கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2006.07

Page 1


Page 2
参考w/~ 距)
ŒIJĦIII, oss! Isaei sae |환T - TMTTTTT |-|-s',sollinnaerobrīdī osoa, 15; III:ssa, IIIs saevae oos! No, EELLI, LI INIMI -LÆ=|s=|s=|)|- ssssssssssssssssssssssssssssssssss ∞∞∞II:I:s
suisse sertae
 

கொழும்பு தமிழ்ச் சங்க
9 ti களுடன் ஒரு நிமிடம்.
இந்த ஆண்டின் நாலாவது இதழ் அறிவு உங்கள் கைகளில் தமிழ்கிறது. முதல் மூன்று இதழ்களும் இருமாதங்களுக்கொரு முறை என வெளிவந்தன. இந்த இதழ் ஏழாவது மாத இதழ், 4வது இதழாக வருகிறது. அதுவும் காலம் கடந்தே வருகிறது. சென்ற ஆண்டு போல் ஒன்பது இதழாவது வெளியிட வேண்டுமானால் எஞ்சிய ஆறு மாதங்களிலும் மாதமொருமுறை ஒரு இதழ் வெளிவந்தால் தான் இது சாத்தியம். இதுவே எமது குறிக்கோளும் முயற்சியும்,
தனிமனிதன் தான் சமுதாயத்தின், ஏன் உலகின் கதாநாயகன். உலகைத் திருத்த வேண்டுமானால் உன்னைத் திருத்து என்பது உனி மை யை உணர்த் தும் பொன் மொபுரி தனிமனிதனது பரிபூரணத்துவத்தில் கவனம் செலுத்துவது தான் உண்மையான மனித Бш5пт5##і.
சுய முன்னேற்றப்புத்தகங்கள் மேல் நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் தோன்றி வளர்ந்துள்ளன. ஆங்கிலத்தில் வெளிவந்த சுய முன்னேற்றப் புத்தகங்களின் வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தை வகுத்து வருவது எப்டிபன் கொவி (Stephen 0ெWCy) 1989ம் ஆண்டு எழுதி வெளிவந்த திறமை படைத்த மக்களின் 5 Lipitriliigi (The 7 Habits of Highly elective PE0ple) என்ற புத்தகம், ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி பலரது வாழ்க்கையை மாற்றியுள்ளது.
இதற்கு மேலாக 2003ம் ஆண்டு அவர் 'எட்டாவது பழக்கம்" என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதன் உபதலைப்பு TTTmTTTTTTTTT HTTTTTTTTTTT SLLLLLLGLLHH LLLLLL LLLL LLCCLLLLSSS உனது உண்மையான தனித்துவத்தை அறி, பிறரிடமிருக்கும் தனித் துவத்தை அறிந்து வெளிக் கொணர உதவு என்பதே அப்புத்தகத்தின் செய்தி.
"அறிவு தன்னளவில் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆசிரிய குழுவிற்காக 3.P ராமச்சந்திரா
gojjat - 3006

Page 3
அறிவு “ARVU'. KNOWLEDGE சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு 41, கல்லூரி வீதி, திருக்கோணமலை, Sandrasegarampillai Gnanambigai Establishment 41, College Street, Trincomalee
பொருளடக்கம்
Llds85lb
01. மஹராஜி ஒரு அறிமுகம் O3
02. ஒரு பிரகாசிக்கும் பாத்திரம் O6
03. ரவீந்திரநாத் தாகூரும் நானும் எங்களது பள்ளிகளை ஒப்பிடுகிறோம் 09
04. மின்வெளிச் சமுதாயம் (தொடர்) 15
05. இயந்திர மொழிபெயர்ப்பு 17
06. கலாச்சார சீரழிவுகள் 20
07. குருமுகம் 28
08. தெரிந்தபெயர் தெரியாத விபரம் 3.
09. தமிழ் திரைப்படங்கள் (1931-2005) 37 10. அட்டைப்படக்கட்டுரை (গ্লাঃ பெர்னாட்ஷா) 42
11. அண்ணல் காந்திஜி குறித்து அமரர் கல்கியின் கருத்து 44
12. சலிப்பும் , சாதனாவும் 47
13. அச்சுறுத்தல் ஆபத்து 48
14. பழங்களும், குணமடையும் நோய்களும் 50
எமத ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு - 2006 - 4வது
இதழை சமர்ப்பிக்கிறோம்
ജ്ഞൺ - 2008 -ത്ത - 2 -
 
 

மஹராஜி
ஒரு அறிமுகம் மஹராஜி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களிடம் உள்ளேயே இருக்கும் அமைதியை அனுபவம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதைப் பற்றி பேசி வருகிறார். மஹராஜியின் செய்தி எளிமையானதாக இருப்பதோடு மட்டுமன்றி மிகவும் ஆழமானதும் கூட. வாழ்க்கையின் எண்ணங்கள் மற்றும் இதுவரை அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ள விஷயங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் இந்த செய்தி உலகத்திலுள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கு, அவர் எந்தவொரு மதம், சமுதாயம் மற்றும் அரசியல் கருத்துக்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும், அவர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
தாய்லாந்தின் பங்காக் நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கான்பரென்ஸ் மையத்தில் மஹராஜி தன்னுடைய உரையின்போது கூறியதாவது - ஒவ்வொரு மனிதனுக்கும் அமைதி மிகவும் அவசியம். இந்த உலகத்தில் நாம் எத்தனையோ பொருட்களை பரிசோதித்துப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரே ஒரு பொருள் உண்டு. அதற்கு மட்டும் நாம் ஒருபோதும் வாய்ப்புக் கொடுக்கவில்லை. அந்தப் பொருள் அமைதி. உலகத்துக்கு அமைதி தேவையில்லை. ஆனால் அமைதி மக்களுக்குத் தேவை. மக்களின் இதயத்தில் அமைதி ஏற்பட்டால்தான், இந்த உலகத்தில் அமைதி ஏற்பட முடியும். எந்த அமைதியை நாம் தேடிக் கொண்டு இருக்கிறோமோ அது நமது உள்ளேயே இருக்கிறது. நமது இதயத்தில் இருக்கும் அமைதி, நாம் எப்போது அதை உணர்ந்திடுவோம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
தனி னுடைய வாழி க் கையில அமைதி பெற விரும்புகிறவர்களுக்கு, மஹராஜி ஞான அறிவிற்கான செயல்முறை விதிகளை அளிக்கின்றார். அவர் கூறுவது என்னவென்றால் ‘நான்
அமைதியைப் பற்றி பேசுவதோடு மட்டுமன்றி, உங்களுக்கு அந்த விதிமுறைகளையும் சொல்லிக்கொடுக்க முடியும். அதன் மூலம் நீங்கள் உங்கள் உள்நோக்கிச் சென்று, அமைதியை அனுபவமும் செய்யமுடியும். ‘இந்த ஞான அறிவை, இதுவரை இலட்சக்கணக்கான மக்கள் அவரிடம் இருந்து பெற்றுள்ளனர்.
- 3 - 1ത്ത ஜூலை - 2008

Page 4
மஹராஜி வட இந்தியாவில் பிறந்தவர். அவர் தன்னுடைய மூன்றாவது வயதிலேயே மக்களிடையே சொற்பொழிவு ஆற்றத் துவங்கி விட்டார். நான்காவது வயதில் அவர் கொடுத்த சொற்பொழிவுதான் முதன் முதலில் பிரசுரமானதாகும். தன்னுடைய தகப்பனாரான சத்ருநாதருக்குப் பிறகு அவர் அமைதிக்கான இந்தச்செய்தி உலகம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அவருக்கு எட்டே வயதுதான் ஆகியிருந்தது.
அவருடைய பதிமூன்றாவது வயதில் லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள மக்களுக்கு அவருடைய செய்தியை அறிமுகம் செய்வதற்காக மஹராஜி அழைக்கப்பட்டிருந்தார். அப்போதிலிருந்து அவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில், இலட்சக்கணக்கான மக்களின் முன் சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார்.
ஆண்டு முழுவதும் மக்களின் அழைப்பின் பேரில், மஹராஜி, இந்தியாவிலும், மற்ற பெருங்கண்டங்களில் உள்ள நாடுகளிலும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய செய்தி உலகத்தின் எழுபது மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு எண்பத்தி எட்டுக்கும் அதிகமான நாடுகளில் கிடைக்கிறது. அவருடைய இந்த நிகழ்ச்சிகளில், சமய - சமயங்களில் ஒரே நேரத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரிடமிருந்து உத்வேகமும் வழிகாட்டுதலும் பெறுகின்றனர். மஹராஜி புதுடில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் சொற்பொழிவு ஆற்றியபோது, அந்த அரங்கம் முதன் முறையாக மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அவருடைய செய்தியின் பிரச்சார சம்பந்தமான எல்லா நிகழ்ச்சிகளும் மக்களின் மூலமாகவே அவர்களுடைய தன்னார்வத்துடன் கூடிய பங்களிப்பின் மூலமாக நிறைவேறுகிறது.
மவறராஜி: மனிதனுடைய சகிப்புத்தன்மை முடிவடைய நேரும்போது போர் ஏற்படுகிறது. மேலும் போரின் காரணமாக அமைதியைப் பெற வேண்டுமென்ற விருப்பத்தினால் மேலும் அதிகரிக்கிறது. நாம் உயிருடன் இருப்பதின் மகத்துவத்தை புரிந்து கொள்ளாத போது போர் ஏற்படுகிறது. மனிதன்தான் இந்தப் போரை ஆரம்பிக்கின்றான். இந்தப் போர் வெளியில் ஆரம்பமாவதற்கு முன்னால் எல்லாவற்றிற்கும் முதன்மையாக மனிதனுடைய மூளையில் இருந்து ஆரம்பிக்கிறது. உள்ளே ஏற்படும் இந்தப் போர் மிகவும் அபாயகரமானது. ஏனெனில், இந்த நெருப்பை ஒருபோதும் அணைத்து விடமுடியாது.
ஜூலை . 2008 - 4 -

மனிதன் தன்னுள்ளே இருக்கும் அமைதியை உணராமல் இருப்பதினாலும், அமைதி வெளிப்படுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதினாலும்தான், இந்தப் போர் ஏற்படுகிறது. நம் எல்லோருக்கும் ஒரு பொருளுக்கான தேடுதல் இருக்கிறது. அதற்கு நாம் என்னமாதிரியான பெயர் கொடுத்தாலும் - வெற்றி, அன்பு, அமைதி, அல்லது நிறைவடைதல் - இவை எல்லாம் ஒரே ஒரு பொருளுக்கான பெயர்தான். எந்தப் பொருளை நாம் தேடுகிறோமோ, அதற்கு இந்த உலகத்தில் பலவிதமான பெயர்கள் உண்டு. ஏனென்றால், உண்மையாகவே நமக்கு எந்தப் பொருள் மிகவும் அவசியம் என்று தெரியாது.
எந்தப் பொருளை நாம் தேடுகிறோமோ, அது நம்மிடம் இருந்து வெளியில் இல்லை. அது நமது உள்ளேயேதான் இருக்கிறது. அது எப்போதும் நமது உள்ளேதான் இருந்தது. எப்போதும் நமது உள்ளேதான் இருக்கிறது. நமது உள்ளேதான் இருக்கும். அமைதி அப்பேர்ப்பட்ட ஒரு உணர்வாகும். அதை உணர்ந்து பார்க்க மட்டுமே முடியும். நமது உள்ளே அப்படிப்பட்ட ஒரு அற்புதமான சக்தி உள்ளது. அதை நாம் அனுபவித்துப் பார்த்து நமது வாழ்க்கையை அன்பாலும், மெய்யறிவாலும் மேலும் நன்றியாலும் நிரப்ப முடியும். பல நூற்றாண்டுகளாக இந்த ஓசை வந்து கொண்டிருக்கிறது. ‘எந்தப் பொருளை நீ தேடுகிறாயோ, அது உள்ளேதான் இருக்கிறது. உங்களுடைய மெய்ப்பொருள் உங்கள் உள்ளேதான் இருக்கிறது. உங்களின் அமைதி உங்கள் உள்ளேதான் இருக்கிறது. உங்களுடைய ஆனந்தம் உங்கள் உள்ளேதான் இருக்கிறது.’ அமைதி பாலைவனத்தில் கிடக்கும் ஒரு விதையைப் போல உங்கள் இதயத்தில் முளைத்து வெளிவரக் காத்துக் கொண்டு இருக்கிறது. எப்போதும் நாம் இந்த விதைமுளை விடுவதற்கு வாய்ப்புக் கொடுப்போமோ, அப்போது நமக்கு வெளியிலும் அமைதி கிடைப்பது சாத்தியமாகும். என்ன, அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்கு நாம் தயாரா?
மனிதன் புலியைக் கொன்றால் அது கேளிக்கையான புலிவேட்டை விளையாட்டு, புலிமனிதனைக் கொன்றால் 'மிருகத்தனம்’ குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு இது போன்றதே.
ஜார்ஜ் பெர்னாட்ஷா
ஜூலை . 2006

