கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2010.06.15

Page 1
i
 

இருமுறை
3 腾 3

Page 2
အဲ့&- வினைத்திறன் மிக்க சேவை நிர்வாகம் மற்றும் பிரஜைகளின் ஆலோசனை பெறல் என்பவற்றினூடாக பொருளாதார
SIGITTITS மேம்படுத்துவதற்காக பிரதேச GóOL, 13 560Li. LDUCEEGO என்பவற்றுடன் இணைந்து செயற்படும் ஒரு உயரிய egoi Dieu 'ഭാരണം ഭൂമിഥ്വിബ് உள்ளூராட்சி சபைகளின் வெளிப்படையான தன்மையை மேம்படுத்தி, சிறந்த பொருளாதார வளர்ச்சியை பொதுமக்கள் அடைவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே ஆசிய நிலையத்தின் முக்கிய நோக்கமாகும்.
SK
 

கல பிரஜைகளும் அதாவது ஆண்களும்,
|L 고IEEFa고E. alamEEaran-E
அளவில் அடையக்கூடியதான ஒரு உலகிற்காக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து IV8 பாடுபடுகிறது.
Do58L LigLDTGUITEGELIG வழிநடத்தப்படும் IE நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பாகும் இவ்வமைப்பு ஆசியா ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள வறிய ஒடுக்கப்பட்ட
ਗ
அபிவிருத்திக்காகவும் குறிப்பாக
பெண்களை வலுப்படுத்தவும் இது
பாடுபடுகிறது.

Page 3
&նիյ1:0յ1յն, I நி3 4)
FLOTT: TITIT TILTE, LEI ] ::
. . . 3. %; /**پاي b
鰲
 
 

s gin G Föçჭawnეზ8)
த கோவில்
மாதம் இருமுறை
காத்திருப்பு 05 - இருக்கை 08
।
ா, டொரிங்டன் அவளியூ பொழும்பு 7 K u Taa SS LLLL LLzLLLL SS K SS K ee kkeSuSKK Gjita Liri i ITT: TIT Eia inukiram gliliil.com
நிர்வாக ஆசிரியர்
।
allւքe:Enlլույ|| |
:EDL
சாந்தி சச்சிதானந்தம்
அருளானந்தம் சஞ்ஜீத் சஞ்ஜீத்
சோ.வி.புன் Elf, Fleg LjE551JET சிதிவாகரன் எஸ். சதிஸ்
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் :Li L= TGLTITLL.

Page 4
ஜூன் 20
உலக அகதிகள் தினம்
புத்தம் பேரினவாதம் என்று சொல்லப்படும் சமாச்சாரங்கள் எல்லாம் முடிவடைந்து இன்றைக்கு ஓராண்டு நிறைவுபெற்ற பின்னரும்கூட வன்னி மக்கள் தத்தமது சொந்த இருப்பிடத்திற்குச் சென்று மீளக்குடி யமர்வதில் பல்வேறு தடைகளையும், சிக்கள்களையும் எதிர்நோக்கி வருகின்றார்கள். இது தொடர்பான உண்மைத் தகவல்களைச் சேகரிப்பதற்காக அண்மையில் கிளிநொச்சி செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சன்ைகள்ைக் கேட்டறிந்தோம். கடந்த வருடம் மார்கழி முதலாந் திகதியில் இருந்து மீள்குடியேற்றத் திட்டம் அமுலாகிக் கொண்டு வருகின்றது. மீள் குடியேற்றத்துக்கென வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நலன்புரி முகாம் களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் மொத்தமாக 23,128 குடும்பங்கள்ை குடியமர்த்துவதற் காக ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்துக்குக் கொண்டு வரப்பட்ட இம்மக்கள் காற்றுக்கூட உட்புக முடியாத மூன்று மிகக் குறுகிய கட்டிடங்களுக்குள் அடைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய சுகாதாரத் தைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அங்கு கிட்டத் தட்ட குேடும்பங்கள் ஒரே கிணற்றினைப் பயன்படுத்து வதுடன் மிக மோசமான நிலையில் காற்றுக்கு ஆடி விழும் நகரங்களைக் கொண்ட நான்தே நான்கு சுழி வறையில் புழங்குவதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக விருந்தது. பகவில் இளையான்களும் இரவில் மலேரியா நுளம்புகளும் இவர்களைப் பதம் பார்க்கின்றன. துர்நாற்றங்களுக்கும் தொற்றுநோய்களுக்கும் மத்தியில் குழந்தைகளும் முதியவர்களும் மிகமோசமாக வாழ்ந்து ELP AFTRETTIGT.
亚蟹
 

தாஷாயணி லோகநாதன்
சிவில் இராணுவத்தினரிடம் அது பற்றிக் கேட்டால் "அவர்களுக்கென்ன? மணியடித்தால் மூன்று வேளையும் சாப்பாடு வரும் ஏகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள்' என்று போய் வரும் எல்லா ஊடகவியலாளர்களுக்கும் வாய் நிறையச் சிரித்துக்கொண்டே கூறுகிறார்கள். அவர் கள் பேச்சில் எவ்வளவு உண்மையிருக்கின்றது என்று அந்த இடத்தில் ஒரு அரைமணிநேரம் செலவிட்டிருந்தால் புரிந்திருக்கும்.
இங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுவருவதுடன் உலக உணவுத்திட்ட மையம் மூன்று வேளை உணவு வழங்குகின்றது. ஆனால் இந்த நிவாரணப் பொருட்களில் சில அடிக்கடி காணாமல் போவதாகவும் அவை சிவில் இராணுவத்தினருக்கு வேண்டிய உணவுக்கடைகளிலும், கிராம சேவகர்களுக்கு வேண்டிய உறவினர்கள் வீட்டிலும் மலிவு விலையில் கிடைக்கின்றனவாம். மீள் குடியேற்ற மக்களுக்கென்று கொடுக்கப்பட்ட முதற்கட்டஐயாயிரம் ரூபாய் கையிருப்பு தீர்ந்த நிலையில் தமது அன்றாட மருத்துவத் தேவைக்குக்கூட பணமில்லாமல் மோட்டுமுகட்டைப் பார்த்துக்கொண்டு மக்கள் இருக்கின்ற நிலை மிகவும் வேதனைமிகுந்ததாக இருக்கின்றது.
மக்களின் மருத்துவத்தேவை மிக அத்தியாவசியமாக இருந்த போதிலும் முகாமுக்கு மிகத் தொலைவிலேயே மருத்துவ முகாம்கள் நடாத்தப்படுகின்றன. போக்கு வரத்து வசதிகள் எதுவுமே செய்து கொடுக்கப்படாத நிலையில் நோயாளிகளும், புத்தத்தால் அங்கவீனர் களான மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக் கின்றனர். பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக் கைகளில்கூட எந்தவித முன்னேற்றமும் இல்லை. அருகில்

Page 5
. .
1950களில் தமிழ்நாட்டில் எழுந்த திராவிடர் இயக்கத்தினை இந்திய அரசு சாதுரியமாகப் புறந் தள்ளி விட்டது என்றுதான் கூறவேண்டும். இந்திய மாநிலங்களில் மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி நடவடிக்கைகளை நடுநிலைமையுடன் எடுக்கும் ஆனைக்குழு ஒன்றினை இந்திய அரசு நியமித்தது இதற்கு ஒரு காரணமாகும். ஆனால் அதனைவிட தமிழ்நாட்டின் முதலீடுகளுக்கான சந்தையை அகில இந்திய ரீதியாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை இணைந்த இந்தியா விலேயே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது தான் அதிலும் விட முக்கிய காரணமாக இருந்தது. 1960களுக்குப் பிறகு, அதுவும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு திராவிடர் இயக்கம் அடங்கிவிட்டது. டெல்லியின் ஆதிக்க மனோ பாவம்தமிழ் மக்களுக்கு மறந்து போய்விட்டது.
இந்த நிலைமை ஈழப்போராட்டம் சூடு பிடிக் கும் வரைக்கும்தான். அப்போது, எழுந்தது தமிழ் அலையொன்று. 2008இலும் 2009இலும் தமிழ்நாடு கொந்தளித்தது. ஆனால் டெல்லியோ தமிழ்த் தேசியப் போராட்டத்தை நசுக்கும், விடுதலைப்
02இs
 

புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்கும் தனது இலக்குகளிலிருந் தும் வியூகங்களிலிருந்தும் இம்மியளவும் அசைவ து தாக இல்லை. ஆனாலும் எந்தித் தேசிய வாதத்தை அழிக்க இந்திய அரசு கிளம்பியதோ, அதனையே இந்த அநீதியான சாணக்கியம் உசுப்பிவிட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வீட்டுக்கு வீடு பிரபாகரனின் படங்கள் அவற்றின் முன்னறைகளை அணி செய்ய ஆரம்பித்தன. குடும்பங்களில் நிகழும் சாமத்தியச் சடங்குகளோ அல்லது பிறந்தநாள் விழாக்களோ எதுவானாலும் அவற்றுக்கான அழைப்பிதழ்களின் மேலே பிள்ளையார் சுழி போடுவதுபோல 'பிரபாகரன் துனை என்கின்ற வாக்கியங்கள் தென்படஆரம்பித்தன. நாம் தமிழர் என்கின்ற இயக்கமும் துளிர்விட்டது. இதற்கு தெலுங்கானா இயக்கமும் நக்ஸலைட்டுக்களின் வளர்ச்சியும் உத்வேகம் கொடுத்தன.
இந்தியாவின் இந்தப் போக்குகளின் விளை வைத்தான் சமீபத்தில் கொழும்பில் நிகழ்ந்த ஐஃபா

Page 6
திரைப்பட விழா இப்பொழுது உணர்த்தி நிற்கிறது. தமிழகத்தில் மறைமுகமாக இருந்த உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டக்கூடிய சந்தர்ப்பமாக ஐஃபா திரைப்பட விழா அமைந்திருக்கின்றது. அரசியல் தளங்களால் தாம் நிராகரிக்கப்பட்டாலும் அதனுடன் இணையான செல்வாக்குப் பொருந்திய திரைப்படத்துறையில் இன்னும் தொடர்ந்து பலவித போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதை தமிழக மக்கள் செய்து காட்டியிருக்கின்றனர். எந்தச் சந்தை திராவிடர் போராட்டத்தை அடக்குவதற்குப் பயன்பட்டதோ, அதே சந்தையை உபயோகித்து இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான் போன்றவர்கள் வருவார்கள் என்று பெரிதாக விளம் பரம் செய்யப்பட்டாலும் அவர்களைப் போன்ற பெரிய நட்சத்திரங்கள் ஒருவரும் வரவில்லை. வந்த நட்சத்திரங்களான ஹற்ருத்திக் ரோஷன், கத்ரீனா கைஃப், விவேக் ஓபராய் போன்றவர்களின் படங்கள் தமிழகத்தில் திரையிடப்படக்கூடாதென்று நாம் தமிழர் இயக்கம் வலியுறுத்தி வருகின்றது. அப்படியே ஹற்ருத்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் திரைப்படமும், கத்ரீனா நடித்த ராஜி சீட்டி திரைப் படமும் நாம் தமிழர் இயக்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் திரையரங்குகளிலிருந்து துக்கப் பட்டுவிட்டன. தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று நினைப்பா என்று கொதித்தெழுந்திருக் கின்றனர்.தமிழக மக்கள்.
அமிதாப்பச்சன் எதை நினைத்துப் பயந்து தனது கொழும்பு விஜயத்தை ரத்துச் செய்தார் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளலாம். இலங்கை அரசாங் கத்தின் மெத்தனத்தை அவதானித்து இனி இந்திய அரசு தமிழர் பிரச்சினைக்கான தீர்வினை முன்
 

வைக்க நடவடிக்கை எடுக்கப் போகிறது என்கின்ற செய்தியும் இதனுடன் கூட வந்தது தற்செயலாக நடந்ததல்ல.
இனி பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

Page 7
புத்தம் பேரினவாதம் என்று சொல்லப்படும் சமாச்சாரங்கள் எல்லாம் முடிவடைந்து இன்றைக்கு ஓராண்டு நிறைவுபெற்ற பின்னரும்கூட வன்னி மக்கள் தத்தமது சொந்த இருப்பிடத்திற்குச் சென்று மீளக்குடி யமர்வதில் பல்வேறு தடைகளையும், சிக்கல்களையும் எதிர்நோக்கி வருகின்றார்கள். இது தொடர்பான உண்மைத் தகவல்களைச் சேகரிப்பதற்காக அண்மையில் கிளிநொச்சி செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளைக் கேட்டறிந்தோம். கடந்த வருடம் மார்கழி முதலாந் திகதியில் இருந்து மீள்குடியேற்றத் திட்டம் அமுலாகிக் கொண்டு வருகின்றது. மீள் குடியேற்றத்துக்கென
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நலன்புரி முகாம்
களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் மொத்தமாக 23,122 குடும்பங்கள்ை குடியமர்த்துவதற்காக ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்துக்குக் கொண்டு வரப்பட்ட இம்மக்கள் காற்றுக்கூட உட்புக முடியாத மூன்று மிகக் குறுகிய கட்டிடங்களுக்குள் அடைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய சுகாதாரத் தைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அங்கு கிட்டத் தட்ட 30 குடும்பங்கள் ஒரே கிணற்றினைப் பயன்படுத்து வதுடன் மிக் மோசமான நிலையில் காற்றுக்கு ஆடி விழும் தகரங்களைக் கொண்ட நான்கே நான்கு கழி வறையில் புழங்குவதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக் விருந்தது. பகலில் இளையான்களும் இரவில் மலேரியா நுளம்புகளும் இவர்களைப் பதம் பார்க்கின்றன. துர்நாற்றங்களுக்கும் தொற்றுநோய்களுக்கும் மத்தியில் குழந்தைகளும் முதியவர்களும் மிகமோசமாக வாழ்ந்து பெங்கின்றனர்.
முழுஇ
 

ན་དེ་ தவிஷாயணிலோகநாதன்
சிவில் இராணுவத்தினரிடம் அது பற்றிக் கேட்டாள் அவர்களுக்கென்ன? மணியடித்தால் மூன்று வேளையும் ாப்பாடு வரும் ஏகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று போய் வரும் எல்லா ஊடகவியலாளர்களுக்கும் பாய் நிறையச் சிரித்துக்கொண்டே கூறுகிறார்கள். அவர் 5ள் பேச்சில் எவ்வளவு உண்மையிருக்கின்றது என்று அந்த இடத்தில் ஒரு அரைமணிநேரம் செலவிட்டிருந்தால்
ரிந்திருக்கும்.
இங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பழங்கப்பட்டுவருவதுடன் உலக உணவுத்திட்ட மையம் முன்று வேளை உணவு வழங்குகின்றது. ஆனால் இந்த வாரணப் பொருட்களில் ਸੇ அடிக்கடி காணாமல் போவதாகவும் அவை சிவில் இராணுவத்தினருக்கு வேண்டிய உணவுக்கடைகளிலும், கிராமசேவகர்களுக்கு வேண்டிய உறவினர்கள் வீட்டிலும் மலிவு விலையில் டைக்கின்றனவாம். மீள் குடியேற்ற மக்களுக்கென்று கொடுக்கப்பட்ட முதற்கட்ட ஐயாயிரம் ரூபாய் கையிருப்பு நீர்ந்த நிலையில் தமது அன்றாட மருத்துவத் திவைக்குக்கூட பணமில்லாமல் மோட்டுமுகட்டைப் ார்த்துக்கொண்டு மக்கள் இருக்கின்ற நிலை மிகவும் வேதனைமிகுந்ததாக இருக்கின்றது.
மக்களின் மருத்துவத்தேவை மிக அத்தியாவசியமாக இருந்த போதிலும் முகாமுக்கு மிகத் தொலைவிலேயே ருத்துவ முகாம்கள் நடாத்தப்படுகின்றன. போக்கு ரத்து வசதிகள் எதுவுமே செய்து கொடுக்கப்படாத லையில் நோயாளிகளும், யுத்தத்தால் அங்கவினர் ளான மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக் ன்றனர். பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக் விக்களில்கூட எந்தவித முன்னேற்றமும் இல்லை. அருகில்

Page 8
நான்கு ஆசிரியர்களுடன் போதிய கட்டிடமோ, கூை வசதியோ இல்லாத பாடசாலையொன்று பெயருக்கு இயங்கி வருகின்றது.
மீள்குடியேற்ற மக்களுக்கு முதற்கட்டமாக ஐயாய் ாம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக தற்காலிக பிருப்புக் கொட்டிலும், மூன்றாம் கட்டமாக இருபத்தை பாயிரம் ரூபாயுடன் எட்டு பைக்கேற் சீமெந்தும், இரண்டு மூன்று மாதம் அலைந்த பின் பன்னிரெண்டு கூரைத்தகடு களும் கிடைக்கின்றதாம் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தம் 23,12 குடும்பங்களே குடியமர்த்தப்பட்ட போதும் 10,000 குடும்பங்களுக்கே அரசாங்கம் நிவாரண செயற்திட்டம் போட்டு வைத்துக் காத்து நிற்கிறது. இந்தப் பத்தாயிரம் குடும்பங்களுக்காவது நிறைவான நிவாரணம் வழங்கியதாகத் தெரியவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் வீட்டுத்திட்டப் பணம் ேேபி00 ரூபாய் 10M கட்டிக் கொடுக்கும் தகர மசேவ கூடங்கள், SLRC-யின் வீட்டுத் திட்டம் போன்றன மக்களை சென்றடைவதே இல்லை. இவ்வாறான பல ஆவனங்களை அரசாங்க சேவைகள் தினைக்களத்தில் அவதானிக்க முடிந்ததே தவிர மக்கள் பெற்றுக் கொண்ட தற்கான அத்தாட்சிகள் எதுவுமே இல்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் நான்கு பிரதேச சபைகளான கராச்சி கண்டாவளை பூநகரி பச்சிலைப்பள்ளி போன்றவற்றில் பூநகரி பிரதேச சபை யில் முழுமையாகவும் நாற்பத்திரெண்டு நகரங்களைக் கொண்ட கரச்சியில் முப்பத்திநான்கு நகரங்களும் பதினெட்டு நகரங்களைக் கொண்ட பச்சிலைப்பள்ளியில் எட்டு நகரங்களும் பதினாறு நகரங்களைக் கொண்ட கண்டாவளையில் பத்து நகரங்களுமே தற்போதைக்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான கார் ணம் என்னவென்று சிவில் நிர்வாகத்தினரிடம் கேட்டால் நில வெடிபொருட்கள், கண்ணி வெடிகள் மற்றும் தாழ் வெடிகள் போன்றவை மக்களின் குடியிருப்புக்களில் இன் னமும் அகற்றப்படவில்லையென்று தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி சாந்தபுரம் வாசியானதவராஜா என்பவ ருடன் பேசினோம் என்ற மூத்த ஆம்பிளைப் பிள்ளை மனள புத்தத்தில பறிகொடுத்துப் போட்டு மிச்சமூண்டு பிள்ளையரும் நானும் மனிசியும்தான் இங்க வந்தனாங் கள் வெறும் மூண்டு நாளில கிராம சேவகரிட்ட அத் தாட்சிப் படுத்திப் போட்டு போட்டோ பிடிச்சிட்டு அவையவையிண்ட காணியளுக்கு அனுப்பிடுவம் எண்டரங்கள் இப்ப ஒரு மாசமாகப் போகுது. இன்னும் ஒண்டுமே இல்லை. இங்க இருந்துகொண்டு வேற எங்கயுமே போக வர ஏலாது. எங்கட காணிகளுக்கு தெரிஞ்சவையை விட்டு பார்ப்பிச்சால் அங்க உள்ள மரம், காய், கனிகளை எல்லாம் ஆமிக்காரன்அள்ளிக் கொண்டு கொழும்புக்கு போறதாச் சொல்லுறாங்கள். துர்ந்த கிணத்துக்குள்ள இருந்து மண் எடுக்கிறாங்களாம். இடிந்து கிடக்கிற அத்திவாரத்து சீமெந்துக்கல்லுகளையும் பேர்த்து எடுத்து விக்கிறாங்களாம்" என்று அவர் மிகுந்த மனவேதனையுடன் கூறினார்
55வயதான பகவான்தினேஷ் ரூபன் என்பவர் எங்க இருக்கு ஒரு நிவாரன்ச் சாமானுமே கிடைக்கயில்ல்ை, இந்ததற்காலிக குடிசையைத் தவிர, நிவாரணம் கேட்டு நானும் மூண்டு வாரமா அலையுறன் மண்ணெண்ணெய் இல்லை, அரிசி இல்லை, கோதுமை மாவும் இல்லை. ராவுக்கு மண்ணெண்ணெய் இல்லாமல் லாம்பு கொழுத் தேலாமல் மூண்டு குமர்ப் பிள்ளைகளோடை ஒரு

