கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல்

Page 1
pಖಂಡರಾಗಿ Lඋසියපmérucපගත් ਸaਗ
 


Page 2

குசீரங்-யல்பானியங்வமர்வில்
குைப்பொங்கல்
முனைவர் மனோன்மணிசண்முகதாஸ் வருகை ஆய்வாளர்
கக்சுயின் பல்கலைக்கழகம்
தோக்கியோ

Page 3
Tamilar-Yappäniyar Vallvil Taipponkal
(C) Prof. Dr. A. Sanmugadas University of Jaffna, Jaffna, Sri Lanka.
Author Dr. Manonmani Sanmugadas FormerVisitingResearch Fellow
Gakushuin University, Tokyo, Japan:
First Edition October 2003
Layout & design S. Krishnamoorthy Bhavani Krishnamoorthy
Printed by KRIBs PRINTERS (Pvt) LTD.

முன்னுரை
தமிழ் மொழிக்கும் யப்பானிய மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டா? என்ற கேள்வி இன்று பலரது உள்ளத்திலும் இருக்கின்றது. கக்சுயின் பல்கலைக்கழகத் தலைவர் பல்கலைக்கழகத்திலே பயிற்றுகின்ற, ஆராய்ச்சி செய்கின்ற பிறநாட்டவர்களை விருந்தொன்றுக்கு அழைத்திருந்தார். அந்த விருந்துக்கு வந்திருந்த பிறநாட்டவர் பலர் என்னிடம் இக் கேள்வியைக் கேட்டனர். கச்சுயின் பல்கலைக்கழகத்திலே கடந்த இருபது ஆண்டுகளாக ஆய்வாளராக இருந்துதமிழ்மொழிக்கும் யப்பானிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய ஆய்விலே ஈடுபட்டிருக்கும் என்னிடம் அதுபற்றிய தகவல்களை அறியவே அவர்கள் அக்கேள்வியைக் கேட்டனர். அவர்களில் பலர் ஒரிரு ஆண்டுகள் மட்டுமே அங்கு வந்து பணிசெய்பவர். பல்கலைக் கழகப் பணியேற்று தோக்கியோ வந்தபின் இந்த ஆய்வு பற்றியறிய விரும்பி னார்கள். அவர்களைப் போலவே தமிழர்களும் இதைப் பற்றியறியாதுள் ளனர். இதுவரை ஆய்வுசெய்து என்ன தகவல்கள் கிடைத்துள்ளன? அவை பொருத்தமானவையா? என்ற கேள்விகளும் எழக்கூடும். எனவே இத்தகைய கேள்விகளுக்கு எம்மாலியன்ற விடையைத் தமிழிலே தர எண்ணியதன் விளைவே இந்நூலாக்கமாகும்.
இன்னொரு வகையிலே இந்நூலைப்படிப்பவர்கள் இந்த ஒப்பீட்டாய்வு பற்றிய தமது எண்ணங்களை இனிமேல் வெளியிடக்கூடும். ஆய்வு பற்றிய செய்திகள் பெரும்பாலும் யப்பானிய மொழியிலேதான் வெளிவந்தன. இந்நூலில் சுருங்கிய முறையிலே அத்தகவல்கள் தமிழிலே தொகுக்கப் பட்டுள்ளன. இரண்டு நீண்ட கட்டுரைகளாக நூல் அமைந்துள்ளது. முதற் கட்டுரை தொடக்கத்தில் மிகச் சுருங்கிய வடிவில் செய்தித்தாளில் வெளி வந்தது. தைப்பொங்கல்பற்றிய செய்திகள் பழைய இலக்கியச்செய்திகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு தைப்பொங்கலின் தொடக்கநிலை பற்றிய சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சொல்லாய்வு நிலை எவ்வாறு பண்பாட்டு நிலையான ஆய்வுக்கு வழிவகுத்தது என்பது பற்றிய தெளிவை அக்கட்டுரை நல்குமென நம்புகிறோம். பண்பாட்டு நிலையிலே இது தொடக்க ஆய்வுநிலை என்பதை பலரும் உணரவேண்டும். கொழும்பில் நடைபெற்ற தமிழாராய்ச்சியின் வளர்ச்சிநிலை பற்றிய கருத்தரங்கிலே “யப்பானிய மொழிக்கும் தமிழ்மொழிக்குமுள்ள தொடர்பின் ஆய்வுநிலை வரலாறும் வளர்ச்சி நிலைகளும்” பற்றிய கட்டுரை படிக்கப்பட்டபோது பண்பாட்டுநிலை பற்றிய ஆய்வு எப்படி அமையவேண்டும் என்ற கருத்தை திரு.க.சண்முகலிங்கம் தெரிவித்திருந்தார். அவர்முன்னர்நடைபெற்ற மொழி
3

Page 4
ஒப்பீட்டு ஆய்வுத்தரவுகளையோ, கருத்துக்களையோபடிப்பதற்கு முழுமை யான வாய்ப்புப் பெற்றிராதபோதும் கருத்தரங்கிலே படிப்பதற்காக எழுதப் பட்ட கட்டுரையை முதலிலே படித்துப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றதால் கருத்தைக்கூறும்தகுதியைப் பெற்றார். இன்னும் அவரோடு தொடர்புடைய யப்பானியரும்தமிழ் - யப்பானிய ஒப்பீட்டாய்வு பற்றிய கருத்தை அவரிடம் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே கருத்தரங்கக் கட்டுரையை நூல் வடிவிலே அமைப்பது பலரும் அது பற்றியறிய வாய்ப் பளிக்கும் எனநம்புகிறோம்.
இரு கட்டுரைகளும் அமைப்பு நிலையிலும் வேறுபட்டவை என்பதை முன்னரே குறிப்பிடுவதும் நன்று. முதலாவது கட்டுரை தகவல் தொகுப்பும் விளக்கமுமாக அமைகிறது. இரண்டாவது கட்டுரை ஆய்வு நிலைத் தரவு களையும் ஆய்வுநிலையின் வளர்ச்சிப் போக்குகளையும் ஆய்வின் விமர்சன நிலைப்பாட்டையும் விளக்குவது. கட்டுரையின் பின்னிணைப்பும் இதனை நன்கு விளக்கும். சர்வதேச நிலையிலே தமிழ் - யப்பானிய ஒப்பீட்டாய்வு எவ்வாறு கணிக்கப்படுகிறதுஎன்பதையும் பலரறிய அவாவுற்றுள்ளனர்.
நூலாக்கத்திற்குப் பேராசிரியர்சுசுமு ஓனோவின்யப்பானிய மொழியிலே எழுதப்பட்டுள்ளநூல்களும் கட்டுரைகளும் பெருமளவிலே பயன்படுத்தப் பட்டுள்ளன. பல செய்திகளைவிளக்கமாக அவரிடம் அறியமுடிந்தது. அதற்கு அவருக்கு நன்றி கூறவேண்டியது எமது கடமை. தமிழ் - யப்பானிய மொழி ஒப்பீட்டாய்வு பற்றி யப்பானிய அறிஞர்களிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளின் பின்னணியைப் பலர் அறியார். தமிழ்மொழி பற்றிய அறிவின்மையும் யப்பானிய மொழியின் பழைமையான நிலை பற்றிய அறிவின்மையும் கருத்து வேறுபாட்டிற்கு அடிப்படையாக அமைவதையும் ஆய்வாளர் பலர் அறியார். மொழி ஆய்வு பற்றிய வேறுபட்ட கோட்பாடு களும் காரணமாயமைகின்றன. காலப்போக்கில் ஆய்வாளர் தெளிவடைவர் என்றநம்பிக்கை பேராசிரியர்ஒனோவிடம் இருப்பதால் தொடர்ந்தும் ஆய்வு செய்துவருகிறார்.
நூல் வடிவ அமைப்பைத் தொகுத்து உதவிய கணவருக்கு நன்றி கூறுவது அழகல்ல. தமிழ் யப்பானிய ஒப்பீட்டாய்விலே கடந்தஇருபது ஆண்டுகளாக அவரும் ஈடுபட்டுள்ளார் என்பதையும் இந்நூலிற்பொறிக்க வேண்டியது எம் கடமை. கட்டுரை எழுதும்போது யப்பானியநூல்களைத் தேடித்தந்துதவிய மொழியியல் நிறுவன காரியதரிசி SUNAO OZAKI யின் உதவிக்கும் என்றும் நன்றியுடையோம். அவர்எமதுதமிழ் மாணவியும்கூட
இன்னும் இந்நூற்படியை எழுதுவதற்கு நல்ல சூழலைத் தந்துதவிய கக்சுயின் பல்கலைக்கழகத்திற்கும் நாம் நன்றிசொல்லவேண்டும்.நூலைநூல் வடிவாக்கி தமிழுக்குப் பணி செய்யும் எஸ். கிருஷ்ணமூர்த்திக்கும் பவானி கிருஷ்ணமூர்த்திக்கும் எமதுநன்றிகள்.

உள்ளடக்கம்
1. தமிழர்-யப்பானியர்வாழ்வில்தைப்பொங்கல்
2. தமிழ்மொழியும் யப்பானிய மொழியும்-ஒப்பீட்பாய்வு
வரலாறும்வளர்ச்சிநிலைகளும்

Page 5

I
தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல்
1. பழந்தமிழர் பண்பாடு
LDனிதன் நிலையாக ஓரிடத்திலே தங்கி வாழத் தொடங்கியபோது பண்பாடும் உருவாக்கம் பெறத் தொடங்கிற்றெனலாம். நாடோடி வாழ்க் கையிலிருந்து முன்னேறிய மனிதன், நிலத்தைப் பண்படுத்திப் பயிர் விளைவிக்கத் தொடங்கியபோது அவனது உறைவிடம் நிலைபெற்றது. வாழும் துழலின் இயல்பும் இயற்கை நிலையும் மனித வாழ்வுடன் நெருக்கமுற்றன. அவற்றின் இயல்புகளையும் மனிதன் தன் வாழ்விய லின் போக்காகவும் எண்ணினான். தனிமனிதனாக அன்றிக் கூட்டு நிலை யிலே குடும்பமாக வாழ மனிதன் எண்ணியதற்கும் இதுவே காரணமாக வும் அமைந்தது. 'பண்பாடு' என்னும் சொல்லின் பொருள் இன்று, மனித வாழ்வியலின் வரலாற்று வளர்ச்சி நிலையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. மனிதப் பண்புகளின் வளர்ச்சி நிலைகளையும் அது உள்ளடக்கியுள்ளது. ஆங்கிலத்திலுள்ள culture என்னும் சொல்லுக்கு நேர்ப் பொருள் தரும் தமிழ்ச் சொல்லாக இச்சொல் பயன்படுகின்றது. அறிஞர் டி. கே. சிதம்பரநாத முதலியார் இதனை முதலில் பயன் படுத்திய பெருமையைப் பெறுகிறார். பயிரிடுவதற்கு ஏற்ற நல்ல நிலம், மனித வாழ்வியலின் பண்புகளை வெளிப்படுத்தும் குறியீடாக அமைந் தது. பயிரிடும் நிலத்துடன் தொடர்புடைய கருவிக் கையாட்சி, வழக்கங் கள், நம்பிக்கைகள், வழிபாட்டு நிலைகள் யாவற்றையும் பண்பாடு' என்ற சொல்லுள் இதனால் அடக்குவதும் எளிதாயிற்று.
பழந்தமிழர் பண்பாடு பற்றிய செய்திகளை அறிவதற்கு எழுத்துருப் பெற்ற ஆவணங்களான இலக்கியங்கள் உள்ளன. சங்க இலக்கியங்கள்
பழைய செய்திகளைத் தொகுத்துக் காட்டுகின்றன. சிறப்பாகப் பழந்
7

Page 6
மனோன்மணி சண்முகதாஸ்
தமிழரது வாழ்வியலையும் பண்பாட்டு நிலையையும் நன்கு விளக்கியுள் ளன. மனித அகவாழ்வும் புறவாழ்வும் அன்று அமைந்திருந்தவாற்றை அறிவதற்கும் இவ்விலக்கியங்கள்தான் இன்று உதவுகின்றன. கால அடிப்படையிலே மனிதப் பண்பாடு பற்றி செய்திகளைத் தேடிப்போகும் போது சங்க இலக்கியங்களைத் தேடிப் படிக்க வேண்டியுள்ளது. தமிழர் களது பண்பாட்டின் பழமையைப் பறைசாற்றும் சான்றுகளாகவும் இன்று சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பெரும் தொகுப்பு நூல்கள் தமிழர் பண்பாடு பற்றிய பழைய செய்திகளைக் கூறுகின்றன.
கி.மு. 300 இலிருந்து கி.பி. 300 வரையான காலப்பகுதியிலே பாடப் பெற்ற பாடல்களே இத்தொகுப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. குறும் பாடல்களும், நெடும்பாடல்களுமாக அமைந்த பாடல்கள் தொகுப்பு நிலையிலே சில சிறப்புப் பெயர்களையும் கொண்டுள்ளன. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து என அவை அமையும்.
இவற்றுள் நற்றிணை நல்ல திணை பற்றிய பாடல்களைக் கொண்டுள் ளது. திணை என்ற சொல் நிலம், ஒழுக்கம் என இரு பொருளில் வழங்கப்பட்டுள்ளது. அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து என்பன தொகுக்கப்பட்டுள்ள பாடல்களின் எண்ணிக்கையால் பெயர் பெற்றுள்ளன. குறுந்தொகை குறுகிய 401 பாடல்களின் தொகுப்பாகும். கலித்தொகை, பரிபாடல என்பன பாடல்களின் செய்யுட்பண்பு நோக்கிப் பெயரிடப்பட்டவையாயுள்ளன. பத்து நெடும் பாடல்களின் சிறப்புப் பெயர் நிலையும் குறிப்பிடத்தக்கது. திருமுருகாற்றுப்படை, பொருநராற் றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப் படை (மலைபடுகடாம்) என்பன ஆற்றுப்படுத்தல் (வழிப்படுத்தல்) நிலை யிலே சிறப்புப் பெயர் பெற்றுள்ளன. குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு என்பன மலர்களின் பெயரால் அழைக்கப்பட்டன. பட்டினப்பாலை பட்டினம் பற்றிய செய்தி கூறுவதால் பெருமைபெற்றது. நெடுநல் வாடை பருவகால நிலையில் தனித்துவம் பெற்றது. மதுரைக்காஞ்சி அறிவுரை நிலையில் சிறப்புப் பெற்றது.
இப்பாடல்களிலே கூறப்பட்ட செய்திகளிலே தமிழர் வாழ்ந்த நிலப் பரப்பின் தன்மை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. முதல், கரு என்ற இருபொருள் நிலையிலே நிலமும், பொழுதும், நிலத்தினுள்ள பொருள் களும் விளக்கப்பட்டுள்ளன. எனவே மனிதனின் வாழ்விடத்தைப் பற்றிய செய்திகளை விரிவாய் அறிய சங்க இலக்கியங்களே பெரிதும் உதவும் சான்றாயமைந்துள்ளன. பழந்தமிழர் பண்பாடு பற்றிய பல செய்திகளை
8

தமிழர்-யப்பானியர்.
அவை தருகின்றன. மனிதன், உணவு, உடை, உறையுள், உணர்வுநிலை என்பன பற்றிய விரிவான செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மனித வாழ்வியலின் வளர்ச்சி நிலையை அறிவதற்கு இப்பாடல்களின் செய்தி கள் நுணுக்கமாக நோக்கப்பட வேண்டியுள்ளன. மனிதனின் பிறப்புத் தொடங்கி இறப்பு வரையிலான செயற்பாடுகள் பாடல்களில் குறிப்பிடப் பட்டிருப்பதால் அவற்றைத் தொகுத்துக் காணும்போது மனித வாழ்வி யலின் வரலாறும், வளர்ச்சிநிலையும் தெளிவு பெறும். பழந்தமிழர் பண்பாடு பற்றிய தெளிவுநிலையும் இத்தரவுகளாற் பெறப்படும்.
மனிதப்பண்பாடு பற்றிய ஆய்வு இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி தற்போது மிக முனைப்புடன் செய்யப்பட்டு வருகிறது. மேலைத்தேய மானிடவியலாளர் கீழைத்தேயப் பண்பாடு பற்றிய ஆய்வுகளில் நாட்டம் கொண்டுள்ளனர். குறிப்பாகத் தமிழர் பண்பாடு பற்றிய ஆய்வுகளும் நடைபெற்றுள்ளன. ஒப்பீட்டுநிலையிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், பழந்தமிழிலக்கியத் தரவுகளை நுண்ணிதாக நோக்கும் பண்பு குறைவாகவே காணப்படுகிறது. பழந்தமிழர் பற்றிய இலக்கியப் பதிவுகள் முழுமையாக ஆங்கில மொழியிலோ அன்றிப் பிறமொழிகளிலோ இன்னும் மொழிபெயர்ப்புச் செய்யப்படவில்லை. இதனால் இலக்கியத் தரவுகளை முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு மேலைத்தேசத்தவர்க்குக் கிடைக்கவில்லை. தமிழிலக்கியப் பதிவுச் செய்திகள் அகழ்வாய்வுத் தரவுகளுடன் நன்கு இணைவதையும் சில ஆய்வாளர்கள் தமது ஆய்வு நூல்களிலே குறிப்பிட்டுள்ளனர். எனினும், பண்பாட்டுநிலையின் கூர்மைநிலையைக் காட்டும் தரவுகளாக இலக்கி யத் தரவுகளை ஏற்றுக்கொள்வதற்குப் பல மேலைத்தேச ஆய்வாளர்கள் இன்னமும் பின்னிற்கின்றனர். அவர்கள் சங்க இலக்கியங்களின் செய்தி களைப் புனைந்துரைகள் என்று எண்ணவும் முற்படுகின்றனர். தமிழர் பண்பாட்டில் சில நடைமுறைகள் பண்டுதொட்டு இன்றுவரை கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன. கால ஓட்டத்தில் அவற்றின் விளக்கமும் கரைந்து வருகிறது. பிறநாட்டுப் பண்பாட்டின் தாக்கம் தமிழரிடையே பரவிச் செல்வாக்குப் பெற்றபோது தமிழரது தனித்துவமான பழைய நடைமுறைகளும் அவற்றுடன் தம் நிலை மாறியுள்ளன. பழந்தமிழரது நடைமுறைகள் பல ஆரியப் பண்பாட்டின் பரம்பலால் மாற்றமுற்றுள் ளன. இன்று அப்பழைய நடைமுறைகள் பற்றிய செய்திகளை மீளாய்வு செய்து பெறவேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. இன்னும் மேலைத் தேயப் பண்பாட்டுக் கோட்பாடுகளுடன் தமிழர் பண்பாட்டு நிலைகளை ஒருசேர வைத்து நோக்கிப் பார்ப்பதனால் உண்மையான பழைய பண்பாட்டுத் தளங்களைப் புறந்தள்ளும் நிலையும் உருவாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையிலே தமிழர் பண்பாட்டு நடைமுறைகளைப் பிற

Page 7
மனோன்மணி சண்முகதாஸ்
இனத்தவர் பண்பாட்டுடன் ஒப்புநோக்கிப் பார்க்கும் முயற்சியும் தோன்றி யுள்ளது. தமிழ்மொழிக்கும் யப்பானியமொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்ற கோட்பாட்டை முன்வைத்துக் கடந்த பதினேழு ஆண்டு களாக ஆய்வு செய்து வரும் யப்பானிய மொழியியற் பேராசிரியர் சுசுமு ஒனோ குறிப்பிடப்பட வேண்டியவர்.
பண்பாட்டு ஒப்பாய்வு
மொழியியல் நிலையிலே தமிழ்மொழியையும் யப்பானிய மொழி யையும் ஒப்பீட்டாய்வு செய்த பேராசிரியர் ஒனோ ஒப்புநிலைச் சொற் களாக 500 சொற்களைத் தந்துள்ளனர். அவற்றுள் பயிர்த்தொழிலுடன் தொடர்புடைய 27 சொற்களை சிறப்புற வேறுபடுத்திக் காட்டியுள்ளார். அவற்றைப் பொருள் நிலையிலே வகுத்து நுண்ணாய்வும் மேற்கொண்டு வருகிறார். ஒலி நிலையிலும் பொருள் நிலையிலும் ஒற்றுமையுற்றிருக் கும் இரு மொழிகளும் பண்பாட்டு நிலையிலும் ஆழமான தொடர்புடை யனவாயிருக்க வேண்டும் என்ற கருத்தையும் அவரது ஆய்வு வெளிப் படுத்தியுள்ளது. 'பண்பாடு' என்ற சொல் முன்னர் குறிப்பிட்டதுபோல் பயிர்த்தொழில் நிலையில் விளக்கம் பெற்றதால் பண்பாட்டு ஒப்பீட்டாய் விலும் பயிர்த்தொழில் நிலையான சொற்கள் பெறப்பட்டபோது அவை சான்றுகளாகவும் அமைந்தன. அச்சொற்களை 4 நிலைகளிலே ஒனோ வகுத்துக் காட்டியுள்ளார். அவற்றைக் கீழே அட்டவணை நிலையில் தருவது பயனுடைத்து.
சொல் - பொருள் ஒற்றுமை நிலை
வகைப்பாடு யப்பானியச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் 1. உழவு 1. FATAKË PATUKAR படுகர்
செய்நிலம்
2 TAMBO TAMPAL தம்பல்
3. AZE ACCU அச்சு
4. KURO KURAMPU குரம்பு
5. ANA ANAI அணை 6. ADE ANTAI அண்டை
8. KOBO KUMARI குமரி
9. INA ENAL ஏனல்
10

தமிழர் -யப்பானியர்.
வகைப்பாடு யப்பானியச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் II. GLumB56ýr 10. SINAI TINAI தினை தொடர்பு TINAI தினை
12. WASE PACCAI பச்சை
13. NI NEL நெல்
11. உணவு 14. AFA AVAI அவை
ogs"-fi‘H 5. KUMA KUMA குமை IV. Ggsmyslaio 16. KÖME KUMA குமை
17. ARE ARAI அரை
18. NUKA NUKKU நுக்கு
19. SITÖGI CĪTAI சீடை
20. KAYU KALl களி
21. MOTI MOTAKAM மோதகம்
22. KATU KOTTU கொட்டு
பிற 23. FUKASU PUKAI புகை G5 TL -il-H 24. WARA VARAL வறல்
25. FÖ PU
26. FONKARA PONKALO பொங்கலோ
PON KAL பொங்கல்
27. FERA VEL வேல்
சொற்களின் ஒற்றுமை நிலையில் 'பொங்கல்' என்ற தமிழ்ச் சொல் லும் FONKARA என்னும் யப்பானியச் சொல்லும் பேராசிரியர் ஒனோ வைப் பண்பாட்டு நடைமுறை ஒப்பாய்வுக்கு இட்டுச் சென்றன. தமிழர் களது தைப்பொங்கலுக்கும் யப்பானியரது KOSHOGATSU (சிறு புத்தாண்டு) இற்குமிடையே நன்கு உணர்ந்து நுணுக்க ஆய்வை மேற்கொள்ளலானார். இரு இனத்தவரது நடைமுறைகளுக்குமிடையே காணப்பட்ட ஒற்றுமை நிலைகளையும் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். கட்டுரை வடிவிலும் நூல் வடிவி லும் அவை வெளிவந்துள்ளன. இவ்விரு நடைமுறைகளைப் பற்றித் தமிழரும் தெளிவாக அறியவேண்டி இச்சிறு நூல் செய்திகளைத் தொகுத்து தமிழில் வழங்குகிறது.
ஒற்றுமையிருப்பதை ஒனோ
1

Page 8
மனோன்மணி சண்முகதாஸ்
2. சங்கச் செய்யுட்கள் காட்டும் நடைமுறைகள்
தமிழரது பண்பாட்டு நடைமுறைகளில் ஒன்றான 'தைப்பொங்கல் பற்றிய நுண்ணாய்வுகள் இன்னும் தெளிவான முறையிலே மேற் கொள்ளப்படவில்லை என்றே கூறக்கிடக்கிறது. இன்று தமிழர் கடைப் பிடித்து வரும் தைப்பொங்கல் பற்றிய வழக்கங்களின் தோற்றம் அல்லது அடிப்படை பற்றிய செய்திகள் யாவும் பொது நிலையான சமய வழிபாட்டு நடைமுறை நிலையாகவே வெளிவந்துள்ளன. தமிழர் வாழ்வியலில் தைப்பொங்கல எவ்வாறு வழிபாட்டு நிலையுடன் தொடர் புற்றது என்பதை ஆராயவேண்டிய தேவையும் இப்போது ஏற்பட்டுள்ளது. இயற்கையோடு நெருங்கி மனிதன் வாழ்ந்த காலத்தில் பல நடைமுறை களை ஏற்படுத்தி வாழ்ந்துள்ளான். அந்த நடைமுறைகளிற் சில பழைய காலத்திற்கு மட்டும் பொருந்தி அமையாமல் எக்காலத்திற்கும் ஏற்றவை யாக உள்ளன. சிறப்பாக இயற்கையோடு ஒட்டிய தொழில் நிலைகளோடு தொடர்புற்றிருந்த நடைமுறைகள் இன்றும் பொருந்துகின்றன. மனித வாழ்க்கையின் செல்நெறியானது வெறுமனே உண்பதும் உறங்குவதுமே என அமையாது தன்னைச் சார்ந்தும், தழ்ந்தும் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் பயன் தருவதாக நிறைவுபெற வேண்டுமென்பதே தமிழர் வகுத்த நடைமுறைகளின் அடிப்படையாக அமைந்திருந்தது எனலாம். தமிழர் நிலைத்து வாழ்ந்த இடங்களிலே காலநிலையின் தன்மைக்கும் இயற்கைச் சூழலுக்கும் இயைய நடைமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.
சங்கப் பாடல்களிலே இத்தகைய நடைமுறைகள் பற்றிய செய்திகள் உள. தைத்திங்கள் சங்கப்பாடல்களிலே சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. கார்காலமாகிய மழைக்காலம் முடிந்து கதிரவனின் வெப்பத்தை மக்கள் மீண்டும் பெறுங் காலம் தைத்திங்களாகும். கதிரவனின் செல்நெறி மாற்றமும் வெப்பநிலையின் உயர்ச்சியும் இத்திங்களின் தொடக்கத்தை மக்களுக்கு நன்கு உணர்த்தின. நிலத்தின் விளைபொருள் பெறுங் காலமும் இதுவே. தானிய விளைவை, அதனைப் பெறுவதற்கான சீரான காலநிலை தந்த கதிரவனுக்கே முதலில் மடையிட வேண்டுமெனத் தமிழர் எண்ணினர். இம்மடையிடும் நடைமுறையே தைப்பொங்கல் எனத் தமிழர் வாழ்வியலில் நிலைபெற்றுவிட்டது. இந்த நடைமுறை யைப் பற்றிய சங்கச் செய்திகள் நுண்ணாய்வுக்குரியவை.
தைத்திங்கள் பற்றிய இரண்டு நடைமுறைகளைச் சங்கச் செய்யுட்கள் சிறப்பாகக் காட்டுகின்றன. தைநீராடல், தையூண் என்னும் இவை பற்றிய செய்திகள் தைத்திங்கள் சிறப்பாகப் போற்றப்பட்டமையை உணர்த்து கின்றன.
12

தமிழர்-யப்பானியர்.
1. தைத்திங்கள்
தை என்னும் பெயருடைய திங்கள் பற்றிய குறிப்பை நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு என்னும் தொகுப்பில் உள்ள பாடல்கள் பதிவு செய்துள்ளன. திங்கள் என்னும் சொல் தற்போது மாதம், நிலவு, திங்கட்கிழமை எனப் பொருள்தரும். சங்கப் பாடல்களில் இச்சொல் நிலவையும் மாதத்தையும் குறித்தது. கால அளவில் குறிப்பிட்ட ஒரு தொகை நாட்களைத் திங்கள் அடக்கிநின்றது. நிலவின் தோற்றத்தையும் செல்நெறி அளவையும் கொண்டு பழந்தமிழர் காலத்தைக் கணித்தனர். இதனால் ஒரு சொல்லையே இருபொருள் குறிக்கப் பயன்படுத்தினர். அது இரண்டிற்குமுள்ள தொடர்பையும் உணர்த்திற்று.
குறுந்தொகை 196ஆம் செய்யுள் தலைவன் இயல்பு கூறும் நிலை யில் தைத்திங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.
வேம்பின் பைங்காயென் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பிற் பணிச்சுனைத் தெண்ணிர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய அற்றால் அன்பின் பாலே.
பரத்தமை ஒழுக்கம் மேற்கொண்டிருந்த தலைவனைத் தலைவி வெறுத்து நிற்கின்றாள். தலைவியின் வெறுப்பைப் போக்கித் தன்னுடன் இணையச் செய்யுமாறு தலைவன் தலைவியின் தோழியிடம் வேண்டு கிறான். அப்போது அவனை நோக்கித் தோழி கூறுகிறாள்.
‘ஐயனே! தலைவி உனக்கு அரியளாக இருந்த காலத்திலே மணஞ் செய்வதற்கு முன்னைய களவொழுக்கக் காலத்திலே என்தோழிவேம்பினது பசிய கசப்புச்சுவை பொருந்தியகாயை உமக்கு உண்ணத் தந்தாலும் இனிய சுவை பொருந்திய கருப்பங்கட்டி என்று பாராட்டிக் கூறினாய். இப்போது பாரி வள்ளலின் பறம்பு மலையிலே உள்ள குளிர்ந்த சுனையிலே உள்ள தெளிந்த நீரைதைத் திங்களிலே தண்மையாகவிருக்கும் பொழுது உமக்குத் தந்தாலும் 'இது வெப்பம் உடையது. உவர்ப்பானது' என்று கூறுகின்றாய். தலைவிமேல் உனது அன்பு இத்தகையதாக உள்ளது.* தைத்திங்களின் தண்மைநிலை இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளது.
புறநானூறு 70ஆம் பாடல் தைத்திங்கள் பற்றிய குறிப்பைத் தண்மை நிலையுடன் மட்டுமன்றிப் பிறிதொரு பண்புடனும் இணைத்துத் தந்துள் ளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர்கிழார் என்னும் புலவர் சிறப்பித்துப் பாடிய பாடலிது.

Page 9
மனோன்மணி சண்முகதாஸ்
"தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண கயத்துவாழ் யாமை காழ்கோத் தன்ன நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை இனிய காண்கிவட் டணிகெனக் கூறி வினவ லானா முதுவா யிரவல தைஇத் திங்கட் டண்கயம் போலக் கொளக் கொள குறைபடாக் கூழுடை வியனகர் அடுதீ யல்லது சுடுதீயறியா திருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன் கிள்ளி வளவனல்லிசை யுள்ளி செல்வை. "கிள்ளிவளவனின்கொடைச்சிறப்பைப்பட்டறிவால் உணர்ந்த கோவூர்கிழார் பாணன் ஒருவனைக் கிள்ளிவளவனிடம் ஆற்றுப்படுத்துகிறார். தேன் போன்ற இனிய நரம்புத் தொடை பொருந்திய சிறிய யாழை உடைய பாணனே குளத்திலே வாழ்கின்ற ஆமையை இரும்புக்கம்பியிலேகோத்தாற் போன்ற நுண்ணிய கோலாற் பிணிக்கப்பட்ட பெரிய உடுக்கின் ஓசையைக் கேட்பாய். இவ்விடத்திலே சிறிது ஆறிப்போக என்று சொல்லி என்னிடத்திலே பல செய்திகளையும் கேட் கின்ற முதிய வாய்மையுடைய இரவலனே! நான் சொல்வதைக் கேள்!தை மாதத்திலே குளிர்ந்திருக்கும் பொய்கையைப் போல கொடுக்கக் கொடுக்கக் குறையாத சோற்றை உடைய அகன்ற நகரிலே உணவைச் சமைக்கின்ற தீயல்லாது சுடுகின்ற தீ அறியாது சோற்றையும் தண்ணீரையும் விளைக்கும் நல்ல நாட்டுக்கு வேந்தன் கிள்ளிவளவன் புகழை நினைத்து . போவாயாக’
இப்பாடலிலே தைத்திங்களது கயத்தின் தண்மையோடு நீர்ப் பெருக் கும் சுட்டப் பெற்றுள்ளது. மன்னனின் சோற்றுக்கொடை தைத்திங்களது நீர்ப்பெருக்குடன் ஒப்பிடப்பட்டுள்ளது. தைத்திங்களது நீர்வளனும் புலவ ரால் இப்பாடலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
நற்றிணை 80ஆம் பாடல் தைத்திங்களின் பிறிதொரு சிறப்பைக்
காட்டுகிறது.
மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன் இன்தீம் பால்பயங் கொண்மார் கன்றுவிட்டு ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும் பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து தழையுந் தாருந் தந்தனன் இவனென இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்

தமிழர்-யப்பானியர்.
தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோள் குறுமகள் அல்லது மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே. தலைவியைக் காணும் ஆவலுடைய தலைவன் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது. தலைவி வாழும் துழலை நினைத்துப் பார்க்கும் தலைவன் தன் ஆற்றாமை உணர்வை வெளிப்படுத்துகின்றான்.
'மாட்டுத் தொழுவத்திலே உள்ள அகன்ற தலையையுடைய கறுத்த எருமையின் மிகவும் இனிய பாலை நிறையக் கறக்கும் பொருட்டு அதன்கன்றைத் தொழுவத்திலே பிணைத்துவிட்டு ஊரிலுள்ள மாடு மேய்க்கும் இளஞ்சிறுவர்கள் மாடுகளின் மேலேறிச் சென்று தனியே மேய்ந்து வரச் செல்கின்ற பெரிய இருள் பிரிகின்ற விடியற்காலத்து விருப்பத்தோடு வந்து "உடுக்கும் தழையும் சூடும் மாலையும் இவன்தந்தான்’ என்று அணிகலன்கள் அணிந்த ஆயத்தோடு நாணம் மீதூரப் பெற்று என்னைப் பெற்றுக்கொள்வதற்காகதான் நோற்கும் நோன்பின் பயனாகத்தைத் திங்களிலே தண்ணிய நீரில் ஆடுகின்ற பெரிய தோளையுடைய அந்த இளமகளே நான் உற்ற இந்நோயை நீக்கும் மருந்தாவாள். அவளை விடப் பிறிதொரு மருந்தும் இல்லையே." தலைவன் கூறுகின்ற தைத்திங்கள் நோன்பு பற்றிய செய்தி ஆய்வுக் குரியது. இப்பாடலுரையாசிரியர் தைத்திங்களிலே பெண் நோன்பிற்காக குளத்திலே விடியற்காலையிலே நீராடுவதாக உரை செய்துள்ளார். பிற் காலத்திலே தோன்றிய ஆண்டாளும் மாணிக்கவாசகரும் மார்கழித் திங்களில் பெண்கள் விடியற்காலையிலே கூட்டாகச் சென்று நீராடும் வழக்கத்தைப் பாடியுள்ளனர். ஆண்டாள் பாடிய திருப்பாவைப் பாடல் கள் முப்பது. முதற்பாடல் மார்கழித் திங்கள் என்று தொடங்குகின்றது. மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவைப பாடல்கள் இருபது. அவரது பாடல்கள் யாவும் மார்கழி நீராடேலோ ரெம்பாவாய் என முடிகின்றன. ஆண்டாளின் முதற்பாடல் மார்கழி நீராடலைக் குறிப்பிடுகின்றது. கண்ணனையே சேரவேண்டும் என்ற ஆண்டாளின் பக்தி உணர்வை மணிவாசகர் திருவெம்பாவையிலே உலகியலோடும் பொருத்திக் காட்டு கிறார்.
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள் எங்கொங்கை நின்னப்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
(திருவெம்பாவை : 19:3-6)
15

Page 10
மனோன்மணி சண்முகதாஸ்
பெண்கள் சிறந்த கணவரை அடையும் பொருட்டு பாவை நோன்பு நோற்கும் மரபு தமிழரிடையே இருந்துள்ளது. மணிவாசகர் தனது திருவெம்பாவையில் உலகியல் நிலையிலே சிவபெருமானுடைய அடியார்களையே கணவராக அடையும் பொருட்டுப் பாவையர் நோன்பு செய்து வழிபடுவதாகக் கூறுகிறார். அத்தகைய கணவரைப் பெற்றால் தமது வழிபாட்டு நடைமுறைகளைச் செவ்வனே தொடரலாம் எனப் பெண்கள் நம்பினர். பாவை நோன்பு இன்றுவரை கடைப்பிடிக்கப்படுவ தும் இதனை நன்கு உணர்த்துகிறது.
இந்த நோன்பு ஆண்டாள் பாடலிலே 30 நாட்களாக அமைய மணி வாசகர் பாடலிலே 20 நாட்களாக அமைந்துள்ளது. இவ்வேறுபாட்டிற் கான காரணம் பாடல்களால் நன்கு உணரமுடியாதுள்ளது. எனினும் பெண்களிடையே நாட்களைக் கணக்கிடும் முறையொன்று இருந்த தைச் சங்க இலக்கியங்கள் கட்டுகின்றன. பண்டைக் காலத்து வாழ்விய லுக்கு ஏற்ப தமது அறிவு நிலையில் நாட்கணக்கீடு பெண்களால் செய்யப்பட்டுள்ளது.
நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து ஆழல் வாழி தோழி. (அகம்: 61:3-5)
சேணுறை புலம்பின் நாண்முறை யிழைத்த
திண்சுவர் நோக்கி நினைந்து கண்பனி
நெகிழ்நூல் முத்தின் முகிழ்முலை தெறிப்ப
(gjasib: 289:9-11)
கணவர் வினைவயின் பிரியும்போது அவர் திரும்பி வரும் வரை
ஒவ்வொரு நாளையும் சுவரிலே கோடிட்டு நாட்களைப் பெண்கள் கழித்ததை மேற்காட்டிய எடுத்துக்காட்டுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், குறிப்பாக ஒரு திங்கள் எவ்வளவு நாட்களைக் கொண்டமைந் தது என்பது பற்றிய குறிப்பைச் சங்கப் பாடல்களிலே காண முடிய வில்லை. சங்க இலக்கியத்திலே எல்லாத் திங்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. பதிற்றுப்பத்து 59ஆம் பாடலில்
பகல்நீ டாகா திரவுப் பொழுது பெருகி
மாசி நின்ற மாகூர் திங்கள்
(Lugsögu: 59:1-2)
என்னும் செய்தி காணப்படுகின்றது. இங்கு மாசித்திங்கள் பற்றிய குறிப்பைத் தந்து நிற்பது பெறப்படும். ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் தைத்திங்களும், மாசித்திங்களும், பங்குனித் திங்களும குறிப்பிடப்பட்டுள்ளன.
l 6

தமிழர்-யப்பானியர்.
தையொரு திங்களும் தரை விளக்கித் தண்மண் டலமிட்டு
மாசிமு ன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து.
(நாச்சியார்திருமொழி 1:1)
உருவுடை யாரிளை யார்கள்நல்லார் ஒதுவல் லார்களைக் கொண்டு வைகல் தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள் திருந்தவே நோற்கின்றேன்.
(நாச்சியார்திருமொழி1:6)
ஆண்டாள் பாடலில் திருப்பாவையின் தொகுப்பு நிலையும் பாடற் பொருளமைதி வளர்ச்சியும், முப்பது என்னும் எண்ணிக்கை தனித்துவம் பெற்றிருப்பதை உணர்த்துகின்றன. ஒரு திங்களில் முப்பது நாட்கள் அமைந்தமையை அவை காட்டுகின்றன. ஞாயிற்றைக் கொண்டு திங்க ளைக் கணக்கிடும் முறை கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வராகமிகிரரால் கொண்டுவரப்பட்டதென்பர். திங்களுடைய வளர்ச்சி, தேய்வு கொண்டு கணக்கிடும் முறை பழையது. எனவே, ஆண்டாளின் பாடலின் தொகை யும் மார்கழித் திங்கள் என்ற திங்களின் பெயரும் பழைய கணக்கிடும் முறையையே காட்டுகின்றனவெனலாம்.
2. தைநீராடல்
தைத்திங்களிலே நடைபெற்ற சிறப்பான நீராட்டாகத் தைநீராடல் குறிப்பிடப்பட்டுள்ளது. மகளிர் ஆறு, குளம் என்பவற்றில் தைத் திங்க ளில் நீராடுகின்றனர். ஐங்குறுநூறு, கலித்தொகை,பரிபாடலில் இச் செய்தி வருகின்றது.
செவியிற் கேட்பினுஞ் சொல்லிறந்து வெகுள்வோள்
கண்ணிற் காணி னென்னா குவள்கொ
னறுவீ யைம்பான் மகளி ராடுந்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந் துண்ணுநின் பரத்தை மார்பே
(ஐங்குறுநூறு:84) பரத்தை ஒழுக்கம் பூண்டிருந்த தலைவன் தலைவியிடம் திரும்பி
வந்தபோது தோழி அவனுக்குக் கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது.
'தலைவனே! நீ பரத்தமை ஒழுக்கமுடையை என்று யாரேனும்
சொல்வதைத் தன் செவியாலே கேட்க நேரினும் அதைப்
பொறுக்கலாற்றாது பெருஞ்சினங்கொள்ளும் இயல்புடைய
எம் தலைவி, நறிய மலரணிந்த கூந்தலையுடைய கன்னிப்
17

Page 11
மனோன்மணி சண்முகதாஸ்
பெண்கள்தைத்திங்களிலே சிறப்பானநீராடுதலைச்செய்கின்ற குளிர்ந்த குளம் போன்று பரத்தை மகளிர் பலரும் பொருந்தி நுகர்கின்ற பரத்தமை அடையாளமுடைய மார்பைக் கண்ணாற் கண்டால் என்ன செய்வாள் என்பதைச்சிறிது எண்ணிப்பார்."
தலைவனுடைய இயல்பு கூறவந்த தோழி அக்காலத்து நடைமுறை யாக தைநீராடல் இருந்ததையும் குறிப்பிடுகிறாள். ஆனால் இங்கு மகளிர் நீராடும் செய்தி மட்டுமே கூறப்பட்டுள்ளது. தைநீராடல் எதற்காகச் செய்யப்பட்டது என்ற விளக்கத்தை இப்பாடற் குறிப்பால் பெற முடியா துள்ளது. கலித்தொகை 59ஆம் பாடலில் வரும் குறிப்பு தைநீராடலின் நோக்கைச் சுட்டுவதாயுள்ளது.
மருளியான் மருளுற இவனுற்ற தெவனென்னும் அருளிலை இவட்கென அயலார்நிற் பழிக்குங்கால் வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்துநீ தையில்ரீ ராடிய தவந்தலைப் படுவாயோ.
(கலி: 59:10-13) தலைவியின் வருத்தம் தீர்க்கும் தலைவனின் கூற்றாக வரும் இப் பாடலிலே தைநீராட்டின் நோக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
'யான் மயங்குகையாலே அதுகண்டு தானும் மருண்டு இவன் உற்றநோய் யாது எனக் கேட்கும் அருள் நெஞ்சம் இவளிடம் இல்லையென்று யான் கூற அதுகேட்டு அயலார் நின்னைப் பழிக்கும் அளவில் கூரிய எயிற்றினையுடைய இளைய மகளிர்க்கு நடுவே வகையான அழகு அணிகளாலே பொலிவு பெற்று நீ தைத்திங்களில் நீராடிய பயனைப் பெறுவாயோ? பெறமாட்டாய்."
இங்கு தைநீராடல் மணமாகாத இளம் பெண்களின் நோன்பு நீராடலா கக் கூறப்படுகிறது. தையில் நீராடியதவம் என்னும் தொடர் இதை விளக்கு கிறது. உரையாளர் இதனைச் சிறப்புக் குறிப்பொன்றால் மேலும் விளக் குவர்.
"தைநீராடுதல் மணமாகாத மகளிர் சிறந்த கணவர் கிடைத்தற் பொருட்டு மார்கழி முழுமதி நாள் தொடங்கித் தைத்திங்களில் முடிக்கும் ஒரு நோன்பு. இந்த நோன்பே பின்னர் திருமாலை வழிபடுகின்ற நோன்பாகவும் சிவனை வழிபடுகின்ற நோன்பா கவும் மாறியது."
பரிபாடலில் தைநீராடல் பற்றி வரும் குறிப்புக்கள் இந்நோன்பு நிலை யையும் உள்ளடக்கியுள்ளன.
18

தமிழர்-யப்பானியர்.
தாயருகா நின்று தவத்தைந்நீர் ஆடுதல்
(பரிபாடல்: 11:91) இளம்பெண்கள் தம் தாயாரின் அருகில் நின்று இத்தைந்நீராடலைச்
செய்கின்றனர். பரிபாடலிலே வையை ஆற்றைப் பற்றிய பாடலில் இக் குறிப்பு வருகிறது. இன்னும் தைநீராடல் அம்பாஆடல்' எனவும் வழங்கப் பட்டதை பரிபாடல் 11ஆம் பாடல் காட்டுகிறது.
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடி. (பரிபாடல்: 11:80-83)
அகன்ற இந்த நிலவுலகமானது ஞாயிற்றின் வெப்பத்தால் வெம்மையடையாமல் மழையாலே குளிர்வதாக என்று வாழ்த்திஅம்பாஆடுதலையுடைய ஆராய்ந்திட்டவளையலை அணிந்த கன்னிமைப் பருவத்து மகளிர் சடங்கறிந்த முதிய பார்ப்பனப் பெண்கள் நோன்பு செய்யும் முறைமையினை அறிவிக்க பனியுடைய வைகறைப் பொழுதிலே நீராடுகிறார்
56.
இங்கு மழையை வேண்டி நோன்பு செய்து நீராடுவதாகக் கூறப்பட் டுள்ளது. தாயரோடு மகளிர் ஆடிய நீராட்டு வழிபாட்டு நடைமுறையாக இருந்தமையும் இதனாற் பெறப்படுகிறது. பரிபாடலில் மேலும் ஒரு செய்தி இதனை உறுதி செய்கின்றது.
இன்ன பண்பின் இன்றைந்நீராடல் -- மின்னிழை நறுநுதன் மகண்மேம் பட்டல் கன்னிமை தனியாக் கைக்கிளைக் காம இன்னியன் மாண்டேர்ச்சி இசைபரிபாடல் முன்முறை செய்தவத் திம்முறை இயைந்தேம் மறுமுறை யமைத்து மியைக நறுநீர் வையை நயத்தகு நிறையே
(பரிபாடல்: 11:135-140)
இனிய தன்மையில் மேம்பாடுற்ற தேர்ச்சியினை உடைய இசையோடு கூடிய பரிபாடலிலே வாழ்த்தப்படுகின்ற நறிய நீரினையுடையவையையே மின்னுகின்றஅணிகலன்களையும் நறிய நுதலையும் உடைய மகட்டன்மை மேம்பட்ட கன்னித் தன்மை முதிராத மகளிரிடத்தே மேற்கூறியவாறு கைக்கிளைக் காமத்தைத் தருகின்ற யாங்கள் முற்பிறப்பிலே செய்த தவத்தாலே இப்பிறப்பில் நின்பால் இத் தைநீராடலாகிய
19

Page 12
மனோன்மணி சண்முகதாஸ்
தவத்தைப் பெற்றேம். அத்தவத்தினையாவரும் விரும்பத்தக்க நினது நீர்நிறைவிலே மறுபிறப்பிலும் யாம் பெறுவோமாக.
பரிபாடலின் செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து கன்னிப் பெண்கள் மழையை வேண்டி நோன்பிருந்து தைநீராடலைச் செய்தமை வெளிப்படுகின்றது. பிற்காலத்து ஆண்டாள் திருப்பாவையிலும் மணி வாசகரது திருவெம்பாவையிலும் தைநீராடல் அடிப்படையாக மழையை வேண்டிப் பாடும் பாடல்களாக அமைந்தன. நாடு வளம் பெற மழையை வேண்டிக் கன்னிப்பெண்கள் நோன்பு இருந்து அதை நிறைவு செய்யும் நடைமுறையே தைத்திங்களில் நீராடுதலாகும். தைத்திங்களின் பிறப்பு இந்நடைமுறையால் சிறப்பான நாளாகவும் அமைந்தது.
3. தையூனிருக்கை
தைத்திங்களின் சிறப்பினை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தையூனிருக்கை குறிப்பிடப்படுகிறது. தலைவியைத் தலைவன் மணம் செய்ய வருவதைத் தோழி தலைவியிடம் கூறுமிடத்து இதுபற்றிய குறிப்பு வருகின்றது.
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் திரையணற் கொடுங்கவுள் நிறைய முக்கி வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தையூ னிருக்கையில் தோன்று நாடன் வந்தனன் வாழி தோழி யுலகங் கயங்கண் அற்ற பைதறு காலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் ய்ாமத்து மழைபொழிந் தாங்கே
(நற்றிணை:22)
தோழி மலைப்பக்கத்திலே கொடிச்சியால் காவல் செய்யப் படும் பசிய தினைப்பயிரில் முதலிலே நன்கு முற்றிய பெருங் கதிர்களைக் கொய்தெடுத்த மந்திக்குரங்கு பாயுந்தொழில் அன்றிப்பிறிது ஏதுமறியாத கடுவன் குரங்கோடு நல்ல மலை மேலேறி அகங்கை நிறையக் கசக்கித்துப்புரவு செய்து தனது திரைந்தஅணலையுடைய வளைந்தகவுள்நிறைய உண்டு புதிய மாரி பெய்தமையாலே நனைந்த பின்புறத்தை உடையனவாய் நோன்புடையார் தைத்திங்கட் பிறப்பிலே நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போலத்தோன்றுகின்ற மலைநாடன் உலகத்துக் குளங்களெல்லாம் நீர் வற்றிய ஈரமற்ற காலை
20

தமிழர்-யப்பானியர்.
சூலொடு வாடிய நெற்பயிருக்கு நடு யாமத்திலே மழை பெய்தாற்போல வந்தான். இனி விரைவிலே மணம் செய்து நெடுங்காலம் வாழ்வாயாக.
இப்பாடலிலே தைநீராடல் செய்து நோன்பு முற்றுப்பெற்ற பின் நடை பெறும் ஊண் உண்ணும் நடைமுறை குறிப்பிடப்படுகிறது. நோன்பியர் என்ற சொல் தெளிவாக யாரைக் குறிக்கின்றது என்பதை அறிய முடியா துள்ளது. நோன்பு நோற்றவர் இலக்கும் பாடலில் தெளிவு பெறவில்லை. ஆனால் தைத்திங்கள் முதல் நாள் இந்த நடைமுறை இருந்தது என்பதை முன்னர் கண்ட நடைமுறைகளால் உய்த்துணர முடிகின்றது. தைநீராடல் முடித்துப் பலர் ஊண் உண்பதற்காக இருப்பது வழமை என்பதும் பாடலால் பெறப்படுகிறது. பலரோடு உணவைப் பகிர்ந்துண்ணும் நாளா கவும் தைதிங்கட்பிறப்பு அமைந்துள்ளது. முன்னர் கண்ட செய்திகளால் மழையை வேண்டி நோன்பிருந்தோர் திங்கட் பிறப்பன்று உணவைப் பகுத்துண்கின்றனர். எனவே, இந்நோன்பியர் புதிய விளைவு பெற உதவிய இயற்கை ஆற்றலான கதிரவனையே நினைத்து நோன்பிருந் தமை பெறப்படுகின்றது. மழையால் நெல் மகிழ்ந்த செய்தி குறிப்புப் பொருள் நிலையில் நோன்பியர் பெறும் விளைபொருளைக் காட்டுகிறது. புதிதாகப் பெற்ற விளைபொருளை அதைப் பெற நல்லுதவி செய்த இயற்கை ஆற்றலுக்கு மடையிடும் நடைமுறையும் இருந்துள்ளது.
4. விளைபொருள் மடையிடல்; புதிதுண்ணல்
இயற்கை ஆற்றலுக்குத் தமது புதிய விளைபொருட்களைப் பழந் தமிழர் மடையிட்ட செய்தி குறுந்தொகைப் பாடலொன்றிலே மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக் கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் சூர்மலை நாடன் கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பாகின்றே.
(குறுந்தொகை:105) தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி கூற்றாக இப்பாடல் அமைந் துள்ளது.
தோழி குறவனுடைய தோட்டத்திலே விளைந்த பொன் போன்ற சிறிய தினையிலே புதிதுண்பதற்காக தெய்வத்திற் கென ஒதுக்கி வைத்த செழிப்பானதினைக்கதிரை அறியாமல் தின்ற மயில் அரங்கிலே கூத்தாடுகின்ற விறலி வெறியுற்று அபிநயம் காட்டும் அழகினை ஒத்து துன்புற்று நடுக்கத்தைச்
2

