கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகமஞ்சரி 2000.07

Page 1
༄།། نيل " " .
R
A OUARTERLY JOURNAL F
SLAeA SqKS YqeSiqiAYYeAeAqL LLe AA ekL
மஞ்சரி: oa 692و Ma
2SX2Seడ2Sకి పాకెడ షాతో సాతి
డాకాతాZSఆxz-SఆడతాaN 2-సాతానైతాa=
#* Sతోష్ణా నైలాష్ణా 2N
尊
ରା
TF 36 f5 5.657 f6) FOI I Îj 6)
5 Tifli GE8FLİ 56) 657
தாய்மையடைய த கர்ப்ப காலங்களில் குறை மாத பிரசவ கருச்சிதைவு குழந்தையின் வளர்
ஜி சுக நல சேவைகள்
* ஒரு நல்ல பொதுச் களும் தகைமைகளு
$ 85 Tỉ56Î
བ་ சலரோகம்
(IITF Tig, * உணவுப் பொருட்க
59 6Î LIâ)
* உடலைப் பாதிக்கு
(356ir off - Li jiġi) 36 air
கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாராகுங்கள்
ஏற்படும் உயர்குருதி அமுக்கம்
b
ச்சியும் விருத்தியும்
சுகாதார பரிசோதகரின் கடமை
D
ளின் கூறமைப்பு
ம் ஈய நஞ்சாக்கம்
உதவியுடன் வெளியிடப்படுகின்
ര, . جاكسين

Page 2


Page 3
மஞ்சரி - 04 ஆடி
-Sistuffi
வைத்திய கலாநிதி ந. சிவராஜா MBBS, DTPH, MD.
துணை ஆசிரியர்:
வைத்திய கலாநிதி செ. சு. நச்சினார்க்கினியன் MBBS, DPH.
ஆலோசகர்கள் :
பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் MBBS, DPH, PhD., Hon. DSc.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் BA. MBBS, MD, MRCP (Psyche)
வெளியீடு:
சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
வாழ்ப்பாணம்,

ஞ் CF f நூலகப் பிரதி
- 2000 மலர் - 03
வாசகர்களுடன் சில வார்த்தைகள் .
சுகமஞ்சரியின் இந்த இதழ் ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் தாமதமாக வருகின் றது. ஐக்கிய நாடுகிள் சிறுவர் நிதியத்தின் பண உதவியுடன் இலவச வெளியீடாக வந்துகொண்டிருந்த சுக மஞ்சரிக்கும் பொரு ளாதாரக் கஷ்டம் ஏற்பட்டது. இந்த இத ழைத் தொடர்ந்து இன்னும ஒரு இலவச இதழ் வெளிவர வாய்ப்பு உரைடு. அதன் பின்பு ஐ. நா. சி. நிதியத் தி ன் உதவி தொடாந்து கிடைக்குமா? கிடையாவிடில் யாழ் மருத்துவ பீடத்தின் சமுதாய சுகாதாரப் பிரிவினால் அதனைப் பிரசு:தது, சிறய விலையில் விற்க முடியுமா? அதனை விலை கொடுத்து - இப்போது இலவசமாகப் பெற்ற வர்கள் வாங்குவார்களா? இப்படியான கேள் விகள் அதன் எதிர்காலம் பற்றி உண்டு இவற்றிற்கு விடையை காலமும் வாசகர் களும் தான் தீர்மானிக்க வேண்டும்.
இதுவரை காலமும் சுகமஞ்சரி சுமந்து வந்த செய்திகளுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. அதனை வாசகர்களின் கடிதங்கள் தெரிவித்தன. சுக மஞ்சரியின் 2000 பிரதிகள் பலதர மட்டங்களில் உள்ள வாசகர்களை அடைந்தன. ஏறத்தாழ 800 பிரதிகள் சுகா தார அலுவலகங்கள் மூலம் குடும்பதல உத்தியோகத்தர், பொதுச் சுகாதார பரிசோ தகர்களுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் ஊடாக எமது மக்கள் பயனடைந்திருப் பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 600 பிரதிகள் வரை மருததுவர்கள், உதவி மருத் துவர்கள் வேறு அரசாங்க சக பல்கலைக் கழக உத்தியோகத்தர்கள் ஆகியோரைச் சென்று அடைந்தன. 260 பிரதிகள் வரை பாடிசாலைகள், சனசமூக நிலையங்கள் ஆகி யவற்றிற்கு அனுப்பப்பட்டன. சுகமஞ்சரி யைப்பற்றிக் கேள்விப்பட்டு பலர் நேரடியா கக் கேட்டு பெற்றுக்கொண்டனர். அலுவல கங்கள், பாடசாலைகள், ஸ்தாபனங்கள் ஆகி யவற்றிற்கு அனுப்பப்படும் பிரதிகள் அங் குள்ள சகலராலும் வாசிக்கப்பட வேண்டும்

Page 4
என்பதே எமது வேண்டுகோளாகும். சில இsங்களில் ஒரு பிரதியைப் பலர் படித்தனர். சில பாடசாலைகளில் அவை அதிபர் அறை பிலேயே முடிங்கி விட்டதாக அறிந்தோம். பாடசாலைகளில் எமது மஞ்சரி பாடசாலை நூலகத்தில் இருப்பதையே விரும்புகிறோம்.
முன்னைய இதழ் போல் இந்த இதழும் பிரயோசனமான கட்டுரைகளைத் தாங்கி வருகின்றது. கர்ப்பகால குருதி அமுக்கம், கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், தாய்மை என்ற தலைப்புக்களில் நான்கு கர்ப்பம் சார்ந்த கட்டுரைகள் வெளிவருகின்றன. கர்ப்பமும் தாய்மையும் மனித குலத்தை வாழ்விக்கும் நிலைகள். அந்தநிலை சுகமா கவும் நிறைவாகவும் இருப்பது அவசியமாகும்.
விற்றமின் ‘சி’யும்
0 ) பல், முரசு, தோல், செங்குருதிக் கலங்கள்
மின் "சி" அவசியம்
D அத்துடன் வேறு சில அத்தியாவசிய தொழி
மாக உடல் அனுசேப இயக்கங்கள்
0 இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவதற்கும் இ
( 100 கிராம் உண்ணக்கூடிய பல்வேறு பழங்க
கிராம்) கீழே தரப்பட்டுள்ளது
திராட்சை 101 Lá,... 8 அப்பிள் 02 வாழை 07. ᎿᏰᎼfr 6 தக்காளி 27 பப்பாளி 57 எலுமிச்சை 63 கொய்யா II 2 நெல்லி 600
1) நெல்லியிலுள்ள விற்றமின் "சி" இயற்கை சூழ என்ற பொருளால் பாதுகாக்கப்படுவது முக்
) நாளொன்றிற்குத் தேவைப்படும் விற்றமின்
ஆண்கள் 75 ιδ). பெண் கள் 70 பாலூட்டும் தாய் 50 குழந்தைகள் 30・75
0 நாளாந்தம் ஒரு நெல்லிக்கனியை உண்டாலே
மஞ்சரி: 04 DGDrif

ஆகவே அனைவரும் அறியவேண்டிய விடியங்கள் இக்கட்டுரைகளில் இருக்கின்றன. சலரோகம் என்ற நீரிழிவு மனிதனது சுகத் தையும், மகிழ்வையும், ஆயுளையும் குறைக் கும் ஒரு குறைபாடு. அதனைத் தவிர்க்கவும் சமாளிக்கவும் அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.
அடுத்த இதழ் உளச்சுகம் பற்றியதாகத் தயாராகின்றது. வாசகர்களின் அபிப்பிரா யங்கள் எமக்கு ஊக்கம் தருவனவாகும்.
இந்த இதழைப் பலரிடையே பரவச் செய்து, எமது சுகாதாரச் செய்தி பரப்பும் சேவைக்கு உதவிபுரிய வேண்டுகிறோம.
– CUIIffluf GF. åMGISAristid
ஆசிரிய ஆலோசகர்
ம் நெல்லிக்கனியும்
போன்றவற்றின் வளர்ச்சிக்கும், நலத்திற்கும் விற்ற
ற்பாடுகளுக்கும் விற்றமின் "சி" தேவை. உதாரண
து அவசியம்
ளில் உள்ள விற்றமின் "சி" யின் அளவுகள் (மில்லி
ம்நிலைகளால் அழியாது. அதில் உள்ள "டானின்" கிய அம்சம்
சி" (மில்லிகிராம் அளவுகளில்)
g
மது தேவைகள் நிறைவு செய்யப்படும்.
03 2000 சுகமஞ்சரி

Page 5
தாய்மையடையத் தயார
உயிரங்கி ஒன்றின் முக்கிய நோக்கம் அதன் இனத்தைப் பெருக்குதல். அங்கியின் வாழ்க்கை வட்டத்தில் இனப்பெருக்க கா லத் தி ல், அங்கி தன்னை இனப்பெருக்கத்திற்கு தயார் செய்து அதன் மூலம் தனது வ ம் ச த்தை உரிய காலத்தில் உரிய முறையில் பெருக்குகின்றது.
ஆனால் மனிதர்களாகிய நாம் எத்தனை பேர் எங்கள் தாய்மைப் பேற்றின்ன உரிய காலத்தில் விரும்பிப் பெற்றுக் கொள்கிறோம்.
ஒருபெண் 14 - 45 வயதிற்குட்பட்ட காலத்தில் தாய்மை அடையக் கூடிய தகுதியுடன் (fertile காணப்படுகிறாள். எனினும் அவள் 20 - 80 வயதிற் குட்பட்ட பருவத்தில் கர்ப்பம் தரித்தல் சிறந்த விளைவுகளை (outcome) உருவாக்கும். முக்கியமாக ஒரு பெண் தனது மு த லாவது தாய்மை பேற்றை அடைவதற்கு சிறந்த காலம் 20 - 25 வருடங்கள் ஆகும். மிகவும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் (teenage pregnancy) அல்லது பிந்திய கர்ப்பமடை sá) (elderly pregnancy) sittii - G&til goalfi)gth பல ஆபத்துகளை ஏற்படுத்துவதோடு, தாய் மரண வீதத்தையும் (MMR) சிசு மரண வீ த த்  ைத யும் (IMR) அதிகரிக்கும்.
அண்மைக் காலங்களில் இளவயதுக் கர்ப்பிணி களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. நாட்டின் சூழ்நிலையால் ஏற்பட்ட இடம்பெயர்தல், நெருங்கி வாழ்தல், கட்டுக்குலைந்த சமுதாய அமைப் புகள் போன்ற காரணங்களும், குடும்ப திட்டமிடல் பற்றிய அறிவின்மை, இளைய சமுதாயத்திற்கு தங் கள் பொழுதுகளை சிறந்த வழியில் கழிப்பதற்கு வாய்ப்பு வசதிகள் இல்லாமை போன்றவையும், இளவயதுக் கர்ப்பநிலைக்கு காரணிகளாக அமைகின் றன.
எனவே ஒவ்வொரு தம்பதியினரும் திட்டமிட்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும், பின்வரும் வழிகள் அதற்கு உதவும்.
* உரிய வயதில் திருமணம் செய்தலும் தாய்மைப்
பேற்றினை அடைதலும்,
is 65T fif இறுதி வருட மருத்துவ மாணவன் மருத்துவ பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
சகமஞ்சரி மஞ்சரி: 04

குங்கள்
* ஒரு பெண் தன் உடல் நிலையை தாய்மை பேற்
றிற்கு தயார் செய்தல். A இலங்கையில் பெரும்பாலான பெண் க ள் போதிய அளவு இரும்புச்சத்தினை உட்கொள் வதில்லை. இவர்களின் உடலில் ஈமோ குளோபின் அளவு ஆகக் குறைந்தது 11gl d என்ற அளவில் இருக்க வேண்டும். எனவே இவர்கள் இலைக்கறி வகைகள், இறைச்சி , முட்டை, சோயா, பருப்பு, பழம் என்பவற் றுடன் இரும்புச்சத்துடைய குளிசைகளை உட்கொளளல் வேண்டும். A முள்ளந்தண்டு, முன் ணான் போன்ற நரம்பி
L6ù G56o pLufTG96(65 63 (eg. Spina bilida குழந்தைகள் பிறப்பதற்கு முக் காரணம் போலிக்கமிலம்(Folic Acid) என்ற விற்றமின் குறைபாடாகும். இக்குறைபாடு குழந்தை வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளில் ஏற்படுவ தால், பெண் தாய்மைப் பேப் - 9 623 ti i ur முன்னரே போது மான அளவு போலிக் அமிலத்தினை உட்கொள்ள வேண்டு ம். போலிக்கமிலம் பச்சை இலைவகைகளில் அதகம் உண்டு. * நோய்வாய்ப்பட்ட நிலையில் பெண் தாய்மைப்
பேற்றினை அடைதல் தவிர்க்கப்படல் வேண்டும் எனினும் நீண்டகால நோய்கள் (Chronic disea Ses) உடையவர்கள் (உ+ம் இருதயநோய், சல ரோகம்) உரிய வைத்திய ஆர். "சனையின்படி கர்ப்பம் தரித்துக் கொள்ளலாம். * கணவன் மனைவி இருவரும் தங்கள் பொரு
ளாதாரநிலை, வெளி நா ட் டு பிரயாணங்கா, போன்ற நிலைகளைக் கருத்தில் கொண்டு கர்ப்ப மடையும் காலத்தைத் தீர்மானிக்கலாம். : இரண்டு குழந்தைகளிற்கிடையே உரிய இடை வெளி (Spacing) ஆகக்குறைந்தது 2 வருடங்கள் ஆவது இருத்தல் நல்லது. இது முதல் குழந்தை யின் வளர்ச்சிக்கு உதவுவதோடு தாயை அடுத்த பிரசவத்திற்கு தயார்செய்வதற்கும் உதவுகின்றது * உடல்நிலை மட்டுமல்ல உளநிலையும் கூட தாய்
சேய் நலனைப் பாதிக்கும் என்பதால் பாதிப் படைந்த சந்தர்ப்பங்களில் தாய்மை அடைதலை தவிர்த்தல் ந ல் லது உ+ம் இடம்பெயர்வு, வீட்டில் முக்கியமானவரின் இழப்பு பெற் றோரைப் பிரிந்த, பிரிகின்ற நிலை. எனவே உரிய குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தி திட்டமிட்டு தாய்மைப் பேற் றினை அடைதல் மூலம் கர்ப்பகால பிரச்சனைகளை குறைப் பதோடு சிறந்த குழந்தைகளையும் பெற்றுக் கொள் ளலாம்.
per: 3 2000

Page 6
கர்ப்பகாலங்களில் ஏற்பரு
உயர் குருதி அமுக்கம் = ஒய்
உடல் இழையங்கள் தமக்குத் தே ைவ ய ர ன குருதி விநியோகத்தைப் பெறுவதற்கு குருதி அமுக்கம் அவசியம். குருதி உடலினுள் குருதிக் குழாய்களாலான ஒரு மூடிய தொகுதி யூ டா க சுற்றியோடுகின்றது. எவ்வாறு திரவமானது அமுக்கம் கூடிய இடத்தில் இருந்து குறைந்த இடத்திற்கு செல்லு மோ அவ்வாறே குருதியும் இதயம் சுருங்கும் போது இதயத்திலிருந்து உடல் இழையங்களிற்கும், இதயம் தளரும்போது உடல் இ  ைழ யங் களி ல் இருந்து இதயத்திற்கும் செல்கின்றது.
குருதி அமு க் கம் என்பது பாயும் குருதி நாடி களின் சுவர்களில் ஏற்படுத்தும் விசையாகும், இதயம் சுருங்குகையில் இது 120 mmHg ஆகவும் தளர்கையில் 80 மmHg ஆகவும் இருக்கும். எனவே குருதி அமுக் கம் இதயத்தினால் பம்பப்படும் குருதியின் அளவி அலும் குருதிக்கலன்களின் விட்டத்திலும் தங்கி இருப் பதுடன் மொத்த குருதியின் அளவிலும் தங்கி இருக்கும்.
குருதி அமுக்கம் உயருவதால் நாடிகளின் இழு நிலை பாதிப்படைகின்றது. ஏன் எனில் இவ் அமுக்க விசை காரணமாக இழுபடு தன்மையற்ற வெந்நார் இழையங்களினாலும் (collagen fibres) கல்சியப் படிவுகளினாலும் சுவர் வைரமடைகின்றது. இதன் காரணமாக மேலும் குருதி அமுக்கம் அதிகரிப்பத னால் குருதிப்பாய்பொருள் நாடிகளின் சுவரினூ டாக இழையங்களினுள் கசிகின்றது. இதில் உள்ள வளர்ச்சிதுைரண்டும் பதார்த்தங்கள் (Growth factors) நாடிச்சுவரின் வளர்ச்சியை தூண்டுவதால் சுவரின் தடிப்பு அதிகரிப்பதுடன் அவற்றில் கொழுப்பு படிவும் ஏற்படுகின்றது.
மேற்கூறப்பட்ட விளைவுகளினால் குரு தி க் குழாய்களின் விட்டம் குறைவடைகின்றது. எனவே குருதி விநியோகமும் குறைகிறது. இத்
தாக்கம் இதயத்திற்கு நிகழும் போது இதயத்தில் வலி ஏற்படல், மாரடைப்பு என்பனவும், மூளைக் குரிய குருதிக்கலங்களில் ஏற்படும் போது பக்கவாதம் போன்றவையும், கண்களைத் தாக்கும் போது பார்வைக் குறைபாடுகளும், (Retinopathy) இதை
affair trafi D6s shal aff 4ம் வருட மருத்துவ மாணவி மருத்துவபீடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
04 :மஞ்சரி ܐ

ம்
அறிமுகம்
விட இளைப்பு, கடின வேலைகள் செய்ய முடியாமை, மனச்சோர்வு என்பனவும் ஏற்படுகின்றன.
உயர் குருதி அமுக்கம் கரு த் த ரித் த தாய்க்கு ஏற் படும் போது அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துகின் றது. வைத்திய உதவி கிடைக்காத இடத்து, தாயின் உயிருக்கு ஆபத்தாகக் கூட அமையலாம் . எனவே இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறல் அவசியம். கர்ப்பவதிகளில் நோயின் தாக்கம் ஏற்படு முன்னரே நோயின் அறிகுறிகள் தோன்றுவதால் ஆரம்பத்திலேயே வைத்திய உ த வி ைய பெறல் சாத்தியமாகிறது.
சா த ரா ரண மா க ஒரு பெண் கர்ப்பவதியாகும் போது குழந்தைக்கு தேவையான பதார்த்தப் பரி மாற்றலை நிவர்த்தி செய்வதற்காக குருதியின் அளவு அதிகரிக்கிறது. எனவே குருதி அமுக்கமும் அதிகரிக் கின்றது. ஆனால் ஓமோன்கள் காரணமாக குருதிக் கலன்களின் சுவர்களில் உள்ள கலங்கள் எண்ணிக்கை யில் அதிகரிப்பதால் விட்டம் அதிகரிக்கிறது. எனவே குருதி அமுக்க அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் 130 mmHg வரை சுருங்க குருதி அ முக்கம் உயரலாம். ஆனால் இதனால் பாதிப்புக் கள் ஏற்படுவதில்லை. அவ்வாறே தளர்தல் குருதி அமுக்கமும் அதிகளவில் மாறுபடுவதில்லை. கர்ப்ப வதிகளில் வளரும் குழந்தை, பெரிதாகும் கருப்பை
கொழுப்பு சேர்க்கை, மார்பக விருத்தி, அதிகரித்த குருதியின் அளவு, சூல்வித்தகம் ஆகியன காரண மாக நிறை அதிகரிக்கின்றது. இது கிழமைக்கு kg ஆல் வழமையாக அதிகரிக்கும். சில வேளைகளில்
கலங்களில் இருந்து இதயத்திற்கு வரும் நாளத்தை
கருப்பை அழுத்துவதனால் கால்களில் வீக்கம் ஏற் படலாம். இவ்வீக்கம் மாலை வேளைகளில் தோன்றி அதிகாலையில் மறைவதை அவதானிக்கலாம்.
சில கர்ப்பவதிகளில் இதுவரை தெளிவாக கண்ட றியப்படாத சில காரணங்களால் வழமைக்கு மாறாக குருதி அமுக்கம் கூடுகிறது. இதனை கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் குருதி அமுக்கம் என்பர். (Pregnancy induced hypertension) giGpsrtunrefrth களில் உடலில் தேங்கும் நீரின் அளவு வழமையை விட அதிகரிப்பதால் நிறையதிகரிப்பும் ஒரு கிழமைக்கு * kg ஐ விட அதிகமாக இருக்கும். இந்த அசாதாரண நீரின் தேக்கம் காரணமாக உடலின் பலபாகங்களில் வீக்கம் ஏற்படுகின்றது. உதாரணமாக விர ல் கள் வீக்கமடைவதால் விரலிலுள்ள மோதிரங்கள் இறுக் குதல், தோலின் கீழ் நீர் தேக்கமடைவதால் தோல்
wቡ: 03 8000 சுகமஞ்சரி

Page 7
தடித்து காணப்படல், விரல்களுக்குச் செல்லும் நரம்பைச்சூழ நீர் தேங்குவதால் மணிக்கட்டுப் பகுதி யில் உள்ளங்கை முடியும் இடத்தில் சற்று மேலே அழுத்தும் போது விரல்களில் நோவுடன் கூடிய வித்தி யாசமான உணர்வு, முகம், கண்மடல் , கணுக்கால் பகுதிகளில் வீக்கம், கணுக்கால் பகுதியில் விரலால் அழுத்தும் போது நீரை இடம் பெயர்ப்பதால் பள்ளம் ஏற்படுதல். (pitting 0edema) என்பவற்றை அவ தானிக்கலாம். இவ்வீக்கங்கள் காலை, மாலை எந்த வேளையும் இருக்கும்.
இவர்களில் குருதி அ மு க் கம் 140 / 80 mmHg என்ற அளவில் அல்லது அதை விட அதிகமாக காணப் படும்.
சிறுநீருடன் புரதம் வெளியேறும் குறிப் பா க அல்புமின் வெளியேறும். ஏனெனில் அதிகரித்த குருதி அமுக்கம் காரணமாக சிறுநீர் குருதிகலன்களின் ஊடுபுகவிடு தன்மை அதிகரிக்கிறது. எனவே சிறிய மூலக்கூறுகளான அல்புமின் சிறுநீருடன் வெளியேறு கின்றது. குருதி அமுக்கம் மேலும் அதிகரிக்கையில் மற்றைய குருதிப் புரத மூலக்கூறுகளும் வெளியேற
6 filt.
குருதி அமுக்கம் 140 / 90 mmHg ஆக இருப்பது சிறுநீருடன் புரதம் வெளியேறுதல் நோயின் தீவிரத் தன்மையைக் குறிக்கும். எனவே உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகுதல் வேண்டும்.
குருதி அமுக்கம் 160 / 110 mmHg ஆகவோ அல்லது அதைவிட அதிகரித்தோ காணப்படுவதுடன் சிறுநீரு டன் புரதமும் தோன்றும் போது நோயாளிக்கு மேற் கூறியவற்றுடன் தாங்க முடியாத தலையிடி (குறிப் பாக தலையின் பிடரிப்பகுதியில் Occipital region) வாந்தி, சிறுநீர் வெறுயேறுவது குறைதல், வயிற்றுக் கும் நெஞ்சுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் நோ பார்வைக் குறைபாடுகள், பார்வை மங்குதல் என்பன ஏற்படும். இதன் போது வைத்திய உதவி பெறப் படாவிடின் வலிப்பு ஏற்படுகின்றது. சில தாய்மார் களில் எவ்வித அறிகுறிகளும் இல்லாமலும் திடீரென வலிப்பு உருவாகலாம்.
2-uf 505 up is 60 to 3 stíflá þIIGfð fðð806Mś6
SS
மூளையில் குருதிப்பெருக்கு - இறப்பு ஏற்பட . מאזוע6
சிறுநீரகம் பழுதடைதல் - சிறுநீரகம் செயல் இழத்தல்.
咨
* மூளையில் வீக்கமும் பாதிப்பும் ஏற்பட்டு கால்,
கைகளில் பக்கவாதம் ஏற்படல்.
3 சரல் பழுதடைதல் - இறப்பு ஏற்படலாம் .
சகமஞ்சரி மஞ்சரி: 04

இதய அறைகள் கனவளவில் அதிகரித்தல் - இதயம் செயலிழத்தல்,
அதிரினல் சுரப்பிகள் செயலிழத்தல்,
நோயாளி ஆழ்ந்த மயக்கத்தில் இருத்தல் - இறப்பு ஏற்படல்.
un gugšas ft S GRIMUS 6gejš605 udá 9 pLI8Ď ílytöfi606A 36ä
பிறப்பில் குறைபாடுள்ள குழந்தைகள் உருவாதல்.
நிறை குறைவான குழந்தைகள் . இவர்கள் நோய்க் கிருமிகளின் தாக்கத்திற்கு அ டி க்க டி
உள்ளாவார்கள்,
குழந்தை இறந்து பிறத்தல் அல்லது பிறந்த பின் இறத்தல்
குருதி அமுக்கத்தின் விளைவுகளை கட்டுப்படுத்த 6. Gå G6N6 U SL6 igåš696 66
落
குருதி அமுக்க அதிகரிப்பு பொதுவாக குழந்தை பிறப்பதற்கு கிட்டிய மாதங்களில் ஏற்படுவதால் அக்காலப்பகுதிகளில் தாய்மார்கள் சிகிச்சை நிலையத்திற்கு அடிக்கடி சமுகமளித்தல்.
ஒவ்வொரு சிகிச்சை நிலைய வரவின் போதும்
V நிறையை அளவிடல்.
V உடலில் வீக்கம் உள்ளதா என பரிசோதித்
தல்.
V சிறுநீருடன் புரதம் வெளியேறுகிறதா என
பரிசோதித்தல்.
V கர்ப்பவதிகள் சிகிச்சை நிலையத்தில் போது மான அளவு ஒய்வு எடுத்தபின் குருதி அமுக் கத்தை அளவிடல். அது அதிகரித்து இருந் தால் அவர்களை அமரச் செய்து மீண்டும் போதியளவு நேரத்தின் பின் அமுக்கத்தை அளவிடல்.
இவர்களில் யாராவது நோயாளியாக காணப்பட் டால்,
V (ğ5(155) 9(ypâi 85ib I 40 / 9 0 mohHg é22 6ßL— அதிகரிக்காது விட்டால் வீட்டில் படுத்தபடி ஓய்வு எடுக்குமாறு ஆலோசனை வழங்குவ துடன் இரு தினங்களுக்கு ஒரு தடவையாவது குடும்ப நல உத்தியோகத்தர் மூலம் குருதி அமுக்கத்தை வீட்டில் அளவிடல். அதிகரித் திருந்தால் உ டன டி யாக அருகிலிருக்கும வைத்தியரை நாடிச்செல்லல்.
03 2000 5.

