கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 1996.10

Page 1


Page 2
FOR ALLKINDS OF INDIAN, SRI LANKAN FOOD & SPICES
EAT NORTAKE AWAY
CATERING AWALABLE FOR SPECIAL EVENTS
133 Paramatta Road, Auburn N.S.W. 2144 Tel: (02) 748 1841, 748 0990
HERO MOVE LAND
SPICE LAND For all supplies of Fijian, Indian & Sri Lankan Foods and Spices and Tamil, Hindi & Malayalam Movies 9.00am-8.00pm, 7 Days 281A Beames Ave., Mt. Druit 2770 Tel: (02) 625 4638 (New Owners)
Sponsorsed by University of
Sydney υΝιόN
TAML and HND Movies are Available Wholesalers and Retaiers
* Indian Spices * Island Foods
* Philipine Foods * Groceries
Opening Hours: Mon - Wed 8am - 7pm Thursday 8am - 9pm Friday 8am - 8pm 8am - 6pm 9am - 6pm
LOBAL SHOPBEST -50 Rooty Hill Road North, Rooty Hill 2766 Te: 675 3954
 
 

மனித மனத்தை உழுகின்ற ཡོད།༽
“abeasürapu” உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்திநிற்கும்
“தலப்மை’, சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் காலாண்டுச் சஞ்சிகை
தனிப்பிரதி - Aus, $2.50 ஆண்ருச்சந்தா 6ībIT (6) :- Aus. S10.00 Q66îbîT (6) :- Aus. SS20.00 பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பய் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ள. செல்வன். நேசராஜா பாக்கியநாதன் Tele: (02) 9622 2337 செல்வி சாந்தினி கிருஷ்ண சர்மா Tele: (02)9743 6207 “Kalappai” Sydney University Tamil Society P.O. Box 40, Wentworth Bldg., University of Sydney, NSW 2006
AUSTRALIA Email:
pketheswa.extro.ucc.su.oz.au
ஏர் 2
கருணைக்கொலை கொவாலா காலடி மலர்கள் COMPUTER indi சகுன பலன் மெல்போர்ன் இளைஞர். கலப்பை ஈராண்டு விழா நாங்கள் இடங்கள் பக்கம் .14 ஹெலன்ஸ்பேர்க் இருவயம் .16 உன்னி கிருஷ்ணன் பேட்டி.18 அழகிய ஆபத்துக்கள் . . .21
ஓர் இஊரின் கதை . . . 24 வாசகர் பக்கம் ・・・27 பிரிந்தவர் சேர்ந்தால். . . .29 GlöFIrgi râyü ugüü Buri'lıp ... 33 எங்களிடம் ஒரு வீடு. .34 Where I WOUld... ... 36 இடபதேசம் . . .38 எழுத்தின் கதை . . . 41 இறைவன் தந்த பரிசு . . . 46 கேளுங்கள் தரப்படும் . . . 49
தமிழ் இஊக்குவிப்புப்போட்டி.50 கிழவனும் புறாக்களும் . . .54 அமைச்சரின் விருது ๑ ๑ ๑ 56 நுால் அறிமுகம் . . . 57 மகப்பேறில்லாத் தன்மை ...58 இலங்கைத்தமிழர் கதுை .81 ஓவியம் - மனோ & குணா அட்டைப்படம் - S. குணசிங்கம் (குண) வடிவமைப்பு - செந்துரண் ஜெகதீசன்
கணனி உதவி - அவுஸ்திரேலிய தமிழ்த் தாபனம்

Page 3
ஐப்பசி 1996
.SXXჯა` * غير தேதி:- 22-09-96, ஞாயிற்றுக் கிழமை. இடம்- டார்வின், வடக்கு மாவட்டம், கொலை செய்யப்பட்டவர்- பாப் டெண்ட்
(Bob Dent) கொலையாளி:- டாக்டர் ஃபில்ப் நிட்ஸ்ச்கே
(Dr. Philip Nitschke) பாவித்த ஆயுதம்முறை-சாவுப் பெட்டியிலுள்ள பம்பி மூலம் கொடிய மருந்துகள் குருதியில் செலுத்தப்பட்டன. கொலைக்கான காரணம்:- 5 வருடகாலப்புற்று நோய் அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி. கொலைக்கான சாட்சி:- இறந்தவரின் மனைவி & குடும்ப வைத்தியர்
கொலை செய்ய அனுமதி வழங்கியவர்:-
கொலை செய்யப்பட்டவர் கொலையை ஆமோதித்தவர்களி:- 2 வைத்திய நிபுணர்கள் + 1 மனநோய் வைத்திய நிபுணர் கொலையாளிக்கான தணர்டனை:- சட்டபூர்வமாகக் கொலை செய்ததால், சட்டத்தின் வலையிலிருந்து தப்பினார். கொலையாளியின் எதிர்காலம்:- இதுபோன்று மேலும் இப்பணியைத் தொடர்வது. (Sydney Morning Herald - 28/09/96)
இது ஒர் உண்மைச் சம்பவம். இதற்குப் பெயர் தான் கருணைக் கொலை(Mercy kiling). கேட்பதற்கு விந்தையாக இருக்கிறதா? இனிமேலும் தொடர இருக்கும் சம்பவம் இது. உலகத்திலேயே முதனி முறையாக அங்கீகரிக்கப்பட்ட யூத்தனேசியா' வுக்கான (Euthanasia) s. Lifli(Legislation) espaviä அவுஸ்திரேலியாவின் பார்வின் நகரம் சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டது. Euthanasia என்ற லத்தீன் சொல் யூ=நல்ல (Eu=Good), 5Gorduar-sroy (thanasia-Death) Taig பொருள் படுமீ. வைதீதியர் கனாலி குணமாக்கமுடியாது என்று கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு, அந்த நோய் காரணமாக அவர்கள் அனுபவிக்கும் அவஸ்தையிலிருந்தும் இவ்வுலகிலிருந்தும் விடுதலை அளிப்பதே இதன் பிரதான நோக்கமாகும். எந்த ஒரு குேம் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை உரிமை
உண டு. எவருகி கும் மற்றவர்களினி வாழ்க்கையை முடித்துவவைக்கும் உரிமை கிடையாது. இதனையே சமயங்கள் எமக்குப் போதிக்கின்றன. இப்படியே இவ்வளவு காலமும் வாழ்ந்துவிட்டோம். என்றோ ஒரு நாள் சாவு வரும் என்று எண்ணிய காலம் போய், நாமே எமது சாவுக்கு நாள் குறிக்கும் காலம் 6ligss, l_S). Euthanasia Whither Mankind என்ற தலைப்பில் ஒர் ஆங்கிலக்கட்டுரை கலப்பையின் களம்-1 ஏர்-2 இல் வெளிவந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சரித்திரத்தைப் பிணி னோக்கிப் பார்ப்போமேயானால், கருணைக் கொலை பல நாடுகளில் பல காலமாக நடைமுறையில் இருந்திருக்கின்றது. அதை அந்தந்த அரசாங்கங்களே, மக்களே ஆதரிக்காவிட்டாலும்
தனிப்பட்டவர்களாலி நிறைவேற்றப்பட்ட
கருணைக் கொலைகள் பலவுண்டு. நெதர்லாந்து நாட்டில் கடந்த 20 வருடகாலமாகக்கருணைக் கொலை நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது. இண்றும் இது குற்றச்செயலாக்கணிக்கப்பட்டபோதிலும், கருணைக் கொலையில் ஈடுபடும் எவரும் உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அந்நாட்டுச் சட்டத்தின் கெடுபிடிகளிலிருந்து தப்பிக்கலாம். அமெரிக்காவில் 37 கருணைக் கொலைகளுக்குக் காரணமான ஒரு மருத்துவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
சற்றே எமது கலாசாரப் பின்னணியை உற்று நோக்குவோமேயானால், எமது தமிழ்ச் சமுதாயத்திலேயும் இப்படியான கருணைக் கொலைகள் இடம்பெற்றிருப்பதையும், எமது மூதாதையினர் அவற்றை ஆதரித்திருப்பதையும் காணலாம். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எமது தாய்நாட்டில், சில வயது வந்தவர்கள் சாவை நெருங்கிய நேரத்தில் உயிர்
2
 
 
 

giILાકી 1996
..ssa U.
ஊசலாடுவதாகவும், சேடம் இழுப்பதாகவும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றோம். மணி ஆசை, பொன் ஆசை தீராததால் தான் உயிர் உடலைவிட்டுப் பிரிய மறுக்கிறது என்பது இதற்காக அவர்கள் கொடுக்கும் விளக்கம். இப்படிச்சேடம் இழுப்பவர்களின் மண்ணாசை, பொன்னாசையைத்தீர்த்துவைத்து, அவர்களுக்கு நல்ல சாவு(மேலோகம் செல்ல) கிடைக்கவேண்டும்
என்ற நோக்கில், பொன்னைப் பாலில் கரைத்துப்
பருக வைக்கும் வழக்கம் காலங் காலமாக
எம்மிடையே இருந்து வந்திருக்கின்றது. அப்படியும் அவர் இறக்கவில்லை என்றால், மதகுருவை அழைத்து பொருட்களைத் ‘தானம் கொடுப்பார்கள். இதனி போது பசுக் கண்றொனிறிணி வாலைப்பிடித்துக் கொள்வார்கள். அப்பசுக் கண்று திணறி, அனுபவிக்கும் அவஸ்தை, அம்மனிதரின் இறப்பைத் துரிதப்படுத்தும் என்பதே அதன் நம்பிக்கையாகும். இதனை நோக்குமிடத்து, கருணைக் கொலை என்பது எமக்கு ஒரு புதிய síLuULosů6a).
மருத்துவர்கள் ஏன் இக்கொலைகளைச் செய்யவேணடும்? அவர்களினி கடமை நோயாளிகளைக் காப்பாற்றுவது. அவர்கள் உயிர்களை எடுப்பது அல்ல. நாம் பொதுமக்களாக இந்த விடயத்தைப் பார்க்கும்போது, இவை குற்றமாகத் தோன்றலாம். எமக்கு ஏற்படும் உணர்வுகள் மனிதாபிமானம் உடையவையாகவே இருக்கும். அப்படித்தான் இருக்கவேண்டும்.
ஒருவரைக் குணப்படுத்தமுடியாது என மருத்துவர்கள் கைவிட்டாலும், இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்போம், என்று இருக்கும் மீதிக்காலத்தையும் பயனுள்ள விதத்தில் கழிக்கலாம்? அல்லது அக்காலத்தை நன்றாக அனுபவித்த பின் இறக்கவேணிடும் என எணணுவது எமது இயல்பே. ஆனால் குணப்படுத்த முடியாது எனக் கைவிடப்பட்ட ஒரு நோயாளி, இருக்கும் மீதிவாழ்க்கை முழுவதும் அந்நோய் காரணமாக அனுபவிக்கும் கொடுரமான சித்திரவதையில், நாம் என்ன பங்கை எடுக்கிறோம். எம்மால் சொல்லக்கூடியது என்னவென்றால், “இருக்கும்வரை இருந்து அனுபவித்துவிட்டுச் சா” என பதா? மற்றொருவருக்காக நாம் இப்படியான ஒரு முடிவை எடுப்பது சரியா? இப்படி எண்ணிலடங்காத சித்திரவதைகளைக் கண்ணால் கணிடவர்கள் தான் இந்த மருத்துவர்கள். அவர்கள் இவ்வாறு அவஸ்தைப்படும் நோயாளிகளுக்காகக் குரல்கொடுக்காவிட்டால் யார் குரல் கொடுக்க முன்வருவர்?
டார்வினில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் எத்தனை கருணைக் கொலைகளுக்குக் களம் அமைக்கப்போகின்றதென்பதோ அல்லது எத்தனை பேருக்குக் கொடுர வாழ்விலிருந்து விடுதலை அளிக்கப் போகிறது என்பதோ, நவம்பர் மாதம் 15ம் தேதி அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பிலேயே தங்கியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
يسقنعLلؤلاء குறளின்பம் அவிசொரிந்து ஆயிரம் வேட்டலினர் ஒனர்றனர் உயிர்செகுத் துர்ைனாமை நர்ைறு. அதி. 2 குறள்
நெருப்பை வளர்ந்து நெய்யைச் சொரிந்து, ஆயிரம் வேள்வி செய்வதைக்காட்டிலும் ஓர் உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்னாமை உயர்ந்தது.
அருத்த இதழுக்கு. கலப்பையின் அடுத்த இதழுக்கு ஆக்கங்களை அனுப்பி வைக்க விரும்புவோர் அவற்றை 14/12/96 க்கு முண் எமக்கு கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் ஆக்கத்தில் தரமும், கலப்பையில் போதிய இடமும் இருக்கும்போது, நிச்சயம் உங்கள் ஆக்கங்கள் பிரகரிக்கப்படும்.
-
கலப்பை இதழில் உங்கள் விளம்பரங்களை பிரசுரிக்க விரும்பின்,பகிரதன் மகாதேவன் உடன் CO2) 9746 74.04 6lip தொலைபேசி இலக்கத்திலோ அல்லது கலப்பை முகவரியுடனோ முழு விபரத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Page 4
கலப்பை
ஐப்பசி 1996
பலராமனினர்ஆயுதம் கலப்பை பாண்ட்லர் பிழைவிட்டபோதும்
நிதிக்கைதிராகக் கலப்பை உயர்ந்திருக்கிறதுநல்ல நோக்கத்திற்காகக் கலப்பை உயர்ந்திருக்கிந்துணையை அங்கு
கர்ைமையிர் மதி *ங்கைாலயர்ந்து விடுகிறது.
வெள்ளைப் பிரம்புகள்
நிகழ்விலிருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

giILાઈી 1996
abØLsửapu
கலைமணி த
(மெல்போர்)
தொலைபேசியை வைத்துவிட்டு ஆயாசத்துடன் சுவரில் சாய்ந்து பெருமூச்சு விட்டாள் தாமரை. அவள் மகள் மங்கையைப் பெண்பார்க்க மாலை ஐந்தரை மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்களாம். தயாராய் இருக்கச் சொல்லி அவள் தோழி திருமகள் திடீரென்று அவசரப் பிரகடனம் செய்துவிட்டாள்.
இந்தச் செய்தியை மங்கையிடம் எப்படித் தெரிவிப்பது? சமையல் வேலை அப்படி ஒன்றும் பிரமாதமான காரியமல்ல. ஒரே மூச்சில் முடிந்துவிடும். ஆனாலி மகளைத் தயார்ப்படுத்துவதுதாணி எப்படி எண்று புரியவில்லை.
ஒருமுறையா, இருமுறையா? கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து பெண்ணைப் பார்க்க வருவதும் போய்த் தெரிவிக்கிறோம் என்று சொல்லிப் போவதும், அதன் பின்னால் அது பற்றிய தகவல்கள் கிணற்றில் போடப்பட்ட கல் போலச் சலனமில்லாமல் போய் விடுவதும் வாடிக்கையாக நடக்கும் நிகழ்ச்சியாகிவிட்டது.
தன் மகளின் திருமணம் இப்படித் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பது தாமரைக்குத் தாங்கமுடியாத மன வேதனையாயிருந்தது. இதற்கெல்லாம் காரணம் மங்கைக்குக் காலொன்று ஊனம் என்பதுதான் அந்த ஒரு குறையைத் தவிர மற்றபடி மங்கையிடம் ஒரு மாக கான முடியாது. சிறுவயதிலேயே செயலற்றுப்போன அந்த ஒரு காலினி குறை இப்போது பெரிதாக்கப்பட்டு அவள் கண்ணிவாழ்க்கை வீணாக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
மகளின் வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதற்காக அவள் தாய் எடுத்த முயற்சிகள், பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட முயற்சிகளால் அவள் அடுக் கடுக் காய் தீ தோலி விகளைச் சந்தித்தபோதெல்லாம் அவ்வப்போது அவள் தோழி திருமகள் மட்டும் ஆறுதல், கூறி கை கொடுக்கவில்லையென்றால் தாமரை என்றோ
ஒடிந்து போயிருப்பாள்.
தாமரைக்கே இப்படியென்றால் மங்கையின் மனநிலை எப்படியிருக்கும்? பெண் பார்க்க வந்தோர்க்குத் தன்னைக் காட்சிப் பொருளாக்கி, முன்பின் தெரியாத ஆடவனைக் கண்டு கற்பனையிலி மிதந்து, பிணி தட்டிக் கழிக்கப்பட்டபின் மனக்கோட்டைகள் இடிந்து சரிந்து, இதயம் சுக்கு நூறாய் நொறுங்கி உணர்ச்சிகளை ஊமையாக்கிவிட்டுத் தனக்குள் தானே சமாதியாகிப் போய் விடுவதையே வழக்கமாக்கிக் கொணிட மங்கையை
எண்ணும்போதே தாய் மனதில் இரத்தம் கசிந்தது.
என்ன செய்வது? பொறுப்பில்லாத தந்தை பெண்ணின் திருமணத்தைப் பற்றி எந்த வித அக்கறையுமில்லாமல் இருக்கும் போது பெண்ணைப் பெற்றவள்தானே அவளைக் கரையேற்றும் வரை மடியில் நெருப்பையும் மனதில் பாரத்தையும் சுமந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது
மங்கை அண்றைக்கென்று அலுவலகம் செல்லாமல் விடுப்புப் போட்டுவிட்டு வீட்டிலிருந்தாள். காலையிலிருந்தே வெளியில் எங்கும் செல்லாமல் எதோ புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு அறையினுள்ளே முடங்கிக் கிடந்தாள். அவள் மனநிலை சரியில்லையோ என்னவோ? மேலும் அடுக்கடுக்காய் வந்த ஏமாற்றத்தின் தழும்புகள் அவளது கலகலப்பான குணத்தையே மாறிறிதி தனிமை விரும்பியாக்கியிருந்தது. இப்போதெல்லாம் அவளுக்குத் துணை புத்தகங்கள்தாம்!
தயக்கத்துடன் மகள் அறைக்குள் நுழைந்து கட்டிலில் அமர்ந்து அவள் தலையைக் கோதினாள் தாமரை. என்ன என்பதைப் போல புத்தகத்திலிருந்து பார்வையை அகற்றித் தாயைப் பார்த்தாள் மங்கை. எங்கெங்கோ சுற்றி வளைத்துப் பேசிவிட்டு இறுதியில் மெதுவாகத் தொலைபேசி விபரத்தைக் கூறினாள் தாமரை.
5

Page 5
s22 حصی-’’ 宝ーゴ受才 ܓàܛ3ܓ
S.
ந்
giાLાઈી 1996
மங்கை முகத்தில் சலனம் ஏதும் காட்டாதது பிரளயத்தை எதிர்பார்த்து வந்த தாமரைக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இன்ப அதிர்ச்சியைத் தந்து கனவில் மிதக்க வைக்கக் கூடிய அந்தச் செய்தியை இவள் இப்படி உணர்ச்சி ஏதுமின்றிச் சாதாரணமாய் எடுத்துக் கொள்ளக் கூடிய காரணம் எண்ன? பெண்மையினி மென்மையான உணர்ச்சிகள் சமுதாயம் தந்த சாட்டை அடிகளினால் மரத்துப் போய்விட்டனவா? இடைவிடாது குத்திக் கிழிக்கப்பட்டு ரணகளமாய் ஆகிவிட்ட இதயம் நுணுக்கமான உணர்வுகளை உணர முடியாமல் போய்விட்டதன் காரணம் விரக்தியா? வேதனையா? வைராக்கியமா?
அந்தச் குழி நிலையிலி இதைப்பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிராமல் தயாராய் இருக்கச் சொல்லிவிட்டு அவசர அவசரமாய் அறையை விட்டு அகன்றாள் தாமரை. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் மங்கையின் மனம் மாறிவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு
அடுத்த அரைமணியில் அங்கே சமையலறையில் தயாராகும் பலகாரங்களின் மணம் பரவ ஆரம்பித்தது. பள்ளியிலிருந்து மாறனும், செலிவனும் வீடு திரும்பிவிட்டார்கள். பாடப்புத்தகங்களை வைத்து வீட்டுப்பாடங்கள் செய்ய ஆரம்பித்தனர். நண்பர்களுடன் அரட்டை
முடித்துவிட்டு வீடு திரும்பிய தாமரையின் கணவரும் யார் வீட்டு விருந்தோ என தனினறையிலி முடங்கிவிட்டார். குடும்பவிவகாரங்களில் தலைகொடுத்து அலட்டிக்கொள்ளாத அவர் ஒரு தனிரகம்! எதிலும் ஒட்டாத தனி ரகம் ஆக குடும்பத்தைத் தாங்கி நடத்திச் செல்லும் முழுப்பொறுப்பும் தாமரையின் தலையிலேயே விழுந்தது.
எல்லாத் துன்பங்களையும் தன்மேல் தாங்கிக் கொண்ட அவளுக்குச் சோதனை வரும்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் மேலாக இருப்பவன்மேல் பாரத்தைப் போட்டு விடுவது வழக்கம். அந்த வழக்கப்படி அன்று சமையலறை பூஜையறையாகிக் கொண்டிருந்தது. வேலைகளுக்கிடையே அவள் மனம் இந்த இடமாவது நல்லபடியாக அமைய வேண்டுமென வேண்டிக்கொண்டிருந்தது.
மணி ஐந்து பத்து. சமையலறை வேலைகள் முடிந்தன. அறையை விட்டு வெளியே வந்தவள் மாறனைப் பார்த்து வரவேற்பறைச் சாமான்களை ஒழுங்குபடுத்தி வைக்கச் சொன்னாள். செல்வனை உடைமாற்றி வரப் பணித்தாள். கணவரின் அறைக்குச் சென்றவள் அவர் உறங்கிக் கொண்டிருப்பதைப்
பும்ே பக்கம் பார்க்க.
6
 

uoụesuƏduuOC) SuƏ>ļuOWA & osuuse|D ƏļeļSH ? SƏļeqOud S||I/M «» MeT sƏɔŋɔeud Əpeu] & SƏɔuƏļJO ƆŋjeŋL & əɔỊApv SSƏuĮSng [[euuS & SƏseųDuna ? səțeS ƏļeņSH seƏ}} & ÁƏuuO)}\/ JO JƏ/wOA & SuuỊe|O ə8eueG ? səụnsu||euOSuƏa & SuuỊe|O ÁļļļļqeỊT ɔŋqnd & suuə|qola uoņeư8ļuuuu! * əɔỊAp\/ [eĥo:] [e]auƏO & MeT Áļļuue-, «» Awen quƏuuuouļAuĘ* ÁɔuƏAĴOsu! / ShqƏC] & MeT uos]edOdJOQ & SuƏŋew IeuỊuuļuƆ & sƏseəT țepuəuuuuoɔ & Áɔļdnuxļueg & əɔueu]+/oupsu.eg & Sļuəuuəəu8v SSƏuĮSng & MeT ƏAļņeussỊuļuup\/ *
aesnŵ að
yxsvites do sanoo awaddnsaha ao나터-------------• s), saepiss Nos:40引劑******心 LLL0Y0YYY0L LLLS0YLSYLLLLLLLYLLLLLL LLLLYLLLLLLLLLLYS 000Z MSN AHNCIAS ‘LIHAILS LLId 04897 LZ WASN XIOONI8)\\|?|BIHO ‘LL THART - SHH8WVHO IHL‘HAING ÅLNQOO £96
| 0188 Z9Z (Z0)0ZLI Ŵ89 (Z0) TTVO SINHW LNHOddV:TTWO SINHW.LNIOddV
’əɔỊAuƏs uoņeußļu ələ|duoɔ ɲəụO pue suoŋɔnu suņdəɔɔe ƏM ‘OÇOÇG ‘ON quə8V uOļeußļuuUu]
NOI_L\/?.+5DIWIWI
ruoņe8ņ|| Jo seəue IIe uos soupəəɔOud
unoɔ ə8ueue pue əJedəud əw əļeņ08əu əw ɔsỊApe əM NOILLVEÐI LITT I
į>ļJOM Jəded ueų əuou qɔnu sỊ 8uļoueéAuOɔ ‘JOųɔỊIOS e qnoqų/w ƏAOUu e ə>{eu sou op ÁļuədOud e ou!||ƏS JO 8uļÁnq Oļ sƏuuOɔ ļļ uƏų/W
SÐNIONVAIHANOO
èHOLIOITOS ( ) HVÍTV^— IVèHITH

Page 6
கலப்பை ஐய்பசி 1996
கம்பியூட்டர் கல்வி பயிதும் மாணவர் ஒருவர் தகர் காதலிக்குக் கடிதம் எழுதினால் ature 65 assubஇப்படி இருக்குமோ.
Track No. 03
Cylinder 01 Computer House NSW 2000 A U S T R A LA
12.10.96
சின்புக் காதலிக்கு,
ஆயிரம் முத்தங்கள். E-Mail இல் விரைந்து வரும் இம்மடல் கண்டு “Freeze” ஆகி விடாதே. பின்னர், உன்னை Re-B00t பண்ண எண்ணால் முடியாது.
நான் இங்கு நலம். நீ எப்படி? உன் Mail வந்துள்ளதென்று எண்ணி எண்ணி “Mail Manager'gé Click Lisodigy is Gurs, succio Gissions Gough "Error Messages”. Tscú. STG (Phone) Line só 56@gogoayuh g6óGodav. Check yours! 2 sứ E-Mail ஐக் காணாது, என் Computer இற்கும் இப்போது என்னைப் போலவே அடிக்கடி Virus பிடிக்கிறது!
உன்னைக் காணாது என் நெஞ்சம் Ribbon இல்லாத Printer போல செயல் இழந்து நிற்கிறது. Password ஐ பாதியிலே மறந்துபோன பாவிபோல பரிதவிக்கிறேன் நான். Screen Saver இல் உள்ள உன் விம்பம் மாத்திரம் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை வந்து - தரிசனம் தந்து - ஆறுதல் கொடுக்கிறது. என்னுள் இருக்கும் உன் Personal file ஐ அடிக்கடி *Open' L60zi60of LITüùGiusi. STai 35ui 6Taigh Heart() disk' 3ò fsopÈ5 gical LIG566)in is sis. 96, 90 Un-Removeable file siro. 6Tai 95uios Print Preview só Lurriúš51T6ů spálsó 2 si Picture 576i “MyLover.bmp” si Gg5ốuyuh. நேற்று முன்தினம் ஒருமுறை “Scanner’ இல் என் இதயத்தை Scan பண்ணிப் பார்த்தேன். அப்போது, Output இல் வந்ததென்னவோ Colour Colour ஆக உன் பெயர் தான். ganó 576an Taigo Gour “Not enough HEART (Disk) Space. Remove the OLD files to insert a NEW one” 6Taip Message, Bold goó siq slq snbf.gog.
8
 
 
 
 
 

giILાહી 1996 கலப்பை
என்னால் அப்படி கலபமாக Remove செய்ய முடியவில்லை. இவையெல்லாம் உனக்கெங்கே புரியப் போகிறது?
வஞ்சிக்கொடி உந்தன் இதயத்தில் நான் Insert ஆக, உன் Password ஐ என்க்கு மாத்திரம் நீ சொல்லக்கூடாதா? உன் Memory இல் இருந்த/இருக்கும் எண்/எம் நினைவுகளை ஒரு முறை Recal பண்ணிப்பார். ‘அன்புக் காதலா! உன் கைகளிடை உறவாடும் ‘Microsoft Mouse ஆக நான் இருப்பேன்" என்று Sydney PCShow இல் வைத்துச் சொன்னவள் நீதானே. ஒவ்வொரு முறையும் நான் 'Mouse ஐக் Click செய்யும் போதும், கேட்பதெல்லாம் என்னவோ உன் பெயரைத்தான்’ என்று அடிக்கடி சொல்வாயே. அதுமாத்திரமா? நாம் இருவரும் 96.png, 6Taiopsigis Computer p Li Software GLTuoyi, Printer gllis Paper போலவும், CD-ROM உம் CD போலவும் என்றென்றும் ஒன்றாக இருப்போம் என்று நீ சொன்னவையெல்லாம் உன் உதட்டிலிருந்து வந்த வெறும் வார்த்தைகள் தானா? உன் Memory 365 (3)(big, 3606 Qusaith- "Save UGOdigoTrig. 6. 'L Program, Power-off gas மறைந்து போவது போல் தொலைந்து விட்டதா? ஆனால் எண்னில் இருக்கும் உன் நினைவுகள் மாத்திரம் CDS இல் வரும் Programs போல் அழியாது உள்ளது. நாங்கள் ஒன்றுசேர்ந்து Network Computer Setup 36 guré sn'ssor LR) Lölungi, f. Longifolk Standalone PC ஆக இருப்பது தான் முறையா?
உன் வீட்டு Windows ஐ அடிக்கடி Z00m பண்ணிப் பார்த்துப்பார்த்து கண்களும் 6Lonigi Gil Law. GTi Internet Access', Expire gougipes (psi 2-6, E-Mail எதிர்பார்க்கும்,
உன்
அன்புக் காதலன்.
( யாவும் கற்பனையே! )

Page 7
arbarů apu
ஐப்பசி 1996
இத்துார் ஜமீன்தார் சோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ளவர். சகுனம் பார்க்காமல் * எக்காரியத்தையும் ஆரம்பிக்கமாட்டார். ஒரு சமயம் அவருடைய சபைக்கு ஒரு பிரபல சோதிடர் வந்திருந்தார். உரையாடிக் கொண்டிருந்த பொழுது சகுனம் பார்ப்பதைப் பற்றியும் பேச்செழுந்தது. சோதிடர் ஜமீன்தாரைப் பார்த்து, "ஐயா தாங்கள் இரட்டைக்காகம் பார்த்ததுண்டா" எனக் கேட்டார். ஜமீன்தார் "இல்லை" எனவே, விடியற் காலையில் எழுந்தவுடன் சோடியாக அமர்ந்திருக்கும் இருகாகங்களில் விழிப்பது மிகவும் விசேடமான சகுனமாகும். அதன் பலனாகப் அதிர்ஷ்டங்கள் சம்பவிக்க இடமுண்டு எனச் சொல்லிவிட்டுக் கிடைத்த சண்மானங்களுடன் விடை பெற்றுச் சென்றார்.
ஜமீன்தாரும் தமது மெய்காப்பாளனைக் கூப்பிட்டு "நீ எப்பொழுதாவது விடியற்காலையில் இரட்டைக்காகங்களைக் காண நேரிடின் உடனே வந்து என்னை எழுப்பிக் கூட்டிச்சென்று அவைகளில் நான் விழிக்கும்படி செய்ய வேண்டும்" எனக் கட்டளையிட்டார். அவனும் "அப்படியே செய்கிறேன்" எனப் பணிவுடன் ஏற்றுக்கொண்டான். சில நாட்களின் பின் ஒருநாள் விடியற்காலையில் ஒரு மதிலின் மேல் சோடியாக இரண்டு காகங்களிருப்பதைக் கண்ட மெய்காப்பாளன் ஓடிப் போய் ஜமீன்ந்தாரை மெதுவாகத் தொட்டு "எஜமான் எழுந்திருங்கள், இரட்டைக்காகங்களிருக்கின்றன, பார்க்கலாம்" என்றான். ஜமீன்தாரும் இரு கண்களையும் விரல்களால் மூடியபடியே எழுந்திருக்க அவரை அணைத்தபடி கூட்டிச்சென்று "அதோ பாருங்கள்" என்றான். அவரும் ஆர்வத்துடன் மூடியிருந்த விரலிகளை நீக்கி இரு கண்களையும் விழித்துப் பார்த்தார். அந்தோ அங்கு ஒரு காகம்தானிருந்தது. இடை
கடந்த கலப்பை இதழில் வெளிவந்த ஆசிரியர் கருத்தை நினைவில் கொண்டு
Gufur*-
இவ்வாக்கத்தை எழுதியுள்ளார். நேரத்தில் ஒரு காகம் பறந்து போய்விட்டது. ஜமீன்தாருக்குப் பெரிய ஏமாற்றமாயிற்று. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "மூடனே! நல்ல ஆனந்தமான தூக்கத்தைக் கலைத்து என்னை எழுப்பிக்கூட்டிவந்து இப்படி ஏமாற்றிவிட்டாயே, இன்று உனக் எனின தணி டனை தரச்செய்கிறேன் பார்" எனக் கூறிவிட்டுப் போய் மறுபடியும் படுத்துத் துங்கிவிட்டார்.
அன்று சபையில் மெய்காப்பாளனுக்குப் பத்துக் கசையடிகள் கொடுக்குமாறு ஜமீன்தார் உத்திரவிட்டபடி தண்டனை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. மெய்காப்பாளனும் அடிகளைப் பொறுமையாய் முதுகிலி வாங்கியபடி சிரித்துக்கொண்டிருந்தான். இதைக் கண்ணுற்ற ஜமீன்தார், அடிப்பதை நிறுத்தும்படி சொல்லிவிட்டு மெய்காப்பாளனை விழித்து "ஏன் சிரிக்கிறாய். அடிகள் உனக்கு வலிக்கவில்லையா"எனக் கேட்டார். "வலிக்காமலென்ன. உண்மையாகவே இன்று விடியற்காலையில் முதன் முதலாக இரட்டைக்காகங்களில் விழித்த எனக்கு இந்தக் கதியானால் அவைகளில் எஜமான் விழித்திருந்தால் அவருக்கு என்ன விதமான கேடுகள் நேர்ந்திருக்குமோ” என்று நினைத்தேன். அப்படியொன்றும் தேராமல் எஜமான் தப்பிச் சுகமாயிருப்பதை எணர்ணிச் சந்தோசமாகச் சிரிக்கத்தான் தோன்றியது என்றான் மெய்காப்பாளன். ஜமீன்தார் சிறிது அதிர்ச்சியுற்றுத் தண்டனையை அத்துடன் ரத்து செய்து மெய்காபாளனுக்குச் சன்மானமும் வழங்கும்படி உத்தரவிட்டார். அன்றிலிருந்து அவருடைய சகுனம் பார்க்கும் நம்பிக்கையில் தொய்வு கண்டது என்னவோ உண்மை.
c.c. (gLDITU JFTLs
 