Page 13
மனோன்மணி சண்முகதாஸ்
செய்கின்ற தெய்வங்கள் உறைதற்குரிய மலைநாட்டையுடைய தலைவனுடைய நட்பு நீர் நிரம்பிய கண்களோடு வருந்தி நினைக்கின்ற நினைவு மாத்திரமேயாயிற்று.
விளைந்த தினையிலே புதிதுண்ண என ஒரு பகுதியைக் கடவுளுக்கு ஒதுக்கி வைத்த நடைமுறை பழந்தமிழரின் பணிந்தொழுகு நிலையை உணர்த்துகிறது. இயற்கை ஆற்றலைக் கடவுளாக எண்ணித் தமது விளைபொருளின் சிறந்ததை மடையிட்டனர். இந்த நடைமுறை கடியுண எனப்பட்டது. தினை, நெல் விளைவிப்பவர்கள் ஓர் ஆண்டின் விளை பொருளை முதன்முதலாக உண்பதைப் புதிதுண்ணல் என்பர். இதனைப்
புறநானூற்றுப் பாடல் ஒன்றும் கூறுகிறது.
22
அருவி யார்க்கும் கழைபயி னனந்தலைக் கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட் கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு கடுங்கட் கேழலுழுத பூமி நன்னாள் வருபத நோக்கிக் குறவர் உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார் மரையான் கறந்த நுரைகொ டீம்பால் மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி வான்கே பூழிரும்புடை கழாஅ தேற்றிச் சாந்த விறகி னுவித்த புன்கம் கூதளங் கவினிய குளவி முன்றற் செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ. (புறநானூறு:168)
அருவிகள் ஆரவாரத்தோடு வீழ்கின்ற மூங்கில் நிறைந்த பரந்த இடத்து மிளகுக்கொடி வளரும் மலைச்சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு தோன்றக் கிளறி தனது இனத்துடன் சேர்ந்து வரட்சியையுடைய பன்றி உழுதுவிட்ட புழுதியிடத்து நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்துக் குறவர் அந்நிலத்தை மறுபடியும் உழாது விதைத்த பெரிய தொகையான சிறிய தினையின் முற்பட விளைந்த புதுவருவாயாகிய கதிரை நல்ல நாளிலே புதிது உண்பதற்காக மரையாவைக் கறந்த நுரையுடைய இனிய பாலை மான் இறைச்சி புழுக்கிய நிணந் தோய்ந்த வெளிய நிறத்தினையுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலை நீராக வார்த்து ஏற்றி சந்தன விறகால் உவிக்கப்பட்ட பாற்சோற்றை கூதாளியால் அழகுபெற்ற மலை மல்லிகை நாறும் முற்றத்து செழுமையான குலையையுடைய

தமிழர்-யப்பானியர்.
வாழையினது அகன்றஇலையிலே பலருடனே பகுத்துண்ணும் ஊரப்படாத குதிரை என்னும் மலைக்குத்தலைவனே இப்பாடலில் பொருள் புதிதுண்ணல் நடைமுறையைத் தெளிவாக
விளங்குவதற்கு உதவுகிறது. புதிய தினையின் விளைவைக் குறித்த நாளிலே பலருடன் பகுத்துண்ணும் . பண்பு குறிப்பிடத்தக்கது. பால் உலை நீராக தினைச்சோறு சமைப்பது நாளாந்த நடைமுறையாகவன்றி சிறப்பான ஒரு நாளிலே செய்யப்பட்டது. “புதிது உண்மார்’ என்ற சொற் றொடர் இதற்குச் சான்றாக விளங்குகிறது. தினையை விதைப்பதற்கும் பின்னர் அந்த விளைவை பகுத்து உண்பதற்கும் நன்னாள் பார்ப்பது தமிழரது வழக்கமாயிருந்துள்ளது. தைத்திங்கட் பிறப்பன்று இந்தப் புதிது உண்ணும் நாளாகக் கணிக்கப்பட்டிருக்க வேண்டும். அது முழுத்திங்கள் தோன்றும் நாளாக இருந்திருத்தல் வேண்டும். இக்கணிப்பு ஆண்டாளின் பாடலாலும் உறுதிப்படுகின்றது. பெரிய திருமொழியில் பிற்காலத்திலும் இப்புதிதுண்ணும் நடைமுறை இருந்தமை கூறப்படுகிறது.
புனத்தினைக் கிள்ளிப் புதுவலிக் காட்டிநின் பொன்னடி
வாழ்க வென்று இனக்குறவர் புதியதுண்ணும் திருமாலிருஞ் சோலை எனவே தைத்திங்கள் பிறப்புநாள் தமிழர் வாழ்வியலிலே பண்பாட்டு
நடைமுறைகள் பலவற்றை உள்ளடக்கிய விழவு நாளாகவும் மாறி விட்டது.
இன்றைய தைப்பொங்கல் நடைமுறைகளை ஆராயும்போது அவற் றில் குறிப்பிடத்தக்க நடைமுறைகள் சங்கப் பாடல்களிலும் காணப்படு கின்றன. தமிழர்களது பயிர்த்தொழில் நிலையிலே வளர்ச்சி ஏற்பட்ட போது தினை விளைவித்தலை விட நெல் விளைவித்தலே பெரிதும் நடைபெற்றது. இதனால் புதிதுண்ணல் நடைமுறைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. நெல்லரிசியுடன் பருப்பும் சேர்த்து பொங்கல் செய்யப் பட்டது. ஆனால், பெரும்பாணாற்றுப்படையில் வரகரிசியுடன் அவரை யின் பருப்பைச் சேர்த்துச் சமைக்கின்ற வழக்கம் மருதநில மக்களி டையே இருந்ததாகக் குறிப்புண்டு.
எழுகா டோங்கிய தொழுவுடை வரைப்பிற் பிடிக்கணத் தன்ன கதிருடை முன்றிற் களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர் குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை சார்த்தி நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற் பருவ வானத்துப் பாமழை கடுப்பக் கருவை வேய்ந்த கவின்குடிச் சீறுார் நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன
23

Page 14
மனோன்மணி சண்முகதாஸ்
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப் புகளினர் வேங்கை வீதண் டன்ன அவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற் றின்சுவை மூரற் பெறுகுவிர்.
(பெரும்பாண் : 185-196)
முள்ளுத் தன்னிடத்தே சூழ்ந்து எழுகின்றவிடத்தே தொடரி முதலிய காடுகள்சூழ வளர்ந்த தொழுக்களையுடைய நிலத்தின் கண்பிடிக்கூட்டம் நின்றாற்போன்று வரகு முதலியனநிறைத்து நிற்கும் கதிர்களையுடைய முன்றிலையும் யானையுடைய காலை ஒக்கும் வரகு திரிகைநட்டு நிற்கும் பந்தரினையும் குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையும் சார்த்தி வைக்கப் பட்டமையாலே நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய மாரிகாலத்தில் வானத்திலே பரவிய முகிலை ஒப்ப வரகு வைக்கோலால் வேய்ந்த அழகையுடைய குடியிருப்பினை உடைய சிறிய ஊர்களிலே நெடிய கொத்தினை யுடைய சிறிய பூளையினது பூவையொத்த குறிய தாளினை யுடைய வரகினது சிறிய பருக்கைகளாகிய சோற்றை நிறத்தை யுடைய கொத்தினையுடைய வேங்கைப் பூவைக் கண்டா லொத்த அவரை விதையினது நன்றாகிய பருப்பை இட்டு நன்கு துழாவுதலாலே இனிய சுவையுடைய மூரலோடு பெறுவர்.
இவ்வாறு பருப்புச் சேர்த்துச் சமைக்கும் வழக்கம் இன்று வரையும் நடைமுறையிலுள்ளது. மருத நிலத்தவர் மட்டுமன்றி எல்லா நிலத்தில் வாழ்ந்தவர்களும் தைத்திங்கட் பிறப்பைப் புதிதுண்ணும் நாளாகக் கொண் டிருக்க வேண்டும். மலை, வயல், காட்டுப் பகுதி நிலங்களில் விளை பொருள்களை மடையிட்டுப் பொங்கலுடன் பகுத்துண்டிருக்க வேண்டும். இதனால் தைத்திங்களுடன் பொங்கலும் சேர்ந்து தைப் பொங்கல் என்ற விழவுப்பெயர் பெற்றதெனலாம். தைப்பொங்கல் என்ற சொற்றொடர் தமிழிலக்கியத்தில் பிற்காலத்திலேயே உருவாக்கம் பெற்றுள்ளது. ஆனால், பொங்கல் என்ற சொல் சிலப்பதிகாரத்தில் பாற்சோறு என்னும் பொருளில் வந்துள்ளது.
3. பொங்கல்- தைப்பொங்கல்
'பொங்கல்' என்னும் சொல் பொங்குகை, பெருங்கோபம், மிளகு, சீரகம், உப்பு, நெய் முதலியன கலந்து அட்ட அன்னம், சூரியன் மகர ராசியிற் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்றேFயன்று துரியனைப் பூசித்துப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா, உயர்ச்சி, பருமை, மிகுதி, கள் எனப் பல பொருள்களைத் தருவதாக தமிழ்ப் பேரகராதி காட்டுகின்றது. தமிழ் மொழியகராதி பொங்கல் என்னும் சொல்லுக்கு
24

தமிழர்-யப்பானியர்.
உயர்ச்சி, கிளர்தல், சமைத்தல், பொலிதல், மிகுதி, கள் என்னும் பொருட்களைத் தருகிறது. பிங்கல நிகண்டு இச்சொல்லுக்கு பொலிவு, மிகுதி, கொதித்துக் கிளர்தல் எனப் பொருள் தருகிறது. நாமதீபநிகண்டு இச்சொல்லுக்கு பொங்கல், கொதிப்பு எனப் பொருள் தருகிறது. தற் காலத் தமிழகராதியில் பின்வரும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. (கோவிலுக்குப் போய்) பச்சரிசியை உலையிலிட்டுப் பொங்க
வைத்து நீரை வடிக்காமல் செய்யும் சாதம். 2. (தமிழ்நாட்டில்) தைமாத முதல் நாளில் மேற்குறிப்பிட்ட சாதத் தைத் தயாரித்துப் படைத்துச் சூரியனை வழிபட்டுக் கொண் டாடும் பண்டிகை. 3. பச்சரியை வேகவைத்து மிளகு, சீரகம் முதலியவை சேர்த்துத்
தயாரிக்கப்படும் ஒருவகைச் சிற்றுண்டி. சிலப்பதிகார காலத்திலிருந்து 'பொங்கல்' என்னும் சொல் அரிசி யில் சமைக்கும் உணவுநிலையான பொருளில் தமிழில் வழங்கப்பட்டு வருகிறது. இச்சொல் விழவு நிலையான ஆரவாரச் சொல்லாகவும் பொங்கலோ பொங்கல் என இன்று வழங்கப்பட்டு வருகிறது. தைப் பொங்கல் நாளன்று பானையிலே பால் பொங்கும் போதும் மாட்டுப் பொங்கலில் மாட்டையோட்டிவிடும்போதும் மகிழ்ச்சியுடன் பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரம் செய்யப்படுகிறது. 'பொங்கு' என்னும் வினையடியின் தொழிற்பெயர் வடிவமாகப் 'பொங்கல்' என்னும் சொல் அமைந்துள்ளது. அதுவே பின்னர் சமைக்கப்பட்ட உணவுக்கும் பெயரா
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய இதைச்சுவற் கலித்த ஈரிலை நெடுந்தோட்டுக் கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி கவட்டடிப் பொருத பல்சினை உதிர்வை அகன்கட் பாறைச் செல்வயிற் றெறிஇ வரியணி பணைத்தோள் வார்செவித் தன்னையர் பண்ணை வெண்பழத் தரிசி ஏய்ப்பச் சுழல்மரஞ் சொலித்த சுளகலை வெண்காழ் தொடிமாண் உலக்கை ஊழிற் போக்கி உரல்முகங் காட்டிய சுரைநிறை கொள்ளை ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக் களிபடு குழிசிக் கல்லடுப் பேற்றி இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற் குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப் புன்கம் மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும்
(அகநானூறு 393:3-11)
25

Page 15
மனோன்மணி சண்முகதாஸ்
வழிப்போக்கர்களாகிய புதியவர்கள் தம்மை வருத்துகின்ற பசியைத் தீர்த்தற் பொருட்டு காட்டை அழித்துக் கொல்லை யாக்கிய தினைப் புனத்திலே தழைத்துள்ள ஈரிய இலையை உடைய நீண்ட மடலையுடைய கவைத்த கதிரையுடைய வரகினது தட்டைகளைத் தொகுத்த மிகுதியான தாளை எருதுகளின் இரட்டைக் குளம்புகள் மிதித்தமையால் உதிர்ந்த பல கவைகளினின்றும் உதிர்ந்த வரகினை அகன்ற இடத்தை யுடைய பாறை நிலத்திலே சமமான இடத்திலே குவித்து வைத்து திரைத்த கோடுகளையும் பருத்த தோளையும் நீண்ட செவிகளையும் உடைய தாய்மார் பண்ணைக் கீரையினது வெள்ளியபழத்தினது விதையினை ஒப்பத்திரிகையால் திரித்து உமியைப் போக்கிய சுளகினால் கொழிக்கப் பெற்ற வெள்ளிய அரிசியை பூணால் அழகு பெற்ற உலக்கையினாலே முறை முறையே குற்றி உரலில் வாயிலே காணப்பட்ட குழியிலே நிறைந்த வரகரிசியை அவ்விடத்திலே உள்ள பெரிய சுனை நீரோடு முகந்த களிமண்ணாற் செய்த பானையைக் கல்லாலி யன்ற அடுப்பின்கண் ஏற்றிவைத்து பூக்கொத்துகள் செறிந்த கொன்றையினது நிறைந்த விறகினால் இடையர்கள் அவித்த பொங்கிய அவிழாகிய வரகுச் சோற்றை கொழுத்த நல்ல பசுவின் பாலோடு பகுத்துண்ணும். இப்பாடலில் வரும் 'குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்' என்ற தொடர் இடையர் சமைத்த உணவு என்ற பொருளைத் தருகின்ற வேளையில் உணவுவகைநிலையை விளக்கி நிற்கிறது. புழுக்கு, அவிழ், புன்கம் என்பன உணவு வகையாகவும் சங்கப் பாடல்களிலே கூறப்பட் டுள்ளன. எனவே, பொங்கு' என்ற அடைநிலையில் பயன்பட்ட சொல் பின்னர் பொங்கல்’ என்ற உணவைக் குறித்திருக்க வேண்டும். சங்கப் பாடல்களிலே கூறப்பட்டுள்ள இத்தகைய உணவுகள் பற்றிய செய்தி களைத் தொகுத்து நோக்கும்போது இது தெளிவாகின்றது.
1. அடிசில்
"இடுமுள் வேலி முடக்காற் பந்தர்ப் புதுக்கலத் தன்ன செவ்வாய்ச் சிற்றில் புனையிருங் கதுப்பினின் மனையோ ளயரப் பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள் மாவண் தோன்றல் வந்தனை சென்மோ."
(அகநானூறு 394:8-12)
"மலரத் திறந்த வாயில் பலருணப் பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
26

தமிழர் -யப்பானியர்.
வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோ டுண்டலும் புரைவது."
(குறிஞ்சிப்பாட்டு:203-207)
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் பனுவலின் வழாஅப் பல்வே றடிசில் வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயி றெள்ளும் தோற்றத்து விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி ஆனா விருப்பின் தானின் றுாட்டித்.
(சிறுபாணாற்றுப்படை 240-245)
பிணம்பிறங் கழுவத்துத் துணங்கை யாடிச் சோறுவே றென்னா வூன்றுவை யடிசில் ஓடாப்பீட ருள்வழி யிறுத்து.
(பதிற்றுப்பத்து: 45:12-14)
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசில் மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து ஆனா விருப்பிற் றாணின் றுாட்டி.
(பெரும்பாணாற்றுப்படை: 476-479)
அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை.
(புறநானூறு 10:7-8)
சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயிறருத்தி.
(புறநானூறு: 127; 7-8)
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை அவிழ்புகு வறியா தாகலின் வாடிய நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்ணெனக் குய்கொள் கொழுந்துவை நெய்யுடை யடிசில் மதிசேர் நாண்மீன் போல நவின்ற சிறுபொ னன்கலஞ் சுற்ற விரீஇக்.
(புறநானூறு:160:4-9)
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
27

Page 16
மனோன்மணி சண்முகதாஸ்
நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை.
(புறநானூறு: 188:3-6) குய்குரன் மலிந்த கொழுந்துவை யடிசில் இரவலர்த் தடுத்த வாயில்.
(புறநானூறு: 250:1-2)
2. அமுது
“அருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும்."
(பெரும்பாணாற்றுப்படை:475)
3. அமலை
28
"நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து நாள்துறைப் பட்ட மோட்டிரு வராஅல் துடிக்கட் கொழுங்குறை கொடுத்துண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகலிலை அமலைவெஞ் சோறு தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து விடியல் வைகறை இடூஉம்."
(அகநானூறு: 196:1-7)
பல்கோட் பலவின் பயிர்ப்புறு தீங்கனி அல்கறைக் கொண்டூண் அமலைச் சிறுகுடி
(கலித்தொகை 50:12-13)
ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச் செல்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது ஓரிற் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்பத் தண்ணி சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே
(குறுந்தொகை: 277:1-5)
வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின் உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை பிடிக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத் தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப இருங்காழ் உலக்கை இரும்புமுகந் தேய்த்த அவைப்புமாண் அரிசி அமலைவெண் சோறு கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்
(சிறுபாணாற்றுப்படை: 189-195)

தமிழர்-யப்பானியர்.
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
உன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
(புறநானூறு: 33:12-14)
இரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக்
கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்
(புறநானூறு: 34:12-14)
எயினர் தந்த வெய்ம்மா னெறிதசைப் பைஞ்ஞணம் பெருத்த பசுவெள்ளமலை வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய இரும்பனங் குடையின் மிசையும் பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே
(புறநானூறு: 177:13-17)
கருங்கை வினைஞர் காதலஞ் சிறாஅர் பழஞ்சோற் றமலை முனைஇ வரம்பிற் புதுவை வேய்ந்த கவிகுடில் முன்றில் அவலெறி உலக்கைப் பாடுவிறந் தயல கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்
(பெரும்பாணாற்றுப்படை:223-227)
பொன்னறைந் தன்ன நுண்ணேர் அரிசி வெண்ணெறிந்தியற்றிய மாக்கண் அமலை தண்ணெ னுண்ணிழு துள்ளீடாக அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்
(மலைபடுகடாம்: 440-444)
4. அவிழ்
கங்கு லோதைக் கவிமகிழுழவர் பொங்கழி முகந்த தாவி னுண்டுகண் மங்குல் வானின் மாதிர மறைப்ப வைகுபுலர் விடியல் வைபெயர்த் தாட்டித் தொழிற்செருக் கனந்தர் வீட வெழிற்றகை வளியொடு சினைஇய வண்டளிர் மாஅத்துக்
கிளிபோல் காய கிளைத்துணர் வடித்துப் புளிப் பதன் அமைத்த புதுக்குட மலிர்நிறை வெயில்வெரிந் நிறுத்த பயில்இதழ்ப் பசுங்குடைக்
29

Page 17
மனோன்மணி சண்முகதாஸ்
30
கயம் மண்டு பகட்டின் பருகிக் காண்வரக்
கொள்ளொடு பயறுபால் விரைஇ வெள்ளிக்
கோல்வரைந் தன்ன வால் அவிழ் மிதவை
(அகநானூறு: 37:2-13)
கவட்டிடப் பொருத பல்சினை உதிர்வை அகன்கண் பாறைச் செவ்வயின் தெறீஇ வரியணை பணைத்தோள் வார்செவித் தன்னையர் பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்பச் சுழல்மரம் சொலித்த சுளகுஅலை வெண்காழ் தொடிமாண் உலக்கை ஊழின் போக்கி உரல்முகம் காட்டிய சுரைநிறை கொள்ளை ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக் களிபடு குழிசிக் கல்லடுப்பு ஏற்றி இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற் குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப் புன்கம் மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும்
(அகநானூறு 6-17)
கள்ளி போகிய களரி மருங்கின் வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி புலைய னேவப் புன்மே லமர்ந்துண்டு.
(புறநானூறு 360:16-19)
செங்கண் மகளிரொடு சிறுதுணி யளைஇ அங்கட் டேற லாய்கலத் துகுப்பக் கெடலருந் திருவ வுண்மோ. மடை வேண்டுநர்க் கிடையருகா தவிழ் வேண்டுநர்க் கிடையருளி
(புறநானூறு: 366:14-20)
வேய்ப்பெயல் விளையுள் தேக்கள் தேறல் குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப் பழஞ்செருக் குற்றதும் அனந்தல்தீர அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ் வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

தமிழர்-யப்பானியர்.
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின் இன்புளிக் கலந்து மாமோ ராகக் கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து வழையமை சாரல் கமழத்துழைஇ நறுமலர் அணிந்த நாறிரு முச்சிக் குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி அகமலி உவகை ஆர்வமொ டளைஇ மகமுறை மடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
(மலைபடுகடாம்: 171-185)
5. உவியல்
மென் புலத்து வயலுழவர் வன் புலத்து பகடுவிட்டுக் குறுமுயலின் குழைச்சூட்டொடு நெடுவாளைப் பல்லுவியற் பழஞ்சோற்றுப் புகவருந்தி.
(புறநானூறு 395:1-5)
6. சொன்றி
சாறயர்ந் தன்ன மிடாஅச் சொன்றி வருநர்க்கு வரையா வளநகர்.
(குறிஞ்சிப்பாட்டு : 201-202) காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோ ளறியாச் சொன்றி நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே
(குறுந்தொகை :233:4-7) வெல்போர்ச் சோழர் கழார்க் கொள்ளும் நால்வகை மிகுபவிக் கொடையொடு உகுக்கும் அடங்காச் சொன்றி.
(நற்றிணை: 218:3-5)
உண்மருந் தின்மரும் வரைளோ ளறியாது குரைதொடி மழுகிய வுலக்கை வயின்றோ றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும் கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
(பதிற்றுப்பத்து : 24:18-22)
31

Page 18
மனோன்மணி சண்முகதாஸ்
கொடுவில் எயினக் குறும்பிற் சேப்பின் களைவளர் ஈந்தின் காழ்கண் டன்ன சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறைகால் யாத்தது வயின்றொறும் பெறுகுவிர்
(பெரும்பாணாற்றுப்படை : 129-133)
இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த
குறுநகை முஞ்ஞைக் கொழுங்கட் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியொடு பெறுTஉம்
(புறநானூறு: 197:10-13)
7. சோறு
32
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
(அகநானூறு :903-6)
இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல் நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் ஒலிகழை நெல்லின் அரிசியோ டோராங் கானிலைப் பள்ளி அளைபெய் தட்ட வானினம் உருக்கிய வாஅல் வெண்சோறு புகரரைத் தேக்கின் அகலிலை மாந்தும்
(அகநானூறு 107:5-10)
மறப்படைக் குதிரை மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை
(அகநானூறு 233:7-9)
களவும் புளித்தன விழவும் பழுநின சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர் இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு கார்வாய்த் தொழிந்த ஈர்வாய்ப் புற்றத்து ஈயல்பெய் தட்ட இன்புளி வெஞ்சோறு

தமிழர்-யப்பானியர்.
சேதான் வெண்ணெய் வெம்புறத் துருக இளையர் அருந்த.
(அகநானூறு : 394:1-7)
சிறுமுத்த னைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ
(கலித்தொகை : 59:20-21)
உறுவெயிற் குலைஇய உருப்பவிர் குரம்பை எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு தேமா மேனிச் சில்வளை யாயமொடு ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்
(சிறுபாணாற்றுப்படை : 174-177)
மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின் பெருநெற் பல்கூட் டெருமை உழவ கண்படை பெறாது தண்புலர் விடியல் கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு கவர்படு கையை கழும மாந்தி.
(நற்றிணை : 60:1-6)
தொல்பசி யுழந்த பழங்கண் வீழ எஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு நணையமை கள்ளின் றேறலொடு மாந்தி
(பதிற்றுப்பத்து : 12:15-18)
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் பெருஞ்சமந்ததைந்த செருப்புகன் மறவர் உருமுநில னதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியும் கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே
(பதிற்றுப்பத்து : 30:40-44)
மட்டுவாய் திறப்பவு மைவிடை வீழ்ப்பவும் அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும் பெட்டாங் கீயும் பெருவளம் பழுணி.
(புறநானூறு 113:1-3)
33

Page 19
மனோன்மணி சண்முகதாஸ்
34
வாலிதின் விளைந்த புதுவர கரியத் தினைகொய்யக் கவ்வை கறுப்ப வவரைக் கொழுங்கொடி விளர்க்காய் கோட்பதமாக நிலம்புதைப் பழுணிய மட்டின் றேறல் புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து நறுநெய்க் கடலை விசைப்ப சோறட்டுப் பெருந்தோ டாலம் பூசன் மேவர வருந்தா யாணர்த்து
(புறநானூறு 120:9-16)
வள்ளத் திடும்பாலுள்ளுறை தொடரியொடு. களவுப் புளியன்ன விளைகள்.
O V KI வாடூன் கொழுங்குறை கொய்குர லரிசியொடு நெய்பெய் தட்டுத் துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோ றுண்டினி திருந்த பின்றை.
(புறநானூறு 328:7-12)
குறுந்தா ளேற்றைக் கொழுங்க ணல்விளர் நறுநெய் யுருக்கி நாட்சோ றீயா வல்ல னெந்தை பசி தீர்த்தல்.
(புறநானூறு 379:8-10)
‘வளநீர் வாட்டாற் றெழினி யாதன் கிணையேம் பெரும கொழுந்தடிய சூடென்கோ வளநனையின் மட்டென்கோ குறுமுயலி னிணம் பெய்தந்த நறுநெய்ய சோறென்கோ திறந்து மறந்த கூட்டுமுதல் முகந்துகொள்ளு முணவென்கோ அன்னவை usua).
வருந்திய இரும்பே ரொக்க லருந்தெஞ்சிய அளித்துவப்ப வீத்தோ னெந்தை
(புறநானூறு 396:13-24)
அழிகளிற் படுநற் களியட வைகிற் பழச்சோ றயிலு முழங்கு நீர்ப் படப்பை
(புறநானூறு 399:10-11)

தமிழர் -யப்பானியர்.
8. கூழ்
செங்கா யுதிர்ந்த பைங்குலை ஈந்தின் பரன்மட் சுவல முரணில முடைத்த வல்வாய்க் கணிச்சிக் கூழார் கோவல ரூறாதிட்ட வுவலைக் கூவல்
(அகநானூறு : 21:20-23)
கொல்லை யுழவர் கூழ்நிழல் ஒழித்த வல்இலைக் குருந்தின் வாங்குசினை
(அகநானூறு: 194:13-14)
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் கூழுஞ் சோறுங் கடைஇ யூழின் உள்ளில் வறுங்கலந் திறந்தழக் கண்டு
(புறநானூறு: 160:18-21)
நெடுங்கழைத் தூண்டில் விடுமீனொடுத்துக் கிணைமக ளட்ட பாவற் புளிக்கூழ் பொழுதுமறுத் துண்ணு முண்டியேன்.
(புறநானூறு : 399:15-17)
9. பலி
இகல்முனைத் தரீஇய ஏறுடைப் பெருநிரை நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும் வால்நிணப் புகவின் வடுகர் தேஎத்து
(அகநானூறு : 213:6-8)
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே
(குறுந்தொகை : 210:2-6)
மாசில் மரத்த பலியுண் காக்கை வளிபொரு நெடுஞ்சினை களியொடு தூங்கி வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நால்வகை மிகுபவிக் கொடையொடு உகுக்கும் அடங்காச் சொன்றி அம்பல் யாணர் விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப
(நற்றிணை: 218:1-6)
35

Page 20
மனோன்மணி சண்முகதாஸ்
நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து உகுபவி அருந்திய தொகுவிரற் காக்கை
(நற்றிணை: 343:4-5) கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து கருங்கண் கருணைச் செந்நெல்வெண் சோறு சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால் கூழுடை நன்மனைக் குழுவின இருக்கும்
(நற்றிணை: 367:1-5) காவன் மன்னர் கடைமுகத் துகுக்கும் போகுபவி வெண்சோறு.
(புறநானூறு: 231:11-12) கூடுகெழீஇய குடிவயினாற் செஞ்சோற்ற பலிமாந்திய கருங்காக்கை கவவுமுனையின்
(பொருநராற்றுப்படை : 182-184)
10.புழுக்கல்
36
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
(நற்றிணை 83:5) உமண்சாத் திறந்த ஒழிகல் அடுப்பின் நோன்சிலை மழவர் ஊன்புழுக் கயரும்
(அகநானூறு 119:8-9) பல்லா னெடுநிரை தழீஇக் கல்லென வருமுனை யலைத்த பெரும்புகல் வலத்தர் கனைகுரற் கடுந்துடிப் பாணி தூங்கி உவுலைக் கண்ணிய நுன்புழுக் கயரும்
(அகநானூறு 159:7-10) முன்றி னிடிய முழவுறழ் பலவிற் பிழிமகிழுவகையன் கிளையொடு கலி சிறந்து சாந்த ஞெகிழியி னூன் புழுக் கயரும்
(அகநானூறு: 172:11-13) வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப் பயநிரை தழீஇய கடுங்கண் மழவர் அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்

தமிழர் -யப்பானியர்.
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற் கொழுப்பா எறிந்து குருதி தூஉய் புலவுப்புழுக் குண்ட வான்கண் அகலறை
(அகநானூறு 309:1-6)
சேக்குவள் கொல்லோ தானே தேக்கின் அகலிலை குவித்த புதல்போல் குரம்பை ஊன்புழுக் கயரும் முன்றிற் கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே
(அகநானூறு : 315:15-18)
கருந்தொழிற் கலிமாக்கள் கடலிறவின் சூடுதின்றும் வயலாமைப் புழுக்குண்டும்
(பட்டினப்பாலை : 62-64)
அடுமகண் முகந்த வளவா வெண்ணெல் தொடிமா னுலக்கைப் பரூஉக்குற் றரிசி காடி வெள்ளுலைக் கொளிஇ நீழல் ஓங்குசினை மாவின் நீங்கனி நறும்புளி மோட்டிரு வராஅற் கோட்டுமீன் கொழுங்குறை செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகற் பாதிரி யூழ்முகை யவிழ்விடுத் தன்ன மெய்களைந் தினனொடு விரைஇ. மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல்
(புறநானூறு 399:1-9)
கள்ளி யேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலு ளாங்கண் உப்பிலாஅ வவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்கு நோக்கா திழிபிறப்பினோ னியப்பெற்று நிலங்கல னாக விலங்குபலி மிசையும்
(புறநானூறு : 362:10-15) நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர் பார்வை யாத்த பறைதாள் விளவின் நீழன் முன்றி னிலவுரற் பெய்து குறுங்காழ் உலக்கை யோச்சி நெடுங்கிணற்று வல்லூற் றுவரி தோண்டி தொல்லை
37

Page 21
மனோன்மணி சண்முகதாஸ்
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி வாரா தட்ட வாடூன் புழுக்கல்
(பெரும்பாணாற்றுப்படை : 94-100) கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை அரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின் தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்கல்
(பெரும்பாணாற்றுப்படை : 471-474) அவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை முரவை போகிய முரியா அரிசி விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப அயின்ற காலைப் பயின்றினி திருந்து
(பெரும்பாணாற்றுப்படை : 112-116)
11. புன்கம்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை மென்றினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு இருங்கதிர் அலமருங் கழனிக் கரும்பின் விளைகழை பிழிந்த அந்தீஞ் சேற்றொடு பால்பெய் செந்நெற் பாசவற் பகுக்கும்
(அகநானூறு: 237:9-13) காலை யந்தியு மாலை யந்தியும் புறவுக் கருவன்ன புன்புல வரகின் பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கி
(புறநானூறு : 34:8-10)
12. மூரல்
38
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
(அகநானூறு : 60:3-6)
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
(பெரும்பாணாற்றுப்படை : 166-168)

தமிழர்-யப்பானியர்.
மேற்குறிப்பிட்ட தமிழர் உணவு பற்றிய செய்திகளை விரிவாக நோக்கு மிடத்து சில கருத்துக்களைப் பெற முடிகிறது. வரகு, தினை, நெல்லரிசி என மூவகையான தானியங்கள் உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவற்றின் தன்மையும் சுவையும் கருதி அவற்றிற்கு வெவ் வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அடிசில் என்ற பெயர் பொதுவான பெயராக அமைந்துள்ளது. சமைக்கப்பட்ட சோற்றை இது குறித்தாலும் பால், நெய், ஊன் போன்றவை சேர்த்துச் சமைக்கப்பட்ட சோறாகவும் காணப்படுகிறது. அமுது என்னும் பெயர் சுவை நிலையில் வழங்கப் பட்டுள்ளது. அம்+அது என்ற அமைப்பில் இனிமையானது என்ற சுவைப்பொருள் பெற்றுள்ளது.
அமலை திரட்சியான அமைப்பு நிலையிலே பெயர் பெற்றுள்ளது. சோற்றைக் கறியுடன் சேர்த்துத் திரளையாக அமைத்து உண்ணும் நடைமுறை காணப்படுகிறது. நறவுண்டு கிடக்கும் பாணர்க்குப் பாண்மகள் சோற்றுத் திரளையைக் கொடுக்கின்றாள். ஊன் சோற்றமலை என்ற தொடர் ஊன் சேர்த்துத் திரட்டுவதைக் குறிக்கிறது. பழஞ்சோற்ற மலை என்ற தொடர் பழைய சோற்றையும் திரளையாக்கி உண்ணும் நடைமுறை இருந்ததைக் காட்டுகிறது.
நன்கு வெந்த அரிசி உணவு அவிழ் எனப்பட்டது. வாலவிழ் மிதவை, வாலவிழ்வல்சி என்னும் தொடர்கள் இதனை விளக்குகின்றன. உவியல் என்ற பெயரும் அரிசியைச் சோறாக்கும்போது கஞ்சி வடிக்காமல் அப்படியே உவிப்பதனால் வந்துள்ளது. சொன்றி என்னும் பெயர் பெரும்பாலும் வரகரிசிச் சோற்றைக் குறித்தது. அரிசியும் ஊனும் கலந்து சமைக்கும்போது சோறு கரையாது அமைப்பது புழுக்கல் எனப் பட்டது. புன்கம் என்பது வரகு, தினை என்பவற்றின் அரிசியைப் பாலு டன் சேர்த்து குழைவாகத் தயாரிக்கப்பட்ட உணவு எனலாம். மூரல் என்பது பாலுடன் சேர்த்து ஆக்கப்படும் அரிசியுணவைக் குறித்தது. பலி அரிசி அல்லது தினையிலே சோறாக்கப்பட்டு கடவுளுக்கு மடையிடும் உணவாக அமைகிறது. இது மனிதன் தனது விளைபொருளைத் தனக்கு அவ்விளைபொருளைப் பெறுவதற்கு உதவிய இயற்கை ஆற்றலுக்கு மடையிட்ட நடைமுறையையும் காட்டுகிறது.
இச்சொற்கள் அரிசி உணவை மனிதன் தயாரித்த விதத்தைக் கூறுவ துடன் மட்டுமன்றி பண்பாட்டு நிலையான அவனுடைய எண்ணங்களை யும் வெளிப்படுத்துகின்றன. நிலத்திலிருந்து பெற்ற தானியத்தைத் தன் வீட்டில் வாழும் பசுவின் பாலோடு சேர்த்து அடுப்பிலே வைத்து உணவாக்கும்போது பால் பொங்கி வந்ததைக் கண்டு 'பொங்கல்' என்ற பெயரையும் பின்னர் தந்திருக்க வேண்டும். தைத்திங்கட் பிறப்பன்று இந்நடைமுறை இருந்ததால் 'தைப்பொங்கல் என்ற பெயர் வழங்கப் பட்டிருக்க வேண்டும்.
39

Page 22
மனோன்மணி சண்முகதாஸ்
தைத்திங்களில் வீட்டில் பொங்கல் செய்து மடைபோடும் நடைமுறை யிருந்ததைச் சங்க இலக்கியச் செய்திகளிலிருந்து பகுத்து உணர முடிகின்றது. சிலப்பதிகாரத்தில் பொங்கல் என்ற சொல் இடம் பெற் றுள்ளது.
காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து
(சிலம்பு : 5:67-69) மறக்குடி மகளிர் காவற்றொழிலைச் செய்கின்ற பூதத்தின் பலி பீடத் தின் மருங்கிலே புழுக்கலையும், நிணச்சோற்றையும், பூவையும், புகை யையும், பொங்கலையும் சொரிந்து மடையிடுகிறார்கள். இங்கே பொங்கல் என்பது கள்ளைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் உரை வழங்கியுள்ள போதும் 'பொங்கல்’ என்பது பொங்கற் சோற்றையும் குறிக்குமென்பர். தமிழரிடையே பொங்கல் மடையிடும் வழக்கமிருந் ததையே இதுவும் உணர்த்தும்.
சங்க இலக்கியத்தில் 'பொங்கல்’ என்ற சொல் சில பாடல்களிலே இடம்பெற்றுள்ளது.
கல்சேர் பிருந்த கதுவாய்க் குரம்பைத் தாழிமுதற் கவித்த கோழிலைப் பருத்திப் பொதிவயிற் றிளங்காய் பேடை யூட்டிப் போகில் பிளந்தட்ட பொங்கல் வெண்காழ்
(அகநானூறு: 129:6-9)
பெய்துபுலம் திறந்த பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப்பட் டன்ன துவலை தூவல் கழிய.
(அகநானூறு 217:1-3) மந்திக் காதலன் முறிமேய் கடுவன் றண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப் பொங்க லிளமழை புடைக்கு நாட.
(ஐங்குறுநூறு : 276:1-3) "பெய்துபுறந் தந்து பொங்க லாடி விண்டுச் சேர்ந்த வெண்மழைபோல."
(பதிற்றுப்பத்து : 55:14-15) இங்கு பொங்கல் என்னும் சொல் வெண்மை, முகில், உயர்ச்சி என்ற பொருள்களைத் தந்துள்ளது. எனவே, தைத்திங்கள், தையூண் நடைமுறை
யிலே பானையில் உலைநீராக பாலை வார்த்து எரியூட்டியபோது பால்
40

தமிழர் -யப்பானியர்.
பொங்கி வர அரிசியிட்டு ஆக்கிய உணவும் பின்னர் பொங்கல் எனப் பட்டது எனலாம். வெண்மை, உயர்ச்சி என்ற நிலையில் முகிலுடன் பொங்கற் சோற்றின் பொங்கிவரும் தன்மை ஒத்திருந்தது. அது பொங்கல் உணவாகிப் பின்னர் சிறப்புநிலையிலே தைப்பொங்கலாகி விட்டது.
இன்னும், தைப்பொங்கலன்று “பொங்கிப் புழுக்கல்’ என்ற நடை முறை (யாழ்ப்பாணக் குறிச்சிகளில்) உண்டு. பருப்பு வகைகளை அவிப் பதைப் புழுக்கல் என்பர். அத்துடன் அன்று பொங்கலும் செய்யப்படும். இது சங்ககாலத்துப் புழுக்கல் என்னும் நடைமுறை இன்றும் வழக்கிலி ருப்பதையே உணர்த்துகிறது. உழுதொழில் செய்வோர் மடையிடும் போது பொங்கலையும் புழுக்கலையும் செய்வர். ஆனால் இந் நடைமுறை இன்று உழுதொழிலுக்குதவும் மாடுகளுடன் தொடர்புபட்ட மாட்டுப் பொங்கல் எனவும் உறவினருடன் தொடர்புபட்ட காணும் பொங்கல் எனவும் மூன்று நாள் நடைமுறையாக மாறிவிட்டது. இந்த நடைமுறை யப்பானி யரது நடைமுறைகளுடன் பெரிதும் ஒற்றுமையுடையதாய்க் காணப்படு கிறது.
4. தமிழ் - யப்பானிய சொல்லொற்றுமை
முன்னர்க் காட்டப்பட்ட சொல் - பொருள் ஒற்றுமை நிலை காட்டும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இன்றியமையாதது. பேராசிரியர் ஒனோ பயிர்ச்செய்கை நிலை யிலே இரு மொழியிலும் ஒற்றுமைப்பட்டுக்காணும் 27 சொற்களை எடுத்துக்காட்டியுள்ளார். இன்னும் அவற்றை நான்கு வகையான வகைப் பாட்டிலும் அடக்கியுள்ளார். தமிழர் யப்பானியர் பொங்கல் நடைமுறை பற்றிய செய்திகளைத் தொகுத்து நோக்குவதற்கும் இச்சொற்களே பெரி தும் உதவியுள்ளன. இங்கு அச்சொற்களை எடுத்துக்காட்டுகள் கொண்டு தெளிவுபடுத்துவது பயனுடைத்தாகும்.
பயிர்ச்செய்கை நிலையிலே செய்முறைகளிலே பலவற்றில் பல் வேறின மக்களும் ஒற்றுமையுடையராக இருக்கக்கூடும். ஆனால், பயன் படுத்துகின்ற சொற்களின் நிலையில் தமிழரும் யப்பானியரும் பெரிதும் ஒற்றுமையுற்றிருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்திய சொற்கள் ஏனைய மொழி பேசும் இனத்தவர்களுடைய சொற்களைவிட ஒலியமைப்பிலும், பொருள் தரு நிலையிலும் பயன்படுமிட நிலையிலும் ஒன்றுபட்டுள்ளன. இச்சொற்கள் மொழியியல் ஆய்வில் பண்பாட்டு மொழியியலாய்வு செய்யத் தூண்டும் சொற்களாகவும் அமைகின்றன. பண்பாட்டு ஒற்றுமை நிலை காட்டும் சான்றுகளாகவும் விளங்குகின்றன.
4. I

Page 23
மனோன்மணி சண்முகதாஸ்
1. உழவுச் செய்கை நிலந்தொடர்பான சொற்கள்
i. LuG6æsir : FATAKE
இச்சொல் யப்பானிய மொழியிலே FATAKE என்னும் சொல் லுடன் ஒற்றுமையுறுகின்றது. யப்பானிய மொழியிலே FATAKE என்பது தற்காலத்தில் வயல் என்ற பொருள் தருகின்ற சொல்லாகப் பொது நிலையிலே பயன்பட்டாலும், புதிதாகப் பயிர்ச் செய்கைக்கெனப் பண் படுத்தப்பட்ட நிலத்தையே முன்னர்க் குறித்து நின்றது. இச்சொல்லைக் குறிக்கும் வரிவடிவமும் இப்பொருளை நன்கு உணர்த்துகின்றது. நெருப்பையும் வயலையும் குறிக்கும். வரிவடிவங்களை ஒன்று சேர்த்து இவ்வரி வடிவத்தை யப்பானியரே ஆக்கியுள்ளனர். (1 + a=XE) தீயை யும் நிலத்தையும் குறிக்கும் இரு வரிவடிவங்கள் இணைந்து நன்செய் நில உருவாக்கத்தை விளக்குகின்றன. காட்டை எரித்து விளைநிலமாக்கி தானியம் விளைவிக்கும் நடைமுறையையும் இச்சொல் உணர்த்துகின் றது. தொடக்கநிலையிலே இயற்கை நிலையான நீர்ப்பாய்ச்சல் மூலம் விளைவு செய்யும் நிலமாகவுமிருந்தது. இப்போது யப்பானில் வயலைக் குறிக்கப் பயன்படுகிறது. தமிழிலுள்ள படுகர் என்ற சொல்லுடன் ஒலி யமைப்பிலும் பொருள் நிலையிலும் ஒற்றுமையுறுகிறது. தமிழில் படுகர் என்னும் சொல் மருதநிலத்தைக் குறிக்கிறது. இச் சொல் மருவி படுகல் எனவும் வந்துள்ளது. சொல்லின் பயன்பாடு அறியப் பின்வரும் எடுத்துக் காட்டுக்கள் உதவும்.
பூம்படு கல்லின வாளைபாயும்புக லிந்நகர்
(சம்பந்தர் தேவாரம்: பக்:65)
பூம்படு கிற்கயல் பாயப்.
(சம்பந்தர் தேவாரம்: பக்:196) பூம்படுகர்ப் பகட்டினங்கள் வெகுண்டெழுந்து.
(காஞ்சிப்புராணம்: திருநாட்டு 131) படுகர் என்னுஞ் சொல்லுக்குத் தமிழ்மொழியகராதி வயல் என்ற பொருளையும் தந்துள்ளது. தற்போது தமிழில் இச்சொல்லின் பயன்பாடு அருகிவிட்டதால் பொருளும் மறக்கப்பட்டுவிட்டது. தமிழிலக்கியங் களிலே மருத நிலமென்பது வயலையும் வயல் சார்ந்த குறிச்சியையும் குறித்தது. ஆனால், தற்போது அச்சொல்லும் வழக்கு அருகிவிட்டது.
ii. 5bLudid: TAMBO
தமிழிலுள்ள தம்பல் என்னும் சொல் யப்பான் மொழியிலுள்ள வயலைக் குறிக்கின்ற TAMIBO என்னும் சொல்லுடன் ஒலியமைப்பிலும் பொருள் நிலையிலும் ஒற்றுமையுறுகின்றது. யப்பானியச் சொல் குளிர்மையான வயலைக் குறிக்கின்றது. கனத்த மழையால் இறுகின வயலைத் தமிழில் தம்பல் எனக் குறிப்பிடுவர். இறுகின வயலை
42

தமிழர் -யப்பானியர்.
உழுவதைத் தம்பலடித்தல் என்பர். தமிழ்மொழி அகராதி தம்பல் என்ற சொல்லுக்கு சேறு என்ற பொருளைத் தந்துள்ளது. தம்பலாடுதல் எனச் சேறாக்குதலையும் குறிப்பிடுகிறது. ஆனால், பிங்கலந்தை, நிகண்டு, நாமதீப நிகண்டுவில் இச்சொல் குறிப்பிடப்படவில்லை. தம்பல் என்ற சொல்லின் பயன்பாடு தற்போது தமிழில் அருகிவிட்டது. இலங்கையி லுள்ள தம்பலகாமம் என்னும் ஊர்ப் பெயர் இச்சொல்லின் வழக்காற்றை உணர்த்தி நிற்பது குறிப்பிடத்தக்கது.
iii. Sešasi : AZE
தமிழில் அச்சு என்னும் சொல் பல பொருட்களைத் தருகின்றது. கட்டளைக்கருவி, கம்பியச்சு, உருக்கெழுத்து, சரியொப்பு, அடையாளம், நெய்வோர் கருவி வகை, உருள்கோத்தமரம், அச்சுருவாணி, எந்திரவச்சு, ஆதாரம், வலிமை, மூலருபம், உடம்பு, செய்வரம்பு என அவற்றைத் தமிழ்ப் பேரகராதி தொகுத்துக் காட்டுகிறது. செய்வரம்பு என்ற பொருளில் அச்சு யப்பானியச் சொல்லான AZE யுடன் ஒற்றுமையுள்ளது. வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்படும் வரம்பு யப்பானிய மொழியில் AZE எனப்படும். யப்பானிய வரலாற்றில் YAYOI காலமென அழைக்கப் படும். கி.மு. 200 - கி.பி. 200 ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் வயல்களின் AZE நாற் சதுரவடிவில் அமைந்திருந்தது. வயலின் ஒரே அளவான நிலப்பகுதிக்கு நீர்ப்பாய்ச்சல் செய்ய இவ்வாறு அமைக்கப்பட்டது. தமிழிலே அச்சுக்கட்டின நிலமென நாற்சதுர வடிவிலே வரம்பு அமைப் பதைக் கூறுவர். மழை பெய்யும்போதும் அளவான நீரைப் பயிருக்கு விடுவதற்கும் இந்த அச்சுக்கட்டும் முறை பெரிதும் உதவியது.
iv. SyübL: KURO
குரம்பு என்னும் தமிழ்ச்சொல் அணைக்கட்டு, ஆற்றினின்றும் வாய்க்கால்களுக்கு நீரைத் திருப்பும் அணை, வரப்பு, எல்லை என்னும் பொருள்களைத் தருகிறது. இவற்றில் வரப்பு என்னும் பொருளில் யப்பானியச் சொல்லான KURO வுடன் ஒற்றுமையுறுகிறது. வயலிலே நடந்து போகின்ற பாதையாகவும் யப்பானியச் சொல் பொருள் தரும். நீர்ப்பாய்ச்சல் நிலையிலன்றி வயலின் பரப்பளவு எல்லையைக் குறிக்க அமைக்கப்படும் மண் அணையாகவும் இச்சொற்கள் பொருள் தருகின் றன. தமிழிலக்கியத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்ட நிலையை நோக்கும்போது இக்கருத்து மேலும் விளக்கம் பெறுகின்றது.
கொதித்த உள்ளமொடு குரம்புகொண் டேற
(மணிமேகலை 18:3) இங்கு குரம்பு என்ற சொல் எல்லை என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. உரையிலே குரம்பு கொண்டேறுதல் - அணையிடப்பட்டி ருந்து பின்னர் அவ்வணையையும் உடைத்துக்கொண்டு செல்லுதல் என
43

Page 24
மனோன்மணி சண்முகதாஸ்
விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வயலிலே நீர்ப்பாய்ச்சும் எல்லையைக் குறிக்க இச்சொல் பயன்பட்டிருக்க வேண்டும்.
மாநீர்க் குரம்பெலாம் செம்பொன்.
(கம்பராமாயணம் : நாட்டு 2)
என வரும் கம்பராமாயணச் செய்யுளடியிலும் குரம்பு என்ற சொல்லின் பொருள் வயலின் எல்லையைக் குறிக்கின்றது. தமிழிலே வரம்பு என்ற சொல்லும் இப்பொருளைத் தரும் சொல்லாகப் பயின்று வந்துள்ளது. தற்போது வரம்பு என்ற சொல்லே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. குரம்பு தமிழில் தற்கால அகரமுதலிகளில் இடம்பெறாமை குறிப்பிடத் தக்கது. தமிழ்மொழியகராதி இச்சொல்லுக்குச் செய்கரை, வரம்பு என இரு பொருள் தந்துள்ளது.
v. se6R9b6RsOT: ANA
அணை என்னும் தமிழ்ச்சொல் பல பொருள் தருஞ் சொல்லா கும். வயலின் நீர் எல்லையை உணர்த்தும் பொருள் நிலையில் இச் சொல் யப்பானியச் சொல்லான ANA வுடன் ஒற்றுமையுறுகின்றது. பழைய தமிழிலக்கியங்களிலே இச்சொல்லின் மேற்குறித்த பொருள் நிலைப் பயன்பாடு துலக்கம் பெறுகிறது.
பைங்கால் செறுவின் அணை.
(நற்றிணை 340:8) ஆய்கதிர் நெல்லின் வரம்பணை.
(குறுந்தொகை 238:2) யப்பானிய ANA வரம்புப் பாதை எனப் பொருள்தருகின்றது. வயலுக்கு நீர்ப்பாய்ச்சும் வரையளவு காட்டும் அணை மேல் நடந்து செல்ல (ւՔIգեւյւք.
vi. 96äT6RoL: ADO, ADE
அண்டை என்னும் சொல் தமிழில் வரம்பு என்னும் பொருளிலும் பயன்படுகிறது.
அண்டை கொண்டு கெண்டை மேயும்.
(திவ்வியப் பிரபந்தம் : திருச்சந்தவிருத்தம் :49) என வரும் செய்யுளடி இதனை விளக்கும். தமிழிற் பேச்சு வழக்கில் வரம்பு வெட்டுதலை அண்டை வெட்டுதல் என்பர். யப்பானிய மொழியில் ADO, ADE என்னுமிரு சொற்களும் பேச்சுவழக்காகவே காணப்படு கின்றன. வரம்பு என்ற பொருளிலே பயன்படுத்தப்படுகின்றன.
vii. Garg: SIRO
சேறு என்னும் சொல் யப்பானியச் சொல்லான SIRO வுடன் ஒலி நிலையிலும் பொருள் நிலையிலும் ஒற்றுமை உடையது. பயிர்செய்
44