Page 8
V7
தினமும் அல்லது இரு தினங்களுக்கு ஒரு தடவையாவது சிறுநீருடன், புரதம் வெளி யேறுகிறதா எனப் பரிசோதித்தல். வெளி யேறினால் உடனே வைத்திய உதவி யை
நாடுதல்,
இந்நோய் யாருக்கு அதிகளவில் ஏற்படுகின்றது?
* 18 வயதிற்கு முன் 35 வயதிற்கு பின் கர்ப்பம்
தரிப்பவர்கள் .
* முதல் பிரசவத் தாய்மார்கள்.
* H-Mole கர்ப்பம் உள்ளவர்கள். இவர்களில்
இக்குருதி அமுக்க அதிகரிப்பு 3 மாதங்களுக்குள். ளேயே தொடக்கிவிடும்.
குறைபாடில்லாத குழந்தைகள்
O
திருமணம் செய்யு முன்பே ருபெல்லா? தடுப் வர்கள் கர்ப்பம் தரிப்பதற்கு குறைந்தது மூ போட்டுக் கொள்ளுங்கள்.
இரத்த உறவுடையவர்கள் தங்களுக்குள் திருய
கர்ப்பம் தரிப்பதற்கு முன் வைத்திய பரிசோ
பெண்கள் அதிக அளவில் பச்சை இலை வன உட் கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் இருந்தே கர்ப்ப்வதிகள் சிகிச்.ை
புகை பிடித்துக் கொண்டிருப்பவர்களின் அரு
கர்ப்ப காலத்தில் வைத்திய ஆலோசனை இன்
20 - 95 வயதிற் கிடையில் குழந்தைகளை ே
18 வயதிற்கு முன்னரும் 35 வயதிற்கு பின் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக் கிடையில் குறைந்தது 2 - 8
கர்ப்ப காலத்தில் மலேரியா வராது உங்கை
கர்ப்பவதிகள் பிரச்சனைகள் இருப்பின் உட
கர்ப்ப காலத்தை மன நிறைவுடனும், சந்ே
மஞ்சரி: 4 u

* அதிக எண்ணிகையான குழந்தைகளை பெற்ற
வர்கள்,
紫 பரம்பரைய ாக தாய், சகோதரிகள் கர்ப்பகாலத் தில். குருதி அமுக்க அதிகரிப்பு கொண்டவர்கள்.
சிறுநீரகம், தைரொயிட், gyrfarësir'u ulio நோயுள்ளவர்கள்.
* ஏற்கனவே உயர்குருதி அமுக்கம் உள்ளவர்கள்.
மேற்கூறிய காரணங்களை ம ன த் தி ல் கொண்டு
மருத்துவ அறிவுரையின் படி செயல்படுதல் தாய், சேய் நலனை உயர்த்தும்,
ளை பெற்றுக் கொள்ளுங்கள்
பூசி போட்டுக் கொள்ளுங்கள். போடத் தவறிய ன்று மாதங்களுக்கு முன்னராவது ஊசி மருந்து
மனங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் .
தனை செய்து கொள்ளுங்கள்.
ககளை அல்லது "போலிக்கமிலம்’ மாத்திரைகளை
ச நிலையங்களுக்கு செல்லுங்கள்.
கில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
றி மருந்துகள் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பற்றுக் கொள்ளுங்கள்.
னரும் குழந்தை பெறுவதை முற்றாகி தவிர்த்துக்
வருட இடைவெளிகளை ஏற்படுத்துங்கள்.
ள பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ன் வைத்திய ஆலோசன்ை பெறுங்கள்,
நாஷமாகவும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
Ꮝnj ; 8 Ꮧ00Ꮎ* சுகமஞ்சளி

Page 9
குறைமாத பிரசவம்
சாதாரண பெண் ஒருவர் கர்ப்பம் தரிக்கும் போது அவரது பிரசவ காலம் பின்வருமாறு கணிக்கப்படுகி றது. கர்ப்பவதி ஒருவரின் கடைசி மாதவிடாய் சக்கரத்தின் முதல் நாளுடன் 9 மாதங்களையும் 7 நாள்களையும் கூட்ட வேண்டும். (அதாவது 280 நாள் கள்) இப்படி கூட்டி வரும் நாள் எதிர்பார்ப்பு பிரசவ திகதியாகும். கிழமைகளில் 40 கிழமைகள் ஆகும். இருப்பினும் 38 ஆம் கிழமை தொடக்கம் 42 ஆம் கிழமை வரை சாதாரண முழு பிரசவ காலம் என கருதப்படுகிறது. ஒரு பெண் 37 கிழமைகளின் முன் குழந்தையை பிரசவிப்பாராயின் அது குறைமாத பிரசவமாக கருதப்படும். குறைமாத பிரசவம் தாய் - சேய் இருவருக்கும் ஆபத்தான நிலைமைகளை தோற்றுவிக்கின்றது. இத்தகைய பிரசவங்கள் தாயின் கர்ப்பகால இறப்பிற்கு காரணமாவதுடன் குழந்தை யில் வாழ்நாள் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். குறைமாத பிரசவங்கள். பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அவற்றில் சில தாய்க்குரியனவாகவும் சில குழந்தைக்குரியனவாகவும் காணப்படுகிறது. குழந்தை கருப்பையில் இருக்கின்ற போதே பிறப்பு ரிமை குறைபாடுகள் காணப்படினும், கருப்பையில் ஒன்றுக்கு ம்ேற்பட்ட குழந்தைகள் வளரும் போதும் குறைமாத பிரசவங்கள் நிகழ வாய்ப்பு உண்டு.
5TilijћI MIJOMlidi
* கர்ப்பகாலத்தில் நோய் தாக்கத்திற்கு உட்படுதல்
ě smůlustav Sláš3áv956řT.
A உயர் குருதியமுக்கம்
A குருதிச் சோகை
A "பிரசவத்திற்கு முன்னான் குருதிப் பெருக்கம்
A சூல்வித்தகம் கருப்பை வாயிலை நோக்கி
அமைதல்
A அசாதாரண கருப்பை
A கருப்பை வரயில் ஏற்படும் தளர்ச்சி
A அதிகளவு அமினியன் பாய்பொருள் தேக்கம்
. J816sflhst
நான்காம் வருட மருத்துவ மாணவன்
மருத்துவ பீடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
தி க - ஞ்சரி மஞ்சரி: 04

A உதரப்பகுதியில் ஏற்படும் பலமான egie
காயங்கள்
A குழந்தையை தாங்கியுள்ள மென்சவ்வு உரிய
காலத்தின் முன் கிழிவடைதல்
35 வயதிற்கு மேற்பட்ட அல்லது 18 வயதிற்கு குறைந்த தாய்
r
முன்னைய பிரசவங்கள் சிதைவுக்குட்பட்டிருத் தல்
s சீரான நிறை அதிகரிப்பு நிகழாமை
சில சந்தர்ப்பங்களில் தாய் - சேய் நலனைக் கருதி குறைமாத பிரசவங்கள். தூண்டப்படுகின்றன. அவை யாவன; தாயில்
* கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு தோய்
* அதிகரித்த இருதய நோய்
* சரியாக தொழிற்படாத சூல்வித்தகம்
* குழந்தைக்கள்னர் குருதி 'விநியோகம் குறைவடை
தல்
* குருதியில் Rh தரணி அதிகரித்தல்
அத்துடன் தாய் ஏற்கனவே குழந்தைப் பேறு குறைந்தவராகவோ அல்லது குழந்தை பெறுவதற் க்ான வயதெல்ல்ை த்ாண்டியவராகவோ இருக்கு மிடத்து மருத்துவர்க்ளால் சிறந்த பராமரிப்பு வசதி யுடன் குறைமாத பிரசவம் தூண்டப்படுகிறது.
இவ்ற்றுட்ன் தாயில் ஏற்படும் மன அழுத்தம் மனக் கிளர்ச்சி என்பனஷ்ம் குறைமாத பிரசவத்தில் குறிப்பிட்ட பங்காற்றுகின்றன. அண்மையில் யாழ். குடாநாட்டில் ஏற் பட்ட போர்ச்சூழலும், الحالق பெயர்வும் குறைமாத பிரசவங்களின் எண்ணிக்க்ை அதிகரிப்புக்கு காரணமாக இருப்பத 'க் வைத்தியி சாலை குறிப்புகள் காட்டுகின்றன.
TLLLLS SS SLSSLLLLLSLL L0LLLLL S SY lla 9 lailä6fá 66 pLIkgäji. 98:a:
* மெலிநதும் உயரம் குறைந்தும் இருத்தல்
* தலைப்பகுதி ஒப்பீட்ட்ன்வில் பெரிதாக இருத்தல்
}லர் 03 2000 7

Page 10
ஆ. மண்டையோட்டு பொருத்துகளிற் கிடையிலான
இடைவெளி அகலமாக இருத்தல்
து மண்டையோட்டின் முற்பகுதியில் உள்ள உச்சிக்
குழி பெரிதாக இருத்தல்,
சிசுவின் தோல்
森
A மிக மெல்லியது
A கருஞ்சிவப்பு நிறம்
A மினுமினுப்பானது
A அதிக நுண்ணிய Lougrmtdio GBL IT tħi SL
பட்டிருக்கும்
முகம் சிறிதாக இருத்தல்
தோலின் கீழ் கோழுப்பு மிகக்குறைவு
; மார்பு மொட்டுக்கள் உருவாகி இராது அல்லது
5mm ஐ விடக்குறைவு
காதுச்சோணை மென்மையாகவும் தட்டையாக
வும் இருத்தல்
举 பாதத்தில் ரேகைக் தோடுகள் உருவாகாமல்
இருத்தல்
; மூளை விருத்தி குறைவு அதனால் A உற்சாகம் குன்றியிருக்கும்
கால், கை அசைவு குறைவு A தசைகள் வலிமை குறைவு
略 தாயின் மார்பகத்தில் பால் உறிஞ்சுவதற்கும்,
விழுங்குவதற்கும் இரமப்படும்
ஆண் சிசுவில் விதைகள் வி ைத ப்பை களில் இறங்கியிராது. பெண் சிசுவில் பேருதடுகள் அகலமாக பிரிந்திருக்கும்
மேற்படி இயல்புகளின் அளவும் தன்மையும் சிசுவின் கர்ப்பகால வயதில் தங்கியிருக்கும்.
குறைமாத சிசுவில் பல்வேறுபட்ட உடற்தொழில் குறைபாடுகளும் மருத்துவ சிக்கல்களும் காணப்படும்.
1. நரம்புத் தொகுதி
அவயவங்கள் வலுவற்றிருத்தல்
亲
தூண்டலுக்கு தூ ண் ட ற் பேறு குறைவாகி காண்பிததல்
(S
بی
கேட்டல், பார்வைத் திறன் குறைவு
亲族
மஞ்சரி: 04
8

* வளரும் காலங்களில் கல்வி ஆற்றல், ஞாபக
சக்தி குறையலாம்.
மற்றைய சிசுக்களுடன் ஒப்பிடுகையில் தாமத மாக பேசவும் நடக்கவும் தொடங்குதல்.
* நுட்பமான வேலைத்திறன் குறைதல்,
2. að GöIG
3; சுவாசத் தசைகள் பலவீனமடைதல்
3 Surfactant sy6Tay G5 Gospjö Söö356ão.
இதனால்
A சுவாசவீதம், சுவாச ஆழம் குறைவடைதல்
A சுவாசப்பை தொற்று ஏற்படல்.
3. 9-60s as their as 5
* இரைப்பை சிறிதாகவும், இறுக்கித் தசை தளர்வாகவும் , இருப்பதால் 2.Ostašr Lபால் மீள வெளித் தள்ளப்படும்.
ஆ. நுண்ணங்கித் தொற்றுக்கு இலகுவாக உட் பட்டு வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் என்பன ஏற்படும்.
கல்லீரல் முதிர்ச்சி குறைவால்
A குருதிக் குளுக்கோஸ் அளவு குறைவாக
இருக்கும்.
A மஞ்சட் காமாலை ஏற்படும்.
4. குருதி தொகுதி
A Patent ductus arteriosus 5 a 6 & s av air தடுப்பு தாமதமாகும். இதனால் சுவாசக் கஷ்டம், வேகமான இரு த யத் துடிப்பு ஏற்படும்.
A மண்டை ஒட்டு குருதிக் கசிவு ஏற்படும்.
5. சிறுநீரக விருத்தி குறைவு * ஆகவே குருதிப் Hே குறைவு
6
e Lò GQUI FO 86060
ஆ; தோற்கீழ் கொழுப்பு குறைவு அதிக வெப்ப
இழப்பை ஏற்படுத்தும்.
* வெப்ப உருவாக்கம் குறைவு. அவைகள்
16ህርቮ: 03 2000 சுகமஞ்சரி

Page 11
தசைத் தொழிற்பாடு குறைவு ஈரல் அனுசேபத் தாக்கங்கள் குறைவு வெப்ப சக்தி வழங்கும் Brown Fat குறைவு ஒட்சிசன் உபயோகிக்கும் திறன் கலங்களில் குறைவு
i
மேற்படி நிகழ்வுகள் சிசுவின் வெப்ப சீராக்கலில் பாரிய பிரச்சனைகளை உருவாக்கும்.
(56) AOLD T5 fiJi i go ġabu 6bis u Tg5à gp100 g) 66ir
1. கர்ப்பவதி ஒழுங்கான கர்ப்பகால கிளினிக் வரவை
மேற்கொள்ள வேண்டும். ஏனெனில்
A குழந்தையின் குறைபாடுகள் A கருப்பைக் குறைபாடுகள் A இரட்டைக் குழந்தைகள் A முன்னைய குறைமாத பிரசவ சரிதை
போன்றவற்றிற்கு ஏற்ப தாய் பிரசவத்திற்கு தயார் செய்யப்படுவாள்.
2. குறைமணதப் பிரசவம் நடக்கும் இடம் மிதமான
சூடு உள்ளதாகவும், மகப்பேற்று வைத்தியர்
மயக்க மருந்து மருத்துவர், சிறந்த குழந்தை மருத்துவ நிபுணர் போன்றோரின் மேற்பார்வை
யும் இருத்தல் அவசியம்.
3. சாதாரண யோனிவழிப் பிறப்பு சிக்கலாகுமிடத்து
Episiotomy எனும் அறுவை சிகிச்சை முறையை உபயோகிக்கலாம்.
4. இடுக்கி உபகரணத்தை (Forceps) உபயோகித்து குழந்தையின் தலையை பாதுகாத்து குழந்தையை வெளியெடுக்கலாம்.
3. குழந்தையின் புட்டப் பகுதி பிறப்பு வழியை நோக்கி இருக்குமிடத்து அல்லது தாயின் உடல்
“கங்காரு ட
அவுஸ்திரேலியாவில் வாழும் முலையூட் தில்" பெற்றெடுத்து விசேடிமான தனது வயிற்று பாலூட்டுகின்றது. தாயின் வெப்பம் குட்டிக்கு
குறை மாதத்தில் பிறந்த சிசுவையும் தா பதன் மூலம் தேவையான வெப்பத்தை சிசுவுக்
«s – 3 fl மஞ்சரி: 04

நிலை மோசமடைந்திருப்பினும் உதரப் பகுதி சத்திர சிகிச்சை முறையை உபயோகித்து குழந் தை பிரசவிக்கலாம்
பிரசவித்த சிசுவை முதிர்வடையா குழ ந்  ைத பராமரிப்பு பகுதியில் சேர்க்க வேண்டும்.
சிசுவுக்கு தாய்ப்பால் வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும். சிசு பால் அருந்த முடியா த விடத்து தாய்ப்பாலை எடுத்து வழங்கவும்
தாய்ப்பாலுடன் மேலதிக உணவாக புரதம், கலோரி அடங்கிய திரவப் பதார்த்தங்கள், விற்ற மின்கள், கனியுப்புக்கள் போன்றனவும் வழங் கப்படல் வேண்டும்.
(56)[I îJJolili68I (8556)
ls
2
ஒழுங்கான கிளினிக் வருகை, கர்ப்பகால நிறை அதிகரிப்பை ஒழுங்காகப் பேணுதல்.
முன்னைய குறைமாத பிரசவ சரிதையுடைய வர்கள் முற்பாதுகாப்பு மாத்திரைகளை எடுத்தல்
கர்ப்ப காலத்தில் புகை பிடித்தல், மது அருந்து தல் போன்றவற்றை நிறுத்தல்.
கருப்பை தசைகளுக்குரிய GF G 3F i p 3D
பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளல்,
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு விரை வாக சிகிச்சை எடுத்தல்
கர்ப்பவதிக்கு கணவனும் உறவினரும் உதவியாக இருத்தல்,
கர்ப்பவதி மன அழுத்தம், மனக் கிளர்ச்சி போன்ற வற்றில் இருந்து விடுபட ஆவன செய்தல்.
ராமரிப்பு”
கங்காரு. தனது குட்டிகளை "குறை மாதத் ப் பகுதி பையில் குட்டியை வைத்து பராமரித்து தேவையான வெப்பத்தை கொடுக்கின்றது.
ய் தன்னுடின் சேர்த்து அணைத்து வைத்திருப் கு கொடுக்கலாம்.
望
ра)rѓ: 03 2000 9

Page 12
கருச்சிதைவு
பாலுறவின் பொழுது ஆணில் இருந்து வெளி யேறும் சுக்கிலத்தில் ஏறத்தாழ அரை மில்லியன் (500,000 - ஐம்பது இலட்சம்) விந்துக்கள் யோனி யைச் சென்றடைகின்றன. இவற்றில் ஏறத்தாழ இருநூறு (200) மட்டுமே, கருப்பையை அடை கின்றன. சாதாரணமாக மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வெளியேறுகின்ற ஒரு முட்டையை, வீரியம் மிக்க ஒரு விந்து பலோப்பியன் கால் வாயில் சந்தித்து, கருக்கட்டுகின்றது, இரண்டு, மூன்று நாட்களில் கரு, கருப்பையை அடைந்து, சூழ்நிலை சாதகமாக இருந்தால் சுவரில் பதிந்து வளர்ச்சியும், விருத்தியும் பெறுகின்றது. சாதாரண மாக கருவளர்ச்சி பெற்று குழந்தையாகப் பிறப் பதற்கு 40 வாரங்கள் தேவைப்படுகின்றன. 40 வாரங்கள் முழுமைபெறாது, பல காரணங்களுக் காக, சில சந்தர்ப்பங்களில் பிரசவம் நடைபெற்று விடுகின்றது. இவ்வாறான 'குறைப்' பிரசவம், கருவானது உருவாகி கருப்பைச்சுவரில் பதிந்த நாளில் இருந்து 28 வாரங்களுக்கு இடையில் நடை பெற்றால் அதைக் "கருச்சிதைவு" என்று அழைக் கின்றோம், ܫ
கருச்சிதைவு இயற்  ைக யாக அதாவது தானா கவே நடைபெறலாம். அது இயற்கை கருச்சிதைவு எனப்படும். 25% கருக்கட்டல் பல காரணங் களுக்காக, இயற்கைக் கருச்சிதைவாக முடிந்து விடுகின்றது. தாய்க்கு ஏற்படும், இரத்தசோகை, மலேரியா போன்ற கடும் காய்ச்சல், கருப்பை குறைபாடு, ஓமோன்களில் ஏற்படும் குறைபாடுகள் முக்கியமாக இருந்தாலும், கருவில் ஏற்பட்டிருக்கும் பிறப்புக் குறைபாடுகளே இயற்கை கருச்சிதைவுக்கு முக்கியமான காரணியாக கணிக்கப்படுகின்றது.
ஆனால் இயற்கையாக ஏற்படாமல் பல காரணங் களுக்காக, உருவாகி வரும் கரு, செயற்  ைக முறையாக,
1. மருந்துகளின் மூலமாகவோ, அல்லது
2. கர்ப்பப் பையினுள்ளேயே வைத்து ஏதாவது கருவியையோ, பொருளையோ, உள்ளே செலுத்தி, குழப்பியோ சிதைக்கப்படுகின்றது.
உலகின் பெரும் பா ன்  ைம நாடுகளில், குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள் இவ்வாறு கருச்
Lis Lif fi... GT6iii). 53f6OT Tifdi d6oflui6i
சமுதாய மருத்துவத் துறை, மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
0 மஞ்சரி: 04

