கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2004.10

Page 1
KAAPPA 42.
 

リGIb11 g面2
LUGOLI

Page 2
Šinkamama Ayat Creations
Graphic Designers, Digital Printers & Artists
ܒܩ܋
SLLLTLTGGLLGGBTaTTLLOaaLLLMCLL0LL0LS
Phone (O2).9920 050804O9826521 e-Malignanamartstoptusnet.com.au
உங்கள் அனைத்து ஓவிய வேலைகளுக்கும், பிரிண்டி தேவைகளுக்கும்
1 I'm a Lumlumon India. Ef yw Collodd e'n troi i TILI'll refir hel, flu חוויוח14BIם ויתחייווידוי.
LLLLLLL LL LLL S LLLLLLL LEaa LaaaaLSa0L0Saa aGMLaL L LL LLLLLS liaisingler LG L L L L S LLLS K LL L S SLLLL LL
 
 
 
 
 
 
 
 
 
 

மனித மனத்தை உழுகின்ற ཡོད༽
HEDL JÜLI உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும் O
HEL ÉOL U அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
gi, ilililili, : A Lis, S2,50 ஆண்டுச் சந்தா ta rifi,II (i) : Aus. S I (), ()() (Afilir:ailgi, III (i) : A Lus. S2K ). ( ) ( )
பிாரிக்கப்படாத படைப்புகrாத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் oli, II siLIscletiriite:II,... Tele : (O2) 4737 9007
KALAPPA P.O Box 40, Horsebush South, NSW 240 ALUSTRALIA, E-mail : kalappa içīyah CO. COITI KD இதழ் வியடிவமைப்பு மித்ர ஆர்ட்ஸ் & கிரியேசன்ஸ் LSLTLLLLLLL LLL LLL SKKSSKSSS KSSKKSKGL LOSO00 000
அட்டைப்பட ஓவியம்
ருபாம் ン ܢܠ
உள்ளே.
தமிழ் வாழ்த்து
DETT TILDI HELT ETT GIMIT அந்தக் காலத்து யாழ்ப்பாணம் சுநாதங்கள் மரணம் ஒன்றுதான் இலவசம் தடம் பதித்த என் ஊரும் என அனனனும பாரம்பரியம் ஒன்று சிட்னியில் மேடையேறியது
LIITETITIJE
யார் காரணம் சித்த மருத்துவம் தண்ணிரும் கண்ணீரும்
உங்கள் சிந்தனைக்கு ஒரு சிறு விருந்து
34
MO
M
50 56
62

Page 3
பத்தாம் ஆண்டில் எத்திசையும் புகழ் மணக்கும் "கலப்பை"யை உலகத்தமிழர்கள் சார்பாக ஒருகோடி வாழ்த்துப்பா) பூக்களால் வாழ்த்துகிறேன். "கலப்பை" என்ற சொல்லாட்சியின் பொருளைத் "தேன்மழை" எனும் கவிதைத் தொகுப்பில் "கலப்பை" எனும் தலைப்பிலேயே கவிஞர் சுரதா அவர்கள் வரைந்துள்ள கவிதையின் இறுதிப் பகுதியை உள்ளவாறே பொருத்திக் காண விழைகின்றேன்.
நிலத்திலுள்ள மேல்மண்ணைக் கீழ்மண் னோடு நீண்டுள்ள கூர்முனையால் ஒன்று கூட்டிக் கலப்பதனை உண்டாக்கும் காரணத்தால் கலப்பை என்று பெயரிட்டார். கலப்பை மூலம் நிலத்தில்நாம் உண்டாக்கும் கலப்பை மாந்தர் நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோமாயின் கலப்பு மனம் உருவாக வழியுண் டாகும் கலப்பு மனத் தால்சாதி செத்தே போகும். குன்றெடுத்த நம்நாட்டில் முன்னர் இந்தக் கொடுமையெலாம் இருந்ததில்லை இவற்றை யெல்லாம் தின்றுவிட்டுத் தூங்குகின்ற தமிழர் கட்குத் தீவிரமாய் எடுத்துரைக்க வேண்டும் ஒன்றுபட்டு வாழ்வதற்குத் தடையாய் நிற்கும் ஒருகோடி வேற்றுமையை ஒழிப்போம் என்று அவர் அன்று சொன்னது தீர்க்கதரிசனமோ? நாட்டு எல்லை களால் வேறுபட்டு நிற்கும் தமிழர்களைச் செம்மொழியாம் நம் மொழியை ஒன்றிணைக்கும் கலப்பினைச் செய்கின்ற "கலப்பை" வாழிய பல்லாயிரம் ஆண்டுகள்
தை 2004 இதழில் வெளியான "கோவில்களும் திருவிழாக்களும்" கட்டுரை, என் முனைவர் பட்ட ஆய்விற்குப் பயனுள்ளதாக இருந்தது. படைப்பாளி சி.சு. நாகேந்திரனுக்கு நன்றி.
என் பங்காகத் தமிழகத்துச் சிறுவனின் சிவகாசி வெடிகளை அவுஸ் திரேலியத் தமிழர்கட்காகக் கவிதையில் அனுப்பியுள்ளேன்.
நல்வாழ்த்துக்கள்.
பி. வடிவேல் பொள்ளாச்சி
ܢܠ
 

&ህ
:
` - T.

Page 4
= - - - - - - هي مدينة " : : : : تايم .. S S Su AAS ܒ ܢ ¬ ܩ .. - -- ܩ " " . . . . " " " , - " " .
ཀ། མཚོ་ -
- - ^ "::
*、。。。、 ---- . ,1 15 ܡܐ ܕܨ - s¬ ¬ T' = "" F.C. """ : . '' .. - uTSAS S SS S SuuuSA AKSS S S SSASS """ہر""" = i = "="==",".
... ." تقع بين " تأتي : ** - ,"-","- :" تيتش تي آية
: " --- F" * థ్రో T_ܒܠܐ ::::::::::::::::::: پيغ; ="ة : ::::: +ی" ܠ '; i SuS ASSS SAA SS qTS q KSA .e - . . . . . . . " " . . ..¬ ¬ ̧ - -T "T".." 7:17 :13. ¬ ¬.ܨ܁ܨ ܼ ܐ - - - "- ఇువా 42 ఇుuశీ 2004 స్లేవ్లోవ్లో ... - - .th. ... L --محrعه. ق. م.:م
* , ' . -" == * قياء. ,... .. "" ܨܨܠܐ ܒܠܐ ܘ リー .................;&#=== ::::.:.*"== === - ཟས་ - .
. ཟླ་
அவனின் ஒரு பார்வையினாலேயே என் உள்ளம் உருகிக் கசிந்து கண்ணீர் மல்கி தன்னிலை மறந்து நின்றிருந்த அந்த நாள்காலை 7.30 மணியிருக்கும். சாலை எங்கும் அப்பொழுது தான் சிறிது சிறிதாக மக்கள் ஆரவாரம் ஆரம்பித்துக் கொண்டி * ருந்தது. பாதையில் அதிகமான வெண்டி இT கள் இல்லையெனிலும் சைக் கிளில் போவோரும் வருவோரும்
சென்று கொண்டிருந்தார்கள்.
நிமிட பிரபாணத்தின் பின் வண்டி ஒரு நிறுத்தத்திற்கு
- வநதது. "அம்மா தTம ரை கவனடிய இடம் வந்தா ச் - Il II DIT...
என் உள்ளம் ஆசையாலும் ஆர்வத்தாலும் பரபரத்தது.
கண்கள் சுற்றுமுற்றும் நோக் கின. வண்டியை விட்டு
ஆயிரம் ஆயிரம் ஆண்டு களாகப் பழந்தமிழர் வாழ்ந்து பலநூறு போர்
... , . - : كن
... ."
$ళ్ల ဝှို ଚେଁ
-- " , "" """ "స్ట్యా ---- ... ن............. ... . . . . :, ' '
Tبي" " _____) ܒܕ SASuSeSeSkeS
 
 
 
 
 
 
 
 
 
 
 

களைக் கண்ட பெருவீரர்கள் காலடிபட்ட மண்ணில் பெருவீரர் களுக்கெல்லாம் பெரும் வீரன் அபயகுலசேகரன், மும்முடிச்சோழன், அருண்மொழி, காவிரியின் மைந்தன், இராஜராஜ சோழனின் மங்காப் புகழ் பரப்பும் தஞ்சைப் பெருங்கோயில் வாயிலில் நின்றிருந்தேன்.
இத்தகையதோர் பெருங்கோயிலைக் கட்டிய மாமன்னன் காலத்தில் நாம் வாழாது போய்விட்டோமே என்று என்மனம் எண்ணாத கனமே இல்லை. நான் நின்றிருந்த பாதை வழியாகக் காவிரியின்
݂ ݂ سی = - اسم ه ق. ۔۔۔۔۔۔۔برsFق மைந்தன் எத்தனை தடவை பெருங்கோயில் சென்று பெருவுடை
:۔ --سم ہے۔ --- س - ث - - -- ٹ۔ - --4۔ ۔۔۔ حیسے سس ۔ யாரைத தரிசித்திருப்பா னோ. என் உள்ளத்தில் பிரவகித்த உவகையை வார்த்தையில் சொல்லிவிடமுடியாது. వ్లో
வாருங்கள்! அனைவரும் வாருங்கள். அகில உலகத்தையும் வியப்பில்
{ጅ ئيه "" ஆழ்த்தியிருக்கும் இம் மாபெரும் கோயிலை நீங்களும் கண்டுகளிக்க క్ష్
و..."**[#=";"" = afTrfri
மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி எழுப்பிய மராட்டியர் :
.
நுழைவாயிலைக் கடந்து நுழைந்தேன். வாயிலைத் தாண் டியதும் ప్ర్రా
ܡ - ት፡† శా -- - சாநதமாக யானை ஒனறு அக கோயிலின் சிற்பக்கலையைக் கண்டு : வியப்படைந்து ஆமோதிப்பது போல்
தலையை ஆட்டிய வண்னம்
நின்று கொண்டிருந்தது.

Page 5
சில அடி தூரத்தில் இன்னு மோர் சிற்ப வாயில். தஞ்சைப் பெருங்கோவில் கட்டியதன் பின்னர் எழுப்பப்பட்ட இக்கோபுர வாயில் இராஜராஜன் சேர மன்னனை வெற்றி கொண்டதன் சின்னமாக கம்பீரத்துடன் எழுந்து நிற்கின்றது. அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஐந்து அடுக்குகளுடன் பல்வேறு சிற்பங்களைத் தன் மேனியில் சுமந்து கம்பீரமாக நின்ற வாயிலையும் தாண்டி அடுத்த கட்டி னுள் நுழைந்தேன்.
ஆகா! இதென்ன. இன்னுமோர் பிரமாண்டமான மூன்று அடுக்குத் திருவாயில். திருவாயிலின் இரு மருங்கிலும் பிரமாண்டமான ஒரே கல்லாலானதுவாரபாலகர் சிலைகள். சாதாரண மனிதர்களான நம்மை யெல்லாம் அதி அற்பர்களாக மாற்றிவிட்டு பெருமையுடன் நிற்பது போல் அமைந்துள்ளது. இராஜ ராஜன் திருவாயில் கோபுரம் மாமன் ன்னைப் போலவே கம்பீரமாக நீலவானுக்கும் செம்மண் தரைக்
கும் இடையே எழுத்து நிற்கின்றது. கோபுரவாயில் இருமருங்கிலும் பச்சைப் பசேலென்ற புற்தரையும் செடிகளும் கொடிகளும் இயற்கை அழகும் சோழச் சிற்பிகளின் கைவண்ணத்துடன் போட்டியிட முயற்சித்த வண்ணம் காற்றில் அசைந்துகொண்டிருந்தன.
ஆகா! என்னதான் போட்டி பிட்டாலும் இத்தகைய சிற்பத்திற்கு முன் உங்கள் அழகெல்லாம் செல்லு படியாகாது என்று எண்ணி வியந்த வாறு திருவாயிலைக் கடந்தேன்.
இராஜராஜன் திருவாயிலைக் கடந்து வந்ததும் என்முன் விரிந்த காட்சி ஆகா! அற்புதம்! அபாரம்! அதிசயம்! என்னவென்று சொல் வேன்! இத்தகையதோர் சிற்ப சிகரத்தை எண்னத்தில் வடிவ மைத்த சிற்பியின் கலாரசனையை என்னவென்று கூறுவது பிரமாண்ட மான நிலப்பரப்பில் நடுநாயகமாக, பல்வேறு தனிக் கோயில்கள் மத்தி யில் வீற்றிருந்த அப்பெருங் கோபுரமும் அதைச் சுற்றிய முக மண்டபமும் என்னைத் தன்னகத்தே ஈர்த்து ஒரழேழு பிறவிக்கும் அடிமை யாகும் வண்ணம் பணியவைத்து விட்டன.
வானையே தொட்டுவிட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அமைந்தது போலிருந்தது அந்த மாபெரும் விமானம்! அதன் பெயரோ தட்சின மேரு தென் கைலாபம்! சில நிமிடங்கள் என் னையே மறந்து விமானத்தையே அண்ணாந்து நோக்கிய வண்ணம் நின்றுவிட்டேன். சில்லென்ற காற்று மேனியில் படவே என் நிலை உணர்ந்தேன். வியப்பிலிருந்து மீள் படாதுவிடினும் அந்த விமானத் தையும் முக மண்டபத்தையும் நோக்கி நடந்தேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதுவென்ன! பெரும் கருங்கல் ஒன்றை முகமண்டபத்தின் வழியில் கொணர்ந்து போட்டிருக்கிறார் கனோ என்று நினைத்தவண்ணம் அண்ணாந்து பார்த்தேன்! பெரும் நந்தி முகமண்டபத்தையே நோக்கிய வண்ணம் இருந்தது. ஆகா! எத்த கைய பெரும் நந்தி. அதைச் சுற்றியும் சுற்றத்திற்கு மண்டபம் எழுப்பப் பட்டுள்ளது. மண்டபத்தின் விதா னத்தில் பல்வேறு வண்ணச் சித்திரங்கள் நாயக்கர் காலத் தில் தீட்டப்பட்டுள்ளன. திருச்சிக்கருகிலுள்ள பச்சை மலையிலிருந்து கொணரப்பட்ட ஒரே கருங்கல் லா லான இந் நந்தி இந்தியா விலே புள்ள மிகப் பெரிய நந்திகளில் ஒன்றாகும்.
அதிசயத்தின் மேல் அதிசயமாக என் மனம் வியப்படைந்து
நந்தியைக் கடந்து ஆகிய சிற்பச் செப்புக் கொடி மரத்தைக் கடந்து முக மண்டபத்தின் கிழக்கு வாயிற்படியின் ஆரம்பத் தில் நின்றேன்.
வாயிற்படியின் இருமருங்கிலும் இரு யானைகளின் தும்பிக்கைகள் நீண்டு வளைந்து இரு அரண்கள் போல் இறுதிப்படிவரை வந்து முடி வடைந்திருந்தன. இது எத்தகைய தோர் கற்பனை சிறு யானைகளின் உடலும் அளவுக்கதிகமாக நீண்டு வரிசை வரிசையான படிகளைத் தம்மகத்தே உள்ளடக்கிய தும்பிக் கைகளும். ஆகா என்னவென்டது! படிகளில் ஏறுகையில் இருமருங் கிலும் சுவர்களில் இரவு நேரங்
O ஆகா! என்னதான் போட்டியிட்டாலும் இத்தகைய சிற்பத்திற்கு முன்
2D LINHEH56MT கொண்டே சென்றது. அழகெல்லாம்
செல்லுபடி ஆகாது
களில் தீபம் ஏற்றுவதற்காக சிறு ஓட்டைகள் அழகாகக் குழியப்பட் டுள்ளன.
முகமண்டபத்தின் மேல் விதானக் சுரையைப் பார்த்தால் வியக்கும் வண்ணம் உள்ளது. கல்லாலான வளைந்த விதானம்! ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னால் இருந்த சிற்பி களின் சிற்பத்திறமையிடம் இன் றைய விஞ்ஞான உலகம் அடி மைப்பட வேண்டும் என்று எண்ணும் வகையில் அமைந்
துள்ளது.
முகமண்டபமே ஒரு சிற்பமண்டபம் போல் உள்ளது. தான் வென்ற நாடுகளில் தான் கண் டவை எல்லாவற்றையும் இவ் ஒரு கோயிலிலேயே சிற்பங்கள் மூவிடம் அடக்
இராஜராஜ சோழன் எண்ணினான் போலும்
துரண் களிலுள்ள சிற்பங்கள் தவிர பல் வேறு தெய்வங்களின் சந்நிதிகளும் ஆங்காங்கு உள்ளன. முகமண்ட்டத்தின் அடுத்த கட்டினுள் நுழையும் முன் மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் ஒரே கல்லாவான பிரமாண்டமான 15% அடி உயரமும்
டைய துவாரபாலகர்கள் கைதேர்ந்த I:
சிற்பியினால் துெக்கப்பட்ட ெ கோடு உள்ளே செல்ல அனுமதி பளிப்பது போல் புன்னகை பூத்த வண்ணம் நிற்கின்றனர்.
மகாமண்டபத்திலிருந்து அர்த்த மண்டபத்திற்குச் செல்லும் வாயி லின் இருமருங்கிலும் பெரும் துவார பாலகர் சிலைகள் உள்ளன. ஒவ்
வொரு கட்டாகக் கடந்து இறுதியில்

Page 6
- ܌ ܩ ܕܢܒ܂ 57
ܠ ܘ . ܕܠܐ 51ܨ ܢ
... ཟླཁ. "ཟ . . . . . . . . ܨ ܡ ';
: அதோ எதிரே பெரும் தூண்களின்
: நடுவே. கர்ப்பக்கிரகத்தின் மைய மாக. இவ்வுலகின் நடுநாயகமாக வீற்றிருக்கும் பெருவுடையாரைப் பார்த்த என் கண்கள் இமைக்க
இ மறந்தன. நான் காண்டது கனவா :- : இல்லை நனவா! பெருவுடையாரைப்
- ॥ ఫ్ఫ్ பாடபதறகு 576 இந்த இரு கணகள } போதவில்லையே. gin; i inTT gig * ண்கள் வழியே சென்று என் நெஞ் : சத்தைக் கொள்ளை கொண்டு
1 5 15 ܠܐ ܕ ܘܢ ... . : விட்டவர்தான் தஞ்சைப் பெருங்
- ܘ܂
கோயில் பெருவுடையார்!
. 溪 f அடி உயரமு 3 அடி சுற்ற
స్టోన్స్లో ௗவும் கொண்ட ஆயுடையார், 13
** ........................................
அடி உயரமும் 234 அடி சுற்றளவும்
a Glar եlաեlեվII என தனித்தனிக் கருங்
கற்களினால் செதுக்கப்பட்டு இணைக் கப்பட்டுள்ள இந்தச் சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரியதாகும். தன் à மனத்திலே குடிகொண்டிருக்கும் ஆடவல்லான் பால் இரா ஜராஜ : சோழன் கொண்டிருந்த இணையற்ற
அன்பை தஞ்சை ஆவுடைய ரைப் பார்க்கும்போது அறிந்து மெய் மறக்கலாம்.
சிவலிங்கத்தின் முன்னால் அதன் உயரத்திற்கு ஈடுகொடுக்கும் முக மாக மிக உயர்ந்த திருவிளக்கு பெரும் தீபங்களுடன் எரிந்து கண் களைக் சுசச் செய்துகொண்டி ருந்தது. சிவலிங்கத்தின் இருமருங் கிலும் ஏணிகள் வைத்து அதில் ஏறி நின்றவண்ணம் ஐயனுக்கு அபிஷேகம் செய்தனர் பூசகர்கள். அபிஷேகம் முடிவடைந்து சர்வ அலங்காரப் Frful Tits" (a ருவு டையாரைப் பார்ப்பதற்கு நிச்சய DITAJ, நாம் பெற்ற இரு கண்கள் போதாவே. பெருவுடையார் கரு வறையின் மேலாக அமைந்திருப்பது தான் நாம் முதற்கண்ட தட்சின மேரு விமானம். கருவறை, சிவலிங் கத்திலிருந்து விமானத்தின் உச்சி வரை தங்கு தடை யின்றிப் LitŤd; கும் வண்ணமே ஆரம்பத்தில் கோயிலின் அமைப்பு இருந்ததெ னிலும் காலப்போக்கில் பறவை களின் தொல்லையால் சிவலிங் கத்தின் மேலாகச் சில
மேல் மரத்தளம் அமைத்து மறைத் துனனனா.
கருவறையின் மேல் உள்ள விமா னத்தின் முதல் தளத்தின் உட்பிர காரத்தில் ஆடவல்லானாகிய சிவனே ஆடிக்காட்டுவது போல் செதுக்கப் பட்டுள்ள அடவுகள் எனப்படும் பரதநாட்டியக் கோர்வைகள், கரண முத்திரைகள் 08இல் 81 சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆயினும் எம்போல் கருவறையின் வாயிலில் நின்று பார்க்கும் பார்வையாளர்
இவை
-
களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளன.
பெருவுடையாரை விட்டு வரு
... ---.
-୬।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।_ [], git
- - -
7 ܘ܂ "..."
. ܘ ܒ 7 ܨ T---- . ... - s } ...'. * ...'
===
', "-- - 17 ܨ ¬ ¬¬
---- s *" క్లె
- " | '''...': '
"...'...' ...
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܬܐ.
வதற்கு மனமில்லையெனிலும் சுற்றுப் பிரகாரத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால் கருவறையின் தெற்கு வாயிலில் அமைந்த பிர மாண்டமான படிகள் வழியே இறங்கினேன். மீண்டும் தட்சிண
மேரு எனப்படும் தென் கபிலாய விTனத்தை அண்3ைாந்து டர்ந்து பிரமிப்படைந்தேன். இவ்விமா னத்தின் கீழ் அமைந்திருக்கும் உபபீடத்தின் தெற்கே மேற்கு டைக்கு கற்றுப் புறங்களில் சிவனின் பல்வேறு சிற்பங்கள் செதுக்கிப் பட்டிருக்கும் அழகே அழகு ' இவை தவிர இச் சிற்பங்களின் கீழ் உள்ள அடிச்சுற்றில் திருக் கோயிலைச் சுற்றிலும் சோழர் காலக் கல்வெட்டுகள் கானப் படுகின்றன.
கோயிலின் தெற்குப் பிரகார வழியே சுற்றிவரும்போது எதிர்ப் படுவது கணபதி சந்நிதி. இதைச் சந்நிதி என்று கூறுவதைக் காட்டி லும் கோயில் என்று கூறுவதே பொருத்தம், ஆம்! பெருவுடையார் சந்நிதியை விட்டுத் தனியாக, தனிக்
கல் |புை 4
¬¬ܐ .
20 ஐப்பசி20
ܘ ܘ ܘ
卤、9、
ف":"+= { கோயிலாக அமைந்துள்ள இக் கணபதி ஆலயம் சரபோஜி மன்ன ரால் விடுக்கப்பட்டுள்ளது.
கணபதி ஆலயத்தைத் தொடர்ந்து பெரிய கோயில் விமானத்தின் பின்புறம், அதாவது மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது கருவூரார் மண்டபம் இராஜராஜ சோழனுக்கும் அவன் தெய்வக் கலைப்பனிக்கும் ஊக்கம் தந்து அதை வளர்த்தவர் கருவூர்த் தேவராயிருக்குமோ என்று என் மனம் எண்ணியது. பதினெண் சித்தர்களுள் ஒருவராகிய கருவூரார் சந்நிதியில் அவரைக் காணும்போது, ஆகா எத்தகையதோர் சாந்தமும் அமைதியும் குடிகொண்ட வதனம் இத்தகையதோர் ஞானியின் வழி காட்டலில் தமிழும் சைவமும் இராஜ ராஜன் காலத்தில் மேலோங்கி இருந்த தென்றால் அதன் விந்தையை என்ன வென்டது.
கருவூரார் மண்டபத்தை அடுத்து அமைந்திருப்பது தமிழ்க் கடவுளாம் ஆறுமுகன் ஆலயம் தஞ்சை நாயக்க மன்னர்களால் எடுப்பிக்கப்பட்ட முருகன் ஆலயம் விஜயநகரக் கண்ணப் பாணியில் அமைந்துள்ளது. இக் கோயிலின் சுற்றுப்புறத்திலும் அமைந் துள்ள சிற்பங்களின் அழகே தனி அழகு. உள்ளே சந்நிதியில் திரு வாசிபுடன் கூடிய ஆறுமுகர் கற் சிற்பமும் வள்ளி தெய்வயானை பரின் நின்ற நிலை கற்சிற்பங்களும் முருகனின் மறுபெயர் நிச்சயம் அழகே என்று பாடும் வண்ணம் வைக்கின்றன.
முருகன் திருக்கே" யின எத் தொடர்ந்து மல்லப்ப நாயக்கர் மண்டபம் அமைந்துள்ளது. இம் " மண்டபத்தின் உட்புறச்சுவர்களில் தஞ்சை மராட்டிய அரசர்கள்

