கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2007.01

Page 1


Page 2
Thirtta Ygir's III Servica of Tarn II سمي --- தமிழ் பேணலில் பதின்மூறு வருடM
༥༧ ༦༧ གས་ན་་་་་་་:༼༦
அவுஸ்திரேலியா படிடதாரிகள் தமிழர் சங்கம் Tamil Competition - Australian Society of Graduate Tamils
அவுஸ்திரேலியா,நியூசிலாந்துதமிழ் ஊக்குவிப்புப்போழ2007
கடந்த 13 வருடங்களாக சிடினியில் நடைபெற்று வரும் ஒரேயொரு தமிழ் மொழிப் போடிடி, அவுஸ்திரேலியா - நியூசிலாந்து தேசிய நிலையில் நடைபெறும் ஒரேயொரு தமிழ்ப் போடிடியாகும்.
போட்டிகள் 7 வயதுப் பிரிவுகளில் 25 போடிடிகள் (சிடிவியில் மடீடும்),
பாடல்மனனப் போட்டி, பேச்சுப் போடிடி, வாய்மொழித் தொடர்பாற்றல், எழுத்தறிவுப் போடிடி, விவாதப் போடிடி, வினாடிவினா, தனி நடிப்பு. (தெரிவு செய்யப்படிட போடிடிகள் மடியூமே வெவ்வேறு மாநகரில் நடத்தப்படும்)
இந்த ஆண்டு தேசிய நிலையில் எழுத்தறிவுப் போடிடி, பாடல் மனனப் போட்டி, பேச்சுப் போடிடி என்ற 11 போடிடிகள் அவுஸ்திரேலிய, நியூசிலாந்தில் மாநில, தேசிய மடிடத்தில் நடத்தப்படியூ அவற்றிற்கு முதற்பரிசாக 11 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
இப்போரகளுக்கான முக்கியதிகதிகள்
விண்ணப்ப முடிவுத் திகதி: 15.06.2007 – fliess 30.06.2007 - சிடிணி தவிர்ந்த மற்றைய நகரங்கள்
28 & 29.07.2007 4 & 5.03.2007 - தமிழ் ஊக்குவிப்புப் போடிடிகள் - சிடினி நகர்
4.08.2007 - மாநில, தேசிய நிலை எழுத்தறிவுப் போடிடிகள்
12.08.2007 - பேச்சு, பாடல் மனனப் போடிடிகள் - மெல்போர்ன் நகர்
25.08.2007 - தமிழ் ஊக்குவிப்புப் போடிடிகள் - கண்பரா நகர்
மற்ற மாநிலங்களில் போடிடிகள் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
29.09.2007 - சிடினியில் தேசியப் போடிடிகள் (பாடல் மனனம், பேச்சு மடிடும்)
30.09.2007 - சிடினியில் பரிசளிப்பு விழா
தொடர்புகளுக்கு
உங்கள் தமிழ்ப் பாடசாலை நிர்வாகத்தினர் எமது இணையத்தளம்: WWW.kalappai.org SSITSISUSL1-fl: 043: 088 725/02 - 9758 7970
P.O Box 4040, Homebush NSW 2.140. E-mail as Ogt.tc.gmail.com Web: WWW, kalapplai.org
 
 
 

Hill|LIf]LI உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
hol) LUGO) LU அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும்
காலாண்டுச் சஞ்சிகை
Errollü olul : A Lus. S2.5)
ஆண்டுச் சந்தா F! -eitris) : A LIs. Sl().()() GolfIII fully, III : A\, L is. S20, (.)(.) O
பிரசுரிக்கப்படாத படைப்புக8ைாத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்புகொள்ள. Tele: (02) 47379007.
KALAPPA
P.O. Box 40, Horslebush South, NSW 214)
AUSTRALIA E-mail : kalappaiayahoo.com
இதழ் வடிவமைப்பு மித்ர ஆர்ட்ஸ் & கிரியேசன்ஸ்
g1 - 44 - 구호 31B
ノ ܢܠ
/ மனித மனத்தை உழுகின்ற `
உள்ளே.
தண்ணிர், தண்ணி, தண்ணிர் 2 காயத்ரி மந்திரம் பற்றிய சில
இலகுவான விளக்கங்கள்
புராணங்கள் படைத்திடுங்கள் நவீன புறநானூறு 15
வரிசைகள் - 15
உயர்வு 21
விடிவி - I 22
குடும்ப வன்முறை 31 வாழ்க்கை என்பது என்ன?
கனவா அல்லது நாடகமா? 33 புலம்பெயர்ந்த தமிழரின்
புனிதப்பணி. காலத்தின் கட்டாயத் தேவை! BE
கண் திறந்திட வேண்டும் 4.
சிந்தியுங்கள் சேமியுங்கள்
உதவுங்கள் یگان
சித்த மருத்துவம் 크
Rewenge 5
ஏ.ஜே. கனகரத்னா நினைவலைகள் 54
சைவ உணவும் சாத்விகமும் - II 83

Page 3
திண்னிர் எமது வாழ்விற்கு முக்கியமானது. எமது உடம்பின் குருதி முதற்கொண்டு எல்லா உறுப்புக்களிலும் அதிகமாக இருப்பதும் நீரே, ஒவ்வொரு நாளும் ஒரு மனிதனுக்கு மூன்று வீற்றர் நீர் தேவைப்படுகின்றது. இதனை நீராகவோ, குளிர்பானங்களாகவோ, உணவாகவோ உட்கொள்கின்றோம். தண்ணீர் அதிகமாகக் கிடைக் கின்றது என்பதனால் அதன் அத்தியாவசியத்தை தெரியாமலே இருந்து விடுகின்றோம். தாகமெடுக்கும் போது தண்ணிர் கிடைக்கா விட்டால்தான் அதன் அருமை எமக்குத் தெரிகின்றது. உண்ணாமல் பல நாட்கள் பிழைக்கலாம், ஆனால் நீர் அருந்தாமல் சில நாட்களே உயிருடன் இருக்கலாம்,
எமது நாடுகளில் கிணறுகளிலிருந்து நன்னீரைப் பெற்றோம். கிணறுகளில் ஊறும் இந்த நன்னீர் பல அரிய மூலகங்களைக் கொண்டி ருப்பது இயற்கை. இதில் இருக்கக்கூடிய "கால்சியம்' என்ற மூலகம் எமது பல்லுக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும். இப்படி இடத்திற்கு இடம் நீரின் தன்மையும் அதன் அரிய மூலகச்சேர்க்கை களும் வேறுபடுகின்றன. கடற்கரைக்கு அண்மித்த இடங்களிலுள்ள கிணறுகளில் உள்ள நீர் உப்பாகவும், உள்புற கிராமங்களிலுள்ள கிணறுகளில் நல்ல ருசியான நீரும் கிடைப்பது இயற்கை ஊருக்கு ஊர் நீரின் தன்மையும் சுவையும் வேறுபடுவதை தாங்கள் கேள்விப் பட்டிருக்கின்றோம். நகரப்புறங்களை எடுத்துக் கொண்டால், குழாய் நீரே பிரதானமாக காணப்படுகின்றது. இந்தியாவில் அரச ஊழியர் களைத் தண்டிக்கும் முறையாக தண்ணீர் இல்லாக் காட்டிற்கு இட மாற்றம் செய்வதாகக் கூறுவார்கள்,
இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் நாம் கிணறுகளைக் காண்பது அரிது. குழாய் மூலம் வருகின்ற நீர், நீர்த் தேக்கங்களில் சேகரிக்கப் பட்டுப் பின்னர் 'குலோரின் (Chloring) போன்ற மூலப்பொருட்களால் சுத்திகரிக்கப்பட்டு எமக்கு கிடைக்கப்பெறுகின்றது. அதிலும் தொற்று நோய்களும், கிருமிகளும் பரவிய வரலாறுகளும் உண்டு, அந்தக் குழாய் நீரை மீண்டும் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குடிக்கும்
 
 

கலப்பை 51 () தை 2007 D 3
r
வழக்க எம்மிடையே உண்டு எம்மில் சிலர் போத்தல்களில் அடைக்கப் பட்ட நீரையோ, குடிபானங்களையோ பாவிப்பதும் உண்டு.
இன்று மழை குறைய நீர்தேக்கங்களில் நீர் மட்டம் குறைகின்றது. அதேவேளை சனத்தொகை பெருகுவதனால் நீரின் தேவை அதிகரிக்கும் நிலை தோன்றியுள்ளது. மழை குறைந்ததன் காரணம் என்ன? எமது நாடுகள் அதீதமாக புதுப்பிக்க முடியாத சக்தியை விரயம் செய்வதினால் என்று அறியப்படுகின்றது. சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வருகின்ற நாடுகளும், அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளும் இந்த சக்தியை அவர்களுடைய நாட்டின் அபிவிருத்திக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றார்கள். இதனால் எமது சூழல் சமநிலை குலைந்து, அதிகமாக தீய வாயுக்கள் (Carbon Di Oxide, Carbon Monoxide, Sulphor Dioxide etc) Barassfisia, LIGSairpgar, இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கின்றது. இதனை பூreen house effect என்பார்கள். இதனால் வட, தென் துருவங்களில் குளிர்க்கட்டி களாக இருந்த நீர் உருகத் தொடங்கிவிட்டது. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரிக்கவும், அதனால் பல தீவுகளில் இருந்த மக்கள் உள் நாட்டிற்கு இடம்பெயர வேண்டியும் ஏற்படுகின்றது. அதேவேளை உலகின் மற்ற இடங்களில் அடமழை பெய்து, வெள்ளப் பெருக்கும், சூறாவளியும், அழிவுகளும் ஏற்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் காரணம் எமது சூழலின் சமநிலை குழப்பப் படுவதே அதற்கான காரணங்களை அறிந்து அதற்கு பரிகாரம் செய்யா விட்டால் எமது எதிர்கால சந்ததியினர் பல பாரிய விளைவுகளைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று சூழல் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கின்றனர். அத்துடன் எதிர்காலத்தில் நாம் குடிக்கப் போகும் நீர், சுத்திகரிக்கப்பட்ட கடல் நீராகவோ அல்லது சுத்திகரிக்கப்பட்ட எமது வீட்டுக் கழிவு நீராகவோ இருக்கலாம் என்பது தான் உண்மை.
நாளுக்கு நான் உளறிய கிணற்று நீரைப் பருகிய நாம், கத்திகரிக்கப் பட்ட எமது வீட்டுக் கழிவுநீரைப் பருகும் காலம் வெகுதொலைவில் இல்லை. இதை நினைத்துப் பார்க்கும்போது கஸ்டமாக இல்லையா ? நாம் என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நாம் பாவிக்கும் நீரின் அளவை குறைத்தும், நாம் பாவிக்கும் மின்சாரத்தை குறைவாகப் பாவித்தும் எமது எதிர் காலத்திற்கு ஓரள விற்கேனும் உதவலாம். இது நாம் ஒவ்வொரு வரும் செய்யவேண்டிய கடமையாகின்றது. இந்தப் பொன் விளையும் பூமியை காப்பாற்ற எம்மாலானதைச் செய்வோம்,

Page 4
ற்றி
娜娜迦” % % g。 % 欧阳”两剧j g % 岛勋娜娜 烟圈)心 研脚比心妍 姆心动J智密” 湖动錢初鄭 磁變翻翻姚弼 的g g g %西 娜學娜é例娜é SSS3 湖蹤獵劍
 

3.
கலப்பை 51) தை 2007 () 5)
அருளொடு செல்வம் ஞானம்
ஆற்றலும் அன்பும் பண்பும்
பொருளொடு பொறுமை ஈகை
பொருந்திடச் செய்வாய் போற்றி
ஆயுள் ஆரோக்கியம் வீரம்
அசைந்திடா பக்தி அன்பும்
தேயுறாத செல்வம் தந்து
தேவியே காப்பாய் அம்மா
சிமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழ்ச்சஞ்சிகையில் இப்பாடலைப் பார்த்தேன். அப் பொழுது காயத்ரி மந்திரத்தை அறிந்திராதபடியால் இது சக்திக் குரிய ஒரு பாடல் என நினைந்து மனனம் செய்தேன். பத்து வருடங் களுக்குப் பின்னர் சுவாமி சித்ய வானந்தர் அவர்கள் எழுதிய காயத்ரி என்னும் தமிழ் நூலைப் படித்த பின்னர் மேற்படி பாடல் காயத்ரி தேவி மீது பாடிய பாடல்
என அறிந்து வியப்படைத்தேன்.
இன்று உலகின் பல பாகங் களிலும் காயத்ரி மந்திரம் பிரசித்தி பெற்று வருவதைப் பார்க்கின்றோம். சிட்னி நகளிலேயே வருடந்தோறும் காயத்ரிக்கு விழா எடுப்பதைக் கண்டு மகிழ்ந்து, டனர் பங்குபற்று வனதக் காண்கின்றோம்.
இந்த வேளைகளில் இம்மந்திரத் தின் கருத்தையும் விளக்கத்தையும் மனதில் பதித்து ஒதுவது
பலனைத் தரும். இதன் கருத்தை
கூடிய
சுவாமிகள் மிக இரத்தினச் சுருக்க மாகத் தருகிறார் பார் நம் அறிவை துண்டுகிறாரோ அந்தச் சுடர் கட வுளின் ஒளியைத் தியானிப்பே"மாக
காயத்ரி மந்திரம் பகலவனுக் குரியது என்று சிலரும் காயத்ரி தேவிக்கு உரியது என்று சிலரும் கூறுவர். இதற்குரிய சரியான விளக் கத்தை சுவாமி தெளிவாகத் தந்தி
ருப்பதை பின்னர் பார்ப்போb.
மேலே கூறப்பட்டுள்ள தமிழ்ப் பாட வைப் பாடியவர் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனாலும் இதை மூன்று வகையான மக்க |ளுக்கு உகந்த மாதிரி பாடியுள் எார். காயத்ரி பந்திரத்தை தெரி பதவர்களும் அதில் தட்டமில்லா தவர்களும் இதை ஒரு சக்தியின் பாடல் என எண்ணிப் பாடிப்
li f'Gð73 ydy G 17 liv,
காயத்ரி மந்திரத்தை அறிந்த வர்களானால், இலெளகீக வாழ் வில் கூடிய பற்றுள்ளவர்கள், இல்
வாழ்க்கைக்கு உரிய செல்வம்,
貓

Page 5
2.
பொருள், வீரம், அன்பு எல்லாம் தரக்கூடியதாக அமைந்து இருக்கிற தென எண்ணி ஓதி வணங்கி பயன் அடைவர்.
காயத்ரி மந்திரத்தை முறையே ஒதி, கிரமமாக பாகம் முதலிய வற்றில் பங்குபற்றி வரும் அன்பர் கள் இப்பாடலின் உட்கருத்தை அறிந்து, பிறவிப் பயனடையும் நோக்குடன் இதைக் கையாள்வர். இன்று சிட்னியிலும் வேறு தமிழர் வாழும் ஊர்களிலும் இத்தகைய அன்பர்கள்தான் கூடுதலாக இருப் பதை நாம் காண்கின்றோம்.
பாடலின் முதலாவது வரியி லேயே இது காயத்ரி தேவிக்கு உரியது என்பதை தெளிவாகக் காட்டி அன்னைணப விளித்து துதி செய்கிறார். இரண்டாவது வரியில் விாம் இருள் கெட அருள்வி' என வேண்டுகிறார், காயத்ரி மந்திரத் தின் ஒரு தனிச்சிறப்பு வென்றால், எனக்கு, எனது என
& Tଞt &&!
தன்மையில் வேண்டாது. பன்
மையில், எல்லோருக்கும் சேர பலன் வேண்டி நிற்பது. இதைக் குறிக்கவே பன்மையில் எம்மையே ஆதரித்து பிரீம் இருள் கெட என வேண்டுகிறார். இங்கு இருள் என்பது ஆதித்தனின் உதயத்தால் அகற்றப்படும் இருளல்ல. எம்மை ஆன்மீக ழிெயில் போகவிடாது, எமது அறிவை மூடி இருக்கும் மாயையைக் குறிக்கிறது. எமது அஞ்ஞான மட்டுப்ே
இருள் அகன்றால் ஞான ஒளி நமக்குக்
கிடைக்கும் என்பதே பொருள். இம்மந்திரத்திற்கு முத் திரை போல் அமைந்திருப்பது இவ் விரண்டு வரிகளே என்றால் மிகையாகாது. மீண்டும் மூன்றா துெ வரியில், மும்மவம் ஆறுத்து ஞானம் முற்றிட விதிப்பாப் என அஞ்ஞான இருள் அகற்றும் வழி யையும் காட்டி கேட்கிறார். இங்கு மிலம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்பவற்றைக் குறிக் கின்றன. இம்மும் மலங்களையும் நீக்கி மெஞ்ஞானம் முழு வளர்ச்சி புற்று முதிர்ச்சி அடையச் செய் வாய் என வேண்டுகிறார்.
என்னென்ன எல்லாம் எமக்கு காயத்ரி தேவி தருவாள் என்பதை இப்பாடல் நன்கு காட்டுகிறது. நாலாம் வரியில், இம்மைwமில் இன்பம் எவ்வTம் இருந்திடச் செப் Wெ என்கிறார். அதாவது, இப் பிறவியில்ேயே மறுமைக்கும் உதவக் கூடிய பேரின்பத்தை தந்தருள்வாய் அம்மா என்பதே உட்பொருள்.
ஐந்தாம் வரியை இனிப் பார்ப் டோம், அருனோடு செல்வம். —**ђд05}уIћ -3y5ії уyrž வேண்டுகிறார். அருள் இறை
ஞானம், 1 κευά" εγχή என்பது அன்னையின் பருளைக் குறிக்கிறது. அன்பின் முதிர்ச்சியே அருள். அருள் மிகுந்த மனத்தினை உடையவர்க்கு இருள் சேர்ந்த இன் வுலக வாழ்வில் அலையத் தேவையில்லை என்கி றார் திருவள்ளுவர், என்றால் அழிந்து
செல்வம் போகும்
தன் இ
 
 
 

பொருள் செல்வத்தைக் குறிப்ப தில்லை. செல்வத்துள் செல்வமாக விளங்கும் அருட்செல்வத்தைக் குறிக்கின்றது.
மீண்டும் ஒருமுறை இவ்வரியில் ஞானம் என்னும் பதம் வருகின்றது. முன்பு மெஞ்ஞானத்தை கேட்டார். இப்போது அன்னையின் தன்மை யைக் குறிக்கும் ஆத்மீக ஞான மாகிய சொரூப ஞானத்தை கேட்கிறார். ஆற்றல் என்பது எமது நிலையுடைமையைக் குறிக்கும். அதாவது தனது பெருமிதநிலை
17றுபடாது, வரின் ஆளுமையைக் குறிக்கிறது. அன்பு என்பதை இலகுவில் விவ ரிக்க முடியாது. அது ஊற்றைப் போல் பெருக்கெடுக்கும் சிறப்புக் குரிய உணர்வாகும். இந்த அன் போடு சேர்த்து பண்பாட்டையும் வேண்டுகிறார்,
அடங்கி நடப்ப
ஆறாம் வரியில் பொருளொடு பெ'துமை, ஈகை பொருத்திடச் செப்பை'ப் என வேண்டுகிறார். பொருள்
என்பது ஆன்மீகப்
பாதையில் செல்போர், பரிவாகிய
அன்பினால் பெறப்பட்டு பிற உயிர்களது துன்பத்தை நீக்கும் அருளையே பொருள் என்பர்.
மற்றும் பொறுக்கும் பெருந்தன் ஒருநாளும்
கோபம் கொள்ளார். கோபத்தால்
மையை உண்டயோர்
வரும் பாவங்களும் அவரை அண்டாது. கொடுக்கும் தன்மை இல்லாதவன் கோடிச் செல்வம்
வைத்திருந்தாலும், ஒரு செல்வமும்
கலப்பை 51தை 2007/57
அவனிடம் அண்டாது கொடுக்கும் தன்மை இல்லாதவன் கோடிச் செல்வம் வைத்திருந்தாலும், ஒரு செல்வமும் இல்லாதவனேயே எனவே பொரு னொடு டெWதுமை, ஈகை எம்மிடம் பொருத்திடச் செப்வாப் என வேண்டுகிறார்.
ஒக்குமென்பர்.
கடைசி இரண்டு வரிகளில் ஆyள், ஆரோக்கியம், வீரமுடன் என்றும், என்னதான் தனக்கு தேர்ந்தாலும் ஆடாத, அசையாத பக்தி ஆன் ைWWம் என்றும் தோத ஆன்னையின் அருட்செல்வத்தை Koř žky a věů), o 3, M. Kvy v gyři vy என வேண்டுகிறார். எனவே நாம் அறிவை மட்டும் தாருங்கள் எனக் கேளாது ஆன்மீக
இன்றியமையாத,
வாழ்வுக்கு மேற்பாடலில் கூறிய அத்தனையும் தந்து எனமக் காப்பாய் என்பதே உட்பொருள்.
சுவாமி சித்பவானந்தர் காயத்ரி மந்திரத்தைப் பற்றி அதில் மூன்று பிரதான வினைச்சொற்கள் உள என்றும் அதை நன்கு அறிந்து விட்டால், மந்திரத்தை நல்ல விளக்கமாக அறிந்துகொள்ளலாம் என்றும் கூறுகிறார், "வரேண்யம்", தீமஹி', எனும் மூன்று சொற்களை எடுத்து விளக்குகிறார். ஓம் பூர் புவஸ் எU"வஹ தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
'ப்ரசோதயாத்
வினைச்
தியோ போ ந பிரசோதயாத்
-

Page 6
வரேண்யம் என்றால் வர்ணிப் பதற்குரியது, போற்றுதற்குரியது என்பது கருத்து இறைவனையோ இறைவியையோ எத்தனை சொற் களால் புகழ்ந்து பாடினாலும் அதற்கு முடிவே இல்லை. எனவே இடையறாது புகழ்ந்து கொண்டி ருக்க வேண்டும் என்பதுதான் வரேண்யம் என்கிறார். காயத்ரி
உருவத்தை கொடுத்து வணங்கி னாலும், அவை குறிப்பிடும் பதங் களின் அடிப்படைக் கருத்து உள் ளத்தில் பதிய வேண்டும். அப் பொழுது தான் உச்சரிக்கும் மந்தி ரத்திற்கு வலிமை வரும் என்பது சுவாமிகள் கருத்து,
தீமஹி என்பதற்கு தியானிப் போமாக என்பது கருத்து. காயத்ரி மந்திரத்தை பயன்படுத்தும் போது சிறிது நேரம் தியானம் செய்வது அவசியம் என்கிறார். நாம் வழி படும் தெய்வம் நமக்கு முன்னி ருக்கும் படத்திலோ, உருவத்தினோ வீற்றிருக்கிறது என உணர்தலே இங்கு தியான மாகும். இந்த உணர்வில் நிலைத்திருப்பதற்கேற்ப எமது ஆன்மீக வாழ்வும் உயர்கிறது என்கிறார் சுவாமிகள்,
ட்ரசேரிதாத் என்பது தூண்டு கிறது என்பதைக் குறிக்கும். முன் கூறிய இரண்டு செயல்களும் மனித னால் செய்யப்படுபவை என்றும், மூன்றாவது வினையாகிய துரண்டு தல் பரமாத்மாவின் செயல் என்றும், இதையே ஆன்றோர்கள்
அதனால் எனவும் சுவாமிகள் விளக்குகிறார்.
ஸ்விதர் எனும் சொல் சூரியனைக் குறித்தாலும், உயிரைத் தருகின்ற, உற்சாகம் ஊட்டுகின்ற, வாழ்வைச் செப்பனிடுகிற பொருள் எனவும் வருவதால் இது இறை வனையே குறிக்கிறது என்கிறார். உலக நடைமுறையில்
கருதப்பட்டாலும் பரதத் துவத்தில் இவை பரமாத்மனுக்கு பொருந்தியதாக அமைகின்றன என்கிறார் சுவாமிகள்.
சூரியன் எனக்
விைதுர் என்ற சொல் பெண் சக்தி யைக் குறிக்கிறது. சாவித்ரி, காயத்ரி என்பன சக்தியே எனவும் விளக்கு
பாலில் சாவித்ரி என்று
கிறார். பர்கஹ என்ற சொல் ருத் திரனுக்கு அமைந்த வேறொரு பெயர் எனவும் கூறுகிறார். வின்ஸ் ஸோ பாதிரியாரின் அகராதியில் பர்கர் எனும் பிரம்மா, விஷ்ணு, சூரியன் ஆகிய நால்வரையும் குறிக்கிறது.
சொல் சிவன்,
This article appeared in "Sydney
Gayatri Maha Yagna 2006”
என்று கூறினார்கள்
 
 
 
 
 

புராணக் கதைகள்; வேறு யூன. تھا ۔۔۔ ۔۔۔ سس ۔ 、_* 莒 F)u கதைகள்: இன்னுஞ்
இயல்புநிலைக்கு ஒவ்வாதன ஆத லின் நம்புதற்கிடமில்லை எனத்
தம்மைப் பகுத்தறிவுவாதிகள் எனச்
சொல்லிக் கொள்வோர் சிலர்
அறுதியிட்டுக் கூறுவதுடன் பழிக்க அந்தலைப்படுவர். அெதனை க்
கேட்டு மனந்தளும்பும் பொது மக்களும் உளர். റ്റ്
அன்புநெறிக் கதைகள் எல்லாம் வரலாற்று முறையாக நிகழ்ந்தேறி
. . .
i
| I31} தனிச் சம்பவங்கள். இ6 ற்றிற்
.1 ܩܫ
சிலர் அன்புநெறிக் கதைப்பொருள்
--
ർ
எ
. சாதாரண மனித ஆற்றலுக்கு
. . . அப்பாற்பட்ட நிகழ்வுகளுக்கும் இடமுண்டு என்பதை முறறாக
nக்கிவம் யாதே. எமது மறுக்கிவிம (புட் த. எமது
எதிர்காலம் எப்போதும் நாம்:
திட்டமிட்டபடி நடப்பதில்லையே. முயன்றும் எமது
=
சக்திக்கு அப்பாற்பட்டு எமது எண்னத்துக்கு மாறாக
எத்து ணை
விடுவதும் உண்டன்றோ ஏன்?

