கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2007.04

Page 1

சித்திரை 2OO7

Page 2
Throun YaarE IП Starwolca Of Tamill தமிழ் பேனலில் பதின்மூன்று வருடங்கள்
%, taikai na W' "ابر la ======= a = نقل
அவுஸ்திரேலியா படிடதாரிகள் தமிழர் சங்கம் Tamil Competition. Australian Society of Graduate Tamils
அவுஸ்திரேலியா,நியூசிலாந்து தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2007
கடந்த 13 வருடங்களாக சிடினியில் நடைபெற்று வரும் ஒரேயொரு தமிழ் விமாழிப் போடிடி, அவுஸ்திரேலியா - நியூசிலாந்து தேசிய நிலையில் நடைபெறும் ஒரேயொரு தமிழ்ப் போடிடியாகும்.
போட்டிகள்:7 வயதுப் பிரிவுகளில் 25 போடிடிகள் (சிடிஜியில் மடிடும்), பாடல்மணனப் போட்டி, பேச்சுப் போடிடி, வாய்மொழித் தொடர்பாற்றல், எழுத்தறிவுப் போடிடி, விவாதப் போடிடி, வினாடிவினா, தனி நடிப்பு. (தெரிவு செய்யப்படிட போட்டிகள் மடியூமே வெவ்வேறு மாநகரில் நடத்தப்படும்)
| இந்த ஆண்டுதேசிய நிலையில்: எழுத்தறிவுப் போடிடி, பாடல் மனனப் போடிடி பேச்சுப் போடிடி என்ற 11 போட்டிகள் அவுஸ்திரேலிய, நியூசிலாந்தில் மாநில, தேசிய மடிடத்தில் நடத்தப்பட்டு அவற்றிற்கு முதற்பரிசாக 11 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படஇருக்கின்றன.
இப்போட்டிகளுக்கான முக்கியதிகதிகள்
விண்ணப்ப முடிவுத் திகதி:
15.06.2007 - சிடினி
30.06.2007 - சிடினி தவிர்ந்த மற்றைய நகரங்கள் 28 & 29.07.2007 / 4 & 5.08.2007 - 5.5g ஊக்குவிப்புப் போடிடிகள் - சிடினி நகர்
4.08.2007 - மாநில, தேசிய நிலை எழுத்தறிவுப் போடிடிகள்
12.08.2007 - பேச்சு, பாடல் மனனப் போடிடிகள் - மெல்போர்ன் நகர்
25.08.2007- தமிழ் ஊக்குவிப்புப் போடிடிகள் - கன்பரா நகர்
மற்ற மாநிலங்களில் போடிடிகள் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
29.09.2007 - சிடினியில் தேசியப் போடிடிகள் (பாடல் மனனம், பேச்சு மடிடும்)
30.09.2007 - சிடினியில் பரிசளிப்பு விழா
தொடர்புகளுக்கு
உங்கள் தமிழ்ப் பாடசாலை நிர்வாகத்தினர் GTLDgil 6apa Tui, Jamb: WWW.Kalappai.org தொலைபேசி: 04:33 088,725/02-97587970
PO Box 4040, Homebush NSW 2140. E-mail asogttcagmail.com Web: www.kalappai.org
 
 
 
 
 
 
 

/ மனித மனத்தை உழுகின்ற N Ehıl) LIGOLI உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
O -
EH G LI GOD LI அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
id:li' I'll : A Lus. 82.5} ஆண்டுச் சந்தா pri Lily, T(t) : „W. Lis. S10. () () (altinitially, III () : Aus. S2 ().(C)C)
பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற (L'eligil. ஆசிரியர் குழுவுடன் தொடப்புகொள். Tele : (O2) 4737 9007
KALAPPA
P.O. Box4), Homebush South, NSW 214)
AUSTRALIA E-Tlail : kalappaisīyahoo, Com
O இதழ் வடிவமைப்பு மித்ர ஆர்ட்ஸ் & கிரியேசன்ஸ் 고 1 - - 1E. 모구 51
\ ン
உள்ளே.
உழவன் உள்ளத்திலிருந்து
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
நம் நாடு அன்றும் இன்றும் புற்றுநோயை தடுப்பதற்கு ஆரோக்கியமான வாழ்வே முதற்படி
வரிசைகள் - II
புற்றுநோய் பற்றிய மருத்துவ ஆலோசனை தொடர்கின்றது
பிறக்கட்டும் மானிட நேயம்
விடிவு - II
ELPf:1 f::
புற்றுநோய் ஏற்பட்டால் அதைக் குணப்படுத்தலாமா?
சித்த மருத்துவம்
உங்கள் திறமைக்கு ஒரு சவால்
இணைபிரியா அன்றில்
பாரடி இது நல்ல பாடமடி
உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம்
2
23
P5
27
34
53
는
5도
EST
S5
67

Page 3
ஆசிரியர்: திரு. பொன். குலேந்திரன்
நூல் மதிப்பீடு: பராசக்தி சுந்தரலிங்கம்
க்கையால் பயனென் - அரன் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத - இவ் ஆக்கையால் பயனென்?
கால்களால் பயனென் - கறைக் கண்டேன் உறை கோயில் கோலக் கோபுரக் கோகர்ணம் - குழாக் கால்களால் பயனென்
 

இப்படிப் பாடுகிறார் அப்பர் பெருமான். திரு. பொன் குலேந் திரனின் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்னும் நூலைப் பார்த்தபோது "கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசிக்கா விட்டால், இந்த மனிதப்பிறவி எடுத்து என்ன பயன்" என்று அப்பர் பெருமான் திருவரங்க ாலையில் பாடியது மனதிலே ஃந்தது.
கோயில் வழிபாடு எமது வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டது. நாம் எங்கே வாழ்ந் தாலும் எமக்குப் பக்கத்திலேயுள்ள கோயிலோடு இணைந்துவிடுவோம். இதனாலேயே, புலம் பெயர்ந்து வாழும் நாம், இன்று போகுமிட ப்ெ i i} ம் கோயில் க ைஎா அமைத்து மன அமைதியைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
எமது நாட்டுச் சூழலிலே, எமக்கு இயல்பாக அமைந்திருந்த இந்தக் கோயில் வழிபாடு, இன்று மாறுபட்ட சூழலிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நமது குழந்தை களுக்கு இயல்பான ஒன்றாக அ  ைம ய வின்  ைஸ்பே என்ற ஆதங்கம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. எமது பற்றிய தெளிவான ஒரு விளக் கத்தை இந்த வருங்கால சந்ததி யினருக்குக் கொடுக்க வேண்டிய ஒரு தேவை இன்று தோன்றி புள்ளது. இவர்களின், ஏன்? எதற்காக? என்னும் கேள்விகளுக்கு அறிவு பூர்வமாக விடை சுறும் முகமாகவே தாம் இந்நூலை எழுதியதாக ஆசிரியர் கூறுகிறார்.
FL Dr. JLr
கலப்பை 52 ) சித்திரை 2007 () 5
எமது சமயகுரவர் கோயில்கள் தோறும் சென்று பக்திப் பரவ சத்தில் பாடிய திருமுறைகள் இன்றும் எமது ஆன்மீக வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன. இந்த வழியிலே வந்த இந்நூலாசிரியரும் எமது ஆன்மீக பாரம்பரியத்தின் சிறப் பையும், பிறந்த நாட்டின் பெருமை யையும், மாறுபட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது சந்ததியினருக்கு தெளிவாக விளக்குவதில் வெற்றி பெற்றுள் விளார் என்று கூறலாம்,
எமது தாய்நாட்டிலே 180க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன என்று ஆசிரியர் இங்கே குறிப் பிடுவது வியப்பைத் தருகிறது. இவற்றில் பலவற்றை வெறுமனே பட்டியலிட்டுத் தராது, அவற்றைப் பற்றிய விபரங்களையும், எமது சமய தத்துவங்களுக்கான விஞ் ஞான பூர்வமான விளக்கங் களையும் சுவைபட பதிவு செய்தி ருப்பது இந்நூலின் சிறப்பம்சம்
நாம் முன்னர் போகாத ஊர் களுக்கும், அங்கே அமைந்திருக்கும் கோயில்களுக்கும் ஆசிரியரோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். ஆசிரியர் சிறந்ததொரு வழிகாட்டி யாக, ஒவ்வொரு நினரிலும், கோயி விலும் நின்று, நின்று அவற்றின் வரலாற்றையும், இடப்பெயரின் காரணத்தையும், அவற்றோடு தொடர்புடைய மன்னர்களைப் பற்றியும், மற்றும் எமது சமய தத்துவங்களையும் வர்ணிக்கும் முறையில் நாம் பல புதிய செய்தி
களைக் கற்கிறோம். ஏற்கனவே

Page 4
கலப்பை 52 | சித்திரை 2007 () 8
கேள்விப்பட்ட பல விபரங்களை
உறுதிப்படுத்திக் கொள்கிறோம். இந்நூலைப் படித்து முடிக்கும் போது ஒரு புனித யாத்திரை
செய்த உணர்வு எமக்கு ஏற்படு
கிறது. எமது சமய பாரம் பரிபத்தையும், தாய்நாட்டையும் நினைத்துப் பெருமிதம் அடை
கிறோம். "மண் வாசனை" நூலில் மனம் பரப்பி மகிழ்விக்கிறது.
சமய குரவர்களான சம்பந்தரும், சுந்தரரும் திருக்கேதீஸ்வரப் பெரு ான் மீதும், திருக்கோணேஸ்வரர் மீதும் பதிகம் பாடிப் பரவினார்கள் என்ற விபரத்தைக் கூறும் ஆசிரியர், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் னரே எமது நாட்டிலே ஐந்து ஈஸ்வரத் தலங்கள் சிறந்து விளங்கி பதற்கான சரித்திரச் சான்று களைக் கூறி எம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். சோழ மன்னர் பொலனறுவையில் சிவாலயங் கனை அமைத்து சைவத்தை வளர்த்த போது, பெளத்த சமயத் தவரான சிங்கள மக்களும் சைவ நெறியைப் பின்பற்றினர் என்னும் செய்தியைக் கூறுகையில் "போர்த் துக்கேயர் தமது மதத்தைப் பரப்பும் நோக்கத்தில் எமது கோயில்களை அழித்தார்கள் என்று அறிந்திருக்கிறோம். ஆனால் சைவ நெறியையும் பெளத்தத்தையும் பின்பற்றிவரும் சிங்களப் படை வீரர்கள், எமது கோயில்கள் பல வற்றை இன்று அழிக்கிறார்களே என்று ஆசிரியர் வருந்துவது எம்மையும் வருத்துகிறது. செல்வச் சந்நிதி, கதிர்காமம் போன்ற திருத் தலங்களிலும், கிழக்கிலங்கையில்
உள்ள முருகன் கோயில்களிலும் நிலவிவரும் மெளன வழிபாடு பற்றிய விபரங்களையும் இந் நூலிலே பார்க்கிறோம். பரராஜ சேகர மன்னன் அமைத்த பரராஜ (FFTL sisir G3)GY ALI I MĨ (39, Tur als MIGLI', பற்றியும், நல்லுரர் கந்தசுவாமி கோயிலுக்கும் புவனேகபாகு மன்னனுக்கும் இருந்த தொடர்பு பற்றியும் அறிகிறோம். இப்படிப் பல செய்திகள்.
"ஒரு நாமம் ஒருருவம் இல் லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தென்ளேனம் கொட் டாமே" என்கிறார் மணிவாசகர். இந்த நாமமும், உருவமும் இல்லாத பரம்பொருளை எமது சமயம் சிவன், சக்தி, பிள்ளையார், முருகன், விஷ்ணு வைரவர், ஐயனார் என்றும் எத்தனையோ பெயர்களால் வர்ணிக்கிறது. இந்தப் பல்வேறு தெய்வங்களையும் அவை குறிக்கும் தத்துவங்களையும் இந்நூலிலே, ஆசிரியர் தனித்தனி அத்தியாயங் களாகப் பிரித்து விளக்கம் தருவது வாசகர்களுக்கு வசதியாக உள்ளது. மற்றும் கண்ணகி, திரெளபதி வழிபாடு பற்றியும் விளக்குகிறார்.
என்றும்
சக்தி பீடங்களைப் பற்றிய அத்தியாயத்தில் சக்தி வழி
பாட்டின் தத்துவத்தை விஞ்ஞான
நோக்கில் ஆசிரியர் ஆராயும் போது, சமயம் பற்றிய எமது பார்வையும் ஒரு புதிய
கோணத்தில் செல்கிறது. பெரு வெடிப்புக் கோட்பாடு பற்றியும் (Big Bang theory) 3) sira Goglair

தோற்றம் பற்றியும் அறிகிறோம். ஓம் என்னும் பிரணவ மந்திரம், சிவ நடனம் போன்ற தத்துவங் களுக்கும் பொருத்தமான விஞ் விளக்கத்தைத் தருகிறார். ஸ்வஸ்திகா, திரிகோனம், ஷட் கோனம், யந்திரம் போன்றவை பற்றியும் விளக்குகிறார்.
ஞான
கோயில் என்பது வெறும் வழி பாட்டுத் தலம் மட்டுமல்ல, அது ஒரு தத்துவம், அந்தத் தத்துவம் பற்றிய விளக்கத்தை வரைபடத் துடன் இந்நூலில் பார்க்கிறோம். திராவிடக் கட்டடக் கலையின்
சிறப்பு, சிற்பக்கலை பற்றிய விளக்கம் யாவும் அறிவு பூர்வமாக விளக்கப்படுகின்றன.
எமது சமயம் பரந்து விரிந்த பெருநோக்கமுடையது. ளாவிய இனிய நல்லியல்பே (பniver:lity) இதன் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் காரணம், ஆன் மீகத்தை வளர்க்க வேண்டிய எமது கோயில்கள் வெறும் வியாபாரத் தலங்களாக மாறிவருவதைக் கண்டு
轟_ú』品
இந்நூலாசிரியர் மனம் வருந்து கிறார். இந்த நிலைமையை மாற்றுவது எமது வருங்காலச்
சந்ததியினரிடமே உள்ளது. எனவே இந்நூலாசிரியருக்கு ஒரு வேண்டு கோள். இந்நூலில் உள்ள கருத்
துக்கள் ஆங்கிலத்திலும் மொழி
பெயர்க்கப்படுவது காலத்தின் தேவையாகிறது. அப்பொழு s எமது பிள்ளைகள் தமது
வாழ்வோடு இக்கருத்துக்களை
இணைத்துக் கொள்வார்கள்.
கலப்பை 52 | சித்திரை 2007 () 7
"கோபுர தரிசனம்" பற்றிய நூலிலே கோயில் கோபுரத்தின் படம் இல்லாதது பெரிய குறை. கோபுரத்தைப் பார்த்த உடனேயே கும்பிடுவது எமது வழக்கம். அட்டைப் படத்திலோ, நூலின் முதற்பக்கத்திலோ கோபுரத்தின் படம் இருப்பது பொருத்தமாக இருக்கும். இந்நூலில் காணப்படும் எழுத்துப் பிழைகளை அடுத்த பதிப்பிலே தவிர்ப்பது அவசியம்.
திரு. பொன். குவேந்திரன் அவர்கள் ஒரு விஞ்ஞானப் பட்ட தாரி. நல்ல ஆய்வாளர், அத்துடன் எமது சமயத்தில் ஆழ்ந்த ஈடு பாடும் கொண்டவர். தான் எடுத்துக்கொண்ட விஷயத்தை விளக்கும் திறமையும் பெற் றுள்ளார். இதுவே இந்நூலை ஏனைய நூல்களிலிருந்தும் வேறு படுத்திக் காட்டுகிறது.
புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர், சமயம் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் பெரியவர்கள் எல்லோருக்குமே இந்நூல் சிறந்த தொரு கையேடாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
"நல்லூரான் திருவடியை நான் நிலைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனெடி - கிளியே இரவு பகல் காணேனெடி"
(யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகள்)

Page 5
Ε. Τ.
പ്രത്തികൃഷ്ണ
வாழ்க்கை வசந்தங்களை வழியில் தொலைத்துவிட்டு வண்ண நினைவுகளை வானில் நிலைக்கவிட்டு வந்து சேர்ந்திடாதா வளமான எதிர்காலமென்று வாழத்துடிக்கும் ஈழத்தமிழரே வடித்தேன் உமக்கோர் கவிதை நம்நாடு அன்றும் இன்றும்
செந்நிறழமியும் பொன்விளை பூமியும் நாம் பிறந்த பொன்நாடு கண்மணிக்கதிர் வயல்களும் காய்கறித்தோட்டமும் கனிரசக்களஞ்சியமும் நம்நாடு செங்கதிரும் களனியிலே சதிராடும் சேற்றினிலே செந்தாமரை முகம் காட்டியதும் நம்நாடு அன்று
மாங்குயிலும் பூங்குயிலும் கானம்பாடும் சலசலக்கும் அருவிகளோ தாளமிடும் அழகுச் சிறகுகளை விரித்து ஆண்மயில்கள் அழகாக நடனமிடும் இக்கோலம் கண்ட பெண்மயில்கள் நாணித்தலைகுனியும் இச்சித்திரக் காட்சியெல்லாம் கண்டவர்கள் கண்களை குளிர வைத்ததுவும் நம்நாடு அன்று.
 
 
 
 

கலப்பை 52 ) சித்திரை 2007 () 9
அன்னையர் தந்தையர் அவர் முன்னையர் யாவரும்
ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகள் அறிவுப்பாங்குடன் கூடிக்குலவி கொண்டாடி மகிழ்ந்து குவலயம் போற்ற குடும்பம் நடாத்தி வாழ்ந்ததுவும் அன்று
பெய்யும் கொண்டபாளர் பெருங்கல்விழிப்பேறுடைபோர் பொய்யாமல் வாழ்ந்ததுவும் ஆதிநீருமுறை ஆட்சி செய்ததும் சோதி இறையருள் பாய்ந்ததுவும் நம் திருநாடு அன்று
கதைகளும் கட்டுரைகளும் கவிதைகளும் கீர்த்தனங்களும் தமிழ் மாந்தர் செவிகளைத் தித்திக்க வைத்ததும் ஓங்கி வளரும் கலையை தலையில் தாங்கி வளர்த்ததுவும் நம் பொன்நாடு அன்று.
இன்று வடக்கும் கிழக்கும் வளம் கெட்டுப்போயிற்று எங்கள் கழனி நிலங்களெல்லாம் கட்டாந்தரைபாகி கந்து வளர்ந்து சந்துகளும் பொந்துகளும் நிரவி அதிகாரர் ஏவிவிட்ட சண்டாளர் தமிழர் பினம் குவிக்க சண்டை செய்யும் பூமி நம்நாடு இன்று.
சாகாத போரினால் எங்கள் தாய்விடு இன்று சவக்களமாயிற்று தினம்தினம் திக்கெங்கும் அழுகுரல் கேட்குது. வன்முறை செய்து வலுத்த கரங்கள் தமிழ் மக்கள் மென் கழுத்துக்களை நெரிக்குது இன்று
நம் நாட்டில் அந்நியர் கால் புதைந்து எம் கன்னியர் கற்பழிந்து ஒமத்தியென காமத்தி வளர்ந்து எங்கள் கல்லூரிப் பெண்களையே கொலை செய்யும் நம்நாடு இன்று.

Page 6
கலப்பை 52 ) சித்திரை 2007 D 10
வாழ்வின் கணக்கை மரணத்தில் வரவு வைத்து அச்சமும் பீதிய |ம் ஆடுகின்ற மானிடாய் ஈனமற்ற ஈனர்கள் கொட்டுகின்ற குண்டுகளால் எங்கள் குஞ்சுகளும் பிஞ்சுகளும் குருதிப்புனலில் குளிக்கின்ற நாடு இன்று.
பித்தம் பிடித்த பல கூட்டங்கள் ஆங்காங்கே பற்பல பேதங்கள் வளர்த்திடுது. பக்குவம் கொண்ட படை விரையுது அது சிக்கலறுத்து சீர் படுத்தவே செங்களமாடுது இன்று
சங்கூதிப்போர் தொடுத்து எங்கள் சங்கத்தமிழ் காக்க சாவே தம் வாழ்வாக்கி களம் 2) {II:3յI செந்நீர் இறைத்து சிவப்பாக்கி சுதந்திரக் கதிரறக்க தமிழன் சுடுபட்டு சாகும் நாடு நம்நாடு இன்று.
கன்று வயதில் குண்டுகள் சுமந்து களம் சென்று கொடிய குண்டர்கள் வாழும் கூடுகள்தான் சிதைத்து - வென்று வெந்திடும் தோழரை தோள்களில் சுமந்து செந்தமிழ் காக்க வேங்கைகள் வெந்தனல் மிதிக்கும் நாடு இன்று
நம்மண்ணில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தவர் வயிறு தினம் தினம் சுருங்குது அங்கு எம்மவர் செத்து மடிந்திடும் செய்தி கேட்கவே என் நெஞ்சினில் செந்தனல் மூளுது உத்தமர் வாழ்வை உறிஞ்சிடும் உலுத்தரின் கொட்டம் அடக்கவே முப்படையும் பாபபுது இன்று
கடலும் ஒருநாள் முசி மூச்சுவிட்டு ஒயும் எரிமலையும் குமுறி வெடித்துக்குளிரும் இடிமின்னலோடு புயலும் புறப்பட்டு தணியும் எங்கள் விழிகளிலும் ஆனந்தக்கண்ணிர் சொரியும்,
 

புற்றுநோயைதடுப்பதற்கு ஆரோக்கியமான வாழ்வே
முதற்பழ
உலகிலே புற்றுநோய் இன்றும் கொடிய நோயாகத் திகழ்கின்றது. புற்றுநோயோ பல வகைப்படும். அது தோன்றும் இடத்தைக் கொண்டும், அதன் கலச்சேர்க்கைகளைக் கொண்டும் (histology), அது வளர்கின்ற, அல்லது பெருகுகின்ற விதத்தைக்கொண்டும் வேறுபடுகின்றது.
இப்படிப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் காரணிகளோ பவ. அவற்றில் சில எமது பிறப்புடன் சம்பந்தப்பட்ட பரம்பரைக் காரணி பாகவோ, அல்லது நாம் வாழும் சூழற் காரணிகளாகவோ, அல்லது எமது வாழ்க்கை முறைகளாகவோ இருக்கலாம். நுரையீரல் புற்றுநோடே (lung carcinon) அவுஸ்திரேலியர்களிடையே அதிகமாகக் கானப்படும் புற்றுநோயாகும். இதற்குப் பிரதான காரணி புகைபிடித்தலாகும். பெருங்குடலில் ஏற்படுகின்ற புற்றுநோயின் (Color:l CILiIR) பிரதான காரணி - எமது ஆரோக்கியமற்ற உணவுகளே.
மனிதனைப் பாதிக்கும் இந்தப் புற்றுநோய்களில் 3-0 சதவீத மானவற்றை நாம் நல்ல ஆரோக்கியமான உணவு மற்றும் பழக்கவழக்கங் களினால் தவிர்த்துக்கொள்ள முடியும் என்று அறியப்பட்டுள்ளது. அப்படி பானால் எவ்வாறு இப்புற்றுநோய்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்: அதிசயமாக இருக்கின்றதா ? இல்லை. அது உண்மை. அப்படியானால் எப்படிப்பட்ட பழக்க வழக்கங்களை நாம் கைக்கொள்ள வேண்டும்?
உடலுக்கு l-agrisy Tiġ,95 II ii io TG3T உணவுகளை உண்ணுதல் பல வகையான நிறைய தாவர உணவுகளையும் பழ3ைக களையும் உண்ணுதல், எதனையும் உண்ணும்போதும் தெரிந்து உண்ணுதல். . மதுபானங்களை குறைத்துக்கொள்ளல் அல்லது முற்றாக
நிறுத்துதல். , புகை பிடித்தலை நிறுத்துதல் 4. உடற் பருமனை அளவுடன் வைத்திருத்தல் 3. ஒழுங்காக உடற்பயிற்சி செய்தல், இப்படி ஆரோக்கியமான வாழ்வு வாழ்வீர்களாய் இருந்தால், புற்றுநோயும் மற்ற நோய்களும் உங்களைப் பீடிக்காது இருக்க அதிக வாய்ப்பு உண்டு.
வெள்ளம் வருமுன் அணை கட்டவேண்டும். அதாவது நோய்
வருமுன் காப்போம்,

Page 7
சைகள்
கேட்டவற்றிலிருந்து
போனது அனைத்தையும் கூறியவள் அவன்
ப0றுநாள் வேலைக்கு வந்த ராகுல் நேரே நிருத்திகாவிடம் வந்து "rற்றானா எங்கே" எனக் கேட்டான். எல்லாக் கோபமும் சேர்த்து "எனக்கென்ன தெரியும்" என அவன் மேல் சீறினாள். அதிர்ந்த ராகுல் "அமைதி, அமைதி நிருத்திகா தேவியாரே " யார் மேல் என்ன கோபம்" எனக் கேட்டான். அதைக் கேட்டதும் விழிக்குளம் தானாகவே நிறைந்து வழிந்தது. கீட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டாள். அதிர்ந்த ராகுல் "என்னடா " எனக் கனிவாகக் நிகழ்ச்சியில்
கேட்டான். கலை
Flışlar Y SITT சொல்லாமல் ଛା!!!!!!!!!!!T
முகத்தை ஆவலுடன் நோக்கி னாள் அவன் முகம் இருண்டது. நிலத்தைப் பார்த்தவன் "சுகன்யா வர வர ஒரு மாதிரித்தான் இருக்கிறாள் நிருத்தி, பாரோ அவள் மனத்தைக் கெடுத்திருக் அவதூறு பேசுவது பாவம் என்பது தெரிந்தும் ஏன் இப்படிச் செய்கின்றார்களோ தெரியாது. அதுபற்றி உன்னிடம் ஆலோசனை கேட்க நினைத்தேன். ஆனால் வெள்ளம் தலைபளவுக்கு
கிறார்கள்.
 

