கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமநலம் 1992.12

Page 1


Page 2
Lnoህ† : 19 arba
பிரதம ஆசிரியர் :
டி. ஜி. பி. கெனவிேரத்ன
ஆசிரியர்
ரண்திங்க பேரேரா மறிந்த ஹோகெதர டபிள்யு. ஜி. சோமரத்ள ஏஞ்ஜினி அத்துக்கோரளை எல். பி. ரூபசோ
Erh பொருளடக்கம்
墨置
அரவடைக்குப் பின்னைய விரயம் குன தன்னிறைவு #Tr:##II. Trtf: இலங்கையில் பிறப்புக்களின் போக்கு கமத்தொழிலுக்கு அரசாங்க ஆதரவு யாழ். மாவட்ட உருவாக்கிழங்கு உற் நெற்பயிர் பீடைகளைக் கண்டறிதல் பாசன வசதிகளும் பாழ்படும் சுற்றுச்சூ
கமக்காரர்களின் மத்தியில் தன்னம்பிக்கையை யையும் ஏற்படுத்தி, அவர்கள் கிராமிய நிறு வடிக்ாககளில் பூரண பங்கெடுத்து அவற்று டள்ள தோடர்பினை மேலும் வலுப்படுத்தி தோன்றாக்கிக்கோள்ள இச்சஞ்சிகை படதயும்,
 
 
 
 
 
 
 
 
 
 

1992
ஆசிரியர் :
சோ. ராமேற்பரன்
85 :
டபின்பு. ஜயரட்ன
நதிடிர் சோநாயக்க
slag. L-Lm
ஜி. ராமநாயக்க
இதழ் : 4
பறந்தால்
பத்தி
ழலும்
பயும் மன உறுதி பனங்களின் நட டன் ஏற்கனவே
நிரந்தரமான
MYL **L'Luluh :
ரஞ்சித் திசாநாயக்க
விலை (தனிப்பிரதி) ரூ. 10.00 ஆண்டுச் சந்தா ரூ. 40.8ಣ್ಯ

Page 3
அறுவடைக்குப் பி குறைந்தால் தன்ன
பெருகிவரும் P&Sir Gaffax RGD få கவனித்தால் இரண்டாயிரம் ஆண்டளவில் உலகிலே 700 கோடிக்கும் அதிகமான் மக்கள் வாழ்வார்கள் போல் தேசிகிறது. இப்போதே உலகில் 45 கோடிக்கும் 100 கோடிக்கும் இடைப்பட்ட தோனக மக்கள் அனரப்பட்டினியுடன் வாழ்கிறார்கள். மக்கள் பெருக்கத்துடன் இந்தினஸ் லுேம் மோசள்கலாம்:இலங்கையைப் பொறுத்த மட்டில் இன்னும் ஏறக்குறைய 21 ஆண்டு கவில், அதாவது 2010 ஆம் ஆண்டளவில் இங்குள்ள மக்கள் தொன் க 2 கோடி, 20 இலட்சம் ஆகிவிடலாம். அவர்களுள் எத்தனை இலட்சம் பேர் பட்டினியால் ஆாடப்போகிறார்களோ சொல்ல முடி யாது. ப்க்கட் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவு உற்பத்தி வேகமும் பெருகு வதாகத் தோன்றவில்லை. இக்காரணத் திர்ைால் வினையும் உணவு தானியங் #ளை மூறையாகப் போரி வைத்து உண்ணுதல் மீக முக்கியமாகும். எளிலும் நடப்பது
உணவுப் சி: விரபுத்
பண்டம் தோன்களில் சதவீ
لالgښ مسمه
தெல் .
மதக் கதி }35
சீன் ፤Iየኛ
far பொறுத்தளவில் J-90s . விலையின்படி விரய தன்டம் கணக்கிட

பின்னைய விரயம் விறைவு காணலாம்
என்ா? உண்வுக்குப் பயன்படுத்த முன் னரே வினைத்தவற்றுள் பேருமளவு வீணாங் விடுகிறது. இதனால் அண்மைக் காலம் தொடக்கம் விளாச்சச்சர்லுப் பேணும் நுட்
பத்தைப் பற்றி விஞ்ஞானி%ள் துணுக்க மாக ஆய்வுகள் 1: சேய்து அறிந்து வருகிறார் என்.
எச். ஏ. எல். பி. ஜயகொடி ஆராய்ச்சி பயிற்சி படத்தியோகத்தர்
காந: ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம் பல உணவுப் பண்டங்கள் பற்றிய விபரங் களைத் திரட்டி, வி. ஜாச்சலுக்கு பின்னர் ஏற்படும் வீண் விரயத்தைக் காட்டும் அட்டவனை ஒன்றைத் தயாரித்துள்ளது. 1990இல் முக்கிய உணவுப் பண்டங்கரில் ஈட்டிய விளைச்சல் ஏற்பட். விரயம். அதனால் ஏற்பட்ட நஷ்ட அளவு ஆகிய வற்றைக் கீழ்க் காணும் + '''LL --RAW i GAEAFF
கட்டும்.
鷺。蘇 நஷ்டத் தொகை (് iస్ கோடி ரூபாவில்
S.
器芷。母
星艺齿-位
மேற்காலும் பண்டங்களுக்கு நிவவிய சில்லறை
لیا۔ البال
-

Page 4
வளர்ச்சி ஈண்டு வரும் நாடு சிளில் கழிவு. கலப்படங்களாலும், பூச்சி புழுக் " கன் எனி, பறவை போன்றவற்றாலும் ஏற்படும் கேடுகளினாலும் , *ளஞ்சியப் படுத்தற் சேதங்ஃப்ளினாலும் ఛా హా పrt போருளில் பெரும்பாகம் ஹீணாகி உண் ஆக்கு உதவாது டோகிறது. இற்ை நிக்ழ் அறியானா, அக்கறையின்மை பேனால் நுட்பம், தேர்ச்சி, பொருளாதார நி3 போன்றவற்றில் நிலவு ம் :வினம் ஆகியனவே காரணிகளாகவிளங்குகின்றன.
கையினாலோ, பத் தி ர ங் எ *ன எ க் it | பயிர் விளைச் ச லை அல்லது விலங்குப் பதார்த்தங்களை பெற்றுக்கொள்வது அல்வது றுேங்.ே செய்வதிலிருந்து உஐஸ் கக்ர்ோள்:ளும் வரை போற்கோள்ளப்படும் சரளமான அல்லது சிக்கலான செயற்பாடு "ஸ்பாவும் அறுவடைக்குப் பின்னரை நுட் 1ங்கள்" அமையும், நார் உணவாக உட்tெrள்தம் பதார்த்தங்களைப்பற்றிக் கவனித்தற்காக அவற்றை பின்னரும் விதத்தில் வசுைப் படுத்தலாம் : (1) தானியங்கள் (2) !!ருப்பு வகைளும், எண்ணெய் வித்துக்களும் 3) பரக்கறி வகைகள் (4) பழ1ை8ாக்கன் f) விஷங்குப் பதார்த்தங்கள்.
அறுவடையின் பின்னரும் நீரின் பதார்த்தங்களில் உயிர்த்தன்மை நீடிக்கும் விலங்குப் பதார்த்தங்கரிலே" **ಹರಾಹಟ தன்மை நீடிக்காது. இந்த முக்கிய தன் மையை ரத்னதிற்கொண்டு அவற்றின் பசுமையைக் காக்கும் விதத்தில் முறையாக நடவடிக்கை எடுக்கித் தவ:பதே விளைச் சல் விரயத்திற்குப் பிரதாம் காரன மாகிறது. தாவர விளைச்சல்களிலும், விலங்குப் பதார்த்தங்களிலும், மாற்றக் கனை ஏற்படுத்தக்கூடிய வேப்பம் காற்று: ாரத்தன்மை போன்றவை தொடர்ந்தும் நீடிப்பதால், அதுவ.ையிலிருந்து உணவா கும் வரை அப்பதார்த்தங்கள் நுண்ணிய பக்டீரியாக் கிருமிகளினாலும் மற்றும் பல சுழற்சிாரணங்ஃளாலும் ப்ர்திக்கப்படும் ஆபத்துக்கள் நிலவவே செய்யும். இவற்றி விருத்துவிளைபொருட்களையும், விலங்குப்

1.தார்த்தங்களையும் பாதுகாத்தற்கு நட. வடிக்னசு எடுப்பது அவசியமாகிறது
தானிய வகைகள்
பல ஆசிய நாடுகளில் போலவே எது நாட்டிலும் அரிசி பிரதான உணவுத் தானியமாக விளங்குகிறது. இதில் 7 சதவீதமான அரிசிேயைப் புழங்கலாக வும், மிகுதியைப் பச்சை அரிசியாகவும் பயன்படுத்துகிறோம்.
அரிசி மீது உமிடீரர். தவிடும் படித் திருப்பதால், அவற்:ை அகற்றுதற்குப் தப்படுத்த வேண்டியிருக்கிறது. இவ்வாய் பக்துவப்படுத்திய அரிசியையே நாம் சமைத்துச் சாப்பிடமுடிகிறது. இதன் காரனாக, அறுவடைச்குப் பின்னர் கிடைக்கும் தெல்லில் பதப்படுத்தலின் போது 15 சதவீதம் ஜீனாகுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்விரய்த் தைப் பின்வருமாறு பிரித்துக்காட்டலாம்:
அறுைைடயின்போது விரயம் -i-S கதிர். அடிக்கும்போது 一I一罗% சுற்றும் rோது I-0-2 காயவைச்தும்போது - (-3. களஞ்சியப்படுத்துகையில் 5- سـ ந்ெல் அவிக்கும்போது --8 நெல் குற்றும்போது . **-$፻፭
-Pi I6LI43Fh L
நெல் விள்ைந்ததும் சேய்யப்படும் பிரதான வேலையே அறுவடை, ”அது படையினால் சப்பி, ராவி, திரைபதேன் போன்றவற்றைக் கிடைக்கும் வினைச் சவில் குiாறத்துக் கோள்வதற்து, நிக்க JFLF (Lrišli 1 % inľ31 RJ|- செய்வது அவசியம். கதிர்களின் 85 சதவீதம் பொன்நிர்ம் கொண்ட பருவம் அறுவனடக்குத் தகுந்த தருண்மாகும். பழைய தேல் இனங்களின் போல அல்லாது. இன்றைய அதி చరిశrస్లో சல் தரும் இன நெற்களில் 100 சதவீதம் முதிர்ச்சி ஏற்படும்வரை காத்திந்க்க் வேண்டியதில்லை. தவிர, சிர் சதவீத முதிர்ச்சியின் அறுவடை, கெய்ம்ஃபெர்து
2 -

Page 5
*ప్లే భ్యు
5 சதவீத மணிகள் உதிர்ந்து போவதைத் தவிர்க்கவும் முடிகிறது. அத்தோடு, நெல் அதிக காலம் வயலில் அறுவடை செய்யப் படாதிருக்கும் போது, உள்ளே உள்ள அரிசியில் ஒருவித மாற்றம் ஏற்பட்டு நெல்குற்றும்போது அதிக குருநலும், வெள் எரியும் தோன்ற இடமுண்டு.
ஆறுவடையின்போது நெல்லின் ஈரத் தன்மை 18-22 சதவீதமாக இருக்கும். அதனால் நெற் கதிர்களை உலர வைத்து சூடு அடிக்கும்போது மணிகள் சீக்கிரத் தில் உதிர வாய்ப்புண்டு. ஆனால், கதிர் களை நாட்களுள் அடிக்காது. 3-4 நாட்கள் களத்தில் வைத்துச் சுணக்குவ தனால் இரண்டு புசல் வரை எவி, பறவை போன்றவற்றால் விரயப்படுத்தப்படு கிறது.
சூடு அடித்தல்
சூடு அடிக்கும் காலத்தின் காரணமாக எவ்வ்ளவோ மண், கல், குப்பை, கூளங் 5Giro போன்றவை தானியங்களுடன் சேர்ந்துவிடுகின்றன. இதனைத் தவிர்ப்ப
ܒ ܢ
 

தற்குச் சூடு அடிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவது உகந்ததாகும். உழவு இயந்திரத்தைக் கொண்டு சூடு அடிப்ப தனால், அதன் சுமை அழுத்தத்தினால் தானியங்களின் முளைப்புத் தன்மை பாதிக் கப்படுகிறது.
உலர வைத்தல்
நெல்லைக் களஞ்சிய ப் படுத் த நீ கு முன்னர் அதன் ஈரத்தன்மை 14 சதவீத மாகக் குறைக்கப்பட வேண்டும். அப்போது தான் பூச்சிகளினால் நெல் பாதிக்கப்படு வதைத் தடுக்கலாம். அரிசிக்கு நுண்கிருமி களினால் ஏற்படும் கேட்டையும் தடுக்
'Tf .
நெல்லைக் களஞ்சியப்படுத்தல்
நெல்லைக் கூடை கட்டிக் களஞ்சியப் படுத்தும் முறையில் எவ்வளவோ நன்மை இருந்தது. கூடையுள் காற்றுச் சுழற்சி ஏற்பட வழியிருந்தமையால், தானியத் தின் வெப்பம் மட்டாக இருக்கக்கூடிய தாக இருக்கும். ஆயினும், இப்போது
--

Page 6
நமது கமக்காரர்கள் சாக்குகளிலும், பொலித்தீன் உறைகளிலும் நெல்லை மூடையாக்கி வீடுகளுக்குள் வைத்துக் கொள்கிறார்கள். இதனால் மூடையினுள் வெப்பத்தைக் குறைக்கும் வாய்ப்பு பெரிதும் குறைகிறது. இதன் நிமித்தம்
6மாதம் இவ்வாறு வைத்திருக்கும் நெல்லில் 4-6 சதவீதம் கெட்டுப்போகிறது. தவிர தானியத்தின் புரதம், ஊட்டம், கணிஜம் போன்றவையும் குறைகின்றன.
கிராமங்களில் களஞ்சியப்படுத்தும் நெல்லில் ஏற்படும் அழிவில் 80 சதவீதம் நுண்ணிய பக்டீரியாக்களினால் உண்டா கிறது. இதனைக் கிருமி நா சினி கள் பாவித்து அழிக்க முற்படுவதிலும் பார்க்க, தானியங்களில் அத்தகைய கிருமிகள் சேர்ந்துவிடாது பார்த்துக்கொள்ளுதல் நல்லது. அநுராதபுரத்திலுள்ள நெல் ஆராய்ச்சி நிலையம் செய்த பரிசோதனை களின்படி, வேப்பிலை, ஆமணக்கம் இலை, யூகலிப்ரஸ் இலை போன்றவற் றைக் கசக்கி நெல்லின் பாரத்தில் 1 சத வீதம் கலந்து களஞ்சியப்படுத்தலினால், இத்தகைய பக்டீரியா பாதிப்பைக் குறைக் கலாம் எனக் கண்டுள்ளார்கள்.
வீடுகளில் காணப்படும் எலிகள், சுண் டெலிகள் மூலமாகவும், மூஞ்சூறுகளினா லும் பலத்த விரயம் ஏற்படுகிறது. எலி ஒன்று நாள் ஒன்றுக்கு 8-12 கிராம் நெல்லையும் சுண்டெலி 3-5 கிராம் நெல்லையும், மூஞ்சுறு 25-30 கிராம் நெல்லையும் தின்று ஒழிக்க முடியும்.
நெல் அவித்தல்
நெல்லை அவித்துக் குற்றுவதனால், அரிசி நொறுங்கி மாவாகிப்போவதைக் குறைக்கலாம். அத்துடன் ஊட்டச்சத்தும் அதிகமாகிறது. ஆயினும் கிராமங்களில் நடப்பதைப் போன்று பாத்திரத்திலிட்டு நெல்லை அவிக்கும்போது, அதிக அவிச் சலினால் அரிசி பிளவுபட்டு மாச்சத்தும் வீணாகிறது. எனவே, நீராவிமூலம் அவித் தலே நல்ல முறையாகும்.