Page 5
ஒரு பிரகாசிக்கும் பாத்திரம் (A Shining Bowl)
மஹராஜி
பேரழிவுகளையும் ஏமாற்றங்களையும் தவிர்க்க முடியாத ஒரு உலகில், சிறந்ததொரு செயல் என்னவெனில், ‘அமைதியையும் தெளிவையும் கொண்ட, உள்ளே உள்ள உலகத்தை நோக்கி வழிகாட்டும் உள்ளத்தின் அந்த எளிமையான அழைப்பிற்குச் செவி சாய்ப்பதே’ என மஹராஜி கூறுகின்றார். மஹராஜி அவர்கள் சிறு வயதினராக இருந்த காலத்தில் இருந்தே அவ்வமைப்பிற்கு செவிசாய்க்கும்படி மக்களை ஊக்குவித்து வருகின்றார்.
உங்கள் வாழ்வில் நடைபெறும் விடயங்கள் எல்லாவற்றையும் கொண்டு உங்கள் வாழ்வை நீங்கள் மதிப்பிட வேண்டாம். ‘உள்ளே உள்ள உலகைப் பாருங்கள். ஏனெனில் அங்கே மிகவும் அழகானதும் எளிமையானதுமானதொன்று பரிணமித்துக் கொண்டிருக்கிறது.”
மஹராஜி தனது 13வது வயதில் தனது பிறந்த நாடான இந்தியாவை விட்டு தனது செய்தியைப் பற்றி மேலும் அறிய விரும்பிய மேலை நாடுகளில் உள்ள மக்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார். அன்று தொடக்கம் அவர் உலகெங்குமுள்ள 9.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
அண்மையில் மஹராஜி அவர்கள், சிறீலங்காவில் இருந்து தனது வீட்டையும் சொத்துக்களையும் கடற் கோளுக்குப் (Tsunami) பலிகொடுத்த ஒருவர் தனக்கொரு பாத்திரத்தை பரிசாக அனுப்பியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
‘கடற்கோள் தாக்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர். அவர் பல காலமாக அவரின் குடும்பச் சொத்தாக இருந்த அந்தப் பாத்திரத்தை துப்பரவு செய்ய திர்மானித்தார். ஆகவே அவர் அதை மினுக்கி மிக அழகானதாக மாற்றினார்.
“அதற்குப் பின் கடற்கோள் வந்து எல்லாவற்றையும் கடலுக்கு அடித்துச் சென்றுவிட்டது. மறுநாள் அவர் தமக்குச் சொந்தமானது ஏதாவது எஞ்சியுள்ளதா என்று பார்க்க அங்கே மிதந்துகொண்டிருந்த குப்பைகளுள் தேடினார்.
'திடீர் என அவரின் கண்கள் அங்கே பிரகாசித்துக்கொண்டிருந்த ஒரு பொருளை நோக்கிச் சென்றது. அந்தப் பாத்திரம் அங்கே சூரிய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. சமுத்திரம் அதை எப்படியோ மீளக் கொடுத்துவிட்டது.”
ஜூலை . 2006 - 6 -

عبر
மஹராஜி அந்த பிரகாசிக்கும் பாத்திரத்தை வாழ்வுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
இந்தக் கதை எதற்காக முக்கியம் பெறுகின்றது? என அவர் கேட்கின்றார். ‘இதுதான் உங்கள் வாழ்வு. உங்கள் உயிர் வாழ்வு. இது உங்கள் நேரம். அதைப் பிரகாசிக்கச் செய்யுங்கள். களங்கமில்லாமல் பிரகாசிக்கச் செய்யுங்கள். கடற்கோள் எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாது. கடற்கோள் வரப்போகின்றதா இல்லையா என்பதல்ல கேள்வி. அது வந்து தாக்கத்தான் போகின்றது. அது வந்து தாக்கும் போது எங்களுடையது என நாம் பெருமைப்படும் அனேக விடயங்கள் தொலைந்து போகப்போகின்றது.”
இலகுவில் அழிந்து போகக்கூடிய விடயங்களைப் பெறுவதில் அதிகளவு முயற்சியைப் போடுவதற்குப் பதிலாக உயிர் வாழ்வில் கவனத்தைச் செலுத்தும்படி மஹராஜி மக்களை ஊக்கமூட்டுகிறார். நாம் செய்யும் விடயங்களுக்கு எல்லாம் உதவியளிக்கும் அந்த உயிரியல் அவதானத்தைச் செலுத்தும்படி அவர் கேட்கிறார். உயிர் இல்லாமல் எம் வாழ்வில் எந்த நிகழ்ச்சித்திட்டமும் இருக்க முடியாது.
‘அந்தப் பாத்திரத்தின் உவமானத்தின் மூலம் அந்த எதிர்மாறான விடயத்தை மிக அழகாக நான் காண்கிறேன். அழிவின் மத்தியிலும், அந்தச் சூறையாடலின் மத்தியிலும் அந்தப் பாத்திரம் பிரகாசிக்கிறது. அது பிரகாசிக்கிறது. அது தன்னை ஒழித்து வைக்கவில்லை. யாரோ ஒருவர் நேரம் எடுத்து அதை மினுக்கித் துப்பரவாக்கி வைத்திருந்தபடியால் அது மிகப் பிரகாசமாக ஒளிவிட்டுக்கொண்டிருந்தது.
‘நாம் ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம். அந்தப்பாத்திரம் பிரகாசிக்கிறதா இல்லையா என்பதை நாம் ஒவ்வொருவரும் எம்மிடம் நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். எங்களுடைய பிரச்சினைகளால் எல்லாம் அது மாசுப்படுத்தப்பட்டுள்ளதா? எங்கள் எண்ணக் கருத்துக்களால் அது மாசுபடுத்தப்பட்டுள்ளதா?”
‘இந்தப் பாத்திரத்தைப் பிரகாசிக்கச் செய்யுங்கள். அப்பொழுது அது வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதைத் தெளிவாகப் பிரதிபலிக்கும்.” மக்கள் வெளிப்புற விடயங்களால் தாக்கபடாத, அமைதியையும் தெளிவையும் கொண்ட உள்ளே உள்ள ஒரு இடத்தை கண்டு கொள்வதற்கு மஹராஜி தனது உதவிகளை நல்கின்றார்.
இந்த உலகம் தரும் வெகுமதிகள் எல்லாம் மாயையானதாகவும் நிரந்தரமற்றதாகவும் இருக்கும் பொழுது உள்ளே உள்ளமையின்
۔ 7 ۔
ജ്ഞബ് - 2008

Page 6
அனுபவத்தில் கவனம் செலுத்துவதால் கிடைக்கும் பரிசானது, உடனடியாகக் கிடைக்கக் கூடியதும் வெளிஉலகில் என்ன நடந்தாலும் அதனால் பாதிப்படையாமல் வாழ் நாள் முழுவதும் நிலைத்து நிற்கக்கூடியதுமாகும், என மஹாராஜி கூறுகிறார்.
‘உங்களால் எவ்வளவற்றைச் சாதித்துக்கொள்ள முடியும் என்பதே இந்த உலகம் உங்களுக்குவிடும் சவாலாகும். உள்ளத்தின் சவாலானது, உங்களால் எவ்வளவு ஆனந்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியும்? அதிலிருந்து எவ்வளவு மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். உங்களால் எவ்வளவு நிறைவடைய முடியும்?’ என மஹராஜி கூறுகிறார்.
உள்ளே உள்ள நிறைவை அடைவது கடினமான விடயம் என நினைப்பவர்களுக்கு பதில் அளிக்கும் பொழுது மஹராஜி உள்ளத்தின் அழைப்பை புறக்கணிப்பதுதான் கடினமான விடயம் என நான் கூறுவேன். அது கடினமானது. எனினும் இதைத்தான் நாம் செய்கிறோம், அதனால் தான் எல்லாம் கடினமானவையாகத் தோன்றுகின்றன எனக் கூறுகிறார்.
அவர் குறிப்பிடும் ஆனந்தத்தில் வாழ்வதற்கான சாத்தியத்தை ஏற்றுக்கொள்வதே முதலாவது அடி என அவர் கூறுகின்றார்.
‘இந்த வாழ்வு மிகவும் அழகானது” என அவர் கூறுகின்றார். அதனால்தான் அது உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. நீங்கள் அதைக் கேள்வி கேட்காமல் அல்லது சவால் விடாமல் அதை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் நாளில் இருந்துதான் அதன் அழகு போற்றப்படுகிறது. “உங்கள் வாழ்வையும் அந்தக் கோப்பையைப் போல் பிரகாசிக்க விடுங்கள், கடற்கோளினால் கூட அதை எடுத்துச் செல்ல முடியவில்லை. அதை துலங்க விடுங்கள். இதுதான் அந்தச் சாத்தியம்: அமைதி, ஆனந்தம், நிறைவு அதை உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் இதற்காகவேதான் நாம் இங்கு இருக்கிறோம்.
மஹராஜியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள
For more information visit,
www.tprf.org
Www.maharai.net www.contactinfo.net
ളുഞ്ഞുങ്ങ - 200 ത്ത سے 83 سم

ரவீந்திரநாத் தாகூரும் நானும் எங்களது பள்ளிகளை ஒப்பிடுகிறோம்.
‘ரவீந்திரநாத் தாகூர் எங்களுக்கு சுயவெளிப்பாட்டின் இயல்பான முறையாக, பறவைகளைப் போன்ற சிரமமே இல்லாமல் பாடக் கற்பித்தார்.”
எனது ராஞ்சிப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் அறிவுக்கூர்மையான பதினான்கு வயது சிறுவன் போலாநாத் என்பவனது இன்னிசைப் பெருக்கை நான் ஒரு நாள் காலை புகழ்ந்தபொழுது அந்த விளக்கத்தைக் கூறினான். துTணிடுதல் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அந்தச் சிறுவன் இசையருவியைப் பொழிவான். போல்பூரில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிலையான சாந்திநிகேதனின் (அமைதியின் இல்லம்) முன்னாள் மாணவன் அவன்.
‘'சிறு வயதிலிருந்து ரவீந்திரநாத்தின் கீதங்கள் நான் பாடுவதுண்டு’ நான் என் தோழனிடம் கூறினேன். ‘வங்காளிகள் அனைவரும், எழுத்தறிவில்லாத பாமரன்கூட அவருடைய உயர்ந்த கவிதைகளில் ஆனந்தம் அடைகிறார்கள்.”
போலாவும் நானும் தாகூரின் பாடல்களிலிருந்து சில அடிகளைச் சேர்ந்து பாடினோம். தாகூர் ஆயிரக்கணக்கான, இந்தியப்பாடல்களுக்கு இசையமைத் திருக்கிறார் . அவைகளில் சில அவருடைய சொந்தப்படைப்புக்கள் மற்றும் சில பழமையான பாடல்கள்.
எங்கள் சங்கீதம் முடிந்த பிறகு நான் கூறினேன்: நான் ரவீந்திரநாத் தாகூரை, இலக்கியத்திற்கான நோபல் பரிசை அவர் பெற்ற பிறகு சந்தித்தேன். அவர் தனி இலக்கியத்தைக் கண்டித்தவர்களை மேல்பூச்சு இல்லாமல் தைரியத்துடன் தள்ளிக்கழித்த முறையை நான் மெச்சினேன். அதுதான் என்னை அவரைச் சந்திக்கத் தூண்டியது. நான் உள்ளுர நகைத்தபடி பேசினேன்.
போலாவிற்கு சுவாரஸ்யம் தட்டியது. அவன் இக்கதையைக் கேட்க விரும்பினான்.
“பண்டிதர்கள் வங்காளக் கவிதையுலகில் ஒரு புது நடையைப் புகுத்தியதற்காக தாகூரைக் கடுமையாகத் தாக்கினார்கள்.”
2008 . ஜூலை - 9 به