மறுத்தால் விழுந்தவனை.
வணக்கம் என் உறவுகளே!
விளக்கங்களும் நியாயங்களும் வீணாகிப்போய் விடிவுகளைத்தேடும் விட்டில் பூச்சிகளாக எங்களின் வாழ்வுப் பயணம் வரிசையாய் நீண்டுகொண்டே செல்கிறது. உரிமை, ஜனநாயகம், சுதந்திரம் என்ற உயரிய வசனங்களை LTLLLLLT TTTT COMTTTTT L LL LLMTL0 TTMTLL TTS LLLLT கதைகள் இனிப் பழங்கதைகளாகவேயிருக்கட்டும், இன்று வன்னிப் பெருநிலப் பரப்பில் ஒழய செங்குருதி காய்ந்து கருகி சருகுகளுக்குள் சரித்திரமாய்த்தன்னைப் புதைத்துக் கொண்டி ருக்கின்றது. ஆங்காங்கே புதிய ஜனனமாய் பிறப்பெடுக்கின் நனகூடாரங்களும், கொட்டில்களும்,
மகா சரித்திரப் போரில் மாண்டவர்கள் போக மீண்டவர்கள் வந்திருக்கிறார்கள் மீள்குடியேற்றங்களுக்காக அந்நியமாகிப் போன இந்தச்சனங்களின் நிதர்சனமான உண்மைகள் நிவாரனங்களுக்காகவும், நிலையான வாழ்வுக்காகவும் நிர்வானமாய் ஆங்காங்கே அலைகின் றன. வீடிழந்து சொத்திழந்து உறவுகளையிழந்து அகதி முகாம்களுக்குள் மானமிழந்து மீண்டும் தம் மனைதேடி வந்திருக்கும் இவர்கள் வேண்டுவது நிறைவான வாழ்வும், நிம்மதியான சூழலுமே,
மீண்டும் முட்கம்பிப்புதர்கள் சூழ இரும்புத்தொப்பிகளுக் கும் சப்பாத்துக் கால்களுக்கும் மத்தியில் இவர்களின் மறு வாழ்வுப்பயணம் தொடக்கிவைக்கப்பட்டிருக்கின்றது. இருந் தும், மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்க, மாடேறி மிதித்தவன் மேல் மரத்தை வெட்டிச் சாய்த்த கதையாக இம்மக்களுடைய சொத்துக்களும், சொந்தங்களும் சூறையாடப்படும் வேட்டையும் ஆரம்பித்திருக்கிறது. வன் மங்களுக்கும் வஞ்சனைகளுக்கும் வகைதெரியாது வாழ்ந்தவர்கள் மீண்டுவந்த வன்னி மண்ணில் வல்லூறு களுக்கு இரையாகிறார்கள். மீண்டும் ஆரம்பித்திருக்கும் வல்லுறவுகளும், கொலை, கொள்ளைகளும் மீண்டுமொரு முழுவின் ஆரம்பத்தைத் தோற்றுவிக்குமோ என அஞ்சத் தோன்றுகின்றது.
பயமே வாழ்வாகி வதைபட்டுக் கொண்டிருக்கும் இவர் களின் இருப்பு இரும்புக்கரங்களுக்கு இரையாகி கடைசியில் எலும்புக்கூடுகளாய்நடமாடும் சந்ததியாக மாறிவிடுமோ என்ற வினாவையெழுப்பி நிற்கின்றது. ஆங்காங்கே தோண்டத் தோண்ட வெளிவரும் எனும்புக் கூடுகள்கூட எக்காளச் சிரிப்பை உதிர்த்தவாறு மல்லாந்து கிடக்கின்றன.
மரமேறியவனை நோவதா? அல்லது மாட்டை நோவதா? அல்லது மரத்தை வெட்டிச் சாய்த்தவனை நோவதா? பெருநிலப்பரப்பின் புதைகுழிகளுக்குள்ளிருந்து வெளிவரக் காத்திருக்கும் எனும்புக்கூடுகள்தான் பதிலுரைக்க வேண்டும்.
உங்களைப்போல் நாளையும் விடியுமென்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும்
Cހހުލް 981}{2
15 - 06 - 2010

Page 9
மீத்தைப் பார்த்தேன் கி நற்க்கணக்கான அரன்னகள் புத் இங்குமிங்கும் சர்வர்த்தர்ன்ர்:
ருகில் பாம்புப் புற்றுகள் வேறு:
:புவில்லை. ஆங்கும் அவை இல்ல்ை ஏன்?
விரிக்கப்படுகின்றது உண்மையில் இந்த இந்த/ ளுக்குன்னதடந்தது என்று ஆரய்ந்தபொழுதுபெரும் பாலானவை கிழித்து வீசப்பட்டுள்ளதாயும் சில் ஆஷ் கு
 

33. Εί

Page 10
-ġornĝşợşỉ gì sợvolo și sosyn @
iiii "awgryō sw-wowngoạyosowae? so gael @ sww swąogy«, også?« @go sowojoso
Ģs@ĝwąơoloog
 
 
 
 


Page 11
கந்தசாமி பாஸ்ரர் விண்ணப்பப்படிவத்தை பவ்வி யமாக அவனிடம் நீட்டினார். வலு மரியாதை பாகத்தான் நீட்டினார். யாழ்ப்பாணத்துக்கு வெளியே செல்வதற்கு இயக்கத்திடம் அனுமதிப் பாஸ் பெற வேண்டும். பாஸ் கொடுக்கிற பொடியளும் அந்தப் பணிமனையில் வேலை செய்பவர்களுக்கும் ஏதோ உலகம் தங்களால்தான் இயங்குகிறது என்ற எண்ணம். எத்தனை பேரின் விண்ணப்பத்தை பாஸ் பண்ணி அங்கால் அனுப்புவதிலும் எத்தனை பேரின் விண்ணப் பத்தை நிராகரித்து மறிக்கலாம் என்பதில் நாட்டம், தாங்கள் அங்கால் இங்கால் நகர முடியாமல் இங்கேயே முடங்கிக் கிடக்க யாழ்ப்பாணத்துச் சனம் உலகம் சுற்றுவதா?
கந்தசாமி நீட்டிய விண்ணப்பத்தைக் கண்ணன் அலட்சியமாக வாங்கிக்கொண்டான்.
"எங்கை போரீர்?"
"அதுக்குத்தானே கொடுத்திருக்கிறன் போற வாற இடம் அதில இருக்குது'
"அது எனக்குத் தெரியும் நீர் கேட்டதுக்குப் பதில் சொல்லும். வாய்க்குள்ள என்ன கொழுக்கட்டையே? எங்க போகப் போரீர்" என்று காட்டமாக மீண்டும் கேட்டான். இவனோடு கொளுவிக்கொள்ளக்கூடாது. காரியமாக வேண்டும்.
"கொழும்புக்கு மகளையும் பிள்ளையளையும் கூட்டிப் போறன். அக்கா பிரான்சிலிருந்து விசாவோட வாறா. மருமகளைக் கூட்டிப் போகப்போறா. அங்க அவன் எவ்வளவுநாள்தான் தனிய இருக்கிறது:
"ஒ மருமகன் பிரான்சிவயோ? அவர் அங்க எப்ப போனவர் என்று கண்னன் கேட்டான்.
அவர் போய் கனகாலம் தம்பி பாஸ் முறைக்கு முன்னம் போய்விட்டார். அவர் யாழ்ப்பாணத்தில்
 

கலியாணம் கட்டினார். மூன்று பிள்ளையரும் மனி சியும் இங்க இருக்கினம். அதுதான் கூட்டிப்போக அக்கா வாறா
"எல்லாற்றையும் ஐசிகளை எடுங்கோ.
அவர் எடுத்துக் கொடுத்தார். அவன் வாங்கித் துருவித்துருவிப் பார்த்தான்.
"உங்கடகுடும்ப அட்டையை எடுங்கோ அவர் எடுத்துக் கொடுத்தார்.
"உங்கட துனைப்படை பயிற்சி முடித்த அட்டை எங்க பயிற்சிக்குப் போன்னீங்களே?
"எல்லாரும் போகத்தானே வேணும். வயது இதில முக்கியமல்ல, போன்னான். இன்னமும் நாலு நாள் முடிய இருக்குது. அதுக்குள்ள அக்கா பிரான்சிலிருந்து வந்திட்டா பயிற்சி அட்டை முடியத்தானேதருவினம். கொழும்புக்கு போட்டு வந்து எடுக்கிறன்
அது ஏலாது பயிற்சியை முடிச்சிட்டு வாரும்.
அதுக்குள்ள அக்காவின்ன ສ. முடிஞ்சிடும். போக வேணும். ஒருக்கா பாக்க வேணும்
அதுக்கு நானென்ன செய்ய? பாக்க வேணு மெண்டால் அக்கானவ இங்க வரச்சொல்லுமன் இங்கால வரமாட்டினமே? வெளிநாட்டுக்காரர் கொழும்போடதிரும்பிவிடுகினம்
அவருக்கு ஆத்திரமாக வந்தது.
'வரத்தான் விடுகிறியவில்லையே? வந்தால் அங்க இங்கயெண்டு அலைக்கழிக்கிறியள். பூந்தோட்டம் முகாமிற்கு போகச் சொல்லுறியள். வலது குறைந்தோரைப் பராமரிக்கவென டொலரில் காசு

Page 12
நன்கொடை முறிகண்டியில் கேட்டுறிக்கற் வேறை விக்கிறியள். காசு தராட்டில் பங்களில கேட்டுப் போடு றியள். இங்க வந்தவைக்கு நடந்தவற்றைக் கேள்விப் பட்டால்ஆரும் வருவினமே"
நான் கனக்கக் கதைக்கவில்லை. உண்மை யைத்தான் சொல்லுறன். பாஸ் எடுக்க விண்ணப்பிச்ச பிள்ளையவில வயது வந்ததுகள் இருக்குது என்பியள். நீங்கள் தரமாட்டியள் என்பது தெரியும், என்ரை மருமகன் பிரான்சில் பெரிய புள்ளி. இயக்கத்துக்கு இவ்வளவு வருடங்களாக சம்பளத்திலிருந்து ஒரு பங்கை மாதச் சந்தாவாகக் கட்டிவாறார். றிசீற்றுக்கள் இருக்கு
இப்படிக் கனபேர் சொல்லுகினம். முதலில் பயிற்சியை முடியும். பார்ப்பம். உமக்கு மட்டும் வயதைப் பொறுத்து வேணுமெண்டால் பாஸ் தாறன். மகளுக்கும் பிள்ளையருக்கும்தரேல்லாது
விண்ணப்ப பத்திரங்களை நிராகரிக்கப்பட்டன எனச் சிவப்பு மையால் கோடிட்டு திருப்பிக் கொடுத் தான்.
திருப்பித் தந்திட்டீர். பாரும். நான் எப்படி உம்மிடமே இவர்களுக்கு பாஸ் எடுக்கிறனென கந்தசாமி மாஸ்ரர்பொருமினார்.
கோபத்தோடு கந்தசாமி மாஸ்ரர் வீட்டுக்குத் திரும்பிவந்தார். அவருடைய மனைவி தீயில் நெய் இட்டாள்.
கொளுவிப்போட்டு வந்திருக்கிறியள். இனி எடுத்த மாதிரித்தான். முதலில றெயினிங்கை முடியுங்கோ. இன்னமும் மூன்று நாள்தானே?
என்னால இயலாதப்பா, அந்த வெயிலுக்க கொட் டானைத்தூக்கிக்கொண்டு ஒட முடியாது. நெஞ்சுக்கை சாதுவா வலிக்கிறமாதிரிக்கிடக்குது.
சொல்லுங்கோவன்
"சொன்னால் டொக்டரிட்ட அனுப்புவான்கள். பரிசோதி என்பான்கள். அதுகள் கற்றுக் குட்டிகள். வருத்தம் இல்லை என்பினம். சரி சரி. நாளைக்குப் போறன் முதலில் பிரான்சுக்கு ஒரு போன் கோல் மருமகனுக்கு எடுக்கப்போறன். அதற்காகக் காசு கட்டின எல்லா ரிசிற்றின்ர கொப்பியையும் அனுப்பி மேலிடத்துக்கு விண்ணப்பிக்கச் சொல். ஒழுங்கா மாதா மாதம் காசு கட்டினவைக்கு பாஸ் இல்லை எண்டால். இது என்ன நியாயம்? ஆருக்கும் பாஸ் கொடுக்கவில்லையே? கெங்காதரனின்ர பொடிச்சி எப்படிப் போனவை?' என்றார்கந்தசாமி.
கெங்காதரனின்ரை மூத்த பையன் வீரமரணம் அடைந்தவன் இரண்டாமவன் இயக்கத்தில் போரா ளியாக இருக்கான் மோளுக்குக் கொடுத்தினம், ஏன் யோகம்மாவின் மோளுக்கு அவளின்ர வீட்டை எழுதி வாங்கிக்கொண்டுதான் போகக் கொடுத்தவையாம். வயது வந்த பிள்ளைபள் மூன்று பேருக்கு ஒண்டாத் தர மாட்டினம். எக்கனம் போறது கடினம்தான். நீங்கள் வேறு கொளுவிப் போட்டு வந்திருக்கிறியள்.
நீ இருந்து பார். பிரான்சுக்குப் போறதுக்கு பாஸ் கிடைக்கும்

காலையே பயிற்சிக்குப் போனார். இந்த வயதிலே வெயிலுக்குள் நிற்பது கஷ்டமாக இருந்தது கொட் டானைத் தூக்கிக்கொண்டு மைதானம் முழுவதும்
;++'=Tئي:" +سته ஓடுவது சிரமமாக இருந்தது. பயிற்சிக்குப் பொறுப் பானவன் கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை. இயலாமையைச்சொன்ன்ார்.
நீர் போய் சேர்டிக்கேற் வாங்கி வாரும் செய்ய இயலாதென்று. நாளொன்றும் செய்யவியலாது. இன்னமும் இரண்டு நாள் தானே? பல்லைக்கடித்துக் கொண்டு செய்து முடியும் என்றான்.
டொக்டரைச் சந்தித்தார். தன் இயலாமையைச் சொன்னார். பரிசோதித்துப் பார்த்தார்.
உப்பிடிக் கனபேர் வருகினம், ஆருக்கும் சேர்டி பிக்கெற் கொடுக்க முடியாது. உங்களுக்கு ஒண்டு மில்லை. நெஞ்சு நோ இருப்பதாகத் தெரியவில்லை. பு ஆர்பிற்.
ஏமாற்றத்தோடு திரும்பி வந்தார். பயிற்சியை முடிக்காவிட்டால் பங்கரில் கிடக்கவேண்டும்.
கடைசி நாள் பயிற்சி கடினமாக இருந்தது. அவ ரால் ஒட முடியவில்லை. நடக்கவும் முடியவில்லை. நெஞ்சு இறுக்கிக்கொண்டது. அப்படியே இருந்து விட்டார். இருக்கவும் முடியவில்லை. நிலத்தில் சரிந்துவிட்டார். சரியும்போது எண்ணிக் கொண்டார்.
பாஸ் கிடைத்தால் எல்லாரும் போயிடலாம்.
மோட்டார் சயிக்கிலில் வந்த கண்ணனும் இன் னொருவனும் கந்தசாமி மாஸ்ரர் வீட்டின் வாசவில் வந்திறங்கினர் வீட்டில் அழுகுரல் ஒலித்தது.
"என்னதம்பிமார் விடயம்? "கந்தசாமியருக்கும் மற்ற நான்கு பேருக்கும் வெளியில் போக பாஸ் கொடுக்கச் சொல்லி விட்டினம்.அனுமதி கிடைச்சிட்டுது
கந்தசாமி மாஸ்ரருக்கு முதலிலேயே அங்காள் போகப் பாஸ் கிடைத்த விபரம் கண்ணனுக்கு உடன் தெரிய நியாயமில்லை.

Page 13

காற்றாய் O කොළඹිඛෆි”
அவனுக்கு வேண்டிய பாதையில் கார் போகவில்லை. அது, வேறு எங்கோ போய்க் கொண்டிருந்தது. "ஏய் டிரைவர் நீ எங்கே போகிறாய்? நான் சன்பிளவர் ரெஸ்ட்டுரண்டுக்கு அல்லவா போகச் சொன்னேன். காரைத் திருப்பு' என்றான் கடுகடுப்புடன் ஆனாலும், அவன் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதவனைப் போல், டிரைவர் அவன் செல்லும் பாதையிலேயே காரை செலுத்திக் கொண்டிருந்தான். இதனால், மனோகரனுக்கு ஆத்திரம் அள்ளிக்கொண்டு வந்தது. "டேய் முட்டாள். நான் சொன்னது உன் காதில் விழவில்லையா. காரை நான் சொன்ன இடத்திற்கு திருப்பி ஒட்டு' என்று கத்தினான். இதனால், சீதா பரபரப்படைந்தாள். "அவசரப்படாதீர்கள் மனோ இப்போது நாம் எனது ரூமுக்குப் போவோம். அங்கு யாரும் இல்லை” சொல்லியபடியே, அன்புடன் அவன்கரத்தைப் பற்றிக்கொண்டாள். இதனால், மனோகரன் கொஞ்சம் சாந்தமடைந்தான். கார் இப்போது, மல்லிகாவின் பங்களாவை நோக்கி போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில், அந்த பங்களாவின் முன்னால் கார் நின்றது. அந்த இடம் எது என்பதை பார்ப்பதற்கு அவனுக்கு அவகாசம் கொடுக்காமல், மனோகரனையும் இழுத்துக்கொண்டு, உள்ளே ஓடினாள் சீதா. அவர்கள் உள்ளே வந்ததும், "கீச்ச். என்ற ஒசையுடன் கதவு சாத்திக்கொண்டது. கொஞ்சம் பரபரப்புடன் திரும்பிப்பார்த்தான் மனோகரன். வழக்கத்தை விட, அன்று உள்ளே வெளிச்சம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இதனால், அந்த பங்களாவின் முன் பகுதியை மனோகரனால் பார்க்கக்கூடியதாக இருந்தது. அந்த சுற்றுப்புறம், ஒருவிதமான பயங்கரத்தை ஏற்படுத்துவதைப் போல் அவனுக்குத் தோன்றியது. அந்த அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம், இதற்கு முன்னர் பார்த்ததாக ஞாபகம். அதாவது இதற்கு முன்பு அந்த பங்களாவிற்கு அவன் வந்திருக்கிறான் என்பது அவனுக்குப் புரிந்தது. அதே நேரம், பயங்கரமான சிரிப்பொலி ஒன்று கேட்டது. இதனால், அவன் மேனியில்

Page 14
ஒரு நடுக்கம் ஏற்பட்டது. கொஞ்சம் கதிகலங்கி போன அவன், மெல்லத் திரும்பி, சீதாவைப் பார்த்தான்.
அப்போது,
"சீதா, நீ உன் ரூமுக்குப் போ' என்று ஒரு குரல் கட்டளையிட்டது. குரல் வந்த திசையில் திரும்பினான் மனோகரன். அங்கே, ஒரு பெரிய படம். அந்தப் படத்தைப் பார்த்ததும், அவன் இதயம் வேகமாக இயங்கியது. அது நின்றுவிடுமோ என்றுகூட அவன் அஞ்சினான். அந்தப் படத்தில் இருந்த பெண், அவனுக்கு நன்கு அறிமுகமானவள்தான். தான் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக் கொண்டதைப் போல் அவன் உள்ளுணர்வு சொல்லியது. அதே நேரம், அந்தப் படத்தில் இருந்த பெண் அவனைப் பார்த்துச் சிரித்தாள். "என்னடா உனக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா?’ படம்தான் பேசியது. மனோகரன், அதிர்ந்துபோய் நின்றான். என்ன நடக்கப் போகிறது என்பது இப்போதுதான், மனோகரனுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. இந்த இடத்தை அவன் பார்ப்பதற்கோ, திரும்பவும் ஒருமுறை வருவதற்கோ அவன் விரும்பவில்லை. வரக்கூடாத இடத்திற்கு வந்துவிட்டதைப் போன்ற ஒர் உணர்வு இப்போது அவனுக்கு ஏற்பட்டது. ஆனாலும், அவன் செய்த செயலுக்கு தண்டனை அனுபவிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதை அவன் உணர்ந்து கொண்டான். "மிஸ் மல்லிகா தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்கு அனுதாபம் காட்டுங்கள்' அவன் மன்றாடி நின்றான். " திராக். ஏறக். தற. மன்னிப்பா? உனக்கா..? உன்மீது கருணை காட்டவேண்டுமா? இதே போல்தானே நான் அன்று உன் காலில் விழுந்து எனக்குக் கருனை காட்டுங்கள், என்று கெஞ்சி மன்றாடினேன். ஆனால் நடந்தது என்ன? நீயும் உன் நண்பர்களும் என்மீது காட்டிய கருனை எப்படிப்பட்டது என்று தெரியும்தானே? அன்று வீரனா: இருந்த நீ இன்று கருணை காட்டும்படி கெஞ்சுகிறாயே, உனக்கு வெட்கமாக இல்லை? உன்னைப் போன்ற மிருகங்களுக்கு எனது சாம்ராஜ்ஜியத்தில் மன்னிப்பே இல்லை. நான் இறந்தாலும் ஆவியாக வந்தாவது உங்கள் எல்லோரையும் பழி வாங்குவேன் என்று அன்று நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? ஹக்.ஹக்.ஹக்." அந்த பயங்கர சிரிப்பு, மனோகரனின் மேனியை புல்லரிக்கச் செய்கிறது. "பிளிஸ் மல்லிகா என்னை மன்னித்து விடுங்கள் சிறு குழந்தையைப் போல் அழுதான் மனோகரன். அதைக் கேட்டதும், படத்திற்குள் தெரிந்த மல்லிகாவின் உருவம் மீண்டும் பயங்கரமாகச் சிரித்தது. அதேநேரம், ஆச்சரியமான் சம்பவம் ஒன்றும் நடைபெற்றது. வெள்ளை புகை மண்டலம் ஒன்று அவையாக வந்து, தோவின் மேனியில் சங்கமமாகியது.

