கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2008.10

Page 1
LD 15 g.
58 556T
[]. []. 公 | | 公 Y
 


Page 2
AUSTRALIAN MEDICTIM, W II)
FOUNDATION Ltd. (AMAF) AC F D
-|BN 4)/ Y3() W,5?" 7"/5
33 Llau radilo Alve, Strathfield. NS' ? || 35. Ar stralia. Phe F si 428ff
அவசரகால மருத்துவ நிதி சேகரிப் -ே Radiothon 2009
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் ஒரு நலன்புரிச் சங்கமாக (charity aaLLaLLmmmLLLLLLS TTT TTTTTTTTS TTTTTTT TTS LLLLLLaLLLLL CLLLLLLaL LLLLL LGGLLLLLLL IEvelopment (ACFI)) என்ற அமைப்பிலும் அங்கத்துவம் வகிக்கின்றது. கடந்த 8 வருடங்களில் எமது அமைப்பு (AMAF) கிட்டத்தட்ட $1.4 மில்லியன் டொலர்களை சேகரித்து இலங்கையில் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் வாழும் எமது தமிழ் மக்களின் மருத்துவத் தேவைக்காக வழங்கியுள்ளது. குறிப்பாக போர்ச் சுழலினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தது அல்லல்படும் மக்களுக்கு அதிகளவில் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.
எமது அமைப்பின் கோரிக்கையின் பேரில் சில சர்வதேச நவன்புரிச் சங்கங்கள் நேரடியாக $1.2 மில்லியன் டொலர்கனை நிதியுதவியாக வடக்கு-கிழக்கு மாநிலங்களுக்கு வழங்கியிருக்கின்றது. அத்துடன் எமது அமைப்பு கிட்டத்தட்ட $3.0 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள், சுட்டில்கள் என்பனவற்றை இங்கு சேகரித்து அனுப்பியுள்ளது. எமது அமைப்பு பல மருத்துவ, சுகாதார சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பல மருத்துவ, பல் வைத்திய, சுகாதார நிபுணர்கள் வடக்குகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று அவர்களது சேவைகளை வழங்கியதுடன், அங்குள்ளவர்களை பயிற்சியளித்திருக்கிறார்கள். எமது அமைப்பு கடந்த 8 வருடங்களாக தொடர்ச்சியாக அல்லல்படும் எமது மக்களுக்கு உதவிவருகின்றது என்பது பெருமைக்குரியது. சுனாமியின் போது எமது அமைப்பு பல வழிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியிருக்கிறது. இது உங்கள் உதவியால் மட்டுமே சாத்தியமாகியிருக்கின்றது.
எமது வருடாந்த பெரிய வெள்ளி தின Radioth01 நிதி சேகரிப்பு வருகிற ஏப்பிரல் மாதம் 10ம் திகதி நடைபெறுகின்றது. இது வழமைபோல சிட்னியிருந்து இயங்கிவரும் இன்பத்தமிழ் ஒலி வானொலியூடாகவும், மெல்போர்னிலிருந்து இயங்கிவரும் 3CR வானொலியூடாகவும் காலை 9மணி முதல் மாலை 6 மணிவரை இந்த நிதி சேகரிப்பு நடைபெறும். நாம் சேகரிக்கும் நிதி உள்நாட்டில் இடம்பெயர்ந்து அல்லல்ப்படும் எமது தமிழ் மக்களின் அவசர மருத்துவதேவைகளுக்கு வழங்கப்படவிருக்கின்றது.
எனவே உங்கள் பங்களிப்பை பெரிய வெள்ளி தினதன்றோ அல்லது எம்முடன் தொடர்பு
கொண்டு உங்கள் அன்பளிப்புக்களை Credit card மூலமோ, காசாகவோ, காசோலையாகவோ எமக்கு அனுப்பி வைக்கலாம். காசோலைகளை'Australian Medical Aid Foundation என்ற பெயரில் எழுதவும்
எம்முடன் தொடர்பு கொள்ள தொலைபேசி: (02}96424860 அல்லது 04:17277862
gysárgigpaigurf:33 Llandilo Ave. Strathfield, NSW2135
எமது மக்களுக்கான மருத்துவதேவை இருக்கும் வரை அவுஸ்திரேலிய மருத்துவ உதவிநிதியம் தன் சேவையைத் தொடரும்.
CARING FORTAMILS IN NEED"
 
 

/ மனித மனத்தை உழுகின்ற ཡོད༽ கலப்பை உலகத் தமிழர் தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
கலப்பை அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
GashūLGIJE: AUS. $2.50
ஆண்டுச் சந்தா உள்நாடு: Aus, $10.00 வெளிநாடு: Aப3, $20.00
பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்புகொள்ள.
Tel:(612) 9758797O
KALAPPA P.O. Box 4040, Homebush, NSW 214) AUSTRALIA E-mail: kalappaigtail. CorI Internet: WWW, kalappai.org
ழ் வடிவமைப்பு மித்ர ஆர்டிஸ் த கிரியேஷன்ஸ் 91 - 44 - 2372. 3182 24735,314
E-mail: contact irrithra.co.in
أمر WWW, Tithra.co.in ܢܠ
20_ნitწნm...
உழவன் உள்ளத்திலிருந்து.2
ஒரு கன்றுக்குட்டியின் கதை. 4
Fyp5gULITULT UTL6................5
எலுமிச்சம் பழத்தின் மகிமை.7
சுத்த போசனமும் சுவைபடச்
சமைக்கும் முறைகளும் . 27
உன் உண்ணாத விரதம் கண்டு. 32
வாவா வா குழந்தை இயேசுவே. 35
ஈழத்து சைவமும் பாரம்பரியமும் .38
அம்பித்தாத்தா. 44
முடிவு உண்டா?. + + ... . . . . . . . . 45ه
மெக்டொனால்ட்ஸ் தந்த பரிசு .52
சித்தாந்தமும் சிந்தனாவாதமும் . 83
ஓம் சாந்தி இறைஞானத்தில் நம்பிக்கை .70
bITabb...................... . . . . . . . . . . . 72

Page 3
தேன்சுடு கலைக்கப்படும்போது பல திசைகளில் பறக் கின்ற தேனீக்கள் இறுதியில் ஒரே மரத்தில் சென்று கூடுகட்டும் முயற்சிக்காய் கூடுகின்றன. கலைக்கப்பட்டோம் என்பதற்காகக் களைத்துப்போவதில்லை.
இன்று தேசந்தேசமாய்ப் பறந்த தேனீக்கள் மீண்டும் கூடுகின்ற நிகழ்வு இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. பறந்து வந்தவர்களே நாம். மறந்து வந்தவர்கள் அல்ல. இது எமது தமிழ்ச் சமுதாயம் உலகளாவிய ரீதியில் உணர்த்தப்பட்ட உண்மையாகிவிட்டது.
தார்மீகக் கடமை என்பது இதுதான். தாய் மீதான கடமை தான் இந்தத் தார்மீகக் கடமை. எமது கூடுகள் கலைக்கப்பட்ட தேசத்தில் மக்கள் போராடி வருகின்றார்கள். வன்னி என்கின்ற நிலப்பரப்பில் இன்று அல்லல் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியும் விதமாக மக்களின் வாழ்க்கை இருக்கின்றது. உதவிக்கரம் நீட்ட முடியாமல் கைகள் உடைந்த நிலையில் எம் உடன்பிறப்புகளின் அன்றாட வாழ்க்கை அமைந்திருக்கின்றது. எம்மால் செய்ய முடிந்த உதவி அந்த உதவியேதான். குரல் கொடுக்கும் உரிமை புள்ள தேசங்களில் எமது வாழ்க்கைப்பயணம் போய்க்கொண்டிருக் கின்றது. பேசமுடியாதவர்களின் துன்பங்களைப் பற்றி எம்மால் பேசமுடிகிறதே. அந்தச் சுதந்திரத்தை நாம் எம் மண்ணின் சுதந்திரத்திற்காகச் செய்துகொண்டிருக்கின்றோம்.
மண்ணின் சுவையறியாமல், புலம்பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்ந்து வந்த இளைய சமுதாயம் இன்று அணிதிரண்டு
 

EFFAJLIGIOU SB & ELLU 2008 & 3
முன்னே சென்று கொண்டிருக்கின்றது. அந்த இளைஞர்களுக்குத் தலைவனங்கக் கடமைப்பட்டிருக்கின்றோம் நாம் எமது எழுச் சியை ஒருமைப்படுத்தி உரிமைக்குரல் எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒலக்குரல் கேட்காத காதுகள் உலகத்தில் இருக்க முடியாது.
இப்போது எமக்குத் தேவை என்ன செய்யலாம் என்பதன் ஒரு தொலைநோக்குச் சிந்தனை என்ன செய்தோம், எப்படிச் செய்தோம் என்பது ஆறிய கஞ்சியாகிவிட்டது. இன்றைய பசிக்கு ஆறிய கஞ்சிகள் ஆறுதல் தராது. இன்று இளைய சமுதாயத்தினர் பல புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு கவனந்திருப்பும் கடமையில் இடம்பெற்றிருக்கின்றார்கள். அவர்களின் சிந்தனை எம் மண்ணின் துயரங்களை மற்றைய இனத்தவர்களுக்குத் தெரிய வைப்பதல்ல புரிய வைப்பதே
காக்கப் புறப்பட்ட கரங்களுக்குக் கை கொடுப்பதும் எமது கடமைதான். பாருக்காகத் தங்கள் வாழ்க்கையை, வசதிகளைத் துறந்து வீறு கொண்டு எழுந்தார்களோ அவர்களுக்காக நாம் தோள் கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. குரல் கொடுக்கும் அதே வேளை பொருள் கொடுக்கும் கடமையும் எமக்கு இருக்கின்றது. மருத்துவ, வாழ்விட உதவிகளை வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
எல்லோருக்கும் உதவி செய்யும் ஆவல் இருக்கின்றது. உணர்வு இருக்கின்றது. கொடுப்பது மட்டுமல்ல கடமை, அதைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் கடமைதான். பல வழிகளில் நம் முயற்சிகள் அமைந்தாலும், அவற்றை ஒருமுகப்படுத்தி, கடந்த காலங்களில் அனுகூலமான முறையில் உதவிப்பொருட்களை அங்கு கொண்டு சென்ற அமைப்புகளினூடாக அனுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. பல வழிகளில் வந்த உதவிகள் ஒரு வழியில் அந்த மக்களைச் சென்றடைய வேண்டுமென்பதே எல்லோரின் விருப்பம், உதவி செய்வோம்! ஒற்றுமையாக உதவி செய்வோம்!
உழவன்

Page 4
ஒரு கன்றுக்குட்டியின் கதை
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குறிக்ருது இன்றுக்குபடி அன்போடு அழைக்ருது வெள்ளைப்பசு - தாயின் அணைப்பில் மயங்குது கன்றுக்குட்டி
குண்டிலே சிதறுது வெள்ளைப்பசு - அதைக் ண்ைடு கதறுது கன்றுக்குட்டி வலியால் அலறுந்து வெள்ளைப்பசு - பார்த்துக் வீலியால் மருளுது கன்றுக்ருடி
இரத்தத்தில் தோய்ந்தது வெள்ளைப்பசு - தாயின் மூத்தத்தை இழந்தது கன்றுக்குட்டி ஈழத்தில் வாழ்ந்தது வெள்ளைப்பசு - அதனால் சினாதை ஆனது கன்றுக்குடி,
- காந்தன்
སྡེའི s ܬ؟ I
 

டித்துப் Luri. In Little
ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா
சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா
சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம்பாப்பா - எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா
பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான்குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா
தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று பேய்களின் ஆட்சிபடி பாப்பா

Page 5
55lDüst)LI 58 3. güLjd 2008 x 6
யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின் சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா இரத்தத்தில் தோய்கிறோம் பாப்பா - நாம் மொத்தத்தில் பாவிகளடி பாப்பா
காக்கை குருவி எங்கள் ஜாதி - இவற்றோடு காட்டில் வாழ்கிறோம் பாப்பா தேளும் பாம்பும் புடைசூழ - நாம் நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம் தலைவிதி இதுதான் பாப்பா அகதிகளாய் வாழ்கிறோம் பாப்பா - நாளை அனாதையாய்ச் சாகக்கூடும் பாப்பா
சாதிகளுள்ளதடி பாப்பா - எம்நாட்டில் சாதிகளுள்ளதடி பாப்பா நாதியற்றோரென்றும் நயவஞ்சகரென்றும் - இரு சாதிகளுள்ளதடி பாப்பா
காலை எழுந்தவுடன் செல்வீச்சு - பின்பு கனிவு கொடுக்கும்நல்ல குண்டுவீச்சு மாலை முழுவதும் மரண வாசலில் - என்று வழக்கப் படுத்திக்கொள் பாப்பா
விண்ணும் இருண்டதடி பாப்பா - எம் மண்ணும் சிவந்ததடி பாப்பா கண்ணும் கலங்குதடி பாப்பா - உனை எண்ணும் பொழுதினிலே பாப்பா
காலம் ஒருநாள் மாறும் பாப்பா - நம் கவலைகளெல்லாம் கலையும் பாப்பா முடிவு ஒருநாள் வரும் பாப்பா - எமக்கு
விடிவு அன்றுகிடைக்கும் பாப்பா
- கெளரி கந்தன்

съ இன்றுவரை மனிதர்களுக்கு நோய ཅ பேணிப்பாதுகாக்கவும் பயன்படும் ஓர் ஒ
. . . . . . எலுமிச்சம் பழம்.
இதன் மருத்துவ குணமும், உணவின் உபயோகமும் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விடயமாகும்.
1875 ம் ஆண்டில் டாக்டர் ப்ளேன் தனது ஆய்வின் முடிவில் எலுமிச்சம்பழம், ரத்தத்தைத் தூய்மை செய்துள்ளதை உலகுக்கு
உணர்த்தினார்.
த்தில்
சர் ராபர்ட் மைக் கேரியன் என்ற மருத்துவ அறிஞர் எலுமிச்சம்பழம் காய்ச்சலைப் போக்கும், தடிமன் வராமல் தடுக்கும் என்று வெளியிட்டார்.
இரண்டாவது உலகயுத்தம் நடந்தபோது போர் வீரர்
களுக்கு சேதத்தில் வெளிப்பட்ட ரத்தத்தை உறையவைக்க எலுமிச்சம் பழச்சாற்றை உபயோகித்தார்கள். இதன்பின்
„rn . ܬܵܐ ، ܬܐ . . .
சிகிச்சையில்
*
雕
|
翻 R

Page 6
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 8
எவரெஸ்ட் சிகரத்தைக் கண்டுபிடித்த டென்சிங், ஹிலாரி ஆகிய இருவரும் தங்களுக்குக் களைப்பு வரும்போதும், போது மான பிராணவாயு கிடைக்காதபோதும் எலுமிச்சம் பழத்தை உபயோகித்துள்ளார்களாம்.
குரங்குகளுக்கு நோய் கண்டால் எலுமிச்சம்பழத்தின் மூலம் டார்வின் சிகிச்சை அளிப்பாராம்.
உணவுப் பொருள்களில் சேரும்போது இதன் சத்துப்பொருள் உணவில் சேர்வதோடு, நல்ல மணமும், ருசியும் கிடைக்கிறது.
லைம் ஜூஸ், கிளிசரின் தைலத்தைத் தேய்த்துக் குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். இதற்கு வெறும் எலுமிச்சம் பழச்சாற்றைக் கூட உபயோகிக்கலாம்.
கல்லீரலைப் பாதுகாப்பதில் இதற்கீடான பழங்களே இல்லை. எலுமிச்சம் பழச்சாறு அரைப்பாகம், தக்காளிப் பழச்சாறு ஒருபாகம், சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும்.
நல்ல காப்பிப் பொடியில் தயாரிக்கப்பட்ட காப்பியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே உட்கொண்டுவிட வேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலைவலி நீங்கும். '
பல் ஈறுகளில் ஏற்படும் பல்வலிக்கும், ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம்பழச்சாற்றை உட்கொண்டும், பல் ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட தொல்லைகள் தீரும்.
எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் உட்கொண்டு வந்தால் வாந்தி நிற்கும்.
பேதி மருந்து உட்கொண்டு பேதி நிற்காவிட்டால், எலுமிச்சம் பழச்சாறு உட்கொள்ள வேண்டும்.
தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சம் பழத் துண்டை வைத்துத் தேய்த்தால் தேள் விஷம் குறையும். இதில் உள்ள டார்ட்டாரிக் அமிலச் சத்துதான் இதற்குக் காரணம்.
வெயிலில் வேலை செய்தல், இரவுப்பணியில் கண் விழித்தல் காரணமாக ஏற்படும் நீர்க்குத்தல், நீர்எரிச்சல்,

ஆகியனவற்றிற்கு எலுமிச்சம்பழச்சாற்றில் தண்ணிர் கலந்து உட்கொண்டு வந்தால் போதுமானது.
மலச்சிக்கல் நோய் ஆரம்ப நிலையில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது சோற்றுப்பு கலந்து பருகினால் போதுமானது; மூன்று நாட்கள் காலை வேளையில் உட்கொள்ள வேண்டும்.
சூட்டு இருமலுக்கு ஒரு எலுமிச்சம் பழச்சாறும் சமபாகம் தேனும் கலந்து காலை, மாலை உட்கொள்ள வேண்டும்.
பித்தமயக்கம் வருபவர்கள் இரண்டு எலுமிச்சம் பழச் சாற்றில் 25 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து காலை வேளையில் உட்கொண்டால் பித்தமயக்கம் தீரும்,
மூத்திரப்பை சுத்தம் அடைய தினமும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணிர் மோர், ரசம் இவற்றை உட்கொண்டால் மூத்திரப்பைக் கோளாறுகள் அனைத்தும் விலகிவிடும்.
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் காட்டுச்சீரகம் என்ற மருந்தை நன்றாக மை போல அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்தால் சாந்துப் பதம் வரும். இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் வைத்திருந்து தலை முழுகினால் தலையில் உள்ள பொடுகு, பொருக்கு முதலானவை சில முறை உபயோகித்தால் மாறிவிடும்.
தலையில் பேன் உள்ளவர்கள் மயிர்க்கால் வரை நன்கு அழுத்தித் தேய்த்து நன்றாக ஊறியபின் தலை முழுகினால் பேன்கள் இறங்கி விடும். தலைமயிர் சுத்தமாகும்.
லெமன்பெக்டின் என்ற மருந்தை காயங்களின் மேல் பூசினால் ரத்தப்பெருக்கு நிறுத்தப்படுகிறது என்று கண்டுபிடித் துள்ளார்கள். இதன் பயனாக ஹோமோஃபிலியா நோயாளி களின் காயத்தால் ஏற்படும் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தி விடமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சிட்ரிக் அசிட்டின் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரியும்.
லெமன் பெக்டேட் என்ற எலுமிச்சை உப்பு ஆழ்துளை மூலம் எண்ணெய் எடுக்கப் பயன்படுகிறது. இந்த உப்பு பூமிக்கு

Page 7
EGGO'GUMDLu 58 *** EJLJf 2008 :* 10
அடியில் உள்ள கால்சியத்துடன் வினை புரிந்து எண்ணெய் வெளிவர உதவிசெய்கிறது.
இரும்பு கடினமானது. மேலும் கடினமாக்குவதற்கு எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சத்துப் பொருள் பயன் படுகிறது.
நாங்கள் நாளாந்த வாழ்க்கையில் சாப்பாட்டில் சேர்க்கும் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்ட சிறிது நேரத்தில் காரத்தன்மை பாக மாறிவிடும்; பல நன்மைகள் ஏற்பட உதவும்.
எலுமிச்சம் பழத்தில் பொட்டாசியம், பொஸ்பரசு, சிட்ரிக் அமிலம், விற்றமின் சி ஆகியவையும், எலுமிச்சம் பழத்தோலில் மாவுப்பொருள், புரதம், கொழுப்புப் பொருள் ஆகியனவும் இருக்கின்றன.
பெரிய மனிதர்களைச் சந்திக்க மகிழ்விக்க ஒரு எலும்மிச்சம் பழம் போதுமானது.
சுபகாரியங்களுக்கும், கோவில் அர்ச்சனைக்கும், மந்திரவாதி களுக்கும் எலுமிச்சம் பழம் தேவை.
தேமல்நோய் உள்ளவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசிவந்தால் தேமல் மறையும்.
முகப்பரு உள்ளவர்கள் தினம் ஒரு எலுமிச்சம்பழச்சாற்றை உட்கொண்டு இரவு படுக்கும்போது பழச்சாற்றை மேலுக்குப் பூசி வந்தால் முகப்பரு மறைந்துவிடும்.
எலுமிச்சம் பழத்தோலை வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு பல் துவக்கினால் பல்லில் உள்ள கறைகள் அகன்றிடும்.
எலுமிச்சம் பழச்சாற்றில் தினமும் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் மாறும், கிருமிகளும் பற்களைத் தாக்காமல் பாதுகாக்கலாம்.
பஸ் பயணத்தின்போது சிலருக்கு குமட்டல், வாந்தி என்பன ஏற்படுவது உண்டு. அதைத் தடுக்க எலுமிச்சம் பழத்தைக் கையில் வைத்து நுகர்ந்துகொண்டு சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
நின்றி வீரகேசரிவர மலர் 米