Page 7
கலப்பை 51 D தை 2007 () 10
வாழ்விலே திருப்பங்கள் ஏற் படலாம். ஆனால், அற்புதங்கள் என்பதை ஏற்க முடியாதென்பர் சிலர், அற்புதங்கள் எமது நாட் டிலோ அல்லது எமது சமய வரலாற்றிலோ மட்டும் நிகழ்ந்தன அல்லவே. பிற இடங்களிலும், மற்றைய சமய சமூகங்களிலும் அற் புதங்கள் நிகழ்ந்தனவாகச் சொல் லப்படுகிறதே. சில போலிகளும் நிகழ்வதுண்டு. எந்தத் துறையிற் போலிகளில்லை? இயற்கையிலும் போலிகள் இருக்கின்றனவே! ஒரறி வுயிரிலுங்கூட உதாரணம் உண்டு. பிணி தீர்க்கும் மூலிகைகளைப் போலப் போலிப்பூடுகள் காணப் படுகின்றன அன்றோ! போலிகள் சில இருப்பதனால் போலி எனத் தூபனவற்றையும்
a gigas in
ஒதுக்கிவிடலாமா?
கண்ணாற் கண்டதையே ஏற் போம் எனப் பிடிவாதம் பண்ணு வோர், நுண்ணுயிர்களும், சூரிய மண்டலத்துக்கு அப்பால் பல கோடி ஒளியாண்டுத் தூரத்தில் மிகமிகச் சக்தி வாய்ந்த பல விண் மீன்களும் உன என யாரோ சொல்ல ஏற்கிறார்கள்தானே. விஞ்ஞானி சொன்னால் ஏற்கலாம்; ஆன்மீக ஞானி சொன்னால் மறுக்க வேண்டுமா? மனிதருக்கும் மேம்பட்ட சக்திவாய்ந்த வாய் விடாப் பிராணிகள் இவ்வுலகில் இல்லையா? வெளவால்கள் எமது செவிப்புலனுக்கும் எட்டாத அதி வேக ஒலியலை எழுப்பி வழி அறிகின்றனவே! மோப்ப நாய்கள்
போ  ைத ப் பெ ா ரு  ைள
மனந்தறிகின்றன; வலசை போகும் (Migrating birds, whales allclimany others) தாம் போகவேண்டிய இடங் களுக்குத் தவறாமற் போய்ச் சேர்வது இல்லையா?
புறாக்கள். பிராணிகள்
முனிவர்கள், சித்தர்கள் சுவா சித்தலின்றிப் பல்லாண்டு கால தியானத்திலீடுபட்டிருந்த தாக நூல்கள் கூறும், ஏன், சில ஆண்டுகளுக்கு முன் சிறு பெட்டி யிற் படுக்க வைத்து, நிலத்தி னுள்ளே புதைத்தது மட்டுமன்றிக் காற்றே புகாதவாறு விஞ்ஞான முறையில் முன்னேற்பாடுகள் பல செய்திருந்தனராம். சிலநாள் கழித்துத் திறந்தபோது சாதாரன மான ஆள்போல இந்தியாவிலே ஒரு யோகியும், மேலை நாட்டிலே
மாகத்
ஒரு மந்திரவாதியும் வெளியே வந்ததாகப் பத்திரிகைச் செய்திகள் இருந்தன. பலரும் வாசித்திருப்பர். தாம் விரும்பும்போது பல் லாண்டு கால எதிர்வு கூறுவோர் பற்றியும், வெகு தூரத்துக்கப்பால் நிகழ்வதை அகக்கண்ணாற் கண்டு கூறுவோர் பற்றியும் கேள்விப்பட் ருக்கிறோம். இங்கனங் காலம் இடங் கடந்து அறியுந்தனியாற்ற லுடைய சித்தர்களும் ஞானிகளும் உளர் என்பதை தள்ளல் இயலாது.
வாளா புறத்
இனி, பக்திநெறிக் கதைகளை வரலாற்று நிகழ்வோ புனைவோ எனப் பேதங்கருதாமல், அவை ஏன் நிகழ்ந்தன அல்லது புனையப் பெற்றன, ஏன் நிலைபெற்று

|கின்றன எனச் சிந்திப்பது பயன் தரு, சமய உண்மைகளைக் கல்வி |றிவிற் குறைந்தோரும் ஓரள வேனும் உணர உதவும் வகையில், ஏற்று ஒழுகத்தக்க வகையிற் பல அமைந்திருக்கின்றன. அரச அறிவியலில் மந்தமானவர் களாயிருந்த அரசகுமாரருக்காக விஷ்ணுசர்மா இயற்றிய "பஞ்ச தந்திரக் கதைகள்" அவர்களைச் சிறந்த ராஜதந்திரிகளாக்கினவே! இன்னுஞ் சில அற்புத நிகழ்வு பற்றியன. வேறு சில புலவர்கள் தம் கற்பனை உலகிற் கண்டவை.
கதைகள்
எனவே பக்திக்கதைகளை
சமய உண்மைகளை அல்லது தூய வாழ்க்கை முறைகளைக் கருவாகக் கொண்டவை,
2. தமது சமயமே மேலானது
எனக் காட்டுபவை,
3. அற்புதங்களை விரித்துச்
சொல்வரை,
4. தலங்களின் உயர்வை
உணர்த்துனை,
3. கற்பனையிற் புனைபப்
பெற்றவை.
- எனப் பலவாறு பகுத்தல் பொருத்தமாயிருக்கும்.
கந்தபுராணம் சமய தத்துவங் களை விளக்கும் விரிவான கதை, மும்மலங்களையும், சகலர் விஞ் ஞானகலராகிய ஆன்மாக்கள், பதி
என்பவைகளின் உருவகமே என
கலப்பை 51 ) தை 2007 () 11
இலக்கிய கலாநிதி, பண்டித மணி கன பதிப்பிள்ளை அவர்கள் எடுத்து விளக்கியிருக்கிறார். பிற் காலத்திலே தத்துவராயர் என்ற புலவர் பாடிய போகவதைப் பரணி, அஞ்களுவதைப் பரனணி என்பனவும் கடந்த நூற்றாண்டு முற்பகுதியில் வாழ்ந்த நவாலியூர்ச் சோமசுந்தரப் தங்கத் தாத்தா) இயற்றிய உயிரிளங்குமரன் நாடகமும் சமய தத்துவம் உணர்த்
புலவர்
தும் வழியை மேற் கொண்டனவே.
இடைக்காலத்திலே சமயங்க ளுக்கிடையே போட்டி வளர்ந்த போது, தத்தம் சமயமே சிறந்தது அல்லது தமது கடவுளே முழு முதற்பொருள் எனக் காட்டுங் கதைகள் பிரபலம் அடையலாயின. விஷ்ணுக்கள் அடிமுடி தேடியமை, தான் கொடுத்த வரத்தைத் தன்னிலேயே பரிசோ திக்க முயன்ற அசுரனுக்குப் பயந்து ஒடிய சிவபெருமானை மோகினி
Il D
வடிவங்கொண்டு வந்த விஷ் ணுவே காப்பாற்றியமை போன்று பல்கிப் பெருகிய கதைகள் இவ் வகையில் அடங்கும்.
நாயன்மார் ஆழ்வார்களின் வரலாறுகளிற் சொல்லப்படும் அற்புதங்களுக்கு அகச்சான்று உள. சிவபெருமானே கூலிபாளாக வந்து அடிவாங்கியமை முதலான அற் புதங்கள் தனித்தன்மை வாய்ந்தன.
"கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு

Page 8
கலப்பை 51 () தை 2007 () 12
அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்"
என்பது மணிவாசகர் திருவாக்கு. ஆலயங்கள், தீர்த்தத் தலங்கள் போன்றவற்றின் பெருமைகளை எடுத்துக் கூறும் தலபுராணங்கள் தாயக்கர் காலத்திலும் பின்னரும் பெருகலாயின. டெக்கேயிருந்து படையெடுத்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் செயற்பாட்டினாற் கூட, புனிதங்குன்றாமல் விளங்கு கின்றன என்பதை உறுதிப்படுத் தலையும், அவ்வத்தலங்களில் நிகழ்ந்த அற்புதங்களை எடுத்துக் கூறுதலையும் அங்கு வழிபட்டோர் எய்திய பெரும்பேற்றை வெளிப் படுத்தலையும் தலபுராணங்கள் தமது குறிக்கோளாகக் கொண்டி ருந்தன. ஒவ்வோராலயத்துக்கும் அதனதன் பெருமையை விளக்கிக் கூறும் புராணங்கள் எழவேண்டும் என்றும் கருதப்பட்டது.
அணில் முதுகிற் gaħl rf Irrer, உள்ள மூன்று வெள்ளைவரிக்கான காரணத்தை விளக்குதல் போன்ற கீதைகளும் பெருக லாயின. கற்பனைக் களஞ்சியம்
கற்பனைக்
எனப் போற்றப்படும் சிவப்பிரகாச சுவாமிகள் ஆனைமுக விநாய கினும் ஆறுமுக முருகனும் நெளித் துப் பழித்தும், கிள்ளி நுள்ளியும் விளையாடுவதாகப் - Tog-Ug போன்றவை உண்மை வரலாறோ விானே ஐயுறத்தக்க
புனையப்பட்டுள்ளன.
ଶu ଦ) of wrify)।
கதைகள் சில மூன்று நாலு பண்புகள் வாய்ந்தனவாகவும் இருக்கின்றன.
பழமையான சங்க இலக்கியங் களிற் சூரனை வென்ற முருகன் பற்றியும் திரிபுரம் எரித்த விரி சடைக் கடவுள் பற்றியும் பாடப் பட்டிருக்கின்றன. இங்கே திரிபுரம் எரித்த கதை பற்றிச் சிறிது விரி வாகச் சிந்திப்பது நன்று.
"ஓங்குமலைப் பெருவில்
பாம்புஞாண் கொளிஇ
ஒருகனை கொண்டு
மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு
வென்றி தந்த
கறைமிடற் றண்னல். ."
புறநானூறு - 55
எனப் பாடுகிறார் மதுரை மருதன் இளநாகனார். இங்கே மலைப் பெருவில், பாம்பு ஞாண் எனக் கூறியவர் கணை எதுவெனக் குறிப் பிடவில்லை; ஒருகனை என்றே கூறுகிறார்.
நெடுமாவாகிய விஷ்ணுவை அம்பாகவும் பூமியைத் தேராகவும், சூரிய சந்திரரைச் சக்கரங் களாகவுங் கொண்டு போருக்குச் செல்கையில், சிவபெருமானால் ஏவப்பெறினும் முப்புரத்தைப் போய்த்தாக்கி அழிக்கவிருப்பவன் § {'t ଘଟିଛIt at ଜଙ୍ଘା விஷ்ணு கர்வங் கொன்ன அவரது அறியாமையைஆணவத்தை - நினைத்துப் புன்

முறுவல் பூத்த மாத்திரத்தே முப் புரமும் எரிந்தன எனவும், தன்னை நினையாமற் போருக்குச் சென் றமையால் விக்கினேஸ்வரர் "முப் புரம் எரி செப்த அச்சிவன் உறை ரதம் அச்ஆது டோடி செப்தார்" எனyப் பின்னர் விரித்தது போலும்.
இவ்விரிவுகள் வெவ்வேறு குறிக் கோளுடையனவாயினும், முப்புரம் எரித்த கதை சைவ சித்தாந்தத்தின் தனிப்பெருங் கொள்கையான முப்பொருள் பற்றியதேயாகும். சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்கும் நூல்களுட் பழமை பானது திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம், அவர் இக்கதையின் தத்துவத்தை (உண்மைப் பொரு ளை "முப்புரமாவது காரியம்" எனத் தெளிவாகக் கூறு கன்மம், ஆணவம் என்ற மும்மலங்களின்
(při Dal
கின்றார். t
காரியங்களான உண்மையை மன இருளும், பிறவித் தொடருக்குக் காரணமான இரு தனு கான | | 51 30r ஆகிய ஆன்மாக்களை
உணரவிடாத
வினைகளும்,
போகங்களும் மூன்றையும் எரித்து ஈடேற்றுகின்ற தத்துவத்தைக் குறிக் கின்றது இக்கதை.
இங்ஙனமாகவும், கதையைக் கேட்ட சிலர் உலகியலோடு ஒட்டிப் பார்த்துப் பொருந்தாக் கதை என இழித்துக் கூற முயல்வர். பிரபஞ்சத்தையே பரமன், பூமியிலும் பார்க்க அதன்
படைத்தவர்
ஒரு சில்லாகிய சந்திரன் மிகச்
கலப்பை 51 () தை 2007 ( 18
சிறிதென்பதும், மற்றொரு சில் லாகிய சூரியன் பன்மடங்கு பெரி தென்பதும் கல்லாய் இருக்குங் கடவுளுக்குப் புலப்படவில்லையோ என நகையாட முயல்வர்.
சிறுவயதிலே காகமும் நரியுங் கதை படித்திருக்கிறோம்; இன்றும் படிக்கிறார்கள். நரி "அழகான காக்கையாரே, நீர் இனிமையாகப் பாடுவீராமே. ஒரு பாட்டுப்பாடும் பார்ப்போம்" என்று கேட்டதாம். முதலில், நரி பேசுமா? என்ன பாஷையிற் பேசிற்று நரிப்பாஷை காகத்துக்கு விளங்கிற்றா? அல்லது நரிக்குக் காகப்பாஷை தெரியுமா?
இது பற்றி எவராவது வினா எழுப்பியது உண்டா? கேட்ட
சிறுவருக்கும் அந்த ஐயப்பாடு வரவில்லை; சொல்லிக்கொடுத்த ஆசிரியர்க்கோ பெற்றோர்க்கோ வரவில்லை. ஏன், அந்தக் கேள் வியை எழுப்புகிறவர்களுக்கும் வர வில்லையே! கண்ணுக்கு முன்னே புகழ்வோரை நம்பாதே எனப் பிஞ்சுக் குழந்தைக்குக் கூறினாற் புரியுமா? இத்தகையனவே பஞ்ச தந்திரக் கதைகளும் மற்றையனவும், அவ்வாறு புராணக் கதைகள் எழுந்த குறிக்கோளைப் பகுத் தறியும் அறிவே வேண்டப்படுவது
மூல விக்கிரகஞ் செய்ததுங் கல்லு: மிதித்தேறும் படியுங் கல்லு என்பராம் சிலர். உண்மைதான். எழுதிய தேசீயக் கொடிக்கு எத்துனை மதிப்புக் கொடுக்கப்படுகிறது! அது ஒரு நாட்டையே - நாட்டுமக்களையே
சிலை பிஸ்

Page 9
கலப்பை 51 ) தை 2007 () 14
குறிக்கின்றதன்றோ, அக்கொடி யைக் காக்க உயிர்த் தியாகமுஞ் செய்யத் தயாராவோரும் உளரே! அது வெறுஞ் சீலைத் துண்டெனக் கருதுகிறோமா? அதனை வெட்டி எடுத்த மீதித் துண்டு அழுக்குத் துடைக்கப் பயன்படுகிறதே! இரண்டும் ஒரே துண்டுகள் தானே?
"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை" என்பது திருமூலர் இவரது கூற்றை அடியொற்றியதே நாயின் சிற்பத்தைக் குறித்த "நாயைக் கண்டாற் கல்லைக்
சீைை பின்
திருவாக்கு.
கானோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" என்பது. அச்சிலையைப் பார்க்கும் அழகியற் கலைஞன் அதன் அமைப்பு, அதன் நிலை, கம்பீரம் என்பன கண்டு மகிழுவான்; மயங்குவான். கலை உணர்வில்லாதவனுக்கு அது வெறுங்கல்லே.
நாம் விரும்பும் பெரியாருக்குப் பெரும்பனச் சிலை நிறுவுகிறோம். வெங்கலத்திலுஞ் சிலை செய்வோம். மாலையிட்டுக்
செலவிற்
கெளரவிப்போம். ஆனாற் காகம்.? மதிப்பு அதிகமாயின் எமது பெரி யார் சிலை வெய்யிலிற் காய் கிறதே, காகம் எச்சமிடுகிறதே என வருந்தி மணிமண்டபங்கட்டி மகிழுகிறோமே! பாருங் குற்றஞ் சொன்னாற் கொதிக்கிறோமே! பெரும் போராட்டமும் நடத்த முனைவோமே.
தனது பொம்மைக்குக் குளிப் பாட்டிச் சட்டையிட்டு, பவுடர்’ கொட்டிப் பூசி, தலைசீவி அழகு படுத்தி மகிழுகிறது குழந்தை. அதனுடன் கொஞ்சிக் குலாவு கிறது. அது கைதவறி விழுந்து
விட்டால், அதற்கு நோவேற் பட்டிருக்குமோ எனப் பயந்து புரட்டிப் பார்க்கும். ஏதாவது மருந்து போடவும் முயலும்,
ஆனாற் பெரியவர்கள் பவுடரைக் கொட்டிப் பெருநட்டமேற்படுத்தி குற்றஞ்சொல்வர்; அடிக்கவும் முனைவர்.
விட்டதாகக்
எனவே, தனிமனித நம்பிக்கை என்பதிலும் பார்க்க அவரவர் ஒரு பொருளுக்குக் கொடுக்கும் மதிப்பே முக்கியத்துவம் பெறுகிறது என்பது தெளிவாகும், பிறர் மதிப்பதை அவமதிக்காமல், சமயக் கருத்துக்களைப் பழிக்காமல் அது சரித்து வாழ்வதே முறைமை,
"எப்பொருள் யார்பார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"
திருக்குறள் -423

ரியத்தில் த
圈 剧 ĝ .
ால்லி வந்த சொ
hill
நம்
திடுவோர்
னே
ற்பதத்
கவிஞரே!
திடுவோர்
றநானூறு படைத
கலப்ை தனி
ଶt') !
ன்றதுவும் -
தக் காட்டிலும்
யை சென்
உனாவுதன
சொல்லி
களமமைத்து துடிப்பு
செ
சால்லாமல்
நவீன கவிதை பல தொடர்ந்திட
ତ!
_
நனை பு

Page 10
அது ஒரு நிதி திரட்டு வதற்கான கலை நிகழ்ச்சி, அந்த மண்டபம் ஒரளவுக்கு நிறைந் திருந்தது. தமிழகத்திலிருந்து வரு விக்கப்பட்ட மிகப் பிரசித்தி பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர் ஒருவர் தனது இசைத்திறமையை அந்த அவையில் காட்டிச் சபை போரின் அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற முயற்சித்துக் கொண்டிருந்தார். அவையின் ஆதரவு கிடைத்தால் தானே அடுத்த வருடம் நிகழ்ச்சிக்கு அழைக்கவிருக்கும் கலைஞர்கள் பட்டியலில் அவர் பெயரும் இடம்பெறும்.
- சாயிசசி
அவரது இசைத்திறமையை ரசிப்பதற்கென ஒரு சாரார் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் அறி விக்கப்பட்ட ஆரம்ப நேரத்திற்கு முன்னரே வந்து மண்டப வாசலில் தவமிருந்து திறந்தவுடன் முண்டி படித்துக் கொண்டு உள்ளே சென்று முடிந்த வரை முன் வரிசையில் தங்களுக்கும் சொல்லி விட்டவர்களுக்கும் தகுந்த இடம் பிடித்துக் கொண்டார்கள். ஆனா லும் தங்களுக்குப் பின்னால் வந்தவர்களுக்கெல்லாம் நல்ல இடம் கிடைக்கத் தங்களுக்குச் சரியான வீரம் இல்லாததால்
 

அவர்களுக்குப் பின்னால்தான் இடம் கிடைத்ததெனச் சிலருக்குச் சிறிது மனக்குறை இருக்கத்தான் செய்தது. அடுத்த நிகழ்ச்சிக்குப் பார்ப்போம் எனத் தம்மைத் தாமே ஆறுதல்படுத்திக் கொண்டனர்.
ஆனால் அந்த அரங்கில் பற வைகள் பலவிதமென்பது போலப் பலவிதமான இசைப்பிரியர்கள் இருந்தனர். ஏழு சுரங்கள் என்றால் என்ன என்று கேட்பவர்களும், கர்நாடக இசையின் தாற்பர்யம் புரியாதவர்களும், என்ன செய்வது நிதி திரட்டுவதற்காக, ரிக்கெற்றைத் தலையில் கட்டிவிட்டார்கள், போகாவிட்டாலும் சம்பந்தப்பட்ட குழுவினர் குறை நினைப்பார்கள் என எந்த ஆர்வமு மில்லாமல் கிடைத்த நேரத்தில்
விதமான
வந்து பின் கதவு வழியாகப் பின் வரிசையில் இருந்தனர். அங்கே வேறொரு விதமான கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அது தான் "உனர்ப் புதினம்" நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே தம் போன்ற வர்களைத் தொலைபேசியில்
அழைத்து "என்ன இன்று சங்கீதக்
கச்சேரிக்கு வருவாயா, ஒரு விஷயம் உனக்குச் சொல்வி
வேணும்" என்று கூட்டம் சேர்த்துக் து கொண்டு போய் நளர்ப் புதினங் களை அளவளாவி மகிழும் வம்பு செறி தீங்கினரும் இருந்தனர். இவர்கள் நாட்டுக்கும் சமூகத் திற்கும் செய்யும் சேவை அளப் பரியது. பின் வரிசையில் அவர் களின் சத்தமும்
" தி ல் ல | ன T
Tைைைரப்
மோகனாம்பாள் சிக்கல் சண்முக சுந்தரம்" என்றால் எப்போதேதி
தன் இசை மழையை நிறுத்திவிட்டு:
என்ன செய்வது, வந்த கடனுக்தி காக அனைத்தையும் சகித்துக்
கொண்டு தன் திறமையால் அவர்களைக் கவர முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்:
நெல்லுக்கினறத்த நீர் போல் முன் வரிசையினர் அம்மழையில் “ நனைந்து கொண்டு இருந்தனர். 貂
நிருத்திகாவும் அவள் மகள் அபர்ணாவுடன் வந்திருந்தாள். தாமதமாக வந்ததால் அவளுக்கும் பின் வரிசையில்தான் இடம் நிருத்தி கா ஒர் இரண்டும் கெட்டான். சிறுவயதில் அம்மா சொன்னதற்காக எதுவோ சில நாட்கள் சங்கீத வகுப்பில் இருந்தவள். அதனால் சங்கீதக் கச்சேரியை ரசிக்கும் அளவுக்கு அறிவு இருந்தது. அவள் அன்புச் சினேகிதி ஷஹானா, "நிருத்தமே
கிடைத்தது,
தெரியாத நிருத்திகா, உங்களுக் கெல்லாம் அருமந்த பெயர்கள்" என எப்போதும் அவளைக் கேலி செய்வாள். இவளும் ஒரட்டிக்குப் போட்டியாக "உனக்கு மட்டும் ஷ்ரானா என்று பெயர் மட்டும் தானே இருக்கு.
தான் எரவாம்.
நீ என்ன டெரி சங்கீத பூஷனமோ " எனக் கிண்டல் பண்ணுவாள். "போடி எனக்கு ஷஹானா ராகம் நன்றாகத்
தெரியும்" என்பாள். எங்கே அதில்: ஒரு கீர்த்தனை பாடு பார்ப்போம்.தி

Page 11
கலப்பை 51 1தை 2007 018
என்றால் "ஈ" வளரீதா' என்ற 'கீர்த்தனையை மிகவும் உருக்கமாகப் பாவத்துடன் பாடுவாள்.
நிருத்திகாவின் செவிகளில் மேடையில் இருந்து வரும் தேவகா 'னத்தை விடப் பின்வரிசையின் தாராச ஒலிதான் மிகத் தெளிவாக விழுந்து கொண்டிருந்தது. தாமத மாக வந்ததற்கு நல்ல தண்டனை என நினைத்துக் கொண்டு, ஷஹானாவும் வருவதாகச் சொன் னாளே வந்தாளா என அரங்கைச் சுற்றிக் கண்கள் எட்டும் தூரம் வரை ஒரு நோட்டம் விட்ட வளுக்குச் சிரிப்பு வந்தது. ஷஹா னாவும் அவளுக்கு இரண்டு வரிசைகள் முன்னால் தான் சங்கீதப்
பெரிய
என நினைத்துக்கொண்டு சங் கீதத்தில் கவனம் செலுத்த முயன்று தோற்றாள்.
விரும் டாத பின் வரிசைச் சத்தங்கள்தான் அவள் செவிகளில் விஷமாக வந்து விழுந்தன. இடைவேளையின் போது எங்காவது வேறு இடமாகப் துபோய் இருக்க வேண்டுமென நிேனைத்த போது அங்கிருந்து வந்த ஷஹானா என்ற வார்த்தை அவளை ஈர்த்தது. ஆஹா சங்கீத ரசிகர்களும் இருக்கிறார்களே என நினைத்துச் ஆனால் அது’ நீர்க் குமிழி போல் ஆகிவிட்டது. அது வெறும் பெயர்
அவள்
சிறிது மகிழ்ந்தாள்.
தான், அவர்கள் யாரோ விஹானா
இபற்றிப் பேசுகின்றார்கள் என
ராகுலனும் இந்த ஷஹானாவும்)
ஒன்றாகப் :": இப்பவும் ஒன்றாக வேலை செய்கிறார்களாம். இந்த ஷஹானா
தன் புருஷன் நிரஞ்சன் வேற2 யாரோ பெட்டைகளுடன் திரி .އެވެ கிறான் (cyfr siŵ? && IIT'
கரத்துச் செய்து விட்டு ராகுல னோட சுத்துதTம்" என்ற வார்த்தைகள் விஷமாக அவள் செவிகளில் விழுந்து கண்களில்
என்று
நீரை வரவழைத்தன. அப்பாடா அம்மா ஷஹானா, நல்ல காலம் நீ இரண்டு வரிசைகள் முன்னால் து இருந்தாய் எனக் கண்ணிர்சோர நினைத்தாள்.
சுகன்யா அப்படி நினைப் பாளா? ஆதி முதல் இவர்கள் து நட்பின் மகத்துவம் புரிந்தவள்." நிரஞ்சனிடம் ஷஹானா பட்டது கொடுமைகள் எல்லாம் நன்கு தெரிந்தவள். அவள் ஷஹானா வால் தன் வாழ்வுக்கு இடைஞ்சல் வருமென்று கனவில் கூட நினைக்கமாட்டாள். இது இவர் களின் கட்டுக்கதை. தான் இனி இதிலே இருந்தால் விஷம் தலைக் கேறிவிடும் என அப்போதே எழுந்தான், அதிர்ஷ்டவசமாக இப்பொழுது முன்வரிசையில் இடம் பிடித்தவர்கள் எதிர்பார்த்து ஆர மாந்து அந்த இடங்களைக் து கைவிட்டனர். நல்ல இடங்கள் நிருத்திக விக்கும் கிடைத்தன. ஆனால் அவள் மனம் இப்பொழுது சங்கீதத்தில் நிலைக்க வில்லை. சற்று முதல் கேட்டி
மகளுக்கும
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருந்தன. அவர்களையா? அவர்களையா இப்படிப் பேசி னார்கள் என்ற நினைப்புத்தான் வந்து கொண்டிருந்தது. "அந்த நட்பின் மேன்மை உங்களுக்குத் தெரியுமா ?" என அவர்கள் முேன்னால் போய் நின்று கத்த வேண்டும் போல் இருந்தது. நாகரீகமில்லாதவர்களிடம் நாமும் அப்படி நடக்கக்கூடாது என நினைத்துப் பொறுமை காத்தாள்.
நிருத்திகா, ஷஹானா, ராகுலன், நிரஞ்சன் எல்லோரும் ஒன்றாகப் படித்தவர் கிள், உதிரான "அம் நிரஞ்சனும் காதவித்துத்தான் திரு மனம் செய்து கொண்டார்கள், அதை ராகுலன் உட்பட அனை
வரும் மகிழ்வு பின் வரவேற்றுச் சிறப்பாக நடாத்தி வைத்தனர், திருமணம் நடந்து ஏறத்தாழப் பத்து வருடங்கள் ஆகின்றன,
அவர்களுக்கு க் கோ பிகா , கெளவிகா என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், சில காலமாகத் தன் கனவனின் போக்கில் மாற்றங்களைக் கண்டும் காணாமல் விட்ட ஷஹானா அவன் பிற பெண்களுடன் வீட்டுக்கும் வர ஆரம்பித்த போது அது தன் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்குமெனப் பயந்ததால் அவனிடமிருந்து விலகி விவாகரத்துப் பெற்றுக் கொண் Lாள். இந்த வேளைகளிலெல்லாம் நிருத்திகாவும் ராகுலனும் அவள் மனப் புண்ணுக்கு ஒத்தடாக இருந்தனர். டி ஹா என வின் பெற்றோர் கனடாவில் இருந்தனர். இங்கு அவளுக்கு ஆதரவுக்கு இவர்கள் தான் இருந்தனர்.
இடைவேளையின் இஷஹானாவை அந்த இடத்தி: லிருந்து மாற்ற வேணுமெனத் தீர்மானித்தாள். தனக்கு அண்மை' யில் வேறு ஆசனங்களும் காலி பாக இருப்பதைக் கவனித்தாள். வைக்கோல் போர் நாய் மாதிரித் தனக்கு மில்லாமல் மற்றவர் களுக்கும் விடாமல் இடங்களை எப்படி வீணாக்குகின்றார்கள் என
நினைத்து வருந்தியவள், நான் வருந்தி என்ன ஆவது, அவர்கள் nT IT வேண்டுமே arם ה - י".
நினைத்துக் கொண்டாள். தாமத மாக வருபவர்கள் சனத்துக்குள்
எப்படி இவர்களைக் கண்டு பிடிக்கலாம். அவர்கள் கண்ட ஓர் இடத்தில் இருப்பார்கள்
என்பது இடம் பிடிப்பவர்களுக்குப் புரிவதே இல்லை.
இடைவேளையின் போது நிருத்திகா, ஷஹானாவைத் தேடிப்
போனாள். அவளைக் கண்ட மகிழ்வில் ஷஹானா குறும்புத்
கொப்பளிக்க "ஆஹா நிருத்திகள்: -girl." தங்கள்
எதுவோ" எனக் மேடையிலிருந்து தி மூன்றாவது வரிசை என்றதும்? மூக்கில் விரலை வைத்தவள் "எப்படி நிருத்தி அவ்வளவு நேரத் துடன் வந்தாய்" எனக் கேட்டாள். "நான் எங்கே வந்தேன். உனக்குப் பின்னால் இருந்தேன். பாவம் ஒரு ஆன்ட்டி பிடித்து வைத்த இடம்: எனக்குக் கிடைத்தது. நீயும் வாதி அங்கே இன்னும் இடங்கள் 独 இருக்கின்றன" என அங்கிருந்து கிளப்பிச் சென்றாள்.
வந்தார்களா? இருப்பிடம் கேட்டாள்.