Page 7
நான் தொடங்கினேன் அவர் சாதாரண நடையையும், இலக்கிய நடையையும் ஒருங்கிணைத்து பண்டிதர்களுக்குப் பிரியமான எல்லா இலக்கியச் சட்ட திட்டங்களையும் புறக்கணித்தார்.அவருடைய பாடல்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு உட்படாமல் ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை உணர்ச்சிக்குகந்த முறையில் வெளியிட்டன.
செல்வாக்குப் படைத்த விமர்சகர் ஒருவர் ரவீந்திரநாத்தை ‘அவர் தன் கூவல்களை அச்சிட்டு ஒரு ரூபாய்க்கு விற்கும் புறாக் கவிஞர்” என்று வெறுப்புடன் வர்ணித்திருந்தார். ஆனால் தாகூரின் எதிர்த் தாக்குதல் கைவசத்திலேயே இருந்தது. அவர் இயற்றிய கீதாஞ்சலியை (பாடலின் வடிவே அஞ்சலி) அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டதும் மேற்கத்திய இலக்கிய உலகம் முழுவதும் புகழ்மாலைகளைத் தாகூரின் பாதங்களில் சமர்பித்தது. ரயில் வண்டி நிறைய பண்டிதர்கள், ஒரு சமயம் அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் உட்பட தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவிப்பதற்கு சாந்தி நிகேதனுக்குச் சென்றார்கள்.
ரவீந்திரநாத் தனது விருந்தாளிகளை வெகுநேரம் வேண்டு மென்றே காக்க வைத்த பிறகே சந்தித்தார். அவர்களுடைய பாராட்டுதல்களை விருப்பு வெறுப்பற்ற மெளனத்துடன் செவிமடுத்தார். இறுதியில் விமர்சனம் என்ற அவர்களுடைய வழக்கமான ஆயுதத்தை அவர்களின் மீதே திருப்பினார்.
'கனவான்களே அவர் கூறினார் தாங்கள் இங்கு என் மீது பொழியும் மணம் கமழும் பாராட்டுக்கள் தங்கள் கடந்தகால இகழ்ச்சிகளின் துர்நாற்றத்துடன் அசம்பாவிதமாகக் கலந்தே காணப்படுகின்றன. என்னுடைய நோபல் பரிசுக்கும் உங்களுடைய திடீர் கூர்மையான ரசனையின் திறனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? வங்காளக் கோயிலில் முதன் முதலாக என் தாழ்மையான இலக்கிய மலர்களை அர்பணித்தபோது உங்களை மனவருத்தமடையச் செய்த அதே புலவன்தான் நான் இப்பொழுதும் - தாகூர் கூறிய தைரியமான கண்டனத்தின் விவரத்தைச் செய்தித் தாள்கள் பிரசுரித்திருந்தன. முகத்துதியால் மயக்கமுறாத ஒரு மனிதனின் வெளிப்படையான சொற்கள் என்னைக் கவர்ந்தன.’ நான் தொடர்ந்தேன் நான் கல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூருக்கு எளிய முறையில் வங்காள வேட்டி அணிந்திருந்த அவருடைய காரியதரிசி ஸி.எஃப். ஆண்ட்ரூஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டேன். அவர் தாகூரை அன்புடன் ‘குருதேவர்” எனக் குறிப்பிட்டார்.
ஜூலை . 2006 ഞ 10 ഞ

‘ரவீந்திரநாத் என்னை மிக அன்புடன் வரவேற்று உபசரித்தார். அவரிடமிருந்து வசீகரம், பண்பு, பெருந்தன்மை, ஆகியவை ஒளிர்ந்தன. அவருடைய இலக்கியப் பின்னணியைப் பற்றிய என் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், அவர் முக்கியமாக நமது மத சம்பந்தமான இதிகாசங்களினாலும் பதினான்காம் நூற்றாண்டில் பிரபலக் கவிஞராயிருந்த வித்தியாபதியின் நூல்களினாலும் கவரப்பட்டதாகக் கூறினார்.’
இந்த ஞாபகங்களால் ஊக்குவிக்கப்பட்ட நான் தாகூரின் சொற்களாலமைந்த ஒரு பழைய வங்காள கீதத்தை “நின் அன்பெனும் 65618,608, 66fGupé, Qayu 6). Tui Ts” (Light the lamp of Thy Love) என்னும் பாடலைப் பாடத் தொடங்கின்ே. போலாவும் நானும் மகிழ்ச்சியுடன் வித்தியாலயத்தின் மைதானத்தில் பாடியவாறு உலாவினோம்.
நான் ராஞ்சி வித்தியாலயத்தை நிறுவிய சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு எனக்குத் தாகூரிடமிருந்து எங்கள் கல்விக் குறிக்கோள்களைப் பற்றிக் கலந்து பேச சாந்தி நிகேதனுக்கு வரும்படி அழைப்பு வந்தது. நான் மகிழ்ச்சியுடன் சென்றேன். நான் அங்கு சென்றடைந்த பொழுது அந்தக் கவிஞர் அவருடைய படிப்பறையில் அமர்ந்திருந்தார். எங்கள் முதல் சந்திப்பில் நான் நினைத்தது போலவே அப்பொழுதும், அவர் எந்த ஓவியனும் விரும்பக் கூடிய மனதில் பதியத்தக்க சிறப்பான ஆண்மையின் ஒரு முன் மாதிரியாகவே திகழ்ந்தார். அவரது முகம் அழகாகச் செதுக்கப்பட்டு கம்பீரமான உயர்குல மாண்புடன் கூடிய தோற்றத்துடன் நீண்ட முடியும். தவழ்ந்த தாடியும் கொண்டு விளங்கியது. கருணை பொழியும் பெரு விழிகள்: தெய்வீகப் புன்னகை மற்றும் உண்மையிலேயே மயக்குகின்ற புல்லாங்குழலைப் போன்ற குரல், உயரமான திடகாத்திர, சீரிய உருவத்தில் கிட்டத்தட்ட அவர் பெண்ணின் மென்மையையும், குழந்தையின் இயல்பான ஆனந்தத்தையும் ஒருங்கே கொண்டிருந்தார். ஒரு கவிஞனுக்கே உரிய லட்சிய எண்ணங்கள் இந்த மென்மையானப் பாடகருள் மிகத் தகுதியாகப் பொருந்தியுள்ளது போல் வேறு எந்த உருவத்திற்கும் பொருந்தாது.
நானும் தாகூரும் சீக்கிரமே வழக்கமான முறையிலிருந்து மாறுபட்ட நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட எங்கள் பள்ளிக் கூடங்களை ஒப்பிடும் ஆராய்ச்சியில் ஆழ்ந்தோம். அதில் நாங்கள் அனேக ஒற்றுமைகளைக் கண்டோம். திறந்த வெளியில் கல்வி புகட்டுதல், எளிமை, ஒரு குழந்தையின் படைப்பாற்றலுக்கு வேண்டிய ஏராளமான
- 1 - mammmmmmmmmmmmmmmmmmmmmm ஜூலை - 2008

Page 8
வாய்ப்புக்கள் முதலியன. இருந்தாலும் ரவீந்திரநாத் இலக்கியம் மற்றும் கவிதையைப் பயில்வதற்கும் நான் ஏற்கனவே போலா மூலம் அறிந்திருந்த இசைமற்றும் பாடல் மூலமான சுய வெளிப்பாட்டிற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருந்தார். சாந்தி நிகேதன் குழந்தைகளுக்கு மெளனத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் முக்கியமாக யோகப் பயிற்சி தரப்படவில்லை.
ராஞ்சியில் அனைத்து மாணவர்களுக்கும் போதிக்கப்படும் சக்தியடிட்டும் யோகதா உடற்பயிற்சிகள் மற்றும் மனதை ஒரு முனைப்படுத்தும் யோக உத்திகள் பற்றிய என் விளக்கத்தை அந்தக் கவிஞர் பாராட்டும் விதத்தில் கவனத்துடன் கேட்டார்.
தாகூர் தன் சிறு வயதில் கல்வி கற்பதில் ஏற்பட்ட பிரச்சினையைக் கூறினார். சிரித்துக் கொண்டே அவர் ‘நான் ஐந்தாவது படிவத்திற்குப் பின் பள்ளிக்கூடத்தை விட்டு ஓடிவிட்டேன்’ என்றார். அவருடைய மென்மையான உள்ளார்ந்த கவிதை உணர்ச்சிகள் பள்ளிக்கூட அறையின் சாரமற்ற, ஒழுங்கு முறைகொண்ட சூழ்நிலையில் எவ்வாறு அவமானப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை என்னால் உடனடியாக உணர முடிந்தது.
‘அதனால்தான் நான் சாந்தி நிகேதனை நிழலடர்ந்த மரங்களின் அடியிலும் வானத்தின் வனப்பின் கீழேயும் துவக்கினேன்.” அவர் அவ்வழியே தோட்டத்தில் படித்துக் கொண்டிருந்த ஒரு குழுவைநோக்கி ஆர்வத்துடன் சுட்டிக் காட்டினார். ‘ஒரு குழந்தை மலர்கள் மற்றும் பாடும் பறவைகள் நடுவில் தன் இயற்கையான சூழ்நிலையில் உள்ளது. அங்குதான் அக்குழந்தை தன்னிடம் மறைந்துள்ள செல்வமான, தனக்கே உரிய திறமையைச் சுலபமாக வெளிக்கொணர முடியும். உண்மையான கல்வி என்பது வெளி ஆதாரங்களிலிருந்து புகுத் துவதோ அல்லது திணிப்பதோ அல்ல. மனிதனின் உள்ளுக்குள்ளே குவிக்கப்பட்டிருக்கும் எல்லையற்ற ஞானத்தை வெளிக்கொணர உதவுவதுதான் அது.”
நான் ஒப்புக் கொண்டு கூறினேன். “சாதாரண பள்ளிக்கூடங்களில், புள்ளி விவரங்கள் மற்றும் வரிசையாக தொடர்ச்சியான சகாப்தங்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. இதனால் இளவயதினர் இலட்சிய பண்பு மற்றும் தலைவர்களைப் போற்றும் சுபாவம் அற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர்.”
சாந்தி நிகேதனைத் தொடங்குவதற்கு ஊக்கமளித்த தன் தந்தை தேவேந்திரநாத்தைப் பற்றி அக்கவிஞர் அன்புடன் பேசினார்.
سے 12 ۔
ஜூலை - 2008

