கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2002.10

Page 1
﷽፭፻፺፩
懿
ܕ ܕ .
ဂုံ'............................
リ。
 


Page 2
SAI DRIVING scHOOL
Experience Instructor 8. SA SCOOL TRANSPORT SERVCE Experienced Driver
Your children are home on time after School
tO & from Homebush public school, Homebush boys school & Strathfield girls high school The transport services are from the following areas: Auburn, Lidcombe, Flemington, Homebush, Strathfield
and other nearest areas
Contact: ANANDARAJAN(Raj)
Phone: 9763 751.5/9763 1620 Mobile: 041 1 091 013
INTERNATIONAL TRNSLATORS &
INTERPRETERS-AUSTRALIA
(incorporating Sri lankan Language Professionals, Australia) BUSINESS REGISTRATION-NSW, AUSTRALIA: BN9788.8817
PO BOX: 3214, TELOPEA NSW 2117, AUSTRALIA BRANCHES: in All Australian cities & major countries
“ZWE 77272EZEZ2,Z327/ 7267ZS472 രീ4ർഗ്ഗe-¶%Eഭe"
CONTACT DETALSSYEY
CENTRAL OFFICE
Te / + 61 29876 6714 / +61 2.9617 0442
Mobile: 610417 227 Fax: + 61 29876 6714

களம் 9
KALAPA
| D6öğ5 D60ğ6)ğ5 s2-g6öip "கலப்பை" உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
கலப்பை, X. SGerstun பட்டதாரிகள் தமிழர் சங்க" ஆதரவில் வெளிவரும் காலாணி டுச் சஞ்சிகை
b6f Jgf6 :- Aus. $2.50 ஆண்டுச்சந்தா O 6TbT(B) :- Aus. S 10.00 Q6l6îbîT(B) :- Aus. $20.00 பிரசுரிக்கப்பாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொப்பு கொள்ள. Tele: (O2) 4737 9007
"KALAPPA”
P.O.Box 40, HOMEBUSH SOUTH, NSW2140 AUSTRALIA
Email
சம நிலையா? சமர் நிலையா?.2
அந்தக்காலத்து யாழ்ப்பாணம்.5 பிரிவின் கொடுமை . 12
வெட்டவெளிதான் கடவுள். 4. பாலன் பிறக்கிறான். 20
இரு நதிகள் . . . . . . . . . . . .24 உள்ளத்து நிலவு நீ. 27 சிதைகிறதே செந்தமிழ் . 37 யாழ் செங்குந்த இந்துக்
கல்லூரி. 39 தமிழ் உணர்ச்சிகளின்
இயக்கம்.4.
தோள் கொடுப்போம்.47
மகளிர் மட்டும் ...................49
இக்காலத்தைய
மேலைநா 6b.............. 56
参
لر kalappaiGyahoo.com ܢܠ
அட்டைப்படம் : இராம் பிரசாத் ஓவியம் : இராம் பிரசாத் திருமதி மனோ ஜெகேந்திரன் வடிவமைப பு:
Dr. பொ. கேதீஸ்வரன்

Page 3
ஐய்பசி 2002
af Mor A
அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களில் தமிழர்களின் தொகை பன்மடங்காகப் பெருகி விட்டது. அதில் ஈழத் தமிழர்களே கணிசமானவர்கள். குறிப்பாக சிட்னியில் தமிழர் தொகையுடன் தமிழ் அமைப்புகளின் தொகையும் அதிகரித்து வருகின்றது. இன்று ஏறக்குறைய நூறு தமிழருக்கு ஒரு சங்கம் என்றாகிவிட்டது. இவ்வமைப்புக்கள் பல வழிகளிலும் தமிழருக்கு சேவை செய்யவும், பொழுது போக்கவும் அமைக்கப்பட்டவை. எம்மில் பலர் இவற்றில் அங்கத்தவராய் இருக்கின்றோம்.
சில அமைப்புக்கள் புலம்பெயர்ந்த தமிழர் நலம் பேண உதவுகின்றன. எம் தாய்நாட்டில் அல்லல் தீர்க்கும் நோக்கில் இயங்கிவரும் அமைப்புக்கள் சில. இந்த இரண்டு நோக்குகளையும் கொணர்டு செயற்படும் அமைப்புக்கள் சிலவும் உண்டு.
இன்னொரு முறையாகப் பார்த்தால், சில
தமிழ் மொழி, பண்பாடு சம்பந்தப்பட்ட அமைப்புக்கள். சில கலை, கலாசாரம் பேண முனைவன. சில சமயவழி செல்வன.
தமிழரின் நலனுக்காக, நன்நோக்கோடு
ஆரம்பிக்கப்பட்டவை இந்த அமைப்புக்கள் தமக்குள்ளேயும், தமக்கிடையேயும் மோதிக் கொள்வதும் உணி டு. இநீத அமைப்புக்களிடையேயான போட்டிகள், பொறாமையை வளர் கி கினிறன. அதைவிடுத்து, கடந்த காலத்தில் நாம் செய்த சேவைகள் என்ன? அவை நல்ல முறையில் நடந்தேறினவா? அச்சேவைகள் உரியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தனவா? என்பது முக்கியம். சமூக அமைப்புக்களாக தம்மை இனங்காட்டிக் கொள்ளும் பல அமைப்புக்கள், எந்த மக்களுக்கு சேவை செய்யப் புறப்பட்டனவோ? அந்த மக்களின் தேவை அறிந்து சேவை செய்கின்றனவா?
சில அமைப்புக்கள், தேவை ஒன்றை உருவாக்கியோ அல்லது ஒரு தேவை இருக்கிறதாக சொல்லிக் கொண்டு, அதற்காகச் சேவை செய்ய முனைவாதாகவே தோன்றுகின்றது. இதன்மூலம் பல வழிகளில் அவஸ்தைப்படுவது, பொது மக்களாகிய நாங்களே. பொழுது போக்கு நோக்கில் இயங்கிவரும் அமைப்புக்களின் நோக்கம் பொழுது போக்காகவே இருப்பது வரவேற்கத்தக்கது. சேவை என்ற நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்புக்கள் தமது நோக்கிழந்து, பொழுது போக்க நினைப்பதும் உண்டு. மக்கள் அங்கீகாரம் பெறவென சேவை என்ற போர்வைக்குள் குளிர்காயும் பல அமைப்புகள் இங்கு உண்டு. ஒரே நோக்கில் இயங்கிவரும் அமைப்புக்கள் சில, எமது சமுதாயத்தை பிரிக்க முயற்சிப்பது அடியோடு நிறுத்தப்பட வேணடும். தமக்கிடையேயான சமரில் பொதுமக்களை பலிக்கடாய்கள் ஆக்குவது தவிர்க்கப்பட வேண்டும். இது எமது சமுதாயத்தின் சமநிலையா? அல்லது சமர்-நிலையா?
இப்பொழுது ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் 4-5 தமிழ் நிகழ்வுகள். தமிழ் மக்கள் எந்த நிகழ்வுக்கு போவது என்ற திண்டாட்டம். நோக்கம் சரியில்லை என்றாலும் முகத்துக்காக போகவேண்டிய நிலை. இவற்கெல்லாம் முற்றுப்புள்ளி இல்லையா?
நாம் படித்தோம். பட்டம் பெற்றோம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பலன். எமது நடவடிக்கைகளில் ஒரு சீரிய நோக்கு, அதற்கான தீர்க்கமான திட்டம், சேவைக்கான தேவை வரையறுக்கப்பட வேண்டும். எமக்கிடையே ஒத்துழைத்து, எமது சமுதாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்!
ஆசிரியர்
2
 

ஐப்பசி 2002 கலப்பை
AUSTRALIAN SOCIETY OF GRADUATE TAMILS (ASoGT)
Polർy Peഞ്ഞ
UNIFUND KALAIKKATHAMPAM 2003 அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம்
கலைக்கதம்பம் 2003
7 June 2003 at 6.30pm at Ukranian Hall Church Street, Lidcombe
Ug5 blgu JLb Bharatha Natyam
bý.9ylmaeál Čanaéky,9uvanéay & byéémbenés eé5vtuaéki 4ska Karunakaran
༈་ལྷ་
is இளைய பத்மநாதனின்
காத்தவன் (நாட்டுக்) கூத்து ஈழத்தின் பாரம்பரிய கலை வடிவம்
கலாவித்தகள் திருமதி சிவாதி கேதீஸ்வரனின் இனினிசை - வீணாகானம் - தாளவாத்தியம்
(Musical Event by Dr. Sivarathy Ketheswaran)
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கான பரிசளிப்பும் சொல்லும் தமிழ் வெல்லும் (இசைச் சித்திரம்). நடிப்பும் துடிப்பும் - சிட்னியின் சிறந்த சிறார்கள்
Tickets: Family - S30 Adults - S15
Students & pensioners - S10
Gontact Mr. Kathr : 9742 6434
Dr. Seean : 04.19 464 024
In Aid of disadvantaged students in the Universities of north and east of Sri Lana

Page 4
கலப்பை ஐய்பசி 2002
THURAI RAJAH
70 COUNTRY DRIVE, CHERRYBROOKNSW2126 Ph: (O2) 9634 1170 - Fax: (O2) 9659 1555
THE CHAMBERS - LEVEL11, 370 PITT STREETSYDNEY 2000 Ph፡ (02) 92678810
3- Administrative Law & Business Agreements & Banking / Finance & Bankruptcy & Commercial leases
8 Criminal Matters & Corporation Law & Debts / Insolvency & Environmental Law & Family Law & General Legal Advice & Immigration Problems & Public Liability Claims & Personal injuries &
Damage Claims & Power of Attorney & Real Estate Sales & Purchases
& Small Business Advice
& Traffic Offences
* Trade Practices Law
& Wills Probates & Estate Claims & Workers Compensation
For Appointments call: (O2) 9634 1170 70 COUNTRY DRIVE, CHERRYBROOK NSW2126
 
 

ஐப்பசி 2002
கலப்பை
அந்தக் காலத்து யாழ்ப்பாணம்
பாகம் 7
முதியோன்
ലര്, മജ്ഞZത് ഗു6ffക്രബ്ബ്"
பனைமரத்துக்குக் கற்பகதரு என்று இன்னொரு பெயரும் உண்டு. அதாவது வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களையெல்லாம் அது கொடுக்கும் என்பது விளக்கம். பழுத்து விழுந்த பனம்பழத்திலிருந்து பல உணவுப் பண்டங்கள் கிடைக்கும். (நாட்டில் பணங்காய் என்று சொல்வது வழக்கம்) பனம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு தண்ணீரும் சேர்த்து அதன் தசையைக் கசக்கிக் கழிகறந்து, அந்தக் கழியைச் சிறிய பனைஓலைப் பாய்களில் ஊற்றிப் பரப்பிவிடுவார்கள். அது காய்ந்ததும் பாயிலிருந்து பிரித்தெடுத்து, துணி டு துணி டாக வெட்டி ஒரு மட்பாத்திரத்திற் போட்டுப் பத்திரப்படுத்தி வைப்பார்கள். அதற்குப் பெயர் பனாட்டு என்பது. நாட்கள் செல்ல அந்தப்பனாட்டு மிகவும் ருசியாக இருக்கும். பசியையும் பிடிக்கும், உடம்புக்கும் நல்லது. பிழிந்த பனங்கழியிலிருந்து பனங்காய்ப் பணிகாரம் செய்து பொரித்துச் J. Tilful ருசியாக விருக்கும். பனாட்டில் பாணிப்பனாட்டு என்றொரு வகையும் உண்டு.
சாறு பிழிந்த பிறகு பனம்பழத்தின் விதைகளை வீசிவிட மாட்டார் கள். அவற்றைச் சேர்த்துவைத்து ஒரு ஐம்பது, நுாறு சேர்ந்ததும் மண்ணைக் கிண்டிப் பதப்படுத்தி மேடைபோட்டு, இந்த விதைகளைப் பரப்பி அதனி மேல் மண்ணைப் போட்டு விடுவார்கள். இதற்கு பனம்பாத்தி என்று பெயர். 4, 5 மாதங்கள்
சென்றதும் அந்த விதைகளிலிருந்து கிழங்குகள் கீழ்நோக்கி வளர்ந்திருக்கும். காலமறிந்து மக்கள் அந்தப் பாத்திகளைக் கிண்டி கிழங்குகளை எடுத்துத் தோலை உரித்துவிட்டு உணவுக்காகப் பாவிப்பார்கள். பனம்பாத்தியைக் கிண்டி கிழங்குகளை எடுக் காவிட்டால், அவை குருத்து முளைத்து இலையாகி, கன்றாகி, வடலியாகி, பின்னர் நெடிய பனையாக் உயர்ந்து வளர்ந்துவிடும். கிழங்கு பனையின் ஆணிவேராக மாறிவிடும். பனைமரங்களின் வயது மனிதரின் சராசரி வயதிலும்பார்க்கக் கூடியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கிண்டி எடுத்த பனங்கிழங்கை நெருப்பில் கட்டும் சாப்பிடலாம். அவித்தும் சாப்பிடலாம். உப்பு, மிளகு, தேங்காய், மிளகாய் சேர்த்துத் து ைவயல் செய்து சாப் பிட உவப்பாகவிருக்கும். அவித்த கிழங்கை இரண்டாகப் பிழந்து, ஒரு பாயில் பரப்பி வெயிலில் நன்றாகக் காயவிட்டு எடுத்தால் அதற்குப் புளுக்கொடியல் என்று பெயர். புளுக்கொடியல் மாதக்கணக்கில் பழுதா காமல் இருக்கும். பனங் கிழங்கை அவிக்காமல், அப்படியே இரண்டாகக் கிழித்து, பாயிற்பரப்பிக் காயவிட்டு எடுத்து வைத்தால் அதை ஒடியல் என்று சொல வார்கள் . ஒடியலையும் கனகாலத்துக்குக் கெட்டுப் போகாமல் வைத்திருக்கலாம். தேவையேற்படும் போது ஒடியலை உரலில் மாவாக இடித்து அந்த மாவைக்கொண்டு புட்டு அவிப்பார்கள்

Page 5
6) )
ஐய்பசி 2002
(ஒடியல்ப்புட்டு). ஒடியல்மாவிலிருந்&jل ஒடியல்க்கூழ் காய்ச்சுவார்கள்.
பனையில் காய்த்த பிஞ்சு பின்னர் காய்ப்பருவமாக மாறி நுங்காகும். நுங்கின் மேற்பக்கத்தை அரிந்தால் அதில் கண்கள்போன்று மூன்று அல்லது இரண்டு துளைகளைக் காணலாம். அவற்றை
ஒவ்வொன்றாகத் தோண்டிச் சாப்பிடுவார்கள்.
நுங்கு கொஞ்சம் முற்றிவிட்டால் அது சீக்காய் ஆக முற்றிவிடும். அதைச் சாப்பிட யாரும் விரும்பமாட்டார்கள்.
பனம்பாளை, அதாவது விரியாத பனம்பூவிலிருந்து, கள்ளு தயாரிப்பார்கள். பெண்பனையில் ஏறி, பாளையினி மடல் விரியவிடாமல் சுற்றிக்கட்டிவிட்டு, பின்னொரு நாளில் பாளையைத் தட்டுப்பொல்லால் தட்டித்தட்டிப் பதப்படுத்திய பிறகு, பாளையினி நுனிப்பகுதியில் ஒரு முட்டியைக் கட்டி விட்டதும் கள்ளு அதனுள் சொட்டுச்சொட்டாக வடியும். முட்டி கட்டும்போது எலி அல்லது அணில் ஏறிக் கள்ளைக் குடித்துவிடாமல் முட்டியை மறைத்து ஒலையால் சுற்றிக் கட்டிவிடுவார். ஆண்பனையில் கள்ளுச் சேர்க்க முடியாது. அதன் பூமி பாளைதானி , பனைமரத்தில் எல்லாரும் துணிந்து ஏறவும் முடியாது. அதற்கென்று ஒரு சாரார் பழக்கப்பட்டிருக்கிறார்கள். (அவர்களுக்கு நளவர் என்று தமிழ்ச் சமுதாயம் பெயர் சூட்டியிருக்கிறது. யாழ்ப்பாணத்து சாதி களில் ஒன்று) பனையில் பயந்து பயந்து ஏறி, கள்ளுச்சீவி, அடுத்தநாள் முட்டியில் சேர்ந்த கள்ளை இறக்கிவந்து தனிமனிதர் பாவனைக்கு அல்லது தவறனைக்குக் கொடுப்பார்கள். கள்ளுக் குடித்தால் வெறிக்கும். அந்தப் போதையைப் பலபேர் விரும்புவதால் கள்ளுக்கு நல்ல கிராக்கி.
f6 6.
நல்ல விலை போகும். கள்ளுக் குடிப்பவனை நல்ல மனிதர் மதிப்பதில்லை. ஏனெனில் குடித்த வணி வெறியில் (போதையில்) செய்வது என்னவென்று தெரியாமல் தீங்குகள் இழைத்து விடுவான். கள்ளைக் குடிப்பதற்குரிய பாத்திரம், பனைஓலையைக் கோலி இருபக்கங்களையும் கூட்டிக்கட்டி எடுத்த பிளாவைத் தானி பாவிப் பார்கள் . கள்ளுமுட்டிக்குள் கண்ணாம்பைப் பூசிப் பாளையில் கட்டிவிட்டால் அதில் ஊறும் கள்ளு கருப்பநீர் என்றொரு பானமாகும். பதநீர் என்றும் சொல்லலாம். அது இனிக்கும், குடித்தாலும் வெறிக்காது. பனங்கள்ளிருந்து சாராயம் (Arack) என்னும் குடிவகைகூட காய்ச்சலாம். கள் ளைச் சேர்த்து (Distillery) வடிசாலைக்கும் அனுப்பு வார்கள். அங்கு அந்தக் கள்ளிலிருந்துதான் வடிசாராயம் காய்ச்சுவார்கள். பொதுவில், குடிவகை எதுவாயினும் அது உடம்புக்குக் கூடாத ஒரு பானம்.
A. இனி, பனைமரத்தின் பிரயோசனங்களைக் கவனிப்போம். பனைமரம் நெடிதாக, சராசரி 50, 60 அடி உயரத்துக்கு, வளரும் ஒரு மரம். மற்றைய மரங்களைவிட வித்தியாசமானது. நீண்ட ஒரு கம்பத்தின் நுனியில் வட்டமாக ஒலைகள் முளைத்திருக்கும். இவைதான் பனையின் "இலைகள்" ஒரு மீட்டர்வரை நீளமுள்ள (காம்பு) மட்டையின் நுனியில் ஒவ்வொரு ஒலையும் இருக்கும். ஆங்கிலத்தில் PalmTrees என்று சொல்லும் வர்க்கத்தைச் சேர்ந்தவைதான் பனையும் தென்னையும். பனைமரத்தின் நிறம் கறுப்பு. மரம், அதன் மட்டை, ஒலை, யாவும் மிகவும் பலம்வாய்ந்தவை. கெதியில் உக்கிப் போகாதவை. பனைஒலைகளை விட,
6

ஐய்பசி 2002 கலப்பை

Page 6
கலப்பை
ஐய்பசி 2002
பனையின் வட்டுக்குள் காணக் கூடியவையாவன - பன்னாடை, பனம்பூ (பாளை), கொக்காரை, கங்குமட்டை, நுங்கு (பின்னர் பனம்பழமாகுவது), பணகுருத்து (பனை ஓலை முளைத்துவரும் போது) - முதலியன.
பனைமரம் மிகவும் பலம்வாய்ந்தது, உறுதியானது. காற்று, மழைக்கு முறிந்து விடாதது. பனைமரம் வீடுகள், கட்டிடங்கள் கட்ட மிகவும் பிரயோசனமானதொன்று. தறித்து வீழ்த்திவிட்டு, ஆப்பு வைத்து அதனைக் கிழித்து, அதன் தோல், சிலும்பல், சிராம்பு முதலியவற்றை வாச்சிகொண்டு சீவி நீக்கி விட்டால் மிஞ்சுவது நல்ல வைரமான மரம். பின்னர் தச்சர் (மரவேலை செய்பவர்கள்) தங்கள் தேவைகளுக்கேற்ப இந்த சுத்தம்பணிணிய மரத்தைத் துணி டுகளாக நறுக் கி எடுத்துக்கொள்வார்கள். இவற்றிலிருந்து வீடுகட்டுவதற்கு வேண்டிய பலவித பொருட்களை வெட்டி, சீவி எடுப்பார்கள். அதாவது, வீடுகட்ட அவசியமான கப்பு, 650) 6. தீராநீதி, சிலாகை, முதலியனவற்றை அளவுக் குமி பிரமாணத்துக்கும் தக்கதாக வாளால் வெட்டியும் சீவுளியால் சீவியும் பாவிப்பார்கள். இந்த வேலைகளுக்கு உதவக்கூடிய பனை மிகவும் உரமானதும் உறுதியானதுமாகப் தறிப்பார்கள்.
பனையைத்
ஏனெனில், சாதா, சோத்தி
உள்ள பனைமரங்களில் வைரமான பகுதி
இராது. அவை பாவனைக்கு உகந்ததல்ல. இதைவிட, கிணற்றில் தண்ணீர் மொள்ள உதவும் துலாவும், பேண்மரம், நென்பு, அச்சுலக்கை முதலியன செய்வதற்கும்,
வேறு வேறு மரம் சம்பந்தப்பட்ட
பார்த்துத் தானி
தேவைகளுக்கும் பனைமரம் உதவும். அத்துடன், பனைமரத்தை அப்படியே பாதியாகப் பிளந்து, அப்பாதிகளை கவிழ்த்துப் பரப்பி அடுக்கி, எல்லாவற்றையும் ஒன்றாகத் தொடுத்து விட்டால் அது நீரோடை முதலியவற்றைக் கடக்க உதவும் ஒரு பாலமாக அமையும். பனைமரத்தைத் துணி டாக்கி நட்டு, படலைத் துாணாகவும் பாவிப் பார்கள் . பனைமட்டைகளை ஒரே அளவில் நறுக்கி வைத்துக்கொண்டு வேலி அடைக்கவும், அடுப்படியை மறைத்து மட்டைச்சுவர் அடைக்கவும், மறைவுத் தட்டிகள் தயாரிக்கவும் பாவிப்பார்கள்.
இவை மட்டுமல்ல. வேலி அடைக்க உதவும் குத்துாசி, கைக்கோ டரிப்பிடி, வாச்சிப்பிடி, உலக்கை, சிறு சிற்பங்கள், அழகுப் பொருட்கள், சில இப்படிப் பல விதமான பொருட்கள் பனை மரத்திலிருந்து செய்வார்கள். பனைமட்டை நாரும் சில தேவைகளைப் பூர்த்திசெய்யும். உதாரணமாக, ஆடு, மாட்டுக்கு கழுத்துக்கண்ணிகள் செய்வதற்கு நார்தான் பலமானதும் திரிநீது போகாமல் நின்றும்பிடிக்கும்.
தளபாடங்கள், உபயோகப்
பனையினி ஒலையிலிருநீது எதி தனையோ பொருட்களைச் செய்வார்கள். குருத்துப் பருவத்திலிருந்து முற்றி ஒலையாக வருமுன்னர் அதற்குச் சார்வு என்று பெயர். பனையிலேறி, வட்டுக்குள் இருக்கும் சார்வை வெட்டிக் கொணி டுவந்து, மூரியை வெட்டித் தள்ளிவிட்டு, அதைக் காயவைத்து (பதப்படுத்தி) எடுப்பார்கள். மெதுமையாக இருந்த சார்வு காய்ந்ததும்

ஐப்பசி 2002
பலம் ஏறி விசிறிபோல் விரிக்கக்கூடிய ஒலை ஆகிவிடும். அதை பன்னஓலை என்பர்கள். அந்த ஒலையைப் பக்குவமாக ஈர்க்குத் தள்ளி, காம்புச் சத்தகம் கொணர்டு, கீலம் கீலமாக வார்ந்து எடுப்பார்கள். (காம்புச் சத்தகத்துக்கு பன்னச்சத்தகம் என்றும் ஒரு பெயருண்டு. அது நீண்ட மெல்லிய பிடியுடன் கைக்கு அடக்கமான, வளைவான ஒரு கத்தி) கீலங்களாக ஒலையை வாரும்போது, அகலமாகவோ மெல்லியதாகவோ, தங்கள் தேவைகளைப் பொறுத்தே, வாருவார்கள். தனியப் பன்னஓலையைமட்டும் பாவித்து பெட்டி, பாய், (புட்டவிக்க) நீத்துப்பெட்டி, தட்டி, தடுக்கு, கூடை, பனங்கட்டிபோடும் குட்டான் வகை கள், குருவி, தேர், கிலுகிலுப்பை முதலிய குழந்தை விளையாடும் பொருட்கள், விசிறி, முதலிய எத்தனேயோ பொருட்களை இழைப்பார்கள். பல வர்ணங்கள் பூசிய சாயஒலைகளால் மேற்சொன்ன பொருட்களைச் செய்து கண்ணுக்குக் கவர்ச்சியாக வைப்பார்கள்.
(ஒருவிதப் புல்லைப் புற்பாய் இழைப்பார்கள்) ஓலையையும் (பனை மட்டையிலிருந்து உரித்த) நாரையும் சேர்த்துச் சில பொருட்களைச் செய்வார்கள் - தண்ணிர் இறைக்கும் பட்டை, நார்க் கடகம், பெரிய கூடை, தட்டி, உமல் (பை) முதலியன இவற்றுள் அடங்கும். ஒலையிலிருந்து வார்ந்து எடுத்த பனை ஈர்க்கிலிருந்து (ஒலை, நாரைச் சேர்த்தும் சேர்க்காமலும்) பல சாமானி களி உற்பத்தியாகும் - அவையாவன, வடக்கயிறு, உறி, திருவணி, விளக்குமாறு முதலியன. பனைஒலை விசிறி எப்படிச் செய்வார்கள்? பனங்குருத்து ஒலையாக விரியமுன்னர்
LT6...g5/16 பணி ன
கட்டை
கலப்பை
மடிப்புமடிப்பாகச் சுருங்கி மெல்லியதாக இருக்கும். அதை வெட்டி வந்து, பாதியாக கிழித்து, ஒரு பாதியை எடுத்து நன்றாக வித்து, விரித்த படியே மணலைக் கிண்டி அடியில் வைத்து மணலால் மூடிவிட்டால் சில நாட்களில் மடிப்புகள் எடுபட்டு விரிந்துவிடும். பின்னர் அதை வட்டமாக வெட்டி, ஈர்க்கினால் விளிம்பைச் சுற்றிவரக் கட்டி எடுத்ததும், அதன் சிறிய மட்டையே கைப்பிடியாகி, நல்ல விசிறியாகும்.
வீடுகளில் (கருப்பநீர்) பதநீரைக் காய்ச்சி பனங்கட்டி செய்வார்கள். இது குடிசைக் கைத்தொழில் ரீதிக்குள் அடங்கும். அதைவிட, தொழிற்சாலைகளில் சர்க்கரையும் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும். உலகச்சண்டைக் காலத்தில், சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயம் பனங் கட்டி நிறைய உத விற் று. கரும்பிலிருந்து கற்கண்டு செய்வது போல கருப்பரீரிலிருந்து கல லாக் காரம் செய்வார்கள். இது இருமலுக்கு இன்றியமையாத மருந்து.
பனம்பண்டங்களின் முக்கியத்துவம் அவை மனிதருக்கு மட்டு மல்ல, கால்நடைகளுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. மாடுகளுக்கு மிகவும் வேண்டிய ஒரு உணவு பனைஓலை. அதை ஈர்க்குத் தள்ளி, கீலங்கீலமாக வார்ந்தெடுத்து, மாட்டுக்குத் தீனாகக் கொடுப்பார்கள். பனம்பழத்தை மாடு நன்றாக நக்கிக் கழியை உட்கொள்ளும். நுங்கைக் குடித்தபிறகு நுங்குக் சிறுதுண்டுகளாக அரிந்து மாட்டுக்கு உணவாகக் கொடுப்பார்கள். சில ஆட்டுக்கடாக்களும் இதை உண்ணும்.
தங்கள் வளவில்
கோம்பையைச்

