கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவர் பாலியல் கொடுமைகள்

Page 1


Page 2

༈ཚུཚོ་ ལྷོ་ சிறுவர் பாலியல்
கொடுமைகள்
ஆய்வு : தமிழ்மணி - தாஜுல் உலூம் மானாமக்கீன் (இலங்கை)
வெளியிட்டோர்
تھZ تھے/ ZZ/7ھ / 74ڑZz تھے کZ62Zتھy62یے
பீ-54-% தேசிய வீடமைப்பு வளாக மாடி வீடுகள் (B 54 - % National Housing Scheme Flats)
கொழும்பு - 10 இலங்கை Colombo - 10 Srilanka
疑 தொலைபேசி : 332225 C

Page 3
முதல் பதிப்பு : 2002 - டிசம்பர் - 8
பதிப்பாசிரியர் : செல்வன் அஸிம் அஹ்மது மக்கீன் (கொழும்பு, ரோயல்
கல்லூரி,உயர்வகுப்பு இறுதியாண்டு மாணவர்)
C) ஆசிரியரது துணைவியாருக்கு
முகப்பு கணினி ஒவிய அமைப்பு : திரு சாய் (சென்னை - தமிழ்நாடு)
அச்சுக் கோர்வை : திரு.பி.சுரேஷ், நாகர்கோவில் (தமிழ்நாடு) 629002
வடிவாக்கம் : ஜனாப் வி.எஃப்.சைபுல்லாஹ், கோட்டார்,
நாகர்கோவில் (தமிழ்நாடு) 629002, தொ.பே. 04652 -242344
அச்சிட்டோர்: g தேவி ஆப்செட்
சென்னை. 600 004 (தமிழ் நாடு)
நூலின் இலங்கை விலை : ரூ. 150/=


Page 4
ஆசிய நாடுகளில் சிறுவர் விபசாரம் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து, ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் என்பவற்றோடு இலங்கையும் முன்னணியில் இருக்கின்றது. ஆசியாவில் 10 இலட்சம் சிறுவர்கள் வர்த்தக நோக்கில் விபசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுள் பெரும்பாலானோர் மிக வறியவர்களாகவும் அடிமைகளாகவும் இருக்கிறார்கள்.
சிறுவர்களால் அதன் தாக்கங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. பலதரப்பட்ட நோய்களும் ஏற்படுகின்றன. தன்னினச் சேர்க்கை மேற்கு நாடுகளைப் போன்று இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலே அதிகமாகக் காணப்படாவிட்டாலும், இது வளராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றிய தீவிர சிந்தனை அவசியமானது. அதன் ஒரு சிறு துளி இவ்வாய்வு நூல்.
அளிம் அஹ்மத மக்கீன்
(ரோயல் கல்லூரி கொழும்பு) பதிப்பாசிரியர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 5
S.
தோன்றாத்துணைகள் !
திரு.ரவி தமிழ் வாணன், நிர்வாக இயக்குநர், மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 17 திரு.இரா. மோகன், நூல் தயாரிப்பாளர்,
மணிமேகலைப் பிரசுரம். சென்னை - 17
திரு.வை. ராமநாதன், எழுத்தாளர், சென்னை - 87.
திருமதி நூர்மின்ஷா மக்கீன் (இயக்குநர், ! அஷ்டலட்சுமி பதிப்பகம்) செல்வி அஞ்சானா மக்கீன் (மருத்துவக்கற்கை
மாணவி, சிட்டகாங், பங்களாதேஷ்)
ஜனாப் வி.எஃப். சைபுல்லா, (துணை ஆசிரியர் "பெட்டக்ம்' பள்ளித்தெரு, இடலாக்குடி, கோட்டார், நாகர்கோவில். தமிழ்நாடு) செல்வன் ஆர்.முகம்மது ஃபைஸ், எம்.எஸ்சி. (பள்ளித் தெரு, இடலாக்குடி)
மற்றும் இலங்கை 'வீரகேசரி' - 'தினகரன்' தினக்குரல்" - "சுடர் ஒளி' - டெய்லி நிவ்ஸ் - 'சண்டே லீடர்' - 'சண்டே டைம்ஸ்’ தமிழ்நாடு 'தினமலர்' - நக்கீரன் - குமுதம் மலேஷியா தமிழ்நேசன்'இதழ்களும் ராய்ட்டர் - முதலிய வேறு பல ஊடகங்களும்.


Page 6
== உள்ளடக்கம் -
59DaisurájáséT-------------------------- 9-29
அக்கிரமங்கள் ---------------------- 30-61
gSurturbisért ----------------------- 62-87
gi' (yurisdit ---------------------- 88-97
ཆrr ༦applཆ༅།། ---------------------- 98-108
ஆதங்கங்கள் ---------------- 109-121
ஆய்வுகள்-- 122-139
ஆலோசனைகள் ----------- 140-149
09 இதய நெருடல்கள் --------------- 150-152
(ஈடேறுதல்கள் LSLSSLSLSSLSLSSLLLSSSSSLLSLSSSSLSSLLSSLLSSLSSS 153-157
விடைபெறும் வேளை -------------- 158-162

அவலங்கள்
பிள்ளைச் செல்வங்களை உடையவன் நான்.
உங்களில் பலரும் அத்தகையவர்களாகவே இருப்பீர்கள்.
பேரன் பேத்திகளைக் கண்டவர்களும் இருப்பீர்கள்.
அல்லது. அண்ணன் - தம்பி, அக்கா - தங்கைகளின் உதிரங்களை உங்கள் செல்வங்களாகவே வரித்திருப்பீர்கள்.
அவர்களைக் கொஞ்சி மகிழ்ந்திட கொஞ்சநேரம்.
இனிப்புகளும் இன்னபிறவும் வழங்கிட சில பல நிமிடங்கள்.
நல்ல நல்ல நவீன உடைகளும் நானாவித விளையாட்டுப் பொருட்களும் கொடுத்து வாழ்த்திட ஒரு பொழுது.

Page 7
-ே- --சிறுவர் பாலியல் கொடுமைகள்
வளர வளர கல்வி கேள்விகளிலும் கரிசனை.
- இப்படித்தான்நம்மில் பலரும் வாழ்ந்து பழகிப்போனோம்.
ஆனால், .. ஆனால் . . . .
இந்த மிலேனிய ஆண்டில் அருவருக்கத்தக்க ஒரு மறுபக்கம்.
உண்மையில், கடந்த நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலேயே திறக்கப்பட்ட ஒரு கேவலமான பக்கம்.
இப்புதிய 21-ம் நூற்றாண்டை அனைத்துலக சிறுவர்களது நலனில் அக்கறை கொண்ட ஆண்டென்று கூடப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
என்றாலும் -
உலகின் 15 மில்லியனுக்கு மேற்பட்ட சிறுவர்களை எயிட்ஸ் என்பது எலிப்பொறியாகக் கவ்விப் பிடித்திருக்கிறது
பதினைந்திலிருந்து இருபத்துநான்கு வயது வரையானவர்களில் ஐவர். ஒவ்வொரு நிமிடமும் எயிட்ஸினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவற்றுக்கு முழுமுதற்காரணமாக அமைவது சிறுவர் சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதே
ஆனானப்பட்ட அமெரிக்காவில் ஆண்டுதோறும் 3 மில்லியன் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்.

11
LOTGT pää6.
எதற்கு அமெரிக்கா?
நாம் பிறந்த மண்ணையே பார்ப்போம். இங்கு லட்சம் லட்சமாக இல்லாவிட்டாலுங்கூட ஆயிரம் ஆயிரமாக ஆட்பட்டுள்ளனர்.
2000ஆம் ஆண்டில் எடுத்த ஒரு மேலோட்டமான கணக்கு வெறும் 692 என்றது. ஆனால் 2002 -ல் அப்படி எடுத்துக் கொள்ள முடியுமா?
இந்த அவலத்தின் பின்னணியில் உள்ளவற்றைப் பற்றிய ஓர் ஆய்வு நேரடியாகத் தமிழில் இதுவரையில் தரப்படவில்லை. ஓர் ஆங்கில நூலின் தமிழாக்கம் (திருமதிகள் மொரீன் செனவிரட்ன - புஷ்பா சிவகுமாரன்) மட்டும் வந்துள்ளது.
நம்பினால் நம்புங்கள். அதைப் பார்க்கவேயில்லை. பார்த்திடாமலேயே என் பார்வையைப் பதித்திட வேண்டும் என்பது என் கொள்கையானது. காரணத்தை கடைசிப்பக்கங்களில் விடை பெறும் வேளையில் தந்துள்ளேன்.
நான் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியை ஆதாரங்களுடன் வழங்கிட என் குருவிக்கூட்டில் கட்டுக்கட்டாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் இதழ்கள், சஞ்சிகைகள், நறுக்குகள், நாளேடுகள் துணை.
மற்றது துணிவு
என்பொருட்டு சுமார் ஐந்து ஆண்டுகளாகப் பல பிரசுரங்களைப் பாதுகாத்து (ஆமாம்! பழைய பேப்பர்காரருக்குப் போடாமல் 0 வைத்திருக்கும் என் நிழலை துணைவியாரை) இந்தச் சமயத்தில் நினைவு கூர்கிறேன்.

Page 8
சிறுவர் பாலியல் கொடுமைகள்
இதோ! அந்தக்குவியலுக்குள் நுழைந்திடப் போகிறேன்.
ஆனால் உங்களை அழைத்திடமாட்டேன்! நல்ல தூசு! நானே தூசு தட்டித் தரவேண்டிய தகவல்களை தந்திடுகின்றேன்.
குவியலில் இந்திய - இலங்கை இதழ்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு வெளியீடுகளும் உண்டு.
அவற்றின் ஏதாவது ஒரு பக்கத்தில் பின் காணப்படுபவை
உள்ளன.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளின் சில அவலங்களை - 98 -லிருந்து 2002 இறுதிப் பொழுதுகள் வரையில் இதன்கீழ் முகம் சுளிக்கச் சுளிக்க அருவருப்போடு படிக்கப்போகிறீர்கள்.
ஆய்வுக்காக அப்பட்டமாக, அப்படி அப்படியே அளித்திட
வேண்டியுள்ளதில் ஆதங்கமே, ஆயாசமே!
எனினும் - எவ்வாறாயினும் அவை தவிர்க்க முடியாதவை
GAGGODAJU நான்கு திக்கிலும். . . .
$ மூதூர், முள்ளிப்பொத்தானைப் பகுதியிலுள்ள ஜீவநகர் என்னும் இடத்தில் காட்டுக்கு விறகு பொறுக்கச்சென்ற 13 வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஓர் இளைஞன் அவளைத் தீயிட்டு எரித்துள்ளார்.
A560teig join (o2.06.1998
 
 

13
மானா மக்கீன்
* தம்புள்ள வெவலவெலப் பகுதியில் 13 வயது சிறுமியைக் கெடுத்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாயும், சந்தேக நபரின் மனைவியும் வெளிநாட்டில் தொழில் புரிகின்றனர். சம்பவதினம், சிறுமியின் தந்தை வீட்டிலில்லாத வேளை கிணற்றுக்குத் தண்ணீர் அள்ளச் சென்ற சிறுமியைத் தனது வீட்டில் இருந்தவாறே பலாப்பழம் சாப்பிட அழைத்ததாகவும், அப்படி சென்ற சமயம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் சிறுமியின் பொலிஸ் முறைப்பாட்டில் பதியப்பட்டுள்ளது
1999-ஆம் ஆண்டில்
* திருமண வைபவமொன்றில் கலந்து கொள்ளத் தாயுடன் சென்று உறக்கத்திலிருந்த நான்கு வயதுப் பெண்குழந்தை மீது 20 வயது வாலிபன் பாலியல் வல்லுறவு மேற்கொண்ட
தினக்குரல் (16.09.98)
பரபரப்பான சம்பவமொன்று தம்புள்ளயில் நடந்துள்ளது.
"தனியார் ஓட்டலொன்றில் நடைபெற்ற எனது சகோதரியின் திருமண விருந்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தோம். குழந்தை மதிய உணவைச் சாப்பிட்டதும் நித்திரையானதால் பக்கத்து அறைகளில் ஒன்றில் உள்ள கட்டிலில் கிடத்திவிட்டு உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தேன்.
"சிறிது நேரத்தில் குழந்தையைப் பார்ப்பதற்காகக் குறிப்பிட்ட அறைக்குச் சென்றேன் பூட்டியிருந்த கதவு சற்றுத் திறந்தாற்போல் இருக்கவே உள்ளே பார்த்தேன். சந்தேக நபரானவர் படுத்திருந்த குழந்தை மீது தகாத உறவில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு நான் கூக்குரலிட்டேன். அவர் தனது உடைகளைச் சரிசெய்தவாறு

Page 9
14 சிறுவர் பாலியல் கொடுமைகள்
என்னையும் தள்ளிவிட்டுக் கொண்டு வெளியில் ஓடினார்" என குழந்தையின் தாயான ஆர். எம். சிந்தாகுமாரி தெரிவித்தார்.
agatai(e.g6i (1203.99)
* தனது தாய் தந்தை அருகே ஜன்னல் ஓரமாக இருந்த கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயதுச் சிறுமியை முப்பது வயதுடைய ஒருவன் தூக்கிச்சென்று தகாத பாலியல் வல்லுறவில்
(ரேப்) ஈடுபடுத்திவிட்டு ஆபத்தான நிலையில் பற்றைக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளான். இச்சம்பவம் தலங்கம பொலிஸ்
பகுதியில் நடந்துள்ளது.
தினக்குரல் (14.4.1999)
மூன்றரை வயதுச் சிறுமியை பாலியல் துன்புறுத்திய ܕ>
குற்றச்சாட்டில் கைதான ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.
2000-ஆண்டில்
S அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனைப்
- தினக்குரல் - (29.06.1999)
பகுதியில் அதிகாலை வேளையில் ஒரு வயதுப் பெண்குழந்தை மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாகக் சந்தேகிக்கப்படும் 26 வயது வாலிபனை அக்கரைப்பற்றுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது :

5
மானா மகசீன்
அட்டாளைச்சேனை பாலமுனை கிராமத்தைச் சேர்ந்த இக்குழந்தை உறங்கிக் கொண்டிருந்தபோது குழந்தையைத் தூக்கிச் சென்று அருகில் இருந்த காட்டுப் பகுதியில் வைத்து துர்ச்செயல் புரிந்துள்ளான் அந்தக் கொடியவன். பின்னர் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு மனித ஓநாய் தலைமறைவாகிவிட்டது. அதிகாலை வேளையில் காட்டுப்பகுதிக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு மீட்டெடுக்கப்பட்டது.
- fotaig Joi - (19.02,2000)
* உரும்பிராயில் (யாழ்ப்பாணம்) பதினைந்து வயதுச் சிறுவனொருவன் சீருடையினரால் தகாத உறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். மிகவும் மோசமாக இக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இச்சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளான்.
- தினக்குரல் - (28.02.2000)
* ரத்தொழுகம பகுதியில் வைத்து வெளிநாட்டு உல்லாசப்பயணி ஒருவரினால் சிறுவன் ஒருவன் பாலியல் இம்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு
பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இந்த முஸ்லிம் சிறுவன் ஜா-எல பகுதியில் பிச்சை எடுத்து ஜீவித்து வந்துள்ளான். 37 வயதுடைய ஜெர்மன் வாசியான உல்லாசப்பயணி அந்தச் சிறுவனை
அழைத்துச்சென்று ரத்தொழுகம பகுதி தங்குமிடம் ஒன்றில் வைத்து

Page 10
16
சிறுவர் பாலியல் கொடுமைகள்
தன்னினசேர்க்கைக்கு உட்படுத்தியுள்ளார். இச்சிறுவனிடம் 5 ஆயிரம் ரூபா கொடுத்துள்ளார்.
2001-ஆம் ஆண்டில்
$ 11 வயதுப் பையனொருவன் மீது பாலியல்
footagj6i - (09.11.2000)
துஷ்பிரயோகம் புரிய முயன்ற சுவிஸ் வாசியை ஹிக்கடுவைப் பொலிஸ் கைது செய்தது.
பையன் அளித்த வாக்குமூலப்படி, 17-வயது வாலிபன் ஒருவனது தூண்டுதலால் சுவிஸ்காரரின் வாடகை வீட்டுக்குச் சென்றதாகவும், வெளிநாட்டவரின் துஷ்பிரயோக முயற்சியைப் புரிந்ததும் நிர்வாணக் கோலத்தில் ஜன்னல் வழியாகத் தப்பித்து ஓடிவிட்டதாகவும் தெரிவித்தான்.
- 6Li6îl laicii - (25.04.2oot)
* 13 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவுக் குற்றம் புரிந்ததாக கைது செய்யப்பட்ட பெளத்த பிக்குவை இம்மாதம் 29 -ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கங்கொடவில நீதிவான் உத்தரவிட்டார்.
பெளத்தமதக்கல்வி (தம்ம வகுப்புக்குச் சென்ற இம்மாணவி மீது விகாரை வளவில் உள்ள கட்டடத்தில் வைத்து இவர் இக்குற்றத்தைச் செய்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
நீதி மன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சிறுமி அந்தப் பிக்குவை அடையாளம் காட்டினார்.
- footagj6i - (26.06.2001)

17
மானா மக்கீன்
* ஐந்து வயதுச் சிறுமியொருவரை 56 வயது வயோதிபர், பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் பமுனுகமவில் இடம் பெற்றுள்ளது. சிறுமியின் தந்தை ஜா-எலவில் வியாபாரம் செய்கின்றார். நேற்று பகல் 1 மணியளவில் தாய், சிறுமியுடன் 3 வயதுச் சகோதரனையும் வீட்டில் விட்டுவிட்டு
கணவருக்குப் பகல் உணவு கொண்டுசென்றுள்ளார்.
இந்த வேளையில், வீட்டுக்கு வந்த வீட்டு உரிமையாளரான குறிப்பிட்ட வயோதிபர், சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார். தந்தை வீடு வந்தபோது சம்பவத்தைச் சிறுமி கூறவே, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தினக்குரல் - (26.06.2001)
* ஃபிரிட்டீஷ் உல்லாசப்பயணி ஒருவரை சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்காக பொலிஸ் கைது செய்தது.
45 வயதுடைய இவர், கொழும்பு ஹோட்டல் அறையில் ஒரு சிறுவனுடன் அருவருப்பான கோலத்தில் காணப்பட்டார்
2002 -ஆம் ஆண்டில்
S பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியை 55 வயதுக்குரிய
- ஐலண்ட்- (6.07.0)
வயோதிபர் ஒருவர் Lum 6Slu u 6o வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளார். அம்பாறைப் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

Page 11
18 ፥
சிறுவர் பாலியல் கொடுமைகள்
பாடசாலை மாணவியான குறிப்பிட்ட சிறுமி, தான் பாடம் ஒன்றினைப் படிப்பதற்காக அயலவர் ஒருவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இருக்கவில்லை. சிறுமி வயோதிபர் ஒருவர் இருப்பதைக் கண்டுள்ளார்.
தனது நண்பியின் பெயரைச் சொல்லிக் கேட்டபோது "அவர் வேறுவிடயமாக தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். நீங்கள் வாருங்கள், நான் உங்களுக்குப் பாடம் கற்பித்துத் தருகின்றேன்" என்று அவர் சிறுமியை அழைத்துள்ளார். சிறுமி விடயம் அறியாமல் வீட்டுக்குள் நுழைந்ததும் வயோதிபர் சிறுமி மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன.
- தினகரன் - (16.01.2002)
S ஒன்பது வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 60 வயதான நபர் ஒருவரை எதிர்வரும் 13-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொறட்டுவை மாஜிஸ்திரேட் பிரசன்ன த சில்வா உத்தரவிட்டார்.
மொறட்டுவை, கெளரளவெல்ல என்ற இடத்தில் இம்மாணவியை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் வேனொன்றில் இவ்வனர்த்தம் நடைபெற்றுள்ளது.
இச்சிறுமியைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்லாமல்
ஒதுக்குப்புறமான இடத்தில் வேனை நிறுத்தி இந்நபர் சிறுமி மீது துஷ்பிரயோகம் செய்ததாகவும் கடந்த 2% மாதங்களாக இவ்வாறு நடைபெற்று வந்ததாகவும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
- தினகரன் - (23.07.2002)

19
மானா மக்கீன்
சிறுவர் துஷ்பிரயோகம் இப்படியும் நடக்கிறது
லீ வத்தளையில், வெளிநாட்டாரின் இச்சைக்கு பாடசாலை சிறுவனை ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த அரசாங்க ஊழியர் ஒருவர் பேலியகொடை பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளார்.
இந்தப் புதிய சிறுவர் வியாபாரம் பற்றி பேலியகொடை பொலிஸ் நிலைய சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பொலிஸ் அதிகாரி திருமதி வீலா அத்தநாயக்க தகவல் தருகையில் கூறியதாவது
"களனியிலுள்ள பிரபலமான பாடசாலையில் இம்மாணவர் கல்வி பயிலுகின்றார்."
"இவருக்கு வயது பதிநான்கு படிப்பில் திறமைசாலியான இவர் ஒன்றரை மாதமாக பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் வகுப்பாசிரியர் தாய், தந்தையரை அழைத்து விசாரித்துள்ளார்.
"பாடசாலை வருவது இல்லை" என்று கூறுவது எமக்கு ஆச்சரியம் தருகிறது என்று பெற்றோர் பதிலளித்துள்ளனர். பின்னர் வீடு போய் மகனை விசாரித்தனர். இந்த விசாரணையின் போது பல விஷயங்கள் அம்பலமாகின. பெற்றோர் தமது மகனுக்கு நேர்ந்த கதி பற்றி என்னிடம் வந்து முறையிட்டனர்.
"விஷயத்தைப் புரிந்துகொண்ட நான் சிறுவனை வழமை போல் ரயில் நிலையத்தில் போய் நிற்குமாறு கேட்டுக்கொண்டேன்.

Page 12
20
சிறுவர் பாலியல் கொடுமைகள்
"அவனும் நாங்கள் சொன்னபடி செய்தான்.
"வாட்டசாட்டமான ஒருவர் இந்தச் சிறுவனிடம் வந்து அவனோடு அன்பாகப் பேசிக்கொண்டிருந்தார். நீர்கொழும்புபோகும் ரெயில் வரவே சிறுவனை அழைத்துக்கொண்டு அவர் ரயில் ஏறினார்.
"மறைவில் இருந்த பொலிஸார் சிறுவனையும் அந்த நபரையும் லபக்கென பிடித்துக்கொண்டனர். இருவரையும் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தோம்.
"நீர்கொழும்பு கடற்கரையோரம் உள்ள குடிசையொன்றில் சிறுவனை அவர் தகாத உறவுக்கு வெளிநாட்டார் சிலருக்கு பயன்படுத்திய விபரம் தெரியவந்தது. அவரும் இதனை ஏற்றுக் கொண்டார்."
- இவ்வாறு பொலிஸ் அதிகாரி கூறினார்.
சிறுவனை இந்த வியாபாரத்தில் ஈடுபடுத்தும் நாட்களில் இவர் சிறுவனுக்கு ஐம்பது. நூறு ரூபா கையில் கொடுப்பாராம். பின்னர் மாலையில் வீட்டுக்கு அனுப்பிவைத்து விடுவாராம்.
இவ்வாறு வாரத்துக்கு மூன்று நாட்கள் அவர் இந்த தகாத உறவில் பயன்படுத்தி வந்திருக்கிறாராம். அவர் ஒரு அரசாங்க ஊழியர் என்பது விசாரணையின் போது தெரிய வந்தது. இப்பொழுது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
இவர் மீது சிறுவர் துஷ்பிரயோக சட்டத்தின்கீழ் வழக்குத் தொடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

21 onan loåéá
"பெற்றோர் தங்களது பிள்ளைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்" என்று பொலிஸ் அதிகாரி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பழக்கமில்லாதவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு பிள்ளைகள் பலியாவது இது முதல் தடவையல்ல இதற்கு முன்னரும் பல நடந்திருக்கின்றனவாம்.
- GyGeseFifi) - (2. to. 2oo2)
இலங்கைக்குச்
சளைக்காத இந்தியா
ஆண்டொன்றுக்கு இரண்டு மூன்று என 1998ஆம் ஆண்டிலிருந்து 2002 வரையில் இலங்கை அவலங்களை முன் பக்கங்களில் படித்த அபிமானிகள் அயலக நாடான இந்தியாவுக்குள்ளும் எட்டிப்பார்த்துத்தான் ஆகவேண்டும்.
எந்த வகையிலும் இலங்கைக்குச் சளைக்காத கேவலங்கள் அங்கும்
"கதிரவன்" என்ற சென்னை நாளேட்டின் இலவச இணைப்பாக வழங்கப்படும் "சூரியகாந்தி" வார இதழின் 29.1198 இதழில் கேள்வி - பதில் பகுதியில் இப்படியொன்று
கேள்வி : சிறுவர் சிறுமியரை சிறு வயதிலேயே சிவப்பு விளக்குப் பகுதிக்குத் தள்ளி விடுகிறார்களாமே?
தோப்பில் மு. ஜெயிலானி.

Page 13
22
சிறுவர் பாலியல் கொடுமைகள்
பதில் ஆம். இந்தக் கொடுமை குஜராத்,
மும்பை (பம்பாய்), லக்னோ. கல்கத்தா போன்ற வடநாட்டுப் பகுதியில் 11 வயதில் கற்பழிப்பு, 12 வயதில் சிவப்பு விளக்குப் பகுதிக்கு அனுப்பி விடுதல் என்பன நடக்கின்றன. $ 1991 இல் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பீட்டின் படி இந்தியாவில் நாற்பதாயிரத்திற்கும் ஐம்பதாயிரத்திற்கும் இடைப்பட்ட விபசாரச் சிறார்கள் இருந்தனர். இதில் பெரும்பங்கு வகிப்போர் நேபாளச் சிறுமியர்கள். தற்போது இந்த எண்ணிக்கை, இரண்டரை இலட்சத்திற்கு மேலாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட சிறுமிகள் இந்தியாவுக்கு இறக்குமதியாகிறார்கள் என நேபாள பெண்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
- "இந்தியா டுடே' - யின் பதிவு. தமிழகத்துடன் தண்ணீர் விடயத்தில் தகாத பிணக்கு கொண்டுள்ள கர்நாடகா மாநிலத்தில்தான் குழந்தைகள் விபசாரம் அதிகரிப்பு 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட உள்ளூர் சிறுவர்களுடன் ஆந்திரா, தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
கேரளா - திருவனந்தபுரம் நகரில் மட்டும் 300 சிறுவர் விபசாரத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக ஓர் ஆய்வில் தெரிந்தது
- தினமலர்நாளேட்டில் வந்த தகவல் -

LDT6ST (Dáášá 23
குமுதம்' குறித்துள்ள தகவல்கள்
* மதுரையில் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு ஒரு கேஸ் பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலுள்ள பகுதியில் ஒரு வீடு. அதில் ஒரு மாதிரி சமாசாரம் நடப்பதாகத் தகவல் வந்து போலீசார் போனபோது அதிர்ச்சி ஒடிசலான மூன்று பெண்குழந்தைகள். எல்லாம் பத்து பதினொரு வயசுக் குழந்தைகள்
வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து வந்திருந்தார் ஒரு புரோக்கர். பலவந்தமான முறையில் நடத்தப்பட்டதால் ஏகப்பட்ட ரத்தப்போக்குடன் இருந்த அந்தக் குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவர்களுக்குத் தையல் போடப்பட்டிருக்கிறது.
"சின்னக் குழந்தைகளைச் சிலபேர் விரும்பிக் கேட்கிறார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க அவர்கள் தயாராகி விடுகிறார்கள். இப்போதும் மாசத்திற்கு இரண்டு மூன்று குழந்தைகளாவது இருபதாயிரம் ரூபாய் வரை ரேட் பேசப்பட்டு கட்டாயமாக வரவழைக்கப்படுகின்றனர். சில குழந்தைகளை ஏதாவது குடிக்கக் கொடுத்து அதில் மயக்க மருந்தைக் கலந்து அழைத்துப் போய்விடுகிறார்கள்" என்கிறார் ஐம்பத்தைந்து வயதான புரோக்கர் பெண்மணி ஒருவர்.
மிகச்சிறு வயதிலேயே இந்தமாதிரி தொழிலில் புகுத்தப்பட்டு, பால்வினை நோயிலிருந்து எய்ட்ஸ் வரை பாதித்து அடுத்தடுத்து சில பெண்குழந்தைகள் இறந்து போயிருக்கின்றன. சமீபத்தில் இப்படி இறந்த பெண்குழந்தைக்கு 15 வயது
சர்வ சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய ப்ளு ஃபிலிம் கேஸட்டுகள், பிட் படங்கள் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் இந்தத் தொழிலில் இருக்கும் பெண்கள்.

Page 14
24
சிறுவர் பாலியல் கொடுமைகள்
- இந்த தகவல்கள் குமுதம் 29.10.2001 இதழில் வந்துள்ளன. "குழந்தைகளுக்கா இந்த நிலை? அதிரவைக்கிறதே மதுரை" என அந்த சஞ்சிகை தலைப்புப் போட்டிருக்கிறது.
சென்னை அரும்பாக்கம் அசோக் நகரைச் சேர்ந்தவர் ரங்கநாயகி. இவருக்கு 9 வயது மகள் உண்டு. இவர் வீட்டில் முருகன் என்ற உறவுக்கார வாலிபன் தங்கியிருந்தான். கடந்த 2000 -ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் திகதி இரவு ஏழு மணிக்கு ரங்கநாயகி தனது வீட்டிற்கு அருகிலேயே உள்ள தனது தாயின் வீட்டிற்கு மகள் மற்றும் முருகனுடன் சென்றார். சிறிது நேரத்தில் தனது மகளையும், முருகனையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவர் மட்டும் அங்கேயே தங்கிவிட்டார்.
பின்னர் வீடு திரும்பிய ரங்கநாயகி, முருகனால் தனது மகள் கற்பழிக்கப்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அரும்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அக்பர் விசாரித்தார்.
'முருகன் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமன்றி அரசு தரப்பு நிருபித்தது. முருகனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தொகை 15 ஆயிரத்தில் 10 ஆயிரத்தை நஷ்டயீடாக ரங்கநாயகியின் மகளுக்குக் கொடுக்க வேண்டும். - இவ்வாறு கூடுதல் செசன்ஸ் நீதிபதி அக்பர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
- 560Tupaji - (20, ov, 2002

25
மானா மக்கீன்
இந்நூலின் அடுத்த அத்தியாயத்திலும் மேலும் சில இந்திய நகரங்களில் நடக்கும் அக்கிரமங்கள் விளக்கமாகவும் விவரமாகவும்
தரப்பட்டுள்ளன.
நாம் இங்கே சற்றே சறுகிப்போய் வெளிநாடுகளில் விவகாரம் எப்படி உள்ளது எனப் பார்த்திடலாம்.
மலேசியா தமிழ்நேசன் தகவல்
மலேசியாவின் தமிழ் நாளேடான தமிழ்நேசன் 1999 மே 11 -இல் தந்திருக்கிற செய்தி இது :
$ 14 வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக வேன் ஒட்டுனர் ஒருவருக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் இரண்டு பிரம்படியும் கொடுக்கப்பட்டது.
1997 மார்ச்சில், கம்போங் சியோல் கன்டிசில் இரு சந்தர்ப்பங்களில் அந்த ஒட்டுனர் சிறுமியைக் கெடுத்தது பொலிஸ் தரப்பில் நிரூபிக்கப்பட்டது.
வியத்நாம் செய்தி
இலங்கை டெய்லி மிரர் ஆங்கில நாளேடு 26.08.99 -ல் ராய்ட்டர் செய்தியொன்றை இவ்வாறு வெளியிட்டிருந்தது
* வியத்நாமிய இராணுவத்தினன் ஒருவன், எட்டு வயதுச் சிறுமியுடன் தகாத உறவு கொண்டு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டான்.

Page 15
26
சிறுவர் பாலியல் கொடுமைகள்
பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி, கூட்டிச்சென்ற இருபது வயது படைவீரன், ஒரு மரத்தின் பின்னால் குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிகிறது.
சமீபகாலங்களில் சிறுவர் தகாத உறவு துஷ்பிரயோகம் வியத்நாமில் அதிகரித்து விட்டது. இக்கொடிய பழக்கத்தில் ஈடுபட வரும் வெளிநாட்டுக்காரர்களின் வருகையும் கூடி விட்டது.
- டெய்லி மிரர் (இலங்கை) 26.08.1999.
மேலே படித்த செய்தி மட்டுமல்ல. அச்செய்தி நிறுவனம் வழங்கிய இன்னும் நான்கு செய்திகளையும் அபிமானிகளின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்.
மைக்கேல் ஜாக்சன் தகாத 2.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பாப்
இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 1993-ம் ஆண்டில் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. 13 வயது சிறுவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது. அந்தச் சிறுவனின் பெற்றோர், ஜாக்சன் மீது வழக்கு தொடர்ந்தனர்.
வழக்குத் தொடரப்பட்ட சில மாதங்களிலே நீதிமன்றத்துக்கு வெளியே அந்தச் சிறுவனின் பெற்றோருடன் ஜாக்சன் சமாதானம் செய்து கொண்டார். ஒரு கோடி 50 லட்சம் டாலர்கள் கொடுத்து வழக்கை வாபஸ் வாங்கச் செய்து
விட்டார்.