வந்துவிட்டது போல் தெரிகிறது. முதலில் ஷஹானாவைக் கண்டு பிடிப்போம்" என அன்றும் இருவரும் தொலைபேசியில் முயற் சித்தும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.
மாலையில் இருவருமாக ஷஹானாவின் வீட்டுக்குப் போன போது அங்கே பூட்டிய வீடுதான் இருவரையும் வரவேற்றது. பக்கத்தி லுள்ளவர்களிடம் விசாரித்த போது வெளிநாடு போய்விட்டதாகக் கூறினர். நிருத்திகா "என்ன ராகுல் இது, திடீரென ஏன் இப்படிச் செய்தான் ?" எனக் கேட்டுச் செய்வதறியாது அந்த இடத்தில் தொப்பென இருந்தாள். "எங்கு போவான் கனடாவுக்கு அம்மா விடம் போயிருக்கலாம். அங்கு விசாரித்தால் தெரியும் வா" என அழைத்துச் சென்றான்.
மறுநாள் அலுவலகத்தில் அவள் மனேஜர் "ஷஹானா ஒரு மாதம் வீவ் விண்னப்பித்திருக்கிறாள். ஒருவித முன்னறிவிப்புமில்லாமல் திடீரென ஒரன் இப்படிச் செய்தாள் " எனக் கேட்டார். கனடாவுக்குப் போயிருக்கலாம் என மழுப்பி வைத்தாள். அவர்கள் அனுப்பிய எந்த இ - மெயிலுக்கும் பதில் இல்லை. அவளின் அம்மா விட்ம் தொடர்பு கொன்ன விபரம் தெரியாது. அதைக் கேட்டு வைக்க யாருக்கும் என்றும் தோன்றிய தில்லை. ஹைானா அவர்களுடன் இருப்பாள் என்ற அசையாத நம்பிக்கை இருந்ததால் வேறு எதையும் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.
என்றும்
கலப்பை521 சித்திரை2007 315
ஒரு வாரமாகியும் எந்தத் தகவலும் இல்லாததால் சாட்சிக் காரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காவில் விழு வோம் என நினைத்து ஒரு நாள் நிரஞ்சனிடம் "ஷஹானாவும் குழந் தைகளும் எங்கே" எனப் போனில் கேட்டாள். சினேகிதி நினைத்துக் கொண்டிருக்கிறான்? என் பிள்ளை களைக் கடத்தியதாகப் பொலிகளில் தகவல் கொடுக்கப்போகிறேன்"
அவன்
ரன்ன
மேல் பாய்ந்தான்.
போனை
I TJ37 - Sissar அத்துடன் நிருத்திகா வைத்து விட்டாள்.
நாளுக்கு நாள் பயம் அதிக மாகியது. பாவும் மர்மமாக இருந்தது. மனேஜர் நிருத்திகாவிடம் வந்து ராஜி னா பாச் செய்து விட்டாள்" என்ற குண்டைத் துரக்கிப் போட் டார். இனியும் பொறுக்கமுடியாது என்ற நிலையில் கனடாவில் தனது தொடர்பு
ஒரு நாள் அவள்
"ஷஹானா வேலையை
நண்பர்களுடன் கொண்டு ஷஹானாவின் அம் மாவின் தொலைபேசி இலக் கத்தை ஒரு மாதிரி எடுத்து அவரிடம் தொடர்பு கொண்டாள். இருக் கிறாயா பிள்ளை' வுர்ஹானாவின் சினேகிதர்கள் எல்லாரும் என்ன மாதிரி ஒழுங்காய் இருக்கிறீர்கள் நிரஞ்சனுக்கு மட்டும் புத்தி ஏன் இப்படிப் போனது. அதனால் பார் எவ்வளவு பிரச்சனைகள், அந்தக் குழந்தை பாவம் எப்படிக் கஷ்டப்படுகிறாள்" எனக்கூறி
"நிருத்திகாவா ? நல்லா
வருந்தினார். பதில் சொல்வத்து

Page 8
கலப்பை 52 ) சித்திரை 2007 14
தெரியாது தவித்தவள் "அம்மா,
ஷஹானா இருக்கிறாளா?" எனக்
கேட்டாள். "அவள் இங்கை இல்லை பிள்ளை" என்றவர், "கொஞ்ச நாளைக்கு அவனைத் தொந்தரவு செய்யாதை பிள்ளை, அவளா உன்னோட தொடர்பு கொள்வாள்" எனச் சொல்லித்
தொடர்பைத் துண்டித்து விட்டார். அதை ராகுவிடம் சொல்லி “ஏன் ராகுல் அப்படி நாங்கள் அவளுக்கு என்ன பாவம் செய்தோம்" என வருந்தினாள்.
"உனக்கு இன்னுமா எனறு னாவைப் புரியவில்லை. தன்னால் எங்களுக்குக் கஷ்டம் வரக்கூடாது என்றுதான் அவள் ஒளிந்து கொண்டாள். இந்தச் சனங்களின் பேச்சுக்கள் அவள் காதிலும் விழுந்திருக்கiாம்" எனச் சொன்னான். "ஏன் ராகுல் இவர்கள் எல்லாம் இப்படி இருக் கிறார்கள்" எனக் கண்கலங்கினான், "அவர்கள் சொன்னால் நமக் கென்ன. எதிர்த்து நின்று அது பொய் என்று நிரூபிக்காமல் பயித்தியக்காரி கோழை மாதிரி ஏன் இப்படிச் செய்தாள். எங்க கனடாவுக்குத்தானே போயிருப் பாள். விடு நான் போய் அவனை இழுத்து வருகிறேன்" என்றான். "இல்லை ராகுல், அவள் அங்கு இல்லை. நான் நன்றாக விசாரித்து விட்டேன்" என்றாள். அப்படியா வினால் ஷஹானா எங்கே போபி
எங்கோ
ருப்பாள் என்பது அவர்களுக்குப் புதிராக இருந்தது.
அந்த நீரின் மேல் அமைந்த கிராமத்தைக் கரையில் நின்று
பிஹானாவும் குழந்தைகளும் ரசித்துக் கொண்டிருந்தனர். தண்ணீர் எங்களுக்கு எவ்வளவு பயம், ஆனால் அங்கே பெரியவர்களும் வயதானவர்களும் குழந்தைகளும் கரையில் காரை நிறுத்திவிட்டுச் சாமான்களை எடுத்துத் தமது சிறு வள்ளத்தில் விவித்துவிட்டு அதை இயக்கிக் கொண்டு நீருக்கு மேல் அமைந் திருந்த தம் வீடுகளை நோக்கிச் சென்று வீட்டு வாசலில் அவற்றை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர், ஒரு வாகனம்தான் இருக்கும். ஆனால் இவர்களிடம் கார், போர்ட் என இரண்டு வாகனங்கள் இருக் கின்றன எனக் கோபிகா வியந்து நின்றாள்.
என்றால்
அனேகமானவர்களிடம்
ஹொனோவும் குழந்தைகளும் தெற்காசிய நாடுகளிலேயே சிறிய "புரூணை"யில் நின்றார்கள், நிருத்திகா, ராகுலனைத் தொலை பேசியில் அழைக்கவேண்டாம் எனத் தடுத்தவிதம் ஷஹானாவுக்கு எதையோ உணர்த்தியது. அதற்கு எதுவே காரணம் இருக்கிறது பிான நினைத்துத் தனது இருக் கைக்குப் போனதும் அவன் வீட்டுத் தொலைபேசியில் அழைத் சு கினபாதான போன்னை எடுத்தாள். "ராகுல் ஏன் இன்று வேலைக்கு வரவில்லை" ப்ான தோரானா பதார்த்தாகக் கேட்டதற்கு "ஏன் ஒரு நாள்சுடப் பார்க்காமல் இருக்கமுடியாதா? உன் புருஷனை விட்டுவிட்டு ஏன் என் கனவர் பின்னால் அலை கிறாய்" எனச் சுகன்யா ஏதேதோ பிதற்றினாள். ஷஹானா அதிர்ந்தாள்.
தTள்
தாள். அங்கே
 
 
 
 
 

அவளுக்கு எதுவுமே புரியவில்லை, சுகன்யா பேசி முடித்துப் போனை வைத்ததும் செய்வதென்ன எனத் தெரியாமல் ஏங்கி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் குழம்பி நின்றாள். சுகன்யாவின் வார்த்தை ஆர்ே ர்ேக் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அவளுக்குச் சிறிது நேரம் எடுத்தது. புரிந்தபோது ஐயோ என அரற்ற வேணும் போல் இருந்தது. நிருத்திகா தடுத்ததன் காரணமும் அப்போது புரிந்தது. எல்லா வற்றையும் அப்படியே போட்டு விட்டு வீட்டுக்குப் போய்விட்டாள்,
நின்றவள்
கிரகித்து அதன்
தனிமையில் இருந்து சிந்தித்த போது சில நாட்கள் எங்காவது போனால் நல்லதென நினைத்தாள். அவளது அம்மாவின் தம்பி புரூனையில் iris I, சேவை அதிகாரியாக இருந்தார். குழந்தைகள் இல்லாத அந்தத் தம்பதிகளுக்கு ஹொனாவிடம் சிறுவயது முத1ே) ஒரு தனி அன்பு இன்னும் இரண்டு வருடத்தில் நான் இங்கிருந்து போய் விடுவேன். இந்த வேலை ஒப்பந்தம்தான் கடைசி. அதற்கிடையில் நீ ஒருக்கால் இங்கு வா. இந்தச் சிறிய முடியாட்சியை நீ பார்க்க வேண்டாமா ? ? எனக் கேட்டுக்
கல்வி
கொண்டே இருந்தார். அவர் கேட்டதற்காகப் பாடசா ைவிப் விடுதலை வரட்டும் வருகிறேன்
என்றவன் இருந்து போசித்தபோது இன்னும் இரண்டொரு தினங் களில் பாடசாலை விடுதலை தானே பிள்ளைகளுக்கும் நல்லது.
55 GTL'EXILI I 52 (CET) சித்திரை 2007匹15
இந்தச் சிறுவயதில் பெற்றோர் பிரிவது என்பது எத்தகைய துன்பம், ஆனால் நிரஞ்சன் மூளை மாறி நடந்தால் செய்வாள். எல்லா விதமாகவும்
அவள் என்ன
முயன்று முடியாமல்தானே விவாக ரத்துவரை சென்றாள்.
சிந்தனை வசப்பட்டவள் கைக் தூரத்தில் இருந்த
எடுத்து மாமாவை அழைத்தாள். அவர்,
தோ ன ல பே சி ைய
உன் னைத்தானே கொண்டிருக்கிறேன், உடனே வா என்றார். அவர் சொன்னது போல உடனேயே ரிக்கெற்றும் கிடைத்தது. யாருக்கும் சொல்லாமலே போய் விட்டாள். அதுதான் எல்லோ
பார்த்துக்
ருக்கும் நல்லது என நினைத்தாள். நினைக்க நாட்களின் பின் திரும்புவோம் என நினைத்தாள்.
அங்கேயே தங்கிவிட
அங்கு மாமாவும் மாமியும் விமான நிலை பத்தில் காத்திருந்து வர வேற்றனர்.
பாபா புரூனை என்றதும் அது எங்கே என்றுதான் ஷஹானா கேட்டான். போர் னிபோ தீவின் ஒரு பகுதி என்றதும் வியப்பாக இருந்தது. இந்தோனேசிய நாட்டின் சிறுதுளி
போன்ற ஒரு நீளமான நாடு அதன்
சிmவங்கில்
1று
வடக்குக் கரையை ஆக்கிரமித் திருந்தது. அது தனி நாடாக இன்றும் முடிபாட்சியாக இருப்ப
தற்குக் காரணம் அந்த நாட்டின் மறைந்த அரசன் பூரீ பகவன் சுல் தானையே சாரும் என அவர்
பெயராலேயே அந்நாட்டுத் தலை}

Page 9
கலப்பை52) சித்திரை 2007 () 16
நகரம் "பண்டார் பூரீ பகவன் என அழைக்கப்படுகிறது. இந்தோ னேசியா, மலேசியா என்ற இரு பெரிய அரசுகளுக்கிடையே அது தனிநாடாக நிமிர்ந்து நிற்பதற்குக் காரனம் அந்நாட்டில் டெடுக்கப்பட்ட எண்ணெய்ப் டிவுகள் தான். அவை அந் நாட்டை உலகிலேயே செல்வம் மிக்க நாடாக உயர்த்தி நிற்கின்றன.
கண்
அவுஸ்திரேலியாவிலிருந்து போய் இறங்கிய ஷஹானாவுக்கும்
பிள்ளைகளுக்கும் விமான நிலை
பத்திலிருந்து வெளியே போனதும் எதுவோ கிராமத்துக்குள் போவது மாதிரி இருந்தது. சிறிது தூரம் போனபின் மாமா இதுதான் தலைநகர், அதோ பாராளுமன்றம், இது பள்ளிவாசல் என ஒவ்வொன் றாகக் காட்டிச் சென்றார். குழந் தைகளுக்கு பிடிக்க வில்லை. அவர்களின் முகத்தில் ஏமாற்றத்தின் சாயலைப் பார்த்த
எதுவுமே
மாமா, நாங்கள் வீட்டுக்குப் போய்க் குளித்துச் சாப்பிட்டதும் உங்க ஞக்கு ஓர் அதிசயத்தைக் காட்டு கின்றேன் என்றார். அதன்படி தான் 'கம்புங் அயர்' என்கின்ற நீர் மேல் அமைந்த கிராமத்தைக் காட்ட நகரின் மறுபக்கத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். படங்களிலும் இன்டர்நெட்டிலும் சிறிய அளவில் பார்த்து அறிந்தவர்கள் இந்தப் பெரிய கிராமத்தையும் அது சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டி ருப்பதையும் பார்த்து வியந்து நின்றனர். அதற்குள் உணவகங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு
அரங்குகள், அங்காடிகள், கடைகள், பாடசாலைகள் அனைத்தும் உள் ளேன. அவர்கள் நிலத்திற்கு வரவே தேவையில்லை என்று மாமா G! Firsárið rrir,
அங்கு வாழும் மலே இனத்த
வரின் இந்த நீர் மேல் வாழும்
பழக்கம் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. அரசாங்கம் அவர்களுக்கு நிலத்தில் தற்குச் சகல வசதிகளும் அமைத் துக் கொடுக்க முன்வந்தபோதும் அவர்கள் தம் பாரம்பரியத்தை விட மனமின்றி அங்கேயே இருக் கின்றனர். அதை ஒரு கெளரவமாக, குடும்பப் பெருமையாக நினைக் கின்றனர். அதனால் அரசு அவர் களுக்குப் பணிந்து அவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளையும் அமைத்துக் கொடுத்துள்ளது என் றும் மாமா கூறினார்.
வசிப்ப
அங்குள்ள பீன்தானின் அரண் பனையின் பருப்னைப் பார்த்து அதிசயித்தனர். அதற்கு அண்மை (பில் அமைக்கப்படடிருந்த பூங்கா வில் தென்கிழக்காசிய நாடுகளின் முக்கிப சின்னங்கள் செதுக்கப்பட்டு சுற்றுSWப் பயனணிகளைக் கவர்ந்தன. அங்கு உலா வந்த ஓர் ஆங்கிலேயர், அரண்மனையைப் பார்த்தீர்கள்ா இது
தாராம் அரண்மனையைவிடவும்
எங்கள் நாட்டின் பக்கிங்
மிகப் பெரியது. எல்லாம் எண் ணெய் செய்யும் வேலை எனக் கூறிப் பொறாமைப்பட்டார்.
மறுநாள் மாமா அவர்கள்ை நாட்டின் அடுத்த நகரான "கோலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிலைற்றுக்கு அழைத்துச் சென் றார். போகும் வழியில் ஆங்காங்கே ஒட்டகச் சிவிங்கிகள் தலையாட் டுவது போலச் சில உருவங்கள் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டி ருப்பதையும் தண்ணீர் தொட்டி மாதிரிப் பெரிய பெரிய கொள் கலன்களையும் கண்டனர். யாழ்ப் பாணத்துக் தெரிந்தவர்கள் ஆதலால் "என்ன தண்ணீர் இறைக்கின்றார்கனா " எனக் கேட்டார்கள், சிரித்த மாமா "தண்ணீர் அல்ல. எண்னெ ப் எடுக்கின்றார்கள். இதைச் சுத்தி களிப்புச் செய்துதான் பெற்றோல் எடுப்பது" என விளக்கினார், "நிலத் தில் மட்டுமல்ல, நாட்டைச் சுற்றி புள்ள நீரிலும் எண்ணெய்ப் படிவு கள் இருக்கின்றன. இதுதான் இந் நாட்டின் முக்கிய பொருளாதாரம்" என்று மாமி சொன்னார். அங்கே ஒரு துர்க்காதேவி கோவிலுக்குச் சென்றனர். அன்று
திருநாள் என்றதால்: பாட்டமும் விழாக்கோலமுமாகக்
கிணறும் துலாவும்
தைப்பூசத் ᏧᏂ IᎢ ckᏗ 1 1] .
கோவில் காட்சியளித்தது.
இத்தனை இஸ்லாமிய ஆஸ் பங்கள் இருக்கும் நாட்டில் இந்துக் கோவிலா என ஷஹானா வியந் தாள். "இந்நாட்டு அரசனின் படை களில் ஒரு பகுதி நேபாளியக் கூர்க்கா இனத்தினர் பிரித்தானியர் தமது பாதுகாப்பிலிருந்து இவர் களை விடுவித்தபோது தற் போதைய சுல்தான் அதையும் கேட்டுப் அவர்களின் வழிபாட்டுக்குத்தான் இந்தக் கோவில் இங்கே உள்ளது.
கொண்டார்.
பெற்றுக்
கலப்பை 52 ரசித்திரை 2007 帕亿。
இதைச் சுற்றி அவர்கள்தான் இருக் கின்றார்கள். இதேபோல தலைநக ரான பண்டார் பூஜி பகவனிலும் ஒரு சிறு துர்க்கா ஆலயம் உள் ளது. இங்கு வேலைக்கு வரும் எங்களைப்போன்ற இந்துக்களுக் கும் இதுதான் தஞ்சம்" என அங்கி ருந்த மாமாவின் நண்பர் ஒருவர் கூறினார்.
அதற்குப் பிறகு அவர்கள் அங்குள்ள கடற்கரைக்குச் சென் றனர். இரவு உணவு அங்காடிகள், விளையாட்டிடங்கள் ஆகியவற் றைப் பொழுதைப் போக்கினர். வந்ததி லிருந்து ஷஹானாவைக் கவனித்த அது பழைய ஹொனா இல்லை என உணர்ந்தார். எப் போதும் சிந்தனை வசப்பட்டிருப்
பார்த்துப் பிள்ளைகள்
பதும் வெறித்த இருக்கும் மருமகனைப் பார்த்து அத்தம்பதியர் வருந்தினர். ஒரு நாள் நீ திரும்ப அவுஸ்திரேலியா ஷஹானா ?
பார்வையுமாக
போகவேனு மா இங்கேயே இருந்துவிடேன் எனக் கேட்டார்.
"அப்படித்தான் நானும் நினைக் கிறேன் மாமா, அது முடியுமா?" என ஷஹானா கேட்டாள். "நீ சரியென்று சொன்னால் கை மேல் இருக்கிறது ஆங்கில ஆசிரியர் பதவி மூன்று வருட ஒப்பந்தம் இருக்க வாடகை இல்லாத வீடு,
கார் வாங்கக் கடன் வசதி எல்லாம்
ஒழுங்கு செய்கின்றேன். பிள்ளை கள் இங்குள்ள இன்டர்நாஷனல்
பாடசாலையில் படிக்கலாம். என்ன

Page 10
கலப்பை 52 D சித்திரை 2007 (118
சொல்கிறாய்" எனக் கேட்டார். விழிக்குளம் நிரம்ப எழுந்து போய் மாமாவை அனைத்து "தாங்க்ஸ் மாமா" எனச் சொல்லி விம்மி னாள். இதைக் கவனித்த மாமியும் ந்ெது
கண் கலங்க அவனை
அனைத்துக் கொண்டார்.
அவளுக்கு வேலை ஒழுங்கு செய்து மற்றைய வசதிகளும் அமைத்துக் கொடுத்தார். அம்மாவுக்கு மட்டும்
மாமா சொன்னது போல
அறிவித்து விட்டுத் தன் கட மையைத் தொடங்கினாள் விடு தலைக்கு வருவதாக எண்ணிை வந்த பிள்ளைகளுக்கு நிரந்தரமாக
அங்கு இருப்பது பிடிக்கவில்லை. தந்தையிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்து ஒரு உலக நாட்டில் தாய் தங்களைக் கஷ்டப்படுத்துகிறான் என நினைத்து அவ்வப்போது தம் வெறுப்பைக்
மூன்றாம்
காட்டினர். ஆனால் ரெஹ்றான விக்குத் தெரியாமல் அவர்கள் தந்தைக்கு அனுப்பிய இ - மெயி லுக் கெல்லாம் பதில் வராததால் வேறு வழியில்லாமல் தாயுடன் இருந்தனர்.
T ஷஹானா அங்கேயே இருந்தான். பிள்ளைகளின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் கவனித்த ஷஹானா அவர்களின் பல்கலைக் கழகப் படிப்புக்கு அவுஸ்திரேலி யாவுக்கு அனுப்பி இனி அவர்களால் நல்லது கெட் திட்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் நிரஞ்சனுக்கு ப்
""|
போன பின்னரும்
வைத்தாள்.
பிள்ளைகள் இருக்கும் இடத்தைக் கிடிதம்மூலம் தெரியப்படுத்தினாள், ஆடி ஒடி ஒய்ந்த நிரஞ்சனுக்கும் அப்போது அன்பும் ஆதரவும் தேவைப்பட்டதால் தந்தை மகள் கிள் உறவு மீண்டும் புதுப்பிக்கப்
புரூனையில்
பட்டுத் தொடர்ந்தது.
திற " ை தனித்து விடப்பட்டாள். பிள்ளை
கள் அவளைப்பற்றிப் பெரிதாக
ஒன்றும் அக்கறை கொள்ள வில்லை. நிரஞ்சனின் தயக்கம், குற்ற உண்ர்வு எல்லாமாக
அன்பளிடம் போகத் தடுத்தது. பாடசாலை நேரம் போக மற்றைய நேரங்களில், எனக்கு மட்டும் ஏன் இந்தத் தனிமை : எல்லோ ரையும் போஸ்த்தானே ஒழுக்க மாக இருந்து வளர்ந்து படித்தேன். காதலித்தது தவறா? ஆனால் அப்போதெல்லாம் நிரஞ்சன் பிள்ளையாக இருந்தார். ராகுல் கம்மா பெண் கிளைச் சீண்டி விளையாடினாலும் பேTவப் பேசாமல் நின்றாரே! அப்போதே
எவ்வளவு நல்வி
நிரஞ்சன் பதுமை
நிரஞ்சன் என்ன வேஷம் போட் டாரோ என நினைத்தாள். வர வரப் பிள்ளைகளின் பாராமுகம்
அவளை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியது.
நிாக்கி - JIE ---- திருதத, TTது; எஸ்லாம
எப்படி இருக்கின்றார்களோ ? அவர் கண்  ைநினைத்தபோது அவளுக்கு நடுக்கமாக இருந்தது. சுகன்யா எப்படி வார்த்தைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டினாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எவ்வளவு நல்ல சினேகிதியாக இருந்தவள் இப்படி மாறி விட்டாளே, ஏன் அப்படி? நான் என்ன தவறு செய்தேன் நிரஞ் சனை நான் பிரிந்தால் நான் ஒரன் ராகுலை அவளிடமிருந்து பிரிக்கப் போகிறேன்? இதென்ன பேத்தல் என நினைப்பாள். சில சமயங் களில், நிருத்தி பாவம் எத்தனை இ - மெயில்
அம்மாவையும் போனில் கேட்டா
அனுப்பினாள்.
னாம். பாவம் என்னைத் தேடி அலைந்திருப்பாள் என எண்ணி வருந்தினாள். ஷஹானா பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க அவை அவளை அறியாமலே சிறிது சிறிதாக அவmள விட்டுப் போய்க் கொண்டிருந்தன. அவன் நினைவுகள் தடுப்ாறித் தன்னை சிறிது சிறிதாகப் புதைகுழிக்குள் போய்க் கொண்டி ருந்தாள், அதன் விபரீதம் புரி யாமல் அவள் தன் சோகத்தில் எப்போதும் தன்னை
மறந்து ஆழ்ந்திருந்தாள்.
அறியாமலே:
தனிமைச்
நிருத்திகா பாவம் தன் வாழ்வில் நல்லது கெட்டது நடக்கும் போது பேசி மகிழ ஒரு தோழமை, சாய் வதற்கு ஒரு தோள் இல்லையே என எண்னணி இப்போது ஷஹானா இருந்தால் எப்படிக் கேலியும் கிண்டலுமாக இருந்திருக்கும் என எண் ணி வருந்துவிTள். ஆனால் அவன் எங்களையெல்லாம் விட்டுவிட்டு
வருந்து வாள்.
எங்கோ அஞ்ஞாதவாசம் செய்வ தற்கு அவளுக்கு நாங்கள் என்ன
துரோகம் செய்தோம்? யாரோ எதுவோ சொன்னதற்காக ஏன் எங்களிடமிருந்து ஒளிந்து வாழ வேணும் ' ராகுல் சொன்னது போல் அவர்கள் நரம்பில்லாத நாக்கினால் பேசும் வார்த்தைகள்
அனைத்தும் Galli , " " G F ET37 நிரூபிப்
பதை விட்டு விட்டு, பத்து வருடங் களாக இப்படி ஒருத்தி ஒளிந்து இருப்பாளா? பாண்டவர்களுக்குக் கூடப் பன்னிரண்டு மாதங்கள் தானே அஞ்ஞாத வாசம். இவளுக் கென்ன இத்தனை வருடங்கள் என நினைத்தவள் பின் பாவம் எப்படி இருக்கிறாளோ? கடவுளே, அவன:ள நன்றாக வைத்துக் கொள் விண் ாைதாரப் பிரார்த்திப்பாள்.
அன்று இரவு படுக்கப்போகும் போது நிருத்திகாவின் கனவன் மோஹன், "நிருத்தி, நான் இன்று நிரஞ்சன ன ப்
என்றான். திடுக்கிட்டுத் திரும்பிய
பார்த்தேன்"
வளுக்கு நிரஞ்சன் யார் என்று மூளையில் பதிவு செய்யப்படச் சிறிது நேரம் எடுத்தது. உணர்ந் ததும் "என்னவாம்" என வார்த் தைகளில் வெறுப்பை உமிழ்ந்தாள். பின் "ஷஹானா எங்கே என்று அவனுக்கு ஏதாவது தெரியுமா மோதரன் " அ " என எ ப் பற்றி ஏதாவது சொன்னான " என ஆர்வமாகக் கேட்டாள். "அது விஷய ம" கத்தான் வந்தார். ஷஹானா ஆஸ்பத்திரியில் இருக்
கிறாளாம். உன்னை ஒருக்கால்

Page 11
கலப்பை 52 ) சித்திரை 2007 D 20
வந்து பார்க்கட்டாம். உன்னிடம் வரத் வந்தார். முடிந்தால் ராகுவையும் கூட்டி நிருத்திகாவின் உடல் நடுங்கியது. கண்கள் உடைப்பெடுத்தன. அறிவு இழந்த நிலையில் இருந்தவன் பேச
இல்லாமல் தவித்து "அவளுக்கு என்ன எந்த ஆஸ்பத்திரி. இவ்வளவு காலமும் எங்கு இருந்தாளாம்" என ஈனஸ்
தயங்கித்தான் என்னிடம்
வரட்டாம்" என்றார்.
கட்டிவில் வார்த்தைகள்
மோஹன் ?
வரத்தில் கேட்டான்.
"புரூணையில் இருந்தானாம். சுகமில்லாமல் இங்கு கொண்டு மருத்துவ மனை விட்டிருக்கிறார்களாம்.
வந்து, தனியார் யில் நாளைக் காலையில் போவோம். இப்போ படுத்துத் தூங்கு நிருத்தி" என்றான். விழிநீர் உதிர "நீங்கள் வந்தவுடன் சொல்லியிருந்தால் நான் அப்பவே போயிருப்பேனே!" என ஏக்கமாகக் கூறிய வள் "அவளுக்கு என்ன git got 4,
காலையில்
போஹன்" கேட்டான் என்: iாம்
Tris-half if a sil அவன் படுத்துவிட்டான். ஆனால் நிருத்திகT துரங்க வில்லை, விழித்திருந்தாள். அவளுக்கு இரு விதமான உணர்வுகள் ட வி!
அன்றிரவு sof, ši,
வருடங்களின் பின் தோழியைக் காணப்போகின்றோம் மகிழ்வு ஒரு பக்கமும், அவளுக்கு என்னவோ வே தன ன மறு பக்க மு: மாக இரவைக் கழித்தாள். காலையில்
உயிர்த்
என்ற
என்ற
ராகுலனிடமும் தொலைபேசியில் விபரத்தைக் கூறிவிட்டுப் பார்வை பாளர் நேரத்திற்கு முன்னராகவே மோஹனை இழுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று
விட்டாள்.
நிருத்திகா போகும்போது,
என்னதான் உடல்நலமில்லா
விட்டாலும் ஷஹானாவின்
குறும்பு போகாது. தலை நரைத்து விட்டது, கிழவியாகிவிட்டாய் என்றெல்லாம் கேலி செய்யப் போகிறாள் எனப் பலவிதமான கற்பனைகளுடன் சென்றாள். அங்கே திருத்திகாவை பின் கண்ட ஷஹானா "திருத்தி" என அவன்
ஆனால் இத்தனை வருடங்களின்
கைகளைப் பற்றினாள். நிருத்திகா கண்கள் கலங்க அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண் டான். எதுவுமே பேசாமல் சிறிது கழிந்தது. பின் "எப்படி இருக்கிறாய் நிருத்தி"
நேரம் றெளனமாகக்
எனக் கேட்டவள், "எப்போ புரூணைக்கு வந்தாய் நிருத்தி: என்னைப் பார்க்க வந்தாயா"
எனக் கேட்டான். திருத்திகாவால் தன்னைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. இவளுக்கு
ଶTୟ୍ଯ
"ஐயோ! என்ன ஆச்சு போஹன்"
அலறிவிட்டாள். அதைப் பார்த்த
ஷஹானா “ஏன் நிருத்தி அழு கிறாய்! எப்ப வந்தாய் என்று தானே கேட்டேன். உனக்குக்
கஷ்டம் தர வேண் ாமென்று இங்கு வந்தேன். நீ இங்கும்
தானே
ஒரன் அழுகிறாய்? நீ
வந்து
 