முதல் படிகள்
பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படிக்கும் எத்தியனைச் சந்திக் கிறாள். இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. காதலும் பிரச்சனையும் இணை பிரியார் சகோதரர்கள் என்பதைப் புரியாத எத்தியன் காருண்ட்" விடுதலையில் இலங்கை சென்று விதத் தாமதித்த வேளையில் உலக வாழ்க்கை நினைத்து எனத் தீர்மானித்து அகவாழ்வை விரும்பி சுவாமி இதயானந்த7 என்ற குருவைத் தஞ்சமடைகின்றான்.
ளத்தியனின் செப்கையால் காருண்/ மனம் மிக விருத்தினாள். அவனது உறுதித்த அடிக்கடி மாறும் பச்சோத்தி போன்ற உண்ம்ை கண்டு வெலுப்படைத்தள்ை பட்டம் பெற்ஜதும் அமெரிக்காவில் கிடைத்த ஆரிய பல வ'ப்ப்புக்கனைy உதறிவிட்டு இலங்கை சென்று தன் பழைய விரிவுரையாளர் வேலையைத் தொடர்கிறாள். அவள் தோழி வினோ அவளுக்காக
மிகவும் வகுத்தின7ண்
Ul23
சிருண்யா யாழ் பல்கலைக் கழகத்தில் வேலை செய்வதாக வீலாவுக்குத் தெரிவித்திருந்தாள். ஷிலாவுக்கு அது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவள் போன பின்னரும் வேறு பல் கலைக் கழகங்களிலிருந்து அவளுக்கு அழைப்புகள் வந்திருந்தன. எத்தகைய அரிய வாய்ப்புகள் என அங்கலாய்த்தாள். சான்
பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகம் சிவப்புக் கம்பளம் விரிக்காத குறைதான். சிலர் அவளிடமும் ரூபனிடமும் குறைப்பட்டுக் கொண்டனர். இதற்கெல்லாம் ஸத்தியன்தானே காரணம் என வீலாவுக்கு அவன்மேல் ஆத்திரமும் கோபமும் வந்தது. அவனைப்
閭 மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற காருண்ா அங்கு

Page 8
EFFENOLEGOLI 5B : * BILJf 2008 & 12
பார்த்து நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டுமெனச் சந்தர்ப் பத்தை எதிர்பார்த்திருந்தாள்.
அது தெரியாத ஸ்த்தியன், காருண்யாவுடன் தொடர்பு கொள்ள முடியாததால் அவளைப் பற்றிய விபரங்களை அதறிவதற்காக ஷிலாவைத் தேடிப் போய்த் தானாகவே பொறியில் அகப்பட்டான். "காருண்யா எங்கே?" என்று அவன் கேட்டதும் "உனக் கெதற்கு?" என ஷீலா சீறினாள். "பெரிய ஆன்மிகம், பகவத்கீதை உரை என்றெல்லாம் போனாப், காதலித்துக் கைவிடலாம் என்று எந்த ஆன்மிகம் சொன்னது ளத்தியன்? எனக்கும் பகவத்கீதை தெரியும் உனக்குத் தெரியுமா? கீதையின் முதல் "தர்மக்ஷேத்திரம்" என்ற வார்த் தையை முதலாவதாகக் கொண் டிருக்கிறது. அது தர்மத்தில் ஆரம்பிக்கிறது. அதன் பொருள் தர்மம் அல்லது செயல்பாடு என்பதாகும். கீதையின்
சுலோகம்
இறுதி சுலோகம் "LILI" k 2.
அதாவது 'எனது' என்ற சொல்லில் முடிகிறது. இந்த இரு சொற் :ே களையும் இணைத் தால் வருவது
தர்ம" அதாவது "என் ெ கடமை" என்பதாகும். கீதையின் பதினெட்டு
“'L IL ru
அத்தியாயங்களிலுமுள்ள எழுநூறு சுலோகங்களுமே என் கடமை' என்ற இந்த இரண்டு சொற்களுக்குள் அடக்கம். அதாவது மனிதனுக்கு விதிக் கப்பட்ட கடமைகளை அவன் தன் தகுதிக்கேற்பத் தன் வாழ்க் கைக்குப் பொருந்தும்படி செய்ய வேண்டும்.
'"'ଡ୍ର (୬ ରାଧ ଜର୍ମାt uid it godt ଘ। ଦ୩ (T୫, இருக்கும்போது தனது பாடங் களை நன்றாகப் படிக்க வேண்டும் இல்லறவாசிகள் தம் குடும்ப வேலைகளை, பொறுப் புகளை முறையாகச் செய்ய வேண்டும். ஒய்வு பெற்றபின் அதற்கேற்ற வகையில் தம் வாழ்வை அமைத்துக்கொள்ள அதன்பின்னர்தான்
வேணும்.
துறந்து மெய்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருளுடன் ஒன்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஒவ் வொருவரும் தமது கடமை களை அக்கறையுடனும் நேர் செய்துகொண்டு
பின்பற்றினால் வாழ்வில் நல்லவையே நடக்கும்
மையாகவும்
தர்மத்தையும்
என நான் கீதை உரையில் வாசித்தேன். கீதையை பகவான் அர்ச்சுனனுக்குப் போதித்ததே
அவனைச் சுடித்திரிய தர்மத் திலிருந்து தவறாது தன் கடமையைச் செய்ய வைப் பதற்காகத்தானே!
"உன் தர்ம ம் என்ன
ஸத்தியன்? வயதான காலத்தில் பெற்றோரைத் தவிக்கவிட்டு, காதலித்தவளைக் கைவிட்டு, துரோகம் செய் நீ ஒரு சுயநலவாதி ஸத்திபன். உனக்கு
நம்பிக்கைத் வதா?
எதுவோ பிரச்சனை ஏற்பட்டபோது அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டுப் போய்விட்டாய். இனி இங்கிருந்து எங்கு போவாய்? ஆனால் உனக்காக நான் இரக்கப்படுகின்றேன். உனக்குக் கிடைக்க இருந்த அத்தனை செல்வங்களையும் ஒரே நொடி யில் நீ தொலைத்து விட்டாய். இனி நீ அடைந்தென்ன? இத்து மதம் மனைவி இருவரும் இணைந்துதான் அறங்
என்ன ஆன்மிகம்
கணவன்
சில
GGOÜGOLJ 58 * 88ЈLJi 200B o 13
களைச் செய்ய வேணுமென்
கிறது. தனித்து
எதையோ நினைக்
நீயானால்
சாதிக்க கிறாய்" எனப் பொரிந்து தள்ளி அவள் சொல்வதன் நியாயம் ஸத்தியனுக்கு அப் பொழுது புரிந்தது. அவனும் அதைச் சிறிது சிறிதாக உணரத் தொடங்கியிருந்தான். அது தான் காருண்யாவைத் தேடிச் ஆனால் அவள் எங்கே என்று இந்த விலா சொல்ல மாட்டாளாமே எனச்
னTள்.
சென்றான்.
சவித்துக் கொண்டான்.
பின் பொறுமையிழந்து 'காருண்யா எங்கே ஷீலா?" "அவள் யாழ்ப்பாணம் போய் விட்டாள்"
எனக் கேட்டான்.
என்றாள். "யாழ்ப்பாணமா?" t, I g]]" அதிர்ந்தவன் "ஒரன் ஷிலா?" என்று கேட்டான். "எல்லWாம் உன்னால்தான்" என்று வெகுண்டாள். "அவளுக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில் எத்தனை அரிய வாய்ப்புகள் வந்தன. புரபெசர் ஹென்றி எப்ப வந்தாலும் வேலை கொடுப்பேன் என்கிறார். ஆனால் அவள் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு அங்கே பழைய வேலையை ஏற்றுக்
லைபாம்.
கொண்டாளாம்" என வருத்தத் துடன் கூறினாள் இன்னும் நம்ப முடியாத ளத்தியன் "நீ சொல்

Page 9
sissCL 58 3üLjd 2008 ಫ್ಲಿ: 14
வது நிஜமா?" எனக் கேட்டான். 'உன்னால் நம்ப முடிய
ன்றவள் தன் வில்லையா?" என்றவள் தனது கம்ப்யூட்டரில் காருண்யாவின் இ-மெயிலைக் காட்டினாள்.
அதில் அவள் உவ்விடம் வந்தால் நினைவுகள் என்னைத் துரத்திக் கொன்று விடும். இங்கேயே வேலையில் சேர்ந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு" என எழுதியிருந்தாள். அதைப் பார்த்த பைத்தியனின் கண் களும் கலங்கின. "நீ சொல்வது எல்லாம் எனக்குப் புரிகிறது ஷிலா, ஆனால் நான் எதையும் வேணுமென்று செய்யவில்லை. அது யாருக்கும் புரியாது" எனக் கூறிவிட்டுப் போனான்.
'நான்
அதனால்
வலா அவன் போவதையே பார்த்துக்கொண்டு வியந்து நின்றாள். அவன் கூறியதன் அர்த்தம் அவளுக்குப் புரிய வில்லை. காருண்யாவும் ஸத்தி பனும் மிக நல்ல அவர்கள் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் எனக் கனவு கண்டவள். நாளும் பொழுதும் தன் தோழியைச் சீண்டி அவர்கள் காதலுக்கு உரமிட்டு
ברץ 'ஜோடி
வளர்த்தவள். வாடிய முகமும் நீர் நிறைந்த கண்களுமாகக்
காருண்யா அவளிடம் விடை
பெற்றதை அவளால் மறக்கவே
முடியவில்லை. அந்த நினைவு அவ்வப்போது வந்து அவளைத் துன்புறுத்தியது. காருண்யா வராமல் அங்கேயே நின்றது அவளை மேலும் வருத்தியது. ஆனால் ஸத்தியன் சொன்னதன் அர்த்தம் அவளுக்குச் சிறிதும் புரியவில்லை. ஆங்கிலேயப் பெண்ணான அவளுக்கு அந்தஸ்து, சமூக வேறுபாடுகள் எதுவும் தெரியாது. அதனால் என்ன முயன்றும் அவளுக்கு விடை தெரியவில்லை. தவறு அனைத்தும் ஸத்தியன் மேல் தான். அதிலிருந்து தப்புவதற்கு அவன் சாட்டுச் சொல்கிறான்
என நினைத்தாள்.
காருண்யா அமெரிக்காவை விட்டுப் தான் என ஸத்திபனின் மனச் சாட்சி அவனை உறுத்தியது. அத்துடன் இப்பொழுதெல்லாம் அவனுக்கு அவள் நினைவாகவே இருந்தது. அளெது அண்மைக்காக ஏங்கினான். அந்த அழகிய வதனத்தைப் பார்ப்பதற்கு, அவளது அன்பான பேச்சைக் கேட்பதற்கு அவளைச் சீண் டி விளையாடு வதற் கெல்லாம் அவன் மிகவும் தவித்தது. விலா சொன்னது போல தன்னிட மிருந்த அரிய பொக்கிஷத்தை இழந்த மாதிரி அவன் இதய
போனது தன்னால்
அவன்
உள்ளம்
 

மெங்கும் ஓர் வெறுமை ஆட் கொண்டது. ஸத்தியன் செய்வ தறியாது துவண்டு போனான். உறக்கம் மறந்து ஒர் பைத்தியம் போலானான்.
&ସitriot,
வசப் பட்டுச் காரியமும் தராது. தீர செய்வதுதான்
"D ST)
எந்தக் நல்ல பலனைத் ஆலோசித்துச் சாலச் சிறந்தது' காருண்யா என்றோ னதை இன்று நினைத்தபோது அவன் கண்கள் கலங்கின. என்னைச் சொல்லிவிட்டு நீயும் அப்படிச் செய்யலாமா நினைத்தான். மன்னிப்புக் கேட்டு அவளுக்குப் பல இ-மெயில் களை அனுப்பினான். ஆனால் பதில் வரவே இல்லை. ஈற்றில் அவனது இ-மெயில்கள் தடை அவனிடமே
செய்யும்
என்று சொன்
* TննI
செய்யப்பட்டு வந்தன.
மனம் மிக நொத்த விபத்தியன் பகவத் கீதையை எடுத்து வாசித் தான். அதில் "கர்மங்கள் மனித னுக்கு மிகவும் இன்றியமை யாதவை, செய்கைகள் மூலமே சிந்தனை, சொல் செயல்களுக் ஏற் கற்றுக்கொள்ளலாம். திரிகரணங் இணைந்தே ஆகவே, உங்கள்
கிடையே ஒருமைப்பாடு Li di மகான்களுடைய களும் இபங்கும்.
என்றும்
கனிகள்
செயல்களுக்குரிய
கலப்பை 58 * ஐப்பசி 2008 & 15
கிட்டும் வரையில் நீங்கள் முயற்சிக்க வேண்டும். ஆசைகள் -9rğ5laJ5L DrTar, இருக்கும்போது உங்களால் செய்கைகளின் பலனை எதிர்பாராமல் இருக்க முடியாது. ஆனால் காலப் போக்கில் சுயநல மற்றும் பலனை எதிர்பாராத நிலையை உங்கள் செய்கைகள் அனைத்தும் வழிபாடாக மாறுகிறது. அப் போது நீங்கள் அனைத்தையும் இறைவனுக்கே லாம்" என்றிருந்தது. கர்மயோ கத்தில் பகவான் விதிக்கப்பட்ட கடமையைச்
செய்" என்றுதான் சொல்கிறார்.
நீங்கள்
எய்தும்போதும்
அர்ப்பணிக்க
'உனக்கு
தனக்கு விதிக்கப்பட்ட கடமை என்ன எனச் சிந்தித்தான்.
எல்லோரையும் போல ஒரு சாதாரன குடும்ப ஸ்தனாக வாழ்வதைத்தானே அப்பா விரும்பு வார்கள். வயதான காலத்தில் அவர்கள்
அம்மா
விருப்புக்களை நிறைவேற்ற வேண்டியதும் தன் கடமை தானே என நினைத்தான்.
காருண்யாவின் உயர்த்த
பண்பைச் சொல்லி அம்மா வைச் சம்மதிக்கச் செய்திருக்க வேணும். அதை விட்டுவிட்டு இப்படித் துறவு நிலைக்குப் போனது எவ்வளவு பெருந் தவறு என உணர்ந்து வருந்தினான்.

Page 10
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 18
"எல்லா நடவடிக்கைகளையும் விட்டு விடுவதால் மட்டும் ஒருவன் சந்நியாசி ஆவதில்லை. ஆகவே, எப்பொழுதும் பற்றில் லாமல் கடமையைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் கடமையைச் செய்யும் மனிதன் உயர்ந்த நிலை அடைகிறான்" என்றும் கர்மயோகம் சொல் கின்றது. ஸத்தியன் காருண் மீண்டும் எப்படிப் பெறுவது என்று சிந்தித்தான். விலாவிடம் ஆலோசனை கேட்டபோது "திட மனதில்லாத உன்னை நம்பி நான் என்ன செய்யலாம் ஸத்தியன். இருந்தாலும் முயற் சிக்கின்றேன்" என்றாள்.
யாவின் அன்பை
ஸத்தியன் தன் குருவிடம் போய்ச் சரண் அடைந்தான். அவர் சிரித்தார். "என்ன உன் உள்ளம் தெளிவடைந்ததா?" எனக் கேட்டார். "நீ எதுவோ மனக்குழப்பத்தில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்தது. அதனால்தான் உன் போக்கில் விட்டேன். மகனே! பூ இல்லா மல் பழத்தைப் பெற இயலாது. மொட்டு மலராகி, மலர் காயாகி, காப் கனியாகிறது. ஒரு மனிதனின் தன்னை அறியும் வழியும் இப்படிப்பட்டதுதான். அதாவது மலர்கின்ற நிலையில் கர்மத்தின் வழியில் செயல்
படுகின்றது. காயாகும்போது அது பக்தி வழி ஆகிறது. காய் பழுத்து அதில் இனிய அமுதரசம் நிரம்பும்போது அது விவேகம் எனப்படும் ஞானமாகிறது. அதுவே தன்னை அறியும் வழி யாகும். அதாவது மலர் நிலையில் இருந்த கர்மத்தில் அன்பு அல்லது பக்தி ரசம் நிரம்பும்போது அது ஞானப் பழமாக மாறுகின்றது. ஆகவே மனிதன் நற்கருமங்கள், இறை வழிபாடுகள் மூலம்தான் பற்றில் லாத ஞானநிலைக்கு முன்னேறு கிறான். ஆகவே, தனித்து வழி நிற்காமல் நற் கருமங்களிலும் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேணும் அதன் மூலமாக நீங்கள் இறை அன்பைப் பெறவேணும். நீ இப்பொழுது வெறும் மலர் தான். நல்வழி மூலம் நீ இறைவன் அருளைப் பெறலாம்."
பாட்டுடன்
"அறனெனப்பட்டதே இல் வாழ்க்கை" என்று வள்ளுவர் சொல்கிறார். ஆகவே, நீ அந்த மேலான அறத்தைச் செய்தாலே போதும் இறை அருள் உனக்குத் தானாக வந்து சேரும். மனம் விரும்பிய பெண் கண்ணெதிரே
நகமும் சதையுமாக உலாவும் போது உன்னால் எப்படித் துறவு நிலைக்குப் போக முடியும்? நீ எப்படித்தான் இழுத்துப்
 

பிடித்தாலும் மனம் முண்டி அது எப்போதும் உன்னை வண்டாகக் குடையு
படிக்கும்.
மல்லவா? பின்னர் உனக்கு எப்படி மனஅமைதி கிடைக்கும்? நீ எப்படித் துறவி ஆகலாம்? ஆகவே, முதலில் போய் அதைச் செய். அந்தப் பிள்ளையைச் சந்தோசப்படுத்து. என்ன அந்தப் பிள்ளை கோபித்துக்கொண்டு போய்விட்டதாக்கும்" கேலி செய்த குரு, "எல்லாம் வருவாள். அதுவும் ஒரு வீம்பு தான். தன்னைக் கவனிக்க வில்லை என்ற வெறும் ஊமைக் கோபம். அது நிலைக்காது. உன்னைப் பிரிந்து அவளாலும் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. அவளும் உனக்காக ஏங்கிக்கொண்டு, நிமிடமும் உன் வரவை எதிர் பார்த்துமிருப்பாள். நீ போய்க் கூப்பிட்டால் மறுபேச்சுப்
எனக்
ஒவ்வொரு
பேசாமல் வருவாள். போய்ச் சந்தோசமாக இரு" என்றார். அவர் பாதங்களைத் தன் கண்ணிரால் பூசித்து எழுந்தான். "இதுவும் உனக்கு ஒர் அனுபவம் தான். போய் வா மகனே! கிருகஸ்தனாக இருந்து கடமைகளைச் செய்.
உன்
வானப்
பிரஸ்தம், சந்நியாசம் எல்லாம் காலம் வரும்போது தானாகவே உன்னை வந்து சேரும்" என விடை கொடுத்தார்.
ESGOLIGODLu 5B : 'Luis 2008 & 17
அதன்பின் அவனுக்கு ஒர் உள்ளத் தெளிவு பிறந்தது. காருண்யாவை அடைவதே தன் வாழ்வின் இலட்சியம் கொண்டான். ஷிலோ கையை
எனக்
விரித்தாள். "உனக்குப் பாவம் பார்த்ததால் நான் ஒர் அரிய இழந்து விட்டேன். எனது இ மெயில்களையும் தடை செய்து இனி என்னிடம் வராதே" எனக் கண்டிப்பாகக் கூறினாள். முடிவில் ஸத்தியன் இலங்கை போவதெனத் தீர்மானித்தான். அதைத் தாயிடம் சொன்ன
தட்பை
விட்டாள்.
போது எதற்கென்று கேட்டார் விபரம் சொன்னதும் "எப்போ போனாள்? ஏன் போனாள்" எனக் கேட்டார். "எல்லாம்
உங்களால் தான்" என்றான்.
"அதுதான் அவளை இந்தப் பக்கமே காணவில்லை என நினைத்தேன். ஆனால் நான் என்றோ உங்களுக்குத் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்துவிட்டேன். நீங்களாக வரட்டும் எனக் காத்திருந்தேன். அசட்டுப் பெண் ஏன் அப்படிச் செய்தாள்? என்னிடம் கேட்டி ருக்கலாமே!" என அங்கலாய்த் தார். "அங்கே நிலைமை சரி யில்லை. உனக்குப் பாஷையும் சரியாகத் தெரியாது. அங்கு எனக்கு ஒரு அண்ணா

Page 11
GEOLEANDLU 58 - B3 LILJA 2008 - 1B
இருக்கிறார். அவரிடம் தொடர்பு கொண்டு விபரம் அறிகிறேன்" என்றார்.
ஆனால் அன்றைய தொலைக் காட்சிச் செய்திகளைப் பார்த்த ஸத்தியன் பதறி அடித்துக் கொண்டு கையில் கிடைத் தவற்றுடன் அதிர்ஷ்டவச மாகக் கிடைத்த விமானப் பதிவில் இலங்கை சென்றான். போகும்போது அன்றொரு நாள் காருண்யா "என் இராமன் வந்து என்னைச் சிறை எடுக்க மாட்டானா?" எனக் கேட்டது நினைவு வந்து கண்கள் பணித் தன. "உன் இராமன் வருகிறேன் காருண்யா. நீ சிறையில் இருந் தால் எப்படியாவது எடுத்து விடுவேன். ஆனால் நீ உயிருடன் gold, Sot (LIT? சீதையை' எனப் பார்த்து வந்து சொல்ல எனக் கு ஒர் ஆஞ்ஜனேயர் இல்லையே" என வருந்தினான். அவன் பார்த்த அந்தச் செய்தியில் குண்டு வெடித்து யாழ். கழகத்தில் ஒரு பகுதி சேத மடைந்தது; பலர் உயிரிழந்தனர் என்றிருந்தது. அதற்குள் என் காருண்யா அகப்படாமல் இருக்க வேணுமென ஆண்டவனை இதயபூர்வமாக வேண்டினான்.
'கண்டேன்
பல்கலைக்
அவன் கொழும்பு போய்ச் சேர்வதற்கு முன்னரே சியாமளா
தன் ஒன்றுவிட்ட சகோதரன் சுகுமாரனுடன் தொடர்பு கொண்டு ஸத்தியனுக்கு வேண்டிய உதவிகள் செய்யும் படி கேட்டிருந்தாள். அவர் அவனை விமான நிலையத்தில் வரவேற்றார். ஸத்தியன் உடனே யாழ் நகர் செல்வதற்குத் துடித்த போது அவர் "அவசரப்படாதே இங்கிருந்து எனக் கூறினார். அவர் சொல் லைக் கேட்டு இரண்டு நாட்கள் காத்திருந்ததுதான் மிச்சம். அவரால் எதுவுமே அறிய முடியவில்லை. ஸத்தியனுக்கு முள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது. என்னால்தானே காருண்யா திரும்ப அங்கு என்ன ஆபத்தில் இருக்கி றாளோ? இவரானால் மெத்தன ம்ாக இதோ விசாரிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்
விசாரிக்கலாம்"
வந்தாள்.
கிறார் என மறுகினான்.
மறுநாள் தான் போவதாகக் கூறிப் புறப்பட்டான். அவரும் அவனுடன் பயணமானார். வழி நெடுகிலும் ஸத்தியன் பயத்துடனும் வருத்தத்துடனும் சென்றான். காருண்யா இல்லா விட்டால் இனித் தனக்கும் ஒரு வாழ்வில்லை என அவன் நினைத் தான். அப்போது அவனுக்குத் துறவு நிலை ஞான யோகம் எதுவுமே நினைவில்
 