Page 7
aѣ6ой вош 23L BL Ilċjfi 2 UUZ
பனைமரம் உள்ளவர்கள் அடுப்பு எரிக்கத் தேவையான விறகுக்கு வேறு எங்கும் போகதீ தேவையில்லை. ஒலை முதற் கொணி டு பனைமரதி துணி டுகள் ஈறாக எல்லாப் பனம்பொருட்களும் அடுப்பெரிக்க ! உகந்தனவாகும். །
தென்னைமரத்தின் உபயோகம்: மேலே பனைமரத்தைக் குறித்துச்
சொன்ன விபரங்கள் கிட்டத்தட்ட எல்லாமே தென்னைமரத்துக்கும் பொருந்தும். தென்னையின் ஒலை வித்தியாசமானதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். தென்னோலை சராசரி 18, 20 அடி நீளமாக s リ இருக்கும். முற்றிக் கீழே விழுந்த 'S தென்னோலையை எடுத்து, நீட்டுக்குப் பாதியாகப் பிளந்து ஒவ்வொரு பாதியிலும் இருக்கும் ஒலைகளைப் பின்னிக் கிடுகு இணக்குவார்கள். அநேகமாகப் பெண்களின் வேலைதான் இது. இந்தக் கிடுகுகளைச் சேர்த்துவைத்து வேலி அடைக்கவும், வீடு வேயவும், வேறு மறைப்புகள் தேவையாயின் அவற்றுக்கும் பாவிப்பர்கள். ஒலையிலிருந்து ஈர் கி குகளை வார் நீது எடுத்து விளக்குமாறு செய்வார்கள். இதற்குக் கூட்டுமாறு என்றும் பெயர். இது வீடு , வாசலைப் பெருக்க, தண்ணீர்விட்டுக் கழுவிச் சுத்தம்செய்ய, உதவும். மிகவும் உறுதியானது. தென்னந்தும்பு (பொச்சு)
பல வேலைகளுக்கு உதவும். கயிறாகத் திரிக்கவும், தும்புத்தடி செய்யவும், மெத்தைக்கு அடையவும், காருக்கும் கதிரைக்கும் Cushion சரிக்கட்டுவதற்கும், நெருப்பு மூட்டவும், இன்னும் பல தேவைகளைத் தும்பானது பூர்த்திசெய்யும்.
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐப்பசி 2002
கலப்பை
துலாவும், வீடு கட்டத் தேவையான மரங்களும் சீவிஎடுத்துப் பாவிப்பதற்கு வைரமான தென்னை மரங்களையே தேர்ந்தெடுப்பார்கள்.
திருவிழாமூட்டம் கோவில்களையும், மற்றும் சிறப்பான வைபவங்களில் மணி டபங்களையும் தோரணங்கள், மாவிலை கட்டி அலங்கரிப் பார்கள். அந்தத் தோரணங்கள் குருத்துத் தெனி னோலையிலிருந்து தானி செய்யப்படுவன. பனையைப் போலவே, தென்னம்பாளையிலிருந்தும் கள்ளுச் சேர்த்து, தென்னங்கள்ளும் குடித்தவுடன் வெறிக்கும். பனையின் நுங்குக்குப் பதிலாக தென்னை இளநீர் காய்க்கும். அதைப் பிடுங்கி மேல்ப்பக்கத்தை அரிந்து எறிந்துவிட்டு இளநீரைப் பருகி தாகசாந்தி செய்துகொள்ளுவார்கள். இளநீர் முற்றியதும் தேங்காயாகிப் பழுத்துக் கீழே விழும். தேங்காயை மூடிப் புறத்தியில் தடிப்பான பொச்சுமட்டை இருக்கும். அதைக் கொடுவாள்க்கத்தியால் அல்லது அலவாங்கின் உதவியால் உரித்து எடுத்தால் உள்ளே பலமான தடித்த ஒடு பந்து வடிவமாக இருக்கும். அதனுள்ளே ஒட்டுடன் ஒட்டியபடி வெள்ளைத் தேங்காய், உருண்டைத் தேங்காய்க்குள்ளே இருப்பது இனிக்கும் இளநீர். தேங்காயைத் துருவி, துருவிய பூவைக் கசக்கிப் பிழிந்தெடுத்த தேங் காய் ப் பாலைக் கரி முதலியவற்றுக் குச் சேர்ப் பார்கள். பூவைப்பிழியாமல், தேங்காய்ப்பூவாக, சாப்பாட்டுடன் துணைஉணவாகவும் பாவிப்பார்கள்.
இறக் கிக் குடிப்பார்கள்.
உணவு வகைகள் :
அந்த நாட்களில் மச்ச, மாமிச உணவுகள் குறைவு. அநேக வீடுகளில் ஆரதக்கறியென்று காய்கறி உணவுகளையே சமைப் பார்கள் . அத்துடன் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், பாற்கட்டி முதலியவற்றையும் சேர்த்துக் கொள்வார்கள். அசைவ உணவுகள் சமைக்கும் நாட்கள் கிழமையில் 2. அல்லது 3 நாட்களாக இருக்கலாம். அடிக்கடி விரதம் அனுட்டிப்பார்கள், அந்நாட்களில் கணிடிப்பாகச் சைவ உணவுதான். சில வீடுகளில் மட்டுமே மச்ச, மாமிசம் தினமும் சமைப்பார்கள். எது எப்படியிருப்பினும் மச் சத்துக் கும் சைவஉணவு சமைப்பதற்கும் வேறுவேறு பாத்திரங்கள் - சட்டி, பானை, அகப்பை, கோப்பை, பேணி, மற்றும் புழங்கும் பாத்திரங்கள் முதலியன - பாவிப்பார்கள். அவை கலந்துவிடாவண்ணம் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.
உணவு வகைகளில் பலவிதத் தயாரிப்புகள் உண்டு:- அரையல், துவையல், பொரியல், வறுவல், அவியல், வதக்கல், தீயல், அரையவியல், சம்பல், கூட்டு, பிரட்டல், உவியல், குழம்பு, பச்சடி, சொதி, இரசம், இப் படி எதி தனையோ விதமாக உணவுகளைச் சமைப் பார்கள் . சமையல்கலைக்கென்றே எழுதிய புத்தகங்கள் எத்தனையோ வெளிவந் திருக்கின்றன. இக்காலத்து வீட்டுச் சமையலுக்குச் சேரும் உணவுப் பொருள்களோ பல விதப்பட்டவை. உணர்பவரின் வாய் ருசிதான் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும், உடம்பின் ஆரோக்கியம் பின் தள்ளப்பட்டிருக்கும்.
11

Page 8
கலம் பை gijalón 2002
பிரிவின் கொடுமை
- S 6 -
எத்தனை கடல்கள் எத்தனை நாடுகள் தாண்டியிருப்பேன் இங்குவர! தாய்நாட்டை விட்டு வரும்போது இல்லாத தாக்கம் என் சொந்தங்களை விட்டு வரும்போது இல்லாத சோகம் இந்தப் பள்ளியை விட்டு வரும்போது வருவதேன்?
காணும் வெள்ளைப் புறாக்களில் கறுப்புக் குயில் ஒன்று தென்படாதா என்று கண்ணில் மருட்சியுடன் நின்ற முதல்நாள் ஏதோ இன்றுபோல் தோன்றுகிறது.
காதுக்கினிய தமிழிருக்க கசந்தது ஆங்கிலம் கலங்கடித்தது பாடசாலை எப்பொழுது வீடு செல்வேனென்று ஏங்கியது மனம்.
தட்டுத் தடுமாறி
பட்டுப் பாடுபட்டு பள்ளியில் பசுங்கிளிபோல் பாடம்படிக்கக் கற்றுக்கொண்டேன்: கண்திறந்து மூடும் விநாடிகளில் கடைசி நாள் இதோ வந்துவிட்டது!
இம்மூன்று வருடங்களில் நான் பெற்ற மறக்க முடியாத நினைவுகள் மல்லுக்கு நிற்கும் வெள்ளைப் புறாக்கள்
12

ஐப்பசி 2002
கலப்பை
கூடு சேர்ந்த குயில்கள் குதுாகலமான கதைகள் கடுமையான பரீட்சைகள் பாசமுள்ள ஆசிரியர்கள் பாதம் பதித்த இடங்கள்
இவற்றை எல்லாம் இன்று விட்டுப்பிரியும் நாள்வரும் என்று நினைக்கவே இல்லை பள்ளியை விட்டு வரும்போது ஏற்பட்ட அந்தத் தவிப்பை, ஏக்கத்தை,
பிரியவே மனமின்றி முடிந்தளவு ஞாபகங்களை என் கண்ணால் படம்பிடித்து நினைவுப் பெட்டகத்தில் சேர்த்து வைத்தேன்
என் ஞாபகங்களைச் சேர்த்து வைக்கும் மனப்பெட்டகத்தில் வந்துசேர்ந்த அடுத்த முத்தாக
இந்நாளை மனதில்
சுமந்தபடி
வேறு வழியின்றி தாயைப் பிரியும் சேயின் மனப்பாரத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.
என்றுமே மறக்கமுடியாத ஏக்கத்தை இந்நாளில் இப்பள்ளி எனக்கு அளித்துவிட்டது: எனது கவலையற்ற
பள்ளிப்பருவம் முடிந்துவிட்டது.
13

Page 9
கலப்பை
ஐய்பசி 2002
சிந்தனைச் சிதறல்கள்:
வெட்டவெளித்ான் கடவுள் ~ என்று கொள்ளலாமா?
கடவுள் என்பது என்னவென்று நாம் ஆராயப் புறப்பட்டால், அதற்கு விளக்கம் கண்டுபிடிக்க முடியாது. விணி வெளியில் (ஆகாயத்தில் ) கோடானுகோடி நட்சத்திரங்கள், கிரகங்கள் நாம் கண்கூடாகக் காணும் சூரியனும் அதனைச்
(கோள்கள்) இருக்கின்றன.
சுற்றிவரும் ஒன்பது கிரகங்களும் மிகப் பிரமாண்டமானவை. பூமியே எந்தப் ஆயினும், சுற்றிவரும் ஒன்பது கிரகங்களில், இரணி டைவிட மற் றைய ஏழும் பூமியைவிடப் பெரியன. மேலும், கோள்களை விடச் சூரியன் எத்தனையோ ஆயிரம்மடங்கு
பெரியது. சூரியனும் ஒரு நட்சத்திரம்தான்.
பெரியது! சூரியனைச்
இந்தப் பிரமாணிடமான சூரியனின் குறுக் களவு, அதனி கோள்கள்
சூரியனிலிருந்து ஒவ்வொரு கோளும் சஞ்சரிக்கும் தூரம், ஒன்றுசேர்த்து நினைத்துப் பார்க்க முயற்சித்தல் வீண் என்றுதான் சொல்ல
எல்லாவற்றையும்
வேண்டும். ஏனெனில் அது கற்பனைக்கு எட்டாதது. விஞ்ஞான ஆராய்ச்சியில் அந்தந்த அளவுகளை, தூரங்களை கண்டு பிடித்திருக்கிறார்கள்தான். ஆனால் ஒரு சரதாரண மனிதனுக்கு இந்த அளவுகளும் துTரங்களும் கற்பனையில் தானி நினைத்துக்கொள்ளலாமே தவிர, அந்த அளவுகள், தூரங்களை நாம் புத்தகங்களில்
வாசிக்கிறோமேதவிர, அனுபவரீதியாக அவை எமக்குப் பிரயோசனப் படமாட்டா.
சூரியமணடலம் என்பது சூரியனையும் அதனைச் சுற்றியோடும் ஒருங்குசேர்த்துக் குறிக்கும் ஒரு பதம். நாமறிந்த சூரியமணி டலம் போல
கோள்களையும்
எத்தனையோ ஆயிரம் சூரியமண்டலங்கள் அணிடத்திலிருக கினிறன விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
என்று
இத்தனை ஆயிரக்கணக்கான சூரியன் களையும் (அதாவது நட்சத்திரங்களையும்) அவற்றில் ஒவ்வொரு நட்சத்திரத்தைச் சுற்றியோடும் கோள்களையும் அண்டம் அல்லது விண்வெளி என்று சொல்லப் படக்கூடிய ஆகாயம்தான் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. (ஆகாயம், வெளி, விண்வெளி, வெட்டவெளி, வானம், Space, Ether - இச்சொற்கள் எல்லாம் ஒன்றையே குறிக்கும்)
இனி, சிறிய அளவுகளைப் பார்ப்போம். ஒரு (Atom) அணுவை எடுத்துக்கொள்வோம்.
Atom is the smallest unit of matter which cannot be divided further. Atom consists largely of empty space. Near the centre of
4.

gillé 2002
கலப்பை
the atom is a dense core or nucleus comprisingprotons (which carry electric charge) and neutrons (which do not). Nucleons cling together to form the nucleus due to an attracting electric force, i.e. the nuclear force which is very strong. Within each atom the electrons are notat rest butthey move in orbits around the nucleus. Atoms combine with each other to form larger structures such as molecules of matter. The most significant characteristic of an atom is the atomic number which is the number of protons in its nucleus. All atoms with Same atomic number have identical properties and thus counted as a given element.
Matter is composed of elements - different matter, different elements Matter is the material substance that constitutes the universe. The basic building blocks of matter are atoms - of solids, liquids, gases. Matter cannot be destroyed nor created; but, it can be converted into energy; and energy into matter, by nuclearfisSion - i.e. splitting of the nucleus of an atOn.
சில தசாப்தங்களுக்கு முன்னர் அணு என்பதற்குப் பொருள் மேலும் பிரிக்கமுடியாத சடப்பொருள் என்பதாகும். அணுவானது கண்ணுக்குத் தெரியாது, பூதக்கண்ணாடி கொண்டுதான் பார்க்கலாம்.
ஆனால், அப்படிப்பட்ட அணுவைக்கூட 1930களில் விஞ்ஞானிகள் சிதறடித்து, Nucleus,(Neutron)நொதுமம் (மின்இயக்கம் இல்லாத சிற்றணுத் துகள்), (Protons) நேர்மின்மம் (அணுவின் கரு) என்று பிரித்துக் காட்டிவிட்டார்கள். அணுவின் மத்தியில் அணுவின் கருவும் அதனைச்சுற்றி அணுவின் சிற்றணுக்களும் வேகத்துடன் சதா சுழன்றவனனமே இருக்கின்றன. நாம் காணும் ஒவ்வொரு சடப்பொருளும் கோடிக்கான அணுக்கூட்டத்தின் சேர்க்கைப் பொருளாகும். சூரியனைச் சுற்றிக் கோள்கள் வலம் வருவதுபோன்று ஒவ்வொரு
அணுவுக்குள்ளும் ஒரு "அணுவின்
கருவும் அதைச் சுற்றிவரும் பல சிற்றணுக்களும் உள்ளன. ஆயினும்
ஒவ்வொரு சடப்பொருளும் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள சிற்றணுக்களைக்
அதாவது, ஒரு
சடப்பொருளிலுள்ள சிற்றணுக்களின்
கொணடதாகும்.
எணர்ணிக்கையானது இன்னொரு சடப் பொருளினி சிற்றணுகி களினி எணர்ணிக்கையைவிட வேறுபட்டது. ஆகவே சிற்றணுக்களின் எண்ணிக்கைதான் ஒரு சடப்பொருள் எது என்பதைத் தீர்மானிப்பது. அத்தோடு, சிற்றணுக்கள் கருவைச் சுற்றிவரும் வேகமும் பொருளுக்குப் பொருள் வித்தியாசப்படும். தண்ணீரை அல்லது வேறு ஏதாவது ஒரு திரவத்தை எடுத்துக்கொணிடால், அதன் அணுக் களிலுள்ள சிற்றணுக்களினி எண்ணிக்கையும், அவை கருவைச் சுற்றிவரும் வேகமும் குறைவாகவிருக்கக்
கூடும். அதேபோல், காற்றை அல்லது
15

Page 10
கலப்பை
ஐய்பசி 2002
ஒரு வாயுவைப் பார்ப்போமானால், காற்றின் சிற்றணுக்களின் எண்ணிக்கையோ அல்லது அவை சுற்றும் வேகமோ குறைவாகவே இருக்கக்கூடும் என்று நாம் ஊகிக்கலாம்.
சடப்பொருள் என்று சொல்லும்பொழுது, மரம், லோகம், தண்ணீர், காற்று, வாயு, துணிமணி, உயிரினங்கள், மண், நெருப்பு, விண்வெளியிலுள்ள சகல பொருட்களும் அதனுள் அடங்கும். உதாரணமாக, ஒரு மரத் துணி டை இது கோடிக்கணக்கான அணுக்கள் சேர்ந்து உருவான ஒரு சடப்பொருள். ஒரு ஒப்புநோக்கிற்காக, ஒரு மரஅணுவின் அணுக்கருவைச் சுற்றி 16 சிற்றணுக்கள் மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் சுழலுகின்றன என்று வைத்துக் கொள்வோம். இனி, ஒரு உலோகத்தை -இரும்பைஎடுத்துக்கொண்டால் அதிலுள்ள ஒவ்வொரு அணுவினி எண்ணிக்கையூழி, அவை தங்கள் கருவைச் சுற்றிச் சுழலும் வேகமும் மரஅணுக்களில் உள்ளவற்றைவிட அவசியம் வேறுவேறாகத்தான் இருக்கமுடியும். இப்படியே ஒவ்வொரு சடப்பொருளிலும்
எடுத்துக் கொள்வோம் .
சிற்றணுகி களினி
அவை வித்தியாசப்பட்டவையாகவே இருக்கும். பொருளுக்குப் பொருள் சிற்றணுக்களின் எண்ணிக்கை கூடி அல்லது குறைந்து இருக்கலாம். அவை கருவைச் சுற்றிவரும் வேகங்களும் வித்தியாசமாகவே இருக்கும்.
இதெல்லாத்திற்கும் அடித்தளமாக உள்ளது ஒரு முக்கியமான விஷயம். அதாவது SP (O)
அணுவுக்குள்ளேகூட ஆகாயம் இருக்கிறது என்ற உண்மை ஆகாயம் இல்லாவிடில் ஒரு சிறிய அணுவிற்கூட கருவைச்சுற்றி சிற்றணுக்கள் எப்படிச் சுழல முடியும்? ஆகவே, நாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கப் போனால், ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஆகாயம் இருக்கிறது. ஒவ்வொரு சடப்பொருளும் ஒரு
அணுக்கூட்டத்தின் சேர்க்கை. எனவே
ஆகாயம்தான் தனக்குள்ளேயே சகல சடப் பொருட்களையும் அடகி சி வைதீதிருக்கிறது என பது
நிரூபணமாகின்றது.
கடவுளைப்பற்றி நாம் கற்பனை பண்ணும்பொழுது காலஅளவை, துTர அளவை முதலியவற்றைப் பிரமாண்டமானதாக, பரந்ததாக, சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். காலத்தை எடுத்துக்கொண்டால் விநாடி, நிமிடம் மணித்தியாலம், நாள், கிழமை, மாதம், வருடம் இவைகளை விட்டு, யுகங்கள், கோடானுகோடி வருடங்கள், ஊழிக்காலம், (light-years), என்றவாறு கற்பனை பணிணவேண்டும். அதேபோல, தூர அளவினை அங்குலம், அடி, யார், மைல், கிலோமீட்டர் என்று பர்க்காமல், சிந்தனையின் வேகம், மனோவேகத்தினால் கணிக்கக் கூடிய தூரம் என்று கணக்கிடவேண்டும். கோடைகாலத்தில் யணி னலைத் திறந்து விண்ணில் வெளி. இவ்வுடம்பை விட்டு, மனம் சூரியனை நோக்கி மனோவேகத்திற் பறந்தது!
ஒருநாள். விண்வெளியைப் பார்த்தேன். முகில் கள் இல்லை: ஒரே
16

●
ஐப்பசி 2002 ðf SOII EJ
சூரியனையும் துளைத்துக் கொண்டு மடு, காடு, மேடு, ஆறு, கடல் அதனூடாகப் போய் எதிர்ப்பக்கத்தால் கட்டடங்கள், உயிரினங்கள், உடம்பு,
வெளிப்பட்டு, இன்னும் தொடர்ந்து போய்க் கொண்டேயிருந்தது. மனோவேகம் என்றால் காலநேரம், தூரம் முதலியன கணக்குக்குள் அடங்கா, சூரியனின் பரிவட்ட எல்லையைக் கடந்து அப்பாற் போய்விட்டது மனம். அங்கு பார்த்தால் ஒரே இருட்டு. சூரியனின் ஒளி பரவக்கூடிய எல்லையைத் தாண்டிவிட்டால், அதற்கப்பால் வெளிச்சம் கிடையாது. ஒரே இருள்மயம். அது எப்படி? வானத்தைப் பர்க்கும்போது நீலமாகவல்லவா
இப்போது இருட்டாக என்று அதிசயப்பட்டேன்.
நாம் சாதாரணமாக
தெரிகின்றது, இருக்கிறதே! ஆனால், அதிசயப்பட ஒன்றுமில்லை. விளக்கம் என்னவெனில், சூரியனின் பிரகாசமான வெளிச்சம் இருட்டாகவிருக்கும் வெட்டவெளியில் படும் போது அது நீலமாகத்தான் தோன்றும். உதாரணம்,
கறுத்தச் சுவர்கள் சூழ்ந்த ஒரு அறையில்,
நடுவே சிறியதொரு விளக்கை வைத்து
விட்டுச் சுவர்களைப் பார்த்தால் அவை நீலநிறமாகவே தோற்றமளிக்கும்.
கடவுள் எங்கும்
உள்ளவர்: எல்லாம் வல்லவர்: எல்லாம்
தெரிந்தவர் : உருவமில லாதவர் : அருவமாயுள்ளவர்: எல்லா உயிர்களிலும் இருக்கிறார்: எல்லாச் சடப்பொருள்களிலும் இருக்கிறார்; (அதனால்தான் சொரூபங்களை வணங்குகிறோம்!) உயிரினங்களின் நடமாட்டத்தையெல்லாம் கடவுள்
பார்த்துக்கொண்டே இருக்கிறார். மலை,
உணவு, பயிர்கள், இவை யாவும் கடவுளின் பராமரிப்பிலேயே இருக்கின்றன. நீர், நெருப்பு, மணி , காற்று, ஆகாயம் ஆகிய பஞ சபூதங்களும் கடவுளினி கட்டளைப்படியே செயற்படுகின்றன என்றும், அதனால் நாம் என்றென்றும் கடவுளைத் துதித்தும், நன்றிசொல்லியும், அவருக்குக் கீழ்ப்படிந்தும் நடந்துகொள்ளவேண்டும் என்றும் புத்தகங்களில் படித்திருக்கிறோம், பெற்றோர், பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம், அதன்படியே நடக்கவும் முயற்சிக்கிறோம். நல்லது "
வெட்டவெளிதானி கடவுள் என்று கொள்ளலாமா? இது ஒரு விந்தையான கேள்வி புத்தகம்
புத்தகமாக இதற்குப் பதில் எழுதலாம்.
ஏற்கனவே கடவுளைப் பறி ரி ஆயிரக்கணக்கான புத்தகங்கள், எல்லாச் சமயங்களிலும், வந்திருக்கின்றன.
அவற்றை விட நாயனி மார்களும் , முனிவர்களும், ஆராய்ச்சியாளர்களும் கடவுள் இன்ன இன்னமாதிரித்தான் இருப்பார் என்று விபரித்திருக்கிறார்கள். எல்லாச் சமயங்களும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார்: அவர்தான் உயிரினங்களைப் படைத்து, காப்பாற்றி, அழித்தும் வருகிறார் என்று ஒன்றுக்கொன்று வித்தியாசம் இல்லாமல் ஆணித்தரமாக அடித்துக் கூறுகின்றன.
சைவசமயத்திலும் கடவுள் எங்கும் இருப்பார், எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர், அவரன்றி ஓரணுவும் அசையாது, கடவுள் தனது
17

Page 11
Φ ου ή ω Η
glėjil 2002
சக்தியைக் கொண்டுதான் மேற்கூறிய முத்தொழில்களையும் செய்கிறார் என்று கூறுகிறது. அத்தோடு,
கண்ணுக்குத் தெரியமாட்டார், சீவராசிகளானாலும்
கடவுள்
எந்தச்
அவரது ஆணைப்படியே உயிர் வாழவேண்டும் என்கிறது. சிலர் சக்தியையே கடவுளாகக்
கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப ஒரு தெய்வத்தைக் கடவுளாக வரித்து, அதை முழுமனதுடன் வணங்குகிறார்கள்.
கடவுள். இவர் எங்கும் இருப்பவர், ஆனால் கண்ணுக்குத் தெரிய மாட்டார். எல்லாம் வல்லவர், ஆனால் அவர் செய்பவை எவருக்கும் புலனாகாது. எல்லாம் அறிந்தவர், அநேகமாக எல்லாத் தெய்வங்களையும் பொறுத்தவரை. ஆனால் சிலவேளைகளில் தெய்வத்தின் அறிவுகூட மழுங் கிப் போவதாகக் கதைகளில் படித்திருக்கிறோம். அவர் மனித உருவத்தில் வந்துதான் துஷ்டநிக்கிரகசிஷ்ட பரிபாலனம் செய்வார் என்றும் படித்திருக்கிறோம். அதனாற்போலும், சாதாரண மனிதனுக்கு வழக்கமாக ஏற்படும் சபலங்கள் - கோபம், அன்பு, காருண்யம், பழிவாங்குதல், புலாலுண்ணல் (வேள்வி), காமம், சபித்தல், கள்வம், முதலிய குணங்கள் மனித உருவத்தில் சித்தரிக்கப்பட்ட கடவுளுக்கும் ഉ. ഞf (് அறிந்திருக்கிறோம்.
ஆகாயம், விண்வெளி, 06. Los 6f, Space, Ether, 36061 எல்லாம் ஒன்றுதான். இவற்றில் கடவுளின்
எனிறு
அம்சங்கள் அத்தனையும் இருப்பதைக் காணலாம். ஆகாயம் தன்பாட்டில் இருக்கிறது, எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கு எல்லையில்லை, அடிமுடியில்லை. உணரமுடியாதது, ஆனால் இருக்கிறது என்று எமக்குத் தெரியும். சூரியன், சந்திரன், பூமி, கிரகங்கள், மற்றச் சூரியமண்டலங்கள், நடசத்திரங்கள் இவை சகலத்தையும் தன்னகத்தே வைத்துப் பராமரித்து வருவது ஆகாயம், வெட்டவெளி. சூரியனையும் தாண்டி கோடானுகோடானு மைல்களுக்கு அப்பால் போய்ப்பார்த்தால் எல்லாம் ஒரேவெளியாக, வெட்ட வெளியாகக் அங்கு ஒன்றுமிராது, எங்கு பார்த்தாலும் ஆகாயம், எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆகாயம் (வெட்டவெளி). 95.Tulis (permanent) நிரந்தரமானது, அழிவற்றது, எங்குமுள்ளது, என்றும் உள்ளது. எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறது. அழிவற்றது எதுவோ அதுதான் கடவுள் - (ஆகாயம்.) எங்கும் நிறைந்தது எதுவோ அதுதான் கடவுள் - (ஆகாயம்) எல்லாம் அறிந்தும் சாட்சாத் சாந்தமூர்த்தியாக அமைதியாக இருப்பது எது வோ அதுதான் கடவுள் - (ஆகாயம்).
பிறந்த நாள்தொட்டு கடவுளைப்பற்றி ஒன்றுமே தெரியாமல்,
காட்சியளிக்கும்.
அரசாங்கத்தின் சட்டங்களும், சமூகக்
கோட்பாடுகளும்தான் கடவுள் என்று
வாழ்பவரும் உளர்.
ஒரு குழந்தை பிறந்து,
த வழிந்து, நடந்து, வளரும்
18

giILાઈ 2002
கலப்பை
பருவங்கள்வரை அதற்குக் கடவுள் என்றால் தெரிய நியாயமுமில்லை! அது வளர்ந்துவரும் காலத்தில் அதன் பெற்றோர், ஆசிரியர், புத்தகங்கள் மூலமாகத்தான் கடவுள்' என்ற ஒரு கற்பனை எண்ணத்தை அதன் மனதில்
என்னவெனிறு தெரியாது,
பின்னர்,
கோவில்கள்,
உண்டாக்கிக்கொள்ளுகின்றது.
ஆகாயத்தைக் கடவுள் என்று கற்பனைபண்ணி வணங்குவது சாதாரண மனிதனுக்கு இயலாத காரியம். ஆதிகாலத்தில், ஏதோ ஒரு சக்தி - தன்னிலும்பார்க்க வலுப்பெற்ற சக்தியொன்று - இருப்பதாக மனிதன் உணர்ந்து, அதற்குப் பயந்தும், பணிந்தும் வாழத் தலைப்பட்டான். ஆகாயத்தை, வெட்ட வெளியை, முன்னிலைப்படுத்தி, அதற்கு ஒரு உருவம் கொடுத்து, அதை மேன்மைப்படுத்தி, போற்றி, அதன் விசாலத்தையும் சூட்சும தீதையும் கணக்கிலெடுத்து, மனிதனிலும் மேம்பட்ட சக்தி அது என்பதை உணர்ந்து, அதனை வழிபடுவது பற்றி மனிதன் மனதிற் கொள்ளவில்லை. ஆகாயத்தை எப்படி வணங்குவது, எப்படி அதன் சக்திக்குக் கீழிப் பட்டு அமைத்துக்கொள்வது என்று ஆதியில்
வாழி கி கையை
மனிதனுக்குப் புரிந்துகொள்ளவில்லை. ஆகவே சூரியன், நெருப்பு, மலை போன்ற இயற்கைச் சக்திகளை கடவுளினி பிரதிநிதியாகக் நினைத்து அவற்றை வழிபட்டான். பின்னர் மனிதன் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகளைப் பிரஸ்தாபித்த மனிதரைப்
பின்பற்றி அவர்கள்மூலம் கடவுளை அறிய
தனது கற்பனைக்கெட்டிய (மனித உடல்சார்ந்த) சமைத்து ஆகாயத்தை (கடவுளை) கற்பனைக்குட்படுத்த முடியாத மனிதன் இதர உருவங்களைப் படைத்து,
முற்பட்டான். அதன்பின்னர்
பல்வேறு உருவங்களைச் அவற்றை வணங்கினான்.
அவற்றைத் தெய்வங்களாகக் கொண்டு அவற்றிற்கு ஆராதனைகள் செய்து, மனிதனுக்குரிய ஆசாபாசங்கள், குணங்கள் அந்தத் தெய்வங்களுக்கும் உண்டு என்று பிறமக்களுக்கும் பிரசாரம்பண்ணி அதனால் தனக்கு ஒரு மனத் திருப்தியைத் தேடிக்கொண்டான். ஆக்வே, இந்தத் தெய்வங்கள், சுவாமிகள் யாவும் மனிதனது கற்பனையில் எழுந்த சிருஷ்டிகள்தாம் - அதாவது, மனிதனது சிருஷ்டிகள்தான் - என்பது எவருக்கும் எளிதில் புலப்படாத ஒரு உண்மையாகும். சுருக்கமாகச் சொன்னால், கடவுளை (ஆகாயத்தை) கற்பனைக்குள் அடக்கி வணங்க மனிதனுக்கு முடியவில்லை: ஆகவே, எதையாவது முன்னிலைப்படுத்தி, தன்னியல்பாக வணங்கக்கூடிய ஒரு உருவத்தைச் சிருஷ்டித்து (man-made deities) அதை வணங்குகின்றான் -
அதாவது, மனிதனால் சிருஷ்டிக்கப்பட்ட சொரூபங்கள். Man cannot meditate without having an object in front. The deities are all man-made, in order to maintain and develop his ego
தான் வணங்குவதற்கென
- அவதானி -
19