தமிழர்-யப்பானியர்.
நிலத்தில் சேறு பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. மலையாள மொழியில் சேறு என்னுஞ் சொல் நாற்று நடவுக்குத் தயாரான நீர்த் தன்மையுடைய நிலத்தைக் குறிக்கின்றது. தமிழில் சேறாடுதல என்பது வயலில் விதைத்தற்காக நிலத்தை ஈரலிப்புடையதாக்கலைக் குறிக்கின்
நிறது.
"இருஞ்சேற் றகல் வயல்.”
(திருமுருகாற்றுப்படை 72) 'தண்சேறு."
(ஐங்குறுநூறு 28:2) என வருகின்ற பழைய இலக்கிய எடுத்துக்காட்டுகள் தமிழில் இச் சொல்லின் பழைய பயன்பாட்டை விளக்கி நிற்கின்றன. யப்பானிய மொழியிலும் SIRO சொல் என்னும் இலக்கிய வழக்காக உள்ளது.
viii. stoff: KOBA
குமரி என்னும் சொல் தமிழில் மலை நிலத்திற் செய்யப்படும் பயிர்ச் செய்கையைக் குறிக்கின்றது. யப்பானிய மொழியிலே KOBA என்னும் சொல் காட்டை வெட்டி எரித்துப் புதிதாகப் பயிர் செய்கின்ற நிலம் எனப் பொருள் தருகிறது. பேச்சு வழக்கிலே இச்சொல் பயன்படுகிறது. தமிழி லும் குமரி என்னும் சொல் தற்போது பயிர் செய்யும் நிலத்தைக் குறிக்கப் பயன்படுவது அருகிவிட்டது.
மேற்காட்டிய உழவுச் செய்கை நிலந் தொடர்பான சொற்களை நோக்கும்போது சொற்களிடையேயுள்ள கூர்மையான பொருள் வேறு பாட்டையும் உணர முடிகிறது. வயல் நிலையில் படுகர், தம்பல் என்பவற் றின் பொருள் வேறுபாடு காய்ந்த வயல், ஈரலிப்புவயல் என அமைகிறது. அச்சு, குரம்பு, அணை, அண்டை என்பவற்றின் அமைப்பு நிலை வேறு பாடு குறிப்பிடத்தக்கது. பண்பாட்டு நிலையில் பயிர்செய் நிலங்களின் பண்படுத்தும் முறையை இச்சொற்கள் விளக்கிக் காட்டுகின்றன. இன் னும் இவை பற்றிய விரிவான ஆய்வைச் செய்யவும் தூண்டுகின்றன. இரு மொழிச் சொற்களையும் ஒப்புநோக்கும்போது இவ்வெண்ணம் மேலும் வலுவுறுகிறது.
45

Page 25
மனோன்மணி சண்முகதாஸ்
2. விளைபொருள் தொடர்பான சொற்கள்
i. 6J6ørsid: INA
ஏனல் என்னும் பழைய தமிழ்ச் சொல் தினையையும் தினைப் புனத்தையும் குறிக்கும். நெற்பயிர்ச் செய்கைக்கு முன்னர் தினை, வரகு போன்ற தானியங்களே விளைவிக்கப்பட்டன. ஏனல் என்னும் சொல் பொதுவாக தானியங்களைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்பட்டிருக்க வேண்டும். தினை, வரகு, நெல் போன்ற தனிப்பட்ட பெயர்களின் பொதுப் பெயராக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனல் என்பது தானியங்களை யும் விளைநிலத்தையும் குறித்துள்ளது. பின்வரும் எடுத்துக் காட்டுகள்
ஏனலு மிரங்குகுர லிறுத்தன
(அகநானூறு: 182:1) எரிதின் கொல்லை யிறைஞ்சிய ஏனல்
(அகநானூறு: 288:5) அடுக்கல் ஏனல் இரும்புனம்.
(அகநானூறு: 348:10) மலையயற் கலித்த மையார் ஏனல்.
(நற்றிணை 108:1) புலர்பதங் கொண்டன ஏனற் குரலே
(நற்றிணை 259:10) ஏனல் என்பது தானியத்தைக் குறித்து நின்றதை விளக்குகின்றன. தானியம் என்ற பொருள் நிலையிலேதான் ஏனல் என்னும் சொல் யப்பானிய மொழியில் INA என்னுஞ் சொல்லுடன் ஒற்றுமையுறுகிறது.
ii. Slswo6oT: SINE, SINAI
தமிழிலுள்ள தினை என்னும் சொல் யப்பானிய மொழியிலுள்ள SINE என்னும் சொல்லுடனும் SINA என்னும் சொல்லுடனும் ஒற்றுமை யுறுகிறது. யப்பானிய SINE என்னும் சொல் நெல்லைக் குறித்து நிற்கி றது. தற்கால வழக்கில் யப்பானிய மொழியில் நெல்லைக் குறிக்கும் INE என்ற சொல் SINE என்ற பழைய சொல்லின் மருவிய வடிவமென்பர். SINE என்ற சொல் முளைத் தொடக்க நிலையிலே தினையையும் நெல்லையும் குறித்ததென்பர். AOMOR என்னுமிடத்தில் தை மாதம் ஏழாந் திகதி SINA1SINA1 எனக் கூவி காகத்திற்குச் சோறு வைக்கும் வழக்கமுள்ளது. இது SINE என்ற சொல்லின் மருவிய வடிவமென்பர். SINE எனத் தொடக்க நிலையிலே தினையையும் நெல்லையும் குறித்த சொல்லிலிருந்து SINAI என்ற வடிவம் தினையைக் குறிக்கவும் INE என்ற வடிவம் நெல்லைக் குறிக்கவும் பயன்பட்டதென பேராசிரியர் ஒனோ கருதுகிறார். ஆனால், தமிழில் தினை என்ற சொல் நெல்லைக் குறிப்பது
46

தமிழர்-யப்பானியர்.
இல்லை. தினையை மட்டுமே குறிக்கிறது. சங்க இலக்கியப் பாடல் களில் தினை பற்றிய செய்திகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.
உழாஅது வித்திய பருஉக்குரற் சிறுதினை
(புறநானூறு: 188:6) முறஞ்செவி யானைத் தடக்கையில் தடைஇ இறைஞ்சிய குரவ பைந்தாள் செந்தினை.
(நற்றிணை 376:1-2) புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை கிளிகுறைத் துண்ட கூழை யிருவி
(குறுந்தொகை 133:1-2) கொய்யா முன்னுகுங் குரல்வார்பு தினையே யருவி யான்ற பைங்கா றோறு மிருவி தோன்றின பலவே.
(அகநானூறு: 28:3-5) கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த செங்கேழ் ஆடிய செங்குரற் சிறுதினை
(நற்றிணை: 213:8-9)
குருவி யார்ப்பக் குரல்குவிந்தன தினை
(பரிபாடல்: 18:47) தினை என்பது தொடக்க காலப் பயிராகவும் இயற்கை நிலையிலே செய்கை பண்ணப்பட்டதாகவும் காணப்படுகிறது. யப்பானிய SINA யும் அவ்வாறே காணப்படுகிறது.
iii. LukaansF: WASE
தமிழில் பசுமையைக் குறிக்கும் பச்சை எனும் சொல் யப்பானிய மொழியிலுள்ள WASE என்னும் சொல்லுடன் ஒற்றுமையுற்றிருக்கிறது. பச்சை என்னும் சொல்லின் அடிச் சொல்லான பசு யப்பானிய WASE யுடன் ஒலி நிலையிலும் பொருள் நிலையிலும் ஒற்றுமையுற்றிருக்கிறது. பசிய நெல் பற்றிய செய்தி யப்பானிய பழைய இலக்கியமான மன்யோசு வில் வருகிறது.
பசு நெல்லைக் களையும் நேரம் வந்திட்டதும்
(மன்யோக:2117) தமிழிலக்கியத்தில் பெரும்பாணாற்றுப் படையில் பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
(பெரும்பாணாற்றுப்படை 168)
என வரும் அடி இப்பொருள் ஒற்றுமையைக் காட்டுகிறது.
47

Page 26
மனோன்மணி சண்முகதாஸ்
iv. G56): NI
நெல் என்னும் தமிழ்ச்சொல் N என்னும் யப்பானிச் சொல்லுடன் ஒற்றுமையுற்று நிற்கிறது. NI என்பது மலை நிலத்திலும், மருத நிலத்தி லும் விளைவிக்கப்பட்டது. மருதநிலத்திலே வெண்ணெல்லும் செந் நெல்லும் செய்கை பண்ணப்பட்டன. யப்பானில் உருண்டையான அரிசி யையும், நீளமான அரிசியையும் பெறும் நெல் வகைகள் விளைவிக்கப் பட்டன. நெல் பற்றிய விரிவான குறிப்புகள் சங்கப் பாடல்களிலே காணப் படுகின்றன.
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
(பெரும்பாணாற்றுப்படை 255) அரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின் தெரிகொ ளரிசி.
(பெரும்பாணாற்றுப்படை:473) செந்நெல் விரவுவெள்ளரிசி
(நற்றிணை: 180:2) தம்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
(நற்றிணை: 183:1) செய்கை நிலத்து விளைபொருள்கள் என்ற நிலையிலே ஏனல், தினை, நெல் என்னும் மூன்றும் சங்க இலக்கியச் செய்திகள் மூலம் தெளிவான விளக்கம் பெற்றுள்ளன. இவ்விளக்கங்களினால் யப்பானியச் சொற் களான SINA, SINE, N1 என்னும் விளைபொருள்களும் தெளிவான விளக்கத்தைப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியச் செய்திகள் விளை பொருள்களின் தன்மைகள் பற்றிய குறிப்புக்களைத் தந்திருப்பதால் இன்றும் பழைய நடைமுறைகளைப் பற்றி நாம் அறிய முடிகிறது. இன்றைய INE என்னும் யப்பானியச் சொல் நிலையிலும் SINA, -SINE - INE எனப் பயிர்ச்செய்கையின் வளர்ச்சிநிலை அதனால் உணர்த்தப் பட்டுள்ளது.
48

தமிழர்-யப்பானியர்.
3. உணவுநிலை தொடர்பான சொற்கள்
பயிர்ச்செய்கையினால் பெற்ற விளைபொருட்களை உணவாக்கும் போது அவற்றின் ஆக்கநிலையைத் தொடர்புறுத்திக் காட்டும் சொற் களும் உள்ளன. யப்பானியச் சொற்களில் சில இவ்வாறாமை நிலை யினால் தமிழ்ச் சொற்களுடன் தொடர்புறுகின்றன.
i. 96oo6n : AFA
அவைத்தல் என்னுந் தமிழ்ச் சொல் நெல் முதலியவற்றைக் குற்றுதல், கையாற் குற்றுதல், அவித்தல், நெரித்தல் எனப் பொருள் தரும். இங்கு தானியத்தைக் குற்றுதல் என்ற நிலையில் தானியத்தை விளக்கி நிற்கிறது. யப்பானிய மொழியில் AFA என்பது தானியத்தைக் குறிக்கின்றது. எனவே, குற்றுதல் என்னும் தொழில் நிலையால் அவை என்னுஞ் சொல் யப்பானிய AFA வுடன் தொடர்புடையது. சங்கப் பாடல் களிலே வரும் குறிப்பு இதற்கு சான்றுநிலை விளக்கமாக அமையும்.
இதைப்புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு
(அகநானூறு: 394:3) கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்
(புறநானூறு: 215:1) வரகின் குற்றப்பட்ட அரிசியினைப் பற்றி செய்தி அவைத்தல் என்னும் தொழிற்பெயரின் இன்னொரு வடிவமான அவைப்பு என்னும் சொல் லால் விளக்கப்பட்டுள்ளது.
ii. s6ooo : KÖMË, KUMA
குமைத்தல் என்னுந் தமிழ்ச்சொல் துவைத்தல், உரலில் வைத்து இடித்தல், குழைய வேகச் செய்தல், வருந்துதல், அழித்தல், எனப் பொருள் தரும். உரலில் வைத்து இடித்தல் என்னும் நிலையில் இடிக்கப் படும் பொருளை யப்பானியச் சொற்களான KOME யும் KUMAவும் குறிக்கின்றன. தமிழ்ப் பேரகராதி குமைத்தல் என்னுஞ் சொல் அரிசியுடன் தொழிற்பாடு நிலையில் தொடர்புறுவதை விளக்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணக் குறிச்சியில் குமைத்தல் என்பது நன்கு துலக்குதல் அதாவது, நெல்லரிசியின் தவிடு போகும்படி குற்றுதல் என்னும் பொருளில் இப்போதும் வழக்கிலுள்ளது. ஆனால், யப்பானிய KOMEயும் KUMAவும் அரிசி என்ற நிலையில் ஒற்றுமையான சொற்களாக இருப்பி னும் வேறுபட்ட சொற்களாக அமைவதற்குப் பொருளின் பயன்பாட்டு நிலையில் வேறுபட்டிருப்பது காரணமாகின்றது. யப்பானிய மொழியில் KOME என்னுஞ் சொல் அரிசியைக் குறிக்கின்றது. KUMA என்னுஞ் சொல் கடவுளுக்கு மடையிடும் அரிசியைக் குறித்து நிற்கிறது. தமிழிலும் குமைத்தல் என்னுஞ் சொல் குழையச் சமைத்தல் என்னும்
49

Page 27
மனோன்மணி சண்முகதாஸ்
பொருளில் கடவுளுக்கு மடையிடும் உணவைக் குறிக்கின்றது. நெல் லரிசியுடன் தொடர்புடைய நிலையில் இவ்விரு மொழிச் சொற்களும் பண்பாட்டு நிலை பற்றி ஆய்வு செய்யத் தூண்டுகின்றன.
iii. 96og : ARE
அரைத்தல் என்ற தொழிற்பெயர்நிலையில் அதன் வினையடியான அரை யப்பானியச் சொல்லான ARE யுடன் தொடர்புறுகின்றது. தானி யத்தை அரைத்து மாவாக்கிய பொருள் ARE எனப்பட்டது. இது பழமை யான யப்பானியச் சொல்லாகும். எனினும், யப்பானிலுள்ள KYUSHU வில் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.
iv. Jäses : NUKA
நுக்குதல் என்னுந் தமிழ்ச்சொல்லின் வினையடிச் சொல் NUKA என்னும் யப்பானியச் சொல்லுடன் தொடர்புடையது. நுக்குதல் என்பது துகளாக்குதல் எனப் பொருள் தரும். யப்பானியமொழியிலே NUKA என்ற சொல் எட்டாம் நூற்றாண்டிலிருந்து பயன்பட்டு வருகிறது. யப்பானிய மொழியில் NUKA என்னுஞ் சொல் அரிசியைத் தீட்டிப் பெற்ற தவிட்டைக் குறிக்கிறது.
v. éfso)L—: SITOGI
தமிழிற் சீடை என்னுஞ் சொல் அரிசி மாவினாற் செய்யப்பட்ட சிற்றுண்டியைக் குறிக்கும். திவ்விய பிரபந்தத்தில் கடவுளுக்கு மடை யிடும் பொருளாகக் கூறப்படுகிறது.
சீடைகாரெள்ளி னுருண்டை. இன்னும் விழா நாட்களில் இன்றியமையாத சிற்றுண்டியாகவும் கொள்ளப்பட்டு வருகிறது. யப்பானியச் சொல்லான SITOG1 என்பது கடவுளுக்கு மடையிடும் உணவுப் பொருளாகப் பொருள் தருகிறது. பழைய காலத்து இலக்கிய வழக்கிலும் தற்கால வழக்கிலும் எடுத்துக் காட்டுகள் காணப்படுகின்றன. ஜப்பானிலுள்ள AOMOR, TOTTORI, H1ROSHIMA, KAGO-SHIMA, KUMOMOTO GLITaip LDITGJL'LËJ56flai Guja, வழக்கிலே பெரிதும் பயன்படுகிறது. வெள்ளை அரிசியை மாவாக்கிச் செய்யும் சிற்றுண்டியாகவும் உள்ளது. எனவே, தமிழ்ச் சொல்லான சீடையும், யப்பானியச் சொல்லான STOG யும் நெருங்கிய பண்பாட்டு நிலையான தொடர்பை விளக்கும் சொற்களாக உள்ளன.
vi. s6rf: KAYU
களி என்னுந் தமிழ்ச்சொல் குழைவான உணவுப்பொருள் நிலை யில் யப்பானிய உணவுப் பொருளான KAYU வுடன் தொடர்புடையது.
50

தமிழர்-யப்பானியர்.
அவையா வரிசி யங்களித் துழவை மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்.
(பெரும்பாணாற்றுப்படை : 275-277) உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
(அகநானூறு 86:1) கொய்குர லரிசியொடு நெய்பெய் தட்டுத் துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
(புறநானூறு 328:10-11) என வரும் எடுத்துக்காட்டுகள் களி என்னும் உணவுப்பொருளின் தன்மையையும் ஆக்கப்படும் முறையையும் விளக்குகின்றன. யப்பானிய உணவுப் பொருளான KAYU வும் அரிசியிலே ஆக்கப்படும் களி போன்ற உணவாகும். தற்காலத்தில் நோய்வாய்ப்படும் நேரத்தில் உண்ணும் மென்மையான சோற்றுணவாக விளங்குகின்றது.
vii. GLorgesih: MOTI
அரிசிமாவிலே செய்யப்படுகின்ற தமிழரது மோதகம் என்ற சொல் யப்பானியரது உணவுப் பொருளான MOT யுடன் மிகவும் ஒற்றுமை யுடையது. பண்பாட்டுநிலையில் இரு இனத்தவரிடையேயும் கடவுளுக்கு மடையிடும் உணவாகவும் விளங்குகிறது.
அவிருருப் புற்ற ஆடமை விசயங் கவவொடு பிடித்த வகையமை மோதகம்
(மதுரைக்காஞ்சி : 425-426) காழியர் மோதகத் தூமுறு விளக்கமும்
(சிலப்பதிகாரம் : 6-137) என வரும் தமிழிலக்கியச் செய்திகள் மோதகம் பற்றிய விளக்கத்தைத் தருகின்றன. யப்பானியரது MOT யும் அரிசியிலே செய்யப்படும் உண வாகும். புத்தாண்டுச் சிறப்புணவாகவும் விளங்குகிறது.
51

Page 28
மனோன்மணி சண்முகதாஸ்
4. செய் தொழில் தொடர்புநிலையும் பிறவும்
பயிர்ச்செய்கையோடு தொடர்புடைய தொழில்நிலையான சொற்கள் உண்டு. அவற்றைப் பற்றி நோக்கும்போது தமிழ் - யப்பானிய தொடர்பு சொல் நிலையில் பொருளை உணர்த்துவது மட்டுமன்றி பண்பாட்டு நடைமுறைகளின் தன்மையை விளக்குவதாகவும் அமைவதைக் காண முடிகிறது.
1. கொட்டு: KATU
நெல்லைக் குற்றுவதை கொட்டுதல் எனவும் தமிழில் வழக்கு உண்டு. இப்பொருள்நிலை யப்பானியச் சொல்லான KATU தமிழ்ச் சொல்லான கொட்டுவுடன் ஒற்றுமையுறுகின்றது.
கொட்டி வீழுமி குத்தல் போல். (பிரபுலிங்கலிலை:சித்திரா:9) என்னும் தமிழிலக்கியச் செய்தியும் இந்நடைமுறையை விளக்கும். யப்பானிய மொழியில் நெல் குற்றுவதை KATA என்னும் சொல் குறிக்கி sDgs.
ii. 6oros: FUKASU
புகைதல் என்னும் பொருள்நிலையில் தமிழ்ச் சொல்லான புகை யும் யப்பானியச் சொல்லான FUKASU வும் ஒற்றுமையுறுகின்றன. யப்பானிய இலக்கியமான 11ஆம் நூற்றாண்டில் எழுந்த GENIMONOGATARI யில் இச்சொல் பயின்று வந்துள்ளது. சங்கப்பாடல்களிலே தினைப்புனத்திலே காவல் செய்யும்போது புகையூட்டுவதாகச் செய்தி உண்டு.
சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி வான மீனின் வயின்வயின் இமைக்கும்
(குறுந்தொகை 150-1-2) அகில்சுடு கானவன் உவல்சுடு - கமழ்புகை
(நற்றிணை: 282:7) iv. Aupdo : WARA
வறல் என்னும் தமிழ்ச்சொல் காய்ந்த பொருளைக் குறிக்கும் நிலையில் யப்பானிய WARA வுடன் ஒற்றுமையுறுகின்றது.
அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை என்றுாழ் வாடுவறல் போல.
(புறநூனுறு: 75:8-9) வரன்மரம் பொருந்திய சிள்வீடு.
(அகநூனூறு 303:17) வறணுறு செய்யின் வாடுபு.
(அகநூனுறு: 301:1) மேல்வரும் எடுத்துக்காட்டுகள் தமிழில் வறல் என்னுஞ் சொல்லின் பொருளைத் தெளிவுபடுத்தும். யப்பானிய மொழியில் WARA என்னும்
52

தமிழர் -யப்பானியர்.
சொல் வைக்கோல் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. பழைய இலக்கியமான MANYOSHU விலும் இச்சொல் பயில்வுற்றுள்ளது.
v. b : FO
பூ என்னும் தமிழ்ச்சொல் மலர்களைக் குறிக்கும் சொல்லாக இருப்பினும் சிறப்பு நிலையில் நெற்கதிரையும் குறித்துள்ளது.
வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன் றண்ணக மண்ணளை நிறைய நெல்லி னிரும்பூ வுறைக்கு மூர்.
(ஐங்குறுநூறு: 30:1-3) யப்பானியச் சொல்லான FO நெற்கதிரைக் குறிப்பதாகும். பூவின் சிறப்புநிலைப் பெயருடன் யப்பானியச் சொல்லான FO ஒற்றுமையுறு கிறது.
vi. GurrësGeor Gurrilasso: FONKARA FONKARA
தமிழில் தைப்பொங்கலன்று பொங்கற் பானையில் பால் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என ஆரவாரம் செய்யும் வழக்கம் தமிழரிடையேயுண்டு. யப்பானியர் புத்தாண்டன்று FONKARAFONKARA என வீட்டைச் சுற்றிவந்து ஆரவாரம் செய்யும் வழக்கமுள்ளது. ஆனால், இச்சொற்றொடரின் பொருள் என்னவென்று யப்பானியர் அறியார். தமிழர்களுடைய பொங்கலோ பொங்கல் என்ற ஆரவாரம் செய்யும் நடைமுறை யப்பானியரால் பின்பற்றப்பட்ட காலத்திலே FONKARA FONKARA என ஆரவாரம் செய்யும் நடைமுறை உருவாவதற்கு அது காரணமாயிற்று இக்கருத்தே தமிழர் - யப்பானியர் தைப்பொங்கல் பற்றிய ஒப்பீட்டாய்வைச் செய்யவும் தூண்டுகோலாயமைந்தது.
vii. Geniei) : FERA
வேல் என்னும் தமிழ்ச்சொல் நுனியிலே கூர்மையான ஒரு கருவி யாகும். இக்கருவி பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டதாக இலக்கி யக் குறிப்புகள் தமிழிலே இல்லை. போரிலே வேல் பயன்படுத்தப்பட்ட மைக்குச் சங்கப்பாடல்களிலே சான்றுண்டு. வேல்மறவர், வேல்மன்னர், வேல்தானை, வேல்வலி, வேல்நெடுந்தகை போன்ற தொடர்களும் இதனையுணர்த்துகின்றன. விலங்குகளைக் கொல்வதற்கும் பயன்படுத் தப்பட்டுள்ளது. இன்னும் வேலின் வடிவ அமைப்பும் வெவ்வேறானது. 'வேல்நுதிபுரை மருப்பு எனக் கலித்தொகையில் வரும் குறிப்பு வேலின் அமைப்பினை ஏற்றின் மருப்பின் அமைப்புடன் ஒப்பிடுகிறது. யப்பானிய FERA என்னுஞ் சொல் குறிக்கும் கருவி பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப் பட்டது. மூங்கிலிலும், இரும்பிலும் செய்யப்பட்டது. தமிழில் வேலின் பயன்பாடு பயிர்ச்செய்கையுடன் தொடர்புபடுத்தப்பட்ட சான்றுகளில்லா விட்டாலும் பயிர்ச்செய்கைக்கும் இக்கருவி பயன்பட்டிருக்க வேண்டும். இதனை மேலும் நுண்ணாய்வு செய்தே சான்று காட்டமுடியும்.
53

Page 29
மனோன்மணி சண்முகதாஸ்
5. தமிழர் தைப்பொங்கலும் யப்பானியர் புத்தாண்டும்
தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாக தைப்பொங்கல் விளங்குகின்றது. யப்பானியருடைய பழைய புத்தாண்டு நடைமுறைகளை நோக்கும்போது அவை தமிழரது தைப்பொங்கல் தொடர்பான நடைமுறைகளுடன் பெரிதும் ஒத்திருக் கின்றன. இன்று இரு இனத்தவரது குறிப்பிட்ட நடைமுறைகளில் ஓரிரு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அடிப்படையில் மாற்றமில்லை. பண்பாட்டு ஒற்றுமை நிலைகளைத் தெளிவாக அறிந்து கொள்வதற்கு நடைமுறைகளை விரிவாகப் பார்ப்பதும் இன்றியமையாதது. தமிழ் யப்பானிய மொழிகளுக்கிடையே காணப்படும் தொடர்பினது ஆழத்தை அறிவதற்குப் பண்பாட்டு நிலையான செய்திகளும் பெரிதும் உதவும்.
தைப்பொங்கல் தமிழரின் பழைய விழாவாகும். யப்பானியருடைய புத்தாண்டு நடைமுறைகள் பொங்கல் நடைமுறைகளுடன் பெரிதும் ஒத்திருப்பதைப் பேராசிரியர் ஒனோ 1982 இல் தமிழ்நாட்டில் கண்டார். ஏலவே மொழித் தொடர்பை ஆய்வுசெய்த அவருக்கு மொழிவழி பண்பாட்டுத் தொடர்பும் ஆய்வுப் பொருளாயிற்று. அவ்வாறு ஆய்வு செய்தபோது ஏறக்குறைய 17 நடைமுறைகளின் ஒற்றுமை நிலையை அவர் எடுத்துக்காட்டியுள்ளார். அவற்றின் அட்டவணை நிலை வருமாறு அமையும்.
யப்பானிய நடைமுறைகள் தமிழர் நடைமுறைகள்
தை14ஆம்நாள்: 1. TONDOYAKI 6GOTL'uLuGib 1. பழைய பயன்பாட்டுப்
சடங்குநிலையாகப் பழைய பயன்பாட்டுப் பொருட்களைத்
தீயிலிட்டு எரித்தல்
பொருட்களைத் தீயிலிட்டு எரித்தல்
2. பழைய வயற் குடில்களை . பழைய மாட்டுக் குடில்களை
தீயிட்டுக் கொளுத்துதல் தீயிட்டுக் கொளுத்துதல்
3. வெடி கொளுத்துதல் . வெடி கொளுத்துதல்
தை 15ஆம்நாள்:
4. தோரணந் தொங்கவிடல் தோரணந் தொங்கவிடல்
5. புத்தாண்டன்று புதுநீர் புத்தாண்டன்று புதுநீர்
அள்ளுதல் அள்ளுதல்
6. பருப்புச் சேர்த்துச் சமைத்த பருப்புச் சேர்த்துச் சமைத்த
54
பொங்கல் பரிமாறல்
காகத்திற்கு உணவிடல்
பொங்கல் பரிமாறல்
காகத்திற்கு உணவிடல்

தமிழர்-யப்பானியர்.
8. மக்கள் வீட்டைச் சுற்றி 8. மக்கள் வீட்டைச் சுற்றி
“HON GARA HON GARA” 660 “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரம் செய்துவரல் ஆரவாரம் செய்தல்
9. மரங்களுக்கு அடித்தல் 9. மரங்களுக்கு அடித்தல்
தை 16ஆம்நாள்: 10. பணியாளர்க்கு விடுமுறை 10. பொழுதுபோக்கு நாள்
கொடுத்தல்
11. பணியாளர்க்குப் புத்தாடை 11. பணியாளர்க்குப் புத்தாடை
வழங்கல் வழங்கல்
12. குடும்பத்தவர் ஒன்றுசேரல் 12. குடும்பத்தவர் ஒன்றுசேரல்
குடும்பக் கல்லறைக்குச் முன்னோர்க்குப் படையல் செல்லல் செய்தல்
13. கலைஞர் வீட்டிற்கு வரல் 13. கலைஞர் வீட்டிற்கு வரல் 14. ஆடல் பாடல் நிகழ்த்தல் 14. ஆடல் பாடல் நிகழ்த்தல்
15. அம்பு எய்தல் 15. கோலாட்டம்
16. மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் 16 மாடுகளுக்கு உணவளித்தல்
உணவளித்தல்
17 பட்டம் விடுதல் 17 பட்டம் விடுதல்
ஒனோவுடைய அட்டவணையில் காட்டப்பெற்றுள்ள நடைமுறைகளை விரிவாகப் பார்க்கும்போது அவற்றின் நெருங்கிய தொடர்பு நிலையை அறியமுடியும். இன்றைய நடைமுறைகளின் மாற்றத்தையும் காண முடியும். பழைய இலக்கியங்களிலே சுட்டப்பட்ட நடைமுறைகளின் வளர்ச்சி நிலைகளையும் விளங்கிக்கொள்ள முடியும். இந்நடைமுறை களை வகைப்படுத்தி நோக்குவது தெளிவைத் தரும்.
1. முதல்நாள் தொடர்பான நடைமுறைகள் 1. பழைய பொருட்களைன்ரித்தல்
தைத் திங்கட் பிறப்புக்கு முன்னைய நாள் ஆண்டு முழுவதும் பயன்படுத்திய பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கும் நடைமுறை உள்ளது. பழந்தமிழர் வாழ்வில் ஒலையால் பின்னப்பட்ட பல பொருட் கள் நாளாந்தம் பயன்படுத்தப்பட்டன. படுக்கும் பாய், இருக்கும் தடுக்கு, பொருட்கள் வைக்கும் பெட்டி, மூடல், உணவுண்ணும் தட்டுவம், குட்டான் போன்றவை ஓராண்டுப் பயன்பாட்டின் பின்னர் பழுதடையும் தன்மையன. தைத்திங்கட் பிறப்புத் தொடக்கம் புதிதாகச் செய்தவற் றைப் பயன்படுத்துவதால் மார்கழிக் கடைநாள் பழையவற்றை எரித்து
55

Page 30
மனோன்மணி சண்முகதாஸ்
விடும் நடைமுறை இருந்தது. வீட்டு நிலையிலே எல்லாப் பகுதிகளிலும் துப்புரவு மேற்கொள்ளப்படும். வேண்டாத மரஞ்செடிகளும் வெட்டி எரிக்கப்படும். பழைய உடைகள், போர்வைகள், செருப்புகள் போன்ற பொருட்களையும் சேர்த்து ஓரிடத்திலே போட்டுக் கொளுத்தி எரிப்பது வழக்கம். இந்நடைமுறையைக் குறிக்கும் சிறப்புப் பெயர் எதுவுமில்லை. தம் வீட்டிற்கு வெள்ளையடித்து கழுவிப் புத்தாண்டைக் காத்திருப்பர். இந்நடைமுறை இன்றும் தமிழரிடையே உள்ளது.
யப்பானிலும் புத்தாண்டுப் பிறப்புக்கு முதல் நாள் இந்நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இந்நடைமுறை TONDOYAK அல்லது DONDOYAKI 6T62T அழைக்கப்படுகின்றது. TÖHOKU, KANTÖ, KINKI பகுதி 8f6io giösB6D (pGOigo TONDOYAKI 6TGOTGyub YAMANASHI, CHÜBU, MIE, KUMAMOTO ug656faio DONDOYAKI gļ6balog TONDOYAKI 667 அழைக்கப்படுகிறது. இந்நடைமுறையின்போது பழைய கடவுள் மாடத் துத் தோரணங்கள் எரிக்கப்படும். வைக்கோலிலும், தாள்களிலும் செய்யப்பட்ட அத்தோரணங்களை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்காக இந்நடைமுறை தோன்றியிருக்கலாம். AKITA பகுதியில் மூங்கில் கம்பு ஒன்றை நாட்டி அதிலே பழைய நெற்கதிரைக் கட்டித் தொங்கவிட்டு எரிப்பர். அத்துடன் கடவுள் மாடத்துப் பழைய பொருட்களையும் எரிப்பர். பழைய காலத்தில் இந்நடைமுறை இருந்ததை HELAN கால (794 - 1185) இலக்கியங்கள் காட்டுகின்றன.
இன்றும் யப்பானில் இந்நடைமுறை KOKURA, FUKUOKA பகுதி asarfiai) DONDOROYAKI Giantaub NAKATSU 696) DONDORO MATSURI எனவும் SIMANE பகுதியில் DONDARAYAKI எனவும் அழைக்கப்படு 6pg. TON DORO, DONDORA 66376D b un T6ofiu j gamb G4FT) களின் பொருளும் இதுவரையில் விளக்கமுறவில்லை. ஒனோ இச் சொற்கள் தமிழிலுள்ள தொன்று என்னும் சொல்லுடன் தொடர்புடைய தாக இருக்கலாமென்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். TONRU என்னும் தமிழ்ச் சொல் யப்பானிய உச்சரிப்பில் TONDO,TONDRA 61301 வந்தி ருக்கலாம் என்பர். தொன்று என்னும் சொல் பழைய என்னும் பொருள் g5(56, g5,1605utgo TONDO-YAKI, TONDORO-YAKI, TONDARA-YAKI என்பன பழையவற்றை எரித்தல் என்னும் பொருளில் வழங்கப்பட்டிருக்
556 OsTLD).
i. பழையகுடில்களைன்ரித்தல்
பழைய குடில்களை எரிக்கின்ற நடைமுறையும் தைத்திங்கட் பிறப்பு முன்னாள் தமிழரால் மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால், தற்போது இந்நடைமுறை
56

தமிழர்-யப்பானியர்.
அருகி விட்டது. பழைய காலத்தில் வயலுக்கு எருப் பெறுவதற்காக ஆடு, மாடுகளை இரவில் வயலிலே பட்டி அடைப்பர். இரவு அவை உண்பதற்குரிய புல், இலைதழைகளை ஒரு சிறிய குடிலில் வயலின் நடுவே போட்டுவிடுவர். அக்குடில்கள் இடம்பெயர்த்தக்கூடிய சிறிய குடில்களாக இருந்தமையால் ஓராண்டுப் பயன்பாட்டில் பழுதடைந்து விடும். எனவே, அவற்றை மார்கழித் திங்கள் இறுதிநாள் மாலையில் எரித்து விடுவர். அக்குடில்கள் பனை ஓலையால் வேயப்பட்டவை. அதை மாடுகள் கடித்துப் பழுதடையச் செய்வதும் உண்டு. அதனால் ஆண்டுக்கு ஒரு முறை புதிதாக அமைக்கவும் நேர்ந்தது.
யப்பானிலே குழந்தைகள் இருப்பதற்காக அமைக்கப்பட்ட சிறு குடில்கள் புத்தாண்டுப் பிறப்புக்கு முதல்நாள் எரிக்கின்ற நடைமுறை உண்டு. இக்குடில் பல்வேறு விதமாக அழைக்கப்படுகிறது. SHOGATSU GOYA - Lišg5TGăT@áë g5gaib, YUKIGOYA - LuGofaig5 g6io gy6oGogI TORIGOYA - பறவைக்குடில் எனப்படும். AKITA,YAMANASH பகுதிகளிலே இக்குடில் GOKOYA - மான் குடில் என அழைக்கப்படுகிறது. HYOGO பகுதியில் HOCHOI என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் தெரியவில்லை. IBARAK1, NIGATA பகுதியில் வயலில் காவலுக்காகப் போடப்பட்ட குடிசைகள் புத்தாண்டுக்கு முதல்நாள் எரிக்கப்படுகின்றன. இந் நடை முறை யாழ்ப்பாண நடைமுறையுடன் ஒத்திருக்கின்றது.
i. வெடிகொளுத்துதல்
முதல்நாள் நடைமுறைகளில் இரவு வெடி கொளுத்துதலும் இடம் பெறும். குடில்களை எரிக்கும்போது வெடி கொளுத்தப்படும். இலங்கை யில் சீனவெடி கொளுத்துதல் என அழைக்கப்படுகிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அப்பெயரைப் பெற்றது. யப்பானிய வெடி களும் கொளுத்தப்பட்டன. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் யப்பானிய வெடி தரமற்றதென்றும் சீனவெடியே தரமானதென்றும் கருதப்பட்டது. தென்னிந்தியாவில் இதனைப் பட்டாசு என அழைக்கின் றனர். படபடவென்ற ஒலியுடன் வெடிப்பதால் பட்டாசு என அழைக்கப் பட்டது போலும். புத்தாண்டுப்பிறப்பினை அறிவிக்குமுகமாக வெடி கொளுத்தப்பட்டது. முன்னைய காலத்தில் குழந்தைப் பிறப்பு, பூப்பு, திருமணம் போன்ற மகிழ்வான செய்திகளை அறிவிக்க வெடி கொளுத் தினர். இந் நடைமுறையை வெடி போடுதல் என அழைத்தனர்.
2. புத்தாண்டுநாள் நடைமுறைகள்
புத்தாண்டு நாளன்று செய்யப்படும் நடைமுறைகளை நோக்கும் போது தமிழரும் யப்பானியரும் அந்த நாளுக்குத் தனிச்சிறப்பு அளித்த தைக் காணமுடிகின்றது. பல நடைமுறைகளையும் இந்நாளிலே மேற் கொண்டுள்ளனர்.
57

Page 31
மனோன்மணி சண்முகதாஸ்
1. வீட்டைஅழகுபடுத்தல்
தைப்பொங்கலன்று வீட்டு முன்றலிலே பொங்கலும் மடையும் செய்யப்படுவதால் அப்பகுதி வாழை நாட்டித் தோரணம் கட்டி அழகு செய்யப்பட்டது. நிலம் துப்புரவு செய்யப்பட்டுச் சாணத்தினாலே மெழுகப்பட்டது. வீட்டுக் கதவுகளுக்கும் வேப்பிலை, மாவிலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டன. கருப்பந்தண்டும் மஞ்சளும் பொங்கலிடு மிடத்தில் நாட்டப்பட்டன. இவ்வாறு வாழை, கரும்பு, மஞ்சள் போன்ற வற்றை நாட்டுகின்ற வழக்கம் வெறுமனே பொங்கல் நடைபெறும் இடத்தை ஒரு தனிப்பட்ட இடமாகவும் அழகுள்ளதுமாக ஆக்குவதற் காகச் செய்யப்பட்டதல்ல. முன்னைய காலத்தில் இம்மரங்கள் பயன் பாடு பற்றி வீட்டு முற்றத்தில் நாட்டப்பட்டிருந்தன. சங்கப் பாடல்களின் செய்திகள் இதனைத் தெளிவுபடுத்தும். மலைப் பகுதியிலும் மருத நிலத்திலும் இயற்கை நிலையிலே வீட்டுமுன்றில் அழகு பெற்றிருந்தது. ஆனால் பிற்காலத்தில் பயிர்ச்செய்கையை எல்லோரும் செய்யாமல் குறிப்பிட்ட மக்களே செய்தபோது புத்தாண்டுப் பிறப்பில் வீட்டை அழகு படுத்த வேண்டியதும் தேவையாகிவிட்டது. அதனால் இன்றும் தமிழர் தைப்பொங்கலன்று வீட்டு முன்றிலை பழையகால நிலைப்படி அழகு படுத்துகின்றனர்.
யப்பானியர் புத்தாண்டு அழகுபடுத்தலில் SHIMEKAZARI எனப்படும் வைக்கோலாற் செய்யப்பட்ட கயிறு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவ்வைக்கோலால் செய்யப்பட்ட கயிற்றிலே புனிதமான இலையெனக் கருதப்படும் SAKAKI இலையையும் இணைத்துத் தொங்கவிடும் வழக் கம் இன்றும் யப்பானில் உண்டு. வீட்டு முன் வாயிலில் KADOMATSU எனப்படும் அழகுபடுத்தலும் குறிப்பிடத்தக்கது. பைன் மரக்கிளையினை மூங்கில்தடியுடன் இணைத்து நாட்டி வீட்டு வாயிலிலே அமைப்பர். தமிழர்கள் தற்போது வாழையை வெட்டி வந்து நாட்டுவதுபோல யப்பானிய நகர்ப்புறங்களிலே SHIMEKAZARI யைச் செய்யாவிட்டாலும் KADOMATSUவை நாட்டுவர். KADOMATSU வில் வைக்கோற் கயிறு இணைந்திருக்கும்.
i. புதுநீர்அள்ளுதல்
தைப்பொங்கலன்று புதிய பானையிலே புதிய நீரை அள்ளிவரும் நடைமுறை உண்டு. முன்னைய காலத்தில் ஆற்றிலும் குளத்திலும் மக்கள் நீர் பெற்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் கிணறு இருக்கவில்லை. ஆறு குளங்களில்லாதவிடத்துப் பொதுக்கிணறுகளே அமைக்கப்பட்டி ருந்தன. எனவே பொங்கலன்று அதிகாலையில் நீராடிப் புதுநீர் அள்ளி வரும் நடைமுறையும் ஏற்பட்டது. தை மாதத்திலே குளங்களிலே குளிர்ந்த நீர் நிறைந்திருப்பதைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. புதுநீர் பற்றிய செய்திகளும் உண்டு.
58

தமிழர்-யப்பானியர்.
“குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப் பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்’
(நற்றிணை: 68:4-5) என்னும் நற்றிணையில் வரும் செய்தி புதுநீரின் பயன்பாட்டைக் குறிக் கிறது. புதுநீரைப் பொங்கல் செய்வதற்கும் மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
ஜப்பானின் தென்பகுதி AOMORI மாவட்டத்திலுள்ள TAKKOMACHI என்னுமிடத்தில் புத்தாண்டன்று வீட்டுத்தலைவன் கிணற்றுக்குக் காலை யிலே சென்று புதியநீரை அள்ளிவரும் வழக்கம் உண்டு. கிணற்றுக்கு அரிசிச் சோற்று உருண்டைகளை மடையிட்டு பின்னர் தண்ணிர் அள்ளும் வாளியிலே மலர்களையிட்டு அதனுள் நீரை அள்ளி வருவர். வாளிக்கு SHIMENAFA எனப்படும் வைக்கோலாற் செய்யப்பட்ட கயிறு சுற்றப்பட்டிருக்கும். பின்னர் அப்புதுநீர் கொண்டு பொங்கல் செய்வர். தமிழர் புதுநீர் அள்ளி வரும் புதுக்குடத்தின் கழுத்தில் மாவிலை கட்டும் வழக்கமுண்டு. சில மலர்களையும் (மல்லிகை, செவ்வரத்தை) இடுவர். இவ்வழக்கம் முன்னோராற் கைக்கொள்ளப்பட்டதற்குத் துப்புரவு நிலையே காரணம் எனலாம். தொலைவிலிருந்து நீரை அள்ளிச் சுமந்து வரும்போது பறவைகள் எச்சம், வண்டினம், தும்பியினம் என்பவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகச் செய்திருக்க வேண்டும். இன்னும் தலை யிலே நீரைச் சுமந்து வரும்போது நீர் தளும்பாமலிருப்பதற்கும் குடத் தின் வாயின்மேல் மாவிலைகளைப் போட்டிருக்கலாம். பிற்காலத்தில் அதுவே மாவிலை கட்டும் நடைமுறையாகிவிட்டதெனக் கொள்ள இடமுண்டு.
iii பொங்கல் செய்தல்
தைப்பொங்கலின் பொருள் காட்டுகின்ற நடைமுறை பச்சரிசியிலே பொங்கல் செய்வதாகும். தமிழரது மரபான விழாக்களில் உணவையும் இணைத்துப் பெயர்பெற்ற விழாவாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. புதிதாக விளைந்த நெல்லிலே செய்யும் புதுப்பொங்கலாகும். தைத் திங்கட் பிறப்பை உணர்த்த எல்லோருமாகப் பகுத்துண்ண வேண்டிச் செய்யப்பட்ட பொங்கலாகும். பச்சரிசியுடன் ஆவின் பால் சேர்த்துப் பொங்கல் செய்யப்படுகிறது. முற்றத்திலே புதிய அடுப்பில் புதுப் பானையை ஏற்றி உலைநீராகப் பசுப்பாலை விடுவர். பால்பொங்கி வரும் போது பச்சரிசியையும் போடுவர். இதனை அரிசி போடுதல் என்பர். இனிப்புச் சேரச் சர்க்கரை, பழவகை, பயறு என்பனவும் சேர்க்கப்படும். அரிசி நன்கு அவிந்து குழையலாக வந்த பின்னர் இறக்கப்படும். அடுப்பிலே பால் கொதித்துப் பொங்கி வருவதால் இதற்குப் பொங்கல் என்ற பெயரிட்டனரெனலாம்.
59

Page 32
மனோன்மணி சண்முகதாஸ்
இன்று பொங்கல் செய்யும் நடைமுறையில் காணப்படும் தோற்றங் கள் பழைய சங்கத்தமிழரின் புதிதுண்ணும் நடைறையின் தொடர்நிலை யாகவுள்ளன. உலைப்பானைக்கு மாவிலை கட்டுவதுமன்றி வெண்ணிற் றிலே குறி எழுதுகின்ற வழக்கமும் உண்டு. இவ்வழக்கம் பழைய மட்பாண்டங்களிலே காணப்படுகின்ற GRAFFIT யுடன் தொடர்புடையது போலத் தோன்றுகிறது. பயிர்ச்செய்கை பண்ணலுக்கு நல்லுதவி புரிய வேண்டி இயற்கையைப் பணிந்து வழிபடும் நிலையிற் பொங்கற் பானை யிலே வழிபாட்டின் வேண்டுதலைக் குறியீட்டு வடிவில் எழுதியிருக்க வேண்டும். அதன் பொருள் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தெளிவாயிருந்திருக்கவேண்டும். மொழிக்கெனப் புதிய வரிவடிவம் தோன்றிய பின்னர் பழைய குறியீடுகளின் பயன்பாடும் அற்றுவிடவே இன்று வெறுமனே சடங்காகச் செய்கின்ற நடைமுறையாகிவிட்டது எனலாம். இது பற்றிய ஆய்வு பேராசிரியர் ஒனாவால் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.
யப்பானிலும் புத்தாண்டன்று AZUK எனப்படும் பருப்பைச் சேர்த்து
பச்சரிசியிலே பொங்கல் செய்யும் வழக்கமுண்டு. தைமாதம் 15ஆம் நாள் KOSHOGATSU என அழைக்கப்பட்டு AZUK - KAYU செய்யப்படும் வழக்கமும் இருந்ததைப் பழைய ஆவணங்களும் குறிப்பிட்டுள்ளன. கீழ்வரும் செய்தி ENGISHIK இல் (ENGI காலத்து 901-923 அறிக்கை) வருகின்றது.
அரசியின் மாளிகை அலுவலகம்: தைமாதம் 15ஆம் நாள்
பொங்கலுடன் கள்ளும் பிற உணவுவகைகளும் எல்லாப்
பணியாளர்களுக்கும் பரிமாறப்பட்டன.
அரச நிர்வாக அலுவலகம்: ஒவ்வொரு ஆண்டும் முதல் மாதம் 15ஆம் நாள்நிர்வாகிகள்களஞ்சியத்தைப் பார்வையிடச்செல்ல வேண்டும். விறகின்தரத்தை மதிப்பிடவேண்டும். இப்பணி செய்யும் நிர்வாகிகளுக்கு பொங்கலும், கள்ளும் ஏனைய உணவுவகைகளும் பரிமாறப்பட்டன.
தண்ணீர் அலுவலகம்: முதல்மாதம் 15ஆம் நாள் 7 தானிய வகைகள் செய்யக் கொடுக்கப்பட்டன. அரிசி, AWA (தினை), KIIBI (garīgig, GMGOT) HIE (DECCAN GRASS MILLET) epi 16G6i) முளை, எள்ளு, AZUK பருப்பு உப்பு என்பன இவற்றுள் அடங்கும். இதே நாள் கூலியாட்களுக்கும் அரிசியும் AZUK பருப்பும் கொடுக்கப்பட்டன. இச் செய்தியின்மூலம் AZUK பருப்பும் சேர்த்த பொங்கல் அரச மாளிகையில் செய்யப்பட்டதையும் ஆடல்பாடல் செய்த அனைவருக் கும் இசையாளர்க்கும் வழங்கப்பட்டதையும் அறிய (uplqSogi. TOSA NIKK (TOSA நாட்குறிப்பு)யிலும் இது பற்றிய குறிப்புண்டு.
60

தமிழர்-யப்பானியர்.
'இன்று நாங்கள் AZUKIGAYU செய்யவில்லை. எவ்வளவு துன்பமானது. . .' இதன் ஆசிரியர் KINOTSURAYUK கப்பலில் சென்று கொண்டிருந் தமையால் மரபான புத்தாண்டு AZUKIKAYU வைத் தயாரிக்க முடிய வில்லை.
நிர்வாகிகளுக்கும் படையினர்க்கும் தைத்திங்கள் 15ஆம் நாள் புத்தாண்டன்று விறகு கொடுக்கப்பட்ட செய்தி வரலாற்றுப் பதிவுகளில் அடிக்கடி வருகிறது. அரசர் TEMMU வின் பதிவில் பின்வருமாறு காணப் படுகிறது.
“TEMMU (676 A.D) 5 : 1 : 15. (ypg56vpÉGIMG 6i6 unt655 GB5igub அதற்கு மேற்பட்டவர்களுக்கும் அரச மாளிகையில் விறகு வழங்கப்பட்டது. JITTO (698A.D):3:1:15 படையினர்க்கும் நிர்வாக அலுவலர்க் கும் அரசமாளிகையில் விறகு வழங்கப்பட்டது."
இவ்வாறு விறகு வழங்குவது புத்தாண்டு முழுவதும் பயன்படுத்து வதற்காக எனக் கொள்ளப்பட்டபோதும் இதில் ஒரு பகுதி பொங்கலைச் செய்வதற்காகவே கொடுக்கப்பட்டது. தை 15ஆம் நாள் பொங்கல் செய்து உண்ணும் வழக்கம் யப்பானிலே பெரும்பான்மையான இடங் களில் இன்னமும் இருக்கிறது.
பழைய காலத்தில் யப்பானில் சிவப்புப் பச்சையரிசியே KAYU செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது. இப்போது வெள்ளைப் பச்சரிசியே பயன்படுத்தப்படுகிறது. யப்பானிய அரசு சிவப்பு அரிசியை விளைவிப் பதற்கு ஊக்கமளிக்காததால் அதன் விளைச்சல் குறையப் பயன்பாடும் குறைந்தது. சிவப்புப் பொங்கல் ஆகுவதற்காகப் பிற்காலத்தில் AZUK பருப்புச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டுமென பேராசிரியர் ஒனோ கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழர் தைப்பொங்கலில் பருப்பு பொங்க லுக்குச் சேர்க்கப்படும் முக்கிய பொருளாக உள்ளது. சங்க இலக்கியத் திலும் சான்று உள்ளமை முன்னர்ப் பெறப்பட்டது. எனினும் தற்போது தமிழர் யப்பானியர் பொங்கலில் பருப்பு முக்கியமாக இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
iv. மடையிடலும்காகத்திற்குப்பலியிடலும்:
தைப்பொங்கல் நடைமுறைகளில் மடையிடுதலும் இடம்பெறுகிறது. பழைய காலத்தில் தைத்திங்கட் பிறப்பன்று இயற்கையின் கொடை யான விளைபொருள்களையும் மடையிடும் வழக்கம் இருந்துள்ளது. மடை என்பது விளைபொருட்களை ஒழுங்குமுறையிலே பரவி வழிபடு தலாகும். மடை என்ற சொல்லூடாக சங்க இலக்கியத்தில் இந் நடைமுறை எவ்வாறு இருந்ததென்பதை அறியமுடிகிறது.
61