வரவில்லை. காருண்யா இல்லாத எதிர்காலம் மிகவும் இருட்டான தாக அவன் மனக்கண்களுக்குத் தெரிந்தது. அவனை அறியாமல் கண்கள் பனித்தன.
அவன் நிலையைக் கவனித்த
மாமா வியந்தார். a taifa ஸத்தியன், அமெரிக்காவில் வளர்ந்த பிள்ளை இப்படி
யெல்லாம் கலங்கலாமா? மனத் தைரியமாக இருக்க வேண்டாமா? நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று பகவான் கீதையில் சொல் கிறார்" அவனுக்கு அப்போதிருந்த ஆத்திரத்திற்கு மாமாவின் குரல்வளையைப் பிடித்து நெரிக்கலாம் போல இருந்தது, வேறு வழி இல்லா
மல் மெளனம் சாதித்த Tå.
என்றார்.
கடவுளே, என் காருண்யாவுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று பிரார்த்தித்தான்.
ழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் போய் விசாரித்த போது அவர்களுக்கு மிகவும் ஆறுதலான செய்தி கிடைத்தது. "அந்தச் சம்பவம் நடைபெறு வதற்கு முன்னரே காருண்யாதன் வேலையை விட்டுவிட்டாள்; பெற்றோருடன் வெளிநாடு போவதாகச் சொன்னாள்" என்றனர். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்தப் பல்கலைக்கழக வளாகத்
ESGOL GIOLI 5B & BELLU 2OOB & 19
தின் சிதைந்த தோற்றம் கண்டு ஸத்தியன் மிகவும் வருந்தினான். ஆனால் தன் காருண்யாவுக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என அறிந்து அவன் விழிகள் துளிர்த்தன. அப்பொழுதுதான் பல நாட்களின்பின் அவனால் நிம் மதியாக மூச்சு விட முடிந்தது. வெளிநாடென்றால் எங்கே அமெரிக்காவுக்குத் தானே போக வேண்டுமென நினைத்து விலாவிடம் தொலை பேசியில் கேட்டபோது அவள் "எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனக்கெதுவும் தெரியாது. எல்லாம் உன்னால் நீயே தேடிக்கொள்" எனச் சினந்தாள்.
தான்.
காருண்யாவின் வீட்டில் அப்பொழுது இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் "எங்களுக்கு எந்த விபரமும் தெரியாது. அவளது ஆன்ட்டி கொழும்பில் இருக்கிறார். அந்த விலாசம் தருகிறோம். போய்க் கேட்கவும்" என்றனர். ஸத்திய னுக்குக் கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத ஏமாற்றம், ஆனாலும் நீ உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தேடிக் கண்டு பிடிப்பேன்" என உறுதி செய்து கொண்டான்.
அவர்கள் அடைந்து அந்த ஆன்ட்டி
கொழும்பை

Page 12
53 - EJ200 - 20
வீட்டிற்குப் போனபோது, அவர் அப்போதுதான் எங்கோ வெளியிலிருந்து வந்தார். பற்றி விபரம் கேட்டதற்கு "இப்பொழுதுதான் சிங்கப்பூர் போகின்றார்கள். அவர்களை அனுப்பிவிட்டுத் தான் நான் விமான நிலையத்தி
காருண்யா
விருந்து வருகிறேன்" என்றார். "அங்கு பல்கலைக்கழகத்தில் வேலை
எங்கே என்றதற்கு
கி  ைடத் தி ரு ப் ப த க ச்
சொன்னாள் மற்றைய விபரங் இனிக் கடிதம் ஏதாவது வந்தால்தான் தெரியும்" என்றார். ஸத்தியன் சிங்கப்பூர் போக ஆயத்தமானான். ககு விபரம் தெரிந்தபின் கூறியும் அதைக் கேட்காமல்
கள் இதுவும்
மாரன் போகலாம் எனக்
அவன் கிடைத்த ரிக்கெற்றில் பயண மானான்.
சிங்கப்பூர் போனபின்னர்தான் அதன் கஷ்டம் அவனுக்குப் புரிந்தது. அங்கே பல்கலைக் கழகத்தில் அப்படி ஒருவர் இல்லை என்றனர். ஸத்திய னுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் தன் தவறுக்குத் தண்டனை என ஏற்றுக் கொண்டான். மாமா வுக்கு விபரம் தெரிவித்து விட்டு ஹோட்டலில் தங்கி னான். சிங்கப்பூரின் விதிகள்,
பூங்காக்கள், காட்சிச்
அருங்கலைக் சாலைகள் எங்கும் தினத்திற்கு ஒன்றெனக் கால் போன போக்கி அலைந்தான். ஏறத்தாழப் பத்து நாட்களாகி
விட்டன. எந்தப் பலனும் கிடைக்கவில்லை. காருண்யா வின் ஆன்ட்டிக்கும் இன்னும் எந்த விபரமும் தெரியாது என்று சொன்னார். சியாமளா "நீ அலைந்தது போதும்
வா. அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லைத்தானே. கண்டு பிடிக்கலாம்" எனக் கூறினார். ஸத்தியன் உடலும் உள்ளமும் சோர்ந்து போனான். இனி அமெரிக்கா போவோம் எனத் தீர்மானித்து அவன் ஹோட்டல் கணக்கை முடிக்கும்படி சொல்லச்சென்றபோது அங்கே அவனுக்குப் பேராச்சர்யம் காத்திருந்தது. காருண்யா அங்கு நின்றாள்.
இருவருக்கும் பேச நா எழவில்லை ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர். அவனது அலைந்து களைத்த முகத்தைப் பார்த்து, இவனுக்கு என்ன ஆகிவிட்டது எனக் காருண்யா
பயந்தாள். அதனால் அவளை
அறியாமலே "நீங்கள் நலமா?" என்ற வார்த்தைகள் வாயிலிருந்து உதிர்ந்தன. அது அவன் செவிகளில் தேனாகப் பாய்ந்து
அவள்
கண்ணிராக வெளி
 

யேறியது. "ஆம்" என வெறுமனே தலையை அ ைசத்தான். அவனுக்கு வார்த்தைகள் வர வில்லை. அத்தனை நாளும் அவர்களும் அதே ஹோட்டலில் தான் இருந்தனர். அன்று வான்பிரான்சிஸ்கோ பயனமா கின்றனர் எனக் கேட்டபோது விதியின் விளையாட்டை நினைந்து வியந்தாலும், அப் பொழுது அவனது ஆனந்தத் திற்கு அளவே இல்லை.
அமெரிக்கா பெற்றோருக்கு விசா ஒழுங்கு செய்ய முடிந்ததால் சிங்கப்பூர் வேலையை
செல்வதற்குப்
பல்கலைக்கழக ஏற்கவில்லை எனக் காருண்யா கூறினாள். ஸத்தியனுக்கு எல் லாமே வியப்பாக இருந்தன. வந்த கஷ்டம் பனி போல மறைந்தது என காருண்யாவின் கைகளைப் பற்றித் தன் எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்புக் கேட்டான். அவள் பெற்றோரி
மலை போல
மகிழ்ந் தான்.
டம் அவளைத் தான் மனம் முடிக்க விரும் புவதாகக் கூறினான்.
அவர்கள் "நாங்கள் தொழி லாளிகள் வீட்டில்
இரங்கள்
பரம்பரை.
பெற்றோர் பெண் எடுப்பார்களா?" எனக் கேட்டனர். "முதலாளி, தொழி லாளி எல்லாம் அந்தக் காலம்
உன்
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 21
அங்கிள். அங்கே ஆள்வதற்கு எந்த நிலமும் இல்லாதபோது எப்படி அவர்கள் தாங்கள் முதலாளி எனக் அம்மாவின் இந்த தான் எல்லாக் குழப்பங்களுக் கும் காரணம், அமெரிக்காவில் முதலாளி இல்லை அங்கிள். அனைவரும் தொழி உழைத்து உண்பவர்கள். தம் உழைப்பால் ஆதிகாலத்தில் பொருளாதார விருத்திக்காக ஏற்படுத்தப்பட்ட தொழிற்
கூறலாம்.
மயக்கம்
யாரும்
லாளிகள்தான்.
உயர்ந்தவர்கள்.
பிரிவுகளை இனியும் நீங்கள் பிடித்துக்கொண்டு இருப்ப தால் என்ன லாபம், தயவு
செய்து அனைத்தையும் மறந்து விடவும்" எனக் கெஞ்சிக் கேட்டான்.
அவர்கள் மூவரும் பேசிய தைக் கேட்டுக் காருண்யா வியந்தாள். அதுபற்றிய விபரம் கேட்டபோது ஒன்றும் இல்லை என ஸத்தியன் கூறி னான். ஆனால் அவள் தன்
பெற் றே T ரிட மிருந்து
காரணத்தை அறிந்தபோது அவளுக்கு வித்தியன் மேல்
அனுதாபம் பிறந்தது. கருணை புடன் அவனைப் பார்த்தாள். அதைக் கவனித்தவன், "எல்லாம்
தவறுதான்
அப்போதெல்லாம்
என் காருண்யா,
நான் சுய

Page 13
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 22
மாகச் சித்திக்கவில்லை என நினைக்கிறேன்" மன்னிப்பின் அறிகுறியாக அவள் அவன் கைகளை இறுகப் பற்றி னாள். இனி என்றும் இவற்றை விடாதே என அவன் உள்ளம் அவளிடம் கெஞ்சியது. அதைக் காருண்யா அவன் கண்களில்
என்றான்.
கண்டாள். கருனை ததும்ப
அவனை அன்புடன் பார்த்தாள்.
எல்லோரும் ஒரே விமானத் தில் பயணம் செய்ய இருந்தது அடுத்த வியப்பாக இருந்தது. காருண்யாவின் அம்மா அருணா, "இதெல்லாம் கடவுள்
செயல் தம்பி. காருண்யா வந்ததிலிருந்து சரியாகவே இல்லை. எதையோ பறி
கொடுத்த மாதிரி இருந்தாள். அவள் எங்களுக்காகத்தான் அங்கு வந்து தவிக்கிறாள் என நினைத்தோம். அதுதான் அங்கு நிலைமை சரியில்லை, அமெ ரிக்கா போவோம் என்றபோது சம்மதித்தோம்" என்றார்.
காருண்யா விலாவைத் தொலைபேசியில் அழைத்துத் தம் வரவைத் தெரிவித்துப் பெற்றோருடன் தான் வருவதாக வும், அவளுடன் இருக்கலாமா என்றும் கேட்டாள். "நீ இங்கு வந்தால் போதும் கரு, பெற்றோர் நம்முடனேயே "கரு,
F_SüT
இருக்கலாம்" என்றவள்,
ஸத்தியன் உன்னைத் தேடி வந்தான். நன்றாகக் குடுத்தேன் தெரியுமா. மாக இருந்தது. அதுதான் உனக்கு இ - மெயில் அனுப்பினேன். நானாக ஒன்றும் செய்யவில்லை கரு. அவன் கெஞ்சினான். அதனால்தான் மனம் கேளாமல் அனுப்பினேன். நீயானால் என் இ = மெயிலையும் தடை செய்து விட்டாய். எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா?" எனும் போது அவள் குரல் தழு தழுத்தது. "மன்னித்துக்கொள் ஷீலு, எல்லாம் தெரிந்த நீயே அப்படிச் என்ன செய்யலாம். அதுதான் உன் இ - மெயிலைத் தடை செய்தேன்" என்றாள்.
ஆனாலும் பாவ
செய்தால் நான்
"ளத்தியனை நீ கண்டாயா?" என ஷிலா கேட்டாள். "உனக்
நான் சிங்கப்பூரில் நிற்கிறேன். அவரை நான் எப்படிக் கான முடியும்" எனக் கேட்டாள். "அவனும் உவ்விடம்தான் நிற் கிறானாம்" என்றாள். "அவர் அவரது குருவின் பின்னால் நிற்பாராக்கும். எனக்கெதுவும் தெரியாது" என்றாள். 'இல்லை கரு, அவன் உன்னைத் தேடித் தான்." என்றவளை முடிக்க விடாமல், "உன்னை விரைவில்
சந்திக்கிறேன்" என்று கூறித்
 

தொடர்பைத் துண்டித்தாள். பின் ஸத்தியனைப் பார்த்து "விலா உங்களுக்காக இரக்கப் பட்டாள்" என்றாள். "இரக்கமா? விலாவிடமா?" என வியப் படைந்தது போல் பாவனை செய்தவன், அவள் அவனைக் கண்டித்ததையும் வேடிக்கை யாகக் கூறிச் சிரித்தான்.
ஸத்தியன் தங்கள் வீட்டில் காருண்யாவும் அவள் பெற் நோரும் வந்து நிற்கலாம் என எவ்வளவோ கெஞ்சியபோதும் அது முறையல்ல எனக் கூறி விலா வீட்டுக்கே போயினர். மற்றவர்கள் மறைவில் நிற்க, ஸ்த்தியன் போய்க் கதவு மணியை அழுத்தினான். கதவைத் திறந்து ஸத்தியனைக் கண்டஷிலா, "என்னஸ்த்தியன்! எங்கிருந்து வருகிறாய்? இங்கு யாரும் வரவில்லை. எனக் கெதுவும் தெரியாது. உன்னால் அவள் இப்பெல்லாம் என்னு டனும் தொடர்பே கொள்வ தில்லை" என்ற அவள் வார்த் தையில் எரிச்சல் தெரிந்தது.
"பொய் சொல்லாதே வீலா, காருண்யா இன்று விமானத்தில் அமெரிக்கா அவள்
வந்துவிட்டாள். மட்டுமல்ல, பெற்றோரும் வந்ததாக எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. நீயா னால் இங்கு வரவே இல்லை
அவள்
. . . . .
sous Lu 5B - Sulus 2008 - 23
என்கிறாய். அப்படியானால் எங்கே போயிருப்பாள் ஷிலா?" எனக் கேட்டான்.
'எனக்கென்ன தெரியும். நீயே போய்ப் பார்" எனக் கதவை அறைந்து சாத்தப் போனவள், அப்பொழுது மறைவிலிருந்து வெளிப்பட்ட காருண்யாவைக் கண்டு, தாவி அனைத்துக் அவளுடன் பெற்றோரும் நிற்பதைக் கண்டு "இந்தக் குளிரில் ஏன் வெளியே நிற்கிறீர்கள். இதென்ன விளை பாட்டு கரு" எனக் கண்டிப் நாணித் தலை குனிந்த காருண்யா "எனக் கெதுவும்
சம்பந்தப்பட்டவர்களைக்
கொண்டாள்.
பாகக் கேட்டாள்.
தெரியாதம்மா.
கேள்" என்றாள்.
அதைக் கவனித்தவள். "என்ன உன் கோபம் குறைந்ததா? எனக்கு இதுதான் வேணும். எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?" எனத் தோழியை அணைத்துக்கொண் டாள். பின் எதுவோ நினைவு வந்தவள் போலக் காருண் யாவை விலக்கியவள் "ஒன்றாக வந்தீர்களா?" எனக் கேட்டுக் 'கள்ளி சிங்கப்பூரிலிருந்து பொய் சொல்லியிருக்கிறாய்" எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள். காருண்யாவின் அந்தக் குறுஞ்சிரிப்புத்தான் அவளுக்குப் பதிலாகியது.

Page 14
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 24
அப்பொழுது அங்கே சியாம ளாவும், தேவராஜனும் வந்தனர். சியாமளா, நேரே அருணாவிடம் போய் "என்னைத் தெரிகிறதா அருணா?" "எத்தனை வருடமானாலும் சிறு வயது நினைவுகள் இல்லாமல் போதுமா சியாமளா? நாங்கள்
எனக் கேட்டாள்.
ஒன்றாக விளையாடி ஒரு வகுப்பில் படித்தவர்களாச்சே! காருண்யா முதல் தடவை வந்து சொன்னபோதே நான் நினைத்தேன். பிறகு அவள் மேலும் விபரங்கள் சொன்ன போது புரிந்தது" என்றார். தேவராஜன், காருண் யாவின் தந்தை மகேந்திரனிடம் அவர்களது பிரயாணம் எப்படி இருந்தது என விசாரித்தார். அவர்களும் காருண்யாவையும் தம்முடன் வரும்படி அழைத்ததற்கு அவர்கள் மறுத்து விட்டனர். நல்ல நாள் பார்த்து வருவதாகச் சொல்லி அவர்களை அனுப்பினர்.
எல்லாம்
பெற்றோரையும்
காருண்யாவின் வரவு அவளது பல்கலைக்கழகத்திலும் பலரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அங்கே அவளுக்காக ஓர் இடம் காத்தி ருந்தது. "இதையெல்லாம் விட்டு விட்டு அங்கே போனாயே" என வுலோ கண்டித்தாள். அதே வேளை "கடந்த ஒரு வருடமாக உன்னைப் பார்க்
கவே சகிக்கவில்லை கரு உன் முகமெல்லாம் இருண்டு கறுத் திருந்தது. ஆனால் இப்போ உன் முகம் ஜகஜோதியாக ஒளிர்கிறது. இந்த ஒளி எப்படி வந்தது கரு? ஸத்தியன் என்ன செய்தான்? " என நேரம் கிடைக்கும்போது அவளைச் சீண்டியும் விளையாடினாள். காருண்யா அதற்குப் பதில் சொல்லத் தெரியாது தடுமாறி அவள் அன்னையிடம் "ஆன்ட்டி உங்களுக்கு அருமை யான ஒரு மகள் கிடைத்திருக்
ண்ாள்.
கிறாள்" எனப் பாராட்டவும் விலா தவறவில்லை.
ஸத்தியன் வந்து சந்தித்தான். பெற்றோர் கலந்தாலோசித்துத் திருமண ஆயத்தங்களைச் செய் தனர். ஒரு நாள் ளத்தியன் "குரு இந்தியா போகப் போகிறார். அதற்கு முதல் பார்க்க வேண்டுமாம்" சுவாமி இதயானந்தாவிடம் அழைத்துச் சென்றான்.
அவ்வப்போது அவர்கள்
୫ - ବର୍ତtଶନୀ କୀTI")
କTବttf
அவர் "இல்லற தர்மம்தான் சிறந்தது. "இல்லற மல்லது நல்லறமன்று" என ஒளவையார் சொல்கிறார். இல்லறத்தான் தான் மற்றவர்களைக் கவனிக்க
வேணும். நீங்கள் இருவரும்
நல்வழியில் பணம் சம்பாதித்து
 

நல்ல பல சேவைகள், தான தர்மங்கள் செய்து பலரும் போற்றும் சிறந்த தம்பதி
களாகப் பல்லாண்டு வாழ்க
வாழ்த்தி அனுப்பினார். காருண்யாவும் அவர் சொல் வது போலத் தம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தாள்.
எல்லோரின் விருப்பத்து டனும் திருமணம் இனிதே நிறைவேறியது. பெரியோரும் பெற்றோரும் நோயின்மை, கல்வி, தனம், தான்யம், அறிவு, குழந்தை, அழகு புகழ், வெற்றி, வலிமை, துணிவு, பெருமை, இளமை, நீண்ட ஆயுள், நல் ஊழ், நுகர்ச்சி ஆகிய பதினாறு செல்வங்களும் பெற்றுச் சிறப்பு டன்
வாழ்த்தினர்.
வித்தியன் -
தம்பதிகள் பல ஆண்டுகள் பல வளமும் பெற்றுச் சிறந்த தம்பதி களாக வாழ்ந்தனர். காருண்யா தன் பல்கலைக் கழக வேலை யைத் தொடர்ந்தாள். ஸத்தியன் தன் தந்தையின் வியாபாரத்தைப் பொறுப்பேற்றான். பெற்றோர் மிகவும் மகிழ்ந்தனர். இறையரு
விருத்தி
._!!! ଈW ଶରୀT T ନା:
வாழ்க என அவர்களை
J. Cyaar II. It
ளால் வியாபாரம்
யடைந்ததால்
பலருக்கும் உதவ முடிந்தது.
560 stu58 * ஐப்பசி 2008 * 25
அவர்களுக்கு மணியாக இரு குழந்தைகள். அவர்களும் படித்து நல்ல நிலைக்கு
வந்தனர். அவர்கள் செய்த பல சமூக சேவைகளால் பலராலும் பாராட்டப்பெற்றனர். அன்பும்
அறனும் நிறைந்த இல் வாழ்க்கையில் இன்பத்திலும், துன்பத்திலும், லாபத்திலும்
நஷ்டத்திலும் இரு வரும் என்றும் ஒருவருக்கு மற்றவர் உறுதுணையாக இருந்து ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்தனர்.
அந்த வருடம் தம்பதிகள்
வாரனாசியில் போப் சுவாமி இதயானந்தாவைச் சந்தித்தனர். நடமாட முடியாத முதிர்ந்த நிலையில் இருந்த அந்த அருளாளர் "உங்களைப் பார்த்து நான் மிகவும் பெருமைப்படு கிறேன். என்ன ஸத்திபன், நீ அன்றே என்னுடன் இங்கு வந்திருந்தால் நீ செய்த இவ் வளவு நல்ல காரியங்களையும் அன்பு இறை பக்தியுடன்
பார் செய்வார்கள். வழியில் ඵ් ග්"
கடமையைப் LJSUSir
எதிர்பார்க்காமல் செய்தால் அதுவே அருகே அழைத்துச் செல்லும், தன்னலம் கருதாத பலன் எதிர்
உன்னை இறைவன்

Page 15
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 28
பார்க்காத எந்தச் சேவையும் இறைவனை மகிழ்விக்கும். அது உன்னை அவனருகே அழைத்துச் செல்லும், கலியுகத்தில் நாமஸ் மரணமும், சமூக சேவையுமே அடைவதற்குச் சிறந்த வழி மேலான தவங்கள்
இறைவனை
எல்லாம் தேவையில்லை. உங்கள் பணிகள் நிச்சயம் இறைவனை மகிழ்விக்கும். உங்கள் நற்பணி மேலும் தொட
ரட்டும்" என வாழ்த்தினார்.
இல்வாழ்வான் ஆகிய கிருகஸ்தன்தான் மற்ற மூன்று
வருணாசிரமங்களில் உள்ளவர்
ܠܐ+1 T
/ܠܓ ܐ
K غير الجاهلي
களுக்கும் என்றும் துணையாக இருந்து அவர்களது தேவை களைக் கவனித்து அவர்களுக்கு வேண்டிய சேவைகளைச் செய்ய வேண்டுமென இந்து தர்மம் போதிக்கின்றது. பிதிர் காரியங்கள், யாகங்கள் அனைத்
தும் கணவன் மனைவி இரு வரும் இணைந்தே செய்ய வேண்டுமென வேதங்கள் கூறு கின்றன. "அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அதுவும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று" என்ற வள்ளுவர் வாக்கை நாமும் நின்ைவு கூர்வோமாக.
K
༡
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* ଅଧ୍ *
శ
S SSAA SAAS AAASAASS ZZSK YZS SZ STSS أو جية """""""""""" A. இதிரோசன் تير في ال: "نج
- 于宣 تفنن جی-تخیلی ایران را
சென்ற முறை உறைப்புக்கும் உணவுக்கும் உள்ள சம்பந்தம் பற்றியும், உறைப்பைக் குறைத்து உண்ணும் வழிகளைப் பற்றியும் சிறிது பார்த்தோம். பின் கறி வகைகள் சமைக்கும் முறைகளைப் பற்றி துவங்கி முதலில் பருப்பில் அல்லது பயறில் மூன்று விதமான கறிகளை சமைக்கும் முறைகளைப் பற்றி அறிந்தோம்.
இம்முறை முருங்கைக் காய், முருங்கை இலை இவற்றைக் கொண்டு சுவைபடச் சமைக்கும் முறைகளைப் பார்ப்போமா? இலங்கைத் தமிழர்களில் அதிகமாய் தாவர உணவை உன்பவர் விரும்பி உண்ணும் மரக்கறி வகைகளில் முருங்கைக்காய் ஒரு தனி இடம் பெற்றிருக்கின்றதை நாம் கான்கிறோம். இந்தியாவில் இக்காயை சாம்பாரில் மட்டும் சேர்த்து சமைப்பர். நாம் கறி, குழம்பு சமைப்பதிலும் சாம்பாரிலும் சேர்த்து சமைக்கின்றோம், இவ்வூரிலும், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளிலும் தமிழர் வாழும் இடங்களில் முருங்கைக்காய் இறக்குமதியான உடனே விற்பனையாகிவிடுவதை நாம் காண்கிறோம். இப்படி பலரால் விரும்பி உண்ணப்படும் காயையும் இதன் இலையையும் எப்படி நன்றாய் சமைக்கலாம் என்பதை இப்போது
பார்ப்போம்.

