கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு வேரும் விழுதும்

Page 1ல ்ல்ம
நட“ ய 1
ருடன்‌ ஷர.
1௬ 1
ட

உர பாடு)
ஷக்‌
சள

ட்ட

 

 

மட
ச்‌

 

வெலள்றிர னிவ டட

ன்‌ சொல த்க் டட

  
  

“ஷி,

 

 

 


Page 2 

 


Page 3 

௬. இராசரத்தினம்‌


Page 4முதற்பதிப்பு ................. யூன்‌ 2007.

பதிப்புரிமை ............... ஆசிரியருடையது.

[5111 978-0-9783337-0-6

(௦ 712/7 782..1/௦. 704678.2, (சரன்‌

நூலாசிரியர்‌
சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌

புத்தக வடிவமைப்பு
சந்துரு துரைராசா

அட்டைப்படம்‌
கருணா
டியி வரைகலை அமையம்‌. -

அச்சிட்டது

விவேகா அச்சகம்‌, ரொரெண்டோ, கனடா.

இயம்‌ 110௨110

181011 11௦771182௦ 45800171௦1
- 38விகரிவுக றக
.. [0100ம௦, 01471. 111 116
(281808.
1௦1: 416-573-7332

41 $ 20.

ரடைரால்‌

என்னுடன்‌ பிறந்து

உடல்‌ வருந்த உழைத்து வாழ்‌!
என்‌ ௮ண்ணன்‌

அமரர்‌ சுப்பிரமணியம்‌ தெய்வேந்‌
அவர்களுக்கும்‌...

சருவ. என்‌ மடியில்‌ தவழ்‌
ர ரம மார்பில்‌ நடை பயி
தமிழீழ விடுதலை

   

மொழி

இனம்‌

நாடு

மனிதம்‌

இவற்றை வளர்க்கவும்‌
இவற்றின்‌ தனித்‌ தன்மை பேணவும்‌
இன்னுயிரை ஈந்தார்க்கும்‌ .....

 

 


Page 5பபப யூன்‌ 2007.

பப்ப ஆசிரியருடையது.

337-0-6

704676.2, (211844

£சரத்தினம்‌

மையம்‌.

ரொரெண்டோ, கனடா.

5800181101
6
11116

2

அடவெய்யட்டு ட

ரடைரால்‌...

என்னுடன்‌ பிறந்து

உடல்‌ வருந்த உழைத்து வாழ்ந்த
என்‌ ௮ண்ணன்‌ ப

அமரர்‌ சுப்பிரமணியம்‌ தெய்வேந்திரம்‌
அவர்களுக்கும்‌...

 

என்‌ மடியில்‌ தவழ்ந்து

மார்பில்‌ நடை பயின்று

தமிழீழ விடுதலைக்காய்‌ நடந்து சென்று
வித்தாகி விட்ட மருமகன்‌

அமரர்‌ குணரத்தினம்‌ பிருதுவிராஜ்‌
அவர்களுக்கும்‌.....

    
 
 

மொழி

இனம்‌

நாடு

மனிதம்‌

இவற்றை வளர்க்கவும்‌
இவற்றின்‌ தனித்‌ தன்மை பேணவும்‌
இன்னுயிரை ஈந்தார்க்கும்‌ .....

  
 


Page 6 

 

கடம அம்‌ ன்‌
கவ்‌ தரவ ன அழகன 209 டத ல


Page 7 

 

 

 

(மாடு ஏசி மாம
நனையாமல்‌ ம மாம எழா
மயமாக சிராம2ா9மி) சறட (பாடி) பவ்ெொெஒ ம.மமம றா

ஞு ஓ ௬ வு

மம்‌

வலில,
்‌]

      

சரிடா ஒவ 6/9 பமா ௫ இஓயடி௰ய( 221.2 மரீரூ “19 - 1௪) ட ப
பற ழும்‌ மயம்‌ ரா்டி ரா ராலரூத முயாமலு [ம ட] 50. ட |
- புலஒஞனுகி௫ுய்ு எம படு எவ்ம்டி பலம்‌ ல.“ ராட்‌ கரி ஐ பியர்‌

ட ௩ டம்‌ 1) ப பிபபுபுப

இயாவா :எயாறமமடு [ேழர ரானார்‌ ஈன்‌ மட யாபலமாம
ராஷ்டி மராம்‌ “வாறான்‌ “மாய “மாமு [யன படிய ழு
“1மூடிய(ு [00 மூடா யாது [வோடுபூடாடகு மரம ரர” 7002 மெ(ரமுஎ

எண ஆரதி! ர கவவவ வானை
உ ்‌்‌

ர்க்‌
ட்ட ஆ எத்‌ எலி ழா ரய எவ
(ஸூ) ஏன இதழும்‌ ஏரு
0) / டட
ட க

 

 

 


Page 8 

 


Page 9அணீந்தூரறை

திரு. பொ. கனகசபாபதி

முன்னாள்‌ பல்‌ கலாச்சார ஆலோசகர்‌.
ரொரண்டோ மாவட்ட கல்விச்சபை, கனடா.
முன்னாள்‌ அதிபர்‌ மகாஜனக்‌ கல்லூரி

தெல்லிப்பளை, இலங்கை.

தம்பி இராசரத்தினம்‌ என்னைப்‌ பிரமிக்க வைத்துள்ளார்‌.
அவர்‌ சிந்தனைகள்‌ அவருக்கே உரித்துடைய தனித்‌
தன்மை மிக்கவை. வாசிப்போர்கள்‌ அவரது கருத்தில்‌
முரண்படலாம்‌, கூற்றுக்களுக்கு அங்கீகாரம்‌ தர
மறுக்கலாம்‌, ஆனால்‌ எவருமே அவற்றில்‌ உள்ள
எதார்த்தத்தை மறுப்பதற்கில்லை.

சிந்தனையின்‌ வாயிலாக எழுபவை வினாக்களா?
அல்லது வினாக்கள்‌ மூலமாக எழுவது சிந்தனையா?
பொதுவாகவே பெரும்பாலோர்‌ தமது சிந்தனைகளுக்குப்‌
பலம்‌ சேர்ப்பதற்கு மற்றையோருடைய கருத்துக்களையும்‌
உதவிக்கு அழைப்பதைக்‌ காணமுடியும்‌. நண்பர்‌
இராசரத்தினம்‌ இதில்‌ இருந்து வேறுபட்டூ நிற்கிறார்‌...
அவரது சிந்தனைகளுக்கு ஊட்டம்‌ கொடுத்தவை
வள்ளுவரும்‌, திருமூலரும்‌, சங்க இலக்கியங்களும்‌
இன்னும்‌ பலர்‌ எழுதிய நூல்களாக அமையலாம்‌.
அனால்‌ அவரது சிந்தனை தற்சிந்தனை. பல நேரடி
அனுபவங்களின்‌ விளைவுகள்‌. வேறொருவரைத்‌ தன்‌
உதவிக்கு அழைக்காத தன்முனைப்புள்ளவர்‌ அவர்‌.

புலம்‌ பெயர்‌ வாழ்‌ தமிழர்களிடையே ஏற்பட்ட வாழ்வியற்‌
சிக்கல்கள்‌ பலராலும்‌ அவதானிக்கப்‌ படுபவை, பெருந்‌

[|


Page 10தொகையினரால்‌ அனுபவிக்கப்‌ பட்டவை, எல்லோராலும்‌
உணரப்பட்டவை, ஆனால்‌ அதற்குத்‌ தீர்வு யாது என
எண்ண வைத்தது ஒரு சிலரை மாத்திரமே. அதில்‌
முதன்மையானவர்‌ இராசரத்தினம்‌. விளைவு? “பண்பாடு
வேரும்‌ விழுதும்‌” எனும்‌ இந்நூல்‌.

ஆரம்பிக்கும்‌ போதே முதலாவது அத்தியாயத்திலேயே
அதிரடியாக “வாழ்க்கை” என்பதற்குத்‌ தனது எண்ணத்திற்
பூத்த வியாக்கினாத்தைத்‌ தந்து வாசிப்போரை நிமிர்ந்து
உட்கார வைக்கிறார்‌. இதே போன்ற பல புது விதமான
எண்ணக்‌ கருக்கள்‌ நால்‌ முழுவதுமே ஊடறுத்துச்‌
செல்வதைக்‌ காண முடிகிறது.

காலங்காலமாக எமது வாழ்வியலில்‌ நெறி நின்ற வாழ்வு
நாகரிக வாழ்வு எனப்பட்டு வந்தது. காலப்போக்கில்‌
அது இருகிளைப்பட்டு நாகரிகம்‌ புறத்துடன்‌ சம்பந்தப்‌
பட்டதாகவும்‌) பண்பாடூ அகத்துடன்‌ சம்பந்தமானதாகவும்‌
பரிணாம வளர்ச்சியுற்றிருப்பதைக்‌ காணமுடிகிறது.

அந்த அகமாகிய மனம்‌ கருவில்‌ இருக்கும்‌ போதே
உருவாகி விடும்‌ எனக்‌ கூறும்‌ இராசரத்தினம்‌ அதன்‌
வியாபகத்தினை அழகாக “உடல்‌ எவ்வாறு பசியோடு
உணவைத்‌ தேடுமோர்‌ உயிர்‌ எவ்வாறு பசியோடு
அன்பைத்‌ தேடுமோர்‌ அது போன்று மனம்‌ பசியோடு
அறிவைத்‌ தேடும்‌” என்கிறார்‌. பண்பாடு எவ்விதமாகப்‌
பரிணமிக்கிறது என்பதனைப்‌ புரிய வைக்கிறார்‌.

நண்பர்‌ இந்நூல்‌ எங்கும்‌ காட்டிய பல உதாரணங்கள்‌
சாமானயமாக வாழ்வில்‌ நடைபெறுகின்றவை, பல அவர்‌
வாழ்வில்‌ நடந்துள்ள நிகழ்ச்சிகளாக அமைந்தமையால்‌

[1


Page 11அவர்‌ கருத்துக்களும்‌ கூற்றுக்களும்‌ பெரும்‌ நம்பிக்கைத்‌
தன்மை பெறுகின்றதைக்காண முடிகிறது. கருத்தியலான
சிந்தனைகளுக்கு வாழ்வியல்‌ உதாரணங்கள்‌
வலுவூட்டுகின்றன.

இந்நூல்‌ எழுதும்‌ முயற்சியில்‌ அவர்‌ ஏன்‌ ஈடூபட்டார்‌?
அதனை ஆரம்பத்திலேயே அவர்‌ கூறியுள்ளார்‌. புலம்‌
பெயர்‌ வாழ்‌ தமிழர்‌ மத்தியில்‌ தோன்றிய வாழ்வியல்‌
சிக்கல்கள்‌, அவர்களது சிந்தனை வெளிப்பாட்டிற்கும்‌
அவர்களது பிள்ளைகளினது சிந்தனைக்குமிடையே
யான முரண்பாடுகள்‌ தான்‌ அவரைச்‌ சிந்திக்க வைத்தன.
அந்த நோக்கத்தை அவர்‌ இந்நூலின்‌ இறுதிவரை மனதிற்‌
பதித்து வைத்துள்ளமை ஆங்காங்கே அவர்‌ கூறுகின்ற
சாமான்யனுக்கும்‌ விளங்கக்‌ கூடிய எளிமையான கதைகள்‌,
விளக்கங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ பெற்றோர்களுக்கும்‌
இடையிடையே வழங்கும்‌ பிள்ளை வளர்ப்புப்‌ பற்றிய
வழிகாட்டல்கள்‌, நெறிப்படூத்தல்கள்‌, பிள்ளைகளுக்கு
வாழ்வின்‌ குறிக்கோள்களைச்‌ செயற்படூத்துதற்காக
வழங்கும்‌ அறிவுரைகள்‌, ஆலோசனைகள்‌ மூலம்‌
தெரிந்து கொள்ள முடிகிறது.

சமய வாழ்க்கையில்‌ அதீத நம்பிக்கை வைத்துள்ள
இராசரத்தினம்‌, மானிடப்‌ பண்பாட்டு வளர்ச்சிக்கு உந்து
சக்தியாய்‌ அமைந்த, தென்‌ கிழக்காசிய மக்களின்‌
சமயக்‌ கோட்பாட்டுச்‌ சிந்தனைகள்‌ மேலைத்தேயத்த
வர்களிடத்துக்‌ கெளரவம்‌ பெறத்‌ தவறிவிட்டமையைச்‌
சுட்டிக்‌ காட்டியதோடூ பண்பாட்டு வளர்ச்சியிற்‌ சமயத்தின்‌
பங்களிப்பினைப்‌ பல இடங்களில்‌ சிலாகித்துக்‌ கூறவும்‌
தவறவில்லை.

[11


Page 12பண்பாட்டுக்குத்‌ தளம்‌ அமைத்துக்‌ கொடூப்பது மனம்‌.
நலல அறிவினை, நல்ல நெறியினை மனம்‌ உள்வாங்க
வேண்டூம்‌. “50ம்‌ ஈ்ரம்‌ 1 க 8000ம்‌ 5௦” என்பார்கள்‌.
நல்ல மனம்‌ அமைவதற்கு நல்ல உடல்‌ வேண்டும்‌ அது
எப்படி? அங்கே இடையிடையே சபலம்‌ வந்து எட்டிப்‌
பார்க்காமற்‌ திடமான மனதாக அமைய என்ன செய்ய
வேண்டும்‌. அதற்கு யோகப்பயிற்சி அத்தியாவசியம்‌
என்கிறார்‌ இராசரத்தினம்‌. நம்மிடம்‌ அமைந்த
மூன்று குணங்களாகிய தமோகுணம்‌, ரஜோகுணம்‌,
சத்துவகுணம்‌ ஒன்றினை ஒன்று அடக்கித்‌ தன்னைப்‌
பலப்படுத்த முயலுகையில்‌ மனிதனில்‌ அக்குணம்‌
பிரகாசிக்கும்‌ என்கிறார்‌. இக்குணங்களைக்‌ கட்டுப்‌ படுத்த
யோகம்‌ அவசியம்‌ என்கிறார்‌. யோகாப்பியாசத்திற்கும்‌
அகஞ்‌ சுரக்கும்‌ சுரப்பித்‌ தொகுதி அல்லது கானில்‌
சுரப்பித்‌ தொகுதியின்‌ செயற்பாட்டுகுமிடையே உள்ள
தொடர்பினை இவர்‌ விளக்கிய விதம்‌ விலங்கியல்‌
ஆசிரியனான என்னையே கிறங்கடித்துவிட்டது.

புதிய சிந்தனை. இன்றைய வாழ்வியலுக்கு வேண்டிய
கருத்துக்கள்‌. கருத்துருவானதாயினும்‌ சுலபமாக
உள்வாங்கக்‌ கூடிய எளிமையான எழுத்து நடை.
வரவேற்க வேண்டிய நூல்‌.

 
 

திரு. பொன்‌ கனகசபாபதி

[*7


Page 13பொருளடக்கம்‌

முன்னுரை
இதழ்‌ 1. அறிமுகம்‌

“வாழ்க்கை” கூறும்‌ பொருள்‌ - ஒழுங்கான வாழ்வே
மகிழ்வு - வாழ்வியல்‌, பண்பாடு, நாகரிகம்‌
வாழ்வியல்‌ - பண்பாடூ - பாடறிந்தொழுகல்‌
நாகரிகம்‌

இதழ்‌ 2. உயிரினங்களிற்‌ பண்பாடு

பரிணாம வளர்ச்சி - உயிரினங்களின்‌ வளர்ச்சி -
மனிதன்‌ யார்‌ - மனம்‌ என்பது - உயிர்‌ - உடல்‌
மலர்ச்சி - உயிர்‌ மலர்ச்சி - அன்பின்‌ வெளிப்பாடூ
நட்பு - நண்பன்‌, பெற்றோராக - நண்பன்‌
துணையாக - நண்பன்‌ வழிகாட்டி - மனமலர்ச்சி -
சமூகவிஞ்ஞானம்‌ - மனதோடூ பேசுங்கள்‌ - மனிதரில்‌
கொடூமுடி - மனிதனின்‌ அழகு - உடல்‌ அழகு
- உயிர்‌ அழகு - மனதின்‌ அழகு - கல்வியின்‌
வகையும்‌ நோக்கமும்‌ - பயன்நிலைக்கல்வி
தன்‌உணர்வுக்கல்வி - வாழ்க்கைக்கல்வி

இதழ்‌ 3. பண்பாட்டின்‌ தோற்றம்‌

உடல்சார்‌ உந்துசக்திகள்‌ - உயிர்சார்‌
உந்துசக்திகள்‌ - அறிதல்சார்‌ உந்துசக்திகள்‌
- பண்பாடு என்றால்‌ என்ன - உந்துசக்தியின்‌
உருவாக்கம்‌

பக்கம்‌
01

09

24

68


Page 14இதழ்‌ 4. பண்பாட்டு வளர்ச்சி

பண்பாட்டு வேறுபாடு - மொழி - கருத்துக்கே
முதலிடம்‌ - பண்பாட்டின்‌ அடிப்படைக்கூறுகள்‌

இதழ்‌ 5. பண்பாடு ஓர்‌ அமைப்பு

சிந்தனைப்‌ பண்பாடு - சிந்தனையின்‌ தோற்றம்‌ -
மனம்‌ செயற்படும்‌ நிலைகள்‌ - மேல்‌ மட்ட மனம்‌ -
நடூமனம்‌ - உணர்வு கடந்த உள்மனம்‌ - மனதின்‌
கூட்டு இயக்கம்‌ - சிந்தனைக்‌ கோணம்‌ - செயலைப்‌
பார்க்கும்‌ கோணம்‌ - பொருளைப்‌ பார்க்கும்‌
கோணம்‌ - சிந்தனை வேறுபாடூ - சமூகப்பண்பாடூ
- முதன்மையானபணிபாடூ - செயலாக்கப்பண்பாடூ
செயலாக்கப்பண்பாடு உடல்சார்‌ உந்துசக்தி
- செயலாக்கப்பண்பாடூ உயிர்சார்‌ உந்துசக்தி -
செயலாக்கப்பண்பாடுூ அறிதல்சார்‌ உந்துசக்தி

இதழ்‌ 6. பண்பாட்டின்‌ கோலம்‌

பண்பாடூ ஒரு விருட்சம்‌ - செயற்பாடூ - நெறியியல்‌
- நெறிமுறைகள்‌ - நம்பிக்கை - கொள்கைகள்‌

பழக்கம்வழக்கம்‌ - குடிவழக்கு - வழக்காறு
- குறியீடு - நடை உடை பாவனை - விழுமியம்‌
- சட்டம்‌

இதழ்‌ 7. பொருளாக்கப்பண்பாடூ

தோன்றும்‌ முறை - பொருளாக்கப்பண்பாட்டின்‌
கூறுகள்‌ - பொருள்சார்‌ பண்பாடூ - பொருள்சாராப்‌

சி!

87

99

130

159


Page 15பண்பாடூ - மறையும்‌ முறை - நாகரிகம்‌ - பண்பு
கலவா நாகரிகம்‌ - நாகரிக வளர்ச்சி - பண்பாடும்‌
நாகரிகமும்‌

இதழ்‌ 8. பண்பாடும்‌ மேம்பாடும்‌

மாறுபட்ட பண்பாடு - மாறுபட்ட மேம்பாடு
உலகவணிகம்‌ - பண்பாடும்‌ படைப்பாற்றல்‌
சக்தியும்‌ - கைவிடக்கூடிய பண்பாட்டுக்‌ கூறுகள்‌ -
கைவிடக்கூடாத பண்பாட்டுக்‌ கூறுகள்‌ - சமயமும்‌
பண்பாடும்‌ - ஜம்மூலங்கள்‌

இதழ்‌ 9. பண்பாட்டின்‌ பணிகள்‌

தேவைகளை நிறைவு செய்தல்‌ - கட்டொருமைப்‌
பாட்டைப்‌ பேணல்‌ - படைப்புத்திறனை வளர்த்தல்‌

பண்பாட்டுவழிக்கல்வி - மதிப்பிடும்‌ பாங்கு
சகிப்புணர்வை வளர்த்தல்‌ - சமத்துவத்தைப்‌
பேணல்‌ - திறந்த மனது - சமத்துவ இன்மையை
வளர்க்கும்‌ அரசுகள்‌ - படைப்புகள்‌ - படைப்புகள்‌
பேசவேண்டியவை

இதழ்‌ 10. சிந்தனை பண்பாட்டின்‌
ஆணிவேர்‌

சைவநெறி கூறும்‌ தத்துவம்‌ - மனம்‌, புத்தி, சித்தம்‌,
அகங்காரம்‌, செயற்பாடுகள்‌ - அந்தக்காரணங்களை
நெறிப்படூத்தவழி - முக்குணங்கள்‌ - தமோகுணம்‌,
ராஜோகுணம்‌, சத்துவகுணம்‌, யோகம்‌,
பிராணாயாமம்‌ உலகம்‌ மலரவழி

71]

174

192

213


Page 16இதழ்‌ 11. உலகவளர்ச்சியும்‌ பண்பாடும்‌ 228

உலகின்‌ இயற்கை அமைப்பு - பண்பாட்டு வீழ்ச்சி
தமிழர்‌ புலம்பெயர்வு - இன்றைய நிலை
மாற்றுவழி - வழி என்ன

இதழ்‌ 12. மரபுவழிப்பண்பாட்டின்‌ 246
இன்றைய நிலை

வரலாறு வழி காட்டுகிறது
- நிறைவாக

 

71]


Page 17முன்னுரை
பமுக்கு முன்‌ படியுங்கள்‌.

அகிலம்‌ எங்குமுள்ள பெரும்பாலான நாடூகளில்‌
அனைத்து இனமக்களும்‌ வாழ்ந்து வருகின்ற சூழல்‌
இன்று. 200 ஆண்டுகளுக்கு முன்னர்‌ வரை தமது
தாயகங்களிலிருந்து புலம்பெயர மறுத்த தமிழினம்‌ 19ஆம்‌
நூற்றாண்டு முதல்‌ புலம்பெயர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்‌
பட்டுள்ளது.

ஐரோப்பியர்‌ காலப்‌ புலம்பெயர்விற்குப்‌ பின்னர்‌ சிறிது
சிறிதான தொகையினர்‌ புலம்பெயர்ந்த போதும்‌
1983ல்‌ ஸீலங்காவிற்‌ தமிழருக்கு எதிராக நடைபெற்ற
இனப்படுகொலைகளைத்‌ தொடர்ந்து பெருமளவு தமிழீழத்‌
தமிழ்மக்கள்‌ உலகின்‌ பல பாகங்களிலும்‌ குடியேறினர்‌,
குடியேறி வருகின்றனர்‌.

1980ம்‌ ஆண்டு முதல்‌ ஈழத்தை விட்டூப்‌ புலம்பெயர்ந்து
நைஜீரியாவிலும்‌ பின்னர்‌ கனடாவிலும்‌ வாழ்ந்து வரும்‌
எனது வாழ்வியல்‌ பட்டறிவில்‌, என்‌ போன்ற தமிழர்கள்‌
மத்தியில்‌ எழுந்துள்ள சிக்கல்களின்‌ வெளிப்பாடே
இந்நூல்‌.

குறிப்பாகப்‌ பல்லினப்‌ பண்பாட்டுச்‌ சூழலில்‌ வாழத்‌
தொடங்கியுள்ள முதலாவது தலைமுறையினராகிய
எமக்கும்‌, எமது அடுத்த தலைமுறையினராகிய
பிள்ளைகளுக்குமிடையே புரிந்துணர்வும்‌ இசைந்து வாழும்‌
தன்மையும்‌ மிகக்குறைவாகவே காணப்படூகின்றன.


Page 18பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இந்நிலை: புலம்பெயர்வாழ்‌ தமிழர்‌ மத்தியில்‌ பல
வாழ்வியற்‌ சிக்கல்களைத்‌ தோற்றுவித்துள்ளது.
இதற்கான காரணத்தைச்‌ சிந்திக்கும்‌ சூழ்நிலையை என்‌
புலம்பெயர்‌ வாழ்வு எனக்குத்‌ தந்துள்ளது.

நம்‌ மனதில்‌ எழும்‌ சிந்தனையின்‌ வெளிப்பாட்டிற்கும்‌
நமது பிள்ளைகளின்‌ சிந்தனை வெளிப்பாட்டிற்குமிடையே
வேறுபாடூ உள்ளது. இதுவே சகல முரண்பாடூகளுக்கும்‌
அடிப்படையாக இருக்கின்றது.

இவவேறுபாடூகளுக்கு மேலும்‌ பல காரண, காரியங்கள்‌
இருந்தபோதும்‌, பண்பாடு மிகமுக்கியமானதாக
அமைந்திருந்தது. அதுவே நம்‌ உள்ளத்தே உறைந்துள்ள
வாழ்வியல்‌ முறையாகும்‌.

இப்பண்பாடே சிக்கலுக்கு அடிப்படைக்‌ காரணம்‌
என்பதையும்‌, அதனைத்‌ தீர்க்கவல்லதும்‌ அப்பண்பாடே
என்பதையும்‌ கண்டுகொண்டேன்‌. அந்த நாள்‌ முதல்‌
என்‌ மனதில்‌ எழுந்த கேள்விகள்‌:-

* பண்பாடூ என்றால்‌ என்ன?

* அது எவ்வாறு தோற்றம்‌ பெறுகிறது?

* அது எதன்‌ அடிப்படையில்‌ உலகில்‌ வேறுபட்டூக்‌
காணப்படுகின்றது?

* அது நிலையானதா? மாறக்கூடியதா? மாற்றக்கூடியதா?
மாற்றக்கூடாததா?


Page 19 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

* ஏன்‌ தொடர்ந்தும்‌ அதே பண்பாட்டைக்‌ கடைப்பிடிக்க
வேண்டும்‌?

* அப்படியாயின்‌ தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியவை
எவையெவை? கைவிடக்கூடியவை எவையெவை?
எவ்வாறு அவற்றைத்‌ தீர்மானிப்பது?

_ * பண்பாடு ஒருவரின்‌ பலமா? பலவீனமா?

* நாம்‌ எமது மரபுவழிப்‌ பண்பாட்டைப்‌ பின்பற்றி நடப்பது
எமது மேம்பாட்டிற்குத்‌ துணை செய்யுமா?

இவ்வாறு எழுந்த பல கேள்விகளுக்கு விடை தேடியதன்‌
விளைவே இந்நூல்‌.

இத்தேடலினாற்‌ பண்பாடூ சார்ந்த பல நூல்களையும்‌,
கட்டுரைகளையும்‌ என்‌ கையில்‌ இது விடயமாக
அகப்பட்டவற்றையும்‌ படித்து வந்தேன்‌. அப்போதுதான்‌
தமிழ்‌ உலகம்‌ நன்கு அறிந்த அறிஞர்‌, மனிதநேயமும்‌,
பற்றும்‌ கொண்ட சிந்தனையாளர்‌ முன்நாள்‌ துணைவேந்தர்‌
க.ப. அறவாணன்‌ அவர்களை 1993ம்‌ ஆண்டூ சந்தித்தேன்‌.
அவரை அழைத்து வந்து இது விடயமாகக்‌ கனடாவில்‌
கருத்தரங்குகள்‌ நடத்தினேன்‌. அவர்‌ எடுத்துத்‌ தந்த
“அ” கரமே எனக்கு வழி காட்டியது.

தொடர்ந்து பதின்‌எண்‌ கவனகர்‌ இரா.கனசசுப்புரத்தினம்‌
அவர்களின்‌ நட்பு அதற்கு மேலும்‌ வலுவூட்டியது.
தொடர்ந்து இன்றுவரை இவைபற்றிக்‌ கற்று வருகின்றேன்‌.
அப்போது நான்‌ கண்டுகொண்டவை பல. குறிப்பாக,

பண்பாட்டியல்‌ பற்றிய மேற்கத்தைய நாட்டூ அறிஞர்களின்‌

3


Page 20பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

முடிவுகள்‌ ஐரோப்பிய, மத்தியதரைக்‌ கடல்‌ நாடூகள்‌
பற்றிய ஆய்வுகளும்‌ அதன்வழி வந்த கூற்றுகளுமே,
மானிடவியல்‌, பண்பாட்டியல்‌ போன்றவற்றிற்‌ பிரதி
பலிக்கின்றன.

ஆனால்‌ சமகாலத்தில்‌ தென்‌ஆசியா, தென்கிழக்காசியா,
தென்‌அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய நாடூகளில்‌
வாழ்ந்த மக்களது குறிப்பாக ஆதிமுதல்‌ உயர்ந்த
நாகரிகம்‌ கொண்ட மக்களாக வாழ்ந்த, உலகில்‌
பல தத்துவங்களை, சமய நெறிகளைத்‌ தோற்றுவித்த
இந்தியமொழிகளை, சீன, தமிழ்மொழியைப்‌ பேசும்‌
மக்களது பண்பாட்டு நிலைகள்‌ மானிடவியலிலோ,
பண்பாட்டியலிலோ முன்னிலைப்‌ படூத்தப்படவில்லை
என்பது உலக மானிடவியல்‌, பண்பாட்டியலில்‌ ஒரு
குறைபாடே. இதற்கான காரணத்தை உற்றுநோக்கும்போது
காலனித்துவ ஆதிக்கத்தின்‌ ஐரோப்பிய மைய வாதமே
எனக்‌ கண்டூ கொள்ளலாம்‌.

உலக மாந்தர்‌ கூட்டத்தில்‌ பெரும்பகுதி மக்களின்‌
வாழ்வியலைப்‌ புறந்தள்ளி வகுக்கப்பட்ட, வெளியிடப்பட்ட
முடிவுகள்‌ இவை.

மக்கள்‌ சமயவழியில்‌ வாழ்வியலை இலகுவிற்‌
பின்பற்றி நடந்தனர்‌. தெற்கு, தென்கிழக்கு ஆசிய
நாடூகளின்‌ சமூகவியலாளர்கள்‌ சமயத்தோடூ
இயைந்து வாழ்ந்தவர்கள்‌ என்பதாலும்‌, சமயத்தின்வழி
பணபாட்டூக்‌ கொள்கைகளை வகுத்தவர்கள்‌ என்பதாலும்‌
மேற்குலகம்‌ ஏன்‌ முழு உலகமுமே இவர்களைச்‌ சமூக
மானிடவியல்‌ அறிஞர்களாகக்‌ கண்டுகொண்டூ இவர்கள்‌
கொள்கைகளைப்‌ பார்க்கத்‌ தவறிவிட்டது என எண்ணத்‌

4


Page 21பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தோன்றுகின்றது.

இவர்களே வெற்றி பெற்ற சமூகவியலாளர்கள்‌, அதா
வது சமூகத்திற்கான மெய்யியலை உருவாக்கி,
அத்தத்துவங்களைச்‌ சமயநெறிகளாக்கி மக்களைப்‌
பின்பற்ற வைத்தவர்கள்‌, சமூகப்பண்பாட்டு உருவாக்கிகள்‌.
இவர்கள்‌ கொள்கைகளைக்‌ கூறியதோடு மட்டும்‌
நின்றுவிடவில்லை, மக்களைப்‌ பின்பற்றவும்‌ வைத்த
வல்லுநர்கள்‌ ஆவர்‌.

பண்பாட்டின்‌ . ஒரு கூறானது நெறியியல்‌. அதன்‌ ஒரு
கூறான கொள்கை, நம்பிக்கையின்‌ ஒரு கூறே சமயம்‌
ஆகும்‌.

. தமிழர்கள்‌ சமயவழிப்‌ பண்பாட்டைக்‌ கொண்டவர்கள்‌
அல்லர்‌. மொழிவழியே தான்‌ அவர்களின்‌ பணபார௫ு
'இயங்குகின்றது.

- இருப்பினும்‌ தமிழர்களிடையே தோன்றிய சித்தர்கள்‌
கடவுளை வெளியே தேடாது தமது அகத்தே தேடினார்கள்‌.
மனதின்வழி வாழ்வியலை வளப்படூத்தக்கூடிய
கோட்பாடுகளை வகுத்தனர்‌. இக்கோட்பாடுகள்‌ தமிழர்‌
சமயத்தோடு ஒண்றிணைக்கப்பட்டு விட்டன.

தமிழர்கள்‌ இன்று பல சமயத்தவர்களாக இருக்கின்றனர்‌.
அவர்களை இணைப்பது தமிழ்மொழியும்‌, பண்பாடு
மேயாகும்‌.

இருப்பினும்‌ தமிழ்ச்சித்தர்கள்‌ கூறியுள்ள வாழ்வியலுக்கான
கோட்பாடுகளை; யோகக்கலை போன்ற வழிமுறைகளைத்‌
தமிழர்களே சமயத்தோடூ உற்றுநோக்குவது அவர்களின்‌
தவறான நம்பிக்கையே.

இன்றைய தமிழர்கள்‌ 2000 ஆண்டூகளுக்கு முற்பட்ட
தமிழர்‌ வாழ்வியல்‌ நிலையிலிருந்து தாழ்ந்து விட்டார்கள்‌.

3


Page 22பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அந்நியரின்‌ பண்பாட்டுப்‌ படையெடுப்பால்‌ வீழ்ந்து
விட்டனர்‌. மேல்‌ எழுவதற்கான ஒருவழி இவர்கள்‌
சமயநிலையிலிருந்து சட்டநிலைக்கு உயர வேண்டும்‌.
விழுமியங்களை இலக்கியங்களாகப்‌ பார்க்காது
இலட்சியமாக உள்வாங்கிக்‌ கொள்ள வேண்டும்‌.

தமிழர்களின்‌ சிறந்த வாழ்வியல்‌ நூலாம்‌ திருக்குறளை
அவர்கள்‌ சமய நூலாகக்‌ கொண்டிருப்பின்‌ தமிழர்களின்‌
வாழ்வியல்‌ இன்று சிறந்து காணப்பட வாய்ப்பு
இருந்திருக்கலாம்‌ என எண்ணத்‌ தோன்றுகிறது.

இந்நூலில்‌ என்‌ பட்டறிவோடூ நான்‌ இதுவரை கற்றவை,
கேட்டவை என்பன நிறையவே இடம்பெற்றுள்ளன.
பலவற்றை எங்கே, எதிற்‌ கற்றேன்‌ என்பதை
நினைவு கூர முடியவில்லை. நினைவுள்ளவற்றைத்‌
துணைநூற்‌ பட்டியலில்‌ இணைத்துள்ளேன்‌. குறிப்பாக
இவை அனைத்தும்‌ என்னுள்‌ பண்பாட்டியல்‌ பற்றிய
ஒரு வடிவத்தைத்‌ தந்தன. அவற்றை உங்கள்‌ முன்‌
படைத்துள்ளேன்‌.

இந்நூல்‌ புலம்பெயர்ந்து வாழும்‌ என்போன்ற
தமிழர்களுக்காக, புலம்பெயர்‌ மண்ணில்‌ தமிழ்மொழியைக்‌
கற்றுவரும்‌ மாணவர்களுக்காக எழுதப்பட்டது. புதிய
சூழலில்‌ அக, புற போராட்டங்களின்‌, தாக்கங்களின்‌
மத்தியில்‌ ஓடிக்கொண்டிருக்கும்‌ என்‌ உடன்பிறப்புக்களை
மனதிற்‌ கொண்டே மொழிநடையிலும்‌, விடயத்திலும்‌
இயன்ற மட்டும்‌ கவனம்‌ செலுத்தினேன்‌. அவர்களின்‌
மனநிலைக்கேற்ப சுருக்கமாகத்‌ தர எண்ணினேன்‌.
மேற்கூறிய இவ்விடயங்களில்‌ எவ்வளவு தாரம்‌ வெற்றி
பெற்றுள்ளேன்‌ என்பதை நான்‌ அறியேன்‌ இருப்பினும்‌ என்‌

6


Page 23பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஆவலை நிறைவு செய்துள்ளேன்‌. உங்கள்‌ கருத்துக்களை
என்றென்றும்‌ வரவேற்றுக்‌ காத்திருக்கின்றேன்‌.

வாசகர்களின்‌ தேவை எனக்கருதி இந்நூலில்‌ சில
இடங்களில்‌ பாரம்பரிய முறைக்கமைய பந்திகள்‌

அமையாது அவற்றை வசனங்களாகப்‌ பிரித்து
அமைத்துள்ளேன்‌.
அத்துடன்‌ பல இடங்களில்‌ “அவன்‌”, “மனிதன்‌”

போன்ற பல சொற்களைக்‌ கையாண்டூள்ளேன்‌.
அவற்றை ஆணிபாலுக்குரியரியன என எடூத்துக்கொள்ள
வேண்டாம்‌. எடூத்துக்காட்டாக “கொல்லான்‌ புலாலை
மறுத்தானை...” என வள்ளுவர்‌  சுட்டிக்காட்டியது
ஆணீவர்க்கத்திற்கு மட்டும்‌ எனக்‌ கருத்திற்‌ கொள்வது
எவ்வளவு தவறானதாகும்‌. அதேபோன்று இந்நூலில்‌
குறிப்பிடப்பட்டவையை மனிதகுலத்தைச்‌ சுட்டி நிற்கின்றது
எனக்‌ கொள்ளவும்‌.

மேலும்‌ “மனிதன்‌ என்ற சொல்லை, தனிமனிதன்‌ என்ற
பொருளில்‌ கொள்வது தவறு. அது மனித இனத்தைக்‌
குறிக்கும்‌” என்று கோம்பர்ஸ்‌ (00%1017:2) என்ற
கிரேக்க மெய்யியல்‌ அறிஞர்‌ கூறியுள்ளமை இங்கு
குறிப்பிடத்தக்கது. ரூல்‌:- ஐரோப்பிய தத்துவ இயல்‌ - பக்கம்‌ 58)

என்‌ முதல்‌ நூல்‌ “தமிழீழம்‌ நாடும்‌ அரசும்‌” ஆகும்‌.
அந்நூல்‌ நாம்‌ ஏன்‌ புலம்‌ பெயர்ந்தோம்‌? என்பதன்‌
அடிப்படைக்‌ காரணத்தை வெளிக்கொண்டு வரும்‌
நோக்கில்‌ எழுதப்பட்டது. அந்நூலைப்‌ பாராட்டிக்‌ கடந்த
11 வருடங்களாக மாதந்தோறும்‌ ஒரு கடிதமாவது பெற்று
வந்தமை என்னைப்‌ பெரும்‌ உற்சாகப்படுத்தியது.


Page 24பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அதுவே இன்னோர்‌ தேவை கருதிய இந்நூலையும்‌
எழுதத்தூண்டியது.

இந்நூல்‌ வெளிவரச்‌ சகல வழிகளிலும்‌ உதவிய
அனைவருக்கும்‌ என்‌ மனமார்ந்த நன்றியினைத்‌

தெரிவித்துக்‌ கொள்கின்றேன்‌.

சுப்பிரமணியம்‌ இராசரத்தினம்‌

 

தொடர்புகளுக்கு:-

தி 4211216:171121009!

38 158180187௧ 1917௦
௦௨00100211, ெர்வார௦
411 116

(221808

11010௦ 719016: (416) 2685-7332
(வ: (416) 573-7332
[5.14811: ரவார்்னா!:௦௫ஜுக11.0௦10


Page 25இதம்‌ 1

அறமுகம்‌

அண்டப்பெருவெளி தோன்றி அதில்‌ ஒன்றான இப்பூவுலகம்‌
தோன்றி, இப்பூவுலகில்‌ பலகோடிக்கணக்கான
உயிரினங்கள்‌ தோன்றி வாழ்ந்து வருகின்றன. இவை
களுக்கிடையே ஒழுங்கு முறைகள்‌ இருப்பதனாற்தான்‌
இவை எவ்விதச்‌ சிக்கலுமின்றி இயங்கிக்கொண்டு
இருக்கின்றன.

ஆகாயப்பெருவெளிகளில்‌ உள்ள கோள்கள்‌
ஆயிரக்கணக்கான விண்மீன்கள்‌ அத்தனையும்‌
தமக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசையினால்‌ ஓர்‌ ஒழுங்கில்‌
இயங்கி வருவதை நாம்‌ அறிவோம்‌.

அதேபோன்று இப்பூவுலகில்‌ பல ஆயிரக்கணக்கான
உயிரினங்கள்‌ தோன்றி வாழ்ந்து வருகின்றன. தாவரம்‌
முதல்‌ மிருகம்‌ வரை உள்ள சகல உயிரினங்களும்‌
தமக்கே உரித்தான வாழ்வியலை அதாவது வாழ்க்கை
முறையை  இவ்வுலகிற்‌ கொண்டூள்ளன. ஆனால்‌
புவியில்‌ வாழும்‌ உயிரினங்களில்‌ மனிதன்‌ மமட்டூம்‌
தமக்குள்ளே பல்வேறு வகைப்பட்ட வாழ்வியலைக்‌
கொண்டவனாகக்‌ காணப்படூகின்றான்‌. அதுவே மனிதரின்‌
சிறப்பியல்பாகும்‌.


Page 26பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
“வாழ்க்கை” கூறும்‌ பொருள்‌

உலகில்‌ உள்ள உயிரினங்கள்‌ ஒன்று முதல்‌ ஆறு
அறிவுவரை உடையன. மனிதர்கள்‌ மிகக்கூடுதலான
அறிவை அதாவது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை
உடையவர்‌. ஆதலால்‌ உலகிலுள்ள உயிரினங்களின்‌
கொடூமுடியாக விளங்குகின்றார்கள்‌. மனம்‌ என்னும்‌
மாபெரும்‌ ஆற்றல்மிக்க கருவியைத்‌ தன்னகத்தே
கொண்டவர்கள்‌; அக்கருவி மூலம்‌ தம்‌ வாழ்க்கையைத்‌
தாமே தீர்மானிக்கக்கூடிய, தம்‌ வாழ்க்கை முறையைத்‌
தாமே அமைத்துக்‌ கொள்ளக்கூடிய ஆற்றலைக்‌
கொண்டூள்ளனர்‌.

எனவே மனிதர்‌ தமது வாழ்விற்‌ சிறந்து விளங்குவதும்‌,
அவர்களது வாழ்தல்‌ முறையும்‌ அவர்களது கையிலேதான்‌
உள்ளன. இதனை விளக்குவதே “வாழ்க்கை” என்னும்‌
சொல்‌. இந்த அடிப்படைத்‌ தத்துவத்தைப்‌ புரிந்து
கொண்டவரின்‌ வாழ்க்கை வசந்தகாலமாக அமையும்‌.

வாழ்க்கை என்னும்‌ சொல்லை உற்றுநோக்கில்‌ அதில்‌,
“வா” - என இப்பூவுலகிற்கு இயற்கை உன்னை
வரவேற்று

வாழ்‌” - என வாழ்த்தி

6

கை: - உன்‌ வாழ்வு உன்‌ “கையில்‌: தான்‌ உள்ளது
என்பதனை அறிவுறுத்தி

“வாகை”- அவ்வாறு உன்கையை நம்பி நீ வாழ்ந்தால்‌

10


Page 27பண்பாரு - வேரும்‌, விழுதும்‌

அது பல “வாகை?களை (வெற்றிகளை) உனக்குத்‌
தரும்‌ என்பது போற்‌ சொல்லாமற்‌ சொல்லி நிற்கும்‌
சொல்தான்‌ “வாழ்க்கை. மேலும்‌ வாகை என்பது
வாழ்க்கையில்‌ ஓர்‌ உன்னத குறிக்கோளை நல்லொழுக்க
வழியில்‌ அடைவதையும்‌ குறிக்கும்‌.

ஒழுங்கான வாழ்வே மகிழ்வு

உலகில்‌ எத்தனையோ வகையான ஒலிகளைக்‌
கேட்கிறோம்‌. எல்லா வகை ஒலிகளும்‌ எமக்கு
மகிழ்ச்சியைத்‌ தருகின்றனவா? இல்லையே, ஆனால்‌
ஒழுங்கான அதிர்வுகளைக்‌ கொண்டூ மிகவும்‌ நேர்த்தியாக
வெளிப்படும்‌ ஒலிகள்‌ “இசையாக” வெளி வருகின்றன.
காதுக்கு இனிமையாக இருக்கின்றன - உள்ளத்தை
மகிழ்விக்கின்றன - எமது உள்ளத்தை மமட்டூம்‌
தானாக மகிழ்விக்கின்றன? கேட்போர்‌ அத்தனைபேரின்‌
உள்ளத்தையும்‌ அல்லவா மகிழ்விக்கின்றன.

உள்ளத்தை மகிழ்விப்பதோடூ மாத்திரம்‌ “இசை: நின்று
விடவில்லை கேட்போரின்‌ உள்ளத்தின்‌ உணர்வுகளை
அது இசைவுபடுத்துகின்றது.

மனிதரின்‌ அகத்தே தோன்றியுள்ள துன்பம்‌, கவலை,
பொறாமை, கோபம்‌, பேராசை போன்ற விரும்பத்தகாத
உணர்வுகளை மனதிலிருந்து “கலைக்க'வல்லது.
ஆதலால்‌ இசை “கலை'யின்‌ முக்கிய அங்கமாக
அமைகின்றது.

இசை உள்ளத்திற்‌ தோன்றும்‌ விரும்பத்தகாத உணர்வு
களைக்‌ கலைத்துக்‌ கொந்தளிக்கும்‌ உள்ளத்தை

11


Page 28பண்பாரு - வேரும்‌, விழுதும்‌

அமைதியுறச்‌ செய்து உள்ளத்தைப்‌ பண்படுத்துவதனால்‌
இசையின்‌ வகையினையும்‌ “பண்‌” என அழைத்தனர்‌
தமிழர்‌.

ஒழுங்கான பண்பட்ட ஒலியைப்‌ பிறப்பித்தவர்கள்‌
பாராட்டப்படுகின்றனர்‌, சிறப்பிக்கப்படுகின்றனர்‌; உயர்ந்த
நிலையில்‌ வைக்கப்படூகின்றனர்‌.

அதேபோன்று வாழும்‌ முறையையும்‌ ஒழுங்காக
அமைத்துக்‌ கொண்டவரின்‌ வாழ்தல்முறை பாராட்‌
டப்படூகின்றது; புகழப்படுகின்றது. அதுவே பண்பட்ட
வாழ்க்கையெனச்‌ சிறப்பிக்கப்படுகிறது. அவ்வாறு
வாழ்பவர்‌ தானும்‌ மகிழ்ச்சியாக வாழ்ந்து பிறரையும்‌
மகிழ்ச்சிப்‌ படுத்துகின்றனர்‌.

எனவேதான்‌ மனிதர்‌ தோன்றியகாலம்‌ முதற்கொண்டு
அவர்தம்‌ வாழ்தல்‌ முறையை மேம்படுத்திக்கொள்ளப்‌
பல்வேறு வகைப்பட்ட அறிஞர்களாலும்‌, ஞானிகளாலும்‌
வழிகாட்டப்பட்டு மனித சமுதாயம்‌ இன்றைய நிலையை
அடைந்துள்ளது. ஒவ்வோர்‌ இனத்திலும்‌ தோன்றிய
ஞானிகளின்‌ தத்துவங்கள்‌ தொடர்ந்து அவர்களுக்காகப்‌
போதிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றின்‌ மூலம்‌ உலக மனித சமுதாயம்‌ பண்பட்ட
வாழ்க்கையை வாழவேண்டூம்‌. அப்போதுதான்‌ இந்த
மனித இனமும்‌ அமைதியோடூ, மகிழ்வோடூ சிறப்பாக
வாழும்‌.

இன்றைய உலகில்‌ அது நிறைவேறியுள்ளதா?
இன்றைய மனிதஇனம்‌ பண்பாடு கொண்ட இனமா?
அது தனது வாழ்வை மகிழ்ச்சியோடு வாழ்ந்து முடித்துக்‌

12


Page 29பணபா௫ - வேரும்‌, விழுதும்‌

கொள்கிறதா? ஒவ்வொரு மனிதரும்‌ தான்‌ பிறந்து
வளர்ந்து வாழ்ந்த இந்த உலகின்‌ மேம்பாட்டுக்காக
எவ்வாறான பங்களிப்பினைச்‌ செய்து வாழ்ந்துள்ளார்கள்‌?
என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடூம்போது
எல்லோராலும்‌ அவ்வாறு வாழ்ந்தோம்‌ என்று சொல்ல
முடியாது.

இதற்கான காரணம்‌ என்ன? நாம்‌ அமைத்துக்கொண்ட
வாழ்வியல்‌ முறையே ஆகும்‌.

ஒவ்வொரு மனிதரது வாழ்க்கை முறையும்‌, ஒவ்வொரு
இனத்தின்‌ வாழ்க்கை முறையும்‌, ஒவ்வொரு நாடு
சார்ந்த சமூகத்தின்‌, சமுதாயத்தின்‌ வாழ்க்கை முறையும்‌
உலகில்‌ தாக்கத்தை ஏற்படூத்துகின்றன. ஆதலால்‌
மனித குலத்தின்‌ வாழ்வியலாம்‌ பண்பாட்டியலின்‌
தோற்றத்தையும்‌, வளர்ச்சியையும்‌, அது பற்றிய
கூறுகளையும்‌ நாம்‌ ஓரளவாவது அறிந்து கொள்வது
அவசியமலலவா?

வாழ்வியல்‌ - பண்பாடு - நாகரிகம்‌

இன்று மானிடவியலில்‌ அதாவது மனிதஇனங்களின்‌
வாழ்க்கை முறையினைப்‌ பற்றிக்‌ குறிப்பிடுவோர்‌
வாழ்வியல்‌, பண்பாடு, நாகரிகம்‌ ஆகிய சொற்களைப்‌

பாவிப்பதைக்‌ காணக்கூடியதாக உள்ளது.

இவற்றை எத்தகைய பொருட்பட உபயோகிக்கின்றனர்‌
என்பதனை விளங்கிக்கொள்வது நன்று.

[3


Page 30பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
வாழ்வியல்‌

வாழ்வியல்‌ என்பது ஓர்‌ இனம்‌ இவ்வுலகில்‌ எவ்வாறு
வாழுகின்றது என்பதைச்‌ சுட்டிக்காட்டி நிற்கின்றது.

ஒருவர்‌ அல்லது ஓர்‌ இனம்‌ தமது உள்ளத்து
உணர்வுகளில்‌ தோன்றும்‌ தேவைகளை, எண்ணங்களை,
தன்‌ விருப்பங்களை நிறைவேற்றிக்‌ கொள்கின்ற வழிகள்‌
அவர்களின்‌ வாழ்வியல்‌ ஆகின்றது.

ஒருவரதோ அல்லது ஓர்‌ இனத்தினதோ வெளிப்பாடூுகளான
பழக்கவழக்கங்கள்‌, ஒழுகலாறுகள்‌, நடைமுறைகள்‌,
நம்பிக்கைகள்‌ என்பன அவரையோ அவ்வினத்தையோ
மேம்படூத்துவதாக, சிறப்பிப்ப தாக அமையாவிட்டாலும்‌
கூட அவை அவ்வினத்தின்‌ “வாழ்வியல்‌” (ஷு ௦ரீ 1116)
என்று அழைக்கப்படுகின்றன.

இனம்‌

உலகிலுள்ள உயிரினங்களைப்‌ பல இனங்களாகப்‌
பிரித்துக்‌ கூறுவர்‌. தாவரம்‌, பறவை, மிருகம்‌, மனிதர்‌,
எனவும்‌.

நீந்துவன, தவழ்வன, நகர்வன, ஊர்வன, நடப்பன,
பறப்பன எனவும்‌ அவை பல வேறு வகைப்படும்‌.

இவற்றுள்‌ ஒவ்வொரு வகையினையும்‌ தனித்தனி
இனமாகவும்‌ கூறுவர்‌. அதேபோன்று மனிதர்களையும்‌
உடலமைப்பை அடிப்படையாக வைத்து ஆபிரிக்க,
சீன, மொங்கோலிய, கார்க்கேய, ... இனங்களாகவும்‌
வகுத்துக்‌ கூறுவர்‌. மேலும்‌ மொழியை அடிப்படையாக

[4


Page 31 

பணர்பாடு - வேரும்‌, விழுதும்‌

வைத்து தமிழினம்‌, சீனஇனம்‌, கிரேக்கஇனம்‌, ... என்றும்‌
அழைப்பர்‌.

ஒரு மொழியிலிருந்து பல கிளை மொழிகள்‌ தோன்றி
விட்ட இக்காலகட்டத்தில்‌ அக்கிளை மொழிக்‌ கூட்டத்‌
தாரையும்‌ ஒன்றிணைத்தும்‌ அழைப்பர்‌. எடுத்துக்காட்டாக
தமிழ்மொழியின்‌ கிளைமொழிகளான மலையாளம்‌,
தெலுங்கு, கன்னடம்‌, ... போன்ற மொழி பேசும்‌
அனைவரையும்‌ “திராவிட்‌ இனம்‌ என்று அழைக்கிறோம்‌.
இவ்வாறு இனம்‌ என்னும்‌ சொல்‌ பல்வேறு நிலைகளிற்‌
கையாளப்பட்டபோதும்‌ இந்நூலில்‌ மொழியின்‌ அடிப்‌
படையிலேதான்‌ கையாளப்படுகிறது. இருப்பினும்‌ இடம்‌
கருதிப்‌ பொருள்‌ கொள்க.

பண்பாடு

“பண்‌” என்ற கூட்டுவினைச்‌ சொல்லை எடூத்தால்‌ - அதன்‌
பொருள்‌

பண்‌? இசை,உருவாக்குதல்‌, செய்தல்‌ ஆகும்‌.

இதில்‌ இசை - பெயர்ச்சொல்‌
உருவாக்குதல்‌, செய்தல்‌ - வினைச்சொல்‌

பண்பாடூ என்பது

பண்‌ 5? பண்படூ ? பண்பாடு என உருவாக்கம்‌
பெற்றுள்ளது. இது

செயல்‌ 2 செயற்படு -? செயற்பாடூ

[5


Page 32பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

முரண்‌ 5 முரணபடூ 5 முரண்பாடு

போன்ற பல சொற்களைப்‌ போன்று அமைகின்றது.
இருப்பினும்‌ இங்கு பண்பாடு என்பது பண்படூத்து
என்பதைக்‌ கூறுகிறது. நிலத்தைப்‌ பண்படூத்தினால்‌ நிலம்‌
பண்பட்டதாகின்றது. அப்போது அந்நிலம்‌ உயர்விளை
பொருட்களைத்‌ தரக்கூடியதாக மாறுகின்றது. உள்ளத்தைப்‌
பண்படுத்தினால்‌ உள்ளம்‌ பண்பட்டதாகின்றது. எனவே
பணபாடூ என்பது “பக்குவம்‌” பெற்ற ஒரு நிலையைக்‌
குறிக்கின்றது.

நிலம்‌ பக்குவம்‌ பெற்றால்‌ நல்ல விளைபொருளைத்‌
தரும்‌. அதேபோன்று உள்ளம்‌ பக்குவம்‌ பெற்றால்‌
நலல சிந்தனையைத்‌ தரும்‌.

இவ்‌ ஒற்றுமையை உணர்ந்ததாலேயே தமிழர்கள்‌
அறிவையும்‌ விளைநிலங்களையும்‌ புலன்‌ என
அழைத்தனர்‌. அத்துடன்‌ இச்சொத்துக்களை “நிலபுலன்‌”
எனவும்‌ அழைத்தனர்‌. நான்‌ சிறுவனாக இருந்தபோது
என்‌ பாட்டி தோட்டத்திற்குச்‌ செல்வதைப்‌ “புலத்திற்குப்‌
போயிட்டு வாறன்‌” என்று கூறிச்‌ செல்வார்‌.

6

அதேபோன்று தம்மை மறந்து ஆழ்ந்த யோசனையில்‌
இருப்போரை “புலனை எங்கே விட்டிட்டு இருக்கிறாய்‌”
என்று கேட்பார்கள்‌.

எம்‌ மனதிற்கு அறிவூட்டும்‌ எம்‌ உடம்பில்‌ உள்ள
கருவிகள்‌ ஐந்தின்‌ வெளிப்பாடுகளை ஐம்புலன்கள்‌!

என்றே அழைக்கின்றோம்‌.

16


Page 33பண்பாட - வேரும்‌, விழுதும்‌

பக்குவம்‌ பெற்றவரின்‌ வாழ்வு அதாவது பணிபாடூ
கொண்ட வாழ்வு சிறப்பாக அமைவதால்‌ - பண்பாடூ
என்பது உலகமாந்தரின்‌ மனநோய்க்கு மருந்தாகவும்‌,
அமைதியான இன்பவாழ்விற்கு விருந்தாகவும்‌
விளங்கும்‌.

எனவே இங்கு பண்பாடு என்பது மேம்பட்ட, மேம்‌
படுத்தக்கூடிய வாழ்வியலை மட்டூம்‌ பொருள்படக்‌ கூறி
நிற்பதை அவதானிக்கலாம்‌.

மத்தியூ. ஆர்னால்டூ எனும்‌ ஆங்கில இலக்கிய
திறனாய்வாளர்‌ “ஒருவன்‌ தன்‌ பண்பு நலன்களை
நிரப்புவதிலும்‌ தன்னைச்‌ சூழ்ந்த சமுதாயத்தின்‌
நலன்களைப்‌ பேணுவதிலும்‌ பேரவாக்‌ கொண்டிருக்கும்‌
நிலையே பண்பாடூ” என்கிறார்‌.

பாடறிந்தொழுகல்‌

பண்பெனப்படூவது “பாடறிந்தொழுகல்‌: என்கிறது
கலித்தொகை. இதற்குச்‌ சிலர்‌ “பிறர்‌ இயல்பு அறிந்து
ஒழுகுதல்‌” எனப்‌ பொருள்‌ கூறுகின்றனர்‌. இது
முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று. ஏனெனில்‌
ஒரு தீய நோக்கோடூ பழகுகின்ற ஒருவரின்‌ இயல்பறிந்து
இயைந்து வாழ்ந்தாற்‌ தீங்கல்லவா ஏற்படும்‌.

எனவே “பெருமை தரும்‌ வகை அறிந்து நடத்தல்‌”
எனப்பொருள்‌ கொள்ளுதல்‌ நன்று.

இதனை உறுதி செய்வது போன்றே திருவள்ளுவர்‌,

17


Page 34பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

“சொல்வணக்கம்‌ ஒன்னார்கண்‌ கொள்ளற்க வில்வணக்கம்‌
தீங்கு குறித்தமை யான்‌”
- குறள்‌: 827

வில்லின்‌ வளைவினைப்போல்‌ பகைவனின்‌ பணிவான
சொல்லும்‌ தீமை தரும்‌, ஆகவே அதனை நம்பக்கூடாது
என்கிறார்‌.

அதேபோன்றே “மக்களே போல்வர்‌ கயவர்‌”
- குறள்‌: 1071

கயவர்களும்‌ புறத்தோற்றத்தில்‌ மக்களைப்‌ போன்றே
இருப்பர்‌ - என்று கூறியுள்ளார்‌. அதேவேளை
வள்ளுவர்‌

“பெயக்கண்டும்‌ நஞ்சு உண்டு அமைவர்‌ நயத்தக்க
நாகரிகம்‌ வேண்டூ பவர்‌”
- குறள்‌: 580

என்பார்‌.
பாராட்டத்தக்க நாகரிகத்தை விரும்புவர்கள்‌ தமக்கு
வேண்டியவர்‌ நஞ்சினைப்‌ பெய்து கொடுத்தாலும்‌
அதனை உண்டு அமைதியாக இருப்பர்‌ என்று கூறும்‌
வள்ளுவரே

“நன்றுஆற்றல்‌ உள்ளும்‌ தவறுஉண்டு அவா்‌அவர்‌
பண்புஅறிந்து ஆற்றாக்‌ கடை”
- குறள்‌: 469

அவரவர்‌ குணங்களை அறியாமல்‌ செய்யும்‌
நன்மையே கூடத்‌ தவறாகி விடும்‌ - என்கிறார்‌ எனவே
“பாடறிந்து ஒழுகும்‌” இயல்பை வள்ளுவர்‌ இடத்திற்கும்‌

16


Page 35பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

சூழலிற்கும்‌ ஏற்ப வகுத்துத்‌ தந்துள்ளமை மனதில்‌
கொள்ளப்படவேண்டியது.

எனவே இவ்வுலகில்‌ பண்பைப்‌ பற்றிய தெளிவு
இல்லாது வாழும்‌ நல்லவர்கள்‌ அதாவது பாடறிந்து
ஒழுகும்‌ இயல்பை அறியாத நல்லவர்கள்‌ - தீயவரால்‌
ஏய்கப்படுவர்‌, மாய்க்கவும்‌ படுவர்‌.

இவ்வளவு சிறப்பாக, நுட்பமாகப்‌ பண்பாட்டைத்‌ தமிழர்‌
வரையறுத்து வைத்துள்ளனர்‌.

பாடறிந்து ஒழுகும்‌ தன்மையை நுணுக்கமாக
வள்ளுவர்‌ கூறியிருந்தபோதும்‌ அதனை நன்கு
தெளிந்து கடைப்பிடிக்காமையால்‌ தமிழர்‌ தமது
அரசுகளை அந்நியர்களிடம்‌ பறிகொடூத்தனர்‌. இன்றைய
அரசியலிலும்‌ தோல்வியுற்று வருகின்றனர்‌ என எண்ணத்‌
தோன்றுகிறது.

எனவே பணி்பாடூ என்பது தமிழர்‌ மொழியியல்‌ நோக்கில்‌

உயர்ந்த, மேம்படூத்தக்கூடிய, சிறப்பிக்கக்கூடிய
பழக்கவழக்கங்களையே  எடூத்துக்கூறும்‌ சொல்லாக
உள்ளது.

இதன்வழியே வரலாற்று அறிஞர்கள்‌, . இலக்கியவழி
நின்று பண்பாட்டைக்‌ கூறுவோர்‌, குறிப்பிட்ட ஒரு மக்கள்‌ -
கூட்டத்தினரின்‌ அல்லது இனத்தின்‌ சிறப்பு வாய்ந்த
உயர்பண்புகளை மட்டும்‌ பண்பாடு எனக்‌ கொள்வது
வழமை.

ஆனால்‌ சமூக மானிடவியலாளர்கள்‌ குறிப்பிட்ட

19


Page 36பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஓர்‌ இனத்தின்‌ உளப்பாங்கின்‌ வெளிப்பாடுகளான
பழக்கவழக்கங்கள்‌, ஒழுகலாறுகள்‌, நடைமுறைகள்‌
சகலவற்றையும்‌ “பண்பாடு” என அழைப்பர்‌. அவை
எத்தகைய மூடநம்பிக்கை உடையனவாயினும்‌ அல்லது
அந்த இனத்தை மேம்படுத்த துணை நிற்காததாயினும்‌
“பண்பாடு” என்றே குறிப்பிடுவர்‌.

ஆனால்‌ வரலாற்று ஆசிரியர்கள்‌, இலக்கியவாதிகள்‌
இவற்றை “ஒழுகலாறு” அல்லது “வாழ்வியல்‌” (ஷூ ௦7
1116) என்று குறிப்பிடுவர்‌.

சமூக, மானிடவியலாளர்‌ பார்வையில்‌ வாழ்வியலே
பண்பாடு ஆகும்‌. அதாவது ஒரு இனத்தின்‌
வாழ்க்கை முறையை, வாழ்வியலை அந்த இனத்தின்‌
“பண்பாடு” என்பர்‌. நானும்‌ இந்நூலில்‌ அவ்வாறே
நோக்குகின்றேன்‌.

இருப்பினும்‌ பண்பாட்டியலின்‌ நோக்கம்‌ வாழ்வியலை
மட்டும்‌ வரலாறு போன்று கூறி நிற்காது மனிதகுலத்தை
மேம்படுத்தவும்‌, மனிதனின்‌ உள்ளத்தை விலங்கியல்‌
நிலையில்‌ இருந்து மீட்டுத்‌ தெய்வப்பண்பிற்கு உயர்த்‌
துவதுமே என்பதனை நாம்‌ மறந்து விடக்கூடாது.

தூயஎண்ணங்கள்‌, தூயசெயல்கள்‌, தூயசொற்கள்‌
என்பனவற்றை முழுமையாகக்‌ கொண்டவன்‌ தெய்வ
நிலையை அடைந்தவன்‌ ஆவான்‌. இங்கு வள்ளுவர்‌
கூற்று நோக்கத்தக்கது.
“வையத்துள்‌ வாழ்வாங்கு வாழ்பவன்‌ வானுறையும்‌
தெய்வத்துள்‌ வைக்கப்‌ படும்‌”

- குறள்‌: 50

20


Page 37பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
நாகரிகம்‌

நாகரிகம்‌ என்பதைப்‌ பண்பாடூ என்ற பொருளிலேயே
சங்ககாலத்தில்‌ நோக்கியிருக்கின்றனர்‌ என்பதனைப்‌ பல
பாடல்வரிகள்‌ மூலம்‌ நாம்‌ அறிகிறோம்‌. அதேவேளை
அக்காலத்திற்‌ பண்பாடூ என்ற சொல்‌ வழக்கில்‌ இல்லை
என்பதையும்‌ நாம்‌ மனதிற்‌ கொள்ளல்‌ வேண்டும்‌.

ஆனாற்‌ பண்பாடூ என்னும்‌ பொருளில்‌ “சால்பு”: என்னும்‌
சொல்‌ இருந்திருக்கிறது

அன்று “பண்பு”, “பண்‌” என்ற சொற்களே இருந்தன
பிற்காலத்தில்‌ இலத்தீன்‌, ஆங்கில மொழிவழி நாமும்‌
பண்பாடூ (பே!பாஒ) , நாகரிகம்‌ (பேச) போன்று
வேறுபாடுகளைப்‌ பகுத்தறிந்து வேற்றுமை காணவேண்டி
“பண்‌” என்பதோடு “பட” என்ற வினையடியைச்‌
சேர்த்து பண்படு-? பண்பாடூ என்ற சொல்லாக்கத்தைப்‌
பெற்றுள்ளோம்‌.

பண்பாடு என்னும்‌ இச்சொல்லை முதன்முதலில்‌
கையாண்ட பெருமை அறிஞர்‌. இரசிகமணி டி. கே.
சிதம்பரநாத முதலியாருக்கே உரியது.

மனிதருடைய வளர்ச்சியை அகவளர்ச்சி, புறவளர்ச்சி
என இரண்டாகக்‌ காணலாம்‌.

உயர்‌ பண்புகளை உள்ளத்தே கொண்டது அக
வளர்ச்சி.

அகவளர்ச்சியை அடிப்படையாக ஆதாரமாகக்‌ கொண்டு
வளர்த்தெடுக்கப்பட்டதே புறவளர்ச்சி.

உலக மனிதகுலம்‌ தன்னலத்தை ஓரளவாகுதல்‌
புறக்கணித்து, பொதுநலத்தைப்‌ பேணவேண்டிய தேவை
முதன்மையானது. எனவே அதற்குத்‌ தேவையான

21


Page 38பணர்பாடு - வேரும்‌, விழுதும்‌

பண்புகளை உள்ளத்தே வளர்த்தெடுக்க வேண்டும்‌.
எடூத்துக்காட்டாக அன்பு, தூய்மை, ஒப்புரவு,
கண்ணோட்டம்‌, ஈகை, சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு போன்ற
பல பண்புகள்‌.

இத்தகைய அகவளர்ச்சி, பண்பாடு என்றும்‌,
அதன்வழி பிறந்த புறவளர்ச்சி நாகரிகம்‌ என்றும்‌
அழைக்கப்படலாம்‌.

இவ்‌ அகவளர்ச்சியும்‌, புறவளர்ச்சியும்‌ மனிதகுலத்திற்கு
இன்றியமையாதன.

இப்புறவளர்ச்சி நகரங்களிலே ஓங்கி வளர்ந்தது.
இதனாலேயே இது நாகரிகம்‌ என்றாயிற்று.
உலகிலுள்ள பேராற்றங்கரைகளான நையில்‌,
யூப்பிறற்றீஸ்‌, தைக்கிறீஸ்‌, சிந்து, கங்கை, காவேரி,
வைகை போன்ற நதிக்கரைகளின்‌ நகரங்களிற்‌ தோன்றி
வளர்ந்த புறவளர்ச்சியாகிய தொழில்துறை, கலைகள்‌,
நகரஅமைப்பு, நவீனகருவிகள்‌ போன்ற இன்னோரன்னவை
பெருவளர்ச்சி கண்டன.

இவை மனிதவாழ்வியலை மேம்படுூத்தின.

இத்தகைய வாழ்வியல்‌ நாகரிகம்‌ என அழைக்கப்‌
பட்டது.

இந்நதிக்கரையோரப்‌ புறவளர்ச்சி அதாவது நாகரிக
வளர்ச்சி அகவளர்ச்சியாகிய பண்பாட்டின்வழித்‌ தோன்றி
வளர்ந்து வந்தது. இப்புறவளர்ச்சியின்‌ தோற்றம்‌
ஒவ்வொன்றுக்கும்‌ அடிப்படையாக ஓர்‌ அகநிலைப்‌
பண்பைக்‌ காண முடிந்தது.

அகமும்‌, புறமும்‌ இணைந்த வளர்ச்சியாக நாகரிகம்‌
தோற்றம்‌ பெற்று வளர்ந்தமையால்‌ அன்றைய
தமிழர்‌ நாகரிகத்தை, பண்பாடு என்ற பொருளிலேயே

22


Page 39பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
அழைத்துள்ளனர்‌.

இன்றைய உலகில்‌ நாகரிகம்‌ என்பது புறத்தோற்றத்தைக்‌
குறிக்கும்‌ ஒரு சொல்லாகவே பாவிக்கப்படூகின்றது.
அழகிய கட்டடங்களையும்‌, தெருக்களையும்‌ மற்றும்‌ பல
வசதிகளையும்‌ கொண்ட ஒரு நகரத்தை நாகரிகம்‌ மிக்க
நகரமென அழைக்கின்றோம்‌. அங்கு வாழும்‌ மக்களின்‌
ஆடை அணிகலன்கள்‌, வாகன வசதிகள்‌, பாவிக்கும்‌
உபகரணங்கள்‌ மற்றும்‌ இன்னோரன்ன புறத்தோற்றங்களை
மட்டும்‌ கவனத்தில்‌ எடூத்து அவர்களை நாகரிகம்‌
மிக்கவர்கள்‌ என அழைக்கின்றோம்‌.

இப்புறத்தோற்றத்தைப்‌ படைத்தமைக்கான காரணியாக
அமைந்தது அகத்தில்‌ எழுந்த சிந்தனையே ஆகும்‌.
இது “பண்பாடு” ஆகின்றது. இருப்பினும்‌ மனிதனின்‌
சிந்தனையால்‌ மிகவேகமாக வளர்ந்து வரும்‌ மாறிவரும்‌
இப்புறத்தோற்றத்தை “நாகரிகம்‌” என்றே அழைப்போம்‌.

பண்பாட்டின்‌ ஒரு கூறாக நாகரிகம்‌ விளங்கும்‌. நாகரிகம்‌
அறிவியல்‌ வளர்ச்சியைக்‌ காட்டும்‌.

பண்பாடு மனவளர்ச்சியையும்‌ அறிவியல்‌ வளர்ச்சியையும்‌
காட்டும்‌ இணைந்த நிலை.

நாகரிகம்‌ இல்லாத பண்பாட்டாளரை ஏற்றுக்‌ கொள்ளலாம்‌.
ஆனால்‌ பண்பாடில்லாத நாகரிகம்‌ உடையவரை

ஏற்றுக்‌ கொள்வதெப்படி?

எனவே நாகரிகத்தையும்‌, பண்பாட்டையும்‌ தனித்தனியே
நோக்குவோம்‌.

23


Page 40இதழ்‌ 2

உ.யீாரனணங்கவீற்‌ பண்பஈரு

உயிரினங்களிற்‌ தாவரம்‌ முதலாக மனிதன்‌ வரை ஓர்‌
அறிவு முதல்‌ ஆறு அறிவு வரையுள்ள உயிரினங்கள்‌
உள்ளன.

மனிதனைத்‌ தவிர்ந்த இந்த உயிரினங்கள்‌ ஒவ்வொன்றும்‌
உலகின்‌ எப்பகுதியில்‌ வாழ்ந்தாலும்‌ ஒரேவிதமான
வாழ்க்கை நெறிமுறைகளை, வாழ்வியலை உடையன.

எடுத்துக்காட்டாகத்‌ தேனீயை எடூத்துக்கொண்டால்‌
உலகில்‌ எங்கு வாழ்ந்தாலும்‌ ஒரேவிதமான வாழ்‌
வியலைக்‌ கொண்டிருப்பதை நாம்‌ அறிவோம்‌.
இதேபோன்றே எறும்பு, புறா, மான்‌, யானை போன்ற
இன்னோரன்ன பல உயிரினங்களும்‌ வாழ்கின்றன.

ஆனால்‌ மனிதன்‌ மட்டூம்‌ ஒரேவிதமான வாழ்வியலை,
பண்பாட்டைக்‌ கொண்டிருக்கவில்லை. மனிதன்‌
உருவத்தால்‌ ஒத்திருந்தாலும்‌ பண்புகளால்‌ பெரிதும்‌
வேறுபடுகிறான்‌. இதற்குக்‌ காரணம்‌ என்ன? மனிதன்‌
மற்றைய விலங்கினங்களை விட ஆறாவது அறிவாகிய
“பகுத்தறிவைக்‌” கொண்டிருப்பதும்‌, அவ்வறிவின்‌ வழி
“மனதை”ப்‌ பயன்படுத்தி சிந்தித்துச்‌ செயற்படுவதுமே
ஆகும்‌.

பரிணாம வளர்ச்சி

மனித வாழ்வியல்‌ அதாவது பண்பாடூ என்பது பரிணாம
வளர்ச்சி பெற்றே வந்துள்ளது. எனவே பரிணாம

24


Page 41 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

வளர்ச்சியை மாற்றம்‌ எனப்‌ பொருள்‌ கொள்ளல்‌
ஆகாது.

மாற்றம்‌ என்பது ஒரு பொருள்‌ இன்னொன்றாக
மாறிவிடுவது. இம்மாற்றம்‌ உடனடியாகக்‌ கூட நடை
பெறலாம்‌.

ஆனால்‌ பரிணாம வளர்ச்சி என்பது தொடர்ச்சியானமாற்றம்‌.
இது தான்தோன்றித்‌ தனமாகவோ, முறையற்ற
நிலையிலோ, ஏற்படுவது இல்லை. இது முறையான
அமைப்பிலேயே நிகழும்‌. இதன்‌ இயக்கமும்‌ செயற்‌
பாடும்‌ ஒருவரையறைக்குள்‌ நின்று செயற்படும்‌ ஒரு
படிமுறைவளர்ச்சியே பரிணாமவளர்ச்சி எனப்படூம்‌.

எடூத்துக்காட்டாக ஒரு வாழைமரம்‌ கிழங்கில்‌ இருந்து
முளைவிட்டூச்‌ சிறிது சிறிதாக வளர்ந்து- பொத்தியை
பூவை வெளிவிட்டு, அது ஓர்‌ ஒழுங்கில்‌ சிறு
காய்களைக்‌ கொண்ட சீப்பாகிக்‌ குலையாகி, காலப்‌
போக்கில்‌ வாழைப்பழமாக மாறுவது போன்றது.

இவ்வாறு ஒரு வாழை மரக்கிழங்கின்‌ முளை வாழைப்பழக்‌
குலையாகப்‌ படிப்படியாக வளர்ந்து மாறிச்சென்றதே
வாழையின்‌ பரிணாம வளர்ச்சி.

உயிரினங்களின்‌ பரிணாம வளர்ச்சிக்கு வெவ்வேறு
கால அளவுகள்‌ உள்ளமை போன்று பண்பாட்டின்‌
ஒவ்வொரு கூற்றின்‌ பரிணாம வளர்ச்சியும்‌ போதியளவு
காலம்‌ எடுத்தே நிகழ்ந்துள்ளது, நிகழும்‌.