Page 33
மனோன்மணி சண்முகதாஸ்
"தெய்வ மடையில் தேக்கிலைக் குவைஇநும் பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர். . ."
(பெரும்பாணாற்றுப்படை : (104 - 105) "இவவமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக் குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி நுண்ணி ராகுளி இரட்டப் பலவுடன் ஒண்சுடர் விளக்க முந்துற மடையொடு நன்மா மயிலின் மென்மெல இயலிக் கடுஞ்சூன் மகளிர் பேணிக்கைதொழுது பெருந்தோட் சாலினி மடுப்ப. . . . .
(மதுரைக்காஞ்சி ; 104 - 110) முருகயர்ந்துவந்த முதுவாய் வேல சினவ லோம்புமதி வினவுவ துடையேன் பல்வேறுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே’
(குறுந்தொகை 362) “படையிடுவான் மன்கண்டீர் காமன் மடையடும் பாலொடு கோட்டம் புகின். . . .”
(கலித்தொகை 109:19-20)
பழந்தமிழர் மடையிடும்போது சோறு, பால் என்பவற்றை மடையிட் டுள்ளனர். மதுரைக்காஞ்சி மடையிடுதலில் யாழ், இசைக்கருவிகளின் பயன்பாட்டையும் மடையிடும் இடத்திலே விளக்கு
கள் வைக்கப்பட்டதையும் உணர்த்துகிறது.
சிலப்பதிகாரம் மடைபோடலில் ஏற்பட்ட வளர்ச்சி நிலைகளையும்
காட்டுகிறது.
62
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குறை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ விலைப்பலி உண்ணும் மலர்ப்பலி பீடிகைக் கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி."
(சிலப்பதிகாரம் : 12:36-44)
முழவு போன்ற

தமிழர்-யப்பானியர்.
இங்கு விளைபொருட்கள் மட்டுமன்றி வண்ணம், சுண்ணம், சாந்து என்பனவும் பயன்பட்டமை கூறப்பட்டுள்ளது. இசைக்கருவிகளான பறை, கோடு, குழல், மணி என்பனவும் மடையில் இணைந்துள்ளன.
தைப்பொங்கல் மடையிலும் இன்று பொங்கலுடன் வண்ணம், சுண்ணம், நறும்புகை, விளக்கு என்பனவும் இடம்பெற்றுள்ளன. கனிகள், கரும்பு, கடலைவகை என்பனவும் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் வெற்றிலை, பழப்பாக்கும் அடங்கும். முக்கனிகள் இம்மடையில் சிறப்புப் பெற்றிருந்தன. வாழை, மா, பலா என்னும் முக்கனிகளுடன் மாதுளம் பழம், எலுமிச்சம்பழம், விளாம்பழம் என்பனவும் மடையிடப்படுகின்றன. ஏனைய தானியங்களிலே செய்யப்பட்ட உணவுப்பொருட்களாக எள்ளு ருண்டை, திணைமா விளக்கு, உழுத்தம்வடை, பயறுசேர்ந்த மோதகம் என்பனவும் மடையிடப்படுகின்றன. பொங்கலைச் சிறுகுன்று போல அமைத்து அதனைச் சுற்றி ஏனைய பொருட்களைப் பரவிவிடுவர்.
யப்பானியரும் பொங்கலில் செய்யப்பட்ட உருண்டையான MOCH1 களை புத்தாண்டன்று தெய்வத்திற்கு மடையிடுகின்றனர். வீடுகளிலே தெய்வபீடத்திலே MOCHI யையும் பழங்களையும் மடையிடும்போது குன்று வடிவில் அவற்றை அமைப்பர். MOCHI களைக் குன்றுபோல் அடுக்கி அதன்மேல் தோடம்பழத்தை வைப்பர். SAKAKI மர இலையை உச்சிப்பகுதியிலே வைப்பர். ஆனால் தற்போது MOCHI அழகுபடுத்து நிலையில் யப்பானிய வீடுகளில் தெய்வப்பீடத்தில் அமைக்கப்பட்டிருப் பதால் மடையிடும் நடைமுறையும் அருகிவிட்டது.
மடையிடுதலின் ஒரு பகுதியாக காகத்திற்குப் பலியிடலும் நடை பெறும். தமிழர் வாழ்வில் பொங்கல் நாளில் மட்டுமன்றி வேறு நிலை களிலும் காக்கைக்குப் பலியிட்டுள்ளனர். "மாசில் மரத்த பலியுண் காக்கை வளிபொரு நெடுஞ்சினை களியொடு தூங்கி வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நல்வகை மிகுபலிக் கொடையொடு உகுக்கும் அடங்காச் சொன்றி அம்பல் யாணர் விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப."
(நற்றிணை 281:1-6) "நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து உகுபலி அருந்திய தொகுவிரற் காக்கை புன்கண் அந்திக் கிளைவயிற் செறியப்.”
(நற்றிணை: 343:4-6) "திண்டேர் நள்ளி கானத் தண்டர் பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
63

Page 34
மனோன்மணி சண்முகதாஸ்
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக்கரைந்த காக்கையது பலியே."
(குறுந்தொகை : 210) முன்னர் காக்கைக்கு உணவிடும் வழக்கம் தமிழரிடையே இருந்தமை இச்செய்திகளாற் புலனாகின்றது. காக்கைகள் பலிச்சோற்றுக்காகக் காத்திருந்த செய்தி மடைநாட்களில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மக்கள் பலி யிட்டதை தெளிவுபடுத்துகின்றது. பறவைகளும் மனிதனின் பயிர்ச் செய்கைக்கு உதவியுள்ளன. தானியங்களின் விதைகளைக் கொணர்ந்து பயிர்களின் உருவாக்கத்தை மக்களுக்கு உணர்த்தின. எனினும் காக்கை களே மக்களது உறைவிடங்களுக்கு அருகில் தங்கி வாழும் பழக்க முடையனவாயிருந்தன. காலையில் கதிரவன் வரவையும் கரைந்து உணர்த்தின. காலப்பொழுதை மட்டுமன்றி விருந்தினரின் வருகை, சுற்றத்தாரோடு உறவாடும் தன்மை என்பவற்றிலும் காக்கையின் பண்பு கள் மக்களுக்குக் காக்கையின் தனித்துவத்தை உணர்த்தின. மக்களும் காக்கைக்கு உணவளிப்பதை தம் வாழ்விலோர் நடைமுறையாக்கினர். மடையிடும் வேளையில் முதலில் காக்கைக்கு உணவிட்டு அது அதை உண்டபின்னரே தாம் உண்டனர்.
“கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து கருங்கண் கருனைச் செந்நெல்வெண் சோறு சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால் கூழுடை நன்மனைக் குழுவின இருக்கும் மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி.”
(நற்றிணை 367:1-6) எனவே தைப்பொங்கலன்றும் புதிய விளைபொருட்களை மடையிட்ட போது காக்கைக்கும் உணவிட்டனர். காக்கைக்கு உணவிடும்போது நிலத்திலே வையாது உயர்ந்த இடத்திலே வைத்தனர். பெரும்பாலும் கூரை மேல் காக்கைக்கு உணவிட்டனர்.
யப்பானியரிடையேயும் காகத்திற்கு உணவிடும் வழக்கம் புத்தாண்டு நடைமுறைகளில் ஒன்றாயுள்ளது. MOCHI யைக் காக்கைக்கு எறிவர். பேராசிரியர் OSHIMATAKEHIKO பின்வருமாறு கூறுகிறார்.
AOMORI யிலுள்ள KAMIGO என்னும் பகுதியில் மக்கள் SNA, SINA என்று கூவியபடி காக்கைகளுக்கு MOCH1 யைப் Lj5/T6öTL–6örgy 6Tgóla) i. egyobGg|SINE, SINEgy6ö6vg) POT, POT என்று கூவியும் காகத்திற்குMOCH1யை எறிவர்.'
64

தமிழர் - யப்பானியர்.
அப்பகுதி மக்கள் SNA அல்லது SINE என்ற சொற்களின் பொருளை யறியார். அவ்வாறு செய்வது வழக்கமாயுள்ளது. பேராசிரியர் ஒனோ SINA என்ற சொல் தமிழிலுள்ள தினையுடன் ஒற்றுமையுறுவதால் தமிழர் நடைமுறையுடன் தொடர்புடையதாயிருத்தல் வேண்டுமென்கிறார். POT என்ற சொல்லும் தமிழிலுள்ள புது என்ற சொல்லுடன் ஒலி அமைப்பி லும் பொருள் நிலையிலும் தொடர்புடையது என்பதால் புத்தாண்டுப் பிறப்பின்போது புதிய விளைச்சலை காகத்திற்கு கொடுத்தனர். இந் நடைமுறைக்கு சான்றாகப் பின்வரும் செய்திகளும் அமையும்.
1. AOMORI யிலுள்ள TSUGARU பகுதியில் புத்தாண்டு காகத்திற்கு MOCHI கொடுக்கப்பட்டது. TAKIZAWA வில் இந்நடைமுறை புத்தாண்டின் மறுநாள் மேற்கொள்ளப்படுகிறது.
2. IWATE யிலுள்ள TONO வில் புத்தாண்டன்று மாலை சிறுவர் MOCHI யை வளைந்த தடியிலே கோத்து 'காக்கையே வா! காக்கையே வா! எனக் கூவும் வழக்கமுண்டு. அவ்வாறு கூவும் போது காகங்கள் பறந்துவந்து அவற்றை உண்ணும்.
3. AKITA 65apGirGT KEMANAI u56o POPPO' 67607È 5ri60)56Ou
அழைத்து தைத்திங்களின் பதினாறாம்நாள் உணவிடுவர்.
4. NIGATA வில் புத்தாண்டின் மறுநாள் மதிய உணவின் ஒருபகுதி பனியால் செய்யப்பட்ட சிறு கோவிலின் கூரையில் வைக்கப் படும். பின்னர் காக்கையை உணவுண்ண வருமாறு அழைப்பர்.
தமிழரைப் போன்று யப்பானியரும் காகத்திற்கு உணவிடுவதை நடைமுறையாகக் கொண்டிருந்தமையை நோக்கும்போது யப்பானியர் தமிழர் நடைமுறைகளால் முன்னொரு காலப்பகுதியில் ஈர்க்கப்பட்டி ருக்க வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது. தற்காலத்தில் இந் நடைமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நகர்ப்புறத்து வாழும் யப்பானியர் இந்நடைமுறை பற்றி அறியாதவராயுள்ளனர். புத்தாண்டும் மேலைத்தேச நடைமுறைகளின் கலப்பினால் மடைநிலையிலிருந்து வேறுபட்டு மக்கள் விருந்தோம்பல் என்ற நிலைக்கு மாறிவிட்டது.
v. G) untings;Gamt Go) umTsing5aio - HONGA! HONGA!
தமிழரது பொங்கல் நாளன்று செய்யப்படும் பொங்கலோ பொங்கல் என்ற ஆரவார ஒலியுடன் யப்பானில் AKTA விலுள்ள TSUGARU வில் உள்ள நடைமுறை ஒன்று ஒற்றுமையுடையதாகக் காணப்படுகிறது. புத்தாண்டிலன்று அல்லது அடுத்தநாள் மாலை HONGA HONGA என்ற ஆரவார ஒலியுடன் வீட்டைச் சுற்றி நடப்பர். அப்போது பருப்பின் தவிட் டையும் கோதுமையின் தவிட்டையும் கள்ளுடன் அல்லது TOFUவின்
65

Page 35
மனோன்மணி சண்முகதாஸ்
(சோயா அவரைப் பாற்கட்டி TOFU எனப்படும்.) மண்டியுடன் கலந்து வீட்டைச் சுற்றித் தெளிப்பர். சில பகுதிகளில் இந் நடைமுறை YARAKUROZURI எனப்படுகிறது. அப்போது பயன்படுத்தப்படும் சொறறொடர் கள் வருமாறு அமையும்.
MAME - NUKA MO HONGA HONGA - Lu(15'ij g56ới@Liib HONGA HONGA KAME - NUKA MO HONGA HONG – gyf6Fg5 g56ớGLib HONGA - HONGA
TOFUKASU MO HONGA HONGA - TOFU LD603Tiquilib HONGA - HONGA
TONDOKOI TONDOKOI - பறந்து வா பறந்துவா
பழைய காலத்தில் AKITA வில் சோயா பருப்புத் தவிட்டுடன் நொருக்கப்பட்ட கடற்பூண்டு, கரி, பைன்மரச்சுள்ளி, YUZURIHA இலை என்பவற்றையும் கலந்து தெளிப்பர். TSUGARU வில் அரிசித் தவிட்டுடன் கள்ளுமண்டி, பருப்புத் தவிடு என்பவற்றைக் கலந்து தெளிக்கும்போது பின்வருமாறு ஒலிக்கும் வழக்குண்டு.
"பருப்புத்தவிடு HONGAHONGA (பொங்க பொங்க) வருவாய் இங்கே பறப்பாய் இங்கே வெள்ளி பொன் பறப்பாய் இங்கே கள்ளும் பெருகுமா இவ்வாண்டு முகர்கிறேன்நறுமணக் கள்ளுநம் தலைவனும் பெறுவானோபலபெண்டிர்’
1985ஆம் அண்டு பேராசிரியர் 85 சுசுமு ஓனோ வயதான மூதாட்டி ஒருத்தியிடம் வாய்மொழியாகக் கேட்ட பாடலைத் தனது கட்டுரையிலே குறிப்பிட்டுள்ளார். அது வருமாறு:
MAME - NUKA MO HONGA HONGA КОМЕ - NUKAMO HONGA HONGA CHOJADONO NOYAMA KARA ZENIMO KANE MOTONDE KÓ DON DE KÓ
பருப்புத் தவிடு பொங்க பொங்க அரிசித் தவிடு பொங்க பொங்க மலையின் தலைவன் செல்வமே பறந்து வருவாய்
AKITA Lug56u976o 2 6ňGT SAIMYÖJI 6768763)lelpfiaio MAME NOKA MAKI என்ற தொடர் பயன்படுத்தப்படுகிறது. ‘பருப்பின் மணம் பரப்பல்' எனக் கூறலாம். இப்பகுதியில் வறுத்த பருப்பின் கோது சிறிதாக வெட்டப்பட்ட மீன் துண்டுகளுடன் கலக்கப்பட்டு வீட்டைச் சுற்றி வலமாக வந்து தெளிக்கப்படும். அப்போது பின்வருமாறு மக்கள் ஆரவாரஞ் செய்வர்.
66

தமிழர்-யப்பானியர்.
பருப்பு மணம் பொங்க பொங்க
அரிசி மணம் பொங்க பொங்க
இங்கே வா பறந்து வா
நல்ல பக்கத்து வழியாலே
வெள்ளி பொன் பறந்து வா
இப்பகுதியில் இந்நடைமுறை அரசவை நடைமுறையாகவுமிருந்தது.
SHINJČ 656ä) MAME NO KA SHÜGI Lu(15úL! LD607š G),5IraňILIT Lub 67607 அழைக்கப்பட்ட நடைமுறையில் பின்வருமாறு ஒலிக்கப்பட்டது.
"பருப்பின் மணம் பொங்க பொங்க
சோற்றின் மணம் பொங்க பொங்க"
MAME NO KA LIGILMair upcomb, KOME NOKA Ggompgђlei upaonih என்னும் பேச்சுவழக்கின் பொருள் பருப்புத்தவிடு (MAMENUKA) அரிசித் தவிடு (KOME NUKA) என்பதாகும். பருப்பு, தினை, பணம், பொருள் என்பன மக்களால் விரும்பப்பட்ட பொருட்கள். எனவே, அவற்றைப் புத்தாண்டு முதல் பெறுவதற்கு ஆரவாரம் செய்தனர்.
wi. காய்க்காத மரங்களுக்குஅடித்தல் தைப்பொங்கல் நாளன்று காய்க்காத பூக்காத மரங்களுக்கு அடிக் கின்ற நடைமுறை ஒன்று தமிழரிடையே இருக்கின்றது. பொங்கலன்று பொங்கலைத் துழாவுகின்ற அகப்பையினாலே மலட்டு மரங்களுக்கு அடிப்பர். அப்படி அடித்தால் அவை விரைவிலே பூத்துக் காய்க்குமென நம்பினர். தென்னை, மா, பலா, பனை போன்ற பயன்தரு மரங்கள் சில வேளை காய்ப்பதோ பூப்பதோ இல்லை. அவற்றிற்கு அடித்தால் பின்னர் விரைவிலே பூத்துக் காய்க்கும். மரங்களுக்கு அடிக்கும்போது "பூப்பியோ காய்ப்பியோ!" என்று கேட்டு அடிப்பர். அப்போது இன்னொ ருவர் "பூப்பேன்! காய்ப்பேன்!” என்று பதில் கூறுவார். இந்நடைமுறை தமிழ் நாட்டிலும் இருக்கிறது.
யப்பானிலும் புத்தாண்டன்று SHISUOKA பகுதியில் பயிர்த்தொழில் செய்கின்ற குடும்பங்களிடையே பொங்கல் (AZUK - GAYU) துழாவுகின்ற அகப்பையினாலே சிறுவர்கள் மரங்களுக்கு அடிக்கும் வழக்கமுண்டு. அவ்வாறு அடிக்கும்போது பின்வருமாறு ஒலிப்பர்.
"சிறுபழம் பெரும்பழம் நீ காய்ப்பியோ! நீ காய்ப்பியோ நீ காய்ப்பியோ பெரும்பழம் உன்கிளைகளில்!”
அல்லது பின்வருமாறு ஒலிப்பர்.
"பழம் காய்க்க வேண்டும் பழம் காய்க்கவேண்டும்! நான் உன்னை வெட்டிவிடுவேன் இல்லாவிட்டால்”
67

Page 36
மனோன்மணி சண்முகதாஸ்
TOKUSHMA பகுதியில் NARYOSH என்னும் சடங்கு முறையொன்று உண்டு. இச்சடங்கின் நடுப்பகுதியில் புத்தாண்டன்று பயன்படுத்தப் படும் KAYUZUE (பொங்கல் துழாவும் அகப்பையால்) கனி தரும் மரங் களுக்கு அடிக்கின்ற வழக்கம் உண்டு.
OKINAWA வில் புத்தாண்டுக்கு முதல்நாள் நடத்தப்படுகின்ற நாடக மும் இந்த நடைமுறையுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. இந் நாடகத்தில் மூவர் நடிப்பர். தோடை மரத்தின் கீழ் மூவரும் ஒன்று கூடுவர். ஒருவர் மரத்துடன் மிகவும் நெருங்கி நிற்பர். ஒருவர் கையில் வாளுடன் நிற்பார். இன்னொருவர் கையில் கூடையுடன் நிற்பர். வாளுடன் நிற்பவர் மரத்தினருகில் நிற்பவரிடம் வருமாறு கேட்பர். " போகிறாயா? இல்லையா?” மரத்தருகில் நிற்பவர் “காய்ப்பேன், காய்ப்
காய்க்கப்
பேன்’ எனக் கூறுவார். அப்போது கையில் கூடையுடன் நிற்பவர் மரத்தி லிருந்து பழம் பெறுவது போலப் பாவனை செய்வார். இச்செய்தி யப்பானிய நாட்டாரியல் ஆய்வாளரான YANAGITA KUNIO வினுடைய SAISHUZOKUGOI (சடங்கு நடைமுறைகளின் சொற்றொகுப்பு) என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
யப்பானில் மரங்களுக்கு அடிக்கின்ற நடைமுறை பரவலாக எங்கும் காணப்படுகிறது. பெரும்பாலும் புத்தாண்டுக்கு முதல் நாள், மறுநாள் நடக்கின்றது. சில இடங்களில் இந்நடைமுறை SETSUBUN (பனிக்கால இறுதிநாள்) என அழைக்கப்படுகிறது.
யப்பானியப் புத்தாண்டன்று குழந்தை பெறாத, திருமணமாகிய மனைவியரை “நீகுழந்தை பெறுவாயாமாட்டாயா!' என்று கேட்டு அவர் களின் பின்புறத்தில் பொங்கல் துழாவுகின்ற அகப்பையால் அடிக்கின்ற நடைமுறையும் வழக்கிலுண்டு. மனைவியர் “நான்குழந்தை பெறுவேன்! நான்குழந்தை பெறுவேன்!” என்று சொல்லும்வரை அடிப்பர்.
யப்பானில் TSUSHMA தீவிலுள்ள TOYOSAKI என்னுமிடத்தில் மணம் முடித்த இளம் மனைவியரை KOPPARAME (கருவுறுவாய்) எனக் கூறிப் பின்புறத்தில் அடிப்பர். இவ்வாறு கூறி அடிக்குந் தடியை KOPPARAME என அழைப்பர். மனைவியரை அடிக்கும்போது சிறுவர்கள் “குழந்தை பெறுவாய்! குழந்தை பெறுவாய்! முட்டைபோலக் குழந்தை பெறுவாய்” என ஒலிப்பர். TWATE பகுதியிலுள்ள TWAISUMI என்னுமிடத்தில் புத்தாண் டன்று குழந்தைப் பேறு அற்ற திருமணமான பெண்களை ஒரு கம்பத் திலே கட்டி வைத்துச் சிறுவர்கள் அவர்களை மிரட்டிப் பின்வருமாறு கேட்பார்கள்.
‘'நீ குழந்தை பெறப்போகிறாயா இல்லையா!'
68

தமிழர் - யப்பானியர்.
அப்போது அப்பெண்கள்;
"நான்குழந்தை பெறுவேன் என்னை விடுவியுங்கள்." என்று கூறுவார்கள். பெண்களை அடிக்கின்ற நடைமுறை மரங்களை அடிக்கின்ற நடைமுறை போலவே இருக்கின்றது. SHIZUOKA பகுதியில் உள்ள ABB யில் ஆண்குறி வடிவாகச் செய்யப்பட்ட தடியொன்றினால் சிறுவர்களும், இளைஞர்களும் திருமணமான புதுமணப்பெண்களை அடிக்கும் வழக்கம் உண்டென YANAGITA குறிப்பிடுகிறார். TOKYC) விலுள்ள TAMA வில் இவ்வாறு பெண்களை அடிக்கும் தடியை MARABO என அழைப்பர். MARA என்றால் ஆண்குறி,BO என்றால் தடி, MAKURA NO SOSHI (தலையணைநூல்; HEIAN கால (794-1185) அரசவைச் செய்தி கூறும் நூல்) யிலும் இச்செய்தி குறிப்பிடப்பட்டுள் ளது. இந்நூலிலுள்ள MAEDA குடும்பம் பற்றிய பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
நிறைமதிப் பொங்கல் நாளான விழாவின் 15ஆம் நாள் மன்னருக்கு பொங்கல் வழங்கப்படும். இந்நாளில் இளைய பணியாள் பொங்கல் துழாவிய அகப்பையை யாருமறியாமல் எடுத்துப்போய் பெண் பணியாளர்கள் வரும் வழியிற் காத்து நிற்பர். பெண் பணியாளர்கள் இவனிடம் அடிவாங்காமல் தங்களைக் காத்துக்கொள்ள முயற்சிப்பர். இக்காட்சி பார்ப்ப தற்கு மிகவும் களிப்பானது. பணியாள் தனது நோக்கத்தை நிறைவேற்றினால் மகிழ்வாகச் சிரிப்பான். அடிவாங்கிய பெண்ணைத் தவிர மற்றையோர் எல்லாரும் இந்த நிகழ்வால் மகிழ்வர். பெண் மட்டும் வெறுப்படைவாள்.
MAKURANO SOSHI யில் பெண்களும் ஆண்களுக்கு அடிப்பதாகக் குறிப்புண்டு. ஆனால் பெண்களை அடிப்பது கருவளத்தோடு தொடர்பு டையதாகவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கிரகண காலத்திலும் மரங்களுக்கு உலக்கையால் அடிக்கின்ற வழக்கமிருந்துள்ளது. கிரகணம் முடிந்தவுடனே உலக்கை யால் மரங்களுக்கு அடிப்பர். இது ஆண் பெண் பேதமின்றிச் செய்கின்ற நடைமுறையாகும். எனினும் இந்த நடைமுறைகள் இப்போது அருகி விட்டன. யப்பானியரும் தமிழரும் பயிர்ச்செய்கை தொடர்பான நடை முறைகளிலும் ஒற்றுமையுற்றிருந்ததை காய்க்காத மரங்களுக்கு அடிக் கின்ற நடைமுறை உணர்த்துகின்றது.
wi. பணியாளர்க்குப்பரிசும் விடுமுறையும் வழங்கல் தைப்பொங்கலன்று பயிர்த்தொழில் தொடர்பான பணியாளர்கள் எல்லோருக்கும் விடுமுறை வழங்கப்படும். அன்று மாலை பயிர்ச் செய்கையுடன் ஒன்றிணைந்த தொழிலாளர்க்கு பயிர்ச்செய்கை நில
69

Page 37
மனோன்மணி சண்முகதாஸ்
உடைமையாளர் கையுறைகள் வழங்குவர். பணப்புழக்கத்திற்கு முன்பு விளைபொருட்களே தொழிலாளர்களுக்குரிய கூலியாக வழங்கப்பட்டது. பயிர்ச்செய்கைக்கு வேண்டிய கருவிக் கலங்களைச் செய்பவர்களுக்கும் பொங்கலன்று கையுறைகள் உடைகளாகவும் உணவுப்பொருட்களாகவும் வழங்கப்பட்டன. ஆனால் பணப்புழக்கத்தின் பின்னர் பணமே கொடுக்கப்
பட்டு வருகிறது.
யப்பானிலும் புத்தாண்டின் மறுநாள் பணியாளர்க்கு விடுமுறை வழங்கப்பட்டது. YABUIR (பணியாளர், உதவியாளர், விடுமுறை) எனத் தற்போதும் இந்நடைமுறை வழக்கிலுண்டு. அன்றைய நாள் பணியாளர் புத்தாடைகள் பெறுவர். புதிய OBI (பட்டி) சுற்றிய புதிய KIMONO (யப்பா னியர் மரபான ஆடை) அணிந்து பணியாளர் ASAKUSA எனப்படும் இடத்திற்குச் செல்வர். ASAKUSA களியாட்டத்திற்குப் பெயர்பெற்ற இடம் ஆகும். பலவிதமான பொழுதுபோக்கும் அங்குண்டு.
தமிழர் நடைமுறையில் தைப்பொங்கலன்று கையுறை பெறுவது பெரும்பான்மை வழக்கமாக இருக்கின்றது. யப்பானியர் நடைமுறையில் புத்தாண்டின் மறுநாள் கையுறை பெறுவதே பெரும்பான்மை வழக்க மாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பணியாளர்க்குப் புத்தாடை வழங்கும் நடைமுறையை யப்பானியர் OSHIKISE எனக் குறிப்பிட்டனர். EDO காலத்துப் பதிவேடு களிலும் இச்செய்திக் குறிப்புண்டு.
SHOGENரIKOSETSUYOSHO (சொற் பொருள் விளக்க அகராதி)யில் SHIKISE என்ற சொல்லுக்கு பணியாளர்க்கு உடையளித்தல் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.
3. மறுநாள் நடைமுறைகள்
தைப்பொங்கலுக்கு மறுநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பனவாய் உள்ளன. கழிந்த ஆண்டைப்போல நடப்பு ஆண்டிலும் சேர்ந்து தொழில் செய்யும் நிலையை விளக்கச் சில நடைமுறைகள் உள்ளன. தமிழர் வாழ்விய லில் தைப்பொங்கல் பெற்ற இன்றியமையாத்தன்மையை உறுதி செய் வனவாயும் அவை உள்ளன.
1. மாட்டுப்பொங்கல்
பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டது. மாட்டுப்பொங்கல எனச் சிறப்பான பொங்கலும் செய்யப்பட்டது. அன்றைய நாள் மாலை மாட் டைக் குளிப்பாட்டி அழகுபடுத்துவர். கொம்புகளிலே பூமாலை சுற்றுவர். புதிய துணியொன்றை மாட்டுக்கு மேல் போர்த்துவிடுவர். மாட்டுக் கொட்டிலிலே பொங்கலும் செய்யப்படும். பொங்கலுடன் ஏனைய பழ
70

தமிழர் - யப்பானியர்.
வகைகளையும் தானியங்களையும் மடையிட்டு மாட்டுக்குக் கொடுப்பர். இந்நடைமுறையிலே மாடு கடவுள் நிலையில் கணிக்கப்பட்டமை குறிப்பிடவேண்டியது. உணவிட்ட பின்னர் மாட்டை அவிழ்த்து வெளியே உலாவ விடுவர்.
யப்பானிலும் இதைப் போன்ற நடைமுறை ஒன்று வழக்கில் உண்டு. AOMORI யிலுள்ள SHIMOKITA என்னும் பகுதியில் அமைந்துள்ள HIGASHIDORI என்னும் ஊரிலே தைத்திங்கள் 20ம் நாள் குதிரைகளுக் கும் மாடுகளுக்கும் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. மக்கள் குதிரை, மாடு என்பவற்றின் கடிவாளம், பிணைக்குங் கயிறு என்பவற்றைப் புதிதாக்கிக் கட்டுவர். அவற்றிற்கு MOCHI கொடுப்பர். TWATE யிலுள்ள ரOHO]] என்னும் ஊரிலுள்ள மக்கள் புத்தாண்டின் மறுநாள் மாட்டிற்கும் குதிரைக்கும் அரிசித் தவிடும் பருப்புத் தவிடும் கொடுப்பர்.
இலங்கையில் இப்போது மாட்டுப் பொங்கல் நடைமுறை அருகி விட்டது. உழவுநிலை, துடுமிதிப்புநிலை என்பவற்றிலே எந்திரங்களின் பயன்பாடு பெருகிவிட்டதால் மாடுகளின் பயன் குறைந்துவிட்டது. தமிழ் நாட்டில் இன்னமும் நடைமுறையில் உள்ளது. யப்பானிலும் பயிர்ச் செய்கையில் மாடு, குதிரை பயன்படுத்தப்படுவதில்லை. எனவே நடை முறையும் அருகிவிட்டது. பழந்தமிழரும் யப்பானியரும் உழவுத் தொழி லில் உதவிய விலங்குகளை விளைபொருள் கொடுத்துச் சிறப்பிக்கவென ஒரு நடைமுறையை ஏற்படுத்தியிருந்தமை பண்பாட்டு ஒப்புநிலையை விளக்குகிறது.
i. உறவினரைக்காணலும் இறந்தோர்படையலும்
தைப்பொங்கல் மறுநாள் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடை முறை இன்றும் உள்ளது. இதனைக் காணும் பொங்கல் என்றும் கூறுவார் உளர். பொங்கல் நாளன்று வீட்டிலே சில நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. மறுநாள் வெளியிலே நடைமுறைகள் செய்யப் படுகின்றன. மணமுடித்தவர்கள் தத்தம் பெற்றோர் வீட்டிற்கு விருந்து உண்ண அழைக்கப்படுவர். இந்நாளில் அன்று இறந்தவர்க்கெனப் படையலும் செய்து எல்லோருமாக உண்பர். இப்படையலில் மதுவும் புலாலும் படையற் பொருட்களாக விளங்கும். புத்தாண்டின்போது இறந்தோரையும் நினைவுறுவுவதற்காக இந்நடைமுறை தோன்றியிருக்க வேண்டும். ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும் புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட தமிழரிடையே இருந்த தவப் படையல் என்று அழைக்கப்பட்ட நடைமுறையும் அருகிவிட்டது. யாழ்ப்பாணத் தில் வடமராட்சிப் பகுதியில் தைப்பொங்கலன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன், இறைச்சி முதலி யன படைக்கப்பட்டன.
71

Page 38
மனோன்மணி சண்முகதாஸ்
யப்பானிலே புத்தாண்டின் மறுநாள் NARA விலுள்ள YOSH1NO பகுதி யில் திருமணத்திற்காக வீட்டைவிட்டுச் சென்ற பெண்கள் தமது பெற்றோர் வீட்டிற்குக் கணவன்மாருடன் உறவினரைக் காண வருகின்ற நடைமுறை உண்டு. KOGOSHIMA வில் இந்நடைமுறை OYAGENZO என அழைக்கப்படுகிறது. KYOTO, OSAKA பகுதிகளிலும் இவ்வாறே அழைக்கப்படுகிறது. யப்பானிய MINZOKUGAKUUITEN எனப்படும் தேச வழக்க அகராதியில் GENZO என்பது சிலவேளை GENZAN எனும் பொருள் தரும். ஒன்றிணைவு எனப் பொருள் தரும். OYAGENZO என்பது பெற்றோரைக் காணச் செல்லுதல் எனப் பொருள் தருமெனக் கூறலாம்.
AMAMI GEG??JGiīGIT TOKUNOSHIMA 6TGöīgoDJusó gö966) jög5/TGOờTLq6ð7 மறுநாளை மக்கள் இறந்தோர் நினைவாக SENZO SHOGATSU (இறந் தோர் புத்தாண்டு) என அழைக்கின்றனர். அந்நாளில் இறந்தவர்களு டைய கல்லறைகளுக்குச் சென்றுகள் சொரிந்து, மலர் தூவி, நறும்புகை இட்டு வழிபடுவர். இவ்வகையில் யப்பானிலே OYAGENZO வும், SENSHOGATSUவும் மக்கள் தங்களுடைய பிறந்த ஊருக்குப் புத்தாண்டின் மறுநாள் திரும்பி வருவதற்காக ஏற்படுத்தப்பட்டவை போலும்.
i. கலைஞர் வருகையும் ஆடல் இசையும்
பொங்கல் நாளின் மறுநாள் இசைக்கருவிகளை இசைப்பவர் வீடு களுக்குச் சென்று இசைவிருந்து கொடுப்பர். குழல், தவில், பறை, உடுக்கு போன்ற இசைக்கருவி வல்லாளர்கள் தத்தம் திறமையை வெளிப்படுத்த அவர்க்கு வீட்டார் கையுறைகளை வழங்குவர். சிறுவர்களும் தங்கள் ஆடல் பாடல் திறமையைக் காட்ட வீடுகளுக்குச் செல்வர். தற்போது இவ்வழக்கம் மாற்றமடைந்து பொங்கல் கலை விழாவாகப் பொதுவான இடத்திலே எல்லாக் கலைஞர்களும் வந்து தம் திறமையைக் காட்டும் நிலையாக மாறிவிட்டது. ஆடல், பாடல், நாடகம் என்பனவும் போட்டி நிலையிலே நடைபெறும். வெற்றி பெற்றோர்க்குப் பரிசில்கள் வழங்கப் படும். இன்று தமிழரிடையே பொங்கல் நடைமுறையைவிடத் தைப் பொங்கல் கலைவிழா இன்றியமையாத நடைமுறையாகி விட்டது. தமிழர் நாடு கடந்து வாழும் நிலையிலும் தைப்பொங்கலை நினைவுகூரும் வகையில் செயற்படுத்துகின்ற நடைமுறையாகவும் உள்ளது. இன்னும் இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நிலையிலும் தைப் பொங்கலை தொடர்புபடுத்தும் நடைமுறையாகவும் பேணப்படுகின்றது.
யப்பானிலும் MANZAI என்ற பெயரில் புத்தாண்டு விழா நிலையில் கொண்டாடப்படுகின்றது. சிறுமுரசு, சீனக்குழல் என்பனவற்றை எடுத்துச் சென்று கலைஞர்கள் வீடுவீடாகச் சென்று தம் திறமையை வெளிப் படுத்துவர். புத்தாண்டுப் பிறப்பின் பின்பே இந்நடைமுறை செயற் படுத்தப் படுகின்றது. புத்தாண்டு மறுநாள் தொடக்கம் 3 நாட்களுக்கு இந்நடைமுறை தொடர்வதால் MIKAWA MANZA என யப்பானின்
72

தமிழர்-யப்பானியர்.
கிழக்குப் பகுதியில் அழைக்கப்படும். மேற்குப் பகுதியில் YAMATO MANZAi என அழைக்கப்படுகின்றது. KAMAKURA காலத் தொடக்கப் பகுதியில் (1192 - 1333) MANZA1 கலைஞர்கள் அரசவைக்கு வருகை தருவது SENJÜ (ஒராயிரம் கார்காலம்) MANZA என அழைக்கப்பட்டது. EDO (1600 - 1868) MANZA என்று மட்டுமே அழைக்கப்பட்டது. MANZA கலைஞர்களுக்கு சிறிய தொகைப் பணமும் கொடுக்கப்பட்டது. MURO. MACHI கால (1333 - 1573) பாடலடியொன்று பின்வரும் குறிப்பைத் தருகின்றது.
நடமாடும் MANZA கலைஞர்கள், MANZAI நடிகர்கள்,
ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் தங்கி கலை நிகழ்ச்சிகளை
நடாத்தி சிறிய பணத்தொகையைப் பெறுவர்.
TEMPO 3 (1882) காலத்தில் OSAKA வில் நடிக்கப்பட்ட நாடகமொன்
றிலே வரும் எவ்வளவு சிறிய தொகையை உழைக்கின்றார்கள் என்ற தொடர் மூலம் கலைஞர் சிறிய தொகையினையே பெற்றதை அறிய முடிகிறது. அரிசியையே அவர்கள் பரிசாகப் பெற்றனர்.
MIKAWA MANZA கலைஞர்கள் உயர்ந்த கருப்புத் தொப்பியணிந்து அரச அலுவலகர் போல உடையணிந்து ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று சிறிய முரசை அடித்துச் சீனக்குழல் இசை வழங்குவர். முடிவில் ஒவ்வொரு கலைஞனும் "உங்கள் வணிகம் வாழ்க! உங்கள் குடும்பம் வளர்க!” என வாழ்த்திச் சில சில்லறைப் பணத்தைக் கையுறையாகப் பெறுவர். தமிழ்நாடு, இலங்கையிலும் இசைக் கலைஞர் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று இசை வழங்கிப் பணம் பெறும் வழக்கத்திற்கும் MANZA கலைஞர் வழக்கத்திற்கும் நெருங்கிய இசைவாக்கம் தெரிகிறது.
iv. பாடல், ஆடல் அரங்கேற்றம்
யப்பானின் அரசவையிலே DOKA எனக் கூறப்படும் இசை அரங் கேற்றம் புத்தாண்டின் மறுநாள் நடைபெறும். DOKA பாடலுடன் மத்தள அடியும் தொடரும். அப்போது கலைஞர் இசைக்கேற்றவாறு கால்களால் நிலத்தை மிதிப்பர். இதனால், DOKA என்பது இசைக்கேற்ப அடி மிதித்தலும் பாடலும் என நேர்ப்பொருள் தரும். அரசவை ஆடல் விழா வில் DOKA ஒவ்வொரு ஆண்டும் அரசவையில் நடைபெறும். NARA (710-794), HEAN (794 - 1185) காலப்பகுதியில் புத்தாண்டின் மறுநாள் இவ்விழா நடைபெற்றது. யப்பானிய பழைய வரலாற்று நூலான NIHON SHOKI யில் DOKA பற்றிய குறிப்பு முதலில் வந்துள்ளது.
ரTO7(693) சீனர்கள் பாடலும் ஆடலும் (DOKA) அரசவையில் நடத்தினார்கள். SHOKU NIHONG என்னும் நூலில் பின்வரும் குறிப்புக் காணப்படு கிறது.
73

Page 39
மனோன்மணி சண்முகதாஸ்
TEMPO2(730).1.16 அரசர் அரசவைக்குச் சென்று 5ஆம் தரத்தி னர்க்கும் மேற்பட்ட பணியாளர்க்கும் விருந்தளித்தார். மாலை யில் அரசியின் மாளிகைக்குச் சென்றார். எழுதுவினைஞர் தரத்தினரும் மேற்பட்டவர்களும் DOKA கலைஞர்களுடன் வந்தனர். கலைஞர் சென்றபின்பு அரசவையிலே எல்லோருக் கும் உண்டாட்டு நடைபெற்றது.
இத்தகைய போதுகளில் பணியாளர் வருமாறு பாடுவர். 'புத்தாண்டுத் தொடக்கத்தில் மன்னருக்கு இப்பாடலை வழங்குகிறோம். அவர் ஆட்சி என்றும் நிலைக்கட்டும்’
இந்நிகழ்வில் நடப்பாண்டுக்குரிய பணியாளர்கள் நியமிக்கப்படுவர். DOKA இசைக் கலைஞர் தலைவர், 2 மாளிகைப் பணியாளர், பதவி உயர்வு பெறுவர். புத்தாண்டின் மறுநாள் ஆடை, செயற்கைப்பட்டு, பட்டு, பருத்தி, கம்பளி, போர்வை என்பன கையுறையாகக் கொடுக்கப்பட்டதை ujib SHOKUNIHONGI 3,gj6pgj.
DOKA இசையில் பெண்களும் பங்குகொண்டுள்ளனர். அரசர் YOZEl (GANGYC); 3, 879) பற்றிய குறிப்பில் “DOKA வழமைபோல பெண் கலைஞர்களாலும் நடத்தப்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது. ஆண் DOKA கலைஞர் பற்றிய செய்தி பின்வரும் அரசர்கள் பற்றிய ஆவணங்களிலும் காணப்படுகிறது.
UDA (R887 - 897), DAIGô (R897 - 930), SUZAKU (R 930 - 946), MURAKAMI (R946-967), ENYU (R969 - 984). ஆண்கள் DOKA கலை நிகழ்வு, பெண்கள் DOKA கலை நிகழ்வைப் போல ஒவ்வொரு வருடமும் நடைபெறவில்லை.
யப்பானில் DOKA கலைநிகழ்ச்சி இன்றும் நடைமுறையிலுள்ளது. AOMORI u9hayaitGIT SHIMO KITA 676760Juri 566b Gu675Git 6i igoyaiG367 இவ்வாடலைச் செய்கின்றனர். கடுமையான பனி பெய்யும் பகுதியாத லால் மரபான ஆடலை வெளியே செய்யமுடியாமையால் வீட்டினுள்ளே செய்கின்றனர்.
V. புத்தாண்டுப்போட்டிகள்
தைப்பொங்கல் மறுநாள் பட்டம் விடல், கோலாட்டம், வண்டி ஒட்டுதல், மாட்டை அடக்குதல் எனப் போட்டிகளும் பல நடக்கும். பட்டம் விடல் யப்பானியர்களிடையேயும் வழக்கமாயுள்ளது. ROKUGOGAWA ஆற்றங் கரையில் பட்டம் விடப்பட்டது. பட்டம் விடுதல் என்னும் தொடர் HAIKU பாடல் எழுதுபவர்க்கு இக்காலகட்டத்தில் பருவகாலச் சொற்றொடராய் இருந்தது. இது புத்தாண்டின் பிறப்புநாளை உணர்த்தியது.
74

தமிழர்-யப்பானியர்.
தமிழரிடையே பட்டம் விடும் வழக்கம் இருந்தபோதும் தைப்பொங்க லன்று பட்டம் விடுதல் இலங்கைத் தமிழரிடையே பெருவழக்காக உள்ளது. படலம், கொக்கு, வாலாக்கொடி, பெட்டி, பருந்து எனப் பல பட்டங்கள் தைப்பொங்கலன்று பறக்க விடுவர். அவற்றை இசையுடனும் இணைத்துள்ளனர். பனை நாரினால் செய்த விண் பூட்டிப் பறக்க விடுவ தால் பட்டம் ஆடிப் பறக்கும்போது காற்றின் வீச்சுக்கேற்ப நல்லொலி எழுப்பும். இரவிலும் இராக்கொடி என்னும் பட்டத்தைப் பறக்க விடுவர். பலவகை வண்ணத்தாள்களிலே பட்டம் செய்யப்படும். சிறுவர், இளைஞர், முதியோர் பெண்கள் என்ற பாகுபாடின்றி எல்லோருமே பட்டம் விடுவர். போட்டிகளும் வைக்கப்பட்டுப் பரிசில்கள் வழங்கப் படும்.
யப்பானியரிடையே புத்தாண்டை ஒட்டி அம்பு எய்தல் நடைபெறும். போட்டி நிலையிலே பலர் பங்குகொள்ளும் நிகழ்வாகும். தமிழரிடையே இந்நடைமுறை இல்லை. ஆனால், வண்டியோட்டல், மாடு பிடித்தல் என இரு போட்டிகள் நடைபெறுகின்றன. மாட்டு வண்டிகளை விரைவாய் ஒட்டுவதற்கு போட்டி வைக்கப்பட்டது. தற்போதும் தைப்பொங்கலன்று அல்லது மறுநாள் இப்போட்டி நடைபெறும். மாடு பிடித்தல் என்பது முரட்டுக்காளையை அடக்குதல். இந்நடைமுறை சங்கப் பாடல்களிலே ஏறுதழுவல் என அழைக்கப்பட்டது. ஏறும் மனிதரும் போராடுவதைக் கலித்தொகை காட்டுகிறது.
காரெதிர் கலியொலி கடியிடி யுருமி னியங்கறங்க ஊர்பெழு கிளர்புளர் புயன்மங்கலி னறை பொங்க நேரிதழ் நிரைநிரை நெறிவெறிக் கோதைய ரணிநிற்பச் சீர்கெழு சிலைநிலைச் செயிரிகன் மிகுதியிற் சினப்பொதுவர் நூர்பெழு துதைபுதை துகள்விசும் புறவெய்த வார்புடன் பாய்ந்தா ரகத்து மருப்பிற் கொண்டு மார்புறத் தழீஇயும் எருத்திடை யடங்கியும் இமிலிறப் புல்லியுந் தோளிடைப் புகுதந்துந் துதைந்துபா டேற்றும் நிரைபுமேற் சென்றாரை நீண்மருப் புறச்சாடிக் கொளவிடங் கொளவிடா நிறுத்தன ஏறு
(கலித்தொகை : 106:24-34) பிரிவுகொண் டிடைப்போக்கி யினத்தொடு புனத்தேற்றி இருதிறனா நீக்கும் பொதுவர் உருகெழு மாநில மியற்றுவான் விரிதிரை நீக்குவான் வியன்குறிப்பொத்தனர் அவரைக் கழல உழக்கி யெதிர்சென்று சாடி
75

Page 40
மனோன்மணி சண்முகதாஸ்
அழல்வாய் மருப்பினாற் குத்தி உழலை மரத்தைப் போல் தொட்டனஏறு தொட்டதம் புண்வார் குருதியாற் கைபிசைந்து மெய்நிமிரித் தங்கார் பொதுவர் கடலுட் பரதவர் அம்பியூர்ந் தாங்கூர்ந்தா ரேறு
(கலித்தொகை 106:16-25) கலித்தொகையில் கூறப்பட்ட ஏறுதழுவல் நடைமுறை திருமணத் துடனும் தொடர்புடையது. முல்லை நிலத்திலே வாழ்ந்த ஆயர்களின் இளம்பெண்கள் வளர்த்த ஏற்றை பலர் பார்த்திருக்க இளம் ஆண்கள் அடக்கவேண்டும். அவ்வாறு காளையை அடக்கும் ஆணையே முல்லை நிலத்துப் பெண்கள் மணம் முடிக்க விரும்பினர். இச்செய்தி பின்வரும் சங்கப் பாடலால் விளக்கம் பெறும்.
"கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள்.”
(கலித்தொகை 103:63-64) “விலைவேண்டா ரெம்மினத் தாயர் மகளிர் கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின்’
(கலித்தொகை: 103:71-73) தைத்திங்கட்பிறப்பான தைப்பொங்கலன்று இவ்வேறுதழுவுதல் நடைபெற்றிருக்க வேண்டும். முன்னர் காட்டப்பட்ட நடைமுறைகளான தைநீராடல், தையூனிருக்கை, புதிதுண்ணல் போன்ற நடைமுறைகளுக் கும் ஏறுதழுவுதலுக்கும் தொடர்பிருந்திருக்க வேண்டும். தைத்திங்கள் திருமணம் செய்யும் திங்களாக இப்போதும் கருதப்படுவதும் இதனை உணர்த்தும். தமிழகத்தில் ஏறுதழுவல் என்ற பெயர் மாற்றமுற்று சல்லிக்கட்டு என வழங்கப்படுகிறது. பழைய நடைமுறை நிலையில் இருந்து வழுவி "முரட்டுக்காளையைத் துரத்திப் பிடிக்கும் விளையாட் டாக" மாறிவிட்டது. பெயர் நிலையிலும் ஜல்லிக்கட்டு' என்றே வழங்கப் படுகிறது. யப்பானியரிடையே இத்தகைய மாட்டை அடக்கும் விளை யாட்டு இன்று சில பகுதிகளில் நடைபெறுகிறது. முன்னர் புத்தாண்டின் போது நடைபெற்றிருக்கலாம்.
தைப்பொங்கல் தமிழர் பண்பாட்டின் அடிப்படையாக அமைந்து ஏனைய வழிபாட்டு நடைமுறைகளுக்கும் விழாக்களுக்கும் தோற்றக் காரணியாக அமைந்துள்ளது. தமிழர் பண்பாடு சமூகநிலைப்பாட்டிற்கான நடைமுறைகள் பலவற்றை உள்ளடக்கியது. விலங்கு வாழ்வுக்கும் மனித வாழ்வுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை விளக்கவல்லது.
76

தமிழர்-யப்பானியர்.
விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனிதன் நிலையாக ஓரிடத்திலே வாழத் தொடங்கி நிலத்தைப் பண்படுத்திப் பல்வேறு விளைபொருட் களின் பயனைப் பெற்றபோது தன் மனத்தையும் பண்படுத்தி வாழ்கின்ற மனப் பயிற்சியையும் பெற்றுக்கொண்டான். மனம் பண்பட்ட நிலையிலே அவனால் பல புதிய ஆக்கங்களை (விளைபொருள் நிலையில்) செய்யவும் முடிந்தது. பண்பட்ட மொழி ஒன்றைப் பேசவும் முடிந்தது. அந்தப் பண்பட்ட மொழியினாலே அனைவரோடும் கருத்துத் தொடர்பு ஏற்படுத்தவும் வாய்ப்பேற்பட்டது. கூட்டு வாழ்வு நிலையில் குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிச் சமூக நிலைக்கு உயர்த்த முடிந்தது.
பொங்கல் நடைமுறைகளோடு பெரிதும் தொடர்புற்ற கதிரவனைப் பெண் தெய்வமாக யப்பானியர் வழிபாடு செய்தது போலவே தமிழரும் வழிபாடு செய்திருக்க வேண்டும். பழந்தமிழிலக்கியங்களிலே பயன் பட்ட ஞாயிறு என்ற சொல்லும் இக்கருத்துக்கு அணி செய்யும். சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோ அடிகள் “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” எனக் கதிரவனை வழிபாட்டுப் பொருளாக்கியுள் ளார். வள்ளுவரால் குறிக்கப்படுகின்ற பகவன் என்ற சொல்லும் கதிரவனையே குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். 'பகலவன் என்ற சொல்லே 'பகவன் எனத் வள்ளுவரால் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கருத்துகள் உண்டு. தமிழிலக்கணங் கூறும் இடைக்கறை என்னும் விதிக்கமைய 'பகலவன் என்னுஞ் சொல் 'பகவன் என வந்ததென விளக்கமும் கூறப்படுகிறது. எனினும், பிற்காலத் தமிழிலக்கியங்கள் கதிரவனை வழிபடுவதைப் பற்றி குறிப்பிடவில்லை. திராவிடக் குழு வைச் சார்ந்த கணிக்கர்களிடம் சூரியனைப் பெண்தெய்வமாக வழிபடும் வழக்கு உண்டென முனைவர் க. ப. அறவாணன் கருத்துத் தெரிவித்துள் ளார். பெண் தெய்வப் பெயராக பகவன் என்றே கணிக்கர்களால் கதிரவன் அழைக்கப்படுகிறான். பெண் தெய்வத்தைக் குறிக்கும் அம்மன் என்ற சொல் போலவே பகவன் என்ற சொல்லும் அமைந்துள்ளது.
இயற்கையின் ஆற்றலைக் கண்டு அச்சங்கொண்டே மனிதன் அவற்றை வழிபடத் தொடங்கினான் எனப் பல மானிடவியல் அறிஞர் கள் கருதுகின்றனர். ஆனால், பழைய இலக்கியத் தரவுகளைத் தெளி நிலையிலே பார்க்கும்போது தமிழர் இயற்கையைத் தமக்கு உற்ற துணையாக ஏற்று நம்பிக்கையுடன் வாழ்ந்தமை புலனாகிறது. மலை, ஆறு, கடல், மண், விண், மரம் போன்ற இயற்கைத் தோற்றங்களின் நிலைகளில் அவற்றின் இயக்கத்தில் ஒரு ஒழுங்குமுறை இருந்ததை தமிழர் உணரத் தொடங்கியபோது அவற்றின்மீது மதிப்புக் கொண்டனர். இயற்கை தரும் பயன்களைப் பெறும்போது அவற்றைப் பெற இயற்கையை வணங்கினர். பெற்றதை மடையிடுவதை நடைமுறையாக் கினர். அதுபோலவே யப்பானியரும் இயற்கை ஆற்றலை வியந்து பணிந்து வணங்கினர்.
77