Page 16
isotobu 58 * ஐப்பசி 2008 * 28
முருங்கைக் காய் கூட்டுக்கறி
தேவையானவை !
* முருங்கைக் காய், காய்மிளகாய், வெங்காயம், தேங்காய் கூட்டு, செத்தல் மிளகாய், சீரகம், மஞ்சள் துண்டு, உப்பு, பால், வெந்தயத் துரள்.
இப்பட்டியலைப் பார்த்து பயப்படாதீர்கள். இவற்றில் இரு பொருட்களைத் தவிர மற்றெல்லாம் தமிழர் சமையல்
அறைகளில் சாதாரணமாகக் கிடைக்கும்.
சமைக்கும் முறை :
இரு முருங்கைக்காய்களின் மேற்தோலைப் போக்கிய பின், மூன்று அங்குல நீளத்தில் நறுக்கி, நீரில் அரை அவியலாய் அவித்து எடுக்கவும். பின் காய்மிளகாய், வெங்காயம் என் பவற்றை நறுக்கிப் போட்டு, சிறு எலுமிச்சங்காய் அளவு வறுத்து அரைத்த தேங்காய் கூட்டை அவித்த காய்களுடன் சேர்க்கவும். இதற்குக் காணக்கூடிய உப்பைச் சேர்த்து பாலில் அவிய வைக்கவும். நன்றாய் அவிந்த பின்னர் மேலும் சிறிது பால் விட்டு மூடிவிடவும். இரண்டு நிமிஷங்களுக்குப் பின் திறந்து ஒருமுறை புரட்டி, வறுத்துப் பொடி செய்த வெந்தயத் தூளில் மூன்று விரற்பிடி தூவி அடுப்பில் இருந்து இறக்கவும். பின் ஒரு தேக்கரண்டி கடுகு, சொற்ப சீரகம், மூன்று காய்மிள காய், சொற்ப வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை நெய்யில் தாளிதம் செய்து, அக்கறியில் போட்டு புரட்டி எடுத்துக் கொள்ளவும். நேர வசதி உள்ளவர்கள் இம்முறையைக் கையாளலாம். அவசரமாகச் சமைக்க வேண்டியவர்களுக்கு
ஒரு குறுகிய பாகம் உண்டு. இதோ வருகின்றது :

வெந்தயம் சேர்ந்த முருங்கைக் காய் கறி :
முருங்கைக்காய் கறி சமைப்பவர்கள் அதிகமாய் வெந்தயம் சேர்த்து சமைப்பது உண்டு. வெந்தயம் உடலுக்கு நல்லது என ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. இதனால் போலும் சிலர் காலையில் எழுந்தவுடன் ஒரு பிடி வெந்தயத்தை நீரில் போட்டு அருந்தி வருகின்றனர்.
கறி சமைக்கும் முறை :
இரண்டு முருங்கைக் காய்களை எடுத்து மூன்று அங்குல அளவிற்கு வெட்டி, இரண்டாகக் கீறி கழுவி எடுக்கவும். பின் வெங்காயம் அரைச் சிறங்கை, மிளகாய் அரைச் சிறங்கை, ஒரு
தேக்கரண்டி தூள், அளவான உப்பு ஆகியவற்றை காயுடன் சேர்த்து அவற்றின் அரைமட்டத்திற்கு பால் விட்டு வேக வைக்கவும். நீர் சுண்டிய பின் இறக்கி தாளிதம் செய்துபோடுக. பின் ஒரு சட்டியில் நெய் விட்டு, அது கொதித்தவுடன், அரைச்சிறங்கை வெந்தயம் சேர்த்து, அது பொன் நிறமாகப் பொரிந்த உடன், முன்னரே தாளிதம் செய்த கறியை அதிற்
கொட்டி, சொற்பமான பால் விட்டுக் கிளறி, மூடி ஐந்து நிமிஷம் வரை இளம் சூட்டில் வேக விட்ட பின் இறக்கி
எடுக்கவும்.

Page 17
5550Lu 58 o EgüLF 2008 : 30
முருங்கை இலைக் கறி :
தேவையானவை !
* மூன்றுபிடி முருங்கை இலை,
* கடுகு
* வெங்காயம்,
* காய்மிளகாய்,
* பால் அல்லது தேங்காய் பால், بقا از
கறி சமைக்கும் முறை :
(நம்மூரில் தேங்காய் அதிகம் கிடைப்பதால் சமையலுக்கு தேங்காய்ப்பால் பாவிக்கின்றோம். தேங்காய் கிடையாத
இடங்களில் பசுவின் பாலைப் பாவிக்கின்றோம்.)
மூன்று பிடி முருங்கை இலையை எடுத்து காம்புகளை நீக்கி குறுணலாக அரிந்து கொள்ளவும். நெய்யில் கொஞ்சம் கடுகைப் பொரியவிட்டு அத்துடன் நறுக்கிய வெங்காயம்,
காய்மிளகாய் ஆகியவற்றை வகைக்கு ஒரு சிறங்கையாகச்
சேர்த்துப் பொரியவிடுக. இவை அரைப்பதம் வெந்தவுடன், நறுக்கிவைத்து இருக்கும் முருங்கை இலையை இதில் கொட்டி குறுசிறங்கை அளவு பால்விட்டு, சிறிதளவு உப்பும் சேர்த்து, கிளறி, ஐந்து நிமிஷம் வரை குறைந்த நெருப்பில் விட்டு மூடி விடுக. பின் திறந்து பார்த்து, நீர் வற்றியபின் சிறிது நேரம் கிளறிப் பின் எடுக்கவும்.
 

EEGLIGATLI 5B & BILJf 2008 & 31
முருங்கைக்காய் குழம்பு
தேவையானவை :
2 முருங்கைக்காய்கள், பொரிப்பதற்கு எண்ணெய், பழம்புளி, காரத் தூள், தேங்காய்ப் பூ, கடுகு, செத்தல் மிளகாய்,
வெந்தயம், உள்ளி, கறிவேப்பிலை
குழம்பு சமைக்கும் முறை :
இரண்டு முருங்கைக்காய்களை எடுத்து அவற்றை ஒன்றரை அங்குல நீளத்தில் நறுக்கிக்கொண்டு அவற்றுடன் கீறிய ஒரு சிறங்கை காய் மிளகாய், வெங்காயம் ஆகியவற்றையுஞ் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒரு எலுமிச்சங்காய் அளவு பழம்புளியைக் கரைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி காரத்தூளும் அளவான உப்பும் கூட்டியபின்னர், ஒரு சிறங்கை தேங்காய்ப் பூவை வறுத்து அரைத்த கூட்டையும் வதக்கிவைத்திருக்கும் முருங்கைக்காய் முதலியவற்றையும் சேர்த்துக்கொள்க.
பின்னர் கடுகு, கறிவேப்பிலை, செத்தல் மிளகாய், வெந்தயம், உள்ளி என்பனவற்றைத் தாளிதம் செய்து அந்தச் சட்டியிலேயே, குழம்புக் கரைசலை ஊற்றி மூன்று கொதிக்குமேல் இறக்கிக்கொள்க.
இக்குழம்பு சோற்றுக்கு மட்டும் அல்லாது. பிட்டு, இடி பப்பம், தோசை, அப்பம் முதலிய எல்லாவற்றுடனும் சேர்த்து உண்ணத் தகுந்த ஒரு சிறந்த பாகமாகும்.
Íůiffě σή Ικαρίναέισι:
சுத்தபோசனபாக சாஸ்திரம்
by
முதலியார் சு. திருச்சிற்றம்பலவர்
αριφείράόν தி. கேதீஸ்வரநாதன்
| 鼬

Page 18
“
i Es
Iத ரதம
-
■: 上 * , *闇
H T T
■ l 丁 ಗಾ: | 3. ಗಾ।
်ကြီးါး | 「
 

கலப்பை 58 & ஐப்பசி 2008 * 33
கண்ணாமூச்சி ஆடிய சோதரத்திற்காய்க் கண்ணிரில் கதறித்
துடிக்குது, அங்கே கதறித் துடிக்குது
கண்ணுக்குக் கண்ணான உன்னுடன் கூடப் பிறப்பாகும்
பெரும் பேறு கொண்டேனே என
கண்ணாமூச்சி ஆடிய சோதரம் இன்று களித்துச் சிரிக்குது
- உன் உண்ணாத விரதம் கண்டு - இங்கே களித்துச் சிரிக்குது
கற்றுக் கொடுத்த ஆசானுளம் கனத்துக் கலங்கிக் கரையுது
அங்கே கலங்கிக் கரையுது
கல்வி சொல்லிக் கொடுத்த செம்மைக்குக் கச்சிதமாய்க்
கெளரவக் காணிக்கை தந்தாம் என
கற்றுக் கொடுத்த ஆசானுளம் கன கம்பீரம் கொள்ளுது
- உன் உண்ணாத விரதம் கண்டு - இங்கே கம்பீரம் கொள்ளுது
சொந்தம் இருந்தும் போகையில் தனித்தாயோவெனச் சுற்றம்
சோருது, அங்கே சுற்றம் சோருது
சொக்கத் தங்கமே சுற்றமாய்ப் பெற்றதாம்பச் சொல்வோமே
உன் மார் தட்டி என
சொந்தம் தேடியுனை நாடி வந்து உறவு தொடுக்குது
- உன் உண்ணாத விரதம் கண்டு - இங்கே உறவு தொடுக்குது
கூடப்பழகிக் குறையிற் போன உனக்காய்க் குமுறி வெடிக்குது, அங்கே குமுறி வெடிக்குது கூடச் சேர்ந்து தோளுக்குத் தோளான நட்பைப்
பெறச் செய்ததவம் ஏதுஎன கூடப் பழகும் நண்பர் குழாம் குதூகலம் š9|9Lužil
உன் உண்ணாத விரதம் கண்டு இங்கே குதூகலம் அடையது
|

Page 19
கலப்பை58 * ஐப்பசி 2008 * 34
பழகிப்போயும் பசிக் கொடுமையில் எம்மினம் ஆலாய்ப்
பறக்குது, அங்கே ஆலாய்ப் பறக்குது
படைத்து இருந்தும் பசி துறந்து இருந்து படைத்துக்
காட்டிய இலட்சியம் உனதிற்காய்
பழகிப் பார்த்தறியா முகங்கள் கூடப் போற்றி மகிழுது
- உன் உண்ணா விரதம் கண்டு இங்கே போற்றி மகிழுது
இங்கே இன்று அங்கே நாளையெனப் போற்றி மகிழுமே,
எங்கெங்கும் போற்றி மகிழுமே
ஈழ விடியலுக்கு வித்திட்டோர் வரிசையில் வந்திட்ட
உனக்காய்த் தமிழினத்து வாழ்த்துப் பாவில்
இங்கே எழும் வாழ்த்துவரிகளும் சேர்ந்துனைப் போற்றிமதிழுமே
- உன் உண்ணாத விரதம் கண்டு எங்கும் போற்றி மகிழுமே!
வாழ்க உந்தன் வேள்வி வண்ணத் தமிழ் மகனே! வண்ணத் தமிழ் மகளே! வாழ்க வாழ்க வாழ்கவே!
- மனோ ஜெகேந்திரன்
 

பலம் பெயர்ந்தோர் வாழும் வாழ்வில் நலம் இழந்தோர் தமை நினைவோர் யார் யார் யார் பொலம் பெருகும் மரியின் மைந்தா கேள் கேள் கேள்
THC LLLLLTL TTLTLLaLTTS TTTT TT TOLLL T SLLSLS தலம் மூழ்கும் நி
புத்தம் மலர்ந்த மண்ணில் நாளும் போர் போர்போர் நித்தம் சூழும் மிடிமை போதும் யோபோ போ கத்தன் பாலன் கண்ணின் மணியே பார் பார் חחש சித்தம் தேடும் விடியல் தரவே வாவாவோ
枋 நெஞ்சம் வெம்பி வாழும் நிலையோ கீழ் கீழ் கீழ் பஞ்சம் நோவு பாழும் பசியைத் தீர் தீர் தீர் கொஞ்சும் மழலை இயேசு ஈது ஏன் ஏன் ஏன்: தஞ்சம் கோர்வோர் சோகம் தீர்க்க வாவா வா!
"“याया"
உள்ளம் ஒடிந்து உடமை இழந்து பாழ் பாழ் பாழ் வெள்ளம் தந்த தாக்கம் போதும் ஓய்ஒய் ֆն கள்ளம் இல்லாக் கன்னி சிசுவே காண் காண் காண்il
மள்ளம் தீர்த்து மலர்ச்சி சேர்க்க п6uп6uпl |
மரணம் பார்த்தும் மெளனம் காத்தல் வீண் வீண் வீண் இரணம் காணும் உலகே நியாயம் கோர் கோர் கோர் சரணம் இயேசு எனவே பணிக தாழ் தாழ் தாழ் கரணம் போடும் வாழ்வை மீட்க வா வா வா
இடிவு காணும் மண்ணில் வேண்டும் பேழ் பேழ் பேழ் முடிவு ஒன்று விரைவில் தேர்ந்து தா தா தா வடிவு மனிதம் எடுத்த கிறிஸ்தைச் சேர் சேர் சேர் கொடிது போக்கக் குழந்தை இயேசே வா வா வா!
- மனோ ஜெகேந்திரன்.

Page 20
ஈழத்து சைவமும்
LIITTIDLIIfluIDD
Uចb 2
சிழந்துச் சைவர் தமிழகத்திலே சைவசமய வளர்ச்சியின் பொருட்டுப் பல்வேறு வழிகளிற் செயற்பட்டிருக்கின்றனர். | கோயிற்றிருப்பணி செய்தவர்களிலே தஞ்சாவூர் மகாராட்டிரர் காலத்தின் முற்கூறிலே (கி. பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற் சுறும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்கூறும்) யாழ்ப்பாணத்து வரணி ஊரினரும் சைவக் குருமார் பரம்பரையிலே தோன்றிய வருமான தில்லைநாதத் தம்பிரான் ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது. திருமறைக்காட்டுச் சிவன்கோயிலிலே தொண்டுசெய்த தில்லைநாதத் தம்பிரான் தஞ்சை மகாராட்டிர மன்னன் நம்பிக் கைக்கும் மதிப்புக்கும் பாத்திரமாகியதால் வேதாரணிசுவரர் கோயிற் பராமரிப்பாளராக நியமனம் பெற்றார். அவர் வரணி யாதீனத்தினைத் தாபித்துத் தம் பரம்பரையினரிடம் கோயிற் பரிபாலனத்தை ஒப்புவித்தார். அவ்வாதீனகர்த்தாக்கள் வரணி, கரணவாய் எனும் யாழ்ப்பாணத்துக் கிராமங்களிலிருந்து வந்தவர்கள். ராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை தம் ஞானகுருவாக வரணியாதீனம் சற்குருநாதசவாமிகள் பூரீலபூரீ கைலாசநாத தேசிகரைக் கூறுவர். வரணியாதீனகர்த்தர்கள்
閭 I
闇
鹃 喹 h ܡܢܬܐ
ATHI||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
-. لیختینٹی I 擂
As
ܕܝܼܘܼ.. ܗ .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வசம், 1949இலே சென்னை அறநிலையப் பகுதியினர் தம் நேரடி நிர்வாகத் தின் கீழ் கொண்டுவரும் வரை, கோயில்
பாதுகாப்புப்
வேதாரணிசுவரர் இருந்தது. தாயுமான சுவாமிகள் வரணியாதீனப் பெரியார்களின் வழித் தோன்றலாவரெனத் தக்க ஆதாரத்தோடு சொல்லப்படுவ மட்டுவில் வே. திருஞான சம்பந்தபிள்ளை பூணூரிலங்கா, கல்வியிற் சிறந்த
தாகப் பண்டிதர்
கூறியிருக்கிறார்.
யாழ்ப் IՉՃt), திசம்பர் பக்.27). எட்டிகுடி மு ரு கன் வேதாரணியம்
பாணப் பெரியார்,
கோ யிலும் கோயிலின்
ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
பதினேழாம் நூற்றாண்டின் பிற் பகுதி யில் வாழ்ந்த திருநெல்வேலி ஞானப்பிரகாச முனிவர் சிதம்பரத்திலே ஞானப் எனும் திருக்குளம் அமைப்பித்தவர். சித்தன்கேணி ஆ, அம்பலவாண நாவலர் (-1932) தமிழகத்திலே திருநெல் வேலியிலே திருஞானசம்பந்த
பிரகாசம்
சுவாமி மடாலயமும் சிதம் பரத்திலே ஆறுமுகநாவலர் சந்தான ஞானசம்பந்த சுவாமி
ஆதீனம் எனும் மடாலயமும்
EGM'Gaou 5B & Bi'uuf 2008 Exo 37
நிறுவி நடாத்தியவர். வட்டுக் கோட்டை சுவாமி சங்கரசுப்பிர மணிய சச்சிதானந்த ராசயோகி (1864-1944)திருவாலங்காட்டுத் தேர்த் திருப்பணி செய்தவர். இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் மறைந்த செப்பறைச் சிதம்பர சுவாமிகள் சிதம்பரத் திலே சிவஞானத் திருத்தளி எனும் மடாலயத்தினை நிறுவி யவர். ஜே. எம். எஸ். வேலுப் பிள்ளையின் புதல்வர் திவான் பகதூர் மாசிலாமணிப் பிள்ளை திருமுல்லைவாயில் rorTFSLUIT மணிரீஸ்வரர் கோயில் தர்மகர்த் தாவாகத் திகழ்ந்தவர். அவர் தம் மனைவியின் ஞாபகார்த் அத்திருத்தலத்திற் சுவாமிக்குக்
த மாக சுப் பிரமணிய கோயிலெடுத்தவர்.
சைவாகமோபதேசம் தமிழ்
ஈழத் தினைப் பூர்வீகமாகக் கொண்ட
நாட்டிற் செய்தருளிய
துறவிகள் பலர் காணப்படு கின்றனர். வரணி தில்லைநாத முனிவர் திருமறைக்காட்டிலே தாபித்துச் சைவாக மோபதேசத்திற்கு
வரணியாதீனம்
நிறுவன ரீதியில் வழிசெய்தமை
முன்னர் கூறப்பட்டது. திருநெல் வேலி ஞானப்பிரகாச முனிவர்