25


Page 42பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
உயிரினங்களின்‌ வளர்ச்சி

மனமா? இது மற்றைய உயிரினங்களுக்கு இல்லையா?
என்ற கேள்வி எழுகின்றது.

இதற்கான விடையை நாம்‌ அறிவதற்கு முன்னர்‌
உயிரினங்களின்‌ பரிணாம வளர்ச்சி பற்றி அறிதல்‌
நன்று.

நான்‌ மாணவர்களுக்குக்‌ கற்பிக்கும்போது ஓர்‌ அறிவுள்ள
உயிரினம்‌ எது? முதலாவது அறிவு எது? என்று கேட்டால்‌
எந்த மாணவரிடமிருந்தும்‌ பதில்‌ வராது.

உயிரினங்களின்‌ பரிணாம வளர்ச்சிக்‌ கோட்பாட்டை
முதன்முதலில்‌ உலகிற்குச்‌ சொன்னவர்‌ யார்‌ என்று
கேட்டால்‌ உடனே அதற்கு “சார்ல்ஸ்‌ டார்வின்‌” எனப்‌
பதில்‌ கூறுவார்கள்‌.

ஆனால்‌ மூவாயிரம்‌ ஆண்டூகளுக்கு முன்னரே தமிழுக்கு
இலக்கணம்‌ வகுத்த தொல்காப்பியர்‌ பரிணாம வளர்ச்சிக்‌
கோட்பாட்டை உலகிற்குத்‌ தந்துள்ளார்‌ என்பதனைத்‌
தமிழர்களாகிய நம்மில்‌ பலரோ, நமது பிள்ளைகளோ
அறிந்திருக்கவில்லை.

இதோ தொல்காப்பியம்‌ - பொருள்‌ 571 - மரபியல்‌ 27இல்‌
உள்ளது.

“ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடூ நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடூ மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே

26


Page 43பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌

ஐந்தறிவு அதுவே அவற்றொடூ செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
நேரிதின்‌ உணர்ந்தோர்‌ நெறிப்படுத்தினரே”

ஒன்று முதல்‌ ஆறு அறிவுவரை உயிரினங்கள்‌ பரிணாம
வளர்ச்சி பெற்றுச்‌ செல்வதையும்‌ வளர்ச்சிபெறும்‌ ஒவ்வோர்‌
“அறிவின்‌” (புலன்‌) வாயில்களாக “உறுப்புக்களையும்‌”
(பொறிகளையும்‌) தந்துள்ளார்‌.

அத்துடன்‌ இவ்வுறுப்புக்கள்‌ மூலம்‌ நாம்‌ பெறும்‌
உணர்வுகளை அதாவது “அறிவுகளையும்‌'” அந்தந்த
அறிவிற்குத்‌ துணைசெெய்யும்‌ “மூலகங்களையும்‌”
(பூதங்கள்‌) கண்டறிந்தனர்‌

 

 

உறுப்பு அறிவு மூலகம்‌ உயிரினம்‌

(பொறி) (புலன்‌) (பூதம்‌) (எகா)

தோல்‌ தொடூ நிலம்‌ மரம்‌, புல,
உணர்ச்சி பூண்டூ

 

 

 

 

முதல்‌ உணர்வாகிய தொடூ உணர்வைத்‌ தோலின்‌ வழியே
நாம்‌ அறிகிறோம்‌. தாவரங்கள்‌ இந்த ஓர்‌ அறிவைக்‌
கொண்டே உயிர்வாழ்பவை. இடம்பெயரமாட்டாத
தாவரங்களை இடம்பெயரா நிலம்‌ ஆட்சி செய்கின்றது

 

வாய்‌ சுவை நீர்‌ மண்புழு,
சிப்பி
இரண்டாம்‌ அறிவாகிய சுவையை உணர்த்தும்‌ கருவி
வாய்‌. அதற்குத்‌ துணை செய்வது உமிழ்நீர்‌, நீர்‌ அதனை
ஆட்சி செய்கின்றது, நீர்‌ நிலத்தில்‌ ஓடும்‌, புழுக்களும்‌
நிலத்தில்‌ ஓடம்‌

 

 

 

 

 

 

 

27


Page 44பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

 

மூக்கு மணம்‌ காற்று எறும்பு,
அட்டை,
பறக்கும்‌
பூச்சிகள்‌
சில
மூன்றாம்‌ அறிவாகிய மணத்தை மூக்கினால்‌ உணர்கின்றோம்‌.
மூக்கை ஆட்சி செய்வது காற்று. காற்று, பூமிக்கு மேல்‌
உலவும்‌ பூச்சிகளும்‌ அவ்வாறே

 

 

 

 

 

கண்‌ பார்வை நெருப்பு பாம்பு,
நண்டு,
வண்டூ சில
பறவைகள்‌
நான்காம்‌ அறிவாகிய பார்வையைக்‌ கண்வழியே அறிகிறோம்‌.
பார்வைக்குத்‌ துணைசெய்வது நெருப்பு, ஒளி

 

 

 

 

 

காது கேட்டல்‌ வான(விண்‌) | மிருகங்கள்‌

 

 

 

 

ஐந்தாம்‌ அறிவாகிய ஒலியைக்‌ காதின்‌ வழியே அறிகிறோம்‌.
அதனை ஆட்சி செய்வது வான்‌ (6121)

 

மனம்‌ பகுத்தறிவு | வானம்‌ மனிதன்‌

 

 

 

 

முதல்‌ ஐந்து அறிவு கொண்ட உயிரினங்கள்‌ உடலை
மாத்திரம்‌ நம்பி வாழ்கின்றன. ஆனால்‌ ஆறாவது
அறிவாகிய “மனத்தை” உடைய “மனிதன்‌” அறிவை நம்பி
வாழ்கிறான்‌, சிந்திக்கும்‌ வானறிவு வளர்ந்து கொண்டே
செல்கின்றது. எண்ண அலைகள்‌ மனிதனை ஆட்சி
செய்கின்றன.

 

 

உயிரினங்களின்‌ தோற்றத்தைப்‌ பற்றியும்‌ இந்த உலகம்‌
எவ்வாறு எப்போது தோன்றியது என்பது பற்றியும்‌ உலகில்‌
வாழும்‌ பல்வேறு அறிஞர்களும்‌ தமது கருத்துக்களைக்‌
கூறியுள்ளார்கள்‌.

28

 


Page 45பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

நாம்‌ வாழும்‌ இப்பேரண்டம்‌(பிரபஞ்சம்‌) தோன்றி 15
மில்லியன்‌ ஆண்டூகள்‌ ஆகிவிட்டது என்று கார்ல்சாகன்‌
என்னும்‌ மேற்கத்திய அறிஞரும்‌, 21.6 மில்லியன்‌
ஆண்டுகள்‌ ஆகிவிட்டன என்று தமிழர்‌ பஞ்சாங்கக்கால
வாய்ப்பாடும்‌ கூறுகிறது. அது மேலும்‌ இப்பூவுலகத்தின்‌
இயக்கம்‌ பற்றிய சகல காலஅளவினைக்‌ கூறுவதுடன்‌
அது எப்போது அழியும்‌ (ஒடுங்கும்‌) என்றும்‌ கூறுகிறது.

இதுபோன்றே உயிரினங்களின்‌ தோற்றத்தையும்‌ அதன்‌
பரிணாம வளர்ச்சி (படிமலர்ச்சி) பற்றியும்‌ உலகின்‌ பல
அறிஞர்களும்‌ தமது கருத்துக்களைக்‌, “கொள்கைகளாக
வைத்துள்ளனர்‌.

கனிமப்‌ பொருட்களின்‌ அணுக்கள்‌, மூலக்கூறுகளில்‌
இருந்தே முதல்‌ உயிர்‌ தோன்றியது என்னும்‌ கொள்கை
உட்பட, பல கொள்கைகளை சார்ல்ஸ்‌ டார்வின்‌ முதல்‌
பல மேற்குலக அறிஞர்கள்‌ கூறியுள்ளனர்‌.

பழைய விவிலியம்‌ பழைய உயிர்களிலிருந்து
கூர்ப்படைந்து புதிய உயிர்கள்‌ தோன்றுகின்றன என்ற
கருத்தை குறிப்பிடுகிறது; ஆனால்‌ பிற்கால விவிலியக்‌
கருத்துக்கள்‌ உயிரினம்‌ தோன்றியது முதல்‌ இன்றுவரை
மாறாமல்‌ இருக்கின்றன என்று கூறுகின்றது.

தமிழர்‌ நம்பிக்கை வழி, கடவுளால்‌ உலகில்‌
படைக்கப்பட்ட உயிர்கள்‌ எண்பத்தி நான்கு லட்சம்‌ யோனி
பேதமுடையவை. அவை அறிவால்‌ ஆறுவகைப்படும்‌.

பிறப்பால்‌ ஏழுவகையாக விளங்குகின்றன.
இருப்பினும்‌ உயிர்கள்‌ உயர்திணை அ..றிணை என
இருவகைப்படும்‌.

29


Page 46பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

உலகின்‌ தோற்றம்‌, உயிரினங்களின்‌ தோற்றம்‌ பற்றி
இந்நூலில்‌ மேலும்‌ பல அறிஞர்களின்‌ கொள்கைகளைக்‌
கூறுவது பொருத்தமாகாது.

எனவே மனிதனின்‌ இன்றைய நிலையிலிருந்தும்‌ உலகின்‌
இன்றைய  சூழலிலிருந்தும்‌ நோக்குவதே நூலின்‌
குறிக்கோள்‌.

இருப்பினும்‌ ஐந்து மூலகங்கள்‌ (ஜம்பூதம்‌) வழியே
ஐம்பொறிகளும்‌, அதன்வழி தோன்றும்‌ புலன்களையும்‌
பார்த்தோம்‌. இவ்வுணர்வுகளின்‌(பொறிகளின்‌) வழியேதான்‌
அறிவினைப்‌ பெற்று உயிரினங்கள்‌ செயற்படுகின்றன,
இயங்குகின்றன.

ஆனால்‌ மனிதஇனம்‌ ஜம்பொறிகளின்வழி பெறும்‌
அறிவிற்கு முழுமையாக அடிமைப்பட்டு ஐந்து அறிவு
வரையுள்ள உயிரினங்கள்‌ போல்‌ செயற்படாது
பலாபலன்களைச்‌ சிந்தித்தும்‌ செயற்படல்‌ வேண்டூம்‌
இதனையே வள்ளுவர்‌

“சுவைஓளி ஊறுஓசை நாற்றம்‌என்று ஐந்தின்‌
வகைதெரிவான்‌ கட்டே உலகு”
- குறள்‌: 27
என்று கூறியுள்ளார்‌.

எமது உடலும்‌, ஐந்து மூலகங்களாலும்‌ (பூதங்கள்‌)
ஆக்கப்பட்டவை. இவை ஐந்தும்‌ சரியான விகிதத்தில்‌
இணைந்து ஒத்துப்போனால்‌ நோயற்ற ஆரோக்கியமான
உடல்‌ தோன்றும்‌ என்று பன்னெடூங்காலமாகத்‌

30


Page 47பண்பா௫ - வேரும்‌, விழுதும்‌

தமிழர்கள்‌ கொண்டூள்ள நம்பிக்கை இங்குச்‌
சுட்டிக்காட்டப்படவேண்டியது.

மனிதர்‌ யார்‌?

மனிதர்‌ யார்‌? என்பதற்குப்‌ பல வகைகளில்‌ மானிட
வியலாளர்களின்‌ கோட்பாடுகள்‌ உண்டூ இருப்பினும்‌
“மனதை” உடையவர்‌ மனிதர்‌. உயிரினங்களின்‌ பரிணாம
வளர்ச்சியில்‌ உயர்நிலையில்‌ கொடூமுடியாக உள்ளவர்‌
மனிதர்‌ என்பது இன்றைய நிலை.

ஆணும்‌, பெண்ணும்‌ தாம்பத்திய உறவில்‌ அதாவது
புணர்ச்சியில்‌ ஈடுபடுவதால்‌ ஆணின்‌  சுக்கிலமும்‌
(விந்தும்‌ - வெள்ளைநிறம்‌), பெண்ணின்‌ சுரோணிதம்‌
(கரு - மென்சிவப்புநிறம்‌) ஒன்று சேர்ந்து பெண்ணின்‌
கருவறையில்‌ “௧௬” நிரந்தரமாகத்‌ தங்குகின்றது. தாயின்‌
கருவறையில்‌(வயிற்றில்‌) வெண்ணிறச்‌  சுக்கிலமும்‌,
மென்சிவப்புநிறச்‌ சுரோணிதமும்‌ கலப்பதால்‌ “கர”
தோன்றி வளர்கின்றது.

கோயில்களில்‌ ஆதிமூல இறைவனை வைத்திருக்கும்‌
இடத்தைக்‌ “கருவறை” என்று அழைப்பர்‌. அக்கரு

வறையினைச்‌ சுற்றி வெள்ளை மென்சிவப்பு
நிறவர்ணக்கோடூகள்‌ போட்டிருப்பதும்‌ எண்ணிப்‌
பார்க்கத்தக்கது.

௧௬ உருவாவதிலிருந்து - மனித உடலின்‌ தோற்றம்‌ பற்றிப்‌
பல சித்தர்கள்‌ கூறியுள்ளனர்‌. குறிப்பாகத்‌ திருமூலர்‌ ௧௬
வளரும்போது ஒவ்வொரு தத்துவப்பொருளும்‌ அத்துடன்‌
வந்து சேருகின்றன என்கிறார்‌.

31


Page 48பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

“போகின்ற எட்டூம்‌ புகுகின்ற பத்தெட்டூம்‌
மூழ்கின்ற முத்தணும்‌ ஒன்பது வாய்தலும்‌
நாகமும்‌ எட்டூடன்‌ நாலு புரவியும்‌
பாகன்‌ விடானெனிற்‌ பன்றியும்‌ ஆமே”

- திருமந்திரம்‌: 457

கணணிற்குப்‌ புலப்படாத சூக்கும நிலையிலுள்ள சுவை,
ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்‌, மனம்‌, புத்தி, அகங்காரம்‌
என்ற எட்டு அம்சங்களும்‌ இணைந்த நுண்ணுடல்‌
கருப்பைக்குள்‌ நுழையும்‌.

பிராணன்‌, அபானன்‌, உதானன்‌, வியானன்‌, சமானன்‌,
நாகன்‌, கூர்மன்‌, கிருகரன்‌, தேவதத்தன்‌, தனஞ்செயன்‌
என்னும்‌ பத்து வாயுக்களும்‌ அந்த நுண்ணுடலாகிய
சூக்கும உடலைச்‌ சூழ்ந்து செல்லும்‌.

காமம்‌,

குரோதம்‌ - பகைமை, கோபம்‌,

உலோபம்‌ - பேராசை, கடூம்‌ பற்றுள்ளம்‌, ஈயாமை,
மோகம்‌ - விருப்பம்‌, வேட்கை,

மதம்‌ - செருக்கு, பெருமை,

மாச்சர்யம்‌ - பொறாமை

துயரம்‌

அகந்தை

என்னும்‌ எட்டு அசுர குணங்களும்‌ உள்ளே புகும்‌.

இரண்டூ கண்கள்‌, இரண்டூ காதுத்துவாரங்கள்‌, இரண்டூ
நாசித்துவாரங்கள்‌, ஒரு வாய்‌, மலவாசல்‌, சலவாசல்‌
என ஒன்பது துவாரங்களும்‌ உண்டாகும்‌. குண்டலினி

32


Page 49பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

என்னும்‌ நாதமும்‌ 12 அங்குலம்‌ ஏறியிறங்கும்‌ பிராணன்‌
எனப்படும்‌ உயிர்ச்சத்தும்‌ உள்ளே அமைந்தால்தான்‌
அது மனிதக்கூடாக வளரும்‌.

இவ்வாறாகக்‌ ௧௬ உருவாகும்‌, வளரும்‌. எவ்வளவு
காலம்‌ உயிர்‌ வாழும்‌? ஆணாக அல்லது
பெண்ணாக எப்படி உருவாகும்‌? எவ்வாறு சிறந்த
குழந்தைகளைப்‌ பெற்றெடுப்பது போன்ற பலவும்‌
திருமந்திரத்திலும்‌, இவ்வாறான வேறு பல நூல்களிலும்‌
சொல்லப்பட்டுள்ளன.

மனம்‌ என்பது
தொல்காப்பியர்‌ மரபியலில்‌ குறிப்பிட்டபடி உயிர்கள்‌

தோல்‌ (ஊறு) -? வாய்‌ (சுவை) 5 மூக்கு (நாற்றம்‌)
கண்‌ (ஒளி) 5 செவி (ஓசை) -? மனம்‌ (பகுத்தறிவு) எனப்‌
பரிணாமவளர்ச்சி அடைந்தோ அல்லது அடையாமலோ
இன்று அவ்வாறே உள்ளன என்பதனை அறிவோம்‌.

இதில்‌ முதல்‌ ஐந்து உறுப்புக்களும்‌ (தோல்‌,வாய்‌, மூக்கு,
கண்‌, காது) மனித உடலில்‌ எங்கே உள்ளது என்பதை
நாம்‌ அறிவோம்‌, அவற்றைச்‌ சுட்டிக்‌ காட்டுவோம்‌
ஆனால்‌ ஆறாவது உறுப்பாக வளர்ச்சி பெற்றுள்ள
மனம்‌ எங்கே உள்ளது? என்று கேட்டால்‌ குறிப்பாக ஓர்‌
இடத்தைச்‌ சுட்டிக்காட்ட எவராலும்‌ முடியாது.

மனம்‌ என்பது பொருளா (உறுப்பு) அல்லது ஆற்றலா
(சக்தி)

33


Page 50பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பொருள்‌ என்றால்‌ எந்த வடிவில்‌ எங்கு உள்ளது?
ஆற்றல்‌ என்றால்‌ அது உடலில்‌ எந்த உறுப்பு வழியே
இயங்குகிறது?

பொருள்‌ இருந்தால்‌ அது ஆற்றலை வெளிப்படுத்தும்‌;

ஆற்றல்‌ வெளிப்பட்டால்‌ பொருள்‌ இருக்கும்‌.

மின்சாரம்‌ என்பது ஆற்றல்‌, ஆனால்‌ அது கம்பி
என்ற பொருளை ஊடகமாக வைத்துப்‌ பாயாத வரை
அதனை உணரமுடியாது. ஒப்புக்கொள்ளவும்‌ முடியாது.
அதுபோலவே மனம்‌ என்பது ஓர்‌ ஆற்றல்‌ அது
முளையை மையமாகக்‌ கொண்டூ பாயாதவரை அதை
உணர முடியாது; ஒப்புக்‌ கொள்ளவும்‌ முடியாது.

எனவே மூளை என்ற பொருளின்றி மனம்‌ என்ற ஆற்றல்‌
இல்லை; மனம்‌ என்ற ஆற்றல்‌ இன்றி மூளை என்ற
பொருளை உணர வாய்ப்பில்லை.!

முடிவாக மனம்‌ என்பது மூளையை மையமாகக்‌
கொண்டூ உடலின்‌ உள்ளும்‌ வெளியும்‌ பாயும்‌ மாபெரும்‌
சக்தியாகும்‌. பொருள்‌ இல்லையென்றால்‌ சக்தியை
உணாமுடியாது. சக்தி இல்லையென்றால்‌ பொருட்கள்‌
இயங்கா.

மனம்‌ உடலைவிட உயர்ந்தது, மனம்‌ உடலால்‌
உற்பத்தி செய்யப்பட்டது என்று கருதுவோரும்‌ உளர்‌.

கீழ்ப்பட்டதொன்று மேற்பட்டதொன்றைப்‌ படைக்க
இயலாது.

34


Page 51பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
உயிர்‌ (ஆன்மா)

உலகிலுள்ள உயிரினங்கள்‌ எல்லாம்‌ தோன்றுகின்றன
பின்னர்‌ ஒருநாள்‌ இறந்து விடுகின்றன; மறைந்து
விடுகின்றன. ஆகவே ஏதோ ஒன்று உடலிற்‌ புகுந்து
கொண்டு உடலை இயக்குவிக்கின்றது; பின்னர்‌ ஒருநாள்‌
அது வெளியேறி விடுகின்றது. அதற்கு உயிர்‌ (ஆன்மா)
எனப்‌ பெயரிட்டார்கள்‌.

உடலையும்‌, மனதையும்‌ விட ஆன்மா (உயிர்‌) தான்‌
உயர்ந்தது; நிரந்தரமானது.

எனவே மனிதர்‌ என்பவரின்‌ முக்கியப்‌ பாகங்களாக
உடல்‌, உயிர்‌, மனம்‌ உள்ளன.

உடல்‌, உயிர்‌, மனம்‌ இம்மூன்றும்‌ இயல்பாக எப்போதும்‌
பின்வருவனவற்றை விருப்புடன்‌ நாடிக்‌ கொண்டிருக்கும்‌,
எதிர்பார்த்திருக்கும்‌, பசியோடிருக்கும்‌ அவை முறையே
உணவு, அன்பு, அறிவு என்பதாகும்‌.

மனிதர்‌
ம்‌
உணவு “- உடல்‌
4
அன்பு - உயிர்‌
-
அறிவு - மனம்‌

உடல்‌ மலர்ச்சி
உடல்‌ எப்போதும்‌ உணவை விரும்பிய வண்ணம்‌

35


Page 52பண்பா௫ு - வேரும்‌, விழுதும்‌

அதனை நாடியபடி இருக்கும்‌. அந்த உடலிகேற்ற தகுந்த
உணவை நாம்‌ கொடூப்போமானால்‌ மலர்ச்சி கொண்ட
சிறந்த ஆரோக்கியமான உடலைப்‌ பெறுவோம்‌.

சிறந்த ஆரோக்கியமான உடல்‌ இந்த உலகியல்‌
வாழ்விற்கு மிகவும்‌ இன்றியமையாதது என்பது சொல்லித்‌
தெரியவேண்டியது இல்லை.

உடம்பார்‌ அழியின்‌ உயிரார்‌ அழிவர்‌
திடம்பட மெய்ஞ்ஞானம்‌ சேரவும்‌ மாட்டார்‌
உடம்பை வளர்க்கும்‌ உபாயம்‌ அறிந்தே
உடம்பை வளர்த்தேன்‌ உயிர்‌ வளர்த்தேனே

திருமந்திரம்‌ - 724

என்கிறார்‌ திருமூலர்‌. மலர்ச்சி கொண்ட உடல்‌
இருக்குமானால்தான்‌ நன்கு சிந்தித்து மேலான அறிவைப்‌
பெறலாம, பிறப்பின்‌ பயனை அடையலாம்‌ என்கிறார்‌.

திருமூலர்‌ உடம்பை வளர்க்கக்‌ கூறிய உபாயங்களில்‌
ஒரு வழி, சிறந்த உணவு.

எமது உணவு எவ்வாறு இருக்கவேண்டும்‌ என்று “மருந்து”

என்னும்‌ அதிகாரத்தில்‌ திருவள்ளுவர்‌ அழகாக எடுத்துக்‌
கூறுகிறார்‌.

உண்ட உணவு செரித்தபின்‌ உடல்‌ நிலைக்கும்‌,
காலத்திற்கும்‌, இடத்திற்கும்‌ ஏற்ப அளவோடு, தீயளவு
(02101168) அறிந்து, உடம்பு ஏற்கக்கூடிய மாறுபாடில்லா
(1௦8 ௮1/௭0) உணவை உட்கொள்ளல்‌ வேண்டும்‌.

36


Page 53பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌

உடம்பிற்கு ஏற்காத, நச்சுத்தன்மை உடைய உணவை
உண்டால்‌ உடல்‌ வருந்தும்‌. அவ்வருத்தம்‌ உச்சநிலை
அடைந்தால்‌ உடலைவிட்டு உயிர்‌ வெளியேறிவிடும்‌.

உயிர்‌ மலர்ச்சி

உயிர்‌ எப்போதும்‌ அன்பை நாடும்‌. அன்புக்காக ஏங்கி
நிற்கும்‌. ப
உண்ட உணவு சக்தியாக உடல்‌ மூலம்‌ வெளியேறுவது
போல;

"அன்பு உயிர்வழியேதான்‌ வெளிப்படும்‌ “அன்பின்‌ வழியது
உயிர்நிலை” என்கிறார்‌ திருவள்ளுவர்‌.

உடல்‌ எதை நாடூம்‌ (தேவை)? என்று கேட்டால்‌ உணவை
என்று எல்லோரும்‌ சொல்லிவிடுவோம்‌ ஆனால

உயிர்‌ எதை நாடூம்‌ (தேவை)? என்று கேட்டால்‌ உடனே
பதில்‌ வராது.

இதனை விளங்கிக்கொள்ளப்‌ பின்வருமாறு கூறலாம்‌.
சிறைத்தண்டனை பெற்ற ஒருவருக்குச்‌ சிறைச்சாலையில்‌
நேரத்திற்கு உணவு கொடுக்கப்படுகிறது, உடற்பயிற்சி
செய்து கொள்ளலாம்‌; படிக்கலாம்‌. உழைத்துத்தான்‌
வாழ வேண்டும்‌ என்பதில்லை எனவே அவருக்கு அது
எவ்வாறு தண்டனை ஆகும்‌?

அங்கு தண்டனை அவர்‌ உடலிற்கு அல்ல “உயிருக்கு”
அவர்‌ உயிர்மீது அன்பு செலுத்துவோர்‌ இல்லை, அவர்மீது
அன்பு செலுத்தியவர்கள்‌, அவர்‌ அன்பு செலுத்தியவர்கள்‌
ஆகியோரிடமிருந்து அவர்‌ துண்டிக்கப்பட்டுள்ளார்‌.
இதனால்‌ அவர்‌ உயிர்‌ வருந்துகின்றது.

37


Page 54பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தூய்மையான அன்பைக்‌ கொண்ட பெற்றோர்கள்‌,
சகோதரர்கள்‌, நண்பர்கள்‌, உறவினர்கள்‌, குரு
வானவர்கள்‌, வாழ்க்கைத்துணைவர்‌ என்போரது
நல்லுறவைப்‌ பெற்றவர்களது உயிர்‌, மலர்ச்சி பெற்ற
உயிராக இருக்கும்‌, மிக்க சக்தி கொண்ட உயிராகத்‌
திகழும்‌, உயிரின்‌ மலர்ச்சியே மகிழ்ச்சியான வாழ்வு.

உணவில்‌ சிறு நஞ்சு கலந்தாலும்‌ உடல்‌ வருந்தும்‌
சிலவேளைகளில்‌ உடலை விட்டூ உயிர்‌ பிரிந்து
விடூம்‌.

அதுபோன்றே நாம்‌ பெறும்‌ அன்பு போலியானது என்றோ,
நாம்‌ அன்பு செலுத்தியவர்கள்‌ போலியானவர்கள்‌, எம்மை
ஏமாற்றிவிட்டார்கள்‌ என்றோ நாம்‌ காணும்போது எமது
உயிர்‌ வருந்தும்‌, துன்பப்படும்‌. சிலவேளைகளில்‌ தன்‌
உடம்பை அழித்து வெளியேறியும்‌ (இறந்தும்‌) விடும்‌.

அதேபோன்றே நாம்‌ அன்பு வைத்துள்ள நிறுவனம்‌,
மொழி, இனம்‌, நாடு, உலகம்‌, மனிதஇனம்‌, உயிரினம்‌...
போன்றவை துன்புறும்போது, அழிவுறும்போது எமது
உயிரும்‌ வாடிவிடும்‌.

எனவே உலகில்‌ எவர்மீதும்‌ போலியான அன்பு
வைக்காதீர்கள்‌, உண்மையாக இருங்கள்‌.

உங்கள்‌ மீது அன்பு கொண்டோர்‌ வருந்தப்‌
பேசாதீர்கள்‌.

மலர்ந்த உள்ளங்களை உயிர்களை வாடிவிடச்‌
செய்யாதீர்கள்‌.

இதனாலேயே “அன்பே சிவம்‌” என்றனர்‌. தமிழர்‌

36


Page 55பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பண்பாட்டின்‌ உயர்நிலையே இதுதான்‌.

இதனாலேயே அன்பு, உயிர்வழி சென்று, வெளிப்படும்‌
இடத்தைப்‌ பொறுத்து, வெவ்வேறு பெயர்‌ சூட்டி
அழைத்தனர்‌ தமிழர்‌.

அன்பின்‌ வெளிப்பாடு

மனிதர்‌
ம கணவன்‌, மனைவி, ] நண்ப!
உடல்‌ - காதலர்‌ (காதல்‌) (நட்பு)
4

பெற்றோர்‌, சகோதரர்‌
(பாசம்‌)

கடவள்‌, குரு
பக்ருனை, அருள்‌) ப

மலர்ந்த அன்பு, உயிர்வழி சென்று - உடலால்‌, உடலின்‌
புலன்கள்‌ அனைத்தும்‌ ஒன்றி உணர்வுபூர்வமாக
வெளிப்படூமிடத்து, அதனைக்‌ “காதல்‌” என்று அழைப்பர்‌.
இது உணர்வு நிலை.

அன்பு ௩ உயிர்‌ - 44

மனம்‌ -

 

 

எந்தக்‌ கருவறையில்‌ எமது உயிர்‌ வாழ்ந்ததோ
அதாவது இந்த உலகில்‌ நாம்‌ வாழ்வதற்கு ஆதாரமாக
இருந்த பெற்றோர்கள்‌, எம்மைப்போன்று அவர்கள்‌
வாயிலாகத்‌ தோன்றிய சகோதரர்கள்‌ என்போர்மீது
நாம்‌ வைத்துள்ள அன்பு, அவர்கள்‌ எம்மீது கொண்ட

39


Page 56பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அன்பு உயிர்வழிவரும்‌ உணர்வுபூர்வமானது. அதனைப்‌
“பாசம்‌” என்று அழைத்தனர்‌. இது இரக்கம்‌, பரிவு
கொண்டநிலை.

எமக்கு அருள்பாலிக்கும்‌ இறைவன்‌, எம்மனதுக்கு
அறிவையூட்டி எம்‌ சிந்தனையைத்‌ தெளிய வைக்கும்‌
எம்‌ குருவானவர்கள்‌, அறிஞர்கள்‌ எம்மீது வைக்கும்‌
அன்பு மனதுவழி வரும்‌ அறிவுபூர்வமானது. அதனைக்‌
“கருணை', “அருள்‌' என்ற சொல்லால்‌ அழைத்தனர்‌.
இது உயர்‌ மனச்‌ சாட்சிநிலை.

நாம்‌ உண்மையான நண்பர்களிடம்‌ கொண்டுள்ள அன்பு
உடல்‌, உயிர்‌, மனம்‌ மூன்றும்‌ ஒன்றிணைய வெளிப்படும்‌,
அங்கு அறிவும்‌, உணர்வும்‌ கலந்து உயிர்ப்புடன்‌
வெளிப்படும்‌. இவ்வன்பு “நட்பு என அழைக்கப்படும்‌.

பொருள்சார்‌ நாகரிகத்தின்‌ வாழ்வே உயர்ந்தது எனத்‌
தவறாக இன்றைய சமூகம்‌ எண்ணிவிட்ட நிலையில்‌,
தன்நலத்திற்கே மனிதன்‌ முன்னுரிமை கொடுக்கும்‌
வாழ்வைக்‌ காண்கிறோம்‌. இதனாற்‌ தன்னலம்‌ துறந்த
துணையை,

பரிவு கொண்ட சகோதரர்களை,

வழிகாட்டலும்‌ பொதுநோக்கும்‌ கொண்ட
ஆசிரியர்களை,

மனச்சான்று கொண்ட உண்மையான நண்பர்களைப்‌,
பெற்றவர்கள்‌ எண்ணிக்கையிற் குறைந்த

தொகையினராகவே காணப்படுகின்றனர்‌.

தன்நலம்‌ மட்டும்‌ கொண்ட நாம்‌ அன்பின்‌ மகத்துவத்தை
அறியாது வாழ்ந்து, மலர்ச்சியில்லா உயிரோடூ வாழ்ந்து,

40)


Page 57பண்பாடு - வேரும்‌, வீழுதும்‌

வள்ளுவர்‌ கூறியதுபோன்று தோலால்‌ போர்த்தப்பட்ட
எலும்புக்கூட்டை உடையவர்கள்‌ போல்‌ மகிழ்ச்சியற்ற
வாழ்வு வாழத்தலைப்பட்டு விட்டோம்‌.

“ஓன்பின்‌ வழியது உயிர்நிலை அ..து இல்லார்க்கு
என்புதோல்‌ போர்த்த உடம்பு”
- குறள: 80

நட்பு

நாம்‌ இவ்வுலகிற் பல்வேறு உறவுகளைக்‌
கொண்டுள்ளோம்‌. சகல உறவுகளுடனும்‌ உண்மையான
நட்புடன்‌ இருப்பதே மிகமிகச்‌ சிறந்தது.

அதாவது நாம்‌ ஒருவருக்குக்‌ கணவன்‌ அல்லது
மனைவி ஆவோம்‌, பிள்ளைகளுக்குப்‌ பெற்றோராவோம்‌,
உடன்பிறந்தோருக்குச்‌ சகோதரராவோம்‌, சிலருக்கு
வழிகாட்டும்‌ ஆசிரியர்களாக இருப்போம்‌. இவ்வகையாக
நாம்‌ பெற்றுள்ள சகல உறவுகளிடத்தும்‌ நாம்‌
கொண்டுள்ள உறவு முறைகளுக்கப்பால்‌ உண்மையான
நண்பர்களாக இருப்போம்‌; அதுவே உயர்ந்தது.

அதுவே நாமும்‌ எம்மோடு உறவு கொண்டோரும்‌
மகிழ்ச்சியாக வாழ வைக்கும்‌ ஒரே வழி. இதனாற்போலும்‌
அன்பின்‌ ஒரு வெளிப்பாடான நட்பைப்பற்றி தமிழ்மறையாம்‌
திருக்குறள்‌, நட்பு (79), நட்பாராய்தல்‌ (80), பழைமை
(81), தியநட்பு (82), கூடாநட்பு (83) ஆகிய ஐந்து
அதிகாரங்களை ஒதுக்கி நட்புப்பற்றி விரிவாகச்‌ சிறந்த
அறிவுரைகளைக்‌ கூறி நிற்கிறது.

நட்புடன்‌ இருப்பது என்பது உடலால்‌, உயிரால்‌,

41


Page 58பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மனதால்‌ இன்னொருவருடன்‌ ஒன்றி வாழ்தல்‌, தூய
அன்பு செலுத்தி வாழ்தல்‌ என்பதேயாகும்‌.

நீ உன்‌ நண்பனுக்குத்‌ துணைவனாக, பெற்றோராக,
சகோதரனாக, வழிகாட்டூம்‌ குருவாக, மந்திரியாக
இருத்தலே நட்பின்‌ அடையாளம்‌, திருவள்ளுவர்‌
ஐந்து அதிகாரங்களில்‌ இவற்றைக்‌ கூறியுள்ளார்‌.
எடுத்துக்காட்டாக மூன்று குறள்கள்‌ வருமாறு.

நண்பர்‌ - பெற்றோராக

“உடுக்கை இழந்தவன்‌ கைபோல ஆங்கே
இடுக்கண்‌ களைவதாம்‌ நட்பு”
- குறள்‌: 788

ஒருவனது ஆடை அவிழும்போது உடனே அதனைப்‌
பிடிக்கும்‌ கைபோல, நண்பனுக்குத்‌ துன்பம்‌ வரும்போது
உடனே அதனைப்‌ போக்குவதுதான்‌ நட்பு என்பது
குறளின்‌ பொருள்‌.

ஒருவனது ஆடை அவிழும்போது பார்ப்போர்‌ சொல்லாமலே
அல்லது அவன்தான்‌ முழுமையாக உணரமுதலே
கைசென்று உதவி விடுகின்றது. கைபோன்ற இப்பண்பு
எம்மை பெற்றெடூத்த தாய்‌, தந்தையருக்கு உண்டு,
நாம்‌ கேட்காமலே துன்பம்‌ வரப்போகின்றது என்று
உணர்ந்ததும்‌ ஓடோடிவந்து உதவுவார்கள்‌.

வரப்போகும்‌ தீங்கை அல்லது குறையை அறிந்த
இடத்து மனம்‌ வருந்தலும்‌, அறிவுரை கூறலும்‌,
எம்மை வழிநடத்த முயலுவதும்‌, பெற்றோர்‌ பண்பே -

42


Page 59சட்டப்‌

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இப்பண்பு, பெற்றோரின்‌ ஒவ்வாத அணுகு முறையால்‌
எமக்குக்‌ கசப்பாகத்‌ தோன்றினாலும்‌ - அது அன்பின்‌
விளைவேயாகும்‌.

இவ்வாறு உயிர்வழி அன்புகொண்ட தாய்‌, தந்தையர்‌
போன்று நண்பர்‌ இருக்கவேண்டும்‌.

நண்பர்‌ - துணையாக

“முகம்‌ நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து
அகம்‌ நக நட்பது நட்பு”
- குறள்‌: 787

பார்க்கும்போது முகத்திற்‌ சிரிப்போடு பழகுவது மட்டுமே
நட்பு ஆகாது; உள்ளத்தின்‌ உள்ளே மகிழ்ச்சி பொங்கப்‌
பழகுவதே நட்பு ஆகும்‌ என்பதே இதன்‌ பொருள்‌.

கண்டபோது உவகை பொங்க, மகிழ்ச்சிகொள்ளும்‌
உள்ளம்‌, பழகும்‌ பண்பு, உண்மையான காதலர்க்கு
அல்லது துணைவர்களுக்கே உண்டூ. இது உள்ளத்தின்‌
உணர்வோடூ செயற்படூவது, அன்பு உடல்வழி
பாய்வதாகும்‌.

எனவே வாழ்க்கைத்‌ துணைபோன்று கண்டபோது
உள்ளத்தில்‌ மகிழ்ச்சி பொங்க இருப்பதும்‌ உண்மையான
நட்பு.

43


Page 60பணர்பாரு - வேரும்‌, விழுதும்‌
நண்பர்‌ - வழிகாட்டி

“நகுதற்‌ பொருட்டு அன்று நட்டல்‌ மிகுதிக்கண்‌
மேற்சென்று இடித்தற்‌ பொருட்டு
குறள்‌ 784

ஒருவரோடூ ஒருவர்‌ நட்பாக இருப்பது தாம்‌ கூடிப்பேசிச்‌
சிரித்து மகிழ்வதற்கு அல்ல - ஒருவர்‌ தவறான செயலில்‌
ஈடுபட முற்பட்டால்‌, அவருக்கு அறிவுரை கூறிக்‌
கண்டித்துத்‌ திருத்துதல்‌ பொருட்டே என்பது பொருள்‌.

அறிவு கூறிச்‌ சரியான வழிச்‌ செல்லும்‌
வழியில்‌ நெறிப்படுத்தும்‌, அறிவுவழிச்‌ செல்லும்‌
ஆசிரியர்களைப்போல்‌ செயற்படூவதும்‌ நட்பின்‌
இலக்கணம்‌ ஆகும்‌.

சுருங்கக்கூறின்‌ (காதல்‌ * பாசம்‌ கருணை) - நட்பு

ஆதலால்‌ கணவன்‌, மனைவி, பிள்ளைகள்‌ போன்ற
இன்னோரன்ன சகல உறவுகளுடனும்‌ நண்பர்களாகப்‌
பழகுவதே, திறந்த மனத்துடன்‌ மன இறுக்கம்‌ அற்று
வாழ வழியாகும்‌.

சிலவேளைகளில்‌ நாம்‌ செல்லும்‌ தவறான வழிகள்‌ எம்‌
பெற்றோர்களுக்கோ, வாழ்க்கைத்துணைவர்களுக்கோ
புலப்படாது இருக்கும்‌ என்பது எணணிப்பார்க்கத்தக்கது.

அதேவேளை கணவன்‌ மனைவி என்போர்‌
ஒருவருக்கொருவர்‌ பரிமாறிக்‌ கொள்ளத்‌ தயங்கும்‌
விடயங்களை நண்பர்களிடம்‌ பரிமாறிக்கொள்வர்‌.

44

மக ரக்ட


Page 61 

 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கணவன்‌ மனைவி உறவு நட்பாக இருந்தால்‌ இவ்வாறான
தயக்கம்‌ ஏற்படாது அல்லவா?

அன்பு என்பது காதலாக, பாசமாக, கருணையாக,
நட்பாக வெளிப்படுவதைக்‌ கண்டோம்‌.

உலகிலுள்ள உயிர்கள்‌ எல்லாம்‌ அன்புப்பசியோடு
இருக்கின்றன. நாம்‌ எல்லா உயிர்களிடத்தும்‌ அன்பு
கொண்டூ வாழ்வதே. சிறந்த வாழ்க்கை, இதனாலேயே
“அன்பே சிவம” என்றனர்‌.

மனமலர்ச்சி

மனிதன்‌ கருவில்‌ இருக்கும்போதே மனமும்‌ உருவாகி
விட்டதை முன்னர்‌ குறிப்பிட்டுள்ளேன்‌. இம்மனம்‌
மரபுவழியில்‌ குணத்தை, பண்பை உடையதாகத்‌
தோன்றினாலும்‌ மனிதனின்‌ ஐம்பொறிகள்‌ (மெய்‌, வாய்‌,
கண்‌, மூக்கு, செவி) மூலம்‌ அது பெற்றுக்கொள்ளும்‌
அறிவிற்‌ கேற்பவே அது சிந்திக்கும்‌, செயற்படும்‌.

மனதைப்‌ பற்றியும்‌ மனிதவாழ்வின்‌ உயர்வு, தாழ்விற்கு
அதுவே ஆதாரமாக, அடிப்படையாக உள்ளது
என்பதையும்‌ விளக்கி உலகின்‌ பல்வேறு அறிஞர்களும்‌
கூறியுள்ளார்கள்‌. இவர்களில்‌ திருமூலர்‌ உள்ளிட்ட
தமிழ்ச்சித்தர்கள்‌ அனைவரும்‌ மிகச்சிறப்பாகக்‌
கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நண்பர்‌ திருக்குறள்‌
இரா. கனகசுப்புரத்தினம்‌ அவர்கள்‌ “நினைவாற்றல்‌ வளர,
வானமே நம்‌ எல்லை” என்ற இரு மிகச்சிறந்த நூல்களை
மனம்‌ பற்றி இலகு தமிழில்‌ எழுதியுள்ளமை வாசகர்‌
நன்மை கருதி மேலும்‌ இங்கு குறிப்பிடத்தக்கது.

45


Page 62பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

உடல எவ்வாறு பசியோடு உணவைத்‌ தேடூமோ; உயிர்‌
எவ்வாறு பசியோடூ அன்பைத்‌ தேடூமோ; அது போன்று
மனம்‌, பசியோடு அறிவைத்‌ தேடூம்‌. அந்த அறிவுப்பசிக்கு
ஐம்பொறிகளும்‌ துணை செய்யும்‌. இதுவே இயற்கை.

அறிதலை விரும்பும்‌ மனதிற்கு சிறந்த வழி அறிவை
அதாவது “கல்வியைக்‌” அளிப்பதே ஒரே வழி ஆகும்‌.

மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளைப்‌
போன்றே ஆறாவது கருவி “மனம்‌”, இக்கருவிக்கு
நாம்‌ கொடுக்கும்‌

$ பயிற்சியைப்‌ பொறுத்தும்‌

$ பெற்றுள்ள அறிவைப்‌ பொறுத்தும்‌

$ பயன்படுத்தும்‌ நுட்பத்தைப்‌ பொறுத்தும்‌
வெளிப்படும்‌ ஆற்றலின்‌ நிலை வேறுபடும்‌,
சிந்திக்கும்‌ திறனும்‌, கோணமும்‌ வேறுபடும்‌,
அவைக்கேற்ப செயற்படும்‌ முறையும்‌, திறனும்‌
வேறுபடும்‌.

மனம்‌, நாம்‌ கொடுக்கும்‌ அறிவிற்கேற்ப நம்மிடம்‌
*எண்ணங்களை, *அசைகளை, *கற்பனைகளை,
“கனவுகளைத்‌ தோற்றுவிக்கும்‌.

மூளையைத்‌ தலைமை அகமாக அதாவது தொடர்பு
மையமாகக்‌ கொண்டியங்கும்‌ இந்த “மனம்‌” எங்கே
உள்ளது? நாம்‌ தான்‌ மனமா? இல்லை, நாம்‌ தான்‌
மனம்‌ என்றால்‌ நாம்‌ எண்ணும்படி அல்லவா நடக்க
வேண்டும்‌. எடூத்துக்காட்டாக முன்னால்‌ நிற்பவருக்கு
அடிக்க வேண்டும்‌ என்று எண்ணினால்‌ உடனே அடித்து
விடுகிறோமா? இல்லையே.

46


Page 63பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இதனை விளங்கிக்கொள்ள ஓர்‌ எடூத்துக்காட்டைப்‌
பார்ப்போம்‌ நீங்கள்‌ இப்போது அலுவலகத்தில்‌
இருக்கிறீர்கள்‌. நீங்கள்‌ உண்ண இருக்கும்‌ இரவு
உணவு வீட்டில்‌ இருக்கிறது. வேலை முடிந்து இரவு
வீட்டிற்குச்‌ செல்கிறீர்கள்‌, சாப்பாட்டு மேசையை எட்டிப்‌
பார்க்கிறீர்கள்‌. ஒரு சிறுதட்டில்‌ லட்டு இருக்கின்றது.
உடனே அதை எடூத்து வாயிற்போட்டு உண்டபடி
உங்கள்‌ அறைக்குச்‌ சென்று உடுப்பை மாற்றிவிட்டூ
வருகிறீர்கள்‌. ப

உங்கள்‌ தாயாரைப்‌ பார்த்து “அம்மா லட்டூ யார்‌ கொண்டூ
வந்தது நன்றாக உள்ளது” என்று கேட்கிறீர்கள்‌. உடனே
அம்மா “சாப்பிட்டு விட்டாயா? அது புழுப்பிடித்து விட்டது
எடூத்துக்கொட்ட வைத்திருக்கிறேன்‌” என்று அம்மா
சொன்னதும்‌ உங்களுக்கு வயிறு குமட்டிக்கொண்டு
வந்து வாந்தி (சத்தி) எடூத்து விட்டீர்கள்‌. இப்போது
உங்கள்‌ வயிற்றுக்குள்‌ இருந்த “லட்டூ” வெளியே
வந்துவிட்டது.

மாறாக நீங்கள்‌ உங்கள்‌ அறையிலேயே தங்கிவிட்டூ
ஐந்துமணி நேரம்‌ கழித்து வெளியே வருகிறீர்கள்‌
அப்போது உங்கள்‌ அம்மாவுடனான அந்த உரையாடல்‌
நடந்ததும்‌ “புழு இருந்ததா என்று கூறி அருவருப்புடன்‌
நீங்கள்‌ ஓங்காளித்துச்‌ சத்தி எடூத்தாலும்‌ அப்போது
அந்த லட்டூ வெளியே வராது; அது செரிமானமாகி
உங்கள்‌ உடலுடன்‌ ஐக்கியமாகிவிடும்‌.

இந்த லட்டைப்‌ போன்றதே மனம்‌. நீங்கள்‌ அலுவலகத்தில்‌
இருக்கும்போது அது வீட்டில்‌ இருந்தது. வீட்டிற்கு வந்து
உண்டதும்‌ அது உங்களினுள்‌ இருந்து பின்னர்‌ வாந்தி
எடுத்ததும்‌ வெளியே வந்துவிட்டது. ஆனால்‌ ஐந்துமணி

47


Page 64பண்பாடு - வேரும்‌, வீழுதூம்‌
நேரத்தின்‌ பின்‌ அது உங்களோடூ ஒன்றிப்போய்‌ விடும்‌.

அதாவது மனம்‌ உங்கள்‌ உடலை விட்டூ இந்த
அண்டப்பெருவெளியில்‌ எங்கோ உலாவும்‌ தன்மை
கொண்டது. வாந்தி எடுத்த லட்டூப்போல்‌ உங்கள்‌
உடலின்‌ உள்சென்றும்‌ வெளியேறியும்‌ உடலின்‌
உள்ளேயும்‌ வெளியுமாக மாறிமாறி உலாவக்கூடியது.

சமிபாடடைந்த லட்டைப்‌ போன்று உங்களோடு
ஒன்றிணைந்து ஐக்கியமாக இருக்கவும்‌ கூடியது.
இந்த மூன்று நிலையிலும்‌ இருக்கக்கூடியது மனம்‌.
இந்த மூன்று விதமாகவும்‌ இயங்கிக்கொண்டிருப்பதும்‌,
இயங்கக்கூடியதும்‌ மனம்‌.

நமது உடலில்‌ மூலாதாரம்‌, சுவாதிட்டானம்‌, மணிபூரகம்‌,
அனாகதம்‌, விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ரம்‌ என ஏழு
சக்கரங்கள்‌ இருக்கின்றன. தலைமை அலுவலகம்‌
மூளையானால்‌ இவை, கிளை அலுவலகங்கள்‌
போன்றவை. இந்த ஏழு மையங்களிலும்‌ சுரக்கும்‌
மன உணர்வுச்‌ சுரப்பிகளே “நாளமில்லாச்‌ சுரப்பிகள்‌”
“(கானில்‌ சுரப்பிகள்‌).

வெளியுலகில்‌ இருந்துவரும்‌ மனம்‌ நமது தலையுச்சியிலுள்ள
“சகஸ்ரம்‌” என்னும்‌ சக்கரமையத்தினூடுூ மற்றைய
சக்கரங்கள்‌ வரை செல்லும்‌.

அதாவது “மூலாதாரம்‌” என்ற சக்கரமையம்‌ முதல்‌

உச்சிவழியே அண்டப்‌ பெருவெளி வரை சென்று
வருவது மனம்‌.

48


Page 65பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

     
  

நாளமில்லாச்‌ ஆற்றல்‌
சுரப்பிகள்‌ மையம்‌
மீனியல்சுரப்பி சகஸ்ரம்‌
பிட்யூட்டரி ஆக்ஞை
தைராய்டு விசுத்தி
தைமஸ்‌ அனாகதம்‌
அட்ரினால்‌...? டர

 

5
பேங்க்ரிய்ஸ்ட  ( ழ்‌ வவ! ரதிட்டானம்‌
விந்து -௮ ர்‌ அட ண்ட்‌ 3

 

ஆக்கசத்தி மூலாதாரம்‌
பைப்பாற்றல்‌
ட்‌ ்‌ மையம்‌

(ன்‌
இத
ம

மூளை - நம்‌ அறிவு மையம்‌
இதயம்‌ - உணர்வுமையம்‌
தொப்புள்‌ - ஆற்றல்‌ மையம்‌

49


Page 66பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌

மனித உடலின்‌ முள்‌ எலும்பின்‌ அடியில்‌ தொடங்கி
மூளையின்‌ உச்சிவரை ஏழு ஆற்றல்‌ மையங்கள்‌, சக்கரங்கள்‌
அமைந்துள்ளன. அவற்றின்‌ செயற்பாடுகளைச்‌ சுருக்கமாகப்‌
பார்ப்போம்‌.

மூலாதாரம்‌ :- இது நம்‌ இனப்பெருக்க உறுப்பின்‌ கீழ்‌
உள்ள மையம்‌, ஐந்து மூலகங்களின்‌ ஒடுக்கம்‌, இதுவே
படைப்பாற்றல்‌ மையம்‌ தன்வயமாகிய உணவு - நீர்‌,

இரத்தம்‌, தசை கொழுப்பு, எலும்பு, எலும்புமச்சை, விந்து
என்னும்‌ தாதுக்களாகப்‌ பிரியும்‌ இடம்‌. தன்வயமாகிய
உணர்வு கலைகளாகப்‌, பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளாகப்‌
பரிமாணம்‌ பெறும்‌ இடம்‌

உண்பதும்‌, இனப்பெருக்கம்‌ செய்வதும்‌ தான்‌ வாழ்க்கை என்ற
எண்ணம்‌ கொண்டோர்‌ அத்தனைபேரும்‌ அதாவது எப்போதும்‌
உணவைப்பற்றியும்‌ பாலுணர்வைப்பற்றியும்‌  சிந்திப்போர்‌,
பேசுவோர்‌ இந்த மையத்திலேயே தேங்கி நிற்பவர்கள்‌.

சுவாதிட்டானம்‌ :- உணவும்‌ உணர்வும்‌ தன்வயமாகும்‌ புள்ளி,
பெங்கரியாஸ்‌ என்னும்‌ சுரப்பி இப்புள்ளியில்‌ இருந்து இயங்கி
இரத்தத்தில்‌ சர்க்கரையின்‌ அளவைக்‌ கட்டுப்படுத்தும்‌, நிலம்‌,
நீர்‌ என்னும்‌ மூலகங்களின்‌ ஒடூக்கம்‌, உடல்‌ வெப்பத்தைக்‌
கட்டுப்படுத்தும்‌. இப்புள்ளியில்‌ மனதை நிலைநிறுத்தும்போது
கனவுகளும்‌ கற்பனைகளும்‌ நம்‌ கட்டுப்பாட்டூக்குள்‌
இருக்கும்‌.

மணிபூரகம்‌ :- உணவும்‌, உணர்வும்‌ செரிமானமாகும்‌
புள்ளி, அருவருப்பான அல்லது அதிர்ச்சியான செய்திகள்‌
இந்தமையத்தைத்‌ தாக்கும்போது வாந்தியையும்‌,

வயிற்றோட்டத்தையும்‌ அவை கொடுக்கும்‌. இது நம்‌
எண்ணங்களைச்‌ செயல்களாகத்‌ தூண்டும்‌ மையம்‌. இது
அட்ரினல்‌ என்னும்‌ சுரப்பி உள்ள மையம்‌. நிலம்‌, நீர்‌ என்னும்‌
மூலகங்களின்‌ ஒடூக்கம்‌. எலும்பு மண்டலம்‌, தண்டூவட்டம்‌,

20


Page 67பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

சிறுநீரகம்‌ என்பவற்றின்‌ இயக்கத்தைக்‌ கட்டுப்படுத்தும்‌
மையம்‌.

அநாகதம்‌ :- நீர்‌ என்னும்‌ மூலகத்தின்‌ ஒடுக்கம்‌ இம்மையம்‌,
மனதுக்குள்‌ நுழைந்த எண்ணங்கள்‌ உணர்வுகளாய்க்‌
கரையுமிடம்‌ இது. கரையாவிட்டால்‌ திடப்பொருளாய்‌
இதயத்தை இறுக்கும்‌. தைமஸ்‌ என்னும்‌ சுரப்பி உள்ள மையம்‌
இது. இதயத்துடிப்பும்‌, இரத்தோட்டமும்‌ கட்டூப்பாட்டினுள்‌
இருக்கும்‌ இடம்‌, துக்கமான செய்திகள்‌ கரையாவிடின்‌
திண்மமாகி இதயநோயை உருவாக்கும்‌.

அநாகதத்தில்‌ ஆற்றலை நிறுத்தக்கூடியவர்களே உணர்ச்சி
உள்ள கவிஞர்கள்‌. சிறந்த கலைஞர்கள்‌ ஆவர்‌.

விசுத்தை :- காற்று இம்மையத்தின்‌ மூலகம்‌. தைராய்டு,
பராதைராய்டூ போன்ற நாளமில்லாச்‌ சுரப்பிகள்‌ உள்ள இடம்‌.
மூச்சுப்பாதைகளின்‌ இயக்கம்‌ எண்ணங்களை நடூவு நிலையில்‌
இருந்து எடை போடும்‌ இடம்‌. நடூவு நிலை தவறும்‌ போது
அல்லது உணர்ச்சி வசப்படும்போது தொண்டை அடைப்பதை
உணரலாம்‌. இம்மையத்தில்‌ எமது ஆற்றல்‌ இருக்கும்போது
விழிப்புணர்வு மிகும்‌.

ஆக்ஜை :- செய்திகளை அறிவுத்தெளிவுடன்‌ சரியான
கோணத்தில்‌ புரிந்து கொள்ளும்‌ புள்ளி. இங்கு பிட்யூட்டரி
என்னும்‌ சுரப்பி உள்ள இடம்‌. இச்சுரப்பியே சகல சுரப்பிகளுக்கும்‌
தாயாக விளங்குவது. அவற்றைக்‌ கட்டூப்படுத்தவல்லது.
இதன்‌ மூலகம்‌ நெருப்பு.

சகஸ்ரம்‌ - தெளிந்த அறிவால்‌, உணர்வுகளை வடிகட்டி
வானில்‌ பரப்பும்‌. பீனியல்‌ சுரப்பி உள்ள இடம்‌ இதுவே.
ஞானம்‌, நினைவாற்றல்‌, கற்பனை என்பவற்றைப்‌ பிறப்பிக்கும்‌.
வானம்‌ இதன்‌ மூலகம்‌.

51


Page 68பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மனதைப்பற்றியும்‌ அதன்‌ செயற்பாடூகள்‌ பற்றியும்‌, அதன்‌
ஆற்றல்பற்றியும்‌ அவ்வாற்றலை நாம்‌ வளர்த்துக்கொள்ளும்‌
முறை, மனதை நம்‌ கட்டூப்பாட்டிற்குள்‌ கொண்டுவருவது
எப்படி? அப்படிக்கொண்டு வருவதன்‌ மூலம்‌ நாம்‌
அடையக்கூடிய மிகப்பெரும்‌ பயன்கள்‌ போன்ற
பல விடயங்களாகக்‌ கூறிக்கொண்டே போகலாம்‌.
அது இந்நூல்‌ ஏற்றுக்கொண்ட கருப்பொருளுக்கு
அப்பாற்பட்டது.

நிறைவாக மனமும்‌ கை, கால்‌, கண்‌ போன்ற ஓர்‌
கருவியே! மனம்‌ என்ற சக்தியை நாம்‌ பயிற்சி மூலம்‌
எம்‌ கட்டூப்பாட்டிற்குள்‌ கொண்டுவர முடியும்‌.

புருஸ்லீயின்‌ கைதான்‌ செங்கட்டியை அல்லது
மரப்ப லகையை உடைக்கவல்லதா? பயிற்சி பெற்ற
கராட்டி வீரர்கள்‌ சகலராலும்‌ அது முடிகிறதல்லவா?
எனவே நீங்களும்‌ உங்கள்‌ கைகளுக்குப்‌ பயிற்சி
கொடுத்தால்‌ உங்களாலும்‌ முடியுமல்லவா அதுபோன்று
தான்‌ மனமும்‌.

உங்கள்‌ மனதுக்கான பயிற்சியை நீங்கள்‌ கொடூத்தால்‌
ஞானிகளின்‌ மனம்‌ போன்று திண்மை உடையதாக
அதுவும்‌ மாறும்‌.

எமது உறுப்புக்கள்‌ எமது உத்தரவுப்படியேதான்‌
நடப்பவை. எடூத்துக்காட்டாக நாம்‌ நினைத்தால்தான்‌
எமது கால்கள்‌ நடக்கும்‌, கைகள்‌ இயங்கும்‌. ஆனால்‌
மனமும்‌ மனது செல்லும்‌ பாதையிலுள்ள நாளமில்லாச்‌
சுரப்பிகளும்‌ (கானில்‌ சுரப்பிகளும்‌) அதன்‌ தொடர்புடைய
உள்‌உறுப்புகளும்‌ எமது கட்டூப்பாட்டில்‌ இயங்குவது
இல்லை. எமது மனதிற்குப்‌ பயிற்சி கொடுத்து எம்‌

52


Page 69பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கட்டுப்பாட்டில்‌ கொண்டூவந்தோமானால்‌, இவற்றின்‌
இயக்கங்களை நெறிப்படுத்தலாம்‌.

அதன்மூலம்‌ மனதிற்‌ தோன்றும்‌ எண்ணங்களை நாம்‌
சீர்செய்து கொள்ளலாம்‌. மனமானது தான்‌ பெற்ற
அறிவிற்கேற்பவே சிந்திக்கும்‌, எண்ணங்களைத்‌ தோற்று
விக்கும்‌. இந்த எண்ணங்களுக்கேற்பவே எம்மிடம்‌
ஆசைகள்‌, விருப்பு வெறுப்புகள்‌, கருத்துக்கள்‌,
செயல்கள்‌ தோன்றுகின்றன, வெளிப்படுகின்றன.

அவையே நம்‌ வாழ்வில்‌ நன்மை தீமைகளை
உருவாக்குகின்றன. உயர்நிலை அல்லது தாழ்நிலையை
அடையவைக்கின்றன.

நல்ல, சிறந்த, உயர்ந்த, அறநெறி தவறாத எண்ணங்கள்‌
எமது நிலையை உயர்த்துகின்றன.

இதனையே வள்ளுவர்‌

“வெள்ளத்தனைய மலர்நீட்டம்‌ மாந்தர்தம்‌
உள்ளத்து அனையது உயர்வு”
- குறள: 595

குளத்திலுள்ள மலரின்‌ தண்டினது நீளம்‌ அதிலுள்ள
நீரின்‌ அளவைப்‌ பொறுத்தே உள்ளது. அதேபோன்று
மனிதனின்‌ உயர்வு அவன்‌ உள்ளத்தே உள்ள
எண்ணத்திற்குத்‌ தக்கபடி அமையும்‌ என்கிறார்‌.

மனித உயர்வு மாத்திரம்‌ அல்ல எமது உடலின்‌ நலமும்‌
மனதின்‌ எண்ணத்தைப்‌ பொறுத்தே அமைகிறது. நமது

33


Page 70பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

எண்ணங்கள்‌ எமது உடலில்‌ பல்வேறு வகைப்பட்ட
இரசாயனப்‌ பதார்த்தங்களை உற்பத்தி செய்கின்றன.
வேண்டத்தகாத எண்ணங்கள்‌ வேண்டத்தகாத
இரசாயனப்‌ பதார்த்தங்களை வேண்டத்தகாத நேரத்தில்‌
உடலில்‌ உற்பத்தி செய்து விடுகின்றன. இவை உடலின்‌
சமநிலையைக்‌ குலைத்து, ஆரோக்கியத்தை மெல்லவே
பாதிக்கத்‌ தொடங்கிவிடும்‌.

எடுத்துக்காட்டாக எமக்கு விருப்மான உணவை
நினைக்கும்போது வாயில்‌ உமிழ்நீர்‌ சுரக்கும்‌, உள்ளத்தில்‌
தோன்றும்‌ எண்ணங்கள்‌ முகத்திற்‌ பிரதிபலிக்கும்‌.
ஏதாவது ஒன்றை எண்ணிப்‌ பயப்படூம்போது இதயம்‌
படபடக்கும்‌. இவ்வாறே சகல எண்ணங்களும்‌ உடலில்‌
மாற்றத்தை ஏற்படுத்துவதை நாம்‌ உணர்ந்துள்ளோம்‌.

பொறாமை, பேராசை, கோபம்‌, பயம்‌, சோகம்‌,
அதிர்ச்சி போன்ற எண்ணங்கள்‌, உணர்வுகள்‌
உடலில்‌ எதிர்மறையான தாக்கத்தைக்‌ கொடுத்து
உடலின்‌ சமநிலையைக்‌ குழப்பும்‌. நோய்களைத்‌
தோற்றுவிக்கும்‌.

அதேவேளை மகிழ்ச்சி, பெருமை, மற்றவர்களின்‌
வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி கொள்ளும்‌ தன்மை,
போன்ற உயர்வான சிந்தனைகள்‌, குறிப்பாக எவற்றையும்‌
நேராக நோக்கும்‌ தன்மை மனதிற்கும்‌, உடலுக்கும்‌
நலனை கொடுக்கும்‌; ஆரோக்கியத்தை வளர்க்கும்‌.

2000 ஆம்‌ ஆண்டில்‌ என நம்புகிறேன்‌ அமெரிக்கப்‌
பல்கலைக்கழகம்‌ ஒன்று வெளியிட்ட ஆய்வில்‌

“உயர்சிந்தனையும்‌, தன்னம்பிக்கையும்‌ உடையவர்கள்‌

54


Page 71பண்பரடு - வேரும்‌, விழுதும்‌

கூடிய காலம்‌ வாழ்வார்கள்‌” எனக்‌ குறிப்பிட்டிருந்தமை
சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே மனதில்‌ தோன்றும்‌ எண்ணங்கள்‌, எண்ணத்தின்‌
வழி நடைபெறும்‌ செயற்பாடுகள்‌ என்பனவற்றின்‌
தன்மைகள்‌, சிறப்புகள்‌ என்பவை மனம்‌ பெற்றுள்ள
அறிவையே அடிப்படையாகக்‌ கொண்டன.

இன்றைய உலகில்‌ பல்வேறு வகைப்பட்ட அறிவுகளும்‌
நிறைந்திருக்கின்றன. எனவே எமது மனதைக்‌
கெடுத்துவிடாத அறிவினை மாத்திரம்‌ மனதிற்குக்‌
கொடுப்பது நன்று.

எவ்வாறு ஒவ்வாத அல்லது நஞ்சுத்தன்மையான உணவு
உடலை வருத்துமோ, எவ்வாறு போலி அன்பு உயிரை
வருத்துமோ, அதேபோன்று எமது வாழ்வியலை மேம்படுத்த
உதவாதவற்றைக்‌ கற்பதனால்‌, அறிவதனால்‌ எமது
மனம்‌ மாசுபடும்‌, எம்மைத்‌ துன்பத்தில்‌ வீழ்த்தக்கூடிய
எண்ணங்கள்‌ தோன்றும்‌.

அவ்வாறு தோன்றும்‌ எண்ணங்களை செயற்படுத்தாது
புறந்தள்ளக்கூடிய அறிவினை மனம்‌ பெற்றிருக்காவிட்டால்‌
துன்பத்தைப்‌ பெறுவோம்‌. மாறாக அவ்வெண்ணங்களைத்‌
தவறானவை எனச்‌ செயற்படூத்தாது விடுவோமானால்‌
இன்பத்தைப்‌ பெறுவோம்‌, வரவிருந்த துன்பத்திலிருந்து
தப்பி விடுவோம்‌. இங்கு புறநானூற்றில்‌ “தீதும்‌ நன்றும்‌
பிறர்தரவாரா”” என்ற கணியன்‌ பூங்குன்றனார்‌ கூற்று
நோக்கத்தக்கது.

எமக்குத்‌ துன்பம்‌ வந்தாலும்‌, இன்பம்‌ வந்தாலும்‌, நன்மை

35


Page 72பண்பாரு - வேரும்‌, விழுதும்‌

வந்தாலும்‌, தீமை வந்தாலும்‌ அது பிறரால்‌ வந்தது
என்பது தவறு. அவை நமது மனம்‌ எண்ணங்களாக
நம்மிடம்‌ தந்த விண்ணப்பங்களை நாம்‌ ஏற்றுக்கொண்டு
செயற்பட்டதால்‌ வந்தவையே என்பதனை உணர்ந்து
அவற்றிற்கான கருவை, ஆசையை, விருப்பை
நம்மைவிட்டு விலக்கிவிடல்‌ வேண்டும்‌.

எனவே நாம்‌ நமது ஐம்புலன்களால்‌ பெறும்‌ அறிவின்‌
மூலமும்‌, உணர்வின்‌ மூலமும்‌, எமது உள்ளத்தில்‌
தோன்றும்‌ எண்ணங்களை நெறிப்படூத்தக்கூடியதாக,
எமது மனம்‌ இருப்பதற்கேற்ற கல்வியினை, மனம்‌
பெற்றிருக்க வேண்டும்‌. இதனையே வள்ளுவர்‌

“கற்க கசடறக்‌ கற்பவை கற்றபின்‌
நிற்க அதற்குத்‌ தக”

- குறள்‌: 391
சந்தேகத்திற்கு இடமின்றித்‌ தெளிவாகக்‌ “கற்க
வேண்டியவற்றைக்‌”” கற்றபின்‌ அதன்படி நடப்பாயாக
என்கிறார்‌.

சமூக விஞ்ஞானம்‌

மனவளர்ச்சிக்குத்‌ தேவையான கற்க வேண்டிய கல்வி
எது? நாம்‌ தொழில்‌ பார்க்கும்‌ நோக்கோடு கற்றுத்தேர்வு
எழுதும்‌ இன்றைய கல்வி அல்ல.

ஒருவன்‌ கற்க வேண்டியது சமூகவிஞ்ஞானம்‌, அதாவது
மனிதன்‌ பற்றிய விஞ்ஞானம்‌. மனிதன்‌ சமூகமாக
ஒன்றுகூடி உழைத்து, பகிர்ந்து, முரணற்று, போராடி,

20


Page 73பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

வாடி, வாழும்‌ சூழலில்‌ எழும்‌ மனிதஇயக்க விதிகள்‌
பற்றிய கோட்பாடுகளே சமூகவிஞ்ஞானம்‌.

இது மனித சமூகத்தின்‌ வரலாறு, பொருளியல்‌,
மெய்யியல்‌, அரசியல்‌, கலை, இலக்கியம்‌ பண்பாட்டியல்‌
யாவற்றிலும்‌ வேர்விட்டு எழுந்து நிற்பது. இவை பற்றிய
கல்வியே ஒருவன்‌ வாழ்வியலுக்குத்‌ தேவை.

ஆனால்‌ அதேவேளை பணம்‌ ஈட்டலும்‌ மிகமிக
முக்கியமானது. இவ்வுலகில்‌ அதன்‌ பொருட்டுத்‌
துறைசார்ந்த கல்வியைக்‌ குறிப்பாக பெளதிகவியல்‌,
இரசாயனவியல்‌, உயிரியல்‌, கணக்கியல்‌ போன்ற பல
தொழில்நுட்பங்கள்‌ அடங்கிய இயற்கை விஞ்ஞானக்‌
கல்வியையும்‌ ஒருவன்‌ மேற்கொள்ள வேண்டியது
அவசியமாகிறது.

இருப்பினும்‌ பெரும்பாலும்‌ சமூகவிஞ்ஞானக்கல்வியே
ஒருவன்‌ தன்‌ மனதின்‌ எண்ணங்களை அறவழி நின்று
கட்டுப்படுத்தத்‌ துணை செய்யும்‌.

மனதோட௫ பேசுங்கள்‌

உங்கள்‌ மனதை உங்களின்‌ சிறந்த வேலைக்காரன்‌
ஆக்கிக்‌ கொள்ளுங்கள்‌. அது தோற்றுவிக்கும்‌
எண்ணங்களின்‌ பலாபலன்களைப்‌ பற்றி அதனோடு
பேசுங்கள்‌. உலக ஒழுங்கிற்கும்‌, உங்கள்‌
இலட்சியத்திற்கும்‌, குறிக்கோளிற்கும்‌ அந்த எண்ணம்‌
இடையூறானது என்றால்‌ அந்த எண்ணத்தைக்‌
கைவிட்டு விடுங்கள்‌. அவ்வாறான எண்ணத்தைத்‌
தோற்றுவித்ததற்காக மனதைக்‌ கண்டித்துப்‌ பேசுங்கள்‌.

37


Page 74பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

“மனதோடூ பேசவும்‌ மனம்‌ தானே துணை செய்ய
வேண்டூம” என்று கேட்டால்‌ - ஆம்‌ மனம்தான்‌
வேண்டும்‌.

அப்படியானல்‌ அது எப்படி?

கண்ணாடியில்‌ காணும்‌ உருவம்‌ போல மனம்‌
தன்னைத்‌ தானே காணவல்லது, பேசவல்லது.

இது சிலருக்குப்‌ புரியாததாக இருக்கும்‌. தன்னோடு
பேசத்‌ தெரியாதவன்‌ பிறரோடூ எப்படிப்‌ பேசுவான்‌?
தன்னை உணராதவன்‌ பிறரை எப்படிப்புரிந்து கொள்ளப்‌
போகிறான்‌? தன்னைக்‌ கண்டுபிடிக்க முடியாதவன்‌
உலகை எப்படிக்கண்டூபிடிக்கப்‌ போகிறான்‌?

எனவே முதலில்‌ உங்களோடூ பேசுங்கள்‌. உங்களை
உணர்ந்து கொள்ளுங்கள்‌. ஐம்புலன்களினூடும்‌ நுகரும்‌
விடயங்களிற்கேற்ப்‌ மனம்‌ பல்வேறு ஆசைகளைக்‌
கொண்டிருக்கும்‌. அதில்‌ விபரீதமானவையும்‌, அற
நெறிக்குப்‌ புறம்பானவையும்‌ உங்கள்‌ இலட்சியத்‌
திற்குத்‌ துணை செய்யாதவையும்‌ இருக்கும்‌.
அவற்றைக்‌ கண்டித்து ஒதுக்கி விட முயலுங்கள்‌.
அவ்வெண்ணங்களைத்‌ தூரவைத்து விடுங்கள்‌. இதுவே
புத்தபிரானின்‌ போதனையும்‌ ஆகும்‌.

இன்றைய உலகில்‌ ஐம்புலன்களினூடூம்‌ இலகுவாக
எமக்குத்‌ தேவையற்ற உணர்வுகளை, அறிவினை, மனம்‌
பெற்றுவிடும்‌. எனவே ஐம்புலன்களையும்‌ ஒழுங்காக
வைத்திருப்பதும்‌ ஓர்‌ அடிப்படை முயற்சியாகும்‌.
இதனையே வள்ளுவர்‌

28


Page 75பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

“பொறிவாயில்‌ ஐந்து அவித்தான்‌ பொய்தீர்‌ ஒழுக்க
நெறி நின்றார்‌ நீடுவாழ்‌ வார்‌”
- குறள்‌: 6
என்று கூறுகின்றார்‌

“ஐம்புலன்களையும்‌  அடக்கியவனது பொய்யாகாத
ஒழுக்கநெறி” என்று பலரும்‌ இதற்குக்‌ கருத்துக்‌ கூறுவர்‌
- அடக்குவதால்‌ எதையும்‌ நெறிப்படுத்தி விடமுடியாது.

வள்ளுவர்‌ கூறியதுபோல்‌ “அவித்தல்‌” வேண்டும்‌. அரிசி,
மா, இறைச்சி உட்பட பல்வேறு பொருட்களையும்‌
அவித்து உடலுக்கு ஏற்புடைய உணவாக்குகின்றோம்‌
அல்லவா, அதேபோன்று ஏற்புடையதை மட்டூம்‌ நுகரும்‌
அறிவினை மனதிற்குக்‌ கொடுத்து விடல்‌ வேண்டும்‌.
அதனை ஆழ்மனதில்‌ பதித்துவிடல்‌ வேண்டும்‌,

உங்கள்‌ கட்டளையை ஏற்று அடங்கி நடக்கக்கூடியவாறு
மனம்‌ செயற்படக்கூடிய பயிற்சியை அதற்குக்‌ கொடுத்தல்‌
வேண்டும்‌. அப்பயிற்சி முறைகளே யோகாசனம்‌, தியானம்‌
என்பன. அவ்வாறு பயிற்சி பெற்ற மனதை, அறநெறி
வழி “புத்தி” கூறுவதைக்‌ கேட்டுச்‌ செயற்பட வைத்தால்‌
ஐம்பொறிகளும்‌ நுகரவேண்டியவற்றை மட்டூமே நுகரும்‌.
இதுவே “பொறிவாயில்‌ ஐந்து அவித்தான்‌'' என்பதாகும்‌.
எனவே தூய அறிவினைப்‌ பெற்ற மனமே, மலர்ச்சி
பெற்ற மனமாகும்‌.