அடுத்து, மந்திர சக்தியான் கட்டுண்டவனைப்போல் செயல்பட்ட சீதா, விழிகளை உருட்டி, மனோதரனைப் பார்த்தாள்.
ஆ என்ன பயங்கரம்? பெரிய அந்த விழிகளின் பார்வை, மனோகரன்ன் கதிகலங்க வைத்தது. இப்போது மல்லிகாவின் படம் மீண்டும் பேசியது. "தோ நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக்கொள் இப்போது உன் எதிரில் நிற்கிறானே, இவன்தான் என்னைக் கொலை செய்த கொனலக்ாரன். இவனுக்கு கொஞ்சமும் அனுதாபம் காட்டாதே. எனக்கு நிதான் ஜீவன் கொடுக்க வேண்டும். இவனுடைய இரத்தத்தினால்தான் அதை நீ செய்ய முடியும்' படம் இப்படிச் சொன்னதும் நடுநடுங்கிப் போனான், படாரென்று திரும்பி கீதாவைப் பார்த்தான். இப்போது,
அவள் கையில் கூர்மையான் கத்தி. பளபளக்கும் அந்தக் கத்தியை முன்னால் நீட்டியபடியே, மெல்டி மெல்ல மனோகரனை நோக்கி ஆார்ந்தாள் தோ, "ஐயோ. வேண்டாம் ரேணுகா. என்னை ஒன்றும் செய்யாதீர்கள், நடந்த தவறுக்கு நான் மட்டும் காரணம் அல்ல. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். எனக்கு அனுதாபம் காட்டுங்கள் நடுங்கியபடியே, கெஞ்சினான் மனோகரன். அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு பயங்கரமாகச் சிரித்தாள் சீதா
சிரித்துவிட்டு, "அப்படியா. அப்படியானால் உன் விர பிரதாபங்களைச் சொல்லு பார்க்கலாம்' என்று சொல்லியபடியே, கத்தியை உயர்த்திக்கொண்டு நின்றாள். "அன்று ஒரு மழை நாள். நானும் எனது நண்பர்கள் மூன்றுபேரும் கிளப்பில் இருந்து பியர் குடித்துக்கொண்டிருந்தோம். எனது நண்பர்கள் ராஜா, குமார், மோகன். மூன்றுபேரும் நல்ல போதையில் இருந்தார்கள் திடீரென்று முடியிருந்த கிளப் கதவை யாரோ தட்டினார்கள். நான்தான் போய் கதவைத் திறந்தேன்.
வாசலில் மிஸ் மல்லிகா நன்றாக மழையில் நனைந்துபோய் நின்றுகொண்டிருந்தார்கள் என்ன மிஸ் மல்லிகா இந்த நேரத்தில்?’ என்று வியப்போடு :"3__
"மிஸ்டர் மனோகரன் எனது கார் இடைவழியில் நின்றுவிட்டது. என்ன காரணமென்று தெரியவில்லை. மழை வேறு பெய்துகொண்டிருக்கிறது. நான் பங்களாவிற்கு போவதற்கு உதவி செய்ய முடியாதா' என்று என்னிடம் கேட்டார்கள். "மிஸ் மல்லிகாவிற்கு உதவி செய்ய விரும்பிய நான் எனது காரிலேயே அவர்களை ஏற்றிச் செல்வதற்கு முடிவு செய்தேன். அதை எனது நண்பர்களிடமும் சொன்னேன். ஆனால் நான் தனியாக போவதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. அதனால் அவர்கள் மூவரும்
என்னுடன் வருவதற்கு பிடி வாதம்பிடித்தார்கள்.
இel

Page 15
வேறு வழியின்றி நான் அளர்களையும் என்னுடன் சுட்டித் தென்றேன். நாங்கள் ஐந்துபேரும் பங்களாவிற்குப் போய் சேர்வதற்கு நள்ளிரவாகிவிட்டது. நாங்கள் அங்கே சென்றதும் உள்ளே வரும்படி சிஸ் மல்லிகா அழைத்தார்கள் நீங்கள்ள்ளே போனதும் நல்ல போதையில் இருந்த எனது நண்பன் ராஜா கொஞ்சமும் எதிர்பாராத விதத்திள் மிஸ் மல்லிகாவைக்கட்டிப்பிடித்து முத்தமிட்டான் இதனால் தடுப்ாறிப்போன் மிஸ் மில்லிகாரப்படியே கீழே விழுந்தார்கள் அவர்கள் கீழே விழுந்ததும் அவர்கள்அணிந்திருந்த சட்டைப் பவாண்டவிகியது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் நல்ல போதையில் இருந்த எங்கள் உண்ர்ச்சிகள் தூண்டப்பட்டன் அடுத்து நாங்கள் நாள்வரும் பாய்ந்து சென்று thiեiլ: பள்விகாவை முத்தமிடுவதற்குப்போராடினோம். இதனால் அவர்களின் உடைகள் எல்லாம் கிழிந்து
போய்விட்டது"
"அதன் பிறகு என்ன நடந்ததென்று எங்களுக்கு தெரியவில்லை. ஒருவர் மாறி ஒருவர். ாள்விக கத்தாமல் இருப்பதற்காக நான்தான் அவர்களின் கழுத்தை அழுத்திப்பிடித்துக்கொண்டேன். ஆனால் அந்த அழுத்தம் அதிகமாக இருந்திருக்க வேண்டும். அதன்
பிறகுதான் தெரிந்தது மிஸ் மல்லிகா இறந்து
விட்டார்கள் என்று.
இதனால் நன்றாகப் பயந்துபோன
நாங்கள்,
பக்கத்துருமில் இருந்த ஒரு
பெரிய இரும்புப் பெட்டிக்குள்
 
 
 
 
 
 

மல்லிகாவின் பினத்தை துக்கிப் போட்டு விட்டு ஆங்கிருந்து ஒடிப்போய் விட்டோம் பள்விகாவின் அந்த உடலின் கவர்ச்சிதான் எங்கள்ை இப்படிச் செய்யத் துண்டியது. நாங்கள் மட்டுமல்ல அவளை அந்த நிலையில் ஒரு கிழவன் பார்த்திருந்தால் கூட இதைத்தான் செய்திருப்பான். இதனால் என்மீது கருனைக் காட்டுங்கள் சொல்லியபடியே இரண்டு கைகளையும் படிப்பி சீதாவைக் கும்பிட்டான். ஆனாள், அதற்குள் கோவின் கையில் இருந்த கத்தி அவன் மார்பை நோக்கி வேகமாகச் சென்றது
அடுத்து அம்மா என்று அலறியபடியே தரையில் சாய்ந்தான்
r அவன் கீழே சாய்ந்ததும் பைத்தியக்காரியைப் போல் செயல்பட்டதோ எதிரில் இருந்த அறைக்குள் ஒடினாள். உள்ளே ஒரு இரும்புப் பெட்டி இருந்தது. அதன் அருகில் ஓடி வந்து பரபரப்புடன் அதைத் திறந்தாள். LIGTIGT. மல்லிகாவின் பின்னம் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தது. அதை அப்படியே திறந்து வைத்துவிட்டு மீண்டும் மனோகரன் விழுந்திருந்த இடத்திற்கு ஒடிச்சென்ற சீதா, மனோகரனின் நெஞ்சில் இருந்து வடிந்து கொண்டிருந்த சூடான இரத்தத்தை இரண்டு கைகளிலும் சேகரித்தாள். கைகளில் சேகரித்த அந்த சூடான இரத்தத்தை அப்படியே கொண்டுசென்று பெட்டிக்குள் பினமாகக் கிடந்த மல்லிகாவின் வாய்க்குள் கொட்டினாள். என்ன ஆச்சரியம் நாகத்தினால் இருக்கும் ஒருவருக்கு நீர் கொடுத்தால் அதை எப்படி உறிஞ்சிக் குடிப்பாரோ அதே போல், இதழ்களில் விழுந்த அந்த சூடான இரத்தத்தை பெட்டிக்குள் கிடந்த மல்லிகாவின் பினம் உறிஞ்சிக் குடித்தது. இரத்தம் உள்ளே சென்றதும், பிணத்தின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்தது. ஆமாம்.
இதுவரை பிணமாகக் கிடந்த மல்லிகா
மெல்ல விழிகளைத் திறந்து,
சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அதைப் பார்த்ததும்
சீதா அப்படியே பயங்கி விழுந்துவிட்ட T.

Page 16
இப்ப கொஞ்சநாளா சில விஷயங்களைப் பற்றி - آیزیg யோசிக்கக் கொண்டிருக்கிறன் மாமி. இதுகளைப்பற்றி உங்கட கருத்துக்களையும் அறிஞ்சால் நல்லது எண்டுதான் நானும் ரவியும் உங்களை பீச்சுக்குக் கூட்டிக்கொண்டுவந்தனாங்கள் மாமி.
ஆலே - மனத்திலை இருக்கிற விஷயங்களை வெளி வெளியாக் கதைக்கிறது நல்லது தேவி. அப்பதான் பிரச்சினைகள் இருந்தால் தீர்வுகாணலாம்.
தேவி- உங்களுக்குத் தெரியும் எனக்கு எஞ்சினி பரிங்கில டிகிரியும், எம்.பி.ஏ யும் இருந்ததால ஒரு நல்ல கொம்பனில நல்ல வேலை கிடைக்கது. பிறகும் புரமோஷன்கள் கிடைச்சு இப்ப நல்ல நிலமையில் இருக்கிறன்.
ஆசல- உண்மைதான் அது பெருமைதானே.
தேனி-நான் சொல்ல வந்தது என்னெண்டால் எங்கட பிள்ளையன் பள்ளிக்கூடம் போகத் தொட்ங்கிட் டாலும் இன்னும் சின்னப்பிள்ளைகள்தானே சமையல் சாப்பாடுகளையும் கவனிக்க வேணும். அதுக்ளின்டை படிப்பையும் கவனிக்க வேண்டியிருக்கு இப்ப வேலையையும் வீட்டையும் சமாளிக்கிறது கஷ்ட மாயிருக்கு பிள்ளைகளை நல்லபடியா வளர்க் கோணும் எண்டால் வேலையை விட்டால்தான் முடியும்போல இருக்கு எனக்கு வேலையை விடவும் மனமில்லை. இந்தமாதிரி நல்ல வேலை செய்ய வேணும் என்றதுதான் என். fitoi Gurrati, J.GJIGJIT யிருந்தது.
ரவி - நீர் வேலையை விடவேண்டிய அவசியமே இல்லை தேவி. ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறீர்?
இதுவி-ஆனால் பிள்ளைய குளுக்கு அடிக்கடி வருத்தங்கள் வருகுது. பெறுத்த வேலைகள் இருக்கிற நேரங்களிலை
லீவு எடுக்க முடியாமல் இருக்கு. இதுகும் ஒரு பிரச்சினையல்லே?
ஆலே - இந்தப் பிரச்சினை பல குடும்பங்களிலை இருக்கு இதுக்குத் தீர்வு, முதலில் இருவருக்கும் இடை யில் நல்ல புரிந்துணர்வு இருக்கவேணும். பொறுப்பு களை ரெண்டு பேரும் பகிர்ந்து செய்ய வேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கவேணும்.
வி-சரியாச் சொன்னிங்கள் மாமி. நான் ஒருத்தன் இருக்கிறன் எண்ட் நினைப்பே தேவிக்கு இல்லை போல இருக்கு தேவியாலை வீவு எடுக்க முடியாத நாளேல நான் லீவு எடுப்பன் பிள்ளைகளோட தேவி நேரம் சில்வழிக்கிற நாளில் நான் சமையல் சாப்பா டுகளைக் கவனிச்சுக் கொள்ளுவன். இப்படி பகிர்ந்து
 
 

செய்யலாமென்வே.
இதுதி இதால அவற்றை வேலையெல்லோ பாதிக்கப் பட்ப்போகுது. அவருக்கும் அடுத்த வருஷம் கண்டிக்கு ட்ரான்ஸ்பர் வரப்போகுதாம். அப்பிடி வந்தா நான் எப் படியும் என்னட வேலையை விடத்தானே வேணும். எனக்கு ஒருநாளும் கண்டிக்கு ட்ரான்ஸ்பர்கிடைக்காது தானே.
ரவி- ஒண்டையும் பிரச்சினையாய் யோசியாதையும். ட்ரான்ஸ்பரிவை போகச் சொன்னால் தீர்மான்மாக போக ஏலாது எண்டுதான் சொல்லப் போறன்.
இதறி- அப்படியெண்மால் நீங்கள் வேலையை விட வேண்டியெல்லே வரும்?
வி- இங்கேயே வேறொரு நல்ல வேலை கிடைக்சால் எடுத்துச் செய்யலாம். வேலையையும் குடும்பத் தையும் சமாளிக்க முடியாது என்ட ஒரு நிலவரம் வந்தால் நான் சில வருஷங்களுக்கு வேலையை விட்டுப்போட்டு வீட்டிலை நிக்கிறன். நீர் எவ்வளவோ காலமாய் ஆசைப்பட்ட வேலையை ஏன் வி
வேணும்?
தேறி- ஆ. ரவி உண்மையாகத்தான் சொல்லுறியளே? எண்டாலும் அப்படி என்னண்டு செய்யிறது:
சிேலி" ஏன் அப்படிச் செய்ய ஏலாது? ரவிசொன்னது தான் சரி. பொம்பிளைதான் வேலையை விட வேணும் எண்டு சட்டம் ஏதும் இருக்கோ? உண்மை யிலை ரவியைப்போல சிந்தனை உள்ளவை எல்லாப் பொம்பிளைபளுக்கும் கிடைச்சால் குடும்பங்களில் ஒருவித தகராறோ பிரச்சின்ைகளோ இருக்காது.
துேவி-உண்மைதான் மாமி எனக்கும் மனநிலை இப்பு எதையும் சமாளிக்கலாம் எண்ட நம்பிக்கை வந்திட் டுது.

Page 17
தமிழர்கள் ஒற்றுமைப்பட்வேண்டும். தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்ப்ட்வேண்டும்'தமிழ்த்தலைவர்கள் ஒன்றுசேர வேண்டும். இந்த ஒற்றுமைக்குரல்கள் இன்றுநேற்றல்ல. இலங்கை சுதந்திரம் பெற்றதாக அறி விக்கப்படுவதற்கு முன்னரே தமிழ் மக்கள் மத்தியிலும் அரசியலில் ஆர்வம் கொண்ட் அறிஞர்கள், புத்தி "ஜீவிகள் தரப்பிலும் ஒலித்தன. இன்றுவரையும் தமிழர் கள் ஒற்றுமைப்படவேண்டுமென்ற குரல் ஒலித்துக் கொண்டுதான்சிருக்கிறது.
தமிழர்கள் ஒற்றுமைப்படவேண்டிய நேரத்தில் ஒற்றுமைப்பட்டிருந்தால் இன்று தமிழர்கள்தலை நிமிர முடியாத அளவு அவலம் ஏற்பட்டிருக்காது. பேரழிவு ஏற்பட்ட பின்னரும்கூ தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்:தமிழ்மக்களின் விடிவுக்காகப் போராட் முன்வந்தவர்களாகக்கூறிக்கொண்டவர்களும் காட்டிக் த்ெ ண்டவர்களும்கட் பிரிந்து நின்றே ஒற்றுமை பற்றிப்பேசுகிறார்கள்
அன்றுதொட்டு இன்றுவரை ஒற்றுமைக்குரல் ஒலித்துக்கொண்டேதானிருக்கிறது. ஆனால் ஒற்றுமை தான் ஏற்படுவதாக இல்லை. இருந்த ஒற்றுமைக: நடந்துமுடிந்து தேர்தலின்போது குலைந்து போனது. இந்தச் சனியன் பிடிச்சதேர்தல் ஏன்தான் வருகிறதோ இருக்கிற ஒற்றுமையையும் சீரழிச்சுப் போட்டுப் போகுத' என்று அமர் அமிர்தலிங்கம் ஒருதடவை
 
 
 
 

கூறியது இப்போதும் நினைவில் நிற்கிறது. கடந்த பொதுத் தேர்தலின்போது முன்னைய நாடாளுமன்றத் தில் ஒற்றுமையாக, ஒரே அமைப்பிள் நின்று தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவ்ர்கள் பிளவுபட்டு சிதறிப்போனார்கள்.
இதே சமயம் முப்பது முப்பத்தைந்து ஆண்டு களுக்கு முன்னர் இந்த ஒற்றுமைக்குரல் சம்பந்தமாக நட்ந்த ஒரு சம்பவம்:நான் நேரில் கண்டு கேட்டது. வாசக நேயர்களும் அறிந்து கொள்ளவேண்டுமென் பதற்காக இங்கே தருகிறேன்.
இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் ஆண்டு விழா, யாழ்ப்பாணம் நகர மண்ட்பத்தில் நடை பெற்றது.ஆசிரியர்கள்மண்ட்பத்தை நிறைத்திருந்தனர். அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின்தலைவர் எஸ்ஜே.வி. செல்வநா பகம் அவர்களும் இம் மகாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர் களாக அழைக்கப்பட்டிருந்தனர். காங்கிரஸ் தமிழரசு போட்டி அதிகரித்திருந்தகாலம் அது இரு தலைவர் களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக இரு தலைவர்களின் ஆதர வாளர்கள் மட்டுமல்ல, கட்சிசார்பற்றவர்களும் மண்ட் பத்துக்கு வெளியேயும் திரண்டிருந்த்னர்

Page 18
ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வே சுப்பையர் வாத்தியார் தலைமையுரை நிகழ்த்தினார். ஆசிரிய களின் பிர்ச்சின்ைகளை எடுத்துக்கறியவர் தமிழ் மக்களின் பிரச்சின்ன்களையும் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் பிரச்சின்ன்களுக்குத் தீர்வுகண்டு உரினப் பட்ன்வாழ்வதற்குதமிழர் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டுமென்றும் கட்சி வேறுபாடுகள்ால் பிளவி பட்டு நிற்கக்கூடாது என்றும் கூறிய சுப்பையரவர்த்தி பார். இதற்காக இருபெரும் தலைவர்களும் ஒன்றுசே வேண்டுமென்க்கறியபடியே இரு தலைவர்களின் பாதங்களுக்கு முன்பாக நிலத்தில் வீழ்ந்து வணங்கி அழுதபடி வேண்டுகோள்விடுத்தார்.
ஆறடிக்கும் அதிகமான துயரமுட்ைய சிவந்: மேரியரான சுப்பையா வாத்தியார் நிலத்தில் சான் ட்ாங்கமாக விழுந்து இருவரும் ஒற்றுமைப்படுங்கள் என்ற கேட்கவும் சுட்டத்தினர் நெகிழ்ந்துபோயினர் ஆசிரியர்கள் சிலர் சுப்பையா வாத்தியாரைத் துக் இருத்தி அமைதிகொள்ளும்படி ஆறுதல் கூறினார்கள்.
இதன்பின் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜிஜி பொன்னம்பலம் உரையாற்றினார். இருவரையு ஒன்று சேர்ந்துதமிழ் மக்களுக்காக சேவைசெய்யும்ப சங்கத்தலைவர் விடுத்த வேண்டுகோளை குறிப்பிட் ஜி. ஜி. தமிழ்க்காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் எ போதும் சேர்ந்து ஒத்துழைக்கத் தயாராகவே இருக் றோம் என்பதை இந்த இத்தில் உறுதிப்ட் தெரிவி பதாகச் சொன்னார். அடுத்து தந்தை என்று அழைக்க படும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர்செல்: நாயகம்பேசினார். சங்கத்தலைவர், சுப்பையா வரத் பார்விடுத்த தலைவர்கள் ஒன்றுசேரவேண்டும் ஏன் கோரிக்கைற்றிக்குறிப்பிட்டார்.
தலைவர்கள் இன்று பிரிந்திருப்பவர்கள் நான ஒன்றுசேரலாம்.இன்று ஒன்றாக இருப்பவர்கள் நான் பிரிந்தும் போகலாம் தலைவர்கள் ஒற்றுமை படுவதிலோ பிரிந்து பேர்வதிலோ பிரச்சினைக இல்லை. மக்கள்தான் ஒற்றுமைப்படவேண்டு
மக்கள் ஒன்றுபட்டார்களாயின் பி. சின்னகளுக்கு
 
 
 
 
 
 
 
 

தீர்வுக்ான முடியும்' என்று தந்தை செல்வாதமது பேச்சில் குறிப்பிட்டார்.
独 ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் மக்கள்தான் ஒற்றுமைப்படவேண்டும் என்று தந்தை செல்வா * அன்று விடுத்த கோரிக்கை 1976 ஆம் ஆண்ால் நிறைவேறியது. தமிழர் விடுதலைக்கூட்டணி உதய 别 மானது வள்வெட்டித்துரை நகர சபைத் தலைவராக 凸 இருந்த ஞானமூர்த்தி அவர்களும் மற்றும் இருவரும் 凸 சேர்ந்து எடுத்த முயற்சியினால் வல்வெட்டித் Fill துறையிலும் திருகோணமலையிலும் நடைபெற்ற 剑 கட்டங்களைத் தொடர்ந்து, வட்டுக்கோட்டையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் தமிழர் 四 விடுதலைக் கூட்டணி உருவானது:வரலாற்று பெருமைமிக்க இம்மாநாட்டில் முக்கிய தீர்மானங்க ா ஞம் நிறைவேற்றப்பட்டன. மக்களின் ஒற்றுமையி னால் ஏற்பட்ட தமிழர் விடுதல்ைக் கட்டணியில் IT தமிழ்த்தலைவர்களும் ஒன்றுசேர்க்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்துதமிழர் தாயகமான வடக்கு霹 கிழக்கில் தமிழீழ அரசை மீண்டும் உருவாக்க 威 மெனக்கோரும் பிரேரணையை நாடாளுமன்றத்தில்
கொண்டுவருவதற்கு தந்தை செல்வநாயகம் முன்னறி வித்தல் கொடுத்தார். இப்பிரேரணை விவாதத்
திற்கு எடுத்துக்கொள்ளப் படாம லேயே நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு புதிய பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான்து. வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படை பிலேயே 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனம் உரு வாக்கப்பட்டு தமிழர் ifilہے لیے پیچھے اوقی கட்டணிையினர் தேர்தலில் போட்டியிட்டு தமிழர்தா யகத்தின் மிகப் பெரும்பான்மை யான் இடங்களைப் பெந்து அமோக வெற்றியீட்டினர். தமிழர் விடுதவைக் கூட்டணியின் இந்த வெற்றி கிரிக்கு பகிள் தானில் ஷேக்முஜிபுர்ரஹ்ம் ஆரின் அவாமிக் கட்சி ஈட்டிய வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட கிளர்ச்சியின் விளைவாக இந்தியா வின் இந்திர தீவயிட்டு வங்காளதேசம்
'ரு'வானது போல் 劉***エ들
E