 
 
 
 
 

அழாதே நான் வேறு எங்காவது போகிறேன். எனக்குத்தான் யாரும் இல்லையே" எனக் கூறும்போது அவள் குரல் தளர்ந்து விழிகள் நீர் கோர்த்தன. அதைத் தாங்க நிருத்தி அங்கிருந்து வெளியே ஓடி விட்டாள்.
வெளியில்
நின்று அழுதாள். முயன்றும் பொங்கிப் விழிநீருக்கு அவளால் அணை போட முடியவில்லை.
மாட்டTத
அவள் பாதையில்
நனட
5TiT 557
பெருகும்
தான் போகுமிடத்தை எல்லாம் தன் நகை கலந்த பேச்சால் ஒளிரச் செய்யும் எல்லோருமாகச் சேர்ந்து இப்படி ஆக்கி விட்டார்களே நினைக்க நினைக்க ஆற முடியவில்லை. அப்பொழுது அவ்வழியால் வந்த ஒரு டாக்டர் "என்னம்மா ஏன் அழுகிறீர்கள் " எனக் கேட்டான், அதைக் கேட்டு நிமிர்ந்த திருத்தியைப் பார்த்து "ஒரப் நீ நிருத்திகாதானே" எனக் குதுரக வித்தவன் "என்ன, ஷஹானாவைப்
என் ஷஹானாவை
: : iT
அவனால்
பார்க்க வந்தா பா ! எங்கே உன்னைக் காணவில்லையே என்று நினைத்தேன்" என்றாள். திருத்திகா
அவளைப் பார்த்துத் திருதிருவென
விழித்தாள். "என்ன என்னைத் தெரியவில்லையா ? எத்தனை வருடங்களாகிவிட்டது. சரி பி"
உன்னுடன் பேச வேணும்" என அழைத்துச் சென்றாள், அவளுடன் போகும் போது அவள் தங்க படித்த காமன் என்பது நிருத்திகாவுக்கு நினைவு வந்தது.
ளூடன் மேல்வகுப்பில்
கலப்பை 52 ) சித்திரை 2007 () 21
அவள் அறைக்குள் போய் இருந்தவள் "நீ காமன்தானே?" என்றாள். "ம், நினைவு வந்ததா? மிகவும் நல்லது" என்றாள். "நீ தான் ஷஹானாவின் டாக்டரா காமன். அவளுக்கு என்ன " எனக் கேட்டாள். "நீ புரிந்திருப்பாயே திருத்தி. இது ஒருவகையான மன நோய். அடுத்தடுத்து ஏமாற்றங்கள், விரக்திகள் ஏற்பட்டால் அதன் தாக்கங்கள் நம்மை அறியாமலே நம்முள் புகுந்து நம் மூளையை அரித்துவிடும் ஷஹானாவுக்கும் அதுதான் நடந்திருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் அவளைக் கொண்டு போய்ப் பரிசோதித்தேன். தன் ஒழுக்கத்திற்குக் களங்கம் கற்பித் தார்கள். ராகுல் என் ஒரு சகோ தரன். அவனுடன் சேர்த்துப் பேசினார்கள். எவ்வளவு அநியாய் என்று அழுதாள். அதைத் தொடர்ந்து அதிகம் போசித்துவிட்டாள். எதிர்பாராமல் எல்லாம் நடந்ததால் அவை அவள் y / r r":35?:ğ5g5" இனி மெதுவாகத்தான் அதைப் நிலைக்குக் கொண்டு வரவேண்டும்" என்றாள்.
என்னைச்
மூளையை மிகவும் விட்டன.
பழைய
"ஏன் காமன் விரன் ஷ்வூரானா
பழைய கேளியும் கிண்டலுமாக அவளை நான் மறுபடியும் பார்ப்பேனா "
நிலைக்கு வருவாளா?
என இரக்கமாகக் கேட்டாள். "வராமல் என்ன நீயும் நானும் முனைந்தால் பழைய நினக்கு வருாைள்" என
உறுதி அளித்தாள். "நான் என்ன
கட்டாயம் அவள்
செய்ய வேணும் சொல்லு,

Page 12
கலப்பை 52 ) சித்திரை 2007 () 22
எதுவானாலும் செய்கிறேன்" என் றாள். கேலியாகப் புன்னகைத்த காபன்,
ப்படியெல்லாம் அழக் கூடாது நிருத்தி, தைரியமாக இருக்க வேணும். ாேது பேசினாலும் அந்த வழிக்கு விட்டு அதே நேரம் அவளுக்குப் பழைய நினைவுகள் வரச்செய்யவேணும். ஆதரவுக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற மனத்தைரியம் வரச்செய்ய
அவன்
வேணும். அவள் பண்பும் ஒழுக் கமும் மாற்றுக் குறையாத தங்கம் போல உயர்ந்தது. அதை பாரும் என்றும் குறை சொல்ல முடியாது. யாரோ அறிவற்றவர்கள் சொன் னால் அதை நீ ஏன் பெரிதாக எடுத்தாய் என அவள் புத்திக்குப் செய்யவேணும். செப்
புரியச்
வாயா " இனக் கேட்டாள்.
"செய்கிறேன் காமன். இதை நான் எப்பவோ செய்திருப்பேன் ,
அவளுக்காக எந்தக் களத்திலும் புகுந்து வாதிட்டிருப்பேன். ஆனால் அவள் தான் ஒடி ஒளிந்து கொண் டானே! இப்பொழுது உன் உதவி
பழைய விறை" பார்க்கிறேன்" என
யுடன் என் னே வை ப் உறுதியாகக் கூறினான்.
அவர்களின் முயற்சி பவன் பெறுமா? நிருத்திகாவுக்கு அவள் அருமைத் தோழி கிடைப்பாளா? அனைவரும் எப்பொழுதும் அனைத்தையும் சீர்தூக்கிப் பக்கம் பார்த்துப் பேசினால் இதுபோன்ற வேறு ஷஹானாக்கள் உருவாகாம லாவது பாதுகாக்கலாம் காமன் நினைத்தான்.
3 ri3Tri;
திெகில்
நிலப்புக்குச் சென்று வந்தான்
நெடுவானை அளந்து வந்தான்
அளவுக்கு மிஞ்சியதால்
அமுதத்தில் விசம் படைத்தான்!
குண்டுவெடிப் பாகட்டும்
குளோனிங்கே ஆகட்டும்!
கண்டுபிடிப் பெல்லாமே
heal ITLpsi. 618 till G3LDIT?
இn. &(ဃဏfi/ဂ်နှဲနှဲ၊ أحكمة
 
 
 
 
 
 

புற்றுநோய் பற்றிய மருத்துவ ஆலோசனை தொடர்கின்றது.
புற்றுநோய் வராது தடுப்பதற்கான சில வழிமுறைகளை பம் பக்கத்தில் பார்த்தோம்:
அதுசரி, புற்றுநோய் வந்துவிட்டால், அதை எவ்வாறு முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்? அதற்கும் சில அறிகுறிகள் இருக்கின்றன. இவற்றை நாம் தெரிந்துகொண்டு உடனடியாக மருத்துவரை அணுகுவதன் மூலம் புற்று நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடிக்கலாம். அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றாகவே குணமாக்கக் கூடியதாக சந்தர்ப் பங்களும் உண்டு. அப்படியானால் அந்த அறிகுறிகள் என்ன என்பதே உங்கள் கேள்வி.
1. தொடர்ச்சியான இருமலும் அத்துடன் இரத்தம் வருதல் 2. எதுவித காரணமுமின்றி உடல் மெலிந்து போதல்
3. மலம், சலம் கழித்தலில் ஏற்படக்கூடிய சிக்கலும்,
மாற்றங்களும், அத்துடன் இரத்தம் கழிதல்
4. பல நாட்களாக மாறாமல் இருக்கும் புண்,
தோலிலோ, மார்பகங்களிலோ, வாய், தொண்டையில்
.
அசாதாரணமான கட்டியோ, தடிப்போ ஏற்படுதல். பி. தொடர்ச்சியாக வாந்தி (சத்தி அல்லது இரத்த வாந்தி
எடுத்தல்.
உணவு சமிபாடடையாத தன்மை அல்லது உணவை விழுங்க முடியாத நிலை,
Z
8. ஆண், பெண் உறுப்புக்களிலிருந்து அசாதாரணமாக
இரத்தம் கசிதல்,

Page 13
கலப்பை 52 [ சித்திரை 2007 () 24
மேற்குறிப்பிட்டவை புற்றுநோய்க்கு அறிகுறியாக இருக்கலாம். இவை மட்டும்தான் புற்றுநோய்க்குரிய அறிகுறிகள் என்ப தில்லை. வேறுசில அரிதான அறிகுறிகளும் புற்றுநோயைப் பிரதிபலிக் கக்கூடியதாக இருக்கின்றன. அத்துடன் மேற்கூறிய அறிகுறிகள் புற்றுநோய்க்கு மட்டுமே உரியன அல்ல, வேறு நோய்களுக்கும் இந்த அறிகுறிகள் காணப்படலாம்.
இப்படியான அறிகுறி இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரை நாடி ஆலோசனை பெறவேண்டும். அவர்கள் பலவழிகளில் ஆய்வுகள் செய்து, உங்களுக்கு ஏதாவது நோய் இருக்கின்றதா என்பதைக் கூறுவார்கள் அல்லது உரிய துறையில் விசேட பயிற்சியுள்ள மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுத் தருவார்கள்.
நோய் வருமுன் காப்பது முக்கியமாகும். இந்த வகையில் அவுஸ்திரேலியாவில் பல நோய்களை ஆரம்ப நிலையிலே கண்டு பிடிக்கும் நடைமுறைகள் உள்ளன. உதாரணமாக MIgram என்ற முறை மார்பகப் புற்றுநோய்க்கும், Pap SIcar என்ற முறை பெண்களின் cervical Latin011 அக்கும் பயன்படுத்தப்படுகின்றன. எந்த வயதில், எப்படிப்பட்டவர்களுக்கு இவை உதவியாக இருக்கும் என்பவற்றைப் பற்றிய விபரங்களை உங்கள் குடும்ப வைத்தியரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
சுகமான வாழ்வே குறைவற்ற செல்வம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாற்றமே பரிணாமமாகி மாறுதல் ஒன்றுதான் மாறாதிருப்பது என ஊடகங்களூடே ஊடுருவிய விஞ்ஞானம் உணர்வுகளுக்குள்ளும் ஊடுருவிப் போனதனால் உயரிய நற்பண்பினை நீ வளர்த்திடு!
இன்றைய உலகில் இவர்கள் பிறந்ததினால் - உடல் இயக்கம் இல்லாத இளைய சமுதாயம் கண்டோம். இயங்காத வாழ்க்கையில் - இன்பமில்லை. இயங்கு இயங்கு.
இயக்கம் எம் வாழ்க்கையின் முதல் அடையாளம்
சோலைகள் இன்றி வாழ முற்பட்டு வெந்து நாம் மடிவதா? விடுகளையே சோலைகள் - ஆக்க விதைகள் மீண்டும் நடுவோம்!
சுகவாழ்வு தொலைத்திட்ட எம்மவரே உடல் பருமன் குறைக்க நடைப்பயிற்சி மூச்சடைப்பைக் குறைக்க - யோகாசனம் நோயற்ற வாழ்வு எனும் குறைவற்ற செல்வம் காண்பீர்!

Page 14
கலப்பை 52 ப சித்திரை 2007 () 28
காதலின் பசுந்தரையில் சீர்வரிசை எனும் தீப்பற்றி - நாம் நம்பி வந்த பாதையிலே நம்பிக்கை தூர்ந்து
நல்லறமே நரகமா? இல்லை இல்லை
தோல்வியின் முடிவுதான் வெற்றியில் வாசல்!
கல்விக் கடலில் கற்றறிந்த பெண்களே கடிமணத்தில் கல்லெறிபடுவதால் - அவள் கடிமனமே கசப்பாகும் - அவள் மனதை கனிவாக உணரவை ஆணினமே!
பெண் விடுதலை கோரும் பெண்ணினமே பெண்ணியத்தின் தன்மை எதுவென்று நீ உணரு அன்றே பெண்ணியமெனும் சிந்தனையில் பூரணமாய் வெற்றி நீ கொள்வாய்!
மழலைகள் வளர்வது குழந்தைகள் காப்பகத்தில் இளையோர் வாழ்வது இரைதேடும் இடம்தனில் முதியோர் இருப்பது வயோதிபர் இல்லத்தில் -இனி நம்மவர் வாழ்வதும் இதில் ஒரு விதியிலா?
தனிமனித எண்ணமே தனிக் குடித்தனமாகி முதுமையில் தனிமை இது அந்திம வேளையின் அஸ்தமன கோடு அஃதிலேல் கூட்டுக் குடும்பமே கூடிக் குலாவிடும்!
இனிய எம் தமிழர் வாழ்வில் அன்று நமக்குக் கிடைத்ததோ - ஷெல்லடி இன்றும் எமக்குக் கிடைப்பதோ - அதிரடி நாளை எது வரும் என்று நீ சொல்லடி!
நாளைய பொழுதாவது நற்பொழுதாகி மனிதர் எம் வாழ்வில் மானிட நேயம் பிறக்கட்டும்!
 
 
 
 
 
 
 
 
 
 
 

* 勇 அறுதி தருணரேன்
ஹெலன்ஸ்பேர்க் ஆலய உற்சவத்தில் பல குடும்பங்கள் உற்சாகமாகப் பங்கு பற்றுவதைப் பார்த்த பாஸ்கரின் மனம் தன் கடந்த வாழ்க்கையை இரைமீட்கிறது.
எண்பத்தி மூன்றாம் ஆண்டின் இனக் கலவரத்தில் அவன் தந்தை கொல்லப்படுகிறார். அடுத்த வீட்டு நண்பர் குனவார்த்த னோவின் குடும்பத்தின் உதவியினால் உயிர் தப்புகிறார்கள் அவனது குடும்பத்தினர். பதினேழு வயதில் குடும்பப் பொறுப்பை ஏற்று, இரண்டு தங்கைகளையும் மணமுடித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறான். இளம் வயதில் அனுபவிக்க வேண்டிய சுகங்களைத் துறந்து வாழ்ந்த அவனையும் மீறி குணவார்த் தனாவின் மகளான நிலாந்தி மேல் காதல் ஏற்படுகிறது. எனினும் அவன் அதை வெளிப் படுத்தவில்லை. தந்தை தேர்ந்தெடுத்த விமலை சந்தோசமாக மணந்துகொண்டு நியூசிலாந்துக்குப் போய்விடுகிறாள் நிலாந்தி, மனமுடைந்து போகிறான் பாஸ்கர். அவன் தம்பி கண்ணன் அவுஸ்திரேலியா போகிறான். படுத்த படுக்கையாயிருந்த தாய் இறந்ததும் தனித்து நின்ற பாஸ்கரை தங்கை லோகினி அவுஸ்தி ரேலியாவிற்கு வரவழைத்துக் கொள்கிறாள்.

Page 15
கலப்பை 52 () சித்திரை 2007 () 28
பாஸ்கரை அழைத்துச் செல்ல சிட்னி விமான நிலையத்திற்கு லோகினியும் அவளின் இரண்டு குழந்தைகள் மட்டுமே வந்திருந் தனர். "அவருக்கு லீவ் எடுக்க முடியவில்லை" என்றாள். லோகி னியின் பிள்ளைகள், "பெரிய மாமா" என்று அன்பாக அழைத் தனர். பாஸ்கர் அவர்களை வாரி அனைத்து முத்தமிட்டான், லோகி னியும் அண்ணனை வாஞ்சை யோடு அனைத்துக் கொண்டாள். இருவர் கண்களிலும், நீர் கசிந்தது.
"அண்ணா மூன்று மாதத்திற்கு முன் கண்ணன் ஒரு குஜராத்திப் பெண்னை கல்யாணம் கட்டி யிட்டான். அவன் என் சொல்லு கேட்பதில்லை. இங்கே வருவது
மில்லை. உங்களுக்கு இருக்கிற மன வேதனையுடன் இதையும் சொல்ல வேண்டாம் என்றிருந் திட்டேன்." என்று தயங்கித்
தயங்கிச் சொன்னான். பாஸ்கரிட மிருந்து ஒரு பெருமூச்சு மட்டுமே வெளிவந்தது.
லோ கினியுடன் பாஸ் கர் இரண்டு நான்தான் தங்கினான். வாடகைக்கு எடுத்திருந்த ஒரு படுக்கை அறை கொண்ட தொடர் மாடி வீட்டிற்கு கூட்டிச் சென்றான்.4 வீட்டிற்கு வேண்டி பதை வாங்கிக் கொடுத் தாள். "அண்ணா, த  ைக் கு வுே  ைல கிடைக்கும் வரை அர சாங் கத் தி ட மிருந்து உதவிப் பணம் கிடைக்கும். அதற்கு வேண்டியதைச் செய்ய செவ்வாய்க்
கிழமை அழைத்துக் கொண்டு போகிறேன்." என்றாள்.
திடீரென்று ஒரு நாள் கண்ணன் டெலிபோன் பண்ணி வினான். "அண்டினா, கண்ண்னன் இங்கே, எப்படி இருக்கிறீர்கள்?" தம்பியின் குரல் கேட்டதும் பாஸ்கர் நெகிழ்ந்து போனான். "கண்ணா! நான் நல்லா இருக்
கிறேன். நீ எப்படி சந்தோசமா இருக்கிறியா? வேலை எப்படி
போகிறது? உன் மனைவி எப்படி" ஆவலுடன் கேட்டான். அண்ணா தன் மேல் கோபமாக இருப்பார் என்று பயந்த கண்ணனுக்கு முதலில் ஆச்சரியத்தில் பேச்சே வரவில்லை. "கண்ணா என்னடா" பாஸ்கர் கேட்க அவன் அழுது விட்டான்.
லோகினி அடிக்கடி தொலை பேசியில் சுகம் விசாரிப்பாள், சனி ஞாயிறுகளில் அவனை வந்து பார்ப்பாள். கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போவாள். படிப்படி பாய் எல்லாம் குறைந்துவிட்டது. நாளடைவில் ஞாயிறு மட்டும் தொலைபேசியில் கதைத்தாள். கனடாவிலிருந்து கங்கா பணக் கஷ்டம் என்றால் மட்டும் டிதம் போடுவாள். கண் னன் அவனைப் பார்க்க வருவதுமில்லை, டெலி தி போன் பண்ணுவது மில்லை. வோ கினி, வேலைக்கும் போய், வீட்டு வேலையும் சமை பலும் செய்து, அத்தோடு வீட்டோடு இருந்த அவள் மா மிய T  ை யு ம் கவனிப்பதற்கே
 
 
 
 
 
 
 
 
 

நேரம் போதாது தவித்தான். அவள் கணவனும் வேலை வேலை என்றிருப்பார். வீட்டை கவனிக்க மாட்டார். "பாவம் அவன் தனியே கஷ்டப்படுகிறாள். என்னாவே ஒரு உதவியும் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டான் பாஸ்கர். "அண்ணா உங்களைப் பார்க்க வாரேன்," என்று டெலிபோன் பண்ணுவான். சுப்பர் மார்க்கட்டுக்கு போய் கோழி வாங்கி வருவான். அதை சமைத்து அத்துடன் தான் செய்த முறுக்கு, கொண்டை கவுங்கையும் பார்சல் பண்ணிக் கொடுத்து விடுவான். இப்போதும் அவன் எண்ணம் எல்லாம் தன் உடன்பிறப்புகளைப் பற்றித்தான். ஆனால் அனெனப் பற்றிக் கவலைப்பட ஒருவரும் இ ருக்கவில்லை, அவர்களுக்கு தங்கள் தங்கள் குடும்பங்கள்தான் முக்கியமாகிவிட்டன.
உடனே
ஊரிலே ஒன்றாய் வாழ்ந்த போது ஒருவர் மேல் ஒருவர்
வைத்திருந்த அன்பாலே இணைந் திருந்தார்கன் சூழ்நிலை அவர் களைப் பிரித்துவிட்டது. சகோதரர் களுக்காக வாழ்ந்த அவன் உள்ளம் இப்போ அவர்களின் அன்புக்காக ஏங்கியது. மனதிலே துளிர்விட்ட காதலும் நிராசையாக முடிந்து விட்டது. காலா காலத்தில் ஒரு கல்பானத்தைப் பண்னணியிருந்தால் பாஸ்கருக்கு இந்த கதி வந்தி ருக்குமா? இப்படி தன் இளமை யைத் தொலைத்து விட்டிருக்க பாட்டான். தன் மனைவி தன் பிள்ளைகள் என்ற உறவு இருந்தி ருக்கும். மனதின் சுமையை இறக்கிவைக்க ஒரு ஆதரவான தோள் இருந்திருக்கும். இப்போ
கலப்பை 52 | சித்திரை 2007 () 29
படுக்கையில் தனிமை அவனை மிகவும் வாட்டியது, நித்திரையின்றி கட்டிலில் சாய்ந்தபடி சாலையில் ஓடும் கார்களை எண்ணியபடி முழித்திருந்த இரவுகளுக்கோ கணக்கில்லை.
சிட்னி வந்து ஒரு வருடத் திற்குப் பின் அவனுக்கு கொண் கோர்ட் ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. தற்செயலாக அவனு டன் கொழும்பில் படித்த நண் பர்கள் மதியையும், திலிபனையும் சந்தித்தான். அந்த நண்பர்கள் தான் அவனுக்கு இப்போ துணை பாக இருந்தார்கள். "பாஸ்கர் இந்தா உன் தட்டைப் பிடி," என்று மதி கூறவும் பழைய நினைவுகள் கலைந்து நிகழ்காலத்திற்கு வந்தான் பாஸ்கர்,
மூவரும் நாற்காலியில் அமர்ந்து உண வருந்தத் தொடங்கினர்.
"தோசை வடை எல்லாமே சூப்பராகவிருக்கிறது" என்றான் திலிபன் ருசித்தபடி "ஆமாம்"
ஆமோதித்தனர் மற்ற இருவரும்.
"நல்ல பிள்ளை, இந்தா இதை பிடி" என்று ஆங்கிலத்தில் சொல்லு வது கேட்டது.
குரல் வந்த பக்கம் திரும்பிப் பார்த்தான் பாஸ்கர். அதே களை நிறைந்த முகம், அதே செக்கச்
செவேல் என்ற நிறம், அதே சுருட்டை முடி கல்யாணமும்,
மகப்பேறும் சேர்ந்து உடல் மட்டும் சற்று பெருத்திருந்தது. சந்தேகமே யில்லை, அது அவளேதான். அவனை அறியாமல் உடம்பில் புத்துணர்ச்சி பரவியது.