எடூத்துக்காட்டாக மாமிச உணவு உண்ணக்‌ கூடாது
என்ற அறிவினை, பழக்கத்தினை உடைய மனம்‌
மாமிசம்‌ அற்ற உணவுகளையே(ுரக்கறி) உண்டூவரும்‌
ஒருவருக்கு மாமிச உணவின்‌ சுவை அருவருப்பைக்‌

59


Page 76பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கொடுக்கும்‌, அவற்றின்‌ மணம்‌ அவருக்கு துர்‌ நாற்றமாகி
அவற்றை விட்டூ விலகியே இருப்பார்‌.

ஆனால்‌ மாமிச உணவுக்கு பழகியோருக்கு அம்‌
மணம்‌ வாயில்‌ உமிழ்‌ நீரைப்‌ பிறப்பிக்கும்‌. அவற்றை
மனம்‌ விரும்பும்‌. எனவே இவை வாய்‌, மூக்கு என்ற
பொறிகளுக்குக்‌ கொடுக்கப்பட்ட பயிற்சியின்‌ விளைவே.

ஐம்பொறிகளையும்‌ நல்வழிப்படூத்தக்‌ கூடிய பக்குவம்‌
பெற்ற மன நிலையை பெறும்‌ பொருட்டே சமயங்கள்‌
உண்ணாநோன்பைப்‌ போதித்தன.

“உண்ணா நோன்பு என்பது பாவத்தை உண்ணாது
நோற்பது” - ஐம்பொறிகளையும்‌ பாவச்செயல்களில்‌
இருந்து காத்தலையே நோன்பு என்கிறது சமயம்‌.

மனிதரில்‌ கொடுமுடி (மாதிரி மனிதன்‌)

மனிதன்‌ என்பவன்‌ எப்படிப்பட்டவனாக இருத்தல்‌
வேண்டூம்‌ என்று ஒரு கேள்வி எழுந்தால்‌ அதாவது ஒரு
மனித மாதிரியைக்‌ கூறுங்கள்‌ என்று கேட்டால்‌ மலர்ச்சி
கொண்ட உடலையும்‌, மலர்ச்சி கொண்ட உயிரையும்‌,
மலர்ச்சி கொண்ட மனதையும்‌ உடையவனே எனலாம்‌.

மனிதனின்‌ அழகு

உறுதியான உடலையும்‌, மலர்ச்சி கொண்ட உயிர்ப்புள்ள
உயிரையும்‌, வலிமைமிக்க, தன்னம்பிக்கையுடைய

60


Page 77பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அறநெறிகொண்ட மனித புத்திக்குக்‌ கட்டுப்பட்ட
மனதையும்‌ உடையவனே - படைப்பில்‌ உயர்ந்த மனிதன்‌,
மனிதரில்‌ கொடுமுடி, மனிதரில்‌ அழகுடையவன்‌.

உடல்‌ அழகு

ஆரோக்கியமான நோயற்ற உடல்‌, அழகாகத்‌ தோன்றும்‌
- அகத்திலும்‌ புறத்திலும்‌ சீரான வலுவான உறுப்புக்களை
உடையவன்‌, அழகுள்ள உடலைக்‌ கொண்டிருப்பான்‌.
இவற்றிற்கு அடிப்படையாக அமைவது திட்டமிடப்பட்ட
உணவுமுறையும்‌, உடற்பயிற்சியும்‌, உடல்‌ மலர்ச்சியைத்‌
தரும்‌ (யோகாசனப்பயிற்சி முதன்மையானது).

உடல்‌ மலர்ச்சி மட்டுமூள்ள ஒருவனிடம்‌ அன்பு
மலர்ச்சியும்‌, அறிவு மலர்ச்சியும்‌ இல்லையாயின்‌ அவன்‌
மிருகம்‌ போல்‌ வாழ்வான்‌, அவனிடம்‌ கொடுக்கப்பட்ட
இந்த உலகவாழ்க்கை குரங்கிடம்‌ கொடுக்கப்பட்ட
பொன்‌ போன்றது.

உடல்‌ மலர்ச்சி மட்டும்‌ கொண்டவன்‌ நட்போ, உறவோ
நீண்ட நாட்கள்‌ நீடிக்கமாட்டா.

உடல்‌ மலர்ச்சி கொண்டவன்‌ அன்பும்‌, அறிவும்‌
உடையவனாகில்‌ உலகிற்குப்‌ பயன்‌ தருபவனாவான்‌.
அவன்‌ உடலே மலர்ச்சியும்‌, கவர்ச்சியும்‌ கொண்டு
அழகாகத்‌ தோன்றும்‌.

உயிர்‌ அழகு

ஒருவனின்‌ தூய அன்பு நிறைந்த உள்ளமே, அன்பு
61


Page 78பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மலர்ச்சி. அது அவனின்‌ அகத்தையும்‌, புறத்தையும்‌
மலரவைப்பதுடன்‌ அவன்‌ மீது ஒரு கவர்ச்சி விசையையும்‌,
காந்தப்புலத்தையும்‌, ஒளியையும்‌ உருவாக்கி விடும்‌.
அவன்‌ மலர்ந்த முகத்தோடூ கவர்ச்சி கொண்டவளாக
இருப்பான்‌.

இதுவே முருகன்‌, புத்தர்‌, இயேசு, விவேகானந்தர்‌,
மகாத்மாகாந்தி, அரவிந்தர்‌ போன்றோரிடம்‌ உள்ள
அழகும்‌, கவர்ச்சியும்‌. இதனையே வள்ளுவர்‌

“அன்புஈனும்‌ ஆர்வம்‌ உடைமை அதுஈனும்‌
நண்புஎன்னும்‌ நாடாச்‌ சிறப்பு”
- குறள்‌: 74

நீங்கள்‌ உயிர்களிடம்‌ கொண்டுள்ள அன்பு அவ்‌
வுயிர்களிடத்து உங்கள்‌ மீது ஓர்‌ ஆர்வத்தைத்‌
தோற்றுவிக்கும்‌. அந்த ஆர்வத்தினால்‌ மற்றைய
உயிர்கள்‌ உங்களை நாடி நட்போடு வருதலைப்‌
பெற்றுத்தரும்‌.

எமக்கு ஒருவர்‌ மீதோ, ஒரு பொருளின்‌ மீதோ ஆர்வம்‌,
விருப்பு ஏற்பட வேண்டுமானால்‌ எம்மை, எமது மனதை
அது கவருதல்‌ அதாவது ஈர்த்தல்‌ வேண்டும்‌. எனவே
இங்கு அன்புள்ளம்‌ கொண்டவர்‌, தன்மீது பிறரைக்‌
கவரக்கூடிய கவர்ச்சி விசையை உடையவராக இருப்பர்‌
என்பதே பொருள்‌.

அன்புள்ளம்‌ கொண்ட மலர்ந்த உயிர்‌ மின்சாரம்‌ போன்று
உடலில்‌ ஓடிக்கொண்டிருக்குமானால்‌ அது அக்காந்த

சக்தியைக்‌ கொடுக்கும்‌.

62


Page 79பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

வாழ்வின்‌ நோக்கம்‌ இன்பமாக மகிழ்ச்சியாக வாழ்வது
அல்லவா? மனிதனின்‌ உண்மையான இன்பவாழ்க்கை
அன்பு கொண்ட உள்ளத்தில்தான்‌ பூத்துக்குலுங்கும்‌.
அன்பு என்பது அகவாழ்க்கையின்‌ சிறப்பிற்கு மட்டூம்‌
அடிப்படையானது என்று பலரும்‌ எண்ணிக்கொண்டூ
இருப்பார்கள்‌.

அன்பு கொண்ட உள்ளம்‌ அகவாழ்க்கைக்கு மட்டுமல்ல
புறவாழ்க்கைக்கும்‌ ஆதாரமானது. அதுவே ஒருவனைத்‌
தன்‌ குடும்பத்தின்‌ மீது, தன்‌ உறவுகள்‌ மீது, தன்‌ ஊரின்‌
மீது, தன்‌ இனத்தின்‌ மீது, தன்நாட்டின்‌ மீது, ஏன்‌ இந்த
உலகின்‌ மீதுகூட ஆர்வத்தையும்‌, அக்கறையையும்‌
கொடுக்கிறது. அதன்‌ வளர்ச்சியில்‌ மேம்பாட்டில்‌ ஈடுபட
வைக்கிறது.

அவற்றின்‌ வளர்ச்சிக்கு, வாழ்விற்கு இடையூறு வரும்போது
அவற்றைக்‌ காப்பாற்றுவதற்காக முழுமனதுடன்‌ ஈடுபடும்‌,
போராடும்‌, தன்னை அர்ப்பணிக்கும்‌, அவற்றிற்காக தன்‌
உயிரையே ஈகம்‌ செய்ய வைக்கும்‌ அற்புதத்தன்மை
கொண்டது அன்பு. அன்பே காதலிற்கும்‌, வீரத்திற்கும்‌
மூலகாரணமானது. அறத்திற்கும்‌, புறத்திற்கும்‌
ஆதாரமானது. இதனையே வள்ளுவர்‌

“அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்‌
மறத்திற்கும்‌ அ..தே துணை.
- குறள்‌: 76

அறியாதவர்கள்‌, அன்பு அறத்திற்கு, அகவாழ்க்கைக்கு
மட்டுமே துணையாகிறது என்பர்‌. வீரவாழ்விற்கும்‌ அந்த

63


Page 80பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அன்பே துணையாகிறது என்கிறார்‌.

மனதின்‌ அழகு

உடல்‌ மலர்ச்சியையும்‌, உயிர்‌ மலர்ச்சியையும்‌
பெறுவதற்கு ஒரேவழி மனமலர்ச்சியைப்‌ பெறுவது.
அதாவது மேலும்‌ மேலும்‌ மனதிற்கு நல்ல அறிவையும்‌
பயிற்சியையும்‌ கொடுப்பது.

நல்ல அறிவைப்‌ பெற்ற பயிற்சி உள்ள மனம்‌ தன்‌
உடலைப்‌ பாதுகாக்கும்‌ வகையறிந்து செயற்படும்‌.
அதேபோன்று நல்ல அறிவை விழுமியங்களுடன்‌ சேர்த்துப்‌
பெற்ற மனம்‌ அகந்தை (20), ஆணவம்‌ அற்றதாக
வளர்ச்சிபெறின்‌ நல்ல அன்பை வெளிப்படுத்தும்‌.

சில மனிதரிடம்‌ அறிவு வளர வளர அகந்தையும்‌,
ஆணவமும்‌ வலுவடையும்‌. இவை வலுவடையின்‌,
அவன்‌ அறிவால்‌ அதிகம்‌ பயன்கிட்டாது.

முற்றிப்பழுத்த தேங்காயினுள்ளே தூய வெண்ணிறத்‌
தேங்காயும்‌, இனிய இளநீரும்‌ உண்டு. அதனை
மூடியுள்ள வலுவான ஓட்டை உடைக்காத வரை
அவற்றை நாம்‌ பெறமுடியாது. அதேபோன்று எம்‌
மனதிலுள்ள அகந்தையையும்‌, ஆணவத்தையும்‌ சிதற
உடைத்தாலத்தான்‌ தூய அன்பு என்ற இனிய ஊற்று
உயிரின்‌ வழியே வெளிவரும்‌.

எம்மனது பெற்ற அறிவின்‌ நற்பயனை இவ்வுலகம்‌
முழுமையாகப்‌ பெறும்‌. அப்போது தான்‌ அவரின்‌ மனதின்‌
அழகைப்பிறர்‌ கண்டூ மகிழ்வர்‌, பாராட்டூவர்‌.

64


Page 81பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
கல்வியின்‌ வகையும்‌, நோக்கமும்‌

மனம்‌ தான்‌ பெற்ற கல்வி மூலம்‌ சிந்திக்கவும்‌,
எண்ணங்களைத்‌ தோற்றுவிக்கவும்‌, தோன்றும்‌
எண்ணங்களை ஆய்வு செய்யும்‌ “புத்தி' கூர்மையானதாக
இருக்கவும்‌ வழிவகுக்கிறது. இக்கல்வியை மூன்று
வகையாகப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌.

பயன்நிலைக்கல்வி

படித்த செய்திளை நடைமுறை வாழ்க்கையுடன்‌
பொருத்திப்பார்க்கும்‌ கல்வி பயன்நிலைக்கல்வி
எனப்படும்‌.

நாம்‌ நடைமுறை வாழ்க்கையில்‌ கடைப்பிடிக்க வேண்டிய
எத்தனையோ விடயங்களைக்‌ கற்கிறோம்‌, ஆனால்‌ அந்த
நடைமுறையை எதிர்‌ கொள்ளும்போது அவற்றைக்‌
கடைப்பிடிக்கத்‌ தவறித்‌ துன்பப்‌ படுகிறோம்‌.

எல்லோரும்‌ இலகுவாக விளங்கிக்‌ கொள்ளக்கூடிய
ஓர்‌ எடூத்துக்காட்டைப்‌ பார்ப்போம்‌. கொதிநீரைக்‌ கண்‌
“ணாடிக்குவளையில்‌ ஊற்றினால்‌ வெடிக்கும்‌. அது
வெடிக்காதிருக்க வேண்டுமாயின்‌ அதனுள்‌ ஓர்‌ உலோகக்‌
கரண்டியை வைத்து ஊற்றல்‌ வேண்டும்‌. இவ்வாறு
படித்துவிட்டு கரண்டியை வைக்காது கொதிநீரை ஊற்றிக்‌
கண்ணாடியை உடைத்துவிட்டூத்‌ திகைத்து நிற்போம்‌.

சமூக வாழ்வில்‌ நாம்‌ கடைப்பிடிக்க வேண்டியவற்றை
கடைப்பிடிக்காது, கற்ற கல்வி அறிவைப்‌ பயன்படுத்தாது
விட்டு விடுகிறோம்‌.

65


Page 82பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தன்‌ உணர்வுக்கல்வி அல்லது
நம்பிக்கைக்கல்வி

ஒருவர்‌ தான்‌ கற்கும்‌ விடயங்களைத்‌ தன்‌ சொந்தப்‌
பண்புடன்‌ ஒப்பிட்டுப்‌ பார்க்கும்‌ கல்வியாகும்‌. பொய்‌
சொல்லக்கூடாதென்று கற்றவர்‌, தான்‌ பொய்‌
சொல்லாது நடக்கிறேனா என்று தன்‌ சொந்தப்‌ பண்புடன்‌
ஒப்பிட்டுப்பார்த்து தன்னை உணர்ந்து கொள்வது.

தான்‌ கற்கும்‌ ஒவ்வோர்‌ விடயத்தையும்‌ தன்‌ சொந்தப்‌
பண்போடு, நடத்தையோடூ ஒப்பிட்டூப்பார்க்கப்‌ பழகிக்‌
கொள்ளல்‌ வேண்டும்‌. அப்போது அவன்‌ தன்னை
உணர்ந்தவனாகிறான்‌.

வாழ்க்கைக்‌ கல்வி

வாழ்விலுள்ள ஒழுங்கின்மையைப்‌ புரிந்துகொண்டு
ஒழுக்கம்‌ காண முயலும்‌ கல்வி.

நாம்‌ வாழும்‌ இவ்வுலகிலுள்ள சடப்பொருட்கள்‌
முதல்‌ உயிரினங்கள்‌ வரை ஒழுங்கற்றதாக எமக்குத்‌
தோற்றம்‌ அளிக்கும்‌. எம்‌ எண்ணப்படி எம்‌ விருப்பப்படி
எம்‌ குடும்பத்தவர்‌ உட்பட எவருமே நடக்காத நிலை
தோன்றும்‌. இந்நிலையில்‌ எமது இலட்சியத்தைக்‌
குறிக்கோளை எவ்வாறு அடைவது? எமது வாழ்வைத்‌
துன்பமானதாக ஆக்கிக்கொள்ளாது மகிழ்ச்சியாக
வாழக்கூடிய வழிமுறைகளைக்‌ கண்டறிந்து திட்டமிட்டூச்‌
செயற்படக்‌ கல்வி உதவும்‌. இத்தகைய கல்வியே
வாழ்க்கைக்கல்வி.

66


Page 83பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

எமது சிந்தனைக்கும்‌, செயலுக்கும்‌, கொள்கைக்கும்‌,
நோக்கத்திற்கும்‌, விருப்புக்கும்‌, ஆசைக்கும்‌, குறுக்கே
நிற்கும்‌ சூழல்‌, எமக்கு ஒழுங்கற்றதாகத்‌ தோன்றும்‌.

இவ்‌ ஒழுங்கற்ற உலகச்சூழலில்‌ எமது வாழ்வின்‌
இலக்கை அடைய, அவற்றோடூ முரண்பட்டூ,
மோதிவிழாது வழிவகுத்துக்கொள்ளப்‌ பயன்படூம்‌ கல்வி,
வாழ்க்கைக்‌ கல்வியாகும்‌.

இவ்வகையான நடைமுறை வாழ்க்கைக்குத்‌ தேவையான
கல்வியினை நிச்சயம்‌ கற்றல்‌ வேண்டும்‌. அதுவே
எம்மனதின்‌ செயற்பாட்டை நெறிப்படுத்தும்‌.

“நல்‌ ஒழுக்கம்‌ நிறைந்த ஒழுகலாறே
மனிதத்தின்‌ மாண்பு”

 

67


Page 84இதம்‌ 3
பண்பாட்டிண்‌ தோற்றம்‌

பணபாடூ எவ்வாறு தோற்றம்‌ பெறுகிறது? பண்பாடு
என்றால்‌ என்ன, என்பதன்‌ விடையைக்‌ காணும்‌
நோக்கத்திற்கு அத்திவாரமாக அமையும்‌ விடயங்கள்‌
பற்றியே இதுவரை சுருக்கமாகப்‌ பார்த்தோம்‌.

மனிதனின்‌ இயங்கு கருவியாக “உடல்‌”, அக்கருவியை

இயக்கும்‌ மின்சாரம்‌ போன்ற “உயிர்‌”,

லட ௫ அக்கருவியின்‌ இயக்கத்திற்கான

கட்டளையைப்‌ பிறப்பிக்கும்‌

"மனம்‌' ஆகியவற்றிற்கு ஆதார

மானவை உணவு, அன்பு,
அறிவு என்பன.

     
 

இவற்றை மனிதன்‌ பெற்றுக்‌
கொள்வதற்கான தூண்டுதலை,
உள்ளார்ந்த இயல்பூக்கத்தை,
இயல்பான  உந்துசக்திகளை
மனிதன்‌ பெற்றுள்ளான்‌.
இவவுந்துசக்திகள்‌ பல்வேறு
வகைப்பட்ட உணர்வுகளாக

[1 13 உள்ளத்தே தோற்றம்‌ பெறும்‌.
1 இவய அவற்றை நிறைவேற்றிக்‌
்‌ 7 கொள்வதே மனிதனின்‌ முக்கிய

। ர்‌ | வேலையாக இருக்கிறது.
ழி

6$


Page 85பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தேவை மனிதர்‌ இயல்பான உந்துசக்திகள்‌
உணவு 5*% உடல்‌ 2 உடல்சார்‌ உந்துசக்திகள்‌
*பசி, *தாகம்‌, *நித்திரை,
*மலசலம்‌ கழித்தல்‌,
* *பாலுணர்வு போன்றவை

உயிர்சார்‌ உந்துசக்திகள்‌
*பாதுகாப்புணர்வு .
*ஆர்வம்‌ உடைமை,
*பற்றுள்ளம்‌, நன்றி,
இரக்கம்‌,துக்கம்‌, கோபம்‌
கடமை, தியாகம்‌ போன்ற
உணர்வுகளின்‌ தூண்டல,
உடல்‌ நோய்‌

11

அன்பு உயிர்‌ 2

11

அறிவு மனம்‌ -? தஅறிதல்சார்‌ உந்துசக்தி
*ஆக்கசக்தி, *ஆராயும்‌
இயல்பு, *எண்ணங்கள்‌,
*கனவுகள்‌, *கற்பனைகள்‌
கலை இலக்கிய
மெய்யியல்‌ போன்ற

வெளிப்பாடுகள்‌

இயல்பாகத்‌ தோன்றும்‌ இத்தகைய உந்துசக்திகள்‌
மனிதனின்‌ உள்ளத்து உணர்வுகளை ஆட்டிப்படைக்க
வல்லன. அத்தேவைகளை நிறைவு செய்யாதவரை
அந்த உள்ளம்‌ அமைதி கொள்ளமாட்டாது.

இத்தகைய தூண்டூதல்கள்‌ மனிதனுக்கு மாத்திரம்‌

69


Page 86பண்பாடு - வேரும்‌, வீழுதும்‌

உடையதல்ல, சகல உயிரினங்களிற்கும்‌ உடையது
. பசியோடு நிற்கும்‌ செடிக்கு நீர்‌ கிடைக்கவில்லையாயின்‌
அச்செடி வாடிவிடும்‌, காலம்‌ நீடித்தால்‌ இறந்தேவிடூம்‌.

எனவே உலகிற்‌ தோன்றிய எல்லா உயிரினங்களும்‌
முதலில்‌ நிறைவு செய்ய முயலுவது, செயற்படூவது,
உழைப்பது, முன்னுரிமை கொடுப்பது இந்த இயல்பான
உந்துசக்தியினைத்‌ தணித்துக்கொள்ள அல்லது
போக்கிக்கொள்ளவே.

மனிதனைத்‌ தவிர்ந்த பிற உயிரினங்கள்‌ ஆறாவது
அறிவாகிய பகுத்தறிவு அற்றவையாதலால்‌ மனம்சார்ந்த
உந்துசக்திகள்‌ அவைகளின்‌ மரபுசார்ந்து மட்டூம்‌
அமையும்‌.

இதனாலே முதல்‌ ஐந்து அறிவுவரை உள்ள
உயிரினங்களை அ..றிணை என்றும்‌ பகுத்தறிவு
கொண்ட மனிதனை உயர்திணை என்றும்‌ தமிழர்‌
பகுத்துள்ளனர்‌.

உடல்சார்‌ உந்துசக்திகள்‌

உடல்வழியே சில இயல்பூக்கங்கள்‌ தோற்றம்‌ பெறும்‌,
இத்தூண்டல்களாக பசி, தாகம்‌, மலசலம்‌ கழித்தல்‌,
நித்திரை, பாலுணர்வு போன்ற இன்னோரன்ன உணர்வுகள்‌
வெளிப்படுகின்றன.

உடலவழி தோன்றிய இவ்வுந்துசக்திகள்‌ மற்றைய
உந்துகச்திகளை விட முதன்மையானவை, முதல்‌
நிலையில்‌ உள்ளவை இவற்றை முதலில்‌ நிறைவு

70


Page 87பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

செய்து கொள்ளவே மனம்‌ விரும்பும்‌; செயற்படும்‌.

மனிதனும்‌ ஓர்‌ உயர்‌ விலங்கினம்‌ ஆகையால்‌
அவைகளைப்‌ போன்று உடலின்‌ உந்து சக்திகளே
முதன்மை பெறுகின்றன. அவற்றை நிறைவு
செய்யப்பட்டதன்‌ அல்லது தணிக்கப்பட்டதன்‌ பின்னர்தான்‌
உயிர்சார்‌ உந்துசக்திகள்‌, அறிதல்சார்‌ உந்துசக்திகள்‌
மனிதனின்‌ மனதிற்‌ தோற்றம்‌ பெறும்‌.

இதனாற்போலும்‌ சில மேற்குலக அறிஞர்கள்‌ உடல்சார்‌
உந்துசக்திகளை மட்டுமே இயல்பான உந்துசக்திகளாகக்‌
குறிப்பிட்டுள்ளனர்‌ என எண்ணத்‌ தோன்றுகிறது.

உயிர்சார்‌ உந்துசக்தி

உடலின்‌ தேவைகள்‌ நிறைவு செய்யப்பட்ட உயிரின்கண்‌
அது நாடும்‌ அன்பின்‌ வெளிப்பாடாக பிற உயிர்களிடத்து
ஆர்வம்‌, கவர்ச்சி, பற்று, விருப்பு, வெறுப்பு, உறவு,
பகை, துக்கம்‌, கோபம்‌, தியாகம்‌ போன்ற உள்ளத்து
உணர்வுகள்‌ மனதைத்‌ தூண்டிய வண்ணம்‌ இருக்கும்‌.

உயிர்‌ தனது பாதுகாப்பை விரும்பும்‌. இதனால்‌
பாதுகாப்பு உணர்வு தூண்டப்படும்‌. இப்பாதுகாப்பு
உணர்வு மேலெழும்போது பயவுணர்வு தோன்றும்‌.
பாதுகாப்பிற்கான முயற்சிகள்‌ தூண்டப்பெற்று மனிதன்‌
செயற்படூவான்‌. இதுவே முதன்மையானதாக இருக்கும்‌.

உடல்சார்‌ உந்து சக்திகள்‌ முதன்மையானதாக
இருந்தபோதும்‌, உடல்‌, உயிர்‌, மனம்‌ ஒன்றிணைந்து
மனிதரின்‌ பாதுகாப்புக்ேகே முதன்மை கொடுக்கும்‌.

71


Page 88பண்பாரு - வேரும்‌, விழுதும்‌

பாதுகாப்பு உணர்வு நிறைவு செய்யப்பட்டதன்‌
பின்னர்தான்‌ உடல்சார்‌ உந்துசக்தியையும்‌ அதன்‌
பின்னர்‌ உயிர்சார்‌ உந்துசக்தியையும்‌ தொடர்ந்து
அறிதல்சார்‌ உந்துசக்தியையும்‌ மனம்‌ கவனத்தில்‌
எடுத்துக்‌ கொள்ளும்‌.

தமிழர்‌ சமயக்கொள்கையில்‌ உயிரோடு ஆணவம்‌,
கர்மம்‌, மாயை என்னும்‌ மும்மலங்களும்‌ தோற்றம்‌
பெற்றுள்ளன என்பர்‌. இதன்வழி மனிதஉயிர்‌ தனித்து
வாழ விரும்பாது பிறவுயிர்களுடன்‌ இணைந்து வாழ
விரும்பும்‌. அதனால்‌ காதல்‌, பாசம்‌, பற்று, விருப்பு,
வெறுப்புப்‌ போன்ற உந்துசக்திகள்‌ மனித உள்ளத்தே
தோற்றம்‌ பெறும்‌. இதன்வழி “ஆசை” மலர்ந்து, வளர்ந்து
மனதைத்‌ தூண்டிய வண்ணம்‌ இருக்கும்‌.

அறிதல்சார்‌ உந்துசக்தி

உடல்‌, உயிர்‌ என்பன வழியே தோன்றும்‌ உந்துசக்திகள்‌
மனதைத்தாண்ட, மனம்‌ அவற்றை நிறைவு செய்வதற்கான
அல்லது போக்கிக்‌ கொள்வதற்கான; வழிவகைகளைக்‌
கண்டறிந்து செயற்படும்‌.

உடல்வழி தோன்றும்‌ உந்துசக்திகளே முதன்மை பெறும்‌.
அதற்கு அடூத்த நிலையிலேயே (இரண்டாம்‌ நிலை)
உயிர்‌, மனம்‌ உள்ளது. மனம்தான்‌ பெற்ற அறிவின்வழி
செயற்படுவதால்‌ ஓவ்வொரு மனிதனும்‌ தான்‌ பெற்ற
அறிவிற்கு ஏற்ப உந்துசக்திகளைப்‌ போக்கிக்கொள்ளும்‌
தன்மையினை உடையவனாகின்றான்‌.

மனம்‌ அறிதலில்‌ ஆர்வம்‌ உடையது. தான்‌ கொண்டுள்ள

72


Page 89பண்பா௫ு - வேரும்‌, விழுதும்‌

ஆசைகள்‌, விருப்பு வெறுப்புகள்‌, தேவைகளுக்கேற்ப
அறிதலில்‌ ஆர்வம்‌ தூண்டப்பெறும்‌. அவ்வழியே
அது ஆக்கசக்தியை படைப்பாற்றலைக்‌ (012811871)
கொண்டிருக்கும்‌.

மனதின்‌ பார்க்கும்‌ கோணத்திற்‌ கேற்பவும்‌, மனதினில்‌
தோன்றும்‌ எண்ணங்கள்‌, கனவுகள்‌, கற்பனைகள்‌
என்பவற்றிற்‌  கேற்பவும்‌ அறிதல்சார்‌ உந்துசக்திகள்‌
தோன்றும்‌. அதன்வழி மனிதனின்‌ நடத்தைசார்‌
பண்புகளும்‌, செயலும்‌ படைப்பாற்றலின்‌ வெளிப்பாடுகளும்‌
அமையும்‌.

இவையே மனிதனை மிருகங்களை விட உயர்ந்த
வனாக்குகின்றது. ஏனையோரிடமிருந்து அவனை
அடையாளப்படுத்தி நிற்கிறது. இங்குப்‌ படைப்பாற்றலின்‌
வெளிப்பாடாக மொழி, கலைகள்‌, இலக்கியங்கள்‌
இன்னோரன்ன புதிய கண்டுபிடிப்புகள்‌ அமையும்‌.

எடுத்துக்காட்டாக மனிதவாழ்வுக்கு வழிகாட்டும்‌ உயர்ந்த

மெய்யியல்‌ நூலாம்‌ திருக்குறளைத்‌ தந்த திருவள்ளுவர்‌
உலக மனிதரிடையே உயர்ந்தார்‌.

இவர்போன்றே புத்தர்‌, யேசு, திருமூலர்‌, இராமலிங்க
வள்ளலார்‌ போன்றோர்‌ இன்னும்‌ அறிஞர்கள்‌,
எழுத்தாளர்கள்‌, கவிஞர்கள்‌, நடிகர்கள்‌ போன்ற
இன்னோரன்ன பலர்‌ உயர்ந்தோராக உள்ளனர்‌.

73


Page 90பணர்பாடு - வேரும்‌, விழுதும்‌
பண்பாடு என்றால்‌ என்ன?

இயல்பாகத்‌ தோன்றிய உந்துசக்திகளை ஒவ்வோர்‌
உயிரும்‌, ஒவ்வொரு மனிதனும்‌, ஒவ்வோர்‌ இனமும்‌
எங்கு? எவ்வாறு? எப்படி? தணித்துக்‌ கொள்கின்றன
அல்லது போக்கிக்‌ கொள்கின்றன என்பதே அந்த உயிரின்‌
அல்லது அந்த இனத்தின்‌ பண்பாடூ (வாழ்வியல்‌) எனக்‌
கூறலாம்‌.

எடுத்துக்காட்டாக ஒரு மாடூ கயிற்றின்‌ மூலம்‌ பிணைத்து
நிற்கின்றது என்று வைத்துக்‌ கொள்வோம்‌. அது சலம்‌
விடவேண்டூமாயின்‌ அது கயிற்றின்‌ மூலம்‌ பிணைத்து
நின்ற இடத்திலேயே விட்டூ விடூகின்றது.

ஆனால்‌ மனிதன்‌ அவ்வாறு செய்வதில்லை. அவன்‌
தனக்கே உரித்தான கழிவறைக்குச்‌ சென்று,
கழிவறையை அசுத்தம்‌ செய்யாது, தகுந்த ஒழுங்கான
முறையில்‌ சலத்தைப்‌ போக்கிக்‌ கொள்கின்றான்‌.

இங்கேதான்‌ மிருகத்திற்கும்‌, மனிதற்கும்‌ வேறுபாடு
மலர்கின்றது. மிருகங்கள்‌ எங்கே? எப்படி? எப்போது?
என்பவற்றை மனதிற்‌ கொள்ளாது போக்கிக்‌ கொள்கின்றன
அல்லது மரபுவழி வந்த பண்புகளுக்கேற்பப்‌ போக்கிக்‌
கொள்கின்றன.

ஆனால்‌ மனிதன்‌ அப்படி அல்ல எங்கே? எப்போது?
எப்படி? என்பதைத்‌ தீர்மானித்துச்‌ செயற்படூகிறான்‌.
இதுதான்‌ மிருகங்களுக்கும்‌, மனிதற்குமிடையே உள்ள
வேறுபாடூ, இதுவே பண்பாடூ ஆகும்‌.

74


Page 91பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அதுமாத்திரமன்றி ஆதியில்‌ மிருகங்கள்‌ மலசலத்தைப்‌
போக்கிக்கொள்ள எவ்வாறு செயற்பட்டனவோ அவ்வாறே
இன்றுவரை செயற்படுகின்றன.

ஆனால்‌ மனிதன்‌ அன்று செடிகளின்‌ மறைவில்‌ மல,
சலத்தைப்‌ போக்கிக்‌ கொண்டான்‌. கால ஓட்டத்தில்‌ அவன்‌
மனது தான்‌ பெற்ற அறிவின்‌ துணைகொண்டூ அவற்றை
எவ்வாறு போக்கிக்‌ கொள்வது என்று ஆய்ந்து,

மனிதனுக்கு இலகுவானதும்‌, வசதியானதுமான முறை
எது எனத்‌ தீர்மானித்து இன்று வீடுகளினுள்ளேயே பல
வசதிகளைக்‌ கொண்ட கழிவறைகளை அமைத்துக்‌
கொண்டான்‌. அவன்‌ மனது தான்‌ பெற்ற அறிவினால்‌
செயற்பட்டுக்‌ கால ஓட்டத்தோடு பரிணாம வளர்ச்சி
பெற்று இன்று இந்த நிலையை அடைந்துள்ளான்‌.
இதுவே மனதின்‌ மாபெரும்‌ சக்தி. பண்பாட்டின்‌ படிமலர்‌
வளர்ச்சி.

இதுபோன்றே “பசி” என்ற இயல்பான உந்துசக்தியை
எடூத்து நோக்குவோ மானால்‌ மற்றைய உயிரினங்கள்‌
ஆதி முதல்‌ இன்று வரை ஒரே விதமாகவே உணவை
உண்டூ வருகின்றன.

ஆனால்‌ மனிதன்‌ ஆதியில்‌ வேட்டையாடி மிருகங்களின்‌
மாமிசத்தை நெருப்பில்‌ சூடாக்கி உண்டான்‌.
ஆனால்‌ இன்று பலவிதமான தயாரிப்பு முறைகள்‌,
ஆயிரக்கணக்கான உணவு வகைகள்‌ அதுமாத்திர மன்றி
அவற்றை எவ்வாறு இலகுவாக உற்பத்தி செய்யலாம்‌
எனச்‌ சிந்தித்து, செயற்பட்டுத்‌ தனக்கு வேண்டிய உணவுப்‌
பண்டங்களைப்‌ பெருமளவில்‌ உற்பத்தி செய்யும்‌

75


Page 92பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இன்றைய நிலைக்கு உயர்ந்துள்ளான்‌. இதுவேதான்‌
மனிதனின்‌ “பண்பாடூ்‌ - கால ஓட்டத்தில்‌ அவன்‌ பெற்ற
பரிணாம வளர்ச்சி; அவனது வாழ்வியலின்‌ ஒரு கூறு;
இதுவே பணாபாட்டூ மலர்ச்சி.

எனவே பண்பாடு என்ற சொல்‌ மனதோடூ மட்டூமே
தொடர்புடையது. மிருகங்கள்‌ தத்தமக்கே உரிய மரபுவழி
அறிவோடூ மாத்திரம்‌ செயற்படுபவை யாகையால்‌
அவற்றின்‌ வாழ்வியலில்‌ ஆதி முதல்‌ இன்று வரை
எவ்வித மாற்றமும்‌ இல்லை.

ஆனால்‌ மனிதன்‌ மரபுவழி அறிவோடூ தன்பட்டறிவையும்‌
தான்‌ பெற்ற கல்வி அறிவையும்‌ இணைத்துச்‌ சிந்தித்துச்‌
செயற்பட்டு வாழ்வியலில்‌ மாற்றங்களை ஏற்படுத்திய
வண்ணம்‌ வாழ்ந்து வருகிறான்‌. இதுவே மனிதன்‌ பெற்ற
ஆறாவது அறிவாம்‌ மனதின்‌ மாபெரும்‌ சக்தி.

மனிதகுலம்‌ தான்‌ பெற்ற அறிவினால்‌ மனதின்‌
துணைகொண்டு சிந்தித்துச்‌ செயற்பட்டூத்‌ தன்‌
உள்ளத்தே தோன்றும்‌ இயல்பான உந்துசக்திகளைப்‌

போக்கிக்கொள்ள அல்லது நிறைவு செய்து
கொள்ளப்‌ பலவாறான ஒழுங்குமுறைகளையும்‌,
நடைமுறைகளையும்‌, கொள்கைகளையும்‌,

நம்பிக்கைகளையும்‌, பண்புகளையும்‌, நெறிமுறைகளை
இயக்கவிதிகளையும்‌ வகுத்துள்ளது.

அவற்றின்வழி செயற்படுவதன்‌ மூலம்‌ உந்துசக்திகளை
நிறைவு செய்து கொள்ளத்தேவையான வழிமுறைகளை
உருவாக்கிக்‌ கொண்டது, பொருட்களைப்‌ படைத்துக்‌
கொண்டது. இதுவே அந்தமனித குலத்தின்‌ “பண்பாட”;

706


Page 93 

பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌

அம்மனிதகுலத்தின்‌ “வாழ்வியல்‌”.

இயல்பான உந்துசக்திகளை எங்கு? எவ்வாறு?
எப்படி? போக்கிக்‌ கொள்ள வேண்டும்‌ என்பதற்காக
ஒவ்வோர்‌ இனமும்‌ கொள்கைகளையும்‌, நடைமுறையும்‌
நெறிகளையும்‌, விழுமியங்களையும்‌, நம்பிக்கைகளையும்‌,
விதிகளையும்‌, சட்டங்களையும்‌, சடங்குகளையும்‌
இன்னோரன்ன பல வழக்காறுகளையும்‌ வகுத்துள்ளது.
இவை அந்த இனப்பண்பாட்டின்‌ கூறுகளாக
அமைகின்றன.

உந்துசக்தியின்‌ உருவாக்கம்‌

மனித உயிர்கள்‌ உருவாகிய நாள்முதலே அவற்றின்‌
இயல்பான உந்துசக்திகளும்‌ படிப்படியாகத்‌ தோற்றம்‌
பெறும்‌. தாயின்‌ கருவறையில்‌ இருக்கும்போதே
குழந்தையின்‌ தேடல்‌ உருவாகின்றது, அதாவது அறிதற்
கருவியாகிய ஐம்பொறிகளும்‌, புலன்களும்‌ தோற்றம்‌
பெற்றுவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிற்‌ பிறந்த குழந்தையின்‌ இத்தகைய இயல்பான
உந்துசக்திகளை அது போக்கிக்கொள்ள நாம்‌ எவ்வாறு
துணை செய்கின்றோம்‌ என்பதே “குழந்தை வளர்ப்பு

92

முறை

இத்தகைய வளர்ப்பு முறையேதான்‌ குழந்தையின்‌
“பண்பை” உருவாக்குகின்றது. அக்குழந்தையின்‌
அறிவு வளர்ச்சியை, ஆளுமையை, நடத்தையைத்‌
தீர்மானிக்கிறது. சுருங்கக்கூறின்‌ அக்குழந்தையின்‌
அக, புறப்‌ பண்பு கருக்கொண்டூ முளைவிட்டூ வளர்ந்து

77


Page 94பணர்பாடு - வேரும்‌, விழுதும்‌

மரமாகின்றது.

இதையேதான்‌ கவிஞர்‌ கண்ணதாசன்‌ “எந்தக்‌ குழந்தையும்‌
நலல குழந்தைதான்‌ மண்ணிற்‌ பிறக்கையிலே அவர்‌
நல்லவராவதும்‌ தீயவராவதும்‌ அன்னை வளர்ப்பினிலே”
என்ற பாடல்‌ மூலம்‌ கூறியுள்ளார்‌.

இயல்பான உந்துசக்திகள்‌ குழந்தையின்‌ உள்ளத்தே
உருவாகும்போது அந்தந்த உணர்வுகளில்‌ முறிவு
ஏற்படாதவாறு; குழந்தையின்‌ உள்ளத்தில்‌ அழுத்தம்‌
ஏற்படாது நாம்‌ எவ்வாறு வளர்த்தெடுக்கிறோம்‌ என்பதே
அக்குழந்தை நாளை எப்படிப்பட்ட மனிதனாக இருப்பான்‌
என்பதைத்‌ தீர்மானிக்கும்‌ முக்கிய காரணியாகும்‌.

இவ்விடயத்தைப்‌ பற்றிப்‌ பல மானிடவியல்‌, பண்பாட்டியல்‌,

குழந்தை உளவியல்‌ அறிஞர்களும்‌ எடூத்துக்‌
கூறியுள்ளனர்‌.

இவை பற்றிய அறிவின்‌ தேவை எவ்வளவு முக்கியமானது
என்பதைக்‌ குறிப்பிட ஓர்‌ எடூத்துக்காட்டைக்‌
கூறுகின்றேன்‌.

இயல்பான உந்துசக்திகளில்‌ ஒன்றான பசியை எடுத்துக்‌
கொண்டால்‌ குழந்தைக்கு அதனைப்‌ போக்கிக்கொள்ள
மதியம்‌ 12மணிக்கு பால்‌ கொடுக்கப்படுகின்றது என

வைத்துக்‌ கொள்வோம்‌

இவ்விடயத்தைத்‌ தாய்மார்‌ மூன்று வகையாகக்‌ கையாள்‌
வதை நாம்‌ பார்த்திருக்கிறோம்‌.

ஒரு தாய்‌ 11.45 மணிக்கே பாலைத்‌ தயார்‌

76


Page 95பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

செய்யத்‌ தொடங்கி 12.00 மணிக்குப்‌ பிள்ளையை
வந்து பார்த்தபோது குழந்தை கண்விழித்துச்‌
சிரித்துக்கொண்டிருக்கும்‌ அப்போது அதனைத்‌ தூக்கி
அந்தப்பாலைக்‌ கொடுக்கிறார்‌; இது முதல்‌ நிலை.

இன்னுமொரு தாய்‌ தன்‌ வேலையில்‌ மூழ்கி இருக்கிறார்‌.
12 மணிக்குக்‌ கண்விழித்த குழந்தையைப்‌ பசியுணர்வு
தூண்டுகிறது. குழந்தை பால்‌ ஊட்டப்படம்‌ என்ற
எதிர்பார்ப்புடன்‌ இருக்கிறது. சிறிது நேரமாகியும்‌ பாலைக்‌
காணவில்லை, அழத்தொடங்குகிறது. அழுகுரல்‌ கேட்ட
தாய்‌ பால்‌ கொடூக்க வேண்டும்‌ என்பதை உணர்ந்து
தன்‌ வேலையை விட்டூவிட்டு உடனே குழந்தையின்‌
பசியைப்‌ போக்க முயற்சி செய்கிறார்‌. இது இரண்டாவது
நிலை.

பாலைக்‌ காணவில்லை என்று அழும்‌ குழந்தைக்குத்‌
தன்‌ வேலையை முடித்தபின்‌ வந்து தாமதமாக ஒரு
தாய்‌ பால்‌ கொடுக்கிறார்‌. இக்குழந்தை தன்‌ “பசி”யைப்‌
போக்கிக்கொள்ள அழுது, போராடிக்‌ களைத்தே விட்டது.
இது மூன்றாவது நிலை.

இக்குழந்தை தனது உணர்வு தகுந்த நேரத்தில்‌
பராமரிக்கப்படும்‌ என்ற நம்பிக்கையை இழந்து விடுகிறது.
அழுது போராடியே பெறவேண்டும்‌ என்று எண்ணுகிறது
இதனால்‌ உள்ளத்தே தன்னம்பிக்கை குறைந்ததாக
இருக்கின்றது.

முதலாவது குழந்தை மிகுந்த தன்னம்பிக்கை
உடையதாகவும்‌ அதன்வழியே மூன்றாவது குழந்தை

தன்னம்பிக்கை அற்ற குழந்தையாக மனவலிமை

79


Page 96பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

குன்றியதாகக்‌ காணப்படும்‌. இவ்வாறு வளர்க்கப்பட்ட
சிறுவர்களே மிகச்சிறிய விடயத்திற்கும்‌ உடனே
சத்தம்‌ போடூபவர்களாக, நம்பிக்கையற்றவர்களாகத்‌
தோன்றுகின்றனர்‌.

இதேபோன்றே ஒவ்வொரு இயல்பான உந்துசக்தியிலும்‌
முறிவு ஏற்படும்போது அவைகளுக்கேற்ப குணாம்சத்தைக்‌
குழந்தை பெற்றுக்‌ கொள்ளும்‌.

குழந்தையின்‌ ஆழ்மனதில்‌ அதன்‌ வாழ்வை மேம்படூத்தத்‌
தடையாகவுள்ள சில முடிவுகள்‌ பதிவாகி விடுகின்றன.

இதன்‌ மறுதலையாக இயல்பான உந்துசக்திகளைத்‌
திட்டமிட்டு, சீராக மனதில்‌ முறிவு ஏற்படாது போக்கிக்‌
கொள்ளும்‌ குழந்தைகள்‌ தன்னம்பிக்கை, ஆளுமை,
சுத்தமான சுற்றாடலை விரும்புதல்‌ போன்ற பல்வேறு
மேம்பாடுடைய பண்புகளைத்‌ தன்னகத்தே கொண்டதாக
வளரும்‌.

இப்பண்புகளை வெறும்‌ சொற்பதங்களாக மாத்திரம்‌
நோக்காது அவற்றின்‌ உள்ளார்ந்த பொருளை உணர்ந்து
நாம்‌ செயற்படல்‌ வேண்டும்‌.

எடுத்துக்காட்டாக “தன்னம்பிக்கை” என்ற சொல்லை
நாம்‌ எடூத்துக்கொண்டால்‌ இச்சொல்லின்‌ உள்ளார்ந்த
பொருளை விளக்கிக்கொள்ள ஒரு கதையைக்‌
கூறுகிறேன்‌.

ஓர்‌ அரசன்‌ கோழிச்‌ சேவல்‌ சண்டைப்‌ போட்டிகளை
நடத்துவது வழமை. வேலன்‌ என்பவரின்‌ சேவலே

60)


Page 97பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

எப்போதும்‌ வெற்றியீட்டி வந்தது. எனவே அரசன்‌
மற்றையோரையும்‌ ஊக்கப்படுத்தும்‌ நோக்கோடு
வேலனை அழைத்து அடுத்த போட்டிக்கு எனக்கு ஒரு
சேவலைப்‌ பயிற்சி செய்து கொண்டு வந்து தா. அடூத்த
போட்டியில்‌ அது பங்குபெற வேண்டும்‌ என்று கூறினான்‌.
அதற்கான மாதாந்தக்‌ கூலியை வந்து பெற்றுச்‌
செல்லும்படியும்‌ கூறினான்‌.

ஒரு மாதம்‌ கழித்து வேலன்‌ அரசனிடம்‌ கூலிபெற்றுச்‌
செல்ல வந்தான்‌. சேவல்‌ எப்படி? என்று அரசன்‌
கேட்க, அதற்கு வேலன்‌, தற்போது “சேவல்‌ தூரத்தே
ஏதாவது கோழியைக்‌ கண்டால்‌ உடனே சத்தம்‌ போட்டு
ஆர்ப்பரித்து நிற்கும்‌” என்றான்‌.

“அப்படியானால்‌ போட்டியை நடத்தலாமா?” என்றான்‌
அரசன்‌

“இல்லை இப்போது வேண்டாம்‌” என்று கூறிச்‌ சென்று
விட்டான்‌. மீண்டும்‌ வேலன்‌: அடுத்த மாதம்‌ கூலியைப்‌
பெற்றுப்‌ போக வந்தான்‌. அரசன்‌ சேவலைப்‌ பற்றிக்‌
கேட்டான்‌; “சேவல்‌ இப்போது வேறு சேவல்களைத்‌ தூர
கண்டால்‌ ஏதுவும்‌ செய்யாது அமைதியாக இருக்கும.
ஆனால்‌ சேவல்கள்‌ கிட்ட வந்தால்‌ ஆர்ப்பரித்து சத்தம்‌
போட்டுச்‌ சண்டைக்குத்‌ தயாராகி விடும்‌” என்றான்‌.

வழமை போல அரசன்‌ அப்படியானால்‌ போட்டிக்கு
அறிவித்தல்‌ விடலாமா? என்று கேட்டான்‌; வேலன்‌
“தற்போது வேண்டாம்‌” என்று கூறிச்‌ சென்று விட்டான்‌.

வேலன்‌ ' மீண்டும்‌ அடுத்தமாதம்‌ வந்தான்‌. இப்போது

81


Page 98பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அரசன்‌ சேவல்‌ பற்றிக்‌ கேட்க “தற்போது சேவல்‌
அருகில்‌ மற்றைய சேவல்கள்‌ வந்தாலும்‌ எதுவும்‌
செய்யாது மிக அமைதியாக இருக்கும்‌” என்றான்‌.
அரசன்‌ “போட்டிக்கு எப்போது அறிவிக்கலாம்‌?” என்று
கேட்க நீங்கள்‌ எப்போதும்‌ அறிவிக்கலாம்‌. எமது சேவல்‌
தயாராகி விட்டது. அது நிச்சயம்‌ போட்டியில்‌ வெற்றி
பெறும்‌ என்றான்‌.

தன்னம்பிக்கை இல்லாது பயத்தினால்‌ முன்பு தூரத்தே
வேறு சேவல்களைக்‌ கண்டவுடன்‌ ஆர்பரித்து, சத்தம்‌
போட்ட சேவல்‌ தற்போது எவர்‌ சண்டைக்கு வந்தாலும்‌
என்னால்‌ தகுந்த முறையில்‌ திருப்பித்தாக்கி என்னைப்‌
பாதுகாத்துக்‌ கொள்ள முடியும்‌ என்ற தன்னம்பிக்கையும்‌,
மனவலிமையும்‌ உடையதாய்‌ இருப்பதனால்‌ அச்சேவல்‌
மிக அமைதியாக இருக்கத்‌ தொடங்கி விட்டது.

தன்னம்பிக்கை உடையவர்கள்‌ நிமிர்ந்த பார்வையுடன்‌
அமைதியாக இருப்பார்கள்‌.

இதேபோன்றே ஓவ்வோர்‌ உந்துசக்தியையும்‌ நாம்‌
சிறப்பாகக்‌ கவனிப்பதே சிறந்த குழந்தை வளர்ப்பு
முறை. சிறுகுழந்தைகள்‌ ஆக்கசக்தியின்‌ வெளிப்பாடாக
வரைந்து பார்க்க, கிழித்துப்‌ பார்க்க, பொருட்களை
இயக்கிப்‌ பார்க்க முயலும்‌. இவற்றிற்கு நாம்‌ நன்கு
இடமளிக்க வேண்டும்‌. பிறந்த குழந்தை பேசுவதற்கு
இரண்டூ வருடங்களுக்கு மேலாகும்‌. எனவே
அக்குழந்தைக்கு எதுவுமே தெரியாது, விளங்காது என்று
நாம்‌ எண்ணிவிடுகிறோம்‌. இது மிகப்பெரிய தவறு.

குழந்தைகளுக்கு எல்லாம்‌ தெரியும்‌ என்ற மனப்பாங்கு

6.2.


Page 99பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பெற்றோர்களிடம்‌ இருப்பதே சிறந்தது. அந்த எண்ணத்துடன்‌
திருப்பிப்‌ பேசத்தெரியாத அக்குழந்தையுடன்‌ இனிமையாக
இனியசொற்களில்‌ பேசுங்கள்‌. எது கூடாது?, எது
செய்யக்‌ கூடாது? என்று விளங்கப்படூத்தி வாருங்கள்‌.
கண்டிக்காதீர்கள்‌; தண்டிக்காதீர்கள்‌. பிழையானதைச்‌
செய்தால்‌ உங்களுக்குப்‌ பிடிக்காது என்பதை மாத்திரம்‌
சூழலுக்கேற்ப வெளிப்படுத்தி வாருங்கள்‌. உங்கள்‌
குழந்தைகளால்‌ அவற்றினைப்‌ புரிந்து கொள்ளமுடியும்‌.

ஆடு குட்டி போடூகின்றது. அக்குட்டிக்குக்‌ தாயின்‌
முலைகள்‌ எங்கே உள்ளன என்று யார்‌ காட்டியது?
அது எழுந்து சென்று பால்‌ குடிக்கவில்லையா?

மிகமிகச்‌ சிறிய குட்டியைப்‌ போட்ட கங்காருவின்‌
குட்டிக்கு, அது மேலும்‌ இருந்து வளர வேண்டிய
மடிப்பையினை யார்‌ காட்டியது? எவ்வாறு அது அதனுள்‌
ஏறி அமர்ந்து கொண்டது?

உங்கள்‌ குழந்தைக்கு மட்டும்‌ உங்களைப்புரிந்து
கொள்ளும்‌ அறிவு இல்லாமலா போய்விடும்‌? உங்கள்‌
குழந்தைக்கு மட்டுமா எதுவுமே தெரியாது? இது தவறு
உங்கள்‌ குழந்தைக்கு எல்லாம்‌ தெரியும்‌!

குழந்தை தாயின்‌ கருவில்‌ இருக்கும்போதே தாய்‌
கேட்கும்‌ ஒலிகளைத்‌ தானும்‌ கேட்கத்‌ தொடங்கிவிடும்‌,
தாயின்‌ உள்ளத்தைப்‌ பாதிக்கும்‌, மகிழ்விக்கும்‌
எல்லா விடயமும்‌ குழந்தையிடத்தேயும்‌ அத்தகைய
உணர்வினைக்‌ கொடுக்கும்‌.

82


Page 100பண்பா௫ - வேரும்‌, விழுதும்‌

தாயின்‌ மனதிற்‌ தோன்றும்‌ கோபம்‌, கவலை, விருப்பு,
வெறுப்பு, பொறாமை, ஆசை போன்ற இன்னோரன்ன
உணர்வுகள்‌ தாயின்‌ மனதை எவ்வாறு பாதிக்கிறதோ
அவ்வாறே குழந்தையையும்‌ சென்றடையும்‌.

இவற்றால்தான்‌ கர்ப்பமுற்றிருக்கும்‌ தாய்மார்‌ விரும்பு
பவற்றை, உணவு முதல்‌ சகலவற்றையும்‌ கொடுப்பது
வழமை.

கர்ப்பமுற்றிருக்கும்‌ தாய்மார்‌ மகிழ்ச்சியாக இருக்க
வேண்டும்‌, நல்லவற்றைக்‌ கேட்க வேண்டும்‌, பார்க்க
வேண்டூம்‌, விரும்புவதை நிறைவு செய்து கொள்ள
வேண்டும்‌.

தாயின்‌ உடல்‌ அகத்தேயும்‌, புறத்தேயும்‌ சுத்த
மானதாகவும்‌, சீரானதாகவும்‌ இருக்க வேண்டும்‌ என்பது
மிக முக்கிய மானதாகும்‌.

பண்டைத்தமிழர்கள்‌ இதில்‌ மிகவும்‌ கவனமாக
இருந்தார்கள்‌. கர்ப்பமுற்ற தாய்க்கு ஆறாம்‌ மாதம்‌
வளைகாப்புச்‌ சூடி அதனை ஒரு சடங்காகவே
நடத்தினார்கள்‌.

ஒலியைக்‌ கேட்கத்‌ தொடங்கிய குழந்தை, தாயின்‌ கையில்‌
அணியப்பட்டிருக்கும்‌ வெவ்வேறு சுர எண்களை உடைய
வளையல்களின்‌ இனிமையான ஒலிகளைக்‌ கேட்ட
வண்ணம்‌ தாயின்‌ வயிற்றில்‌ உதைக்காது அமைதியாக
இருக்கும்‌. இச்சடங்கோடூ தாயைப்‌ பெற்றோரின்‌ வீட்டிற்கு
அனுப்பி வைப்பார்கள்‌. அவள்‌ தான்‌ வாழ்ந்த சூழல்‌, தன்‌
பழைய நண்பர்கள்‌ என்போரைக்‌ காண்பதில்‌ பேசுவதில்‌

64


Page 101பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மகிழ்ச்சி. பெற்றோரின்‌ அன்பான பராமரிப்பு, மனதில்‌
அழுத்தம்‌ இல்லாது பேசவும்‌ சிந்திக்கவும்‌ கூடிய சூழல்‌
இவை தாயின்‌ மனதை மேலும்‌ ஆரோக்கியமுள்ளதாக
வளர்க்கும்‌.

மனதில்‌ குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு பற்றிய
பயமின்றித்‌ துணிவோடூ மகப்பேற்றை எதிர்கொள்ளும்‌
மனப்பாங்கு என்பவற்றை வளர்க்கும்‌ சூழலாக அது
அமையும்‌, என்பதால்‌ முன்னோர்கள்‌ வளைகாப்புச்‌
சடங்கை நடத்திப்‌ பெற்றோர்‌ வீட்டில்‌ அத்தாயை விடும்‌
வழக்கத்தைக்‌ கொண்டிருந்தனர்‌.

இவ்வாறு கருவில்‌ இருந்தே குழந்தையை வளர்க்கும்‌
முறை என்பது மிக மிக முக்கியமானதொன்றாகும்‌.

இந்த உலகு மேலும்‌ மேம்பாடூடையதாகச்‌ செல்ல, சிறந்த
பண்பும்‌, அறிவும்‌ கொண்ட அடுத்த தலைமுறையை
மனிதகுலம்‌ உருவாக்கிக்கொண்டே செல்ல வேண்டும்‌.
அதற்குக்‌ குழந்தை வளர்ப்பு முறைக்கான சிறந்த
கல்வி முறை திருமணத்திற்கு முன்னரே திருமணத்‌
தம்பதிகளுக்குக்‌ கொடுக்கப்பட வேண்டும்‌.

இந்த உலகின்‌ போக்கை, பண்பை, மேம்படுத்தக்‌ கூடிய
அடூத்த தலைமுறையினரை உருவாக்கக்‌ கூடியவர்களாக
இருப்போரில்‌ பெற்றோரினதும்‌, அரசியல்‌ வாதிகளினதும்‌
பங்கு கணிசமான அளவு உள்ளது.

ஆனால்‌: இன்றைய உலக வழக்கில்‌ இவர்கள்‌
இப்பாத்திரங்களை வகிக்க எவ்வித சமூக வாழ்வியல்‌
முன்‌ அறிவோ தகமையோ தேவையில்லை!

85


Page 102பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இவர்களுக்குரிய அடிப்படைத்‌ தகைமை 18 வயதாக
இருக்கவேண்டியது மட்டுமே! என்பது உலக நியதி.

பண்டைய அரசர்களின்‌ ஆட்சிக்‌ காலங்களில்‌ அரசன்‌,
அமைச்சர்கள்‌, என்போர்‌ தம்புதல்வர்களைச்‌ சிறுவயது
முதல்‌ பல்வேறு துறைசார்‌ அறிவினை உடைய
அறிஞர்களிடம்‌ அனுப்பிக்‌ கல்வி பயிற்றுவிப்பர்‌.

அதன்பின்னர்‌ சில ஆண்டுகள்‌, அவர்களைத்‌
தங்கள்‌ வாழ்விடங்களை விட்டு, தாம்‌ யார்‌ என்ற
அடையாளங்களை வெளிக்காட்டாது, பல்வேறு

நாடுகளுக்கும்‌ சென்று சாதாரண மக்களோடூ ஒன்றி”
வாழ்ந்து, மக்கள்‌ வாழும்‌ சூழலை, அவர்களின்‌
வாழ்வியலை நன்கு புரிந்து கொள்ள வைத்தனர்‌.

இவ்வாறு தேர்ச்சி பெற்ற பின்னரே நாட்டை நிர்வகிக்கும்‌
பொறுப்பினை ஒப்படைத்தனர்‌ என்பதனை இன்றைய
அரசியல்வாதிகளின்‌ குறிப்பாக மூன்றாவது உலக
நாடுகளின்‌ அரசியல்வாதிகளின்‌ திறனோடூ ஒடப்பிட்டூப்‌
பார்த்தல்‌ நன்று.

தமது கட்சியின்‌ வேட்பாளராக நியமிப்போரின்‌
தகமைகளைக்‌ கட்சித்தலைவர்கள்‌ சீர்தூக்கிப்‌ பார்த்தல்‌
மிக நன்று. அரசியற்‌ தலைவர்களைத்‌ தெரிவு செய்யும்‌
மக்களும்‌ அந்த அடிப்படையில்‌ எண்ணிப்‌ பார்த்தல்‌
மிகமிக நன்று.

 


Page 103இகம்‌ 4
பண்பட்ட வளந்ச்ச

ஆதியில்‌ மனிதன்‌ குகைகளிலும்‌ மரங்களிலும்‌ வாழ்ந்து
வந்தான்‌. அன்றைய அவனது சூழலுக்கேற்ப இயல்பான
உந்துசக்தகளை அவன்‌ சிந்தித்துச்‌ செயற்பட்டூப்‌
போக்கிக்‌ கொண்டான்‌.

எடூத்துக்காட்டாக முக்கிய உந்து சக்தியான பசியைப்‌
போக்கிக்கொள்ள ஆதிமனிதன்‌ மிருகங்களை வேட்டை
யாடி அவற்றின்‌ உடலை உண்டூ வந்தான்‌.

தன்னாற்‌ சில மிருகங்களை வளர்த்து அவைகளையும்‌
அவைகள்‌ தரும்‌ பால்‌ போன்ற பதார்த்தங்களையும்‌
உணவாக்கிக்‌ கொள்ளலாம்‌ எனத்தன்‌ சிந்தனையின்‌
திறனால்‌ கண்டு கொண்டான்‌.

கால ஓட்டத்தில்‌ அவனது அறிவுத்‌ திறன்‌ வளர்ச்சியால்‌
உண்ணக்கூடிய காய்‌, கனி, கிழங்கு தானிய
வகைகளையும்‌ கண்டறிந்தான்‌. அவற்றையும்‌ உண
வாக்கிக்‌ கொண்டான்‌.

மேலும்‌ அறிவு வளர கால ஓட்டத்தோடூ பரிணாம
வளர்ச்சி பெற்ற மனிதன்‌ எப்படி வேட்டையாடி வாழும்‌
கடினமான சூழலை விட்டூ மிருகங்களை வளர்க்கக்‌
கற்றுக்‌ கொண்டானோ; அதே போன்று கிழங்கு
வகைகளையும்‌, தானியங்களையும்‌ தானே விளைவிக்கக்‌
கற்றுக்கொண்டான்‌. இவற்றுக்கு உகந்த சூழலாக
ஆற்றங்‌ கரைகளைத்‌ தெரிவு செய்தான்‌.

67


Page 104பணர்பா௫ு - வேரும்‌, விழுதும்‌

ஓடித்திரிந்து போராடி வாழ்ந்த வாழ்வியலில்‌ மாபெரும்‌
திருப்பம்‌ ஏற்பட்டது.

ஒரே இடத்திலிருந்து வாழத்தொடங்கினான்‌.
தொடர்ந்து தன்‌ மனதின்‌ துணைகொண்டு
சிந்தித்து; பகுத்தறிந்து செயற்பட்டான்‌. தனக்குத்‌
தேவையானவற்றைத்‌ தானே படைத்தான்‌.

பண்பாலும்‌ நாகரிகத்தாலும்‌ உயர்ந்து பரிணாம வளர்ச்சி
பெற்று இன்றைய நிலைக்கு வந்து விட்டான்‌.

தனக்கு என்று ஒரு “வாழ்வியல்‌ முறையை” உருவாக்கிக்‌
கொண்டான்‌.

அதுவே அவனது பண்பாடூ ஆயிற்று.

இன்றைய நிலையை மனிதன்‌ அடைய ஆயிரக்கணக்கான
ஆண்டூகள்‌ ஆகிவிட்டன.

இதிலிருந்து பண்பாடூ என்பது, தலைமுறை
தலைமுறையாகப்‌ பெற்றோர்கள்‌, குடும்பம்‌, சமுதாயம்‌
ஆகியவற்றின்‌ மூலம்‌ அறிவு சார்ந்த நிலையில்‌
கற்றுணர்ந்த நடத்தை முறைகளாகும்‌. அதாவது செயல்‌
முறைகளாகும்‌ என்பது தெளிவாகிறது.

இவ்வாறே மனிதன்‌ ஒவ்வோர்‌ உந்து சக்தியையும்‌
போக்கிக்‌ கொள்ளத்‌ தான்‌ பெற்ற அறிவினைப்‌
பயன்படுத்தி, மனம்‌ என்னும்‌ மாபெரும்‌ ஆற்றல்‌ மிக்க
கருவியின்‌ மூலம்‌ சிந்தித்துச்‌ செயற்பட்டு, அந்தந்த
உந்து சக்திகளுக்கு ஏற்ற பொருட்களை உருவாக்கிக்‌
கொண்டான்‌.

66

 


Page 105பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பண்பாட்டு வேறுபாடு

உலகப்பந்தின்‌ வெவ்வேறு பகுதிகளிற்‌ குடியமர்ந்து
கொண்ட மனிதகுலத்தின்‌ உந்துசக்திகள்‌ ஒன்றாக
இருந்தபோதும்‌ மனிதக்‌ கூட்டங்கள்‌ தாம்‌ குடியமர்ந்த
சூழலுக்கு ஏற்பத்‌ தமது வாழ்க்கை முறைகளை
அமைத்துக்‌ கொண்டன.

அக, புற பண்புகளைக்‌ கால ஓட்டத்தோடு வளர்த்‌
தெடூத்துக்‌ கொண்டன. அதனால்‌ இம்மனிதக்‌ கூட்டம்‌
ஒவ்வொன்றும்‌ தமக்கெனத்‌ தனித்துவமான ஒரு
பண்பாட்டை பெற்றுக்கொண்டது. எனவே மனிதகுலத்தின்‌
பழக்கவழக்கங்களை எடுத்துச்‌ சொல்லும்‌ தன்மை
வாய்ந்தது பண்பாடு ஆகும்‌. ப

மனிதகுலம்‌ தன்‌ வாழ்வியலை வளர்த்துக்‌ கொள்ளத்‌
தனக்குத்‌ தேவையான கருவிகளை, பொருட்களை
உருவாக்கித்‌ தன்‌ அறிவின்‌ வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றில்‌
மாறுதல்களைச்‌ செய்த வண்ணம்‌ வளர்ச்சி பெற்றுத்‌,
தனக்கென ஒரு நாகரிகத்தை வளர்த்தெடுத்துக்‌
கொண்டது.

எடூத்துக்காட்டாக ஆற்றங்கரைகளில்‌ விவசாயத்தைத்‌
தொடங்கிய மனிதன்‌ மழைநீரையும்‌ ஆற்றுநீரையும்‌
தேக்கிவைக்க அணைகளைக்‌ கட்டிப்‌, பெரிய குளங்களை
உருவாக்கி அதிலிருந்து நீர்ப்பாசனம்‌ செய்தான்‌.
இவ்வாறு நீர்ப்பாசன நாகரிகத்தில்‌ வளர்ச்சி பெற்றான்‌.

மனிதக்கூட்டம்‌ குடும்பமாக, குழுவாக, சமூகமாக
இயங்கியே இவ்வளர்ச்சியைப்‌ பெற்றுள்ளது. இதற்கு

89


Page 106பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அடிப்படையாக ஆதாரமாக அமைந்தது சமூகத்தின்‌
ஒவ்வொரு மனிதனும்‌ தான்‌ பெற்ற அறிவை,
பட்டறிவை தன்‌ உணர்வுகளை, மற்றவரோடு பரிமாற்றம்‌
செய்தமையே.

இப்பரிமாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது அவன்‌
அதற்காகவே உருவாக்கிக்‌ கொண்ட “மொழி” என்னும்‌
மகத்தான கருவி. இதன்‌ சக்தி, ஆற்றல்‌ அவன்‌
பெற்றுள்ள எந்தக்‌ கருவியை விடவும்‌ உயர்ந்தது,
சிறந்தது வலுவானது.

மொழியே அவனை மற்றைய விலங்குகளிடம்‌ இருந்து
வேறுபடூத்திக்‌ காட்டியது, உயர்த்தியது. மொழி
விலங்கினத்தை அவனிடம்‌ பணிய வைத்தது என்றால்‌
மிகையாகாது

எனவே பூமிப்பந்தின்‌ ஒவ்வோர்‌ மூலையிலும்‌ வாழ்ந்த
மனிதக்குழுக்கள்‌ ஒவ்வொன்றும்‌ தனித்தனியே தம்‌
குழுவில்‌ உள்ள ஒவ்வொரு மனிதனுடனும்‌ தொடர்பை
வலுப்படுத்திக்‌ கொள்ள மொழி பெரிதும்‌ துணை
செய்தது. இம்மொழி அவர்களின்‌ சொத்தானது.

ஓவ்வொரு மனிதக்குழுவும்‌ உருவாக்கிக்‌ கொண்ட
“மொழி” வேறுபட்டு இருந்தது. இதற்கு அடிப்படையாக
அமைந்தது, ஒவ்வொரு கூட்டத்தினரிடையேயும்‌ வாழும்‌
சூழலுக்கேற்பப்‌ “சிந்தனை” வேறுபட்டிருந்தமையே
ஆகும்‌.

ஓவ்வொரு மனிதக்கூட்டமும்‌ அவர்கள்‌ பேசியமொழியின்‌
பெயரால்‌ “இனம்‌” என்று அழைக்கப்பட்டனர்‌.

90


Page 107 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அதேபோன்று அந்தந்த மனிதக்கூட்டத்தின்‌ வாழ்வியல்‌
முறையும்‌ அதாவது பண்பாடும்‌ அவர்களின்‌ மொழிகளின்‌
பெயரால்‌ அழைக்கப்பட்டது. எனவே பண்பாடு என்பது
உலகில்‌ மொழியின்‌ அடிப்படையிலேயே வேறுபட்டது
எனலாம்‌.

எடுத்துக்காட்டாக சீனப்பண்பாடூ, தமிழ்ப்‌ பணபாடு,
கிரேக்கப்‌ பண்பாடு, அரபியப்‌ பணபார௫ு, இத்தாலியப்‌
பண்பாடூ க இப்பெயர்களுக்கு மொழியே
அடிப்படையாகும்‌.

உலகம்‌ மிகவும்‌ சுருங்கிவிட்ட நிலையில்‌ பண்பாடு
இன்று நாட சார்ந்ததாகவும்‌, இடம்‌, நகரம்‌, ஊர்‌
சார்ந்ததாகவும்‌, அழைக்கப்பட்டாலும்‌ பண்பாடு என்பது
மொழியின்‌ அடிப்படையையே ஆதாரமாகக்‌ கொண்டூ
வளர்ந்தது. அதன்‌ அடிப்படையிலேயே பெரும்‌
வேறுபாட்டை உடையது.

மொழி

மொழி என்பதை ஒருவன்‌ “அறிந்த கருத்துக்களையும்‌்‌
“உணர்ந்த உணர்வுகளையும்‌' அளந்து' உரைப்பதற்குப்‌
பயன்படுத்தும்‌ கருவி எனவும்‌ வரையறை
செய்யலாம்‌.

ஒருவன்‌ தன்‌ ஐம்புலன்களாலும்‌ அறிந்தவற்றையும்‌,
தன்‌ உள்ளத்தே தோன்றும்‌ உணர்வுகளையும்‌
மற்றையோர்க்குச்‌ சரியாக, விளங்கக்கூடிய முறையில்‌
எடூத்துரைக்க வேண்டூம்‌. அவற்றிற்குரிய சொற்பதங்களை
மொழி கொண்டிருத்தல்‌ வேண்டும்‌.

91


Page 108பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மனிதகுலம்‌ இயற்கையையும்‌, தனக்குள்‌ வகுத்துக்கொண்ட
உறவு முறைகள்‌ உள்படத்‌ தான்‌ வாழும்‌ புறச்சூழல்‌,
அகச்சூழல்‌ என்பவற்றையும்‌ அவற்றில்‌ இருந்து
படைத்துள்ள உருவ, அருவ, அருவுருவ வடிவில்‌
உள்ள சகலவற்றையும்‌ தெளிவாக எடுத்து விளங்கக்‌
கூடியதாக “அளந்து” உரைக்கக்‌ கூடியதாக மொழி
இருத்தல்‌ வேண்டும்‌.

இவற்றிற்கான சில எடூத்துக்காட்டுகளைப்‌ பார்ப்போம்‌.
இந்நூலில்‌ முன்னர்‌ குறிப்பிட்டிருந்தபடி தமிழில்‌
அன்பின்‌ வெளிப்பாடான காதல்‌, பாசம்‌, கருணை,
அருள்‌, நட்பு என்னும்‌ சொற்பதங்களே. நாம்‌ யார்மீது
அன்பு கொண்டுள்ளோம்‌ என்பதைச்‌ சுட்டி நிற்பது
குறிப்பிடத்தக்கது.

எமது குடும்ப உறவுகளைப்‌ பெரியப்பா, சித்தப்பா,
பெரியம்மா, சித்தி, மாமா, மாமி, சகோதரன்‌, சகோதரி
மச்சான்‌, மைத்துனி என்ற சொற்கள்‌ மூலம்‌ அவர்கள்‌
யார்‌ என்பது சுட்டி நிற்பதும்‌ குறிப்பிடத்தக்கது.

ஒரு மர இலையின்‌ வளர்ச்சிப்‌ பருவத்திற்கேற்ப
கொழுந்து, தளிர்‌, இலை, பழுப்பு, சருகு எனப்‌ பெயர்‌
சூடிக்‌ கொண்டனர்‌. இது இலையின்‌ பருவத்தை
“அளந்து” குறிப்பிடுகிறது.

இதேபோன்று ஆங்கிலத்தில்‌ பனிக்குப்‌ பல்வேறு
வகைப்பட்ட சொற்கள்‌ உண்டு.

ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல்‌, எற்படூ,
மாலை, யாமம்‌ என ஆறு சிறுபொழுதுகளாகவும்‌;

92


Page 109பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஒரு வருடத்தை கார்‌, கூதிர்‌, முன்பனி, பின்பனி,
இளவேனில்‌, முதுவேனில்‌ என ஆறு பருவகாலங்களாகப்‌
பெரும்பொழுதாகவும்‌ தமிழர்‌ வகுத்தனர்‌.

இதனை மேற்குலகம்‌ தம்‌ சூழலுக்கேற்ப நான்கு
பருவகாலங்களாகப்‌ பகுத்துக்‌ கொண்டது.

இவைபோன்று பல மொழிகளும்‌ ஒரே விடயத்தைப்‌
பல்வேறுவகையில்‌ அளந்து குறிப்பிட்டு நிற்பது இயற்கைச்‌
சூழலுக்கேற்ப அந்த அந்த மொழியின்‌ வளர்ச்சியைச்‌
சுட்டி நிற்கும்‌.

இன்னுமோர்‌ எடுத்துக்காட்டு தமிழர்‌ தாயகங்களில்‌
ஒருவரை வரவேற்கும்‌ போது “உள்ளம்‌ குளிர
வரவேற்கிறோம்‌” என்று கூறுவோம்‌. ஆனால்‌ குளிர்ந்த
சூழலில்‌ உள்ள மேற்குலகில்‌ “பி௱ 14/5௦
என்று கூறுவோம்‌. இதனை நாட்டுக்கு நாடூ மாறிக்‌
குறிப்பிட்டால்‌ அர்த்தமே வேறுபட்டுவிடும்‌ அல்லவா?

இதன்வழி மொழி என்பது பண்பாட்டின்‌ கண்ணாடி

என்பதும்‌, பண்பாட்டைக்‌ காவிச்செல்லும்‌ வாகனம்‌
என்பதும்‌ தெளிவாகும்‌.

இவற்றிற்கும்‌ மேலாக மொழி என்பது ஒர்‌ இனத்தின்‌
மூலவளம்‌, அடையாளம்‌.