Page 7
பற்றும் அரசிடரின் ஓவியங்கள் முதலிய குறிப்புக்கள் திட்டப்பட் டுள்ளன.
g --------
ஆகி" மாபெரும் தமிழ் மன்னன் எழுப்பிய கோயிலைச் சுற்றிலும் எத்தணின் சிற்பக் கூடங்கள் என்று எண்ணி எண்ணி விடப்பிலT ழ்த்தின்
பெருைைடயார் சந்நிதியின் வடக்கு வாயிலில் சோழர்களால் அமைக்கப்பட்ட சண்டேசுவரர் சந்நிதியும் பிரமாண்டமாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து சுந்தர பாண்டியனால் விழுட்டப்பட்ட உலக முழுதும் உடையாள் பெரியநாயகி ஆலயம் பெரிய கோயிலுக்கும் நந்தி மண்டபத்திற்கும் இடையே தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதானத்திலே கருணையே வடிவமாய் உலகம் அனைத்திற்குமே தாயான அம்மை அடி உயரத் தில் எழுந்தருளி அருள்பாலித்த வண்ணம் நின்றிருந்தான்.
பெரிய கோயிலைப் பற்றிக் கூறவேண்டுமெனில் எனது ஆயுட் காலம் முழுவதுமே பான் அதன் அழகையும் சிற்பத்தையும் சித்த
ரிக்கினும் முடிவு என்ட தற்கு இடமேயில்லை.
திருக்கோயில் சுற்றுப் புறத்தில் அன மக்கப் பட்டுள்ள நூற்றுக்கனக் கான லிங்கங்களும் மராட் டியர்காலச் சிற்பங்களும் ஒவியங்கள் அனைத்தும் அழகுக்கு அழகு சேர்ப் ப:ைபாக அமைந்துள்ளன.
காவிரியின் மைந்தன் இராஜராஜ சோழன் எழுப்பிய பெருங்கோயிலில் பெயருக்குத் தகுந்தாற் போன்று பெருவுடையார் முதற்கொண்டு சுற்றுப்புறங்களிலுள்ள சிற்பங்கள் வரை பெரிய அளவி லேயே நிர்மானசரிக்கப்பட்டுள்ளன.
ஒரு மன்னனின் புகழ் எான  ைTவி நிற்கும் போது அணி த க் கண்டு பொறாமை கொள்ளாது, அம்மன்னனின் புகழின் நிழலில் தாமும் பங்கு கொண்டுள்ள பாண்டி பர்களையும் மராட்டியர்களையும் நாயக்கர்களையும் எண்ணும்போது வியப்பாகவும் மகிழ்வாகவும் உள்ளது.
நிலையற்ற மண்ணினால் தம்மி டையே பகைமையை வளர்த்த அரசர்கள் கலையின் நிமித்தம் ஒன்றுகி டி தென் கைலாயத்தைப் படைத்தனரெனில் என்னே அவர்கள் கன:யார்ம்ெ இதே ஒற்றுமை அன்று அந்நிரை எதிர்த்து நிற்கும்போதும் வெளிப்பட்டிருக்குமாயின் இன்று எமது நில்ை:
ஒரு மாபெரும் மாமன்னன் காலடிபட்ட திருத்தலத்தைக் காணும் பாக்கியம் பெற்றமைடை நான் என்னவென்று கூறுவேன். சோழர் களின் கல்வெட்டுக்களை மட்டும்
',
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படித்தறியும் சக்தி என்னிடம் இருந் திருப்பின், ஆகா! எத்தனை விடயங் களை, வரலாற்று விளக்கங்களை, இராஜராஜனின் வீரப்பிரதாபங் களை அறியமுடியுமே என்று எண்ணி ஏங்கவே முடிந்தது.
தமிழ் மகன் இராஜராஜன் தமிழுக்கும் தமிழ்ப் பாரம்பரியக் கலைக்கும் பண்பாட்டிற்கும் ஈடு இணையற்ற செல்வத்தைக் கொண்ட யாக வழங்கியிருக்கிறான். அவன் ஆட்சி காலம் எங்கும் மறையவில்'ை ஆம்! இன்றும் தஞ்சையில் பெருவு டைடார் கோயிலுக்குச் செல்லும் வழியில் கம் சீராக வீரப்பார்வை பார்த்தவண்ணம் நிற்கின்றான் இராஜ ராஜ சோழன். கடல்கள் தாண்டி தமிழர்களின் வீரம் புலிக்கொடி கட்டிப் பறந்ததடT என்று மார் தட்டிக் கூறுவது போல் உள்ளது அன்ை நிலை!!
பெருவுடையார் கோயிலின் பிரதியாக, சற்றுச் சிறிய அளவில் இராஜ ராஜ சோழ வினின் கன் எழுப்புவித்த கங்கைகொண்ட சோழபுரம் என்னும் கோயில் தஞ்சையிலிருந்து கும்பகோணத்தில் சுமார் அரைமணி நேரப் பயணத்தில் அமைந்துள்ளது. பச்சைப்பசேலென்ற வயல்களும் சோலை மரங்களும் புடைசூழ அமைந்துள்ளது கங்கை கொண்ட சோழபுரம்.
தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு வனும் தஞ்சைப் பெருங்கோயி வைக் காணவேண்டும். பின்னர், தந்தைக்கு மகன் சளைத்தவனல்ல என்று பறைசாற்றும் கங்கைகொண்ட சோழபுரம் காணவேண்டும். நம் முன்னோர்கள் வாழ்வாங்கு வாழ்ந்த சிறப்பைக் காணவேண்டும்! கண்டு மெய்மறக்க வேண்டும்.
..
கலப்பை 42 D ஐப்பசி 2004:11.
இராஜராஜ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகினும் நின் புகழ் மங்காது இவ் உலகிலே தமிழர் களிடம் மட்டுமின்றி அனைவ ரிடத்திலும் பரவி நிலைத்துவிடும் படி சாசனம் எழுதியாகிவிட்டது! ஆம்! உலகப் பாரம்பரியச் சின்னம் என்று யுனெஸ்கோ நிறுவனமே ஆவுடைபாரை உலக ரீதியில் கெளர வித்துவிட்டதையா ! இவ் உலகையே ஆளும் பெருவுடையானுக்கு ஆட வல்லானுக்கு உல்கே வியக்கும் வண்ணம் தட்சின பேருளைத் தந்த நின் கொற்றம் வாழ்க! நின் புகழ் மங்காது பல்லாயிரம் ஆண்டுகள் இவ் அண்டசராசரத்தில் நிலைத் திட பெருவுடையார் சித்தும் கொண்டு
விட்டார் !
வாழ்க தமிழ்! வளர்க நின்
தொற்றும், !
{r,s}
மருத்துவர் LDPD . GhGOGUfGÖT அவர்கள் வழங்கிய அழகு மற்றும் உடலியல் சார்ந்த கேள்வி-பதில்கள் துணுக்குச்செய்திகளாக இடம் பெற்றுள்ளன. படித்துப் பயனடைவீர்.
لار

Page 8
குமர் கரைசேர வேணும் அந்தக் காலத்திலே தம்பதிகளாக வரப்போகிற ஆணும் பெண்ணும் ஒருள்ரையொருவர் முதல் முதலாகப் பார்க்கிறது திருமண நாளன்று. மணவறையில்தான். அதுவும் பெண்ணின் கழுத்தில் தாளி கட்டு வதற்காக மணப்பெண்ணின் முகத்தை மூடியிருந்த வெள்ளைத் துணியை நீக்கிய பின்புதான் மாப்பிள்ளை தன்னுடைய வருங்கால மனைவியின் முகத்தைக் கண்ணால் கண்டு ரசிப்பார். அல்லது விதியை நொந்துகொள்ளுவார்)
ருதுவானபிறகு பெண் பின்ளைகளை வெளியில் காணமுடியாது. ஆனபடியால் காதல், கண்டதும் காதல், காதலின்றேல் ராதல், காதலுக்குப் பின்தான் கலியாணம் என்ற பதங்களுக்கே இடமில்லை. பெற்றோர்களாலும் மற்றோர்களாலும் நிச்சயிக்கப்பட்டுத்தான் திருமணச் சடங்குகள் நடந்தேறும் பொதுவாக, பெற்றோர்களுக்கு பெண்குழந் தையிலும் பார்க்க ஆண் குழந்தை பிறந்தால் சந்தோஷம் அதிகம் எனலாம். பெண்குழந்தை பிறந்து, வளரும்போது அது எவ்வளவு
 

வடிவாக இருந்தபோதும், கட்டி யாக இருந்தாலும், பெற்றோருக்கு அப்போதைக்கப்போது புகழும் பெருமையும் ஏற்பட்டாலும் அவர் களின் அடிமனதில் ஒரு பொறுப்பு, ஒரு மெல்லிய துக்கம் இழையோடிக் கொண்டேயிருக்கும் எங்கள் பெண் பிள்ளை வளர்ந்ததும் அவளைக் கரைசேர்க்க வேணுமே! அது &F r மில்லாமல் ஒப்பேறுமா அல்லது எங்களை அலைக்கழிக்குமா என்ற ஒரு அங்காய்ப்பு அவர்களின் உள்ளத் தைச் சதா அரித்துக்கொண்டே
பிருக்கும்.
:t), WIகளில் டெண்பிள்ளைகள் ஆளானதும் அவர்களைப் பள்ளிக்குப் போவதிலிருந்து பெற்றோர் நிற் பாட்டிப்போடுவார்கள். அதோடு அவர்களின் படிப்புக்கும் முற்றுப் புள்ளிதான். அதன் பயனாக அவர்கள் திருமணமாகிகணவனுடன் குடும்பம் நடத்தும்பொழுது அவர்களின் உலக விடயங்களைப் பற்றிய பொது அறிவு விருத்தியடைந்திருக்காது. சில கணவன்மாருக்கு தமது மனைவி மார் அதிகம் படிக்கவில்லை, படித்துப் பட்டம்பெற்ற தம்மோடு சரிவர பொது அலுவல்களில் கலந்துகொள்ள அவர்களுக்கு ஆற்றல் போதாது என்றதை அறிந்ததும் அவர்கள் மனதில் ஒரு கவலையுணர்ச்சி அல்லது கோபம் ஏற்பட இடமுண்டு இக்காலத்தில் இருப்பதுபோல் அக் காலத்தில் விவாகரத்துக்கள் நடப் டது மிகமிக அருமை. விவாகத்துச் செய்வதானாலும் அதற்குச் சட்டம் லேசில் இட ங்கொடுக்காது. ஆழ ான குற்றங்கள், குறைபாடுகள், நடத்தைப் பிசகு, தீராத வியாதி முதலியவற்றைக் காட்டி, அவற்றை நிரூபித்தபின்புதான் நீதிபதி அவர் களைப் பிரிந்துபோக அனுமதிப்
முதியோன்

Page 9
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 14
பார். ஆகவே, ஒரு ஆண் பெண் தம்பதிகள் விரும்பி விவாகரத்துச் செய்வதானாலும் அது மிகவும் கடினம். சட்டங்களை அப்படி அமைத்து வைத்திருந்தார்கள்.
அப்படியானால், விவாகமான ஒரு பெண், ஒன்றில் விதவையா னால் அல்லது விவாகரத்துச் செய்யப் பட்டவளாக இருந்தால், அவளின் பிற்கால வாழ்க்கை எப்படி ஒடும் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. அவள் படித்தவளாக இருந்தால் ஏதாவது வேலை வெட்டி செய்து பிழைக்கலாம். பெற்றோர் முதியோர் களாக இருந்தால் அந்தக் குடும் பத்தின் அலுவல்களைப் பொறுப் பெடுத்து அந்தப் பராக்கில் தனது தீராத கவலையை, பிறர் அறிய முடியாத வேதனையைக் குறைக்க லாம், மறைக்கலாம். அல்லது குழந் தைகளை, பாலன்களைக் கூட்டி
வைத்து முதலாம் வகுப்பு முதல்
5ம் வகுப்பு வரையுமுள்ள பாடங்
களைக் கற்பிக்கலாம்.
எப்படித்தான் தனது உள்ளத்தை ஏமாற்றி, பராக்குக் காட்டினாலும், மண வாழ்க்கையில் காணும் சுகம் அவளுக்கு அற்றுப்போய் விட்டது பற்றிய மனத்தாங்கல் எந்நேரமும் அவள் அடிமனதில் ஒரு சொல்ல முடியாத இள வேதனையைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும். அந்த வேதனைக்கு விரகதாபம் என்று சொல்லுவார்கள். அன்றைய சமுதாயத்தில் அந்த வேதனையை அவள் ஆயுள் பூராவும் அனுபவித்தே தீரவேணும். மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவள் எவ்வளவு அழகாக இருந்தாலும், எத்தனை பண்புகளைக் கொண்ட வளாக இருந்தாலும் அவளை ஆடவர்கள் நெருங்க முடியாது. அவளை விரும்பினவர்கள் கூட நெருங்கமாட்டார்கள். ஏனெனில்,
சமூகக் கட்டுப்பாடு அத்தனை இறுக்கம். அவள் தனியே இருந்து வாழ வெட்டியாக, தன் கவலை யைப் பொறுமையோடு தாங்கிக் கொண்டு மிகுதி வாழ்நாட்களைக் கழிக்க வேண்டியதுதான்.
பெண்ணுக்குத் திருமணவயது
வந்ததும் அவளுக்கு எங்காவது பார்த்து ஒரு வரனை ஒழுங்கு பண்ண வேணும் என்று பெற் றோர் கரிசனை கொள்ளுவார்கள். ஒரு திருமணத்தை ஒப்பேற்றுவ தற்குப் பல வழிகள் இருந்தன. ஒன்று அக்காலத்தில் மைத்துனன்/ மைத் துணியைத்தான்-அதாவது, தகப் பனின் சகோதரியின் பிள்ளையை அல்லது தாயின் சகோதரனின் பிள்ளையைத்தான்-தம்பதிகளாக்கு வதற்குப் பெற்றோர்கள் ஏற்கனவே திட்டமிட்டு, அதை முடித்தும் 60)6) LL-fT/Tc56.
சில குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு வயதில் மூத்த ஒரு மைத்துனன் இருந்தால் அவன் அப் பெண் குழந்தை வளர்ந்ததும் அவளையே திருமணம் செய்ய வேணும் என்று நியமித்துவிடுவார்கள். "பிறந்தி ருக்கும் எமது குழந்தையை உமது மகனுக்கே கொடுக்கிறோம்" என்று பெண்ணின் பெற்றோர் வாக்குக் கொடுப்பார்கள்.
அதேமாதிரி, “எங்கள் மகனுக்கு உங்கள் பெண்ணைத்தான் தார மாக எடுப்போம்" என்று ஆண்குழந் தையின் பெற்றோர் சத்தியம் செய்து கொடுப்பார்கள். அந்தக் குழந்தை கள் வளர்ந்து பருவமடைந்ததும் பெற்றோரின் சபதத்தை நிறை வேற்றுவதற்காக மைத்துனி/ மைத் துனனைத் திருமணம் செய்தே ஆகவேண்டும். அவர்கள் ஒருவரை யொருவர் விரும்பாவிட்டாலும் அதைத் தட்டிக் கழிக்க முடியாது.

ஆகவே, இருவரும் ஒத்திருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக அமையும். இல்லாவிடில்..? வாழ்க்கை முழு வதும் பெண்ணுக்குக் கண்ணிரும் கம்பலையும்தான்!
இன்னொரு வழியும் உண்டு. பெண்ணைப் பெற்றோரின் உற் றோர்கள், உறவினர்கள் தங்களுக் குத் தெரிந்த நல்ல குடும்பங்களில் ஒன்றிலுள்ள இளைஞனைப் பேசித் திருமணம் செய்ய எண்ணி, பெண் னின் பெற்றோருடன் கூடிக் கலந் தாலோசிப்பார்கள். சாத்திரியாரிடம் பெண்ணின், பிள்ளையின் சாதகங் களைக் காட்டி விவாகப் பொருத் தம் பார்ப்பார்கள். நன்றாக இருந் தால், அதன்பின்னர்தான் சீதனப் பிரச்சினை தலைகாட்டும். சீதனத் திலும் இருபகுதிகளும் ஒத்துவந்தால், நல்லநாளாகப் பார்த்துத் திரு மணத்தை முடித்து வைப்பார்கள். பெண்ணின் பெற்றோர் கலியா ணத் தரகரிடம் சொல்லி வைப் பார்கள். தரகரும் பெண்ணின் வயது, படிப்பு, அழகு, பெற்றோரின் சாதி, சமயம், தொழில், சகோதரங்கள், சீதனம் முதலிய எல்லா விபரங் களையும் குறித்து வைத்துக்கொள் வார். அப்பெண்ணின் தகைமைக்கு ஏற்ற மாப்பிள்ளையாகத் தேடிப் பார்ப்பார். தரகருக்கு முதலாவது தேவை பணம். கலியாணங்களை ஒப்பேற்றினால்தான் ஊதியம் கிடைக் கும். அதனால் பெண்ணின் தரா தரத்துக்கு முழுதும் ஒத்துவராத மாப் பிள்ளை என்றாலும் ஏதாவது பொய், புரளி சொல்லிக் கலியாணத்தை ஒப்பேற்றிப் போடுவார். அதேமாதிரி, மாப்பிள்ளையின் பெற்றோருக்கும் பெண்ணைப் பற்றிப் புளுகி, அவர் களின் மனதைத் திருப்பிப் போடு வார். வடிவாகச் சோடித்துக் கதை சொல்லி, உண்மையைப் புரட்டி, இல்லாததைச் சொல்லி ஏமாற்றிக் காரியத்தை ஒப்பேற்றுவதில் தர கர்கள் மகா கெட்டிக்காரர்கள்.
கலப்பை 42 0 ஐப்பசி 2004 () 15
வேறொரு வழி. தங்கள் மகன் ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று ஆணின் பெற்றோர் அறிந்து கொண்டால், அல்லது தமது பெண் ஒரு குறிப்பிட்ட இளைஞன்
பெண்ணின் பெற்றோர் ஊகித்தி ருந்தால் அல்லது உளவறிந்தால், இருபகுதிப் பெற்றோர்களும் கூடிப் பேசி, வேறு பெரியோர்களையும் கலந்தாலோசித்து, சாதகப்பொருத்தம் பார்த்தோ பார்க்காமலோ அப்பெண் ணையும் இளைஞனையும் சேர்த்து வைப்பார்கள். திருமணம் நடந் தேறும். நல்ல மனத்தோடு இந்தத் தம்பதிகள் சோடி சேர்ந்தபடியால் சீதனப் பிரச்சினையும் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும் மனப்பொருத்தம் இருந்தால் சாதகப்பொருத்தம் பார்ப்பது அவசியமில்லை என்பது அந்தக் காலத்துச் சித்தாந்தம்!
மேலே, ஒழுங்கான காதல் இல்லையென்று சொன்னேனே தவிர கள்ளக்காதல் இல்லை என்று நான் சொல்லவில்லையே! ஒரு வருக்குமே தெரியாமல் மிகவும் கள்ளமாகக் காதலித்து, அதனால் தொல்லைக்கு உட்பட்ட சோடி களும் இருக்கத்தான் செய்தார்கள். அது எப்படி? என்னென்றுதான் பெற்றோரின், அயலவரின் கண் களையும் உச்சிவிட்டு அவர்களுக்குக் காதல் கொள்ளச் சந்தர்ப்பம் வாய்த்தது? அதுதான், சந்தர்ப்பங்கள் வாய்க்காவிடின் வேறு வசதிகளை உண்டாக்கிக்கொள்ள வேண்டி யதுதானே!
உலகப்புதினங்களை அறிந்து கொள்ளாமல் பெண்பிள்ளைக்கு எவ்வாறு இருப்புக்கொள்ளும் ? இந்தக் கட்டுப்பாடுகளை மீற அவர்கள் கையாண்ட வழிகள் பல. தெருவோரம் வேலி உள்ளவர்கள் கிடுகுவேலியில் ஒரு சிறு துவாரம் வைத்து, அதனுரடே கண்ணை வைத்து, தெருவாற் போவோர் வருவோரைக் கண்காணிப்பார்கள்.