Page 19
ஏற்பட்டுவிடுமோ என்று ஜே.ஆர் தலைமையில் அமைந்த ஆட்சியாளர்கள் அஞ்சினர். இதனால் காவல்துறையினரைத் தூண்டிவிட்டு யாழ்ப்பாணத் தில் நடந்த கண்காட்சியில் கலகத்தைத் தொடக்கி நாடுமுழுவதும் இனக்கலகம் பரவ வழிவகுத்து, கூட்டணியின் வெற்றியைத்திசைத்திருப்பிவிட்டனர்.
தமிழர் தாயகத்துக்கு வெளியே வாழ்ந்த தமிழ் மக்களுக்கு உயிர் அழிவும், சொத்தழிவும் ஏற்பட்டு அகதிகளாகி கப்பல்களில் தாயகம் திரும்பினர். இந்த இனக்கலகம் பற்றி பாரபட்சமற்ற விசாரணை வேண்டு மென்ற கோரிக்கைக்கு சன்சோனி தலைமையில் ஆனைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த விசாரனை அறிக்கை இன்னமும் வெளிவரவில்லை. இதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை உடைக்க பலவழி களிலும் சிலர் முயற்சி செய்தனர். இதே சமயம் 7 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றச்சொல்வி இளைஞர்கள் வற்புறுத்தினர். இவ்வேளையில் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த கடும் நடவடிக்கை, இளைஞர்கள் நாட்ட்ைவிட்டு வெளி யேறவும், அதேசமயம் சாத்வீகப் போராட்டங்களைக் கைவிடவும் வழிவகுத்தது.
தேர்தல்களில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டது. இன்று தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று கக்குரலிடுவோர் முன்னரும் ஒற்றுமையைக் குவைத்தார்கள் இன்றும் ஒற்றுமையைச்சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகக் கடைசியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த ஒருவர் தமக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தொகுதி ஒதுக்கவில்லை என்பதற்காக கூட்டணிக்கு எதிராக பிரசாரம் செய்தார். இளைஞர்களின் போராட்டத்துக்கு எதிராகவும் பகிரங்க மடல்கள் எழுதி ஊட்கங்களில் பிரச்சாரம் செய்தார்.தமிழர் விடுதலைக் கட்ட்னியின் தலைவர் தாமே என்றும், இதனால் இனிமேல்நிர்வாக சபைக் கூட்டங்கள் நடத்த முடியாதென்றும் நீதிமன்றத் தில் தடை உத்தரவு வாங்கி அது செயல்பட முடியாமல் தடுத்தார். இதுமட்டுமன்றி தமிழர் கூட்டணி நிர்வாகிகளுக்கு எதிராகவும் இளைஞர் மன்றங்களுக்கு எதிராகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்ம்ை யாருக்கும் மற்றும் அரசஅரசியல் உயர் பீடங்களுக்கும் மடல்கள் எழுதி பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்தார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் என்ற
விண்கற்களில் சூரியனை சுற்றிவரு என்று ஆராய்ச்சிச கோள்களைத் தவி வருகின்றன. இவற் அதாவது 200கிலே கற்களை அமெரிக் செய்து வருகின்றன அமைத்துள்ளனர். தண்ணீர் இருப்பது பகுதிகளில் தண்ன வாழவும் வாய்ப்பு
 

திமன்றத்தடை உத்தரவினால் செயல்பட்டவர் கடந்த பொதுத் தேர்தலில் தலைநகரில் தமது மகளைத் லைமை வேட்பாளராக நிறுத்தியதுடன் மற்றும் மிழ்த் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி ாமும் போட்டியிட்டார். இவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார். ந்திரிக்கா அம்மையாருக்கு எழுதிய கடிதங்களை நீண்டும் தேர்தல் காலத்தில் பிரச்சாரத்துக்காக வெளி பிட்டார். இதுவே அவருக்கு வினையானது. ஜன் ாயகக் காவலர் என்று புகழ்ந்த சிங்கள, ஆங்கிலப் த்திரிகைகளின் புகழ்ச்சிக்கு சிங்களவர்கள்கூட மதிப் |ளிக்கவில்லை.
தந்தை செல்வா வகித்த கூட்டணியின் தலைமைப் தவியை வைத்தே தந்தையின் பெயரில் வெற்றி ட்டலாம், தலைவராகலாம் என்று அவர்கண்ட கனவு விக்கவில்லை. தமிழ் மக்கள் எல்லோரையும் மாற்றிவிட முடியாது. இதை தனிப்பெரும் தமிழர் tட்டணித் தலைவர் இன்று உணர்ந்திருப்பார் ால்லோரும் தலைம்ைப் பதவியைக் குறிவைத்து 1ற்றுமைக்குரல் எழுப்பினால் பின்பற்றுபவர்கள் JITT7
ü岛市 நம் பல்வேறு கோள்களிலும் தண்ணீர் இருக்கிறதா 1ள் நடந்து வருகின்றன. சூரியனை சுற்றிவரும் ர ஏராளமான விண்கற்களும் விண்ணில் சுற்றி றில் பல கற்கள் இராட்சத அளவில் இருக்கின்றன. 7 மீட்டருக்கு மேல் அகலமாக இருக்கின்றன. அந்த காவில் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு எர். ஹவாய் தீவில் இராட்சத டெலஸ்கோப்பை அதன்மூலம் இந்த கற்களை ஆய்வு செய்ததில் து தெரிய வந்தது. உறைந்த நிலையில் மேல் சீர் இருந்தது. அதனால் அவற்றில் உயிரினங்கள் இருக்கலாம் எனகருதப்படுகிறது.

Page 20
*தமிழ் ஹிந்திபி தெலுங்கு மூன்று மொழிகளிலும் ஒரே நேரம்
"ராவணன் படத்தில் நான் இராவணன் கிடையாது படத்தில் எனது கேரக்டர் பெயர் விர அப்படி பானால் ராவணன் யார்? அது மElரத்தினத்துக்குத்தான் தெரியும். தமிழில் ஏற்ற வேடத்தை இந்தியில் அபிஷேக் பச்சன் ஏற்றிருக்கிறார். இப்படத்தில் பாருமே கஷ்ட பயில்ாமங் நடித்திருக்க Լւքլին III Այl EոնեiելIIIվի
ITLE "무
 


Page 21
விாம்பத்தான் அலட்டிக் கொள்கிறார்கள் இன்றைய இளைஞர்களில் ஒரு குழுவினர்
இணையத்தில் தளம் உருவாக்கி எழுதிக் கொண்டி ருக்கிறார்களாம். பத்திரிகைகளில் எழுதி, வளர்ந்து எழுத்தாளராகிவிட்ட நமது எழுத்தாளர்களைப் போலவே இவர்களும் ஒரு தளத்தை உருவாக்கி விட்டால் எழுத்தாளராகிவிட்டதாக எண்ணிக் கொண்டு திரிகிறார்கள். சில தளங்கள் பரவாயில்லை ரகர். சில தளங்கள் ஏதோ அவரவர் அறிவுக்குட்பட் டவை. சில தளங்கள் பிஞ்சில் பழுத்தவை. சில தளங்கள் பத்திரிகையில் வெளிவரும் துணுக்குத் தோரணங்களுக்கு ஒத்தவை. சில தளங்கள் வாந்தின்ய வரவைப்பவை. இரண்டொன்றில் அவரவர் படித்த, நன்கு புரிந்துகொண்ட விடயங்களைத் தெரிவிப்பவை. ஒரு சுகமான அல்லது ஆர்வமான அல்லது ஆரோக்கி பாவ வாசிப்புக்கு உட்பட்டவையாக எவற்றையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. எனக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். தெரிந்தவர்கள் வலைத்தள முகவரி தந்தால், அது நன்றாக இருக்கு பொனில், தளத்துக்கு உரியவனது பும் அதன் முகவரி
G
 

ாயத்தந்தவரையும் வீட்டுக்கு அழைத்து ஒரு பிளேன்ரி கொடுக்கத்தயாராக இருக்கிறேன்.
ஒரு வட்டத்துக்குள் நின்று எண்ணங்களைப் பரி மாறிக் கொள்ளும் தளங்களே அதிகமாக இருக்கின் ன. சந்தித்ததையும் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டதையும் வைத்து குறிப்புப் போடுகிறார்கள். அதற்கு மொக்கை போடுவது என்று பெயராம். மாக்கையாக இருந்தாலும் ரசிக்கத்தக்கதாக இருக்க வேண்டாபரர
ஒரு நூலை வாசித்து அதுபற்றி கருத்துப் பரிமாறிக் கொள்ளுதல், நல்ல கவிதையொன்றை எடுத்துக் ாட்டுதல், சுவையான ஒரு சம்பவத்தை எழுதுதல், ாட்டு நடப்புப் பற்றி, சமூக நலன் பற்றி எழுதுதல் போன்ற முயற்சிகளை யாரும் செய்வதாக இல்லை. செய்திப் பத்திரிகைகளில் ஞாயிறு இதழ்களில் வரும் கட்டுரைகளின் சாரமாகப் பலர் சமூக நலன் குறித்து எழுதுவதாக பாவனை பண்ணுவதைப் பார்க்கும் போது வயிற்றைப் புரட்டுகிறது. அரைவேக்காட்டுத் நனமாகச் சிலர் மேதாவிகள் போலச் சொல்லும் கருத்துக்களைப் படிக்கும்போது என்றைக்காவது

Page 22
அவரைச் சந்திக்காமல் இருந்துவிடவேண்டும் என்ற பிரார்த்திக்கத் தோணுகிறது. அண்மையில் ஒருவரின் தளத்தில் அதைப்படிப்பவர்கள் என்று ஒரு பட்டியல் சுழன்றதைப் பார்த்தேன். உலகத்திலுள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் பலர் அத்தளத்தைப் படித்துக் கொண்டிருப்பதாக ரீல் சுற்றப்படுகிறது. சிவியில் இருப்பவர்கள் எல்லாம்கூட அவரது மொக்கைகளைப் படிக்கிறார்களாம். யாருக்குக்கதை விடுகிறார்?
ஒரு புதிய நண்பரோடு அறிமுகமாகும்போது மின்னஞ்சல் முகவரியைக் கேட்டு விடுகிறார். ଗ୍ଯା இலக்கிய ஆர்வலரோடு அறிமுகம் கிடைக்கும்போது அவர் நமது தள முகவரியைக் கேட்கிறார். இரண்டுப் இல்லாதவன் வாய்ப்பாடு தெரியாத மாண்வன்ைட் போலத் திண்றுவதைக் கண்டிருக்கிறேன். அப்படி எதுவும் இல்லை என்று சொல்பவர்களை ஒரு "பேக்கு என்பது போலப் பார்க்கிறார்கள். ஆனால் இவற்றை யெல்லாம் வைத்துக்கொண்டிருப்பவர்களது தளங் களுக்குப் போனால் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வரும் வாசகர் கடிதங்கள் நல்லவை என்று சொல்லத் தோன்றுகின்றது.
நானும் ஒரு "பேக்கு போலக் கொஞ்சக் காலப் திரிந்திருக்கிறேன். இயலாமல் பலரிடம் (அவர்களுப் அரைகுறைதான்) தகவல் பெற்று ஒரு தளத்தை ஆரம்பித்தேன். அதை உருவாக்கிக் கொள்ள முயன்று ஒரு கட்டத்தில் மடிக்கணனி செயலிழந்து போனது 2000 ரூபாய் கொடுத்துச் செய்த பின்னர் ஏழெட்டு பக்கங்களை உருவாக்கி முடிந்த பிறகு சில நண்பர் களுக்குத் தகவல் கொடுத்தேன். இரண்டொருவ பார்த்துவிட்டு முடித்துக்கொண்டார்கள். நான் தளப் உருவாக்கினால் அவர்கள் படித்தேயாக வேண்டுப் என்று தலைவிதியா என்ன?
சிறு கதைகள் என்று ஒரு பக்கத்தை உருவாக் கினேன். மூன்று கதைகளைப் போட்டபிறகு இப்பபு கதைகளைத் தளத்திலேயே போட்டுவிட்டால் புத் கமாக வெளிவரும்போது யாரும் வாங்க மாட்டா களே என்ற பயம் வந்தது. அந்த மூன்று கதைகளோடு நிறுத்திக் கொண்டேன். வெளியிட்டு விழா அன்று விற்கும் ஐம்பது புத்தகங்களும்கூட விற்காமல் போம் விடும் என்ற பயம் தொற்றிக்கொண்டது எனக்கு.
எனவே வெறும் மொக்கை போடுவதற்கு மாத்திரமே இது சரிவரும் என்று முடிவுக்கு வந்து விட்டேன். ஆனால் மொக்கை போடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. எனது பெயரில் தேடி, எனது முகவரியைக் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பாக இரு கட்டும் என்று அத்தளத்தை விட்டு வைத்திருக்கிறேன்.
இப்போது இளைய சமூகம் வாசிப்பில் அக்கரை காட்டுவதில்லை. இலத்திரனியல் காட்சி ஊடகங்கள் இரத்தத்தோடு ஒன்றிப் போய்விட்ட நிலையில் தளங்களை உருவாக்கி மொக்கை போட்டு அதை யாவது வாசிக்கிறார்களே என்பதுதான் எனக்கிருக்கும் பெரிய சந்தோஷம்.

எங்களுக்காய் யார்
இருக்கிறார்கள்?
குழந்தைகள் மீண்டும் மீண்டும் ஏன் பிறக்கின்றன பதற்றங்கள்ை கண்டு அதிரும் இந்த தழந்தைகளை பார்க்கும் பொழுதெல்லாம் முகம் கோனலாகி உடைகிறது. ജ|വെfLiീT LITELLITILഖTീയോ, அவர்களின் வார்த்தைகளை கேட்பவர்களிள்ளை, அந்தச் சிறுவன் பனத்திற்காக கழுத்து நெரித்து கொங்ப்ேபட்ட நகரத்தில் அவனின் குருதி படர்ந்த தெருவில் நான் எப்படி அமைதியாக திரிவது? அம்மா! ஏன் என்னை இந்த மEங்ாளில் பெற்றிருக்கிறாய்? யாரிடமும் கருனையில்லை நேத்தமும் வன்மமும் படிந்த முகங்களுடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்னைச் சுற்றிலும் மனரீதர்களை தின்று களிக்கும் மிருகங்கள் இமைகின்றன மிருகம் கவர்ந்து சென்ற நண்பனைப்போல நான் ஏனம்மா இருக்கிறேன்? கருனைக்காக தவிக்கும் தழந்தைகள் எனக்கு முன்னால் செல்லுகின்றனர் பிள்ளைகளுக்காக துடிக்கும் தாய்மார்கள் என்னோடு பேசுகின்றனர் அம்மா ஏன் என்னை இந்த மண்ணீரில் வளர்த்தாய்? குழந்தைகளை இழுத்துச் செல்பவர்கள் என்னையும் ஒரு இரவில் துப்பாக்கிகEால் இழுத்துச் செல்ல முடியும் உன்னையும் என்னையும் குறித்து யாரும் பேசுவதாயில்RE தங்கள் கோப்பைகளை குறித்தும் தங்கள் வீடுகளைக் குறித்தும் தங்கள் வண்டிகளைக் குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள் i&LELIT sell lith Ellipsis, மண்ணின் என்னை நடமாட விட்டிருக்கிறாய்? பூக்களை பார்க்க இன்னும் எதை நாம் இழக்க வேண்டும்? துப்பாக்கிகளால் இருதயத்தை குத்திக்கொள்ளும் காகம் ஏன் இன்னும் விரட்டுகிறது? அமைதியான இரவில் இந்த நகரத் தெருவொன்றில் நடந்து வர ஆளசப்படுகிறேன் வெளிச்சங்களில் மகிழ்ச்சியுடன் உலவ விரும்புகிறேன். அம்மா அழகான வாழ்புெ எப்படியிருக்கும்? மகிழ்ச்சிக்கான ஏக்கங்கள் கணவாய்ப்போகின்றன. காலம் எல்லா வகையிலும் பிழைத்துப்போய்க்கிடக்கிறது நீ இன்னும் வெயிலில் கிடந்து காய்கிறாய் எங்களுக்காய்யாரம்மா இருக்கிறார்கள்?
CS தீபச்செல்வன்
இ89

Page 23
இ விக்ரமாதித்தன்
அரைத்த மாவில் கலர்
சாமி வேள், ஆறு ஆகிய படங்களை இயக்கிய ஒ ஹரியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் ெ
சிங்கம், ஒளிப்பதிவு - பிரியன், இசை - தேவி நி3 பூரீபிரசாத், தயாரிப்பு - ஸ்டியோ கிரீன், நடிகர்கள் - பிற
சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக், கதை- இே திரைக்கதை-வசனம் ஹரி.
கடத்தல், கப்பம் வாங்குதல், கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களை செய்பவர்களை 鷲 கம்பீரமாக வேட்டையாடி வீழ்த்துபவனே சிங்கம். ಡಾ.
சிங்கமாக சூர்யா. இது அவரின் 2 ஆவது படமும்கூட நல்லூர் என்ற கிராமத்தில் பலசரக்குக் கடை வியாபாரத்தை நடத்த விரும்பும்துரைசிங்கம் (சூர்யா) ն): தன் அப்பாவின் ஆசைக்காக பொலிஸ் வேலையில் بولچی சேருகிறார் நேர்மையான பொலிஸ் சப் இன்ஸ் பெக்டரான அவருக்காக, எதையும் செய்யத் தயாராக முன்
 
 

HåU TDFMGOst
த ரியல் எஸ்டேட் விவகாரத்தில் சென்னை தாதா ான பிரகாஷ்ராஜூடன் சூர்யாவுக்கு பொலிஸ் லையத்தில் கையெழுத்திடுவதில் பிரச்சினை ஏற்பட காஷ்ராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சப் ன்ஸ்பெக்டர் சூர்யாவை, இன்ஸ்பெக்டர் சூர்யா ாக பதவி உயர்த்தி, தனது திருவான்மியூர் ஏரியா க்கே மாற்றல் செய்ய வைக்கிறார். அங்கே இருவருக் மான மோதல் ஆரம்பிக்கிறது. கடைசியில் வில்ல ன் கோட்டைக்குள் இருந்தவாறே ஹீரோ எப்படி ஸ்லனை முடிக்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்,
சூர்யா மீண்டும் 'காக்க காக்க படத்திற்கு பிறகு ாவிஸ் வேடத்தில் கடமை தவறாத பொலிஸ் திகாரியாக முரட்டு மீசை, உருட்டு விழியுடன் கம்பீர க இருக்கிறார். கோபப்படுகிறார், ஆக்ரோஷமாய் எடையிடுகிறார், காதலிக்கிறார், துடிக்க துடிக்க டுக்காய் நடக்கிறார். பொலிஸ் கதாபாத்திரம் வருக்கு நன்றாகவே பொருந்துகின்றது. ஆங்காங்கே நம் காதல் காட்சிகளில் அட்டகாசமாக நடித்திருக் ம் இவர், பஞ்ச் வசனம் பேசும் போதுதான் கத்தி தைக் கிழிக்கிறார். துரைசிங்கம் என்று இவருக்கு வத்த பெயர்கூட ஏதோ பொருத்தமாய் இருப்ப ய்த்தெரியவில்லை.
இயக்குனர் ஹரி தனது மசாலா கலவையிலிருந்து துெம் அச்சுப்பிறழாமல் எடுத்திருப்பதுபோல் தெரி து. கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளுமே ஏதோ பாரு ஹரி படத்தில் பார்த்தது போல்தான் இருக்கி 1. ஆரம்பக் காட்சி ஐயாவில் தொடங்கி, இறுதிக் ட்சி ஆறு', 'சாமி வரை பார்த்த ஞாபகம்தான். ம்பட்டை வில்லன்கள், வீர வசனங்கள், புஜங்கள், றுக்கேறும் நரம்புகள் ஆக்ஷன், கொமடி பனை டி உயரத்தில் பறக்கும் ஜீப்புகள், குத்துப்பாட்டு,

Page 24
நடுவில் குடும்பம், சென்டிமென்ட் என்று வழக்கம் போல் எல்லா மசாலாவும் இதிலும் இருக்கிறது. தகவல்கள் சேர்த்து சேர்த்து வசனங்களை அமைத் திருப்பதால் ஹரி நிறைய இடங்களில் கைத்தட்டல் பெறுகின்றார் வீரம் சொட்டச் சொட்ட திரைக்கதை அமைக்கும் பாணி, அதில் வில்லனன் பந்தாட ஹிரோ எடுக்கும் புத்திசாவித்தனமான யுக்திகள், எல்லாமே மிகச் சரியாக திட்டமிட்டு செய்திருக்கிறார் இயக்குனர் நிச்சயம் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் ஹரி மட்டும்தான்.
நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் மசாலா படத்தில் ஹீரோயினை முழுப் படத்திலும் ஒரளவு ஸ்கோப் உள்ள பாத்திரத்தில் காட்டியிருக்கிறார்கள். அனுஷ்காவும் உணர்ந்து நடித்திருக்கிறார். விரட்டி விரட்டி காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். நல்ல வேளையாக கதையின் பல இடங்களை அவரை வைத்தே இயக்குனர் நகர்த்துகிறார். அதனால் படம் முழுக்க வருகிறார். கவர்ச்சியையும் அளவாக அள்ளி வழங்கியிருக்கிறார். நடனக் காட்சிகள் சூப்பர். இயக்குனர் மற்றும் கெமராமேனுக்கு, ஹிரோயினுக் கும் ஹீரோவுக்கும் உயரத்தை சமாளிப்பதற்கே நேரம் சரியாக இருந்திருக்கும்போல. இதற்காகவே க்ளோஸ் அப் காட்சிகளையும் தவிர்த்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ரொமான்ஸ் காட்சிகளில்சுட சில அடி எட்டவே நிற்கிறார் ஹீரோ,
வில்லனாக பிரகாஷ்ராஜ் கலக்கி எடுக்கிறார். பேசவேண்டிய இடங்களில் பேசி பயங்கரத்தைக் காட்டுகிறார். படம் தொய்வில்லாமல் செல்வதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம், அவரது ட்ரேட் மார்க்கான "டேய். டேய்'ஐ இங்கும் கைவிட ສາມີຂຶກວ່າ,
எட்டு எரிமலையாக விவேக், கொ ஞ்சமேனும் சிரிக்க வைத்திருக்கிறார். இவரின் கொமடி பல இடங்களில் சிவிர்க்க வைக்கிறது. அனுஷ்காவிடம் காசு வாங்கி போன் நம்பர் கொடுக்கும் சீனிலும், கடத்தல் லொறியைப் பிடிக்க வரும் சீனிலும் நகைச் சுவையை ரசிக்க முடிகிறது. இவரது இரட்டை அர்த்த வசனங்களை நிறுத்திக்கொண்டால் நல்லது எனத்
தோன்றுகிறது.
ராதாரவி, நாசர், "நிழல்கள் ரவி, மனோரமா, விஜயகுமார் என ஒரு பெரிய ஜாம்பவான்கள் சுட்டமே
நடித்திருந்தாலும் யாருக்கும்
N
 