Page 16
AI, GANGGIL 52 || Flifl:500 J 2007 || 50
" மதி, தி வி பன், எனக் குத் தெரிந்தவர் போய் கணிதத்துவிட்டு
ரேன்."
3)கயின் தட்டுடன் அவனை அணுகி, "நிலாந்தி! எப்ப சிட்னி வந்தீர்கள் " எதிராக
அமர்ந்து கொண்டான்.
என்றபடி
திற ரென்று முன்னால் வந்திருந் தவனைக் கண்டு சந்தோசமும் நிழலாட, "பாஸ்கர் நீங்களா? நான் சிட்னி வந்து ஒரு வருடமாகிறது. நீங்கள் எப்ப சிட்னி
வந்தீங்க
நிலாந்தி,
“வந்து இரண்டு வருடமாகிறது. இந்துக் கோயிலுக்குப் போகிற பழக்கம் இன்னும் தொடர்கிறீர்கள் போலும்"
ஆச்சரியமும்
என்று கேட்டான்
"பின்னே உங்க குடும்பத்துடன் சேர்ந்து போன பழக்கம் விட்டுப் போகுமா. நீங்க அப்படியேதான் இருக்கிறீங்க. நாங்க ஒரு வரை ஒருவர் பார்த்து ஐந்து ருெடங்கள் ஆகிறது இல்லையா" என்றபடி அவன் முடியில் இருந்த இன நரையையும், அவன் தொந்தியில் விழுந்திருந்த வயிற்றையும் அவ தானித்தான்.
"நீங்கள் உங்கள் கொஞ்சும் தமிழை இன்னும் மறக்கவில்லை"
அடுக்கான பற்கள் பளிச்சிட பல வருடங்
என்றான் -9|all&ն:
களுக்குப் பின் அவனால் அப்படிச் சிரிக்க முடிந்தது. அந்தச் சிரிப்பைக் கண்டு எத்தனை நாள் என்று நினைத்தாள் நிலாந்தி,
"மஞ்சு, பாஸ்கர் அங்கிளுக்கு
ஹலோ சொல்லம்மா" என்று
மகளை பாஸ்கருக்கு அறிமுகம் செய்து அங்கிள்" என்றாள் மஞ்சு,
வைத்தாள். "தரனோ
பம் மினய எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும்" என்றான்.
"உங்க
"அப்பவும் இப்படி குண்டா கவா இருந்தா " என்று குழந்தை சிரித்தபடி கேட்டாள்.
"பேஸ்" என்று பாஸ்கர் கூறி
கண் சிமிட்ட மூவரும் கலகெ வென்ச் சிரித்தார்கள்.
இருவரும் தங்கள் தங்கள்
குடும்பத்தவர்களைப்பற்றி விட
ரங்கள் அறிந்து கொண்டனர்.
"எங்கே
உங்களை
விமல் மக்கு நாள் கண்ட சந்தோசத்திலே விமலை மறந்திட்டேன்"
"பாஸ்கர், விமலுக்கும் எனக்கும் விவாகரத்து நடந்து இரண்டு வருடத்திற்கு மேலாகிறது. நியூசி
 ை ந் தி ல்ே த T என் இ ன் ஜ ம் இருக்கிறார்."
ஆச்சரியமும், ஒன் என்ற
கேள்வியுடனும் அவன் கண்கள் விரிந்தன.
"அவர் வேறு ஒருத்தியை விரும்பி, திருமணமும் செய்து கொண்டார்" சிவந்த அவள் இதழ் களில் ஒரு மெல்லிய சிரிப்பு தோன்றி மறைந்தது.
அந்தச் சிரிப்பில் அவளது அளவற்ற நிராசையும் வேதனை பையும் உணர்ந்தான் பாஸ்கர், அந்நேரம் திலீபனும் மதியும்
அவனைத் தேடிவர அவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.
g
 

விலகி வழி விட முன்னுக்கு மேளக்காரரும் நாதஸ் வரக்காரரும் வாசித்தபடி செல்ல, பின்னால் குருக்கள் நெற்றியில் திருநீறு பட்டையும் சந்தன குங்குமப் பொட்டுடனும் கம்பீர மாக சுவாமிக்கு முன் நடந்து செல்ல உணர்வலம் உட்பிரவாகத் தில் ஊர்ந்து சென்றது. வெளியே வந்து சுவாமியை வாகனத்தில் ஏற்றினார்கள், பாஸ்கரும் அவன் நண் பர்களும் தங்கள் காரிலும், நிலாந்தி தன் காரிலும் ஏறி ஸ்டாம்வெல் பார்க் கடற்கரை நோக்கிச் சென்றனர். நாதஸ்வரக் காரர் நீலாம்பரி ராகத்தில் ஊஞ்சல் பாட்டு வாசிக்க விநாய கரை உளஞ்சலாட்டியபடி கடலை நோக்கிச் செல்வது கண் கொள் விளாக் காட்சியாகவிருந்தது. பாண்க ருக்கு கொழும்பில் கபித்தாவத்தை சிவன் கோயிலின் உற்சவங்களுக்கு நிலாந்தியின் குடும்பத்துடன் சென்ற நாட்களை நினைவூட்டியது. பக்திப் பரவசத்துடன் சனங்கள் அரோஹரா அரோ ஹரா என்று கோஷமிட கணபதியின் சிலை யைக் கடலில் கரைத்தனர்.
சனம்
வீடு திரும்புமுன் பாஸ்கரும் நிலாந்தியும் தங்கள் தொலைபேசி இலக்கங்களை பரிமாற்றம் செய்து கொண்டனர்.
பாஸ்கர் அடுத்த நாள் லோகினி புடன் தொலைபேசியில் கதைத்த போது "கோயிலிலே நிாைந்தியைச் சந்தித்தேன். از این வருடத்திற்கு முன்தான் நியூசிலாந்தில் இருந்து சிட்னி வந்தாளாம். விமல் அவளை
கலப்பை 52 ) சித்திரை 2007 D $1
விவாகரத்துப் பண்ணிவிட்டு ைேறு ஒருத்தியைக் கட்டிட்டானாம்."
"அப்படியா டாம் அவள். அண்ணா இன்றே போய் அவளை சந்திப்போம்."
"சரி, நான் இப்பவே தயார்" என்றான் சிறு பிள்ளை பைப் போல்,
அவன் குரலில் தொனித்த சந்தோசத்தை லோகினி கவனித் தாள். நான் நினைத்தது சரிதான். 'வம் அண்ணா. நிலாந்தி மேல் ஏற்பட்ட காதவை எங்களுக்காக தியாகம் செய்துவிட்டார். இளம் வயதிலே அனுபவிக்க வேண்டிய சுகங்களை இழந்து வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்" என நினைத்து வருந்தினாள்.
நிலாந்தி முகம் மவிர வரவேற்றாள். அவள் ஒரு நல்ல வேலையில் இருப்பதாகவும், குழந்தை மஞ்சு அரிவாரி படித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் அறிந்து கொண்டனர். விமலைப் பற்றி அவர்கள் சொன்னான்.
அன்ர்கள்ை
கேட்காம
"ஆரம்பத்திலே விமலும் நானும் சந்தோசமாகத்தான் இருந்தோம். ஆனால் இரண்டு வருடத்திற்குள் அன்ெ என்ன?ன விட்டு விகிட் போவது தெரிந்தது. கொடுத்த பணத்தை தன் இஷ்டத்துக்கு செலவுபண்ணி முடித்திட்டான். அவன் பூக்கு பூ தாவுகிற வர்க்கத்தைச் சேர்ந்
தாத்தே si Tailsil Ti
தி ஸ் இன். ஒரு இந்தியப் பெண்

Page 17
கலப்பை 52 | சித்திரை 2007 32
உடன் திரிந்தான். விவாகரத் துக்குப் பிறகு ஒரு பிலிப்பினோ பெண்ணை மணந்து கொண்டான். குழந்தை மஞ்சுவையும் பார்க்க ஆரம்பத்திலே
மிகவும் நொந்துபோய்
வருவதேயில்லை. நான் தனிமையில் துடித்துப் போனேன். அமெரிக்காவிலிருந்து அப்பாவும் அம்மாவும் வந்து சில மாதங்கள்
இருந்து விட்டுப் போனோர்கள். எனக்கு தைரியமும் ஊட்டி னார்கள். இப்போ நிம்மதியாக
தன்னம்பிக்கையோடு இருக் கிறேன்" என்று தன் சில வருட கல்யாண வாழ்வை சுருக்கமாகச் சொல்லி முடித்தாள் நிலாந்தி,
அவன் மட்டும் என் கண் ஏணிலே பட்டால் சும்மா விடமாட் டேன்." என பாஸ்கர் மனதுக்குள் கருவினான்.
லோகினி அவன் கைகளை தன் கையில் எடுத்து "நிலாந்தி கவலைப் படாதே. உனக்கு நாங்கள் இருக் கிறோம்." கண்களில் ஈரம் கசிந்தது.
"தாங்யு அக்கே" என்ற நிலாந்தி யின் கண்களும் பாச உள்ளர்ச்சியில் பனித்தன.
வந்தவர்களுக்கு தே எனீர் கொடுத்து உபசரித்தபடி, "நாங்கள் பள்ளி விடுதலைக்கு யாழ்ப்பாணம் வந்திருந்தபோது எல்லோரும் சேர்ந்து பனங்கடலுக்குள் ஓடி விளையாடியதும், கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட்டதும் நினைவுக்கு வருகிறது எவ்வளவு சந்தோசமான நாட்கள் அது." நிலாந்தி பெரு மூச்சு விட்டாள்.
"குரும்பட்டித் தேர் கட்டி இழுத்தது இப்ப சீ - எ ன்
கண்ணுக்குள் வந்து நிற்கிறது." என்றான் பாஸ்கர்.
"ஏன் நிலாந்தி, அண்ணா பனைமரத்தில் ஏறி விழுந்தப்போ அப்பா கிழுவம் தடிபாலே அடித்தார். அப்போ அண்ணா அழ நீயும் விம்மி விம்மி அழுதது நினைவிருக்கா" என்று
கேட்டாள் லோகினி,
LI firstı: 7. fi
"ஒன்" வெட்கத்துடன் முறுவலித் தாள் நிலாந்தி.
அடுக்காவின் பளிச்சிட பாஸ்கர் இந்த சம்பா எரணையை ரசித்தவன், "எவ்வளவு சந்தோசமாக பறவைகள் போல் பறந்து திரிந்தோம். அந்த நாட்கள் இனி திரும்பி வராது." என்றான் பெருமூச்சுடன்.
தன் பற் தன்
பாஸ்கர் வசிக்கும் இடம் நிலாந்தியின் வீட்டிற்கு அருகே இருந்தது. அடிக்கடி நிலாந்தியைப் பார்க்கச் சென்றான். அவளும் ஆவலுடன் அவனை வரவேற்றாள். நேரம் போனது தெரியாது கதைத் தார்கள். குழந்தை மஞ்சி பாஸ் கருடன் ஒட்டக் கொண்டாள். மூவருமாகச் சேர்ந்து புதர் காடுகளுக்குள் பூவி வாக்கிங் போவார்கள், "பாஸ்கர், கவுங்கும் செய்து பிளாஸ்க்கில் கோப்பியும் போட்டு வைத்திருக்கிறேன். பார்க்குக்கு r போய் பொழுதைக் கழித்து விட்டு வருவோம்" என்பாள். பாஸ்கரும் சந்தோசமாகச் சேர்ந்து போவான்.
நல்வாக
வடையும்
இப்படியே ஆறு மாதங்கள் தருண்டோ டின. ஒடு குழந்தை மின் சீ . "அங் கிள் நாளைக்கு எங்கள் பள்ளிக்
நாள்
 
 

கடத்திலே பெற்றோர் தினம், எ ல் லாருடைய அம்மா புெம் அப்பாவும் வருவார்கள். எனக்குத் தானே அப்பா இல்லை. நீங்க அம்மாவுடன் அப்பானாக வர முடியுமா?" அந்த அழகான பெரிய கண்கள் - அதே நிலாந்தியின் கண்கள் - அவனைக் கெஞ்சின. கண்கள் குளமாகி அவள் பட்டுக் A ன் ன ங் களி ல் மணி கள T க பாஸ்கர் நெகிழ்ந்து போனான். தந்தையின் அன்புக் காக ஏங்கும் மஞ்சுவின் பிஞ்சு fogar fi அவன் இதயத்தைத் தொட்டது. "சரிடா, கட்டாயமாக வாரேன்" என்றவன் மஞ்சுவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண் டான். எல்லாவற்றையும் கேட்டு விட்டு அங்கு வந்த நிலாந்தியின் ஈரம் கசிந்த கண்கள் அவனுக்கு நன்றியைத் தெரிவித்தன.
உருண்டன.
பெற்றோர் தினம் முடிந்து மூவரும் பீட்சா ஹட்டுக்கு உண வருந்தச் சென்றார்கள். காரை விட்டு இறங்கிப் போகவும் மஞ்சு பாஸ்கரின் வலது கையைப் பிடித்துக்கொண்டு துன்னித் துள்ளி நடந்தாள். மறுபக்கத்தில் நடந்த நிலாந்தி மெல்ல பாஸ்கரின் இடது கரத்துடன் தன் கரத்தைக் கோர்த்துக் கொண்டாள். அந்த ஸ்பரிசம் பாஸ்கரை இன்ப உலகத்திற்கு இழுத்துச் சென்றது. திரும்பியவன் கண்கள் அவள் கண்களைச் சந்தித்தன. அதில் ஒளிர்ந்த அன்பையும், காதலையும் கண்டான்.
மஞ்சு சாப்பிட்டுக்கொண்டு படம் வரைந்து கொண்டிருந்தாள். நிலாந்தியின் கைகளை தன்
கலப்பை 52 D சித்திரை 2007 33
கையில் எடுத்த பாஸ்கர் "நிலாந்தி, அன்றும் இன்றும் நான் உன்னை உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன். குடும்ப சுமையும் கடமைகளும் நிறைந்த வாழ்க்கையில் நீ ஒரு நிலவாக ஒளி வீசிக் கொண்டிருந் தாய். நீ கல்பானம் கட்டி போனதும் என் உள்ளம் இருண்டு விட்டது. இப்போ உன்னை மணந்து மஞ்சுவுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருக்க விரும்புகிறேன்." அவன் குரல் கரகரத்தது.
அவள் கண்களில் இதுவரை மிளிராத ஒரு பிரகாசம், உதடுகள் துடிக்க "அனே பாஸ்கர்! என்னி டம் சொல்லாமல் இவ்வளவையும் மனதுக்குள்ளே வைத்திருந்தீர்களா? ஏன் முன்னமே சொல்லவில்லை! நானும் உங்களை அப்பவிருந்து காதலிக்கிறேன் போலும். இப்ப
நிச்சயமாக உங்களை நான் காதலிக்கிறேன்."
பாஸ்கர் துள்ளி எழுந்தான்.
அவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின் விளக்கின் ஒளி வீசியது. மஞ்சுவைத் தூக்கி, "மஞ்சு இன்று முதல் நான் உன் அப்பாவேதான். இனிமேல் நடிக்கத் தேவை யில்லை" சத்தமாகவே சொன் னொன். பக்கத்து மேசைகளில் இருந்தவர்கள் திரும்பி அவர் களைப் பார்த்தனர். அதைப் பொருட்படுத்தாது மூவரும் கை கோர்த்தபடி பீட்சா ஹட்டை விட்டு ஆனந்தக் கடலில் மிதந்த படி வெளியேறினர்.

Page 18
|-|-!!!! · |-■ ! ! 丝&_ sae:%
芭F凸山凸
厂
ழிபடும்
கெ வண்டு
(L:4"(4y:"529 35L-52|í7YTá
மயம்
தி வனை
•ያ”
தான்றிய
(E
முன் றாகும்.
|ಸ?||
எனப்படும்.
"FI III IJE:
சைவச
த்தின்
கண்டு
இருசத
30) Fi5) Il-FIDALIg;
சைவசமயம ஒன
f)
க்கப்
கரப்பா
பிடி
C
ாகங்களில்
DITAR;
.
LI al ாலத்தில்
களின்மூலம்
உலகின்
க
ஆராச்சி
மூவிப்
களின்
(
ள் .
- - துணைக்கண்டத்தின்
<]]T&0] Wi୫,
அகழவு
l'ITI; -
2.! தெ
அ தியத்
էյֆI,
கூர்
3.
|-
டுச்
ட்டுள்ள
AI)
ܕ:
T
Հե3IT
பகுதி
гъ -
r
வழிப
".
J.
B.
FT '
ச்சமய
ம் இ டுள்ளது.
த்தப்பட்(
னிவுப
ல்
பான்ற மேலும்
 
 
 
 
 

கணிப்பின்படி இப்பொருட்கள் வேதகாலத்திற்கும், ஆரியரின் வருகைக்கும் முற்பட்டதுமல்லாமல் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை என உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. எனவே, சைவ சமய வழிபாடு முறை பல வாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தெனத் துணிந்து கூறலாம்.
என்னும்
மேலும் சைவசமயம் இந்து சமயத்திலிருந்து வேறுபட்ட தென்பதும் இந்து சமயம் பிற்பாடு தோன்றியதென்பதும் இங்கு குறிப் பிடத்தக்கது. மிகப் பழைய காலத்தில் சிந்து நதிக்குத் தெள் கிழக்குப் பகுதியில் நன்கு வளர்ச்சி படைந்த கலாச்சாரம் பண் பாடுடைய மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதை அகழ் வாராய்ச்சிகள் காட்டுகின்றன. மேற்கு நாடுகளிலிருந்து இங்கு புகுந்த கிரேக்கர், இங்கு வாழ்ந்த மக்களை, சிந்து (Sinclu), நதி காரணமாகவும் சிந்து என உச்ச ரிக்காட்டாமை காரனமாகவும் இந்தூஸ் (indus) என அழைத்தனர். இதன்பின் வந்த பாரசீகர், இந்தூஸ் என்று உச்சரிக்க முடியாமையால் தமது உச்சரிப்பிற்கேற்ப கிண்டூஸ் (hindus) என அழைத்தனர். இச் சொல்லே இன்றுவரை நிலைத்த துடன் இந்தியா முழுவதிலும் வாழ்ந்துவந்த மக்களைச் சுட்டும் சொல்லாகவும் நிலைத்ததெனலாம். இவ்விடத்தில், இன்னோர் முக்கிய உண்மை என்னவெனில், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் மிக வளர்ச்சியடைந்த நாகரிகம் உடைய மக்களளென்பதும், இந்தியாவுள் பின்னுழைந்த ஆரியர், நாடோடி மந்தை வளர்ப்போராகக்
கலப்பை 52 சித்திரை 2007 T 35
கானப்பட்டனர் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கைகளை சிறப்புற விளக் குவது "சைவசித்தாந்தம்" சித்தாந்த மென்பதன் பொருள், முடிந்த முடிபு என்பதாகும். சிவாகமங் களில் சிவபெருமான் துெத்துச் சொன்ன முடிபுகளே சைவ சித்தாந்தம் எனப்படும். எனவே, சைவத்தைப் பற்றி முடிவு செய்யப் பட்ட கொள்கையைக் கூறுவது சைவசித்தாந்தம் எனப்படும்.
சைவத்தைப்பற்றிக் சுறும் நூல் களுள் மிகப்பழையன "வேதம்" மற்றும் 'ஆகமங்கள்" ஆம், இவை பிரண்டும் வடமொழியில் எழுதப் TASS S T0 0 LLL TTS SKS SkL LL GL LJ OL முழுமையாக சைவத்தைப்பற்றியும் சிவனைப் பற்றியுமே கூறுகின்றன. இதனால் இவை பொதுவாக "சிவாகங்கள்" எனப்படும். ஆத்மிக பேற்றைப்பற்றி வேதங் களிலும் ஆகமங்களிலும் கூறப் பட்டிருக்கிறது. எனினும், வேதங் களில் கூறப்பட்ட சில கருத்துக்கள் வேறும் சில சமயங்களில் கானப் படுகின்றன. ஆயினும் முக்கிய மான "சத்திதிபாதம்" என்னும் "முத்தி" நிலை சிவாகமங்களில் மட்டும் கூறப்படுவது சைவத்தின் தனிச்சிறப்பாகும். இதனாலேயே, சைவத்திற்கு சிவாகமம் "சிறப்பு" நூல் எனவும் வேதம் "பொது" நூல் எனவும் கூறப்படுகிறது.
வேதத்திற்கும் சைவத்திற்கும் சர்ச்சை எழுந்தனக்கு "பிரம்ம சூத்திரம்" என்னும் நூலே காரனமாகும். கி.பி. 8ஆம் நூற்றாண்டளவில் பிரம்மசூத்திரம்

Page 19
சுதுப்பே 52 | சித்திரை 2007 () 36
என்னும் இந்நூல் வியாசமுனி வால் எழுதப்பட்டது. இது கடவுளைத்தவிர வேறு பொருட்கள் இல்லை என்னும் "ஏகான்ம எாத"க் கொள்கைபை உருவாக்க வழிவகுத்தமையே காரணம் என லாம். இதன்பின் வந்த பாடியக் காரர்களும் மேலும் குழப்பத்தை உண்டு பண்ணினர். எனவே, வியாசரின் காலத்திற்குப்பின் வேத ஆகமங்களின் கருத்துக்களில் வேறு பாடுகள் தோன்றி வளர ஆரம் பித்ததெனலாம். அத்துடன், இவர்கள் வேதமே "கடவுள்" என்று கூறுவதும் இங்கு குறிப்பிடப் படவேண்டிய ஒன்றாகும்.
எவ்வாறெனினும், சிவாகமம் சைவத்திற்கு "முதல்" நூல் என்றும் "பிரமான" நூல் என்றும் கூறப் படுகிறது. சிவன் குரு வடிவாய் வந்து ஆன்மாக்களுக்கு "முத்தி" அருளி தன்னாடியில் சேர்ப்பிப்பதை அறியத்தருதுை சைவசித்தாந்தம் ஒன்றே. இருப்பினும் சித்தாந்தத்தைப்பற்றி தெளிவாகக் சுறும் நூல்கள் மெய் கண்ட சாத்திர நூல்கள் அல்லது தத்துவ நூல்கள் என்னப்படுபவையாகும். இவை தமிழ்மொழியில் எழுதப் பட்டவை. இவை கி.பி. 12ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் எழுதப் பட்டவை எனக்கருதப்படுகின்றது. இவற்றில் மொத்தம் 14 நூல் களடங்கும். இவற்றில் 8 நூல்கள் சந்தானகுரவர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. மெய்கண்ட சாத்தி ரங்களில் முதல்நூல் மெய்கண்ட
ալիք ընI
தேவரால் எழுதப்பட்ட "சிவஞான போதம்" எனும் நூலாகும். இதன் பொருள் சிவஞானம் அடைவதன்
வழியைப் போதிப்ப தென்பதாகும். இதற்கு வழிநூலான "சிவஞான சித்தியாரை" மெய்கண் தேவரின் மாணாக்கரான அருணந்திசிவாச் சாரியார் எழுதியுள்ளார். மேலும் இம்மெய்கண்ட நூல்கள் சைவத் தின் "பொருள்" நூல்களென்றும் தேவாரத் திருமுறைகள் "புகழ்" நூல்களென்றும் கூறப்படும். எவ்வா றெனினும் இத்திருமுறைகளிலும், திருக்குறள்களிலும் வரும் கருத் துக்கள் சைவசித்தாந்தத்தில் எடுத் தாளப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். இதனால் திருமந்தி ரமும் ஏனைய திருமுறைகளும் காலத்தால் முற்பட்டவை என்பது தெளிவாகும்.
அடுத்து சைவசித்தாந்தம் கூறும் முடிந்தமுடிபுதான் என்னே? அது Li gF, J, F, LI MY Fři sr ssir sig i. மூன்றுமே இந்த உலகின் நித்திய மான பொருட்கள் என்றும், பசுக் களாகிய ஆன்மாக்கள் அடைய வேண்டும் என்பதை விளக்குவதுமே எனலாம். அத் துடன் இது சிவபெருமானால் அருளப்பட்டதென நம்பப்படுகிறது. மேற்கூறிய மூன்று பொருட் களையும் வேறும் பல பெயர் கொண்டழைப்பர். இதனையே சைவசித்தாந்தம் வரிசைக்கிரம மாகவும், தெளிவாகவும் விளக்கு கின்றது. முப்பொருள் விளக்கம் என்று கூறுவது இதுவேயாம். 3' தத்துவங்களை ஆதாரமாக வைத்து அதனை சித்தாந்தம் விளக்கு கிறது. இத்தத்துவங்கள் மிகநுட்ப மாகவும் பொருள்படவும் ஆன்மா வையும் அதனி பக்கத்தையும் தெளிவாகக் கூறுகின்றது. இத் தத்துவங்கள் உயிரின் தோற்றம்
சிவனை

மற்றும் பிரபஞ்சத் தோற்றம், ஒடுக்கம் என்பன இறைவனால் இயக்கப்பட்டு உயிர்கள் இறை இன்பம் என்னும் முத்திநிலை அடைவதை விளக்குகின்றது. இவற்றில் 24 ஆன்ம தத்துவங்கள் அல்லது பிரகிருதிமாயா தத்து வங்கள் எனப்படும். ஏனையவை சுத்தமாபா, அசுத்தமாயா தத்து வங்களில் அடங்கும்.
முப்பொருள் விளக்கத்தின் மூலம் சைவசித்தாந்தம் சைவத் விதையும், சிவகதியையும் விளக்கு கிறது. தென்னாடு சைவத்திற்குப் புகழ்பெற்றதெனினும், இங்கு வாழ்ந்த ஆதிசங்கரரும் கடவுளைத் தவிர வேறொன்றும் இல்லை என்று கூறுவது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
"சற்காரியவாதம்" சைவத்திற்கு அச்சாணி எனப்படுகிறது. சற் அல்லது சத் என்றால் உள்ளது என்பது பொருள். இக்கொள்கைப் படி உள்ளது அழியாது, இல்லாதது தோன்றாது. மனிதர்களாகிய நாம் உளவிணக்கண்களால் மட்டும் பார்க்க முடியும். இதனால், நம் கண்
களுக்குத் தெரியும் பொருட் களையே உள்ள பொருட்க
ளென்றும் அவையல்லாதன எல் லாம் இல்லையென்றும் நம்பு கிறோம். ஆனால், சைவ சித் தாந்தம் இரண்டு வகையான பொருட்கள் உண்டென்று கூறு கிறது. ஒன்று துரலப் பொருட்கள். இவையே நம் கண்களுக்குப் புவிப்படும் பொருட்கள். சைவம் கூறும் இன்னோர் பொருள் சூக்குமப் பொருள். இவையே நாம் கருதும் இல்லாத பொருட்கள்.
கலப்பை 52 | சித்திரை 2007 () 37
இறைவன், உயிர்கன் என்பன சைவம் சுறும் சூக்குமப் பொருட் களாகும். இவை யாவும் ஒரு
காலத்தில் சூக்குமமாய் நின்று பின் வேண்டிய காலத்தில் துரல பொருட்களாக வெளிப்படும் என்பதே "சற் காரிய வாத"க் கொள்கையாகும். இவ்விதமே SKTTT TTTTTS S TTLL LLL LSS S LLLL k0S YS என்பனவும் அழியாப் பொருட்கள், ஆனால் சடப் என்கிறது சைவ சித்தாந்தம்
பொருட்கள்
பதி
பதி என்பதன் பொருள் தலைவன் என்பதாகும். இவன் உலகிற்கு ஒரே தலைவன். இவனை சிவன் என்று கூறு கின்றது. இவனுக்கு வேறும் பல பெயர்கள் உண்டு, பொதுப்படை LIITT TIL — GayGốT G I Går TJJ LI TIJirişi: கூறுவர். இச்சொல்லின் பொருள் எல்லாவற்றையும் கடந்தவன் என்பதாகும். இன்னோர் பொருள்
சைவம்

Page 20
கலப்பை 52 ) சித்திரை 2007 38
கட உள் என்னும் கருத்துக் கொண்டதாகும். உள்ளமாகிய மனத்தைக் கடந்து நிற்கும் பரம் பொருள் என்பது பொருளாகும். உலகத்திலுள்ள அ ைGனத்துப் பொருட்களும் ஒடுங்கும் காலத் திலும் அழியாது இருப்பவன் இவன் ஒருவனே,
வெவ்வேறு சமயத்தவர்கள் தத்தமது சமயத்துக்கு ஒவ்வோர் கடவுள் உண்டென்றும் அவனை வெவ்வேறு பெயர் கொண்டும் அழைப்பர். உலகிற்கு ஒருவனே கடவுள்; அவன் வெவ் வேறு சமயத்தவரால் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப் படுகின்றான் என்று அனுமானிக்க முடிகிறது.
சைவம் தன் முழுமுதற்கடவுள் சிவன் என்றும், அவன் மூன்று வகைத்தோற்றம் கொண்டவன் என்றும் விளக்குகின்றது. அவை யாவன, உருவம், அருவுருவம், அருவம் என்பனவாம். இதில் உருவவடிவினன் மகேஸ்வரன் எனப்படுவான். இதில் 25 வடி வங்கள் உண்டென்று கூறப்படு கிறது. அடுத்து அருவுருவம். இதன் பொருள், இதில் உருவமுண்டு அல்லது இல்லை என்று கூறக் கூடிய நிலையாகும். சிவலிங்கம் இவ்வித அருவுருவ வடிவமென்பர். இதில் லிங்க உருவமுண்டு; அதற்கு மேல் எதுவித உருவமும் நமக்குத் தெரிவதில்லை, குறிப்பாக புறக் கண்களுக்கு வேறு வடிவங்கள் தெரிவதில்லை. அடுத்து அருவ நிலை, அதாவது உருவமில்லாத ஒருநிலை, சைவத்தை தீரத்தெளி வதன் மூலம் இதனை அறியலாம்.
எனவே,
சைவசித்தாந்தக் கோட்பாடு சைவத் தெய்வங்கள் பிறப்பது மில்லை இறப்பதுமில்லை என்று அடித்துக் கூறுகிறது. இதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்த அருவ நிலையினை நாம் நன்கு விளங்கிக்கொள்ளலாம், கண்க ளுக்குப் புலப்படாததினால் ஒரு பொருள் இல்லை என்று கூறுவது
முட்டாள்தனமானது. உதாரண மாக, ஆகாயம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. இதனால்
ஆகாயம் இல்லை என்று கூற முடியாது. "உலகாயதர்கள்" அவ்வாறே கூறுகின்றனர். சைவம் இறைவன் அருவமாகவும் அருவு ருவமாகவும் உருவாகவும் இருப் பானென்கிறது. இவற்றிற்கு மேலாக சிவனின் திருமேனி அருள் என்றும் அன்பு என்றும் புகழப் படுகிறது. அருளுக்கு இன்னோர் பெயர் கருணன. உலக சிருஷ்டிக்கு இறைவனின் இந்தக் கருணையே
hrtaxův trof).
சைவசித்தாந்தம் இறைவனை இம்மூன்று நிலையிலும் ரிப்பது அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பதையும், அவனால் எதையும் அறியவும் ஆற்றவும் முடியும் என்பதனை உயிர்களுக்கு விளக்குவதற்கேயாம். மேலும், இயற்கைக்கு இலக்கண முண்டு, அதன்படி, உருவமுள்ள ஒரு பொருள் அதேநிலையில் தன்னை அருவமாக மாற்ற முடியாது. அவ்விதமே அருவமான ஒரு பொருள் தன்னை உருவமான பொருளாக மாற்றிக்கொள்ளமுடி யாது. இதற்கு ஆகாயம் ஒரு உதா ரணம். ஆனால், மேற்கூறியவாறு
சித்த