Page 12
கலப்பை
ஐய்பசி 2002
பாலன் பிறக்கிறான்
-ஆசி. கந்தராஜா -
வறட்சி. கிழக்கு ஆபிரிக்க நாடுகளிலே மழை பொய்த்து விட்டது. இதுவரை காணாத வறட்சி என பேசிக்கொண்டர்கள்.
கிளிமஞ்சாரோ ஆபிரிக்காவின்மிக உயர்ந்த அதனி உச்சியிலுள்ள உறைபனிகள் என்றும் உருகுவதில்லை. இருந்தாலும் எண் ன? அதன் அடிவாரத்தில் இப்பொழுது வறட்சி. பசுமை இழந்து குச்சிகளைத் தாங்கிய மரங்கள். வற்றிய நீரோடை, மரங்கள் சிலவற்றின் உச்சிகளுக்கு
6) 6).
ஒட்டகச்சிவிங்கிகள் தமது கழுத்தை
நீட்டி உணவு தேடின. மெலிந்தன வலியனவுக்குப் பணியும் நியதி. பிணம்தின்னும் கழுகுகள்மட்டும் வயிறாற உண்ட களைப்பில் உயிர்ப்பிழந்த மரக்கொம்புகளில் இளைப்பாறின.
மலைஅடிவாரத்தின் தென்மேற்குத் திசையில் குரவைச் சத்தங் களும் மேளச்சத்தங்களும் ஒலித்தன. அங்கு வாழும் சுதேசிகள் ஒன்றாக இணைந்து வேள்வி நடத்துகிறார்கள். மழை பொய்த்ததால் வனமும் மக்கள் வயிறும் வறண்டுவிட்டன. அந்த வறட்சியிலே (Tribal) டிரைபல்' முறுகல்களும் விரோதங்களும் கருகினபோலும் ! அனைவருக்கும் இப்போது வேண்டியது மழை அதற்காக கலாச்சார மரபுபடி வேள்வி, கூட்டுவழிபாடு தொடங்கி யிருக்கவேண்டும். வேள்வியில் பலியிடும்
ஆடுகளினி அலறல் கொட்டுமேளச் சத்தங்களை மேவி எதிரொலித்தது. எலும்பும் தோலுமாக வயிறு ஒட்டிய நிலையில் உள்ள ஆடுகள்
மேலதிமாக வேள்வி நடக்கும் இடத்துக்கு இழுத்துச் செல்லப்படுகின்றன.
9)s) 5 5 5 (Hakanghi) 36oi pi வேள்விக்குப் போகவில்லை. அவளால் இயலவில்லை. இப்பொழுதெல்லாம் அடிக் கடி அவள் சிறுநீர் கழிக்கவேண்டும். பிரசவகாலம் நெருங்க நெருங்க இந்த உபத்திரவம் அவளைப் பாடாய்ப் படுத்துகிறது. இன்று மதியத்திலிருந்து அடிவயிறும் விட்டுவிட்டு வலிக்கிறது. இந்த வலியின் அர்த்தம் அவளுக்குத் தெரியும்.
20
 

ஐப்பசி 2002
கலப்பை
ஒரு முறையல்ல, மூன்று முறை ஆண்குழந்தைகளைப் பிரசவித்தவள். ஒன்றுமே பிழைக்கவில்லை. இந்தக் குழந்தையாவது தனக்குத் தங்கவேண்டு மென்று அவள் வேண்டாத தெய்வம் இல்லை.
சென்ற வார மீதான கணவனினி இனத்தவர்கள் காட்டுக் கிராமத்தி லிருந்து, கிளிமஞ சாரோ மலையையொட்டி, இவள் வாழும் விவசாய பூமிக்கு வந்திருந்தர்கள். மழை இல்லை. வனவருமானமும் வேட்டையும் படுத்துவிட்டன. மழைவரும்வரை அல்லது ஏதோ ஒரு வருமானம் கிடைக் கும்வரை இங்கேதான் இருப்பதாக உத்தேசம் என்றுகூறி உட்கார்ந்து விட்டார்கள்.
அவர்களை '66/67f76.u/6L//7” என்றுசொல்லவோ அல்லது "எம்மிடம் பணமில்லை” என்றுகூறவோ முடியாது. குல ஆசாரங்களைப் பேணுத லி அவர்களின் இனக்கடமை. இதனால், அவர்கள் அங்கு இருக்கும்வரை சாப்பாடு போட்டேயாக வேண்டும். தவறினால் அந்த "ட்ரைப்" மக்கள் ஹகங்கியையும் அவள் கணவனையும் தங்கள் குலத்திலிருந்து விலக்கி விடுவார்கள்.
எதிர்பாராத இந்தச் செலவுகளைச் சமாளிப்பதற்காக அவள் கணவன் எல்லைதாண்டி நைல்நதிக்கரையில் வாழும் தன் பால்ய நண்பனைப் பார்க்கச்
சென்றிருக்கிறான். வாரம் ஒன்றாகியும் அவனிட மிருந்து தகவல்கள் வராதது ஹகங்கிக்கு மனச்சேர்வை ஏற்படுத்தியது.
அணி டிவாழ வநீத கணவனின் டிரைபல் இனத்தவர்களும் வேள்விக்குச் சென்றுவிட்டர்கள்.
ஹகங்கிக்கு அடிவயிற்றில் மீண்டும் நோவெடுத்தது.
பன்னீர்க்குடம் உடைந்துவிட்டது!
பிரசவத்துக்கு வந்திருந்த எலிசபெத் சுறுசுறுப்படைந்தாள். இவள் அங்குள்ள மாதாகோவிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி. அந்தக் கோவிலில் தான் ஹகங்கியும் தோட்டவேலை செய்கிறாள். அவளும் இவளும் ஒத்தவயதுத் தோழிகள். நட்பின் இறுக்கம் எலிசபெத்தை இங்கு பிரசவம் பார்க்க வைத்துள்ளது.
மினி ன லென 69 (U) வலி அடிவயிற்றிலிருந்து நெஞ்சுவரை பாயவே
2

Page 13
கலப்பை
ஐய்பசி 2002
ஹகங்கி தம்பிடித்து முக்கினாள். அது பிரசவ முக்கல் . . .
ஒன்று
அழகான குழந்தை
ஜனனமாகியது!
'ஹகங்கி! நீ அதிர் கூழ்டக்காரி1 பெண் குழந்தை. ராணியாட்டம் உனக் குச் சீர் வரிசை கொண்டுவரப்போகிறாள். எத்தனைபேர் அவளுக்கு ஷமணப்பெண் கூலி )ே
கொடுக்கப் போட்டி போடுகிறார்கள் என்று பாரேன்” என்று உற்சாக வார்த்தைகள் கூறிக்கொண்டே தொப்புள்க்கொடியை கயிறால் இறுகக் கட்டி நறுக் கத் தயாரானாள்.
ஹகங்கி மூச்சைப் பிடித்து மீண்டும் முக்கினாள்
முன்னைய தொப்புள் கீ கொடியை நசித்தவாறு இன்னொரு சோடி பிஞ்சுக் கால்கள் உலகத்தை எட்டிப் பார்த்தன. பிரசவம் பார் தீத எலிசபெத் அரண்டுவிட்டாள்.
இரட்டைக் குழந்தை! அதுவும் காலால் பிறக்கிறது.
'ஆண்டவரே! இந்தநேரத்திலா?.” எலிசபெத் சிலுவைக் குறியிட்டாள். ஹ கங் கி கணி களை மூடி அரைமயக்கத்தில் படுத்திருந்தாள். முக்குவதற்குக் கூட அவளிடம் பலமில்லை.
ஆட்டமும் பாட்டமும் வேள்வியும் முடிந்து உறவுகள் வீட்டுக்கு வருவதற்கு முன்பு ஏதாவது  ெச ய’ ய வே ண " டு ம’
கன்னியாஸ்திர்களுக்கான மேலங்கியை இழுத்துச் சொருகியவாறு எல்சபெத் சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபட்டாள். காட்டாமணக்கெண்ணையை கைகளிலே தடவி, பிஞ்சுக் கால்களை இறுகப்பற்றி, குழந்தையை வெளியே இழுத்தாள்.
இரண்டாவதாக ஓர் ஆண்குழந்தை பிறந்தது.
இரணிடு குழந்தைகளும் ஆரோக்கியமானவையாகத் தோன்றின.
இவை குல ஆசாரங்களுக்குத் தப்புமா..?
வேள்வி முடிந்து இனத்தவர்கள் இப்போது வந்துவிட்டால் . . 3
அசுர கெதியில் எலிசபெதி செயற்படத்துவங்கினாள். வெள்ளெருக்கம் சருகுகளைக் குவித்து, நெருப்பிட்டுப் புகைமூட்டினாள்.
கருகிய எருக்கம்பாலின் வாசனை ஹகங்கியை விழிப்படையச் செய்தது. தானி இரு குழந்தைகளைப் பிரசவிதி திருப்பதை பூரணமாக உணரத்தொடங்கியதும், உடலின் பலம் முழுவதையும் திரட்டி எழுந்து உட்கார்ந்தாள். குழந்தைகளைப் பார்த்ததும் அழுகை பீறிட்டது.
22

ஐப்பசி 2002 கலப்பை
"இரட்டைக் குழந்தைகள்தான். பயப்படாதே இதற்கு ஏதாவது வழி ஹகங்கியின் கணிணிரும் செய்வோம்" என்று எலிசபெத் ஆறுதல் வறணி டுவிட்டது. திக் பிரமை
கூறினாள். ஆறுதலான வார்த்தைகளை மீறி அழுகை தொடர்ந்தது. அவளுடைய அழுகையின் காரணத்தை எலிசபெத் பூரணமாக அறிவாள்.
பிறந்த குழந்தைகளுக்கு என்ன நடக்குமென்பது 'கங்கிக்கு நன்கு தெரியும். அவளுடைய கணவனின் டிரைப்பில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதுபற்றி விநோதமான கருத்திருக்கிறது. அது அபசகுனம் என்று கருதுகிறார்கள். மழை பொய்த்து, பஞ்சம் பரவியுள்ள இந்தக் காலத்தில் பிறந்த இரட்டைக் குழநி தைகள் "சாத்தானி களே" எனச்சொல்லி, கொன்றுவிடுவார்கள்.
மேளச்சத்தம் அடங்கியது. வேள்வி முடிந்துவிட்டதா . . . ? ?
பிடித்தவள் போல மூலையில் குந்தி இருந்தாள்.
உறவுகளின் உரையாடல் சத்தம் வீட்டைநோக்கி வந்துகொண்டிருந்தது. ஷஷஅவர்கள் வருகிறார்கள் என் குழந்தைகளைக் காப்பாற்று”
ஹகங்கி எலிசபெத்தை யாசித்தாள்.
6T6
கழுத்தில் தொங்கிய சிலுவையைக் கண்களில் ஒற்றி, "ஆண்டவரே இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றும்" என கண்களை மூடி எலிசபெத் மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.
உறவுகளின் சத்தம் முற்றத்தில் மிக அருகில் கேட்டது. தாமதிக்க இனி நேரமில்லை. தனது தீர்மானத்தினைச் செயற்படுத்துவதில் எலிசபெத் தீவிரமானாள்.
ஹகங்கியினி தொடைகளிலே வழிந்துகிடந்த இரத்தத்தையும் பிரசவ திரவங்களையும் தன் தொடை களிலும் அங்கியிலும் பூசிக்கொண்டாள்.
ஆண்குழந்தையைத் தானே பிரசவித்த பாவனையில் ஒன்றி
கன்னிமரியாள் அல்ல. எலிசபெத்தும் தன்னைத் தாயாக்கிப் படுத்துக் கிடந்தாள். --- -- ο Ο o----
23

Page 14
கலப்பை ஐப்பசி 2002
இரு நதிகளி
. விழி மைந்தன் மாலையிலே மஞ்சள் வெயில் காயும் நேரம்
மாநகரில், ரொறன்ஸ் ஆற்றின் கரையில் உள்ள சோலையிலே, புல் மீதில் சாய்ந்தவாறே
தூக்கமிலாச் சொர்ப்பனத்தில் திளைக்களானேன்.
சிற்றலைகள் ஓடுகிற ஆற்று நீரில்
செவ்வந்திச் சூரியனின் முகத்தைப் பார்த்தேன் புற்றரையில் சிறு தாரா நடந்து போகும்
புதர் புதராய் ரோஜாக்கள் பூத்து நிற்கும் தத்திவரும் அலைகளிலே தவழ்ந்து வந்த
காற்றின் இதம் தானென்ன? கரையின் மீது எத்திசையும் மின் விளக்கு வெளிச்சம் இங்கே
இயற்கையொடு செயற்கையும் சேர் இதம் தான் என்ன?
படகுகளிற் பவனி வந்து மகிழ்கின்றாரும், பாதைகளில் நடப்பாரும், ஒடுவாரும், மரநிழலிற் சாய்ந்திருந்து கதைகள் பேசி
மகிழ்வாரும், பாபகியூ வைக்கின்றாரும் நடைபயிலும் அன்னத்தின் பின்னால் ஒடும்
மழலைகளும், நண்பர்களோடுலவுவாரும் நிறைகின்றார் எங்கெங்கும் ரோஜாக் பூக்கள்
நிம்மதியாய்த் தலை சாய்த்துக் காற்றில் ஆடும்.
சலசலத்தும், மின்விளக்கு வெளிச்சம் தன்னில்
தகதகத்து மின்னியும், மென் காற்றை வீசிக்
கலகலத்து நகைத்தும், பூம் படுக்கை நட்ட
கரைகளுக்கு நடுவில் ரொறன்ஸ்' என்னும் ஆறு
24

கலப்பை
அலை சிலுப்பிப் புன்னகைத்து வளைந்து செல்லும்
அழகிதனைக் காணுகையில், இலங்கை நாட்டில்
மலைகளுக்கு நடுவில், முன்னொரு நாள் கண்ட
மகாவலி என்றொரு நங்கை மனதில் வந்தாள்
கரைகளிலே மின்விளக்கு வெளிச்சம் இல்லை கரு நாணற் புதர்களுக்கு நடுவிலே, சீறி
நுரையடித்துப் பெருகுகிற ஆறு பாறை
நூறு, கரு முகம் நீட்டி நிற்கும், நீரில்
செம்மண்ணின் நிறத்தினிலே கலங்கல் தண்ணீர்
சீறி வரும் கரையெல்லாம் சேறு, சேறு
மண்டி நிற்கும் புதர்கள் கரையெங்கும் வானில்
மழை மேகம் சூரியனை மறைத்துச் செல்லும்
கரையினிலோர் மாமரத்தின் உச்சிக் கொப்பில்
தனித்திருந்த கிளியொன்று, தலையைச் சாய்த்து
மரகதம் போல் இறகுகளைக் கோதிக் கொள்ளும்
மகாவலியும் இரைச்சலுடன் சுழன்று போகும்.
இருந்தாலும், ஆற்றினில் ஓர் மடுவில், ஆட்கள்
இறங்கி நின்று குளித்தார்கள், துணிகள் தோய்த்தார்.
குடங்களிலே நீர் மெண்டு பெண்கள் சென்றார். குடிப்பதற்கு சமயத்தில் உதவும் என்றார்.
மறுபடியும் நனவுக்கு வந்து, முன்னால்
மகிழ்ச்சியுடன் ஒடுகிற 'ரொறன்ஸ்" ஐப் பார்த்தேன்
கருமைநிற எண்ணெயொடு பொலித்தீன் பைகள்
தண்ணிரில் மிதந்து கொண்டு செல்லல் கண்டேன்
25

Page 15
கலப்பை
ஐப்பசி 2002
ஆசையுடன் தண்ணில் காலை வைத்த
மழலை ஒன்றைத், தாய் இழுத்துச் செல்லல் கண்டேன்.
"மாசடைந்த ஆற்றினிலே நீந்தல் வேண்டாம்"
மரப்பலகை அறிவித்தல் கரையில் கண்டேன்.
சிலுசிலுத்துப் பாய்கின்ற ரொறன்ஸ்' ஆம் ஆற்றில் செத்துவரும் மீன்களினைக் கண்கள் காணும்
மலையோடு மகாவலியின் கரையில், ஆங்கோர்
மாமரத்தில் இருந்த கிளி மனத்தில் நிற்கும்.
'@lyngpsdýrsvö' bgp - Torrens River
uTuág - Barbeque QLI66ési” – Polythene
11ம் பக்கத் தொடர்ச்சி
கடையில் வாங்கும் சாப்பாடுகளோ சொல்லத் தேவையில்லை. பல வியாதிகளுக்குக் காரணமாக இருப்பன இனி றைய சாப்பாடுகளில் சேர்க்கப்படும் பொருள்கள் என்பது வைத்தியர்களின் அபிப்பிராயம்.
அடுப்படி மெழுகிய நிலமட்டத்தில் இருந்தபடியால் பெண்கள் ஒரு பலகைக்கட்டையின் மேல்தான் உட்கார்ந்து தங்கள் அலுவல்களைச் செய்வார்கள். பெண்கள் அடிக்கடி குந்தி, எழும்பி, குனிந்து, நிமிர்ந்து, வளைந்து, நடந்து உடம்பை இயற்கை அப்பியாசத்துக்கு உள்ளாக்குவதால் அவர்களை வியாதிகள் இலகுவில் பீடிப்பதில்லை. ஏன், அம்மியில் அரைத்தல்,
உரலில் இடித்தல், கிணற்றில் தண்ணீர் அள்ளி இறைத்தல், நெல்லுக் குத்துதல், ஆட்டக் கல்லில் உழுந் தரைத்தல், திரிகைக்கல்லில் மா, பயறு, உழுந்து திரித்தல் மூசிமூசித் துணிதோய்த்தல், முற்றமும் வீடும் கூட்டுதல், காய்கறித் தோட்டம் / பூந்தோட்டம் வைத்துப் பராமரித்தல், சந்தைக்குப் போதல், பிள்ளைகளைப் பராமரித்தல், இவைகள் யாவும் உடம்பை tim ஆக வைத்திருக்க உதவுக்கூடிய அப்பியாசங்கள்தானே! - அவை பெண்கள் தினந்தோறும் நினையாப்பிரகாரம் செய்யும் தேகாப்பியாசங்கள். (அவர்களுக்கு Park உம் Evening Walkஉம் தேவையில்லை!)
(தொடரும்)
26

ஐய்பசி 2002
கலப்பை
உள்ளத்து நிலவு நீ
சிறுகதை
o
| d
நெஞ்சம் இனிக்கிறது - உன்பால்
தஞ்சம் புகத்துடிக்கிறது
வெஞ்சமரில் வெல்லும் உன் தடந்தோள் கண்டு அஞ்சுவர் பகைவர் எனப் பெரும் புலவர் கொஞ்சு தமிழில் உன் கொற்றம் வாழ்த்துதல் கேட்டு
மிஞ்சுது காதல் அதனால்
நெஞ்சம் இனிக்கிறது - உன்பால்
தஞ்சம் புகத்துடிக்கிறது
ஸ்ருதி அண்மையில் தான் அமரர் கல்கியின் "பார்த்திபன் கனவு" சரித்திர நாவலைப் படித்தாள். கல்கியின் எழுத்துக்களில் ஸ்ருதிக்கு ஓர் அபார பிரியம். எந்தக் காலத்துக்கும் உகந்தவை. எப்போதும் யாராலும் சுவைத்துப் படிக்க்கூடியவை. அதுமட்டுமல்ல அந்த நாவல் ஸ்ருதிக்குப் பிடித்ததற்கு இன்னொரு காரணம் அதன் சம்பவங்கள் ஏறத்தாழ அவளது அப்போதைய மனநிலையைப் பிரதிபலித்தன.
பார்த்திபன் கனவு நாவல் தமிழ் நாட்டில் பல்லவர் காலத்தின் இறுதிக் காலத்தையும் மாபெரும் சோழர்காலத்தின் ஆரம்ப காலத்தையும் பின்னிப் பிணைந்து அமரர் அவர்களின் கற்பனைத் தேன் துளிகளால் உயிரூட்டப்பட்டிருந்தது. அந் நாவலில் ஸ்ருதிக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் அதன் கதாநாயகி பல்லவ இளவரசி குந்தவைதேவி. அவளுக்கு தான் என்ன துணிவு, பல்லவரின் பரம எதிரியான சோழ இளவரசன் விக்ரமனைக் காதலிப்பதற்கு? அதுவும் யார் அவன் என்று தெரியாமலேயே கண்டதும் காதல் வசப்பட்டுவிட்டாள்.
(கலைஞர் மு கருணாநிதி)
ஸ்ருதியும் அப்பொழுது இளவரசி குந்தவையின் நிலையில் தான் இருந்தாள். தன் தந்தையின் உடைகள் தயாரிப்பு வியாபாரத்தின் பரம எதிரியான விக்ரம் மேல் அவளுக்குக் கணிடதும் காதலி ஏற்பட்டுவிட்டது. அதை அவளால் என்ன முயன்றும் தவிர்க்க முடியவில்லை. பார்த்ததும் இவனே உன்னவன் என்று அவள் உள்ளம் உணர்த்த, அவளும் தன் இதய சிமீமாசனதீதில் அவனை இருத்திவிட்டாள். அன்பு கொண்ட நெஞ்சம் பின் விளைவுகளைச் சிந்திக்குமா என்ன?
ரெடிமேட் உடை தயாரிப்பில் விக்ரமின் தந்தை சுந்தரம் தான் நகரத்திலேயே கொடிகட்டிப் பறந்தார். அவரது "லுக்வெல் நிறுவனம் தயாரிக்கும் உடைகளுக்குத் தான் வெளி நாட்டிலும் நல்ல வரவேற்பிருந்தது. ஆனால் அண்மைக் காலமாக அதில் ஒரு சரிவு. அந்த இடத்தைச் ஸ்ருதியின் அப்பா பத்மநாதனின் "அழகு" நிறுவனம் படிப்படியாகத் தட்டிக் கொண்டது.
27

Page 16
கலப்பை
ஐப்பசி 2002
அணி மையில் லுக வெல் பெரு நஷ்டத்திற்குள்ளானது. அதனால் சுந்தரம் மனமுடைந்து இதய அதிர்ச்சிக்கு ஆளாகி மருத்துவ மனையில் இருந்தார். இதற்கெல்லாம் ஸ்ருதியின் அண்ணா வருணி செய்த தில்லுமுல்லுகள் தான் காரணமென அறிந்த விக்ரம், அவர்களின் அழகு நிறுவனத்திற்கு வந்து பத்மனாதனிடம் தாறுமாறாகக் கத்திவிட்டுப் போனான். பத்மனாதனிடம் பேசிவிட்டுக் கனல் கக்கும் கண்களுடன் திரும்பியவனை அப்பொழுது தான் கதவைத் திறந்து தந்தையிடம் எதுவோ கேட்கச் சென்ற ஸருதியின் கண்கள் சந்தித்தன.
அந்த வினாடியே அவள் உள்ளத்தில் ஓர் இன்ப அருவி ஊற்றுப் பெருகத் தொடங்கியது. மொட்டு விரிந்து மணம் பரப்புவது போல அவள் மனத்துள் ஓர் இனிய பரவசம் பொங்கிப் பெருகுவதை உணர்ந்தாள். அப்பொழுதே அந்த நிலா அவள் உள்ளத்துள் புகுந்து விட்டது. அவனது அந்தக் கம்பீரமி, எண்ணிப் பன்னிரண்டு மாதங்களில் லுக்வெல் ஐப் பழைய நிகைகுக் கொண்டு வருவேன் என்ற சபதம், அதை நிறைவேற்றுவதில் அவனுக்கிருந்த அசையாத நம்பிக்கை யாவும் ஸ்ருதியை மிகவும் கவர்ந்தன. வந்த வேலையைவிட்டு விட்டு அவனையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றாள். அவன் போய்ப் பல நிமிடங்களாகியும் ஸ்ருதி அசையாமல் நிள்றாள். தந்தை என்னம்மா என்று கேட்ட பின் தான் தன்னிலைக்கு வந்து "யாரப்பா அது" எனத் தந்தையிடம் கேட்டாள்.
அவர் "அவன் மடையன் கிடக்கிறான் விடு
என்றார் ஆனால் அவள் விடாமல் கேட்கவும் அந்த கந்தரம் ஒரு காலத்தில் என் நண்பன் தான். ஸ்ருதி வியாபாரம் என்றால் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தானே செய்யும். அது புரியாமல் அவன் ஆஸ்பத்திரியில் கிடக்கிறான், இவன் இங்கே வந்து கத்திவிட்டுப் போகிறான் என்றார்.
ஆனால் அவளால் அதைச் சாதாரணமாக எடுக்க முடியவில்லை. அந்த நிமிடமே அவனது லட்சியத்தின் வெற்றிக்கு உதவ அவள் அன்பு கொண்ட உள்ளம் சபதம் எடுத்துக் கொண்டது. அதற்குச் சாதகமாகத் தந்தையிடம் தந்திரமாகப் பேசி வியாபார ஒப்பந்தங்கள், ரெண்டர் விலைமதிப்பீடுகள் ஆகியவற்றிற்கான பொறுப்பைத் தன் வசமாக்கிக் கொண்டாள். ஸ்ருதி அப்பொழுது தான் உடை அலங்காரத்தில் பட்டம் பெற்றிருந்தாள். அதனால் பத்மநாதனும் மகள் கற்ற வித்தையைத் திறம்படக் காட்டுவாள் என நம்பிப் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தார். அந்த நேரம் வருண் வெளிநாடு சென்றிருந்ததும் ஸ்ருதிக்குச் சாதகமாகியது.
ஸ்ருதிககுத் தங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் நஷ்டம் பற்றிக் கவலையே இல்லை. பல தலைமுறைகளுக்குப் போதுமான சொத்தில் ஒரு பகுதி குறைந்தால் என்ன?. ஆனால் விக்ரம் வெற்றி பெற வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். வியாபார ரகசியங்கள் புதிய ரெண்டர்கள். தமக்கு வரும் புதிய ஆர்டர்க்ள் யாவையும் அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டுமெனத் தீர்மானித்தாள். எல்லாம் சரி ஆனால் அவனை எப்படி அணுகுவது? அவளது உதவியை நிச்சயம் அந்தச் சிங்கம் ஏற்காது. அது
28