27 மானா மக்கீன்
ஜெர்மனியர் பிலிப்பைன்சில் குற்றம்
* பாலியல் துஷ்பிரயோகம் செய்த 65 வயதான ஜெர்மன் பொறியியலாளர் ஒருவருக்கு பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் ஒன்று 34 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.
- 15, 16 வயதுள்ள இரு சிறுவர்களை ஒரு வீட்டில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக அப்பொறியியலாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது பற்றி ஒரு சிறுவன் கூறும்போது "150 போஸெஸ் (5256 டொலர்) தருவதாக கூறி ஜெச்ட் அவருடைய வீட்டுக்கு கூட்டிச் சென்றார்" எனக் கூறினான்.
அந்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா 100000 போஸெஸ் வழங்குமாறும் ஜெச்ட்க்கு கட்டளையிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் சட்டப்படி சிறுவர் பாலியல் வன்முறைகளில்
ஈடுபடுபவர்களுக்கு 17 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
லண்டன் குடும்பப் பெண் சிறுவனுடன்
* பதின்மூன்று வயது சிறுவனைக் கடத்திச் சென்று செக்ஸ் அனுபவித்த மூன்று குழந்தைகளின் தாய், தான் செய்த தவறை கோர்ட்டில் ஒத்துக்கொண்டார். இந்த வழக்கில்
இவருக்கு நான்கு ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
லண்டனைச் சேர்ந்த 36 வயதான இந்தப் பெண்ணுக்கு
திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். பையன்கள் மூவரும்

Page 16
28 g
சிறுவர் பாலியல் கொடுமைகள்
பள்ளியில் படிக்கின்றனர். மூன்று மகன்களில் ஒரு மகனின் நண்பன் தினந்தோறும் அப்பெண்ணின் வீட்டிற்கு வருவான், 13 வயதே ஆன அந்த பையன் மீது அவளுக்குக் காதல் ஏற்பட்டது. முத்தத்தில் ஆரம்பித்த காதல் உடல் உறவு வரை தொடர்ந்தது. ஓராண்டு காலம் வரை இருவரும் தினந்தோறும் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டனர். லண்டனை விட்டு அமெரிக்கா செல்ல முடிவு செய்தனர். ஒருநாள் யாருக்கும் தெரியாமல் அந்த சிறுவனை அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று விட்டார் குடும்பப் பெண் மகனை காணாத பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால் மகனை காணவில்லை என்று போலிசில் புகார் கொடுத்தனர்.
ஒரு நாள் அந்தச் சிறுவன் தன் தாய்க்கு போன் செய்தான். இந்த போன்தான் இந்தச் சிறுவனை கண்டுபிடிக்க உதவியது. போன் செய்தியையடுத்து பொலீசார் உஷார் அடைந்தனர். சிறுவன் புளோரிடாவில் ஒரு ஒட்டலில் தங்கி இருப்பதை அறிந்தனர். உடனே பொலீசார் புளோரிடா விரைந்து சென்று சிறுவன் தங்கியிருந்த ஒட்டல் அறையை தட்டினர். அப்போது அந்த அறையில் சிறுவனும் அந்தப் பெண்ணும் நிர்வாணக் கோலத்தில் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். இருவரையும் கைது செய்து கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அந்தப் பெண்ணும் நீதிபதி முன்பு ஆஜராகி தனது தவறை ஒப்புக்கொண்டார். "எனது திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அளிக்காததால் அந்தச் சிறுவனின் காமப்பசிக்கு என்னை அர்ப்பணித்துக்கொண்டேன்' என்றும் கூறினார்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி அந்த பெண்ணின் நிலையை கருத்தில் கொண்டு விதிவிலக்களித்து ஒவ்வொரு வழக்குக்கும் தலா இரண்டாண்டுகள் தண்டனையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

29
மானா மக்கீன்
பங்களாதேஷ் பரிதாபம்
* பங்களாதேஷில் சிலாரங்க் டாங்கிபாரா கிராமத்தில் 11 வயதுச் சிறுமி ஒருத்தி வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் புல்மேயப்போன ஆட்டைப் பிடிக்கப் போனாள். அதைப்பார்த்த அதே கிராமத்தவன் வலுக்கட்டாயமாக அவளையே மேய்ந்தான். ஓர் இளங்கதிர் பட்டுப்போனது.
- தி டெய்லி ஸ்டார் (டாக்கா) 03.07.2002

Page 17
30 சிறுவர் பாலியல் கொடுமைகள்
அக்கிராமங்கள்
ன்னும் பல அருவருப்பான பக்கங்களையும்
ஆய்வுக்காகப் பார்வையிட வேண்டியிருக்கிறது. "அக்கிரமங்கள்" என்ற இந்த அத்தியாயத்தில் மூன்று வகை மனித ஒநாய்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்போகிறேன்.
ஆனால் எந்தத் தமிழ் அகராதியிலாவது "மனித ஓநாய்' என ஒரு வார்த்தை வருகிறதா?
மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் கூட, மிருகங்களுடன் மிருகங்களாக வாழ்ந்த காலத்தில் கூட அவனை மனித ஒநாய் என்றழைக்க வில்லையே இப்பொழுது மட்டும் எப்படி?
நாமெல்லாம் சிறுவயதில் அம்புலிமாமா இதழ் படித்தவர்கள். அதில் வருகிற குதிரை, குரங்கு, சிங்கம், புலி, ஆடு, மாடு சம்பந்தப்பட்ட கதைகளை 'உண்மையானவையா? இப்படியும் நடக்குமா? என ஆயிரம் தடவை கேட்போம்.
"பைத்தியக்காரப்பிள்ளையாக இருக்கிறாயே? அதெல்லாம் கற்பனை, ஜோடனை, புத்தி புகட்ட சொல்லப்பட்டவை" எனப் பெற்றோர் தெளிவுபடுத்துவார்களே, நினைவுண்டா?
ஆயினும் கட்ந்த நூற்றாண்டில் ஆரம்பித்து, புத்தாயிரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிற 'இந்த ஓநாய்க்
கதைகள் மட்டும் உண்மையானவை.
மூன்று வகை பெரிய ஒநாய்கள் உள்ளனர்.

By apo Joach69 31
முதியவர் - ஆசிரியர் - பெற்றோர்!
இவர்கள் இளைய தலைமுறைகளுக்கு முன்னு தாரணமாகத் திகழவேண்டியவர்கள். ஆனால் இவர்களில் சிலரோ.? மிகவும் ஆதாரபூர்வமான, நீதிமன்றப் பதிவுகளிலிருந்து பெற்ற சில செய்திகளை மட்டும் இதன்கீழ் தருகிறேன்.
நம்ம பெரிசுகள்
நிறையவே நிகழ்வுகளை நாளேடுகள் பதித்துள்ளன. பொறுக்கிய நான்கு மட்டும் இங்கே, அதிலொன்று தமிழகத்தில் நடந்தது.
முதலில். . . இலங்கை :
* 1996 -ஆகஸ்டு 18-ம் தேதி நடந்த ஒரு படுபயங்கரமான துஷ்பிரயோகத்திற்கு மாமா முறையான முதியவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி சரத் குணதிலக தனது தீர்ப்பில் குறிப்பு வழங்கிய பொழுது "எனது 28 ஆண்டு நீதிச் சேவையில் இப்படியொரு குரூரமும் கொடுமையும் நிறைந்த சம்பவம் எனது தீர்ப்புக்கு இப்போதுதான் வந்துள்ளது" என்றார்.
அவ்வாறு நடந்த நிகழ்வு என்ன?
* தனது தம்பியின் இரண்டரை வயதே நிறைந்த பெண்குழந்தையோடு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டது மனித உருவில் இருந்த ஒரு முதிய ஓநாய் நடந்த இடம் புலத்
சிங்கள.
-வீக் எண்ட் எக்ஸ்பிரஸ் 13.08.2000 -ல் தீர்ப்புச் செய்தி,

Page 18
சிறுவர் பாலியல் கொடுமைகள்
* பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த நிலையில் இரு 12 வயதுச் சிறுமியர் தென்பகுதியில் பிரதான வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக சிறுவர் துஷ்பிரயோக தடுப்புக்குழுவின் மாத்தறை மாவட்டப் பிரதிநிதியான திருமதி ஏ. கே. ஐ. அமரசிறி தெரிவித்துள்ளார்.
* எண்பது வயது வயோதிபர் ஒருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு சிறுமியும், தாயின் கள்ளக் காதலனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மற்றச் சிறுமியும் கர்ப்பமடைந்துள்ளமை விசாரணைகள்
மூலம் தெரிய வந்துள்ளன.
-தினக்குரல் (இலங்கை) 16.03.1999,
* மாலை 7.30 மணியளவில் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற 12 வயதுச் சிறுமி ஒருத்தியை முதியவரான கடை உரிமையாளர் உள்ளே இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அதனைச் சிறுமி எதிர்க்கவே அதனையடுத்து இருவருக்கும் இடையில் இடம்பெற்ற இழுபறியில் கடைக்காரர் மயக்கமடைந்து விழுந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். அதன்பின்பு சிறுமி வெளிப்புறம் ஓடி வந்து கதவைத் தட்டி தன்னைக் காப்பாற்றுமாறு வெளியாரை அழைத்துள்ளார். அங்கு உதவிக்கு ஓடிவந்தவர்களிடமே அந்தச் சிறுமி இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.
சிறுமியின் குரலைக் கேட்ட அயலவர் பொலிஸ0 க்கு
அறிவிக்கவே பொலிஸார் வந்து சிறுமியை மீட்டதாக ஸ்தலத்தில் இருந்தவர்கள் தெரிவித்கனர்.

33 மாரா மக்கீன்
அதனையடுத்து மயக்கமடைந்த கடைக்காரர். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாகத தெரிவிக்கப்
பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
- தினக்குரல் 28.03.1999,
கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி நிந்தவூர் அட்டப்பள்ளம் எனும் இடத்தில் வசிக்கும் 11 வயதுடைய பருவமடையாத சிறுமி அதே இடத்தைச் சேர்ந்த 76 வயது நபருக்கு சாப்பாடு எடுத்துச் சென்றபோது அவர் சிறுமியை சாமியறைக்குள் அழைத்துச் சென்று பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பாக சிறுமியும் அவரது தந்தையும் சம்மாந்துறை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்து ஆஜர் செய்தனர். இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு கல்முனை மாவட்ட நீதிபதி அன்ரன் பாலசிங்கம் 5 வருட ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிட்டார்.
- தினக்குரல் (இலங்கை)23.11.1999,
இது தமிழ்நாட்டுத் தகவல்!
சிவந்திப்பட்டி கார்மேகனார் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகள் சுயம்புலட்சுமி (15). இவள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் கடந்த மாதம் 30 - ம் தேதி வீட்டில் படுத்திருந்தாள். அப்போது ரைஸ்மில் அருகில்

Page 19
34 சிறுவர் பாலியல் கொடுமைகள்
வசித்து வரும் குமார் (62) என்பவர் சுயம்புலட்சுமியின் வீட்டிற்கு வந்தார். சுயம்புலட்சுமியிடம் "உன் தாய், தந்தை எங்கே?"எனக் கேட்டாராம். அதற்கு அவள் "அவர்கள் ஊருக்கு சென்று உள்ளார்கள்" எனக் கூறினாளாம். உடனே குமார் சுயம்புலட்சுமியை பலவந்தமாக கீழே தள்ளி அவளது
வாயில் துணியை வைத்துக் கற்பழித்தாராம்.
பின்னர் சுயம்புலட்சுமியிடம், நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும், வெளியே சொல்லாமல் இருந்தால் மும்பையில் வேலை பார்த்து வரும் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் குமார்
கூறிவிட்டு தலைமறைவானார்.
இச்சம்பவம் பற்றி சுயம்புலட்சுமி தனது பெற்றோரிடம் பத்து நாட்கள் கழித்து கூறியுள்ளார். இது சம்பந்தமாக சுயம்புலட்சுமி சிவந்திபட்டி பொலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து திருநெல்வேலி ஜே. எம் 4 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
தினமலர்(திருநெல்வேலிப்பதிப்பு) 17.07.1999
இப்படிப் பெரிசுகள் பிசாசுகளாக, ஓநாய்களாக நடந்து கொண்டதை ஒருபுறத்தில் வைத்தால், ஆசான்கள் என 2-ші நிலையில் வைத்து மதித்துப் போற்றப்படுகிறவர்களின் நீசத்தனங்களை எந்த இடத்தில் வைப்பது?

ATNT lokád 35
ஆான்களின் க்கிரமங்கள் 96. . . dö
* மலையகம், இராகலைப் பாடசாலை அதிபர், பன்னிரண்டு வயது மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகப் படுத்தியதற்காக அவரது விடுதி ஊர் மக்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. பக்கத்திலிருந்த வன இலாகா அதிகாரியின் இல்லத்தில் தஞ்சமடைந்த அதிபரைப் பொலிஸ் கைது செய்தது.
-மிட்வீக் மிரர் - (சஞ்சிகை) 17.09.1997
* மலையகம், வெலிமடையைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர், தான் நடத்திய டியூசன் வகுப்புக்கு வந்த மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதானார். அதிபரைக் குற்றவாளி யாகக்கண்ட பண்டாரவளை நீதிபதி ஓராண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார். (1996 -இல் நடந்த சம்பவத்திற்கு 1999 -இல் தீர்ப்பு கூறப்பட்டது
-5kszлё(g5убі о9.т.1999.
* "வகுப்பில் கற்றவற்றை செயல்முறையில் செய்துகாட்ட மாலையில் பாடசாலைக்கு என்னை வரச்சொன்ன யசபால ஆசிரியர் தனியாக அறைக்குள் அழைத்துச் சென்று என்மீது தப்பான நடத்தையில் ஈடுபட்டார்" என பதினொரு வயது பாடசாலை மாணவன் பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிவான் ஜகத்பாலபட்டபெந்தி முன் சாட்சியமளிக்கையில் கூறினான்.

Page 20
சிறுவர் பாலியல் கொடுமைகள்
S ஹொரண ஹல்தொட்ட கனிஷ்ட வித்தியாலயத்தில் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியரான யசபால விதானகே என்ற நபருக்கு எதிராக பாணந்துறை மேல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் சாட்சியமளித்த போதே பாதிக்கப்பட்ட மாணவன் மேற்கண்டவாறு கூறினான்.
1997 ஜூன் முதல் 1998 ஜூன் வரையிலான காலப்பகுதியில் பாடசாலை சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதன் பேரில் யசபால விதானகே என்ற ஆசிரியருக்கு எதிராக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்பு புத்த பிக்குவாக இருந்து பின் பிக்கு வேடத்தை விட்டு ஆசிரியர் நியமனம் பெற்ற இந்த ஆசிரியர் திருமணமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் மேலும் ஏழு வழக்குகள் பாணந்துறை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
பாடசாலை சிறுவர் சிறுமிகளை பாலியல் துர்நடத்தையில் ஈடுபடுத்தியதற்காகவே இவ்வழக்குகளும் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு வழக்கில் இவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைத்துள்ளது
A62786 - 26.06.20of
* கொழும்பில் உள்ள சர்வதேசப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர், பன்னிரண்டு வயது மாணவியைப் பாலியல்

Turt losis 37
துஷ்பிரயோகம் செய்தார். உடனடியாக அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலை நூலகத்தில் சம்பவம் இடம் பெற்றுள்ளது என பொலிசாருக்குத் தகவல்.
- 5607G Gottb6v - ov.oa. 1999
* அநுராதபுரம் மாவட்டத்து தம்புட்டுவேகமயில் உள்ள பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர், தனது வகுப்பு மாணவி ஒருத்தியிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். இதற்கு இன்னொரு ஆசிரியரும் ஒத்தாசைபுரிந்தார். சம்பவம் ஆசிரியர்களது ஓய்வறையில் நடந்தது. விவரம் அறிந்த ஏனைய மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியரை பொலிஸ் கைது செய்தது.
- சண்டே லீடர் - 6.05.1999
* பதின்மூன்று வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகக் குற்றம் புரிந்ததாக யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் ஒருவர், ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையிலும், 20 ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் செல்ல யாழ். மேலதிக நீதிவான் எஸ். ஏ.ஈ. ஏகநாதன் அனுமதி வழங்கினார்.
- 5607e5(gp6i - 22,07, 1999.
A000. ... - ei
* ஏறாவூர் பகுதியிலுள்ள ஒரு வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களை பல காலமாக நிகழ்த்தி வந்துள்ளார்.

Page 21
38 சிறுவர் பாலியல் கொடுமைகள்
கடந்த 04.04.2000ம் திகதி மாலைநேர மேலதிக வகுப்பிற்கென்று அழைக்கப்பட்ட 7-ம் ஆண்டு மாணவி ஒருவர் மீது, குறிப்பிட்ட இந்த ஆசிரியரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் ரீதியிலான நடவடிக்கையை, தற்செயலாக அந்த வகுப்பறைக்குள் சென்ற மற்றொரு மாணவி நேரடியாகப் பார்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆசிரியரது நடத்தை பற்றி பாடசாலை அதிபர் மட்டத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, பாதிப்பிற்குள்ளான மாணவியும், சம்பவத்தை நேரில் கண்ட மாணவியும் சாட்சியளித்துள்ளார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இப்பாடசாலையைச் சேர்ந்த 7 மாணவிகள் கையொப்பமிட்டு இந்த ஆசிரியரது நடத்தை பற்றிய ஒரு முறைப்பாடு மட்டக்களப்பு வலயக் கல்வித் திணைக்களத்திற்கும் சில முக்கியப் புள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பற்றிய விசாரணை சூடு பிடிக்க ஆரம்பித்தது.
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள். அதிகாரிகள் என்று அனைத்துத் தரப்பினாலும் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த ஆசிரியரோ, தன் மீது அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக சுமத்தப்பட்ட அபாண்டமான பழி என்று இந்தச் சம்பவம் பற்றித் தெரிவித்து வருகின்றார்.
- சரிநிகர் - (மாதமிருமுறை இதழ்) ஏப் 27, மே, 10 2000
* சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு முதல்தடவையாக 34 வருடகாலச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

J
Nam tokédi
காலியிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கும், அந்தப் பாடசாலையின் சிற்றுண்டிசாலை நடத்துநர் ஒருவருக்குமே இந்தச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக இவ்வாறு நீண்ட காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது இலங்கையில் இதுவே முதல்தடவையாகும்.
சங்கீத ஆசிரியர் எச்.டி. அமரதாச அதே பாடசாலையில் சிற்றுண்டிச்சாலை நடத்திவரும் கே. கே. நிமால் ஆகிய இருவருக்குமே 34 வருட கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. காலி நீதிமன்றத்தால் இந்தத் தண்டனை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இத்தகைய தண்டனை முறை சிறந்த வழிமுறையாக உள்ளது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹரேந்திர டி. சில்வா தெரிவித்துள்ளார்.
"12 இதற்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட 16 சிறுவர்களை இந்த இருவரும் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். ஆயினும் 3 சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகமே வெளிவந்தது" என்று சூழல் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்புக்கான தொண்டர் அமைப்பின் தலைவர் மொரின் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றவாளிகள் இருவரும் முதலில் சிறுவர்களைப் பாடசாலைச் சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு இனிப்பான போதைவஸ்துக்கள், ஹெரோயின், சிகரெட் இவைகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். இத்தகைய

Page 22
40 சிறுவர் பாலியல் கொடுமைகள்
போதை பழக்கத்திற்கு அவர்களை அடிமையாக்கியதும் அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். அதன்பின்னர் காலியிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு இந்தச் சிறுவர்களை விற்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
ஜேர்மன், அவுஸ்திரேலியா, சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த வெளிநாட்டுக்காரர்களால் இந்தச் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக வீடியோ கேஸட்டுகள் பல கண்டுபிடிக்கப்பட்டு
அவை நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.
1996 ஆம் ஆண்டு முதல் இந்த இருவருக்கும் எதிராகக் காலி நீதிமன்றில் விசாரணை நடைபெற்று வந்தது. அண்மையில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் போதே 34 வருடகாலச் சிறைத்தண்டனை உத்தரவு வழங்கப்பட்டது.
- 456ставестві - из.п.гооо
Y
வவுனியா தெற்கு சிங்களப்பிரிவில் உள்ள 11 வயது பாடசாலை மாண்வியொருவர் அதிபரினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வவுனியா
பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி தற்போது வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இந்த மாணவி எல்லைக் கிராம பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்த நிலையில் அதே பாடசாலை அதிபரினால் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

41
IDITIT Disdiái
யுத்தநிலைமை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வவுனியாவில் அகதிகளாக வாழ்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவி அப்பகுதி கிராம சேவகரின் உதவியுடன் குறிப்பிட்ட பாடசாலையில் அனுமதிபெற்று 6 ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.
- தினக்குரல் - 28.11.2000
S கண்டியைச் சேர்ந்த தமிழ்க் கல்வி அதிகாரி ஒருவர் 9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் மத்திய மாகாண கல்வித்திணைக்களம்
அவரை சேவையிலிருந்து இடை நிறுத்தம் செய்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் பள்ளே கலை பகுதியில் அமைந்துள்ள இக்கல்வி அதிகாரியின் வீட்டுக்கு இச்சிறுமி பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற போதே இவர் இச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மெனிக்கின்ன பொலிஸார் சம்பந்தப்பட்ட சிறுமியை விசாரணை செய்த பின்னர் கல்வி அதிகாரியைக் கைது செய்தனர். அவரை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக தெரியவருகிறது.
- தினக்குரல் - 22.03.2000
இலங்கையைத் தொடர்ந்து இந்திய அவலங்களை குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பார்த்தால் அங்கும் நிறைய நிறைய

Page 23
42 சிறுவர் பாலியல் கொடுமைகள்
சில அருவருப்புகள் மட்டும் இங்கு இடம் பெறுகின்றன.
சீர்காழி அருகே 5 மாணவிகளை கற்பழித்ததாக ܕܟ݂ ஆசிரியர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அரசினர் உய்ர்நிலைப்பள்ளியில் 4 -வது வகுப்பு ஆசிரியராக இருந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவரும் அதே பள்ளியில் சத்துணவு சமைப்பாளராக இருக்கும் வெங்கட்ராமன் (30) என்பவரும் சேர்ந்து இந்த பள்ளிக்கூடத்தில் இருக்கும் 10 வயதுக்குட்பட்ட 5 மாணவிகளை கற்பழித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இதில்
வெங்கட்ராமன், போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கைதான் ஆசிரியர் ஆறுமுகத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். "நான் அன்புடன் தான் மாணவிகளை முத்தமிட்டேன். பாசத்துடன் தான் தடவிக்கொடுத்தேன். இது தவறா?" என்று கூறினாராம். நீண்ட நேர விசாரணைக்கு பின்னரே போலீசாரின் கேள்விக்கு அவர் முறையாக பதில் சொன்னார்.
அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
ஆசிரியரால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் 5
மாணவிகளும் மருத்துவப் பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ
கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
- pnooG) togi - 23.03.1997,

43
மானா மக்கீன்
ஆசிரியரால் மாணவி தற்கொலை
* திருவாரூர் அருகே 8-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர்
கற்பழித்தாராம். விஷயம் வெளியே தெரிந்ததால் மனம்
உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது
குறித்து வழக்கு பதிந்து போலீசார் ஆசிரியரை கைது
செய்தனர்.
திருவாரூர் அருகே உள்ளது ஆந்தங்குடி அறுபதாம்
கட்டளை. இந்த ஊரை சேர்ந்தவர் முருகையன். இவரது மகள் சரஸ்வதி (வயது 16) ஆந்தங்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 8 -ம் வகுப்பு படித்து வந்தாள். இதே பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் மனோகரன் வயது 31
வகுப்பு இல்லாத நேரத்தில் சரஸ்வதியை மட்டும் தனியாக அழைத்து கொஞ்சிப் பேசுவாராம். சரஸ்வதியோ தனக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்தானே என எதுவும் நினைக்காமல் அவரிடம் சரளமாக பழகியுள்ளார். -
தமிழ்ச் சிறப்பு தேர்வு எழுத வேண்டும் எனக்கூறி மாணவி சரஸ்வதியை மனோகரன் திருவாரூர் அழைத்து சென்றார். அங்கு பல இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்தாராம். திருவாரூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் மாணவி சரஸ்வதியும், ஆசிரியர் மனோகரனும் விதவிதமாக போட்டோ எடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் சரஸ்வதி தனக்கும் ஆசிரியருக்கும் தொடர்பு உள்ளதாக வெளியில் தெரிந்து விட்டதை எண்ணி மனம் உடைந்தாள். வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துத் தற்கொலை செய்து கொண்டாள்.
- நம்ம ஊரு செய்தி, ஏப். 99.

Page 24
44 சிறுவர் பாலியல் கொடுமைகள்
ஐந்து ஆசிரியர்கள் ஒரு மாணவி
* மாணவியை கற்பழிக்க முயன்ற 5 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 மாணவியை கற்பழிக்க ஆசிரியர்கள் முயன்றதாக புகார் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன் நடத்திய விசாரணையில், பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 14 ஆசிரியர்களை திருவண்ணாமலைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கையை சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனரிடம் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையின் பேரில், பள்ளியைச் சேர்ந்த தேவதாஸ், முனுசாமி (முதுநிலை, சந்திரசேகர், காமாட்சி (பெண் ஆசிரியை, தமிழ் மணி (உடற்கல்வி ஆகியோர் பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- தினமலர் -22.11.2000
உருது படிக்க வந்த மாணவி கற்பழிப்பு
* புதுடில்லி நேரு விகார் பகுதியிலுள்ள இளம் பெண் ஒருவர், உருது மொழி கற்றுக் கொள்வதற்காக அப்பகுதியில்

45
TNT ukšá
உள்ள மசூதிக்கு சென்று வந்தார். இப்பெண்ணுக்கு பாடம் கற்றுக் கொடுத்து வந்த இஸ்மாயில் என்பவர், ஒருநாள், வலுக்கட்டாயமாக அவரை கற்பழித்துள்ளார். மேலும் இச்சம்பவம் பற்றி வெளியே கூறினால், கொலை செய்து விடுவதாக அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.
தன்னை மூன்று அல்லது நான்கு முறை கற்பழித்ததாகவும், ஆனால் இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லவில்லை என்றும் இதுகுறித்து வழக்கு விசாரணை நடந்தபோது இளம்பெண் தெரிவித்தார். இவ்வழக்கின் குற்றவாளியான 43 வயதான இஸ்மாயிலுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்குமாறு, தீர்ப்பளிப்பதாக நீதிபதி பிம்லா மகின் கூறினார்.
சிறுமியை 1வருடம் கற்பழித்தவர் கைது
& டெல்லியிலுள்ள அன்சாரி நகரில் வசிப்பவர் பல்வந்த்சிங் பிஸ்ட் (வயது 22). அறிவியல் பட்டதாரி வாலிபர். இவர் தனது வீட்டில் வைத்து சில மாணவ மாணவிகளுக்கு டியூஷன் (தனி பயிற்சி அளித்து வந்தார். அவரிடம் 15 வயது சிறுமி ஒருத்தியும் படித்து வந்தாள். அவளை பல்வந்த்சிங் கடந்த 1 ஆண்டு காலமாக கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதுபற்றி அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் பல்வந்த்சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- fantasmät (Ffilmas mrmrAms?) 12. na. Maaa

Page 25
46 சிறுவர் பாலியல் கொடுமைகள்
இவ்வாறாக இந்தியாவிலும், இலங்கையிலும் ஒநாய்த்தனங்கள் என்றால், வெளிநாட்டு ஆசிரியர்களைச்
சொல்லவும் வேண்டுமா?
ஸ்பெயின், அமெரிக்கா (புளோரிடா), இலண்டன் மூன்று இடங்களில் நடந்தவை இதன் கீழ் காணப்படுகின்றன. அனைத்திற்கும் ஆதாரம் ராய்ட்டர் செய்தி நிறுவனம்.
ஸ்பெயின் நாட்டில்.
$ ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சலோனா அருகே ஒரு பள்ளிக்கூடத்தில் சிறுமிகளை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தும் கொடுமை நடந்துள்ளது. 5 வயது முதல் 15 வயது வரை உள்ள 40 சிறுமிகள் அதற்காக பயன்படுத்தப்பட்டனர். அதோடு அவர்களின் செயல்களை வீடியோ படமாகவும் தயாரித்து வெளியிட்டனர். அதற்காக மிகச்சிறிய குழந்தைக்கு பரிசுப் பொருளும், பெரிய சிறுமிகளுக்குப் பணமும் வழங்கப்பட்டது. தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று அந்தப் பள்ளிக்கூடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் ஒரு கவுன்சிலர் (முனிசிபல் அங்கத்தினர்) மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக அந்தக் கவுன்சிலர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். அவரை பதவி நீக்கம் செய்யவும் மேயருக்கு கட்சி மேலிடம் சிபாரிசு செய்துள்ளது.
- ராய்ட்டர் செய்தி நிறுவனம் -

47
At it odds
அமெரிக்கா புளோரிடா பேராசிரியர்
ஃபுளோரிடா அத்திலாந்திக் பல்கலைக் கழகத்தில் அமெரிக்க வர்த்தகப் பேராசிரியராக கடமையாற்றும் 58 வயதான மார்வின் ஹேர்ஷ், 15 வயதுடைய சிறுவனுடன் ஒரு வருடமாக தவறான உறவு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கிறது. அத்துடன் அவர் மீது 10 குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
சிறுவர் துஷ்பிரயோகத்தை நோக்கமாகக் கொண்ட சுற்றுலாக்களைத் தடுக்கும் நோக்குடன் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் முதலாவது நபர் இப் பேராசிரியராவார்.
இக்குற்றங்களிற்காக ஹேர்ஷ் 100 வருட சிறைத்தண்டனை அனுபவிப்பதோடு 2.5 மில்லியன் டாலர் அபராதத்தையும் செலுத்த வேண்டியேற்படும்.
"பேராசிரியர் நல்லவராக இருந்தபடியால் நான் முழு மனதுடன் இதைச் செய்தேன். அவர் தரும் பணத்திற்காகவும், பரிசுப் பொருட்களுக்காகவும் நான் அவருடன் வந்தேன். அவரை கடவுளுடைய அற்புதமாகக் கருதினேன்" என்று சிறுவன் தெரிவித்துள்ளான்.
-ராய்ட்டர் செய்திநிறுவனம் லண்டன் ஆசிரியை
* லண்டனில் செக்ஸ் கல்வி கற்பித்து கொடுக்கும் ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனிடம் செக்ஸ் உறவு
வைத்துக் கொண்ட தகவல் வெளியானதை அடுத்து பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

Page 26
au
சிறுவர் பாலியல் கொடுமைகள்
ரோசாமன்ட் மோஸ்லி 37 வயது திருமணமானவர். இரண்டு குழந்தைகளுக்கு தாய், லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் செக்ஸ் கல்வி ஆசிரியர். இதே பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் எலிஜா கேம்பெல் வாட்ட சாட்டமான மாணவன். இவனை பார்த்ததுமே ஆசிரியை மோஸ்லி செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள துடித்தார். அதனால் அந்த பையன் மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். ஒருநாள் அந்தப் பையனை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு என்ன் நடந்தது என்பதை மாணவன் எலிஜா
கூறுவதை பாருங்கள் :
"ஒரு நாள் பள்ளியில் நான் யூனிபார்முடன் இருந்தேன். அப்போது ஆசிரியர் என்னை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு 120 டாலர் கொடுத்து அறை எடுத்து தங்கினோம். பாதுகாப்பான செக்ஸ் எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டே என்னிடம் செக்ஸ் உறவு கொண்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட ஒரே களைப்பாக இருந்தது. மறுநாள் நான் பள்ளிக்குச் செல்லவில்லை"
எலிஜாவுடன் தனக்கு உறவு இருந்ததை ஆசிரியை மோஸ்லியும் ஒப்புக்கொண்டார். "ஆசிரியைக்கு சரியான தண்டனை கொடுக்காவிட்டால் என்னைப்போலவே பல மாணவர்களின் வாழ்க்கையைப் பாழாக்கிவிடுவார்" என்று மாணவன் எலிஜா தெரிவித்தான். இப்போது தன் வயதுக்கேற்ற பெண்ணுடன் பழகிவருவதாகவும் வேலைக்குச் செல்வதாகவும் எலிஜா
தெரிவித்துள்ளான்.
ராய்ட்டர் செய்தி நிறுவனம்