Page 10
கலப்பை 42 D ஐப்பசி 2004 0 16
சிலர் தங்கள் பெற்றோர், சகோ தரர்கள் வீட்டிலில்லாத சமயம் பார்த்துத் தெருப்படலையைச் சற்றே நீக்கி அதன்வழியாக வெளியில் நடப்பவற்றை அவதானித்துக் கொள் வார்கள்.
சிலர் தங்கள் சிறிய தம்பி மூலம் இளைஞர்களைப் பற்றிய விபரங்கள் யாவையும் அறிந்து வைத்துக்கொண்டு, தங்கள் மனதுக்குப் பிடித்த அல்லது அழகானவன், அல்லது பணவசதி படைத்த இளைஞனைக் குறிவைத் துக் காத்திருப்பார்கள். தக்க தருணம் வரும்பொழுது அவர்கள் தெருவால் போகும்பொழுது கண் களைக் காட்டியோ, சிரித்தோ தங்கள் விருப் பத்தைச் சாடையால் தெரிவிப்
intrig56it.
ஆண்களும் வேட்டை நாய்கள் மாதிரி ஆலாய்ப் பறந்துகொண்டு
劳
பெண் ஓரிடமும் வெளியே
திரிபவர்கள்தானே, துர ண் டி ற் புழுவை அப்படியே கவ்விக் கொள் வார்கள். தான் போட்ட தூண்டிலின் புழுவை ஒருவன் விழுங்கிவிட்டான் என்று கண்டதும் தனது முயற் சியை நிறுத்திக்கொண்டு, ஒன்றும் தெரியாதமாதிரி பின்வாங்கிவிடு வாள் பெண். பந்தை அவனுடைய கோட்டுக்குள் அனுப்பிவிட்டோம் தானே என்று அது திரும்பி வரும் வரை பேசாமல் காத்திருப்பாள்.
இனி ஆடவனின் முறை. கரடி பிறை கண்டதுபோல, காண முடி யாத ஒரு பெண்ணினத்தின் வர வேற்கும் சைகையைக் கண்டறிந்த வாலிபன் சும்மா இருக்க மாட் டான். பகீரத முயற்சிகள் செய்து அவளைக் காண, கதைக்க முயற்சிப் பான். அதில் பலர் வெற்றி காண்பர். பெண்ணும் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் நடிப்பாள். பின்னர் அவனுடைய முயற்சிக்கு
இரங்கித்தான் தான் இணங்கிப்
போவதாக அவனுக்குச் சொல்லிக் கொள்வாள்.
காலப்போக்கில் இந்தக் காதல் முற்றி, அநேகமாக, கள்ளக் கலவி யில் முடிந்த சம்பவங்கள் பலவுண்டு. ஆனால், பெண்ணின் உடம்பில் மாற்றம் காணும்வரை பெற்றோருக்கும் மற்றோருக்கும் விஷயம் துளிகூடத் தெரியாதபடிக்குச் சந்திப்புகள் நடந்தேறும். பெண் ஓரிடமும் வெளியே செல்லாதபடியால், அவளின் வீட்டிலேயேதான் இரவு சாமத்தில் இந்தச் சந்திப்புகள் நடக்கும். இது இரண்டாம் பேருக், குத் தெரியாது. பின்வளவாக இருக் கலாம், மாட்டுக் கொட்டிலாக இருக்கலாம், அல்லது, சந்தர்ப்பம், வசதியைப் பொறுத்து, வீட்டில் ஒரு புறம்போக்கான இடமாகக் கூட இருக்கலாம்.
இயற்கை வேகத்தினால் உந்தப் பட்டு, மனக்கட்டுப்பாட்டையும்
மீறி, ஆணின் இச்சைக்கு இடங்
 

கொடுத்துவிடுவாள் பெண். இதனால் தான் பெண்ணாகப் பிறக்கக்கூடாது என்று பெண்கள் அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள் போலும். தன்னு டைய செயலால் பின்னுக்கு ஏற் படக்கூடிய விளைவுகள் என்ன
காமல், மனம் போன போக்கில் ஆசைக்கு இடங்கொடுத்துவிட்டுப் பின்னர் வாழ்நாள் முழுதும் வேத னைப்படுவார்கள்.
இவர்கள் எல்லைதாண்டிப் போவ தற்குக் காரணம் இல்லாமல் இல் o பெற்றோரின் கட்டுப்பாடோ மிகவும் இறுக்கம். கிடைத்த சந்தர்ப்பங் களைப் பயன்படுத்திப்போடுவோம் என்ற அவாவே அவர்களின் இந் நடத்தைக்குத் துரண்டுகோலாக அமைவன. மேலும், அயலவர் களுக்கு ஒரு அசுகை தெரிந்தால் போதும், பெற்றோரிடம் சொல்லிப் போடுவார்கள், அல்லது கூக்குரலிடு வார்கள். அயலவர்கள் அந்த விஷ யத்தைப் பெரிதுபடுத்தி, பரப்பி, கும்மாளம் கொட்டுவது அந்தப் பெண்ணிலுள்ள இரக்கத்தால் அல்லது பெற்றோரிலுள்ள விருப் பத்தால் அல்ல. அந்தக் குடும் பத்தில் பொறாமை உள்ளவர்களாக ருக்கலாம். அல்லது, தாங்கள் கட்டித்தனமாகப் பாரிய குற்ற மொன்றைக் கண்டுபிடித்து விட் டார்கள் என்று தம்பட்டம் அடிப் பதற்காகவும் இருக்கலாம். அல்லது, பழைய கோபத்துக்குப் பழிவாங் கும் நோக்கமாகவும் இருக்கலாம். ஏன், அந்தப் பெண்ணைத் தங் கள் பையனுக்கு மணமுடிக்கலாம் என்று கற்பனை பண்ணிக் காத்தி ருந்தவர்கள், இவள் குறுக்கால் இழுத்துவிட்டாளே என்ற ஆத்தி
படுத்தக்கூட அப்படிச் செய்திருக்
556 OC).
என்ன இருந்தாலும், வழுக்கி விழுந்த அந்தப் பெண் பின்னர் வாழமுடியாது. அவள் ஒன்றில்
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 17
தற்கொலை செய்துகொள்ளுவாள் அல்லது அவளை வேறு நாட்டி லிருக்கும் உறவினர் வீட்டுக்கு அங்கு போய் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு வா என்று பெற்றோர் இரகசியமாக அனுப்பிவிடுவார்கள். அல்லது, அவளை அந்த நிலை மைக்கு ஆளாக்கியவனைத் தேடிப் பிடித்து அவனை வற்புறுத்திக் கலி u_HT GOOTLio து வைப்பார்கள். கருத் தடைக் கருவிகளும் அக்காலத்தில் புழக்கத்தில் இருக்கவில்லை.
கள்ளமாகக் காதலித்தவர்கள், பெற்றோர் சம்மதிக்கமாட்டார் கள் என்று திட்டவட்டமாக அறிந் ததும் யாருக்கும் சொல்லாமல் வீட்டைவிட்டு எங்காவது ஒடிப் போய்த் தங்கியிருந்து தனிக்குடித் தனம் நடத்தின சம்பவங்களும் சில கேள்விப்பட்டதுண்டு. கள்ளக் காதல் வளர்வதற்கு உதவிகள் பல கோணங்களில் இருந்து வரும். இரக சியத் தூது விடுவார்கள், கடிதங்கள் இரகசியமாகப் பரிமாறப்படும், இரகசிய சந்திப்புகள், இப்படிப் பல. வீட்டைவிட்டு ஓடிப்போன வர்களைப்பற்றி அயலவர்கள் கதைக் கும்பொழுது, "அந்த இளைஞன் இந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு போய்விட்டானாம்” என்றுதான் பேசிக்கொள்வார்கள்.
இப்படியான நிகழ்வுக்குப்பின்னர், சம்பந்தப்பட்ட குடும்பம் அயல வரின் கேலிக்கும் பரிகாசத்துக்கும் ஆளாகும் அந்தப் பெண்ணின் சகோ தரங்களையும் மணமுடித்து வைப்ப தற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி நேரிடும். அந்த வீட்டில் பெண்
கருவழிக்கும் கைங்கரியம் அந்தக் காலத்தில் கேள்விப்படாத விஷயம். கருத்தரித்துக் கொண்டால் அது இறங்கும் வரை வளர்ந்தே ஆக வேண்டும். வேறு வழியில்லை. வழுக்கிய பெண்ணின் மனநிலையை அவளின் தாயாரின் மனநிலையை. சற்று யோசித்துப் பாருங்கள்.! O

Page 11
திகா նմliն Ա: 雌蕊昌麾ü F. s リJ1章1】 配தி
த்தி či துர' வின்ர்:ரென்பிக்ரில்' இனிய நம்&மதுரமாக இஒலித்தது.இமுன்ன ኪነ moë Wùùሾ&ሸr
புது இன்னுமா எழுந்திருக்கவில்ை *** Ayiti Lrrr.
வின் குரல்&கேட்கும்வரை கட்டிலி டுத்திருந்து
அதை ரசித்திருப்பாள். ஆனால் இப்பொழுது அவளும் இஒரு குடும்பத் தலைவி.இதன் கடமையைத் தானேதான் பார்க்கவேண்டும்&rழுப்புவதற்கு அம்மா வரமாட்
&ார்&அதனால்தானாகவே இாழுந்து அவசரமாகி
இலுவலகம் செல்வதற்கு ஆபத்தமாகிக் கொண்டிருந்த போது 'து' என்ற அவள் கணவன் பரத்தின் குரல் இதனக்குள் எழுந்த எரிச்சலைப் பொறுமை ! xபொறுமை{ள்ன்க்.இகட்டுப்படுத்திக்கொண்ட்ே
"என்ன&எனக் கேட்டுக்கொண்டு அவனிட்ம்)
3 tiraffair. அப்பொழுதுதான் தாக்கம் கலைந்து எழுந்தவன் கட்டிலிலேயே இருந்துகொண்டு "காப்பி
 
 
 

முதலிலேயே
ள்ாஸ்கில்
க் கப்பில் ணுக்கு மது னந்தேறும்
ான் இனி சாப் முதல்
ாலைபேசி
- រី ம்
எடுத்துக்
ள்ை போல்;
5ğişS ÈXIT.*** இண்டும் நல்ல்
ரை ஒட்டிக்
ப்பு வந்தது.
ଖୈt: !!! ଈଁt:
பத்தப்ாகிக்: ண்டியதைத்
ாண்டு கதவு #äåಿàಿ:
ா ஒரு சலிப்
பொறுப்பாள்
யுமாகச் சேர்ந்து b மது விரைவில் இதுவுக்கும் ாதங்களுக்கு பணம் நட்ந்தது.
-
னான்:அவன்
லுக்கருகே
அட்ா:r
ாட்ாரத் தலை பிரசித்தி நிறுவனத்
கலப்பை 42 n ஐப்பசி 2004 19
இருவரும் காதலித்துப் பெற்றோர்
ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்:காதலிக்கும்போதெல்
இப்படி மாறினான் என்று மதுவுக்
காதலன் கணவன் இரண்டும் வெல்
வேறு முகங்களோ என நினைத்தாள்.
"அப்படியானால் இந்தக் கணவ னுடன் என்னால் இன்னும் எத்தண்
நாட்களுக்குச் சேர்ந்து வாழ முடியும்
என்பது மதுவுக்கு ஒரு கேள்விக் குறியாக இருந்தது.
வலகம் வீடு, நண்பர்கள் விருந்துகள் லாமல் இருந்தவள்தானே. : அம்மாதானே பார்த்துக்கொண்; டார். திருமணமானதும் எல்லா வற்றையும் எப்படித் தனித்துச் செய்யமுடியும் வழமை போல அவரவர் வேலையை அவரவரே செய்யலாரே அதை விட்டுவிட்டு: பரத் எப்படி எல்லாவற்றிற்கும்
அவளையே எதிர்பார்க்கலாம் பரத்
ஏன் இப்படி இருக்கிறான்? விட் இைப்பற்றி எந்த எண்ணமுமே இல்லால் அலுவலகம்; நண்பர் கள் என்று இருக்கிறான். அவன் போகும் விருந்துகளுக்கும் களி பாட்ட்ங்களுக்கும் மது போகா விட்டால் அதற்கும் முணுக்கென்று கோபம் வரும் நண்பர்களுடன் நேரம்
காலம் தெரியாமல் அரட்ட்ை
அடித்துவிட்டு நடுச்சாமத்தில்
விட்டுக்கு வந்து அப்பாட்ா என்று படுத்து விடுவான். அதன்பின் அவள் தான் றுநாள் காலை தேவையான் வற்றை:அவன்ஜண்ட்கள்: எடுத்து இவைத்துவிட்டுப்
வேணும் இப்பு: இல்லாவி மறுநாள் காலையிலும் தானே எல்லாம் செய்யன்ே
"இப்படியே இன்னும் எத்
s

Page 12
கலப்பை 42 0 ஐப்பசி 2004 D 20
நாட்களுக்கு என்னால் சமாளிக்க முடியுமோ? என நினைத்தாள். மதுவுக்கு இதுபற்றி நண்பர்களிட மெல்லாம் ஆலோசனை கேட்க விருப்பமில்லை. "நமது குடும்ப விஷயம் நான்கு சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும் மது” என்று அம்மா அடிக்கடி சொல்வார். அம்மாவிடம் சொன்னால், "இப்ப தானே கல்யாணமாச்சு மது, எல் லாம் போகப் போகச் சரியாகும். ஒரு குழந்தை பிறந்தால் பொறுப்பு தானாகவே வரும். நீ பாரேன்” 6τοότι μπή.
மதுவுக்கு அம்மாவின் அந்தக் கணக்குப் புரியாது. அது எப்படி? குழந்தை பிறந்தால் இன்னும் வேலை கூடுமல்லவா? அலுவலக வேலையையும் பார்க்க முடியாமல் அல்லவா இருக்கும்? கடவுளே, என் உத்யோகத்தை விட்டுவிட்டு நான்
எப்படி வாழ்வேன்? இந்த அம்மா
வுக்கும் பயித்தியம்தான். குழந்தை எல்லாம் ஒன்றும் வேண்டாம். இப்போ இருக்கும் நிலைமையில் பரத்தும் வேணுமா என்பதே கேள் விக்குறியாக இருக்கிறது. இதற்குள் குழந்தை என்ன வேண்டிக் கிடக் கிறது? எனச் சிந்தித்துக்கொண்டே ஒரு மாதிரி எந்தத் தவறும் நேராமல் காரை ஓட்டிக்கொண்டு அலுவலகம் போய்ச் சேர்ந்தாள்.
அன்று அலுவலகத்திலும் ஒரு முக்கியமான கூட்டம் இருந்தது. ஒரு சர்வதேச நிறுவனம் முதலீட்டை அதிகரிப்பதற்காகப் புதிய பங்கு களைப் பொதுமக்களுக்கு விற்பதற் காகத் தமது நிதி நிலைமை பற்றிப் பங்குத் தரகர்களிடமும் வியாபார நிறுவனங்களிடமும் விளக்கும்படி கேட்டிருந்தது. அதற்கான அறிக் கைகள் அனைத்தையும் தனது உதவியாளர் ஆனந்தியைத் தயா ரிக்கும்படி கூறியிருந்தாள். ஆனந்தி
அண்மையில்தான் இலங்கையி லிருந்து புலம் பெயர்ந்து வந்த ஒரு கணக்காளர். இலங்கையில் பிரசித்தி பெற்ற கணக்காளர் நிறுவனத்தில் கடமையாற்றிச் சிறந்த அனுபவம் மிக்கவர். ஆனந்தியின் திறமை யைப் பார்த்து மதுவுக்கு வியப்பு. ஆனால் அவுஸ்திரேலியாவுக்குப் புதிது என்றதால் உள்நாட்டு அனுபவம் இல்லாததைச் சாட்டாக்கிச் சாதா ரண ஒரு கணக்காளராகத்தான் மதுவின்கீழ் வேலை செய்ய அமர்த்தி இருக்கிறார்கள்.
மதுவுக்குத் தெரியும் அன்றைய கூட்டத்திற்கான அறிக்கையை ஆனந்தி திறம்படத் தயாரித்திருப் பாள் என்று. ஆனாலும் இப்படி யான கூட்டங்கள் எப்பொழுதுமே முள்ளின்மேல் நிற்பது போலத்தான். வியாபாரப் போட்டி மிக்க உலகில் வாயிலிருந்து தவறி வரும் ஒரு வார்த் தையும் அனைத்தையும் தலை கீழாக மாற்றிவிடும். மதுவுக்கும் ஒன்றும் பெரிய அனுபவமில்லை. அதனால் அனைத்தும் நன்றாக நிறைவேறும் வரை ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்.
காலை பத்து மணிக்குக் கூட்டம் அதற்கு முதல் அடிக்கடி தொந்த ரவு செய்யும் அந்தச் சிறு நிறு வனத்தின் வருமான வரிக் கணக் கைப் பார்த்து முடிப்போம் என எடுத்தால், எல்லாம் சரி, ஐந் தொகை மட்டும் முண்டியடித்தது. என்ன முயன்றும் மதுவால் அதைச் சமன்படுத்த முடியவில்லை. அப் பொழுது அன்றைய கூட்டத்திற் கான அறிக்கையை எடுத்துக் கொண்டு வந்த ஆனந்தி கம்ப்யூட் டரில் மேலோட்டமான ஒரு பார்வையிலேயே தவறைக் கண்டு பிடித்து “என்ன மது இதோ இருக்கிறது” என, மாறி இருந்த இரண்டு இலக்கங்களைத் திருப்பிப்

போட்டுக் கணக்கைச் சரிப்படுத்தி யவள், “என்ன, ஏதாவது பிரச்ச னையா மது?” எனக் கேட்டாள்.
தலை நிமிர்ந்து அவளைப் பார்த்த மது "ம், சொந்த விசயம்" என்றாள்.
ஆனந்தி அவ்வளவாக மதுவிடம் உரிமை எடுத்துக் கொள்வதில்லை.
மேலதிகாரி என்ற உணர்வுடன் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந் தவள். அதனால் ஆங்கிலேயர் போல எதிலுமே விலகி இருப்பார்கள். நம்மவரைப் போல் ஆ ஊ என்று கஷ்டங்களை நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் பகிர்ந்து ஆறுதல் பெறமாட்டார்கள் என்பது ஆனந் திக்குத் தெரிந்திருந்தது. அதனால் மது சொந்த விஷயம் எனச் சொன்னதும் "அப்படியா” எனக் கேட்டுவிட்டுத் தன் இருக்கைக்குப் போய்விட்டாள்.
கையில் இருந்ததை அப்பால் வைத்துவிட்டு ஆனந்தி கொடுத்த அறிக்கையைப் பார்த்த மதுவுக்கு வியப்பு, மகிழ்ச்சி எல்லாம் ஒருங்கே தோன்றின. ஆனந்தியின் மேல் ஒரு தனி மதிப்புத் தோன்றியது. இரண்டு வருடங்களுக்குமுன் முதல் பட்டம் பெற்ற என் ஏட்டுச் சுரைக் காய்ப் படிப்பெங்கே? ஆனந்தியின் பல வருட அனுபவ அறிவெங்கே? அத்தனையும் அந்த அறிக்கையில் தெற்றெனத் தெரிந்தன.
குறித்த அந்த நிறுவனத்தின் முதலீட்டின் அளவு, சர்வதேசப் பங்குச் சந்தையில் அதன் பங்கு களின் மதிப்பு, அதன் வியாபாரத் திறமை அதனால் கிடைக்கும் லாபம், பங்குதாரர்களுக்கு வருடா வருடம் கிடைக்கும் லாபத் தொகை, அதன் விபரங்கள் இன்னோரன்ன சகல விபரங்களையும் புட்டுப் புட்டு வைத்திருந்தாள். வழக்கமாக மது ஒன்றைத் தயாரித்துக்கொண்டு
கலப்பை 42 0 ஐப்பசி 2004 ) 21
போக அங்கே பங்குத்தரகர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடை கூறமுடியாமல் தடுமாறி இருக்கி றாள். ஆனால் ஆனந்தியின் அறிக் கையில் அத்தகைய வினாக்களுக் கெல்லாம் தெள்ளத் தெளிவாக இருந்த விடைகள் ஆனந்தியின் அனுபவ அறிவைப் பறைசாற்றின. அதைப் பார்த்த மகிழ்வில் மது, இதுவரை தனக்கிருந்த மனக் குழப்பங்களை மறந்து கடமையே கண்ணாயினாள். அதை எடுத்துக் கொண்டு ஆனந்தியிடம் போய் "ஆனந்தி, வாவ், மார்வலஸ், எக்ஸ லண்ட்” எனப் பாராட்டினாள். ஆனந்தி வியந்து நின்றாள். பின், *ஆனந்தி, இன்று நீங்கள்தான் இதை எல்லோருக்கும் எடுத் துரைக்கப் போகின்றீர்கள். அங்கே நான் வெறும் பார்வையாளர்தான்” என்றாள். ஆனந்தி சங்கோசப்பட் டாள். “வேண்டாம் மது, எனக்கு இங்கே பழக்கமில்லை. ஏதாவது தவறானால் மேலதிகாரிக்கு நீங்கள் தான் பதில் சொல்லவேணும். எனக்குப் பயமாக இருக்கிறது. வேண்டாமே" எனக் கெஞ்சினாள். "நான் இதை நம்பமாட்டேன். இவ் வளவு அழகாகத் தயாரித்த ஒருவ ருக்கு இதை விளக்கவா தெரியாது? இன்று நீங்கள்தான் செய்கின்றீர்கள் ஆனந்தி. இது என் கட்டளை" என் றாள். ஆனந்தி “யெஸ் பாஸ்” எனத் தலையைச் சாய்த்து அவள் கட்ட
காட்டினாள்.
ஆனாலும் உள்ளுக்குள் உதறலாக இருந்தது. இலங்கையில் அவள் வேலை செய்தது மிகப் பிரபல்ய மான கணக்காளர் நிறுவனம்தான். அங்கு பல சர்வதேசத் தனியார் வங்கிகளின் கணக்குகளுக்கு அவள் பொறுப்பாக இருந்தாள். அதனால்
பட்டபாடு அத்துடன் அவளது மேலதி

Page 13
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 22
காரி மிகவும் பொறுமையாக அவளுக்கு அனைத்தையும் கற்பித் திருந்தார். அங்கே ஆனந்தி, இது போன்ற பல கூட்டங்களை நடத்தி யிருந்தாலும் இங்கு பயமாக இருந் தது. ஆனால் அவளது சிறு தயக்க மும் அவள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும். அதனால், வருவது வரட்டும் எனத் துணிந்து ஏற்றுக் கொண்டாள். கூட்டத் தில் ஆனந்திக்கு எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. மிகவும் சிறப்பாக அனைத்தும் நடத்தினாள். மிகப் பெரிய முதலீட்டாளர்களிடமிருந் தும் அவர்களின் தரகர்களிடமிருந் தும் சரமாரியாகத் தொடுக்கப்பட்ட வினாக்களுக்குத் தங்கு தடையின்றிப் பதிலளித்தாள். அதைப் பார்க்க மதுவுக்கு அதிசயமாக இருந்தது. சர்வதேச அளவிலான அந்த நிறுவனத்தின் பரிமாணங்களைப் பற்றி மிகவும் தெளிவாக விளக்கி னாள். இதையெல்லாம் எப்பொழுது கற்றுக் கொண்டாள் என மது அதிசயித்தாள். அவர்கள் விற்பதாக அறிவித்திருந்த பங்குகளில் பெரும் பகுதியை வாங்குவதாக அங்கு வந்திருந்த பங்குத்தரகர்கள் ஒப்பந் தம் செய்து கொண்டனர்.
ஆனந்திக்கு அளவற்ற மகிழ்ச்சி. அவளுக்கு இதுவரை இருந்த தயக் கம் சூரியனைக் கண்ட பனி போல மறைந்தது. அந்த நிறுவனத்தினர் அவர்களை மிகவும் பாராட்டினர். மதுவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. எல்லாம் திறம்பட நடந் ததால் TfuĵkoöT LATTUTT 60) ulu பெறலாம்; தொடர்ந்தும் அந்த நிறுவனத்தின் வியாபார ஆலோச கராக மதுவின் கம்பெனியே இருக் கலாம் எல்லாம் ஆனந்தியால்தானே. இவ்வளவு திறமையையும் வைத்துக் கொண்டு பாவம் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறாள். இதற்கு ஏதாவது செய்யவேண்டு மென நினைத்தாள்.
முடியுமோ தெரியாது ஆனந்தி. உங்களால் இன்று நம் நிறுவனத் திற்கு நல்ல பெயர் கிடைத்திருக் கிறது. உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே" என யோசித்தவளுக்கு ஆனந்தி அவளைத் தன் வீட்டுக்கு வரும்படி பல தடவைகள் அழைத்தும் நேரமின்மையால் போகாதது நினை வுக்கு வந்தது. கூட்டம் நினைத்த தைவிட முன்னரே முடிந்துவிட்டது. அதற்கான அறிக்கையை வீட்டில் போய் எழுதி நாளைக்குக் கொடுத் தால் சரி. இப்பொழுது ஆனந்தி வீட்டுக்குப் போவோம் எனத் தீர் மானித்தாள்.
ஆனந்தியிடம் சொன்னபோது, விருந்தோம்பல் தமிழர் பண்பல்லவா.
பிள்ளைகளைப் போய்ப் பாட
சாலையில் கூட்டிக்கொண்டு போக வேணும். அங்கே அவர்கள் பாட சாலைப் பின் பராமரிப்பு நிலை யத்தில் நிற்பார்கள்” என்றாள். சரி, எங்கள் காரிலேயே போவோம் என இருவரும் போய் ஆனந்தி யின் மகன் தருண், மகள் துர்க்கா இருவரையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கே ஆனந்தியின் கணவன் சதீஷ் வந்திருந்தான். அங்கிருந்த ஒரு சோபாவில் விழுந்து கிடந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கழற்றிய சப்பாத்துக்கள் அந்த இடத்திலேயே இருந்தன. அவனது அலுவலகப் பை அங்கே ஒரு பக்கத்தில் இருந்தது. இவர் களைக் கண்டதும் அரக்கப் பரக்க எழுந்து உட்கார்ந்தான். பிள்ளை களும் புத்தகப் பைகளைச் சோபாவில் போட்டுவிட்டு உள்ளே ஓடினர். ஆனந்தி, மதுவை வரவேற்றுக்