‘ தந்தை, அவர் ஏற்கனவே ஒரு விருந்தினர் இல்லமும் கோயிலும் கட்டியிருந்த இச்செழிப்பான நிலத்தை எனக்குப் பரிசளித்தார். நான் 1901ஆம் ஆண்டில் பத்துச் சிறுவர்களுடன் மட்டுமே என் கல்விமுறைப் பரிசோதனையை இங்கு தொடங்கினேன். நோபல் பரிசுடன் வந்த எண்ணாயிரம் பவுண்டுகள் எல்லாம் பள்ளிக்கூடத்தை நிர்வகிப்பதில் செலவாயிற்று.” என்று ரவீந்திரநாத் என்னிடம் கூறினார்.
மூத்த தாகூரான தேவேந்திரநாத்,'மகரிஷி” என்ற பெயரில் பரவலாகப் பிரபலமடைந்திருந்த குறிப்பிடத்தக்க மனிதர் என்பதை அவருடைய சுயசரிதத்திலிருந்தே ஒருவர் கண்டு கொள்ளலாம். அவருடைய இளமைப் பருவத்தில் இரண்டு வருடங்கள் இமயமலைச் சாரலில் தியானம் செய்வதில் கழிந்திருந்தன. அதேபோல் அவருடைய தந்தை துவாரகநாத் தாகூரும், பொதுமக்களுக்கு தர்மம் செய்யும் அவருடைய வள்ளல் தன்மையினால் வங்காளம் முழுவதும் புகழ் பெற்றிருந்தார். புகழ்பெற்ற இம்வம்சாவளியில் மேதைகள் நிரம்பிய ஒரு குடும்பமே உருவாயிற்று. ரவீந்திரநாத் தாகூர் மட்டுமல்ல, அவருடைய எல்லா உறவினர்களுமே தங்கள் படைப்பாற்றல் மூலமாகத் தங்களைத் தனிப்படுத்திக் காட்டும் திறமையைப் பெற்றிருந்தனர். அவருடைய மருமகன்களான ககனேந்திரா, அவனிந்திரா இருவரும் இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களில் முன்னணியில் இருப்பவர்கள். ரவீந்திரநாத்தின் சகோதரரான த்விஜேந்திரா, பறவைகளாலும் வன விலங்குகளாலும் கூட விரும்பப்படும் ஓர் ஆழ்ந்து நோக்கும் தத்துவஞானி.
விருந்தினர் இல்லத்தில் இரவு தங்கும்படி ரவீந்திரநாத் என்னை அழைத்தார். மாலையில் அந்தக் கவிஞரும் அவருடைய குழுவும் முற்றத்தில் அளித்த நாடகக் காட்சியின் அழகில் நான் மிகவும் மகிழ்ச்சியுற்றேன். காலம் பின்னோக்கி விரிந்தது. என் கண்முன்னே இருந்த காட்சி புராதனகால ஆசிரமம் போன்ற ஒன்றாகும். அந்த ஆனந்தமான பாடகனும் அவனைச் சுற்றிய பக்தர்கள் அனைவரும் இறை அன்பெனும் ஒளிச் சூழலில் பரிமளித்தார்கள். தாகூர் நட்பின் ஒவ்வொரு இணைப்பையும் இசைவெனும் இழைகளினால் பின்னினார். அவர் வலிந்து கூறாமல், தடுக்கமுடியாத ஒரு காந்த சக்தியால் இதயத்தைக் கொள்ளை கொண்டார். ஆண்டவனின் பூஞ்சோலையில் அபூர்வமாக மலர்ந்த கவிதை மலர்கள் இயற்கை மணம் பரப்பி மற்றவர்களைத் தன்வசம் இழுக்கவே செய்தன!
- 3 -
ஜூலை - 2006

Page 9
ரவீந்திரநாத் தன் இனிமையான குரலில் தான் புதிதாக இயற்றியிருந்த சில அருமையான கவிதைகளை எங்களுக்கு வாசித்துக் காட்டினார். அவருடைய அனேக கவிதைகளும் நாடகங்களும் அவருடைய மாணவர்களை மகிழ்விப்பதற்காகவே சாந்தி நிகேதனில் இயற்றப்பட்டன. அனேகமாக ஒவ்வொரு பத்தியிலும் இறைவனை, அவனுடைய புனித நாமத்தை கூறாமலேயே குறிப்பிடுகின்ற கலைத் திறனில் அவருடைய வரிகளில் அழகு அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றியது. ‘இசையின் பேரின்பத்தில் நான் என்னையே மறந்து என் இறைவனான உன்னை நண்பனென அழைக்கிறேனே,” என்று எழுதியிருந்தார்.
மறுநாள் மதிய உணவிற்குப் பிறகு நான் அந்தக் கவிஞரிடம் பிரியாவிடை பெற்றேன். அவருடைய சிறு பள்ளிக்கூடம் இப்பொழுது சர்வதேச பல்கலைக்கழகமாக, 'விஸ்வபாரதி” என்ற பெயரில் வளர்ந்து அங்கே பல நாடுகளிலிருந்தும் வருகின்ற மாணவர்கள் ஓர் ஆதரிசச் சூழ்நிலையைக் காண்பது எனக்கு மெத்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
‘எங்கே மனம் அச்சமென்பதறியாதோ,
தலை நிமிர்ந்து உள்ளதோ, எங்கே அறிவு சுதந்திரமாக உலவுமோ, எங்கே உலகு சுருங்கிய தேசச் சுவர்களினால் துண்டங்களாகப் பிளவுபடாதோ, எங்கே சொற்கள் உள்ளாழ்ந்த
உண்மையிலூறிப் பொங்குமோ, எங்கே என்றும் தளராத முயற்சிகளின் கரங்கள்
முழுநிலையை நாடுமோ, எங்கே அறிவின் தெளிந்த நீரோடை செத்த
பழக்கமெனும் வறண்ட பாலை வழி பாயாதோ, எங்கே மனம் என்றும் விரியும் எண்ணத்திலும் செயலிலும் நீ
நீ காட்டிய வழியில் முன் நடக்குமோ, அந்த விடுதலை சொர்க்கத்தில் எந்தையே
என்நாடு விழிக்கட்டும்!”
ரவீந்திரநாத் தாகூர்
大大大大大央央大央大大
ജ്ഞഔ - 2008 മത്ത - 14 -

மின்வெளிச் சமுதாயம் (தொடர்)
எம். சிவலிங்கம்
சைபர் சட்டங்கள் கடந்த இதழ் தொடர்ச்சி.
இது போன்ற சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண பல்வேறு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பலநாடுகளும் மின்வெளி சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. மேற்குறிப்பிட்ட சட்டச்சிக்கல்களுக்குப் பெருமளவு தீர்வு காணப்பட்டுள்ளது. தொடக்க காலங்களில் மின் வணிகத்தை ஒழுங்கு படுத்துவதற்கு மட்டுமே சைபர் சட்டங்கள் தேவைப்பட்டன. மின்வணிகத்தை ஒழுங்குபடுத்த ஐ.நா சபையில் எடுத்துக்கொண்ட முன் முயற்சியை இங்கு குறிப்பிட வேண்டும். 1996 டிசெம்பரில் ஐ.நா. சபையில் மின்வணிகம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. இது, மின்வணிக மாதிரிச்சட்டம் (Model Law of Exlectronic Commerce) 66óg) 360pâ5üULLg.
உலக அறிவாண்மைச் சொத்துடமை அமைப்பு (World Intellectual Property Organisation-WIPO) 199696b Gig6il6rsia) 2 (56) Tidu இரண்டு உடன் படிக்கைகள் சைபர் சொத்துடமை / பதிப்புரிமை ! காப்புரிமை தொடர்பான முன்னோடிச் சட்டவடிவு எனலாம். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் மின்னணுத் திருட்டுக்கூடாது (No Electronic Theft Act, 1997) 6T6760 Lib சட்டமும், டிஜிட்டல் மிலேனியம் Lig, Life,0LD5 (The Digital Millenium-copy Right Act, 1998) Bill (pf) இயற்றப்பட்டன.
ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் எக்லீப் (ECLIP-Electronics Commerce Legal Issues Platform) 676ði so ab Lól. 1ņ60Duu SÐ460)LDgöË5g5. இக்கமிட்டி சைபர் சட்டங்கள் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பரிந்துரை செய்தது. அவற்றின் அடிப்படையில் சில ஐரோப்பிய நாடுகள் சைபர் சட்டங்களை இயற்றின.
ஐ.நா. சபைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, மலேசியாவில் 1997ஆம்
= 15 - തമ്മ ஜூலை - 2008

Page 10
ஆண்டில் சைபர் சட்டங்கள் (Cyber Laws) நிறைவேற்றப்பட்டன. சிங்கப்பூர் அரசு, 1998ஆம் ஆண்டில் மின்னணுத் தகவல் பரிமாற்றச் சட்டத்தை (Electronic Transactions Act) É60go(36)sbgóugöl. G|bgslu IT6úlsÓ 2000S,b ஆண்டு ஜூலை மாதம் 'தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 நிறைவேற்றப்பட்டது. மின்வணிகம், டிஜிட்டல் ஆவணம், டிஜிட்டல் கையொப்பம், டிஜிட்டல் தடயம் பற்றிய விதிமுறைகள் இதில் உள்ளன.
பல நாடுகளிலும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் சைபர் சட்டங்களுக்கான முன்னோடித்திட்டங்களே. இவையே முற்று முடிந்தவை என்று கருதி விட முடியாது. இதே திசை வழியில் நாம் இன்னும் வெகுதொலைவு போக வேண்டும். சைபர் சமுதாயத்தில் சந்திக்கப் போகும் சைபர் சிக்கல்களுக்குத் தீர்வுகாண ஒவ்வொரு நாட்டளவிலும், சர்வதேச அளவிலும் சைபர் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
六六六古六六六六六六六
உலகில் மக்கள் மிகவும் கேடான சமுக நிலமைகளையும் சகித்துக் கொண்டு, முன்னேற்றமடைய பெருமுயற்சி எதுவும் செய்யாதிருப்பதற்குக் காரணம் ‘மது’ வால் கோடிக்கணக்கான குடும்பங்கள் முளை மழுங்கி மந்தமடைந்து தங்களது கல்லறைகளை நோக்கி ஊர்ந்து கொண்டிருப்பதால் தான்.
ஜார்ஜ் பெர்னாட்ஷா
ஜூலை - 2006 மண 6 -

இயந்திர மொழிபெயர்ப்பு
இயந்திரமொழிபெயர்ப்பு என்பது ஒரு கலையா, அல்லது அறிவியல் துறையா, அல்லது தொழில்நுட்பத் துறையா, என்னும் விவாதம் எழுவதுண்டு. அவரவர் மனம் போல் இதற்கு விடை கூறுவதுண்டு.
கவிதையைச் சுவை கெடாமல், மூலக் கவிதையின் பண்போ, தரமோ, கருத்தோ மாறாமல் அதைப் படிப்பவனின் மனத்தில் தான் ஒரு மொழி பெயர்ப்பை அதாவது வேறொரு எழுதியதின் அடிச் சுவட்டைப் பின்பற்றி அரிதே தள்ளாடி நடந்துவரும் வாசகத்தைப் படிப்பது போன்ற உணர்ச்சியைத் தூண்டாமல், செய்யப்படும் மொழிபெயர்ப்பே சிறந்த மொழிபெயர்ப்பு. கலைத் துறையைச் சார்ந்தது. ஆனால் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சொல்லுக்குச் சொல்லும், பதத்துக்கு பதமுமாக மொழி பெயர்த்தபோதிலும் பொருள் கெடாமலிருக்கும் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்துறையைச் சார்ந்தது என்றே சொல்லலாம். இங்கு மனித அறிவுக்கு இடம் உண்டே தவிர, கற்பனைப் பண்புக்கு, ரசிகத் தன்மைக்கு அதிக இடம் இல்லை. ஆனால், இவ்இரண்டு துறைகளையும் சார்ந்த மொழிபெயர்ப்புக்கள் எல்லாம் ஒரே வகையானவை என்று எண்ணிவிடலாகாது. இவ்விரண்டு துறைகளிலும் கூட கற்பனைப் பண்புகள் மிகுந்த பகுதிகள் உண்டு. அவற்றை மொழிபெயர்க்கும்போது, அறிவோடு கற்பனையும் கலந்தே செயல்புரிய வேண்டியிருக்கிறது. அரிய விஞ்ஞானக் கோட்பாடுகளில் சில இவ்வகையைச் சார்ந்தவை. இரண்டும் இரண்டும் நாலு என்று சொல்லுவதற்கும், ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் இணைந்து தண்ணிராக அமைகின்றன என்பதற்கும், கற்பனை மனமோ கவிதைப் பண்போ தேவை இல்லை. ஆனால் பிரபஞ்சத்தின் எல்லை, தத்துவம், தன்மை, முதலியவற்றை (இவற்றுள் ஒன்றையும் நாம் நேரில் காணவோ உணரவோ முடியாது) விவரித்துக் கூறவும், நுண்ணிய அணுவின் உள்ளே அதனிலும் நுண்ணியதுகள் அடங்கியுள்ள நிலைகளைக் கூறவும், கற்பனை மனமும் உணர்ச்சியும் வேண்டும். "அலையே என்னில் துகளே ஆம், துகளே என்னில் அலையே ஆம் தன்மையை உடைய ஒளியின் தத்துவத்தை உணரவும் வெளியிடவும் அரிய கற்பனைத்திறன் வேண்டும். ஆதலால் மொழிபெயர்ப்பு கலையாகவும், அறிவியலாகவும் இரு வேறு தன்மைகளை உடையது.
17 =
ஜூலை - 2008