Page 12
கலப்பை 51) தை 2007 (20
கச்சேரி முடிந்து வீட்டுக்குப்
போன நிருத்திகாவுக்கு இரவெல் லாம் தூக்கமில்லை. இன்று காப்பாற்றிவிட்டேன், ஆனால்
எத்தனை நாட்களுக்கு என்னால் முடியும். கோவிலில், கடைகளில் என நரம்பில்லாத நாக்கால் பக்கம் பார்க்காமல் பேசுவார்கள். 臀 காதலித்து மணந்த கணவனைப் போதா தென்று இது வேறா? சில சமயங்களில் ஷஹானா, "உனக்குத் தெரியுமா நிருத்தி, நான் இன்னும்
நிரஞ்சனைக் காதலிக்கிறேன்" எனச் இசொல்லும் போது அவள் கன்னத்தில் பனார் என அறைய வேண்டும் போல் நிருத்திகாவுக்குத் தோன்றும். அடி போடி இவனே! எனப் பேசிவிட்டுப் போய்விடு வாள். அவள் இதைக் கேட்டால் தாங்க Tra. செய்யலாம். ராகுவிடம் ஆலோ சேனை கேட்போம் என நினைத்துக் கொண்டு அலுவலகம் போனாள். ஆனால் தூரதிர்ஷ்டவசமாக அன்று அவன் வரவில்லை. காலைத் தேனீர் வேளையின் போது நிருத்திகாவிடம் வந்த ஷஹானா "என்ன நாட்டிய பூஷணம் நம்ம ரவிகுவதிலகம் என்ன ஆனார்" எனக் கேட்டாள், "எனக் கென்ன தெரியும், ஏதாவது சுகவீனமாக இருக்கலாம்" என்றான்.
3 ன் வர
"சுகவீனமா " எனத் துடித்தவள். அவள் மேசையில் இருந்த தொலை பேசியை எடுத்து "வீட்டுக்கு போன் பண்ணுவோம்" என்றாள். அவசர மாக அதைப் பறித்த நிருத்திகா "அதெல்லாம் வேண் டாம்,
நாளைக்கும் வராவிட்டால் பார்க்க ஐாம்" எனக் கூறி வைத்தாள்.
நிருத்திகாவை ஒரு மாதிரியாகப் பார்த்த ஷஹானா சரி எனக்கறிப்
சுகன்யா ஏதாவது இவள் மனம் நோகும்படி கூறினாலும் பாவம்' ஒரு சுடு சொல் தாங்கமாட்டாள்:
நல்ல காலம் காப் ாற்றிவிட்டேன்பிர் ଈ TଈIt is୍]] &rar $$. It it. rresio நினைத்தாள். ராகுல் இ வரட்டும், அவனிடம் "என்ன?
உன் மனைவி தத்துப்பித்தென்று * எதுவோ பிதற்றுகின்றாளாம்பியார் தி சொல்வைக் கேட்டு இப்படி யெல்லாம் பேசுகின்றாள்? ஹாதி னாவை அவளுக்கு இன்று நேற்றாதி தெரியும். அவளை ஒருக்கால் கண்டித்துவை" எனச் சொல்ல வேணும் எனத் தனக்குள் ஒருதி தீர்மானம் செய்து கொண்டாள்து
ஆனால் எல்லாம் தலைகீழாக 芥 மாறப் போகிறதென்று பாவம்: நிருத்திகாவுக்குத் தெரியாது. ஷஹா னாவின் துடிபாட்டம் தெரிந்தி ருந்தும் அவள் தன் சொல்லைக் கேட்டு ராகுல் வீட்டுக்கு போன் பண்ணாமல் போய்விட்டாள் எனப் பெருமித மடைந்தாள். ஆனால் மதியம் சாப்பாட்டு வேளையின் போது அவள் வராமல் விட்வே நிருத்திகா தேடிப் போனாள்: அவன் பகுதியில் இருந்தவர்கள் ஷஹானா தலைவலியெனச் சிறிது முன்னர் தான் வீட்டுக்குப் போன தாகக் கூறினர். ஒரன் சொல்லா மல் போனாள் என வியப்பாகத் இருந்தது. கைத்தொலைபேசியில்: அழைத்தான். பதில் இல்லை. வீட்டுத் தொலைபேசியிலும் பதில்: வரவில்லை. நிருத்திகாவுக்கு ஏனோ' பயமாக இருந்தது. ':Ñ್ನ செய்வதெனத் தெரியவில்லை:
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AAN
涩
s
蓬
*
simu இன்று விண்மீனாக
வானவெளியில் நிரலாக்கின்றான்!
தும்பியைப் பார்த்தவன் உலங்கு வறுதியில் உயரப் பறக்கின்றான் !
பானைக் கண் தமிழ் மங்கையோ பருவக்
கற்பக் கொண்டாள்.
மருட்சியால் அரவளைக்க மறந்து ெ ட்ரும் பாதையை வருந்துக் கொண்டாளி !
விழிபால் மிரட் கனவனை வரிக்கு வரவரைக்க கற்றுக் கொண்டாள் !
விலங்கிடம் கற்றதை மானிடர் ஏன் மறந்துவிட்டார்கள்"
மிருகம் மனிதரிலும் உயர்வானது JIiiiI IiiiI I p. II''

Page 13
ف
சிட்னியிலுள்ள ஹெலன்ஸ்: பேர்க் வெங்கடேஸ்வரர் ஆலயத் தில் விநாயகர் சதுர்த்தி விழானின் Li, T, si (F.T.TF, G è in T5. கொண்டாடிக் கொண்டிருந்தனர். கோயில் உள் வீதியைச் சுற்றி விநாயகர், அம்மன் , முருகனையும் வனங்கிவிட்டு கோயில் முன் நடையை கடந்தான் பாஸ்கர் கூடவே அவன் சிநேகி தர்கள் மதியழகனும், திலிபனும் வந்தார்கள். அடுத்து மேற்கு நோக்கி எழுந்தருளியிருந்த வெங்க டேஸ்வரரையும் தரிசித்தார்கள். குடும்பத்தார் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழ உன் துணை வேண்டும் திருமாவே" என்று வேண்டிக் கொண்டான் பாஸ்கர். தரிசனம் முடித்து மூவரும் வெளி வீதிக்கு வந்தனர். தொண்டர்கள் சுடும்
சிவன்,
"ரன்
öእ! åù} [ _ "
தோசை, பலவித உணவு வகை
தரிைன் நெடிதுயர்ந் திருந்த யூக்கலிப்டஸ் மரங்களுக் கூடாக ஜில்லென்று வீசிய காற்றுடன் கலந்து மூக்கைத் துளைத்து, வயிற்றிலே பசியைக் கிள்ளியது. வெளி வீதியில் போடப் டட்டிருந்த கொட்ட கையின் மேடையிலே களை நிகழ்ச்சிகள் நடந்து கெ கண் டி ருத்த  ை அவற்றைப் பார்த்ததும் அங்கேயே நின்று விட்டான் திவிபன், அவன் முதுகில் தட்டி, "வாடா சாப்பிட
նiIIT:Fնմl ճճT,
லாம். பசிக்கிறது" நண்பர்கள் அவனை இழுத்துக் கொண்டு உணவு விற்பனையாகும் கொட் டகைப் பக்கம் சென்றனர். ஆளுக்கு நாலு தோசைக்கும் ஒரு வடைக்கும் டிக்கட் வாங்கிக் கொண்டு : 50% புெ எடுக்கும் வரிசையில் டே' நின்றனர்.
 
 

வழனப் போல் பராக்காக தமக்குத் தெரிந்தவர்களுடன் உரையாடினர் திலிபனும் மதியழகனும், சிறிதே சுருட்  ைடயான கே சத்தில் சூரியனின் கதிர் பிரகாசத்தில் அவன் வயதுக்கு மீறிய இளநரை வெள்ளிக் கம்பியாக மின்ன அங்கே கதிரைகளில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தவர்
al தான் பாஸ்கர், தாத்தா, பாட்டி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று உற்சவத்திற்கு வந்திருந்த குடும்பங்களைப் பார்த்தான், பாட்டா பேத்தியைத் தூக்கி மடியிலே வைப்பதும் கொஞ்சு துெம், பாட்டிக்காரி பேரனுக்கு உணவு ஊட்டுவதும், "என்வளவு சந்தோஷமாகவும் குதுரகவாகவும் இருக்கிறார்கள். உம்ம். நாங்களும் அந்த நாட்களிலே இப்படித்தான் ஊரிலே கோயில் திருவிழாவிற்குப்
மேலோட்டமாகப் பார்த்
போவோம்,' என்று தனக்குள் வருத்தப்பட்டான். க்யு ரிைசை மு ன் னோ க் கி ச் செ ல் ல
பாஸ்கரனின் நினைவுகள் ரிவேண்
கியரில் சென்றது.
அப்போது பாஸ்கருக்கு வயது பதினேழு, கொம்பனித் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தந்தை சிவப்பிரகாசம், தாய், தங்கைகள் லோகினி, கங்கா, தம்பி கண்ன ணுடனும் வாழ்ந்து வந்தான். சிவப்பிரகாசம் புரக்கோட்டையில் உள்ள மத்திய வங்கியில் நல்ல பதவியில் வேலை பார்த்து வந்தார். அவர்கள் வீட்டிற்கு ஒட்டினாற் போல் இருந்த வீட்டில் குன
கலப்பை 51 D தை 2007 | 23
வார்த்தனாவின் குடும்பம் குடியி ருந்தது. அவர்களது இரட்டைப் பிள்ளைகள் சுனிலுக்கும் அர்ச்சு னோவுக்கும் கிட்டத்தட்ட பாஸ் கரின் வயது மகள் நிலாந்திக்கு கிங்காவின் வயது,
இரண்டு வீட்டா ருக்கும் இடையே நெருக்கமான உறவு. அந்த வீட்டுப் பிள்ளைகள் இந்த
வீட்டிற்கும் இந்த வீட்டுப் பிள்ளைகள் அந்த வீட்டிற்கும் தங்குதடையில்லாமல் போய்
வந்தனர். அவர்கள் தமிழையும் இவர்கள் சிங்களத்தையும் எளி தாகப் பேசக் கற்றுக் கொண்டனர். சுற்றுவா, உல்லாசப் பயனம் என்று பாசத்தோடு சேர்ந்து போய் வந்தனர். பள்ளிக்கூட விடுதலைக்கு பாஸ்கரின் குடும் பத்துடன் துன வார்த் தனா குடும்பமும் பாழ்ப்பாணம் சென்று கும்மானத்துடன் நாட்களைக் கழித்தனர். வாழ்க்கை மிகவும் குதுர கலமாக ஓடிக் கொண்டி ருந்தது. அந்த சந்தோசமான வாழ்க்கையிலே இடி விழுந்தது
ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி மூன்றில் அரசாங்கம் மூட்டிவிட்ட இனவெறி கொழும்
பைத் தாக்கியது. அந்த கும்பல் தெருத்தெருவாகச் சென்று தமிழரின் வீடுகளுக்குள் புகுந்து,
தாக்கியும், கொன்றும் அவர்களின் உடைனமிகளை அழித்தும், சூறை பாடியும் அட்டூனியம் செய்தார்கள். தூரத்தில் கேட்ட அந்த கும்பவின் இரைச்சல் | !!! L'IJ 4). Il Toy, é. கூடவும் அவர்களின் வீட்டை நெருங்குகிறார்கள் என்று விளங் கியது. மீனாட்சி கையில் கடைக் குட்டி கண்னனினத் துரக்கியபடி

Page 14
கலப்பை 51 ) தை 2007 () 24
செய்வதறியாது கண்கள் மிரள, முகம் வெளுக்க, உடல் வெட வெடக்க, "சிவ சிவா, அவரும் இன்னும் வேலையாலே வர வில்லையே, என்ன செய்வேன்" மனம் பதைபதைக்க குளறியபடி நின்றாள். பிள்ளைகள் நடுங்கிக் கொண்டு அம்மாவைச் சுற்றி நின்றனர். டாஸ்கருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. 'அந்த கும்பல் எங்களைத் தாக்கும் விெர பார்த்துக் கொண்டு பேசாம விருப்பதா? கொடுவாகத்தியை எடுத்து அவர்களைத் தாக்கினால் என்னவாம். இள இரத்தம் பயமறியாதுதானே.
நல்லவேளை அந்நேரம் அடுத்த வீட்டு குணவார்த்தனா "பாஸ்கர்! இக்மன்ர இக்மன்ர" அவசரமும் பயமும் சேர்ந்து அவர் குரல் கீச்சிட்டது. தங்கள் வீட்டுப் பக்கத்தில் ஏணி மேல் ஏறி நின்ற குண வார்த்தனா, "மீனாட்சி அம்மா, நீங்க வீட்டிலே இருக்கிற நகை, பனம், மாத்து உடையும் எடுத்துக் கொண்டு இக்மன்" சீக்கிரமாக மதிலடிக்கு வாங்கோ"
மீனாட்சிக்கு அவள் வணங்கும் கப்பித்தாவத்தை சிவனே உதவிக் கரம் நீட்டியது போலிருந்தது. எல்லோரும் பின் மதிலடிக்கு ஒடினார்கள். அவர் சட்டென்று குனிந்து மீனாட்சியின் கையில் இருந்த கண்ணனை வாங்கி தன் ம  ைன வி ரஞ் சனி பி ட ம் கொடுத்தார்.
பாஸ் கரிடம் , "ஓ பிணி வி ய கொண்டு வந்து எல்லாரையும் ஏத்தி இங்காலே அனுப்பு"
தங்கைகளையும் தாயையும் ஏற்றி குணவார்த்தனா வீட்டுப்
பக்கம் அனுப்பியபின் ஏணியை கொண்டோடிப் போய் முன்
இருந்த இடத்தில் வைத்தான் பாஸ்கர், தாவி மதில் மேல் ஏறினான். மறு பக்கத்தில்
அர்ச் சுனா கை கொடுத்து அவனை இறக்கி விட்டான்.
பாஸ்கர் வீட்டாரை பழைய சாமான்கள் வைக்கும் அறையில் இருத்தி கதவைச் சாத்தினார் குணவார்த்தனா, கதவைச் சாத்த வும் இனவெறி கும்பல் இரும்பு பொல்லுகளால் பாஸ்கர் வீட்டுக் கதவையும் ஜன்னலையும் இடிப் புதும் வீட்டுக்குள் புகுந்து பொருட் களை அடித்து உடைப்பதும் கேட்டது. "டெமுளோ பேருனா" தமிழர் தப்பிட்டாங்க) என்று கூறுவதும் கேட்டது. குன வார்த்தனா வீட்டுக் கதவைத் தட்டினார்கள், குணவார்த்தனா "அபிசிங்கள" என்று சொல்லவும் அவர்கள் போய்விட்டார்கள், கும் பல் அடுத்த தெரு விற்கு போய்விட்டார்கள் என்று நிச்ச யித்துபின், "பயப்படாமல் வெளிலே வாங்கோ," என்று கதவைத் திறந்துவிட்டார் குணவார்த்தனா.
வெளியே வந்த மீனாட்சி "ஐயோ f ரஞ்சனி என்னுடைய மகாத்தையா வை இன்னும்
கானோ மே " வாய் விட்டுக்
கதறினாள்,
ரஞ் சனி மீன ரா ட்சி  ைய
அனைத்து "சிவா அங்கிள் இப்போ
வந்திடுவார். நீங்கள் அழு வா
தேங்கோ" என்றாள்.
எ ன் ன செய் வ தென்று
தெரியாது முழித்த பாஸ்கரின் குடும்பத்தாருக்கு
டரீதியுடன்
 
 

துவினவTர்த்தனா குடும்பத்தார் Š &፴ துTன Tக நின்றனர். நடக்கிற விசயங்கள் எதுவும்
புரியாத வயது கண்ணனுக்கு. பசியினால் அழுது கொண்டிருந்த வனுக்கு உனவும் பாலும் கொடுத்து துரங்க வைத்தாள் ாஞ்சனி பின்பு மற்றவர்களுக்கும் உணவு பரிமாறினாள். அவர்களின் நிலைமையிலே சோறு தொண் டைக்குள் ளால் இறங்குமா ? ஆனால் ரஞ்சனி அன்போடு பரிமாறியதை மறுக்க முடியாமல் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு எழுந்தனர். அன்று இரவு குண வார்த்தனா வீட்டில் தங்கினார்கள்,
இரவு முழுவதும் மீனாட்சியின் விசும்பல் கேட்டுக்கொண்டே யிருந்தது. அப்பாவிற்கு என்ன ஆகியிருக்குமோ? பாஸ்கரின் விம்மி வெதும்பியது. லோகிணியும் அதே நிலையிலே தான் இருந்தாள். விடிந்தும் சிவப் பிரகாசம் வீடு வந்து சேரவில்லை.
ir: GIT li
"உங்களை எங்களோட வைத்தி ருக்கத்தான் விருப்பம். ஆனால் அக்கம் பக்கத்திலே இருக்கிறவர்கள் காட்டிக் குடுத்தா எங்களால் உங்களைக் காப்பாத்த முடியாம போபிடும்," என்று விளக்கிய குன வார்த்தனா அவர்களை பக்கத்திலே இருந்த அகதி முகாமில்
சேர்த்துவிட்டார்.
பொலிசிடம் சிவப்பிரகாசத்தின் படத்தைக் கொடுத்து தேடும்படி கேட்டுக்கொண்டார், தினமும் வந்து பார்த்து அவர்களுக்கு வேண்டியதைக் கொண்டு வந்து கொடுத்தார்.
கலப்பை 51 ) தை 2007 () 25
நாலு நாள் கழித்து சிவப்பிர காசத்தின் பாதி எரிந்த சடலம் கிடைத்தது. குணவார்த்தனா தான் இந்த துக்கச் செய்தியைக் கொண்டு வந்தார்,
மீனாட்சி "ஐயோ! ஐயோ! S|sflu ITI /LLTA உங்களைக் கொண் டுட்டாங்களே. நான் இனி என்ன செய்யப்போகிறேன் ? தட்டத் தனியே எங்கட பிள்ளைகளை எப்படி வளர்த்து ஆளாக்கப் போறேன்" என்று வாய்விட்டுக் கதறினாள் பாஸ்கரன் விக்கித்துப் போய் உட்கார்ந்துவிட்டான். அப்பாவின் அகால மரணம் நினைத்து கண்ணர் தாரை தாரை
பாக வடித்தான். துணைவார்த்த னாவும், "நீங்க தமிழ், நாங்க சிங்களம். ஆனால் எவ்வளவு
அன்பாகப் பழகிறோம். இதெல் லாம் பேராசை பிடித்த அரசியல் வாதிகளின் வேலை," என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.
அன்று கண்ணில் நீர் பெருக தாய் நின்ற காட்சியை பாஸ் கரனால் இன்னும் மறக்கமுடிய வில்லை. அவனின், அவன் குடும் பத்தின் தலை எழுத்தையே மாற்றி எழுதிய சம்பவம் அது.
அகதிமுகாமில் ஒரு மாத காலம் இருந்துவிட்டு, அவர்களின் கிராமமாகிய கட்டுண்டக்குப் போய் மீனாட்சியின் சீதன வீட்டில் குடியேறினர். அவளுக்குச் சொந்த இபற்கிTட் டிலிருந்து வந்த வரும்படியுடனும், அரசாங்கத்திட மிருந்து கிடைத்த விதவை ஓய்வூதியப் பணத்தையும் கொண்டு அவர்கள் வாழ்க்கை ஒருவாறு ஒது.
[ | ]"Th:F

Page 15
கலப்பை 51 () தை 2007 () 28
ரே ப் போதும் கவன வ யின்றி கலகலப்பாக இருந்த மீனாட்சி இப்போது கணவர் மறைந்தபின் பேசுவதையே குறைத்துக் கொண் டான். தன் புன்னகையையும் தொலைத்துவிட்டாள். தாயின் நிலைகண்டு பாஸ்கருக்கு நெஞ்சு வளித்தது.
தாயின் அருகே அமர்ந்தவன் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு, "அம்மா கவலைப் படாதேங்கோ, குடும்பப் பொறுப்பு களை சுமக்க நான் இருக்கிறேன்." அவன் குரல் நடுங்கியது.
2) - āf ଶif ( 1 ) {# ଶl!
*LY FT 5a) f, , எவ்வளவு செய்ய முடியும். இந்த
இரண்டு பெண் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து கல்யானம் கட்டிக் கொடுக்கவேண்டும். உன்
படிப்பு இருக்கிறது. தட்டி கண்னன் அவனுக்கு ஐந்து வயது தானே.” துக்கம் நெஞ்சை
அடைக்க அவள் திணறினான். "அவன் படித்து ஆளாக மட்டும் நான் உயிரோடு இருப்பேனோ" மீனாட்சியின் கண்களில் கண்ணர் அருவியாக வழிந்தோடியது. தாயின் வார்த் ன த கன் பாண்) க ரி ன் இதயத்தை கசக்கிப் பிழிந்தது.
"அம்மா! நீ கவலைப்படாதே. நான் சீக்கிரமாக ஒரு வேலையிலே சேர்ந்து எல்லோரையும் காப் பாத்துவேன். அப்பா இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதை இயன்ற அளவு செய்வேன். இது நிச்சயம்" என்ற படி தாயின் மடியில் தலையை சாய்த்தான். பாஸ்கரின் தலை முடியைக் கோதிய படி, "தி பாவமடா, எப்படி இத்தனை பொறுப்பையும் தனியே." "என்னாலே முடியும், நம்புங்க அம்மா, நீங்கள் உங்க
உடம்பை பார்த்துக் கொள் ளுங்கள்" என்றான் உறுதியான குரளில், சேலைத் தலைப்பால்
கண்ணிரைத் துடைத்த மீனாட்சி யின் முகத்தில் வருத்தம் தோய்ந்த
புன்னகை தவழ்ந்தது. எல்லா வற்றையும் கேட்டபடி கண்ணிர் வடிய, தானில் சாய்ந்தபடி நின்றாள் லோகினி,
வெறும் வாய்ப் பேச்சோடு நிற்காமல், பாஸ்கர் செயலில்
இறங்கினான். சிவப்பிரகாசத்திற்கு மகன் டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. பாஸ்க ருக்கும் தான், எனது ஆசைகள் முக்கியமில்லை. நான் அம்மாவுக்கு பாரமாக இராது, தங்கைகள் தம்பியின் படிப்புச் செலவுகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு நான் ஒரு உத்தியோ கத்திலே சீக்கிரமாகச் சேர வேண்டும். இதற்கு என்ன வழி என்று ஆராய்ந்ததில் மூன்று வருடப் படிப்புடன் எ க்ள் கதிரானராகினால் (Religraplier) உடனே அரசாங்க வைத்திய சாலையில் வேலையும் கிடைக்கும் என்று அறிந்தான். அதற்குரிய
 
 
 

விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைத்தான். பயிற்சி பெற கொழும்பில் இடமும் கிடைத்தது. இதனால் பாஸ்கரின் தன்னம் பிக்கை மேலும் கூடியது.
கொழும்பில் குணவார்த்தனா டாள் கரை கட்டாயப்படுத்தி தங்கள் வீட்டிலே தங்க வைத்தார். படிக்கும்போது மாலையில் ஒரு நிறுவனத்தில் கணக்கு விாழுதிக் கொடுத்தான். அந்த சம்பளப் பணத்தை அப்படியே அம்மாவுக்கு அனுப்பி வைத்தான்.
வர்த்தக
தேர்ச்சி பெற்றதும் பாஸ்கருக்கு இரத்தினபுரி மருத்துவமனையில் கிடைத்தது. அங்கேயே குடியிருப்பதற்கு ஒரு அறை வாடகைக்கு எடுத்து சிக்கனமாக
வேலை
இருந்து வீட்டுச் செலவுக்கு கொஞ்சப் பணத்தை அனுப்பி வினான். மிகுதியை வங்கியிலே
சேமிப்புக் கனக்கில் போட்டான், எல்லாம் தங்கைகளின் கல்யாணத் திற்காகத்தான். போக்குவரத்து
நி ைஸ்:  ைம ன பப் பொறுத்து உணருக்கும் போய் வருவான். மீனாட்சி கணவனை இழந்த
சம்பவத்தில் இருந்து மீளவே யில்லை, நெற்றியில் பொட்டின்றி, புடவை உடுத்தி, முகம் பொலிவிழந்து, நிறம் மங்கி, உடல் நலிந்து இருந்தாள். தாயின் நிலை கண்டு பாஸ்கர் நெஞ்சுருகிப்
போவான்.
வெள்ளைப்
மகனைக் கண்டதும் மீனாட்சி பின் முகத்தில் பாச ஒளி பரவும்.
" J T SY AF, Y ir G r u Lr || ALI L' u 'T இருக்கிறாய்? அங்கே உனக்கு
கலப்பை 51 () தை 2007 () 27
பார் வாய்க்கு ருசியா சமைத்துப் போடப்போயினம்? இப்படி உடல் மெலிந்து போயிருக்கிறியே" என்று கூறி அவனுக்குப் பிடித்த உணவு விவிக்கிளிைச சமைத்து பக்கத்தில் இருந்து பரிமாறுவாள்.
"அம்மா நான் நல்லா சமைப் பேன். அத்தோடு குணவார்த்தனா வீட்டிற்குப் ரஞ்சனரி ஆன்ரி என்னை அங்கே
விவிட்டT, பற்றி கவலைப்பட வேண்டாம்,
அங்கிள் போனா
சாப்பிட என்னைப்
தாயின் கையை ஆதரவாக தன் கையில் எடுத்து, "அம்மா, உங்க
பார்த்துக் ஞங்கோ, தங்கச்சிகள், தம்பி,
உடம்பைப் கெரன்
நீங்க தான் எனக்கு முக்கியம்."
அவன் குரல் தழுதழுத்தது. கண்கள் பனித்தது. "லோகினி, அம்மாவை நீதான் கவனித்துக்
கொள்ள வேண்டும். கண்ணா நீ நல்லா படிக்க வேணும். அங்கே இங்கே என்று திரியாமல், பள்ளிக் கூட முடிந்ததும் நேரே விட்டே வந்திடு, இராணுவ கெடு பிடி மோசமாக இருக்கிறது" என்று சொல்லி விடை பெறுவான்.
சில ஓய்வு நாட்களில் கொழும் புக்குப் போப் குணவார்த்தனா வீட்டாரைப் பார்த்துவிட்டு வரு வான், அர்ச்சுனா, சுனில் இரு வருடனும் கலகலப்பாகப் பேசி விட்டு வருவான். அவன் கண்கள் குணாவார்த்தனாவின் கிடைக்குட்டி நிலாந்தியைத் தேடியது. அவர்கள் வீட்டில் தங்கிப் படித்த போது நிலாந்தியிடம் அவனுக்கு ஒரு