Page 41
மனோன்மணி சண்முகதாஸ்
நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் ஐந்து பெரும் இயற்கை ஆற்றல் களையும் நினைவுகூரச் செய்யும் நடைமுறையாகவும் தைப்பொங்கல் விளங்குகின்றது. இந்த ஆற்றல்கள் இல்லாவிட்டால் மனிதன் உணவைப் பெறமுடியாது. உயிர் வாழவே முடியாது. எனவே, அந்த ஆற்றல்களின் துணையினை விளக்க முற்றத்திலே பொங்கிச் சுற்றத்தோடு பகிர்ந்து உண்ணும் நடைமுறை மனிதனால் ஏற்படுத்தப்பட்டது போலும்.
தமிழர் யப்பானியர் பண்பாட்டின் நெருங்கிய தொடர்புக்கும் இந்த இயற்கை ஆற்றலை நன்குணர்ந்து கொண்டமையே அடிப்படையாகும். தனிமனித நிலையிலே பிறப்புத் தொடங்கி இறப்பு வரையான நடை முறைகளிலே ஒற்றுமை காண்பதற்கும் இதுவே காரணம். மேலைத் தேயத்து பண்பாட்டு நடைமுறைகளால் தமிழரின் பண்பாட்டு அடிப்படை மாற்றம் அடையாதிருப்பதற்கு இதுவே இன்றியமையாத நிலையா யிருந்தது.
78

12.
13.
14.
15.
16.
17.
8.
19.
20.
2.
22,
23。
தமிழர்-யப்பானியர்.
உசாத்துணை நூல்கள்
அகநானூறு
புறநானூறு நற்றிணை
குறுந்தொகை கலித்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல்
பத்துப்பாட்டு (முதற்பகுதி)
. பத்துப்பாட்டு (இரண்டாம் பகுதி)
1l.
தொல்காப்பியம் பிங்கலந்தை நிகண்டு நாமதீபநிகண்டு சிலப்பதிகாரம்
மணிமேகலை
நாலாயிரதிவ்விய பிரபந்தம் தமிழர்நாகரிகமும் பண்பாடும்
தமிழர்திருமண நடைமுறைகள்
இத்திமரத்தாள்
ஆற்றங்கரையான்
அனுபவ விவசாயக்கலை
பாட்டும் தொகையும் தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்
கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு கழக வெளியீடு, சென்னை கழக வெளியீடு, சென்னை இரத்தினநாயகர்அன்சன்ஸ் அ. தட்சணாமூர்த்தி, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
பதிப்பாசிரியர்கள் அ. சண்முகதாஸ், மனோன்மணிசண்முகதாஸ் முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், யாழ்ப்பாணம். அ. சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், வராவொல்லை வெளியீடு, யாழ்ப்பாணம். அருணாசலம் சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் வராவொல்லை வெளியீடு, யாழ்ப்பாணம், தொகுப்பு ஜெ. தே. திருஞானம், சூர்யாபதிப்பகம், சென்னை எஸ். ராஜம், சென்னை
க. காந்தி, உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம் சென்னை
1970
1973
1976
1978
1975
1972
1973
1975
1976
1968
1973
1978
1985
1977
1975
1959
1987
1984
1985
1989
1991
1958
1980
79

Page 42
மனோன்மணி சண்முகதாஸ்
24.
25.
26
27.
28.
29.
30.
11.
80
NIHONGO NO SEIRITSU
NIHONGO NO KIGEN
NIHON SHOKI
SOUND CORRESPONDENCES BETWEEN TAMIL AND JAPANESE
TAMIL LEXICON
தமிழர் பண்டிகைகள் பாணன், கங்கை புத்தக நிலையம்
சென்னை 1990
ஈழத்து வாழ்வும் வளமும் க. கணபதிப்பிள்ளை
பாரிநிலையம், சென்னை 1962 . தமிழர்சால்பு சு.வித்தியானந்தன்
தமிழ்மன்றம், கண்டி 1954 தமிழில் பழமொழி இலக்கியம் எஸ். செளந்தரபாண்டியன்
ஸ்ரார்பிரசுரம், சென்னை 1988
திருக்குறள் கழகப் பதிப்பு 1979 திருஞானசம்பந்தர் தேவாரம்
மாணிக்கவாசகர்திருவாசகம் கழக வெளியீடு, சென்னை 1976
Bibliography
WORLDVIEW AND RITUALS AMONG JAPANESE AND TAMILS Susumu Ohno, Arunasalam Sanmugadas,
Manonimani Sanmugadas, Gakushuin University Tokyo 1985 NIHONGO TO TAM RUGO Susumu Ohno, Shinchosha Tokyo 1981
NIHONGO IZEN Susumu Ohno, Iwanami Shincho 1987
Susumu Ohno, Chuokoron sha, Tokyo 1980 Susumu Ohno, Iwanami Shincho, Tokyo 1994
Iwanami Shoten,Tokyo 1965-67
Susumu Ohno, Gakushuin University,
DRAVIDIAN ETYMOLOGICAL DICTIONARY
LTERARY HISTORY IN TAMIL
CULTURAL HARITAGE OF THE TAMILS
Tokyo 1980
University of Madras 1982
T. Burrow & M.BEmeneau, Oxford 1961 Karthygesu Sivathamby,
Tamil University, Tanjavur 1986
EDITORS: S.V. Subramaniam, V.Veerasami International Institute of Tamil Studies Madras, 1981

தமிழ்மொழியும் யப்பானிய மொழியும் ஒப்பீட்டாய்வு வரலாறும் வளர்ச்சி நிலைகளும்
முன்னுரை
தமிழ் என்னுஞ் சொல் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் தத்திரம் 386 தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" எனத் தமிழ்ச் சொல்லின் இலக்கண நிலை பற்றி விளக்குமிடத்து தமிழ்’ என்னும் பெயர்ச் சொல்லைக் காண முடிகிறது. தமிழ்ப் பேரகராதி இச்சொல்லின் பொருள்களை இனிமை, நீர்மை, இயற்றமிழ் - இசைத் தமிழ் - நாடகத்தமிழ் என மூவகையாக வழங்கும் மொழி, தமிழ்நூல், தமிழர், தமிழ்நாடு எனத் தொகுத்துக் காட்டுகிறது. சொற்பொருள் விளக்கநிலையில் தமிழுக்கு இனிமை, நீர்மை என்னும் பொருள்கள் வழங்கப்பட்டதை பிங்கலந்தை நிகண்டு பதிவுசெய்துள்ளது. நாமதீப நிகண்டு இனிமையின் பெயர்களுள் ஒன்றா கத் தமிழைக் காட்டுகிறது. இன்னும் தமிழின் பெயராக தென்சொல், திராவிடம் என இரு பெயர்களையும் தருகிறது.
தமிழ்மொழி பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மேலைநாட்டு மொழியாய்வாளர்க்கு திராவிடம் என்னும் சொல் தமிழ்மொழி பற்றிய ஆய்வுக்குத் திறவுகோலாய் அமைந்தது. திராவிடம்’ என்ற சொல் ஏழாம் நூற்றாண்டிலே பயில்வுற்றதாகவும் குமாரில பட்ட ஆந்திர திராவிட பாஷா என மொழிப்பெயராக இச்சொல்லைக் குறிப்பிடுகிறா ரெனவும் கால்டுவெல் கூறுகிறார். ஆனால் இந்தியாவின் தென்
81

Page 43
மனோன்மணி சண்முகதாஸ்
பகுதியில் 'வழங்கி வந்த மொழிக் குடும்பத்திற்கு இப்பெயரை முதன் முதலில் கால்டுவெல் பயன்படுத்தியமையால் திராவிடம்' என்பது மொழிக் குடும்பத்தின் பெயராக தற்போது வழங்கப்படுகிறது. எனவே, கால்டுவெல்லுக்குப் பின்னர் கிட்டல், குண்டர்ட், பறோ, எமெனோ' போன்ற மேலைநாட்டு அகராதித் தொகுப்பாளர்களும் இச்சொல்லையே பயன்படுத்த நேர்ந்தது. திராவிடம் என்ற சொல் ஒருவர் பெயர், மக்கள், மொழி எனப் பல பொருள் தருவதை வடமொழி அகராதியும்” குறிப்பிடு கின்றது.
திராவிடம்’ என்னும் சொல் பற்றியும் தமிழ் எனும் சொல் பற்றியும் கால்டுவெல்லும், கிரியர்சனும்" வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித் துள்ளனர். திராவிடம்’ என்ற மூலச்சொல்லே தமிழ்’ எனத் திரிந்தது என்னும் கால்டுவெல் கருத்தை மறுத்து தமிழ்’ என்பதே திராவிடம் என்ற சொல்லின் மூலம் என கிரியர்சன் கூறுகிறார். எம். பூரீநிவாச ஐயங்கார்" இச்சொல்லை வடசொல்லாகக் கொண்டு இச்சொல் குறிக் கும் பொருள்களின் அடிப்படையில் திராவிடம் முதலில் இடத்தையும், பின்னர் அங்கு வாழ் மக்களையும் அதன் பின்னர் மக்கள் பயின்ற மொழியையும் குறித்திருக்க வேண்டுமென்கிறார். திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் மொழி முதல்நிலை பெறுவதை தேவநேயப்ப பாவாணர் வருமாறு தெளிவாக்குவர்.
p._Gv5ggspj6irGMT (6)LDmysle5566MTGvGvíTub Turanian, Semitic, Aryan GTGOT முப்பெருங்கவைகளாயடங்கும். இவற்றுள் ஒவ்வொருகவை யும் பற்பல கிளைகளாய்ப் பிரியும். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மொழித் தொகுதியாகும். இவற்றுள் துரேனியக் கவையில் திராவிடக் (Dravidian) கிளைக்குத் தலைமையாகக் கருதப்படுவது அமிழ்தினும் இனியதமிழ்மொழிய்ே"
மொழிக்குடும்பங்கள் பற்றிய ஆய்வில் உலக மொழிகளை Aryan, Semantic, Turanian என மூன்று பெரும் பிரிவுகளாக மாக்ஸ் முல்லர் பிரித் துள்ளார். அவற்றுள் Turanian பிரிவைச் சார்ந்ததாகக் கருதப்படும் திராவிடக் குடும்பத்தின் மொழிகளை ஆராய்ந்து திறம்பட வகுத்தவர் கால்டுவெல் ஆவார். கால்டுவெல்லுக்கு முன் பிரான்சிஸ் எல்லிஸ் என்பவர் திராவிட மொழிகள் என்ற பெயரின்றி ஒரு மொழிக் குடும்பம் உள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்." எல்லிஸ், கால்டுவெல், கிரியர்சன், பறோ, எமெனோ போன்றவர்களின் திராவிட மொழிக் குடும்பம் சார்ந்த மொழிகளின் வகுப்பைப் பின்வரும் அட்டவணை விளக்கும்.
82

தமிழர் - யப்பானியர்.
திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள்
எல்லிஸ்
தமிழ் தெலுங்கு கன்னடம்
LDGODGDulu TGITřb
துளு
குடகு
கால்டுவெல்
தமிழ் தெலுங்கு
560760TLED
மலையாளம்
துளு குடகு தோடா கோட்டா
கோண்ட் கோண்டு ஒரன் ராஜ்மகால்
தமிழ் தெலுங்கு
530 TØoðLD
LO60)6)u IIT6Tub
துளு
குடகு தோடா கோத்தா கொண்டா கொண்டி கொலமி நாயக்கி பர்ஜி
கதபா கூயி
கூவி குரூக் மால்தோ பிராகூய்
பறொ.எமெனோ கிரியர்சன்
தமிழ் தெலுங்கு
ES60T60T LO
மலையாளம்
துளு குடகு தோடா கோட்டா
கோண்ட் கோண்டு ஒரன் ராஜ்மகால் பிராகுயி
மொழியாய்வின் வளர்ச்சி நிலையிலே மொழிகளின் இயல்பு, பண்பு, தொடர்பு என்பவற்றைக் கொண்டு பிறிதொரு வகுப்புநிலையும் அமைந் துள்ளது. அதனைப் பின்வரும் அட்டவணை தெளிவாக்கும்.
தென்திராவிடம்
தமிழ் LD606)u TGT. b
கன்னடம்
குடகு துளு தோடா கோத்தா கொரகா
திராவிடமொழிக்குடும்பம்
நடுத்திராவிடம்
தெலுங்கு
கோண்டி G55ITuit
கூயி
கூவி
கோலாமி
பர்ஜி
கதபா
கொண்டா
நாயக்கி
பெங்கோ
LD60TLIT
வடதிராவிடம் குரூக்
மால்தோ
பிராகூய்
83

Page 44
மனோன்மணி சண்முகதாஸ்
மேற்காட்டிய 23க்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உண்டு என மொழியியலாளர் கருதுகின்றனர். திராவிட மொழிகளுள்ளே மிகவும் பண்பட்ட மொழியான தமிழ்மொழி பற்றிய ஆய்வு கால்டுவெல் காலத் திலேயே பிறமொழி ஒப்பீட்டாய்வு நிலைக்கு வளர்ந்திருந்தது. துருக்கிய மொழியுடன் தமிழை ஒப்பிட்டு கால்டுவெல் ஒரு சொல் அட்டவணை யைத் தமது நூலிலே தந்திருக்கிறார். அது வருமாறு:
Meaning Turkish of the Altai Modern Turkish Tamil
BLACK KORO QUARA KARU
OLD KORI GORI KIRA
CHIEFTAIN KAN KHĀN KÕN or KO
தமிழிலுள்ள கோன் அல்லது கோ என்னும் சொல் துருக்கி - மங்கோலிய மொழிகளில் பயிலும் KAN , KHAN gj6io6og KHAGAN என்னும் சொற்களுடன் தொடர்புடையதெனவும் கால்டுவெல் கூறுகி றார். இன்னும் துருக்கி, பினிஸ், ஹங்கேரிய, யப்பானிய மொழிகள் ஒரே குடும்பமொழிகள் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். இக்கருத்து தமிழ் - யப்பானிய மொழி ஒப்பீட்டாய்வுக்கு மிகவும் இன்றியமையாத தாகும். இன்னும் யப்பானிய தமிழ்மொழிச் சொற்கள் சிலவற்றையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். அவை வருமாறு அமையும்.
தமிழ்ச்சொல் யப்பானியச்சொல் iru - 63 (5 ari, iri, ori, uri karu - 45(L5 kurõ, koroi para - LD baru, haru
Para - பழ burui, furui
தமிழ்மொழிக்கும் யப்பானிய மொழிக்குமிடையே உள்ள தொடர்பு பற்றிய ஒப்பீட்டாய்வினைக் கடந்த 17 ஆண்டுகளாக பேராசிரியர் சுசுமு ஒனோ செய்து வருகிறார். யப்பானியரான இவர் மொழியியல் பேராசிரிய ராக 38 ஆண்டுகள் தோக்கியோவிலுள்ள கக்சுயின் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர். தற்போது அப்பல்கலைக்கழகத்தால் வாழ்நாள் பேராசிரி யராக பெருமைப்படுத்தப்பட்டு மொழியியல் நிறுவனத்தில் ஒப்பீட்டாய் வினைத் தொடர்ந்தும் செய்து வருகிறார். ஓனோவின் ஒப்பீட்டாய்வு தமிழாராய்ச்சியில் குறிப்பிடத்தக்க தனித்துவத்தைக் கொண்டுள்ளது. சிறப்பாக யப்பானிய மொழியின் மூலம் பற்றிய கருத்தினை யப்பானி யரிடையே ஆழமாகச் சிந்திக்க வைத்துள்ளது. மொழியியல் துறை சார்ந்த ஆய்வாளர்கள் மட்டுமன்றி ஏனைய துறைசார்ந்த ஆய்வாளர் களும் இன்று யப்பானில் இந்த ஒப்பீட்டாய்வு பற்றிக் கருத்துக்களைத் தெரிவிக்க முன்வந்துள்ளனர். பிறநாட்டு மொழியியல் ஆய்வாளர்களும்
84

தமிழர்-யப்பானியர்.
இதில் பங்கேற்று உள்ளனர். பேராசிரியர் கமில் சுவலபில் (செக்கோசு லோவாகியா) பேராசிரியர் ஆஷர் (எடின்பறோ) பேராசிரியர் சதாசிவம் (இலங்கை) பேராசிரியர் பொன். கோதண்டராமன் (இந்தியா) பேரா சிரியர் சண்முகதாஸ் (இலங்கை), பேராசிரியர் குருராஜராவ் (இந்தியா), நாகராஜராவ் (இந்தியா), D. ரகுபதி (மாலைதீவு) போன்றோர் ஒனோ வின் ஒப்பீட்டாய்வில் தொடர்புகொண்டு தமது கருத்துக்களையும் கட்டுரை வடிவில் தந்துள்ளனர்.
தமிழ் மொழியும் யப்பானிய மொழியும் தொடர்புள்ளவை என்ற கோட்பாடு முதன்முதலாக மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டு பொதுக் கருத்தரங்கிலே ஓனோவால் வெளிப் படுத்தப்பட்டது." இருமொழிகளிலும் தொடர்புற்றமைந்த சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டன. அது இந்த ஒப்பீட்டாய்வின் நிலையான தொடக்கமாயமைந்தது. அன்று தொட்டு இன்றுவரை இந்த ஒப்பீட் டாய்வு எத்தகைய வளர்ச்சி நிலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதைத் தரவுச் சான்றுகளோடு இக்கட்டுரை விளக்கிக்காட்டும். தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியிலும் வரலாற்றிலும் இந்த ஒப்பீட்டாய் வின் பெறுமானத்தை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் இலக்கா கும். ஆய்வுப்பரப்பும் தொடர்புநிலைகளும், ஆய்வுநிலையும் செல்நெறி களும், ஆய்வு தொடர்பான வெளியீடு, ஆய்வு பற்றிய விமர்சனம் என்னும் நான்கு பகுதிகளில் விரிவான நிலையில் கட்டுரையின் உள்ளடக்கம் அமையும். கட்டுரையின் இறுதியிலே விளக்கக் குறிப்பு களும், உசாத்துணைத் தரவுகளும் இணையும். பின்னிணைப்பொன்று தரவுநிலையிலே தனியாய் அமையும்.
85

Page 45
மனோன்மணி சண்முகதாஸ்
1. ஆய்வுப்பரப்பும் தொடர்புநிலைகளும்
யப்பானிய மொழியியற் பேராசிரியர் சுசுமு ஓனோ தமது ஒப்பீட்டு ஆய்வுக்குத் தமிழ்மொழியைத் தெரிவு செய்தமை பற்றிய விளக்கம் இங்கு முதற்கண் அமைய வேண்டியது. ஓனோ 1987ல் வெளியிட்ட NIHON GO IZEN (The Geneology of the Japanese Language) 676876Opub 5/T656ö தமிழ்மொழி பற்றியறிவதற்கு முன்னர் தன்னுடைய ஒப்பியல் ஆய்வு நிலை பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.
இற்றைக்கு ஏறக்குறைய 40ஆண்டுகளுக்கு முன்நான் கொரிய மொழி பற்றிய ஆய்வைச் செய்துள்ளேன். பிறமொழிக் கற்கையென்பது ஆங்கிலம், ஜேர்மன், பிரஞ்சு அல்லது சீன மொழிக் கற்கை என இருந்த நிலையில் கொரிய மொழியைக் கற்கத் தொடங்கிய எனக்கு கொரிய மொழியின் இலக்கணம் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாயிருந்தது. உச்சரிப்பும் கடின மாயிருந்தது. சொல்லொழுங்கு நிலையில் மட்டும் இரு மொழிச் சொற்களும் பொருந்தியமைந்தன. இன்னும் அஸ்ரனின் யப்பானிய மொழியுடன் கொரிய மொழியின் ஒப்பீட்டாய்வு (1879) KANAZAWA SHOZABURO வின் யப்பானிய - கொரிய மொழித் தொடர்புக் கருத்துரை (1909) என்னும் நூல்களிற் கூறப்பட்டவை தெளிவான கருத்துக்கள் எனவும் எண்ணியிருந்தேன்.ஆனால், நானேஒப்பான சொற்கள் பற்றிய நுண்ணாய்வை மேற்கொண்டபோது அவை ஒற்றுமையுறுவது கடினமாயிருந்தது. அப்போது 140 சொற் களை ஆராய்ந்தேன். பின்னர்கடனாகப் பெற்ற சொற்களையும் இணைத்துப் பார்த்தபோதும் 200 சொற்கள் சேர்வதே கடினமா யிருந்தது. சொற்களின் தரவு நிலையில் 15ஆம் நூற்றாண்டிலே தான் கொரியச் சொற்களும் காணப்பட்டன. எனது சொற் பட்டியலில் பிழையான சொற்களிடம் பெற்றமையும் பின்னர் சுட்டிக்காட்டப்பட்டது. இலக்கண வகைநிலையில் கொரிய மொழியப்பானிய மொழியுடன் ஒற்றுமையுறுவதை ஆய்வு நிலையில் செய்ய எண்ணி இடைச்சொல் நிலை, துணைவினை நிலை என்பவற்றில் இணைத்துப் பார்த்தபோதும் முடிவு ஒற்றுமையின்மையையே தந்தது" கொரிய மொழிக்கும் யப்பானிய மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஒனோ தொடர்ந்து அதனைச் செய்ய முடியா மல் இடையே நிறுத்திவிட்டார். எனினும், தான் இரு மொழிகளையும் ஒப்பிட்டுச் செய்த ஆய்வு பற்றி SHIBUNDO என்னும் வெளியீட்டாளரது மாதாந்த இதழில் கட்டுரை எழுதியுள்ளார்." A Comparative study of the Japanese and Korean languages 616ërgojLb 5L'Goor ஒப்பீட்டாய்வுக் கருத்துக் களைத் தாங்கி 1952 இல் வெளிவந்தது. யப்பானிய மொழியின் மூலம்
86

தமிழர் - யப்பானியர்.
பற்றிய ஆய்வில் தொடர்ந்து ஓனோ ஈடுபட்டு வந்ததை அவர் 1957 இல் GG16sfuSul The Origin of the Japanese Language' 676ip BJT6) ep6)(plb அறியக்கிடக்கிறது. ஓனோவை விட வேறு யப்பானிய மொழியியலாளர் களும் யப்பானிய மொழியை திராவிட மொழியுடன் ஒப்பிட்டு ஆய்வுகள் செய்துள்ளனர். சிப? (SHIBA), புஜிவர*(FUTWARA) மிநொருகோ?* (MNORUGO), முரயம? (MURAYAMA) போன்றோர் 70களில் யப்பானிய மொழியைத் திராவிட மொழியுடன் ஒப்பிட்டு கட்டுரைகள் வெளியிட்டுள் ளனர். புஜிவர யப்பானிய, திராவிட, சிரியன் மொழிகளிலுள்ள உடற்கூறு பற்றிய சொற்களைப்பற்றி ஆய்வுசெய்துள்ளார். சிப திராவிட, யப்பானிய மொழிகளின் எண்கள் பற்றிய சொற்களின் ஆய்வைச் செய்துள்ளார். முரயம யப்பானிய மொழிச் சொற்களையும் தெலுங்கு மொழிச் சொற் களையும் ஒப்புநோக்கிப் பார்த்துள்ளார். இக்காலகட்டத்தில் ஒனோவும் யப்பானியமொழிச் சொற்களையும் தெலுங்குச் சொற்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய முற்பட்டார்* திராவிட மொழிகளுடன் யப்பானிய மொழியை ஒப்பிட்டு ஆய்வுசெய்யும் முயற்சியில் UCHIDA* வும் ஈடுபட்டிருந்தார். இக்காலகட்டத்தில் ஒனோ ADRAVIDIANETYMOLOGICAL DICTIONARY? என்னும் நூலை வாங்கினார். அந்த நூல் அவரு டைய யப்பானிய மொழியின் மூலம் பற்றிய ஆய்வினை முனைப்பாகச் செய்வதற்கு வழிகாட்டியது. திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளுள்ளே தமிழ்மொழியே யப்பானிய மொழியுடன் நெருங்கிய தொடர்புகொண்டது என்னும் எண்ணம் ஒனோவுக்கு தோன்றுவதற்கும் அந்த நூலிலே தொகுக்கப்பட்டிருந்த தமிழ்ச்சொற்கள் சான்றுகளாயின.
எனவே ஒனோ யப்பானிய மொழியைத் தமது ஆய்வு நிலையிலே மொழியியல் அடிப்படையில் தமிழ் மொழியுடன் ஒப்பீடு செய்ய எண்ணினார். இரு மொழியையும் ஒப்பீட்டாய்வதற்கு தமிழ்மொழியை தமிழர் ஒருவரிடம் கற்பது முக்கியமானது என்பதை உணர்ந்தார். யப்பானிலே உள்ள இலங்கை, இந்திய தூதுவர் நிலையங்களுடன் தொடர்புகொண்டார். இந்தியத் தூதுவர் நிலையத்தில் பணிபுரிந்த கணபதியின் தொடர்பினால் ஓனோவுக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தின் உபவேந்தரான தாமோதரனின் அறிமுகம் கிடைத்தது. தாமோதரன் தமிழ்ப் பேரகராதியின் முழுத்தொகுதிகளையும் ஒனோவுக்கு வழங்கிய துடன் தமிழ் கற்பதற்காக DR. பொன். கோதண்டராமனையும் உதவி செய்யும்படி தொடர்பும் ஏற்படுத்திவிட்டார். இத்தகைய சென்னைப் பல்கலைக்கழகத் தொடர்பு ஓனோவின் ஒப்பீட்டாய்வுக்கு தமிழ் மொழி சார் நிலையில் நல்லதொரு படிக்கட்டாய் அமைந்தது. ஒப்பீட்டு ஆய்வுக் காகத் தமிழ் மொழியைத் தான் தெரிந்ததை ஒனோ தனது நூலில் பின்வருமாறு கூறுவர்.
'தமிழ்மொழி கி.மு. 2ஆம் நூற்றாண்டு வரையில் வளர்ச்சி யடைந்த இலக்கியத் தொகுப்புக்களைக் கொண்டுள்ளது.
87

Page 46
மனோன்மணி சண்முகதாஸ்
யப்பானிய இலக்கியமான மன்யோசுவைக் காட்டிலும் 1000 ஆண்டுகள் பழைமையான 2500 பாடல்களைக் கொண்டுள் ளது. இதன்பின்பும் காலத்துக்குக்காலம் தோன்றிய இலக்கியங் கள் பல உள.”*
திராவிட மொழிகளின் தொகுப்பு அகராதி, யப்பானிய பழைய இலக் கியங்களில் நிறைந்த புலமை பெற்றிருந்த ஓனோவுக்குத் தமிழ் மொழி யின் பழைய இலக்கியங்களின் சொல்லாட்சியையும் வளத்தையும் நன்குணர வைத்தது. தமிழ்ப் பேரகராதி தமிழ்ச் சொற்களின் வேறு பட்ட பொருள்களையும் இலக்கியங்களிலே அந்தச் சொற்கள் பயின்று வந்தவாற்றையும் விளக்கிக் காட்டியது. எனவே ஒனோ தனது ஒப்பீட் டாய்வுக்குத் தரவாகவும் சான்றாகவும் ஏறக்குறைய 300 சொற்களைத் தெரிந்தெடுக்கும் நிலைமையும் உருவாகியது. தெரிவுசெய்த சொற்களை யப்பானிய மொழிச்சொற்களுடன் ஒலியமைப்பில் ஒப்பிட்டுக் காட்டிய ஒனோ அவற்றின் பொருள் நிலையான ஒற்றுமைநிலையையும் எடுத்துக் காட்டினார். அரிசிப் பண்பாட்டு நிலையிலே இரு மொழிகளிலும் ஒற்றுமைப்படும் சொற்களைத் தொகுத்து 1979ல் கட்டுரை வெளி யிட்டார். இக்கட்டுரை யப்பானிய நாளிதழான ASAH1 SHINBUN27 இல் வெளிவந்தது. யப்பானிய மொழிமூலம் பற்றிய ஆய்விலே நாளிதழின் தொடர்பும் ஏற்பட்டமையால் யப்பானிய மக்களும் இந்த ஒப்பீட்டாய்வு பற்றியறிய நேர்ந்தது.
மொழியுடன் ஆழமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதும் இக்காலகட்டத்தில் தெளிவாயிற்று. யப்பானியச் சொற்களோடு தொடர்புடைய தமிழ்ச் சொற்களைப் பற்றி ஏனைய தமிழாராய்ச்சியாளர்களும் அறியும்படி மதுரையில் நடந்த (1981) உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒனோ THE RELATIONSHIP OF THE TAMIL AND JAPANESE LANGUAGES” என்னும் கட்டுரையைச் சமர்ப்பித்தார். அக்கட்டுரையிலே ஏறக்குறைய 500 சொற்கள் தொடர்புடைய சொற்களாக எடுத்துக் காட்டப்பட்டன. தமிழ் மொழிக்கும் யப்பானிய மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எனச் சான்று காட்டிய ஓனோவின் ஆய்வு தமிழாராச்சியாளர் பலரை இந்த ஆய்வு பற்றிச் சிந்திக்கவும் தொடர்பு கொள்ளவும் வைத்தது. ஒனோ சொல் ஒப்பீடு பற்றிய ஆய்வினை யப்பானில் 1980 தை தொடக் கம் ஐப்பசி வரை GENGO மாத இதழிலும் தொடராகக் கட்டுரையாக வெளியிட்டிருந்தார். யப்பானிய அறிஞர்களையும் விமர்சனம் செய்ய அக்கட்டுரைகள் தூண்டின. இன்னும் ஒனோவின் தமிழ் - யப்பானிய GLDTц9 5PLJI FELTu joj 1980 ob SOUND CORRESPONDENCES BETWEEN TAMILANDJAPANESE? என்னும் தலைப்பில் நூல் வடிவமாகவும் கக்சு யின் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது. இதனால் கக்கயின் பல்கலைக்கழகம் ஒனோவின் ஆய்வு பல்கலைக்கழக நிலையில் நடைபெற உறுதியான ஒரு களத்தையும் உதவியது.
88

தமிழர்-யப்பானியர்.
தமிழ்மொழிச் சொற்களும் யப்பானிய மொழிச்சொற்களும் மொழி யியல் அடிப்படையான ஒற்றுமையுடையனவா என்பதைக் கணிப்பீடு செய்வதும் ஆய்வுநிலையில் இன்றியமையாதது. மதுரைத் தமிழா ராய்ச்சி மாநாட்டிற்கு கட்டுரை சமர்ப்பிக்க வந்த பேராசிரியர் வாசெக் ஒனோவினுடைய ஒப்பீட்டுச் சொற்கள் முழுவதையும் பார்வையிட்டுத் தன்னுடைய கருத்தையும் தெரிவித்தார். ஒலியமைப்புத் தொடர்பு நிலை யில் மொழியியற் கோட்பாட்டு அடிப்படையில் சில சொற்கள் பொருத்த மற்றிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வு ஓனோவின் ஒப்பீட்டு ஆய்வில் மேலைநாட்டு மொழியியல் ஆய்வாளர் ஒருவரையும் தொடர்புற வைத்தது.
மதுரைத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒனோவின் ஒப்பீட்டாய்வு கோட்பாட்டு நிலையில் வெளிப்படுத்தப்பட்டமை யப்பானிய அறிஞர் களிடையே யப்பானில் எதிர்ப்பு விமர்சனங்களையும் வெளியிட வைத் தது. மொழியியல் ஆய்வில் ஈடுபடாத யப்பானிய அறிஞர்களின் கருத்து களும் யப்பானிய மக்களின் மனதில் தமிழ் - யப்பானிய மொழி ஒப்பீட் டாய்வு பற்றிய விளக்கத்தைப் பதிய வைக்க முயன்றன. தோக்கியோ பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கரசிம? இந் நிலையில் ஒனோவின் ஆய்விலே விமர்சன நிலையிலே தொடர்பு கொண்டு யப்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் வெளியிட்டார். மொழியியலறிஞரான முரயம், தொகுநக* போன்றோரும் விமர்சன நிலையில் ஒப்பீட்டாய்வைப் பற்றிய கருத்துக்களை வெளியிட்டனர். இத்தகைய யப்பானிய அறிஞர்கள் ஒனோவினுடைய சொற்களை தமிழாராய்ச்சி செய்யும் தமிழர் ஒருவர் நுணுக்கமாக ஆய்வு செய்து கருத்து வெளியிடுவதே சிறந்தது எனவும் கூறினர். அதுவரை ஒனோ தனது ஆய்வை நிறுத்திவிடாமல் தொடர்ந்து செய்து வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கால கட்டத்தில் அமெரிக்க மொழியிய லாய்வாளரான மில்லரும், JAPANESE AND TAMIL என்னும் கட்டுரை யிலே ஓனோவின் ஒப்பீட்டாய்வு பற்றிய விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் நிலையில் தொடர்பு கொண்டார். மேலைத்தேச அறிஞரின் விமர்சனம், ஓனோவின் ஒப்பீட்டாய்வை விமர்சித்த யப்பானிய அறிஞர் களுக்குப் பக்கபலமாயிற்று.
ஒனோவின் தமிழ் - யப்பானிய மொழித்தொடர்பு பற்றிய கட்டுரையை மதுரை மாநாட்டிலே செவிமடுத்த சண்முகதாஸ்”, அது பற்றி நுண்ணாய்வைச் செய்வதற்கென யப்பான் நிறுவனம் வழங்கிய ஓராண்டுப் புலமைப் பரிசிலைப் பெற்று 1983 யப்பான் வந்து ஒனோவின் ஆய்வில் இணைந்துகொண்டார். அவருடன் மனைவி மனோன்மணியும் ஆய்வாளராக இணைந்தார். இக்காலகட்டத்தில் ஒனோவின் ஆய்வுப் பரப்பு சொற்பொருள், ஒலியமைப்பு ஒப்பீட்டு நிலைக்கும் மேலாக இரு மொழிகளினதும் இலக்கண வகைப்பாட்டு நிலைகளிலும், பண்பாட்டு
89

Page 47
மனோன்மணி சண்முகதாஸ்
நிலைகளிலும் ஒற்றுமையுறும் தன்மைகளை நுண்ணாய்வு செய்யும் நிலையாக வளர்ந்தது. மனோன்மணி கக்சுயின் பல்கலைக்கழக மொழி யியற் பீடத்தில் ஆய்வாளராக நியமனம் பெற்றார். சண்முகதாசின் தொடர்பால் ஒனோவின் ஒப்பீட்டாய்வில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும் இணைந்துகொண்டது. இக்காலகட்டத்தில் ஒனோ SHIBUNDO வெளியீட்டாளரின் மாதாந்த இதழான KOKUBUNGAKU. KAlSHAKUTO KANSHO வில் தனது ஒப்பீட்டாய்வுக் கருத்துகளைத் தொடர் கட்டுரை யாக 1983 தை மாதத்தில் இருந்து எழுதத் தொடங்கினார். முரயம, தொகுநக போன்றவர்களின் விமர்சனங்களை மறுத்து விளக்கம் கொடுப்பதற்கு SHIBUNDO நல்லதொரு வாய்ப்பாயமைந்தது. தமிழ்ச் சொற்களும் அவற்றுடன் ஒற்றுமையான யப்பானியச் சொற்களும் பழைய இலக்கியங்களிலே பயின்று வருமாற்றை எடுத்துக்காட்டு களுடன் இணைத்துக் காட்டியபோது பண்பாட்டு நிலையான ஒற்றுமை களும் வெளிப்பட்டன. வழிபாட்டு நிலையிலே யப்பானியரது கமி வழிபாட்டையும் தமிழர்களுடைய கணபதி வழிபாட்டையும் ஒப்பிட்டு சண்முகதாஸ் தோக்கியோவில் நடைபெற்ற கருத்தரங்கிலே* கட்டுரை படித்தார். அக்கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த கமில் சுவலபில் ஓனோவையும் சந்தித்தார். தமிழ் - யப்பானிய மொழி ஒப்பீட்டாய்வு பற்றிய கருத்துக்களைக் கேட்டறிந்தார். இந்தச் சந்திப்பின்மூலம் இன்னொரு மேலைத்தேச மொழியியலாய்வாளரும் ஒனோவின் ஆய்வு டன் தொடர்புகொள்ளும் நிலை ஏற்பட்டது. கமில் சுவலபிலும் ஓனோவின் ஒப்பீட்டாய்வு பற்றிய தனது கருத்துக்களை BSOAS*இல் வெளியிட்டார். அதே கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் ச. வே. சுப்பிரமணியனும் ஒனோவைச் சந்தித்தார். அவருடைய சந்திப்பினால் உலக தழிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தமிழாய்வு தொடர்பான நூல்கள் ஆய்வு உசாத்துணை நூல்களாக வாங்கிப் பயன்படுத்தப்பட்டன.
1986 இல் பேர்ளினில் நடைபெற்ற உலக மொழியியலாளர் மாநாட்டில் ஒனோ தன்னுடைய ஒப்பீட்டாய்வு கருத்தைக் கட்டுரையாகச்" சமர்ப் பித்தார். முதன்முதல் மேலைத்தேயத்தில் நடைபெற்ற கருத்தரங்கிலே ஒனோ தனது ஆய்வுக்கருத்தை எடுத்துக்கூறியபோது தமிழ்-யப்பானிய மொழியின் ஒப்பீட்டாய்வு தொடர்ந்து நடைபெறுவதை உலக மொழியிய லாளர்கள் அறிந்தனர். இக்கருத்தரங்கிலே சண்முகதாசும் ஒனோவினு டைய தமிழ் - யப்பானிய ஒற்றுமைப் பாட்டிற்கு உதவும் அம்சங்கள் பற்றிய கட்டுரையைச்* சமர்ப்பித்தார். இந்த மாநாட்டில் ஒனோவின் ஒப்பீட்டாய்வு மேலைத்தேய அறிஞர்களால் விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் கருதப்பட்டது. மில்லர் 1986இல் BSOAS இதழில் தமிழ் - யப்பானிய ஒப்பீட்டாய்வு பற்றிய கருத்தை” வெளியிடுவதற்கும் இது காரணமாயிற்று.
90

தமிழர்-யப்பானியர்.
1987இல் மலேசியாவிலே நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழா ராய்ச்சி மாநாட்டில் ஒனோ தனது ஒப்பீட்டாய்வின் வளர்ச்சி நிலையை வெளிப்படுத்தும் வகையில் பழைய யப்பானிய மொழியிலும் பழைய தமிழ்மொழியிலும் உள்ள இடைச்சொற்களின் ஒற்றுமைப்பாட்டைப் பற்றிய கட்டுரையைச் சமர்ப்பித்தார். ஆஷரும் இந்த மாநாட்டில் தமிழ்யப்பானிய மொழித்தொடர்பு பற்றிய கட்டுரையைச் சமர்ப்பித்தார்." மனோன்மணியும் தமிழர்-யப்பானியப் பாடல்களின் அகப்பொருள் மரபு பற்றிய கட்டுரையைச் சமர்ப்பித்தார்." இத்தகைய ஆய்வுக் கட்டுரைகள் ஒனோவின் ஆய்வுக் கோட்பாட்டை வலியுறுத்துவனவாய் அமைந்தன. இதன்மேலும் ஒனோ தன்னுடைய இதுகாலவரையிலான ஆய்வு பற்றிய கருத்துகளை நூல்வடிவிலே NIHONGO IZEN என்ற பெயரில் வெளி யிட்டார். யப்பானிலுள்ள இவநமி வெளியீட்டாளரால் இந்நூல் வெளி யிடப்பட்டது. இந்நூல் வெளிவந்தபோது யப்பானிய அறிஞர் ஓனோ வின் ஆய்வு செல்நெறியில் வளர்ச்சிபெற்றிருப்பதை உணர்ந்தனர்.
தமிழ்மொழிச் சொற்களையும் யப்பானியமொழிச் சொற்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது அவை மொழியியல் அடிப்படையில் மட்டுமன்றி பண்பாட்டு அடிப்படையிலும் ஆழமான ஒற்றுமைப் பண்பு களை வெளிப்படுத்தின. அகழ்வாய்வுகளால் பெறப்பட்ட தாழிகள் பண்பாட்டு நிலையான ஒற்றுமையை வெளிப்படுத்தின. யப்பானிலே கியுசுவில் கண்டுபிடிக்கப்பட்ட தாழிகள் ஒனோவின் ஒப்பீட்டாய்விலே அகழ்வாய்வுத் தரவுகளும் தொடர்புறும் நிலையை ஏற்படுத்தின. இந் நிலையிலே அகழ்வாய்வுத் தரவுகளை ஒப்பிட்டுக் கருத்துகள் தெரிவிக்க குருராஜராவ், ரகுபதி, நாகராஜராவ்" ஆகிய மூவரும் யப்பான் வந்து கியுசுவின் அகழ்வாய்வுத் தரவுகளைப் பார்வையிட்டு தம்முடைய கருத்துக்களைத் தெரிவித்தனர். தாழிகளிலே வரையப்பட்டிருந்த GRAFFITT பற்றியும் ரகுபதியும் ஒனோவும் கலந்துரையாடல்கள் செய்தனர். இக்கருத்துக்களையும் நூல் வடிவிலே ஓனோ 1994இல் NIHON NOKGEN என்னும் பெயரில் வெளியிட்டார். இவநமி வெளியீடாகவே இந்நூலும் வெளிவந்தது. ஓனோவின் தமிழ் - யப்பானிய மொழி ஒப்பீட் டாய்வு; பண்பாட்டுநிலை ஒப்பீட்டாய்வு நிலையில் வளர்ச்சி பெற்று அதற்கான ஏனைய சான்றுகளையும் தேடும் நிலைக்கு வந்தபோது ஏனைய அறிஞர்களால் விமர்சிக்கப்படும் ஆய்வாகவும் மாறியது. யப்பானிய அகழ்வாய்வு அறிஞர்கள் இதில் பங்கு கொண்டனர். ASAH1 SHINBUN போன்ற நாளிதழ் நிறுவனம் இத்தகைய விமர்சன ஒன்று கூடல்களை ஏற்படுத்திக் கருத்துப் பரிமாற்றங்களுக்கு வழிசெய்தது. 90ஆம் ஆண்டின் பின்னர் ஒனோவின் ஆய்வு தொடர்பாக வெளிவந்த நூல்களைப் பற்றிய விமர்சன நிலையில் பல யப்பானிய அறிஞர்கள் தொடர்பு கொண்டனரெனலாம். 95 இல் கியோதொவில்" நடைபெற்ற விமர்சன ஒன்றுகூடல் குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழி கற்ற யமகித*
91

Page 48
மனோன்மணி சண்முகதாஸ்
இதில் பங்குகொண்டு கருத்துரை வழங்கினார். ஒனோவும், மனோன் மணியும் ஒப்பீட்டாய்வின் வளர்ச்சிநிலை பற்றிக் கருத்துரை செய்தனர்.
இவ்வாறு ஓனோவின் ஒப்பீட்டாய்வுப் பரப்பு நிலையிலே வளர்ச்சி
ஏற்பட, தொடர்புறும் ஆய்வாளர்களும், அறிஞர்களும், நிறுவனங்களும் பெருகலாயின.
2. ஆய்வுநிலையும் செல்நெறிகளும்
தமிழ்மொழியையும் யப்பானிய மொழியையும் ஒப்பிட்டு ஆய்வு
செய்த ஒனோ தனது ஆய்வு பற்றிய கருத்துக்களைக் கட்டுரை வடிவிலும்
நூல் வடிவிலும் காலத்திற்குக் காலம் வெளியிட்டுள்ளார். அவற்றிலி
ருந்து அவருடைய ஆய்வு நிலையையும் செல் நெறிகளையும் பகுத்துப்
பார்க்கலாம். கால அடிப்படையில் மூன்று நிலைகளை அமைக்கலாம்.
அவை வருமாறு அமையும்.
1. 1979 தொடக்கம் 1981 வரை
2. 1982 தொடக்கம் 1987 வரை
3. 1988 தொடக்கம் 1995 வரை
ஆய்வு நிலையில் இம்மூன்று கட்டங்களும் குறிப்பிடத்தக்க செல்நெறி
களையும் அடக்கியுள்ளன. எனவே அக்கட்டங்களை தனித்தனியாக
நோக்குவது பயன் தருவதாகும்.
2:1 முதலாவது கட்டம் இப்பகுதியில் ஒனோவின் ஆய்வு புதிய கோட்பாடு ஒன்றினை முன் வைக்கும் நிலையில் ஆய்வு வரலாற்றிலேயே இன்றியமையாத இடத் தைப் பெறுகிறது. ஆய்வுப் பரப்பு நிலையிலும் இரு மொழிச் சொற் களின் தேட்டம், ஒலி ஒப்புமை, பொருள் ஒப்புமை காணல், சொற்களைப் பொருள் நிலையில் வகைப்படுத்தல் என்பனவே அடங்கும். யப்பானிய மொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவாய் அமைந்த பண்புகளை ஒனோ பின்வருமாறு எடுத்துக்காட்டுவார்.
1. இரு மொழிகளும் (பழைய யப்பானிய மொழியும் பழைய தமிழ்
மொழியும்) ஒட்டு மொழிகளாகும். 2. இரு மொழிகளும் பெயரெச்சத்தைப் பெயருக்கு முன்னால்
ஏற்கும். 3. இரு மொழிகளும் வினையெச்சத்தைப் வினைக்கு முன்னால்
ஏற்கும். 4. இரு மொழிகளும் மூவிடப் பெயர்களைத் தெளிவாக வேறு
படுத்தும். யப்பானிய மொழியில் தன்மை: KÖ; முன்னிலை: SÖ; LuLidia M5: KA
92

தமிழர் - யப்பானியர்.
தமிழ் மொழியில்
தன்மை: ; முன்னிலை: u; படர்க்கை: a 5. இரு மொழிகளும் இடைச்சொல், ஒட்டுகள், துணைவினைகள்
என்பவற்றை ஒரேநிலையில் பயன்படுத்துகின்றன. 6. யப்பானிய வினைகள் திணைபால் வேறுபாடு உணர்த்து
வதில்லை. ஆனால், தமிழில் வினைச் சொற்கள் திணைபால்
வேறுபாடு உணர்த்தும்.
இது குறிப்பிடத்தக்க வேறுபாடாகும்.
தமிழ்மொழியையும் யப்பானியமொழியையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்த
ஆரம்பகாலத்தில் மேற்காட்டிய குறிப்புக்களை மட்டுமே இலக்கண நிலையில் எடுத்துக்காட்டினார். எனினும், எதிர்காலத்தில் இலக்கிய வழக்கு நிலையில் இரு மொழிகளையும் ஆராய்ந்து சொற்களின் ஆக்கம் பற்றிய கருத்துக்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
இருமொழிச் சொல் நிலையிலுள்ள தொடர்புகளை எடுத்துக் காட்டும்
போது ஒலியமைப்பிலேயுள்ள ஒற்றுமை பற்றிய கருத்துக்களை கூறுகி றார். முதலில் யப்பானிய மொழியின் ஒலியமைப்பைக் காட்டுகிறார்.
1.
சொல், அசை : ஓர் உயிரொலி (w) அல்லது மெய்யொலியும் உயிரொலியும் சேர்ந்து (CV) அசையாகும். எடுத்துக்காட்டு : a, 1, u, d, ka, ki, ku, kö, ta, ni, fu. அசையின் இறுதிநிலையாக உயிரொலி இடம்பெறும். வரலாற்றுக் கால யப்பானிய மொழி அசை இறுதி நிலையில் மெய்யொலி முதலாக இடம்பெறவில்லை. ஆனால் வேர்ச்சொல் நிலையில் வினை மெய் + உயிர் + மெய் CVC அமைப்புப் பெற்றது. தமிழ் மொழியும் இந்நிலையில் ஒற்றுமையுடையது. 2) luîG)TITa6 3G)JIT65) (Monophthong) உயிரொலியில் நெடில், குறில் வேறுபாடில்லை. சொல் முதனிலையில் a, 1, u, 6 நான்கு உயிரொலிகளே இடம்பெற்றன. முதனிலையில் ஒரு மெய்யொலியே வரும். முதனிலையில் t, pl, st, spr போன்ற கூட்டொலிகள் வரா. 8 மெய்யொலிகள் சொல் முதனிலையாக வரும். அவை k.s, t,n, fm, y, W இதில் fபழைய p விலிருந்து திரிந்ததென்பர். 13 மெய்யொலிகள் முதனிலை, நடுநிலையில் வரும். அவை வருமாறு: k, s, t, n, fm, y, w, g, 7, d, b, 1. பழைய யப்பானிய மொழியில் g, z, d, b GLOGipasiu u elipdëG 5ToSlusia0)607 (Lpair007T6) GLippi nga, nza, nda, mba என ஒலிக்கப்பட்டன. இப்பண்புநிலை யப்பானிய மொழியைத் தமிழ்மொழியோடு ஒப்பிடும்போது மிகவும் முக்கியமானது.
93

Page 49
மனோன்மணி சண்முகதாஸ்
9. தமிழ் மொழியில் ஒலியமைப்பில் (-1, n-n, t-t , 1-1 என வேறுபாடு உண்டு. யப்பானிய மொழியில் இத்தகைய வேறுபாடு இல்லை. t, n,r என்ற ஒலிகள் மட்டுமேயுண்டு. 10. 9ஆம் நூற்றாண்டில் யப்பானிய மொழியில் a, 1, u, e, O என ஐந்து
உயிரொலிகள் வழக்கிலிருந்தன. யப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒலி ஒற்றுமையை ஒப்பிட்டு அவற்றை வெளிப்பட ஒனோ எடுத்துக்காட்டுவார். யப்பானிய உயிரொலிகளில் நீண்ட, குறுகிய ஒலி வேறுபாடில்லாத நிலையிலும் இரு மொழி உயிரொலிகளையும் தொடர்பு நிலையில் ஒலிக் கோட்பாட்டு அடிப்படையில் ஒனோ விளக்குவார். ஒலி நிலையில் u, u இரண்டு வகையில் அடங்கும். யப்பானிய மொழியில் இவற்றுடன் ஒற்றுமை யுறும் ப, o" என வேறுபடுவதை ஒனோவால் தெளிவாக விளக்க முடிய வில்லை. அதிகமாக e, 8 தமிழ் ஒலிகள் யப்பானிய iஒலியுடன் ஒற்றுமை யுறுவதற்குக் காரணம் யப்பானிய மொழியில் e ஒலி இன்மையெனலாம் என்பார். அதேபோன்று அதிகமாக 0, 0 ஒலிகள் யப்பானிய a ஒலியுடன் ஒற்றுமையுறுவதற்குக் காரணம் யப்பானிய o ஒலி பழைய யப்பானிய மொழியில் இல்லாமையே என்பார். சில இடங்களில் o யப்பானிய a வுடன் ஒற்றுமையுறும். ஆனால் பழைய யப்பானிய மொழியில் சில சொற்களில் a வும் o வும் வரினும் பொருள் மாற்றமடைவதில்லை. எனவே, தமிழ் a, a: யப்பானிய a, தமிழ் 0, 0 : யப்பானிய a பின்னர் வளர்ச்சி நிலையில் தமிழ் a, a: யப்பானிய 6, தமிழ் 0, 0 : யப்பானிய 6 வந்தமைந்ததென்பார். உயிரொலி ஒற்றுமையை ஒனோ அட்டவணை நிலையில் பின்வருமாறு காட்டுவார்.
உயிரொலி தமிழ்மொழி யப்பானிய மொழி எடுத்துக்காட்டு - சொற்கள்
а, а al 167
2. i, ή i 34
3 u, ü Ul 57
4. u, Ο 40
5 e, e. 27
6 о, б a (ö) 8
7. а, а Ο 4
8. o, o 6 10
இந்த அட்டவணையும் எடுத்துக்காட்டுகளும் அவருடைய நூலிலே? அமைந்துள்ளன.
94

தமிழர்-யப்பானியர்.
மெய்யொலி ஒற்றுமையையும் அட்டவணை நிலையிலே காட்டி
யுள்ளார்.
மெய்யொலி தமி.மொழி யப்.மொழி எ-கா சொல் |தமி.மொழி யப்.மொழி எ-கா சொல்
மு.நி| ந.நி மு.நி ந.நி k k 62 20 Z
kk k 2 d 5
rhk 3 8 r 2
C S 34 6 n 辽 8
was 8 Zero 3 in t d 6
CC S t t 30 8
乞 S 5 2
f 2 d 3
t t 21 tt t 8 S 13 d l
d 4 19 O
t t t 8 Il Iι
S 7 t d 2
p f 6 r r 20
b 2 S
Pp Z 2
ΙΥ Πη 39 11 у
b 2 r 21
2 Ll l
mp b 10 l r 14
f 6 у у y l r
уу у W W 14 r r 30 f 14
S 4 b
Ι r 19 vv b
t 1
II r 4
S l
மெய்யொலி ஒற்றுமை பற்றிய
தார.
சில கருத்துகளையும் ஒனோ தெரிவித்
95