அங்கே ஆனந்தியின் கணவன் சதீஷ் வந்திருந்தான். அங்கிருந்த ஒரு சோபாவில் விழுந்து கிடந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கழற்றிய சப்பாத்துக்கள் அந்த இடத்திலேயே இருந்தன. அவனது அலுவலகப பை அங்கே ஒரு பக்கத்தில் இருந்தது.
கணவனுக்கு அறிமுகம் செய்து கொண்டே அவற்றை ஒவ்வொன் றாக எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.
மதுவுக்குக் கோபம் கோபமாக வந்தது. "எல்லா ஆண்களுமே அப்படித்தானோ? அப்பா, பரத், இங்கே சதீஷ் எல்லோருமா?” என நினைத்தாள். அம்மாவைக் கேட் டால் “அது. நாங்கள் அப்படித் தான். நீ உன் புருஷனுக்கு எல்லா வற்றையும் பழக்கு” என்பார். ஆனந்தி என்ன சொல்வாளோ என நினைத்தாள். போனதற்கு ஒப்புக்குச் சிறிது நேரம் இருந்து விட்டு “நாளை அலுவலகத்தில்
சந்திக்கலாம்” எனச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனால் அங்கே பரத்தும் சதீஷ் இருந்த அதே கோலத்தி லேயே இருந்து எதுவோ சிற்றுண்டி கொறித்துக் கொண்டிருந்தான்.
இங்கும் சினம் தலைக்கேறியது. ஆனால் பரத்தைக் கோபிக்க அவ ளுக்குத் தெரியாதே. அவன்மேல் அவள் மட்டற்ற அன்பு வைத்தி ருந்தாள். எல்லாப் பெண்களும் இப்படித்தான் அன்புக்கு அடிமையோ என நினைத்தவள் ஆனந்தியைப் போலத் தானே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் தனது எண்ணமும் செய்கையும் வேறுபடுவதை நினைத்து அவள்
கையில் விரிந்தன.
அனைத்தையும் வைத்துவிட்டு உடை மாற்றிவிட்டு வந்தவள் “தேனிர் குடித்தீர்களா பரத்” என ஒப்புக் குக் கேட்டு வைத்தாள். அவளுக் குத் தெரியும் அவன் குடித்திருக்க மாட்டான் என்பது. அதுபோலவே, "இல்லை மது அதற்காகத்தானே நீ வரட்டுமென்று பார்த்துக்கொண் ன்” என்றவன் அவளுடன் சமையலறைக்குள் சென்று "இன்று உங்கள் கூட்டம் எப்படி மது? எத்தனை பேரை ஏமாற்றிப் பங்கு களை விற்றீர்கள்?” என வேடிக் கையாகக் கேட்டான். அவனது அந்த அக்கறையில் அவள் உள்ளம் நெகிழ்ந்தாள். அவளது வேலை என்றால் மது அனைத்தையும் மறந்துவிடுவாள். அதில் அவளுக்கு அத்தகைய ஒரு பெருமை. அதனால்

Page 14
இந்த எணணம கூடாதே! இது எல்லா வற்றையும் / தலைகீழாக்கி
எதிர்காலத்தையே பாழாக்கிவிடுமே! இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டுமே!
அன்று நடந்ததைச் சொல்லிக் கொண்டே மிகச் சுவையாகத் தேனீர் தயாரித்துக் கணவனுக்குக் கொடுத்
"நீ உனது அறிக்கையில் ஆனந்தி யைப் பற்றி எழுதவேணும் மது” என்றான்.
"நிச்சயமாக பரத். எவ்வளவு திறமை தெரியுமா?” எனக் கேட்ட வளுக்குக் கணவன் மற்றவர் நலனில் கொண்டுள்ள அக்கறை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவன் வீட்டு வேலையில் பங்கெடுக் காமைதான் அவள் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. இது என்ன நான் ஆண் என்ற திமிரா? அல்லது காலங்காலமாக இது மனைவியின் கடமைகள்தானே என்ற எண்ணமா? அது அவளுக்குப் புரியவில்லை. "இதை எடுத்து அதில் வைக் கிறேன் மது” என அவன் சும்மா
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 24
ஒரு பேச்சுக்குச் சொன்னாலும் அவள் உச்சி குளிர்ந்து விடும். “வேண்டாம் நானே பார்க்கிறேன்” என்பாள். அந்த ஆறுதல் வார்த் தையே "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற எண்ணத்தை மழுங் கடித்துவிடுமே!
ஆனால் அவனுக்கு அந்த எண் ணமே வரவில்லையே. அதுதான் அவள் வருத்தம். மற்றபடி அவள் கணவன் ஒரு தங்கம். எந்தவித கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை யாகாதவன். அம்மா கூட ‘இதெல் லாம் ஒரு பெரிய விஷயமில்லை
கிடை நான் வந்து சமைத்து வைக் கிறேன். வேண்டிய சாமான்கள் வாங்கி வைக்கிறேன். வீடு சுத்தம் செய்கிறேன். பிறகென்ன உனக் கென்பார்” ஆனால் அவளுக்கு
இதிலெல்லாம் சம்மதமில்லை.
அவரவர் தத்தம் வேலையைப் பார்த்தால் என்ன என நினைப் பாள். ஆனந்தியிடம் இதுபற்றிக் கேட்க வேண்டுமென நினைத்தாள். ஆனால் தேனிர் குடித்துக் கொண்டே சமையலறை மேசை யில் இருந்து அவன் தனது அலுவ லக நிகழ்ச்சிகளைப் பேசிக்கொண் டிருக்க அவள் சமைத்தாள். இது தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான். அன்று பரத், தன்னுடன் வேலை செய்த லூசியின் பிறந்த நாள் விருந்து பற்றிச் சொல்ல, அதைக் கேட்டு அவனைக் கேலி செய்து கொண்டே மது தன் சமையலை முடித்தாள். அதன்பின் இருவரும் உணவருந்திவிட்டு டீவிக்கு முன் னாலிருந்து இருவருக்கும் பிடித்த "சட்டமும் ஒழுங்கும்” என்ற நாட கத்தைப் பார்த்துவிட்டுப் படுக் கைக்குப் போயினர்.
1றுநாள் அலுவலகத்தில் அவள்
அறிக்கையைப் பார்த்த முகாமை
 
 
 

யாளர் இருவரையும் அழைத்துப் பாராட்டினார். ஆனந்தியிடம், “விரை வில் உங்களுக்கு நல்ல சம்பளத் தில் ஒரு வேலை ஒழுங்கு செய் கிறேன்” எனச் சொன்னார். அன்று மதிய உணவின்போது மது, ஆனந்தி யிடம், "உங்கள் வேலையின் திறமை போல எனக்குச் சில வாழ்க்கைத் துணுக்குகள் தெரியவேணும் ஆனந்தி நான் கேட்டால் தவறாக நினைக்க மாட்டீர்களே” எனக் கேட்டாள்.
"இதில் தவறாக எடுக்க என்ன இருக்கிறது மது. என் துணுக்குகள் உன் வாழ்க்கையை வளப்படுத்தி னால் எனக்கும் மகிழ்ச்சிதான்” என்றாள். மது, முதல் நாள் ஆனந்தி வீட்டில் தான் கவனித்ததையும், காலையிலிருந்து படுக்கைக்குப் போகும்வரை தன் கணவன் தன் னிடம் எதிர்பார்ப்பதையும் கூறி, "ஏன் ஆனந்தி இப்படி? பரத் ஒரு ஆணாதிக்கவாதி என்றோ, பெண் களைக் குறைவாக எண்ணுபவர் என்றோ என்னால் நினைக்க முடிய வில்லை. அவருக்கு எனது வேலைத் திறமையில் ஒரு பெருமை அதை நான் கவனித்திருக்கிறேன். ஆனால் வீட்டில் ஏன் இப்படிக் குழந்தைத் தனமாக இருக்கிறார் எனப் புரிய
என்னால் எவ்வளவு நாட்களுக் குச் சமாளிக்க முடியும் என்றும் தெரியவில்லை. சமயத்துக்குக் கோபம் கோபமாக வருகின்றது; மனசும் உடம்பும் களைத்துப் போகிறது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டுத் தனித்து எங்காவது போய் விடலாமா என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. அம்மா, நீங்கள் எல்லோரும் எப்படித்தான் சமாளித் தீர்களோ தெரியாது” என அங்க லாய்த்தாள்.
இதைக் கேட்ட ஆனந்தி திடுக்கிட்
டாள். “இந்த எண்ணம் கூடாதே!
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 25
இது எல்லாவற்றையும் தலை கீழாக்கி இவள் எதிர்காலத்தையே பாழாக்கிவிடுமே! இதை முளையி லேயே கிள்ளி எறிய வேண்டுமே!” என நினைத்தவள் மதுவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
அதைப் பார்த்த மது, "என்ன என் வேதனை உங்களுக்குக் கிண்ட லாக இருக்கிறதா?” எனச் சிணுங் கினாள். மீண்டும் அவளைப் பார்த் துக் கிண்டலாகச் சிரித்த ஆனந்தி, மதுவின் கையை ஆதரவாகப் பற்றி, "இல்லை மது, நீ குழந்தையாகவே இன்னும் இருக்கிறாய். அதுதான் சிரிப்பாக இருந்தது. மன்னித்துக் கொள்” என்றாள். "நான் ஒன்றும் குழந்தையில்லை” என்றாள் மது முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே
"இது என்னவாம்" என அவளை அணைத்த ஆனந்தி, "கல்யாண மாகி எவ்வளவு நாட்களாகிறது மது?” எனக் கேட்டாள். "என்ன, ஏறத்தாழ ஆறு மாதங்கள் இருக் கும். ஏன் கேட்கிறீர்கள்? எனக் கேட்டாள்.
“ஆறு மாதத்தில் பரத்தைப் பற்றி என்ன தெரிந்து இந்த விரக்தி மது?” என்றாள்.
“ஆறு மாதமென்ன ஆனந்தி, நாங்கள் நான்கு வருடங்கள் காத லித்தோம். அப்போதெல்லாம் பரத் இப்படி இல்லை தெரியுமா? இப்போ ஏன் மாறினார் என்று புரிய வில்லை" என்றாள் கவலையுடன். "பரத் ஒன்றும் மாறவில்லை மது. நீதான் தவறாகப் புரிந்திருக் கிறாய்” என்றாள்.
மதுவுக்கு வியப்பு. "போங்கோ உங்களுக்குத் தெரியாது. நீங்களும் அம்மா மாதிரியே. காலம் கால மாக உங்களின் இந்த அடிமைத் தனம் போகாது. அந்த நாளில்

Page 15
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 26
பெண்கள் வீட்டில் இருந்தார்கள். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்தார்கள். ஆனால் இன்று வேலையும் பார்த்துக் கொண்டு முழு வீட்டு வேலையும் என்னால் செய்ய முடியாது ஆனந்தி. இருவரும் சம பங்காகத் தான் செய்ய வேண்டும்” என்றாள் உறுதியாக, ஆனந்தி மீண்டும் சிரித்தாள். மதுவுக்கு எரிச்சலாக இருந்தது. ஏன் இவளிடம் கேட் டோம் என நினைத்து மெளன மாக இருந்தாள்.
ஆனந்திக்குப் புரிந்தது மதுவின் பொறுமையின்மை. எனவே, "மது, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கவா? என்றாள், “என்ன?” என வேண்டா வெறுப்பாகக் கேட்டாள் மது. "உன்னைக் குழந்தையாகச் சிறிது நேரம் நினைத்துக்கொள் மது.
உன் கையில் ஓர் அழகான புதிய
பொம்மை கிடைத்தால் என்ன செய்வாய்?" எனக் கேட்டாள். இதென்ன விசர்க் கேள்வி என அவளை ஒரு மாதிரியாகப் பார்த்த மது "விளையாடுவேன்” என்றாள். "அது மட்டுமா? எல்லோருக்கும் காட்டுவாய் அல்லவா? பெருமைப் படுவாய் இல்லையா?” எனக் கேட்டாள். "ஆமாம்” எனப் பதில ளித்தவள் ஆனந்தியை வியப்புடன் பார்த்தாள்.
"இன்னுமா புரியவில்லை மது" என்ற ஆனந்தி, "கல்யாணமாகி ஆறு மாதம்தான் ஆகிறது. பரத்துக்கு நீ அவர் கையில் கிடைத்த ஓர் அழகிய பொம்மை மாதிரி மது. அதுதான் அந்தப் பொம்மை என்ன வெல்லாம் செய்கிறது என்று பார்த் துப் பெருமைப்பட்டுக் கொண்டி
சகோதரர்கள் என இருந்தாலும் மனைவி என்பது ஒரு மேலான பந்தம் மது என் மனைவி கையால்
காப்பி குடித்தேன், என் மனைவி வழியனுப்ப ஆபீஸ் வந்தேன் என நினைப்பதில் அவருக்கு ஒரு தனி மகிழ்வு மது. அதில்லாமல் இதெல் லாம் ஆணாதிக்கம் இல்லையம்மா. பரஸ்பரம் அன்பின் அதீதம். சொல்லப்போனால் அன்புத் தொல்லை என்று கூறலாம். எல் லாம் சில நாட்களுக்குத்தான். அவரைக் கணவன் என்ற பதவியி லிருந்து அப்பாவாக்கிப் பாரேன், பொறுப்பு தானாக வந்துவிடும். பிறகு நீ கல்யாணத்திற்கு முதல் இருந்த, ஏன், அதைவிடச் சிறந்த பரத்தைக் காண்பாய்” என்றாள்.
"நீங்களும் அம்மா மாதிரியே சொல்கின்றீர்கள் ஆனந்தி. ஆனால் எனக்குப் புரியவில்லை. இதுவே தாங்கவில்லை; குழந்தையா? என மலைப்பாக இருக்கிறது" என்றாள் வேதனையுடன்.
"அப்படி இல்லை மது காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்றதே இன்பம் என்பார்கள். சமத்துவம் பேசுவது குடும்பம் இல்லை மது. அலுவலகங்களில் வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். ஆனால் குடும்பம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது அங்கே எனது உனது என்று சமபங்கு எதிலும் கிடையாது மது. இன்று நீ செய் தால் நாளை பரத் செய்துவிட்டுப் போகிறார்.
எங்கள் வீட்டில் பார்த்ததை வைத்து முடிச்சுப் போடாதே என் கணவர் ஒரு டாக்டர் மது. ஆனால் இங்கே மருந்துப் பொருட்கள் விற்ப னையாளராக வேலை செய்கின்
நல்ல பதவியில் இருந்தோம் ஆனால் எல்லோரையும் போல வெளி நாட்டு மோகம் எங்களையும்

ஆ ட் டி வைத்தது. இங்கு வந்த பின்னர்தான் நிலைமை புரிந்தது. அவர் இங்கே டாக்டராக வேலை செய் வதற்கு ஒரு பரீட்சை, அதன்பின் நேர்முகப் பரீட்சை எல்லாம் சித்தியடைய வேணும், அதற்குப் படித்துக்கொண்டே குடும்பத்தின் தேவைகளைச் சமாளிப்பதற்காக மருந்துப் பொருட்கள் விற்பனை யாளர் பணியையும் செய்கின்றார். அவர் வீட்டுக்கு வரும் காலநேரம் தெரியாது மது. அதனால்தான்
G iki
நாட்கள் வீட்டுக்கும் வராமல் அங் கிங்கென அலைந்த மனிதன் எப்படி இருப்பார்? அதைத்தான் நேற்று நீ எங்கள் வீட்டில் பார்த்தாய். அதை வைத்து நீ எந்த முடிவுக்கும் வராதே சில சமயம் நாங்களும் திரும்பி இலங்கைக்குப் போகவா எனவும் நினைப்போம். ஆனால் அங்கும் போய் இனி எல்லாம் புதிதாகத் தான் தொடங்க வேணும். அதை இங்கேயே செய்வோம் என ஆறுதல் அடைவோம். என் சதீஷ் சமையல் கூடச் செய்வார் தெரியுமா? தேவைப் பட்டால் உன் பரத்தும் செய்வார் மது. நீ இதற்கெல்லாம் கஷ்டப்
படுகிறாய் என்பதை அவர் இன்னும் உணர வில்லை. அது அவர் மனத்தில் உறைக்கவில்லை. கல்யாணமான புதிது, விளையாட் டுத்தனமாக இருக்கிறார். நீ உன் கஷ்டங்களை அவருக்கு உணர்த்தப் பார். அதன்பின் எல்லாம் தலை கீழாக மாறிவிடும்” என்றாள்.
"குடும்பங்களில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கம்மா. மாமி யார், சகோதரர்கள் என்று பல பிரச்சனைகள் வரும். அதெல்லாம் உனக்கில்லை. நீ அதிர்ஷ்டசாலி மது இது மிகச் சாதாரணம். இதற்குப் போய்ச் சலித்துக்கொள்கிறாயே!” என மேலும் கூறினாள்.
"குழந்தையா என்று சலிக்காதே மது. ஒரு குடும்பத்தின் ஆதாரம் குழந்தைதான். அந்தப் பிஞ்சு உடல் உன் கைகளில் தவழும்போது அது ஒரு தனி இன்பம். குழந்தைகள் தான் கணவன் மனைவிக்கிடையே ஒரு பாலமாக இருப்பார்கள். இப்போ நீ எல்லாவற்றையும் விட்டு விட்டு எங்காவது போகத் தோன்றுகிறது என்றாயே! ஒரு குழந்தை இருந் தால் உனக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றுமா? தோன்றினாலும் குழந் தையின் நலன் கருதி அந்த எண் ணம் மாறும். நான் உன்னை அவ சரமாக உடனே குழந்தை பெற்றுக்

Page 16
கலப்பை 42 [] ஐப்பசி 2004 () 28
கொள் என்று சொல்லவில்லை. ஆனால் அதைப் பற்றிச் சிந்திப்பதில் தவறில்லை புது" என்றாள்.
மது அனைத்தையும் கேட்டுக் கொண்டு மெளனமாக இருந் தான். மதிய உணவு நேரமும் முடிந் தது. இவ்வளவும் காணும் என ஆனந்தி விட்டுவிட்டாள். ஆனால் எந்தத் தவறும் நடக்கக் கூடாதே என்ற கவலை அவளுக்கிருந்தது.
மதுவும் ஆனந்தி சொன்னவற்றை அசை போடத் தவறவில்லை. அவனது சினேகிதி ஹரிதா இப் படித்தான் கல்யாணமாகிய ஒரு வருடத்திலேயே பிரிந்தாள். கேட் தற்கு "அவன் சரியில்லை மது நான் ஒன்றும் அவனுக்கு வேலைக்காரி பாகப் போகவில்லை. மனைவியா கத்தான் மணம் முடித்தேன்" என் றாள். அவள் கணவன் ரோகித்தும் பரத் மாதிரி மோகத்தில்தான் இருந்திருப்பானோ! இவள் புரி யாமல் அவசரமாகப் பிரிந்தாளோ
TT நினைத்தாள்.
ஆனந்தியின் வார்த்தை பொய் யில்லை என்பது இரண்டே நாட் களில் நிரூபணமானது. அன்று
8.
மதுவுக்கு அலுவலகத்தில் மூச்சு விட முடியாத அளவுக்கு வேலை. அத்துடன் தலைவலி தலையைப் பிளப்பது போல இருந்தது. எப் படியோ காரை ஓட்டிக் கொண்டு வீட்டை அடைந்தாள். கையில் இருந்த அனைத்தையும் போட்டு விட்டு "என்னால் ஒன்றும் முடிய வில்லை பரத்" என்று உடையும் மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்துவிட்டாள்.
"என்னம்மா" என பரத் பதறிப் போனான். "ஒரு தேனீர் குடித்தால் எல்லாம் சரியாகும் மது. இதோ நான் கொண்டுவருகிறேன்" எனப் போய்த் தேனீர் கொண்டு வந்தான். "சாப்பிட ஒன்றும் இல்லை. பரத் ஏதாவது வெளியில் வாங்கு இல்லா விட்டால் அம்மாவிடம் போனில் சொன்னால் ஏதாவது கொண்டு வருவார்" என்றான். "அதெல்லாம் வேண்டாம்" என்றவன் தானே உணவு தயாரித்து அவனை எழுப்பி வந்து "சாப்பிடு மது வேலை என் றால் இப்படியா. சாப்பாடு, தண் rைர் இல்லாமல் யாரும் சாவார் கன்? பசியால்தான் உனக்குத் தலை
அவள் கண்கலங்குவதைப்
பார்த்த பரத் "என்னம்மா? எனக் கனிவுடன் கேட்டான்.
ஒன்றுமில்லை" என்றவள் “ஐ லவ் யூ பரத்” 660 முணுமுணுத்தாள்
 
 
 

வலி சாப்பிட்டால் எல்லாம் சரி பாகும்" என அவளை வற்புறுத்தி அழைத்து உணவு பரிமாறினான்.
மதுவுக்கு மகிழ்வில் கண்கள் கலங்கின. "நான் பரத்துக்கு ஒர் அழகிய பொம்மைதான். இது புரி யாமல் நானாகவே விழுந்து உடை பப் பார்த்தேனே, நல்ல வேளை சுட புள் ஆனந்தி உருவத்தில் வந்து காப் பாற்றினார்" என நினைத்தாள். அவன் கண் கலங்குவதைப் பார்த்த பரத் "என்னம்" எனக் கனிவுடன் கேட் டான். "ஒன்றுமில்லை" என்றவள், "ஐ லவ் யூ பரத்" என முணு முணுதாள. ஆனால அனை பாமபுச செவிகளில் அது விழுந்தது. "ஆஹா ! இதைக் கேட்கத் தினமும் சமைக்க லாம் போல இருக்கு பது" என அவ ளைச் சீண்டினான், ஆதுவும் தல்ை வலி தினமும் வராதா என நினைத் தான்.
மறுநாள் திய உணவின்போது வழக்கமாகக் கண்டினில் எதை பாவது வாங்கிக் கொறிக்கும் மது, வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்திருப்பது கண்டு "என்ன மது, வீட்டுச் சாப்பாடு, அம்மா அனுப் பினாரா?" என ஆனந்தி கேட்டாள். "இல்லை. இது மிகவும் விசேஷ் மான ஒரு சாப்பாடு" என்றாள். "அதென்ன அப்படி விசேஷம் ? எங்கே பார்ப்போம்" எனத் தன் பக்கம் இழுத்தவள். "வெறும் உப்புமா! இதிலென்ன விசேஷம் பது" எனக் கேட்டாள்.
"ஆமாம் விசேஷம்தான்" என அதை எடுத்துக்கொண்டவள், "உப்புமா ஒன்றும் விசேஷமில்லை ஆனந்தி. இது வந்த விதம்தான் விசேஷம் இது பரத் செய்த உப்புமா" என்றாள் நாணம் மேலிட "ஆஹா! அதுதானே பார்த்தேன். அமிர்த மாக இருக்குமே" எனக் கூறி மது வைக் கனிவுடன் பார்த்தாள். "சீ
கலப்பை 42 [] ஐப்பசி 2004 ப 29
போங்கோ" என மேலும் கன்னம் சிவந்தவன் உப்புமாவை மிகவும் ஆவலு. ன் உண்டாள்.
அதைப் பார்த்து ஆனந்தி பரவசப்பட்டாள். "அப்பாடா, இது போதும் தலைவலி இவள் வாழ் னைப் பாதுகாத்துவிட்டது. եյ I ցի ஆறுதலடைந்தாள். உண்டு முடித்த மது, "நீங்கள் சொன்னதில் எவ்வளவு உண்மை இருக்கென்று நேற்று உணர்ந்தேன் ஆனந்தி. தலைவலி என்றதும் பரத் பதறிப் போய்விட்டார். அதைப் பார்த்த என் தலைவலி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது" என்றாள்.
"ஆனால் வேண்டுமென்றே நடித்து அவரை உப்புமா செய்ய வைத்தா பாக்கும்" எனக் கேலி செய்தான். "நான் ஒன்றும் நடிக்கவில்லை" என மது சிணுங்கினாள்
அவளை அன்புடன் அண்ணத்த ஆனந்தி, "குடும்பம் என்பது ஓர் இனிய சங்கீதம் எனப் பெரிய வர்கள் சொல்வார்கள் மது அங்கே நாதங்கள் எப்பொழுதும் சுநாதங்க வளாக அமைய வேண்டும். என்றைக் கும் ஆதார சுருதியின் எயம் தவறக் கூடாது. கீழ் ஸ்தாபியிலும், மேல் ஸ்தாயியிலும் தனித்தனியே சஞ்சரிக்கும் இரு குரல்கள், ஒரே ஆதார சுருதியில் ஒன்றையொன்று அடியொற்றித் தழுவி, குழைந்து பரவசமூட்டுவது போலத்தான் கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒரு வா அனே பாகவும அனுசர ணையாகவும் ஒன்றி வாழவேண்டும் அங்குதான் அனுராகம் பிறக்கும். வாழ்க்கை வசந்தமாக இருக்கும். அதைவிடுத்து ஆதார சுருதியின் வயத்தை உதறி இசையின் மாறு பாடுகள் அதன் அடிப்படையையே தகர்க்க ஒருநாளும் அனுமதிக்கக் கூடாது மது. இந்த உண்மையை நீ உணர வேண்டும்.