நெல் குற்றுதல்
இப்போது நெல் இலகுவில் இயந்திரங் களினால் குற்றப்படுகிறது. உருக்கு உருளைகளைக்கொண்ட யந்திரத்தினால் குற்றும்போது, அரிசியில் சேதாரம் அதிக மாகிறது. றப்பர் உருளை பொருத்திய யந்திரங்களில் இவ்வாறு ஏற்படுவதில்லை. அத்தோடு அவ்வகையில் கிடைக்கும் தவிடும் தரமுள்ளதாக இருக்கிறது. அரிசி நிலையிலிருந்து உணவாகுதற்கிடையில் எவ்வளவு விரயம் ஏற்படுகிறது என்பது பற்றி இன்னும் இந்நாட்டில் முறையான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. எனினும் 1990ஆம் ஆண்டு விளைச்சலை அடிப்படை யாக வைத்துப் பார்த்தால், அவ்வாண் டில் 40 கோடி ரூபா பெறுமதியான நெல் விரயமாகியுள்ளது என்பதை அறியமுடி கிறது.
பருப்பு வகைகளும் எண்ணெய் வித்துக்களும்
விலங்குப் புரதமுள்ள பதார்த்தங் களின் விலை அதிகரித்து வருவதனால் குறைந்த செலவில் பருப்பு வகைள் மூலம் எமது புரதத்தேவையை ஈடுசெய்யலாம். இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகை களின் விலையும் உயர்ந்து வருவதனால் உள்நாட்டில் கிடைக்கும் பயறு, துவரை, கவ்பி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இந்த முறையில் செலவையும் குறைக் கலாம். ஊட்டச்சத்தையும் பேணலாம். ஆயினும், பருப்புள்ள தானியங்களின் தரத்தைக் காப்பாற்றும் விதத்தில் அவை களஞ்சியப்படுத்தப்படுவது குறைவு. பயற்றினங்களை பூச்சி புழுக்கள் அநேக மாகத் தாக்கவல்லன. இத்தகைய தாக்கு தல்களைத் தடுக்காவிட்டால் விளைச்சல் முழுவதுமே களஞ்சியத்திலே நாசமாக லாம். கெட்டுப்போன பருப்பு வகைகள் உணவுக்கு உதவாது என்பதுடன் துர் நாற்றத்தையும் கொண் டி ரு க் கும். அவற்றை விதைப் பொருளாகவும் பயன் படுத்த முடியாது. பருப்புத் தானியங் களின் ஈரத்தன்மை 10-12 சதவீதத்துக்
- حسسيسه :

Page 7
குக் குறைக்கப்பட்டு, உமிச் சாம்பலுடன் கலந்து (சாம்பல் தானிய நிறையில் 5%) களஞ்சியப்படுத்தலினால் 6மாதங்களுக்குக் கெடாதிருக்கும் என அனுரா த புர ஆராய்ச்சி நிலையம் அறிவிக்கிறது.
சில பருப்பு இனங்களில் அறுவடைக் குப் பிற்பட்ட விரயம் சதவிகிதத்தில் கீழே காட்டப்படுகிறது:-
செயற்பாடு சோயா கவ்பீ பயறு
போஞ்சி உழுந்து
அறுவடையின் போது 3-4 தானியத்தைப் பிரித்தெடுக்கும் போது 3-5 0.5 0.5 உயர்த்தும்போது/ சுத்தப்படுத்தும் − போது? - NIKA களஞ்சியப் படுத்துகையில் 2-3 10-20 10-20
* இதற்கான தரவுகள் இன்னும் a
வில்லை
சோயா, நிலக்கடலை எள்ளு போன் றவை எண்ணெய் வித்துக் கொண்ட பருப்பு வகையாகும். சோயாவின் நிறை யில் 22 சதவீதமும், நிலக்கடலையில் 38 சதவீதமும், எள்ளில் 50 சதவீதமும் எண்ணெயாக உள்ளது. இக்காரணத்தி னால் மற்றைய பருப்பு வகைகளிலும் பார்க்க இவை சீக்கிரம் பழுதுபட இட முண்டு. ஆதலால் இவற்றைக் களஞ்சியப் படுத்த முன்னர் அவற்றின் ஈரத்தன் மையை 6-7 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இங்கு மற்றும் ஒரு விடயத் தையும் குறிப்பிட வேண்டும். இப்பருப்பு வகைகள் பதங்கெடும்போது அவற்றில் "மைகோரொக்கின்", "அவ்லா ரொக்கின்", "அஸ்பஜில்லஸ் போன்ற நச்சுத் தன்மை களையும் பக்டீரியாக்கள் தோற்றுவித்து விடுகின்றன. இத்தகைய நச்சுத்தன்மை களுள் சில புற்றுநோயைக்கூட ஏற்படுத்த வல்லன். இவற்றை நாம் உட்கொள்

S.
ளாது கைவிட்டு, விலங்குகள் தீனியில் சேர்த்தாலும் விலங்குகளும் பாதிக்கப் பட்டு அவற்றின் பால், முட்டை போன்ற உற்பத்திகளும் குறையும். வில்ங்குகளுக்
குச் சாவும் ஏற்படலாம்.
மற்றும் ஒரு ஆபத்தும் நிலவுகிறது. அதாவது இவ்வாறு பழுதடைந்த தானி யங்கள் வளர்ச்சி அடைந்த நாடுகளி லிருந்து, வளர்ச்சி கண்டு வரும் நாடுக ளுக்கு தக்கபரிசோதனையோ, கவனமோ இல்லாது இறக்குமதி செய்யப்பட்டு உண வில் சேர்க்கப்பட்டால் அதனால் பெரும் தீங்கு ஏற்படவும் இடமுண்டு.
மரக்கறி வகைகள்
அறுவடிைக்குப் பின்னர் சிக்கிரம் பழுதடையும் பொருட்களுள் மரக்கறி முதலிடத்தைப்பெறும். இதற்கு அவற்றின் ஈரத்தன்மை, அமைப்பு, மென்மை அதிக நீரைக்கொண்டிருத்தல் போன்றவை
காரணமாகும். அத்தோடு தானியங்கள்,
பயற்றினங்கள்போல மரக்கறி வகைகளை
உலர்த்தவோ சுலபமாக ஏற்றியிறக்கவோ
முடியாது.
சமதரைப் பகுதியில் விளையும் மரக் கறி வகைகளிலும் பார்க்க, மலைநாட்டு
மரக்கறி வகைகள் எளிதில் பழுதடையக்
கூடியன. சில கமக்காரர்கள் søort – t9மரக்கறி வகைகளை அறுவடை செய்கி றார்கள். மரக்கறி வகைகளைப் பூச்சி புழுக்களிலிருந்து காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் மருந்தை அடித்துவிட்டு கையோடு அறுவடையையும் செய்கிறார் கள். இதனால் நச்சுத்தன்மை மக்களின் உணவில் சேர இடம் , ஏற்படுகிறது. இத னால் அறுவடையின் பின்னர் மரக்கறி யின் தரம் கேள்விக் குறியாகிறது
இன்றைய ஏற்றியிறக்கற் செலவு மிகுந்து காணப்படுவதால் செலவைக் குறைக்கும் நோக்குடன் ஒரு சாக்கில் அதிக மரக்கறியைத் திணிக்கிறார்கள். இதனாலும் மரக்கறி உடைந்து நசிந்து பழுதடையக் கூடியதாகின்றது. அத்து

Page 8
_ன் மரக்கறி மூடைகள் மீது மனிதரும் ஏறி உட்கார்ந்து பயணஞ் செய்கிறார் கள். இதனாலும் அவை பாழடைகின் றன. அடுத்தது மரப்பெட்டிகள், பிளாஸ் ரிக் கூடைகள் போன்றவற்றுக்கு அதிக விலை நிலவுவதால், சாதாரண கமக் காரர்கள் அவற்றில் மரக்கறிகள்ை அடைக்காது இலகுவில் பழுதாகக் கூடிய சாக்குகளிலேயே மரக்கறி வகைகளைக் கட்டி அனுப்புகிறார்கள். இவ்வாறு செய் வதனால் அவர்களுக்கு ஏற்படும் நஷ் டத்தை அல்லது நல்லபடி பொதிப் படுத்துவதில் அவர்களுக்குள்ள நயத்தை விளங்கவைக்க வேண்டும்.
பழங்கள் பழுக்கும்போது எதிலீன்" என்ற ஒரு இரசாயன பதார்த்தம் எப்ப டிப் பழங்களை விரைவில் பழுக்கச் செய் கிறதோ அப்படியே இலைகள், மரக்கறி வகைகளை சீக்கிரத்தில் பழுதடையவும் செய்கின்றன. அதனால் பழங்களையும், மரக்கறிகளையும் ஒன்றாகச் சேர்த்து அனுப்புவதோ, சேமித்து வைப்பதோ கூடாது. மரக்கறி வகையில் மண், மணல், சேறு எதுவும் ஒட்டியிராதபடி கழுவித் துப்பரவுசெய்து வைத்துக்கொள்ள வேண் டும் அல்லது சந்தைக்கு அனுப்ப வேண் டும். இல்லையேல் அவற்றின் தரம்கெட்டு ஊட்டம் உருசி போன்றவை குறைந்து சந்தை மானத்தையும் இழந்துவிடும்.
சாதாரண்மாக தக்காளி போன்ற மரக்கறி பெட்டிகளில் அடைத்து அனுப் பப்படுகிறது. இதனால் தக்காளி அதிகம் பழுதடைவதில்லை. ஆயினும், நெடுநாட் கள் தக்காளியை வைத்திருக்கும்போது அவற்றில் சில பழுதடையத் தொடங்கும். பழுதானவற்றை அடிக்கடி பார்த்து நீக்கி விட்டால் மிகுதிப் பழங்கள் பழுதடையா. தக்காளி சீக்கிரம் பழுதடைவது பற்றி யும், அவற்றை நீடித்துப் பேணி வைக்கும் வசதிகள் இல்லாமை பற்றியும் பொறுப் புள்ளவர்களது அக்கறையின்மை பற்றியும் அண்மையில் ஒரு கிளர்ச்சி முறைப்பாடு கள் ஏற்பட்டிருந்தன. இதே போன்ற ஒரு நிலை பெரிய வெங்காயத்துக்கும் ஏற்பட்டிருந்தது. பெரிய வெங்காய அறு
6 مس.

வடை முறைகளில் கவனஞ் செலுத்தாத தினாலும் பலவித இழப்புகள் ஏற்பட் t.get.
போஞ்சி, கத்தரிக்காய் போன்றவற் நில் முற்றும்போது பழுப்பு மஞ்சள் நிறம் தோன்றி அவை விரைவில் அழுகிப்போவ தைக் கவனித்திருக்கலாம். இதற்கு *செலக்கிகும் லின்தே முதியானும்", “பொமோபிஸ் வென்சன்ஸ்" என்ற இரு வகை பக்டீரியாக்கள் எனச் சொல்லப் படுகிறது. இவற்றை நல்ல விதைகளைத் தேர்ந்தெடுப்பது மூலமும், முறை யாகப் பயிரிடுவதன் மூலமும் தவிர்க்கலாம். மலையகப்பகுதிகளில் குறுகிய அளவு நிலத்தில் அதிக ஆதாயத்தைத் தருவது உருளைக் கிழங்குச் செய்கையாகும். ஆயினும், இதனை அறுவடை செய்து க ள ஞ் சி யப்படுத் தி வைக்கும்போது "எர்வீனியா கரரோறா", "SAugs-r மோனாஸ் மார்ஜினாலிஸ்" ஆகிய பக்டீரி யாக்கள் அதனை விரைவில் பழுதடையச் செய்கின்றன. சான்றுபடுத்தப்பட்ட நல்ல விதைக்கிழங்குகளைக் கமக்காரருக்குக் கிடைக்கச் செய்வதன் மூலம் இத்தகைய விரயத்தைப் பெரிதும் குறைக்கலாம்.
அறுவடைக்குப் பின்னைய விபரம் பற்றி முறையான ஆய்வுகள் நடத்தப் படாவிட்டாலும், 1990ஆம் ஆண்டில் மாத்திரம் 300 கோடி ரூபாவுக்கு இத்த கைய விரயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. w
p வர்க்கங்கள்
கமக்காரர் இப்போது முன்னரைவிட பாரிய அளவில் பழச்செய்கையை மேற் கொண்டு வருகின்றனர். மரக்கறி வகை களிலும் பார்க்க பழ வகைகள் விரைவில் பழுதாகும் தன்மைகள் கொண்டவை. அதிக மென்மை, இனிப்புச் சத்துக் கூடு தலாக இருத்தல், அறுவடைக்குப் பின்னர் பழங்களில் காணப்படும் வெப் பத்தை வழமையாக நீக்காதமை, வகைப் படுத்திச் சீராகச் செய்யாத ஏற்றியிறக் கல் போன்றவை இத்தன்மைகளுள் சில

Page 9
வாகும். தவிர, பழங்களுக்கு நல்லவிலை கிடைக்கவேண்டும் என்பதற்காக அவற் றைப் பருவத்துக்கு முன்னரே பறித்துச் சந்தைப்படுத்தப் பார்த்தல், பழுக்கச் செய்தற்காக "அசெற்றலீன்" போன்ற இரசாயன பதார்த்தங்களைப் பாவித்தல், மற்றும் முறைகேடுகள் காரணமாக பழங் களின் சுவையும் தரமும் மாறுபடுகின்றன. பழங்கள்ல் நிறைய நீர்த்தன்மை இருப்ப தால் அழுகுதல், பக்டீரியா, ஈஸ்ற் போன்றவை விருத்தியாதல் அநேகமாக நிகழ்வனவாகும்.
பப்பெயின் எனப்படுவது பப்பாசிக் காயிலிருந்து பெறப்படும் பாலாகும். இதனைத் திரட்டுதற்குக் காய்களில் கத்தி யால் கீறுகள் போட்டுத் திரட்டப்படு கிறது. இச்செய்கையினால் காய்கள் காயப்படுவதுடன், பக்டீரியா தாக்குதலுக் கும் உள்ளாகின்றன. இப்படியான நிலை யில் அறுவடையாகும் பப்பாளிப் பழங் களில் 80-90 சதவீதம் பழுதடைகிறது. இப்பழங்களுக்கு "டேகஸ் பெருஜீனியஸ்" என்ற ஒரு வகை பழ ஈயினாலும் பாதிப்பு ஏற்படுகிறது. இது பப்பாளிக்காயில் பட்ட கீற்றில் தங்கி முட்டையிட்டுப் பெருகி, அவற்றைத் தாக்குகின்றன. இக்காரணத் தினால் அத்தகைய புழங்களுடன் சேர்த்து வைக்கப்படும் ஏனைய பழங்களும் சேதப் படுகின்றன.
பல்வேறு விலங்குப் பதார்த்தங்கள்
மனிதனுக்கு மிக தேவைப்படும் அமி னோ அமிலம் விலங்குப் பதார்த்தங்கள் மூலமே கிடைக்கிறது. இதுவே தாவரப் பொருட்களுக்கும், விலங்குப் பொருட் களுக்கும் இடையில் உள்ள பிரதான வேறுபாடாகும், மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், தாவரப்பொருட்களில் உயிர்த்தன்மை நீடிக்கிறது. விலங்குப் பொருட்களில் அப்படி இருப்பதில்லை. இதனாலும் விலங்குப் பொருட்கள் அதி விரைவில் பழுதடைய ஏதுவாகின்றன. இவை விலங்குகளிலிருந்து பிரிக்கப்பட்ட நேரம் தொடக்கம் கெட்டுப் போகத்

தொடங்குகின்றன. இதனால் அவற்றை நல்லமுறையில் பாதுகாத்து. வைக்க வேண்டும். இவற்றில் ஊட்டச்சத்து நிறைய இருப்பதால் அதனை ஆதார மாகக் கொண்டு பக்டீரியாக்களும் பல்கிப் பெருக இடமுண்டு. மீனும் மீன் உற்பத்திகளும்
எமது நாளாந்த் உணவுடன் சேர்க் கப்படும் விலங்குப் பொருட்களுள் அல்லது அதனைச்சார்ந்த பொருள் எது வும் போதிய அளவு இல்லாவிட்டாலும் கூட முக்கிய இடத்தைப் பெறுகிறது. för பிடிக்கப்பட்டது தொடக்கம் உணவுக்குத் தயாரிக்கப்படும் வரை பல கட்டங்களில் நன்கு பேணப்படாது விட்டால் அது கெட்டுப் போவதற்கு இடமுண்டு. 6Tíñig5 6it மீன்பிடிப்படகுகள் அநேகமானவற்றில் குளிரூட்டிச் சாதன வசதிகள் கிடையா. ஆதலால் கடலில் பிடித்த மீன் கரை வந்து சேருவதற்கிடையிலேயே ப ழுது படத் தொடங்கிவிடும். கரைக்கு வந்த மீன், விற்பனைக்குப் பலகையில் வைக்கப் பட்டுள்ள நேரத்திலும் வெய்யில், மழை பட்டோ, பழுதான மீனுடன் வைக்கப் படுவதனாலோ விரைவில் பழுதாகிப் G3 untd, 6).Tib.
'ஐஸ் கட்டிகளுக்கு விலை உயர்வாக இருப்பதனாலும், கிடைப்பது கஷ்டமாக இருப்பதனாலும், படகுகளில் மீனைப் பேணுவதற்கு, சட்ட விரோதம்ான செய லாக இருந்தும், * போமலின்" என்ற சவம் பேணும் இரசாயன ப்தார்த்தத் தைப் பாவிக்கிறார்கள். இதுவே மணி தருக்குப் பெரிதும் கேடாகும். மீனைப் பேணுவதற்குப் பூர்வாங்க முறைகளையே பயனபடுத்துதல், ஏற்றியிறக்கல் முறை, நாள் முழுவதும், மீனைப் பலகையில் போட்டு விற்பனைக்கு வைத்தல் போன்ற செயற்பர்டுகளால் பிடித்த மீனில் கணிச மான பாகம் விரயமாகிவிடுகிறது. மீன் பழுதடைந்து துர்நாற்றம் கிளம்புவதற்கு *சியூடமோனாஸ்", "மொறெக்செலா", *அகெனிரோபக்ரர் போன்ற ப்க்டீரி யாக்களே காரணம் எனக் கண்டுள்ளார்