கருத்துக்கே முதலிடம்‌

மானிடவியலாளர்கள்‌ ஓர்‌ இனத்தின்‌ பண்பாட்டு
வறட்சிக்கு, வளர்ச்சி அடையாத மொழியே காரணம்‌

93


Page 110பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

என்பர்‌. இருப்பினும்‌ ஒரு பண்பாட்டைச்‌ சேர்ந்த எந்த ஒரு
பழக்கவழக்கமும்‌ பொருளற்ற தன்மையில்‌ அவர்களின்‌
பண்பாட்டில்‌ இடம்பெறவில்லை என்பதனை உலகில்‌
வாழும்‌ ஒவ்வொரு மனிதனும்‌ மனதிற்‌ கொள்ளல்‌
வேண்டும்‌.

எல்லாவற்றிற்கும்‌ மேலாகப்‌ பண்பாட்டுப்‌ படிமுறை
வளர்ச்சியில்‌ பொருளை முதலாக வைத்து மிருகம்‌
போல்‌ வாழ்ந்த மனிதகுலம்‌ கருத்தை முதலாக வைத்து
வாழும்‌ இனமாகப்‌ பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு அடிப்படையாக அமைந்தது மொழியே.

பண்பாட்டின்‌ அடிப்படைக்‌ கூறுகள்‌

மனிதன்‌ தன்‌ இயல்பான உந்து சக்திகளைத்‌
தணித்துக்கொள்ள அல்லது போக்கிக்கொள்ள அவனது
மனம்‌, அறிவின்‌ துணை கொண்டு சிந்தித்துச்‌ செயற்பட்டு
அவற்றுக்குத்‌ தேவையானவற்றை (பொருட்களை)
உருவாக்கிக்‌ கொண்டது எனக்‌ கண்டுகொண்டோம்‌.

சிந்தனை -5 செயல்‌ - பொருள்‌

உலகில்‌ உள்ள மனிதர்கள்‌ எல்லோரிடத்தும்‌ ஒரே
விதமான இயல்பான உந்துசக்திகள்‌ உணர்வுகளாகத்‌
தோன்றிய போதும்‌ ஒவ்வொரு மனிதக்‌ கூட்டமும்‌ தான்‌
வாழ்ந்த சூழலின்‌ வேறுபாட்டிற்‌ கமைய வேறுபட்ட
அறிவினைப்‌ பெற்றது. அதனால்‌ சிந்தனையில்‌
வேறுபட்டது; மாறுபட்டது.

வேறுபட்ட சிந்தனைக்‌ கேற்ப மனிதன்‌ செயற்பட்ட

94


Page 111பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

முறைகள்‌ மாறுபட்டன, அவற்றின்‌ வழி படைக்கப்பட்ட
பொருட்கள்‌ இடத்துக்கிடம்‌ வேறுபட்டுக்‌ காணப்படுகிறது.
எடூத்துக்காட்டாக தமிழர்கள்‌ பசி என்ற உணர்வைப்‌
போக்க “நெல்‌” என்ற தானியத்தை முக்கியமானதாகக்‌
கொண்டனர்‌.

நெல்லை விளைவிப்பதற்கு நிலத்தைப்‌ பண்படுத்த
முற்பட்டனர்‌, அதற்கான கருவியாக ஏர்‌ கலப்பையை
உருவாக்கிக்‌ கொண்டனர்‌. விளைவிக்கப்பட்ட நெல்லை
அரிசியாக்கத்‌ தமக்கென ஒரு முறையை வகுத்துக்‌
கொண்டனர்‌. அரிசியைச்‌ சோறாக்க “பானை: “சட்டிகளை”
உருவாக்கிக்‌ கொண்டனர்‌.

இவ்வகையில்‌ தமிழர்களின்‌ நெல்‌, ஏர்‌, கலப்பை, பானை,
சட்டி என்பன போன்ற கருவிகள்‌ அவர்களின்‌ பசியைப்‌
போக்கிக்‌ கொள்ள உருவான பொருட்கள்‌ (கருவிகள்‌)
ஆயின.

இவர்கள்‌ செய்துகொண்ட ஏர்‌, கலப்பை, பானை, சட்டி
என்பவற்றின்‌ வடிவமும்‌, அவற்றின்‌ மீது அவர்கள்‌
பொறித்துக்‌ கொண்ட சித்திரவேலைப்‌ பாடூகளும்‌
மற்றைய இனங்களினுடையதை விட வேறுபட்டதாக
இருந்தன.

தமிழர்கள்‌ கறுப்பு, சிவப்பு மட்பாண்டங்களையும்‌
அவற்றின்மீது தனித்துவமான சித்திரவேலைப்பாடூ
களையும்‌, குறியீடுகளையும்‌ பொறித்திருந்தனர்‌. எனவே
இவைகள்‌, அவர்களை அடையாளப்படுத்தி நின்றன.
இவை அவர்களின்‌ பண்பாட்டுச்‌ சின்னங்கள்‌ ஆயின.

95


Page 112பண்பரடு - பேரும்‌, விழுதும்‌

தமிழர்கள்‌ அரிசியை பிரதான உணவாகக்‌ கொண்டது
போல்‌ சில மக்கள்‌ சோளத்தைக்‌ கொண்டிருந்தனர்‌.
சிலர்‌ கிழங்கு வகைகளைக்‌ கொண்டிருந்தனர்‌.
அதன்‌ வழி அவற்றை விளைவிப்பது, அறுவடை
செய்வது, அவற்றிலிருந்து உணவுப்பண்டங்களை
தயாரித்துக்கொள்வது, இவற்றைச்‌ செய்து முடிக்கத்‌
தேவையான உபகரணங்களை உருவாக்கிக்‌ கொண்டது
என்பன உட்பட சகலதும்‌ தனித்துவமானவை. ஆக,
அவை அவர்களது பண்பாட்டுச்‌ சின்னங்களாயின.

கால ஓட்டத்தோடு மனிதனின்‌ அறிவுத்திறனும்‌
கூடிக்கொண்டு செல்லச்‌ செல்ல அவன்‌ தனது
செயல்‌ முறைகளில்‌, கருவிகளின்‌ உருவாக்கத்தில்‌,
படைப்பாற்றலில்‌, அவற்றிற்கான மூலப்பொருட்களில்‌
பரிணாம வளர்ச்சி பெற்று வந்துள்ளான்‌.

எடுத்துக்‌ காட்டாக மொழியை எடுத்துக்‌ கொண்டால்‌
- தகவல்‌ பரிமாற்றத்திற்காக “ஒலி£களைப்‌ பிறப்பித்துக்‌
கொண்டான்‌.

இவ்‌ “ஒலி: வடிவங்களின்‌ சேர்க்கைகள்‌
“சொற்களாயின”.

இச்சொற்களின்‌ சேர்க்கை “வசனமானது”

வசனங்களின்‌ தொகுப்பு “கருத்துக்கள்‌” “பொருள்கள்‌:
ஆயின. அவன்‌ சிந்தனையை வெளிப்படுத்தும்‌ மொழி
வளர்ந்தது; வளம்பெற்றது; பேச்சு மொழி, தோற்றம்‌
பெற்றுவிட்டது.

தொடர்ந்து தனது மொழியின்‌ ஒவ்வோர்‌ “ஒலி:க்‌ கூற்றுக்கும்‌
வரிவடிவத்தை (எழுத்தை) உருவாக்கிக்‌ கொண்டான்‌.
இவ்வடிவமும்‌ கால ஓட்டத்தோடூ மாற்றம்‌ பெற்று

96


Page 113பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

வந்தது. ஆதியில்‌ தனது வரிவடிவங்களை கற்கள்மீது
பொறித்துக்‌ கொண்டான்‌, களிமண்மீது பொறித்தான்‌,
தடிப்பான மர இதழ்களின்மீது (தமிழர்‌ பனைஓலை

ஏட்டுச்சுவடி)பொறித்தான்‌, உலோகத்‌ தக௫களை
உருவாக்கி அவற்றின்‌ மீது பொறித்தான்‌. துணிகளின்மீது
பொறித்தான்‌ இன்று பல மூலப்பொருட்களைக்‌ கொண்டு
கடூதாசியைக்‌ கண்டூபிடித்து அவற்றின்மீது பொறித்து
வருகிறான்‌. ஆயிரக்கணக்கான ஆண்டூகளில்‌ அவன்‌
பெற்ற பரிணாம வளர்ச்சி இது.

இதுபோன்றே ஒவ்வோர்‌ இயல்பான உந்து சக்திகளுக்கும்‌
உணர்வுகளுக்கும்‌ வடிகால்‌ காண தொடர்ந்து சிந்தித்துச்‌
செயல்பட்டு வருகிறான்‌.

தனது உயிர்சார்‌ உந்துசக்திகள்‌, அறிதல்கள்‌
உந்துசக்திகள்‌ உட்பட்ட அனைத்து உந்து
சக்திகளுக்கும்‌ சிறப்பாக வடிகால்கள்‌ அமைத்துக்‌
கொள்ள பல்வேறுவகைப்பட்ட கொள்கைகளையும்‌,
கோட்பாடுகளையும்‌, நெறிமுறைகளையும்‌ தன்னைச்‌
சுற்றியுள்ள உலகஇயக்கத்தைப்‌ பற்றிய பல்வேறு
நம்பிக்கைகளையும்‌ அவன்‌ வகுத்துக்கொண்டு இயங்கி
வந்துள்ளான்‌.

இத்தகைய “இயக்கம்‌” அதாவது “இயங்கியல்‌” அனைத்‌
துமே ஒவ்வோர்‌ இனத்தினரிடையேயும்‌ மாறுபட்டுக்‌
காணப்படுகிறது.

இவ்வாறு மனிதகுலத்தின்‌ கடந்தகால “இயங்கியலை'
மனிதன்‌ ஆய்வு செய்ததன்‌ மூலம்‌ மனிதகுல
மேம்பாட்டுக்கான பரிணாம வளர்ச்சியைப்‌
பெற்றுவந்துள்ளான்‌.

97


Page 114பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மனிதன்‌ இத்தகைய மனிதகுல “இயங்கியலை:
பல்வேறுதுறைகளாகவும்‌, கூறுகளாகவும்‌ பகுத்துப்பார்க்க,
ஆய்வுசெய்யப்‌ பழகிவிட்டான்‌.

இன்று அவன்‌ மானிடஇயல்‌, மொழியியல்‌, சமுதாயவியல்‌,
இலக்கியவியல்‌, வரலாற்றியல்‌, அறிவியல்‌, கல்வெட்டியல்‌,
மருத்துவவியல்‌, பண்பாட்டியல்‌, போன்ற இன்னோரன்ன
பலப்பல துறைகளாகச்‌ செயற்படூகிறான்‌. அதன்வழி
வாழ்வியலுக்கான பல கொள்கைகள்‌, கோட்பாடுகள்‌
நெறிமுறைகள்‌ என்பவற்றை வகுத்துள்ளான்‌. வகுத்தும்‌
வருகிறான்‌.

எனவே மனிதனின்‌ அறிவுவழி, சிந்தனையின்‌
தேடல்திறன்‌, செயல்வடிவம்‌, பெற்ற நிலையே
“பண்பாடு”.

இந்த அமைப்பின்‌ அடிக்கட்டுமானத்தின்‌ மீது
(அத்திவாரத்தின்‌ மீது) எழுப்பப்‌ பட்டதே மனித இனத்தின்‌
அனைத்து இயங்கியலும்‌ ஆகும்‌.

 

96


Page 115 

இதழ்‌ 5
பண்பஈரு ஒர்‌ அமைப்பு

ஓவ்வொரு மனிதனும்‌, இனமும்‌ சிந்திக்கும்முறை
“சிந்தனைப்‌ பண்பாடூ்‌ என்றும்‌, அதன்வழி
செயற்படும்முறை “செயலாக்கப்பண்பாடூ” என்றும்‌
செயலின்‌ வழி அவன்‌ அடைவது, பெற்றுக்‌ கொள்வது
“பொருளாக்கப்‌ பண்பாடு” என்றும்‌ பண்பாட்டின்‌
அடிப்படைக்‌ கூறுகளை வகுத்துக்‌ கொள்ளலாம்‌.

 

பண்பாடு
|
ம்‌ ழ்‌ ழ்‌
சிந்தனைப்‌ செயலாக்கப்‌ பொருளாக்கப்‌
பண்பாடு பண்பாடு பண்பாடு

பண்பாட்டின்‌ அடிக்கட்டுமானமாக விளங்கும்‌ சிந்தனைப்‌
பண்பாடு, செயலாக்கப்‌ பண்பாடு, பொருளாக்கப்‌ பண்பாடு
ஒவ்வொன்றும்‌ பல நூற்றுக்‌ கணக்கான கூறுகளை,
பிரிவுகளைக்‌ கொண்டுள்ளன. இவை அத்தனையையும்‌
தன்னகத்தே கொண்டூ ஒரு கட்டுமானமாகிய கோலத்தில்‌
முவ்னாம்‌. அதாவது அமைப்பொழுங்கில்‌ இயங்கலே
பண்பாட்டியல்‌ எனலாம்‌.

பண்பாடு என்பது இலக்கியம்‌, இசை, நடனம்‌,
வழிபாட்டு முறைகள்‌, சடங்குகள்‌, பண்டிகைகள்‌,
ஆடைஅணிகலன்கள்‌ மட்டும்தான்‌ என்பதுபோல்‌
பலரும்‌ எண்ணிக்‌ கொண்டிருப்பதைக்‌ கண்டும்‌ கேட்டூம்‌
உள்ளேன்‌.

99


Page 116பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இவை மட்டூம்‌ பண்பாடூ ஆகாது.

பணபாடூ என்பது மிகப்பெரும்‌ அமைப்பாகும்‌.

இந்த அமைப்பில்‌ ஆயிரக்கணக்கான கூறுகள்‌ பல
வடிவங்களில்‌ ஒன்றிணைந்து கிளைவிட்டுப்‌ பெரும்‌
விருட்சமாக நிமிர்ந்து நிற்கும்‌. இதுவே ஓர்‌ இனத்தின்‌
தன்மையை அடையாளத்தை வெளிக்காட்டி நிற்பது.

சிந்தனைப்‌ பண்பாடு

மனதிற்‌ தோன்றும்‌ எண்ணங்களே சிந்தனை. ஆறாவது
அறிவாகிய பகுத்தறிவின்‌ கருவியே மனம்‌. அதற்குரிய
மூலகம்‌ (பூதம்‌) வானம்‌.

மனதில்‌ தோன்றும்‌ சிந்தனைகள்‌, எண்ணங்கள்‌
என்பவையும்‌ வானத்தைப்‌ போன்று விரிந்து பரந்தவை,
எலலையற்றவை, எண்ணற்றவை, பலகோணங்களில்‌
இருந்தும்‌ தோன்றுபவை.

அவை வானத்தில்‌ தோன்றும்‌ எண்ணற்ற விணமீன்கள்‌
போல்‌ மனதிலும்‌ பல கோணங்களிலில்‌ தோன்றி
மின்னும்‌.

வானத்து விண்மீன்களை எல்லாம்‌ நம்மால்‌ கண்டுகொள்ள
முடிவதில்லை. அதேபோன்று நம்‌ மனதில்‌ படிந்துள்ள
எண்ணங்கள்‌ அத்தனையையும்‌ கண்டூணர முடியாது.

வானத்தை ஆய்வு செய்து விண்மீன்களின்‌ தன்மையைக்‌
கண்டறிவதுபோல்‌, நம்‌ சிந்தனைகளையும்‌ பகுத்தறிந்து
பார்க்காது கருத்துத்‌ தெளிவுபெற முடியாது.

வாழ்வின்‌ முன்னேற்றத்திற்கு செயலின்‌ ஆக்கத்திற்கு

100)


Page 117 

பணர்பாடு - வேரும்‌, விழுதும்‌

பகுத்தறிந்து முடிவெடுக்கும்‌ பழக்கம்‌ அவசியம்‌.
எனவே ஒரு விடயத்தைப்‌ பற்றிய சிந்தனை பலவாறாகப்‌
பலகோணங்களிற்‌ தோன்றும்போது, வெளிப்படும்போது,
அவற்றைப்‌ பகுத்தறிந்து இறுதியாக எடுக்கும்‌ முடிவே
சிந்தனையின்‌ வெளிப்பாடு. அச்சிந்தனையை நடை
முறைப்படுத்தலே செயல.

சிந்தனையின்‌ தோற்றம்‌

உள்ளத்தே பலவிதமான, பலவாறான, எண்ணங்கள்‌
பின்வரும்‌ மூன்று காரணிகளாலும்‌ தோன்றும்‌.

*மனிதனின்‌ உள்ளத்தே தோன்றும்‌ தேவைகள்‌,
ஆசைகள்‌, விருப்புகள்‌ வெறுப்புகள்‌ போன்ற அனைத்து
உந்துசக்திகளுக்கு ஏற்பவும்‌,

*மனிதன்‌ ஏற்கனவே தான்‌ பெற்றுள்ள பட்டறிவுக்கு
(அநுபவஅறிவுக்கு); எற்பவும்‌ இதுவரை அவன்‌ சமூகத்‌
திலிருந்து உள்வாங்கிக்‌ கொண்ட மனச்சான்றுகளான
நம்பிக்கைகள்‌, கொள்கைகள்‌, விழுமியங்கள்‌, அற
நெறிமுறைகள்‌, சட்டங்கள்‌ ஆகியன உள்ளிட்ட சகல
நெறியியலுக்கு ஏற்பவும்‌,

*அவனது ஆழ்மனமாகிய உணர்வு கடந்த உள்மனதில்‌
இருந்து உதயமாகும்‌ அறிவுரைக்கு ஏற்பவும்‌;
மேற்கூறிய மூன்று பரிமாணக்களில்‌ (1211015100)
உதயமாகும்‌. இவ்வாறு தோன்றும்‌ எண்ணங்களைப்‌
பகுத்தறிந்து சிந்தித்து முடிவெடுத்தல்‌ வேண்டும்‌. ஆனால்‌
மனிதன்‌ விழிப்புணர்வுடன்‌ பகுத்தறிந்து சிந்திக்காது
முடிவெடூப்பதும்‌ உண்டு.

101


Page 118பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

சுருங்கக்‌ கூறின்‌ மனிதனின்‌ உந்து சக்திகள்‌,
பட்டறிவுடன்‌ அவன்‌ மனதில்‌ மனச்சான்றுகளாகப்‌
பதிந்துள்ள (நெறியியல்‌) அறிவு,

ஆழ்மனதில்‌ இருந்து தோன்றும்‌ எண்ணங்கள்‌,

என்ற மூவிசைகளினதும்‌ அதாவது சக்திகளினதும்‌
விளைவாகவே சிந்தனையின்‌ முடிவு இருக்கும்‌.

இதில்‌ மனதில்‌ எத்தகைய வலு கூடிய சக்திகொண்டூ
தாக்குகின்றதோ, சிந்தனையின்‌ விளைவும்‌ அந்தப்‌
பக்கம்‌ நோக்கியதாக இருந்துவிடும்‌. எனவே
சிந்தனையின்‌ முடிவுகள்‌ சரியான திசையில்‌ இருப்பதற்கு
விழிப்புணர்வுடன்‌ கூடிய பகுத்தறிவுக்கு நன்கு இடமளித்து
நாம்‌ எந்த முடிவுகளையும்‌ எடூப்போமானால்‌ அப்போது
கூடியவரை எமது சிந்தனையின்‌ முடிவுகள்‌ சரியாக
இருக்கும்‌.

மனம்‌ செயற்படும்‌ நிலைகள்‌

மனம்‌ மூன்று நிலைகளிற்‌, செயல்படும்‌. அவையாவன
மேல்மட்ட மனம்‌ (0011801018 ம்ம)

நடூமனம்‌ (800 ௦001801008 பார்ம்‌)

உணர்வு கடந்த உள்மனம்‌ (8 ாார்றம்‌)

*மனதில்‌ ஏழு அடூக்குகள்‌ உண்டு. அவை ஒவ்வொன்றின்‌
செயல்களும்‌ சக்திநிலைகளும்‌ வேறுவேறு, அவற்றின்‌
ஆற்றலைப்பற்றி நாம்‌ விரிவாகப்‌ பார்க்காது மனம்‌
செயற்படும்‌ தன்மைபற்றியே இங்குப்‌ பார்க்கின்றோம்‌.

இதன்‌ பொருள்‌ வேறுவேறு மனங்கள்‌ உண்டூ என்பதல்ல
- மனம்‌ ஒன்றே தான்‌. ஆனால்‌ வெவ்வேறு நிலைகளில்‌
அது இருக்கவல்லது, இயங்கவல்லது. ஒரு நிலை

[02


Page 119பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மற்ற நிலைக்கு மாறக்கூடியது.

ஒளிக்கதிர்‌ ஒன்றுதான்‌. ஆனால்‌ அதனுள்‌ ஏழு
நிறங்கள்‌ உண்டூ. ஒவ்வொரு நிறமும்‌ வெவ்வேறு
விதமாக இயங்கக்‌ கூடியன. ஒவ்வொரு நிறமும்‌
வெவ்வேறு அலைவீச்சினைக்‌ கொண்டன, பொருட்களை
ஊடறுத்துச்‌ செல்லும்போது வெவ்வேறு முறிகோணத்தில்‌
இயங்கவல்லது. அவை ஒவ்வொன்றும்‌ வெவ்வேறு
பண்பினை உடையன.

உயிரினங்களின்‌ வளர்ச்சியில்‌ ஒவ்வொரு நிறமும்‌
மாறுபட்ட தாக்கத்தைக்‌ கொடுக்க வல்லது, மனித
மனங்களில்‌ ஒவ்வொரு நிறமும்‌ தனித்துவமான
விளைவினை ஏற்படுத்த வல்லது. அதுபோன்றதே
மனதின்‌ செயற்பாடும்‌.

மேல்மட்ட மனம்‌ (முதல்‌ மன அடுக்கு)

மேலடமட்ட மனத்தினை முதல்மன அடுக்கு என்றும்‌
புலன்மனம்‌ அல்லது இயல்பு உணர்வு என்றும்‌
அழைப்பர்‌.

ஐம்பொறிகளின்‌ வழிகளாக வரும்‌ உணர்வுகளை ஏற்பதும்‌
இயங்குவதும்‌ இம்மனதின்‌ தொழிற்பாடு, இம்மனம்‌ உடற்‌
பாதுகாப்பு, இனவிருத்தி, ஆகிய இரண்டு தொழில்கள்‌
மீதும்‌ நேரடியாகத்‌ தொழிற்படும்‌.

மனிதன்‌ அநுபவிக்கும்‌ பல உணர்வுகள்‌ அதாவது
சுவை, மணம்‌, பக்தி, தியாகம்‌, வீரம்‌, புகழ்ச்சி,
இகழ்ச்சி, பொறாமை, குரோதம்‌ போன்ற இன்பநாட்டம்‌
அல்லது பயத்தைச்‌ சார்ந்த உணர்வுகளை உள்வாங்கிச்‌
செயற்படும்‌ தன்மையது இந்தப்புலன்‌ மனம்‌.

மிருகங்களுக்கு இந்த மனமே செயல்படும்‌ தன்மையது

103


Page 120பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
நடுமனம்‌

நடுமனத்தை உள்மனம்‌, அகமனம்‌, மறைமனம்‌,
தர்க்க அறிவு என்றும்‌ அழைப்பார்கள்‌. இது மனதின்‌
இரண்டாவது நிலையிருந்து செயற்படும்‌.

நாம்‌ காண்பவை, கேட்பவை, அறிபவை எல்லாவற்றையும்‌
நாம்‌ விரும்பியோ விரும்பாவிட்டாலோ பதிவு செய்து
வைத்துவிடும்‌. நம்‌ மனதில்‌ தோன்றும்‌ எண்ணங்கள்‌
எல்லாம்‌ இங்குப்‌ பதிவாகின்றன.

இம்மனதின்‌ தன்மை முழுக்க முழுக்க சமூகத்தால்‌
உருவாக்கப்‌ படூவது. எம்‌ சமூகம்‌ படைத்துள்ள
நெறியியல்‌ கூறுகள்‌, கொள்கைகள்‌, நம்பிக்கைகள்‌,
நீதிநெறிகள்‌ போன்றனவும்‌,

நம்‌ பெற்றோர்‌, நண்பர்கள்‌, உறவினர்கள்‌ தொடர்பான
உணர்வுகள்‌ பந்தபாசக்‌ கடன்கள்‌ என்பனவும்‌,

நம்‌ சமூகம்‌ கருதும்‌ கெளரவங்கள்‌ - நாம்‌ கல்வி
வழி பெற்ற ஒழுக்கங்கள்‌ உட்பட அறிவுகள்‌ - நமது
பட்டறிவுகள்‌ - நாம்‌ பெறும்‌ பயிற்சிகள்‌ அத்தனையும்‌
இந்த மனதில்‌ பதிவாகின்றன.

நம்‌ உணர்வு கடந்த உள்மனதில்‌ அதாவது மனதின்‌
மற்றைய அடூக்குகளான ஆழ்மனதில்‌ இருந்து வரும்‌
உணர்வுகளை, எண்ணங்களை வடிகட்டூவது, அல்லது
அவைபற்றிய கருத்துக்களை மோதவிடூவது இந்த
மனமே.

தான்‌ இதுவரை பதிவு செய்து வைத்துள்ளவற்றில்‌
இருந்து எடுத்துச்‌ “சாட்சியாக” முன்வைக்கும்‌ மனம்‌
இது - அதுவே “மனச்சாட்சி??,

104


Page 121பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌

நமது இன, மொழி, சாதி, சமயக்‌ கொள்கை என்பன
இம்மன அடுக்கில்‌ பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன;
அதனால்‌, தான்‌ செய்வது சரி என்ற எண்ணத்துடன்‌; பல
சமூக விரோதச்‌ செயல்களையும்‌ சமூக மேம்பாடு அற்ற
செயல்களையும்‌, இது துணிந்து செய்யும்‌ தன்மையது.

எடூத்துக்காட்டாக இன, மொழி, சாதி, சமய
முரண்பாடுகளால்‌ எழும்‌ கலவரங்களின்போது ஒன்றும்‌
அறியா அப்பாவி மக்களைக்‌ கூடக்‌ கொலைசெய்யும்‌
நிலையைக்‌ குறிப்பிடலாம்‌.

சுருங்கக்‌ கூறின்‌ நடூமனம்‌ என்பது உங்களின்‌
கடந்த(இறந்த) காலம்‌. அதாவது கடந்த காலத்தில்‌
அனைத்து வழிகளிலும்‌ நீங்கள்‌ பெற்ற அறிவின்‌ கலசம்‌,
ஆவணக்காப்பகம்‌.

நடுமனம்‌; நிகழ்காலத்தையும்‌ (புலன்‌ மனதின்‌
உணர்வுகளையும்‌)

எதிர்‌ காலத்தையும்‌ (ஆழ்மனதில்‌ இருந்து தோன்றும்‌
ஆலோசனைகளையும்‌) கட்டுப்படுத்த ஓயாமல்‌ முயன்று
கொண்டே இருக்கும்‌.

உணர்வு கடந்த உள்மனம்‌

புலன்மனம்‌, நடூுமனம்‌ ஆகிய இரண்டூ அடூக்குகளையும்‌
தவிர்ந்த மற்றைய அடூக்குகள்‌ - நாம்‌ பெற்றுள்ள
மனத்திறனுக்கேற்ப இயங்கக்‌ கூடியவை, மனதைப்‌
பயிற்சி மூலம்‌ கட்டுப்படுத்தி, எண்ணங்களை
ஒழுங்காக்கி, மனம்‌ என்ற சக்தியின்‌ திறனை உயர்த்த
உயர்த்த இந்த உணர்வுகடந்த உள்மனதின்‌ (வலுமிகு

105


Page 122பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஆழ்மனதின்‌) செயற்பாடும்‌ அதிகரிக்கும்‌.
இம்‌ மனம்‌ மெய்‌ உணர்வின்‌, ஞானத்தின்‌ வெளிப்பா௫,
இம்மனதை உபயோகித்து வெளிவருபவையே சிறந்த
இலக்கியம்‌, கலை, தத்துவங்கள்‌ ஆகும்‌.

இம்‌ மனதின்‌ ஆழத்தில்‌ அளவற்ற ஆற்றல்கள்‌ புதைந்து
கிடக்கின்றன. அவற்றைத்‌ தக்கபடி வளர்த்துப்‌ பயன்‌
அடைவது எம்கையிலேயே உள்ளது.

இம்மனமே “உள்ளொளி: என்றும்‌ “ஆத்மாவின்‌ குரல்‌”
என்றும்‌ சொல்லப்‌ படூவது. இம்மன அறிவு துலங்கும்படி
செயற்பட்டால்‌ துன்பமே இல்லை.

நாம்‌ சில சிக்கல்களுக்கு உடனடியாக முடிவு
எடுக்கமுடியாது திண்டாடூவோம்‌ - அப்படியே விட்டூ விட்டூ
வேறு வேலை பார்ப்போம்‌. பின்பு அச்சிக்கல்களைப்‌
பற்றிச்‌ சிந்திக்கும்போது அல்லது சிந்திக்காத போது
கூட அதற்கான தீர்வு மனதில்‌ தோன்றும்‌. அதற்குக்‌
காரணம்‌ நமது வெளிமனம்‌ அச்சிக்கல்களை ஒதுக்கி
வைத்து விட்டு மற்றைய வேலையைக்‌ கவனிக்கும்போது,
வலுமிகு ஆழ்மனமானது சிந்தித்துத்‌ தீர்வு கண்டு
வைத்திருக்கும்‌.

எம்மில்‌ பலரும்‌ பல சிக்கல்களுக்கு முடிவு காண
முடியாது தூக்கத்திற்குச்‌ (நித்திரை) சென்றுவிடுவோம்‌.
விழித்ததும்‌ எமக்கு அதற்கான தீர்வு மனதில்‌ தோன்றும்‌.
புலன்‌ மனம்‌ தூங்கிவிடக்கூடியது ஆனால்‌ உணர்வு
கடந்த உள்மனம்‌ எப்போதும்‌ விழித்திருக்கும்‌, அது
அதற்கான தீர்வினைக்‌ கண்டூ வைத்திருக்கும்‌.

106


Page 123பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இவை அனைத்தும்‌ ஒவ்வொரு மனிதனும்‌ தன்‌
மனத்திண்மையையும்‌, திறனையும்‌ எவ்வாறு வளர்த்து
வைத்துக்‌ கொண்டூள்ளான்‌ என்பதைப்‌ பொறுத்ததே.

இதனையே வள்ளுவர்‌

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்‌
திண்ணியர்‌ ஆகப்‌ பெறின்‌.
- குறள்‌: 666

என்றார்‌.
மனத்திண்மை உடைய ஒருவன்‌ தான்‌ எண்ணியதைச்‌
செய்து முடிக்க உறுதியுடன்‌ முயலும்போது உணர்வு
கடந்த உள்மனம்‌(கடவுள்போன்று) அவனுக்கு வழிகாட்டி
நிற்கும்‌.

மனதின்‌ கூட்டு இயக்கம்‌

இயல்பான 4
உந்து சக்திகள்‌

   

மேல்மட்ட மனம்‌
(முதல்மனஅடுக்கு,
புலன்வழி
உணர்வுகள்‌) நடூமனம்‌ (மனச்சான்று)
உணர்வு கடந்த உள்மனம்‌

(வலுமிகு ஆழ்மனம்‌)

107


Page 124பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இயல்பான உந்து சக்திகள்‌ தம்தேவைகளை,
விருப்புகளை வலியுறுத்த, ஐம்புலன்வழி உணர்வுகள்‌
அவற்றை நுகரவேண்டித்‌ தமது விருப்பை, ஆசையை
மேல்மட்ட மனதின்‌ கண்‌ தூண்ட,

உணர்வுகடந்த உள்மனம்‌ (வலுமிகு ஆழ்மனம்‌) செயல்பட
வேண்டியதற்கான தீர்வினை, ஆலோசனையை வழங்க,
மனம்‌ செயற்படத்‌ தீர்மானிக்கும்‌ அல்லது செயற்படும்‌.
ஆனால நடூமனமானது “மனச்சான்று” - தான்‌ இதுவரை
பெற்றுவைத்துள்ள கொள்கைகள்‌, நம்பிக்கைகள்‌, நம்‌
உறவுகள்‌ மீதுள்ள பந்தபாசங்கள்‌, எமது கடன்கள்‌,
சமூகத்தில்‌ வைத்திருக்கும்‌ போலிக்‌ கெளரவங்கள்‌,
நெறிமுறைகள்‌ இப்படிப்‌ பல பின்னணியைக்‌
கொண்டது.

சுருங்கக்‌ கூறின்‌ மனம்‌ ஏற்கனவே பெற்றுள்ள பண்பாட்டு
நிலையே “மனச்சான்று. எனவே அது அதற்கேற்ப
கேள்விகளை எழுப்பும்‌. சரியானதாயின்‌ மனம்‌
மகிழ்ச்சியோடு செயற்படும்‌.

தவறான தாகில்‌ அல்லது சந்தேகத்துக்கு இடமானது
ஆகில்‌ மனதில்‌ உறுத்தல்‌ தோன்றும்‌. சிந்தனைவழி
செயல்படும்‌. வேகமும்‌, ஈடுபாடும்‌ குறையும்‌,
சிலவேளைகளில்‌ மனம்‌ ஆழ்மனதில்‌ இருந்து வந்த
தீர்வினை செயல்படுத்தாது நிறுத்திவிடும்‌. செயற்பட்டால்‌
தான்‌ செய்தது சரியானது என மீண்டும்‌ மனம்‌
அங்கீகரிக்கும்‌ வரை மனஉறுத்தல்‌ இருந்தே தீரும்‌.

எடுத்துக்காட்டாக ஒருவன்‌ தான்‌ துன்பப்படூவதாகக்‌
கண்ணீர்மல்க உதவி கேட்கிறான்‌. உடனே உதவ
ஆழ்மனம்‌ விரும்புகிறது, முற்படுகிறது. அப்போது
நடுமனம்‌ இவன்‌ உண்மையானவன்‌ தானா? என்ற

[06


Page 125 

பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌

சந்தேகத்தைக்‌ கிளப்புகிறது! மனம்‌ தடமாறுகிறது.
எடுத்த முடிவு மாறுகிறது.

உலக மக்கள்‌ அனைவரும்‌ சகோதரர்கள்‌ சமமானவர்கள்‌
என ஆழ்மனம்‌ சொல்கிறது. செயற்படமுற்படூம்போது
நடூுமனமென்ற சமுதாய அமைப்பைத்‌ தாண்டும்போது
எமது உணர்வே மாறிவிடூகிறது.

காதல்‌ நன்று, எமது பிள்ளைகள்‌ காதலித்தே திருமணம்‌
செய்யட்டும்‌ என்ற ஆழ்மன விருப்போடு மகனின்‌
காதலை வரவேற்கிறோம்‌. மகன்‌ காதலித்தது வேறு
சாதிப்பெண்‌ என்று அறிந்ததும்‌; நடூமனம்‌ தான்‌ சேமித்து
வைத்த சமூகத்தின்‌ சாதிக்கொள்கையை அறிவிக்க
மனம்‌ தடுமாறுகிறது! உணர்வு மாறுகிறது!

“யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌
தீதும்‌ நன்றும்‌ பிறர்‌ தர வாரா”

- புறநாநூறு
என்பது தமிழரின்‌ ஆழ்மனதில்‌ இருந்து எழுந்த
உயர்‌ விழுமியம்‌ - இதனை நாம்‌ பெருமையாக
ஏற்றுள்ளோம்‌.
அத்தகைய நாம்‌ செயல்படும்போது சாதி, சமய, நிற,

இன வேறுபாட்டை முதன்மையாக வைத்து முடிவுகளை
எடூக்கிறோம்‌.

“தீதும்‌ நன்று பிறர்‌ தர வாரா” என்பதை ஏற்ற நாம்‌
எமக்கு வரும்‌ துன்பங்களுக்குப்‌ பிறரைக்‌ காரணம்‌

109


Page 126பண்பாடு - வேகும்‌, விழுதும்‌

காட்டுகிறோம்‌.

இதுதான்‌ நடூுமனதின்‌ வேலை. ஒவ்வொரு மனிதனின்‌
சிந்தனையும்‌ இவ்வாறே வேலை செய்கிறது. மனிதன்‌
தன்‌ வலுமிகு ஆழ்மனம்‌ சொல்வதின்படி நடப்பதே
சிறந்தது.

சிந்தனைக்‌ கோணம்‌

ஒவ்வொரு தனி மனிதனிடத்தும்‌ அவன்‌ பிறிதொரு
“செயலைப்‌” பார்க்கும்‌ போதோ, ஒரு “பொருளைப்‌”
பார்க்கும்போதோ அவனின்‌ சிந்தனை வேறுபட்டூக்‌
காணப்படும்‌. இவ்வேறுபாடூ அவன்‌ சகல வழிகளாலும்‌
ஏற்கனவே பெற்றுள்ள அறிவின்‌ அடிப்படையில்‌
அமையும்‌. ஓவ்வொரு தனிமனிதனிடையேயும்‌ உள்ள
இச்‌ சிந்தனை வேறுபாடூ அம்மனிதனின்‌ “சிந்தனைப்‌
பண்பாடூ:: எனலாம்‌.

செயலைப்‌ பார்க்கும்‌ கோணம்‌

இத்தனிமனிதச்‌ சிந்தனைப்‌ பண்பாட்டை விளங்கிக்‌
கொள்ள எடூத்துக்‌ காட்டாக பின்வரும்‌ கதையைப்‌
பாருங்கள்‌.

இராமாயணத்தில்‌ ஒரு சம்பவம்‌. இராமனுக்கு முடி
சூட்டுவிழா நடப்பதற்கான சடங்கினை வசிட்டர்‌ நடத்திக்‌
கொண்டிருக்கிறார்‌. இராமனுக்குப்‌ பக்கத்தில்‌ சீதையும்‌,
அருகே கீழே அநுமானும்‌ அமர்ந்திருக்கின்றனர்‌.
இலக்குமணன்‌, பரதன்‌, கைகேயி, கூனி போன்ற பலரும்‌
சபையில்‌ இருக்கின்றனர்‌.

110


Page 127பண்பாட - வேரும்‌, விழுதும்‌

வாத்திய இசைகள்‌ பேரொலிக்க இராமனுக்கு
முடிசூட்டப்பட்டது. வாத்தியப்‌ பேரொலிகள்‌ அடங்கவும்‌
இலக்குமணன்‌ பலத்த ஒலியுடன்‌ சிரிப்பது எல்லோருக்கும்‌
கேட்டது.

முடிசூட்டலின்போது இலக்குமணன்‌ சிரிப்பதைக்‌
கேட்ட இராமர்‌ - இலக்குமணன்‌ ஏன்‌ சிரித்தான்‌ எனச்‌
சிந்திக்கிறார்‌.

என்னோடு பதினான்கு ஆண்டுகள்‌ உடனிருந்து பல
துன்பங்களையும்‌ அநுபவித்து எனது இன்றையநிலைக்குக்‌
காரணமானவன்‌. எனக்கு முடிசூட்டும்‌ போது தனக்குத்‌
தகுந்த இடம்‌ தரவில்லையே என எண்ணிச்‌ சிரிக்கிறானா?
என எண்ணினார்‌.

சிரிப்பொலியைக்‌ கேட்ட பரதன்‌ - “பார்த்தாயா
அண்ணனை நாட்டை விட்டூ அனுப்பியபோதும்‌
மீண்டும்‌ வந்து அவனுக்குரிய முடியாட்சியைப்‌ பெற்று
விட்டோம்‌.” என இறுமாப்புடன்‌ சிரிக்கின்றானா? என
எண்ணினானாம்‌.

சீதை - “தற்போது அண்ணாவுக்குப்‌ பக்கத்திலிருந்து
அரசியாக முடிசூட்டிக்‌ கொண்டிருக்கிறாயே, நாம்‌
எல்லாம்‌ இராவணனுடன்‌ போர்‌ புரிந்து உன்னை
அவனிடம்‌ இருந்து மீட்டுவந்தோம்‌'' என ஏளனமாகத்‌
தன்னைப்‌ பார்த்து சிரிக்கிறானா? என எண்ணினாளாம்‌.

அநுமான்‌ - “நான்தான்‌ அண்ணாவுக்குப்‌ பக்கத்தில்‌ இருக்க
வேண்டியவன்‌ நீ போய்‌ அமர்ந்திருக்கிறாயா?”” எனத்‌

தன்னைப்‌ பார்த்து சிரிக்கிறானா என எண்ணினானாம்‌

111


Page 128பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கைகேயி - “நீ எம்‌ தந்தையிடம்‌ வரம்‌ பெற்று
அண்ணனைக்‌ காட்டூக்கு அனுப்பி உன்மகன்‌ பரதனுக்கு
அரசைப்‌ பெற்றுக்‌ கொடூத்தாயே. தற்போது என்ன
நடந்தது பார்‌” எனத்‌ தன்னைப்‌ பார்த்துச்‌ சிரித்தானா?
என எண்ணினாளாம்‌.

கூனி - “நீ என்னதான்‌ சூழ்ச்சி செய்தபோதும்‌ நாம்‌
வெற்றி பெற்று விட்டோமே” - எனப்‌ பெருமிதத்தோடு
சிரிக்கின்றான்‌ என எண்ணினாளாம்‌.

இவ்வாறு சபையில்‌ இருந்த ஒவ்வொருவரும்‌
இலக்குமணன்‌ சிரித்த இந்தச்‌ செயலுக்காக வேறுவேறு
வகையில்‌ தம்‌ மனக்குறைபாடூகளுக்கு ஏற்ப, தம்‌
தகுதிக்கேற்ப சிந்தித்துக்‌ கொண்டனர்‌.

அப்போது வசிட்டர்‌ இலக்குமணனைப்‌ பார்த்து
“இலக்குவணா இப்போது ஏன்‌ சிரித்தாய்‌” என்று
கேட்டார்‌.

இலக்குமணன்‌ “என்‌ அண்ணன்‌ முடிசூட்ட வேண்டும்‌
என்பதற்காகக்‌ கடந்த பதினான்கு வருடங்களாக
இரவுபகல்‌ கண்விழித்து உழைத்தேன்‌. முடிசூட்டூ
விழாவைக்‌ காண விரும்பி ஆறுதலாக ஓய்வாக வந்து
அமர்ந்திருந்தேன்‌. சிறிது தூங்கிவிட்டேன்‌. பேரொலி
முழங்குவதைக்‌ கேட்டு கண்விழித்தபோது அண்ணனின்‌
தலையில்‌ முடிசூட்டப்பட்டு விட்டது. என்னை நினைத்து
நானே சிரித்தேன்‌” என்றான்‌.

எவ்வளவு தூய மனது இலக்குமணனுக்கு, ஆனால்‌
அவனது “இச்‌ செயல்‌” மற்றைய ஒவ்வொருவர்‌ மனதிலும்‌

வெவ்வேறு எண்ணங்களைத்‌ தோற்றுவித்து விட்டது.

112


Page 129பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இதுவே அவர்‌ அவர்களது “சிந்தனைப்‌ பண்பாடு.”

ஒரு செயல்‌ நிகழ்ந்ததின்‌ உண்மை ஒன்றாக இருக்க
- மற்றையவர்கள்‌ அதுபற்றி எண்ணுவது, முடிவுக்கு
வருவது, அவரவர்‌ மனம்‌ அவ்விடயம்‌ பற்றி முன்பே
கொண்டுள்ள அறிவின்‌ அல்லது அவர்களின்‌
ஆசையின்‌ அடிப்படையிலேயே அமையும்‌. இவ்வாறு
தவறான முடிவுக்கு வருவோர்‌ ஆராய்ந்து பார்ப்பது
இல்லை, என்பதே உண்மை நிலை.

இராமாயணத்தின்‌ பின்புலம்‌ தெரியாதவர்களுக்காக
வேறு ஒரு கதை.

ஒரு தாய்‌ தந்தையருக்கு ஒரு மகள்‌ -அவள்‌ திருமணம்‌
முடித்துக்‌" கணவன்‌ வீட்டிற்குச்‌ சென்றுவிட்டாள்‌.
தனிமையில்‌ அவர்கள்‌, வாழ்ந்த காரணத்தால்‌
வீடுவாடகைக்குக்‌ கேட்டுவந்த பல்கலைக்கழகம்‌
செல்லும்‌ ஒரு மாணவியைப்‌ பின்வரும்‌ நிபந்தனையில்‌
குடியமர்த்திக்‌ கொண்டனர்‌.

“நீங்கள்‌ வாடகை எதுவும்‌ தரவேண்டாம்‌, ஆனால்‌ எமது
வீட்டைத்‌ துப்பரவு செய்து, சமையலில்‌ எமக்கு உதவி
செய்து இருந்தால்‌ போதுமானது”” என்பதே.

வீட்டில்‌ இருக்கும்‌ தாயார்‌ பொழுதுபோக்குக்காக
நிறையவே தொலைக்‌ காட்சி பார்ப்பார்‌, குறுநாடகங்கள்‌
பார்ப்பார்‌, பத்திரிகைகள்‌ வாசிப்பார்‌. இவர்‌ பார்க்கும்‌
சகலதும்‌ வாழ்வியல்‌ முரண்பாட்டுப்‌ பின்னணியைக்‌
கொண்டன. வீட்டுக்கு வேலைக்கு வரும்‌ இளம்‌ பெண்கள்‌
வீட்டில்‌ உள்ள பையன்களைத்‌ தம்வசமாக்கிக்‌ கொள்வது,

113


Page 130பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தகாத உறவு கொள்வது போன்ற இன்னோரன்ன
தகவல்கள்‌ பலவும்‌ செய்திகளாக, கலைவடிவங்களாக
அத்தாயின்‌ மனதுக்கு அறிவூட்டப்பட்டிருந்தன!

ஆறு மாதங்கள்‌ கழித்து அவ்வீட்டிற்கு அவர்களது
மகளும்‌ மருமகனும்‌ ஒரு வார விடூமுறையில்‌ வந்து
தங்கினார்கள்‌.

அவர்கள்‌ வந்து இரண்டூ நாட்கள்‌ கழிந்து விட்டன.
மூன்றாம்‌ நாள்‌ வீட்டில்‌ குடியிருந்த பெண்‌ காலில்‌
கொலுசு மாட்டியிருந்தாள்‌. அதைக்கண்ட தாய்‌ இவள்‌
ஏன்‌ எப்போதும்‌ இல்லாத வகையில்‌ இப்போது கொலுசு
கட்டியிருக்கிறாள்‌. தன்‌ மருமகப்பிள்ளையைக்‌ கவர்ந்து
கொள்ளவோ எனப்‌ பலவாறாக எண்ணிக்‌ கொண்டாள்‌,
அவள்‌ மனம்‌ அமைதியை இழந்தது.

“இவள்‌ என்ன ஒருபோதும்‌ இல்லாமல்‌ இப்ப மருமகன்‌
வந்து நிற்கும்போது கொலுசுகட்டியிருக்கிறாள்‌
ஏன்‌? இவளுக்கு இதை யார்‌ கொடுத்தது? இவளாக
வாங்கினாளா? அல்லது மருமகன்‌ கொடுூத்தாரா?
இவ்வளவு காலமும்‌ இல்லாமல்‌ ஏன்‌ இப்போது மட்டூம்‌
கட்டியிருக்கிறாள்‌? ...”

எனப்‌ பலவாறாக எண்ணிக்‌ குழம்பியதோடூ கணவனிடமும்‌
முறைப்பட்டுக்‌ கொண்டாள்‌. கணவன்‌ சரி விடூ இன்னும்‌
நாலு நாட்களில்‌ பிள்ளைகள்‌ போய்விடுவார்கள்‌
என்று கூறிச்‌ சென்றுவிட்டார்‌. ஆனால்‌ அத்தாயின்‌
மனம்‌ அமைதியுறவில்லை. மேற்கொண்டு ஏதாவது
நடந்தால்‌. .... கற்பனைக்‌ குதிரை ஓடிக்கொண்டிருந்தது,
மன அமைதி குலைந்துவிட்டது.

114

 


Page 131பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

குடியிருந்த பெண்ணைப்‌ பார்த்து அந்தத்தாய்‌ கேட்டாள்‌ -
“என்ன திடீரென்று கொலுசு கட்டியிருக்கிறாய்‌? ஏன்‌?” பதில்‌
இல்லை. அப்பெண்‌ மெளனமாக இருந்தாள்‌. அவளின்‌
மெளனம்‌ மேலும்‌ தாயின்‌ மனதைக்‌ குழப்பியது.
“எங்காலை உனக்கு இந்தக்‌ கொலுசு” மீண்டும்‌
கேட்டாள்‌? “என்னிடம்‌ இருந்தது.” என்றாள்‌.

“ஏன்‌ இவ்வளவு நாளும்‌ இருந்திட்டு இப்ப
கட்டியிருக்கிறாய்‌”? மெளனம்‌ பதில்‌ இல்லை.
பொய்தானே சொல்லுறாய்‌.......

தாயின்‌ மனம்‌ தடுமாறித்‌ தத்தளித்து அடக்கமுடியாது
கேட்டாள்‌. “என்ன மருமகனை கையுக்குள்‌ போடப்‌
பார்க்கிறாயா”?

அப்பெண்‌ கலங்கியே விட்டாள்‌, அவள்‌ கண்கள்‌ கலங்கி
விட்டன. அதனைக்‌ கண்ட தாய்‌ - தான்‌ நினைத்தது
சரியென எண்ணிக்‌ கொண்டூ மேலும்‌

“என்ன உன்‌ கள்ள எண்ணம்‌ வெளிப்பட்டுப்‌ போய்விட்டது
என்று பயமா?” என்று கேட்டாள்‌.

மேலும்‌ அமைதி காக்காத அந்தப்‌ பெண்‌ “இங்கு
வந்திருக்கும்‌ உங்கள்‌ மகளும்‌ மருமகனும்‌ புதிதாகத்‌
திருமணம்‌ செய்து கொண்டவர்கள்‌. அவர்கள்‌
வீட்டில்‌ பொது இடங்களில்‌ தனியே இருக்கும்போது
நெருங்கியிருக்கலாம்‌ நான்‌ திடீரென்று அவ்விடம்‌
சென்றால்‌ அவர்களுக்கும்‌ எனக்கும்‌ ஒரு மாதிரி
இருக்கும்‌. ஆதலால்‌ நான்‌ வருவதை அவர்கள்‌
அறிந்து கொள்ள இக்‌ கொலுசைக்‌ கட்டிக்கொண்டேன்‌

115


Page 132பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
என்றாள்‌.”

இளம்‌ வயதான அந்தப்‌ பெண்‌ எவ்வளவு பண்புடன்‌
அறிவார்ந்து நடந்து உள்ளாள்‌.

ஆனால்‌ ஒரு பிள்ளையைப்‌ பெற்றெடுத்து திருமணம்‌
செய்து கொடூத்த அநுபவம்‌ கொண்ட வயதுமுதிர்ந்த
இந்தத்‌ தாயின்‌ சிந்தனையைக்‌ குழப்பியது யார்‌?

அந்தப்‌ பெண்‌ கொலுசு கட்டிய அந்தச்செயல்‌, எப்படி
அந்தத்தாயின்‌ மனதில்‌ தவறான எண்ணத்தைப்‌
புகுத்தியது?

அத்தாயின்‌ மனம்‌, தன்னைச்‌ சூழ்ந்துள்ள ஊடகங்கள்‌
வாயிலாக நாளாந்தம்‌ சமுதாயத்தைப்‌ பற்றிப்‌ பெற்றுக்‌
கொண்ட செய்திகள்‌ மூலம்‌ உள்வாங்கிக்‌ கொண்ட
அறிவின்‌ விளைவே!

கொலுசு கட்டவேண்டும்‌ என்று எண்ணியது அந்தப்‌
பெண்ணின்‌ சிந்தனைப்‌ பண்பாட்டால்‌ நிகழ்ந்த செயல்‌

அச்செயலுக்கான காரணத்தைத்‌ தவறாக எண்ணிக்‌
கொண்டது அத்தாயின்‌ “சிந்தனைப்‌ பண்பாடு.”

இவ்வாறு உலகில்‌ நடைபெறும்‌ ஒவ்வொரு செயலுக்கும்‌
- ஒவ்வொரு மனிதனும்‌ தன்‌ சிந்தனைப்‌ பண்பாட்டுக்கேற்ப
அதனை  விமர்சிக்கிறான்‌ எண்ணிக்கொள்கிறான்‌
ஆனால்‌ அது நிச்சயம்‌ முற்றிலும்‌ உண்மையாகவோ,
ஒரு பகுதி உண்மையாகவோ இருக்க வேண்டியது
இலலை. இதுவே மனிதன்‌ தானும்‌ துன்பப்பட்டு பிறரையும்‌
துன்புறுத்துவதற்குக்‌ காரணமாக அமைவது.

116


Page 133பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
பொருளைப்‌ பார்க்கும்‌ கோணம்‌ :

ஒரு “செயல்‌” எவ்வாறு ஒருவரின்‌ பார்க்கும்‌ கோணத்திற்கு
ஏற்ப மாறுபட்ட சிந்தனையைப்‌ பிறப்பிக்குமோ அதே
போன்றே ஒரு பொருளும்‌ பிறப்பிக்கும்‌.

அதை விளங்கிக்கொள்ள இவ்‌ எடூத்துக்காட்டைப்‌
பாருங்கள்‌. தெருவோரம்‌ உள்ள ஒரு தோட்டத்தில்‌
மிக அழகிய ஒரு பூ பூத்திருக்கிறது. இப்பூவைக்‌ கண்ட
அவ்வழியால்‌ சென்ற பூந்தோட்டத்தில்‌ ஆர்வம்‌ உடைய
ஒருவர்‌ “இப்பூமரத்தை என்னுடைய தோட்டத்தில்‌
எவ்வாறு உருவாக்கலாம்‌” எனச்‌ சிந்தித்தார்‌.

அவ்வழியால்‌ சென்ற மாலை கட்டும்‌ ஒருவர்‌ - “இப்பூவை
நான்‌ கட்டும்‌ மாலைகளின்‌ குஞ்சத்திற்கு வைத்தால்‌
எப்படி இருக்கும்‌” எனக்‌ கற்பனை செய்துகொண்டார்‌.

பூவைக்கண்ட அம்மன்‌ கோயில்‌ பூசகர்‌ - “இப்பூவை
அம்மனின்‌ முடியில்‌ வைத்தால்‌ நல்ல அழகாக
இருக்குமே” எனவும்‌.

பூவைக்கண்ட தாவரவியல்‌ ஆசிரியர்‌ இது எந்த
இனத்தைச்‌ சேர்ந்தது? இப்பூமரம்‌ கிழங்கில்‌ இருந்தா
விதையில்‌ இருந்தா உற்பத்தியாகிறது? எனப்‌ பலவாறாக
எண்ணினார்‌.

காதலியை நோக்கிச்‌ செல்லும்‌ காதலன்‌ கண்ணில்பட

அவன்‌ அதனைப்‌ பறித்துச்‌ சென்று தன்‌ காதலியிடம்‌
கொடூக்கலாமா? என எண்ணினான்‌.

117


Page 134பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

திருமணவீடு நோக்கிச்‌ செல்லும்‌ ஒரு பெண்‌ - இப்பூவைப்‌
பறித்து என்‌ கொண்டைக்கு வைத்தால்‌ எப்படி இருக்கும்‌.
நாம்‌ கட்டியிருக்கும்‌ சேலைக்கு இதன்‌ வர்ணம்‌ நன்றாகப்‌
பொருந்துகிறதே என எண்ணினாள்‌.

பூவைக்‌ கண்ட ஒரு கவிஞன்தன்‌ உள்ளத்து உணர்வுகளைக்‌
கொட்டி ஒரு கவிதையே வடித்துவிட்டான்‌.

பூ என்ற ஒரு பொருளைக்‌ கண்ட ஒவ்வொருவரின்‌
மனதிலும்‌ அவரவர்களின்‌ தொழில்‌ சார்ந்தும்‌, தேடல்‌
சார்ந்தும்‌, தேவை சார்ந்தும்‌ பார்க்கும்‌ கோணத்திற்கேற்ப
வெவ்வேறு எண்ணங்களைத்‌ தோற்றுவித்தது. இதுவே
அவரவர்‌ “சிந்தனைப்‌ பண்பாடூ.”

இது பற்றி இக்கதைமயையும்‌ பாருங்கள்‌.

கிராமப்புறத்திலுள்ள ஒரு தேநீர்க்‌ கடை அதன்‌
வாசலோடூ ஒட்டி ஒரு பெருங்கல்‌ தரையில்‌ கிடந்தது.
அதன்மேல்‌ அந்த ஊரின்‌ இளைஞர்கள்‌ உட்கார்ந்து
கொண்டு போவோர்‌ வருவோரைப்‌ பற்றித்‌ தமக்குள்‌
கிண்டல்‌ செய்தபடி இருப்பார்கள்‌. இது கடைக்காரரின்‌
வியாபாரத்திற்கு இடையூறாக இருந்தது. அக்கல்லை
அகற்றி விடலாம்‌ என்றாலோ அது மிகப்‌ பெரும்‌ கல்லு.
அதனை அகற்றப்‌ பணம்‌ வேண்டும்‌. இளைஞர்களிடம்‌
பக்குவமாய்‌ எடூத்துச்‌ சொன்னபோது, அவர்கள்‌ இது
நலல இருக்கை, எமது பொழுது போக்கிற்கு அது
வேண்டும்‌ என்றனர்‌. கடைக்காரன்‌ என்ன செய்வது என்ற
எணணத்துடனே நாட்களை ஓட்டிக்கொண்டிருந்தான்‌.

ஒரு நாள்‌ அவன்‌ கடைக்கு வந்த ஒருவன்‌ கடைக்காரரைப்‌
பார்த்து எனக்கு இந்தக்‌ கல்லைத்‌ தருகிறாயா?

118


Page 135 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

எனக்கேட்டான்‌.

கடைக்காரன்‌ ஆச்சரியத்துடனும்‌ மகிழ்ச்சியுடனும்‌
உடன்பட்டான்‌. எவ்வளவு பணம்‌ வேண்டும்‌ என்று கேட்க
எனக்குப்‌ பணம்‌ வேண்டாம்‌ நீ வாகனத்தை ஓழுங்கு
செய்து இவ்விடத்தைவிட்ட்க்‌ கொண்டு சென்றாலே
போதும்‌ என்றான்‌.

அவ்வாறே அவன்‌ கல்லை எடூத்துக்‌ கொண்டூ
சென்றான்‌.

சில மாதங்கள்‌ கழித்து அவ்வூரின்‌ சந்தைக்கு மிக
மிக அழகான யேசுவின்‌ சிலை ஒன்று விற்பனைக்கு
வந்தது. அதனைக்‌ கேள்வியுற்ற தேநீர்க்‌ கடைக்‌
காரனும்‌ சந்தைக்குச்‌ சென்றான்‌. அச்சிலைக்காக ஏலம்‌
கூறப்பட்டூுக்‌ கொண்டிருந்தது.

சிலையைக்‌ கண்ட அவன்‌ சிலையின்‌ தெய்வீக
அழகில்‌ மயங்கினான்‌. அவனும்‌ சிலைக்கான ஏலத்தில்‌
பங்குகொண்டு தனது தொகையைக்‌ கூறினான்‌.

சிலையை விற்பனைக்குக்‌ கொண்டூ வந்தவன்‌
தேநீர்க்‌ கடைக்காரன்‌ கேட்ட விலைக்கு அவனிடம்‌
கொடுத்தான்‌.

சிலையைப்‌ பெற்றுக்‌ கொண்ட கடைக்காரன்‌ மேலும்‌
ஏலத்திற்கு விடாது எனக்குத்‌ தந்துள்ளீர்கள்‌, நன்றி
எனக்‌ கூறினான்‌.

சிற்பி புன்னகைத்தான்‌. மேலும்‌ கடைக்காரன்‌

119


Page 136பணர்பாடு - வேரும்‌, விழுதும்‌

“இச்சிலைக்கான மெழுகு போன்ற இந்த அற்புதக்கல்லை

எந்த மலையில்‌ இருந்து எடுத்தீர்கள்‌” என்று
கேட்டான்‌.

அதற்கு அச்சிலையை விற்கவந்தவன்‌ - இச்சிலைக்கான
கலலை உங்கள்‌ கடையின்‌ வாசலில்‌ இருந்துதானே
எடுத்துச்‌ சென்றேன்‌ அதுதான்‌ இது என்றான்‌.

ஆச்சரியத்துடன்‌ கடைக்காரன்‌ அச்சிலையை
நோக்கினான்‌. அக்கல்லா இந்த யேசுநாதர்‌? அவனால்‌
நம்பவே முடியவில்லை.

கடைக்காரன்‌ பார்வையில்‌ வெறும்‌ சுமையாக
இடையூறாகப்பட்ட கல்‌, இளைஞர்களின்‌ பார்வையில்‌
நலல இருக்கையாகத்‌ தோற்றமளித்தகல்‌, சிற்பியின்‌
கண்களில்‌ யேசுவின்‌ உருவத்தை உள்ளே காட்டி
நின்றது.

ஒரு பொருளைப்‌ பார்க்கும்‌ கோணத்தைப்‌ பொறுத்து
நமது சிந்தனையில்‌ அது தோற்றமளிக்கின்றது.
பெறுமதியைத்‌ தருகின்றது.

இதுவே “கலலைக்கண்டால்‌ நாயைக்‌ காணோம்‌
நாயைக்‌ கண்டால்‌ கல்லைக்காணோம்‌.”” என்ற முது
மொழியின்‌ பொருள்‌.

கல்லால்‌ செய்யப்பட்ட நாயின்‌ சிலையை அழகிய நாய்‌
என நோக்கில்‌ அது கல்‌ என எம்மனதில்‌ தோன்றாது,
மாறாக அந்த நாயின்‌ சிலையை கல்‌ என நோக்கில்‌
அச்சிலையின்‌ அழகோ, அது நாய்‌ என்றோ எம்மனதில்‌

120


Page 137பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
தோன்றாது.

இவ்வாறாக ஒரு பொருளோ ஒரு செயலோ பார்ப்பவரின்‌

கோணத்திற்‌ கேற்பத்‌ தோற்றம்‌ பெறும்‌. இதுவே
அவர்களின்‌ “சிந்தனைப்‌ பண்பாடு.”

சிந்தனை வேறுபாடு

ஓவ்வோர்‌ இனமும்‌ தன்‌ உந்துசக்திகளைப்‌
போக்கிக்கொள்ள தான்‌ வாழ்ந்துவரும்‌ இயற்கைச்‌
சூழலை உற்று நோக்கிய சிந்தனையும்‌,

தாம்‌ வாழ்ந்த சூழலவழி சமூகம்‌ பெற்றுக்கொண்ட
வாழ்வியலின்‌ பட்டறிவினைத்‌ துணையாகக்‌ கொண்ட
சிந்தனையும்‌,

இவற்றுக்கிடையிலான ஒரு ஒழுங்கைப்‌ பேணிக்கொள்ள
தம்‌ சமூகத்தால்‌ தோற்றுவிக்கப்பட்டுப்‌ போதிக்கப்பட்ட
மெய்யியலின்‌ (நெறியியலின்‌) தன்மைக்கேற்ற
சிந்தனையும்‌,

ஆகிய மூவகைச்‌ சிந்தனைகளும்‌ உலகில்‌ உள்ள
ஒவ்வோர்‌ இனத்திடையேயும்‌ அவ்‌ இனம்‌ நிலையாகக்‌
குடி கொண்ட இடங்களின்‌ இயற்கைச்‌ சூழலை
அடிப்படையாகக்‌ கொண்டூ வேறுபட்டுக்‌ காணப்பட்டன.

இச்சிந்தனைப்‌ பண்பாட்டின்‌ வேறுபாடே - அதன்வழி
பிறக்கும்‌ பண்பாட்டிற்கும்‌, பண்பாட்டின்‌ கூறுகளுக்கும்‌
அடிப்படையானதால்‌ அவைகளும்‌ இனத்துக்கு இனம்‌
வேறுபடும்‌.

121


Page 138பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இச்சிந்தனை வேறுபாடுகள்‌ அதாவது ஒவ்வோர்‌ இனமும்‌
சிந்திக்கும்‌ தன்மை அந்தந்த இனத்தின்‌ “சிந்தனைப்‌
பண்பாடூ: எனப்படும்‌.

சமூகப்‌ பண்பாடு

ஒரு சமூகமோ, இனமோ தன்‌ வாழ்வியலுக்கான
சிந்தனைபற்றிய முடிவினை எடுக்கும்போது, அதிற்‌
பல துறையினரும்‌, பலதரத்தினரும்‌, ஈடூபடுவதனாலும்‌,
அவ்வாறு ஈடுபடுவோர்‌ தூர இருந்து நோக்குவதாலும்‌;
இவ்வாறு நோக்கும்‌ சகல மனங்களின்‌ நின்றும்‌ பிறக்கும்‌
எண்ணங்களை நன்கு ஆய்வுசெய்து தடுமாற்றம்‌ இன்றி
சமூகமேம்பாட்டுக்கான சிந்தனைகளாக முன்‌ வைப்பர்‌.

இச்சிந்தனை முடிவுகள்‌ புலன்மனம்‌, இடைமனம்‌,
ஆழ்மனம்‌ ஆகியவற்றின்‌ எண்ணங்களை நன்கு
ஆராய்ந்ததாக இருக்கும்‌.

இம்முடிவுகள்‌ இனத்துக்கினம்‌ வேறுபட்டுக்‌ காணப்பட்ட
போதும்‌, அவை பிற இனங்களின்‌ பார்வையில்‌
சிறப்பாகத்‌ தோன்றவில்லை என்றாலும்‌ கூட, அவை
அந்த இனமக்களிடையே பொருளற்ற தன்மையில்‌
வைக்கப்படவில்லை என்பதை நாம்‌ விளங்கிக்‌ கொள்ள
வேண்டும்‌.

கால ஓட்டத்தில்‌ சிந்தனை வேறுபாட்டால்‌ கருத்து

மாற்றம்‌ பெற்று அவ்வினமே தேவையற்றதை மாற்றிக்‌
கொள்ளும்‌. அதற்கேற்ப உலகம்‌ சுருங்கி விட்டது.

122


Page 139பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
முதன்மையான பண்பாடு

மனமே சிந்தனையின்‌ வேறுபாட்டிற்கு அடிப்படையானது.
எனவே மனம்‌ தனது ஐம்பொறிகளின்‌ நுகர்ச்சியாலும்‌,
கல்வியாலும்‌, பட்டறிவாலும்‌, தான்வாழும்‌ சமூகத்தின்‌
மெய்யியல்‌ தந்துவங்களாலும்‌, நெறிமுறைகள்‌, விதிகள்‌,
போன்ற இன்னோரன்ன பிறவற்றாலும்‌ அறிவைப்‌ பெற்றுக்‌
கொண்டிருக்கும்‌.

இந்நிலையில்‌ மனதின்மேல்‌ புகுத்தப்படூம்‌ உந்து
சக்தியினால்‌ ஏற்படும்‌ தேவையை, விருப்பை
நிறைவேற்றிக்‌ கொள்ள மனம்‌ சிந்திக்கும்‌.
ஒவ்வொருவரும்‌ பெற்ற அறிவும்‌ பல்வேறுபட்டதாக;
பலதரத்தினதாக இருப்பதனால்‌ தன்மனதில்‌ ஏற்பட்ட
உந்துசக்தியின்‌ தேவையை, விருப்பை நிறைவேற்ற
தான்‌ பெற்ற அறிவை எவ்வளவு தூரம்‌ பகுத்தறிந்து
மனம்‌ பயன்‌ படூத்துகின்றதோ அதனைப்‌ பொறுத்தே
சிந்தனையும்‌ அதன்‌ தரமும்‌ இருக்கும்‌, வெளிப்படும்‌.

சமூகமாகச்‌ செயல்படும்போது, இவ்வாறு வெளிப்படும்‌
ஒவ்வொரு மனித சிந்தனையினதும்‌ கூட்டு விளைவாகவே
அந்த இனத்தின்‌, அச்சமூகத்தின்‌, சிந்தனை வெளிப்படும்‌.
அதுவே அந்த இனத்தின்‌ சிந்தனைப்‌ பண்பாடு. சிந்தனைப்‌
பண்பாடே முதன்மையான பண்பாட.

123


Page 140பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

செயலாக்கப்‌ பண்பாடு

 

பண்பாடூ
ம
ம ம ம
(சிந்தனை) (செயல்‌) (பொருள்‌)
சிந்தனைப்‌ செயலாக்கப்‌ பொருளாக்கப்‌
பண்பாடு பண்பாடு பண்பாடு

செயல்‌ - செயலாக்கப்பண்பாடூ

மனிதனிடத்தே உடல்வழி தோன்றும்‌ இயல்பான
உந்துசக்தியான முதல்‌ நிலையிலுள்ள “உயிரியல்‌
தேவை”.

உயிர்வழி தோன்றும்‌ இயல்பான உந்துசக்தியான
இரண்டாம்‌ நிலையிலுள்ள “உளவியல்தேவை”.

அறிவுவழி செயல்படும்‌ மனதில்தோன்றும்‌ இயல்பான
உந்துசக்தியான மூன்றாம்‌ நிலையில்‌ உள்ள
“சமுதாயத்தேவை” ஆகிய

மேற்கூறப்பட்ட மூன்று தேவைகளையும்‌ நிறைவேற்றும்‌
அடிப்படையிலேயே சிந்தனை தோன்றச்‌ “செயல்‌” வடிவம்‌
பெறும்‌. அதாவது வாழும்‌ வழி தோற்றம்‌ பெறும்‌.

இங்குச்‌ செயல்‌ என்பது ஒருவர்‌ செய்யும்‌ வேலையைக்‌
குறிப்ப தில்லை. தேவையை முன்னிட்டு ஒருவர்‌
மேற்கொள்ளும்‌ பணியின்‌ மூலம்‌ அத்தேவை
நிறைவேற்றப்படுமானால்‌, அதனை நிறைவேற்றிய
பணியே “செயல்‌” ஆகும்‌. அப்பணியை நிறைவேற்றச்‌

124


Page 141பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

செயற்பட்ட தன்மையே “செயலாக்கப்‌ பண்பாடாகும்‌.”

செயலாக்கப்பண்பாடு - உடல்சார்‌
உந்துசக்தி

இயல்பான உந்துசக்திகளை மொழிவழி இலக்கணத்தில்‌
உள்ள இடங்களான தன்மை, முன்னிலை, படர்க்கை
என்னும்‌ நிலைக்கு ஒப்பிடலாம்‌.

எடுத்துக்காட்டாக உடல்வழி உந்துசக்திகளான பசி,
நித்திரை, மலசலம்‌ கழிதல்‌, பால்‌ உணர்வு போன்ற
உயிரியல்‌ தேவைகள்‌ முதல்நிலையில்‌ உள்ள தனது
தேவைகளாக அமைந்தவை (இடம்‌ தன்மை).

அவற்றுள்‌ பால்‌ உணர்வை எடூத்துக்‌ கொள்வோம்‌.

பால்‌ உணர்வைப்‌ போக்கிக்‌ கொள்ள மனிதன்‌ ஆதியில்‌
வரன்முறையற்று புணர்ந்து கொண்டான்‌. அப்போது
கூட்ட அமைப்பே இருந்தது. குடும்ப அமைப்பு இருக்‌
கவில்லை.

கால ஓட்டத்தில்‌ ஏர்‌ ஆண்‌ பல பெண்களோடோ ஒரு
பெண்‌ பல ஆண்களோடோ கூடி வாழ்ந்த முறையைத்‌
தவிர்த்து குறிப்பிட்ட ஒருவரோடோ, சிலரோடோ வாழும்‌
நிலையை அடைந்து மேலும்‌ வளர்ச்சி பெற்று ஒரு
பெண்‌ குறிப்பிட்ட ஒரு ஆணோடூ வாழும்‌ நிலைக்குப்‌
பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.

இவ்வாழ்க்கை முறையால்‌ இறுக்கமான கு௫ம்ப
அமைப்புமுறை உருவானது


Page 142பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஆண்‌ பெண்‌ உறவில்‌ ஆரோக்கியம்‌ மலர்ந்தது,
சுகாதாரமான வாழ்வு உருவானது. குடும்ப
உறுப்பினர்களிடையே அன்பும்‌, பண்பும்‌, உணர்வுகளாக
மலர்ந்தன. நம்பிக்கையும்‌, பாதுகாப்பு உணர்வும்‌,
பகிர்ந்து கொள்ளும்‌ பண்பும்‌ மனிதமனங்களில்‌ வலுப்‌
பெற்றன.

ஓவ்வொரு சமூகமும்‌ ஆணும்‌ பெண்ணும்‌ இணை
வதற்கான பலதரப்பட்ட திருமண முறைகளை
உருவாக்கிக்‌ கொண்டனர்‌. இத்திருமணங்களை நடத்தி
வைப்பதற்கென அந்த இனம்‌ தான்‌ கொண்டுள்ள
நம்பிக்கைகள்‌, கொள்கைகள்‌ அடிப்படையில்‌
திருமணத்திற்கான நெறிமுறைகளை வகுத்தது.

அந்த நெறிமுறைகளைப்‌ பாதுகாக்கச்‌ “சட்டங்களை”
உருவாக்கிக்‌ கொண்டது. இவை எல்லாம்‌ செயலாக்கப்‌
பண்பாட்டின்‌ “அகவெளிப்பாடூகளாக”்‌ இருக்க

தமது நம்பிக்கைகள்‌ கொள்கைகள்‌ என்பவற்றுக்கேற்ப
வகுத்துக்‌ கொண்ட நெறிமுறைகளுக்கு அமைவாக
திருமணச்‌ “சடங்குகள்‌ நடத்தப்பட்டன.

நடத்தப்படும்‌ இச்சடங்குகள்‌ செயலாக்கப்‌ பண்பாட்டின்‌
“புறவெளிப்பாடாக்‌ தோற்றம்‌ பெற்றன. எடுத்துக்‌ காட்டாக
இன்றைய தமிழர்‌ (இந்து சமய) திருமணத்தின்போது
ஓமம்‌ வளர்த்தல்‌, கூறைச்சேலை, தாலிகட்டல்‌, மோதிரம்‌
போடல்‌, ஆலாத்தி எடுத்தல்‌ போன்ற இன்னோரன்ன
பிற.

சுருங்கக்கூறின்‌ “கருத்தியல்‌ நிலையில்‌ உள்ளவை
செயலாக்கப்‌ பண்பாட்டின்‌ அகக்கூறுகளாக

126


Page 143பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

நெறியியல்‌ ஆகவும்‌, பொருள்‌ நிலையிலுள்ளவை
செயலாக்கப்பணிபாட்டின்‌ புறக்கூறுகளாக பொருளாக்கப்‌
பண்பாடாகவும்‌ வகுக்கப்பட்டன.

செயலாக்கப்பண்பாடு - உயிர்சார்‌
உந்துசக்தி

அடூத்த எடுத்துக்காட்டாக உயிர்வழி தோன்றும்‌
உந்துசக்தியான இரண்டாம்‌ நிலையில்‌ உள்ள
உளவியல்‌ தேவைகளை நோக்கின்‌ இவைகள்‌ தன்‌
குடும்ப உறவின்வழி, தான்கொண்ட அன்பின்வழி,
உணர்வின்‌ வழி பிறந்த கடமைகளாக (இலக்கணவழி
முன்னிலை) அமைகின்றன.

எடூத்துக்காட்டாகத்‌ தன்‌ பிள்ளைகளையும்‌,
பெற்றோர்களையும்‌, மனைவியையும்‌ பாதுகாக்க,
அவர்களின்‌ தேவைகளை நிறைவேற்றிக்‌ கொள்ள
“பொருளீட்டல்‌” (பணம்‌ சம்பாதித்தல்‌) முக்கிய ஒரு
பணியாக, மனிதனின்‌ முக்கிய தேவைகளில்‌ ஒன்றாக
அமைகிறது.