ஐப்பசி 2002
கலப்பை
வெற்றியை நேர் வழியில் தான் தேடும். ஆனால் அவளது அண்ணா போன்ற குள்ள நரிகளிடம் அதெல்லாம் பலிக்காது. அண்ணாவின் உளவாளிகள் எத்தனை பேர் லுக்கெவல்லில் இருப்பார்களோ?. ஸருதி இன்று முதல் விக்ரமின் நிழல் உளவாளியாக இருக்கத் தீர்மானித்தாள். அதைச் செயல்படுத்தும் வகை தான் அவளுக்குத் தெரியவில்லை மனம் குழம்பினாள்.
மனமிருந்தால் மார்க்கமா இல்லை?. அவள் தோழி அர்ச்சனாவுக்கு அண்மையில் தான் லுக்வெல்லில் உடைகள் வடிவமைப்பாளர் வேலை கிடைத்திருப்பது நினைவு வந்தது. இனியென்ன நிச்சயம் வெற்றிதான் எனச் ஸ்ருதியின் உள்ளம் உவகித்தது. முதல் கட்டமாக அர்ச்சனாவை போனில் அழைத்துச் "சுந்தரம் அங்கிள் எப்படி இருக்கிறார்" என்று கேட்டாள்.
வியந்த அர்ச்சனா "அவரைப்பற்றி நீ எப்படி ஸ்ருதி" என்றாள் "ஏன் அவரை நான் பார்க்கக் கூடாதா? சிறுவயதில் அங்கிள் என்னைத் தூக்கி வளர்த்திருக்கிறார். அந்த அன்பு இன்னும் என் மனத்தில் பசுமையாக இருக்கிறது. அது தான் நினைக்கிறேன்" என்றாள்.
பார்க்க
ஸ்ருதியின் இரக்க கபாவம் தெரிந்த அர்ச்சனாவுக்கு அது ஒன்றும் வியப்பாக இருக்கவில்லை. "அவர் உடல் நிலை இன்னும் ஸி திரமடையவில்லை. அத்தையுடன் நான் ஆஸ்பத்தியில் தான் இருக்கிறேன். வேண்டுமானால் நீ வா ஸ்ருதி” என்றாள். வியந்த ஸ்ருதி அத்தையா யார் அர்ச்சனா எனக் கேட்டாள்.
’கந்தரம் என் தாய் மாமா ஸ்ருதி, என்று இது வரை தன் தோழியிடம் மறைத்த விபரதி தைக் கூறினாள உங்கள் குடும் பங்களுக் கிடையே யுள்ள பிரச்சனையால் நான் இதை உன்னிடம் சொல்ல வில்லை மன்னித்துக் கொள்ளடி" எனக் கெஞ்சினாள்.
ஸ்ருதி அதைப் பொருட் படுத்தவில்லை. அவள் அர்ச்சனாவின் தோழியாக அன்று விக்ரமின் அம்மாவிடம் அறிமுகமானாள். அதன் பின் ஸ்ருதி அடிக்கடி கந்தரத்தையும் அவர் மனைவி வானதியையும் சந்தித்து ஆறுதல் கூறினாள். அவ்வப்போது வேண்டிய சிறு உதவிகள் செய்தாள். அவர்களுக்கு அவளை மிகவும் பிடித்துக் கொண்டது. மாமா, அத்தை அன்பைச் சம்பாதித்தாயிற்று, இனி விக்ரமை எப்படி வசப்படுத்துவது என அவள் சிந்தித்த வேளையில் தான் விக்ரம் அர்ச்சனா திருமணம் பற்றிய பேச்சு அவள் காதில் இடியாக விழுந்தது. அது அவர்களின் சிறு வயதிலேயே இரு குடும்பங்களாலும் தீர்மானிக்கப் பட்டது என்றும் ஸ்ருதிக்குத் தெரிய வந்தது. அச் செய்தி இது வரை ஓர் இனிய அருவியாகத் தோன்றிய ஒன்று திடீரெனக் காட்டாற்று வெள்ளமாகி அனைத்தையும் அடித்துச் சென்றது போல அவளை அதிர வைத்தது.
அடி கள்ளி முதல் சுந்தரம் மாமா என்றதை மறைத்தாய், பிறகு கல்யாண விசயத்தையும் மறைத்துவிட்டாய்" என அர்ச்சனாவைக் கேலி செய்த ஸ்ருதி, உயிர்த் தோழிக்கே துரோகம் செய்யப் பார்த்தேனே எனத் தனக்குள் உடைந்து போனாள். தன் பலம், சக்தி எல்லாம் தன்னைவிட்டுப் போனாற்
29

Page 17
கலப்பை
ஐப்பசி 2002
போல் செயலிழந்து. செய்வதறியாது திகைத்தவள் சிந்தித்துத் தெளிந்து, தன் உள்ளத்துள் புகுந்த நிலவை அப்படியே புதைத்து இறுக மூடினாள். அது அவள் இதயத்துள் கடராக என்றும் பிரகாசிக்கும். அதை இந்த உலகின் எந்தச் சக்தியாலும் அழிக்கவோ, பிரிக்கவோ முடியாது. அவளது பூஜையும், பிரார்த்தனையும் அங்கே என்றென்றும் இரகசியமாக நடக்கும்.
ஆனால் ஸ்ருதி தன் லட்சியத்திலிருந்து சிறிதும் பிறழவில்லை. அர்ச்சனாவும் அதே வேலையை லுக்வெல்லில் செய்வதால் சினேகிதியுடன் வேலை விஷயமாக அளவளாவுவது போலவே வியாபார இரகசியங்களை வெளியிட்டாள். அர்ச்சனாவும் அன்பும் ஆசையும். எதிர்காலக் கனவுகளும் உள்ள ஒரு மனிதப் பிறவி தானே! என்ன தான் வியாபார தர்ம நியாயங்களை நினைத்தாலும் கிடைத்த விபரங்கம்ை பயன்படுத்தாமல் விட முடியவில்லை. அதனால் பல ரென்டர்கள் லுகிவெல்லுக்கு கீ கிடைதீதன. அதையெல்லாம் ஸ்ருதி பாராட்டினாள். தனக்குக் கிடைக்கவில்லையே என அவள் சிறிதும் வருந்தியதாகத் தெரியவில்லை. அர்ச்சனா என்ன தானி தவிர்க்க நினைத்தாலும் ஸ்ருதி அவளை வலிந்து அழைத்தாள். "வேண்டாம் ஸ்ருதி ஒரே வேலையில் அதுவும் இரண்டு போட்டிக் கம்பனிகளில் இருப்பவர்கள் இப்படி அடிக்கடி சந்திப்பது சரியில்லை என்றாலும் விடமாட்டாள். "வேலைக்கும் நம் நட்புக்கும் என்ன சம்பந்தம் அர்ச்சனா என்பாள். "போடி படிக்கும் போது நீ ஒன்றும் மக்கில்லையே ஸ்ருதி, இப்போ உனக்கு என்னடி ஆச்சு"
என்று கோபித்துக் கொள்வாள்.
"எதுவோ ஆச்சு விடேன்" என்பவளின் கண்களில் ஒரு சோகம் தெரியும். உடனே "எனக்கு உன்னை விட்டால் என் நன்மை தீமைகளைப் பங்கிட யார் இருக்கிறார்கள்? அம்மாவா? அக்கா, தங்கையா?” எனக்கூறி அர்ச்சனாவின் இரக்கத்தைச் சம்பாதித்துக் கொள்வாள். "உன்னைப் பார்க்காமல், உன்னுடன் பேசாமல் நான் எப்படி இருப்பேன் அர்ச்சனா” என்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள் வாள். அர்ச்சனாவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாகவும் சிரிப்பாகவும் இருக்கும். "என்னடி காதல் வசனமெல்லாம் என்னிடம் பேசுகிறாய்? இதோ பார் ஸ்ருதி நான் அர்ச்சனா, உன் சினேகிதி எனக் கிண்டல் செய்வாள்.
"அதெல்லாம் தான் எனக்குக் கிடைக்காதே" என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறுவாள். வார்த்தைகளில் ஒரு கலக்கம் தெரியும், கண்கள் கலங்கும். அர்ச்சனாவுக்கு, இப்போதெல்லாம் ஸ்ருதி ஒரு புதிராக இருந்தாலும் அவளுக்கிருந்த வேலைப் பழுவில் என்ன ஏது என்று சிந்திக்கவோ பிடித்து வைத்துக் கேட்கவோ முடியவில்லை. விக்ரம் தன் இலட்சியத்தின் இலக் கையே நோக்கிப் போய் கொண்டிருந்ததால் அர்ச்சனாவும் வேறு சிந்தனையின்றி அவன் பின்னால் ஒட வேண்டியிருந்தது. அதனால் தோழியைப் பற்றிச் ‘சிந்திக்க அவளுக்குப் பொழுது கிடைக் கவில்லை. அது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அர்ச்சனா அப்பொழுது நினைக்கவில்லை.
30

ஐப்பசி 2002
கலப்பை
ஸ்ருதி என்ன தான் தன் காதலைத் தியாகம் செய்ய நினைத்தாலும் அவளால் அது முடியவில்லை. என்ன முயன்றும் விக்ரமை அவளால் மறக்க முடியவில்லை. எப்போதும் அவனருகில் இருக்க வேண்டும் போலவும், அவனுடன் பேச வேண்டும் போலவும் இருந்தது. இப்படியே எத்தனை காலம் என்னால் இருக்க முடியும் எனப் பயந்தாள். தன் உள்ளத்தை உரியவனிடமோ, அன்றி உயிர்த் தோழியிடமோ வெளியிட முடியாமல் தவித்தாள். காதலை மறப்பதைவிடக் காதலுக்காக உயிரை விடுவது சுலபம் போலும் என ஸ்ருதி அடிக்கடி நினைத்தாள்.
எஞ்சியுள்ளது உயிர் ஒன்று தான, எனினும் வஞ்சமின்றி வழங்கிடுவேன் உனக்காகக் கணினா”
என்ற கலைஞரின் சங்கத் தமிழ் வரிகள் அடிக்கடி அவள் நினைவில் வந்தன.
அர்ச்சனாவால் கிடைக்கும் புதிய ரெண்டர்கள், அதனால் வரும் லாபம் எல்லாவற்றையும் பார்த்து விக்ரம் அக மிக மகிழ்ந்தான். அதைப் பாராட்டும் விதமாக அவளுக்குப் பரிசுப் பொருட்களாக வாங்கிக் குவித்தான். அப்போதெல்லாம் அர்ச்சனா தனக்குள் மறுகினாள். நான் என்ன செய்தேன்? யாரோ ஒருத்தியின் தியாகம் என நினைப்பாள். ஆனால் அவள். அதை ஏன் செய்தாள் என அர்ச் சனாவுக்கு நினைக் கதி தோன்றவில்லை. சில சமயம் ”எனக்குள் இருந்து ஆட்டிப் படைக்கும் அந்தச் சக்தி பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது விக்ரம்" என்று கூறுவாள். அவனும் ஆமாம் அர்ச்சனா உன்னிட்ம எதுவோ ஒரு சக்தி இருக்கத்தான் வேண்டும்.
இல்லாவிட்டால் நான் இந்த அளவுக்கு வெற்றி பெற முடியாது" என்பான்.
விக்ரம் தன் இலக்கை அடைந்து அந்த ஆண்டின் சிறந்த ரெடிமேட் உடைகள் ஏற்றுமதியாளருக்கான விருதைத் தட்டிக் கொண்டான். அர்ச்சனாவைவிட ஸ்ருதி தான் அதிகம் மகிழ்ந்தாள். "உன் ஆள் நினைத்ததைச் சாதித்துவிட்டார் பெரிய அசகாய சூரன் தான் என்று பாராட்டினாள். அப்பொழுதும் அவளைப் பார்த்து அர்ச்சனா அதிசயித்தாள். என்ன இவள் எதிரியின் வெற்றியைக் கொண்டாடுகிறாள் என்று. நேரடியாகவே ஸ்ருதியிடம் கேட்டாள். "அடி போடி ஏன் எதிரியாக நினைக்க வேண்டும், என் அர்ச்சனாவின் வருங்காலக் கணவர் என்று நினைக்கிறேன். ஆர்வமுள்ள ஓர் இளைஞரின் வெற்றி என்று நினைக்கிறேன் என்றாள். அர்ச்சனா அவளை வியப்புடன் பாாப்பாள். சிப்பியில் தானே முத்தும் இருக்கிறது. இவள் அந்தக் குடும்பத்தில் தோன்றிய ஒரு முத்து என நினைத்து மகிழ்ந்தாள்.
இந்த வேளையில் தன் உலகச் சுற்றுலாவை முடித்துக் கொணர்டு வருணி நாடு திரும்பினான். விக்ரமுக்குப் பரிசு கிடைத்த செய்தி கேட்டு அவன் உள்ளம் கொதித்தது. அவனது பொறாமைத் தீ அத்துடன் நிற்கவில்லை. விக்ரமைக் கொலை செய்யும் அளவுக்குப் போய் விட்டது. இது ஸ்ருதிக்குத் தற்செயலாகத் தெரிந்த போது அதிர்ந்தாள் ஆனால், எதிர் நடவடிக்கைகளில் இறங்கினாள். பரிசளிப்பு விழா மேடையில் விக்ரம் பரிசு பெறும் போது கட்டுக் கொல்வதாகத் திட்டம் தீட்டப்பட்டது. ஸ்ருதி விளிப்பாக இருந்து தக்க நேரத்தில்
31

Page 18
கலப்பை
gin léf 2002
புகுந்து அந்தக் குண்டைத் தன் நெஞ்சில் தாங்கிக் கொண்டாள். விக்ரம் ஒரு சிறு உரசலுமின்றித் தப்பினான். மேடைக்குப் பாய்ந்த அர்ச்சனா தோழியின் தலையை மடியில் வைத்து "என்ன காரியமடி இது எனக் கதறினாள். ஆனால் ஸ்ருதியின் முகத்தில் குண்டுபட்ட வேதனையின் சாயல் சிறிது மின்றி மகிழ்வின் ஒளியும், சாதித்துவிட்டேன் என்ற பெருமிதமும் தெரியக் கண்டு அர்ச்சனா பிரமித்தாள். ஸ்ருதியின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தன. அர்ச்சனாவின் கைகளை இறுகப் பற்றி எதுவோ முனகினாள். அர்ச்சனா எதையும் கவனிக்காமல் ஸ்ருதியை அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாள். ஆனால் ஸ்ருதிக்கு வாழும் விருப்பிருந்தால் தானே யாராலும் அவைைளக் காப்பாற்ற முடியும். அவள் தான் காதலுக்காக உயிரையே தியாகம் செய்யத் தீர்மானித்து விட்டாளே! இனி யாரால் என்ன செய்ய முடியும்?.
ஆனால் அர்ச்சனாவும் அவளை விடுவதாக இல்லை, அசையாமல் அவள் அருகிலேயே இருந்து "வந்து விடு ஸ்ருதி, தயவு செய்து வந்து விடு" "என்னை விட்டுப் போய்விடாதே" என்று அவள் காதுக்குள் சொல்லிக் கொணி டே இருந்தாள். அப்பொழுது அர்ச்சனா இது ஏன் என்றும் நினைத்தாள். தன் உயிரையே துச்சமாக மதிப்பதானால் அதை வெறும் இரக்கம், ஓர் உயிரைக் காக்கும் வேகம், மனித நேயம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்கும் மேலாக எதுவோ ஒன்று இருக்க வேண்டும். அது என்ன எனத் தன் மூளையைக் குடைந்தாள். கிடைத்த விடையால் அர்ச்சனா அதிர்ந்தாள். இது எப்படிச் சாத்தியமாகும் என்று வியந்தாள்.
விக்ரமும் ஸ்ருதியும் என்றாவது ஒருவரை ஒருவர் பாாத்திருப்பார்கள் என்பதே அர்ச்சனாவைப் பொறுத்தமட்டில் ஓர் அதிசயம். அதன் பின் ஸ்ருதி விக்ரமைக் காதலிப்பாள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. என்பது அவளுக்குத் தெரியாதே. ஆனால் இன்று அவளுக்கு எல்லாம் புரிந்தது.
கண்டதும் . காதல்
அவள் எண்ண அலைகளில் அன்றொரு நாள் ஸ்ருதி "காதல் எல்லாம் எனக்குக் கிடைக்காதே’ எனக் கலங்கியது. "பார்த்திபன் கனவு நாவலில் வரும் இளவரசன் விக்கிரமன் மாதிரி உன் விக்ரமும் தந்தையின் கனவை நனவாக்கப் பாடுபடுகிறார், அவருக்கு வேண்டிய உதவிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும அர்ச்சனர் எனச் சொன்னது எல்லாம் வந்து, வந்து போயின. அனைத்தையும் சாதாரணமாக எடுத்தது தவறு என்று அர்ச்சனா வருந்தினாள். "அடிப்பாவி எதுவுமே சொல்லாமல், என் மூலமாகவே அவர் கனவை நனவாக்கினாயர்" என ஏங்கி அழுதாள். காதல் என்பது ஒரு புனிதமான உயர்ந்த உறவென்றால் காதலுக்காகக் காதலையே தியாக மீ செய்வதை என்னவென்பது? அர்ச்சனாவுக்கு அர் தெரியவில்லை.
கடவுளே! எவ்வளவு பெரிய தவறு செய்திருப் பேணி. "எண் மனத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி தான் அர்ச்சனா” என்று ஸ்ருதி எப்போதும் சொல்லிக் கொள்வாள். ஆனால் நான் இதைப் புரிந்து கொள்ளாமல் விட்டேனே என்று மறுகினாள். "எப்படியாவது என் ஸ்ருதியை என்னிடம் தந்துவிடு ஸ்வாமி நான் அவளையும்
32

ஐப்பசி 2002
கலப்பை
அத்தானையும் சேர்த்து வைக்கிறேன்" என்று வேண்டினாள். அவள் வேண்டுதல் பலித்தது. ஸ்ருதி மூன்றாம் நாள் ‘கண் விழித்தாள். அர்ச்சனாவின் கணிகள் அருவியாயின. "ஸ்ருதிம்மா அத்தானுக்கு ஒன்றும் இல்லை. நீ உன் உயிரைக் கொடுத்து அவரைக் காப்பாற்றிவிட்டாய்" என்றாள். ஸ்ருதியின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. ஆனால் அர்ச்சனாவினி கண்ணிாப் பெருக்கு மட்டும் அடங்கி ஒய்வதற்கு நெடு நேரம் சென்றது.
ஸ்ருதியின் தன்னலமற்ற செய்கையால் இரு குடும்பங்களுக்குடையே இருந்த பகையும் குறைந்து உறவு வளர்ந்தது. தன் பொறாமைத் தீக்குத் தன் தங்கையே பலியாக இருந்ததை நினைந்து நினைந்து வருண் நாழும் பொழுதும் வருந்தினான். வியாபாரத்தில் போட்டி இருக்கலாம் வஞ்சகம், சூது பொறாமை எல்லாம் இருக்கக் கூடாது அது அனைத்தையும் அழித்துவிடும் என உணர்ந்து திருந்திய மனிதனானான்.
ஸ்ருதியின் உடல் நிலை படிப்படியாகத் தேறியது. தன் உயிரைக் காத்த நன்றிக்காக விக்ரமும் அவ்வப்போது அவளைப் போய்ப் பார்த்துச் சிறிது நேரம் ஏதாவது பேசி விட்டுப் போனான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஸ்ருதியின் முகம் சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்வதைக் கண்டு அர்ச்சனா தன் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்து கொண்டாள்.
ஒரு பக்கம் விக்ரமை இழக்க வேண்டுமென நினைக்கும் போதெல்லாம் அவள் இதயம் வலித்தது. ஆனால் உயிரையே
அர்ப்பணிக்கத் துணிந்த ஸ்ருதிக்குத் தான் அவன் சொந்தமாக வேண்டுமென்பதில் அர்ச்சனா உறுதியாக இருந்தாள். ஸ்ருதியின் காதலுக்காகத் தன் காதலை மறக்க அவள் ஆயத்தமானாள். ஆனால் அது எப்படி என்று தான் தெரியவில்லை. இது எத்தனை பேரை வேதனைப்படுத்தும். நான் என்ன செய்வேன்?" என வருந்தினாள். தன் முடிவை எப்படிச் செயல் படுத்துவது என்றும் அவளுக்குத் தெரியவில்லை. யார் மனத்தையும் நோகடிக்க அவள் ஆயத்தமாக இல்லை.
இதற்கு என்ன வழி என்று பலவாறு சிந்தித்தவள் முடிவில் சுந்தரத்திடம் அனைத்தையும் கூறித் தீர்வு கேட்பது தான் சரி என நினைத்தாள். அவர் எதையும் நன்கு ஆலோசித்து நியாயமான முடிவு எடுப்பார். உணர்ச்சி வசப்படமாட்டார் அர்ச்சனா அவரிடம் போய் நடந்தவை அனைத்தையும் விபரமாகக் கூறி, "மாமா நீங்கள் தான் அத்தானுக்கும் ஸ்ருதிக்கும் எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேணடும். நாணி ஆஸ்திரேலியா போகின்றேன். அங்கே முகாமைத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்கு அனுமதி பெற்றுவிட்டேன்" என்றாள். இதைக் கூறி முடிப்பதற்குள் பல தடவைகள் அவள் குரல் தளர்ந்து, வார்த்தைகள் தடைப்பட்டன, கண்களிலிருந்து உருண்ட முத்துக்கள் அவள் கன்னங்களில் மாலையாகி அவள் கழுத்தில் ஆரமாகியது.
சுந்தரத்தின் நெஞ்சும் வலித்தது. செய்யும் வகை அறியாது அர்ச்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் ஏன் என்று அவருக்குப் புரியவில்லை. கடவுள் ஏன்
2

Page 19
கலப்பை
ஐப்பசி 2002
மனிதனி போடும் முடிச் சுக்களை என்றும் அவருக்குத் தெரியவில்லை. அவர் கண்களும் கலங்கின. ஆனால் நட்புக்காக இருவருமே தியாகம் செய்வதை நினைத்துப் பிரமித்துப் போய் அசையாமல் இருந்தார். அர்ச்சனா "என்ன மாமா? நான் சொல்வது தவறானால் என்னை மன்னித்து விடுங்கள், ஆனால் இதற்கு வேறு வழியில்லை மாமா என்று கண்கலங்கினாள். மருமகளின் தலையை அணி புடன் வருடியவர் 'உண்னை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது அர்சசனா, ஆனால் இது ஒன்றும் சுலபமில்லையே அம்மா. உன்
மாற்றுகின்றார்
அத்தை, விக்ரம் எல்லரரையும் எப்படி சமாளிப்பேன்" எனக் கலங்கினார். "யாரையும் என்னிடம் எதுவும் கேட்க விடவேண்டாம் மாமா, அப்படி ஏதாவது நடந்தால் அந்த இடத்திலேயே என் இதயம் வெடித்துச் சுக்கு நூறாகிவிடும்" என மீண்டும் விம்மினாள்.
"சரிம்மா, எல்லாவற்யுைம். நான் பார்க்கிறேன் ஆனால் உன் எதிர்காலம் கண்ணம்மா" எனக் கலங்கினா. "எனக்கென்ன மாமா உங்கள் ஆசீர்வாதத்தால் நான் நன்றாக இருப்பேன்" என்றாள். "உன் திருமணம் அர்ச்சனா, நான் உன் தாய்க்கு என்ன சொல்வேன்" என்று வருந்தினார். "மாமா யாவும் நம் கையில் இல்லை. காலம் ஒரு வேளை என் மனத்தையும் மாற்றலாம். காத்திருப்போம். இப்போ ஸ்ருதி அத்தான் திருமணம் தான் அவசியம் என்றாள்.
விசா வந்ததும் உண்னை நாணி ஆஸ்திரேலியா அனுப்பி வைப்பது மாதிரி அனைவரையும் நம்ப வைப்போம். அதன் பின் இங்கே அவர்கள் திருமணத்தை
நடத்தப் பார்க்கிறேன்" என்றார் "பார்ப்பது இல்லை மாமா எப்படியாவது நடக்க வேண்டும், எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது" எனச் சொல்லிப் போனாள். என்ன பெண் இவள் என வியந்த சுந்தரம், தன் தங்கை மகளைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். "நிச்சயம் உனக்கோர் நல்ல வாழ்வு அமையும் அம்மா எனத் தனக்குள் சொல்லிக் கொண்டார்.
திட்டமிட்டபடி எல்லோரையும் வைத்துக் கொண்டு சுந்தரம் விபரத்தைக் கூறினார். அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை என்பதால் யாருமே எதுவும் பேசவில்லை. ஆனால் அர்ச்சனா ஏன் இப்போ தனித்து வெளி நாடு போக வேணி டுமெனிற வினா எலி லோர் உள்ளங்களிலும் தொக்கி நின்றது. அர்ச்சனா அவர்களின் அந்தப் தவிர்த்தாள்.
பார்வையைத்
ஸ்ருதி மட்டும் "அர்ச்சனா உனக்கு இப்படி ஒரு எம்பிஏ (MBA) ஆசை இருப்பது எனக்குத் தெரியாதே, இது போல வேறு எதையெல்லாம் எனினிடமிருநீது மறைத்தாய் எனச் சிறிது கோபமாகக் கேட்டாள். "ஏன் ஸ்ருதி நீ என்னிடம் எதையாவது மறைத்தாயா?" என அர்ச்சனா விழிகளை மலர்த்திக் கேட்டாள். வ்ாயைத் திறந்தால் எங்கே அகப்பட்டு விடுவேனோ என்ன பயத்தில் ஸ்ருதி மெளனமானாள். ஆனால் இவள் ஏன் போக வேணடும் என்ற வினா அவளையும் அரித்தது.
பேச்சை மாற்றிய ஸ்ருதி "நீ இப்படி ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று போனால் திருமணம் எப்போ? அர்ச்சனா விக்ரம்
34