Page 16
கலப்பை 51 ப தை 2007 () 28
ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நிலாந்திக்கு இப்போது வயது பதினேழு, நல்ல நிறமும், சுருட்டை முடியும், எடுப் பான மூக்கும். அவள் முகத்தில் ஒரு தனி கவர்ச்சியைக் கண்டான் விடலைப் பருவத்திற் குரிய இனிய உணர்வுகளும் ஆசை களும் அவன் மனதில் எழுந்தன. குடும்பப் பொறுப்பும்,
பாஸ்கர்.
ஆனால் பாசமும்தான் அவன் உள்ளத்திலே மேலோங்கி நின்றன. அந்தக் வேகத்தில் வாலிபப் பருவத்தின் குறும்புகளைத் துலைத் தான். உல்லாசமாக சிநேகிதர் களோடு சந்தியில் நின்று அழகிய குமரிகளைப் பார்த்து கண்ண டிக்கும் அந்த சுகத்தையும் துறந்தான்.
մեI aնի II:
"பாஸ்கரா, யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தின் அட்டு ஒளியம் தாங்க முடியவில்லை, லோகினியை சீக்கிரமா கல்யானம் பண்ணிக்குடுக்க வேணும், எந்த நேரம் என்ன நடக்குமோ தெரி யாது" என்று மீனாட்சி கடிதம் போட்டிருந்தாள், பாவம் பாஸ்கர் இந்த இளவயதிலே ஒரு முதிய குடும்பத்தவரின் பொறுப்புகளைச் வேண்டியிருந்தது. கல்யா னத்தரகர்கள் பின்னால் அலைந்து திரிந்தான்.
சுக்க
அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு மாப்பிள்ளைக்கு லோகினியை மிகவும் பிடித்து
விட்டது. சேர்த்து வைத்திருந்த பணத்தையும், மீனாட்சியின் நகைகளில் பாதியையும், மீனாட் சிக்குச் சொந்தமான ஒரு பத்துப்
பரப்பு வயற் காணியையும் லோகினியின் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்து கல்யாணத்தைச் செய்து அவளை கணவனுடன் சந்தோசமாக அனுப்பி வைத்தான்.
எட்டு வருடங்கள் டோடின. நிலாந்தி சாலையில் படித்துக் கொண்டி ருந்தாள். அவள் மேல் இருந்த ஈர்ப்பு இப்போது பாஸ்கரையும் மீறி காதலாக மாறியது. குண வார்த்தனா வீட்டுக்குப் போனால் நிலாந்தி பாஸ்கரை மலர்ந்த மு) கத்தோடு உபசரிப் பான். "பாஸ்கர் டி குடிக்கிறீர்களா? கவுங் சாப்பிடுங்கோ" என்று குழைவாக அன்புடன் தத்தித்தத்தித் தமிழில் உபசரிப்பதே ஒரு தனி அழகு. ஒரு குழந்தையின் கொஞ்சும் தமிழாக அவன் காதில் ஒலித்தது. அவன் திரும்பிப் போகும் போது, "பாஸ்கர்!" அதே குழைவு, "உங்க ளூக்கு கொஞ்சம் கவுங் பார்சல் பண்ணிையிருக்கேன், கொண்டு போங்கோ" என்று அவன் கையில் கொடுப்பாள். நிலாந்திக்கும் என்
உருண் சர்ண்க:1;
மேல் பாசம் இருக்கிறதுதான். ஆனால் அது எப்படிப்பட்டது என்று நான் அறிய விரும்ப வில்லை. நேரம் வரும் போது
என் ஆத்மார்த்தமான காதலைச் சொல்லலாம்" என்று நினைத்தான்.
கனடாவிலிருந்து வந்த மாப்பிள்ளைக்கு
ஒடு எஞ்சியிருந்த காணி, நகை, பணத்துடன் சமா விரித்து கங்காவிற்கும் கலியா விணத்தை பண்ணிை அவனையும் கனடா அனுப்பி வைத்தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை குன வார்த் த னா வீட்டு க்கு ப்
 
 

போயிருந்தான். வீட்டில் எல்லோ ரும் சந்தோசமாகத் தென்பட்டனர்.
"பாஸ்கர், நானே உனக்கு டெலிபோன் பண்ண வேணு மென்றிருந்தேன். நிலாந்திக்கு
கல்யாணம் முடிவாகியிருக்கு மாப் பிள்ளை விமல், நியூசிலாந்தில் கனக்காளராக வேலை பார்க் கிறார். நல்ல பையன். நிலாந்திக்கு அவனை மிகவும் பிடித்திருக்கிறது. விமலுக்கும் அவளைப் பிடித்து இருக்கிறது."
குணவார்த்தனாவின் குரலிலே ஒரு தந்தையின் சந்தோசமும் பெருமையும் ஒலித்தது. ஆனால் எத்தனையோ ஆசைகளோடும் கற்பனைகளோடும் இருந்த பாஸ்கரின் இதயம் கல்லடிபட்ட கண்ணாடி போல் சிதறியது. எனினும் தன்னைச் சமாளித்துக் கொண்டு , " அ ங் கிள் நல்ல சந்தோசம். எப்ப கல்யாணம் ? நான் லீவ் போட்டுட்டு வந்து கல்யாண வேளையிலே ஒத்தாசை யாக இருக்கிறேன்" என்று பிரயாசைப்பட்டு குரலில் உற்சா கத்தை ஊட்டிச் சொன்னான்,
பாஸ்கரனால் ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை. அவன் வெளியே எதுவுமே காட்டவில்லை. ஆனால் மனதுக்குள் நிறைய பேசிக்கொண்டான். இன வேறு பாடும், குடும்பத்தராதரமும் தடை பாக இருக்கும் என்று தெரிந்தும் என்னையும் மீறி நிலாந்தி மேல் காதல் வளர்ந்து விட்டது. என் கடமைகள் முடித்தபின்தான் என் காதலை வெளிப்படுத்துவது என்று காத்திருந்தேன். இப்போ இலவு காத்த கினியின் கதையாச்சே,
கலப்பை 51 () தை 2007 ) 29
அவன் மனதில் நிலாந்தியைப் பற்றி சுகமான நினைவுகள் இருந்த இடத்தில் சூன்யம் நிரம்பியது. கனத்த நெஞ்சோடு தன் குடும்பப்
பொறுப்புகளை மேற்கொண்டான்.
"பாஸ்கர், கண்ணன் உன்னைப் போலில்லை. விளையாட்டுத்தனம் அதிகம், எவ்வளவு சொன்னாலும் கேட்கிறானில்லை. இங்கே தமிழ் இளைஞர்கள் மேல் இராணுவக் கெடுபிடி கடுமையாக இருக்கிறது. அவன் இந்தச் சூழலில் இருக்க வேண்டாம். ஏதாவது செய்ய வேண்டும்" என்று எழுதியிருந்தாள் மீனாட்சி,
லோகினியும், "அண்ணா, கண்ணனை ஆண்தாதி பயிற்சிக்கு அனுப்புங்கோ. பயிற்சி முடிந்ததும் சான்றிதழைக் காட்டி அவனுக்கு இங்கே வர குடியுரிமை எடுத்துத் தரலாம்" என்று எழுதியிருந்தாள். அவள் யோசனைப்படி கண் னனை கொழும்புக்கு வர வழைத்து ஆண்தாதி பயிற்சி நிலையத்திற்கு அனுப்பினான், நிலாந்தியின் அண்ணன்கள் அர்ச் சுனா, சுனில் அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காகப் போய்விட் டார்கள். இதனால் பாஸ்கர் எப்போதாவது அவர்கள் வீட் டிற்குப் போய் சுகம் விசாரித்து விட்டு வருவான்.
பயிற்சி முடிந்த கையோடு கண்ணனுக்கு அவுஸ்திரேலியா போக நுழைவுரிமை கிடைத்தது. "இனி அம்மாவையும் உங்களையும் இங்கே எடுப்பிட்டதுதான்
என்

Page 17
கலப்பை 51 | தை 2007 () 30
அடுத்த வேலை. அதற்கு வேண்டிய படிவங்களை அனுப்பி வைக் கிறேன்." என்று எழுதியிருந்தாள்
ఇuTa,
கண்ணனும் அவுஸ்திரேலியா போன பின் பாஸ்கர் யாழ்ப் பானத்திற்கு வேலை மாற்றம் எடுத்துக் கொண்டான். பிள்ளை கள் எல்லோரும் கரை சேரு மட்டும் பொறுத்திருந்தாளோ என்னவோ, இப்போது மீனாட்சி படுத்த படுக்கையாகி விட்டாள். அவள் முகத்தில் காலதேவனும், தீராத மனவேதனையும் இரக்க மின்றி வரைந்த கோடுகள், மெலிந்த அவள் உடலில் திட்டுத் திட்டாக எலும்புகள் தெரிந்தன. தாயின் நிலைகண்டு கண்ணிர் விட்டான் பாஸ்கர்,
சகோதரர் கனை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திட்டாய். உனக்கும் வயது ஏறிக்கொண்டு போதுது. இப்பவாவது ஒரு கல்யாணத்தை பண்ணிைக்கொள்" இடையில் லொக்குலொக்குவென்று இருமல் தெஞ்சைக் குடைந்தது. சளி தொண்டைக்குழிக்குள் வந்து கற கரத்தது. "எங்கட சொந்தக்காரர் களிடம் உனக்கு ஒரு நல்ல பெண்ணாகப் பார்க்கச் சொல்லி யிருக்கிறேன்" மீனாட்சிக்கு மூச்சு வாங்கியது.
"பாஸ்கரா! உன்
பாஸ் கருக்கு தன் கல்யா இனத்தைப் பற்றிச் சிந்திக்க நேரமோ எண்ணமோ இருக்கவில்லை, தாயை பெரிய டாக்டர்களிடம் காட்டினான். மீனாட்சிக்கு நுரை பீரல் புற்றுநோய். அதுவும் முற்றி விட்டது என்றனர். அம்மாவை
மகரகம புற்றுநோய் ஆஸ்பத் திரியில் சேர்க்கவேண்டிய ஏற்பாடு களில் ஈடுபட்டான். ஆனால் மீனாட்சி பட்ட துன்பம் போதும் என்று கடவுள் எண்ணிவிட்டார் போலும். அவளுக்கு இவ்வுலகை விட்டு நிரந்தரமான விடுதலை கிடைத்தது. பாஸ்கர் தனியே நின்று தாய்க்குச் செய்ய வேண்டிய FFI roi, செய்து முடித்தான்.
கடன் களைச்
"தம்பி பாஸ்கர், உன் அம்மா குடுத்து வைத்தவ, அ ைகடைசி காலத்திலே பக்கத்திலே நீ இருந்தாய். இப்போ ஈமக்கடன் களையும் நீ செய்கிறாய். திரை கடல் தாண்டி திக்குத்திக்காப் போனவர்கள் தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடைசிக் கடனுக்காவது என்றார் அங்கு கூடியிருந்தவர் களில் ஒரு முதியவர்.
இTரTங்களா "
தாய் போனதும் பாஸ்கர் தனித்து நின்றான். தாயில்லாத அந்த வீட்டில் பாஸ் கருக்கு இருக்கப் பிடிக்கவில்லை. திரும் பவும் இரத்தினபுரிக்கே வேலை மாற்றம் எடுத்துக் கொண்டான். அவனுக்கு பலவிதங்களில் ஆதர வாக இருந்த குணவார்த்தனாவும் மனைவியும் வீட்டைப் பூட்டிக் கொண்டு மகன் மானரப் பார்க்க அமெரிக்கா போயிருந்தனர்.
லோகினி, பாஸ்கரின் நுழைவு ரிமை வேலைகளைத் துரிதப் படுத்தி ஒரு வருடத்திற்குள் அவுஸ்திரேலியா வரவழைத்துக் கொண்டாள்.
தொடரும்.
 
 

சிட்டப் புத்தகம் எடுத்துப் புரட்டினால்
சாட்டை கொடுக்கும் சரத்தினைப் படித்தால் தட்டிச் சொல்வது வன்முறை குடும்பத்தில் தண்டனைக்கு உரிய குற்றம் என்றல்லோ
வாழ்வில் தினம் சேர்ந்திடும் உறவுகளால் வருந்தியே கூடும் தீர்ந்திடாப் பிளவுகளால் நேரிடும் குடும்ப வன்முறைகளால் குழம்பிடில் நேரிய விதிமுறைகள் நிறையவே விளங்கிடலாம்
பயத்தை மட்டும் ஒருபொழுதும் தூண்டாதே புடைக்கும் கோபத்தில் குரலையே தூக்காதே தாக்குதலை நினைத்துக் கூடப் பார்க்காதே தொல்லை கொடுப்பதால் குற்றத்திலே மாட்டாதே
ஊறு உடலிற்கோ உணர்விற்கோ ஆகலாம் உடலுறவில் ஒப்புதலைப் பெறாததிலும் எழலாம் கூடிப் பிரிந்த துணையினாலும் தொடரலாம் குடும்ப உறவிலுள்ள எவரினாலும் வரலாம்

Page 18
கலப்பை 51 D தை 2007 () 32
ஆணினம் படுகிற பாட்டின் பாதிப்பினை ஆய்ந்து பார்த்திடினது ஐந்து வீதமாம் அதிகமாய்ப் பெண்ணே வன்முறையில் மீதமாய் அவதிப் படுவதைக் காட்டுவது புள்ளிவிபரமாம்,
புரட்சிப் பாடல்களில் கவிஞர் பாரதியார் புதுமை எழுச்சியில் தொடர்ந்த பாரதிதாசன் ஆண்கள்தான் என்பதை எவருமே கூறலாம் அவர்வழி நடப்பின் வீதங்கள் மாறலாம்
நீதிக்கும் நேர்மைக்கும் யார்க்கும் பேதமில்லை நீங்களும் யோசித்தால் கொஞ்சமும் பாவமில்லை கருத்தைக் கதையில் கவிதையில் கானத்தில்
கடுப்பாய்ச் சொல்லிக் காட்டுவதில் ஈனமில்லை
பட்டது எல்லாம் பலஜென்மத்திற்குப் போதுமே படுவதற்கு இனியில்லை மிச்சமே என்று மெளனியாய் வாளா இருந்தின்று வாடினால் மரணம்வரை ஏதுமே மீளாது போயிடலாம்
முடிந்து போனகதை என்றிருந்தால் விடிவில்லையே முயன்று பாராமலே முடிவிடத் தேவையில்லையே விட்டிலாக வாழ்க்கை வீணாகுதல் பாபமல்லவோ விடியலுக்கு வழிகள் பேணுதல் இலாபமல்லவோ
சட்டத்தில் நிவாரணம் சகலதும் இருக்கையில் சந்தர்ப்பம் நோக்கிச் சமயோசிதமாய்ச் செயலுறின் சாத்வீகமான குடும்ப வன்முறைக் களையெடுப்பில் சந்தோஷமாக நன்முறையில் வாழ்வு முளையெடுக்கும்
- மனோ ஜெகேந்திரன்
 

?هممه gJنامه په اقدامره
ಹqd19àld واتهاu? உலகமே ஒரு நாடகமேடை அதில் நாமெல்லோரும் நடிகர்கள். பூமி என்னும் மேடையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வேடம் தரித்துக் கொண்டு தங்கள் தங்கள் டாத்திரங்களைச் செவ்வனே நடித்து விட்டுப் போகிறார்கள். இந்த நாடகத்துக்கு ஒத்திகையில்லை. நடிகர் களின் ஒப்பனையை இயற்கையே செய்து விடுகிறது. முன்னறி விப்பின்றித் தோன்றி. தத்தம் பாத்திரங்களைத் திறம்பட நடித்து விட்டு நடிகர்கள் மறைத்துவிடுகிறார்கள். உலக நாடகமேடையில்
எல்லோருமே நடிகர்கள். பார்வையாளர்களும் அவர்களே! வேறாக பார்வையாளர்கள் என்றில்லை.
ஒரேயொரு வித்தியாசம். நடிகர் எப்போது தோன்றுவார். என்ன வேடத்தில் தோன்றுவார், எப்போது அவரின் நடிப்பு முடிவுக்கு வரும் என்பது எவருக்கும் தெரியாது. எல்லாவற்றையும் §ಳ್ತ)

Page 19
கலப்பை 51 தை 2007 ப 34
வாழ்க்கை ஒரு சந்தைக்கூட்டம் என்று அறிஞர்கள் சொல்வார்கள். சந்தைக்குப் போகிறோம். தினமும் ஒழுங்காகச் சந்தைக்கு வருபவர் களையும் சந்திக்கிறோம். அவர் களுடன் உரையாடுகிறோம். புதுப் புது ஆட்களைக் கூட எதிர்கொள் கிறோம். அறிமுகம் செய்து அவர் களுடன் அளவாளாவிப் பழகு கிறோம். அந்த உரையாடல்களில் சந்தோஷமான விடயங்கள், துக்க மான விடயங்கள், பிடிக்காத விடயங்கள் கூட இடம்பெறும். சம்பாஷனை முரண்பட்டால் சண்டை சச்சரவுகள், கை கலப்புகள் கூட நடைபெறலாம். சாமான்களை வாங்கிக்கொண்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்பு கிறோம். அவ்வளவுதான். காட்சி மாறிவிடும். சந்தையில் சந்தித்தவர் களையும் அங்கு இடம்பெற்ற உரையாடல்கள் உணர்ச்சி பேதங்கள் முதலியன பற்றியும் முற்றாக மறந்து விடுகிறோம். வீட்டுக்கு வந்ததும் சந்தைக் கதையே வராது.
இவ்விதமாக, வாழ்க்கையில் எமது செயற்பாடுகள் எவ்வாமே கனவுகள்தாம். குறுங்கனவுகள் நீண்ட கனவுகள் - எமது நாளாந்த செயற்பாடுகள், அதாவது உண்ணுதல், உறங்குதல், போதல் வருதல், இரங்குதல், கோபித்தல்,
துக்கித்தல், ஆடுதல், பாடுதல், இன்பம் நுகர்தல், துன்பம் அனுபவித்தல், இவையெல்லாம்
துறுங்கனவுகள், இவைகள் உடனுக் குடன் மறந்துபோவன. நீண்ட 4. ଜିନ୍ଦୀ ଘy of sit a T 3ij | J337 பிறந்து, படித்து, உழைத்து,
செய்து, சொத்துச்
வளர்த்து, திருமன்னஞ்
சேர்த்து, ஆண்டு அனுபவித்து, பொருள்களை இழந்து, நோய் வாய்ப்பட்டு, கடைசியாக இறந்து போதல் என்று கொள்ளலாம். நீண்ட கனவுகள் கூட காலப் போக்கில் நினைவிலிருந்து மங்கி,
மறைந்து கடைசியாக மறந்தே போகும்.
நாம் ஒவ்வொருவருக்கும்
கனவுகள் கண்டு பழக்கம். சிவது நல்ல கனவுகள், சிஸ்து கெட்
கனவுகள். கனவு கண்டுகொண்டி ருக்கும் நேரத்தில் மனதில் பெரிய தாக்கங்கள் ஏற்பட்டுவிடு கின்றன. மனதில் பயம் வரும், அல்லது ஏக்கம் வரும். அல்லிது சந்தோஷ மிகுதியாஸ் குதுரக விக்கும். வாழ்க்கையில் எதிர் பார்க்காதது எல்லாம் கனவில் நடந்தேறும். ஆனால் முடிந்து கண்விழித்துக்
டதும் எமக்கே சிரிப்பாக, அதிசய ஏமாற்றமாக இருக்கும். இப்படியெல்லாம் உணர்ச்சி வசப் பட்டோமே என்று எம்மையே நம்பமுடியாத நிலையில் இருப் போம். இந்தளவுக்கு நம்மனதைப் உளைச்சதெல்லாம்
கனவு (N,Tačiai
I f]!'F,ኛሖ .
போட்டு சும்மா கனவுதானா? நிஜமாகவே
அந்தத் துக்கத்தையோ ஏக்கத்தையோ, சந்தோஷத்தையோ அனுபவிக்கவில்லிையா என்று எம்மையே நாம் கேட்டுக் கொள் கனவு நேரத்தில் நம் உடம்பிலும் உள்ளத்திலும் ஏற் பட்ட தாக்கங்களெல்லாம் பொய், அவை தோற்றம் மட்டுமே. விழித்ததும் நம் மனதிலோ உடலிலோ எந்த வித மாற்றமும் ஏற்பட்டிருக்கது.
நாம்
வோம்.

இந்தக்
ஓ! மது
இதேமாதிரித்தான், கனவு மாதிரித்தான் வாழ்க்கையும் என்பதை ஆறுத பிாக உற்று யோசித்தால் புரியும். பிறக்கிறோம், அனுபவிக்கிறோம், இறக்கிறோம். இன்பம், துன்பம், கோபம், துக்கம் எல்லாம் வரும், போகும். ஆனால் அவையெல்லாம் உடலைப் பொறுத்தபட்டில்தான். உயிரானது தன்பாட்டில், அமைதி பாக, எல்லாவற்றுக்கும் சாட்சியாக, பார்த்துக் கொண்டிருக்கும். பின்னர், இந்த உடம்பின் காலம் முடிந்ததும் இதிலிருந்து நீங்கி இன்னொரு உடம்புக்கு மாறிவிடும். இந்தப் பிறப்பில் இந்த உடம்பு செய்த நல்வினை தீவினைகளைப் பொறுத்தே அடுத்த பிறப்பை இந்த உயிர் எடுத்துக்கொள்ளும். சகஸ்தும் ஆண்டவனின் திட்டத் தின் படியே நடக்கும். நாம் செய்கிறோம் என்று நினைப்ப தெல்லாம் வீண் பிரபை, நாமாக ஒன்றும் திட்டமிடுவதோ, செப் வதோ கிடையாது. எல்லாம் ஆண்டவன் விதித்தபடியே நடந்து
ரு.
கலப்பை 51 () தை 2007 () 35
ஒன்றை நினைக்கின் அது
ஒழிந்திட்டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்
- ஒன்றை நினையாதபோது முன்வந்து
நிற்கும் எதுவும் எனையாளும் ஈசன் செயல்
ஒளவையார் சற்று பொறுமையாக யோசித்துப் பார்த்தால் விளங்கும். வாழ்க் விகையில் நடக்கும் ஒவ்வொரு சம்ப வமும் கனவுதான். சில காலத்துக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் எங்கள் மனதை மிகவும் பாதித்தன. தாங்க முடியாத உணர்ச்சி வசப்பட்டோம். ஆனால், காலப்போக்கில் அவையெல்லாம் நினைவாய், கனவாய், பழங்கதை பாய் மனதை விட்டு அகன்று விட்டன வல்லவா ? பழையது களை இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவை கனவு மாதிரி மனதுக்குத் தோன்ற Jinsi JKRIJGJLIT ?
- முதியோன்

Page 20
貂
(பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி)
எமது தாய் நாடு தமிழ் ஈழம் பெற்ற தாய் மகிழவும் பிறந்த பொன்நாடு போற்றவும் நாம் பேசிவந்த மழலை மொழி தமிழ். W சிற்றில் சிதைத்து விளையாடியது முதல் சீரான பட்டம் ଜା । 1ற்று செல்வம் கொழிக்கும் வேலையில் அமர்ந்து திருத்தக வாழ்ந்தது வரை ஆங்கிலமொழி கைகொடுத்துதவியது உண்மையென்றாலும் தமிழீ ழத்தில் வாழ்ந்த தமிழரின் செம்மை வாழ்விற்கு இருபத்திநான்கு
 

ق
ÉE
மணி நேரமும் வீட்டிலும் வெளி பிலும் பேசவும் உறவாடி மகிழவும் உறுதுணையாகச் சிந்தையிற் பூத்துச் செந்நாவில் தயக்கமின்றித் தவழ்ந்து செயற்பட்டது எம் தாய்மொழி 1 யாகியதமிழ்மொழி என்பதை எவரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. ஆனால் புலம்பெயர்ந்து புகுந்த நாடுகளில் இன்று நாம் காணும் உண்மைநிலை என்ன? தாய் மண்ணின்(மைந்தர்களாக எல்லோரும் வாழ்கின்றார்களா? வீட்டிலும் வெளியிலும் தமிழர் களுடன் பேசவும் உறவாடி மகிழ வும் எம் தாய் மொழியாகிய தமிழ் மொழியை அவர்கள் தயக்கமின்றி இதய பூர்வமாக அரவனைக்கிறார் களா? இதற்குத் தகுந்த பதில் உங்க ளூக்கே புரியும்.
குழந்தை பிறக்கும்பொழுது எல்லாம் தெரிந்த ஞானக்குழந்தை யாகப் பிறப்பதில்லையே! எந்த வொரு எடுத்துக் கொண்டாலும் ஒருவர் பிறந்த நாள்முதல் அவரின் மனவளர்ச்சி, மொழிவளர்ச்சி, நெறிவளர்ச்சி அவர் வளரும் - வளர்க்கப்படும்
நாட்டை
சூழ்நிலைகளின் தாக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டே வளர்ச்சி படைகின்றன என்பது ஏற்கக் இரு ப் பி னு ம் பெற்றோர்கள் தங்கள் குழந்தை
* ப த க
பான்மை பெறுகிற தல்லவா? புலம்பெயர்ந்தவர்களிற்
մեՀՈՒքTT வளர்க்கும்
முக்கிய இடத்தைப்
கலப்பை 510 தை 20
சிலர் தற்காலச்
07 II ー சூழலுக்கேற்ப
التي لا توفي يوليو تيال களை மாற்றி வாழ்கிறார்கள்
இதைப் பிழை என்று труд шту, а ஆனால் அவர்கள்:தமிழ்பேசு
o7 வதையும்தாங்கள் தவிர்ப்பதுது
மட்டுமல்லாது தங்கள் அன்புக் குரிய வாரிசுகளுக்கும் தமிழ்: மொழியைக் கற்பிக்காது வாளாது விருப்பது மனதிற்கு வ
ஏற்படுத்துகிறது. தமி என்ற தனித்துவத்தை அவர் முந்து வருகிறார்கள் என்பன Trள் E. மறந்து வருகிறார்கள். களரின் வருங்காலச் சந்ததியின் தான்
என்ன? தமிழ் மொழி பேச எழுதத் தெரியாத அவர்களை எந்த இனத்தில் சேர்ப்பார்கள் "நான் தன் மானமுள்ள தமிழன்" என்று அவர்களால் மார்புதட்டிக் கூறத்தான் முடியுமா? அவர்கள் தங்கள் வருங்காலச் சந்ததியினரை என்ன இனம் என்று முத்திரை
பதிப்பார்கள்:
புகுந்த நாடு களில் சிறுபான்மைச் சிமுகமாகி
புலம்பெயர்ந்து
அந்த நாடுகளிலே நல்வி வேலை கிளைப் பெறும் நிமித்தம் ஆதிக்கத் திலுள்ள அரசு மொழிகளைக் கற்று வாழ்க்கையில் ஒகோவென்று முன்னேறி சிறிதாகத் தமிழை மறந்து வந்தமை தான் அவர்கள் தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தத்தினால் விட்ட தவறு.
வந்தவர்கள் சிறிது

Page 21
ప 。 : :
* "";_تاری 孪 இதன் தொடர்ச்சியே இன்று மொழியின் பாரம்பரியம் தி அவர்களின் வாரிசுகள் தங்:ை கொண்ட் சிறப்புகள் எதுவும் இறந்துவரும் துக்ககரமான நில்ை தெரியது. தம்பிள்ளைகளுக்குத்இ இ தமிழைத் தங்கள் பிள்ளைகள் தமிழின் அரும்பெருஞ் சிறப்
கற்பதற்கு" அவுத்திரேலியாவில் பியல்புகளை எடுத்தியம்பி அவர் (என்ன தேவை இருக்கிறது என்று களுக்குத் தமிழைப்தி படிக்கும்
இஅவர்கள் விதண்டாவாதம் பேசு
"ప్స్టFద్ద్
ప எமக்குச் சாப்பாடு தருமா? இது
இந்நிலையில் அவர்களுக்கு
التي இபழம்பெரும் நாகரிகச் சிறப்புப் பெற்ற தமிழ்மொழியை இலக்கியச் செழுமை குன்றாத இன்றமிை
தலைசிறந்த பண்பாடும் பாரம் பரியமும் மிக்க கலைவளக் கற்பக தருவான கன்னித் தமிழை, மொழி களிற்குள் செவ்விய மதுரஞ்சேர் செந்தமிழை, பரம்பரையாகத் தொப்புள் தொடர்புள்ளதும் தாய்ப் பாலுடன் சேர்த்து காலங்காலமாக ஊட்டப்பட்டதுமான தண்டமிழை அதன் வெற்றி கண்டுணர்ந்து தங்கள் மழலைகளுக்கு ஊட்டத் தாமாகவே முன்வர வேண்டும்.
இப்புனிதப் பணியின் அவசி
ஆர்வத்தை வளர்த்தல் இன்றையது
கிறார்கள் தமிழ் கற்பித்தால் அது ஒவ்வொரு பெற்றோரினதும் தலை
ILJr"IL CHILLST gyffin. వ్రె ஆது
இவற்றை
உணர்ந்து மிகுந்த ஆர்வத்துட்ன்ர்
*_一 யார் தமது பிள்ளைகளுக்குத் தமிழ் மன்னி கட்டுவது: து படிப்பிப்போர் தொகை சிறிது து
சிறிதாகக் கூடிவருவது தமிழ ரெல்லோருக்கும் மட்டில்லா
மகிழ்ச்சியைக் கொடுப்பது ஒன்
றாகும். இவ்வளவு காலமும் தமிழை மறந்தவர்களும் இனி யாவது தமிழைக் கற்பிக்க முன் வருதல் அத்தியாவசியமாகிறது. தமிழ் கற்பது கடினமானதென்றும் தம் 'பிள்ளைகளுக்கு மற்றப் பாடங்கள் படிப்பிக்க நேரம் போதாதென்றும் நொண்டிச் சாட்டைப் பெற்றோர் பலர் இந்தக் கூற்றுத் தவறானது. ஏனென்றால் தமிழீ ழத்தில் முன்பெல்லாம் இருமொழி
களையும் சிலர் மூன்று அல்லது
கூறுகிறார்கள்.
பத்தை, காலத்தின் கட்டாயத் தேவையை உணர்த்தத்தான் நான்கு படித்து திறமைசாலி களாகக் கல்வியில் சிறந்த பெறு முடியும். தமிழைப் புறக்கணிப் பேறுகள் பெற்றுத் திகழ்ந்ததை Utஉள்ளத்தில் திணிக்க ஒருவரும் மறுக்கமுடியாது. இந்
அவுத்திரேலியாவில் பிறந்து பிள்ளைகளுக்கு தமிழ்
வளரும்
நாட்டில் படிப்பதற்கு இன்னமும் வசதிகள் கூடுதலாக இருப்பதால் பிள்ளைகள் தமிழை முறையாகப்
3. 3.
 