மானா மக்கீன் 49
ஹாங்காங் போதனாசிரியர்
$ 10 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஐந்து மாணவியரை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த ஒரு கல்விப் போதனாசிரியர் தண்டிக்கப்பட்டார். 49 வயதான அந்த ஓநாய் டியூசன் வகுப்புகளின் போது அவ்வாறு நடந்து கொண்டது நிரூபிக்கப்பட்டது.
எழுத்தறிவித்தவன் இறைவன் என்று நாம் ஆசிரியர்களைப் போற்றி வருகிறோம்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என அன்னைக்கும், தந்தைக்கும் அடுத்த இடத்தில் ஆசான் போற்றப்படுகிறார்.
இந்த இரண்டும் மேல்நாட்டுக்காரனுக்கு தெரியாமல் இருக்கலாம் . . . . . நமக்கோ?
ஆசிரியன் என்றாலே குற்றத்தை நீக்குபவன் என்று பொருளாம். அப்படிப்பட்டவர்களே குற்றம் இழைப்பவர்களாக
ஆகிவிடலாமா?
ஆசிரிய சேவை மீது ஏற்படுத்தப்படும் களங்கமும், கறையும் ஏனைய நல்ல ஆசிரியர்களை மட்டுமல்ல, இந்த சேவையைப் போற்றி மதிக்க வேண்டிய மாணவர்களையும் பாதித்து விடாதா?
இதே கருத்துமூன்று ஆண்டுகளுக்கு முன் 1997 மே -யில் தமிழகத்து நீடாமங்கலம் விழாவொன்றில் முன் வைக்கப்பட்டது. பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு வைபவத்தில் ஒன்றிய ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளர் ச. மீனாட்சிசுந்தரம் அவர்கள் ஆற்றிய உரை அற்புதம்

Page 27
50
சிறுவர் பாலியல் கொடுமைகள்
"அண்மைக்காலமாக ஆசிரிய சமுதாயத்திற்கே சில புல்லுருவிகளால் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. சிலகாலத்திற்கு முன்பு வரை செக்ஸ் சாமியார்களைப் பற்றி ஏடுகளிலே நிறையச் செய்திகள் வந்தன. அவை ஆத்திகர்களின் உள்ளத்தைப் பெரிதும் பாதித்தன. அதே போல, செக்ஸ் ஆசிரியர்களைப் பற்றியச் செய்திகள் ஆசிரிய சமுதாயத்தையே தலைகுணிய வைத்துள்ளது."
"அந்தச் சமுதாய விரோதிகளைத் தாக்கிலே போட்டாலும் தகும். குறைந்தபட்சம் இனி அவர்கள் ஆசிரிய பணிக்கு வரமுடியாதவாறு அவர்களது ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் களையாவதுப் பறித்து அழித்திட வேண்டும்"
"ஆசிரியர்கள் muri? அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்பதை அவர்களுக்கே விளக்கவும், ஆசிரியர் சமுதாயம் எப்படி மதிக்கப்பட வேண்டும் என்பதைப் பொதுமக்களுக்கு விளக்கவும், இனி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தை உள்ளடக்கிய செப்டம்பர் முதல் வாரத்தை நாடு முழுவதும் கொண்டாடப் போகிறோம்."
தினகரன் தமிழக நாளேடு - 16.05.1997 சென்னை பதிப்பு
இதே 1997 -ஆம் ஆண்டில் புதுடெல்லி நீதிமன்றத்தில் மாணவியை ஆசிரியர் தகாத உறவுக்கு உட்படுத்திய வழக்கில் ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்த பெண் நீதிபதியான பிம்லா மகின் தனது தீர்ப்பில்.
"ஓர் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள தொடர்பு தந்தைக்கும் அவரது குழந்தைக்கும் இடையே உள்ள தொடர்பு போன்றது" என்றார்.
தினமலர்(தமிழக நாளேடு) 04.12.1997 சென்னை பதிப்பு

51
, man Däß
நாற்றுகளை மேய்கிற ஒ) நாய்ப் பிறவிகள்
உண்மையிலும் உண்மையே.
ஆனால், டில்லிப் பெண் நீதிபதியை அதிர்ச்சியின் டச்சத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய, அவரது கருத்தையே சிதறடித்துவிடக்கூடிய அக்கிரமமான அருவருக்கத்தக்க நிகழ்வுகள் பிலிப்பைன்சிலும் இலங்கையிலும் நடந்துள்ளன. இன்னும் வேறு நாடுகளிலும் நடந்திருக்கலாம். என் ஆய்வுக்குள் அகப்படவில்லை அவ்வளவே
அப்படி என்ன நிகழ்வுகள் என்பதை அபிமானிகள் யூகிந்து விடலாம். இருந்தாலும், இதன்கீழ் சிலவற்றைத் தந்து மார்ஜிதப்படுத்துவது என் பேனாவின் கடமை.
& 12 வயதுடைய மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்து நான்கு மாதக் கருவை கலைத்த தகப்பனுக்கு அனுரா9தபுரம் மேல் நீதிமன்றம் 19 ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனையும், ரூ. 5000 அபராதத்தையும் விதித்தது. * 11 வயதுடைய மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த சிறிய தகப்பனுக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் 15 ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனையும் ரூ. 25000 அபராதத்தையும் விதித்தது. '
திவயின - சிங்கள நாளேட்டில் வந்த செய்திகள் 16.01.1998.

Page 28
சிறுவர் பாலியல் கொடுமைகள்
/5
12 வயது சிறுமியுடன் தந்தை ! மாமனார் !
* தனது தந்தையும், மாமனாரும் தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியதாக 12 வயதுச் சிறுமி ஒருவர் சிலாபம் பொலிஸில் புகார் செய்ததையடுத்து தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாமனார் தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக சிலாபம் பொலிஸார் நடத்திய விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாவது இச்சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்று வெளிநாடு சென்றுள்ளார் வீட்டில் இச்சிறுமியும் அவரது சகோதர சகோதரிகளும், தந்தையுடனும், மாமனாருடனும் வசித்து வருகின்றனர்.
சம்பவ தினம் மது போதையில் வந்த மாமன், தன்னை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியதாகவும் அதே தினம் தனது தந்தையும் மதுபோதையில் வந்து தன்னை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
- தினக்குரல் (நாளேடு) 07.10.1998
மகள்மார் மூவருடன்!
* களுத்துறைப் பகுதியில் தந்தை ஒருவர் தமது சொந்த புதல்விகள் மூவரைக் கொடூரமான முறையில் தொடர்ந்து பல தினங்கள் பாலியல் வல்லுறவு புரிந்து வந்துள்ளது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மிருகத்தனமான செயல்களுக்கு உதவியதாக சந்தேக நபரின்
தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ானா மக்கீன் 53
தந்தையின் வெறிக்கு இரையான 13, 15, 17 வயதுடைய
இந்த மூன்று பிள்ளைகளும் களுத்துறை, நாகொடை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது -
சந்தேக நபரின் மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே அவரைவிட்டுப் பிரிந்துவிட்டார். கணவரின் பாலியல் ரீதியான தொல்லைகள் தாங்கமுடியாமலே அவர் பிரிய நேர்ந்ததாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து 3 பெண் பிள்ளைகளும் தந்தையுடன் வசிந்து வந்துள்ளனர். அவர்களுடன் பாட்டியும் தந்தையின் தாய் இருந்தாள்.
சந்தேக நபர் (தந்தை தனது மூத்த மகளை, அவளுக்கு 14 வயதாக இருக்கும்போதே, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். அவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்து விட்டார். பின்னர் மற்றைய இரு பிள்ளைகளும் இந்தக் கயவனின் காமவெறிக்குப் பலியாகி வந்துள்ளனர். எனினும் அந்தப் பிள்ளைகள் அச்சம் காரணமாக வெளியில் எதுவும்
தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர்.
- தினக்குரல் - 6.10.1999
* இரண்டாண்டு இடைவெளியில் இந்த களுத்துறை வட்டாரத்திலேயே இன்னொரு சம்பவம் !
இதில் தந்தைக்கு ஏற்பட்ட முடிவு எப்படி, யாரால் என்பதை தன் கீழுள்ள செய்தியைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Page 29
சிறுவர் பாலியல் கொடுமைகள்
தனது 14 வயது, 11 வயது பெண்பிள்ளைகளுடன் பாலியல் சேஷ்டைகள் புரிந்த கணவனை ஆசிட் வீசிக் கொலை செய்தார் மனைவி
களுத்துறையில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் சந்திரசிறி பெர்னாண்டோ (39 வயது என்பவர் மரணமானார்.
இவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் மரணமானார்.
தனது கனவன் தினமும் பெண் பிள்ளைகளுடன் இவ்வாறு நடநது கொள்கிறார் என்றும் அதனை தடுக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்காததால் நான் இவ்வாறு அசிட் வீசிக் கொலை செய்தேன் என்றும் அப்பெண், பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
- தினக்குரல் - 20.06.2001
ஐயோ இதை யாரிடம் சொல்லி அழுவது?
S :ட்டகளபடி புன்னைச்சோலைப் பகுதியில் தனது எட்டு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தையொருவரை வளைத்துப் பிடித்த பொதுமக்கள் அவரை நையப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தனது சித்தியின் வீட்டில் தனிமையிலிருந்த இந்த எட்டு வயதுச் சிறுமியை அங்கு சென்ற தந்தை (வயது 34) பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி உள்ளார்.

LOTGIET Lošićßis
சிறுமி எழுப்பிய அவலக் குரலையடுத்து அங்கு விரைந்த அயலவர்கள் மகளை வல்லுறவுக்குட்படுத்திய பின்னர் தப்பிச் செல்ல முயன்ற இந்த நபரை வளைத்துப் பிடித்து மிகக் கடுமையாக நையப்புடைத்த பின்னர் மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக மட்டக்களப்பு
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-தினக்குரல் - 16.02.2000
தாயும் துணை !
* பிரியந்தா ஐயலத் என்ற வாலிபனுக்கு தொழிற்சாலை ஒன்றில் சித்ரா என்ற பெண்ணுடன் முறைகேடான பழக்கம் ஏற்பட்டது.
அவள் ஏற்கனவே மணம் புரிந்திருந்தாள். கணவனுடனேயே வாழ்ந்து கொண்டிருந்தாள். பத்து வய்து மகளும் இருந்தாள்.
வாலிபன் வீட்டுக்கு வரத் தொடங்கினான். தாய் மகளையும் பழக அனுமதித்தாள். கடிதத் தொடர்புகள் வைத்துக்கொள்ளவும் மகளைத் தூண்டினாள். அவளே அவற்றை எழுதியும் கொடுத்தாள். பிரதி செய்து கையெழுத்திடுவது மட்டும் மகள்
தந்தைக்கு வாய்ப்பூட்டு!
நாளடைவில், தாய் கொடுத்த பூரண சுதந்திரத்தில் வாலிபனது பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு சிறுமி ஆளானாள்,

Page 30
56 சிறுவர் பாலியல் கொடுமைகள்
கர்ப்பமும் அடைந்தாள். இப்பொழுது ஒரு வயதுக்குழந்தையை தந்தையார், பாட்டியார் உதவியோடு வளர்க்க வேண்டிய நிலை.
இதை நீங்கள் படிக்கையில் அவளுக்கு வயது 15 தான்
தாயார் - வாலிபர் இருவர் சம்பந்தப்பட்டவரையில் சட்டம்
தண்டிக்கவே செய்தது.
மகள் சீரழிய தாயே உதவியதற்காக பத்தாண்டுக் கடூழிய சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் அத்தோடு ஐம்பதாயிரம் ரூபாய் நஷ்டஈடும் மகளுக்கு வழங்க வேண்டும் என்பது தாய்க்கு அளிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு
வாலிபன் பிரியந்தாவும் பத்தாண்டுகள் கடூழியமும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பெற்றான். அவனும் சிறுமிக்கு ஐம்பதாயிரம் நஷ்டஈடு வழங்கவேண்டும்.
-சண்டே லீடர் - (இலங்கை) 27.02.2000
களுத்துறையில் மீண்டும்!
$ 14 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்திய சம்பவம் தொடர்பாக 40 வயதுடைய தந்தையை
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் களுத்துறை தெபுவன பகுதியில் உள்ள தோட்டமொன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

WAMY Odhar -- 57
பிள்ளையின் தாயார் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற சமயமே தந்தை இவ்வாறு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். வேலை முடிந்து வீடு வந்த தாயாரிடம் சிறுமி இது தொடர்பாக தெரிவித்துள்ளார். பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
- தினகரன்.-07.03.2002 பெரியதர்தையின் பேய்த்தனம்
* யுவதியொருவர் பெரிய தந்தையாலும் அவரின் நண்பராலும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று ஏறாவூர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தந்தையைப் பிரிந்து பெரிய தந்தையுடன் வசித்து வந்த ற்ற யுவதியின் (வயது 16 தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார்.
இந்த யுவதி வீட்டில் தனிமையில் இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெரிய தந்தையும் அவரின் நண்பரும் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
"இந்த யுவுதி நீண்ட காலமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்." என வைத்தியப் பரிசோதனையை மேற்கொண்ட வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
-தினக்குரல் - 10.04.2002

Page 31
58
சிறுவர் பாலியல் கொடுமைகள்
* ஏறாவூர் தாமரைக்கேணி பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் இதுகாலவரை மறைக்கப்பட்டு வந்திருப்பதாக
பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்திருக்கிறது.
இச்சிறுமி தனது சிறிய தந்தையான தயிர் வியாபாரி ஒருவர் மூலமாக கற்பழிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிட்டியுள்ளது.
இவர் தனது மனைவியின் உடன்பிறந்த சகோதரியையும் திரும்ணம் செய்ததாக கூறிக்கொண்டு வைப்பாட்டியாக வைத்திருப்பதாகவும் பொலிஸாருக்குக் கிடைத்திருக்கும் தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாகவும் தாம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில். . . . .
* உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு பெண் தனக்கும் தனது தங்கைக்கும் சில ஆண்டுகளுக்கு முன் தங்களுடைய தந்தை இழைத்த பாலியல் கொடுமைகளை எடுத்துரைக்க மைக்கைப் பிடித்த போது அரங்கில் நிலவிய நிசப்தத்தில் .ஒருவகையான டென்ஷனை உணர முடிந்தது م இச்சம்பவங்கள் அம்மாவிற்குத் (ஆறு பெண்களின் தாய்) தெரிந்தவுடன் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள முயன்றது. கிறிஸ்துவ சேவை அமைப்பின் உதவியால் காப்பாற்றப்பட்ட இக்குடும்பத்தைத் தாய் வழிப் பாட்டி கூலி வேலை செய்து பராமரித்து வருகிறார். ஜாமீனில்

TarIT Dékási 59
வெளிவந்துள்ள தகப்பன் குடும்பத்தையே ஒழித்துக் கட்டிவிடுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறான்.
-நாகர்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கக் கூட்டத்தில் திருமதி, மைதிவிசிவராமன் அவர்கள்.
தாய்லாந்தில். . . . . .
N மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தார் தந்தை.
தாய்லாந்தில் நபர் ஒருவர் மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதுடன் கொலை செய்தமைக்காக அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இது மூன்றாவது மரண தண்டனையாகும்.
1997 ஆம் ஆண்டு 38 வயதான டெகா சுவான்னாசுக் என்பவர் நான்கு வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் கொலை செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவருக்கு ஒன்பது சன்னங்கள் இடப்பட்ட இயந்திரத்துப்பாக்கிமூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
தாய்லாந்து மரணதண்டனை வழங்குவதை இடைநிறுத்தி வைந்திருந்தது. ஒன்பது வருடங்களின் பின்னர் 1996 ஆம் ஆண்டு மீண்டும் தண்டனை நிறைவேற்றத்தை அமுல்படுத்தியது. அதன் பின்னர் இதுவரை ஒன்பது மரண் தண்டனைகள்
நிறைவேற்றப்பட்டுள்ளன.
1999 ஜூலை 11 ல் வந்த செய்தி.

Page 32
60 சிறுவர் பாலியல் கொடுமைகள்
பிலிப்பைன்ஸில், , , , ,
* மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவருக்கு மரண
தண்டனை.
பிலிப்பைன்ஸ் வாசியொருவர் தனது 14 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட்து.
வளர்ப்பு மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமையினால் அவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது.
1999 ஜூலை 27-ல் வந்த செய்தி
நோ காமண்ட் (No Comment) என்றொரு வார்த்தை ஆங்கிலத்தில் உள்ளது.
கருத்து தரமாட்டேன்' என அழகுத் தந்திடலாம்.
பெரிய புள்ளிகளிடம் ஊடகவியலாளர்கள் முக்கிய நிகழ்வு ஒன்றுக்குக் கருத்துக் கேட்டால் மேற்கண்டவாறு பதில் கூறி நடை பயில்வார்கள் !
அவர்கள் பாணியில் நானும் மேற்கண்ட சம்பவத்திற்கு மட்டும் அந்த வார்த்தையைப் பாவிக்க வேண்டியதாகிறது. நானும் ஒரு பெரிய ஆசாமி என அர்த்தப்படுத்திக் கொண்டல்ல அபிமானிகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது சிலாக்கியம் எனக் கருதுகிறேன்.

TIT Loséféir 61
என்றாலும் "நாற்றுகளை மேய்கிற (ஓநாய்ப்பிறவிகள்" எனத் தலைப்பிட்டு என் கருத்தை தெரிவித்திருப்பதாக நம்புகிறேன்.
இந்நூல் அச்சுக்கு போகும் அக்டோபர் மாத (2002) இறுதிப் பொழுதுகளில் கிடைத்த ஒரு செய்தி
மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை
பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியபின் படுகொலை செய்த ஆசிரியருக்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ மரண தண்டனை விதித்துள்ளார்.
மாவரளை பொலிஸ் பகுதியிலுள்ள
தித்தெனிபொத்த என்ற இடத்தில் வசித்து வந்த 17 வயது மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டவராவார்.

Page 33
62 சிறுவர் பாலியல் கொடுமைகள்
அநியாயங்கள்
Nவ்வத்தியாயத்தின் ஆரம்பப் பக்கங்களில் தனிமனித வெறித்தனங்களை விவரித்தேன். (மிருகக் குணங்கள் எனப்பதித்திட விரும்பவில்லை. அவை மேலானவை.
பின்னர் பெரிசுகளின் பிசாசுக்குணங்களைப் பிட்டு வைத்தேன்.
அப்புறம், வேலியே பயிரை மேயும் (ஆசிரியர்கள்) அக்கிரமங்களைக் காட்டினேன்.
கடைசியில், அருவருப்பின் உச்சத்திற்கே போய், தங்களது நாற்றுகளையே மேய்கிற பெற்றோர்களைப் பார்க்கச் செய்தேன்.
இனி, இளம்பயிர்கள் வேறு எப்படியெல்லாம் மேயப்படுகின்றன என்பவற்றையும் காட்டிட வேண்டும்.
இந்திய நாட்டைப் பொறுத்தவரையில் * இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்துக் கோவளம்
* பல்லவ மன்னர்கள் வைத்துவிட்டுப் போன மாமல்லபுரம்
* ஃபிரெஞ்சு செண்ட் வீசும் புதுவை பாண்டிச்சேரி ஆகிய மூன்று இடங்களுடன், * இலங்கையில், நீர்கொழும்பு, பெந்தோட்டை - ஹிக்கடுவை கடற்கரைப் பிரதேசங்களையும்

மானா மக்கீன் 63
* தூரகிழக்கு நாடுகளில் தாய்லாந்தையும் பார்த்திடலாம்.
இப்பொழுது ஒஹோவாகிவிட்ட இணைய - வெப் தளங்களில் (இன்டர்நெட் - வெப்சைட்) புதுவை,
கோவளம் முதலியவை அடையாளம் காட்டப்படுவது சர்வசாதாரணம்.
பிரபல தமிழக நாளேடுகளான தினமலர், நக்கீரன் வார இதழ் ஆகியனவும் சண்டே லீடர் - சண்டே டைம்ஸ் முதலிய ஆங்கில வார ஏடுகளும் இலங்கை நடப்புகளையும் மிகவும் ஆதாரத்துடன் நிழற்படங்களுடன் தந்தவண்ணம் உள்ளன.
முதலில் நக்கீரன் வாரமிருமுறை இதழின் பக்கங்களை
நன்றியுடன் புரட்டிப் பார்க்கலாம்.
மாமல்லபுரத்தில் பாலியல் கொடுமை !
அந்தச் சிறுவனுக்கு சுமார் பத்து வயதிருக்கும். இளம்பச்சை நிறத்தில் ஒரு கிழிந்த டிரவுசரும், "Donald Duck" என்ற ஆங்கில வாக்கியம் பொறிக்கப்பட்ட பனியனும் அணிந்திருந்தான். முகத்தில் பத்து வயது குழந்தைக்கு இருக்க வேண்டிய பால் மணம் கொஞ்சம் கூட இல்லை.
மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றித்திரிந்து, வெளிநாட்டுப் பயணிகளிடம் பெண்டன்ட்ஸ் என்கிற செயற்கை பதக்கங்களையும் வண்ணப்படக் கார்டுகளையும் விற்றுவரும் இந்தச் சிறுவனின்
பெயர் மைதீன்.
இந்தச் சிறுவனிடம் அப்படியென்ன இருக்கிறது?

Page 34
64 சிறுவர் பாலியல் கொடுமைகள்
அரும்புப் பருவத்தைத் தாண்டாத மைதீன், எய்ட்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறான். ஏன்? அதை மைதீனே சொல்கிறான்.
"எனக்கு அப்ப மூணு, நாலு வயசு இருக்கும். ஸ்கூல் விட்டதும் கலைப்பொருட்களை விற்க கடற்கரைக்கு வந்தேன். அப்ப ஒரு ஹாலந்துக்காரர் வந்தார். அவர்கிட்ட கலைப்பொருட்களை காட்டினேன். அப்ப தன்னோட ரூமுக்கு வருமாறு கூப்பிட்டார். . . போனேன். நிறைய காசு கொடுத்தார்.
"தகாத முறையில் செக்ஸ் விஷயங்களை சொல்லிக்கொடுத்து செய்யச் சொன்னார். செய்தேன். அப்புறம் தெனம் போனேன். கொஞ்ச நாள்லேயே என்னோடு உறவு கொள்ளும் அளவுக்கு என்னை தயார் பண்ணிட்டார். சில சமயம் வலி எடுத்து நான் அழுதால், உனக்கு அது வாங்கித்தர்றேன். இது வாங்கித்தர்றேன்னு சமாதானப்படுத்துவார். என் சட்டை தரணிகளையெல்லாம் கழற்றிவிட்டு முழுசா வீடியோ படமெல்லாம் எடுப்பாரு. அப்புறம் அவர் போய் விட்டார். அதன்பிறகு ஒரு ஜெர்மனிக்காரர் இப்படி செஞ்சார். இப்படி நிறைய பேர்"
- இந்தச் சிறுவனின் உதடுகளிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் நடுங்கவைத்தன. இந்தச் சிறுவனை நமக்கு அறிமுகப்படுத்திய சமூக சேவகர் சங்கர், "சார், இவனை மாதிரி மாமல்லபுரத்தில் ஏறத்தாழ 200 சிறுவர், சிறுமிகள் இப்படி வெளிநாட்டு பயணிகளால் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போ மாமல்லபுரம் உலக அளவில் சிறுவர்கள் செக்ஸுக்கு பேர்போன இடமா மாறிடுச்சி" என்றார்.

மானா மக்கீன் 65
அதிரவைக்கும் இந்தத் தகவல்களை கண்ணெதிரே காணும் வரை நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் . . . இரவு நேரத்தில் ஒளி மயங்கிக் கிடந்த கடற்கரை மணல்வெளியில் வெளிநாட்டுக்காரர்கள் தமிழ்ச் சிறுவர், சிறுமிகளோடு தொட்டுப் பேசி சிரித்துக் கொண்டிருந்த காட்சியைக் கண்டதும் நெஞ்சம் கனத்தது.
சிறுமிகளின் இருட்டுப்பாதையை நம்மால் அறிய முடிந்தது.
மோகன் என்ற சிறுவனுக்கு கம்பெனியாகக் கிடைத்தவன் ஒரு ஜெர்மனியக் கிழவன். எப்போதும் குனிந்தபடியே நடக்கும் இந்தக் அறைக்கு மோகன் அடிக்கடி செல்வான். கிழவனின் இச்சைகளைத் தீர்ப்பதால் கிடைத்த பணத்தைக் கொண்டு வரும் மோகன், தன் நண்பர்களுக்கு அடிக்கடி பீர்
வாங்கித்தருவானாம்.
"துண்டு பீடி" என்ற பட்டபெயர் கொண்ட இன்னொரு சிறுவன் சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு அடிக்கடி வந்து போவான். இவன் தன் குப்பத்துப் பசங்களுக்கு செக்ஸ் வித்தைகளையும், வியாபாரத்தையும் கற்றுத்தந்தவனாம். இவனிடம் பயிற்சி பெற்ற ரமேஷ், காட்டுராஜா போன்றவர்கள்
வெள்ளைக்காரர்களுக்கு செக்ஸ் சேவை (?) செய்து வருகிறார்கள். "துண்டு பீடி" யின் திறமையைக் கண்டு அசந்துபோன
வெளிநாட்டுப் பார்ட்டிகள் அவனுக்கு மாமல்லபுரத்திலும் பாண்டிச்
சேரியிலும் இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

Page 35
66 சிறுவர் பாலியல் கொடுமைகள்
தாஜூன் என்ற சிறுமிக்கு இந்த விஷயத்தில் ஃபிரண்டாக இருப்பவன் ஒரு பிரெஞ்சுக்காரன். இந்தப் பெண்ணின் அப்பா மோடிவித்தைக்காட்டி பிழைக்கிற ஆசாமி. தாஜூன் மேல், ஈர்ப்பான பிரஞ்சுக்கார ஆள், அவளையும், அவள் அப்பாவையும் கொச்சினுக்கு அழைத்துப் போய்வந்தான். சமீபத்தில் அந்தப்பெண் ஆளாகி இருப்பதாக தகவல்.
ஹாலந்து நாட்டுக்காரரான ரூடி என்ற 70 வயதுக் கிழவருக்கு 14 வயது சிறுமி கீதா செக்ஸ் தோழி! இரண்டு வருஷத்திற்கு முன்பிருந்தே இந்தச் சிநேகம் தொடர்கிறது. இப்போது ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் ரூடி, கீதாவுக்கு மாதாமாதம் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான்.
லட்சுமி என்ற சிறுமி, தன்னோடு சில சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு தன் வெள்ளைக்கார நண்பரைச் சந்திக்கிறாள் வெள்ளைக்கார நண்பரோ, எல்லோருக்கும் கோப்பைகளில் மதுவை நிரப்பித்தருவார். பிறகு. . . இந்தப் பார்ட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் 100 முதல் 500 வரை கிடைக்கிறது.
இப்படியாக இருட்டில் நீந்தும் மழலைகளின் பட்டியல் நீள்கிறது. புனிதம் மிகுந்த தமிழகத்தின் கலாசாரத்தை சீரழிக்கும் படியாக - வெளிநாட்டைச் சேர்ந்த பலர் மாமல்லபுரத்தில் மிகக் கொடூரமான சிறுவர் செக்ஸ் லீலைகளை அரங்கேற்றுகின்றனர் இவர்களை யாரும் தட்டிக்கேட்பதே இல்லை. சில லாட்ஜ்களும் இதுமாதிரியான காரியங்களுக்கு தன் வாசல்களை அகலத் திறந்து வைத்திருக்கின்றன.

மானா மக்கீன் of
"கடந்த 6 மாதங்களில் மாமல்லபுரத்திற்கு சுமார் 30 -க்கும் மேற்பட்ட பீடோபைல்கள் (விளக்கம் 4 -ஆம் அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது வந்துள்ளனர். விடுதிக் குழந்தைகளையும் சேர்த்து சுமார் 200 குழந்தைகள் இவர்களால் செக்ஸுக்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பணம் நிறைய கிடைப்பதால் குழந்தைகளின் பெற்றோர்களும் இதைத் தடுப்பதில்லை. 70, 80 வயதுக் கிழவர்களுக்குகூட சிறுமிகளை சந்தோஷமாகக் கட்டிக் கொடுக்கிறார்கள்" என மேலும் சொன்னார் ரோப் டைரக்டர் சங்கர்.
முன்பு கோவாவில் தங்கியிருந்த பீடோபைல்கள் தற்போது மாமல்லபுரத்தை முற்றுகையிட்டு வருகிறார்கள். காரணம் கோவாவில் ஒரு சிறுவர் விடுதியில் நடந்த ரெய்டில், பலர் அகப்பட்டனர். விடுதி நிர்வாகியும் கைதானார். அதுபோல கோவா சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், காவல் துறையும் நீண்டநாள் கோவாவில் தங்கும் வெளிநாட்டவர்களைக் கண்காணிக்கின்றன. எனவே தான் பீடோபைல்கள் தமிழ்நாட்டுக்கு ஓடி வருகிறார்கள்.
பீடோபைல்களின் பிடியிலிருந்து குழந்தைகளின் உலகத்தைக் காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? எய்ட்ஸ் அபாயத்திலிருந்து மகாபலிபுரம் மீளுமா? கேள்விகள் நீள்கின்றன. விடை?
-நக்கீரன்(புலனாய்வு வாரமிருமுறை) 29.03.1997
பாண்டிச்சேரியில் வெள்ளைகளின் விளையாட்டு
* இந்திய நாட்டின் பச்சிளம் பாலகர்களை சீரழிப்பதோடில்லாமல், அதைப் புகைப்படம், வீடியோ எடுத்து விற்பதோடு நிற்காமல், அவர்களை கடத்தி கொண்டு செல்கிறது ஒரு கும்பல்

Page 36
68 சிறுவர் பாலியல் கொடுமைகள்
இப்படி தங்கள் குழந்தைகள் சீரழிக்கப்படுவதை இந்திய பெற்றோர்களே அனுமதிக்கிறார்கள். அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? குழந்தைகளைச் சீரழிக்கும் கும்பல் எது? அவர்களது காமப்பசி எத்தகையது? அவர்களுக்கு இந்திய சிறுவர்களின் மீது ஏனிந்த காதல்?
உலகத்தை அச்சுறுத்தும் பீடியோ பைல் (விளக்கம் அடுத்த அத்தியாயத்தில் எனப்படும் சிறுவர் செக்ஸ் கலாசாரம். . . பண்பாட்டில் தோய்ந்த நம் தமிழ்நாட்டிலும் பக்கத்திலிருக்கும் புதுவையிலும் (பாண்டிச்சேரி) வேரூன்ற தொடங்கியிருக்கின்றன என்ற தகவல் கிடைத்தபோது திடுக்கிட்டுப் போனோம்.
பீடியோபைல் கும்பல்களின் நெட் ஒர்க் பற்றிய விசாரணையில் உடனே இறங்கினோம். இது பற்றிய ஆரம்ப நூலிழை ஒன்று, நமக்கு புதுவையில் (பாண்டிச்சேரி கிடைத்தது.
முதலில் நமது சந்தேகக் கண்களில் சிக்கியவர்கள் ஈவ்நோயல் கால்ட்ரி, ஐக்கார் கிறிஸ்டோபர் என்ற இரண்டு வெளிநாட்டுப் பொதுச்சேவை ஆசாமிகள். பிரான்ஸ்காரர்கள்.
இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய இரு நாட்டு பாஸ் போர்ட்களையும் வைத்திருக்கும் இந்த 50-வயது கிதார் இளைஞர் ஈவ் நோயலிடம் "உங்கள் நாட்டை விட்டுவிட்டு வந்து இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றோம்.
"ஃபிரான்ஸ் நாட்டில் எல்லாமே செயற்கையாகி விட்டது. வேகமாக செல்லும் கார்கள், செயற்கையாய் ஒளிரும் கம்ப்யூட்டர்கள், கான்கிரீட் கல்லறையாகிவிட்ட நகரங்கள். ச்சே! சம்பாதிக்கும் பணத்தில் 70% ஐ அங்கு வாடகைக்கே கொடுக்க வேண்டிய நிலை.