சிதைவு செய்து கொள்வதற்கு சட்டம் இடம் கொடுக் கின்றது. அவ்வாறான நாடுகளில் வைத்தியசாலைக ளிலேயே, மருத்துவர்களினால் கருச்சிதைவு, ஆபத்து இல்லாத, தேர்ந்த முறைகளில் கிருமித்தொற்று இல்லாத சூழலில், மேற்கொள்ளப்படுகின்றது. மேல் நாடுகள் மட்டுமன்றி, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலும், அரசாங்க வைத்தியசாலைகளிலேயே கருச்சிதைவைச் செய்து கொள்ளலாம். அதற்கு அந் நாட்டு சட்டம் இடம் கொடுக்கின்றது.
இ ல ங்  ைக யி ல் கருச்சிதைவுச்சட்டம் மிகவும் கடுமையானது கொடுமையானது என்று கூடச் சொல்லலாம். இலங்கைச் சட்டத்தின் படி ஒரு தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே கருச் சிதைவு செய்யச் சட்டம் இடம் அளிக்கின்றது. அதாவது ஒரு மணம் ஆகாத இளம் பெண் கற்பழிக் கப்பட்டு - பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு அப்பெண் கருவுற்றால் கூட அவளுக்கு கருச்சிதைவு மருத்துவர்களால் செய்யப்படுவதற்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை. தனக்கு ஏற்பட்டுள்ள உடல்ரீதி шт68т, உளரீதியான, சமூகரீதியான தாக்கங் களுடன் இவ்வளவு உளைச்சலுக்கும் காரணமான நிகழ்வின் மூலம் உருவான கருவை பத்து மாதம் சுமந்து பெற்று பராமரிக்க வேண்டும் என்று இருக்கும் மனிதாபிமானமற்ற இக்கடும்சட்டம் திருத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. இக்காலகட்டத்தில் முக்கியமானதுவும் கூட
சட்டம் இப்படி கடுமையாக இரு ந் தாலு ம் ஏறத்தாழ 750 சட்டத்திற்குப் புறம்பான கருச் Sato,5656ir (Criminal Abortion) gaió05udi நாளாந்தம் நடைபெறுவதாக உலக சு காத ரா ர மையத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உடலி யல், உளவியல் நோய்க்கிருமி நீக்கம் போன்றவை குறித்த எவ்வித அறிவும் இல்லாத பலரால் பல கொடூரமான முறைகளில் சட்டத்திற்குப் புறம்பான கருச்சிதைவு மேற்கொள்ளப்படுகின்றன. கருச்சிதைவு செய்து கொள்ளும் பெண் பணம் கொடுப்பதுடன் தன்னுடன் பாலுறவு கொள்ள வேண்டும் என்பது வும் இவர்களில் ஒரு சிலரது நிபந்தனையுமாகும் , மருத்துவ அறிவு சிறிதும் அற்ற இவர்கள், பலவித தடிகள், தண்டுகள் முதலியவற்றை யோனித் துவா ரத்தின் மூலம் கருப்பையினுள் செலுத்தும் பொழுது இவை யோனியைக் குத்திக் கிழித்துக்கொண்டு வயிற்று உறுப்புக்களைச் சேதப்படுத்தி உயிராபத் துக்களை விளைவிப்பது வைத்தியசாலை மருத்து வர்கள் அறிந்த ஒன்று. பல்லாயிரக் கணக்கான ரூபா பெறுமதியான மருந்துகள் இவர்கள் ஒவ்வொரு வரின் உயிரைக் காப்பதற்காக செலவிடப்படுகின் றது. இது நோயாளர் உணரப்படாத ஒன்று சட்
upayi . 03: 2000 சுகமஞ்சரி

Page 13
டத்திற்குப் புறம்பான கருச்சிதைவை மருத்துவர்கள் பொலிசாருக்கு அறிவிக்க வேண்டும் என்பது சட் டம். ஆனால் இவ்வாறு செய்தால் இந்நோயா ளர்கள் வைத்தியசாலைக்கு வராமல் வீடுகளில் இருந்து, நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி, பலவித மான நோய்ச்சிக்கல்களுக்கு ஆளாவது மட்டுமல்ல, அவர்களுக்கு மரணமும் ஏற்படலாம் என்பதால், மருத்துவர்கள் அதிகமாக பொலிசாருக்கு அறிவிப் பது இல்லை.
நோய்ச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கிருமித்தொற்று. முக்கியமாக பலோப்பியன் கால் விTப் தாக்கத்திற்கு உள்ளானால், கருத்தரிக்கும் வாய்ப்பே இனி இல்லாமல் போகலாம். அடைப்பு முழுமையாக இல்லாது போனால், கருத்தரித்தாலும் கரு பலோபியன் கால்வாயிலேயே வளர்ச்சியுற ஆரம் பிக்கலாம். இது உயிராபத்தை தோற்றுவிக்கும். கிருமித்தொற்று வயிற்றுப் பகுதிக்கு சென்றுவிட் -ால், சீழ் பிடித்து, உடனடியாகச் சத்திர சிகிச்சை செய்ய வேண்டி வரும். நோயாளி உயிர் பிழைப்பது கடினம் - கிருமித்தொற்று, தீராத வயிற்றுவலி, சிறுநீர் கடுப்பு முதலிய நோய்களுக்கும் வழி வகுக் (5 D.
இவ்வாறு பல பிரச்சனைகள் இரு ப் ப த ர ல் கருச் சிதைவை செயற்கையாக மருத்துவம் தெரியாத வர்கள் மூலம் செய்ய முனைவது அறிவீனமான செயல் இலங்கையில் மருத்துவர்கள் செய்ய முனை வது அவர்களுக்கு பெரும் பிரச் ச  ைன க  ைள உருவாக்கும். எனினும் இரு வைத்திய நிபுணர்கள் கலந்தாலோசித்து, தாயின் உயிருக்கு ஆபத்து என்று தீர்மானிக்கும் நிலையிலேயே இலங்கைச் சட்டத்தில் கருச்சிதைவு செய்யலாம். இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் கொழும்பில் ஒரு வெளி
எதிர் பாராத பாலுறவின் பின்,
பலோப்பியன் கால்வாயில் கருக்கட்டிய பையை வந்தடைந்து அகவணியில் பதிந்து கொ முறையில் தயாராக அகவணி வைக்கப்பட்டிரு பின் வைத்திய ஆலோசனையுடீன் அகவணியை எடுப்பதன் மூலம் கரு பதியக்கூடிய சூழல் கரு லாத ஒரு கருச்சிதைவு தடுக்கப்படுகின்றது. ஆக களில் பாலியல் வல்லுறவாகவும் இருக்கலாம்) ளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் 24 ட பலனைத் தரும்.
கமஞ்சரி -- > -- - - - - - - - மஞ்சரி: T

AS qAASSLALAASM S S SqSqSMSMSMSqqSqS S SqSqSMSSSMLSSSLSLS
நாட்டு நிறுவனம், சேவை அடிப்படையில் ரூபா 600/- (அவர்களது செலவாக) பெற்றுக்கொண்டு, அவசியமானவர்களுக்கு கருச்சிதைவை நல்ல மருத்துவ முறையில் செய்கின்றது. பலர் இவ்வுதவியை பிரயோசனப்படுத்திக் கொள்ளுகிறார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது என்று அனைவரும் அறிந்திருந்தாலும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருகிறார்கள் காரணம் - இவர்களுடைய சேவை இல்லாது போனால் பெண்கள் வேறு கருச்சிதைவாளர்களிடம் சென்று பிரச்சனை களுக்கு ஆளாவது அனைவரும் அறிந்தது. அதுவும் இவர்களிடம் கருச்சிதைவை வேண்டுபவர் கருவுற்று இரண்டு மாதங்களுக்குள் செய்து கொள்ள வேண்டும். இச் சேவையும் கொழும்பில், அதனை அண்டிய பகுதிகளில் இருப்பவர்களுக்கே கிடைக்கின் நி0து
எது எவ்வாறெனினும், க ரு ச்சி  ைத வு செய்து கொள்ள வேண்டிய ஒரு நிலையை தவிர் த் து க் கொள்ளுவது புத்திசாலித்தனமான காரி யம், குடும்பக் கட்டுப்பாட்டு சாதனங்கள் இவ்வளவு பரவ லாக கிடைக்கும் பொழுது வேண்டாத பிள்ளையை பெற சந்தர்ப்பம் ஏற்படுவது முட்டாள் தனம், மணவினைக்கு அப்பால், அதற்கு முன்பாக கருத்தரித்துக் கொள்வது அதைவிடப் பெரிய முட் டாள்தனம், உண்மையில் உதவி தேவைப்படுபவர் கள், தமது விருப்பத்திற்கு மாறாக, பாலியல் வல்லு றவிற்கு ஆளாக்கப் பட்ட பெண்கள், சம்பவம் நடந்த உடனேயே அல்லது அடுத்த நாளோ, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை போன்ற பெரிய வைத்திய சாலைகளுக்குச் சென்றால், அங்கு இப்பரிதாபகரமான நிகழ்விற்கு தகுந்த உதவிகள் கிட்டும்,
LLSLLSLLLSLGSLSGSLGSLLSGSLSGSLGSLSGSSSLSGSLGSGSGSLSGLSLSLSLSLSLSLSLSL
பின், 72 மணித்தியாலங்களில் இக்கரு கர்ப்ப ாள்கின்றது. இக்காலப்பகுதியில் இதற்கு ஏற்ற க்கின்றது. எனவே எதிர் பாராத பாலுறவின் வெளியேறச் செய்யக்கூடிய மாத்திரைகளை ப்பையில் இல்லாமல் போகின்றது. தேவையில் வே எதிர்பாராத பாலுறவின் பின், (சில வேளை மருத்துவர்களிடம் விளக்கி இம் மாத்திரைக மணித்தியாலங்களுக்குள் இதைச் செய்வது நல்ல
—>ომ-ო:
εί ο εορο- 一五

Page 14
குழந்தையின் வளர்ச்சியும்
பிள்ளையின் வளர்ச்சி
l)
2)
3)
முதல் 3 ஆண்டுகள் குழந்தையை மாதா மாதம் நிறுக்க வேண்டும்
தொடர்ந்து இரு மாதங்கள் நிறை கூடாவிடின் ஏதோ பாதிப்பு உண்டு. குழந்தையின் சகல வளர்ச்சி விருத்தி அம்சங்களில், எடைகூடும் நிலைமை ஒர் பிரதானமான அறிகுறி. முதல் 4 மாதங்களுக்குத் தாய்ப்பால் மாத்திரம் போது மானது. பிள்ளையின் தொடக்க காலத்தில், தாய்ப்பால் மாத்திரம் ஊட்டுவதனால் நோய் வராமல் பாதுகாப்பு அளிக்கிறது. குழந்தையின் முதலாம் வயதினில் கொடுக்கப்படும் தடை மருந்துகளை வயதிற்கேற்ப உரிய வேளையில் (Age Appropriate Immunisation) Go)LIsi) goyá கொள்வதன் மூலம் போசனை குறைவடையும் நிலைமையைத் (Under Nutrition) 56 it is லாம். சிகிச்சை நிலையத்தில் வழங்கப்படும் வளர்ச்சிப்பதிவேட்டை தாய் விளங்கிக் கொள் வதன் மூலம் குழந்தையைச்சரிவர வளர்க்க
முடியும்
பிறந்த கணத்தில் இருந்து நாலு - ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.
குழந்தை சீராக வளர்வதற்குத்தாய்ப்பால் உணவாகவும், பானமாகவும் அமைகிறது, ஆரம்பத்தில் வயிற்றோட்டம், மற்றும் பொது வான நோய்த்தொற்று அபாயத்தில் இருந்து தாய்ப்பால் பாதுகாப்பு அளிக் கி றது. குழந்தைக்குக் கிடைக்கக்கூடிய அதி சிறந்த உணவு தாய்ப்பாலேயாகும். குறிப்பிட் ட காலத்தில் தாய்ப்பால் தவிர வேறு எவ்வித மான பானமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருவருடங்கள் வரை, ஏன் இன்னும் கூடுதலாகவும் தாயினால் பால் ஊட்டமுடியும்.
குழந்தையின் 4-6 வது மாதத்தில், தாய்ப் பாலுடன் மேலதிக உணவு தேவை.
கா. வைத்தீஸ்வரன் இளைப்பாறிய சுகாதாரக் கல்வி அதிகாரி, - 7, அல்பேட் பிளேஸ், தெகிவளை,
2.جه
மஞ்சரி: 04:

ம் விருத்தியும்
4)
3. I
3, 4
தா ய் ப் பா ல் ஊட்டிய பின்பே குழந்தைக்கு மேலதிக உணவு ஊட்டப் படல் வேண்டும். இதன் மூலம், தாய்ப் பால் குழந்தைக்கு நீண்ட காலம் ஊட்ட முடியும்.
மசித்த பப்பாகிப்பழம் அவித்த காய்கறி முதலானவற்றைக் குழந்தையின் உணவு டன் பிசைந்து ஊட்டல் நலமாகும்.
குழந்தைக்கு ஊட்டும் கஞ்சி, சூப் முத லியன தயாரிக்கும் போது முளைத்து இலை விடும் தானியங்களைத் தூளாக் கிச் சேர்த்தல் கூடிய ஊட்டச்சத்தைக் கொடுக்கும் .
பல வகை உணவுகளை மாறி மாறிக் கொடுப்பது குழந்தைக்கு நயம் பயப்ப தாக அமையும்.
மூன்று வயதிற்குட்பட்ட குழைந்தைக்கு
●@
நாளைக்கு 5 அல்லது 6 வேளை
உணவு தேவை
4. I
4,2
வளர்ந்தோர் அருந்து ம் அளவுக்குக் குழந்தைகள் உணவு அருத்த மாட்டார் கள். குழந்தைகளின் வயிறு சிறியது. ஆனா ல் அவர்களின் உணவுத்தேவை கூடுதலாக உண்டு. எனவே குழந்தைக
ளுக்கு அடிக்கடி உணவு ஊட்டுதல் அவ சியமாகின்றது.
குறிப்பு: பிறப்பு நிறை முதல் வருட இறுதியில் ஏறத்தாழ 3 மடங் காகவும் அதன் இரண்டாவது வயது பூர்த்தியின் போது 4 மடங்காகவும் கூடும் நிலைமை யுண்டு. எனவே குழந்தைக்கு அதற்குரியதாகப் போதிய அளவு சரி விகித உணவு ஊட் டப்படல் வேண்டும்.
தயாரித்த உ ண வுகள் உடனுக்குடன் ஊட்டப்படல் வேண்டும். நீண்ட நேரம் வைத்திருப்பதன் மூலம் நோய்க்கிருமிக ளின் தொற்று ஏற்பட முடியும். தயா ரிக்கக் கஸ்டமான தருணத்தில் பாண், பழம், சிற்றுண்டி, இளநீர், பொரி அரிசி மாக்கலவை முதலானவற்றைக் கொடுக் கலாம். அத்துடன் தாய்ப்பாலும் இடை யிடையே ஊட்ட முடியும்.
2000 சுகமஞ்சரி

Page 15
5) மூன் று வயதிற்குட்பட்ட குழந்தைக்கு வழமையான உணவு ட ன் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்தல் மிக அவசியம்,
5.1 குழந்தையின் விசேடசக்தி தரும் உண வுத் தேவைகளுக்கு அமைவாகக் குடும் பத்தாரின் உணவுடன், முக்கியமாகச் சி ல வ ற்  ைற ச் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும். உ+ம் மசித்த காய்கறிவகை கள், கொழுப்பு அல்லது எண்ணெய்ச் ச த் து ஸ் ள உணவுப்பதார்த்தங்கள் ப ட் டர், நெய், தாவர எண்ணெய் சோயா எண்ணெய், நிலக்கடலை எண் ணெய், எள்ளு, அல்லது மசித்த பருப்பு வகைகள் சேர்ப்பது சிறப்புடையது.
5.2 தாய்ப்பால், குழந்தையின் உ ண வை மேலதிகமாகச் செழிப்பாக்குகின்றது. குழந்தை இரண்டாம் வயதை நிறைவு செய்யும் வரை தாய்ப்பால் தொடர்ந்து கொடுபடல் வேண்டும்.
6) எல்லாக் குழந்தைக்கும் விற். "A" நிரம்பிய உணவுகளாகிய - தாய்ப்பால், பச்சை இலைக்காய் கறிகள், மஞ்சள், செம்மஞ் சள் நிறப்பழங்கள், காய்கறிகள் முதலி யன அவசியம் தேவை.
6.1 கண்பார்வைக்கும், வயிற்றோட்டம் முத லிய நோய்களில் இருந்து பாதுகாப்பதற் கும், உயிர்ச்சத்து "A" தேவை. எனவே நாளாந்த உணவில் விற்றமின் "A" கட் டாயம் சேர்க்கப்படல் வேண்டும்.
6.2 வயிற்றோட்டம் அல்லது சின்னமுத்து ஏற்பட்ட குழந்தையின் உடலில் கூடி யளவு விற்றமின் "A" இழக்க நேரிடும், தாய்ப்பால் அடிக்கடி ஊட்டுதல், கூடுத லாகப் பழங்கள், காய்கறிசேர் உணவை ஊட்டுவதன் மூலம் இழந்த சத்தியை மீளப்பெற முடியும்.
7) நோயுற்ற பின், குழந்தைக்கு மேலதிக மாக ஒருவேளை உணவு குறைந்தது ஒரு கிழமைக்கு வழங்கப்படல் வேணடும்.
7.1 சின்னமுத்து, வயிற்றோட்டநோய் சம்ப விக்கும் வேளையில் குழந்தைக்குப் பசி ஏற்படுவது மிகக்குறைவாகவே காணப் படும். இக்கால கட்டத்தில் உண்ணும் உணவில் மிகச்சிறிதளவே குடலினால் உறிஞ்சப்பட முடியும். ஒரு வருடத்தில்
க்கமஞ்சரி மஞ்சரி: 04

பல தடவைகள் இந்நோய்கள் சம்ப விக்குமாகில் அக்குழந்தையின் வளர்ச்சி பாதிப்புறும்,
7.2 எனவே நோயுற்ற வேளையில், குழந்தை உண்பதற்கும், குடிப்பதற்கும் தூண் டப்படல் வேண்டும். குழந்தை உண்ண விரும்பாவிடின், இவற்றை நடைமுறைப் படுத்துவது மிகச்சிரமமாக அமையும், எனவே குழந்தை விரும்பும் மென்மை யான உணவு, இனிப்புணவு, முதலான வற்றைச் சிறிதளவாவது, ஊட்டுதல் அவசியமாகின்றது. இவ்வுணவுகள் அடிக் கடி ஊட்டப்படல் வேண்டும். இதன் மூலம் குழந்தையின் வளர்ச்சியை மேம் படுத்தலாம்,
7.3 குணமடைந்த பின்பு, குழந்தைக்கு மேல திகமான உணவு தேவை. இதன்மூலம் இழந்த உடல் நிலைமையை ஈடுசெய் யக்கூடியதாக அமையும். மேலதிகமாக ஒரு நா  ைள க்கு ஒருவேளை தன்னும், ஒரு வார காலத்திற்காவது அளித்தல் அவசியம் ஆகின்றது.
8) குழந்தையின் உணவு ( பொதுவான
தகவல் )
8.1 குழந்தைக்கு முதல் 4 மாதங்கள் தாய்ப்பால் தவிர வேறு எவ்வுணவோ, பாணமோ, கொடுக்க வேண்டியதில்லை. குழந்தை பிறந்த அரை மணிநேரத்தில் இருந்து கடும்புப்பால் கட்டாயமாக (மஞ்சள் நிறம்) ஊட்டப்படல் வேண் டும், குழந்தை பிறந்தவுடனாகிலும் சரி அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் கொதித்து ஆறிய நீர், குளுக்கோஸ் கலந்த நீர், மல்லித்தண்ணிர், இளநீர் போன்ற எவ்விதமான பானமும் ஊட்டு தல், முற்றாகத் தவிர்க்கப்படல் வேண் டும். கொடுக்க முற்படின், குழந்தை போதியளவு தாய்ப்பால் குடிக்க மாட் டாது. அத்துடன், போதியளவு தாய்ப் பால் சுரக்கும் நிலைமை படிப்படியா கக் குறைந்து கொண்டுபோக முடியும்.
8.2 குழந்தையின் 4-6 மாதத்தில், படிப்படி யாகத் திண்ம உணவுகள் அறிமுகப் படுத்தப்படல் வேண்டும். ஒருவயதை அடையும் போது, குடும்பத்தார் உண் ணும் உ ண வு க  ைளப் (உறைப்புத் தவிர்ந்த) பிள்ளைகள் உண்ணக்கூடிய வர்களாகப் பழக்கப்படல் வேண்டும்.
1

Page 16
ــــــــــــ
பிள்ளையின் உளவிருத்தி
I)
2)
சிசுக்கள், பிறந்த பொழுதில் இருந்து விரைவாகக் கற்கத் தொடங்குகிறார்கள். மனிதனின் மூளை வளர்ச்சியில் அதி கூடிய பகுதி அ த ன் முதல் இரண்டு வருடங்களில் நிறைவுறுகின்றது. குழந் தையின் பொருத்தமான உளவளர்ச்கிக் சத் தேவைப்படுவது வளர்ந்தோரின் அன்பும் அரவணைப்புமேயாகும்.
1.1 பார்த்தல், நுகர்தல், கேட்டல், சுவைத் தல், தொட்டுணர்தல் ஆகிய ஐம்புலன் களும், சிசு பிறந்த கணத்திலிருந்தே செயற்பட ஆரம்பிக்கின்றன. அவர்கள் பிறந்த பொழுதில் இருந்தே உலகை அறிய தொடங்குகிறார்கள்.
1.2 மற்றவர்கள் தம்முடன் கதைத்தல்
தொடுத்தல், அரவணைத்தல் முதலான வைகள் சிசுக்களின் அதிமுக்கிய தேவை களாக அமைகின்றன. அத்துடன் பழக்க மானவர்களின் முகங்களைப் பார்க்க வும் அவர் தம் சத்தத்தைக் கேட்கவும் அவாவுறுகின்றனர். இவர்கள் தம்முடன் சம்பாசிப்பதையும் அதற்குப் பதிலிறுக் கவும் (Respond) விளைவர். புதிய சத்தங் களைக் கேட்கவும், பொருட்களைப் பார்க்கவும், அவதானிக்கவும், அவற்றை பற்றிப்பிடிக்கவும், அவற்றுடன் விளை யாடவும் முயற்சிப்பர். இந்நிலைமை யைக் கற்றலின் ஆரம்பமாகக்கருத முடியும். சிறுவர் செவி மடுக்கும் ஒலி களுள் மிகமுக்கியமானதாகக் கருதப்படு வது மக்களுடன் பழக்கப்பட்ட சத்தங் களேயாகும். குழந்தைகளின் பார்வை யில் மிக முக்கியமானவை மக்களின் முகங்களேயாகும். குழந்தைகளை நீண்ட நேரம் தனிமையில் விடுதல் தவிர்க்கப் படல் வேண்டும்.
1.3 குழந்தைகளுக்குப் போதிய அன்பு, கவனிப்பு, அரவணைப்பு மிகவும் இன்றி யமையாததாகும். அத்துடன் விளை யாட்டு, நற்போசனை (நிறைஉணவு) சுகாதாரப் பராமரிப்பு, முதலான அம்
சங்கள் சரிவரக் கிடைக்கும் போது, அவர்களின் உளவிருத்தி சிறப்புடன் அமையும்
குழந்தையின் உளவிருத்திக்கு விளை ual G ló'4 cpásá'uoa éb.
பிள்ளை விளையாட்டின் மூலம், அதன் உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற் சி
4
மஞ்சரி: 04, மலர், !