 

ஐப்பசி 1996 ab-VÜaNf
Melbourne Elaigner Sangam
MES President
1 1

Page 8
கலப்பை
ஐப்பசி 1996
அவுஸ்திரேலியாவில் தமிழ் வாழ வேண்டும். வாழ்வது மட்டும் அல்லாது வளரவும் வேண்டும். இது கலப்பை ஆசிரியர் குழுவினரின் முக்கிய நோக்கு.இன்று. தமிழில் ஒரு இதழை வெளியிட வேண்டும் என்ற குறிக்கோளோடு ஈராண்டுகளுக்கு முன்னர் ஒரு மாலைப்இஜிஜ்
எங்களது மனங்களில் ஒரு மூலையில் மட்டு கற்ற தமிழ்க் கல்வி எங்களுள் எழுந்த
அணைகடந்து சிதறி சீர் ஒரு தளம் தேவைப்பட் எங்களுக்கு அதனை ஆர் தெரியவில்லை. அதன ஏற்படுத்த முற்பட்டோ
எங்களது கலப்பையான தமிழர்தம் கலப்பையா கட்டிக்காக்கும் கா wrvwrrrrr. & அரசகுமாரி ஈனி றெடுக்கும் குழந்தை அவளுடையது. அக்குழந்தை வளர்ந்து அந்த நாட்டிற்கு அரசனாகும்போது, அவன் அந்நாட்டு மக்களுக்குச் சொந்தமாகின்றான். ஆனால் தாய் மகன் என்ற பந்தம் மாறுவதில்லை. தாயின் அன்பு அவனை மேலும் சான்றோன் ஆக்க அவனும் செங்கோண் ஆகின்றான். மக்களின் குறை நிறைகளை அறிந்து தாயின் அன்புடன் சேயான கலப்பையைச் செம்மைப்படுத்த கலப்பை ஈராண்டு இதழ் வெளியீட்டு விழாவினை ஜூலை மாதம் 21ம் தேதி ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் நடத்தினோம்.
மாலை மணி 530க்கு சித்தாந்த வித்தகரான திரு. மு. இளையதம்பி அவர்களின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆஸ்பீல்ட் பாலர் மலர் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்தைத் தொடர்ந்து வரவேற்புரை வழங்கினார் சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத் தலைவர் செல்வி கௌசல்யா சுந்தரலிங்கம். ஆசிரியர் என்பவர் மாணவரின் அன்றாட வளர்ச்சியைக் காண்கிறார்.
வகுப்பைச் சேர்ந்த நாளிலிருந்து அவன் சிந்தனைகளை ஆராய்ந்து, அவனுக்குப்
சமன் செய்து தெளிவுபடுத்துகிறார். தான் அறிந்திராத ஒன்றை மற்றொருவன் நிச்சயம் அறிந்திருப்பான், நாம் கற்றது கைமண்ணளவு தானே. ஆயினுமீ நாம் சநீதிக் குமி ஒவ்வொருவரும் நமக்கு ஆசான் ஆவதில்லை. அறியாததை அறியப்படுத்துவது மட்டுமல்லாது மனதைத் தெளிவுபடுத்திச் சீர் செய்யும் பொறுப்பையும் தாங்கி வருவதாலேயே ஒருவர் ஆசிரியர் ஆகின்றார்.
அவ்விதத்தில் கலப்பைக்கு ஒரு தமிழ் ஆசிரியராக "நாகநந்தி தி வேணுகோபாலன் அவர்கள் மதிப்புரை வழங்கினார். மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியின் முன்னாள் தமிழ் ஆசிரியரான திரு. வேணுகோபாலன் அவர்கள் இதுவரை வெளிவந்துள்ள ஒன்பது கலப்பை இதழ்களிலுள்ள ஒவ்வொரு கதை, கட்டுரை கவிதை, பேட்டி, ஆசிரியர் தலையங்கம் என அனைத்து ஆக்கங்களையும் மிகவும் நுட்பமாகக் கணித்துத் தம் கருத்தைத் உள்ளதை உள்ளபடி
குழு எதிர்நோக்கும் சில இன்னல்களை வெளிபடுத்திப் படிப்படியாகக் குறைகளை நீக்கி
12
 
 
 
 
 
 
 

giju8ી 1996
abasitapu
நிறைகளைக் கூட்டிக் கலப்பையை மேம்படுத்துவதில் ஆசிரியர் குழு கொண்டிருக்கும் கடப்பாட்டைத் தெரிவித்தார். நிகழ்ச்சியின் சிறப்புரையை வழங்கியவர் இலங்கையில் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் திரு யூ எல். அலியர் அவர்கள். சிட்னியில் சிறிது காலம் மட்டுமே தங்கியிருக்கும் அவர் இங்கும் தமிழி ஆர்வலர்களின் பணி தழைத்தோங்கி இருப்பதைக் கண்டு இழத்தினார். கலப்பை மென்மேலும் வளர்ந்து هنه வேண்டும் என தமது ஆசியையும்:
வயிற்றுப்பசியைப் போக்க இடைவேஜ் பின்னர் சிட்னி பல்கலைக்கழகத் உறுப்பினரான செல்வன் கனகராஜா புல்லாங்குழல் இசையும் அவருடஜ்ஜழஜின் மிருதங்கமீ ஆகியவற்றினை இசைக்கலைஞர்களின் இசையும் மெய் மறக்கச் செய்தன. இசைக்குப் யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரான திருமதி ப உமாசங்கரின் மாணவிகள் நயம் பார்ப்போரைக் கணி சிமிட்டாத செய்துவிட்டனர்.
"வெள்ளைப் பிரம்புகள்" என்ற படைப்பின் மூலம் ஏட்டெழுத்தில் மட்டுமின்றி மேடைப்படைப்பிலும்
வல்லவரென நிரூபித்தனர் சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க உறுப்பினர். நீதி அரங்கில் கலப்பையையே சாட்சியாகக் கொண்டு கம்பரின் இராமாயணத்தையும் வியாசரின் மகாபாரதத்தையும், இவற்றில் இடம்பெறும் பாத்திரங்களைப் பற்றியும் இரு சாரார் வாதிடுவதே காட்சி. சாமர்த்தியமான வாதங்கள் கேட்பவரின் சிந்தனையைத் தூண்டுவதோடு மட்டும் அல்லாது நகைச்சுவை வெள்ளத்திலும் மூழ்கச்செய்தன. செல்வன் நேசராஜா பாக்கியநாதன். செல்வன். உமைமைந்தன் திரா, செல்வன். சாய் வசந்தராஜ ஜிபாலகன், செல்வன், மைலைநாதன் ாதணி, செல் வணி, ஞானகுமாரணி ணரட்ணமி, செலி வி. கோமதி த்தி, செல்வி. கௌசல்யா கந்தரலிங்கம், பபிதா சற்குணராஜா ஆகியோர் இதில் ர். படைப்பின் பிரதியைத் தயாரித்த சஞ்சிகை செயற் குழு உறுப்பினரான ன. நேசராஜா பாகீகரியநாதனி ரையையும் கவி போல பாடி இவரையும் கவிதை மழையில் மூழ்கச்
செல் வ
இழி
நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிய கலப்பை உபகுழு உறுப்பினர்களான திரு கோ. செல்வநாதனும் செல்வி சங்கரி சண்முகராஜாவும் வணக்கம் கூற நிகழ்ச்சி ஒரு நிறைவைக் கனடது.

Page 9
கலப்பை
ஐப்பசி 1996
லகத்தில் தாய் தந்தை இல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா? உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் தெரிந்து கொள்ளுங்கள் - மற்றவற்றை எல்லாம் படித்த பின்னர்,
எண்ணங்க பயந்துட்டீங்களா? இப்படி ஒரு புதிர விட்டுட்டோம்னு? ரொம்ப நாள எங்களக் காணோம்னு பாத்துட்டு இருந்தீங்களா? (குறிப்பு (புதிய கலப்பை வாசகர்களுக்கு) - கலப்பை இதழ் களம் 2 ஏர் 2ல் நாங்கள் வாசகர்களுக்கு அறிமுகமானோம். அதன் பின்னர் களம் 3 ஏர் 2ல், அதாவது இந்த இதழில் மீண்டும் வாசகர்களைச் சந்திக்க ஓடோடி வந்துள்ளோம். இடைவேளை சற்றே நீண்டமைக்கு வருந்துகிறோம்.)
அது இல்லீங்க, ஒரு வருஷமா ஒரே யோசனை - பெற்றால் தான் பிள்ளையா? பொழுது போகலைன்னு இப்படி எல்லாம் வீண் யோசனை பணிணிட்டு இருக்கோம்னு நெனச்சிடாதீங்க. உங்களை பிரிஞ்சிருந்த ஒரு வருஷத்தில 3 கலப்பை இதழிகள வெளிட்டுட்டோம், ரெண்டாவது வருஷ நிறைவு விழாவையும் கொண்டாடிட்டோம். என்னங்க செய்யறது ஆண்டவன் மூளைய கொடுத்துட்டான். அதுவும் ஏதாவது ஒன்னை யோசிச்கண்டே இருக்குது. பெத்தவங்களுக்குச் சொலி லலாமீனா, வீட்ட 6մlւ: 6 தொரத்திடுவாங்களோண்னு பயம். அதான் உங்களுக்கிட்டயாவது சொல்லாலாம்னு நெனச்சோம்.
நமது சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும்
திருமணம் செய்துக்கொள்கின்றனர். பின்னர்
அவர்களின் உறவை பலப்படுத்தவும், அவர்களது பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கவும் 3C5 வாரிசை உருவாக்குகிறார்கள். இந்நாளில் புதிய தம்பதியினர் தத்தம் திருமண நாட்களை உல்லாசமாகக் கழிக்க பிள்ளைப்பேறு பெறுவதை ஒரீர் ஆணடுகள் தள்ளிப் போடலாமீ. ஏணி, பேரப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் என ஏங்கும் பெற்றோரின் வற்புருத்தலைப் பொறுக்க முடியுமேயானாலி அதற்கு மேலும் தள்ளிப்போடலாம். ஆனால் வாரிசு இல்லாத திருமணமும் திருமணம் தானா என்று கேட்கும் அளவுக்குக் குழந்தையைப் பெற்றெடுப்பது திருமணமான ஒவ்வொரு தம்பதியினரினதும் கடமையாகிவிட்டது.
கட்டுப்பாடிண்றி கத்தித் திரியும் ஒரு இளைஞனுக்குக் கல்யாணம் எனும் பந்தத்தை ஏற்படுத்தி ஒரு குழந்தையையும் கையில் கொடுத்துவிட்டாலி தந்தையான வணி திருந்திவிடுவானா? திருந்தலாம். ஆனால் திருந்தாமலும் இருந்துவிடலாம். சாலையில் வாகனத்தைச் செலுத்துவதற்கும், தான் அதற்கு தகுதியானவன் என நிரூபித்து அனுமதி பெற வேணி டிய இக் காலத்திலி, பிள்ளை பெற்றெடுப்பதற்கு மட்டும் ஏனோ தகுதி ஏதும் வேண்டப்படுவதில்லை. மாறாக தகுதியற்றவனும் பிள்ளை பெற தூண்டப்படுகிறான்.
தான் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை தன் பிள்ளை நன்றாக இருந்தாலி போதும். எத்தனையோ பெற்றோரின் வரி இதுவே. இவ்வரியைச் சற்றே ஆராய்வோம். தகப்பண் குடித்தாலும் சரி. தாய் பிச்சையெடுத்தாலும் சரி. அவர்களின் பிள்ளை எப்படியோ நன்கு கல்வி கற்று சான்றோம் என மற்றவர் புகழ்மாலை சூட்ட சிறப்புர வேண்டும். அப்பிள்ளை தங்களது இரத்ததில் உருவானவனல்லவா, அதனால் பெருமை பெற்றோர் இருவரிடையே சமமாக பகிர்ந்துக்கொள்ளப்படலாம். பெருக்கல் வகுத்ல் எல்லாம் தெரியும் தானே உங்களுக்கு? என்னடா இது, தங்கள் வாழ்க்கையையே பிள்ளைகளின் நலனுக்காக அற்பணித்த பெற்றோருக்கு இன்றைய தலைமுறையினர் செலுத்தும் நன்றிக்கடன் இதுதானா?” என்று நினைக்கின்றீர்களா? மேலும்
14
 
 

ஐப்பசி 1996
கலப்பை
படியும்.
தங்கள் கனவுகளையெல்லாம் நனவாக்கமதத்தம் திருமண பந்தத்தை வலு படுத்த.எத்தகைய மனிதர்களாக இருந்தாலும் சரி, முன்னறிந்த தெய்வங்களாக போற்றப்பட.தம் பெயர் சொல்ல.தாம் வாழ்ந்த வாழ்க்கையில் எதையும் பெரிதாக சாதிக்காவிடினும் சாதனை புரிய பத்து பிள்ளைகளை விட்டுச் செல்வதாக எண்ணி மன திருப்தி அடையவதனிமையை நெருங்க விடாது Gafutu........ இதற்கெல்லாம் ஒரு பிள்ளை தேவைப்படுகிறது. கணவனோ மனைவியோ விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிடலாம். ஆனால் பெற்றெடுத்த பிள்ளையோ உயிர் கொடுத்த காரணத்தினாலும், அவ்வுயிருக்கு ஈடாக கொடுக்க தனது உயிரைத்/வாழ்க்கையைத் தவிற வேறு எதுவும் இல்லாத காரணத்தாலும் என்றும் பெற்றோர் சொல் தட்டாது வாழ வேண்டும். பிள்ளைகளின் நல் வாழ்வில் அக்கறை கொண்டே சொல்கிறோம் என்பர் பெற்றோர். ஆனால் பாசம் என்னும் விலங்குகளைப் பிள்ளைகளின் கைகளில் பொறுத்தி அவர்களின் சுதந்திரத்தைப் பறித்து அவர்கள் வெறும் தலையாட்டு பொம்மைகளாக
மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பது
எவ்வகையில் நியாயமாகும்.
எண்ணங்க..ஹலோ..இனினும் படிச் கட்டு இருக்கீங்களா, இல்ல குழம்பிப் போய் உட்காந்துட்டீங்களா? என்ன சொல்ல வரோம்னா, இந்த மண்ணுல பிறந்தவனெல்லாம் ஒரு பிள்ளைய விட்டுட்டு போகனும் என்ற கட்டாயம் இருப்பது
தவறு. ஏன், குழந்தை பெறாவிட்டால் அவன்
ஆண்மைக்கு ஏதும் குறையோ? மனிதனாக பிறந்துவிட்டால் குழந்தை பெறுவது பலருக்கும் பெறும் பாடு இல்லை. (இவ்விடத்தில் தாயை சற்று விட்டுவிடுகிறோம். ஏனெனில் குழந்தையைப் பத்து மாதம் சுமப்பது சிரமமே). ஆனால் பிள்ளைக்கு அன்பையும் ஆதரவையும் ஊட்டி வளர்க்க பெற்றோர் தகுதி கொண்டிருக்க வேண்டும். பிள்ளையைப் பெறுபவர்களெல்லாம் கயநல நோக்கம் மிகுந்தவர்கள் தான். தந்நலம் கருதாது சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என உழைக்க எண்ணினால், தத்தெடுக்க உலகில் பிள்ளைகள் இல்லையா? தன் இரத்தத்தில் உருவாகிய குழந்தை மட்டும் தான் தன் பிள்ளையா? அப்பபொழுதுதான் ‘என் ரத்தத்தின் இரத்தமே’ என சொல்லி பாச வலை வீசி தன் எண்ணங்களை நிறைவேற்றிக்
கொள்ளலாம் என்ற எண்ணமோ? அதே அன்பை வேற்றோன் பிள்ளையிடம் செலுத்த முடியாதா? அப்பிள்ளையை சான்றோன் ஆக்கக் கூடாதா? பெற்றால் தான் பிள்ளையா? அப்படியே பெற்றால் மட்டும் போதுமா?
சமுதாய முன்னேற்றத்தில் தந்நலம் இல்லா ஆர்வம் இருப்பின் குழந்தைகளை தத்தெடுங்கள். சுயநலத்தை முற்றும் துறந்த மகானாக இருக்க விரும்பாத நிலையில் குழந்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதானால் மட்டுமே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையும் இல்லை. குழந்தையை வளர்க்கும் அளவு பொறுப்பும் இல்லை என்றால் தயவு செய்து குழந்தைகளைப் பெறாதீர்கள். இம்மண்ணில் பிறக்க விருப்பமா இல்லையா என்று எங்களிடம் யாருமி கேட்கவில்லை. வாழிவு இணிபமானதா துன்பமானதா என்பது ஒவ்வொரு மனிதனினதும் வாழ்க்கைச் சம்பவங்களைப் பொறுத்து தீர்மானிக்கப்படுவது. பிறப்பில் தான் எங்களது எண்ணத்தைக் கருதவில்லை வாழ்விலாவது எங்களது எண்ணத்தை மதித்து ஆதரியுங்கள். தாய் தந்தை இல்லாத அனாதைக் குழந்தைகள் இருப்பது போதும். பெற்றோர் இருந்தும் அனாதைகளாக வாழும் பிள்ளைகளின் எண்ணிக்கையையும் பெருக்க வேண்டாம். ஒரு புதுக்கவிதை நயத்தோடு பாருங்க சொல்ல வருவது என்ன என்று புரியும்
4ஒத்தையடி பாதையில நானும் என் பொண்டாட்டியும். மாடு கட்டிய வண்டியில மெதுவாக நகர்ந்து வர தூரத்தில ஒரு பையன்.
நட்ட தடு வெயிலில காலிலும் ஒன்னும் இல்ல கணிகலங்கி அழா குறையா கால் போன போக்கில செல்லக் கண்டேன்.
கண்ணுக்கெட்டிய தூரம் தெரியவில்லை நகரமீ.
அவனருகே மாடு நிற்க கேட்டேன் சில கேள்விகளை.
gas
64ம் பக்கம் பார்த்த
15

Page 10
கலப்பை
ஐப்பசி 1996
* கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்’
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது. அவுஸ்திரேலிய கோவில் பணியில் ஈடுபட்டு வாழ்வது அதிலும் அரிதுதான். எவ்வளவு படித்த மேதையாக இருப்பினும் எவ்வளவு பணம் ஈட்டினாலும் கோவில் பணியில் பெருமை கொள்கிறார். அதுதான் எமக்குப் பெருமை.
ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிட்னி நகரில் குடியேறினர். அவர்களுடன் அவர்களுடைய கலையும் கலாச்சாரமும் குடியேறின. இதுநாளும் தங்கள் நாட்டில் காத்து வந்த பரம்பரைக் கலையைக் காக்க வேண்டுமே என்ற குன்றாத ஆர்வம். அப்போது விட்லம் (Whitlam) தொழிற்கட்சி அரசின்கீழ் வெள்ளை அவுஸ்திரேலிய கொள்கை தளர்த்தப்பட்டது. இதுவே தக்க தருணம் என எண்ணி அவுஸ்திரேலியாவில் தங்கள் கலாச்சாரத்தையும் மதநம்பிக்கையையும் தத்துவங்களையும் பரப்புவதற்கு இந்து கோவில் ஒன்றைக் கட்டும் அவசியத்தை உணர்ந்தனர். ஒருமிக்க ஒன்றான எண்ணத்தில் உதித்த எண்ணத்திற்கு உருவம் தரக் கோவில் கட்டும் பணியைத் தொடங்கினர். இரவு பகலாகக் கருமமாக உழைக்கும் நோக்கம் கொண்ட இவர்கள் தங்களோடு தங்கள் கலாச்சாரத்தையும் குடியேற்றினர்கள். அது ஒரு அற்புதமான கதை நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய கலாநிதி B.பாஸ்கர ராவ் 1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி அன்று தம் இல்லத்தில் 17 நண்பர்களைக்கூட்டி சிட்னியில் கோவிலைக்கட்டும் சாத்தியக் கூறு பற்றி விவாதித்தார். 1978ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி “வெங்கடேஸ்வரா ஆலயக்குழு ஒன்று துவக்கப்பட்டது. கோவில் கட்டுவது என முடிவு எடுத்தாகி விட்டது. இப்போது கோவில் கட்டுவதற்கு இடம் வேண்டுமே. எல்லோரும் ஒன்று கூடி 26-11-1978ல் இப்போது கோவில் எழும்பியுள்ள புனித இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். நிதி திரட்டவும் இதர LGoofs, odorosiusyid S.V.T. Holdings Ltd, கம்பனிச்சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 1979ம் ஆண்டு கோவிலைக் கட்டுவதற்கான
விண்ணப்பம் Wolongong நகர சபைக்குச் (City Council) சமர்ப்பிக்கப்பட்டது. நகர சபையின் அங்கீகாரம் பெற்ற பின் எண்ணற்ற பக்தர்கள் குழுவில் சேர்ந்தனர். நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழக மைதானத்தில் பிரத்தியேகமாக நிறுவப்பட்ட தியான மண்டபத்தில் 1979 ஜூலை 7ம் திகதி கணேச விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவுஸ்திரேலியாவில் சாஸ்த்திரீய முறைப்படி ஆலயம் எழுப்பப்படும் முதல் Lugஅது.
உலக முதல்வன் ஓடியே வருக ஒமெனும் மந்திரப் பொருளே வருக உலகிற் பெரியோன் உடனே வருக உடலிற் பெரியோன் உவந்தே காக்க
என வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கப்பட்டது. S.V.T.A, 1979 Gsů@thir også 7ó ás தரும சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஹெலன்ஸ்பர்க் கோவில் கட்டும் இடத்தின் உரிமையைப் பெற்றது. உடனே நிதி திரட்டும் குழுவும் கட்டிடக் குழுவும் நிறுவப்பட்டு அவற்றிடம் நிதி திரட்டும் பணியும் படிப்படியாகக் கோவிலைக் கட்டும் வேலையுமீ ஒப்படைக்கப்பட்டது.'ஆஹம சாஸ்த்திரத்தில் நிபுணரான பூரீ T.V. அனந்தராம சேஷணி S.V.T.A. யின் கெளரவ ஆகம ஆலோசகராக
நியமிக்கப்பட்டார்.
இந்தத் திட்டத்திற்கு இந்தியாவில் ஆகும் செலவுக்காக திருப்பதி-திருமலை தேவஸ்தானம் ட்ரஸ்ட் வட்டியின்றி ரூபாய் 600,000 கொடுத்து உதவியது. சிற்ப சாஸ்திரத்தில் தலையாய
நிபுணராக விளங்கிய சிற்பகலாரதினம்
6
 
 
 

gilt Jó) 1996
கலப்பை
பூரீ.V.ஜானகிரமண ஸ்தபதி 1983 செப்டம்பரில் கோவில் கட்டும் இடத்தைப் பார்வையிட வந்தார். பார்வையிட்ட பிறகு அவர் கூறினார், 'பரார்த்த பூஜை நித்ய கால பூஜைகளுக்கு அமோகமான இடம், சிற்ப சாஸ்த்திரங்களில் கூறிய படி எல்லாவித தெய்வீக அம்சங்களும் கூடியது. ஹெலன்ஸ்பர்க் மிகவும் அற்புதமான ஸ்தலம். இயற்கையான மரங்கள் அடர்ந்த இடம். கடலலை மோதும் இடம், சலசல என ஓடிவரும் சிறுநதி. கோலாகலமிக்க பொருத்தமான இடம் என ஒப்புதல் தெரிவித்தார்.
திரு வி. ஜானகிரமண ஸ்தபதி கோவிலில் பொருத்தப் படும் சில விக்கிரகங்களும் பஞ்சலோக விக்கிரகங்களும் அடங்கிய பட்டியலைத் தயாரித்தார். 1983 செப்டம்பர் 22ந் தேதி ஹெலென்ஸ்பர்க் கோவில் திட்டத்திற்குக் கோவில் ஸ்தபதியாக நியமிக்கப் பட்டார். அவர் சிட்னியில் தங்கியிருந்த போது 1983 செப்டம்பர் 11ந் தேதி
மிபூஜையும் நிறைவேறியது. Tailor ¥: Whitting Pty Ltd, slugly பொறியியலாளர்களாக வேலை செய்தனர். Brewster Murray Pty Ltd, sity firsts நியதிகளை மேற்பார்வை யிட்டனர். 25-1-84 ல் பூரீ வெங்கடேஸ்வர கோவில், 187-84 só S.V.T. uoprostori Luth, 10-12-84 ó g விக்னேஸ்வர கோவில், 10-12-84 ல் tolet, 15-4-87 ல் குருக்கள் தங்குமிடம் - இவற்றைக் கட்டுவதற்கு Wolongong நகர சபை அங்கீகாரம் அளித்தது. அல்லல் போக்கும் பூரீ கணேச பெருமானின் ஆசிகளுடன் தெற்கு மண்டலத்தில் இந்து கோவில் கட்டும் முதல் படி நிறைவேறியது.
தடங்கலைத் தவிர்த்திடு நன்மையைச் சேர்த்திடு விடங்களைத் தொலைத்திடு விநாயகத்தேவனே தப்பிதம் செய்யினும் ஒப்பரும் முதல்வனே கப்ரம் மண்யனின் சோதரா காத்திடு
பூீரீ கணேச பெருமானின் அழகான சிலையும் குரீ வெங்கடேஸ்வர பெருமானின் சிலையும் கொண்ட கோவிலும் இதுவரை மக்கள் கண்டிராத ஆரவாரம், பரபரப்பு, கோலாகலத்துடன் நிறைவேறியது. 1985 ஜூன் 30 ந் தேதி மஹாகும்பாபிஷேகம் நிறைவேறியது. சிட்னி நகரில் இந்துக்களின் வரலாற்றில் மறக்க முடியாத அனுபவம்.
இதையொட்டி பூரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு யூரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வழங்கிய ஆசிகள் 'கடல் கடந்து வாழும் நிலையிலும் தங்களது பரம்பரைச் சொத்தாகிய ஆஸ்திகத்தை வளர்த்துப் பயணி பெற வைக்கும், பூரீ வெங்கடேஸ்வரா ஆலயக் குழுவினரின் இந்த நல்ல முயற்சி நல்லபடியாக நிறைவேற தேவதார்ப்ப ரூபியான குரீ பரமேஸ்வரன் அருள்புரிய ஆசீர்வதிக்கிறோம். அன்பே சிவமயம் சத்தியமே பரமசிவம்’ என்ற புனித சேதியைப் பரப்பும் ஹவாயில் உள்ள கைலாசபிதா சற்குரு சிவாய கப்பிரமணிய சுவாமிகளின் ஆதீனமும் ஆசிகள் வழங்கியது.
ஏழாம் நூற்றாண்டின் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கோவில்கள் பூரீ வி. ஜானகிரமண ஸ்தபதியின் அபூர்வமான படைப்பாகும். பெரிய கோவிலினி பூg வெங்கடேஸ்வர பிரபுவின் விமானம் தரை மட்டத்திலிருந்து 43 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. யூரீ விக்னேஸ்வர ஆலயம் தரைமட்டத்திலிருந்து 18 அடி உயரத்தில் விமானத்துடன் கஜபதி போல நிற்கிறது.
கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கும்
போது குரீ ராம பிரபுவுக்கும் குரீ கிருஷ்ண பகவானுக்கும் ஆலயங்கள் எழுப்ப வேண்டும் என்ற அவசியத்திற்கேற்ப முக்கால் மண்டபம் சேர்க்கப் பட்டது. ஆதி மூலங்களைத் தொழவும் விமான தரிசனம் செய்வதற்கும் மஹாமண்டபம் உயர்த்தப் பட்டது. இதற்காக மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பிரகாரங்களில் மூன்று பெரிய கதவுகள் கட்டப்பட்டன. அபிஷேக நீர் கோவிலின் கிழக்குப் புறத்தில் போவதற்கு கோமுகங்கள் நிறுவப்பட்டன. பக்தர்கள் கோவில் பிரதர்ச்சனை செய்வதற்குச் செளகரியமாக காங்கிரீட் அடிப்பாதைகள் கட்டப்பட்டன.
ஸ்தபதியார் குரீ வி. ஜானகிரமண ஸ்தபதி சமர்ப்பித்த மஹா திட்டப்படி 43 லட்சம் வெள்ளிகள் செலவாகுமென திட்டமிடப்பட்டது. இத்தனை பெரிய தொகைக்கு எங்கே போவது? ஆகவே 6 நிலைகளில் கோவிலைக்கட்டத் தீர்மானிக்கப் பட்டது. சிவா, பார்வதி, சுப்ரமணியஸ்வாமி, தெய்வயானை, வள்ளி, துர்க்காதேவி, தகூர்ணாமூர்த்தி, ஆதிநாராயணன், பிரம்மா,
3.
28ம் பக்கம் பார்க்க.
17