ஒருவன்‌ எவ்வெவ்‌ வழிகளில்‌ எவ்வாறு பொருளீட்டல்‌
(பணத்தைச்‌ சம்பாதித்தல்‌) வேண்டும்‌ என அவனது
சமூகம்‌ பல நெறிமுறைகளை வகுத்துள்ளது. அவனது
தொழில்சார்ந்து பல விதிமுறைகளை உருவாக்கி
உள்ளது. இவை செயலாக்கப்‌ பண்பாட்டின்‌ அகக்கூறாக
இருக்கும்‌

அவன்‌ புரியும்‌ அத்தொழில்‌ வழி, அவன்‌ உழைப்பால்‌
பெற்றுக்கொண்ட பொருள்கள்‌, செயலாக்கப்‌ பண்பாட்டின்‌

127


Page 144பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

புறக்கூறாக அமைகின்றன. எடூத்துக்‌ காட்டாக அவன்‌
தன்குடும்பம்‌ வாழ என ஒரு வீட்டைக்‌ கட்டிக்‌ கொண்டால்‌
அவ்வீடு செயலாக்க பண்பாட்டின்‌ புறவெளிப்பாடான
பொருளாக்கப்‌ பண்பாடாக அமைகிறது.

செயலாக்கப்‌ பண்பாடு - அறிதல்சார்‌
உந்துசக்தி

அடுத்து மனது வழி தோன்றும்‌ உந்துசக்தியான
மூன்றாம்‌ நிலையில்‌ உள்ள சமுதாயத்‌ தேவையினை
(இலக்கணவழி படர்க்கை) எடூத்தால்‌, எடுத்துக்காட்டாக
சமூகம்‌ தான்‌ இறைவழிபாடூ செய்யவென ஒரு கோயிலை
அமைத்துக்‌ கொள்ள விரும்புகிறது.

இத்தேவையை நிறைவேற்றும்‌ நோக்கோடூ
செயற்படும்போது கோவிலை எப்படி? எவ்வாறு?
எங்கே? அமைத்துக்கொள்ள வேண்டும்‌, எவ்வாறு
வழிபாடு செய்யவேண்டும்‌, என்று சமூகம்‌ தான்‌
ஏற்கனவேகொண்டுள்ள நம்பிக்கைகள்‌, கொள்கைகள்‌
அடிப்படையில்‌ நெறிமுறைகளை வகுத்து வைத்‌
துள்ளது.

இந்து சமயத்தவர்‌ வேதம்‌, ஆகமம்‌ என்பவற்றை வகுத்து
வைத்துள்ளனர்‌. இவை செயலாக்கப்‌ பண்பாட்டின்‌ அக
வெளிப்பாடுகளாக அமைகின்றன.

கட்டப்பட்ட கோயில்களும்‌ நடத்தப்படும்‌ சடங்குகளும்‌

புறவெளிப்பாடாக, பொருளாக்கப்‌ பண்பாடாக
அமைகிறது.

128


Page 145பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

எனவே சமூகம்‌ தனது தேவைகளை நிறைவேற்றிக்‌
கொள்ளத்‌ தான்பெற்ற அறிவின்‌ வழி சிந்தித்து
செயல்படும்போது, அவற்றுக்கான நெறி முறையினை
உருவாக்கிக்‌ கொண்டு அதன்வழி செயற்பட்டூப்‌
பொருட்களை உருவாக்கும்‌.

தேவையை நிறைவேற்றிக்‌ கொள்ளும்‌ “வாழ்வு”
மட்டும்‌ பெரிதன்று. “வாழும்‌ வழியும்‌” பெரிதென
மனிதசமூகம்‌ உணர்ந்து கொண்டது.

எனவே செயற்படும்‌ முறைக்கென அதாவது வாழும்‌

முறைக்கான வழிவகைகள்‌ வகுக்கப்பட்டன.
அவை செயலாக்கப்‌ பண்பாட்டின்‌ அகக்கூறுகளாக
அகவெளிப்பாடுகளாக பரிணாமம்‌ பெற்றன.

படிமுறைவளர்ச்சி பெற்று நெறியியல்‌ கூறுகளாக
அகத்தே அமர்ந்து கொண்டன.

இந்நெறியியல்‌  கூறுகளுக்கு ஏற்பச்‌ செயற்பட்டு
பொருட்கள்‌ படைக்கப்பட்டன. அதாவது செயலாக்கப்‌
பண்பாட்டின்‌ புறவெளிப்பாடாக பொருட்கள்‌ தோற்றம்‌
பெற்றன.

 


Page 146இதம்‌ 6
பண்ப௱ட்டிண்‌ கோலம்‌

 

 

பண்பாடு
|
1 ] [
சிந்தனைப்‌ - செயலாக்கப்‌ -ு பொருளாக்கப்‌
பண்பாடூ பண்பாடூ பண்பாடு
ர: ம்‌
2 ச்சூ
ம்‌ பொருள்சார்‌ பொருள்சாரா
ட பண்பாடூ பண்பாடு
3
நெறியியல்‌
1 1] 1 8
குடிவழக்கு நெறிமுறைகள்‌ சட்டம்‌ விழுமியம்‌
(“வஷ) (கொள்கை
(வழக்கடிப்பாடு, நம்பிக்கை
குறியீடு, பழக்கம்‌ /
நடையுடை வழக்கம்‌)
பாவனை)

மேற்கூறப்பட்ட கோலத்தின்‌ (0௨4121) வடிவில்‌
பண்பாட்டின்‌ மிக முக்கியக்‌ கூறுகளைப்‌ பொருத்திக்‌
கொள்ளலாம்‌.

இக்கூறுகள்‌ ஒவ்வொன்றும்‌ பல கிளைக்கூறுகளைக்‌

கொண்டிருக்கும்‌. இக்கட்டமைப்பின்‌ சகல கூறுகளும்‌
மனம்‌ என்ற பூமியில்‌ உருவான சிந்தனை என்ற

130


Page 147பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

விதையின்‌ (௧௬) புறத்‌ தோற்றங்கள்‌ என்பதை நாம்‌
மறந்துவிடக்கூடாது.

பண்பாடு ஒரு விருட்சம்‌

பண்பாட்டின்‌ கோலத்தினையும்‌, கட்டமைப்பினையும்‌,
ஒரு பெருமரத்துடன்‌ ஒப்பிடலாம்‌. அப்பெருமரத்தைத்‌
தாங்கி நிற்கும்‌ பூமியாக “மனதையும்‌”

அம்மரத்தின்‌ வேர்களாக “சிந்தனையும்‌”; அடிமரமாகச்‌
“செயலும்‌”;

மரத்தின்‌ பெரும்‌ கிளைகளாகப்‌ பண்பாட்டின்‌ முக்கியக்‌
கூறுகளும்‌

பெரும்‌ கிளைகளில்‌ உள்ள பல சிறு கிளைகள்‌ போன்று,
ஒவ்வொரு முக்கியக்‌ கூறுகளின்‌ பிரிவுகளான பலப்பல
பண்பாட்டுக்‌ கூறுகளையும்‌ குறிப்பிடலாம்‌.

அக்கிளைகளில்‌ தொங்கும்‌ இலைகள்‌, பூக்கள்‌, காய்கள்‌
கனிகள்‌ போன்றே “பொருளாக்கப்‌ பண்பாடு உள்ளது.

எவ்வாறு இலைகள்‌, பூக்கள்‌, காய்கள்‌, கனிகள்‌
நறுமணத்தையும்‌, பயனையும்‌ கொடுத்து மனிதமனங்களில்‌
இடம்பெறுகின்றனவோ அதேபோன்று மனிதர்‌ மனங்களில்‌
தோற்றத்தைக்‌ கொடுத்து மணம்வீசி நிற்பது செயலால்‌
விளையும்‌ பொருளாக்கப்‌ பண்பாடே (நாகரிகமே).

செயற்பாடு

ஒரு சமூகத்தின்‌ செயற்பாடு அல்லது செயற்படும்முறை
அதாவது இயக்கம்‌, அவ்வியக்கத்தின்‌ வேகம்‌,
இயங்கியல்‌ என்பன அதன்‌ நெறியியல்‌ கூறுகளிலேயே

131


Page 148பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தங்கியுள்ளது.

ஒரு சமூகமோ, மனிதனோ தான்‌ கொண்டுள்ள
நெறியியலுக்கு அமைவாகச்‌ செயற்படூம்போது
இலகுவாகவும்‌, வேகமாகவும்‌ இயக்கம்‌ நடைபெறும்‌.

நெறியியலுக்கு முரணாகச்‌ செயற்பாடு அமையும்போது
நடுமனதாகிய மனச்சாட்சியின்‌ குறுக்கீட்டால்‌ இயக்க
வேகம்‌ தடைப்படும்‌. இவற்றை நன்கு விளங்கிக்கொள்ள
நெறியியலின்‌ முக்கிய கூறுகளாக குறிக்கப்பட்டுள்ள
குடிவழக்கு, நெறிமுறை, சட்டம்‌, விழுமியம்‌ என்பவற்றின்‌
தன்மைகளை நாம்‌ முதலில்‌ அறிந்திருத்தல்‌ வேண்டும்‌.

பணபாட்டினைப்‌ பற்றிய நுண்‌ அறிவினை ஒருவர்‌
பெறாதவரை, அதைப்‌ பற்றிய தெளிவான அறிவினையும்‌,
பார்வையையும்‌ கொண்டிருக்க மாட்டார்‌. அதனால்‌ அவர்‌
வாழ்வில்‌, சிந்தனையில்‌ சிக்கல்கள்‌ எழுவது இயல்பே.

நெறியியல்‌

ஒருவர்‌ எவ்வாறு வாழவேண்டும்‌, வாழ்வில்‌
ஒருவர்‌ எவற்றைச்‌ செய்ய வேண்டும்‌, எவற்றைச்‌
செய்யக்கூடாது, ஏன்‌ செய்யக்‌ கூடாது? போன்ற
விதிமுறைகள்‌ “நெறியியல்‌? என அழைக்கப்படும்‌.

இந்நெறியியல்‌ விதிமுறைகள்‌ - விழுமியங்களாக,
நம்பிக்கைகளாக, கொள்கைகளாக, சட்டங்களாக,
பழக்கங்களாக, வழக்கங்களாக, குடிவழக்குகளாக
மற்றும்‌ இன்னோரன்ன பல கூறுகளாகச்‌ சமூகத்தில்‌
நிலவி வருகின்றன.

132


Page 149பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
நெறிமுறைகள்‌

மக்களின்‌ நடத்தை முறைகளையும்‌, செயற்பாடுகளையும்‌
முறைப்படுத்தக்‌ கூடிய விதிகளே “நெறிமுறைகள்‌”.

இவற்றின்‌ முக்கிய கூறுகளாக மக்கள்‌ கொண்டுள்ள
கொள்கைகள்‌, நம்பிக்கைகள்‌, பழக்கங்கள்‌, வழக்கங்கள்‌
அமையும்‌. சமூகம்‌ ஒழுங்காக, இணக்கமாகச்‌
செயற்படவும்‌, தனிமனிதர்கள்‌ ஒழுங்காக வாழவும்‌ நெறி
முறைகள்‌ வழிவகுக்கின்றன.இவை சமுதாயத்தைக்‌
கட்டுப்பாடாக இயங்க வைக்கின்றன.

நெறிமுறைகள்‌ ஒவ்வோர்‌ இனத்திடையேயும்‌,
சமூகத்திடையேயும்‌ அவை கொண்டூள்ள பழக்கங்கள்‌,
வழக்கங்கள்‌, கொள்கைகள்‌, நம்பிக்கைகளுக்கு ஏற்ப
மாறுபடும்‌; வேறுபடும்‌.

எடூத்துக்காட்டாகத்‌ திருமண உறவில்‌ - தமிழர்‌
“ஒருவனுக்கு ஒருத்தி” என்னும்‌ கொள்கையை
உடையவர்கள்‌. ஆனால்‌ முஸ்லீம்‌ சமூகத்தைச்‌

சேர்ந்தவர்கள்‌ ஒரு ஆண்‌ நான்கு பெண்களை
மணக்கலாம்‌ என்ற கொள்கையை உடையவர்கள்‌.

ஒவ்வோர்‌ இனத்தின்‌ பண்பாடும்‌ வாழும்சூழலுக்கு
ஏற்பப்‌ பொருள்‌ பொதிந்த தாகவே தோன்றியது. என்ற
அடிப்படையில்‌ ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு பார்ப்பது,
உயர்வு தாழ்வினைக்‌ கற்பிப்பது மிகத்தவறானது.
இருப்பினும்‌ பண்பாட்டின்‌ கூறுகளைத்‌ தெளிவாகப்‌
புரிந்து கொள்ளும்‌ நோக்குடனேயே இவை இந்நூலில்‌
ஒப்பிட்டுப்‌ பார்க்கப்‌ படுகின்றன.

133


Page 150பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
நம்பிக்கை

மனிதன்‌ தான்‌ வாழும்‌ இவ்வுலகைப்‌ பற்றியும்‌,
ஞாயிறும்‌ அதன்‌ கோள்களையும்‌ கொண்ட இவ்‌
அகிலத்தைப்பற்றியும்‌,

ஐம்பூதங்கள்‌ பற்றியும்‌, இவற்றை எல்லாம்‌ இயக்கும்‌
சக்தி பற்றியும்‌,

மேற்கூறிய அனைத்தும்‌ மனிதவாழ்வில்‌ எவ்வாறு
தொடர்புபட்டூள்ளன, எவ்வாறு எமது வாழ்வை
உயர்த்தவோ தாழ்த்தவோ கூடியன என்பது பற்றிய ஒரு
எண்ணத்தை மனதில்‌ கொண்டுள்ளான்‌.

சுருங்கக்‌ கூறின்‌ உலகில்‌ உள்ள ஒவ்வொரு பொருளும்‌
மனித வாழ்வியலில்‌ எத்தகைய தொடர்பைத்‌,
தாக்கத்தை ஏற்படுத்தக்‌ கூடியது என்று, சமூகமோ
மனிதனோ கொண்ட எண்ணத்தின்‌ அடிப்படையில்‌
மனதில்‌ பதிந்துள்ள கருத்தே அவர்களின்‌
“நம்பிக்கையாகும்‌.

இந்நம்பிக்கைகள்‌ - மரபுவழியாலோ, கல்வி வழியாலோ,
பட்டறிவின்‌ வாயிலாகவோ பெற்ற அறிவின்‌ அடிப்படையில்‌
மனதில்‌ உருவான கருத்து ஆகும்‌.

அறிவு, ஆசை என்பவற்றால்‌ எண்ணங்கள்‌
உதயமாகும்போது எது நல்ல எண்ணம்‌ எது கெட்ட
எண்ணம்‌ என்று மனது பிரித்துப்‌ பார்க்கு முன்னரே
அவை அப்படியே மனதிற்‌ சென்று பதிந்துவிடுகின்றன.

எனவே வாழ்வியலில்‌ நம்பிக்கைகள்‌ அனைத்தும்‌
உயர்ந்ததாக, மனித வாழ்க்கையை மேம்படூத்தக்‌

134

 


Page 151 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கூடியதாக இருக்வில்லை.

ஒவ்வோர்‌ இனமும்‌ மேற்கூறிய ஒவ்வொன்றைப்‌ பற்றியும்‌
ஒரேவகையான நம்பிக்கையை கொண்டிராது, பல்வேறு
வகைப்பட்ட நம்பிக்கைகளைக்‌ கொண்டுள்ளது. இவற்றுள்‌
ஒரு பகுதி மூட நம்பிக்கைகளாகவோ அல்லது இன்றைய
உலக நடைமுறைக்கு ஏற்புடையவை அற்றதாகவோ,
தன்னையோ தன்‌ இனத்தையோ மேம்படுத்தாதவை
ஆகவோ இருப்பது இயல்பு.

எனவே உலகில்‌ உள்ள இனங்கள்யாவும்‌ தாம்‌
கொண்டூள்ள நம்பிக்கைகள்‌ பலவற்றையும்‌ தன்‌
வாழ்வியல்‌ ஓட்டத்தோடூ மாற்றி வந்துள்ளன.

எடூத்துக்காட்டாக என்‌ வாழ்வில்‌ ஒரு சம்பவம்‌.
எனக்கு நான்கு வயதாக இருக்கும்போதே என்‌ தந்‌ைத
இறந்துவிட்டார்‌. என்‌ தாய்‌ ஒரு “விதவை”

விதவைகள்‌ நற்காரியங்களை முன்நின்று நடத்தக்‌
கூடாது என்பது உள்பட விதவைகள்‌ பற்றிய பல்வேறு
நம்பிக்கைகளைத்‌ தமிழ்ச்‌ சமூகம்‌ கொண்டூ இருந்தது.
என்‌ திருமணத்தின்போது திருமணம்‌ நடைபெறும்‌
இடத்திற்கு என்‌ தாயார்‌ கட்டாயம்‌ வரல்‌ வேண்டும்‌ என
வற்புறுத்திக்‌ கூறியிருந்தேன்‌.

என்னை மணமகனாக அழைத்துச்‌ செல்லும்போது
என்னோடு வரும்படி அம்மாவை அழைத்தேன்‌. தான்‌
வேறு வாகனத்தில்‌ வருவதாகக்‌ கூறியவர்‌ திருமணத்திற்கு
வரவேயில்லை. பின்னர்‌, ஏன்‌ வரவில்லை என நான்‌
கேட்ட போது சிரிப்புடன்‌ எவ்விதப்‌ பதிலும்‌ எனக்குச்‌

135


Page 152பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

சொல்லவில்லை.

தான்‌ விதவை; திருமணத்தின்‌ போது முன்நின்றால்‌
தன்பிள்ளையின்‌ வாழ்வு நன்கு அமையாது என்ற
நம்பிக்கை அவர்மனதில்‌ ஆழப்‌ பதிந்திருக்கலாம்‌.
அலலது தான்‌ போய்‌ முன்நின்றால்‌ மற்றையவர்கள்‌
என்ன கூறுவார்களோ என்ற தாழ்வுணர்ச்சியாகவும்‌
இருந்திருக்கலாம்‌.

எது என்பதை நான்‌ அறியேன்‌. நான்‌ நன்கு வாழவேண்டும்‌

என்று என்‌ தாய்‌ முழுமனதோடூ வாழ்த்தியிருப்பார்‌
அலலவா?

விதவையை ஒதுக்குவது மூடநம்பிக்கை என்று கண்டு
கொண்ட தமிழினம்‌ இன்று விதவைகள்‌ பற்றிய
நம்பிக்கையை மாற்றிவிட்டது. என்‌ அண்ணா ஒருவர்‌
இறந்துவிட்டார்‌. என்‌ அண்ணியே முன்னின்று தன்‌
பிள்ளைகளுக்குத்‌ திருமணம்‌ செய்து வைத்தார்‌.

இருபத்தைந்து வருட கால ஓட்டத்தில்‌ - பலகாலமாக
எம்மினத்தின்‌ பெரியோர்களால்‌ இது மூடநம்பிக்கை எனப்‌
பல வழிகளிலும்‌ கருத்துப்‌ பரிமாற்றம்‌ செய்யப்பட்டமை,
இம்‌ மூடநம்பிக்கையை மாற்றிக்கொள்ள வழி
வகுத்தது.

எனவே நம்பிக்கைகள்‌ சமூக, அறிவியல்‌ வளர்ச்சிக்கேற்ப
பரிணாம வளர்ச்சிபெற்றுக்‌ கொள்கைகள்‌, வழக்கங்கள்‌
என்பவற்றைவிட இலகுவில்‌ மாறக்கூடியவை.

136

 


Page 153 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
கொள்கைகள்‌

மனித வாழ்வோடு தொடர்புடைய அல்லது
தொடர்பற்ற அகிலத்தில்‌ உள்ள சகல பொருட்களின்‌
இயங்கியலைப்‌ பற்றியும்‌, உலகில்‌ உள்ள
உயிரினங்களின்‌ உணர்வுகள்‌, உறவுகள்‌, அவற்றின்‌
நன்மை தீமைகள்‌ பற்றியும்‌, ஒவ்வொரு சமூகத்தின்‌
வழிகாட்டிகளும்‌, அறிஞர்களும்‌ தாம்‌ வாழ்ந்த
சூழலில்‌, அக்காலகட்டத்தில்‌ கொண்டுள்ள முடிவான
கோட்பாடுகளே அவர்களின்‌ “கொள்கைகள்‌? ஆகும்‌.

எடூத்துக்காட்டாக உயிரினங்கள்‌ ஓர்‌ அறிவு முதல்‌ ஆறு
அறிவுவரை உடையன என்றும்‌, அவைகளின்‌ வளர்ச்சி
ஒழுங்கு முறைகளைப்‌ பற்றியும்‌ தொல்காப்பியர்‌
கோட்பாட்டை தொடக்கத்தில்‌ பார்த்தோம்‌. இக்கொள்கை
இன்றுவரை ஏற்புடையதாகவே உள்ளது.

அதேவேளை மனிதகுல மேம்பாட்டுக்கு ஏற்புடையதல்லாத
ஆரியர்களால்‌ புகுத்தப்பட்ட “மனுநீதி கோட்பாடுகள்‌
பல, தமிழ்ச்சமூகத்தில்‌ நிலவிவந்ததை, வருவதைக்‌
காணக்கூடியதாகவும்‌ உள்ளது. எடூத்துக்‌ காட்டாக

மனிதனைப்‌ பிறப்பு வழியில்‌ பிராமணன்‌, சத்திரியன்‌,
வைசிகன்‌, சூத்திரன்‌ என்று நான்கு பெரும்‌ சாதிகளாகப்‌
பிரித்துக்‌ கூறுபோட்டது.

மேலும்‌ இப்பிரிவு நிலைக்கவும்‌ அடையாளப்படுத்திக்‌

கொள்ளவும்‌. பிறக்கும்‌ குழந்தைகளுக்கு அச்சாதிக்குரிய
பெயர்களையே சூட்ட வேண்டும்‌ என்றும்‌ கூறியுள்ளது.

137


Page 154பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌

இக்கொள்கையை ஏற்ற தமிழர்‌ பிள்ளைக்குப்‌ பெயர்‌
சூட்டும்‌ ஓர்‌ நிகழ்வினைச்‌, சடங்கினை, நடத்தி
வந்துள்ளனர்‌. இச்சடங்கிற்குப்‌ பிராமணரை அழைத்து
நடத்தினர்‌.

மனுந்திப்படி,
“பிராமணனுக்கு மங்கலத்தையும்‌, சத்திரியனுக்குப்‌
பலத்தையும்‌, வைசிகனுக்குப்‌ பொருளையும்‌,

சூத்திரனுக்குத்‌ தாழ்வையும்‌ காட்டூகிறதான பெயரை
இடவேண்டியது”

மனுநீதி - அத்தியாயம்‌ - 2, சுலோகம்‌ 31

“ பிராமணனுக்குச்‌ “சர்மா” என்பதையும்‌, சத்திரியனுக்கு
“வர்மா'என்பதையும்‌, வைசியனுக்குப்‌ “பூதி” என்பதையும்‌
சூத்திரனுக்கு “தாசன்‌” என்பதையும்‌ தொடர்‌ பெயராக
இடவேண்டியது”

மனுநீதி - அத்தியாயம்‌-2, சுலோகம்‌ 32.

மனுந்தியின்‌ இக்கோட்பாட்டைத்‌ தமிழர்‌ குறிப்பாகத்‌
தமிழ்நாட்டுத்‌ தமிழர்‌ கொள்கைகளாகக்‌ கொண்டூ
அண்மைக்காலம்வரை ஏற்று நடந்துள்ளனர்‌.

தன்னையே இழிவுபடூத்தவும்‌, தாழ்த்தவும்‌ கூடிய இக்‌
கொள்கைகளை முற்றிலும்‌ நீக்கி, தன்‌ இனத்தை
மேம்படுத்தும்‌ பொருட்டு இவற்றைக்‌ கைவிடல்‌
வேண்டூம்‌. ஆனால்‌ இன்றுவரை தமிழினம்‌ இத்தகைய
கொள்கைகளை முழுமையாகக்‌ கைவிடாது பற்றி
நிற்பது ஆச்சரியப்படக்‌ கூடியதே.

138


Page 155பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இவ்வாறு தமிழினம்‌ உயர்வானதும்‌ தாழ்ந்ததுமான
கொள்கைகள்‌ பலவற்றை இன்று கொண்டூள்ளது.
மனுநீதியின்‌ மேற்கூறப்பட்ட கொள்கைக்கு எதிராகத்‌
திருக்குறள்‌ கூறுவது வருமாறு.

“பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்‌ சிறப்பொவ்வா
செய்தொழில்‌ வேற்றுமை யான்‌”
- குறள்‌: 972

பிறப்பால்‌ எல்லா உயிர்களும்‌ ஒன்றே பிறப்புக்‌
காரணமாக வேற்றுமை உடையதன்று, ஒரு மனிதன்‌
மேற்கொண்டுள்ள செயல்‌ அல்லது தொழில்‌ காரணமாக
சமூகத்தில்‌ மதிப்பான நிலையை அவன்‌ அடையக்கூடும்‌
- என்ற வள்ளுவர்‌ கோட்பாடூ - அவர்‌ கூறி இரண்டாயிரம்‌
ஆண்டூகள்‌ ஆகியும்‌, தமிழர்‌ எல்லோரும்‌ இன்று வரை
அதனைத்‌ தம்‌ “கொள்கை:யாக ஏற்கவில்லை என்பதே
உண்மை நிலை.

மேற்கூறப்பட்ட மனுநீதி, திருவள்ளுவர்‌ ஆகியோரது
கோட்பாடூகளிலிருந்து நாம்‌ ஒன்றைப்‌ புரிந்து
கொள்ளலாம்‌.

எப்போதும்‌ ஓர்‌ இனம்‌ தான்‌ பின்பற்றும்‌ கொள்கைகள்‌
தன்‌ இனத்தினரால்‌ அவர்கள்‌ வாழும்‌ சூழலுக்கு ஏற்ப
வகுக்கப்பட்டவையாக அமையின்‌; அக்கொள்கைகள்‌
அவ்வினத்திற்கு உகந்ததாக அமையும்‌.

பிற இனத்தினரால்‌ ஓர்‌ இனத்தின்மேல்‌ திணிக்கப்படும்‌
அல்லது புகுத்தப்படூம்‌ அல்லது பிற இனத்தின்‌ வழி

நுழைந்து கொண்ட கொள்கைகள்‌ பெரும்பாலும்‌ அந்த

139


Page 156பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இனத்தை மேம்படூத்தமாட்டா.

ஆனால்‌ பிற இனத்திடையே உள்ள சிறந்த
கொள்கைகளை ஓர்‌ இனம்‌ அறிந்து தான்‌ வாழும்‌
சூழலுக்கு ஏற்ப, தானே வடிவமைத்து ஏற்றுக்‌ கொள்வதே
சிறந்ததாக, உகந்ததாக அமையும்‌.

ஒவ்வோர்‌ இனமும்‌ கொண்டூள்ள கொள்கைகள்‌
அவ்வினத்தின்‌ சிந்தனைப்‌ பண்பாட்டிற்கு ஏற்ப மாறுபட்டே
காணப்படும்‌. எண்ணங்களைப்‌ போன்றே கொள்கைகள்‌
எல்லாம்‌ உயர்ந்தனவாகவோ, சிறந்தனவாகவோ, அன்றி
உண்மையானதாகவோ இருக்க வாய்ப்பில்லை.

இருப்பினும்‌ நம்பிக்கையைப்‌ போன்று அல்லாது - ஓர்‌
அளவு அக்காலத்தோடூ ஒட்டிய அறிவியல்‌ அடிப்படையில்‌
கொள்கை வகுக்கப்‌ பட்டதாகவே இருப்பதால்‌ இவை
சமூகத்தின்‌ வாழ்வியலில்‌ கூடிய வரை கடைப்பிடிக்கப்‌
படுவனவாக, சமூகத்தின்‌ கட்டுக்கோப்பான நடத்தைக்கு
வழிகோலுவனவாக அமைகின்றன.

ஓர்‌ இனம்‌ கொண்டுள்ள கோட்பாடுகள்‌ அந்த இனத்தின்‌
முதிர்ச்சியை எடுத்துக்‌ காட்டுவனவாக இருக்கும்‌. தமிழர்‌
கருத்தியல்‌ நிலையில்‌ நூற்றுக்‌ கணக்கான உயர்ந்த
கோட்பாடுகளைக்‌ கொண்டுள்ளனர்‌ எடுத்துக்‌ காட்டாக

“யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌

நன்றும்‌ தீதும்‌ பிறர்‌ தர வாரா” -புறம்‌
“யாதானும்‌ நாடாமால்‌ ஊராமால்‌” -குறள்‌

“என்‌ கடன்‌ பணி செய்து கிடப்பதே”

“மானம்‌ என்றால்‌ உயிரையும்‌ கொடுூத்துக்‌ காப்பாற்றும்‌ வேட்கை”
“மனத்தூய்மை, விடாது முயலுதல்‌ - என்னும்‌ நோக்கு”

140


Page 157பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

“உள்ளுவதெல்லாம்‌ உயர்வுள்ளல்‌ - என்னும்‌ சிந்தனை”
“தான்‌ துன்புற்றாலும்‌ பிறர்‌ துன்புறக்‌ கூடாது, தான்‌ பெற்ற இன்பம்‌
பெறுக இவ்வையகமே - என்னும்‌ இரக்க உணர்வு

இவ்வாறாக அகவாழ்வை. மன எண்ணங்களைச்‌
சீர்‌ செய்யக்கூடிய வகையில்‌ இயற்கை அன்பறம்‌,
ஆர்வஒழுக்கம்‌, வாழ்க்கைப்‌ பண்பு, மெய்‌ உணர்வு,
செயலறம்‌ போன்ற பல கோணங்களிலும்‌ கோட்பாடுகளைத்‌
தமிழர்‌ கொண்டிருந்தனர்‌.

இவற்றைக்‌ கொள்கைகளாக எவ்வளவு சதவீத மக்கள்‌
கடைப்பிடிக்கின்றனர்‌ என்பது ஆய்வுக்குரிய மறுபக்கம்‌ '

பழக்கம்‌ வழக்கம்‌

மனிதன்‌ உண்பது, உடுப்பது, உறங்குவது, தொழில்‌
செய்வது உட்பட்ட தனது இயல்பான உந்துசக்திகளைப்‌
போக்கிக்‌ கொள்ள முயற்சிக்கும்‌ எல்லா நடைமுறைகளும்‌
பழக்கம்‌ (ஸ்ம வழக்கம்‌ (0050) எனப்படும்‌
எடூத்துக்காட்டாக பல்‌ விளக்கி முகம்‌ கழுவல்‌, நீராடல்‌,
உணவு உண்ணல்‌, வழிபடுதல்‌, பணிகளைச்‌ செய்தல்‌
போன்றவை அன்றாடப்‌ பழக்கங்கள்‌ ஆகும்‌.

இப்பழக்கங்கள்‌ இனத்துக்கினம்‌ வேறுபட்டிருப்பதை
நாம்‌ அறிவோம்‌. நாம்‌ கற்றுக்கொண்ட இப்பழக்கங்கள்‌
இடத்துக்கிடம்‌, இனத்துக்கினம்‌, நாட்டுக்கு நாடூ
வேறுபட்டுக்‌ காணப்படும்‌.

மரபுவழியாக நாம்‌ பின்பற்றி வரும்‌ சில பழக்கங்களை
எமது புதிய சூழலுக்கும்‌ அறிவியல்‌ வளர்ச்சிக்கும்‌ ஏற்ப

மாற்றிக்‌ கொள்ளல்‌ நன்று. எடூத்துக்காட்டாக, எமது

141


Page 158பண்பாடு - வேரும்‌, வீழுதும்‌

உபயோகத்திற்குப்‌ பின்னர்‌ உள்ள கழிவுப்‌ பொருட்களை
சிலர்‌ அவற்றிற்கு உரிய இடங்களில்‌ போடுவதன்‌
மூலம்‌ சுற்றுச்‌ சூழலைச்‌ சுத்தமாக வைத்திருக்க
முடியும்‌. ஆனால்‌ சிலர்‌ தெரு ஓரங்களிலும்‌ மற்றும்‌
பொது இடங்களிலும்‌ அவற்றைப்‌ போட்டு கூழலை
அசுத்தப்படுத்தி விடுகின்றனர்‌ இப்பழக்கத்தை மாற்ற
வேண்டாமா?

இந்துக்‌ கோயில்களில்‌ பிராமண குலத்தில்‌ பிறந்த
ஒருவரே பூசகராக இருப்பர்‌. என்னும்‌ பழக்கத்தை
நெடூங்காலமாகக்‌ கொண்டுள்ளோம்‌.

அவர்‌ எத்தகைய தகைமை வாய்ந்தவர்‌ என்பதை
எவரும்‌ ஆராயத்‌ துணிய மாட்டார்கள்‌. அவருடைய
கல்வி, பண்பு, சமூகஈடூபாடூ என்பன சீர்தூக்கிப்‌ பார்க்கப்‌
படுவதில்லை மனுநீதியால்‌ புகுத்தப்பட்ட இப்பழக்கத்தைப்‌
பன்னெடுங்காலமாக நாம்‌ கொண்டுள்ளோம்‌.

இவ்வாறு பன்நெடூங்காலமாக பின்பற்றப்படும்‌ பழக்கங்கள்‌
ஒரு சமூகத்தின்‌ அங்கீகாரத்தைப்‌ பெற்ற தொன்றாகி
“வழக்கம்‌” ஆகின்றது. வழக்கம்‌ பலகாலமமாக
அச்சமூகத்தில்‌ இருப்பதால்‌ அது ஆட்சியாளர்களின்‌
அங்ககாரத்தைப்‌ பெற்றிருக்கும்‌. அத்துடன்‌ சில
வழக்கங்கள்‌ அரச சட்ட அங்கீகாரத்தை பெற்றுவிடும்‌.

ஒரு சமூகத்தின்‌ மேம்பாட்டுக்கு இடையூறாக இருக்கும்‌
அத்தகைய ஒரு வழக்கத்தை மாற்ற முற்படும்போது
அச்சமூகத்தில்‌ இருந்து பெரும்‌ எதிர்ப்புக்‌ கிளம்பும்‌.
அது சட்டவிரோதமான செயலாகக்‌ கணிக்கப்படும்‌.
மேலும்‌ அரச விரோதச்‌ செயலாக்கச்‌ சட்டத்துறையால்‌

142

 


Page 159பண்பாட - வேரும்‌, விழுதும்‌

பார்க்கப்படும்‌.

இம்மாற்றத்திற்குக்‌ குறுக்கே மதக்கட்டளைகள்‌,
பெரியோர்‌ கோட்பாடுகள்‌ எழுந்து நிற்கும்‌ இம்மாற்றத்தை
மேற்கொள்பவர்‌ புரட்சியாளராகச்‌ சமூகத்தால்‌
கணிக்கப்பட்டு ஒதுக்கப்படூவார்‌. ப

அவர்‌ துணிந்து நின்று வெற்றி பெற்று, அவ்வழக்கத்தை
மாற்றி அம்மாற்றத்தால்‌ சமூகம்‌ வளர்ச்சி பெற்றால்‌,
அதன்‌ நிலை மேம்பட்டால்‌ அதன்பின்பு அவரை அதே
சமூகம்‌ “புரட்சியாளனாக? “சிந்தனை யாளனாக”
வரலாற்றில்‌ ஏற்றுக்கொள்ளும்‌. எடூத்துக்‌ காட்டாக
பெரியார்‌ ஈ.வே.ரா அவர்களைக்‌ கூறலாம்‌.

இன்றுவரை சைவ சமயத்தவர்கள்‌ பிராமண குலத்தில்‌
பிறந்தவரையே சமய குருவாகவும்‌, சமஸ்கிருதத்தையே
வழிபாட்டு மொழியாகவும்‌ கொண்டுள்ளனர்‌. இதுபற்றிப்‌
பலகாலம்‌ பல அறிஞர்கள்‌ கூறிவந்தபோதும்‌ தமிழ்ச்‌
சமூகம்‌ இவ்வழக்கத்தை மாற்றிக்‌ கொண்டுள்ளதா?

சில ஆண்டுகளுக்கு முன்வரை சில சாதியினர்‌
கோயிலுக்கு வெளியில்‌ நின்று வழிபடும்‌ வழக்கத்தினை
கொண்டிருந்தனர்‌.

தமிழ்‌ இனத்துக்கே பெரும்‌ இழுக்கான, தமிழ்‌ இனத்தை
ஒன்றுபட வைக்காது பிரித்துக்‌ கூறுபோடும்‌ இச்சாதியக்‌
கொள்கையில்‌, அவர்கள்‌ வழக்கத்தில்‌ - இன்று
மாற்றத்தை ஏற்றுக்‌ கொண்டூள்ளது.

இவ்வாறாக ஓர்‌ இனத்தின்‌ மேம்பாட்டூக்குக்‌ குறுக்கே
நிற்கும்‌, தடையாக இருக்கும்‌ நெறிமுறைகளான

143


Page 160பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

நம்பிக்கை, கொள்கை, பழக்கம்‌, வழக்கம்‌ என்பவற்றை
அந்தந்த இனங்கள்‌ கண்டறிந்து மாற்றிக்கொள்வதற்கான
பரப்புரைகளில்‌ தொடர்ந்து ஈடுபடுவதால்‌ கால ஓட்டத்தில்‌
அவ்வினம்‌ தான்‌ அடையக்கூடிய நன்மையையும்‌
அதனால்‌ ஏற்படும்‌ மேம்பாட்டையும்‌ கவனத்தில்‌ எடுத்து,
அம்மாற்றத்தை உள்வாங்கிக்‌ கொள்ளும்‌.

இவ்வாறாக ஒவ்வொரு கூறும்‌ ஆயிரக்கணக்கான
நெறிமுறைகளைக்‌ கொண்டுள்ளன. அவற்றை விரிவாக
இப்போது நோக்காது பண்பாடூ என்பதன்‌ முழுமையான
கட்டுமானத்தை, கோலத்தை முதலில்‌ விளங்கிக்‌
கொள்வதே எம்‌ நோக்கம்‌. பண்பாட்டின்‌ கூறுகளை
விளங்கிக்‌ கொள்வதற்காகவே தமிழர்‌ பண்பாட்டில்‌ உள்ள
சில எடூத்துக்‌ காட்டுகள்‌ இங்கே தரப்படுகின்றன.

குடிவழக்கு([-௦11/8/௮)

அடுத்ததாக நெறியியலின்‌ முக்கிய கூறுகளில்‌ ஒன்றான
குடிவழக்கை எடூத்துக்‌ கொள்வோம்‌. ஒரு சமூகத்தில்‌
அனைவரிடமும்‌ காணப்படும்‌ பொதுவான நடத்தை
முறைகள்‌ “குடிவழக்கு' எனப்படும்‌.

இது மக்களிடமிருந்து இயல்பாகச்‌ சிந்திக்காது
வெளிப்படும்‌. இவை மரபு வழியாக ஒவ்வொரு மனிதனின்‌
மனதிலும்‌ படிந்திருக்கும்‌.

எடுத்துக்காட்டாக தமிழ்‌ இனத்தில்‌ ஒருவரைக்‌ கண்டதும்‌
கைகூப்பி வணக்கம்‌ செலுத்துதல்‌, ஆசிரியரைப்‌
பெயர்‌ சொல்லி அழைக்காமை, பாதணியுடன்‌ இந்துக்‌
கோயில்களுக்குள்‌ செல்லாமை, பெண்கள்‌ மாதவிலக்குக்‌

144


Page 161பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

காலத்தில்‌ கோயிலுக்குப்‌ போகாமை, திருமணமான
பெண்கள்‌ குங்குமப்‌ பொட்டணிதல்‌ போன்றவற்றைக்‌
கூறலாம்‌.

எமது சமூகத்தில்‌ உள்ள பலரும்‌ எடுூத்துக்காட்டாக
வைத்தியர்‌, ஆசிரியர்‌, கணவன்‌, மனைவி, பெற்றோர்‌,
பிள்ளைகள்‌ போன்ற ஒவ்வொருவரதும்‌ செயற்பாடுகள்‌
“கடமை” என்னும்‌ பண்பால்‌ இனத்துக்கினம்‌
மரபுவழியாகக்‌ கடைப்பிடிக்கப்‌ பட்டு வருதலையும்‌
குறிப்பிடலாம்‌.

பெரும்பாலான குடிவழக்குகள்‌ அந்தந்த இனத்துக்கே
உரிய ஓஒழுக்கங்களாகின்றன. குடிவழக்கின்‌ முக்கிய
கூறுகளாக வழக்கடிப்பாடூ”, “குறியீடு”, “நடையுடை
பாவனை” என்பவற்றைக்‌ குறிப்பிடலாம்‌.

வழக்கடிப்பாடு

ஒருமனிதரைப்பற்றிய கணிப்பீட்டை இன்னொருவருக்கு
உடனே கொடுக்கக்‌ கூடிய நடத்தைப்‌ பண்புகள்‌.
“வழக்கடிப்பாடு” எனலாம்‌. இங்கு நடத்தைப்‌ பண்புகள்‌
என்று குறிப்பிடும்போது அவை “செயல்‌ “சொல்‌
இரண்டையும்‌ குறிக்கும்‌.

சுருக்கமாகக்‌ கூறின்‌ வழக்கடிப்பாடுூ என்பது தொன்று

தொட்டு வரும்‌ பயிற்சி ஆகும்‌.

எடூத்துக்‌ காட்டாக ஒருவர்‌ பொதுவான பேருந்தில்‌
௫06) பயணிக்கும்போது வயதானவருக்கு எழுந்து
தனது இருக்கையைக்‌ கொடுத்தல்‌, உடற்குறைபாடு

145


Page 162பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

- உள்ளவர்‌ ஒரு செயலைச்‌ செய்யக்‌ சிரமப்‌ படும்போது
அவருக்கு உதவுதல்‌, ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி
மருத்துவமனை, பாடசாலை போன்ற பொதுமக்களுக்கு
பணியாற்றும்‌ நிறுவனங்களில்‌ தொண்டராகப்‌
பணியாற்றுதல்‌ போன்ற செயல்களைக்‌ குறிப்பிடலாம்‌.

எந்த நெருக்கடியான சூழலிலும்‌ மற்றவர்களுடன்‌
இனிமையாகப்‌ பேசுதல்‌, சில இனங்கள்‌ எச்சூழலில்‌
எத்தகைய சொற்களைப்‌ பாவிக்க வேண்டும்‌
எனப்‌ பண்பாட்டு அடிப்படையில்‌ வழக்கமாக்கிக்‌
கொண்டூள்ளனர்‌. இச்சொற்கள்‌ அவர்களுடைய ஆழ்‌
மனதில்‌ வேர்‌ ஊன்றி நிற்கும்‌ என்பதை நாம்‌ தெரிந்து
கொள்ளல்‌ வேண்டும்‌.

எடுத்துக்காட்டாக ஒரு வீட்டில்‌ நன்மையான நிகழ்ச்சி
நடைபெற்றால்‌ அதற்கு வந்தவர்‌ திரும்பிப்‌ போகும்போது
“நான்‌ மீண்டும்‌ வருகிறேன்‌” “போயிட்டு வாறன்‌”
“வரப்போறன்‌'” என்று கூறிச்செல்வது வழமை. அது
இவை போன்ற நல்ல நிகழ்ச்சிகள்‌, நன்மைகள்‌ உனக்கு
மீண்டும்‌ கிடைக்கட்டும்‌ என வாழ்த்துவதாக அமையும்‌
எனத்‌ தமிழர்‌ கொள்வர்‌.

அதேபோன்று ஒரு துக்கமான நிகழ்வு நடந்த வீட்டுக்கு
வந்தவர்‌ திரும்பிப்‌ போகும்போது “நான்‌ போகிறேன்‌”
“நான்‌ புறப்படுகிறேன்‌” என்று கூறிச்‌ செல்வதும்‌
வழமை. இதுபோன்ற நிகழ்வு உனக்கு இனி நடக்காது
இருக்கட்டும்‌ என வாழ்த்துவதாகக்‌ கொள்ளப்படும்‌.

மிக அண்மையில்‌ எனது சகலன்‌ சபா வீட்டில்‌ நடந்த
ஒரு சம்பவம்‌ - கனடாவில்‌ வசிக்கும்‌ அவரது தாயார்‌

146


Page 163பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தமிழீழம்‌ மட்டக்களப்பில்‌ கடம்‌ சுகவீனம்‌ உற்றிருந்தார்‌.
அங்குச்‌ சென்று தன்‌ தாயைப்‌ பார்க்க விரும்பிய அவர்‌
விமானச்‌ சீட்டையும்‌ வாங்கிப்‌ பயண ஓழுங்குகள்‌
அத்தனையும்‌ முடித்துவிட்டார்‌. போர்க்‌ காலச்‌ சூழல்‌
ஆதலால்‌ அவர்‌ மட்டும்‌ சென்று வர இருந்தார்‌. தெரிந்த
பலரும்‌ போர்க்காலம்‌ இராணுவக்‌ கெடுபிடி அதிகம்‌ என்று
கூறியிருந்தனர்‌. அது அவர்மனதில்‌ ஒரு தயக்கத்தை
ஏற்படுத்தியிருக்கும்‌. பயணம்‌ புறப்பட இன்னும்‌ 15
மணிநேரமே உண்டு.

அப்போது அவரது மகன்‌ வந்து அவரைப்‌ பார்த்து
“அப்பா நீங்கள்‌ போகுமுன்னர்‌ கடைசியாக எனக்கு
உருளைக்‌ கிழங்கு பொரித்துத்‌ தந்துவிட்டுப்‌ போங்கள்‌”
என்று கேட்டார்‌. தன்‌ மகனின்‌ “கடைசியாக” என்ற கூற்று
அவர்‌ மனதில்‌ அபசகுனமாகப்‌ (துற்குறி) பட்டூவிட்டது
போலும்‌ உடனே பயணத்தை நிறுத்தி விட்டார்‌.

எனவே வழக்கடிப்பாடூ என்பது ஒருவனிடமிருந்து இயல்பாக,
சிந்திக்காது வெளிப்படுபது. இவ்வெளிப்பாடுகளின்‌ மதிப்பு,
அச்சமூகம்‌ கொண்டூள்ள நல்லவை, கெட்டவை என்னும்‌
நம்பிக்கையோடு தொடர்புடைய கருத்துக்களையும்‌,
செயல்களையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டிருக்கும்‌.

வழக்கடிப்பாடுூகள்‌ பெரும்பாலும்‌ உயர்வானவையாகவும்‌,
அதேவேளை ஓவ்வொரு இனத்தின்‌ தனித்துவப்‌
பண்பாகவும்‌ அவ்வினத்தை அடையாளப்படுத்தியும்‌
நிற்க வல்லன.

ஒருவரை வரவேற்கும்‌ போது ஆங்கிலேயர்‌ கை
குலுக்கியும்‌, தமிழர்‌ கை கூப்பியும்‌, ஜப்பானியர்‌ கை

147


Page 164பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கூப்பி உடலை வளைத்தும்‌, ஆ..பிரிக்கர்‌ கையை
_ மடித்து உடலை வளைத்தும்‌ வரவேற்பர்‌.

இப்போது தமிழர்கள்‌ பலர்‌ கைகூப்பி வரவேற்பதற்குப்‌
பதிலாக ஆங்கிலேயரைப்‌ பின்பற்றிக்‌ கைகொடுத்தே
வரவேற்கின்றனர்‌. நாம்‌ கைகூப்பி வரவேற்கும்போது
எமது பண்பாட்டை நாம்‌ அடையாளப்படூத்தி நிற்போம்‌.

இதேபோன்றே தம்‌ குடூம்ப உறவினர்‌ ஒவ்வொருவரோடூம்‌
பழகும்‌ முறை, தேசிய கீதம்‌ பாடும்போது எழுந்து
நிற்றல்‌, வாழையிலையில்‌ உணவு பரிமாறும்‌ போது
தலையிலையை இடது பக்கம்‌ வைத்து எந்தெந்த
உணவு வகையை எப்போது இலையின்‌ எந்த இடத்தில்‌
வைத்தல்‌ என்ற முறையைப்‌ பின்பற்றல்‌, சில குறிப்பிட்ட
காலத்தில்‌ சில உணவுப்‌ பொருட்களை உண்ணுதல்‌
கூடாது என்று தவிர்த்தல்‌, உண்ணும்போது முதலில்‌
எவ்வாறான உணவை உண்ணல்‌ என்ற ஓழுங்கு
முறை போன்ற இன்னோரன்ன ஆயிரக்கணக்கான
நடைமுறைகள்‌ வழக்கடிப்பாடுகள்‌ எனப்படும்‌.

குறியீடு

எந்த ஒரு செயலும்‌, பொருளும்‌, நடத்தையும்‌, உணர்வும்‌
குறியீடு மூலம்‌ வெளிப்படூத்தக்‌ கூடியதே, சுருங்கக்கூறின்‌
வாயால்‌ பேசாது பேசி நிற்பவையே குறியீடூகள்‌.

வீதி ஓரங்களின்‌ வீதியின்‌ தன்மையையும்‌, நாம்‌ எவ்வாறு
செல்ல வேண்டும்‌ என்பதையும்‌ குறியீடுகள்‌ மூலம்‌
தெரியப்படூத்துகின்றனர்‌.

வாகனத்தைப்‌ பொது இடங்களில்‌ நிறுத்தும்போது வலது
148


Page 165பணர்பாடு - வேரும்‌, விழுதும்‌

குறைந்தோருக்குரிய தரிப்பிடங்களைக்‌ குறியீடுகள்‌
சுட்டிக்‌ காட்டி நிற்கின்றன. வாய்‌ பேச முடியாத பலரும்‌
குறியீடுகள்‌ மூலம்‌ பேசிக்‌ கொள்வது போன்ற பலவும்‌
குறியீடுகளாகும்‌

மொழிகளுக்கான ஒலிகளின்‌ குறியீடே எழுத்து, பரத
நடனத்தின்‌ முத்திரைகளும்‌ பாவங்களும்‌ குறியீடே,
தமிழர்கள்‌ தமது நல்ல நிகழ்ச்சிகளின்‌ போது கதலி
வாழைமரத்தைக்‌ கட்டி, மாவிலையை உள்பக்கம்‌
தெரியவும்‌, தோரணத்தை நேராக மடித்து மேல்நோக்கவும்‌
தொங்க விட்டிருப்பர்‌.

துக்க நிகழ்வானால்‌ மொந்தன்வாழையைக்‌ கட்டி,
மாவிலையின்‌ பிறப்‌ பக்கம்‌ தொரியவும்‌, தோரணத்தை
கீழ்‌ நோக்க மடித்தும்‌ தொங்கவிட்டிருப்பார்கள்‌.

தமிழர்களின்‌ பாரம்பரிய தோல்வாத்தியத்தில்‌ ஒன்றான
பறையினை அடித்து ஒலி எழுப்பும்‌ முறையினைக்‌
கொண்டு - அப்பறை எத்தகைய நிகழ்வுக்காக
ஒலிக்கப்படூுகிறது என்பதை அண்மைக்காலம்‌ வரை
தமிழர்கள்‌ அனைவரும்‌ தெரிந்திருந்தனர்‌.

அதேபோன்று கோவிலில்‌ திருவிழா நடக்கும்போது தவில்‌
நாதசுரம்‌ எழுப்பும்‌ ஒலியைக்‌ கொண்டூ கோவிலினுள்‌
இப்போது என்ன நிகழ்வு நடை பெறுகின்றது என்பதைக்‌
கேட்போர்‌ அறிந்து கொளவர்‌. (எருடு: சுற்றுப்பலி
சுற்றல்‌, சுவாமி எழுந்தருளல்‌, இருப்புக்குப்‌ போதல்‌, தீப
ஆராதனை காட்டல்‌ போன்ற பலவும்‌)

தேவாலயங்களில்‌ மணி ஒலிக்கும்‌ முறையைக்‌
கொண்டூ கேட்போர்‌ செய்திகளைப்‌ புரிந்து கொள்வர்‌.

149


Page 166பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இவ்வாறு ஒவ்வோர்‌ இனமும்‌ தமது வாழ்வியலில்‌
ஆயிரக்கணக்கான குறியீடுகளைப்‌ பல துறைகளிலும்‌
கொண்டுள்ளன.

இன்றைய திரைப்படங்கள்‌ சில குறியீடு மூலம்‌

கருத்துக்களைச்‌ சொல்லி நிற்பது ஒரு சிறந்த முதிர்ந்த
கலையாகப்‌ பார்க்கப்‌ படுகிறது

இதேபோன்றே பண்பாட்டிலும்‌ குறியீடுகள்‌, சகல
இனங்களும்‌ விளங்கிக்‌ கொள்ளும்‌ பொதுவானவையாகச்‌
சிலவும்‌, அந்தந்த இனங்களே புரிந்து விளங்கிக்‌
கொள்ளக்‌ கூடியதாக ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு
மட்டுமே உரியனவாக; வேறு சிலவும்‌ உள்ளன.

எடுத்துக்காட்டாக ஓர்‌ இளம்பெண்ணின்‌ கணவன்‌ இறந்து
விட்டான்‌ எனின்‌ சாவுவீடூ நடக்கும்‌ போது ஒரு பெரிய
சட்டியில்‌ நீரை விட்டூ வைத்திருப்பார்கள்‌. அதனுள்‌
ஒரு மூதாட்டி மூன்று பூக்களைக்‌ கொண்டூ வந்து
போடுவாராயின்‌ அப்பெண்‌ மூன்று மாதம்‌ கர்ப்பமாக
இருக்கிறாள்‌ என்பதே பொருள்‌. இது ஊருக்கு
அச்செய்தியை அறிவிக்கும்‌ ஒரு குறியீட்டு முறை.

நடை, உடை பாவனை

ஒருவன்‌ தன்னையும்‌ தான்‌ வாழும்‌ சூழலையும்‌,
தான்‌ பயன்படுத்தும்‌ பொருட்களையும்‌ அலங்கரித்துக்‌
கொள்வது, வடிவமைத்துக்‌ கொள்வது என்பவற்றினை
நடையுடை பாவனை எனலாம்‌.

எவ்வாறு தலைவாரிக்கொள்வது, உடை அணிந்து

150


Page 167பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கொள்வது, அலங்கரித்துக்‌ கொள்வது என்பவற்றோடு
நாம்‌ உபயோகிக்கும்‌ பொருட்கள்‌ அத்தனையினதும்‌
வடிவமைப்புகள்‌ அவற்றை அழகு  படுத்தியிருக்கும்‌

தன்மைகள்‌ எல்லாம்‌ “நடை, உடை, பாவனை”
ஆகும்‌.

ஒருவனதோ, ஓர்‌ இனத்தினதோ நடையுடை பாவனை
மிக வேகமாக மாறிக்‌ கொண்டே இருக்கும்‌. எடுத்துக்‌
காட்டாக நாம்‌ உடைகளை உடுக்கும்‌ விதமும்‌,
உடைகளின்‌ வடிவமைப்பும்‌ வேகமாக மாறி மாறிக்‌
கொண்டே இருக்கும்‌.

இம்மாற்றங்கள்‌ சில மிகக்‌ குறுகிய காலத்திலும்‌ சில
சற்று நீண்டகாலத்திலும்‌ நிகழும்‌. எமது உடைகளின்‌
வடிவமைப்பும்‌ உடூக்கும்‌ முறைகளும்‌ குறுகிய காலத்தில்‌
மாறிக்‌ கொண்டிருப்பதைக்‌ காணலாம்‌.

அதேவேளை சில அலங்கார முறைகள்‌ சற்று நீண்ட
காலம்‌ எடூக்கும்‌. எனது பேரனார்‌ காதில்‌ தோடூ
அணிந்திருந்தார்‌, என்‌ தகப்பன்‌ காது குத்தியிருந்தார்‌;
தோடூ அணியவில்லை. நான்‌ தோடூ அணியவில்லை.
என்‌ மகன்‌ அணிந்துள்ளார்‌.

அதேபோன்று வருடா வருடம்‌ நாம்‌ உபயோகிக்கும்‌
வாகனங்களின்‌ (0 வடிவமும்‌ மாறிக்‌ கொண்‌
டிருப்பதைக்‌ காண்கிறோம்‌. மனிதர்களால்‌ மிக
இலகுவாகக்‌ கண்டுகொள்ளக்‌ கூடிய இத்தகைய
புறத்தோற்ற வெளிப்பாடுகள்‌ “நடை, உடை, பாவனை”:
என அழைக்கப்படும்‌. ஒரு நகைச்‌ சுவை சித்திரக்‌ கதை
ஞாபகத்திற்கு வருகிறது.

131


Page 168பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌

ஒருவர்‌ தன்‌ மகளின்‌ பிறந்ததினத்திற்கு ஓர்‌ உடையை
வாங்கிக்கொண்டு ஓடிச்‌ செல்கிறார்‌. அதனைக்‌ கண்ட
அவரின்‌ நண்பர்‌, “எங்கே அவசரமாக ஓடிப்போகிறாய்‌”
எனக்‌ கேட்டார்‌. அதற்கு, “எனது மகளின்‌ பிறந்தநாள்‌
அதற்காக இதனை வாங்கிக்‌ கொண்டூ போகிறேன்‌”
என்றார்‌.

அதுசரி ....அதற்காக ஏன்‌ ஓடிப்போகிறாய்‌ ஆறுதலாகப்‌
போவதுதானே..

நான்‌ ஆறுதலாகப்‌ போனால்‌ இந்த உடையின்‌
வடிவமைப்பு முறை ([-858//௦/) மாறிவிடும்‌. பின்பு மகள்‌
இது இப்ப நாகரிகம்‌ இல்லை என்றுவிடூவாள்‌ என்றார்‌.
இவ்வளவு வேகமாக மாறக்கூடிய புறத்தோற்ற
வெளிப்பாடுகளே இவை. ஒவ்வொரு மனிதனுடைய
நடைஉடை பாவனையும்‌ --- பெரும்பாலும்‌ அவனால்‌
உருவகப்படூத்தப்பட்டு அவன்‌ நடத்தையில்‌
இடம்பெற்றதாக இருக்கமாட்டாது. அவனது சூழலே
அவனை அவ்வாறு நடக்க வைக்கிறது என்பதே
உண்மையாகும்‌.

ஒருவர்‌ வாழ்ந்த சூழலில்‌ வாழும்‌ சூழலில்‌ இருந்து
இத்தகைய நடை உடை பாவனையைக்‌ கற்றுக்‌
கொள்கிறார்‌. இவற்றில்‌ சில நிரந்தரமாக அவர்கள்‌
மனதில்‌ படிந்து விடுகின்றன, நாம்‌ தலைவாரிக்‌
கொள்ளும்‌ முறைகூட.

எமது பிள்ளைகள்‌ இவற்றில்‌ மாற்றத்தை ஏற்படூத்தும்போது

எமது மனம்‌ ஏற்றுக்‌ கொள்ள மறுக்கிறது. நாம்‌
பிள்ளைகளுடன்‌ இதற்காக முரண்படுகிறோம்‌.

152


Page 169பண்பாடு - வேரும்‌, வீழுதூம்‌

எடூத்துக்காட்டாக இன்றைய இளம்‌ தலைமுறையினர்‌
பலரும்‌ காதில்‌ தோடூ குத்திக்‌ கொள்வதையோ
தலைமயிரை வளர்த்துக்‌ (ஆண்‌ பிள்ளைகள்‌) கட்டிக்‌
கொள்வதையோ பல பெற்றோர்‌ ஏற்கவில்லை.
இதற்கு இரண்டு காரணங்களைக்‌ கூறலாம்‌. அவர்கள்‌
இப்புறத்தோற்ற வெளிப்பாடுதான்‌ பண்பாடு என்று
தவறாக எண்ணிக்கொண்டது.

இத்தகைய நடைஉடை பாவனைகள்‌ மாறிக்கொண்டே
இருக்கும்‌ என்ற உண்மை நிலையை விளங்காது
தான்‌ தன்னை அலங்கரித்துக்‌ கொள்ளும்‌ தன்‌ மனதில்‌
படிந்துவிட்ட “சித்திர” நிலையே சிறந்தது. பிறரால்‌
மதிக்கப்படுவது என்ற மனநிலையும்‌ ஆகும்‌.

எடூத்துக்காட்டாக எனது பேரனார்‌ காதில்‌ தோடூ
போட்டிருந்தார்‌, என்‌ அப்பாவுக்குக்‌ காது குத்திய
அடையாளம்‌ இருந்தது. அவர்‌ தோடு போட்டிருக்க
வில்லை. என்‌ பாட்டனார்‌ நான்‌ சிறுவனாக இருக்கும்போது
எனக்குக்‌ காது குத்திவிடும்படி என்‌ தந்தையிடம்‌
கூறிக்கொண்டே இருப்பார்‌

என்‌ பாட்டன்‌ காலத்தில்‌ ஆண்கள்‌ காதுகுத்தித்‌ தோடு
போட்டு இருந்தனர்‌ - அப்படி இல்லையாயின்‌ அவர்‌
திருமணத்திற்கு முன்னதாகக்‌ “காது குத்துச்‌ சடங்கு”
என்று வைத்துக்‌ காது குத்தித்‌ தோடூ போட்டூவிடுவார்கள்‌
- அதன்‌ பின்பே திருமணம்‌ நடக்கும்‌.

இப்போது எமது பிள்ளைகள்‌ காது குத்தியிருப்பதைப்‌
பார்த்து ஏன்‌ குத்தியிருக்கிறான்‌ என்கிறோம்‌. எம்‌ முந்திய
தலைமுறை தோடூ போடாததைக்‌ குறை கூறியது. நாம்‌

133


Page 170பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தோடுூபோடூவதைக்‌ குறை கூறுகிறோம்‌.

எனவே நடை உடைபாவனைகள்‌ மிதவேகமாக
மாறக்கூடியவையே என்பதையும்‌, அவை
மாறிக்கொண்டுதான்‌ இருக்கும்‌ என்பதையும, நாம்‌
உணர்ந்து கொண்டு இம்மாற்றங்களை உள்வாங்கிக்‌
கொள்வதே சிறந்தது.

இதுவரை செயலாக்கப்‌ பண்பாட்டின்‌ பெரும்‌ கூறுகளான
நெறியியல்‌ குடிவழக்கு இரண்டினையும்‌ பார்த்தோம்‌;
அடுத்து “விழுமியம்‌' பற்றிப்‌ பார்ப்போம்‌.

விழுமியம்‌

ஓர்‌ இனம்‌ கட்டுக்கோப்பாக மேம்பாட்டு நிலை நோக்கி
இயங்குவதற்கு, அடைய வேண்டிய இலக்கினை
அடைவதற்கு வழிகாட்டி நிற்பவை, ஒளியாக
விளங்குபவை விழுமியங்களே. உலகில்‌ உள்ள எல்லா
இனங்களாலும்‌ வரவேற்கப்படும்‌ நெறியியல்‌ கூறு
விழுமியம்‌ ஆகும்‌.

எடுத்துக்காட்டாக உண்மை பேசுதல்‌, அறம்‌ செய்து
வாழ்தல்‌, நீதிக்குக்‌ கட்டுப்படல்‌, பிறன்மனை நோக்காமை,
நல்லவற்றையே எண்ணுதல்‌, ஒப்புரவு, விருந்தோம்பல்‌,
இனியவை கூறல்‌, சொன்னபடி நடத்தல்‌ போன்ற
பலப்பல....

கருத்தியல்‌ நிலையில்‌ உள்ள இவை ஓர்‌ இனத்தின்‌
வாழ்வியலுக்கும்‌, செயல்களுக்கும்‌, நடத்தை
முறைகளுக்கும்‌, வழி காட்டுபவையாக, ஊட்டச்‌ சக்தியாக
விளங்கும்‌. உலக இனங்கள்‌ சகலராலும்‌ ஏற்கப்பட்ட

154


Page 171பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கோட்பாடுகளே விழுமியங்களாக இருந்தபோதும்‌
ஒவ்வொரு இனமும்‌ சில விழுமியங்களுக்கே முதன்மை
கொடுத்துள்ளன.

சில இனங்கள்‌ தூய்மைக்கு முதலிடம்‌ தருகின்றன,
இன்னும்‌ சில நேர்மை, அமைதி, சமத்துவம்‌, அழகு,
ஆத்மீகம்‌ போன்றவைக்கு முதலிடம்‌ தருகின்றன.

ஜப்பானியருக்கு அழகு, ஸ்பெயின்‌ நாட்டவருக்கு
ஆண்களின்‌ வீரம்‌, இந்தியர்களுக்கு அஆத்மீகம்‌,
ரூசியர்களுக்கு சமத்துவம்‌ போன்றவை முன்னிலையில்‌
உள்ளவை.

ஒரு மனிதனோ ஒர்‌ இனமோ எவ்வளவு எண்ணிக்கை
யான விழுமியங்களை தனது வாழ்வியலில்‌ கடைப்‌
பிடிக்கின்றனரோ அத்தகைய மதிப்பினை அவ்வினமோ,
மனிதனோ உலகில்‌ மற்றைய இனங்களிடையே
பெறுவர்‌ என்பது உறுதி.

எனவே உலகில்‌ ஓர்‌ இனம்‌ மதிப்புப்‌ பெறவேண்டூுமாயின்‌
கருத்தியலில்‌ உள்ள விழுமியங்களை நடைமுறையில்‌
பின்பற்ற வேண்டும்‌.

சட்டம்‌

பண்பாட்டின்‌ அக வெளிப்பாடுகளான நெறியியலின்‌
கூறுகளான குடிவழக்கு, நெறிமுறைகள்‌, விழுமியம்‌
என்பவற்றைச்‌ சமூகம்‌ கடைப்பிடித்து ஒழுகுவதை
ஊக்கப்படுத்தும்‌ நோக்கோடு ஆக்கப்பட்டதே “சட்டம்‌
ஆகும்‌.

155


Page 172பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஒவ்வோர்‌ இனமும்‌ தனது குடிவழக்கு, வழக்காறு,
குறியீடு, நெறிமுறை, கொள்கை, நம்பிக்கை, வழக்கம்‌,
விழுமியம்‌ போன்ற அனைத்துக்‌ கூறுகளுக்கும்‌
அமைவாக இயங்குவதற்கு, அதாவது நெறியியல்‌
சமுதாய வாழ்விற்கு அரணாக விளங்குவது சட்டம்‌.

இந்நெறியினை மீறுவோரைத்‌ தண்டித்தலும்‌ சட்டத்தின்‌
ஒரு கூறாகும்‌. “தண்டனை' மனிதவாழ்வின்‌ பண்பு
நிலைக்கு மாறுபட்டதாக, பழிவாங்கும்‌ செயல்‌
போன்று தோன்றினாலும்‌ தண்டனை வழங்குவதன்‌
மூலம்‌ சமுதாயம்‌ தான்‌ போற்றிக்‌ காக்கும்‌ நெறியியல்‌
நலிந்து போகாது, வலுவோடூ இருக்கவும்‌ சமூகம்‌
கட்டுக்கோப்போடுூ செயல்படவும்‌ ஊக்கசக்தியாகச்‌
சட்டம்‌ விளங்கும்‌.

சட்டம்‌ - மரபு வழியாகவும்‌, அதிகார அமைப்புகள்‌
வழியாகவும்‌ ஊடாடி வந்தன. இன்று அரசினால்‌
நிறுவனமயமாக்கப்பட்டதாகச்‌ சட்டம்‌ உள்ளது.

ஒவ்வோர்‌ இனத்திடையேயும்‌ நெறியியலைக்‌ கட்டிக்‌ காத்து
வாழ்வியலை வழி நடத்திப்போகப்‌ “பழமொழிகளும்‌”
“நன்நெறிக்‌“ கூறுகளும்‌ கிராமியக்‌ கதைகளும்‌,
பாடல்களும்‌, இலக்கியங்களும்‌, கலைவடிவங்களும்‌
அவ்வினத்தின்‌ சான்றோரால்‌ படைக்கப்பட்டுள்ளன.

அதனால்‌ இவை பல்வேறு வழிகளாலும்‌ மக்கள்‌
மத்தியில்‌ பரப்பப்பட்டு, மக்களிடையே நாளாந்தப்‌
பேச்சுவழக்கில்‌ இடம்பெற்றிருந்தன. கல்வி அறிவற்ற
சாதாரண மனிதன்கூட வாழ்வியல்‌ விதி முறைகளை,
சட்டங்களை அறிந்திருந்த காலம்‌ ஒன்று இருந்தது.

156


Page 173பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அதனால்‌ நாகரிகத்தில்‌ வளர்ச்சி பெறாதவன்‌ கூட
பண்பாட்டில்‌ மேம்பட்டவனாகப்‌ பண்டைய தமிழன்‌
இருந்தான்‌.

மேற்கூறப்பட்ட காரணங்களால்‌ மொழியும்‌, மொழி
வழிக்கலையும்‌ பண்பாட்டைக்‌ காவிச்செல்லும்‌ வாகனமாக
இருந்தமையால்‌, எத்தகைய கல்வி அறிவுநிலையில்‌
உள்ளவனைக்கூடத்‌ தன்வாழ்வியலோடூ ஒன்றிணைத்துக்‌
கொண்ட சமூகமாக அன்றைய சமூகம்‌ இருந்தது.
எடுத்துக்‌ காட்டாக “களவும்‌ கற்று மற” என்ற
முதுமொழியை எடூத்துக்‌ கொண்டால்‌ “ஒருவனுக்கு
ஒருத்தி” என்ற தமிழர்களது கொள்கையை இது
வலியுறுத்தி நிற்பதைக்‌ காணலாம்‌.

களவொழுக்கத்தில்‌ ஈடுபாடூள்ள ஒருவன்‌ - அப்பெண்ணை
வாழ்க்கைத்‌ துணையாகத்‌ திருமணம்‌ செய்தபின்‌ மீண்டும்‌
இன்னொருவருடன்‌ களவொழுக்கத்தில்‌ ஈடுபடல்‌ ஆகாது.
களவொழுக்கத்தை மறந்து விடல்‌ வேண்டும்‌ என்பதே.

இவ்வாறாகத்‌ தமிழர்‌ மத்தியில்‌ உள்ள பல பழமொழிகள்‌
உட்பட நெறியியல்‌ கூறுகளுக்குச்‌ சரியான கருத்தினைப்‌
புரிந்துகொள்ளா நிலை இன்று காணக்கூடியதாக உள்ளது.
இது ஒருவகையில்‌ பண்பாட்டுப்‌ பின்னடைவேயாகும்‌.

இன்று பேச்சுமொழிகளில்‌ பழமொழிகளோ விழுமியக்‌
கூறுகளோ இல்லாது நலிந்து விட்டது. கிராமியப்‌
பாடல்கள்‌ ஓரளவு மறைந்தே விட்டன. இலக்கியங்கள்‌
மனிதவாழ்வியலின்‌ நோய்களை மட்டூம்‌ சுவைபட
எடுத்தியம்பி நிற்கின்றன.

157


Page 174பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இன்று கலைகளின்‌ நோக்கம்‌ முழுமையாகப்‌ பொழுது
போக்காக மாறித்‌ திரைப்படம்‌, தொ(ல்லைக்‌ காட்சி
மூலம்‌ மக்களிடம்‌ சென்றடைகின்றன. அவை தமிழ்ப்‌
பண்பாட்டை மாத்திரமல்ல, தமிழ்‌ மொழியைக்கூடக்‌
காவிச்‌ செல்கின்றனவா! என்பதை நீங்களே கூறுங்கள்‌.

இருப்பினும்‌ ஒரு சில சிறந்தநூல்கள்‌, இலக்கியங்கள்‌,
கலைவடிவங்கள்‌ வெளி வருகின்றன. ஆனால்‌ மேற்கூறிய
களியாட்டவகைப்‌ படையலுக்குச்‌ சுவைப்பட்ட மனிதர்கள்‌
சிறந்தவற்றை வரவேற்கிறார்கள்‌ இல்லை.

இவவாறு ஒரு சில கலை, இலக்கிய வடிவங்களில்‌
இடம்பெற்ற நெறியியலை இன்றைய தமிழரில்‌
ஒரு பகுதியினர்‌ மனதை மகிழ்வூட்டும்‌ வெறும்‌
இலக்கியங்களாகப்‌ பொழுது போக்குச்‌ சாதனமாகப்‌
பார்க்கிறார்களே ஒழிய, அவற்றை வாழ்வுக்குரிய
இலட்சியங்களாக. வாழ்வியலில்‌ மனிதன்‌ தன்‌
தேவையைக்‌ கருதி, செயலைச்‌ சிந்தித்துத்‌ திட்டமிட
வழிகாட்டும்‌ விதிமுறையாகப்‌ பார்க்காத நிலை
காணப்படுகிறது.

“தீதும்‌ நன்றும்‌ பிறர்‌ தர வாரா”

 


Page 175இதழ்‌ 7
பொருளாக்கப்‌ பண்ப௱ரு

மனிதமனம்‌ சிந்தித்துச்‌ செயற்பட்டுத்‌ தன்‌ தேவையை
நிறைவேற்றிக்‌ கொள்வதற்கேற்ற பொருட்களை
உருவாக்கிக்‌ கொள்கிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட
பொருட்கள்‌ உருவாக்கிய சமூகத்தினது பண்பாட்டின்‌
அடையாளமாக விளங்குவதால்‌ இது “பொருளாக்கப்‌
பண்பாடு” என அழைக்‌ கப்படுகிறது.

 

சிந்தனைப்‌ - செயலாக்கப்‌ - பொருளாக்கப்‌
பண்பாடூ பண்பாடு பண்பாடு
1 ்‌ [
பொருள்சார்‌ பொருள்சாரா
பண்பாடூ பண்பாடூ
நி 19 211] (1௦1 ாயர்ராரவ]
யியால மயி(யா

மனிதன்‌ தான்‌ பெற்ற அறிவின்‌ துணையால்‌ தன்‌
தேவையை நிறைவேற்றிக்‌ கொள்ளப்‌ படைக்கும்‌
இப்பொருட்கள்‌ நெறியியலும்‌ அவற்றின்‌ கூறுகளும்‌
போன்று அகத்தே இல்லாது வெறும்‌ கோட்பாடாக,
கருத்துக்களாக வெளிப்படாது புறவெளிப்பாடாகப்‌
பொருட்களாக இருப்பவை.

இவையே அந்த இனத்தின்‌ பண்பாட்டுச்‌ சின்னங்கள்‌

ஆகின்றன. இவையே அந்த இனத்தின்‌ பணிபாட்டூ
வளர்ச்சியை வெளிக்காட்டி நிற்பவை ஆதலால்‌

1539


Page 176பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பொருளாக்கப்‌ பண்பாட்டை “நாகரிகம்‌” என அழைத்தல்‌
பொருந்தும்‌.
ஓவ்வோர்‌ இனமும்‌ கருத்துப்‌ பரிமாற்றத்துக்கென
உருவாக்கிக்‌ கொண்ட “மொழி”?யின்‌ பெயராலே
பண்பாடூகள்‌ அழைக்கப்படுவது ஒரு சிறந்த எடுத்துக்‌
காட்டாகும்‌.

தோன்றும்‌ முறை

இன்றைய உலகில்‌ உருவாக்கப்பட்டு விற்பனை
செய்யப்படும்‌ பொருட்களுக்குத்‌ தரக்கட்டூப்பாடூம்‌
(ெவி1ர3 ௦௦14101) அதற்கான விதிமுறைகளும்‌ வரையறை
செய்யப்பட்டுள்ளன. அதற்கு அமைவாகவே பொருட்கள்‌
உற்பத்தி நடைபெறுகின்றது. அதேபோன்று

ஒவ்வோர்‌ இனமும்‌ இயல்பான உந்துசக்திகளைப்‌
போக்கிக்‌ கொள்ள சிந்தித்துச்‌ செயற்பட்டுப்‌ பொருட்களை
உருவாக்கும்போது அவற்றுக்கான விதிமுறைகளாகச்‌
சிந்தனையின்‌ வழி பிறந்த செயலாக்கப்‌ பண்பாட்டின்‌
கூறான “நெறியியல்‌” செயல்படும்‌.