அளிக்கப்படுகின்றது. அதே வே  ைள குழந்தைகள் விளையாட்டின் மூலம் தம்மைச்சூழவுள்ள உலகத்தைப் பற்றியும் அறிந்து கொள்கின்றார்கள். பிள்ளை
கள்
விளையாடுவதற்குப் பெற்றோரால்
சிறப்பாக உதவ முடியும்.
21
2, 2
2, 3
விளையாட்டு வினோதமாக (Fun) இருப் பதனால் அவர்கள் விளையாடுகிறார் கள். ஆனால், குழந்தையின் உளவிருத் திக்கு விளையாட்டு மிகவும் முக்கிய மானது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
எளிமையான பொருட்கள் உதவியுடன் விளையாடுவதன் மூலமாகவும், வளர்ந் தோர் உலகம் போலப் பாவனை செய்து நடிப்பதன் மூலமாகவும், குழந்தைகள் தம்மைச் சூழவுள்ள உலகைக் கற்றுக் கொள்ளுகிறார்கள். ஒருவரின் மொழி தொடர்பான தி ற ன் க ளின் (Skill) விருத்தி, அவை தொடர்பாகச் சிந்திக் கும் ஆற்றல், ஒருங்கமைக்கும் முயற்சி கள் யாவற்றுக்கும் விளையாட்டு அதி முக்கிய பங்கைப் பெறுகிறது. முயற்சிப் பதன் மூலமும் கற்றுக் கொள்கின் றார்கள் - பலாபலன்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர், கேள்விகள் கேட்கின் றனர். புதிய சவால்களை ஏற்படுத்தி அவற்றில் வெற்றிகாண விழைகின்ற னர். பிள்ளைகளுக்கு விளையாட்டு, வாழ்க்கை தொடர்பான அறிவையும், அனுபவத்தையும் கொடுக்கிறது. அத் துடன் புதியனவற்றைக் கண்டு அறி வதற்கு ஆவலைத் தூண்டுவதற்கும், கட்டுப்பாடாக வளர்வதற்கும் இவ் விளையாட்டு உதவுகிறது.
பிள்ளைகள் விளையாடுவதற்குரிய புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு உதவியாக அதற்கான பொருட் க  ைள வழங்கிப் பெற்றோர் உதவலாம். ஆனால் இவ் விளையாட்டைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவற்றில் செல்வாக்குச் செலுத் தவோ பெற்றோர் முற்படக்கூடாது. இக்குழந்தைகளின் விளையாட்டுக்கள் மூலம், அவர் தம் விருப்புக்களையும் சிந்தனைகளையும் அவதானித்தல் மிக வும் பிரயோசனமாக அமையும். குழந் தைகள் எவற்றைச் செய்ய விரும்புகிறார் களோ அவற்றை ஊக்குவித்தல் பெற்
றோர் கடமையாகும். இவ்விளையாட்
டுக்களில் பெற்றோர் கூடுதலாகச் செயற் பட முற்படின், குழந்தைகள் ஆர்வ
03
2000.
(ജ
சுதுமஞ்சழி

Page 17
மிழக்க நேரிடும். இதன் மூலம் குழந்தை கள் தாமாகக் கற்கும் சந்தர்ப்பத்தை இழக்க நேரிடும். தாமாக முயற்சித்தே இக்குழந்தைகள் கற்கிறார்கள். பிழை களேற்படின் மீண்டும், மீண்டும் முயற் சித்து வெற்றி கொள்கின்றார்கள்.
2.4 பிள்ளைகள் தமக்கு விருப்பமானவற்றைச் செய்ய முனையும் போது, பெற்றோர் அவற்றிற்குக் குறுக்கிடாது, பொறுமை கடைப்பிடித்தல் மிக அவசியம். ஆபத்து ஏற் பட க் கூ டி ய செயற்பாடுகளைத் தவிர்த்து புதிய விடயங்களைச் செய்ய ஊக்குவித்தல் வேண்டும், கஸ்டமான விடையமாகிலும், பிரயாசையுடன் முடி வெடுக்க வேண்டியிருப்பினும் அவற்றைச் செய்யத் துரண் டு த ல், பிள்ளையின் உளவிருத்தியில் மிக முக்கிய அம்சமாகும். சில சமயங்களில் பிள்ளைகள் இம்முயற் சியில் விரக்தியடையலாம். இவ்விரக்தி இவர்களுக்குப் புதிய நுட்பங்களைக் கண் டறிய உதவும் ஆனால் அளவுக்கு மீறிய விரக்தி, கு ழ ந்  ைத யி ன் ஊக்கத்தைக் குறைத்துத் தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்த முடியும் தோல்வி மனப் பான்மை ஏற்படாது எப்போது தவிர்க்க வேண்டும். என்பதைப் பெற்றே ரா ர் அவதானித்து அதற்கேற்பச் செயற்பட வேண்டும்,
2.5 சிறுவர்கள், வளர்ந்தோர்போல் உடை யணியவும், அவர்போல் நடிக்கவும் தாய், தந்தை , ஆசிரியர், வைத்தியர் அல்லது தனது சிந்தனையில் வருபவர் போல் நடிக்கவும் விரும்புவர். இவை போன்ற விளையாட்டுக்கள் பிள்ளையின் விருத் திக்கு மிக அவசியம், ஏனையோரது நடைமுறைகளையும், பழக்கவழக்கங் களையும் அறிந்து கொள்ளவும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை ஏற்படுத்தவும் இவ்விளையாட்டுக்கள் உதவ முடியும். இவர்களின் சிந்தனை களைத் தூண்டுவதற்கும், இவ்விளை யாட்டுக்கள் உதவுகின்றன. இவ்விளை யாட்டுகளுக்குத் தேவையான துணிமணி கள், தொப்பி மற்றும் ஏனைய பொருட் களைப் பெற்றோர் வழங்கிப் பிள்ளை களை ஊக்குவிக்க வேண்டும்.
2.6 சில சமயங்களில் குழந்தைகள் தனியே விளையாடல் அவசியம். வேறு சில சமயங் களில் வளர்ந்தோருடன் இ  ைண ந் து விளையாட நேரிடலாம். குழந்தைகளு டன் சம்பாசித்தல், சில சொற்கள் - சத்
மஞ்சள்- மஞ்சரி: 04

தங்களை மீண்டும், மீண்டும் உச்சரித்தல், பாடுதல் பாலர் பா ட் டு க் க ைள இணைந்து இசைத்தல், பிள்ளைகளுக் கான விளையாட்டுக்களை மீண் டு ம், மீண்டும் விளையாடல் முதலியன யாவும் அவர்களைக் குதூகலமாக வைத்திருப் பதுடன் அவர்களின் வளர்ச்சி விருத்தி யிலும் முக்கிய பங்கைப் பெறுகின்றன.
3) தமக்கு அண்மையில் உள்ளவர்களின் நடத்தைகளைப் பார்த்தே பிள்ளைகள் கற்றுக் கொள்கின்றார்கள்.
3.1 வளரும் பிள்ளைகளின் பழக்க வழக்கங் களுக்கும், ஆளுமை விருத்திக்கும், வளர்ந் தோரதும் மூத்த பிள்ளைகளினதும் முன் உதாரணங்கள் மிக முக்கியமாகும். இம் முன் உதாரணங்கள் சொற் களி லும் கட்டளைகளிலும் பார்க்க குழந்தை களைச் சீராக வளர்ப்பதில் கூடிய பங் கைப் பெறுகின்றன. உரத்துச் சத்தமிடல் கடுமையாக எச்சரித்தல், வன்முறைகள் மூலம் தமது கோபத்தை வ்ளர்ந்தோர் காட்ட முற்படின், அம்முறைகள் தான் சரியெனக் கருதி, அவ்விதமே குழந்தை களும் செயற்படுவர். குழந்தைகளையும், ஏனையோரையும் இரக்கம், அனுதாபம், பொறுமை, காருண்யத்துடன் பெரியோர் நடத்தினால் சிறு வர் களும் அம்முன் உதாரணங்களைப் பின் பற்றி நடப்பார்
(56.
8.2 ஏறக்குறைய நான்கு வயதிற்குக் குறைந்த பிள்ளைகள் தம்மைப் பற்றியே அக்கறை கொள்ளல் இயற்கையே. (Self Centred) மற்றையவர்களைப் பற்றிச் சிந்திக்கவும், அன்பு செலுத்தவும், ஆதரவு காட்ட வும் படிப்படியாகவே முயற் சிப் பர் தம்மைப் பற்றி மாத்திரம், அக் க  ைற கொள்ளும் சுயநல மனோபாவம் சிறுவர் மத்தியில் காண்பது இயல்பு. உடல் உளரீதியாக இவர்கள் வளர்ச்சியுறாது இருப்பதே இதற்கான காரணங்களாகும். சுய நலமற்றவர்களாகவும், தா ரா ள மனப்பான்மை கொண்டவர்களாகவும், அவர்கள் வளர வளரக் கற்றுக் கொள் வர். இவற்றிற்கு வளர்ந்தோரின் முன் உதாரணம் மிக அவசியமாகும். தம்மை ஏனையோர் எப்படி நடத்துகிறார்கள். என்பதில் இருந்தே அவர்கள் இவ்வம்சங் களைக் கற்றுக் கொள்கிறார்கள்.
Dorf 0 2000 "

Page 18
ت. مع :
4) குழந்தைகள் வெகு எளிதில் கோபமடை வர். அதே போன்று வெகு இலகுவில் பயப்படுவர். அழுதும் விடுவர்.
குழந்தைகளின் உணர்வு و ظا/ال 0 (60/rgری (مه கள் தொடர்பான கல்வி விளக்கமும், Sy gysau cypů வளர்ந்தோருக்கு இருக்கு முகில், அவர்கள் குதூகலமாகவும் சம நிலையுடனும் நல்நடத்தைக் கோலங்களு டனும் வளர முடியும்.
4.1 வளர்ந்தவர்களுக்குச் சில வேளைகளில் குழந்தைகளின் உணர்வுகள் நியாய பூர்வ மற்றவைகள் போலத் தோன்றினாலும், அவைகள் உண்மையானவையாகவும், நியாய பூர்வமானவைகளாகவும் இருக்க முடியும். முன்பின் அறிமுகமில்லாதவர் களைக் கண்டாலும் குழந்தைகள் அச்சம் கொள்வர், அதே போன்று இரு ட் டு வேளைகளிலும் குழந்தைகள் அச்சமடை . வர். மிகவும் சிறிய விடையங்களுக்கும் மனமுடைந்து அழத்தொடங்குவார்கள். தாம் விரும்பிய ஒன்றைச் செய்யமுடியா ‘விடினும் வீணாக விரக்தியுற்றுக் கோபங் கொள்வர் இதேபோன்று விரும் பி ய ஒன்றைக் கொடுக்காவிடினும் சினம் கொள்வர்.
பெற்றோர் பிள்ளைகளின் உணர்வுகளைச் சரிவரப் புரிந்து அவற்றை மிக அவதானத் துடன் அணுகுதல் வேண்டும். பிள்ளை களின் அழுகை, சினம், அச்சம் முதலிய வற்றைப் பொருட்படுத் தாது பெற்றோர் கண்டிப்பார்களாகில், பிள்ளைகள் வெட் கத்துடனும், வெகுளித்தனமாகவும் உணர்வுகளைச் சரிவர வெளிக்காட்ட முடியாது வளர்ந்து விடுவர். குழந்தை கள் தமது உணர்வுகளுடன் கடுமை யாகப் போராடுகையில், பெற்றோர் அமைதியாகவும், இரக்கமாகவும் இக் குழந்தைகளை அணுகினால் அவர்கள் மன நிறைவுற்று மகிழ்ச்சியாகவும், சம நிலையுடனும் உளவிருத்தியடைவர்.
4.2 சிலவேளைகளில் இக்குழந்தைகள் பொய் பேசுவது போ ன் று காணப்படுவர். உண்மை நிலைமைக்கும். அவர் தம் கற்பனா உலகுக்கும் இடையேயான வேறுபாடுகளை, அவர்களால் விபரிக்க முடியாமையே இதற்கான காரணமாக அமையலாம்.
. --
16 மஞ்சரி 04 “DeWr:

4.3
4, 4
4, 5
ஒரு பிள்ளை பிழையான அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் நடக்க முற்படுமாகில், அந்நிலைமையை உறுதி illumr656pub, அமைதியாகவும் இக்குழந் தைக்கு விளங்கவைத்தல் அவசியமாகின் றது. இவ்விளக்கம் அமைதியாகவும், நியாயபூர்வமாகவும் அமைதல்வேண்டும் . குழந்தைகள் தாம் நேசிக்கும் வளர்ந்த வர்கள் கூறும் அறிவுரைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிப்பதற் கும். அவர்களைத் திருப்திப்படுத்துவதற் கும் விரும்புவர். எனவே இவர்கள் கூறும் புத்திமதிகளையும், சட்டதிட்டங்களை யும் நினைவில் வைத்து நடைமுறைப் படுத்த விரும்புவர். படிப்படியாக இவ் விளக்கங்களையேற்று அவர்கள் முன் உதாரணங்களையும் விளக்கங்களையும் அ டி ப்ப  ைட யாக வைத்துத் தாம் அவற்றை நடைமுறைப்படுத்த முற்படு வர். இவ்விதமான நடவடிக்கையின் மூலம், சரி, பிழை என்பவற்றிற்குரிய வித்தி யாசத்தை விளங்கி அதற்குரிய மனச்சாட் சியை உருவாக்கிக் கொள்வர்."
தமக்கு நிகழ்ந்தவை பிழை என்பதைக் குழந்தை தமது அழுகை மூலமே வெளிக் காட்டும். பசி அல்லது களைப்பு அல்லது நோ அல்லது அசெளகரியம் அல்லது கூடிய வெப்பம் அல்லது கூடிய குளிர் அல்லது அதிர்ச்சி அல்லது அச்சம் ஏற் படும் போது குழந்தைகள் அழுகை மூலமே வெளிக்காட்டுகின்றனர். அத்து டன் அன்பு அல்லது அரவணைப்பு நாடி யும் அழ முடியும். இந்நிலையில் அவர்க ளின் அழுகையை நாம் பாராமுகமாக இருக்க முடியாது.
சில குழந்தைகள் அழும்போது எவ்வளவு முயற்சித்தாலும் இடைநிறுத்த முடியாத நிலைமை ஏற்படும். இவ் வித மா ன அழுகை குழந்தை பிறந்து மூன்றாவது நான்காவது வாரங்கள். தினமும் குறிப் பிட்ட வேளையில் ஆரம்பிக்கலாம். சில சமயங்களில், இந்நிலை மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம். இதற்கான காரணங் கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை அத்துடன் இந்நிலைமை குழந்தைகள் மத்தியில் எவ்வித பாதிப் பை யும் ஏற்படுத்தவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
அனேகமாகக் குழந்தைகள் தாயின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே அழுவர். அழும் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும்
ევ
8000
கதமஞ்சள்

Page 19
அவரைத்தூக்கி ஆறுதல்படுத்த முற் படின் தொடர்ந்து அழவே முயற்சிப்பர். ஆனால், இப்படியான நிலையில் இவ்வித மாக அழும்பிள்ளையைப் பொருட்படுத் தாது விடும் பட்சத்தில், அதற்குப் பழக் கப்பட்டு அமைதியடையும் பிள்ளைகளும் உண்டு.
48 "தமது இல்லம் பாதுகாப்பானது தமது பெற்றோரும். உற்றோரும் த ம் மீது அன்பு பாராட்டுகின்றார்கள் தம்மை அன்பாகவும், பாதுகாப்பாகவும்பராமரிக் கிறார்கள்?" எனும் நம்பிக்கை ஏற்படும் போது குழந்தைகள் அச்சமின்றி வாழ்கி ADrtias 6t.
5) குழந்தைகளின செயற்பாட்டிற்கு பெற் றோர் . உற்றோரின் தொடர்ச்சியான சினுமதியும் (Appropal) ஊக்குவிப்பும் (encouragement) அவசியம். உடல் ரீதி யான தண்டனை குழந்தையின் உளவிருத் தியில் பாதிப்பை ஏற்படுத்தும்,
5.1 குழந்தைகளின் நாளாந்தப் பழக்கவழக் கங்கள். நடத்தைக் கோலங்களுக்குப் பெற்றோரின் அனுமதி அவசியம். இதன் காரணமாக அவர்கள் நல்லவர்களாக வளர்வதற்கு இம்முயற்சிகள் ஊக்குவிப் பாக அமைய முடியும். நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கும் வேளை களில், பெற்றோர் அவற்றை அவ தானித்து அவற்றிற்குத் தமது சந் தோசத்தையும், அங்கீகாரத்தையும், வெளிக் காட் டு த ல் வேண்டும். தொடர்ந்து குழந்தைகளைக் கண்டித்தல் சத்தமிடல், தண்டிப்பதிலும் பார்க்க மேலே குறிப்பிட்ட அம்சங்களே மிகச் சிறந்த முறைகளாகக் கருதப்படுகின்றன.
5.2 குழந்தை தனது திறன் - ஆற்றலை வெளிப்படுத்தும் போது அவை மிகவும் சிறி தா க இருந்தாலும், பெற்றோர் தமது அகமகிழ்வை வெளிக்காட்டுதல் மிகவும் இன்றியமையாததாகும். அவர் களின் செயற்பாட்டை மெச்சாவிடின், அல்லது தொடர்ந்து குறை கூறின், அவர்கள் புதிய திறன்களை வளர்க்கும் நிலைமை குறைந்து கொண்டேபோகும். பல சந்தர்ப்பங்களில் பெற்றோர் பிள் ளைகளில் காணப்படும் குறைகளை வர் ணிைப்பவர்களாகவே காணப்படுகிறார் கள். அவர்களில் காணப்படும் சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் நிலைமை
சகமஞ்சரி மஞ்சரி: 04

கள் குறைவாகவே காணப்படுகின்றன. இந்நிலைமை மாறுதல் வேண்டும்.
உடல் ரீதியான முறையில் குழந்தைகளை தண்டிப்பது, அவர்கள் மத்தியில் பாரதூ ரமான பா தி ப் பை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் ஏனையவர்களிடம் நியாயபூர்வமாக நடக்க மாட்டார்கள். அத்துடன் மற்றவர்களிடம் வன்முறை களைத் துரண்டுவதற்கு ஏதுவாகவும் அமைவர். பிள்ளைகள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதுமல்லாமல், பெற்றோர், ஆசிரியர் முதலானவர்களி டம் இருந்து கற்கும் இயல்பான ஆர் வத்தை அழிப்பதற்கு ஏதுவாகவும் அமைய முடியும்
6) பாடசாலைக் கல்விக்கான அத்திவா ரத்தைக் குழந்தையின் ஆரமபகால வாழ்க் கையில் பெற்றோரால் அமைக்க முடியும்.
6.
பாடசாலைகளில் மாணவர் வெற்றிகர
மாகக் கற்பதற்குரிய அத்திவாரத்தினை
குழந்தையின் ஆரம்ப கால வாழ்க்கை யில் அமைத்துக் கொள்ள முடியும். இக் குழந்தை பிறந்த கணத்தில் இருந்து *" நேசிக்கப்படுகின்றேன். பாதுகாப்பான
சூழலில் வளருகின்றேன்; எமது முயற்சி
6.2
களைப் பெற்றோர் அங்கீகரிக்கின்றனர்?" என உணரும் பிள்ளை, விருப்பமாகவும், தன்னம்பிக்கையுடனும் விரை வாகக் கற்கும் நிலைமை உருவாகும்.
குழந்தைகள் விளையாடுவதற்குப் பெற் றோரினால் உதவ முடியும், மிகவும் எளிமையான உபகரணங்களை அவர்க ளின் விளையாட்டுக்குப் பாவிக்க முடியும் குழந்தைகள் ஏதாவது முயற்சிகளை மேற்கொள்வதற்கும், குழந்தையின் உள விருத்தியில் புதிய கட்டத்தைப் பெறுவ தற்கும், இவ்வுபகரணங்கள் பேருதவி யாக அமைய முடியும். இவ்வுபகரணங் களுக்கு அதிகபணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. நீர், மணல், காட்போட் பெட்டி, பொருட்கள் சேர்க்கக் கூடிய பாத்திரங்கள், மரத்திலான கட்டிடக் gfösis air (Building Blocks) all L9-6) பாவனையில் உள் ள பாதுகாப்பான பொருட்கள், பல நிறங்களினால் தீட்டப் பட்ட பொருட்கள், பந்து, மற்றும் கிரா மிய நிலையில் பாவனையில் உள்ள பொருட்கள் யாவும், கடையில் கூடிய பணம் செலவிட்டு வாங்கும் விளையாட் டுப் பொருட்களுக்கு ஈடாக அமைய முடியும். குழந்தைகளினால், பாதுகாப்
பாகத் தீர்மானம் எடுக்க முடியுமானால்
-aths
03 2000 * காஷ் 17

Page 20
6.3
அவற்றை எவ்வேளைகளிலும், அனு மதித்தல் வேண்டும். குழந்தைகள் தமது செயல்திறன் வெற்றிகளிலும் தாம் விட்ட பிழைகளில் இருந்துமே, மிகவும் சிறப்பாகக் கற்கிறார்கள். இக்குழந்தை களின் விளையாட்டில், பெற்றோர் துணை புரிய வேண்டுமே தவிர, அவர் களின் விளையாட்டைக் கட்டுப்படுத்தக் கூடாது.
பாலர் பாடசாலை குழந்தைகள் பரா மரிப்பு நிலைய நிகழ்ச் சி கள் மூலம் குழந்தை பாடசாலையில் கற்பதற்குச் சிறப்பாக ஆயத்தப்படுத்த முடி யும். இந்நிலையங்களில் குழந்தைகளுக்குக் கூடிய பராமரிப்பும், கவனமும் செலுத் தும் அதே வேளை பலதரப்பட்ட விளை யாட்டுக்களை ஒழுங்கு செய்வதன் மூலம், குழந்தைகளின் திறன்களை வெகுவாக வளர்க்கமுடியும்.
பாடசாலையில் இக்குழந்தைகள் சிறப் பாகக் கற்கவேண்டும் என்பதற்காகப் பெற்றோர் இக்குழந்தைகளைக் தீவிர பலவந்தப்படுத்துவதினால் எது விதத் திலும் முன்னேற்றம் காண முடியாது. அனேகமான பெற்றோர் தமது ஆர்வம் கூடியதாக இருக்கிறது, வாசித்த ல், எழுதுதல், தானங்களை எழுதவைத்தல் முதலியனவற்றைக் குழந்  ைத க ளின் மிக இளம் பராயத்தில் கற் பித் த ல், கட்டடத்தின் மேற்பகுதியை முதலில் கட்டுவதற்குச் சமனாகும். கட் டி டம் ஒவ்வோர்படி மேலே கட்டி அமைப்பது போலக் குழந்தைகளின் கற்பித்தல் முறையும் அமைதல் வேண்டும். ஒவ்வோர் கட்டத்திலும் பிள்ளைகள் கற்பதற்குரிய சந்தர்ப்பத்தைப் பாடசாலை ஆசிரியர் களும், பெற்றோரும் அளித்தல் வேண் டும். இவற்றைச் செயற்படுத்துவதற்குச் செயல் திறனும், பொறுமையும் வேண் டும். குழந்தைகள் கற்கு ம் போது அவர்கள் பங்கம் (Frustration) அடை கின்றனரா அல்லது கூடுதலாகச் சலிப்பு அடைகின்றனரா என்பதை அவதானித் தல் வேண்டும். தொடர்ந்து அவர்கள் கற்பதற்குரிய புதிய சந்தர்ப்பங்களையும், ஆர்வத்தையும், சவால்களையும் அளிப் பதன் மூலம் தமது கல்வியைத் தொடர் வதைக் குழந்தைகள் மத்தியில் உருவாக்க (pg. HD.
குழந்தைகள் ஒரு மொழியைப் பேசுதல், அதனை விளங்குதல். ஒரு பிரதான மா ன தும், சிக்கலானதுமான பணி
3
மஞ்சரி: 4
O6