Page 11
aisastals ஐப்பசி 1996
கர்நாடக சங்கீதத்திலும், சினிமாத்துறையில் பின்னணிப்பாடகராகவும் புகழ் பெற்றவர் கலைமாமணி உன்னிக்கிருஷ்ணனர். உலகினர் பல நாடுகளில் இசைக் கச்சேரி நடாத்திய இவர், இசைப்பயணத்தின் ஒரு கட்டமாகச் சிட்னி வந்தபோது கலப்பை ஆசிரியர் குழு சந்தித்த வேளையில். உங்களுக்கு சங்கீதத்துறையில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது என்பது பற்றி சிறிது விளக்குவீர்களா?
நான் பிறந்து வளர்ந்த இடம் சென்னை. எனது பெற்றோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்தின் குடியேறினார்கள். எனது தாயார் சங்கீதத்துறையில் மிகவு அவர் பக்திப் பாடல்களை விரும்பிப் பாடுவார். நாடகங்கள் எனது சிறு வயதில் தாயார் சொல்லிக்கொடுத்த ப கற்றுக்கொண்டேன். அவ்வயதில் சினிமாப் பாடல்களையும் விரும்பிக்கேட்பேன்.
எனது பன்னிரண்டு வயதில் பெற்றோரின் றுத்தலினால் கர்நாடக, சங்கிதத்தை முறைப்படி கற்றுக்கொள்ளத் தொடங்; என்ற சங்கீத வித்துவான் வீட்டிற்கு வந்துஜ் அந்த நேரத்தில் சங்கீதத்தைவிட கிரிகெட் கூடுதலாக இருந்தது. எனது பதினெட்டாவது ஸ்பதில் மற் டாக்டர். எஸ். ராமனாதன் என்ற பெயர் பெற்ற சங்கீதப் : பயிலத் தொடங்கினேன். அதே நேரத்தில் எனது குத் அணியிலும் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அதனால் கிரிகெ ல் அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியம் இருந்தது. கல்லூரிப்xபடிப்பு முடிந்த பின்னர் தான் இசைத்துறையில் ஈடுபாடு ஏற்படத் தொடங்கியது.
இதற்கான ஒரு காரணம் நாங்கள் ஆரம்பித்த Youth Association For Classical Music ஆகும். இக் கழகத்தின் மூலம் என்னைப் போன்ற பல இளம் பாடகர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அக் கழக உறுப்பினர்கள் எல்லோரும் மிகவும் நல்ல சங்கீதப் பின்னணியுள்ள குடும்பங்களிலிருந்து வந்தவர் அவர்களுடன் சேர்ந்ததால் அவர்களைப் போல் நானும் பாடவேண்டும் என்ற் போட்டி மனப்பான்மை ஏற்பட்டது. பாடிப் பயிற்சி செய்வதற்கு நேரம் ஏற்ப்டுத்திக் கொண்டேன். இதுவே நான் இசைத் துறையில் முன்னேறுவதற்கு முதற் ப் அமைந்தது. நிறையப் பாடல்களைப் பாடவேண்டுமென்ற ஆர்வ டாக்டர். எஸ். ராமனாதன் இறப்பதற்கு இரண்டுஜ் 攀 க்கு இது நடந்தது.
இதன் பின்னர் திருமதி சாவித்திரி சத்த் கற்கத் தொடங்கினேன். அவர் இன்றும் எனக்கு திரு. கல்கட்டா கே. எஸ். கிருகூர்ணமூர்த்தியிடமும் தற்போ இருபதிலிருந்து இருபத்தெட்டு வயதிற்கு இடைப்பட்ட தர் சங்கீதம் பயிலுவதில் ஈடுபட்டேன். கச்சேரிகளுக்கி வரத்தொடங்கின. அதற்காக நிறைய உருப்படிகளைக் கற் ஏற்பட்டது.
1989-90 இல் வீணை தனம்மாள் பாணி ஒன்றிற்கு நூற்றிற்கும் அதிகமான விண்ணப் எட்டுப் பேரில் நானும் ஒருவன். ஆறு மாத
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

giILાઈી 1996 கலப்பை
பட்டறை எனது கர்நாடக சங்கீத அறிவை விருத்தி செய்தது மட்டுமின்றி எனது இசைத் துறை ஆர்வத்தையும் மேலும் துாண்டிவிட்டது.
கடந்த இரண்டு வருட காலங்களாகத் தான் நான் சினிமாத் துறையில் பாடி வருகின்றேன். இதற்கான முதல் சந்தர்ப்பத்தை இசையமைப்பாளர் எ. ஆர். ரஃஹற்மான் எனக்கு அளித்தார். அதைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. தற்போது ஒரு 4-5 சினிமாப் பாடல்களையும் மாதத்தில் 10-15 கர்நாடக இசைக் கச்சேரிகளையும் செய்து வருகின்றேன்.
நீங்கள் இசைத்துறையில் ஈடுபட்டு என்ன சாதனைகள் செய்து இருக்கின்றீர்கள்? இன்னும் என்ன செய்ய விரும்புகின்றீர்கள்?
இசைத்துறையில் நான் படிக்க வேண்டியவையும் சாதிக்க வேண்டியவையும் ஏராளமாக இருக்கின்றன. நான் ஒரு முழுநேரப் பாடகனாக வருவேனென்று என்றுமே நினைக்கவில்லை. 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் தனியார் கம்பனி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது ஓய்வு நேரத்திலேயே கச்சேரிகள் செய்து வந்தேன். சினிமா இசைத் துறையில் பிரபல்யமான பின் எனது துறையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இசைத் துறையில் எனக்குக் கிடைத்த முதல் விருது “யுவ கலா பாரதி” விருது. அடுத்தது கடந்த வருடம் தமிழ் நாடு அரசால் வழங்கப்பட்ட “கலைமாமணி” விருது. இவ் விருது நான் ஒரு போதும் எதிர்பார்க்காத ஒன்று. இது தமிழ் நாடு முதல் அமைச்சரால் வருடா வருடம் சினிமாத் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும்.
தொடர்ந்து கர்நாடக சங்கீதத்தில் பல நுணுக்கங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் என்பது எனது அவா. கர்நாடக சங்கீதத்தில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் தொடர்ந்து பின்னணிப் பாடல்களைப் பாடுவேன். அத்துடன் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல இசைக் கச்சேரிகளையும் நடாத்திப் பல இசைப்பிரியர்களைச் சந்திக்க ஆசைப்படுகின்றேன்.
அவுஸ்திரேலியா தவிர்ந்த வேறு எந்தெந்த நாடுகளில் நீங்கள் கச்சேரிகள் செய்து இருக்கின்றீர்கள்?
1983, 85, 88ம் ஆண்டுகளில் நான் விடுமுறையின் போது சிங்கப்பூர் போகும் நேரங்களில் சிறு கச்சேரிகள் செய்திருக்கின்றேன். அந்த நேரங்களில் எனக்குத் தெரிந்த சில உருப்படிகளைப் பாடுவேன். உத்தியோகபூர்வமாக முதன்முதலில் 1995 மார்ச் மாதத்தில் அமெரிக்காவுக்குப் போனேன். முழு அமெரிக்காவிலும் இருபத்திரண்டு கச்சேரிகள் செய்தேன். நல்ல வரவேற்பும் கிடைத்தது. 1995 ஆகஸ்டில் சவுத் ஆஃபிரிக்காவுக்கும் இந்த வருடம் ஏப்பிரலில் இலங்கைக்கும் மே மாதத்தில் டுபாய், பாரெயின், மஸ்கட், அபுடாபி, டோஹா ஆகிய இடங்களுக்கும் சென்றிருந்தேன். இப்போ அவுஸ்திரேலியாவிலிருந்து நியுசிலாந்து மலேசியா ஆகிய இடங்களில் கச்சேரிகளை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்ப இருக்கின்றேன்
பிறநாடுகளில் வாழும் எங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் கர்நாடக இசையைக் கேட்பதற்கோ அல்லது அவர்களுக்கு அத்துறையில் ஆர்வம் ஏற்படுவதற்கோ உள்ள சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு என்று நாங்கள் நினைக்கின்றோம். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கர்நாடக சங்கீதம் மிகவும் நுணுக்கமானது. அதனைக் கற்பதும் மிகவும் கடினம். இதற்குக் கட்டாயம் அத்துறையில் ஒரு ஆர்வமும் பரிச்சயமும் ஏற்படவேண்டும். இதற்குப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே கர்நாடக சங்கீதத்தை கசெற்றில் போட்டுக் கேட்க வைக்கலாம். இவ்வாறு பரிச்சயம் ஏற்படும் போது குழந்தைகளுக்கு சங்கீதம் கற்க வேண்டுமென்ற ஆர்வமும் ஏற்பட்டால் கற்பது கடினமல்ல. நான் பிறநாடுகளில் கச்சேரி வைக்கும் போது கச்சேரியின் ஒரு பாகத்தில் கர்நாடக சங்கீதத்தையும் மறு பாகத்தில் மெல்லிசைப் பாடல்களையும் பாடுவேன். இதனால் கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் இல்லாதவர்களும் அதனைக் கேட்க ஒரு வாய்ப்பு ஏற்படுகின்றது. அதே நேரம் அவர்கள் ரசிக்கக்கூடிய மெல்லிசையையும் கேட்கின்றார்கள். சினிமாத் துறையில் எனக்கு ஏற்பட்டுள்ள பிரபல்யம் கர்நாடக இசையில் ஈடுபாடு இல்லாதவர்களையும் எனது கச்சேரிகளுக்கு வரவைக்கின்றது என்று நான் நம்புகின்றேன்.
9

Page 12
கலப்பை ஐப்பசி 1996
உங்கள் பாடல்களைப் பலர் விரும்பிக் கேட்பது போல் நீங்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பீர்கள்?
நான் எல்லோருடைய பாடல்களையும் கேட்பேன். ஒவ்வொரு பாடகனின் பாடலிலும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது. சினிமாப் பாடகர் ஜேசுதாஸின் பாடல்களைச் சிறுவயதிலிருந்தே கேட்பேன். கர்நாடக இசைத்துறையில் ஆர்வம் ஏற்பட்ட பின்னர் அவரது கர்நாடக இசைக் கச்சேரிகளையும் கேட்பேன். அவருடைய பாடல்களைக் கேட்டு அவரைப் போலவே பாடவேண்டுமென்றும் ஆசைப்பட்டேன். அதுவே நான் சினிமாத் துறையில் பாட ஆரம்பித்ததற்கும் ஒரு காரணம் என்று கூடச் சொல்லலாம்.
இந்திய சினிமா இசையில் மேலைத் தேச இசைக் கலப்புகள் இடம்பெறுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இதனால் இந்திய இசையின் தனித்துவம் இழக்கப்படலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
பொதுவாகப் பாடல்களை இரு வகைப்படுத்தலாம். ஒன்று ரசிக்கக்கூடியவை. மற்றையது ரசிக்க முடியாதவை. ரசிக்கக்கூடிய பாடல்கள் எவ்வாறு அமைக்கப்பட்டாலும் அதில் பிழை இருப்பதாக நான் நினைக்கவில்லை. முன்னேறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இன்றைய இசையமைப்பாளர்கள் பல புதிய யுக்திகளைக் கையாண்டு புதிய பாணியில் பாடல்களை அமைத்து வருகின்றார்கள். இது காலத்துக்குக் காலம் ஏற்படும் மாற்றம். இவற்றைப் பரந்த மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். இவ்வாறான இசைக்குத் தான் இன்று ரசிகர்களிடையே வரவேற்பும் அதிகம். சினிமாத் துறையில் இன்று மில்லியன் கணக்கில் பணம் புரளுகின்றது. எதை ரசிகர்கள் வரவேற்கின்றார்களோ அதைத் தான் இசையமைப்பாளர்கள் வழங்குவார்கள். சில காலங்களுக்கு முன் எம். எஸ். வி யின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் இன்று ஏ. ஆர். ரஃஹற்மான் போன்றவர்களின் பாடல்களைத் தான் விரும்பிக் கேட்கின்றார்கள். இன்னும் 25-30 வருடங்களில் இன்னுமொரு புதிய இசையமைப்பாளர் வந்து வேறொரு பாணியில் இசையை வழங்கலாம். அப்போது இன்றைய இசைக்கு வரவேற்புக் குறைந்துவிடும். இவை காலத்தால் ஏற்படும் மாற்றங்கள். இதனால் இந்திய இசையின் தனித்துவம் இழக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. く
உங்களுக்கு உன்னிகிருஷ்ணன் என்று பெயர் வந்ததற்கு ஏதாவது காரணம் உணர்டா?
இது எனக்குப் பெற்றோரால் வழங்கப்பட்ட பெயர். உன்னி என்றால் மலையாளத்தில் சிறியவன் என்று பொருள். உண்னிகிருஷ்ணன்-சின்னக்கிருஷ்ணன்.
உங்கள் ரசிகர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்வீர்களா?
ரசிகர்களின் ஊக்குவிப்பே எனது இன்றைய நிலைக்குக் காரணம் எனலாம். அவர்கள் பாராட்டும் போது இன்னும் திறமையாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அவர்கள் குறைகளை விமர்சித்தால் என்னால் முடிந்தவரை அடுத்த முறை அக்குறைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்.
இப் பேட்டியை முடிக்குமுன்னர் உங்கள் சிட்னித் தமிழ் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
என் கச்சேரிகளின் போது அவர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன். அத்துடன் அடுத்த முறை சிட்னி வரும் போது இந்த முறையைவிடப் பெரிய ரசிகர் கூட்டத்தையும் எதிர்பார்க்கின்றேன்.
இறுதியாகப் பல சிரமங்களின் மத்தியிலும் இப்பேட்டியை வழங்கியதற்கு சிட்னிப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் “கலப்பை” வெளியீட்டிற்கான உபகுழுவின் சார்பிலும் கலப்பை வாசகர்களின் சார்பிலும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 

ஐப்பசி 1996
asAsiapu
ஆபத்து என்பது எது? நிகழப்போவதை தெரிந்து கொண்டால் அது ஆபத்து. உச்சி மரத்தில் ஏறி நின்று பிடித்திருக்கும் கையை விட்டால் என்ன நடக்கும். இது தெரிந்த ஆபத்து. ஆபத்துக்கள் தெரியாமல் வருவதுமுண்டு. அழகு என்றால் என்ன? சில வேளை நாம் செய்த காரியம் பெரியவர்களுக்குப் பிடிக்காமல் போனால் கோபத்துடனி 'நீர் செய்த காரியம் நல்லாயிருக்கிறது’ என்பார்கள். அதன் கருத்து, செய்த காரியம் சிறந்ததென்றல்ல. பிடிக்காத விடயத்தைப் பிடித்த மாதிரிச் சொல்வது. அது போல்தானி அழகிய ஆபத்துக்கள் என்று கூறுகின்றேன்.
கவலைகள் நிரம்பினால் கலங்கி குவளையென தேக்கி வைக்கும் எங்கள் விழியென்ற பெயர் கொண்ட கண்கள் புன்னகைப் பூப்பூக்க பூரிக்கும் நாக்குள்ள நந்தவன மலர்கள் உதடென்று பெயர் கொண்ட இதழ்கள் ஆம் அழுகையும் சிரிப்பும் அருகருகாக.
இதயத்துக்குள் ஒரே போராட்டம். ஒரே சச்சரவு. எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம். யுத்தம் நடக்கிறது. ஒ அதனாற்றான் இதயத்திற்குள் இரத்தம் பாய்கிறதோ, உலகில் எத்தனையோ பிரச்சனைகள். அவை தீர்க்கப்படக்கூடியவை. ஆபத்துக்களைக் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி அறிந்து கொண்டாலும் அவற்றை தீர்க்க முடியுமா? அடையாளம் காணமுடியுமென்றொரு நம்பிக்கை இருக்கிறதா?
முயற்சி செய்து பார்க்கின்றேன்.
囊囊囊爽*狭囊羧
உன்னால் அன்பு கரக்கப்படும் போது அது ககம் பலரால் நீ நினைக்கப்படும் போது அது ககம் சூழ்ந்த கவலை
விலக்கப்படும் போது அது ககம் மற்றவர் உணைப்பார்த்து இரக்கப்படும் போது நீ இதயமுள்ள ஏழை அன்பை அளவிடலாம்-ஆனால் அழவிடக்கூடாது
வேர்தான் முதல் உருவாகிறது. அதன் பின்தான் மரம் வளர்கின்றது. வளர்ந்த மரம், “எனக்கு வேர் இனி வேண்டாம் எண்ணிடம் கிளை இருக்கிறது’ என்று சொன்னால் விளைவு என்ன என்பது தெளிவு. ஒரு பூவின் மொட்டையுடைத்து எந்த வண்டும் தேன் குடித்ததாய் சரித்திரம் இல்லை. பூக்கும் வரை காத்திரு' என்று வண்டுகளுக்கு ஏதும் சட்டம் போடப்பட்டதா? இல்லை. ஐந்தறிவு ஜீவராசிகள் வந்த வழி மறப்பதில்லை பழைய சொந்தம் துறப்பதில்லை. காலங்காலமாகக் காத்திருக்கின்றன. கூரைகள் கோபுரங்கள் உயர்ந்தோங்கி நின்றாலும் அவற்றிணி அத்திவாரங்கள் அடியில்தான் இருக்கின்றன. மனித இனம் மட்டும் முதிர்ச்சியடைந்தவுடன் தாய் தந்தையரை ஒதுக்குகின்றது. ஏறிய பின் ஏணியை எட்டியுதைக்கலாமா? இந்த இடத்தில் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகின்றது.
ஒரு மகனிடம் தந்தை ஒரு உடைந்த ஒட்டுத்துண்டைக் கொடுத்து மகனிடம் கூறினார் இதைத் தாத்தாவிடம் கொடுத்து இதிலேயே இனி சாப்பிடச்சொல்லு" அதற்கு மகன் "அப்பா எப்படி இந்த அழுக்கு ஒட்டிலே தாத்தா சாப்பிடுவர்" என்று கேட்டான் அதற்கு அவர் "எண் குடும்ப நிலைக்கு அவருக்குக் கோப்பையிலே சாப்பாடு போட முடியாது" என்றார். சிறிது காலத்தில் தாத்தா இறந்து விட்டார். அந்தச் சிறுவன தாத்தா சாப்பிட்ட ஒட்டுத்துண்டைப் பத்திரமாக ஒரு பெட்டியில்
டி வைத்தான். அப்போது அங்கு வந்த தந்தை கிழவர் சாப்பிட்ட இந்த ஓட்டை ஏன் எடுத்து வைக்கிறாய்" என்றார். அதற்கு அந்தச்சிறுவன் "உங்களுக்கு நான் சோறு போட ஒட்டுத்துண்டுக்குப் பிறகு எங்கே
போவேன்" என்றானாம். இதோ ஒரு அழகான ஆபத்து. ஏன் அழகான
2

Page 13
கலப்பை
ஐப்பசி 1996
ஆபத்து என்று சொல்கிறேன் என்றால் சில விடயங்கள் நாம் செய்யும்போது சந்தோசமாக இருக்கும். ஆனால் அதுவே எமக்கு நிகழும் வேளை ஆபத்தாக இருக்கும். ஆபத்துக்கும் அழகு இருக்கிறதா?
囊演责责* பூட்டுப் போட்டுனக்கு பூங்காற்று நெருங்காமல் தோட்டம் வைத்துனக்குத் தேன் மலர் பறித்து கட்டியுனக்குக் கவி மாலை போடுகின்றேன் தருவாயா வந்துவிடுவாயா?
மூடுபனி நிலவில் குளிர்காய்ந்து பின்னர் பாடுமினம் தேனியதன் கால்பட்ட மலரெடுத்து கட்டியுனக்குக் கவிமாலை போடுகின்றேன் திருவாயால் பதில் ஒன்று தருவாயா?
காற்றுவரும் வழி பார்த்து நாற்று
விழும்- நீர் ஊற்றுவரும் திசையிருந்து ஓடிவரும் -அது அலையடிக்கும் என்மனதில் எப்போது-உன் வலையடிக்கும் வந்து விடு.
மனதின் மகிழ்ச்சியை நிறுத்திவிட்டு நீயேன் என் உள்ளத்திற்குப் போட்டாய் ஊரடங்குச்சட்டம்?
இது கடவுச்சீட்டில்லாத ஒரு காதல் பயணத்தின் ஒரு பக்கம். மனங்கள் இரண்டு கேட்டுக்கொண்ட வித்தியாசமான விண்ணப்பம். அவர்கள் உல்லாசமாக காலம் கழித்தார்கள். இன்றைய இலக்கணம் மாறாமல் காதலித்தார்கள். காலங்கள் செல்ல எதிர் காலம் பற்றியும் எண்ணத்தொடங்கினார்கள். படகுப்பயணம் போன்றது வாழ்க்கை என்று படித்திருக்கிறார்கள். அலை கொந்தளிக்கும் அமைதியான கடல்தான் வாழ்க்கை என்று அறிந்திருக்கிறார்கள். நீந்தத் தெரியும் என்று நிச்சயம் செய்து கொண்டார்கள். விவாகம் செய்ய முதல் நிரம்ப விவாதம் செய்தார்கள். புதுமைகளைவரவேற்றார்கள். ஆனால் பழைய சடங்குகளுக்கும் சம்மதித்தார்கள். உள்ளங்களை உணர்ந்து கொண்டார்கள். ஆண் பெண் சமத்துவம் அவசியமென்றனர். அதன்படி நடந்துகொண்டனர். அந்த இளைஞன் அம்மி மிதிக்கவும் ஆயத்தமானான்.
இருவரின் தாய்மொழி என்னவோ தமிழ்தான். ஆனால் அவளிடம் பஞ்ச புராணம் இருந்தது. அவனிடம் பைபிள் இருந்தது. சிலுவையைச்
சிவனும் மதிப்பான். சிலுவை சுமந்தவன் சிவனையும் மதிப்பான். கடவுள்களே கை குலுக்கும் போது பக்தர்கள் நாமேன் பயப்பட வேண்டும். வீட்டுக்கு எப்படியோ விடயம் தெரிந்தது.வாக்கு வாதங்கள் தொடங்கின. கோயில் வாயிலா? தேவாலய வாயிலா? தலைப்பு வைத்து தர்க்கம் நடந்தது. அந்தக் காதலர்களுக்கு ஆபத்து ஆரம்பமானது. அவர்களுக்கு அது அழகிய ஆபத்து. ஆண்டாணிடு காலமாக பழகிய ஆபத்து. முன்னோர்கள் போராடிய போது விலகிய ஆபத்து. விதியின் கை தலை மேலே எழுதிய ஆபத்து. ஆபத்தை அவர்கள் அனுபவித்தார்கள். இளங் கணிறு பயமறியாது.சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.இவை இளைஞர்களுக்காகவே இயற்றப்பட்ட பழமொழிகள், பழமொழிகள் பல வகை. கருத்துக்கள் என்னவென்பதைக் காதலர்கள் சொல்லட்டும் அவர்களுக்குக் காலம் சொல்லட்டும். ஆபத்தின் அழகே அழகு.
L Juq- LJtqஉயர்ந்து கொள்ளலாம் என்றோ ஒரு நாள் எனைப்பார்த்து ஆசிரியர் அன்பாய்ச் சொல்லி வைத்தார் ஏணிப்படி பற்றி சொல்கிறார் என்றெண்ணி படிக்காமல் இருந்து விட்டேன் அப்போது ஏன் இப்படி என் வாழ்க்கை போனதென்று இப்போது புரிகிறது அப்போது கூறியது.
கற்பித்தல் என்பது தொழிலென்றால் பொழிகின்ற மழைக்கும் நாம் சமீபளமீ கொடுக்க வேண்டும்.வானத்திற்கு மட்டுமல்ல வாழ்கின்ற பூமிக்கும் வாடகை கொடுக்க வேண்டும். இந்தா என்று இயற்கை கொடுக்கும் அத்தனைக்கும் சந்தா கொடுக்கவேண்டும். எனவே கற்பித்தல் என்பது கடமையல்ல தொழில் அல்ல. வரங்களை மட்டுமே வழங்கத்தெரிந்த ஒரு வகை தவம். இலையுதிர் காலமானாலும் பூக்களை மட்டும் சிந்துகினிற 나 J S. 6) 5 மரம் . விழுதுகளையுருவாக்கும் இந்த விருட்சங்களை விழுந்து வணங்குவதே தகும். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்று ஒரு பழமொழி இருக்கிறது. மாணவண் ஆசிரியர் உறவு சுமூகமாக இல்லாதபோது வித்தை அவனுக்கு வேப்பங்காயாகிறது.இங்கு ஒர் ஆசிரியர்
22

ஐப்பசி 1996
கலப்மை
மாணவனின் பார்வையிலிருந்து விலகுகிறார்.
ஒரு ஆசிரியர் மாணவனிடம் சில கேள்விகள் கேட்கின்றார். மாணவன் பதிலளிக்கின்றான். ஆசிரியர்; உன் பொழுது போக்கு என்ன? மாணவன்: ஆடு வளர்ப்பது ஆசிரியர்; உன் தந்தையின் தொழில் என்ன? மாணவன்; ஆட்டிறைச்சி விற்பது ஆசிரியர்: தந்தையின் தொழிலி உண் பொழுதுபோக்கிற்கு எதிரானது. எனவே பிழையான விடைக்கு புள்ளிகள் இல்லை. ஆசிரியர்; உன் தந்தையின் பெயரென்ன? மாணவன: மார்க்கண்டேயன் ஆசிரியர்: தந்தைக்கு என்ன வயது? மாணவன்: நாற்பது ஆசிரியர்: என்றும் பதினாறாய் இருப்பவன் மார்க்கண்டேயன்.எனவே தகாத பதில் தவறான பதில். ஆசிரியர்: மனிதாபிமானம் எங்கிருக்கிறது? மாணவன்: மிருகங்களின் வாலில் ஆசிரியர்:என்ன சொல்கிறாய்? முாணவன்: ஆம் மிருகங்களிடம் தான் இருக்கிறது. மனிதனிடம்தான் வாலில்லையே. ஆசிரியர்: தெளிவில்லாத பதில் மாணவனுக்கோ கவலை, கோபம். ஆசிரியர் திரும்பவும் கேட்டார்; நீ முட்டாளாய் இருக்கிறாயே என்ன தொழில் செய்யப்போகிறாய். மாணவன்; உங்களைப் போல் ஆசிரியத் தொழில் செய்யப்போகின்றேன். தன்னைத்தாக்குகின்றான் என்று புரிந்து கொண்ட ஆசிரியரும் அந்த மாணவனை மடக்க எண்ணி பொது அறிவுக்கேள்வி ஒன்றைக் கேட்டார்.
உன் நாட்டின் தேசிய மிருகம் எது என்றார். மாணவன் அவதானமாக யோசித்து விட்டு சொன்னான்: திரு. கருப்பசாமி ஆம் அதுதான் அந்த ஆசிரியரின் பெயர்.
கிண்டல் செய்யவென்று அந்த மாணவன் அப்படிச் சொணி னானா? இல்லை தனி எண்ணங்கள் புறக்கணிக்கப்படுகின்றனவே என்ற கோபத்தில் சொன்னானா? மாணவனின் கண்ணோட்டம் ஆசிரியரின் கண்ணோட்டத்திலிருந்து விலகும் போது அங்கு ஒரு இடைவெளி ஏற்படுகின்றது. ஒரு இளைஞனின் பார்வை சமூகத்தின் கண்ணோட்டத்திலிருந்து விலகும்போது அங்கு
ரு இடைவெளி ஏற்படுகின்றது.
பற்றோரின் கண்ணோட்டம் பிள்ளைகளின் போக்கிலிருந்து விலகும் போது இடைவெளி ஏற்படுகின்றது. இடை வெளிகள் நல்ல எதிர் காலத்தின் நடைவெளிகள் என்று சொல்லி விட முடியாது. இளமையில் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் எதிர் காலத்தில் தாக்கங்களை ஏற்படுத்தலாம். இந்த அழகிய ஆபத்துக்களை எம்மால் தடுக்க முடியுமா?
எவ்வளவோ சந்தோசங்கள் சுதந்திரங்களுடன் கூடியது இளமைக்காலம். எதிர் காலம்
இருணிடதா? ஒளிமயமானதா? நினைத்துப்பார்க்கலாம் ஆனால் நிர்ணயிக்க (pL9ttigl.
மழை வராது என்று எண்ணி குடையில்லாமல் போகும் போது மழை வந்தால் அது ஏமாற்றம். மழை வருமென்றெணிணி குடையோடு போகும்போது மழை வராமல் போனால் அது சந்தோசம். எதிர் காலம் கஸிடமானது என்றெண்ணி வைப்போம். எதிர்த்து நிற்க தயாராவோம். எதிர் காலமென்பது எமக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் இருக்கிறது. அனைவருக்கும் இருக்கிறது இந்த அழகான ஆபத்து. அவதானம் அழகு ஆபத்தானது என்பதை விட ஆபத்து அழகானதென்று எனறு வைத்துக்கொள்வோமா?
23

Page 14
கலப்பை
ஐப்பசி 1996
இது ஒர் ஊரின் கதை. அந்த ஊரின் பெயர் ஊமையம்பட்டி, இந்திய துணைக்கண்டத்தில் தமிழகத்தின் இடுப்பில் உட்கார்ந்து இருப்பது சேலம் மாம்பழத்திற்குப் பெயர் பெற்றது. அங்குள்ள கஞ்சமலையின் காலடியில் உள்ள ஒரு சிற்றுார் ஊமையம்பட்டி,
மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த நிலப்பரப்பு. அங்கு நெசவாளர்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர். விவசாயிகளும் பாதிக்கு மேல் இருந்தனர். நெசவாளர்களுக்கு வேணி டியது ஒரு தொழிற்கூடம். அதுவே அவர்கள் தங்கும் வீடும் கூட. நல்ல மிதமான காலை நேரம் மிகவும் அவசியம். அந்நாளில் நூலுக்குப் பசையூட்ட இயந்திரமில்லை. எனவே காலையில் மித வெய்யிலில் பசையூட்டி உலர வைப்பர். அந்த வெப்ப தட்பம் உள்ள நிலப்பரப்பாகச் சேலம் மாவட்டம் இருந்தது. அதன் காரணமாக அந்த நிலப் பரப்பில் நெசவு தொழில் மிகவும் சிறப்பாக நடந்து வந்தது.
அந்த நிலத்தில் ஒரு மேட்டுக்குப் பக்கத்தில் உள்ள பள்ளத்திற்குப் பெயர் மலைவிழுங்குப் பள்ளம். அந்தப் பள்ளத்தினுள்ளிருந்து பார்த்தால் பக்கத்து கஞ்சமலையைக் கூட காணமுடியாது. அதனால் அக்காலத்தில் அப்பெயர் ஏற்பட்டது. அந்தப் பள்ளத்தின் அடுத்து இருந்தது ஒரு நெசவாளர் கிராமம். அதனி பெயர் மேட்டுப்பாளையம். பள்ளத்தில் இருந்த அந்த ஊருக்கு அப்பெயர் எப்படி ஏற்பட்டது? தெரியாது.
அந்த நெசவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேறு ஊர்களுக்கு குடிபெயரச் செய்தனர். ஆனாலும் அவர்கள் தங்கள் மூதாதையினர் வாழ் நிலத்தில் ஒரு கோவிலைக் கட்டி (குல தெய்வம்) தங்கள் மூதாதையினரை வருடம் ஒரு முறை நினைவு கூர்ந்து வணங்க அங்கு கூடுவர்.
ಕೆಹೆಹg
612 sisablisofotsib
அந்த நாளைய குடியேறிகளில் சிலர் கிழக்கு நோக்கிச் சென்றனர். அப்படிச் சென்றவர்கள் கஞ்சமலையிலிருந்து புறப்பட்டுக் காவிரியில் கலக்கும் பொன்னியாற்றின் கரையில் குடியமர்ந்து தங்கள் தொழிலைச் செவ்வனே செய்து வந்தனர்.
அந்த ஊரில் 1947ல் பிறந்த வர்தானி இந்தக்கதையை எழுதுபவர். அவர் பிறப்பதற்கு முன் அந்த ஊர் ஒரு அழகிய ஊராக இருந்திருக்க வேண்டும். 1950ல் அந்த ஊரின் நிலை வேறாக இருந்தது. அது ஒரு தீபகற்பகமாகக் காணப்பட்டது. பொன்னியாறு தவழ்ந்து வந்து அந்த ஊரில் ஓர் ஏரியில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தது. அது ஒரு பெரிய ஏரி. அதில் இருந்து வழிந்து ஒடும் கால்வாயுடன் இன்னொரு சிறிய ஏரி இருந்தது. அவை இரண்டு ஏரிக்கும் இடைப் பட்ட மேட்டு நிலம் கொஞ்சம் இருந்தது.
ஊமையம்பட்டியின் கிழக்கில் வெங்கச்சக்கற்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் வெட்டப்பட்டு குவியலாகக் காணப் படும். அந்தக் காலத்தில் அந்த இடங்களில் வெங்கச் சக்கற்களால் கட்டப்பட்ட வீடுகள் நிறைய இருந்திருக்கும். அந்த வீடுகளுக்கு இடையில் ஒரு பெரிய குட்டை இருந்திருக்கும்.
பிறகு ஒரு காலத்தில் யாரோ ஒரு குறு நில மன்னர் அங்கு அந்தப் பெரிய ஏரியை ஏற்படுத்தி இருக்கலாம். அந்த நீர் தேக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த வீடுகள் அழிந்து விட்டுச் சென்ற கற்குவியல்களே அவை.
அந்த ஏரியின் கரை வெள்ளத்தைக்கட்டுப் படுத்த முடியாமல் அடிக்கடி உடைந்து விடுமாம். அதனால் ஒரு ஊமையனை மனிதப் பலி கொடுத்தனராம். அப்படிச் செய்கையில் உடல் கிழக்கிலும் தலை மேற்கிலும் விழுந்ததாம் உடல்
24
 
 
 
 
 