Page 17
கலப்பை 42 D ஐப்பசி 2004 D 30
இப்போ இளமை வேகத்தில் பின்விளைவுகளைச் சிந்திக்காது அவசரமாக முடிவெடுத்துவிட்டுப் பின் காலங்கடந்து உணர்ந்து வருந்துவதால் எந்தப் பயனும் இருக்காது. அதனால் எதையும்
வேண்டும். இருவேறுபட்ட சூழலில் இருந்து வருபவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவே சில காலம் செல்லும். இதனால்தான் நம் முன்னோர் இனம், மொழி, மதம் ஒன்றானவர்கள் மணம் முடித்தால் அடிப்படை வேறு பாடுகளைத் தவிர்க்கலாமென அத் தகைய ஒரு முறையை ஏற்படுத்தி னார்கள். அதனால் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் தோன்றாது, குடும்பம் சிறப்பாக அமையும் என நம்பி
னார்கள். அதைவிடுத்து இந்தக்
காலத்தில் நீங்கள் சொல்வது போலச் சமத்துவம் பேசுவதற்குக் குடும்பம் தேவையில்லையம்மா. எங்காவது ஒரு ப்ளாட்டில் ஒரு அறையில் இருந்து வேலைக்குப் போய்வரலாம். குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும் என்பார்கள். இன்பம், துன்பம், கஷ்டம், நஷ்டம் யாவையும் எதிர்கொண்டு சமாளித்து வாழப் பழகவேணும் மது” என்றாள். "குருவே சரணம்” என மது வேடிக்கையாக ஆனந்தியைப் பார்த்து இரு கரங்களையும் கூப்பி 6TITGT.
“வேண்டும் வரம் கேள் மகளே” என ஆனந்தியும் அபயக்கரம் காட்டினாள். இருவரும் கலகல வெனச் சிரித்தனர். காலம் வேக மாக ஓடியது. சுருங்கச் சொன்னால் மது, ஆனந்தியைக் குருவாக, ஒரு மூத்த சகோதரி போல மதித்தாள்.
அவர்கள் நட்பு நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது.
ஆனந்தியும் பதவி உயர்வு பெற்று இன்னொரு பகுதியின் பொறுப்பாளராக இருந்தாள். சதீ ஷ"ம் பரீட்சைகள் எல்லாம் சித்தி யடைந்து டாக்டராகப் பதவியேற் றிருந்தான். ஆனந்தி தன் கணவ னுக்கு ஆதரவாக இருந்து மீண்டும்
வியப்பாக இருந்தது."நீங்கள் பெரிய ஆள்தான் ஆனந்தி” எனப் பாராட்
பட்டால் நீயும் இதைத்தான் செய் வாய் எந்தப் பொறுப்புள்ள மனைவி யும் இதைத்தான் செய்வாள். குடும்பம் என்பது இதுதான் மது" என்றாள் ஆனந்தி.
அண்மையில் சில நாட்களாக
கவனித்து அவள் தாயாகப் போகி றாள் என்பதை ஊகித்தாள். ஆனால் அவளாகச் சொல்லும் வரை காத் திருந்தாள். மதுவும் வெட்கத்தாலோ என்னவோ ஆனந்தியிடம் அந்தப் பேச்சை எடுக்கவில்லை. ஆனால் அன்று மது, பரத்தின் காரில் வந்திறங்குவதைக் கவனித்தவள் அதைச் சாட்டாக்கி “என்ன மது, பரத்தின் காரில் வந்த மாதிரித் தெரிந்தது. உனது கார் எங்கே?” எனக் கேட்டாள்.
மது குங்குமமாகச் சிவந்தாள். வெட்கித் தலை குனிந்தவள், “என்
பரத் இனி காரெல்லாம் ஒட்ட வேண்டாமென்கிறார்” என்றாள்.
ஆனந்தியும் அதிர்ந்தவள் போல முகத்தை வைத்துக்கொண்டு "அடக் கொடுமையே! என்ன மாதிரிக் கார் ஒட்டின பிள்ளையை இப் படிச் செய்திட்டானே பாவி” என அங்கலாய்த்தாள்.

மது அவசரமாக "ஐயோ, அப்படி ஒன்றும் இல்லை ஆனந்தி. அவர் எனக்காகத்தான் செய்தார். அது
செய்ய விடுவதில்லை" என மேலும் சிவந்தாள். "என்ன்டா இது இன்று எல்லாம் அதிசயமாக இருக்கிறதே!
உதிக்கவில்லையே?” என ஆனந்தி மதுவை மேலும் சீண்டினாள்.
"இதுதானே வேண்டாமென் கிறது. உங்களுக்கா புரியவில்லை ஆனந்தி! நீங்களாகவே காரணத் தைக் கண்டுபிடியுங்கள். நான் எதுவும் சொல்லமாட்டேன்” எனச் செல்லமாகக் கோபித்தாள்.
அவளை அணைத்தவள், “ரொம்ப சந்தோசம் மது உன் மணவாழ்க்கை திடமான அத்திவாரத்தில் எழுந்து விட்டது. இனி யாராலும் எதனா லும் அதை அசைக்க முடியாது” என்றாள்.
"எல்லாம் உங்களால்தான் ஆனந்தி எனக் கண்கலங்க மது அவளை அணைத்துக் கொண்டாள்.
உன்னைப் போல் எத்தனையோ
பேசி எடுத்தேன் கவிழ்த்தேன் என எல்லாவற்றையும் போட்டு உடைத்து வாழ்க்கையை வீணாக்கிவிட்டு நிற் கின்றார்கள். என்னால் உன்னை மட்டுமாவது காப்பாற்ற முடிந்ததே என நினைத்து ஆனந்தி மகிழ்ந் தாள்.
"கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து ஒருவ ருக்கு மற்றவர் என்றும் ஆதரவாக
கும். இல்லறம் இனிய சங்கீதமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐய மில்லை மது” எனக் கூறி ஆனந்தி, மதுவை அணைத்துக் கொண்டாள்.
O
கலப்பை 42 0 ஐப்பசி 2004 D 31
அழகுக் குறிப்புகள்
பல், பரு, பருவம் - சோமசேகர், குலசேகரம்
? கேள்வி: எனக்கு வயது பதினாறு. பல் ஆடுகிறது. முக மெல்லாம் பருவாக உருவாகி பரிதவிக்க வைக்கிறது. வாயெல் லாம் பல்லாக ஆடுகிறது. இந்தப் பதினாறு பருவத்திலேயே இவ் வளவு பரிதாபம் எனக்கு களிம் புகள், மாத்திரை, மருந்துகளை நான்கு மாதங்களாக ஒருநாள் கூட விடாமல் சாப்பிட்டு வரு கிறேன். பலன் தெரியவில்லை. பருவ வயதில் உணர்ச்சிகள் வேறு உயிரை வாங்குகிறது. அதிக உணர்ச் சியால் பருக்கள் வருமா? இந்தப்
த்தில் வரும் பல்வேறு நோய் களுக்கு மருந்துகள் உள்ளதா? 4) பதில் பதினாறு வயதினிலே பரிதாபம் எதற்கு? பரிதவிக்க வேண்டாம். பல், பரு போன்ற பல்வேறு பிரச்சனைகள் குண Lorras Heckla Lava 200, Kalibrom 200 ஆகிய இரண்டு ஹோமி யோபதி மருந்துகளை Two Drachm Pills 96.T6576i airtrijgs ஒவ்வொன்றிலும் 5 மாத்திரை களை ஒருநாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவு சாப்பிடுவ தற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சுவைத்து ஒரு வாரம் சாப்பிடுங்கள். ஆங்கில மருந்து களை நிறுத்திவிடுங்கள். களிம் புகள் வேண்டாம். இனி கவ லையும் வேண்டாம். பருவம் படுத்தும் பாடும் போய்விடும்.
... Qp.

Page 18
}}ལ་མ་ཉུང་ཙམ་
. ക "I hம் : |
DLLs:JJAL IFFI
':
' ' ' ' i 'ಸ್ಥೆ? 500 gil 份
• ಇಂ×ny
தம்
الماس ساساري ري
. .................................. : ) 8
1955) ILLLLÜ 搬。
ன் அசிங்க றேே
- ്
-- ', ' .ق. م . - "
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
-- - ܚܒܝܒܫܒܐ ܗ ܘ ܬܐ ܕ ܚܝܠܐ ܕ ܙ -1

Page 19

கலப்பை 42 [] ஐப்பசி 2004 ) 35
நம் கடல் அன்னையின் தானாட்டு, ன்பாடும் தேன்பாடலாகவும், மறுபுறம் கதிரவன் வரவு கண்டு களிப்பில் மலரும் தாமரையான் உறைவிடமாகக் கொண்ட தாமரைக்குளித்தின் சுகந்தமும் அமைய, நடுவிலே அமைந்தது பாளையூர் எனும், என் கால்களின் தடம் பதிந்த என் Fls (LLL,
என் கிராமம் என்பதைவிட தளர் என்று கூறலாம் யாழ்பாடியின் சிறப்பைக் காலம் காலமாகக் கூறிநிற்கும் பாழ்ப் பானத்திலே, நகரை அண்டிய பகுதியில் அமைந்திருப்பதனால் உளர் என்றே அழைக் கப்படுகின்றது.
எப்படி என் ஊருக்கு பாஷையூர் எனும் பெயர் உருவானது என்பதற்குக் கூறப்படும் காரணமாவது முன்பு எமது ஊரை அடுத்து அமைந்திருக்கும் கொழும் புத்துறை எனும் ஊரில் கப்பல் போக்கு வரத்தும்-துறைமுகமும் அமைந்திருந்த தாகவும், அவ்வாறு போக்குவரத்தை மேற் கொள்பவர்கள் எமது ஊரில் பாஸ் எடுப் பதனால் பாஸ் ஊர் என்று அழைக்கப் பட்டதாகவும் நாளடைவில் திரிவடைந்து பாஷையூர் என்று மாற்றமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
பாஷையூரின் ஒருபுறம் கடலின்வினையின் தாலாட்டு மறுபுறம் கொய்பாத் தோட்டம் இன்னொருபுறம் ஈச்சமோட்டை எனும் ஊர், அடுத்த புறமாக கொழும்புத்துறை எனும் ஊர்கள் அமைந்து அழகையும், சிறப்பையும் கொடுக்கின்றன.
பாஷையூரின் நடுநாயகமாக, பாதுகாவலராக, கம்பீரமாக வீற்றி ருப்பவர் புனித அந்தோணியார். ஆமாம், அவர் புகழ்பாடும் ஆலயம் தளரின் மையப்பகுதியில் வானளாவி உயர்ந்து, கம்பீரமாகக் காட்சி தருகின்றது.
கத்தோலிக்க சமயத்திலேயே கோடானுகோடி புதுமைகளால் மக்கள் துயரங்கள் தீர்த்து, தேவன் பாதையில் வழிநடத்துபவர் புனித அந் தோணியார் என்றால் மிகையாகாது. அவரது உதவியைத் தேடி ஆலயம் வருபவர்கள் ஆண்டவன் வார்த்தையைக் கேட்டு வாழ்வில் மனம் மாறி, நல்ல மனிதர்களாக வாழும் சந்தர்ப்பங்களும் இடம்
பெறுவதுண்டு.

Page 20
8.
L ஐப்பசி 2004 ) 35 பாஷை யூர் மக்கள் அனைவ ருமே கத்தோலிக்கர்கள்தான். பொது வாகப் புனித அந்தோனியாரின் ஆலயம் கடலை அண்டிய பகுதி களில் இருப்பதைக் காணலாம். உதா ரனாக, பாலைதீவு, கச்சை தீவு, மண்டைக் கல்லாறு எனப்படும் கடலின் நடுவில் அமைந்துள்ள தீவுகளிலும் மற்றும் கொழும்பு நகரில் அமைந்துள்ள மிகவும் பிரபல்யம் வாய்ந்த கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தையும் குறிப் பிடலாம். புனிதரின் வரலாற்றில் கூறப்படுகின்றது. அதாவது அவர் ஒரு குருவானவராக வாழ்ந்தவர். வேதத்தைப் போதித்து வந்தவர். அவ் வறு வேதம் போதித்த ஒருதடவை மக்களை அழைத்த வேளையில் மக்கள் அவரைப் புறக்கணித்ததா கவும், அவர் கடற்கரையில் சென்று கடல் மச்சங்களை அழைத்த வேளை யில் அவைகள் கரையை நாடி வந்து போதனையைக் கேட்டதாகவும் கூறப்படுகின்றது.
எமது உளரில் அமைந்துள்ள புனித அந்தோனிபாரின் ஆலயத்தில் ஆனி ம் திகதி மதியம் 12 மணி யளவில் கொடியேற்றம் நடைபெறும் அன்றிலிருந்து ம்ே திகதிவரை எம் தளர் கண்கொள்ளாக் காட்சியாக, பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும்
நாற்புறத்திலிருந்தும் மக்கள் வெள்ளம் வருவதைக் காணலாம். எந்தவித சமய வேறுபாடுமற்ற ஓர் சமரசத்தை அங்கு காணலாம் ஆனி fம் திகதி நவநாள் ஆராதனைகள் ஆரம்பமாகிவிடும் காலையும், மாலை பும் திருப்பலிகள் ஒப்புக் கொடுக் கப்படும். எமது நாட்டைச் சார்ந்த குருமார்களும் இந்தியாவைச் சார்ந்த குருமார்களும் சமூகம் தந்து வேதத் திற்கு விளக்கம் கொடுப்பார்கள்.
பிரசங்கிகள்)
நடைபெறும் திருப்பலிகள் பக்தி மிக்கதாக இருக்கும் திறமை வாய்ந்த
ஆலயப் பாடகர் குழாம் என்று சொன்னால்கூட மிகையாகாத அளவிற்கு, பக்திரசம் மிக்க பாடல் களால் பக்தர்களைப் பக்திப் பரவ சத்தில் ஆழ்த்தும் பாடகர்குழாமின் பாடல்கள், கேட்பவர்களை மெய் மறக்க வைத்துவிடும் எல்லோராலும் பாடமுடியும். ஆனால் கேட்பவர் இதயங்களில் பக்தியை உருவாக்கும் வண்ணம் பாடுவதே பாடலுக்கு சிறப்பு என்பதை உணர்ந்து பாடு வார்கள். 5 அல்லது வயதில் இருந்தே பாடுவதற்குத் தெரிவு செய் யப்பட்டு விடுவார்கள். அத்தோடு ஒருவர் இருந்தால்கூட எந்தவித தயக்கமும் இன்றி ஆலயத்தின் அடி வரைக்கும் கேட்கும் வண்னம் குரல் எடுத்துப் பாடவும், ஒலி வாங்கியின் முன்னால் பாடும் வேளை, பாடுபவருக்கே எங்கோ தூரத்தில் இருந்து கேட்டது போன்ற அளவிற்கு ஒலியின் அளவைக் குறைத்துப் பாடவும் பயிற்சிகள் அளிக்கப்படுவதுண்டு. அதனால் தனியாகப் பாடும் வேளையில் அவர்கட்கு தயக்கம் என்பது ஏற் படுவதில்லை.
இவ்வாறாகத் திருப்பலியில் பக்திப் பரவசத்தை உருவாக்குவ தில் பாடகர் குழாம் பெரும் பங்கு வகிப்பதுண்டு, ' நாட்கள் நவநாள் ஆராதனைக்குப் பின்னர், ம்ே திகதி காலையில் 3 திருப்பலியும் மாலையில் தேர்ப்பவனியும் இடம் டெறும் ஒவ்வொருநாள் ஆராதனை களும் ஆலயத்தின் முகப்பில் திருப் பீடம் அமைக்கப்பட்டு அதில் நடை பெறும், மக்கள் அனைவரும் ஆவ பத்தின் முன்பாக அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்து பங்கு கொள்வார்கள். ஆயிரம் ஆபி ரமாய் மக்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு புனிதரின் வல்லமை பைக் கானலாம். கடவுளிடம் பரிந்துரைத்து வரம் பெற்றுத்
 
 
 

தருபவர் எனும் நம்பிக் கையில் மக்கள் தம்  ேவ ண் டு த  ைல அடைவதுண்டு.
என் பொருட்டு /சிங்களவர்களுக்கு
தன் உயிரை இழப் | all air at als). If அதைக் காத்துக் கொள்வான், இறப் பினும் வாழ்வான்" எனும் யேசுவின் வார்த்தைக்கு ஏற்ப புனிதர்கள் இறந்த வர்கள் அல்ல, மக்கள் மத்தியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப் ப வர்கள். பேசு விற்காக அவர்கள் வாழ்ந்தவர்கள் அல்லவா? எப்படி இறக்க முடியும்?
திருநாள் அன்று 13ம் திகதி) மாலையில் புனிதரின் திருச்சுரு பத்தை திருத்தேரில் வைத்து பவனி பாகக் கொண்டு வருவார்கள். அயல் ஊர்களின் எல்லை வழியாக வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. தேரின் முன்னே செல்ப வர்கள் கொப்பாத்தோட்டம் புதுவிதிக்குச் சென்றுவிடுவார்கள். அயல் ஊரின் எல்லைக்கு ஆனால் தேர் இன்னமும் ஆலயத்தினருகே அசைந்து கொண்டிருக்கும், அந்த அளவிற்கு மக்களால் ஆன நீண்ட வரிசை காணப்படும். மாலை மனிக்குப் புறப்படும் தேர் மீண்
இருள் ஆட்சி புரியத் தொடங்கி விடும். அந்த இருளின் உனடாக, வர்ண ஒளி விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட தேரில் புனிதன் வெற்றி வீரனாகப் பவனிவரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி பாகும். அதனை விவரிக்க வார்த் தைகளே இல்லை.
இதில் இன்னும் ஒரு குறிப்
மட்டும் இல்லையே, நம் தமிழர்களுக்கும் இவ்வாறான குணம் இருக்கத்தானே செய்கிறது!
பிடக்
| L அம்சம் என்ன வெனில், திருத்தேர் பவனி வரும் தெருவின் இருமருங்கிலும் அயல் ஊர் களில் ஒவ்வொரு இல்லத்தின் வாயிலிலும் அழகான வண்ணச் சேவைகளால் அலங்கரிக்கப்பட்டு, புனிதரின் திருஉருவப் படத்தை வைத்து, தீபமும், துரபமும், மலர் களும் வைத்துக்கொண்டு இல்லத் தவர் அனைவரும் காத்திருந்து புனி தருக்கு வணக்கம் செலுத்துவதைப் பார்க்கும் வேளை மெய்சிலிர்த்து விடும். காரணம், அவர்கள் கத்தோ விக்கர் அல்ல. அனைவரும் இந்து சமயத்தவர்கள். இவ்வாறு திருநாள் நிறைவுபெறும் திருநாள் தொடங்கும் நாளிலிருந்தே காப்புக்கடைகள், கடவைக் கடைகள், அல் வாக் கிடைகள், ஐஸ்கிரீம் கடைகள் என்று திடீர்க்கடைகளும் தோன்றிவிடும்.
திருநாள் நிறைவுபெற்றதும், பங்குக் குரு வானவர் பாடகர் குழாமையும், திருப்பவிக்கு உதவிய பணியாளர்களாகிய சிறு ஆண் பிள்ளைகளையும் அழைத்து விருந்து வைத்துப் பின் குறிப்பிடும் நாளில் சுற்றவா விற்காக பஸ் ஒன்றை அமர்த்தி எல்லோரையும் அழைத்துச் செல்வார். கொழும்பு நீர்கொழும்பு, அனுராதபுரம், மலைநாடு என்று அழைத்துச் செல்வார். தனியார் பஸ்சில் பிரயாணிக்கும் வேளையில்