 
 
 
 
 
 
 
 
 

வேண் 2:8தி ދުވަ. ag நீயும ان . ங்கிலத்தில் எழுதித் '?೪
1+*
அறிவு போட்டிக்குப் tirri , சிக்கு சாதகமாய் இருக்குமே யதையும் படிக்க தவிர ஒரு காலமும் தடையாக' இருக்காது.
17:11 தியோமறிந்த மொழிகளிலே தமிழ் குடும்பங்களில் காணக்கூடிய இ
மொழிபோல் இனிதாவது எங்கும் சி" இருக்கிறது. இதனால்து தி இஎவ்வாறு தமிழ் வாழையடித் இ வாழையாகத் தொடரும்? எழுதது 豹
Staffff.
3. எகளைத் தயார் செய்வதைப் தி
盟 . . இகானோம் எனறு அன்று
ரமழை பொழிந்த மகாகவியின் கீற்வித மறக்கலாகுமா? କ୍ଳି ୯୬ காலத்தில் செழுமைமிக்க மொழி
தல்லவா எம் தமிழ்மொழி
"செத்தமிழ் மக்களே வாரீர் t
-- ā Ã ã"
தெய்வத் தமிழ் மொழிச் சீரினைத் துேரீர்
ஆந்தியில் எம்மொழி மாதா - உதிர்
அல்லனைத் தீர்க்க அறிவு аугују."
என்று வருந்திப் பாடிய "தங்கத் தாத்தா"வை நினைத்துப் பாருங்கள்!
தமிழ்மொழியை உயர் வகுப்பு வரை ஓர் பாடமாக எடுக்கலாம் என்ற இன்றைய சூழலில் தமிழை வளர்க்க தன்மானமுள்ள தமிழ ரெல்லாம் தமிழைத் வேண்டும். பள்ளிகளில் நடாத்தப் படும் பிள்ளைகள் பரிசில்கள்
வேண்டும் என்பதற்காக மட்டும்
முன்வர வேண்டும். தமிழாகப் படிக்க
போட்டிகளில் தங்கள்
எடுக்க
வாசிக்கத் தெரியாத பிள்ளைஇ
எப்படித்
தமிழை முறையாக எழுதவும்
5-வாசிக்கவும் படிக்கவும் பழக்கு
வதற்கு எல்லோரும்
வேண்டும்.
முன்வர "முயற்சி திருவினை ஆக்கும்" என்ற சான்றோர் வாக் கிற்கு அமையத் தங்கள் மழலை களுக்கு முறையான தமிழ் அறிவை ஊட்ட முன்வர வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. அழியும் மொழிகளில் தமிழும் ஒன்று - தமிழ் நலிந்து மெலிந்து "வெல்லத் தமிழ் மெல்ல இனிச்சாகும்" - என்று கூறிவரும் ஆராய்ச்சியாளர்களை வெட்கித் தலைகுணிய வைப்போம் என்று சபதமெடுப்போம்! சங்கம் வளர்த்த முத்த மினழ வளர்த்திடுவோம்!
தரணியெங்கும்
சே تيتيتيتيات الكويت في * தனது சந்ததிக்குத்து உயர்ந்திருந்து ஆட்சி செய்த தமிழைப் பரப்புவது?
ÉE
E.

Page 22
அன்பென்னும் பதம் விளங்க அரங்கேற்றம் செய்வோம் என்றால் என்போன்ற மக்கள் எல்லாம் எழுந்து முன்திரண்டு நிற்பார் அன்பு மூன் றெழுத்துத்தானே அரங்கேற்றம் எளிதே என்பார் பண்புக்குப் பட்டிமன்றம் பாட்டுக்குக் கவியரங்கம் அன்புக்கோர் அரங்கம் என்று வாயாலே வடிவமைப்பார் அன்பேதான் இறைவன் அது தெரியாதா அண்ணா என்பார் அயலானை நேசி என்று ஆண்டவர் சொன்னார் என்பார் என்புமே பிறர்க்கு உண்டு. திருக்குறள் வகுத்ததென்பார் என்பல அறிவு கூறும் எம்தமிழ் சோதரர்க்கு, தன் தமிழ் அண்ணன் தம்பி அன்னையர் படும் துன்பத்தை கண்டதும் கடிதே மூடும் கண்களும் திறந்திடாதோ?
தமிழ் எங்கள் அமிழ்தம் ஆகும் தப்பேதும் இல்லை உண்மை அமிழ்தத்தை அடகு வைத்து அந்நிய மொழியை இல்லம் அடங்கலாய் உலவச் செய்து அதிலொரு இன்பம் காண்பர் தெருவிலே காரில் கண்ட இரு பெரும் (த)டமிழர் தங்கள் தனி பொழி தமிழ் மறைத்து தடம் புரண்டாங்கிலத்தை கலக்கிடும் மாலைக் கண்ணை கசக்கியே விழித்துப்பார்த்து கண்களைத் திறந்திடாரோ இன்தமிழ் இசைத்திடாரோ?
 

வேரிலா மரங்களாகி வெய்யிலில் மழையில் தோய்ந்து ஆரவே உணவிலாது அருந்திட நீரில்லாது ஊருண்டு உறங்குதற்கு உறைவிடம் மரத்தின் நிழல் போரணி வீசும் "ஷெல்லும்" பொறிபடும் குண்டும் கண்டு சிதறிடும் தமிழர் இன்று செத்துமே மடிதல் தம்மை ஏறிடும் அன்புக் கண்கள் இறுகவே மூடிக்கொள்ளல் மாறிடும் நாளே எங்கள் கண்களைத் திறந்திடாயோ -
"சுனாமியால்" எங்கள் மக்கள் சொல்லொணா துயரம் கண்டார்.தி கனாமியால் கடல் கோள் கொண்ட துன்பத்தைச் சுமந்தோர்நோக ஆமியின் அட்டகாசம் அடிக்கொரு அடியாய் ஈழப்தி பூமியைப் புழுதியாக்கி போரிற் கோர் முடிவிலாது 3 காவியைக் கட்டும் "சாது சரணமே." சொல்லி சண்டை தூவிடும் சூழ்ச்சி செய்தும் சோதரர் துன்பம் கானா பாவியர் திருட்டு கண்கள் திறந்திட வேண்டும் சுவாமி
மாது நற் சீதை தன்னை மடக்கியே கடத்திச் செல்ல மாரீசன் மயக்கும் மாய மானாக மாறினாற் போல் தீதையே கருத்தாய் கொண்டு தேன் தமிழ் தீயுள் வேக பாதகர் பத்து ஐந்து ஆண்டுகளாக இன்று பறந்திடச் செய்யும் மாயச் சமாதான வெண்புறாவே ஏதுனக்கிந்தத் தொல்லை இனிய நின் பெயரை நாச மாக்கிடச் சூழ்ச்சி செய்த சந்திரி, சிங்கா சேர்ந்து நாக்கினை வனைத்து வாக்கை வஞ்சித்து வேட்டையாடும் போக்கினைப் புரிந்து, புனித சாந்தியை விழித்துப் பார்த்து பொறுத்த நாம் போற்றுகின்றோம் புனிதமே வெண்புறாவே ! சாற்றிடும் சத்தியம் சேர் சமாதானம் ஈழம் எங்கும் வீற்றிட விரைந்துன் கண்கள் திறந்திட வேண்டும் அம்மா
ஆக்கியோன் திசையரசன் 1062 - 66 Burlington Road, HII Iebuslı 24), N.S.W.
27.01.07 அன்று மெல்போர்னில் நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் வாசிக்கப்பட்டது)

Page 23
அவுஸ்திரேலியாவில் சிட்னி Lisi) as Ligi (Lidcomb) அமைந்த ஹாலில் அங்கும்
தனது வீட்டு
இங்குமாக உலாவிக் கொண்டி
ருந்தாள் சாரதா
38 வயதை எட்டிக் கொண்டி ருக்கும் மிகுந்த சஞ்சவமும், மனக் கவன'யும், ஆற்றொண ாத்துயரமும் ஆட்டிப்
படைத்துக் கொண்டிருந்தன.
சாரதான பே
சமீபகாலமாக தாயகத்தில் நீண்ட பெற்றுக் கொண்டிருக்கும் 3 ri ரால் எத்தனை எத்தனை தமிழ்மக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். உயிரி ருந்தும் நடைப்பினமாய், உரிமை பிருந்தும் அடிமைகளாய், வாபி ருந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும், இல்  ைல
தள்கிைளாப்
இல்லை, வாழ முயன்று கொண்டு
 

%
இருக்கும் அந்த மக்களை நினைக் கையில் அவள் கண்களில் இருந்து நீர் முத்துக்கள் வழிந்தோடின. இதயத்தில் இரத்த முத்துக்கள் வழிந்தோடின. நெஞ்சை யாரோ பிளப்பது போன்ற ஓர் உணர்வு தோன்றி தோன்றி மறைந்தது.
சம்மட்டி கொண்டு
இங்கு எல்லா மக்களும் நல்ல வசதியுடன் தானிருக்கிறார்கள். இங்குள்ள தமிழ் அங்குள்ள வாடிவதங்கும் தங்களது சகோதரர்களுக்கு இருகரங்களை பும் நீட்டி தங்களால் இயன்ற உதவிகளைப் புரிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் "
மக்களும்
இப்படியெல்லாம் யோசித்து
ஆன்று பின்னேரம் r மணிக்கு அவுஸ்
விட்டு, சனிக்கிழமை
திரேலிய மருத்துவ உதவி நிதியம் நடத்திய முத்தமிழ் நிகழ்ச்சிக்குத் தன்
[ የ] WIT ፭ዞዃ} (1፲
கண்ணா இவர், பிள்ளைகள் சகிதம் சென்றாள்.
நிகழ்ச்சியின் சப்தஸ்வரா இசைக்குழுவினர்
SFIO' Luli:Ffor AF,
வழங்கிய இனிய பாடல்களையும் மற்றும் இடைவேளைக்குப் பின் இடம்பெற்ற வில்லுப்பாட்டையும்
மக்கள் கேட்டு ரசித்தனர்.
சில மருத்துவர்கள் தாயகத்திற்குச் சென்று எவ்வாறு
தாங்கள்
மருத்துவ உதவி வழங்கிவிட்டுத் திரும்பினார்கள் என்பது பற்றியும்
கலப்பை 51 () தை 2007 43
சுவைபட உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இடையிடையே தாயகத்தில் நோயால் வாடிவதங்கி யிருப்போரையும், அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தின் மூலமாக எவ்வாறு அங்கு உதவி வழங்கப்படுகிறது
8ጅጎ(፴
போட்டுக் காட்டினார்கள்.
என்பதையும்
திரையில் ஸ்லைடுகளைப்
திரையில் தெரிந்த காட்சிகளை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் அங்கு கூடியிருந்த பெரியவர்கள் என அனைவரும் L Trr SS) á கொண்டிருந்தார்கள். நோயாளர்
கண்கொட்டாமல்
களையும், மற்றவர்கள் அவர் களுக்கு உதவும் காட்சிகளையும் இன்னும் அதிக நேரம் காட்டி
பிருந்தால்  ைட யே
பார்வையாளர்களி
இ ன் னு ம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்
ਗLL
என்ற எண்ணம் சாரதாவின் உள்ளத்தில் தோன்றி மறைந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அமைதியாக
எல்லோரும் வீடு திரும் பி
விட்டார்கள்,
அடுத்த ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் 4 மணியளவில்
அவளது வியது மகன் ரமனன் அவளருகே தலையைக்
குணிந்தபடி நின்றான்.
வந்து

Page 24
கலப்பை 51 [தை 2007 () 44
"அம்மா! உங்களிடம் ஒரு
"என்ன விஷயம் சொல்லேன்"
என்றாள் சாரதா,
"போனகிழமை அந்த நிகழ்ச்
சிக்குப் போய்விட்டு வந்ததில் இருந்து என்ர மனமே சரியில்லை. சரியான கவலையாகக் கிடக்குது. என்னால இயன்ற அளவு காசு சேர்த்து அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதிபத்திற்கு குடுக்க என இழுத்து இழுத்துக் கூறினான் ரமணன்.
யோசிக்கிறேன்"
"என்ன மாதிரி காசை சேர்க்கப்
போகிறாய் மகனே' என்பது போல மகனை உற்றுப் பார்த்தாள்
சாரதா
ரமணன் தொடர்ந்தான்.
"என் ர நண்பர்களுடனும் கணிதத்தேன். அவர்கள் பகுதி நேர வேலைக்குப் போறாங்கள். அதி:
&ኃ JÜ தாங்க
கிடைக்கிற சம்பளத்தில
மற்றும்
தேவைக்கு அதிகமாகப் பாவிக்கும்
பகுதியைபும்
வாசனைத் திரவியங்களை பாவிக் கிறதை குறைச்சு அதில மிச்சம் பிடிக்கிற காசையும் வீடியோ
அந்தக் சேர்த்து அங்கே
கேம்களை வாங்காமல்
கான சபும் கஷ்டப்படுகிறவர்களுக்கு அனுப்ப
போசிச்சிருக்கிரம்" என்றான்.
அவனுக்குப் பின்னால் நின்று எட்டிடப்பார்த்த அவன் 10 வயது தங்கை நர்மதாவும் "நானும் இனி மேல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழ மையும் மக்டொனால்ட் சில்
ஹாப்பி மீல் (11:புரy M:I) வாங் காமல், எப்போதாவது ஹாப்பி மீலை வாங்கலாம் என்று யோசிக் கிறேன். அப்பிடியும் காசை மிச்சம் பிடிக்கலாம்தானே அம்மா" என்று வினவினTள்,
இங்கு வளரும் பிள்ளைகளுக் கும் எங்கள் நாட்டில் நடக்கும் அதனால் வாடிவதங்கும் மக்களைப் பற்றியும்
பிரச்சினைகளையும்,
அவ்வப்போது உணர்த்தி வந்தால் இங்கு வளரும் இளைய சமு தாயமும் அங்குள்ளவர்களுக்கு நிச்சயம் உதவுவார்கள் என்ற எண்ணம் சாரதாவுக்கு ஏற்பட்டது. ஒரு சிறிய விதைதான மிகப்பெரிய ஆலமரமாகி பல பேருக்கு நிழல் அளிக்கிறது.
அந்த எண்னம் அளித்த நிம்மதி உணர்வுடன் அவன் தன் வேலைகளைக் கவனிக்க தன்
இருக்கையில் இருந்து எழுந்து
சென்றாள்.
 
 

ില്ക്ക്
KSA Sasa ജ്ഞ அகராதி (தமிழ் estigab)
teolUTaynnTTL:
Bpਕo, (glo
பே
பேய்அவரைகோழிஅவரை) (aami wali:A C il:adi: til பேய்க்கொம்மட்டி Cucullis colocyI this பேய்ப்புல் [O:s chati i tr | LIITILIT: பேய்த்தக்காளி Solanum lyc opeTsi CLIII பேய்ப்புடல் Trichçısırıtlıcs lacinios:ı பேய்மு:சுட்டை , (Carn y Lily Illus specios Lis
Jasi11 in LIITTI III kdLuli:litLIIT1 பேரேலம் Eletta rial carda ITI LI Im
Bil Ir ii r roa 37 jiggyb Ricinus iller is
பொ
பொடுதலை Werbena modiflora பொன்னாங்கண்ணி Illecebrusessile பொட்டகத்துத்தி ERA Hibiscus abeli moschus G. firfiry sistgaara).5Giraf) Lepidagothes cristata பொற்றலைக்கையாந்தகரை Wedelia calcundLulacuc:
பொன்னங்கண்ணி பொன்னாங்கண்ணியிலை தினமும் பாவித்து வந்தால் உடல் மெருகேறி பொன்னிறமடையும். மூலநோய்கள், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் குணமாகும் என்பது அனுபவ ரீதியான வைத்தியமாகும். பூram'பொன்னாங்கண்ணியிலையில் - 3210 ஜ1. 呜 LLLLLL LS 00S LLLLLLLLS LLLL LLS 000 LLlLS LLLLLLLLS 0S LLS LLL LLLL L0 LLL மணிச்சத்து உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Page 25
கலப்பை 51 ) தை 2007 () 46
மகரம்புவெந்தயம்) மகளிக்கீரை மகிழம்மரம் மஞசாடி
மஞ்சள் மணலிமணலிக்கீரை) மஞ்சிட்டி மணி(உத்திராட்சம்) மணித்தக்காளிசஞ்சீவி) மதுரசம மதனகாமேசுரப்பூ மந்தாரை மயில்மானிக்கம் மருதமரம் மருக்கொழுந்து மரமஞ்சள் மகரவாழை மருதோன்றி மலைகலக்கி மலையாமணக்கு மலைதாங்கி மலைத்தும்பை மலைத்தேங்காய் பைைல்விகை மலைமுள்ளங்கி மலைவேம்பு மல்லிகை
Erwa doce Celosia albida || 22 Min Liscops Adenanthera pivonia Curcumrila longalinn (tum cric) Gisekia pharinacioides Rubia mung ist:
Eliocarpus
Se olanu III nigrum Asclepias acida (mico. In plant) Pergularia toTicintosa B:Lullinia variegata lpoinoca guarıoclit Terminali: Elata ATte nisi alustriaca Micrisperimum fenestralu II (Origallum majorarum Lawsonia spinosa AdianLurıh candi:LtLLIm1 Jalrcopha multifica Sida lanceolala Phyllis biflor; Fictid sterculi: Millingtonia hortensis Ornithogal galdense Milia azidarachta Jasminum sa Illbac
மணித்தக்காளி மணித்தக்காளி இலையை பருப்புடன் கடையல்
செய்து சாப்பாட்டில் கலந்து
கொண்டால் குளிர்ச்சி உண்டாகி
வசீகரம் பெற்று பெண்களின் மார்பகங்கள்கூட வனப்புப்பெற்று தேககாந்தியும் உண்டாகும் என்று கூறப்படுகின்றது.
மயில்மாணிக்கம். இதன் இலையை மட்டும் அரைத்து தயிருடன் கலந்து காலை மாலை வேளைகளில் சாப்பிட்டுவர பெண்களின் வெள்னை ஒழுக்கு, காசநோய்கள் குணமாகும்.
மருதோன்றிப்பூ நீடித்த கொண்டது.
தலைவலியை அகற்றும் தன்மை
 

கலப்பை 51 () தை 2007 () 47
மலைவேம்பு மலைவேம்பின் மகிமை பற்றிய பாடல்:
"மலட்டுப்புழுவும் வயிற்றின் வலியு மலட்டு வாய்வும்போ மடங்கி - கொலட்டு முலைவேஞ் சினவேற்கண் னேதிமமே கேளாய் மலைவேம்பின் பேரை வழுத்து!"
மலைவேம்பு பற்றிய இன்னுமொரு பாடலைப் பாருங்கள்
"மலைவேம்பு தன்பிசின்றான் வாதக் கரப்பன் மதுமேகக் கட்டியிவை மாற்று - நிலமீது தாதுவுமுண்டாக்கும், சலபேதி யைக்கட்ட மாதே இதனை வழுத்து!"
| roT! r: T i i Mangifera indica | fyTaն Sascwara Zeylanica மாகதிமுல்லைக்கொடி} Jasminum friculturnu II மான்கீரை ^ Imara In thus Luguistifolia மான்செவிக்கள்ளி Calcolia Klcinii மாசிபத்திரி Artemisia indica மாசிக்காய்கடுக்காய்) - Quercus Inflectoria (gallinull) மாஞ்சிசடாமாஞ்சி) Waleriana jltimansi மாடம்உழுந்து Phluscolus mungo மாதளை மாதுளை) PLI Inica gramatuurl ( Pt. I begral Ilalic) மாவினங்கை Cratava Tcxb1Lrgha
நி
மியூவரிசி Cacalca sonchifolia மிருதசஞ்சீவி மிருதசஞ்சீவனி) Solanum Inigru||1 (pallacea) மிளகாய் Capsicum frutescens மிளகாய்சக்களத்தி Winea pusilla மினகரனரை Scopolia acLllcata மிளகு Piper nigrum (pepper)
(էք
முட்கீரை A, IT n: rarithi L Is sp) imisas
முட்சங்கு Millia

Page 26
கலப்பை 51 ) தை 2007 () 48
TT TeTTTTTTTTT TTA TTTTTTT LLLLLLLLmmtHLLLLL LLLLLLLaaLL
முசுமுசுக்கை முசுக்கட்டைமரம் முசுறுப்புல் முத்திருக்கஞ்செடி முத்தக்காசு முத்திரிகை முக்குளி
முருக்கு முருககவரை முருங்கை முள்முருங்கை முள்ளிலவு முள்ளங்கத்தரி முதலைக்கோரை முள்ளங்கி முதலைப்பூண்டு முள்ளிநீர்முள்ளி முல்லைக்கொடி முன்னை முன்னைக்கிரந்தி முட்காய்வேளை முட்கொன்றை முட்பூல் முண்முருக்கு
Bryonia seabT: Sycamine
PITITcrcillia
Asar II LLIT Up: CLL nl Cyprus juncill AnacardilIII (ccidentale Portulaca pilosa Erythrina indica Psophacarpus tetragonolobus Hyperanthera miringi Erythrina Indical BarInbax leptaphyllum Scola TI LIIT1 in sa Inul Cyperus duhit Lis Raphantis sativus (Radish) Polygon Lum glabral Scolanum indicum Jasminum Samblic PrcInna integrifolia Barleria, Nittida (falen spine ysl Caesalpina scaT1{lc:Ins Phyllanthus Buca frondkos:L
d
முடக்கொத்தான் முடக்கொத்தான் என்ற சொல்லிலேயே அதன் குனாதிசயம் உள்ளது. திமிர்வாதம், கீல்வாதம் என்றழைக்கப்படும் கைகால்கள் சுயாதீனமின்மையை குணமாக்கும் தன்மை கொண்டது.
(Cure of palsy and gout), 3:56) iT
முடக்கறுத்தான் விான்றும்
அழைப்பதுண்டு. இதன் வேரில் Supporin நிறைய உள்ளதால் வாத நோய்களை கட்டுக்குள் அடக்கும் தன்மை உண்டு.
மூக்கிறட்டை முக்கரத்தை மூக்காவனை(மூக்காவனை) மூக்கொற்றிக்காய் மூக்கொற்றிப்பூடு
மூங்கில்
Boerhaavia procumbg|15 Tephrosia spinosa Thul Ilbergia racemosil Iluli indical BambLisa EITLIT1clinacca
 

கலப்பை 51 ம் தை 2007 49
மொ
மொச்சை Lablab vulgaris
மோதிரக்கன்னி Hugoniau mystax
மோ
மெள
மெளஷசிநாணற்புல்லரைஞாண்) Saccharum sp(ntaneum
நி1 வள்ளி Convolvulus batatu - ഭ வல்லாரைசரஸ்வதி Indian Pennywort ട് வக்கணாத்தி Symphoresma involucrata 2. வக்கரவச்சிகீரைவகை) Sesuvian adscendens வட்டத்திருப்பி'பொன்முசுட்டை) Cissampelas வவ்வாலோட்டி ترین تعمیر Pteropus Jawanicus வண்டை(வெண்டை) Hibiscus sinnal Intus ਇ% வயற்கொடுக்கி Heliotropium coromandelianum வயலம்மான் பச்சரிசி Euphobia decumbens வரகு Paspallum fiumentaceum வரியாத்துக்கிழங்கு Rheum palinatum வசம்பு ദ Acous Calla Inhuis வண்டு கொல்வி Cassia Alata வன்னி Prosopis spiccgcr: வள்ளிக்கொடி Batata Sedulis வழுக்கைப்பசளை Portulaca palinoides வங்காரவச்சி Sesuvium adscendens வாதக்கிரப்பன் Ailanthus tree
須
வல்லாரை இதனைப் பசும்பால்விட்டு அரைத்து நெல்லிக் காயளவு உட்கொண்டால் காச நோய், ஈளை முதலிய நோய்கள் அகலும்,
100 grams sugisultan T. gabalissfai 2.24 mg. Calcium, 68.8 mg (iron copper gold), 32 TAIS மணிச்சத்து உள்ளதால் இந்த மூலிகையை கற்பக இனத்தைச் சேர்ந்த மூலிகை என்று கூறுவார்கள்.
வாதக்கரப்பான் இதனுடைய பட்டையை பாரிச வாத நோய்க்கு மாற்று மருந்தாக பாவிக்கலாம் என்று கூறப்படுகின்றது. (Bag is used as an antidote for paralysis), R
TTE"

Page 27
TH="TE=""j==============
Islumped my head onto the pillow, My eyes half open, Today Was school and wasn't looking forward to it. There was fifteer Tinutes left. This usually happens. Walked Ower to the bathroom still half awake. I grabbed Ty toothbrush. As opened my Touth a putrid scent came out. "HUTTyup James," MuT) shouted from downstairs. I quickly showed the toothbrush into my mouth and had a thirty se cond brush of my teeth, I didn't bother to have a shower today. Usually take hours. I quickly put on my uniform.
Ate a piece of toast and hurried Off tC SChOOl.
I Walked into the Cl:ISSTOC T1, "Goodmorning Mrs. Gaskay". I said joyfully. But I really didn't meam it. "Hi James," Ty friend Justin said. Justi is a Cool fellow. He's Ty only real friend. "James, do you want to see the Comic character drew'?" he
asked.
"Yeah okay," I replied.
"COTe here," he called. I Walked ower to his desk.
 