69
மானா மக்கீன்
நான் இந்தியா வந்தது சேவை செய்ய, இது ஏழைகளின் நாடு.
கொழுகொழு கன்னத்தோடு பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். எனவே சில குழந்தைகளை பெற்றோர்களின் சம்மதத்தோடு வளர்க்கிறேன். இதற்காக பிரான்சில் உள்ள செல்வந்தர்களிடம் நன்கொடை வசூலிக்கிறேன்" என்றார்.
இரண்டாவது நபரான கிறிஸ்டோபர், வொன்டரிங் ட்ரி
இவர் சொல்கிறார். . "ஃபிரான்ஸ், ஆப்ரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் எங்கள் அமைப்பு செயல்படுகிறது. பெற்றோரின் ஒழுக்கக்கேடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை 2 வருடங்களுக்கு தத்தெடுப்போம். அவர்களைப் பல நாடுகளுக்கு அழைத்துச் செல்வோம். இது அவர்களுக்கு நல்ல மாறுதலை தரும். இந்தியாவிலும் இதைச் செய்யத்தான் வந்தேன்."
வசதியான பெரிய வீடுகளில் வசிக்கும் இவர்களது பராமரிப்பில் 15 வயது ஜான்சன், பெலிக்ஸ், 12 வயது ஜேம்ஸ், 15 வயது
வீராரெட்டி குப்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த வெளிநாட்டு ஆசாமிகளுக்கும் சிறுவர்களுக்கு மிடையே நிலவும் உறவு சராசரியாகத் தெரியாததால் பின்னணி விபரங்களைத் தேடி கிளம்பினோம்.
சாமுவேல் என்பரைத் தேடி சின்ன முதலியார் சாவடிக்குப் போனோம். அங்கே இங்கே என அலைந்து அந்தப் பிரமாண்டமான வீட்டைக் கண்டுபிடித்தோம்.

Page 37
70 சிறுவர் பாலியல் கொடுமைகள்
மலையாளியான சாமுவேல் எடுத்த எடுப்பிலேயே அதிரடித் தகவல்களை தந்தார்.
"ஈவும், கிறிஸ்டோபரும் பீடியோபைல் பார்த்த அந்தச் சிறுவர்கள் அவர்களின் Bed friend -கள். ஈவ், 1995-ல் வீராரெட்டிக் குப்பத்தில் ஜேசுதாஸ் ராஜாவோடு சேர்ந்து அனாதை விடுதி ஆரம்பிச்சான். பிறகு ராஜா, வசூல்பணத்தை சுருட்டியதாகக் கூறி வெளியே வந்து ராஜா மேல் புகாரும் கொடுத்தான்" என்றவர்,
"மேடம் பார்பரா, ஜார்ஜியா என்ற இங்கிலாந்துப் பெண்மணி புகார் கொடுத்தார். அப்ப நான் தான் இவனை தப்பிக்க
வச்சேன்" என்றும் சொன்னார்.
"ஈவ், ஒரு பீடியோபைல் குற்றவாளி என்று தெரிந்து அவனை ஏன் தப்ப வைத்தீர்கள்?" என்றோம்.
"பிரைவேட் டிடெக்டிவான என்னிடம் அவன் வந்தான். தப்ப வைச்சது என் தொழிலுக்காக, ஆனா புதுவை சி.ஐ.டி பிரிவு
இருக்கிறேன்" என்றார் சாமுவேல்.
0ெண்டனிலிருந்த மேடம் பார்பராவை ஐஎஸ்.டி. யில்
பிடித்தோம்.
"பீடியோபைல் குற்றங்களுக்காக ஈவ், பிரான்ஸில் 2 வருடம் சிறை தண்டனை பெற்றவன். ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸில் கூட இவன் மேல் வழக்கு இருக்கு இந்த சர்வதேசக் குற்றவாளி பற்றி ஆதாரத்தோடு புதுவை போலீஸில் புகார்

மானா மக்கீன் 71
கொடுத்தேன். அவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஈவை தப்ப வைத்துவிட்டார்கள். நான் இறந்தால் கூட ஆவியாக வந்து லஞ்சம் வாங்கி அதிகாரிகளை பழிவாங்குவேன்" என தன்
சபதத்தையும் சொன்னார் மேடம் பார்பரா.
"மேடம் பார்பரா போலீஸ்ல புகார் கொடுத்ததும் மாஜிஸ்ட்ரேட் முன்னால் அருள்தாஸ் என்கிற சிறுவன் வாக்குமூலமே கொடுத்தான். ஆனாலும் போலீஸ் அதிகாரிகளை கரன்ஸி பலத்தால் ஆஃப் பண்ணிட்டான் ஈவ்" என்றவர், ஒரு சிறுவனிடம் எடுத்த ஆடியோ பேட்டியை நம்மிடம் போட்டுக்
காட்டினார்.
அதில் அச்சிறுவன், தன் உடம்பில் ஈவ் என்னவெல்லாம்
செய்தான் என்பதை அப்பட்டமாக விவரித்துள்ளான்.
நமது விசாரணைகளை முடித்துக்கொண்டு மீண்டும் ஈவ் நோயலிடமே வந்து "ஏகப்பட்ட லீலைகளை நடத்தி இருக்கிறீர்களே?" என்றோம்.
நம்மை ஆச்சரியமாகப் பார்த்து "அட இவ்வளவு தூரம் விசாரித்துவிட்டீர்களா? சரி. நான் குற்றமற்றவர் என புதுவை போலீசே முடிவு செய்துவிட்டது பிறகு என்ன?" என்ற ஒரு காகிதத்தை நம்மிடம் நீட்டினான்.
அதில்,
"செக்ஷன் 377 ஐபிசி படி ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட வேண்டுமானால் குற்றவாளி சிறுவர்களுடன் பின்புற வழியாக உறவு கொண்டிருக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றவாளி ஒரு சிறுவனின் உறுப்பை சுவைத்தான் என உள்ளது. இதில் ஈவ்

Page 38
72 சிறுவர் பாலியல் கொடுமைகள்
குற்றவாளி இல்லை. அவரது வாயில் உறுப்பை வைத்த சிறுவன்தான் குற்றவாளி" என்ற ரீதியில் சட்டவிளக்கம் தந்திருக்கிறார்கள் போலீஸார்.
சமூக சேவை என்ற போர்வையில் சிறுவர்களை தங்களது செக்ஸ் வக்கிரங்களுக்குத் தீனியாக்கிக் கொள்வதும், அவர்களின் பலான படங்களை உலக அளவில் மார்க்கெட்டிங் செய்து பெரும்பணம் பார்ப்பதும், சிறுவர்களைக் காட்டி கருணை நிதிபெறுவதும் தான் இந்த பீடியோ பைல் கும்பல்களின் பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது.
இதனை சீனியர் எஸ்.பி.யான எஸ். எஸ். பொன்னையனிடம் விளக்கினோம். அதிர்ச்சி காட்டிய அவர்
"உடனே நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்.
ஈவ் நோயல் கிறிஸ்டோபரைப் போல் புதுவை மாநிலத்திலும், தமிழகத்திலும் ஏராளமான பீடியோபைல் ஆசாமிகள் சுற்றுலாத் தலங்களில் முகாமிட்டு சிறுவர்களை சீரழித்து வருகிறார்கள். சிறுவர்களோடு இவர்கள் நடத்தும் மன்மத விளையாட்டுக்களால் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.
எனவே. . . .
பீடியோ பைல் ஆசாமிகளின் பிடியிலிருந்து தமிழ்ச் சிறுவர்களைக் காப்பாற்ற தமிழகப் போலீஸாரும் புதுவைப் போலீஸாரும் கூட்டு நடவடிக்கையில் இறங்கவேண்டும், இது அவசரமான அவசியம்.
-பிரகாஷ் -நக்கீரன்(புலனாய்வு வாரமிருமுறை) 13.10.1999

மானா மக்கீன் 73
கோவளம் கடற்கரையில் செக்ஸ் தொழில்
* திருவனந்தபுரத்தில் உள்ள பல சுற்றுலா மையங்களிலும் சிறுவர்களை செக்ஸுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். கோவளம், பாபனாசம் கடற்கரை ஆகிய இடங்களில் சிறுவர்கள் அதிக அளவில் செக்ஸ் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சுற்றுலா மையங்களில் கைவினைப் பொருட்கள் விற்பனைக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களும், சிறுமிகளும்தான் தகாத உறவுக்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது கைவினைப் பொருட்கள் விற்பனையில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுடன் விபசார சிறுவர்களும் கலந்து விடுகிறார்கள். அவர்களை வெளிநாட்டுப் பயணிகளிடம் ஏஜண்டுகள் அறிமுகப்படுத்துகின்றனர். அவர்கள் ஒப்புக்கொண்ட பணத்தை ஏஜண்டுகள் வாங்கிச் சென்று விடுகிறார்கள்.
கோவளம் பகுதியில் காணப்படும் சிறுவர்கள் பெரும்பாலோர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். விபசாரத்துக்காகக் கொண்டு வரப்பட்டவர்கள். இவர்களுக்கு ஐந்து, ஆறு மொழிகள் ஒரளவுக்குப் பேசும் அளவு கற்றத் தரப்படுகிறது. ஃபிரெஞ்ச், ஜெர்மன் மொழிகள் கூடத் தெரிந்த சிறுவர்கள் இருக்கிறார்கள்.
ஏழு வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களும், சிறுமியரும் இங்கே ஏராளமாக இருக்கிறார்கள். இந்த சிறுவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று கண்காணிப்பதற்கு
ரவுடிகள் சிலரும் கடற்கரையில் சுர் றித் திரிவதை காணமுடிகிறது.

Page 39
74 சிறுவர் பாலியல் கொடுமைகள்
திருவனந்தபுரம் சுற்றுலா மையங்களுக்கு கர்நாடக சிறுவர்கள் அதிகமாக வரத் தொடங்கியது கடந்த ஆண்டில்தான். இப்போது சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியிருக்கிறது. வர்க்கலா பகுதிக்கு அதிக அளவில் சிறுவர்கள் வந்தனர். இவர்களைக் கண்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்படவே சிறுவர்களை
அழைத்து வந்த ஏஜண்டுகளை அடித்துவிரட்டியிருக்கிறார்கள்.
இவர்களை போட்டோ எடுக்க நினைத்தால் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். போட்டோ எடுக்க வேண்டாம் என்று
பெற்றோர்கள் கூறியிருப்பதாக அச்சிறுவர்கள் கூறுகிறார்கள்.
கர்நாடகாவில் உள்ள பல ஏஜண்டுகள் இந்த சிறுவர்களை வைத்து பணம் சம்பாதித்து வருவதாக தெரிய வந்துள்ளது. பல வருடங்களுக்கு முன் துணி விற்பனைக்காகக் கோவளம் வந்த சில வியாபாரிகள்தான் சிறுவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி பெருமளவில் பணம் சம்பாதித்து இருப்பதாக தெரிகிறது. பணம் சம்பாதித்த உடன் ஏஜண்டுகளை வைத்துத் தொழில் செய்கிறார்கள்.
சிறுவர்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள்?
கர்நாடகாவில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் இருந்துதான் சிறுவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று நல்ல உடற்கட்டுள்ள சிறுவர், சிறுமிகளை தேர்ந்து எடுக்கின்றனர். சிறுவர்களுக்கு உணவும் மாதம் ரூ. 500 ம் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
வர்க்கலா - பாபனாசம் கடற்கரையில் அழுக்கு ஆடை
அணிந்து அசிங்கமாக காட்சியளிக்கும் சிறுவர்களைக் கட்டி

75
மானா மக்கீன்
அணைத்தபடி மணலில் படுத்து இருக்கும் வெளிநாட்டுப் பெண்களை காணலாம். இந்த கண்றாவி காட்சி அன்றாட நிகழ்ச்சி.
கர்நாடகாவில் இருந்து அழைத்து வரும் சிறுமிகளை உடனே கடற்கரைக்கு அனுப்புவதில்லை. முதலில் சமையல் வேலையில் ஈடுபடச் செய்வார்கள் ஏஜண்டுகள். அப்போது வெளிநாட்டினர்களுடன் எப்படிப் பழக வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பது பற்றி எல்லாம் கற்றுக் கொடுப்பார்கள். பயிற்சி
முடிந்த பிறகு இவர்களைக் கடற்கரைக்கு அனுப்பி வைப்பார்கள்.
சிறுவர்களின் போக்கில் திருப்தி அடையும் வெளிநாட்டினர் பலர். அவர்களை டவுனுக்கு அழைத்துச் சென்று ஆடை உட்பட பொருட்கள் வாங்கிக் கொடுப்பார்கள் அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும்போது தங்களிடம் உள்ள காமிரா, வாட்ச் போன்ற விலை உயர்ந்த பொருட்களை சிறுவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு செல்கிறார்கள்.
"இந்தியச் சிறுமிகளை வெளிநாட்டினர் மிகவும் விரும்புகிறார்களா?" என கோவளம் கடற்கரையில் மசாஜ் செய்யும் இளைஞர் ஒருவர் கேட்டபோது அதைபுரிந்து கொண்ட அமெரிக்கர் ஒருவர் "ஆமாம்" என்று சிரித்தார்.
திருவனந்தபுரம், மாநில மகளிர் கமிஷன் இது தொடர்பாக விசாரித்தது.
மகளிர் கமிஷனில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் பறந்தது. உயர் அதிகாரிகள் கீழ் அதிகாரிகளுக்குக் கட்டளை போட்டார்கள். ஆனால், போலீசார்
ரெய்டுக்கு வரும் தகவலை எற்கனவே தெரிந்து கொண்

Page 40
76 சிறுவர் பாலியல் கொடுமைகள்
ஏஜெண்டுகள், சிறுமிகளையும் சிறுவர்களையும் அங்கிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள். போலீசாரில் பலர் இந்த ஏஜண்டுகளிடம் இருந்து மாமூல் பெற்று வருபவர்கள். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சுலபமானது அல்ல என்று கோவளம் வாசிகள் கூறுகிறார்கள். மாமூல் தானே!
தினமலர் (சென்னை பதிப்பு) 21.04.1999
பிரகாஷ் என்ற ஓர் இதழாளர். பிரபலமான நக்கீரன் இதழில் இரு காலகட்டங்களில் பதித்தவற்றை தினமலர் இதழின் புலனாய்வு ரிப்போர்ட் கட்டுரையும் கண்டீர்கள். மிகச்சிறப்பான புலனாய்வுக் கட்டுரைகள். இவை ஒன்று 1997லிலும், மற்ற இரண்டும் 1999 லும் பிரசுரமாகியுள்ளன.
முதல் கட்டுரையை முடிக்கும் பொழுது, "பீடோபைல்களின் பிடியிலிருந்து குழந்தைகளின் உலகத்தைக் காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? எயிட்ஸ் அபாயத்திலிருந்து மகாபலிபுரம் மீளுமா?" என்றும், பீடியோ பைல் ஆசாமிகளின் பிடியிலிருந்து தமிழ்ச்சிறுவர்களைக் காப்பாற்ற தமிழகப் போலிசாரும், புதுவைப்போலிசாரும் கூட்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும். இது அவசரமான அவசியம்" என்றும் இரண்டாவது கட்டுரையையும் திரு. பிரகாஷ் முடித்துள்ளார்.
தினமலர் ரிப்போர்டை எழுதியவர் கேள்விகளையோ, கோரிக்கைகளையோ வைக்கவில்லை.
எவ்வாறாயினும் என் ஆய்வு வெளிவருவது 2002 கடைசியில். இவையோ நாலைந்து ஆண்டுகளுக்கு முன்னுள்ளவை.

77
மானா மக்கீன்
ஏதாவது மாறுதல் ஏற்பட்டிருக்கலாமல்லவா! துருவித் துருவித் தேடினேன்.
ஒரு தகவல் கட்டுரையை இந்தியா டுடேயில் கண்டுபிடித்தேன். (பிப் 07:2001) செய்திகளை ராய்ட்டரிலும், தினமலரிலும் பார்த்தேன். அதில் (லொகேஷன்) இடம் தான் மாறியுள்ளது. மற்றபடி . . ஊஹூம்
முன்னைய பம்பாயாகிய மும்பாய். அங்கே ܕܟ݂ மலாடில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலின் 108 -ஆம் எண் அறைக்குள் போலீஸ் படை நுழைந்தபோது அவர்கள் கண்ட காட்சி அதிரவைத்தது.
வெளிநாட்டுத் தம்பதி இருவர் முழு நிர்வாணமாக அவர்களுக்கு முன்னே ஏழு ஒன்பது வயதுகளில் இரண்டு சிறுவர் சிறுமியர். அவர்களும் முழு நிர்வாணம்
தம்பதியரது வயது 50 க்கு மேல் மேசைமீதிருந்த லேப்டாப் கணிணியைப் போட்டுப் பார்த்த போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது
விதவிதமாக கேவலத்தனமான முறைகளில் சிறுவர் - சிறுமியர் பாலியல் உறவுகளில் ஈடுபட்டிருந்த காட்சிகள் சின்னத்திரையில்
இந்தியா - தாய்லாந்து குழந்தைகள் பெரிசு (முதியவர்களோடு தகாத உறவுக்கு உட்பட்டுக் கொண்டிருந்தனர்
அறையில் இருந்த சிறுமியர் உட்பட மேலும் சில சிறுபெண்
குழந்தைகளுடன் இந்தத் தம்பதியர் செக்ஸில் ஈடுபட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளும் இருந்தன.

Page 41
78 சிறுவர் பாலியல் கொடுமைகள்
முறையே 59, 56 வயதுடைய இந்த சுவிஸ்காரர்கள் இந்தியாவுக்கு பல தடவை வந்திருப்பதை கடவுச் சீட்டுகள் காட்டிக் கொடுத்தன.
ஒரு நல்ல ஹோட்டலில் தங்குவதும், காரில் தெற்கு மும்பைக்குப் போவதும், அவ்வாறு செல்லும் பொழுது பரிசுப் பொருள்களை கொண்டு போய் குழந்தைகளுக்கு
வழமையாக இருந்துள்ளது.
குளிப்பாட்டப்பட்டு, நல்ல உடைகள் அணிவித்து, உண்ணக்கொடுத்து, அப்புறம் சங்கதிகள் படிப்படியாக ஆரம்பமாகும். அவற்றை ஒரு டிஜிட்டல் காமிரா பதிவுசெய்து லேப் டப்பில் டவுன் லோடு செய்யும்.
"இந்தியாவில் நடக்கும் இம்மாதிரிக் குற்றங்களில் இன்டர்நெட் பயன்படுத்தப்பட்ட முதல் குற்றம் இது" என வர்ணிக்கிறது இந்தியா டுடே இதழ்.
மும்பையில் மட்டும் சுமார் ஒரு லட்சம் சிறுவர் - சிறுமியர் இத்தகைய வெளிநாட்டவரின் வக்கிர நடவடிக்கைகளுக்குள் சிக்கக் கூடிய அபாயத்தில் இருப்பதாகச் சொல்லியுள்ளார் சிரேஷ்ட இன்ஸ்பெக்டர் ஹரிஷ் இனாம்தார்.
மும்பை நீதிமன்றம் இந்தத் தம்பதியை பிணையில் விட மறுத்து விட்ட போதிலும் இப்போதைய 2002 - இறுதிப் பொழுதுகளில் சட்டத்தின் ஒட்டை ஒடிசல்களின் மூலமாக இவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு என் பேனா நம்புகிறது.

79
மானா மக்கீன்
ஆனால் ஆசியாவின் ஆயிரமாயிரமான், லடசம் லட்சமான சிறார்களது சுகங்கள்?
ஆகவே சிறுவர் துஷ்பிரயோகம் என்பது ஒரு "சாண்டில்யன் தொடர்கதை" என நான் மிக நிச்சயமாகப் பதிக்கலாம்.
இந்த இடத்தில் இன்னொரு பயனான தகவல்
R இந்தியாவின் பிரபல சுற்றுலா இடங்களில் ஒன்றான கோவா பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 400 கி.மீ. கடந்தாண்டில் (2001) தான் சிறுவர் துஷ்பிரயோகத்தின் பாதகத்தைப் புரிந்துள்ளது.
20.07.2001-ல் வெளியான டெய்லிநிவ்ஸ் இதழில் ஏ.எ.பி செய்தி நிறுவனம் வழங்கியுள்ள தகவலின்படி, கோவா இவ்விடயத்தில் இந்தியா முழுமைக்குமே ஒரு முன்மாதிரி காட்டும் போல் தோன்றுகிறது.
கோவாவின் 3000 போலிஸ் படைகள் பீடியோபைல் ஆசாமிகளுக்கு வலைவிரித்து நிற்கிறதாம்.
சிறுவர் துஷ்பிரயோகங்களைப் புரிந்து அகப்பட்டு தண்டனை பெற்ற வெளிநாட்டவர்களது ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய
கொண்ட சமூகசேவை இயக்கங்களின் ஒத்துழைப்பும் பெறப்படுமாம்.
தாம், மாம்' என்று தான் இங்கே எழுதியிருக்கிறேன். இந்த 2002 -ல் எந்தளவுக்கு கோவா போன்ற பிரபலமான உல்லாச இடம் தன் செயற்பாட்டில் வெற்றி கொண்டது என்பது என்னால்
சொல்லமுடியாதிருப்பது இவ்வாய்வில் ஒரு காையே!

Page 42
80 சிறுவர் பாலியல் கொடுமைகள்
இருந்த போதிலும் நல்லதையே நினைப்போம். நன்மைகளே நடந்திருக்கும் என்று நம்புவோம்.
பாவத்தின் நகரம் நீர்கொழும்பு
* இலங்கையில், கொழும்புக்கு அண்மியதாக இருப்பது நீர்கொழும்பு ஒரு கடற்கரைப்பிரதேசம்
சர்வதேச விமான நிலையம் இந்த ஊருக்கு மிக அண்மியதாக அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும்
பரிச்சயமான இடம்.
சில ஆண்டுகளுக்கு முன் பகிரங்கமாக சிறுவர் விபசாரம் கொடிகட்டிப் பறந்த பிரதேசம். எதுகல பீச் என்ற இடம் முக்கியமாக இருந்தது.
தினமும் சுமார் 500 லிருந்து 600 பையன்கள் வரை இங்கு செயல்பட்டார்கள் என்கிறார் திருமதி மோரின் செனவிரத்தின.
gait, "Protecting Environment And Children Every Where" என்ற அமைப்பின் தலைவி பீஸ் (Peace) சுருக்கமான பெயர். சுற்றுச்சூழலையும், பாரெங்கும் வாழும் சிறுவர்களையும் பாதுகாக்கவுமென 1991 லிருந்து குரல் கொடுத்து ஓர் அரசு சார்பற்ற அமைப்பு (என்ஜிஓ)
இந்த அம்மையாரிடம் கிடைக்காத தகவல்களே இல்லை
நீர்கொழும்பை, பாவத்தின் நகரம் (Sin City) என அவர் வர்ணிக்கிறார்

மானா மக்கீன் | 81
ஆனால் இந்த 2002 -ல் நிலைமையில் மாற்றம்
கடுமையான சட்டங்களை அரசு போட்டிருப்பதால் தரகர்களும், சிறுவர்களும் அவர்களை நாடிவரும் வெளிநாட்டவரும் மர்மமான முறையில் மறைந்து போய் விட்டார்கள்.
ஆனால் செயல்படவே செய்கிறார்கள்! அண்டர் கிரவுண்டில் (ஆங்கிலத்தில் தான் எழுதிக்காட்ட வேண்டியிருக்கிறது.
இந்த நீர்கொழும்புப் பிரதேசத்தைப் போல இன்னொரு பகுதியும் இப்பொழுது பிரபலமாகியுள்ளது.
அது வரலாறுகளைப் புதைத்து வைத்துள்ள அநுராதபுரம்
நீர் கொழும்பிலிருந்து சில நூறு கி.மீ. க்கு அப்பால் உள்ள அநுராதபுரம் இலங்கை இராணுவத்தில் பணிபுரியும் இளம் இரத்தங்களின் வடிகால் இடம்
நாட்டுக்குச் சேவையாற்றுவோரின் போக்கிடமும், பொழுதைக் கழிக்கும் இடமுமாக இந்த அநுராதபுரம் விளங்குகிறது.
அதற்குப் பொருத்தமாக யாழ்ப்பாணத்தை நோக்கிய பாரிய ராஜபாட்டையில் (ஏ-9 பாதை ஒரு பிரதான நகரமாக விளங்குகிறது.
மாதம் முடிந்தால் கை நிறையக் காசுகளுடன் திரிகிற இந்த இராணுவத்தினர்களுக்கு இளம் சிறார்களும், இளம் நங்கையரும் நல்ல துணை.
வறுமையின் பிடியிலிருக்கிற அநுராதபுரச் சுற்றுப்புற கிராமச் சிறுவர்கள் அவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள்.

Page 43
82 சிறுவர் பாலியல் கொடுமைகள்
இப்படி இந்த நீர்கொழும்பு, அநுராதபுரத்தைப் போல அதற்கு எதிர்த்திசையிலே (தென் மாகாணத்தில் அமைந்துள்ள
ஹிக்கடுவைப் பிரதேசங்களும் இத்தகைய துஷ்பிரயோகங்களுக்குப் பெயர் பெற்றவையே. பல உலக நாடுகளின் வக்கிரப் புத்திகாரர்களுக்குத் தெரிந்த பெயர்களே!
ஓர் இலங்கைச் சிறுவன் மேற்குறித்த தனது ஆறேழு வயது அறியாப்பருவத்திலேயே இயற்கைக்கு
முரணான பாலுறவு அனுபவத்தை அடைவதற்கு நிர்ப்பந்திக்கப் படுகிறான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி பீஸ் அமைப்பும், சிறுவர் உரிமை குறித்த 112 ஆண்டு காலப் பழமையான சட்ட்திட்டத்தைத் திருத்த ஏற்படுத்தப்பட்ட குழுவும் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, 5000 சிறுவர்களுக்கு இந்த அவல வாழ்க்கை என 05.09.1999 சண்டே லீடர் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்திய சண்டே லீடர் 02.06.2002 -ன் 27 -ஆம் பக்கத்தில், 50 -லிருந்து 60 ஆயிரம் சிறுவர்கள் - என அதே பீஸ் அமைப்பு அறிவிப்பதாகக்
கிட்டத்தட்ட 3 துண்டுகள் இடைவெளியில் எண்ணிக்கையின் அதிகரிப்பைப் புரிந்து கொள்ளுங்கள்.
"இவர்களை சிறுவர் விபசாரர்கள்(Child Prostitutes) என அழைக்கக்கூடாது. விபசாரத்திற்கு உட்படுத்தப்படுகிற சிறுவர்கள் (Prostituted Children) என்றே அழைக்க வேண்டும்" என்கிறார் நாம் சற்றுமுன் அறிமுகப்படுத்திக் கொண்ட திருமதி மோரின் செனவிரத்ன அம்மையார்.

VDIT GOTT LDähács 83
இக்குறிப்பு சிந்தனைக்குரியது
சரி. இந்த அடுத்தடுத்த வீடுகளைத் (இந்தியா இலங்கை தாண்டி சார்க் அமைப்புக்குள் வருகிற பங்களாதேஷ் (டாக்கா), பாகிஸ்தான் (கராச்சி) என்றும் போய்ப் பார்க்கலாம். ஆனால் இதேபோன்ற காட்சிகளையே விவரிக்க வேண்டியிருக்கும். வீணாகப் பக்கங்கள் தான் அதிகரிக்கும். ஆகவே தவிர்ப்பு பதிலுக்குச் சில ஆயிரம் மைல்கள் தூரமாகப் போய், ஒரு பதிவுக்காக
வித்தியாசமான தாய்லாந்து
தூரகிழக்கு நாடுகளில் தாய்லாந்து (பாங்காக்) தேசத்தைப் பார்த்தால் சற்று வித்தியாசமான தகவல்கள் கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் மூன்று முறை பயணித்திருக்கிறேன்.
எழுத்துப்பணிகளுக்குக் கெளரவங்கள் தரவும், பண முடிப்புகள் வழங்கவும் தஞ்சை மாவட்டத்து மக்கள்’ (முக்கியமாக மயிலாடுதுறை - நீடுர்வாசிகள்) அழைத்திருந்த அச்சமயங்களில் சில நேரங்களை ஒதுக்கிக்கொண்டு ஒரு குருவியைப் போல செய்திகள் - தகவல்கள் சேகரித்து வந்திருக்கிறேன்.
* தாய்லாந்தின் மொத்த வருமானத்தில் பன்னிரண்டு சதவிகிதம் சிறுவர் விபசாரத்தினால் தான் கிடைக்கிறது. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் அச்சிறுவர்கள், தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள இயலாதவர்கள்.
சுரண்டலை எதிர்க்கும் திறனற்றவர்கள்.

Page 44
84
சிறுவர் பாலியல் கொடுமைகள்
பீடோ பைல் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட்டு விட்டன என தாய் அரசு தெரிவிக்கிறது. பாங்காக் நகரத்தை மட்டும் பார்க்கிறவர்களுக்கு அப்படித் தோன்றும். ஆனால், சையான்மீ. சையாம்ரை என்ற இடங்களில் சிறுவர் விபசார விடுதிகள் என்றே தனியாக உள்ளன.
இங்கு ஒட்டல்கள், உல்லாச விடுதிகள் சூப்பர்மார்க்கெட், சலூன், நிரோத் வழங்கும் எந்திரங்கள், மருத்துவமனை, காவல் நிலைய்ம் அனைத்தும் உள்ளன. ஆடம்பர பங்களாக்கள் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு நகரைச்சுற்றி கோட்டை சுவரும் எழுப்பப்பட்டு எழில்மயமாய் காட்சி தருகின்றது. உலகமெங்கும் உள்ள கோடீஸ்வர ஓரினச்சேர்க்கை பிரியர்கள் இங்கு குவிகின்றனர். இரவு 8 மணி வரை செயல்படும் இந்த செக்ஸ் நகரத்தில் சிறுவர்கள், வாலிபர்கள் வாடகைக்கு விடப்படுகின்றனர்.
பாத்ரூம் மசாஜ், ஆயில் மசாஜ், ஸ்டேன்டிங் மசாஜ், சிட்டிக் மசாஜ் பெட்ரூம் மசாஜ் என ஐந்து வகை மசாஜ்கள் இளைஞர்களால் செய்யப்படுகின்றன. ஓரினச் சேர்க்கையில் எந்த ஒரு எய்ட்ஸ் போன்ற நோயும் பரவாது என உறுதிமொழி வேறு அளிக்கின்றார்கள். ஈடுபட வருபவர்களுக்கும் முறையான மருத்துவப் பரிசோதனைகளும் உண்டாம்.
தமிழ்நாட்டில் திருவிழாக்கள் நடக்குமே அதுபோல இங்கும் உண்டு. அங்கே வரும் சிறுவர் சிறுமிகளை வலைவீசிப் பிடித்து, பெற்றோர்களுடன் தொடர்பு கொண்டு பணத்தை வீசி ஆசைகாட்டி அபகரித்து விடுகின்றனர்.
சிறுமிகளை சீனச் சுற்றுலாப் பயணிகளிடம் மட்டும் தாரை வார்க்கும் வழக்கமும் உண்டு என்றும் இளமைக்கு இவர்களின் உறவு தேவை எனச் சீனர்கள் நம்புவதே காரணம்.

85
மானா மக்கீன்
தாய்லாந்தின் தென்பகுதி முழுவதிலும் 10 - 13 க்கு
சிறுமியையாவது கண்டுகொள்வதே கடினமாம்! அம்மாடி ஆத்தாடி வடதாய்லாந்தில் சிறுவர்களைத் தவறான வழியில் பயன்படுத்தியமை
நீண்டகாலமாக ஒரு பிரச்சனையாக உள்ளது.
கம்போடியக் காட்சி
பாலியல் துஷ்பிரயோகத்திற்காக வேறு நாடுகளுக்குச் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் காட்சி கம்போடியாவில் சர்வ
சாதாரணம்.
இந்தக் கம்போடியா, சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் சோடை. இருப்பினும் பலதிட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. நிலைமை இன்னும் கட்டுப்படுத்தப் படவில்லை.
அமெரிக்கா, பிரிட்டன் அலங்கோலங்கள்
தூரகிழக்கு நாடுகளில் தான் இப்படியென்றால், அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கூட இந்த அலங்கோலங்களுக்கு குறைவேயில்லை.
முன்னாள் சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகள் முதல் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் வரை ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு விற்கபப்படும் சிறார்கள், சிறுமியர்
மட்டும் 50,000 ஐயும் மிகைத்துள்ளதாம்.