Page 21
குருவானவர் கேட்டுக் கொண்டி ருப்பார், அனைவரும் கைதட்டி பைலாப் பாட்டுக்கள், சினிமாப் பாட்டுக்கன் பாடி மகிழ்வர். அந்த மகிழச்சியைப் பார்த்து குருவான வரும் மகிழ்வார்.
பாஷையூரில் அறிவாளிகள், கலை ஞர்கள், நாடகத்துறையில் பிரசித்தி பெற்ற அண்ணாவியர், கவிஞர்கள் குருக்கள், கன்னியர் துறவிபர் உதை பந்தாட்ட வீரர் என்று காலத்திற்குச் காலம் தோன்றத்தான் செய்தார்கள். ஊரில் நடைபெறும் அனைத்து நிகழ்வும் பங்குக் குருவானவரின் கட்டளைப்படியே நடைபெறும்.
மாலை 6 மணிக்குப் பின்பு இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள் யாரும் வெளியே நிற்க முடியாது. குருவானவர் ஒரு பிரம்புடன் வீதி வலம் வருவார்.
அவரின் வெள்ளை ஆடையைத் தூரத்தே கண்டால் போதும், தலை தெறிக்க நாங்கள் வீட்டை நோக்கி ஓடிவிடுவோம். மாலையில் இராப் பாடசாலை என்று ஒரு பாட சாலை அமைக்கப்பட்டு, பிள்ளை களுக்கு இலவசமாகக் கல்வியும் புகட்டப்படுவதுண்டு.
இந்த வகையில் இயங்கிக் கொண் டிருந்த எமது ஊருக்கு பெருமை சேர்த்தவர்களில் என் கூடப்பிறந்த என் அண்னன் மமான்ஸ் என்ப வரும் ஒருவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். எமது ஊரில் பல குழுக்களாக உதைபந்தாட்டக் குழுக்கள் ஆரம் பிக்கப்பட்டு, அவர்கட்கிடையில் போட்டிகள் நடைபெறுவது வழக் கம். அந்தப் போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரனுக்கான பரிசை வருடா வருடம் தட்டிக் கொள்வார். அந்த அளவிற்குச் சிறந்த உதை பந்தாட்ட வீரன். தன் கால்களுக் குள் அகப்படும் பந்தை லாவக மாக் எவருடைய உதவியும் இன்றி ஒரு முனையில் இருந்து மறு முனைக்குக் கொண்டு சென்று கோல் போடுவதில் மிகவும் திறமை சாலி. அவரது விளையாட்டைப் பார்த்து பார்வையாளர் மத்தியில் இருந்து பல தடவைகள் என்னை மறந்து கூச்சவிட்டு ஆரவாரித் திருக்கின்றேன். அந்த அளவில் அவரது விளையாட்டில் வினை மறந்திருக்கின்றேன். உதைபந்தாட் டத்தை அவரது காலத்தில் ரசித்த வர்கள் அவர் பற்றி அறிந்திருப் பார்கள்.
ஊர்களுக்கிடையிலான போட் டியில் பார்வையாளர் மத்தியில் இருந்து எழும் குரலையும் கேட்டி ருக்கிறேன். அதாவது "டேய் மமான் சின் காலுக்கு அடித்து அவனை முதலில் வெளியே அனுப்புடா"
 

என்று. இதன்மூலம் ஊரவர்களுக் கிடையில் பிரச்சனைகளும் எழுவ துண்டு.
பின்பு யாழ்ப்பாண உதைபந் தாட்டக் குழுவிற்குத் தலைமை தாங்கி விளையாடினார். அந்தப் போட்டிகளிலும் சிறந்த விளையாட்டு வீரனான பரிசுடன்தான் வருவார். கொழும்பில் விளையாடிய வேளை யில் ரட்ணம்ஸ் எனும் உதைபந் தாட்டக்குழு தமது குழுவில் விளை யாட இவரைச் சேர்த்துக் கொண்டது. அதன்மூலம் இலங்கை அணியில் விளையாட ஒரு தடவை தெரிவு செய்யப்பட்டார். மணிலாவிற்குச் செல்வதற்கு எல்லா ஆயத்தமும் நிறைவுபெற்ற வேளை, கடைசி நேரத்தில் தமிழன் எனும் காரணத் தால் நிறுத்தப்பட்டு, மிகவும் கவலை
படைந்தார்.
சிங்களவர்கள் மட்டும் இல்லையே, நம் தமிழர்களுக்கிடையேயும் இவ் வாறான குணம் இருக்கத்தானே செய்கிறது-தனிப்பட்ட விரோதங் களுக்காகத் திறமைசாலிகள் தவிர்க் கப்படுவதும், தம்மைச் சார்ந்தவர் களுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதும் என்று அது மாறாத குணம் அதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை ஆனால் ஆண்டவன் திறமைகளைத் தந்துள்ளான் என்பது உண்மை.
இவ்வாறு தன் காலில் கிடைத்த பந்தைக்கூட எதிரியின் கால்களுக் குக் கிடைக்கவிடாமல் பாதுகாத்த என் அண்ணனின் கையிலிருந்து வாழ்க் கைத்துணையை இறைவன் தட்டிப் பறித்துக்கொண்டு தந்தையையும், பிள்ளைகளையும் தனிமரமாக விட்டி ருக்கும் காட்சியை நினைக்கும் வேளை இதயம் கனக்கிறது. o

Page 22
SSSSMS S S S S S S S S S S 0 S S 0 0 S SS0 S0SSS SK SS S S S S 0 S S S S S S SO S S S S S S S S S S S S S S S S S S S S ... .........
 
 
 

ჯ
יל"ה לא אל 86 אלא""
..
ଽ - - - - - - - . . .
ஜ்ே
S-2. 18288 " ستستعد "
தேயில் தள்ள் : == '' : پـــــــي .=
်ဓ r
|
%..............'. تي!".
- г. , : ༣: f :ே

Page 23
கலப்பை 42 0 ஐப்பசி 2004 ) 42
காத்தவராயன் பிறப்பும், பள்ளிக் கூடம் செல்வதும், சின்னானைத் தோழமையாகக் கொள்வதும், ஆரியப் பூமாலையைத் திருமணம் செய்ய விரும்பித் தாயாருடன் வாதாடுவ தும், தாயாரின் கட்டளையை ஏற்றுக் கழுமரம் ஏறுவதும் எனக்
கூத்து முடிகிறது. தாயாரின் ஏனைய கட்டளைகள் ஆடப்பட வில்லை. ஆனாலும், காத்தவராயன் கூத்து இசையையும் நடையையும் முழுமையாகக் காணமுடிந்தது.
சிட்னியில் வாழும் எமது శి ஞர்கள் அரங்கேற்றி யதன் மூலம் ஓர் அசுர சாதனையே புரிந்துள்ளார்கள். பாடல், இராகம், தாளம் தப்பாது மிகவும் திறமை lIFT.d5l. L_lfTLQ_lALD 10 நடிததும :"##:? காத்தவராயனாக நடித்தவர் ஒரு பாரம்பரியக் கலைஞர். தமது பாத் திரத்தை உணர்ந்து செய்தார். அவரே க்கூத்தை அண்ணா வியம் செய்திருந்தார். அவர் இளை ஞராக இருந்தபோதும், சிறந்த கலைஞர் என்பதில் சந்தேகம் இல்லை. மாரியாக நடித்தவர்கள்
இருவருமே திறமையாகப் பாடி, பசி, ஆடினார்கள். சிவனாக நடித் தவர் ஒரு பண்பட்ட கலைஞர். அவருடைய மிடுக்கான நடை, முக பாவம், ஆடல், பாடல் எல்லாமே குறிப்பிடும்படியாக இருந்தன. பால காத்தானாக வந்த குழந்தையின் இயல்பான நடிப்பு பார்வையாளர் களை வசீகரித்தது. அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. கண்ணபிரானாக நடித்தவரின் தோற்றம், பாடல், ஆடல், நடிப்பு மனதைக் கவர்ந்தன. நாரதராக நடித்தவரின் பாடலும் நடிப்பும் சிறப்பாக இருந்தன. சின்னான், வைகுர ராசன், பார்வதிதேவி, காவலாளர் என்று எல்லோருமே தத்தமது பாகங்களை உணர்ந்து செய்தனர். பின் முத்துமாரி அம்ம னாக நடித்தவர் பாரம்பரியம் வழு வாது முறைப்படி விரதம் காத்தே வேடம் ஏற்றிருந்தார் என்று அறிந் தோம்.
ஒப்பனைபற்றி விசேஷமாகக் கூறவேண்டும். நடித்தவர்கள் எல்
வந்த இந்த மரபு இங்கேயும் தொடர்கிறது. பெண் வேடங்கள் மிகவும் பொருத்தமாக இருந்தன. சிவன், கண்ணன், நாரதர் போன்ற வர்களின் ஒப்பனை கண்ணுக்கு விருந்தாக இருந்தது. காத்தவராயன், சின்னான், வைசூரராசன் போன்ற வர்களின் தோற்றம் பொலிவாக இருந்தாலும், உடையிலும் இசை நாடக மணிஉடுப்புப் பாரம்பரியம் பேணப்பட்டிருக்கலாம். காத்தவ ராயன் கூத்தை "வட்டுடுப்பில்” ஆடிய வரலாறும் உண்டு. அவை பற்றியும் எதிர்காலத்தில் சிந்திக்க லாம்.
శి’ கலைஞர்களின் பங்கு வ்கே முக்கிய இடத்தைப் பெறு றது. காத்தான் கூத்துக்கு ஹார் மோனியமும் உடுக்கும் பிரதான மானவை. அவற்றுடன் தபேலா வும் டோலக்கும் இணைந்திருந்
 

தன. இவற்றின் இசை கூத்தின் தரத்தை உயர்த்திவிட்டது. பிற் பாட்டு கூத்தில் பாதி என்பதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும் எல்லோரும் பாடாமல் பிற்பாட் டுக்கென ஒரு தனிக் குழு இருந் தால் இசை சிறப்பாக அமையும். பெண் குரலும் கலந்திருத்தல் மிகவும் சிறப்பு.
இந்தக் கூத்திலே காணப்பட்ட பெரிய குறை இதன் நீளம் ஊரிலே விடிய விடியக் கூத்து நடக்கும் போது ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் பாடுவது குறையாகத் தோன்றாது. ஆனால் இங்கு நேரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் முழுக் கதையை ஆடாவிட்டாலும் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் சென்றுவிட்டது. "சஞ்சாரிகளை”ச் சுருக்கி ஒன்றரை மணிநேரக் கூத் தாக்கினால் விறுவிறுப்பாக இருக் கும். முழுக் கதையையும் பகுதி பகுதியாகத் "தொடர் கூத்தாகவும்” ஆடலாம். காத்தவராயன் கூத்துக் கென்றே ஒரு நாடகக் குழு உருவா வதும் வரவேற்கத்தக்கதுதான். இதைச் செய்வதற்கு இக்கலைஞர்கள் மிகவும் தகுதி உள்ளவர்கள்.
கூத்தின் ஆரம்பத்தில் திருமதி மாலதி சிவசீலன் கூத்தைப் பற்றிச் சிறந்ததொரு "அறிமுக” உரையாற்றி னார். தமிழ்நாட்டிற்கு பரதநாட் டியம், தெருக்கூத்து, கர்நாடகத் திற்கு யக்ஷகாணம், கேரளத்திற்கு கதகளி, ஆந்திராவுக்கு குச்சுப்புடி, சிங்களத்திற்கு கண்டியநடனம், ஆனால் ஈழத் தமிழ் மக்களுக்கு என்ன என்ற கேள்வியை எழுப்பி விளக்கமும் அளித்தார். எமது வடிவம் கூத்து என்பதை அவர் சான்றுகளுடன் விளக்கியது நல்ல தொரு ஆரம்பமாக இருந்தது. திறந்த வெளிகளிலும், கோயில் வீதிகளிலும் விடிய விடிய நடந்த கூத்து, பேராசிரியர் வித்தியானந்
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 43
தனின் முயற்சியால் ஒன்றரை, இரண்டுமணி நேரக் கூத்தாக படச்சட்ட மேடையிலே அரங்கேறி யதைக் கூறினார். பேராசிரிய ரின் வழியிலே வந்த பேராசிரியர் கள் அமரர் கைலாசபதி, சிவத் தம்பி, சண்முகதாஸ், மெளனகுரு, பாலசுந்தரம் போன்றவர்கள் கூத்தை முன்னெடுத்தார்கள். கூத்தாடுப வர்களும், பாரம்பரியத்தைப் பேண விரும்புபவர்களும் கூத்து வகைக ளையும் அவற்றின் வரலாற்றை யும் அறிவது அவசியம். இந்தத் துறையிலே விற்பன்னர்களாக இருப் பவர்கள் இவைபற்றி எழுதியும் பேசியும் மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அறிவுறுத்துவது முக்கிய தேவை.
கிராமங்களிலே கூத்துப் பார்க் கும் மக்கள், தாம் ஒரு கூத்தைப் பார்க்கிறோம் என்று நினையாது, தமது வாழ்க்கையோடு இயைந்த ஒரு சமய வழிபாட்டில் பங்கு கொள்பவர்களாகத் தம்மை ஈடுபடுத் திக் கொள்வார்கள். இன்றைய உலகில், புலம்பெயர்ந்த நாடுகளில் இவ்வாறான கதைகளை ஆடுவது தகுமா? காலத்திற்கு ஏற்ப கருத்து வேண்டாமா? என்ற கேள்விகள் எழுகின்றன. ஊரிலே இயல்பாக இருப்பதை, புலம் பெயர்ந்த நாடு களில் வாழும் எமது இளம் சமு தாயத்தினருக்கு எப்படி விளங்க வைக்கலாம்? பாரம்பரியத்தைப் பாதுகாக்க விரும்பும்போது, பழைய வடிவத்திலே புதிய கருத்துகளைக் காட்டினால் என்ன? சென்ற வருடம் இங்கே மேடை ஏறிய காத்தவன் கூத்திலே, பழைய வடிவத்தில் புதிய கருத்தைக் காட்டினார்கள். இதனா லேயே, "நான் இறந்தகாலத்திற்குள் பார்க்கிறேன் நிகழ்காலத்திற்குச் சேவை செய்ய” என்ற வரிகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.

Page 24

urOLB BuLL0HLDLLuLSL LL LLuHLSHH LLLLSHuBS LL LLLLH BB0LrO BrrrLrL OkOrKL B SLSDD
&ኮትm
鬣 & ಟ್ವಿ!X& ତୁଷ୍ଟ
:::::::'; ଝୁ
எத்தைப் பெற்றுக்
ों
क' }, ::::ୋ;
ଝୁଟ୍ରୁ S ଝୁ ଽ * ଝୁଟ୍ରୁ
& భ ×

Page 25
10காபாரதப் போரில் கர்ணனைக் கொன்றது யார்? இதற்கு பொதுவான பதில் அர்ச்சுனன் என்றுதான் பதில் வரும். ஆனால் அக்கதையை ஆழ்ந்து நோக்கினால், வெளிப்படையில் கர்ண னின் உடலைத் தாக்கியது அர்ச்சுனனாக இருப் பினும், அவனின் இறப்புக்குப் பல காரணங் கள் உள்ளன. இந்திரன் மாறுவேடத்தில் வந்து கவச குண்டலங்களைப் பெற்றுச் சென்றது முதல் காரணம். பிராமணனால் பெற்ற சாபத்தால் தேர் பாதியில் ஓடாமல் நின்றது இன்னொரு காரணம். தனது குருவிடம் தான் சத்திரியன் இல்லை என்று பொய் கூறி வில்வித்தை பயின்ற தால் அனைத்தையும் சாதிக்கவல்ல பிரம்மாஸ் திரம் என்ற மந்திரம் இடையில் மறந்துபோனது மற்றொரு காரணம். அர்ச்சுனனிடம் ஒரு தட வைக்குமேல் நாகபாணத்தை எய்ய மாட்டேன் என்று தாய் குந்திக்குச் சபதம் செய்தது மறு காரணம். தான் செய்த புண்ணியம் அனைத்தை யும், கிழப் பிராமண வேடத்தில் வந்தது கிருஷ்ணர் எனத் தெரிந்தும், தானம் செய்தது அடுத்த காரணம் மொத்தத்தில் தர்மம் வெல்ல வேண்டுமென்பதே முழுமுதற் காரணம் அர்ச்சுனன் இங்கு தன் கடமை யாற்றும் கருவியாகவே அமைந்துள்ளான்.
இதுவே நம் வாழ்க்கையும். எமக்கு ஏதாவது
O
Ο .
இருந்து அப்பிள் ஏன் நிலத்தில் விழுந்தது? அது மேலே போவதற்கென்ன? என்ற நியூட்டனின் கேள்விகளே புவியீர்ப்பு சக்தி பற்றிய அறிவைத் தந்தன. () ()
ந. கீதாகரன்
 

வேண்டாதது நடக்கும்போது நாம் வெளிப்படையாகத் தெரியும் கருவி களைக் குற்றம் காணுகின்றோம். உண்மையில் நாம் செய்த செயல் களுக்கேற்ப பலனைத்தான் நாம் பெறுகின்றோம். இந்தப் பிறப்பில் எதுவும் செய்யாவிடினும் கடந்த காலப் பிறப்பில் ஏதாவதைச் செய் திருப்போம் நெருப்பில்லாமல் புகை யாது என்பார்கள். இந்த உலக நாடகத்தில் விபத்தென்று ஒன்று இல்லை. நமக்கு நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் கண்டிப்பாக ஓர் காரணம் இருக்க வேண்டும். நல்ல செய்தி என்னவெனில் அதில் நன் மையும் அடங்கியிருக்கும் அது எமது நம்பிக்கையைப் பொறுத்தது.
மரத்தில் இருந்து அப்பிள் ஏன் நிலத்தில் விழுந்தது? அது மேலே போவதற்கென்ன? என்ற நியூட்டனின் கேள்விகளே புவியீர்ப்பு சக்தி பற்றிய அறிவைத் தந்தன. எந்த ஒர் தாக்கத் துக்கும் சமனும் எதிருமான மறு தாக்கம் உண்டு என்பதே நியூட்டனின் மூன்றாவது விதியாகும். இதையே கர்மவிதியும் விளக்குகிறது. தினை விதைத்தவன் தினையறுப்பான். வினை விதைத்தவன் வினையறுப் பான். எமக்கு வரும் துன்பத்திற்கு மற்றவர்தான் காரணம் என ஓர் விரலைக் காட்டும்போது மற்ற மூன்று விரல்களும் அதற்கு "நீ மூன்று மடங்கு காரணம்” என அவை என்னைக் காட்டி நிற்கின்றன. பெருவிரல், அதற்கு இறைவன்தான் சாட்சி என மேல் நோக்கி நிற்கின்றது. எனவே, எனக்கு வரும் பிரச்சனை களுக்கு மற்றவர்களைக் குறை கூறாமல் நானே முழுப்பொறுப்பையும் ஏற்கும் போது பாதிப் பிரச்சினை தீர்ந்து விடுகின்றது. நான் மற்றவர்களைக் குறை கூறும்போதே அது உருகு கின்றது. இது ஒர் தொற்றுநோய் போன்றது. இதைத் தடுப்பதற்கு,
கலப்பை 42 D ஐப்பசி 2004 () 47
முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்ளும்போது அங்கே தெளிவு பிறக்கின்றது. மனப்பாரம் இல்லை. இதனால், பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு பிறக்கின்றது. மற்றவர்களில் பிழை பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. இதனால் நாம் எதையும் சாதிக்கப்போவதும் இல்லை.
அதெல்லாம் சரி1 மற்றவர்கள் என்னில் பிழைபிடிக்கும்போது அதை நான் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியும்? நான் செய்வது 100% சரி யாக இருக்கும்போது மற்றவர் என் னைத் தொடர்ந்து குறைகூறினால், அதை எதிர்ப்பதன் மூலம் நான் எதையும் சாதித்துவிட முடியாது. "உண்மை என்ற படகு ஆட்டம் காணும், ஆனால் மூழ்கிவிடாது" என்பது முதுமொழி.
நான் செய்வது சரி என விவா திப்பதைவிட அதைச் செயலில் நிரூ பிக்கமுடியும். எவ்வாறு? ஒருவன் ஓர் யோகியிடம் கேட்டான், “எதி ரியை வெல்வது எவ்வாறு?" அதற்கு அந்த யோகி அமைதியாகக் கூறினார். "அவனை உன் நண்பனாக்கிவிடு". அதேபோல், என்மீது குற்றம் காண் பவர் மீது அன்பும் கருணையும் கொண்டு அவரை மன்னிப்பதே சிறந்த வழி. இதுவே நிரந்தரத் தீர்வு. விளங்கிக்கொள்ளப்பட வேண்டிய விடயம் :ன்னவெனில், என்மீது குறை கூறுபவர்களை எதிர்ப்பது அவர் கருத்தைச் சரி யாக்கிவிடும். மாறாக, அவரை மன்னிப்பதால் இன்று அல்லது நாளை தான் செய்தது தவறு என் பதை அவர் உணர்வார். இதுவே உண்மையின் சக்தி
என்னதான் இருந்தாலும், மற்றவர் செய்வதை என்னால் பொறுக்க முடியவில்லை என்றால் அதற்குக் 3. சணம் என்னில் இருக்கும் மறை முகமான ஆணவமே, ஆணவம்

Page 26
கலப்பை 42 0 ஐப்பசி 2004 D 48
இருக்குமிடத்தில் அன்புக்கு இட மில்லை. அங்கே வெற்றியும் இல்லை. விஸ்வாமித்திரர் தான் பிரம்மரிஷி ஆகவேண்டுமென ஆணவத்தில் பல அற்புதங்களைச் செய்தார். ஆனால் ஒன்றும் பலன் கொடுக்கவில்லை. இறுதியில், எப்போது தன் ஆண வத்தை உணர்ந்து தலைபணிந் தாரோ அன்றே அவர் விரும்பிய பட்டம் அவருக்குக் கிடைத்தது. அதேபோல், எதையும் வெல்வதற்கு இலகு வழி அன்பும் பணிவுமேயாகும் மிகவும் முட்டாள்தனமான செயல் யாதெனில், நான் விரும் பியபடி மற்றவர்கள் நடக்க வேண் டும் என எண்ணுவதே. இந்த பெரிய எதிர்பார்ப்பே ஏமாற்றத் தையும் துன்பத்தையும் கொடுக்கிறது. மற்றவர்கள் என்னைப் புரிந்து நடக்க வேண்டும் என நினைப் பதை விட்டுவிட்டு நான் மற்றவர் களைப் புரிந்து நடப்பதே புத்தி சாலித்தனம். ஒர் பழம் கூற்று என்னவெனில் "முட்டாள் மேடையில் சத்தம் போடுவான், அறிவாளி பார் வையாளர்களில் ஒருவராக இருந்து சிரிப்பான்" உலகில் எந்த இரு மனி தர்களின் பெருவிரல் அடையாளமும் ஒன்றாக இருக்க முடியாது.
ஒவ்வொருவரும் இந்த உலக த்தில் விதம்விதமான பாகத்தை நடிக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நான் விரும்பியபடிதான் நடக்க வேண்டும் என நினைப்பது நியா யமானது அல்ல. புத்திசாலித்தன
எவ்வாறோ, என்ன குணம் படைத் தவரோ அவ்வாறே ஏற்றுக்கொள் வதுதான். அதில் மாற்றம் செய்யத் தேவையில்லை. எவ்வாறு ஓர் தாய் தன் குழந்தையில் எவ்வளவு பிழையிருப்பினும் அதை வெளிக் காட்டாமல் அன்பை மட்டும் கொடுக்கிறாளோ அவ்வாறே நாமும் ஒர் தாயாக வேண்டியதுதான்.
“என்னதான் இருந்தாலும் அவள் அவன் நல்லவர்” என்ற நல்வாழ்த்தை மட்டும் மற்றவர் மேல் எப்போதும் கொண்டிருந்தால், இந்த நல்லெண் ணம் கண்டிப்பாக மற்றவரை மாற் றும். இது எனது அனுபவம். மற்ற வர்களின் சிறப்பியல்புகளை மட்டும் பார்ப்பதே எப்போதும் சிறந்தது. எல்லாம் எனது பார்வையில்தான் தங்கியுள்ளது. சிவப்புக் கண்ணாடி போட்டிருந்தால் பார்ப்பது அனைத் தும் சிவப்பாகத்தான் தெரியும் அதே போல் சிறப்பியல்பு என்ற கண் ணாடியை எப்போதும் அணிந்தி ருந்தால் மற்றவர்களின் குறை ஒருபோதும் தெரியாது. இது பல பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும். எதுவும் முடியாவிட்டால் மெளன மாக இருந்து அன்பை மட்டும் கொடுக்க வேண்டியதுதான். இது மற்றவர் தன் தவறை உணரவைத்து பல குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.
புத்தபகவான் அமைதியாகத் தியானம் செய்துகொண்டிருக் கும்போது ஒருவன் வந்து கெட்ட வார்த்தையால் நீண்டநேரம் திட்டிக் கொண்டிருந்தான். புத்தர் மெளனத் தில் தொடர்ந்திருந்தார். இதனால் சலிப்படைந்த அவன், அவரின் மகிமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, அவரின் அமைதியின் அர்த் தத்தைக் கூறுமாறு வேண்டினான். புத்தர் கூறினார். "நீர் யாருக்கும் பரிசு கொடுக்கும்போது அதை அவர் ஏற்க மறுத்தால் அது யாருக்குச் சொந்தம்” இதேபோல், மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அது எனக்குப் பொருந்தவில்லை யெனில் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. இதுவே உண்மையான சுயமரியாதை இதில் ஆணவம் இல்லை. அன்பும் அமைதி
யுமே எனது சுயமரியாதை,