இறைவனுக்கோ அவன் திருவுரு த்ெதிற்கு இலக்கணம் கூற முடி யாது. இறைவனின் தோற்றம் இலக்கண வரம் பிற்கப்பாற்பட்ட தென்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மேலாக ஆன்மாக்களாகிய நம்மை சிந்திக்க வைட்டதற்காகவே இறை வனுக்கு இம்மூன்று தோற்றங்களும் என்பதை மறந்துவிடல் ஆகாது. மேலாக, உலக ஒடுக்கத்தின்போது அவன் மட்டுமே எஞ்சி நிற்பான் என்றும் இவன் மும்மூர்த்திகளில் நின்றும் வேறுபட்டவன் என்றும் சைவ சித்தாந்தம் கூறுகிறது.
சைவசித்தாந்தம் இறைவனை பலவாறு வர்ணிக்கும்போது "விச் வாதிகன்" "விச்வரூபி" என்றும் வர்ணிக்கின்றது. இதில் விச்வா திகன், பிரமா விஷ்ணு இருவரும் முடி தேடிய கதைமூலம் விளக்கி, அவனுக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை என் பதை நமக்குப் புரியவைக்கிறது.
சிவனின் அடி
அவ்விதமே, விச்வரூபி என்பது ஆன்மாக்களில் பால் வேறு பாடில்லை என்பதையும் ஆண் பெண் இருபாலாரிடத்தும் இறை வன் சமமான அன்புடையவன் விளக்குகின்றது. இறைவனின் அர்த்தநாரீஸ்வரர் வடிவின்மூலம் இது விளக்கப் படுகின்றது. சைவம் உயிர்களுக்கு சம அந்தஸ்து வழங்கி எல்லாச் சமயங்களையும் அரவணைத்திருப் பதும் இத்தால் விளங்குகிறது.
சிவமின்றி சக்தியோ சக்தியின்றி சிவ மோ இல்லையென்பது ஆன்றோர் வாக்கு சிவனது சக்திப்
என்பதையும்
கலப்பை 52 | சித்திரை 2007 39
பரப்பில் ஒன்று கிரிபாசக்தி எனப்படும். பிரமா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய முத்தெய்வங் களின் தோற்றத்திற்கு இச்சக்தியே மூலம். இம்மூன்று தெய்வங்களும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் களையும் புரிகின்றன. இயற்கைச் சக்திகளை தெப்பங்களாக உருவ கித்து சைவ மக்கள் வழிபட்டு வந்தார்கள் என்னும் சரித்திர உண்மையும் இதன் மூலம் உறுதிப்
படுத்தப்படுகின்றது.
மேலும், முழுமுதற் கடவுளாகிய சிவன் ஐந்தொழில்களையும் பொறுப்பேற்கின்றான். அவை பாவன:- படைத்தல், காத்தல்,
அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாம். இவற்றில் பின்னி ரண்டு தொழில்களையும் தானே நடத்துகின்றான். படைத்தற் றொழில் பிரமாவிடமும், காத்தற் றொழில் விஷ்ணு விட மும்,
அழித்தற்றொழில் உருத்திரனிட மும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வேண்டியபொழுது அவைகளை யும் சிவனே மேற்கொள்வான். இத்தொழில்கள் சித்தாந்த மொழி யில் பஞ்சகிருத்தியங்கள் எனப் படும். இத்தொழில்களே ஒரு வகையில் உயிர்களின் பிறப்பு இறப்புக்களையும், அனுபவிப்புக் களையும் ஈற்றில் உயிர்கள் முத்திப் பேறு அடைவதையும் விளக்குவ தாகும். சிவனின் நடராசவடிவி லான திருக்கூத்தும் இதனையே விளக்குகிறது. மேலும், முத் தொழில்கள் என்னும்பொழுது விறத்தல், அருளல் என்பன முறையே காத்தல், அழித்தல் என்பனவற்றில் அடங்குகின்றன,

Page 21
கலப்பை 52 | சித்திரை 2007 40
பண்டத்தல் என்னும்பொழுது, அது உயிர்களை மட்டுமின்றி உலகையும் அதனுடன் கூடிய பொருட்களையும் தோற்றுவித்து, அவற்றை உயிர்கள் அனுபவிக்கப் பண்ணுவதே படைத்தல் என்பதன் உண்மையான பொருளாகும்.
காத்தல் என்பது உயிர்களை துன்பத்திலிருந்து காப்பாற்றுவது மட்டுமின்றி, உயிர்கள் தாம்தாம் செய்த வினைகளை நுகரும் காலம் அதன்ைன நடைமுறைப் படுத்துதலே காத்தலாகும்.
ஃப்"
அழித்தல் என்பது, தொடர்ந்து
நிகழும் வினை, போகம் என்பன
வற்றால் உயிர்கள் களைப்படை கின்றன. இந்நிலையில் உயிர்கள் இனைப்பாறும் வண்ணம் தனு, கிரன, புவன போகங்களை
ஒடுக்கி உதவுதலேயாம்.
மறைத்தல் என்பது, உயிர்கள் வாழும் காலத்தில் சிவப்பேறு பெறும்பொருட்டு பொருட்களிற் சிலவற்றை உயிர்களின் குளுக்குப் புலப்படாது செய்தலாகும்.
ಆಳàTತ:
அருளல் என்பது, சுத்தநிலை எய்தும் உயிர்களுக்கு சிவன் குருவடி வாய் வந்து அவர்களி டத்தில் எஞ்சியிருக்கும் மலத்தை யும் நீக்கி சிவப்பேற்றை அடையச் செய்வதாகும்.
மேலும், இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிற்
கின்றான் என்பதை திருக்குறள், !
"அகர முதல எழுத்தெலாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்பதன் மூலம் விளக்குகிறது.
L
பசு என்பது உயிர்கள் அல்லது ஆன்மாக்களாகும். மனித இயக் கத்திற்கு இது முக்கியமானது. பசு அல்விது ஆன்மா என்பது உடலு மல்ல, பஞ்சேந்திரியங்களு மல்ல, அந்தக் கரணங்களுமல்ல, எனவே, உடலையும், பொறிகளையும், பிரானனையும் இயக்குவது இந்த உயிராகிய சித்துப்பொருளே என்கிறது சைவசித்தாந்தம். உடல் பிரேத நிலையிலிருக்கும்பொழுது அறிதற் பண்பு அதற்கில்லை. உடலில் பிராணன் இருந்தும் உறக்கநிலையில் அறிவு நிகழ்வ தில்லை. ஏனெனில், பிரானன் ஒரு சடப்பொருளானமையால் பொருட்களை இயக்கமுடிவ
தில்லை. எனவே, உயிர்தான் பொருட்களை இயக்குகிறது. எனவே, உடலையும், பொறி
களையும், பிராணனையும் இயக் குவது உயிராகிய சித்துப்பொருள் என்கிறது சைவ சித்தாந்தம். சைவசித்தாந்தக் கொள்கைப்படி உயிர்கள் அனாதிபானவை, தோற்றுவிக்கப்படாதவை, என்றும் அழியாதவை, எண்ணிலடங் காதவை. உயிர் நம் கண்களுக்குப் புலப்படாத ஒரு பொருள்.
இதனால் இதன் தன்மை பற்றி
 

அபிப்பிராய பேதங்களுண்டு. வெவ்வேறு தத்துவ விளக்கங் களுமுண்டு. இத்தகையவர்களில்
பரிணாமவாதி, சாக்கியர், பெளரா வணிகர், கெளளர், ஐக்கியவாதிகள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதில் ஐ க் கி ய வ " தி கள் என்போர் சைவரில் ஒரு பிரிவின ராகும். இவர்களின் கருத்தும் சைவத்திலிருந்து வேறுபட்டதாகும். இவர்களின் கருத்துப்படி, உயிரின் மறைப்புக்குக் காரணம் ஆணவம் என்பதை ஏற்றுக் கொள்ளாது அதற்கு உடலே காரணம் என் கின்றனர். ஆனால் ஆணவம் இல்லையாயின் உயிர்பந்தநிலை அடையவேண்டிய தேவையோ பிறப்பு இறப்பு வட்டமோ வேண்டியதில்லை என்கிறது சைவ சித்தாந்தம், உமாபதி சிவாச் சாரியார் உயிருக்கு முழுமையான இலக்கணம் கூறும்போது "உயிர் சிறிது வியாபகம் உடையதாய், நித்தமாய், இயல்பாகவே உள்ள ஆணவத்தால் விளையும் பசுத் துவம் என்ற தோஷமுள்ளதாய், பாசங்களில் கட்டுண்ணுவதால் பசு என்னும் பொருளுடைய தாயிற்று" என்கிறார். அனாதி பாய், அசுத்தமாயையில் அமிழ்ந் திக் கிடந்த உயிர், பின் தனது செயல், அறிவு, இச்சை என்பன சிறிது சிறிதாக விளக்கம்பெற்று, தன் முக்குனங்கள் மற்றும் அந்தக் கரணங்களோடு ஒருங்கிணைந் திருக்கும். இந்நிலையில் சூக்கும தேகத்தோடு பொருந்திய துரல தேகத்தை மாறிமாறிப் பெற்று அவஸ்தைகளூடாக, நல்வினை தீவினைகளையும் அதற்கான பாவ புண்ணியங்களையும் ஏற்று, இன்ப
கலப்பை 52 ) சித்திரை 2007 () 41
துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும். மேலும் உயிர் சார்ந்ததன் வண்ண ம் சாரும் தன்மையுடையது. அதாவது ஒரு கால் பாசத்தோடும் பின் பதி யோடும் சேரும் தன்மையுடையது. அதாவது பந்த நிலையில் அசத் தாகவும், சுத்தநிலையில் சத்தாக வும் இருக்கும். இதனால் உயிர் "சதசத்து" எனப்படும்.
பிறவிகள் ஏழு வகைப்படும் என்னும் சித்தாந்தம் இதனை அச்சு என்கிறது. மேற்கூறிய அச்சுக் களில் உட்பிரிவுகளுமுண்டு. இவை யோனி எனப்படும். ஏழு பிறவி களில் ஒன்றான மனிதப் பிறவியே எல்லாப்பிறவிகளிலும் மேலான தென்கிறது. வினைக்கேற்ப ஓர் உயிர் ஓர் உடலோடு சேர்ந்து பிறவியை எடுக்கிறது. அச்சின் வேறுபாட்டிற்கேற்ப அவற்றின் அறிவின் எண்ணிக்கை வேறுபடு கிறது. புலன்களால் அறியும் அறிவு ஐந்து மனிதனுக்கு மட்டும் இவ்வைந்து அறிவுடன் பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவும் சேர்கிறது. முக்கியமாக, இப்பகுத் தறிவை இறைவன் மனித உயிர் களுக்குக் கொடுத்ததன் நோக்கம் அஞ்ஞானத்தைய கற்றி மெய் ஞானத்தைப்பெற்று முத்தியடை வதற்கேயாம். இச்செயலுக்குத் துணையாகவே தனு, கரண, புவன, போகங்களை இறைவன் உயிர் களுடன் கூடவே பண்டத்துள்ளான்.
ஒரு உயிரின் நிகழ் கால தொழிற்பாடு, அவ்வுயிரின் பழைய எஞ்சிய வினையையும், நிகழ் காலத்தில் ஆற்றும் வினையிலும் தங்கியுள்ளது. எவ்வாறாயினும்,

Page 22
PII, 60' GWYLI 52 | áföldīOJ 2007 || 42
உயிர்கள் பிறக்கும்போது பாசத் பிறக்கின்றன. ஒரு உயிர் எப்பொழுது ஒரு உடலுடன் கூடுகின்றதோ அப்பொழுதே வினைகளும் தொழிற்பட ஆரம் பிக்கின்றன. முற்பிறப்பின் வினைத் தொகுதி பிராப்தம் எனவும், இறந்தகால நிகழ்கால சிந்தனை மண்டபது ஆகாமியமெனவும், வினை பூச்சியமாகிய இடைநிலை சஞ்சிதம் என்றும் வினை மூன்று தரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
துடனேயே
உயிர் எடுக்கும் உடலின் தோற்றத்திற்குக் காரணம் மாயை பேயாம். இது ஒரு படிமுறை
ஒழுங்கில் நடைபெறுகிறது. முதல் நிலை சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என்னும் மாயை நிலையாம். இதற்கு அடுத்த நிலை குக்கும சரீரமாம். ஒரு உயிர் இறக்கும்பொழுது தூல சாரத்தை விட்டு சூக்கும சரீரத்தோடு வெளியேறுகிறது. அடுத்து ஒரு உயிர் பிறவி எடுக்கும்பொழுது அதன் வினைக்கேற்ற தூல உடலை எடுக்கின்றது. இதனை இறைவனே ஆக்கிக் கொடுக்கின்றான் என்பது சித்தாந்தக் கருத்து. உயிர்கள் ஊன உடலோடு பிறப்பதையும், அவற்றுன் சில சுகபோக வாழ்வை அனுபவிப்பதையும் நாம் காண் கின்றோம். இதற்குக் காரணம் அவரவர் செய்யும் வினையே என்று சித்தாந்தம் பல உண்மை நிகழ்வுகளைக் கூறி விளக்குகின்றது. இவ்வாறு, இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை தத்துவங்களைத் தொழிற்படுத்தி, போகங்களை அனுபவிக்கச் செய்து, வினையைச் செய்வித்து,
இன்பதுன்பங்களை அனுபவிக்கச் செய்து, ஒரு கால எல்லையில் உயிர்களுக்கு பிரபஞ்சப்பற்றை ஒழிக்க உதவுகிறான். பற்று நீங்கு வதன்மூலம் உயிர்கள் மல நீக்கம் பெறுகின்றன். இதுவே "மலபாரி பாகம்" எனப்படும்.
உயிர்களின் முக்குண தோற்றத் திற்கு பிரகிருதி மாயையின் சார்பே காரணமாகும். அந்தக் கரணங்களுக்கும் இதுவே காரண மாகும். அதாவது, மனம் நினைத்த லுக்கும், புத்தி நிச்சயித்தலுக்கும், சித்தம் சிந்தித்தலுக்கும், அதாரங் காரம் அபிமானித்தலுக்கும் துணையாகின்றன.
மேலும் உயிர் உடலோடு ஒட்டியிருக்கும்போது ஐந்து நிலை களைக் கொண்டிருக்கும். இவை அவத்தைகள் எனப்படும். அவை யாவன: விழிப்பு, கனவு, உறக்கம், பேருறக்கம், மூச்சு அடங்கிய நிலை என்பனவாம்.
உயிர்கள் பிறவிகள் தோறும் பாசத்தோடு கூடி வினைகளை ஆற்றுவதை அறிந்தோம். இவ் வினைகளிலிருந்து ஆன்மா முற் றாக அகலும்போதே முத்திக்கு வழி பிறக்கின்றது. உயிர் பாசத் துடன் கூடியிருக்கும் நிலையை நெல் மணிக்கு ஒப்பிடுவர். நெல் மனியில் உமி, தவிடு, முளை என்பன அரிசியுடன் ஒட்டி புள்ளன. மேற்கூறிய மூன்று பொருட்களையும் நீக்கும்பொழுது அல்லது நீங்கும்பொழுது அரிசி சுத்தமாகின்றது. இவ்விதமே ஒர் ஆன்மாவிடத்திலிருந்து ஆணவம், கர்மம், மாயை ஆகிய மும்மலங் களும் அகலும்பொழுதே உயிர்

ஞானமும் முத்தியும் பெறுகிறது. மேலும் உயிர் தானாகவே இயங்கு வதாக நம்மிற் பலர் எண்னிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் சைவசித்தாந் தம் உயிர் தானாக இயங்கமுடியாதென்கிறது. உயிர் இலக்கணத்தின்படி உயிர் சித்தா பிருப்பினும் தானாக இயங்கும் சித்தல் வ. அது இன் பிேனTர் பொருளால் இயக்குவிக்கப்பட வேண்டும். அவ்வாறு இயக்கு விப்பவரே இறைவன் அல்லது சிவன் என சைவ சித்தாந்தம் கூறுகிறது. இதனைப் பின்வரும் திருமுறைகள் தெளிவாக்குகின்றன.
"ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே" "அவனின்றி ஓர் அணுவும் அசையாது"
"அவனருளாலே அவன்தாள் வணங்கி"
இவ்வாறு உயிருக்கு இலக்கணம் கூறும் சைவசித்தாந்தம் அதனை "சதசத்து", "சிதசித்து", "மலசித்து" என்னும் பெயர்களால் சுட்டுகிறது.
LITEFIn
சைவசித்தாந்தம் முப்பொருள்களில் மூன்றாவது பாசமெனப்படும். இது வேறு பல பெயர்களாலும் சுட்டப்படுகிறது. மலம் எனப்படுவதும் இதுவேயாம். உயிர் என்று தோன்றுகின்றதோ மலமும் அதனோடு சேர்ந்து தோன்றுகிறது. இம்மலம் மேலும் மூன்று கூறுகளாகப் பிரிக்கப்படு கின்றது. அவையாவன: ஆணவம்,
விளக்கும்
கலப்பை 52 | சித்திரை 2007 () 43
கர்பம், என்பவை ம், இவையும் பொருள் களெனினும் அவை சடப்பொருட் கனாம, சடம என்றான தானாக இயங்கமுடியாத பொருள்கள் என்பதாகும். இதனாலேயே பல் வேறு களையும் கொண்டுள்ளன.
[ስ ITÉሸhህl !
உள்ள
தன்டைப்களையும், பண்பு
ஆணவம்
உயிர்களிடத்து அனாதியாகவே உள்ள மலம் ஆணவமலமாகும். இதனை மூலமலமென்றும் கூறுவர். ஆயினும் இது உயிரின் குணமன்று. உயிர்களிடத்தில் ஆணவம் வியா பித்திருக்கும் இயல்பை "செம்பில் களிம்பு" என்னும் தன்மைக்கு ஒப்பிடப்படுகிறது. ஆணவத்தின் இலக்கணம் கூறும் சித்தாந்தம் "எஞ்ஞான்றும் உயிர்களிடத்து அஞ்ஞானம் நிகழ்த்தும்" என்கிறது. ஆணவத்தில் எட்டுக் காரியங் களுள்ளன. அவையாவன: விகற் பம், கற்பம், மோகம், அஞர், நகை, குரோதம், மற்றும் மனம் மொழி மெய்களால் செருக்கடைதல் என்பனவாம். ஆன்மா திருவருள் பெற முற்றும் தடையாக இருப்பது இவ் ஆனவ மலமேபாம். இதனாலேயே உயிர் களிடத்து அஞ்ஞானம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உயிர் ஆனவ மலத்தில் சிக்குண்டிருக்கும் நிலை மூவகையாகப் பகுக்கப்படும். அவையாவன: கேவலநிலை, சகல நிலை, சுத்த நிலை என்பனவாம். கேவலநிலையில் உயிர் முற்றாக ஆணவமலத்தினால் மறைக்கப் பட்டும், சுத்தநிலையில் ஆணவம்
கொலை,

Page 23
கலப்பை 52 ) சித்திரை 2007 44
சற்று நீங்கியும், சகலநிலையில் அவற்றிற்கு இடைப்பட்டும் நிற்கும் என்று விளக்கப்படுகிறது.
ஆணவமலத்தின் பின் நின்று திரோதான சக்தி மனமே உயிர் களுக்கு மறைப்பைக் கொடுக்கிறது. இது திருவருட் சக்தியாயிருந்தும் மரத்தின் தொழிற்பாட்டிற்கு உடந்தைய யிருப் பதினால் திரோதான மனம் எனப்படுகிறது. பொய்யான பிரபஞ்சத்தை மெய் பான பொருளாக உயிர்களுக்குக் காட்டுவதும் இத்திரோதான சக்தியே. உயிர்களுக்கு இருவினை யொப்பு நிகழ்ந்ததன் மேல் மலபரிபாகம் நிகழும் நிலையில் இது பராசக்தியாக மாறும் இதுவே
"சத்திநிபாதம்" எனப்படும்.
எனினும் ஆணவமலம் ஆன்மா முத்தியடைந்த நிலையிலும் தன் வலிமை குன்றி நிற்பதன்றி அழிந்து விடுவதில்லை. இதனை சைவ சித்தாந்தம் ஒடுங்குதல் (Evolution of involution) என்கிறது. இதனால் உயிர்கள் இடையறாது இறை ஞானத்தில் திளைத்து நிற்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இவ்வாறு உயிர்களின் முத்தி நிலைக்கு இடையூறாக நிற்கும் ஆன பி மலம் அழிக் கப்பட வேண்டும் என்பதையே "சூரன்
போர்" தத்துவ ம் நமக்கு விளக்குகிறது.
கர்மம்
ஒருவர் ஒரு செயலைச் செய்யும் போது அது கர்மம் அல்லது வினை எனப்படும். இவை
அனைத்தும் நல்வினை அல்லது தீவினை என்னும் பெயரில் அடங்கும். இது ஆகாமிய கர்மம் எனப்படும். இவ்வாறு உயிர்கள் செய்யும் நல்வினை தீவினை என்பன இறைவனால் முறையே புண்ணியம் என்னும் வகைகளாகத் தொகுக்கப்படும். இத்தொகுப்பு சஞ்சித கர்மம் எனப்படும், அது ஒவ்வோர் பிறவி பிலும் ஒரு கோட்டா முறையில் பிரிக்கப்பட்டு உயிர்களின் அணுப விப்புக்காக இறைவனால் விடப் படுகிறது. இவையே உயிர்கள் அனுபவிக்கும் இன்ப மற்றும் துன்பங்களாகும். இதுவே பிரா ரப்த கர்மம் எனப்படும். ஆகா மியம் மற்றும் சஞ்சிதம் என்பன காரனங்களென்றும் பிராரப்தம் காரியமென்றும் கூறப்படும் உலகி லுள்ள மக்கள் வேறுபட்ட அளவு களிலான வாழ்க்கையையும், இன்ப துன்பங்களையும் அனுபவிப்ப தற்குக் காரனம் "தெனச் சிந்திக்கும்பொழுது இக்கர்மமே
L. Ti tři
காரணம் என்பது புலனாகும். ஓர் உயிர் உடல் எடுக்கின்ற தன்மையும், அதன் முன்னைய
வினைக் கேற்றதாகவே அமையும்
என்பதனை மணிமேகலை என்னும் நூல் பின்வருமாறு கூறுகிறது. "வினையின் வந்தது வினைக்கு வினை யாவது மக்கள் பாக்கை" மேலும் ஒருவ ருடைய சூழல், ஆயுள், போகம் என்பனவற்றையும் இக்கர் ம வினையே நிர்னயிக்கின்றது.
உண்மை விளக்கம் என்னும் நூலில் எடுத்தாளப்பட்ட பின் வரும் கூற்று,

"அறியாமை ஆண வநீ ஆன சுகதுக்கங்குதியா வினை என்று
கொள்"
இதனை நன்கு விளக்கு
கின்றது. ஒருவர் செய்யும்
வினைக்கு அவரே சொந்தம்,
அதன் பலன் அவரையே தொட ரும் என்பதை மறந்துவிடலாகாது. மேலும், செய்த வினையின் பயனர் என ஒருவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது நியதியாகும். ஒருவருக்காக இன்னொருவர் வினை செய்யவோ அல்லது அனுபவிக்கவோ முடியாதென்பது சைவசித்தாந்தக் கருத்தாகும். அவரவர் செய்யும் வினையை அவரவரே அனுபவிக்கவேண்டும் என்பதை பின்வரும் செய்யுள் விளக்குகிறது.
"தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன"
விதியின் வலிமையை விலக்க முடியுமா அல்லது குறைக்கத்தான் முடியுமா என்னும் கேள்வி நம்மில் பலரிடையே எழுவதுண்டு, சைவ சித்தாந்தம் இதுபற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போப்" னால், விதியை வெல்வதற்குரிய வழிவகைகள் வேதம் போன்ற
கலப்பை 52 | சித்திரை 2007 () 45
நூல்களில் இல்லை என்று கூறிய ஒளவைப் டாட்டி, வினையை வெல்வதற்கு ஒரே வழி "ஈஸ்வர தியானமே" என்று பின்வரும் பாடல் மூலம் கூறுகின்றார்.
"சிவாய நம என்று சிந்தித்து
இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
அதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்"
என்கிறார்.
மேலும், "சிவாயநம" என்பது ஒரு சூக்கும பஞ்சாட்சரம், சிவாய நம என்றால் ஐந்து எழுத்துக் கணினக்கொண்டது. ஆகவே, பேரின்ப வீட்டைப் பெறுவதற்கு வழிவகுக்கும். மாறாக, "நாச்சிாைப" என்பது ஓர் தூல பஞ்சாட்சரம், இது இம்மைப் பயன் பெறுவதற்கே உதவும் எனக் கூறப்படுகிறது. எனவே, துன்பத்தை வெல்லு வதற்கு ஒரே வழி "சிவாயநம" என்ற மந்திரத்தை ஒதுதல் மட்டு மேயன்றி வேறொன்றுமில்லை என்றும், மற்றவை எல்லாம் விதி கொண்டு செலுத்தும்வழி என்றும் தெரிவிக்கின்றார் ஒளவைப்பாட்டி
豎 तावतः। 'ஆ'ஆ'த కో-కెప్లొ ت ஒ リー