Page 10
கள். புரதம் மிகுந்து காணப்படும் சில மீன்வகைகள் மனிதரின் உடம்பில் சில ஒத்துக்கொள்ளாத் தன்மைகளை ("அலர் ஜிகளை') ஏற்படுத்துகின்றன. இதற்கு அத்தகைய மீன்களில் காணப்படும் ‘ஹிஸ் ரடீன்" என்ற அமினோ அமிலம் ‘ஹிஸ் ரமைன்" என்ற அமினோ 9) Lóla) Lorra, மாறுதலாவதே காரணம் என்கிறார்கள். இந்நிலை ஏற்படாது தவிர்ப்பதற்குக் குளிரூட்டும் வசதிகளை ஏற்படுத்துவதும் , மீன் நசிந்து போகாது பார்த்துக் கொள் வதும் முக்கியமாகும். இத்தகைய முறை களாலேயே மீனில் ஏற்படும் விரயத்தைக் குறைக்கலாம்.
கருவாடு
ஒரே நிலையான மீனையும், கருவாட் டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், கருவாட் டில் அதிக புரதம் அடங்கியிருக்கும். பழைய முறைகளிலேயே இன்னும் கரு வாடு பதப்படுத்தப்படுவதனால், விரயம் அதிகமாகிறது. மீனின் குடற்பாகத்தை நீக்கி, கடற்கரையிலோ சாக்கிலோ போட் டுக் காய வைத்துக் கருவாடு பதனிடு கிறார்கள், இச்சமயத்தில் ஈக்களினால் மனித மலத்தில் காணப்படும். ஒரு வகை பக்ரீறியா காயவைக்கப்படும் மீனில் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதனாலும் பழுது ஏற்படுகிறது. அத்தோடு "டேமர்ஸ் டஸ்" எனப்படும் மிகச்சிறிய, எறும்புகளி னாலும் கருவாடு அழிக்கப்படுகிறது. இவ் வாறு உற்பத்தி செய்யப்படும் கருவாட் டிலும் பெரும்பாகம் விரயமாகிறது.
இறைச்சி வகைகள்
முன்னரிலும் பார்க்க இப்போது அநேக இலங்கையர் இறைச்சி வகைகளை உட்கொள்ளப் பழகியிருக்கிறார்கள். இத னைக் கறியாக்கியும், நே ர டி யா க இறைச்சியாகவும் உண்கிறார்கள். எவ், வாறாயினும், விலங்குகளைக் கொன்று எடுப்பது இறைச்சி என்ற காரணத்தி னால் அதில் பக்ரீறியா தொற்று ஏற் பட்டு, விரைவில் - பழுதடைய வாய்ப் புண்டு. விலங்குகளைக் கொன்று நிலத்தில் போடுவதனால் 'சல்மநெலா', 'கொலஸ்

றிடியம்’ போன்ற பக்ரீறியாக்களினால் பாதிப் ஏற்படுகிறது. இப்படிய்ான நுண் கிருமிகளினால் பாதிப்புறும் இறைச்சி வகைகளை உண்ணும் மனிதருக்கும் பல வித தீங்குகள் ஏற்படலாம்.
பாலும் பாற்பொருட்க ளும்
தயிர், "யோகர்ட்", பால் போன் றவை ஊட்டச்சத்தை நிறையக் கொண் டிருப்பதால் அவற்றில் பக்ரீறியாக்கள் விரைவில் பெருக முடியும். எனவே, சீக் கிரத்தில் குளிர்ப்படுத்தி அல்லது அதிக குளிர்ப்படுத்தி "பாய்ஸ்சர் முறையில் பதப்படுத்தினாலே தவிர அவை கெட்டுப் போகலாம். தொலைவிடங்களில் உள்ள பால் சேகரிப்பு நிலையங்கள் சிலவற்றில் குளிர்சாதன வசதிகள்' இல்லாதிருக்க லாம். ஆதலால் பாலைப் பக்குவப்படுத்தி வைப்பதற்கு அந்நிலையங்களில் இர. சாயன திரவங்கள் சிலவற்றைப் பாவிக்க லாம். இது அளவுக்கு மிஞ்சிப் பாவிக்கப் பட்டாலும், தாமதப்பட்டுப் பாவித் தாலும், பால், பாற்பொருட்கள் பழு தடையலாம். இதனாலும் இவற்றில் பெரும் விரயம் ஏற்படலாம்.
up 56, L
இப்போது முட்டையின் உற்பத்தி நாளாந்தம் அதிகரித்து வருகிறது. அத னால் உற்பத்திக்கு ஏற்ப அவற்றைக் கெடாது வைக்கவும் முனையாவிட்டால், விரயமும் பெரிதாகிவிடும்
நெல்லைத் தவிர ஏனையவற்றின் விரயம் பற்றிய விபரங்கள் திரட்டப்படா திருப்பதனால். அவை பற்றிய புள்ளி விப ரங்கள் கிடைக்கவில்லை.
வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில் அறுவடைக்குப் பின்னைய விரயம் பாரிய தாக இருந்தபோதிலும், அதுபற்றிய ஆய்வுகள் இன்னும் குறிப்பிடக் கூடியன வாக இல்லை. இத்துறைக்குக் கூடிய அக் கறை காட்டுவதன் மூலம் கம உற்பத்தி களில் ஏற்படும் வீண் விரயத்தையும் தவிர்க்கலாம்; மக்கள் பட்டினியைப் போக்கவும் உதவலாம்.

Page 11
இலங்கையில் பிறட்
(BIRTH TRENDS
- விஜயராணி ச ஆராய்ச்சி பயிற்சி
அறிமுகம்:
இலங்கையின் சனத்தொகை வளர் காணப்படுகின்ற போதிலும் வளர்ச்சிப் போ திற்குக் காலம் குடித்தொகையை நிர்ணய வதால் குடித்தொகை வளர்ச்சியிலும் லே குடித்தொகையில் காணப்படும் வளர்ச்சி நின் கும் சமமானதல்ல. சில மாவட்டங்கள் தே வீதத்தினையும், வேறு சில மாவட்டங்கள் வீதத்தினையும் கொண்டிருக்கின்றன. தொகை வளர்ச்சி தேசிய மட்டத்திற்குச் பாடுகள் காணப்படுவதற்கு அம்மாவட்டங்க ation Components) பிறப்பு, இறப்பு, இட
எனினும் இலங்கையின் பிறப்புகளில் போக்கையும், அதற்கான காரணிகளையும் ஆ
Dnr 5th
இலங்கையின் குடித்தொகை தொடர்ச்சிய வளர்ச்சி வேகம் படிப்படியாகக் குறைந்து கெ ஆராய எடுத்துக் கொண்ட காலம் 1871ஆம் 110 வருடங்களாகும். 1991இல் அடுத்த கு ஆனால், நாட்டின் உள்ளூர் கலவர நிலை மேற்கொள்ளப்படவில்லை. எனினும், 1990 காலிகமாக மதிப்பிடப்பட்டு ஆய்வுகட்குப்
இக்கட்டுரைக்கான தரவுகள் பெரும்! திணைக் களத்தினால் வெளியிடப்பட்ட அ and Statistics) குடித்தொகை தகவல் நிை வெளியீடுகளிலிருந்தும், வேறு சில பருவக தும் பெறப்பட்டன. C. B. R. , T. F R., தொகை கணிப்பு நுட்பங்களை (Dem2ே0ா பட்டன.
இலங்கையில் தொடர்ச்சியானதும், 1871 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டதெனினு பின்னர் ஐரோப்பியராட்சிக் காலத்திலும், திரட்டுதல், நீர்ப்பாசன திட்டங்கள், கட்ட
 

புக்களின் போக்கு IN SRI LANKA )
ஈற்குணராஜா - உத்தியோகத்தர்
*ச்சியை அவதானிக்கின்ற போது வளர்ச்சி ாக்கில் வேறுபாடு காணப்படுகின்றது. காலத் பிக்கும் காரணிகளில் மாற்றங்கள் ஏற்படு வறுபாடு காணப்படுகின்றது. இலங்கையின் லை இலங்கையின் மாவட்டங்கள் அனைத்திற் சிய வளர்ச்சியை விட உயர்வான வளர்ச்சி * தேசிய வளர்ச்சியை விட குறைவான
ஒரு சில மாவட்டங்களிலேயே குடித் சமமானதாகவிருக்கின்றது. இத்தகைய வேறு ளின் குடித்தொகைக் காரணிகளான (Popuடப்பெயர்வுகளின் தன்மையே காரணமாகும்.
ஏற்பட்டுவரும் மாற்றங்களையும், அதன் ஆராய்வது இக்கட்டுரையின் பிரதான நோக்க
ாக அதிகரித்தக் கொண்டு செல்கின்ற போதிலும் ாண்டே செல்கின்றதெனலாம். இக்கட்டுரை ஆண்டிலிருந்து 1981ஆம் ஆண்டு வரையான டிக் கணிப்பு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மைகள் காரணமாக இக்கணிப்பு இதுவரை, , 1991ம் ஆண்டுக்கான சில தரவுகள் தற் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பாலும் குடித்தொகை மதி ள்ளிவிபரத் 55,60556i6), b, (Deparatme. of Census au,35687 (Population Information Centre) ால வெளியீடுகள், சிறப்பு வெளியீடுகளிலிருந் S. M. A.M. போன்ற குறிகாட்டிகள் குடித் ahle Techniques) luugituGäg) 5, 60õi?ä5ü
நிலையானதுமான குடித்தொகைக் கணிப்பு ம், பண்டைக்காலத்தில் சிங்கள அரசர்களும் வரிசேகரிப்பு, போரிட இராணுவத்தினரைத்
.ட நிர்மாண வேலைகள் எனப் பல்வேறு
-

Page 12
தேவைகளுக்காக இலங்கையின் சிற்சில பாக கின்றதென்பதற்குச் சான்றுகள் உள்ளன.
தொடர்ச்சியான குடித்தொகைக் கை ஒரு முறை எடுக்கப்பட்டது. இதன்படி மு: 1931, 1946, 1953, 1963, 1971, 1981 ஆ கணிக்கப்பட்டது. 1931 இல் உலகளாவிய ரீ காரணமாக சனத்தொகைக் கணிப்பில் சனத் பால் போன்ற விபரங்கள் கூடக் கணிக்கப் எடுக்கப்பட வேண்டிய கணிப்பு இரண்டாம் பட்டு 1946லும், பின் 1953லும், இதன்பின் மீண்டும் 1971லும் . 1981லும் எடுக்கப்பட்ட கணிப்பு இன்னமும் மேற்கொள்ளப்படவில் வளர்ச்சியை அவதானிப்பின் அட்டவணை துக்குக் காலம் எவ்வாறிருந்தது என்பதனைக்
அட்டவணை 1, 1
இலங்கையின் குடித்தொகையும்,
( 1871 -
ஆண்டு குடித்தொகை
1871 2,400,380 1881 2,759, 738 89 3,007,789 190 3,565,954 1911 . 4, 106,350 192 4,498,605 1931 5,306,871 1946 6,657,339 1953 8,097,895 1963 10,582,064 1971 12,689,897 1981 14,846,750 1990 7,243,000
1990 க்கான தற்காலிக மதிப்பீடு
Source: The Popula
L. I. C. R.
அட்டவணை 1.1ஐ அவதானிக்கும்டே ஆண்டுச்சராசரி வளர்ச்சி 2 வீதத்தை மிஞ் மாக மட்டுமே இருந்துள்ளது. 1931-1948ப குடித்தொகை வளர்ச்சி வீதம் 1946-1953 அதிகரிப்பைக் கொண்டிருந்துள்ளது. இதன் 1.7 வீதமாகவும், 1990ல் 1.4 வீதமாகவும் சியானது 1881ல் இருந்த வளர்ச்சி வேகத்ை கது.
i !,

கங்களில் குடித்தொகை கணிக்கப்பட்டிருக்
Eப்பு 1871 இல் இருந்து பத்துவருடங்களிற்கு றையே 1871, 1881, 1891, 1901 1921, ம் வருடங்களில் இலங்கை சனத்தொகை தியாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை ந்தொகை மட்டுமே கணிக்கப்பட்டது. வயது, படவில்லை. இதன் பின் 1941 ஆம் ஆண்டில் உலகப்போர் காரணமாக மீண்டும் தடைப்
1963லும் எடுக்கப் பட்டன. இவற்றின் பின் ன. 1991 ஆம் ஆண்டிற்கான குடித்தொகைக் லை. இனி இலங்கையின் குடித்தொகை 1.1 இலங்கையின் குடித்தொகை காலத் * காட்டுகின்றது.
ஆண்டுச் சராசரி வளர்ச்சி வீதமும் - 1990)
நூற்றுவீத ஆண்டுச்சராசரி அதிகரிப்பு வளர்ச்சி வீதம்
15.0 ... 4 -
9.0 0.9 18.6 1.7 15.2 1.4 9.6 0.9 18.0 1.7 25.4 1.5 21.6 2.8 30.7 2.7 19.9 2.2 16.99 1.7 16.13 1.4
tion of Sri Lanka E. D. SERIES
1ாது 1946 வரை இலங்கையின் குடித்தொகை சிவிடவில்லை. 1891லும், 1921லும் 0.9 வீத 0 ஆண்டு காலப்பகுதியில் 1.5 ஆக இருந்த
காலப்பகுதியில் 2.8 வீதமாக சடுதியான பின் படிப்படியாகக் குறைவடைந்து 1981ல் காணப்பட்டது. இந்த 1.4 வீத வளர்ச் தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்
0 -

Page 13
அட்டவணை 1.1ல் இரு குடிக்கை அதிகரிப்பை நோக்கின் 1881ம், 1921ம் ஆ குறைவாகவேயிருந்துள்ளது. ஆனால், 19
இருந்துள்ளது. 1963ல் இது மிகவும் உயா போதிலும், 1971ல் வேகமான வீழ்ச்சியைச்
இவ்வாறு குடித்தொகை வளர்ச்சிக்கு
கட்குமான காரணங்களை அவதானிப்பி (Population Component) 6T GOTLIGub
1. பிறப்பு அல்லது கருவளம்
2. Spril (Death or Mortal:
3. 9Lt. Gluutelj (Migration) ஆகிய மூன்றுமே காரணங்களாகும். இம் தொகையை நிர்ணயிக்கும். இதனைப் பின்
Р WYS B - D
t+n 飞 P + ( ten t*ーーー〜〜ー
Natural In
= tயிலிருந்து t+n வருட க.
(Population from time t
P = t காலத்தின் குடித்தொன
சி+n = tயிலிருந்து t+n வருட
(Number of births in tin
Pt+n
tயிலிருந்து t+n வருட ச ( Number of deaths in ti
t+n = tயிலிருந்து t+n வருட ச
Number of inmigrants i
Ot +-n = t யிலிருந்து t+ n வரையா Number of out migrant
ஒரு பிரதேசத்தின் குடித்தொகைய தொகையில் இருந்து, பிறிதொரு குறித் ஆக்குடித்தொகையில் ஏற்பட்ட இயற்கை இடப்பெயர்வுமே (Net Migration கார பிட்ட காலத்தினுள் ஏற்படும் பிறப்புகளி ungub (Births-Deaths is Natural Increase பகுதியில் ஏற்படும் குடி உள்வரவிற்கும், auiTsjib (Inmigration-Out Migration = Net M நேரத்தின்குடித்தொகைநிலையையும், அதன் அதிகரிப்பை ஏற்படுத்தும் பிறப்பு இறப்பு