நெறியியல்‌ கூற்றுக்கு அமைவாக செயற்படூம்போது
அலலது போருளாக்கம்‌ நிகழும்போது வாழ்வியல்‌
இயக்கம்‌ அதாவது செயற்பாடு, இயல்பாகவும்‌
இலகுவாகவும்‌ விரைவாகவும்‌ நடைபெறும்‌.

நெறியியலுக்கு முரணாகச்‌ செயற்படூம்போது,
செயற்படூபவர்‌ தன்‌ மனதிலும்‌, சமூகத்திலும்‌,
எதிர்ப்பையும்‌ சில வேளைகளில்‌ போராட்டத்தையும்‌
எதிர்‌ கொள்வார்‌.

160


Page 177பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மேற்கூறிய கருத்தை மேலும்‌ விரிவாகக்‌ கூறின்‌.

செயலாக்கப்‌ , பொருளாக்கப்‌
ச ராச ட

பண்பாடு பணபாடூ
நெறியியல்‌

மனிதன்‌ தன்‌ தேவைகளை; விருப்பங்களை நிறைவேற்ற
வேண்டிச்‌ செயற்படூம்‌ போது இத்தேவைகள்‌,
விருப்பங்கள்‌ என்பவையோ, அவற்றை நிறைவேற்ற
வேண்டிச்செயற்படும்‌ முறையோ, அம்மனிதன்‌ தனது
மனதிற்‌ படிந்துள்ள பண்பாட்டின்‌ கருத்தியலுக்கு
(நெறியியலுக்கு) உடன்பட்டதாக, அவற்றிற்கு
முரணற்றதாக இருப்பின்‌ அவன்‌ மனம்‌ அச்செயலுக்கு
நேர்‌ ஊக்கியாகச்‌ செயற்பட்டு; நிறைவு செய்யும்‌
வேகமும்‌ திறனும்‌ சிறப்பாக அமைவதுடன்‌ மகிழ்ச்சியான
சூழலையும்‌ பிறப்பிக்கும்‌.

அதாவாது ஆற்று நீர்‌ ஓட்டத்தின்‌ திசையிலேயே ஒருவர்‌
நீந்திச்‌ செல்வதைப்‌ போன்று இலகுவானதாக, வேகமாக
இலக்கை அடையக்‌ கூடியதாக அமையும்‌.

மாறாக அவன்‌ நிறைவேற்ற முற்பட்ட விடயமோ,
அவ்விடயத்தை நிறைவேற்ற அவனால்‌ தேர்ந்து
எடூக்கப்‌ பட்ட வழிமுறையோ (செயற்படும்‌ முறையோ)
அவன்‌ நம்பியுள்ள பண்பாட்டின்‌ கருத்தியலுக்கு
மாறுபட்டதாயின்‌ அவன்‌ மனம்‌ எதிர்‌ ஊக்கி போன்றே
செயற்படும்‌. அதாவது ஆற்று நீரோட்டத்தின்‌ திசைக்கு
எதிர்த்‌ திசையில்‌ நீந்துவதைப்‌ போன்று கடினமானதும்‌,
பல எதிர்ச்‌ சத்திகளை எதிர்‌ கொள்ள வேண்டியதுமாக

161


Page 178பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அமைந்து விடூம்‌.

பொருளாக்கப்‌ பண்பாட்டின்‌ கூறுகள்‌.

பொருளாக்கப்‌ பண்பாட்டை பொருள்சார்‌ பண்பாடு
பொருள்சாராப்‌ பண்பாடு என இரு பெரும்‌ கூறுகளாகப்‌
பிரிக்கலாம்‌. இவை இரண்டும்‌ ஒன்றோடொன்று
தொடர்புடையவை

எடுத்துக்காட்டாக காதலர்‌ இருவர்‌ திருமணவாழ்வில்‌
ஈடுபட முற்படும்போது திருமண நிகழ்வை எவ்வாறு
நடத்தவேண்டும்‌ திருமணத்தின்போது உள்ள எவ்வெச்‌
சடங்குகளை எப்படிச்‌ செய்யவேண்டும்‌ என்ற
விதிமுறைகள்‌, திருமணத்தின்‌ போது சொல்லப்படும்‌
மந்திரங்கள்‌, உறுதிமொழிகள்‌ என்பவை பொருள்சாராப்‌
பணபாடாகவும்‌

திருமணத்தின்‌ போது அணிந்துகொள்ளப்படும்‌ தாலி,
மெட்டி, மாலை, கூறைச்சேலை, வேட்டி, மோதிரம்‌,
நிறைகுடம்‌, குத்துவிளக்குப்‌ போன்றவை பொருள்சார்‌
பண்பாட்டுக்கு உரியவையாகவும்‌ அமையும்‌.

தமிழர்களின்‌ மரபுவழி ஆயுர்வேத மருத்துவத்தில்‌
குறிப்பிட்ட ஒரு மருந்தினை உருவாக்க என்னென்ன
மூலிகைகளை எவ்வெவ்‌ அளவில்‌ கலந்து உருவாக்க
வேண்டும்‌ என்பன பற்றிய தகவல்‌ அல்லது விதிமுறை
பொருள்சாராப்‌ பண்பாடாகவும்‌, உருவாக்கப்பட்ட
மருந்துப்‌ பொருட்கள்‌ பொருள்சார்‌ பண்பாடும்‌ ஆகும்‌.
சுருங்கக்கூறின்‌ மருத்துவமுறை பொருள்சாராப்‌
பண்பாடாகவும்‌, அம்முறைக்கமைய ஆக்கப்பட்ட
பொருட்களாகிய மருந்துகள்‌ பொருள்சார்‌ பண்பாடாகவும்‌

162


Page 179பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கருதப்படும்‌.
பொருள்சார்‌ பண்பாடு

மனிதனின்‌ இயல்பான உந்துசக்திகளை நிறைவுறச்‌ செய்து
கொள்ள மனிதன்‌ செயற்பட்டுப்‌ படைத்துக்கொண்ட
பொருட்கள்‌ பொருள்சார்‌ பண்பாட்டுப்‌ பொருட்களாக
இருப்பதுடன்‌ அவைகளே அந்த இனத்தின்‌ பண்பாட்டின்‌
அடையாளச்‌ சின்னமாகவும்‌ விளங்குவதுடன்‌, அந்த
இனத்தின்‌ பண்பாட்டு வளர்ச்சியைப்‌ பறைசாற்றி
நிற்பனவாகும்‌.

எடூத்துக்காட்டாகத்‌ தமிழர்கள்‌ பசியைப்போக்கிக்‌
கொள்ளச்‌ சோற்றைப்‌ பிரதான உணவாகக்‌ கொண்டனர்‌.
எனவே அதனோடு தொடர்புடைய ஏர்‌, கலப்பை,
நீர்ப்பாசன முறை, சூடடித்தல்‌, நெல்‌, அரிசி, பானை, சட்டி
போன்ற பலவும்‌ பண்பாட்டுச்‌ சின்னங்கள்‌ ஆகின்றன.

காலநிலையால்‌ தோலின்‌ உணர்வுகள்‌ பாதுகாக்கப்பட
வேண்டி உருவான உடைகள்‌, பிற்காலத்தில்‌ இன்று
மானத்தை மறைக்கவெனத்‌ தமக்கே உரித்தான
உடைகள்‌, என்பன தனித்துவமான வடிவமைப்பை,
அணிகின்ற அலங்கரிக்கின்ற முறைகளை, ஒவ்வோர்‌
இனமும்‌ கொண்டிருந்தது. அந்த உடைகள்‌ அவ்வினத்தின்‌
தேசிய உடைகளாகின; அவர்களின்‌ அடையாளச்‌
சின்னங்களாகக்‌ கருதப்படுகின்றன.

ஆதியில்‌ பசியைப்‌ போக்கிக்‌ கொள்ள மிருகங்களை
வேட்டையாடினான்‌. இம்‌ மிருகங்களை மனிதர்‌
வேட்டையாடவென ஆயுதங்களை உருவாக்கிக்‌

163


Page 180பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கொண்டான்‌. அவ்வாயுதங்களே பிற்காலத்தில்‌ பிற
இனத்தோடு போர்புரியவும்‌ பாவிக்கப்பட்டன. மிருக
வேட்டையில்‌ தொடங்கி மனிதவேட்டையில்‌ தொடரும்‌
இப்போர்க்கருவிகளும்‌ பண்பாட்டின்‌ படையல்களே!

பொருள்சாராப்‌ பண்பாடு

மனிதன்‌ தேவைகளை நிறைவேற்றப்‌ பொருட்களை
உருவாக்கும்போது அவற்றை உருவாக்கிக்‌ கொள்ளும்‌
முறைகள்‌ பற்றிய விபரங்கள்‌, விதி முறைகள்‌ என்பவை
பொருள்சாராப்‌ பண்பாடாகும்‌.

இத்தேவைகள்‌ சிலவற்றை நிறைவேற்றும்‌ போது
பல்வேறு வகைப்பட்ட சடங்குகளை முதற்படியாக மனிதன்‌
நடத்தினான்‌. (பால்‌ உணர்வுக்கு, குடும்ப இணைவுக்கு
எனத்‌ திருமணம்‌) இச்சடங்குகளை நிகழ்த்துவதற்கான
ஒழுங்கு விதிகள்‌ என்பன பொருள்‌ சாராப்‌ பண்பாடுகள்‌
ஆயின.

இதுபோன்று தன்‌ உணர்வுகளைப்‌ பகிர்ந்துகொள்ள
உருவாக்கப்பட்ட மொழி, பொருள்சாராப்‌ பண்‌
பாடாகவும்‌

அந்த மொழியின்‌ ஒலி வடிவத்திற்கான வரி வடிவம்‌
(எழுத்துக்கள்‌) பொருள்சார்‌ பண்பாடாகவும்‌,

அந்த வரிவடிவம்‌ (எழுத்துக்கள்‌) எவ்வாறு இணைந்து
சொற்களாக, மொழிக்கூற்றுகளாக (வசனம்‌) இருக்க
வேண்டும்‌ என்ற விதிமுறைகள்‌ “இலக்கணம்‌” என்னும்‌
பெயரில்‌ பொருள்சாராப்‌ பண்பாடாகவும்‌ உள்ளன.

அந்த வசனங்களின்‌ வழி பிறந்த செய்திகளை, வரிவடிவில்‌
164


Page 181பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பதித்துக்‌ கொள்ளப்‌ பயன்படுத்திய கருவிகள்‌ தமிழர்‌
ஆதியில்‌ எழுத்தாணி, ஏட்டூச்சுவடியைப்‌ பயன்படுத்தினர்‌.
இவை பொருள்சார்‌ பண்பாடாகவும்‌ அமைந்தன.

இவ்வாறே மனிதன்‌ உருவாக்கிக்‌ கொண்ட கலைகளான
இசை, நடனம்‌, நாடகம்‌, சித்திரம்‌, சிற்பம்‌, கட்டடக்கலை
போன்ற இன்னோரன்ன கலை வடிவங்கள்‌ அந்தந்த
இனத்துக்கே உரிய தனித்துவமான அடையாளச்‌
சின்னங்களாக பொருள்சாராப்‌ பண்பாட்டில்‌ அமைந்‌
துள்ளன. ப

இசை, நடனம்‌ போன்ற இக்கலை வடிவங்களை
வெளிப்படுத்த உருவாக்கிக்‌ கொண்ட கருவிகள்‌
பொருள்சார்‌ பண்பாட்டூச்‌ சின்னங்கள்‌ ஆகின.
எடுத்துக்காட்டாகப்‌ பறை, தவில்‌, நாதஸ்வரம்‌, வீணை,
யாழ்‌ போன்றவையைக்‌ கூறலாம்‌.

மறையும்‌ முறை

பொருளாக்கப்‌ பண்பாட்டில்‌ மனிதனின்‌ தேவை கருதி
உருவான பொருட்களின்‌ தேவை அற்றுப்போகும்போது
அவை மறைந்து அல்லது வழக்கிழந்து போகின்றன.

எடூத்துக்காட்டாக ஆதியில்‌ ஏட்டுச்சுவடியையும்‌,
எழுத்தாணியையும்‌ பொருட்களாகக்‌ கொண்டிருந்த
தமிழர்‌ கால ஓட்டத்தில்‌ கடுதாசியையும்‌, பென்சில்‌,
பேனா என்பவற்றை உபயோகிக்கத்‌ தொடங்க, ஏட்டுச்‌
சுவடியும்‌, எழுத்தாணியும்‌ மறைந்தே விட்டன.

இவ்வாறே ஒவ்வொரு தேவைகளுக்கான பொருளாக்கப்‌

165


Page 182பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பண்பாடூ(பொருள்‌ வடிவம்‌) கால ஓட்டத்தோடு
பரிணாமவளர்ச்சி பெற்றுப்‌ புதிய வடிவங்கள்‌ நவீன
தோற்றம்‌ பெறப்‌ பழையன மறைந்து வழக்கிழந்து
போய்விடும்‌.

நாகரிகம்‌

நாகரிகம்‌ என்பது இன்றைய உலக வழக்கில்‌ பண்பாட்டின்‌
புற வெளிப்பாடாகும்‌.

பொருளாக்கப்‌ பண்பாட்டினையும்‌, பொருளாக்கப்‌
பணபாட்டின்வழி பெற்ற பொருட்களை வாழ்வில்‌ எவ்வாறு
பயன்படுத்திக்‌ கொள்கிறோம்‌ என்பதனைக்‌ காட்டும்‌
குடிவழக்கின்‌ ஒரு கூறான நடையுடை பாவனையையும்‌
நாகரிகம்‌ என்று கூறலாம்‌.

தனிமனிதனின்‌ பாவனைப்‌ பொருட்கள்‌ - உணவு,
உறைவிடம்‌, தொலைத்‌ தொடர்பு சாதனம்‌, போக்கு
வரத்து வசதிகள்‌ உடை உள்ளிட்ட அவனால்‌
பயன்படூத்தப்படும்‌ சகல கருவிகள்‌ உள்படச்‌ சமூகம்‌,
மக்கள்‌ பாவனைக்காகப்‌ படைத்து விட்டிருக்கும்‌ பல
துறை சார்ந்த பல ஆயிரக்கணக்கான பொருட்களும்‌
அதனுள்‌ அடங்கும்‌.

எடுத்துக்காட்டாக - நகரஅமைப்பு, போக்குவரத்து
அமைப்பு, தொடர்பு சாதனங்கள்‌, மருத்துவக்‌ கருவிகள்‌,
விளையாட்டூத்‌ திடல்கள்‌, கலை அலங்காரப்‌ பொருட்கள்‌,
மனிதவாழ்வியலை - வசதியும்‌, அழகுக்கலையும்‌
கொண்டவையாக மாற்றியுள்ள ஆயிரக்கணக்கான
மனிதக்‌ கண்டு பிடிப்புக்கள்‌ மனித நாகரிகத்தை

166


Page 183பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
எடூத்தியம்பி நிற்கின்றன.

இத்தகைய சூழலைத்‌ தன்வாழ்வில்‌ கொண்டூ விளங்குபவன்‌
நாகரிகம்‌ மிக்கவன்‌ என்றும்‌ வசதிபடைத்தவன்‌ என்றும்‌
உலகம்‌ கணிப்பிட்டூள்ளது.

அதேபோன்று இத்தகைய நாடுகளை முதல்தர நாடூ
களாக, வளர்ந்த நாடுகளாக உலகம்‌ கணிப்பிட்டூள்ளது.
மற்றைய நாடூகள்‌ மூன்றாம்‌ உலக நாடூகள்‌ என்றே
அழைக்கப்‌ பெறுகின்றன.

மனித வாழ்வியலை மேம்படுத்தவும்‌, இலகுவாக்கவும்‌,
கூடிய இவற்றை இயற்கை விஞ்ஞான (அறிவியல்‌)
அறிவால்‌ மனிதன்‌ படைத்துள்ளான்‌. இவை
இன்றியமையாதவையே.

இத்தகைய நாகரிக வளர்ச்சி நாள்தோறும்‌ மிக வேகமாக
வளர்ந்து வருகிறது.

பண்பு கலவா நாகரிகம்‌:

மனிதகுல வாழ்வியலை வளர்த்துள்ள இத்தகைய
நாகரிகம்‌ பண்பாட்டை, சுற்றுச்சூழலை புறந்தள்ளி
வளர்ந்து வருவதால்‌ அது இன்று சமூகத்தில்‌ பல
சிக்கல்களையும்‌ தோற்றுவித்து உள்ளது என்பதை
நாம்‌ கவனத்தில்‌ எடூத்து, அவற்றுக்கான தீர்வினைக்‌
கண்டுகொள்ள வேண்டும்‌.

பண்பு கலவாத இந்நாகரிகத்தால்‌ செருக்கை
வளர்க்கும்‌ போக்கில்‌ ஆரவாரம்‌ காணப்படூகிறது. இது

167


Page 184பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மனிதகுலத்தில்‌ ஏற்றத்‌ தாழ்வுகளையும்‌ பிரிவுகளையும்‌
தோற்றுவித்து விட்டது.

புலன்வழி வரும்‌ உணர்வுகளைத்‌ தூண்டி மனித
உள்ளங்களை மகிழ்வுறுத்தியும்‌, களிப்புறுத்தியும்‌,
அதன்வழி மனித மனதில்‌ ஆசைகள்‌ வளர்ந்து அவைகளே
அவனது வாழ்வின்‌ குறிக்கோளாக மாறிவிட்டன.

உயிரியல்‌ இன்பம்‌ மட்டுமே மேலானது என்னும்‌
கொள்கை அதாவது 'உலகாயதம்‌' மேலோங்கி அதுவே
குறிக்கோளாகி வருகிறது.

மனிதர்கள்‌ இக்குறிக்கோளைப்‌ பண்பு வழிநின்று
அடையாது நெறியியலை மறந்து, பண்பைத்‌ துறந்து
செயல்படுவததனால்‌ பல துன்பங்களை வாழ்வில்‌
அடைவதைக்‌ காணக்கூடியதாக உள்ளது.

இதனால்‌ மனிதர்கள்‌ செல்வத்திற்கும்‌ அதிகாரத்திற்கும்‌
அடிமையாகும்‌ பாங்கும்‌, தன்நலமும்‌ கொண்டவர்களாக
மாறிவிட்டார்கள்‌. அன்பு நோக்கும்‌, பொது நலமும்‌
குன்றிவரத்‌ தொடங்கிவிட்டன.

செல்வமும்‌ அதிகாரமும்‌ வாழ்வின்‌ குறிக்கோளாகும்‌
போது பணிபாடூ கெடூகிறது, சமூகம்‌ துன்புறுகிறது.

இதனால்தான்‌ தமிழர்‌ குடிப்பெருமையை வலியுறுத்தினர்‌.
உன்நலன்‌ உன்குடூம்பநலன்‌ என்பவற்றைவிட
குடும்பத்தின்‌ பண்பாட்டுப்பெருமை பெரியது என்றும்‌
குடும்பத்தின்‌ பெயர்‌, புகழ்‌, மரியாதை, மதிப்புப்‌ பெரியது
எனவும்‌ ஒவ்வொரு தமிழனுக்கும்‌ உணர்த்தப்பட்டது,

166


Page 185பண்பா௫ - வேரும்‌, விழுதும்‌

இவை உணர்த்தப்பட்டால்‌ தனது உலகாயத
இன்பங்களை அடைய நெறி தவறிப்‌ போகமாட்டான்‌
என்று சமூகம்‌ எதிர்பார்த்தது.

எனவே அறம்‌ தழுவிய புறம்‌ வலியுறுத்தப்படல்‌ வேண்டும்‌.
பண்பு வழியே பொருளாக்கப்‌ பண்பாட்டில்‌ மேம்படல்‌
வேண்டும்‌,

உலகாயதத்தை, (2ர்சர81 மெ1*மா2) மனிதன்‌ பின்பற்றி
அதற்கு அடிமையாகாது அதுதான்‌ வாழ்வென்று
எண்ணாது ஆனால்‌ விரும்பின்‌ அறன்வழி தவறாது
அவற்றைப்‌ பெற்று வாழ்வதே அமைதியான மகிழ்ச்சியான
வாழ்வு.

உலகில்‌ உள்ள ஒரு பகுதி தனிமனிதர்களின்‌ குறிக்‌
கோள்கள்‌ மாறி விட்டன இதே போன்றே, சில நாடூகளின்‌
குறிப்பாக மூன்றாம்‌ உலக நாடூகளின்‌ குறிக்கோள்களும்‌
பொருளாக்கப்‌ பண்பாட்டில்‌ மட்டும்‌ மேம்படும்‌ நோக்‌
கோடூ செயல்பட்டூத்‌ திசை மாறி அவலங்களைச்‌ சந்திக்‌
கின்றன.

நாகரிக வளர்ச்சி

மனிதகுலம்‌ பொருள்சார்‌ பண்பாட்டில்‌ கொண்ட கவர்ச்சி
காரணமாக, இயற்கை விஞ்ஞானம்‌ (அறிவியல்‌) வளர்ச்சி
கண்டு அதன்வழி நாகரிகம்‌ பெரும்‌ வளர்ச்சியை
அடைந்து விட்டது. வணிக நோக்குக்‌ கொண்ட உலகு,
பண்பாட்டு நோக்குக்‌ கொண்ட உலகைப்‌ பின்தள்ளிவிட்டுூ
தனித்துவமாக வளர்ந்துவிட்டது. வளர்ந்து வருகிறது.

இன்றைய உலகில்‌ வியக்கத்தக்க அறிவியல்‌ மேம்‌

169


Page 186பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பாட்டால்‌ உலக நாகரிகம்‌ மேலோங்கி நிற்கிறது. அது
மனிதகுலம்‌ கொண்டுள்ள பண்பாட்டு நெறியியலைக்‌
கவனத்தில்‌ கொள்ளாது விடுமானால்‌ உலகிற்‌
பெருந்தீங்கே விளையும்‌. இவற்றை வலியுறுத்திய வண்ணம்‌
பலநாட்டு அறிஞர்கள்‌, பல்வேறு அமைப்புகளினூடும்‌,
ஐ. நா. சபையினூடூம்‌ தொடர்ந்து முயற்சிகள்‌ எடுத்து
வருகின்றனர்‌.

இதனை வலியுறுத்தியே வள்ளுவரும்‌

“அரம்போலும்‌ கூர்மைய ரேனும்‌ மரம்போல்வர்‌
மக்கள்பண்பு இல்லா தவர்‌”
- குறள்‌: 997

மிகச்சிறந்த அறிவாளியாக இருந்தபோதும்‌ மக்கள்‌ பண்பு
இல்லாதவரானால்‌ அவர்‌ மரம்போன்று ஓர்‌ அறிவினை
உடையவரே ஆவார்‌.

எடுத்துக்காட்டாக இன்று நாகரிகத்தில்‌ மிகவேகமாக
வளர்ந்துள்ள பல நாடூகள்‌ சுற்றுச்சூழலைப்‌
பாதுகாப்பதற்கான பண்பினைக்‌ கொண்டூ
இருக்காமையினால்‌ முழு உலகமுமே அவலத்தை
எதிர்நோக்கி உள்ளதை நாம்‌ அறிவோம்‌.

மேற்கூறிய இவ்வளர்ச்சி மனித இனத்தின்‌

பல உயர்பண்புகளைச்‌ சிதைத்து வருவதைக்‌
காண்கிறோம்‌.

பண்பாடூ தன்‌ பாரம்பரிய, மரபு வழி வளர்த்தெடுத்ததே
நாகரிகம்‌ ஆகும்‌. ஆனால்‌ அதே நாகரிகம்‌ இன்று

170


Page 187பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அதே மரபுவழியுடன்‌ மோதுகிறதா? என எண்ணத்‌
தோன்றுகிறது.

பண்பாட்டைப்‌ புறக்கணித்துத்‌ தோன்றியுள்ள இத்தகைய
வளர்ச்சி மூலம்‌ பெற்ற வாழ்வியற்‌ கூற்றினை “நாகரீகம்‌”
என அழைக்கலாம்‌.

நாகரிகம்‌ - நாகரீகம்‌
நாகரிகம்‌ என்னும்‌ சொல்‌

கர்‌ * அகம்‌) - நகரகம்‌ - நகரிகம்‌ - நாகரிகம்‌
எனத்‌ தோன்றியது எனத்‌ தேவநேயப்‌ பாவாணர்‌ அவர்கள்‌
குறிப்பிட்டுள்ளார்‌. இருப்பினும்‌

நகர்‌ இகம்‌) -- நகரிகம்‌ 5 நாகரிகம்‌ என இலக்கணவழி
பிறந்தது என்றும்‌ கூறலாம்‌. இங்கு “இகம்‌” என்பது
“இம்மை” எனப்‌ பொருள்படும்‌.

இம்மையை அதாவது இப்பிறப்பின்‌ வாழ்வியலை
மேம்படுத்தக்கூடிய வழிமுறையை நாகரிகம்‌ எனக்‌
கொள்ளலாம்‌.

நாகரிகத்தை நாகரீகம்‌ எனச்‌ சிலர்‌ அழைத்தபோதும்‌
அவற்றை நாம்‌ கீழ்க்கண்டவாறு நோக்கலாம்‌.

நகர்‌ * ஈகம்‌) - நகரீகம்‌ -) நாகரீகம்‌ என
இலக்கணவழி கொள்ளலாம்‌. இங்கு “ஈகம்‌” என்பது
விருப்பம்‌ எனப்பொருள்‌ கொண்டால்‌ நாகரீகம்‌ என்பது
மனிதரின்‌ விருப்பத்துக்கு அமைய விருப்பத்தை,

171


Page 188பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஆசைகளை நிறைவேற்றக்கூடியவாறு பிறந்த வாழ்வியல்‌
எனப்பொருள்‌ கொள்ளலாம்‌.

நாகரீகம்‌ என்பது “புதுமை” எனப்பொருள்படும்‌. எனவே
புதுமை மிக்க பண்பு கலவாப்‌ புறவெளிப்பாட்டினை
நாகரீகம்‌ என எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

பண்பாடும்‌ நாகரிகமும்‌

பண்பாடு என்பது மனிதரின்‌ அகத்தே உள்ளத்தே
குடிகொண்ட பண்பு என்றும்‌, நாகரிகம்‌ என்பது பண்புவழி
பிறந்த புறவெளிப்பாடாகும்‌ என்ற கோட்பாட்டோடூ
பன்மொழிப்‌ புலவர்‌ இரா.மதிவாணன்‌ அவர்கள்‌
சுட்டிக்‌ காட்டியுள்ள வேறுபாடுகளை இங்கு குறிப்பிட
விரும்புகிறேன்‌.

பண்பாடு நாகரிகம்‌

1. அன்பொழுக நோக்கும்‌ செருக்கை வளர்க்கும்‌

நோக்கில்‌ புலப்படூம்‌ போக்கில்‌ புலப்படும்‌
அமைதி ஆரவாரம்‌

2. மெதுவாகப்‌ பரவும்‌ விரைந்து பரவும்‌
நிலையாக இருக்கும்‌. அடிக்கடி மாறும்‌.

3. உள்ளத்தைப்‌ உள்ளத்தைக்‌
பண்படுத்தும்‌ களிப்புறுத்தும்‌

4. புதுப்புனைவு கொள்ளாது. புதுப்புனைவு கொள்ளும்‌.

 

5. பொது நலம்‌ வளர்க்கும்‌. | தன்னலம்‌ வளர்க்கும்‌.

172


Page 189பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

6. பண்பாடூ தழுவிய
ஒழுக்கலாறு மக்களை
இணைக்கும்‌

7. உயர்ந்த பண்பாட்டாளரே
- பண்பாட்டை வளர்க்கமுடியும்‌.

8. இருவேறு இனங்கள்‌
கலந்து வாழும்‌ போது
அவர்களின்‌ பண்பாடூ
கலக்கத்தயங்கும்‌.

9. நாகரிகம்‌ இல்லாத
பண்பாட்டால்‌ தீமை
இல்லை.

10.பண்பாட்டு முதிர்ச்சி
உலகத்தைக்‌ காக்கும்‌

11.இலக்கியத்தாலும்‌
கலையாலும்‌ போற்றிக்‌
காக்கப்படும்‌ அருஞ்செல்வம்‌.

 

புறநாகரிகம்‌ தழுவிய
ஒழுக்கலாறு மக்களைப்‌
பிரிக்கும்‌.

புறநாகரிகத்தை எவரும்‌
வளர்க்கலாம்‌.

இருவேறு இனங்கள்‌
கலந்து வாழும்போது
புற நாகரிகம்‌
கண்மூடித்தனமாக
கலந்து விடும்‌.

பண்பாடு தழுவாத
இந்நாகரிகத்தால்‌
அளவிறந்த தீமைபெறும்‌

நாகரிகம்‌ தனித்து
வளர்ந்தால்‌ உலகத்தை
அழிக்கும்‌. ..

செல்வத்திற்கு
அடிமையான
அறிவியலின்‌
கண்டுபிடிப்புகள்‌.

்‌. எனவே பண்பாட்டை முழுமையாகத்‌ - தன்னகத்தே

கொண்டு

வளரும்‌

நாகரிகமே

சமூகத்தினை

மேம்படுத்துவதாக அமையும்‌.

173


Page 190இதம்‌ 8
பண்பஈ௱ரும்‌ - மேம்பாரும்‌

“மேம்பாடு என்னும்‌ சொற்பதம்‌ பல துறைகளின்‌
வளர்ச்சிக்கும்‌ பாவிக்கப்பட்டு வருகிறது.

மேம்பாடு என்பது மனித குலம்‌ அதன்‌ நடைமுறையில்‌,
பொருளாதாரத்தில்‌, அரசியலில்‌, சுதந்திரத்தில்‌,
இயங்கியலில்‌, அதாவது சுருங்கக்‌ கூறின்‌ அதன்‌
“வாழ்வியலில்‌” வளர்ச்சி காணும்‌ நிலையே மேம்பாடூ
எனலாம்‌.

பண்பாட்டூச்‌ சூழலில்‌ இருந்து விடுபட்ட மேம்பாடு என்பது
ஆன்மா இல்லாத வளர்ச்சியாகும்‌. வளர்ச்சி பெற்ற
வாழ்வியல்‌ என்பது மக்கள்‌ கொண்டுள்ள நெறியியலுக்கு
அமைவாக விழுமியங்களை உள்வாங்கிக்‌ கொண்டதாக
அமைந்திருத்தல்‌ ஆகும்‌.

வெறும்‌ உலகாயத முன்னேற்றம்‌ மட்டும்‌ மேம்பாடூ
ஆகாது.

“பண்பாடு” “மேம்பாடு என்னும்‌ இரு சொற்களையும்‌
நாம்‌ இணைத்து நோக்கும்‌ போது பண்பாடூ என்பது
“கூடிவாழும்‌ முறை: என்றும்‌

“மேம்பாடு என்பது மக்கள்‌ உலகின்‌ எப்பாகத்தில்‌
வாழ்ந்தாலும்‌ அவர்கள்‌ தாங்கள்‌ மதித்துப்‌ போற்றும்‌
நன்னெறிகளுக்கிணங்கவும்‌ தங்கள்‌ பட்டறிவின்‌

அடிப்படையிலும்‌, தங்களின்‌ உள்ளார்ந்த ஆற்றல்களை

174


Page 191பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

வெளிப்படூத்தவும்‌, தமது வாழ்வியலின்‌ குறிக்கோள்களை
அடைவதற்கும, அவர்களுக்குள்ள “சுதந்திரத்தை”
அதிகரிக்கும்‌ ஒரு செயல்முறை என்று வரையறுத்துக்‌
கொள்ளலாம்‌.

பண்பாடு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடுூ,
சுற்றுச்‌ சூழலைப்‌ பாதுகாத்தல்‌, சமூக ஒருங்கிணைவினை
'மேம்படூத்தல்‌, சமுதாயத்தில்‌ உள்ள சமூகசேவை
நிறுவனங்கள்‌ உள்ளிட்ட அனைத்துக்‌ குடியியல்‌
நிறுவனங்களையும்‌ பேணி வளர்த்தல்‌ போன்ற
பிறவற்றுக்குத்‌ துணை நிற்க வேண்டும்‌. அப்போதுதான்‌
பண்பாடூ மேம்பாட்டிற்கு வலிமை சேர்ப்பதாக அமையும்‌
என்பதையும்‌, பண்பாட்டு வழிசென்று மேம்பாடு
காண்பது இலகுவானது என்பதையும்‌ கண்டூள்ள உலகு
பண்பாட்டை வளர்த்தெடூத்துச்‌ செல்ல விரும்புகிறது.

எடூத்துக்காட்டாகச்‌ சீனக்குடியரசு உருவாகும்‌ போது அந்‌
நாட்டில்‌ பல மொழிகளைப்‌ பேசும்‌ மக்கள்‌ இருப்பதைக்‌
கண்டு கொண்டனர்‌. ஆனால்‌ ஆறு மொழிகளுக்கு
மாத்திரம்‌ எழுத்துக்கள்‌ இருந்தன.

எழுத்துக்கள்‌ இல்லாத பல மொழிகளும்‌ எழுத்துருவை
பெற்றுத்‌ தமது மொழிகளை வளர்த்துக்‌ கொள்ள
அரசு உதவியது; ஊக்கப்‌ படுத்தியது. அம்‌ மக்களின்‌
தனித்துவம்‌ வளர்க்கப்பட்டது.

மக்கள்‌ தொகை கூடிய சீன நாடூ மேற்குலகின்‌ எதிர்ப்புக்கு
மத்தியிலும்‌ சகல துறைகளிலும்‌ முன்னேறி ஒரு வல்லரசாக
அதே மேற்குலகம்‌ தன்னை நாடிவரக்கூடியவாறு
வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

175


Page 192பண்பாட௫ - வேரும்‌, விழுதும்‌

மேலும்‌ உலகில்‌ வாழும்‌ பலகோடி மக்களிடையே
குறிப்பாகப்‌ பொருளாதாரத்தில்‌ மேம்பட்ட நாட்டின்‌
மக்களிடையே பொருளாதாரத்தோடூ பணி்பாடூம்‌ கலந்து
வளர்ந்திருந்ததினால்‌ தான்‌ 2004 மார்கழியில்‌ ஏற்பட்ட
சுனாமி அனர்த்தத்தின்‌ போது உலகின்‌ ஒரு பகுதி மக்கள்‌
ஓடிச்‌ சென்று உதவும்‌ மனப்பாங்கைப்‌ பெற்றிருந்தனர்‌.

மாறுபட்ட பண்பாடு

பல்வேறு இனங்களின்‌ பண்பாடும்‌ ஒன்றுக்கொன்று
மாறுபட்டது. இன்னும்‌ துல்லியமாகப்‌ பார்த்தால்‌
இனங்களின்‌ எண்ணிக்கையை விடப்‌ பண்பாட்டின்‌
எண்ணிக்கை பல மடங்காயிருக்கின்றது.

மாறுபட்ட பண்பாடு உலகின்‌ பலவீனம்‌ அல்ல பலம்‌,
உலகின்‌ வலிமை.

உலகின்‌ இயற்கைச்‌ சூழல்‌ குறிஞ்சி, முல்லை,
மருதம்‌,பாலை, நெய்தல்‌ என ஐவகை நிலங்களாக
அவற்றுள்‌ ஆயிரக்கணக்கான வடிவங்களாக
அமைந்திருப்பது உலகிற்கு அழகு சேர்க்கின்றது.
அதுபோல மாறுபட்ட பண்பாடும்‌ அமைந்திருக்கும்‌.

மாறுபட்ட மேம்பாடு

பல்வேறு பண்பாடுகளும்‌ தமக்கே உரித்தான மேம்பாட்டு
முறையினைக்‌ கொண்டிருப்பது இயல்பானதே. அதுவே
சிறந்ததும்‌, சுதந்திரமானதும்‌, ஆக்கசக்தியினைக்‌
கூட்டுவதும்‌ ஆகும்‌.

. ஆனால்‌ இன்றைய உலகமயமாக்கலில்‌ வளர்ந்த

176.


Page 193 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

நாடுகள்‌ மற்றைய நாடூகளின்‌ மேம்பாட்டு முறைகளை,
குறைபாடுகள்‌ உள்ளதெனக்‌ கருதி, தமது முறையே
சிறந்தது என்ற எண்ணத்தோடு அவற்றைப்‌ புறக்‌
கணிக்கின்றன, ஒடுக்குகின்றன.

அதனால்‌ அந்த நாடுகள்‌ தமது பண்பாட்டூ வழியில்‌
பொருளாதாரத்தில்‌, அரசியலில்‌, நீதிநிர்வாக சமூகவியல்‌
உள்ளிட்ட சகல வாழ்வியலிலும்‌ மேம்பாட்டை அடைய
முற்படாது திணிக்கப்பட்ட முறைகளைப்‌ பின்பற்றுவதால்‌
தமது ஆத்மாவை இழந்து துன்பப்படுகின்றன.

பல்வேறு பண்பாடுகள்‌ இருப்பதுபோல்‌, ஏன்‌ பல்வேறு -
மேம்பாட்டு முறைகள்‌ இருக்கக்‌ கூடாது? உலகின்‌
ஒவ்வொரு பகுதியிலும்‌ உள்ள மக்கள்‌ தங்கள்‌ தங்கள்‌
வழிகளில்‌ இன்றைய உலகின்‌ புதுமைக்குப்‌ பங்களிக்க
ஏன்‌ இன்றைய வல்லரசுகள்‌, ஆளும்வர்க்கங்கள்‌
அனுமதிக்க மறுக்கின்றன? உள்ளுரில்‌ வேரூன்றிய
பண்பாடு உலகளாவிய செயல்‌ முறைகளில்‌ பங்கு
பெறுவதற்கு வாய்ப்பினைக்‌ கொடுக்க வேண்டும்‌.

உலக வணிகம்‌

இன்றைய உலக வணிகம்‌ பல இனங்களின்‌
பண்பாட்டைச்‌ சிதைத்து அவர்களின்‌ குடூம்பவாழ்வுகளில்‌
சிக்கல்களைத்‌ தோற்றுவிக்கிறது. தங்கு தடையற்ற
உலகச்‌ சந்தையில்‌ ஆதாய நோக்குடன்‌ உலகளாவிய
போட்டி நடைபெறுகின்றது.

இப்போட்டியின்‌ விளைவால்‌ பேராசை, ஏற்றத்தாழ்வு,
உண்மையும்‌ தூய்மையும்‌ அற்ற நடைமுறைகள்‌ மலிந்து

177


Page 194பணர்பாடு - வேரும்‌, விழுதும்‌

விட்டன. இதனால்‌ பெரும்பகுதி மக்கள்‌ கொட௫மைக்கு
ஆளாக்கப்பட்டூள்ளனர்‌.

பிறர்கையை எதிர்பார்த்து முதலாளித்துவ உற்பத்தி
முறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ மூன்றாம்‌ உலக நாடூகள்‌
படிப்படியாக தமது மரபுவழிவந்த பொருளாதார சமூக
நிறுவனங்களையும்‌, அகம்சார்ந்த கோட்பாடுகளையும்‌
கைவிட்டூ விட்டன. அவற்றிற்குப்‌ பதிலாகப்‌ பொருளாதார
வளர்ச்சி தேசியப்பாதுகாப்பு, போன்றவற்றுக்கான
கோட்பாடுகளைச்‌, சட்டங்களை வகுத்துச்‌ செயல்படத்‌
தொடங்கிவிட்டன.

தம்‌ செயலுக்குத்‌ துணையாக உலகளாவிய அளவில்‌

செய்தித்தொடர்பு மேலாதிக்கத்தையும்‌ ஏற்றுக்‌
கொண்டுூவிட்டன.

இவற்றினால்‌ பெரும்‌ பகுதிமக்களின்‌ எண்ணங்கள்‌,
குரல்கள்‌ வெளிப்படாது - ஆதிக்கசக்தியின்‌ குரலே
ஒலிக்கின்றது. இதனால்‌ உலகில்‌ இன்று இச்சிறு
குழுமங்களான ஆதிக்கசக்திகளின்‌ கருத்துக்களே
ஏற்றுக்கொள்ளப்பட்ட சனநாயகம்‌ ஆகிவிட்டது.

இதனால்‌ பயனடைந்தோர்‌ பாதிக்கப்பட்டவர்‌ ஆகிய இரு
கூட்டத்தாருக்கும்‌ இடையேயான இடைவெளி உலக
நாடுகளில்‌ அதிகரித்து விட்டது.

ஒருசிலர்‌ கைகளில்‌ சொத்துக்கள்‌, பணபலம்‌ அதிகரிக்க,
அதிகாரம்‌ பெருகி விட்டது. உதாரணமாக மெக்சிக்கோவில்‌
1993ல்‌ 24 குடும்பங்களின்‌ சொத்து உடமைகளின்‌
பெறுமதி, மிகுதியான 15 கோடி மக்களினதும்‌ சொத்துகள்‌

176


Page 195பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

உடைமைகளைவிட அதிகமாக இருந்தது.

பெரும்பகுதி மக்களிடையே வறுமையும்‌, பற்றாக்‌
குறையும்‌, உலக நாடூகளிடையே நெருக்கடியும்‌
உலகத்‌ திறந்தவெளி வணிகக்‌ கொள்கையினால்‌
வளர்ந்து வருகிறது. என்பதனை முதன்மை நாடூகளின்‌
ஆதிக்கசக்திகள்‌ ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

திறந்தவெளி உலக வணிகக்கொள்கைதான்‌ அனைத்து
நோய்களுக்கும்‌ மருந்து என்னும்‌ கருத்து ஒரு சமய
நம்பிக்கை போன்று உலகின்‌ சகல நாடூகளிடையேயும்‌
பரப்பப்பட்டு நம்பப்பட்டு வருகிறது.

இந்நிலை மாறுவதற்கு ஆதாயநோக்கத்தை
மட்டும்‌ கொள்ளாது பண்பாட்டின்‌ நெறியியலையும்‌
அதன்‌ கூறுகளையும்‌ அதாவது கொள்கைகள்‌,
விழுமியங்கள்‌, அறவியல்‌, அழகியல்‌ என்பவற்றையும்‌
பொருளாதாரத்துக்கான ஊக்கு சக்தியாக அமைத்துக்‌
கொள்வதற்குரிய வழிவகைகளைக்‌ கண்டறிந்து
செயற்படல்‌ வேண்டும்‌.

எடூத்துக்காட்டாக மக்களை வறுமையிலிருந்தும்‌
அறியாமையிலிருந்தும்‌ விடூவித்துத்‌ தனிமனிதனுக்கும்‌,
மக்கள்‌ குழுக்களுக்கும்‌, இனங்களுக்கும்‌, இயற்கைக்கும்‌
இடையில்‌ ஒருமைப்பாட்டினை உருவாக்கி மக்களின்‌
படைப்பாற்றல்‌ சக்தியினைக்‌ கூட்டுவதும்‌ முக்கியம்‌
ஆகும்‌.

சமுதாயத்தை உலகவணிகப்‌ பொருளாதாரம்‌
வெற்றிகொள்வதை, ஏற்றத்‌ தாழ்வுகளை, ஏற்படுத்திக்‌

179


Page 196பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
கூறுபோடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வணிகப்‌ பொருளாதார வளர்ச்சியில்‌, இயற்கையுடன்‌
இணைந்த உறவுநிலையை அறிவியல்‌ கொண்டிருக்காது,
ஒவ்வொரு மனிதனையும்‌ கவனத்திற்‌ கொள்ளாமல்‌
சமூக மேம்பாடு நடைபெற இயலாது என்ற
நம்பிக்கை வளர்க்கப்படல்‌ வேண்டும்‌. இத்தகைய
நம்பிக்கையே இயற்கைச்சூழலைப்‌ பாதுகாப்பதுடன்‌
ஒவ்வொரு மனிதனதும்‌ படைப்பாற்றல்‌ சக்தியினையும்‌
மேம்படுத்தும்‌.

படைப்பாற்றலைக்‌ கூட்டக்கூடிய முறையில்‌ ஒவ்வொரு
இனத்தின்‌ பண்பாடும்‌ அமைந்திருந்தால்‌ தான்‌ அந்த
இனம்‌ மேம்பாட்டை அடையும்‌. மேம்பாட்டூக்குரிய சிறந்த
வழிமுறையினைக்‌ கொண்டிருக்கும்‌.

பண்பாடும்‌ படைப்பாற்றல்‌ சக்தியும்‌

ஒவ்வொரு இனமும்‌ தனது தேவைகளை நிறைவு செய்து
கொள்ள - தனது படைப்பாற்றல்‌ சக்தியை வளர்த்துக்‌
கொள்ளல்‌ வேண்டும்‌.

படைப்பாற்றல்‌ சக்தியின்‌ வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும்‌
பண்பாட்டின்‌ கூறுகளை அந்த இனம்‌ கைவிடலாம்‌,
அல்லது மாற்றி அமைக்கலாம்‌.

எடூத்துக்காட்டாகத்‌ தமிழர்‌ மத்தியில்‌ அவரவர்‌
திறமையை அறிந்து அவற்றிற்கேற்ப மக்கள்‌ தொழிலில்‌
ஈடுபடாது மரபுவழியில்‌ சாதிய அடிப்படையில்‌ தொழில்கள்‌
நடைபெறுவது சுட்டிக்காட்டத்தக்கது.

160)


Page 197பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மரவேலை, இரும்புவேலை, மீன்பிடி, தென்னை பனை
வளங்களைப்‌ பயன்படுத்தல்‌, கட்டடம்‌, சிகையலங்காரம்‌,
இசையின்‌ சில துறைகள்‌ போன்ற இன்னோரன்ன
முக்கிய துறைகளைக்‌ குறிப்பிடலாம்‌. இது கைவிடப்பட
வேண்டிய கொள்கை, நம்பிக்கை ஆகும்‌.

கைவிடக்கூடிய பண்பாட்டுக்‌ கூறுகள்‌

இவ்வாறு மேம்பாட்டூக்கு குறுக்கே நிற்கும்‌ கூறுகளாகப்‌
பெரும்பாலும்‌ பண்பாட்டின்‌ “கொள்கைகள்‌:
“நம்பிக்கைகள்‌” “சடங்குகள்‌” என்பன அமைந்திருக்கும்‌
மேற்கூறிய இப்பண்பாட்டுக்‌ கூறுகள்‌ சமூகவிஞ்ஞான,
இயற்கை விஞ்ஞான வளர்ச்சியோடு பரிணாமவளர்ச்சி
பெறக்கூடியவை என்பதையும்‌

இக்கொள்கைகள்‌, நம்பிக்கைகள்‌, சடங்குகள்‌
என்பவற்றை ஒரு புனிதமான மாற்றமுடியாத மரபாகப்‌
போற்றுதல்‌ கூடாது என்பதையும்‌ நாம்‌ கவனத்தில்‌
கொள்ளவேண்டும்‌.

தன்‌ இனத்தின்‌ மேம்பாட்டைக்‌ கவனத்திற்கொண்டு, புதிய
சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கக்‌ கூடிய நெகிழ்திறன்‌
உடையவையாக அவைகளைக்‌ கருதவேண்டும்‌.

மேம்பாட்டுக்குக்‌ குறுக்கே நிற்கும்‌, படைப்பாற்றல்‌
சக்தியைக்‌ குறைக்கும்‌ பண்பாட்டின்‌ இக்கூறுகளை
நன்கு ஆய்வுசெய்து அவைகள்‌ சமூகத்தை அடக்கி
ஒடுக்குவனவாக கூறுபோடுவனவாக அமையப்பெறின்‌
அவற்றில்‌ உள்ள மூடநம்பிக்கைகளையும்‌,
முரணான கொள்கைகளையும்‌ அவை சார்ந்த

161


Page 198பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌

பழக்கவழக்கங்களையும்‌, மனப்பான்மையையும்‌ தியாகம்‌
செய்துவிடல்‌ வேண்டும்‌, கைவிட வேண்டும்‌.
மேற்கூறிய அடிப்படையில்‌ மட்டும்தான்‌ ஓர்‌ இனம்‌ தான்‌
கொண்டுள்ள பண்பாட்டில்‌ சிந்தனையில்‌ மாற்றத்தைக்‌
கொண்டு வருதல்‌ நன்று.

எனவே ஓர்‌ இனம்‌ தனது பண்பாட்டில்‌ கைவிடக்கூடிய,
அல்லது மாற்றம்‌ செய்யக்கூடிய அதாவது பின்பற்றி
வாழத்‌ தேவையற்றவை எவை எவை என்பதனை
மேற்கூறிய அடிப்படையிலேயே தீர்மானித்து
முடிவெடூத்துச்‌ செயல்படல்‌ வேண்டும்‌.

இதற்குச்‌ சிறந்த எடூத்துக்காட்டாகக்‌ தமிழர்களிடம்‌
உள்ள சாதியக்‌ கொள்கைகள்‌, சகுனம்‌ பார்க்கும்‌
நம்பிக்கைகள்‌, சில சமயச்‌ சடங்குகள்‌ என்பவற்றை
எடூத்துக்‌ கொள்ளலாம்‌.

எடுத்துக்காட்டாக எல்லோர்க்கும்‌ பொதுவான ஒரு சிறிய
விடயத்தைக்‌ கூறலாம்‌. பெண்கள்‌ தலைவிரித்தபடி எதிரே
வருவது சகுனப்படி துர்க்குறி என நம்பிக்கை கொண்ட
தமிழர்‌ சமூகம்‌, இன்று பெண்கள்‌ அழகாக தலைவிரித்துச்‌
செல்வதே அழகு எனப்‌ பின்பற்றவில்லையா?

இத்தகைய ஆதாரம்‌ அற்ற காலத்தோடு ஒவ்வாத
மூடநம்பிக்கைகள்‌ கைவிடப்பட வேண்டியவையே.

கைவிடக்கூடாத பண்பாட்டுக்‌ கூறுகள்‌

சமூகமேம்பாட்டுக்குத்‌ தடையாக உள்ள பண்பாட்டூக்‌
கூறுகள்‌ மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவையே

[82


Page 199பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

என மேலே பார்த்தோம்‌.

அதேபோன்று ஓர்‌ இனம்‌ கைவிடக்கூடாத பண்பாட்டுக்‌
கூறுகள்‌ உண்டா? என்ற கேள்வியும்‌ எழுகின்றது.

நெறியியல்‌ கூறுகளான நெறிமுறை, விழுமியம்‌,
குடிவழக்கு, குறியீடு, வழக்கடிப்பாடூ, உயர்‌
பழக்கவழக்கம்‌ என்பன கைவிடத்‌ தேவையற்றவை.
இவை அந்த இனத்தை அடையாளப்படூத்தி நிற்பவை.

அந்த இனத்தின்‌ அடையாளங்களை, பிறசமூகத்‌
தினரிடையே மதிப்பை ஏற்படூத்தக்கூடிய பண்பாட்டின்‌
கூறுகளை, அந்த அந்த இனங்கள்‌ தொடர்ந்து
கடைப்பிடித்தல்‌ வேண்டும்‌.

குறிப்பாக ஓர்‌ இனம்‌ கொண்டுள்ள விழுமியங்களை
அந்த இனம்‌ தொடர்ந்து இறுக்கமாகக்‌ கடைப்பிடிக்க
வேண்டும்‌. ஏனெனில்‌ விழுமியங்கள்‌ எப்போதும்‌ உலகில்‌
உள்ள பிற இனங்களால்‌ மதிக்கப்படுபவை. உலகப்‌
பொதுவானவையாகக்‌ கருதப்படுபவை.

எடுத்துக்காட்டாக ஈகை, பொய்‌ சொல்லக்கூடாது
என்பனவற்றை உலகில்‌ உள்ள எல்லா இனங்களும்‌
வரவேற்கும்‌; மதிப்பளிக்கும்‌.

இதேவேளை கொள்கைகள்‌ நம்பிக்கைகள்‌ என்பன
அந்தந்த இனத்துக்கே உரியன. ஓர்‌ இனத்தின்‌
கொள்கைகளில்‌ உயர்வானதும்‌, தாழ்வானதும்‌ இருக்கும்‌
என்பதனை நாம்‌ ஏற்றுக்கொள்ளுதல்‌ வேண்டும்‌.

183


Page 200பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இதன்‌ அடிப்படையில்‌ விழுமியங்களுக்கும்‌ கொள்கைகள்‌,
நம்பிக்கைகளுக்கும்‌ இடையே உள்ள வேறுபாட்டினை

உற்று நோக்கல்‌ நன்று.

 

 

இனத்திற்கு மட்டுமே
உரியது.

நெறிமுறை விழுமியம்‌
(கொள்கை நம்பிக்கை)
குறிப்பிட்ட ஓர்‌ உலகப்பொதுவானது

சகல இனங்களாலும்‌
வரவேற்கப்படக்‌ கூடியது.

 

உயர்வானதாகவோ,
மதிப்பற்றதாகவோ
இருக்கும்‌.

உயர்வானதாகவே
இருக்கும்‌.

 

மாற்றம்‌ அல்லது
பரிணாம வளர்ச்சி
பெறக்கூடியது.

மாற்றக்‌ கூடாதது
மாற்றம்‌ அடையாதது.

 

அந்த இனத்தை
மேம்படுத்தக்‌ கூடியது
அலலது மேம்பாட்டிற்குத்‌
தடையாக உள்ளது.

அந்த இனத்தை
மேம்படுத்தக்‌ கூடியவை.

 

எல்லாவற்றையும்‌
அந்த இனம்‌ சரியானது
உயர்வானது என்று
நம்பும்‌. பிற இனங்கள்‌
சிலவற்றை வரவேற்கும்‌
சிலவற்றை ஏற்க
மாட்டாது.

 

 

எல்லாவற்றையும்‌
சகல இனங்களும்‌
ஏற்றுக்கொள்ளும்‌
ஆனால்‌, முன்னுரிமை
கொடுப்பதில்‌
இனத்துக்கினம்‌
வேறுபடும்‌.

 

 

இதன்‌ அடிப்படையில்‌ உற்றுநோக்கில்‌ கூடிய அளவு
விழுமியங்களைக்‌ கடைப்பிடித்து ஒழுகும்‌ இனமோ

தனி மனிதரோ

மற்றைய இனங்களிடையே,

பிற

164


Page 201பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மனிதரிடையே மதிப்பைப்பெறுவர்‌ என்பதையும்‌

அத்துடன்‌ தனது இனத்துக்கே உரிய கொள்கைகள்‌,
நம்பிக்கைகள்‌ உட்படச்‌ சகல பண்பாட்டுக்‌ கூறுகளிலும்‌
எவை எவை தன்‌ இனத்தின்‌ கட்டொருமைப்பாட்டை
வளர்க்கவும்‌, காக்கவும்‌, தன்‌ இனத்தின்‌ வாழ்வியலை
மேம்படுத்தக்‌ கூடியவை எனக்‌ காணப்படுபவற்றையும்‌
இழந்துவிடாது தொடர்ந்து கடைப்பிடித்தல்‌ வேண்டும்‌
என்பதும்‌ தெளிவாகிறது.

சமயமும்‌ பண்பாடும்‌

உலகில்‌ பல இனங்கள்‌ தமது பண்பாட்டைச்‌
சமயத்துடன்‌ நன்கு கலந்து விட்டூள்ளனர்‌. கல்வி
மூலமும்‌, அறிவியலாலும்‌, மக்களைப்‌ பண்பாட்டை
அதாவது வாழ்வியலைப்‌ பின்பற்ற வைப்பது மிக மிகக்‌
கடினமாகப்‌ பட்டதனால்‌,

தனிமனித, சமூக மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட
நெறியியலை நடைமுறைப்படுத்தக்‌ கடவுளும்‌ அதன்‌
வழி சமயமும்‌ பயன்படூத்தப்‌ பட்டன.

சமயம்‌ என்பது வெறும்‌ நம்பிக்கை அல்லது
சட்ங்கில்‌ அமையாது ஒரு குறிக்கோளை அடைவது
அதன்‌ இயல்பாகும்‌. அதன்‌ இலக்கு விழுமியங்கள்‌
நிறைந்த நேர்மையான வாழ்க்கைக்கு உதவுவதாகும்‌.
இப்பொருளில்‌, இந்‌ நோக்கில்‌ தான்‌ சமயம்‌ தோற்றம்‌
பெற்று வளர்ந்தது.

சமயக்‌ கொள்கைகளில்‌ ஒன்றாகப்‌ பண்பாட்டின்‌ நெறியியற்

165


Page 202பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கூறுகள்‌ இணைக்கப்பட்டுச்‌ சமய நம்பிக்கைகளாக,
சடங்குகளாக இணைக்கப்பட்டு அவற்றை மீறுதல்‌
கடவுள்‌ மறுப்பு அல்லது பாவமான காரியம்‌ என்றும்‌
கடைப்பிடித்தல்‌ புண்ணியம்‌ என்றும்‌ மனிதரின்‌ மனங்களில்‌
நம்பிக்கைகளாகப்‌ புகுத்தப்பட்டன.

சமூக விஞ்ஞானத்தை ஒவ்வொரு மனிதனும்‌ கடைப்‌
பிடித்து ஒழுகுவதே வெற்றி அளிக்கும்‌ என்பதால்‌ மனித
மனங்களை அந்த இனம்‌ தான்‌ கொண்ட கொள்கைகள்‌,
நம்பிக்கைகள்‌, விழுமியங்கள்‌ என்பவற்றை ஏற்றுக்‌
கொள்ள வைப்பதற்கும்‌ செயற்பட வைப்பதற்கும்‌
சமயவழி இலகுவானதாக அமைந்தது,

இது ஆதிகால சமூகவியலாளர்களுடைய உளவியல்‌
சார்ந்த உன்னத அறிவிற்கு ஓர்‌ எடூத்துக்‌ காட்டூ.
எனவே சில சமூகவியலாளர்கள்‌ சமயவழி கோவிலினூடூ
செயற்பட்டனர்‌.

இதில்‌ உள்ள ஆபத்து என்னவென்றால்‌ மூடநம்பிக்கை
களையும்‌, அர்த்தமற்ற சடங்குகளையும்‌ சமூகமேம்பாடூ
கருதி மாற்றி அமைப்பதோ, அகற்றுவதோ, மிக மிகக்‌
கடினமான செயலாக அமைந்து விட்டது.
எடூத்துக்காட்டாகத்‌ தமிழர்களது வாழ்வியலை நோக்‌
கினால்‌ சமயத்தின்‌ ஊடே தமிழ்‌ இனத்தில்‌ புகுந்துகொண்ட
ஆரியர்கள்‌ - சாதி, நீதிமுறை, சடங்குகள்‌, போன்ற பல
நம்பிக்கைகளைப்‌ புகுத்தித்‌ தாமே மதகுருவாக இருந்து
வளர்த்து வருகின்றனர்‌.

தமிழ்‌இனத்தை மேம்படுத்தத்‌ துணைநிற்காத இத்தகைய
மூட நம்பிக்கைகள்‌, சடங்குகள்‌, தமிழ்‌ இனத்தின்‌
“கட்டொருமைப்பாட்டை”ச்‌ சிதைத்து வருகிறது.

166


Page 203பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

எடுத்துக்காட்டாக வாழ்வில்‌ “நெறியியலுக்குப்‌”” புறம்பான
ஒருவனின்‌ நடத்தையால்‌ வரும்‌ தீங்கையோ, அதன்‌
குறைபாட்டையோ, பாவத்தையோ, சடங்குகள்‌(பரிகாரம்‌)
மூலம்‌ தீர்த்தக்‌ கொள்ளலாம்‌ என அவனை
நம்பவைத்துள்ளது.

அது மாத்திரமன்று களவு எடூக்கச்‌ செல்பவன்‌ கூட
கடவுளுக்கு “நேர்த்தி” வைத்துச்‌ செல்லும்‌ அளவிற்கு
நிலைமை இருக்கிறது.

நம்பிக்கையினால்‌ தோன்றும்‌ தயக்கங்களின்‌
கூட்டுத்தொகையாகவும்‌, மனித மேம்பாட்டுக்கான மனித
ஆற்றல்களைத்‌ தடையின்றிப்‌ பயன்படுத்துவதைத்‌
தடுக்கும்‌ பண்பினை உடையதாகவும்‌, சமயம்‌ மாறி
வருவதைக்‌ காணமுடிகிறது.

இத்தகைய தமிழரது சமய நம்பிக்கைக்கு எதிராகப்‌ பல
பகுத்தறிவு வாதிகள்‌ முயன்றும்‌ வெற்றிபெறவில்லை.
பெரியார்‌ ஈவேரா அவர்களால்‌ ஏற்படுத்தப்‌ பட்ட விழிப்புணர்வு
பல பகுத்தறிவுவாதிகளை உருவாக்கியபோதும்‌ தமிழ்‌
இனத்தின்‌ கட்டொருமைப்‌ பாட்டை, “நாம்‌ தமிழர்‌” ஒரே
குடிப்பிறப்பினர்‌ என்ற உணர்வோடூ இயங்கும்‌ தன்மையை
ஏற்படுத்த முடியவில்லை என்றே கூறலாம்‌.

கடவுள்‌ இருக்கறாரா?இல்லையா? என்பதற்கு அப்பால்‌ மனித
சமூகத்தை ஒழுக்கமாகவும்‌, கட்டொருமைப்பாட்டூடனும்‌,
பண்புடனும்‌ வாழவைப்பதற்கும்‌; மனிதன்‌,
மனத்திண்மையை இழந்துவிடாது இருப்பதற்கும்‌ கடவுள்‌
நம்பிக்கையும்‌ அதன்வழி பிறந்த சமய நெறியியலும்‌
மனிதகுலத்திற்குத்‌ தேவைப்பட்டது.

187


Page 204பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

காலஓஒட்டத்தில்‌ அதிகாரவிரும்பிகளாலும்‌, நயவஞ்‌
சகர்களாலும்‌ அவர்களின்‌ ஆசைகளுக்கும்‌
சுயநலத்திற்கும்‌ ஏற்ப வணிகமயமாக்கப்பட்ட சமயம்‌
அதாவது பண்பாடு கலவாத சமயக்கொள்கைகள்‌,
சடங்கு மயமாகி விட்டன.

இத்தகைய சமயப்போக்கால்‌ மனிதகுலம்‌ சீர்கெட்டூம்‌,
சிதைந்தும்‌, ஏமாற்றப்பட்டும்‌, மனிதநேயத்தைத்‌
துறந்தும்‌ மதவெறி கொண்டதாகவும்‌, மதத்தின்‌
பெயரால்‌ மனிதப்படுகொலைகள்‌ செய்யக்கூடியதாகவும்‌
மாறிவிட்டதை வரலாறு காட்டி நிற்கிறது. எனவே சமயம்‌
தோன்றிய தனது நோக்கில்‌ இருந்து விலகிவிட்டது.

சகிப்புணர்வையும்‌, சுதந்திரமான சிந்தனைப்போக்கையும்‌,
பிறரையும்‌ அவர்கள்‌ வாழ்வியலை மதிக்கும்‌
பண்பினையும்‌, வளர்த்தெடுக்கச்‌ சமயம்‌ தவறிவிட்டது.
எனவே சமயத்தின்‌ இத்தகைய போக்கினை மாற்றி
அமைக்காதவரை பண்பாட்டைச்‌ சமயத்தின்வழி
எடூத்துச்செல்வது கேள்விக்குரியதே.

முள்ளை முள்ளால்‌ எடூப்பது போன்று, சமயவழி
புகுத்தப்பட்ட தமிழ்‌ இனத்தை மேம்படுத்தாத கூறுகளை
சமயவழி சென்றே மாற்றுவது இலகுவானது ஆகும்‌ என
நம்புகிறேன்‌.

இன்று தமிழரது சமயக்‌ குருவானவர்களாகத்‌ திகழும்‌
பிராமண குலத்தவர்கள்‌ தாமும்‌, நாயன்மார்கள்‌, கவிஞர்‌
சுப்பிரமணிய பாரதி, திரு. சாமிநாத ஐயர்‌ மற்றும்‌ அவர்கள்‌
குலத்தில்‌ பிறந்த பல தமிழ்‌ உணர்வாளர்கள்‌ போன்று
தாமும்‌ தமிழர்கள்‌ என்ற உணர்வை உள்வாங்கி, தமிழ்‌

188


Page 205பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இன மேம்பாட்டை மனதில்‌ கொண்டூ செயல்படூவது,
தமிழ்‌ இனத்தவர்களாகிவிட்ட அவர்கள்‌ உட்பட சகல
தமிழர்கள்‌ வாழ்வுக்கும்‌ நன்றே.

ஐந்து மூலகங்கள்‌

தமிழர்‌ வாழ்வியலையும்‌ உலக இயங்கியலையும்‌
மேம்படூத்தக்கூடிய பற்பல கோட்பாடுகளை இந்து சமயம்‌
கொண்டூள்ளது. எடூத்துக்‌ காட்டாக சுற்றுச்‌ சூழல
மாசடைவதும்‌ அதனால்‌ உலகிற்கு உள்ள தீங்கையும்‌
பற்றி இன்றைய உலக சமுதாயம்‌ பெரிதும்‌ கவலைப்‌
படுகின்றது.

ஆனால்‌ அன்றே தமிழர்‌ நிலம்‌, நீர்‌, காற்று,
நெருப்பு, வானம்‌ ஆகிய ஐந்து மூலகங்களையும்‌
வழிபாட்டுக்குரியனவாக்கி, அவைகள்‌ ஒவ்வொன்றையும்‌
ஒவ்வொரு தெய்வத்தின்‌ பெயர்‌ கூறி அழைத்துத்‌
தெய்வங்களாக, எமக்கு அருள்செய்வன என்ற
நம்பிக்கையை மக்களிடம்‌ வளர்த்து அவற்றைத்‌
தூய்மையாக வைத்திருப்பதற்கான நடை முறைகளைச்‌
“சடங்குகளாக” மக்களுக்குள்‌ புகுத்தியுள்ளனர்‌. பூமியைச்‌
சுத்தமாக வைத்திருக்கப்‌ “போகிப்‌ பண்டிகையை”
எடூத்துக்காட்டாகக்‌ கூறலாம்‌.

சமயமும்‌ சட்டமும்‌
உலகில்‌ பெரும்பாலும்‌ சட்டம்‌ தனது அதிகாரத்தைப்‌

பயன்படுத்தியே வெற்றி பெற முடிகின்றது. ஆனால்‌
சமயம்‌ அப்படியாக இல்லை. உலகில்‌ பெரும்பாலாக

169


Page 206பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஒவ்வொரு மனிதனும்‌ தானாக விரும்பி ஏற்றுக்கொள்வது,
பின்பற்றுவது சமயம்‌ ஆகும்‌.

மனிதன்‌ பல வேளைகளில்‌ சமய நடைமுறைகளைச்‌
சுகமான சுமைகளாக சுமந்த வண்ணம்‌ திரிகின்றான்‌.

மனிதன்‌ சட்டத்திலும்‌ பார்க்கச்‌ சமயத்தை மதிப்பதற்கான
காரணங்கள்‌ பல இருந்தாலும்‌ முதன்மையானது
மனமே.

மனம்‌ எவை எவை தன்னை மேம்படூத்தக்கூடியவை,
சிறப்பிக்கக்கூடியவை, தனக்குரியவை என ஏற்றுக்‌
கொள்கிறதோ அதற்காக வாழத்‌ தலைப்படும்‌ தன்மையை
உடையது. அவற்றோடூ இசைந்து செல்லவல்லது.

சுருங்கக்கூறின்‌ மனம்‌ தனக்கானது என்று எவற்றை
ஏற்றுக்‌ கொள்கிறதோ, அவை பற்றிச்‌ சிந்திக்கும்‌,
வழிமுறைகளைக்‌ கண்டுபிடிக்கும்‌; விருப்புடன்‌
செயற்படும்‌.

சட்டங்கள்‌ தமக்கானவை தன்னையும்‌ தன்‌ இனத்தையம்‌
மேம்படுத்தக்கூடியவை. தனக்கு வழிகாட்டி நிற்பவை
போன்ற நிலையை மனித மனங்களில்‌ வளர்த்தெடூத்தாற்‌
தான்‌ மனித சமூகம்‌ சமய நிலையிலிருந்து சட்டத்தை
மதித்து ஏற்கும்‌ நிலைக்கு உயரும்‌. சமயம்‌ போன்று
சட்டத்தையும்‌ நோக்கும்‌.

மாறாகச்‌ சட்டங்கள்‌ பிறர்‌ தன்னை கட்டூப்படூத்தவும்‌,

அதிகாரத்தை தம்‌ மீது செலுத்தவும்‌ உருவானது என
நம்புமானால்‌ அது வெற்றி பெற மாட்டாது.

190


Page 207பண்பாட - வேரும்‌, விழுதும்‌

எனவே இயற்றப்படும்‌ சட்டங்கள்‌ நெறியியலுக்கு
அமைவாக இருப்பதுடன்‌ அத்தகைய பண்பாட்டின்‌
நெறியியற்‌ கூறினை மனித மனம்‌ தன்‌ வாழ்வியலுக்கு
உரியது என  ஏற்றுக்கொண்டதாகவும்‌ இருப்பின்‌
அத்தகைய சட்டங்கள்‌ இயற்றப்பட்டதன்‌ நோக்கம்‌
வெற்றி பெறும்‌.

 

த்‌

191


Page 208இதழ்‌ 9
பண்பஈட்டிண்‌ பணீகளண்‌

மனிதனால்‌ தோற்றுவிக்கப்பட்ட இறைநம்பிக்கையும்‌,
சமயக்‌ கொள்கைகளும்‌ இன்று மனிதனைத்‌
தோற்றுவிப்பதற்காக அமைந்து விட்டதைப்‌ போன்றும்‌,

மனிதனால்‌ உருவாக்கப்பட்ட கருவிகள்‌ மனிதனுக்கு
வழிகாட்டி நிற்பதைப்‌ போன்றும்‌,

மனிதனால்‌ உருவாக்கப்பட்ட பண்பாடும்‌ மனித
வாழ்வியலுக்கு வழிகாட்டி நிற்கின்றது. அந்தவகையில்‌
பண்பாட்டின்‌ பணிகள்‌ பலவாறாகப்‌ பரந்துள்ளன.
அவற்றில்‌ சிலவற்றைப்‌ பார்ப்போம்‌.

தேவைகளை நிறைவு செய்தல்‌

பண்பாட்டின்‌ பணி, மனிதனின்‌ இயல்பான உந்து
சக்திகளை அதாவது அவனது தேவைகளை நிறைவு
செய்வது என்பதனையும்‌,

அவற்றை நிறைவு செய்யும்‌ போது பின்பற்ற
வேண்டிய “நெறியியல்‌”கூறுகளையும்‌ - அக்கூறுகளின்‌
விதிமுறைகளுக்கு அமைவாகச்‌ செயற்பட்டு
படைக்கப்படும்‌ பொருட்களே அதாவது பண்பாடூ
கலந்த பொருளே சிறப்பாக அமையும்‌ என்பதையும்‌
கண்டூகொண்டோம்‌.

மனிதனின்‌ தேவைகளை நிறைவு செய்த

192.


Page 209பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இப்பொருட்களும்‌, அப்பொருட்களைப்‌ படைக்க
உருவான கருவிகள்‌ என்பனவும்‌ இயற்கை விஞ்ஞான
(அறிவியல்‌) வளர்ச்சிக்கேற்ப தொழில்‌ நுட்பங்களால்‌
மேம்பட்டவையாக வளர்ந்துள்ளன. வளர்ந்து
வருகின்றன.

எடூத்துக்காட்டாக ஏர்‌ கலப்பை இன்று உழவு
இயந்திரமானது. உணவு சமைக்கும்‌ விறகு அடுப்புகள்‌
மின்சார அடுப்புகளாகி விட்டன.

இதனால்‌ மன ஈடூபாடூம்‌ உடல்‌ உழைப்பும்‌ இன்றி
பணத்தின்‌ மூலம்‌ தன்‌ தேவைகளை ஒரு மனிதன்‌
நிறைவு செய்துகொள்ளும்‌ காலமாக இக்காலம்‌
அமைந்து வருகிறது.

எனவே பணம்‌ ஈட்டல்‌ ஒன்றே மனிதவாழ்வின்‌ குறிக்‌
கோளாக மாறிவிட்டது.

பொருள்‌ ஈட்டல்‌ உலகவாழ்வில்‌ மிக இன்றியமையாதது
என்பதில்‌ யாருக்கும்‌ மாற்றுக்‌ கருத்து இருக்க
முடியாது.

“பொருள்‌ இல்லார்க்கு இவ்வுலகம்‌ இல்லை” என்று
வள்ளுவரே கூறிவிட்டார்‌.

இத்தகைய மனித தேவையை நம்மால்‌ தவிர்க்கவோ,
ஒதுக்கவோ முடியாது.

அன்று மனிதனின்‌ தேவைகளை நிறைவேற்ற அவன்‌
வாழ்ந்த கிராமியச்‌ சூழல்‌ இருந்தது. குடிசைகள்‌

193


Page 210பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இருந்தன. இன்று இக்குடிசைத்‌ தொழில்கள்‌ நகரத்திற்கு
வந்துவிட்டன. மேலும்‌ நகரத்தில்‌ இயந்திர மயமாக்கப்பட்ட
தொழிற்சாலைகளில்‌ புகுந்துவிட்டன.

உணவு உடை உட்பட சகல தேவைகளும்‌ தொழிற்சாலை
மயமாகி விட்டதனால்‌, இத்தகைய தனது தேவைகளைப்‌
தானே நிறைவு செய்து கொண்ட சூழலை மனித சமூகம்‌
இன்று இழந்துவிட்டது. பணத்தைக்‌ கொடூத்தே இவற்றை
அவன்‌ பெறமுடியும்‌ என்பதே இன்றைய நிலை.

இன்றைய நிலைக்கேற்ப மனித சமூகத்தின்‌ குறிக்கோள்‌
மிக மிக ஒடூங்கியதாக மாறிவிட்டது.

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வும்‌ அதனால்‌ போட்டியும்‌
பொறாமையும்‌ மேலோங்க மகிழ்ச்சியும்‌, மற்றவர்களோடு
இணைந்து வாழும்‌ தன்மையும்‌ குன்றிச்‌ சுயநலம்‌
மேலோங்கி வளரத்‌ தொடங்கிவிட்டது.

பண்பாடு தோற்றம்‌ பெற்ற காலச்‌ சூழல்‌ இன்று
இல்லை. வாழும்‌ சூழல்‌ மாறிவிட்டது; மாறுகின்றது.
எனவே அதற்கேற்பப்‌ பண்பாடு பரிணாம வளர்ச்சி
பெறவேண்டும்‌. அதாவது ஆற்று நீரோட்டம்‌ போன்று
கால ஓட்டத்தோடு பண்பாட்டின்‌ சகல கூறுகளும்‌
பரிணாம வளர்ச்சி பெறல்‌ வேண்டும. அப்போதுதான்‌
அப்பண்பாடு மரபற்றுப்‌ போகாமல்‌ - காலத்தை
வென்று வேரூன்றி நிற்கும்‌. செழுமை பெற்று
என்றென்றும்‌ இளமையாக விளங்கும்‌.

194


Page 211பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கட்டொருமைப்பாட்டைப்‌ பேணல்‌

இன்றைய இச்சூழலுக்கு ஏற்றவாறு பண்பாடு பரிணாம
வளர்ச்சி அடையும்‌ போது சமூகக்‌ கட்டொருமைப்பாட்டை
மேலும்‌ வளர்க்கக்‌ கூடியவாறு, அவ்வினத்தின்‌
“நெறியியல்‌ கூறுகள்‌” சிதைவுறாவண்ணம்‌ செயல்‌
முறைகளும்‌, அவற்றைக்‌ காக்கும்‌ சட்டங்களும்‌, நீதி
முறைகளும்‌ அமைக்கப்படல்‌ வேண்டும்‌.