Page 11
மொழிபெயர்ப்பு என்பது ஓர் அருமையான பாலத்தைப் போன்றது. மனத்தோடு மனத்தையும், நாட்டோடு நாட்டையும், பழமையோடு புதுமையையும் இணைக்கவல்லது. அவ்வாறு இணைத்து வருவது ஒவ்வொருவனும், எம் மொழியினை ஆகட்டும், வெளியிடும் வாசகம் ஒவ்வொன்றும் ஒரு மொழி பெயர்ப்பு. அவனுடைய மனத்தில் தோன்றும் கருத்து, மொழி வடிவமாக வெளிவரும்போது, ஒன்று மற்றொன்றாக அமைகிறது அல்லவா? எத்தகைய அறிவிற் சிறந்த நாடாயினும், அந்நாடு ஒன்றே அறிவு அனைத்தையும் தன்னிடம் மட்டுமே கொண்ட களஞ்சியம் என்று சொல்லலாகாது. ஆகவே, ஒவ்வொரு நாட்டு பேரறிஞரும், மேதைகளும், தத்துவ தரிசிகளும், கண்டு வெளியிட்ட கருத்துக்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக வேண்டுமாதலால், அவை மொழி பெயர்க்கப்பட்டும் வந்திருக்கின்றன. அக்காரணத்தால் உலகப் பண்பாடு ஒருமைப்பாட்டை உடையதாகிறது. மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு வாழச் செய்கிறது. அறிவுச் செல்வம் உலகனைத்துக்கும் பொதுவானதும், எடுக்க எடுக்கக் குறையாததுமான செல்வமாகத் திரண்டு வருகிறது. எங்கும் பரவுகிறது, மொழி பெயர்ப்பின் துணையால்.
ரஷ்யர்கள் ஸ்புட்னிக்கை விண்வெளியில் வீசிய செய்தியை அமெரிக்கர்கள் தெரிந்து கொண்டவுடன் பெருவியப்பு அடைந்தார்கள். அறிவியல் துறையின் முன்னணியில் இருப்பதாக எண்ணி வந்த தம்மைவிட ரஷ்ய முன்னேறியது ஏன் என்று தங்களைத் தாமே வினவத் தொடங்கினார்கள். நம்முடைய அறிவியல் கல்விமுறையில் என்ன ஊனம் இருக்கிறது என்று தேடினார்கள். அத்துறையைத் திருத்தி அமைப்பதற்கான வழிகள் அனைத்தையும் தேடி வகுத்தார்கள். ரஷ்யர்களை விண்வெளித் துறையில் எட்டிப் பிடிக்க வேண்டும். அவர்களைக் காட்டிலும் அத்துறையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று முனைந்தார்கள்.
விஞ்ஞான அறிவின் அடிப்படையிலே தான் ரஷ்யா அவ்வளவு முன்னேற்றம் அடைந்தது. ஆகவே அவர்களின் விஞ்ஞான அறிவின் தரத்தை அதன் நுட்பங்களை, விவரங்களை, போக்கை அறிந்து கொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார்கள். விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகள் எல்லாம், சிற்சில செய்திகளைத் தவிர, மற்ற விவரங்களை எல்லாம் விஞ்ஞானப் பத்திரிகைகளில் வெளியிடுகின்றன. அவ்வறிவு மக்கள் அனைவருக்கும் பொதுவாகிறது. நாடு விஞ்ஞான உரம் இட்ட வளம் பொருந்திய நாடாக ஆகிறது. அப்படிச்
ஜூலை - 2008 سه 118 سم

செழுமையுடைய விளைநிலத்தில் புதுக்கருத்துக்கள் முளைத் தெழுகின்றன. புதிய தின் ைேமகள் வெளித்தோன்றுகின்றன.
கண்டுபிடிக்கப்படுகின்றன. புத்தமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.
ஆதலால் ரஷ்யா விஞ்ஞானப் பத்திரிகைகள், நூல்கள் ஆகியவற்றில் அடங்கிய சிறந்த விஞ்ஞானக் கருத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தம் நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இது மாபெருஞ் செயல், பல்லாயிரக் கணக்கானவர் ஒன்று கூடி உழைத்தாலும், நெடுங்காலம் பிடிக்கக் கூடிய செயல்.
ஆனால் இது விரைவில் செய்யப்பட்டால் அன்றி, ரஷ்யர்களை எட்டிப் பிடிப்பது எப்படி? ஆகவே இயந்திர மொழிபெயர்ப்பே இதற்கு உரிய வழி என்று தோன்றிற்று.
இதற்குள் 'எலெக்ட்டிரானியல்’ என்னும் துறை வளர்ந்து, 'கம்பியூட்டர்கள்’ என்னும் விந்தை கருவிகள் அமைக்கப்பட்டு விட்டன. இவற்றுள் ஒரு வகைக் கருவி மொழிபெயர்ப்புக்கு உரியதாக அமைக்கப்பட்டது. அத்தகைய இயந்திரம் தானாக ஒன்றும் செய்யாது. அது கற்பிக்கப்பட வேண்டும். அறிவும், சொல்லும், இணைச்சொல்லும் கற்பிக்கப்பட்டாக வேண்டும். அப்படிக் கற்பிக்கத் தொடங்கி, இயந்திரங்களுக்கு மொழிபெயர்க்கக் கற்றுக் கொடுத்து விட்டார்கள். தனித்தனியே ஒவ்வொரு மொழிக்கும் வெவ்வேறு இயந்திரம் வேண்டும். அவை அமைந்து விட்டன.
அவை செயல்படும் வேகம் நம்மால் நினைக்கவும் ஒண்ணாதது. நிமிஷத்துக்கு இரண்டாயிரம் சொற்களையோ, வேண்டுமானால் இன்னும் வேகமாக, அவை மொழிபெயர்க்கின்றன. சிற்சில வேளைகளில் தவறினாலும் (அப் போது விஞ்ஞானி திருத்திக்கொள்கிறார்) பொதுவாக நன்றாக வேலை செய்கின்றன.
ரஷ்யர்கள் வீசிய ஸ்புட்னிக்கே, இயந்திர மொழிபெயர்ப்பை ஊக்குவித்தது என்று சொன்னால் மிகையாகாது.
பெ.நா. அப்புசாமி
திணிக்கப்படுகின்ற கல்வி பயன் தராது - காலம் தான் வீணாகும். விருப்பம் அறிந்து புகட்டப்படுகின்ற கல்வியே சிறந்து விளங்கும் ஜார்ஜ் பெர்னாட்ஷா
سے 149 ۔
ஜூலை . 2008

Page 12
கலாச்சார சீரழிவுகள்
“வீட்டிலை உதவிக்கு ஆம்பிளைப் பொடியன் ஒருத்தரும் இல்லை. சந்தைக்கு போறதெண் டால் என்ன, கடைக்குப் போறதெண்டால் என்ன நான்தான் போக வேண்டிக் கிடக்கு.”
இதுதான் இன்றைய தமிழ்த் தாய்மார் பலரினதும் முறைப்பாடாக இருக்கிறது ஏன்! இன்னமும் ஒருபடி மேலே போய்.
“அவரும் ஊரிலை இல்ல. பாங்குக்குக் கூட நான்தான் அலைய வேண்டிக்கிடக்கு’ என்று முனகுபவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எங்கே போய்விட்டார்கள் இந்த இளைஞர்கள் ஆடவர்கள் 6T6)6OT b ...?
விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்து விட்டதால், இவர்கள் எல்லாம் வீட்டைத் துறந்து, தமது பங்களிப்பை அளிக்கக் களம் புகுந்து விட்டார்களா?
இல்லவே இல்லை.!
“பிள்ளைகளை இஞ்சை வச்சிருந்தால், இயக்கத்தில் சேர்த்துப் போடுவார்கள்!” என்று அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள் சிலர்.
“பொடியள் இருக்கிறார்கள் தானே, போராடிச் சுதந்திரம் பெற்றுத்தர அதுமட்டும் எங்கட பிள்ளைகளை பாதுகாப்பாக
வெளிநாட்டில இருக்கட்டும்’ என்று செயற்படுகிறார்கள் வேறு சிலர்.
“பொம்பிளைப் பிள்ளைகளுக்கு சீதனம் தேடவேணும்” என்று ஒடுபவர்கள் இன்னும் சிலர்.
சொகுசான வாழ்க்கைதேடி ஓடுவார்கள் பலர். இந்தச் சுயநலக்காரக் கும்பல்களின் நோக்கம் என்ன?
ஜூலை = 2006 - AW 2O

அவர்கள் போராடிச் சுதந்திரம் பெறட்டும் , நிலைழை சீர்திருந்தட்டும், அமைதி வரட்டும், அதன்பிறகு நாங்கள் நாடு திரும்பி, நிம் மதியாக, ஆடம் பரமாக , செல் வாக் குட னி 6עו חוה நினைத்திருக்கிறார்கள்.
பிழைக்க வழி தெரிந்தவர்கள் ஆனால் முன்னைய பண்டா போல் இன்றைய அதி உத்தமர் போல் முதுகெலும்பு இல்லாத கோழைகள்!
மற்றவர்களது உழைப்பில், தாம் ஆதாயம் தேட முயலும் நயவஞ்சகர்கள்!
ஆனால்.
ஒரேயடியாக மறுக்கப்பட்ட அரசாங்க வேலை வாய்ப்புக்கள், பயந்து பயந்து குறைக்கப்பட்ட தனியார்துறை வேலை வாய்ப்புக்கள், தமிழரது பொருளாதார வளங்கள் முற்சிகள் மீது திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட நயவஞ்சகத் தாக்குதல்கள், புதிய எரிபொருள், பொருளாதாரத் தடைகள்.
இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு, எமது பொருளாதாரம் ஒரேயடியாகச் சாய்ந்து விடாமல், முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பது இவர்களது இந்த வெளிநாட்டு உழைப்புத்தான் என்பதும் உண்மை.
குடிசைகள் அழகான வீடுகளாகக் கோலங்கொள்கின்றன.
கந்தல் துணிகள், நேரமொரு நவீன ஆடைகளாகச் சோபனம் கொள்கின்றன.
ஒரு நேரச் சோறுகூடக் கிடைக்காதவர்கள், கேக்கும் ஐஸ்கிறீமும் தெவிட்டுகிறது என்கிறார்கள்.
இவையெல்லாம் தேவையான வளர்ச்சிதான். காலமாற்றத்தின் நியதிதான்.
ஆனால் இதைப் பெறுவதற்காக நாம் எதை, எதையெல்லாம் இழக்க வேண்டியதாயிற்று.
மூன்று சிறு சம்பவங்களைக் கூறுகின்றேன். உங்களுக்கே புரியும்.
۔ 21 سے
ஜூலை . 2008