 
 
 
 

it. பெரியஸ்கோப் இல்லை. ஆனால் அவர் களுக்கென கொ டுக்கப்பட்டிருந்த கரெக்டர்களை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள்.
: ஒளிப்பதிவு திருப்தியாகவிருக்கிறது. தேவிழறிபிரசாத்தின் இசை யில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. ஆனாள் பின்னணி இசையில்தான் சொதப்பிவிட்டிருக்கிறார். வி.டி. விஜயனின் எடிட்டிங் ஆங்காங்கேதாவி, படத்தை ஒரளவுக்கு தூக்கி நிறுத்து கின்றது.
இரண்டு மணி நேரம், முப்பத்தைந்து நிமிடங் களை விறுவிறுப்பாக நகர்த்தவேண்டும் என்ற முனைப்பில் ஹரி உழைத்திருப்பது தெரிகிறது. ஆனால் தனது முன்னைய படக்காட்சிகளையே கொப் பியடித்திருப்பது மாறாத லொக்கேஷன்கள், ரிப்பீட் வசனங்கள் என் சலிப்புத் தட்ட வைக்கிறார். மசாலா படங்களுக்கே உரிய பிரச்சினையான நீண்ட மற்றும் வசனங்களால் ஆன் கிளைமாக்ஸ் படத்தின் வேகத்தை பாதிக்கிறது. தூத்துக்குடியில் பிரகாஷ்ராஜ் பிரச்சினை பண்ணும் போது ஊரே திரண்டு வந்து சூர்யாவுக்கு சப்போர்ட் செய்வது, திகதி முடிவடைந்த பாஸ் போர்ட்டை வைத்து ஒரு நல்ல கொமடி காதல் காட்சிகள், வேலையை விட்டு சூர்யா செல்லலாம் என நினைக்கும்போது அனுஷ்காவின் வசனம் என்பவ காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன்.
சில திருப்பங்களை எளிதாக கணிக்க முடிந்தாலும், லொஜிக் உதைத்தாலும் பார்க்கும்போது பெரிய குறை ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. தன்னை மீண்டும் அற்புதமான ஒரு கொமர்ஷியல் டைரக்டராக ஹரி நிரூபித்திருக்கிறார். படத்தின் முடிவில் "சிங்கத்தின் வேட்டை தொடரும்.' என டைட்டில் போடப் பட்டிருப்பதால் சிலவேளை "சிங்கம் -2 எடுக்கும் ஐடியா வேறு இருக்கிறதோ தெரியவில்லை. ஏற் கனவே பல படங்களில் பார்த்த கதைதான் என் றாலும் படபடவென வெடிக்கிறது சிங்கம். சூர்யாவின் இந்த 25-வது படம் அவரது சில ܕܚܒܝܒܝܢ. ரசிகர்களை திருப்திப்படுத்தாவிட்டாலும், அவருக்கு மேலும் சில ரசிகர்களை உரு வாக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆதமொத்தத்தில் சிங்கம்- சீற்றம்

Page 25
கேள்வி: ஜனாதிபதி பதவிக்கு மக்களால் இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீண்டும் மூன்றாம் முறை அத்தகைய பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்க முடியாது என அரசியலமைப்பு கூறுவதாக செய்திகள் கூறுகின்றன. அவ்வாறாயின் மூன்றாம் முறை எள் வாறு சாத்தியமாகும். இது பற்றி சட்டம் என்ன கூறுகின்றது?
வேகனேஸ்வரன், திருகோணமலை
பதில் அரசியலமைப்பின் உறுப்புரை 302) அவ்வாறுதான் எடுத்துரைக்கின்றது. இரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவர், மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்க தகுதி உடையவர் அல்லர் என்று அள்வுறுப்புரை திட்ட வட்டமாகக்கூறுகின்றது.
ந தாழமையக ஒருவர் மக்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். ஜனாதிபதி பதவியை ஏற்ற ஒரு மாதத்திற்குள் இறந்து விடுகின்றார். உடனடி பாக பிரதமர் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப் படுவார். அதன் பின் பாராளுமன்றம் ஜனாதிபதியை
Ε
 
 
 

ல் சிக்கி அவதியுறுகிறீர்களா? அவற்றுக்குத் தீர்வுகான ங்கள் சட்டம் பேசுகிறது என்னும் இப்பகுதிக்கு உங்கள்
ள் அனுபவமிக்கசடத்துவிகள்பதிலளிப்பார்கள்
தேர்ந்தெடுக்க வேண்டும். பிரதமரை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கலாம். அல்லது வேறு பாராளுமன்ற உறப்பினரை ஜனாதிபதியாக தெரிவு செய்யலாம். அவ்வாறு பாராளுமன்றத்தால் ஜனா திபதியாக தெரிவுசெய்யப்படுபவர், மக்களால் ஜனா திபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கூற முடி யாது. அவ்வாறு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டவரை, அதன்பின் மக்களால் இரு முறை தேர்ந்தெடுக்க முடியும். ஆகவே அவர் ஏறக் குறைய 18 வருடங்களுக்கு தொடர்ந்தும் ஜனா திபதியாக இருக்கமுடியும்.
அரசியலமைப்பின் பிரகாரம் இரு முறைக்கு மேலாக ஒருவர் மக்களால் ஜனாதிபதியாக தேர்ந் தெடுக்க முடியாது. மூன்றாவது முறையாகவோ அல்லது அதற்கு மேலாகவோ ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால் அரசியலமைப்பின் உறுப்புரை 30 (2) க்கு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியலமைப்பின் 30 (3) உறுப்புரை எவ்வாறு திருத்த முடியுமென்பதை உறுப்புரை8ஆ) விபரிக்கின்றது.
83(ஆ) உறுப்புரை விபரிக்கப்பட்டவாறுதான் அவ்வகையான திருத்தம், நீக்கம், மாற்றம், அத்துடன்

Page 26
*, - . f శ్లో-_ is
*、
சேர்ப்பு ஆகியவற்றை செய்யமுடியும். இவ்வாறு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்றில் இரண்டு (23) வீதத்திற்கு குறையாதோர் சாதகமாக வாக்களிக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும் பான்மை என்பது பாராளுமன்றத்தின் மொத்த உறுப் பினர்களான 225 உறுப்பினர்களில் மூன்றில் இரண் டாகும். ஆகவே வாக்களிப்பில் சமூகமளிக்காதோரும் உட்படுத்தப்படுவர். ஆகவே ஆகக் குறைந்தது 150 பாராளுமன்ற உறுப்பினர்களானது சாதகமாக வாக்களிக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும் பான்மை வாக்குகளைப் பெற்றாலும் அரசியலமைப் பின் 30 (3) உறுப்புரையை திருத்தவோ மாற்றவோ முடியாது. அவ்வாறு திருத்துவதற்கும் மாற்றுவதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் தீர்ப்பும் (RHFERANTUM) பெற வேண்டும்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிங்கள மக்கள், மக்கள் தீர்ப்பில் ஜனாதிபதிக்கு சாதகமாக வாக் களிப்பர். அது முடிந்த முடிவு. ஆனால் மக்கள் தீர்ப்பின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்குச் செல்லலாம். மக்கள் தீர்ப்பை ரத்துச்செய்யுமாறு உயர் நீதிமன்றத் திற்கு விண்ணப்பம் கொடுக்கலாம். அரசியல்வாதிகள் நினைப்பதுபோல் இலகுவான நடைமுறைச்சாத்தியம் கொண்டதல்ல.
கேள்வி. எனது மகன் ஒரு சிறிய பலசரக்குக்கடை நடத்துகின்றார். எனது மகனுடன் பொறாமை கொண்ட யாரோ ஒருவர் ஆயிரம் ரூபா கள்ள நோட்டொன்றைக் கொடுத்து சாமான் வாங்கிச் சென்றிருக்கிறார். காலை 9 மணிக்கு பொலிசார் வந்தனர். கடையில் கள்ள நோட்டு இருக்கின்றது என்று கூறி கடையிலிருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு மகனையும் கூட்டிச் சென்றனர். கடையிலிருந்த பனத்தில் ஒரு ஆயிரம் ரூபா நோட்டு, கள்ள நோட்டு என்று கூறி மகனை நீதிமன்றத்திற்குக் கூட்டிச் சென்றனர். மகனை இரண்டு கிழமைக்கு காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவு கொடுத்துவிட்டார். மகன் வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கின்றார். மகனை எவ்வாறு வெளியில் எடுப்பது மகனுக்கு எதிரான வழக்கு என்ன நடக்கும்?
க. அமரசிங்கம், ஹட்டன்
- يضرب بيفي" يشيل " يقول " يفيل.
 
 

y y
夔 يهياله يشي
பதில் உங்களது மகன் பவசரக்குக்கண்ட நடத்துபவர். அங்கு பலர் சாமான்கள் வாங்குவார்கள், பணம் தருவார்கள். அவ்வாறு வியாபாரம் நடைபெற்ற வேளையில் ஒருவர் ஆயிரம் ரூபா கொடுத்து உங்கள் மகனிடம் பொருட்கள் வாங்கியுள்ளார். உங்கள் மகனிற்கு ஆயிரம் கொடுத்தவரை தெரியவில்லை. உங்கள் மகனிடமிருந்து எடுத்த பணத்திலிருந்து ஒரேயொரு ஆயிரம் ரூபாதான் சட்டப்படி அமையாத ரூபாய்த் தாளாக இருந்தது. அதுவும் பொலிசார் அறிவிக்கும் வரையும் அவருக்கு ஒரு ஆயிரம் ரூபாய்தான் சட்டத்திற்கமையாத தாளாக இருப் பதனை அறியார். அவர் இந்த ரூபாய்த்தாளை அச்சிட்ட வருமல்லர். அதனால் உங்களது மகன் குற்றம் எதனையும் செய்யவில்லை. எவ்வாறு ஆயிரம் ரூபாய் அவரது கைவசம் கிடைக்கப்பெற்ற தென்பதை அவரால் விளங்கப்படுத்த முடியும். வழக்கமாக இவ்வாறான ரூபாய்த் தாள்களை வியாபார நடவடிக்கைகளின்பொழுது பெற்றுவருபவர் என்ற குற்றச்சாட்டுமில்லை. இவ்வாறான வேறு பல சாதக ான் விடங்கள் உங்கள் மகன் பக்கம் இருக்கின்றன. பிணையும் கிடைக்கும். வழக்கிலும் வெற்றி பெறு வீர்கள். தகுதிவாய்ந்த சட்டத்தரணியை அணுக வேண்டும்.
நீங்கள் ஒரு தகுதிவாய்ந்த சட்டத்தரணியை உங்களது மகனின் வழக்கை நடத்துவதற்கு நியமியுங் Gir. För Gamsauszu விட்டொழியுங்கள். உங்கள் மகன் குற்றம் ஒன்றும் புரியாதவர். அவர் பிணையில் வருவார். வழக்கிலிருந்து விடுதலை பெறுவார்.
ஒடிப்போகும் நேரத்தில் பனம் தேடிக்கொள் வேரம் என்ற கொள்கையுண்டயோர் எல்லாவகை தொழில்களிலும் இருக்கின்றார்கள். அதனால்தான் தகுதிவாய்ந்த சட்டத்தரணியை அணுகும் வண்ணம் கேட்டுக் கொண்டேன். நேர்மையாகவும் உங்களது மகனின் உரிமைகளை நன்றாகப் பேனக்கூடியவரு மான ஒரு சட்டத்தரணியை நீங்கள் நாடவேண்டும்.
கேள்வி எனது தம்பிக்கு வயது 22 சென்ற ஆண்டு ஜூன் மாதம் வீதியோரத்தில் போடப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதனை நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய ஒரு வருடமாக
臀
தந்து 1

Page 27
வெவிக்கடைச் சிறைச்சாலையில் காவலில் வைக்கப் பட்டுள்ளார். பொலிஸ் பரிசோதனை நிலையத்தில் அவர் தனது தேசிய அடையாள அட்டை, வேல்ை செய்யுமிடத்தில் கொடுக்கப்பட்ட தொழில் அனுமதிப் பத்திரம், கார் ஒட்டும் அனுமதிப்பத்திரம் இவைகள் யாவற்றையும் காட்டியுள்ளார். பொலிசார், பொலிஸ் பதிவு கைவசம் இருக்கவில்லையென்று கூறினர். அதன் பிரகாரம் கைது செய்கின்றோம் என்று கூறிகைது செய்தனர். மேற்கூறியவற்றை நீதிமன்றத்திற்கு கொடுத்த அறிக்கையில் விபரிக்கப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு ஐயமிருக்கிறது என்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. நீதிபதி விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவு கொடுத்தார். தம்பியை வெளியில் எடுப்பதற்கு என்ன செய்ய வேண் டும் என ஆலோசனைதருவீர்களா?
கவிக்னேஸ்வரன்வத்தளை
பதில் நீங்கள் கூறுகின்ற நிகழ்வுகள் முழுமையான வையாக இல்லை. நீங்கள் தம்பியை கைது செய்யும் பொழுது நீங்கள் தம்பியுடன் நின்றீர்களா? நீதிமன்றத் திற்கு கொடுக்கப்பட்ட பொலிஸ் அறிக்கையை நீங்கள் வாசித்துப் பார்த்தீர்களா? நேரடியாக நீங்கள் கண்டதை கேட்டதை, வாசித்து அறிந்ததைக் கூறுகின் நீர்களா? அல்லது கேள்வி ஞானத்தில் கூறுகின்றீர் 4; GF || ?
= सा शक
EEE; பிடித்த வீடியோ
MIN=HISTA Grrrrrrr. பிடித்த வீடியோவை ெ
GIF இமேஜ்க
g; fig, Movi இந்த மென்பொரு உங்களுக்குப் பிடித்
பின் கீழே உள் மற்றும் முடிவுப் "Export to animat
Politi Animated GIF gjig, Soft (
ஜபு:இ8
ஆக மாற்ற http://evanolds, cor
 
 

நீங்கள் கூறுவது சரியாக இருந்தால் தமிழர் ஒருவர் பொலிஸ் பதிவை கைவசம் கொண்டுதிரியாவிட் டால், வைத்திருக்காவிட்டால் பயங்கரவாதி யென்றோ அல்லது அவ்வாறு ஐயப்படுவதென்றோ ஒருவரை கைது செய்ய முடியாது. அவ்வாறு கைது செய்தால் கைது செய்யப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பல மீறப்படுகின்றன. ஒருவித குற்ற முமின்றிகைது செய்யப்படுகின்றார். பொலிஸ் பதிவு கைவசம் வைத்திருக்கானம் ஒரு குற்றமல்ல. நீங்கள் ஒரு சட்டத்தரணி மூலம் உங்களது தம்பியின் வழக்கை நடத்தியதாகக் கூறவில்லை. ஏன் இவ்வளவு காலமும் ஒரு சட்டத்தரணியை நியமிக்கவில்லை? பொலிஸ் பதிவு கைவசம் வைத்திருக்கான மக்கு விளக்க மறியலில் உங்கள் தம்பியை வைத்திருக்காமல் இருக்க லாம். வேறு குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றம் விளக்கமறியவிற்கு கட்டளையிட்டிருக்கவரம் அவசர கால சட்ட நியதிகளுக்கு கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கீழும் சிலவகையான குற்றச்சாட்டின் பேரில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் உங்கள் தம்பியை காவலில் வைக்கும்படி கட்டள்ை பிறப்பித்திருக்க லாம். அல்லது நீங்கள் கூறுகின்ற வண்ணமும் நடந்திருக்கலாம். எதற்கும் தகுதிவாய்ந்த சட்டத்தரணி யிடம் இவ்வழக்கை ஒப்படையுங்கள். அவரிடம் உங்களது குறை நிறைகளைக் கூறுங்கள். அவர் உங்களுக்கு தகுந்த நிவாரணங்களைப் பெற்றுத் தருவார்.
ளைப் பற்றி நாம் அறிந்திருப்போம். நமக்குப் கோப்புகளை GIF இமேஜ்களாக மாற்றி உதவும் மென்பொருள் பற்றி பார்ப்போம்.
10AniGIF என்ற மென் பொருள் உதவுகிறது. ளை நிறுவிய பின் "Tic " -> “Open’ மூலம் த வீடியோவைத் திறந்து கொள்ளுங்கள்.
எள , மற்றும் Track Bar உதவியுடன் ஆரம்பம் பகுதிகளை தேர்வுசெய்து, பின் "Export -> ted GIF..” epGJL. GIF LI LErIT , e gjeni Tigj,
பொருளை தரவிறக்க இங்கு செல்லவும். n/ mov togifsimple.html

Page 28
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எட்டுப் பாடங்களிலும் விசேட திறமைச் சித்திகளைப் பெற்ற ஒரு மாணவன் உயர்தரப் பரீட்சையில் ஒரு பாடத் திலேனும் சித்தியடையவில்லை. பிள்ளையின் மனதிலே விரக்தி பெற்றோருக்கு விசனம் என்ன நடந் தீது?
இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டுமாயின் இன்னும் சில கேள்விகளுக்குப் பதில் காணவேண்டும். பட்டப் படிப்புக்கு வாசலாக இருக்கும் உயர்தர வகுப் பில் 3 பிரதான பாடங்களை மட்டும் ஒரு மாணவன் படிக்கப் போகின்றான். இதுதான் அவனுடைய வாழ் வின் அடித்தளம். இந்த அடித்தளம் போடப்படும் நிலம், நெகிழ்ந்த நிலையில் இருக்கின்றது. அதாவது கட்டிளமைப் பருவம் வளர்ந்தும் வளராத முதிர்ந்தும் முதிராத பருவம். உணர்ச்சிகள் அலைபாய்ந்து கொண்டிருக்கும் காலம், மாணவனுடைய திறன் எது என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒரு gli III.
அனைத்துப் பாடங்களிலுமே திறமைச் சித்தி பெற்ற ஒரு பிள்ளையின் மெய்யான ஆற்றல் எது என்று கண்டுபிடிப்பது எளிதன்று. அதற்கு பொறுமை, நிதானம், திறந்த மனப்பான்மை ஆகியன அவசியம். பெற்றோரும் ஆசிரியரும் பிள்ளையைக்குறித்து வைத் திருக்கின்ற திட்டமும் எதிர்பார்ப்பும் பிள்ளையினு டைய ஆற்றலுக்கும் ஆர்வத்துக்கும் முரணானதாகவும் இருக்கலாம். இந்த முரண்நிலை ஒரு மந்த நிலையை உருவாக்கும்.
இந்த நிலைக்குக் காரணம் என்ன? நோக்கமற்ற கல்வி ஒரு காரணம். பெரும்பாலான பெற்றோ ருடைய எதிர்பார்ப்பு, தமது பிள்ளைகள் அனைத்துப் பாடங்களிலும் திறமைச்சித்தி அடைய வேண்டும் என்பதுதான். சில பாடங்களில் பிள்ளைகள் கூடிய எண்கள் பெறாவிட்டால் அந்தப் பாடங்களில் விசேஷ் கவனம் செலுத்தி அந்தப் பாடங்களிலும் எப்படி யாவது திறமைச் சித்தியடைய வைக்க பகீரதப் பிரயத் தனம் எடுக்கின்றனர். சில ஆசிரியர்கள் தங்களிடம் பியூஷனுக்கு வரும் மாணவருக்கு அதிக புள்ளிகளைக் கொடுத்து உண்மைக்குப் புறம்பானதும் பிள்ளையின் எதிர்காலத்துக்குப் பாதகமானதுமான ஒரு நிலையை உருவாக்குகின்றனர். கல்வியின். மெய்யான நோக் கத்தை அறிய மனதில்லாமல் இருக்கும் இவர்கள் பிள்ளையின் எதிர்காலத்தோடு விளையாடுகிறார்கள்
எந்தத் துறையில் பிள்ளைக்கு இயல்பான ஆற்றல் இருக்கின்றது? எந்தத் துறையில் பிள்ளைக்கு இயல்பான ஆர்வம் இருக்கின்றது? என்பதை கண்டு கொள்வதுதான் கல்வியின் பிரதான நோக்கம் தமக்கு மனப்பாடமாகத் தெரிந்த எல்லாவற்றையும் பிள்ள்ை யின் மனதுக்குள்திணிப்பதல்ல கல்வி தனது சுய
 

புத்தியினாலும் ஆர்வத்தினாலும் உந்தப்பட்டு எந்தப் பாடத்தில் அவன் ஏனைய பாடங்களைவிட அதிக ஆற்றலை வெளிப்படுத்துகிறானோ அந்தத் துறையில்தான் அவனுக்கு இயல்பான ஆற்றல் இருக்கின்றது என்பது கண்கூடு. ஆனால் அனைத்துப் பாடங்களையும் கற்பதற்குரிய வாய்ப்புகள் இருக்க வேண்டும்.
எமது நாட்டின் கல்வி முறை சரியில்லை என்று குறைகூறிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை. 11 வருடக் கல்வியின் இறுதியில் மாணவனுடைய மெய்யான ஆற்றல் எது என்று தீர்மானிப்பது 3 மணிநேர வினாத்தாளா? அல்லது பெற்றோரும் ஆசிரியரும் மாணவனுடைய அ  ைடவு க  ைஎா ஆராய்ந்து அ வ னு டன் கலந்தாலோசித்து எடுக்கும் தீர்மானமா? தற்செயலாக பரீட்சை நாட்களில் பிள்ளை நோய்வாய்ப்பட்டு அல்லது மன உளைச்சலுக்கு உட்பட்டு இருந்தால் பெறுபேறுகள் சுட்டும் தரக் குறிகள் என்ன ? பெற்றோரும் ஆசிரியரும் இந்த 11 வருட காலத்தில் இந்த மாணவனிடம் கண்டுகொண்டவை யாவை? பிள்ளையினுடைய அந்தத் திறமைகளைக் கண்டுகொள்வதற்கு பாடசாலை எடுத்த முயற்சிகள் என்ன? இந்த அவதானங்களின் அடிப்படையிலும் பிள்ளையின் ஆர்வத்தின் அடிப்படையிலும் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெற்றியை மட்டுமே தரும் . 1
பதில் சந்தேகம் உண்டா?