66
6, 7
யாகும். குழந்தை பிறந்த கணத்தில் இருந்து அவர்களுடன் பேசுதல், பாட் டுப்பாடுதல், பாலர் பாடல்களை இசைத் தல், பொருட்கள், ஆட்களைக் காண் பித்துப் பெயரிட்டு அழைத்தல், கேள்வி கேட்டல், வாசித்தல், கதை கூறுதல் முதலானவற்றைப் பொருத்தமாக அவர் கள் விளங்கும் அளவிற்குப் பெற்றோர் முன்வைப்பதன் மூ ல ம், குழந்தைகள் சிறப்பாகக் கற்க முடியும். குழந்தைகள் பேசுவதற்கு மிக நீண்ட நாட்களுக்கு முன்பே, மொழியை விளங்கும் ஆற்ற லைக் கொண்டுள்ளார்கள். குழந்தை யின் மிகவும் ஆரம்ப காலத்திலேயே பெற்றோர்களால் சம்பாசனைகளை நடாத்த முடியும். மிகவும் எளிமையா கவும், குழந்தைத் தனமாக இச்சம் பாசணை அமைந்தாலும் காரியமில்லை. ஆனால் குழந்தைப் பருவத்தில் நாம் இக்குழந்தைகளுடன் நிறையக் கதைத் . தல் வேண்டும். குழந்தையைச் சொற் களினால் மூழ்கச் செய்தல் (Bathing tha child with words) sob päo) Lor கும். குழந்தையின் சத்தம், அச்சொற்க ளுக்கு அனுசரணையாக ஏனையவர்கள் மறுமொழி அளிப்பதும், ஏனையவர்க ளின் சத்தம், சொற்களுக்குக் குழந்தை இசைந்து (Respond) விடை அளிப்ப தையும் அவதானிக்க முடியும். குழந்தை சத்தமிடல், சொல் உ ச் ச ரித் த ல், வசனங்களைப் பேச அவர்கள் கற்றுக் கொண்டவற்றில் இருந்து மிகுதியை நிறைவு செய்ய உற்சாகப்படுத்தல் வேண்டும்.
குழந்தைகள் பலதரப்பட்ட வயதினில் கதைக்கக் கற்றுக்கொள்வர். பொதுவாக அதன் மு த லா வது வயதினில் பேச ஆரம்பிக்கலாம். அதன் நான்காவது வயதினில் முழு வசனங்களைக் கதைக்க முடியும். அதன் ஆறுவயதினில் மொழி யின் சகல அடிப்படை அம்சங்களைக் குழந்தை அறிந்திருக்க முடியும்.
ஆண், பெண் குழந்தைகளின் உடல் உள உணர்பூர்வமான (Emotional) தேவைக ளில் எதுவிதமான வித்தியாசங்களும் இல்லை. இரு பாலாரினதும் விளை யாட்டு, மற்றும் சகலவிதமான கற்கை தொடர்பான தேவைகள் யாவும் ஒரே தன்மை கொண்டதாகவே அமைந்திருக் கும். தமது அன்பை வெளிக்காட்டுதல், மெச்சப்படுதல்(Approval) முதலானவற் றில் எதுவிதமான வித் தி யாச மும் இல்லை,
při
e
2000 " சுகமஞ்சரி

Page 21
7) பிள்ளையின் விருத்தியில் சிறந்த அவ தானிப்பாளர், பெற்றோரேயாவர்.
குழந்தை சரியாக வளரவில்லை; வளர்ச்சி யில் ஏதோ வித்தியாசம் காணப்படுகின்றது.
என்பதை அறியும் வகையில் எச்சரிக்கை அறிகுறிகளைப் பெற்றோர் அறிந்திருத்தல் வேண்டும்.
சில குழந்தைகளில் வளர்ச்சி முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருக்கலாம். ஆனால் இவற்றை ஓர் ஆ ப த் து அறிகுறியாகப்
பெற்றோர் கருத வேண்டியதில்லை. பின் வரும் கால அட்டவண்ையின் பிரகாரம் குழந்தையின் அபிவிருத்தி அமைந்திருக்க Փւգպւծ. அப்படியில்லாவிடின், ஏ தோ ஆபத்தான நிலைமையெனக் கருத வேண்டி யதில்லை. ஆனால் வைத்தியர்கள், வெளிக் களச் சுகாதார ஊழியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடுதல் மிகவும் பிரயோசனமுள் ளதாக அமைய முடியும்.
7.1 மூன்றுமாதத்தில் தங்கள் குழந்தை R- பிரகாசமான நிறங்கள், வெளிச்சத் தின் பக்கத்திற்குத் (குழந்தை) தன் தலையைத் திருப்புகின்றதா?
- பெரிய சத்தம் எழும்பக்கம், அதன்
கண்களைத் திருப்புகின்றதா?
- புன்முறுவல் செய்கின்றதா?
- இரு கைகளாலும் கால்களாலும்
உதைக்கின்றதா?
- கூவிடும் சத்தம் இடுகின்றதா?
(Make cooing Sounds)
7.2 பன்னிரண்டாம் மாதத்தில், தங்கள்
குழந்தை -
- உதவியின்றி இருத்தல்
- கைகால்களின் உதவியுடன் தவழ்தல்
- (உதவியுடன்) எழுந்து நிற்றல்
- பெருவிரல், மற்றும் இ ன் னோர் விரல் உதவியுடன் பொருட்களை எடுத்தல்.
- எ விரி  ைம யான வழிகாட்டுதலைப்
பின்பற்றுதல்.
pas அன்பு கூர்தல் - செலுத்துதல்.
- இரண்டு அல்லது மூன்று சொற்
களை உச்சரித்தல்,
மஞ்சரி: 04

حضغسطسسسسس
7.3 இர ண் டா வது வயதினில் தங்கள்
குழந்தை =
- இரண்டு அல்லது மூன்று சொற்கள் அடங்கிய வசனம் பாவிக்கின்றாரா?
- பழக்கப்பட்டவர்களையும், பொருட்
களையும் இனம் காணுதல்.
- நடக்கும் போது ஒரு பொருளைத்
தூக்கிச் செல்லுதல்.
- மற்றயவர்கள் சொல்பவற்றைத்
திருப்பிச் சொல்லுதல்.
- தனது உணவைத் தானே அருந்து
தல் ,
- தலை, மயிர், காது, மூக்கு இவை
களை இனம் காட்டுதல்.
7.4 நாலாவது வயதினில், தங்கள் குழந்தை
- ஒரு காலில் நிற்றல்,
- ஏனையவர்களுடன் சிறிய விளை
யாட்டில் ஈடுபடல்.
- கேள்விகள் கேட்டல்.
- சிறிய வினாக்களுக்கு மறுமொழி
அளித்தல்.
- வெவ்வேறு உணர்வுகளை வெளிப்
படுத்தல்.
- அடிப்படை 8 நிறங்களை வெளிக்
asти"-u-dv.
7.5 ஐந்து வயதினில், தங்கள் குழந்தை -
- தெளிவாகக் கதைத்தல்.
- உதவியின்றி ஆடை அணிதல்
- வட்டம், சதுரம், முக்கோணங்களை
வரைதல்
- 5 ல் இருந்து 10 வரை எண்ணுதல்,
gastrprihi 1. Facts for life who / unicef
2. Your child - Dr. H. A. Aponso
onvri
03 2000 19

Page 22
ஒரு நல்ல பொதுச் சுகாத பரிசோதகரின் கடமைகளு = ஓர் உதாரணத்துடன்
ஒரு சமூகத்தின் அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்பில் (Primary Health Care) பொதுச் சுகாதாரப் பரிசோ 53; it (Public Health Inspector - PHI) 6Taitualifair பங்கு கணிசமானது. குடும்பங்கள் - சமூகம் என்ற நிலையில் ஒரு குடும் ப நல உத்தியோகத்தருடன் (Family Health Worker) Gafsi isg, gy6i if giboilh பணி மக்களின் சுக நலத்தை சீராக்குவதற்கு மிக வும் உதவுகிறது.
SL60D 56
அவரது கடமைகள் பன்முகப்பட்டனவாகும். அவை யிாவன:
1. மக்கள் தாமே சுகமாக வாழ்வதற்கு அவர்களு
டன் சிநேகமான தொடர்பு வைத்தல்.
2. சுற்றாடல் பாதுகாப்பு
A குப்பை - கழிவுப்பொருட்களின் அகற்றலை
கண்காணித்தல். \ - ܀ A மலகூடம் கட்டுவித்தல்
3. வீட்டுச் சுகாதார கண்காணிப்பு A கட்டட சுகாதார அமைப்பு A வீட்டுச்சூழல்
ఓy உணவுச் சுகாதார கண்காணிப்பு
கால்நடை கொல்களம் சந்தை குழல் நீர் விநியோகம் பால் விநியோகம் உணவு தயாரிப்பு நிலையங்கள் உணவு விற்பனை கடைகள்
5. தொற்று நோய் தடுப்பும், தீவிரமாக நோய்
பரவும்போது நடவடிக்கை எடுத்தலும்
முன்னைய பொதுச்சுகாதார மருத்துவ மாது (Public Health Midwife)
GLITffulf of. fQ656Ori55 fò சமுதாய மருத்துவத் துறை மருத்துவபீட்ம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
20 மஞ்சரி: 04* ம

T UT நம் தகைமைகளும்
6. நோய் காவிகளை அழித்தல்
A நுளம்புகள் A. விசர் நாய்கள் ... to 7. பாடசாலை சுகாதாரம்
8. தொழிற்சாலை சுகாதாரம்
9. திருவிழா, களியாட்டங்கள் போன்ற விசேஷ தினங்களிலும், புயல், வெள்ளம் போன்ற
இயற்கையின் சீற்றங்களின் போதும், Guntífsiv
** அனர்த்தங்களின் போதும் (அகதி முகாம்)
தகுந்த சுகாதாரப் பராமரிப்பு.
10. கிராம, நகர சபைத் தலைவருக்கும் அங்கத்த * வர்களுக்கும் தன்னால் இயன்ற சுகாதார
ஆலோசனை கூறுதல்
11. சுகாதாரக்கல்வி புகட்டல்,
12 சுகாதாரவைத்திய அதிகாரியின் சுகாதார
குழுவில் ஒரு அங்கமாக இயங்குதல்.
13. சுகாதார ஆய்வுகளில் பங்கு பற்றல்.
14. சுகாதார அதிகாரியினால் ஏற்படுத்தப்படும் வேறு எந்த நடவடிக்கைகளிலும் பங்கு பற்றல்,
560.56DD356
இத்தகைய பல்வேறு பொதுத்தொடர்புகள் கடமைகள், எதிர்பார்ப்புக்கள் கொண்ட ஒரு சேவை செய்பவருக்கு ஆழமான ஆளுமையும் விரிவான அறிவும், தனிப்பட்ட தகைமைகளும் இருக்க வேண் டும். அவற்றில் சிலவற்றைப்பார்ப்போம்.
நல்ல தேகாரோக்கியம் நடுநிலை கொண்ட மனம்
தெய்வ பக்தி திடமான கல்வியும் தொடரும் கல்வி கற்றலும் பல மொழி அறிவு
சமூக உணர்வு
கடமை உணர்வு
a 03 2000 சுகமஞ்சரி

Page 23
கீழ்ப்படிவு
எழுத்து - பேச்சு வல்லமை எந்த இடத்திலும் எவ்வித மக்கள் மத்தியிலும், குறுகிய காலத்தில், தன்னை அவர்கள் சேவைக்கு ஏற்றதாக்கும் மனப்பான்மையும் ஆற்றலும் A நிர்வாகத் திறன் A ஆரோக்கியமான பொழுதுபோக்கு
i
9 fu Î6T 6T6Iš Ffijiji JÖ)
1913 ஆம் வருடத்தில் சுகாதார இலாகாவில் சூழல் சுகாதாரம் கண்காணிப்பதற்கு சனிற்றரி* கிளை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. அதன் தேவையாக 1914 இல் மூன்று பேர் சனிற் ற ரி பரிசோதகர்களாகப் (Sanitary Inspectors) LJusid L. L. L. Got ii. go மாதப்பயிற்சி 1931 இல் இந்தப்பயிற்சி இங்கிலாந் $pasier Royal Sanitary Institute Gr gö7 Ap göQoy ən 65T556) Gör பாடவிதானத்திற்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட் டது. அந்த நிறுவனத்தின் இலங்கைக் கி  ைள யே இறுதிப் பரீட்சையை நடத்தி, சான்றிதழ் வழங்கி யது. கொழும்பில் நடைபெற்ற இந்தப் பயிற் சி 1945 இல் களுத்துறைக்கு மாற்றப்பட்டது. அதன் பின்பு களுத்துறையில் உள்ள சுகாதார நிலையம் தான், பொதுச் சுகாதார பரிசோத்கர்கள் என்று பெயர் மாறி விரிவான தகைமைகளும் உயர் அந்தஸ் தும் பெற்ற் இந்த சேவையாளரின் பயிற்சிக்குப் பொறுப்பாக இருந்தது.
சென்ற ஆண்டு, முதல்முறையாக, தமிழ் மொழியில் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் இப்பயிற்சி கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் 44 ஆண்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களாக யாழ் பிராந் திய சுகாதார சேவைகள் மாகாணப் பிரதிப் பணிப் unterTrif பணிமனையினால் பயிற்றப்பட்டனர். இப்பயிற்சியில் யாழ் மருத்துவ பீடத்தின் பங்களிப்பு கணிசமானது. நாம் கற்பித்த பரிசோதகர்களின் தகைமை குறித்து எமக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உண்டு, எனது மக்கள் அவர்களின் சேவையினால் பெரிதும் பயன் அடைவர்.
இலங்கையின் சுகாதார முன்னேற்றத்திற்கு, முன்
னைய சனிற்றரி பரிசோதகர்களின் வே லை யும்,
பின்பு வந்த பொ. சு. ப. வின் பங்கும் குறிப்பிடத்
தக்கனவாகும். அந்தக்காலத்திலே மிகவும் பரவி,
நோய், துன்பம், மரணம் என்று சமூக வாழ்வைச் சீரழித்த பெரியம்மை (Small pox) கொலரா, பிளேக், இவற்றுடன் மலேரியா ஆகியவற்றைச் சமாளிப்பதற்கு அவர்கள் பல மணிநேரம் போராட வேண்டியிருந்தது.
1950 களும் அதன் பி ன் பும் சுகாதார நிலைமை அவ்வளவு மோசம் இல்லை. ஆகவே சென்ற நூற் றாண்டின் பிற்பகுதியில் பொ. சு. ப. கள் சுகா தார ஆபத்துக்களைச் சமாளிப்பதிலும் பார்க்க
சுகமஞ்சரி மஞ்சரி: 04
 

சுகாதார மேம்பாடுகளில் கவனம் செலுத் து வதற்கு நல்ல வாய்ப்பு இரு ந் த து 1956 இன் பின் பல பொ. சு. ப. உடன் வேலை பார்க் கும் சந்தர்ப்பம் எனக்கு இருந்தது. அவர்கள் அனை வருமே என்னிலும் வயதில் மூத்தவர்களாகவும் அனுபவசாலிகளாகவும் இரு ந் த னர். சிலர் என் மனதைவிட்டு நீங்காதவர்களாக இருக்கின்றனர்.
அவர்கள் கோக்கரல்லையில் ஜேமன்; நாவலப்பிட்டி யில் பெரேரா, BAINS, சண்முகநாதன், நவரட்ண ராஜா யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம், MANN, g)uriréF. 35 tʼi 30)ʻ_u „Lu r, Gô—u raö7 Jur bu A) b.
திரு. பொன்னம்பலம் அப்போது யாழ்ப்பாணத்தில் சுகாதாரக் கல்விக்கு பொறுப்பாக இருந்தார். அவர் பொ. சு. ப. ஆக பல வருடங்கள் வேலை பார்த் தவர். அவரை யே பொ. சு. பரிசோதகர்களின் தகைமைகளுக்கு ஒர் உதாரணமாக இந்தக் கட்டுரை யில் எழுதுகின்றேன். அவர் இறக்கும் வரை எமது சுகமஞ்சரியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந் தார். ஒவ்வொரு இதழையும் படித்துவிட்டுப் பாராட் டும், ஆலோசனையும் எழுதி ஊக்குவிப்பார்,
கரவெட்டி என்ற கல்வியில் சிறந்த கிரா மத்தில் 27-07-194 இல் பிறந்த அவர், அங்கேயே 20-1-1998 இல் தனது 84 ஆவது வயதில் gy LD T if ஆனார் . ugly ருெ ட ங் கள் ஒரு பொதுச் சுகாதார பரிசோதகரின் சோத னைகள் மிக்க வாழ் விலே பங்கு கொண்ட a A . . . ஜ் அவரது மனைவி வேத ாகிப்பத்து நாட்களில் தனது 85 ஆவது வயதில் அமரர் ஆனார். அப்படியான @@ மனைவி கிடைத்திராவிடில் திரு. பொன்னம்பலம் வெற்றியான ஒரு வாழ்  ைவ நிறைவேற்றியிருக்க இயலாது, அவரது சிறப்பான தேகாரோக்கியம் போல், மன - மனை ஆரோக்கியம் கொடுத்த ஒரு மனைவி யையும் கடவுள் அவருக்குப் படைத்தது, அவரின் தவத்தின் தகைமை ஆகும்.
Séda
பொன்னம்பலம் அவர்களின் ஆரம்பக் கல்வியானது, கிராம சூழலிலே விக்னேஸ்வராக் கல்லூரியில் ஆரம் பித்து, புதிய சூழலான மட்டக்களப்பு சென். மைக் கல் கல்லூரியை அடைந்தது, பின்பு த  ைல ந கர்
மலர் 03 2000 2.

Page 24
கொழும்பில் ஆனந்தாக் கல்லூரியில் நிறைவு கண்டது. விதம் விதமான சூழல், மக்கள், மொழி நடைமுறை கள் ஆகியவற்றின் அனுபவம் இளம் வயதில் ஒரு மனிதனின் மனதைப் பதப்படுத்துகின்றது. இவரின் வாழ்வு இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.
அவர் தொடர்ந்து நூல்கள் மூலமும், பயிற்சிகள் மூலமும், அனுபவம் மூலமும் கற்றுக் கொண் டே இருந்தார். அவரது இறுதிக்கல்வி நூல் எமது சுக மஞ்சரி தான்.
க்சரோகம், குடும்பக்கட்டுப்பாடு, திட்டமிடல், சுகா தாரக் கல்வி ஆகியவற்றில் பயிற்சி பெற்ற அவர் விசேஷ பயிற்சிக்காக ஒரு வருடம் (1957.1958) அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக் கழகத் தில் பயின்றார். இப்படியாக, ஒரு சுகாதார பரிசோத கருக்கு தொடர் உயர் கல்வி மிகவும் அவசியமாகும். இத்தகைய வாய்ப்புக்களை யாழ். பல்கலைக்கழகம் மருத்துவ பீடத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண் டும்.
a) GLD TAf அறிவும் 岛山伊听 岛前四创画
திரு. பொன்னம்பலம் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுகாதார விடயங்களைத் தெளி வாகவும் கவர்ச்சியாகவும் பேசக்கூடியவர். அவர் 4950 இல் இலங்கையின் கச நோய்த்தடை இயக்க பிரசாரகராக இருந்தவர். 1955 இல் சுகாதார கல்வி கற்பிக்கும், முறைகளில் பயிற்சி பெற்றபின் 1956 இல் சிலாபம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் சுகா தாரக்கல்வி அதிகாரியாகவும், 1959-1963 காலகட் கட்டங்களில் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக் களப்பு ஆகிய இடங்களிலும் அதே சேவையிலும் இருந்தார்.
விரிவுரைகள் ஆற்றுவதில் வல்லமை
சாதாரண மக்களுக்கு தரும் சுகாதார போதனை யில் மட்டுமல்ல, ஆசிரிய கலாசாலைகளில் உள்ள சுகாதார பாடவிதானத்திற்கு ஏற்ப விரிவுரைகள் ஆற்றுவதிலும் வல்லவராக இருந்து, அவர்களால் மிகவும் வேண்டப்படுபவராக இருந்தார். பலாலி, கோப்பாய், நல்லூர், கொழும்புத்துறை ஆகியவற் றின் ஆசிரிய கலாசாலைகளில் நான்கு வருடங்களும் மட்டக்களப்பு, அட்டாளைச்சேனையில் ஏழு வருடங் களும் பகுதி நேர விரிவுரையாளராக இருந்து விரும் பப்பட்டவர். மேலும் யாழ், மட்டக்களப்பு தாதிமார் பயிற்சி நிலையங்களும், தெல்லிப்பழை மருத்துவ மாதுக்கள் பயிற்சி நிலையமும் அவரின் விரிவுரை களால் மிகவும் பயன் அடைந்தன.
1962-1963 ஆம் வருடங்களில் என்னுடன் சேர்ந்து நல்லூர் கந்தசுவாமி கோவில் விழாக்களின் போது 10 நிமிட சுகாதார பேச்சுக்களை ஏற்பாடு செய்து, நிகழ்த்தினார். அவரின் தகைமைகளை நேரடியாக
22 மஞ்சரி: 04 ம

LHaSeS qHSH SqSaS SJSreS S AJSAALALLSSJAS SALqS SLS SAJS AAAA - - - - - . . . . . . . acial - يتبيتي :-3 تبت...سنت- لا. خگوتتبعنش: ۰۰۰،". بتها
அவதானிக்கும் வாய்ப்பு எனக்கு அப்போது கிடைத் திதி
ରୁliରା
அவர் 1973 ஆம் வருடம் தனது 60 ஆவது வயதில் அரச சேவையில் இருந்து ஒய்வு பெற்றார்.
ஓய்வா? பொன்னம்பலம் போன்றவர்கள் இறக்கும் வரை ஒய்வு பெறுவதில்லை,
1973 பின், அவரது சுகாதார தொண்டுகள் பின் வருமாறு:
1974 குடும்பத்திட்ட நிறுவனத்தில் அதிகாரி மட்
டக்களப்பு
1980 REDBARNA நிறுவனத்தில் சமூக சுகாதார
அதிகாரி, களுவாஞ்சிக்குடி
1986 UNICEF நிறுவனத்தில் திட்ட நிறைவேற்று
அதிகாரி, மட்டக்களப்பு
திரு. பொன்னம்பலம் சேவை செய்த எல்லா இடங் களிலிருந்தும், அவர் ஒய்வு பெறும்போது பாராட்டுக் கடிதங்கள் அவருக்குக் கிடைத்தன. அவற் றை ப் படித்து மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தன. ’
அவருக்கு "யாதும் ஊரே, யாவரும் கேளிர்". இந்த மனநிலையிலே தான் மக்கள் சேவையை மகேஸ்வரன் சேவையாக எண்ணி செயலாற்றினார்.
ஆத்மீகம்
ஆத்மீக பலம் இல்லாவிடில் ஒரு வர் அமைதியாக வாழ இயலாது, நம்பிக்கையுடன் சேவை செய்ய இயலாது, மக்களின் அன்புக்குப் பாத்திரமாக முடி யாது. சி. பொ. மிகுந்த தெய்வ பக்தர். ஒய்வின் பின் நேரடியாக ஆலயத்தொண்டு (தச்சை விநாய கர், கரவெட்டி), தேவார வகுப்புக்கள் நடத்துதல் என்று ஈடுபட்டார். மேலும் ஒரு தெய்வத் தொண் டராக கிராமப்பிள்ளைகளுக்கு இலவசமாக ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தார்.
(p.60.
திரு. பொன்னம்பலம் அவர்களுடைய வாழ்க்கை யானது அறிவு, ஆற்றல், கடமை உணர்வு, மக்கள் மேல் அன்பு, தெய்வ பக்தி, அடக்கம் ஆகியவற்றை கொண்டதாகும். அவர் கடைசியாக சுகமஞ்சரிக்கு அனுப்பிய கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்.
As regards Suka Manjari, I am prepared to be of assistance within my konwledge. w
அந்த வயதிலும் என்ன ஆர்வம் என்ன அடக்கம் அவருடைய சுருக்கமான வாழ்க்கை வரலாறு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு மட்டும்ஸ்ல, ம க் கள் சேவையில் ஈடுபடும். சகல சேவையாளருக்கும் தொண்டர்களுக்கும் நல்ல உதாரணம் ஆகும்.
) 03 2000 சுகமஞ்சரி