Page 13
அவனின் சீரழிவு
என்னுடன் தனிமையில் அரசாங்க விஷயங்களைப் பற்றிக் கதைக்கவெனத் தயங்கியபடி வந்தான்.
புதிதாக மணமானவன், மாலைசூட்டி மாதம் ஒன்று கூட ஆகவில்லை. அதற்கிடையில் இந்தச் சிக்கல்.
ஏமாற்றம் தரும் உறவு புது வாழ்க்கை ஒட்டாமலே பிரிந்து விடக்கூடிய நிலை!!
தனிமையில், மங்கிய ஒளியில் அவளை அணுகியவுடனேயே அவன் சோர்ந்து விடுகிறான். அவனால் முடியவில்லை.
இயலாமை. ஏமாற்றம். சலிப்பு.
அவள் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறாள்
ஏமாற்றம். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் தொடர்கிறது.
ஒருநாளா?. இரண்டு நாளா..?. மாதம் ஒன்று கழியப் போகிறது.
இனியும் முடியாது. அவள் பொறுமை இழந்து விட்டாள். உறவை முறித்து ஒரேயடியாகப் பிரித்து விடலாமா என்ற தனது
எண்ணத்தை அவனுக்குக் கொடி காட்டி விட்டாள்.
அப்படி நேர்ந்தால் அந்த அவமானத்துடன் உயிர்வாழ முடியுமா? என்ற ஏக்கம் அவனுக்கு. என்னிடம் ஓடி வந்தான்.
பொறுமையுடன், பூரணமாக அவனைப் பரிசோதித்தேன் அவனது உறுப்புக்களில் எந்தக் குறையும் இல்லை.
ஏதோ மனோவியல் சிக்கலாகத்தான் இருக்கவேண்டும்.
நிதானமாகப், புரிந்துணர்வுடன் அவனுடன் நீண்ட நேரம்
உரையாடினேன். அவனது கடந்த கால வாழ்க்கையை பற்றி விசாரித்தேன்.
ஜுலை - 2006 மண ۔ 22۔

மூன்று வருடங்களாக, மத்தியகிழக்கு நாடொன்றில் பெரும் முதலாளி ஒருவனின் தனிப்பட்ட டிரைவராக கடமையாற்றினான். கை நிறையச் சம்பளம். வயிறு நிறையச் சாப்பாடு, நிம்மதியான வாழ்க்கை அப்பொழுதுதான் அந்த பங்களாவில் கடமையாற்றிய ஒரு சிங்களப் பணிப்பெண்ணின் நட்புக் கிடைத்தது.
நட்பு நெருங்கியது. மேலும் இறுகியது. படுக்கையறை வரை சென்று விட்டது.
அப்பொழுது அவனுக்கு எல்லாமே நிறைவாக முடிந்தது! எந்த இயலாமையும் இருக்கவில்லை!
எனக்குத் துரும்பு கிடைத்து விட்டது! அதை வைத்துக் கொண்டு, மனோதத்துவ ரீதியில் அவனை மேலும் நெருங்கி விசாரித்து போது, அந்த உறவு அவனது மனத்தை மிக ஆழமாகப் பாதித்து விட்டது! தான் ஒரு பெரிய குற்றத்தைச் செய்து விட்டதாகத் தன் மனதுக்குள்ளேயே மறுகினான்.
பழைய சுகங்கள் மலர் மணமாக தென்றலோடு கூடிக்குலாவி மனத்தை நிறைக்கின்றன.
பழையவளை மறக்க முடியவில்லை. அந்த நேரத்தில் புதியவளுக்குத் துரோகம் இழைத்ததாக மனம் கோணுகிறது.
இதனால் இவளை நெருங்கும் போதெல்லாம், குற்ற உணர்விற்கு ஆளாகி மனந்தளித்து இயலாமைக்கு ஆட்பட்டான்.
அவன் முன்பு செய்தது பிழையென்ற போதும், அந்தக்குடும்பம் விவாகரத்து வரை சென்று பிரிந்து விடாமல் இருப்பதற்கு, என்னால் ஆகக்கூடியதைச் செய்யவேண்டும்.
அவனுக்கு பல விஷயங்களைப் புரிய வைத்தேன். பல சம்பவங்களை உதாரணம் காட்டினேன். குற்ற உணர்வை இழக்க வைத்து, நம்பிக்கையை அவன் மனதில் வளர வைத்தேன். சில மருந்துகளும் உதவின.
அண்மையில் பை நிறைய கற்கண்டுடன் முகம் நிறைந்த சிரிப்புடனும் என்னிடம் வந்தபோது, என்னால் கூட மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.
- 23 -
ஜூலை - 2006

Page 14
இன்னுமொரு சீரழிவு
அவனை இழுத்து வராத குறையாக என்னிடம் அழைத்து வந்தனர்.
மொட்டை தலை! நிர்ச்சிந்தையாக எதையோ எங்கோ தூரத்தில் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
கேட்ட கேள்விக்குப் பதிலில்லை தட்டிப் பார்த்த போதும், உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை!
கூட்டிக்கொண்டு வந்த அவனது மனைவியும், உறவினர்களும் ஏக்கம் தெளியாமல் கவலை வழிய நிற்கிறார்கள்.
சவூதி அரேபியாவிற்கு அவன் போய் ஆறு மாதம் கூட இருக்காதாம் . திடீரென ஒருநாள் கட்டுநாயக் காவில் வந்து இறங்கியிருக்கிறான். இவர்களுக்குத் தெரியாது. அவன் அறிவிக்கவில்லை. அறிவிக்கக்கூடிய மனத்தெளிவுடன் இருக்கவில்லை.
கட்டு நாயக்காவில் இவன் வெறித்த பார்வையுடன் நிற்கையில், முடிச்சு மாறிகள் இவன் உடமைகளைச்சுருட்டி விட்டனர் போலும், வெறுங்கையுடன் நின்ற இவனைக் கண்ட ஒரு உறவினர் விசாரித்த போது இவன் வாயே திறக்கவில்லை. மிகுந்த கஷ்டத்துடன் இவனை ஊருக்கு கூட்டி வந்து மனைவியிடம் ஒப்படைத்து விட்டான்.
வீட்டிற்கு வந்ததுதம் எதுவும் பேசவில்லை! கேட்ட கேள்விகளுக்கு மறுமொழி எதுவுமில்லை. சிரிக்கவும் இல்லை, அழவும் இல்லை. ஊட்டினால் உண்கிறான். பருக்கினால் குடிக்கிறான். உடையைக் கொடுத்தால் மாற்றுகிறான். எந்தவித உணர்வோ உணர்ச்சியோ இல்லை. எல்லாம் மறந்து, மரத்து மரக்கட்டையாக நிற்கிறான். ஏதோ திடீர் அதிர்ச்சியால் மனம் பேதலித்து விட்டது! ஏன் எப்படிப் பேதலித்தது. எப்படி கொழும்பு வந்து சேர்ந்தான். ஒன்றுமே அவர்களுக்குப் புரியவில்லை எனக்கும் தான்.
மனோதத்துவ வைத்திய நிபுணரிடம் அனுப்பி வைத்தேன் அப்பொழுது அவனது சவூதி அறை நண்பரின் கடிதம் அவர்களுக்குக் கிடைத்தது.
ஜூலை . 2006
- 24 -

ஊரிலிருந்து வந்த ஒரு கடிதத்தைப் பார்த்தபின் தான் இப்படியாகி விட்டான். வெறுமையான பார்வையுடன் திரிந்தான். வைத்தியரிடம் செல்ல மறுத்து விட்டான். வேலைத்தளத்தில் ஏற்பட்ட ஏதோ தகராறில் குற்றம் விசாரிக்கப்பட்டு அந்த நாட்டு வழக்கப்படி மொட்டையடிக்கப் பட்டான். பிறகு ஊருக்கு அனுப்பப்பட்டான் என எழுதியிருந்தான்.
பிறகுதான் அவனுக்கு வந்தது என்ன கடிதம் என்று தேடிப்பிடித்து பார்த்திருக்கிறான்.
மொட்டைக்கடிதம் நீ உங்கு உழைத்து வாடுகிறாய். இங்கு உனது மனைவி தனது பழைய காதலனுடன் உனது உழைப்பில் உல்லாசம் காண்கிறாள்' என்று கருத்துப்பட எழுதியிருந்தது.
உடனே உறவினர்கள் இங்கு விசாரித்து பார்த்திருக்கின்றனர். அவள் ஒழுக்கமான அடக்கமான பெண் ஒருவரையும் காதலித்திருக்க வில்லை. எப்பொழுதும் எந்தக் காதலுடனும் உல்லாசமாகக் கொண்டாடவில்லை.
யார் இந்த இழிந்த நாகரிகமற்ற மொட்டைக் கடிதத்தினை எழுதியது? துருவித் துருவி ஆராய்ந்ததில் அது வெளிப்பட்டது.
அவளை முன்பு மாணவப் பருவத்தில் ஒருவன் விரும்பி இருக்கிறான். ஒருதலைக்காதல் பின் அவளை மணமுடிக்கவும் காத்திருக்கிறான். அதுவும் முடியவில்லை.
விரக்தியடைந்த அவன் கோரமான பழி வாங்கலில் இறங்கினான். விஷயம் புரிந்ததும் வைத்தியம் இலகுவாயிற்று.
அவர்களின் சீரழிவு
புத்தம் புதிய சேலை, பளபளக்கும் தாலி, மஞ்சள் பூசியதும்
பளிச்செனத் தெரியும் கன்னம், அழகான பெரிய குங்குமப்பொட்டு
நாணமும் பூரிப்பும் பொலியும் முகம்.
புதிய சேட், இவள் என் மனைவி, இவளை நான் காப்பேன் என்ற உறுதியும் பொறுமையும் காட்டும் கம்பீர முகம்.
- 25 -
ggresoro - 2006

Page 15
பார்த்தவுடனேயே புதுமணத் தம்பதிகள் எனப் புரிந்தது. தமது புது வாழ்க்கையை ஒழுங்காகத் திட்டமிட்டு அமைக்க என்னிடம் ஆலோசனை பெற வந்திருப்பார்கள் என நினைத்தேன்.
“தாங்கள் வெளிநாட்டிற்குப் போகப் போறம், பிளைட் இன்னும் சில நாட்களில் கிடைச்சிடும் போலையிருக்கு.
ஆனால் இவவிற்கு மாதச் சுகயினம் வரப்பிந்திவிட்டது.
பிரயாணம் பண்ணினால் கரு அழிந்து விடும் என்று பயப்படுகிறார்கள் போலும்.
‘பயப்பட ஒன்றும் இல்லை. கொழும்பு போகும் வரைக்கும் தான் பிரயாணம் கொஞ்சம் கஷ்டம். ஆனால் ஒன்றும் நடக்காது. பிறகு சொகுசான பிளேன் பிரயாணம் தானே.
அங்கை போனால் நல்ல சுவாத்தியம் சத்தான சாப்பாடு நல்ல மருத்துவ வசதி ஆரோக்கியமான வாழ்க்கை. எந்தப் பயமும் இல்லாமல் துணிந்து பிரயாணம் செய்யலாம்” என்றேன்.
‘அதில்லை டொக்டர்." அவன் தயங்கினான்.
‘அங்கை போன உடனை கர்ப்பம், பிரசவம் என்றால் கஷ்டம் சமாளிக்க ஏலாது. இரண்டு பேரும் வேலை செய்தால் தான் உழைச்சு சுகமாக இருக்கலாம். நாலு காசு சேர்க்கலாம் என்றபடியால் இப்ப பிள்ளை வேண்டாம். இதை அழிக்க வேணும்.”
எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
எத்தனை பேர் பிள்ளை இல்லை என்ற கவலையில் ஏங்கித் திரிகிறார்கள். எத்தனை நேர்த்திக்கடன் வைத்தும் எவ்வளவோ வைத்தியம் செய்தும் பலன் இல்லாமல் வாடுகிறார்கள்.
ஒன்றை ஆக்குவது தான் கஷ்டம். ஆனால் அழிப்பது சுலபம் என்பதைப் புரியாமல் இருக்கிறார்களே.
பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் என்றால் ஒரு வேளை அவர்களது குடும்பக் கஷ்டத்தை எண்ணியாவது மன்னிக்கலாம்.
് 26 ഒ
ஜூலை . 2006