Page 24
Bislistu 52 I lgålaaj 2007 D 46
இ ன் ப துன்ப மென்பது ஒருவரின் பிராரப்த கர்மம் என்று முன் கூறப்பட்டமை இங்கு கவனிக்கத் தக்கது தளராத உள்ளத் தோடும் உறுதியான நம்பிக்கை யோடும் இறைவனைப் பிரார்த் தனை செய்தால் தீவினையின் பலன் குறைந்து இறை அருள் கிடைக்குமென்பதும் அனுபூதி பாளர்களின் வாழ்க்கை வரலாறு களிலிருந்து நாம் அறிந்து கொள்ள லாம். உதாரணமாக, சிவபெரு மானிடத்தில் அளவுகடந்த பக்தி கொண்ட மார்க்கண்டேயர் எவ்வாறு இயமனனவென்றார் என்பதை நூல்கள் விளக்குகின்றன. உண்மையான அடியவர்களுக்கு "நாளும் கோளும் என்செயும்" என்னும் திருஞானசம்பந்தரின் தேவாரமும், ஒன்றும் செய்யா தென்பதைப் புலப்படுத்துகின்றது. மேலும், ஒரே பிடிவாதத்துடனும் பக்தியுடனும் திருக்கை லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அப்பர் சுவாமிகள் முன் சிவ பெருமான் தோன்றினார் என்னும் வரலாறு முண்டு விடாமுயற்சியும், அறவாழ்வும், அதற்கு மேலாக இறை நம்பிக்கையும் கர்ம வினைக்கு மருந்தாகுமென்பது சைவ சித்தாந்தக் கருத்தாகும்.
உயிர்களின் பிறப்பில் அச்சு, யோனி என்னும் பிரிவுகள் உண் டென்று முன் கண்டோம். சிவ புராணம் சுறும்,
"புல் லா கிப். எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன்"
என்னும் அடிகள் விளக்குவது இதுவாம். உயிர்கள் கர்மவினைக் கேற்ப வெவ்வேறு விதமான
உடலை எடுக்கின்றன சித்தாந்தம் கூறுகிறது. ஓர் உயிரின் கர்ம வினைக்கேற்ப உடன்ப்ெ இறைவனே அவ்வு பிருடன் சேர்த்துவைக்கின்றான். ஓர் உயிரின் கர்ம வினையின் மாற்றத்திற்கேற்ப அதன் it (3 F அன்றி யோனியே மாறலாம். ஆனால், "பரினாபுக் கொள்கையாளர்கள்" ஒரு ஒழுங்கு "பரிணாம வளர்ச்சி" ஏற்படுகிற தென்று உடலுருமாற்றத்தை அடப் படையாகக்கொண்டு கூறுவர்.
என்று
முறையில்தான்
இக்கருத்தை சைவசித்தாந்தம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது போன்று மீமாம்சகரில் ஒரு
பிரிவினர் யோனி மாறும், அச்சு மாறாதென்று கூறுவர். இவை போன்ற கருத்துக்களை சைவ சித்தாந்தம் ஏற்றுக்கொள்ளவில்லை. சைவசித்தாந்தம் உயிரின் பிறப்பில் எந்த மாற்றமும் ஏற்படும் என்கிறது. இந்தக் கொள்கையை பின்வரும் திருமுறை விளக்குகிறது.
"சிவந்திபு
திருநிழல் பந்தல்செய்து உவந்தவளி றந்தபேதே கோச்செங்கனனுமாக"
மானைக்காவில்
திருவானைக்காவில் சிவனைப் பூசித்த சிலந்தி கோச்செங்கட் சோழனாய்ப் பிறந்ததென்றும்;
"நிறை மறைக்கTடதன்னில் நீண் டெரி தீபந்தன்னைக் கறை நிறத் தெவிதன் மூக்குச்சுட்டிடக் கனன்று தூண்ட"
திருமறைக்காட்டில் விளக்குத்திரி தூண்டிய எலி மாபவிச்சக்கர வர்த்தியாய் பிறந்தான்)
எனவே ஒவ்வோர் உயிரும் அவ்வப் பிறப்பில் அனுபவிக்க

இருக்கும் வினையின் "Бй ... ... --
கேற்ப இறைவன் அதற்கு உடலை வழங்கு வான் என்று சைவி சித்தாந்தம் கூறுகிறது. விளக்க மாகக் கூறுவதானால், வினைக்கு
தன்மைக்
ஏற்பவே எந்தப் பிறவிபோ, எவ்வகை உடலோ உயிருக்குக்
கிடைக்கும். கர்ட் வினைக்கு ஏற்ப அச்சோ, யோனியோ மாறலாம். இதுவே சைவ சித்தாந்தக் கொள்கையாகும்:
LITելի|ԼI
இல்லாத பொருளை உள்ளது போலவும், உள்ள பொருளை
இல்லாததுபோலவும் ஒரு பொருள் இன்னொரு பொருள் போல் தோன்றுவதும் மாயை எனப்படும். இதனால் மாயை என்பது ஒரு அருவப்பொருள். எனவே இதனை புறக்கண்களாற் கான முடியாது. உலகத் தோற்றத்திற்கும், உயிரின் தோற்றத்திற்கும் இம்மாபையே முதற் காரணம். அதாவது மூவி) காரணம் என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. உலகமும் உயிர்களும் காரனை, காரிய முறைப்படி தோன்றுகின்றன. அதாவது மாயை என்னும் காரணத்திலிருந்து காரிய மாகிய உலகமும், உயிர்களும் தோன்றுகின்றன. உலகம் ஒரு செயற்கையான அல்லது செய்யப் பொருள். இதனைச் செய்தவன் இறைவன். முப் பொருளில் ஒன்றான பாசத்திற்குள்
l I l - L
இதுவும் அடங்குகிறது. ஆக்கப் பட்ட பொருட்கள் யாவும்
அழிவுக்குட்படும். இதுவே இயற் கையின் நியதி. இவ்விதமே, உலக
கலப்பை 52 ) சித்திரை 2007 () 47
மும் ஒரு காத்தில் அழிவுக்கு உட்படும் ஆன T ல் , ன ச ெ சித்தாந்தம் கூறும் அழிவு என்பது "ஒடுங்குதல்" ஆகும். அதாவது உலகம் ஒரு காலத்தில் மறைந்து பின் தோன்றும் என்பது சைவ சித்தாந்தக் கருத்தாகும்.
இதே டாங்கில் உடலும் மாயை பயிலிருந்து தோன்றுவதாக சைவ
சித்தாந்தம் கூறுகிறது. இந்த அடிப்படையிலேயே இறைவனும்
உயிரும் தவிர்ந்த உலகிலுள்ள ஏனைய பொருட்கள் யாவும் 出凸凸卤下凸 என்கிறது Fe
சித்தாந்தம். இதனையே சைவ சித்தாந்தம் "சற் காரிய வாதம்" எனக் கூறுகிறது. சற்காரியமானது உள்ளதாகிய காரணத்திலிருந்து உள்ளதாகிய காரியம் தோன்றுத லாகும். காரணத்தில் சூக்குமமாக இருந்து, காரியத்தில் தூலமாகத் தோன்றும். இதனை நிகழ்த்தி வைப்பவன் இறைவன்.
உடலை சரீரம், தேகம் எனப் பல பெயர் கொண்டழைப்பர். உடல் எனும்பொழுது அதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று துரல சரீரம். இதுவே தம் ஆளனக் கண் களுக்கு ப் உடலாகும். மற்றொன்று சூக்கும சரீரமாம். இதனை புறக்கண்களால் கானமுடியாததுடன் அது நான்கு உறைகளைக் கொண்டதென்றும் கூறப்படுகிறது. மேற்கூறிய சூக்கும தேகத்திற்கு முதற்காரணமாவது இம்மாயையேயாம். இம்மாயையில் மூன்று பகுதிகளுண்டு. அவை பாவன பிரகிருதிமாயை, அசுத்த மாயை, சுத்த மாயை என்
f | gl! [ʼy !_y (35) L f.
வாம்.

Page 25
கலப்பை 52 | சித்திரை 2007 () 48
உயிர்களின் மற்றும் l, தோற்றத்தையும் அவற்றின் இயக் கத்தையும் சைனம், தத்துவங்கள் மூலம் விளக்குகின்றது. சைவ சித்தாந்தம் 3 தத்துவங்களைக் கொண்டுள்ளது. இதில் 24 பிர கிருதி மாயா ஆன்ம தத்துவங்க ளென்றும், அசுத்த மாயை தத்துவங்களென்றும், 5 சுத்த மாயை தத்துவங்களென்றும் சொல்லப்படுகிறது.
உயிர் தனது வினையை நிகழ்த்துவதற்கு உடல் மட்டும் போதுமானதன்று. இதற்கு தனு, கரண, புவன. போகங்கள் என்னும் கரணங்கள் வேண்டும். இதுவும் மாயையின் பகுதிகளேயாம். இது
பTமயம் எனப்படும். இந்த வகையில், உயிர் ஏனைய இரு மலங்களிலிருந்தும் விலகி வீடு
பேறு அடைய மாயை அதனைத் தகுதிப்படுத்துகிறதென சைவ சித்தாந்தம் கூறுகிறது.
உலகமும், உடலும் பஞ்சபூதங் களால் ஆனது. உடல் அழியும் போது அது பஞ்சபூதங்களுடன் கலக்கின்றது என்றும் சைவ சித்தாந்தம் கூறுகிறது. அத்துடன் மனிதர்களாகிய நாம் உடலின் உள்ளும் புறமும் பயன்படுத்து வதும் இப்பஞ்சபூதப் பொருள் களையேயாம். அதுமட்டுமின்றி இப்பஞ்ச பூதங்களான பிருதிவி, அப்பு, தேயு, ଶ}} |TW||', ஆகாசம் என்பன சில பொதுத் தன்மை களுடன் சிறப்புத் தன்மையையும், கொண்டுள்ளது. இத்தகைய குணங் களை உயிர்களும் கொண்டிருக்கும். எனினும் உயிர்களின் குணங்கள் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு
இருக்கின்றன. அவையாவன சாத்
வீகம், இராசதம் , தாமசம் என்பனவாம்,
* ஃப் ஃபா- ) , ' எல்லாவற்றிற்கும் மேலாக
இறைவனும் இப்பஞ்ச பூதங் களுடன் வியாபகமாக இருக் கின்றான் என்பது சைவசித்தாந்தக் கருத்தாகும்.
"பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி"
என்னும் திருவாசகப் பகுதி இதனைத் தெரிவிக்கின்றது.
பிரகிருதி மாயையில் ஆன்மா இருக்கின்றபொழுது அது 24 தத்துவங்களின்மூலம் தொழிற் படுகின்றது. இவை ஆன்ம தத்து வங்கள் என்று கூறப்படும். மேற் கூறிய தத்துவங்கள் வாயிலாக
இறைவன் உயிர்களுக்கு வினை அநுபவங்களை ஊட்டி ம6:நீக்கம்
செய்து வீடுபேற்றிற்குத் தகுதி பாக்குகின்றான். மந்திர தந்திர பல ன்களுக்கும், பெளதிக
விஞ்ஞான நலன்களுக்கும், மனோ தத்துவ நலன்களுக்கும், ஆத்மீக பலன்களுக்கும் மற்றும் லெளகீக பலன்களுக்கும் இத்தத்துவங்களின் மூலம் சைவம் விளக்கம் கூறு கின்றமை சிறப்பானதாகும், மேற் கூறியவற்றின் மூலம் பிரபஞ்ச இயக்கத்திற்கும் அதற்காதாரமான உயிர்கள் மற்றும் உலகத் தோற்றத் திற்கும் இறைவனே முழுமுதற்

காரணம் என்பது நன்கு விளங்கு கிறது. "நிமித்த காரணம்" என்பது இதுவேயாம். நிமித்தகாரணன் இறைவனாம்.
முத்தி
ஆன்மாவின் உணர்வுபூர்வமான திருப்பு நிலைகள் மூன்று என்கிறது சைவம், அவையாவன: இருவினை பொப்பு, சத்தி நிபாதம் என்பனவாம். உயிர்கள் கேவல மற்றும் சகல நிலைகளில் இருக்கும்பொழுது வினைகளைச் செய்துகொண்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கும். இவ்வினைப் பயன்களின் நுகர்வுகளை விருப்பு வெறுப்பு அற்று ஒருதன்மைய தாகக் காணும் நிலையே இரு வினையொப்பு எனப்படும். இதனை, "ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்குவர்" என்னும் கூற்று இந்நிலையில் உயிர்களிடத்து அனாதியாகவே உள்ள ஆணவமலத்தின் வலிமை குன்றத்தொடங்கும். இது மலபாரி பாகம் எனப்படும். மூன்றாவதான சத்திநிபாதம், திரோதான சக்தி பராசக்தியாக மாறி நின்று உயிர் களுக்கு அருள் வழங்கும் நிலை யாம். இந்நிலையில் இறைவனின் திருவருள் உயிரில் பதியும். அப் போது, இறைவன் தன் திருவருளே திருமேனியாகக் கொண்டு எழுந் தருள்வான். உயிரில் படிந்திருந்த அழுக்கை நீக்கும் வண்ணம் ஞானத்தை உணர்த்துவான். அப் போது உயிரில் பற்றியிருந்த எஞ்சிய மாயையும் கர்மமும் விலகும். இவ்வாறு தூய்மைப்
பல பரிபாகம்,
விளக்கும்.
கலப்பை 52 ) சித்திரை 2007 () 49
படுத்தப்பட்ட உயிரும் இறைவனும் இரண்டறக் கலக்கும். அதாவது சிவஞானத்தோடு ஆன்மஞானமும் செறிவுற்றுக் கலந்து ஒன்றாகும். இதுவே, இன்பம் பயக்கும் சைவம் கூறும் "முத்தி" நிலையாகும். சிவம் உயிர்களோடு வேறற ஆனால் கலப்பில்லாமல் நிற்கும் நிலை "அத்துவிதம்" எனப்படும்,
உயிர்கள் நிலை பானவை. இளமை, இன்பம், செல்வம் எல்லாமே நிலையற்றவை. உயி ருக்கு ஆதாரமான உடலே ஒரு நிலையில் அழிந்துவிடும் என்பது திண்ணம். அறுதியான இறுதிப் பொருள் இறைவன் ஒருவனே. அவனை அடைவதற்கே உயிர்கள் முயற்சியெடுக்கவேண்டும். இதற் காகவே இறைவன், உயிர்களுக்கு மனிதப் பிறவியை அளித்திருக் கின்றான். மனிதன் ஒழுக்கம், அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், ஆசாலம், உறவு, சீலம் என்னும் நற்பண்புகளில் ஒழுகி வாழ்ந்து மேலும் இப்பண்புகளில் வழுவாது நின்று தானம் தவம் செய்தல் அறங்களாம். இவைகளின் பலன் புண்ணியங்களாம். இதனோடு கூடவே மனம், மொழி, மெய் களால் மனிதன் சிவனை வணங்கி னால் தேவர்களுக்கும் மேலான சிவலோக பதவியில் வைக்கப் படுவர் என்கிறது சைவம்.
சைவம் கூறும் அன்பு மற்றும் ஒழுக்கமாகிய உயர் பண்புகள் நமது இலக்கிய நூல்களாகிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, நன்நெறி போன்றவற்றி னாலும் போதிக்கப்படுகின்றது.

Page 26
கலப்பை 52 ) சித்திரை 2007 ) 50
உயிர்கன் பசுஞானத்தாலோ, பா சஞானத்தாலோ சிவனை அறியமுடியாது. பதிஞானத்தால் மட்டுமே அவனை அடைய முடியும் பிரமா, விஷ்ணு அடிமுடி தேட முயற்சித்து தோல்வி கண் டமைக்கு இதுவே காரணமாம்.
ஆன்மா பந்த பாசத்திலிருந்து முற்றாக விலகும்போது பதிஞானம் பெறுகிறது. இது பரஞானம் என்றும் கூறப்படும். இந்நிலையில், கர்மமும் மாயையும் ஆன்மாவை விட்டு நீங்கும். பின் அது பர சிவத்தின் திருவடியில் அத்துவித இபைபிற் சேர்ந்திருக்கும். இந் நிலையில் உயிருடன் அனாதியாக உள்ள ஆணவமலமும் நீங்கிவிடும். அந்நிலையில் ஆன்மா சுத்திபெற் றடையும் பரமுத்தியே சைவ சித்தாந்தம் கூறும் "முத்தி"யாகும்.
"முத்தி" எவ்வாறு இருக்கு மென்பதை அருணந்தி சிவாச்சாரி யார் விளக்கும்பொழுது, ஆன் மTக்கள் முத்திபடைந்தால், இறைவன் அவர்களை காந்தம் இரும்பை கவர்ந்திணைப்பதுபோல இணைத்து விடுவான் என்கிறார். சைவம் கூறும் முத்தி பின்வரும் செய்யுளால் விளக்கப்படுகிறது.
உள்ள மல நீக்கி யோங்கு சிவாநந்த வெள்ளம் திளைத்ததுவாய் மேவுதலே - கள்ளவழி பூங் கொத்தார் சிவசடையார் கூறுசிவாக
மத்திற் சித்தாந்த முத்தியெனத் தேறு பக்தியே முத்திக்கு வித்து என்பது சைவ சித்தாந்தக் கருத்தாகும். இதனை எல்லாத் திருமுறை பாடல்களிலும் காணலாம்.
பக்தி
உலகிலுள்ள மொழிகளிற் சில, சிலவற்றிற்குப் பெருமை பெற்ற தெனக் கூறப்படுகிறது. இந்த வகையில் தமிழ்மொழி பக்திக்குரிய மொழி எனப் பலராலும் புகழப் படுகிறது. இதனால் சைவ சமயத் திற்கு பக்தி முக்கியமென்பது தெளிவாகிறது. அவ்விதமே. தென்னாடு பக்திக்குப் பெயர் போன இடம் என்றும் கருதப் படுகிறது.
மேலும் சைவம் கூறும் பக்தி நெறி நான்கு வகைப்படும். அவை பாவன சரியை, கிரிபை, போகம், ஞானம் என்பனவாம். சமய குரவர் நால்வரும், மேற்கூறிய நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்து இறைவனை என்று கூறப்படுகிறது.
அடைந்தார்கள்
இவர்களில், காலத்தால் முற் பட்ட அப்பரடிகள் திருநர்வுக்கரசர் சரியை மார்க் கத்தை கடைப்பிடித்தார் கூறப்படுகிறது. இது சரீரத்தால் இறைத்தொண்டு செய்யும் முறை பாகும். இது தாசமார்க்கம் எனப் படும். இவருக்கு அடுத்துவந்த ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர் கிரியை மார்க் கத்தை கடைப்பிடித்து அதாவது அகத்தாலும் புறத்தாலும் இறை வினை பூசித்தார் என்பர். இந்நெறி சற்புத்திர மார்க்கம் எனப்படும். அடுத்து வந்த சுந்தரர் மனத்தால் இறைவனைத் தொழுதார். இதுவே யோகம் என்றும் சகமார்க்கம் என்றும் கூறுவர். இறுதியாக வந்த மாணிக்கவாசகர் ஞானத்
பிளணு
என்று

தால் இறைவனைத் தொழுதார், இதுவே ஞான வழி என்றும் சன்மார்க்கம் என்றும் கூறப்படும். எவ்வாறெனினும், இவர்கள் தனித் தனியே ஒவ்வோர் மார்க்கத்தைக் கிடைப்பிடித்தனர் என்பது பொரு அவர்களின் வழிபாட்டு முறைகளில் இவை சிறப்பானவை என்பதே பொருளாம். மேலும், முதற் கூறிய மூன்றும் பதமுத்தி என்றும் இறுதி பாகவுள்ளது பரமுத்தி என்றும் கூறப்படும்.
&Tailaւ.
ஞானத்திற்கு அறம் மட்டும் போதுமானதாகக் கருதுபவர்களும் உண்டு. அறம் என்றால் சீரிய ஒழுக்கம் பொருளாம். ஆனால் இதுமட்டும் போதுமான தன்றென்றும், அதற்கு இறைவழிபாட்டின் உறுதிப்பாடு வேண்டுமென்றும், அப்பொழுது தான் அது வலுப்பெறும் என்றும் கூறுகிறது. தற்பொழுது நம் மத்தி பிற்கூட ஒருவருடைய விபரத்தை இன்னொருவர் முக்கியமாக சந்) உறுதிப்படுத்த வேண்டும் என்னும் முறை இதனைத் தெளிவாக்கும்.
என்பது சைவம்
அன்பே சிவம் என்கிறது சைவ சித்தாந்தம் உயிர்களிடத்தில் சிறந்து குனங்களில் மிக உயர்ந்தது அன்பு ஆகும். அன்பின் வளர்ச்சிபெற்ற நிலை தான் பக்தியாகும். ஆன்ம ஈடேற் றத்திற்கு தோன்றாத் துணையாக இருக்கும் இறைவன்மீது கொள் ளும் அன்பே பக்தியாகும். இந்த அன்பை உலக ஆசைகளில் லயிக்க விட்டால் அது விபரீதமாக முடிந்துவிடும். மாறாக அன்பை பிற உயிர்களிடத்தும் இறைவன்
விளங்கும்
கலப்பை 52 ) சித்திரை 2007 51
இடத்தும் செலுத்த வேண்டும், அறுபத்துமூன்று நாயன்மார்களும் சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியின் மூலமே இரண்டறக் கலந்தனர் எனப்படுகின்றது.
"பக்தியால் யானுனைப் பல
கிாலும். முத்தியே சேர்வதற் கருள்வாயே" என்று திருப்புகழ்
கூறுகிறது. திருவாசகத்திலுள்ள "முத்தனே முதல்வா." என்பதும் இதனையே வலியுறுத்துகிறது. உலகப்பற்றை நீக்குவதற்கான ஒரே வழி இறை பக்தியாகும். "என் பெலாம் நெக்குடைய ரோமம் சிலிர்ப்ப உடலினக மனம் அழலின் மெழுகாய் இடையறாதுருக வரு மழை போலிரங்கியே இருவிழிகள் நீரிறைப்ப" என்னும் தாயுமானவர் கூற்று நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
பக்தியின்மூலமே ஆன்மாக்கள் இறைவனின் அன்பைப் பெறலாம் என்பது திண்னம், சுந்தரர்தான் அன்போடு இறைவனிடத்து பக்தி கொள்ளும் போதெல்லாம் இறை பிள் தம்முன் தொன்றுவான் என்கிறார். பக்தியாகிய வலைக்கு இறைவன் ஒரு காலமும் தப்ப முடியாது என்பது முத்தர்களின் அனுபவம்.
உலகில், பாக்கை, இளமை, செல்வம் எதுவுமே நிலையில் aaH0 TOO OOOS S TT 0 a இன்பம் தருவனவுமல்ல, இறைவன் ஒரு வனே நிலையானவன். அவன் திருவடியைச் சேர்வதே நிலையான இன்பம் என சைவம் கூறுகிறது. இந்த அறுதியான உறுதிப்

Page 27
கலப்பை 52 ) சித்திரை 2007 ( 52
பொருளை அடைய உயிர்களாகிய நாம் இடையறாது முயலவேண்டும்.
ஒவ்வோர் சமயமும் ஆத்மீகம் பற்றி வெவ்வேறு விதமாகக் கூறு கின்றது. உதாரணமாக, உலகாயதர் லெனசீக இன்பங்களில் உயர்வான மகளிர் போகமே முத்தி என் கின்றனர். இவ்விதமே சமணம் எண்வகையான மேன்மைக் குனங் களைப் பெற்று அலெளகிய ஆகாசத்தை அடைதலே முத்தி என்கிறது. மேற்கூறிய எவையும் முத்திப் பேறுகள் அல்ல என்றும் பந்தபாசத்திலிருந்து முற்றாக விடு தலை பெற்று சிவனடி அடைதலே முத்தி என்கிறது சைவசித்தாந்தம்.
சமய, சமூக, வாழ்வியல் ரீதியாக தமிழரிடையே சிறப்பாகக் கானப்படுவனவென "உலக அறிஞர்களால் போற்றப்படும், அறிவாசார உயர் பண்புகளுக்கும் அநுசரணைகளுக்கும் காரணம், இச்சைவ சித்தாந்தக் கலையின் செல்வாக்கு அவர்களிடம் இருந் தமையே என்கின்றார்கள். அத் துடன், இந்து நாகரிகத்தின் அடிப்படையாக விளங்குவதும் இச்"சைவசித்தாந்தக் கலை" என்பது வெளிநாட்டறிஞர்களின் கருத்தாகும்.
"மேன்மை கொள் சைவந்தி விளங்குக உலகமெலாம்"
பயன்பட்ட நூல்கள்:
1. மெய்கண்ட நூல்கள் ஏழு :
தெளிவுரை சி.சு. மணி
2. சிவஞானசித்தித் திறவுகோல்:
பண்டிதர் மு. கந்தையா
.
血盟。
சைவ சித்தாந்தக் கட்டுரைகள்:
கொதி. சிங்காரவேலு
முப்பொருள் உண்மை விளக்கம் : சித்தாந்தவித்தகர் மு. இளையதம்பி
சைவ சித்தாந்த அறிவாராய்ச்சியியல்: கலாநிதி சொ. கிருஷ்னராஜா
சைவத்தை அறியுங்கள்: க. கணேசலிங்கம்
சைவ சமயம் : விவேகானந்த சபை வெளியீடு, கொழும்பு
இந்துமத சாரம் : இராமகிருஷ்ணமட வெளியீடு
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்: கலாநிதி க.கைலாசபதி
திருமந்திரம்: திருமூலர்
சைவத்திருமுறைகள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
சித்தர் பாடல்கள்

புற்றுநோய்
ஏற்பட்டுவிட்டால் அதைக் குணப்படுத்தலாமா?
இந்தக் கேள்விக்கு விடை பொதுவாக "இல்லை" என்பதே உங்களில் பலரது எண்னமாக இருக்கும். புற்றுநோயைக் குணப் படுத்துவது என்பது கடினம்தான். ஆனால் புற்றுநோயைக் குணப் படுத்த முடியாது என்ற நிலைமை இப்பொழுது மாறி வருகின்றது.
ஒரு உடல் உறுப்பின் அசாதாரன வளர்ச்சியை அல்லது ஒரு கட்டி உருவாவதை Neopltsா என்கின்றோம். அது இரு வகைப்படும். அதில் பிரதானமாக இருவகை Benign அல்லது (Italign:Int) கொடிய வகை. நாம் பொதுவாக புற்றுநோய் என்னும்போது கொடிய வகையையே குறிக்கின்றோம். இந்த சாதுவான வகைக் கட்டிகளை இலகுவிலும் முழுமையாகவும் குணப்படுத்தலாம். ஆனால் கொடிய வகையான, அதாவது எம்வழக்கில் புற்றுநோயைக் குணப்படுத்துவது மருத்துவ உலகத்திற்கு ஒரு சவாலாகவே இன்றும் விளங்குகின்றது. ஆனால் புற்று நோய் பற்றிய பாரிய அறினைப் பெற்றுவிட்ட விஞ்ஞான உலகம் அதனைப் பல வழிகளில் குணப்படுத்த முயல்கின்றது.
அதற்கு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தல் மிகவும் முக்கியமாகும். புற்றுநோயின் இயல்புகள், நோயின் வளர்ச்சியும், பரவியுள்ள விதமும், அந்த மனிதரில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி என்பன இந்த நோயை குணமாக்குவதற்கு முக்கிய காரணி களாக இருக்கின்றன.
நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் பலரது நோய் குணமாக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சையோ (surgery), மருந்து LLLTTTTTTSOTT SSLLLLLLLLDLCCSS TTTTTTS LTTTTLLLLLTelG SSLLLLLLLaaCCS :Iாகவோ, எதிர்ப்புச் சக்தியைத் தூண்டும் மருந்துகள் அல்லது TேHiherry போன்ற முறைகளால் புற்றுநோயைக் குனப் படுத்தவோ, கட்டுப்படுத்தவோ பயன்படுத்தப்படுகின்றன. அண்மையில் அவுஸ் திரேலிய விஞ்ஞானியான பேராசிரியர் பிறேஷர் (Press Fr:r) பெண்களில் ஏற்படுகின்ற cervical carcil01:1விற்கு தடுப்பூசியைக் (Yttin:) கண்டுபிடித்து நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.
எனவே, நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் மூலம், நோய்களை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பதனால் புற்றுநோயை முற்றாக மாற்றக்
கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன.
- கலப்பை மருத்துவக் குழு 6.
ܘ ܐ .