 

giJlóf 1996
asAsiapu
பக்கம் மல்லசமுத்திரம் என்றும் தலைப் பக்கம் ஊமையம்பட்டி என்றும் பெயர் பெற்றன எனக்கூறுவர். ஊமையம்பட்டி ஒரு அழகான சிற்றுார். நெசவாளர்கள் 50 குடும்பமும், விவசாயிகள் 50 குடும்பமும் இருக்கும். மேலும் ஒடர்கள் 3 அல்லது 4 குடும்பங்களும், 1 சலவைத்தொழில் செய்யும் குடும்பமும் வேறு சில குடும்பங்களும் வாழ்ந்து வந்தன. ஊரின் நுழைவாயிலில் அழகான பாவடி இருக்கும். காலையில் 10 பாவுகளுக்குப் பசையூட்டும் காட்சி அன்றாடம் உண்டு. குறைந்தது 60 அல்லது 70 பேர் அங்கு வேலை செய்வர்.
அந்தப் பாவடிதான் அந்த ஊரின் நீதி மன்றம். மக்கள், நெசவாளர்கள் தங்கள் வழக்குகளை அங்குதான் எடுத்து வைப்பர். சிலசமயங்களில் வழக்குகள் வாக்கு வாதத்தில் முடிந்து ஊர் இரண்டு படும். இந்தப் பாவுச் செய்யும் முறையில் (Process) 4 அடி நீளம், 1 அங்குல கனம், 2 அங்குல அகலம் உள்ள மூங்கில் கம்புகளும் உருண்டையான கம்புகளும் பயன் படுத்தப்படும். குறைந்தது ஒரு பாவுக்கு 100 அல்லது 120 மூங்கில் கம்புகள் பயன் படுத்தப்படும். சில சமயங்களில் ஊர் இரண்டு படும் போது அவைகளே ஆயுதமாகப் பயன் படுத்தப்பட்டு மண்டைகள் உடைவதும் உண்டு.
இந்த வழக்குகள் யாவும் நெசவாளர்களையே கட்டுப்படுத்தும். விவசாயிகளுக்கு என்று ஒரு தனி வழக்கு மன்றம் உண்டு. இந்த பாவடிகள் மையத்தில் ஒரு சாவடி இருக்கும். அங்குதான் விவசாயிகள் தங்கள் வழக்குகளை அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்வர். அவர்களுக்குள் முரண்பாடுகண்டால் எப்படி தீர்த்துக் கொள்வர்கள் என்று கவனித்ததில்லை.
இந்தச் சாவடியில் ஒரு மண் சட்டி(2 அடி விட்டம் உள்ளது)யில் கட்டிய தோல் பறை இருக்கும். வழக்குகளையோ, நல்லது கெட்டதுகளையோ தெரிவிப்பதற்கு அப்பறை உபயோகிக்கப்பட்டது.
அந்தச் சாவடியில் ஒரு புளிய மரம் நீண்ட நாட்களாகவே உள்ளது. அந்த ஊரில் 50களின் ஆரம்பத்தில் மின்சாரம் கிடையாது. எனவே இரவில் கல் தூணின் மேல் இருக்கும் விளக்கில் ஊர் சங்கோதி விளக்கேற்றுவான். இவனுக்கு சங்கு
கிடையாது. ஆனால் ஊர்ப்பறையை அடித்து விபரம் கூறுவான். இது ஒரு பரம்பரை உரிமை உடையது. சங்கோதியை யாராவது மிரட்டினால் அது பெரிய குற்றம்.
ஐம்பதுகளின் ஆரம்பத்தில் அந்த ஊர் ஒரு அழகிய கிராமம். வருடத்தில் 3 மாதம் அந்த ஏரி நிரம்பி வழியும். ஏரி நிரம்பினால் அதன் அழகு பல மடங்கு உயர்ந்துவிடும். கிழக்கே இருந்த மல்லசமுத்திரம் சேலத்துடனும், திருச்செங்கோட்டுடனும் சாலை வழியில் இணைக்கப்பட்டதால் அது ஒரு முக்கிய வியாபார நிலையமானது. கிராம மக்கள் தங்கள் துணிகளை இங்குதான் விற்பனை செய்வர். ஏரி நிரம்பி வழிந்தால் பரிசல் விடப்படும். அதுதான் முக்கிய போக்குவரத்துச் சாதனம். படகோட்டி காலைமுதல் இரவு 8 மணி வரை தன் வேலையைப் பார்ப்பான். யாராவது சினிமாவுக்குச் சென்றால் கணிடிப்பாய் படகோட்டியிடம் சொல்லியாக வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு மல்லசமுத்திரம் தான் செல்ல வேண்டும். அப்போது இந்தப் பரிசல்
சவாரிக்குக் கட்டணம் கிடையாது.
அந்த வட்டத்தில் உள்ள மக்கள் இந்த ஏரிக்குச் சுற்றுலா வருவதும், பரிசல் சவாரி செய்வதும் கூடக் காணக் கிடைக்கும் காட்சிகள்.
ஆனால் தண்ணீர் குறைந்துவிட்டால் ஒரே தொல்லைதான். கிராமத்திற்கும் நகரத்திற்கும் பாதை கிடையாது. ஏரிக்குள் நடந்து செல்லவேண்டும். ஒரு மைல் தூரம் இருக்கும்.
ஆனால் ஏரி முழுவதும் நிரம்பாவிட்டால் பரிசல் கிடையாது. வாரம் தோறும் புதன் கிழமைகளில் சந்தையில் தான் வாரத்திற்கு வேண்டிய அரிசி, பருப்பு, முதலியவற்றை வாங்கி வர வேண்டும். அப்போது பெரிய பெரிய மண்பானைகளில் அவை சேமித்து வைக்கப் படும். சிறுவர்கள் புதன் தோறும் பெற்றோருடன் சந்தைக்குச் செல்வர். தாய்மார்கள் ஓர் இடத்தில் ஒரு பெரிய கூடையை (2 அடி விட்டம்) வைத்துவிட்டு சந்தைக்குள் சென்று ஒவ்வொரு பொருளாகத்தங்கள் சேலையில் மடியில் வாங்கி வருவர். பிறகு கூடையில் வைத்துவிட்டு சென்று அடுத்ததை வாங்கி வருவர். சிறுவர்கள் அந்தக் கூடைகளைப் பார்த்துக் கொள்வர்.
25

Page 15
கலப்பை
ஐப்பசி 1996
7 மணி அளவில் ஒரு கூட்டமாகச் சேர்ந்து கொண்டு கையில் மே எண்ணெய் (keroSene) லாந்தர் விளக்குகளை ஏந்திக் கொண்டு அந்த ஏரியில் செல்வர். அப்படி நடந்து செல்கையில் பாம்பு கடித்து மாண்டவர்களும் உண்டு.
ஏரி நிரம்பினாலும் களிப்பு. காலியாகக்கிடந்தால் சலிப்பு இல்லை. ஆனால் அரை குறையாக நின்று விட்டால் அக்கிராம மக்களுக்குப் பெரிய கஷ்டம்தான். நகரத்திற்குச் செல்ல 4 மைல் அந்த ஏரியைச் சுற்றி நடந்து செல்ல வேண்டும். மழை அதிகம் பெய்தால் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஏரியைக் கடக்க முடியாது. நகரம் சென்றவர்கள் அங்கு தங்கள் நண்பர்கள் வீட்டில் தங்கி விடுவர்.
இந்தக் கஷ்டகாலம் ஆரம்பத்தில் வருடத்தில் 1 அல்லது 2 மாதம் தான் இருக்கும். ஆனால் 55ல் அந்தக் கிராமத்தார் தங்கள் அறியாமையால் பொன்னி ஆற்றில் கஞ்சமலைக்கு அருகில் வேம்படிதாளம் என்னும் ஊரில் ஓர் அணை
கட்டக் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டனர்.
அந்தக் கையெழுத்து அந்த ஊரின்
தலையெழுத்தையே மாற்றி அமைத்துவிட்டது. அந்த அணைக்குப் பிறகு பெரிய ஏரி நிரம்பவே இல்லை. பரிசல்கள் எல்லாம் பறந்து விட்டன. அரைகுறை ஏரியுடன் மக்கள் அல்லாடினர்.
அந்தச்சிறிய ஊரில் ஆரம்பப்பள்ளி வந்தது. மெதுவாக மின்சாரமும் வந்தது. ஆனால் மக்கள் குடும்பம் குடும்பமாக இரு ஏரிகளுக்கும் நடுவில் இருந்த மேட்டுக்குச் சென்று குடியேறினர். அந்த புதிய ஊருக்குப் பெயர் முதலில் புதுக்காடு, பிறகு அதற்கு வெங்கடேசபுரி என்று பெயர் வைக்கப்பட்டது. அங்கு குடியேறியவர்கள்
எல்லோருமே நெசவாளர்கள். தறிகளைக் கழட்டிச் சென்று அங்கு பூட்டிக் கொண்டு தங்கள் வழக்கம் போலி தொழிலி செய்ய ஆரம்பித்தனர். விவசாயிகளால் அப்படிச் செய்ய முடியவில்லை. நிலத்தையும் நீரையும் இடம் பெயர்க்க அவர்களுக்குத் தெரியவில்லை.
ஊமையம்பட்டி மெல்ல மெலீலத் தேய ஆரம்பித்தது. நிலத்தடி நீர் குறைவால் கிணறுகள் காய ஆரம்பித்தன. ஏரிகள் யூகலிப்டஸ் வேளம் மரங்கள் காட்டிலாகாவினால் பயிரிடப்பட்டு காடாக ஆரம்பித்தது. ஊர் உருக்குலைந்தது. பிறகு எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட விஷச் செடிகள் அந்தக்காட்டிலும் விதைக்கப்பட்டன. இன்று அது மிகவும் கோரமாகத் தலைதூக்கி விட்டது. கிராமத்தின் கிழக்கே தெரியும் அலவாய் மலையும் அதிலி உதயமாகும் ஆரியனுமி பழங்கதையாகிவிட்டன.
இன்று ஒரு 8 அடி அகல கற்பாதை உள்ளது. கார்கள் செல்ல முடியும். பழைய மாரியம்மன் கோயில் அப்படியே உள்ளது. பாவடி பாழ் அடைந்துவிட்டது. 50 நெசவாளர் குடும்பங்கள் 5 அல்லது 8 ஆகக் குறைந்துவிட்டது. பாவுக்கு பசை போட முடியாது. தேவையில்லை. பக்கத்தில் ஊரிலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். கைத்தறியும் அழிந்து விசைத்தறிக்கு இடம் கொடுத்துவிட்டது. ஆனாலி கிராமம் விசைத்தறிக்குப் பொருந்தவில்லை.
சாவடி அப்படியே இல்லை. புளிய மரம் உள்ளது. வீடுகள் குட்டிச் சுவராக இருக்கின்றன. கதைப்பவர் வாழ்ந்த வீடு அப்படியே உள்ளது. நன்றி அதை வாங்கி அங்கு வாழ்பவருக்கு. கதைப்பவர் நாட்டையே விட்டு அடுத்த நாட்டிற்கு குடியேறிவிட்டார். இப்போது அவர் அந்த ஊருக்குச் சென்று வரும் வெறும் விருந்தாளி. இதற்கு யார் பொறுப்பு?
Learn to speak what you feel and act what you speak
26
 
 
 
 
 
 
 
 

ஐப்பசி 1996
கலப்பை
பெற்றோரை 6QumrL 6afaL6NÖmILADIr?
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”, “தந்தை தாய் பேண்” என்பன காலங்காலமாக வழங்கி வரும் முதுமொழிகள். “மாதா பிதா குரு தெய்வம்” எண்ற முதுமொழி அன்னையையும் தந்தையையும் தெய்வத்துக்குச் சமானமாக்கின்றது.
பிள்ளைகளின் கல்வியில் உடல் நலத்தில் வாழ்க்கையில் அவர்களின் முன்னேற்றத்தில் எத்துணை கரிசனையும் அக்கறையும் தமிழ்ப் பெற்றோர் எடுத்துக்கொள்கின்றனர் என்பது சொல்லிப் புரியவைக்கவேண்டிய சமாச்சாரம் இல்லை.
வயோதிகம் எல்லோருக்கும் வருவது தான். இது உலக நியதி. வயோதிபர்கள் குழந்தைகளை ஒத்தவர்கள். இந்நிலையில் வயோதிபர்களாகிவிட்ட பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்காமல் முதியோர் இல்லங்களில் தஞ்சமடையச் செய்வது வாடவிடுவது சரிதானா? இதுவா பிள்ளைகள் அவர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன்?
எந்த நாணயத்துக்கும் இரு பக்கங்கள் உண்டு. இருபக்க நியாயங்களையும் அலசி ஆராய விழைந்த போது எழுந்த கருத்துக்கள் இவை. இத்தகைய கருத்தமைந்த குறுங்கதை ஒன்று, இவிதழில் “அழகிய ஆபத்துக்கள்’ என்ற தலையங்கத்தில் பாநேரா எழுதியுள்ளார். அதையும் வாசிக்கத் தவறாதீர்கள்.
உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலில் உள்ளோம். உங்கள் கருத்துக்களையும் அடுத்து வெளிவருமீ கலப்பை இதழிலி பிரசுரிக்கக்கூடியதாக எமக்கு அனுப்பிவைக்கவும்
ر
281A Beaměså
குயி
bush
Mt.Druitt-277o
(Queensland)
Tel: (02) 625 463
கர்னல்காந்து மாநிலம்

Page 16
கலப்பை
17ம் பக்கத் தொடர்ச்சி.
மஹாலட்சுமி, ஆணிடாள், சிவலிங்கம், ஆஞ்சநேயர், நவக்கிரக மூர்த்திகளும் உள்பட எல்லா கடவுள்களும் கொண்ட பிரம்மாண்டமான கோவில் முடிவாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டன. இவ்வாறு சைவ வைஷ்ண பாணிகளில் புராதன சிற்ப சாஸ்திரக் கலைக்கேற்ப கட்டப்பட்டுக் கும்பாபிஷேகமும் கொண்டாடப்பட்டது. விக்ரகங்களும் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1994 ம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி மஹாகும்பாபிஷேகம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.
மஹாகும்பாபிஷேக விழாவன்று கலந்து கொண்ட பூரீ டி.எஸ்.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் பூீரீ டி.வி.அனந்தராம சேஷன், அனுபவித்த சம்பவம், மெய்சிலிர்க்க வைக்கும் அந்த நிகழ்ச்சி, கோவில் மஹாகும்பாபிஷேகத்துக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது. அன்று பெரும் புயலும்
கடுங்காற்றும் வீசின. சம்பிரதாய பந்தல்கள் குலைந்துவிடுமோ என்ற பயம். அபசகுனம் என்று கூறவிரும்பாத பூரீ டி.எஸ். சாம்பமூர்த்தி சிவாச்சாரியார், எட்டுத் திக்குகளில் எட்டுத்
தேங்காய்களை உடைக்க உத்தரவிட்டார். எட்டாவது தேங்காயை உடைக்கும்போது புயற்காற்று ஓய்ந்தது. அமைதி நிலவியது. புனித நீர் தெளிக்கப்பட்டது. இறைவன் சக்தியை உணர்ந்து மக்கள் ஆரவாரித்தனர். இந்தத் தெய்வீகப் பணியில் ஈடுபட்டு, நம் கனவை நனவாக்கிய பக்தர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
டாக்டர் பி. ஜனார்த்தனன், திடீரென தோன்றும் மின்னலைப்போல மஹாகும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட அந்தக் கணநேரம் மனதிலே என்றும் நிலைத்து நிற்கும். கோவிலை கட்டியாகிவிட்டது. மஹாகும்பாபிஷேகமும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இனி தொடர்ந்து பணிபுரிய வாருங்கள். உதவிக் கரம் நீட்டுங்கள். குரீ வெங்கடேச பெருமாளின் ஆசிகளைப் பெற்று நலமுடன் வாழ்க.
ஆசிரியர் குழு
தவறை உணர்கின்றோம்
வாசகர்களே சிசன்ற கலப்பை இதழில் வெளியான 'வேள்வி ஆடு” (பக்கம் 69) என்ற சிறுகதை பிரிதிவிராஜ் என்பவரால் அறுப்பப்பட்டுப் பிரசுரமானது. ஆனால் இக்கதை ‘சிசக்கு மாடு” என்ற சிபயரில் வ.ஐ.சு. சிஜயபாலனால் எழுதப்பட்டு ந்ேகெனவே இருமுறை பிரசுரமானதாக அறியவந்துள்ளோம். பல வாசகர்களும் இதைச் சுட்டிக் காட்டியிருந்தார்கள். இத்தவறை உணர்கின்ற அதேவேளை எழுத்தாளர்கள் ஆக்கங்களை அறுப்பும்போது தவறான தகவல்களைத் தரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
28
 

ஐப்பசி 1996
கலப்பை
ம்மா என்பது சிந்துராவுக்கு என்றும்
'ஓர் எட்டாத கனியாகவே இருந்தது.
மிகச் சிறு வயதில் எல்லாச் சிறுவர்களும் தம் பெற்றோருடன் கூடிக் குலாவும் போது எனக்கு மட்டும் ஏன் அம்மா இல்லை என்று சிந்து ஏங்கியிருக்கின்றாள். அதன்பின் ஒரளவுக்கு விபரம் புரிந்த போது தன் சினேகிதர்கள் சிலரும் 'என் அம்மா என்னை விட்டுப் போய் விட்டர் எண் றோ எண் அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டார்கள் என்றோ சொல்வதைக் கேட்டுத் தன் அம்மாவும் அப்படித்தான் தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்டா என்று நினைத்து தன் தாயின் மேல் தன்னையறியாமலே ஒரு வெறுப்பையும் தன்னைக் காப்பாற்றும் தந்தையின் மேல் மட்டில்லா அன்பையும், பாசத்தையும் நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டாள்.
ஆனால் வழக்கமாக எங்குமே போகாத அவள் அப்பா சங்கர் அன்று அவ்விருந்திற்கு
அவளையும் அழைத்துச் சென்றார். அங்கே
அவளைக் கண்ட ஒரு வயதான மாது அப்பொழுது தான் இலங்கையிலிருந்து வந்தவர் நீ சித்ராவின் மகளா? என்று மிகவும் ஆவலாகக் கேட்டார். அவளுக்கு தன் நான்கு வயதில் பிரிக்கப்பட்ட அன்னையின் பெயரே மறந்து போனதால் 'எனக்குத் தெரியாது என்றாள். அப்போது அங்கே வந்த சங்கரின் நண்பனின் மனைவி "ஆமாம் மாமி சிந்து எங்கள்
சித்ராவின் பெண் தான்' என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். அதனைத் தொடர்ந்து அவர்கள் தமிழில் 'பாவம் சித்ரா என்ன மாதிரி இருந்தவள் இந்தச் சங்கரின் செய்கையால் அவள் வாழ்க்கையே வீணாகிவிட்டது. இந்தப் பெண்ணை எப்படிக் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றினாள் என்ன அநியாயம் அவளுக்குத் தன் தாயின் பெயரே மறந்துவிட்டது என்று அங்கலாய்த்தார்கள். தொடர்ந்தும் இப்போது
அவள் எங்கே! எப்படி இருக்கின்றாள்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என்று வினாவினார். அதற்கு அந்த மூதாட்டி அவள் விவாகரத்தாகிச் சங்கர் குழந்தையையும் கொண்டு இங்கு வந்த பின்னர் சுமார் மூன்று மாதங்கள் வரை அந்த ஏக்கத்தால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள் அதன் பின் அவளது சினேகிதி யாரோ தனனுடன் பேராதனைக்கு அழைத்துச் சென்றதாகச் சொன்னார்கள். ஏறத்தாழப் பன்னிரண்டு வருடங்கள் இருக்கும் இல்லையா? சித்ரா ஊர்ப்பக்கம் வரவேயில்லை. அவளின் தந்தையும் அவளுடன் போயிருந்து இந்த வேதனையிலேயே சுமார் நான்கு
ஐந்து வருடங்களுக்கு முன்னர் இறந்ததாக அறிந்தோம் . அதன்பின்னர் சித்ராவைப்பற்றி ஊரில் எந்தத் தகவலுமே இல்லை என்றார்.
'சங்கர் ஒரு மடையன். படிப்பறிவு போதாது என்பதற்காக யாரும் விவாகரத்துச் செய்வார்களா? அதைத் திருமணமத்திற்கு முன்னரே சிந்தித்திருக்கலாமே என்றார்.
அதற்கு அந்தப் பெண் இல்லை மாமி, அது வெறும் சாட்டு அவர் தன் காதலியையல்லவா தேடி வந்தார். ஆனால் அவர் யாரைத் தேடி இங்கு வந்தாரோ அந்தப் பெண்ணும். இவரை மணக்க மறுத்துவிட்டாளாம். இப்போ பாவம் இந்தப் பிள்ளை தாயிருந்தும் இல்லாத வளாக வளர வேண்டியிருக்கின்றதே என்று வருந்தினர். அது வரை தம் கதையின் சுவாரஸ்யத்தில் சிந்து அங்கே நின்றதைக் கவனிக்காதவர்கள் அப்பொழுது அவளைக்கவனித்துக் கண் ஜாடையால் தம்
கதையை இடையிலேயே நிறுத்தினர்.
29

Page 17
abstrapu
ஐப்பசி 1996
அவர்கள் கதைத்தவற்றிலிருந்து சிந்து தனக்குப் புரிந்த தமிழ் அறிவைக்கொண்டு 'அம்மா என்னைத்தள்ளி வைக்கவில்லை அப்பாதான் என்னை அம்மாவிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்து தாயற்றவளாக வளரும் நிலைக்கு ஆளாக்கியிருக் கினிறார் எனறு கிரகித்துக்கொண்டாள். மேலும் தன் சிறு வயதில் தந்தையுடனி அவுஸ்திரேலியாவுக்கு வந்ததிலிருந்து நடந்தவை அனைத்தையும் இந்தத் தகவலுடன் கூட்டிக் கழித்துப் பார்த்தபோது அவளுக்கு மேலும் பல விபரங்கள் புரிந்தன .
அதன் பின் சிந்துவுக்குத் தன் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்ததெனின் அது மிகையாகாது. ஆனால் எப்படி என்று அவளுக்குப் புரியவில்லை. அப்பொழுது 59 6hu6ño பணி னிரணி டாமி வகுப்பிலி படித்துக்கொண்டிருந்தாள். பாவம் அவள் என்ன செய்வாள்? தனி தாயினி முகத்தை நினைவுக்குக் கொண்டுவரப் பலவாறு முயற்சித்துத் தோற்றாள். முடிவில் அந்தம்மா 'நீ சித்ராவின் மகளா?" என்று கேட்டதை வைத்துத் தன் தாய் தன்னைப் போலவே இருப்பாள்
எனத் தீர்மானித்துத் தன் உருவத்தைக் கணிணாடியில் பார்த்து அதன் வயதான உருவத்தை மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்தாள். சிந்து தன் கற்பனை அன்னையின் மேல் அன்பைப் பொழிந்தாள். பல சந்தர்ப்பங்களில் இப்போது அம்மாவும் இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்ப்பாள். ஆனால் தந்தையுடன் எதுவும் கதைக்கமாட்டாள். சிறு வயதில் ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களால் அவரிடம் தாயைப்பற்றிச் சிந்து எதுவுமே கேட்பதில்லை.
சிந்து பலவிதமான குழப்பங்களுடனும் ஒருவாறு படித்துத் தாவரவியலில் சிறப்புப் பட்டம் பெற்றாள் அவளுக்கு அவுஸ்திரேலிய பொதுநல விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு ஆராய்வாளராகப் பதவி கிடைத்தது. அங்கு வேலை செய்யும்பொழுது திரு சில்வா என்ற இலங்கையரைச் சந்தித்தாள். அவர் முதலில் அவளிடம் மிகவும் ஆர்வமுடன் கேட்டது, உங்களுக்கு இலங்கையில் தேயிலை ஆராய்ச்சி
நிறுவனத்தில் பணிபுரியும் செல்வி சித்ரா விஸ்வநாதனைத் தெரியுமா? அவரைப்போலவே இருக்கின்றீர்களே என்பது தான்.
'எனக்கு இலங்கையில் யாரையும் தெரியாது தாங்கள் நாட்டை விட்டு வந்து அதிக நாட்களாகிவிட்டன என்று சொன்னாலும் பின்னர் திடீரென இது எண் அம்மாவின் பெயரல்லவா? என்று மின்னல் போல் அவள் மனத்தில் உதித்தது. பின் அது என் அம்மாவாக இருக்கலாமா? என்ற ஒரு சந்தேகமும் கூடவே எழுந்தது.
அதன்பின் வந்த நாட்களில் சிந்து திரு சில்வாவுடன் நெருங்கிப்பழகி அவரைப்பற்றி அறிவதுபோல் சித்ரா பற்றிய விபரங்களைச் சேகரித்தாள் . 'சாண் ஏற முழம் சறுக்குவது போல அவர் கூறும் சில விபரங்களைக் கொண்டு இது என்னைப் பெற்றவள் தான் என்று தீர்மானித்தாலும் வேறு சில எதிர்மாறாக இருந்தன. ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியாமல் தவித்தவள் முடிவில் ஒரு துப்பறியும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு மேலும் விபரங்கள் சேகரித்துத் தருமாறு பணித்தாள். அவர்கள் கமார் ஒரு மாதத்தில் திகதிவாரியாக எல்லா விபரங்களுடன் சித்ராவின் ஒரு புகைப்படமும் இணைத்திருந்தனர். அவை சந்தேகமற சித்ரா அவள் அன்னையே என்று தெளிவுபடுத்தினது. அன்று சிந்து ஓர் இனம் புரியாத உணர்ச்சிக்குள்ளாகியிருந்தாள். 'எனக்கு ஏன் இந்த நிலை? தாயிருந்தும் இல்லாதவளாக ஏன் ஆக்கப்பட்டேன்? என்று வருந்தினாள். இருப்பினும் அவளுக்கு மட்டில்லா மகிழ்ச்சி 'என் அம்மாவைக்கண்டுபிடித்துவிட்டேன் என்று எங்காவது போய் நின்று சத்தமாகக் கத்தவேண்டும் போல் இருந்தது. ஆனால் தந்தை அதை நிச்சயம் வரவேற்கமாட்டார் என்பதாலி அனைத்தையும் இரகசியமாகவே வைத்துக் கொண்டாள்.
அவளுக்குக் கிடைத்த தகவல்களின்படி அவள் அன்னை இபபோது டாக்டர் சித்ரா விஸ்வநாதன். தாவரவியலில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தாள். இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதம விஞ்ஞான ஆராய்வாளராகப் பணிபுரிகின்றார் என்றிருந்தது. சிந்துவுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படித் தனக்கும் அதே துறையில் ஆர்வம் உண்டாயிற்று என்று. அதுதான் தாய்
30

ஐப்பசி 1996
asasiapu
மகளுக்கிடையேயுள்ள பந்தம் என்று நினைத்தாள். தன் தாயை நினைத்துச் சிந்து மிகவும் பெருமை கொண்டாள். படிப்பறிவு போதாதென்று அவள் தந்தை விலக்கியதாகப் சில வருடங்களுக்கு முன்னர் அறிந்து பச்சாதாபப்பட்டவள் இன்று எண் அம்மா ஒரு 'கலாநிதி எனப் பெருமிதங்கொண்டாள்.
குழந்தையையும் கணவனையும் பிரிந்து.
துவண்டு போகாமல் படித்து டாக்டர் பட்டம் பெற்றீர்களே அம்மா என்று மனதாரப் பாராட்டினாள். அவனது ஒரு மனம் தன் அன்னையின் பெருமைகளைத் தந்தையிடம் சொல் என்றது ஆனால் எதற்கும் காலம் வரட்டும் இப்போது வேண்டாம் முதலில் அணினையைப் போய்ப் பார்க்க வேண்டுமெனத்தீர்மானித்து அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டாள்.
அதிர்ஷ்டம் அவள் பக்கம் வேலை செய்தது எனலாம். அன்று அவளைப்பார்த்த திரு சில்வா 'சிந்து உங்களுக்கு இலங்கைக்குப் போக விருப்பமா? தனித்துப் போவதற்கு உங்கள்
பெற்றோர் அனுமதிப்பார்களா?" என்றார். அவளுக்கு ஒரே ஆச்சர்யம் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது.
இருப்பினும் தன் உணர்ச்சிகளை வெகு பிரயத்தனப்பட்டு மறைத்தவள் 'எனக்குப் போவதில் ஒன்றும் பிரச்சனையில்லை ஆனால் ஏன், எதற்கு அங்கு போகவேண்டும்? என்றாள்.
நாணி அவுஸ்திரேலியாவில் தேயிலை பயிரிடலாமா? என்று ஒர் ஆராய்ச்சியை மேற்கொணடிருக்கிணி றேன அதற்கு இலங்கையில் சில தகவல்கள் சேகரிக்க வேண்டியிருக்கின்றது. எனக்கு இப்போது குடும்பத்தைவிட்டுப் போகமுடியாது அது தான் உங்களை அனுப்பலாம் என நினைத்தேன் முடியுமா? என்றார்.
நிச்சயமாக முடியும் திரு சில்வா எப்போ போகவேணடும்? என்றாள் மிகவும் மகிழ்ச்சியுடன். அடுத்த மாதம் மட்டில் போகவேணி டிவருமி நாணி எலி லா ஆயத்தங்களும் செய்தபின் சொல்கின்றேன் என்றார். சிந்து அன்று ஆகாயத்தில் பறந்தாள். நடப்பவை எல்லாம் அதிசயமாக இருந்தது. என்ன ஏதாவது கடவுள் செயலா? அம்மா
எனக்காகப் பிரார்த்திக்கின்றாரா என்று சிந்தித்தாள்.
அம்மா
எனத் தனக்குள்
‘பூர்வாங்க ஆயத்தங்கள் யாவும்முடிந்த பின்னரே
தந்தையிடம் சொன்னாள் . அவர் இப்போது அங்கு எதற்குப் போகின்றாய்? தனித்துப் போவதெல்லாம் நல்லதல்ல நான் இதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று சத்தம் போட்டார். சிந்து இது ஒரு அரிய வாய்ப்பு நான் போக வேண்டுமெனச் சொல்லி அவரை ஒருவாறு
"சம்மதிக்கச் செய்தாள்.
அங்கு யாரிடம் போகின்றரய் என்றதற்கு மிகவும் பெருமையாகக் கலாநிதி செல்வி சித்ரா விஸ்வநாதன் எனக்கூறித் தந்தையை மிகவும் ஆவலுடன் பார்த்தாள். அவரும் சிந்தனை வசப்பட்டவராக என்ன பெயர் சொன்னாய் என்றார். அன்னையின் பெயரை மீண்டும் மகிழ்வுடன் கூறியவள் ஏன் கேட்டீர்கள் அப்பா? உங்களுக்கு அவங்களைத் தெரியுமா? என்றாள். ஒன்றுமில்லைச் கம்மா கேட்டேன் எனச் சொல்லிப் போய்விட்டார்.
சிந்து தனக்குள் மகிழ்ந்தாள் பின்னர் அப்பா ஞாபகம் வந்ததா? அம்மாவாக இருக்கலாமா என்று சந்தேகமா? அல்லது படிப்பறிவு இல்லாதவள் என்று தங்களால் நிராகரிக்கப்பட்டவள் எங்கே கலாநிதியாவது என்ற இறுமாப்பா? சந்தேகமேயில்லாமல் அது அம்மாதான் எல்லாம் வந்தபின் சொல்கின்றேன்
சொல்லிக்கொண்டாள்.
சிந்து தன் தாயைப் பார்க்கப்போகும் நாளை மிகவும் ஆவலுடண் எதிர்நோக்கியிருந்தாள். திரு
சில்வாவுக்கு நன்றி தெரிவித்தவள் தன் கதையைக்
கூறி நாணி 'அம்மாவை ஆச்சரியப்படுத்த" விரும்புகின்றேன் தயவுசெய்து நீங்கள் இப்போ ஒன்றும் தெரிவிக்க வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள்.
அது வசந்த காலம் இலங்கையின் ஓர் ககவாசஸ்தலம் என்று அழைக்கப்படும் , தலவாக்கொல்லை நகரின் வீதியோரத்து மரங்களெல்லாம் பூத்துக்குலுங்கின. அதிலிருந்து வீசிய மந்தமாருதம் உல்லாசப்பயணிகளை வா! வா என்று அழைத்தது. புள்ளினங்கள் மகிழ்வுடன் பாடிப்பறந்தன. ஆனால் அன்று காலையில் கண்விழித்து இவற்றையெல்லாம் ஜண்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த சித்ராவின் உள்ளத்தில் மட்டும் ஓர் இனம் புரியாத உணர்ச்சி கவலையும் மகிழ்வுமான ஓர் மனோநிலை என்ன
2 1