Page 29
என்ன செய்தாலும் சில தொத்து வியாதியள .הrrrח| மண் தடுக்கேலாது. எல்லாருக்கும் ஒரு வயசில வாற மாதிரி வெளிநாட்டு விசர் ஒண்டு தொத்திற்றுது என் செல்ல மகளுக்கும்.
திருகோணமலையில் இருந்து கொழும்புக்குப் போய் பாஸ்போட்டையும் அடுத்து, விக்கினமில்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்பி விவக்கக்கர்ப ஏஜன்ஸிகாரன் ஆரையும் கையோ கண்டு அழுது போட்டு வருவ பெண்டு பயணத்துக்கு அடுக்குப்பண்ணினம்.
கொழும்பிவ அறிஞ்சனவ தெரிஞ்சவை வீட்டில போய்த் தங்கி மினக்கெடுறதெண்டது இந்தக் காலத்தில் ரெண்டு பக்கத்தாருக்கும் பிரச்சினை ஒருநாள் வேலை காக பதிவு இதிவெண்டு பொலிஸ் ஸ்ரேசன் வழிய போய்த் தொங்கிக் கொண்டு நிண்டு இழுபடுறதும் உசிதப்படாது. போன்மா வந்தா எண்டு வேலையை முடிச்சுக்கொண்டு போன சுறுக்கில மூச்சுக்காட்டாமல் % திரும்பி வாறதுதான் புத்தி. அதுக்கு ராக்கோச்சிதான் தோது.
என்ஜினோட தொடுத்து ரெண்டாம் வகுப்புப் பெட்டி ரெண்டு. அதுக்கங்கால மூண்டாம் வகுப்புப் பெட்டியன மறைச்சாப்போல Buரி: எண்டுற சாப் பாட்டுப் பெட்டியோட றெயின் வந்து நிண்டுது. அடிச் சுப்பிடிச்சு அள்ளுப்பட்டு தெரிஞ்ச சேக்கஸ் எல்லாம் காட்டி ஒரு மாதிரி கோணர்சீற் பிடிச்சு குதூகலப்ப றெயினும் வெவிக்கிட்டுது.
றெயில்ல, பஸ்ஸில் எண்டு பயணம் போகேக்க தான் மனிசி என்னோட மனம் விட்டுப் பேசிறவ. மனம் விட்டெண்டால், சொந்தக்கதரின் சோகக் கதை பாளையம் பக்கத்து வீட்டாக்களின்ர பரிசு கேடுகளையும் வண்ண்மா, வடிவா, விளப்பம் அவிட்டு விடுறதுதான்.
பன்னிரண்டு மனிதாண்ட, மனிசியும் விடுப்புக் கதை பறைஞ்சு வாயுளைஞ்சு கண்ணை மூடத்து வங்கீற்றா, சாடையாக் கண்னை முடிச் சாய்வம் எண்டு நானும் நினைக்க, திடுதிடெண்டு உள்ளிட்டங்கள் அஞ் சாறு விறுத் தடியன்கள். ஆமி, பொலிஸ்காரரை அடிக்2 கர பாக்கிற பாக்கியம் பெற்ற எங்கிட ஆக்களுக்கு அவ: * புளின்ர அங்கங்களப்பற்றிச்சரங்கோ பாங்காச் சொல் வத் தேவையில்லை. வந்தவங்கிட கையில வாளுகளும், :பொல்லுகளும் என்ஜின் பக்கமா அன்னஞ்சிருந்த சீட்:
டி) இருந்து பாத்துக் கொண்டிருந்த எனக்கு என்ன நடக் குது, ஏது நடக்குதெண்டு முதலில ஒண்டுமா விளங்x கேவ்வை, விளங்கின்ாப்பிறகு முளை வேலை செய்ய மாட்டனெண்டுSLike பண்ணிற்றுது,
பெரும்பாலும் என்ன்ன்ப்போல Witnt இல பயணஞ் செய்யிற, மற்றவையவிட கொஞ்சம் வசதி யான மிடில் கிளாஸ் ஆக்கள்தான்ே செக்கண்ட்' கிளாஸ்பில் போறவை. பொதுவாக அவயள் மற்றவய' ளோட அடிதடிக்கெண்டு இறங்காத சிாதுவான அப்' பிராணி ஆக்கள். எங்கிட நடப்பும் நாட்டாமையும்
 

வழமையா வீட்டுக்க தானே. அதமிஞ்சிப் போனால் * "அரையப் போட்டிட்டு அடுத்த வளவுக்காரனோட வாயால் சண்டித்தனம் பண்ணிறதோடசபி.
கேட்டு கேள்வியில்லாமல் முறையா எல்லாம் நடக்குது. ஏதோ தந்து வச்சதை திருப்பி வாங்குமப் |போல உரிமையோட நகை நட்டுகள்ை உருவிக்கழட்டி: அடுக்கிறான்கள். நடக்கிறதெல்லாம் கனவா நினைவா எண்டு விளங்காமல் நித்திரை மயக்கத்தில கிடந்த சன மெல்லாம், கோழிக்குஞ்சுகளை பருந்திட்ட இறாஞ் சிக் குடுத்த தாய்க்கோழியளப்போல மலாாடிச்சுப்போய் மாங்கிக் கொண்டிருக்கினம்.
பிச்சைக்காரனுக்கு அம்பது சதம் குடக்கிறதெண்டா லும் அறுவது தரம் யோசிச்சு மூளையப் பிணையிற ஈயாப்பிசினியனான எங்களுக்கு உது தேவைதான். எண்டாலும் 83 இல தொட்டு, முறைக்கு முறை விரும் பியோ விரும்பாமலோ குடுத்துச்சிவந்த கை எங்கிட்கை எண்டதால கர்ணன்ர பரம்பரேவ வந்த எங்களுக்கு இதொண்டும் புதுசில்லைத்தானே? காசைக்குடுக்க கஞ்சப்பட்டினமோ என்னவோ ஒண்டு ரெண்டு பேருக்கு முறையா சாத்துப்படியும் நடந்துது பாத்துக் கொண்டிருந்த எனக்கு வயித்தைக் கலக்குமாப்போலே கிடக்கு எழும்பிIlet க்குப் போவமெண்டாலும் நடக் காது. நாசமறுப்பான்கள் நாலுபேர் நட்டுவக்காலியளப் போல நடுவழியில எல்லே மறிச்சுக்கொண்டு நிக்கிறான்கள். கொஞ்சம் அசங்கினாலும் கையில் வச்சி ருக்கிறதாவ தீட்டிப் போடுவான்கள். எல்லாத்தையும் அடக்கிக் கொண்டு இருக்கவேண்டியதுதான்.
கலியானம் முடிச்ச புதிசில் பாத்தாப் பிறகு என்று மணிசிய உள்ளபடி உருப்படியா நான் பாத்தது அண்டைக் குத்தான். தாலி, தொங்கட்டான் எண்டு உள்ள நகை நட்டெல்லாத்தையும் அம்மனுக்குச் சாத்துமாப்போல சாத்தியண்டு அலங்கார பூசிதையா என்ர சகதர்மணி எழுந் தருளி வந்திருக்கிற அந்தத்' திருக்கோலத்தைக் காணக் கண்னராவிப் போச்சுது, மகளையும் குறை சொல்லு மாப்போல விடேல்ல. காப்பு, சங்கிலி, கழுத்துமாலை, கைச்சங்கிலிபெண்டு நவீன டிசைனில பாத்துப் பாத்துச் செய்த பணியாரங்களை எல்லாம் போட்டு தங்கப் பவுண்ான பிள்ளையெண்டு சொல்லுமாப்போலசிங்காரராத்தான் சோடிச்சிருந்தா.
பிறிஞ்சிப்பலுக்கு முன்னால் தன்னும் வளையாத இது நான் பள்வியமாக எழும்பி என்னால ஆனமட்டும் வளளஞ்சு நிண்டன். ஆனாலும் நாரிப்பிடிப்பு 30 பாகைக்கு மேல் வன்னய விடமாட்டன் எண்டிட்டுது. அது அவனுக்கு விளங்கினால் எல்லே. விட்டான் ஒரு நெவிள் அடி செவிட்டைப் பொத்தி விண் கூவிச்கது. அரைப் போத்திலை நாவர அடிச்சமாதிரி தலை கிறு கிறுத்தது. அதுக்குப்பிறகு நடந்ததெல்லாம் மங்கலாத் தான் ஞாபகமிருக்கு
செக் பொயின்ரில் ஆமிக்காறன் செக்பண்றதவி
মৃত্যু - - -

Page 30
வலுதிறமாமேலை இருந்து கால்வரை தடவி (பாவம் ஏசன்சிகாறனுக்குத்தான் லக்கில்லாமல் போய்ற்றுது) பாலைப்பழம் போல பொதிஞ்ச வச்ச அந்தக் காசோட மிச்சக்காசையும் அவன் வழிச்சுத் துடைச்செடுத்த விருத்தாந்தத்தை சொல்லித்தான் தெரியவேணுமே?
என்னோட படிப்பிக்கிற சமயபாட உச்சர் மணிசி ஒண்டும் அதே றெயின்ஸ் புரிசனோட வந்தவை. எங்க ளைப்போல இவ்வாட்டிக்கும் குறையில்லாமல் நகை நட்டெல்லாத்தையும் தாரை வாத்துக் குடுத்துப் போட்டும் மனுசி கிணுங்காமல் செந்தளிப்பா முகத்தை வச்சுக் கொண்டிருந்தது எனக்குப் பெரிய ஆச்சரியமாட் போக்கது. மண்ணையும் பொன்னையும் சம்மா மதிக்கிற அளவுக்கு மணிசி பக்குவப்பட்டிட்டுதாக்குமெண்டு விண்ச்சன். மன்ன் டக் குடைச்சல் தாங்கேலாமல் பிறகொரு நாள் மனிசிட வாயைப் போய்க் கிண்டினன். அப்பதான் விஷயம் வெளிக்கது. மனிசி போட்டுச் கொண்டு வந்ததெல்லாம் கிவிற்று நகையாம். மனிசனுக் குக்கூட உது தெரியாதாம் உண்மை தெரிய வந்து எப்ட வீட்டிவ பூகம்பம் வெடிக்கப்போ குதோ எண்டு நடுங்கிக்கொண்டிருந்த மனிசிக்கு வாய்ப்பாப் போயிற் 'றுது புரிசனையும் பேய்க்காட்டி வந்த வெங்கனாந்தி பளையும் ஏமாத்தி ஒரே கல்வில ரெண்டு மாங்காயடிச் சால் முகத்தில் செந்தளிப்பு தாண்டவமாடாமல் வேத என்ன செய்யும்?
அடுத்தடுத்த நாள் பேப்பறில் ஒரு மூல்ேல இந்த நியூஸ் வந்தது. சில நேரம் பாத்திருப்பியள். நாங்கள் போன றெயில்வதான் நடந்ததெண்டு ஆண்டை அயல் இருக்கிறவைக்கோ சொந்தக்காறடுக்கே தெரியாது. நாங்களும் இதைப்பற்றி மூச்சுக்காட்டேல்லை. பொறா மைப் பிடிச்ச சனங்கள் தெரிஞ்சா வினா சந்தோஷ்ட் பட்டிடுங்கள் ஏதாவதொண்டை இழந்துதான் |ஒண்னிடப்பெற வேணும் எண்டுவினம், அதுவும் சர் தான். நகை நட்டுப் போனதோட மனிடே உடம்பில் மாற்றம் வந்திருக்குது.
நகை நட்டக்குடுத்து பிரெஷறை வாங்கி வச்சிருச் 2 கிறா. தங்கத்தின்ர விலை ஏறுதெண்டு பேப்பர் வழிய, 'வாசீக்கேக்க எனக்குமிப்பு பிறெஷர் ஏறீற்றுது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 31
DGDE
கால்பந்தாட்ட ரசிகர்களின் கனவுத் திருவிழா துள்ளது.விளையாட்டுலகில் அதிக ரசிகர்களைக் கொன் கால்பந்தாட்டப் போட்டிகள் அமைகின்றன. 1930 ஆம் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ள தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகியுள்ளன. 32 அணி நிரூபிக்கவுள்ளன. மொத்தம் ேேபாட்டிகள் நடைபெறவு
உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளை நட பீபா(fi) 1904 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னே பாட்டாக அங்கீகரிக்கப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்சில் நடந்த ஒலிம்பிக்கில் கால்பந்தாட்டம் இன உருகுவே, சுவிட் சர்லாந்து அணிகள் மோதின. அதில் பந்தாட்ட சாம்பியனானது.
அதன் பின்னர் சர்வதேச அளவில் உலகக் கிண்ண
கால்பந்தாட்டக் கூட்டமைப்பு தீர்மானித்தது. முதன் மு: கிண்னக் கால்பந்தாட்டபோட்டிகள் நடைபெற்றன. அதி
4 ஆண்டுகளுக்கொருமுறை போட்டிகள் நடைெ
 
 

இம்மாதம் ஜூன் 11 ஆம் திகதி முதல் ஆரம்பித் ட கால்பந்தாட்டத்தின் சிகரமாய் உலகக் கிண்னக் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை 18 உலகக் ன. 19 ஆவது உலகக் கிண்ண போட்டிகள் தற்போது கள் அடுத்த மாதம்வரை மோதி தம் பலத்தை ள்ளன.
ாத்தும் சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பான ர சர்வதேச அளவில் கால்பந்தாட்டம் ஒரு விளை இனைத்துக் கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் னத்துக்கொள்ளப்பட்டது. இறுதிப் போட்டியில் உருகுவே வெற்றி பெற்று முதல் ஒலிம்பிக் கால்
கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்த சர்வதேச தலில் 1930 ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் உலகக் ல் உருகுவே வெற்றிபெற்றுசம்பியனானது.
பறும் வகையில் அட்டவணைப்படுத்தப்பட்டன.
KOFFR
| Côte d'Ivoire
' "تي
Portugal

Page 32
இருந்தாலும் உலகப்போர் காரணமாக 1943, 1948 அதன் பின் 1950 ஆம் ஆண்டு முதல் இன்று வரை வருகின்றன.
இதுவரை அதிக உலகக் கிண்ன கால்பந்தாட் அணிக்கே உள்ளது. இத்தாலி 17ஆவது தடவைய மெக்ஸிகோ 14ஆவது தடவையாகவும், ஸ்பெயின்
பிரேசில் 5 முறையும் இத்தாலி 4 முறையும், ஜெ என்பன 2முறையும், பிரான்ஸ், இங்கிலாந்து என்ப
இம்முறை பல நாடுகளின் முக்கிய வீரர்க முடியாமையால் அந்த அணிகள் சாதிக்குமா என்பது
பிரேசில், இத்தாவி, இங்கிலாந்து, ஜேர்மனி, முன்னேறிச்செல்லுமென எதிர்பார்க்கலாம்.
உலகக் கிண்ணத்தை முத்தமிடப் பல அணிகள் முத்தம் பெற ஆசைப்படுகிறதோ .
IEEE
HEID
| ||-
KOTO
HF
IEE
 
 
 
 
 
 
 
 

ஆம் ஆண்டுகளில் போட்டிகள் நடைபெறவில்லை. எந்தவித தடங்கலுமின்றி போட்டிகள் நடைபெற்று
ட தொடரில் (19) பங்குபற்றிய பெருமை பிரேசில் ாகவும், ஆர்ஜென்ரினா 15 ஆவது தடவையாகவும் 13ஆவது தடவையாகவும் களம் காண்கின்றன.
ஜர்மனி 3 முறையும், உருகுவே மற்றும் ஆர்ஜென்ரினா ன முறையும் உலகக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளன.
ள் உபாதைக்குள்ளாகி போட்டிகளில் பங்கேற்க கேள்விக்குறியே.
ஆர்ஜென்ரினா, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள்
முயன்றாலும் உலகக் கிண்ணம் யார்வசம் சென்று
III, II, tillII, II, IIի DAIN, GALI, NEGOITTI II, II III. H
ருெருவே இருருனே NHH
site ந்ேதாவி பிரான்சி இந்நாயி ALBIdi) ருகுவே er influeriteAOITÍby CBDMBHNIDOs UtillLeft 'Bildt) élt Bieldi Reftist @%fillefile ) Isih CAPTAEHHI
Distiläs III Köyfeshedefi ifleri thfth SHIN HII
FOLLIT in histol O LEADÓIBH III Mbi ditë fleti 甘壘 ருந்தார் Burigji MIMI ■ fóAIDIAMI Filofi) *轟 பிரான் M Óley||I||I||I||I||I||I/FFILIIT Är fill Hjir)
HATITIE வித்தாயி
silbfilm IIsl|fiffiff
நப நாடு பழகர் நாடகபாடு ப அ = வெற்றி பெற்ற அர
ா பங்குபற்றிய நாடுக

Page 33
மருத்துவரிடம் வருபவர்களில் பலர் களைப்பாயிருக்கு என்று சொல்லுவார்கள். காய்ச்சல், வயிற்றோட்டம், வாந்தி போன்ற நோய்களால் போஷாக்கு இழந்தவர்கள்களைப்பாக இருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி மிகவும் ஆரோக்கிய மான உடல் நிலையில் இருப்பவர்கள் அல்லது அவ் வாறு பார்வைக்குத் தென்படுபவர்கள்கூட சொல்லிக் கொண்டு வருவார்கள்.
"சத்தெல்லாம் பிழிஞ்சு எடுத்தமாதிரிக் கிடக்கு", 'உடம்புக்கு ஏலாதாம்', "ஒண்டுமே செய்ய முடிய வில்லை'. இப்படி எத்தனையோ வாசகங்கள். வழமைபோல இயங்க முடியாதிருத்தல், ஊக்கக் கேடு, உற்சாகமின்மை, சோம்பலாக இருத்தல் போன்ற யாவும் இந்தக் கிளைப்பிற்குள் அடங்கும். ஆங்கிலத் தில் Fatigue என்பார்கள். ஆனால் இது நித்திரை கொள்ள வேண்டும் என்ற நிலை எனப்படும் தியக்கம் (Drowsiness) - SIL.
பெரும்பாலும் இக் களைப்பு என்பது உடலின் ஒருவித தற்காப்பு முயற்சியாகும். கடுமையான உழைப்பு, உளநெருக்கீடு, போதிய ஒய்வின்மை, உற்சாகமற்ற சூழல் போன்ற வேண்டாத தொல்லையி லிருந்து மீள்வதற்கு எமது உடலும் உள்ளமும் எடுக்கும் எதிர்வினைதான். போதிய ஒய்வு எடுத்ததும், நன்கு தூங்கி எழுந்ததும் அல்லது மகிழ்ச்சியான சூழல் கிட்டியதும் அது, தானாகவே மறைந்துவிடும். பெரும்பாலும் களைப்பு என்பது கடுமையான நிலை அவ்வ. பயப்பட வேண்டி பதும் இல்ல்ை.
மருந்துவரிடம் அத6ளிவாகச் விசாம்புறுங்கள் ஆனால் அவ்வாறு செய்தும் அது மாறவில்ல்ை எEல் மருத்துவரை நாட வேண்டிய தேவை ஏற்படும்.
 