Page 25
SoG in Hń (Diabetes Mellitu
806 Jľ5ôb 66j prá 661697
உடல் பல ஆயிரம் கோடி கலங்களால் ஆக்கப் பட்டது. இக்கலங்கள் உயிர் வாழவும் தொழிற்பாடு களை ஆற்றவும் சக்தி தேவை. இச்சக்தி பிரதான மாக மாப்பொருள் சமிபாடடைந்து உருவாகும் குளுக்கோசில் இருந்து பெறப்படுகின்றது. குளுக் கோஸ் கலங்களுள் உள்ளெடுக்கப்படுவதை, சதையி எனும் சுரப்பி சுரக்கும் "இன்சுலின்" (Insulin), எனும் ஒமோன் கட்டுப்படுத்துகிறது. குளுக்கோஸ் அனுசேபத்தில் ஏற்படும் குறைபாடு காரணமாக
சிலரோகம் ஏற்படுகின்றது. இது இருவகையில் ஏற்படலாம்.
1. சுரக்கப்படும் இன்சுலின் அளவு குறைதல்
2. கலங்களில் உள்ள இன்சுலின் ஏற்பி (Receptor) யில் ஏற்படும் கட்டமைப்பு மாற்றங் காரண மாக இன்சுலின் சரியான முறையில் தொழிற் பட முடியாதிருத்தல்.
இதன்போது குருதியில் குளுக்கோள் மட்டம் சாதாரண அளவை விட (120mg/100m) உபருகின்றது, இதுவே சலரோகம் எனப்படுகின் றது. 100m குருதியில் குளுக்கோளின் அளவு 180றg க்கு மேற்படும்போது சிறுநீரில் குளுக்கோஸ் வெளியேறும் நிலை ஏற்படுகின்றது. இதனால் சிறுநீரின் செறிவு அதிகரிக்கின்றது. இதன் காரண மாக மேலதிக நீர் குருதியில் இருந்து அகத்துறிஞ் சப்படுகின்றது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி ஏற்படுகிறது. இதனால் சலரோகத்தை நீரிழிவு நோய் என்றும் அழைப்பர், நீர் அதிகளவு வெளியேறுவதால் தாகமும் அதிகரிக்கின்றது.
fy 556 at 6055 air
1) இன்சுலினில் தங்கியுள்ள நேயாளிகள் (Insulin
dependent diabetes mellitus)
A அதிகமாக சிறுவயதில் (Juvenile) தோன்றும்
A சதையில் உள்ள இ ன் சு லி ன் சு ர க் கும் கலன்கள் முற்றாக அல்லது குறிப்பிடத் தக்க அளவு அழிக்கப்படுவதனால் உருவா கும்.
66i. Il T 556jr நான்காம் வருட மருத்துவ மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
s-supe56Ffi? மஞ்சரி: 04 மல

A 3) pi G3 நா யாளிகள் உயிர்வாழ்வதற்கு வாழ்க்கை காலம் முழுவதும் இன்சுலின் ஏற்றுதல் அவசியமாகும்.
2) இன்சுலிகளில் தங்கியிராத நீரிழிவு நோயாளிகள் (Non - lnsulin dependent diabetis mellitus) A இது அதிகமாக வயது வந்தவர்களில் வரும் நீரிழிவாகும். இதனால் பாதிக்கப்படும் நோயாளிகள் அநேகமாக உடற்பருமன்
է Իլ : கூடியவர்களாக இருப்பார்கள்
A இது இன்சுலின் சுரக்கும் தன்மையில் ஏற் படும் குறைபாடு காரணமாகவும் இன்க லின் ஏற்புக்களில் (Recepter) ஏற்படும். குறைபாட்டினாலும் ஏற்படுகின்றது.
3) கர்ப்ப காலங்களில் ஏற்படும் நீரிழிவு நோய்
(Gestational Diabetes mellitus)
2) போசாக்கின்மையால் ஏற்படும் நீரிழிவு நோய்
Malnutrition related diabetes mellitus)
5) வேறு காரணங்களால் உருவாகும் நீரிழிவு நோய்
... " இதில் முதல் மூன்றுமே மக்களை அதிகம் பாதிக்கும் வகைகளாகும்.
நோயின் அறிகுறிகள்
O அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவில் நித்திரைக்குச் சென்ற பின்னகும் இடையிடையே எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டியிருத்தல் அதிகரித்த தாகம்
அசாதாரண பசி
கண் பார்வை மங்குதல் அவயங்களில் விறைப்புத் தன்மை ஏற்படல் நாட்பட்ட மாறும் புண்கள் பின்கழுத்திலும் உடலின் பின்பகுதியிலும் பதுக் களும் கட்டிகளும் தோன்றுதல்
பெரும்பான்மையானவர்களில் இல் அறிகுறிகள் ஆரம்பத்தில் தென்படுவதில்லை. வேறு நோய்களுக் காக சிகிச்சை பெறச்செல்லும் போது, சந்தர்ப்புவது மாக கண்டுபிடிக்கப்படுகின்றது. எனவே பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடமொரு முறை சல. குருதிப் பரிசோதனை செய்துகொள்வது விரும் பத்தக்கது. அதிலும் குறிப்பாக பின்வருவோர் மிகுந்த கவனம் எடுத்தல் நல்லது.
ft; " ᎤᏘ 2000 es

Page 26
O உயரம், வயதிற்கேற்ப இருக்க வேண்டியதைவிட மேலதிகமான உடல்நிறையும் பருமனும் உடை யவர்கள், அளவிற்கதிகமாகவும் அடிக்கடியும் உணவு உண் ணும் பழக்கம் உடையவர்கள். பரம்பரையில் சலரோகம் இருப்பவர்கள் அதிகளவில் மதுபானம் பாவிப்பவர்கள். கர்ப்பவதிகள்
fp f6fâ) 55 i 65 T fir 9 a. Se puqb y 800 656) all 60 Gu (356
தேவையான பொருட்களும் அவற்றின் பருமட்டான விலைகளும் அருகே தரப்பட்டுள்ளன. மேற்கூறிய பொருட்களை மருந்துக்கடைகளில் வாங்கலாம்.
உ.கரணம் விலை (ரூபா) 1. பரிசோதனைக் குழாய் (Test Tube) - 18 2. Jaiva' (Test tube holder) ー 65 3. 2.5ml Finalsår (Syringe) - 5 ܚ 4. GOLD AUT '97 (Ink Filter) 10 ܡܢ 5. Gou GOTLqëð 3560UTFổv (Benedict Solution) 125ml-25 6. மெழுகுதிரி ۔ے
முழுத்தொகை 12
செய்முறை
காலை எழுந்தவுடன் சிறுநீர் முழுவதையும் வெளி யேற்றிய பின் இரண்டாம் முறை வெளியேற்றப்படும் சிறுநீரை பரிசோதனைக்கு பயன்படுத்தவும். 0 சிறின்ஜில் 2, 5m அளவிற்கு பெனடிக்ற் கரைசல் எடுத்து, பரிசோதனைக் குழாயினுள் விடவும். O போத்தல் ஒன்றினுள் சேகரிக்கப்பட்ட சிறு நீரில் 4துளிகள் மைநிரப்பியின் உதவியினால் பெனடிக்கரைசலைற் கொண்ட பரிசோதனைக் குழாயினுள் விடவும். 3. o பரிசோதனைக் குழாயை சிறிது, சரித்துப்பிடித்து எரியும் மெழுகுதிரியில் அல்லது மதுசார விளக் gai) (Spirit lamp) Glåm Sá(5th 6760pr Qaulu மேற்றவும். O கரைசல் கொதித்தபின் பரிசோதனை குழாயின் வெளிப்புறத்தை உலர்ந்த துணியால் துடைத்த பின் நிறமாற்றத்தை அவதானிக்கவும்.
()6
நீலநிறம் காணப்படின் சிறுநீரில் குளுக்கோஸ் இல்லை. சிறுநீரில் குளுக்கோஸ் இருப்பின் நிறம் அவற்றின் செறிவுக்கு ஏற்ப பச்சை, பச்சைமஞ்சள், மஞ்சள், இளஞ்சிவப்பு, செங்கட்டிச்சிவப்பு என மாற்றமடையும். ஒவ்வொரு முறையும் செய்யும் பரி
24 மஞ்சரி: 4 6

rf
Merv 1 كتخصص
சோதனையின் நிறமாற்றத்தை ஒரு குறிப்புக் கொப் பியில் குறித்து அடுத்தமுறை வைத்தியரை பார்க்கச் செல்லும் போது காட்டவும்.
ஏறத்தாழ சலரோகத்தினால் பீடிக்கப்பட்டவரி களில் 50% ஆனவர்கள் அந் நோயினால் பீடிக்கப் பட்டிருப்பதனை அறியாதவர்களாகவே இருக்கின்றார் கள். எனவே இப்பரிசோதனையை செய்து கொண்டி ருக்கும் சலரோக நோயாளிகள் இப்பரிசோதனையை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் செய்து பார்க் கலாம். சிலவேளைகளில் அவர்களும் இவ் 50% வீதத் தினுள் அடங்கக்கூடும்.
Slų
பரிசோதனையில் நீலநிறம் தோன்றின் அது சிறுநீரில் குளுக்கோஸ் இல்லை என்பதையே உறுதிப்படுத்தும் ஆனால் குருதியில் சில வேளைகளில் குளுக்கோஸ் மட்டம் உயர்வாக இருக்கலாம் எனவே வேறு சில குருதிப் பரிசோதனைகளின் மூலமே இதனைக் கண்டு பிடிக்கலாம்.
சிறுநீர் பரிசோதனையில் நீலநிறம் தவிர மற் றைய நிறங்கள் தோன்றின் அவர் வைத்திய ஆலோ சனை பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும்.
65 T forráð og Abu BÒ få 566
சிக்கல்கள் பொதுவாக சலரோகம் தோன்றி பல வருடங்களின் பின்னரே ஏற்படுகின்றது. சலரோ கம் இருப்பது ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை வழங்கப்படுமாயின் இச்சிக்கல்கள் தோன்றுவதை தடுக்கலாம். அல்லது பல வருடங்க ளுக்கு பிற்போடலாம். ஆனால் பொதுவாக சல ரோகம் இருப்பது தாமதமாகவே கண்டுபிடிக்கப் படுவதால், இச்சிக்கல்களின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துவிடுகின்றன. எனவே இச்சிக்கல்கள் தோன்றுவத்ை தடுக்க சலரோகம் இருப்பது நேரத் துடன் கண்டறியப்படுவதும், தகுந்த சிகிச்சையும் அவசியம்.
45 di Gir
O கை, கால்களில் விறைப்புத்தன்மை உருவாதல் நரம்புக் கலங்களுக்கு குருதியை வழங்கும் குரு திச்சிறு குழாய்களில் கொழுப்பு படிவடைந்து குருதிச்சுற்றோட்டம் படிப்படியாகக் குறைவ டைவதால் உணர்ச்சி நரம்புகள் பாதிக்கப்படும். இதனால் அவயவங்களில் உணர்ச்சியற்ற தன்மை ஏற்படும்
O கண்பார்வை படிப்படியாக குறைவடைதல் கண்க ளின் விழித்திரையில் உள்ள குருதிச் சிறுகுழாய் கள்சேதமடைவதாலும் விழித் திரையில் நீர்ப்பா யங்கள் சேர்வதனாலும் கண்பார்வை பாதிக்கப்
3 2000 சுகமஞ்சரி

Page 27
படலாம். கண்ணீர்ப் பாயங்களில் உள்ள வெல்லச் செறிவு அதிகரிப்பதால் கண்வில்லை தடிப்படை யும் இதனாலும் பார்வை மங்கலாம்.
J5IĽu Ľ8b ID Ip Ij t|6Šľ56ľ
இது பின்வரும் காரணங்களினால் ஏற்படுகின்றது.
A கை, கால்களில் உணர்ச்சியின்மையால் காயங்கள் ஏற்படும் போது அதை உடனடி யாக அறிய முடியாதிருத்தல்
A குருதிச்சிறு குழாய்களில் அடைப்பு ஏற்படுவ தால் இழையங்களது குருதி விநியோகம் பாதிக்கப்படுதல்
A உடலின் நோய் எதிர்ப்புத்தன்மை குறை
வடைதல் .
O சிறுநீரகம் பாதிப்பு அடைவதனால் புரதம் (அல்புமின்) வெளியேறத் தொடங்கும். காலக் கிரமத்தில் சிறுநீரகம் அதன் தொழிற்பாட்டை இழக்க நேரிடும். தன்னாட்சி நரம்புத்தொகுதி பாதிப்படைவதால் வாந்தி, வாயிற்றோட்டம் என்பன அடிக்கடி ஏற்படும் O ஆண்மைக் குறைபாடும் ஏற்படக்கூடும்.
O
U) சலப்பை, பாலியல் உறுப்புக்கள், தோல் முதலி யவற்றில் தொற்றுக்கள் ஏற்படுவதால் பெரும் பாதிப்பு ஏற்படும்
சலரோகமும் அதற்கான சிகிச்சை முறைகளும்
சலரோக சிகிச்சையின் நோக்கமானது குருதியில் குளுக்கோஸ் சமநிலையை பேணுவதன் மூலம் இந் நோயினால் வரும் சிக்கல்களை குறைத்து நோயாளி யின் வாழ்நாளை நீடிக்கச் செய்தலாகும். பிரதான மாக மூன்று முறைகளில் சிகிச்சை அளிக்கப்படு கின்றது.
உணவுக்கட்டுப்பாட்டு முறை
A உணவுக்கட்டுப்பாடும் மாத்திரைகளும்
A உணவுக்கட்டுப்பாடும் இன்சுலின் ஊசி க்கடி. ஏற்றுதலும்
சலரோக நோயாளியின் உணவு முறையானது நோயாளிக்கு நோயாளி மாறுபடக்கூடியது. அதாவது நோயாளியினுடைய தன்மை, சிகிச்சை முறையின் தன்மை, வயது, நிறை, நாளாந்த வாழ்க்கை முறை என்பவற்றைப் பொறுத்து வேறுபடும், எனினும் சலரோக நோயாளிகள் பின்வரும் சில உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தல் நன்று.
O அதிகளவு நார்ப்பொருட்கள் சேர்ந்த உணவை
உட்கொள்ளல்.
கமஞ்சரி மஞ்சரி 04 Los

eSSA SeAeS ATTSekeeSMSAeAeTeASASAqAqS SeqeAq qAAA LAL AAAq AiAqAeLLLAAAA R.'"k m . . . Y-::-&L:ssa.Silk
உதாரணமாக ஒடியல் மா, கீரை வகைகள். நார் சமிபாடடைந்த குளுக்கோசை மெதுவாக விடுவிப்பதனால் குருதியில் குளுக்கோஸ் மட்டம் சடுதியாக உயர்வதை குறைக்கின்றது. அத்துடன் நார்ப்பொருட்கள் உள்ள உணவு நீரை உறுஞ்சி அதிகளவு கனவளவை எடுப்பதனால் உண்ணும் உணவின் அளவு குறைக்கப்படுகின்றது. இதனால் உடற்பருமன் குறைய ஏதுவாகின்றது.
ஒரு வேளை உ ண வை பல வேளைகளாக பிரிந்து உண்ணல் சினிச் சத்து கூடிய உணவுகளை முற்றாசி தவிர்த்தல் மாப்பொருள் கூடிய உணவு களை, அளவு குறைத்து உண்ணல்
நேரம் தவறாது உணவை உண்ணல்
உணவுக் கட்டுப்பாடு மட்டும் சலரோசத்தை கட்டுப் பாட்டினுள் வைத்திருக்காவிடின் உணவுக்கட்டுப் பாட்டை தொடர்ந்து கடைப்பிடிப்பதுடன் வைத்திய ஆலோசனையுடன் மாத்திரைகளையும் உபயோகிக் asaontb.
தற்போது இருவகையான மாத்திரைகள் பயன் பாட்டில் உள்ளன. இவை சதையியில்உள்ள இன்சுலின் சுரக்கும் கலங்களை தூண்டி இன்சுலின் ஐ ふりrá* உதவுகின்றன. அதற்கு சதையியில் தொழிற்படக் கூடிய இன்சுலின் சுரக்கும் கலங்கள் இரு த் தல் அவசியம்.
விரும்பிய உணவை உண்ண முடியவில்லை Graf ஏக்கத்துடன் இருக்கும் நோயாளிக்காக உருவாக்கப் பட்டது தான்7Acarbos" எனும் புதிய மாத்திரை, இது உணவுக்கால்வாயில் மாப்பொருள் குளுக்கோஸ் ஆக மாற்றப்படுவதைத் தடுக்கின்றது. இதனால் குருதியில் குளுக்கோஸின் அளவு உயர்வது தடுக்கப் படுகின்றது, இது தற்போது மேலைநாடுகளில் நீரழிவு நோயளிகளுக்கு விருந்துடன் சேர்ந்து பரி மாறப்படுகின்றது.
-Glucophage bGurg Js paslGāšs
ருக்கும் இன்னுமொரு மாத்திரை இது குருதியில் உள்ள குளுக்கோளை ஈரலில் கிளைக்கோஜன் ஆக மாற்றி சேமிப்பை தூண்டுகின்றது. இதனால் குருதி யின் குளுக்கோஸ் மட்டம் பேணப்படுகின்றது.
TZD இதுவும் தற்போது அறிமுகம் செய்யப் பட்டுள்ள புதியதொரு மாத்திரையாகும். இது தசைக்கலங்கள், கொழுப்புக்கலங்களை இ ன் சு லி னிற்கு உணர்திறன் கூடியவையாக மாற்றுகின்றது. இதனால் குருதியில் உள்ள மேலதிக குளுக்கோசா னது விரைவாக இக்கலங்களினுள் எடுக்கப்படுவத னால் குருதியின் வெல்லச்சமநிலை பேணப்படுகின் றது. மாத்திரைகள் உணவுக்கட்டுப்பாடு என்பவற்
vr, 03 2000 25

Page 28
றிற்கும் நீரழிவு நோயான கட்டுப்படாது விடின் வைத்திய ஆலோசனைப்படி இன்சுலின் ஊசி ஏற்று வதன் மூலம் சலரோகத்தை கட்டுப்பாட்டினுள் கொண்டு வரமுடியும், எனினும் இன்சுலின் பிரயோக மானது தற்காலிகமாக பின்வரும் வேறு சில நிலை மைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
; கர்ப்ப காலங்களில்
: நோயாளிக்கு வேறு ஏதாவது சத்திரசிகிச்சை
செய்யவேண்டியிருப்பின்
நோயாளிக்கு கா யங் கள் அல்லது நோய் தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பின்
இன்சுலின் ஏற்றும் நோயாளிகள் பின்வரும் அம்சங் களை கடைப்பிடித்தல் அவசியம்
1. இன்சுலின் சேமிப்பு
குளிர்சாதனப்டெட்டியின் ந டு ப் பகுதி யில் வைத்து சேமித்தல் சிறந்தது, மேற் பகுதி யி ல் (freezer) வைத்துச் சேமிக்கக்கூடாது. குளிர்சாதனப் பெட்டி இல்லாவிடின் இயலுமானவரை குளிரான (330° C),வெளிச்சம் படாத இடத்தில் சேமித்து வைக்கவும் .
2. சிறிஞ்சை தேர்ந்தெடுத்தல்
ஏற்றப்படும் இன்சுலின் கனவளவானது அதனு டைய வீரியத்திலேயே (strength) தங்கியுள்ளது. இது unit/ml எனும் அலகில் குறிக்கப்படுகின்றது. தற் போது கடைகளில் மூன்று வகையான வீரியத்தில் இன்சுவின் கிடைக்கின்றது (u-40, u.80, u-100) எனவே நீங்கள் பாவிக்கும் இன்சுலினின் வீரியம் குறிக்கப்பட்ட சிறிஞ்சையே எப்பொழுதும் பாவித் தல் வேண்டும். சரியான ஊசியை பயன்படுத்தப்படா விடின் அளவுகளில் மாற் றம் ஏற்படுவதால் பல சிக்கல்கள் உருவாகும்.
3. இன்சுலினை ஊசியினுள் எடுத்தல்
* இன்சுலின் உள்ள போத்தலை கவன மாக
குலுக்கவும் ஆ இன்சுலின் போத்தலின் மேல்மூடியை spirit
மூலம் நன்றாக துடைக்கவும் & எந்தளவு கனவளவு இன்சுலின் தேவையோ அந்த அளவு வளியினை ஊசியினுள் இழுக்கவும் பின் இவ்வளியை போத்தலினுள் செலுத்தவும்
யினுள் இழுக்கவும்
ஊசியை போத்தலில் இருந்து வெளியே இழுப்பதற்கு முன்னர் வளிக்குமிழிகள் ஏதாவது இருப்பின் அதைப்போத்தலினுள் செலுத்தவும்.
洛
பின் தேவையான அளவு இன்சுலினை ஊசி
豪
26 மஞ்சரி 04

ray- ــــــــــمـــــــخ
4. ஊசியினை உடலினுள் ஏற்றல்
* ஊசி ஏற்றப்படும் இடத்தில் உள்ள தோலினை
Surgical Spirit -2.60 gigoliasajib
* ஊசி ஏற்றப்படும் பகுதியை பெருவிரலாலும் சுட்டுவிரலாலும் நன்றாக பிரித்துப் பிடிக்கவும் இதனால் ஊசி ஏற்றப்படும் போது ஏற்படும் வலியை குறைக்கலாம்
* பின் ஊசியை தோலுக்கு செங்குத்தாக பிடித்து, உட்செலுத்தியபின் இன்சுலினை உட்செலுத்தவும்
* ஊசியினை வெளியே எடுத்தபின் ஊசி குற்றிய இடத்தை பஞ்சினால் அழுத்திப் பிடிக்கவும்
ஊசி, சிறின்ஞ் இரண்டையும் தொற்று நீக்கிய பின்னரே மீண்டும் பாவித்தல் வேண்டும்
குறிப்பு ஒரே இடத்தில் தொடர்ந்து ஊசி போடும் போது தோல் தடித்தல் கட்டிகள் உருவாதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம். எனவே ஊசி போடப்படும் இடங்களை மாற்றுதல் அவசியம் தொடையின் முற்பகுதி, அடிவயிற்றுப்பகுதி, புட்டப் பகுதி, மேற்கைப்பகுதி போன்ற இடங்களில் மாறி
மாறிப் போடலாம்.
8f6o6g5yfb (Duä5 ĝ6) a) uqb
பின்வரும் நிலைகளில் ஏற்படலாம்
* மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி எடுத்த பின்னர் உணவு உட்கொள்ளாதபொழுது, உண்ண தாமதமாகும் பொழுது அல்லது குறைந் தளவு உண்ணல் .
*; இன்சுலின் அல்லது மாத்திரையின் அளவு கூடுதல்
* வழமையைவிட அதிகளவு உடற்பயிற்சி அல்லது
வேலை செய்தல்,
* உடலில் ஏதாவது நோய் அல்லது தொற்று ஏற்படல், (விசேடமாக வாந்தி அல்லது வயிற் GAprillb)
* சில ஈரல், சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்டிருத்
தல்.
* வேறு நோய்களுக்காக வேறு மருந்து க  ைள நீரிழிவு மருந்துகளுடன் சேர்த்து பா வித்த பொழுது (உ+ம் அஸ்பிரின்)
* மதுபானங்கள் அருந்துதல்,
மயக்க நிலையானது இரத்தத்தில் குளுக்கோசின் அளவு குறித்த அளவைவிட கூடுவதனால் அல்லது குறைவதனால் ஏற்படுகின்றது. (இவை முறையே
reserer,
colo: os 2000 சுகமஞ்சரி