ஆனால் இது இவர்களின் முதல்க் கர்ப்பம். இவர்களின் இணைவின் முதல் அறுவடை, எத்தனை அரியது. எத்தகைய மகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தக் கூடியது.
இதை அழிக்க முயல்கிறார்கள். இதை அழித்து விட்டால் இதன் பிறகு குழந்தை பிறக்கும் பாக்கியம் இவர்களுக்கு இல்லாமலேயே போகலாம். தங்களது சொகுசான வாழ்விற்காகவும் பண ஆசையாலும் இப்படி ஒரு முடிவிற்கு வந்தார்களே எனக் கோபம் வந்தது.
ஆனால் அவர்கள் பிரச்சினை அவர்களுக்குத்தான் தெளிவாகத் தெரியும் என்பதும் புரிந்தது. ஆனால் அழிக்கவா முடியும் சட்டம் இடங் கொடுக்காது மனச்சாட்சியும் விடாது.
மறுத்து அனுப்பி வைத்தேன்.
வெளிநாட்டுப் பணம் வேண்டுமென்று சொல்லி இத்தகைய கலாச்சாரச் சீரழிவுக்கு இடமளிக்கத்தான் வேண்டுமா?
Dr. M. K. (ypgassTeofisabib
நன்றி. ஒருடாக்டரின் டயரியில் இருந்து.
ஒன்றைப் பெற்றுவிடத் துடிக்கும் துன்பம் - பெற்றபின் அதன் தன்மை கருதிய துன்பம் - இரண்டுமே எதிர்பார்ப்புகளால் விளைந்தவைகள். ஏமாற்றத்தையும் - துன்பத்தையும் போக்கிக் கொள்ள ‘எதிர்பார்ப்புகளை” ஒத்திப் போடுங்கள்.
سے 27 پر
ஜுலை - 2006

Page 16
குருமுகம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் இதயங்களில் என்றும் பசுமையாக நிலைத்து நிற்கிறது; இலங்கையின் திருக்கோணமலையில் அமைந்த சுவாமிஜியின் சந்நிதானமான சிவயோக சமாஜ யோகாச்சிரமம். அந்த அழகிய அமைதி நிரம்பிய ஆச்சிரமம் ஞானம், தியாகம், பரோபகாரம் போன்ற விசேஷ குணாம்சங்கள் பொருந்திய காவி நிறத்தினுள் அடங்கி இருக்கிறது. ஆச்சிரமத்தினுள்ளே சஞ்சலத்துடன் வருவோரை, தன் சைத்தன்னிய அலைகளால் அரவணைத்து, சாந்தி அளித்து வரவேற்கிறது முன் மண்டபம். அவரவர் பிரார்ப்த கர்மவினை நீங்க, பிரார்த்தனை, சத்தங்கம் போன்ற சற்கருமங்களில் ஈடுபட்டுத், தீவினை எரித்து நல்வினை சேர்த்திட வழிக்கோலுகிறது இப் புனித மண்டபம்,
கண்ணிர் மல்கி, உள்ளம் உருகி, மேனி சிலிர்த்து, கசிந்துருகும் பஜனைப் பாடல்களையும், மனதுக்கும் புலன்களுக்கும் இதமளிக்கும் இசை நிகழ்ச்சிகளையும் நமது செவிப்புலன்களுக்கு அம் மண்டபம் வழங்குகிறது. மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கக் கூடிய திரவியங்களின் ஹோமப் புகையையும், ஊது பத்தியின் சுகந்தத்தையும் இம் மண்டபத்தின் நாசி நுகர்கிறது. இறைவனுடைய நாமங்களில் மனம் ஒன்றி அவனை கூவி அழைப்பதற்கும், எம் குருவின் பேரன்பை நினைத்து அங்கு பித்தாகப் பேசவும் நாகொடுத்து வைத்திருக்கிறது. இதை சிருஷ்டித்த சிற்ப்பியின் தவக்கோலத்தைக் காணும் பேற்றையும், பிறவியின் புண்ணிய பலத்தையும் நினைத்து, கண்ணிர் மல்கும் பேற்றை நம் கண்களும் இங்கு பெறுகிறது. காற்றடைத்த நமது காயம், இவற்றுடன் ஒருங்கு சேர்ந்து பெரும் சுகத்தை இம் மண்டபத்தில் அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கிறது.
இப்பேர்ப்பட்ட பேரனுபவத்தை பல்லாயிரக் கணக்கான ஜென்மங்களுக்கு கொடுக்கும் அருட்சக்தி இம் மண்டபத்தில் நிறைந்து வழிந்து, அள்ள அள்ள ஊறி வருகின்ற பெருமையை கூறாமல் இருக்க முடியவில்லை. சிறிது நேரம் மண்டபத்தில் அமர்ந்தாலே மனச்சுமை குறைந்து, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு, துணிவு, தன்னம்பிக்கை ஏற்படும்.
ஜூலை - 2008 ے 28 سه

சுகானுபவத்தைப் பெறும் பலரை நெஞ்சார நினைந்து உருகவைக்கும் அற்புத சக்தி வாய்ந்தது அம் மண்டபம். ஆச்சிரமம் மண்டபத்தின் வலது புறத்தில் அமைந்த அடக்கமான ஒரு அறைதான் எம் குருஜி பல வருடங்களைக் கழிக்கும் உறைவிடம். அந்த அறை வாசலில், “you are born for higher things' 616örg QLT3disablut (66f 6f 6ft 335,5156ft எமது ஜனனத்தின் நோக்கத்தை ஞாபகப்படுத்துகிறது.
எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்களைத் திசை திருப்பி, அவர்களுடைய வாழ்கையை உயர்த்திய பெருமைக்குரியது அந்த புனித அறை. இத்தகைய பெருமை வாய்ந்த சுவாமிஜியின் சந்நிதானத்தில் எத்தனையோ கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது. எத்தனையோ சங்கடங்கள் தீர்ந்து போயிருக்கிறது. எத்தனையோ அற்புதங்கள் மலர்ந்தும் இருக்கின்றது. எம் குருதேவரைச் சுற்றியுள்ள சக்திவாய்ந்த அலைகளின் சைத்தன்யப் பெருமையை தன்னகத்தே அடக்கி வருவோருக்கு சாந்தி அளிக்கிறது சுவாமிஜியின் அந்த இருப்பிடம். அந்த சின்னஞ்சிறு அறைக்குள் இருந்து கொண்டே பல்வேறு காரியங்களுக்கும் அத்திவாரம் இடும் புனித இடமாகவும் அது அமைந்துள்ளது.
சுவாமிஜியின் அறையின் இடது புறத்தில் குருவின் எளிமையான மரக்கட்டில், தலைப்பக்கத்தில் ஒரு சிறிய அலுமாரி, கால் பக்கம் சிறிய மேசை, மேசையில் ஒரு கூடையும் தோல்ப்பையும் காணப்பட்டது. அறையின் வலது பக்கத்தில் ஒரு பெரிய அளவிலான மேசை, இந்த மேசையின் கீழ்ப்புறத்தில் மூன்று, நான்கு பூசணிக்காய்கள் அநேகமாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். பாடுபட்ட பாட்டாளிக்குத் தோலோடு பூசணிக்காய் என்று நம் முன்னோர்கள் கூறும் பழமொழிதான் ஞாபகத்துக்கு வரும். சுவாமிஜியின் சந்நிதானத்தில் எப்போதும் ஓர் ஆழமான உள்ளார்த்தத்தைத்தான் அது வெளிப்படுத்தி கொண்டிருந்தது. இந்த மேசையின் மீது அழகான மேசை விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருபுறம் புத்தகங்கள், கடிதங்கள் அழகாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மறுபுறம் வெள்ளித் தட்டொன்றில் ஊதுபத்தி புகைந்த படியே சுகந்தமான நறுமணத்தை அறைமுழுவதும் பரப்பிக் கொண்டிருந்தது. மேசையின் நடுப்பகுதியில் சுவருடன் சாய்ந்தபடியே நடுத்தர அளவுடைய ஒரு நிலைக்கண்ணாடி,
- 29 - ஜூலை - 2006

Page 17
பூர்வ வாசனையின் தொடர்பு போலும், அழகிய குருவி ஒன்று அந்த மேசையின் கண்ணாடிக்கருகில் மிக நெருக்கமாக கண்ணாடியை நோக்கியபடியே நின்று கொண்டிருப்பதை, சுவாமிஜியை தரிசிக்கச் சென்ற வேளைகளில் அவதானித்தேன். சுவாமிஜி வெளியே செல்கின்ற நேரங்களில் வெளியேறி, ஆச்சிரமத்திற்கு அவர் திரும்பியதும் குருவியும் மேசைக்குத் திரும்பிவிடும். இப்படியாக சில மாதங்கள் தொடர்ந்து அந்தக் கண்ணாடியை உற்று நோக்கியபடியே அசைவின்றி நின்று கொண்டிருக்கும் காட்சியை பார்க்கக்கூடியதாயிருந்தது.
அச்சிறு பறவை பசியாறுவகற்கென சில தானியங்கள் சுவாமிஜியின் திருக்கரத்தினால் போடப்பட்டிருக்கும். பார்க்கும் வேளைகளிலெல்லாம் தன் பிம்பத்தைக் கண்ணாடியில் உன்னிப்பாக பார்த்தப்படியே அசையாமல் நிற்பது வினோதமான உணர்வைக் கொடுத்தது. கண்ணாடியில் பிரதிபலிக்கும் தன் உருவம்தான் தன்னுடைய ஆத்மா என்று தன்னையே கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தது அக்குருவி. மாறுபடும் தன்மையதான இவ்வுடலையும், மாறாத பெரு நிலையான ஆத்மாவையும் மறந்து, அதிலேயே மதி மயங்கி நிற்கிறது அந்தப் பறவை. சுவாமிஜியின் தரிசனத்தைப் பெறுவதற்காக, அந்தப் புனித அறைக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு ஓர் ஆழமான கருத்தை இந்த அழகிய குருவி சிலகாலம் கொடுத்துச் சென்றது பலகாலம் மனதைவிட்டு அகலவில்லை.
செல்வி. தா. சியாமளாதேவி
துயரம் அதிகமாகும் போது தான் உணருகின்றேன். காதலிக்காமல் இருப்பதை விட, காதலித்து இழந்து விடுவதே மேல்.
ஜார்ஜ் பெர்னாட்ஷா
ஜுலை - 2006 mmmmmmmmmmm 3O

தெரிந்தபெயர் தெரியாத விபரம்
Machiavellianism (LDTöâluG66ü65luî6ü elya(p60p)
புகழ்பெற்ற "தி பிரின்ஸ்' எனும் நூலில் நிக்கோலோமாக்கிய வெல்லி தெரிவித்துள்ள கொள்கையின் அடிப்படையில் அமைகின்ற ஆட்சிமுறை. அவரது கருத்துப்படி அரசியல் அதிகாரம் என்பது அத்துடன் முடிவடைந்து விடுவது. எனவே ஒருவன் தனது ஆளுகையைப் பாதுகாத்துக் கொள்ளவிரும்பினால், வன்முறை, கடுமை, அதிகாரம் ஆகியனவற்றைக் கையாளலாம் என்றார் மாக்கியவெல்லி.
Machismo (LDTöflorò(BLDT)
ஆண்மையைக்குறிக்கும் ஸ்பானியச் சொல். மற்றவர் நலனைக் கருத்தில் கொள்ள முரட்டுத்தனமான ஆண்மையினைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
Macrobiotics (difgibDI6OROT6hqasis (835ITʻLuITG6).
ஜென் கொள்கையில் உணவு பற்றிய கருத்து. ஒவ்வொருவகை உணவும் அனுகூலம் பிரதிகூலம் எனும் இரண்டு இயல்புக்கும் உட்பட்டதுதான். எனவே இயற்கையோடு ஒத்துப்போகின்ற அளவில் இரண்டும் இணைந்திருப்பது நன்று.
Mafia (மோசடிக்கும்பல்)
திட்டமிட்ட மோசடிக் கும் பல களைக் குறிக் கினி ற இத்தாலியச்சொல். நெப்போலியன் காலத்தில் இத்தாலி நாட்டுத் தீவான சிசிலியில் சட்டம், ஒழுங்கு நிலைக்குலைந்த போது தங்களது உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ள அங்குள்ள செல்வந்தர்கள் அடியாட்களை அமர்த்திக் கொண்ட காலம் முதற் கொண்டு இக்கும் பல்கள் வளர்ந்து வருகின்றன. காலப்போக்கில் இந்த அடிதடிக்கும்பல்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவையாக மாறிவிட்டன.
- 3 a.
goal - 2006