Page 18
கலப்பை giાLાકી 1996
இது என்று யோசித்துக்கொண்டே ஏமாற்றத்தையும் இ மனவேதனையையும் கைக்கெட் டும் தொலைவில் இருந்த கொடுக்கப்போகின்றாயா? என்பது தான். அந்த ஒரு கலண்டரைப் பார்த்தாள் கவலைக்கான நம்பிக்கை ஒளியிலேயே உயிரைத் தாங்கிக் கொண்டு
காரணம் புரிந்தது கமார் பதினேழு வருடங்களுக்கு முன்னர் அதே நாள் தான் அவள் தன் நான்கு வயது மகளைத் தான் எல்லாமே என்று நினைத்திருந்த தணி கணவனிடம் பறிகொடுத்தாள். இன்றும் அவள் நெஞ்சம் பதறியது. அன்றே அவள் ஓர் நடைப்பிணமானாள். அந்த நாளை அவள் கவனத்தில் கொள்ளாவிட்டாலும் அவள் அடிமணம் நினைவுபடுத்தும் .
அச்சமயத்தில் அவள் அருமைத் தோழி பாரதி மட்டும் இல்லையானால் சித்ராவைப் புதைத்த இடத்தில் இப்போ புல் என்ன பெரிய மரங்களே வானளாவ வளர்ந்திருக்கும் எனலாம். எச்சமயத்திலும் பாரதியை நினைத்தால் சித்ராவுக்கு நெஞ்சமெல்லாம் நன்றியால் நிறையும் அவனைக் கேட்காமலேயே கண்கள்
குளமாகும். நட்புக்கு இலக்கணம் ஒரு பாரதி
என்றால் மிகையாகாது.
s sú si சித்ராவை விவாகரத்தும் பண்ணிவிட்டான் குழந்தையையும் கொண்டு அவுஸ்திரேலியா போய்விட்டாண் அறிந்தவுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவள் தனது வேலைகள் யாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுப் போனாள். தாயில்லாத சித்ராவை அச்சமயத்தில் ஒரு தாய் போல இருந்து கவனித்தாள். அவள் மனம் சிறிது தேறியதும், இங்கிருந்தால் உனக்குக் கஷ்டம் சில நாட்களுக்கு என்னுடன் வா' என்று பேராதனைக்குக் கூட்டிச் சென்றாள். வற்புறுத்திக் கஷ்டப்படுத்திப் பல தடவைகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து சாப்பிட வைத்தாள். உயிரே போனபின் இந்த உடம்பு எதற்குப் பாரதி என்னை விடேன் . என்று எத்தனை தடவைகள் கெஞ்சியிருப்பாள்.
அப்போதெல்லாம் பாரதி சித்ராவிடம் பாவித்த ஒரே ஒரு அஸ்திரம் என்றாவது உன் பெண்
எல்லாம் தெரிந்து உன்னைப் பார்க்க வந்தால் அப்போ நீ இல்லாவிட்டால் அவள் மணம் என்ன பாடுபடும் சிந்தித்துப்பார் சித்ரா வாழ்நாட் பூராவும் அவளுக்கு அப்படியான ஒர்
வாழ்ந்தாள். பாரதி ஆட்டியபடியெல்லாம் ஆடினாள்.
உயிர் இருக்க வேண்டுமேயெண்பதற்காக உண்டாள், உடுத்தினாள், உறங்கினாள் எனலாம். அவற்றைவிட அவளுக்கென்று எத்தகைய ஆசைகளும் இல்லை.
பழைய சிந்தனைகளில் மூழ்கியிருந்தவள் திடுக்கிட்டு நேரத்தைப்பார்த்தாள் எட்டு மணியாகிவிட்டது. மனம் முரண்டு பிடித்தாறும் கடமை முந்திக்கொண்டது. 檔 நாள் அவனது முகாமை நிர்வாகஸ்தர் (Managing Director) so Quiacrooric அவர்கள் அன்று யாரோ அவுஸ்திரேலியாவிலிருந்து தேயிலை வளர்ப்புப்பற்றிய விபரங்கள் சேகரிப்பதற்கு வருவதாகச் சொல்லியிருந்தார். நினைத்த போது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய செடி பற்றி இப்போது அவர்களுக்கே நாம் விபரம் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்று ஒரு வகையில் பெருமையாகவும் இருந்தது.
எழுந்து குளித்து அலுவலகம் சென்றாள். காலை
தட்டிய பெர்னாண்டோ அவள் வரச்சொன்னதும் திறந்து போனார். அவர் பின்னால் வந்த பெண்ணைப் பார்த்ததுமே சித்ராவின் உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. கால்கள் துவண்டு நெஞ்சம் உருகியது, கணிகள் பணித்தன. காலமெல்லாம் தன்னிரு கணிகளுக்குள்ளும் வைத்துப் போற்றிய உருவம் இன்று தன்னெதிரே நிற்பதைக்கண்டாள். நிழலா? நிஜமா? என்று தடுமாறியவள் தன்னை ஒரு நிலைக்குக் கொண்டுவர மிகவும் பிரயத்தனப்பட்டாள். நல்ல வேனையாகப் பெணர்ண்டோ அவள் நிலையைக் கவனிக்கவில்லை அவர் சிந்துவை அறிமுகம் செய்வதிலேயே குறியாக இருந்தார். ஆனால் சிந்துவுக்குத் துல்லியமாகப் புரிந்தது அம்மாவின் அன்பு தன்னை அடையாளம் கண்டுகொண்டது என்று. அவளுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
பெர்னாண்டோ மிகவும் குதூகலமாகச் சித்ரா பாருங்கள் என்ன ஆச்சரியம் இவள் உங்களை மாதிரியே இல்லை என்றார். சித்ராவுக்கோ ஒன்றும் புரியவில்லை இவர் என்ன சொல்கின்றார்?
அருத்த இதழில் முந்றும் *R
-

giuકી 1996 கலப்பை
கலப்பை சிசால் நிரப்பல் போட்டி - இல9 கலப்பை-சொல் நிரப்பல் போட்டியில் வாசகர்கள் காட்டிவரும் ஆர்வத்தைப் பாராட்டுகின்றோம். முன்புபோலவே இப்போட்டியிலும் கலப்பை உறுப்பினர்கள், குடும்பத்தினர் கலந்து கொள்ள முடியாது என்பதை கூறிவைக்க விரும்புகிறோம். அடைக்கப்பட்ட சதுரங்கள் - -10, 15, 23, 24, 25, 26, 30, 34.
இடமிருந்து வலம்
l. கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகன் இங்குள்ளான்
7. முருகப் பெருமானுக்கு இது பன்னிரண்டு உள்ளன
13. வேள்வியின்போது மிருகங்களை இது கொடுப்பார்கள்.
இங்கு வலம் இடமாக மாறி உள்ளது
18. மனிதனாகப் பிறந்தவர்கள் இது செய்யவேண்டும்
19. கணவன் இழந்தவள் இங்குள்ளாள்
27. பெண்கள் பாவிப்பது, இங்கே குழம்பியுள்ளது
3. காட்டு விலங்கொன்று இங்குள்ளது.
35 பெண்களுக்கு ஒப்பிடும் விலங்கு இங்கு மாறியுள்ளது
மேலிருந்து கீழ்
1. இராமரின் பாதம் பட்டுப் பெண்ணானவள் 2. அறுப்பதற்கு உதவும் ஓர் ஆயுதம் குழம்பியுள்ளது
5. ஒருமையின் எதிர்ச்சொல் குழம்பியுள்ளது
6. இலங்கை மக்களுக்குத் தற்போது தேவையான ஒன்று குழம்பிவிட்டது 16. கடலிலிருந்து பெறப்படும் அசைவ உணவு
2. மனிதன் இறந்த பின்பு தேவைப்படும் பொருள் 29. மனிதனுக்கு இருக்கும் மூன்று ஆசைகளில் ஒன்று இங்குள்ளது
வாசகர்களே! இப்போட்டியில்பங்கு பற்றுவதற்கு நடுப்பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும் சொல் நிரப்பல் போட்டிக்கான சதுரங்களை உபயோகிக்கலாம். சரியாக அனுப்புவோரில் இரு அதிட்டசாலிகளின் விபரமும், சரியான விடையும் அடுத்த கலப்பை இதழில் பிரசுரிக்கப்படும். அதிட்டசாலிகளுக்கு குமார் எண்டபிரைசஸ் வழங்கும் இசை Loop விடியோ நாடாவும், தமிழ் சினிமாப் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டும் (CD) முறையே முதலாம், இரண்டாம் பரிசுகளாக வழங்கப்படும். வெளிநாட்டு வாசகர்களாக இருப்பின் ფ2(უნ வருடத்திற்குரிய கலப்பை இதழ்கள் இலவசமாக அனுப்பிவைக்கப்படும். விடைகளை 142.96 இற்கு முன்பாக கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஒருவர் எத்தனை விடைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
33

Page 19
δρύύaου
giILાહી 1996
பாரதி பராசக்தியிடம் விண்ணப்பம் செய்தது போல் - ՝ காணி நிலம் ஒன்று எனக்கு யாழ்ப்பாணத்தில் இருந்தது. அதில் ஒர் அழகான வீடு இருந்தது. பத்தினிப் பெண் இருந்தாள். கொஞ்சிக் குலவிடக் குழந்தைகள் இருந்தன. பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் அங்கே இருந்தன.
அமைதியான ஆனந்தமான அர்த்தபுஷ்டியான வாழ்க்கை. எண்பதுகளில் இனக்கலவரம் வெடித்தது. இன மத சாதி அந்தஸ்து பேதங்களைக் கடந்து அது எல்லோரையும் பாதித்தது. இது தான் சோசலிசம் என்பது போல்,
அமைதி குலைந்தது. ஆனந்தம் விடைபெற்றுப் போயிற்று. அர்த்தபுஷ்டியா? அப்படியென்றால் என்ன? இனக் கலவரம் எங்கள் மீது ஆழமான வடுவைப் பதித்துச் சென்றது.
அது 1987ம் ஆண்டு பங்குனி மாதம் 29ம் நாள். காலை மணி 8.40. திடீரென்று போர் விமானங்கள் காரணம் எதுவுமின்றி எங்கள் வீட்டை இலக்கு வைத்துத் தாக்கின.
ஏகப்பட்ட குண்டுகள். ஒவ்வொன்றும் 55கிலோ
கொண்டவை. ஒவ்வொரு வீச்சிலும் இரு குண்டுகள் பொழியப்பட்டன. முதற் குண்டு
ஜனுன தேஜ்தித்தி
ஐமூன்றே:வயது நிரம்பிய ஐமூத்தவுளிடம்
அதன் பின் சரமாரியான குண்டுத் தாக்குதல்கள்.
இருபது நிமிட நேர அகரத்தனமான தாக்குதலின் பயங்கர அனுபவம் முடிந்து வெளியே வந்து பார்த்த போது - வீடு முழுவதும் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டு உருக்குலைந்து போய் இருந்தது. வீட்டினுள் இருந்த பொருட்கள் அனைத்தும் அடையாளம் தெரியாதபடி நொறுங்கிப்போயிருந்தன. வீட்டின் மேற் கூரைகள் கீழே விழுந்து கிடந்தன. கவர்கள் வெடித்துப் பொருமியிருந்தன.
எல்லாமே சீர்குலைந்து போயிருந்தாலும் இரு பொருட்களை மட்டும் ஒரு சிறு கீறல்கூட இல்லாமல் மீட்கமுடிந்தது. ஆச்சரியம் நிறைந்த அதிசயம். அவை தம்புராவும் மிருதங்கமும். ஆமாம் நாதத்துக்கு என்றும் அழிவில்லையென அவை உணர்த்தினவோ
எவரும் காயம் கூட இன்றித் தப்பினோம். நல்லூர் முருகனின் அருளின்றி வேறென்ன காரணம் கூற.
வயது வந்த எங்களுக்கு அதிர்ச்சிதான். ஆனால் எங்கள் குழந்தைகளின் மனோநிலை?
ஏற்பட்டி பாதிப்புகள்.இ ர வீட்ட்ை ஆமி
34
 
 

கலப்பை
என்ரை வீடு தெரலைந்து : , :::.:.:.........:.:.:::جحج:^x جب "அப்பா:ஒரு புது வீடு கட்டப் போற் 'எனக்கு ஒரு கவரும் கட்டிலும்
அப்பாட்டைச் சொல்லி வாங்கவேனும்
நித்திரை கொள்ளாவிடில் கவரைப் பார்த்துக் கொண்டு படு என்று நான் சொல்வது
வழககம ' ' ' ' '.' . . .''...'...' ...'...',' இரவு வேளைகளில் . துயில் கொள்ள. வேண்டிய தருணங்களில் . ஏதாவது வாகனத்தின் சத்தம் கேட்டாலும் .
அதைச் சொல்ல இயலாமல் வெதும்பி இளையவளும் நித்திரை கொள்ள முடியாமல் விழித்து எழுந்து . அழுது . பின் சில நிமிடங்களில் மீண்டும் துயில் கொண்டு . பின் உடன் விழித்து . எழுந்து . அழுது
அதுவும் ஓர் அனுபவம்.
வேலியே பயிரை மேயும் போது யார் தான் என்ன செய்ய முடியும்? தாங்க முடியாத சோகச் சுமைகள் . யாரை நோவது . எவருக்கு எடுத்துரைப்பது .
இந்தியப் படையும் இலங்கைக்கு வந்தது.சமாதானத்தின் நம்பிக்கைக்கீற்றுகள் ஒளிரத்தொடங்கின. 'எங்களுக்கு ஒரு வீடு வேண்டும அதுவே எங்கள் தாரக மந்திரம் ஆயிற்று.
இதுவரை காலத்து உழைப்பையெல்லாம் கொட்டி வீடு கட்டும் ஆயத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கொங்கிரீட் (concrete) கற்கள் அரியப்பட்டன. கற்கள் பறிக்கப்பட்டன. மணல் குவிக்கப்பட்டது. வேப்ப மரங்கள் பனை மரங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. ஒடுகள் வாங்கப்பட்டன. எல்லாம் முடிந்து வீடு கட்ட ஆரம்பித்த தருணத்தில் . இந்தியப் படைகள் கலைக்கப்பட்டன. மீண்டும் இனக் கலவரம் தாண்டவமாடத் தொடங்கியது. சமாதானம் என்ன வானவில்லா.? அழகு
காட்டிவிட்டு மறைகின்றதே!
மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோட
ஆமிக்காரன் வாறான் என்று மூத்தவளும்
ல் மரங்கள் ஒடுகள்
க்கன.
கொங்கிர் கற்கள் ம எல்லாவற்றுக்கும் கால்கள் முனைத்த சொல்லியும் சொல்லாமலும் இறக்கை கட்டிக்கொண்டு ஒட்த் தொட்ங்கின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சப்பட்டது.அ
காலத்தின் கட்டாயம். மீறமுடியாத நிர்ப்பந்தம். இயலாமையை நினைக்க நினைக்க
யும் பீறிட்டுக்கொண்டு
எங்களுக்குச் சொந்த వీణ வேண்டும் என்பது
வெறுங் கனவாய் கற்பன்ையாய் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டது. வீட்டுக்குப் பதில் கொட்டில் தான் போட முடிந்தது. வருடங்கள் உருண்டோடின. இனக் கலவரம் உக்கிரமடைந்தது. யாழ் நகரை நோக்கி இராணுவம் முன்னேறத் தொடங்கியது. அதைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற உக்கிரத்தில் எங்கணும் குண்டு மழை பொழிந்தது. எங்கும் அவலத்தின் கோரத்தாண்டவம்.
1995ம் ஆண்டு ஐப்பசி மாதம் 30ம் நாள். அன்பார்ந்த தமிழீழ மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு அகலுமாறு அசரீரி அறிவுறுத்தியது. கைதடிப் பாலத்தினூடாக லட்சோப லட்சம் மக்கள் உடமைகள் எல்லாவற்றையும் கைவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஊர்ந்து செல்லலாயினர். நாங்களும் தான்.
மறுபடியும் காலத்தின் கட்டாயம். மறுக்க முடியாத நிர்ப்பந்தம். மறுபடியும் சோகச் சுமைகள். அழுதழுது கண்ணிர் வற்றிவிட்டது. குடா நாட்டு மக்கள் அனைவரையும் தாங்கவொண்ணாது தென்மாராட்சி தவித்தது.
வடமாகாணத்தை விட்டு வெளியேறத் தகைமையுடையவர்கள் அங்கிருந்து நீங்கினார்கள். நாங்கள் தகைமையுடையவர்கள். தலை நகரம் நோக்கி நகர்ந்தோம். தலை நகரம் என்ன எங்களுக்குத் தாய் வீடா? அங்கும் மாற்றாந் தாய் மனப்பாண்மை தானே! எங்கு போவது? யார் தான் கைநீட்டி ஆதரவு
35

Page 20
கலப்பை ஐப்பசி 1996
தருவார்கள்? என்பவன் காலத்தின் கண்ணாடி தானே.
கங்காரு நாடு கருணை காட்டியது. கடல் தமிழனின் தலைவிதி. அகதியாய்
கடந்தோம். அலைகின்றான். ஆண்டவனே உனக்கு அனந்த கோடி நினைக்க நினைக்க நெஞ்சம் விம்முகின்றது. நமஸ்காரம் அன்று எங்களுக்கு வீடு இருந்தது. நாடும் திரைகடலோடியும் திரவியம் தேடு என்று இருந்தது. அன்று சொன்னாள் ஒளவைப் பாட்டி, அவள் இன்று இரண்டுமே இல்லை. இன்றிருந்தால் திரைகடலோடியும் புகலிடம் யாரை நோவது . ? எவரிடத்தில் நாடு என்றிருப்பாள். ஏனென்றால் கவிஞன் எடுத்துரைப்பது - ?
As I sit here doing my school homework,my mind begins to wander. Where would
I rather be right now? I think to myself...I would rather be on
a deserted tropical island in the middle of the Indian Ocean. An island by the name of Sri Lanka.
I would love to sit or lie in the warm sand and let the waves splash over my legs. would sit near the water and write things in the sand and then let the water wash it away.
I would climb the tallest trees and pick mangoes and coconuts from the trees and eat them. I can already taste that sweet fruit in my mouth.
After my meal I would explore the island, picking exotic flowers and braiding them together so I can wear a crown of beautiful exotic flowers in my hair. It would be a little hotter in this part of the day so I would go for a swim in the sparkling blue sea. The dolphins and whales and beautiful fish would swim with me.
But this is all just a wish because I am stuck here doing my homework. But I can still dream can't I?
Shabarika Ajithkumar, (12 years old)
36
 

ஐப்பசி 1996 கலப்பை
சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் கமாக “பல்கலைக்கழக
நிதியுதவித்திட்டம்’ (Unifund Project) அதன் நிதி சேகரிப்பின் ஒரு முயற்சியாக எமது
தாயகத்தின் நினைவுகளைச் சித்தரிக்கும் நத்தார் புதுவருட வாழ்த்து மட்லிகளை வெளிட்டுள்ளார்கள். இவை ஆங்கிலத்திலும் தமிழிலும், மற்றும் எழுத்துக்களற்ற வெறுமையான மடல்களாக அச்சடிக்கப்பட்டுள்ளன. இவ்விற்பனையில் சேகரிக்கப்படும் நிதி இலங்கையின் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இம்மடல்களை வாங்குவதன் மூலம் அல்லல்படும் எமது இதமிழ்சகோதரர்களுக்கு உதவி செய்தவர்களாவீர்கள். , , - . . .
த வாழ்த்து மடல்களை சிட்னியிலுள்ள தமிழ் வர்த்தகநிலையங்களிலும்Unifin அங்கத்தினர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம். விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
லாநிதி பூதேவி:சிறீஸ்
Unifund 96áluú GLIL'iq
3 (வயது) பிரிவுகளில் தகுதியுள்ள போட்டியாளர்களிருந்து தரமான ஒவியங்கள், அடுத்த ஆண்டுக்குரிய Unifund வாழ்த்து மடல்களுக்கு எதிர்பார்கின்றோம். வயது பிரிவுகள் 7 வயதுக்கு கீழ், 8-11 வயதுக்குட்பட்டோர், 12-15 வயதுக்குட்பட்டோர். உலகத் தமிழர்களால் நத்தார்-புதுவருட பண்டிகை கொண்டாடப்படுவதை மையயமாகக் கொண்டு இப் போட்டி நடைபெற உள்ளன. A4 தாளில் ஒவியங்கள் வரையப்படுவது வரவேற்கப்படும். வர்ணங்கள் உங்கள் விருப்பப்படியே.
நத்தார்.புதுவருட தினங்களைச் சித்தரிப்பதாக இருக்கும், ஒவியங்களில் சிறந்ததெனக் கருதப்படும். Unifundநத்தார் புதுவருட வாழ்த்து மடலுக்குத் தெரிவு செய்யப்படும்.
பெற்றோர்களின் மேற்பார்வை இப்போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ஒவியத்துக்கான மூலக் கருத்தும், எண்ணமும் போட்டியாளர்களின் உரித்தாக இருக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் Unifundகலைக்கதம்ப நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படுவார்கள். போட்டிக்கான உங்கள் ஒவியங்களை, 10-1-1997இற்கு முன் எமக்குக் கிடைக்கக்கூடியதாக பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (ps, 6.5: Unifund projects - SUTS, PO Box 40, Wentworth Building, University of Sydney, NSW 2006.
இப்போட்டிக்கான விதிமுறைகள் அடங்கிய விபரக்கொத்து தேவைப்படுவோர் டாக்டர் வாசுகி மயில்வாகனத்துடன் தொடர்பு கொள்ளவும். 9736 1806 (O) &9642 3839 (H)
37

Page 21
ஐப்பசி 1996
எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. அந்தச் செருப்புக் கடையில் இந்த ஷைைவ வாங்கி இன்னும் முழுசாகப் பதினைந்து நிமிஷங்கள்கூட ஆகவில்லை. இத்தனை விபரீதங்கள் நடந்து விட்டன.
வேணி டாமி - எனறு அழாத குறையாககக் கெஞ்சினேன். -என்னுடைய நிலைமைக்கு ஒரு ஷஉவுக்கு ஆயிரம் ரூபாய் கட்டுபடி ஆகாது.- என்று கெஞ்சினேன். விடவில்லையே என் நண்பர்.
'எல்லாம் கட்டும் சார்!
வெளிநாடு
என்று வற்புறுத்தினார்.
'ஆயிரம் ரூபாய் சார்பரிதாபமாக,
என்றேண்
'எனக்காகத்தான் இந்த -ஸ்பெஷல் ரேட்
இன்னொருவனாய் இருந்திருந்தால் இரண்டு மடங்கு கறந்திருப்பாணி ' என்ற நண்பர் விடாக்கணிடனாய் இருந்துவிட்டார். பணத்தை அழுதுவிட்டு ஷ ை ேவ ச டு வெளியில் வந்தோம். வேளை சரியில்லை என்று உள்ளுணர்வு சொல்லியது.
சும்மா காலில் போட்டு நடந்து பாருங்கள் சார் பொருத்தமாக இல்லையென்றால் திருப்பிவிட்டு வேறு எடுத்துக் கொள்ளலாம்- என்றார் நண்பர்.
அதெப்படி சார் தெருவில் போட்டு நடந்தபிறகு திருப்பமுடியும்?- என்று திகைத்துக் கேட்டேன் நான்.
அதற்கு நான் ஆச்சு நீங்க போட்டுப் பாருங்க!- என்று வற்புறுத்தினார் அவர்.
சென்னையில் அந்தப் பகுதியில்
மாடலாம். ஒட்டகத்தின் தோலாம். சுகமாகத்தான் இருந்தது. பழைய செருப்பைக் கைப்பையில் அடக்கம் செய்துவிட்டுத் தொடர்ந்து நடந்தேன். மெள்ள நடந்தோம் சாலையின் திருப்பத்தில் மெயின் ரோட் சந்திப்பில் இருந்தது அந்த நடைபாதைக் கோயில்.
நண்பர் பரபரப்போடு -சார் அங்காள பரமேஸ்வரி கோயில், அர்ச்சனை நடக்கிறது. நல்ல சகுனம். ஒரு நிமிஷம் நின்று தரிசித்துவிட்டுப் போய்விடுவோம் என்றார். நடையாதையை ஆக்ரமித்து நான்கு தூண்களை நட்டுத் தகரக் கூடையைப் போட்ட தனியார் நிறுவனம் அது. வேண்டா வெறுப்பாக ஷைைவக் கழற்றி வைத்துவிட்டு, கோயிலி என்ற அந்த சதுரத்திற்குள் காலை வைத்தேன். அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. அரைவீசம் மனத்தை ஆம்பாளிடத்திலும் மிச்சத்தை அவிழ்த்து வைத்த ஷஅவினிடத்திலும் வைத்துத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு நின்றேன். அரை நிமிஷம் தானிருக்கும். கர்ப்பூர ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு திரும்பினால் ஷஉவைக் காணோம்
திக்கித் திணறி, திகைத்துத் தடுமாறி, சுற்றுமுற்றும் பார்த்தால் ஒரு இளைத்த இளைஞன் அதை மாட்டிக் கொண்டு வேகமாக நடக்கிறான். . .
டேய் டேய்தம்பிதம்பி ஷஷை-ை என்று அலறியவாறு பின் தொடர்ந்து ஓடினேன்.
அவனி என னைத் திருமி பிப் பர்த்துவிட்டுப் பீதியடைந்து, சாலையின் குறுக்கே பாய்ந்து ஓடத் தொடங்கினான்.
கண் சிமிட்டுகிற நேரம். அகர வேகத்தில் வந்த யமஹா- ஒன்று அவன்மேல் படிரென்று மோதி, தடுமாறிச் சுழன்று, நிதானித்து நிமிர்ந்து ஒருகணமும் நிற்காமல் ஓடி மறைந்தது. அரையிருட்டு நேரத்தில் அதன்மேல் இருந்தவர்கள் யார் என்றுகூடத் தெரியவில்லை.
மோதப்பட்ட இளைஞன் நாலடி உயரத்தில் ஆறடி தூரம் பறந்து எதிர் வாடையில் போய்
 
 

giILાહી 1996
கலப்பை
மல்லாக்க வீழ்ந்தான். ஒரே ஒருமுறை அவன் தலை எழுமீபியது. பிறகு விழுந்தது விழுந்ததுதான்.
சரசர- என்று கூட்டம் சேர்ந்தது. நானும் நண்பரும் ஒடினோம். இளைஞன் பரிதாபமாகக் கிடந்தான். மூக்கின்வழியாக இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கழுத்து இயல்பிற்கு மாறாகத் திருப்பிக் கொண்டிருந்தது. கண்கள் ஏறிச் சொருகி வெள்ளைவிழி மட்டும் தெரிந்தது. அவன் கட்டியிருந்த வேட்டி தர்தாரகக் கிழிந்திருந்தது. இத்தனைக்கும் அந்தப் புது ஷஉ அவனி காலைக் கவி விகி கொண்டிருந்தது ஒரு அதிசயம். சுற்றி நின்ற கும்பல் கழுகுகள் போல வளைய வளைய வந்தது.
பூட்ட கேஸுதான் போலே கீது- என்றான் ஒருவன்.
மூக்காலே ரவையூண்டு ரத்தம் ஒயுகுது என்றான் இன்னொருவன்.
அத்தான் சொல்லுது ஆள் குளோளப்னு, உள்ளே சாடா புட்டுகினு போயிருக்கும்" என்று தீர்ப்பு வழங்கினான் முதலில் பேசியவன்.
தூக்குங்கய்யா என்றான் ஒரு அப்பாவி. 'ஏன்? மாட்டிகினு முளிக்கவா? போடா அப்பாலே' என்று ஒதுக்கினான் ஒரு அனுபவளப்தன். இப்படி சலசலப்பு வளர்ந்து கொண்டிருந்தது.
நண்பர் என் கையைப் பற்றி -வாங்க சார் போயிடலாம்- என்று பரபரத்தார்.
'ஷஉசார்' என்றேன் நான் பரிதாபமாக, ‘போய்க் கழட்டப் போநீரோ. போய்த் தொலைகிறது. வாங்க சார் போலீஸ் வந்தால் அவ்வளவுதான்!” என்றார் நண்பர்.
அவர் வாக்கில் சனி இருந்ததோ என்று சந்தேகிக்கும்படி -சர்-ரென்று வந்து நின்றது போலீஸ் ஜீப் ஒன்று. மிடுக்காக இறங்கி நடந்து வந்தார் இன்ஸ்பெக்டர் ஒருவர்.
'எண்ணய்யா கலாட்டா இங்கே! என்றார் அவர் அதிகாரமாக, கூட்டம் உடனே கல்லெறிந்த பாசிபோல் விலகியது. 'ஆக்சிடெண்டு சார் ஆள் காலி போலே கீது மோட்டார்பைக்காலே மோதிப்போட்டுட்டுப் போயே போய்ட்டான் சார்- என்று விவரித்தான் ஒருவன். இன்ஸ்பெக்டர் உட்கார்ந்து இளைஞன் கழுத்தில் கையை வைத்துப் பார்த்தார். ஒன்றுமில்லை. உடனே அவன் சட்டைப் பைகளைச் சோதனை போட்டார். அங்கும் ஒன்றும் இல்லை. என்னய்யா சுத்தமா காலி பண்ணிட்டீங்க போலே
இருக்குது?" என்றார் இன்ஸ்பெக்டர் எழுந்து.
ஐயோ சார் இப்பதானுங்களே ரெண்டு
மினிட்கூட ஆவல்லே! என்றான் ஒருவன்.
நேரம் இருந்திருந்தால் முயற்சி செய்திருப்பான்
போல் இருக்கிறது. இன்ஸ்பெக்டர் கற்றுமுற்றம் பார்த்தார். பொதுவாக, ‘ஏணியா! நடுரோட்லேயா நடந்து
வந்துகிட்டிந்தான் இந்த ஆள்?" என்று கேட்டார். இல்லே சார் ஒரமாத்தான் போய்க்கினு இருந்தான். இந்த சார் கூப்பிடவே நடு ரோட்லே ஓடினான் எண்றான் ஒரு ஆள், என்னைச் சுட்டிக் காட்டியபடி, இன்ஸ்பெக்டர் என்னைத் திரும்பிப் பார்த்து'ஏன் சார் நீங்க அவனைக் கூப்பிட்டீங்க? அவன் உங்களுக்குத் தெரிஞ்சவனா? என்று விசாரித்தார். நான் மென்று விழுங்கியவாறு, இல்லே. . . எனக்கு அவனைத் தெரியாது சார். ஆனா. அவன். வந்து. தொடங்கியதை நாணி முடிக்கும் வரை இன்ஸ்பெக்டர் காத்திருக்கவில்லை. சாலையின் குறுக்கே இறங்கி அங்கே வந்து கொண்டிருந்த ஒரு போலீஸ் வானை நிறுத்தி விட்டார். பின்னர் வேலைகள் துரிதமாக நடந்தன. பக்கத்தில் ஒரு கடையிலிருந்து கோணிப்பை ஒன்றை வாங்கி அந்த இளைஞனை அதில் கிடத்தி, வண்டியில் ஏற்றினார்கள். நீங்களும் ஏறுங்க சார் என்றார் இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து. அதிர்ந்து போன நான் நானா சார்?" என்றேன். எண் அதிர்ச்சியைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ஒரு நமுட்டுச் சிரிப்புடன், "ஒண்ணும் பயப்படாதீங்க சார் ஒரு சின்ன ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கத்தான். வேறே ஒண்ணும் இல்லே. ஒரு ஃபார்மாலிட்டிக்குத்தான் கேஸ் ஒண்ணும் புக் ஆவாது. கம்மா வாங்கஎன்றார். தயங்கிய நான் திரும்பிப் பார்த்தால் நண்பரைக் காணோம். எப்போது நழுவினாரோ. குனிந்த தலையுடன் சென்று வானில் போய் ஏறினேன். ஹாஸ்பிடல் காஷஉவாலிட்டியில் நேரே மாச் சுவரிக்குக் கொணடு போகச் சொல்லிவிட்டார்கள். நான் அங்கேயே உட்கார்ந்து நடந்ததை நாலே வரிகளில் ஒரு ஸ்டேட்மெண்டடாக எழுதி எடுத்துக்கொண்டு போய், சவக்கிடங்குக்கு முன்னால் நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தேன். அவர் அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுப் புருவத்தை உயர்த்தி -நீ ங்கள் போகலாம்
39

Page 22
கலப்பை
ஐப்பசி 1996
d 6Topff.
நான் மென்று விழுங்கியவாறு 'சர்' என்றேன். -என்ன?- என்றார் அவர்.
அந்த ஷம் என்னுது என்றேன். 'என்னய்யா சொல்றே நீ?" என்று சீறினார் அவர். இது வரையில் சார் போட்டவர் இப்போது ஏக வசனத்தில் இறங்கிவிட்டார். ஈனஸ்வரத்தில் நான் 'அவன் போட்டிருக்கிறது என்னுடைய ஷ ைசார் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி அரைமணிகூட ஆகவில்லை சர். அதை அவன் திருடிகிட்டு ஓடினதால்தான் சார் நான் அவனைக் கூப்பிட்டேன்! என்றேன். எரிமலையாக வெடித்தார் இன்ஸ்பெக்டர்.
‘ஏணியா உங்களுக்கெலி லாமீ கொஞ்சமாவது இது இருக்காய்யா? ஒரு மனுஷன் செத்துட்டான். நீ கூவினதினாலேதான் அவன் குறுக்கே ஓடி செத்துட்டான். அது கொஞ்சம்கூட உறைக்கல்லே உனக்கு? அவன் காலிலே இருக்கிறது உணி ஷஉண்ணு சொல்லிக்கிட்டு, அதைக் கொண்டாண்னு கேட்டுக்கிட்டு நிக்கிறயே, மனுஷனாய்யா நீயெல்லாம்? பொணத்துங் கால்லே இருந்து
அவுத்துப் போட்டுக்கப் போறயோ நீ? போய்யா என்றார். எண் சாணும் ஒரு சாணாகக் குறுகி மெள்ள நகர்ந்தேன் நான். -வாஸ்தவம் தானே- என்றது உள்மனம். செருப்பாலே அடித்தாலும் தகும்- என்றது அறிவு. குமட்டிக் கொண்டு வந்தது. வாயில் வந்த கசப்பை மாற்றிக்கொள்ள அருகில் இருந்த கடையில் பீடா ஒன்றை வாங்கிப் பொட்டுக் கொண்டேன். மனம் இருண்டு கிடந்தது. ஏதோ சதி தமி கேட்டுத் திருமி பிப் பார்த்தால்இண்ஸ்பெக்டர் வேகமாக வந்து ஜீப்பில் ஏறுவது கண்ணில் பட்டது. அது என்ன . . . . அவர் கையில் . . . ே அரை குறையாக நியூஸ் பேப்பரில் கற்றப்பட்டு. . . ...?
என் ஷ ைதான்! இனி ஸ்பெக்டரின் -உபதேசதாத்பரியம் - அப்போதுதான் 'கர் என்று எனக்கு உறைத்தது.
தூ என்று டாவை உமிழ்ந்துவிட்டு நடந்தேன்.
40,
 