 

மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் களைப்பு எத்தகைய வேலைகளின்போது ஏற்படுகிறது? வேலையுடன் தொடர்பில்லை எனின் எந்த நேரத்தில் ஏற்படுகிறது? போன்றவற்றைக் கவனித்துச் சொல்லுங்கள், காவை யில் படுக்கையிலிருந்து விழித்தெழும்போதே சோர் வாக இருந்து, அது நாள் முழுவதும் தொடர்ந்தால் மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கக்கூடும். மாறாக காலையில் மிக உற்சாகமாக இருந்து, நேரம் செல்லச் செல்ல களைப்பு அதிகரித்துச் சென்றால் அது தைரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்வதாக இருக்கலாம். அல்லது காலையில் நலமாக இருந்து சற்று நேரம் செல்ல, சோர்வும் தலைவலியும் சேர்ந்து வந்தால் அது சைனஸ் நோயாக இருக்கலாம். இவ் வாறு பல நோய்களை அறிகுறிகளிலிருந்தே மருத்துவர் ஒரளவு ஊகிக்க முடியும் என்பதால் உங்கள் அறிகுறி களை இயன்றளவு தெளிவாகச்சொல்லப் பழகுங்கள்.
][[ീ മ
இரத்துச்சோகை
எமது நாட்டிலும் மேலும் பல கீழைத்தேச நாடுகளிலும் இரத்தச் சோகை பரவலாக இருக்கிறது. பொதுவாக ஹீமோகுளோபிவின் அளவு ஆண்களில் 13 கிராம்(Hb 13gm) ஆகவும் பெண்களில் 12கிராம் (Hb 12gm) ஆகவும் இருக்க வேண்டும். இது குறைவாக இருந்தால் மூளை உட்பட உடல் உறுப்புகளுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது. இதனால் சோர்வும், களைப்பும், மந்தநிலையும் ஏற்படலாம். பிள்ளைகள் மனம் ஊன்றிப் படிக்க முடியாது சோர்வு தடுக்கும். சுறுசுறுப்பு குறையும். இது படிப்படியாக ஏற்படும் நிலை என்பதால் நோயாளியால் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். உடல், முகம், கண், நாக்கு போன்றவை வெளிறலாக இருப்பதை வைத்து மருத்துவரால் அறிய முடியும். சுலபமான இரத்தப் பரிசோதனை மூலம் நிச்சயமாக அறிய முடியம்

Page 34
Glfi. L'uffi
தூசி, காலநிலை மாற்றங்கள், கடுமையான மனங்கள், மகரந்தம் போன்றவற்றிற்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அடிக்கடி சளி, தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு அது சைன்ஸ் தொல்லையாக மாறிவிடுவதும் உண்டு. சைண்சைடிஸ் என்பது மண்டை ஒட்டில் நாசிக்கு அண்மையாக இருக்கும் காற்றறைகளில் அழற்சியும் கிருமித்தொற்றும் ஏற்படுவதாகும். இவை யாவும் தலைப்பாரம், களைப்பு, சோர்வுத்தன்மை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும், ஆஸ்துமாவும் இத்தகைய ஒரு ஒவ்வாமைச் சளி நோயே. மேலைநாடுகளில் வசந்த காலங்களில் பெரும்பாலும் காணப்படும் Hay f:W இத்தகையதே. இங்கு காலவேறுபாடுகள் தெளிவாக இல்லாத நிலையில் பலருக்கும் நாளாந்தம் தொல்லை கொடுக்கிறது.
நீரத்துவிதாங்கை கொடுக்கும் விகள்
மனிதர்களுக்கு பலவிதமான உடல் வலிகள் ஏற்படுகின்றன. உதாரண்மாக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது வீழ்ந்துவிட்டால் அடிபட்ட வலி தாங்க முடியாததாக இருக்கும். ஆனால் இது தற் காலிகமானது. பல வலிகள் வாரக்கண்க்கிலோ மாதக் கனக்கிலோ அன்றி வாழ்நாள் பூராவும் தொல்லை கொடுக்கலாம். மூட்டுவாதங்கள், முள், எலும்பு நோய்கள் போன்றவை அத்தகையவை. நீண்ட நாள் நீடிக்கும்போது வலிகள் மனச்சோர்வையும் களைப்பையும் ஏற்படுத்தும்.
மது மற்றும்போதைப்பொருங்கள்
இன்று எமது சமுதாயத்தில் மது பாவனை அதிகரித்து வருகிறது. போதைப் பொருட்களும் பலரை வசீகரிக்கின்றன. சிகரட்டும் இதில் அடங்கும். இவை மன உற்சாகத்தைக் கொடுக்கின்றன. ஆனால் அது போலியானது. அதாவது அதை உபயோகிக்கும் போது மட்டுமே உற்சாகத்தைக் கொடுக்கின்றது. உபயோகிக்காதபோது சோர்வும் களைப்பும் தோன்றும் உடனேயே மீள எடுக்கச் சொல்லும். ஆனால் நாட் செல்லச் செல்ல மேலும் அதி களவு பாவித்தாலே பழைய உற்சாகம் கிடைக் கும். நீங்கள் அவ்வாறு உபயோகிப்பவரா யின் அதனை உடனே நிறுத்துங்கள். குறைத்துக் குறைத்து நிறுத்தலாம் என எண்ணினால் நீங்கள் உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றுவதாகவே இருக்கும். நீங்களாக நிறுத்துவது கடினமாக இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள். உங்களது கணவன் அல்லது மகனது நடத் தையில் திடீர் * மாற்றங்கள் ஏற் % பட்டால் அவ % தானியுங்கள். ।।।। 品s门品 @守r尚 வு ம் வேறு நேரங்களில்
 
 
 
 
 
 
 
 
 
 

அதிக உற்சாகமும் கானப்பட்டால் இதுவும் மது அல்லது போதைப் பொருள் காரணமாக இருக்கலாம். இப்பொழுது பல பெண்களும் இதில் அடங்கு கிறார்கள்.
நூக்கக் ருருநாடு
பொதுவாக ஒருவருக்கு 6-7 மணிநேரத் தூக்கம் தேவை. இல்லாவிடின் மூளையால் சமாளிக்க முடி யாது. ஏனெனில் நீங்கள் தாங்கும் போதுதான் மூளையானது தனக்குக் கிடைத்த தகவல்களை ஒழுங்குபடுத்திச் சேமிக்கின்றது. போதிய தூக்கம் இல்லாவிடில் அதைச் செய்ய முடியாது சோர்வுறும். தூக்கக் குறைபாடு ஏற்படுவதற்கு உங்கள் வேலைப் பளுவும் காரணமாக இருக்கலாம். அல்லது நோய்க ரூம் காரணமாக இருக்கலாம். உடல் நோய்கள் மட்டு மின்றி மன உளைச்சல்களும் தூக்கத்தைக் கெடுக்கும். போதிய துரக்கம் என்பது படுக்கையில் கிடக்கும் நேரமல்ல, அமைதியாகத்துங்கும் நேரம் என்பதாகும். தூக்கத்தில் மூச்சுத் திணறல் (sleep HTH) சிவருக்கு ஏற்படுவதுண்டு. இதை நீங்கள் உணர மாட்டீர்கள். உங்களுடன் தூங்குபவர், நீங்கள் அமைதியாகத் துங்குவதையும் திடீரென தினறுவதையும் அவ தானிக்கக் கூடும். அவ்வாறெனில் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
владћGIFilципIlfil BпипTHEti.
தைரொயிட் சுரப்பி என்பது எமது கழுத்தில் குரல் இவளையை அண்டியிருக்கும்
ஒரு சுரப்பியாகும். இது

Page 35
தைரொஸ்சின் என்ற ஹோர்மோனைச் சுரக்கிறது. இது குறைவாகவோ அன்றி அதீதமாகவோ சுரந்தால் களைப் புச் சோர்வு, வியர்வை, குளிர் தாங்க முடியாமை, படபடப்பு, எடை குறைதல் அல்லது அதிகரித்தல் போன்ற பல்வேறு அறிகுறிகள் நோயின் நிலைக்கேற்ப தோன்றும். TSH, FTI போன்ற இரத்தப் பரிசோதனைகள் மூலம் இதனைக் கண்டறியலாம். இப்பிரச்சின்ை உள்ளவர்களுக்கு சுரப்பியில் வீக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. அதேநேரம் கழுத்தில் களலை இருக்கும். அனைவருக்கும் இந்நோய் இருக்கிறது எனவும் கருத வேண்டாம்.
LIDGJELBE II sisi
பெரும்பாலானவர்களுக்கு களைப்பு என்பது மனதோடு சேர்ந்தது. மனச்சோர்வு, உள நெருக்கீடு, மனப்பதகளிப்பு போன்ற பல்வேறு உளம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்களில் முக்கிய அறிகுறி, களைப் பாகத்தான் இருக்கிறது. இதை நோயுள்ளவர்கள் உனர் வதில்லை. உடலில் உள்ள பிரச்சினைக்கு மனம் காரண மாக இருக்கும் என்பதை மருத்துவர் கூறினாலும் பலரும் ஏற்றுக் கொள்வதில்லை. எனக்கு ஒரு கவலை பும் இல்லை. யோசனையும் இல்லை என மறுப்பவர் கள் ஏராளம், காரணம் மனநோய்கள் பற்றி எமது சமூகத்தில் இருக்கும் தப்பான அபிப்பிராயம்தான். விசர், பைத்தியம், அங்கொடை எனப் பல பிம்பங்கள் மனநோய்கள் பற்றி அவர்களுக்கு உண்டு. வேலைத் தளத்தில் உள்ள நெருக்கீடு, பரீட்சையில் உச்ச மார்க் பெற வேண்டும் என்ற துடிப்பு, வீட்டிலும் சமூகத்தி லும் நிதம் சந்திக்கும் சாதாரன பிரச்சினைகள்கூட உள நெருக்கீட்டிற்கு காரணமாகலாம் என்பதை பல ரும் புரிந்து கொள்வதில்லை. எனவே நெருக்கீடுகள் உங்கள் களைப்புக்குக் காரணமாக இருக்கலாம் என் றால் அதை உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். அல்லது மருத்துவர் அவை பற்றி தானாக விசாரித்தால் தயங்கா மல் வெளிப்படையாகப் பேசி உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணமுயலுங்கள்.
வேறு தீவிரகாராங்கள்
அவை தவிர பல தீவிர நோய்களும் களைப்புக்குக் காரணமாக இருக்கலாம். நீரிழிவு, இருதயச் செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, ஈரல் செய லிழப்பு, சயரோகம், புற்றுநோய்கள் ஏன் எயிட்ஸ் கூட
TITAT DITA, SLUIT.
நீங்கள் செய்யவேண்டியது
எனவே போதியளவு தூக்கம், போஷாக்கான உணவு தினசரி உடற்பயிற்சி, அளவான வேலை, போதிய ஒய்வு, மகிழ்ச்சியான சூழலுக்கு மாறுதல், மன அடக்கப் பயிற்சி (யோகா, தியானப் பயிற்சி), போதைப் பொருள் தவிர்ப்பு போன்ற ஆரோக்கிய மான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள். அவ்வாறு செய்தும் உங்கள் களைப்பு குறையாவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது
மிகவும் அவசியம் ஒருடு Tr. SS
நான் நரியன். நீ சந்திரன் சந்திரன் சூரியனிட்டயிருந்து வெளிச்சத்தை வாங்கம் ܢ | நீ என்ன பயிருந்து பணம் வாங்குவ ஆனா பிரண்டு பேருமே திருப்பித்தராடங்க
32இல்
 

Keyboard Software
வேலைப்பழு பதட்டம் ஆகியவற்றால் நாம் சிலநேரம் எம்மை TTTTTT uT u S uuuu uuuuLLL LLueeOLLLLLLLL LLCL LLLLLS ATeeuuT LTT LL LLLLLL TTTTT LL ueuu uu TTTuTTLL LLLS எமது கண்ணிகளைப் பயன்படுத்தலாம் அப்படி நாம் இஸ்லாத
ELIILLTL செயதிருக்கின்றனர் என்று பார்ப்பதற்கு ஒரு பென் பொருள்
உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் பின்புலத்திலேயே இச்சுட்டியை நீங்கள் இயங்கவைக்கலாம். இது இயங்குகின்றது என்று உங்கள் கனணியை பயன்படுத்து வர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் என்ன செய்தாகள் என்பதை ஒரு கோப்பில் நமக்குத் தருகிறது. கீழே உள்ள படத்தை JITTTTTEBEELD,
A
L5 =
LLLLLL LL L LL LLDL D LD DDD DD D DuD uu LL LLLL LL L S L
--
FT"TTT Haim mm o
I என்ற பட்டளைத் தட்டினால் ந்ேத மென்பொருள் இயங்க ஆரம்பித்துவிடும். பின்நீங்கள் கனணியைவிட்டுச்செல்லும்போது என்ற பட்டனைத் தட்டினால் பின்புலத்தில் இயங்க ஆரம்பித்து
பிடும். மீண்டும் கொண்டுவரப+++HF இவற்றில் தாவது ஒன்று:அழுத்தவும்.
| = क का हवा धावा का
"F=*=ना
下|一_
|L |-
F=F=1 या =
his
H lliligi Himi m TTI:IIIIIIII IIJ III.
li ATinilla nim lar பேயாடி -
LSSS D D S = p#:
உதாரணமாக நீங்கள் சென்ற பின் உங்கள் கனான்ரியைப் பயன்படுத்தி ஒருவர் டைப் செய்கிறார் என் வைத்துக்கொள்வோம் Hவர் என்ன டைப் செய்தார் என்பது அனைத்தும் நமக்குத் தெரிந்து பிடும். படத்தைப் பார்க்கவும்
। செய்த அனைத்தும் לו ללא היה לל בחוד
". "பாது | EC CEFEITLILJITF GTIFIEEE, GE &e.
Galicit என்பதை நாம்
சென்று கூறலாம். கீழே به بیماریهایی است.
ed in உள்ள படத்தைப் பார்க்கவும்
— இந்த பொருளை
프--- டவுன்லோ செய்ய இந்தச்
பாா dF LF51) Li F T Gill T i El, Lir
Gla illusiqin, Ipsww.dent.
EDITI LI JWT Jad.php?IDI LILLI *Pulitishin” =Hit II

Page 36
ஜூன் மாத சஞ்சிகை பார்த்தேன். பார்ப்பதற்கு புதிதாக இருந்தது. சிறையிலிருந்து ஒரு மடல் மனதை நெகிழ வைத்துவிட்டது. கண்ண்ேறு சூப்பர் மருத்துவ கட்டுரை எழுதும் முருகானந் தத்துக்கு ஒரு சபாஷ் போடலாம். மிகவும் ஜனரஞ் சகமாக எழுதுகிறார். இலக்கியம் நயத்துடன் வெளிவந்திருந்தது. தோட்டியின் பதிவு காலத்தின் தேவை. எழுதாவிட்டால் திருந்த மாட்டார்கள். TTS LLLLTuTTTLLTLTTS aLCCLLL L TYLT TTLLLLL
இருக்கிறமுக்கு ஆரம்பத்திலேயே வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். காரணம் புதிய முயற்சி யில் வெளியிட்டமைக்கு புத்தகத்தை எடுத்ததும் முதலில் நான் பார்ப்பது கடைசிப் பக்கத்தைத்தான். காரணம் இருப்பை பார்ப்பதற்கு. ஆனால் அவ் விடத்தில் கொஞ்சநேரம் இருந்தது. நானும் என்ன என்று வாசித்தேன். அட இந்த 8 இல் இவ்வளவு இருக்கா என்று வியந்தேன். அனைத்து ஆக்கங்களும் நன்றாக இருக்கின்றன. வாசிப்பதற்கு இலகுவாக இருக்கின்றது.
In fil. GLED LIHAT ilirlifti Fiul I, KTERIJA
ஆசிரியர் அவர்கட்கு வணக்கம். கடந்த இருக்கிறம் புதிய அமைப்பில் வெளிவந்ததைப் பார்த்தேன். நல்ல மாற்றங்களை நிச்சயம் ஏற்றுக்கொள்ளலாம். கிரைம் பக்கம் திகிலூட்டுகின்றது. வடக்கு கிழக்கு
ஆக்கங்களை மட்டுமே பிரதிப வித்து வந்த இருக்கிறமில் அண்மைக்காலமாக மலையக எழுத் தாளர்கள் மற்றும் மலையக பிரச்சினைகள் சம்பந் தப்பட்ட ஆக்கங்களும் வெளிவருவது உண்மையி லேயே வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள். மாரேன்ேபாராளுடன்
를 'வாசகர்களே இருக்கிறம் பற்றியிஉங்கள் Liga 'ஆலோசனைகளையும் நபாாண்ட முறமாகவோ
மின்னஞ்சல் மூலமாகவோ னங்களுக்கு எழுதி அது "வாசகர் கருந்து"பகுதியில் பிரசுரிக்க காந்திருக்கின்ே
முகவரி- இருக்கிறம்,
3 டொரிங்டன் அவனியூ கொழும்பு-07 tflaires (5gsi-irukirantagnail.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்ற இருக்கிறம் பார்த்தேன். கொம்பனித்" தெருவில் நடந்த அராஜகத்தை பிரதிபலிக்கும் அட்டைப்படம் சிறப்பாக இருந்தது. முற்றிலும் வித்தியாசமான அமைப்பினைக் கொண்டு வெளி வந்துள்ளது. ஆக்கங்கள் வழமையாக நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே வெளிவந்துள்ளன. ஆசிரியர்தலையங்கம், பதிப்பகத்தார், கார்ட்டூன், க்ரைம் பக்கம், தொடர், கட்டுரை, சட்டம், மருத்துவம், இலக்கியம், தோட்டியின் பதிவு என அ  ைனத்து ஆக்கங்களுமே சிறப் பாக
இருக்கின்றன. தொடர்ந்து வளர வாழ்த்துக்கள். T. EFTER LITTEīleofil, Galiiiiiiiii Teilnīraeli
வணக்கம் கடந்த இருக்கிறம் கிடைத்தது. வேண்டிய திகதியில் அல்ல. மிகவும் தாமதமா கவே கிடைத்தது. இது வழமையாக நிகழும் ஒரு சம்பவம். ஒரு இதழ் அதற்குரிய திகதியில் வெளி வரவில்லையாயின் அதைப் பற்றிய எதிர்பார்ப்பு குறைந்துவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சஞ்சிகையை வாங்க கடைக்குச் சென்றால் இன்னும் வரவில்லை என்று கூறுகின்றனர். நாங்கள் எத்தனை முறை சென்று கேட்பது? ஆகவே சில நேரம் அதற்கு பதில் வேறு சஞ்சிதை களை வாங்கிச்செல்வதும் உண்டு. உரியவர்த கவனத்தில் எடுக்கவும்.
Girth, Llangyl II Tritistir, tua diagewidium
. . . . . . . . . . . . . . . . . இகுதி
■ " . ====

Page 37

தமிழ் இலக்கியப் பரப்பிலே புலவர்கள் பெண் களை மலருக்கு ஒப்பிட்டுப் பாடுவது சர்வசாதாரண மான ஒரு நிகழ்வு என்பதை நாம் அறிவோம்.
மங்கையர்கள் மலர்களென்றால், வண்டுகள் அவர்களை நாடிச்செல்வது இயற்கையல்லவா?
இதனாற்றான் போலும் தமிழ் இலக்கியப் பரப் பிலே வண்டும் வனிதையரும் பற்றிய பாடல்களை நாம் ஏராளமாகக் காணமுடிகிறது. அப்படிப்பட்ட தமிழ் இலக்கிய பாடல்களில் சிலவற்றை இங்கு எடுத்து நோக்குவோம்.
தமிழ் இலக்கிய பரப்பிலே சிற்றிலக்கிய நூல் வரிசையிலே நளன் சரிதம் கூறும் நளவெண்பா மிகமுக்கிய இடத்தினை கொண்டுள்ளதை நாம் அறிவோம். இதற்கு அதன் கதையும் ஒரு காரணம் எனலாம். நளன் - தமயந்தி காதல் விவகாரம் ஒரு வித்தியாசமான பாங்கினையுடையது. இவர்களது காதல் விவகாரத்தில் தலையிட்டவில்வர்கள் சாதாரண மனிதர்களல்லர், சகல சக்தியும் கொண்ட தேவர்கள். அதனால்தான் நளன்-தமயந்தி திருமண விழாவினை நாம் எல்லோருமே ஆசிர்வதிக்க வேண்டியவர்களாக உள்ளோம். இனி விடயத்திற்கு வருவோம்.
நளன், தமயந்தியைக் காதல் திருமணம் செய்து தனது நிடத நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றான். தேரிலே நளனின் அருகே இருந்தவண்ணம், தமயந்தி தனது கனவனின் நாட்டின் சிறப்பினையும், அழகினை யும் ரசித்தவண்ணம் பூரிப்படைகிறாள்.
நளன் இடையிடையே தமயந்தியைப் பார்த்து அதோ பார், இதோ பார் என சில காட்சிகளைச் சுட்டிக்காட்டிதமயந்தியை மகிழவைத்ததோடு தானும் மகிழ்கின்றான். இப்படியாக தமயந்திக்குக் காட்டிய காட்சிகளில் ஒன்று "வேர்த்தாளைக் காண்’ என்ற
IT".
நளன் தமயந்தியைப் பார்த்து அதோ வேர்த்துப் போய் நிற்கின்ற ஒரு பெண்ணைப் பார் எனக் காட்டினான். நளன் காட்டிய அந்தப் பெண் எதற்காக வேர்த்தாள்?
கொள்ளி கொத்தி வேர்த்தாளா?
அல்லது
நெல்லுக்குத்தி வேர்த்தாளா?
அல்லது
வயல் வேலை செய்து வேர்த்தாளா?
அல்லது
வீட்டுவேலை செய்து வேர்த்தாளா?
எதற்காக வேர்த்தாள்?
மேற்கூறிய எதனையும் அவள் செய்யவில்லை. அப்படியாயின் எதற்காகவேர்த்தாள்?
நளவெண்பாவில் புகழேந்திப் புலவரே அதனைக் கூறுகிறார்.
மங்கையொருத்தி
மலர்கொய்வாள்வான்முகத்தை
பங்கயமென்றெண்ணிப் படிவண்டை
செங்கையால் காத்தாள்
அக்கை மலரை
காந்தள் என்ப் பாய்தறுமே

Page 38
W.
霞
蠶 *
வேர்த்தாளைக் காண் என்றான் வேந்து மங்கையொருத்தி மலர்கொய்வாள் அவள் வான்முகத்தைபங்கயமென்றெண்ணிப் படிவண்டை தன் செங்கையால் காத்தாள், காத்தாளின் செங்கையை வண்டு காந்தள் என நினைத்துப் பாய்தறுமே வேர்த்தாள் அப்படி வேர்த்தாளைக் காண்என்றான்
dl(frరికి 5మీ " சிறுநீரகத்தில்
அமெரிக்க மருந்
தண்ணீருடன் * பரிசோதித்தே து புள்ளியில் இ
எலுமிச்சையி: பழங்களைக்
தடுப்பதில் எ
※ சாத்துக்குடி த உள்ளது என் இயக்குனரான
·
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேர்த்தான்னப் பார் எனக்காட்டினான்.
எப்படி வேர்த்தாள்? வேர்த்த அந்த மங்கை மலர்த் தோட்டத்தில் நின்று மலர் கொய்து கொண்டிருந்தாள். அவளுடைய வான் முகத்தை - அழகான முகத்தை: பங்கயமென்றெண்ணி -தாமரை மலர் என நினைத்து." படிவண்டை- மொய்க்கின்ற வண்டை, செங்கையால்
(வேந்து - அரசன்) அதாவது நளமகாராசன்,
காத்தாள் -செந்நிறமா 5AT Fbaהl:#f aii++siוו{ si தட் டிக் காத்தாள். அக்கை மலரை - அவளுடைய சிவந்த அழகிய கையை காந்தள் மலர் என நினைத்து வண்டு பாய்தலுமே வேர்த்தாளைக் காண் என்றான் வேந்து.
வண்டிற்கு மலர் எதுர முகம் எது கை எது? என் காணமுடியாத - இனங்கான முடியாத தவிப்பு நிலை. மங்கைக்கோ அவ்வண்டினைத் துரத்தி வேர்க்கின்ற நிவை.
மலர்த் தோட்டத்தில்ே மங்கையின் முகம், கை, எல்லாமே மலர்களாகவே படுகிறது.வண்டிற்கு.
அதனால் வண்டு மங்கையின் முகத்தி:ே மொய்க்கிறது. அதனைத் தன் கையால் தடுக்கிறாள். கையைக் காந்தள் மலர் என நினைத்து மொய்க்கிறது. அதனைத் தடுக்கவே மீண்டும் முகமாகிய தாமரை மலரில் போய் மொய்க்கிறது. வண்டிற்கு மயக்கநிலை. மங்கைக்கோ அவதிநிலை. அதனால் மங்கை வேர்த்துவிட்டாள். நிடத நாட்டின் சிறப்பை, பெண் களின் அழகை சொல்லாமல் சொல்லிக் காட்டிப் பெருமையடைகிறான்நளன்.
இதனைப் படம் பிடித்துக் காட்டிப் பெருமை யடைகிறார் புலவர்.
ருவாகாமல்தடுக்ரும்பிறமன்ேேள் கல் உருவாகாமல் எலுமிச்சைச் சாறு தடுக்கும் என்று ந்துவநிபுனர் பிதுரிவித்துள்ளார்.
ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றை இரண்டு லீட்டர்
கலந்து சிறிது சிறிதாக சிலரை குடிக்கச் செய்து ாம். சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதற்கான வாய்ப்பு ருந்து 0.13 புள்ளியாகக் குறைந்தது தெரிய வந்தது. ல் சிட்ரஸ் அதிகளவில் உள்ளது. மற்ற சிட்ரஸ் நிறைந்து"
காட்டிலும் சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் லுமிச்சை சிறப்பாக செயல்படுகிறது. எலுமிச்சை விர்த்து மற்ற பழங்களில் சிட்ரஸ் மிகக் குறைவாகவே 3 அமெரிக்காவின் சிறுநீரக நல மையத்தின்
ரோஜர் சர்கூறியுள்ளார்.
Fரி உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பு, கல்சியம், ஆகியவற்றின் பாதிப்பைக் குறைக்க எலுமிச்சைச்சாறு பும். உப்பில் உள்ள கால்சியம்தான் சிறுநீரக சுள் அதிக பங்கு வகிக்கிறது. எனவே உணவில் உப்பின் றைப்பதன் மூலம் கல் உருவாவதை தவிர்க்க முடியும் ஓர் சர்.
இ835
in H 'FETHİ