அதாவது ஓவ்வோர்‌ இனமும்‌ தனது மொழி,
அம்மொழிவழிப்‌ பண்பாடு, என்பவற்றைக்‌ கட்டிக்காக்க,
வளர்க்க, அதன்வழியே மேம்பாடு அடைய அதிகூடிய
சுதந்திரத்தை, அதிகாரத்தைக்‌ கொண்டிருப்பது மிக மிக
இன்றியமையாதது.

ஆனால்‌ ஆக்கிரமிப்பு, அதிகார எண்ணம்‌ கொண்ட,
ஆதிக்க விருப்புடைய அரசுகள்‌ ஒரு நாட்டில்‌ பல
மொழி நிலவுவது, அம்மொழி வழிப்‌ பண்பாட்டை அந்த
இனம்‌ பேணுவது, தனது நாட்டில்‌ அரசியல்‌ உறுதிப்பாடு
அற்ற நிலையை உருவாக்கும்‌ என்றும்‌, தொழில்‌ துறை
மற்றும்‌ பொருளாதார மேம்பாட்டிற்கு இடையூறானது
என்றும்‌, எண்ணிச்‌ செயல்படூவதனால்‌ அந்நாடூகளில்‌
அரசியல்‌ உறுதிப்பாடும்‌ பொருளாதார மேம்பாடும்‌
சீர்குலைந்துள்ளதைக்‌ காண்கின்றோம்‌.

இவ்வாறு ஆட்சியில்‌ உள்ள அரசுகளால்‌ புறம்‌
தள்ளப்பட்ட இனங்கள்‌ - தமது சூழல்‌ எப்பொழுது,
எப்படி மாறும்‌ என்று நம்பமுடியாத, நியாயமற்ற,
கொடுமை மிகுந்த, தற்பாதுகாப்பு அற்ற நிலையில்‌ - தன்‌
ஆற்றலை நம்பித்‌ தன்‌ வாழ்வியலைத்‌ தொடரமுடியாது.

195


Page 212பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

என்ற எண்ணத்தைக்‌ கொண்டிருப்பர்‌. இந்நிலையில்‌
அம்மக்கள்‌ நாட்டூப்பற்றுடன்‌ அந்நாட்டின்‌ வளர்ச்சியில்‌
ஈடுபடமாட்டார்கள்‌.

ஓர்‌ இனத்திற்கு அது மதிக்கின்ற தன்‌ வாழ்வியலை
நடத்தத்‌ தேவையான சுதந்திரத்தைக்‌ கொடுக்காது -
பொருட்களையும்‌, சேவைகளையும்‌ மட்டுமே அவர்கள்‌
மதிக்கவேண்டுமென இவ்‌ அரசுகள்‌ எண்ணுவது
அவ்‌ அரசுகளின்‌ பண்பாட்டு வறட்டுத்தன்மையைக்‌
காட்டுகிறது.

எல்லோரும்‌ ஒரேமாதிரியாகச்‌ சிந்திக்கவேண்டூம்‌ தனி
ஒருவகைப்பட்ட நெறிமுறைக்கு, பண்பாட்டிற்கு அடிபணிய
வேண்டும்‌. தனியொரு கண்ணோட்டத்திலேயே இந்த
உலகை நோக்க வேண்டும்‌, என ஒருவரோ, ஒர்‌இனமோ,
ஓர்‌ அரசோ எண்ணுவது, எதிர்பார்ப்பது, வற்புறுத்துவது
பைத்தியக்காரத்தனம்‌.

அதேவேளை மாற்றுக்கருத்து உடையோர்‌ தமது
கொள்கையைக்‌ கருத்தைத்‌ தொடர்ந்து தளராது மக்கள்‌
மத்தியில்‌ முன்னெடுக்க வேண்டும்‌.

படைப்புத்திறனை வளர்த்தல்‌

ஒவ்வொரு மனிதனும்‌ படைப்பாற்றல்‌ திறனை வளர்த்‌

தெடூப்பதற்குப்‌ பண்பாடு துணை  நிற்கவேண்டியது
பண்பாட்டின்‌ பணிகளில்‌ முக்கியமானது.

மனிதனது தேவைகள்‌, நோக்கங்கள்‌ என்பவற்றுக்கு
அமைவாக அவனது குறிக்கோள்களை அடைவதற்கு
ஏற்ற வகையில்‌ அவனது மனது சுதந்திரமாகவும்‌,

196


Page 213பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

விருப்புடனும்‌ சிந்திக்க அவன்‌ கொண்டுள்ள பண்பாட்டின்‌
நெறியியல்‌ கூறுகள்‌ இடமளிக்குமாயின்‌, இயல்பாகவே
அவன்‌ எத்தடைகளையும்‌ மீறிய படைப்பாற்றல்‌ திறன்‌
உடையவனாக இருப்பான்‌.

ஒருவன்‌ தனது சமுதாயம்‌ கொண்டுள்ள நெறியியலுக்குப்‌
புறம்பாகச்‌ செயல்பட்டு விட்டேன்‌ என்ற குற்ற
உணர்வையோ, அதனால்‌ சமூகத்தை எதிர்கொள்வதற்கு
ஏற்படும்‌ கூச்ச உணர்வையோ கொண்டிருப்பானாகில்‌
அவை அவனது படைப்பாற்றல்‌ திறனைக்‌ குறைக்கும்‌.

அதாவது குற்ற உணர்வும்‌, கூச்ச உணர்வும்‌
படைப்பாற்றலைக்‌ குறைக்கும்‌. அதேபோன்று அச்சமும்‌
கவலையும்‌ படைப்பாற்றலைக்‌ குறைப்பவையே

கவலைக்கு முக்கிய காரணம்‌ உளப்‌ போராட்டமே.
உள்ளத்தில்‌ இரண்டூ பட்ட உணர்ச்சிகள்‌, எதிர்மறையான
காரணங்கள்‌ இருப்பதே இதற்குக்‌ காரணம்‌.

சடுதியாக ஆதரவை இழத்தல்‌, தனிமை, கைவிடப்படல்‌,
துணை இன்மை என்பன ஒருவனிடத்தில்‌ அச்சத்தைத்‌
தோற்றுவிக்கும்‌.

நடந்ததையும்‌ நடக்கப்போவதையும்‌ எண்ணிப்பார்க்கும்‌
கற்பனை ஆற்றல்‌ அதிகரிக்க அதிகரிக்க வெகுதூர
அபாயங்களைப்‌ பற்றியும்‌, எதிர்காலத்தில்‌ என்ன
நேருமோ என்ற கவலையைத்‌ தொடர்ந்து - தான்‌
செய்த செயல்கள்‌, செய்யப்போகும்‌ செயல்கள்‌ பற்றிய
எண்ணத்தால்‌ எழும்‌ உணர்ச்சி காரணமாகவும்‌ அச்சம்‌
தோன்றக்கூடும்‌.

197


Page 214பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

எனவே குற்ற உணர்வு, கூச்ச உணர்வு, அச்சம்‌,
கவலை அற்றவனாகச்‌ சுதந்திரமான உணர்வுடன்‌
செயற்படும்‌ ஒருவனே படைப்பாற்றல்‌ மிக்கவன்‌.
திறமைசாலி.

பண்பாட்டு வழிக்கல்வி

உலகில்‌ வாழும்‌ ஒரு மனிதர்‌ ஒருவர்‌ மகிழ்ச்சியோடு வாழ
என்ன தேவை? என்ற கேள்வியை மாணாக்கர்களிடம்‌
கேட்ட போது - பணம்‌ என்று பதில்‌ கூறினர்‌.

சரி, பணத்தை ஈட்ட என்ன வழி? என்ற கேள்விக்கு
துறைசார்ந்த கல்வியைக்‌ (இயற்கை விஞ்ஞான)
கற்று, ஏதாவது ஒரு துறைசார்ந்த அறிவைப்‌ பெற்று,
தொழில்வாய்ப்பைப்‌ பெற்றுக்கொள்வதே வழி என்ற
முடிவுக்கு வந்தனர்‌.

துறைசார்ந்த அறிவினைப்‌ பெற்று அதன்வழி
போதியளவு பணத்தை ஈட்டிக்கொள்வதால்‌ மட்டும்‌
மகிழ்ச்சியாய்‌ வாழ முடியுமா? என்ற கேள்விக்கு எல்லா
மாணவர்களிடமிருந்தும்‌ - இல்லை என்றே பதில்‌
கிடைத்தது.

மேற்கூறியது கடந்த பத்துவருடங்களில்‌ பல
நூற்றுக்கணக்கான 15 - 18 வயதுவரை உள்ள
கனடாவாழ்‌ மாணவர்களிடமிருந்து பெற்ற பதில்களே

இவை. இவற்றில்‌ அவர்களிடம்‌ கருத்து வேறுபாடூ
இருக்கவில்லை.

“அப்படியானால்‌ மகிழ்ச்சியாக இருக்க வாழ்வில்‌ வேறு

198


Page 215பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

என்ன வேண்டூம்‌?”” என்ற கேள்விக்குப்‌ பலதரப்பட்ட
பதில்கள்‌ கூறப்பட்டன. அதில்‌ பெரும்‌ பகுதியோர்‌

கூறியது - நிம்மதி.

வாழ்க்கையை ஆரம்பிக்கு முன்னரே இம்மாணவர்கள்‌
நிம்மதியைத்‌ தேடூகின்றார்கள்‌!

இன்றைய உலகின்‌ சமூக அமைப்புப்பற்றி, சூழலைப்‌
பற்றி நாம்‌ நிதானமாகச்‌ சிந்திக்க வேண்டிய
கடமையில்‌ உள்ளோம்‌ - என்பதையே இது எடுத்துக்‌
காட்டுகின்றது.

இம்‌ மனநிலையை அவர்கள்‌ பெற்றதற்கு அடிப்படைக்‌
காரணம்‌ - வாழும்‌ சூழலோடூ இயைந்து வாழ முடியாது
இருப்பதே ஆகும்‌.

இச்சமூக இசைவாக்கத்தை பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற
கல்வியை அக்கல்வி அறிவின்வழி அவற்றுக்குரிய
மனப்பான்மையை, புரிந்துணர்வை, சகிப்புணர்வை
அவர்கள்‌ பெற்றிருக்கவில்லை என்பதே ஆகும்‌. இவற்றை
அவர்களுக்குக்‌ கொடுக்கக்கூடிய கல்வி பண்பாட்டு
வழிக்கல்வியேயாகும்‌.

பண்பாட்டூவழிக்‌ கல்வி என்பது அடிப்படையில்‌

ஒவ்வொருவரும்‌ தமது பாரம்பரிய மொழியைக்‌ கற்பதும்‌
அம்மொழிவழி பிறந்த கலை, பண்பாடு, வரலாறு,

சமூகஇயல்‌, அரசியல்‌ பொருளியல்‌, மெய்யியல்‌,

உளவியல்‌ என்பவற்றைக்‌ கொண்ட சமூக விஞ்ஞான

கல்வியைக்‌ கற்பதேயாகும்‌.

இக்கல்வி அவர்களிடம்‌ - சகல மக்களுக்கும்‌ உரிய -

199


Page 216பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

சுதந்திரம்‌, கடமை, சகலவற்றையும்‌ பகிர்ந்து கொள்ளும்‌
உரிமை, என்பவற்றை மதிக்கும்‌ மனப்பாங்கை
வளர்க்கும்‌. மற்றவர்களின்‌ உரிமையைப்‌ பாதுகாக்கும்‌
மன உறுதியை அவர்களிடம்‌ கொடுக்கும்‌.

வன்முறைக்கும்‌; சகிப்புணர்வு அற்ற தன்மைக்கும்‌;
ஆணிவேராக, ஊற்றுக்‌ கண்களாக விளங்கும்‌ பண்பாடூ,
பொருளாதாரம்‌, அரசியல்‌, சமயம்‌ போன்றவை சார்ந்த
வெறுப்புணர்வை களைந்தெறிந்து, மனதில்‌ இருந்து
்‌ அகற்றி, மற்றவர்களின்‌ வாழ்வியலை மதிக்கக்‌ கூடிய
பகுத்தறிவைப்‌, பண்பை சமூக விஞ்ஞானக்‌ கல்வி

.... கொடுக்கும்‌.

அறிவியற்‌ கல்வி மட்டுமே பகுத்தறிவு சார்ந்தது எனக்‌

்‌.. கருதுவது தவறு. ஒவ்வொரு புராணமும்‌, வரலாறும்‌

ஒருவகைப்‌ பகுத்தறிவை வெளிப்படுத்துகின்றது.
சடப்பொருளின்‌ மீது ஆதிக்கம்‌ செலுத்துவதில்‌
அறிவியலும்‌, தொழில்நுட்பமும்‌ திறன்‌ வாய்ந்தவையாக

்‌ உள்ளன; ஆனால்‌, வாழ்க்கைக்குப்‌ பயனுறுதி

அளிப்பதற்கு அல்லது சமூக, அரசியல்‌ அல்லது
அறிவியல்‌ சிக்கல்களுக்குத்‌ தீர்வு காண்பதற்கு
்‌. அவற்றால்‌ இயலவில்லை.

எனவே எமது கல்விக்‌ கொள்கை இனம்‌, சமூகம்‌, சமயம்‌,
மற்றும்‌ நாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தையும்‌,
- ஒருமைப்பாட்டையும்‌, சகிப்புணர்வையும்‌ வளர்க்கத்‌
துணைபுரிதல்‌ வேண்டும்‌. ப
இவற்றை மேலும்‌ முன்னெடூக்க கூடியவகையில்‌ கலைத்‌
திட்டம்‌, பாடத்திட்டம்‌, ஆசிரியர்‌ பயிற்சி முறை என்பன

200


Page 217பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அமைவுறல்‌ வேண்டும்‌.
மதிப்பிடும்‌ பாங்கு

மனித வாழ்வியலில்‌ நாம்‌ மிகச்‌ சிலவற்றுக்கே மிகுந்த
மதிப்பளிக்கிறோம்‌. இம்மதிப்பிடும்‌ பாங்கு நாம்‌
கொண்டுள்ள பண்பாட்டின்‌ வழியே அமைகிறது.

இன்றைய உலகின்‌ பொருளாதார நெருக்கடி, வறுமை,
சமூக, குடும்ப அமைப்பு என்பவற்றின்‌ காரணமாகப்‌
பணத்திற்கு மிக மிக முக்கியத்துவம்‌ கொடுக்கிறோம்‌.
பொருள்சார்‌ பண்பாடே உயர்ந்தது என்ற எண்ணம்‌
வளர்ந்துகொண்டூ வருகிறது.

மான உணர்ச்சி, குடிப்பெருமை, புகழ்‌, அதிகாரம்‌
போன்றவையும்‌ முன்னுரிமை பெற்றவையாகக்‌
காணப்படுகின்றன.

எம்மால்‌ முன்னுரிமை அளிக்கப்படும்‌ எவையும்‌
சமூகத்தின்‌ இசைந்த வாழ்வுக்குத்‌ துணை செய்வதாக
இருத்தல்‌ அவசியம்‌. இந்நோக்கையே பண்டைய தமிழர்‌
கொண்டிருந்தனர்‌.

இவைபற்றி முனைவர்‌ க.ப.அறவாணன்‌ அவர்கள்‌
தமிழ்ச்‌ சமூதாய வரலாறு என்னும்‌ நூலில்‌ பின்வருமாறு
குறிப்பிடுகின்றார்‌.

“பொருள்‌ இன்மையால்‌ ஏற்பட்ட வறுமை மிகப்‌
பெரிதாகக்‌ கருதப்பட்டு, கவலைப்‌ பட்டவர்களாகப்‌
பண்டைத்தமிழர்கள்‌ இல்லாததும்‌ இங்கே சுட்டிக்‌
காட்டத்தக்கது. பண்டைய தமிழர்பண்பாடூ, பொருளியலை

201


Page 218பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அடிப்படையாக வைத்துக்‌ கட்டப்பட்டது அன்று.
அன்பியலை அடிப்படையாகக்‌ கொண்ட அருளியலே
அவருக்கு நோக்கமாக இருந்தது. காசு அறிமுகமாகாத
பண்டமாற்று முறை முற்றும்‌ பின்பட்ட சமுதாய அமைப்பில்‌
இ..து இயலக்கூடியதே. இன்பத்தையும்‌ துன்பத்தையும்‌
பகிர்ந்துகொள்ளும்‌ சுற்றம்‌ சூழ்ந்த சமூக அமைப்பில்‌
வறுமை பெரிதாகத்‌ தோன்றாது...”

காசு அறிமுகமாகிய பின்னரும்‌ ஈழத்தின்‌ கிராமப்புறங்களில்‌
பண்டமாற்று முறையும்‌, கூலிக்குக்‌ காசு கொடுப்பனவு
இல்லாது “வாரமுறையில்‌: அவ்வுற்பத்திப்‌ பொருளைப்‌

பகிர்ந்துகொள்ளும்‌ முறை இருந்ததையும்‌ நான்‌
கண்டூள்ளேன்‌.

எனவே அன்பிற்கும்‌ அறத்திற்கும்‌ முன்னுரிமை
அளிக்கவும்‌, தனிமனித சுதந்திரம்‌, மனிதநேயம்‌,
சகிப்புணர்வு, என்பவற்றை வளர்த்தெடுப்பதற்கும்‌ உரிய
மனப்போக்கினை, மதிப்பளிக்கும்‌ பண்பினை முன்னிலைப்‌
படுத்தல்‌ வேண்டும்‌.

சகிப்புணர்வை வளர்த்தல்‌

இன, மொழி, சமய, அரசியல்‌ வேறுபாடுகள்‌ காரணமாக
கடந்த சில நூற்றாண்டுகளாக மனிதப்‌ படுகொலைகள்‌,
அவலங்கள்‌, அழிவுகள்‌, வன்செயல்கள்‌ நடைபெற்று
வருவதைக்‌ காண்கின்றோம்‌.

சில நாடுகளில்‌ அரசே இனவாதப்‌ போக்குடன்‌ இவற்றை
முன்நின்று நடத்தும்‌ கொடுமையைக்‌ காணக்கூடியதாக
உள்ளது. சட்டத்திலும்‌, நடைமுறையிலும்‌ ஓரவஞ்‌

202


Page 219பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

சனையாக நடத்தப்படுவதை எவ்வகையிலும்‌
நியாயப்படுத்த முடியாது; கூடாது.

சிலநாடூகளில்‌ தனித்தனி இனக்‌ குழுமங்கள்‌ மோதி
அழிவதைக்‌ காணக்‌ கூடியதாகவும்‌ உள்ளது.

சில நாடுகளில்‌ அரசு ஒவ்வோர்‌ இனத்தினதும்‌
மொழி, பண்பாட்டு, சமயத்திற்கான பாதுகாப்பைச்‌
சட்டமூலம்‌ வழங்கியிருந்த போதும்‌, அவை வாழும்‌
இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தவில்லை.
மனித உரிமைகளை மதிப்பதற்கு உரிய
சகிப்புணர்வையும்‌, பண்பையும்‌ சட்டத்தால்‌ மட்டும்‌
கொண்டூ வர முடியாது.

“மனிதர்கள்‌ அனைவரும்‌ ஒரே இனம்‌ ஒன்றே குலம்‌
ஒரே பொதுத்தாய்‌ மூலத்தின்‌ வழிவந்தவர்கள்‌.
அவர்கள்‌ கண்ணியத்தில்‌ சமமானவர்கள்‌, சரிநிகர்‌
உரிமை உடையவர்கள்‌, அனைவரும்‌ மனித குலத்தின்‌
இணைபிரியாத ஓர்‌ அங்கம்‌” என யுனெஸ்கோ 1978
நவம்பர்‌ 27ல்‌ ஓர்‌ அறிக்கையை வெளியிட்டது. மேலும்‌

“தனிமனிதர்கள்‌ அனைவருக்கும்‌ இனம்‌, குழுமங்கள்‌
அனைத்துக்கும்‌ வேறுபட்டிருக்க உரிமை உண்டு.
தங்களை வேறுபட்டவர்கள்‌ எனக்‌ கருதவும்‌, வேறுபட்டு
வாழவும்‌ உரிமை உடையவர்கள்‌. . எனக்‌
கூறப்பட்டுள்ளது. இவ்வாறான பல உலக அமைப்புகளின்‌
கோட்பாடுகள்‌ கொள்கைகள்‌ மனிதர்களிடையேயும்‌,
நாடூகளிடையேயும்‌ செயலளவில்‌ பெருமளவு மாற்றத்தை
ஏற்படுத்தவில்லை.

203


Page 220பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மதிப்பதற்கும்‌ மகிழ்வதற்கும்‌ உரிய மனப்போக்கினைச்‌
சட்டத்தினால்‌ கொண்டூ வர முடியாது.

சமூகவிஞ்ஞானக்‌ கல்வி வழியாக பெறும்‌ அறிவு, திறந்த
மனம்‌, சிந்தனைச்‌ சுதந்திரம்‌, மனச்சான்று, நம்பிக்கை
ஆகியவற்றின்‌ மூலமே மக்கள்‌ மத்தியில்‌ சகிப்புணர்வு
"வளர்கிறது.

ஓவ்வோர்‌ இனத்தின்‌ பண்பாட்டை, வெளிப்பாட்டு
வடிவங்களை அல்லது தனித்துவமான வாழ்வியல்‌.
மேம்பாட்டு வழிமுறைகளை மதிப்பதும்‌, ஏற்றுக்‌
-. கொள்வதும்‌, பாராட்டுவதும்‌ தான்‌ “சகிப்புணர்வு”. ப

.. சுருங்கக்கூறின்‌ வேற்றுமையில்‌ ஒற்றுமை காண்பதுதான்‌
. சகிப்புணர்வு.

சகிப்புணர்வு - மற்றவர்களின்‌ அடிப்படைச்‌ சுதந்திரத்தை
ஏற்றுக்கொள்ளவும்‌, தான்‌ கொண்டுள்ள கொள்கை
நம்பிக்கை மீதான வெறியையும்‌, அதிகாரப்போக்கையும்‌
நீக்க வழிவகுக்கும்‌.

எனவே பண்பாட்டின்‌ பணிகளில்‌ முக்கியமானதொன்றாகச்‌ ப
“சகிப்புணர்வு திகழ்கின்றது.

சகிப்புணர்வைக்‌ கொண்டிருப்பது என்பது சட்டத்தையும்‌
சமூக நீதியையும்‌ தீவிரமாக ஆதரிக்கும்‌ மனப்போக்கைக்‌
கொண்டிருக்கும்‌ அதேவேளை, சமூக அநீதியைப்‌
பொறுத்துக்‌ கொள்வது என்பதோ, தனது கொள்கையைக்‌
கைவிடுதல்‌ அல்லது பலவீனப்படுத்தல்‌ என்பதோ
. பொருள்‌ ஆகாது. மாறாக ஒருவர்‌, தான்‌ கொண்டுள்ள

204


Page 221பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கொள்கை, நம்பிக்கையில்‌ பற்றுறுதியுடன்‌ நடப்பதை
ஏற்றுக்‌ கொள்ளுதல்‌ என்பதே பொருளாகும்‌.

சமத்துவத்தைப்‌ பேணல்‌

உலகில்‌ உள்ள மக்கள்‌ அனைவரும்‌ சகலவற்றிலும்‌
சமத்துவமான வாழ்வினைக்‌ கொண்டிருக்கக்‌ கூடியவாறு
வகை செய்வது பண்பாட்டின்‌ பணியாகும்‌.

சமத்துவம்‌ என்னும்‌ பொழுது நாடு, மொழி, இன, சமய,
பொருளாதார, பண்பாட்டு வேறுபாடுகளால்‌ முரண்பாடூ
ஏற்படாது இருத்தல்‌ வேண்டும்‌ என்பதை மட்டூம்‌ கருத்தில்‌
கொண்டூ கூறப்படவில்லை.

ஒரே மொழி இனப்பண்பாட்டைக்‌ கொண்டுள்ள மக்கள்‌
சமூகத்திற்கிடையே சாதி, சமய, பிரதேச, வட்டார
வேறுபாடுகள்‌ காரணமாக எழும்‌ முரண்பாடுகளால்‌
ஏற்படும்‌ சமத்துவம்‌ இன்மையே முக்கியமானது.

ஏனெனில்‌ இச்சமத்துவமின்மை ஒரேமொழிவழி தோன்றிய
பண்பாட்டு மக்கள்‌ சமூகத்தின்‌ கட்டொருமைப்பாட்டைக்‌
குலைத்து, அச்சமூகத்தை வலுவற்றதாக்கி, அதன்‌
மேம்பாட்டை, வளர்ச்சியை, எழுச்சியை நசுக்கி
விடக்கூடிய ஒரு கொடும்‌ சக்தி. அச்சமூகத்தின்‌ உள்ளே
தோன்றிய புற்றுநோய்‌.

சாதி, சமய, பிரதேச, வட்டார, அரசியல்‌ முரண்பாடுகளால்‌
எழும்‌ சகிக்க முடியாதவற்றிற்கு, முரணானவற்றுக்கு
எதிராக எழும்‌ மிரட்டல்‌ போர்கள்‌, வன்முறைகள்‌,
படுகொலைகள்‌ என்பன, மறைக்கப்படுதல்‌ அல்லது
அநுமதிக்கப்படூதல்‌ மிகக்கொடுமையான செயலாகும்‌.

205


Page 222பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இது மக்கள்‌ குழுக்களிடையே உட்பிரிவினையை
உண்டாக்குகிறது, காழ்ப்புணர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
அமைதியையும்‌ பாதுகாப்பையும்‌ சீர்குலைக்கிறது.

இதனால்‌ ஒரே பண்பாட்டைக்‌ கொண்ட சமூகம்‌ சிறு சிறு
குழுக்களாகத்‌ தனிமையாக்கப்பட்டு, ஒன்றுக்கொன்று
ஓரவஞ்சனையான நடத்தையினால்‌ தாழ்வும்‌
மற்றைய. இனங்களிடையே மதிப்பும்‌ அற்று இழிவாக
நோக்கப்பட்டூப்‌, பழிக்கப்படும்‌.

அவ்வினப்பண்பாட்டைச்‌ சேர்ந்த சகலருமே தம்மதிப்பை
இழப்பர்‌, தாழ்வுறுவர்‌. இத்தகைய நிலை மனிதகுலத்திற்கு
நல்லதல்ல. ஏனெனில்‌ அம்மக்கள்‌ கூட்டத்தின்‌
ஆற்றலை, அறிவை, உலகமேம்பாட்டிற்கான பங்கினை
உலக சமூகம்‌ பெறமுடியாது போய்விடும்‌.

உலகம்‌ ஓர்‌ ஊர்‌ போன்று மிகமிகச்‌ சுருங்கிவிட்ட
இக்காலத்தில்‌, உலகம்‌ சமூக அறிவியல்‌ நெருக்கடியால்‌
அவதியுறுகின்ற இன்றைய நிலையில்‌ ஒவ்வோர்‌ இனமும்‌
ஒவ்வொரு மனிதனும்‌ தனிமனித சுதந்திரத்தை, சரிநிகர்‌
. உரிமையை, பொறுப்புகளை, அதிகாரத்தை, ஆற்றலை,
சமவாய்ப்பினை, கடமை உணர்வை, கூட்டுணர்வை
கொண்டிருத்தல்‌ மிக மிக முக்கியமான தாகின்றது.

மேற்கூறப்பட்ட இத்தகைய குணாம்சத்தை ஒருவன்‌
கொண்டிருக்க வேண்டியவாறு அவனது பண்பை
வளர்த்தெடூக்க அந்தந்த இனங்கள்‌, அரசுகள்‌
தேவையான அத்தனை நடவடிக்கைகளையும்‌ திட்டமிட்டு
செயற்படுத்தல்‌ அவசியம்‌.

206


Page 223பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

உலகமக்கள்‌ அனைவரும்‌ அறிவாண்மை, தொழில்நுட்ப,
சமூக, பொருளாதார பண்பாட்டூ அரசியல்‌ முன்னேற்றத்தில்‌
மிக உயர்ந்த நிலையை எட்டுவதற்குச்‌ சரி நிகரான
வினைத்திறனை உடையவர்கள்‌ என்ற நம்பிக்கையைத்‌
திட்டமிடுவோர்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌.

சுதந்திரம்‌, மனிதநேயம்‌, சமத்துவம்‌, கூட்டுணர்வு, நீதி
பற்றிய அறிவு, சிந்தனை, பரப்பப்பட்டு, தோழமை உணர்வு
வளர்க்கப்படல்‌ வேண்டும்‌. அடிமைத்துவத்தையும்‌,
கீழ்ப்படிவதையும்‌ அநுமதிக்கக்‌ கூடாது.

கருத்து வேற்றுமைகளை வரவேற்கவும்‌ கருத்தைக்‌
கருத்தால்‌ மட்டும்‌ திறந்த மனதோடூ எதிர்கொள்ளும்‌
பண்பை ஒவ்வொரு மனிதனிடமும்‌ வளர்க்கவும்‌ உரிய
முயற்சிகள்‌ மேற்கொள்ளல்‌ வேண்டும்‌.

திறந்த மனது

திறந்த மனதுடன்‌ ஒருவர்‌ கருத்தை அணுகுவது என்பது
எப்படி? நான்‌ வைத்த கருத்துக்கு மாறுபட்ட ஒரு
கருத்தை மற்றவர்‌ வைத்து விவாதிக்கின்றார்‌. அப்போது
என்‌ கருத்துத்தான்‌ வெல்ல வேண்டும்‌ என்ற மனப்‌
போக்கைக்‌ கைவிட்டூ மனதில்‌ இருந்து துடைத்தெறிந்து
உன்னுடைய கருத்துச்‌ சரியா? என்னுடைய கருத்துச்‌
சரியா? என்று பார்க்காது விடவேண்டும்‌.

மேலும்‌ இந்த நேரத்திற்கு, இந்தச்‌ சூழலுக்கு எந்தக்‌
கருத்துச்‌ சரியாக இருக்கும்‌ என்று சிந்திப்பதும்‌,
இரண்டூமே என்கருத்துக்கள்‌ தான்‌ என்ற மனநிலையுடன்‌
கருத்தின்‌ தன்மையை மட்டூம்‌ பார்த்து முடிவெடுக்கும்‌

207


Page 224பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மனப்பாங்கே திறந்த மனது.

என்‌ பிள்ளைகளையும்‌ பிறர்‌ பிள்ளைகளையும்‌ சமமாக
நோக்க வேண்டூ மெனில்‌ முதலில்‌ பிறர்‌ பிள்ளைகளையும்‌
என்‌ பிள்ளையைப்‌ போன்று நோக்க வேண்டும்‌, எண்ண
வேண்டூம்‌, மனதால்‌ ஏற்கவேண்டும்‌.

சமத்துவமின்மையை வளர்க்கும்‌ அரசுகள்‌

ஒரு நாட்டில்‌ வாழும்‌ குடிமக்களிடையே தோன்றும்‌
சமத்துவமின்மை அந்த நாட்டின்‌ வளர்ச்சியைச்‌
சீரழிக்கும்‌ என்பதை நாம்‌ அறிவோம்‌. பொருளாதார,
வாழ்க்கைத்தர சமமின்மை ஒருபுறம்‌ இருக்க

ஆட்சி அதிகாரத்தில்‌ உள்ள இனக்குழு மற்றைய
இனத்தின்‌ மொழி, கலை, சமய, பண்பாடு, பாரம்பரிய
நிலம்‌ என்பவற்றை ஆக்கிரமித்து, அந்த இனத்தை
இரண்டாம்‌ நிலையில்‌ வைத்துப்‌ பார்ப்பதும்‌

மற்றவர்களைப்‌ போன்ற சமவாய்ப்பு, சமவசதி
என்பவற்றை அம்மக்களும்‌ பெறமுடியாத சூழலை
உருவாக்கிக்‌ கொள்வதும்‌ - அந்நாட்டைச்‌ சீரழிக்கும்‌.

ஓர்‌ இனத்துக்கு அல்லது தனித்துவமான பண்பாட்டுச்‌
சமூகத்திற்குத்‌ துயரை உண்டாக்கி அதுதன்‌
குறிக்கோளை அடைவதைத்‌ தடுக்கின்ற நிலை
முழுமையான நாட்டையே அழிவுக்குக்‌ கொண்டு
செல்லும்‌. இதற்கு எடூத்துக்‌ காட்டாக ஸ்ரீலங்கா அரசின்‌
இனவாதக்‌ கொள்கையையும்‌ ஸ்ரீலங்கா நாட்டையும்‌
கூறலாம்‌.

208


Page 225 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கருத்துப்‌ பரிமாற்றத்திலும்‌, சகிப்புணர்விலும்‌
ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட மக்கள்‌ அவற்றைத்‌
தமது ஆயுதமாகக்‌ கொண்டு தமது சுதந்திரத்தை,
உரிமையைப்‌ பெறும்‌ பொருட்டுப்‌ போராடும்‌ போது
அவர்களின்‌ நியாயமான கோரிக்கைகள்‌ சட்டத்திற்குப்‌
புறம்பானவை எனக்‌ காட்டிக்‌ கொள்ளக்கூடிய
சட்டங்களை உருவாக்கி அச்சட்டப்படி நடவடிக்கை
என்ற போர்வையில்‌ அரசுகள்‌ அம்மக்களுக்கு எதிராக
வன்முறை கொண்டு செயற்படுவது, அம்மக்களை
அவர்கள்‌ தாம்‌ கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையைத்‌
துறந்து அரச வன்முறையை வன்முறை மூலம்‌
எதிர்கொள்ளும்‌ நிலையைத்‌ தோற்றுவிக்கும்‌; இதுவே
மக்கள்‌ புரட்சி. எடுத்துக்காட்டாக இலங்கைத்தீவில்‌
தமிழ்மக்கள்‌ விடுதலைப்புலிகளின்‌ தலைமையில்‌
நடத்திவரும்‌ போராட்டத்தைக்‌ குறிப்பிடலாம்‌.

படைப்புக்கள்‌

கலை, இலக்கிய, சமூக மற்றும்‌ பல்துறை சார்ந்த
நூல்கள்‌ பண்பாட்டின்‌ ஓர்‌ அங்கமாகும்‌.

ஒவ்வோர்‌ இனமும்‌ தான்‌ கொண்டுள்ள பண்பாட்டு
நெறியியலை, பரப்புரை செய்யும்‌ ஓர்‌ ஊடகமாக
மக்கள்‌ மனதில்‌ மீண்டும்‌ மீண்டும்‌ தமது நெறியியலை,
விழுமியங்களை பதித்துக்‌ கொள்வதற்கான ஊடகங்களாக
கலை, இலக்கியப்‌ படைப்புகள்‌ இருந்தன.

இத்தகைய படைப்பாளிகள்‌ முற்காலத்தில்‌ உழவர்கள்‌,
மாலுமிகள்‌ போன்று விண்ணோடும்‌ மண்ணோடும்‌
மிக இணக்கமாகத்‌ தொடர்பு கொண்டிருந்தார்கள்‌.

209


Page 226பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

எனவே அன்றைய படைப்புகள்‌ அம்மக்கள்‌ வாழும்‌
மண்வாசனையை உடையனவாக இருந்தன.

இன்று கலைப்படைப்புகள்‌ அனைத்துலக மயமாகிவிட்டன.
தொழில்நுட்பம்‌ மிக உயர்நிலையை அடைந்துள்ளது.
இந்நிலையில்‌ படைப்பாளிகள்‌ குறிப்பாகக்‌ கலைப்‌
படைப்பாளிகள்‌ ஓர்‌ இனத்தின்‌ பாரம்பரியத்தைப்‌
பிரதிபலிக்க வேண்டும்‌. மரபுவழிக்‌ கலைவடிவங்களைக்‌
கொண்டிருக்கவேண்டும்‌ என்பதை விட, உலகில்‌
அதிக அளவு பார்வையாளர்களைப்‌ பெற்றுக்கொள்ள
வேண்டும்‌ என்பதையே குறிக்கோளாகக்‌ கொண்டூ
இயங்குகின்றனர்‌.

இந்தவகையில்‌ தொழில்‌ நுட்பத்திலும்‌ பணபலத்திலும்‌
மேம்பட்ட அமெரிக்கா போன்ற நாடுகளின்‌ கலை
வடிவங்கள்‌ குறிப்பாகத்‌ திரைப்படங்கள்‌ உலகை
ஆக்கிரமித்து நிற்கின்றன.

இதனால்‌ ஒவ்வோர்‌ இனத்தினதும்‌ மரபுக்‌ கலைகள்‌
நலிவுற்றுப்போய்க்‌ கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு
மொழிசார்ந்த திரைப்படங்கள்‌ கூட அகில
உலகத்திரைப்படங்களின்‌ ஆதிக்கத்திற்கு உட்பட்டு
தமது மொழிக்குரிய பண்பாட்டைக்‌ கைவிட்டு விட்டன.
திரைப்படங்கள்‌ பிடித்த இடத்தை தொலைக்காட்சிகள்‌
வகிக்கத்‌ தொடங்கி விட்டமையால்‌ அந்தந்த

மொழிவழித்‌ தொலைக்காட்சிகள்‌ தமது மொழி வழி
மரபுக்கலைகளுக்கு இடம்‌ அளிக்கலாம்‌ அல்லவா...!

210


Page 227பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
படைப்புகள்‌ பேசவேண்டியவை

படைப்புகள்‌ சமூகக்‌ குறைபாடுகளை, சிக்கல்களைப்‌
பற்றி மட்டும்‌ பேசாது தீர்வுகளையும்‌ பேசவேண்டும்‌.
எடுத்துக்காட்டாக வறுமையைப்பற்றி மட்டும்‌ பேசாது
வறுமை ஒழிப்பைப்பற்றியும்‌ பேசவேண்டும்‌.

இலக்கியத்திற்கு, கவிதைக்கு பொய்யழகு என்னும்‌
நம்பிக்கையைப்‌ பலரும்‌ கொண்டூள்ளனர்‌. இக்கூற்றை
முழுமையாக புரிந்து கொள்ளாமையாற்‌ போலும்‌ சில
இலக்கியங்கள்‌ இயற்கைக்கு மாறுபட்ட, நடைமுறைச்‌
சாத்தியமற்ற முதற்பொருள்‌, கருப்பொருள்‌ என்பவற்றைக்‌
கொண்டுள்ளன என எண்ணத்‌ தோன்றுகின்றது.

ஒரு மொழிவழி இலக்கியங்கள்‌, படைப்புக்கள்‌ அம்மொழி
பேசும்‌ மக்களின்‌ முடிந்த கொள்கைகளையும்‌ முதிர்ந்த
குறிக்கோள்களையும்‌ தன்னகத்தே கொண்டூ திகழும்‌
இயல்புடையதாக இருந்தால்த்தான்‌ அது காலந்தோறும்‌
நிலைத்து நிற்கும்‌.

இன்றைய உலகு நீண்ட நால்களைப்‌ படிக்கத்‌ தயாராக
இல்லை. சுருங்கக்‌ கூறின்‌ நின்று நிதானமாகச்‌
சிந்திக்கவும்‌ தயாராக இல்லை. இன்றைய உலகுக்கேற்ற
வடிவங்கள்‌ தேவைப்படுகின்றன.

சொல்வடிவை வென்ற உருவடிவங்கள்‌ முக்கியமானவை
எடூத்துக்காட்டாக கேலிச்சித்திரங்கள்‌, புகைப்படம்‌, சிற்பம்‌,
ஓவியம்‌, குறியீடுகள்‌ என்பனவற்றைக்‌ குறிப்பிடலாம்‌.

சிறந்த இசையோடு கூடிய நடனங்கள்‌ இன்றைய
மக்கள்‌ மனதைக்‌ கவருகின்றன. நடனம்‌ ஒரு சிறந்த

211


Page 228பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கலைவடிவம்‌ என்பதில்‌ ஐயமில்லை. நடனம்‌ உடல்‌
பேசும்‌ ஆத்மாவின்‌ மொழி,

சுருங்கக்கூறின்‌ பண்பாட்டின்வழி பிறந்த கலைகள்‌,
மற்றும்‌ படைப்புகள்‌ மக்களின்‌ வாழ்வினை மேம்படுத்தும்‌
நோக்கோடு குறிக்கோளோடு அமையவேண்டியதன்‌
முக்கியத்தை இன்றைய படைப்பாளிகள்‌ உணர
வேண்டும்‌. இன்றைய திரை உலகு உட்படப்‌ பல்வேறு
பொழுதுபோக்குக்‌ கலை வடிவங்களும்‌ சமூகத்தில்‌
ஏற்படுத்தியுள்ள சிக்கல்களைப்‌ படைப்பாளிகள்‌ உற்று
நோக்கிச்‌ சமூகப்‌ பொறுப்புணர்வோடு நடப்பதே நன்று.

 

 

212


Page 229இதழ்‌ 10
சந்தனணை - பண்ப௱ட்டிண்‌
ஆணி வற்‌.

உலகின்‌ ஒழுங்கான, சீரான, அமைதியான,
மகிழ்ச்சியான மனிதவாழ்வுக்கு, பண்பாடே வழிகாட்டி.
பண்பாட்டின்‌ தோற்றத்தின்‌ விதையாக மனமும்‌, அதன்‌
ஆணிவேராகச்‌ சிந்தனையும்‌ உள்ளன. அதாவது
மனிதமனத்தின்‌ உன்னத வெளிப்பாடுதான்‌ பண்பாடு.

ஒவ்வொருவரின்‌ இச்சிந்தனைப்‌ பண்பும்‌ மரபுவழி
வரும்‌ இயல்பானதா? அல்லது புறச்சூழலால
வளர்த்தெடுக்கப்படுவதா? என்ற எண்ணம்‌, பேச்சு
எம்மிடையே இருப்பதைக்‌ கண்டுள்ளோம்‌.

மனிதனைத்‌ தவிர்ந்த ஏனைய உயிரினங்களுக்கு இருப்பது
இயல்பூக்கம்‌ முரு) அவைகள்‌ இயற்கையின்‌
நியதிப்படி அவைகளின்‌ மரபுப்படி வாழ்ந்து மறைகின்றன.
எடூத்துக்காட்டாக ஓவ்வொரு இனப்பறவையும்‌
ஆதிகாலம்‌ முதற்கொண்டூ இன்றுவரை ஒரே விதமாகவே
கூடுகட்டுகின்றன. தூக்கணாங்குருவியைப்‌ பார்த்துக்‌
காகமோ, காகத்தைப்‌ பார்த்து தூக்கணாங்குருவியோ
தமது கூடூ கட்டும்‌ முறையை, மாற்றி அமைக்கவில்லை;
அமைக்கப்‌ போவதுமில்லை.

ஆனால்‌ ஓர்‌ இனப்பண்பாட்டைக்‌ கொண்டமனிதன்‌ தன்‌
பண்பாட்டில்‌ பரிணாம வளர்ச்சியடைந்து வந்ததுடன்‌,

213


Page 230பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பிற இனங்களின்‌ பண்பாட்டின்‌ கூறுகளை ஏற்றும்‌, தன்‌
பண்பாட்டின்‌ சில கூறுகளைத்‌ துறந்தும்‌, மறந்தும்‌,
மாற்றியும்‌ வந்துள்ளான்‌.

அதேவேளை சில கூறுகளை ஏற்கமறுத்தும்‌ வந்துள்ளான்‌.
இதற்குக்‌ காரணம்‌ மனமே ஆகும்‌.

ஏழு மட்டங்களில்‌ அடூக்குகளில்‌ மனம்‌ உள்ளபோதும்‌
புறமனம்‌, நடுமனம்‌, ஆழ்மனம்‌ என மூன்று
நிலைகளிலிருந்து அவை செயற்படுவதை முன்பு
குறிப்பிட்டிருந்தோம்‌.

மனதைப்‌ பற்றி மேலும்‌ பலர்‌ கூறியிருந்த போதும்‌
வள்ளலார்‌ என்று அழைக்கப்‌ படும்‌ இராமலிங்க
சுவாமிகள்‌ திருவருட்பா மூலம்‌ கூறியுள்ளவைற்றையும்‌
அறிந்திருத்தல்‌ நன்று.

வள்ளலார்‌ கூறும்‌ தத்துவம்‌

சிந்தனையின்‌ தோற்றம்‌ பற்றி வள்ளலார்‌ கூறுவது
என்ன? தாயின்‌ வயிற்றில்‌ ௧௬ உருவாகும்‌
போதே அந்தக்கரணங்கள்‌ எட்டும்‌ கருவைச்‌
சென்றடைந்திருக்கும்‌.

ஐம்பொறிகள்‌ வழி பெறும்‌ அறிவு, உணர்வு, விருப்பு,
வெறுப்பு, ஆசை  என்பவற்றிற்கேற்ப மனிதனின்‌
இயங்கலைச்‌ செயலைத்‌ தீர்மானிப்பவை புலன்களோடூ
தொடர்புடைய மனம்‌, புத்தி, சித்தம்‌, அகங்காரம்‌
என்னும்‌ அந்தக்‌ கரணங்களே.

214


Page 231பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மனம்‌, புத்தி, சித்தம்‌, அகங்காரம்‌ -
செயற்பாடுகள்‌

ஐம்புலன்களின்‌ வழி வரும்‌ இயல்பான உந்துசக்திகளான
உணர்வுகளை, விருப்புகளை, ஆசைகளை மனம்‌ தன்‌
கவனத்தில்‌ எடுத்துக்கொள்ளும்‌.

மனம்‌ தான்‌ கவனத்தில்‌ எடூத்துக்கொண்ட புலன்களின்‌
வேண்டுகோளைப்‌ புத்தியினிடம்‌ ஒப்படைக்கும்‌.

புத்தி மனத்திடமிருந்து பெற்ற வேண்டுகோளைச்‌
செய்யத்தக்கதா? செய்யத்‌ தகாததா? என ஆராய்ந்து
தெரிவிக்கும்‌. மனதின்‌ அவ்வேண்டுகோளை நிறை
வேற்றுவதால்‌ ஏற்படும்‌ நன்மை தீமைகளை ஆராய்ந்து
தெரிவிக்க வேண்டியது புத்தியின்‌ கடமையே ஆகும்‌.
இதனால்‌ தான்‌ சரியாக, திறமையாகச்‌ செயற்படு
வோரைப்‌ புத்திசாலி என்கிறோம்‌.

புத்தி தனது விசாரணையின்‌ முடிவினை அதாவது
சகல பக்க நியாயத்தையும்‌ விளக்கமாக சித்தத்திடம்‌
ஒப்படைக்கும்‌.

சித்தம்‌ புத்தியினிடத்து இருந்து பெற்ற தகவல்களை,
விளக்கத்தைக்‌ கொண்டூ முடிவெடுக்கும்‌. வேண்டுகோளை
நிறைவேற்றுவதாயின்‌ அதற்கான பாதையை, வழியைத்‌
தீர்மானிக்கும்‌.

இதனை ஏற்றுக்கொள்ளலாம்‌, இதனைத்‌ தவிர்க்கலாம்‌,

இதனை எப்படி எவ்வாறு செய்யலாம்‌ என முடிவெடுப்பது
சித்தமே.

215


Page 232பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இதனால்‌ தான்‌ செய்யவேண்டிய சரியான விடயத்தை
ஒருவன்‌ பிழையான வழியிற்‌ செய்தால்‌ அவனைப்பார்த்து
“உனக்கென்ன சித்தம்‌ கலங்கி விட்டதா?”என்று
கேட்பார்கள்‌.

சுருங்கக்கூறின்‌ மனதின்‌ விருப்பத்தையும்‌ புத்தியின்‌
விளக்கத்தையும்‌ ஆய்வு செய்து முடிவெடுக்கும்‌
மேலதிகாரியாக, தலைவனாகச்‌ “சித்தம்‌”
இருக்கின்றது.

தலைவன்‌ எடுக்கும்‌ முடிவைத்‌ தொண்டன்‌ செய்து
முடிக்கச்‌ செயற்படுவது போன்று “அகங்காரம”
செயற்படத்‌ தொடங்கிவிடும்‌.

எடுக்கப்பட்ட முடிவு சரியானதோ? தவறானதோ?
நீதியானதோ? அநீதியானதோ? என அகங்காரம்‌
ஆராயாது, நான்‌ செய்து முடிக்கிறேன்‌ எனச்‌
செயற்படும்‌.

பண்பாட்டு நெறியியலுக்கு ஒத்த முடிவானால்‌
அகங்காரத்தின்‌ செயல்‌ வரவேற்கப்படும்‌.

சித்தம்‌ எடுக்கின்ற முடிவு தவறானதாக அல்லது
அந்தியானதாக இருப்பினும்‌ சமூக எதிர்ப்பையும்‌ மீறி
அலலது மறைத்து, அடாவடித்‌ தனமாக அல்லது
தந்திரமாக அகங்காரம்‌ செய்துவிடும்‌. நான்‌ என்ற
ஆணவத்துடன்‌ ஆர்ப்பரித்துச்‌ செயல்படும்‌.

புலன்களின்‌ ஆசை, விருப்பு, வெறுப்புகளை
நிறைவேற்றக்கூடியதாக மனம்‌ இருக்கிறது.

216


Page 233பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இதனை வள்ளலார்‌ திருவருட்பாவில்‌ பின்வருமாறு
குறிப்பிடுகிறார்‌.

“பாய்மரம்‌ என்றுரைத்‌ திடம்‌ ஓர்‌ பாராய்‌ முரட்டுப்‌ பயலே
பல்பொறியாம்‌ படூகாலிப்‌ பயல்களோடும்‌ கூடிச்‌
சேய்மையினும்‌ அண்மையினும்‌ திரிந்தோடி ஆடித்‌
தியங்காதே....... இ:

ஒரு நிலைப்பட்டு நிற்காமல்‌ அங்கும்‌ இங்கும்‌
அலைபாய்ந்து திரியும்‌ வேட்டுவப்பயலே ஐம்பொறிப்‌
போக்கிரிகளுடனும்‌ நீ கூடி அங்கும்‌ இங்கும்‌ திரிந்து
ஓடி ஆடி இருக்காதே........

என மனதைப்பார்த்து ஒரு தந்‌ைத மகனுக்குக்‌
கூறுவதைப்போல்‌ அறிவுரை கூறுகின்றார்‌. புலன்களின்‌
விருப்த்தை ஆராயாது உடன்‌ படாதே என
எச்சரிக்கின்றார்‌.

புலன்களின்‌ வேண்டுகோள்‌ வாழ்வியலைச்‌ சிறப்பிக்காது
எனின்‌ அதன்‌ வேண்டுகோளை ஆசையை மனம்‌
ஏற்றுக்கொள்ளாவிடின்‌, புலன்கள்‌ தன்னிச்சையாக
எதையும்‌ செய்ய முடியாது அடங்கிவிடும்‌.

ஒருவனைக்‌ கெடுக்க வல்லதும்‌ மனமே,
கெட்டவனை அதிலிருந்து மீட்க வல்லதும்‌ மனமே.
எனவே நல்லறிவினைப்‌ பெற்ற மனம்‌ பண்பாட்டின்‌
நெறியியலுக்கு அடங்கி ஒடுங்குமாயின்‌ புலன்களும்‌
அடங்கி ஒடுங்கி விடும்‌.

மனதைப்போன்றே புத்தியும்‌ தெளிந்த அறிவினைப்‌

217


Page 234பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பெற்றதாயின்‌ மயங்காது சிறந்த ஆலோசனையை
வழங்கக்கக்கூடியதாக இருக்கும்‌.

இதனையும்‌ வள்ளலார்‌
“மயங்கு புத்தி எனும்‌ உலகவழக்காளிப்‌ பயலே
வழித்துறை மீ தென்றறியாய்‌ வகை சிறிதும்‌ அறியாய்‌
உயங்கி விசாரித்திடவே ஓடுகிறாய்‌ உணரும்‌
உழவறியாய்‌ வீணுழைப்பிங்‌ குழைப்பதில்‌ என்பயனோ
வயங்கு மனம்‌ அடங்கியவாறடங்குக....”

உலக வாழ்க்கையில்‌ காணப்படும்‌ கவர்ச்சியைக்‌
கண்டூ புத்திமயங்கி விடூவாயாயின்‌ மனிதவாழ்க்கை
தடம்‌ மாறிப்போகும்‌. வாழும்‌ வகையினை அறிய
முடியாது. வாழ்வின்‌ பொருளை உணரும்‌ உணர்வை
அறியமுடியாது போகும்‌. அப்போது வாழ்க்கை வீணாகிப்‌
போகும்‌. எனவே அலையும்‌ மனதை அடக்கியது போன்று
புத்தியையும்‌ அடக்குக........

மனம்‌, புத்திபோன்றே தெளிந்த அறிவினைச்‌ சித்தம்‌
பெற்றிருத்தல்‌ வேண்டூம்‌. சித்தத்தைப்‌ பற்றியும்‌
திருவருட்பா கூறுவது.

“கலையறியாச்‌ சித்தம்‌ எனும்‌ களமோசப்‌ பயலே
கால்‌ அறியாய்‌ தலை யறியாயப்‌ காண்பன கண்டறியாய்‌
நிலையறியாய்‌ ஒன்றை ஒன்று நிச்சயித்‌ திவ்வுலகை
நெறிமயங்க மயக்குகின்றாயப்‌ நீயோ இங்குறுவாய்‌
அலையறியாக்‌ கடல்‌ போலே அசைவற நின்றிடூ நீ..”

“வாழ்க்கை ஒரு அழகுக்கலையாகும்‌ அக்கலையை நீ
அறிந்திருந்தால்‌ அதனை அழகுபட அமைத்திருப்பாய்‌

218


Page 235 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஆனால்‌ அதை நீ அறியாதவனாய்‌ இருக்கின்றாய்‌.
அதனால்‌ உன்‌ வாழ்க்கை அவலமாக இருக்கின்றது.
வாழ்க்கையின்‌ தொடக்கத்தையும்‌ முடிவையும்‌ அறியாது
இருக்கின்றாய்‌. வாழ்க்கையின்‌ நோக்கத்தை அறியாது
ஒன்றை, வேறொன்றாக நிச்சயித்து உலகமாந்தர்‌
நெறிதவறி நடக்கும்படி அவர்களை மயங்கவைத்துள்ளாய்‌.
சித்தமே நீ இருப்பதாயின்‌ அலை இல்லாத கடல்போல
அமைதியாக அசைவற்று நின்றிடுவாய்‌.....”

மனம்‌ புத்தி என்பவற்றைப்‌ போன்றே தெளிந்த அறிவினை
சித்தம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. அதேபோன்று
ஆர்ப்பரிக்காத அடக்கமான அகங்காரத்தையும்‌
கொண்டிருப்பது அவசியம்‌.

சித்தத்தின்‌ கட்டளையை ஏற்றுச்‌ செயற்படும்‌ அகங்காரம்‌
தான்‌ மேற்கொண்ட பணி வெற்றி பெறும்போது
ஆர்ப்பரித்து நிற்கும்‌. உலக வாழ்வில்‌ இவைகள்‌
வழக்கமானவை என எண்ணாது. தான்‌ செய்து முடித்த
பணியின்‌ இயல்பை, அதில்‌ தனது உண்மையான
பங்களிப்பை, தனது வலுவின்‌ அளவைச்‌ சரியாகக்‌
கணக்கெடூத்துக்‌ கொள்ளாது அகந்தை கொண்ட
மனநிலையில்‌ செயற்படும்‌.

இதனை விளங்கிக்கொள்ள எடூத்துக்காட்டாக ஒரு
கதை

ஓர்‌ ஆற்றினைக்‌ கடந்து செல்லத்‌ தொங்குபாலம்‌ ஒன்று
இருந்தது. ஆற்றங்கரையில்‌ தொங்குபாலத்தை ஒட்டி
ஒருமரம்‌ இருந்தது.

யானை ஒன்று தொங்குபாலத்தின்‌ வழியே ஆற்றைக்‌
கடக்க முற்பட்டது. அப்போது அங்கிருந்த மரத்திலிருந்து

219


Page 236பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஓர்‌ அணில்‌ யானையின்‌ முதுகின்‌ மேல்‌ தாவிக்‌
கொண்டது.

யானை தொங்குபாலத்தினூடு செல்லும்போது
யானையின்‌ பாரத்தினால்‌ அப்பாலம்‌ ஆடிக்கொண்டே
இருந்தது.

அப்போது அணில்‌ நான்‌ பாலத்தைக்‌ கடக்கும்‌ போது
இப்பாலம்‌ ஊஞ்சல்‌ போன்று எப்படி ஆடுகிறது எனத்‌
தனக்குள்‌ எண்ணி மகிழ்ச்சியும்‌, பெருமிதமும்‌ கொண்டு
யானையின்‌ முதுகில்‌ துள்ளித்‌ துள்ளிக்‌ குதித்த
வண்ணம்‌ சென்றது. ஆணவத்தால்‌ எம்பிக்‌ குதித்த போது
பொத்தென்று ஆற்றில்‌ விழுந்து விட்டது. பக்குவப்படாத
அகங்காரமும்‌ அணிலைப்‌ போன்று தப்புக்கணக்குப்‌
போட்டுூவிடக்‌ கூடியது.

அந்தக்‌ கரணங்களை நெறிப்படுத்த வழி

மனம்‌, புத்தி, சித்தம்‌, அகங்காரம்‌ ஆகிய அந்தக்‌
கரணங்கள்‌ புலன்களின்‌ தகாத ஆசைகளின்வழி
செயற்ப்படாது இருக்க நாம்‌ நல்ல அறிவினை
அவற்றுக்குக்‌ கொடூக்க வேண்டும்‌. நல்ல அறிவினை,
நல்ல நெறியியலை மனம்‌ உள்வாங்கிக்கொண்டால்‌
மட்டும்‌ போதுமா? என்றாற்‌ போதாது.

உறுதிகொண்ட திடமனதை ஒருவர்‌ கொண்டிருத்தல்‌
அவசியம்‌. திடமனதைக்‌ கொண்ட ஒருவரின்‌ புறமனம்‌
புலன்களால்‌ வசியம்‌ செய்யப்பட்டிருந்த போதும்‌
உள்மனம்‌ விழிப்பாக இருந்து தவறுதலான காரியத்தை
செய்யவிடாது தடுத்து நிறுத்திவிடும்‌.

220


Page 237பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இவ்வாறான மனதை ஓருவர்‌ கொண்டிருக்க இரண்டூ
பழக்கங்களை நாம்‌ கொண்டிருக்க வேண்டும்‌.
ஒன்று நமது குணங்களை ஒழுங்குபடுத்தல்‌, இரண்டூ
யோகப்பயிற்சியில்‌ ஈடுபடல்‌.

முக்குணங்கள்‌
மனிதன்‌ தாமோகுணம்‌, ராஜோகுணம்‌, சத்துவகுணம்‌ என

மூன்றுவகைக்‌ குண்ங்களை உடையவன்‌. இக்குணங்கள்‌
இயல்பாக நம்மிடம்‌ அமைந்துள்ளன்‌. ட

தாமோ குணம்‌

மயக்கம்‌, சோம்பல்‌, உறக்கம்‌ முதலியவற்றைக்‌ :
கொடுக்கும்‌. இதனால்‌ அறிதிறன்‌ குறையும்‌. ப
தாமோ குணத்தைக்‌ குறைத்துக்‌ கொள்ள, புளித்த

பழைய உணவுகள்‌ உண்ணும்‌ பழக்கத்தைக்‌ கைவிடல்‌
. வேண்டும்‌. ்‌

ராஜோ குணம்‌
பேராசை, கோபம்‌, அதிகாரம்‌ போன்ற உணர்வுகளைக்‌'
. கொடுக்க வல்லது. இதனைக்‌ குறைத்துக்‌ கொள்ள

மாமிச உணவைத்‌ தவிர்த்தல்‌, உண்ணும்‌ உணவு
அதிக காரமாக, சூடாக இருக்கக்கூடாது...

221


Page 238பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
சத்துவ குணம்‌

ஆசையைக்‌ குறைத்து, மனதில்‌ சாந்தத்தை
வளர்க்கவல்லது. இக்குணத்தை வளர்த்துக்கொள்ள
காய்கறி, பழங்கள்‌, பால்‌, தேன்‌, பருப்புவகை சிறந்த
உணவு.

மனித மனதில்‌ மூன்று குணங்களும்‌ மாறிமாறி
மற்றவற்றை அடக்கிவிட்டு ஒன்று மேல்‌ எழுவது இயல்பு
நிலை. அப்போது மனிதனின்‌ குணங்களும்‌ அதற்கேற்ப
இருக்கும்‌.

மனிதனின்‌ குண்டலினி சக்தி எந்தச்‌ சக்கரத்தில்‌ நிற்கிறதோ
அந்தச்‌ சக்கரத்தின்‌ தன்மைக்கு, செயற்பாட்டிற்கு
உரியதாகக்‌ குணம்‌ வெளிப்படும்‌. எடூத்துக்காட்டாக
குண்டலினி மணிபூரகச்‌ சக்கரத்தில்‌ இருக்கும்‌ போது
ராஜோ குணம்‌ பிரதானமாகிறது.

எனவே இக்குணங்களைக்‌ கட்டூப்படுத்தவும்‌ யோகம்‌
தேவைப்படுகிறது.

யோகம்‌

உடலின்‌ உறுப்புகள்‌, நாடி, நரம்புகள்‌, நாளமில்லாச்‌
சுரப்பிகள்‌ (கானில்ச்‌ சுரப்பிகள்‌ போன்றவற்றை
ஒழுங்காக இயங்கவைத்து - மூளைத்திறனைக்‌ கூட்டி,
உள்ளத்தையும்‌ உடலையும்‌ ஒத்த இசைவுள்ளதாக்கி
- உறுதி படைத்த மனதைத்‌ தரவல்லது. மனதை எமது
கட்டுப்பாட்டில்‌ இயங்கவைக்கும்‌ திறனைத்‌ தரவல்லது
யோகக்கலை.

2.22


Page 239பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

யோகக்கலையை பின்வரும்‌ எட்டு வகைகளாகப்‌
பகுத்துப்‌ பயிற்சி செய்வர்‌ அவையாவன இயமம்‌,
நியமம்‌, ஆசனம்‌, பிராணாயாமம்‌, தாரணை, தியானம்‌,
சமாதி என்பனவாகும்‌.

இயமம்‌ :- கொலை, களவு, காமம்‌, பொய்‌, பொருளாசை
தவிர்த்தல்‌.

நியமம்‌ :- அகத்தூய்மை, புறத்தூய்மை, உள்ளத்தில்‌
திருப்தி அடைதல்‌, தவநெறி நிற்றல்‌, ஞானநூல்‌ கற்றல்‌,
கடவுள்‌ வழிபாடு.

ஆசனம்‌ :- உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்‌
பயிற்சி வழிமுறை.

பிராணாயாமம்‌ :- பிராணனாகிய உயிர்‌ சக்தியைக்‌
கட்டுப்படுத்தல்‌.

பிரத்தியாகரம்‌ :- சிதறிக்‌ கிடக்கும்‌ மனதின்‌ சக்தியை
ஒன்றுபடூத்தல்‌ மனதை நடூநிலைப்‌ படூத்தல்‌

தாரணை :- புலனடக்கத்திற்குப்‌ பிறகு மனதை ஓரிடத்தில்‌
நிறுத்திப்‌ பழகுதல்‌.

தியானம்‌ :- ஒருமித்த மனப்பான்மையுடன்‌ இருத்தல்‌.
சமாதி :- தன்னை மறந்தநிலை.

எனவே யோகம்‌ என்பது இயமம்‌, நியமம்‌ ஆகிய ஒழுக்க
விதிகளைக்‌ கடைப்பிடித்து ஆசனம்‌, பிரணாயாமம்‌

223


Page 240பணர்பரடு - வேரும்‌, விழுதும்‌

ஆகிய உடற்பயிற்சிகளையும்‌, பிரத்தியாகாரம்‌ தாரணை
என்ற உளப்பயிற்சிகளையும்‌ செய்து தியானம்‌, சமாதி
ஆகிய உயர்‌ நிலையினை அடைதல்‌ ஆகும்‌.

யோகக்கலையின்‌ ஒரு அம்சம்‌ பிராணாயாமம்‌, தியானம்‌
என்பன. இவ்விரண்டையும்‌ மட்டூம்‌ நூலின்‌ சுருக்கம்‌
கருதிப்‌ பார்ப்போம்‌.

பிராணாயாமம்‌

பிராணாயாமம்‌ என்பது நாம்‌ சுவாசிக்கும்‌ முறையை
ஒழுங்கு செய்வதே. எமது உடலினுள்‌ உள்ள உறுப்புகள்‌
எதனின்‌ இயக்கத்தையும்‌ நாம்‌ கட்டுப்படுத்த முடியாது.

அதாவது புற உறுப்புகளான கை, கால்‌, கண்‌ போன்ற
வையின்‌ இயக்கத்தை நாம்‌ கட்டூப்படுத்த முடியும்‌.

ஆனால்‌ உடலினுள்‌ உள்ளே உள்ள இருதயம்‌, ஈரல்‌
போன்றஉறுப்புகள்‌ முதல்‌ நாளமில்லா சுரப்பிகள்‌ வரை
எந்த உறுப்பும்‌ எமது காட்டூப்‌ பாட்டில்‌ இல்லை.

ஆனால்‌ நாம்‌ சுவாசிக்கும்‌ காற்றை எம்மால்‌ கட்டுப்படுத்தி
விரும்பியபடி இயக்கமுடியும்‌.

இவ்வாறு சுவாசத்தை எம்‌ கட்டூப்பாட்டில்‌ கொண்டூவந்து
ஒழுங்கு படூத்துவதன்‌ மூலம்‌ உடம்பினுள்‌ உள்ள
உறுப்புகளையுக்‌ கட்டூப்படுத்தவும்‌, உடலின்‌
சமநிலையைப்‌ பேணவும்‌, மனதை எமது கட்டூப்‌
பாட்டினுள்‌ கொண்டூவரவும்‌ முடியும்‌.

224


Page 241பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இவ்வாறு மனதைக்‌ கட்டூப்பாட்டினுள்‌ கொண்டூ
வருவதன்‌ மூலம்‌ மனம்‌, புத்தி, சித்தம்‌, அகங்காரம்‌
என்பன ஒழுங்கான நெறியில்‌ தொழில்படூம்‌ அதனால
புலன்களைக்‌ கட்டுப்படுத்தி அவற்றை நற்செய்கைகளில்‌
ஈடுபடுத்தி நற்பயன்‌ அடையலாம்‌. ப

தியானம்‌

தியானம்‌ புறமனதை ஒடூக்கி, நடூமனத்தை எழுப்பி,
அடிமனதை விழிக்கச்‌ செய்யும்‌ ஆற்றல்‌ வாய்த்தது.
இதற்குப்‌ பல்வேறு பயிற்சிமுறைகள்‌ உண்டு. ப

இந்நூலில்‌ மனிதகுணங்களை ஒழுங்காக்க வழியுண்டு
என்பதையும்‌, உடலை ஆரோக்கியமாகவும்‌ மனதைக்‌
கட்டுப்பாடாகவும்‌ வைக்க யோகம்‌ சிறந்த வழி.
என்பதையும்‌ சுட்டிக்காட்டியுள்ளேன்‌.

ஆனால்‌ அவைகளைப்பற்றியும்‌, அவற்றின்‌ எண்ணிறைந்த
சிறப்பியல்புகள்‌ பலன்கள்‌ பற்றியும்‌ குறிப்பிடவில்லை.
இந்நூலின்‌ நோக்கமும்‌ அதுவல்ல. இருப்பினும்‌ யோகக்‌
கலையின்‌ ஆசனம்‌, பிரணாயாமம்‌, தியானம்‌ என்பவற்றை
ஆகுதல்‌ முறைப்படி பயின்று, பயிற்சி செய்து மகிழ்வோடு
வாழ்வீராக!

ஆணிவேர்‌

மனிதனின்‌ உடலாலும்‌, உயிராலும்‌, உணர்வுகளாகத்‌
தோன்றும்‌ விருப்புகள்‌, தேவைகள்‌, ஆசைகள்‌
உயர்ந்தனவாக இருக்க, சிறந்தனவாக இருக்க,
மனிதகுலத்தை மேம்படுத்தக்‌ கூடியனவாக இருக்கக்கூடிய

225


Page 242பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

வழிகளை இந்நூல்‌ கூறியுள்ளது. அவைகள்‌ அவ்வாறு
இருப்பின்‌ வாழ்விற்‌ துன்பமில்லை.

ட மாந்தர்தம்‌ உள்ளத்தனையது உயர்வு”

நோயற்ற ஆரோக்கியமான, வலுவான உடலைப்பெற
சிறந்த நல்ல உணவை உண்டால்‌ மட்டூம்‌ போதுமா?
இல்லையே! நல்ல உடற்பயிற்சியும்‌ வேண்டுமல்லவா?

அதேபோன்று நல்ல மனதைப்பெற நல்ல அறிவை
வழங்கினால்‌ மட்டும்‌ போதாது. மனதுக்கு நல்ல
பயிற்சியைக்‌ கொடுக்க வேண்டும்‌. அதுவே ஆசனம்‌,
பிரணாயாமம்‌, தியானம்‌. நம்‌ முன்னோர்‌ கண்ட இவ்வரிய
வழியைப்‌ பின்பற்றுவோம்‌._

திடமான உடலும்‌ மனவலிமையும்‌ நல்லறிவும்‌ கொண்ட
மனதின்‌ சிந்தனை நன்றாக அமையும்‌. ஆதலால்‌
பண்பாட்டின்‌ ஆணிவேரான சிந்தனைப்‌ பண்பாடூ சிறப்பாக
அமையும்‌. சிந்தனைப்பண்பாடு சிறப்பாக அமைந்து
விட்டால்‌ அது சிறந்த பண்பாட்டினைத்‌ தோற்றுவிக்கும்‌.
உயர்ந்த வாழ்வியலுக்கு வழிகாட்டும்‌.

உலகம்‌ மலர வழி

உலகம்‌ உய்ய, மலர ஒவ்வொரு மனிதனும்‌
சமத்துவநிலை கொண்ட சுதந்திரம்‌ உடையவனாக
இருத்தல்‌ வேண்டும்‌. ஒவ்வோர்‌ இனத்தின்‌ பண்பாடும்‌
வளர்க்கப்படல்‌ வேண்டும்‌. இவை அமைய ஒவ்வொரு
மனிதனதும்‌ சிந்தனைப்‌ பண்பாடூ சிறந்து விளங்கல்‌
வேண்டும்‌.

226


Page 243பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌

சிறந்த சிந்தனைப்‌ பண்பாடு கொண்ட ஒருவன்‌ மக்களின்‌
சமத்துவ நிலைக்காகச்‌ சிந்திப்பான்‌, செயற்படூவான்‌.

சமத்துவம்‌ என்னும்போது பொருளாதாரத்தில்‌, கல்வி
கேள்விகளில்‌, வசதிவாய்ப்புகளில்‌, பண்பில்‌ உயர்நிலை
எய்திய மனிதக்கூட்டத்தையே சுட்டி நிற்கிறது.

கம்பராமாயணத்தில்‌ கம்பன்‌ கண்ட சமத்துவ நிலையைப்‌
பாருங்கள்‌. ஒரு நாட்டில்‌ எவரும்‌ பொய்‌ பேசமாட்டார்கள்‌
என்றால்‌ “உண்மை” என்ற சொல்லுக்கே அர்த்தம்‌
இல்லையல்லவா? சகல வளங்களும்‌ நிறைந்துள்ள
ஈகைப்பண்பு கொண்ட மக்கள்‌ வாழும்‌ நாட்டில்‌ யாராவது
வறுமையால்‌ வாடூவார்களா? மிகவும்‌ வலிமையும்‌
கலங்கா நிலையும்‌ கொண்ட நாட்டிற்குப்‌ பகைவர்கள்‌
இருக்க முடியாதல்லவா?

வண்மை இல்லை ஓர்‌ வறுமை இன்மையால்‌!
திண்மை இல்லை நேர்‌ செறுநர்‌ இன்மையால்‌
உண்மை இல்லை பொய்‌ உரை இன்மையால்‌!
ஒண்மை இல்லை பல்‌ கேள்வி ஓங்கலால்‌
(பாலகாண்டம்‌ நாட்டூப்படலம்‌ -85)

எனவே உலகம்‌ மலர மக்கள்‌ உயர்‌ சிந்தனைப்‌
பண்பாட்டினை விழுமியங்களைக்‌ கொண்டிருத்தல்‌
வேண்டும்‌. சிந்தனைப்‌ பண்பாடும்‌, விழுமியமும்‌
பண்பாட்டின்‌ முக்கிய கூறுகளாகும்‌.

227


Page 244இதழ்‌ 11
உ.லகவனர்ச்சியும்‌ பண்ப௱ரும்‌.

ஆதியில்‌ ஒன்றாக இருந்த நிலப்பரப்பு கண்டங்களாகப்‌,
பல தீவுகளாகப்‌ பிரிந்து சென்று விட்டது. விலகிச்சென்ற
இந்நிலப்பரப்புகளுக்கிடையே தொடர்புகள்‌ அற்றிருந்தது
ஒரு காலம்‌.

ஆனால்‌ இன்று உலகம்‌ மிகமிகச்‌ சுருங்கி விட்டது
நிலப்பரப்பால்‌ அல்ல, தொடர்பால்‌. மனிதன்‌ பெற்றுள்ள
அறிவியல்‌ வளர்ச்சியே இதற்குக்‌ காரணம்‌. அறிவியல்‌
வளர்ச்சி மூலம்‌ அவன்‌ பெற்றுக்கொண்ட போக்குவரத்து,
தொலைத்தொடர்பு, ஊடகவியல்‌ என்பனவற்றின்‌
இமாலய வளர்ச்சியே காரணமாகிறது.

உலகம்‌ ஓர்‌ ஊர்போல்‌ சுருங்கிவிட்டதால்‌ மனித
சமுதாயம்‌ பெற்ற மனித வாழ்வியலிற்கான நன்மைகள்‌
பலப்பல. அதேவேளை தீமைகளும்‌ பலப்பலவாக
அமைந்து விட்டதைக்‌ காண்கிறோம்‌.

உலகின்‌ இயற்கை அமைப்பு

அன்று ஒவ்வொரு மொழி பேசும்‌ இனக்கூட்டமும்‌
தாம்‌ வாழும்‌ சூழலிற்கேற்ப அரசியல்‌ அமைப்பை,
வாழ்வியல்‌ முறையைக்‌ கொண்டிருந்தன. தமக்கேயுரிய
தலைமையையும்‌, பண்பாட்டையும்‌ கொண்டிருந்தன. ஒரு
மொழி பேசும்‌ மக்களிடையே கூடப்‌ பூமியின்‌ இயற்கைச்‌
சூழலிற்கேற்பத்‌ தனித்தனியாகப்‌ பகுக்கப்பட்ட பூகோள
எல்லைகளைக்‌ கொண்ட நாடூகளாக, அரசுகளாக அந்த

228


Page 245பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌
மக்கள்‌ குழுமங்கள்‌ வாழ்ந்து வந்துள்ளன.

எடூத்துக்காட்டாகத்‌ தமிழர்‌ நிலங்களை ஐந்து வகையாகப்‌
பிரித்து அது அதற்குரிய தனித்துவமான பண்பாட்டைக்‌
கொண்டிருந்தனர்‌.

இன்று உலகம்‌ சுருங்கிவிட்ட நிலையில்‌ பல்வேறு
இனங்களும்‌ புலம்பெயர்ந்து ஒரு நாட்டில்‌ ஓர்‌ அரசின்‌
கீழ்‌ வாழும்‌ சூழல்‌ அமைந்து விட்டது.