ஐய்பசி 1996
டாப்ள் பாண்டு ȚII i afirinthiftë SISi
இனிறைய அறிவு வளர்ச்சி நூலி வளர்ச்சி ஆகியனவற்றுள் தந்தையாகவும் தாயாகவும் விளங்குவன காகிதமும் அச்சும்தானிஇதை மறுக்கவோ மறைக்கவோ யாராலும் முடியது' எனற இநத7ய நூலக அறிஞர் திலீலைநாயகத்தினி கூற்று கடதாசியின கனடுபிடிப்புககும் அச்சுக’கலையின வருகைக்கும் சாலப்பொருத்தமானதாகும்.
இது காலவரை எழுத்துக்களை எழுத்தர்கள் மூலப்பிரதியிலிருந்து பிரதியெடுத்தனர்.இது அரும்பெரும் கலையாகக் கருதப்பட்டது. நூல் ஒன்றினை எழுதி முடிப்பதற்குப் பல மாதங்கள் எடுத்தன. பிரதிகள் சிலவாயிருந்தன.வசதி படைத்தோர் மட்டுமே இவற்றினைக் கொள்வனவு செய்து சேமித்து வைக்க முடிந்தது. சமயச் சார்பான நுால்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நுால்கள் தேவாலயங்களிலும் மடாலயங்களிலும் உள்ள சமயாச்சாரியர்களின் பாவனைக் குட்படுத்தப்பட்டு வந்தன.
எழுது பொருட்களைப் பொறுத்தமட்டில் பல சிக்கல்கள் பேதங்கள் நிலவின. இது காலவரை எழுதுவதற்குகந்த பொருட்களாக இருந்து வந்த பேபைரைஸ் புல் தோல் களிமண்கட்டி கல் மரப்பட்டை பட்டுத்துணி உலோகங்கள் ஆதியன பெருமளவில் கிடைக்கக்கூடியதாயிருக்கவில்லை. எழுதப்பட்டவை நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக &ín - tq uJ பணிபுகளைக் கொண்டிருக்கவில்லை. எழுதப்பட்டவை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இலகுவிலி எடுத்துச் செலீலக் கூடிய தன்மையிலுமிருக்கவில்லை. இதே போல் நூல்கள் பெருந்தொகையாக வெளியிடப்பட்டு பலரும் ஒரே நேரத்தில் உபயோகிக்கக்கூடிய தன்மையினையும் பெற்றிருக்கவில்லை.
எனவே மேறிகுறிப்பிடப்பட்ட
பண்புகளைக்கொண்ட எழுதுகருவி உடனடித் தேவையாயிருந்தது. காகிதத்தினைக் கண்டுபிடிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இதனால் ஏற்பட்டது.
சீனாவில் கடதாசி கணிடுபிடிக்கப்படுவதற்கு முன்பாக பல்வேறு பொருட்கள் எழுதுவதற்கு உபயோகிக்கப்பட்டன. சீன நாட்டில் சென ugisusog (CHOU DYNASTY)யினரின் ஆட்சி கி.மு.255 இல் முடிவடைந்தபோது சீன இலகீகரியங்கள் யாவுமீ மூங்கிலி எழுதுகோல்களினால் மரச்சாற்றில் தயாரிக்கப்பட்ட மையினாலி மூங்கிலி மரங்களிலும் மரத்துண்டுகளிலும் எழுதப்பட்டன. சிறுசிறு செய்திகளும் நீண்ட செய்திகளும் இவ்வாறே எழுதப்பட்டன. இந்த முங்கில் பட்டைகளின் மூலைகளில் துளைகளிடப்பட்டு கயிற்றினாலும் தோலினி நரம்புகளினாலும் கட்டப்பட்டு புத்தகங்களாக்கப்பட்டன. ஹான் பரம்பரை ( HAN DYNASTY) யினரின் ஆட்சியின்போது(கி.மு 206 முதல் கி.பி. 220வரை) சீனாவினால் பட்டுத்துணியிலான துாரிகை கொண்டு எழுதுவது வழக்கமாயிற்று. முன்னரிலும் பார்க்க இதில் எழுதுவது சுலபமாயிருந்தது.
இருப்பினும் கடதாசியினைப் போன்றதொரு பொருளில் எழுதுவது சுலபமெனக் கண்டு பச்சைப்பட்டில் Scibis (RAW SILK) sirésis ostiugis முறை முதன் முறையாகக் கையாளப்பட்டது. கி.பி.100 இல் வெளிவந்த சீன அகராதி இதனை நிரூபணமாக்குகிறது. இது காலவரையும் எழுதப்பட்டுவந்த மூங்கில் பட்டுத்துணிடு அதிக செலவினத்தை ஏற்படுத்தியது. ஆகவே தாய்வான் பட்டை, நார், துண்டு, துணி மீன் வலைகள் ஆகியனவற்றின்
41

Page 23
கலப்பை
துாள்களைக் கொணிடு காகிதம் செய்ய முற்பட்டனர். சீனப்பெருஞ் சுவரிலும்,துருக்கிஸ்தானிலும் கணி டெடுக்கப்பட்ட கணிடுபிடிப்புக்கள் இவற்றினை வலியுறுத்துகின்றன. முதன் முதல் அச்சுக் கலையைக்கண்டு பிடித்த பெருமையுடன் கடதாசியையும் கண்டுப்பிடித்த பெருமையும் சீனாவையே சாரும். கடதாசியின் வரவு எழுத்துலகில் புதியதோர் மாற்றத்தினைக் கொண்டுவந்தது. இதுகாலவரை எழுதுவதற்கு உபயோகிக்கப்பட்டு வந்த சாதனங்கள் யாவற்றையும் விட இது பெருமளவில் கலபமாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இதுவும் சீனாவின் கொடையாகவே விளங்கியது. கி.பி.105 ஆம் ஆணி டிலேயே கடதாசி சீனாவிலி கணிடுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. சாய் லண் (TSAI LUN) எனபவர் காகிதக் கணிடுபிடிப்புப் பற்றி தனது பேரரசருக்கு அதிகாரபூர்வமாய் அறிவித்தாக சீன வரலாறு கூறுகிறது. இதனால் இவர் கண்டு பிடித்த கடதாசியினைக் 'கோமகன் காகிதம்(Paper of marquis Tsai) 6Taig slopisuGapsi. அரச மாளிகைகளில் ஏற்பட்ட கெடுபிடிகளில் இவரின் பெயரும் தொடர்புபட்டிருந்ததால் இவர் தற்கொலை செய்துகொண்டார். எனினும் சீன மக்களும் அரசாங்கமும் அவரை இன்று வரை கெளரவித்து மதித்து வருகிறது.
இவரது கணடுபிடிப்பினைக் கெளரவிக்கும்முகமாக இவரது படத்தினைக் கொண்ட முத்திரையயொன்று அண்மையில் சீனாவினால் வெளிவிடப்பட்டது. இன்றுவரை இவரது படத்தின் முன் ஊதுவத்தி வைத்து வணங்கப்படுவதாகவும் தெரிகிறது. இது அவர்கள் அவருக்குக் காட்டும் கெளரவத்தை எடுத்துக்காட்டுகின்றது.(மக்மேற்றி, 198982) அச்சுக் கலையைப் பொறுத்தமட்டிலும் சீனாதான் முன்னணியில் இருந்து வந்துள்ளது. மரக்குற்றிகளில் தனித்தனி எழுத்துக்களை தலைகீழாகக் செதுக்கி அவற்றின் மீது மை பூசிப் பிரதியெடுத்தனர்.பல்வேறு எழுத்துக்களைச் செதுக்கியெடுக்கக்கூடிய தனிமையினால் புத்தகங்களை வெளியிட முடிந்தது. எழுத்துக்களை தேவைக்கேற்றவாறு மாற்றியமைக்க முடிந்தது. கி.மு.8ஆம் நுாற்றாண்டில் இத்தகைய முறையில் பலவித முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Garri slipsopfloor (BLOCKPRINTING) ஏற்படுத்திய பெருமையும் சீனாவினையே சாரும். இம் முறையினைப் பாவித்து வெளியிடப்பட்ட வைர குத்திரம் (DIAMOND SUTRA) staigyib birst glejebi சான்று பகர்கிறது. சமஸ்கிருத மொழியில் மூல நுால் எழுதப்பட்டு சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இந்நூல் பெளத்த சமயம் சார்பானது. இது கி.மு.868ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுவே உலகிலேயே மிகவும் பழமையான அச்சிடப்பட்ட நுால் எனக் கருதப்படுகிறது. இது பிரித்தானிய அரும்பொருட்காட்சியகத்தில் இருப்பதாகத் தெரிகிறது(சம்பந்தன் 1976 45). இதே போன்று இதற்கு முந்திய காலப்பகுதியைச்சேர்ந்த அதாவது கி.மு.704 ஆம் ஆண்டளவில் கொரியாவிலுள்ள தாது கோபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தமதம் சர்பான நூலொன்று காலத்தால் முந்திய நூலாகக் கருதப்படுகிறது.
மர அச்சுக்களைக் கொண்டு நூல்களை வெளியிடும் முறை சீனாவில் 1200 வருடங்களாக நிலவிவந்ததாக வரலாறு கூறுகின்றது. இதைவிட நகர்த்தக் கூடிய எழுத்துக்களை முதலில் மரத்திலும் பின்னர் பித்தளை, களிமணி, மட்பாண்டங்களிலும் பொறித்து, கி.பி.1045 ஆண்டுவரையில் உபயோகித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைவிட கி.மு.137ஆம் ஆண்டளவில் சாய் லன் காலத்தில் இருந்த கடதாசியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் பிரித்தானிய அரும் பொருட் காட்சியகத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. இதுவே உலகிலேயே மிகப் Lup 6oo Lo uLu Tow கடதாசியாகும்(மக்மேற்றி, 19892 62)
கடதாசியின் மேற்கு நோக்கிய பயணம் மிகச்சுவையானது,விசித்திரமானது. 700 ஆணிடுகளாகச் சீனாவினாலி மறைத்து வைக்கப்பட்டிருந்த கடதாசி செய்யும் கலை மேற்குலகத்துக்குத் தெரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கிறிஸ்தவ சமயம்,இஸ்லாம்.பௌத்தம் ஆகிய மதங்களிடையே நிலவிய போட்டி மனப்பான்மை கடதாசியின் அறிமுகத்துக்குக் குந்தகமாக அமைந்தது. சீனயப்பானிய பெளத்த குருமார் தமது சமய சார்பான விடயங்களை எழுத, பிரதி செய்யக் கடதாசி மிகப் பயனுடையதெனக்
42

铺
型
۱
i.
爸 盤
ܬ݂ܶܐ
فيا
i
ES
隋
蒜
i
瑟
வைர சூத்திரம்: உலகத்திலேயே மிகப் பழமையான மரவுருவத்திலைான படவுருவங்களைக் கொண்டு 868-ல் அச்சடிக்கப்பட்ட முதல் நூல், பக். 45
忘豆闆還 ttiimiiitiiiagquifqist 前baéri盆a* of sig ぶ。 uueapeg
# 378 1669-RN نے ہK உலகிலே சதசள்முதலாக நகர்த்தக் கூடிo Oழத்துக்களைக் 6)tნmoზიrGნ #Ž: 3. 牛22rföowó
கொணன்ட விறிலரில துால்,
அச்சுக்கலையின் தந்தை ஜான் கூட்டன்பர்க்கு

Page 24
கலப்பை
ஐப்பசி 1996
கருதினர். இதனால் கடதாசி செய்யும் முறையினை வெளியுலகத்திற்குத் தெரியவிடாது தடுத்து வைத்தனர். ஆனாலி அராபியர் தமது ஆதிக்கத்தைக்கீழைத்தேசத்திலும் நிலைநாட்ட எணணி ருஷய துருக்கிஸ்தானைக் கைப்பற்றினர். அங்கு கடதாசி செய்யக்கூடிய சீனர்களைச் சிறைப்பிடித்துச்சென்றனர். இதனால் சமர்க்கண்டுப் பிரதேசத்தில் கடதாசி கி.பி.751ஆம ஆண்டு அறிமுகமானது. காகிதம் என்பது அரபு மொழியில் 'காகத் என்னும் சொல்லில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. எனவே கடதாசி சமர்க்கணிடில் பெரும் புகழைப் பெறக் காரணமாயிருந்தது, அநநாட்டுச் சுவாத்திய நிலையும் சணல் உற்பத்தியுமாகும். இதன் பின் கடதாசி கி.பி.793இல் பாக்தாத் நகரையடைந்தது. அதன் பின்னர் டமாஸ்கஸ் என்னும் நகரைச் சென்றடைந்தது. இங்கிருந்தே உலகின் பல நாடுகளுக்கும் கடதாசி விநியோகிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து இதனது பிரயாணம் எகிப்து நகரை நோக்கியதாயிருந்தது. எகிப்தின் சுவாத்தியம் கடதாசிக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்யக் கூடியதாயிருந்தது. இதன் காரணமாக எகிப்தில் 9ஆம் நூற்றாண்டில் இருந்து 11ஆம் நுாற்றாண்டு வரை எழுதப்பட்டன யாவும் கடதாசியில் எழுதபபட்டன. பொருட்களைச்சுற்றும் slaruyi (WRAPPING PAPER) gris பிரசித்தமானது. 12ஆம் நூற்றாண்டளவில் கடதாசி மொறக்கோவைச் சென்றடைந்தது. இன்று மேற்குலகின் மிகப்பழமையான கடதாசியில் எழுதப்பட்ட ஆவணம் சிசிலி மன்னனால் எழுதப்பட்ட உயிலாகும்.இதன் காலம் கி.பி.1109 எனச் சொல்லப்படுகிறது. கிறிஸ்தவ உலகில் இத்தாலியில உள்ள வயிரியானோ (FABRIANO) என்னும் இடத்தில் கடதாசி ஆலை முதன்முதலில் நிறுவப்பட்டது. இதனாற்றாண் இன்னும் இத்தாலியில் இருந்து வெளிவரும் சகல கடதாசி வகைகளும் மிக்க மெருகூட்டுவனவாயுள்ளன.
கடதாசி அராபியர்களினாலும், யூதர்களினாலும் ஆக்கப்பட்டதென்பதனால் கிறிஸ்தவர்கள் கடதாசியின் உபயோகத்தைத்தடுத்த செய்திகளும் உள்ளன. முக்கியமான பொது ஆவணங்கள் கடதாசியில் எழுதப்படக்கூடாதெனச் சட்டம் கூட மதசார்பாக ஏற்படுத்தப்பட்டது.
1221ஆம் ஆண்டு பிரடெரிக்11 (FREDERIK 11)இகடதாசியில் எழுதப்பட்ட ஆவணங்கள் செல்லுபடியாகா எனத் தடைவிதித்தார். இதனால் முக்கிய ஆவணங்கள் மிருகத் தோலில் எழுதப்பட்டன.கடதாசி பின்வரும் நாடுகளில் குறிப்பிடப்பட்ட வருடங்களில் பாவனைக்கு வந்ததாக தெரிகிறது. காஷ்மீர் (800), பாக்தாத் (793),எகிப்து (900) ஸ்பெயின் (1150), இத்தாவி (270)நுாரம் பேர்க் ஜேர்மனி (1390), இங்கிலாந்து (1494), பில்டெல்பிலா ஐக்கிய அமெரிக்க நாடுகள்(1890). இன்று கடதாசி செய்வதற்குப் பல பொருட்கள் பாவிக்கப்படுகின்றனநார்ப்பட்டு, பட்டு, புல், மரம், முகமுகப்பு நார், புளிச்சைச ணல்வைக்கோல்,சாக்குத்துணி, நுாற்கயிறு, பயனற்றதாள்கள் என்பன இவற்றுள் அடங்கும். இதே போன்று கடதாசியின் வகைகளும் வேறுபட்டுமுள்ளன. பத்திரிகைகளை வெளியிடுவதற்கென ஒரு வகையும்,நூல்களை வெளியிடுவதற்கென ஒரு வகையுமாக உள்ளன. இவற்றினை விட வழு வழுப்புத்தாள் (ART PAPER) Tgi si si sro '(LITHOGRAPHICPAPER) Qur's Louisi srai, sil sol sai (CARDBOARD) சருகுத்தாள (TRACING PAPER)Gs guisra (CELLOPHANE PAPER)எனப்பல்வகைக் கடதாசி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஐரோப்பாவில் அச்சுக்கலையின் தோற்றம்
மனித கலாச்சார வளர்ச்சிகளின் நிகழ்வுகளில் முக்கியமானது நகர்த்தக்கூடிய அச்சுக்களைக் (MOVEABLETYPES)ssociaisodcu ஆகும். நகர்த்தக்கூடிய அச்சுக்களை முதலில் யார் உருவாக்கினர் என்பதில் பல சர்ச்சைகள் slatorso.
ஒரு சிலர் கூற்றுப்படி லோறண்டு 65 rorúLö(LAURENT COSTER) 6Teigyúô
டச்சுக்காரரே இதனை 1423இல் கண்டுபிடித்தார் எனத் தெரிகிறது.
53ம் பக்கம் பார்க்க. 37
44

gilLló) 1996 ases fabu
கருந்தெருக்கள் அவன் மேலும் கீழும் நிறைந்து வழியும் இறைந்து கிடக்கும் ஒடியும் நடந்தும் காற்றில்கூட அவனைப்போலவே ஒருவரை ஒருவர் அசையாதிருக்கும் காகிதச் சுருள்கள் மோதிடும் மனிதர் சுயமிழந்து உணர்வழிந்து காலை நேரத்து சுறுசுறுப்பு சுருண்டு கிடக்கும் சிட்னி நகரிலும் நினைவு திரும்பிட்ட மாற்றமேதுமின்றி கணப்பொழுதனில் சுற்றிச் சுழரும் மீண்டும் குடிக்கும்
குடியே வாழ்க்கை
எந்த ஆரவாரமுமின்றி
வீதியோர்த்தில் கந்தல் மூட்டையும் வீழ்ந்து கிடப்பர்
கழிவுக் காகிதமும் இதனை மட்டுமே கட்டிலும் போர்வையுமாய் அரசும் விரும்பும்
apatabas auanyayat

Page 25
கலப்பை
ஐப்பசி 1996
னம் இருண்டு கறுத்து சோ என்றபடியே | மழை பொழிந்த வண்ணம் போட்டியாகப் பவித்திராவும் கண்ண்ர்க் கடலில் மூழ்கியிருந்தாள். வானமும் முகாரி ராகம் இசைப்பதில் எந்த விதத்திலும் பவித்திராவுக்குச் சோடை போகவில்லை மேசையில் முகம் புதைத்தபடி குலுங்கி குலுங்கி அழும் பவித்திராவை ஒரு வசீகரச் சிரிப்புடன் பூமாலை போட்டிருந்த போட்டோபிரேமிலிருந்த அவளது கணவனி கணிஇ இமைக்காமலி பார்த்துக்கொண்டிருந்தான்.இ ‘நேற்று இருப்பார் இன்று இல்ல்ை எங்கு தேட என்பது போல் மனித வாழ்க்கை தான் எவ்வளவு நிரந்தரமில்லாதது. குமார் ஆசையாக வாங்கி அருமையாகப் பேணிப் பாதுகாத்த ஸ்கூட்டரே அவனுக்கு எமனாகி முப்பத்து நான்கு வயது பவித்திராவை விதவையாக்கி விட்டது. பவித்திராவையும் முறையே பதினொரு வயது, எட்டு வயது, ஆறு வயதிலுள்ள மூன்று குழந்தைகளையும் தன்னந் தனியே பூமியில் தவிக்கவிட்டு விட்டு அவன் சொர்க்கம் சென்று விட்டான். ...: பவித்திராவும் குமாரும்: தானி எவி வளவு இன்னிமையானவை பசுமையானவை. அவன் எஞ்சினியராக கடமையாற்றிய அதே அலுவலகத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்த்தாள் பவித்திரா. அழகுச்சிலையான அடி பெட்டகமான பவித்திராவைப் பார்த்த விரும்பத்தோன்றாது. பெற்றொர் இல்லாத ப அண்ணன் சாரங்கன்தார் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத போதிலும் ஒரே மகன், எஞ்சினியர், கொழுத்த சீதனம் வாங்கிக் காட்டுகிறேன் என்று பீற்றித் திரிந்தஐகுமாரின் தந்தைக்குத் தான் பெரிய ஏமாற்றம் ஏமாற்றம் தந்த சீற்றத்தில் நாண் செத்தா கூட நீ வந்து கொள்ளி போடக்கூடாது’ என்று குமாரிடம் கூறி விட்டார். கட்ைசியில் நடந்தது என்ன. தனயனின் இறுதிச் சட்ங்குக்குத் தந்தைதான் வரவேண்டி இருந்தது. காலன் முந்திப் பூத்த
உயிரை முன்னரும் பிந்திப் பூத்த உயிாை பின்னரும் எடுப்பதில்லையே. தன்னிஷ்டத்திற்குத் தானே உயிர்களை எடுக்கிற இந்தக்காலத்தில் யாரால் சத்தியவான் சாவித்திரி போல் எமனிடம் சென்று போராட முடியும் மேல் துண்டால் வாயைப் பொத்தியபடி "மகனே! உண்ர கலியாணத்துக்குத் தான் வந்து அட்சதை போடலை கடைசியில் இப்படி வாய்க்கரிசி போட வைச்சுட்டியே’ என்று அவர் கதறியழுதபோது உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லோரும் அழத் தொடங்கி விட்டார்கள். 'தாயில்லாத் தனிப்பிள்ளை என்று உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தேன். இப்போது ஒண்டுக்கும் அர்த்தமில்லாமல் போச்சே” என்று இடிந்து போய் உட்கார்ந்து விட்டார். இப்போது பவித்திரா ஆதரவுக்காக நம்பியிருப்பது அண்ணன் ஒருவனைத்தான். குமாரை மணந்த பிறகு தானி பார்தீதுக் கொணடிருந்த வேலையிலிருந்தும் விலகி விட்டாள். குமாரின் தந்தை இறுதிச்சடங்கிற்கு வந்த போதும் மருமகளுக்கு ஆதரவாக ஒரு வார்தை கூட கூறவில்லை. பேரக் குழந்தைகளையும் அணைக்கவில்லை. அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர்களது உறவே அவருக்கு எட்டிக்காயாகக் கசந்தது குமார் இறந்து நான்கு வாரங்களாகின்றன. நாலு வாரங்களிற்கு முன் வழக்கம் போல் ஆபிஸ் சென்றவர் ஆபிஸில் இருந்து ஸ்கூட்டரில் திரும்பி வந்துகொண்டிருக்கையில் எதிர்ப்பக்கத்தில் வேகமாக வந்த லாரி ஒன்றுடன் மோதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்ததும் பவிதி திரா பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஒடுகினாள். அங்கு குற்றுயிரும் குறையுயிருமாய் இருந்த குமாரிற்குத் தான் வாழ்வேனா என்ற ஐயம் ஏற்பட்டிருக்க வேண்டும். அவளை அழைத்து, “பவித்திரா இப்ப நீ நமது நாலாவது குழந்தைக்குத் தாயாகப் போகிறாய். நானிருப்பேனோ இல்லையோ தெரியேலை, கண்மணி. ஆனாலும் ஆம்பிளைப் பிள்ளையோ பொம்பிள பிள்ளையோ எதுவென்றாலும் நல்லபடி பெத்து வளக்க
46
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'gill lés 1996
கலப்பை
வேண்டியது உண்ர பொறுப்பு. உன்னைத் தன்னந் தனியே விட்டுட்டுப் போறன் எண்டு நெனைக்கத் தான் கவலையாய் இருக்கு. என்ர நினைவா நான் இறைவன் தந்த இந்த ஒன்றரை மாசமே ஆன பரிசை உன்ர பொறுப்பில் விட்டுட்டு செல்லுறன். கவனமாய்ப் பார்த்துக்கொள் என்று திக்கித் திக்கித் கூறிய அவனைத் தடுத்து, “அப்பிடி ஒண்டும் சொல்லாதீங்க. உங்களுக்கு ஒண்டும் நடக்காது’ என்று அவனைத் தேற்றினாள். ஆனால் அவனது பயம் உண்மையாகி விட்டது. அவளது தேற்றுதல் தான் பொய்த்து விட்டது. அவளுடன் கதைத்த பிறகு இரண்டு நாள் கோமாவில்(coma) இருந்தவன் யாருக்கும் தொல்லை தராது அப்படியே இறந்து விட்டான். அவனது தலையில் பலமாக அடிபட்டிருந்ததால் மூளையில் குருதி உறைந்து கோமா நிலைக்கு ஆளானவன் அப்படியே எமனுடன் சென்று விட்டான். அவன் இறந்து நான்கு வாரங்களாகியும் துயரம் ஆறாது அழுது கொண்டிருந்த பவித்திராவின் கையைப் பிடித்து இழுக்கிறாள் கடைசி மகள் சரண்யா, “அம்மா சாரங்கன் மாமாவும் மாமியும் ஹாலில் இருக்கினம் உங்களை அங்கு வரட்டாம் என்று கூறிவிட்டுச் சிட்டாகப் பறந்து விட்டாள். விளையாடப் போகிற அவசரம் அவளுக்கு தந்தை இனி வரமாட்டார் என்று கூட விளங்காத வயது புரியாத பருவம். அந்தி மயங்கும் நேரமாதலால் மற்ற இரு பிள்ளைகளும் படித்துக் கொண்டிருந்தார்கள். பவித்திரா மெளனமாக ஹாலில் போய் அமர்ந்தாள். ஹால் கடிகாரம் எழுப்பும் “டிக்” “டிக்’ என்ற ஓசை தவிர வேறு சப்தம் எதுவுமில்லை. அங்கு மயான அமைதி நிலவியது. நீணட மெளனத்திற்குப் பிறகு நெடிய பெரு மூச்சொன்றை விட்டுவிட்டு ஆரம்பிக்கிறான். “பவித்திரா நீ இப்ப இருப்பது வாடகை வீடு. மூத்தவன் தான் பெடியன். மற்ற இரண்டும் பொம்பிளைப்பிள்ளைகள். குமாரின் கிராட்டியூட்டி பிராவிடெண்ட், ஃபண்ட் பணத்தைப் பாங்கில போட்டு வாற வட்டியில் அவர்களைக் கரை சேர்க்கலாம். கொழும்பில சீவிக்கிற எண்டா விலைவாசி பற்றித் தெரியும்தானே. இவ்வளவு பிரச்சனைக்குள்ளே உனக்கு இன்னொரு குழந்தையும் பிறந்தா கஷ்டம் தானே. குமார் இருந்தாலாவது பரவாயில்லை. அவனும் இல்லாம நீ இனியொரு குழந்தையைப் பெத்து வளர்க்கிறது எண்டா நெனைச்சு பார்க்கேலாம
கிடக்கு. பேசாம அதை அழித்து விடுவோமா என்று வினவினான். சாரங்கனின் கூற்றை ஆமோதிப்பது போல் அவன் மனைவி மெளனமா இருந்தாள். சிறு வயதில் தங்கைக்காக உயிரையே விடுவேன் என்றவன், இப்போது தங்கையிடம் ஜனித்திருக்கும் மற்றோர் உயிரை அழிக்கச் சொல்கிறான். ஒ மனிதன் தனக்கென்று சொந்தபந்தங்கள் ஏற்பட்டவுடன் எப்படி மாறி விடுகிறான். அண்ணன் தங்கையிடையே பூத்திருந்த பாசமலர் கருகித் தீய்ந்து அதன் இதழ்களெல்லாம் பகமமாகி விட்டன. தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்ற கூற்றுதான் எவ்வளவு உண்மையானது. சாரங்கனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அந்தப் பொறுப்புடன் தங்கையின் பிள்ளைகளையும் பார்த்துவிடவேண்டிய பொறுப்பும் வந்துவிடும் என்று பயந்து விட்டான் போலும், கேட்டுக்கொண்டிருந்த பவித்திரா எரிமலையானாள். சீற்றத்துடன் அனல் துண்டங்களாய் வார்த்தைகள் வந்து விழுந்தன. “ஏன் அண்ணா தெரியாமத்தான் கேட்கிறேன். உனக்கு குமாரின் முடிவு ஏற்பட்டு அண்ணி நானிருக்கும் நிலையிலிருந்தால் கூட இப்படிப்பட்ட முடிவுக்குத் தான் அணிணி வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?” அவளது வார்த்தைகளின் உக்கிரத்தைத் தாங்க முடியாத அவன் தலை குனிந்தபடி “நான் சொல்லிறதை சொல்லிட்டன். இனி உண்ர பாடு உண்ர பிள்ளைகளுடைய பாடு. அண்ணா என்று எதுக்கும் வந்து நிற்க வேண்டாம்” என் கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றான். அவனைப் பின்தொடர்ந்தாள். அவன் மனைவி. அவர்களதும் கார் கிளம்பும் ஓசை கேட்டது. அண்ணன் தங்கை உறவு என்று தொய்ந்து தொங்கிக் கொண்டிருந்த பாச நூலிழை ஒரேடியாக அறுந்து விழுந்து விட்டது. ஊதுபத்தி எரிந்தால் வாசமாவது மிஞ்கம் உறவு பற்றி எரிந்தால் வாட்டம் தான் மிஞ்சும். அவர்களிடையே ஒட்டி உறவாடிய பாசத் துகள்கள் சாம்பலாகிக் காற்றில் கலந்து கரைந்துகொண்டிருந்தன. “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ என்றுத் சும்மாவா சொன்னார்கள். சாரங்கனிடம் பணம் இருக்கிறது. நல்ல மனம் தான் இல்லை. சீரிய குணம்தான் இல்லை. பவித்திரா தன் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொணிடு மன நிம்மதிக்காக வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலை நோக்கி
M7

Page 26
கலப்பை
giILાઈી 1996
நடக்கிறாள். குமாரினது இறுதி வாசகம் திரும்ப திரும்ப கரை சேரும் அலைகள் போல அசரீரியாய் ஒலிக்கிறது, என்ற நினைவா நான் இறைவன் தந்த இந்த ஒன்றரை மாசமே ஆன பரிசை உன்ர பொறுப்பில் விட்டுட்டு செல்றன் கவனமாய் பார்த்துக்கொள்” “இந்த அண்டமே எதிர்த்து வந்தாலும் குமார் எங்களின்ற குழந்தையைப் பெத்து நல்லபடி வளர்த்துக்காட்டுறன். இந்த உலகத்திற்கு” என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு நடக்கும் அவளது கூற்றை ஆமோதிப்பதுபோல் மென்மையான சில்லென்ற குளிர்காற்று அவளைத் தழுவிச் சென்றது.
(உஷா ஜவாகர)
7ம் பக்கத் தோடர்ச்சி. பார்த்து பெருமூச்சு விட்டபடி மங்கையின் அறைக்குள் சென்றாள். அங்கு அவள் மங்கைக்கு வேண்டிய ஆடைகளை எடுத்துக் கொடுத்து அணியச்சொல்லி நயமாகக் கூறிவிட்டு அங்குமிங்கும் பம்பரமாகச் சுழன்றாள்.
நேரம் ஆகஆக அவள் நெஞ்சம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையே மங்கையின் அசிரத்தையும் உற்சாகமின்மையும் அவளை எண்னவோ செய்தது. செய்வதைச் செய்வோம் முடிவு கடவுள் விட்ட வழி என்று எண்ணிக் கொண்டாள்.
ஐந்து முப்பத்தைந்துக்கு வீட்டு வாசலில் வாடகைக் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. உடனே தாமரை பரபரப்படைந்தாள். முன்னறயின் அமைப்பை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்துவிட்டுத் திருப்தி அடைந்தவள், வருபவர்களை வரவேற்க வாசலுக்கு விரைந்தாள். மாப்பிள்ளை வீட்டாருடன் தாமரையின் தோழி திருமகளும் வந்திருந்தாள். 9 Suai மூலமாக தீ தானி இந்தச் சமீபந்தமே ஏற்பாடாயிருந்தது. மாப்பிள்ளைப் பையன் நல்ல உயரமாய் கருகருவென்ற சுருள்முடியுடன் கம்பீரமாயிருந்தான். அவனைப் பார்த்ததும் தாமரையின் முகம் மலர்ந்தது. வேண்டுதல் பாதி நிறைவேறிவிட்ட திருப்தியில் விட்டுப்போன பிரார்த்தனை மனதிற்குள் மீண்டும் தொடங்கியது.
மாப்பிள்ளைப் பையனுடன் மற்றோர் இளைஞன், தாய் தந்தையர் மற்றும் சிறு பெண் ஒருத்தி அனைவரும் உள்ளே வந்து அமர்ந்தனர். சற்றுத் தள்ளி பதுமை போல் அமர்ந்திருந்த மங்கையைப் பார்த்ததும் வந்தவர்கள் முகத்தில் திருப்தி படர்ந்தது. மங்கையின் வயது, படிப்பு, வேலை விபரம் போன்றவைகளை விசாரிக்க ஆரம்பித்தார்கள். அச்சமயத்தில் தாமரை சிற்றுணர்டிகளைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தாள்.
அச்சமயத்தில் பையனின் தாயார் மங்கையைப் பார்த்துத் தன் அருகில் வந்து அமரச் சொனர்னபோதுதாணி சோதனை ஆரம்பித்தது. மங்கை எழுந்து கால்களை விந்தி விந்தி நடந்து அவர்கள் எதிரேயுள்ள நாற்காலியில் அமர்ந்தாள். உடனே சம்பந்தி அம்மாவின் முகம் மாறியது. கேள்விக்குறியுடன் திருமகளைப் பார்க்க அவள் மிடறு விழுங்கினாள்.
அச்சமயத்தில் இடைபுகுந்த தாமரை சமாதானம் கூறும் குரலில், சம்பந்தியம்மா! பிறந்தபோது மங்கை எல்லோரையும் போல நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் சிறுவயதில் ஏற்பட்ட நோயினால் இப்படியாகி விட்டது." சில நிமிடங்கள் அங்கே அசாத்திய மெளனம் நிலவியது.
சூழ்நிலையின் கடுமையை மாற்ற எண்ணிய தாமரை அவர்களிடம், பலகாரம் சாப்பிடுங்கள்,' என்று தட்டுகளை அவர்கள் பக்கம் நகர்த்தி வைத்தாள். 'சம்பந்தம் ஏற்படாமல் அந்நியர் வீட்டில் கை நனைக்கும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது' வெடுக்கென பதில் வந்தது அம்மையளிடமிருந்து, அதன்பின் அவர்கள் பேச்சு பட்டும் படாமலும் மேலோட்டமாக இருந்ததைக் கண்டு மங்கையின் மனம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது.
கற்றி வளைத்து ஏதேதோ பேசிவிட்டுப் பின்னர், 'போய்ப் பதில் எழுதுகிறோம்" என்று அவர்கள் புறப்படும் சமயத்தில், "ஒரு நிமிடம்." எனற உறுதியான குரலி கேட்டுதி திரும்பிப்பார்த்தனர். பாரதியின் புதுமைப் பெண் போல மங்கையின் தோற்றமி அவர்களை அப்படியே நிற்க வைத்தது.
‘போய் என்ன பதில் எழுதப்போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்கள் முடிவை நீங்கள் இங்கேயே சொல்லிவிடலாம். ஏன்
48;
 