Page 21
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 38
திருவண்ணாமலை ஆதீனத்திலே துவராடை பெற்றுத் துறவி "சோழமண்டலத்தின் கணிருந்த ஆதிசைவர்களுள்ளும் சைவப் பண்டாரங்களுள்ளும்
பாதிச்
திருவண்ணாமலைத் தம்பிரான் களுள்ளும் பலருக்குச் சைவாக மோபதேசம்" செய்தருளியவர் (ஆறுமுக பிர பந்தத் திரட்டு, முதற்பாகம், நல்லறிவுச் சுடர் கொளுத்தல்,
நாவலர்
1954, i. 25-26).
ப தி னெ ட் ட 7 ம் நூற்றாண்டின் கடைக்கூறிலும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்த அள வெட்டி வைத்திய தாத முனிவரும் அவர் மரபினரும் அளவெட்டி வே. ձե3մT3: சபைப்புலவர் (1816 - 1873) தாய்மாமனாருமான சுப்பிர மணிய தம்பிரானும் சிதம்பரத் திலே வாழ்ந்து பணிபுரிந்து சிவபதம் அடைந்தவர்களாவர். திருவண்ணாமலை ஆதீனம் பூரீ சரவண சுவாமிகள் ஆறுமுக நாவலர் காலத்திற் சென்னையில் வசித்துப் பேர்பெற்ற ஈழத்தவ (ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, மேற்படி, பக். 128). திருவண்ணாமலை
ராவர்
(-1949)
ஆதீனத் தம்பிரானாக விளங்கிய
ஆறுமுகத் தம்பிரான் ஆறுமுகநாவலரின்
உரையாசிரியர்
மாண வரும் அவருடைய வண்ணைச் சைவப் பிரகாச வித்திபாசாலை ஆசிரியரு மாகப் பூர்வாசிரமத்தில் வாழ்ந் தவர். சித்தன்கேணி ஆ அம்பல வாண நாவலர் மதுரைத் திரு ஞானசம்பந்தர் மடத்திற் காஷாயம் பெற்று நைட்டிகப் பூண்டு தமிழ் நாட்டிலே திருநெல்வேலி யிலும் சிதம்பரத்திலும் பணி புரிந்து மடைந்தவர். வண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துக் குமாரத் தம்பிரான் சுவாமிகள்
பிரமசரியம்
சிதம்பரத்திற் சிவபத
எனும் இலக்கணச் சுவாமிகள் சூரியனார்கோயில் ஆதீனகர்த்தரிடம் முத்தீக்கையும் சைவசந்நியாசமும் சமயவறிவும் பெற்று அங்கும் சிதம்பரத்திலும் பேரெடுத்தவர். ஈழத்தினைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இலக்கணச்சுவாமிகளின் பின்பு சிவபதமடைந்தவரும் திருநெல் வேலிச் செப்பறை மடத்திற் பலகாலம் வாழ்ந்து செப்பறைச் சுவாமிகள் எனப் பேர்பெற்றவரு சிதம்பர
|LONTଶST செப்பறைச்
சுவாமிகள் தஞ்சை அன்னப்பன்

பேட்டை பூரீ தாயுமானசுவாமி கள் கீனக்திலே aיונTTTgשוכ -
த *
பெற்றவர்.
சித்தாந்தத்தினைச் சைவசமயிகளிடையே எடுத்துச் செல்வதில் பெரிபார்
aնil:Fall
ஈழத்துச் சைவப்
முன்னின்றனர். திருநெல்வேலி ஞானப்பிரகாச முனிவர் இயற்றிய பெளவு கராகம விருத்தி சிவஞானபோத விருத்தி சித்தாந்த சிகாமணி, பிரமான
சங்கத மொழியில்
தீபிகை, பிராசாத தீபிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோக சாரம், சிவயோக
ரத்நம், சிவாகமாதி மாகான் மிய சங்கிரகம் எனும் நூல்களை நீர்வேலி சி. சங்கரபண்டிதர் எழுதிவைத்திருந்த ஏடுகளின் உதவியோடு நல்லுர்
பிழையற
த. கைலாசபிள்ளை பதிப்பித் தார். அவர் சிவஞானசித்தியார் சுபக்கத்திற்கு எழுதிய யினை சிவசமவாதவுரை என்று ஆதீனம்
(-1785) மறுத்துக் கண்டனங்கள் எழுதி யிருந்தார். இணுவில் நடரா சையர் ஞானப்பிரகாசரின் சுபக்கவுரையினை 1888 இலே
உரை
திருவாவடுதுறை சிவஞானசுவாமிகள்
திருப்பற்றுாரிற் பதிப்பித்தனர்.
HCPLSVL 5B * güLJft 2OOB * 39
இவ்வுரை சித்தியார் சுபக்க அறுவருரைப் பதிப்புகளிலும் (1888 - 89, 1895) g Lh
பெறுகின்றது.
பூரீலபூரீ ஆறுமுகநாவலர் (1822 - 1879) வைசமய தத்துவ விளக்கமாகவும் அதனை மறுத்த புறச்சமய கண்டனமாகவும் செய்த சைவப்பிரசாரணத்திற்
叠占硫山占L直上 உண்மைகளை மக்களுக்குப் புரியவைத்து, சைவசமயத்துள்ளே புகுந்து நீக்கி, புறச்சமயங்களின் தீவிரமான முறியடிக்கும் முயற்சியிலே ஈட்டிய வெற்றி
விட்ட ra
பிரசாரத்தினை
குறிப்பிடத்தக்கது. அவருடைய எழுத்துகளிலே அவர் சாதனை புலனாகின்றது. திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராண வசனம் (1852), சைவதுரவுன பரிகாரம் (1854, 1861), சைவ சமய நெறியுரை (1868), போலி பருட்பா (1869) என்பன சிறந்த எடுத்துக்காட்டு. இம்முயற்சி யிலே அவர் தமிழ்நாட்டில் வீரவணக்கத்திற்கும் ஸ்மார்த்தத் திற்கும் ஈடு கொடுக்கவேண்டி இருந்தது. சத்திய
முடியாது என்று கண்டவர்கள்
நாவலரவர்களின்
நோக்கை வெல்ல

Page 22
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 40
தமிழ்நாட்டிலே பிரதேசக்
காய்ச்சலைக் கட்டவிழ்த்து விட்டனர். அக்காய்ச்சலினாற் பாதிக்கப்பட்டது யன்றி ஈழமன்று. சைவ சமயத்
தமிழகமே
தின் தத்துவம் சைவ சித்தாந்தம்; அதன் மூலம் சைவாகமங்கள் அதற்கு வேறு மூலம் இல்லை என்பது நாவலரவர்களுடைய அடிப்படைச் சமய சித்தாந்தம், இக்கருத்துகளை மயக்கம் இன்றி முன்வைத்து நாவலரவர்கள் சமய பாடம் நடத்தினார். நாவலர் பாரம்பரியம் ஈழத்திற் சைவ மரபுகளைக் காப்பாற்றிக் கிறித்துவத்தின் முனைப்பினைத் தடுத்துவிட்டது. தமிழ்நாட்டிலே வீர வணக்கமும் ஸ்மார்த்தமும் சைவத்தின் தனித்தன்மைக்குப்
பங்கமாக முடிந்தன.
நாவலரவர்களின் நண்பர் நீர்வேலி சி. சங்கர பண்டிதர் (1829 - 1870) தாம் புதிதாக எழுதிய நூல்களையும் உரை களையும் பரிசோதித்த மூல நூல்கள் சிலவற்றையும் பிரசுரிக்கும் நோக்கோடு, தம் காணிகள் சிலவற்றை விற்றுப் பொருள் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு குடும்பத்தோடு சென்றிருந்தகாலை, புதுச்சேரி
யில் வைசூரி கண்டு மறைந் தனர். இந்நூல்களிற் சைவப்பிர காசனம், சிவதூஷண கண்டனம், மிலேச்சமத விகற்பம் என்பன அவர் சிரேட்ட புதல்வர் சிவப்பிரகாச பண்டிதரால் 1878 இலும் கிறிஸ்துமத கண்டனம் அவர் அ. குமாரசுவாமிப் புலவரால் 1882 ggy tři பெற்றன. இவற்றிலே சைவப்
மாணவர் சுன்னாகம்
பதிப்பிக்கப்
பிரகாசனம் சைவசமயப் பண்பு
களைக் கூறுவது ஏனைய மூன்றும் கிறிஸ்தவ மத கண்டனம்.
நாவலரவர்களின் பிறிதொரு நண்பர் ராவ்பகதூர் சி.வை. "தாமோதரம்பிள்ளை (1832 - 1901) 1867 இலே வெளியிட்ட விவிலிய
விரோதமும் அன்றும் பின்பும்
சைவமகத்துவமும்
கிறித்தவரிடையே பெரும் பர பரப்பினை ஏற்படுத்தின. சைவ சைவசித்தாந்த விளக்கமாகக் காணப்படு கின்றது. விவிலிய விரோதம் விவிலியம் கடவுள் நூலன்று என்பதை நிறுவ முற்படுகிறது. கிறித்தவராகப் பிறந்து வளர்ந்த ஒருவர் கிறித்தவத்தினை மறுத்துச் சைவத்தினை ஆதரித்து
மகத்துவம்

எழுதியது கிறித்தவரிடையே பெரும் கொந்தளிப்பினை உண்டுபண்ணியது எதிர்பார்க்க வேண்டியதொன்றே.
சென்னையில் தம் காலத்தில் வசித்தவரும் யாழ்ப்பாணத் தினைப் பூர்வீகமாகக் கொண் டவருமான பூணூரீ சரவணகவாமி
ତିନିବu
என்று ஆேறு பிரபந்தத் திரட்டு, முதற்பாகம், மேற் படி, பக். 128).
கள் நாவலரவர்களாற் சாத்திர போற்றப்பட்டுள்ளார்
பண்டிதர்
முகதாவலர்
ஆறுமுகநாவலரின் மாணவர் களிலே இணுவில் நடராசையர் தர்க்ககுடாரதாலுதாரி நல்லுரர் வை. திருஞான சம்பந்தபிள்ளை, காசிவாசி சி. செந்திநாதையர் என் போரும் சைவப் பிர சாரணத்தில் முன்னணியில் இணுவில் நடராசையர் (-1903) தமிழ் நாட்டிற் சிதம்பரம், மதுரை முதலாம் ஊர்களிற்
நின்றவர்களாவர்.
பலநாள் வசித்துச் சித்தாந்த சாத்திரம் படிப்பித்தவர். தர்க்ககுடார தாலுதாரி நல்லூர் வை. திருஞானசம்பந்த பிள்ளை சிதம்பரம் சொர்க்கபுர மடத்
FALCOLI 5B XI ELILJA 2OOB 3, 4-1
திலே தங்கி அங்கு சித்தாந்த வித்தியாசாலை நடத்திக் கொண்டிருந்தபோது சிவபதம் அடைந்தவர்.
அரிகரதாரதம்மிய
அவருடைய
மொழி பெயர்ப்பு (1895), நாராயன பரத்துவ சிவனுக்குப் பரத்துவம் கூறி விஷ்ணுவுக்கு கூறுவன. காசிவாசி சி. செந்தி நாதையர் (1848 - 1921) கிறிஸ்து மதகானனகுடாரியாகச்சிவனுந் தேவனா என்னுந் தீயநாவுக்கு ஆப்பு, வஜ்ரடங்கம், விவிலிய குற்சிதம், விவிலிய குற்சித கண்டன திக்காரம், விவிலிய
நிரசனம் என்பன
அஃதின்மை
குற்சிதக் குறிப்பு என்பன தந்து, ஏகான்மவாதத்தினை மறுத்துச் சென்னை ஆரியனார் பிரமம்: பரப்பிரமமாகாத சீவப்பிரமம், தாந்திரிக
துண்ட கண்டன கண்டனம்,
வச்சிர தண்டம்,
மகாவுக்கிரசு வீரபத்திராஸ்திரம் வழங்கிச் சித்தாந்த சிகாமணி திகழ்ந்து, நாவலரவர் களின் சைவ பாரம்பரியத்தினை
வைதிக சைவ சுத்தாத்துவித சைவசித்தாந்தமாகக் ԿեITքեիր இக் கருத்துத் தொடர்பாகச் செந்திநாதையர் இந்து சாதனத்தில் எழுதிய
விழைந்தவர்.

Page 23
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 42
கட்டு  ைரக  ைன நல்லுரர்
த. கைலாசபிள்ளை 1897 இலே சுத்தாத்துவித சித்தாந்த எனத் தொகுத்தளித்தனர். இவ்வழியிலே அவருடைய சைவ வேதாந்தம் (1920), தேவாரம் வேதசாரம் (1917) குறிப்பிடத்தக்கன. பதினாறு பிரசுரனங்களிலே சிவபரத்துவத் தினை நாட்டும் வேதாந்தச் சான்றுகளையுடையது. வேதம்,
ஆகமம், ஆக இதிகாசபுராணம் என்பனவற்றிலும் திருமுறை களிலும் சிவபரத்துவத்தினைக்
வைதிக சைவ
եմիքենI சமயம்
என்பன
சைவ வேதாந்தம்
வேதாந்தம், மாந்தம்,
காட்டும் ஒற்றுமைகளைக்
கூறுவது தேவாரம் வேதசாரம்
வடகோவை சு. சபாபதி நாவலர் (1845 - 1903) நாவலர் மரபிலிருந்து விலகித் திருவா வடுதுறையாதீன சம்பந்தத்தி னாலே அம் மரபினைக் கண்டிக்கப் புறப்பட்டவர். இவர் கூறும் நூல்களை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். தீக்ஷிதரின் நூல்களின் மொழி பெயர்ப்புகள் சிவகர்னாமிர்
சிவபரத்துவம்
அப் பய
தம் (1885), பாரத தாற்பரிய சங்கிரகம் (1876), இராமாயண
தாற்பரிய சங்கிரகம் (1876): அரதத்தாசாரியர் நூல் மொழி பயர்ப்பு சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் (1876), சிவனே நான்கு வேதத்திலும் பாரதத் திலும் இராமாயணத்திலும் கூறப்படும் பரம்பொருள்
என்பது இந்நூல்களின் தாற்
பரியம். சபாபதி நாவலர் கிறித்தவத்தினை மறுத்து எழுதியது பேசுமத சங்கற்ப
நிராகரணம் (1882).
மேலைப்புலோலி நா. கதிரை வேற்பிள்ளை (1871 - 1907) சித்தாந்த சைவ சித்தாந்த மகாசரபம்
மகோத்தாரனர்,
函ü凸Fā止
இவரு டைய சைவ பூஷன சந்திரிகை (1900), மகோற்சவ உண்மை விளக்கம் (1896), சுப்பிரமணிய கிரமம் (1900) என்பன குறிப் இவர் பதிப்
மேலைப்புலோலி
என்று பேரெடுத்தவர். சமய விளக்கத்திலே
சிவக்ஷேத்திராலய
பராக்
பிடத்தக்கவை. பித்த வி. கார்த்திகேய பிள்ளையின் சைவசித்தாந்த சங்கிரகம் (1903) வினாவிடையில் அமைந்த தெளிவான விளக்கம் பின்பு இராம
நாவலரவர்களுக்குப்
வீரவணக்கத்தினை

லிங்கபிள்ளை பாடல் ஆபாச தர்ப்பனம் அல்லது மருட்பா மறுப்பு (1904) மூலம் கண்டித்து வழக்கு மன்றம் ஏறி நிலை நாட்டியவர் கதிரைவேலர். நீலகிரி குன்றுரரிலே அவருக்குச் சம்பவித்த மரணம் கேள்வி களுக்கு விடை தராமலே போய்விட்டது. கதிரைவேலர் புத்தமத கண்டனமும் தந்தவர். சித்தன்கேணி ஆ அம்பலவான நாவலர் சிவத்துரோக கண்டனம் தந்திருக்கிறார். முத்துக்குமாரத் சுவாமிகள் 1921 இலே சிவ ஞான முனிவரின் சிவஞான போத மாபாடியம் முழுவதும் முதன்முதலாக வெளியாகக் காரணமாயிருந்த பரிசோதகர் குறிப்பிடத்தக்கது. இவரே தருமபுரவாதீனத்தாரின் முக்கியமான நூலான முத்தி
வண்ணை
தம்பிரான்
என்பது
560ügDL 58, 3. EüLJái 2008 X. 43
நிச்சயப் பேருரையை ஆராய்ந்து இலே பதிப்பிக்க உதவியவர். இவரே வீழிச் சிவாக்கிர போகிகளின் சிவாக் கிர பாடியம், கிரியாதீபிகை,
சைவ சந்நியாச பத்ததி எனும் சங்கத நூல்களையும் பரிசோதித்து உதவியவர். செப் பறைச் சிதம்பர சுவாமிகள் சிதம்பரத்தில் நிறுவிய மடால பத்திற் பலருக்குச் சைவசித் தாந்த பாடம் சொல்விக்
கொடுத்தவர். புலோலி சு. சிவ பாதசுந்தரம்பிள்ளை (1878 - 1953) தருமபுர ஆதீனத்தார் அழைப்பினை ஏற்று 1948 இலே தமிழ்நாடு சென்று ஜே. எம். நல்லசாமிப்பிள்ளையின் சிவஞான சித்தியார் ஆங்கில மொழி பெயர்ப் பினைத்
திருத்திப் புதுக்கி வெளிப்படுத்த உதவியவர்.

Page 24
LITGETit
தமிழ் வாழததான - பாடுபடும் வலியைப் பாடுவார்.
(அம்பித் தாத்தா)
...
н O -
– ר Б. ы
. 11 ܗܝܢ ܡܕ s
I -
 
 
 
 
 
 
 

r?sاہشھe eواطن
சிதிகாலையின் நிசப்தத்தை ஊடுருவிக்கொண்டு வெகு தொலைவிலிருந்து "அல்லாவோ அக்பர்" என பள்ளிவாசலின் அறைகூவல் ஒலித்தது. தினமும் அதிகாலையில் இப்படியாக ஒலிக்கும்போது என் மனதில் இனம்புரியாத ஒரு நிம்மதி
ஏற்படுகிறது. அது ஏன் என என்னால் விளக்க முடியவில்லை.
இரவு படுக்கையில் படுத்தால் சரியா நித்திரை கொள்வ தில்லை. கண்ணயர்வதும் பின்பு முழித்துக்கொள்வதுமாக என் இரவுகள் கழியும். அன்றும் அப்படித்தான் பள்ளிவாசலின் அறைகூவல் ஒலித்தது. 'அம்மா ஒருபடி விடிந்துவிட்டது" என முணுமுணுத்துக்கொண்டு எழுந்தேன். தலையணையை கட்டிலின் சட்டத்தில் சாத்தி அதன் மேல் முதுகை சாத்திய படி காலை நீட்டிக்கொண்டு படுக்கையில் அமர்ந்தேன். படுக் கைக்குப் பக்கத்து மேஜை மேல் இருந்த மணிக்கூடு 1987 டிசம்பர் 18 காலை 5.00 மணி எனக் காட்டியது. மணிக்
கூட்டுக்குப் பக்கத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து என் மனைவி
பாக்கியம் எழுதிய கடிதம் கண்ணில் பட்டது. மேஜை விளக்கைப் போட்டு விட்டு மனைவியின் கடிதத்தை வாசிக் கத்துவங்கினேன். இந்தக் கடிதத்தை பல தடவை படித்துவிட்டேன் எனினும் திரும்பத் திரும்ப வாசிக்க
வேணும் போலிருந்தது.

Page 25
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 46
பல நாட்களுக்குப் பின் மனைவியிடமிருந்து இந்தக் கடிதம் வந்திருந்தது. கடிதம் எழுதிய திகதியோ ஒக்டோபர் 22. ஆனால் கடிதம் முந்த நாள் என் கைக்கு வந்து சேர்ந்தது. யாழ்ப்பாணத்தி லிருந்து கடிதம் வந்து சேருவ தென்றால் இப்போதைய நிலைபரத்தில்ஆகக் குறைந்தது இரண்டு மாதமாவது ஆகும்.
நைஜீரியாவின்
தான்
ਨੂੰ 2 விஞ்ஞான மாஸ்டராக வேலை செய்து வருகிறேன். நான் மட்டும் முதலில் நைஜீரியா வந்து சேர்ந்தேன். இடம் வசதி, மூன்று பிள்ளைகளின் படிப்பு வசதிகள் எப்படி எனப் பார்த்து,
பிரதேசத்தில்
பின்பு மனைவி பிள்ளைகளை வரவழைப்பது என நினைத்துக் கொண்டு தான் இங்கு வந்தேன். ஆனால் நிலைமை விதமாக முடிந்து விட்டது. மூத்த பிள்ளை செந் தாழன், ஒரே ஒரு மகன் வயது பதினெட்டு, இயக்கத்தில் சேர்ந்து விட்டான். மகன் இயக்கத்தில் சேர்ந்ததும் பாக்
வேறு
எனது
கியம் ஊரை விட்டு வர மறுத்துவிட்டாள்.
'நாங்க எல்லோரும்
ஊரை விட்டு போய்விட்டா அவன் தனித்துப்போவான்.
அப்பா, அம்மா, சகோதரிகள்
அவனுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் எனத் தெரிந் தால், அவன் ஒரு நாளைக் காவது எம்மோடு வந்து சேருவான்" எனச் சொல்லி ஊரிலே தங்கிவிட்டாள்.
நான் உழைக்கிற இயந்திரமாக நைஜீரியாவில் வேலை பார்த்து வருகிறேன். இரண்டு வருசத்துக்கு ஒரு முறை லீவில் ஊர் போய் வருவேன். ஊருக்குப் போவ தென்றால் உயிரைக் கையில்
பிடித்துக்கொண்டு போவது போல்தான்.
"தடதட"வென வாசற்
கதவை எனது ஸ்டுவேர்ட் இஸ்மெயில் தட்டுவது கேட்டது. மனைவியின் கடிதத்தை மேசை மேல் போட்டுவிட்டு, வாசற் கதவைத் திறந்தேன், "சணு மாஸ்டர்" அவன் கூற நானும் "சணு" எனக் கூறி அவனை வரவேற்றேன். சணுவென்றால் நைஜீரியாயின் ஹவுசா மொழியில் வணக்கம் எனப் பொருள்படும். அவன் குடும் பத்தோடு குடியிருப்பதற்கு வீட்டுக்கு ஒரு அறுபது அடி
போப்
தூரத்தில் குவார்டர்ஸ் கொடுக்
கப்பட்டிருந்தது. காலையும் மாலையும் வந்து வீட்டு வேலை களைச் செய்துவிட்டுப் போவான். அவன் சுமாராக
ஆங்கிலம் பேகவான்.