இந்நிலையில்‌ இன, மொழி, பண்பாட்டூ அடிப்படையில்‌
ஒருமித்த மக்கள்‌ குழுமத்தை “சமூகம்‌” (குமுகம்‌)
(௦ொெரமாப்ுு) என அழைக்கலாம்‌. ஒரு நிலப்பரப்பினுள்‌
ஒன்றிற்கு மேற்பட்ட சமூகத்தினர்‌ வாழும்‌ குழுமத்தை
“சமுதாயம்‌” (குமுதாயம்‌) (00160) என அழைக்‌
கலாம்‌.

இவ்வாறு பல்வேறு இனங்கள்‌ கலந்து வாழும்‌ சமுதாய
நிலையாலும்‌ உலகம்‌ சுருங்கிவிட்ட நிலையிலும்‌
ஓவ்வொரு சமூகத்தினதும்‌ மரபுவழிப்பண்பாட்டில்‌
மாற்றங்கள்‌ ஏற்பட்டு விட்டன, ஏற்பட்டு வருகின்றன.

ஒரு பண்பாட்டினை இன்னொரு பண்பாடு புதிய
கோட்பாடுகள்‌, மாற்று வழிமுறைகள்‌, தொழில்நுட்ப
மற்றும்‌ நுண்ணறிவுத்திறன்கள்‌ மூலம்‌ வளப்படுத்த
முடியும்‌. ஆனால்‌ எந்தவொரு பண்பாட்டையும்‌
இன்னொரு பண்பாடூ முற்றிலும்‌ அழித்துவிட முடியாது,
அழித்து விடவும்‌ கூடாது.

இந்நிலைக்குப்‌ பல காரணங்கள்‌ இருப்பினும்‌ அடிப்‌

229


Page 246பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

படையானதொன்று காணப்படுகிறது. அதுதான்‌
வல்லான்‌ வகுத்ததே சட்டம்‌ என்னும்‌ நிலை

தொழில்நுட்ப உயர்வால்‌, உயர்போர்க்கருவிகளையும்‌,
படைபலத்தையும்‌ கொண்டநாடூ, இனம்‌ - உயர்ந்த
இனமாக இன்று கணிக்கப்படூகிறது. இத்தகைய இனம்‌ -
இவற்றால்‌ கொண்ட பெருமித எண்ணம்‌, அவர்களிடையே
சமூகக்கட்டொருமைப்பாட்டைக்‌ கொடுத்துச்‌ சமுதாய
ஒருமைப்பாட்டைப்‌ பேணுகிறது.

எனவே இத்தகைய நாடூகள்‌ தொழில்நுட்பத்திலும்‌,
படைபலத்திலும்‌, பொருளாதாரத்திலும்‌,  சமூகக்கட்‌
டொருமைப்பாட்டிலும்‌ சமூதாய இசைவாக்கத்திலும்‌
சிறந்து விளங்கி வல்லமைகொண்ட நாடுகளாக, சமு
தாயங்களாக முன்னிலை வகிக்கின்றன.

எடூத்துக்காட்டாக அமெரிக்கா, சீனா போன்ற
நாடுகளையும்‌ ஆங்கிலேய, யூத இனங்களையும்‌ குறிப்‌
பிடலாம்‌.

இவ்வாறு ஓவ்வொரு பகுதியிலும்‌ தோன்றியுள்ள
வல்லரசுகளின்‌ பொருளாதார, வணிக, தொழில்நுட்பம்‌
உள்ளிட்ட சகலவற்றின்‌ ஆக்கிரமிப்பினால்‌ பல நாடூகள்‌
தமது சுயத்தை இழந்து வருகின்றன. அதுமாத்திரம்‌
அன்று இந்நாடுகளில்‌ வாழும்‌ மக்கள்‌ ஆதிக்க,
ஆக்கிரமிப்பு எண்ணம்‌ கொண்ட வல்லரசுகளின்‌ பண்பாடூ,
நாகரிகம்‌, தொழில்நுட்பம்‌ என்பனவே சிறந்தது என்ற
எண்ணத்தினால்‌ மனப்பான்மையால்‌ தமது மரபுவழிப்‌
பண்பாட்டிற்கும்‌ அந்நிய பண்பாட்டிற்குமிடையே பெரும்‌
ஊசலாட்டத்தைக்‌ கொண்டிருக்கின்றனர்‌.

230


Page 247பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இவர்கள்‌ தமது நாட்டின்‌ சூழலுக்கேற்ற வாழ்வியல்‌
முறையைத்துறந்து தமது காலடியின்‌ கீழ்‌ உள்ள
வளங்களை ஆதிக்க சக்திகளிடம்‌ தொலைத்து விட்டன,
தொலைத்து வருகின்றன. இதற்கு எடூத்துக்காட்டாக
ஆப்பிரிக்க, அரேபிய, ஆசியாவின்‌ சில நாடுகளைக்‌
குறிப்பிடலாம்‌.

எடுத்துக்காட்டாக ஸீலங்கா அரசானது தமிழினத்தின்‌
நியாயபூர்வமான சுதந்திரப்போரை உலகநாடூகள்‌
கண்டுகொள்ளாது இருக்க வேண்டூம்‌ என்பதற்காகத்‌
தனது நாட்டின்‌ வளங்களை உலகநாடூகளுக்கு கையூட்டு
(லஞ்சம்‌) போன்று பகிர்ந்தளித்துக்‌ கொண்டிருக்கிறது.

பண்பாட்டு வீழ்ச்சி

இந்நிலையில்‌ உலகில்‌ குறிப்பாக வல்லமை கொண்ட
"நாடுகளைத்‌ தவிர மற்றைய நாடூகளில்‌ சமுதாய
நிலைமை மிக மோசமாகவே உள்ளது. இன்றைய
ஊடகங்கள்‌ படம்‌ பிடித்துக்காட்டும்‌ சமுதாய வாழ்க்கை
பெருமைப்படக்கூடியதாக இல்லை.

அன்பும்‌, பரிவும்‌, அருளும்‌ பிறர்‌ உணர்ச்சிகளைப்‌ புரிந்து
கொள்ளும்‌ பண்பும்‌ மிக அரிதாகி விட்டன.

இன்று மனிதனின்‌ உடல்சார்‌ உந்து சக்தியான உணவு,
உடை, உறையுள்‌ உள்ளிட்ட சகல அடிப்படைத்‌
தேவைகளையும்‌ நிறைவு செய்யப்‌ பணமே தேவை,
பணமே குறிக்கோள்‌ ஆகிவிட்டது. இவ்வாறான உலக
நெருக்கடி பண்பாட்டின்‌ ஒவ்வொரு கூறுகளிடையேயும்‌
மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

231


Page 248பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

சிக்கல்கள்‌ நிறைந்த சமூகத்தில்‌, போராட்டம்‌ நிறைந்த
வாழ்வில்‌ மூடநம்பிக்கைகளும்‌ அவை சார்ந்த சடங்‌
குகளும்‌ பெருமளவில்‌ இருக்கும்‌, புத்துயிர்பெறும்‌.
போலிச்சமயத்‌ தலைமைகளினால்‌ இவை மேலும்‌
தோற்றுவிக்கப்படும்‌. எடுத்துக்காட்டாக இன்றைய கனடிய
தமிழ்ச்சமூகத்தில்‌ இவை காணப்படுகின்றன.

தமிழர்‌ புலம்பெயர்வு

கடந்த பல நூற்றாண்டுகளாக சில நாடுகள்‌
பல நாடுகளின்‌ மீது படையெடுத்து வெற்றி
கொண்டு அவற்றை ஆக்கிரமித்து ஆட்சிசெய்து
வந்தமையினாலும்‌,

இவ்வாறு ஒரு நாட்டால்‌ கைப்பற்றப்பட்ட பல நாடுகள்‌
ஓர்‌ அரசின்‌ கீழ்க்கொண்டு வரப்பட்டு ஒரு நாடு
போன்ற மாயத்தோற்றம்‌ பெற்று ஓர்‌ அரசஅமைப்பின்‌
கீழ்‌ ஆளப்பட்டு வந்தமையினாலும்‌, வருவதனாலும்‌,
பல்லின மக்களும்‌ பல நாடுகளில்‌ குடியேறி வாழ்ந்து
வருவதாலும்‌, இன்றைய உலகில்‌ கலப்பில்லாத
மனித இனமும்‌ இல்லை, அதேபோன்று கலப்பில்லாத
பண்பாடும்‌ இல்லை.

இருப்பினும்‌ இத்தகைய இனங்கள்‌ தமது மரபுவழிப்‌
பண்பாட்டை முற்றிலுமாக இழந்து விட்டன என்றும்‌
கூறுவதற்கு இல்லை.

மேற்சொன்ன சகல காரணங்களுக்கும்‌ அமெரிக்க,

ஆப்பிரிக்க, ஆசியாவின்‌ பல நாடூகள்‌ சிறந்த
எடூத்துக்காட்டுகள்‌ ஆகும்‌.

232


Page 249பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இருப்பினும்‌ சற்று விரிவாகப்‌ பார்க்கில்‌ தமிழர்‌ வரலாற்றை
நோக்கலாம்‌.

9-10 ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ சோழர்‌ ஆட்சிக்காலத்தில்‌

சோழப்பேரரசு தென்கிழக்கு ஆசியாவில்‌ உள்ள
பல நாடுகளையும்‌ வெற்றி கொண்டு தன்‌ ஆட்சியின்‌
கீழ்க்கொண்டு வந்தது, ஆனால்‌ ஐரோப்பியர்கள்‌
அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில்‌ செய்ததுபோன்று
தமிழர்‌ தமது ஆட்சி உரிமைக்கு உட்பட்ட நாடூகளில்‌
தம்மொழியைப்‌ பரப்பவில்லை. தமிழர்கள்‌ சென்று
அதிகாரம்‌ பெற்றவர்கள்‌ என்ற மதிப்புடன்‌ ஓர்‌ ஆளும்‌
இனத்தின்‌ குடிமகனாகக்‌ குடியேறவில்லை.

அக்காலத்‌ தமிழர்கள்‌ பொருளியலிலும்‌, பண்பாட்டியலிலும்‌
மேம்பட்டவர்களாகப்‌ புலம்பெயர மறந்து, மறுத்துத்‌
தம்நாட்டிலேயே வாழ்ந்து வந்தனர்‌. வறுமைப்பட்டோர்‌
கூடத்‌ தம்நாட்டில்‌ தமது சூழலில்‌ உள்ள வளத்தைப்‌
பயன்படூத்தி வாழ முடியும்‌ என்ற நம்பிக்கையுடன்‌ தமது
தாயகங்களிலேயே தங்கிவிட்டனர்‌.

காலம்‌ ஓடியது ஐரோப்பியர்கள்‌ வந்தார்கள்‌. தமிழர்கள்‌
வரவேற்றார்கள்‌. முடிவில்‌ தமது அரசையும்‌, நாட்டையும்‌
ஐரோப்பியர்களிடம்‌ பறிகொடூத்தார்கள்‌.

சோழப்பேரரசின்‌ காலத்திலிருந்து எட்டூ நூற்றாண்டுகளின்‌
பின்னர்‌ (18ம்‌ நூற்றாண்டின்‌ பின்னர்‌) உலகின்‌ மேற்கு
மூலையிலுள்ள கரிபியன்‌ தீவுகள்‌ முதல்‌ கிழக்கு
மூலையிலுள்ள பிஜித்‌ தீவுவரை உள்ள பல பிரெஞ்சு,
ஆங்கில ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளிலும்‌ ஓடிச்சென்று
குடியேறினார்கள்‌.

233


Page 250பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

நான்‌ நைஜீரியாவில்‌ எட்டு வருடங்கள்‌ வாழ்ந்தேன்‌.
அக்காலங்களில்‌ பலகலை நிகழ்ச்சிகளில்‌ ஆப்பிரிக்க
மக்கள்‌ துரத்திப்‌ பிடிக்கப்பட்டூச்‌ சங்கிலிகளால்‌
கட்டப்பட்டு அடிமைகளாகப்‌ பல காலனி நாடூகளுக்கும்‌
இழுத்துச்‌ செல்லப்படுவதைச்‌ சிறந்த இசையுடன்‌ நாட்டிய
நாடகமாகக்‌ காண்பிப்பார்கள்‌.

அவர்களிடம்‌ பேசும்போது அவர்கள்‌ எங்களைப்‌ பார்த்துக்‌
கூறிய ஒரு விடயம்‌ என்‌ உள்ளத்தைப்‌ புண்படுத்தியது.

“ஆபிரிக்கர்களாகிய எம்மை வெள்ளையர்கள்‌ துப்பாக்கி
முனையில்‌ பலவந்தமாகக்‌ கட்டி இழுத்துச்சென்று
குடியேற்றினார்கள்‌

ஆனால்‌ நீங்கள்‌ கூலிகளை ஏற்றக்‌ கப்பல்‌ வந்து நிற்கிறது
என்று அறிந்ததும்‌ கப்பலில்‌ இடம்‌ கிடைக்க வேண்டும்‌
என்பதற்காக அயல்வீட்டாருக்குக்‌ கூடச்சொல்லாது
ஓடிச்சென்று கப்பலில்‌ ஏறியவர்கள்‌”? என்று ஏளனமாகக்‌
கூறுவார்கள்‌.

சோழப்பேரரசு காலத்தில்‌ ஆளும்‌ இனமாகக்‌ குடியேற
மறுத்த தமிழன்‌ ஐரோப்பியர்‌ காலத்தில்‌ “கூலி” என்ற
பெயர்‌ தாங்கிப்‌ புலம்பெயர்ந்து சென்றமைக்கான
காரணம்‌ யாது?

கூலிகளாகத்‌ தமிழன்‌ சென்று வாழ்ந்த வாழ்வின்‌
அவலநிலை, துயரநிலை சொல்ல முடியாதது. இந்நிலைக்கு
ஒரு எடூத்துக்காட்டாகக்‌ கரும்புத்தோட்டத்திலே...
என்னும்‌ பாரதியார்‌ பாடலைக்‌ கவனத்தில்‌ எடுக்கலாம்‌.
கண்ணீர்‌ சிந்திச்‌ சிந்திப்‌ பாரதி எழுதிய இப்பாடல்‌
புலம்பெயர்‌ தமிழனின்‌ அன்றைய அவலநிலையை

234


Page 251பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

எடூத்துக்காட்டுகின்றது.

1.

கரும்புத்‌ தோட்டத்திலே - அவர்‌

கால்களும்‌ கைகளும்‌ சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து

மாதர்தம்‌ நெஞ்சு கொதித்துக்‌ கொதித்துமெய்‌
சுருங்கு கின்றனரே - அவர்‌

துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற்‌ கிலையோ? - செக்கு

மாடூகள்‌ போலுழைத்‌ தேங்குகின்றார்‌. அந்தக்‌

(கரும்புத்‌ தோட்டத்திலே)

பெண்ணென்று சொல்லிடிலோ ஒரு
பேயும்‌ இரங்கும்‌ என்பார்‌; தெய்வமே! - நினது
எண்ணம்‌ இரங்காதோ? - அந்த
ஏழைகள்‌ அங்கு சொரியுங்‌ கண்ணீர்வெறும்‌
மண்ணிற்‌ கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்‌
கண்ணற்ற தீவினிலே - தனிக்‌
காட்டினிற்‌ பெண்கள்‌ புழுங்குகின்றார்‌ அந்தக்‌
(கரும்புத்‌ தோட்டத்திலே)

நாட்டை நினைப்பாரோ? - எந்த

நாளினிப்‌ போயதைக்‌ காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்‌

விம்மி விம்மி விம்மி விம்மியழுங்‌ குரல்‌
கேட்டிருப்பாய்‌ காற்றே! - துன்பக்‌

கேணியிலே எங்கள்‌ பெண்கள்‌ அழுதசொல்‌
மீட்டும்‌ உரையாயோ? - அவர்‌

விம்மி பழவுந்‌ திறங்கெட்டும்‌ போயினர்‌

(கரும்புத்‌ தோட்டத்திலே)

நெஞ்சம்‌ குமுறுகிறார்‌ - கற்பு
நீங்கிடச்‌ செய்யுங்‌ கொடுூமையிலே அந்தப்‌

235


Page 252பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பஞ்சை மகளிரெல்லாம்‌ - துன்பப்‌

பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்‌

சாகும்‌ வழக்கத்தை இந்தக்‌ கணத்தினில்‌
மிஞ்ச விடலாமோ? - ஹே

வீரமா காளி சாமுண்டி. காளீஸ்வரி!

(கரும்புத்‌ தோட்டத்திலே)

இப்பாடல்‌ புலம்பெயர்‌ தமிழன்பட்ட துன்பத்திற்கு ஒரு
சிறிய எடூத்துக்காட்டேதான்‌, அடிமைப்பட்ட பரிதாப
நிலைக்குரிய வாழ்வை அவன்‌ வலிந்து தேடிக்கொள்ள
வேண்டிய நிலை ஏன்‌ ஏற்பட்டது?

மேற்கூறிய கேள்விக்கான விடையைச்‌ சுருக்கமாகப்‌
பார்ப்போம்‌.

ஐரோப்பியர்கள்‌ வருகைக்கு முன்னர்‌ உலகிலேயே
சிறந்த நீர்ப்பாசன நாகரிகத்தைக்‌ கொண்டிருந்த மக்கள்‌
தமிழர்‌ என்பது உலகவரலாற்றில்‌ மிகைப்படுத்தப்பட்ட
கூற்று அல்ல.

இது எதனைச்‌ சுட்டிக்காட்டுகிறது என்றால்‌ தமிழர்கள்‌,
மனிதனின்‌ அடிப்படைத்‌ தேவையான உணவிற்கு வேறு
எந்த நாட்டிற்கும்‌ கையேந்த வேண்டிய தேவையற்று
உணவில்‌ தன்நிறைவு பெற்றிருந்தனர்‌. தமிழ்நாட்டிலும்‌,
தமிழீழத்திலும்‌ விளையும்‌ நெல்முதல்‌ பலவகைத்‌
தானியங்களும்‌ அங்குள்ள மக்களின்‌ தேவைக்கு
மேலாக ஏற்றுமதி செய்யக்கூடிய அளவு இருந்தது.

தமிழர்கள்‌ தமது சூழலிற்கு ஏற்பவும்‌, உடல்நலத்திற்கு
ஏற்பவுமான உணவுப்‌ பொருட்களை விளைவித்தனர்‌.

236


Page 253பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மருந்தே உணவு, உணவே மருந்து என்ற கோட்பாட்டைக்‌
கொண்டிருந்த தமிழர்‌ தேவைகருதிய தானிய,
சிறுதானியங்களையே விளைவித்தார்கள்‌.

தமிழர்‌ அரசுகள்‌ நீர்ப்பாசனத்திற்கான பொறுப்பையும்‌,
விவசாயிகள்‌ நலனையும்‌ கவனித்துச்‌ செயற்படுவதையே
முக்கியப்‌ பணியாகக்‌ கொண்டிருந்தன.

விவசாயத்‌ தேவைகள்‌ சார்ந்த தொழில்கள்‌ புரிவோர்‌,
வணிகர்கள்‌, போன்ற : பெரும்‌ மக்கள்‌ கூட்டம்‌
விவசாயிகளை நம்பி வாழ்ந்தார்கள்‌.

இந்நிலையைத்‌ திருக்குறள்‌ நன்கு எடுத்துக்‌
காட்டுகின்றது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்‌ மற்று எல்லாம்‌
தொழுதுண்டூ பின்செல்‌ பவர்‌”
- குறள்‌: 1033

அடுத்ததாகத்‌ தேவையானது உடை, தமிழ்மக்கள்‌
தமக்குத்‌ தேவையான உடைகளின்‌ உற்பத்தியைத்‌
தாமே மேற்கொண்டிருந்தனர்‌. பருத்தி, பட்டு இரண்டுமே
பெரும்‌ வளர்ச்சி பெற்றிருந்தன.

தமிழர்களின்‌ அரசுகள்‌ மருத்துவம்‌, சிற்பம்‌, ஓவியம்‌
போன்ற கலைவளர்ச்சிக்கு ஆக்கமும்‌, ஊக்கமும்‌

அளித்து வந்தன.

இந்நிலையில்‌ தமிழர்களின்‌ அரசாகப்‌ புகுந்து கொண்ட
ஐரோப்பிய அரசுகள்‌, குறிப்பாக ஆங்கிலேய . அரசு

2237


Page 254பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தமிழர்களின்‌ பாரம்பரிய உணவு உற்பத்தி பற்றிய
எவ்விதக்‌ கவனமும்‌ செலுத்தாது தனது நாட்டிற்குத்‌
தேவையான, தனது வணிகத்திற்குத்‌ தேவையான
கோப்பி, தேயிலை, கரும்பு, இறப்பர்‌ போன்றவற்றை
மட்டும்‌ விளைவிக்க ஏற்பாடு செய்தனர்‌, உதவினர்‌.

விவசாயத்தை நம்பி வாழ்ந்த பெரும்மக்கள்‌ கூட்டம்‌
அநாதைகள்‌ ஆக்கப்பட்டனர்‌. பல ஆண்டுகளாக
கட்டிக்காத்து வந்த குளங்கள்‌ தூர்ந்து போயின.
எடுத்துக்‌ காட்டாகத்‌ தமிழீழத்தின்‌ வன்னிப்‌ பிரதேசம்‌
முழுவதும்‌ குளங்கள்‌ தூர்ந்து போய்க்‌ காடுகளாக
மாறிவிட்டன. மக்களும்‌ புலம்பெயர்ந்து விட்டனர்‌.
விவசாயம்‌ புறக்கணிக்கப்பட்டுூ அரசுதொழில்களே
மதிப்புப்‌ பெறலாயிற்று.

ஆங்கிலேய ஆட்சியாளர்களால்‌ அறிமுகப்படுத்தப்பட்டு
அவர்கள்‌ நாட்டு விளைபொருளான கோதுமை மா
தமிழர்கள்‌ உணவில்‌ இடம்பெற்றதாலும்‌ தமிழர்‌
விளைபொருட்கள்‌ உற்பத்தியில்‌ வீழ்ச்சி ஏற்பட்டது.

ஆங்கிலேய நாட்டில்‌ தயாரிக்கப்படும்‌ துணிகள்‌, உடைகள்‌
தமிழர்களிடையே விற்பனைக்கு வந்தன. இதனால்‌
ஆயிரக்கணக்கான துணி, ஆடை உற்பத்தியாளர்கள்‌
வேலையற்றவர்கள்‌ ஆனார்கள்‌.

தமிழர்களின்‌ மருத்துவம்‌, உள்ளிட்ட கலைகள்‌
வலுவிழந்து செல்லத்‌ தொடங்கியன,.

முழுமையாக நோக்கில்‌ ஆங்கிலேய ஆட்சியாளர்கள்‌
நமது நாட்டின்‌ மூலவளத்தை உபயோகித்துத்‌ தமக்குத்‌

238


Page 255பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தேவையானவற்றை உற்பத்தி செய்யும்‌ ஓர்‌ இடமாகவும்‌,
தம்மால்‌ உலகநாடுகளில்‌ உற்பத்தி செய்யப்படும்‌
பொருட்களின்‌ சந்தையாகவும்‌, தாம்‌ ஆட்சி செய்த
நாடுகளைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டனர்‌.

அதுமாத்திரம்‌ அன்று, தமது உற்பத்திக்குக்‌ குறைந்த
செலவில்‌ கூலிகளாக அந்நாட்டு மக்களைப்‌
பயன்படூத்தினர்‌.

இம்மக்கள்‌ தாம்‌ பெறும்‌ இக்கூலிப்பணத்தைக்‌ கொண்டே
தமது வாழ்விற்குத்‌ தேவையான உணவு, உடை
போன்ற பொருட்களை வாங்கவேண்டிய கட்டாயநிலை
இருந்ததனால்‌ தம்‌ உழைப்பிற்குப்‌ பெற்றுக்கொண்ட
கூலிப்பணம்‌ மீண்டும்‌ ஆங்கிலேயர்‌ கைகளுக்கே
சென்றது.

சுருங்கக்கூறின்‌ கூலிக்கு ஆங்கிலேயர்‌ தமது உற்பத்திப்‌
பொருட்களைப்‌ பண்டமாற்றுச்‌ செய்தமை போன்ற
நிலையே.

மேற்கூறப்பட்ட இப்புறச்சூழற்‌ காரணங்களால்‌
தமிழர்‌ தாயகங்களில்‌ வாழ்ந்த பெரும்பகுதி மக்கள்‌
வறுமைக்கோட்டின்‌ கீழ்த்‌ தள்ளப்பட்டனர்‌. ஒருபகுதி
மக்கள்‌ வேலைவாய்ப்பு அற்றவர்களானார்கள்‌.

இதனால்‌ இம்மக்கள்‌ பல்வேறு நாடூகளிற்கும்‌ கூலிகளாக
ஓடிச்‌ சென்றனர்‌.

கடந்த 200வருடகால ஓட்டத்தில்‌ கயானா, ரெரிலாண்ட்‌,
பிஜி போன்ற பலநாடூகளில்‌ குடியேறிய தமிழர்கள்‌

239


Page 256பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தாம்‌ தமிழர்‌ குடிப்பிறந்தோர்‌ என்பதையே அறியாது
இருக்கின்றனர்‌. முற்றிலுமாக தமது மரபுவழிப்பண்பாட்டை
இழந்து தமது அடையாளத்தைத்‌ தொலைத்து
உணமையான ஏதிலிகளாக நிற்கின்றனர்‌.

தமது மொழி, பண்பாடு என்பவற்றை இழந்து
ஆங்கிலத்தையோ அல்லது அந்தக்குடியேற்ற நாட்டு
மொழியையோ பேசும்‌ இவர்களை,

ஆங்கிலேயர்களும்‌ அரவணைக்கவில்லை, வாழும்‌
நாடூம்‌ தமது குடிமக்களாக மதிக்கவில்லை.

அதுமாத்திரமல்ல அவர்களின்‌ தாய்நாடான இன்றைய
இந்தியாவை, அவர்கள்‌ பசுக்கன்று தாய்ப்பசுவைத்‌
தேடி ஓடிவருவதைப்போன்று, ஓடிவரும்‌ போதெல்லாம்‌
தாய்ப்பசு பால்‌ ஊட்ட மறுத்துக்காலால்‌ அடிப்பது
போன்ற நிலையே காணப்படுகின்றது. இதனைக்‌ கயானா
நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்‌ ஒருவரே என்னிடம்‌
கவலையுடன்‌ கூறினார்‌.

வரலாற்றில்‌ ஐரோப்பியர்களால்‌ நிகழ்ந்த இத்தகைய
இனப்படுகொலைகளை, இன்றுவரை தாயகத்தமிழர்கள்‌
சிந்திக்கவே இல்லை போலும்‌!

ஐரோப்பியர்களிடம்‌ இருந்து தாம்‌ சுதந்திரம்‌
பெற்றுவிட்டோம்‌ என்று கூறும்‌ தாயகத்‌ தமிழர்‌,
ஐரோப்பியர்களால்‌ அவர்கள்‌ ஆட்சிக்காலத்தில்‌
கூலிகளாகக்‌ கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின்‌
நிலை, அவர்களின்‌ சுதந்திரம்‌ பற்றிச்‌ சிந்தித்தார்களா?
அது தமது கடமை என்று உணர்ந்தார்களா? மாறாக

240


Page 257பணர்பாடு - வேரும்‌, விழுதும்‌

இம்மக்களின்‌ அரசுகளாக இருந்த சோழ, பாண்டிய
அரசுகளின்‌ இடத்தை நிரப்பியுள்ள தமிழக அரசு - இது
இந்திய மத்திய அரசின்‌ வெளிநாட்டூக்‌ கொள்கை எனக்‌
கூறுகிறது.

இக்கூற்று - தமிழநாட்டூத்‌ தலைவர்கள்‌ இன்றுவரை தம்‌
கடமை மறந்த அடிமைகளாகவே உள்ளனர்‌ என்பதையே
வரலாற்றில்‌ எடூத்தியம்பி நிற்கின்றது.

இன்றையநிலை

மேற்குலக நாடுகளால்‌ வழங்கப்பட்ட சனநாயக அரசியல்‌
முறையானது, பல ஐரோப்பிய நாடூகளில்‌ இருந்து
சுதந்திரம்‌ பெற்ற நாடுகளில்‌, மேலும்‌ சிக்கல்களை
உருவாக்கி விட்டுள்ளது.

இதற்கு அடிப்படைக்‌ காரணமாக இருப்பது முக்கிய
இரண்டூ காரணிகள்‌.

ஒன்று ஆங்கிலேயர்களால்‌ ஒன்றிணைக்கப்பட்ட பல
மொழி பேசும்‌ நாடுகள்‌ ஒரேகுரலில்‌ ஒன்றிணைந்து
சுதந்திரம்‌ வேண்டிப்‌ பெற்றபோது தத்தமது நாடுகளை
மீண்டும்‌ தனித்தனியாகப்‌ பெற்றுக்கொள்ளாமை அல்லது
ஒன்றாக இயங்க முற்பட்டபோது தம்நாடுகளுக்குக்‌ கூடிய
சுயஆட்சி முறையைக்‌ கொண்ட அரசியல்‌ அமைப்பை
அவர்கள்‌ பெற்றிருக்காமையே. அதாவது ஒவ்வொரு
இனமும்‌ தமக்குரிய சுயநிர்ணய உரிமைகொண்டூ ஓர்‌
அதிகாரப்பகிர்வு நிலையைப்‌ பெற்றிருக்காது இருப்பதே.

இரண்டாவது அடிப்படையில்‌ பல நாட்டினர்‌ ஒரு நாடாக

241


Page 258பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

ஓர்‌ அரசின்‌ கீழ்‌ இயங்கும்போது ஏதோ ஒரு நாட்டினர்‌
பெரும்‌ பானமையினராக இருப்பது இயல்புநிலை.

இத்தகைய இயல்பு நிலையாலும்‌, ஆங்கிலேயரின்‌
முதிர்சசியடையாத சனநாயக முறையாலும்‌, ஆட்சி
அதிகாரத்தைப்‌ பெறும்‌ பெரும்பான்மை இனம்‌ மற்றைய
இனங்களை இரண்டாந்தர நிலைக்கு தள்ளிவிட்டமை.

மாற்றுவழி

இந்நாடுகள்‌ பொருளாதாரத்தில்‌ மேம்பட்டூச்‌ சிறப்புமிக்க
வாழ்வியலை அந்நாட்டு மக்கள்‌ பெற்றுக்கொண்டு
செழிப்புடன்‌ வாழவேண்டூமானால்‌,

ஒன்று தனிமொழி பேசும்‌ இனங்களுக்கு மிகக்கூடிய
அதிகாரப்பகிர்வு கொண்ட அரசமைப்பை உருவாக்க
வேண்டும்‌.

அவ்வாறு மொழிவழித்‌ தோன்றும்‌ மாநில அரசுகள்‌
தம்மிடையே வாழும்‌ தனித்துவமான பண்பாட்டுப்‌
பின்னணியைக்‌ கொண்ட மக்கள்‌ குழுமங்களுக்கு
அவர்களுடைய தனித்துவத்தைப்‌ பாதுகாக்கவும்‌,
வளர்க்கவும்‌ கூடிய அதிகாரப்பகிர்வுகள்‌ கொண்ட உள்‌
ஊராட்சி அமைப்புகளை வழங்க வேண்டும்‌.

இவ்வாறாக அதிகாரப்‌ பகிர்வினைக்‌ கொண்ட அரசியல்‌
அமைப்பினை உடைய நாடூகள்‌ நன்கு வளர்ச்சியுறும்‌.
எடுத்துக்காட்டாக அமெரிக்கா, கனடா, பல ஐரோப்பிய
நாடுகளைக்‌ குறிப்பிடலாம்‌.

242


Page 259பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மாறாக அதிகாரங்கள்‌ பகிர்ந்தளிக்கப்படாது பல
இனங்கள்‌, குழுமங்கள்‌ ஒடுக்கப்படும்‌ போது,
சமவாய்ப்பினைப்‌ பெறும்‌ பொருட்டு அவர்கள்‌ போராடத்‌
தொடங்குவர்‌.

இவ்வாறான அரசியல்‌ அம்சங்களுக்கு ஒடுக்குமுறை
மூலம்‌ தீர்வுகண்டு முடிவுக்குக்‌ கொண்டு
வந்து விடலாம்‌ என அரசு நினைப்பது மிகவும்‌
அபாயகரமான கற்பனை ஆகும்‌. காவல்‌ துறைக்கும்‌,
இராணுவத்துக்கும்‌, அதிகாரவர்க்க இயந்திரத்திற்கும்‌
உரிமைகளை வழங்கி இவ்வாறான கோரிக்கைகளை
அடக்கி விடலாம்‌ என எண்ணிச்‌ செயற்படுவது
மேலும்‌ சிக்கல்களையே வளர்க்கும்‌. இத்தகைய
செயற்பாடு நேர்மையற்ற, சனநாயகத்திற்கு எதிரான
செயற்பாடுகளுக்கு வழிகளைத்‌ திறந்து விடுவதாக
அமையும்‌. அரசின்‌ இச்செயல்‌ புலிக்குப்‌ பயந்து
புலியின்‌ குகையிலேயே ஒளித்துக்‌ கொள்வதைப்‌
போன்றதாகும்‌.

எனவே பல்வேறு வகைப்பட்ட குற்றவியல்‌ சட்டங்களை
இயற்றி காவல்துறை, இராணுவம்‌ மற்றும்‌ அதிகாரவர்க்க
இயந்திரங்களுக்கு உரிமைகளைக்‌ கொடுப்பதற்குப்‌
பதிலாக பொது விவகாரங்களை  நிர்வகிப்பதிலும்‌,
கண்காணிப்பதிலும்‌ பொதுமக்கள்‌ பெரும்‌ பங்களிப்பதாக
இருக்க வேண்டும்‌. சகலமட்ட அரசியல்‌ நிறுவனங்களும்‌
மேம்பட்ட அதிகாரச்‌ சமநிலையைக்‌ கொண்டிருக்க
ஊக்கப்படுத்த வேண்டும்‌.

தகவல்‌ பரிமாற்றம்‌ மற்றும்‌ பேச்சுக்கு விரிவான
சுதந்திரம்‌ அளிக்கப்படல்‌ வேண்டூம்‌. நாட்டில்‌ எழும்‌

243


Page 260பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

எத்தகைய கோரிக்கைகளையும்‌ சனநாயக வழியில்‌
அணுகுவதுடன்‌ காலம்‌ தாழ்த்தாது அவற்றுக்கான
மூலத்தைக்‌ கண்டறிந்து தீர்த்து வைப்பதே - ஒரு நாட்டின்‌
மக்களை கட்டொருமைப்பாட்டூடனும்‌, நாட்டுப்பற்றுடனும்‌
செயற்பட வைக்கும்‌ - தவறின்‌ ஊழலும்‌, சீர்கேடும்‌
நிறைந்த நிர்வாகம்‌ மேலோங்கியும்‌ நாட்டின்‌ அமைதி
சீர்குலைந்தும்‌ நாடு தாழ்ந்து போகும்‌.

அடுத்து மக்களைக்‌ கூறுபோடும்‌ கட்சி அரசியல்‌
முறைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தம்மண்ணுக்கேயுரிய
புதிய முறையைத்‌ தோற்றுவித்தல்‌ அவசியம்‌.

இன்றைய கட்சித்தலைமைகள்‌ அரசியல்த்தலைமைகள்‌
மற்றவர்களின்‌ உழைப்பைப்‌ பயன்படூத்தி முழுவதற்குமான
அதிகாரத்தைப்‌ பெற்றவர்களாகி விட்டனர்‌.

இவ்வதிகார சக்தியை மக்களுக்காக தமது நாட்டிற்காகப்‌
பயன்படூத்துவதற்குப்‌ பதிலாக தமது ஆட்சி அதிகாரத்தைத்‌
தொடர்ந்து வைப்பதற்காகவே பயன்படுத்தப்படும்‌ நிலை
மூன்றாம்‌ உலகநாடூகளில்‌ வேர்‌ ஊன்றி விட்டது.

இதனால்‌ நாட்டிற்கு எது நன்மை? எது தீமை என
அறியாத பொதுமக்கள்‌ கூட்டம்‌ ஒரு புறமும்‌ தன்னல
விருப்பால்‌ ஏற்படும்‌ தலைமை, இனமொழி, சாதி,
சமய அடிப்படையில்‌ எழும்‌ தலைமை, போன்ற நிலை
மறுபுறமுமாகக்‌ காணப்படுகின்றது.

சில நாடுகளில்‌ மந்தை உண்டு, மேய்ப்போன்‌ கிடையாத
நிலை காணப்படுகின்றது. மேற்கூறிய இச்சூழலில்‌ உள்ள
சனநாயகக்‌ கட்சிஅரசியல்‌, சமூகத்தில்‌ திறமை வாய்ந்த
சர்வாதிகாரத்‌ தலைமைகளைத்‌ தோற்றுவித்து விட்டது.

244


Page 261பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அத்தகைய சர்வாதிகாரிகளின்‌ கைகளில்‌ மாறிமாறிப்‌
பல நாடூகள்‌ சிக்கித்‌ தவிக்கின்றன.
வழி என்ன?

நிச்சயம்‌ இன்றைய பெரும்பான்மை கட்சி அரசியல்‌
முறைமை ஒருபோதும்‌ நாடுகளில்‌ அமைதியான சூழலை
ஏற்படுத்த மாட்டாது.

அரசியல்‌ சபைகளின்‌ தேர்தலிற்குப்‌ போட்டியிட
முன்வரும்‌ உறுப்பினர்களுக்கு அடிப்படைத்‌ தகுதிகள்‌
வரையறை செய்யப்படல்‌ வேண்டும்‌, அத்துடன்‌
பலதுறை சார்ந்தவர்களும்‌ அச்சபைகளில்‌ அங்கம்‌
வகிக்கக்கூடியதுமான ஓரு சனநாயகத்தேர்தல்‌ முறை
உருவாக்கப்படல்‌ வேண்டும்‌. ஒருவர்‌ உறுப்பினராக இருக்‌
கக்கூடிய கால எல்லை குறிப்பிடப்படல்‌ வேண்டும்‌.

கட்சி அரசியல்‌ ஒரு பகுதியாக இருப்பின்‌ மக்களால்‌
தெரிவு செய்யப்படாதோர்‌ கட்சித்‌ தலைமைகளிலிருந்து
கொண்டூ வாழ்நாள்‌ முழுவதும்‌ மக்களால்‌
தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக்‌ கட்டூப்படுத்துவது
போன்றவைக்கு இடமளிக்கக்கூடாது.

எது எப்படி இருப்பினும்‌ உலகமக்களின்‌ வாழ்வியல்‌
மேம்பாட்டில்‌ ஒவ்வோர்‌ இனத்தின்‌ பண்பாட்டு
இயங்கலிற்கும்‌ முழுமையான சுதந்திரம்‌ அளிக்கப்‌
படக்கூடியதும்‌ மேற்கூறிய குறைபாடுகள்‌ அற்றதுமான
ஓர்‌ அரசியல்‌ அமைப்பு முறை உலகில்‌ உருவாக்கப்பட
வேண்டிய தேவை தெரிகின்றது.

245


Page 262இதழ்‌ 12
மறரபுவழ்ப்‌ பண்ப௱ட்டிண்‌
இண்றைம நீலை

இன்றைய உலகில்‌ ஓவ்வொரு நாளும்‌
பல்லாயிரக்கணக்கான மக்கள்‌ நாடூ விட்டூ
மற்றைய நாடூகளிற்கு விமானப்‌ பயணம்‌ செய்து
கொண்டிருக்கின்றனர்‌.

பல இனங்களும்‌ கூடி வாழும்‌ சூழல்‌. இந்நிலையில்‌ பல
இனப்பண்பாடூகளும்‌ கலந்து விட்ட ஒரு உலகப்பண்பாடூ
தோற்றம்‌ பெற்று வருகின்றது. இருப்பினும்‌ ஒரு
பண்பாட்டின்‌ அனைத்துக்‌ கூறுகளிலும்‌ மாற்றம்‌ நிகழ்ந்து
விடுவதில்லை.

இன்றைய உலகம்‌ “உயர்‌ சிந்தனைப்‌ பண்பாட்டையும்‌”,
“விழுமியங்களையும்‌” கடைப்பிடித்து ஒழுகுவதைச்‌
சகல மக்களிடமும்‌, நிறுவனங்களிடமும்‌, அரசுகளிடமும்‌
எதிர்பார்க்கின்றது.

அதற்கேற்ற உலகச்சூழலை உருவாக்கப்‌ பல
அமைப்புக்கள்‌ முயன்று கொண்டே இருக்கின்றன.

இன்றைய உலகின்‌ புதிய கண்டுபிடிப்புக்கள்‌,
நவீனமயமாக்கல்‌, சகல தேவைகளும்‌ தொழில்‌
மயமாதல்‌, நகர மயமாதல்‌, சில குழுமங்கள்‌ தமது
மொழி, கலை என்பவற்றை இழந்து வேறு இனவடிவம்‌
பெறல்‌ அல்லது ஓரினமாதல்‌ என்பன உலகின்‌ மக்களை

246


Page 263பண்பாடு - வேரும்‌, விழுதும்‌
ஒன்றிணைத்து ஒருமித்துச்‌ செயற்பட வைத்துள்ளது.

இருப்பினும்‌ கூட சகல சமூகங்களிடையேயும்‌ சகோ
தரத்துவ உணர்வு தோன்றியுள்ளதா? என்றால்‌ இல்லை
என்பதே இன்றைய நிலை.

இனப்பாகுபாடு மண்ணடி வேராக, நிலத்தடி .நீராக.
ஓடிக்கொண்டேதான்‌ இருக்கின்றது. இவ்வினப்பாகுபாட்டின்‌
தன்மை நாட்டிற்கு நாடு: வேறுபட்ட அளவில்‌
இருக்கின்றது. ள்‌

உயர்சிந்தனைப்‌ பண்பாடும்‌, அவர்கள்‌ கொண்டூள்ள

விழுமியங்களும்‌, அவர்களது சகிப்புணர்வும்‌,
அவர்களின்‌ தேவைகளும்‌, அவர்களை ஒத்து இயங்க
வைத்துள்ளன. ப

இந்நிலையில்‌ மேற்கூறிய இம்மூன்று பண்பாட்டுக்‌
கூறுகளையும்‌ எவ்வளவிற்கு எவ்வளவு அதிகமாக ஓர்‌
இனம்‌ கொண்டூள்ளதோ அவ்வளவிற்கு அவ்வளவு
அந்த இனம்‌ மற்றைய இனங்களால்‌ மதிக்கப்படும்‌.

அதே வேளை தம்மினத்தின்‌ அடையாளத்தைச்‌ சுட்டி
நிற்கும்‌ தமது மரபுவழிப்‌ பண்பாட்டின்‌ சமூகத்தை
மேம்படுத்த வல்ல மற்றைய கூறுகளையும்‌ எந்த இனம்‌ '
இழக்காது இருக்கின்றதோ அந்த இனமும்‌ மற்றைய
இனங்களால்‌ மதிக்கப்படும்‌. எந்த இனம்‌ அவற்றை
இழந்து விடுகின்றதோ அந்த இனம்‌ தனது மதிப்பை .
இழந்து விடும்‌ என்பதும்‌ வரலாறு.

முன்னையதற்கு எடூத்துக்காட்டு சீன, யூத இனங்கள்‌,

247


Page 264பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பின்னையதற்கு எடூத்துக்காட்டு கயானாவில்‌ குடியேறிய
இந்திய நாட்டு மக்கள்‌.

வரலாறு வழிகாட்டுகிறது

இன்றைய உலக சமூகங்கள்‌ உறவாடி வாழும்‌ நிலையில்‌
“உலகப்பண்பாடூ” என்ற தோற்றப்பாடு வெளிப்படுகிறது.
உலகப்பண்பாடூ என்பது உலகம்‌ தழுவிய பண்பாடூகளின்‌
இசைவாக்க நிலையாக மட்டூமே இருக்க முடியும்‌.

இக்கூட்டணியில்‌ உள்ள பண்பாட்டுச்‌ சமூகங்கள்‌ ஒவ்‌
வொன்றும்‌ தமது தனித்துவத்தைப்‌ பேணிவளர்க்க
வேண்டும்‌, பராமரிக்க வேண்டும்‌.

இத்தேவை கருதி ஒவ்வொரு சமூகமும்‌ பண்பாட்டு
மையங்களை அமைத்துக்கொள்வது முக்கியமானது

ஆகும்‌.

இந்நிலையில்‌ இக்கருத்தின்‌ தேவையை உணர்ந்து
கொள்ளும்‌ பொருட்டூ 2005 யூன்‌ மாதம்‌ “தமிழ்மொழி
வாரம்‌” என ஒரு வாரத்தை அறிவித்துத்‌ தமிழ்மக்கள்‌
மத்தியில்‌ இவற்றுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்‌
நோக்கோடூ பல்வேறு அமைப்புக்களையும்‌ கனடாவாழ்‌
அறிஞர்களையும்‌ ஒன்றிணைத்து ஒரு செயற்றிட்டத்தை
முன்னெடுத்தேன்‌. அப்போது என்னால்‌ வெளியிடப்பட்ட
கட்டுரையை இங்கு நிறைவாகத்‌ தருகிறேன்‌.

... உலகில்‌ வாழும்‌ பல்வேறு இனங்களும்‌ தத்தம்‌
தாயகமண்ணை விட்டுப்‌ புலம்பெயர்ந்து வெவ்வேறு
நாடுகளில்‌ வாழ்கின்றன என்பது வரலாறாகும்‌.

248


Page 265பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இவ்வாறு புலம்பெயர்ந்த இனங்களிற்‌ சில தாம்‌
குடியேறிய நாடுகளை ஆக்கிரமித்து, அடிமைப்படுத்தித்‌
தமது அரசுகளை நிறுவி ஆட்சிசெய்தன.

ஆட்சி அதிகாரத்தின்‌ மூலம்‌ தத்தம்‌ மொழி, கலை,
பண்பாட்டை அந்நாட்டு மக்களிடையே புகுத்தி,
அவற்றை உயர்ந்ததாக்கித்‌ தமது இனத்திற்குப்‌
பெருமை சேர்த்தனர்‌. தம்மினமே உயர்ந்த இனம்‌
என்னும்‌ தோற்றத்தையும்‌ உருவாக்கிக்‌ கொண்டனர்‌.

இந்த வகையில்‌ குறிப்பிடத்தக்கோர்‌ ஐரோப்பியர்‌
ஆவர்‌. இவர்களில்‌ ஆங்கிலேயர்‌, பிரஞ்சுக்காரர்‌,
இசுப்பானியர்‌ (றா), போர்த்துக்கேயர்‌,
ஒல்லாந்தர்‌ ஆகியோரைச்‌ சிறப்பாகக்‌ கூறலாம்‌.
மிகச்சிறிய தொகையிற்‌ சென்ற இவ்வினத்தினர்‌
மிகப்பெரும்பான்மையாக வாழந்த அவ்வவ்‌ நாட்டு
மக்களைத்‌ தத்தம்‌ மொழிவழி ஆட்சிசெய்தனர்‌.

தாம்‌ அடிமை கொண்ட நாடுகளின்‌
செல்வங்களைச்‌ சுரண்டித்‌ தம்மையும்‌ தமது நாட்டையும்‌
வளமாக்கிக்கொண்டனர்‌. தமது வாழ்க்கை முறை,

ஆட்சிமுறை, நீதிமுறை ஆகியவற்றை அந்நாடுகளிற்‌
புகுத்திப்‌ பெரும்‌ பண்பாட்டுப்‌ படையெடுப்பையே
நிகழ்த்திவிட்டனர்‌. இதன்‌ விளைவாக இவர்களது
ஆட்சியிலிருந்து விடுபட்ட பின்னரும்‌ அடிமைப்பட்ட
நாடுகளால்‌ இன்றுவரை நிமிர்ந்து நிற்க
முடியவில்லை.

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும்‌ வேறு சில
இனங்கள்‌ தத்தம்‌ மொழி, கலை, பண்பாட்டைப்‌
பாதுகாத்து தமது அடையாளங்களை இழக்காது தமது

249


Page 266பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தனித்துவத்தைப்‌ பேணிக்காக்கும்‌ அதேவேளையில்‌,
சமூகப்‌ பொருளாதாரத்‌ துறைகளிலும்‌ மேம்பட்டும்‌
வாழ்கின்றன. இவை தமது பண்பாட்டுச்‌ சிறப்பின்‌
மூலமும்‌, தத்தம்‌ தாய்நாட்டுச்‌ சிறப்பியல்புகள்‌
மூலமும்‌ பிற இனங்களால்‌ மதிக்கத்தக்க இனங்களாக
வாழ்ந்து வருகின்றன. இவ்வாறான இனங்களிற்‌
குறிப்பாகச்‌ சீனர்‌, ஜப்பானியர்‌, யூதர்‌, இத்தாலியர்‌,
கிரேக்கர்‌ ஆகியோரைக்‌ கூறலாம்‌. இவற்றுள்‌ சீனா,
ஐப்பான்‌, தாய்லாந்து ஆகிய நாடுகள்‌ ஐரோப்பிய
ஆக்கிரமிப்புக்குச்‌ சிறிதளவேனும்‌ இடம்‌ அளிக்காது
வாழ்ந்த பெருமைக்குரியன.

யூத இனம்‌ தமக்கென ஒருநாட்டை ஜம்பது
ஆண்டுகளுக்கு முன்னர்‌ கொண்டிருக்கவில்லை,
எனினும்‌ அவ்வினம்‌ கடந்த 2500 ஆண்டுகளாகத்‌ தமது
தனித்துவத்தைப்‌ பேணியதன்‌ மூலம்‌ பெருமைக்குரிய
இனமாகத்‌ திகழ்ந்து வருகிறது.

மேற்கூறிய இரு தொகுதி இனங்களும்‌ உலகில்‌
பிற இனங்களால்‌ மதிக்கத்தக்க இனங்களாகத்‌ தத்தம்‌
அடையாளங்களை இழக்காது கட்டொருமைப்பாட்டோடு
வாழ்ந்து வருகின்றன. மேலும்‌, உலகின்‌ கலை,
பண்பாடு, அறிவியல்‌, தொழில்நுட்பம்‌ அன்ன பிற
துறைகளின்‌ மேம்பாட்டிற்கு உதவிப்‌ பிற இனங்களால்‌
போற்றுதற்குரியனவாகவும்‌ விளங்குகின்றன.

அடுத்துப்‌ புலம்பெயர்ந்த இனக்குழுக்களில்‌
ஒன்றான ஆபிரிக்க மக்களை எடுத்து நோக்கில்‌
பல்வேறு ஆபிரிக்க நாடுகளும்‌ ஐரோப்பியர்களால்‌
அடிமை கொள்ளப்பட்ட காலத்தே, ஆபிரிக்க மக்கள்‌

250


Page 267பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாக அல்லது
கூலிகளாகப்‌ புலம்பெயர்த்தப்பட்டனர்‌.

சில ஆபிரிக்க இனங்கள்‌ சொந்த நாட்டிலேயே தமது
மொழியை இழந்தன. சில இனங்களின்‌ மொழி வளர்ச்சி
குன்றியது. தமது அடையாளத்தைத்‌ தொலைக்கும்‌
அளவுக்குத்‌ தம்மை ஆண்ட இனங்களின்‌ மொழி,
பண்பாட்டை உள்வாங்கிக்‌ கொண்டன.

அடுத்ததாகத்‌ தமிழினத்தை எடுத்து நோக்கினால்‌
கிறித்துவுக்கு முற்பட்ட காலம்‌ தொடக்கம்‌ அயல்‌
நாடுகளோடு வணிகத்தொடர்பு கொண்ட இனமாக
இருந்திருக்கிறது. தமிழர்‌ வணிக நோக்கோடு
கிழக்காசியா மற்றும்‌ மேற்காசிய நாடுகளுக்குச்‌
சென்று வந்தனர்‌. எந்த நாட்டிலும்‌ குடியேறி வாழ -:
முயலவில்லை.

9-ஆம்‌, 10-ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ சோழப்பேரரசின்‌
எழுச்சியோடு பல கிழக்காசிய நாடுகளிற்‌ தமிழர்‌
செல்வாக்குப்‌ பெற்றனர்‌. பல நாடுகள்‌ சோழப்‌
பேரரசின்‌ ஆளுமையின்‌ கீழ்‌ வந்தன. இருப்பினும்‌
ஐரோப்பிய இனங்களைப்‌ போன்று இந்நாடுகளை
ஆக்கிரமித்து ஆட்சி செய்யவில்லை என்பதுவும்‌ தமது
மொழி, கலை, பண்பாடுகளை வலிந்து புகுத்தவில்லை
என்பதுவும்‌ நோக்கத்தக்கவை. இந்நாடுகளில்‌ இன்றும்‌
தமிழர்‌ மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களைக்‌

காணக்‌ கூடியதாக உள்ளது.

தமிழர்‌ நாகரிகமானது உலகிற்‌ தோன்றிய தொல்‌
நாகரிகங்களுள்‌ ஒன்றாகும்‌. “உலகில்‌ இதுவரை 23

251


Page 268பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

நாகரிகங்கள்‌ அரும்பி, மலர்ந்து, மணம்பரப்பியுள்ளன.
அவற்றுள்‌ 21 நாகரிகங்கள்‌ காலத்தின்‌ கொடுமையால்‌
வாடிவதங்கி உலர்ந்து உதிர்ந்து விட்டன. இரண்டு
நாகரிகங்கள்‌ மட்டுமே . நிலைத்து நிற்கின்றன.
இவற்றுள்‌ ஒன்று சீன நாகரிகம்‌ மற்றையது தமிழர்‌
நாகரிகம்‌ ஆகும்‌.” இது வரலாற்றுப்‌ பேராசிரியர்‌
யே. ஏ. தாயின்பி அவர்களது (07 4.4 70௪௦)
துணிபாகும்‌.

வாணிபத்தை முன்னிறுத்தி நாடுகளை
வன்கவர்வு செய்யும்‌ நோக்கங்கொண்ட ஜரோப்பிய
இனங்களைச்‌ சிறிதளவும்‌ அனுமதிக்காத சீன,
யப்பானிய இனங்களைப்‌ போலன்றி, தமிழினம்‌
இவர்களை உள்வாங்கிக்‌ கொண்டது.

13-ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌
அராபியரிடமும்‌ 16-ஆம்‌ நூற்றாண்டில்‌ ஐரோப்பியரிடமும்‌
ஆட்சி உரிமையை இழந்ததமிழினம்‌ தன்சொந்த
நாட்டில்‌ வாழும்‌ வழி அற்றுப்‌ பொருளாதாரத்தில்‌
வீழ்ச்சியுற்றுக்‌ கூலிகளாகப்‌ புலம்பெயர்ந்து ஆங்கில,
பிரஞ்சுக்‌ குடியேற்ற நாடுகளிற்‌ குடிபுகுந்தனர்‌.

இவர்கள்‌ குடியேறிய இடங்களிற்‌ குறிப்பாகச்‌
சிங்கப்பூர்‌, மலேசியா, பர்மா, பிஜி, மொர்சியசு,
சீசெல்சு, ரியூனியன்‌, தென்னாபிரிக்கா, கரிபியன்‌
தீவுகள்‌ என்பவற்றை எடுத்து நோக்குவோம்‌.

சிங்கப்பூர்‌, மலேசியா, பர்மா போன்ற நாடுகளில்‌
குடியேறிய தமிழர்‌ அந்நாடுகள்‌ விடுதலைபெற
முன்பிருந்தே தமிழ்‌ மொழியைத்‌ தம்வழித்தோன்றல்கள்‌

252


Page 269 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

மறவாதிருக்க வழிதேடினர்‌. குடியேறிய நாடுகளில்‌
தமிழ்‌ கற்பிக்க முயன்றனர்‌. மலேசியாவில்‌ 1816-ஆம்‌
ஆண்டில்‌ முதலாவது தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது.
ஆர்வமின்மையால்‌ சில ஆண்டுகளில்‌ இது மூடப்பட்டது.
மீண்டும்‌ 1834-இல்‌ தொடங்கி ஐந்து ஆண்டுகளில்‌
மூடப்பட்டது. 1875 முதல்‌ தமிழ்ப்பள்ளி தொடர்ந்து
நடைபெற்றது. இதேபோன்ற நிலையே சிங்கப்பூரிலும்‌
நிலவியது. பர்மாவில்‌ தமிழினம்‌ தனித்துவமாக
மொழியை இழக்காமல்‌ மொழிக்கல்வியோடு
இருந்தது.

பிஜி நாட்டிற்கு 1880-ஆம்‌ ஆண்டளவில்‌
சென்ற தமிழர்‌, தமிழ்‌ மொழியை வள்ர்த்துத்‌ தமது
அடையாளத்தைக்‌ காத்துக்கொள்ளப்‌ பாடுபட்டனர்‌.
1940-ஆம்‌ ஆண்டளவில்‌ அங்கு ஓர்‌ இலட்சம்‌ தமிழர்‌
வாழ்ந்தனர்‌. இந்தியா சுதந்திரம்‌ அடைந்ததும்‌ “நாம்‌
இந்தியர்‌ ” என்ற உணர்வு மேலோங்கப்பெற்றதாலும்‌ வீட்டு
மொழியாக இந்தி மொழியைப்‌ பயன்படுத்தியதாலும்‌
கலப்பு மணத்தினாலும்‌ தமிழர்‌ அடையாளம்‌ இழந்து
விட்டனர்‌. 1985-ஆம்‌ ஆண்டின்‌ பின்பு தமிழ்மொழி
கற்க அரசு வசதி செய்து கொடுத்ததனால்‌ இன்று
மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. மொரீசியசிலும்‌ ஓரளவு
இதே நிலையே காணப்படுகின்றது.

ரியூனியன்‌ தீவில்‌ இன்று இரண்டு இலட்சம்‌ தமிழர்‌
வசிக்கின்றனர்‌. இவர்கள்‌ இருநூறு ஆண்டுகளுக்கு
முன்னர்‌ சென்று குடியேறியோர்‌. இவர்களில்‌ 95
விழுக்காட்டிற்கு மேற்பட்டோர்‌ தமிழ்‌ மொழியை
மறந்து விட்டனர்‌. இன்று பல்கலைக்கழகங்களில்‌
தமிழ்மொழியைக்‌ கற்க முற்படுகின்றனர்‌. தமிழைத்‌

253


Page 270பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

தாம்‌ கற்கவேண்டும்‌ என்ற எண்ணம்‌ இன்று பரவி
வருகின்றது.

கயானா, ஜமெய்க்கா, சூரிநாம்‌, கிரெனடா
போன்ற கரிபியன்‌ தீவுகளிற்‌ குடியேறிய தமிழர்‌
தமது மொழியை முற்றாக இழந்து விட்டனர்‌. கலை,
பண்பாட்டிலும்‌ பெரும்பகுதியை இழந்து விட்டனர்‌.
தாம்‌ எம்‌ மரபினர்‌ என்ற தெளிவின்றி இந்திய மரபினர்‌
என்ற உணர்வோடு மட்டும்‌ உள்ளனர்‌.

18-ஆம்‌, 19-ஆம்‌ நூற்றாண்டுகளில்‌
புலம்பெயர்ந்த தமிழினம்‌ தான்‌ குடியேறிய நாடுகளிற்
தனது மொழியைப்‌ பாதுகாத்து அதன்‌ மூலம்‌ தன்‌
அடையாளத்தைப்‌ பேணிக்கொள்ள முயன்ற. சிங்கப்பூர்‌,
மலேசியா, பர்மா போன்ற நாடுகளில்‌ குடியேறியோர்‌
தமது தனித்துவத்தை இழக்கவில்லை. இதன்‌
விளைவாகப்‌ பெருமை கொண்ட மக்கள்‌ குழாமாக

விளங்குகின்றனர்‌.

இதேவேளை பிஜி, மொரீசியசு,
தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிற்‌ குடியேறியோரிற்‌
பெரும்‌ பகுதியினர்‌ மொழியை இழந்ததினால்‌
இனத்திற்குரிய சிறப்பியல்புகளை இழந்து
தாழ்வுற்றுத்‌ தனது தனித்துவத்தையும்‌ அதன்‌ மூலம்‌
பெற்றுக்கொள்ளக்கூடிய  மதிப்பினையும்‌ இழந்து
விட்டனர்‌. இத்தாக்கத்தை உணர்ந்ததனால்‌ மீண்டும்‌
மறுமலர்ச்சி பெறத்துடிக்கின்றனர்‌.

கயானா போன்ற கரிபியன்‌ தீவுகளிற்‌
குடியேறியோர்‌ மொழியை இழந்தமையால்‌ தமது

254


Page 271பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

அடையாளத்தை இழந்து விட்டனர்‌. இவர்களிற்
பலர்‌ பல்வேறு திறமை படைத்தவராயும்‌, பொருள்‌
படைத்தவராயும்‌ இருந்த பொழுதிலும்‌ மனக்குறை

கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்‌.

18-ஆம்‌, 19-ஆம்‌ நூற்றாண்டுகளிற்‌ புலம்பெயர்ந்த
தமிழர்‌ வரலாறும்‌, புலம்பெயர்ந்த பிற இனங்களின்‌
வரலாறும்‌ எமக்குத்‌ தரும்‌ பாடம்‌ யாதெனில்‌ எந்த ஓர்‌
இனம்‌ தனது மொழி, கலை, பண்பாடுகளைப்‌ பேணித்‌
தன்‌ அடையாளத்தை இழக்காது வாழ்கின்றதோ,
அந்த இனமே பிற இனங்களால்‌ மதிக்கப்படும்‌
என்பதாகும்‌.

அதேவேளை தமது மொழியை இழந்த
இனக்குழுக்கள்‌ பொருளாதாரத்தில்‌ எவ்வளவு
மேம்பட்டு இருந்தாலும்‌ அது தனிமனித வளர்ச்சியாகவே
பார்க்கப்படும்‌ என்பதையும்‌, ஓர்‌ இனத்திற்குரிய
பெருமையை அவர்களாற்‌ பெறமுடியாது என்பதையும்‌
கண்ட மொரீசியசு, பிஜி, ரியூனியன்‌, தென்னாபிரிக்கா
போன்ற நாடுகளில்‌ குடியேறிய தமிழர்‌ இப்பொழுது
மொழியைக்‌ கற்பிப்பதன்‌ மூலம்‌ மறுமலர்ச்சியைப்‌
பெற்றுக்கொள்ள முயலுகின்றனர்‌.

18-ஆம்‌ 19-ஆம்‌ நூற்றாண்டுகளிற்‌ புலம்பெயர்ந்த
தமிழருக்குத்‌ தமது தாய்‌ நாட்டோடு தொடர்பு
இருக்கவில்லை. புலம்‌ பெயர்ந்தோரில்‌ பெரும்‌
பகுதியினர்‌ கல்வியறிவு அற்றவர்‌. அவ்வேளையில்‌
தாய்‌ நாடும்‌ அயலவர்‌ ஆதிக்கத்தின்‌ கீழ்‌ இருந்தது.
புலம்பெயர்ந்து வாழும்‌ நாடுகளிலும்‌ அந்நாட்டு அரசுகள்‌
தாய்மொழியைக்‌ கற்பிக்கவில்லை. பெரும்பாலும்‌

255


Page 272பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

கல்வியே புகட்டப்படவில்லை. சமய உணர்வு ஒன்றே

இவர்களை இணைத்து வைத்திருந்தது.

தாம்‌ பொருளாதாரத்திலும்‌ புற வாழ்விலும்‌
மேம்பட்டிருந்த போதும்‌ தமிழ்மொழியையும்‌
மரபுவழிப்‌ பண்பாட்டையும்‌ இழந்து அடையாளத்தைத்‌
தொலைத்தன்‌ மூலம்‌ ஏற்பட்ட துன்பவரலாற்றின்‌
ஊடேயும்‌ இன்று மீண்டும்‌ பல நாடுகளிலும்‌
மறுமலர்ச்சி பெற்றுத்‌ தத்தம்‌ அடையாளங்களோடு
வாழ்வதே சிறப்பு என்ற எண்ணம்‌ மேலோங்கி வருவது
பாராட்டுதற்குரியது. தம்‌ தனித்துவத்தைப்‌ பேணுவதே
தமக்குப்‌ பெருமை என்பதையும்‌ அதற்கு ஒரே வழி
தாய்மொழி கற்றிருப்பதே என்பதையும்‌ அம்மக்களுக்கு
வரலாறு புகட்டியுள்ளது.

இன்று தமிழீழ விடுதலைப்போரினால்‌ புலம்‌
பெயர்ந்த எம்மக்களுக்கு அவர்களைப்போன்ற துன்பச்‌
சூழ்நிலை இல்லை. பண்பாட்டு மையங்களை தமக்கென
கல்லூரிகளை அமைத்து தமிழை மேம்படுத்தவும்‌
அவற்றினூடாகத்‌ தமது அடையாளங்களை இழக்காது
செயற்படவும்‌ எவ்விதத்‌ தடையும்‌ இல்லை. நாம்‌ குடி
யேறிய நாடுகள்‌ தாய்மொழி கற்பதை ஊக்குவிக்கின்றன.
மேலும்‌ புலம்பெயர்ந்து வாழும்‌ நாடுகளில்‌ உள்ள
தமிழ்‌ அமைப்புகள்‌ தாய்‌ மொழியைக்‌ கற்பிக்கப்‌
பெரிதும்‌ முயன்று வருக்கின்றன. புலம்பெயர்ந்து
வாழும்‌ மண்ணின்‌ வாசனைக்கேற்பப்‌ பாடத்திட்டங்கள்‌
அமைத்துச்‌ செயற்படுகின்றன. நமது தாய்‌ நாட்டுடனும்‌
நெருங்கிய தொடர்பு உண்டு, அங்கிருந்து தேவையான
உதவிகளும்‌ கிடைக்கின்றன.

256


Page 273பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

இவ்வாறு இன்றைய புறச்சூழல்‌
வாய்ப்பாக இருக்கும்‌ அதேவேளை, தாய்மொழி
கற்பதன்‌ இன்றியமையாமையை உணர்ந்து,

தமிழ்மொழி அறிவினைப்‌ பெறுவது, வலிமைமிக்க
வழித்தோன்றல்களை, குடும்பத்தை, சமூகத்தை,
உருவாக்குவதோடு பெருமைமிக்க இனம்‌ என்னும்‌
நிலையையும்‌ பெற்றுத்தரும்‌.

நமது அடுத்த தலைமுறையைச்‌ சரியாக
உருவாக்கக்‌ கிடைத்த வாய்ப்பை, நாம்‌ தவறாது
பயன்படுத்த வேண்டும்‌ என்ற எண்ணத்தை உலகில்‌
புலம்பெயர்ந்து வாழ்ந்த இனங்களின்‌ வரலாற்றின்‌
மூலம்‌ தமிழர்‌ கற்றுக்கொண்டார்களா? என்பது வினாக்‌
குறியேயாகும்‌.

இன்றைக்கு ஐயாயிரம்‌ ஆண்டுகளுக்கு
முன்பிருந்தே வளமான மொழி, கலை, பண்பாடு,
கணிதம்‌, வானியல்‌, கட்டடம்‌, மருத்துவம்‌ அன்ன
பிற துறைகளில்‌ மேலோங்கியிருந்த தமிழினம்‌ இன்று
நலிந்து காணப்படுகின்றது. இன்று அதன்‌ உயரிய
விழுமியங்களை எமது தலைமுறை பெற்றுக்கொள்வதன்‌
மூலம்‌ அவர்களைத்‌ தம்குடும்பத்தோடும்‌, சமூகத்தோடும்‌
இயைந்து வாழக்கூடியவர்களாக உருவாக்க முடியும்‌.
எமது பிள்ளைகளை வீட்டிலும்‌ நாட்டிலும்‌ சிறந்து
விளங்கக்‌ கூடியவர்களாக வளர்தெடுப்போம்‌.

257


Page 274பண்பா - வேரும்‌, விழுதும்‌
நிறைவாக

நிறைவாக இந்நூலில்‌ பண்பாடு என்றால்‌ என்ன?
அது எந்த அடிப்படையில்‌ உலகில்‌ வேறுபடுகிறது?
பண்பாட்டின்‌ எத்தகைய கூறுகள்‌ உலகப்‌ பொதுவானவை,
பண்பாட்டின்‌ தோற்றத்திற்கான மூலம்‌ எது? மனதிற்கும்‌,
சிந்தனைக்கும்‌, செயலிற்கும்‌ உள்ள தொடர்பு
போன்ற பண்பாட்டியலின்‌ பொதுவான நிலையையே
பார்த்தோம்‌.

புலம்பெயர்ந்த நாடுகளில்‌ வாழும்‌ நம்மவர்கள்‌ பலர்‌
பல்வேறு வகைப்பட்ட உளவியல்‌ சிக்கல்களினாலும்‌
மன அழுத்தத்தினாலும்‌ ஆட்பட்டு அவதிப்படுவதைக்‌
காண்கிறோம்‌.

மன அழுத்தத்திற்கு அவர்களது மனம்‌ வலிமை
அற்றதாக இருப்பதும்‌, சிக்கல்களுக்கு மூலகாரணமாக
அமைவதும்‌ பண்பாடு என அறிவோம்‌. எனவே ஒருவர்‌
மனவலிமை அதாவது மனத்திண்மை கொண்டவராகத்‌
தன்னை வளர்த்துக்‌ கொள்ள எத்ததைய முயற்சிகளை
(யோகம்‌) மேற்கொள்ளலாம்‌ என்பது நிலைப்படூத்தப்‌
படுகின்றது.

அடூத்து மனதின்‌ செயற்பாடுகளை ஓரளவாகுதல்‌
விளங்கிக்கொள்வது மனதின்‌ போக்கால்‌ பாதிப்புறாது
இருக்கப்‌ பழகிக்‌ கொள்ள உதவும்‌.

மனித வாழ்வியலின்‌ தன்மையை விளங்கிக்கொண்டூ தனது
வாழ்வை அமைத்துக்‌ கொள்ளக்‌ கூடிய ஆற்றலையும்‌,
நம்பிக்கையையும்‌ பெற்றுக்‌ கொள்ளவும்‌ அவற்றுக்கான
வழிவகைகளை அமைத்துக்‌ கொள்வதற்கும்‌ உரிய

258


Page 275 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

சிந்தனையை வாசகர்‌ மத்தியில்‌ பிறப்பித்திருக்கும்‌ என
நம்புகிறேன்‌.

ஆனால்‌ இவ்வாறான ஒரு நூலை எழுத முற்பட்டதன்‌
முக்கிய நோக்கம்‌ புலம்பெயர்‌ தமிழர்‌ வாழ்வியலைப்‌
பற்றிய என்‌ எண்ணத்தை, நோக்கைப்‌ புலம்‌ பெயர்வாழ்‌
தமிழர்களுடன்‌ பகிர்ந்து கொள்ளுதலேயாம்‌.

வாழ்க வளமுடன்‌.

 

 


Page 276துணை நூல்கள்‌

சு.ப.அறவாணன்‌ - தமிழ்ச்‌ சமுதாய வரலாறு -
சபாநாயகம்‌ அச்சகம்‌, சிதம்பரம்‌

பக்தவத்சலபாரதி - தமிழர்‌ மானிடவியல்‌ -
மெய்யப்பன்‌ தமிழாய்வகம்‌, சிதம்பரம்‌

பக்தவத்சலபாரதி - பண்பாட்டு மானிடவியல்‌ -
மாணிக்கவாசகர்‌ பதிப்பகம்‌, சென்னை

இரா கனக சுப்புரத்தினம்‌ - நினைவாற்றல்‌
வளர - கவனகர்‌ முழக்கம்‌, சென்னை

இரா கனக சுப்புரத்தினம்‌ - வானமே எல்லை -
அறிவுநிதி பதிப்பகம்‌, சென்னை

டாக்டர்‌ சு. தட்சணாமூர்த்தி - தமிழர்‌
நாகரிகமும்‌ பண்பாடூம்‌ - யாழ்‌ வெளியீடு,
சென்னை

டாக்டர்‌ ஆர்‌. ௭. சுப்பிரமணியம்‌-
அருட்பால்‌ அமுதம்‌ - ஸ்ரீ செந்தில்‌ பதிப்பகம்‌
குடியாத்தம்‌

தமிழ்த்தென்றல்‌ திரு. வி. க - பரம்பொருள்‌
அலலது வாழ்க்கை வழி - பூம்புகார்‌ பதிப்பகம்‌
சென்னை


Page 27710.

11.

12.

துறைவன்‌ - உலகப்பண்பாடு -
வானதி பதிப்பகம்‌, சென்னை

திருவாரூர்‌ - பஞ்சநத தியாக சுந்தரம்‌ -
ஆத்மீகமும்‌ அறிவியலும்‌ - கங்கை புத்தக
நிலையம்‌ சென்னை

ராகுல சாந்கிருத்தியாயன்‌ - ஐரோப்பிய
தத்துவஇயல்‌

ஞா. மாணிக்கவாசகன்‌ - திருமூலர்‌ திருமந்திரம்‌
மூலமும்‌ விளக்க உரையும்‌ - உமா பதிப்பகம்‌,
சென்னை


Page 278நன்றி மலர்கள்‌

என்‌ கையெழுத்துப்‌ பிரதியை மனம்‌
கோணாது வாசித்துத்‌ தட்டச்சுச்‌ செய்து

தந்த என்‌ மகள்‌ திருமதி கிரிஜா ஜெயரூபன்‌,
திருமதி உமா நகுலசிகாமணி, திருமதி துசிதா
கனகசபை ஆகியோருக்கும்‌

தட்டச்சுச்‌ செய்யப்பட்டதை அழகுற
வடிவமைத்துத்‌ தந்த தம்பி சந்துரு
துரைராசாவிற்கும்‌

தட்டச்சுச்‌ செய்யப்பட்ட நூலில்‌ உள்ள
பிழைகளை செவ்வனே திருத்தித்‌

தந்ததுடன்‌ நூலின்‌ சிறப்பினைக்‌ கூறி என்னை
மேலும்‌ உற்சாகப்படுத்திய அறிஞர்களுக்கும்‌

இந்நூலுக்கான அணிந்துரையை வழங்கி
எனக்கும்‌, நூலுக்கும்‌ பெருமை சேர்த்த அதிபர்‌
திரு பொன்‌ கனகசபாபதி அவர்களுக்கும்‌

என்‌ ஐயுறவை நீக்கி, எடூதுகோள்களைத்‌

தந்து நின்ற துணைநூல்களுக்கும்‌,
அதன்‌ ஆசிரியர்களுக்கும்‌

நூலை அழகுற அச்சிட்டூுத்‌ தந்த விவேகா
அச்சகத்தாருக்கும்‌


Page 279 

இந்நூலுக்கான அட்டைப்‌ படத்தை
வடிவமைத்த எம்‌ ஓவியர்‌, நண்பர்‌

திரு கருணா அவர்களுக்கும்‌

இப்படைப்பு வெளிவர பல்வேறு வகையிலும்‌
உதவிய இலைமறைகாய்‌ போல்‌
மறைந்திருக்கும்‌ என்‌ குடூம்பத்தாருக்கும்‌
மற்றும்‌ என்‌ நண்பர்களுக்கும்‌

என்‌ மனமார்ந்த நன்றியறிதலைத்‌
தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

அன்புடன்‌,

திரு சு. இராசரத்தினம்‌


Page 280பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

(குறிப்புகள்‌


Page 281 

பண்பாடு - வேரும்‌, விழுதும்‌

குறிப்புகள்‌


Page 282பண்பாடு - வேரும்‌, விழுதூம்‌


Page 283

Page 284 

 

 

 

    

விற்கக்‌
ழு

 

 

 

 

| [564 978-0-9783337-0-6

 

 

£6097813323106