Page 28
வால்மினகு Piper cubich: வாசைஆடாதோடை) Justicia adiatoda
வாழை Mulsa paradisiaca (plantain) வாடாமல்லிகை (GI 1 Yılırcına glibsa வாதமடக்கிதழுதாழை) Clerode du 11 pll'11ides
வார்த்தாகி சிறுவழுதலை)
: : Սիմք:
Sl:LILLI1 MiIlusa flexios:
Aegle I11a III helis விசிறி Ehretia buxifolia விழில் Alropogon multical III விட்டுணுகாந்தி Ew will is alsilaides விஷ்ணுகரந்தை Splı aranthus indicas விபூதிகரை Cle, in1ւ f Lilitols:1 விளாத்தி Fer Tial Elephalin || || 11
வில்வம் மூன்று வில்வ இலைகளையும் ஐந்து மிளகையும் சேர்த்து அதிகாலையில் வயிற்றில் வாயிலிட்டு சென்று : நாட்களுக்கு மண்டலம் தின்றால் ஆஸ்துமா நோய் குணமாகும் என்று சித்தர்கள் அருளியிருக்கின்றார்கள், வில்வ மரத்தை கவளம் என்றும் அழைப்பார்கள்.
வெறும்
 

கலப்பை 52 | சித்திரை 2007 55
வில்வமரப் பிஞ்சுக்காய் இலைகளின் சதைப்பகுதியை சேகரித்து நிழலில் உலர்த்த வேண்டும் நன்றாய் உலர்ந்தபின் இடித்துத் தூளாக்க வேண்டும். அத்துரளில் ஒரு தேக்கரண்டியளவு எடுத்து பசுமோரில் கலந்து அருந்தினால் எட்டுவிதக் குன்மநோய் குணமாகும் வில்வமரப் பிஞ்சுக்கு குன்மநோய், வயிற்றுப்புண், குடற்புண் ஆகியவற்றை குணமாக்கும் இயல்பு உண்டு.
வில்வப்பழம். மரத்திலேயே பழுத்த வில்வப்பழங்களை எடுத்து அவற்றின் ஓட்டை உடைத்து விதைகள், நரம்புகள் நீக்கி சதையை மட்டும் எடுத்து சர்க்கரை சேர்த்துப் பிசைந்து கடுக்காயளவு எடுத்துத் தினமும் இருவேளை உண்டு வந்தால் கண்நோய்கள் குவினமாகும்.
வில்வமரப் பிசின் பழம்பெரும் மருத்துவ நூலில் காணப்படும் இப்பாடல் வில்வமரப்பிசினின் குணாதிசயத்தை தெளிவாகக் கூறுகின்றது.
'பல்லவம்பூ பிஞ்சின் பழமியா வும்முறையே வல்லவம் மேகம்மந்த மாகுன்மஞ் - சொல்லுகின்ற சோக்காருள் விந்துநட்ட நூறு மடுத்தவர்கட் காக்கமருன் வில்லுவத்தி வாம்"
வில்வம் வேர்
பதார்த்தகுண சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாடல்:
வில்லுவத்தின் வேருக்க வீறுகுன்ம வாயுகபம் சொல்வொ விண்னாப் பித்தந்தொடர் சோடை - வல்லகப
தாகசுர நீரேற்றஞ் சன்னியொடு மெய்வலியும் மேகமொடு நீங்குமே விள்'
புவிப்பாணி முனிவரின் பாடல் ஒன்று:
"அக்கினி மாந்தம் மரோசியதி சாரம்விக்கல்
நிற்கரிய பித்தசுரம் நீள்சாந்தி - சுட்கநோ
பாதிபநோ யேகு மழகோடு புஷ்டியுண்டாங்
கோதில்வில்வ வேரதனைக் கொள்!"
வில்வமர இலைகள், பூக்கள், பிஞ்சுகள், பழங்கள், பிசின், வேர் ஆகியனவற்றில் மருத்துவக்குணம் நிறைய உள்ளதால் தான் வில்வம் தெய்வீகத்தன்மை வாய்ந்த ஒன்று என சைவக் கோவில்களில் வளர்க்கப்பட்டு வணக்கத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதனிலிருந்து சைவ சமயக் கொள்கைகள் மனித உடல் ஆருேக்கியத் தினை முன்னிறுத்தியே வகுக்கப்பட்டுள்ளன என்பது தெளிஇ

Page 29
கலப்பை 52 D சித்திரை 2007 D 58
வி
வீராணிக்கிழங்கு Escorcioneira scorzonera
வெ வெந்தயம் Fenugreck வெந்தயக்கீரை Trigonella foemum graecum
A casial leucophlaea வெற்றிலை Betcl வெள்ளதுகு Exacum hyssopifolium வெள்ளரிக்காய் Cucumi LutilissiIITILIS வெருகங்கிழங்கு ATLLI T1 nacrorhizon வெட்சி C0C0Cillea ട്ട് ട് வெண்டை Hibiscus sinnantus : வெண்துளசிசிவதுளசி OcyIILIIIn Lenuilorlin வெட்டுவேர் Adropogon வெட்டிவேர்(விளாமிச்சை) Cuscus
வெட்பாலை வெந்தயம் வெள்ளைமிளகு வெள்ளையம்மான் பச்சரிசி வெதுப்படக்கி வெண்கடுகு வெள்ளல்லி வெள்ளாம்பல் வெருகு வெள்ளைக்காக்கணம் வெள்ளைமந்தாரை வெள்ளைச்சாரணை
வெற்றிலை வெற்றிலைச் சாற்றுடன் தேன் கலந்து கொடுத்தால் எந்தக் கடுமையான நோயும் குணமாகும். வெற்றிலைக்கொடியின் வேரை மென்று தின்றால் நல்ல குரல் வளம் ஏற்படும்.
வெள்ளரிக்காய் நீர்ச் சுருக்கு, நீர்த்துவார குணமாகும். கடும் புகைத்தல் பழக்கம் உள்ளவர்கள் பூசணி வகையைச் சேர்ந்த வெள்ளரிக்காய், வத்தகைப்பழம், கெக்கரிக்காய் ஏதாவது ஒன்றினை (சிறிதளவாவது தினமும் உண்டுவரின் புகையிலையில்
காணப்படும் நஞ்சுத்தன்மையை (Nicolic) சமானப்படுத்தி (Neutralize)
Wrightia antidysentirica Trigomella Graceum Piper nig LIII) Euphobia incana Balota disticha Sinapis(mustaril) Nymphaea stellata Nymphaea albal Arum polyphyllu T1 II lacrorhizum Clitoria ternatica Bauhinia condila Trianthema Iloilogy Ila
தினவு, சுரப்பான்
 

கலப்பை 52 ) சித்திரை 2007 ( 57
உடலுக்கு தீங்கு ஏற்படுத்துவதை தவிர்க்கும் என்பது எனது சொந்த சோதனை அனுபவ 1757-1997) க் கண்டுபிடிப்பாகும்.
வே
வேம்பு Melia azaldi rachta வேர்க்கொம்பு WI11 HIILIII zingiber வேங்கைமரம் Percarpus bilobus
சாதாரண வேப்ப மரம்:
வேம்பு ஆறு வகைப்படும். அவையாவன - வேம்பு, சர்க்கரை வேம்பு, மலைவேம்பு, கறி வேம்பு, நில வேம்பு, சிவனார் வேம்பு ஆகும்.
வேம்பு, மலை வேம்பு ஆகியனவற்றின் இலை, காய், பட்டை ஆகியன கசப்புச் சுவையுடன் இருக்கும்.
சர்க்கரை வேம்பின் இலை, காய், பட்டை ஆகியன இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
நிலவேம்பும், சிவனார் வேம்பும் மூலிகை இனத்தைச் சார்ந்தவை.
தேரையர் கூறுகின்றார்.
வேம்பு
"ஒதரிய வேம்பை யுரைக்கின் கரமுடனே வாதமர மூலகன மந்தம்போத் - தீதா புதிரு மெரிபூச்சி குன்ம மொழியுஞ் சிதறுமலம் போகுமனத் தேர்!"
பழம் பெரும் மருத்துவ நூலொன்றில் காணப்படும் பாடல்கள்
"கிருமிகுட்ட மாந்தங் கெடுவிடஞ்சு ரங்கள் பெருமியவ சூரிகையின் புண்க - ளொருமிக்க நிம்பத் திலையிருக்க நீடுலகில் நீங்காமற் கம்பத் திலைத்திருக்கக் காண்"

Page 30
AN, KALI BIL I 52 || fill GTM y 2007 || 58
சர்க்கரை வேம்பு
"காபசித்தி யாருங் கடிய சிலோத்மமறுந் தூய விந்து நாதமிவை சுத்தியுமாந் - துரயவருக் கெத்திங்குங் கிட்டு மிலையருந்தில் வாயெல்லாத் தித்திக்கும் வேம்புதற்குத் தேர்!"
வேப்பம் பூ
"பித்தத் தெழுந்த பெருமூர்ச்சை நாத்தோடஞ் சத்தத் தெழுவமனந் தங்கருசி - முற்றியக வேப்ப மலகிருமி யினவயேகு நாட்சென்ற வேப்பமஸ் ருக்கு வெருண்டு!"
வேப்பெண்ணெய்
"வாதம்போம் பித்தமிகு மாறாக் கிரந்தியொடு மேதுகரப் பான்சிரங்கு முன்னிசிவும் - ஒதுடவின் நாப்ப ஆணுறுசுரமு நாடுசந் நியுந்தொலையும் வேப்பநெய் பென்றொருகால் வின்"
வேப்பம் பிண்னாக்கு:
"சந்தியுடன் வாதத் தலைநோய்போம் வாதமறும் முன்னின்ற தோஷ முரியுங்காண் - பண்ணுதமிழ் வல்லவரே வேம்பின்வழி வந்தபிண்ணாக் கென்றொருகாற் சொல்லவையம்போமோ தொலைந்து!"
சிவனார் வேம்பு
"சாய்குக்குமடிப் புண்பழம்புண் சர்மகுட்டம் பிளவை தீக்கடுக்கால் வன்பெருநோய் சிந்துமா - நோய்க்கு விதையாதி வேம்பினால் மெய்யழகு காலை லுதையாதி வேம்பினா லுன்"
 

-ക്രജ്ളരിക്
இப்பக்கத் தாளை அடியோடு வெட்டியெடுத்து கீழே உள்ள வினாவிற்கான விடையையும், தங்களது பெயர், முகவரி போன்ற ஏனைய விபரங்களையும் மறுபக்கத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தெளிவாக எழுதி இக் கலப்பை ஏடு வெளியிடப்பட்ட திகதியில் இருந்து ஒரு மாத காலத்தினுள் கிடைக்கக்கூடியதாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். சரியான விடையை எழுதும் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு பரிசுப்பொருளும், பரிசு வென்றவர் தேர்ந்தெடுக்கும் ஒரு நபருக்கு ஒரு வருடத்திற்கான கலப்பை வெளியீடுகளும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
இப்போட்டியில் ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதும்
ஆகும். ஒருவர் எத்தனை விடைத்தாள்களையும் அனுப்பலாம்.
ஆனால் விடைகள் எல்லாம் கலப்பை ஏட்டில் வெளியிடப்படும்
தாள்களிலேயே நிரப்பப்படல் வேண்டும். போட்டோ பிரதி எடுத்து
அனுப்பப்படும் விடைத்தாள்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
என்பதையும் அறியத் தருகிறோம்.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி :
KALAPPA P.O. Box 40, Homebush South, NSW 2140 AUSTRALIA
வினா ?
ஒரு டொலர் நாணயம் ஒன்று ஒரு கண்ணாடிப் போத்தலின் உள்ளே இடப்பட்டு போத்தலின் வாய் ஒரு றப்பர் தக்கையினால் இறுக்கமாக அடைக்கப்பட்டுள்ளது. போத்தலையும் உடைக்காமல், றப்பர் தக்கையையும் கழற்றி வெளியே எடுக்காமல் அந்த ஒரு |டொலர் நாணயத்தை வெளியே எடுக்க முடியும். எப்படி? (விடையை சுருக்கமாக மறுபக்கத்தில் அதற்குரிய இடத்தில் எழுதுக.)

Page 31
கலப்பை 52 () சித்திரை 2007) 60
முன் பக்கத்திலுள்ள வினாவிற்கான விடையை கீழே உள்ள கூட்டினுள் எழுதுக.
கீழே உள்ளவற்றை ஆங்கிலத்தில் தெளிவாக நிரப்பும்படி தயவுடன் வேண்டுகிறோம்.
Y TEJETIT (LILLIT :
அஞ்சல் விலாசம் :
தொலைபேசி இலக்கம் :
நான் போட்டி விதிகளை ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கிறேன்.
hsllL|ls|LLIsluslÍ filskslu || ||s) ;
நீங்கள் இப்போட்டியில் வென்றால், ஒரு வருடத்திற்கான கலப்பை வெளியீடுகள் இலவசமாக அனுப்பி வைக்கப்படுவதற்காக நீங்கள் தெரிவு செய்யும்
நபரின் பெயர்
அவரின் அஞ்சல் விலாசம்
 

கலாகீர்த்திபேராசிரியர் LITë
ப 3ண் ண் டக் கால த் தி லே' பாண்டிய நாட்டுக்கு வடஎல்விை' பாகச் சிறுமலைத் தொடரும் அங்கு உற்பத்தியாகிக் கிழக்கு நோக்கி ஓடிய வெள்ளாறும் விளங்கின. வெள்ளாற்றின் வடக்
தெற்கி:ே பாண்டியரும் ஆட்சி புரிந்தனர். வெள்ளாற்றின் தென்பகுதி ஒல்லை யூர் நாடு, அந்நாட்டில் ஒவ்னபையூர்
சோழரும்
ர் பொன். பூலோகசிங்கம்
முக்கியமான ஊர். அவ்வூர் இன்று ஒவியமங்கலம் என்று வழங்கு
கின்றது
ஒல்லையூர் நாட்டிற்கு உரிமை கொண்டாடிச் சோழரும் பாண்டி பரும் அடிக்கடி போர் புரிந்தனர். ஒருகாலத்திலே பூதபாண்டியன் ஒல்லையூர் நாட்டினைச் சோழ ரிடம் இருந்து மீட்டு ஒல்லையூர்

Page 32
கலப்பை 52 சித்திரை 2007 ( 82
தந்த பூதபாண்டின் என்று
புகழ்பெற்றான்.
பூதபாண்டின் பெருவீரன். சேரனும் சோழனும் ஒருமுறை ஒன்றாக இணைந்து பூதபாண்டி பனைத் தாக்கி வீழ்த்த முயன்றனர். போருக்குப் புறப்படுமுன் அவன் கூறிய வஞ்சினம் இன்றும் கிடைக் கின்றது. அதன்மூலம் துணிவையும் ஆற்றலையும் அறிய முடிகின்றது. சேர  ைன யும் சோழனையும் தான் வென்று புறங்கானச் செய்யாவிடின், தான் போற்றிய நான்கு செல்வங்களை இழந்தவனாகக் கடவதாக எனச் சபதம் எடுத்தான். அவன் போற்றிய அந்நான்கு செல்வங் களாவன, தன் இன்னுயிர் மனை யாளைப் பிரியாது இருத்தல், மக்களாற் கொடுங்கோலன் என வையப்பெறாது, செங்கோலன் எனப் போற்றப்படுதல், மையல் கோமான் மாவன், எபில் தலைவன் ஆந்தை, அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் உட்பட்ட நண்பர்களைப் பிரியாது இருத்தல், பாண்டியநாட்டு அரச காவலை நீங்காமல் இருத்தல்
GT ST LI JITTI,
அவன்
பூதபாண்டிபன் கவியுள்ளம் மிக்க வன். I T - II வஞ்சினப் பாட்டும் அகப்பொருள் பாடலும் சான்று.
அவன்
பூதபாண்டிபன் தன் மனை வியைப் பெரிதும் நேசித்தவன். அதனால்தான் அவன் வஞ்சினம் கூறியபோது, சிறந்த அவளினின்றும் நீங்குவேனாக
தனக்குச்
என்று முதலிற் கூறினான். பின்பு தான் செங்கோல், நட்பு, நாடு பற்றிச் சிந்தித்தான்.
தாய் பிள்ளையை ஏசித் திருத்து மனைவி கணவனைத் தழுவி நடப்பாள். ஆனால், பெண் தானபப் போலவும் மனைவியைப் போலவும் நடந்து கொள்வது அவசியம். !تاشي பாண்டியன்தேவி. அவள் அவன் வாழ்வில் - அரச வாழ்க்கையில் வகித்த முக்கிய இடமே பூத தன் தேவிக்கு வ ஞ் சினத்திலே முதலிடம் கொடுக்க வைத்தது. பின்னின்று பேணுவது பெண்மை என்னும் சான்றோர் கூற்றுக்கு இணைய ஒழுகிய கற்பினள் அவள்,
பூதபாண்டியன் தேவி சிறு பொழுது கூடத் தனியாக இருக்க தேர்ந்தாலே உயிர் நடுங்கி விடுவாள். இருவரும் இளமையின் இன்பத்திலே பூரித்திருந்தனர். இளமையிற் சிறந்த வளமை இல்லை. அவர்கள் இணைபிரியா அன்றில்கள். துணைபிரியா மகன்
வான்.
அத்தகையவன்
பாண்டியனைத்
றில்கள்.
காலன் அந்தகன். அவனுக்குத் தெரியவில்லை. பூதபாண்டியன் உயிரை அவன் பறித்துவிட்டான். அவின் தேவி துடித்தாள்: துவண்டாள்; புரண்டாள். எல்லா வற்றையும் செய்து தீர்த்துவிட் டாள் ஆற்றாமையின் எல்லைக்கே வந்து விட்டாள்; முடிவு எடுக்க வேண்டிய கட்டம் - கணவனை இழந்தவளுக்கு - காதலனைப் பிரிந்தவளுக்கு வரும் கட்டம்
 

ஒரு பிறவியிலே தமக்குக் கணவனாக வாய்த்தவர் மறுபிறவி யிலும் தொடர்ந்து கணவனாக வர வேண்டும் என்று எதிர் பார்ப்பது பெண்மையின் மாண்பு. இதனாலே அவர்கள் எடுக்கும் முடிபு அந்த அபிவிானையை ஒட்டியதாகவே அமையும், கணவன் உயிர் நீத்த போது, தாமும் உயிர்விடும் நிலையை அவற்றில் முக்கியமானதொன்று STSITILIT. உயிரைப் போக்கிய வேவால் மனைவி தன்னைத் தானே குத்திக்கொண்டு உயிர் விடுவதுமுண்டு. கனவன் தலையோடு தன் மார்பினையும் முகத்தினையும் ஒருசேர வைத்து மனைவி இறப்பது மு: ண் டு , தீப்பாய்ந்து மனைவி உலக வாழ்க்கையை நீப்பதுமுண்டு. தீப் பாய்தல் உடன் கட்டையேறல் எனவும் வழங்கப்படும். இந்நிகழ்ச்சி தான் வட இந்தியாவிலே “சதி 5ான வழங்கப்படுவதாம். முது மக்கட் தாழியைத் தனக்கும் இடமுடைத்தாக வனையும்படி குயவனை நோக்கிக் கணவனைச்
ifଶ0]Tit] ! ଟଂt
சுரத்திடை இழந்த மனைவி கூறுவதான செய்தியின் அடிப் படையிலே தாழியிலும் இறந்த
கணவனோடு மனைவி சேமிக்கப் பட்டாள் என்று கருத இடமுண்டு.
கணவனோடு மனைவி உயிர் விடாது தொடர்ந்து உலகிலே கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழ்வதுமுண்டு. அவ்வாறு கைம்மை நோன்பு மேற்கொள்ளு பவர்கள் கூடிய விரைவிவே
கன வ ைன ப் போய் ச் சேர
கலப்பை 52 ப சித்திரை 2007 D 83
வேண்டும் என்றே நோன்பு இருக்கிறார்கள். அவர்கள் தம் ஆசாபாசங்களை நசித்து ஒழித்துப் பற்றை அறுத்துக் கொண்டு ஓடும் மனோபாவத்தினர். அவர்கள் தம் அழகிய கூந்தலைக் களைந்து, அணிகலன்களையும் அலங்காரங் களையும் ஒழித்துக் கொள்வார்கள். அவர்கள் பரல் பரவிய நிலத்திற் ப பயின் றிக் கிடப் பார் தன் : உண்ணும் காலத்திலே உண்ணாது
தப்பி உண்டார்கள் உணவாகக் கொள்ளும் தானியம் நெல்லரிசியாக அல்லாது ஆம்பல் அரிசியாக இருக்கும்; நெல்லரிசியாயின் பழஞ்சோறாக இருக்கும்; அந்தச்சோற்றுக்குப் புளியிட்டுக் கடைந்த வேளைக் கீரை அன்றி வேறு கறி இராது. இவ்வாறு எல்லாம் தம்மை வருத்தித் தம் ஆசாபாசங்களை நசுக்கி இவ்வுலகிலே கனவனோடு வாழ்ந்த வாழ்க்கையை விரும்பி மறு உலகத்தில் அல்லது மறு பிறவியில் அதனை அடையும் நோன்பிகள் அவர்கள்,
கா:
அஸ்லி
பூதபாண்டியன் தேவி கைம்மை நோன்பினை அவலமாக - துன்ப tாகக் கருதியவன். கணவனுக்குப் பிறகு தொடர்ந்து அல்லல்பட்டுக் கொண்டு வாழ அவள் விரும்ப வில்லை. அதனால் அவளைத் är'ILITI (Tusi) முற்பட்ட சான்றோர் கருத்தினை அவள் ஏற்கவில்லை. பூதபாண்டியனுக்குப் பின்பு அரசுகட்டில் ஏறுவதற்கு வேறுயாருமில்லை என்று தீப்பாய் தலைத் தடுத்தார்களோ? அல்லது  ேத வி உடன் க ட்  ைட
தடுக்க

Page 33
கலப்பை 32 | சித்திரை 2007 64
ஏறுவதற்குப் பயப்படுவாள் என்று தடுத்தார்களோ? தானாக விரும்பி உடன்கட்டையேற மேற்கொள்ளப் L. r பின்பும் தடுக்க முற்பட்டவர்கள் எண்னத் தினைக் கூடத் தேவி ஐயுற்றான். கணவன் இல்லாத இடத்திலே தனக்கு இடமில்லை என்பதே அவள் முடிவி. அதனால் அவள் உயிர் துறக்க வேண்டும்,
ஒழுங்குகளைக J)፡ŠúúI [ ____
தீப்பாய அவள் பயப்பட வில்லை, தாமரைக்குளமும் தீயும் அவளுக்கு ஒன்றாகவே தெரிந்தன. பூதபாண்டிபன் தேவி உடன் கட்டை ஏறுவதற்குச் சுடுகாட்டிலே சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டி ருந்தன. அங்கு பினப்படுக்கை
கரிய முருட்டு விறகாலே அடுக்கப்
பட்டிருந்தது. தேவி நீராடிக் கூந்தல் விரித்த கோலத்தோடு உடன் கட்டை ஏறுவதற்கு வந்தாள். அவள் கண்களில்ே: கணவனைப் பிரிந்த துயரம்.
சுடுகாட்டை அவள் வெருட்சி புடன் நோக்கினான். தேவி பினப்படுக்கையிலே அக்கினியின் சுவாலையிலே ஐக்கியமாகினாள். அவள் உடன்கட்டை ஏறிய காட்சியை மதுரைப் பேராலவாயர் ஓவிய மாக்கித்
பூதபாண்டியன்
உள்ள முருக
தந்திருக்கிறார். தேவியும் கவியுள்ளம் படைத்தவள். தன்னை உடன்கட்டை ஏறவேண் டாம் என்று தடுத்த சான்றோ ருக்குத் தன் எண்ணக் கருத்துகளை அவள் தெளிவாகச் செய்யுளிலே
கூறியிருக்கிறாள்.
காதலரைப் பிரிந்து வாழ விரும்பாது உடன்கட்டை ஏறும்
பெண்களைச் சமுதாயம் நடுகல் எழுப்பி மதிப்பணித்து வந்தது. அந்நடுகற்கள் பாசதிக்கற்கள் என்று அழைக்கப்பட்டன.
உடன்கட்டை ஏறும் வழக்கம் பின்பு திசைமாறிப் போயிற்று. உடன்கட்டை ஏற விரும்பாத பெண்களைக் கட்டாயப்படுத்தி உடன் கட்டை ஏற்றுவிக்கும் வழக்கமும் உருவாகியது. அப் பெண்கள் மீது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கோபதாபங்களும் அவர் களுக்கு அளிக்க வேண்டிய ஆதரவினை அளிக்கும் மனப் பான்ன பின்ன பயும் அதற்கு முக்கிய காரணங்களாகக் கானப் பட்டன. இதனாலே காலனித்துவ ஆட்சிக் காலத்திலே உடன்கட்டை ஏறும் முற்றாக நீக்கும் தடைபுத்தரவு 829இல்ே பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ராஜா ராம் மோகன் ராய் முதலாய் அன்னேறய சமுதாய நோக்குடைய சீர்திருத்தவாதிகள் பலர் காரண மாக இருந்தனர். ஆயினும் சட்டத்தை மீறி ஆங்காங்கே விருப்புடனும் விருப்பின்றிக்
வழக கததை
கட்டப பாகவும் உடன்கட்டை ஏறும் வழக்கம் காலம் வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அண்மைக்
ஆதாரம்
Լ|IllեTենIII:
25, 7||, 2lf, 47, 24, 고5f)
அகநானூறு 25
 

கேளாய் மகளே கேளாய் . அம்மா
கெஞ்சலைக் கொஞ்சமே கேளாய் பாராய் செல்வமே பாராய் பாசமாய் என்னைப் பாராயே
மாமாவும் மாமியும் கேட்கினமே - வலிய மச்சானைக் கட்டிடத் தானல்லவே சொந்தமும் தூரவே விலகிடாது சொத்துமே கைவிட்டுப் போய்விடாதே
நோயால் தந்தையும் வாடுகிறார் - ஆக நோகவே கூடாது அவர்மனமே மாப்பிள்ளை வெளிநாட்டு மதனல்லோ மாலையும் கழுத்துமாய் வாழடியே
படித்துச் சொன்ன பாடமதால் - விதியென பணிவுடன் அவளும் சம்மதித்திடவே
காசையே கொட்டி விசுக்கிடவே
கல்யாணம் பெரிதாய் நடந்ததுவே

Page 34
கலப்பை 52 ) சித்திரை 2007 () 66
சீதனம் வெகுமதி இலட்சமுமாய் அள்ளி சீர்வரிசையும் நகை நட்டுமாய் மாடி மனையும் தோட்டமுமாய் மஞ்சளுக்கு மொய்யும் விலையானதே
சம்பந்த வருமானம் போதுமென்று - அந்தச் சம்பந்தியும் சாப்பாடும் காணுமென்று சாத்திரம் சடங்கும் பார்த்திடவே சாந்தி முகூர்த்தமும் முடிந்ததுவே
மறுநாள் விடிய மகள் - வந்து மடிமேல் விழுந்து கேவினாளே ஆதரவுடனே அனைத்து ஏனென்கவே அம்மா மோசம் போனேனென்றாளே
மாமனார் சொல்வழி தலையாட்டி - அவர் மகனோ கடமைக்காய்க் கைப்பிடித்து முடித்தபின் மீண்டும் பழையவளிடம் முடிவாய்ப் பறந்து போய்விட்டானே
நீதியோ இதுவென முறையிடவே நீட்டியே முழக்கினார் மாமனாரே யோகமே பார்த்துச் செய்திடாது யோசித்துச் செய்தால் பலனுமுண்டே
பலியிட்ட கடாவாய்ப் போன்வளை பார்த்ததுமே பரிதவித்து வாடுகிறாள் பந்தாவைப் பார்த்துப் பண்ணுவோர்க்கு
பாரடி இதுநல்ல பாடமடியே
- மனோ ஜெகேந்திரன்
 