ரிப்பு ஆண்டுகட்கிடையிலான நூற்றுவீத ஆண்டுகளில் நூற்றுவீத அதிகரிப்பு மிகவும் 46ன் பின் நூற்றுவீத அதிகரிப்பு உயர்வாக ர்வாக அதாவது 30.7% மாக இருந்துள்ள * காணக்கூடியதாக உள்ளது.
ம், அதன் போக்கிலுள்ள வேறுபட்ட நிலை ன் இதற்கு குடித்கொகைக் காரணிகள்
(Birth or Fertility). ity),
முன்று காரணிகளும் ஒரு இடத்தின் குடித்
வரும் வாய்ப்பாடின் மூலம் அறியலாம்.
) + ('...) 出-n t十n、t十n
سمصن--سے --سہ مسس -- سا أفسسسسســ
GTeaSC Net Migration
ாலத்தின் பின் குடித்தொகையளவு
to t+n years)
ds (Population at timet )
காலம் வரையான பிறப்புக்கள் he t to t-n years)
காலம் வரையான பிறப்புக்கள் me t to t+n years )
காலம் வரையான குடித்தொகை உள்வரவு n time t to t+n years)
னகாலப்பகுதியில்குடித்தொகைவெளியேற்றம் s in time t to t+n years )
ானது குறிப்பிட்ட காலத்தில் இருந்த சனத் த காலத்திற்கிடையில் மாற்றமடைவதற்கு 955 fillb (Natural Increase), Gas stu ணமாகும். இயற்கையதிகரிப்பானது அக்குறிப் ற்கும், இறப்புகளிற்கும் இடையிலான மீதி ). தேறிய இடப்பெயர் வானது குறித்த காலப் குடிவெளியேற்றத்திற்கும் இடையிலான மீதி Migration). எனவே, ஒருபிரதேசத்தின் குறித்த ண்போக்கையும்ஆராயவேண்டுமாயின் இயற்கை க்களையும், தேறிய இடப்பெயர்வை ஏற்ப
11 -

Page 14
டுத்தும் குடி உள்வரவு குடிவெளியேற்றம் மாகும். இக்கட்டுரையில் இலங்கையின் பிற யும், அதற்கான காரணங்களையும் பற்றி
1.0 இலங்கையில் பிறப்புக்களில் ஏற்பட்
குடித்தொகையை நிர்ணயிக்கும் கார் கின்றன. கருவளத்திற்கு ஏற்பவே பிறப்பு வேறு பெளதீக சமூக, பொருளாதாரக் க உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வருகின்ற குறிகாட்டிகளுள்ளன. இவற்றுள் இலகுவா Lu 'G) 6.0565th C.B.R. (Crude birth rat C.B.R.ஐ அவதானிக்கலாம். C.B.R. ஆயிர (Number of births perthousand population)
oL6.60600T l.2
இலங்கையின்
( 1871
ஆண்டு
1875 ܚ- 1871 1380 س-۔ 1876 1881 - 1885 1890 محسن 1886 1895 -سس- 1891 896 - 1900 1905 -ܝܢ 1901 1906 - 19 10 1915 سس۔ 1911 1916 - 1920 1921 - 1925 1930 ܚ 1926 1931 - 1935 1940 أسس 1936 1941 - 1945 1950 می۔ 1946 1955 سسسسه 1951 1960 حسب 1956 1961 - 1965 1970 حتى 1966 1974 -سس 1971 1980 - س- 1985 -س 1990
Source: Population P.
i !

என்பன பற்றி ஆராய வேண்டியது அவசிய றப்புக்களில் ஏற்பட்டு வரும் மாற்றத்தினை சிறிது ஆராய்வோம்.
ட்டுவரும் மாற்றங்கள்;
ாணிகளுள் பிறப்புக்கள் முக்கிய இடம் வகிக் க்கள் அமைகின்றன. எனினும், இன்று பல் ாரணிகளால் பிறப்புக்களில் பலமாற்றங்கள் ன. இப்பிறப்புக்களை அளவீடுசெய்ய பல ானதும் பொதுவாகப் பலராலும் பாவிக்கப் e) ஆகும். அட்டவணை 1.2ல் இலங்கையின் ாம் பேரிற்கான மொத்தப் பிறப்பாகும்
.
பிறப்பு வீதம் - 1990)
C. B. R.
28.6 26.3 28.6 30.2 3.7 37.1 38 • 6 · · 37.5 37.0 38.2 39.2 40.4 36.9 35.9 36.6 38.9 38.1 36.5 34.3 3, 1 28.7 28.4 24.3 20.0
roblems of Sri Lanka.
2 -

Page 15
அட்டவணை 1.2 ன்படி 1871ல் இ இருந்துள்ளது. இதன் பின் ப்டிப்படியா: ஆகக் காணப்பட்டு, பின் படிப்படியாகக் கின்றது. ஆரம்ப காலங்களில் பிறப்புக்க இறப்புவீதம் உயர்வாக இருந்தமை, கருச் குறைவு, எதிர்பார்க்கும் ஆயுட் காலம் காரணங்களாகும். 1945ன் பின் ஏற்படுத்த நடவடிக்கைகள் காரணமாக மக்கள் வாழ் யினால் 1945ன் பின் பிறப்பு வீதத்தில், சிறி 1960களில் ஆரம்பிக்கப்பட்ட குடும்பத்திட் பிறப்புவீதம் படிப்பீடியாக குறைந்து வந்து
பிறப்புகளின் போக்கைக் காட்டக்கூ 65th (Total Fertility Rate - T. F.R.) -g, g5. குரிய காலத்தைக் கடந்து முடிக்கும் போ குழந்தைகளின் எண்ணிக்கை எனச் சுருக்க 4. 93 ஆகவும், 1971ல் 4. 1ஆகவும், 1981ல் வீழ்ச்சியடைந்துள்ளது. 1963லிருந்து 1990 இருந்து 2.6ஆக வீழ்ச்சியடைந்தமை குறிட
இவ்வாறு பிறப்புக்களில் வீழ்ச்சி ஏ யான தாக்கத்தையேற்படுத்தச் சில மறை இவ்வாறான காரணிகளில் குடும்பக்கட்டுட தள்ளிப்போதல், வயதமைப்பில் (Age Strt யறிவு வீதம் உயருதல், பெண்கள் தொ வீதம் உயருதல், மக்களது . வாழ்க்கைத் காரணங்களாகக் கூறலாம். இவற்றைச் ச
1.1 குடும்பத்திட்ட கட்டுப்பாட்டு நடவடிக்ை
இலங்கையில் 1950களின் ஆரம்ப க திட்டமிடல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் அமுல்படுத்தப்பட்டதுடன் மகப்பேற்று, ! வற்றுடன் இணைக்கப்பட்டு செயற்படுத்த
இலங்கையில் அரச, மற்றும் அர திட்டமிடல் நடவடிக்கைகளில் ஈடுபடுகி: Planning Association of Sri Lanka, S. Voluntary Surgical Contraceptives, P (Community Development Centre) Guit. கிலும் சுமார் 118 வைத்திய நிலையங் மூலமும், குடும்பக் கட்டுப்பாட்டு நடவட இதன் பொருட்டு இலவச ஆலோசனைகள் ளப்பட்டு வருகின்றன.
மக்களைக் குடும்பத்திட்ட நடவடி Pocket Allowance Gustairsp p5L-619-56)5 திருமணமான குடும்பங்களில் ஏதாவது ஒ

ருந்து 1885 வரை C. B. R. 28.6 ஆகவே உயர்ந்து, 1930ல் மிக உயர்வாக 40.4
குறைந்து, 1990ல் 20 ஆகக் காணப்படு ள் குறைவாகவிருந்தமைக்கு பிரசவத்தாய் சிதைவு உயர்வாக இருந்தமை, போஷாக்கு குறைவாகவிருந்தமை போன்றன பிரதான ப்பட்ட சில சமூக பொருளாதார அபிவிருத்தி க்கைத் தரத்தில் ஏற்பட்ட சில அபிவிருத்தி தளவு உயர்ச்சியை அவதானிக்க முடிகின்றது. - நடவடிக்கைகளின் விளைவாக 1970களில் ள்ளமையையும் இங்கு குறிப்பிடல் வேண்டும்.
டிய மற்றுமோர் குறிகாட்டி மொத்தக்கருவள ம். இதனை ஒரு பெண் குழந்தைப் பேற்றுக் து இறுதியாக அவளிற்கு உயிருடன் பிறந்த 5மாகக் கூறலாம். இலங்கையில் 1963ல் T.F.R. 3.4 ஆகவும் குறைவடைந்து, 1990ல் 2.6 ஆக ற்கிடைப்பட்ட 27 வருடத்தினுள் இது 4.9ல் ப்பிடத்தக்க மாற்றமேயாகும்.
ம்படப் பல காரணிகள் உள்ளன. சில நேரடி றமுகமாகப் பிறப்பைக் கட்டுப்படுத்துகின்றன. ப்பாட்டு நடவடிக்கைகள், திருமணவயது பின் 1cture) ஏற்படும் மாற்றம், பெண்களின் கல்வி ாழில் நடவடிக்கைகளில் சேர்ந்து கொள்ளும் தர உயர்வு, நகராக்கம் போன்றவற்றைக் ற்றுத் தனித்தனியே நோக்கலாம்.
nsas sír: (Family Planning Programmes)
ாலப் பகுதிகளிலேயே குடும்பக் கட்டுப்பாட்டு பட்டன. எனினும் 1965ல் இது தேசிய ரீதியாக 2ற்றும் குழந்தைகட்கான சுகாதாரம் என்பன }ப்படத் தொடங்கியது. •
ச சார்பற்ற நிறுவனங்கள் பலவும். குடும்பத் ir pr. gaibņ6ir F. P. A. S. L. (Family
L. A. V. S. C. (Sri Lanka Association for S.L. (Population Service Lanka), C. D. C. ன்றன குறிப்பிடத்தக்கவை ஆகும். நாடெங் கள் மூலமும், மாவட்ட வைத்தியசாலைகள் டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ா, இலவச சேவைகள் போன்றன மேற்கொள்
க்கைகளில் ஊக்குவிக்கும் முகமாக Out of களும் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் ரு முற்ையையேனும் பின்பற்றி குடும்பத்திட்ட
است. 13

Page 16
மிடலைச் செய்பவர்கள் 1975ல் 32 வீதம 61.7 வீதமாகவும் காணப்படுகின்றனர். அ குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை புதித (New Acceptors) அவதானிக்கலாம்.
Jo LSASS6 UT 1.3
திருமணமானவர்களில் குடு
ஏதாவது ஒரு முறையையே
a புதிதா ஆண்டு முறை கொ
1966 1967 1968 1969 1970 1971 1972 1973 1974 1980 1985 1987 1989 1990 99.
Source: Fertility decline
Population Statis
அட்டவணை 1.3ன் மூலம் குடும்ப பின்பற்றுவோர் தொகை 1980 வரை அதிக காணப்படினும் மீண்டும் 1990ல் அதிகரி 1980ல் ஏற்றுக்கொண்டோர் வீதம் மிக உ நிரந்தர தடுப்புமுறையான Steralization த மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்கா மான குடும்பக்கட்டுப்பாட்டு முறையாகவிரு படுத்துகின்றது. 1975ல் இருந்து 1987 வை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பிற்பற் 61.7 வீதமாக அதிகரித்துள்ளது. இது நு இலங்கை யைப் பொறுத்தளவில் இது குறி
1.2 S(5uD600T shugs (Age at marriage)
திருமண வயதில் ஏற்படும் மாற்றம் யிக்கின்றது. இக்காலத்தில் மகப்பேற்றுக்கு அடங்குகின்றது. திருமணவயது பின்தள்ளி அமைகின்றது. உதாரணமாக 15 வயதில் தி குரிய காலமானது 30 வருடங்களாகவிருக் பின்போடப்பட்டு 25 வயதில் அவர் மணம்

ாகவும், 1982ல் 54.9 வீதமாகவும், 1987ல் ட்டவணை 1,3ல் 1966ல் இருந்து 1991 வரை ாக ஏற்றுக்கொண்டோர் எண்ணிக்கையை
ம்பக்கட்டுப்பாட்டு முறைகளில் னும் ஏற்றுக்கொண்டவர்கள்
க குடும்பக்கட்டுப்பாட்டு யைப் பின்பற்றச் சேர்ந்து ண்டோர் எண்ணிக்கை
15,000 36,695 48, 164 54,534 55,269 49,324 71,044 95,931 120,000 171,000 138,967 135,416 12, 138 144,648 150,718
需 Sri Lanka. tiçs of Sri Lanka.
க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஏற்றுப் ரித்து, பின் 1985, 1987, 1989களில் குறைந்து க்கத் தொடங்கியிருப்பதனைக் காணலாம். யர்வாக இருந்துள்ளது. ஆரம்பத்திலிருந்த்ே 5 IT Gör (Vasectomy or Tubectomy) 91 GG, GMT ani லிக தடுப்புமுறைகளை விட இது நிரந்தர ப்பதால் அதிகளவில் பிறப்புக்களைக் கட்டுப் ரயான 12 வருடகாலப் பகுதிக்குள் குடும்பக். றுவோர் எண்ணிக்கை 32 வீதத்திலிருந்து ாற்றுவீதத்தில் 92.81 வீத அதிகரிப்பாகும்
பிடத்தக்களவு வெற்றியேயாகும்
குடும்ப வாழ்வில் ஈடுபடும் காலத்தை நிர்ண ய காலமான 15-45 வயதுவரையான காலம் போடப்படும்போது இக்காலம். குறுகியதாக ருமணமாகும் பெண் ஒருவரது மகப்பேற்றுக் நம் (45-15= 30). ஆனால், திருமணவயது
செய்வாராயின் அவரது மகப்பேற்றுக்குரிய
4 -

Page 17
காலப்பகுதி 20 வருடங்கள் (45-25=20) ப கட்டுப்படுத்துகின்றது. திருமண வயதைக் (Singulate mean age at marriage) இலங் டமும் எவ்வாறு அதிகரித்துச் சென்றுள்ளt கலாம்.
அட்டவணை 1.4
இலங்கையில் சராச
( 1901
ஆண்டு ஆ
1901 24 1911 26 1921 27 1946 27 1953 27 1963 27 197 28 98. 27 1987 YOM
Source: Fertility de
x• அட்டவணை 1.4ன்படி 1901ல் 24, SMAM 1981âp. 27.9 6 உயர்த்துள்ளது. வருடங்கள் ஆகும். பெண்களிற்கான SMAM 24.4 ஆகவுயர்ந்துள்ளது. 71 வருடகாலத்தி களின் SMAMன் அதிகரிப்பைவிட் இரட்டிப்ட டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றின்படி p75ig5fu 5rajů fej5)(Reproductive age spa 1981ல் இது 45-24.4= 20.6 வருடங்களர்க வயதில் ஏற்பட்டுள்ள இவ்வதிகரிப்பானது மன படுத்துகின்றது.
1.3 பெண்களின் தொழில் படை பங்ெ
ticipation) பெண்கள் தொழில் புரிவத்ால் பெ போவது மட்டுமன்றி, மணம்ான பெண்க பெற்றுக்கொள்வதிலும் காலதாமதத்தை ஏ பிறப்புக் காரணமாக தொழிலுக்குச் சென்று வற்றிலுள்ள சிக்கல்கள் கார்ணமாகவும் தெ றைத் தள்ளிப் போடுகின்றனர். மேலும் த எண்ணிக்கையையும் (Desire Family Size) கொள்ளுகின்றனர். குடும்பத்தில் குழந்தைட் களைக் கொண்டிருக்கும் குடும்பங்களில் இத் ஏற்படுத்துவதில்லை. எனினும், ஒரளவேனும் 'யைப் பொறுத்தவரையில் பெண் தொழில் 6 பிறப்பு வீதத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தி வரு
15 أسيس

ட்டுமேயாகும். இது குழந்தைப் பிறப்பைக் கணிப்பதற்குரிய குறிகாட்டிS.M.A.M.ஆகும். கையில் S.M.A.M. ஆண், பெண் இருபாலாரி தன்பதனை அட்டவணை 1.4ல் அவதானிக்
ர்த் திருமண வயது - 1987 )
S.M.A.M.
6
ெ
6
cline in Sri Lanka.
6 வருடங்களாக இருந்த ஆண்களிற்கான 71 வருட காலத்திற்கான அதிகரிப்பு 3.3 1901ல் 18.3 வருடங்களாகவிருந்து 1981ல் ல் அதிகரிப்பு 6.1 வருடங்களாகும். ஆண் அதிகரிப்பு பெண்களின் SMAMல் ஏற்பட் 1901ம் ஆண்டு காலப்பகுதியில் மகப்பேற் n) 45-18.3=26.7 வருடங்களாகும். ஆனால், மட்டுமே காணப்படுகின்றது. இத்திருமண றமுகமாக இலங்கையின் பிறப்பைக் கட்டுப்
56ûq (Female Labour Force : Par :
ண்களிற்கான திருமண வயது பின்தள்ளிப் ள் தொழில் நிமித்தமாக குழந்தையைப் ற்படுத்த வேண்டியிருக்கின்றது. குழந்தைப் வருதல், தொழிலில் ஈடுபடுதல் போன்ற ாழில்பார்க்கும் பெண்கள் குழந்தைப் பேற் நாம் கொள்ள வேண்டிய குழந்தைகளின் ஒன்று அல்லது இரண்டாகக் குறைத்துக் ப் பராமரிப்பிற்காக வீட்டு உதவியாளர் தகைய பிரச்சினை பெருமளவு தாக்கத்தை
பாதிப்பு காணப்படுகின்றது. இலங்கை வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதால் இது நகின்றது.