 
 

püUá 1996
abársů apu
தயங்குகிறீர்கள்? பெண் வேண்டாம் என்று ஏற்கனவே தீர்மானித்தாகிவிட்டது. அதைச் சொல்வதை வீட்டில் போய்த்தான் எழுத வேண்டுமா?
‘ஒரு பெண்ணின் அழகு, நிறம், உயரம் பார்ப்பவர்கள், அவள் மனதை ஏன் பார்க்க மறுக்கிறார்கள்? அவள் உடல் ஊனம் என்று பின்வாங்குபவர்கள் மன ஊனம் எத்தனை ஆணிகளிடம் இருக்கிறது என்பதை ஏன் எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை?"
மற்றவர்களால் உதாசீனப்படுத்தப்படும் அரளி மலர்கள்தாம் ஆண்டவனுக்கு அர்ச்சிக்கப்பட்டு
அவன் காலடியை அழகுபடுத்தும் பாக்கியத்தைப் பெறுகிறது. அந்த காலடி மலர்களைப் போன்ற நாங்கள் என்றும் அர்ச்சனை மலர்கள்தாம். எனறு அழுதுகொண டே 2- of 6t. சென்றுவிட்டாள். திக்பிரமையுடன் நின்றிருந்த மாப்பிள்ளை வீட்டார் பின் தெளிந்து அவமானமும் ஆத்திரமுமாய் கிளம்பி விட்டனர். தாமரையோ இந்தப்பெண் இப்படித் தன் வாழ்க்கையைத் தானே கெடுத்துக் கொண்டதே. சரி, இனி அடுத்த, சம்பந்தமாவது நல்லபடியாக முடிய வேண்டும் என்று தன் பிரார்த்தனையை இப்போதே தொடங்கிவிட்டாள்.
கலப்பையின் அடுத்த இதழிலிருந்து கேளுங்கள் தரப்படும் பகுதி ஒன்று தொடங்கப்படவுள்ளது. தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம் வரலாறு புராண இதிகாசச்செய்திகள் இவை குறித்து நம் அன்பர்களுக்கு எழும் ஐயப்பாடுகளை அவர்கள் வினாவடிவில் எழுதி அனுப்பினால் அவற்றிற்கு உரிய விளக்கங்களைத் தகுதியுடைய அறிஞர்களிடமிருந்து பெற்று வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். தமிழகப் பத்திரிகைகளில் வரும் கேள்வி-பதில் போன்றதொரு பகுதி அன்று இது. அவ்விதழ்களில் வரும் வினாக்களுக்கு ஆசிரியருடைய சொந்த அபிப்பிராயங்கள் எள்ளல்கள் இடக்குகள் இவையே பதில்களாகத் தரப்படுகின்றன. இதழ்களில் வரும் எத்தனையோ பொழுது போக்கு அம்சங்களில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகின்றது. கலப்பை திட்டமுள்ள இது அப்படிப்பட்டதொன்று அன்று. 'கலப்பையின் வாசக அன்பர்கள் இலக்கியம் படிக்கும்போது எழக்கூடிய நியாயமான ஐயப்பாடுகளை சுருக்கமான வினாக்களாகக் கேட்கலாம். உதாரணமாக ஒரு அன்பர் ஊழல் என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படுகிறர். இதற்கு எதிர்ப்பதம் (antonym) என்ன என்ற ஐயப்பாடு அவருக்கு எழலாம். அவரது வினாவும் அதற்குரிய விளக்கமும் பின்வருமாறு அமையும்.
வினா: 'ஊழல்' என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம் என்ன?
விளக்கம்; ஊழல் என்பதற்கு எதிர்மறைச்சொல் ஊழ் என்பதுதான். ஊழ் என்ற சொல்லுக்கு உரிய பல பொருள்களில் முறை என்பதும் ஒன்று. முறை அற்றது அல்லது ஊழ் அல்லாதது, ஊழ் +அல்-ஊழல். இன்றைய உலகில் முறைகேடுகள் பரவலாகவும் முறையானவை காண்பதற்கு அரியனவாகவும் இருப்பதால் ஊழல் என்ற சொல் நாம் நன்றாக அறிந்த ஒன்றாகவும் ஊழ் அறியப்படாததாகவும் உள்ளன.
இப்பகுதியில் இலக்கிய இலக்கண சொற்பொருள் விளக்கங்கள் கேட்கப்படலாம். போதுவாக அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் உண்மையறிதலுக்கு முதன்மை கொடுக்கப்படவேண்டும். கருத்து மாறுபாடுகள் காழ்ப்புகள் ஆகியவற்றை உண்டாக்கக்கூடிய வினாக்கள், அரசியல் தொடர்பானவை ஆகியவை கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
அன்பர்கள் தங்கள் வினாக்களைத் தெளிவாக எழுதி, கலப்பை ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம்.
40

Page 27
கலப்பை ஐப்பசி 1996
சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ் ஊக்குவிப்புப்
போட்டிகள்
முன்னுரை
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினால் சென்ற மூன்று ஆண்டுகளாக நடாத்தப்பட்டுவருகின்றன. எதிர்வரும் 1997 ஆம் ஆண்டும் இப்போட்டிகளை நடாத்துவதற்கான ஒழுங்குகளைச் சங்கம் மேற்கொண்டுவருகின்றது. இப்போட்டிகளை நடாத்துவதன் முக்கிய நோக்கம், இங்கு வாழ்கின்ற எமது சிறார்கள் தமிழ் கற்பதை ஊக்குவிப்பதும் அவர்களிடையே தமிழ்மொழி, தமிழ் கலாசாரம் ஆகியனவற்றில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதுமேயாகும். போட்டிகளுக்குரிய விடயங்கள் முக்கியமாகத் தமிழ்மொழி, தமிழ் கலாசாரம் சார்ந்தனவாகவும் ஏனைய பொது விடயங்கள் சம்பந்தமானவையாகவும் இருக்கும். இப்போட்டிகள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இப்போட்டிகளில் சிட்னியில் வாழும் 25 வயதிற்குட்பட்ட தமிழ் சிறார்களும் இளைஞர்களும் பங்குபற்றலாம். சிட்னியிலுள்ள தமிழ்க் கல்வி நிலையங்களில் தமிழ் கற்கும் மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தமது விண்ணப்பங்களை அவர்களின் தமிழ் கல்வி நிலையங்களுக்கூடாக அனுப்பிவைத்தல் விரும்பத்தக்கது.
வயதுப் பிரிவுகள் எல்லாப் போட்டியாளர்களினதும் வயது 31.07.96 அன்றுள்ள வயதுப்படியே கணிக்கப்படும். போட்டியாளர்கள் ஆரம்பப் பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு, இளைஞர் பிரிவு ஆகிய வயதுப் பிரிவுகளில் ஒன்றில் மட்டுமே பங்குபற்றலாம். குறைந்த வயதுப் பிரிவினைச் சேர்ந்த போட்டியாளர்கள் அவர்களின் வயதுப் பிரிவிலும் கூடிய வயதுப்பிரிவினருக்கான போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படலாம்.
ஒருவகையினைத் தேர்ந்தெடுத்தல்வேண்டும்.
போட்டிக்குத் தெரிவுசெய்த பாடலிகளை மனனஞ்செய்து கூறல்வேண்டும். அத்துடன் அவற்றின் பொருளையும் தமிழில் கூறல்வேண்டும். போட்டியின்போது உச்சரிப்பு, மனனஞ்செய்யுந்
போட்டிகள்
(1) பாடல் மனனப் போட்டி
ஆரம்பப் பிரிவு - 8 வயதிற்குஉட்பட்டவர்கள் ਨੇ இறீ குப் பின்
றந்தவர்கள்). இப்போட்டிக்குச் சிறுவ்ர்களுக்கான பாடல்கள் கொடுக்கப்படும். இப் பாடல்களை மனனஞ்செய்து கூறல்வேண்டும். அவற்றின் பொருளைக் கூறவேண்டியதில்லை.
கீழ்ப்பிரிவு - 8 வயதிற்கும் 8 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் (01-08-88 இற்கும்3107-90 இடையில் பிறந்தோர்).
இப்போட்டிக்கெனத் திருக்குறள்கள், மற்றும் பாடல்கள் ஆகியன கொடுக்கப்படும். போட்டியாளர் இவற்றுள் ஏதாவது
திறமை, பெருளுணர்ந்து கூறுதல், சபைமரபும் ஆதிக்கமும் ஆகியன கவனிக்கப்படும்.
(2) வாய்மொழித் தொடர்பாற்றல்
போட்டி
கீழ்ப்பிரிவு 8 வயதிற்கும் 8 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் (01-08-88 இற்கும் 31
07-90 இடையில் பிறந்தோர்).
இப்போட்டி நாளாந்தம் வீட்டில் குடும்ப
அங்கத்தினருக்கிடையே இடம்பெறக்கூடிய உரையாடல் முறையில் அமைந்திருக்கும்.
50
 

gi Lóf 1996
கலப்பை
மத்திய பிரிவு 8 வயதிற்கும் 10 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் (01-08-86 ற்கும் 31-07-88 D(5lo இடையில் பிறந்தோர்). இப்போட்டி நாளாந்தம் ட்டில் குடும்ப அங்கத்தினருக்கிடையேயும் மற்றும் தமிழ் கல்வி நிலையங்களிலும் இடம்பெறக்கூடிய உரையாடல் முறையில் அமைந்திருக்கும்.
மேற்பிரிவு 10 வயதிற்கும் 13 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் (01-08-83 இற்கும் 31-07-86 இற்கும் இடையில் பிறந்தோர்).
இப்போட்டி நாளாந்தம் வீட்டில் குடும்ப அங்கத்தினருக்கிடையேயும், தமிழ் கல்வி நிலையங்கள் மற்றும் தமிழ் சமூகத்தினரின் திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் போன்ற வைபவங்களில் இடம்பெறக்கூடிய உரையாடல் முறையில் அமைந்திருக்கும்.
போட்டியின்போது உச்சரிப்பு, சொற்பிரயோகம்,
உரையாடும் திறமை ஆகியன கவனிக்கப்படும். (3) பேச்சுப் போட்டி
இப்போட்டியில் மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற் பிரிவு, இளைஞர் பிரிவு ஆகிய வயதுப் பிரிவினர் பங்குபற்றலாம். ஒவி வொரு வயதுப் பிரிவினருக்கும் வெவ்வேறு போட்டிகள் நடாத்தப்படும்.
மத்திய பிரிவிற்கும் மேற்பிரிவிற்கும் பேச்சுக்கள் எழுதிக் கொடுக்கப்படும். போட்டியாளர் கொடுக்கப்பட்ட போட்டியினை மனனஞ் செய்து கூறல்வேண்டும். எழுத்துப் பிரதியைப் பார்த்து வாசித்தால் புள்ளிகள் குறைக்கப்படும்.
அதிமேற்பிரிவிற்கும் இளைஞர் பிரிவிற்கும் போட்டிக்கான தலைப்புக்கள் மாத்திரமே கொடுக்கப்படும். போட்டியாளர்கள் பேச்சுக்களைத் தாங்களே தயாரித்து மனனஞ செய்து பேசவேண்டும். எழுத்துப் பிரதியைப் பார்த்து வாசித்தால் புள்ளிகள் குறைக்கப்படும். ஒவ்வொரு போட்டியாளருக்கும் பேசுவதற்கு 4 நிமிடங்கள் கொடுக்கப்படும்.
போட்டியின்போது உச்சரிப்பு, மனனஞ்செய்யுந் திறமை, பெருளுணர்ந்து கூறுதல், சபைமரபும் ஆதிக்கமும் ஆகியன கவனிக்கப்படும்.
(4) எழுத்தறிவுப் போட்டி
இப்போட்டியில் கீழ்ப் பிவு, மத்திய பிவு, மேற்பிவு, அதிமேற் பிரிவு ஆகிய வயதுப்பிரிவினர்
பங்குபற்றலாம். ஒவ்வொரு வயதுப்பிரிவினருக்கும்
வெவ்வேறு போட்டிகள் நடாத்தப்படும்.
கீழ்ப் பிவிற்கான கேள்விகள் கீறிட்ட இடங்களை நிரப் புவனவாக அமைந்திருக்கும். இக்கேள்விகளுக்குத் தமிழ் மொழியிலுள்ள உயிரெழுத்துக்களும் அம்மா, அப்பா போன்ற 15 சிறிய சொற்களும் கொடுக்கப்படும். இப்போட்டி 30 நிமிடங்களைக்கொண்டதாக இருக்கும்.
மத்திய பிரிவிற்கான கேள்விகளும் கீறிட்ட இடங்களை நிரப்புவனவாகவே அமைந்திருக்கும். இக்கேள்விகளுக்குத் தமிழ் மொழியிலுள்ள உயிரெழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் அம்மா, அப்பா, ஆடு, இலை போன்ற 30 சிறிய சொற்களும் கொடுக்கப்படும். இப்போட்டி 45 நிமிடங்களைக்கொண்டதாக இருக்கும்.
மேற்பிரிவிற்கும் அதிமேற் பிரிவிற்குமான போட்டிகள் மூன்று பிரிவுகளைக் கொண்டதாக அமைந்திருக்கும் முதல் பிரிவில் 40 வினாக்களும் அவை ஒவ்வொன்றிற்கும் நான்கு விடைகள் கொடுக்கப்படும். அவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து விடைத் தாளிலி அடையாளமிட்டுக்காட்டல்வேண்டும். அடுத்துள்ள 10 வினாக்கள் கோடிட்ட இடங்களை நிரப்புவனவாக அமைந்திருக்கும். போட்டியாளர்கள் கோடிட்ட இடங்களில் பொருத்தமான பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ அல்லது வேறு பொருத்தமான சொல்லையோ எழுதும்படி கேட்கப்படுவர்.
இரண்டாவது பிரிவில் -
மேற்பிரிவில் போட்டியிடுவோர் மீட்சையின்போது கொடுக்கப்படவுள்ள ஒருவிடயத்தையிட்டுத் தனது பெற்றோரின் ஊரிலுள்ள தனது உற்றாருக்கு கமார் 150 சொற்களுக்குக் குறையாத கடிதமொன்று எழுதும்படியும்,
அதிமேறி பிரிவிலி போட" டியிடுவோர் பரீட்சையின்போது கொடுக்கப்படவுள்ள ஒரு தலைப்பின் கீழ் சுமார் 150 சொற்களைக்கொண்ட கட்டுரையொன்று எழுதும்படியும் கேட்கப்படுவர்.
51

Page 28
கலப்பை
ஐப்பசி 1996
மூன்றாவது பிரிவில் இரண்டு வயதுப் பிரிவினருக்கும் 5 நிமிடங்களுக்குச் சொல்வதெழுதுதல் கொடுக்கப்படும்.
(5) விவாதப் போட்டி
இப்போட்டியில் அதிமேற் பிரிவும் இளைஞர் பிரிவும் பங்குபற்றலாம். போட்டிகள் அரை இறுதிப்போட்டி, இறுதிப்போட்டி என்ற இருநிலைகளில் இடம்பெறவுள்ளன. அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றப் போதிய போட்டியாளர்கள் விண்ணப்பிக்காதபட்சத்தில் அரை இறுதிப்போட்டி நடைபெறமாட்டாது. அவி வாறான சந்தர்ப்பத்தில் அரை இறுதிப்போட்டியில் பங்குபற்ற விண்ணப்பித்த அனைவரும் இறுதிப்போட்டியில் பங்குபற்றத் தகுதியுடையராவர். of sody - இறுதிப்போட்டிக்கான தலைப்புக்கள் பின்னர் கொடுக்கப்படும்.
இப்போட்டியில் பங்குபற்றவிரும்புவோர் மும்மூன்று போட்டியாளர்களைக்கொண்ட குழுக்களாக விண்ணப்பித்தல்வேண்டும்.
போட்டியாளர் விவாதத்தின்போது தமது துணைக்குறிப்புக்களைப் பயன்படுத்தலாம். ஆனாலி விவாதத்தினை தமது எழுத்துப்பிரதியிலிருந்து வாசிக்கக்கூடாது. எழுத்துப் பிரதியிலிருந்து வாசிக்கும் போட்டியாளர்களுக்குப் புள்ளிகள் குறைக்கப்படும்.
விவாதத்தில் எண்னென்ன அம்சங்கள் கவனிக்கப்படும், எப்படிப் புள்ளிகள் வழங்கப்படும் என்பனபற்றிய விபரங்கள் போட்டியிலி பங்குபற்ற விணணப்பிப்பவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விவாதக் குழுக்கள் போட்டியில் பங்குபற்றும் வரிசைக்கிரமம் சீட்டிழுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும்.
அரை-இறுதிப் போட்டிகள் மூலமீ இறுதிப்போட்டிக்குப் பங்குபற்றத் தகுதி
குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அரை இறுதிப் போட்டி முடிவடைந்ததும்
இறுதிப் போட்டிக்கான தலைப்புக் கொடுக்கப்படுவதுடன் விவாதத்தை ஆதரித்துப் பேசுவதற்கும் எதிர்த்துப் பேசுவதற்குமான குழுக்கள்
பரிசுகள் போட்டிகளில் பங்குபற்றும் ஒவி வொரு போட்டியாளருக்கும் 'போட்டியில் பங்குபற்றியதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ஆரம்பப் பிரிவு, கீழ்ப்பிரவு, மத்திய பிரிவு ஆகியவற்றிற்கான போட்டிகள் ஒவ்வொன்றிலும் வெற்றிபெறும் முதல் மூவருக்கு 1ஆம், 2ஆம், 3ஆம் பரிசுகளுடன் ஐவருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.
விவாதப் போட்டிகள் தவிர்ந்த மற்றைய ஒவ்வொரு போட்டிக்கும் 1ஆம், 2ஆம், 3ஆம் பரிசுகள் வழங்கப்படும்.
விவாதப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் வெற்றிபெறும் குழுவிற்கு முதற்பரிகம் போட்டியிட்ட அடுத்த குழுவிற்கு ஆறுதல் பரிசும் வழங்கப்படும்.
பொது போட்டிகளில் வெற்றிபெற்றோருக்குப் பரிசு வழங்குதல் 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆந் திகதி நடைபெறவுள்ள "UNIFUND கலைக்கதம்பம் 1997" என்ற கலை நிகழ்ச்சியில் இடம்பெறும்.
போட்டிகளில் சிறந்தனவெனக் கருதப்படும் நிகழ்ச்சிகளில் சில இக்கலைவிழாவின்போது மேடையேற்றப்படுவதுடன் சிட்னியிலுள்ள தமிழ் வானொலி ஒலிபரப்புக்களிலும் இடம்பெற ஒழுங்குகள்
செய்யப்படும்.
போட்டியின விதிகளை மீறுபவர்களினி விணிணப்பங்கள் போட்டிக்கு ஏறிறுக கொள்ளப்படமாட்டா. போட்டிகள் நடாத்தும் பொறுப்பு சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தையே சார்ந்ததாகும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகள் எவற்றிற்கேனும் போதிய போட்டியாளர்கள் விணணப்பிக்காதவிடத்து அப்போட்டி நடைபெறமாட்டாது.
மேலதிக விபரங்களுக்கு திரு.கோ. செல்வநாதனுடன் (02) 9745 1634 இல் தொடர்பு கொள்ளலாம்.
52

gilLjól 1996 கலப்பை
ada 4a 40a 4a ae an &56OJ6), J D6556r JessTsesar
கலப்பையின் இன்னொரு முயற்சியாக, சிட்னியில் தமிழ் மக்களால் நடாத்தப்படும் வர்த்தக தாபனங்களையும், சமூக சேவை வழங்கிவரும் பொதுநல தாபனங்களையும் அடக்கிய பட்டியல் ஒன்று 'மஞ்சள் பக்கங்கள்’(Yellow Pages) என்ற பெயரில் தைமாதக் கலப்பை இதழுடன் இணைக்கப்படவுள்ளது. இதற்கான விபரங்களைத் திரட்டும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். சிட்னியில் இருந்து செயற்படும் அனைத்து வர்த்தக, பொதுநல தாபனங்களின் விபரங்களும் இதில் இடம்பெற வேண்டும் என்பது விருப்பம். இப்பட்டியலை முழுமையாக்க உங்கள் தாபனங்களின் விபரங்களை தந்துதவும்படி வேண்டுகின்றோம்.
இதற்கான முடிவு திகதி : 5-1-97 ஒரு தனியார் தாபனத்தைப் பட்டியலில்ச் சேர்ப்பதற்கு $20 அறவிடப்படும். ஒரு வர்த்தக தாபனம், ஒன்றுக்கு மேற்ப்பட்ட இடங்களில் பட்டியல்ப் படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், மேலதிகமான ஒவ்வொன்றுக்கும் $10 அறவிடப்படும். பொதுநல தாபனங்களிடமும், கலப்பையின் நிகழ்கால, எதிர்கால விளம்பரதாரர்களிடமும் கட்டணம் ஏதும் அறவிடப்படமாட்டாது.
உங்கள் தாபனங்களைப் பதிவு செய்து கொள்ளவதற்கோ அல்லது மேலதிக தகவல்கள் பெற விரும்பின், பகீரதன் மகாதேவன் - 9746 7404 அல்லது
சாந்தினி சிருஷ்ணசர்மா - 97436207 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். Ա リ புபும் பக்கத் தொடர்ச்சி இத்தாலியரான காஸிரல்டி(CASTALD) செக் கோசில வாக்கியாவைச் சேர்ந்த வால்ட்வோகல்(WALDFOGHEL)என்போரும் 1444இல் அச்சுக்களை உருவாக்கினர் என வேறு சிலரும் கூறுகின்றனர். எனினும் ஜோனி l'aiutis (JOHANN GUTEN BURG)என்னும் ஜெர்மன் நாட்டவரே முதன் முதலில் நகர்த்தக் கூடியஅச்சுக்களை
உருவாக்கினார். அந் நூல்தான் 42வரிகளைக்தி கொண்ட விவிலிய நூல்(BIBLE)இவரது பெயரைக் கொண டே இன றுவரை நிலவிவருகிறது.பாரீஸ் நகரிலுள்ள மசரீன் நுால கதீதில இவி விவிலிய நுாலினி பிரதியிருப்பதனால் இதனை மசர்ன் விவிலியக்
Bir ai (MAZARINE BIBLE) GT asi gou
அழைக்கப்படுகிறது.
உருவாக்கியவர் என்பதும்தனித்தனி உலோக எழுத்துக்களை ஆக்கியதுடன அச்சுப்பொறியையும் கண்டுபிடித்தார் என்பதும் இப்பொழுது தெளிவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது
இதனாற்றான் அச்சுக் கலையைக் கண்டுபிடித்த இவரை 'அச்சுக்கலையின் தந்தை' என வர்ணிக்கின்றனர். மேலும் இவர்தான் முதலாக நகர்த்தக்கூடிய அச்சுக்களைக் கொண்டு நூல் ஒன்றினையும் 1450 ஆம் ஆணிடில்
இவரது கணிடுபிடிப்பினால் அச்சுக்கவை அச்சுவார்ப்பு மூலம் உருவாக்க முடிந்தது: எழுத்துக்கள் யாவும் ஒரே தன்மையாக இருக்கும் வாய்ப்புக் கிட்டியது.எழுத்துக்களைக் கொண்டு பக்கம் பல பிரதிகளை ஒரே சமயத்தில் வெளியிட முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நூல்களை வெளியிடும் காலமும் நேரமும் மீதப்படுத்தப்பட்டன. இவை யாவும் அச்சுக்கலைக்கோர் அடித்தளமாய் அமைந்தன.
வளரும்
53

Page 29
asasiapu
giILાઈી 1996
ஜெர்மனியின் தென் பயன் மாநிலத்தின் தலைநகரம் மியூனிச் நகரம். ஒரு மில்லியனுக்கு மேல் சனத்தொகை கொண்ட அந்த நகரம் உணர்மையிலேயே மிகவும் அழகானது. புராதன கட்டடங்களுடன் அழகிய தேவாலயங்கள் பல கொண்டது. தவிர, நகரம் எங்கும் துப்புரவாகக் காணப்படும்.
அன்று காலை நான் மியூனிச் நகரத்திலிருந்து வடக்கேயுள்ள சீகன் என்கிற நகரத்துக்குப் போகவேண்டியிருந்தது. நகரத்தின் ரயில் நிலையத்தில் இரணிடு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ரயில் ஏறவேண்டிய பிளாட்பாரத்தில் இருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்து, ரயில் வணிடிகள் வருவதையும் போவதையும் நோக்கிக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் கழிந்ததும் ஒரு கிழவன் குடிபோதையிலி எனினருகே வந்து உட்கார்ந்து கொண்டான். அவன் ஒரு கையில் ஒரு பியர் போத்தலையும் மறு கையில் உருளைக்கிழங்கு பொரியல் கொண்ட ஒரு கடதாசி உறையையும் வைத்திருந்தான். இந்தக் காலை வேளையில் எப்படித்தான் இவ்வாறு குடிக்க நேரம் கிடைத்ததோ என்று நினைக்க வேண்டாம்.
கிழவனும்
சிலர் இரவு
இப் படித்தானி , குடிக்கத்தொடங்கியிருந்தாலும் காலையில்கூட வெறி முறிந்திருக்காது. இவனும் அப்படிப்பட்டவனாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
இருந்தாலும் மற்றவர்களைவிட அவன் பரவாயில்லை. ஏதாவது சாப்பிடவேண்டும் என்கிற எணர்ணமாவது இவனுக்குத் தோன்றியதே. இல்லாவிட்டால் அந்தப்
பொரியலை ஏன் வாங்குவாண்?
ஆனாலும் அவன் சாப்பிடவில்லை. பொரித்த உருளைக் கிழங்கை நிலத்திலி வீசிக்கொண்டிருந்தான். அவற்றை அங்கிருந்த புறாக்கூட்டம் பட பட என சிறகுகளை அடித்த வணிணம் கொத்தித் திண்று கொண்டிருந்தது.
இப்போது அந்த வழியாக ரயில் நிலையத்தில்
சேவை செய்பவனைப்போலக் காட்சியளித்த ஒருவன் வந்துகொண்டிருந்தான். நாங்கள்
54
 
 
 
 

%}}ાILાઈી 1996
கலப்பை
இருந்த இருக்கையை நெருங்கியதும், அங்கு குழுமியிருந்த புறாக்கூட்டத்தைக் கலைத்துவிட்டான். என்றாலும் நிலத்தில் ஓரிரு
பொரியற் துண்டுகள் காணப்பட்டன.
இந் தாப்பா,எனின வேலை செய்து கொணர்டுகொண்டிருக்கிறாய்?' எனறான அவன் அந்தக் குடிகாரக் கிழவனைப்பார்த்து. கிழவனுக்கோ நல்ல வெறி. அவன் கூறியதொன்றும் காதில் விழவில்லைபோலும். ரயில் ஊழியன் ஒருமுறை முறைத்துப்
பார்த்தான்.
‘என்னப்பா, நான் சொல்லுவது உன் காதில் விழவில்லையா?" என்று சொல்லிய வண்ணம் அந்தக் கிழவனை நெருங்கி அவன் தோளை உலுப்பிவிட்டான். கிழவனுக்கு அப்போதுதான் நிற்பது தோன்றியிருக்கவேண்டும். ஒருமுறை தலையை உயர்த்தி மேலே பார்த்தான்.
தனக்கு முனி னே யாரோ
இந்த இடத்தை அசுத்தப்படுத்தாதே! நாங்கள் தானி துப் புரவு பணி ன வேண்டிவரும்' என்று கத்தினான். கிழவன் ஒன்றுமே பேசவில்லை. உருளைக்கிழங்கு பொரியல் கொண்ட ஒரு கடதாசி உறை காறி சட்டை பொக் கெட்டினுள் போட்டுக்கொணர்டான். ரயில் உழியனும் அவ்விடத்தை விட்டகன்றான்.
சிறிது நேரம் கழிந்தது. கிழவன் காற்சட்டை பொக்கெட்டினுள் இருந்த உருளைப்
மீணடும் எடுத்துக்கொணர்டான். எடுக்கும்போது,
பொரியலை கையிலி
பொக்கெட்டிலிருந்த நாணயங்கள் சிலவும் நிலத்தில் விழுந்து விட்டன. கிழவன் அதைப்
பொருட்படுத்ததியதாகத் தோன்றவில்லை. புறாக்கூட்டமும் மீண்டும் எங்களைச் சூழ்ந்து கொண்டது.
சில நிமிடங்களின் பின்னர் அவன் கையிலிருந்த பொரியல் முடிந்து விட்டது. புறாக்கூட்டமும்
கலைந்தது. கிழவன் வெறியில் அந்த
இருக்கையில் சாய்ந்து கொண்டான். சீக்கிரம் நித்திரை அவனை ஆட்கொண்டது.
நான் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டேன். தூரத்தே அதே ரயில் ஊழியன் வருவது தெரிந்தது.
கிழவனை அணுகியதும் அந்த ஊழியன் ஒரு கணம் நின்றான். கீழே கிடந்த நாணயங்கள் அவன் கண்ணில் பட்டன. உடனே குனிந்து அவற்றைப் பொறுக்கித் தன் காற்சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டான். நிலத்தில் கிடந்த ஒரு நாணயத்தையம் அவன் விடவில்லை.
பின்னர் அந்தக் கிழவனை ஒருமுறை பார்த்தான். பின்னர் அந்த வெற்றுக் கடதாசியை எடுத்து அருகிலிருந்த குப்பைத்தோட்டியில் போட்டுவிட்டான். அந்த இடம் மீண்டும் துப்புரவாகக் காட்சியளித்தது.
of
The end Nove
knowledge è
55

Page 30
கலப்பை
ஐப்பசி 1996
சாம்பவி பரிமளநாதன்
ஹோம்புஷ் தமிழ்ப் பாடசாலை, சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம், தமிழ்மன்றம் போன்றவற்றின் நிகழச்சிகளில் பங்கேற்றும் பல விருதுகள் பெற்றும் வந்திருக்கிறார். அவரின் திறமைக்கும் தமிழ் மொழி படிப்பதிலுள்ள ஆர்வத்துக்கும் இவை சான்று பகர்வன. நுண்கலைகளிலும் திறமை மிக்கவர் சாம்பவி. தென்னிந்திய கர்நாடக இசை, பரதநாட்டியம், நாடகம் போன்றவற்றையும் இப்பொழுது பயிலுகிறார். சுருங்கச்சொன்னால் சாம்பவி எல்லாம் வல்ல திறமையாளர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இவருக்கு 1995ல் தமிழ் Loaipita "Young Achiver's Award" என்ற விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இவர் ஹோம்புஷ் கல்வி நிலையத்துக்குப் பெயர் தேடிக்கொடுத்துள்ளார். சாம்பவியின் புலமையும் திறமையும் பிறந் ட்டிற்கும் புகுந்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பன.
Uல்வேறு இனங்களுக்கான மொழிவழிப் பாடசாலைகளில் உள்ள மிகத்திறமைவாய்ந்த மாணவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படும். saoloissai ufssfu siipi (The Minister's Award for ExCelence in Student Achievement - Community Language School Students of the Year 1995) a சவுத் வேல்ஸ் இல் மே 9ம் திகதி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் பிறந்த சாம்பவி பரிமளநாதன் என்ற மாணவிக்கு இப் பரிசு கிடைத்துள்ளது. பிறந்த ஒன்பதாவது மாதம் தொடங்கி தமிழ்ச் சூழலில்லாத அன்னிய நாடுகளில் வசித்து வந்தாலும் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் கைவிடாமல் இன்றுவரை அவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டி வருபவர். அத்துடன் கலப்பையின் சொல் நிரப்பல்ப் போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றும் ஒரு சிறுமி.
The Minister's Award for 3 Excelence instudent. ë: Achievement::1995 iš:
56
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐப்பசி 1996 aboMsửapu
இன்று மாலையும் படையினன் ஒருவன் வீசிச் செல்கிறான் உடைந்த பெட்டகம் ஒன்றால் ஒடிந்த காலை கிராம தேவதையின் அணிகலன்கள் யாவுமே களவாடப்பட்டுவிட்டன. ஒற்றைச் சிலம்பும் இவள் உடைமையாயில்லை. பலிபோயின பேச்சொலியும், கைவனையோசை வீச்சு நடையும் பிறைநுதற்திலகமும்
அன்னியன் கைபட்ட அழிந்ததெனவாயிற்று.
ஆம். காற்றுவழிக் கிராமம் என்னும் கவிஞர் க. வில்வரெத்தினத்தின புதிய வெளியீட்டில்தான் இக்கவிதையும் இடம் பெறுகின்றது."சு. வில்வரெத்தினம ‘கவிதையுலகில புதியவரல்ல. காற்றுவழிக் கிராமம் அவர் பார்வையின் ஒரு
பகுதி. ஒரு பறிபோன கிராமத்தின் அங்கலாய்ப்பாய், ஊமைக்காயமாய், , எச்சங்களை அசைபோடும் மீட்பாய் அமைகின்றது இக்கவிதைத் தொகுதி. ஏழு கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுதியை ஆகவே நிறுவனத்தின் சார்பில் திருஜபார் வெளியிட்டுள்ளார்.
கிழிந்ததன் நகலாய் என்னும் கவிதையில் உற்வின் இடைவுகளை இப்படிக் கூறுகின்றார்.
நாலு திக்குக்கொரு உடைவாகிப்போயின உறவுகள் ஆயினும் அதிசயம்தான் நாமும் உயிர்கொண்டு ஊர்கின்றோம் காலொடிந்த நண்டதனைப்போல் இது எம்மண்ணின் நினைவுகளைப் படம் பிடிக்கின்றது.
வேற்றாகி நின்ற வெளி என்ற இன்னுமோர் கவிதையில் கிராமத்து இயற்கையையும் அவை இல்லாமற்போன சோகத்தையும் கூறும்போது
முற்றத்துச் சூரியன், முற்றத்து நிலா
முற்றத்துக் காற்றென வீட்டு முற்றங்களுக்கே உரித்தான வாழ்வனுபவங்கள் விடைபெற்றுக் கொண்டன.
அவருக்கேற்பட்ட வாழ்வனுபவங்கள் காற்றுவழிக் கிராமத்தினூடாக எம்மை
57