Page 45
86 சிறுவர் பாலியல் கொடுமைகள்
இத்தகவலை, ஆசிய வலயத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளருள் ஒருவரான ரேல்ஃப் போய்ஸ் கூறியுள்ளார். இப்பொழுதும் அந்தப் பதவியில்
உள்ளாரா என்பதை ஆராயவில்லை
மொத்தமாகவே, அமெரிக்காவில் மூன்றுலட்சம் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்
படுகிறார்களாம்.
இதைத் தெரிவிப்பது அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான சிறுவர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று. ஆதாரம் ராய்ட்டர் செய்தி நிறுவனம்.
அமெரிக்க நிலவரம் இப்படியென்றால் -
* கடந்த 20 வருடத்திற்குள் பிரித்தானியாவில் இங்கிலாந்து மட்டும் 1000 சிறுவர்கள் பாலியல் தொழிலில் பயன்படுத்தப் பட்டிருப்பதாக அங்குள்ள டெயிலி மெயில் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது.
இங்கு சிறுவர்களை முறைகேடான உறவுக்குப் பயன்படுத்திப் பணம் சம்பாதித்த 96 பேர் கைதாகி இருப்பதாகக் கூறும் பிரிட்டன் பொலிஸ், மேற்படி கேவலத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இன்னும் பல குற்றவாளிகளைத் தேடி வலை விரித்திருப்பதாகவும் கூறுகின்றது.
ஃபிரான்ஸில் வீடியோ படங்களுடன் 400 பேர்!
* ஃபிரான்ஸில் சிறுவர் பாலியல் தொடர்பில் இன்ப சுகம்
அனுபவித்தும், அது தொடர்பான வீடியோப்படங்களைத் தயாரித்தும் வந்த 400 பேர் நாடெங்கிலும் கைதாகினர்.

மானா மக்கீன் 87
முதலில் கைது செய்யப்பட்ட முக்கியப் புள்ளி நான்கு சின்னஞ் சிறுவர்களுடன் நடத்திய பாலியல் லீலை ஒரு திரைப்படம் போல் படமாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 213 வீடியோ கேசட்டுக்களையும் செயல்முறைப் புத்தகங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
மேற்படி தகாத உறவு பற்றிய வீடியோக்களுக்கு, ஸ்பெயின், போலந்து நாடுகளில் மிகுந்த கிராக்கி இருப்பதாகவும், திரைப்படங்கள்
தயாரிப்பது போல இதையும் ஒரு முழுநேரத் தொழிலாகச் செய்து வந்த்தும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.
ஃபிரான்சில் பல நகரங்களில் கைது செய்யப்பட்ட இந்த 400 பேரில் மதகுருமார் இருவர், ஆசிரியர்கள் எண்மர், நகரசபை உறுப்பினர் ஒருவர், ஒரு சத்திரசிகிச்சை நிபுணர்,
சமூகசேவையாளர்கள் சிலர் அடங்குகின்றனர்.
செய்தி - ஆதாரம் ராய்ட்டர் நிறுவனம்
வேறு சில நாடுகளின் தகவல்கள்
* அமெரிக்காவைப் போல தனியாக லத்தீன் அமெரிக்க
நாடுகள் இருக்கின்றன. இங்கே 20 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாழாகிப் போயினர்.
மற்றும் ஹொன்டூராஸ், கெளதமாலா, எல்சல்வடோர், மெக்சிக்கோ, தென் அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையே சிறுவர் துஷ்பிரயோகக் கோஷ்டியொன்று இயங்கிக் கொண்டிருப்பதாக இன்டர்போல் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Page 46
88 சிறுவர் பாலியல் கொடுமைகள்
அட்டூழியங்கள்
X பீடு பைல்
36 பீடோபைல்
X பீடியோபைல்
பீடே பைலியா
3.
g
( Lumyrmt 6opLuaóluumt
- இதெல்லாம் என்னங்க? புரியுதுங்களா?
தமிழகத்து நக்கீரன் இதழைத் தொட்டால் பீடோ பைல் எனப் பார்க்க முடிகிறது.
இலங்கை வானொலி ஆங்கிலச் செய்தியறிக்கையைக் கேட்டால் பீடு பைல் என்றொரு வார்த்தையை உபயோகிக்கிறார் வாசிப்பவர்.
Qbg5 Qy6oTGQlb (p6opCu “Paedo Phile" - “Pedo Phile" என்ற ஆங்கில வார்த்தைகளுக்கு சொல்லப்படுபவை. முதலாவதில் 'A' மேலதிகமாக இருக்கிறது. இரண்டாவதில் இல்லை. இருந்தும் உச்சரிப்பு மாறுபடுகிறது.
முன்னையதைப் பரவலாக உபயோகிக்கிறார்கள். பின்னையது அமெரிக்காவில் தான் பழக்கம்.
இந்த விவரங்களை பாக்கெட் ஆக்ஸ்போர்ட் அகராதியின் 12 ஆம் அச்சில் (1999) பார்த்தேன். ஆங்கில - ஆங்கில - தமிழ்

) 89 மானா மக்கீன்
அகராதிகள் பலவற்றிலும் காணப்படவில்லை. ஒருவேளை புதிய பதிப்பில் இடம் பெறலாம்.
மேற்படி ஆக்ஸ்போர்ட் அகராதியில் பீடோ (Paedo) என்பதற்கு குழந்தை (Child) என்றும், கிரேக்க மொழியில் குழந்தையைக் குறிக்கச் சொல்லப்படும் "Pais Paid என்பதன் மரூஉ
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"GLOBJb IŠGELT GODLu6ólum (Paedo Philia) 6T 6T ugi குழந்தைகள் மீது பாலியல் ரீதியாக ஏற்படும் கவர்ச்சி - ஈர்ப்பு" என்று விளக்கம் தரும் அதே அகராதி அவ்வாறு கவர்ச்சி கொள்பவனை பீடோ பைல் (Paedo Phile) என்ற வார்த்தை குறிக்கும் என்றும் தெரிவிக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் குழந்தை என்றுதான் அகராதி பதித்திருக்கிறதேயொழிய சிறுவன் (Boy) எனப்பதிக்கவேயில்லை.
எவ்வாறாயினும், பீடோபைல் அல்லது பீடுபைல் என்பது வயதுக்கு வராத சிறுவர்மீது மோகம் கொண்டு அவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்பவர்களுக்கே சூட்டப்பட்டுள்ள பெயரே!
ஆணுக்கும் அதுதான். . . . பெண்ணுக்கும் அதுதான்.
Homo Sexuality என்கிற ஓரினச்சேர்க்கை உறவைக்கூட பல மேலைநாடுகள் சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. ஆனால், சிறுவர்களுடன் தகாத பாலியல் உறவு கொள்ளுதல் எங்குமே தடை. அந்தவகையில் அனைத்து நாடுகளிலும் இந்தக் குற்றம் புரிபவர்கள்
தண்டனைக்குரியவர்கள்.

Page 47
90 சிறுவர் பாலியல் கொடுமைகள்
இங்கிலாந்தின் ஸ்காட்லண்ட் யார்ட், அமெரிக்க எஃப்ஐ சிஐஏ போன்ற அமைப்புகள் இந்தப் பீடோபைல்காரர்களை ஒழிக்கக் கோடிக்கணக்கில் செலவிடுகின்றன. அனைத்துலக சிறுவர் அமைப்பான ஐ.நா. வின் யுனிசெப் UNICEF இந்த அவலத்திற்குச் சாவுமணி அடிக்க முழுமூச்சுடன் பாடுபடுகிறது.
1996 -ல் இலங்கை சண்டே டைம்ஸ் வார இதழில் வெளியான கட்டுரை ஒன்று மேலும் பல விவரங்களை எனக்குத் தருகிறது.
கட்டுரையாளர்களான சுரேஷ் திஸ்ஸ ஆராய்ச்சி ஜெனிஃபர் பால்டானோ இருவரும் எழுதியுள்ள ஆய்விலிருந்து நன்றியுடன் சில பகுதிகள்.
ty6i sr aduafuit (Paedo Phlia) 676irtuals, unfit பைலியாக்கள் (Para Phias) என்ற ஒரு தொகுதியைச் சார்ந்து கிரேக்க மூலத்திலிருந்து உருவானது. இந்தப் பாரா (Para) வைதவறான பாதை - மாறிப்போன பாதை - வித்தியாசமான
வழி தடம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.
R ஆகவே, பாரா பைலியா என்பதன் அர்த்தம், இயற்கைக்குப் புறம்பான ஈர்ப்பு அல்லது இயற்கைக்கு முரணான கவர்ச்சி என்பதாகும். இந்த ஈர்ப்பு ஒவ்வாத ஒன்றின் மீதோ அல்லது மிருகங்களின் மீதோ கூட ஏற்படலாம். அதில் சம்பந்தப்படுபவரை அவை மானபங்கப்படுத்த/ம். அல்லதர துயரடையவும்
செய்யும்.

மானா மக்கீன் 91
S இலங்கை தேசிய மருத்துவமனையின் மனோதத்துவ வைத்திய ஆலோசகர் டாக்டர் ரவீன் ஹன்வெல அவர்களது தகவல்களின்படி, பலவகையான பாரா பைலியாக்கள் உண்டாம். இதில் முதலாமிடம் பீடோ பைலியா என்ற இயற்கைக்கு முரணான வகையில் சிறுவர் மீது ஏற்படும்
ஈர்ப்பு - கவர்ச்சி என்பதாகும்.
* அடுத்தது, சாதாரணமாக யாரும் காண விரும்பாத ஒன்றை காட்சிப் பொருளாகக் கண்டு களித்தல் (உடைகள்
களைதல் போன்றவற்றைக் கானல்),
* மற்றது, தன் பாலியல் உறுப்பை மற்றவர் உடலில் உரசிக் கொள்ளல் (பஸ் பயணங்களில் இதுவே)
- இவை எல்லாமே மனோ வியாதியோடு சம்பந்தப்பட்டவையே. மனநோய் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவையே.
ང་ எவ்வாறாயினும், டாக்டர் ஹன்வெல அவர்கள் கருத்துப்படி, பீடோ பைல் எனப்படுவோர், சிறுவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிதல் மனநோயினால் அல்ல!
ஒரு காலத்தில் ஒரினச் சேர்க்கை உறவுகூட மனோவியாதியின் விளைவு எனக் கருதப்பட்டது. இப்பொழுது அப்படி எண்ணுவதில்லை. அதைப் போலவே இந்தப் பீடோ பைலியாவும் சமூகத்தில் ஒழுக்கம் கெட்டுப் போனதால் ஏற்பட்டுப் போன ஒரு சீரழிவேகியாழிய மனோவியாதியால் ஏற்பட்டுப்போன ஒரு பிரச்சினையல்ல.

Page 48
92
சிறுவர் பாலியல் கொடுமைகள்
- இவ்வாறெல்லாம் அந்தக்கட்டுரை பேசுகிறது.
இலங்கையில் 1999 -ல் ஏற்படுத்தப்பட்டுள்ள (NCPA) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை - இதுவரை குற்றவாளிகளாகக் காணப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட பீடோ பைல் ஆசாமிகளின் நாமாவளியைத் தொகுத்துள்ளது. இதனை, குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளிடம் கொடுத்து, அவர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவிடாமல் செய்யும் பணியை மேற்கொள்ளக்
கேட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முக்கியமான புள்ளிகளாக பதினைந்து பேர் குறிக்கப்பட்டுள்ளனர். உல்லாசப்பயணிகள் - தொழில்சார் நிறுவனங்கள் என்ற போர்வைகளில் உள்ளே நுழைந்த இவர்களில் ஒரு சிலரை நாமும் தெரிந்து கொள்வதால், இலங்கைச் சிறுவர்களது சீரழிவை மிகத் தெளிவாகப் புரிந்திட முடியும்.
இதேபோல், இலண்டன் நிவ்ஸ் ஒப் தி வேர்ல்டு நாளிதழ் கூட, லண்டனில் பொது மக்களால் அடையாளம்
காணப்பட்ட பீடோ பைல்காரர்கள் 50 பேரினது நிழற்படங்களைத்
துணிந்து பிரசுரித்து ஒரு நல்ல காரியம் செய்தது.
இலங்கையில் பிரபலமான
சிலரது குறிப்புகள்
ஆமின் ஹெய்ன்ரிச் பாஃப் ஹவுஸர்
இந்த சுவிஸ் ஆசாமியே இலங்கையில் தண்டனை பெற்ற முதலாவது வெளிநாட்டுப் பிரஜை
 

LOT6ONIT LOäsáŝás 93
ஆண்டு 1995. அப்பொழுது 55 வயது. இரு சிறுவர்களுடன் தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டில் தோமஸ் கஸ்பார் வார்ஸ் என்ற இன்னொரு சுவிஸ்காரனுடன் கைதாகி இருவரும் 1997 -ல் இரண்டாண்டுக் கடுங்காவல் தண்டனை பெற்றார்கள்.
ஆனால், எப்படியோ தோமஸ் மட்டும் நாட்டை விட்டுத் தப்பி ஓடிவிட, இவன் ஒருசில மாதங்கள் சிறையிலிருந்துவிட்டு, புத்தர் பிறந்த வெஸாக் பெளணர்மி காலத்தில் பொதுமன்னிப்பில் வெளியில் வந்தான். இவன் விடுதலையானதே தன் பணபலத்தினாலும் அதனாலேற்பட்ட செல்வாக்கினாலும் என்ற கருத்து நிலவியது.
மீண்டும் அவன் 1998-அக்டோபர் 8-ல் அதே சிறுவர்களுடன் உறவு கொண்டிருந்த நேரத்தில் கையும் மெய்யுமாக பிடிப்பட்டான்
என்றாலும், ஜனவரி 99-ல் சென்னைக்குத் தப்பியோடினான்.
அங்கே சுமார் ஆறுமாதகாலம் இருந்தபொழுது, கடவுச்சீட்டு மோசடியில் கைது செய்யப்பட்டு சுவிட்சர்லாந்துக்கு
நாடு கடத்தப்பட்டான்.
இவன் இலங்கையில் பத்தாண்டுகளுக்கு மேல் இருந்த சமயத்தில் விசா வசதிகளுக்காக மேரி என்ற ஒரு தமிழ் மாதுவைத் திருமணம் செய்துள்ளான். இருவரும் தாம்பத்திய உறவு கொண்டார்களா என்பது ஐயம்! ஆயினும், அந்தப் பெண்ணின் தங்கை மகன் மாணிக்கம் என்ற சிறுவனுடன் பல தடவை உறவு
கொண்டது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

Page 49
94 சிறுவர் பாலியல் கொடுமைகள்
எரிக் ஓ. லெனார்ட்
இந்த ஆசாமி ஒரு சுவீடன் பிரஜை, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி 65 வயது பலதடவை இலங்கை வந்து சிறுவர்களைச் சீரழித்துக் கொண்டிருந்தான். கடைசியில், 1999 - ஏப்ரல் 24லில், சிலாபம் என்னுமிடத்தில் பதினாறு வயதுப் பையனுடன் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டான். பின், பிணையில் வெளியில் வந்தான். நாட்டைவிட்டு தப்பியோட முயன்று விமான நிலையத்தில் மீண்டும் கைதானான். அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் எற்றுக் கொண்டதன் பேரில், ஓர் இலட்சம் ரூபாய் அபராதமும், பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஈராண்டுக் கடூழியத் தண்டனையும் பெற்றான்.
ஃபென்விக் ஜோன் டக்ளஸ்
75 வயதுடைய இந்த ஆசாமிக்கு ஆஸ்திரேலியா சொந்த இடம். 1999 செப்டம்பர் 5 -ல், ஹிக்கடுவை என்ற உல்லாசக் கடற்கரைப் பிரதேசத்தில் ஆறு பையன்களுடன் கைதாகி தண்டனைக்காகக் காத்திருப்பு
ஜேன் நில்ஸன்
நோர்வே மேற்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவன் அறுபது வயது ஒரு குடும்பஸ்தன். இரு பிள்ளைகளின் தந்தை கட்டடக் கலைஞன்.
இலங்கை நீர்கொழும்புப் பகுதி எதுகல விடுதியொன்றில் ஒரு பதினைந்து வயதுப் பையனுடன் இருக்கும்பொழுது பிடிப்பட்டான். அச்சமயம், மிகவும் அருவருக்கத்தக்க ஒரு தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகப் பொலிஸ் கூறியது.

A 95 மானா மக்கீன்
எட்டு லட்சம் ரூபாய் ரொக்கம் வேறு கைவசம் இருக்கக்
காணப்பட்டது.
தினந்தோறும் புதுப்புது சிறார்களுடன் உறவு வைத்திருந்தான். தன் வாக்குமூலத்தில், வயது வராதவர்களோடு உடலுறவு வைத்துக்கொண்டதை ஒப்புக் கொண்டான்.
பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஓர் இலட்சம் அபராதமும் கீழ்க்கோர்ட்டில் விதிக்கப்பட்டது. ஆனால் உயர் நீதி மன்றத்திற்குச் செய்த அப்பீலில் நிரபராதியானான்.
வயதுக்கு வராத 200 சிறுவர்களுடன் தொடர்பு வைத்து நாலரை ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை பெற்ற விக்டர் பூமான் என்பவனுடன் இந்த ஆளை ஒப்பிடும்போது கொடுக்கப்பட்ட தண்டனை மிகவும் அதிகமானதே.
அந்த விக்டர் பூமானைப்பற்றிய விவரங்களையும் உடனேயே தொடர்கிறேன். . . .
விக்டர் பூமான்
இப்பொழுது 60 வயதை அடைந்து தன் சொந்த நாடான சுவிட்சர்லாந்து சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவன், இலங்கையின் மிகப்பெரிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக்காரன்
சுமார் 200 சிறுவர்களை அநியாயப்படுத்தியவன் என வர்ணிக்கப்படுகிறான்

Page 50
96 சிறுவர் பாலியல் கொடுமைகள்
அவனது இலங்கை வாழ்க்கையில் (1984 - 96) சமூக சேவைகளுக்கும் சர்ச் பணிகளுக்கும் அள்ளிக் கொடுத்தும், வேறு பலவற்றுக்குத் தாராளமாக செலவு செய்தும் நல்ல அரசியல் செல்வாக்கும் தேடிக்கொண்டான். பொலிஸ் வட்டாரத்திலும் பிரபலம்.
இவன், சீதுவை என்ற இடத்தில் (இலங்கை சர்வதேச விமான நிலையமருகில் உள்ளது) ஏற்படுத்திய மின் உபகரண தொழிற்கூடத்தில் 1500 பேர் வரை பணி செய்தனர்.
பன்னிரண்டு ஆண்டு காலங்கள் இலங்கையில் நீர்கொழும்பு * எதுகலயில் வசித்த பொழுது ஆரம்ப காலத்தில் சுவிஸ் மனைவியும் இருந்திருக்கிறார். பின்னர் சிறுவர்களுடனேயே நேரமெல்லாம் கழிந்திருக்கிறது.
வயதுக்கு வராத பிள்ளைகளை படுக்கை அறைக்குக் கூட்டிச் சென்று படங்கள் காட்டுவதும், எப்பொழுதும் யாராவது ஒரு சிறுவனுடன் அல்லது மூன்று. நான்கு பையன்களுடன் இருப்பதும், சில நேரங்களில் 30 , 50 சிறுவர் புடைசூழக் கும்மாளமிட்டுக் கொண்டிருப்பதும் இவன் இயல்புகள். 12 - 13 வயதுப் பையன்களை
மிகவும் விரும்பினான்.
இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டு சுவிட்சர்லாந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்ட பொழுது, அந்த தேசமே இவனுக்கு எதிரானது ஊடகமும் ஒரு பிடி பிடித்தது. அந்நாட்டு நீதிமன்றம், பதினைந்து சிறுவர்களுடன் ஏற்பட்ட உறவுகளை மட்டும் ஆதாரபூர்வமாகத் தெரிவித்து குற்றம் சுமத்தியது.
விசித்திரத்திலும் விசித்திரமாக இவன் அனைத்தையும் ஏற்றான்

штап оћđd 97
1998 - ஜூன் 25 -ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, ஒரு லட்சம் சுவிஸ் பிராங்குகளை, தன்னால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், இலங்கையின் சிறுவர் நலன்புரிப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றுக்கும் அவன் வழங்க வேண்டும்.
"சூரிச்" சிறையில் இருக்கும் அவன், காசில்லையே எனக் கை விரித்தான். ஆனால் அங்கும் இங்கும் இலங்கை) அவனுக்குப் பணம் குவிந்திருப்பதாக சிறுவர்நலன் காக்கும் வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள். இது அச்சுக்குப்போகும் வரையில் நல்ல தகவல் எதுவும் வரவில்லை.
இந்த ஆசாமிகளைப் போன்ற இருவரே முன்னைய 3 -ஆம் அத்தியாயத்தில் கண்ட சுவிஸ்தம்பதியர். இந்தியாவில் மாட்டியவர்கள். இவர்களைப் போன்ற பலர் இன்டர்நெட் என்கிற இணையத்தில் செய்கிற ஆகாநெறிகளை அடுத்த அத்தியாயத்தில் அறியுங்கள்.

Page 51
98 சிறுவர் பாலியல் கொடுமைகள்
ஆகா நெறிகள்
$ இன்டர் நெட்
இணையம்
ஊர், உலகமெல்லாம் இதைப்பற்றியே பேச்சு
பேச வேண்டியதுதான்.
சமீபத்திய அறிவியல் சாதனையல்லவா!
எந்தளவுக்கு அறிவைப் பெற்றுக் கொள்ள முடியுமோ பெற வேண்டியதுதான்.
ஆனால் அறிவு மட்டுமா இருக்கிறது?
ஆபாசமும் அருவருக்கத்தக்க விடயங்களும் நுழைந்திருக்கிறதே!
தமிழ்நாட்டு ஜோல்னா பையன் ஒருவர் தகவல்களைக் குவித்து வைத்துள்ளார். (ஜோல்னா பையன் என்றால் யாரைப் பெரும்பாலும் குறிக்கும் என்பது இலங்கை அபிமானிகள் அறியாத ஒன்று செய்தி நிருபர்கள் - எழுத்தாள வர்க்கத்தினரைக் குறிப்பது
நான் குறிப்பிடுகிற ஜோல்னா பையன் என்பவர் கலை, இலக்கியம், அரசியல் உலக விசித்திரங்கள் அனைத்திலுமே அத்துப்படி

LDIT68 T LDébécist - 99
இவரை அறிமுகப்படுத்திக்கொள்ள தமிழகப் பிரபல தினமலர்தின ஏட்டின் ஞாயிறு வார மலரை வாங்க வேண்டும். இது இலவசம். அதிலே பிரபலமான 'அந்துமணி இருப்பார். அவரிடம் சொன்னால் ஜோல்னா பையனைக் காட்டுவார். என் பெயரைக்
குறிப்பிட்டால்,இன்னும் உதவுவார்.
"அந்துமணி மூலமாகவே நானும் ஜோல்னா பையனை அறிமுகப்படுத்திக் கொண்டபொழுது, இணையம் என்கிற இன்டர்நெட்டிலே ஆபத்தான விஷயங்களும் குவிந்துள்ளன எனச்சொல்லி இந்தத் தகவலைத் தந்தார். அது அந்த இலவச வாரமலர் ஒன்றிலும் இடம் பெற்றுள்ளது.
இன்டர்நெட்டில் சிறுவர் செக்ஸ் படங்கள் சர்வசாதாரணம். செக்ஸ் ஆபாசங்களை காட்டும் போர்னோகிராபி என்ற கேவலத்தை சில நாடுகளில் உள்ள சிலர் வெப் - சைட்டில் உருவாக்கி சேர்த்து விடுகின்றனர். ஜாண் ராம்சே என்ற அமெரிக்க தொழிலதிபர் இதில் பிரபலமானவர். இவரது ஆறு வயது மகள் ஜான் பென்னட் கொல்லப்பட்டார். இதை விசாரிக்கப்போன போலீசாருக்கு ராம்சே நடத்திய மர்ம பிசினஸ் பற்றித் தெரிய வந்தது. இன்டர்நெட்டில், எரோடிகா என்ற பெயரில் சிறுமிகள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட செக்ஸ் படங்களை பல வெப்சைட்களாக அமைத்துள்ளார். இந்த மர்ம விவகாரங்களால் தான் இவரது மகள் ஜான் பென்னட் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள் எனப்
போலீஸ் சந்தேகிக்கிறது. வினை விதைத்தவன் கதை தான்!
ஜோல்னா பையனின் இத் தகவலை அடியொற்றியதாக இலங்கை ஏடான மீள் பார்வையும் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறது.

Page 52
100 சிறுவர் பாலியல் கொடுமைகள்
* சிறுவர் விபச்சாரத்தை வளப்பதற்கென்று சர்வதேச ரீதியில் பல கும்பல்கள் திட்டமிட்ட அடிப்படையில் செயல்படுகின்றன. அவற்றுக்குப் பணம் மட்டுமே தேவை. சமூக சீரழிவு பற்றி எக்கவலையும் கிடையாது. அவை ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, உல்லாசப் பயணம், வெகுசனத் தொடர்பு சாதனங்கள், அரசியல் அனைத்துக்குள்ளும் ஊடுருவி இருக்கின்றன. இக் கும்பல்களுக்கு இன்டர்நெட் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சிறுவர்களைத் தேடும் வழிகள், அவர்களை கடத்திச்செல்லும் முறைகள், அவர்களை அடைந்து கொள்ளும் விதங்கள் பற்றியத் தகவல்களை அவை வழங்குகின்றன.
உலகின் புவியியல் எல்லைகளையே மிஞ்சிநிற்கும் இந்த இன்டர்நெட் தகவல் வெள்ளத்தை தடுத்து நிறுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பம் முன்னேறவில்லையென்று தொடர்புசாதன நிபுணர்கள் கை விரித்துள்ளார்கள். உலகம் முழுக்கவும் இதன் வசீகரப் படிக்கள் 200 மில்லியன் பேர்களுக்கு மேல்!
நன்றி : மீள்ப்பார்வை'
யுனெஸ்கோ என்ற பிரபலமான அமைப்பு முதல் தடவையாக தனது கவலையை 1999 முதற்பகுதியில் காட்டியது. இடம் பாரிஸ்.
அங்கே மாநாடொன்றில் கலந்துகொண்ட ஒரு கலிபோர்னியப் பெண்மணி குறிப்பிட்ட தகவல் பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்து போனது.
R அவரது பத்து வயது மகனை, பக்கத்து வீட்டுக்காரன் இன்டர்நெட் மூலமாகவே பிடித்துப் பல தடவை

மானா மக்கீன் 101
துஷ்பிரயோகப்படுத்தினானாம். ஏனைய இன்டர்நெட் காரர்களுக்கு அவனை இரவலாகக் கொடுத்தானாம்.
இன்டர்போல் அமைப்பைச் சேர்ந்த திருமதி அக்னஸ் "என்ற இன்னொரு மாது கருத்துத் தெரிவிக்கையில், "இந்த துஷ்பிரயோகத்திற்கு இணையமே இன்றைய பெரிய தூண்டுகோல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
"இன்டர்நெட் என்பது உலக நடவடிக்கைகளைக் காட்டும் ஓர் கண்ணாடி எனலாம். இதில் இதுபோன்ற துஷ்பிரயோக நிகழ்வுகளைக் காண்பிப்பதுடன், இதற்குச் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதும் மிகவும் வேதனைக்குரிய செயல்" - என மாநாட்டில் கலந்துகொண்டோர் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவிலும் ஒரு மாநாடு நடந்தது. ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, ஆசியா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
யுனெஸ்கோ மாநாட்டுக் கருத்துக்களே அங்கும் வலியுறுத்தப்பட்டன.
சில ஆண்டுகளுக்கு முன், ஸ்டொக்ஹாம் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டையும் நினைவில் கொள்ள வேண்டும்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய அறிமுகத்தை வழங்கி, அதற்குத் தூண்டுதல் வழங்குவதில் இணையம் பங்கு வகிப்பதாக பங்கு பற்றிய அனைவரும் ஏகோபித்து குரல் எழுப்பினர். இன்டர்நெட் வலைப்பின்னலில் (வெப்-தளம்) ஒரு மில்லியன் ஆபாச உருவங்கள் இருப்பதாகவும், சிறுவர் விபசாரத்துடன் தொடர்பான தகவல்களைத் தர மட்டும் 40 மில்லியன் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Page 53
102 சிறுவர் பாலியல் கொடுமைகள்
அப்பாடி அம்மாடி!
உண்மையில் இணையம், தேசங்களின் எல்லைகள் கடந்த ரீதியில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உதவும் கைக்கருவியாக உள்ளது. அதன் மூலம் இலகுவாகத் தகவல்கள்
பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எஸ் என்ற அமைப்பு தொகுத்துத் தந்துள்ள ஆகா நெறிகளை இதன்கீழ் நறுக்காக சுருக்கித் தருகிறேன்.
* இணையத்தில் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் சிறுவர்களின் படங்கள் குறித்த ஒரு தரவுதளத்தை இன்டர்போல் அபிவிருத்தி செய்தது. இது உலகின் 179 நாடுகளின் அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
* சுவீடனை சேர்ந்த பொவிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோர்களுக்கிடையிலான இணைப்புக்களை அறியவும், பலியாவோரைத் தேடிக்கண்டு பிடிக்கவும் உதவக்கூடிய கணணித் தொழில்நுட்ப முறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
லீ சிறுவர்கள் ஏதாவதொரு ஹோட்டல் அறையில் துஷ்பிரயோகம் செய்யப்படும் வெப்தளப் படங்களைப் பொலிஸார் கண்டால் இது தரவுத்தளத்துக்குச் செல்கின்றது. அரசாங்கங்கள் இந்த ஹோட்டல் படத்தை உபயோகித்து அதன் இட அமைவைக் கண்டுபிடிக்க உதவுவதோடு
குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும் உதவலாம்.

103
DTGT Lošš.
* ஆயினும் பிரச்சினைகள் உள்ளன. பாவியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பலியாவோர் சம்பந்தப்பட்ட இப்படங்கள் உலகின் எப்பாகத்திலும் எடுக்கப்பட்டிருக்கலாம். கணனியில் பாலியல் துஷ்பிரயோக விளம்பரங்களில் ஈடுபடுவோரைக் கண்டு பிடிப்பது கடின67மன்றம், குற்றவாளிகளில் பலர் கைத்தொழில் அபிவிருத்தியடைந்த ஜெர்மனி மற்றம் நோர்வே போன்ற நாடுகளில் இருப்பதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்கும் சர்வதேச அளவிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான மூல வளங்களைக் கொண்ட நாடுகள் உலகத்தில் மிகக்
குறைவென்றும் கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
* என்றாலும் சில அரசாங்கங்கள் தம்மிடமுள்ள மூலவளங்களை உபயோகித்து நல்ல விளைவுகளைப் பெற்றுக் கொள்வதாகவும், பிரிட்டனில் உபயோகத்தில் உள்ள முகத்தை இனம் காணும் கணணித் தொழில் நுட்பமுறை சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்ததாகவும் தெரிகிறது.
$ ஒருவர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக ஒரு சிறுமி தெரிவித்தார். பொலிஸார் இக்கணனித் தொழில் நுட்பத்தை உபயோகித்து அவரின் மறைந்திருந்த படமொன்றைப் பெற்றுக் கொண்டபோது, நீதிமன்றம் அதை அங்கீகரித்தது.
* சிறுவர்களின் வெப்தளப் படங்கள் மிதக்கும் பணிப்
பாளங்களின் சிறுமேற்பகுதி மட்டுமே என்றும், அநேகமான
பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் தனிப்பட்ட

Page 54
104 . சிறுவர் பாலியல் கொடுமைகள்
சேகரிப்புக்களில் உள்ளனவென்றும், அவை இரகசியமாகவே விநியோகிக்கப்படுகின்றன67வனவும் லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலிஸ் சேவையின் தீவிர குற்றத்தடுப்புக் குழுவைச் சேர்ந்த கரோல் ஹெளலெட் கூறுகிறார்.
R மேலும், உலகம் முழுவதிலுமுள்ள பாலியல் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸாரின் பணி மாத்திரம் போதாது. அவர்களைக் கண்டு பிடிக்கவும் அவர்கள் செயற்படுவதைக் கடினமாக்கவும் கடுமையான
சட்டங்கள் அவசியமென்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
S இணையச் சேவைகளை வழங்குவோர் வெப்தளத்தில் சிறுவர் பாலியல் வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் பரவலான
கருத்துக்கள் உள்ளன.
* பிரிட்டன் சைல்ட் நெட் இண்டர்நாஷனல் அமைப்பைச் சேர்ந்த நைகல் வில்லியம்ஸ், புதிய உயர் தொழில்நுட்பங்கள் தினமும் அபிவிருத்தியடைந்து வருவதால் சட்டத்தை அமுல்படுத்துவோர் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டுமென்றும் கூறுகிறார். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களிலும், ஏனைய இத்தகைய குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோர் உலகில் பல்வேறு பகுதிகளுக்கு பறந்து செல்ல முயலக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
* கடந்த வருடம் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட இணைய டேற்றிங் கிளப்ஸ் தொடர்பு கொண்ட செல்லிடத் தொலைபேசிகள் காரணமாக சிறுமிகள் அதிகமதிகமாக வயது

oram Ločkár. 105
கூடிய ஆண்களுடன் பாலுறவில் ஈடுபட்டதை இவர் சுட்டிக்காட்டுகிறார்.
$ ஜப்பானில் இணையம் மூலம் இடம்பெறும் சிறுவர் விபசாரம் புதியதும், கலாசார மற்றும் தொழில்நுட்பத்தொடர்பு கொண்டதென்றும் செல்லிடத் தொலைபேசிகள் வழங்கும் உரையாடல் குழல்கள் குறித்து நாம் சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டுமென்றும் வில்லியம்ஸ் மேலும் தெரிவித்தார்.
S சிறுவர்களுக்கான நடவடிக்கையைக் குறிக்கும் அரசுசார்பற்ற நிறுவனத்தின் சிறுவர் மற்றும் தொழில்நுட்ப அலகின் இணைப்புப் பணியாளர் ஜோன் கார், இணையப் பாலியல் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் பிரிட்டனில் சிறுவர் கடத்தலை வெளிப்படையாகக் கையாளும் சட்டங்கள் இல்லையென்றும் தெரிவித்தார்.
* இதே நேரத்தில், இன்டர்நெட்டில் காண்பிக்கப்படும் சிறுவர் தகாதவறவுகள் படக்காட்சியில் இலங்கைச் சிறுவர்கள் 600 பேர்களுக்குமேல் உள்ளனர் என பிபிஸி ஒலிபரப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
இலங்கைச் சிறுவர் பற்றிய 500 விளம்பரங்களைக் காண முடியும் என்கிறது இன்னொரு தகவல்.
கடந்த 2000 மே -8 இல், ஒரு ஜெர்மனியனை இலங்கைப் பொலிஸ் கைதுசெய்தது. இவன் வசம் அவனே தயாரித்த பல சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படச்சுருள்கள் இருக்கக் காணப்பட்டன. இவை இணையத்திற்கு விநியோகிக்கப்பட்டதெனவும் அறிய முடிந்தது.