Page 50
மனோன்மணி சண்முகதாஸ்
1. தமிழில் மொழி முதல்நிலை மெய்யொலி C அதிகமாக
இல்லாமல் போதல். 2. யப்பானிய மொழியிலே r க்கும்1க்குமிடையே வேறுபாடு
இல்லை.
தமிழிலேயுள்ள r, r, !, 1, 1 யாவும் யப்பானிய r உடன் ஒற்றுமையுறும். இது குறிப்பிட வேண்டிய வேறுபட்ட நிலையாகும்.
சொற்களின் ஒற்றுமைப் பண்புகளை ஒலியமைப்பு நிலையிலே QL'ILîl'QLa LITjL'IL 15sö(5 oG360TIT6)/6(5 A Dravidian Etymological Dictionary தான் தரவுகளை நல்கியது. தமிழ்ச்சொற்களின் வேர்நிலையை அறிவ தற்கும் ஏனைய திராவிட மொழிச் சொற்களோடு தமிழ்ச் சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்த அகராதி உதவியது. தமிழ்ச் சொற்களின் பொருளையும் அறிய உதவியது. திராவிட மொழிகள் அமைப்பு நிலை யில் வேர்ச்சொற்கள் CVC அல்லது CVCVC அமைப்புடையன என ஒனோ கருத்துக் கூறுகிறார். யப்பானிய மொழி வினைச்சொல் பற்றிய புணர்நிலையை ஆராய்ந்த ஒனோ (1953) இப்போது யப்பானிய மொழி யிலே உள்ள வினைகளின் வகையிலே YODAN புணர்நிலை வினைகளை ஆராய்ந்து அவற்றில் 75% மெய்யொலியில் இறுதிநிலை பெறுவதை வெளிப்படுத்தியுள்ளார். அவற்றின் அமைப்பு CVC அல்லது CVCVC ஆக உள்ளது. இந்த நிலை சொல்நிலையிலே யப்பானிய மொழியும் தமிழ் மொழியும் ஒற்றுமைப்பட்டுள்ளமையை விளக்க உதவியது. ஓனோவினு டைய ஒலியமைப்புக் கோட்பாட்டின் பொருத்தப்பாட்டையும் சொற்களின் சான்றுகொண்டு நிறுவுவதற்கும் வாய்ப்பளித்தது.
பொருள் அடிப்படையிலே இரு மொழிச் சொற்களையும் ஒப்பிட்டு நோக்கிய ஒனோ அவற்றைச் சில வகைப்பாடுகளில் விளக்கியுள்ளார். சொற்களின் பொருள் நிலையின் ஆழமான தொடர்பினை இந்த வகைப் பாடுகளால் நன்கு புலப்படுத்தியுள்ளார். அவற்றை இங்கு தருவதும் பொருத்தமாகும்.
96

தமிழர் - யப்பானியர்.
1. இயற்கைச் சூழல் தொடர்பான சொற்கள்
அ. நிலம் ஆ விலங்கு தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் தமிழ்ச்சொல் யப்பானியச்சொல்
1. fiālam - 65Tatb 1. mai - DIT al 2. nilam - ÉGALb ni 2. katavu - EL6j kötöfi
3. yaru - uusigny yara 3, kuru, kuruku
4. kamar- ÆLDj kama குரு, குருகு körö > koro 5. Vahku - வங்கு wago 4. varumbu - 6. põrai - GSI UTGITyp föra வழும்பு fare 7. kūval-g,6)6) kubo 5. vāval- ataugi) faburi
8. kal- g6io kara 6. põttu - G3 unggi fötutaka
9. man -- uDGð7 mana, manago ||7. kuruvi - (g5(56? kura 10, calli- 5F6D66) Sari-jari 8. tuval-தூவல் tubasa ll. cavaru - 3-6) 1G) saba 9. vāl- Gustasio WÖ 12. kumpi- (gib. 9 kömi 10. pāmpu- uitby fabu 13. ceru-C3.Fim sirö 11. tumpi- gIJÈL) töbau > tombo l4. nurampu- gigibly nörö 12. pā p pātti - 15. pinti - Saig fidi பாப்பாத்தி faberu 16. Callal-goirotai) sarafu 13. kocu - G.ET9, ka 17. tampal-gıbugü tampo, ta 14. Cellu - GDFGirG5 sirami 18. kumari-golfi köba இ. மரம், செடி 19. paţuvam-LIG)6ulb fata
1. Cimpu-சிம்பு siba 20. patukar- Gaj fataki
2. cūtu - söd 21. akam-9alp aka சூடு al 3. Cakkai - GFášGM45 saka 22. ahal - geog60p6,007 ala
II. o 4. karal - Gə?pg kara 23. antai - 965765) - adei, ado k
5. Ul - k 24. vaņtal-ajGöīgi) wada urau - (gEDG6) e 6. kulai- (SIGMOND kura 25. matu-upQ) 2S
7. kāmpu - ETLib kabi
97

Page 51
மனோன்மணி சண்முகதாஸ்
ஈ. இயற்கைநிலை தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் 1. akal --956) aku 19. taţa- gl.- tatafu 2. alar - gyaloj al 20. tati – glą tat 3. iţi - 39 iti 21. tarai - 5GOp tal 4. i ruku - gole, iröku 22. tā - grp TU 5. uka - 235 ukabu 23. tey- தேய் tuku 6. uku – 23 uku 24. teli - G56ífi tiru 7. ütu - 9676) uti 25. tēmpu- Ggb sibomu 8. uru – 22-(ab 26. nāru - 5Tņi 2. 9. uy -ஊய் öyu 27. paru – Lug), faru 10. орpu- 69Liц afu 28. pār - urp föröbu l l. kamar- BELDyp kamari, kamaru || 29. pular - Goj föra 12. karai - ALGOJ karu 30. pey -- Guuiu furu 13. kullir - golfij köyu 31. mati - LDg6 möti 14. kumpu - 5. tbL|| kömu 32. māl - LDTGit marubu 15. campu - g-FTLiblu li sabu, sabusi 33. varu - 6) (5 (ara) faru 16. Cural - 9pgo Z L1 34. vāṁku - GJITĚJg5 wagu 17. Ceri - Gargs) sizi 35. vil- 696io firaku 18. naral - 5rajo al 36. viţu - 6î6) wisu > usu
2. உறவுமுறை தொடர்பான சொற்கள்
அ. உறவுமுறை ஆ. தன்மைப்பெயர்
1, accan-அச்சன் acha 1. -இ i
2. ayya-அய்யா aya 2. nān - 5Tgš Π3 3. tantai-giš605 tada
4. tātā - g5stg5/T tada
5. annai-gj65760607 3.ՈՑ
6. amma - geyiblrot.
ammal - ge|LibLDTGTİ ama, amma
7. avvai -96.6061 aba 8. atta, - išg5T
āttāl - gļģTGir ada 9. āyā- gultot aya 10 ka1. கால் kara
98

தமிழர்-யப்பானியர்.
3. மனித உடல் தொடர்பான சொற்கள்
91. 2 lo ஆநோய் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் 1. ați – gytą asi 1. katti- as 19 kasa 2. kathir - ægj kasira 2. kottai- GÆSTšGO23, katai 3. kavul - 5G Git kafo 3. timir-6LSj simu 4. kumir - gLSp köbu 4. namuttu 5. koru - கொழு koyu - நமுட்டு namadu 6. Cettai-Glg-L60)L- siti, sitiku 5. navu- 56 nafë, nafëku 7. tuppal- gJÜLu6io tuba 6. nay-postuiu nayu 8. (61 - தோள் ta 7. purru-Lippi förö 9. nāvu - BTo naburu 8. pottai fösa > bösama 10. pattam - LJČLub| fada - பொட்டை fota > böta pattai – LIL’ GOL 9. muttu - (y255) mutya 11. pal- Ligi) fa 10. vaţu - 610) fata 12. pitar - 19 ј fiti 13. murru - Guergöppu ՈՂԱՏԱ 14. mūlai – eupGINDGIT ΠΥ 113IO 15. mey - GOLDuiu ΠΥ 11 4. உணவு,உடை,உறைவிடம் தொடர்பான சொற்கள்
அ. பயிர்ச்செய்கை
1. kuru - g05 kuru, kurumi 6. kumai-g)d kuma, kömë 2. itti-Qgß itiziku 7. nel - Q56o ni 3. Curai-dig0T uri 8. Campa - grubLut saba 4. pir, piram- 9. pacCai -பச்சை fasa > wasa
பீர், பீரம் fisako 10 pū - 4 fö 5. avai - - 9p60)6)J afa 1 1 varal - 6up6si» Waa.
ஆ. தொழில் 1. ira iraval - 10. pakavu, pakal -
இர, இரவல் irafu பகவு, பகல் faka 2. umi - 2) Ló L l1. pari - lug5) faru 3. kalai - GEGOOGIT karu 12. perukku - GLI(5é(5| firöfu 4. kiri - Seyf6 kiru 13. potir - GLITSj födiru 5. kurai - (gop köru 14. muci - முசி musiru 6. koțițu - GASTLIG katu 15. muri - முரி möru 7. tați - gStą tatl 16. mul - மூள moya 17. mūțu - elipo "G) IOSU 8. tukai- துகை tuku 18. vay - 6jtij fayaru, fayasu 9. naţțu - BTL () aS --- y
19. ver - Gauj we, uwe
99

Page 52
மனோன்மணி சண்முகதாஸ்
இ. பயிர்ச் செய்கைக் கருவிகள்
தமிழ்ச்சொல் யப்பானியச்சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல்
1. ural - 2 JT6id USU 7. patal -ul-6) fasa 2. karu - BEQyp kari 8. mattu - LD '05. aSU 3. kucci - (53F3F kuci 9. maru - LD(up masakari 4. cattukam - 10. muram - (ypsiplib mumi
சட்டுகம் sazi l l. vațam - Gu Lio VWaSa 5. cali - goo saru > garu 12. vēl-Goj6) fara 6. Cukir - 4,6j suku, suki
ஈ. சமையல், உணவு 1. uruku - 2)-(535 urukasu 17. ari - gin ac 2. urai - P_GOJ urakosi 18. arai – gyGODT ፭afal 3. iru - ĝ3gp iru 19. ampali - gyuibu66 | amari 4. eri-6lf iru 20. kali-agai kayu 5. pukai-g)4 fökë, fukasu 21. käti - +Tiq. kasu 6. nāvu - rotaļ mabusu 22. ceru - Ggg) siru 7. cappai- gü62)L safasu 23. kār - astj kara 8. kati - 59 kadiru 24. kacațu - AE5FG) kasu 9. kavvu - 466i Jay kaburu 25. cappal- சப்பல் sарра 10. Cuppu- துப்பு sufu 26. ar - ஆர் a 2. 11. kumatru- (g|DLG) kömu 27. kumpi- 5.Lb5 köbi 12. tatu - g5(6) tat 28. vaţi - 69 fasi 13. matu - p6) latull 29. catti - Floq sasi (nabë) 14. kumai - g65)Ld kuma, kömë || 30. tațiți - 5' tą tadi 15. nukku - 5äg nuka 31. tāri- g5styf5) tt 16. Cul-digit SUl 32. muntai – (ypofÈGM235|| mödafi
... 26.
l. accu - gips-gi aza > aze, azafu || 5. orukku- Gypsi(35 öru 2. ucci - 2.jĝA Zl 6. ney, neyvu 3. սtu - Փ_(6) ösöki - நெய், நெய்வு nufu 4. սtuppս - Փ_(6)ւյւլ ösufi 7. mulți – (ypą musufu
mau-uDG) maturu, matufu
100

தமிழர்-யப்பானியர்.
ஊ. உறைவிடம் எ. கருவிகள் தமிழ்ச்சொல் யப்பானியச்சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல்
l. arai – gyGOp 2. fatO 1. kaņ, kanu 2. irai, irappu - கண்,கணு kanamë இறை, இறப்பு iraka 2. karu - 5Gp kari 3. katai - 560) kado 3. kari - கழி kasi 4. tā - g|Tp Sall kotam, kottu katama 5. tārvāram கொட்டம், - தாழ்வாரம் taruki கொட்டு 6. pati - Luq fasi 5. taţi - 359 tati 7, maccu- Logg, aSa 6. puțțil - புட்டில் födari 8. Valai-6160GT fari 7. pețiți - GLJų tą fitu 9. vēy - G36 uuiu fuku 8. mulai -(posit möri 10. matil - LoS6io mati
5. தொழில்கள்
அ. உடலால் செய்யப்படுவன
l. atir-95).j adiru 9. ciluppu - 6F6?JÜLų siröfu 2. amali - அமளி aal 10. nēr - G35j niru 3. amir. - -gyuÉyp all 11. maņa - o managari 4. irai- 360p irafu l2. pațiu- uG fatu 5. ul-) at Ll 13. mukam-(ypaEub muku 6. kumi - (guó kömu 14. munku - (pĖJG5 möguru 7. kūl- 4,6) köru 15. murru - Qypribapu möru 8. Cattam-sF. Liò sadamu 16. vilampu- GalaTuity || wirafu > urafu
ஆகையால் செய்யப்படுவன 1. akal --9yat6) aku 10. õhku -gÄlg agu 2. attu- - gjögl atli 11. kalāvu - EGOTGy karamu 3. ati - gjuq atli 12. karanku - EgipÉJG35|| karagu 4. attu - gyu (G) atul 13. kuvavu- (56J6! kufafu 5. ăţu - g6 asoba 14. kuri- g4: kuru 6. uttu - 2.-ägi tu 15. Calavai - g'GPGOGII STS 7. еу, е - 61і, өт iru 16. catu - FIT@ SaS 8. erru – Gapibgp iru 17. coli-G3-stos Söru 9. orru - geogrippu ösu 18. tumi - g/Ló. t
101

Page 53
மனோன்மணி சண்முகதாஸ்
தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல்
19. tura - gy turanuku 27. potir – Gurgj fötiru 20. para, pār - 28. putai – LGO25 futa, fusagu _ty, LiTj fara 29. muți - Gypą, musufu 21. pari - Luf farasu > barasu || 30, mutu- மூடு tS 22. parru-l gibbon! faru 31. vaku - GJg5 waku 23. picaí - 1980).g. fisigu 32. VaVVu- 6)u6iu6q fafu 24. piți - Guq fisi 33. viku-6ýleg figu 25. piņai - 960687 fineru 34. vil- Galasio wiru > uru 26. piri - 9f6 firu 35. Veu - Qal'G) WefU
இ. காலால் செய்யப்படுவன 1. akal-946) akaru 9. tattu - g55gy tali 2. alukku- 99).šg arukku 10. tavit - g65j tabi 3. i laku - SIGITg5 iraku > yuraku | 11. tavu-gTo; tabu 4. ēku - 65 iku 12. tüvu -g56 töbu
5. ētu - 6 (5) iru 13. ni - f5 inu 6. oppu- ஒப்பு öfu 14. ninku - pÉNĚJeg, nigu 7. kalāi- GEGOOGID karu 15. pari-uf fasu, fasiru, barun 8. Carukku - ġrapidéeb | saru 16. kavir - 56.jp kaferu
6. ஏனைய நோக்குகளின் புலப்பாடு, உணர்வு
அ, இடம், நேரம்
l. uvan - g 6uassa ufa 8.mi-f mi
2. utir - g gj όtu 9, mutu -ep3 mötö 3. ul - 2.6Ť 10. Vãy - Guiru J fa 4. նtu- Փ616) tt 11. impar - 9ubuj ima 5. kan - AEGðồ7 ka 12. itai-360) ito 6. națu - 56 la 13. põtu - Gourg föto 7. pampal-ubugi) faba
102

தமிழர் - யப்பானியர்.
ஆ. புலப்பாடுஉணர்வு
தமிழ்ச்சொல் யப்பானியச்சொல் தமிழ்ச்சொல் யப்பானியச்சொல் 1. miri - 645 miru 15. pari - uf fasi 2. pār - uj (ma) faru 16. uiyar - go luLuj uya 3. ceppu - GDSFÜLų | ifu 17. ańkalay 4. pani – LGoof fanasu -அங்கலாய் agarasi 5. way - வாய் fa, ba 18. avalam - - 9g6u6uDub | afare 6. munu mսոս 19. uka - 2_6 ukaru
- (lpX3ğğ2/(JP3öğDil mönö mönö 20. kurul - (3(1567 kurumeku 7. kutalai- (gg5GOOGD || kutaru 21. kurappu- Gyptn{ kurufu 8. ar- gj aragafu, arasofu ||22. mayakku-LDLujšeg || maya, mayofu 9. urappu - 2-Jül || || örabu 22. matam - Lo-Lito alta 10. terul - Gg(56it siru 23. kațampan-Sllub LJ6ö7|| katamu 11. uranku-2 piše uragu kațampi - ZELLİ ? 12. nampu - f5! b4 all 24. asatu – 93f6 aSato 13. pukalvu-Læ6äxa| fököru 25. pet tai-GLILI GOL fitai > bita > bitai 14. puri — if föru 26. cūrai - g56Mngo suri
இ. பொருள்நிலை (பெயரெச்சம்)
தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் 1. i ruku, irai - 19. ñekir-G656Foup niki
இழுகு, இழை iro 20. nalakku - 456Ditg5 | naru 2. teli-G56fi sira, siro 21. tallar - g56Tj tarasi 3. kurāl- (5T6i) kuro 22. varu - 6).jp waru, warö 4. avuri - gjalyf awö 23. vantu - Gu6ö7G) || fadi 5. aviri-gyo if awi 24. patti - Lillq fatti 6. cettu - G3Fjög sita 25, e - 6t i,itu, iduku, idure, 7. tukir- g/8j töki idure, iduti, ika,iku 8. tuyya – gjui juu tuya 26. maru - LDgmj ΙΥ13ί3 9. cayam -g:Tulb saya 27. muru - (!pop nörö 10. pattai – LjLʻ60)L fadara 28. velavela 11.cēku - GF5 sikö - வெலவெல Werawerta 12.cékaram-GBqFgJub sika 29. tunțam - gIGðờTLuid tuda 13.сау, ау-фтий.-gціи Sa 29. kammal, kammu 14. peru - Gug5 firo - கம்மல், கம்மு kama 15. uppս - Փ.ւյւլ öfu 30. putai -ւթoւ futo 16. main - LDIT637 manesi 31. cențu - GaFGðờTG || sida, sidami, sitami, 17. i laku - BMGMT(g. ira > yura sitadami 18. mūcuțai - IՈԱՏ3 32. kultu -(5:G kösö
103

Page 54
மனோன்மணி சண்முகதாஸ்
2:1 இரண்டாவது கட்டம்
இரண்டாவது கட்டத்தில் ஓனோவின் ஒப்பீட்டாய்வு, சொற்களின் ஒப்பீடு என்ற நிலையிலிருந்து வளர்ச்சியடைகின்றது. தொடர்களின் அமைப்பில் சொற்களின் ஒப்பீட்டைச் செய்ய எண்ணிய ஒனோ யப்பானியச் சொற்கள் பயின்று வந்த பழைய யப்பானிய இலக்கியத் தரவுகளையும் தமிழ்ச் சொற்கள் பயின்று வந்த பழைய தமிழிலக்கியத் தரவுகளையும் தனது ஒப்பீட்டாய்வுக்குத் தரவுகளாகப் பயன்படுத்தலானார். இந்நிலை யிலே யப்பானிய இலக்கியமான மன்யோசுவும் சங்க இலக்கியங்களும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. மாதாமாதம் யப்பானிய மொழியிலே சொற்களின் தொடர்நிலைப் பயன்பாடு பற்றிய கட்டுரைகளையும் எழுதலானார்.* சொற்களின் ஒலி ஒப்புமை, பொருள் ஒப்புமை, இலக்கியப் பயன்பாட்டு ஒற்றுமை என்பன ஒருசேர எடுத்து விளக்கப் பட்டபோது இரு மொழிகளின் தொடர்பு நிலையின் ஆழமும் வெளிப்பட லாயிற்று. இன்னும் உறவுப் பெயர்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடப் பெயர்கள் பற்றியும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அவற்றை அட்டவணை நிலையில் இங்கு தருவது பயன் தரும்.
யப்பானிய மொழி தமிழ் மொழி தன்மைமுன்னிலை படர்க்கை நிச்சய தன்மை முன்னிலை | படர்க்கை நிச்சய
மில்லா மில்லாத
ko SO ka(a) i ସ୍ଥି 垒一 H 6T 冷 రీ s kore SO-re ka-re idu-re gal உது 92. எது @' (a-re)
ရွှော် ko-ko so-ko ka-siko id-uku g) ies உங்கு அங்கு எங்கு
ko-ti so-ti (a-nata) idu-ti QiGs 2 åGa, அங்கே எங்கு @o (konata) || (so-nata) இவ்விடம் உவ்விடம் அவ்விடம் எவ்விடம்
྾་་་་ ko-no so-no ka-no இந்த உந்த அந்த எந்த o (a-no)
மேற்காட்டிய அட்டவணையில் தமிழில் பொருள், இடம், திசை, தொடர்பு என்பன எவ்வாறு கட்டப்பட்டதோ அதேபோன்று யப்பானிய மொழியிலும் சுட்டப்பட்டமை ஒரு நோக்கில் விளக்கப்பட்டுள்ளது. சுட்டு நிலையில் ஆங்கில மொழி மரபிலிருந்து யப்பானிய மொழியும் தமிழ் மொழியும் வேறுபட்டுள்ளன. பேசுவோனுக்கும் கேட்போனுக்குமிடையே உள்ள தூரம் நன்கு தெளிவு பெற்றுள்ளது. தமிழ் மொழியிலே 'உ'வின் பயன்பாடு தற்போது இலங்கைத் தமிழில் மட்டுமே பெருமளவில் உள்ளது. ஆங்கில மொழியின் தாக்கத்தால் ஏனைய தமிழ் வழங்கும்
04

தமிழர் - யப்பானியர்.
இடங்களில் வழக்கிழந்து காணப்படுகிறது. ஆனால், யப்பானிய மொழி யில் நன்கு பயன்படுத்தப்படுவதால் தமிழ்மொழியுடன் அம்மொழி ஆழமான தொடர்பு கொண்டிருப்பதை இலக்கண நிலையிலே உணர முடிகிறது.
இலக்கண நிலையிலே தமிழ் மொழியும் யப்பானிய மொழியும் ஒற்றுமையுறுவதை ஒனோ இக்காலகட்டத்தில் ஆய்வு செய்யலானார். தொடக்கத்தில் வகைப்பாட்டு நிலையில் இலக்கண அமைப்பில் இரு மொழிகளும் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை ஆய்வு செய்தார். அடுத்து இலக்கண அமைப்பை நன்கு விளக்க இடைச்சொற்கள் துணை வினைகளின் பயன்பாட்டையும் ஒப்பிடலானார். இரு மொழிகளினதும் தொடர்களின் அமைப்பை ஒப்பிட்டபோது பின்வரும் இலக்கண இயல்பு க்ளை ஒற்றுமை நிலையாக எடுத்துக்காட்டியுள்ளார்.
1. பெயர்ச்சொல் வேற்றுமை நிலையில் தன்னிலையில் திரிபு
அடையாது. எ-கா: தமிழ் :கல்லின், கல்லொடு
uuluust : isiNO, isiTO
மேற்காட்டிய எடுத்துக்காட்டில் தமிழ் மொழியில் வேற்றுமை உருபுகளாக வரும் இன், ஒடு என்னும் இடைச்சொற்கள்யப்பானிய மொழி இடைச்சொற்களான NO, TO வுடன் ஒற்றுமையுற்றிருப்பதைக் காணலாம்.
2. இரு மொழிகளிலும் தொடரியம் எழுவாய், பயனிலை
என்ற ஒழுங்கமைப்பிலே அமைகின்றன. எ-கா: தமிழ் : வேனில் போயிற்று
uLuLuLuT : faru sarinu
தமிழ் : கடல் பெரிது uLulùLIIT : umi firosi
3. பெயரெச்சம் பெயர்ச்சொல்லுக்கு முன்னால் வரும்.
எ-கா: தமிழ் : வெண் திங்கள்
ulut : siroi tuki தமிழ் : செம் மலர் Lu'LuíT : akai hana
4. வினையெச்சம் வினைச்சொல்லுக்கு முன்னால் வரும்.
எ-கா: தமிழ் : மெல்ல நட
uul'just : yukkuri aruke
தமிழ் : என்றும் அருளல் வேண்டும் u'LIT : Tune ni atafu besi
105

Page 55
மனோன்மணி சண்முகதாஸ்
5. செயப்படுபொருள்வினைச்சொல்லின் முன்னால் வரும். எ-கா: தமிழ் : கல்லின் நாட்பலி Զ6ու-ւգ
Luli'uunt : isi ni sasagemono wo sita
6. தொடர்புப் பிரதிப் பெயர்ச்சொற்கள் இல்லை.
எ-கா: தமிழ் : அவர் இருந்த என் நெஞ்சு
utilum : kare ga sundeiru watasino kokoro
7. துணைவினைவினையின் பின்னால் இணைந்த சொல்லாய்
அமையும். luar எ-கா: தமிழ் என்னாதுஉம் பரியல் வேண்டா
ulut : sukosimo dojosu bekarazu
8. துணைவினை சேர்க்கப்படும் ஒழுங்குநிலையில் ஒரு சீர்மை
உண்டு. எ-கா: தமிழ் : நடத்தப்பட்டதன்றும் கொல்லோ
uu'uunt : yuka - se - rare - nai - deshiyo - ka
9. இடைச்சொற்கள்: பெயர்ச் சொல், வினைச் சொற்களைத்
தொடர்ந்து வரும். எ-கா: தமிழ் : அருளும் அன்பும் அறனும்
u'll un : megulmi mo ai mo tutome mo 10. வினை கொண்டு முடியும் தொடரியத்தில் சொல்லினிறு
தியில் வினாவிடைச்சொல் வரும். எ-கா: தமிழ் : இன்றும் வருங்கொல்
uLuŮLunt : nani wo suru ka
தமிழ் : ஒரிகொல்லோஅல்லன் கொல்லோ uuuuunt : ori ka foka no fito ka
பொதுநிலைக் குறிப்புக்களாக இக்கருத்துக்கள் அமையினும் இரு மொழிகளிலும் பயன்படுகின்ற இடைச்சொற்களின் நுண்ணாய்வை மேற் கொண்டு ஓனோ தனது கருத்தினை வெளியிட்டபோது ஆய்வின் செல் நெறியிலே ஆழம் ஏற்படலாயிற்று. தமிழ் மொழியிலும், யப்பானிய மொழியிலும் பயன்படுத்தப்படும் இடைச்சொற்களின் ஒற்றுமையை ஒனோ வருமாறு வகுத்துள்ளார்.
g5Lßlup: attu in aka, akam in otu um um
யப்.: t Ο ga ni tö mö mu
தமிழ் இடைச் சொற்களின் முதனிலையிலே உயிரொலி அமைவதும் யப்பானியச் சொற்களில் உயிரொலி இன்மையும் குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழியிலே வழக்கிலுள்ள இடைச்சொற்களில் அ, இ, உ, ஒ
106

தமிழர் - யப்பானியர்.
என்பன மொழி முதனிலை உயிரொலிகளாக அமைந்துள்ளன. இப்படி யான மொழிமுதனிலை உயிரொலிகளையுடைய இடைச் சொற்கள் யப்பானிய மொழியிலே இல்லை. எனவே, இவ்விரு மொழிகளையும் ஒற்றுமையுடைய மொழிகளெனக் காண்பதும் சிக்கலாகின்றது. ஓனோ முன்னர் எடுத்துக்காட்டிய சொற்களின் ஒப்பீட்டிலே தமிழ்மொழியிலே இதுபோன்ற சொல் முதனிலையில் உயிரொலி விடுபட்ட அமைப்பைக் காட்டும் எடுத்துக்காட்டுகள் எதுவும் இல்லை. இன்னும் யப்பானிய மொழியிலே உயிரொலியின் விடுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதையும் ஆராய வேண்டி உள்ளதென ஒனோ கருத்துத் தெரிவித் துள்ளார்? எனினும், இதுபற்றிய தன்னுடைய ஆய்வுநிலைக் கருத்தைப் பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளார்.
'யப்பானிய மொழியானது வரலாற்றுக்காலத்திலிருந்தே ஒரு சொல்லின் இறுதி அசைநிலை பொதுவாக உயிரொலியிலே முடிகின்ற பண்பைக் கொண்டுள்ளது. இப்பண்பினால் இடைச் சொல் முதனிலையிலும் சிலவேளை உயிரொலி அமைவ துண்டு. அது தொடர்ந்து வரும் பெயர், வினையின் இறுதி நிலையில் நிற்கும் உயிரொலியுடன் சேர்கையில் இடைச் சொல்லின் முதனிலையின் உயிரொலி உறுதியாக உயிரொலித் தொடர்பை அதிகமாக்குகிறது. அதாவது, அதன் ஒலியளவைக் கூட்டுகிறது. ஆனால், பழைய யப்பானிய மொழியிலே உயிரொலியின் தொடர்பு விடுபட்டதாயிருந்தது. அது தொடரும் இடத்து மெய்யொலியைப் புகுத்திய நிலையும் காணப்படுகிறது. ஆனால், இரு உயிரொலிகள் தொடருமிடத்து ஒன்று விடுபடுவதே பொதுவாயிருந்தது. இன்னும் பழைய யப்பானிய மொழி இடைச்சொற்களில் உயிரொலியில் தொடங்கும் தன்மையும் இல்லை. wasukani (1) என்னும் எடுத்துக்காட்டில் () என்பது இடைச்சொல். எனினும் இது (yt) போல உச்சரிக்கப்பட்டதோ தெரியவில்லை. மறுபக்கம்தமிழ் மொழியிலே மெய்யொலியிலே முடியும் சொற்கள் பல உள. உயிரொலியில் தொடங்கும் இடைச்சொற்கள் உயிரொலியிலே முடியும் சொற்களோடு இணையும்போது ய், வ், ர், க் போன் றவை இடையில் சேர்க்கப்பட்டன. அல்லதுநிலை மொழியின் சொல்லிறுதி நிலை உயிரொலி அல்லது பின் இணையும் இடைச்சொல்லின்முதனிலை உயிரொலிபுணர்ச்சிநிலையில் விடுபடுகிறது. எடுத்துக்காட்டாக, பூ + இன் = பூவின் 'வ்' இணைந்துள்ளது. சேம்பு + இன் = சேம்பின் "உ" விடப்பட்டுள்ளது. யப்பானிய மொழியிலே பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் பின்னால்
107

Page 56
மனோன்மணி சண்முகதாஸ்
இடைச்சொல் இணையும்போதுஇடைச்சொல்லின்முதனிலை உயிரொலியாக இருப்பின் இடையிலே மெய்யொலியைச் சேர்க்கும் தன்மையுடையது. இடைச்சொல்லின் முதனிலை
உயிரொலி உண்மையில் விடப்பட்டதென்று கொண்டால் யப்பானிய மொழியின்இடைச்சொல்லுடன்தமிழ் மொழியின்
இடைச்சொல் ஒற்றுமையானதெனக்கொள்ளும் இடத்துதமிழ் மொழியின்இடைச்சொல்லின்முதனிலை உயிரொலியை விடு கின்ற நிலையிலேதான் இரு மொழிகளதும் இடைச்சொற்கள்
ஒற்றுமையுறும் பண்பினைக் காணலாம்.?
இவ்வொற்றுமையையே ஒனோ சொற்களின் அடிநிலை, ஒலியமைப்பு
என்பனவற்றின் ஒற்றுமையைவிட மிகவும் உறுதியான சான்றாக எண்ணு கிறார். யப்பானிய மொழியின் இடைச்சொற்களின் பயன்பாட்டு நிலை யைப் பழைய இலக்கியமான கெஞ்சி மொநகதரியில் உள்ள இடைச்
சொற்களின் வகைப்பாட்டில் வைத்து விளக்குகிறார். அதில் பயன்படுத்
தப்பட்ட இடைச்சொற்களின் எண்ணிக்கையையும் அவற்றுள் ஒற்றுமை யுறும் தமிழ் மொழி இடைச்சொற்களையும் அட்டவணை நிலையிலே
வருமாறு காட்டியுள்ளார்.
இடைச்சொல் பயன்பாட்டு 8ம் நூற்றாண்டு
அமைப்பு
எண்ணிக்கை
19539
13869
12 090
10917
9839
9837
8971
5442
2 11
228
733
பழைய இலக்கிய இடைச்சொல்
Π.Ο.
ni
ΥΟ
te
(wo)
ίΟ
fa
ba
ya
ga
ka
tt
தமிழ்மொழி இடைச்சொல்
இன்
இன்
UT, ଗ୍ଯା
அகம், அக
கொல்
அத்து, அது
மேற்காட்டிய அட்டவணையிலே காட்டியது போல 12 இடைச் சொற் களை ஒப்பிட்டுள்ளார். வினைச் சொல்லாக்கத்திற்கு உதவும் எல்லா வகையான இடைநிலைகளையும் ஒப்பீட்டு நிலையில் ஆய்வு செய்து
108

தமிழர்-யப்பானியர்.
இரு மொழிப் பயன்பாட்டு நிலையான எடுத்துக்காட்டுகளும் கொடுத்
துள்ளார்."
அடுத்து பண்பாட்டு நிலையிலே யப்பானிய (மரபான) புது வருடத்
திற்கும் தமிழரது தைப்பொங்கலுக்கும் உள்ள ஒப்புமைகளையும் ஒனோ
காட்டியுள்ளார். 16 நிலையான ஒப்பீட்டைத் தனது நூலிலே? தெளிவு
படுத்தியுள்ளார்.
1. பொங்கலுக்கு முதல் நாள் பழையவற்றை எரித்தலும் வீட்டைத்
துப்புரவு செய்து அழகுபடுத்தலும்
குடில்களை எரித்தல் (வயலிலே பயன்படுத்தியவை)
வெடி கொளுத்துதல்
புத்தாண்டு அலங்காரம் செய்தல்
புதுநீர் அள்ளி வருதல்
பொங்கல் செய்தல்
காக்கைக்குப் பொங்கல் வைத்தல்
கடவுளுக்குப் படையல் செய்தல்
பாடல்கள் பாடுதல்
1
O
(காய்க்காத, பூக்காத) மரங்களை உலக்கையால் அடித்தல்
1
1
. பொங்கலோ பொங்கல் என ஒலித்தல்
1
2
குதிரையேற்றம், காளையடக்கல்
1
3.
வில் அம்பு என்பனவற்றின் பயிற்சி
1
4
உறவினரைச் சென்று காணல், நடுகல் வணங்கல்
1
5
பரிசுப் பணம், பொருள் வழங்கல்
1.
6.
ஆடல் வகைகள் யப்பானியருடைய KOSHOGATSU என அழைக்கப்படும் புதுவருட நடை
முறைகள் தைப்பொங்கல் நடைமுறைகளோடு ஒற்றுமையுற்றிருப்பதை NIHONGO IZEN இல் ஒனோ விரிவாக விளக்கியுள்ளார்.
இறப்புத் தொடர்பான நடைமுறைகளையும் இவ்வாறே ஒப்பிட்டுக் காட்டினார். பழைய யப்பானிய இலக்கியங்களான KoரKi, NIHONSHOK! போன்றவற்றிலே இறப்புத் தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட நடைமுறை களை தமிழிலக்கியப் பதிவுகளோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளார். இந்நடை முறைகளிலே 9 நிலையான ஒற்றுமைப்பாட்டைக் காட்டுகிறார். அவற் றின் அட்டவணைப்படுத்தப்பட்ட அமைப்பு பின்வருமாறு அமைந்தது.
மூவுலகக் கோட்பாடு பற்றிய தமிழர் யப்பானியர் கருத்துக்களையும் ஒனோ இரு மொழி இலக்கியத் தரவுகளைச் சான்றாகக் கொண்டு
109

Page 57
மனோன்மணி சண்முகதாஸ்
யப்பானியநடைமுறை
தமிழ்நடைமுறை
. பிணத்தை MOYA என்னும்
இடத்தில் வைத்தல். உறவினர் ஒருவர் அருகிலே அமர்ந்திருத்தல்.
உதவியாள் இருவர். ஒருவர் பாடுதல். மற்றவர் உணவு தயாரித்தல். எட்டாம் நாள் இரா ஆடல்
LT6.
. பெண்கள் எட்டாம் நாள்
அழுதல்.
எட்டுப் பேய்கள் இசநகியை துரத்தல்.
. இசநகி உணவு வகைகளால்
பேய்களைத் துரத்தல்.
. இசநகி கீழுலகில் மறை
தல்,
இசநகி நீரில் மும்முறை மூழ்கித் தூய்மை பெறல்.
பிணத்தைப் பொது இடத்
தில் உயரமாக வைத்தல்
உறவினர் ஒருவர் அருகிலே
அமர்ந்திருத்தல்
சிறப்பு நிலையில் இருவர்,
ஒருவர் அழல். மற்றவர் உணவு தயாரித்தல்.
எட்டு என்னும் சிறப்பு
நடைமுறை.
பெண்கள் எட்டாம் நாள்
ஒப்பாரி.
எட்டு அன்று பேய் இரத்தம்
உறிஞ்ச வரல்.
பேய்க்குப் படைத்தலென்ற
சிறப்பான நடைமுறை.
கொள்ளி வைத்தவர் நீர்
நிலையில் மூழ்கல்.
கொள்ளி வைத்தவர் மும்
முறை நீரில் மூழ்கித்
தூய்மை பெறல்.
ஒப்பீட்டாய்வுக் கருத்துக்களையும் இக்காலகட்டத்திலே வெளியிட்டு உள்ளார்.3
2:3 மூன்றாவது கட்டம்
இக்காலகட்டத்திலே ஓனோவின் ஒப்பீட்டாய்வு மொழியியல் துறை யுடன் வேறு துறைகளையும் தொடர்புபடுத்தும் புதிய செல்நெறியைப் பெற்றுள்ளது. இரு மொழிகளிலும் ஒலியமைப்பிலும் பொருள் நிலை யிலும் ஒற்றுமையுற்ற சொற்களாக ஏறக்குறைய 500 சொற்களை இக் காலகட்டத்திலே ஒனோ சான்று காட்டுகிறார். அவற்றுள் பயிர்ச் செய்கைத் தொழிலுடன் தொடர்புடைய சொற்களாக 27 சொற்களைக் காட்டியுள்ளார். பொருள் நிலையிலே அவற்றை நுண்ணாய்வு செய்து வகைப்படுத்தியுமுள்ளார். அவற்றின் அட்டவணை வருமாறு அமையும். (ஏற்கனவே 10 ஆம் பக்கத்தில் இவ்வட்டவணை கொடுக்கப்பட்டுள்ள
போதிலும், வசதிக்காக மீண்டும் இங்கு தரப்படுகிறது.)
10

வகைப்பாடு உழவுசெய் நிலம் தொடர்பு
செய்பொருள்
தொடர்பு
உணவு தொடர்பு
வினை தொடர்பு
பிற
இத்தகைய பயிர்த்தொழில் தொடர்பான
1
2
3
4
5
6
7
8
9
O
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
யப்பானியச்சொற்கள்
i fatakë
tambo
aZe
kuro
ala
ade
siro
kobo
ina
sinai
sine
Wase
ni
afa
kuma
kömë
a[Շ
nuka sitögi kayu moti
katu
fukasu
Wara
fö
fonkara
fera
தமிழர்-யப்பானியர்.
தமிழ்ச்சொற்கள் patukar - u6)5j tampal - g5 h6)
aCCl - அச்சு kurampu - (ég5JTL bL! anai - அணை antai - அண்டை cēru - சேறு kumari - (35LDf
ēnal - ஏனல் tinai - தினை tinai - தினை paccai - i 15-60)éF nel - நெல்
avai - அவை kumai - gold kumai - (960)D arai - அரை nukku - 5/5(5 cītai - சீடை kali - களி mõtakam - (3D-g54sh koțţu - கொட்டு pukai - Lf60d35 varal - வறல் pu pohkalo - பொங்கலோ poňkal - GuitšlasGio vël - வேல்
சொற்களுள் 5 சொற்கள்
கொரிய மொழியிலுள்ள சொற்களுடனும் தொடர்புற்றிருப்பதையும் காட்டுகிறார். அவற்றை அட்டவணை நிலையில் காட்டுதும்.
தமிழ்ச்சொல்
patukar -
nel - GOB6)
vel - G36u6io
படுகர் citai - go kucci - (gj:6F
யப்பானியச்சொல்
fatakë sitögi kusi
fera
ni
கொரியச் சொல்
pat stök
kot
pyöt ni
1 11

Page 58
மனோன்மணி சண்முகதாஸ்
இச்சொற்கள் பற்றிய ஒப்பீட்டாய்வின்போது பழைய இலக்கியத் தரவுகள் மட்டுமன்றி பயிர்ச்செய்கை தொடர்பான நுண்ணாய்வு நிறுவ னங்களது தரவுகளையும் ஒனோ பயன்படுத்தினார். அவருடைய NIHONGO NO KGEN என்னும் நூலிலே* இவை பற்றி எழுதியுள்ளார். இறப்பு நடை முறை தொடர்பான நுண்ணாய்வும் இக்காலகட்டத்திலே செய்யப்பட்டது. தமிழ்மொழியிலே சுடுகாடு என்னும் பொருளிலே வழங்கப்பட்ட பழைய சொல்லான ஈம் என்பதையும் யப்பானிய மொழியிலும் ஒரே பொருளில் வழங்கப்பெற்ற imi என்ற சொல்லையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது ஈமத்தாழிகள் பற்றிய ஆய்வும் தொடர்பு நிலையில் விரிவடைந்தது. அகழ்வாய்வுத் துறையினர் ஈமத்தாழிகள் பற்றிய ஒப்பீட்டைச் செய் கின்றபோது அவை பற்றிய வழக்கிலிருந்த பழைய இலக்கியச் சொற் களையும் தேடிவரநேரிடும். அந்நிலையில் ஒனோவின் ஆய்வு பயனுள்ள தாகின்றது. யப்பானில் KYUSHUவில் கண்டெடுக்கப்பட்ட தாழிகளையும், தமிழகத்திலே கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளையும் ஒனோ ஒப்பிட்டுக் கருத்துக் கூறியபோது அது தொடர்புடைய அகழ்வாய்வு, வரலாறு, புவியாய்வுத் துறையினருக்கு கேலிக்கூத்தாக இருந்தது. ஆனால், அத் துறையின் நுண்ணாய்வாளர்கள் எதிர்காலத்தில் ஒப்பீட்டாய்வு மேற் கொள்ளும்போது அகழ்வுப் பொருட்களுக்கும் மனிதனுக்குமிடையே இருந்த தொடர்பினை விளக்குவதற்கு ஒனோ எடுத்துக்காட்டிய இரு மொழிச் சொற்களையும் தேடிவரும் நிலை ஏற்படும். பண்பாட்டு நிலை யிலே பயின்ற சொற்களின் பொருளை அறிவதற்கு ஒனோ காட்டும் விளக்கங்களைப் படிக்கவேண்டியும் நேரிடும். எனவே, சொற்களினூடாக பண்பாட்டு நிலையை அறிதல் என்னும் ஒனோவின் ஒப்பீட்டாய்வின் செல்நெறி பலருக்கும் பயன் தருவதாக அமைகின்றது. ஈமத்தாழிகளின் வகைப்பாடு பற்றி ஆய்வுசெய்யும் அகழ்வாய்வுத் துறையினர் அவற்றின் பயன்பாடு பற்றி விளக்குவதற்கு மொழி நிலையிலே பதிவு செய்யப்பட்ட இலக்கியத் தரவுகளை இணைக்க நேரிடும். யப்பானிய அகழ்வாய்வு வரலாற்றிலே அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட தாழிகளும், இறந்தோர் புதைகுழிகளும் யப்பானிய இலக்கியப் பதிவுகளால் மட்டும் தெளிவு பெறா. பழந்தமிழ் இலக்கியப்பதிவுகளாலும் தெளிவுபடுத்தப்பட வேண் டும். ஒனோ மணிமேகலையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஐவகையான நடைமுறையையும் ஒப்பிட்டு நோக்கியுள்ளார். அவருடைய விளக்கம் துலக்கம் பெற உதவிய மணிமேகலை அடிகள் வருமாறு:
"ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர் இரவும் பகலும் இரி வுடன் றரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்?
112

தமிழர்-யப்பானியர்.
இறந்தோரது ஈமக்கடன்கள் பற்றிய ஆய்வை முன்னர் பொது நிலை யிலே செய்த ஒனோ இக்காலகட்டத்திலே நுணுக்கமாகச் செய்தார். இன்னும் தாழிகளிலே உள்ள GRAFFIT பற்றியும் தன்னுடைய கருத்தை ஒனோ வெளியிட்டமையும் இக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்கது.
மேலும், யப்பானியப் பண்பாட்டிலே இரும்பின் பயன்பாடு, நெசவு என்பவற்றின் தொடர்பையும் இரு மொழிச்சொற்களின் சான்றுகொண்டு ஒனோ ஆராய்ந்துள்ளார். இவை பற்றிய விரிவான செய்திகளைத் தனது நூலிலே எழுதியுள்ளார்.* மனித நடைமுறைகளில் வழிபாடு, நம்பிக்கை தொடர்பான செய்திகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். திருமணம் தொடர்பான இரு நாட்டவரதும் பழைய நடைமுறைகளினது ஒற்றுமைப் பாட்டையும் எடுத்துக்காட்டினார். சங்க இலக்கியமும் யப்பானிய பழைய இலக்கியமான மன்யோசுவும்" தரவுகளைக் கொடுத்துள்ளன. YUFUKE* என யப்பானியரிடையே இருந்த நம்பிக்கையை தமிழர்களுடைய விரிச்சி? கேட்கும் நடைமுறையுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தார். வழிபாட்டு நிலையிலே யப்பானியர் இயற்கையின் பேராற்றலை வியந்து வழிபடு கின்ற பண்பாடுடையவர். பழந்தமிழரும் இயற்கையின் பேராற்றலை துர், அணங்கு என வழிபட்டனர். யப்பானியச் சொல்லான KAM பேராற்றலை யுடைய கடவுளைக் குறிக்கும் KAM என்ற சொல்லுடன் தமிழ்ச் சொல் லான கோமான் என்ற சொல்லை ஒப்பிட்டபோது வழிபாட்டு நடைமுறை யின் தொடக்க நிலையை உணர முடிந்தது. இதனால் இக்காலகட்டத்து ஒனோவின் ஆய்வு ஏற்கெனவே பண்பாட்டு நடைமுறைகளை ஒப்பீட் டாய்வு செய்தவர்களோடு வேறுபட்டமைந்தது. நடைமுறைகளைக் குறிக்கும் சொற்களின் பொருள் ஏனைய ஆய்வாளர்களால் நன்கு தெளிவாக்கப்படவில்லை. ஆனால், ஒனோவின் ஆய்வு சொற்களின் பொருளும் நடைமுறைகளும் இறுக இணைந்திருப்பதை நன்கு விளக்கிக் காட்டியது.
113

Page 59
மனோன்மணி சண்முகதாஸ்
இக்காலகட்டத்தில் நுண்ணாய்வு செய்யப்பட்ட சொற்கள்
தமிழ்ச்சொல் யப்பானியச்சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல்
1. avir- gyGÁîþ alaku 33. munku - (ypOJĖGg5 muguru 2. acai-அசை asagu 34. entu - Glsög) ika 3. ayakku - 9ļLučišG5 ayoku 35. eń ku - 6TĖJg5 iduku 4. accu- அச்சு RZÓ 36 eppotu - GIGungsi itu 5. accu- 9jä5 özöru 37. melli — GLro6üb6é5) me, mi 6. alai - 9/3)L atu 38. veri - G6ug5) veragu 7. atar- 2|_j atll 39. kețiți - GÆLuq kasiko 8. annan-g6760767 annyan 40. kevi - QL69 kafi 9. attan – 9ë5Gö7 ata > ada 41. mey - மெய் al 10. amarar- gyupgj ala 42. cēru - GBFp siru 1 1. amir - -2»juf5yp abiru 43. kokki - GJSTi@ kagi 12. aiyam-aguib ayasi 44. kokku - Garág, kaki 13. alampu-அலம்பு arafu 45. köman -(Bas/TLDT6öıl kamu > komi 14. alar - goyaj 2C 46. pokkaņai - 15. ali - gy68 a fac பொக்கனை faka
- 47. pokkanam16. accal-ஆச்சாள் aCCa பொக்கணம் fogo 17. añcu – gyG53, özömu 48. ponkal - GALITĚJ356io | fongara, fonga 18. allu - 9ygioa) öru 49. poți - Guituq fodol 19. iru – 9gpi iru 50. poti - Gurią bottuara 20. i ruku- 3. ple, iroku 51. poțițu - GNLITTLIG potu 21. im- ali imi 52. pottai-GlLitL60)_ posa > bosama 22. uku- og uku 53. poli - Guitaf foru 23. ukkalam-2 á46mi ukami 54. potu - போடு fotaru 24. umi- 2 Lól ԱI11 Ա 55. pottu - போத்து fotu 25. uru - 9 (g5 LTU 56. põrvai - GuíTjGODGJ || foro 26. urukku- 2 (5äg urukku 57. põttu - GouTšg wotoko 27. ukkaram-2 EJLb öki 58. por - போர் ni, fo 28. un - 2 637 önari 59. põrai - (3uTop fora 29. unar- go 6007 ff ödöröku 60. mokkani 30. urai - 2 apy örösu - மொக்கனி mokko 31. kūcu - 3.g. kusugruru || 61 mõtakam 32. pukar - Lygtyp kötöbuki - மோதகம் moti
kötöfuku | 62. kaccu - 5d4. kaziru
l 14

தமிழர்-யப்பானியர்.
தமிழ்ச்சொல் யப்பானியச்சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல்
63. katamā - 5LDT kase 98. kețițu - GASLG kidamu 64. katan - 5L67 kötö 99. kevi – GEG? kafi 65. katal - ELGÜ kata 100. kokkārai - 66. kattu - g"G) katanu கொக்காரை kagamu 67. kattu - EIG) kata 101. Campa -- FubuíT samba
68. kati - SEG katu 102. Cara Cara - FTJFT ZaaZafa 69. katukku- Egäg kase 103. Cafu - Fir(6) SSU 70. katai - SEGOg5 katari 104. Campu - சாம்பு sabu 71. kamatam - 45LDLL') kamë 105. citar - SFg5j sitataru 72. kamakkaitu kamaku > 106. сimir - gućp simu
- கமக்கட்டு gamaku || 107. cimpu - Faby siba 73. kala - 56) (mana) gali 108. cuki - F6F suki 74. kavar - 35Guj kafa 109.cukir -46j suku 75. karuttu - 5E(upğ5g5/| kara 110. cukku - 3.de) sukuna 76. kalai – 363)GT karu 111. Cuval - 356.16d Só > Se 77. kali-gai karu > kayu 78. kan - SEGð7 kane 112. cull - SHGit SU 79. kāval - ETTGAu6io kabafu 113. Curukku- sig surudo 80. kāl - ST6io kara 114. cuttu - துருதது sösö > SOSO 81. kāl- 55/T6io kuruma 115. cūrai - துறை ST 82. kukai- (565 kuki 116. Certal - Glg-LGOL sitiku 83. kurampu- (g5JLÊL- kuro 117. cē ku - G3gFg5 sikö 84. kuttam - 3al lub kusa 118. caňku - Frég agamu 85. kun - digit kuna 119. cappai- FLIGOLj afa 86, kuttu-ey Փ kösötö 120. Curai - 360T uri 87. kumartu- (g|DL'G) kömu 121. Cūtu - g(6) ösöfu 88. kumarí - (guDif köba 122. cuțu - gG) ösöfi 89. kumi - grip köbu 123. ceruku - GF(5635 iru 90. kumpi - (3ıbı9) komi> gomi 91. kumpu- (gubų köbi 124. akavu - gyta, sakebu 92. kuruku- (5C5C5 koro 125. akar - gyagp sakuru 93. kullir - gafij köru 126. avir - gyGap sabaku 94. kücu - ging, kösö (guru) 127. akai – gyGOJE saku 95. kūppu - galių köfu 128. akai – gyGM45 sakayu 96. ketta - Gael' L. kitanasi 129. akai – gyGODSE saku 97. kentai - Gg683769) kida 130.2y - ஆய் Sal
115