Page 31
giILાઈી 1996
மகப்பேறு இல்லாத தன்மை ஏறக்குறைய 15 சதவீதமான திருமணமான தம்பதிகளிடையே காணப்படும் ஒரு பொதுவான குறைபாடாகும்.
இந்தப் புள்ளி விபரம், மேலைத் தேய நாட்டவர்களிடையே செய்யப்பட்ட ஆய்வாக இருந்தாலும், இதே மாதிரியான புள்ளிவிபரத்தையே மற்றைய இன மக்களுக்கிடையேயும் எதிர்பார்க்கலாம். எமது வழக்கப்படி திருமணப்பொருத்தத்தில் ‘சந்ததி விருத்தி’ என்ற விடயமுமி, சாத்திரத்தில ‘யோனிப் பொருத்தம்(புத்திரச் செல்வத்திற்கான பொருத்தம்) பார்ப்பதும் மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரத்தை உறுதிப்படுத்தியதற்கான சான்றுகள் ஏதும் இல்லை.
மகப்பேறு அற்றோர் எப்போது வைத்திய ஆலோசனை பெறவேண்டும்? குழந்தை பெற்றெடுக்கும் நோக்குடன் குறைந்தபட்சம், தமது 12 மாதகால தாம்பத்திய வாழ்க்கை(இனச் சேர்க்கை) மூலம், ஒரு பெண் கருத்தரிக்கத் தவறுமிடத்து, அத்தம்பதியினர் இருவரும் இதற்கான மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியமாகும். இந்நிலமைக்கு அவர்களில் ஒருவரோ(கணவன் அல்லது மனைவி) அல்லது இருவருமோ காரணமாக இருக்கலாமீ. இவி வாறான தனிமை உடையவர்களில் சுமார் 30 சதவீத குறைபாடுகள் பெண்களையும், 30 சதவீத குறைபாடுகள் ஆணிகளையும், 30 சதவீத குறைபாடுகள் ஆண்-பெண் இருவரையும் சார்ந்ததாகவும், மீதி 10 சதவீதம் காரணம் அறியப்படாத குறைபாடுகளெனவும் கூறப்படுகின்றன. மொத்தத்தில் இவற்றுக்கான காரணங்கள் நூற்றுக்கணக்கில் இருந்தபோதிலும் இவற்றில் பொதுவானவை சிலவே.
அசாதாரணமான விந்துக்கள்(Spem), அவற்றின் குறைவான உற்பத்தி, ஓமோன் (Hormone) கரப்புக்களில் ஏற்படும் குறைபாடுகள், உடலுறவு
ty
S.P.கேதீஸ், மருத்துவபீடம்,
சிட்னி பல்கலைக்கழகம்.
கொள்ள முடியாத தன்மை (Impotence), ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் நோய்கள் ஆகியவை ஆண்களின் மகப்பேறற்ற தன்மைக்கு முக்கிய காரணங்களாகும். பெண்களில், ஒமோன் கரப்புக்களில் ஏற்படும் குறைபாடுகள், பெண் இனப்பெருக்க உறுப்புக்களில் ஏற்படும் நோய்கள், பாலியல் முறையால் பரவும் தொற்று நோய்கள் எனபன பெருமளவுக்குக் காரணமாக அறியப்பட்டுள்ளன. சில பெண்களில் உடலில் இயற்கையாகவே தோன்றும், நுண்துணிக்கை மட்டத்திலான எதிர்ப்புத்தன்மை (Antibodies) விந்துகளைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றது. இது இனவிருத்திக்கு முக்கிய தடையாக இருக்கின்றது. இவற்றைவிட, அதிக அளவில் சிகரெட் புகைப்பது, மதுபானம் அருந்துவது, போதைப்பொருட்களுக்கு அடிமையாவது போன்ற பழக்கங்கள் இத்தன்மையை தோற்றுவிக்கும் ஏனைய காரணிகளாக நம்பப்படுகின்றன.
வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு,
ரு பெண்ணையோ அல்லது ஆணையோ, குறைபாடுடையவர்கள்’ என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் இவர்களில் காணப்படும் சில அடையாளங்கள், அறிகுறிகள் (Symptoms & Signs), அவர்களது மகப்பேறறிற தன்மைக்கான காரணத்தைக் கணிடறிய மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆணிகளில் இத்தன்மைக்கான அறிகுறிகள், பொதுவாக இனப்பெருக்க உறுப்புடனி தொடர்புடையவையாகவே இருக்கின்றன. விருத்தி குறைந்த சிறிய 6fla»55 6i (Testicle), விதைப்பைக்குள் விதைகள் அற்ற தன்மை, நோய்களால் அல்லது விபத்தினால் விதையில் ஏற்படும் வீக்கம், கட்டி(Tumour) என்பன
58
 
 

ஐப்பசி 1996
முக்கியமாக அவதானிக்கப்படவேண்டியவை. ஒழுங்கற்ற, அசாதாரணமான மாதவிடாய் வட்டம் (Menstrual periods); sigis g560cissioid கொண்ட குரல், முகத்திலும், மார்பிலும் மயிர் வளர்தல் (Hirsutism); நன்கு மெலிந்த அல்லது நன்கு பருத்த உடம்பு, கருத்தரித்துகுழந்தை பெறாமலே மர்பகங்களிலிருந்து திரவம் கரத்தல் (Galactorrhoea) போன்ற அறிகுறிகள் பெண்களில் முக்கியமாகக் கவனிக்கக்கூடியவை. மகப்பேறற்ற ஒரு பெண்ணில் மேற்குறிப்பிட்ட எல்லா அறிகுறிகளையும் ஒருங்கே எதிர்பார்க்க முடியாது. அவற்றில் ஒன்றோ அல்லது பலவோ காணப்படலாம். ஆனால் பலரில் இவ்வறிகுறிகள் ஏதும் தென்படுவதில்லை,
குழந்தைப் பாக்கியம் இலலாதோர், குடும்பத்திட்டமிடல் அமைப்புக்கோ அல்லது அதற்குரிய மருத்துவப் பகுதிக்கோ (Infertility Clinic) GF Goi gp - Gay TFGOD GOT uy Ló சிகிச்சையும் பெறலாம். முதலில் இத்தன்மைக்கான காரணத்தைக் கணிடறியும் பொருட்டு, கணவனுமீ மனைவியும் மருத்தவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். காரணத்தை அறிந்ததும், அதற்குரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படும். சில நோய்களை மருந்துக் குளிகைகளினால் குணப்படுத்தலாம். வேறு சில நோய்களுக்குச் சத்திர சிகிச்சை அவசியமாகின்றது. சிலருக்கு மட்டும், “செயற்கையாக கருத்தரிக்கும் முறை(n-Vitro Fertilization or IVF) சிபார்க செய்யப்படுகின்றது. இது இப்பொழுது மிகவும் பிரபல்யம் அடைந்துவரும் முறையாகும். இதன் மூலம் பிறக்கும் குழந்தையையே, பரிசோதனைக்குழாய்க் குழந்தை(Test tube baby) என்று நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ‘கருக்களை பரிசோதனைக் குழாயில் விடுவதன் மூலம், அவை குழந்தையாக வளர்த்து விடுகின்றன’ என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அது அப்படியல்ல. ஆண்-பெண் கருக்களை, அவற்றின் சேர்க்கைக்காக 36 மணித்தியாலங்கள் மட்டும் பரிசோதனைக் குழாய்க்குள் வைத்திருந்துவிட்டு, பின்னர் அதனைத் தாயினி கருப்பைக் குள் விட்டுவிடுகிறார்கள். எனவே சேர்க்கையடைந்த கருக்கள் இயற்கையாகவே தாயினுள் குழந்தையாக உருவாகின்றது. இம்முறை மூலம்
கலப்பை
கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக இருந்தபோதிலும், இச் சிகிச்சைக் குதி
தெரிவாகுவோரில் சுமார் 50 சதவீதமானோருக்கு எதிர்காலத்தில் குழந்தைப் பாக்கியம் கிட்டும் என அண்மையில் எடுக்கப்பட்ட மதிப்பீடுகள் கட்டிக் காட்டுகின்றன. இதனை ஒத்த வேறு சில cypopsi(Gamete Intra Fallopian Transfer or GIFT) வெவ்வேறு குறைபாடுடையவர்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று, வேறு சில முறைகளும் மகப்பேறற்ற பலருக்குக் குழந்தை பெறும் வாய்ப்பைத் தேடித் தருகின்றன. முற்றிலும் பிள்ளை பெற்றெடுக்கத் தகுதியற்ற பெண்கள், இன்னொரு பெணணிணி கருப்பையிலி 5 L۵ او கருக்களை(கணவனின் விந்தும், மனைவியின் முட்டையையும்) சேர்த்துவிடுவதன் மூலம் தமக்கென்று ஒரு குழந்தையைப் பெற முடியும். இம்முறையில் குழந்தையைப் பெற்றெடுக்கும் siropu, s665 asi (Surrogate mother) என அழைப்பர். இங்கு, இரண்டு தாய்மாருக்கு ஒரு பிள்ளை, உயிரூட்டியவள் தாயா, அல்லது ஈன்றெடுத்தவள் தாயா, என்ற உணர்ச்சிகலந்த உரிமைப் போராட்டம் ஏற்படும் சாத்தியங்களும் உண்டு. சிக்கலான இப்பிரச்சனைகளில் இருந்து விடுபட, அதற்குரிய சட்டவிதிமுறைகள் ஆவன செய்கின்றன. தற்பொழுது அவுஸ்திரேலியாவின் தலைநகர், கண்பராவில் மட்டுமே இம்முறை நடைமுறையில் உள்ளது.
ஆணின் விந்துக்களே மலட்டுத்தன்மைக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டால், இனம் தெரியாத ஆணிடமிருந்து விந்துக்களைத் gro Loirs (Sperm donation) Qug Gussi மூலமும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம். எத்தருணத்திலும் அந்த உயிரூட்டிய தந்தையை அறியமுடியாது. இத்தகவல்கள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். எனவே அப்பெணிணினி கணவனே, பிறக்கும் குழந்தைக்குத் தந்தை என்ற முழு உரிமையும் பெறுவார். எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் இப்படிக் குழந்தையைப் பெற்றெடுக்கும் அந்தத் தாய், தன் குழந்தைமீது பொழியும் அன்பையும் அரவணைப்பையும் வேறு எதனாலும் ஈடு செய்துவிடமுடியாது. குழந்தையை
59

Page 32
கலப்பை
giILાઈી 1996
ஈன்றெடுக்கும் போது அவள் அடையும் ஆனந்தத்திற்கு எல்லை ஏது?
மேலே குறிப்பிட்ட முறைகள் யாவும் கைகூடாது போகுமிடத்து, ‘தத்தெடுத்தல் முறை பலருக்குப் பிள்ளையில்லாக் குறையைப் போக்கியுள்ளது. சிலர் உறவினர்-நண்பர்களின் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பது வழக்கம். வேறு சிலர் தத்துக்கொடுக்கும் நிலையங்களினூடாகக் குழந்தைகளைப் பெறுகிறார்கள். பல அவுஸ்திரேலியர்கள் இலங்கையில் போரினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இதன்மூலம் யாருமற்ற அப்பிள்ளைகளுக்கு மறுவாழ்வு கிடைப்பதுடன், கிடைக்கப்பெறாத அந்தக் குழந்தைச் செல்வத்தைப் பெற்ற ஆனந்தம், தத்தெடுக்கும் தம்பதியினருக்குக் கிடைக்கின்றது.
கருநிலையில், ஆணி குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை நிருணயிப்பவர், தந்தையா? அல்லது தாயா? தாய்தான் என்று பலர் எண்ணலாம். ஆனால் அது தவறு. பெண்ணால் ஒரு வகை முட்டைக் கருவை(X) மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் ஆணினால் இருவகையான விநிதுக் கருக்களை(Xஅல்லதுY) உருவாக்க முடியும். இதில் X கருவைக் கொணட விந்து முட்டையுடன் கருத்தரிக்கும்போது, அங்கு பெண்(XX) குழந்தையும்: Yகருவைக்கொண்ட விந்து முட்டையுடன் கருத்தரிக்கும்போது, அங்கு ஆணி(XY) குழந்தையும் உருவாகின்றன. எனவே ஆண்களே தமது குழந்தைகளின் பாலைத்(Sex) தீர்மானிக்கக்கூடியவர்கள். ஆனால் அதுவும் அவர்கள் கைகளில் இல்லை. ஆண், பெண் என்ற விந்துகள் எழுந்தவாறாகவே
முதலில் நீந்திச் சென்று முட்டையுடன் சேர்கிறதோ, அதுவே குழந்தையின் பாலை நிர்ணயிக்கின்றது. இது இயற்கையின் நியதி. ஆனால் இன்றைய விஞ்ஞானம் இயற்கையை மாற்றியமைக்கப் புறப்பட்டுவிட்டது. ஏன், உங்கள் விருப்பப்படி ஆண் குழந்தையையோ அல்லது பெண் குழந்தையையோ தெரிவு செய்து கருத்தரிக்கும் முறைக்கான ஆராய்ச்சிகள் வெற்றியளித்துள்ளன. இதன் மூலம் ஆசைக்கொரு பெண்ணும், அஸ்திக்கொரு ஆணும் பெற யார்தானி
விரும்பமாட்டர்கள்? ஆனால் ‘இது மனிதக் கோட்பாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் எதிரானது’ என்ற கோஷம் ஏற்கனவே ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இதன் விளைவுகள் என்ன என்பதைப் பொறுத் திருந்து தானி பார்க்கவேண்டும்.
மகப்பேறற்ற தன்மை’ ஆணி - பெணி, இருபாலாருக்கும் பொதுவாக அமைவதை இங்கு காணி கிறோம். சிலருக்கு இது நிரந்தரமாகவே இழுக்கை ஏற்படுத்திவிடுகின்றது. அவர்களின் உணர்ச்சிகளைத் மழுங்கடித்து விடுகின்றது. உரிய சிகிச்சை வழங்குவதன் மூலம் இத்தன்மையில் மாற்றம் கண்டு, குழந்தைகள் பெறப் பல வாய்ப்புக்கள் உள்ளன. இந்த விடயத்தில் மேலும் ஆலோசனை பெற
விரும்புவோர், உங்கள் குடும்ப வைத்தியர்
ஊடாக உதவிகளைப் பெறலாம்.
r N சொல்நிரப்பல் போட்டி - இல. 3
விடைகள்
இடமிருந்து வலம் 1. மகாகவி, 7. காவடிப்பாடல்), 14. பிரிவு 19. மாயன், 23. கால், 25. அன்னம் 34. காவேரி/காவிரி
மேலிருந்து கீழ் 1. மட(ம்), 2. காப்பியம், 3. கவரிமான் 4. விடிவு 12. கானல்வரி, 28. கானடும்)
வெற்றி பெற்றோர்
Homebush ஐச் சேர்ந்த சிவானுஜா உமாசங்கள் முதற்பரிசான $1500ஐயும், St. Marys 83 (3aff by 6) aboTrf நிர்மலேந்திரன் இரண்டாவது பரிசான $10.00 ஐயும் பெற்றுக்கொள்கிறார்கள். பரிசுகள் காலக் கரமத்தில் அனுப்பிவைக்கப்படும்.
أص ܢܠ
60

arbasửarpu i

Page 33
கலப்பை
giાઈી 1996
வரலாறும் வாழ்விடமும்
இலங்கைத் தீவுக்கு இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டு கால வரலாறு உள்ளதாக நம்பப்படுகிறது. அது உணர்மையாயின் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆகக் குறைந்தது இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டு கால வரலாறு உண்டு. ஏனெனில் இலங்கைத் தீவில் சிங்களவர்களது ஆரம்பகாலக் குடியேற்றங்கள் இடம் பெற்ற காலமாகிய கிறிஸ்துவுக்கு முன் ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தமிழர்களும் இலைங்கையில் இருந்து வந்துள்ளார்கள் என்பது எவரும் மறுக்க முடியாத உணர்மையெனப் பக்கச்சார்பற்ற வரலாற்று ஆய்வாளர்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும் கூறுவதினாலாகும். ஆனால் இ ைலங்கையினர் வரலாறானது ஆரம்பகாலத்திலிருந்தே உணமைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமையாது கற்பனைக் கட்டுக்கதைகளை (MYTHS) 6ooo uulters iš G5 ir soosi 6L எழுதப்பட்டுள்ளது. இதனால் பிற்காலத்தில் சிங்கள- தமிழ்க் கல்விமான்களும் வரலாற்று அறிஞர்களும் தத்தமது பக்கத்து நியாயங்களையும் ஆதாரங்களையும் முன்வைத்து வரலாறு எழுதி வைத்தனர். சிங்களவர்களது வரலாற்று நூல் என நம்பப்படும் மகாநாம என்ற பெளத்த பிக்குவினால் கிறிஸ்துவுக்குப் பின் ஐந்தாம் நுாற்றாண்டில் எழுதப்பட்டதாகக்
கட்டுக்கதைகளையும் கற்பனை அம்சங்களையும் கொண்டதாக இலங்கை வரலாறு என்பது சிங்களவர்களது வரலாறு என்பதை நிலைநிறுத்த முற்படுகின்றது.
இலங்கைத் தமிழர்களினி வரலாற்றுச் சிறப்புக்களும் தனித்துவ அம்சங்களும் சிங்களத் தொல்பொருள் வரலாற்று ஆய்வாளர்களால்
எழுதப்பட்டுள்ளன. அதேபோல் இலங்கைத் தமிழர்களின் மரபு வழித் தாயகமான, அவர்களது வாழி விடங்களான, வட கிழக்குப் பிரதேசங்களிருந்து அவர்களைப் பலாத்காரமாக வெளியேற்றியும் அவர்களைக் கொன்றொழித்தும் முழு இலங்கையும் சிங்களப் பெளத்தநாடு என்று
பிரகடனப்படுத்துவதில் முனைத்து நிற்கிறது சிங் களப் பேரின அரசாங்கமீ. இதனி முதற்கட்டமாகச் சுதந்திரகாலத்திலிருந்து தமிழர் தாயகத்தை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையாகத்
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை
ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைப் படிப்படியாகத் தொடர்ச்சியாக ஆட்சிக்குவந்த அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்தன. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் மரபுவழித் தாயகமான அம்பாறையில் சிங்கள அம்பாறைத் தேர்தற் தொகுதியையும், திருகோணமலையில் சேருவில தேர்தற் தொகுதியையும், மட்டக்களப்பில்
மதுறுஒயா குடியேற்றத் திட்டத்தையும்
முல்லைதீவில் மணல் ஆறு(வெலிஓயா) குடியேற்றத் திட்டத்தையும் ஏற்படுத்தித் தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டு ஆக்கிரமித்த ஆட்சியாளர்கள் அதன் இறுதிக் கட்டமாகச் சென்ற வருடம் யாழ்பாணத்தையும் இவ்வருடம் கிளிநொச்சியையும் கைப்பற்றித் தமிழர்களை நாடற்றவர்களாக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே இலங்கைத் தமிழர்களின் வரலாற்றையும் அவர்களது மரபுவழி வாழ்விடங்களையும் பற்றிய சரியான உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வது அவசியமாகின்றது. அத்தோடு ஒர் இனம் தனது நிகழ்காலச் சாதனைகளையும் எதிர்கால முயற்சிகளையும் சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு அவ் இனத்தின் கடந்தகால வரலாற்றுச் சாதனைகளும் தனித்துவப் பெருமைகளும் உந்து சக்தியாகவும் துாண்டுதலாகவும் அமையும் என்பதினால் அவைபற்றி அறிந்திருத்தல் பயனுடையதாகும்.
இலங்கைத்தீவில் சிங்களவர்களது குடியேற்றங்கள் இடம்பெற்ற ஆரம்பகாலமாகிய கிமு. 5ம் அல்லது ம்ே நுாற்றாண டிலிருந்தே தமிழர்களும் இலங்கையில் இருந்து வந்துள்ளார்கள் என்பது எவரும் மறுக்கமுடியாத உணர்மையெனப் பக்கச்சார்பற்ற பல தொல்பொருள் வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அவர்களுள் Walter Schwarz என்பவரும் ஒருவராவார். அவர் says, “The Tamils of Sri Lanka' Taip வெளியீட்டில் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் இலங்கையைக் கைப்பற்றிய முதலாவது ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களான போத்துக்கேயர் 16ம் நுாற்றுாண்டில் இலங்கைக்கு வந்த
62

ஐப்பசி 1996
abØLửapu
வேளையில் தமிழர்கள் வடக்கிலும் சிங்களவர்கள் தெற்கிலும் தனித்தனியான பழமைவாய்ந்த இராட்சியங்களின் கீழ் வெவ்வேறாக வாழ்ந்து வந்ததைக் கண்டனர். போத்துக்கேயருக்குப் பின் இலங்கையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் அவை தனித்தனி இராட்சியங்களாகவே விளங்கின. அதன்பின் இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானியர்களே தமது நிர்வாக வசதிக்காகப் 19ம் நூற்றாண்டில் முழு இலங்கையையும் ஒரே நிர்வாக அரசியல் அலகாக ஒற்றையாட்சி முறையின் கீழ் ஒன்றிணைத்தனர். இவ்வாறு பிரித்தானியர் முழு இலங்கையையும் ஒன்றிணைத்தபோதிலும் இலங்கை மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ' இலங்கையர் என்ற தேசிய இனமாக உருவாகவில்லை. மாறாக அவர்கள் தத் தமது தனித்துவங்களுடன் 'சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள், பறங்கியர் என்ற தனித்தனிப் பிரிவினராகவே வாழ்ந்து வந்தனர். குறிப்பாகச் சிங்கள மக்களும் இலங்கைத் தமிழர்களும் வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு மொழி பேசி வெவ்வேறு கலாசாரம் பேணித் தத்தமது தனித்துவங்களுடன் இரு வேறு தேசிய இனங்களாகவே வாழ்ந்து வந்தனர். இந்த இரு தேசிய இனங்களைச் சேர்ந்த கல்விகற்ற, பணம்படைத்த ஒரு சிறு உயர் குழாமினர் தமது அரசியல் தலைமைத்துவ நலன்களுக்காக ஒன்று பட்டுச் செயலாற்றிய போதிலும் இருபகுதி மக்களிடையேயும் ஒற்றுமை ஏற்படவில்லை. அன்னியராட்சியில் அடங்கிக்கிடந்த தேசியவாத உணர்வுகள் இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து பொங்கி எழுந்ததன் விளைவாக இன்று நாடு சிங்கள-தமிழ்த் தேசிய இராணுவங்களின் கீழ் வரலாற்றில் அன்னியர் இலங்கையில் காலடி எடுத்து வைத்த வேளையில் இருந்த சிங்கள-தமிழ் இராச்சியங்களை ஏற்படுத்தி தத் தமது தனித்துவங்களுடன் வாழ்த் தலைப்பட்டு நிற்கின்ற ஒரு நிலமையே இன்று காணப்படுகிறது.
இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் 2500 வருடங்களுக்கு மேலாக வாழிந்து வருகின்றபோதிலும் நீண்டகாலமாக வரலாறு, அரசியல், கலை, கலாச்சாரம் என்பவற்றைப் பொறுத்தளவில் இந்தியாவில் வாழ்ந்த தமிழர்களின் ஒரு பகுதியினராகத் தம்மைக் கருதியமையினாலோ என்னவோ தமக்கெனத் தனியான வரலாறு ஒன்றை ஆரம்பக் காலத்திலிருந்து எழுதி வைக்க முயற்சிக்கவில்லை. இதன் விளைவாக நீண்டகாலக்
கற்பனைக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு "மகாநாம என்ற பெளத்த பிக்குவினால் எமுதப்பட்ட 'மகாவம்சம்' என்ற நுாலே இலங்கையின் வரலாற்றைக் கூறும் நுால் என்றும் நிலைநிறுத்திக் கொணர்டனர். சிங்களவர்களுக்கு எந்தளவுக்கு இலங்கை சொந்தமோ அந்தளவுக்கு அது தமிழ்ர்களுக்கும் சொந்தமானது என்பதை எண்றைக்குச் சிங்களப் பேரினவாதிகள் உணர்கிணிறார்களோ அன்றைக்குத்தான் இலங்கை நாட்டிற்கும் இலங்கை மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கைத் தமிழர்களின் தாயகமாம் தமிழ் ஈழத்தில் அகவாழ்வு அமைந்த முறையை ஈழத்துப் பூதந்தேவனாரின் சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ள பாடல்கள் கூறுகின்றன. மேலும் இரண்டாயிரத்தி நுாற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எல்லாள்ன் என்ற தமிழ் மன்னன் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையில் நல்லாட்சி செய்தான் எனச் சிங்கள வரலாற்று நுாலி கனே கூறுகின்றன. எல்லாளனுக்குப் பின் சிலகாலம் சிங்கள மன்னர்கள் இலங்கைத்தீவை ஆட்சி செய்தனர். மீண்டும் சோழப் பேரரசாட்சியில் கி.பி. 993ம் ஆண்டில் இராஜ இராஜ சோழனின் படைகள் இலங்கை மீது படையெடுத்து வெற்றி பெற்று பொலநறுவையைத் தலைநகராகக் கொணிடு தமிழராட்சி ஏற்படுத்தப்பட்டது. தமிழர் ஆட்சியில் பெருந்தொகையான தமிழர்கள் தமிழ் நாட்டிலிருந்து தமிழீழத்திற்கு வந்தனர். தமிழர் எண்ணிக்கை பெருகி இலங்கையின் வட கிழக்குப் பகுதியெங்கும் தமிழர்களின் வாழ்விடங்களாயின. சோழர் ஆட்சிக் காலத்தில் தமிழர்களின் பணி பாடும் வாழிக்கை முறைகளும் தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் சிறப்புற்றிருந்தன. இதனாலேயே சோழர் காலம் தமிழுலகின் வரலாற்றில் பொற்காலம் எனப்போற்றப்படுகின்றது. சோழர்களுக்குப் பின் பாண்டியர்களும், பாண்டியர்களுக்குப் பின் ஆரியச் சக்கரவர்த்திகளும் தமிழ் ஈழ மன்னர்களாக விளங்கினர். இந்த ஆரியச் சக்கரவர்த்திகள் பரம்பரையைச் சேர்ந்த கடைசி மன்னன் தான் சங்கிலி. தனது கடைசி மூச்சுவரை தமிழீழத்தின் இறைமையையும்
63

Page 34
A5Assas
محمح
ஆட்சி உரிமையையும் விட்டுக்கொடுக்காது போத்துக்கேயருடன் போராடினான் சங்கிலி மன்னன். 1819ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சங்கிலி மன்னன் சிறைப் பிடிக்கப்பட்டுத் துாக்கிலிடப் பட்டதன் மூலம் தமிழ் ஈழத்தின் இறைமையும் ஆட்சியுரிமையும் போத்துக்கேயரின் வசமாயிற்று. பதின்மூன்றாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் மீண்டும் புத்துயிர்புப் பெற்ற தமிழீழ அரசு பதிழேழாம் நுாற்றாண்டின் முற்பகுதியில் போத்துக்கேயரிடம் அடிமைப்படும் வரை நல்லுாரைத் தலைநகராகக் கொண்டு ஏறத்தாழ முன்நுாற்றி ஐம்பது ஆண்டுகளாக ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சியின் கீழி நிலைத்திருந்தது. அந்த வரலாற்று நிலையை மிள உயிர்ப்புப்பெறச் செய்து போத்துக்கேயரிடம் இழந்த இறைமையை இன்றைய சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து மீளப்பெறுவதற்கே இன்றைய ஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைத் தீவு இரு வேறு தேசிய இனங்களின் வாழ்விடம் என்பதையும் அதில் இலங்கையின் வட கிழக்குப் பிரதேசம் தமிழர்களின் மரபு வழித் தாயகம் எனபதையும் பிரித்தானியரது ஆட்சிக்காலத்தின் நோர்த் தேசாதிபதியின் செயலாளராக விளங்கிய கிளெக்கோர்ண் என்பவரின் 1799ம் ஆண்டு ஜுன் மாதம் 1ம் திகதிய குறிப்பு
AŽ
ஐப்பசி 1996
கூறுகின்றது. அதில். ‘இலங்கைத் தீவானது இருவேறு தேசிய இனங்களால் வெவ்வேறு பகுதிகளாக உடைமை கொண்டாடப்பட்டது ஆட்சி செய்யப்பட்டது. இத் தீவின் மத்திய பகுதியும் தென்பகுதியும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையுமுள்ள மேற்குப்பகுதியும் சிங்களவர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும். இத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் மலபார்களினால் (தமிழர்களாலி) ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும். இவ்விரு தேசிய இனங்களும் மதத்தாலும் மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வேறுப்பட்டிருந்தன. என்று கூறப்பட்டுள்ளது.
எனவே வரலாற்றுத் தொல்பொருள் ஆய்வுத் தகவல்களின்படி இலங்கை சிங்கள - தமிழ்த் தேசிய இனங்களில் வாழ்விடம் என்பதும் இதில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் இலங்கைத் தமிழர்களின் மரபு வழித் தாயகம் (வாழ்விடம்) என்பதும் இலங்கைத் தமிழர்கள் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்த 5. Logl
சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு ஈழத் தமிழர்களுக்கான சுயாட்சியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இன்றைய ஈழப்போராட்டம் என்பதையும் அறிவோமாக.
gas 15ம் பக்கத் தொடர்ச்சி தம்பீ.எந்த ஊரு? ஊரில்ல என்றான் அவன் பேராவது தெரியுமா? என்றாள் என் மனைவி பேரு வெக்க பெத்தவங்க இல்ல யாராவது பாத்து பட்டப்பெயர் வைத்தால்தான் உண்டு, அனாதப் புள்ள சாமி என்றான்.
கலங்கியன எண் மனைவியின் கண்கள் எங்கே போகிறாய் என்றேன் திசத் தெரியல சாமி கால் போன போக்கில எண்றான் அவன். எங்களோடு வருகிறாயா ஆயுக வரை காப்பற்றுவோம் என்றேன்.
என் தம்பி தங்கச்சிய பாருங்கோ அப்புறம் நான் வாரேன் என்றான். தனியாக நடைகட்டும் உனக்கு தம்பி எங்கே தங்கை எங்கே என்றேன். உலகில் உள்ள எண்ணப்போல மத்த அனாதைங்கதான் ஐயா
என்றான்.
படிச்சு முடிச்சாச்சா?
உலகத்தில் உள்ள அனாதை பிள்ளைகளின்
எண்ணிக்கை - இலட்சக்கணக்குகள். இலட்சத்து ஒன்று வேண்டாம்.
64
 

General INSTANT Printing
2ー Z』
WE PRINT
O Business Cards • Envelopes O Menus
• Letterheads • Invitations Invoice Books
• Leaflets O Brochures
Typesetting Rubber Stamps "For all your Printing needs"
please call PARI at
2e e lം 9743 9594 |
21 EDWINSTREET, REGENTS PARKNSW 2143 TELEPHONE/FAX: 9743 9594

Page 35
சுவைமிக்க இ திருமணம், பி உங்கள் இல்லங்களில் நடைெ தேவையான விருந்து உபசார * Treat yourself traditional In * Relax and experience true l * We have prices to suit your * We also do outdoor catering
蹟 s , ኳኳm። ** LUNCH. a 1.00am-2.30pm
DINNER 5.30pm-10.00pm
Closed Monday 朝
t th * . . . s.
INDIAN RE
Tel: (047) 469 High Street Mall
Printed by Prints R Us"
 
 
 
 
 

ந்திய உணவகம் றந்த நாள் மற்றும் பெறும் விசேட வைபவங்களுக்குத் ங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
diaIl Cuisimu: Uf Thamlini Indian hospitality
budgel
and private functions
மை - உழைப்பு
Ieni
STAURANT
21 7382
PENRITH 2750.
PP 243459/0011