Page 55
106 சிறுவர் பாலியல் கொடுமைகள்
ஏற்கனவே நாம் அறிமுகப்படுத்திக்கொண்ட பீஸ் அமைப்பின் தலைவி திருமதி மோரின் செனவிரத்ன அவர்களது தகவலின்படி, இணையத்தில் இலங்கைச் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டது இதுவே முதல்
தடவையாகும்.
இந்த ஜெர்மன் ஆசாமி, இலங்கையில் 20 ஆண்டுகள் வசித்து வந்தவனென்றும், அவனது நடவடிக்கைகளை 5 ஆண்டுகள் கவனித்த பிறகே கைதுக்குள்ளானான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் இந்தியாவில் மும்பையில் கடந்த ஆண்டு (2001) அகப்பட்டுக் கொண்ட சுவிஸ் தம்பதியினரே இணையத்தில் இந்தியச் சிறுவர்கள் தப்புத்தப்பான வேலைகளுக்கு உட்படுத்தப்படுவதை இந்தியப் போலிசுக்கு உணர்த்தியவர்கள். தாங்கள் உலக பீடோ பைல் கும்பலைச் சார்ந்தவர்கள் எனவும் காட்டியவர்கள்.
1998இல் 14 நாடுகளை உள்ளடக்கி இணையத் துஷ்பிரயோகக் கண்டுபிடிப்புகளும் கைதுகளும் மேற்கொள்ளப்பட்டன.
அச்சமயம் "வொண்டர் லேண்ட் கிளப்" என ஒன்று இணையத்தில் இருப்பது தெரிய வந்தது. அமெரிக்கா அதற்கு முகவரி. 40-க்கும் 70-க்கும் உட்பட்டவர்கள் அங்கத்தவர்கள், அந்தக் கிளப் மூலம் சிறுவர்களைத் துஷ்பிரயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 34 அமெரிக்கர் குற்றக்கூண்டில் ஏற்றப்பட்டனர். பின்னர் பிணையில் வந்த நால்வர் தற்கொலையும் செய்து கொண்டனர். சமூகத்தினர் முன் முகம் காட்ட முடியாமல் போனதே காரணம்.
இந்தக் கிளப்பின் ஆசாமிகள், பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இருந்தனர். பெயர்கள் பகிரங்கமானதும்

மானா மக்கீன் 107
அங்கேயும் ஒரு டசன் பேர்வழிகள் தற்கொலை பண்ணிக் கொண்டனர்!
புரூஸ் கிளப் என மற்றொன்றும் இணையத்தில் வலம் வந்தது. இதன் அங்கத்தவர்கள் பல நகரங்களிலும், நாடுகளிலும் சுற்றுலாப்பயணிகள் போலச் சந்தித்துக்கொண்டு சிறுவர்களைத் தேட ஆரம்பித்தனர். அகப்பட்டவர்களைத் துஷ்பிரயோகமும் செய்தனர். சிறுவர் உறவு நிழற்படங்களையும் வீடியோ நாடாக்களையும் தாராளமாகப் பரிமாறிக் கொண்டனர்.
கிளாரன்ஸ் ஒஸ்போர்ன் என்ற ஓர் ஆஸ்திரேலிய நாட்டு புரூஸ் கிளப் அங்கத்தவரிடமிருந்து 2500 நிழற்படங்கள் கைப்பற்றப்பட்டன. அத்தனையிலும் பையன்கள்! பையன்கள்! பாலியல் கொடுமைகள்!
இத்தனை பெரிய தொகைப் படங்கள் இருந்ததற்குக் காரணம், அந்த ஆசாமி 30 ஆண்டுகள் சிறுவர் நீதிமன்றப் பதிவாளர் பதவியிலிருந்தவாறு சிறுவர்களுடன் தகாத உறவுகொண்டிருந்ததாகும்.
"5 übů GITT" (North American Man - Boy Love Association) என்பது இன்னொரு இணையக் கிளப். இதைத் தமிழ்ப்படுத்தினால் "வட அமெரிக்கா ஆண்கள்-பையன்கள் அன்பு மன்றம்" என அர்த்தப்படும்.
அன்பு என்ற புனிதமான பெயரால் அருவருக்கத்தக்க செயல்கள்.
சரி. இண்டர்நெட் என்கிற இணையத்தில் இருக்கிற இத்தகைய இழிவுகளிலிருந்து இளைய தலைமுறையைதப்ப வைக்ச வழி ஏதும் உண்டா?
மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறார்கள்.

Page 56
108 சிறுவர் பாலியல் கொடுமைகள் யுனெஸ்கோ ஒன்றை முன் மொழிந்திருக்கிறது :
* அறிவைத்தேடி இண்டர்நெட்டை நோக்கி ஒடும் இளையவர்களை ஆபத்துக்களிலிருந்து தவிர்க்க பில்டர்கள் அல்லது திரையை மறைக்கும் சாதனங்கள் போன்றவற்றைத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
சிந்தித்துச் செயல்படுத்திப் பார்த்தார்களா என்பதை அறிய எனக்கு நேரமிருக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டு தினமணி நாளேட்டில் (10.09.2001) இப்படியொரு செய்தியைப் படித்தேன்.
* இன்டர்நெட் மூலம் ஆபாசப் படங்களைப் பார்த்த வெறியில் 8 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பூரீதர் (22) கைது செய்யப்பட்டார்.
இத்துடன் இன்டர்நெட் இழிவுகள் போதுமென நினைத்து எனது ஆதங்கங்கள் சிலவற்றைச் சொல்ல அடுத்த அத்தியாயம் அழைத்துச் செல்கிறேன்.
 

LOTGT pääsi 109
ஆதங்கங்கள்
உலகளவில் சிறுவர் துஷ்பிரயோகங்களை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அவலங்கள் - அக்கிரமங்கள் - அநியாயங்கள் - அட்டூழியங்கள் - ஆகாநெறிகள் எனப்பார்த்து விட்ட என் பேனாவுக்கு சில ஆதங்கங்களும் உண்டு.
எனது இந்த முயற்சிக்கு நான் அணுகிய சில முக்கியமானவர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கத் தயங்கி
விட்டது கூட பெரிய ஆதங்கமாகப் படவில்லை.
ஆனால் இதனை எழுதி முடித்துக் கொண்டிருந்த 2002 - அக்டோபர் 18 ஆம் தேதி இரவு சுமார் பத்து மணியளவில் பிபிசி
தமிழோசை மூலம் என் காதுகளில் விழுந்த ஒரு செய்தி அப்படியே தூக்கிவாரிப் போட வைத்தது.
* "கிறிஸ்தவ குருமார்கள் - போதகர்கள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் 67சய்தது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டால் அவர்களைப் பதவியிலிருந்து நீக்கி விடவேண்டும்" என அமெரிக்கக் கத்தோலிக்க ஆயர்கள் வழங்கிய ஆலோசனையை வத்திகான் நிராகரித்துவிட்டது. தவறு செய்தவர்களைப் பாதுகாக்கவே அது விரும்புவது போல் தோன்றுகிறது.
- எனச் செய்தி காற்றில் கலந்து கொண்டிருந்தது.

Page 57
110 சிறுவர் பாலியல் கொடுமைகள்
மதிப்பிற்குரிய கிறிஸ்தவக் குருமார்களும் இந்தச் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஒர் அங்கம் என்ற தகவல் எந்த மறுப்புக்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டுப்போன நிலையில், 2002 ஜூனில் அமெரிக்கக் கத்தோலிக்க ஆயர்கள் ஆலோசித்துப் பிரேரித்த ஒரு விடயம் நல்லதொரு தீர்வாகவே அமையும் என எதிர்பார்த்திருந்த இலட்சக்கணக்கான இதயங்களில் எனதும் ஒன்று.
ஏனெனில், நாலைந்து வரிகளில் அல்லது ஓரிரு பாராக்களில் விடைபெறும் வேளை கடைசிப்பக்கத்தில் குறிப்பு எழுதி கண்ணியப்படுத்தி விடலாம் எனப் பேனா மிகவாக விரும்பி நின்றது.
தமிழோசை செய்தி அனைத்தையும் பொய்யாக்கி, பொடியாக்கி பெரும் ஆதங்கத்தை உண்டு பண்ணி விட்டது.
அதுவும் எந்தச் சூழ்நிலையில்?
82 வயதான இரண்டாவது அருளப்பர், சின்னப்பர் பரிசுத்த பாப்பரசராகப் பதவியேற்று 24 ஆண்டுகளை பூர்த்தி செய்த (16.10.2002) ஓர் அற்புதமான நேரத்தில் அதற்கடுத்த இரண்டாம் நாளில் (18.10.2002) ஒரு முக்கிய விடயத்தில் பிரேரணை நிராகரிப்புக்குள்ளாகி தூக்கி எறியப்பட்டுள்ளது.
ஆனால் உலகக் கத்தோலிக்க மதத் தலைவரான பரிசுத்த பாப்பரசர் இப்படியானவொரு முடிவை எடுத்திருப்பாரா என்பதையும் நம்ப இதயம் மறுக்கிறது.

மானா மக்கீன் 111
ஏனெனில் இவ்வாண்டு (2002) ஜூலையில் கனடா டொரெண்டாவில் நடைபெற்ற இளைஞர்விழாவைத் தொடங்கி வைத்த பரிசுத்த பாப்பரசர், துஷ்பிரயோகத்தில் தொடர்புடைய பாதிரியார்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
* "அப்பாவி சிறுவர்களுடன் பாதிரியார்கள் தகாத ஒழுக்கத்தில் ஈடுபடுவது வெட்கம் கெட்ட வேதனையான செயல். கத்தோலிக்க மதத்துக்கே இழுக்கு, ஒரு சிலர்தான் இப்படி தவறு செய்கிறார்கள். பெரும்பான்மையான பாதிரியார்கள் மதத்தைப் போற்றிப் பரப்புகிறார்கள். அவர்களைப் பின்பற்றும்படி கத்தோலிக்கர்களை கேட்டுக்
கொள்கிறேன்!
- என அவர் அப்பொழுது குறிப்பிட்டார்.
2002 - ஏப்ரல் 12 -ல் அமெரிக்கத் திருச்சபை தலைமைக் குருவானவர்களை (கர்தினால்கள் வத்திக்கான் உச்சி மாநாட்டில் சந்தித்த பொழுதும் பாப்பரசர் -
பீடோபைல் குருமார்களைக் கடுமையாகக்" ܕܸܟ݂ கண்டிக்கிறேன். அமெரிக்கக் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு இழுக்கை உண்டுபண்ணும் இவர்களை நினைத்து நெஞ்சம் பதறுகிறேன். இறைவனது பார்வையில் இது பெரும் பாவச் செயல்களில் ஒன்று. இளம் பிள்ளைகளை ஊறு செய்வதற்கு மதத்திலோ, மதகுருமாருக்கோ இடமில்லை."
- என வன்மையாகக் கண்டிக்கிாங்கார்.

Page 58
112 சிறுவர் பாலியல் கொடுமைகள்
'ஏனப்பி ராய்ட்டர் போன்ற செய்தி நிறுவனங்கள் மூலமாகக் கிடைக்கப்பெற்று இலங்கை நாளேடுகளில் வெளியான ஐந்து செய்திகளை எப்படி பிரசுரமானதோ அப்படியே இங்கு அபிமானிகளுக்கு மறுபிரசுரம் செய்கின்றேன். இவை, இந்நூல் அச்சுக்குப்போகும் வரையில் தொகுக்கப்பட்டவை என்பதையும்
நினைவில் வையுங்கள்.
பாலியல் வழக்கில் பிரதிவாதியாக வத்திக்கான்!
கத்தோலிக்க மதகுருக்களால் பாலியல் துஷ்பிரயோ கத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் இருவர், மனுவில் வத்திக்கானை பிரதிவாதியாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க மாநிலங்களான புளோரிடாவிலும் ஒரெகனிலும் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளில் பிரதிவாதியாக வத்திக்கானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
புளோரிடாவில் 28 வயதான ரிகி கோமஸ் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 1987 இல் டமிபாவிலுள்ள கிறிஸ்தவப் பாடசாலையில் தான் கல்விகற்றபோது அருட்.திரு. வில்லியம் புரூக் என்பவரால் பாலியல் தஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டார். அப்போது கோமஸ்"க்கு 6/tudy 14.
பாலியல் தஷ்பிரயோகத்தை அடுத்து தான் மனரீதியாக
பாதிக்கப்பட்டதாக கோமஸ் கூறினார்.

man dit 113
புரூக் தற்போது நியூஜெர்ளியில் மதகுருவாகக் கடமையாற்றுகிறார்.
ஜோன் டோ என்பவர் சார்பாக ஒரகெனில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவர் 1965 - 1966ம் ஆண்டுக் காலப்பகுதியில் சிறுவனாக இருந்தபோது அருட்திரு அன்ரு ரொனான் என்பவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
TTLL LLL LLLLLL TTTTLTL aLTSLTTL S TTLTTLTTTLLLLLL0LLLLLLLLAT ஈடுபட்டமைக்காக அயர்லாந்தில் இருந்து சிக்காகோவுக்கும் பின்னர் அங்கிருந்து போர்ட்லாண்டுக்கும் இடமாற்றம் 67øraivautuu Land.
பாலியல் துஷ்பிரயோகம் புரியும் கத்தோலிக்க மதகுருமார் மீது வழக்குத் தொடரப்படுவதைத் தடுப்பதற்காக அவர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கத்தோலிக்க தலைமைப்பீடமே இவர்களை இடமாற்றம் செய்வித்து அவர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவைத்ததாக வாதிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேற்படி இரு வழக்குகளையும் தொடுத்துள்ள வாதிகளின் சட்டத்தரணியான ஜெஃப் அண்டர்ஸன் Vravai avai fr6uras AfvaS776 ap67 epg

Page 59
114 சிறுவர் பாலியல் கொடுமைகள்
மறைப்பதற்கான உத்தரவுகளை ஆயர்களுக்கும் கத்தோலிக்க மதகுருக்களுக்கும் வத்திக்கான் பிறப்பித்ததற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தார்.
சிறுவர்களைப் பாதுகாக்கவே வழக்குகளை தாக்கல் செய்ததாகவும் அன்டர்ஸன் புளோரிடாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.
இதேவேளையில், இதுவரை பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை வத்திக்கானுக்கு எதிராக சுமத்திய எவரும் வெற்றிபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Aarayar (o.s.orode)
lurra?udio Caspañola-Iru69 unahifilumpo Arrafarruor 1
சிறுவனிடம் தகாத உறவு வைத்துக் கொண்டதற்காக தார்மீகப் பொறுப்பேற்று புளோரிடா மாநில கத்தோலிக்க பாதிரியார் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
g/67uof'és/7afai suu s/76vtoffs u/74ßfuffffassh சிறார்களிடமும், பெண்களிடமும் தகாத முறையில் நடந்து கொள்வதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. பாஸ்டன் நகர பாதிரியார் ஜான் ஜியோகான் என்பவர் 30 ஆண்டுகளாக 130 பேரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல பாம்பீச் பகுதியைச் சேர்ந்த ரிஷப் கானல் 25 ஆண்டுகளுக்கு முன்பு மாணவன் ஒருவனைக் கட்டாயப்படுத்தி ஒரினச்சேர்க்கை

LNTam Lošir 115
மேற்கொண்டுள்ளார். இவர்கள் எல்லோரும் சமீபத்தில் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
பாதிரியார்கள் மீதான புகார்கள் வருவதால் இதற்கு (ԹԼգճյ காண்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினால்களை, போப் ஆண்டவர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் வத்திகான் நகருக்கு அழைத்துள்ளார்.
இதற்கிடையே புளோரிடாவில் புனித பீட்டர்ஸ் பார்க்கைச் சேர்ந்த பாதிரியார் ரொபர்ட், 14 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு நபர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பாதிரியார் ரொபர்ட் தனது இராஜினாமா கடிதத்தை பிஷப் விஞ்ச்சிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக லிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விஞ்ச் மீதும் சிலர் செக்ஸ் புகார் கூறியுள்ளனர். ஆனால் அந்தப் புகாரை கண்டுகொள்ளாத லிஞ்ச் தான் பதவி விலக முடியாது எனக் கூறியுள்ளார்.
- enill ffage6.gif) - (24.o4,2002)
பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் மதகுருமாருக்கு எதிராக நடவடிக்கை
தொடர்ச்சியான முறையில் சிறுவரைப் Lurønýouvaib துஷ்பிரயோகம் செய்யும் கத்தோலிக்கப் போதகர்களை அவர்களின்

Page 60
116 சிறுவர் பாலியல் கொடுமைகள்
பொறுப்புக்களிலிருந்து நீக்கிவிடுவதற்கம். தேசியக் கொள்கையொன்று வகுக்கப்படல்வேண்டும்.
இவ்வாறு பரிசுத்த பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் அவர்களால் அழைக்கப்பட்ட இருநாள் கூட்டத்தில் அமெரிக்க றோமன் கத்தோவிக்க தேவாலயங்களின் கர்தினால்கள்
முன்மொழிந்துள்ளனர்.
சிறுவரைத் துஷ்பிரயோகம் செய்யும் மதகுரு ஒருவருக்கு ஒரு தேவாலயப் பொறுப்பைக் கொடுப்பது பெரும் ஆபத்தானது என செய்தியாளர் மகாநாட்டில் கருத்துக்கூறிய அமெரிக்கக் கத்தோவிக்க ஆயர்களின் தலைவர் விலரன் கிறிகோர், தொடர்ச்சியான முறையில் தஷ்பிரயோகத்தில் ஈடுபடும் மதகுருமார்களுடன், ஒரே முறை மட்டும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஒரு மதகுருவை ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்தார்.
"மதகுருமார்களின் வாழ்க்கையிலும் சமய வாழ்விலும் இளையவர்களுக்குத் தீங்கு செய்யும் பேர்வழிகளுக்கு இடமில்லை" என்று கூட்டத் தொடக்க நாளான செவ்வாயன்று
பரிசுத்த பாப்பரசர் தெரிவித்தார்.
செய்தியாளர் மகாநாட்டிற்கு கர்தினால் பேர்னாட்லோ சமூகமளிக்கவில்லை. பொஸ்டன் மாநிலத்தைச் சேர்ந்த கர்தினாலான இவர், சிறுவரைத் துஷ்பிரயோகம் செய்யும் மதகுருமாரிடமிருந்து சிறுவரைப் பாதுகாக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவராவார். இவர் தனது கார்டினால்

LOTar lokását 117
பொறுப்புகளிலிருந்து விலகவும் மறுத்துவிட்டார். பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மிதமான வேகத்தில் முன்னெடுப்பதாக அவர் தனது தேவாலயப்பகுதி மக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
-Liiggest- (25.04.2002)
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் - அருட்தந்தை ஷேன்லி நிராகரிப்பு
சிறுவர்களைப் பரவியல் தரஷ்ரபிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 77 வயது கத்தோவிக்க மதகுருவான அருட்தந்தை பெளஸ் ஷேன்லி தான் நிரபராதி எனத் தெரிவித்தார்.
சிறுவர் பாலியல் வல்லுறவு தொடர்பாக குற்றச்சாட்டுகள் ஷேன்லி மீது தொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை
வழங்கப்படும்.
ஒரு சிறுவனை 1983 முதல் 1990 வரை ஷேன்லி தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தி வந்துள்ளார். பொஸ்டனில் உள்ள தேவாலயத்தில் குருக்கள் தங்குமிடத்தில், பாவத்தை ஒப்புக்கொள்ளும் இடத்திலும் குற்றம் பல தடவை இழைக்கப்பட்டுள்ளது.

Page 61
118 சிறுவர் பாலியல் கொடுமைகள்
இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் இப்போது 24 வயதான வாலிபராவார். ஷேன்வியை 7 இலட்சத்து 50 ஆயிரம் டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பொஸ்டனில் உள்ள கத்தோலிக்க மதகுருவான ஜோன் ஜியோகான் என்பவர் சிறுவன் ஒருவனை பாவியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியமைக்காக சிறைத்தண்டனை அனுபவித்த வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ஷேன்லி மீதான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டை தெரிந்து கொண்டும் பொஸ்டன்கர்த்தினால் பெர்னாட்லோ இவர்களை வேறு வேறு தேவாலயங்களுக்கு இடமாற்றம் செய்தமைக்காக அவர் இராஜினாமா செய்ய வேண்டுமென்று மக்கள்
கோரியுள்ளனர்.
- 5607&sj6ór (og,05,2002)
பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மதகுரு தற்கொலை
Lumravớ’avai) துஷ்பிரயோகம் 6745 si sus7607 குற்றச்சாட்டுகளுக்கு ஆளான முன்னாள் கத்தோலிக்க மதகுரு ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

LorraT Ipdását 119
அமெரிக்க மாநிலத்தில் உள்ள தேவாலய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த இவர் தாக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரியவருகிறது.
64 வயதான அல்பிரட் சிபப்டிகொலர் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். 70 களின் பிற்பகுதியிலும் 80 களின் ஆரம்பத்திலும் இவர் தம்மை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக இருவர் குற்றம் சாட்டியிருந்தனர். இதனை அடுத்து கடந்த எப்ரலில் இவர் மதகுருவாக செயற்படுவதிலிருந்தும் தடுக்கப்பட்டார்.
அண்மைக்காலமாக அமெரிக்கக் கத்தோலிக்க தேவாலய வட்டாரங்களை உலுக்கிவரும் மதகுருமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தில் அல்பிரட்டின் தற்கொலை புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேவேளை, லோஸ் ஏஞ்சல்ஸ் கர்த்தினால் பிராகர் மஹோனி, உள்ளுர் மதகுரு ஒருவர் பாலியல் தஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட விடயத்தை தான் இதுவரை மறைத்து வைத்திருந்ததை எற்றுக்கொண்டார்.
- A60776, 1805, 2002,
மூன்று கிறிஸ்தவ குருமார் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு
சிறுவர்களை தகாத உறவில் ஈடுபடுத்தியது குறித்து கெளதமாலாவைச் சேர்ந்த மூன்று கிறிஸ்தவக் குருக்கள் குற்றம் சாட்டப்பட்டுன்னர்சிகள்,

Page 62
- 120. Mga Urduid Gardausd
கெளதமாலாவின் மனித உரிமைக்கான குறைகேள் passif (Ombudsman) (34tsdadaItal Atodayahavad
goly 67 tan (flata5 1760)60/t 6u 176dy 619 67A5677.5 to 1782) gofallyth கிறிஸ்தவக் குருக்கள் இவ்வாறான குற்றச்செயல்கள் புரிந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 7 வயது 9 வயது பெண்குழந்தைகள் இருவரும், 16க்குக் குறைந்த வயதுடைய ஒரு சிறுவனும் இவ்வாறு பாலியல் உறவில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள். இது பற்றி ஏற்கனவே நாம் விசாரணை நடத்தினோம்.
பாப்பாண்டவரின் வருகையை முன்னிட்டு விசாரணை அறிக்கையை வெளியிடாது நிறுத்தி வைத்திருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்கக் குருக்களின் இந்தகு நடத்தைகள் கத்தோலிக்கமத அமைப்புக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உலகளாவிய ரீதியில் இச்செய்திகள் இவ்வாறாக வெளிவர, 30.05.2002 -ல் வெளியான இலங்கை டெய்லி ரிவ்ஸ் ஒரு செய்தியை இப்படி வெளியிட்டது
* ஹல்துமுல்லையைச் சேர்ந்த திலக்ஜயவர்தனா என்ற கத்தோலிக்கப் பாதிரியார் 17-வயதுப் பையனுடன் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றத்திற்காக சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

TNT ek w 121
இவர் அமெரிக்க கலிபோர்னியாவில் மேற்படிப்புக்குச் சென்றிருந்த வேளை இப்படியான குற்றத்தைச் செய்தார் என லாஸ் ஏஞ்சல்ஸ் கர்தினால் ரோஜர் மாஹனி மூலமாகக் கிடைத்த குற்றப்பத்திரத்தை வைத்து நடவடிக்கை எடுத்ததாக பதுளை பிஷப் வின்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
குற்றம் சுமத்தப்பட்டு இடைநிறுத்தம் செய்தபின் பாதிரியார் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது.
எவ்வாறாயினும் இந்நூல் உங்கள் கரங்களில் இருக்கப்போகின்ற கோலாகல கிறிஸ்மஸ் சமயத்தில் முடிவுகளை வத்திக்கான் மீளாய்வு செய்திருக்குமென எதிர்பார்ப்பு
அதேபோல புனிதமான ஒரு சேவையில் ஈடுபட்டுள்ள பெருமதிப்புக்குரியவர்கள் பொன்னையும், பொருளையும் விட பெறற்கரிய பிள்ளைச் செல்வங்களைப் போற்றிப் பாதுகாத்திட திவ்விய இயேசுபிரான் அவதரித்த மாதத்தில் உள்ளார்ந்த விருப்பங்கள்.

Page 63
122 சிறுவர் பாலியல் கொடுமைகள்
ஆய்வுகள்
உலக சுகாதார நிறுவனம் தந்தவை
உலகில் 14 வயதுக்குட்பட்ட 40,000,000 சிறுவர்கள் தஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
* பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கின்ற 20,000,000 சிறுவர்களைப் பராமரிக்க ஆண்டொன்றுக்கு 124 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது.
* தென் ஆப்பிரிக்கா, சுவீடன், டொமினிக்கன் குடியரசு போன்ற 19 நாடுகளில் நடத்தப்பட்டிஆய்வுகளின்படி 7 வீதத்திலிருந்து 34 வீதம் வரையிலான சிறுமிகளும் 3 வீதத்திலிருந்து 29 வீதம் வரையிலான சிறுவர்களும் பாலியல் வல்லுறவினால் gjigj u t'L Ꮳt0 frᏧᏝ0 fr6ᏪᏤ பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இவை மூன்று நான்காண்டுகளுக்கு முன் ஏற்பட்டவை. இப்பொழுது?
யுனிசெப் வழங்கும் இந்தியத் தகவல்கள்
சிறுவர் சிறுமியர் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான கருத்தரங்கமொன்று சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடந்தது. அதில், தனது

மானா மக்கீன் 123
ஆய்வறிக்கையை யுனிசெப் வெளியிட்டது. இந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளவை:
* முக்கிய நகரங்களில் ஒரு லட்சம் சிறுவர், சிறுமியர் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் முப்பது சதவீதம் பேர் சிறுவர்கள். இச்சிறுவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். சுற்றுலா சம்பந்தப்பட்ட இடங்களில் சிறுவர்கள் அதிகளவில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
* சுற்றுலா இடங்களில் சிறுவர்களுடன் உடலுறவு கொள்வதற்காகவே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள்
வருகின்றனர்.
* சில சமயங்களில் பெற்றோர்களே தங்களின் குழந்தைகளை சுற்றுலாப் பயணிகளிடம் பணத்துக்கு ஆசைப்பட்டு விபசாரத்திற்கு அனுப்புகின்றனர்.
* பல சிறுவர்கள் வற்புறுத்தப்பட்டும், கடத்தப்பட்டும், எமாற்றப்பட்டும், விற்கப்பட்டும் விபசாரத்தில் ஈடுபடுத்தப் படுகின்றனர். சிலர் அவர்களின் குடும்பத்தினரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிலர் ஆசை வார்த்தைகள் கூறி தூண்டப்படுகின்றனர். பெரியவர்களுடன் உடலுறவுக்கு அனுப்பப்படும் சிறுவர்கள், கடுமையான காயங்கள், நோய்கள் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். இது போன்ற பலாத்காரத்தினால் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

Page 64
124 சிறுவர் பாலியல் கொடுமைகள்
1995 இல் யுனிசெப் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின் படி இந்தியாவில் மாத்திரம் ஐந்து இலட்சம் சிறுவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஐ.நா. சிறுவர் உரிமைகள் சமவாயக் குறிப்புகள்
விபசாரம், ஆபாச நடவடிக்கைகள் என்பன உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் (அசிங்கமான) தொழில் துறைகளாகும். இது, வறிய நாடுகளிலும் செல்வ நாடுகளிலும் கோடிக்கணக்கான சிறுவர் சிறுமியரின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறது.
சில நாடுகளில் ஏழு வயதுச் சிறுவர்களைக் கூட வயது வந்தவர்கள் வாங்கியும் விற்றும் வருகிறார்கள். இதனைச் செய்வோரில் சிறுவர்களின் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர், தர்ம நிலையங்கள் எனப் போலி வேடம் பூண்டுள்ள சில நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங்குவர்.
பல தென்கிழக்காசிய நாடுகள் பாலியல் வேட்கையுடைய ஐரோப்பிய உல்லாசப்பிரயாணிகளை மட்டுமல்லாமல் ஆசியப் பிராந்தியத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆண்களையும் காந்தம் போல் கவர்ந்து வருகின்றன.
பல நாடுகளில், சட்டத்தின் காவலர்கள் பாவியல்துறையில் சிறுவர்கள் துர்ப்பிரயோகம் செய்யப்படும் விடயத்தில் பராமுகம் காட்டி வருகின்றனர். அவர்கள் விரும்பினால் சிறுவர்களையும் சிறுமிகளையும் விபசார விடுதிகளிலிருந்து விடுவிக்க முடியும். அதற்கு வசதியான சட்டதிட்டங்கள் இருக்கவே செய்கின்றன. ஆயினும், சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரிகள் இவ்விடயத்தில் பெரும்பாலும் கண்டும் காணாதவர்கள் போலவே நடந்து

uGI loååá 125
கொள்கிறார்கள். அப்பட்டமான ஊழல் அல்லது ஒத்துழைப்பின் மூலம் அவர்களும் இந்த நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள்.
இத்தகைய ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு ஆளாகும் சிறுவர்கள் பெரும்பாலும் மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மனமுறிவு ஏற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அல்லது மது அல்லது போதைப் பொருள்களுக்கு அடிமைகளான பெற்றோரைக் கொண்டவர்களாவர். சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் தாய்மாரே விபசாரிகளாயிருக்கிறார்கள்.
பாலிய விபசாரத்தால் பணம் திரட்டுவோரைத் தண்டிப்பதற்கான சட்டங்கள் எல்லா நாடுகளிலும் உண்டு. ஆயினும் இவற்றை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டப்படுவதில்லை. மேலும் உளவியல் மற்றும் புறப்பிரச்சினைகளை சட்டத்தினால் மட்டும் தீர்க்க முடியாது. ஒரு சமுதாயத்தில் பாலியல் விபசாரமும் சுரண்டலும் பீடை போலப் பரவினால் அதனைப் பூண்டோடு களைவதற்கு அச் சமுதாயம் முன்வந்து சட்ட அதிகாரிகளுக்கு உதவ வேண்டும்,
மத்திய கிழக்கு நாடுகள் தமது பிராந்தியத்தில் இந்த பிரச்சினை இல்லை என்று வாதிட்டாலும் இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாலியற் சுகங்களைத் தேடி வெளிநாடுகளுக்கு, குறிப்பாக தென்-கிழக்கு ஆசிய பிராந்தியங்களுக்குச் சென்று வருவதையும் மறைத்திடமுடியாது.
மேற்குறித்தவாறான சகல நிலைமைகளிலிருந்தும் சிறுவர்களைக் காப்பாற்றவும், துர்ப்பிரயோகத்தைத் தடுத்தல், துர்ப்பிரயோகத்துக்கு ஆளானவர்களுக்குச் சிகிச்சை அளித்தல்
ஆகியவற்றுக்கான செயல்திட்டங்களை உருவாக்கவும், தகுந்த