ஐப்பசி 2002
கலப்பை
பாவம் இல்யைா" என்றாள்.
'எனக்கு அதெல்லாம் தெரியாதடி, நான் படிக்க வேண்டும். அவர் பாவம் என்று உனககுப் பெரிய அக்கறை இருந்தால் நீயே அவரைக் மணந்து கொள். சத்தியமாகச் சொல்கிறேன் ஸ்ருதி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என வேடிக்கை போலக் கூறினாள். தன் கலக்கத்தைக் காட்டாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
ஸ்ருதி அதிர்ந்தாள். அசட்டுப் பிசட்டென்று எதையாவது உளறாதே அர்ச்சனா" எனக் கோபித்தாள்.
இல்லடி, உண்மையாகத் தான் சொல்கிறேன். அத்தை இப்பவே பேரணி, பேத்தி என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். நான் அந்தப் பக்கம் போக இந்தப் பக்கம் அவருக்கு வேறு பெண் பார்த்தாலும் ஆச்சர்யமில்லை. அப்படியானால் நீயும் அப்பிளிகேசன் போடலாம். விகி ரமைக் மணக்க உனக்கென்ன கசக்குமா?" என்றாள். ஆனால் இப்படி நடக்கும் என்று தெரிந்த பின்னும் ஏன் அர்ச்சனா உனக்கு இந்த ஆசை? வாழ்க்கையைவிட என்ன கண்டறியாத படிப்பு உனக்கு வேண்டிக் கிடக்கு, எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டுத் திருமணம் செய்து வாழும் வழியைப் பார்" எனச் ஸ்ருதி கண்டிப்பாகக் கூறினாள்.
அதைக் கேட்ட அர்ச்சனாவின் உள்ளம் நெகிழிந்தது. என்ன ஓர் உயர்ந்த ஆத்மா. இவள் போகட்டும். இவள் இல்லாத நேரத்தில் எப்படியாவது விக்ரமை மடக்கி மணந்து கொள்வோம் என்று நினைக்காமல் என்னைப் போக வேண்டாம் என்று தடுக்கிறாளே
என வியந்தாள். அவள் விழிகள் குளமாயின. அத்தான் கிடைக்காவிட்டால் என்ன ஸ்ருதிம்மா உயிருள்ளவரை p — бі அன்பொன்றே எனக்குப் போதும் என நினைத்தாள்.
பேச்சை மாற்ற நினைத்தவள் "அடி கம்மா போடி கல்யாணத்திற்கு இப்போ என்ன அவசரம். எல்லாம் நடக்கும் போது தானே நடக்கும்.இண்ணார்க்கு இண்ணாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று எனக் கேலி செய்தவள் அவள் தலையைக் கோதி "இந்தச் சின்ன மூளைக்குள் அதையும் இதையும் போட்டுக் குழப்பாதே. ஸ்ருதி குண்டு பட்ட உடம்பு தாங்காது. யாவும் நன்மைக்கே மகளே! என்று எழுந்து நின்று அபயக்கரம் காட்டினாள். 'போடி' என ஸ்ருதி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு உம் மென்றிருந்தாள்.
"ஐயோ இரண்டு வருஷங்களுக்கு இந்த அழு மூஞ்சி என் கண் முன்னால் நிற்குமே நான் என்ன செய்வேன் இறைவா" என அர்ச்சனா அபிநயம் காட்டினாள். அதைப் பார்த்துச் ஸ்ருதி கலகலவென நகைத்தாள். "அப்பாடா இது போதும் என்று அர்ச்சனா அவளிடம் விடைபெற்றாள். எத்தனை நேரம் தான் உள்ளத்தை மறைத்து உதட்டால் பேசுவாள்.
அர்ச்சனா என்ன தான் கலகலப்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் அவள் முகத்தில் சோக ரேகைகள் அப்பட்டமாகத் தெரிந்தன. இதை யார் கவனிக்காவிட்டாலும் அவள் அன்னை நன்கு கவனித்தார். காரணம் கேட்டு மகளை மேலும் புண்படுத்த விரும்பாமல் நடப்பதுதானே
35

Page 20
3560ůsoII
நடக்கும் என வாளாவிருந்தார்.
உரிய நாளில் அர்ச்சனா பயணமானாள். ஒருவாறு தன் உணர்வுகளை மறைத்து அனைவரிடமும் விடை பெற்று விமானத்துள் ஏறியவள் இது வரை அடக்கி வைத்திருந்த துயரத்தைத் தன் வழியே ஓட விட்டாள். பக்கத்தில் இருந்த ஆங்கிலேயர் "என்ன வீட்டாரைப் பிரிந்த கவலையா? ஒன்றுக்கும் பயப்படாதே ஆஸ்திரேலியா நல்ல இடம்" என்றார். "வீட்டை மட்டுமா பிரிந்தேன். இதுவரை எனக் கிருந்த அனைத்தையுமல்லவா இழந்து விட்டேன்’ என நினைக்கும் போது
கண்கள் மீண்டும் பொங்கின. யன்னலுக்கு
வெளியே பார்வையைத் திருப்பி அை மறைத்துக் கொண்டாள்.
சுமார் ஆறு மாதங்களின் பின் ஒரு நாள் சிட்னியில் ஒரு சிறிய ப்ளாட்ல் (flat) விக்ரம் ஸ்ருதி திருமண வீடியோவை அர்ச்சனா பார்த்துக் கொண்டிருந்தாள். இன்றும் அவள் விழிகள் பொங்கிப் புனல் உதிர்த்தன. ஆனால் அது ஆனந்தக் கண்ணிர். அவள் அன்புக்குரிய இருவர் திருமண பந்தத்துள் இணைந்து விட்டார்கள் என்ற மகிழ்வில் வந்த கண்ணிர்.
"அம்மாவை எப்படியாவது விரைவில் கூப்பிட்டு இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட வேண்டும். இவர்களுக்கு என்னால் எந்த ஒரு குறிற உணர்ச்சியும் ஏற்படக்கூடாது. அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என நினைத்துக் கொண்டாள்.
ஐய்பசி 2002
விக்ரம் - ஸ்ருதி திருமணப் பேச்சைச் கந்தரம் ஆரம்பித்த பின் பல தடவைகள் தொலை பேசியில் விக்ரமும் ஸ்ருதியும் 'எனின அர்ச்சனா இது' கேட்டுவிட்டார்கள். ஸ்ருதி கோபமாக "என்னால் எதுவும் முடியாது. உடனே வந்துவிடு" என மிரட்டியும் பார்த்தாள். ஆனால் அர்ச்சனா "இது தான் சரி. மாமா சொல்வதைக் கேளுங்கள்" எனக் கூறித் தொடர்பைத் துண்டித்துவிட்டாள். அந்த அன்பை இப்போ நினைத்தாலும் அவள் நெஞ்சம் நெகிழ்ந்து, விழிகள் நிறைந்தன.
எனக்
அவள் அன்னை மட்டும் "இப்படித் தான் நடக்குமென்று முன்னரே எனக்குத் தெரியும் அர்ச்சனா, உன்னை நினைத்து நான் பெருமைப்படுகின்றேன் கண்ணம்மா" எனிறதை கி கேட்டுப் பெரும் ஆறுதலடைந்தாள் "ரொம்ப நன்றி அம்மா" எனக் குரல் தழதழக்க்க கூறியவள். "என்னைப் புரிநதுகொண்ட என் அருமை அம்மா’ என நினைந்து, நினைந்து உள்ளம் உருகினாள்.
"என் நெற்றியில் திலகமும், கூந்தலில் மலர்களும் உங்களுக்காகவே என்றும் என்னை அலங்கரிக்கும் அத்தான். என்றும் என் உள்ளத்து நிலவு நீ என் 'உயிருள்ள வரை அதை நாணி தொழுது கொணடேயிருப்பேன்." என அர்ச்சனா தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.
36
 

güLjá 2002
αδοο ά ωu
சிதைகிறதே செந்தமிழ்
உஷா ஜவாகள்
சிதைகிறதே செந்தமிழ் பதைபதைக்கிறதே நெஞ்சம்! உதைபந்தாய் உயிர்த்தமிழ் வதைபடுகிறதே மேதினியிலே
உண்ணுவதோ ஊர்ச்சாப்பாடு உறங்குவதோ தாய்மடியில் உள்ளத்திலே தாய்மொழி மறந்து உதட்டிலே அன்னியமொழி ஏனோ!
செந்தமிழ் வாழட்டுமென ஈழத்தமிழன் துறக்கிறான் தன் உறவை தன் உயிரை
புலம்பெயர் தமிழனோ புலம்பெயர்ந்ததை மறக்கிறான் நற்குணம்பெற மறக்கிறான் நற்பணம் பெறப் பறக்கிறான்
கன்று மறந்ததில்லை அம்மா என்றழைக்க சிட்டு மறந்ததில்லை அன்னை என்றழைக்க
தமிழன் மறந்தானோ அம்மா என்றழைக்க தமிழன் மறந்தானோ அன்னை என்றழைக்க
மம்மி என்று அழைத்தால் அது
டம்மி என்று எப்போது உணருவான்?
அன்னியன் கற்கிறான் அன்னைத் தமிழை ஆசையாக் கேட்கிறான் ஆசைத் தமிழை
ஆன்னியனைப் பார்த்து நம்மவரும் செந்தமிழின் பெருமை பேசலாம்
புகழ் பாடலாம்!
யாழ் இனிது குழல் இனிதென்பார்
தம்மக்கட் மழலைத் தமிழ்ச்

Page 21
கலப்பை
ஐப்பசி 2002
சொல் கேளாதார்!
ஆங்கிலம் இனிது பிரெஞ்சு இனிதென்பார் தம்மக்கட் மழலைத் தமிழ்ச் சொல் கேளாதார்!
ஆயிரம் நட்சத்திரங்கள் மின்னினாலும் அவை நிலவுக்கு ஈடாகுமா? ஆயிரம் மொழிகள் கற்றாலும் அவை நம்தமிழுக்கு ஈடாகுமா?
சிறகை சுமப்பது சுமையென சிட்டு நினைப்பது இல்லை இலையைச் சுமப்பது சுமையென இளந்தளிர் நினைப்பது இல்லை
தமிழைக் கற்பது சுமையென
தமிழ்ச்சிறார் நினைப்பது இல்லை
தமிழைக் கற்பது சுமையென தமிழ்ப்பெற்றோர் நினைப்பதுஏனோ?
குடம் என்றால் நிறைந்தாற்றான்
அழகு குளம் என்றால் நிறைந்தாற்றான்
அழகு குணம் என்றால் நிறைந்தாற்றான்
அழகு
குழவி என்றால் தமிழ் கற்றாற்றான் அழகு
நிலவு கண் முடியது செந்தமிழ் சிதைவதைப் பார்த்து செந்தமிழன் எதிர்காலம் அமாவாசை இருட்டாயிற்று!
சூரியன் எரிந்தான் சுந்தரத் தமிழ் எரிவதைப் பார்த்து சுந்தரத் தமிழன் எதிர்காலம் சுடுகாடாய் மாறியது!
நிழல் பிரிவதில்லை நம் உடலைவிட்டு தமிழ் பிரிவதில்லை நம் உயிரைவிட்டு
தமிழ் வார்த்தையை மலராக்கி தமிழ்ப் பாடலை மாலையாக்கி சூட்டுவாய் தமிழ்தாய்க்கு , காட்டுவாய் தமிழ்ப் பற்றை
சிதையும் செந்தமிழுக்கு சிதைமூட்டச் சிறந்தநாள் நாளையே விடியும் காளையே பொறுத்திரு
38

ஐப்பசி 2002 கலப்பை
புகழ்பெற்ற ஈழத்துப் பாடசாலைகள் கலப்பையில் 'ஈழத்தில் இசை வளர்த்தோர்' என்ற தொடர் வெளிவந்தது, நீங்கள் அறிந்ததே. திரு. சுப்பிரமணிய ஐயர் எழுதிய இத்தொடர் கட்டுரைகளை, திருமதி ஞானம் ரட்ணம் கலப்பையில் வெளியிட உதவினார். இத்தொடருக்குக் கிடைத்த பல ஊக்கமளிக்கும் கருத்துக்களே, புகழ்பெற்ற ஈழத்துப் பாடசாலைகள்' என்ற தொடரை அறிமுகப்படுத்தச் செய்திருக்கின்றன. முன்னைய தொடருக்கு மாறாக, இந்தத் தொடரில் வாசகர்கள் எவரும் தமது பாடசாலைகளைப் பற்றி எழுத முன்வரலாம். அல்லது உங்கள் பாடசாலையின் பழைய மணவரையோ அல்லது ஆசிரியரையோ உங்கள் பாடசாலையைப் பற்றி எழுதும்படி கேட்கலாம். இந்த வகையில் இவ்விதழில் யாழ். செங்குந்த இந்துக் கல்லூரி இடம் பெறுகின்றது. ஏம்மையெல்லாம் கல்வி, கலை, கலாசாரத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையிலும் மேன்மையடையச் செய்த எமது பாடசாலைகளை மீண்டும் ஒரு முறை
நினைவுறுவோம். ஆசிரியர்.
யாழ். செங்குந்த இந்துக் கல்லூரி பொருளாதார வசதிகளோ, நகர்ப்புற
நன்மைகளோ, தகுந்த தொழில் வாய்ப்பு வசதிகளோ, இல்லாத காலம் அது. அக்காலத்தில் அருகிலிருந்த கிராமப்புற குடும்பங்களின் கல்வித் தேவைகளை மேம்படுத்தவென வித்தியாதர்மத்தை யாவர்க்கும் அளிக்கும் நோக்குடன் நல்லூர் பிரதேசத்தில் திருநெல்வேலி கிராமத்தில் 1934ம்
ஆண்டு விஜயதசமி தினத்தன்று சங்கமடப் பாடசாலை என்ற பெயருடன் ஓர் பள்ளிக்கூடம் ஸ்தாபிக்கப்பட்டது.
சில மாதங்களின் பின் சைவ வித்தியாயிருத்திச் T iš 5 šślsă (Hindu board of education) ஆதரவுடன் அரசாங்க உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக அது பதிவு செய்யப்பட்டது. அதன்பின் செங்குந்த சைவ துவிபாஷா கலவன் பாடசாலையெனப் பெயர்பெற்று, பின்பு செங்குந்த ஆங்கில பாடசாலையென மாற்றம் பெற்று, 1958ம் ஆண்டு செங்குந்த இந்துக் கல்லூரியாக உயர் அந்தஸ்து பெற்றது.
இதற்கு தேவையான காணியை, அவ்வூர்
பெரியார் சாஸ்திரியார் இளையதம்பி அவர்கள் தர்ம சாதனமாக ஈந்து தவினார். இக்கல்லூரிக்கு ஓர் இலச்சனையும், கல்லூரிக் கீதமும் உண்டு. இந்த இலச்சனையை உருவாக்கியவர் சிற்பி என்றழைக்கப்படும் ஆசிரியர் சரவணபவன் ஆவார். அவரே கல்லூரிக் கீதத்தை இயற்றினார்.
தற்பொழுது ‘அற்புத மனிதர் என்றும் அழைக்கப்படும் மேதை பணிடிதர் இராமச்சந்திரன் அவர்கள் இக்கல்லூாயில் பயின்றதும் , அணி னாருகி கு கொழும்புத்துறையிலும் (யாழ்ப்பாணம்), கனடாவிலும் இராமச்சந்திர லிங்கேஸ்வரர் என்று சிலை எழுப்பி வழிபடும் அம்சம் இக்கல்லூரிக்கு பெருமை அளிக்கின்றது.
39

Page 22
கலப்பை
இப்பாடசாலையின் முதலாவது அதிபராக சுன்னாகம் குமாரசாமிப் புலவரின் மகன் திரு. முத்துக்குமாரசாமிப்பிள்ளை(B.A) அவர்கள் அதிபராகக் கடமையேற்று, இன்றுவரை 14 அதிபர்கள் கடமையாற்றி உள்ளார்கள். இன்று திருமதி சிவஞானவதி விஸ்வலிங்கம் 14ஆவது அதிபராக உன்னத சேவையாற்றி வருகின்றார். ஆரம்பக்காலத்தில் திரு. கந்தையா(B.A), பண்டிதர் சின்னதுரை, திரு. K.S. ஆனந்தர் (B.O.L), திரு விஜயரட்ணம் (B.A), பண்டிதர் எஸ். இராசையா ஆசிரியர் குழாமில் முக்கிய இடம்பெற்று இப் பாடி சாலை முன்னேற்றத்திற்கு உளப்பூர்வமாக உத்தம சேவையாற்றியுள்ளார்கள்.
இற்றைக்கு 30 வருடங்களின் முன் முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 1400 மாணவர்கள் கல்வி கற்றனர். அப்பொழுது 40 ஆசிரியர்கள் கடமையாற்றினர். ஆனால் தற்போதைய குழப்ப நிலைமை காரணமாக சுமார் 500 மாணவர்கள் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி பயிலுகின்றனர். தற்பொழுது 25 ஆசிரியர்கள் இக்கல்லூயில் கடமையாற்றுகின்றனர்.
இற்றைக் காலம் வரை இக்கல்லூரி பேராசிரியரை(எஸ். முத்துலிங்கம்), பல ஆசிரியர் களை, டாக்டர்களை,
பொறியியலாளர்களை, கலைஞர்களை வளர் தி தெடுத்து, பொலிவுடனி விளங்குகின்றது.
இன்று இலங்கையில் மாத்திரமன்றி இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் அதன் பழைய மாணவர்கள் தாமும் அங்கு படித்தோமென்று பேருதவி நல்கி
40
ஐய்பசி 2002
பெருமைப்படும் அளவிற்கு செங்குந்த நிமிர்ந்து நிற்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் டென்மார்க்கில் வதியும் பழைய மாணவர் திரு. ஏம். ஏஸ். விஸ்வநாதன் என்பவர் பாடசாலை வளர்ச்சிக்கு உதவியாக 2 இலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ்வுதவி மூலம் 287 வகதி குறைந்த மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள்.
ஏனைய நகள்புறக் கல்லூரிகள் போல் இங்கும் பல துறைகளில் அதாவது கணனித்துறை, விளையாட்டு, சங்கீதம், சித்திரம், நாடகம் ஆகியவற்றில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றார்கள்.
இக்கல்லூரிக்கு விளையாட்டு மைதானக் காணியை அயலில் உள்ள சட்டநாதர் ஆலய தேவஸ்தானம் நனி கொடையாக வழங்கியுள்ளது போற்றப்பட வேண்டியதாகும்.
இப்பாடசாலை 'சுடரொளி சஞ்சிகையையும், முதி தமிழி மணிறமி நதி' எனிற சஞ்சிகையையும் வெளியிட்டு வருகின்றதும் உவகைக்குரிய விடயங்களாகும்.
பாடசாலையின் வளர்ச்சிக்கு பழைய மாணவர்கள் துணைபோக வேண்டும். அதுவே பாடசாலை நிலைக்கவும், மகத்தான பணி தொடரவும் வழிவகுக்கும். இக்கல்லூரி நீடுளிகாலம் நிலைத்து நின்று பல சவால்களையும் எதிர்கொண்டு அவ்வூர் மக்களுக்கு சேவை செய்து தமிழையும் சைவத்தையும் காத்து மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறோம்.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.
திரு. குட்டிப்பிள்ளை கிட்ணர்

ஐப்பசி 2002
கலப்பை
தமிழ் உணர்ச்சிகளின் இயக்கம்
கலாகீர்த்தி, பேராசிரியர், டாக்டர் பொண்,பூலோகசிகம்
தமிழ்ப் பற்று, தமிழபிமானம் , தமிழுணர்ச்சி, தமிழ் வெறி எனும் தொடர்கள் தமிழனுக்கும் அவனுடைய மொழிக்கும் இடையே நிலவம் உறவினி பெறுமானங்களைக் காட்டும் தகைமை உடையவை. மொழியை ஒரு கருவியாக - சாதனமாக - வைத்து, ஒலிக் குறியீட்டுத் தொகுதியாக அழுத்தம் கொடுத்து கோக்கும் மரபு அமெரிக்க மொழியியலாளர் புளும்பீல்டு (Leonard Bloomfield, Language, 1933) முதலாக மேற்கிற் செல்வாக்கடைந்தது. இக்கோட்பாடு சமுதாய மொழியியலுக்குப் பொருந்துவதாகத் தெரியவில்லை.
ஓரினத்தினி அதிமுக்கிய இலட்சணமாகக் 5 FTG) 5 G. Los அறியப்படுவது அதன் மொழி ஒருமைப்பாடு.
இக்கருத்தினைப் பல்வேறு இனங்களின் பெயர்கள், அவ்வவ் இனங்களுடைய மொழிப் பெயர்களாக அல்லது அப்பெயர்களின் வேர்களில் இருந்து தோன்றியவையாக இரு த்தல் அரண்செய்கின்றது. பிரஞ்சு, ஜேர்மன், போலிஷ், இதாலியன், ஸ்பனிஷ், தமிழ், கன்னடம் முதலிய பெயர்கள் உதாரணமாகக் கொள்ளப்படலாம். யூதர் பயன்படுத்திய ஜேர்மானிய கிளை மொழி, அதற்குரிய ஜிட்டிஷ் என்ற பெயரால் வழங்காமல் பூமிஷ்' என வழங்கப்பெறுவதும், ஐயர்லாந்து தேசத்துக் கேயிலிக் மொழி "ஐரிஷ் என வழங்கப்படுவதும் இக்கருத்தினை மேலும் வலியுறுத்துகின்றன.
மொழியின் இணைக்கும் ஆற்றல், அதனைப் பேசும் இனத்தால் நன்கு உணரப்பட்டதாகும். தமக்குச் சிறப்பான மொழியினை ஒவ்வொரு இனமும் பற்பல நூற் றாணி டுகளாகத் தேசிய
முகாமைத்துவத்தின் முனையிலும் போற்றிப் பேணி வருகின்றது. ஐக்கிய அமெரிக்க நாடுகளிற் கூட இப்பண்பினைக் காணலாம். அங்கு பெனின்சல்வேனியா டச்சு, மெக்சிகன், பிரஞ்சு மொழிகள் பேசும் சுற்றுவட்டங்கள் இனிறும் நின்று நிலைக் கினிறன. மொழியானது தம்முடைய தனித் துவத்தினைக் காப்பாற்றக் கூடிய கேடயமாக அவர்களுக்கு அமைந்திருக்கின்றது. தேசிய ஆக்கத்திலே, இன அடையாளமான மொழி உதவியாகவும் அமையலாம்; தடையாகவும் அமையலாம். ஓரினமே ஒரு தேசியமாக அமைகின்றபோது உதவியாக அமையும் மொழி, பல்வேறு மொழி பேசும் இனங்கள் ஒரு தேசியமாக உருவாகும்போது, பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது. தமக்கென யூதர் இஸ்ரவேல் எனும் காட்டினைப் பெற்றபோது, தம்மிடையே சமயாசாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஹீப்ரு மொழியைத் தேசிய மொழியாக உயிர்ப்பித்தனர்.
தமிழ்மொழிப் பற்று காலாகாலமாகப் பலம் வாய்ங் த தொன்றாக இருங் து வந்திருக்கிறது. அது தமிழர்தம் நீண்ட வரலாற்றிற் பற்றாகவும் அபிமானமாகவும் வெறியாக வம் அவர் களை இயக்கிவந்துள்ளது. முடியுடை மூவேந்தர் தமிழகத்தினைப் பெருமையுடன் ஆண்ட, கிரிஸ் தாப்தத்தினி ஆரம்ப நூற்றாண்டுகளிலும், விஜயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர் கங்கை முதல் கடாரம் வரைத் தம்மாணை செல்லச் சாம்ராஜ்யம் கண்ட மகோன்னத கட்டமான கி.பி. 9 முதல் 13 வரையிலான நூற்றாண்டுகளிலும் தமிழுணர்வுகளின் புலப்பாட்டினைக்
41

Page 23
கலப்பை
giléf 2002
காணமுடியவில்லை, மொழிவாரியான கொந்தளிப்புகளுக்கு இடமிருக்கவில்லை. தமிழ்ப்பற்றினையோ, தமிழ் அபிமா னத்தையோ, தமிழ் உணர்ச்சியினையோ, தமிழ் வெறியினையோ வெளிப்படுத்த வேண்டிய தேவை அக்கட்டங்களில் இருக்கவில்லை. மூவேந்தர் காலத்தில் அரசின் இலட்சிய எல்லையை இமயத்திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட எல்லை நிலமாகக் கருதும் மனோபாவத்தினைக் காண முடிகிறது (புற.6, 17, 67 மதுரைக் 7072). அந்தக் காலத்திலே தமிழகத்தினைத் தனித்துக் காணும் காட்சி இருந்ததாகத்
கன்னாடு நெடி யோன் குன்றித்திற்கும் தொடியோள் பெளவத்திற்கும் இடைப்பட்டதாகக் கருதும் பாங்கு சிலப்பதிகாரத்திலே முதலிற் காணப்படும் (வேனிற் காதை,1-2). பிற்காலச் சோழர் எழுப்பிய சாம்ராஜ்யம் தமிழர் முன்னெப் போதும் காணாத மகோன்னதத்தினை வழங்கியதாகும். அதன் காலத்திலே வர்த்தகம், கலாசாரம், சமயம் முதலாம் பரிவர்த்தனைகள் தென்கிழக்கு ஆசியாவக்கு அப்பாலும் கொண்டு செல்லப்பட்டன. தஞ்சைப் பெரியகோயில், கங்கைகொண்டசோழபுரம், திரிபுவனத்து கம் பேசுவரர் கோயிலி போன்ற பிரமாணி டமான கோயிலி களும் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற மாநூல்களும் சோழரின் மகோன்னதத்திற்குச் சான்றாக நிலைத்து நிற்கின்றன. காரும் மக்களும் சுபிட்சமாக வாழக் கலைகளும் செழித்தோங்கிய சோழப் பேரரசர் காலம் தமிழர் வரலாற்றிற் பொற்காலம் என்பதிற் சந்தேகமில்லை.
மூவேந்தர் ஆட்சியினைத் தொடர் தமிழ்நாட்டின் வடக்கிற் பல்லவரும் தெற்கிற் களப்பிரரும் தமிழ் நாட்டினை
அடிமைப்பருத்திவிட்டனர். தென்கன்னடத்துச் சிரவணபெல்கொலாப் பிரதேசத்தில் வாழ்ந்த மலைச்சாதியினரான களப்பிரர், கதம்பர் எழுச்சியின் முன்னே, கோலார் பகுதியிலுள்ள நந்திமலைப் பிரதேசத்திற்குப் பெயர்ந்து, அங்கிருந்து தமிழகத்தின் வட எல்லை யான வேங்கடமலைப் பிரதேசத்திற் குடியேறினர். நெல்லூர்ப் பிரதேசத்தில் வாழ்ந்து, சாதவா கனருக்குத் திறை செலுத்தி வந்த பல்லவர், காஞ்சிப் பிரதேசத்தை அடைந்து, குந்தூர்ப் பகுதியைக் கைப்பற்றி, பெல்லாரியின் சில பகுதிகளைத் தமதாக்கித் தொண்டை காட்டினைத் தமது கேங் திரமாகக் கொணி டகாலை, களப் பரிரர் தெனி னகத்தினைத் தமதாக்கிக் கொண்டனர். தம்மாட்சிக்கு உட்பட்ட தமிழரிடமிருந்து மதத்தாலும் மொழியாலும் களப்பிரரும் ஆதிப்பல்லவரும் வேறுபட்டவர். பெளத்தமும் சைனமும், பிராகிருதங்களும் சங்கதமும் அப்பொழுது செல்வாக்குப் பெற்றிருங்தன. அங்கியர் தம் எதேச்சாதிகாரத்திலே தமிழர்தம் பண்டைய பாரம்பரியங்கள் சிதை வடைய, காலாகாலம் போற்றிவங் த பணி பாடு வேரோடு களையப்பட, ஆற்றொணா அவதிக்குள்ளாகி, தம் பணி டைய மகோன்னதத்தினை எண்ணியெண்ணிப் புழுங்கிப் பெருமூச்சும் ஆத்திரமும் மாறுபடத் தமிழ் உணர்ச்சிகள் கொங் தளித்துக் குமுறிய காலமவை. அக்காலத்திலே தமிழ் உணர்வுகள் விதேசிய மொழி, மதம், பண்பாடு என்பனவற்றின் கெடுபிடிகளிலிருந்து தமிழினத்தினைக் காப்பாற்ற முன்னின்றன. அக்காலத்தெழுந்த இலக்கியம் இவ் வணர் வகளைப்
பிரதிபலிக்கின்றன.
பண்டைய சான்றோர் போற்றிய அகப்பொருள் மரபினை விளக்கும் முயற்சி குறிஞ்சிப் பாட்டு, போற்றும் முயற்சி கலிப்பாடல்களும் ஐங்குறுநூற்றுப் பாடல்களும். உலகியலிற் பயன்பட்ட ஆற்றுப்படை, முருகனினி திருக் கோயில் களுக்கு
42