கூடையில் நான் போட்டு வைத்திருந்த அழுக்குத்துணி
களை வெளியே கொண்டு போய் பிளாஸ்டிக் வாளியில் ஊறப்போட்டான். பின்பு
உள்ளே வந்து வீட்டை துப்பரவு பண்ணத் தொடங்கினான். நானும் சுடுதண்ணி சுவிட்சைப் போட்டு மெல்லிய சுடுநீரில் குளித்து, கூடம் செல்ல ஆயத்தமா இது டிசம்பர் ம ாதம், ஹமட்டான் (hamattam) நல்ல குளிர். வெளியே பனியுடன் பாலை வனத்து தூசி சேர்ந்து பத்து அடிக்கு அப்பால் என்ன இருக்கிறதென்று தெரியாது பனி மூடிக்கிடந்தது.
பள்ளிக்
னேன்.
காலம்.
ஒரு கம்பளிச் சட்டை யைப் போட்டுக் கொண்டு வெளியே புறப்பட்டேன். இஸ்மெயில் வீட்டுக்குள் செய்ய வேண்டிய வேலை களை முடித்து விட்டு வெளியே துணி தோய்த்துக் கொண்டிருந் தான். நான் வீட்டைப்பூட்டிக் கொண்டு, இஸ்மெயிலிடம் மாலை நாலரை மணிக்கு போதும் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு எனது மசிடா வாகனத்தில் கவர்மெண்ட்காலேஜ் நோக்கிப்
புறப்பட்டேன்.
வந்தால்
கலப்பை EB ஐப்பசி 2008 * அ7
காரில் புறப்பட்டதும் எனது மனச் சிந்தனை காரை விட வேகமாக ஓடியது. மகன் இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் ஆண்துனையில் லாமல் தனியே இருக்கிறார்கள்.
நான் இங்கே ஆபிரிக்கா கண்டத்தில் தட்டத்தனியே இருக்கிறேன். மனைவி
மக்களுக்கு ஏதாவது நடந்தால் எனக்குத் தெரியவருவதற்குப் பல மாதங்கள் ஆகலாம். யாழ்ப்பாணத்துக்குக் கடிதப் போக்கு வரவோ டெலிபோன் பேசவோ,அப்போதையநிலையில்
வசதிகள் குறைவு.
உற்றார் உறவினர் இழப்பும், பொருளாதார இழப்பும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையில் தினமும் நடந்து
கொண்டிருந்தன. தமிழரின் தன்மானத்தைக் காக்கவும் தமது அடிப்படை உரிமை
களை விட்டுக் கொடுக்காமல் தலைநிமிர்ந்து நிற்கவும் வேண்டு மென்றால் நம் தமிழ் மக்கள் இத்தகைய இன்னல்களைப் பொறுத்து க் கொள் ள வேண்டிய நிலையோ?
தமிழ் இனத்தின் இளைய வீரர்கள் வீரத்துடன் போராடு வதைப் பார்க்கவும் கேட்கவும்

Page 26
GSHÜGEL 58 & BILJf 2008 : 48
ஒரு விதத்தில் பெருமையாக லிருந்தது ஆனால் இதனால் விளையும் உயிர் இழப்பும் பொருளாதார சேதமும் தேவையா எனக் கேள்வியும் எழுகின்றது.
ஈழத்திலிருந்து பிற நாடு களுக்கு இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வருங்கால சந்ததியர், ஈழத்தின் சரித் திரத்தில் தமிழ் மக்கள் சிங்கள அரசின் அட்டூழியத்தை எதிர்த்துப் போராடி, பல வீரச் செயல்களைச் சாதித்தனர் ஈழத்தின் இளம் சந்ததியினர் எத்தனை எதிர்ப்பு கள் வந்தும் தம் உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை எழுதியிருப்பதை வாசித்து வியப்படைவார்களா? தாம் ஈழத்தமிழ் இனத்தைச் சேர்ந் தவர்கள் என்று சொல்லுவதில் பெருமை கொள்வார்களா?
கம்பவுண்டுக் கேட்டை அடைந்ததும் எனது சிந்தனையும் ஒரு முற்றுப் புள்ளிக்கு வந்தது. கிரை எனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்திவிட்டு பள்ளிக்கூட வாத்தியார்களின் அறையை நோக்கி நடந்தேன். வழியில் நின்ற எனது விஞ் ஞான மாணவர்கள் "குட் மோர்னிங்" எனக் கூறி என்னை
என்றும்,
பள்ளிக்கூட
வரவேற்றனர். மாணவிகள் விக்டோரியா ராணி காலத்தில் எப்படி ஒரு காலை மடித்து தலையை ஒரு பக்கம் சாய்த்து நமஸ்காரம் செய்தார்களே அதே போல் என்னை வரவேற்றனர்.
வாத்தியார்களின் அறையில், கணித மாஸ்டர் வெற்றிவேல் என்னைப் பாத்ததும், அருகே வந்து
"கொழும் புக்கு போட்டீரோ" என்று கேட்டார்.
கால்
'இல்லை" என்றேன்.
"யாழ்ப்பாணத்தில் கார்பட் ஷெல்லிங் நடக்கிறதாம். அனேக போராளிகள், பொது மக்கள் இறந்தும் பலர் படு காயம் அடைந்துமிருக்கிறார்களாம்."
கையிலிருந்த என் பேனா நழுவி கீழே விழுந்தது.
"உம.கி.கு எப்படி இது தெரியும் ? " என் குரல் நடுங்கியது.
'மிசஸ் அந்தோனி கொழும் புக்கு டெலிபோன் பண்ணிய போது இப்படியான செய்தி கிடைத்ததாம்" என்றார்.
எனக்கு இரண்டு காதுக்கும் பின்னாலே குளிர்ந்து கொண்டு வந்தது. தலையும் சுற்றிக் கொண்டு வந்தது. மெதுவாக கதிரையில் [Øhବl)
பக்கத்திலிருந்த
அமர்ந்தேன். grair

மையைப் பார்த்துவிட்டு வெற்றி வேல் மாஸ்டர், "இப்பவே ஏன் கவலைப்படுகிறிர் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் NETக்கு போய் கொழும்பில் இருக்கும் உமது சகலனுக்கு டெலிபோன் பேசலாம். எனக்கு அங்கே வேலை பார்க்கும் அல்லாஜியை அவரிடம் சொல்லி டிலேயில்லாமல் கால்
எடுத்துத் தரலாம்" என்றார்.
நல்லாத்தெரியும்.
நைஜீரியாவின் கடுணா பிரதேசத்தில் டெலிபோன் வசதி குறைவு. சர்வதேச கால் எடுக்க வேண்டு மென்றால் “NET” ST siirro கூறப்படும் நிலையத் தில் போய்த்தான் எடுக்க
வேண்டும். இருபத்திநாலு மணிநேரமும் அது இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அங்கு வருவோர் எல்லோரும் எக்ஸ்பற்றியட்ஸ் - பிற நாட்டவர் களாகத்தான் இருப்பார்கள். நிலையத்தில் வேலை செய்யும் ந பர்கள் யாரை யாவது அல்லது ஒரு சம்திங் அவர்கள்
வைத்தால் க்யூ வரிசையை விட்டு தனிப்பட்ட சலுகை கிடைக்கும். வெற்றி வேல் மாஸ்டர் அல்லாஜி என்று அழைத்த நபர் மெக்கா சென்று வந்திருந்தார். அவருக்கு
தெரிந்தால், ତିମିର୍ଦtନ୍ଧନୀt
கையில்
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 49
மரியாதை கொடுத்து அப்படி அழைத்தார்.
பள்ளிக்கூடம் முடிந்ததும் இரண்டு மணி யளவில் வெற்றிவேல் மாஸ்ட ரும் நானும் எனது வாகனத்தில் நிலையத்தை அடைந்தோம். எனது நல்ல நேரம் வெற்றி
மத்தியானம்
வேல் மாஸ்டருக்குத் தெரிந்த அல்லாஜி அன்று கடமையில் இருந்தார். கொழும்பில் எனது தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுத்
சகலனின்
தேன். அத்துடன் ஒரு பத்து நபாராவை அன்பளிப்பாக அவர் கையில் வைத்துவிட்
டேன். கொழும்பு தொடர்பு பத்து நிமிடத்திற்குள் கிடைத் தது. என் சகலனே பேசினார். யாழ்ப்பாணத்தில் போராளிகள் ஐம்பதுக்கு மேலே கொல்லப் பட்டதாகவும், அத்துடன் அதிக போராளிகள் படுகTபம் அடைந்துள்ளார்கள் என்றும், பொதுமக்களும் பட்டுள்ளார்கள் என்றும் கூறிக் கொண்டு போனார். எனக்கு விளங்கிவிட்டது. செந்தாழனைப் பற்றி இனிமேல்தான் போகிறார் என்று.
பாதிக்கப்
கூறப்
"செந்தாழனுக்கு படுகாயம். அவனுடைய இரண்டு களையும் குண்டடி பட்டதால் அம்புடேட் பண்ணி விட்டார்
கால்

Page 27
கலப்பை 58 * ஐப்பசி 2OOB * 50
களாம். அவன் உயிருக்கு ஆபத் தில்லையாம்" எனக் கூறினார்.
தொலைபேசி என் கையை விட்டு தழுவியது. மெல்லப் பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். வெற்றிவேல் மாஸ்டரும் அல்லாஜியும் பக்கத்தில் வந்து என் தோளைத் தட்டி தேற்றினர். அவர்களுக்கு செய்தி என்னவென்று தெரியா விட்டாலும், என் நிலையைப் பார்த்து துக்ககரமான செய்தி என விளங்கி விட்டது.
"உம்முடைய நிலையிலே நீர் இப்ப காரை ஓட்ட வேண்டாம்" என வெற்றிவேல்
கூறினார்.
வெற்றிவேல் மாஸ்டர் எனது காரை ஓட்டிக் கொண்டு எனது வீட்டை நோக்கிப் புறப் பட்டார். வழியில் செந்தாழனைப் பற்றிய செய்தி
போகும்
யைச் சொன்னேன். அவருக்கு எனக்கு சொல்வி தேற்றுவதென்று தெரியவில் லையோ என்னமோ, எதுவுமே
என்ன
பேசவில்லை.
அதன்பின் நான் அடிக்கடி என் சகலனிடம் தொலைபேசி யில் எனது மகனது சுகத்தையும் பெண்பிள்ளைகள் பற்றியும் அறிந்து கொள்வேன். செந்தாழனின் கால்கள் முழங்
மனைவி,
காலுக்குக் கீழ் வெட்டி எடுக்கப் அவன் நிரந்தர வீட்டில் தங்கி
பட்டபின் மாக நம்
விட்டான் என்ற செய்தியும் கிடைத்தது.
மனைவியின் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தேன். கடிதமும் வந்தது. பிரித்துப் படித்தேன். கடிதத்தில் சில எழுத்துக்கள் பாக்கியத்தின் கண்ணிர்த் துளிகளால் நனைந்து ஆங்காங்கே அழிந்திருந்தன.
நான் afgår
கடிதத்தை
"கண்ணே மணியே என்று ஒடு பெற்றோம். அவன் படித்துப் பெரிய உத்தி பார்ப்பான் எமது கடைசி காலத்தில் ஆதரவாக இருப்பான் என்று எண்ணி "னேன். ஆனால் அவன் இப்ப இரண்டு கால்களையும் இழந்து வீட்டோடே வந்திருக்கிறான். ஆனாலும் அவனுடைய தமிழ் ஈழத்தாகம் இன்னும் தணிய நீங்கள் அனுப்பிய இயக்கமும்
அவனுக்கு ஒரு சக்கர வண்டி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். நானும் அவனுக்கு என்று வீட்டின் முன் அறையை ஒதுக்கிக் கொடுத் திருக்கிறேன். எந்நேரமும் தன் அறையிலிருந்து எதோ எழுதிக் இயக்கத்
மகனைப்
யோகம்
வில்லை.
பனத்துடன் பணம் போட்டு
கொண்டிரு ப்பான்

தைச் சேர்ந்தவர்கள் வந்து அவனை தங்கள் வாகனத்தில் அழைத்துக் கொண்டு போவார் கள். செந்தாழன் இயக்கத்தின் அதிரடிப்படைக்கு கம்பட் திட்டம் போட்டுக் கொடுப் பதில் முக்கிய நபராம்.
கால்கள் போனாலும், எனது மகன் உயிரோடு வீடு வந்து சேர்ந்து விட்டானென்று இப் போது நிம்மதியாகவிருக்கிறேன். ஆனால் நமது இரண்டு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றித் தான் ஒரே கவலை. மல்லிகா எந்நேரமும் அண்ணன் பக்கம்தான் பேசுவாள். சில: வேளைகளில் அண்ணனுக்கு ஒத்தாசையாக எழுத்து வேலை களும் செய்து கொடுக்கிறாள். இது எங்கே போய் முடியப் போகிறதோ?" என எழுதி யிருந்தாள்.
கடிதத்தைப் படித்து முடித்த ஈழத்துக்காகப்
எனது மகனின்
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 51
இந்த
பாழ்ப்பாணம்
பெருமைப்பட்டேன். வயதில் நான் போய் என்னத்தை கிழிக்கப் போகிறேன். உத்தியோகம் இருக்கும் உழைத்து, பணத்தை ஊருக்கு அனுப்பு வதை விட வேறு என்ன செய்ய முடியும். ஆனால், யாழ்ப்பாணத் தில் அந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த எனது பெண்களின் எதிர்காலம் ஒரு கேள்விக் குறியாகத் தோன்றியது.
விரை
எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு உண்டு அல்லவா? அதுபோல் Tேது ஈழத் தமிழரின் பிரச்சனைக்கும் ஒரு முடிவு இல்லாமலா போதும்? இப்படி நினைத்து எனது
மனதைத் தேற்றிக் கொள்வேன்.

Page 28
6Diónu.
னால்ட்ஸ் தந்த பரிசு
- கிறுக்கி
மோகன் வேலைமுடிந்து மாலை வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு பூங்காவினூடாகத்தான் போவது வழக்கம். அன்று அவனது மனைவி பணியகத் தொலைபேசியில் அவனை அழைத்து, "வரேக்கை ரோஸ்ற் பாண் வாங்கிக்கொண்டு வாருங்கோ" என்று சொல்லியிருந்தாள். மூலைக்கடையில் பாண் வாங்கிக்கொண்டு பூங்காவினுள் நுழையும்போது வாசலில் வைத்திருந்த கரும்பலகையில் நடைகள்" பற்றிய வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதை அவதானித்தான். அதில் ஐந்து விதமான நடைகள்பற்றி விபரிக்கப்பட்டிருந்தன. அவற்றிலொன்று 'தளர்நடை' அதுதான் தனக்கு உகந்தது என்றெண்ணி மிகுதித்தூரத்தை தளர்நடையிலேயே நடந்துபோனான்.
பூங்காவில் ஒதுக்கமாக இருந்த வாங்கு ஒன்றில் ஒரு வயோதிபர் உட்கார்ந்துகொண்டு பாண்துண்டுகளைப் பிய்த்துப் பிய்த்து அங்கு கூடியிருந்த புறாக்களுக்கும் சிட்டுக்குருவி களுக்கும் எறிந்து விளையாடிக்கொண்டிருந்த காட்சியைக் கொஞ்சநேரம் நின்று ரசித்தான். தானும் தனது பாணில் ஒரு துண்டைப் பிய்த்துக் குருவிகளுக்குப் போடுவோமா என்று ஒரு கணம் யோசித்தான். ஆனால் மறுகணம் வீடுசேரவேண்டிய அவசரத்தை எண்ணி மேலும் தளர்நட்ை நடக்கலானான். கொஞ்சத்தூரம் நடந்து R பார்த்ததும் அது தனது சுயநடையாக அமைய
 
 

5505(Lu 58 & gÜLuf 2008 & 53
வில்லை, அத்துடன் வீட்டுக்குப் பானைக் கொண்டு போக வேண்டிய அவசரம், இரண்டும் சேர்ந்து அவனை விரட்டியது. விறுக்விறுக்கென்று துரிதநடையில் நடந்து வீடுபோய்ச் சேர்ந்தாள்.
கதவுமனியை அடித்ததும் மைதிவி ஒடிவந்து கதவைத் திறந்து அவனை வரவேற்று, பானையும் கையில் வாங்கிக் கொண்டாள். மோகன் நேரே Kinder Roomக்குப் போய் அங்கு காய்ச்சலாகப் படுத்திருக்கும் தனது பிள்ளையின் நெற்றியைத் தொட்டுப்பார்த்து, கன்னத்தைத் தடவிக்கொடுத்துவிட்டு, "என்ன செய்யுது ராசா? பிள்ளைக்குக் காய்ச்சல் வந்தவனோ?" என்று செல்லமாகக் கேட்டுவிட்டு, தனது உடுப்புகளை மாற்றிக் கொண்டு குளியலறைக்குப் போய் showerஇல் குட்டிக்குளிப் பொன்று போட்டுவிட்டு வந்து ஆறுதலாகச் சோபாவில் அமர்ந்தான். மருத்துவர் என்ன சொன்னார் என்று மனைவியிடம் கேட்டறிந்துகொண்டு நேரே சாப்பாட்டு மேசைக்குப் போய் கதிரையில் உட்கார்ந்தான். நல்ல பசியுடன் வந்திருக்கிறார் என்பதைக் குறிப்பால் அறிந்துகொண்ட மைதிலி துரித கெதியில் சோறு, கறிகளை மேசைக்கு எடுத்து, கோப்பையில் அவற்றைப் பரிமாறி அன்பாக அவனிடம் நீட்டினாள். அவன் வாங்கிக்கொண்டான். ஆனால் அந்த அன்பை அவனால் பிரதிபலிக்க முடியவில்லை. அவனது முகத்தில் சோகக்களை தெரிந்தது. பிள்ளையின் சுகபீனம் அவன் மனதைச் சற்று வாட்டியது. ரசிப்பின்றிச் சாப்பிட்டுவிட்டு, போய் சோபாவில் சரிந்து படுத்து நித்திரையாகிவிட்டான்.
மைதிவிக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளின் பெயர் மாதுரி பள்ளிக்கூட மாணவி. அன்று பள்ளிக்கூடம் போக முன்னர் அக்காவிடம், "எனக்கு இறாலும், கோழியும், கிழங்கும் பொரித்து Fried Rigg செய்துவையுங்கோ அக்கா" என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள். பசியுடன் வீடுதிரும்பியதும் சப்பாத்தை ஒரு பக்கமும், புத்தகப்பையைச் சோபாவிலும் எறிந்துவிட்டு, நேரே சாப்பாட்டு மேசைக்குப் போய்க் குந்திக்கொண்டு, தான் Order பண்ணிப்போட்டுப் போன Fried Rice வருமென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்

Page 29
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 54
தாள். அது செய்யவில்லை என்றறிந்ததும் அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அக்காவை ஏசினாள். மைதிலி தயவாக, "பிள்ளையை மருத்துவரிடம் கொண்டுபோய்க் காட்ட வேண்டியிருந்ததால் சமையல் தாமதமாகிவிட்டது. அதனால் Fried Rice செய்யவில்லை" என்று எடுத்துச் சொல்லியும்
அவளின் கோபம் அடங்கவில்லை. "செய்யமுடியாட்டில் முன்னமே சொல்லியிருக்கலாம்தானே முண்டம்மாதிரி இருந்து விட்டு. . .' வாக்குவாதம் கிளம்பியது. வாய்ச்சண்டை
வலுத்து கைச்சண்டையாக மாறியது. நிலைமை முற்றி, கையில் அகப்பட்ட பொருட்கள் எறிகணைகளாக மாறின. சண்டை சூடுபிடிக்க, தண்ணீர்கூட கணையாக மாறியது. மைதிலி தனக்குப் பக்கத்திலிருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் ஒரு கை நிறையக் கிள்ளி மாதுரியின் முகத்தில் எறிந்தாள். மாதுரி விலத்தினாள். அந்தத் தண்ணீர் போய் அடுப்பில் பாண் வாட்டுப்பட்டுக் கொண்டிருந்த தோசைக்கல்லின்மேல் பொழுக்கென்று விழ, சூடான கல் சுறீர் என்று பெரிய ஒலத்தைக் கிளப்ப, மோகனின் நித்திரை குழம்பிவிட்டது. புறுபுறுத்துக்கொண்டு அடுப்படிக்கு வந்து இந்தச் சண்டைக் காட்சியைக் கண்டான். ஆனால் ஒன்றும் அதிசயப்படவில்லை. வழக்கமாக நடக்கிற உள்வீட்டுப்போர்தானே என்றெண்ணிக் கொண்டு, வழக்கமாகத் தான் செய்துவைக்கும் சமாதானத் தொழிலில் இறங்கினான்.
இந்தத் தருணத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு மைதிலி இரண்டு துண்டு பாண்களை வாட்டியெடுத்து அதன் மேல் மார்ஜரின் பூசி சீனியும் போட்டு எடுத்துக்கொண்டுபோய் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அவனை எழுப்பினாள். சீலன் அனுங்கிக் கொண்டு விழித்துப் பார்த்துவிட்டு, திரும்பி, தாயின்மடியில் தலையை வைத்துக்கொண்டு, மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். தாய் அவனின் தலையையும் நெஞ்சையும் தடவிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளின் காதில் தன் கணவனுக்கும் தங்கைக்கும் நடந்த வாக்குவாதம் துல்லியமாகக் கேட்டது.