Page 18
1.4 assissauga asib (Literacy Rate '. கல்வியறிவு வீதத்திற்கும், பிறப்பு (Negative Correlation) உண்டு. கல்வியறிவு கரிப்பால் ஏற்படும் பிரச்சினைகள் அதன் த இக் கொள்வதுடன், குடும்பக் கட்டுப்பாட்டு பெற்றுக்கொள்கின்றனர். அட்டவணை 1.5 பட்டு வரும் விருத்தியைக் காட்டுகின்றது.
இலங்கையில் க
( 1881 -
oL6)6.
ஆண்டு ஆண்
1881 29 1921 , S6, 1946 70. 1953 75, 1963 79. 1971 85. 1981 91.
Source: Fertility De Pic Publical
அட்டவணை 1.5ன்படி 1881ல் இரு பகுதியில் ஆண்களிற்சான கல்வியறிவு வீத பெண்களின் கல்வியறிவு வீதமானது 3.1 துள்ளது. இக்கல்வியறிவு வீத வளர்ச்சியா காரணமாகின்றது.
1.5 வாழ்க்கைத் தர உயர்வு (Increasi சமூக, பொருளாதார ரீதியாக மக்க குடும்பத்தில் குறைவான குழந்தைகளைக் விரும்புகின்றனர். உதாரணமாக கல்வியறி உள்ளோர் சிறிய குடும் பங்களைக் கொண் மக்கள் வாழ்க்கைத் தரத்தில் உயர்வு ஏற் கின்றனர். இவற்றுடன் நச ராக்கம் (Urb வாழ்க்கைத் தரத்தில் உயர்வு ஏற்படுவது பற்றாக்குறை, செலவினங்கள் என்பன என்பவரது கொள்கையின்படி மேலதிக யானது, அம் மேலதிக குழந்தைக்கான ச்ெ திக குழந்தை விரும்பப்படுகின்றது.
"If the satisfactions to be desired that are involved, where ''Costs' (H. Leibenstein, Economic. Backwa

வீதத்திற்கும் எதிர்மறையான தொடர்பு அதிகரிக்க அதிகரிக்க குடித்தொகை அதி
ாக்கங்கள் பற்றி மக்கள் அதிகளவில் விளங் முறைகள் பற்றியும் தெளிவான அறிவைப் இலங்கையில் கல்வியறிவு வீதத்தில் ஏற்
ல்வியறிவு வீதம் - 1981 )
)6RT 1.5
கல்வியறிவு வீதம்
கள் பெண்கள்
8. 3. 4. 2.2 43.8 9 S3.6 3 63.2 ,6 70.9 1 83.2
cline in Sri Lanka tions 1990, 1992.
நந்து 1981 வரையிலான 100 வருடகாலப் ம் 29.8 வீதத்திலிருந்து 91.1 வீதமாகவும், வீதத்திலிருந்து 83.2 வீதம்ாகவும் உயர்ந் னது பிறப்பு வீத வீழ்ச்சிக்கு மறைமுகமாகக்
ng Physical Quality of Life) 1ளின் வாழ்க்கைத் தரம் உயரும்போது தம் கொண்ட சிறிய குடும்பத்தையே மக்கள் வு விருத்தியடைந்த ஐரோப்பிய நாடுகளில் டிருப்பதனைக் காணலாம். இலங்கையிலும் படும்போது சிறிய குடும்பத்தையே விரும்பு nization) ஏற்படும்போதும் குடும்பங்களின் ண்டு. மேலும் நகர வாழ்வில் உள்ள இடப் 3. Tp 600 Le7 g 6), b Leibenstein (1957, 1974) குழந்தையினால் கிடைக்கப்பெறும் திருப்தி, லவினத்தைவிட அதிகமாக இருப்பின் மேல
from that child are greater the 'Costs' and to be interpreted rather boldly" 'dness and Economic Growth)
م۔ سہ 6

Page 19
இலங்கையில் நகர வாழ்க்கைச் செ Leibenstein ன் கொள்ட்ைபடி மேலதிக ( திருப்தி குறைவானதாகவேயிருக்கும். இலங் வாழ்ந்து வந்தனர். இது 1971ல் 22.4 வீத வீதத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்குப்
முடிவுரை
இவ்வகையில் தொகுத்து நோக்கும் ஆண்டு காலப்பகுதிகளில் ஒரளவு குறைவாக அதிகரித்து 1925களில் மிக உயர்வாகவும், ! டைந்து இன்று தென் ஆசிய நாடுகளில் மி நாடாகக் காணப்படுகின்றது. தற்போது அ வடிக்கைகளாலும், கல்வியறிவு விருத்தியில் போன்றவற்றாலும் எதிர்காலத்திலும் இலா வீழ்ச்சி ஏற்படும். U.N. D.P.ன் கணிப்பின் தொகை 19 மில்லியனாக மட்டுமே இருக்கு சனத்தொகை அதிகரிப்பு வீதத்தில் ஏற்பட் சராசரி அதிகரிப்பானது 2.8 வீதமாகவும், மாகவும் காணப்பட்டது. இது 1989ல் 1.3 மதிப்பீட்டின்படி 1.1 ஆகக்குறைந்துள்ளது. யினாலேயே பெரிதும் ஏற்பட்டுள்ளது என இலங்கை ஒர் விருத்தியடைந்து வரு அதிகரிப்பானது மூலதன ஆக்கத்தைக் கட தடைசெய்யும். வேகமான சனத்தொகை அ அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்படும். பிறப்புக்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பொ இன்னொருவகையில் நோக்கும்போது சனத் என்பதும் குறிப்பிடக்கூடியதே. எனினும் பாகப் பயன்படுத்தி உச்சப் பயனைப் பெ இல்லாதவிடத்து வேகமாக அதிகரித்து வரு தொகையை அதிகரிக்கச் செய்வதுடன், ம எனவே, இலங்கையின் தற்போதைய பெ வேகமான குடித்தொகை அதிகரிப்பு பொருளாதார அபிவிருத்திக்கு நன்மையே
References:
1. Census of Population, 1963, 1971, 2. Country Monograph Series No 4,
3. Fertility Decline in Sri Lanka
4. Population Problems of Sri Lanka,
5. Populption Statistics of Sri Lanka 6. Sri Lanka Demograpic and Health

லவினங்களுடன் ஒப்பிடும்போது மேற்படி 5ழந்தைப் பிறப்பு பெற்றோரிற்கு தரும் கையில் 1871ல் 10.8 வீத மக்கள் நகரத்தில் மாக உயர்ந்துள்ளது. இவ்வதிகரிப்பு பிறப்பு
போது இலங்கையின் பிறப்புவீதம் 1871ம் வும், பின்னர் 1885 களின் பின் படிப்படியாக மீண்டும் 1931ன்பின் படிப்படியாகக் குறைவ கக்குறைவான பிறப்பு வீதத்தைக் கொண்ட முல்படுத்தப்பட்டு வரும் குடும்பத்திட்ட நட ஏற்பட்டு வரும் முன்னேற்றம், நகராக்கம் வ்கைச் சனத்தொகையின் பிறப்பு வீதத்தில் படி 2000ம் ஆண்டளவில் இலங்கைச் சனத் நம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. காரணம் டுள்ள வீழ்ச்சியே ஆகும். 1953ல் ஆண்டுச் 1963ல் 2.7 வீதமாகவும், 1971ல் 2.2 வீத வீதமாக வீழ்ச்சியடைந்து 1990ன் தற்காலிக இது பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி லாம். iம் நாடாக இருப்பதனால் சனத்தொகை ட்டுப்படுத்தும்; வாழ்க்கைத்தர உயர்வைத் திகரிப்பு நுகர்செலவுகளை அதிகரிப்பதால் இவ்வகையில் நோக்கும்போது இலங்கையின் ருளாதார ரீதியாக சாதகமானதேயாகும். தொகையே ஒரு நாட்டின் சிறந்த வளம் வளர்முக நாடுகளில் அவ்வளத்தைச் சிறப் றக்கூடிய வசதி வாய்ப்புகள் போதியளவு தம் சனத்தொகையானது தங்கிவாழ்வோர் க்கள் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும்: ாருளாதார நிலையைப் பொறுத்தவரையில் கட்டுப்படுத்தப்படுகின்றமை நாட்டின் ஆகும்.
1981 Department of Census and Statistics. Population of Sri Lanka 1976, ESCAP, Bangok, Thailand. A Survey of Population Policies, 1980, Nanayakkara. V. K. Sri Lanka Institute of Development Administration. Proceedings of Seminar, 1976, D.T.R.U. University of Sri Lanka, Colombo Campus 1990, 1992 Population Information Centre. Survey, 1987 Department of Census and Sta 1stics.
7 അ

Page 20
*மத்தொழிலானது அதிக மூலத னத்தை இடும்போது குறைந்த வருவாயே கி  ைட க் கி ன் ற து என்ற கருத்தே உலகம் பூராவும் நிலவுகின்றது. குறிப் பாக உணவு உற்பத்தி இதனால் பாதிக் கப்படுகின்றது.இதனால்தான் அமெரிக்கா, ஐரோப்பிய பொருளாதார ஆணைக்குழு, ஜப்பான், அவுஸ்ரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உணவு உற்பத்திக் காக அதிகளவில் மான்யம் வழங்கப்படு கின்றது. ஜப்பான் தவிர்ந்த இந்த நாடு கள் உணவுத் தானியங்களின் பாரிய ஏற்று மதி நாடுகளாக விளங்குகின்றன.
ஆசியாவில் உணவு உற்பத்தியானது சிறிய அளவிலான பண்ணையினாலும், மூலதனத்திற்கு மட்டுப்படுத்தப் பட் ட அடைதலினாலும் சித்தரிக்கப்படுகின்றது.
பெரும்பாலான அபிவிருத்தி அடைந்த நாடுகள் உள்ளீடுகள் (விசேடமாக உரம் மற்றும் கடன் மூலதனம்) மற்றும் விலை கள் மீது மான்யங்களைக் கொண்டுள் ளன. உணவு உற்பத்திக்காக இந்தோனி ஷியா, மலேசியா, இந்தியா ஆகிய நாடு கள் தொடர்ந்தும் உள்ளிடுகளின் மானி யத்தை வழங்கும் அதே வேளை, தாய் லாந்து குறிப்பான கமக்காரர் உதவி நிதியத்தை கொண்டுள்ளது. இந்நிதியம் மூலம் நெல் கமக்காரர்களுக்கு ஸ்திர மான விலையைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் ஈடுபடுகின்றது. மலேசியா வின் கமத் தொழில் வங்கி 2%-6% வட் டியில் கடன் வழங்குகின்றது.
விலை மான்யங்கள் இரு அந்தங்க ளில் பயனுள்ளதாக தொழிற்படுகின்றது. ஒன்று பண்ணை மட்டத்தில் ஒரு அடி மட்ட விலை. மற்றது சில்லறை மட்டத் தில் உச்ச விலை ஆகக்குறைந்த அதார விலையை விட சந்தை விலை வீழ்ச்சி
கமத்தொழிலுக்கு

அரசாங்க ஆதரவு
அடையும் என்ற பயம் ஏற்படும் போதெல் லாம் இந்தியாவில் உள்ள தேசிய கமத் தொழில் கூட்டுறவு சந்தைப்படுத்தல் சம்மேளனம் சந்தை ஆதரவு தொழிற்பாடு களை மேற்கொள்கின்றது. இதற்கு மேல திகமாக இந்தியாவானது பண்ட குறிப் பான தலையீட்டினை பண்டச் சபை கள் மற்றும் கூட்டுறவுசங்கங்கள் ஊடாக மேற்கொள்கின்றது.
எமது நெற் சந்தைப்படுத்தும் சடை யைப் போல் தொழிற்படும் இந்திய உண வுக் கூட்டுத் தாபனம் குறிப்பிட த் த க் க தொகையளவு அரிசியையும், கோதுமை யையும் கொள்வனவு செய்கிறது. இந்திய பருத்தி கூட்டுத்தாபனமானது பருத்திக் கான பண்ணை விலைக்கு ஆதரவு வழங்கு கின்றது. இதே நேரம் தேயிலைச்சபை, கோப்பிச்சபை மற்றும் வாசனைச் சரக்கு கள் சபை ஆகியன தமக்குரிய பண்டங் களின் சந்தைப்படுத்தலைக் கட்டுப்படுத்து கின்றன. இதேபோல, தேசிய பாற். பண்ணை அபிவிருத்தி சபையானது இலங்கை யி ல் உள் ள எண் ணெ, ய், கொழுப்புகள் கூட்டுத்தாபனத்தைப் போலவே மாட்டுத் தீவனத்திற்கு வழங்கு வ தற் கா க எண் ணெய் விதை யின் விலையை ஸ்தீரமாக இருப்பதை உறுதி செய்வதற்காக கணிசமான அளவு விதை யைக் கொள்வனவு செய்கிறது.
உற்பத்தியின் விற்பனைக்கு வசதி அளிப்பதற்கும், கமக்காரருக்கும், வர்த்த கர்களுக்கும் இடையில் கொடுக்கல் வாங் கலை கட்டுப்படுத்துவதற்கும் கமத் தொழில் உற்பத்திக்கான சந்தைப்படுத் தல் இடத்தையும் இந்தியா வழங்கு கின்றது. ஒவ்வொரு பண்டத்திற்குமான ஆகக்குறைந்த விலையானது விதைத் தலுக்கு முன் அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் போட்டிக்குரிய பயிர்களின் லாபத்
سیسی۔ &

Page 21
தன்மையை கமக்காரர்கள் முன்கூட்டியே அறிவதற்கு வசதியாக உள்ளது.
விலை ஆதரவு திட்டத்தின் கீழ் பிலிப்பைன்ஸ் தேசிய உணவு அதிகார சபை பண்டங்களைக் கொள்வனவு செய் வதற்கான பொறுப்பினைக் கொண்டுள் ளது.
1991ஆம் ஆண்டுவரை இலங்கையில் நெற் சந்தைப்படுத்தும் சபையானது உத்தரவாத விலையில் அல்லது அதற்கு மேல் நெல்லுக்கான திறந்த சந்தை விலையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக் கைகளை எடுத்தது. ஆனால், 1991இல் உத்தரவாத விலை புசலுக்கு 136 ரூபா வாக அதிகரித்த போது இச்சபையின் தொழிற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் கமக்காரர்களுக்கு தமது உற் பத்திகளுக்கு சிறந்த விலை கிடைக்க வில்லை. அத்துடன் பாவனையாளர்களுக் கும் சாதாரண விலையில் அரிசி கிடைக்க வில்லை. நெல்லின் உற்பத்தியின் அதிகரிப்பிலும், பாவனையாளர்களுக் கான ஸ்திர விலையை உறுதிப்படுத்துவ திலும் சிறந்ததொரு பங்கினை நெற் சந்தைப்படுத்தும் சபை வகிப்பதற்கு அதற்கு தேவையான மூலதனம் வழங் கப்படவேண்டும். அறுவடையின் போது நெல்லைக் கொள்வனவு செய்வதற்கும், குறைந்த விநியோக காலத்தின்போது வழங்குவதற்கும் செ யற் றி ற னா ன தொழில்நுட்பமொன்றை மேற்கொண் டால், பாவனையாளர் இறக்குமதி அரி சியைவிட மலிவான உள்ளூர் அரிசியைப் பெறக்கூடியதாகவிருக்கும்.
முன்னரைவிட தற்போது நெல் விவ
சாயிகள் அதிகளவு நிதிக்கஷ்டத்தினால் பாதிப்படைந்துள்ளதுடன், அறுவடை முடிவடைந்தவுடனேயே நெல்லை விற்க வேண்டிய இக்கட்டான நிலையில் விளங்கு கிறார்கள். இதன் தொடர்ச்சியாக நெல் லின் விலை வீழ்ச்சி அடைவதுடன், நெல் லில் இருந்து வருமானமும் குறைவடை கின்றது. வருமானம் வீழ்ச்சி அடையும் போது உள்ளீடுகளின் குறிப்பாக உரத் தின் பாவனை குறைவடைவதுடன், நெல் உற்பத்தி வீழ்ச்சி அடைகின்றது. உரம்