Page 60
மனோன்மணி சண்முகதாஸ்
தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல்
131. uka - 235 suku 166, teri - Gig5ff; sirusi 132. uri - 2 f Söru 167. teli - G56fi siro l33. uri - g_f StlfԱ 168. te rru - G5ibgp situ 134. imir - 3).uróip simu 169. te n rall - G5Gðagp6io | sidake 135. i r - fj. sirami 170. tēmpu - Gg bi sibomu 136. uppս - 2-ւնւլ sifo 171. filiaral, naral - 137. takaram, takatu takara ஞரல், நரல் al
தகரம், தகடு 172. ñāl, nā l- (G,56io, [56)| naru 138. takai - 35GM)3S takasi 173. haru - G5 tan 2 139. tatavu - g5 6 || tataku 174. ñekiri-Gg6Egip niki, niko 140.taţțu - 35 () tata 1 l4 l. taţțu - g5 G tataku 175. neli - G56 el 142. tani - gj60of tanasi 176. nuval - BlGlu6io nöbu 143. tantai – g5fÈ605 tanda 177. nā — 15T 2 144, tapս - Ֆւլ tafuru 178. natu l-BGB) naka 145. tappu -g5U | tafa 179. nampu - Eb nafë 146.talai-goat tarasi 180. ni - f5 > 1. 147. tātai, tātā - 181. ninku - përgj nigu
தாதை, தாதா tata > dada 182, nurai- நுரை nörö
148. tavu-gira töbu 183. nukku-5äg nuka 149. tar தாழ் t3fU 184. nel, nel por 150. tari- தாழி tafUl - நெல், நெல்போர் ni, nifo 151. tinkal - Sắia:EGÏT tuku > tuki o 152. tuțumai- 5660) o tudumui 185. pakuti-ugo faka 153. tuli - g6 turu > tuyu 186. pakattu-LáG fakasu >bakasu 154, tuntil - தூண்டில் (u>ti 187. расаі - шsog: faci 155. tūval - g5sTGJ6id tubasa 188. pațār - lumtj fatameku 156. tukal - g55Giī töga 189. paţam - L -lb fata 157. tuțum - gj@Lib tödöröku 190. pati - Luuq fatu 158. teru - Q5(ib5 ti, di 191. pati - Luq fasi 159. teli - G56í) tiru 160. toku - Gla, Taj takaru l92. pau - LuG) fatu 161. tā - grp Sai 193. pațuttu - L16.gg fata 162. tān - g51TGö7 Sa 194. parti - u fuq 163. tinai - ĝ96MDGOVO7 sina 195. pațuvan - LuGG JGö7 || fata ke 164. tinai - gB6OGOT sinai 196. pattai - Lil 65L- fada 165. teri - Gigf? siru 197.pan nu-Lugig, fanasu
116

தமிழர் - யப்பானியர்.
யப்பானியச் சொல்
தமிழ்ச்சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் 198. patam - ug5b fatago 233. pūņ - 46 fodasi 199. para - ug faruka 234. pē - Gu (musu) fi 200.paravai- uJG3)6NJ (una) fara 235. pētai - Guog fita > bita 201. param - uTub (amano) fara 236. рё1 - Gu6) firu 202. para - Lg fare 237. pokkam - GutšÆLib | foka > boka 203. paravu - upo farafu 238. pakkam-ušEb waki 204. paravukkatan farafu 239. paku - JC35 WaS2 205. paعلیہ farasu 240. para படர் wataru 206. para - Lp furu 241. pin - பின் winaka 207. parampu - L|publ fara 242. põntu -போந்து WOta > O 208. pappu - பாப்பு fafa 243. mal -மள all 209. paiyam- GOLub fëmi 244. makuți - LDGgą maku 210. Dãy - LTư fo 245.macankai-LD5Fš6)4 masumi 211. pāvu - To fafu 246. maccu - LD5ëg; masaki kadura 212. pār - up föröbu 247. maţi - Lot, mati > madi 213. piccu - 1944. fizukasi 248. mațu - LDG) 2SU 214. piti - Guq fisigu 249.mattu-Lo () ASU 215. pinai - 966007 fineru 250. maņa - p60 managaru 216. pitar - Lon_j fiti 251.mayir-LDusi mayu 217. pittai- 9gag fitafi 252. malai-LDGO)Gao möri 218. pin - Sait fina, fine 253. mallam - LDGioGoLib mari 219. pukar - புகழ் (kötö) - fuki 254. maccukkatt i 220. pulam - s6oLib fure -மச்சுக்கத்தி masakari 221. punai - GOYGODT funa > fune 255. marra - Leiop Tlata 222. putai- GODg5 futa 256. maņņal - LDGồTGO076i) mönö 223. putai - LIGOL fötöri 257. mātu - DTG) matufu 224. putti - Lịt” tạ fötöki 258. māņ - DTo manesi 225. puțițam - quid fotό 259. māmi - DT6 mama fafa 226.putu, putitu- fόtό 260. māran -- uDapGö7 ΠΥ13TO
புது, புதிது 261. mi - ló) mi
227.puri - L|fi föru 262. mítai - 16a)L mitu 228. pular - jaj asabor. ake 263. muți - (ypą musubu 229. purutu - புழுது förö 264. multi-(poug motafi 230. puram - புறம foka 265. muțițu - (pol@ mutu > butu
: - ւկDՈ)] 266. muţți - (pliq muti
117

Page 61
மனோன்மணி சண்முகதாஸ்
தமிழ்ச்சொல் யப்பானியச் சொல் தமிழ்ச்சொல் யப்பானியச் சொல்
267. muraţu - (prG) ΙΙΙ.113 293. ε - σι ya 268. muń ku - (yptÅreg5 muguru 294, e - g ya 269. m licu - ера, LSU 295. vakai – 6 GOgs fakaru 270. mũtu - cup6) mutuki 296. vați - 6 ją fasiragu 271 . munu mսոս 297. van tu - 616oö7G) fati -( ( mono mono |” varukku - 6Qpieg, fare 299. val- agit fari 272. mutal - (pg6ö ΠlOO
300. vākku - ataše, faku 273. muri - (!pof möru
301. Vacam - 6) uitgFlb fa 274. muriyal - (ypfusi mörösi 275. muru - (Ip(yp mörö 302. vāțu - GaultG) fasu 276. mul - (ураії mori 303. vāy - வாய் fa 277. murru - Cypsippu möru 304. Vāy - Gutruiu fa 278. muni - முனி ΙΙ.1ΟΙ Ο 305. vā rai - வாழை fari 279. mū! – eupGir möru 306. viri -6lf firaku 280. mũt!u- (tp (9) mösu 307. viru-6?p firefusu 281. yāru - uLungpy yara 308. vettimai 282. akam – gyBELb yaka - GoGu q63Did fitaburu 283. akai – gyGODBE yaku 309. veru - GNGAugp firumu 284. akai – gj6D5 yaku 310. veli - Gauas firu 285. acai - gyGODSF yasumu 311. veli - Galaf fi 286. acai - 9/60)3. yasu 312. veli - GavGif firameku 287. amar - goy Dj yamu 313. vaci - 6/6. fasi : ar - sugg, U yöröfi 314. vanti - GU6ðilg 289. ar - gif ari
ஆ у 315. vari - 65 wari 290. a fall - ஆரம ya 29 l. etițu - 67G) yatu 316. vānku - Gutšles wagu 292. e - 6, ya 317. veri - G6um5 weraku
118

தமிழர்-யப்பானியர்.
ஒனோவின் ஒப்பீட்டாய்வின் செல்நெறியிலே குறிப்பிடவேண்டிய இன்னொரு நிலை அவருடைய செய்யுள் வடிவ ஒப்பீடாகும். சொற்களின் பொருள்நிலைப் பயன்பாடு, இலக்கண அமைப்பு என்பவற்றை பழைய இலக்கியத்தரவுகளிலே நோக்கியபோது இரு மொழி இலக்கியச் செய்யுள் வடிவ அமைப்புக்கும் தொடர்பு இருப்பதை ஒனோ கண்டார். மன்யோசுப் பாடல்களின் அமைப்பு சங்க இலக்கியப் பாடல்களிலும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தபோது சான்றுகள் கிடைத்தன. யப்பானிய WAKA°அமைப்புக்கும் தமிழில் ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என்னும் செய்யுள் அமைப்புக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய்ந்தபோது யப்பானிய WAKA தமிழின் வெண்பா அமைப்புடன் ஒற்றுமையுறுவதைக் காணமுடிந்தது. யப்பானிய WAKA அமைப்பு வருமாறு அமையும்.
1. 5 அசை 7 அசை 7 அசை (Katura)
2. 5 7 7 5 7 7 (Sed oka)
3. 5 7 5 7 7 (Tanka)
4. 5 7 5 7 7 7 (Bussokusekika)
5. 5 7 5 7 5 7 ..... 7 (chöka)
இவற்றைத் தமிழில் முறையே துண்டுதுண்டான பாடல், திரும்பத் திரும்ப வரும் பாடல், குறும் பாடல், புத்தர் காலடிப் பாடல்கள், நெடும் பாடல்கள் எனக் கூறலாம். தொடர்நிலையில் WAKA வின் அமைப்பு பின்வருமாறு அமையும்.
SS - (5) - - (7) (12 அசை) -m- ட (5) - -- (7) (12 அசை)
(7) (7 அசை)
மன்யோசுவின் பல பாடல்கள் இவ்வகையில் அமைந்துள்ளன.
இதே போன்ற அமைப்பினைச் சங்க இலக்கியப் பாடல்களில் கலித் தொகையில் மட்டுமே காண முடிந்தது. ஆனால், நாலடியார், ஆசாரக் கோவை, திணைமொழியைம்பது போன்ற நூற்பாடல்களிலே இத்தகைய WAKA அமைப்பினைக் காணமுடிந்தது. ஓனோ எடுத்துக்காட்டாக பின்வரும் பாடலைக் காட்டுவர்.
"வேனிற் பருவத் தெதிர்மல ரேற்றுாதுங் 2 கூனிவண் டன்ன குளிர்வய னல்லூரன் 3. மாணிழை நல்லா ரிளநல முண்டவர் 3. மேனி யொழிய விடும்" 2
119

Page 62
மனோன்மணி சண்முகதாஸ்
கலித்தொகை, நாலடியார் பாடல்களில் அசைகள் அமைந்திருக்கு மாற்றையும் கணக்கிட்டுள்ளார். இந்த ஒப்பீட்டாய்வு பற்றிய கருத்துக் களைக் கட்டுரை வடிவாக யப்பானிய மொழியிலும்? ஆங்கிலத்திலும்? வெளியிட்டார். செய்யுள் அமைப்பிலும் இருமொழிப் பாடல்கள் ஒற்றுமையுறுவதை ஒனோ எடுத்துக்காட்டியபோது இதுவரை WAKA வின் மூலம் எதுவென்று அறியாத நிலையும் தெளிவுபடலாயிற்று. யப்பானி யச் செய்யுட்களின் அமைப்பு தமிழ்ச் செய்யுட்களின் அமைப்போடு ஒற்றுமையுறுவது ஓனோவின் ஒப்பீட்டு ஆய்வு நிலையிலே புதியதொரு தளத்தையும் அமைத்துக் கொடுத்தது. இன்று ஓனோவின் ஆய்வின் செல்நெறி பரந்துபட்டதால் நுண்ணாய்வு செய்யப்பட வேண்டிய பல பகுதிகள் இருக்கின்றன. அவற்றைப் பலர் ஆய்வு செய்யவேண்டிய நிலையும் ஏற்படலாம். ஒப்பீட்டு மொழி நிலையிலேயே சொல் ஒலி யமைப்பு, பொருளமைப்பு, தொடரமைப்பு, செய்யுளமைப்பு எனப் பரந்து விட்டது. இதைவிடப் பண்பாட்டு நிலையிலும் பல நிலைகளில் ஒப்பீடு செய்ய வேண்டியுள்ளது. இன்னும் ஓனோவினுடைய ஆய்வும் ஆய்வுப் பெறுபேறுகளும் கணிப்பீடும் மதிப்பீடும் செய்யப்பட வேண்டியவை.
3. ஆய்வு தொடர்பான வெளியீடுகள்
இரு மொழி ஒப்பீட்டாய்வு தொடர்பான இதுகால வரையான வெளியீடுகள் பற்றிய தரவுகளும் மதிப்பீடுகளும் இன்றியமையாதன. ஆய்வைப் பற்றிப் பிறரும் அறிந்துகொள்ள இவை உதவும். வருங்காலத் தவர் அறியவும் வாய்ப்பளிக்கும். இந்த ஆய்வு பற்றிய வெளியீடுகள் மும்மொழியில் வெளிவந்துள்ளன. யப்பானிய, தமிழ், ஆங்கில மொழி யிலே வெளியிடப்பட்டுள்ளன. ஓனோவின் வெளியீடுகள், பிற யப்பானிய ரது வெளியீடுகள், பிறநாட்டவரது வெளியீடுகளென இவை அமைந்துள் ளன. இவற்றை ஒப்பீட்டாய்வுக் கருத்துக்களின் வெளியீடு என்ற நிலை யில் நூல்கள், தொடர்கட்டுரைகள், தனிக்கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைத்தொகுப்புகள் என வகைப்படுத்தலாம்.
3:1 நூல்கள்
தமிழ் யப்பானிய மொழி ஒப்பீட்டாய்வு பற்றி வெளிவந்த நூல்களை இரு வகைப்படுத்தலாம். ஒன்று ஒப்பீட்டாய்வுத் தகவல்களை வெளியி டும் ஒனோவினுடைய நூல்கள். மற்றது ஒப்பீட்டுத் தரவு நிலையிலும், ஒஷ்பீட்டு ஆய்வுநிலையிலும் பிறரால் எழுதப்பட்ட நூல்கள். இந்நிலை யில் யப்பானியமொழியிலும் தமிழ்மொழியிலும் நூல்கள் வெளிவந்துள் ளன. இந்நூல்கள் பற்றிய சுருக்கமான செய்திகள் இங்கு இடம் பெறுகின்றன.
3:1:1 ஒனோவெளியிட்டநூல்கள்
ஒப்பீட்டாய்வு பற்றி 5 நூல்களை ஒனோ எழுதியுள்ளார். ஒரு நூல் ஆங்கிலத்திலும் ஏனைய நான்கும் யப்பானிய மொழியிலும் எழுதப்
120

தமிழர்-யப்பானியர்.
பட்டவை. வெளியிடப்பட்ட காலநிலையில் வரிசைப்படுத்தின் வருமாறு அமையும்.
அ. NIHONGONOSERITSU :(யப்பானிய மொழியின் பிறப்பு) 1980.
வெளியீடு : CHUOKORON-SHA. தோக்கியோ.
gy. SOUND CORRESPONDENCES BETWEEN TAMIL AND JAPANESE: 1980.
வெளியீடு : கச்சுயின் பல்கலைக்கழகம், தோக்கியோ.
இ. NIHONGOTOTAMIRUGO : (யப்பானிய மொழியும் தமிழ்மொழியும்) 1981, G616fu*(6) : SHINCHOSHA. (35TäSGuust.
ஈ. NIHONGOIZEN :(யப்பானிய மொழி வழிவரலாறு) 1987.
G61 Gifu Sf6 : IWANAMI SHIN SHO,
உ. NIHONGONO KIGEN: (யப்பானிய மொழியின் மூலம்) 1994.
Q)6).u6vf?u5G5) : IWANAMI SHIN SHO.
ஒனோவினுடைய நூல்களில் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூல் ஒப்பீட்டாய்வுச் சொற்களின் அட்டவணையாக அமைகிறது. இந்நூலின் முகவுரையில் ஒனோ இரு மொழிகளினதும் ஒலியொப்பீடு பற்றிய தன் னுடைய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். நூலமைப்பிலே முன்னுரை, ஒலி ஒப்பீடு (உயிரொலி, மெய்யொலி) ஒப்பீட்டுச் சொற்களின் வகைப் பாடு, உசாத்துணைப் பட்டியல் என நான்கு பகுதிகளாயுள்ளன. ஆரம்ப கால ஆய்வுநிலை என்பதால் இந்நூல் சுருக்கமான செய்தியையே g5(56fpgj. g5LÉSpojë GD3Fst pih:56f6ð7 GOLIITOLB5GODGT Dravidian Etymological Dictionary* யிலிருந்தும் தமிழ்ப் பேரகராதியிலிருந்தும் கொடுத்துள்ளார். பொருள் நிலையிலே ஒப்பீட்டுச் சொற்களை வகைப்படுத்திக் காட்டி யுள்ளார். இவ்வகைப்பாடு தமிழ் - யப்பானிய பண்பாட்டு நிலை ஒப்பீடு பற்றி ஒப்பீட்டாய்வாளர் எண்ணு வதற்கு இடமளித்தது. பிறமொழி யாளரும் ஒப்பீட்டுத் தரவுகளை மதிப்பீடு செய்வதற்கும் இந்நூல் உதவியது.
யப்பானிய மொழியிலே எழுதப்பட்ட நூல்களில் முதல்நூல் என்ற நிலையில் NIHONGO No SERITSU விரிவான செய்திகளை அடக்கியுள்ளது. தமிழ்மொழி பற்றிய செய்திகளை யப்பானியர் விரிவாக அறியவேண்டிப் பல தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நூலமைப்பிலே முன்னுரை, தொடர்ந்து 14 இயல்கள், விளக்கக் குறிப்பு அட்டவணை, உசாத்துணை நூற்பட்டியல், பின்னுரை, சொல் அட்டவணை என 366 பக்கங்களைக் கொண்டமைந்துள்ளது. யப்பானிய மொழி பற்றிய வரலாற்றுநிலையான செய்திகள் பிறமொழியாளர்க்குப் பெரிதும் பயன் தருவன. எழுத்து இல்லாத காலம், சீன வரிவடிவத்தில் யப்பானிய மொழி பதிவு செய்யப்பட்ட காலம், யப்பானிய வரிவடிவம் அமைத்து யப்பானிய மொழி எழுதப்பட்ட காலம் என மூன்று காலநிலைகளிலே சிறப்பாக
121

Page 63
மனோன்மணி சண்முகதாஸ்
வகுத்து யப்பானிய மொழி பற்றிய ஆய்வுக் கருத்துக்கள் ஓனோவினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலிலே அமைந்துள்ள 14 இயல்களும் நூலின் பொருளடக்கத்தைத் தெளிவுபடுத்தும். அவற்றை இங்கு தருவது தரவுநிலையில் பயன்படும்.
1. புராணகாலம் 2. புராணகாலம் 3. யப்பானிய மொழியின் பலவகையான பிறப்புநிலை கருத்து (இங்கு
தமிழ்மொழியுடனான தொடர்புக்கருத்துகள்) . சொற்களின் வளர்ச்சிநிலை
ஒலிகளின் மாற்றம்
4
5
6. யப்பானின் கிழக்கும் மேற்கும் 7. யப்பானியர் சீன வரிவடிவத்தைக் கற்பித்தல் 8. எழுத்தாக்கங்களின் தொடக்கம் 9. பாடல்களைப் பதிவுசெய்தல் 10 இலக்கணம் பற்றிய உணர்வுகொள்ளல் 11. சீனமொழியில் இயற்றிய பாடல் உட்பட சீன எழுத்தாக்கங்களுக்கும்
யப்பானிய ஒலி உச்சரிப்பு ஆக்கல் 12. பெண்களின் உலகம்
13. சீனவரிவடித்தை பயன்படுத்தப் பயில்தல் 14. KANA Lulu u 6öt Lumr(t)
NIHONGO TO TAMIRUGO GIGöīGODjib நூல் தமிழ்மொழிக்கும் யப்பானிய மொழிக்குமிடையே அமைந்த தொடர்புநிலையை விளக்கும் நூலாகும். அமைப்புநிலையில் 6 இயல்களுடன் இறுதியில் தமிழ் மொழிக்கும் யப்பானிய மொழிக்கும் தொடர்பான சொல் அட்டவணை யுடன் இணைந்து 286 பக்கங்களைக் கொண்டமைந்துள்ளது. இயல் களிலே தொகுக்கப்பட்டுள்ள செய்திகள் பின்வரும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.
1. தென்னிந்தியாவின் சொற்களுடன் யப்பானியமொழி
தமிழ்மொழியை ஒப்பிடல் ஒலியொற்றுமை - உயிரொலி ஒலியொற்றுமை - மெய்யொலி
அக்கால வாழ்க்கையை மீட்டுருவாக்கல்
யப்பானிய மொழி ஆய்வின்பின்
ஒப்பீட்டாய்வு தொடர்பான செய்திகளைத் தொடர்புறுத்திக் கூறும் நிலையில் இந்நூல் சிறந்தது.
122

தமிழர் - யப்பானியர்.
NIHONGO IZEN என்பது ஒப்பீட்டாய்வு பற்றிய வெளியீடுகளிலே மிக முக்கியத்துவம் பெறும் நூலாகும். இரு மொழிகளுக்குமிடையே காணும் மொழியியல் நிலையான தொடர்பை நன்கு விளக்கிக் காட்டுவதுடன் தரவுகளையும் தருகிறது. நூலமைப்பிலே முகவுரை, இரு இயல்கள், முடிவுரை, தமிழ் உசாத்துணை நூற்பட்டியல், உசாத்துணை, நூல், கட்டுரைகளின் பட்டியல், பின்னுரை என அமைந்துள்ளது. இரு இயல்களும் முறையே யப்பானிய பண்பாட்டின் ஆழம், யப்பானிய மொழியின் அமைப்பு எனப் பெயர்கொண்டு பயனுள்ள செய்திகளை விளக்குகின்றன. முகவுரையிலே யப்பானிலிருந்து வெகுதொலைவி லுள்ள தென்னிந்தியாவுடனான தொடர்புநிலையை விளக்கியிருப்பது ஆய்வின் தொடக்கத்தை அறிய உதவுகிறது. இரு மொழி பேசுவோரது பண்பாட்டு நடைமுறையிலே ஆழமான தொடர்பு இருப்பதையும் ஒனோ இலக்கியச் சான்றுகள் கொண்டு விளக்கியுள்ளார். தமிழர்களுடைய பண்பாடு யப்பானியருடைய பண்பாட்டுடன் ஒற்றுமையுறுவதற்கு மொழி ஒப்புமை அடிப்படையாக அமைந்திருக்க வேண்டுமென ஒனோ கருது கிறார். இந்நூலின் இரண்டாவது இயல் யப்பானிய மொழியமைப்பைத் தமிழ்மொழியமைப்புடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது. இலக்கண அமைப்பு நிலையின் ஒற்றுமையை விரிவாக விளக்கியுள்ளது. 366 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 275 பக்கங்களில் இவ்வொற்றுமை நிலைபற்றி எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சொற்களின் ஒற்றுமை நிலை இலக்கியப் பயன்பாட்டின் மூலம் நுணுக்கமாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. நூலின் இறுதியிலே தரப்பட்டுள்ள உசாத்துணைப் பட்டியல் கால அடிப்படையில் யப்பானிய-திராவிட ஒப்பீட்டாய்வு பற்றிய முயற்சி களையும் பலர் அறிய வாய்ப்பளிக்கிறது. 1896 தொடக்கம் 1987 வரை ஏறக்குறைய 130 ஆண்டுகளாய் இம்முயற்சி தொடர்வதையும் ஒனோ எடுத்துக்காட்டியுள்ளாரெனலாம். ஒனோ எழுதிய NIHONGONO KIGEN ஒப்பீட்டாய்வின் பல்துறைத் தொடர்புகளையும் எடுத்துக்காட்டும் நூலாகும். ஒரு மொழியின்மூலம் மொழியியலாய்வின் மூலம் நிறுவப் பட்டாலும் அதன் வரலாற்று நிலைகளையும் விளக்க வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் ஒனோ தன்னளவிலே தூண்டப்பட்டு மேற் கொண்ட அகழ்வாய்வு நிலையான மொழித் தொடர்பு ஒற்றுமை ஆய்வு பிறமொழியாளர் தொடர்புடன் நடைபெற்றதையும் இந்நூல் ஆவணமாக் குகிறது. யப்பானிய மொழியின் மூலத்தை வரலாற்றை ஆசிரியர்களும் தேடிப்போக நேரிடும். அகழ்வாய்வுகள் காட்டும் வாழ்வியல் நடை முறைக்கு உரியவரின் மொழி எது என்ற கேள்வியும் எழும். அதற்கான மறுமொழியை அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை இலக்கியம் வெறும் பெயரளவில் மட்டுமன்றி பயன்பாட்டு நடைமுறை நிலையிலும் விளக்கமாக ஆவணப்படுத்தியிருப்பின் பெறுவது எளிதா கும். இந்த வகையில் பழந்தமிழிலக்கியம் நல்ல பணி செய்திருப்பதை அகழ்வாய்வு அறிஞர்கள் ஏற்றுள்ளனர்". ஒனோவின் இந்நூலும்
123

Page 64
மனோன்மணி சண்முகதாஸ்
தமிழிலக்கியத் தரவுகளின் அடிப்படையில் பல விடயங்களை விளக்கி யுள்ளது. நூல் அமைப்புநிலையிலே “தொடக்கமாக” என்ற முன்னுரை யுடன் 4 இயல்களுடனும் விளக்கக்குறிப்பு, பின்னுரை, யப்பானியமொழி யுடன் ஒற்றுமையுறும் தமிழ்ச்சொற்கள் என 271 பக்கங்களைக் கொண்டு அமைகிறது.
தொடர்புநிலை பற்றிய அறிவு, ஒற்றுமைப்பட்ட மொழியும் பொருள் களும், ஒற்றுமைப்பட்ட மொழியும் உலகியலும், தென்னிந்திய மொழி பண்பாட்டுடன் யப்பான், கொரியா என அமைந்த 4 இயல்களில் 2ஆம், 3ஆம் இயல்கள் விரிவான செய்திகளைத் தருகின்றன. சிறப்பாக மூன்றாம் இயல் பல விளக்கப்படங்களுடன் மொழியும் பொருள்களும் தொடர்புறுமாற்றை நன்கு விளக்கிக் காட்டுகிறது. தென்னிந்தியாவிலும் யப்பானிலுள்ள கியூசுவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட தாழிகளின் ஒப்பீட் டினை ஒனோ செய்துள்ளார். GRAFFIT பற்றிய அவருடைய ஒப்பீட்டுக் கருத்தினையும் படவிளக்கங்களாக இணைத்துள்ளார். யப்பானிய மொழி யுடன் ஒற்றுமையுள்ள தமிழ்ச்சொற்களில் ஏறக்குறைய 365 சொற்களை அட்டவணையாக்கித் தந்துள்ளார்.
ஒனோவினுடைய ஒப்பீட்டாய்வுக் கருத்துகளை நூல்வடிவாக வெளி யிடும்போது ஒரே பார்வையில் கருத்துக்களைப் பெறமுடிகிறது. யப்பானிய மொழியிலே எழுதப்பட்ட நூல்கள் தரவு நிலையிலேயும் ஏனைய ஆய்வாளர்களுக்குப் பயன் தருபவை. தமிழ்ச்சொற்கள் பற்றிய மூல நூலாக Dravidian Etymological Dictionary யையும் தமிழ்ப் பேரகராதி யையும் பயன்படுத்தியதை ஒனோ தன்னுடைய நூல்களிலே தவறாது குறிப்பிட்டுள்ளார். இந்நூல்கள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டால் தமிழரும் இந்த ஒப்பீட்டு ஆய்வு பற்றிய ஓனோவின் கருத்துகளை அறிய வாய்ப்பு உண்டாகும். ' 3.1:2 ஒப்பீட்டாய்வுத்தரவுநிலையிலும் ஒப்பீட்டாய்வுநிலையிலும்
பிறமொழியாளரால்எழுதப்பட்டநூல்கள் இவ்வகையில் பின்வரும் 5 நூல்கள் வெளிவந்துள்ளன.
9. WORLDVIEW AND RITUALS AMONG JAPANESE AND TAMILS : 1985.
வெளியீடு : கக்கயின் பல்கலைக்கழகம் : தோக்கியோ. ஆ. தமிழ்மொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை 1990.
வெளியீடு : கொழும்புத் தமிழ்ச்சங்கம், இலங்கை, இ. மன்யோக (யப்பானியக் காதற் பாடல்கள்) 1992.
வெளியீடு : வராவொல்லை, யாழ்ப்பாணம். ஈ. மன்யோசு காதற் காட்சிகள்: 1992. வெளியீடு : கொழும்புத் தமிழ்ச் சங்கம். உ. இன்றைய திராவிட மொழி ஆய்வில் தமிழ் - யப்பானிய ஒப்பீடு 1993. வெளியீடு : யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
124

தமிழர்-யப்பானியர்.
இந்நூல்களில் முதல் நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஐந்தின் தொகுப்பாகும். கட்டுரைகள் முதலில் யப்பானிய மொழியிலும் தமிழ்மொழியிலும் எழுதப்பட்டு இந்நூலாக்கத்திற்காக ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கப்பட்டவை. இந்நூல் இருமொழி ஒப்பீட்டிற்கான தரவு நிலையிலே பண்பாட்டு நடைமுறைகள் பற்றிய செய்திகளின் தொகுப் பாகவே அமைந்துள்ளது. கட்டுரைகளின் தலைப்பையும் எழுதியவர் களின் பெயரையும் இங்கு தருவது பயனுள்ளதாகும்.
1. WORLDVIEW : THE THREE - LEVEL UNIVERSE IN JAPAN AND TAMIL CULTURES
- SUSUMU OHNO
2. JAPANESE AND TAMIL NEW YEAR's CELEBRATIONS - - SUSUMU OHNO
3. THE TAMIL MARRIAGE SYSTEM UPTO 300 A.D - MANONMAN SANMUGADAS 4. THE TAMIL MARRIAGE SYSTEM AFTER300 A.D - ARUNASALAM SANMUGADAS
5. MARRIAGE IN JAFFNATODAY - MANONMANI SAN MUGALDAS
ஒனோவினுடைய முன்னுரையும் நூலின் இறுதியில் சொல் அட்ட வணையும் அமைந்துள்ளன. ஒப்பீட்டாய்வு நிலையில் இந்நூல் பண்பாட்டு நடைமுறைகளைப் பிறமொழியாளரும் அறிவதற்கு உதவி யாயுள்ளது. ஒப்பீட்டாய்வு நிலையில் கட்டுரையாளர்கள் மூவரும் இணைந்திருப்பதால் யப்பானியரும் தமிழரும் வெளியிட்ட நூலாகவும் அமைகிறது. ஓனோவின் கட்டுரைகள் அவரெழுதிய யப்பானிய நூல் களிலும் பொருள்நிலையில் விளக்கப்பட்ட செய்திகளையே அடக்கி உள்ளன. ஏனைய கட்டுரைகள் மூன்றும் தமிழர் திருமண நடைமுறை கள் பற்றிய வரலாற்று நிலையான மாற்றங்களைத் தமிழ் இலக்கியங் களினூடாக எடுத்துக்காட்டுகின்றன. எதிர்காலத்தில் இந்நடைமுறைகள் யப்பானிய திருமண நடைமுறைகளுடன் ஆராயப்படவுள்ளன.
தமிழ்மொழியும் யப்பானியமொழியும் : இலக்கண ஒப்புமை என்னும் நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகும். ஒனோவினுடைய NIHONGOIZEN இல் இயல் இரண்டில் அமைந்த இருமொழி இலக்கண ஒப்பீடு பற்றிய கருத்துக்களின் மொழிபெயர்ப்பாக இது அமைகிறது. இலங்கையைச் சேர்ந்த சண்முகதாசும் மனைவி மனோன்மணியும் இம்மொழிபெயர்ப் பைச் செய்துள்ளனர். ஓனோவின் ஒப்பீட்டு ஆய்வுக் கருத்துகளை முதன் முதலாக தமிழில் வெளியிடும் நூல் என்ற வகையில் இந்நூல் குறிப்பிடத்தக்கது. இன்னும் யப்பானிய மொழியின் பண்புகள் பற்றித் தமிழர் அறியவும் இந்நூல் வாய்ப்பளிக்கின்றது. இருமொழி இலக்கண நிலையிலே ஒப்பிடப்பட்ட கருத்துக்களைப் பொருளடக்க நிலையில் பின்வருமாறு அமைத்துள்ளது. 1. வகைநிலையான ஒற்றுமை 2. யப்பானிய மொழியின் இடைச்சொல்லுடன் தமிழ்மொழி இடைச்
சொல்லின் ஒப்புமை
125

Page 65
மனோன்மணி சண்முகதாஸ்
3. யப்பானிய மொழியின் துணைவினைகளுடன் தமிழ்மொழியின்
துணைவினைகளின் ஒப்பீடு
மொழிபெயர்ப்பு நூலென்ற நிலையிலும் இரு ஒப்பீட்டாய்வுக் கருத்து களின் ஆவணம் என்ற நிலையிலும் இந்நூல் சிறப்புப் பெறுகிறது. எனினும் மொழிபெயர்ப்பு மொழி நடைநிலையில் இறுக்கமாய் அமைந் தமையால் தெளிவு நிலையில் மயக்கமேற்படவும் இடமளிக்கிறது என்ப தையும் குறிப்பிடவேண்டும்.
மன்யோசு (யப்பானியக் காதற் பாடல்கள்)வும் மொழிபெயர்ப்பு நூல் ஆகும். யப்பானிய மொழியில் எழுந்த பழைய இலக்கியத் தொகுப்பான மன்யோசுவிலிருந்து 155 பாடல்கள் தமிழிலே மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. இருமொழி இலக்கண அமைப்பில் இடைச்சொற்களின் ஒப்பீட்டிலே மன்யோகப் பாடல்கள் பல தரவு நிலையிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்நூலிலுள்ள பாடல்கள் இருமொழி இலக்கியங் களினதும் அகப்பாடல்களின் பொருள் மரபு பற்றிய ஒப்பீட்டாய்வுக்குத் தரவாகப் பயன்படுத்தப்பட்டவை. அந்த ஆய்வுக்காகவே மனோன்மணி யால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. யப்பானிய இயற்கை நிலையான நான்கு பருவ காலங்களுக்கும் உரிய காதற் பாடல்கள் மன்யோசு தொகுதி பத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன. நூலின் முற்பகுதியில் அமைந்துள்ள மன்யோக இலக்கிய அறிமுகம் தமிழர் அதைப்பற்றியறிவதற்கு உதவுகிறது. தமிழ் அகப்பாடல் மரபுக்கும் மன்யோசு காதற்பாடல்களின் மரபுக்குமிடையே காணப்படும் ஒற்றுமை நிலைகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கே தருவது பொருத்தமாகும்.
1. சங்க அகப்பாடல்களிலே வருகின்ற கூற்று நிலையாகவே மன்யோசு விலும் உணர்வுகள் விளக்கப்பட்டுள்ளன. தமிழ் அகப்பொருள் மரபின் முக்கிய பங்காளர்களான தோழி, தலைவன், தலைவி, கண்டோர், நற்றாய் என்பவற்றோடு ஒற்றுமையான பங்காளர்கள் மன்யோசுப் பாடல்களிலும் காணப்படுகின்றனர். 2. பங்காளர்களின் உணர்வுகளும் கூற்றுகளும் சங்கப் பாடல்களைப் போன்று இயற்கைப் பகைப்புலத்தோடு இணைத்துக் கூறப்பட்டுள்
63.
3. காதலர் உணர்வுகள் புலப்படுத்தப்படும்போது யப்பானிய மக்களது பிரதேச வாழ்வு நெறியும் பண்பாடுகளும் பொதிந்து வைக்கப்பட் டுள்ளன.
4. காதலன் பிரிந்து செல்கின்ற வழி வழியின் இடர்கள், திரும்பிவரும் காலநிலை, காதலியின் காத்திருப்பு நிலை, அவள் பிரிவுத் துயர்
26

தமிழர் - யப்பானியர்.
நிலை, தாயாரின் கண்டிப்பு, ஊரவர் என்பன விளக்கப்படுந்தன்மை சங்கப் பாடல்களோடு பெரிதும் ஒற்றுமையுடையது. 5. வேறுபட்ட பிரதேசங்களில் வாழுகின்ற ஆண்பெண் தொடர்பு நிலை யும் விளைவுகளும் சமூகநிலையிலே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வு நடத்துவதற்கான அடிப்படையான நடைமுறை களின் தன்மைகளை விளக்கும் நிலைகளும் ஒற்றுமைப்பட்டுள்ளன. 6. திருமணமான ஒருத்தியை ஆண் விரும்பும் நிலை 7. பெண்கள், பொருள் தேட்டம், தூது, பகை என்ற நிலைகளிலே
பிரிந்த காதலர்கள் திரும்பி வரும்வரை பிரிவை ஆற்றியிருத்தல். 8. பிரிவுநிலையை இயற்கைக் காலநிலைகளோடு இணைத்து விளக்கல்
9. ട്യൂബ്രtD பெண்ணும் துளுரை பரிமாறிக் கொள்ளல். மலை, ஆறு,
மரம் என்பவற்றை முன்னிறுத்திச் சூளுரை செய்தல்.
10. தெய்வ நம்பிக்கையையும் தெய்வ மடைபோடும் நிலையையும் விளக்கல், தமது காதல் நிறைவேறி இருவரும் ஒன்று சேர்வதற்கு ஏதாவது இடையூறு நேரின் தெய்வ மடைபோடுவதாக வாக்குறுதி செய்தல். மரம், மலை, ஆறு, கடல், வான் போன்ற இயற்கைச் சக்திகளை வழிபட்ட சங்ககாலத் தமிழருக்கும் யப்பானிய மக்களுக் கும் இருந்த ஒற்றுமைப் பண்புகள்.
11. நிலங்களின் தன்மைக்கேற்ப மக்களின் வாழ்க்கைமுறை, நடை முறை வேறுபட்டிருப்பதை விளக்கல். பயிர்ச்செய்கை, மீன்பிடி, வேட்டை, அரச காரியம் என அவரவர் வாழுகின்ற நிலத் தன்மைக் கேற்ற தொழில் முறைகளுடன் இயங்கிக் கொண்டிருந்த மக்களின் உணவு, உடை, உறையுள் ஏனைய பழக்கவழக்கங்களிலும் வேறுபாடி ருந்ததை விளக்கல்.
தமிழர் யப்பானியரது பண்பாட்டு நிலையான ஒற்றுமையைச் செய்யுட் கள் மூலமாக எடுத்துக் காட்டவும் இம்மொழி பெயர்ப்பு நூல் உதவும். முன்னர் உதிரியாகச் சில மன்யோசுப் பாடல்கள் தமிழிலே மொழி பெயர்க்கப்பட்டிருப்பினும் நூல் வடிவிலே அமைந்த மன்யோகப் பாடல்களின் முதல் தொகுப்பு இதுவே.
மன்யோசு காதற் காட்சிகள் என்யோசு காதற் காட்சிகள் 30 மன்யோசு காதற் பாடல்களையும் 30 சங்க அகப் பாடல்களையும் ஒப்பிட்டு காட்சி நிலையில் உரைநடையில் விளக்கம் தரும் நூலாகும். இதனை மனோன்மணி சண்முகதாசு எழுதினார். இந்நூலை வெளியிடுதற்கு யப்பான் நிறுவனம் வெளியீட்டு மானியம் வழங்கியது. மன்யோசு தொகுதி பத்திலுள்ள பின்வரும் எண் பாடல்கள் ஒப்பிடப்பட்டுள்ளன.
127

Page 66
மனோன்மணி சண்முகதாஸ்
மன்யோசு: எண் சங்கப்பாடல் தொகுதி: எண் மன்யோசு:எண் சங்கப்பாடல் தொகுதி: எண்
1890 நற்றிணை : 303 1905 குறுந்தொகை : 24 1891 ஐங்குறுநூறு : 464 1906 ஐங்குறுநூறு : 368 1892 ஐங்குறுநூறு : 341 1907 குறுந்தொகை : 186 1893 ஐங்குறுநூறு : 338 1908 குறுந்தொகை : 329 1894 ஐங்குறுநூறு : 315 1909 குறுந்தொகை : 376 1895 ஐங்குறுநூறு : 328 1910 குறுந்தொகை 95 1896 ஐங்குறுநூறு : 322 19 நற்றிணை : 75 1897 குறுந்தொகை : 352 1912 குறுந்தொகை 104 1898 ஐங்குறுநூறு : 321 1913 குறுந்தொகை : 150 1899 குறுந்தொகை : 162 1914 குறுந்தொகை 122 1900 ஐங்குறுநூறு : 331 1915 குறுந்தொகை : 66 1901 ஐங்குறுநூறு : 348 1916 குறுந்தொகை : 76 1902 ஐங்குறுநூறு : 343 1917 ஐங்குறுநூறு : 423 1903 குறுந்தொகை : 134 1918 குறுந்தொகை : 200 1904 ஐங்குறுநூறு : 259 1919 குறுந்தொகை 138
அவற்றைச் சங்கப் பாடல்களின் தொகுப்புப்பெயர், எண் என்பவற்றுடன் அட்டவணை நிலையில் கீழே தருவது நூலின் அமைப்பையும் தன்மை யையும் விளங்க வைக்கும்.
தமிழர் யப்பானியரது காதற்பாடல்களிலே கருப்பொருள்கள் பயன் படுத்தப்பட்டமையை இவ்வுரைநடைக் காட்சிகள் தெளிவாக விளக்கும். ஒனோவின் ஒப்பீட்டாய்வு செய்யுள் அமைப்பு நிலையிலும் ஒற்றுமைக் கூறுகளை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. இருமொழிப் பாடல்கள் பற்றிய ஒப்பீட்டாய்வைச் செய்ய எண்ணியிருப்போர்க்கும் இந்நூல் விளக்கத்தைக் கொடுக்கும். தமிழில் இவ்வகையில் எழுதப்பட்ட முதல் நூலாகவும் அமைந்துள்ளது. இந்நூல் வெளியீட்டிற்கு யப்பான் நிறுவனம் நிதியுதவியுள்ளமை குறிப்பிடவேண்டியது. காதற் பாடல்களின் ஒப்பீட்டுநிலை ஏனைய புறப்பாடல் பற்றிய ஒப்பீட்டாய்வுக்கும் வழிகாட்டு வதாய் அமைந்துள்ளது. ஓனோவின் ஒப்பீட்டாய்வுச் சூழ்நிலையை இது உணர்த்துகிறது.
இன்றையதிராவிடமொழிஆய்வில்தமிழ்யப்பானிய ஒப்படு
இச்சிறுநூல் அ. சண்முகதாசு பேராசிரியராக நியமிக்கப்பட்ட பொழுது நிகழ்த்திய தொடக்கப் பேருரையாகும். இதில் இன்று திராவிட மொழிகள் உலகிலுள்ள சில மொழிகளுடன் ஒப்பிடுவது பற்றிக் கூறி, யப்பானிய மொழியுடன் தமிழ்மொழி மொழியியல் அடிப்படையிலும்,
128

தமிழர்-யப்பானியர்.
செய்யுள்-இலக்கிய அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் எவ் வாறு ஒற்றுமையுறுகின்றன என்பதற்கு ஓனோவினுடைய முடிபுகளின் அடிப்படையிலே கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
3:2 தொடர் கட்டுரைகள்
தமிழ் யப்பானிய ஒப்பீட்டாய்வு பற்றி ஓனோ எழுதிய தொடர் கட்டுரைகள் இங்கே குறிப்பிடத்தக்கவை. யப்பானிய மொழியிலே இக் கட்டுரைகள் எழுதப்பட்டன. ASAH செய்தித்தாளில் முதலில் 3 கட்டுரை களைத் தொடர்ந்து ஒனோ எழுதியுள்ளார். தமிழும் யப்பானிய மொழியும்’ என்ற தலைப்பில் 1980 இல் இவை வெளிவந்துள்ளன. அதே ஆண்டில் GENGO" என்னும் பெயரில் யப்பானில் வெளிவரும் மாதாந்த இதழில் NIHONGo To TAMIRUGO என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இவை தை மாதம் தொடக்கம் ஐப்பசி வரை பத்துக் கட்டுரைகளாக வெளி வந்துள்ளன. 1983 தை மாதம் தொடக்கம் இன்றுவரை SHIBUNDO வெளி uớì(Đ6Đaö100 KOKUBUNGAKU - KAISHAKU To KANSHO GIGöIgö)ịLb LDITg5!Tị595 995ựốlai) NIHONGo To TAMIRUGONO KANKE என்னும் (யப்பானிய மொழியுடன் தமிழ் மொழியின் தொடர்பு) தலைப்பில் ஒனோ எழுதிய கட்டுரைகள் ஆய்வு வரலாற்றிலேயெ ஒரு சாதனையாகவுள்ளன. ஒப்பீட்டாய்வுக் கருத்துக் களை ஏனையோரும் உடனடியாக அறிந்துகொள்வதற்கு இக்கட்டுரை கள் உதவின.
3:3 கட்டுரைகள்
ஒப்பீட்டாய்வு பற்றி ஒனோ எழுதிய கட்டுரைகளும் பிற யப்பானியர் எழுதிய கட்டுரைகளும், பிறமொழியாளர் பிறமொழியில் எழுதிய கட்டுரைகளும் பல வெளிவந்துள்ளன. தமிழ் மொழியை யப்பானிய மொழியோடு ஒப்பிடும்போது திராவிட மொழிபற்றியும் ஆய்வு செய்யப் பட்டதால் அது பற்றிய கட்டுரைகளும் இங்கு குறிப்பிட வேண்டியவை. ஒனோவின் ஆய்வு பற்றிய கருத்துக்களை வெளியிட்ட யப்பானியர் 56f6b MURAYAMA, TOGUNAGA, KARASHIMA, YAMASITA, OZADA, EAMOTO. KODAMA, OBAYASHi, SASAKi போன்ற பல்துறை சார்ந்த ஆசிரியர்கள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய கட்டுரைகள் பல யப்பானிய மொழியிலும் சில ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. கட்டுரை எழுதிய பிறமொழியாளர்களில் கமில்சுவலபில், ஆஷர், பொன். கோதண்ட ராமன், சண்முகதாஸ், வசெக், மனோன்மணி, மில்லர், WINTERS, SCHFEMAN போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவை தமிழ், ஆங்கிலம், யப்பானியமொழி, செக்மொழி என்பவற்றிலே எழுதப்பட்டுள்ளன. சில கட்டுரைகள் ஆராய்ச்சி மாநாடுகளில் படிக்கப்பட்டவை. இவை பற்றிய விரிவான செய்திகளை இக்கட்டுரையின் பின்னிணைப்பு விளக்கும்.
129

Page 67
மனோன்மணி சண்முகதாஸ்
3:4 கருத்தரங்குகள்
தமிழ்மொழியையும் யப்பானிய மொழியையும் ஒப்பீடு செய்த ஓனோ தன்னுடைய கருத்துக்களை யப்பானிலும், வெளிநாடுகளிலும் கருத் தரங்குகளிலே வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வுடன் தொடர்பு கொண்ட வர்களும் எதிர்ப்புக் கருத்துடையோரும் கருத்தரங்குகளிலே தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். யப்பான், இந்தியா, மலேசியா, இலங்கை, ஜேர்மனி போன்ற நாடுகளிலே நடைபெற்ற கருத்தரங்கு களிலே சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் தமிழ் யப்பானிய ஒப்பீட்டு ஆய்வின் சர்வதேச நிலையினை விளக்குகின்றன. சிறப்பாக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கருத்தரங்கு இந்நிலையைத் துல்லியப் படுத்தியுள்ளது. ஏனைய கருத்தரங்குகளில் யப்பானில் நடைபெற்ற மொழியாய்வு, பண்பாட்டாய்வு தொடர்பான கருத்தரங்குகள் குறிப்பிடத் தக்கவை. இக்கருத்தரங்குக் கட்டுரைகள் பற்றிய செய்திகளும் இக் கட்டுரையின் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.
ஒனோவின் இருமொழி ஒப்பீட்டாய்வு தொடர்பான வெளியீடுகள் எல்லோராலும் அறியப்படவேண்டிவை. இந்த ஆய்வின் வரலாற்றையும் வளர்ச்சியையும் எதிர்காலத்தில் எடுத்துக்காட்டப்போகும் சான்றுகளும் இவையே. இன்னும் ஆய்வைப் பற்றிய கணிப்பையும் மதிப்பீட்டையும் செய்ய உதவும் தரவுகளும் இவையே. இவற்றைத் தொகுத்து ஒருநிலை யிலே காட்டுவதும் இன்றியமையாதது. அது தனியாகச் செய்யப்பட வேண்டியது. கட்டுரையின் பின்னிணைப்பிலே இவை ஓரளவு தொகுக்கப் பட்டுள்ளன. இன்னும் ஆய்வு தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கு களும், ஆய்வோடு தொடர்புபட்ட கருத்தரங்குகளும் குறிப்பிடத்தக்கவை. இந்நிலையில் உலகக் கருத்தரங்குகளின் தொடர்பு ஆய்வு தொடர்பான கருத்து வெளியீடு என்ற நிலையிலே அமைந்தது. ஆனால் ஆய்வின் மதிப்பீடு என்ற நிலையில் யப்பானில் நடந்த சில கருத்தரங்குகள் ஒனோவும் பிற ஆய்வாளர்களும் நேரடியாகவே கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள வாய்ப்பளித்தன." இக்கருத்தரங்குகளை ஒழுங்கு செய் வதில் செய்தித் தொடர்புச் சாதனங்களும் (செய்தித்தாள், தொலைக் காட்சி) பங்குகொண்டதால் பொதுமக்கள் நிலையிலும் ஆய்வு பற்றிய கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. யப்பானில் குறிப்பாக இந்நிலை இருந்தது. பல்கலைக்கழக ஆய்வுக் கருத்தரங்குகளிலே ஒப்பாய்வு தொடர்பான கருத்தரங்குகளும் நடைபெற்றுள்ளன. கக்கயின் பல்கலைக் கழக மொழியியல் நிறுவனம் இந்நிலையிலே பல கருத்தரங்குகளை ஒழுங்குசெய்துள்ளது. ஏறக்குறைய ஆண்டுதோறும் இவ்வகையில் ஒனோவின் ஒப்பீட்டாய்வு கருத்துப் பரிமாற்றத்திற்குள்ளாகியுள்ளது. பிறநாடுகளில் இந்தியாவில் சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை யில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஒல்லாந்தில் STATE UNIVERSITY OF UTRECHT என்பவற்றில் ஒனோவினுடைய ஒப்பாய்வு கருத்தரங்கங்களிலே தோன்றியுள்ளது. ஆனால் தமிழ்மொழி ஆராய்ச்சி என்ற நிலையில்
130

தமிழர் - யப்பானியர்.
இந்த ஒப்பீட்டாய்வு இன்னமும் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளிலே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் இதற்கு இடமுண்டு.
4 ஆய்வு பற்றிய விமர்சனம்
தமிழ் - யப்பானிய ஒப்பீட்டாய்வு பற்றிய வரலாற்றில் அது பற்றிய விமர்சனங்களையும் நோக்கவேண்டியுள்ளது. ஒப்பீட்டாய்வு பற்றி இரு நிலையான விமர்சனங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று யப்பானிய அறிஞர்களது விமர்சனம். மற்றது வெளிநாட்டு அறிஞர்களது விமர் சனம். யப்பானிய அறிஞர்களில் இருவகைப்பட்டோர் இந்த ஆய்வினை விமர்சித்துள்ளனர். அது பற்றித் தனித்து நோக்குவது பயன் தரும்.
4:1 யப்பானியரது விமர்சனம்
இந்த இருமொழி ஒப்பீட்டாய்வைப் பற்றி யப்பானியர் தொடக்க காலத்திலேயே விமர்சித்துள்ளனர். மொழியியல் தொடர்புடையவர் என்ற நிலையில் முரயம, தொகுநக என்னுமிருவரும் குறிப்பிடத் தக்கவர்கள். தொகுநக வடமொழி அறிந்தவர். அதன்மூலம் தமிழ் மொழியுடன் தொடர்பு கொண்டவர். எழுத்து நிலையில் இவரது விமர்சனம் மேலோட்டமானதாகவே அமைந்தது. எனினும் இன்றுவரை இந்த ஒப்பீட்டாய்வு பற்றிய விமர்சனத்தை எதிர்நிலையிலேயே செய்து வருகிறார். வெளிப்படையாக ஆய்வு நோக்கில் ஆழமான விமர்சனம் எதுவும் மொழியியலறிஞரான இவரால் எழுதப்படாதது இங்கு குறிப்பிடத்தக்கது. தொடக்க காலத்தைய கருத்தரங்குகளில் இவர் வெளியிட்ட எதிர்ப்பு நிலையான செய்திகள் மட்டும் செய்தித் தாளில் வெளிவந்துள்ளன.° முரயம திராவிட மொழியிலே தெலுங்கு மொழி பற்றிய ஆய்வைச் செய்தவர். தமிழை விடத் தெலுங்கு யப்பானிய மொழியுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறவில்லை. ஆனால், ஓனோவுடைய ஒப்பீட்டுச் சொற்களின் பொருத்தமின்மை பற்றிக் கட்டுரை எழுதியுள்ளார்.° பதின்மூன்றாவது உலக மொழியியல் மாநாட் டிலே தமிழ் மொழி - யப்பானிய மொழியின் ஒற்றுமை நிலை’ என்ற கட்டுரை மூலம் தன்னுடைய விமர்சனத்தை உலகிற்கு அறிவித்தார். தொடர்ந்தும் சொற்களின் ஒப்பீடு என்ற நிலையில் கட்டுரைகள் வெளி வந்துள்ளன. ஆனால், முரயமவின் விமர்சனக் கருத்துகள் பிழையா னவை எனச் சான்று காட்டி ஓனோவும் கட்டுரைகள் எழுதியுள்ளார். முரயம காலமாகியதால் அந்த விமர்சன நிலையும் மறைந்தது. தெலுங்குச் சொற்களை யப்பானிய மொழிச் சொற்களுடன் ஒப்பிட்டு நோக்கிய முரயம திராவிட மொழிக் குடும்பத்தில் மிகவும் வளர்ச்சி பெற்ற மொழி எனக் கருதப்படும் தமிழ்மொழியில் ஒற்றுமைத் தன்மை மிக்கிருந்ததை ஏனோ ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இதேபோன்று தெலுங்கு மொழியாய்வைச் செய்த KODAMA, முண்ட மொழியாய்வைச்
131