ДЕОogaШ5E * ВЕШLi 2COB o EE
"மாதுரி எதையும் கொஞ்சம் யோசிச்சு நடக்கவேணும் பிள்ளை அக்கா காலையிலை எழும்பின நேரம்தொடக்கம் பம்பரமாக வேலை செய்கிறா. சமையல் வேலை, வீடுவாசல் தளபாடங்கள் துடைச்சுச் சுத்தமாக வைக்கவேனும், எல்லாற்றை உடுப்புகளும் தோய்ச்சுக் காயவிட்டு, iron பண்ணி மடிச்சுவைக்க வேணும், பிள்ளையின் அலுவல்களைப் பார்க்கவேணும், அத்தோடை பிள்ளைக்குச் சுகயினம், மருத்துவரிட்டைக் காட்டி மருந்து வாங்கிவந்து அவனுக்குக் குடுக்கவேணும் - இப்பிடி எத்தினை அலுவல்களை அக்கா செய்துமுடிக்கிறா பாவம் தானே சொன்னபடி சாப்பாடு செய்துவைக்கேல்லையெண்டு நீ அவளைக் கோபிக்கலாமா?" என்று புத்திமதியை கொஞ்சம் உறைக்கத்தான் சொன்னான்.
மாதுரிக்கு அவன் சொன்னது சரியென்று படவில்லை. திமிறிக்கொண்டு மேசையிலிருந்து அப்புறமாகப் போய் நின்று கொண்டு, "அப்ப நான் சாப்பிடுகிறதில்லையோ? பள்ளியிலை யிருந்து பசியோடை வந்தனான். உங்கடை சோறும் கறியும் எனக்குப் பிடிக்காதெண்டு அவஷக்குத் தெரியாதோ? வாற வழியிலை மற்றப் பிள்ளைகள் மெக்டொனால்ட்சுக்குப் போய் விரும்பினதைச் சாப்பிட்டிட்டுப் போகினம், நான் அதுக்குக் காசு கேட்டால் நீங்கள் தாறதுமில்லை. அந்தப் பிள்ளைகள் என்ன நினைப்பினம்? எனக்கு வயிறு சுகமில்லையெண்டு பொய்ச்சாட்டுச் சொல்லிப்போட்டு வந்திட்டென்" என்று மூச்சுவிடாமல் சொல்லிமுடித்தாள். பேசிவிட்டுப் போய் பக்கத்து ஹோலிலிருந்த சோபாவில் குறண்டி உட்கார்ந்துகொண்டு TW யை முடுக்கிவிட்டு அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். TWயில் நடந்தவற்றைக் கண்கள்தான் பார்த்தனவே தவிர மனம் உள்வாங்கவில்லை.
மோகன் விடவில்லை. சில விநாடிகள் கழித்து அவளிடம் போனான். மைதிவியும் கூடவே போனாள். "ஏன்? உனக்கு மாதா மாதம் பொக்கற்காசு தாறவர்தானே காசில்லை, காசில்லை என்கிறாய்?" மோகன் இடையிட்டு, "சரீ சரீ பொக்கற்காசு குடுக்கிறது சாப்பாடு வாங்கவல்ல. ஏதாவது ஆசைப்பட்ட சாமான்கள் வாங்கத்தான் பொக்கற்காசு. சரீ விடுங்கோ நான் உதிலை சைக்கிளிலை போய் மெக்டொனால்ட்சிலை Chicken

Page 30
ESGOLIGOLI 58 & EBuLuf 2008 : 55
Burg1ே வாங்கிக்கொண்டுவாறென். இண்டைப்பாட்டுக்குச் சரிக்கட்டுவம்." உடனே மைதிவி குறுக்கிட்டு, "ஒமோம்! ஒவ்வொருநாளும் உது சரிப்பட்டுவராது. முதலிலை பிள்ளைக்குச் சுகம் வரட்டும். நீங்கள்தான் அவளுக்குச் செல்லம் குடுக்கிறது. அவள் தான் நினைச்சபடி நடக்க, நீங்களும் அதுக்குத் தாளம் போடிறியள்." மோகன், "சளி விடப்பா நீர் போய்ப் பிள்ளையைப் பாரும் நெஞ்சிலை சளியிருக்குது. அவன் இருமேக்கை தெரியுது. கொஞ்சம் கற்பூரத்தைலத்தை நெஞ்சிலை தடவிப் போட்டு, கம்பிளிபாலை போத்திவிடும்."
மைதிலி மூஞ்சையைச் சுழித்துவிட்டு திரும்பிப்போகி றாள். மோகன் சைக்கிளில் ஏறி வெளியே போகிறான்.
கதவுமனி அடிக்கிறது. கதவைத் திறந்ததும் காவேரி வாசலில் நிற்கிறாள். அவள் மாதுரியின் வகுப்பு மானவியும் உற்ற சிநேகிதியும், கேட்டாள் - “மாதுரி நிற்கிறாவா?" மைதிலி பதில் - "ஒம், வாரும் அறைக்குள்ளை நிற்கிறாள். போய்ப்பாரும்."
காவேரி கதவில் தட்ட மாதுரி கதவைத் திறக்கவில்லை. மீண்டும் தட்டி, "நான்தான் காவேரி வந்திருக்கிறேன்" என்று சொன்னதும் கதவு மெதுவாகத் திறக்கப்படுகிறது. பசியுடன் அழுதுகொண்டிருந்த மாதுரி கண்களைத் துடைத்துக்கொண்டு கதவைத் திறந்து புன்னகைக்கும் பாவனையில் தனது முகத்தை வைத்துக்கொண்டு, "வாரும் காவேரி உள்ளுக்கு வாரும் கதவைச் சாத்திப்போட்டு வாரும். என்ன இந்த நேரத்திலை?" அவள் அழுதிருக்கிறாள் என்பதைக் காவேரி கவனித்தும் தெரியாதது போலி, "ஒண்டுமில்லை மாதுரி சும்மா பாத்திட்டுப்போக வந்தனான். நீர் வந்த களையிலை சாப்பிடட்டும் எண்டுதான் கொஞ்சம் பொறுத்து வந்தனான்."
பொக்கற்றிலிருந்து ஒரு மடித்த கடிதத்தை எடுத்து மாதுரியிடம் கொடுத்து, "இதை உடனே கொண்டுவந்து தந்திடவேணுமெண்டு எனக்கு வீட்டிலையிருக்க இருப்புக் கொள்ளேல்லை. அதுதான் கொண்டோடி வந்தனான்." மாதுரி கடிதத்தை ஆவலுடன் பிரித்துப் படித்தாள்.

BRIJETILI EE & ELILA POОВ č. 57
மோகன் Chicken Burger உடன் வந்துவிட்டான். மைதிலி அதைக் கவனிக்காதது போல அடுப்படியில் வேலை. மைதிலி யின் நொந்த உள்ளத்தை விளங்கிக்கொண்ட மோகன் தானே நேரில் போய் மாதுரியின் கதவைத் தட்டினான். பதிவில்லை. "மாதுரி வந்து சாப்பிடு, உனக்கு விருப்பமான சாப்பாடு வந்திருக்குது." மாதுரி மெல்லக் கதவைத் திறந்து, "நான் கொஞ்சம் பொறுத்து வாறென், அத்தான்" என்று சொல்லிக்கொண்டு கதவை மூடும்பொழுது உள்ளேயிருந்த காவேரியை மோகன் கண்டுவிடுகிறான். "ஒ காவேரியும் வந்திருக்கா? அதுதான் பசிக்கேல்லை!"
காவேரி “ஓம்! இப்பத்தான் வந்தனான். நீங்கள் எப்பிடி? சுகமாக இருக்கிறீங்களோ?" அந்தவேளை காவேரி அவனைப் பார்த்த குறும்புப் பார்வையும் அவளின் புன்சிரிப்பும் அவ்வளவு ஆரோக்கியமானதாக அவனுக்குப் படவில்லை. எனினும் அவளின் வசீகரத்தில் சற்றுத் தடுமாறித்தான் விட்டான். இது முதற்தடவை அல்ல. காவேரி மாதுரியைச் சாட்டிக்கொண்டு அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகிறதற்குக் காரணம் காவேரிக்கு மட்டும்தான் தெரியும். ஏன்? மோகனுக்கும் சாடை யாக விளங்காமலில்லை. மாதுரியின் முன்னிலையிலும், வீட்டில் மைதிலி இருக்கும்போதும் அவனுடன் அவள் அளவளாவிப் பேசமுடியாதுதானே!
காவேரி கொண்டுவந்த கடிதத்தை மாதுரி வாசித்து விட்டு வானில் பறந்து கொண்டிருந்தாள். கடிதத்தை நெஞ் சோடணைத்து வைத்துக்கொண்டு கூத்தாடாத குறை. மோகன் வாசலுக்கு வந்ததும் அதை மறைத்துக்கொண்டு மெதுவாக மறைவான ஒரு பக்கத்துக்குப் போய்விட்டாள்.
காவேரி பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை. தாயுடன் தான் வசிக்கிறாள். தகப்பன் விவாகரத்துச் செய்துவிட்டார். கோர்ட்டில் தீர்ந்தபடி தாய்க்கு ஜீவனாம்சம் மாதாமாதம் கிடைக்கும். அந்தப் பணத்திலிருந்து வீட்டுச்செலவுகளையும் சமாளித்துக்கொண்டு. கஷ்டப்பட்டு காவேரியையும் படிக்கவைக்கிறாள்.

Page 31
SfisoÜRTTOU 58 BUf 2008 - 58
மோகன் ஒரு வசீகரமான ஆண்மகன். கட்டுமஸ்தான தேகம். எந்தப் பெண்ணும் விரும்பத்தக்க தோற்றம். இருதரப்புப் பெற்றோர்களும் பேசி மோகனை மைதிலிக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். திருமணமாகி இரண்டு ஆண்டுகளின் பின்னர்தான் ஒரு ஆண்குழந்தை பிறந்தான். குழந்தைக்கு இப்போது வயது மூன்று.
 ைமதிலி சிறிய வளாக இருக்கும்போதே தாயை இழந்துவிட்டாள். தகப்பன் வெளிநாட்டில் வேலை. இப்போது இளைப்பாறும் வயது. மைதிலியின் தமையன் உத்தியோகமாக இருக்கிறார். அவருக்கும் திருமணமாகிவிட்டது. குடும்பத்துடன் அடிக்கடி வந்து மைதிலியைப் பார்த்துப் போவார்கள். தங்கள் மற்ற மகள் மாதுரியைப் படிப்பதற்காக அக்கா மைதிலியுடன் மோகன் வீட்டில் விட்டிருக்கிறார்கள்.
மோகன் - மைதிலியின் பிள்ளை சீலனுக்கு காய்ச்சல் மாறவில்லை. சளியுடன் இருமலும் மூக்கடைப்பும் அதிகரிக்க மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்தார்கள். அவர் வந்து குழந்தையைப் பார்த்துவிட்டு 'பிள்ளைக்கு நிமோனியாபோல் இருக்கிறது, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கள்" என்று பணித்துவிட்டுப் போய்விட்டார். உடனே பிள்ளையை மருத்துவ மனைக்குக் கொண்டுபோக அங்கு வாட்டில் அனுமதித்தார்கள். மைதிலி பிள்ளையுடனேயே நாள்முழுவதும் இருப்பாள். மோகன் வேலைத்தலத்தில் லீவு எடுத்துக்கொண்டு ஆஸ்பத் திரிக்கும் வீட்டுக்குமாக ஒடியோடி தேவையானவற்றைச் செய்தான். சமையல் பொறுப்பும் அவன் தலையில்தான் விழுந்தது. அதாவது, தேநீர் போட முட்டை பொரிக்க, பிட்ஸாவைச் சூடாக்க, மீன் டின்னை உடைத்துக் கொட்டிச் கடவைத்துப் பாணுடன் சாப்பிட. இப்படி மேலெழுந்த வாரியான சமையல்
மாதுரிக்கு இது வாய்ப்பாக அமைந்தது. அத்தானிடம் கெஞ்சிக்கூத்தாடிப் பணம் வாங்கிக்கொண்டு அவளும் காவேரியும் மெக்டொனால்ட்சுக்கு அடிக்கடி போய் விரும்பி பதை உண்பார்கள்.

560Lj5L 58 * 8ljudi 2008 * 59
மெக்டொனால்ட்சின் முகாமையாளருடைய மகன் தான் அந்த நிறுவனத்தின் காசாளர். அவனது பெயர் கைலைநாதன் (சுருக்கமாக கைலை). மற்றப் பள்ளி மாணவிகளுடன் மாதுரியும் அடிக்கடி மெக்டொனால்ட்சுக்குப் போவது வழக்கம். கையில் காசு இருக்கும்போதெல்லாம் போவாள். அந்த வேளைகளில் மாதுரியின் கண்களும் கைலையின் கண்களும் சந்திக்கும். கண்கள் கதைபேசும், வாய் புன்னகைக்கும். சாப்பிட்டு முடிந்தாலும் அவ்விடத்தைவிட்டுப் போக மனமில் லாமல் சகமாணவிகளின் அழுத்தம் காரணமாகக் கவலையுடன் தான் வீடு திரும்புவாள். மாணவிகளுள் காவேரிதான் மாதுரிக்கு நெருங்கிய, ஆத்மநண்பி மெக்டொனால்ட்சில் இருவரும் சாப்பிட்டுவிட்டு அவளுக்கும் சேர்த்தே சாப்பாட்டு பில்லைக் கட்டுவாள்.
அன்று காவேரி கொண்டுவந்து மாதுரியிடம் சேர்த்தது கைலையின் காதற் கடிதம்தான். கைலைக்கும் மாதுரிக்கும் இரகசிய காதல் மலர்ந்தது. அந்த விடயம் காவேரியைத் தவிர வேறெவருக்கும் தெரியாது. இருவர்களினதும் பள்ளிப்படிப்பும் அழிவை எதிர்கொண்டுநின்றது.
குழந்தைக்கு வியாதி குணமாகாமல் தொடர்ந்தும் மூன்று கிழமைகள் ஆஸ்பத்திரியில் வைத்திருக்கவேண்டியதாயிற்று. மைதிலி வீட்டிலில்லாத தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு காவேரி அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வருவாள். அவள் வருவது மோகனுக்கும் ஒரு உற்சாகத்தைக் கொடுப்பது போன்ற உணர்ச்சி.
மாதுரி இப்போது அத்தானிடம் பணம் பெற்றுக்கொண்டு அடிக்கடி மெக்டொனால்ட்சுக்குப் போவாள். அங்கு போய் ருசியாகச் சாப்பிடுவதுடன் கைலையுடன் உரையாடுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அதேவேளை, காவேரி மாதுரியைப் பார்க்கவரும் சாட்டில் அடிக்கடி அவர்களின் வீட்டுக்கு வந்துபோவாள். மாதுரி மெக்டொனால்ட்சில் இருக்கும்போது காவேரி இங்கு மாதுரியின் வீட்டிலிருப்பாள். இடைக்கிடை அடுப்படிக்கும்

Page 32
assoustou 58 * egÚILUA 2008 * 60
போய் மோகனுக்கு உதவிகள் செய்வாள். அவள் வந்துபோவது மோகனுக்கும் ஒரு இனந்தெரியாத ஆனந்தத்தை அளித்தது. அவள்மேல் அவனுக்கு ஒரு ஆசையும் பிறந்துவிட்டது எனலாம். ஆனால் அவளை நெருங்கப் பயம், மைதிவியின் நினைவு வந்தவுடன் தூரப்போய்விடுவான். இருவரின் மனங்களிலும் ஏதும் தயக்கம் ஏற்பட்டதோ அல்லது தக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்களோ தெரியாது. இப்படியே மூன்று கிழமைகள் கழிந்தன. இருவரும் நெருங்கக்கூடிய நேரமும் சந்தர்ப்பமும் வருமென்று எதிர்பார்த்திருந்தார்கள்.
மூன்றுகிழமை முடிவில் குழந்தைக்குச் சுகமாகி வீட்டுக்குக் கொண்டுவந்தார்கள். பிள்ளையை நோய் நன்றாக வாட்டி விட்டது. எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தான். வைத்தியர் சொன்னபிரகாரம் சூப்பும் ஹோர்விக்சும் பழரசங்களும் கொடுத்து ஆளைத் தேற்றினார்கள். ஆஸ்பத்திரியிலிருந்து மைதிலி குழந்தையுடன் வீட்டுக்கு வந்ததும் அங்கு சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல அவளுக்கு ஒரு பிரமை. ஆனால் மாதுரியின் காவேரியின் நடமாட்டங்களில் மட்டும் ஒரு மாற்றமும் நடக்கவில்லை. காவேரியின் வருகையும் மாதுரி மெக்டொனால்ட்சுக்குப் போவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.
ஒருநாள் மாலை, மைதிலி குளியலறைக்குக் குளிக்கப் போனவள், நினையாப் பிரகாரமாக ஏதோ எடுப்பதற்கு அவசர மாக அடுப்புக்குள் நுழைந்தாள். அங்கு அவள் கண்ட காட்சி அவளைப் பிரமிக்கவைத்தது. அப்படியே ஒருகனம் விறைத்து நின்றுவிட்டாள். தன் கணவனும் காவேரியும் கட்டிப்பிடித்துக் கொஞ்சிக்கொண்டு நின்றதை நேரடியாகக் கண்டதும் அவளுக்கு என்ன செய்வது என்ன பேசுவது என்று தோன்ற வில்லை. கையில் வைத்திருந்த போத்திலை சடாரென்று கீழே மோதிவிட்டு விறுக்கென்று ஓடிப்போய் அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திப் பூட்டிக்கொண்டாள். மோகன் எத்துணைக் கெஞ்சியும் திறக்கவில்லை. பயந்து நடுங்கிக்கொண்டு நின்ற காவேரி மெல்ல நழுவி வீட்டுக்கு ஓடிவிட்டாள்.

கலப்பை 58 * ஐப்பசி 2008 * 31
பள்ளியிலிருந்து திரும்பிய மாதுரி இடிவிழுந்ததுபோல நின்ற அத்தானையும் பூட்டியிருந்த அறையையும் மாறி மாறிப் பார்த்து வியப்பும் பயமும் ஒருங்கே தோற்ற, விரலைக் கடித்துக்கொண்டு பேச்சுமூச்சின்றி நின்றாள்.
மோகனுக்கும் காவேரிக்குமிடையில் நிலவிய நட்பு மாதுரிக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் தன்னுடைய கைலையின் காதலை முன்னேற்ற காவேரியின் உதவி தேவை என்று கருதி அவர்களின் நட்பை அவள் பெரிதுபடுத்த வில்லை. கண்டும் காணாததுபோல் நடந்துகொண்டாள்.
மைதிலி அறைக்குள் போனவள்தான், அன்று முழுவதும் வெளியே வரவில்லை. மோகன் வெளிவிறாந்தை சோபாவில் படுத்துக்கொண்டான். அந்தத் தருணம் பார்த்து மைதிலி வெளியே வந்து குழந்தைக்குத் தேவையான மருந்துகள், உணவுகளை எடுத்துக் கொண்டுபோய் தன்னுடைய அறைக்குள் வைத்துக்கொண்டாள்.
காவேரி அன்றிலிருந்து அவர்கள் வீட்டுக்குப் போவதை நிறுத்திக்கொண்டாள். மாதுரிக்கு அது ஒரு பெரிய இழப் பாக இருந்தது. அவள் இல்லாததால் கைலையின் தொடர்பு களும் குறைக்கப்பட்டுவிட்டன. இனிமேல் அத்தானிடமிருந்து பணம்வராமல் மெக்டொனால்ட்சுக்குப் போகவும்முடியாது. மாதுரி தனது கடைக்கு வராதது கைலைக்குப் பெரிய ஏமாற்ற மாக இருந்தது. அவளைக் காணாததால் அவனுக்கு இரவில் தூக்கமே வரவில்லை.
ஒருநாள் மாதுரி பள்ளியிலிருந்து திரும்பும்பொழுது கைலை அவளை நடுவழியில் சந்தித்து அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அது நீண்ட கடிதம், வீடுபோய்ச் சேர்ந்ததும் தனது அறைக்கதவைப் பூட்டிவிட்டு உள்ளேயிருந்து கடிதத்தை ஆவலாகப் படித்தாள். படித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தாள். சாப்பிடவும் வெளியே வரவில்லை. அடுத்து என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை, கலந்தா லோசிப்பதற்குக் காவேரியுமில்லையே.

Page 33
கலப்பை 58 * ஐப்பசி 2008 * 82
மைதிலியின் நடமாட்டத்திலும் பெரிய மாற்றம் தெரிந்தது. அவள் முந்திய ஆளில்லை. அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு மாறிவிட்டாள். ஒரே சோகமயமாகக் காட்சியளித்தாள். ஆதலால் மாதுரிக்கு அக்காவுடன் மனம்திறந்து பேச வழி யில்லை. a Taira II. செய்யலாமென்று சிந்தித்துச் சிந்தித்து, கடைசி யாக ஒரு முடிவுக்கு வந்தாள். கடிதத்தில் எழுதியிருந்த கட்டளைப்படி நடப்பதற்குச் சித்தமானாள். தனது விலை உயர்ந்த உடுப்புகள், ஆபரணங்கள், அவசியம் தேவையான பொருட்களை மட்டும் ஒரு பெட்டியில் அடுக்கிவைத்துக் கொண்டு ஆயத்தமாக இருந்தாள்.
இரவு 2 மணி ஒரு கார் மெதுவாக வந்து அவர்கள் வீட்டுப் படலையைத் தாண்டி சற்றுத்தூரத்துக்கப்பால் போய் நின்றது. மாதுரி சந்தடியில்லாமல் பெட்டியுடன் வந்து கைலையின் காரில் ஏறினாள். கார் கிளம்பிற்று. அவள் போய்விட்டாள். போயேவிட்டாள் - புதுவாழ்வைத் தேடி!
மைதிலியின் நை முறைகளைக் கவனித்த மோகன் அவளைப் பரிவாக அழைத்துப்போய் உளநல வைத்தியரிடம்
. L காட்டினான். அவர் சோதித்துவிட்டு, ாகனைத் தனிமையில் அழைத்து, "அவளின் மனநின்ல கவலைக்கிடமாகவுள்ளது.
i يسمى . அமைதி அவசியம்" என்று சொன்னார். பாவம் மைதிலி !
 

நண்பன் ஒருவன் தன்னை "கம்யூனிஸ்ற்” எனச் சொல்லத் திரிந்தான். அது அவன் வாலிப முறுக்கோடு திரிந்த காலம். பின்பு குடும்பம், பிள்ளைகள், பணம் NAVN "o"0" வசதிகள் வந்தபின், ஒப்புக்கு வெளியே பொதுவுடமைவாதம் பேசித் திரிந்தாலும், விட்டில் அவன் சைவப்பழம்.
கம்யூனிச கொள்கைகளின் கேள்வி €7:* பொதுவுடமை சித்தாந்தம் பற்றி முழுதாக ஒரு புததகததைததானும படிக காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதைக் கண்டிருக் கிறேன். கம்யூனிசம் பேசுதல் "புத்திஜீவிதத்தனத்தை அடையாளப்படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என நான் நினைப்பதும் உண்டு.