"Look," he said,
"Awesome," I said. Then I saw Jenny. "Oh no," I thought. Jenny is the fattest, mea nest, Lugliest and strongest girl in the school, And guess what, she likes me. Then, she saw me. "Hi honey = cakes," she said as she walked over to me. "Stop calling me that, it's embarrassing," said under Ty breath,
"Jenny's here James," Justin Said.
"Don't you think I know that," said abruptly." She's so fat that you can't Tiss her." I thought. I turned away as if I Wasn't looking at her,
Suddenly, the bell rang, "Sawed by the bell," I thought.
"Everybody back to your seats. We're going to kick off the day with maths," Mrs. Gaskay said.
"Yes." | muttered.
School finally finished and my bra ir Was totally WOTT – Ut. I was back home, Walked up to my room. Suddenly, I heard a "crash' noise, ran quickly, My framed picture of the Sri Lankar Cricket tea was broken With all the glass pieces shattered or the floor.
"No, my picture," said in devastatiOIT.
"Sorry about that. It was an accidefinit," a WCICE Called. The SoleOne appeared,
"Who are you?" I asked.
a
கலப்பை51) தை 2007 51
"I'm Jack and I'm, well a ghost," he said. "By the Way, don't bother calling anyone else to help you. - You're the only one who can hear
The and see me," he said.
"Why am the only one that can hear and see you?" asked.
"I don't know", he said. "By the Way, get out of my room," he
demanded.
"It's my room," boomed,
。 "No, this was my room when Was alive," he added.
"What You li wied irm this house Wher you Were aliwe?" I asked i astor histlert,
"Yeah, with Ty Dad, Mum and
little sister Meagan. But I don't
know where they are now," he
anSWered.
2. ދު "James, Can you walk the dog?" Mu asked froT) doWristrairs,
"Yeah, okay," I replied.
"Sorry, I have to walk the dog," told Jack,
"C'mon Scruffy," I said while grabbed his leash, And off we went dWith the street,
While I was walking the dog, a black cloud was floating on top of ille. Suddenly, a woice Called out to Te, "Where is he?"
"Who are you?" inquired,
"I asked where he is?" the woice ask Eed agair,

Page 28
கலப்பை 51 () தை 2007 ()
"Where is who?" I asked again.
"WTF" | Suted
"If you don't tell me I'll choke
I
you," he threatened.
"I think you're talking to e
Wrong person," I said.
"ND, I'm mot
der ICE,
"Who, Jack?" I asked.
"Yes," he boosted.
"He's in Tyroom," I said.
"You better not be lying," he shouted, And then he disappeared, I looked at Scruffy. She was frozen, She didn't even twitch, I tugged at her lash. She Cafe bäCk, 3 live.” C'mon Scruff," I said. We reached home, I left Scruffy in the backyard, entered the house. "Did you walk the dog, James?" Mum asked.
"Yes," answered. Iran up to my room, As I opened the door heard a voice call help, help.' It was Jack and the ghost | met while I was walking Scruffy. He was strangling Jack. Why was he doing this? "Stop," barked. He let go off Jack,
"It's that littlebrat Irret while he was Walking his dog," the evil ghost sпеегеб.
"Why are you doing this?" | asked.
a
"DO't law ful W. With me. whereTn the same School as me, he was a
play y ''' fibully and one day humiliated him,
is he?" he asked once more. ణ Jack said தி
ー "he said With conf "And everyone laughed," the
He's doing this because he was
How did you humiliate him?" asked. 3.
3"I puta farting thing on his chair he sat down and it made a farting noise." Jack said.
ewil gh Ost added.
"That's pretty funny." I said with laughter.
"How dare you laugh at me?" the evil ghost barked.
"Who are you talking to," Mum
interrupted. ー。 p ട്ട "A1, o One," | StutterEd.
"Well, then do your homework," MILIT irsisted,
"Okay," I said. She went out of the TOOTi ard SIThashed thë djr dr. her way.
"Go away yoL ghost" I shouted.
"My name is Andy," he finished апd disappeaгесd.
"You have to save me James, krovy Andy has got a evil trick up his sleeves," Jack whiled.
"I know," said as I grabbed Ty homework book. I started to do ty FiOTeWOrk. It Was the rTiddle Is the night when I heard a "help me" noise. I ignored it and went back asleep.
 
 
 

ബ
погпіпg | heard another noise, But this time it sounded like the evil ghost. hopped Out of my bed. I listerhed carefully. The noise was coming from the closet. opened it. There Was a Secret passage Way. It was dark. Theard the noise again. "Help
me," it sounded like Jack, I went
through the rope, Jack," I shouted.
inside the closet. Cold air brushed on face, I followed the path. Now, found myself with two passage Ways. "Which way do go?" I asked myself. "Let's try right." So I went inside the right passage way. At the end I found myself at a dead end. "What a Wastel" | Turtured as looked at the Wall. I turned around and headed back. Finally, I reached the Wo passage Ways again. "NOW, try the left," thought. I headed into the left hole. But once again found myself at a dead end. But this time I Could hear Jack. He was calling out for help. I rested Ty ear of the Wall. He was with Andy. I put my hand on the wall but it just went straight through. "The wall was an illusion," thought. "A trick." | Walked straight through the Wall. I could see Jack, Andy was next to him. He had a knife in his hand. He was going to kill Jack for such a little matter, My eyes narrowed on Andy. I ran towards Jack calling out "stop."
"What are you doing here?" Andy asked.
கலப்பை 51 ) தை 2007 D 53
"James," Jack shouted with gleе.
"Leave him alone," I told Andy. Then, an idea pooped into my mind. Jack's a ghost so the knife would go straight through him and if he's tied EO a rope he'll be able to Walk straight through it. "Crawl straight
"What" he exclaimed.
"Just do it," | shouted once more. He crawled straight through the rope.
Il Work 3d, MJI W RUN!" |
SCrea Ted. We rari.
"Come back," Andy shouted. He tried to throw the knife at Jack but it just went straight through him, "NO!"he Screamed. He ran afterus,
But We're far ahead of hit, We
TéäChed the Eld of the c|OSEt. "Hurry up Jack open the door," | Called. He opened the door. Jack and hurried out of the closet. "Lock
it," | told him, And Jack did what told him, Andy was locked inside. We both gawe each other high fives. "Talks Jatles," Jack said,
No problem," said.
NOW, We won't hawe to Worry about Andy ever again," I finished.
By Sanjeyan Siwalananthan
1

Page 29
1956 ஜூன் 5ஆம் தேதி உத்தி யோக மொழி மசோதா பிரதி நிதிகன் சபையில் அறிமுகப் படுத்தப்பட்டதை அடுத்துக் கட்ட விழ்த்துவிடப்பட்ட அடாவடித் தனம் ஏற்படுத்திய பயங்கரச் சூழல் புகைந்து கொண்டிருந்த தொடர்ச்சியிலே 1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் தேதி பேராதனையில் இலங்கைப் பல் கலைக்கழகத்தின் புதிய நடப் பாண்டு ஒன்று ஆரம்பித்தது. அப்பொழுது யாம் பொதுக்கவைத் தகுதிப் பிரிவிலே கால் வைத்தோம். ஏ.ஜே. கனகரத்னா அவர்களுக்கு அது இறுதி ஆண்டின் ஆரம்ப மாகும். அவர் ஆங்கிலம் சிறப்புக் கலைப் பிரிவின் இறுதிக் கட்டத் திலே நின்றார். அவருக்கு அது நாலாம் ஆண்டு. அவர் 1954இலே பேராதனைக்கு அநுமதி பெற்றவர். கனகரத்னா அக்காலத்திற் பல் கலைக்கழக வட்டாரத்திலே "பெயின்' அல்லது "பெபின் கனக ரத்னா’ என்றுதான் அழைக்கப் LỘlan rrrr. Pepin the Short (714-768) என்பவர் Charl:Imagne எனும் பேர்
து பெற்ற ஐரோப்பிய அரசனின்
('ir billi rig il Il I ITTF மரபினைத் தோற்றுவித்த Franks இன் அரசர். அவர் குள்ளமாய் இருந்தபடியால் அவர் பெயருக்குப் பின் குள்ளத்தைக் குறிப்பிடும் சொல்லுடன் வழங்கப்பெற்றார்.
தந்தையாக,
கனகரத்னாவுக்கும் அப்பெயர் அவர் உயரத்தை ஒட்டி எழுத் தாதல் வேண்டும். கனகரத்னா ஏ.ஜே என்று அப்பொழுது வழங்கியதாகத் தெரியவில்லை. அப்பெயர் : களில் ஏரி வீட்டுத் தாபனத்திலோ அல்லது 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திலோ உருவாகி இருக்கலாம்.
1957 ஜூலை முதல் 1958 ஏப்பிரல் வரை சென்ற நடப்பாண் டிலே கனகரத்னாவும் யாமும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எம்மிடையே ஏற்பட்ட உறவுககுப பல காரணங்கள கூற முடியும். அவருடைய பழைய கல்லூரியான யாழ்ப்பாணம் சம் பத்திரிசியார் கல்லுரரியிலிருந்து சில ஆண்டு இடைவெளிக்குப் பின்பு கலைப்பீடத்திற்கு அநுமதி பெற்று வந்த முதலாள் யாம் என்ற பெருமை எமக்கு உண்டு. கனக ரத்னா கொழும்பு அர்ச், யோசேப்பு கல்லுரரியில் இருந்து பேராதனைக்கு அநுமதி பெற்றவ ராவர். கனகரத்னாவின் கனிட்டர்
కల్వ్
திரையாடாக்டர் பொன். பூலோகசிங்கம்
 
 
 
 
 
 

எஸ். ஜி. கனகரத்னா எம்மோடு ஆரம்ப வகுப்புகளில் இருந்து விஞ்ஞானம், கலைப்பிரிவுகளுக்குப் பிரியுமட்டும் சேர்ந்து சம்பத்தி ரிசியார் கல்லூரியிற் பயின்றவர்.
எனக்குச் சீனியராக அவர் கொழும்பிலிருந்த வளாகத்திலே பயின்றவர். அவர் பின்பு
லங்கைப் பல்கலைக்கழகத்திலே பராதனையில் விஞ்ஞானப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்.
அவரை ‘கல் தொப்பி' என்று அவர் பீடத்திலே மாணவர் வழங்குவர்.
இவற்றிற்கு மேல், கனகரத்னா எம்முடன் நெருங்கிப் பழகுவதற்கு முக்கிய காரணமாக ருந்தது அவருக்குத் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட ஆதங்கம். அவருடைய பின்னணியிலே தமிழ் இலக்கி பத்தில் ஆர்வம் கொள்ளும் சூழல் இருந்ததாகத் தெரியவில்லை. அவருடைய தந்தை டபிள்யூ ஃபி கனகரத்னா கொழும்பு அர்ச். பீட்டர்ஸ் கல்லூரியில் ஆங்கிலம், லத்தீன் ஆசிரியராகப் பணிபுரிந்து பின்பு தரணியானார். அவர் குடும்பம் எப்பொழுது யாழ்ப் பானம் வந்ததென்பது தெரிய வில்லை. பாம் சம்பத்திரிசியார் கல்லூரியிலே 1947 இலே சேர்ந்த காலம் முதலாக அவர்கள் யாழ்ப் பானம் மூன்றாம் குறுக்குத் தெரு 4), இலக்க வீட்டிலே வசித்து வந்தனர். பெற்ற தானயப் பாளி பத்திலே இழந்துவிட்ட கனக ரத்னாவுக்கும் அவர் தம்பியர் இருவருக்கும் மேலை நாட்டுப் பண்டைய இலக்கியத்தில் ஆர்வம் மிக்க தந்தைதாம் துரனாக நின்று உதவினார். இதனால், கனகரத்னா தமிழைச் சுமாராகவே இளமையிற் பேசியிருப்பார். அவருடைய முதற் கட்டுரைத் தொகுப்பான "மத்து
(197) என்பதை "'F' ஆம் ஆண்டில் இலங்கையில் திறை
வேஜ்தப்பட்ட தனிச்சிங்கினச் '
சட்டத்தித்து இந்த7ல் படைப்'" எனச் சமர்ப்பணம் செய்திருக் கிறார். தனிச்சிங்களச் சட்டத்தின் காரணமாகத் தமிழ் அபிமானம் மீதூரப் பெற்றவர்களுள் தானும் ஒருவராகி, அந்த அபிமானத்தாலே தமிழில் எழுதவேண்டும் என்ற முனைப்பு ஊக்கமாக அமைய, அவ்வூக்கத்தின் காரணமாகத் தாம் தமிழில் எழுதிய கட்டுரைகள் மத்து தொகுப்பில் இடம்பெறுவ தாகக் கனகரத்னா "என்னுரையிற் கூறியிருக்கிறார். பல்கலைக்கழகத் திலேதான் அவர் தமிழ்ப் பத்தி ரிகைகளையும் சஞ்சிகைகளையும் தேடி வாசிக்கப் பழகிக் கொண்டார் என்று கூறலாம்.
யாழ்ப்பாணத்திலே பயின்ற காலம் முதலாகக் கல்கி, கலை மகள், குமுதம் முதலிய சஞ்சிகை களைத் தவறாது வாங்கி வாசிக்கும் பழக்கமுள்ளவன் யான். பின்பு சரஸ்வதி, எழுத்து எனும் சஞ்சிகை களையும் தவிறTது பெற்று வாசிப்பதுண்டு. யாழ்ப்பாணத் திலே தம்பித்துரை நியூஸ் ஏஜென் சியும் கண்டியிலே முஸ்லிம் ஹோட்டலும் அவற்றின்ை ப் பெற்று வாசிப்பதற்கு அன்று உதவின எழுத்து முதல் இதழ்
1959 ஜனவரியிலே தான் வந்தது. 2
அப்பொழுது கனகரத்னா பேரா தனையில் இல்லை. ஆனால் விஜயபாஸ்கரனின் சரஸ்வதி அவர் அங்கு இருந்த காலத்திலே வெளி வந்துகொண்டிருந்தது. கனகரத்னா இராமநாதன் மண்டபத்தில் எம் மறையில் கிடந்த சஞ்சிகைகளை வந்து ஆர்வமாக வாசித்து விவா திப்பார். அவர் பொதுவாக இரவு னவுக்கு முன்பு அல்லது பின்பு தான் வருவார். அவர் வரவு எமக்கு ஆரம்பத்திற் பேருதவியாக அமைந்தது. பஸ் கலைக்கழகம் நுழையும் முதல் வாரம் புதிய

Page 30
கலப்பை 51 ருதை 2007 (156
2 ஆண்டுதான்
எேங்களைப் இது ஆளாக்க முடியாமற்போன நாட்
து கிளையும்
梨 கொள்ளும்
திருந்தார், அவரிடம் காணப்பட்ட
கேட்சிகளிலோ
தி வேறு.
மாணவர்களுக்கு பகிடிவதை (Rging) நடைபெறும் காலம். அந்த அவ்வதை மிக மோசமாக இருந்ததாக நம்பப்படு கிறது. அதன் விளைவாக சில சீனியர் பல்கலைக்கழகத்திலிருந்து
猫 அன்று விலக்கி வைக்கப்பட்ட
தோடு அவ்வருடம்தான் இது வதை
தடை செய்யப்பட்ட காலமுமாம். எங்கள்
பகிடி பல்கலைக்கழகத்திலும்
அறையில் வந்து சிறிது நேரம் தங்கிப் போனதால் சீனியர் பகிடி வதைக் கு
களுமுண்டு. கனகரத்னா தன் இறுதியாண்டிலே தமிழ் சஞ்சிகை பத்திரிகைகளையும் வாசித்துப் பொருள் பண்ணிக் அளவுக்கு வளர்ந்
நுண்ணறிவும் பகுத்தறியும் பாங்கும்
影 அவருக்குத் துணைநின்றன.
எம்முடைய பல்கலைக்கழக மானவர் கட்டத்திலே மறக்க முடியாத மனப்பதிவுகளை அவர் ஏற்படுத்தியிருந்தார். சண்டை
சச்சரவுகளில் ஈடுபடுவதிலோ, உரத்துப் பேசி மற்றவர்கள் கவ னத்தை கவர்வதிலோ, எந்தவொரு குழுக்களிலோ கலந்து நிற்பதிலோ, இனக் கவர்ச்சியை நாடு வதிலோ அவருக்கு அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் வாசிப்பும் கிரகித்தலும் அவருக்கு அசுரப் பசியாக இருந்தமை தெரியும். விரிவுரைகளுக்கு ஒழுங்காகப் போனாலும், அவர் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வில்லை. அறிவு வேறு, திறமை தேர்வு ஆயத்தம் வேறு. அன்றை சிறப்புக்கலை மாணவர் களிலே ஆங்கில அறிவும் பயிற்சி யும் மிக்கவராகத் திகழ்ந்த கண்க
ரத்னா தேர்விலே சித்தியடைந்த
போதும்" சிறப்புப்"பிரிவிலே
தேறத் தவறிவிட்டார். இல்லை :
பாயின், அன்று அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில விரிவுரையாளராகப் பதவியேற் றிருப்பார். பல்கலைக்கழகத்தின் நியமன விதிகள் அவரை விரி வுரையாளர் பதவியிலே நியமிக்க இடம் தரவில்லை. பிற்காலத்திலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திலே அவர் ஆங்கிலப் போத வினாசிரியராகவே அப்பதவி அவருக்குப் al அசெளகரியங்களை ஏற்படுத்தின. அவருடைய நண்பர்கள் பலர் பேராசிரியர்களாகவும் அவரது புலமையாற் பயன்பெற்ற பலர் விரிவுரையாளராகவும் கடமை யாற்ற, அவர் போதனாசிரியர் என்ற நிலைக்குள் தன்னை ஒட்டுக்குள் சுருக்கிக் கொண்டு உலவினார்.
1958இலே பேராதனையை விட்டுப் புறப்பட்ட கனகரத்னா சம்பத்திரிசியார் கல்லூரிக்கு ஆசிரியராகப் போயிருந்தார். கதவிக கல்லுரரியின் நடைமுறை
களுக்குப் புறம்பான உரைநடை
களும் ஒளிவு மறைவில்லாத கருத்துப் பரிமாறல்களும் அவருக்கு மாணவரிடையே மிக்க செல் வாக்கை ஏற்படுத்திய போதும் மேலிடத்திலே அதிருப்தியை வளர்த்திருக்கலாம். ஏனெனில் அவர் விரைவிலேயே வேறிடம்
பணிபுரிந்தார்.
நாடினார்.
1980 ஜூலையில் நடந்த ஐந்தாவது பாராளுமன்றத்
தேர்தலில் வெற்றியடைந்த சிறிமா பண்டார நாயகர அரசாங்கம் கல்விக்கூடங்களைத் தேசியமயப் படுத்தும் திட்டத்தை அதன் முதல் வேலைகளில் ஒன்றாகக் கொண்டுவந்தது. அதன் படி தனியார் பாடசாலைகளில் இருந்த ஆசிரியருக்கு அரசாங்கப் பொறுப்
 
 
 
 
 

2.
பின்கீழ் வந்த பாடசாலைகளுக்கு
மாற்றம் பெற்றால் தனியார்
பாடசாலைகளில் இழக்கும் சில சலுகைகள் அங்கு கொடுக்கப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கப் பட்டது. பாதிப்புகளுக்கு ஆளாக விரும்பாது புலம்பெயர்ந்த கனக ரத்னா தெல்லிப்பளை மகாஜனா கல்லுரரிக்குச் சென்றார். அவர் அங்கு அதிக காலம் இருந்ததாகத் தெரியவில்லை.
ஏனெனில் 11ஆம் ஆண்டு "ஏரி வீட்டு டெபிலி நியூஸ் பத்திரிகையிலே தனிச்சிறப்புக்சுறு &Tay, T , (feature Writer) நியமனம் பெற்றார். அங்கு உதவியாசிரியராக இருந்தபோது அவருக்கு அனுபவ பதவியேற்றம் ஒன்று, பல பத்தி ரிகையாளருக்கு மேல் வழங்கப் பெற்றது. அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏரி வீட்டுப் பத்திரிகையுலகிலே கனகரத்னாவால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. எந்த நிர்ப்பந்தத்தின் பேரிலும் தனக்குச்
சரியெனப் படாததை அவர் ஏற்று எழுதியது கிடையாது. கல்வி அமைச்சர் பதியுத்தீன்
மஹ்மூத் கொழும்பு றோயல் கல்லுரரி மாணவர் அனுமதி தொடர்பாக ஒரு பனிப்புனரயை விடுத்தார். அதன் சிரேட்டப் பிரிவுக்கு வெளியூர்களில் இருந்தும் ITனைவர்களை அனுமதிக்கும் வகையிற் சில இடங்களை ஒதுக்கித் தேர்வு நடாத்தி அவர்களைத் தெரிவு செய்யுமாறு பணிப்புரை கூறியது. அமைச்சரின் பனிப் புரையை மறுத்து ஒப்சேவரிற் கட்டுரை எழுதும்படி ஏரிக்கரை அதிபர் எஸ்மண்ட் விக்கிரமசிங்க கனகரத்னா வைப் பணித்தார். விசாரணையில் இறங்கிய கனக ரத்னா அமைச்சரின் பணிப்புரை நியாயமானது என்பதை உணர்ந்த
-
seolúciou 51 m s.g. 2007 057
போது ஏரிக்கரை முகாமைத் துவத்தின் பணிப்பினைச் செயற் படுத்தாததால், அவரை ஆசிரியர் பிரிவிலிருந்து செய்தி சேகரிப்பு மேசைக்கு மாற்றுவதாக அறிவித் தல் வழங்கப்பட்டது. கனகரத்னா ஒரு வெற்றுத்தாளை வேண்டித் தாம் பதவியில் இருந்து விலகுவ தாக எழுதிக் கொடுத்துவிட்டு ஏரிக்கரைத் தாபனத்தை விட்டு வெளியேறினார்.
ர்ேகள் கனகரத்னாவை நவீன தமிழ் இலக்கிய உலகிலே மறக்க முடியாத ஒருவராக முன்வைக் கிறது. 16 பெப்ருவரியில் விஜய பாஸ்கரனின் சரஸ்வதி மாசிகை பபிலே அவர் "மெளணியின் வழி பாடு” எனும் விமர்சனக் கட்டுரையை வழங்கியிருந்தார். * மென வினி' 'எஸ் , மணி) யின் அழியாச்சுடர் எனும் பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு 1959 அக்டோபரில் வெளியானது. அக்காலம் முதல் எழுத்து சஞ்சிகை யிலே ஒரு மெளனி வழிபாட்டின் பிரதிபலிப்பினைச் சலிப்பேற்று மளவிற்குக் கானக்கூடியதாக இருந்தது. அப்பொழுது மெளனி பயின் கதைகளைக் கனகரத்னா விமர்சிக்கையில் "தமிழில் உண்மை விமர்
யான ஆக்கபூர்வமான சனத்திற்கு வழிபாடுகள் நந்தி களாகக் குறுக்கே நிற்கின்றன"
என்று கூறினார். அன்றையபோது அவர் தெளிவாகவும் ஆணித்தர மாகவும் நவீன தமிழ் இலக்கிய விமர்சனம் செய்ததைக் கான மகிழ்ச்சியாக இருந்தது. இளங் கீரன்’ சுபைர் தந்த மரகதம் சஞ்சி கை பின் இர எண் டாம் இதழிலே 19 செப்டம்பரிற் கனகரத்னாவின் "தேசிய இலக் கியம் - சில சிந்தனைகள்' எனும் கட்டுரை வெளிவந்தது. "தாய்நாடு சேப்நாடு என்ற மந்திரத்தை

Page 31
கலப்பை 51 () தை 2007 () 58
உடைத்து, அசலான தேசிய இலக்கியத்திற்கு ஒரு சர்வதேசிய சுருதி இசைந்திருக்கும் என அவர் சாதித்தார். இக்கட்டுரையை எழுத்து 34-35 ஆம் இலக்க இதழிலே சி.சு. செல்லப்பா அக்டோபர் - நவம்பர் 1 இலே மறுபிரசுரம் செய்திருந்தார்.
'கள் கனகரத்னாவின் மொழி பெயர்ப்புப் பணிக்கும் முக்கிய மான வடிகாலாக அமைகின்றன. ரரி வீட்டு ப் பத்திரி ைகபா ன 0lserverஇல் 1 இலே இலங்கை யின் நவீன சிறுகதைகள் ஆங்கி லத்தில் மொழிபெயர்த்து வழங்கப் பட்டன. ஆரம்பத்திலே சிங்களக் கதைகள் தாம் பிரசுரமாயின. பின்னர் கனகரத்னாவின் மொழி பெயர்ப்பிலே பல ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும் இடம் பெற்றன. அக்காலத்திவேர் கண்க ரத்னா இலங்கையின் III: 'yl1 பத்திரிகையிலும் இந்தியாவின் |Ilustrated Weekly is lilia. ille Little Magazing எனும் பத்திரிகைகளிலும் தமிழ்ச் சிறுகதைகளை மொழி பெயர்த்து ஆங்கிலத்திலே வழங்கி னார். எம். ஏ. நுஃமானின் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பிலும் செல்வ. கனக நாயகத்தின் Luli:54*Ing. : i hid | ii - 11:11t 20) எனும் தொகுப்பிலும் கண்க ரத்னா மொழிபெயர்த்த சிறு கதைகள் இடம்பெறுகின்றன. என்.கே. ரகுநாதன், அயேசுராசா, கே.வி.நடராஜன், கேசட்டநாதன், ரஞ்சகுமார் எழுதிய சிறுகதை களின் கனகரத்னாவின் மொழி பெயர்ப்பு கனகநாயகத்தின் தொகுப்பிலேயுள. ரஞ்சகுமாரின் கோசலை அதன் குறியீட்டுப் பாங்கு சிறந்து நிற்குமாறு மொழி பெயர்ப்பிலே வருவது குறிப்பிடத்
தக்கது. கனகரத்னா தமிழ்க் கவிதைகளையும் செய்யுளன:தி புடன் ஆங்கிலத்திலே மொழி
பெயர்த்து வழங்கியுள்ளார். கனக நாயகத்தின் தொகுப்பிலே நீலா வனன், அ. யேசுராசா, சண்முகம் சிவலிங்கம், எஸ்.வில்வரத்தினம் என்போரின் ஆறு கவிதைகள்
கனகரத்னாவின் ஆங்கில மொழி பெயர்ப்புடன் இடம்பெறுகின்றன. மு பொன் ன ம் பல த் தி ன் "பொறிக்குள் அகப்பட்ட தேசம் எனும் நீண்ட கவிதையை ஆங்கி வத்திலே கனகரத்னா மொழி பெயர்த்திருக்கும் லாவகம் மூலத் தின் கருத்தையும் ஆசிரியரின் கவித்துவத்தையும் சிறப்புடன் முன் வைக்கின்றது.
ஏரிலீட்டை விட்டு விலகிய கனகரத்னா கீழ்த்திசை நோக்கி னார். அங்கு திருக்கோபில் அரசாங்கப் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார். ஆனால் அவர் அரசியல், வரலாறு முதலியனவற்றையும் அங்கு போதித்தார். விடுமுறைக்கு யாழ்ப்பாணம் மீண்ட கனகரத்னா பின்பு திருக்கோவில் போக வில்லை. அப்பொழுதுதான் அவர் *F, i FlapJay" (The Cooper:LLC II') --F ரியர் பதவியை எடுத்தார். அது வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபையின் வெளியீடு.
1970ஆம் ஆண்டின் பிற்கூறிலே பாம் யாழ்ப்பாணத்திற்கு எமது முதற்கட்டுரைத் தொகுதியான "தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறி ஞரின் பெருமுயற்சிகள்" என்பதை யாழ்ப்பாணம் கன 'வாணிப் புத்தக நிலையத்திற் பதிப்பிக்கச் சென்றிருந்தோம். அப்பொழுது தான் கனகரத்னான ப்ெ பல வருடங்களுக்குப் பின்பு சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைவாணி புத்தக நிலையம் பிரதான வீதியில் வாடி வீட்டுக்கு அடுத்ததாக அப்பொழுது நிலைபெற்றிருந்தது. மறு மூலையிற் சட்டத்தரணிகள் சுடும் கட்டிடம், அங்கு அழகு
 