ஒருமுறை வேலையில் என் பராமரிப்பில் இருந்த வயோதிகப் பெண் தன்னை தனது வைத்தியர் முட்டாள் எனக் கூறிவிட்டார் என என்னிடம் முறையிட்டார். இதன் காரணமாக அப்பெண் மிகுந்த மனக் குழப்பத்தில் இருப்பதைக் கவனித் தேன். நான் சிறிது நேரம் அமைதி யாக இருந்துவிட்டு “நீங்கள் முட்டாள் என நீங்களே நம்புகிறீர்களா?” எனக் கேட்டேன். அவ்வயோதிகப் பெண் என்னை உற்றுப் பார்த்துவிட்டு உடனே சாந்தமாகிவிட்டார். இந்தச் சம்பவம் எனக்கு மிக முக்கிய மான உண்மையை உணரவைத்தது. நான் நல்லவன் என்று நான் நம்பினேன் ஆயின் மற்றவர்களின் என்னைப் பற்றிய கருத்திற்கு நான் வருத்தப்படத் தேவையில்லை.
நான் இப்போது நேரம் உள்ள போது இருந்து சிந்திப்பேன். "நான் யார்? எனது சிறப்பியல்பு என்ன? எனது இலட்சியம் என்ன? நான் யாருக்குரியவன்? இறைவன் என்றும் எனக்குத் துணையாக இருப்பார்" இவ்வாறு இறைவன் சிந்தனையில் ஆழ்ந்துவிடுவேன். இந்த நம்பிக்கை பல சிக்கலான விடயங்களை இலகு வாகச் செய்து முடிக்கும் சக்தியைக் கொடுத்தது. என்னைப்பற்றியும் இறைவனைப் பற்றிய விழிப்புணர் வைக் கொடுப்பதிலும் இராஜயோக தியானம் முன்னணி வகிக்கின்றது. இராஜயோகதியானம் பற்றிய மேலதிக 65uTril 5(15565 WWW.rajayogam.org என்ற தமிழ் மின் இணையத்திற்கு விஜயம் செய்யவும்.
அல்லது
02 9716 7066 என்ற தொலை பேசி எண்ணுடன் தொடர்பு கொள் ளவும.
nkeethan(a)yahoo.com.au
O
கலப்பை 42 0 ஐப்பசி 2004 () 49
அழகுக் குறிப்புகள்
முடியில் }િ கேசவலு, -
ரோஷனை
? கேள்வி: என் வயது இருபத் தாறுதான். அதற்குள்ளாகவே
சாப்பிடுகிறேன். முடி கொட்ட ஆரம்பித்த வேகம் எனக்குத் தலையில் இடி விழுந்த மாதிரி இல்லை, அது முடியில் விழுந்த அடியாகவும், இடியாகவுமே கருதுகிறேன். முடியின்றி என்னால் என்ன செய்யமுடியும்? எனக்கு சுய இன்பப் பழக்கம் உண்டு. கனவுகளில் அனைத்தும் வெளி யேறிவிடும். இதனை எல்லாம் வேறு நினைத்து முடியைப் பிய்த் துக் கொள்கிறேன். LiJö க்கு ခိနီ முடி p * பதில்: Androgen என்ற ஹார் மோன் சீரின்மை மற்றும் கவலை தான் முடி கொட்டுவதற்கான காரணம், முடி கொட்டுவதை, தலையில் விழுந்த இடியாகக் கருதுகிறீர்கள். வழுக்கையை வரவிடாமல் தடுக்க ஏராளமான மருந்துகள் உள்ளன. முதல் கட்ட மாக Phosphorus 30 என்கின்ற ஹோமியோபதி மருந்தை One Drachim Pilis gjørønlaio GunTiš8G காலை மட்டும் 5 மாத்திரைகளை உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு மாதம் சுவைத்துச் சாப்பிடுங்கள். சுய இன்பம் அளவோடும் இருந் தால் சுகம். இதற்கும் முடிக்கும், முடிச்சு போடாதீர்கள். இதுதான் முடிக்கான என் முடிவான முடிவு
ང། لر عه

Page 27
ܼ ܘ .
...,
...: ".
_
ሠ ፳፻† it. 点
மருத்துல்
இரு နှီးဗါး၊ 萤 ந்து iள்
WS
...
"" :جنس *
*、
... -- ܘ كينغ يو - ه - ه - : " . يحمل
:
L
...
.
ல்க F. :
:
... " தேTசி
;ے چي "'
&alJ.. <
". ...-
.
്
expr:
岛、 Ù I'ዞ
፵፱ եւիի
S38 KITE: LAX. Liġi fl
| .
 
 


Page 28
கலப்பை 42 0 ஐப்பசி 2004 () 52
காரணியாகும். தமிழர்கள் தென் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி இன்றும் பூரண சுதந்திரம் இல்லாதவர்களாக வாழ்வதால் இத் தகைய மருத்துவ ஆராய்ச்சிகளில் அங்குள்ளவர்கள் பெரும் பணச் செலவில் ஈடுபடுவதற்கு வசதியும் வாய்ப்பும் இல்லை. ஆனால் புலம் பெயர்ந்து வசதியோடு வாழும் தமிழ் மக்கள் தங்கள் பார்வையை ஏன் இத்திசையில் திருப்பக்கூடாது என்பதே என் கேள்வியாகும்.
இயற்கை அன்னையின் செயற் பாடே உலகின் பொக்கிஷம். தாவ ரங்கள் விலங்குகள் நுண்ணுயிர்கள் போன்றவற்றின் செயற்பாட்டில் நடைபெறும் சிக்கலான தொழிற் பாடுளிலேயே மானிடரின் சுகபோக சீவியமும் உணவும் தங்கியுள்ளன. எனவே, எழுத்தாளர்கள் தமது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுக் காவியங்கள் படைப்பது போன்று எமது தமிழ் மருத்துவ இளம் தலைமுறை ஆராய்ச்சி யாளர் பல்வேறு கோணங்களில் தங்கள் நுண்ணறிவைப் பிரயோ கித்து எயிட்ஸ், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஏன் மாற்று மருந்து கண்டுபிடிக்கக் கூடாது என்பதே என் மனக்கிடக்கையாகும்
தமிழ் ஏட்டுச்சுவடிகளில் ஆராய்ச் சிக்காக மருத்துவத் தகவல்கள் நிறைய உள்ளன. எனவே அவுஸ் திரேலியாவில் வாழ்கின்ற-படிக் கின்ற-படித்த-வசதிபடைத்த தமிழ் இளந்தலைமுறையினர் மேற் குலக மருத்துவத்துக்கு இணையாக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கென மூலிகைகளின் ஆங்கிலப் பதங்க ளையும் சித்த மருத்துவம் பற்றித் தெரிந்த தகவல்களையும் தந்துதவ விரும்புகின்றேன்.
ஆராய்ச்சி அல்லது ஆராய்வு என்பது இலகுவான ஒன்றல்ல.
சில மூலிகைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன. அநேகமான மூலிகைப் பெயர்களில் அர்த்தங் கள் மறைந்து நிற்கின்றன. உதார ணமாக வாதமடக்கி (clerodendrum phlomoides)60)u 6TG5 gigsld, கொள்வோம். வாதம் என்றால் Arthritis. 9|L d5 6T6áipitai) control ஆண்டுக்கொருமுறை காய்க்கும் காற்றோட்டிக்காயை விரத நாட்களில் பொரித்துச் சாப்பிடுவது இந்து சமயத்தவர் மத்தியில் உள்ள பாரம் பரிய உணவுக் கலாச்சாரமாகும். காற்றோட்டிக்காய் உடலிலுள்ள வாயுக் கோளாறுகளை அறவே நீக்கும் தன்மை வாய்ந்தது. காற்று என்றால் வாயு. ஒட்டி என்றால் நீக்கும் சக்தி. இதைப்போல் பல நல்ல தகவல்கள் உள்ளன.
“காலை விளாங்கனி கடும் பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்பரேல் காலை ஊன்றிக் குனிந்து நடந்தவன் கோலை எறிந்து குலாவி நடப்பரே" சித்தர் ஒருவரின் அருமையான Lift 6i
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் நான் தருவேன் கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூய்மணியே
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா" உணவுக் கலாச்சாரம் பக்திப் பாடலிலும் உள்ளது.
ஆண்டவனால் உலகம் படைக் கப்பட்டபொழுது உணவு அதிகளவு உண்பவர்களுக்கு அங்கு மருந்தும் படைக்கப்பட்டு உள்ளன. நாங்கள்
நாவுக்கு ருசியானதை உட்கொண்டு

மருந்துப் பதார்த்தத்தை நீக்கி விடுகின்றோம். உதாரணமாக, முக் கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை எடுத்துக் கொள்வோம். நாங்கள் இனிப்பான பலாப்பழச் சுளை களை ஆசைதீர உண்கின்றோம். அளவுக்கு அதிகமாக உண்டால் வயிற்றுக்குத்து ஏற்படுகின்றது. நாம் என்ன செய்கின்றோம்? மருத் துவரை நாடுகின்றோம். அது அவசியமில்லை. பலாப்பழத்தினுள் இருக்கும் பலாக்கொட்டைகள் இரண்டை நறுநறுவெனப் பச்சை
மூலிகையின் பெயர்
அகதி (தில்லை)
அகத்தி அக்கந்தம் (தான்றிமரம்) அங்காரவல்லி (குறிஞ்சா) அங்குரோசனம் அசமதாகம் (ஒமம்) அச்சமம் அச்சகம் (நீர்முள்ளி) அச்சாணிமூலி (உத்தாமணி) அச்சுரம் (நெருஞ்சில்) அடாசனி (புளியாரை) அசோணம் (சவரிலோத்திரம்) அசோகம்
அச்சத்தி (கத்தரி) அனிச்சை (நாகமல்லிகை) அணிமுலை (பூசணி) அண்டகம் (குப்பைமேனி) அதிமதுரம் (அதிங்கம்) அதிகும்பை (கையாந்தகரை) அதிகோலம் (அழிஞ்சில்) அதிபசமி (கொன்றை) அத்தி அத்தகோரம் (நெல்லி) அத்திரம் (நீர்முள்ளி) அத்துலாக்கி (கருஞ்சீரகம்) அமுக்கிரா அமுதபுட்பம் (சிறுகுறிஞ்சா)
கலப்பை 42 0 ஐப்பசி 2004 D 53
யாக உண்டால் வயிற்றுக்குத்து வர வாய்ப்பில்லை. மாங்காய் அதிக மாகச் சாப்பிட்டவர்க்கு அதனுள் இருக்கும் மாங்கொட்டை வித்துப் பிஞ்சின் வெள்ளைநிற மேல்பாகம் உடனடியான அருமருந்து.
தமிழ் மருத்துவ ஆராய்வாளர் களே. ஆர அமரச் சிந்தியுங்கள். முயற்சியுங்கள். வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.
Botanical Name
Exeaecaria agollocha Coronilla grandiflora Terminalia Periploca sylvestris Circuma angustifolia Sisson ammi lanethum Sowa POmmerCullia
Barleria
Cynanchum Tribulus terrestris
Oxalis
Trichosanthes Uvaria longifolia Solanum
Justicia
CuCubita
Acalypha Glycyrrhiza glabra (Licorice) Eclipta
Alangium
Cassia
Ficus racemosa Phyllanthus Aconitum Heterophyllum Nigella (cummin) Pysalis Fexusa Periploca

Page 29
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 54
அம்மான் பச்சரிசி அயமி (வெண்கடுகு) அயவாரி (வசம்பு) அயமரம் (அலரி) அயிகம் (ஊமத்தை) அயிரியம் (நெட்டி) அரக்கம் (நன்னாரி) அரணியா (காட்டுக்கரணை) அரச மரம் அரத்தோற்பலம்
அரத்தை அரலை (கழலைக்கட்டி) அரவிந்தம் (தாமரை) அரளி (பீநாறி) அரிடம் (கடுகுரோகிணி) அரித்திரம் (மஞ்சள்) அரிமஞ்சரி (குப்பைமேனி) அரிநெல்லி அரிவாள்மணைப்பூண்டு அரீடம் (கடுகுரோகிணி) அருகசனி (பேரேயம்) அருகனி (பிரண்டை) அருக்கம் (எருக்கு) அர்ச்சுனம் (மருதம்) அருணம் (எலுமிச்சை) அருளரசி (குடசப்பாலை) அருளலம் (அழிஞ்சில்) அருளுறுதி (வேம்பு) அரேசகண்டு(கருணைக்கிழங்கு) அலகுபனை
அலரி அல்லாரி (வெள்ளல்லி) அல்லி (ஆம்பல்) அல்லிகம் (பேய்க்கொம்மட்டி) அவகதவாய் (கீழ்காய்நெல்லி) அழிஞ்சில் (செம்மரம்) அறுகம்புல் அறுபதம் (கையாந்தரை) அறைக்கீரை அனிச்சம்விரை அனிசு (பெருஞ்சீரகம்) அனுகம் (செஞ்சந்தனம்) அன்பகர் (சமுத்திரயோகி
Euphorbia hypericifolia Mustard sinapis ACOrus calamus Oleander
Datura Aeschynemene aspera Hemidesmus indicus Dracontium polyphyllum Peepul / Ficus Nymphaea rubra Alpinia galanga Sansevara Zeylanica Nelumbium speciosum SterCulia foetida Helleborus niger Circuma longa (saffron) Acalypha indica Cicca disticha Sida lanceolata Black hellebere Elettaria Cardamum (cardamom) Cissus quadrangulus Asclepias gigantea Terminalia alata Ĉitrus limetta riss (Lime) Holanhen codage Alangium decapetalum Melia azadirachta (margosa) Dracontium polyphyllum Borrassue flabelliformis Nelium odorum (oleander) Nymphaea stellata Nymphaea rubra (Lily) Cucumis colocynthis Phyllanthus Alangium decapitalum Cynodion dactylion Eclipte prostrata Amaranthus tristis Rhinacanthus Communis Illicium anisatum (anise) Pterocarpus Santalinus Convulvulus

அகில் அடுக்கு மல்லிகை அழிஞ்சில் அளத்துப்புல் அளத்துப்பூளை அந்திமந்தாரை அபின்
அப்பிரகம் அப்பைக்கோவை
அவரை அவுரி (நீலிப்பூண்டு)
அகத்தி-அகத்தி இலை உடல்
வெப்பத்தைச் சமநிலையில் வைத் திருப்பதற்கு உதவும் தன்மை வாய்ந்தது. அதில் 63 சத்துக்கள் உள்ளன. 100 கிறாம் இலைகளில் 1130 மில்லிகிறாம் கல்சியம் 80 மில்லிகிறாம் மணிச்சத்து 39 மில்லி கிறாம் இரும்புச் சத்து 9000 மில்லி கிறாம் விட்டமின் ஏ-யும் 169 மில்லி கிறாம் விட்டமின் சி-யும் உள்ள தாகக் கூறப்படுகின்றது. அது நல்ல கண்பார்வையையும் அபரிமிதமான சிந்தனா சக்தியையும் தரவல்லது. அளவுக்கதிகமான காப்பி, தேநீர் மதுபானம், போதைவஸ்து போன்ற குடிபானங்களால் உண்டாகும் உபா தைகளைச் சமனாக்கிக் காப்பாற் றும் சக்தி கொண்டது. அகத்தி யிலையைப் பாசிப் பயறுடன் சேர்த்து உணவாக்கி 2 வாரங்கள் உண்டால் இருதய நோய்கள் குணமாகும்.
அகில்- கல்லீரலில் பித்தநீரைப் பெருக்கும் ஆற்றல் இதனிடம் உண்டு. அகிற்கட்டை கபாலக் குத்தைக் குணமாக்கும் தன்மை வாய்ந்தது. முட்கள் நிறைந்த சதுரக்
அவுரி- அவுரி இலை விஷக் கடிகளைக் குணமாக்கும் தன்மை வாய்ந்தது.
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 55
Xylaloo (eaglewood) Arabian Jasmine Alangium Pommerullia Cornucopice Illecebrum brachiatum Polyanthes tuberosa Papaver Somniferum Mica / Talc Bryonia Rostrata Dolichi (Phaseoli) Indigofera tinctoria
அல்லி அல்லி விதைகள் சுக்கில விருத்திக்கு உகந்தது.
அமுக்கிரா கிழங்கு:- தாது புஷ்டி ஏற்படுத்தும்.
அம்மான்பச்சரிசி - மலபந்தத் துக்கு நல்லது.
அதிமதுரம்-முடிவளர உதவும்
அத்திப்பட்டை- பெண்கள் உதிரப்பெருக்கைக் கட்டுப்படுத்தும்.
அமுத புட்பம் :- சிறு குறிஞ் சாவுக்கு மறுபெயர் அமுதபுட்பம். நீரிழிவு வியாதியைப் போக்கவல்லது.
அருகனி- பிரண்டைக்கு மறு பெயர் அருகனி. மூல நோய்க்கு மருந்தாகும்.
அப்பிரகம் :- கருங்கல் பாறை யுள்ள இடங்களில் உள்ள கிணற்று நீரில் இந்த அப்பிரகம் (Mica) நிறைய உள்ளதால் வேற்று இடங்களில் வசிப்பவர்கள் அத்தண்ணிரைப் பருகினால் சிறுநீர் எரிவுடன் பல அசெளகரியங்கள் ஏற்படும். உடனடியாக தேசிக்காய் சாறு கலந்த நீராகாரம் சாப்பிட்டால் குணமாகிவிடும்.
.தொடரும்

Page 30
பச்சைப் பசேல் என்ற வயல்கள். வாழைத் தோட்டங்கள், கரும்புத் தோட்டங்கள் என்று கண்ணுக்கு எட்டியவரை பகிடையான கிராமம். வாய்க்கால் வரம்புகளில் பெரி பவர் பரமசிவம் குடைபிடித்துக் கொண்டு நடந்து வரும் அழகே தனிதான். பரம்பரை பரம்பரை பாய் சுற்றம் சூழ வாழ்ந்து பழகிய மனிதர். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் சென்னைப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கும் - பழக்க வழக்கங்கள் உயர்வாக இருக்கும் என்று பிள்ளைகளும் மனைவியும் வற்புறுத்தியால் வேறு வழியின்றி சென்னை மாநகருக்கு இடம் பெயர்ந்தவர் இவர்.
பரமசிவத்திற்குப் பிடித்தபடி கிணற்றுடன் கூடிய பெரிய இடத்தில் தனிவீடாக வாங்கப்பட்டது. வரு டங்கள் உருண்டோடின. எப்போ தும் தனது கிராமிய வாழ்க்கையின் மேன்மையையும்-நகரவாழ்வின் அனைத்தையும் எண்ணி எண்ணிப் பெருமூச்சு விடுவார். தனது கிரா
மியச் சொத்தில் பாதியை விற்றே நகர வீடு வாங்கப்பட்டது. பின்ளை களின் பள்ளிப் படிப்பு-கல்லுரரிப் படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு களுக்காக மீதிச் சொத்துகளும் விற்றுத் தீர்ந்தது. ஒன்றை இழந்து தானே ஒன்றை அடைய முடியும் உயர்கல்விச் சொத்து, பிள்ளை களுக்குக் கிடைத்துவிட்டது என்ற திருப்தி பரமசிவத்துக்கு.
வருடா வருடம் கிணற்று நீர் வற்றிக்கொண்டே வந்தது. காலை மாலை தவறாமல் உடல் குளிரக் குளித்தவருக்கு தினம் ஒரு தடவை குளிப்பதும் காக்காய் குனிப்பாகி விட்டது. கிராமத்து வீட்டைப் போன்றே இங்கும் கிணற்றைச் சுற்றி காய்கறித் தோட்டங்கள் போட்டு நன்கு பராமரித்து வந் தார். கிணற்றில் நீர்மட்டம் குறையக் குறைய பயிர்களின் எண்ணிக் கையும் குறைந்தது - இறுதியில் பசுமைத் தோட்டம் கானாப்வே போய்விட்டது.
தண்ணfர்ப் பிரச்சனை பரம
 

சிவத்தின் தலையான பிரச் ச  ைவினய T எனது. விரக்தி வரும்போதெல் லாம் கிராமத்துக்கு மீளக் குடியேறுவதையே விவா திப்பார் விடுமுறை நாட் | களென்றால் தண்ணிர் -
தண்ணீர் என்ற பட்டி மன்றம்தான் நடக்கும். ஒவ்வொருவரும் தமது
&९
டுமா மழை இல்லை? முழுத் தமிழ்நாடுமே மழை இன்றித் தவிக்கிது நமது கிராமத்தில் குறு வைச் சாகுபடியும் நிறுத் தப்பட்டுவிட்டது வளம் மிக்க வயல் நிலங்கள் வீட்டு மனைகளாகவும் - கல்லுரரி வளாகங்களா
அறிவுக்கு எட்டியபடி வாதாடுவார்கள். பல்கலைக் கழகமாக - நல்லதொரு விவாத மேடையாக இவர்கள் வீடு எப் போதும் கலகலப்பாக இருக்கும்.
"மாதம் மும்மாரி பொழிந்து மூவேந்தர் காலம் வளம் மிக்கதாக இருந்தது. எங்கள் காலத்தில் மழை குறைந்தாலும் பருவமழை பொய்த்த தில்லை. இப்போது பருவமழையும் பொய்த்து - பருவம் தவறியும் கூட மழை பெய்வதும் குறைந்துகொண்டே வருகின்றது. கிராமத்தைவிட்டு ஒரன் வந்தோம் என்றிருக்கிரது" இது பரம சிவத்தின் குமுறல்,
கவும் - கனரகத் தொழிற் சாலையாகவும் மாறிவருகின்றன. நிலத்தடி நீர் மீ அடிக்குக் கீழ் போய்விட்டதாம். மேலும் ஆழ மாக்கினால் உப்புநீர்தான் கிடைக் குமாம், கனாமி என்னும் ஆழிப் பேரலை வந்தபின் உப்பு நீரூற்றும் அதிகரித்துள்ளதாம். வற்றாத ஜீவ நதிகளும் வற்றிவிட்டன. ஆடிப் பெருக்குக்கு காவிரிப் படுகையில் கிணறு தோண்டி நீராடிய பரிதா பத்தைத் தொலைக்காட்சியில் காட் டினார்கள்" - இது முதல் மகனின் விTதம.
"அப்பா, உலகமே மாறிவரு கிறது. நாமும் அதற்கு ஏற்றவாறு