Page 34
சோக நாடொன்றில் நான் கல்வி கற்ற காலங்களில்
துடன் அங்கே வாழ்ந்த கிழக்கு ஜேர்மன் பேரர் ாக்கியம் ஒன்று, அடிக்கடி ஞாபகத்துக்கு
"சோசலிஷம், கம்யூனிசம்பேசும் பலருக்கு பணத்தையும் பதவியையும் கொடுத்துப்பாருங்கள், மறுகணமே அவர்கள் முதலாளித்துவம் பேசத்துவங்கி விடுவார்கள்." பொதுவுடமை ங் ஒரு சிந்தனாவாதம் மட்டும்தான்; நடைமுறைக்கு உதவாது என்பது பேராசிரியரின் நம்பிக்கை. "ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது" என்கிற நம்மவர் பழமொழியை அவர் அநுசரித்துப் பேசுவார்.
சோசலிஷம் பேசிய நாடுகள் பல இன்று சின்னாபின்னப் பட்டுப் போனதுக்கும், முதலாளித்துவ முறைகளைப் பின்பற்றி இப்போது அவை வீறுநடை போடுவதற்கும் காரணம் என்ன? நடைமுறையில் அவை தோற்றுப்போனதற்கு பேராசிரியர் சொன்னது மட்டுமே காரணமாகுமா? சித்தாந்தங்களிலும் பார்க்கச் சிக்கலானவை நடைமுறைகள் என்பதை நான் ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் அநுபவ வாயிலாக அறிந்து கொண்டேன்
எனது இளமைப்பருவத்தில் ஏழு வருடங்கள் சோசலிஷ நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட கிழக்கு ஜேர்மனியிலும், பின்பு ஆறுவருடங்கள் ஜனநாயக நாடாக உரிமை பாராட்டிக்கொண்டு, முதலாளித்துவ பொருளா தாரத்தைப் பயின்ற மேற்கு ஜேர்மனியிலும் படித்திருக் கிறேன்; அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரிந் திருக்கிறேன். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின் ஜேர்மனி பிளவு பட்டதால் தோன்றிய இரு நாடுகளும், ஒன்றுக் கொன்று பரமவிரோதம் பாராட்டிய காலம் அது!
மார்ச் மாதம் 15ம் திகதி 1939ம் ஆண்டு. செக்கோ சுலவாக்கியா மீதும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாந் திகதி போலந்து மீதும் அடொல்வ் ஹிட்லர்
 
 
 
 
 
 
 
 
 

நி 1945
யெடுத்ததைத் தொடர்ந்து இரண்டாம் உலக ங்கியது. ஆறு வருடங்கள் நடந்த கொடுர புத்தப்
அ மெரிக்கா, பிரித்தானியா, பிரான் ருஷ்யர் ஆகிய
கு டுகள்,ஜேர்மனிமீதுநடாத்தியபடையெடுப்பால் ம் ஆண்டு யுத்தம் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது. ஹிட்லரின் படை தோல்வியைத் தழுவ, நான்கு நாடுகளும் பொட்ஸ்டம் என்ற இடத்தில் கூடி, உடன்படிக்கையொன்றின் மூலம் ஜேர்மனியை நான்காக பங்கு போட்டுக் கொண்டன.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பினை முன்னெடுத்து வாழும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளால் கம்யூனிச சித்தாந்தங்களில் ஊறிய ருஷ்யாவுடன் ஒத்துப்போக முடியவில்லை. இதனால் தமது பகுதிகளை ஒன்று சேர்த்து மே மாதம் 1949ம் ஆண்டு ஜேர்மன் "சமஷ்டிக் குடியரசு" என்ற பெயரில் மேற்கு ஜேர்மனி என்னும் நாட்டை உருவாக்கினார்கள். நம்மூர் பாஷையில் சொல்வதானால் மேற்கு ஜேர்மனி, மூன்று பங்காளிகளுக்குச் சொந்தமான சொரியல் காணியாக இருந்தது. இருப்பினும், அமெரிக்க - பிரித்தானிய - பிரான்ஸ் அரசுகள் தங்கள் எல்லைகளைத் தெளிவாகவும் கச்சிதமாகவும் வரைந்து உறுதி எழுதிக் கொண்டார்கள்.
ஏட்டிக்குப்போட்டியாக சோவியத் ருஷ்யாவும் அதே ஆண்டு ஏழாம் திகதி ஒக்டோபர் மாதம் தனது கால் பங்கு பிரதே சத்தை "ஜேர்மன் ஜனநாயகக் குடியர"சாக பிரகடனப்படுத்திக் கொண்டது. இதுதான் கிழக்கு ஜேர்மனி என மேற்குலகால் அழைக்கப்பட்ட பிரதேசமாகும்.
ஜேர்மனியின் தலைநகரம் பேர்ளின். அதுவே அடொல்வ் ஹிட்லரின் காலத்தில் மட்டுமல்ல, பன்னெடுங்காலமாக ஜேர்மன் நாட்டின் தலைநகராக பெருமை பெற்றிருந்தது.
ஜேர்மனியை தமக்குள் பங்கு போடும்போது, பேர்ளின் நகரம் ரூஷ்ய ஆதிக்கத்துக்கு விடப்பட்ட கிழக்குப்

Page 35
isolarly 58 & scus 2008 & 66
܂ ܪ
ந்துவிட்டது. பழைமை வாய்ந்த அந்த ர்ேளி
ူဖွFil
பங்கு மேற்கு பேர்ளினாக பிரகடனப்படுத்தப்பட, சோவியத் ரூஷ்யாவின் கால்பங்கு கிழக்கு பேர்ளினாகி"பேர்ளின்" என்ற பெயரில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (கிழக்கு ஜேர்மனி) தலைநகராகியது. கிழக்கு பேர்ளின் என்றில்லாமல் "பேர்ளின்" என்ற பெயரில், அது கிழக்கு ஜேர்மனியின் தலைநகராகத் தொடருதல் சோவியத் ரூஷ்யாவின் பெருமைக்கு உகந்தது என சோவியத் ஆட்சியாளர் கருதினார்கள்.
கிழக்கு ஜேர்மனியில் சோவியத் ரூஷ்யாவின் நண்பனாய் ஆட்சியில் அமர்ந்த சோசலிஷ ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கும் முதல்படியாக "மேற்கு பேர்ளின்" நகரத்தில் ஆடம்பர கார்களும், கவர்ச்சிகரமான நுகர் பொருள்களும் குவிக்கப்பட்டன.
சோசலிஷ ஆட்சியில் ஆடம்பரத்துக்கு இடமில்லை. ஒவ்வொருவரின் தேவைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற ஊதியம் என்பதும், எல்லாமே எல்லோருக்கும் சொந்தமானது என்பதும் சோசலிஷம் பற்றிய பாமரத்தனமான விளக்கம். ஆனால் மனித மனம் இயல்பாக ஆடம்பரப் பொருள்களுக்கு அங்கலாய்க்கும் என சரியாகவே மேற்குலக முதலாளிகள் புரிந்து வைத்திருந்தார்கள். வசதியான வாழ்வு தேடிய மக்கள் கிழக்கு ஜேர்மனியில் இருந்து மேற்கு பேர்ளின் நகரத்துக்குத் தப்பியோடத் துவங்கினார்கள்.
"இது நம் ஆட்சிக்கு சரிப்பட்டுவராது" என்று எண்ணிய ருஷ்ய சார்பு கிழக்கு ஜேர்மன் அரசு, 13ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1961ம் ஆண்டு இரவோடிரவாக மேற்கு பேர்ளின் நகரத்தைச் சுற்றி உயர்ந்த மதில் சுவரை எழுப்பியது. அத் துடன் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளின் எல்லைகளுக்கும்
நகரை சோவியத் ஆதிக்கத்துக்கு விட்டுவிட் ப்ங்காளிகள் விரும்பவில்லை. தலைநகராக இருந்த பேர்ளின் நகரமும் நான்காகப் பிரிக்கப்பட வேண்டுமென பங்காளிகள் மூவரும்
வாதாடிப் பெற்றுக் கொண்டார்கள். பேர்ளின் நகரின் முக்கால்
 
 
 
 
 

கலப்பை 58 * ஐப்பசி 2008*87
கடுங்காவல் போட்டது. கட்டுக் காவலையும் மீறி பாய்ந்தோடிய கிழக்கு ஜேர்மன் மக்களை குருவி சுடுவது போல கிழக்கு ஜேர்மனியின் காவல்படைகள் சுட்டுவீழ்த்துவதாய்பங்காளிகள் மூவரும் பிரசாரம் செய்தார்கள்.
இலங்கையில் 1983ம் ஆண்டு நடந்த இனக்கலவரத் தின்பின், தமிழர்கள் பெருமளவில் மேற்கு ஐரோப்பாவை நோக்கி வரத் துவங்கினார்கள். இதற்கு வசதியாக அமைந்தது உலக அகதிகள் இறங்குதுறையாக அக்காலத்தில் செயற்பட்ட கிழக்கு பேர்ளின் நகரம்.
கிழக்கு ஜேர்மனியின் பொருளாதாரத்திலும், மக்களின் ஆடம்பர மோகத்திலும் மேற்கு ஜேர்மனி புகுந்து விளையாடி நெருக்கடி கொடுக்க, வந்திறங்கும் உலக அகதிகள் மூலம் மேற்கு ஜேர்மனிக்கு தொல்லை கொடுத்து, கணக்கைச் சரிசெய்யும் முயற்சியில் கிழக்கு ஜேர்மனி ஈடுபடலாயிற்று. இதற்கு பிளவுபட்ட ஜேர்மனியின் பூகோள அமைப்பும், பேர்ளின் நகரம் குறித்த பொட்ஸ்டம் உடன்படிக்கை விதி களும், வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. மேற்கு பேர்ளின் நகரம் கிழக்கு ஜேர்மனிக்குள் இருந்தாலும், அது மேற்கு ஜேர்மனியின் ஆளுகைக்கு உட்பட்டதால், மேற்கு பேர்ளினுக்குள் வந்து சேர்ந்துவிட்டால், மேற்கு ஜேர்மனியில் வசிப்பதற்கான அகதி அந்தஸ்துக் கோருதல் சாத்தியமாக அமைந்துவிடும். பின்னர் அங்கிருந்து வேறு பல மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், தரை எல்லையைக் கடந்து சென்ற டைதல் அப்போது சாத்தியமாக இருந்தது.
1980ம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த ஐரோப்பிய நாடுகளின் குடிவரவு விதிகளில், தற்போது புகுத்தப்பட்டுள்ள கெடுபிடிகள் இருக்கவில்லை. எனவே, அகதிகள் பிரான்ஸ், சுவிஸ், ஒல்லாந்து, டென்மார்க், நோர்வே என்றும், பின்னர் அங்கு தமது வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்டு பிரித்தானியா, கனடா என ஆங்கிலம் பயிலும் நாடுகளுக்கும் இடம் பெயர்தல் சாத்தியமாயிற்று.

Page 36
oos *|| 68
வுபட்ட ஜேர்மனிகள் 1990ம் ஆண்டு இனை ர பூமிப்பந்தெங்கும் தமிழன் புலம்பெயர்வதற்கு நுை նկի 6ւ யிலாக அை ந்தது, கிழக்கு பேர்ளினும், அதனுடன் இணைந்த மேற்கு பேர்ளினின் பூகோள அமைப்புமே என்பது இதுவரை பதிவுசெய்யப்படாத உண்மையாக உள்ளது:
சோவியத்யூனியனும் கிழக்கு ஜேர்மனியும் அகதிகள் விடயத்தில் "ஒரே கல்லில் இரண்டு மா கள் அடித்ததை" ஊன்றிக் கவனித்தவர்களுக்கு நன்கு விளங்கும். பெருந்' தொகை அகதிகள் ரூஷ்ய விமானத்தில் பறந்ததின்மூலமும், ஒருநாள் கடவை விசாவுக்கு கிழக்கு ஜேர்மன் அரச நிர்வாகம் பணம் அறவிட்டதின் மூலமும் பெருந்தொகையான வருமானம் பெற்றார்கள். கிழக்கு ஜேர்மனிக்குள் இருக்கும் "குப்பைத் தொட்டியாக" மேற்கு பேர்ளினைப் பாவித்து பல்லாயிரக்கணக்கான உலக அகதிகளை வகை தொகை யின்றி மேற்கு பேர்ளினுக்குள் தள்ளித் தொல்லை கொடுத்தார்கள். இதனால் எண்பதாம் ஆண்டுகளில், சுற்றிவர மதில் சுவரால் தனிமைப்படுத்தப்பட்ட மேற்கு பேர்ளின் நகரம் அகதிகளால் நிரம்பி வழிந்தது. அகதிகளின் இத்தகைய படையெடுப்பு மேற்கு ஜேர்மன் அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்தது.
கிழக்கு ஜேர்மனி, ஜேர்மன் ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறை வடைந்ததைக் கொண்டாட, 1989ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் சோவியத் தலைவர் கொபச்சேவ் கிழக்கு பேர்ளின் வந்ததும், காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும்படி கிழக்கு ஜேர்மன் அரசை வற்புறுத்தியதும், அதற்கு SED கட்சி தயக்கம் காட்டியதும் பின்னர் வெளிவந்த சமாச்சாரங்கள். ஆனால் இரு துருவங்களாகத் திகழ்ந்த இருநாடுகள் ஒன்றிணையும் என்பது யாருமே எதிர்பார்க்காத சடுதியிலே நிகழ்ந்த சம்பவமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

podsvu sa 3 gust 2008 %. 89."
ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி 1995ekoஆண்டு நாட்டின் அதிபராக இருந்த ஹேல்மூட்கோல் ன் ஜனநாயகக் குடியரசு என்ற கிழக்கு ஜேர்மனியின் இனிச்செல்லாதுஎன அறிவித்தார்.இதன் தொடர்ச் ய கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்த ஜேர்மனியாகியது: ப்ொருளாதாரப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாத 關 சோவியத் யூனியன், மிகப்பெருந்தொகைப் பணத்தை
மேற்கு ஜேர்மனியிடம் பெற்றுக்கொண்டதன் பின்னரே இரு நாடுகளின் ஒன்றிணைப்பை அனுமதித்தார்கள் என்று அப்போது பேசிக் கொண்டார்கள் 情
இரு ஜேர்மனிகளும் இணைந்த பின்பு, 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேர்ளின் சுவர் முற்றாக இடித்து அகற்றப் பட்டது. இடிக்கப்பட்ட பேர்ளின் சுவரின் சிறிய கொங்கிறீற் துண்டுகள் ஞாபகச் சின்னங்களாக 1990ம் ஆண்டுகளில் விற்கப்பட்டன.
கிழக்கிலும் மேற்கிலுமாக, சோசலிஷ முதலாளித்துவ அமைப்பின் கீழ், ஜேர்மனியில் பலகாலம் வாழ்ந்து அனுப வித்தவன் என்ற உணர்வின் உந்துதலினால், ஒன்றிணைந்த ஜேர்மனியின் நிலவரத்தை நேரில் காண ஆசைப்பட்டேன். பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி, நான் கல்வி கற்ற ஜேர்மன் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், விஞ்ஞான மகாநாட்டுக்கு சிறப்பு பேச்சாளராக என்னை அழைத் திருந்தது. உலக வாழ்வின் இயல்புகளை இனங்கண்டு, தீதும் நன்றும் பகுத்தறியும் பதின்மூன்று முத்தான வாபப் பருவத்து ஆண்டுகளை நான் ஜேர்மன் மண்ணிலேதான் ஆண்டு அநுபவித்தேன். என் வாழ்க்கையின் அர்த்தங்களைக் கற்பித்த மண் என் வாழ்க்கைக்கும் உழைப்புக்கும் ஏற்ற கல்வியை எனக்களித்து என்னை மனிதனாய் நிமிர்ந்து நிற்கச் செய்த மண், என் இரண்டாவது தந்தை மண்ணைத் தரிசிக்கும் ஒரு மனோபாவத்துடன், நான் விமானத்தில் ஏறினேன்.
(நன்றி. ஜீவநநி) (தொடரும்)

Page 37
* Ö)
T
R
I
 

கலப்பை 58 * ஐப்பசி 2008 * 71
。。。 °2 S கற்பித்துத் தரப்படும் ஞானத் s 邻 தின்படி நம் வாழ்க்கையை நடத்த 轮 S முதலாவது நாம் அந்த ஞானத்தில் நிலை A
யான நம்பிக்கையைப் பெறவேண்டும். அத்தகைய உணர்வுபூர்வமான நம்பிக்கையால் தான் வாழ்வில் மிகப்பெரிய மாறுதல் உண்டாகக் கூடும். உண்மையான தகப்பன் குடும்பத்தினரி டையே மற்ற எல்லாத் தகப்பன்மாரைப்போலவே நடந்து கொள்வான். அவன் தனது பணியைச் செய்ய வேண்டி ஆசிரியனாகப் பள்ளிக் கூடத்தை அடைகிறபோது அங்கு ஆசிரியனாக தன் கடமையைச் செய்வான். அவனே தன் நண்பர்களிடையே நண்பனாக இருப்பான். தன்னைப்பற்றி எவ்விதத்தில் நம்பிக்கை கொள்கிறானோ அதன்படியே அவன் அந்தந்த இடங்களில் செயலாற்றுவான். ஆகவே, பிரஜாபிதா பிரம்மா மூலம் நமக்கு பரமாத்மா வால் தற்சமயம் கற்பிக்கப்படும் ஞானத்தில் நம்பிக்கை இருந்தால்தான் நாம் முன்னேற முடியும். நம்பிக்கை ஏற்படாத வரை நமது ஆன்மீக முன்னேற்றம் ஆரம்ப மாகாது. நமது நம்பிக்கை எவ்வளவோ அந்தளவுக்குத் தான் வெற்றியும் கிட்டும். இதனால்தான் நம்பிக்கை யுடையவன் வெற்றி அடைவான் என்னும் பழமொழி சாதாரண மாக வழங்கி வருகிறது. நமக்கு இந்தத் தெய்வீக சம்பந்தத்தில் நம்பிக்கை வேண்டும். அவர் சாந்தியும் சந்தோஷமும் அளிப்பவர். மூன்று உலகங்களுக்கும் அதிபதி என்று இறைவனாகிய பரமாத்மா கூறுகிறார். நான் அழியாத ஆத்மா. நான் சாந்தி ரா
அடைதல் வேண்டும். ஓம் சாந்தி
8IT

Page 38
Artist; "Gnanam", Composer: Kandiah Kumarasan
Blacktown, Hillside-3037, N.S.W.248, Wictoria, Australia. Australia.
r
፵፻፶
أ. احسنتيميسرة
闇 鲇
量 r Humans strivic T
S
to negate NE Atrees for selfish purposes
* : - but trees never reverse N Sinhaling habits.
Loving souls cry within Psbon, ululate inhale forgiveness
Registering with serene hub tale pomp as udder honey.
 
 
 
 
 
 

Graphic Designers, Digital
Printing of Busing GaiGDesigns, Bann
في تل باردة مالية بقرار قمة في
الألف د لا لكرة الي بن عبد الربط الدا" التقي باقية . .
IHI IHI LH ru iri li

Page 39
Fifteen Years in service of Tamil
அவுஸ்திரேலியா பட்ட Australian Society of GI
AUSTRALLANAN ܬܹܐܒܲ TAMIL COM
தமிழ் ஊக்குவி
அகில அவுஸ்திரேலியாவிலும், நி போட்டியாக நடைபெறுகின்றன. ப
இத்தமிழ்ப் போட்டிகள்
இவ்வருடப் போட்டிககு "என்று எமது இன்னல்க:
போட்டிகள்: பேச்சு(Speech), கவிதைமன6
எழுத்தறிவு(Written), வாய்மொழித்தொடர்பு வினாடி வினா (Quiz), விவாதம் (Debate)
(Talent contest) (SuTugelsit.
வயதுப் பிரிவுகள்: பாலர் பிரிவு ஆரம்பப் அதிமேற் பிரிவு, இளைஞர் பிரிவு எ இடைப்பட்டவர்களுக்குநடைபெறுகின்றன.
விண்ணப்ப முடிவு திகதி 24June 2009
சிட்னியில் போட்டிகள் : 15, 16, 22,23
தேசியநிலைப் போட்டிகள் : 4th 000ber
பரிசளிப்பு விழா : 1 OctoT
(during the NSW labour day long we
Address: Coordinator, Tamil Competition, Email:asogt, tcsagnail.com Website:www. National Coodinator: Mr. K. Narenthiranatha Sydney; M.A.Ninalendran
The Basis of Emotional Thinking of the உலகத் தமிழர் உணர்வுகளின்
 

ܕܠܐ ܬܐܒܠܐ
தமிழ்ப் பணியில் பதினைந்து வருடங்கள்
தாரிகள் தமிழர் சங்கம் "aduate Tamils (ASoGT)
D NEW ZEALAND
PETITIONS
ப்புப் போட்டிகள்
யூசிலாந்திலும் இந்தப் போட்டிகள் தினைந்து வருடங்களாக சிட்னியில் iநடைபெறுகின்றன.
ருக்கான கருப்பொருள்: ள் தீர்ந்து பொய்யாகும்"
OT (ELITlig (Recitation of Poetry),
JITDso (Werbal communications), , தனி நடிப்பு (Sol Acting) and பல்திறன்
பிரிவு, கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவு, மேற் பிரிவு, ன ஏழு பிரிவுகளில் 3-30 வயதிற்கு
August 2009
2009
29
tekend)
PO Box 4.040, NSW2140, Australia
kalppa.org
I (07)3122-1847 or 0402026922 (O2) 8824.3051 or 04.19255625
Tamil Diaspora கருவூலம் PHPLH.