Page 68
மனோன்மணி சண்முகதாஸ்
செய்த OZADA, UCHIDA (தெலுங்கு மொழி ஆய்வு) போன்றோரும் தமிழ் - யப்பானிய மொழி ஒப்பீட்டாய்வை விமர்சனம் செய்தவர்களாவர். UCHIDA தெலுங்கு நாட்டார் பாடல்களை யப்பானிய மொழியிலே மொழிபெயர்த் தவராவார். தமிழ் மொழி பற்றி ஆய்வு செய்யும் EAMOTO வும் விமர்சனம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
மொழியாய்வாளர் என்றில்லாமல் தென்னிந்திய வரலாற்று ஆய்வா ளர் என்ற வகையில் தமிழ்-யப்பானிய ஒப்பீட்டாய்வைத் தொடக்க காலத்திலிருந்தே விமர்சனம் செய்து வரும் கரசிம குறிப்பிடப்பட வேண்டியவர். இவர் தனது விமர்சனக் கருத்தை யப்பானிய மொழி யிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளார்." தென் இந்திய வரலாறு தொடர்பான ஆய்வைச் செய்த கரசிம தென்னிந்தியா விலே சில ஆண்டுகள் தங்கியிருந்தவர். ஆனால், இவருடைய விமர்சன மும் மேலோட்டமான கண்டனமாக இருக்கிறதே தவிர ஆழமான ஒப்பீட்டு ஆய்வுக் கருத்துக்களை மதிப்பீடு செய்யும் ஆற்றலற்ற நிலை யைக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. இவர் உலகத் தமிழாராய்ச்சி மன்றத் தலைவராக இருந்தவரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அடுத்து அகழ்வாய்வு தொடர்பான ஓனோவின் ஒப்பீட்டு ஆய்வுக் கருத்துகளை விமர்சனம் செய்த மானுடவியல் அறிஞர்களான OBAYASH, SASAKI போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஒனோவினுடைய மொழி ஒப்பீட்டு ஆய்வுக்கு துணைச் சான்றாகப் பயன்படுத்திய அகழ்வாய்வுத் தரவுகளை இவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். KYUSHU வில் அகழ்ந் தெடுக்கப்பட்ட தாழிகள் பண்பாட்டு நிலையிலே தமிழர் பண்பாட்டுடன் ஒற்றுமையுள்ளது என்ற ஒனோவின் கருத்தை இவர்கள் ஏற்கவில்லை. இத்தரவுகளை ஒனோ பயன்படுத்துவது தவறு எனக் கருதுகின்றனர். தென்னக அகழ்வாய்வு அறிஞர்களின் துணையோடு ஒனோ அவற்றைப் பயன்படுத்தியுள்ளார். எனினும் யப்பானிய அறிஞர்கள் அதை ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. இன்னும் இவர்கள் இத்தரவுகளை ஆய்வு நிலையிலே ஒப்பிட்டுப் பார்க்கவும் இல்லை. எதிர்காலத்தில் இத்தகைய முயற்சி நடைபெறலாம். யப்பானியரது பண்பாட்டின் மூலம் சீனப் பண்பாடே என்ற கருத்து இன்றுவரை வலியுற்றிருப்பதால் ஒனோவின் கருத்தை யப்பானியர் ஏற்றுக்கொள்வதற்கில்லை. சீன வரிவடிவத்தை யப்பானியர் பெருமளவிலே பயன்படுத்துவதும் சீன சொற்களின் பயன் பாடு யப்பானிய மொழியிலே இன்று பெருமளவாக இருப்பதும் இதற்குக் காரணமெனலாம். வரலாற்றுச் சான்றுகள் தமிழர் யப்பானியர் தொடர்பை இதுவரையில் பிற்பட்ட நிலையிலேதான் எடுத்துக்காட்டு கின்றன. ஆனால் யப்பானியச் சொற்களை மட்டுமே ஒனோ பழந்தமிழ்ச் சொற்களுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். சீனமொழி இலக்கண அமைப் பும் முற்றிலும் வேறுபட்டது. எனவே ஒனோ மொழி ஒப்பீடு செய்து நிறுவும் நிலையிலே பண்பாட்டுச் சொற்களின் துணையுடன் யப்பானியர்,
132

தமிழர்-யப்பானியர்.
தமிழர் பண்பாட்டின் ஒற்றுமையையும் விளக்க முற்பட்டார். பழைய யப்பானிய இலக்கியங்களை, அவற்றின் தரவுகளை" வரலாற்றுச் சான்று களாக ஏற்றுக்கொள்ளும் யப்பானிய வரலாற்று, அகழ்வாய்வு அறிஞர்கள் யப்பானிய பழைய இலக்கியச் சொற்களின் வரலாற்று நிலையை ஏற்க மறுப்பது விந்தையே. வரலாற்று, அகழ்வாய்வு, மானிடவியல் அறிஞர் களும் தமிழ் - யப்பானிய ஒப்பீட்டினைத் தத்தமது ஆய்வு நிலையிலே ஆராய்ந்து கருத்து வெளியிடும்போது அவர்களது விமர்சனமும் விளக்கமுறும். ஓனோவினுடைய துணைச்சான்றுகள் வலுவற்றவை என்பதை ஒப்பீட்டாய்வின் மூலமே அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இளைய தலைமுறையினர் வரிசையில் ஒனோவின் இரு மொழி ஒப்பீட்டை விமர்சிக்கும் YAMASHTA குறிப்பிடத்தக்கவர். தமிழ்மொழியைக் கற்றவர். தென்னகத்தில் சில ஆண்டு வாழ்ந்தவர். மெய்யியல் அறிஞர். மொழியியல் அறிவாளர் என்ற நிலையிலன்றி தமிழிலக்கியத்தைச் சில காலம் கற்றவர் என்ற நிலையில் ஒனோவின் ஒப்பீட்டாய்வைப் பற்றி விமர்சனம் செய்யும் தகுதி பெறுகிறார்.
தற்போது குறுந்தொகையை விரிவாகப் படிக்கிறார். 1995இல் KYOTO வில் நடைபெற்ற கருத்தரங்கிலே ஓனோவின் ஆய்வை விமர்சித்தவர். தமிழ் அறிந்த யப்பானியர் என்ற நிலையில் தனது கருத்துக்களை யப்பானிய மொழியிலே நீண்ட கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்? இவருடைய கட்டுரை ஒனோவின் NIHONGO IZEN நூல் விமர்சனமாக அமைந்துள்ளது. ஓனோவின் நூல் பற்றிய நீண்ட விமர்சனம் எழுதிய முதல் யப்பானியர் இவர் எனக் கூறலாம். ஒனோவின் ஒப்பீட்டாய்வுச் சொற்களில் (ஏறக்குறைய 500) 53 சொற்களை இவர் பொருத்தமற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார். அவற்றை இங்கு தருவது பயனுடைத்து.
யமசித காட்டும் தமிழ்ச்சொற்கள்
kacațu naţţu param makuti katai mūtu paravu muci katal maţțu pari muţțu kavar tampal purru mul kali tavir pāvu müţu kalai vantal pokkaņai amir kāl naţţu pittai im kõman Er pin acul kullir piņai pin anai õńku pațiu putai ār ār cūrai paţi plurai vațam cuval patu vakku vaņtal teli patkar kāval varal
33

Page 69
மனோன்மணி சண்முகதாஸ்
யமசித காட்டும் சொற்கள் பொருள் நிலையிலே யப்பானியச் சொற் களுடன் வேறுபடுவதாகக் காட்டுகிறார். தமிழ்ச்சொற்களின் பொருள் களைத் தமிழ்ப் பேரகராதி, பிங்கலந்தை போன்றவற்றின் விளக்கங் களைக் காட்டுகிறார். சில தமிழ்சொற்கள் வடசொற்கள் எனவும் விளக்கி யுள்ளார். ஒனோவின் இலக்கிய எடுத்துக்காட்டுகளிலும் பொருள் நிலை யில் வேறுபாடிருப்பதை ஒனோ காட்டும் இடைச்சொல் விளக்க எடுத்துக் காட்டுகளால் நிறுவுகிறார். ஆனால் ஒனோவின் கோட்பாட்டு நிலையில் யமசித எடுத்துக்காட்டுகளைப் பொருத்தமற்றவையென உறுதிப்படுத்த வில்லை. ஒலி, பொருள், தொடர்நிலையில் 53 சொற்களும் பொருத்த மற்றவையென நிறுவவில்லை. இவருடைய விமர்சனத்தை, விளக்க நிலை வேறுபாட்டை ஓனோ எடுத்துக்காட்டிக் கட்டுரை ஒன்று எழுதியுள் ளார்? ஓனோவின் இடைச்சொல் பற்றி ஒப்பீட்டாய்வை யமசித விமர்சித் திருப்பது ஒனோவின் ஒப்பீட்டாய்வைக் கூர்மைப்படுத்தியுள்ளது. ஒற்றுமைப்பட்ட சொற்களென ஒனோ எடுத்துக்காட்டிய ஏறக் குறைய 500 சொற்களில் 53 சொற்கள் தவிர ஏனைய ஏறக்குறைய 450 சொற்களை யமசித ஏற்றுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓனோவின் ஒப்பீட்டாய்வை யமசித ஆய்வுநிலையிலே ஒப்பீட்டு விமர்சனம் செய்யாமல் நூல் விமர்சனம் என்ற நிலையிலேயே விமர்சித்துள்ளார்.
ஒனோவினுடைய ஒப்பீட்டாய்வை விமர்சனம் செய்த யப்பானிய அறிஞர்களது நோக்கு சிந்தனைக்குரியது. யப்பானிய மொழியின் மூலம் தமிழ்மொழியுடன் தொடர்புபடுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளாத நிலையே காணப்படுகிறது. பிறமொழி ஆய்வு என்பது தற்போது ஒப்பீட்டு நிலையில் செய்யப்படாது பிறமொழியின் பண்புகளை யப்பானி யருக்கு எடுத்துக்காட்டுவதாகவே அமைகிறது. இன்னும் தென்னிந்திய ஆய்வு என்ற நிலையில் இதுகாலவரை வரலாற்று நிலையான ஆய்வாகவே முனைப்புடன் தொழிற்பட்டுள்ளது. அதனால் ஓனோவின் ஆய்வு யப்பானிய உலகில் வேறுபட்டதொன்றாக அமைகிறது. யப்பானிய உணர்வுக்கு மாறான நிலையிலே ஓனோவின் ஆய்வு செல்வ தாக யப்பானியர் கருதுகின்றனர். இன்றைய யப்பானியர் தமிழ்மொழி யின் தொன்மையையும் பண்பினையும் அறியாதவர். தொடர்புச் சாதனங்கள் மூலம் இவர்கள் அறியும் தமிழ்மொழியும் தமிழரும் மிகவும் பின்தங்கிய நிலையுடையவாக அமைவதாலும் உணர்வு நிலையிலே யப்பானியர் தொடர்புற விரும்பாத நிலையையே காணலாம். விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகளோடு ஒப்பிடும்போது மொழி ஒப்பீட்டாய்வு யப்பானிலே வணிகவளமற்ற ஆய்வாகவும் கருதப் படுகிறது. தமது மொழியின் மூலம் பற்றியறிவதற்கு யப்பானியர் இன்று நேரம் செலவிட விரும்பவுமில்லை. ஆனால் செய்தித்தாள், தொலைக் காட்சி, கருத்தரங்கு, கருத்துப்பரிமாற்றக்குழு போன்ற நிலைகளில் யப்பானிய மொழி பற்றிய செய்திகள் பேசப்படுகின்றன. ஆய்வு விமர்ச னங்களை இவை வரவேற்கின்றன.
34

தமிழர்-யப்பானியர்.
4:2 வெளிநாட்டு அறிஞர்களது விமர்சனம்
வெளிநாட்டு அறிஞர்களில் ஒனோவின் இருமொழி ஒப்பீட்டாய்வை விமர்சனம் செய்தவர்கள் மூவர் குறிப்பிடப்பட வேண்டியவர். அமெரிக்க மொழியியலறிஞரான MLLER இதுபற்றி 1983இல் JAPANESEAND TAMIL என ஒரு கட்டுரையை LANGUAGE என்னும் இதழில் எழுதினார். இக்கட்டுரையிலே ஒனோ சொல் ஒற்றுமையை நிறுவுவதற்காக பொருத்தமற்ற யப்பானியச் சொற்களை எடுத்தாள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். MLLER யப்பானிய மொழியைக் கற்றவர். சில நூல்களும் எழுதியுள்ளார். தனது யப்பானிய மொழியறிவை நிறுவ ஒனோ எடுத்துக்காட்டிய சொற்களை விமர்சித் தார். ஆனால் ஒனோ அதனைத் தகுந்த சான்றோடு விளக்கியபோது MLLER இன் கருத்து கணிப்பிலிருந்து விலகியது. மீண்டும் MLLER 1986 இல் TAMILAND APANESE? என்ற கட்டுரையை BSOAS இல் எழுதினார். இக் கட்டுரை யில் ஓனோவின் ஆய்வுத்தரத்தை மதிப்பிட்டுக் காட்டினார். இவருடைய கருத்து யப்பானிய அறிஞர்களுடைய உணர்வோடு பெரிதும் ஒத்திருந் தது. இதன் பின்னர் இவர் எதுவும் ஒனோவின் ஆய்வு பற்றிக் குறிப்பிட வில்லை.
அடுத்து MILLER இன் மாணவரான SCHIFFMAN குறிப்பிடத்தக்கவர். இவர் MILLER இன் மாணவர். தமிழ்மொழியைக் கற்பிப்பவர். 1981இல் DLANEws இல் KARASHMAதமிழ் - யப்பானிய தொடர்பு பற்றிய கட்டுரையை எழுதிய பின்னர் இவரும் யப்பானிய திராவிட தொடர்புபற்றிய கட்டுரையை எழுதியுள்ளார். மலேசியாவிலே நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரை ஓனோ நேரடியாகவே தனது ஆய்வு பற்றிய கருத்தைக் கேட்டார். SCHIFFMAN “மில்லரே தெளிவாகக் கூறியுள்ளார். அதுவே என் கருத்தும்” என்றார். யப்பானிய மொழியை அறியாதவரெனினும் பிறமொழியாளர் என்ற நிலையில் MLLER ருடைய கருத்தை இவரும் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறமொழி விமர்சகர்களில் கமில்சுவெலபில் ஒனோவின் கோட்பாடு பற்றிய மதிப்பீட்டை 1985இல் கட்டுரையாக வெளியிட்டார். திராவிட மொழியாய்வாளர் என்ற நிலையிலும் தமிழறிவாளர் என்ற நிலையிலும் ஏனைய பிறமொழியாளர்களைவிட இவரது மதிப்பீடு எல்லோராலும் வேண்டப்பட்டது. யப்பானிய அறிஞர்களும் இவரது மதிப்பீட்டின் மூலமே ஒனோவின் ஒப்பீட்டாய்வை ஏற்கலாமென எண்ணினர். கமில் சுவெலபில் முதலிலே ஓனோவின் ஒப்பீட்டாய்வுச் சொற்களை தமிழறிந்த தமிழர் ஒருவர் ஆய்வு செய்து அவற்றின் பொருள்நிலை ஒப்பீட்டைச் செய்யவேண்டுமென விமர்சனம் செய்தார். இன்னும் இரு மொழிச் சொற்களும் ஒற்றுமையுறுவது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கமுடியாது எனவும் கருத்துத் தெரிவித்தார். இதன் பின்னர் அவர்
135

Page 70
மனோன்மணி சண்முகதாஸ்
எழுதிய நூலிலே’ ஒனோவின் ஒப்பீட்டாய்வு பற்றிய மதிப்பீட்டையும் செய்துள்ளார். ‘அடி’ என்னும் தமிழ்ச் சொல்லின் பொருள் ஒனோவால் பிழையாகக் கையாளப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். ஒனோ அச் சொல் தான் குறிப்பிட்ட பொருளில் இலக்கியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளதை எடுத்துக்காட்டி விளக்கிய பின்னர் கமில்சுவலபில் விமர்சனம் எதுவும் கூறவில்லை. குறிப்பாக ஒனோவினுடைய செய்யுள் அமைப்பு ஒப்பீடு பற்றிய கருத்து எதையும் இன்னும் வெளிவிடவில்லை.
WINTERS சும் தமிழ் யப்பானிய மொழித் தொடர்பு பற்றி ரDL இல் கட்டுரை எழுதியுள்ளார்? ஆனால் ஆழமான மதிப்பீடு எதையும் இவர் பின்னர் செய்ததாகத் தெரியவில்லை. யப்பானிய மொழி பற்றிய ஆய்வு மொழியியலாளரிடையே ஒரு தாக்கத்தை விமர்சிக்கும் உணர்வை ஏற்படுத்திய போதும் அது தொடரவில்லை. ஓனோவுடைய கருத்துகள் பெரும்பாலும் யப்பானியமொழியில் வெளிப்படுத்தப்பட்டமையும் இதற் கொரு காரணமாகலாம். வெளிநாட்டு அறிஞர்களிடையே தமிழறிஞர் களின் மதிப்பீடும் வெளிவராமைக்கும் இக்காரணம் பொருந்தும். எதிர் காலத்தில் இந்நிலை மாறக்கூடும்.
ஒனோவின் இருமொழி ஒப்பீட்டாய்வின் கடந்தகால வரலாறு பற்றி அறிய எண்ணுவோர்க்கு இக்கட்டுரையின் செய்திகள் உதவக்கூடும். ஆனால் வளர்ச்சிநிலை பற்றிய செய்திகள் கருத்தளவிலே இங்கு தரப் பட்டதால் சுருக்கமாக அமைந்துள்ளன. யப்பானியமொழியிலே வெளி வந்த நூல்களில் கூறப்பட்டுள்ள விரிவான கருத்துகள் பிறமொழியாக்கம் பெற்றால் பயன்தரும். அவை பற்றிய அறிவின்மையால் ஒனோவின் ஒப்பீட்டாய்வைக் கணிப்பதும் மதிப்பீடு செய்வதும் கடினமாகும். ஆய்வுக்கு ஒனோ பயன்படுத்திய தரவுகள் இருமொழி நிலையிலும் இன்னும் விரிவு பெறவேண்டியுள்ளன. ஒப்பீட்டு நிலையில் பெறப்பட்ட சொற்களின் பண்பாட்டு நிலையான ஒப்பீடும் விரிவாகச் செய்யப்பட வேண்டியது. இருமொழிகளும் நெருங்கிய தொடர்புடையன என ஒனோ முன்வைத்துள்ள கோட்பாடு ஆய்வு நிலைகளால் பொருத்தமற்றது என்று உறுதிசெய்யப்படும்வரை அதைத் தள்ளிவிடவும் முடியாது. அவ்வாறு உறுதி செய்யப்பட்டாலும் தமிழ் ஆராய்ச்சியின் வரலாற்றில் இந்த ஆய்வு இடம்பெற்று நிற்கும். எனவே தமிழாராய்ச்சி மாணவர் களும், ஒப்பீட்டு ஆய்வாளர்களும் தமிழ் - யப்பானிய மொழி ஒப்பீட்டு ஆய்விலே எதிர்காலத்திலே முனைப்புடன் செயற்பட வேண்டிய தேவை யும் உண்டென்பதில் ஐயமில்லை. அதுவே தமிழ்மொழியின் நிலையான இடத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு சான்றாகவும் அமையும்.
136

10.
11.
12.
13.
14.
15.
தமிழர்-யப்பானியர்.
விளக்கக் குறிப்புகள்
g5.6 pts (USyms (TAMIL LEXICON)
பிங்கலந்தை நிகண்டு
நாமதீப நிகண்டு
ROBERT CALDWELL
REW. F. KIT”TEL
GUNDERT. H
BURROW . T & EMENEAU, M.B
IBIO
SANSKRET ENGLISH DCTIONARY
GRIERSON. G.A.
SR! NIVASA AlYANGAR, M
தேவநேயப்பாவாணர். ஞா
MAX MULER
FRANCIS W. ELLS
அகத்தியலிங்கம். ச
UNIVERSITY OF MADRAS. 1982. uds: 1756
பிங்கல முனிவர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1978. பக்: 444
சிவசுப்பிரமணியக் பல்கலைக்கழக மறுபதிப்பு - 1930. பக்: 195,236
கவிராயர், தஞ்சைப்
A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN
ORSOUTH - INDIAN FAMILY OF LANGUAGES, UNIVERSITY OF MADRAS. 1976, P.4.
A KANNADA - ENGLISH DCTIONARY 1894.
MANGALORE, BASEL MISSION BOOK & TRACT
DEPOSITORY.
MALAYALM AND ENGLISH DCTIONARY ASIAN
EDUCATIONAL SERVICES, NEW DELHI, 1982,
DRAVIDIAN ETYMOLOGICAL DICTIONARY, OX
FORD, 1961.
DRAVIDIAN ETYMOLOGICAL DICTIONARY, OX
FORD. 1961.
MONIER WILLIAMS, OXFORD, 1974 (RE)
LINGUISTIC SURVEY OF INDA, MOTELAL BANARSIDAS, DELHI. 1973 (RE)
TAMIL STUDIES, AES. 1982 (RE)
மொழியாராய்ச்சி, சென்னை.
LECTURES ON THE SCIENCE OF LANGUAGE, LoNDON, 1862.
g86uf ugbÉlu @55ll'it DRAVIDIAN ETYMOLOGICAL DCTIONARY (peirgpj60yulá) GSmesů பாளரால் பின்வருமாறு தரப்பட்டுள்ளது. "THE DRAVIDIAN FAMILY OF LANGUAGES WAS
RECOGNIZED AT LEAST AS EARLY AS 1816 BY
FRANCIS W. ELIS IN HIS NOTE TO THE INTRO
DUCTION OF A.D. CAMPBELL's A GRAMMAR OF
THE TELOOGoo LANGUAGE”
திராவிடமொழிகள், பாரிநிலையம், சென்னை. 1976.
137

Page 71
மனோன்மணி சண்முகதாஸ்
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
சுசுமு ஓனோ
சுசுமு ஓனோ
சுசுமு ஓனோ
சுசுமு ஓனோ
SUSUM U SHBA
AKRA FUJIWARA
A. MiNORU Gõ
MURAYAMA SHCHRÖ
24.
25.
26.
27.
28.
29
13
UCH] UDA KHIKO
T. BURROW & M. B. EMENEAU
SUSUMU OHNO
. மு. கு. கட்டுரை
8
ASAHI SHINBUN, EVENINGED.
THE RELATIONSHIP OF THE TAMIL AND JAPANESE LANGUAGES. ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, மதுரை. 1981,
NHONGO ZEN, IWANAM | SH INSHO, TOKYO, 1987. P.242.
"A COMPARATIVE STUDY OF THE JAPANESE AND KOREAN LANGUAGES", KOKUGO TO KOKUBUNGAKU, SHIBUNDO, NO.5 1952.
THE ORIGIN OF THE JAPANESE LANGUAGE, IWANAMI SHOTEN, TO KYõ. 1957.
DRAVIDAGO TO NIHONGO, JINBUNRONSHU ΚΥΟΤΟ OSHIDA, KYόΤο 1973.
JAPANESE AND DRAVIDIAN AND SCYTHAIN, WITH
SPECIAL REFERENCE TO THE WOCABULARY OF
PARTS OF THE BODY, KNK DAIGAKU KYOYO
BUNKEN KYŪKYõ. 1974
NIHONGo No GENRY U Wo MOTOMETE, NlHONBUNKA,4.
NABU Go To NIPPON GO, To KYo. 1973.
தமிழ்மொழியைப்பற்றி அறியாத நிலையிலும்
யப்பானிய மொழியியலறிஞர்கள் திராவிட மொழிகளுள் தெலுங்கையே ஆய்வு செய்த மையாலும் ஒனோவும் இக்காலகட்டத்தில்
தெலுங்கு பற்றி ஆராய்ந் துள்ளார்.
KOKUSAI DRAVIDA GOKENKY Ujo வில் ஆய்வா ளராக இருந்தவர். SHUKAN ASAH1 இல் ஒனோ வின் ஆய்வு பற்றிய இவரது கருத்து வெளிவந் துள்ளது. (9/24) 1982.
DRAVIDIAN ETYMOLOGICAL DICTIONARY OXFORD. 1961.
NHONGO IZEN (WANAMI SHINSHO, Tō KYo.
1987.
THE DERIVATION OF THE JAPANESE:
THE CLOSE AFFINITY BETWEEN THE DRAVIDIAN
AND JAPANESE LANGUAGES:
A STUDYESPECIALLY ON THE TERMS OF RICE CULTURE (INJAP) 1979.

30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
SUSUMU OHNO
NOBURU KARASHIMA
MURAYAMA SH1CH!RO
MUNIO TOGUNAGA
MILLER, ROY ANDREW
அருணாசலம் சண்முகதாஸ்
அருணாசலம் சண்முகதாஸ்
2.VELEBIL KAMII , , V .
SUSUMU OHNO
அருணாசலம் சண்முகதாஸ்
MLLER, ROY ANDREW
ASHER. R., E.
தமிழர் - யப்பானியர்.
SOUND CORRESPONDENCES BETWEEN TAMIL
AND JAPANESE. GAKUSHUIN UNIVERSITY,
To KYO 1980.
COMMENTS ON THE JAPANESE - TAMIL RELATIONS, DLA NEWS, VOL.5, NO.4. 1981.
OHNO HAKASE NO ʻKATTAI (RAIJIN) GOGEN
SETSU, KAISHAKU GAKKAI GEKKAN KI KANSHI, TOKYO. 1983.
SHUKAN ASAHI ga) g(36artesheir guila பற்றிய இவரது கருத்து வெளிவந்துள்ளது. 1982.
REVIEW OF S.OHNO's NIHONGOTO TAMIRUGO. LANGUAGE. 59(1983) 207 - 1 1. 1981.
யப்பான் நிறுவனப் புலமைப்பரிசில். (1983 - 1984) ஆய்வறிக்கை "A COMPARATIVE STUDY OF THE CULTURAL WORDS IN JAPANESE AND TAMIL LANGUAGES.”
"A COMPARATIVE STUDY OF KAMI WoRSHP IN JAPAN AND GANESHA WoRSHIP (N JAFFNA."
XXXI INTERNATIONAL CONGRESS OF HUMAN
SCIENCES IN ASIÁ, AND NORTH AFRICA, PROCEEDINGS. PP. 1059 - 1060: 1983.
"TAMIL AND JAPANESE - ARE THEY RELATED? THE HYPOTHESIS OF SUSUMU OHNo;” BSOAS XLVII 1, 1 16 - 20 1985.
"JAPANESE-TAMIL RELATIONSHIP” 1986.
KOKUSAI GENGO GAKUSHO KAIGI HAPPYO),
BERINO,
"JAPANESE - TAMIL RELATIONSHIP: SUPPORTING EVIDENCES FORS. ONO’S HYPOTHESIS”, KOKUSA
GENGO GAKUSHO KAIIGI HAPPYO; BERLINO. 1986.
BSOAS XLIX 2, 557 - 60. 1986.
"TAMIL AND JAPANESE : SOME TYPOLOGICAL
ANALOGIES" ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர். 1987.
139

Page 72
மனோன்மணி சண்முகதாஸ்
42. மனோன்மணி சண்முகதாஸ்
43. குருராஜராவ் B. K.
44. ரகுபதி. பொ
45. நாகராஜராவ்
46. OHNO SUSUMU
47. YAMASHITA HIROSHI
48. மு. கு. நூல்
49. SUSUMU OHNO
50. சுசுமு ஓனோ
51.
52.
53.
54.
55. சுசுமு ஓனோ
56. மணிமேகலை
140
"தமிழர் - யப்பானியர் காதற் பாடல்களில் அகப்பொருள் மரபு : ஓர் ஒப்பீட்டாய்வு" ஆறாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர். 1987.
COMPARISON OF SOUTH INDIAN MEGALITHIC
CULTURE AND THE YAYO CULTURE IN JAPAN,
LANGUAGE INSTITUTE, GAKUSHUN UNIVERSITY,TOKYO. 1991.
COMPARISON OF SOUTH INDAN MEGALITHC
CULTURE AND THE YAYOI CULTURE IN JAPAN;
TOYO BUNKA KENKYUJO, GAKUSHUIN UNIVERSITY, TOKYO. 1991.
COMPARISON OF SOUTH INDIAN MEGALTHC
CULTURE AND THE YAYO CULTURE IN JAPAN;
TOYO BUNKA KENKYUJO, GAKUSHUIN UNIVERSITY, TOKYO. 1992.
NIHONGO NO KIGEN SHINHAN WO MEGUTTE
KOKUSAI NI HON BUNKAKENKYU SENTA. KYO TO 1995.
SOME REMARKS ON SO - CALLED TAMIL -
JAPANESE GENEALOGICAL HYPOTHESIS. PROPO
SED BY PROF. SUSUMU OHNO FROM A
TAMILOLOGIST POINT OF VIEW. KUKUSAI NIном вuNKA KENKYU SENTA, кyото. 1995.
NIHONGoTo TAMIRUGo No KANKEI (RELATIONS BETWEEN JAPANESE AND TAML) KOKU BUNKAKU KAISHAKU To KANSHO, SHIBUNDo., TOKYO 1983.
NA HONGO IZEN, P. 246
மு.கு. நூ.PP.247-248
மு.கு. நூ.PP. 250-289
மு.கு.நூ.PP. 10-34
மு.கு. நூ.PP.42-46
NI HONGO NO KIGEN, IWANAMI SHINSHO, TõKYõ. 1994.
சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை. 6:65 - 69; 1975

57.
58.
59.
6O.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
சுசுமு ஓனோ
மன்யோசு
சுசுமு ஓனோ
சுசுமு ஓனோ
தினைமொழியைம்பது
PUA MAI
SUSUMIU COHNO
GURURAJA RAO. B.K.
NARAST MHAIAH B.
SUSUMU OHNO
ASHA-H] S-H!NBUN
TOGUNAGA MUNO
MURAYAMA SHICHIRO)
KARAS-MA NOBURU
кој!кi
NIHONSHOK
YAMASHITA HIROSHI
SUSUMU OHNO
KAM L. V. ZVELEBIL
WINTERS. C. A
தமிழர்-யப்பானியர்.
NIHONGO NO KIGEN. PP. 160 - 173
IWANAM1 SHOTEN, To KYo 1957 - 62.
NIHONGO NOKGEN; PP. 179 - 81
மு. கு. நூல். பக். 179-81
“PROSODY OF CANKAM AND JAPANESE TANKA IN 5 - 7 - 5 - 7 - 7 SYLLABLE METER.", PULAMAl VOL. 19. No. 2. PP. 40 - 68 QFeireneur. 1993.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை. பாடல் : 35 1976.
Geirabeat. 1993.
NHONGO TO TAMRU GO NO KANKE, KOKU BUNKAKU KAISHAKU To KANSHo: Tõ KYõ
MEGAILITHIC CULITURE IN SCUTH INDIA, MYSORE. 1974.
NEOLITHIC AND MEGALTHC CULTURE IN
TAMIL, NADU DELHI. 1980.
JAN - OCT., “TAMIL AND JAPANESE. A COMPARATIVE STUDY” GENKO, TAISHUKAN, TOKYO.
1980.
கருத்தரங்கு. "யப்பானிய மொழியின் மூலத் தைத் தேடி "
SHUKAN ASHAHI, Tô KYô 1982.
OHNo HAKASE NO KATTAJ (RAIJIN) GoGENSETSU, KASHAKU GAKKA GEKKANKKANSHi 336; 1983,
மு. கு. கட்டுரை
WANAM sHoTEN, TõKYõ. 1958.
WANAM sHoTEN, TõKYõ. 1965-67.
மு. கு. கட்டுரை
TAM RUGO -- NIHONGO DOKESETSU NI
TAISURU HIHAN WO KENSHO SURU. 1996.
DRAVIDIAN LINGUISTICS AN INTRODUCTION.
PONDCHERRY INSTITUTE OF LINGUISTCS AND
CULTURE PONDICHERRY. P. P. 116 - 122. 1990.
FURTHER NOTES ON JAPANESE AND TAMIL,
JDL, 13, 2, PP. 347-353. 1984.
141

Page 73
மனோன்மணி சண்முகதாஸ்
Asher, R. E.
Balambal, V. N.
Balambal, V. N.
Burrow, T.
Burrow, T. and Emeneau, M. B.
Burrow, T.
Caldwell, Robert
Emeneau, M. B.
Fujiwara, Akira
Fujiwara, Akira
Fujiwara, Akira
Fujiwara, Akira
Fujiwara, Akira
Gnanasundaram V.
Gururaja Rao, B. K.
Hattori, S.
142
Bibliography
*Tamil and Japanese : Some Typological Analogies", VI International Conference - Seminar of Tamil Studies, Kuala Lumpur, 1987.
"Japanese and Indian Scholars clash over the theory that "The Roots of the Japanese lie in Tamil”, JDL, 12 : 1, 1983, pp. 215-26.
"Japanese Language Through A Tamil-Eye", Pulamai Publications, Madras, 1989.
"Onomatopoeic Expressions in Tamil and Japanese Languages", Uyarayvu No. 1, University of Madras, 1983.
"The Body in Dravidian and Uralian", BSOAS, XII : 2, London, 1944.
ADravidian Etymological Dictionary, Oxford, 1960.
"The Loss of initial C, S in South Dravidian", Collected Papers on Dravidian Linguistics, Annamalainagar, 1968.
A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages, (Reprinted), Madras, 1976.
"Numerals in ComparativeLinguistics” (with special reference to Dravidian), Collected Papers Dravidian Linguistics, Ethnology and Folktales, Mysore, 1967. Basic Japanese Grammar, Tokyo, 1967. "Japanese, Dravidian and Scythian with special reference to the vocabulary of parts of the body", Bulletin of the Faculty of Arts and Sciences, Kinki University, 1974 Dec.
"Japanese and Dravidian with special reference to words beginning with original k-", Bulletin of the Faculty of Arts and Sciences, Kinki University, 1975 Dec.
"The Body in Japanese and Dravidian", Bulletin of the Faculty of Arts and Sciences, Kinki University, 1976 Jan. "The Japanese - Dravidian vocabulary of Flora and Fauna”, Kokusaigengokagakukenkyujoho, Sangyo University, Kyoto, 1981.
Onomatopoeia in Tamil, Annamalainagar, 1985. Megalithic Culture in South India, Mysore, 1974. Nippon go no keito, Tokyo, 1959.

Hulbert, H. B.
lemoto Taro
Karashima, Noboru
Kodama, Nozomi
Konow, S.
Kothandaraman, Pon.
Kothandaraman, Pon.
Kothandaraman, Pon.
Lal, B. B.
Mabuchi, Kazuo (Ed.)
Manonimani Sanmugadas
Manonimani Sanmugadas
Manonimani Sanmugadas
Manonmani Sanmugadas
Meenakshi Sundaran, T. P.
Menges, K. H.
தமிழர்-யப்பானியர்.
A Comparative Grammar of the Korean and the Dravidian Languages, 1905.
"A Note on Dr. Ohno's Hypothesis", (Japanese) Bulletin of International Research Center for Japanese Studies, No.13, Kyoto, 1996.
"Comments on the Japanese-Tamil Ralations", DLA News, Vol. 5, No.4, 1981. "From a Dravidian Linguistic Point of View” Bulletin of International Centerfor Japanese Studies, No. 13, 1996. "Munda and Dravidian Languages", in G. A. Grierson : Linguistic Survey of India, Vol.4, Calcutta, 1906. "Linguistic Affinities Between Dravidian and Japanese", Presented at the International Congress of Linguistics, Tokyo, 1982 / In Dr. K. Mabuchi (Ed.) The Origins of the Japanese Languages, Tokyo, 1985. A Comparative Study of Tamil and Japanese, International Institute of Tamil Studies, Madras, 1994. "Japanese and Dravidian Languages", Paper Presented
to the Eighth International Conference / Seminar of Tamil Studies, Thanjavur, 1995.
"From the Megalithic to Harappa: Tracing Back the Graffiti on the Pottery”, Ancient India, No. 16, 1962.
The Origins of the Japanese Language, The International Collection of Essays, Tokyo, 1985.
"Treatment of nature in the love poems of Cankam texts and Manyoshu” (in Japanese). XXXIIIrd In
ternational Conference of Orientalists in Japan, Tokyo, 1988.
"Manyoshu Poems and Old Tamil Poems" (in Japanese), Bun Gaku, Iwanami Shotten, Tokyo., Vol.56: 11, 1988.
"Birds in Manyoshu and Cankam Love Poems", XXXVIth International Conference of Orientalists in Japan, Tokyo, 1991.
"Onomatopoeic Words in Tamil", Bulletin of the Language Institute of Gakushuin University, No. 13, Tokyo, 1990.
A History of Tamil Language, Poona, 1965.
"Dravidian and Altaic", Central Asiatic Journal, Vol.XIX, No.3, 1975.
143

Page 74
மனோன்மணி சண்முகதாஸ்
Menges, K. H.
Miller, R. A.
Miller, R. A.
Minoru Go
Minoru Go
Murayama, Schichiro
Murayama, Schichiro
Murayama, Schichiro
Murayama, Schichiro
Murayama, Obayashi
Narasimhaiah, B.
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
144
"Dravidian and Altaic", Anthropos, 72, 1977, pp. 12979.
"Japanese and Tamil", Language, 59 : 1, 1983, pp. 207-11.
"Tamil and Japanese", BSOAS, 49:3, 1986.
"In Search of the Origin of Japanese", Nihon Bunki, No.4, 1979.
A Comparative Study of Papuan and Japanese, Shibundo, Tokyo, 1980.
"The Origin of the Japanese Language", The Journal of Japanese Ethnology, Tokyo, 1971.
“Nampogo to Nippongo N. Egami and S. Ohno”, Nippon go no Nazo, Tokyo, 1973.
“Ono hakase no “kattai” (raijin) gogensetsu” (Ono’s Theory about the origin of the word 'kattai’), Kaishakugakkaigekkankikanshi, 336, 1983.
"Ono hakase no tamirugosetsu” (Ono's Theory about Tamil), Nihongogaku, 3: 9, 1984, pp. 75-79.
Nippongo no Kigen, Tokyo, 1973.
Neolithic and Megalithic Cultures in Tamilnadu, New Delhi, 1980.
"A Comparative Study of the Japanese and Korean Languages", Kokugo to Kokubungaku, Shibundo, No.5, Tokyo, 1952.
The Origin of the Japanese Language, Iwanami Shoten, Tokyo, 1957.
"The derivation of the Japanese Language: The close affinity between the Dravidian and the Japanese Languages: A study especially on terms of rice culture", Asahi Shinbun (Tokyo Daily Newspaper), Evening edition, 13.10.1979.
Nihongo no Seiritsu, Chuokoron Sha, Tokyo, 1980.
Sound Correspondences between Tamil and Japanese (English), Gakushuin University, Tokyo, 1980.
"Tamil and Japanese: A comparative study", Gengo, Jan. - Sept., Taishukan, 1980.
"Tamil and Japanese : (No. 1)", Asahi Shinbun, 27.11.1980,
"Tamil and Japanese : (No.2)", Asahi Shinbun, 8.2.1980.

Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu., Sanmugadas, A.,
& Manonmani, S.
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohno, Susumu
Ohnu, Susumu
Ohno, Susumu., Saburo Fujita.',
and Ponnampalam Ragupathy
Ohnu, Susumu
தமிழர்-யப்பானியர்.
"The relationship between Tamil and Japanese Languages" (English), Proceedings of the Vth International Conference 1 Seminar of Tamil Studies, Madurai, 1981.
"Tamil and Japanese : (No.3)”, Asahi Shinbun, 26.1. 1981.
Nihongo to tamirugo, Shinchosa, Tokyo, 1981.
"Correspondences between Tamil and Japanese : A reply to S. Murayama (English)", Kokugogaku, No. 130, Sept., 1982.
"The loss of initial c - in Tamil and s - in Japanese (English)", The Department Journal of Tamil, University of Madras, 1983.
"A study on the relationship between Tamil and Japanese : Intervocalic stops in the two Languages (English)” International Journal of Dravidian Linguistics, XII : 2, 1983.
"The relationship between Tamil and Japanese”, Kaishaku to kansho, Tokyo. From 1983 onwards. More than 80 articles have appeared.
“Murayama Schichiro shi ni koteru. Yoriyoi Tamirugaku no tame ni” (An answer to Mr. Murayama Schichiro-For a better study of Tamil), Nihongogaku, 3 : 9, 1984, pp. 80-83.
Worldview and Rituals among the Japanese and Tamils (English), Gakushuin University, Tokyo, 1985.
Nihongo Izen, Iwanami Shotten, Tokyo, 1987.
"The Genealogy of the Japanese Language:Tamil and Japanese”, Gengo Kenkyu, 95, Tokyo, 1989, pp. 32 - 63.
“Nihon to wa nanika to iu koto”, Nihongo kenkyu : Gengo to Densho (Japanese Studies: Linguistics and Tradition), Ohno Susumu 70th Birthday Felicitation Volume, Kadokawa Publishers, Tokyo, 1989.
“Prosody of Cankam and Japanese Tanka in 5 - 7, 5-7 - 7 Syllable Meter", Pulamai Vol. 19:2, Madras, 1993.
Nihongo no Kigen, Iwanami Shinsho, Tokyo, 1994.
Graffiti of Southern India and Japanese Signs, Tokyo, 1994.
"Japanese and Korean Languages", 8th International Conference Seminar of Tamil Studies, Thanjavur, 1995.
145

Page 75
மனோன்மணி சண்முகதாஸ்
Ohno, Susumu
Osada, Toshiki
Ragupathy, Ponnampalam
Ragupathy, Ponnampalam
Ramachandran, K. S.
Ramanna, H. S.
Sanmugadas, A.
Sanmugadas, A.
Sanmugadas, A.
& Manonimani Sanmugadas.
Sanmugadas, A.
Sanmugadas, A.
Sanmugadas, A.
Sanmugadas, A.
146
“Tamirugo - Nihongo Dokei Setsuni Taisuru Hihan
Wo Ken Shosuru', Bulletin of International Research Center for Japanese Studies, No. 14, 1996.
"Froma Natural Anthropological and Archaeological, Ethnological Point ofView”, Bulletin ofInternational Research Center for Japanese Studies, No. 13, 1996.
Early Settlements in Jaffna. An Archaeological Survey, Madras, 1987.
"Comparison of South Indian Megalithic Culture and the Yayoi Culture in Japan", Language Institute, Gakushuin University, Tokyo, 1991. Dr. S. K. Gururaja Rao gave a Lecture on the same subject to the Institute in 1991. Dr. Nagaraja Rao delivered a Lecture on the same subject to the Institute of Oriental Culture, Gakushuin University in 1992.
Archaeology of South India-Tamilnadu, New Delhi, 1980.
Megalithic of South India and South East Asia - A Comparative Study, Madras, 1983.
"A Comparative study of some Aspects of the Culture and Language Depicted in Kojiki and Old Tamil Literary Texts", Report Submitted to Japan Foundation, Tokyo, 1983.
"A Comparative study of Kami worship in Japan and Ganapathy worship in Jaffna", Proceedings of the 31st International Congress of Human Sciences in Asia and North Africa. Ed. Yamamoto Tatsuro, The Toho Gakkai, Tokyo, 1984, Vol. 11. pp. 1059 - 61.
Cultural Similarities between Japanese and Tamils: A View through their words", Journal of the Institute of Asian Studies, Madras, Vol.4 : 1, 1986, 83 - 110.
"Japanese-Tamil Relationship: Supporting evidences for Susumu Ohno's Hypothesis", XIVth International Congress of Linguists, Berlin (GDR), 1987.
"A Comparison of Tamil - Japanese Quality Words", VIth International Conference / Seminar of Tamil Studies, Kualalumpur, 1987.
"Japanese-Tamil Relationship : 1/r Alternation", The Sri Lanka Journal of South Asian Studies, Vol. 1: 1, University of Jaffna, 1987.
"A Comparative Study of case particles in Japanese and Tamil", XXXIIIrd International Conference of Orientalists in Japan, Tokyo, 1988.

Sanmugadas, A.
Sanmugadas, A.
Sanmugadas, A.
Sanmugadas, A.
Sanmugadas, A.
Schiffman, Harold F.
Shiba, Susumu
Shiba, Susumu
Shiba, Susumu
Shiba, Susumu
Suseendirarajah, S.
Vacek, J.
Vacek, J.
Winters, C. A.
Winters, C. A.
தமிழர்-யப்பானியர்.
"Mountain worship among the Japanese and the Tamils", Kailasapathy Commemorative Volume, Jafna, 1988.
"A Comparison of Japanese 1 was and Tamil / el", Transactions of the XXXVIth International Conference of Orientalists, The Institute of Eastern Culture, Tokyo, 1991.
The Present State of Dravidian Studies and the Tamil -Japanese Relationship Inaugral Lecture, University
of Jaffna, Sri Lanka, 1993.
"Ohno Susumu', The Encyclopedia of Languages and Linguistics, in Ten Volumes, Ed. R. E. Asher, Peragamon Press, Oxford, 1993.
“Dravidian Metaphony and Japanese - Tamil Relationship", Paper presented for a Panel Discussion, 8th International Conference - Seminar of Tamil Studies, Thanjavur, 1995.
"Japanese-Dravidian Connections", DLANews, Vol. 5, No. 5, 1981.
"Thinking in Old Japanese", Jinbun Ronso, No. 18 &19,1970.
"Dravidian Languages and Japanese" (in Japanese), Jinbunronshu, Nos. 1 & 2, Kyoto Women's University, 1973 Dec. & 1974 Dec.
"Dravidian and Japanese" (in Japanese), Gendai no esprit, SpecialVolume, 1980, pp. 219-45.
"Dravidian and Japanese : A Comparison between Numerals” (in Japanese), Paper presented to the Japan Folklore Conference (Nihonminzokugakkai),
974.
"Japanese - Tamil Cultural Relationship : A Critical Analysis of Ohno's Proposition”, Sri Lanka Journal of South Asian Studies No. 1, 1986.
“The Dravido - Altaic Relationship“, Archiv Orientalni, 55, 1987.
"Dravidian and Mongolian : Summary of Results", 8th International Conference - Seminar of Tamil Studies, Thanjavur, 1995.
"Further Thoughts on Japanese - Dravidian Connections”, DLA News, Vol. 5, No. 9, 1981.
"Further notes on Japanese and Tamil", JDL, 13:2, 1984, pp. 347 - 53.
147

Page 76
மனோன்மணி சண்முகதாஸ்
Yamashita, Hiroshi
Zwelebili, Kamil V.
Zvelebil, Kamil V.
Zvelebil, Kamil V.
சண்முகதாஸ், அ.
சண்முகதாஸ், அ.
சண்முகதாஸ், அ.
சண்முகதாஸ், அ.
சண்முகதாஸ், அ.
சண்முகதாஸ், அ.
சண்முகதாஸ், அ. மனோன்மணி சண்முகதாஸ்
சண்முகதாஸ், அ.
சண்முகதாஸ், அ.
மனோன்மணி சண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ்
148
"Some Remarks on So - Called Tamil - Japanese Geneological Hypothesis Proposed by Prof. Susumu Ohno: From a Tamilologist Point of View", Bulletin of International Research Center for Japanese Studies, No. 13, 1996.
"Tamil and Japanese - Are they related? The Hypothesis of Susumu Ohno” BSOAS, XLVIII, i, l985.
"Dravidian and Japanese Once Again", Paper presented at the Seminar - Symposium on "Nihon Bunka to Nihongo” (Japanese Culture and Language), Organised by Asahi Shimbun in collaboration with Kadokawa Publishers, Tokyo, 28 August, 1989.
Dravidian Linguistics An Introduction, Pondicherry Institute of Linguistics and Culture, 1990.
“யப்பானில் தமிழ்” எண்பத்திரண்டில் தமிழ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1982.
“யாழ்ப்பாணத்திலிருந்து யப்பான்வரை', ஈழமுரசு, வாரவெளியீடு, 192.1984 26.3.1984
"தமிழ் - யப்பானிய தொடர்பு பற்றிய ஆய்வின் இன்றைய நிலை” ஈழமுரசு இரண்டாவது ஆண்டு மலர், யாழ்ப்பாணம், 1986, "யப்பானிலும் தைப்பொங்கல்", சுசுமு ஓனோவின் “Pongal Festival in Japan” at 6irgri 3660 usair 516 présib, வாழும் தமிழ் உலகம், தமிழ் உலக வெளியீடு, மேரிலாண்ட், அமெரிக்கா, 3 : 4 & 5, 1986.
"இந்து - சிந்தோ வழிபாடும் நம்பிக்கைகளும்" இந்து நதி, கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு, 1987 "தமிழ் - யப்பானியத் தொடர்பு : ஒரு மதிப்பீடு" மாதாந்தக் கருத்தரங்கு இந்து கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சு, கொழும்பு 1990.
தமிழ் மொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்பீடு, சுசுமு ஓனொவின் Nihong01zen என்னும் நூலின் ஒரு பகுதியின் தமிழாக்கம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு, 1990 இன்றைய திராவிடமொழியாய்வில் தமிழ் யப்பானிய ஒப்பீடு தொடக்கப் பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
993.
தமிழ்மொழி இலக்கண இயல்புகள், மூன்றாம் பதிப்பு, பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு, 1998 "இலக்கியத்தில் தமிழர் யப்பானியர் வாழ்வியல்" ஈழநாடு, 1921984,
"தமிழர் யப்பானியர் சமூகங்களிற் பெண்கள்", ஈழநாடு, வாரவெளியீடு 13.84 1484.

மனோன்மணி சண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ்
மனோன்மணி சண்முகதாஸ்
தமிழர் - யப்பானியர்.
"தமிழர் யப்பானியர் வாழ்வில் வழிபாடு", ஈழநாடு, 303.1984
"நேமியனைத்துமவளாட்சி தமிழர் யப்பானியர் வழிபாடு பற்றிய ஓர் ஒப்பீட்டாய்வு', சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிவத்தமிழ்ச் செல்வி மணிவிழாச் சபை, துர்க்காபுரம், தெல்லிப்பளை, 1985.
"தமிழ் யப்பானியப் பாடல்களில் அகப்பொருள் மரபு ஓர் ஒப்பீட்டாய்வு" ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர், 1987 "தமிழர் - யப்பானியர் செம்பொங்கல்”, தினகரன், 帕89.02.19,
மன்யோசு காதற் பாடல்கள், மொழிபெயர்ப்பு, காந்தளகம், சென்னை, 1992
"மன்யோசு - சங்க இலக்கியக் காதற் காட்சிகள்", தினகரன் வார வெளியீடு, 16.1990, 8.6.1990. மன்யோசு காதற் காட்சிகள், தமிழ்ச்சங்கம், கொழும்பு, யப்பான் நிறுவன நிதியுதவியுடன் வெளியிடப்பட்டது. 1992 "தமிழர் யப்பானியர் வழிபாட்டு நடைமுறைகள் , பரமேஸ்வரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பூரீ பரமேஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேக மலர், 1992 யப்பானிய மொழியைத் தமிழிற் கற்க, காந்தளகம், சென்னை, 1992
யப்பானியக் காதற் பாடல்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2000.

Page 77


Page 78

2ροαν και ερε π2oo.oo
歴