Page 31
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 58
நம்மை மாற்றிக்கொள்ள வேண் டியதுதான். மனிதன் மாத்திரமல்ல, ஜீவராசிகளுக்கே அத்தியாவசிய மான காற்றும் - நீரும் இலவச மாகக் கிடைப்பவை என்றுதான் படித்திருக்கிறோம். ஆனால் தற் போதைய நிலை என்ன? சுற்றாடல் மாசடைந்து வளிமண்டலத்தின்
காற்றோடு கலப்பதற்காக பாரிய இயந்திரங்களை அமைத்திருக்கி றார்கள். பூமியின் வெப்பமே அதி கரித்து வருகிறதாம். துருவங்களின் பனிப்படலங்கள் உருகி கடல் மட்டம் அதிகரிக்குதாம். சூரியக் கதிர்களை வடிகட்டி அனுப்பும் ஓசோன் படலத்திலும் ஒட்டை விழுந்துள்ளதாம். குடிநீர்ப் பிரச் சனையும் பெரிய சவால்தான். துருவப் பகுதியில் உள்ள பெரிய பனிப்பாறைகளைக் கரைசேர்த்து குடிநீர் பெறும் நாடுகளும் உண்டு. கடல்நீரையே குடிநீராக மாற்றும் பல நாடுகள் உண்டு.” - இப்படி
"பேசிப்பேசி தொண்டைத் தண் ணிரும் வற்றப் போகிறது. காப்பி சாப்பிடுங்கள்” என்று பாட்டி எல்லோருக்கும் பரிமாறுகிறாள். "ஏன் இந்த மழை பொய்த்தது? இந்த நாட்டில் அநியாயம், அக்கிரமம், அதர்மம் தலைதூக்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் அடிதடி - குத்து வெட்டு, கொலை, கொள்ளை, போட்டி, பொறாமை, கற்பழிப்பு, நம்பிக்கைத் துரோகம் என்று கலிமுற்றிய செயல்கள். மனிதன் மனிதனாக இல்லை. படைத்த இறைவனையே மறந்துவிட்டான் மனிதன். நாட்டில் ஒரு நல்லவன் இருந்தாலே எல்லோர்க்கும் பெய்ய வேண்டிய மழை, கற்புள்ள பெண் பெய் எனச் சொன்னாலே பெய்ய வேண்டிய மழை இப்போது எங்கே போனது? வருணபகவானின் மனம்
குளிர யாகங்கள் செய்தார்கள், மனம் உருகிப் பிரார்த்தனை செய் தார்கள் - இனிய இராகங்களைப் பாடியே மழை பெய்வித்தார்கள்! இது பாட்டியின் அங்கலாய்ப்பு.
"பாட்டி மழை குறைந்து போன தைத் தவிர்க்க முடியாது. இது அறிவியல் ான உண்மை, சனத் தொகை அதிகரிக்க அதிகரிக்க காடுகள் அழிக்கப்படுகின்றன. பூமித் தாயை மூடி நிலத்தடி நீர் ஆவியாவதைத் தடுக்கும் வனப் போர்வைகள் அகற்றப்படுகின்றன. இதனால் நீரூற்றுகள் மற்றும் ஒடும் நதிகளும் வற்றுகின்றன. நிலத்தடி நீர் மட்டமும் கீழே போய்விடு கிறது. நகரங்கள் சீமெந்துக் காடுக ளாக மாறுகின்றன. இடையிடையே பெய்யும் மழைநீரைக் கூட இங்குள்ள சீமெந்துப் போர்வைகள் தடுத்து விடும். இதனால் எப்படி நிலத்தடி நீர்மட்டம் உயரும்? எங்கள் வீட்டுக் கிணறு வற்றிக் கொண்டு வருவதற்கு இதுதான் காரணம். சென்னை மாநகரின் சனத்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. எம்மைப் போல கல்வி தேடியும் மற்றும் வேலை வாய்ப்புக் காகவும், அரசு அலுவலகங்கள் வங்கிகள் - தலைமை நிறுவனங் கள் நீதிமன்றங்கள். என எல்லாமே இங்கு மையப்பட்டு இருப்பதாலும் இது தவிர்க்க முடியாதது இவர்களின் தேவைகளுக்காக அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. 300-600 அடி வரை ஆழ்குழாய்க் கிணறுகளும் உள்ளே நீள்கின்றன. இராட்சதப் பம்புகள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ் சப்படுகின்றன. நமது கிணற்று நீர் வற்றாமல் இருக்குமா?" - இது மகளின் சமாதானம்.
“எதைச் சொல்லி என்ன பயன்? இதற்கு என்னதான் தீர்வு? முதலில் எமது கிணற்றை இன்னும் பத்து அடிகளாவது ஆழப்படுத்திப் பாருங்கள். பொதுமக்களில் அக்

கறை இல்லாமல் இந்த அரசாங் கங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டா இருக்கின்றன?” என்று பரமசிவம் குரல் கொடுக்கிறார்.
“அரசுகள் வேடிக்கை பார்க்க வில்லை அப்பா, எதிர்கால நன்மை கருதி பல திட்டங்களைச் செயற் படுத்திக்கொண்டேதான் வரு கின்றன. பாரிய அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வைக்கிறார் கள். புதிதாகக் காடு வளர்ப்புத் திட்டம், காடுகளைப் பாதுகாக் கும் திட்டங்களைச் செயற்படுத்து கிறார்கள். பிராந்திய ரீதியாகவும், தேசிய அளவிலும் நதிகளை இணைத்து கடலுள் விரய மாகும் நீரைத் தடுக்கத் திட்ட மிடுகிறார்கள். நகரங்களில் மழை நீர் சேமிப்புத் திட்டங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முனைகிறார்கள். விவசாயத்தைப் பொறுத்தவரை சொட்டு நீர்ப் பாசனம் போன்ற “சிக்கனமான பாசன முறைகள்” மற்றும் வறட் சியைத் தாங்கி குறுகிய காலத் தில் பெரு விளைச்சலைத் தரக் கூடிய பயிர் இனங்களைக் கண்டு பிடித்தல் போன்ற ஆராய்ச்சி களையும் செய்கிறார்கள்.
ஒடும் கார்மேகத்தில் இரசாய னப் பொடியைத் தூவிக்கூட மழை பொழிவிக்க முயற்சி செய்கிறார்
கள். இவையெல்லாம் வெற்றி பெற்று, ஆற்றுமணல் வியாபார மையங்\
களாக மாறியுள்ள பகுதிகளில் நீர் பாய்ந்து ஓடவேண்டும், சிலந்தி
'', ለ
li, fi ii ii ii, 9a, u 3, i '.: 1 {}} *
a
கலப்பை 42 0 ஐப்பசி 2004 0 59
கிடக்கும் பாசனக் குளங்கள் நிரம்பி வழிய வேண்டும். செவ் வாய்க் கிரகத்திலேயே தண்ணிர் தேடும் விஞ்ஞானிகள் இதற்கு மாற் றாக ஒரு வழி தேடாம லா போவார்கள்! தென்றல் காற்றை இரசாயனத் திரைகளில் தடுத்து அதன் ஈரப்பதத்தைக் குளிரவைத்து, நீரூற்றுகளாக உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வீண் விரயம் செய்யாமல் முதலில் வீட்டில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தப் பழகுங்கள்-மீண்டும் பெரிய மகன் விவாதித்தான்.
“நீரை இதைவிடச் சிக்கன மாகப் பயன்படுத்தினால் வீடே நாறிப் போகும் புறத்தூய்மை நீரால் தான் சாத்யமாகும். இதையெல்
f
擎 t
t
մ

Page 32
கலப்பை 42 0 ஐப்பசி 2004 () 60
லாம் விட்டுவிட்டு நடக்கக்கூடிய தைச் சிந்தியுங்கள். நாங்கள் இந்த வீட்டிற்கு வரும்போது 20 அடிக்கு மேல் இந்தக் கிணற்றில் நீர் இருந் தது. எனவே இன்னும் சிறிது ஆழ மாக்கினால் கண்டிப்பாக நீர் இருக்கும். முயற்சி செய்வோமே” என்று அப்பா கெஞ்சுகிறார்.
"அப்பா, கிணற்றை ஆழமாக் குவது இலகுவான காரியம் அல்ல. ஏற்கனவே நீர்மட்டம் குறைந்த தால் வெளியே வைத்திருந்த மோட் டார் பம்பை கிணற்றிற்கு உள் ளேயே இடையில் பொருத்தியுள் ளார்கள். மேலும் ஆழப்படுத்தி னால் பெரிய ஜெட்டு பம்புதான் போடவேண்டி இருக்கும். எப் படியும் ஒரு வாரத்துக்குள் உரிய வர்களை அழைத்து வருவோம். அவசரப்படாதீர்கள். நாங்கள் போய்வருகிறோம்" என்று பிள் ளைகள் அப்பாவைச் சமாதானப் படுத்திவிட்டு வெளியே கிளம்பி விட்டார்கள்.
கிராமத்தில் இருந்து கந்தசாமி வருகிறார். குடும்பத்தில் ஒருவ ராக - நண்பராக - சேவகராக இருந்தவர். கிராமியச் செய்திகளை நேரடி ஒலிபரப்புச் செய்யவே இங்கு வருவார். பரமசிவத்திற்கு நண்பரைக் கண்டதும் புதிய உற்சாகம் பிறந்தது. தண்ணிர்ப் பிரச்சனையால் தாங்கள் படும் சொல்லொண்ணாத் துயரங் களையும் - கிணற்றை ஆழப்படுத் துவதில் எழுந்த சர்ச்சைகளையும் கூறினார். இறுதியில் இருவருமே சேர்ந்து தூர் வாரத் தொடங்கி னார்கள். நீணட ஏணி மூலம் கீழே இறங்கி சகதி மண்ணை பரமசிவம் அள்ள, மேலிருந்தவாறு கயிறு கட்டிய மண் வாளியை கந்தசாமி இழுத்துக் கொட்டிக் கொண்டிருந்தார். சகதி மண் மலை போலக் குவிந்தது. ஊற்றுக் கண் திறந்து நீர் சலசல என ஊறியது.
"பரமசிவம் பிடிவாதக்காரன் அவன். நினைத்ததைச் சாதிக்கா மல் விடமாட்டான். பிள்ளைகள் எவ்வளவு தடுத்தும், கந்தசாமி வந்தவுடன் இளமைப் பொலிவுடன் கிணற்றுக்குள் இறங்கி விட்டானே" இது பாட்டியின் பெருமிதம்.
தண்ணிர் ஊறும் சல சலப்புக் கேட்டு மனைவியும் ஓடி வந்து கிணற்றை எட்டிப் பார்த்தாள். முழங்கால் வரை தண்ணிருக்குள் தனது கணவர் நின்று கொண்டு வெற்றிக் களிப்போடு தொடர்ந்து தோண்டுவதைக் கண்டாள். "போதும் ஏறுங்க, களைத்துப் போய் விடுவீங்க” என்று கத்தினாள். “இன்னும் இரண்டு அடி ஆழப்படுத்தி விடுவோம் என்று தொடர்ந்தார் பரமசிவம்.”
இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. "தடார், தடார்” என்ற சத்தத்துடன் மண் சரிந்து மூடியது. மண் சரிந்து விழுந்த வேகத்தில் மேலெழுந்த தண்ணிர், பதறிப்போய் கிணற்றை எட்டிப்பார்த்த பரமசிவத்தின் மனைவியின் முகத்தில் தெறித்து அவள் குங்குமத்தை அழித்தது.
மருத்துவர் U.S. l. 66060for அவர்களை கடிதம் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற விரும்புவோருக்கு
மடத்துவீதி (பாரதி வீதி கட்டிங்) LirrojorigiC3sFif - 6 o5 oo 1.
65/T.Gué: o413,2344.276
\ 6035(3 Jaf : 93454 56 o56 .لر
 
 

3 icy 2.
ఫ్క్క శీ * ፮ቌቛና ഴ്ക് ళ
ஸ்இசி இயக் கொரலுக்
சஞ்சிகை
அவுஸ்திரேலியாவில் பாலம் என்ற புதிய சஞ்சிகை தீபாவளி தினத்தன்று வெளிவந்துள்ளது. சிட்னி, லண்டன், சென்னை என்ற இடங்களில் காரியாலயங்களைக் கொண்ட பாலம் சஞ்சிகை, ஒரு சர்வதேச சஞ்சிகையாகவே மலர்ந்திருக்கின்றது. ஐம்பத்து ஆறு பக்கங்களில் வெளிவந்த முதல் பிரதி பல வர்ணங்களுடன், பல படைப்புக்களுடன் சினிமாப் பகுதியையும் கொண்டுள்ளது. ஆழ்ந்து கிடக்கும் எமது மொழியை மீட்டெடுப்பதும், அந்தரத்தில் தவிக்கும் எமது இனத்தை அரவணைப்பதும் பாலத்தின் குறிக் கோளாகும். கலப்பை சஞ்சிகை அளவில் வெளிவரும் இந்த மாதாந்த சஞ்சிகையை $2.50க்கு பெற்றுக் கொள்ளலாம்.
/
gig. 6(5 YESVISION G66fluiG.
ஆசிரியருடன் தொடர்பு கொள்ள P.O.BOX-437,
Westmead, NSW 2145, Australia.

Page 33
பீரங்க புகையிரத நிலைய மொன்றில் "நித்திய குடிகாரன்” வகையைச் சேர்ந்த ஒருவனை போலீசார் விரட்டிக் கொண்டி ருந்தார்கள். அவனைச் சுற்றி அவன் குடித்து முடித்த "மினிக்குவாட்டர்” மதுப் போத்தல்களும் சிகரெட் கட்டைகளும் நிறைந்து காணப் பட்டன. " போத்தல் களைப் பொறுக்கிக்கொண்டு புகையிரத மேடையை விட்டு வெளியேறு” என பொலீஸ்காரன் உரத்து சத்தமிட்டான்.
"நான் ஏன் வெளியேற வேண்டும்? இது என் நாடு. ஜேர்மனியில் எங்கு வேண்டுமானாலும் படுப்பதற்கும் இருப்பதற்கும் எனக்கு பூரண உரிமையுண்டு. என்னை விரட்ட நீ யார்?" எனதூஷண வார்த்தைகள் பல கலந்து உரத்த தொனியில் வாதிட்டுக் கொண்டிருந்தான் நித்திய குடிகாரன்.
அந்தத் தொனி எங்கோ கேட்டது போல் இருந்தது. உற்றுப் பார்த் தேன். சந்தேகமே இல்லை. என் னுடன் ஒன்றாகப் பட்ட பின் படிப்பைத் தொடர்ந்த ஜேம்ஸ் சிமித், அவனருகில் சென்று "என் னைத் தெரிகிறதா?” எனக் கேட் டேன். கண்களைச் சுருக்கி அரு கில் வந்து பார்த்தவன், "பூரீலங்கா
நண்பனே, எப்போது பேர்லினுக்கு வந்தாய்” எனக் கேட்டு என் கைகளை இறுகப்பற்றிக் குலுக்கினான். அவனுடன் உறவாட இன்னொரு வன் வந்ததை ஜேர்மன் பொலீஸ் காரன் விரும்பவில்லை. உடனடி யாக அவனைப் புகையிரத நிலைய மேடையைவிட்டு வெளியேறு மாறு பொலீஸ்காரன் கடின தொனியில் மீண்டும் கட்டளை யிட்டான்.
“வா, வெளியே போவோம்” என ஜேம்ஸை அழைத்தேன். “ஒரு மினிக்குவாட்டர் மது வாங் கித் தருவாயா?” எனக் கேட்ட வாறே பின்தொடர்ந்தான்.
“என்ன நடந்தது உனக்கு ? இதுவென்ன கோலம் ?” என சுரங்கப் பாதையில் இருந்து வெளியே வந்ததும் கேட்டேன்.
“நண்பா, கை நடுங்குது. சீக் கிரம் மதுப்போத்தல் ஒன்று வாங்கித் தா, கதையைச் சொல் கிறேன்” என என் கைகளைப் பிடித்தான். உண்மையில் அவனது கைகள் இரண்டும் வெடவெடத்து நடுங்குவதை அவதானித்தேன்.
அல்க்ககோல் செறிவு குறைந்த மினிக்குவாட்டர் போத்தல் ஒன்றை அருகில் உள்ள பெட்டிக்
 

கடையொன்றில் வாங்கிக் கொடுத்தேன். ஒரே மடக்கில் போத்தலைக் காலி செய் தவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கதையைச் சொல்லத் துவங் கினான்.
ஜேம்ஸ் மிகுந்த புத்திசாலி. எதையும் விரைவில் கிரகித்துக்கொள்வான். ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் எனச் சாதிப்பவன். யாருடைய பேச்சையும் கேட்கமாட்டான். மற்றவர் கள் கருத்துச் சொல்வதையும் அனுமதிக்க மாட்டான். இதனால் பேராசிரியருடன் முரண்பட்டுக் கொண்டான். பல்கலைக் கழகத்திலும் பல எதிரிகளைச் சம்பா தித்துக் கொண்டான். விளைவு - பாதியில் படிப்பை முறித்துக்கொண்டதுடன் எந்த வேலையிலும் அவனால் நிலைத்து நிற்க முடியவில்லை. மனைவியும் குழந் தைகளும் விட்டுப் பிரிந்துவிட்டனராம். அவன் இப்போது வீடு வாசலற்ற நித்திய குடிகாரனாக நடைபாதையில் வாழ்கிறான்.
எனக்குத்தான் எல்லாம் தெரியும்; நான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணங் கொண்டவர்களுக்கு ஜேம்ஸின் வாழ்க்கை ஒரு பாடமாகும். எங்களில் எத்தனை பேர் மற்றவர்களை முழுமையாகப் பேச விடுகிறோம். மற்றவர் தன் கருத்தைச் சொல்லி முடிக்கும் முன்பே இடையில் வெட்டி, வெல்லப் பேசி, தான் சொல் வதே சரியென சாதிக்க முயல்கிறோம்.
மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல அவர்களுக்கும் சந்தர்ப்பம் தாருங்கள். நீங்களே அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தால் உங்க ளால் புதிதாக ஒன்றையும் கற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்களைப் பேசவிட்டுக் கேளுங்கள். புதிது புதிதாகப் பல விஷ யங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மற்ற வர்கள் பேசுவதில் நல்ல கருத்துக்கள் இருப்பதாகப்பட்டால் குறிப்பிட்ட அந்தப் பேச்சைப் பற்றியும் அவரைப் பற்றியும்
நான்
எனக்குத்தான் எல்லாம் தெரியும்;
சொல்வதைத்தான்
மற்றவர்கள்
கேட்கவேண்டும்
எனற எண்ணங் கொண்ட வர்களுக்கு ஜேம்ஸின் வாழ்க்கை 69(5 LJITLLDIT(5b.

Page 34
கலப்பை 42 D ஐப்பசி 2004 ) 64
உயர்வாகப் பேகங்கள். தன் பேச்சை மதிக்கும் ஒருவரை, பேசுபவர்க்கு மிகவும் பிடிக்கும். இதனால் நட்பு பவப்படும்.
தான் பிடித்த முயலுக்கு முன்றே கால் என்ற ரீதியில் பேசுவதால் சண்டைதான் எழும். இதுதான் ஜேம்ஸ் தன் மனைவி, பிள்ளை களைப் பிரிவதற்கு முக்கிய கார னமாய் அமைந்தது. எதிராளி முரட்டுத்தனமாய்ப் பேசுகிறார் என்று எண்ணினால், அவரது கருத்தில் நியாயம் இல்லை என்ற போதும் தற்காலிகமாக விட்டுக் கொடுத்து நகர்வதால் இறுதியில் நீங்களே வெற்றிபெறுவீர்கள். உங் களுக்குப் பிடிக்காததை அல்லது தவறான கருத்து என்று நீங்கள் எண்ணுவதை ஒருவர் சொன்னால், அதை முரட்டுத்தனமாக மறுத்து சத்தம் போட்டுப் பேசாதீர்கள் !
நிதானமாக மற்றவர்களின் உணர்ச்சி களுக்கு மதிப்பளித்து, புன்சிரிப் போடு, அவர் மனம் நோகாதபடி மெதுவாக உங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள். எவ்வளவு பெரிய முரடர் என்றாலும் உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பார். ஜேம்ஸ் முதலில் சறுக்கி விழுந்தது இங்கே தான். பேராசிரியரிடத்திலும் வேலைக்குச் சேர்ந்த இடங்களிலும் அவனால் அனுசரித்துப் போக முடியவில்லை. இதனால் வாழ்க் கையே சூனியமாகி இப்பொழுது தெருவோரத்தில் வாழ்க்கை நடத்து கிறான்.
அது சரி! வேதம் ஒதும் இவர் எப்படி? சொன்னபடி நடக்கிறாரா?
என நீங்கள் கேட்கக்கூடும். ஜேம் ளைச் சந்தித்தபின்பு முடிந்தவரை பின்பற்ற முயற்சிக்கிறேன். நீங்களும் முயற்சியுங்கள் வாழ்வு வளம் பெறும்
 

2612-16 Toongabbie Road, Toongabbie, NSW - 2146 ingen R — R.Ay" 5-irrir: WERTLeraruit tipen || Плућ чек. Првп.
Mr. 5rg H L". Hy krig I Work er's Compensation 5tT"Y. M. gir" | HC Liga Physiotherapy Argey THJE
Dr. Jey Chondron Dr. Shanthini Seelan, Dr. Thawa Selecan
UTC Ts
Opening Hours. Man-Fi. Don I Silm On Io Opi hone: 2 963 G 7757 Bulk Billing Open 6 Daya
9IGGiOSCEGÓlu II - figofilu filco ஈழத்துஎழுத்தாளர் சிசு நாகேந்திரனின் எழுதிய
அந்தக்காலத்து யாழ்ப்பாணம்
== اموال انتقلمlی) دخ

Page 35
Engaging Tamils. With Exciting Ente
A Dai Woa/ & fierratoria" for City), tric Music P gyrrves R Zades Prog///ries A You WWF (WWWW) yn:
A WIWIWITIŞ, SİVROPIC18,
E 57, Wrivia
E. Y.T. We West H.
Mys
i'r PMW) ar y Fancy Wales
E. E. Entry & Sir W. Fry
 

one 300 3.0. 74 International in 1978 is
www.sigaram.tv
(MSქON ĠHAN SWEZEA
: ETT FI DIFFETTI