ஐப்பசி 2002 கலப்பை
வழிகாட்டுகின்றது. அகப்பொருளுக்குச் சிறந்த பரிபாட்டு, தெய்வீக சம்பந்தத்திற்குப் பயன்படுகிறது. பழஞ்சர மரபினரின் பெருமை பாடப் பிற்காலச் சேரர் எடுத்துக்கொண்ட முயற்சி பதிற்றுப்பத்து. பழந்தமிழ் இலக்கிய மொழியையும் பாரம்பரியங்களையும் மரபுகளையும் போற்றிப் பேணும் களஞ்சியம் தொல்காப்பியம். பழந்தமிழர் சிந்தனை வளர்ச்சியின் அளவினைக் கணித்து வைத்தது திருக்குறள். பெண்ணின் பெருமை பாடுவதைச் சமணத் துறவிக்கு இலட்சியமாக வைப்பதிலும் பண்டைத் தமிழர் பாரம்பரியங்களை மார்தட்டிப் பாடுவதனைத் தமிழ்த் துறவிக்கு நோக்கமாக வைப்பதே பொருத்தமாகும் என்பதைச் சிலப்பதிகாரம் உணர்த்தி நிற்கின்றது. தமிழர் உயர்ச்சி குன்றி, அங்கியர் விலங்கிடக் கைகட்டி நின்றபோது, மார்தட்டி அறைகூவிய - தமிழைத் துறக்காத துறவி, இளங்கோவடிகள்.
முதலாம் மகேந்திரவர்மன்(610-630) முதலாக வரும் பல்லவர் காலத்தினை ஒட்டிப் பெருக்கெருத்த பக்தி இயக்கம் மொழிப்பற்றினை விதேசிய மதிகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்யப் பயன்படுத்துகின்றது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தத்தம் சமயப் பிரசாரத்திற்குத் தமிழுணர்ச்சியைப் பயன்படுத்தத் தவறவில்லை.
தமிழோடிசை பாடலி மறந்தறியேன் 4, 1.6
நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு ፖ.62.8 ̇
தீந்தமிழோடு இசை கேட்கும்
இச்சையாற் காசு நித்தல் நல்கினி 788.8
பெளத்தர்-சைனர் சமய நிறுவனமான சங்கங்களின் அடிப்படையில் (மணிமேகலை,7.11314) சைவ வைணவர் தமிழ்ச்சங்க மரபொன்றினைப் பல்லவர் காலத்திலே உருவாக்கினர். சிவபெருமான் மதுரைத் தமிழ்ச்சங்கத்தினை நிறுவியதாகச் சம்பந்தர் பாட (3.54.11), தருமிக்குச் சிவன் புலவனாய்ச் சங்கமேறிக் கனகக்கிழி கொடுப்பித்த கதையினை அப்பர் தருகிறார் (6.76.3). ஆழ்வாரும் "சங்கத்தமிழ்மாலை முப்பதும்" (திருப்பாவை,30), "சங்கமுகத் தமிழ்மாலை பத்தும்" (பெரியதிருமொழி,3.4.10) பற்றிப் பெருமை கொள்கின்றனர். சமயமும் தமிழும் தமிழர் பண்பாட்டிலே இரு கண்களாக உருவாகியது பல்லவர் காலத்திலே என்று கூறலாம். மகேந்திரவர்மன் (610-630) சைவத்தினைத் தழுவிய காலம் முதலாகப் பல்லவர் தம்மைப் பக்தி இயக்கத்தோடு ஐக்கியப்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் ஆதரவினைப் பெற்றனர். சமய எழுச்சி தமிழர்தம் கலைகள் மறுமலர்ச்சி காணப் பேருதவியாக அமைந்தது.
பாண்டியன் கருங்கோன் (575-600) முதலாக எழுச்சிபெற்ற பாண்டியர் அரசு தமிழர் மரபுகளைப் போற்றிப் பேணுவதாகச் செல்வாக்குப் பெற்றது. கின்ற சீர் நெருமாறனைச் (650-700) சைவத்திலிருந்து சம்பந்தர் சைவத்திற்கு மீட்ட காலம் முதலாகச் சைவமும் தமிழும் மதுரையில் இணைகின்றன(திருக்கோவையார்,20). தமிழ்நர் பெருமான்' எனப் பாண்டியனை முத்தொள்ளயிரமும்(32) பாண்டிக்கோவையும்(87) போற்றுவன. பாண்டியரின் குலகுருவாகவும் தமிழாசிரியராகவும் அகத்தியர் கி.பி.10ஆம் நூற்றாண்டுச் சாசனங்களிற் கூறப்படுதல் கவனிக்கத்தக்கது. வீரநாராயணன் (880-900) செப்பேடு தென்மதுராபுரியிற் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த கதை கூற, மூன்றாம் இராசசிம்ம பாண்டியன்(900-920) சின்னமனூர் செப்பேடுகள் மதுராபுரிச்சங்கம் வைத்த கதை கூறுவன. பாண்டியரின் மூன்று தலைநகரங்களை ஒட்டி முச்சங்க வரலாறு உருவாகியது. அக்கதையை பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்பு எழுந்த களவியலுரை விரிவாகப் புனைந்து கூறுகின்றது.
43

Page 24
கலப்பை ஐய்பசி 2002
V
தமிழினத்தின் திருஷ்டி பரிகாரமாக அமைந்தது விஜயககர - நாயக்கர் காலம்(14 -16 நூற்றாண்டுகள்). இசுலாமியரிடமிருந்து வைதீக தர்மத்தினைப் பாதுகாக்க உருவாகிய விஜய நகரப் பேரரசும் அவர்களின் மேலாணையை ஏற்றும் பின்பு ஏற்காமலும் செயற்பட்ட நாயக்கர் அரசுகளும் செய்த புறக்கணிப்பாற் சைவமும் தமிழும் பேணப்பட வேண்டிய கிலை உருவாகிய போது, தமிழ்ப்பற்று தீவிரதர கிலை அடைந்து தமிழ் வெறியாகின்றது. சமயத்தோடு தமிழை ஒன்றாக்கியதனால் தமிழுக்கு ஒரு நூதன சக்தியும் வீரமும் விஜயநகர-நாயக்கர் காலத்திற் கிடைத்தன. அங்கியர் ஆட்சி சுமத்திய வரிப் பழுவும்(பரத்தமைக்கு முதன்முதலில் தமிழகத்தில் வளி விதித்த பெருமை விஜயககர சாம்ராஜ்யத்திற்கே உரியது) பண்பாட்டுச் சிதைவும் தமிழ் உணர்ச்சிகள் கொந்தளிக்கக் காலாயின.
15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அருணகிரிகாதர் முருகப்பெருமானைத்
தமிழின்பாற் பற்றுள்ள தமிழ்த் தெய்வமாகப் போற்றும் மரபுக்கு அழுத்தம் கொருக்கிறார்.
முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போண் கந்தரலங்.22
செந்தமிழ்ப் பெருமாளே திருப்.38
செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார திருப்.41 என்று போற்றி மகிழும் அருணகிரியார் அகத்தியருக்கு முருகன் தமிழாசிரியராக இருந்தது, திருமுருகாற்றுப்படைக்கு நக்கீரருக்கு முதல் எடுத்துக் கொடுத்தது, கந்தபுராண அரங்கேற்றத்தின் போது எழுந்த புணர்ச்சி பற்றிய சர்ச்சைக்கு வீரசோழியத்திலிருந்து விதி காட்டியது, பொய்யாமொழிப்புலவர் அகந்தை அடக்கியது முதலாம் தமிழோடு தொடர்புடைய பல நிகழ்ச்சிகளைத் திருப்புகழிலே போற்றிப் பதித்துள்ளார்(49,203,525,793,1022).
17ஆம் நூற்றாண்டினரான குமரகுருபர சுவாமிகளின் பாடல்களிலே தமிழ்மொழிப் பற்றும் தமிழ் வெறியும் தனியழகுடன் செறிந்து ஒளி சிதறுகின்றன. பசுந்தமிழ், பைந்தமிழ், Ludi பமிழ் தீந்தமிழ் தெள்ளுதமிழ் சங்கத்தமிழ், முத்தமிழ், தெய்வத்தமிழ் என்றெல்லாம்
வாய் நிறையப் பாடி மகிழும் குமரகுருபரர்,
பைங்தமிழ் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே மீனா.பித.காப்பு,
தமிழொரு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி மீனா.பித.சப்பாணி,
தெளிதமிழின் வடித்திரு கவரசமே முத்.பித,சிறுபறை,10
கறைபழுத்த துறைத்திக் தமிழினி
ஒழுகு நறுங் சுவையே மீனா.பித.வருகை,9
எனப் பற்பல பிரயோகங்களிலே தமிழுக்கு அளித்திருக்கும் முதன்மையைக் காணாமல் இருக்க முடியாது.அவருடைய தமிழ்ப் பற்றின் உச்சமும் உணரக்கூடியதாக அமைகின்றது. இவர் காலத் தினையொட்டி வாழ்ந்த மதுரைச் சொக்கநாதர் தமிழ்விரு தூதின் ஆசிரியர்,
இருந்தமிழே உன்னால் இருங்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் 151 என அக்காலத்திய தீவிரதரத்தினை உணர்த்துகிறார்.
44

ஐப்பசி 2002
கலப்பை
தமிழினம் மேனி மேலும் அவதிக்குள் ளாகி e os 3 ou meu கல்லோலப்பட்ட கட்டம் அடுத்து வந்த 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகள். சுதேசிய சமயத்தின் பேரால் நிலவிய அரசுகளின் ஆதரவு குறைவாக இருந்தபோதும் தம்மைத் தாமே காபாங்து செய்யக்கூடிய கிலைமை ஒரளவுக்காவது தமிழினத்திற்கு இருந்த நிலைமை பாறிவிட்டது. மதுரை நாயக்கர் ஆட்சியின் (1529-1736) அஸ்தமனத்தோரு தஞ்சை மகாராட்டியர்(1673-1855) ஹைதர் அலி(1765-1782), திப்பு சுல்தான்(-1799) உட்பட்ட மைசூர் அரசர்கள், முகமது அலி, சந்தா சாகிப் உட்பட்ட ஆர்காட்டு நவாப்கள் ஹைதரபாத் நிஜாம்கள்; தமிழ்நாட்டுப் பாளையக்காரர், இராமநாதபுரம் சேதுபதிகள் எனப் பல்கிப் பெருகிய சிற்றரசர்களின் விரோதங்கள் ஆங்கிலேயர் தம்மாட்சியைப் 18 ஆம் நூற்றாணி டினி கருவிலே தமிழ்நாட்டிலே திடப்படுத்திக்கொள்ள உதவின. தமிழர் மொழியையோ கலாசாரத்தினையோ பண்பாட்டினையோ நாகரிகத்தினையோ ஆதரிக்க யாருமிருக்கவில்லை. தமிழர் தம் காட்டிலேயே அனாதரவாகி நின்றனர்.
தெலுங்கு, கன்னடம், இந்துஸ்தானி, சங்கதம் என்பனவற்றிற்குத் தமிழ்நாட்டிலே கிடைத்த ஆதரவு தமிழுக்கு இக்கால கட்டத்திலே இருக்கவில்லை. கர்நாடக இசை' என்ற பெயரில் தெலுங்கு, சிகத இசைப் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சங்கீத மும்மூர்த்திகள் எனக் கர்நாடக இசைப் பிரியர் போற்றும் தியாகராஜையர்(1767-1847), முத்துச்சாமி தீசுஷிதர் (1776-1835), furton சாஸ்திரிகள்(1762-1827) சாகித்தியங்கள் கீர்த்தனைகளாகவும் கிருதிகளாகவும் தஞ்சை மகாராட்டியர் காலத்திலே பல்கிப் பெருகின. இவர்களிலே தியாக ராஜையர் தமிழிலே எதுவும் இயற்றவில்லை. ஏனைய
இருவர் பேராற் சில தமிழ்க் கிருதிகள் மட்டுமே வழங்குகின்றன. 'சங்கீத மும்மூர்த்திகளால் தமிழிசை வளர்ச்சி பெற முடியவில்லை. தமிழ் இசை தான் பிறந்து வளர்ந்து சோபனம் காட்டிய காட்டிலே ஆதரவின்றிக் கிடந்தது. அது பாமரர் இசையாக ஒதுக்கப்பட்டது.
தென்னகத்திற் போற்றப்பட்ட கோயிற் பண்பாடு இசுலாமியரால் மட்டுமன்றிக் காலனித் துவ கிறித்தவராலும் பெருஞ் சேதத்திற் குளி ளாகியது. வேதத்தினைப் பிரமாணமாகக் கொண்ட அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் எனும் வைதிக மார்க்கங்கள் இயக்க ரீதியிற் பரங் த முறையிற் பிரசார மெய்தின. சிவப்பிராமணர் கூட ஸ்மார்த்தத்தினை ஏற்றுச் சைவ நெறிக்குப் புறம்பே செயற்பட்டனர். விஜயநகர சாம்ராஜ்யத்தின் போது பெருக்கமும் செல்வாக்கும் பெற்றுச் சமூகத்திலே தனித்துவம் அடைங்த பிராமணியம், வைதீக தர்மத்தினையும் வர்ணாசிரம தர்மத் தினையும் தன்னுடைய வசதிக்கேற்பப் நடைமுறைப்படுத்தியது. சாதிப் பாகுபாடு கடவுளின் கட்டளையாகத் திணிக்கப்பட்டது. மக்கள் அதன் சுமையைத் தாங்கமுடியாமல் திண்டாடினர்.
V.
ଗରu ଗif ୩ ଜୀt unif sof செனி னை இராசதானி 1802 ஆம் ஆண்டு வெலஸ்ஸி துரையினாலே திடமான உருவத்தினைப் பெற்றது. பாஞ்சாலக்குறிஞ்சி கட்டபொம்மன், மருது சகோதரர் போன்றோரின் வீரச் சவால்கள் அங்கியரின் போர்த் தந்திரங்களின் முனி னே வரையறுத்து ஒழு) காக அமையாதிருந்தது 'எட்டப்ப வேலைகளுக்கு உதவியாக இருந்திருக்கிறது. காத்திரமான எதிர்ப்பினி றி வெளி ளையர் எதேச்சாதிகாரமாக 150 ஆண்டுகள் தம்மாணையை ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த இந்தியாமீது
45

Page 25
கலப்பை
ஐப்பசி 2002
செலுத்த முடிங் தது. அவர்களுடைய காலனித்துவ ஆட்சியிலே அடங்கி ஒருங்கிக் கிடக்க வேண்டிய தழல் நிலைத்த போதும் அப்பொழுது புதிய தொரு அலை வீசத் தொடங்கியது. அவ்வலைக்கு முக்கிய காரணியாக இருந்தது மேலைத் தேயக் கல்விமுறை எனல் வேண்டும்.
கிறித்தவ மதப் பரம்பலுக்கு அநுகூலமாக இருக்க வேணி டி, அறிமுகமாகிய மேலைத் தேயக் கல்விமுறை நாட்டில் நிலவிய பாரம்பரியமான கல்விமுறையிலிருங்து வேறுபட்டது. பழமையிற் புதைந்து கிடந்த சமுதாயத்தை நவீனத்துவத்திற்கு அறிமுகப்படுத்த உதவுவதாக அது அமைந்தது. நவீனப் பகுத்துணர் பாடங்கள் சுதேசிகளை முன்னேறிச் செல்லக் கூடிய பலத்தினை அளித்துச் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற ஊக்குவிப்பதாக அமைந்தன. புதிய கருத் துகளுக்கும் புதிய அணுகுமுறைகளுக்கும் புதிய உலகியற் சிந்தனைகளுக்கும் அவர்கள் முகங்கொடுத்தனர். இதனாற் புதியதொரு சமூக வகுப்பு-மத்தியதர வகுப்புஉருவாகியது. அவ்வகுப்பு பாரம்பரியமான தொழில்களை விட்டுப் புதிய தொழில்களை எதிர்நோக்கிற்று. இவ்வகுப்பினர் தம் பாரம்பரியங்களை- வேர்களை- தேரும் உணர்வுகளுக்கு அறிமுகமாயினர். இவற்றின் பயனாக எழுந்த மறுமலர்ச்சி இயக்கம் விதேசிய கலாசாரப் பணி பாட் ரு அமிசங்களைப் புறக்கணித்துச் சுதேசிய மொழி, மத, பாரம்பரிய, பண்பாட்டு அடையாளங்களை நாடும் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. இவர்களிடையே மதுவிலக்கு, பெண்கள் முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு சாதி வேற்றுமை நீக்கம், கதர் சுதேசி இயக்கம், கிராமத்தை நோக்கித் திரும் ப, தல எனி பன பெற்ற முக்கியத்துவத்தினாற் பொதுசன ஈடுபாடு பரந்திருந்தமையும் சமுதாய முன்னேற்றம் குறிக்கோளாகக் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கன.
46
றொபேர்ட் காலி டுவெல் பாதிரியார்(1819-1891) 1856 இலே வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பியல் geoisasso Tib (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) திராவிட இனம் எனும் கோட்பாட்டினையும் திராவிடமொழிகள் எனும் மொழிக்குரும்பத்தினையும் முன்வைத்து, அம்மொழிக் குரும்பத்தின் தனித்தன்மையையும் தனித்தியங்கும் ஆற்றலையும் எடுத்துரைத்து இறும்பூதெய்த வைத்தது. கற்பிட்டி சீமான் காசிச்செட்டி(1807-1860)தமிழ்ப் புலவர் பாரம்பரியத்தினை 1859 இலே தமிழ் பளுராக்' எனும் ஆங்கில நூலில் Gypsi son Quģg5mTsf (The Tamil Plutarch). மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளை (18551906) தமிழரின் பண்டைய பண்பாட்டினை எடுத்துரைப்பதின் மூலம் தமிழரிடையே புத்துணர்ச்சியைத் தூண்டலாம் என்று கனவுகண்டார். அவர் 1895 முதல் 1901 வரை சென்னையில் மதராஸ் றிவியூ எனும் f6b560sfigo (The Madras Review) 6Tg5u ஆங்கிலக் கட்டுரைகள் 1904 ஆம் ஆணி டில் 'ஆயிரத் தெணி னுTறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' எனத் தொகுக்கப்பெற்று வெளியாயின (Tamils Eighteen Hundred Years Ago) இக்கட்டுரைகள் அதுவரை காலமும் முக்கியத்துவம் அளிக்கப் பெறாமல் விடப்பட்டிருந்த தமிழர் பண்பாட்டினையும் நாகரிகத்தினையும் பிரபல்லியப் பருத்தின. முச்சங்க பாரம்பரியத்தின் வாரிசாக 1901 இலே நான்காவது தமிழ்ச் சங்கத்தினை மதுரையிற் பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத்தேவர்(1867-1911) நிறுவ முன்னின்றார். அது சங்கதத்திற்கு முற்பட்டு ஆரிய மயமற்ற பாரம்பரியத்தினைப் பேணும் பொருட்டு அமைக்கப் பெற்றது. சி.வை. தாமோதரம்பிள்ளை(1832-1901) பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களை அழிந்து போகாமல் அச்சிட்டுத் தமிழர் 'முதுசொம்' காத்தனர். (தொடரும்)

ஐப்பசி 2002 கலப்பை
தோள் கொருப்போம்
படலை இருக்கூடு பதுங்கிப்பாய்ந்து ஒளித்தோடி வடலிச் சுடுமண்ணில் வளையிழாவில் வடித்தெடுத்து கடலைச் சுண்டலோரு கருய்பநீரும் சேர்த்தழுத்து விடலைப் பருவத்தில் விளையாடிய ஊர்ச்சாவடியில் கடலைக் காடாகிச் சுந்தரத்தை இழந்துவிட்ட திடலைக் காண்கையில் திக்கென்று பதகழித்து அடலை மேடாக அழிந்துவிட்ட தாயகத்து நடலைக் கண்டும் நாமிங்கு வாளாவிருக்கலாமோ
வIளாவிருக்கலாமோவசதியாய் வசதியாய் வாளவிருக்கல்ாமோ வாழ்வே வதங்கிடுகையில் வாய்முடியாதல் வசையன்றோ வளையா வலுத்தோளாக வளத்திற்கு வழிகோல வாரீரோ வாரீரோ வண்ணமாய் வலுத்தோள்கொடுய்போம் !
நூங்கு ஒடியலிற்கும் நுனியிழந்த பனங்கிழங்கிற்கும் பங்குய் பணியாரத்திற்கும் பாணித்தட்டுய் பனாட்டிற்கும் பங்கஜக் குளத்திலையில் பாங்காய்த் தட்டமைத்து சங்கதமாய்ச் சேர்ந்தங்கே சந்தோஷமாய்க் கூழ்குடித்த துங்க தமிழினத்தின் துடிய்பே அடங்கிய்போகையில் இங்கு நாம்அமர்ந்து இங்கிதமாய் இடக்குய்பேசின் அங்குவாழ் எம்மவர் அழும்விழியது துடைய்பதற்கு எங்கு அவர்போவார் எம்மைவிட யாரிடமோ
uLIITfLGLIDIT uLIITTŘ35Gör uIITrŘIBGör uLITfLGLDIT யக்கதருவாய் யாமிருப்பின் யாசகம் யாரிக்கல்லோ யாதியாக யாளித்தோளாக யாதுமாய் யத்தனித்து யாவருமே யாவருமே யாவுமாய் யாளித்தோள்கொருப்போம் !
47

Page 26
assoli 6mo ஐய்பசி 2002
பஞ்சணைய் படுக்கையும் பகட்டான ஆடைஅணியும் மிஞ்சும் அறுசுவையும் மிதமான சுகபோகமும் கொஞ்ச வாழும்நாம் கொட்டிக்கொடுக்காவிடினும் கிஞ்சும் நினைய்யின்றிக் கிள்ளித்தானும் தெளித்துவிடின் பஞ்சம் பட்டினியால் பாழடைந்து பரிதவித்திடும் பிஞ்சுக் குழந்தைமுதல் பிறப்பில் மூத்தோரினது அஞ்சும் வாழ்க்கையில் அகலொன்று நாம்ஏற்ற நெஞ்சம் விழைந்திங்கு நெக்குருகித் தரவந்திருவோம்
தரவந்திருவோம் தாரளமாய்த் தாராளமாய்த் தரவந்திருவோம் தருதற்குத் தடுப்பிடல் தமிழர்க்குத் தரமில்லையே தாங்கும் தமித்தோளாகத் தரணியில் தலைசிறக்க தாரீரோ தாரீரோ தயங்காது தமித்தோள்கொருப்போம் !
ஆர்த்த தேட்டத்தை அபரிதமாய் அங்கனுய்பி சேர்த்துய் பிரயோகித்துச் செய்பமாய்ச் சீர்திருத்தி தீர்த்த துயரத்தால் திரும்பவும் வழிபிறந்திட பார்த்த இடமெல்லாம் பசுமை கண்விழித்திட வார்த்துக் கொடுத்தாரென வடகிழக்கு வாழ்த்திட பூர்த்தி செய்தோமெனய் புலம்பெயர்ந்தோர் பூரித்திட ஈள்த்த உறவுகளோடு இணையக்காலம் வருகையில்
கோர்த்த கைகளோடு கொட்டி நாம்மகிழ்ந்திருவோம்
நாம்மகிழ்ந்திருவோம் நன்றாக நன்றாக நாம்மகிழ்ந்திருவோம் நன்னிலைதாழ நழுவுதல் நமக்கது நல்லதல்லவே நவ்விய நற்தோளாக நம்மண்ணுக்கு நாம்ஆக நாமேதான் நாமேதான் நனிதே நற்தோள்கொடுப்போம் !
- DGGOTIT ஜெகேந்திரன்
48

ஐப்பசி 2002
கலம் பை
அன்பான பெண் வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்! இந்தப் பகுதி பெண்களைப் பெரிதும் கவரக் கூடிய அம்சங்களை ஏந்தி வருகிறது. ஒவ்வொரு இதழிலும் வெவ்வேறு வகைப்பட்ட ஆக்கங்களைத் தாங்கி வருகின்றது, இந்த ‘மகளிர் மட்டும் பகுதி.
மொட்டு 3
6T60s 60T
F6OLDLLC36)|T
- சிவாஜினி சச்சிதானந்தா -
ஆயகலைகள் அறுபத்துநான்கினில் ஒன்றான சமையல் கலைக்கு, அதில் திறமையும் வல்லமையும்
காவிய நளச் சக்கரவர்த்தியின் பெயர் மிளிர
படைத்த பழம் பெரும் நாயகன்
‘நளபாகம் ' என்று நாமகரணம் சூட் டி னாலும் , ஆண் / பெண் இருபாலாருக்கும் பொதுவானதே இந்த சமையல் கலை என்பதை நாம் அறிவோம், நளபாகம் என்ற பெயரினால் நளமகாராஜன் பெருமையடைந் தானா, இல் லை நள மகாராஜனினால் சமையல் கலை பெருமையுற்றதா என்ற வாதம் எல்லாம் ஒருபுறம் இருக்க, உலகின் பிரசித்தம் பெற்ற சமையல் நிபுணர்கள் (chets) ஆண் களாக இருந்தபோதும், அந்த நிபுணர்கள் படாடோபமாக சமைத்துக்
களைத்து வீடு திரும்பும்போது, அவர்கள் |5 7 6 Լձ வருவதென்ன வோ
எதிர் பார்த் து தம் இல்லாள் கைப்பக்குவத்தில் எளிமையாக அமைந்த
வயிறும்
நாளாந்த சமையலைத்தான் என்பதையும் நாம் அறிவோம். எப்படித்தான் திருப்பிப் போட்டுப் பார்த்தாலும் கடைசியில் சமையல் அடைக் கலமாகி விடுவதென்ன வோ தையலிடம்தான்!
சமையல் அம்சம் இல்லாத மகளிர் மட்டும் வாசமில்லா மலராகிவிடுமல்லவா? எனவே மொட்டு-3 ‘என்ன சமையலோ?’ என்ற தலைப்பில், ஒரு வித்தியாசமான சமையல் பக்குவமாக விரிகிறது.
49