Page 29
5 جب جسم
Hyperglycemia, hypoglycemia star 930ypä5lu G கின்றது.
குருதியில் குளுக்கோசின் அளவு குறையும் போது, உடற்தள்ளாட்டம், அதிகளவு வியர்வை உருவாதல் இதயத்துடிப்பு வேகமடைதல், பார்வை மங்குதல், கைகளில் நடுக்கம் ஏற்படல், எளிதில் கோபமடை தல் போன்ற முன்னறிகுறிகள் தோன்றும்.
எனவே இவ் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட உடனேயே சிறிது குளுக்கோஸ் அல்லது சீனி உட் கொண்டால் சிறிது நேரத்தில் தெளிவு ஏற்படும். 15 நிமிடத்தில் தெளிவு ஏற்படாது விடின் அல்லது முற்றாக மயக்கமடைந்துவிடின் நோயாளியை உடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லல் வேண்டும்.
குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது மயக்கம், அதிக தூக்கம், அதிகரித்த தாகம், சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி போன்ற அறி குறிகளை அவதானிக்க முடியும். இந்நிலையில் உடன் வைத்திய உதவியை நாடல் அவசியமாகும். இம்மயக்க நிலையானது எப்பொழுதும் எவ்விடத்திலும் நிகழ லாம். எனவே பின்வரும் முற்காப்புக்களை கடைப் பிடித்தல் அவசியமாகும்.
*
შt*
மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி எடுத்த பின் கட்டாயமாக குறித்தளவு உணவை நேரம் தவறாமல் உட்கொள்ளல்,
S
ge
* உணவை உட்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் (விரத காலங்கள், வேறு நோயினால் பீடிக்கப் பட்டிருத்தல்) வைத் தி ய ஆலோசனையுடன்
நீரிழிவு நோயாளி
நாளாந்த ப கலை உணவு இடியப்பம்
பாண் 2 துண்
சம்பல், வான a 690 10 D69: LunT6ão LDmrti 6
சேர்க்காமல் மதிய உணவு : சோறு 1 அக மரக்கறி வேலி
கவும்) இலை மாலை உணவு : கிறீம் கிரக்கர் தேநீர் / மா Sya 2. GRTa ur6šo 3 g6.
இவற்றுடன்
சேர்க்கலாம்.
moms s
~ AsiaSurde éFfl மஞ்சரி: 04 D

خصيصشتقسم
மாத்திரைகள், இன்சுலின் அளவில் மாற்றம் செய்தல். 38. வீட்டில் உள்ளவர்களுக்கு மயக்கநிலை பற்றி
தெளிவாக விளக்கமளித்தல். * நோயாளி சிறிதளவு குளுக்கோசை அல்லது இனிப்பு வகைகளை எப்பொழுதும் தன்னுடன் வைத் திருத்தல் . * வெளியே செல்லும் போது தான் ஒரு சலரோக நோயாளி எனவும் தான் உள்ளெடுக்கும் மருந்து வகைகளையும் அவற்றின் அளவுகளையும் எழுதிய அட்டை ஒன்றை எப்பொழுதும் எடுத்துச் செல்லல், வேறு நோய்களிற்காக வைத்தியரிடம் செல்லும் போது தான் ஒரு சலரோக நோயாளி என வைத்தியருக்கு தெரியப்படுத்தல்
சலரோகத்தினை முற்றுமுழுதாக குணமாக்க முடியாது. ஆனால் தகுந்த சிகிச்சை பெற்று நோபைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதனால் அதனால் ஏற்படும் தீயவிளைவுகளை பிற் போடலாம். ஒரு நபருக்கு சலரோகம் தோன்றியிருப்பது எவ்வளவு விரைவாக கண்டறியப்படுகின்றது என்பதிலேயே சிகிச்சையினுடைய முழுவெற்றி தங்கியுள்ளது. எனவே 40 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருமொருமுறையாயினும் தங்கள் சலம், குரு தி பரிசோதனை செய்து கொள்வது நன்று. அவ்வாறு செய்யும் போது, நீரிழிவு நோயாளி எனக் கண்டறியப் படுமிடத்து வைத்திய ஆலோசனைப்படி த குத் த சிகிச்சை பெறுவாராயின் அவர் பயனுள்ள ஆரோக் கியமான வாழ்க்கையை வாழமுடியும்.
ரியின் போசணை ாதிரி உணவு
அல்லது தோசை 2 அல்லது ாடு (1/2” தடிப்பு) இவற்றுகூன் ழப்பழம் சேர்க்கலாம். மைட், தேநீர், பழரசம், சீனி அருந்தலாம். ப்பை அல்லது 1 பீலீஸ் ண்டிய அளவு (கிழங்கு வகை தவிர்க் க்கறிவகை கட்டாயம்.
பிஸ்கட் 2 அல்லது பாண் 1 துண்டு ர்மைட் (சீனி சேர்க்காமல்) ாடு அல்லது இடியப்பம் 3 அல்லது ஸ்லது தோசை
இலைக்கறி அல்லது சம்பல்
ул: оз зоод - - 27

Page 30
உணவுப் பொருள்களின் ச
MSLLLSLeeeLTLSSLLSMezLYSMLLSeLYSLMLeeLSeLeSBSBSSLeSYLSLSTLSLYYLeLSLSLSL eeeeeSLeLLSL
சுகாதார சேவையாளரின் நலன் கருதி உண தொடர்ந்து வரும் சுகமஞ்சரி மலர்களில் வெளிய
இங்கு வாழுகின்ற தமிழ்மக்கள் பாவிக்கும் ön. Bja) if Gaffi al ûLIČBairaMTG.
GLIII, 5 Il pi di 5.5 T i 56ì a 9affi
î6ŠI ITİ, இவற்றை புத்தக வடிவில் வெளி உள்ள குறைகளையும் உங்கள் கருத்துக்களை வெளியீட்டை சமூகத்திற்கு அளிப்பதற்கு உதவிய
MLSSLSLeLSLLLSLLSLLLSMMSLLLSLLLYYLSSeSLYLSLS LSLLLLLLSLLLSqqSLLSLLLLLSLS e SLLLLLLSLLLLLL
உணவுப் பொருள்களின் கூறமைப்பு அட்டவணை கள் பற்றிய குறிப்புகள் N 1. அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கக் கூறுகளின் அளவுகள் உணவுப் பொருள்களின் உண்ணக்கூடிய பகுதிக்கே பொருந்தும். எனவே தேவைப்படும் திருத்தங்களைச் செய்த "முழு" உணவுப் பொருளுக்குப் unrašas aosrub o அட்டவணையின் இறுதியில் "முழு" உணவுப் பொருளாக வாங்கும் போது அதில் உண்ண முடியாத பகுதியாக எஞ்சும் 'கழிவு' வீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 2. அண்ணளவான நைதரசன் கொள்வனவு அள விடப்பட்டே உணவுப் பொருளின் புரதக் கொள் ளளவு கணக்கிடப்பட்டுள்ளது. எல்லா உணவு களுக்கும் மாற்றீட்டு அலகாக 6, 25 பாவிக்கப் பட்டுள்ளது 3. குறிப்பிடப்பட்டுள்ள காபோவைதரேற் கொள் ளளவு, ஈரலிப்பு, புரதம், கொழுப்பு, நார், சாம்பல் என்பவற்றினை கணக்கிடப்பட்ட பின் பெறப்பட்ட ஒரு பெறுமதியாகும். 4. உணவுப் பொருள்களின் சக்திக் கொள்ளளவு, காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு என்ப வற்றின் கொள்ளளவுகளில் இருந்து கணக்கிடப் பட்டுள்ளது. ஒரு கிராமுக்கு முறையே 4, 4, 9, கிலோ கலோரி சக்தி வெளிப்பாடு காபோவைத ரேற்று, புரதம், கொழுப்பு என்பவற்றிற்கு இருக் கும் என எடுத்துக் கொள்ளப்படுகிறது. 5. முன்னரே உருவாக்கப்பட்ட விட் ட மின் ஏ
விலங்குணவுப் பொருள்களிலேயே காணப்படு கிறது. அதன் கொள்ளளவு குறிப்பிட்ட அளவு !"மைக்கிரோ கிராம்கள் ரெட் டினோ ல்" (Micrograms of retinol) og Få குறிப்பிடப்பட் டுள்ளது. தாவர உணவின் கரோட்டீன்கள் (விட்டமின் ஏ முன்னோடி) கொள்ளளவு மைக்
超ö மஞ்சரி: 04 6م

கூறமைப்பு
வூப் பொருள்களின் கூறமைப்பு அட்டவணைகள், Galli5)5 69 filj5 si offusi il LGai GT6).
உணவுப் பொருள்கள் பற்றிய விபரங்கள் இதில்
தற்கு இது உதவும் என்று நம்புகிறோம்.
யிடும் நோக்கமும் எமக்கு இருப்பதால், இதில் Isò 6 Dhj 9 paj 5 I6), pupSOLDIGT 95 ாக இருக்கும்.
- ஆசிரியர், சுகமஞ்சரி
LLLLSYLLLLYYYLLLSLLLSLSLLYLSLeLeSLSLYLLLYYYLLLLLYLLLLLLSLLL
கிரோ கிராம்களில் (mcg) குறிப்பிடப்பட்டுள்ளது. சில உணவுகள் உதாரணமாக முட்டை முன்பே உருவாக்கப்பட்ட விட்டமின் ஏ. கரோட்டின் (முன்னோடி) ஆகிய இரண்டையும் கொண்டுள் ளன என்பதை கவனத்தில் கொள்ளவும்,
பின்வரும் தொடர்புகளைக் கவனிக்கவும்!
1. சரிவதேச அலகு (1. U.) விட்டமின் ஏ உ0.3 மைக்கிரோ கிராம்கள் ரெட்டினோல்
சர்வதேச அலகு (1. U.) விட்டமின் ஏக 6.8 மைக்கிரோ கிராம்கள் கரோட்டீன்,
9 தரப்பட்ட உணவுப் பொருளின் போசனைக் கொள்ளளவிற்கும், பாவனையில் உள்ள உண வின் ஆக்கக்கூறு அட்டவணைகளிற்கும் இடையே கொள்ளளவில் வித்தியாசங்கள் (அநேகமாக சிறி தளவு) இருக்கக்கூடும். இவை இ ன ங் களு க் கிடையே சுவேறுபாடுகள், மண், காலநிலை வேறு பாடுகள், கணிப்பீட்டு முறைகளிலான வேறுபாடு கள் என்பனவற்றால் ஏற்படுகின்றன.
7 அட்டவணைகளில் பாவிக்கப்படும் பின்வரும்
குறிப்பீடு முறைகளை அவதானிக்கவும்.
அ) ஒரு உணவுக்கூற்று இல்லாமல் போனால் அல்லது மிகக்குறைந்த அளவில் மட்டும் காணப்படும் போது பூச்சியத்தினால் ( 0) குறிக்கப்படுறது.
ஆ) இரண்டு குற்றுக்கள் (, ) குறிப்பிட்ப்பட்ட
தரவு இல்லாமல் இருப்பதை குறிக்கிறது.
蓋下”
இ) எழுதப்படாத فا-الله பொருத்தமற்ற இடங்களில் விடப்படுகின்றது. உதாரணமாக தாவர உணவில் முன்னரே உருவாக்கப் பட்ட விட்டமின் ஏ இன் அளவு,
ii 03 2 000 " சுகமஞ்சரி

Page 31
- - - -
| 00z | 09ÇI
* - || 0 ≤ || 1:0| 0: si || 1:0 | 01 I || Ozi|8. cz | S * | 0' +|OF I || [] ( 89ște „geøl oo60 )|
• | }|||-* |(gg」Jコ「Jfng@こ []" ||Z () - || {}Z{ | Off || 0g|0′09 || Z'0 || ZOZ | §§7 | Ç'6 || fi 8 | 6 | 9 || 9çi | 0' + s.qe urițiaeri -- Trīņos urn fizie | £060 ---||||( Norm:#ı-ıfsıų,9|$) souriņion [1 역|Z + 0 +| Ö05 || (})]] | []s, []|Ģo [] | [][];|00$ | 0′ 89 || Zo 0 || E. OI ! (JLZ || 0 - 67|m写乌塔哥劑捍聽鱷현Q-60 - - ||| --||||( North-fiņựce(s) |[) Tz|Z : []]ŌŌț¢Ű8國的|0,0守|E^{}|()흑 3[][]E || 5 || 95· 寸的|sĩ, L|§ €E|§ ' £Zœurīsieri「나TrTrT軍學urm tT니T民| TO6O ----|----|----—\ ——==== |-|----- |-||-||---- 표函----|-安||! 學|| 활| 활| 院| 불| 활| 활| 활| 활| 활| 불 불| 越 新一路| .岛 (原陵脚撑腰柳一游一瞬一哪一赠一。唯一憾용 ||城 ※一娜。一一*一一娜一* 哪一一一。一圈一伽「. |§§姆·眼|E3门|明sırtırılgı içeļos) urīte) sıfızı,脚 → ss |1", 또 || TR→.封孚||函打鸥 ġ.).圆圈一股홍世, , f 나村→引, 班|壁|國司: _ | 5|?释一。 一册翻轉翻割 o £• •版|- -||- =ą,→| –,安 * ||g ||g ||s |통 ||s ||* ||s |g ||g ||學|德 : 德 || ||s毋
·|!|—**æ= ||||-H|-+ si | ◄ | £1더 ]터미그헌미그활80 | l6 | 90 si so | #o | so jo z0 | 106업(高島
(ųoogido.ligfűfalo) ugoslīgā Ērīrutivos kaegs-aquae 001)
ĮĮĶĒĶIĢIII oặnii foss in gồ SLLLLL LLS LLL LLLLLS LL LLLL0S0LL SLLLLLLLLLLL S LLLLSLLLLL

『、“ggJbsgaミeg gggs
eeSLLLS S SS SeLee S SeL S eeLL e SeL S L S L S eeLL SS LLLL
h =
I " O
1 ' []
I'[]
[]Q I
[]Q I
[]{}EI
051 Œ
[][][]
[]\}[
量。置
[]E
UE
[]IE
-- || 현:"() () '()'I || I "() ()一{1 []}}|''[[]] 10 033|| 9,0 3:"현g || r"O I "If" | I () O'8守-|| 편'D
• sjeo | 0:096 ’’ |9'05 - || Z." () O'Čo || I "Z
06 0ህ l
001 ÚE []EL 05
[]EI DE I :
£5 {}Es}
(1:|
MD-1편 OLI
ĜțI ÖĞs.
!}" LI
s s, çi Ç" () () "8E 寸寸 寸“L Ū"Ç 9"#
D'E E o 9
| "[]
8:0
[ "[] I "ו L'93) [“寸 寸:E R & 岭“寸
9, 18 |
[] o # I No.
|
5' 역
9"E
£ €
8"O
8: STz 면 "E
|
I o I £"#7| E' E
H
HT
[  ̈†ሺ
sis
[]s
9!. § 1 95ț¢ に9 59 LII 역A Ķs. 09 國守的
T.
I "Z6 []"LL
0·08 |
£'L5 | soo
| solo [] ".$$ Ū" IĘ 國: 98 0° 5'I I'68 |
• oo |
moợøkoww.mm &Om道官r많& rm#T*常民wn)니T原는ur려g)
|mogoko on kolonçertoe sourn@@ITJ-Tiflurno)
(高等ur rmw'(國民A에 널(mues)官ames)|| 9IGO (sự sụose tarı ÇIĞ0 (?坦母后穹上n
† IẾs) (『喝ggg追Jgg)」E日D 160 「比コ) Eqg」コ 5D 「*コこ gEJ 1160 「gEg) gEュ 0160 「gggb) guコ 5060 (QQ) 『EJ 8060 (ņı olayı şorţeloj) 41-T-Trn || L.060 **9056)
(†T-Top-Teae. L'œur1)**)ŞŪĶ0
} |

Page 32
உடலைப் பாதிக்கும் ஈய
ஈயம் பல நூற்றாண்டுகளாக பல வழி க ளில் பயன்படும் ஒரு நச்சு உலோகம். தாழ்ந்த உ ரு கு நிலை கொண்டிருத்தல், இலகுவில் ஒட்சியேற்றம் அடைதல், உலோக அரிப்பை எதிர்க்கும் இயல்பு. பல உலோகங்களுடன் இலகுவில் கலந்து கலப்பு உலோகங்களை ஆக்குதல் போன்ற பல இ யல் பு களினால் ஈயம் பல கைத்தொழில்களில் பயன்படுத் தப்படுகின்றது உதாரணமாக குழாய்கள், துப்பாக்கி குண்டுகள், கலப்புலோகங்கள், மின்கலங்கள், பூச்சி கொல்லிகள், மெருகு எண்ணெய்கள் (வாணிஸ்). அழகு சாதனங்கள், மற்றும் வண்ணப் பூச்சுக்களுக் கான சாயங்கள் போன்ற எண்ணற்ற பொருட் களின் உற்பத்தியில் ஈயம் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் களிமண் கை வினைப் பொருட்கள் செய் வதில், பிளாஸ்டிக் தொழிலில், பல்வேறு பற்பசை கள், குழந்தை உணவுகள், மற்றும் பல பதப்படுத் தப் பட்ட உணவுப்பொருட்களை அடைத்து அனுப் பும் ரின்கள், தேயிலைத் தூள்களை அடைத்து அனுப் பும் ஈயக் கடதாசி என பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. நவீன தொழில்களில் ஈயத் தின் தே ன் வ அதிகரித்துக்கொண்டே போகிறது. அச்சுத்தொழில், ரப்பர் தொழில் போன்றவற்றிலும் ஈயம் பெருமளவில் பாவிக்கப் படுகிறது. மேற்கூறிய தொழிற் துறைகளின் மூலமாக மட்டுமின்றி சுற்றுச் சூழலில் வாகனப் புகை போன்ற முக்கிய மூலகங் களில் இருந்தும் ஈயக்குழாய்களினால் விநியோகிக்கப் படும் குடிநீரிலுள்ள ஈயமாசு பொன்றவற்றின் மூல மும் மனித உடலை அடைகின்றது. விளைவு மனித னைத் தாக்கும் பல்வேறு நோய்களாகும்.
ஈய நஞ்சுகள் மனித உடலை அடையும் வழிகள்
1. Jar F post
தொழில் துறையினால் ஏற்படும் ஈய நஞ்சாக்கத் தின் பெரும் பகுதி ஈயம் கொண்ட தூரமங்கள், துர சு க் கள் சுவாசப்பாதையூடாக உள்ளெடுத்தல் மூலம் (Inhalation) உடலை அடைகிறது. இதை விட நகரப்பகுதிகளில் வாகன புகை மூலமாவும் ஈயம் காற்றை மாசு படுத்தி சுவாச மூலம் உடலை அடைகிறது. கிராமப் பகுதிகளில் வாகனப் போக்கு வரத்து அதிகம் இல்லாததால் ஈய நஞ்சாக்கம் மிக குறைவாக உள்ளது.
நான்காம் வருட மருத்துவ மாணவன், மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
፵ በ LD(655 if 04 6)

நஞ்சாக்கம்
2. உணவு மூலம்
சுவாசப் பாதையில் உள்ளிழுக்கப்பட்ட FFu.uub உணவுக்கும், சுவாசத்திற்கும் பொது வா ன தொண்டையிலிருந்து விழுங்கப்படுவதன் மூல ம் உணவுக்கால்வாயினுள் சென்று அகத்துறிஞ்சப்பட G) TLD
காற்று, நீர், மண் மற்றும் பூச்சி கொல் வி மருந்துகள் மூலமும் உணவுப்பொருட்களில் ஈய நஞ்சு சேரலாம். நீர் நிலைகளில் இயற்கையாகவே காணப் படும் ஈயம் அல்லது ஈயக்குழாய்களினூடு விநியோகிக் கப்படும் குடிநீர் மூலமும் ஈயம், உட்கொள்ளல் முறையில் உடலில் சேர் கிற து கடையிலிருந்து வாங்கியதும் நேரடியாக உண்ணக்கூடிய நி  ைல யிலுள்ள உணவுப் பொருட்களில் தூசியும், பூச்சி கொல்லி மருந்தும் எந்த வகையிலாவது கலக்கும் போதும் ஈயத்தால் மா ச டைகிறது. உணவுப் பொருட்கள் ஈயம் அடங்கிய எனாமல் பூசிய பெட்டி கள் அல்லது தகரங்களில் சேமித்து வைக்கப்படும் போதும் ஈயத்தால் மாசடைகிறது. தானியங்களை அரைக்கும் இயந்திரங்களில் செலுத்தி மாவாக்கும் போதும் ஈயத்தால் மாசடைகிறது. உணவுக்காக பயன்படுத்தப்படும் மஞ்சள் தூளில் ஈய குரோமைட் வியாபாரிகளினால் சர்வ சாதாரணமாக கலந்து கலப்படம் செய்யப்படுகிறது. இயற்கையான உணவு களை விட தகரங்களில் அடைக்கப்பட்ட உணவு களில் ஈயம் அதிக அளவில் காணப்படுகிறது.
மேற்கூறப்பட்ட உட்கொள்ளல் முறை யி லா ன ஈய நஞ்சாக்கம் காற்று மூலமான ஈய நஞ்சாக்கத் திலும் பார்க்க முக்கியத்துவம் குறைந்தது.
3. தோல் மூலம்
சேதன ஈயச் சேர்வைகள் தோல் மூலம் உட்
r -
செல்கின்றன. இவ்வகை ஈய நஞ்சாக்கம் மிக அரி தாகவே நடைபெறுகிறது. ஈயத்தின் சகல சேர்வை களும் நச்சுத்தன்மையானவை எ னினும் ஈயஆச னேற்று, ஈயஒட்சைட்டு, ஈயகாபனேற்று முதலி யன மிகவும் ஆபத்தானவை. ஈயசல்பைட்டு நச்சுத் தன்மை குறைவானது.
2L6ůá) Fu 6fáů
சாதாரணமாக 150-400 mg ஈயம் ஒவ்வொரு வரின் உடலிலும் சேமிப்பிலுண்டு, குருதியில் 100 மில்லி லீற்றருக்கு 25 மை க்ரோ கிராம் ஈயம் காணப்படும். இது 70 மை க்ரோ கிராம்கனை தாண்டும் போது ஈய நஞ்சாக்கத்தின் குணங்குறிகள் வெளிப்படத் தொடங்குகின்றன. நாளா ந் தம் 02-0.3 மில்லி கிராம் ஈயம் உட்கொள்ளல் буpopub
03 2000 சுகமஞ்சரி