 
 

சுப்பிரமணியத்தோடு கனகரத்னா
பொதுவாகக் காணப்படுவார், அவர்களோடு "பிறிமியர் கபேக் கும் பின்பு "யாழ்ரா ஹோட்டல் என்பதற்கும் நாளாந்தம் போவது வழக்கம். "பிறிமியர் கபே அவரு டைய உறவினர் அப்பொழுது நடத்தியதாகும். அங்கு பெரும் பாலும் எம்மைத் தேனீர் அருந்த வைத்துவிட்டுப் பின்பு ஹோட்ட லுக்கு நீராகாரத்திற்குப் போவார் கள். அவர்களுடைய நீராகாரத்தில் அப்பொழுது பாம் கலந்து கொள்வதில்லை. வேறு சில எழுத் தாளர்களையும் அந்த ஹோட் டலில் தான் பொதுவாகக் கணக ரத்னா சந்திப்பதாகக் கூறுவார். நான் காலையில் யாழ்ப்பாணம் வந்து மாலையில் புங்குடுதீவு செல்ல வேண்டியிருந்தது. இடை நேரத்திலே கலைவாணியிலே சரவைத் தாள்களைத் திருத்தி அச்சுக்குக் கொடுக்க வேண்டி யிருந்தது. எனது தொகுப்பு டிசம்பரில் வெளியானது. கண்க ரத்னா ஆசிரியராகத் திகழ்ந்த கூட்டுறவிலே 1971 இலே,
இது போல சிந்திக்கத்தக்க சிந்தனைக்கு விருந்தான நல்ல தமிழ்த்தொண்டினை ஈழத்து இலக்கிய உலகில்
இந்நூல் மூலம் செய்துள்ள திரு.பொபூலோகசிங்கத்தினை ஈழம் இலகுவில் மறக்க முடியாது என்று நீட்டோலை கபிலர்' அன்று விமர்சனத்தின் ஊடே எழுதியிருந்தார். அவர் யார் ? எனக்குப் பின்பு தெரிந்தது!
எம். ஏ. ரஹ்மான் '4 நவம்பரிலே எஸ்.பொ.வின் ஆதர வுடன் ஆரம்பித்த இளம்பிறை எனும் மாசிகையிலே, கனகரத்னா அதன் பத்தாவது இதழிலே
கலப்பை 510 தை 2007 () 59
அருள்வாக்கி மலர் 1965) 'மத்து என்ற தொடரைச் செகராச சேகரன்' என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். அந்த முதல் கட்டுரை ஜே. கே. கல்பிரைத் எழுதிய அமெரிக்க முதலாளித்துவம் எதிர் வலுக் கோட்பாடு அறிமுகமாகும். இரண் டாவது கட்டுரை செல்வி ரசெல் கார்சன் எழுதிய 'சைலன்ற் ஸ்பிறிங்' அறிமுகமாகும். அது இனம்பிறையின் 1-12வது இத ழான சாகித்திய மலரிலே 1965 இலே வந்தது. இவ்வாறு இளம் பிறையில் மத்து எனும் தொடரில் பிரசுரமான கட்டுரைகளையும் பிரசுரமாகாத புதிய கட்டுரை களையும் தொகுத்து மத்து என்ற பெயரிலே 1970 அக்டோபரிலே அரசு வெளியீடாக ரஹ்மான் Garrat (5 gigs if, J.K. Cialbraith, Richel Carson, Ian SLIt lie, Richard Fostcr Jones, Milovan Djilan, H.R.G. (iгеavcs, Philip Rahw, Brian Inglis, R.D. Mac Canın, Joseph C:LTıpbell, A.M. Hocaırt எனும் பதினொருவர் எழுதிய பதினொரு நூல்கள் "மத்து' தொகுதியில் அறிமுகமாகின்றன. இவை அமெரிக்க முதலாளித்துவம், உயிர்க்கொல்விகள், உளவியல், ஆங்கிலமொழி வரலாறு, பொது வுடைமை அமைப்பு, பிரித்தானிய யாப்பு, அமெரிக்காவில் இலக்கியம், மருத்துவம், திரைப்படக் கோட் பாடுகள், பெளராணிகம், மானிட வியல் எனும் பல்வேறுபட்ட துறைகளைப் பற்றிய குறிப்பிடத் தக்க நூல்களாம். கனகரத்னாவின் பரந்துபட்ட வாசிப்புக்கு மத்து ஒரு எடுத்துக்காட்டாக இருப்ப தோடு அவருடைய விசாலமான ஞானத்திற்கும் உதாரணமாகும். அவர் மூலத்தின் ஆத்மாவைத் தரிசிக்க மிகவும் உதவியிருக்கிறார். மத்தினை இரண்டாம் பதிப் பாகவும் அண்மையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

Page 32
கலப்பை 51தை 2007 60
197 முதலாகக் கனகரத்னா யாழ்ப்பானப் பல்கலைக்கழகத் திலே ஆங்கிலமொழி கற்பிக்கும் நிலையத்தில் ஆங்கில போதனா சிரியராகக் கானப்படுகிறார். ஏறத்தாழ 15 வருடங்களுக்கு மேலாக அங்கு அப்பதவியிலே நிலைத்திருந்தார். கனகரத்னா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற் சேர்ந்தபோது, ரெஜி சிறிவர் 5GITT - || hr Wisiting LectureT -225 ஆங்கிலத்துறையிற் பணிசெய்தார். கனகரத்னா போன்று அவரும் தேர்வுப்பேறுகளால் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையால் ஒதுக்கப்பட்டவர். றெஜியும் கனகரத்னாவும் மிகவும் நெருக்கமான நண்பர்களானார்கள். அத்தோடு கனகரத்னா அவர்மீது அபாரமான மதிப்பும் வைத்திருந் தார், கனகரத்னாவின் கருத்துல கினை றெஜி அப்பொழுது வெகு வாகக் கவர்ந்திருந்தார். கனக ரத்னா தட்டச்சிற் பதித்து ரோனி யோவில் வெளிப்படுத்திய CIpus Bulletin எனும் செய்திப் பத்திரி கையிலே றெஜியின் விரிவுரை களின் சுருக்கங்கள் இடம்பெற்றன. "செங்காவலர் தலைவர் யேசுநாதர்" எனும் தொகுப்பிலே (டிசம்பர், 2000) இடம்பெறும் முதலாவது கட்டுரையான "செங்காவலர் தலைவர் யேசுநாதர்' என்பது றெஜியின் உரை ஒன்றினைத்
25-paifug, Tegh (Selected Wrilings of
Reggie Siriwardere, Wol.1.2005," Blok, Christ and the Red Guards"). 360.568. றெஜியின் வேறு சில எழுத்து களையும் அவர் தமிழில் வழங்கி புள்ளார். றொபேர்ட் கிறேவ்ஸ்: தனித்துவம் மிக்க கவிக்குயில் எனும் கனகரத்னாவின் 'அலை கட்டுரை புரட்டாசி, 8 றெஜியின் டெயிலி நியூஸ் கட்டுரையின் தமிழாக்கம் 18 டிசம்பர், 1985),
அனைத்துலக இனத்துவ ஆய்வு நிலையத்திற்காக றெஜியின் கட்டுரை முதலானவற்றைக் கண்க ரத்னா தெரிந்து இரு பகுதிகளாக அமைத்து 2005 - 2006 காலப் பகுதியில் வெளியிட வைத்தார். இலக்கியம், கலைகள் தொடர்பான தொகுதி 2005 இலே வெளியானது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்வதை விரும்பாதிருந்த கனக ரத்னா றெஜியின் தொகுப்பின் இரண் டாவது பகுதி  ைபத் தொகுத்துக் கொடுக் கக் கொழும்புக்கு 2005இன் பிற்பகுதி யில் தமது சுகயினம் அதிகரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த போதும் வந்து தாம் ஏற்றுக் கொண்டிருந்த பொறுப்பினை ஒப்பேற்றக் கஷ்டப்பட்டு முடித்துக் கொடுத்து 200இன் நடுப்பகுதியில் அச்சிட வைத்தார். இரண்டாவது தொகுதிக்கு கனகரத்னா எழுதிய முன்னுரையே அவரது கடைசி ஆங்கில ஆக்கமாக இருக்க வேண்டும். றெஜி 2004 டிசம்பர் 15ஆம் தேதி மறைந்தார். அவர் நண்பர் கனகரத்னா தன் மறை வுக்கு முன்னே அவருக்கு பெரு மாளிகை எழுப்பி விட்டார். ஆம், அவர் எழுத்துகளைத் தெரிந்து அவற்றினை ஒழுங்குபடுத்தி அவர் நண்பர் நின்று நிலைக்கச் செய்து விட்டார்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில போதனாசிரியர் கண்க ரத்னா யாழ்ப்பாணத்தில் அன்று வெளியான சஞ்சிகைகள், பத்தி ரிகைகள் பலவற்றிற்கும் துணை நின்றார். டொமினிக் ஜீவாவின் மல்லிகை யாழ்ப்பாணத்தில் வெளி வந்தபோது கனகரத்னாவின் பங்களிப்பு அதிகம். அதேபோல் அலையிலும் அவர் தாக்கம் குறை வானதில்லை. எஸ்.சிவநாயகம்
 
 
 
 

- LITELLITa:T55si Sallirday Review
பத்திரிகையை 1982 ஜனவரி 3
இலிருந்து 1983 ஜூலை வரை நடாத்திவிட்டுத் தமிழ்நாட்டிற்கு
அகதியாகப் புலம்பெயர்ந்தபோது (iil mini Navara the Il Gi is a 3.337 நின்று அதனைத் தொடர்ந்து நடத்தக் கனகரத்னா உதவினார். இவ்வாங்கிலப் பத்திரிகையின் சகோதர இதழான திசையில் மு. பொன்னம்பலத்திற்கும் ஒத்தாசையாகக் கனகரத்னா இருந்தார்.
கனகரத்னா மில்லிகைக்கு உதவி பது போளி: இளம்பிறைக்கும் உதவினார். மல்லிகைக்குச் செய்த உதவிகளை அலைக்கும் செய்தார். இரு துருவங்களில் நின்றவர் களுக்கும் கனகரத்னா அலட்டிக் கொள்ளாமலே உதவி செய்வார்; செய்திருக்கிறார். இதனால் அவரைப் பலரும் இனங்காணத் தவறிவிட்டதில் வியப்பில்லை. அண்மையில்
ஆன் எனினர். улуучу 507/w//w// fi
மறைந்த வெளிகண்ைwம் 'க்னபிடத்தில் ra jäs alyš7.
என்று பரணி பாடப்பட்டுள்ளது. மார்க்சிய ஆய்வறிவாளரான கண்க ரத்னா அவர்களின் கருத்துகளை
"மார்க்சியவாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும்" எனும் மைக்கேல்லோவியின் நூலின் தமிழாக்கத்திலும் (1978) "மார்க் சியமும் இலக்கியமும் சில நோக்குகள்" (18) எனும் கட்டுரைத் தொகுப்பிலும் காணமுடியும். பின்னைய தொகுப்பிலே Al:In
Swingewood, Gary Saul Mk Isin, Reggie $iw:பtel என்போர் கட்டுரைகளின் கருத்துகளைத் தமிழாக்குவதோடு,
கலப்பை 51 ) தை 2007 61
தாம் 1 இலே வெளியிட்ட "மார்க்சியமும் இலக்கியமும்' எனும் கட்டுரையையும் கண்க ரத்னா தந்திருக்கிறார். அந்தக் கட்டுரையின் முடிவு
"...at (3 SW 8.5. (...) ?? Glyn2% ddŵr i'r dwy Wrth 57 ar y wl (Friw, rwy'r wyf i." dyl&006-07 gywir - gwylwyr)/w/%' / i /h/wir படுத்துவதை இனிWWது WW திட்டும். ஃபிைருதின் தெள் உy பத்திWை டெருக்குவதற்கும், பொரு வி'த'த்தை விண்' (தித்துவிதித்தும் விழுது' வின் ஆஸ்வின் ஆனது அவன் செww வேண்டும் என்று'ல் எண் விெட்டி  ைWத் துரக்கிக் கொண்டு வலுக்குச் செல்லு ம"தே? " அல்லது தொழிற் சாலைக்குச் சென்று வேலை செப்we"தே* உண்ணிக்கலாம். அதை விட்டுவிட்தி ''ர்க்சும் எங்கெல்சும் கற்னை7:ற் கூட
விண்ண"தி ஆண்ஷ்கோள்களைக் கொண்டு விழுத்தாளர்கrைyள்
அண்டைசூதர்கண்'ஸ் ஃடைடே"திகது பேதமையிலும் தே.ை அyதுே குதலுக்குப் போதிக்க முனைப் சீடர்ஃவின் மூடத்தனி '797 செWWதும்
என்பதாகும் மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள், 8, பக்.98-1 கனகரத்னா ஈழத்திலே மார்க்சியவாதம் தமது முதுசொம், ஏகபோக சொத்து என நம்பி இருந்த அணியில்: சேர்ந்து அதன் எண்ணிக்கையைப் பெருக்க விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டவர். சுருக்கமாகச் சொன் வினால், அவர் எந்தவொரு கட்சியின் அங்கத்துவ அடையாளத்தையும் சுமந்து கொண்டு திரிந்தவரல்லர்,
கனகரத்னாவின் கட்டுரைகள் அடங்கிய தொகுப் பொன்று

Page 33
r = * " |
கலப்பை 516 தை 2007) 62
"செங்காவலர் தலைவர் பேசுநாதர்' என்ற பெயரிலே இருபத்தெட்டு ஆக்கங்களைத் தாங்கி டிசம்பர் 2000 இல் மித்ர வெளியீடாக வந்தது. இதனுள் 1t முதல் 2000 வரை எழுதப்பட்ட - வெளிவந்த ஆக்கங்களுள். இவற்றிலே tெ, 1917, IE7, 1975, IE778, 1980, 1998 எனும் ஏழு ஆண்டுகளுக்குச் சராசரி ஒவ்வொரு ஆக்கமும், 島70, 7972、Jリ I??s 979 எனும் ஐந்தாண்டுகளுக்கும் சராசரி இவ் விரு ஆக்கமும், 20ற்கு மூன்று ஆக்கமும், 17, 1777 எனும் இரு ஆண்டுகளுக்கும் நந்நான்கு ஆக்கங் களும் காணப்படுவன. இவற்றிலே சிவானந்தன் , ரோ ஹறி னி ஹென்ஸ்மன் எனும் ஈழத்துப்
பூர்வீகமுடையோர் நாவல்களின்
விமர்சனங்களும் மாயாயதார்த்த வாதம் கட்டுரையும் கனகரத்னா ஆங்கிலத்தில் எழுதி | laճ1&hI, இவற்றை (Jl. பொ. விம் பொன். கணேஸ் என்பவரும் தமிழ்ப்படுத்தியுள்ளனர். இத் தொகுப்பிற் கட்டுரைகள், பேட்டி, oli TTL-i, வசனகவிதைகள் என் பன இடம்பெறுகின்றன. Reggie Siriwardene, David Craig, Henry Meire. Picalsis, Walter De L: Mylaire, Raymcicl William, Maupassant, Arthur Koestler, Robert Tostevensky, (3girl DašT
மாரியா
பற்றிய
அவிரைவினர் failC39T
முதலியோர் பேச்சு, எண்ணம் கட்டுரை அல்லது
ஆகியன கனகரத்னா தமிழாக்கம் பெற்றிருக்கின்றன. அவை உளவியல், மூளை, நகைச் சுவை, விண்வெளி சம்பந்தமான ஆய்வுகள்; திரைப்படம் பற்றியவை: சிறுகதை, இலக்கிய
* {ւք ճll ճւ rטהpi
நாவல்,
விமர்சனங்கள் எனும் பலவிதமான விஷயங்கள் தொடர்பானவை. சில கட்டுரைகள் கனதிமிக்கன; சில அறிமுகப்படுத்தும் நோக்கத்து டன் முன்வைக்கப்பட்டவை. கனக ரத்னா வளரும் ஈழத்தமிழ் இலக் கியத்தின் செழுமையை ஆங்கிலம் மூலமாக உலகறியச் செய்தவர்; ஆங்கில இலக்கிய உலகின் வளர்ச்சி களை தமது எழுத்துகள் மூலம் தமிழ் எழுத்தாளருக்குத் தெரியப் படுத்திக் காட்டியவர்.
செல்வம் அருளானந்தனை ஆசிரியராகக் கொண்ட "காலம்' எனும் கனேடிய சஞ்சிகை தனது lவது இதழை 2002 ஜூன் மாதம் ஏ.ஜே. கனகரத்னா சிறப்பிதழாக வெளியிட்டு கனகரத்னாவைக் கெளரவப்படுத்தியது. அவருடைய இலக்கியப் பணிகளுக்காக கனே டிய இலக்கியத் தோட்டம் அண் மையில் 50 கனேடிய டொலர் களைப் பரிசாக வழங்கியது.
திறனாய்வாளர், பத்திரி காசிரியர், பதிப்பாசிரியர், மொழி பெயர்ப்பாளர், சினிமா விமர்சகர், போதனாசிரியர் என்றெல்லாம் போற்றப்பட்டவர், எமக்கும் நண்ப ராக இருந்தவர் என்பதிலே பெரு மைப்படும் நேரத்திலே, அவர் தன்னைத்தான் மறைத்துக் கொள் வதற்கு நீராகாரப் பழக்கத்தினை மேற் கொண்டனரோ, அவரை அது மறைத்துக் கொண்டதோ அல்லது அவர் அதற்குள் மறைந்து கொண்டாரோ என எண்ணும் போது உள்ளம் கனக்கிறது. -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விசிவ உணவில், அதாவது தாவர உணவில் குறைபாடுகள் இருப்பதாகச் சிலர் தவறாகக் கருதுகிறார்கள். விலங்கினங் கிளை நாம் நோக்கும்பொழுது எத்தனையோ விலங்கினங்கள் தாவரத்தினையே தின்பவையாக நாம் காண்கிறோம். அந்த
- விலங்கினங்களில்தான் எத்தனை வகை பருமனில் பெருத்ததும் அபாரமான ஞாபக சக்தியைப் பெற்றதுமான யானை ஒரு வகை.
- - அதிக வலுவும் ஓடுவதில் விரைவும் கொண்ட குதிரை ξαζί, 31, 31 π.
- - - சாந்தமே உருவான பசுவும், மானும், முயலும் பிறிதொரு வகை
一, '. බී ܨܡ ஒட்டகச் சிவிங்கி வரிக் குதிரை, குரங்கினங்கள் லுேம் சில வகைகள் தாவரத்தினையே தின்னும் இவ்விலங்கினங்களில் குறைபாடு ஏதும் .في مصري 2 GİRT , IT ? இவை a 7 GlʼʻgʻLJ "T பிதறு:து ஒரு பொதுப் டன. உண்டு,

Page 34
கலப்பை 51 () தை 2007 () 64
மதம் பிடித்தால், முட்டி மோதினால் அல்லது மிரட்டினால் அன்றி இவை பாவும் சாதுவான விலங்கினங்களே. இவற்றோடு புலால் உணவையே தின்னும் சிங்கம், புலி, ஓநாய், வல்லூறு போன்ற விலங்கினங்களை ஒப் பிட்டுப் பாருங்கள், பார்த்தாலே பயம் தருபவை அவை. சாத்விக உணவுக்கும் குனத்துக்கும் சம் பந்தம் புரிகிறது அல்லவா?
எமது சமய சாதகர்கள் சைவ உணவு வகைகளையே பெரும் பாலும் உண்ன வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றுள் கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய உயரிய விழுமியங்களை எமது அறநூல்கள் வலியுறுத்துவதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். எமது சைவ சமயம் மட்டுமன்றி இந்தியாவில் தோன்றிய சமனம், பெளத்தம் ஆகிய சமயங்களும் ஊழ் அல்லது கருமவினை பற்றிய நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டவை. ஒரு உயிரை அதுவும் வளர்ப்பு மிருகம் ஏற்பாடு செய்யும் பொழுது, பல சந்தர்ப்
ஒன்றைக் கொல் விட
பங்களில் அந்த வளர்ப்பு மிருகம் இருக்கும்
கோரத் தை மு ன் கூட்டி யே
தனக்கு விளைய
உணர்ந்து கொள்கின்றது என்ற உண்மை பல நாடுகளில் அவ அந்த கொல்லப்படுவதற்குச்
தானிக்கப்பட்டுள்ளது. மிருகம்
சற்று முன்பும் கொல்லப்படும்
அவவமும் துயரும் துன்பமும்
விபரிக்க முடியா தவை. இந்த உணர்வுகள் அதன் தசைகள் நார்களிலும் ஒன்றிவிடும். அதன் ஊனை உண்ணும்பொழுது
பொழுதும் படும் வருத்தமும்
சொற்களால்
அதுபட்ட துயர், துன்பம் என்ற
வினைகளும் சேர்த்தே உட் கொள்ளப்படுகின்றன என்றால் மிகையாகாது.
இச்சந்தர்ப்பத்தில் உலகப் புகழ் பெற்ற பாடகரும் தற்கால பிரபல தாவர உணவியல்வாதியுமான (S. Irtai l niin TL La:f (Paul Mc ('ItIcy) அண்மையில் கூறியதை நினைவு கூரலாம். இறைச்சிக்காக விலங் குகள் வெட்டப்படும் கொலை LI SF,ĚJI FST5 FU5 (Sl.:Lughter houses) i sisir னாடிச் சுவர்கள் அமைக்கப் பெற்றால் உலகிலே அனைவருமே தாவர உனவையே உட்கொள்வர்' என அவர் கூறினார், கருமவினை என்ற கொள்கை உண்மையானால் புலாலுக்காகக் கொல்லப்பட்ட உயிரினங்கள் பட்ட துயர், துன்பங் களையும் புலால் உண்பவர்கள் பட்டு பிறவழியில் ஈடு செய்தோ தீரத் தானே
வேண்டும்"
உணர்ந்தோ
எல்லாவற்றுக்கும் (ձւո«Լյr *
சைவ உணவு முழுமையான ஆரோக்கியம் உடையது; உடலுக்கு
வேண்டிய பல்வகையான ஊட்டச்
சத்துக்களையும் வழங்குவதும் மாசு
 
 

குறைந்ததும் ஆகும். இவை மட்டு மன்றி மனித உடலில் உள்ள சமி உறுப்புகளுக்கு மிகக் கொடுப்
பாட்டு குறைந்த பளுவைக் பவையும் ஆகும். புலால் உண்பவர் களிலும் பார்க்க հ51 + all உணவையே உண்பவர்கள் பினணி
அதுவும் பிணி களால் பீடிக்கப்படுவது குறைவு.
களால், நவீன
அவர்களே நீண்ட பயன்பாடு உடைய ஆயுளையும் ஆரோக்கியம் கூடிய வாழ்வையும் அனுபவிக் கிறார்கள். அவர்கள் களை நாடுவதும் குறைவு. அவர் களுக்குப் பற்சிதைவுகள் ஏற்படு வதும் குறைவு. இதனால் அவர் களுக்கு ஏற்படும் மருத்துவ, பிற வைத்திய செலவுகளும் குறைவு.
இயல்பாகவே அவர்களின் உடல்
வைத்தியர்
கள் கூடுதலான நோயை எதிர்க்கும் (StrongcrimTLI): System) -2yiypsoa. Isti உடற் தூய்மையையும் வனப்பும்
மென்மையும் உடைய உடற் தோலையும் பெறுகின்றன. அண் மையில்
அமெரிக்க உணவியற்
FYřil, i { AI TIL:TriciII) Lðicllcctii: Wss&xčiation) வெளியிட்ட அறிவிப்பின்படி ፩iቖነgo) Š፡ነ! பூரணமானதும் எதுவித அற்றதும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உணவு
குறைபாடும்
புலால் உணவு விருத்திக்கு மாறாகவும் சைவ உணவுக்குச் சார்பாகவும் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற் றுள் முக்கியமான சிலவற்றை
இங்கே பார்ப்போம்.
கலப்பை 51 () தை 2007 D 85
கால்நடை வளர்ப்புக்குக் கூடுத லான நிலம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவில் விளையும் சோளத்தில் (con) பத்து
உதாரனமாக
மனிதர்கள் உண்கி தொண்ணுறு (90%) வீதம் கால்நடை உணவாகிறது. இதேபோல தானியமும் கால்நடை உணவா கிறது . இவ்வாறு மூ வ ப் பொருளாகப் பெறும் புரதச்சத்தில்
வீதத்தையே றார்கள்,
卑5烹 ஒட்ஸ் (bats)
புலால் மூலமாக மனிதர் பெறுவது பத்து வீதமே. மீதி '% கழிவுப் பொருட்களாக வீணாகின்றன.
ஒரு இருந்து 2000 கிலோ உருளைக்கிழங்கைப்
ஏக்கர் நிலத்தில்
பெறலாம். அதே வேளை அதே நிலப்பரப்பிலிருந்து பெறக்கூடிய மாட்டு இறைச்சியோ 120 கிலோ மட்டுமே. மொத்த விளை நிலத்தில் 5% மாட்டு இறைச்சி பெறுவதற்குப் பயன் படுகிறது. ஒவ்வொரு கிலோ மாட்டு இறைச்சிக்கும் 16 கிலோ வகைகளும் சோயா அவரையும் தேவைப்படுகின்றன. உலகிலே ஒவ்வொரு ஆண்டும்
அமெரிக்க
தானிய
இரண்டு கோடி மக்களுக்கு மேல் பட்டினியால் மடிகிறார்கள். நாள் தோறும் சத்துணவு இன்மையால் இரு விநாடிகளுக்கு ஒரு குழந்தை விகிதம் இறக்கின்றது. அமெரிக் காவில் வாழும் மக்கள் மட்டுமே
தமது வீதம் குறைத்தால் ஆண்டுதோறும் உலகில் பட்டினியால் வாழும் மக்களில் பத்துக் கோடிப் பேர்
புலால் உணவைப் பத்து