மீதான மான்யம் விலக்கிக்கொள்ளப்பட் டது மட்டுமன்றி, அதற்கு இறக்குமதி தீர்வையும் விதி க் க ப் பட வு ஸ் ளது. இதனால் உரத்தின் விலை மேலும் உயர் வடையவுள்ளது.
அண்மைய வருடங்களில் பெருந் தோட்டத்துறைக்கு அரசாங்கம் நேரடி யாகவே மான்யங்களை வழங்குகின்றது. ஆனால், இந்நிலை உணவு உற்பத்தியைப் பொறுத்தளவில் இல்லை என்றே கூற வேண்டும்.இலங்கையில் நெல் உற்பத்தியின் பெறுமதியானது டொலரின்படி பார்த் தால் தேயிலையின் ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் மொத்த அந்நிய செலா வணியை விட அதிகமாகும். நெல் உற் பத்தியில் ஏதாவது வீழ்ச்சி ஏற்பட்டால் எமது கொடுப்பனவு மீதியில் மேலும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
தொழில்நுட்ப ரீதியிலும் (ஆராய்ச்சி, விரிவாக்க சேவைகள், விதை உற்பத்தி மீதான மூலதனம் மூலம்), நிதி ரீதியிலும் (கடன் மற்றும் உரத்தை அடைதல் செயற்றிறனான உத்தரவாத ஆகக் குறைந்த விலை) நெல் உற்பத்திக்கான உள்ளக அமைப்பின் மீள் தாபித்தலிலேயே உடனடி மற்றும் நீண்ட கால தீர்வு தங்கி யுள்ளது. எனவே, இது சம்பந்தமாக நாம் உடனடியாக தீர்வு நடவடிக்கை களை எடுக்காவிட்டால் நாம் கடும் பிரச் சனைகளை எதிர்நோக்கவேண்டி வரும். ஏனெனில்இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்த தசாப்தத்தின் இறுதியில் உணவுத் தானிய பற்றாக்குறைக்கு முகம் கொடுக்க வேண் டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது. அதே வேளை, சர்வதேச ரீதியில் விற்கப்படும் அரிசியின் மொத்த தொகையளவு மிகவும் குறைவாகும். அதாவது இது இந்தியாவின் பாவனையில் சுமார் 10 சதவீதமாகும்.
உணவுப் பயிர் சந்தைப்படுத்தலுக் கான மீள் நிதிப்படுத்தல் திட்டத்தை மதிப்புரை செய்வதும் அவசியமாகும். ஏனெனில் அதைப் பராமரிப்பதற்கும், விரிவாக்குவதற்குமான செலவினமானது அதை வாபஸ் பெறுவதற்கு நாடு கொடுப் பனவு செய்ய வேண்டியுள்ள விலையின் ஒரு பகுதியாக அது விளங்கும்.
ஆதாரம்: உணவு பண்ட செய்தி இதழ்
nയു

Page 22
யாழ். மாவட்ட உருை
ges நாடுகளில் கோதுமை முதலான காபோவைதரேற்றுத் தேவையை ஈடு செய்யும்.தானியங்களுக்கான ஒரு பிரதான பதிலீடாக உருளைக்கிழங்கு விளங்குகின் றது. இலங்கையில் ’அத்தகைய முக்கியத் துவம் பெறாத போதும் தானியங்களுக்கு அடுத்த இடத்தைப் பெறும் உடஉணவுப் பயிர்களுள் ஒன்றாக உருளைக்கிழங்கு அமைகின்றது.
1948ஆம் ஆண்டில் விவசாயத் திணைக் களம் பரீட்சார்த்த ரீதியில் உருளைக் கிழங்குச் செய்கையை ஆரம்பித்ததாயி னும், வெற்றிகரமான பயிர்ச்செய்கை, 1957களில் பிரதானமாக நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டது. நாளடைவில் யாழ்ப் பாண மாவட்டக்தில் உருளைக்கிழங்கு செய்கைக்கு வாய்ப்பான காரணிகள் இருந் தமையினால் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப் பாக இம்மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கை மேற்கொள்ளப்படுகின்ற பெரும் போக காலத்தில் இரவு வெப்பநிலை 22 - 24° செ ன் ரிகிறேட்டுகளுக்கிடையில் உள்ளமை இதற்கு வாய்ப்பான பிரதான காரணியாகும். டகல் வெப்பநிலை உயர் வாகக் காணப்படுகின்றமையானது ஒளித் தொகுப்பின் மூலம் பெருமளவு உணவு தொகுக்கப்படுகின்ற மைக்கும், இவ்வாறு தொகுக்கப்பட்ட உணவுப்பொருள் முகிழ் களில் தேக்கப்படுவதற்கு குறைவான இரவு வெப்பநிலையும் காரணமாகின்றன. மேலும், இம் மாவட்டத்தில் இக்காலப் பகுதியில் பெறப்படுகின்ற 1200 மி.மீ. வரையிலான சராசரி மழை வீழ்ச்சி, இம் மாவட்டத்தில் பரம்பியுள்ள செம்மஞ்சள் லற்ற சோல், மணற்பாங்கான மண் வகை கள் ஆகியன இப்பயிர்ச்செய்கைக்கு சாதக மாக அமைகின்றன. தவிர கார்த்திகை, மார்கழி மாதங்களில் கிடைக்கும் பெரு மளவிலான மழைவீழ்ச்சி காரணமாக மற்ற உப உணவுப் பயிர்கள் இக்காலப் பகுதி யைத் தவிர்த்தே செய்கை பண்ணப்படு வது வழமையாகும். எனவே, இக்காலப் பகுதியில் உருளைக் கிழங்கு பயிரிடுவதன் மூலம் குறுகிய காலத்து ள் பெருமளவு வுரு வாயை பெறக்கூடியதாக உள்ளது.

ளக்கிழங்கு உற்பத்தி
1970ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், ஒரு சில வருடங்கள் தவிர, சராசரியாக இலங் கையில் மொத்த உருளைக் கிழங்கு உற் பத்தியில் 20% வரையிலானது யாழ் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றது. இது 1974/75 பெரும்போக காலத்தில் 40 சத வீதமாக காணப்பட்டது. எனினும், 84/85 பெரும்போகத்தில் இருந்து நிலப்பரப்பள் விலும், உற்பத்தி அளவிலும் பெருமளவு வீழ்ச்சி ஏற்படும் அதே வேளையில் உற்பத்திச் செலவு அதிகரித்துச் செல்லு கின்றமையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளன. இதற்கு:
1. நாட்டில் தோன்றியுள்ள அமைதி
யற்ற சூழ்நிலை, 2. விதைக் கிழங்கு விநியோகத்தில்
ஏற்பட்ட பாதிப்புக்கள், 3. உருளைக்கிழங்கு செய்கையைத்
தாக்கிய நோய்கள், 4. பொருத்தமற்ற காலப் பகுதி களில் பயிரிட்டமை போன்றவை. பிரதான சில காரணங்களாகும்.
செ. ரூபசிங்கம் விரிவுரையாளர் விவசாய பாட்சாலை, வவுனியா.
விதைக்கிழங்கு விநியோகத்தின் போது மீண்டும் மீண்டும் பழையவர்களே பதிவு செ ய் யப் பட்ட மையையும், புதியவர் களுக்கு விநியோகிக்காமையும் புதிதாக மேலதிக பயிர்ச்செய்கை விஸ்தீரணம் பெறப்படாமைக்கான காரணங்களாகும்.
யாழ். மா வட்ட உருளைக்கிழங்கு செய்கை புத்தூர், உரும்பிராய், நல்லூர், உடுவில் கமநல சேவை நிலையப் பிரிவு களிலேயே பெரும்பாலும் மேற்கொள்ளப் படுகின்றது. இவற்றினுள்ளும் புக் தூர், உரும்பிராய் பிரிவுகளிலேயே 80 சத வீத உருளைக்கிழங்கு செ ய்  ைக மேற் கொள்ளப்படுகின்றது. புலோலி, சாவகச் சேரி முதலான பகுதிகளில் செய்கையை விஸ்தரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. யாழ். மாவட்ட விவசாயிகள் உருளைக் கிழங்கு செய்கையில் அனுபவம் மிக்கவர்
20 -

Page 23
களும், வினைத்திறனானவர்களும் ஆவர். பெரும்பாலான உருளைக்கிழங்கு செய்கை யாளர்கள் 18 வயதைக் கடந்தவர்களாக வும், எட்டாம் வகுப்பு வரை படித்தவர் களாகவும் உள்ள  ைம ஆய்வொன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இத னால் த்ொழில் நுட்ப ரீதியில் உருளைக் கிழங்கு செய்கையை விஸ்தரிப்பதற்கு இவை சாதகமாக காணப்படுகின்றன. இவர்கள் அவ்வப்போது ஏற்படும் மாறுதல் களை அனுசரித்து வெற்றிகரமாக விவ சாய நடவடிக்கைகளை மேற்கொண்டு இலாபமீட்டக்கூடியவர்களாக உள்ளனர். இத்தகைய விவசாயிகள் 6000 வரையில் இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின் றன.
பெரும்பாலான விவசாயிகள் சராசரி யாக 1.22 ஏக்கர் பரப்புடைய ப்யிர்ச் செய்கை நிலத்தை உடையவர்களாக உள் ளனர். இவற்றுள் ஏறத்தாழ 75% ஆனவை சொந்தமானவையாகவும், 25% ஆனவை குத்தகைக்கு எடுத்தவையாகவும் உள்ளன. மேற்படி பயிரிடப்படும் நிலப்பரப்பு அளவு ஒரு சிறந்த பெறுமானத்தை அடையும் வரை நிகர இலாபம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பயிரி ட ப் படும் நிலப்பரப்பு அளவு மிகவும் குறை வாக உள்ளபோது உள்ளீடுகள், ஊழியம் போன்றவை வினைத்திறனாக பயன்படுத் தப்படாது இலாபம் குறையும்.
ஆர்க்கா, டெசிறி. விகாறோ, எக்ஸ் டோஸ், கார்டினல் போன்ற வர்க்கங்கள் யாழ். மாவட்டத்தில் பயிரிடக்கூடியன வாகும். ஆர்க்காவானது இலை, முகிழ் அழுகல் நோய்க்கு எதிர்ப்பியல் உடையது. ஒப்பீட்டளவில் விளைச்சல் கூடியது. எனி னும், பெரும்பாலான நோய்களின் தாக் கம் குறை வ க க் காணப்படுகின்றமை யால், அண்மைக் காலங்களில் விவசாயி களால் டெசிறி பெரிதும் தேர்வு செய்யப் படுகின்றது. எவ்வாறாயினும் நுகர்வோர் விருப்பும் அல்லது சந்தைமானமும் வர்க் கங்களைத் தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதால் மிகவும் அண்மைக் காலங்களில் டெசிறி, விகாறோ என்னும் வர்க்கங்களே பெரிதும் விரும்பப்படுகின் றன.

ஆரம்ப காலங்களில் இலங்கையின் நுகர்வுக்காகவும், ந டு கை ப் பொருள் தேவைக்காகவும் உருளைக்கிழங்கு இறக்கு மதி செய்யப்பட்டு வந்தது. பின்னர் சில ஆண்டுகளில் அந்நியச் செலாவணியை மீதப்படுத்தும் நோக்குடன் நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டது. உருளைக்கிழங்கு உற்பத்திச் செலவில் 50% வரையிலானது நடுகைப்பொருள் கொள்வனவுக்காகும். இறக்குமதி செய்யப்படுகின்ற விதைக் கிழங்கையே பெரும்பாலான விவசாயி கள் விரும்புகின்றனர். ஏனெனில் 35 - 45 மி. மீட்டர்களுக்கிடைப்பட்ட பருமன் கொண்ட கிழங்குகள் 69 சத வீதமாக காணப்படுகின்றமையும், இவற்றை நடும் போது நடுகைப் பொருட் தேவை 1990 கிகி/ஹெ ஆகவும் காணப்படுகின்றமையு மாகும் ஆனால், உள்நாட் டு க் குரிய வற்றை பயன்படுத்தும்போது 35 - 45 மி. மீட்டர்களுக்கு இடை ப் பட்ட பருமன் கொண்ட விதைக்கிழங்குகள் 35% ஆகக் காணப்படுவதுடன், விதைக் கி ழ ங் குத் தேவை 2700 கி.கி/ஹெ ஆக அமைகின் றது. எவ்வாறாயினும் உள்நாட்டுக்கு உரிய வற்றிலும் பார்க்க இறக்குமதி செய்யப்படு கின்றவற்றிலும் நோய்த் தாக்கங்கள் பர வலாக ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட் டுள்ளது. 1989/90 பெரும்போகத்தில் குறிப் பாக மலையக உருளைக்கிழங்கு செய்கை பாதிக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக் கிழங்கு மூலம் பரவிய நெமற்றோ புழுக் களின் தாக்கமே ஆகும். எனவே, குறை ந்த செலவுடன் உள்நாட்டில் விதை உரு ளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படும் போது அவையே சிபார்சு செய்யக்கூடியன வாகும். எனவே, விவசாயிகளின் விருப் பம் இதற்கு முரணானதாகவே காணப்படு
ன்றது.
விதை உருளைக்கிழ கின் தூய்மை யும், உரிய காலப்பகுதியும். விவசாயிகளுக் குக் கிடைக்கின்ற தன்மையும் உருளைக் கிழங்குச் செய்கையைப் பாதிக்கும் பிர தான காரணிகளாகும். யாழ். மாவட்டத் தில் உருளைக்கிழங்கு நடுகைக்கு உகந்த காலப்பகுதி கார்த்திகை மாத நடுப் பகுதி யில் இருந்து மார்கழி மாத நடுப்பகுதி வரையிலானதாகும். இக்காலப்பகுதியில் இருந்து விலகி நடுகை மேற்கொள்ளப்படு மிடத்து விளைச்சல் குறைந்து, இலாபத்

Page 24
தில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டமை பல
சந்தர்ப்பங்களில் அனுபவபூர்வமாக அறி
யப்பட்டுள்ளது. எனவே, விதை உருளைக் கிழங்கின் விநியோகம் உரிய காலப் பகுதி
யுள் மேற்கொள்ளப்பட வேண் டும்.
ஐப்பசி மாத நடுப்பகுதியில் இருந்து விநி
யோகம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இத ற்கு முந்தி மேற்கொள்ளப்படுமிடத்து பல பிரதிகூலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. குளி ரூட்டல் வசதிகள் இன்மையும், இக்காலச் சூழல் வெப்பநிலை 30°சென்டிகிரேட் அள வையைச் சூழ்ந்ததாய் அமைவதும் இதற் கான கார்ணங்களாகும்.
1 பற்றீரிய மெல்லழுகல் பலசந்தர்ப் பங்களில் விதை உருளைக்கிழங் கின் 30% வரையிலான இழப்புக் குக் காரண்மாவதுண்டு. 2. வெப்பநிலை உயர் ந் தள வில் காணப் படுவதனால் முளைகள் உயர்ந்த வீதத்தில் வளர்ந்து, உகந்த காலப்பகுதிக்கு முன்பே நடுகைக்கு ஆயத்தமாகும். இம் முளைகளை அகற்றிப் பேணுவ தாயின் இதற்காக மேலதிக செல் வுண்டாகும். 3 விதைக்கிழங்குகள் சுருங்கி உடற் றொழிலியல் அடிப் படையில் முதிர்ந்தவையாகும். இவை நடு கைக்கு உகந்தவை அல்ல. 4. முகிழ் அந்துக்களின் தாக்கத்தால் 20% வரையிலான இழப்பேற்பட வும் வாய்ப்புண்டு.
மேற்படி துர்ப்பயன்கள் பருவத்துக்கு முந்திய விநியோகத்தாலும், மழைவீழ்ச்சி பெறப்படும் காலம் பயிர்ச் செய்கைக் காலத்தில் இருந்து விலகல் உள்ளீடுகளின் கிடைக்கும் தன்மையில் பிரச்சனைகள் போன்றவை உரிய காலத்துக்கு பிந்திய விநியோகத்தாலும் ஏற்படு வன வா கும். விதைகிழங்குகளின் முளைகொள்ளக்கூடிய தன்மையும், உடற்றொழிலியல் ரீதியில் தரமானவையாகக் காணப்பட வேண்டிய மையும் கருத்திற் கொள்ளப்பட வேண்டி யனவாகும். இவ்வாறான குறித்த காலப் பகுதியுள் மட்டுப்படுத்தப்பட்ட யாழ். மா