Page 27
கலப்பை
გt?i II |dfl 2002
விருந் தினர்களை சமையலுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கின்றோம் நாம் , யாராவது விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால்
உபசரிப் பதில்
என்ன சமையல் செய்வது என்று யோசித்து யோசித் தே தலை முடி நரைத்தோ கொட்டியோ ப்ோய்விடுகிறது. அதிலும் மச்சம் மாமிசம் உட்கொள்ளாத விருந் தாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம் - என்ன சமையல் என்று தீர்மானிக்க முடியாமல் தலை முடியைப் பிய்த்துக் கொள்ளலாம்போலத் தோன்றும். “மீண்டும் மீண்டும் அதே கறியும் கூட்டும் ரச மும் தானா? - அலத்துப்போய்விட்ட பக்குவங்கள்” எனறு முணுமுணுத்துக் கொள்ளும் சகோதரிகளே, இலகுவில் தயாரிக்கக் கூடியதும் போஷாக் கு நிறைந்ததும் சுவை மிக்கதுமான பக்குவம் ஒன்றினை கீழே தருகின்றேன். நான் வாசித்தோ கேட்டோ தயாரித்து அனுபவித்த இவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்குக் கூட மகிழ்ச்சிதான். செய்து பார்த்துக் கொள்ளுங்களேன்!
2-2010/5 – 6ls Tig5úly =
(4 - 6.பேருக்குரியதுட)
ஏலக்காய்ச் சாதம் மாமிசமற்ற இறைச்சிக் கரி
தாளிதம் செய்த உருளைக் கிழங்கு
கெக்கரிக்காய் - தக்காளி ரைட்டா
(cucumber- tomato raita)
米
வல்லாரை - பப்படப் பொரியல்
* பாசிப்பயறு பாயாசம்
துவக்காய் சாதம் தேவையான பொருட்கள்:
* 2 கோப்பை சம்பா அரிசி * 3 கோப்பை நீர் * 1/4 கோப்பை நெய்
அல்லது உருக்கிய மார்ஜரின் * I/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் * 1 பெரிய வெண்காயம் - அரிந்தது * கரட்-சிறுதுண்டுகளாக வெட்டியது * 2 துண்டு ரம்பை
(pandanus leaf) * I Girl (3) Grif (lemon grass) * 1 நெட்டு கறிவேப்பிலை * தேவைக்கேற்ப உப்பு
செய்முறை : * முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் நெய்யை உருக்கி, அதில் ரம்பை, சேர, கறிவேப் பிலையோடு வெட் L4- up வெண் காயத்தில் அரைவாசியையும் சேர்த்துப் பொன்னிறமாகும் வரைத் தாளிதம் செய்து கொள்ளுங்கள்,
* பின்னர் கழுவி வடித்த அரிசி, மிகுதி வெண் காயம், ஏலக்காய் துாள், உப்பு என்பனவற்றையும் சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு கிளறிப் பொரிய விடுங்கள். * இதனுள் வெட்டி வைத்திருக்கும் கரட்டையும் நீரையும் சேர்த்து அரிசியை வேக விடுங்கள்,
50

gilt Jó 2002
மாமிசமற்ற இறைச்சிக்கறி (SITGITITGot / CFITILIT)
தேவையான பொருட்கள்
* 250 கிராம் மாமிசமற்ற இறைச்சி (stewed vegetarian mutton)
(இது 500 கிராம் பைகளில் சீன அல்லது தமிழர் பல சரக்குக் கடைகளிலர் கிடைக்கின்றது, குளிர் பெட்டியில் உறைந்த நிலையில் இருக்கும் இதனை சமைப்பதற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்பே வெளியில் எடுத்துவிடுங்கள் ). * 1 பெரிய வெண்காயம் * I தக்காளிப் பழம் * தேவைக்கேற்ப மிளகாய் / கறித்துாள் * தேவைக்கேற்ப உப்பு * 1 நெட்டு கறிவேப்பிலை * துண்டு ரம்பை * I said, Grif ( lemon grass ) * சிறிதளவு கடுகு, சீரகம் * 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் / ஏலக்காய்/கராம்பு/கறுவா வறுத்தரைத்த வாசத்துாள் * தாளிதம் செய்வதற்கு சிறிது ஒலிவ் எண்ணெய்
செய்முறை : * முதலில் ஒரு அகன்ற தாச்சியில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், ரம்பை, சேர, கறிவேப்பிலை, அரிந்து வைத்திருக்கும் வெண்காயம் ஆகியவற்றைப் போட்டுக் கிளறிப் பொரிய விட வேண்டும். இதனுள் மிளகாய்கறித்துாள் சேர்த்து சிறிது நேரம் வறுத்து, வெட்டிய தக்காளித் துண்டங்களையும் சேர்த்துக் கிளறுங்கள், * இதனுள் காளான்/சோயா துண்டங்களை சேர்த்துக் கிளறி, சிறிதளவு நீர் சேர்த்து மேலும் வறுத்து ஒரு பிரட்டல் கறியாக்கிக் கொள்ளுங்கள், * இறக்குவதற்கு முதல், வாசத்துாள் சேர்த்துவிடுங்கள்,
தாளிதம் செய்த உருளைக்கிழங்கு
தேவையான பொருட்கள் : * 250 கிராம் அவித்துத் தோல் நீக்கிய சிறிய வட்ட ஊருளைக்கிழங்கு ( chat potatoes) * 1 பெரிய வெண்காயம் - மெல்லியதாக அரிந்தது * 2 துண்டு ரம்பை * 2 - 3 மேசைக் கரண்டி இடித்த மிளகாய்த்துாள் * I gifoofa, GFT (lemon grass) * 1/4 மேசைக் கரண்டி மஞ்சள் துாள் * 1 நெட்டு கறிவேப்பிலை * தேவைக்கேற்ப உப்பு * பொரிப்பதற்கு எண்ணெய் * 1/2 கோப்பை தேங்காய்ப்பால் (அல்லது பசப்பால் /சோயா பால் )
செய்முறை : * அவித்து வைத் திருக்கும் கிழங்குகளுக்கு மஞ்சள் உப்பு சேர்த்துப் பிரட் டி , எண் ணெயில் ஆழப் பொரித்தெடுக்க வேண்டும், * ஒரு அகன்ற தாச்சியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், ரம்பை சேர கறிவேப்பிலை, அரிந்த வெண்காயம் ஆகியவற்றை இட்டு, மெதுமையபகும் வரை தாளியுங்கள். * இதனுள், பொரித்து வைத்திருக்கும் கிழங்கு மற்றும் இடித்த மிளகாய் உப்பு என்பனவற்றையும் சேர்த்து மேலும் 2 நிமிட நேரம் அடியில் பிடித்துக் கொள்ளாமல் கிளறிக் கொண்டிருங்கள், * கடைசியாகப் பாலைவிட்டு, பாலைக் கிழங்கு உறிஞ் சிக் கொண்டதும் இறக்கிவிடுங்கள்,
வெண் கபயம்
51

Page 28
கலப்பை
gin Jð 2002
கெக்கரிக்காய்
- தக்காளி ரைட்டா தேவையான பொருட்கள் : * 2 கோப்பை தயிர் * 3 நெட்டு வெண்காயத்தாள் * 2 மேசைக் கரண்டி துாளாக அரிந்த ligain goodsv ( mint leaves) * 2 கெக்கரிக்காய் துருவியது * தக்காளி சிறு துண்டங்களாக்கப்பட்டது * 1/4 தேக்க ரணர்டி மிளகு து.ாள் * 1/2 தேக்கரண்டி நற்சீரகத்துாள்* தேக்கரண்டி சீனி ck தேவைக்கேற்ப உப்பு
செய்முறை : * தயிர் மெதுமையாகும் வரை கடைந்து, மற்றைய அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் பாவனைக்குத் தேவையாகும் வரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருங்கள்,
6)/6ნ 6ს/T622Z - பப்படப் பொரியல்
தேவையான பொருட்கள் :
* பெரிய
米
வலி லாரை இலைகள் உருளைக்கிழங்கு பப்படம் * நிறமூட்டப்பட்ட சவ்வரிசிப் பப்படம் * பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை :
* வல்லாரை இலைகளை காம்பு நீக்கி
கலந்து கொள்ளுங்கள் .
கழுவிச் சுத்தப்படுத்தி, நீரில்லாமல் துடைத்தெடுத்து, சிறிதளவு Փ-նվ சேர்த்து, ஓரளவு கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளுங்கள். வல்லாரை பதம் கெடாமல் இருக்கவும், சுருங்காமல் இருக்கவும், மொர மொரப்பாக இருக்கவும் எண் னெயரில் போட் டவுடனேயே இலைகளை எடுத்துவிட வேண்டும், * இரண்டு வகை பப்படங்களையும் பொரித்துக் கொள்ளுங்கள், * அனைத்தையும் கலந்து விடுங்கள்.
LITšiLup LTLITsi
தேவையான பொருட்கள் :
米 3/4
* 2 மேசைக் கரண்டி கடலைப் பருப்பு
கோப்பை பாசிப் பயறு
* 2 மேசைக் கரண்டி அரிசி *6 கோப்பை தேங்காய்ப்பால் * 2 கோப்பை சர்க்கரை/ கருப்பட்டி * சிறிது உப்பு * I கைபிடி முந்திரிப்பருப்பு (cashew nuts ) * 2 மேசைக் கரண்டி நெய் * கைபிடி முந்திரி வற்றல் * 1/4 தேக்கரண்டி ஏலக்காய் துாள் * தேங்காய்ச் சொட்டு
- பல்லுப்ஸ்லாய் சீவியது
செய்முறை : * முதலில் பாசிப்பயறையும் கடலைப் பருப்பையும் அவற்றின் பச்சை மணம்
போக வறுத் தெடுத்து, கழுவிய
52

ஐப்பசி 2002 கலப்பை
அரிசியையும் சேர்த்து, கரைய விடாமல் பரிமாறும் նհ0/1 நீரில் அவித்தெடுத்துக் கொஞ்சமாய்க் + ... .
கடைந்து கொள்ள வேண்டும், * சர்க்கரையை சிறிதளவு நீரில் மெல்லிய நெருப்பின் மேல் வைத்துக் கரைத்துக் கொள்ளுங்கள், * கரைத்த சர்க்கரையைப் பாசிப்பயறுப் பாத்திரத்தில் மெதுவாக வார்த்து (அடியில் தங்கும் மண்ணை வார்த்து விடாதீர்கள்), மெல்லிய நெருப்பில் வைத்துக் காய்ச்சி, ஏலக்காய் துாள், உப்பு, தேங்காய்ப்பாலையும் சேர்த்து, ஒரு கொதி கொதித்ததும் இறக்கிவிடுங்கள், * அடுப்பிலிருந்து இறக்க முதல், நெய்யில் வறுத்தெடுத்த முந்திரிப் பருப்பு, முந்திரி வற்றல், தேங்காய்ச் சொட்டுப்பற்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் குறிப்பு சீனியையும், தேங்காய்ப்பாலுக்குப் பதிலாக
சர்க்கரைக்குப் பதிலாக
பசும்பாலையும் பயன்படுத்திக் கொள்ளலாம், விரும் பரிய இடித்த குண்டுமணியளவு பச்சைக் கற்பூரத்தையும்
பட் சத்தில்
கொதிக்கும்போது சேர்த்துக் கொள்ளலாம்,
फु Jी , பரிமாறலுக்கு வருவோம், சமைத்ததைப்
சமைத் தாய் விட்டது . இனிப்
புசிப்பதில் நாவுக்கு சுவை கிடைக்கும் அதே வேளை, விருந்தினர் கண்களுக்கும்
لقي الاقة அமைந்துவிட்டால் விருந்தின் மெருகே
ér 6ð) 6)) t- L - 59 60 i S T U Lo T u
கூடி விடுகிறது. உணவானது இன்முகத்தோடு பாங்குறப் பரிமாறப்படும் இடத்து நிறைவு பெற்று, விருந்து பூரணத்துவம் பெறுகிறது.
இவை மட்டுமல்ல,
கிடைத்துவிடும் ஒரு அம்சம், எம்மில் பலரது வீட்டு தி தோட்டங்களிலும் கிடைக் கும் வாழையிலையை சில (F560);5&560L56fi di L(Super markets) வாங் கிக் முடிகின் ற தமிழர் எமது நாகரிகத்தோடு இணைந்து வந்துவிட்ட வாழையிலையை விட்டுவிடுவதா என்ன? 560) puî6ù Qy (5 & (5 (stainless steel) பாத்திரங்களையும் தட்டங்களையும் எமது விருந்து பரிமாறலுக்குப் பயன்படுத்திக் கொள்வோமே!
கொள் ள
வாழையிலை யை ;
வாழையிலைகளைக் கழுவித் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உணவு உண்ணும் தட்டங்களுக்கு மெல்லிய பச்சை நிறத்தையுடைய தலை வாழையிலைப் பகுதியிலிருந்து பரிமாணத் தையொத்த வட்டங்களை வெட் டி யெடுத்து, வைத்துவிடுங்கள். இதன் மேல் உணவு
த ட் டங் களின்
தட் டங் களில்
பரிமாறப்படும்போது வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும்.
சாதத் திற் குப் பரந்த தட்ட மும் , மற்றவைகளுக்கு அகன்ற வாயுடைய பாத்திரங்களும் அழகாக அமையும் உணவுப் பதார்த்தங்களை மேசைக்கு எடுக்கும் இந்தப் பாத்திரங்களின் அடியிலும் உட்புறப் பாகங்களிலும் அளவுக்கு வெட் டியெடுத்த இலைகளை
பரப்பிவிட்டுக் கொள்ளுங்கள். இதற்குக்
53

Page 29
கலப்பை
ဣf ILJဖါ၊ 2002
நிறம் கொணி ட அடிவாழையிலைகளைப் பயன்படுத்திக்
கொள்ளலாம், சமைத்தவற்றை இவற்றில்
கடும் பச் சை
வைத்துப் பரிமாறும்போது ஒரு தனிக் கவர்ச்சியே வந்துவிடுகிறது.
அலங்காரத்திற்குச் தேவையானவை
அலங் கார வேலைப் பாடு என்பது
அவரவர் கற்பனாசக்தி, அதனை வெளிப் படுத்தும் திறமை, செயல் முடிக்கும் பொறுமை என்பவற்றில் தங்கியிருக்கும் ஒன்றாகிறது. ஒரு சு வார சியத் திற் காயினும் கீழே குறிப் பிட் டுள்ள எளிமையான அலங்காரத்தை செய்து பார்த்துக் கொள்ளுங்களேன்.
* இறுக்கமான ஒரு தக் காளிப் பழத்தின் மெதுமைனான தட்டைப் பக்கத்திலிருந்து இறுக்கமான தட்டைப் பக்கம் வரை 1/2 அங்குல மொத்தத்தில், சிறிதளவு சதையுடன் சேர்த்துத் தோலை, சுற்றிச் சுற்றி, அது வழியில் கிழிந்து விடாவண்ணம் நீளமாக சீவியெடுக்க வேண்டும். ஒரு முனையில் தொடங்கி மறுமுனைவரை, தோல் வெளிப்புறம் இருக்க, ரோசாமொட்டு வடிவத்தில் சுருட்டியெடுத்து, ஒரு குச்சியினால் (tooth pick) 9 Lqufì sò G3 ù i sé குத்திவிட வேண்டும். சிவப்பு நிறத் தக்காளி ரோசாப்பூ தயார்!
米 இல் லாத
(lemon) யின் தோலை மட்டும், மேலே தக்காளிப் பழத்திற்குக்
கறைகள் கீறல் கள் எலுமிச்சை
கூறியது போல 6T LOT as வெட்டியெடுத்துக் கொள்ளுங்கள், இதனைக் மஞ்சள் நிற ரோசாப்பூ தயாராகிவிட்டது!
கூட சுருட்டி விட்டால் ,
* ஒரு சிறிய ஆரஞ்சு நிற மிளகாய்,
ஒரு சிறிய பச்சை நிற மிளகாய், இவற்றைக் கூரான முனை கொண்ட கத்தியின் உதவியுடன் மிளகாய்களின் நுனிகளிலிருநது காம்பிற்கு அருகே வரை இரண்டாகப் பிளக்க வேண்டும்.
மிளகாயைச் சற்றுத் திருப்பி, 90 பாகையில் மீண்டும் ஒரு தரம் அதேபோல் வெட்டி, மிளகாயின்
உடலை நான்கு இதழ்களாக்கிக் கொள்ள வேண்டும், காம்பிற்கு அருகே வரை வுெட்டும்போது மிளகாய் முற்றாகப் பிளந்து விடாதிருக்கக் கவனமெடுக்க வேண்டும் மெதுவாக விதைகளை
அகற்றிவிட்டு, குளிர்ந்த நீரினுள் இவற் றையிட் டு குளிர் சாதனம் பெட்டியில் சில மணிநேரம் வைத்துவிடுங்கள், அழகான ஆரஞ்சு, U & 60) ಆ மிளகாய் பூக் கள் தயாராகிவிட்டன!
* சுருள் வகை பார்ஸ்லி (parsley ) இலைகளில் சிலவற்றைக் கழுவி, காம்பு நீக்கி, நீரை உலர்த்திக் கொள்ளுங்கள்.
* ஒரு சிவப்புப் பெரிய வெண்காயம்,
54

ஐப்பசி 2002
参
So 6)
தோல் நீக்கி, வளையங்களாக வெட்டி
வைத்திருங்கள்
* ஒரு நுள்ளல் கேசரித்துாளை ஒரு
மேசைக் கரண்டி பாலில் கரைத்து வைத்திருங்கள்.
* ஒரு பழக் கூடை அல்லது ஒரு
பூச்சாடி
அலங்காரம்
ஆமாம் , அலங்காரத்திற்குத் தேவையான பொருட்கள்
இனி என் ன, பொருத்தமான இடங்களில் கவர்ச்சியும் நளினமும்
சமையல் தயார் , மேஜை
எ ல் லாமே தயார் ,
எ ல் லாவற் றையும்
குன்றாமல் அழகாக வைத்துவிடுவது
பெண் களுக் குத் தான் கை வந்த கலையாயிற்றே!
* சாதத் தின் மேல் கரைத் து
வைத்திருக்கும் கேசரியில் சில துளிகளைத் தெளித்து, நடுவில் சிவப்பு ரோஜா மலரை அமர்த்தி, சாதத்தின் மேல் அங்தும் இங்குமாகத் துாவி விடுங்கள் - ஏலக்காய் சாதத்திற்கு ஒரு தனி கவர்ச்சியே வந்துவிடும்.
சில பார்ஸ்லி இலைகளை
* காளான்-சோயா பிரட்டலின் நடுநாயகமாக மஞ்சள் ரோஜாவை வைத்து, சுற்றிலும் சில பார்ஸ்லி இலைகளைப் பரப்பி விட்டுப் - அழகாக இருக்கிறதா இல்லையா என்று!
* கிழங்குக் கறியின் மேல் இரண்டு மிளகாய்ப் பூக்களையும் அமர்த்தி, ஒரு
பாருங்களேன்
சில இலைகளையும் துாவிவிட்டால் , அவை காரப் புன்னகை பூப்பது நிச்சயம்!
* ரைட்டாவின் மேல் ஓரிரு துளிகள் கரைத் த கேசரியைத் தெளித்து, வெண்காய வளையங்களை மெதுவாக நடுவில் அடுக்கி வைத்துப் பாருங்கள் - பூரித்துப் போவீர்கள்,
* பொரியல் வகைகளின் நிறம் ஒன்றே அதனை அலங் காரமாக்கிவிடுகிறது. மூன்று வகையறாக்களையும் மாறி மாறி அடுக்கி வைத்துவிடுங்கள் - அவற்றின் வர்ணஜாலச் சிரிப்பில் சொக்கிப் போவீர்கள்,
என்ன வாசகர்களே, உங்கள் வீட்டில் இடம்பெறும் அடுத்த விருந்து இதுவாக இருக்கும் என்று நான் நம்பலாமா?
வணக்கம்
ஓவியக் கலைஞர் (65TGOTID
சகல விதமான சரித திர வேலைகளுக்கும் , வர் ண ஓவியங்களுக்கும் , இயற்கைக்
காட்சிகள், மற்றும் உங்கள்
அணி புக் குரியவர் களின்
புகைப் படங்களை(Photos) பெரிதாக
வரைதல் போன்றவற்றிற்கும்
தொடர்பு கொள்ளவும் ,
ஓவியக் கலைலுள்
ஆானம் (02) 9920 0508
55

Page 30
கலப்பை
ஐப்பசி 2002
இக்காலத்தைய மேலைநாடுகளில்
நான் அவதானித்தவை -முதியோன்
எனது கற்றுப்பயணத்தின் அட்டவணையின்படி அமெரிக்காவில் தங்கியிருப்பது மூன்றுகிழமை என்றிருந்தது. ஆனால், பாபாவின் ஆச்சிரமத்தில் நான் கண்ட நிம்மதியும் மனச்சந்தோஷமும், இன்னும் சில நாட்கள் அங்கு தங்கினால் என்ன என்று எண் மனம் ஏங்கிற்று. அதற்கு அனுசரணையாக, சாந்தகுருவும், ராகவனும், அங்கு வந்துபோகும் மற்ற அடியார்களும் வற்புறுத்தியதின் பேரில், எனது பயணத்தை இன்னுமொரு கிழமை தள்ளிப் போட்டோம் . மகாசந்தோஷம். பின்னர் அங்கிருந்து இவர்களைப் பிரிய மனமில்லாமல், உடம்பை இழுத்துக் கொணி டு கனடாவுக்குப் போனேன்.
எனக் கோ
கனடா: கனடா விமானநிலையத்துக்கு
எனது மைத்துனரும் பிள்ளைகளும் வந்து என்னை அழைத்துப் போனார்கள். மைதி துனர் ஒரு இளைப் பாரிய உத்தியோகத்தர். ஆதலால் அவருக்கு விரும்பிய இடங்களுக்கு என்னைக் கூட்டிச்செல்ல நிறைய நேரமும் அவகாசமும் இருந்தன. கனடா ஒரு “சின்ன யாழ்ப்பாணம்” என்று பலர் சொல்லக் ஆனால் அங்கு போனபிறகுதான் அவர்கள் சொன்னதை ஊர்ஜிதப்படுத்த முடிந்தது. எந்தத் தெருவால் போனாலும் ஒரு நாலு தமிழரையாவது காணாமல்
S6
கேள்விப்பட்டதுண்டு.
திரும்பமுடியாது. வழியில் சந்திப்பவர்களுடன் சொந்த பந்தங்கள்பற்றி, ஊர் விவகாரம்பற்றி, கனடாவில் வசிக்கும் மற்றத் தமிழர்களைப்பற்றி உரையாடிவிட்டு, நேரம் பிந்தினதால் குறிவைத்துப் போன அலுவல்கள் ஒப்பேறாமல் திரும்பி வந்த நாட்களும் பல.
பிறநாடுகளில் புலம்பொயர்ந்து வசிக்கும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லப்போனால், எங்கே தொடங்கி எங்கே முடிப்பதென்று தெரியவில்லை! பொதுவாகச் சொல்லப் போனாலி , மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, அவர்களில் எல்லோரும் நல்ல வளத்தோடும் வசதிகளோடும் வாழ்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கடவுள் அருளால் வீட்டு வசதி, உணவு வகைகள் வசதி, வாகனவசதி, நிறைய கலைநிகழ்ச்சிகள் முதலியன அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. கலியாணவீடு, பிறந்தநாள், ருதுசாந்தி 21வயதுப் பூர்த்தி முதலிய வைபவங்களில் செலவுகள் தாராளமாகவே இருக்கின்றன. அவர்களின் பணம், அவர்களின் விருப்பப்படி செலவு செய்து சந்தோஷம் அனுபவிப்பதுபற்றியோ, அதனால் அவர்களின் கெளரவம் ஒரு படி உயர்வதுபற்றியோ மற்றவர்கள் அபிப்பிராயம் தெரிவிப்பது நியாயமில்லைத்தானே! ஆனால், மாறாக, அவர்கள் மனதில் நிம்மதியோ,

ஐiபசி 2002
கலப்பை
திருப்தியோ இருப்பதாகத் தெரிய வில்லை. அதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஊரில் இருக்கும்பொழுது அலுவல்களைக் கவனிக்க தூரங்களுக்கு நடக்க நேரிடும் தண்ணி கிணற்றில் அள்ளிச் சுமந்துதான் பலதுக்கும் பாவிக்க வேண்டும். காய்கறி, மீன், இறைச்சி, பால், தயிர், உலருணவு வகைகள் ஊரில் எல்லாருக்கும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கா. விறகு வாங்கவேணும், மாடும் கள்வரும் வளவுக்குள் வராமலிருப்பதற்கு, கெட்டுப் போன வேலியை அடைக்க கிடுகுக்காரனைக் காத்திருந்து, கிடுகு வாங்கி, வேலி அடைப் பவனைத் தேடிப்பிடித்து வேலி அடைப்பித்து முடிக்க வேணும். அவ்வண்ணமே.
வீடு வேய்தலும் காய்கறித்தோட்டம், பூந்தோட்டம், வயல், இவற்றிற்கான வேலைகள், ஆடு, மாடு, கோழி இவைகளைப் பராமரித்தல், கிராமத்து வாசிகசாலை, களியாட்டங்கள் இப்படி தினசரி வேலைகள் இருந்து கொண்டேயிருக்கும். மேற் சொனி னவை உத்தியோகம் வகிக்காதவர்கள், சீவனத்துக்காக வேறு தொழில் செய்யாதவர்களைப் பற்றியே சொன்னோம்.
ஆனால், நான் போய்வந்த எல்லா மேற்கத்திய நாடுகளிலும் , (ஏணி, ஒஸ்ரேலியாவிலும்கூட) கவனித்தவற்றை ஒட்டு மொத்தமாகச் சொல்லப்போனால், பொதுவாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மூரில் இருப்பவற்றைவிட நிலைமைகள் வேறு. வீட்டுக்குள் பைப்பில் தண்ணிர்
வரும். வாகன வசதிகளுணர்டு. எந்த
உலருணவு வகை களும் கிடைக்கக்கூடியதாகப் பல கடைகளுண்டு. விதம்விதமான காய்கறிகள், பழவகைகள் ஏராளமாக உண்டு. பால், தயிர், சீனி, மா, எண்ணைவகை, இவற்றில் விதவிதமான தயாரிப்புகள் விற்பனையாகின்றன. போக்குவரத்துக்குப் பொதுவாகனவசதிகள் உண்டு. கண்காட்சிகள், பூங்காக்கள், களியாட்டங்கள், சூதாட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் இவைகளுக்குக் குறைவில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகளுக்குள் போட்டி பொறாமை, சோதனைகளில் தரப்படுத்துதல், இவை அந்த நாடுகளில் மருந்துக்கும் கிடையா.
எது எப்படியிருப்பினும் அங்கு வசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி யில்லை, மனதில் திருப்தி கிடையாது. எந்நேரமும் மன அங்கலாய்ப்புடனேதான் காணப்படுகிறார்கள். இன்ன நேரம் இன்னது செய்யவேண்டும், அதன்பிறகு இன்னது முடிக்கவேண்டும், பின்னர் இன்னதைப் பார்க்கவேண்டும் என்று சதா மனதைப் போட்டுக் குழப்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் நிம்மதியற்ற தன்மைக்குக் காரணம் என்னவாயிருக்கும் என்று ஆராய்ந்து பார்த்தேன். இவர்களின் அதிருப்திக் குக் காரணங்கள் இல்லாமலில்லை.
இன்றைக்கு அதைச் செய்துமுடிக்காவிடில் நாளைக்கு அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், தெண்டம் அடிப்பார்கள். இன்று, நாளை இதைச் சாப்பிட்டு முடிக்கவேண்டும், அல்லது அது பழுதாகி வீசவேண்டி வரும். வந்திருக்கும்
57