Page 35
ー
ー
கலப்பை 51 ) தை 2007 () 66
களுக்குத் தாவர வழங்கி உயிர்ப் பிச்சை கொடுக்க லாம், உலகில் விளையும் மொத்த
உணவுகளை
தானிய அளவில் 40% வளர்ப்பு விலங்குகளுக்கு உணவு ஊட்டவே பயன்படுகின்றது. இப்பங்கில் அரைப்பகுதி நேரடியாக மனித ரின் உணவாக மாறும் என்றால்
உலகப் பட்டினி ஒழிந்துவிடும்.
உலகிலே பட்டினிச் சாவினால் மடிபவர்கள் விபரங்களை மேலே குறிப்பிட்டோம். ஆனால் அரை அதிலும் குறைவாகவோ உண்டு உடலோடு
வயறு உனவுடனோ
உயிரை ஒட்டவைத்துக் கொள்ளும் மக்களின் தொகையோ மேலும் பல கோடி இத்தனை நெருக்கடி களின் மத்தியிலும் உலக சனத்
தொகையோ செப்
கிறது. கூடவே வளர்கின்றது. இதனால்
வளரத்தான் அபிவிருத்தி என்பதும்
உண்போர் தொகையும் உணவின் மிகக் கூடுதலாக கண் கூடு,
விளைநிலமோ
தேவையும் வளர்வதும் ୫. ସ୍ନିତ ଘy உற்பத்திக்கான மட்டுப்படுத்தப்பட்டதே. என்ன தான் விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டாலும் உற் பத்தித்திறனின் வளர்ச்சிக்கும் ஓர்
உண்டு.
பொருளாதாரக்
எல்லை இத்தகைய காரணிகளால் உனவையே
கட்டுதலாகச் சைவ
உண்ண வேண்டியவர்களின் தொகையும் கூடிக்கொண்டே போவதும் தவிர்க்க முடியாதது தெளிவாகிறது. நாளைக்கு இன்றி
அமையாதது என ஏற்படப்போகும்
ஒரு நிலையை எதிர்கொள்ள இன்றே எமது குழந்தைகளை பாரம்பரியமாகப் பழக்கப்பட்ட
ஒரு விழுமியத்தைத் தொடர்ந்தும் பேணப் பயிற்றிக்கொள்வது புத்தி சாலித்தனம் அல்லவா?
பூமியின் கொண்டே செல்கின்றது என்றும்
வெப்பம் வளர்ந்து
இதற்கு மனித செயற்பாடே முதற்காரணியாக இருக்கலாம் என்றும் ஐ. ஆதரவில் ஞானிகள்
நா. தாபனத்தின்
உலகளாவிய விஞ் ஒன்று ஆணித்தரமான அறிக்கை ஒன்றை
நகரில்
கூட்டம்
lur Tifisñi! அண்மையில் வெளியிட்டது யாவரும் அறிந்ததே. கூடுதலான எரிபொருட்களின் பயன்பாட்டால் வெளிப்படும் காபன் ஈர் ஒட்சைட் (Carbon-di - 0xide) முதலான வாபுக்களே இந்த வெப்பநிலை ஏற்றத்துக்குக் கார ணம் ஆகின்றன. தாவர வகை உணவுகளிலும் பார்க்க புவாலை அடிப்படையாகக் கொண்ட உனவு செய்வதற்கு பொருட்கள் தேவைப்படுகின்றன.
வகைகளைத் தயார்
கூடுதலான எரி
இதனால் வெப்ப ஏற்றத்தைக் குறைப்பதற்கும் சைவ உணவின் பயன்பாடு உதவுகின்றது என்றால் மிகையாகாது. புலால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பெரும்.அளவிலான வன அழிப்பும் தேவைப்படுகின்றது. உதாரனமாக
அமெரிக்காவில் மட்டுமே புலால்
 
 
 
 
 

உற்பத்திக்கென 2 கோடி ஏக்கர் நிலத்தில் வன அழிப்புச் செய்யப் பட்டது. அத்தகைய மிதமிஞ்சிய வன அழிப்பும் உலக வெப்பநிலை உயர்வதற்குக் காரணமாகிறது.
வளர்க்கப்படும் கால்நடைகளை
புலால் உனவுக்காக
வெகுவாகக் குறைத்தால் உலக
வெப்பநிலை உயர்வு 18% த்தால்
குறையும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த அளவீடு உலகம் முழுவதிலும் இயங்கும் போக்குவரத்து வாகனங்கள் வெளி யிடும் வாயுக்களால் ஏற்படும்
வெப்பநிலை உயர்வுக்கும் கூடுத
லான தாகும்.
வெப்பநிலை உயர்வு மட்டு மன்றி பிற வழிகளிலும் புலால் உற்பத்தியால் சூழல்
மாசடைகிறது. உலகப் பசுமையும்
* - ଈଯ୩ ଶy
அருகி வருகின்றது. அமெரிக்க
விளைநிலங்களில் உள்ள மேல்
மண்ணில் ஃ ஏற்கனவே மண்
அரிப்பினால் இழக்கப்பட்டு விட்டது. அயன மண்டலக் காடுகள் அழிக்கப்படுவதால்
ஆண்டு தோறும் உயிரினங்களில் Species (), () அற்றுப் போய் விடுகின்றன. இந்த அழிப்பு விகிதமோ உலகிலே வளர்ந்து
வகைகள்
கொண்டே செல்கின்றது. வளரும் நுகர்வுக்கு தனது உற்பத்தி ஈடு கொடுக்க இயலாத தால் ஆண்டுதோறும் அமெரிக்கா (LS) 15 கோடி கிலோ இறைச்சியை மத்திய, தென்
உள்நாட்டு
அமெரிக்க நாடு
களில் இருந்து இறக்குமதி செய் கின்றது. இதனால் அந்த நாடு களிலும் வன அழிப்பு அதிகரித்துக் செல்கின்றது. அபி விருத்தி அடைந்து விட்ட அமெரிக்கா ஒன்றே இத்தனை வன அழிப்பை ஏற்படுத்துகின்றது என்றால், இன்று விரைந்து வளர்ந்து வரும் சீனாவும் இதர பெரிய நாடுகளும்
ஏற்படுத்தும் பார்த்தாலே
கொண்டே
விாத்தகைய பாதிப்பை 3r
விரண்ணிப்
ஏற்படுகிறது.
அச்சம்
த ஷ்ர மட்டும் உண்பவர்களிலும் பார்க்க புலால் புற்றுநோய் ஏற்படும் சாத்தியப்பாடு கூடுத வானது என்றும் ஓர் ஆய்வு கூறு கின்றது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் 3.8 மடங்கு
3- 3T -
உண்பவர்களுக்கு
புலால் உணவால் அதிகரிக்கின்றது என்றும் ஆண்களுக்கு ஏற் படும் புறஸ்டேற் புற்று நோய் (Prostate ட்icer) 3. மடங்கு அதிகரிக்கிறது என்றும் அறியப்பட்டுள்ளது. இதே போல குருதியில் தீய கொலேஸ் FC3rarsi (Cholcs -terol garisT - MyGTTG, புலால் உணவால் அதிகரிப்பதால் மாரடைப்பு நோய்கள் வருவதற் கான சாத்தியப்பாடும் அதிகரிக் கின்றது. அதிக புலா ல் உண்ணும் ஆண்களுக்கு இருதய நோய் ஏற்படும் சாத்தியப்பாடு ஃ எனில், | ಇy மட்டும் உண்ணும் ஆண்களுக்கு அது 13% ஆகக் குறைகின்றது.
፳E - ŠúúHT &uûኽ Šኽ!

Page 36
கலப்பை 51 I தை 2007 () 68
t
அதிகரிப்பு வளங்களை விரைவாகக் குன்றச் செய்கின்றன.
||s1.!Ti' P_à| வின்
உலகின் இயற்கை
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் நன்நீரில் 5%க்கு மேலாக கால்நடை அபி விருத்திக்கே பயன்படுகிறது. ஒரு கிலோ கோதுரையை உற்பத்தி செய்ய பி கலன் நீர் தேவைப்படும்.
உதாரனமாக
ஆனால் ஒரு கிலோ பசு மாட்டு
இறைச்சிக்கு 0.00 நீர்
தேவைப்படும். இதே போலவே
கி1ேள்
எரிபொருள் தேவையில் உள்ள வேறுபாடும். ஒரு கலோரி (alkrit) வெப்ப அலகு சக்தியை வெளிப் படுத்தக் கூடிய மாட்டு இறைச்சிப் புரதத்தை உற்பத்தி செய்வதற்கு 78 கலோரி வெப்ப வெளிப்பாடு செய்யும் எரி பொருள் (எண்னை அல்லது இயற்கை வாயு தேவைப் படுகிறது. அதே வேளை ஒரு கலோரி வெப்ப அலகு சக்தியை வெளியிடும் சோயா அவரையின் உற்பத்திக்கு 2 கலோரி வெப்ப வெளிப்பாட்டுக்கான எரிபொருள் மட்டுமே தேவைப்படுகின்றது. அமெரிக்காவில் உள்ள மொத்தக் கணி வளங்களில் 38% கால்நடை அபிவிருத்திக்குப் பயன்படுகிறது. தூய தாவர உணவுகளின் உற் பத்திக்குத் தேவைப்படும் கணி வளமோ 2% மட்டுமே,
புலால் உணவு உற்பத்தி இன்று உலகளவினே வர்த்தக அடிப் படையில்தான் நிகழ்கிறது. இலாப நோக்கங்களுக்காக இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளும்
பறவைகளும் நோயின்றி வாழ வேண்டும் என்ற ஆதங்கத்தால் மிதமிஞ்சிய நோய் தடுப்பு மருந்து FG7 ( ANT1 libicitics) - Syftig, GIGIT*" 'IL விலங்குகளுக்கு ஊட்டப்படு கின்றன. இதனால் அந்த உயிரின வகைகள் வெகு விரைவில் அந்தத் தடுப்பு மருத்துகளுக்குப் பழக்கப் பட்டு தமது நோய் எதிர்ப்புத் திறனையும் இழந்துவிடுகின்றன. அந்த உயிரினங்களைக் கொன்று பதப்படுத்திய புலாவை உண்பவர் களும் இந்தக் குறைபாட்டுக்கு ஆளாகிவிடுகிறார்கள். இதனால் ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த நாடுகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புலால் வகைகளுக்கு பலவித கட்டுப்பாடு களை விதிக்க வேண்டிய நிர்ப் பந்தமும் ஏற்பட்டிருக்கின்றது.
புUைTஸ் உண்போர்
உணவை அதிகம் பலருக்குத் தெரியா மலே ஏற்படும் ஒரு தீங்கு உயிர்க் கொல்விகளால் (Pelicids) ஏற்படு கின்றது. அமெரிக்காவில் உள்ள தாய்ப்ார்களில் புலால் உண்பவர் களில் ஒர% பேர்களின்
III என்ற கிருமிநாசினி கலந்திருப்பது கண்டு அறியப்பட்டி ருக்கிறது. மறுபுறம் தாவர உணவையே உண்ணும் தாய்மார்
தாய்ப்
பாவில்
களில் 8%க்கு மட்டுமே தாய்ப் பாலில் DDT கலந்திருப்பதாகவும் அறியப்பட்டிருக்கிறது. இதே போல டிபெல்ட்றின் (ligldrin) போன்ற இதர கிருமிநாசினிகளும் ||51|tTi!
El 33}: உண்ணும்
 
 

தாய்மார்களின் தாய்ப்பாவில் மிகக் இருப்பதும் கண்டு அறியப்பட்டுள்ளது.
சுடுதல்பாக
இறைச்சிக்காக விலங்குகளை வெட்டிக் கொலை செய்யும் கொலையகங்கள் பார்க்கவே பயங் கரமாக இருக்கும். இந்தக் கொலை யகங்களில் ஆண்டுதோறும் கொல்லப்படும் விலங்கினங்களின் எண்ணிக்கையோ ஏராளம், உதார ணமாக அமெரிக்காவில் ஆண்டு தோறும் மணித்தியாலத்துக்கு tti),000 விலங்குகள் விகிதம் கொல்லப்படுகின்றனவாம். அமெ ரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற 'அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஒருவன் ஆண்டு ஒன்றுக்குச் சரா சரியாக 120 கிலோ இறைச்சியை உண்கிறான்,
புலால் உண் ணும்
இந்நாடுகளில் சராசரியாக 72 வயது வரை வாழக்கூடிய ஒருவ ணுக்கு அவனது உட்கொள்ளும் புலால் உணவுக் காக 1 மாடுகள், 3 ஆடுகள், 23 பன்றிகள், 45 1,100 கோழிகள், இத்தனைக்கும்
வாழ்நாளில்
كأس الحد. வான்கோழிகன்,
மேலாக 42 கிலோ மீனும் தேவைப்படுமாம்,
புலால் கொலையகங்களுக்கு
அண்மையில் வாழும் மக்களோ கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்லப்படும் விலங்குகள் அச்சத் தாலும் கோபத்தாலும் எழுப்பும் அலைச் அலறல் ஒலிகளை நித்தம் நித்தம் கேட்டு
சத்தங்களை,
。
கலப்பை 51 () தை 2007 () 89
貓
அல்ல்ைபடுகிறார்கள். உள்ளே வேலை செய்பவர்களோ இந்தச் சத்தங்களைக் கேட்பது மட்டு மல்லாமல் அகோரக் கொலைக் காட்சிகளையும் நித்தம் காண் இதனால் இந்தக் கொலையகங்களில் பலwர் தொடர்ச்
கிறார்கள்,
சியாக நெடு நாட்களுக்குப் பணி
புரிவதில்லையாம். அமெரிக்
...ኛMቕ' - காவிலே இந்தத் துறையிலே
பணி புரிபவர்களுக்கே கூடுதலான காயங்கள் ஏற்படுவதும் உண்டாம், கூடிய விரைவில் தொழில் விட்டுத் தொழில் மாறுவோரையும் இந்தத்
துறையில்தான் காணலாமாம்.
இயற்கையாகவே மனித னுடைய உடல் அமைப்பு புலால் உணவிலும் பார்க்க தாவர உணவு வகைக்கு ஏற்றதாகவே அமைந் திருக்கிறது என அறிவியல் கூறு பொறுத்த விலங்கினங்கள் இரு விலங்குகள் உண் தமிழில் சொல்லும் வழக்கம் இல்லை. இதைத் தீன் தாவர வகை (பெரும்பாலும் வகைப்படுத்திச் சொல்வதும் தமிழ் மரபு. உதாரணமாக குரங்குகள்,
கின்றது. உணவைப் வரையில் வகைப்படும். பதை உணவு என்று
(பெரும்பாலும்
அல்லது இரை புலால்) என்று
யானைகள், பசுக்கள் எல்லாம்
தாவரத் தின்னிகள். நாய்கள், சிறுத்தைகள், புலிகள் எல்லாம் புலால் தின்னிகள். இவ்விருவகை விலங்கினங்களோடும் மனிதனை
ஒப்பிட்டுப் பார்ப்போம்.

Page 37
கலப்பை 51 ) தை 2007 (170
2.
3.
多
புலால் தின்னிகளுக்கு உடல் வியர்ப்பதில்லை. உடல் வெப் பத்தை விரைவான சுவாசத்தாலும் நாக்கை தேவைக்கேற்ப வெளியே தொங்க விடுவதாலும் கட்டுப் படுத்துகின்றன. மறுபுறம் தாவரத் தி ன் னி களு க்கு உடலிலே
கின்றன. புலால் தின்னும் விலங்கு களுக்கு இரையை இறுகப் பற்றிக் கொள்ளவும் கிழித்து உண்ணவும்
வியர்வைத் துவாரங்கள்
வசதியாக நீண்ட பற்களும் நகங்
களும் இருக்கின்றன. தாவரத்
தின்னிகளுக்கு பற்களும் நகங்களும்
கட்டையே.
விளங்கி
{Silivii)
புலால்
தின்னும் னங்களின் உமிழ் நீரில் மாவுச்சத்தை முன் கூட்டியே செரிக்கத் தேவைப்படும் தியலின் (Pyali) என்ற திரவம் காணப்படுவ தில்லை. ஆனால் தாவரத் தின்னி களுக்கு உமிழ்நீரில் இந்தத் திரவம் இருப்பதால் மாவுச்சத்துகளை அவை எளிதில் சீரணிக்க உதவு கின்றது. புலால் தின்னும் விலங்கு களுக்கு அவை தின்னும் எலும்பு களைச் செரிப்பதற்கு வசதியாக ஐதரோகுளோரிக் அமிலத்தைச் (IC1) சுரக்கும் சுரப்பிகள் இருக் கின்றன. இந்த வசதி தாவரத் தின்னிகளுக்கு இல்லை. புலால் தமது இரையைத் தின்னும்பொழுது அவற்றின் அலகுகள் கீழ் மேலாக அசை கின்றன. ஆனால் தாவரத் தின்னி களோ
தின்னிகள்
அரை போடுகின்றன.
பு:ால் தின்னிகள் நீரை நக்கிக் குடிக்கின்றன. தாவரத் தின்னிகன்
நீரை உறிஞ்சிக் குடிக்கின்றன.
இவ்வாறாகப்
பொழுது அமைப்பு பல வகைகளில் விலங்
for of f f | f
விரிதனின் உடல்:
கினங்களில் தாவரத் தின்னிகளின்
உடல் அமைப்பைப் போலவே இருப்பது தெரிகிறது. இதனால்
இயற்கையாகவே தாவர உணரவே
மனித உடல் அமைப்புக்கும் உகந்த உணவு என முடிவு கொள்ளலாம்.
தாவர உண்ணவு வண்கிகளில் குறைபாடுகள் பல உண்டு என்ற
கருத்தும் பலருக்கு
உதாரணமாக தாவர
தவறான * _fff0",
உணவையே உண்பவர்களுக்கு போதிய புரதச்சத்துக்கள் கிடைப்ப தில்லை எனப் பலர் தவறாகக் கருதுகிறார்கள். உண்மையில் தாவர உண்வுகளில் தேவையான புரதச்சத்துக்கள் உண்டு. அங்கே மிகக் & Gr,
சமநிலைப்படுத்த தேவையும் இல்லை. ஒப்பிடும் பொழுது தாவர உணவில் உள்ள புரதச் இருக்கலாம்.
இது
என்றே கொள்ள வேண்டும். மிகக்
#: - ଦ୍ୱା' &| விெதிகளைச் வேண்டிய புலால் உணவோடு
சத்துக்கள் குறைவாக
ஒடு
தன்னக்கே
ஆனால் வகையில்
கூடுதலாகப் புரதச்சத்தை உட் கொள்ளும் பொழுது சிறுநீரகத்தில் கற்கள், எலும்புகள் துவார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மடைதல் (strosis), அல்கேமர்ஸ்: GBTr' (Alzheimer's disease), 3.5 T. மாறாட்ட வருத்தங்கள் (Ilia) பிணிகள் பட்டுமன்றி இருதய நோய், புற்று நோப் போன்ற பினிகளுக்கும் ஆளாகும்
போன்ற
சாத்தியப்பாடு அதிகரிக்கின்றது.
பயத்தங்காப் வகைகள் (h:Ins)
முழுக்கோதுமை, மரக்கறி போன்ற
வற்றில் கிடைக்கும் புரதச் சத்துக்கள் ஆரோக்கியமான வாழ்க் கைக்குத் தாராளமாகப் போது மானவை. கடும் பச்சைத் தாவர
வகைகளிலும் பயத்தங்காய் வகை களிலும் போதிய கல்சிபம் (Clium) ஊட்டச் சத்து கிடைக்கின்றது. அத்துடன் நவீன உலகில் சந்தைப் படுத்தப்படும் பால், பழச்சாறுகள் முதலியன பெரும்பாலும் கல்சியம் செறிவூட்டப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன. தாவர உணவு வகைகளில் உள்ள ஒரே ஒரு குறைபாடு விட்டமின் 1ே2 குறை வாகக் கானப்படுவதே இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய் வதற்கு
(Multiple உட்கொண்டால் போதுமானது.
பல்வகை விட்டமின்
wialis) குளிகைகளை
புராதன கிரேக்க நாகரிகத் திலும் தாவர உணவு வகைகள் ஒம்பப்பட்டதற்கு வரலாற்றில் சான்றுகள் உண்டு. எத்தனையோ மேதைகளும் தத்துவஞானிகளும் தாவர உணவு மட்டுமே; உண்டு
வாழ்ந்தார்கள், புகழ் பூத்த
பண்டைய கணித மேதை பைத (Pythiagurus) இதற்கு ஒர் எடுத்துக் காட்டு. இந்தியாவிலோ வேதகாலத்தில் இருந்தே தாவர
4: 'T&f!
உணவுகள் ஓம்பப்பட்டதற்குச் சான்றுகள் உண்டு. பிறநாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பயணித்த மெகஸ்தீன்ஸ் (Megas themes)
for Fusar (FH - Hsien போன்றவர் குறிப்புகளில் இந்திய மக்கள் பெரும்பாலும்
a G., Taint
களின் பயனக்
தாவர உண்னையே டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய இந்தியாவில் 3 இல் இருந்து 45 வீதத்தினர் தாவர உரைவை மட்டும் உண்ப
്!) கின்றது. அதே நேரம் அமெரிக் வீதத்தினரே தாவர
Ճնճմ: Ա`
தாகப் புள்ளிவிபரவியல்
காவில் 3
உனவரனர்.
சமய அடிப்படையில் நோக்கி
னால் உலகிலே, முக்கியமாக சைவ சமயம், இந்து மதம், சமண மதப் ஆகிய சமயங்களைச் சார்ந் தோரே தாவர உணவைப் பெரும்
பாலும் ஒம்புகின்றனர். பெளத்த
மதத்தைப் பொறுத்தவரையில் மகாயான வகுப்பைச் சேர்ந்த பெளத்தர்கள் தாவர உணவை
ஓரளவு ஒம்புகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் பின்பற்றப் படும் தேராவாத பெளத்தமத வகுப்பினர் புலால் உண்பார்கள்,
அவர்கள் இந்துமத தாக்கத்தின்
RAYA ܡܘܫܐ

Page 38
ろ\
கலப்பை 510 தை 2007 D 72
விளைவாக பசுமாட்டு இறைச்
சியை மட்டும் அனேகமாகத் தவிர்த்துக் கொள்வார்கள். கிறிஸ் gar Logisgai Seventh-day Adven
இரு
தாவர
tists, Rastafarians sтати பிரிவினர் மட்டுமே
உணவை ஒம்புகின்றனர். இஸ்லாமி யருக்கோ பன்றி இறைச்சியைத் தவிர இதர அவர்களின்
புலால் உணவுகள்
சமயச் சடங்கு
களுடன் ஒன்றிவிட்டவை.
நாடுகளின் அடிப்படையில் பார்த்தால் தாவர மட்டும் நுகர்வோர் மிகக் கூடுத லாக வாழும் நாடு இந்தியாதான். ஆனால் இன்று அபிவிருத்தி அடைந்த சகல நாடுகளிலும் கூட தாவர உணவு ஆண்டு தோறும் பிரபலமாகி வருகிறது.
* - նին" aնի ճյ1
அனேகமாக எல்லா அபிவிருத்தி
அடைந்த நாடுகளிலும் தாவர உணவுச் சங்கங்கள் செயல்படு கின்றன. அனைத்துலக அடிப்
படையில் இச்சங்கங்களை ஒன் றினைக்கும் அனைத்துலகத் தாவர உணவுச் சங்கம் ஒன்று 1908 ஆம் ஆண்டிலேயே ஆரம் பிக்கப்பட்டது. அச்சங்கம் இன்று உலகளாவிய அடிப்படையில் தனது செயற்பாடுகளை விரிவு செய்து வருகின்றது.
இதுவரை கருத்தில் கொண்ட வற்றை நாம் தொகுத்து நோக்கி ଧୋTITକର୍ମ)। உணவு அல்லது மிகப் பெரும்
ü ü]፰፻F&እ!
தாவர உணவு
பாலும் சாத்விகமானது. சாத்விக குணம் சாந்தம், அமைதி, அகச் சமநிலை ஆகிய உயரிய இயல்புகளை
குன ஓங்கச் செய்யும். தாவர உணவை உண்பது எமது பாரம்பரிய விழுமியங்களில் ஒன்று. அது தார்மிகமானது. எமது சைவ சமயத்தினால் ஒம்பப்படுவது. மனம், ஆவி ஆகிய மூன்றுக்கும் ஆரோக்கியமானது.
உடல்,
உலகம் வாழ் மக்களுக்கு நீண்ட ஆயுளை நல்குவதும் சாவுகளை பெரியளவில் குறைக்க உதவுவதும் ஆகும். சூழல் மாசு பாட்டைக் குறைத்து சூழலின் பேண உதவுவதும் ஆகும். இவை மட்டுமன்றி பொரு ளாதார வளங்களைப் பேணுவ தற்கும் மேலும் கூட தாவர உணவை ஒம்புதல் இன்றியமையாதது.
பட்டினிச்
இயல்பைப்
வளர்ப்பதற்கும்
இக்கட்டுரையில் வரும் பல தகவல்கள் அண்மையில் ஹாவாய் தீவில் மகாசமாதி அடைந்தவரும் யாழ்ப்பாணம் சிவயோக சுவாமி களின் பிரதம சீடர்களில் ஒரு சுப்பிரமுனியசுவாமி Loving Gancsa GTGärry இந்து பெறப்பட்டவை நன்றிக்கடனுடன் தெரியத்தருகின்றேன்.
வருமான இயற்றிய நூலில்
என்பதை
 
 

Ghanam Apt Creations
Graphic Designers, Digital Printers & Artists
Phone (O2) 9920 050804O982652 e-Mail: grananartsoptusnet.com.au
- S GualbLita algori,
ጰረርሷረረረ e/ed Custowey's Accept our skills
Escocok, Lubliskita ESook)-ACE ga-Colo ay Mooyk
-{Hoewelikes
Eartleys. To stews
o Ewrocture, & ve YS
೨೭slಿತಿ التي تميل شة
ea Kisuals of Luitations
E3 Article خدام حكمt عامج oY"
12 Listess (ČKAYTAS
Wigra 3\。 8 Cecasion vs. C ίδι,
3279, Arcot Road, Kodambakkam, Chennai - 600024. Tel: 91 44 2372 3182, 2473 5314 Mobile : 919444357173 Email mithra booksignail.com

Page 39
Access to hospitals ....... Man Lutriti 01 . . . . . . . . . . . . . . . Medicine .....................
Such is the plight of Tamil
Tens of thousands have been Imad North East of
OWER THE PAST 6 YEARS
AMAF has been providing assistance ti facilities in NorthEast (NE) Sri Lanka.
AMAF has financed the establishment : the art pathology laboratory in NE Sri Xray unit, 6 patient transport Vehicle (CCU), intensive care unit (ICU) and mobile dental clinic and provided equi
YOU CAN MAKE A DIFFERENCE TO THE HE
by contributing to
UPCOMING MAJOR EVENTS FOR THIS
AMAF Clinical Symposium & Charity B m "Muththami Maalai-7 Cultural Progra
அவுஸ்திரேலிய
ATSITraian Me
We thank you for cont
BOTribution Could be Tade. Die A
Australian Medical
PalladdESST 5 NOE AVE
Telephone (O2) 9642
FOUTIETOTIEJI
 
 

..... DIFFITZULT , , , RAMPANT ..... IN SHORT SLPPLY
s in North East Sri Lanka
E hD Teless and destitute in the Sri Lanka
Dwards improving medical and health
ind Commissioning of the first state of Lanka. It has also donated a mobile s, equipment for coronary care unit operating theatre. AMAF has setup a pment to improve the dental care,
ALTH AND WELL BEING OF OUR PEOPLE
AMAF projects,
YEAR
anquet (Melbourne) - 11 August 2007 m (Sydney) - 8 December 2007
மருத்துவ உதவிநிதியம்
Aid Foundation Inc. (AMAF)
tinuing Wըur Support.
AF by drawing a cheque in favour of
Adil Foundation nC)
ue, SIraleld, MSN 285
GIF DATE E Is WWW.III
ual LL LKLKLLLLLLL TK LaLLLAALLTTLLLLL 圆
席