Page 39
அண்மையில் மட்டக்குளியில் இடம்பெற்ற வீடியோ மற்றும் புகைப்பட பயிற்சிநெறிப் பட் |-31|I) பொன்றில் இலங்கையின் பல பாகங்க விலிருந்தும் பயிற்சியாளர்கள் வந்திருந்தனர். இப்பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றிய ஜெனூபா, கலாரதினி, நிஷாந்தினி, தில்கேஸ்வரி ஆகியோரை இளமை புது மைக்காகசந்தித்து உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது.
ஆரம்பத்திலேயே யார் கதைப்பது என அறையில் ஒரே குழப்பமும் சத்தமுமாகவிருந்தது. "ஹேய் நீகதை நிகதை' என சற்றுநேரம் சிரிப்பிலேயே களைகட்டியது அந்த அறை சாதாரணமாக கதைக்க வெளிக்கிட் NA விசயம் சற்றே சூடேறியது. காரணம் கலாட்டாவின்
கதாநாயகர்கள் ஆண்களாயிற்றே. பிறகென்ன? போட்டு தாக்கு தாக்கு என தாக்கிவிட்டனர் அந்த மக ளிர்அணியினர்.
முதலில் சிக்கியது ஜெனுரபாதான். நான் அன்
றாடம் பிரிட் க்கு போக ஒரு மனித்தியாலம் எடுக்கும்.
 
 
 
 
 
 

பஸ்ளில் சிலநேரம் சீட் கிடைக்கும். சிலநேரம் சீட் கிடைக்காது. கிடைத்தால் இருப்பம் கொஞ்ச நேரத் தான யாராவது ஆம்பளைங்க கிட்ட வந்து நிற்பாங்க. கொஞ்சநேரத்தால் பார்த்தா என்னவோ நட்ரசுற மாதிரி இருக்கும். என்ன எண்டு பார்த்தால் தள்ளி நிற்பாங்க். எண்ட சட்டை அயன் பண்ணாமல்தான் இருந்தது. அவசரத்துல பஸ் வந்துட்டுது. நானும் போட்டுட்டு வந்துட்டன் Offict ல போய் பார்த்தால் இந்த பக்கத் துல இருந்த ஆள் உரகன உரகல எண்ட சட்டை அயன் பண்ண பட்டுட்டுது. நான் ஏலாத கட்டத்துல எழும்பி நிண்டுட்டன் என்று சொல்ல கூடியிருந்த எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.
அதுமட்டுமல்ல. இன்னும் எத்தனையோ விசயங் கள் இருக்கு. ஆனால் அதெல்லாம் வாயால் சொல்ல முடியாது’ என்று சொன்ன கலாரதினி ஏதோ நினைவு வந்தவளாய் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

Page 40
லோரும் கேள்விக் கணைகளால் துளைத்தனர். திரு மணம் முடித்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டாலும் கூட எல்லோரையும் குறும்புத்தனத்துடன் நையாண்டி பண்ணிக்கொண்டிருந்த அவர் திருமணம் என்பது இப் போது சீதனத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. உதா ரணத்துக்கு ஒரு வீட்டில் 300,000 ரூபா சீதனமாக கொடுக்க இருந்தால் நாங்க போய்ட்டு பதில் அனுப் புறம் எண்டு சொல்லிட்டு போவாங்க அந்தப் பொண்ணும் எதிர்பார்ப்போட இருக்கும். அதேநேரம் வேறு ஒரு பெண் வீட்டில் 500,000 ரூபா தாறம் எண்டு சொல்லிட்டாங்க எண்டால் அதயே கட்டிக்குவாங்க அந்த பொண்ணவிட பெட்டரா வேற எங்கயாவது கிடைச்சா அதயும் வச்சிக்குவாங்க. இது என்னோட உறவுமுறையில் உள்ள ஒருவருக்கும் என் நண்பர் ஒரு வருக்கும் நடந்து இருக்கு, நாங்கதான்ஜாக்கிரதையாக இருந்து இவங்ககிட்ட இருந்து தப்பித்துக் கொள்ள ணும் என்றார்கவலையோடு,
இன்னும் சில மாதங்களில் புதுமனப்பெண் ஆகப் போகும் ரதினி பெண்களை சிறிதும் விட்டுக்கொடுக் காதவர். மட்டக்களப்பிலிருந்து வந்திருந்த இவர் பெண் கள் அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்வதால் நிறைய விடயங்களை அறிந்து வைத்திருந்தார். இப்போ ஆண்களை நம்பிஏமாந்து போறது அதிகமா இருக்கு அதுல ஒரு சம்பவம் ஒரு பெண் மிஸ்ட் கோல் ஒண்டாவ பாதிக்கப்பட்டது. சகோதர இனத்தைச் சேர்ந்த ஒரு பையன் முபாரகன் எண்டு தமிழ் பெயர வச்சிக்கொண்டு அந்த பிள்ளை போட Phone ல கதைச்சிகதைச்சிலவி பண்ணிறதா ஏமாத்தியிருக்கான், ஒருநாள் அந்த பையன் தண்டவருக்கு வழியெல்லாம் சொல்லி வரச்சொல்லியிருக் கார் அந்த பிள்ளையும் அவர நம்பி 200 ரூபா காசோட வீட்ட விட்டு வந்து தொடர்ந்து பயணம் செய்ய காசு இல்லாம் அவனுக்கு aேl பண்ணி இருக்கு அதேநேரம் அவளின்ட வீட்டுல பும் அந்த பிள்ள கதைச்ச டெலி போன் நம்பர வச்சி அவனோட கதைச்சிருக்காங்க. அந்த பையன் தான் தப்பித்துக் கொள்றதுக்காக அந்த பிள்ளைய வர வேண்டாம் எண்டு திரும்பி போக சொல்லி இருக் கான் வந்த பிள்ளைக்கு திரும்பி போக காசில்ல. தனியே இந்த பிள்ள பஸ்தரிப்பிடத்துவ நிற்கிறதா எங்க ஞக்கு வந்த தகவலையடுத்து நாங்க விசாரிச்சி அந்தப் பிள்ளய மீட்டுக் கொண்டு வந்திட்டம். இந்தப் பிள்ள ஒருவேளை அங்கு சென்று இருந்தால் நிச்சயம் துஷ் பிரயோகம் செய்யப்பட்டு இருக்கும். அத்தோடு இந்த யுத்தத்துக்கு பிறகு பிள்ளைகள் பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இருக்காங்க. பொம் பிள பிள்ளைகள்தான் சற்று விழிப்பா இருக்கனும் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள்மீது சற்று விழிப் புணர்வாக இருக்கணும் கதைய வளர்த்து அதுல ஏமாறு றது பெண்கள்தான் என்று நீண்ட பெரு மூச்சோடு சொல்லி முடித்தார்.
மன்னாரைச் சேர்ந்த நிஷாந்தினரி பெண்களின் உரிமைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒருநிறுவனத் தில் பணியாற்றி வருகிறார். ஒருமுறை தான் பஸ்ஸில் பயணம் செய்யும்போது ஆண்கள் அந்த பஸ்ஸில் நின்றுகொண்டு பயணித்த இளம் பெண்களுக்கு எல்லா வகையிலும் இடையூறு விளைவித்ததைப் பற்றி கூறி

அன்றாடம் நரக வேதனைய அனுபவிச்சிக்கொண்டு பெண்கள் வேலைக்கு போறாங்க. கேட்டா தனி பஸ்
பும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுதான் போசுனும் எண்டு சொல்வாங்க இந்த பிள்ளைகள் தங்களுக்கு இப்படி நடந்ததெண்டு சொல்ல முன்வருவார்களா? இப்படி இவர்கள் வாய மூடிக்கொண்டு, பயந்துகொண்டு, என் பெரிதாக்க வேண்டும்? எண்டு நினைக்க அவன்களின் சேட்டை கூடுமே தவிர குறையாது' என்று சற்றுE" உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார் கேட்டுக் கொண்டி ருந்த எல்லோரும் அதை ஆமோதித்தனர்.
திலகேஸ் அக்கா நீங்கள் சொல்லுங்கோ பெண் கள் எப்படி உடை அணியனும் எண்டு விரும்புரிங்க என்று நிஷாந்தினி கேட்டாள். தான் அன்னிந்திருந்த உடையை எதிரேயிருந்த கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டே உடை அணியிறதுல எந்தவித மான பிரச்சினையுமே இல்ல. எப்படி வேணுமெண்டா" லும் அணியலாம் எதை வேணுமெண்டாலும் உடுத் தலாம். ஆனால் பாதுகாப்பாக இருந்தால் சரி. நம்மட கலாச்சாரம் முக்கியம்தான். அதோட நாகரீகமாகவும் உடுத்தினால் சரி என்றார்திலகேஷ்.
இப்ப வெள்ளைக்காரிகளும்தான் அரைகுறையா * உடை அணிந்திட்டு வாறாங்க வெள்ளைக்காரன் அவண்ட வேலயத்தான் பார்த்துட்டு இருப்பான். ஆனால் நம்மடஆண்கள் உரசுவதும் சீண்டுவதும் என சேட்டை விடுவார்கள். 'ஆ' என வாயைத் திறந்து கொண்டு பார்ப்பானுகள் என்று ஆண்களை கடுமை: யாக சாடினாள் ரதினி உடனே நிஷாந்தினி ரதினி யைக் காட்டி இவ முன்ன அப்படித்தான் உடைய வாள். இப்ப மாப்பிளைக்கு பிடிக்கேல எண்டு மாறி விட்டாள் என்று உண்மையைப் போட்டுடைத்தாள். எல்லோரும் கூக்குரலிட்டுச் சிரித்தனர்.
அது அவரவர் இஷ்டம், மற்றவங்களை மாற்ற ணும் எண்டு நினைக்கக்கூடாது. இவ்வளவு செய்யும் ஆண் தன் தங்கை றோட்டால போதேக்க தவறாக பார்ப்பானா? பேசுவானா? ஒரு பெண் றோட்டார் போசுேக்க அவட மனசு புண்படுறமாதிரி கதைக்கிறது ஒரு டீசிங்' என்று ரதினி சற்று அதிகமாகவே ஆவேசப்
II" LITTGör.
ஆரம்பத்தில் கதைப்பதற்கு என்னிடம் தலைப்பு கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் பிறகு ஆளையாள்: விளாசிக்கொண்டு இருந்தார்கள். ஆண்களும் சரி பெண்களும் சரி பிறக்கும்போது யாரும், தான் ို,႔L3:
ளுக்கும் வெவ்வேறான பழக்கவழக்கங்களையும் கட்டுப்பாடுகளையும் திணித்து வேறுபடுத்திவிட்டது. ஆகவே இதற்கு இந்த சமூகம்தான் பதில் கூற வேண் டும் என்று திலகேஸ் ஒருவாறு இந்த காரசாரமான விவாதத்தை முடித்துவைத்தார்.
ஏன் பெண்களுக்கு மட்டும்தான் உடுப்பை ஒ அளவுகோளாக நாம் வைக்கின்றோம்? ஏன் பெண் களின் உடலைப் பற்றி மட்டும்தான் கவலைப்படு கிறோம்? யோசித்துக்கொண்டேகிளம்பினேன்.

Page 41
வற்றையும்ன்ருேந்தத்தக்கருவி உற்பத்தி மலையகத்தில் இடம்பெற்றுவரும் பல் வேறு கலாச் சீரழிவுகளுக்கும், கொலை, கொள்'
ங்களுக்கும் இக்கசிப்பு உற்பத்திய்ே
யின்றி வாழ்ந்து வித்தின்றனர்.
காரனாக ஆண்ர்ந்து இருன்தாக அப்பிரதேச மக்கள் பலரும் தெரிவித்தன்ர்/
 
 
 
 
 
 
 
 
 
 
 

缀
犯 :
%;
W
W.
歴エ T இ%
纷 பித்து ஒரு நாளைத்து கீழ்க்கும்தாசை மதுஅருந்தி
క్ల్లో இத்திட்டுக்கு கொடுத்துத்
இரு மலையகப் பிரஜை தந்தில்ாளி:படிப்பு என் கொழும்பில் செல்வந் வேலைக்கு அமர்த்தி
%ரத்துப்ே

Page 42
* 貓
சாதுர்ரன்றாகக்
SS S SS SS SSAASAASS இரண்த்திரலேயே பூர்க்க வைக்க முடியவில்லையாம் இன்று தருகின்றேன் நாளை தருகின்றேன்/என்ற%
%இல்ல ஒரு வத்திரம் இல்லைங்கி இரவுஸ்தி இந்ததால் தவிசெய்வரங்கமந்திரிமாருக்குசெ ார்க்குநரங்க நாங்க ள் என்று தனது கஷ்டத்
:ப்பட்டு வாழும் இல்ல்ை என்று கிறின்
டிக்கிறவங்க இருக்குறாங் தோட்ட்த்தில் வேல்ை செய்வரங்க மற்றவங்க நாம் நீட்டுல33ருர் சம்பளம் கொடுப்பாங்க அத்கொ:
%டுக்குகொண்டுபோல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நறது ரிட்டும்தான் இவரது இட்டித்தான் அவருக்கு சம்பளம்
எல்லோரிட்மும் நீகன்னு சொல்றாங்க னே?’ என்று கேட்ார்
GL Ligli: றிபோய்க்கொண்டிருக்கின்றது, முந்து 7 பிள்ளைகளுடன் க்ஷ்டப் ாயைச் சந்தித்தோம், மனிதர்கள் எவ்வித வசதிகளும் இன்றி மிகவு %வேலை செய்தே வாழ்க்கை விளக்ளை வீடுகளில் வேலைக்கு ஏன்: செய்றாங்க என்று வெகுத்
წ. კვტ.: ་་ ჯაჭვა; † ტუ , , , .. s - இத்திரட்சி பத்திரம் இல்லாத
கச்சேரிகளில் போய் கேட்டால் அதிகாரிகளின் அசமந்த போக்கு
காலத்துவ யோசிக்காம இத்தன : ார்வேதனையுட்ன்: '
பிற்பனை ஆகுமாம். லாம் சிரியான கஷ்ட்ம்'
ால்லி ஒரு பிரயோசனமும் ப்படி போனாலும் தைக்கூறினார்.

Page 43
இங்க உள்ள பிரச்சின் எல்லாருக்கும் தெரியும். பக்கத்துவ உள்ள பொலிஸ்"க்கு தெரியும் அரசியல் வாதிகளுக்கும் தெரியும். வடிவேல் சுரேஷ் வந்திருக் காரு செந்தில் தொண்டமான், அரவிந்த குமார்ஆறு முகம் தொண்டமான் இப்படி எல்லா கட்சிக்காரர்க ஆம் வந்திருக்காங்க அவங்க வரும்போதே இந்த இடம் நல்லா தெரியும் பிரதான இடத்துல்தான் இருக்கு இந்த கசிப்பு தொழிலயும் பிரதான இடத்துல தான் செய்றாங்க இது அவங்களுக்கும் தெரியும். தெரிஞ்சிக்கிட்டே கண்டுக்காம போறாங்க இவங்க இருக்கு கடிதம் அனுப்பி இருக்கம் இதெல்லாம் நிற் பாட்ட சொல்லி சொல்லியும் இதுவரைக்கும் எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கல. ஒரு இரண்டு பேரால தோட்டத்துல உள்ள இளைஞர்களும் சரி, தோட்டதொழிலாளிகளும் சரி, பாடசாலை மாணவர் களும் சரி எல்லாருமே பாதிக்கப்படுறாங்க. பக்கத்துவ பொவின் வச்சிக்கிட்டு இத நிற்பாட்ட முடியாட்டி பொலிஸ் இருக்குறதுல அர்த்தமே இல்ல, ரேட்டுல குடிகிட்டு பேர் வாரங்கள் : தன்:ழம் கொடுக்குறாங்க. ஆனால் இத பிரதானமா செய்றவங் களுக்கு தண்டனை கொடுக்குறாங்க இல்ல. இப்ப நாங்க பொலிஸ்"க்கு பிடிச்சி கொடுத்தாலும் அரசி பல்வாதிகளே கோள் பன்னாரி அவங்கள் வெளிவ விட சொல்றாங்க என்றார் பார்த்தீபன். இப்பிரதேசத்திவி ருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில்தான் பொலிஸ் நிலையம் இருக்கின்றதாம். ஆனால் அதிகாரிகள் தங்கள் சுயலாபத்துக்காக குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு கண்டும் காணாமல் இருக்கின்றனர்
நாங்க ஏதும் நடவடிக்கை எடுத்தா நாங்கதான் பிரச்சின் பண்றம் எண்டு எங்கள பிடிச்சி உள்ள போடுறாங்க பொலிஸ் இருக்கும்போது நீங்க சட்டத்தை கையில எடுக்கேலாதுனு சொல் நாங்க ஆனால் செய்றாங்களும் இல்ல. அது மட்டுமல்ல, தண்ணீர் வசதி, மலசல்கூட வசதி ஒன்றுமே இல்லாமல் இருக்கம். இந்த வடிவேல் சுரேஷ் எல்லாம் பெயருக்கு
நிகழ்ச்சியில் எவ்வாம் செய்துதாரன் எண்டு சொல்விட்டு செய்து தரல்ல தண்ணீர் லைன்ஸ் கசிவு இருக்கு ஒரு நீர்தாங்கி கட்டித்தாரதா சொல்லி அடிக்கல் நாட்டிட்டு இந்த பக்கம் வரவே இல்ல. பல்சல் கட்டம் கட்டித்தாரதா சொல்லி குழிகள் வெட்டச் சொன்னாங்க வெட்டி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டுத் இருந்தம் செய்து தரல்ல என்றார் பிரகாஷ்.
பல்வேறு அபிவிருத்தித் * திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற அரசாங்கம், இப் பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்து மக்களுடைய குறை நிறைகளைத் தீர்க்க முயற்சிக்கல் வேண்டும் மலையக அரசியல்
Uಷ್ರ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாதிகள்தான் இவ்வாறான பிரச்சினையுள்ள கிராமங்களை இனங்கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுமனே அரசாங்கத்துடன் கைகோர்த் துக்கொண்டு அவர்களைப் புலப்படுத்துவதால் என்ன பிரயோசனம்? இன்று தமிழர் பிரதேசங்கள் அத்துமீறிய சிங்களக்குடியேற்றங்களால் கொஞ்சம் கொஞ்சமாக காவு கொள்ளப்பட்டு வருகின்றன். நாம் விழிப் பாயிருந்தால்தான் எமது பிரதேசங்களைப் பாதுகாக்க முடியும். மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய வர்கள்கட்ட சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திக்கு துணைபோவதுதான் மிகவும் வேதனையாக இருக்கின் றது; கசிப்பு உற்பத்தியை அதிகரித்து, இப்பிரதேச மக்க ஞடைய வாழ்வாதாரத்தைச் சீர்குவைத்து, கடைசியில் அத்துமீறிய குடியேற்றங்கள் மூலம் இம்மக்களுடைய காணிகளை பிடுங்கி, இவர்களை நடுத்தெருவில் அவையவிடுவதுகூட ஒரு திட்டமாக இருக்கலாமோ
என்று அஞ்சத் தோன்றுகின்றது. நல்ல தொழில்வாய்ப் புக்களையும் அடிப்படைத் தேவைகளையுமே இப் பிரதேச மக்கள் வேண்டி நிற்கின்றார்கள் எல்லா
வற்றுக்கும் முதல் இந்தக் கசிப்பு உற்பத்தியை ஒழித்துக்கட்ட துணிந்தவர்கள் யாரா
வது முன்வரவேண்டும். தி வருவார்களா ?

Page 44


Page 45

#ff7ț78.17 Z|,|| 0 :13 L "Z|. O quuƠIO O‘seansueụseqəSJS 6Z “ON ‘suɔļuļud ļəsįJO eĀer
stu·Iscusso)uvipinų TO ‘9ɛɛOGIĘ – TIO -
ROIG, Ig, IĘIŲILITUO