Page 65
126. சிறுவர் பாலியல் கொடுமைகள்
சட்டவாரியான வழிவகைகளை உறுதிப்படுத்துவத/ சமவாயத்துக்கு ஒப்புவித்தல் தெரிவித்துள்ள நாடுகளின் கடமையாகும்.
பிரித்தானிய அமைப்புகளின் அறிக்கைகள்
யுகே எனப்படும் பிரித்தானிய இங்கிலாந்து தேசத்தில் 15 -க்கும் மேற்பட்ட சிறுவர் நலன்புரி அமைப்புகள் உள்ளன. சிறுவரது துன்பங்களை தொலைபேசி வாயிலாக அவர்களிடமே கேட்டறிந்து தீர்வு காண்பது அவர்களது சேவைகளுள் ஒன்று.
அவ்வமைப்பின் 1995-b ஆண்டறிக்கையில் தரப்பட்டுள்ளவை உங்கள் பார்வைக்கு :
1995-ம் ஆண்டில் இங்கிலாந்தில் மாத்திரம் 10,942 பிள்ளைகள் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள். இவர்களில் 96% ஆன்ோர் தமக்கு அறிமுகமான வர்களால் பலவந்தப்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது தரஷ்ரபிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். அதிலும் கூட வெட்கக் கேடான அம்சம் பாதிக்கப்பட்ட மொத்த சிறார்களில் 56% ஆனோர் தந்தையர் அல்லது சகோதர சகோதரிகள் ஆகியோரால் கெடுக்கப்பட்டுள்ளனர். 4496 ஆனோர் ஏனைய உறவினர்கள், பக்கத்து வீட்டார்கள்,
நண்பர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடும்பத்தார் என்று கூறும்போது கூட 76% பங்கை தந்தை அல்லது தாயின் இரண்டாம் கணவன் பெறுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. தாயினால் 91 சிறுமியரும், 394 சிறுவர்களும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். தாயாலும், தந்தையாலும் 23 சிறுமியரும் 48 சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மானா மக்கீன் 127
இந்த வகை துஷ்பிரயோகங்களின் போது தாயும் தந்தையும் தம் பிள்ளைகளை வெட்கங்கெட்ட விதத்தில் நடந்து கொள்ளப்பணித்து விட்டு புகைப்படம் எடுத்த அல்லது வீடியோ செய்த சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, குடும்பத்து நண்பர்களது வெறிக்கு இணங்கும்படி பெற்ற பிள்ளையை நிர்ப்பந்திக்கும் 67பற்றோர்கள் இந்த நாகரீக உலகில் இருக்கிறார்கள் என்பதும் சாட்சியாக உள்ளன.
இவ்வாறு நெருங்கிய உறவினர்களாலேயே பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர் சிறுமியரின் மனோநிலை மற்றையோரால் பாதிக்கப்படுவோரின் மனோநிலையை விட அதிகம் வித்தியாசமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இத்தகைய நெருங்கிய உறவினர்களிடமிருந்து பாதுகாப்பையும் பண்பாட்டு, ஒழுக்கப் பயிற்சியையும் சிறுவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மறுதலையான இத்தகைய நடத்தை, அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இந்த அனுபவம் அவர்களது வாழ்வு நெடுகிலும் காயாத வடுவாக நின்று தொந்தரவு செய்து, மனோ நோயாளிகளாகவும், பெரும் பாலியல் வேட்டையர்களாகவும் அவர்களை மாற்றி விடுகிறது.
பெரும்பாலும் சிறுவர்களாக இருக்கும்போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியவர்கள் வளர்ந்த பின்னர் ஒரு வகையான விரக்திநிலையில் இருப்பதும், பாலியல் உணர்வுகளைத் தரண்டும் படங்களைப் பார்ப்பதிலும், புத்தகங்களை வாசிப்பதிலும் அதிக விருப்பத்துடன் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தகவல் மீள்பார்லுை (இலங்கை) டிச96

Page 66
128 i Agar undháb GSM70Basat
பிரித்தானிய (இங்கிலாந்து தேசத்தைப் பொறுத்த வரையில், இங்கே, 1995 ஆம் ஆண்டின் அறிக்கையையே தர முடிந்தது. இப்பொழுதோ ஏழாண்டுகள் கழிந்து விட்டன. அவலங்கள் அதிகரித்திருக்குமா, குறைந்திருக்குமா என்பதனை அபிமானிகள் அனுமானத்திற்கே விட்டுவிட பேனா விரும்புகிறது.
இதயத்தை நெருடும் இலங்கை பூர்வுகள்
2000 -வது ஆண்டில் இலங்கை போலிஸ் பதிவுகளில் அதிகமாக உள்ளவை சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமே என பல அமைப்புகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாலியல் பலாத்காரத்திற்கும், கொலைகளுக்கும் 73 கோவைகள் திறக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 389 சிறுவர் அவலங்களுக்காக
இந்த 369பதிவுகளிலும் அதிகமாகக் குற்றம் சுமத்தப் பட்டிருப்பவர்கள் சிறுவர் - சிறுமியரது உறவுக்காரர்களே
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ என்பார் தகவல் தருகையில், தந்தை, சகோதரன், மாமன் அல்லது சினேகிதன் என்போரே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்.
மேலும் 369 லிலும் 16 வயதுக்குட்பட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அவரது குறிப்பு
தற்சமயம், கொழும்பு நகருக்கு மிக மிக அருகாமையிலும் இது வந்து விட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
 
 
 
 

LOTGITT uočkácii 129
இடம் : கல்கிஸை எனப்படும் புகழ்பெற்ற மவுண்ட் லவ்னியா, கொழும்பிலிருந்து அரைமணிநேரக் கார்ப்பயணம். சுற்றுலாப் பயணிகளது அபிமான பீச் - அந்தகாலத்திலும் சரி, இந்தகாலத்திலும் சரி.
பையன்களா, பெண்களா, போதைப் பொருட்களா மூன்றும் பீச்சில் கிடைக்கும் என்கிறார்கள் இங்குள்ள ஒட்டல் சங்க நிர்வாகிகள்.
இப்பகுதியில் வசிப்பவரான திரு. ஏ. எச். பெர்னாண்டோ என்பவர். சண்டே டைம்ஸ் நிருபர் டானியாவுக்கு அளித்த நேர்காணலில், "அனைத்து அசிங்கங்களுக்கும் நல்ல மறைவிடம். நல்ல பாதுகாப்பு காலார நடந்து செல்லக் கூச்சமாக இருக்கிறது" எனக் குறித்துள்ளார்.
கல்வியாளர் இருவர் கருத்துக்கள்
འ་ அருட்தந்தை எஸ். டேமியன் (உளவளத் துணையாளர்) அவர்களிடம், "தகாத உறவினால் பாதிப்படைந்த பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்" எனக் கேட்டபொழுது -
"இது ஒரு விரிவான விடயம். எனினும் சுருக்கமாக இதை சொல்கிறேன். இதனால் பாதிப்படைகின்றவர்களை இரண்டு விதமாக நோக்கலாம். ஒன்று சிறுவயதிலே நடந்த அந்த நிகழ்வில் இருந்து மீள முடியாது தன்னையே குற்றவாளியாக கருதுகின்ற ஒரு நிலை. அதாவது குற்றப்பழி உணர்வால் தன்னையே நொந்துக்கொண்டு வாழ்கின்ற நிலை.
"இப்பாதிப்பின் விளைவு தனது நாளாந்த கடமைகளில் இருந்து விலகி தன்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது. கடவுள்

Page 67
130 சிறுவர் பாலியல் கொடுமைகள்
தன்னை மன்னிக்க மாட்டார். பெண்ணாக இருந்தால்
தனக்கு திருமணமே வேண்டாம் போன்ற முடிவுகளை எடுத்துக் கொண்டு வாழ முற்படுவர். இது பெரிய உளப்பாதிப்பு இப்பாதிப்பில் இருந்து பாதிப்புக்குள்ளானவரை சாதாரணநிலைக்கு கொண்டு வருவதற்கு உளச்சிகிச்சை கட்டாயம் அவசியம். நடந்தது மன விருப்பின்றி என்பதை முதலில் உணர வைக்க வேண்டும்.
"இரண்டாவது மோசமான நிலை. பாதிப்படைந்தவர் தொடர்ந்து தானாக தன்னை இழக்கத் துணிகின்ற நிலை. அல்லது மற்றவர்களைப் பயன்படுத்த நினைக்கின்ற நிலை. இது ஒரு வெறி உணர்வுதான், ஏற்கனவே நடந்தேறிய பாதிப்பின் ஒரு விளைவாகக் கூட இருக்கலாம். அது பசியாக மாறுகின்றபோது அலைகின்ற நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாது உள்ளது."
திரு. ஜி. எஸ். எம். செபஸ்தியான் பிள்ளை ܕܟ݂ (விரிவுரையாளர் சமூகவியல்) அவர்களிடம் கேட்ட பொழுது
"பெரியவர்களால் மேற்கொள்ளப்படும் சிறுவர் பாலியல் எல்லா நாடுகளிலும் காணப்படினும் தென்னிலங்கையில் அதிகமாக காணப்படுவதை அறிய முடிகிறது. பெற்றோர் பணம் சம்பாதிக்கும் முகமாக உல்லாசப் பயணிகளுக்கிடையே சிறுவர்களைப் பாலியல் தேவைக்கு ஈடுபடுத்துகின்றார்கள். சிறுவர்களால் அதன் தாக்கங்களை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. பல தரப்பட்ட நோய்களும் ஏற்படுகின்றன. தன்னினச் சேர்க்கை மேற்கு நாடுகளைப் போன்று இலங்கைத் தமிழர் மத்தியிலே அதிகமாகக் காணப்படாவிட்டாலும், இது வளராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றிய தீவிர சிந்தனை அவசியமானது.

131
LOTANT LDésé6tik
வறுமையும், போசாக்கின்மையும் பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும். இதில் மத்திய தர, அதற்கு மேற்பட்ட வர்க்கத்தினர் கவனம் செலுத்தினால் இதனைக் குறைக்கலாம். இதில் ஈடுபட்ட சிறுவர்கள் தகவல் வெளிவரும் போது ஒருவித தாழ்வுணர்ச்சிக்கு உட்பட்டு, குற்ற உணர்வுடன் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்க முற்படுகின்றனர். இவ்வாறானவர்களை தமிழ்ச் சமூகம் வித்தியாசமான முறையில் பார்க்கும். ஏனெனில் நமது சமுதாய அமைப்பில் இது ஒரு பெரிய பிரச்சினை. பாதிப்படைந்த பிள்ளையை மிக மோசமான நிலைக்குள்ளாக்கி அந்த நிகழ்வை பூதாகரமாக்கி மீண்டும் அதே நிலைக்குள்ளாக்குவதில் நமது சமூகம் எப்போதும் பின்நின்றதில்லை. பெற்றோரின் பங்கு முதன்மையானது. அவர்களால் தொடர்ந்து கிடைக்கும் ஆதரவுதான் அப் பிஞ்சுகள் வளர உதவும்"
JAV
"ஆத்மா நவமணி (இலங்கை வாரஇதழ்) 1998
பிரபல மகப்பேறு மாதர் நோய் வைத்திய நிபுணர் ܕܟ டாக்டர் எம். எல். நஜிமுதீன் குறிப்பு
"சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் நீங்கள் நினைப்பதைவிட மிகவும் அதிக அளவில் இலங்கையில் இடம் பெறுகின்றன. இத்தகைய வன்முறைகட்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகளில் அநேகமானோரின் தாய்மார் வெளிநாட்டில் இருக்கின்றனர். சொந்தத் தந்தையால் பாலியல் வன்முறைக்குள் ளாக்கப்பட்ட இரண்டு சிறுமிகளை நான் பார்த்திருக்கின்றேன். இவர்களில் ஒரு பிள்ளைக்கு வயது 11 அம்மா வெளிநாட்டில் பல
வருடங்களாக வேலை பார்த்து வருகின்றார். வயதில் குறைந்த

Page 68
132 சிறுவர் பாலியல் கொடுமைகள்
இரண்டு தங்கைகளையும் இவள் பராமரிப்பதுடன் வேலைகள் அனைத்தையும் இவளே கவனித்து வருகிறாள். இவளது தந்தை பல மாதங்களாகவே பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மிகுந்த வேதனையுற்ற இந்தச் சிறுமி இதைத் தனக்கு நம்பிக்கையான ஒரு ஆசிரியையிடம் முறையிட்டு அழுதாள். அந்த ஆசிரியை பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவன் கைது செய்யப்பட்டான். ஆனால் அவன் பிணையில் விடப்பட்டதும் இந்தப் பிள்ளைகளைக் கொலை செய்வதற்காகக் கத்தியுடன் வைத்தியசாலைக்கு வந்தான்.
- தினகரன் - வாரமஞ்சரிக்கு எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து (02.06.2002)
இதழாளர் திரு. கே.பி மோகனின் போலீஸ் ஆய்வு
"சமூகச் சீர்கேடுகள் குறித்து சிந்திக்காமல் வாழும் குடும்பங்களிலேயே அதிகப் பிரச்சினைகள்" - எனப் போலிஸ் தகவல்களை
வைத்து ஆய்வு செய்கின்றார். கே.பி. மோகன் என்ற ஓர் இதழாளர்.
இவரது சுருக்கமான ஆய்வெழுத்துக்களை தினக்குரல் வார இதழில் சகோதரி தேவமனோகரி வெளியிட்டிருக்கிறார். அதனை அப்படியே நன்றியுடன் மறுபிரசுரம் செய்கின்றேன்.
"சமூகச் சீர்கேடுகள் பற்றி சிந்திக்காமல் ஏனோ தானோ என்று வளர்ந்து கொண்டிருப்பவர்களின் குடும்பங்களில்தான் அதிகமான பிரச்சினைகள் உருவாகின்றன" என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொறுப்பில்லாமல் வாழுகின்ற இக்குடும்பங்களில் தான் வெட்டுக்குத்துக்கள், துர்நடத்தை சம்பவங்கள், பாலியல்

மானா மக்கீன் 133
பலாத்காரங்கள், கடத்தல் சம்பவங்கள், கொலை, கொள்ளைகள்,
கல்விச் சீர்கேடு என்பன பொதுவாக இடம் பெறுகின்றன.
பொலிஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு புத்தகங்களில் பதிவாகியுள்ள ஒவ்வொரு குற்றச்செயல்களையும் ஆராயும் போது இவ்விடயம் தெரிய வருகிறது.
பொதுவாகக் குடும்பத் தலைவர் அல்லது தலைவி குடும்பப் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்து வாழும் போது, அக்குடும்பம் குற்றச் செயல்களுக்குத் தரண்டுதல் அளிக்கும் வீடாக மாறி வருகின்றது. குடும்பத் தலைவன் இல்லாத அனேகமான வீடுகளில் அந்நியரின் ஆதிக்கமும், குடும்பத் தலைவிகள் இல்லாத வீடுகளில் பாலியல் ரீதியான பிரச்சனைகளினால் விளையும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
பொறுப்பான குடும்பப் பெண்கள் இல்லாத வீடுகளில் தனித்து இருக்கும் இளம் பெண்கள், யுவதிகள், சிறுமிகள் வீட்டிற்கு வந்து போகும் அல்லது அங்கு இருக்கும் அல்லது பலவந்தமாக வீடு புகுந்தவர்களால் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும்
சம்பவங்கள் பல இடம் பெற்றள்ளன.
இதில் ஊனமுற்ற நிலையில் இருந்த 5 யுவதிகள், 2 வாய் பேசாத பெண்கள், 8 சிறுமிகள், இனிப்பு பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 19 சம்பவங்களும், மரண அச்சுறுத்தல் விடுத்து பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இவற்றில் மிருகத்தனமாகவும் வழமைக்கு மாறான விதமாகவும் Liv UToui osoivpoj6ir இடம்
பெற்றுள்ளன.

Page 69
134 சிறுவர் பாலியல் கொடுமைகள்
சிலர் பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் கழுத்து நெரித்தும், அடித்தும் வெட்டியும் 67கால்லப்பட்டுள்ளனர். இவ்வாறான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் தந்தைமார், சித்தப்பா மற்றும் மாமா முறையான உறவினர்கள், அயலவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், கீழ்மட்ட நிலையில் வாழும் குடும்பங்களில் துர்நடத்தை, போதைவஸ்தர பாவனை என்பன
அதிகமான இடம் பெறுகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் இல்லாத வீடுகளில் கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளதுடன் அங்கு கல்விச் சீர்
கேடுகளும் இடம் பெறுகின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனது அடிக்குறிப்பொன்று!
* வட மத்திய மாகாணத்திலேயே அதிகளவிலான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம் பெறுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில ஆய்வுத் தகவல்கள்
ஆசிய நாடுகளில் சிறுவர் விபசாரம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து, ஹெங்கொங், பிலிப்பைன்ஸ் என்பவற்றோடு இலங்கையும் முன்ன சியில் இருக்கின்றது. ஆசியாவில் 10 இலட்சம் சிறுவர்கள் வர்த்தக நோக்கில் விபசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுள் பெரும்பாலானோர் மிக வறியவர்களாகவும் அடிமைகளாகவும்
இருக்கிறார்கள்.

TGITT Lošikácia 135
இந்தியாவில் கல்கத்தா, மும்பாய், தில்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் விபச்சாரர்களாக பிழைப்பு நடத்துவோருள் 30% 20 வயதுக்குக் குறைந்தவர்கள். (மும்பாயில் மட்டும் நாற்பதாயிரம் சிறுமியர் பாலியல் விபசாரத்தில் நேபாளத்தில் 5000 பேர் இருக்கின்றனர். மிகத் திட்டமிட்டு இயங்கும் வர்த்தகக் குழுக்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். சாமானிய மக்கள் இத்தகையப் பாலியல் சீர்கேடுகள் பற்றி அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ய அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.
மூன்றாம் உலக நாடுகளில் அண்மைக்காலமாக மிக ஆர்வம் காட்டப்படுகின்ற சுற்றுலாப் பயணத்துறையால் எற்பட்ட ஒரு துரதிர்ஷ்டமே சிறுவர் விபசாரம். பெண்களைப் பாலியல் ரீதியாக விற்பனை செய்வதும் மூன்றாம் உலக நாடுகளின் ஓர் ஒழுக்கப் பிரச்சனைக்கு அடிகோலி வருகிறது.
மூன்றாம் உலக நாடுகள் சிலவற்றில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக நிலவுகின்ற பலவீனமான சட்டங்களை அறிந்த ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தமது சபலமிக்க ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்குடன் ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்கிறார்கள்.
வறுமையின் பிடியில் சிக்கியுள்ள பங்களாதேஷ் தலைநகர் டாக்கா தெருக்களில் மட்டும் 15,000 முதல் 20,000 சிறுவர்கள் விபசாரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். பலர் 12 வயதுக்கு முன்பே இப்படி பாழ்படுத்தப்படுகிறார்கள்.
இன்னொரு ஆய்வின்படி, ஓர் இலட்சம் பேரில் சரி
பாதிபேர் சிறுவர்கள்தானாம்.

Page 70
136 சிறுவர் பாலியல் கொடுமைகள்
"பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பச்சிளம் பாலகர்களும் பாலியல் ரீதியில் வக்கிரப்படுத்தப்பட்ட இளங்குருத்துக்களும் மனவிவகாரம், மனசோர்வு, குற்ற உணர்வு உட்பட பல்வேறு உளவியல் சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்" என ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார சமூக துறைக்குழு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. சில சிறுமியர் தற்கொலை முயற்சிக்குக் கூட இறங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியதொரு கட்டுரை
நான்காண்டுகளுக்கு முன்பு தினகரன் (இலங்கை வார மஞ்சரியின் 12 - 05 - 1996 இதழில் ஒரு முழுப்பக்கக் கட்டுரையை வளர்ந்து கொண்டிருந்த எழுத்தாளர் ஒருவர் வழங்கியிருக்கிறார். . . அவர் ரிஸ்கி ஷெரீஃப். மலையகமாம் மாவனல்லை என்ற இடத்தைச் சேர்ந்தவர். இப்பொழுது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவராகத் திகழ்கிறார்.
நான் முன்னர் முழுப்பக்கமாகக் கொண்டு வந்த லைட்ரீடிங் பகுதிக்குப் பல விடயங்கள் அனுப்பிக் களைத்தவர் என்பதும் என் நினைவில்!ஆனால் எனக்கு நல்லபடியாக சந்தர்ப்பம்
வழங்கிட வசதிப்படவில்லை என்பதும் உண்மை.
இப்பொழுது இந்த நூலில் ஓர் அருமையான சந்தர்ப்பம் சலுகைகள் எதையும் எதிர்பார்த்தல்ல, அவரது ஆய்வுக்கு மதிப்பு கொடுத்து)

137
மரீனா மக்கீன்
ரிஸ்கி ஷெரீஃபின் அந்த ஆரம்பகால எழுத்துக்களில் சிறுவர் சீரழிவில் அவர் காட்டியிருக்கிற கவலையும் கரிசனையும் நான் கூட பட்டதில்லை. அதில் பதிக்கப்பட்டிருக்கிற கருத்துக்களையும், குறிப்புகளையும் ஆறாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது படிக்கிற பொழுது, நான் என்னவெல்லாம் பதித்திட விரும்புகிறேனோ அத்தனையும் காணப்படுவது அதிசயம். தனியாக ஒன்றை எழுதும் அவசியமில்லை. அப்படி எழுதினாலும் அவரைப் பிரதி செய்ததாகவே முடியும். இந்த வயதில் ஈயடிச்சான் காப்பி தேவையா? ஆகவே அக்கட்டுரையிலிருந்து சிலவற்றை கொய்து தரப் பெரிதும் விரும்புகிறேன், அவருக்கு நன்றி தெரிவித்து.
விபரம் அறியாத பருவமடையாத சிறார்களை ܕܸܟ݂ பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது பரவியல் தரஷ்ரபிரயோகமாவதுடன், வன்முறை சார்பான விபசாரமுமாகும். இந்தச் சிறுவர் விபசாரம் மனித உரிமை மீறல்களோடு சம்பந்தப்பட்ட ஒரு மிலேச்சத்தனமான மிருகத்தனமாகும்.
கள்ளங்கபடமறியா வெள்ளை மனம் கொண்ட சிறார்கள், தாமறியாமல் பிற சக்திகளால் பலாத்காரமாக பாலியலில் ஈடுபடுத்தப்படுவதும், தரன்புறுத்தப்படுவதும் மட்டுமல்லாமல், தாம் உடம்பையும், வாழ்வையும் கெடுத்து நாசமாக்கி சீரழித்துக் கொண்டிருப்பதும் இன்று நடக்கிறது.
சிறுவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் பரவியல் செயல்களின் பின்விளைவுகள் என்ன? எப்படிப்பட்டது? என்று எதையுமே அறியாதவர்களாகவே இருக்கின்றனர். தவிர, அவ்வாறு ஈடுபடும் சிறார்களின் தொகையில் சரிபாதி வீதமானோர் தாம் விரும்பியே இந்தச் செயலில் ஈடுபடுவதாகவும் தெரியவருகிறது. அதற்கு முதன்மைப்படும் காரணங்களில்,

Page 71
138 சிறுவர் பாலியல் கொடுமைகள் வறுமையும் பட்டினியுமே பிரதானமாகக் கொள்ளப்படுகிறது. சிறு வயது ஆசைகளையும், மோகங்களையும்
கூட இதற்குச் சார்பாகச் சுட்டலாம்.
பணத்துக்கும், ஆடம்பரப் பொருட்களுக்கும், வெறும் திண்பண்டங்களுக்கும் இலகுவில் மயங்கிப் போகக்கூடிய சிறார்கள் விபரீதம் ஏதுமறியாத நிலையில் வெகு சுலபமாக சிறுவர் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல், நேரடியாக ஈடுபடும் சிறுவர்களை விட அவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் தரகர்களே இத் தொழிலில் பெரிதும் சம்பாதிப்பவர்களாக இருக்கின்றனர்.
வெளிநாட்டவரோடு நட்பு, சக வாசம் வைத்துக் கொள்வதை சிறார்கள் - குறிப்பாக ஆசிய நாட்டுச் சிறார்கள் ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகிறார்கள். அவர்களது படாடோப வாழ்க்கை தமக்கும் வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதன் காரனமாகவும் சிறார்கள் குறுகிய நேரத்துக்குள் தம்மையறியாமலேயே தடம் புரள்கிறார்கள். உல்லாசப் பயணிகள் கொடுக்கும் பணத்துக்காகவும், பரிசுப் பொருட்களுக்காகவும் அவர்கள் சொல்படி எப்படி எப்படியெல்லாமோ விபரமறியாது ஆட முனைகிறார்கள். அவர்கள் எந்த வகையிலேயோ மூளைச்சலவை செய்யப்பட்டு விடுகிறார்கள்.
வெளிநாட்டவர்கள் ஆசிய நாட்டுச் சிறார்களை - குறிப்பாக இலங்கை, இந்தியா, போன்ற நாடுகளின் சிறார்களை தமது இச்சைகளுக்கு வடிகால்களாகப் பயன்படுத்துவதில் முதன்மைப்படும் காரணம். . . கறுப்பு இனத்தவர்களை பாலியலில் மிகவும் விரும்புவதேயாகும்.
அடுத்த பட்சமாக, , , ஓரினச் சேர்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மேற்கத்தையவர்கள், மேற்கு நாடுகளில் எய்ட்ஸ்

LOTGIT (0.556 139
போன்ற நோய்கள் பரவலாகக் காணப்படுவதனாலும், மற்றும் தமது அந்தரங்க வாழ்க்கையை சுகமாக அனுபவிப்பதற்காகவும் அதிகம் ஆசிய நாடுகளை நோக்கிப் படையெடுத்த வண்ணமிருக்கிறார்கள்.
எப்படியோ சீரழிந்து போவது நமது நாடு மற்றும், அண்டைய சகோதர நாடுகளினதும் பச்சினம் சிறார்கள்தாம்.
ரிஸ்கி ஷெரீஃப் இப்படி ஆய்வு செய்ததைப் போல இன்னொரு எழுத்தாளரும் ஆலோசனைகள் நல்கியுள்ளார். அவரும் நான் விரும்புபவரே என்னை மதிப்பவரே. அடுத்த அத்தியாயத்தில் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Page 72
140 சிறுவர் பாலியல் கொடுமைகள்
ஆலோசனைகள்
ன் அத்தியாயத்தில் அறிமுகமான ரிஸ்கி ஷெரீஃப் போல இன்னொரு இளைய தலைமுறை எழுத்தாளருக்கு இந்த அத்தியாயத்தில் சந்தர்ப்பம்.
அவர் மர்லீன் மரிக்கார். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் தினகரனுக்குள் நுழைந்தவர். அதற்கு முன் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி வட்டத்திற்குள் வளைய வளைய வந்து வாரத்திற்கு இருமுறை எனக்கும் தொலைபேசி செய்து நூல்கள் பற்றியும், இதழியல் துறைபற்றியும் உசாவுவார். உபயோககரமான செய்திகளை என்னிடமிருந்து கறந்துவிடுவார் கறந்து
மர்லீன் மரிக்காயரது இந்தத் திறமை தினகரனில் நிருபராக நுழைந்த பொழுது கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. இப்பொழுதும் புறந்து கொண்டிருக்கிறது.
தற்பொழுது அவர் நல்ல நல்ல செய்திக் கட்டுரைகளை வாராவாரம் எழுதிக் கொண்டிருக்கிறார். பாராட்டுகிறேன். அத்தகையவொன்று, இவ்வாண்டு (2002) ஆகஸ்டு 04 -ல் வெளியாகியுள்ளது. "நம்பிக்கைக்குரிய நண்பர்கள் கூட உங்கள் குழந்தைக்கு குற்றமிழைக்கலாம்'எனத் தலைப்பிட்டு அற்புதமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அப்படியே மறுபிரசுரம் செய்யவே ஆசை இடப்பஞ்சம் இடறு செய்கிறது. நறுக்கி சுருக்கித் தருகிறேன்.

4. LOTGT Lošést
རྩི་ குழந்தைகளின் நலன்களுக்காகச் செயற்பட்டு வரும் பீஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இந்நாட்டில் ஐம்பதாயிரத்திற்கும், அறுபதாயிரத்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இவை கூடிச் செல்லுகின்றனவேயொழிய குறைந்ததாக இல்லையெனக் குழந்தை நல நிபுனர்கள் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறு சிறுவர்களைப் பாவியல் தஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கை பல மட்டங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இவை சமுதாயத்தின் உள்ளே நடக்கும் ஒர் கொடுமை, துஷ்பிரயோகம், அதன் காரணத்தினால் அனைத்துமே வெளிவருவதில்லை. ஒரு சிலதைத் தவிர.
வளர்ந்தவர்களின் காமப்பசிக்கு யாதுமறியாத அப்பாவிச் சிறுவர்கள் தீனியாக்கப்படுவதன் மூலம் அவர்களின் சொற்ப நேரத் தேவை பூர்த்தி செய்யப்படலாம். ஆனால் இக்குழந்தைகள் உடல், உளரீதியாக ஒருங்கே பாதிக்கப்படும். இதனை எவருமே மறுக்க
முடியாது.
அந்த வகையில் உடல் ரீதியான பாதிப்புகள் குறித்து முதலில் கவனம் செலுத்துவது மிகவும் பயன்மிக்கதாக இருக்கும்.
குறிப்பாக, இன்றையக் காலகட்டத்தில் பல விதமான பாலியல் நோய்கள் பழக்கத்தில் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தொற்றுநோய்கள். இந்நோய்கள் முறை கேடானதும் தவறானதுமான பாவியல் தொடர்பாடல்களின் மூலமே தோற்றம் பெற்றிருக்கின்றன. அவ்வழிகளின் ஊடாகவே பெரும்பாலும் பரவவும் செய்கின்றன.