வட்ட உருளைக்கிழங்குச் செய்கைய்ானது மலையக் விவசாயிகளின் உருளைக் கிழங்கு விளைச்சல் சந்தையை அடையும் காலப் பகுதியினின்றும் வேறுபடுவதன" ல் உரிய சந்தை வாய்ப்புக்களையும் பெற ஏதுவா கும். மேலும் மலையகக் கிழங்குகளுடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்ட உருளைக் கிழங்குகள் பேணப்படக்கூடிய காலவளவு குறைவானதாகும். எனவே, குறிப்பிட்ட காலப்பகுதியுள் சந்தைப்படுத்தி முடிப்பத னையே விவசாயிகளும் விரும்புவர்.
மேலும், பெரும்பாலான உருளைக் கிழங்குச் செய்கையாளர்கள் நிலப் பண் படுத்தலுக்காக மண்வெட்டிகளையே உப யோகிக்கின்றனர். 75%ற்கு மேற்பட்டவர் கள் சொந்தமாக நீரிறைக்கும் இயந்திரங் கள், தெளிகருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளனர். இப்பண்புகள் உருளைக் கிழங்குச் செய்கைக்கு வாய்ப்பாக அமை வது மட்டுமன்றி இலாபத்தை அதிகரிப்ப தற்கும் காரணமானவை ஆகும். அநேக மான விவசாயிகள் உருளைக்கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்படும் காலப்பகுதி தவிர மற்றைய வேளைகளில் வெங்கா யம், மிளகாய், புகையிலைபோன்ற பணப் பயிர்களையும் மற்றும் உப் உணவுப் பயிர் களையும் செய்கை பண்ணுகின்றனர். இத் தகைய பல்லினத்துவமான பயிர்ச்செய்கை. முறையானது இலாபத்தினளவை அதிகரிக் கும் அதே வேளை, தொடர்ச்சியான உரு ளைக்கிழங்குச் செய்கையினால் ஏற்படக் கூடிய நோய்பீடைத் தாக்கங்களையும் கட் டுப்படுத்த உதவும். சராசரியாக ஏக்கர் ஒன்றினை உருளைக்கிழங்கு உற்பத்திக்கு உட்படுத்துவதன் மூலம் 75 ஆயிரம் ரூபா விலிருந்து ஒரு லட்சம் ரூபா வரையிலான இ லா பத் தை ப் பெற்றுக்கொள்ளலாம். எவ்வாறாயினும் 1989/1990 பெரும் போகத் தின் பின்னர் அடுத்து வந்த இரண்டு போக காலங்கள்லும் யாழ், மாவட்டத்தில் உரு ளைக்கிழங்குச் செய்கை புறக்கணிக்கத் தக் களவிலேயே நடைபெற்றது. ஆயினும், 1992; 1993 பெரும்போக காலத்தில் ஏறத் தாழ 150 ஹெக்டாயர் நிலப்பரப்பில் உரு ளைக்கிழங்குச் செய்கை மேற்கொள்வதற் குத் திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
--سبسے۔ 22

Page 25
நெற்பயிர் பீடைக
நெல் இந் நாட்டின் பிரதான தானியப் பயிராக இருப்பதோடு, ஆகக் கூடுதலான நிலப்பரப்பிலும் விளைவிக் கப்படுகிறது. ஆண்டுதோறும் அதற்கென ஒதுக்கப்படும் நிலத்திலேயே நெல் இடை யறாது செய்கை பண்ணப்படுகிறது. நெற் பயிரை சிறிய கமக்காரர்கள் கூட சிறு அளவில் விளைவித்து வருகிறார்கள். தவிர அதிக விளைச்சலைத் தரவல்ல பல நவீன நெல் இன வகைகளும்விஞ்ஞான ஆராய்ச்சி கள் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய நெல் இனங்கள் நன்கு வளர அதிக உரம் வேண்டப்படுகிறது. அவ் வாறு உரமிடும்போது அவ்வகை நெல் இனங்கள் செழித்து வளர் கின்றன. செழுமையாக வளரும் அவ்வினங்கள் பல தரப்பட்ட பயிர்ப்பீடைகளுக்கு உட்படு கின்றன. சுத்தமான விதை நெற்களைப் பயன்படுத்தாவிட்டால், விளைச்சல் குறைவதோடு, களைத்தொல்லை, பூச்சித் தொல்லை போன்றவையும் ஏற்படும். எனவே நெற்பயிர்ப் பீடைகள் மீது கவ. னஞ் செலுத்தினால் கமக்காரர்களும், நாமும் பயனடையலாம்.
நெற்தாள் காற்றை உறிஞ்சும் பூச்சிகள் வாற்பயிரையே அழிக்கும்
சுருண்டு வாடியுள்ள நெற்தாளை விரித்துப்பார்த்தால் அதனுள் தடித்த மண் நிறம் கொண்ட புழு இருப்பதைக் காணலாம். இதனை பலியோதிரிப்ஸ் பதி மோமிஸ் என்ற பெயரால் அழைக்கி றார்கள். இப்புழுவின் நீளம் 1.25 மி.மீற் றர் வரை இருக்கும். அது தெற்தாள் ஒவ் வொன்றின் இடையிலும் தனித்தனி முட்டைகளை இடும். முட்டைகள் 3 நாட்களில் பொரித்து குஞ்சுகள் வெளி
- 2
 

ளைக் கண்டறிதல்
வரும் அவை வெள்ளை அல்லது "மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தைக்கொண்டவை யாக இருக்கும். இவை துரித முழுவளர்ச் சியை 3 வாரங்களில் பெறும். வளர்ந்த தும் அவற்றின் உயிர்வாழ்க்கைக் காலம் 2 வாரங்களாக இருக்கும்.
Jaya
அழிவின் முன் அரைவாசிக் காலத் தின் போது நெற்குருத்துத் தாள்களில் மஞ்சள் அல்லது வெள்ளி போன்றகோடு கள் தென்படும். பின்னர் யாவும் ஒன்று சேர்ந்து தாள் முழுவதும் மஞ்சள் நிறம் அடையும். இறுதியில் தாள் நீள் பக்கமர் கச் சுருண்டு, பயிர் அழிந்து போகும். இப்பூச்சிகள் முக்கியமாக 4 வாரங்களுக் குட்பட்ட இளம் பயிர்களையே தாக்கும். இப்பூச்சிகள் துரித பெருக்கம் பெறுவத னால், அவற்றினால் ஏற்படும் அழிவு சீக்கிரமாகப் பெருகும். எனவே "இத னைக் கவனிப்பது முக்கியம்ாகும்.
நெற்பயிர் புழுக்கள்
இவை இரண்டு வகைப்படும். ஒன்று மண் நிறம் கொண்டதாக இருக்கும் (நீலோபவாட லுஜன்ஸ்). மற்றது முது குப்புறம் வெள்ளை நிறம் கொண்ட புழு வாகும். (கொகடெல்ல. பர்சிபெரா) நன்கு வளர்ச்சி பெற்ற புழுக்கள் மண் நிறத்தைக் கொண்டனவாக இருக்கின் றன. அவற்றுள் ஆண் Hಆಕೈಗೆ மி. மீற் றர் நீளமாகவும் புெண்டிழு 6ir 4. 5:፯ß]. மீற்றர் கொண்டனவாகவும் இருக்கும்.
பாதி வு நீச்சி பெற்ற செட்டைகளைக்
邻,, t ଊର୍ଜଃ புழுக்கள் முழுவளர்சி அடைந்த செட்டைகள் கொண்ட்)த்திழுக்களுடன்
இனப்பெருக்கத்திற்காகச் சேர்ந்த பின்

Page 26
னர் முட்டையிடத் தொடங்குகின்றன. சாதாரணமாக ஒரு பெண் பூச்சி 150-300 முட்டைகளை இடும், அவை, பயிரின் நடுத்தண்டினுள் செலுத்தப்பட்டிருக்கும். சில சமயங்களில் நெற்தாளின் நடு நரம் புகளின் இடுக்குகளிலும் இப்படியான முட்டைகள் காணப்படும். ஒரு கூட்டி னுள் 2412 முட்டைகள் இருப்பதுடன் அத்தகைய கூடுகள் பலவும் இருக்கும். இம்முட்டைகள் வெடிக்கும் போது வெளி வரும் இளம்புழுக்கள் சற்று நீளமானதா கவும் வெள்ளை நிறம் உடையதாகவும் இருக்கும். அவை பயிர்த்தண்டின் சாற் றினை உறிஞ்சி வாழ்கின்றன. அவற்றின் முழு வளர்ச்சிக்காலம் 19-23 நாட்கள் பிடிக்கும்.
சேதம்
இப்பூச்சிகள் பயிரை உறிஞ்சுவத னால், முதலில் பயிர் மஞ்சள் நிறம் அடைந்து பின்னர் வாடிப்போகிறது. இதனை மக்கள் பூச்சி அழிவு என்பார் கள், இத்தகைய அழிவு நெற்பயிரின் எந்தக் கட்டத்திலும் ஏற்படக்கூடும்: அத்துடன் அது முழு அழிவையும்` ஏற் படுத்தக்கூடும். ་་་་་་་་་་
நெல் ஈ (லெப்டோதொறய்யா ஒறரோநியஸ்) இது புழு நிலையிலிருந்து நீண்ட ஈயாக வளர்ச்சி காண்பதற்குள் 15-18 மி. மீற்றர் வரை வளரும். அதன் முன் கால்கள் மண் நிறத்தவையாகவும், பின் கால்கள் பச்சை நிறம் கொண்டவையா கவும் இருக்கும். அதனைத் தொட்டால் கடும் நாற்றத்தையும் ஏற்படுத்தும். வய லில் பயிர் இல்லாதபோது இவ்வகை ஈ அங்கு வளரும் புல் பூண்டுகளுள் மறைந்து வாழும். அதன் சீவிய காலம் சாதாரண மாக 115 நாட்கள் வரை நீடிக்கும். நெற் தாள் மீது இந்த ஈ வரிசையாக முட்டை இடும். ஓரிடத்தில்ே 10-20 முட்டை களைக் காண முடியும். முதலில் மெல் லிய மஞ்சள் நிறம் கொண்ட இம்முட் டைகள் இறுதியில் சிவப்பு மண்

!组
நிறத்தைஅடையும். ஒரு பெண் ஈ 200-300 முட்டைகளை இடும். முட்டைகள் 5-8 நாட்களில் வெடித்து, குஞ்சுகள் 5 நாட்க களில் முழு வளர்ச்சி அடைகிறது.
சேதம்
இந்த வகை ஈ முற் றிக் கொண்டு வரும் கதிரிலிருந்தே அதன் உணவைப் பெறுகிறது. அநேகமாக மாலை வேளை சூரிய வெளிச்சம் மங்கிவரும் வேளை இவை புறப்பட்டு வருவதைக் காணலாம். இந்த ஈ நெல் மணியின் காற்றை உறிஞ் சுவதால், நெல் மணி முழுச்சப்பியாக, அல்லது "அரைவயிறனாக மாறுகிறது. இது நெல்மணியைத் துளைத்து உறிஞ் சிய இடம் தடித்த மண் நிறம் கொண்” டிருப்பதைக் காணலாம். சில சமயங்க ளில் இதன் காரணமாக நெல் மணிக ளில் ஒரு புதுவித நாற்றம் தோன்றக் கூடும்.
வயல் மண்மூட்டுப் பூச்சி (மஸ்கொடினோபோரா லுறிடா)
இது முழுவளர்ச்சியின் போது 8-10, மி. மீற்றர் நீளத்தை அடையும். . இது ஐந்து கோணங்களையும் கறுப்பு நிறத் தையும் கொண்டிருக்கும். இதன் ஒட் டின்மீது துல்லியமற்ற மஞ்சள் புள்ளிகள் இருக்கும். இது மிக நீண்ட காலம் வாழக் கூடியது. நெற்தாள்களில் இது சமாந் தர வரிசைகளில் முட்டைகளை இடும். 6 நாட்களில் முட்டை வெடித்துக் குஞ்சு வெளிவரும். குஞ்சு நிலை 5 நாட்கள் வரை நீடிக்கும். அதன் பின்னர் 6-7 வாரங்களில் அது பூரண வளர்ச்சி அடை யும் அதன் இனப்பெருக்கம் வருடத் துக்கு ஒரு முறை மாத்திரமே நிகழ்கி றது.
சேதம்
இப்பூச்சி கதிரின் அடிப்பாகத்தைத தாக்கி உணவைப் பெறுவதால், கதிரில் அல்லது தாளில் மஞ்சள் அல்லது சிவப் புக் கோடுகள் படியும். இளம் பருவத் தில் தாள்முறுகி, மஞ்சள் நிற்மாகி, * மடிந்த காதலர்" போன்ற நிலையை எய்தும். இப்பூச்சி நெற்பயிர் கிளைத்து வளரும் பகுதியில் உணவைப் பெறுவத னால், கிளை விடுதல் குறையக் கூடும்.

Page 27
பாசனவ பாழ்படும் சு
சனச் செயற்பாடுகளினால் க்மத்
தொழிலை விருத்தி செய்த நாடுகளுள்
இலங்கையும் ஒன்று. பழங்காலம் தொட்டு
இங்கு பாசனச் செயற்பாடுகள்
இருந்து வந்திருப்பதுடன், தொடர்ந்தும் நிலைநிற்கப் போகிறது. அதேபோலவே
கமத்தொழில் பொருளாதாரமும் பாசனச்
செயற்பாடுகளின் அடிப்படையில் நிலைக்
கக் கூடிய தன்மை தென்படுகிறது.
இலங்கையின் நிலப்பரப்பில் 9 சத வீதம் அல்லது 5580 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு பாசன பயிர்ச்செய்கைக்கு உட் பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள், நீரோடை கள் போன்றவற்றில் 37 கன கிலோ மீற் றர் நீரளவு இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இதில் பாசனத் தேவை களுக்காகவே கன கிலோ மீற்றர் நீர் தேக்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பு நீர்வள விகிதத்தை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை முத லிடத்தைப் பெறுகிறது. பின்வரும் புள்ளி
விபரம் அதனைத் தெளிவுபடுத்துகிறது:
---མས 25

சதிகளும் ற்றுச்சூழலும்
நீர் வளப்பாவனை நாடு வருடத்துக்கு
கன மி. மீற்றரில்
-as
ஜப்பான் 301.00 இலங்கை 70.00
பாகிஸ்தான் 47.00
இந்தியா 9. 12
முன்பிருந்த சோவியத் ரஷ்யப் பகுதி நீங்க லான ஏனைய ஆசிய நாடுகள் 57.7
அமெரிக்க ஐக்கிய ராச்சியம் 51.0 முன்னைய சோவியத் ரஷ்யா 21.2
ஆதாரம்: உலக நீர்வளமும் அதன் எதிர்காலமும்
இவ்வகையில் எமது நாடு ஜப் பானுக்கு அடுத்ததாக உள்ளது. எமது
பியசிறி கருணாதிலக ஆராய்ச்சி, பயிற்சி உத்தியோகத்தர்
நாடு சிறிதாக இருந்தபோதிலும் நீர் வளத்தைத் திறம்படப் பயன்படுத்துவதில் முன்னணியில் நிற்பது தெளிவாகிறது.
நீர்வளப்பயன்பாட்டினால் நன்மை கள் பல ஏற்படுகின்ற போதிலும், சுற்
றச் சூழலுக்குப் பாதிப்பும் ஏற்படவும் இடமுண்டு. எனவே, பாசனச் செயற்