Page 31
கலப்பை
ஐப்பசி 2002
அரசாங்கக் கடிதத்தின் படி அந்த அலுவலைத் தவணை தப்பமுன்னர் செய்துமுடிக்க வேண்டும். பிள்ளைகளின் சிறு சு கயினம் பற்றி டொக்டரிடம் காட்டவேண்டும். அதற்கும் appointment வைக்காமற் போகமுடியாது. இன்ன கடையில் மலிவு விற்பனையாம். அந்தப் பொருள் ஏற்கனவே வீட்டிலிருந்தாலும் பரவாயில்லை, மலிவு என்பதற்காக வாங்கிவைப்போம். பைப்பில் வெந்நீர் ஒழுங்காக வருவதில்லை, அவனைக் கூப்பிட்டால் உடனே வர முடியாதாம், அடுத்த கிழமையாம். வாங்கிவந்த (Freezer) G6sfle(5L'lgu JffuðssöÍ SSOsli குளிரூட்டிக்குள் உடனே போடாதபடியால் பழுதாகிவிட்டன, எறிய வேண்டும். பெரிய பிள்ளைகள் Cell-phone பாவிப்பதைப் பார்த்துவிட்டுத் தனக்கும் ஒன்று வேணுமென்று சின்னவன் அழுகிறான். மூத்தவள் தன்னுடைய T.V. பழுதாகிவிட்டது, புதிது வாங்கித் தாருங்கோ என்று பிராணனை வாங்குகிறாள். இன்று பின்னேரம் கோவிலுக்குப் போகவேண்டும், எல்லோரும் போக முடியாது, வீட்டுக்கு யார் காவல்? காரில் ஐந்துபேர்தானே போகலாம், யாரை விட்டுவிட்டுப் போகிறது? கிழவனை பஸ்ஸில் வரச்சொன்னால் அவருக்குப் பிடிக்காது, சின்னப்பிள்ளை தனியே இருக்கமாட்டான், அவனை அடுத்த வீட்டிலும் விட முடியாது, அவர்களோடு கோபம், கேட்கஇயலாது. எந்தச் சேலையைக் கட்டிக் கொண்டு போகிறது என்று தீர்மானிக்க முடியாமலிருக்கிறது. இருக்கிற SarccSஐ வேறை வேறை Functionsக்கு ஏற்கனவே கட்டியாச்கது. நகைகளையும் வரேக்கை
Bankகிலிருந்து எடுத்துவர வேண்டும். நாளையின்றைக்குக் கலியாணவீட்டுக்கும் போட்டிட்டுப் பிறகு கொணர்டு போய் இப்ப சாமம் இரண்டு மணியாகுதே, இந்த யூனிக்குப் பாட்டி என்று போன பிள்ளைகள் இன்னும் வீடு திரும்பவில்லையே! எங்கே போகிறார்களோ,
வைக்கலாம்.
என்ன செய்கிறார்களோ, கடவுளுக்குத் தான் தெரியும். (தெரிந்தும் என்ன செய்ய முடியும்?) நாங்கள் அவர்களைக் கேட்கவும் முடியாது, கணிடிக்கவும் இயலாது. இதெல்லாம் Modern lifeஆம், நாங்கள்
எல்லாம் பட்டிக்காடாம்."
ஊரில் நடைமுறையிலிருக்கும் வாழ்க்கை
எங்கள்
நெறிகளை விட எவ்வளவு வித்தியாசங்கள் பார்த்தீர்களா? எப்போது ஊர் திரும்பலாம், அநீதப் புனிதமான காற்றைச் சுவாசித்துக்கொண்டு, அந்த முத்துப்போன்ற பச்சைத் தண்ணீரைக் குடித்துக்கொண்டு இருந்தாலே சாப்பாடும் தேவையில்லை, அந்தச் சாப்பாட்டு வகைகள்தான் என்ன ருசியப்பா என்று சொல்லிக்கொண்டு பலர் இருக்கிறார்கள். வேறு சிலர், இங்கு சிலபல கஷ்டங்கள் இருந்தாலும் பரவாயில்லை, இப்படிச் ஆடம்பரமான வாழ்க்கை ஊரில் கிடைக்கவா போகிறது என்று கருதுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் திரும்பி ஊருக்குப் போகிற நோக்கமில்லை. இன்னும் சிலர், இன்னும் வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, நல்ல காசும் சேர்த்துக் கொண்டு அங்குபோனால் இலங்கை ரூபாவில் பெருந்தொகை காசுக்கு மாற்றலாம். மாற்றிப்போட்டு, காணி, வீடு,
சொகுசான, செல்வமான,
கொஞ சக் காலம் இநீத
a Q

gi Lાઈ 2002
கலப்பை
கார், நகை, துணிமணி, இவைகளை வாங்கி இங்குள்ள வசதிகளை அங்கும் ஏற்படுத்தி, பெரிய சீமான்களாக வாழலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
நல்லவேளை நாங்கள் புலம்பெயர்ந்து வந்தது. இங்கு வந்து நல்லபடியாக எல்லாம் மாறிவிட்டோம். இப்போது மேல்நாட்டவருக்குச் சமமாக நாம் வாழுகினறோம். ஆனால எங்கள் தோலைமட்டும் வெள்ளையாக மற்ற முடிய வில்லையே/நிறம் மாறினால்தானே அவர்கள் எங்களைச் சமமாக மதிப்பார்கள்/ என்று தங்கள் மனதுக் குள் புளுங்கிக்கொண்டிருக்கும் ஒன்றிரண்டு குடும்பங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
சில முதியவர்கள் தமக்குப் பொழுது போக வில்லையே என்று கொட்டாவி விட்டுக் கொணி டும் சலித்துக்கொண்டும் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுபவிப்பதற்கு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கலை நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமில்லை. ஒவ்வொரு வாரஇறுதியிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் நடனம், நாடகம், சங்கீதக் கச்சேரி, இவையும் வேறு களியாட்டங்களும் அவசியம் நடப்பதைக் காணலாம். முதியவர்கள் தமது பிள்ளைகளுடனோ பேரப்பிள்ளைகளுடனோ இவற்றிற்குப் போய் பொழுதுபோக்கலாமே! ஆம் போக்கலாம், ஆனால் எல்லோருக்கும் அந்த சிட்டாது. கூட்டிப்போவதற்கு ஆள்வசதி, வாகனவசதி, தனிமையாக இயங்கமுடியாமை, அதிக நேரம் ஒரே இடத்தில் குந்தியிருக்க
வாய்ப்பு கி
இயலாமை, இப்படிப் பல சிக்கல்கள் குறுக்கே வரக்கூடும். இருந்தும், பல முதியவர்கள், ஆரோக்கியமாக உள்ளவர்கள் அங்கங்கு காணும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், சார்ந்த அமைப்புகளில் பணியாற்றித் தமது நேரத்தைப் பிரயோசனமாகக் கழிக்கிறார்கள். முதியவர்களுக்கென்றே பல சங்கங்கள் எல்லா நாடுகளிலும் இயங்கு கின்றன. அவற்றில் இவர்களும் சேர்நீது தமது சமுதாயத்துக்குப் பயன்படக்கூடிய பல ஆக்கபூர்வமான திட்டங்களைத் தயாரித்துச் செயலாற்றி, முன்னேற்றம் அடைந் திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. இவர்கள் சுறுசுறுப்பாகவும் ஏதாவது பணிகளில் ஈடுபட்டுக்கொண்டும் காலத்தைக் கடத்தும்வரை இவர்களது ஆரோக்கியமும் குன்றாது என்பது எனது சொந்த அபிப்பிராயம்.
சமய, கலை, கலாசாரங்கள்
AAAAAAAAAAAAAA
லணர்டன்: கனடாவில் ஒரு மாதம் தங்கியிருந்து அங்கு வசிக்கும் பல நணி பர்கள் சொந்தக் காரர்களைச் சந்தித்துக்கொண்டு லண்டன் மாநகருக்குப் பறந்தேன். அங்கு எனது நாடக குருவும், உற்ற நண்பனுமான நாடக மேதாவி தாசீஸியஸ் அவர்களின் இல்லத்தில் தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரும் அவரின் மனைவி விமலாவும் அழைத்ததின்பேரில் அங்கு போக நேர்ந்தது. லண்டனில் நான் ஒன்பது வருடங்கள் இருந்தபடியால் நண்பர்கள் அநேகர். சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், பலரைச் சந்தித்து, அளவாளாவி, அவர்களுடன் சாப்பிட்டு,
எல்லோரையும்
59

Page 32
கலப்பை
ஐப்பசி 2002
ஒக்கலித்து மகிழ்ந்து மூன்று கிழமைகள் போனதே தெரியாமல் கழிந்தன. ஒன்றிரண்டு புதிய சொந்தக்காரரின் வீடுகளுக்கும் போய்வந்தேன்.
AAAAAAAAAAAA
ஜேர்மனி: என்னைவரவேற்க ஆவலுடன் காத்திருந்த
எனது மூத்த மகள் , மருமகனி, பேரப்பிள்ளைகளைக் காண விமானமூலம்
லண்டனிலிருந்து ஜேர்மனியில்
பயணமானேன். டுகல்டோப் என்னும் விமானநிலையத்தில் மருமகன், மகள், மூவரில் ஒரு பேரப்பிள்ளை வந்து சந்தித்து அழைத்துப்போனார்கள். புதிதாக வீடுமாறிச் சில மாதங்கள்தான். ஆனதால் வீட்டினுள் செய்யவேணி டிய குறை வேலைகள் பலவற்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இருவரும்
காலையும் மாலையும்
வேலைக்குப் போவார்கள். (வார இறுதிகளிலும் வேலை). பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவார்கள். படிக்கும்
பாடங்கள் டொச்மொழி, வீட்டில் பேகவது தமிழ். மூத்த பேர்த்திக்கு தமிழில் எழுத வாசிக்கவும் தெரியும். நாட்டிய அரங்கேற்றம் செய்தவள். வாரஇறுதித் தமிழ்ப் பள்ளிக்கூடம் சங்கீத, நடன வகுப்புக்கள், சொந்தக்காரர், நண்பர்கள் வீடுகளுக்கு விசிற், இப்படி கழிகின்றன. எண் போன்றவர்களுடன் ஆறுதலாக குந்தியிருந்து அளவளாவிக் கதைப்பதற்கு
அவர்களின் நாட்கள்
ஒரு வருக்கும் பகலிலி நேரமி கிடைப் பதில்லை. எனினும் இராச்சாப்பிட்டுக்கு பிறகு
பேசவேண்டியவற்றைப் பேசித்தீர்ப்போம். விடியற் காலை எழுந்து அவர்கள் திரும்பவும் ஓட்டம், நான் தனிய
கடந்த வருடங்களில் இவர்கள் வசித்த வட்டாரத்தைவிட இப்போது இருக்கும் வட்டாரம் வேறு. முந்தின இடம் எனக்குப் பழகிவிட்டது. ஆதலால் அங்கு என்பாட்டில் கடைகளுக்குப் போகவோ, தெருக்களில் நடைபழகவோ எனக்குச் சுகமாகவிருந்தது. இது புது இடமானபடியால் வெளியிற் செல்ல இடம் பழக்கமில்லை. வீட்டிலேயே குந்திக் கொண்டு கம்மாவிருக்கவேண்டிய நிர்ப்பந்தம்.
AAAAAAAAAAA
டென்மார்க்: ஒரு மாற்றத்தைவேண்டி, நான் திட்டமிட்டிருந்த படி டெனி மார் கி கில் குடுமிபதி துடன குடியேறியிருக்கும் எனது மருமகன் வீட்டுக்குப் பயணம் பண்ணினேன். ஜேர்மனி வடஎல்லைவரை ரயிலில் பிரயாணம்
மு னினமே
செய்தேன். தொடர்ந்தும் பிரயாணஞ் செய்யவேண்டிய அந்த ரயில் ஒரு ரயில்நிலையத்தில் வந்ததும் தரித்து நின்றது. மேலும் அசையவில்லை. கனநேரம் கழிந்தும் ரயில் அசைந்ததாகக் காணோம். ஏதோ repair-25 di (5 Lé என்று நினைத்துக்கொண்டிருந் தேன். ஆனால், அரைமணிநேரம் தாணி டியதும் டெனி மார் கீ கில் எனது மருமகன் இறங்கச்சொன்ன ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகை யன்னலூடாகத் தெரிந்தது. இடம் வந்துவிட்டதென்று ரயிலிலிருந்து இறங்கினேன். மருமகனும் பிள்ளைகளும் காத்து நின்றார்கள். எனக்கென்றால் நம்பமுடியாத
இறங்க வேணி டிய
நிலையத்தில் எண் வரவைக்
அதிசயம். ஜேர்மனிக்கும் டென்மார்க்குக்கும் இடையிலுள்ள கடலைக் கப்பல்மூலம்தான்
60

ஐப்பசி 2002
கலப்பை
தாணி டவேணி டுமெனிறு எனக் குச் சொல்லிவைத்தார்கள். இது கடலைக் கடக்காமலே நேரே ரயிலில் டென்மார்க் வந்து சேர்ந்துவிட்டோமே என்று மருமகனிடம் கேட்டேன். அவர் சிரித்துவிட்டுச் சொன்னார் கடலைக் கடந்துதான் வந்தீர்கள். ஆனால் நீங்கள் ரயிலிருந்து இறங்காதபடிக்கு ரயிலே கப்பலுக்குள் வந்து நின்றதும் கப்பல்தான் ரயிலையும் உங்களையும் இக்கரைக்குக் கொண்டு சேர்த்தது என்று. தளத்தில் தண்டவாளம் பதித்து, ஒரு முழுரயிலை தனக்குள் அடக்கி, கடலைத் தாண்டக்கூடிய கப்பலைத் தூரத்திலிருந்து திரும்பிப் பார்த்தேன். என்ன பிரமாண்டமான கப்பல்
மருமகனுக்கு பிள்ளைகள் நால்வர். அவர்களில் பிந்திய மூவரும் ஒரே சூலிற்பிறந்தவர்கள். அவர்களுடன் சந்தோஷமாகவும் வேடிக்கையாகவும் நாட்கள் கழிந்தன. மொழியில்தான் பள்ளியில் படித்தாலும்
அவர்கள் டேனிஷ்
வீட்டில் தமிழ் சரமாரியாகப் பேசுகிறார்கள். அந்த மூவரும் ஒன்றாகவே இருப்பார்கள். சண்டையும் நிறையப் பிடிப்பார்கள், ஆனால் பிரிந்தே போகமாட்டார்கள். பெற்றோருக்கு இவர்களைப்போல உதவிகள் செய்யும் பிள்ளைகளைக் காணிபது அருமை. வீட்டில் தளபாடங்களையும், துடைத்துக்கூட்டித் துப்பரவாக வைத்திருத்தல், அடுப்படியில் தாயாருக்கு வேண்டிய கையுதவிகளைச் செய்தல் முதலிய வேலைகளைத் தாங்களாகவே முன்வந்து செய்வார்கள். அத்தோடு, விளையாட்டிலும் நிறைய ஈடுபாடு. அடிக்கடி என்னிடம் வந்து தாத்தா எண்ன வேனும், அது திரவ, இது
) பாகங்களையும் ,
செய்யவா, பசிகக?றதா? இனனது கொண்டுவருகிறேன் சாப்பிடுகிறீர்களா என்று சதா என்னைப் பிச்சுப்பிடுங்கிக்கொண்டே இருப்பார்கள். அந்த அன்புத் தொல்லைகூட ஒருவித சந்தோஷம்தான். காரில் எனினையும் கூட்டிக் கொணி டு முழுக்குடும்பமும் கோப்பன்ஹேகன் என்னும் தலை நகரத்துக்குப்போய், அங்கு ராணி மாளிகை, பழைய துறைமுகம், கடல் நடுவே தனது காதலன் எப்போது திரும்பிவருவான் என்று கற்பாறையில் அமர்ந்து கடலையே பார்த்தபடி ஏங்கிக் காதி திருக்கும் முதலியவற்றையும் காட்டினார்கள். இந்தக் கடற்கன்னி பல்லாண்டுகளுக்கு முன்னர் ஒரே கல்லிற் செதுக்கி அந்தப் பாறையில் அமர்த்தி வைக்கப்பட்ட ஒரு அழகுச் சிற்பம். அற்புதமான தோற்றம். அதற்குக் கால்களில்லை. அரைக்குக் கீழ் மீனினது
கடற் கணினிகை
உடம்பு. இவையெல்லாம் பார்த்து ரசித்துவிட்டுப் பிரிய மனமில்லாமல்
ஜேர்மனிக்குத் திரும்பினேன்.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இப்போது புளங்கும் காசு யூரோ எனப்படும். முன்னர் ஒவ்வொரு நாடும் தங்கள் தங்கள் வைதி திருநீ தார்கள் . அணிமையில்தான் எல்லா நாடுகளின் காசையும் யூரோ வுக்கு மாற்றியிருக்கிறார்கள். இந்த மாற்றம் சில நாடுகளுக்குப் பாதகமாக அமைந்து விட்டது. சாதாரணமாக, ஜேர்மனியை எடுத்துக் கொணர் டால், அவர்களின் முன்னைய காசு டொச் மார்க்ஸ். மாற்றத்தின் பின்னர் ஒரு யூரோ கிட்டத்தட்ட 2 மார்க்ஸ் பெறுமதியாகும். ஆனால் இந்த
666
61

Page 33
கலப்பை
ஐய்பசி 2002
மாற்றம் ஜேர்மன் பிரசைகளை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டது. ஏனெனில், மாற்றத்துக்குப் பிறகு பொதுவாக பொருட்களின் விலைகள் யூரோ காசில் அரைவாசியாக மாறியிருக்கவேண்டும். ஆனால் நிலைமை அப்படியில்லை. உதாரணமாக், முன்பு 20
உணிமை
மார்க்ஸுக்கு வாங்கின ஒரு பொருள் இப்போது 11 யூரோவாக இருக்கவேண்டும். ஆனால் அதன் விலை இப்போது 18 யூரோ எனலாம். இந்த விலைவாசி மாற்றத்தால் சனங்கள், முக்கியமாக குறைந்த வருமானமுள்ளவர்கள், கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
ஜேர்மனியிலிருந்து ஒக்டோபர் ஆறில் விமானம் ஏறி 8ந் திகதி மெல்போனில் வந்திறங்கினேன். எனது பேரன்கள் இருவரும் விமானநிலையத்தில் என்னை வரவேற்று வீட்டுக்குக் கூட்டிப்போனார்கள்.
எனது சுற்றுப்பிரயாணத்தின் சாராம் சத்தைச் சொல்லப் போனால், மனதுக்குக் கவலை தரக்கூடிய சில முக்கிய விஷயங்கள் தானி முந்தியடித்துக் கொண்டு நினைவில் மு னினுக்கு வருகின்றன. அது புலம்பெயர்ந்து வாழும் தமிழினத்துக்கே ஏற்பட்டிருக் கும் கவலை, யாராலும் தீர்க்கமுடியாத கவலை. அதுதான் தமிழ் இளைஞர்கள், யுவதிகளைப்பற்றிய கவலை. ஒஸ்ரேலியா உட்பட எல்லா மேற்கத்திய நாடுகளிலும், இளமைப்பருவம் அடைந்த பிள்ளைகள் 18 வயதை எட்டியதும் அவர்கள் பிள்ளை மதிக்கப்படுவதில்லை.
母,6河灯5
அவர்களை
இஷ்டம் தானி .
முழுமனிதராகவே அந்நாடுகளின் சட்ட திட்டங்கள் கணிக்கின்றன. அப்பிள்ளைகள் தன்னிச்சையாக எதையும் செய்யலாம். பெற்றோர் குறுக்கிட முடியாது. அவர்களின் செயல்களுக்குப் பெற்றோர் பொறுப்பும் அல்ல. பிள்ளைகள் பெரிய வகுப்புகளிற் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் புகுந்து விட்டார்களானால் பிறகு அவர்களின்
மேலைநாட்டுப் பிரசைகளின்
மேலை தி தேயப் பலவித கலைகளையும் வளர்க்கின்ற, ஊக்குவிக்கின்ற உற்பதிதி காணப்படுகின்றன.
பல்கலைக் கழகங்களானது
ஸ்தாபனங்களாகவே
பல்கலைக்கழகங்களில் இருபாலாரும் படிக்கிறார்கள், பழகுகிறார்கள். பிள்ளைகள் பதினெட்டு வயதுவந்து மே ஜா க ளா கரி வரி டட் ட படியா ல மாணவர்களிடையே ஆணி, பெண் உறவுகளை அதிகாரத்திலுள்ளவர்கள் அனுமதிக்கிறார்கள். அல்லாவிடில் அக்கழகங்களில் கருத்தடைக் கருவிகளைப் பகிரங்கமாக, எல்லோருக்கும் இலவச மாகக் கிடைக்கக் கூடியதாக, ஏணி வைத்திருக்கவேணி டும்? உறவுகள் வைக்கலாம், ஆனால் தடுப்புமுறையைக் கையாளவேண்டும் என்பதனால்தானே! இளம் உள்ளங் களின் உணர்ச்சிக்கு வரம்பு தெரியாது. எது எப்படி நடந்தபோதிலும் நமகி கெனி ன என்று நாம் வாளாவிருந்துவிடக்கூடாது. தமிழ் மக்கள், பொதுவாக இளைஞர்கள், எதையும் புதிதாகவே அனுபவிக்க விரும்புபவர்கள். ஆனாலி , இதில் , அவர்கள்
பரவாயிலி லையெனிறு ஏற்கனவே
62

ogi II 1ð 2002
ά, δοή ωII
பாவனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததை மனமுவந்து ஏற்றுக்கொள்வார்களேயானால் அவர்களின் தியாகம் குறித்து வேறுயாரும் அக்கறைப் படத் தேவையில்லை. அதைத் தமிழ்ச் ஆகவேண்டும்.
சமூகமும் ஏற்றுக்கொண்டே
அதைவிட இன்னும் மோசமான கேடு ஒன்று. அதுதான் "தூன்’பாவனை. இளவயது பயமறியாது என்பதற்கேற்ப, துடிப்பான வயதில் எதையும் ஒருக்கால் taste பண்ணிப் பார்ப்போம் என்ற ஆவல் முன்னிற்கும். அதனால் சில மாணவர்கள் கெட்ட சகவாசத்தினால் ஏமாற்றப்பட்டு போதை வஸ்துக்கள் பாவிக்கவும் துணிந்துவிடுகிறார்கள். போதையின் பிடிக்குள் சிக்கியவர்கள் பின்னர் மீள்வது மிகவும் கடினமான விடயம். இளைஞர்களும் இந்த வலைக்குள் அகப்பட்டு விடுவாார்களோ என்பதுபற்றித்தான் தமிழ்ப் பெற்றோர் உன்னிப்பாகக் கவனமெடுக்கவேணர்டிய
சில தமிழ்
விடயம்.
நாங்கள், முதியோர், எவ்வளவுதான் அரட்டிக்கொண்ட போதிலும், புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் இந்த சுமந்து தானி ஆகவேணி டியிருக்கிறது. எங்கள் விமரிசன தி தை
க வர் டங்களைச்
அவர்கள்
ஆனால்
நம்மைக் குறைகூறவும் மாட்டார்கள்.
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்,
அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தாங்கள் குடியேறியிருக்கும் நாட்டுப் பழக்கவழக்கங்களை அனுசரித்தேயாக வேணி டிய நிர்ப்பநி தத்துள்
தள்ளப்பட்டிருக்கிறார்கள். அது எமது தமிழினத்தின் தலைவிதியே ஒழிய வேறல்ல.
ஊரில் திருவிழாக்காலங்களிலும் விசேட திதிகளிலும் விரதம் அனுட்டிப் பார்கள். காலையில் சாப்பிடாமல், குளித்து, கோவிலுக்குப் போய்வந்துதான் மதிய போசனம். அதுவும் ፵(ዐb சிவனடியாரை அழைத்து அருக்கு அமுதூட்டியபிறகுதான் தாம் உணவு அருந்துவார்கள். காலப்போக்கில் இந்தச் சிவனடியார்களைப் பண்டாரம் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அதேபோல் எனது சுற்றுப்பயணத்தில் எனக் கு ஏற்பட்ட அனுபவத்தில் , என்னையும் ஒரு பண்டாரம்போலச் சில
சொந்தக் காரர்கள், நண பர்கள் நடத்தினார்களோ என்ற ஒரு விசித்திரமான எனினம் எனக்கு மனதில்
உதயமாகியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் எண் னைக் கணிடதும் சுகநலம் விசாரித்தபிறகு, அடுத்ததாக வருவது தங்கள்வீட்டுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு வரும்படி எனக்கு அழைப்பு. நானும் மறுக்கமுடியாமல் போய்ச் சாப்பிடுவேன். சாப்பாடு திறமாக இருக்கும். முடிந்ததும் நானி பாய் சொல்லி விடைபெற்றுக் கொண்டு போய்விடுவேன், அவர்களும் வாசலில் நின்று உடம்புச் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுக் கதவைச் சாத்திக்கொள்ளு வார்கள். சாப்பாடுகொடுத்து உபசரிப்பதுமட்டும்தான் ஒருவருக்குக் அன்பு காட்டு வதன் அடையாளம் என்ற தப்பபிப்பிராயம் எங்கள் சமுதாயத்தில் நன்றாக ஊன்றி நிற்கின்றது!
என்னைப்பற்றித்தான்
சு கதீ தைக் கவனமாகப்
63

Page 34
S. 6)
எழுதும்படி மனம் நிர்ப்பந்திக்கிற் .ܘܽm வழியில்லை. ஏறக்குறைய ஆறு மாதங்கள் பல நாடுகள் சுற்றிவிட்டு, சுகம் குன்றி யும், உள்ளத்தில் சிறிது மாற்றங்களுடனும் ஒக்டோபர் 8ந் திகதி மெல்போணை வந்தடைந்தேன். சுகம் குன்றுவதற்குக் காரணம் இல்லாமலில்லை. ஒவ்வொரு நாட்டிலும் போய்த் தங்கியிருந்ததும், விசிற் பண்ணினதும் எல்லாம் சொந்தக்காரர் வீடுகளில் அல்லது நணி பர்களினி வீடுகளிற்தானே. விருந்துப சாரம் பிரமாதம். ஒருவேளை ருசியான உணவை மூக்குமுட்டப்
ஒவ்வொரு வீட்டிலும்
பிடித்தால், அடுத்த வேளை எப்படிச் சாப்பிடுவது? பசிக்குமா? Ф— боотбо! சீரணிக்க ஏதாவது அப்பியாசம்
மேற்கொண்டேனா? இல்லை! இங்குபோல் தினமும் மாலை இரண்டு மணிநேரம் வெளியே நடந்தோனா? அதுவுமில்லை. இருந்தும் அடுத்தவேளை சாப்பிட, பசியில்லாவிட்டாலும், அவர்களின் அன்புக் கட்டளையை மீறி, ஒருநேர உணவைத் தவிர்க்கவோ குறைத்துச்
ᏧᏏfᎢ 6ᏡᎠᏛu ,
சாப்பிடவோ முடியவில்லை. நாளுக்குநாள் இதே நிலை மைதானி . அதனால் கூட்டுமொத்தம், வயிறு வீங்கிவிட்டது. (காற் சட்டை அளவில்லை). வயிற்றுப்பொருமல், வாய்வு, மலச்சிக்கல், உடல் பருமன், சோம்பல், களை முதலிய வியாதிகளுடன் திரும்பினேன். மனமும் அலுத்துவிட்டது.
சுற்றுப்பயணமும் முடிந்தது. எல்லாம் கனவுபோல் மறைந்து, மறந்து விட்டன. ஆனால் மேற்கூறிய உள்ளத்தை உறுத்தக்கூடிய சில விடயங்கள்மட்டும் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன. பயணத் தொடக்கத்திலிருந்த ஆசைக்கு
64
மாறாக, இனிமேலும் இப்படியான சுற்றுப்பிரயாணம், அதாவது எமது தமிழ்ச் சகோதரர்ளைக் கணிடு அவர்களின் வாழ்க்கைமுறைகளை அவதானிக்க முயல்வது, அவசியமா என்ற ஐயப்பாடு மனதிற் குடிகொண்டுவிட்டது. இருந்த இடத்திலேயே இருந்து மனத்தைச் சாந்தமாக வைத்திருப்பதே உசிதம் என்று மனதுக்குப் படுகிறது. அப்படி மனதை நிம்மதியாகவும் , சாந்தமாகவும் வைத்துக் கொணி டு தியானத்துடன் ஆனந்தமாக வாழி கீ கையைதி தொடரக்கூடிய இடமொன்று இருக்கிறது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். உங்களுக்கு ஞாபகமில்லாவிடில் அது என் பிழையல்ல! ஆனாலும் மனம் ஒரு குரங்கு அடுத்த வருடம் மனம் எப்படி மாறுமோ சொல்லமுடியாது; அல்லது, விதிதான் தலைகீழாக மாற்றிவிடுமோ, யார் அறிவர்?!
- முதியோன் -
கலப்பையை (சநீதா) உங்கள நணபர்களி, உறவினர்களுக்கு
பரிசுப் பொருளாக்குங்களி வெளிநாடுகளிலோ, உள்நாட்டிலோ இருக் கண் ற தமிழ் மீது பற்றுக் கொணி ட , உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு கலப்பையைப் பரிசாக்குங்கள், வருட சந்தாவைச் செலுத்துவதன் மூலம் உங்களது பெயரில் , அவர்களுக்கு கலப்பை இதழ்கள் அனுப்பிவைக்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கலப்பை முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,

தமிழ் கையேடு 2003
இணையத்தில் வெளிவரவிருக்கின்றது.
இந்த இணையத்தளத்தில் தமிழ் கையேட்டில் வெளிவந்த சமூக, சமய, பொது விடயங்களும் இடம் பெறுகின்றன.
தமிழ் கையேடு:2003 இல் விளம்பரம் வழங்கிய வியாபார தாபனங்கள் தமது விளம்பரங்களை, 2003 ஆண்டு டிசெம்பர் மாதம் வரை இலவசமாக
இந்த இணையத்தளத்தில் பிரசுரிக்கலாம். அதற்கு எம்முடன் தொடர்பு கொண்டு உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.
தமிழ் கையேடு 2003-4 இல் பிரசுரிக்காத புதிய விளம்பரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும்.
visit
WWW.tamilguide.com.au
Tamil Guide is the only directory, published for and by Tamils in NSW
بر

Page 35
PARK MEDICAL
26/12-16 To TOON
DR. JEY CHANDRAN
(DIPEN !
Monday - Fric Saturday – Sunday - Pu
BULK
* Emergency * Women's Health * Antenatal Care * Minor Surgery * Pathology Blood tests * Workers Compensation * In-House Physiotherap * X-Ray Services Open
For Appoi
9636
Carpark spaces

ongabie Road GABIE
DR. THAVA SEELAN
DAYS
lay 8am – 8 pm blic Holidays 9am - 4pm.
BILLING
* ECG * Child Health * Immunization * Stress Management * Allergy Tests
Υ
* Days next door
intments Call
7757
available at REAR