Page 73
142
சிறுவர் பாலியல் கொடுமைகள்
இவற்றில் பாலுறவுத் தொற்று நோய்கள் (எஸ். ரி டி) எச். ஐ. வி எயிட்ஸ் ஆகியனவே பிரதானமானவை.
பாலுறவுத் தொற்று நோய் என்பது தனியே ஒரு நோயை மட்டும் குறிப்பதில்லை. இதில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வைரசுகள் தோற்றுவிக்கும்
நோய்கள். இவ்வகை நோய்களை உரிய மருத்துவ சிகிச்சைகளின்
மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.
இப்பாலுறவுத் தொற்று நோய்களுக்கு உள்ளாகி இருப்பவர்கள் தோற்றத்தில் சுக தேகிகள் போன்று காட்சியளிப்பர். அதனால் இவர்களின் காமப் பசிக்கு இரையாகும் குழந்தைகளுக்கும் இந்நோய்கள் தொற்ற முடியும். அவை பெரும் பாதிப்புகளை
ஏற்படுத்தும்.
இந்நோய்களைக் குணப்படுத்தவெனப் பெருந்தொகை பணத்தைச் செலவிட வேண்டும். குறிப்பாக, இவ்வகை நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் போது முறையான சிகிச்சையளிப்பு இன்றியமையாதது. இல்லையாயின் மீள மீளத் தோற்றம் பெறக்கூடும்.
இதே நேரம், இன்று உலகளாவிய ரீதியில் பெரும் உயிராயத்து பீதியை ஏற்படுத்தி இருக்கும் நோய்தான் எச்.ஐ.வி எயிட்ஸ், இதுவும் முறைகேடான பாலுறவு மூலமே பெரிதும் பரவுகிறது. இது ஒர் வைரசு நோய். இந்நோய்க்கு உள்ளாகின்றவர்களைக் குணப்படுத்த முடியாது. சரியான சிகிச்சை முறைகளோ, மருந்துகளோ இதுவரையுமே கண்டு பிடிக்கப்படவில்லை, மரணமே இன்று வரையும் முடிவாக உள்ளது

மானா மக்கீன் 143
இந்த எச்ஐவி வைரசுத் தொற்றுக்குள்ளாகின்றவர்கள் நோயாளர்களாக மாறுவதற்கு குறைந்தது எட்டுப் பத்து வருடங்கள் எடுக்கும். இதுவரைக்கும் இவ்வைரசுத் தொற்றுக்குள்ளாகி இருப்பவர்களும் சுகதேகிகள் போன்று தோற்றமளிப்பர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் 2001 -ம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, இலங்கையில் சுமார் 8500 பேர் எச்.ஐ.வி. காவிகளாக தொற்றுக்குள்ளானவர்களாக இருக்கின்றனர். ஆனால் பாலுறவு தொற்று நோய்கள் மற்றும் எச்ஐவி எயிட்ஸ் ஒழிப்புக்கான இலங்கை இயக்கத்தின் அறிவிப்பின்படி, இந்நாட்டில் ஐநூறுக்கும் குறைவான எண்ணிக்கையுடையோரே இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இந்நாட்டில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்கள் அனைவருமே இனங்காணப்படாதுள்ளனர் ன்ன்ற முடிவுக்கு வரக் கூடியதாக உள்ளது. அது பெரும் ஆபத்தான விடயம். அதனால் இப்படியானவர்களின் காமப்பசிக்கு தீனியான
குழந்தைகளுக்கும் இவ்வைரசுகள் தொற்றிவிட முடியும்.
ஆகவே இன்றையக் கால கட்டத்தில் பாலியல் ரீதியான தஷ்பிரயோகங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இச்செயற்பாடுகளுக்கு ஒருபோதுமே இடமளிக்கக் கூடாது. இந்த விடயத்தில் பெற்றோரும், உறவினர்களும் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
அலட்சியப் போக்குகள் ஆபத்துக்களைக் கொண்டு வரலாம். அதனால் அவர்களை உடல், உள ரீதியான மருத்துவப்
பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, உரிய சிகிச்சைகளை அளிக்க

Page 74
144 சிறுவர் பாலியல் கொடுமைகள்
வேண்டும். இவற்றைத் தாமதப்படுத்தக்கூடாது. இவ்வகைக் குழந்தைகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதும் மிகவும் அவசியமாகும். இவை பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுக்கும் குழந்தைகளுக்கு நிவாரணங்களாக இருக்கும், என்றாலும் இவ்வகைத் துஷ்பிரயோகங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வது தான் இன்றைய பொழுதுகளில் மிகவும் முக்கியத்துவப்பணி என உறுதிபடக் கூறலாம்.
-நன்றி சொல்கிறேன் மர்லீன் மரிக்கார்:
மரண தண்டனை விதிக்க வேண்டும்
- ஏ. எச் எம் அஸ்வர் எம்.பி
"சிறுமியர் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் படுவது அதிகரித்துள்ளது. பாலியல் வன்முறையில் ஈடுபடு பவர்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும்" என்று இப்போதைய மாண்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் முன்னைய அரசில் ஐ.தே. கட்சி எம்.பி. யாக இருந்தபொழுது நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
"பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்" என்ற தனி நபர் பிரேரணையை அவர் சபையில் சமர்ப்பித்து தொடர்ந்து பேசும்போது, திருக்குர்ஆனை மேற்கோள் காட்டி "பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்" என்று சொன்னார்.
"நாளாந்தம் பத்திரிகைகளில் தந்தை புதல்வி மீது பாலியல் வன்முறை, வீதியில் சென்ற யுவதி மீது காடையர் பாலியல் வன்முறை என்று பல செய்திகள் வெளிவருகின்றன.
 
 
 
 
 

45
மானா மக்கீன்
இவற்றை கட்டுப்படுத்தாவிட்டால் நமது சமூகம் சீரழிந்து விடும். எனவே பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.
அவர் கேட்டுக்கொண்டது அப்படியே இப்பொழுது நிறைவேற்றம் அநியாயக்காரர்கள் மரணதண்டனை பெற ஆரம்பித்துள்ளனர். ஆனந்தம் ஆனந்தம்
அதிகாரிகளுக்கு அறிவிப்பது அத்தியாவசியம்
$ "நமது பிள்ளைகளுக்கோ அல்லது மற்றவர்களின் பிள்ளைகளுக்கோ பாலியல் துஷ்பிரயோகங்கள் நிகழ்ந்ததும் உடனடியாக அவற்றைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பது கட்டாயக் கடமையாகும். இல்லையெனில், இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் துணை போவதாக அமைந்துவிடும்."
- சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர் பிரமிளா திவகர கோரிக்கை
துஷ்பிரயோகத்தை முறையிட வெட்கப்படக்கூடாது
* "துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படும் சிறுவர்கள் அது தொடர்பாக வெட்கப்படாமல் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அல்லது பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள சிறுவர்நலன் காக்கும் அலுவலர்களுக்கு அறிவிக்க வேண்டும்."
கொத்மலை பிரதேச செயலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த சிறுவர் நலன்காக்கும் அலுவலரான சமணசேகர ஜயசுந்தர.

Page 75
146
Ĥgan urTeludio GasTösseE8.5af
* "வைத்திய அறிக்கையே இவ்வாறான குற்றச் செயல்களுக்குப் பிரதான சாட்சியாகும். விசாரணைக்குட் படுத்தப்படும்போது வைத்தியர்கள் சட்டத்தரணிகள் அவர்களின் மனத்தில் கிலேசம் ஏற்படாத முறையில் நடந்துகொள்வது அவசியமாகிறது. ஒரே விடயத்தை அடிக்கடி சிறுவர்களிடம் துருவி ஆராய முற்படுவதால் ஏற்கெனவே மனப்பாதிப்புக்குள்ளான சிறுவர்கள் மேலும் விரக்திக்குள்ளாகின்றனர்"
- கொழும்பு தெற்கு சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர.
வாடகங்கள் அவதானமாகச் செயல்பட வேண்டும்
* சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக ஊடகங்கள் பெரும் பங்களிப்பை வழங்கிவருகின்றன. கூடுதலான பிரசாரத்தினால் சில வேளைகளில் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக செய்திகள் வெளியாகும்போது, மற்றும் விசாரணைகளின் போது கவனமாகச் செயற்படுவது அவசியமாகிறது. சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குச் சிறந்த சட்ட மூலங்களை உருவாக்குவது இன்றையக் காலகட்டத்தில் அத்தியாவசியமாகிறது.
பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களின் நன்னடத்தை பற்றிய அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் இழுபறி நிலைகளினால் விசாரணைகள் தாமதமாகின்றன. பொலிஸார் இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிறைக்கூடங்களில் சிறுவர்களைப் புறம்பாக வைப்பதுடன் பாரிய குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளுடன் அவர்களைச் சேர்த்து வைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
- அரச சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சீவ சமரநாயக்க

147
மானா மக்கீன்
மாணவிகள் தமக்கு நிகழும் அநீதிகள் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டும்.
$ "வீடுகளில் மாணவிகளுக்கு பெற்றோர்களாலும், உறவினர்களாலும் ஏற்படும் கொடூரங்களை வெளியில் வாய்திறந்து கூற முடியாத படி பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இனி அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதிருக்க வேண்டுமானால் மாணவிகள் துணிந்து சென்று பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய பின்னிற்கக்கூடாது."
- முன்னை நாள் மகளிர்விவகார அமைச்சர் சுமேதா பீ. ஜயசேன.
பெண் பொலிஸ் உதவவேண்டும்
"பெண் பொலிஸார் தமது பாதுகாப்புக் கடமைகளுடன் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"
"அதே நேரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நல்ல அறிவூட்டல்களை வழங்க வேண்டும். ஆன்மிகப் போதனைகளை வழங்க வேண்டும். அவர்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை உருவாக்க வேண்டும். சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க (plգած"
குற்றத்தடுப்புபிரிவின் பிரதிப்பொலிஸ்மா அதிபர் சிறிசேன ஹேரத் (18.10.2002)
மதப்பெரியார்கள் அக்கறை காட்ட வேண்டும்.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான" ܕܸܟ݂ பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு

Page 76
148
சிறுவர் பாலியல் கொடுமைகள்
மதப்பெரியார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்."
- என, இலங்கையின் நான்கு முக்கிய மத நிறுவனங்களின் தலைமைபீடத்திற்கும் புத்தளம் சைல்ட் விஷன் அமைப்பின் செயலாளர் ஏ. சி. எம். ரூமைஸ் வேண்டுகோள்.
வேறு முக்கியமான یوکے லோசனைகள்
O சிறுவர்களை தனிமைப்படுத்தி விடாதீர்கள்; அவர்களது அன்றாட வாழ்க்கையை அவதானித்த வண்ணம் இருங்கள்.
O சிறுவர்கள் பிறர் முன்னிலையில் உடைமாற்றும் பழக்கத்தை நிறுத்துங்கள். அவர்களது சகோதரர்கள், உறவினர்களாக இருந்தாலும் வேண்டவே வேண்டாம்.
O எப்பொழுதும் அவர்களது மறைவான உறுப்புகள் மறைக்கப்பட்டே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துங்கள்.
O பாடசாலை செல்வோர் அந்நியர்களை விட்டு அகன்றே இருக்க வேண்டும் எந்த வெளியாரிடம் இருந்தும் எந்த அன்பளிப்பும், பணமும் பெறுவது சரியல்ல என்றும்
உணர்த்துங்கள்.
O எந்த நல்லதையும் கெட்டதையும் (முக்கியமாக கெட்டது) பெற்றோர்களுக்கு மறைத்து வைக்கக் கூடாது என அன்போடு அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
O சிறு வயதினரது அன்றாட வெளி நடமாட்டங்களை நீங்கள்
அறிந்திருத்தல் வேண்டும். அவர்களது நண்பர்களையும்

LDT6SIT (Dšší 149
தெரிந்திருக்க வேண்டும்.
O அவர்கள் படிக்கும் இதழ்கள், சஞ்சிகைகளுடன், அன்றாடப் பொழுதுபோக்கு எப்படி அமைகிறது என்பதையும் அவதானியுங்கள்.
O வீட்டில் கணனி வைத்திருப்பவர்கள் இணையத்தில் இன்டர் நெட்) எப்பொழுதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். (5-ம் அத்தியாயத்தில் பல விவரங்களைப் பார்த்திருப்பீர்களே
O L]6) சிறுவர் சீரழிவுகளும் வீட்டிலிருந்தும், கல்விக்கூடங்களிலிருந்தும் ஆரம்பிக்கிறது என்பதைப் புரிய வேண்டும். உங்கள் இல்லமும் அவ்வாறு ஆகாதிருக்குமாக
() உங்கள் செல்வங்களை பாடசாலைக்குக் கொண்டு விடும் வாகன சாரதிகள் விடயத்திலும் கவனம் தேவை. சமீபகாலங்களில் இந்தச் சாரதிகள் செயற்பாடுகளும் கேள்விக்குறியாகி விட்டன. ஒரு பெண்ணைப் பாதுகாப்புக்குக் கூட்டிச் செல்லும் வாகனம் கிடைத்தால் நீங்கள்
அதிர்ஷ்டசாலி

Page 77
150
சிறுவர் பாலியல் கொடுமைகள்
gjs' இதய நெருடல்கள்
ந்நூலைப் பொறுத்தவரையில், சிறுவர் - சிறுமியர்க்கு ஏற்படுத்தப்படுகின்ற கேவலங்களில் ஒன்றைப் பற்றி மட்டுமே எடுத்தாளப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஐந்தரை கோடி குழந்தைத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகத் தாரை வார்த்துள்ள
பாரதத்தாயின் பரிதாபத்தைப் படம் பிடித்திடவில்லை.
இலங்கை, மலையகம் (இந்திய வம்சாவளிகள்) சார்ந்த சிறு பாராயத்தினரின் உரிமைகள் சுரண்டப்படுவதைத் தொட்டுக்
காட்டவில்லை.
உலக வீதிகளையே உறைவிடமாகக் கொண்டு இலட்சக்கணக்கான இளம்வயதுக்காரர்கள் இன்னல்படுவதை விவரித்திடவில்லை.
ஆடு மாடுகளைப் போல ஆயிரமாயிரமாக அவர்கள் விற்பனை செய்யப்படும் விவரங்களையும் விவரமாகத்
தந்திடவில்லை.
ஆசியாவில் மாத்திரம் விபசாரத்தில் ஈடுபடுத்தப் பட்டிருக்கும் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட சிறுவர்களது சீரழிவைச் சித்திரிக்கவில்லை. سمبر

மானா மக்கீன் 151
ஏன்? ஏன்?
வேறொறுமில்லை. தொட்டால் எழுத்துக்கள் அதிகரிக்கும். பக்கங்கள் கூடும். இதிலெல்லாம் உங்கள் பொன்னான நேரங்கள் ஓரளவுக்குத்தான் செலவாக வேண்டும்.
என்றாலுங்கூட, நான் தொட்ட சிறுவர் சீரழிவு தகாத உறவில் இன்னும் சில மீதமிருக்கின்றன.
S இலங்கையில் தினமும் ஒரு சிறுவன் தகாத பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படுகிறான்.
$ 67பரும்பாலான apt/t/air 4666774 சீரழிப்பது உறவினர்களும் அண்டை அயலார்களும்,
S வயது கடந்த பெண்களும் சிறுவர்களைக் கெடுப்பதில்
வல்லவர்கள்.
S சிறுவர்களாக இருக்கும் பொழுது சீரழிந்தவர்கள் வாலிய வயதடைந்ததும் சிறியவர்களையே தேடுகிறார்கள்.
S ஆசியா வீக் என்ற பிரபலமான சஞ்சிகை,
உலகில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் இலங்கை மூன்றாவது நாடு
* பாலியல் நோய் சிகிச்சைநிலையங்களுக்கு வருவோரில் u sve ih சிறுவயதில் áoffI//Tố%3D tưữ பெற்றுக் கொண்டவர்களாகவே உள்ளனர். அதிலும் பெண்கள் 40
சதவிகிதம்.

Page 78
152 சிறுவர் பாலியல் கொடுமைகள்
இவற் ை)யெல்லாம் கருத்தில் கொண்ட ஜனாதிபதி
திருமதி சந்திரிகாவின் அரசு, சென்ற நூற்றாண்டின் இறுதிப்
பொழுதுகளில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிலொன்று. அதற்கான சட்டத்தை எதிர்க்கட்சி ஆதரவுடனேயே நாடாளுமன்றத்தி கொண்டு வந்தார் சந்திரிகா (சந்தேகப்படாதீர்கள். எதிர் கட்சியினர் கையை உயர்த்தி ஒகே சொல்லவே செய்தார்கள்!
நாள் 11ள12.1997
இதன் பின் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல், மற்றும் அவற்றினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாத்தல் என்பன தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. சட்ட மாஅதிபர் TTTTTTTAAA AAAA AAS AAA Aq TAq qq ATASAAS A TTS TTTTS பொலிஸ் மாஅதிபர் இலாகாவில் அவரது தலைமையில் விசேட பிரிவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
'உண்மையில் சமாதானம் மட்டுமல்ல, இலங்கையில்
பிரச்சினை. சிறுவர் சீரழிவும் அப்படியே.
இதற்கொரு முற்றப்புள்ளி எற்பட இது போன்ற ஆய்வுகள் துணை நிற்கட்டும்.
 

. 153 LOTSATT Dä5ốc
ஈடேறுதல்கள்
கோனார் தமிழ்க் கையகராதியைப் புரட்டிய சமயம் மேற்கண்ட தலைப்பு கிடைத்தது.
கடைத்தேறுதல் - வாழ்வடைதல் என்றெல்லாம் இதற்கு பொருள் உண்டு.
இந்நூலின் முதல் அத்தியாயம், "அவலங்கள்"என்பதில் ஆரம்பித்தால், முடிவான அத்தியாயம் "ஈடேறுதல்கள்' என்பதில் தான் முற்றுப்பெற முடியும்.
அப்படியே அமைகிறது.
சிறுவர்களைப் பொறுத்தவரையில், அவர்களது 12-18 வயதிற்குட்பட்ட பருவம் மிகவும் ஆபத்தானது. கண்டதே காட்சி, கொண்டதே கோலமென ஆசைகளுக்கு மட்டுமே ஆளாகிப் போகக் கூடிய பருவம். வாழ்க்கையின் அர்த்தமும் விளைவுகளும் புரியாத நிலையில் எந்தப்பக்கமாகவும் இலேசில் ஈர்க்கப்படக் கூடிய பருவம் அந்த 12-18! அந்தப் பருவங்கள் ஒழுங்காக செப்பனிடப்பட வில்லையானால் எதிர்காலம் திசை மாறிப்போய்விடும். முக்கியமாக,
ஒழுக்கம், கட்டுப்பாடு கெட்டுவிடும்.
- இது உளவியல் நிபுணர்கள் ஆய்வு.
அதுமட்டுமல்ல, அருவருக்கத்தக்க உறவுகளினால் எற்படக்கூடிய நோய்கள் (எய்ட்ஸ்) நிரந்தரமானவை.
வாழ்க்கையையே அழித்துவிடக் கூடியவை.

Page 79
சிறுவர் பாலியல் கொடுமைகள்
ஆனால் இவை இளங்கொழுந்துகளுக்குப் புரியவே புரியாது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை சிறுவர் உரிமைகள் பிரகடனம் ஒன்றை 1959 -ல் வெளியிட்டது. பின் 1979ஐ சிறுவர் ஆண்டாக அறிவித்து, மேற்படி பிரகடனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
அத்தோடு, சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானமொன்றில், சிறுவர்களைப் பாதிக்கும் செயல் புரிபவர்களைக் கைதுசெய்து தண்டிக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவது, வடுக்களை உண்டாக்குவது கொலை செய்வது முதலியவற்றோடு ஆயுதமோதல்களில் அவர்களை ஈடுபடுத்துவதையும் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம்
* நாடுகளில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு சிறுவர்களைப் பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் விசேடப் பயிற்சியளிக்க வேண்டும்.
என்றும் அத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதும் முக்கியமானவொன்று.
சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஜெர்மனி,
நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளும் புதிய சட்டவிதிகளைக் கொண்டு வந்துள்ளன.

155
LOTSET Lohács
இந்தியாவிலும் 2000-லேயே பல கடுமையான சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்தன. ஜூன் 17, 2000 -ல் டெல்லி மாநகரில் பல்லாயிரம் சிறுவர்கள் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி "கடுமையான சட்டங்களைக் கொண்டு வாருங்கள்" என அரசைக் கோரியிருப்பது ஒரு பரபரப்பான நிகழ்வு இதில் நடிகை மனிஷா கொய்ராலா முன்னணி வகிக்கிறார் அதனாலேயே இந் நூலின் முன் அட்டையை அலங்கரிக்கிறார்.
வியத்நாம் நன்கு கேள்விப்பட்ட நாடு. அமெரிக்க இராணுவத்தை ஓடஒட விரட்டிய நாடல்லவா! அங்கேயும் இந்தத் துஷ்பிரயோகத்தைத் துரத்த மரணதண்டனையே வழங்கிடும் வகையில் சட்டத்தைத் திருத்தி விட்டனர்.
அந்தவகையில், ஏழு வயதுப் பையனுடன் தகாத உறவு. கொண்ட 54 வயது ஃபிரெஞ்சுக்காரனுக்குக் கம்போடியாவிலுள்ள நீதிமன்றம் 1997 மார்ச் 3 -ல் தண்டனை அளித்தது.
யு. கே. எனப்படும் பிரிட்டன் (இங்கிலாந்து) இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் தனது தூதரகங்கள் மூலமாகப் பயனுள்ள ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது.
"செல்லும் இடங்களில் உல்லாசப் பயணிகளாகவே இருங்கள். சிறுவர் துஷ்பிரயோகிகளாகப் பிரிட்டிஷ் பிரஜைகள் மாறக்கூடாது' என எச்சரித்து பிரசாரம் செய்தது. முக்கியமாக பிர்யாண முகவர்களையும் அறிவுறுத்தியது.
இது பலன் தந்திருப்பதாகவே படுகிறது. எந்தச் செய்தியிலும் இப்பொழுது பிரிட்டிஷ்காரர்கள் சம்பந்தப்படாமல்
உள்ளனர்.

Page 80
156
சிறுவர் பாலியல் கொடுமைகள் தினக்குரல் - என்ற இலங்கை நாளேட்டின் 20.3.1998
இதழில் சுவர்ணராஜா நிலக்ஷன் இப்படி ஒன்றை எடுத்துக் காட்டுகிறார்.
வெறுமனே சட்டப்புத்தகத்தில் எழுதி வைத்து விடுவதால் குற்றச்செயல்கள் ஒழியப்போவதில்லை. தகுந்த முறையில் அத்தண்டனைகள் வழங்கப்பட்டு குற்றம் புரிந்தவர்களுக்கு எவ்விதக் கருணையும் காட்டப்படாது கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் சட்டத்தால் செய்யப்பட்ட எற்பாடுகள் ஒழுங்காக நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்ற நம்பிக்கையும், குற்றங்களைப் புரிந்தால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றிய அச்சமும் மக்களுக்கு ஏற்படும்.
மிக மிகச் சரி.
இவ்விடயத்தில் பெற்றோர் என்றும் பார்க்கக்கூடாது. பேராசிரியர்கள் என்றும் யோசிக்கக்கூடாது. சட்டம் என்றால், தண்டனை என்றால் எல்லோருக்கும் ஒன்றே என அமைதல்
வேண்டும்.
எதிர்காலத்தில், மிகக்கீழ்த்தரமான அருவருக்கத்தக்க சிறுவர் தகாத உறவு முற்றும் முழுதாக அழிக்கப்பட வேண்டுமானால்
நம் நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் பொதுமக்களுக்கு அறிவூட்டுவது அவசியம்.

A ) 15:՛ LOTaT pääsi
எங்கேனும் எந்தப்பிள்ளையேனும் அதற்குரி கெளரவத்துடனும், மதிப்புடனும் நடத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிருகங்களையும் விட கேடுகெட்ட மனோபாவம் மனித்ர்களிடமிருந்து மாற்றப்பட ஆவன செய்ய வேண்டும்.
ஒழுக்கம், கட்டுப்பாடு பேணத்தெரியாதவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கித் தண்டிக்க வேண்டும். இது இப்பொழுது இலங்கையில் நீதிமன்றங்களில் நிறைவேறத் தொடங்கியுள்ளது.
தூய்மையான இதயமும், நல்லொழுக்கமும், சுயக்கட்டுப் பாடும், பண்பும் பாசமும் எந்த மனிதரிடம் குடிகொண்டிருக்கிறதோ அவரால் இந்தக் கொடுமையையும் தடுத்த நிறுத்த முடியும்.
அந்த மனிதர் நீங்களாகக்கூட நிச்சயமாக இருப்பீர்கள்!
அடுத்த பக்கத்தில் எனது 'விடைபெறும் வேளை காத்திருக்கிறது. அதையும் தவறாது படித்திடுங்கள்.

Page 81
158
சிறுவர் பாலியல் கொடுமைகள்
இ விடைபெறும் வேளை
எனதருமை அபிமானிகள் பின்வரும் கடிதத்தை முதலில் படியுங்கள்.
அன்பிற்குரிய திருமதி செனவிரட்ன,
தாங்கள் அனுப்பிவைத்திருந்த சிறுவர் பாலியல் கொடுமைகள் உலகளாவிய ரீதியில் என்ற நூல் 90% நாளேடுகளில் வந்த செய்திகளையே கொண்டுள்ளது என்பதை நாங்கள் காண்கின்றோம். அத்தோடு, பெரும்பாலும் இரண்டாம்தரமான தகவல்களைக் கொண்டதாகவும் உள்ளது. (Mostly Secondary Information) Gr(gig Territ தகவல்களைத் திரட்ட கஷ்டப்பட்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவை பெரும்பாலும் இரண்டாம்தரமான தகவல்களையே கொண்டுள்ளன (Mostly Secondary information). LopgriLib Disra)a), படித்துப்பார்த்தார். அவரது பேச்சின்படி, இந்த நூலை வைத்து எழுத்தாளரது திறமையை அவ்வளவாக உயர்த்திச் சொல்ல முடியாதுள்ளதாம்,

0 - 0 159 மானா மக்கீன்
என்றாலும், பெரும்பாலான பக்கங்களில் இடம் பிடித்திருக்கும் பத்திரிகைச் செய்திகளுடன், "பீஸ்' (PEACE) சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை' (Child Protection Authority) பற்றியும் சில பக்கங்களில் சொல்லி இருக்கிறார்.
பீஸ்'அமைப்புக்கு நெருக்கமானவர்களை விட வெளியில் உள்ள வேறு யாராவது ஒருவர் இந்த நூலை விமர்சிக்க வேண்டும்.
இப்படியொரு கடிதம் இந்த நூல் கையெழுத்துப் பிரதியாக இருக்கும்பொழுது எழுதப்பட்டது.
யாருக்கு? நான் அணிந்துரை கேட்டுப் போன பீஸ்" (Peace) அமைப்பின் தலைவி திருமதி மோரின் செனவிரத்ன அம்மையாருக்கு (அந்த ஆங்கிலக்கடிதம் அப்படியே கடைசிப் பக்கத்தில் ஆதாரத்திற்காகத் தரப்பட்டுள்ளது.
எல்லா எழுத்தாளர்களையும் போல நானும் எனது நீண்ட எழுத்துப் பயணத்தில் இவ்வாறான கருத்துக்களைப் பெற்றுள்ளபடியால் கலங்கிப் போய் விடவில்லை குழம்பித்தான் போனேன்!
தமிழ்த்தெரியாத மோரீன் செனவிரத்தின அம்மையார், தமது அமைப்பைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணியிடம் (அவர் பெயர் கடிதத்தில் தெளிவாகத் தெரியவில்லை கருத்துக் கேட்டுள்ளார் - அணிந்துரை' வழங்குமுன் அந்தப் பெண்மணியும்

Page 82
160
சிறுவர் பாலியல் கொடுமைகள்
தமது துணைவருடன் இந்நூலைக் கையெழுத்துப் பிரதியாக படித்துள்ளார்.
அவர்கள் எந்தக் கருத்தையும் குறிப்பையும் முன்வைக்கச் சுதந்திரமுடையவர்கள். தலையிட யாருக்கும் முடியாது. அந்த வகையில் என்னாலும் முடியாது.
ஆனால் ઈી6) 'நெருடல்கள்' கடிதத்தில் எனக்குள்ளனவே அவற்றை யாருடன் அலசித் தீர்ப்பது?
எனக்குள்ள ஒரே சொத்து எனது அபிமானிகளே!
அந்த வகையில் நீங்களே கீழ்க்கண்டவற்றைத் தீர்த்து வையுங்கள்
இப்படியானதொரு நரலைக் கற்பனையில் எழுதி முடிக்க முடியாது! ஆதாரத் தகவல்களுக்கு ஊடகங்களின் தனையைத் தான் நாட முடியும். அதிலும் காற்றோடு கலந்து விடுகிற வானொலி, பார்வையிலிருந்து மறைந்து போய்விடுகிற தொலைக்காட்சி இரண்டையும் தள்ளிவிட்டு அச்சிலே பதிவாகியுள்ள பத்திரிகைகளைத்தான் நான் நாட முடியும், ஆதாரமாகத் தேதியிட்டுச் சொல்ல முடியும். இந்த நிலையில் நாளேட்டுத் தகவல்கள் தாமே இந்நூலில் பெரும்பாலான பக்கங்களில் வரமுடியும்?
இந்நிலையில், கடிதத்தில் கருத்துத் தந்த அம்மையார் இந்த நடைமுறையைச் சாடி இரண்டாம்தரமான தகவல்கள்' (Secondary Information) TLigi 376r? 676r?

LorGT pääsi 161
அதுமட்டுமல்ல, Secondary இரண்டாம் நிலை என்று குறி' C ல் FIRST (முதன்மை நிலை என ஒன்று இருந்தாக வேண்டுமே அந்த FIRST இந்த அம்மையாரின் எண்ணத்தில் எது?
4-ம்.5-ம்,6-ம்,7-ம்,8-ம்,9-ம்,10-ம், அத்தியாயங்களில் D 6T6T606) algoortb FIRST 9óoa)6/m? Secondary Information
தானா?
இவரது கடிதத்தில் உள்ள வேறுசில தனிப்பட்ட குறிப்புகளின்படி, அவர் வயது வந்த மகளார் ஒருவருக்கு (என்னைப் போல) தாயாகவும் உள்ளது புரிகிறது, அப்படிப்பட்ட ஒருவர் பிள்ளைச் செல்வங்களுக்கு ஏற்பட்டுள்ள அவலங்களைத் தொட்டுப் காட்ட பத்திரிகைச் செய்திகளை நான் ஆதாரமாக எடுத்துக் கையாண்டால் 'அது இரண்டாம்தரத் தகவல்' (Secondary Information) என ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சுட்டுவது ஏன்?
ஏன்?
sf, Gust 6015 Gums, Gib. First Information GT606) என்பதையாவது எனக்குக் கோடிட்டுக்காட்டி (என் முகவரி மறுபக்கத்தில்) இன்னொரு நூல் எழுத எனக்குத் துணை செய்திட எல்லாம் வல்லவன் துணை புரிந்து நமது பிள்ளைச்
செல்வங்களைக் காப்பாற்றுவானாக.
இதனை ஆயாசத்துடன் படித்த அபிமானிகளுக்கு ஆயிரமாயிரம் நன்றியறிதல்கள். அதே நேரத்தில் என் குருவிக் கூட்டை செவ்வனே பரிபாலிக்கும் என் நிழல்' (துணைவி,

Page 83
162 சிறுவர் பாலியல் கொடுமைகள்
தொலைதூரத்தில், பங்களாதேஷ், சிட்டகாங் மருத்துவக் கல்லூரியில் பிரிவுத் துயரைத் தாங்கிக்கொண்டு மருத்துவக் கற்கையில் மூழ்கியுள்ள மகளார் அஞ்சானா, ரோயல் கல்லூரியில் உயர் கல்வி முடித்து, அடிவானத்திற்கு அப்பால் ஒரு நல்ல எதிர்காலத்தைத் தேடும் மகனார் அஹ்மது அளிம், சென்னை மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குநர் திருமிகு ரவி தமிழ்வாணன், நூல் தயாரிப்பாளர் திரு.இரா.மோகன், நாகர்கோவில் இளவல்கள் சைபுல்லா முஹம்மது பைஸ் ஆகியோர் தங்கள் வேலைப் பளுவுக்களுக்கு மத்தியில் எனக்குப் பக்கபலமாக நின்றமைக்குப் பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும்.
எப்பொழுதும் எழுத்துப் பணியில் proot pist
ஒரு முக்கிய அடிக்குறிப்பு :
எங்கே அந்த அம்மையாருடைய (திருமதி மோரின் செனவிரத்ன) அணிந்துரை என்பீர்கள்! எப்படிக் கிடைக்கும் Secondary information Tg)5(5?
முகவரி
B-54-A.
N.H.S. Flats, Maligawatte, Colombo-10
SRI LANKA
Ph : 33 22 25

இப்படியொரு கடிதம் இந்த நூல் கையெழுத்துப் பிரதியாக இருக்கும்பொழுது எழுதப்பட்டது.
പ്പ് 3/- 7-ch
・ジ・ヘみ * سعہہور مجھمر ہرن ہستی
.M4M , ;( ' جلسہہيہم“ k مهم
بی عمر ضد الهی به A) A منگs/
2 . ^ص ماه مکه مکم مهمینمایع ر ستہ ہسٹگمجمہ سکیسرسلم یہ مہنگ ہی بہتر
久a
. گر e ہی مہم اسم جہلم محمد کہہ کر ۔ سعیدہ ہو گا تمھمہ گیم “ م&/ بندگی بس پھیک/ : محمد علم/ }عماڑ عیش محمدہمثلکہ ہر سبڑی محنیفہ کولہلم ممنہمہ ومحہ گرہستہ یخ کی- اسکی کریمہ، جماعر റn?pr 997 2 کلو مماسہ ص کر کسوس بھر تلگو/ .芷尝芳笼芝芳笠സ്ഥJ. 7. --l بھصہ سمعہ Aعجم محرم یا ٹھیک کتحت عالمستقر -لو گرہی ہے مہسہراس (سہلم fേ پر سبربر طلسمگر ہو ہمطبعہ اس aulu- އއއއ://
سمحریکبر موعد )صصه علم رحیم گھر سہرہ موسم سمسلمگر / ہبہ (S ستگر سروس کر سکہ لحہ ہسv اسکے محمدرحمہساس ہوترہ S۔ لحرکیہ ہمہصہ س۷/ سامسمی آی . غ۸ دسA محل تحس\گرسیحی 2/ صہسطر حصہستہ سعھہیلر
مستعڑھ حساس سلسلاستمریم مہارヘ Z***/ انعارلس ہC /才ン /K- 7ി. റീപ്ലേ ^*例念 ീഴ്ക~': ി. ?:% uീ0് -- SIKITA-u od 4e MMM el-/. og

Page 84


Page 85
盛
ణ్ణి ప్ర్ర
露
 

シ
※“密
*******餐變