Page 28
பாடுகளினால் மற்ற நாடுகளிலும் பார்க்க எமது நாட்டில் அன்றும், இன்றும், இனி மேலும் பாதிப்புகளுக்கு இடமுண்டு.
இத்தகைய நிலைமைக்கு நிலப் பரப்பு, நீர்வளம் ஆகிய இரண்டு காரணி களுக்கு இடையிலும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தமை முக்கியமாகும், வரலாற்றிலே இத்தொடர்பு பற்றி எவ் வளவோ உதாரணத்தைக் காட்ட முடி யும். அனுராதபுர இராச்சியம் செழிப்பு மிக்க பிரதேசமாக இருந்ததைப் பண் டைய வரலாறு காட்டுகிறது. ஆயினும், இடையிடையே ஏற்பட்ட யுத்த நிலைமை களினால் பொருளாதாரம் பாதிக்கப் பட்டது. செழிப்பின்மையால் மக்கள் செறிந்து வாழும் தன்மை மறைந்ததுடன், மண்வளமும் அருகியது. மக்கள் குடி யேற்றம் அருகியதால், புல்லும், பற்றை யும், காடும் அடர்ந்து வளர்ந்தன. இவற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி நாட்டின் ஸ்திரத் தன்மையையும் பாதித்தது.
இலங்கையின் நீர் வளத்தைப் பற்றி ஆராய்கையில் குளங்களைப்பற்றி நாம் மறந்துவிடக்கூடாது. 1873 இல் புரோகி யர் நடத்திய ஆய்வின்படி, வடமத்திய மாகாணத்தில் மாத்திரம் 2877 குளங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னக்கோனின் ஆய்வின்படி, தற் போது இப்பிராந்தியத்தில் 3000 குளங் கள் இருப்பது தெரியவந்துள்ளது. சி. எம். பெர்னாந்து என்பவரது கூற்றின்படி முன்னைய நூற்றாண்டின் பின் ஐம்பது வருடங்களின்போது, இலங்கை முழுவதி லும் பத்தாயிரம் குளங்கள் இருந்தன வாம். இவ்வகையில் பெரிய, சிறிய குளங் கள் பல இருந்தபோதிலும், பத்து இலட் சம் கன அடி நீருக்கு மேல் உள்ள குளங்
2 ܝܘܗ

கள் 161 மாத்திரமே இலங்கையில் இருந் துள்ளன. எப்படிப் பார்த்தாலும், 65,000 சதுர கிலோ மீ ற் ற  ைர மாத் திர ம் கொண்ட இச்சிறிய நாட்டில் நீர்த்தேக் சங்களுக்கும் பாசன கட்டமைப்புகளுக் கும் பெருமளவு நிலம் உட்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே, இவற்றால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தையும் அறிந்திருப்பது அவசியமாகும்.
பாசன தேவைக்காக நீர்த்தேக்கங் கள் நிறுவும்போது, நில அமைப்பு, நீரோட்டம், சுவாத்தியம், மண், தாவர வளம், விலங்கினங்கள் ஆகிய சகல அம் சங்களிலும் மாற்றங்கள் ஏற்பட இட முண்டு. இந்த உண்மை சோவியத் ரஷ்யா வில் நடத்திய ஆய்வினால் தெளிவாகி யது. இதன்படி, உஷ்ண வலய நாடு களுள் ஒன்றான இலங்கையிலும் நீர்த் தேக்க அமைப்புக்களினால் சுவாத்தியம் வேறுபட இடமுண்டு.
நீர்த்தேக்கங்களினால் காற்றில் ஈரப் பதம் அதிகமாவதுடன், சூழலும் அதிக குளிர்ச்சி அடைதற்கு ஏதுவுண்டு. நிலத் தடி நீர்மட்டம் உயர்வதற்கும் நீர்த் தேக்கங்கள் காரணமாகின்றன. புதிதாக அமைக்கப்படும் நீர்த்தேக்கங்களில் நீர் நிறையத் தொடங்கிய பின்னர் நிலத்தடி யிலுள்ள நீர்மட்டம் கட்டாயமாகவே உயரும். இவ்வாறு மேல் மட்டத்திற்கு வரும் நீர் மீண்டும் மண்ணில் சுவறி நிலத் ፵ኝ ዞኖ- நீர்மட்டத்தை அடையும். இதனால் நிலத்தடி நீர்ப்பெருக்கம் வேகமாக வேறு படக்கூடும். சில சமயங்களில் இவ்வாறு
5 ফেব্ৰু-as

Page 29
வடிந்தோடும் நீர் நிலத்தடி நீர்மட்டத்தை அடையாது வேறு திசையிலும் செறியக் கூடும். இதற்கு உதாரணமாக, சமணல வெவ நீர்த்தேக்கம் நிறுவப்பட்டபோது அயலவர்கள் கிண்றுகள் தோண்டியூதன் மூலம் நீர்பெறத் தொடங்குகிறார்கள் என்ற முறைப்பாடுவந்ததைக் குறிப்பிட
லாம்.
மேல் நீர்மட்டம் கீழ் நோக்கிச் செறி வதனால் கட்டிடங்களது அத்திவாரம், நிலத்தடியிலுள்ள தொலைத்தொடர்புச் சாதனங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள் ளாகலாம். அத்தோடு நிலமும் சில சரி யங்களில் சதுப்புத்தன்மை அடையலாம். கண்டியிலிருந்து பொல்கொல்லை செல் லும் மடவளைப்பாதை ஒரத்தில் உள்ள வீடுகளின் தளம் ஈரலிப்பாகியுள்ளதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
நீர்ப்பெருக்கத்திற்கு உள்ளாகும் பகுதி களில் கனிஜ வளம் பாதிக்கப்படுவதோடு, பயிர் நிலமும் பாழடையும்.
நீர்ப்பெருக்குக்கு உட்படும் பிரதேசங் களைச் சதுப்பு நிலப்பகுதிக்ள், புல் வெளிப்பகுதிகள், களிமண் பகுதிகள் என வேறுபடுத்திக் கூறலாம். நிரந்தர நீர்ப் பெருக்குக்கு உள்ளாகும் பிரதேசத்தில் மரஞ்செடி கொடிகளும் விலங்குகளும் முற்றாக அழிந்துவிடும், இடையிடையே நீர்ப்பெருக்கினால் பாதிக்கப்படும் பகுதி களில் புல்வகைகளும் நீரை அடுத்து வள ரக்கூடிய தாவரங்களும் தோன்றி வள ரும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதனால், மரங்களது கிளைகள் 50-70 சதவீதம் நீண்டு வளர இடமுண்டு எனவும், இத
னால் சுற்றுச் சூழல் நன்மையிடைய்

வாய்ப்பு ஏற்படுகிறதெனவும் விஞ்ஞானி கள் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கங்களை அமைப்பதனால், வரட்சிக் காலத்தின்போது  ́ 5fr பருக வரும் வில்ங்குகளுக்கு இலகுவாக நீர்
கிடைக்க முடிகிறது. கிளை, கெர்ம்புகள்
27
செழித்து வளர்வதனால் விலங்குகளில்
சில வர்க்கம் தங்கள் உணவைச் சுலப
மாகத் தேட முடிகிறது. அத்தோடு நீர்த்தேக்கத்துக்கு உட்படும் நிலப்பரப்பு விஸ்தரிப்பதனால் அதில் மீன் வகைகளும் பெருகுதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அத னால் நீரை அண்டி வாழும் பறவை இனங்களும் பெருகும். மேட்டு நிலப்பகுதி யில் நீர்த்தேக்கம் அம்ைக்கும்போது, அவற்றில் வாழும் விலங்குகள், குறிப் பாக. இளம்பருவ விலங்குகள் அழிந்து
விடக்கூடும். வன விலங்குகள் வாழும் பகுதிகள் வெட்டி அழிக்கப்பட்டு, கமத்
தொழில் செய்யப்படுவதனாலும், அப் பகுதிகளில் வீடுகளும், பாதைகளும் நிறு வப்படுவதனாலும், விலங்குகள் வர்ழவும், இரைதேடவும் நிலம் அருகிப்ப்ோதல் மற்றுமொரு சிக்கலாகும்.
ஆறுகள, வாய்க்கால்கள் வழியாக அள்ளுப்பட்டுவரும் பல்வகைப் பசளைகள்,
உரங்கள் நீர்த்தே க்கங்களில் வந்த் õ01.-6.
தன் காரணமாக நிலப்பாசி, சல்வீனியா
பூண்டு போன்றவை துரிதமாக வளர்ந்து நீர்த்தேக்கங்களை மேட்டு நிலமாக்கி
விடக்கூடும்.
இவற்றைப் பார்க்கும்போது, உள்ள
நிலங்களில் விளைச்சலை உயர்த்த முனை
தல் புதிய, நீர்த்தேக்கங்கள், பாசன
வசதிகளை ஏற்படுத்தலிலும் பார்க்கச் சாலச் சிறந்ததாகும்.

Page 30
*கமநலம்’
** கமநலம்' சஞ்சிகைக்கு இதுவரை பூர்வமான பணிக்கு உறுதுணை புரிந்தீர்க மார்கழி இதழுடன் உங்கள் சந்தா தொ ஆண்டு தொடர்ந்தும் "சமநலம் சந்தாத எமக்குண்டு.
அடுத்த ஆண்டுக்கான சந்தா தொகை யிடுவதில் அதிக செலவினத்தை ந்ாம் எதி விலை தொடர்ந்தும் 10 ரூபாவாக இருக்கு
இதுவரையும் உங்களை வந்தடைந்த " கிடைத்த பயன்களை உங்கள் நண்பர்களும் எமது பேரவா. ஆகவே, அவர்களையும். யத்தை உங்களிடம் விட்டுவிடுகின்றோம். இ முயற்சியிலும், ஊக்கத்திலுமே தங்கியுள்ள
இங்கு நாம் உங்களுக்காக " " கமநலம் உங்கள் நண்பர்களுக்கு அல்லது உறவின எங்களுக்கு எழுதுங்கள் அல்லது இதேமா பூர்த்தி செய்து அனுப்புமாறு கூறுங்கள்.
உங்கள் ஊக்கமும் உதவியும், உறு படுத்தும் என்பதில் ஐயமில்லை. "கமநலம் தாங்கி வரும் என உறுதிமொழி அளிக்கி محكحكححححكححكحكحكحيصححكحح
....... . . . ., 36ās
"கமநலம்" சஞ்சிகையின் ஒரு வருட கட்டளையை / அஞ்சற்கட்டளையை
அனுப்பவேண்டிய முகவரி;-
DIR Agrarian Research a 14, Wijer
COL
列 په سيه

சந்தாதாரருக்கு
பும் சந்தாதாரராக இருந்து எமது ஆக்க ள், இதற்கு உங்களுக்கு நன்றி கூறுகிறோம். கை முடிவடையும். எனினும், அடுத்த நாரராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை
历 40 ரூபாவாகும். 'கமநலத்தை வெளி ர்நோக்குகின்றபோதும் இச் சஞ்சிகையின் தம்.
*கமநலம் சஞ்சிகைகளினால் உங்களுக்குக் }, உறவினர்களும் பெறவேண்டும் என்பதே 'கமநலம்" சந்தாதாரராக்கும் கைங்கரி இக்கைங்கரியத்தைநிறைவேற்றுவது உங்கள் து என்பதைச்சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
, .
சந்தா படிவத்தை வெளியிட்டுள்ளோம். ர்களுக்கு சந்தாபடிவம் தேவை என்றால் திரியான படிவத்தை தயாரித்து அதைப்
துணையும் எங்களுக்கு உற்சாகத்தை ஏற் " தொடர்ந்தும் தரமான கட்டுரைகளைத் ேெறாம். :
ല്പ
ழிேக்கவும் . . . . . .
டச் சந்தாவாக 40 ரூபாவுக்கான காசுக்
இத்துடன் அனுப்புகிறேன்.
ECTOR, nd Training Institute, ama Mawatha, OMBO -- 7.
8 ജ്ഞ

Page 31
RECENT PUBLICATION
RESEARCH. AND TE
Research Study
O SOCIO ECONOMIC AND CONDIT HOLDING SECTOR IN SRI LANK Asoka C. K. Sepala
O A NEO TRADITIONAL INSTITUT
MANAGEMENT Kasyanathan, N. P., Manoharan, R
O SOCIAL SCIENCE RESEARCH ME' SOCIAL SCIENCE RESEARCHERS Oreilly, J. P., Nikahetiya, S.B.R
O SHIFTING FARMING-TOWARDS
FOUR RAINFED FARMING SYST Fredrick Abeyratne, Gunasena, H.P
INPUT USE EFFICIENCY AND PF PRODUCTION
O GAL OYA FARMER ORGANIZAT
AND PROSPECT Ranasinghe Perera, I.
O GAL OYA WATER MANAGEMEN'
MID-TERM IMPACT ASSESSMEN Widanapathirana, A. S., Brewer, J.
O A PROCESS EVALUATION OF CO KURUNEGALA DISTRICT-SUBS INTEGRATED RURAL DEVELOPM Henegedara, G. M.
O SMALLHOLDER RUBBER REHAB ECONOMIC CONDITIONS OF RU) SRI LANKA- A PRE-PROJECT ST KALUTARA AND KEGALLE DIST Jayasena, W. G., Herath, H. M. G.
O A PRELIMINARY ASSESSMENT O MAJOR IRRIGATION REHABILIT, CASE OF TANK RRGATION MC Abeysekera, W. A. T.

S OF THE AGRARAN
ANING INSTITUTE
ONS OF COCONUT SMALL A
ON FOR RRIGATION WATER
B.
THODOLOGY-A MANUAL FOR
STABILITY-A STUDY OF EMS IN SRI LANKA M., Ten nakoon, D.
RODUCTIVITY OF RICE
ION PROGRAMME PROGRESS
T PROJECT: t
D.
CONUT CULTIVATION IN THE TUDY OF THE KURUNEGALA
MENT PROJECT
LITATION PROJECT: SOCIO BER SMALL HOLDERS IN JDY OF RATNAPURA, RICTS
THE PERFORMANCE OF A TION PROGRAMME: THE DERNIZATION PROJECT
Price
50.00
40.00
35.00
45.00
10.00
20.00
50.00
30.00
50.00
25.00

Page 32
PUBLICATIONS
Research Series
CHANGE AND CONTINUITY IN SYSTEMS Abeyratne, Mrs. S., Jaya
COMM UNITY FORESTRY PROJE: Gamage D., (1987) (76)
AGRICULTURAL CREDIT IN GA SETTLEMENT SYSTEM Wickram
IRRIGATION AND WATER MAN SETTLEMENT SCHEME OF SRI WATER MANAGEMENT PROJEC
A STUDY ON THE EMPLOYMEN OYA IRRIGATION AND SETTLE Senanayake, S. M. P., Wijetunga, L
sOCIO ECONOMIC SURVEY - TH AREA (KURUNEGALA DISTRIC Jayantha. Perera Dr., Kumarasiri P
A STUDY OF NON-CONVENTIO 1N SRI LANKA Chandrasiri, A., Ranawana S., (1987) (82)
KURUNEGALA INTEGRATED R EX-POST EVALUATION
Sepala, A. C. K., Chandrasiri, J. K. Tudawe, III., Abeysekera, W. A. T., ""
K1 RINDI OYA IRRIGATION AN) MIDPROJECT EVALUATION, Gamage, D., Wanigarathne, R. D., Tuda we, I. (1988) (85)
INQUI RIES :
DIRECTOR, Agrarian Research and 1 14, Wijerama Mawatha Colombo-7.
FÖR INTED AT T H E KUMARAN FSR

OF THE ART
Price
VILLAGE IRRIGATION ntha Perera Dr. (1986) (75, 45.00
T BASELINE SURVEY
60.00
L OYA IRRIGATED Lisinghe G. (1987) (77) 25.00
AGEMENT IN A PEASANT ANKA (A STUDY OF THE T OF MINIPE) (1987) (78) 45.00
T GENERATION IN KIRIND1 MENT - ... D. I. (1987) (79) 35.00
E GAL.GAMUWA. A. S. C. T) Senakarachchi R. B., 'athirana (1987) (80) 30.00
NAL ANIMAL FEED RESOURCES Kariyawasam T.,
65.00
URAL DEVELOPMENT PROJECT
M. D., Gamage, D., Jayasena, W. G., Wanigarathne, R. D. (1988) (84) 70.00
D SETTLEMENT PROJECT :
Wijetunga, L. D. I.,
50.00
raining Institute, P. O. Box 1522
Ess, 20, DAM STREET. colo M Bo-2,