Page 33
உடலை அடைவதாக கணக்கிடப் பட்டுள்ளது. குடி நீரில் ஈயம் லீற்றருக்கு 0.01 மில்லி கிராமுக்கு மேல் இருத்தலாகாது என உலக சுகாதார நிறுவனம் தர நிர்ணயம் செய்துள்ளது.
ĝ5 Laîáà) FFIIII fb 59135j5gjiĉiĝ53 Ĥ H Láô
இரைப்பையிலும் கு ட லி லு ம் அகத்துறிஞ்சப் படும் ஈயத்தின் அளவு பல் வேறு காரணிகளைப் பொறுத்து வேறுபடும். சிறு பிள்ளைகளும் போசாக் கற்றவர்களும் ஈயத்தை அதிக அளவில் அகத்துறிஞ் சுகிறார்கள். புரதக் குறைபாடு, கல்சியம், பொஸ் பரசு, நாகம், மக்னீசியம், விற்றமின் E குறைபாடுள் ளோரிலும் அகத்துறிஞ்சல் வீதம் அதிகம். உட் கொண்ட ஈயத்தில் 90% மலத்தின் மூலம் வெளிய கற்றப்படும். அகத்துறிஞ்சப் பட்ட 10% ஈ ய மு ம் குருதியை அடைந்து அதில் பெரும் பகுதி குருதியின் செங்கலங்களுடாக பல்வேறு அங்கங்களை அடைந்து இறுதியில் எலும்புகளை சென்று சேர்கிறது. இது நீண்ட காலம் அகற்றப்படாமல் எலும்பிலேயே எந்த விளைவுகளையும் தராமல் இருந்து விடும். பின்பு எலும்பு மறு சீராக்கத்தின் போது ஈயம் விடுவிக்கப் பட்டு ஈய நஞ்சுநோய் அறிகுறிகள் தோன்றும்.
ஈய நஞ்சிக்கத்தின் அறிகுறிகள்
அசேதன ஈய நஞ்சு வயிற்று நோ, மலச்சிக்கல், பசியின்ம்ை, பல் முரசு ஊதா நிறமாதல், குருதிச் சோகை, மணிக்கட்டு மற்றும் குதி மூட்டுத் தளர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.
சேதன ஈய நஞ்சாக்கத்தின் அறிகுறிகள் பெரும் பாலும் மையநரம்புத் தொகுதி சார்ந்ததாகும். இவ் அறிகுறிகள் தலையிடி, நித்திரையின்மை, மாறாட் டம் நரம்பு அழற்சி, உணர்ச்சி மரத்தல், பாரிச வாதம் முதலியன.
தொழிற் கூடங்களில் ஈயத்தை அதிகளவில் கையாள் வதுடன் தொடர்புடைய வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு கருச்சிதைவு, காலத்திற்கு முன்னான பிள்ளைப் பேறு முதலியன அதிகம் என கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
* உணவில் கொழுப்புணவைக் குறைத்தல்
குறைந்த அளவிலேயே பாவிக்கப்படல் வே * நாளாந்த உணவில் நார்த்தன்மை உணவுகள் * தினமும் உடல் உழைப்பு கூட்டப்படல் வே
:: உணவில் கருவேப்பிலை வெள்ளைப்பூடு பே
T
das DG5éFiff LD(disafi O4
கொலெஸ்ரோலைக் குை
; எண்ணெய் அவசியம் சேர்க்க நேரிடின் நிரம்ப (எள்ளு) சூரியகாந்தி எண்ணெய், Corn எ

肝亚
நஞ்சாக்கத்தைக் கண்டுபிடித்தல்
மேற்கூறிய குணங்களுடன் சிறுநீரிலுள்ள ஈயம், கோப்ரோபோபைறின் (Coproporphyrin), அமைனோ லெவுலினிக்கமிலம் (Aminolevulinic acid) போன்ற அளவுகள் குறிப்பிட்ட எல்லையை தாண்டியுள்ளதை அவதானிப்பதன் மூலம் ஈய நஞ்சாக்கத்தை கண்டு பிடிக்கலாம்.
ቇቇቇ፴ቐ
உட்கொள்ளல் முறையில் ஈய நஞ்சாக்கம் ஏற் பட்டிருப்பின் இன்னும் அகத்துறிஞ்சப்படாது குடலில் எஞ்சியிருக்கக்கூடிய ஈயத்தை, கழிவகற் றலை தூண்ட மருந்துகள் வழங்கி வெளியேற் றல்.
Penicillamine, Unithiol, Dinnerca prol GJIT Gövsap Fuggll-air 330 Goorigid (Chelating agents) gy at ஈயத்தை சிறுநீரில் வெளியேற்றத் துர ண டு ம் மருந்துகளை வழங்குதல் .
FI E 33Frë 5 600 56ë 30 palopi ai
1 இயலுமான வரை ஈயத்திற்குப் பதில் நஞ்சுத் தன்மை குறைந்த உலோகங்களை பாவித்தல்.
2. ஈயத் தூரமங்களையும் தூசுகளையும் சரியான முறையில் தொழிற் கூடங்களிலிருந்து அகற்று தல்.
3. தொழிலாளர்களை சரியான முறையில் ஈயத்
தூமம், தூசுக்களிலிருந்து பாதுகாத்தல்.
4. தொழிலாளர்களை காலத்துக்குக்காலம் ஈய
நச்சாக்கத்திற்குள்ளாகி இரு கின்றார்களா எனப் பரீட்சித்தல்.
தொழில் செய்வோர் தனிமனித சுகாதார பழக் கங்களை கைக்கொள்ள ஊக்குவித்தல், (உதா ரணம்:- கைகளை நன்கு கழுவிய பின்னரே (தொழிலின் பின்னர்) உணவு உட்கொள்ளல், தொழிற் கூடங்களில் வைத்து உணவு உட்கொள் ளலைத் தவிர்த்து உணவு கூடங்களில் உணவு அருந்துதல்.)
றைக்கும் வழிமுறைகள்
ாத கொழுப்பு அமிலங்கள் அடங்கிய நல்லெண்ணை ண்ணெய் பாவிக்கலாம். (இவைகள் யாவும் மிகக் ண்டும் .
அதிகரிக்கப்படல் வேண்டும்.
ண்டும்,
ான்றவற்றின் பாவனை கூட்டப்படல் வேண்டும்.
udøvri: 03 2000
31

Page 34
இனியனின் பதில்க హో#
قے s
競感命Q 1
முஸ்லீம் மக்கள் பன்றி, ஆமை போ ன் ற இறைச்சி வகைகளை வெறுத்து ஒதுக்குகின்றார்கள். இதில் மருத்துவ ரீதியான நன்மைகள் உண்டா? அல்லது மதம் சார்ந்த மூ- நம்பிக்கைகளா?
க. வி. வித்தியாயூசன் சாவகச்சேரி
us
ஒவ்வொரு சமயங்களிலும் ஞானிகள் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கும், இடங்களுக்கும், மக்களுக்கும் ஏற்ற அறிவுரைகளை அவர்கள் சுகதேசியாக நல முடன் வாழி வழங்கி இருக்கின்றார்கள். முகமது நபி அவர்கள், இறை தூதர் என்பது இஸ்லாமியர் நம்பிக்கை. ஏறத்தாழ 1400 வருடருகளுக்கு முன்பு வாழ்ந்த முகமது நபி அவர்கள், பாலைவனப் பிரதேசங்களில் மக்கள் இறந்த அழுகிய மாமிசங் களை உண்டு நோய்வாய்ப் படுவதைக்கண்டு, மக்கள் நலமுடன் வாழ, இரத்தம் சிந்தச்செய்து, புலால் உண்ணும் வழக்கத்தை போதித்து அருளினார் இதன் மூலம் சாதாரணமாக மரக்கறி வகைகள் குறைந்த அரேபிய பிரதேசத்தில் வாழும் மக்கள் அழுகிய புலால் உண்பதைத் தவிர்த்தார். ஓடுகள் உள்ள கடல் வாழ் பிராணிகள், கடலில் இருந்து எடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் மரணமடைகின்றன. இவை சூடான பாலைவனப் பிரதேசங்களில் இலகு வாக அழுகி விடுகின்றன. எனவே இவ்வுணவை ஒதுக்குவது அப்போது நல்ல பழக்கமாக இருந்திருக் கும். மலசலகூடம் இல்லாத இடங்களில், பன்றியே * சுத்திகரிப்பு தொழிலாளி” யாக - ஆனால் மலத் தையே புசித்துவிடுகின்றது. இதை ஒதுக்குவதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இல்லாது போனாலும் இவற்றை உண்ணுவது மனதுக்கு சங்கடமாக இருக்க
"
@& மஞ்சரி 04 D6)
 

D
ri;
லாம். என்றாலும் இக்கேள்விக்கு சரியான விடையை இஸ்லாம் சமயம் அறிந்த பெரியவர்களிடம் கேட்டு அறிவது நல்லது.
கேள்வி 2
மன நோயாளிக்கு, பெளர்ணமி அமாவாசை போன்ற காலங்களில் மன நோய் கூடுவதேன்?, வேறு வியாதி உள்ளவர்களுக்கும் இக்காலங்களில் நோய்கள் உண்டா?, ஆடு, மாடு போன்ற விலங்கு களின் புணர்ச்சியும் இக்காலங்களில் நடைபெறுவ தாக அறிகிறேன். அப்படியானால் கோள்களின் சுழற்சி மனித உள்ளங்களையும், வாழ்க்கையும் பாதிக் கின்றன போல் உள்ளன அல்லவா?, அப்படியானால் ஜோதிடம் உண்மையாகுமா?
ஜோதிடம், காண்டம், ரேகை சாஸ்திரம் என்பன இன்றைய விஞ்ஞான முறையில் விளக்கம் கொடுப்ப தற்கு அப்பாற்பட்டவை. ஒரு வேளை எமது விஞ் ஞான அறிவு இன்னும் போதாமலும் இருக்கலாம். இவை நம்பிக்கையையும், மனதையும் பொறுத்த விடயங்கள். என்னைத் தனிப்பட்ட முறையில் கோட்டால், சரியானதாகவும், இலகுவில் இன்னொரு வரால் அறிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் இவர்களால் கூறப்பட்ட பொழுது, புதுமையாகவும் ஆச்சரியமாகவும் தர்க்க சாஸ்திரத்திற்கு அப்பாற் பட்டவையாகவும் இருந்திருக்கின்றன. இது எனது தனிப்பட்ட அநுபவம்.
கோள்களின் சுழற்சி, கால மாற்றங்களையும், மழை வெய்யிலையும், கொண்டு வருபவை. எமது மனமும் இவ்வெளிச் சூழலுக்கு பொதுவாக மாற்ற மடைவது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முக்கிய மாக எமது நாடுகளைப் போலல்லாது, நான்கு காலங்களும் மிகவும் வேறுபட்ட நிலையில் உள்ள மேற்கு நாடுகளிலும் அவுஸ்திரேலிய தென் பகுதியி லும் மக்கள் இக்கால வேறுபாடுகளால் மிகவும் மாறு பட்ட தாக்கங்கள் பெறுவார்கள். குளிர் பனிக்காலம் விரும்பத்தகாத ஒன்றாகவும், வெயில் காலம் மிகவும் ஆனந்தத்துடன் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகவும், விளங்குகின்றது. அங்கு அதிகமான மரணங்களும், தற்கொலைகளும் குளிர்காலத்தில் ஏற்படுவது ஆய் வாளர்களினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அமாவாசை, பெளர்ணமி காலங்களில் பெரிதளவான மாற்றங்கள் மனநோயளரிடையே இருப்பதாக சாதாரணமாக பேசப்பட்டாலும் விஞ் ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. சாதாரணமாகவே, பெளர்ணமி மனதிற்கு இதமான
08 8ህ00 சுகமஞ்சளி

Page 35
தாகவும், மகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும், முந்திய நாட்களில் வெளியில் சென்று ஆடிப், பாடி பேசிமகிழக் கூடிய காலமாகவும் இருந்தது. ஆனால் இருட்டான அமாவாசை வீட்டிற்குள் முடங்கிக் கிட ப் ப ைத காட்டும் காலமாக இருந்தது.
மிருகங்களுக்கு புணர்ச்சித் தூண்டல்கள், கால நிலைக்கு மாறுபட்டு வருவது அவதானிக்கக் கூடிய தாக இருக்கின்றது. பிள்ளைப் பேறுகளும் இவ்வாறே வருடம் முழுவதும் நடைபெறுகின்றது. பெளர்ணமி யில் பிள்ளைப் பேறு அதிகம் என்று கூறுவது, சரி யானதல்ல என்பதை பல ஆய்வுகள் சுட்டுகின்றன. அவ்வாறே மிருகங்களிலும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் புணர்ச்சிக்கு தூண்டுதல் அதிகம் என்பதும் சரியானதாக தென்படவில்லை.
M. M.
========
மது பாவனை
பெரும்பாலான மதுபான விற்பனைக்கான வில் பதால் ஆண்மை அதிகரிக்கும் என்ற எண்ணத்தை அமைந்திருக்கும். ஆனால் இது முற்றிலும் தவற
மதுபானங்கள் குறைந்தளவில் எடுப்பதால், மு அகற்றி, பாலியல் உணர்வுகளை வெளிக் கொன
நீண்ட காலமாக மதுபானம் பாவிக்கும் ஒருவி விந்து உற்பத்தியும் குறைவடைகிறது என அண்ை வட கொழும்பு வைத்தியசாலையில் நடத்தப்ட உறவுகளையும் பாதித்து, மலட்டுத்தன்மையையும்
அங்கு ஆய்வுக்குட்பட்ட மது அருந்துபவர்களில் நிலைமைகள் அவதானிக்கப்பட்டது.
வித்துகள் இல்லாமை விந்துகள் அசையும் தன்மை குறைவு விந்துகளில் 10 % மேல் குறைபாடுகள் காணப்பட்
இதைவிட 36.7 % மானவர்களுக்கு ஆண் கு, உடலுறவில் ஈடுபட முடியாது இருந்தது அவதா
இத்தகைய காரணங்களால் மதுவுக்கு அடிமைய மனதில் வைத்துக்கொண்டு தங்கள் மனைவிமா குடும்பத்தில் சச்சரவு ஏற்படுகின்றது.
மது அருத்துபவர்கள், இப் பழக்கத்தை மு ஒரளவு மீளலாம்.
======== s
சுகமஞ்சரி மஞ்சரி 04 D

་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།
சுகாதாரம் சம்பந்தமான உங்கள் சந்தேகங் களிற்கு
6)QI56u5 QITË ë Qaf. së d6)II të së 6Jfuair பதில் தருவார், இப்பகுதியில் பொதுவான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட
கேள்விகளை வரவேற்கின்றோம். உங்கள்
கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:
fff W
*சுகமஞ்சரி’
சமுதாய மருத்துவத்துறை,
மருத்துவபீடம்,
யாழ்ப்பாணம்,
YYLeLLLLLLLSLSLLLLLSLLLeeLSeeMYLeLLeLSLLLLLLLLLLLLYLLLSLSLzL
M
பும் பாலியலும்
ாம்பரங்கள் குறிப்பிட்ட மதுபானங்கள் பாவிப் 5 பார்ப்பவர் மனதில் ஏற்படுத்தக்கூடிய வகையில்
ான ஒரு தகவல்.
}க்கியமாக ஆரம்ப காலத்தில், inhibition ஐ ரலாம். இது தற்காலிகமானது.
பருக்கு நரம்புத் தொகுதி பாதிக்கப்படுவதுடன் மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பட்ட ஆய்வின்படி, மது அருந்துதல் பாவியல்
அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
* விந்து பரிசோதனையின் போது பின்வரும்
- : : ... - ماه،
لے
றி விறைப்படைவது குறைவாக இருப்பதால், னிக்கப்பட்டது.
ான ஆண்களில் பலர் தங்கள் இயலாமையை ரை சந்தேகிக்கத் தொடங்குகிறார்கள். முடிவில்
ழுமையாக விட்டுவிடுவதால் இந்நிலையிலிருந்து
JSqqLLLSSASSLLL SSSYSSSSSLL LLLSSSMLLLLLLLLSLLLSLLLLLSLSSSLqqLLLLSSLAMSqLL
Ryff; 03 2000 33

Page 36
தொழுநோய் - சில துளிகள்
G5 T (p35 Tuli Mycobacterium என்னும் பக்ரீறியாவினால் உண்ட
இக்கிருமிகள் தோலையும் நரம்புக
இந்நோயின் முதல் அறிகுறி ச அரிப்பு உண்டு பண்ணாத அடை தடித்து சிலரில் கட்டிகளும் தோ
தொழுநோய் நரம்புகளைப் பாதி உணர்வற்ற நிலை ஏற்படுகிறது. வலியோ தெரியாது. இதனால்
களில் காயம் ஏற்பட்டு, சீழ்ப் அங்க விகாரங்கள் ஏற்பட்டு விடு
இங்தநோய்க்கிருமி நோயாளியின் மூக்குவழி நீர் மூலமும் தொற்றுத
பரவக் கூடியநோய்களில் தொழு( தலை ஏற்படுததும் 10 நோயாளி 2 பேரிடமிருந்தே இங்நோய் தெ
10 பேரில் 9 பேர் இயற்கையாக சக்தியைக் கொண்டிருப்பதனால் லும் தொழுநோய் உண்டாகாது.
நோயின் அறிகுறிகளைக் கண்ட னால், அங்க விகாரங்களின்றிக் ெ
பார்வைக்குறைபாடு ஏற்படுவதை களில் காயம் ஏற்படாது Ꮳ. வேண்டும்.
தொழுநோயாளிகள் சாதாரண தனிமைப் படுத்தவோ, வைத்தியச
தொழுநோயாளிகளுக்குப் பகிரங்க களில் இலங்கையும் ஒன்றாகும்.
34
மஞ்சளி 04

eprae (மைகோபக்ரீறியம் லெப்றே) -ாகிறது.
ளையும் தாக்குகின்றன.
ருமத்தில் தோன்றும் ஓர் உணர்வற்ற, டயாளமாகும். மேற்பரப்பு நரம்புகள ன்றுகின்றன. −
திப்பதால் உடலில் சில பகுதிகளில் அவ்விடங்களில் சூடோ, குளிரோ, நோயாளிக்குத் தெரியாமல் அவ்விடங் பிடித்துப் புண்ணாகி காலப் போக்கில் கின்றன.
" தோலிலிருந்து தொடுகை மூலமும், லடைகின்றன,
நோய் மிகக் குறைந்தளவு தொற்று களை எடுத்துக்கொண்டால் அவர்களில் ாற்றக்கூடும்
வே இங்நோய்க்குத் தாக்குப் பிடிக்கும் அவர்களுக்குக் கிருமிகள் தொற்றினா
துமே சிகிச்சை பெறத் தொடங்கி தொழுநோயை குணப்படுத்தலாம்.
னத் தடுப்பதிலும் உணர்வற்ற பகுதி பணுவதிலும் கூடிய கவனமெடுத்தல்
வாழ்க்கை நடத்தலாம். அவர்களைத் ாலையில் வைக்கவோ தேவையில்லை.
மாக உரிய சிகிச்சை வழங்கும் நாடு
e.g. soon -
சுகமஞ்ச1

Page 37
eLS00eSe eASLSLLeSLqeL eLLLLS LLLLLLLLeqLS LLLBeSLSLqeeSLSLqLeLLLqLeSYS
'சுகமஞ்சரி யை தொடர்ந்து பெற விரும்பினால் இந்தப் படிவத்தை நிரப்பி 2. 60 il qtli fT55 கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும். ஆசிரியர், "சுகமஞ்சரி? சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம், யாழ்ப்பாணம்.
--ང་ཡང་ཡང- །ག་དག །ག །----
முழுப்பெயர்: திரு / திருமதி /செல்வி o « é a se se o aces
காரியாலய விலாசம்:
*** *Mao se 80 Sasag was » segresse
வீட்டு "விலாசம்: oo estos sas ses sese se es
· sa aras a o a soat ana· · o s o o o
பதவி
* • •sa 8 s• •s •es • g
பிறந்த திகதி s
நாள்
சுகமஞ்சரி, அனுப்பவேண்டிய விலாசம் (பொருத்தம!
காரியாலய விலாசம்:
வீட்டு விலாசம்
LLLLLS zLLL000L000L YYLLL LLLLSLY00LLLLSLLLLLLLL LLL LLLLLLLLSL
திகதி
குறிப்பு: இதற்கு முன்னர் இந்தப் படிவத்தை அனு

a
காரியாலயப் பாவிப்புக்கு
Lq AAAqLLeAY qeYLqLLLYLqLLYqqAA q YSLqLAqYYqAYYqLLLAALLLLLAA ALLYLeLAeY
qqTqqL S L LS SSL L LSLS S LLLL SL SqL S S SLL0 LL LLLLL LL LLL LLLLLLLLL LL LLLLLLLLSL LLLSL LLLLL S SLSSq MLLSLLLLS L0L00L LL0L 00 C S S LLLLL 0 SSSq LLL
LS0SLLLL 0LLL MMkS LLLL SSq LSL LLLL gAM LSLSLSLLSL LLL LSLL L LLLLLS LLLLLLL LLLLLSLL LLSLSLLSLSSLS SLLLLL LLLL S S LSLSLSL LLSS LLLL LSL LLLLLLL0 S LLLL LLLLLL
LLLLLL LSLS LLL LLL LLLL LSeMS LSLLSL qSL LLLSL LLL LSLSLSL LSL LLLLL0S SLLLL LLL LLS •es osse - •—•s. »• e Oo
S SLLLSL LSL LSLLSL LLLLS SLLLLLS LLL LSLSLLLL SSSSLSLS SSS S LSLLSL LSSLLLSSS SLSSSS S SLLLSLSS SSLSLSS SS SS SSLLLLLLLL qq Sq qSLLLLLLLL LLLSSL LSSS LLL0LLLLLLL LLLLLLLLSLLLLS
-- LLLLLL LLLLLLLLSLLLL S SSSS LSLLLLL S 0LLLL LS LLLLLLL LLLL LSL LLLLL LLLLLLLLSL LSL LSLSSSLLSSLSLLSLLLSLSLLLLLL0LLL0LLLLLL0L0SS
LLLL LL LYLLL LLLLLL TLLLLSSSL0L LLL 0LL LSLS LL LS LSSLSSSMSSS LLLLLLLLY LLLLLL LLLLLLLLS LL0 LLL LLLLL S LL 0 LLLLL L LL LLSLLLL LLLLL LSLLLLL LLLL LS SSS SSASAS
S0LL LLLSLkLLL LLLLLL LSL0L 0LLLLLLL LL0 LLLL S SM LSLSSL 0LLL LLLLLL L0LSLL LLSLSL LSL LSL S LLL LSLSL LLLLL LLL LLLLL LLLLLLLLSLLLLLLLS LLLLLL
LLLLLL LLL LLL LSLSLS 0LL S iL Sg LL LLSLS S SLLLL LLLLL SALL L0LL LLLLLLLALA 0 LSLSL LLLLLLLL00LLLS LSLSLLLLL LSL 0LLLLLLL LLLLLLLLSLLSS LLLLL TSSS
மாதம் ஆண்டு
ான கூட்டில் அடையாளம் இடவேண்டும்)
LLL0L0LLLL LS SLSLSLSL LSLSL LSLSLLLLLSLLLLLSLLLSLLL0LLLLLSLSLLLSLSLLLL LLLLLLLL0L
கையொப்பம்
ப்பியவர்கள் திரும்பவும் அனுப்பவேண்டியதில்லை.

Page 38


Page 39


Page 40
நற்சி
Y சிறந்த நாள்
ஆய பலவீனம்
O O. கீழ்மை உணர்வு
ایست اما
O குழப்பத்தை விளைவிப்பது
> சிறந்த மனிதன்
வதனைக்குரிய இன்மை
மிக மலிவானதும் எவரும்
} எளிதாகச் செய்யக்கூடியதும் > மனிதனின் மிகச்சிறந்த பகுதி
அத்தியாவசிய தேவை
வெற்றிக்கு வழி
பாரதி பதிப்பகம், 430, கே. கே. எஸ். வீதி
 

நிதிலை
- இன்றைய நாள்
- பொறாமை
৪Ships*', மேலதிகப் பேச்சு
- சரியென உணர்ந்ததைச் செய்பவன்
- ஆன்மீக உணர்வின்மை
- குற்றம் காணல்
- பண்புடைமை உற்சாகமுடைமை
- கலங்காத அறிவு
卧
யாழ்ப்பாணம், தொலைபேசி எண் : 3081