 
 
 

லுதத்தமிழர்பண்பாடிருக்
நூல் மதிப்புரை -
நறன
தமிழ் ஞான முதன்மொழி தமிழினத்தார் உலகத்தின் மூத்த
குடியினர்; தமிழ் நாகரிகம் உலகத் தொன்முது நாகரிகங்களுக்கு வித்தானது. தமிழர் பண்பாடு உலக வரலாற்றில் தன்னை நிலைப் படுத்திக்கொள்ள செய்த ஒட்டு மொத்தமான முயற்சிகள்ை இலக்கண இலக்கியங்களாகவும் திருக்குறள் போன்ற அறநூல் களாகவும் பல்வேறு வாழ்வியல் கூறுகளாகவும் பயன்கலைகளாக வும் கவின் கலைகளாகவும் வெளிப்படுத்திய பெருமைக்குரியது. தமிழர் இல்லற வாழ்வும் போர் முறைகளும் கோட்டை கட்டும் கலையும் நகர மைப்பு சீர்மையும் கடலோடும் திறனும் பிற இனத் திற்கும் எடுத்துக் காட்டாக இலங்கியவை. கனக்கும் பாகை களும் கடவுட் கொள்கையும் எவரையும் வியப்பிலாழ்த்தும் செறிவார்ந்த செப்பமுடையவை. இவை தமிழ்ப்பெருமை சாற்றும் தற்பெருமைக் கூற்றுகளல்ல; இன மான வரலாறு இது வரலாறு இழந்த இன ம் நூலறுந்த
காற்றாடியாகிவிடும்.
எச்செயலும் வெற்றி பெற வேண்டு மா பின் அச்செபஸ் தொடங்குமுன் முந்தைய நிலைப் பாடுகளை அறிந்தே வருங்காலச்
69réfusé
ஒரு புள்நோட்ட ம் ணு
(Book Review - A Bird's Eyeview)
செயல் திட்டம் வகுப்பது முறை. மருத்துவர் மருந்து தருமுன் நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும் எ ன் கிற " ர் திருவன் ஞ வ ப் பெருந்தன க. உலகத் தமிழர் பண்பாட்டை ஆராப்பவரும் அதன் முத்துநிலைகளையும் நிகழ் நிலைகளையும் ஒப்பு நோக்கிய பின்னரே வருங்கால அறிவியல் உலகில் தமிழினம் தலை நிமிர்ந்து வாழ்தற்குரிய வாழ்வியல் பாங்கு களை வடிவமைத்துத்தர இயலும்,
இந்தப் பின்னணியில், உலகத் தமிழர்களில் பண்பாட்டு வினை நிலத்தைப் பண்படுத்திப் பயிரிட்டு நீரிறைத்துக் களையெடுத்துக் கண் போல் காத்து, உயர்ந்த உரமிட்டு விளைச்சலை எவரும் விபத்து போற்றும் வண்ணம் அறுவடை செய்திருக்கும் செயற்கரிய செயலே தமிழ்க்குயில் முனைவர் கா. கலிய பெருமாள் அவர்களின் உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் என்கிற இந்த வீறார்ந்த பெருநூல்.
சற்றொப்ப 12 பக்கங்களைக் கொண்ட இந்தப் பெரிய நூல் தமிழ்ப் பண்பாட்டுத் தலைப்பில் துண் மாண் துழைபுலப் பன் மாண் சிறப்புடைய பேராசிரியர் கனின் ஆராய்ச்சி நுட்பங்களை, திறன் பப் புெ நுட்பங் கன அளத் தமிழுலகிற்கு முதன் முறையாக

Page 35
கலப்பை 52 சித்திரை 2007 ( 83
முழுமையாக வடித்துத் தந்திருக் கிறது. தமிழரின் மாட்சி, இடைக் கால மீட்சி, வருங்கால மாட்சி கவிகளத் தொகுத்தும் வகுத்தும் தமிழர் வாழ்வியல் சட்டங்களாகத் தமிழினத்திற்கு நின்று நிலைத்து நீடித்துப் பயன்படும் கொண்ட ய விளித் திருக்கிறது. நூ வின் பி த் திறந்ததும் இம்மாபெரும் பணி தொடங்கிய முன்னுரை, அருஞ் செபஸ் செப்ப பெருந்துனை பெற்றியாளர் பட்டியல், நூலினுட் புகும் தோரன வாயில் ஆகிய வறறைக கானானா',
ஆபிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவல் அன்றே
என்பது பண்டையோர் மரபு. இந்நூலும் ஆயிர முகத்தான் அகன்றது. இதற்குப் பாயிரமாக அமைந்ததே தோரணவாயில். இந் நூலின் உட்கருத்தை, உள்ளார்ந்த செறிவை அடியில் தெரியும் சிறிய உருவம் போல் தெரியக்காட்டு கிறது. இவை பண்பாட்டு முரசுகள் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
1. தமிழர் பண்பாடு - ஒரு
விளக்கம்
தமிழர் பண்பாடு மலரா?
if all
3. தமிழர் பண்பாட்டின் முதிர்ச்சியும் சிறப்பும்
4. தமிழர் பண்பாட்டின்
தனித்தன்மைகள்
5. தமிழர்களின் அகப்புறக்
குறைபாடுகளும் தீர்வுகளும்
இந்த ஐந்து சிறிய கட்டுரைகள் பெரிய நூலின் உட்கருத்துகளை வெள்ளோட்டமாக விதந்துரைக் கின்றன. நூலின் உன்னே என் னென்ன செய்திகள் பேசப்படு
கின்றன என்பதை பேசும் பட மாகத் திரையிட்டுக் காட்டுகின்றன.
தொண்ணுறு கிட்டுரைகளைக் கொண்ட இப்பெருநூல் பத்து இயல்களைக் கொண்டது. முதல் ஆறு இயல் வரலாற்றுப் பார்வை யிலும் அடுத்த நான்கு இயல்
வாழ்வியல் பார்வையிலும் வகைப்
படுத்தப்பட்டுள்ளன,
"ஒரு நாட்டை வென்று
அடிமைப்படுத்த வேண்டுமா?
படை வேண்டாம் படைக்கலங் களும கொலைக்கணங்களும்
வேண்டாம். அந்நாட்டின் வர லாற்றை அழித்துவிடு. அந்நாட்டு மக்கள் தாாகவே உனக்கு அடிமைகளாகி விடுவர்" என்பது மேனாட்டுப் பழமொழி. ஆப்பி ரிக்க மக்கள் கூடி வாழ்ந்தாலும் கல்வியறிவும் வேந்தனராட்சியும் கொண்ட வரலாற்றுப் பின்னணி இல்லாததால் எளிதில் வேட்டை பாடப்பட்டு அமெரிக்க சந்தை களில் அடிமைகளாய் விற்கப் பட்டனர், கோட்டை கட்டி கொடிபுயர்த்தி படைநடத்திய பண்டைத் தமிழ் வேந்தர் இமயம் மற்றும் மேற்கே பனை நாட்டிலும் கிழக்கே தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் குடியேற்றம் கண்ட பேரரசராக நெடுங்காலம் விளங் கினார், கோட்டை கட்டி போர்ப் பயிற்சி தந்து அண் ைகடலில் களஞ் செலுத்திய காலம் போப் போர்ப் பயிற்சி மறந்து கோவில் கட்டி அடியார்க்கு அடியா ராப் நாள்: வருண ஆரியச் சூழ்ச்சியில் கல்விக் கண் இழந்த தமிழினம் அடிமை வரலாற்றைக் காண நேர்ந்தது. இத்தகு மாட்சியும் வீழ்ச்சியும் உள்ளடக்கிய வரலாற்றைத் தமிழர் அறிந்தால்தான் பண்டு தொட்டு வ எர்த்து 3 ந் தி
 

நற்பாங்குகள் பண்பாட்டு மீட்டுரு வாக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது புலனாகும். எங்கெங்கு என்ன காரணத்தால் வீழ்ச்சியுற்றோம் என்பது தெளி வாகும். அந்த வரலாற்றுப் பார்வை என்னும் நோக்கில்
வரலாற்றில் தமிழர் பண்பாடு 2. இலக்கியத்தில் தமிழர்
Lor T:
நாட்டுப்புறவியலில் தமிழர் பண்பாடு
அறக்கோட்பாடுகளில் தமிழர் பண்பாடு
ජී.
சமய வாழ்வில் தமிழர் பண்பாடு
1. ஒப்பனைக் கலையில்
தமிழ் பண்பாடு
என்னும் -2. இயல்கள் விரிவாகப் பேசப்படுகின்றன. இந் நூல் கலைக்களஞ்சியப் பாங்கில் தொகுக்கப்படவில்லை. குறிப்பிட்ட இனத்தாரின் வாழ்வியலில் கானப்படும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், நடப்புகள் (சடங்கு கள்), விழாக்கள், அன்றாட வாழ்வின் பொதுப் பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றை உள்ளது உள்ள படி வகுத்துத்தரும் கட் டுரைத் தொகுப்புகளை அக" நிரலில் தருவது கலைக் களஞ்சி பத்தின் நோக்கம் இந்து வின் அணுகுமுறை முற்றிலும் வேறானது தமிழர் வாழ்வியலில் தொன்று தொட்டு நிலவிவரும் பண்பாட்டுக் கூறுகள் விாவை என்பது தமி ழர்க்குத் தெரியும். அவற்றுள் இன்றும் பயன் கொள்ளத்தக்கவை ாவை, பின் பற்றத்தகாதவை எவை, அயலவரால் புகுத்தப்
கலப்பை 52 | சித்திரை 2007 ( 83
பட்டவை எவை, அயலவர் பண் பாட்டு ஊடாட்டத்தில் சிதைந்து திரிந்தவை எவை, உண்மையான தமிழர் பண்பாட்டை திரித்தும் மறைத்தும் தாழ்த்தியும் சீர் குலைத்த சீர்கேடுகள் எவை, அவற்றை மீட்டுருவாக்கம் செய்து நடைமுறைக்குக் ;TT gaar Li Taal புதிய பண்பாட்டு நெறிகள் எவை என்றெல்லாம் திறனாய்வு செய்து சிந்தை தெளிவிப்பதே இந்நூலின் நோக்கம். தமிழினத்தை ஒற்றுமை
மிகுந்த இனமாக புதிய பண் பாட்டு வாழ்வியல் நடைமுறை ால் பிணைக்கும் அரிய
முயற்சிக்கு வழிவகுப்பதே இந்
நூலின் புதிய அணுகுமுறை. அத னோல் கலைக்களஞ்சியப் பாங்கில் தொகுக்கப்படாமல் திறனாய்வு நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நோக்கில் தமிழர் பண்பாடு திறனாய்வு செய்யப் பட்டு வருங்காலத் தமிழர்க்குப் புதிய வாழ்வியல் நெறிகளை நிலைத்த சட்டங்களாக வகுத்துத் தருவதால் களஞ்சியம் என்றும் பெயர் தரப்பட்டுள்ளது. முறை மன்றத்தில் நடுவர் ஆய்ந்து தீர்ப்பு சொல்வது போல் பண் பாட்டு நிலைப்பாடுகளில் தெளி 3ான முடிவுகள் எடுக்கப்பட்டி ருப்பதால் இந்நூலில் ஏரான அணுகுமுறை | logical tւրբrticli) காணப்படுகிறது. இதனை முறை sig styr) assaySussm") (court functi{I} என்பர். பல்கலைக் கழகங்கள் தொகுக்கும் கலைக் களஞ்சியத்தில் க்களிடையில் நிலவும் அன் ற "டப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளைத் திறனாய்வதற்குப் பெரிதும் தக்கவர். அந்நூலைக் கண்ணுறும் அறிஞர் L. Glo () tři இந்நூல் பல்கலைக் கழகங்களால்

Page 36
கலப்பை 52 | சித்திரை 2007 D 70
தொகுக்கவியலாத பாங்குடையது என்று கூறுவதன் நோக்கம் இதுவே.
தந்தை பெரியார் மூடநம்பிக்கை களைத் தனித்து நின்று தகர்த் தெறிந்தார். இவை பல்கலைக்காக வெளியீடுகளாக வந்திருந்தால் எதிர்பார்த்த வினைச்சலைத் தந்திருக்காது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் தெருவில் நின்று மேடை போட்டுப் பேசபாட் டார்கள். கோயிலில் நுழையும் போராட்டமோ தீண் டாமை எதிர்ப்புப் போராட்டமோ செய்ய மாட்டார்கள். தந்தை பெரியார் குமுகாயப் பின்னடைவுகளையும் அஞ்சாமல் திறனாய்ந்தார்; திருத்தினார். இத்தகு முயற்சியை இந்நூல் செயற்படுத்திக் காட்டி யிருப்பதால் இதற்கு உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
த மி у її ட விண் பாட் டின் மீட்சிக்கும் மீட்டுருவாக்கத்திற்கும் இந்நூல் குரல் கொடுத்திருக்கிறது.
அப்படிக் குரல் கொடுத்த கட் டுரைகள், தமிழர் பண்பாட்டில் வாழ்வியல் பார்வை என்னும் பாங்கில்,
7. தமிழர் பண்பாட்டின் மீட்டுருவாக்கம் ஏன் ?
8. தமிழர் பண்பாட்டில் உளடாட்டங்களும் பின்னடைவுகளும்
4. இல்லற வாழ்வில் தமிழர்
பண்பாடு
(). தமிழர் வாழ்வில் புதிய
È in Ir(
என்னும் த ன ல ப் புக ைஎ க் கொண்ட இறுதி நான்கு இயல் களில் புதியதோர் பண்பாட்டுப் படையலாக தமிழுள்ளங்களுக்கு சிந்தைக்கினிய விருந்து படைத் திருக்கிறது.
அரசியல் முதல் அன்றாட வாழ்க்கை வரை தமிழர்தம் மனம் என்னும் வாயிலில் முளைத்த கன எ களைக் கல் லியெறிந்து கரும்பும் செந்நெல்லும் விளையும் கழனிகளாக மலர்மணம் பரப்பும் பூங்காக்களாக மாற்றும் முயற்சி பண்பாட்டு மீட்டுருவாக்கம் என் னும் இயலில் பேசப்படுகின்றன.
அயலவர் ஊடாட்டங்களால் விளைந்த பண்பாட்டுச் சிதைவு கள், சீர்கேடுகள், பின்னடைவுகள் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டுள்ளன.
இன்றைய உலகத் தமிழர் வாழ்வில் - மொழியை மறந்து விட்டவர்கள், பண்பாட்டுத் தொடர்புகளால் பிணைக்கப் படாதவர்கள், சாதி வேறுபாடு களால் நிலையாக ஒற்றுமை குலைந்தவர்கள், சாதிக்கொரு சடங்கு முறையும் வீதிக்கொரு வாழ்க்கை முறையும் கொண்ட வர்கள், கல்வி பொருளியல் சாதியின் தகுதி போன்றவற்றால்
என்றும் தம்மைப் பிரித்தே நினைத்து, ஒப்புக்காக மேடை களில் ஒன்றேகுலம் ஒருவனே
தேவன் என்று பேசுபவர்கள், தம்மைச் சாதிப் பெயரால் அடையாளங்காட்டி, தமிழன் என்று அறிமுகம் செய்து கொள்ளத் தயங்குபவர்கள் ஆகிய வர்களுக்கும் சிந்தை தெளிவிக்கும் - விளங்கச் சொன்னால் - பித்தம் தெளிவாக்கும் மருந்தாக - தமிழ் ரனைவர்க்கும் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே வகையான பழக்க வழக்க நடப்பு சடங்கு) முறைகளை வலியுறுத்துவதாக - தமிழினத்தைத் திட்டமிட்டவாறு வழிகாட்டி வழிநடத்துவதாக -
இல்லறத்தில் தமிழர் பண்பாடு தமிழர் வாழ்வில் புதிய பண்பாடு
 
 

என்னும் இரு இயல்கள் படைக் கப்பட்டுள்ளன.
தமிழர் திருமண முறைகளும், தமிழர் நீத்தார் கடன் நெறிமுறை களும் ஏற்கெனவே தமிழ்க்குயிலா ரால் தனி நூல்களாக வெளியிடப் பட்டு உலகனைத்தும் வாழும் தமிழர்களை வழிநடத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி,
தமிழினத்தில் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகப் பிரித்தாளுவதற் காகப் புகுத்தப்பட்ட சாதியு னர்வை தமிழனாகப் பிறந்த ஒவ் வொருவனும் தன் நினைவிலிருந்து
நிலை யாகத் தூக்கியெறிய வே ண் டு ம் யாரும் த ன் பெயருக்குப் பின்னால் செட்டி
பார் என்றோ முதலியார் என்றோ ஐயர் ஐயங்கார் என்றோ சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்ள லாகாது. மாற்றாக மேனாட்டார் குடிப்பெயர் (Burname) இட்டுக் கொள்வது போன்றும் பண்டைத் தமிழர் குடிப்பெயர்களால் குறிப் பிட்டது போன்று இயற்பெயரோடு மூவேந்தர் பெயர்களில் ஒன்றை யேனும் பொருந்தும் வகையில் தமிழரின் மரபார்ந்த பெயர் வகைகளில்) சேர்த்துக் கொள்ள லாம் என்னும் கருத்து தமிழரின் இயற்பெயரும் குடிப்பெயரும் என்னும் தலைப்பில் கூறப் பட்டுள்ளது. இது வரவேற்கத் தக்க நல்ல வழிமுறையாகும்.
தமிழர் வரலாற்றில் காணப் படும் மற்றொரு வீழ்ச்சிப் படுகுழி பல்வேறு சில்லறைத் தெய்வ வழிபாடுகள், சாதி வேறுபாடுகளை நிலைநாட்டும் வகையில் சாதிக் கேற்ற உருவ வழிபாட்டு முறைகள் நீடிக்கின்றன. பிராமணர்கள் வெங்கடேசுவரர் கோயில் கட்டி
கலப்பை 52 [ சித்திரை 2007 D 71
வேத நெறிகளை வாழ் வித்து வேதாந்தத்தை வளர்ப்பவர்க ளாகவே இருக்கிறார்கள். இவர்கள் சிவனை போ முருகனையோ வழிபடுவதில்லை. அன்பே சிவம் என்பதிலும் பிராமனர் தவிர்த்த இந்துக்களைச் சமமாக நடத்த வேண்டும். அன்பு செலுத்துபவர் களோடு இரண்டறக் கலந்து பழகி இந்துக்களிடையில் ஏற்றத்தாழ் வில்லை என்பதை நிலைநாட்டு வதிலும் நம்பிக்கையில்லாதவர் களாக வாழ்ந்து வருகிறார்கள். மாரியம்மன் கோயில் கட்டுபவன் இந்து மதத்தின் சூத்திரன். அந்தக் கோயிலுக்குப் போகும் பிராமணர் வழிபட மாட்டான். ஆனால் பிராமணர் வழிபடும் கடவுளை எல்லோரும் வழிபட வேண்டும். பிராமணர் திருக்குறளைப் படிக்க மாட்டான். தேவாரம் திருவாசகம் ஒதமாட்டான். அவன் ஓதும் சுப்பிர பாதத்தை, பகவத்கீதையை, வேதமந்திரங்களை அவனினும்
தாழ்ந்த சாதியார் ஆனாலும் கேட்க வேண்டும். ஆதலால்
இந்துமதம் சாதியால் பிரித்தாளும் சூழ்ச்சியை மூவாயிரம் ஆண்டு களாகப் பின்பற்றி வருகிறது. மக்களைப் பிரித்தே வைக்கிறது. ஒன்று படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. அதற்குச் சாதி மட்டு மன்றி பற்பல சில்லறைத் தெய்வங் களின் உருவ வழிபாடுகளும் காரணமாகிறது.
கிறித்தவரும் இசுலாமியரும் உருவ வழிபாட்டைக் கடந்து ஒரிறை வழிபாட்டுக்கு வந்ததனால் அவர்களிடையே இன ஒற்றுமை வளர்ந்தது. இன ஒற்றுமை வளர்ந்த தால் பண்பாட்டுப் பிணைப்பு வளர்ந்தது. பண்பாட்டுப் பினைப் பால் பொருளியல், வாழ்வியல், கல்வியறிவியல், தொழிலியல்

Page 37
フ
கலப்பை 52 1 சித்திரை 2007 )
முன்னேற்றங்கள் படிப்படியாக வந்தெய்தின. உலக நாடுகளிடை யில் கிறித் தவரும் இசுலாமியரும் நன்கு வளர்ச்சிபெற்ற புகழார்ந்த இனத்தவராக விளங்குகின்றனர்.
இந்துக்களிடையில் இத்தகைய வளர்ச்சியை எத்தனை நூற்றாண் டானாலும் காணமுடியாது. ஒன்று கூடும் வாய்ப்பின்றி சாதியாலும் வில் எனற தெய்வங்களாலும் பிரிக்கப்பட்ட இனம் முகத்தில் சிரிப்பைக் காட்டினாலும் அகத் தில் உள்மனத்தில் சாதி வேறு பாட்டு நெருப்பைக் கக்கும் சில்லறை தெய்வ வழிபாட்டு முறை வேறுபாடுகள் என்னும் எரிமலைக் குமுறலைப் பெருமூச்சு எரிமலையாக வெடித்தெழச் செய்யும்,
இவற்றுக்கு என்னதான் மாற்று, எதுதான் வழிவகை என்று சமயத் தலைவர்களோ அரசியல் தலை வர்களோ சிந்திக்கவில்லை. நாட்டு முன்னேற்றம் ஐந்தாண்டுத் திட்டங்களில் இல்லை. நாட்டு மக்களின் ஒற்றுமையுணர்வில், ஒருமைப்பாட்டில்தான் உள்ளது. இதற்காக சாதி ஒழிப்பு, சில்லறை தெய்வவழிபாடு மறுப்பு நெறிகளை புணர்த்தி நல்லாற்றுப்படுத்துவதற் காக வள்ளலார் உணர்த்திய ஒளி வழிபாட்டு நெறியே தமிழரின் இறை வழிபாட்டு நெறியாக இந்நூலில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளது.
சமயத்துறையில் ஒளி வழி பாடும், வாழ்வியல் துறையில் சாதி வேறுபாடற்ற இனஒற்றுமை வளர்க்கும் பண்பாட்டு நெறிகளும் வளர்ந்தால் உலகெங்கும் வாழும் தமிழினம் போட்டி மிகுந்து உலகில் வீறு பெற்று எழுச்சி கொள்ளும், பேரும் பெருமையும்
சேர்ந்து வரும், ஊரும் நாடும் உவப்படையும் என்பதை இந்நூல்
உறுதிப்படுத்துகிறது. தமிழர் கனவை பயன்களாக்கும் ஒளி
காட்டும் கலங்கரை விளக்கம் இது.
உலகத்தமிழர்கள் அனைவரும்
ஒரு கு ைட பின் கீழ் வர வேண்டும் உட்பகை விலகி
ஒற்றுமை உணர்வோடு சேர்ந்து வாழவேண்டும். தமிழர்கள் அருள் பொருள், கல்வி கேள்வி ஆகிய வற்றுடன் வழிபாட்டிலும் வாழ் வியல் ஒழுகலாறுகளிலும் பழந் தமிழரின் பகுத்தறிவுத் தாக்கம் விளங்க வேண்டுமென் பதில் தமிழ்க்குயில் கா. கலியபெருமாள் மிகுந்த ஆர்வங்காட்டி செயல் பட்டுள்ளார். இந்த நூல் தமிழின பண்பாட்டின் வரலாற்றுப் பெட்டகம், தமிழர் வாழ்வியல் பற்றிய சட்டப் புத்தகம், வீடு தோறும் இருக்க வேண்டிய ஒளி விளக்கு - இத்தகைய பயனுள்ள வழிகாட்டி நூலை தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தொகுத்தளித்த மலேசியத் தமிழ்க்குயில் கா. கலிய பெருமாள் உலகத்தமிழர் மனங்
களில் இடம் பிடித்துவிட்ட தமிழ்ச்சான்றோர்களில் ஒருவர் ஆகின்றார்.
உலகத்தமிழர்
பண்பாட்டுக் களஞ்சியம்
lieu Rm I2Ill) அஞ்சல் செலவு உட்பட)
கிடைக்குமிடம்: கலையரசு எண்டர்பிரைஸ் IA, லாலுவான் கங்கை பாரி I, தெலுக்குரின், 3000 ஈப்போ, பேராக், தொலைபேசி (15 - 253327

Gnamann Agt Creations
Graphic Designers, Digital Printers & Artists
gagិgo
Phone: (O2) 992O OBOB 0400 B2B 52 e-Mail gnaanatsoptusnet.com.au
உங்கள் அனைத்து ஓவிய வேலைகளுக்கும், பிரினிடிங் தேவைகளுக்கு
»ಗು ಶ್ರೀ ಹಿ6ಕ
愛クリ%の2。 (○る YAVAY ت n,
. -- (μSίονεγS λαοερί οι Y SkίίίS
3 16ook Publiskité) GEOok ) AO LE P, ZE (Cottoxy MOovsk -
teatres O 1E25 APIKeys & 1E-oS-Eevrs of O 16vrock-uvre & strubexas Zsests متخصيصل ات OAkL KMaks of staties OTA-titute جمجتمعونخضة oy
Ses Čs
rts g Seation Out ചC;
329, Arcot Road, Kodambakkam, Chennai - 600 024 Tel: 91 44 237.23182, 2473 5314 Mobile : +9194443.571773 Email : mithrabooks.gmail.com

Page 38
|
Access to hospitals ..., Malnutrition .......... Medicine ................,
Such is the plight of Ta
Tens of thousands have been I DES
OWER THE PAST 6 YEARS
AMAF has been providing assistan facilities in NorthEast (NE) Sri Lank
Il AMAF has financed the establish ITE
the art pathology laboratory in NE Xray unit, 6 patient transport veh (CCU), intensive care unit (ICU) a Inobile dental clinic and provided e
YOU CAN MAKE A DIFFERENCE TO THE
by Contributin
UPCOMING MAJOR EVENTS FORT
| AMAF Clini Cal SymposiLITT1 & Chario "Muththami || Maalai-7" Cultura | PrO
We thank you for C
Contribution could be made one
MATSran Mei
sit Tiss: 55 N
Telephone: (O2).964
For TTET DIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DIFFICLlLT
. . . . . . RAMPANT ....... IN SHORT SLPPLY
T || S || ||Orth East Sri Laska
nade homeless and destitute in the [ Of Sri Lanka
:e to Wards impro Wing The di Call and health
nt and COT. Tissioning of the first state of Sri Lanka. It has also dOnated a Tobile icles, equipment for coronary care unit ind operating theatre. AMAF has setup a quipment to improve the dental care,
: HEALTH AND WELL BEING OF OUR PEOPLE J to A MAF projects.
HIS YEAR
ty Banquet (Melbourne) - 11 August 2007 gra T1 (Sydney) — 8 December 2007
மருத்துவ உதவிநிதியம் Cal Aid Foundation Inc (AMAF)
O Il tin Luing yOLIIT SLIpp Drt.
AMAF by drawing a cheque in favour of
TAMFOTO
VELE, Srathfield, NSW 2135 PEI
on visi WWW.aTiaf.org
శ్లో Made by: MTHRA, Chennai- 24 small, mihrabakuggmailton
ܡܩ ܲ