Page 18
Magna Carta (LD6sfig5 92-fi6pLDé FITFGTLib)
1215இல் இங்கிலாந்து நாட்டில் கடுமையான அரசுக்கு எதிராக ஜான் மன்னன் மனித உரிமைகளை வற்புறுத்தி இச்சாசனத்தை வெளியிட்டார். இச்சாசனம் பேராலயத்தின் உரிமையையும், பிரபுத்துவ முறையினையும் ஓரளவு ஆதரித்தது.
Malabar Rebellion (LDIT6TT assossib)
கேரளத்தின் மலபார் பகுதியில் 1921ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரை எதிர்த்து நடந்த மாப்ளாக்களின் பயங்கரக்கலகம். கிலாபத் இயக்கத்தினை அடியொற்றி இக்கலகம் நடந்தது.
Malgudi (DT6b(gg)
ஆர்.கே.நாராயணனின் நாவல்களில் பேசப்படும் கற்பனை நகரம், தென்னிந்தியச் சிறு நகரங்களின் கலாச்சாரப் போக்கு, எளிமை, நகைச்சுவை, அன்றாட வாழ்க்கை முறை போன்றவற்றை இந்நகர் பற்றிய விளக்கங்களில் காணலாம்.
Mathusianism (மால்தூஸியன் கொள்கை)
மக்கள்தொகை உலகில் கிடைக்கும் வாழ்க்கை வசதிகளை விட வேகமாக வளரும் தன்மையது என்று கூறினார். ஆங்கிலப் பொருளாதார அறிஞர் மால்தூஸ், போர், நோய்கள், பஞ்சம், வறுமை ஆகியவற்றால் குறைக்கப்பட்டாலொழிய பெருகி வருகின்ற மக்கள் தொகை இந்த உலகை அழித்து விடும் என்பதே இக்கொள்கையின் சாரம்.
Mandal Report (uD66öīL6ð SDÓäs6opas)
1979ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிற்பட்ட வகுப்பினரின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஆய்ந்து ஒரு அறிக்கை வெளியிடுமாறு பி.ப.மண்டல் குழுவினை நியமித்தார். அந்த மண்டல அறிக்கை நெடுங்காலம் கேட்பாரற்றுக் கிடந்தது. 1989ஆம் ஆண்டு பிரதமர் வி.பி. சிங் அதனை நடைமுறைப்படுத்த முன்வந்தார். ஆனால் அதற்குக் கடுமையான எதிர்ப்பும் போராட்டமும் நடந்தது. வி.பி. சிங் ஆட்சி கவிழ்ந்தது. மண்டல் கமிஷன் அறிக்கை மறுபடியும் ஒதுக்கப்பட்டு விட்டது.
ஜூலை . 2008 سے 352 سس

Manhattan Project (LD6irst L6i is LLB)
1948ஆம் ஆண்டு முதன் முதலாக அணுகுண்டைத் தயாரிக்க அமெரிக்கா போட்டத்திட்டத்தின் குறிப்புப் பெயர். இந்த அணுகுண்டுத் திட்டத்திற்கான ஏராளமான பணியாளர்களை டென்னிசி மாநிலத்தின் தெற்குப் பகுதியில் மன்காட்டன் என்னுமிடத்தில் இரகசியமாக குடியேற்றினார்கள். எனவே இது மன்காட்டன் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
Manusmriti (மனு நீதி நூல்கள்)
புராண கால இந்தியச் சட்ட விதிகள் என்று கருதப்படும் மனுவின் சட்டதிட்டங்கள் புராணங்களின்படி மனுவே ஆதிமனிதன் எனவே அவனே மனித குல பிதா இப்போது காணப்படும் மனுவின் சட்டங்கள் கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகின்றன.
Maoism (LDIT(36uITuile:Lồ)
சீனாவில் உருவான மாசே துங்கின் கருத்துகளும், விளக்கங்களும்; மார்க்சீய லெனினியக் கோட்பாட்டுக்குச் சற்று மாறானவை. நகர் புறத் தொழிலாளர் களைவிட, கிராமப்புற உழைப்பாளிகள் தான் புரட்சி செய்யவேண்டும் என்று மாவோ விரும்பினார். இந்த யுத்திதான் கம்யூனிசம் சீனாவில் வெற்றிபெறக் காரணமாக இருந்தது.
Maphilindo (uDiĵh6ölgāG3g5IT)
மலேஷியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா என்ற மூன்று நாடுகளின் பெயர்களையும் இணைத்த சுருக்கச்சொல், மலாய் இனத்தைச் சார்ந்த அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது பிலப்பைன்ஸ் தலைவர் மகபாகலின் திட்டமாகயிருந்தது. Marshall Plan (DTj696ö ślub)
1947ல் அமெரிக்க உள்நாட்டு அமைச்சர் ஸார்ஸ் மார்ஷல் என்பவரின் கருத்தில் உருவான ஐரோப்பாவுக்கான பொருளாதார சீர்திருத்தச் சட்டம். உலகப் போரினால் நலிவுற்றுப் போன நாடுகள் தமக்குத்தாமே உதவி புரிந்து கொண்டு மீண்டும் வளர்வதற்கான திட்டம் என்றும் இதனைக் கூறலாம்.
~33 〜
ஜூலை . 2006

Page 19
Marxism (DTjä fuub)
கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கல்ஸ் எனும் இருவராலும் திட்டமிடப்பட்ட அரசியல் கொள்கை அன்றைய முதலாளித்துவ பொருளாதாரத்தை இவர்கள் இருவரும் கடுமையாக விமர்சித்தார்கள். மார்க்சீய பொருள் முதல்வாதக் கொள்கையின் படி ஒரு காலகட்டத்தில் எங்கணும் உழைக்கும் வர்க்கத்தினர் புரட்சி செய்வர்: அதுவே வர்க்கபேதமற்ற பொது உடைமைச் சமூகத்தை ஏற்படுத்தலும் என்பதாகும்.
Mass Culture (LDis356fi soortésnylb)
பொதுமக்களின் பேராவலை நிறைவு செய்யும் அன்றாடக் கலாச்சாரம், பரந்துபட்ட செய்தி ஊடகங்களான வானொலி, டி.வி. திரைப்படம், நாடகம் ஆகியன இக்கலாசாரத்தைப் பேணுகின்றன.
Massochism (LDTGB3FTalasub)
பிறர் உடலைத் துன்புறுத்தி அதன் வழித்திருப்தி அடைகின்ற கொடுர மனப்பான்மை. லியோபால்டு மாசோ என்னும் ஆஸ்திரிய நாட்டு எழுத்தாளரின் நூலில் இத்தகு அனுபவங்கள் சித்தரிக்கப் பட்டுள்ளன. அதனையொட்டியே இச்செயலுக்கு மாசோகிசம் என்று பெயர் வந்தது.
Materialism (s) (36)ismugsb)
உலகின் திடப்பொருள்களும், இயற்பியல் மாற்றங்களும்தான்
உண்மையானவை என்னும் கோட்பாடு, தானே இயங்க முடியாத உள்ளத்தின் வழி உடல் இயங்குகிறது என்பதும் இதனுள் அடங்கும்.
Meditation (gólum 60 sólso60
உள்ளத்தைக் கட்டுப்படுத்தும் பழக்கம், அமைதியையும் ஆனி மிக உயர் வினை கொடுக் கவல் லது. உள் ளத்தை ஒருமுகப்படுத்துவதும் இக்கலை. வடமொழியில் ‘தியானம்’ என்றும், ‘சன்’ என்று சீன மொழியிலும், "ஜென்’ என்று ஜப்பானின் மொழியிலும் குறிப்பிடுவர்.
ജ്ഞങ്ങ - 2008 1ത്ത - 34 -

Metabolism (வளர்சிதை மாற்றம்)
இந்த சிக்கல் நிறைந்த இரசாயன வளமுறையினால் நாம் உட்கொள்ளும் உணவு ஆற்றலாக மாற்றப்படுகிறது.
Metaphysics (GLDuúGLIT(b6ú)
நடப்பு நிலையைக் காணும் பொருட்களை வைத்து ஆராய்ந்து பாராமல் பகுத்தறிவுக்கண் கொண்டு பார்த்தல், இது தத்துவத்தின் ஒரு பிரிவாகும்.
Microfilm (மிகச்சிறு புகைப்படச்சுருள்)
பத்திரங்களையும் சான்றிதழ்களையும் மிகச்சிறிய அளவில் புகைப்படமாக எடுத்துக் கொள்ளும் முறை. இதனால் அவற்றை எளிதில் எடுத்துச் செல்லவும், மீண்டும் பார்க்கவும் வசதி ஏற்படுகிறது.
Minorityism (சிறுபான்மைக் கொள்கை)
மத ரீதியான சிறுபான்மையோர் தங்களது இயலாமையைப் பெரிதுபடுத் தி சலுகை கேட்பதை குறிக் கும் சொல் . பெரும்பான்மையினரைச் சார்ந்த தலைவர்கள் கூட தேர்தல் காலங்களில் தங்களையும் சிறுபான்மையினராகப் பாவித்துக்கொண்டு சிறுபான்மையினரின் வோட்டுக்களைப் பெற முயற்சிப்பது உண்டு.
Mixed Economy (ab60üLü GuffCh6IImg5TJlb)
தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்த ஒரு
பொருளாதாரக் கோட்பாடு. இவையிரண்டு துறைகளுக்குள் போட்டியும் ஏற்படுவதுண்டு. இந்தியப் பொருளாதாரம் இதற்கு சான்று.
Multi-National Corporation (L1661st (6d. (g(gufu Tils6f)
ஏராளமான முதலீடு செய்து மிகச்சிறந்த தொழில் திறமையோடு பல்வேறு நாடுகளில் இயங்கும் வணிக நிறுவனங்கள். உலகளாவிய கண்ணோட்டத்தில் இவைபற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எனவே சிற்சில தனிப்பட்ட நாடுகளின் நலன்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன.
Monogamy (6(b 35|Ty LD600TLD)
ஒரே ஒரு மனைவியுடன் அல்லது ஒரே கணவனுடன் வாழும் வாழ்க்கை.
سے 355 مہ
ജങ്ങബ് - 2008

Page 20
Montage (பல்பொருள் காட்சி)
உதிரியாக உள்ள பல்வேறு பொருள்களை முறைப்படுத்தி இணைத்தல். பல்வேறு திரைப்படச் சுருள்களை வரிசைப்படுத்தும் போது ஒரு கருத்தை அடுத்தடுத்து இணைத்தோ எதிர்நிலைப்படுத்தியோ வற்புறுத்துவதும் இதனுள் அடங்கும்.
Morphing (GLUT (56 LDTÖDLò)
கணினியின் துணை கொண்டு ஒரு பொருளின் அல்லது வடிவத்தின் உருவத்ைதையோ அல்லது அமைப்பையோ மாற்றி அமைத்தல்.
Most Favoured Nation (9 glassigg)6035 Qugpub biTG)
வணிக பெருக்கத்திற்காக சில நாடுகள் பெறுகின்ற சலுகை இச்சலுகையின் கீழ் வரும் நாடுகள் பிறநாடுகளோடு தாங்கள் வைத்துக்கொள்ளும் வணிக ஒப்பந்தத்தில் சிற்சில வரிச்சலுகைகளைப் பெறுகின்றன. மற்ற நாடுகளுக்கு இத்தகைய வரிச்சலுகை கிடையாது.
Multi Polarity (Lugii (p6060, 9ty fu6))
உலக அரசியலைக் குறித்த சொற்றொடர், கெடுபிடி போர் நடந்தபோது வல்லரசுகளுக்கிடையே இருமுனை அரசியலாக இருந்த நிலைமாறி இப்போது உலக அரசியல் பன்முனையாக மையம் கொண்டுள்ளது.
Mutation (glej LDIT (Jut(G)
சீரான அமைப்பில் ஏற்படுகின்ற திடீர் மாறுபாடு. ஒரு உயரியப்பொருளின் இயல்பான குணங்கள் அதன் ஆதாரத்திலிருந்தும் முற்றிலும் மாறுபாடு அடைதலை இச்சொல் குறிக்கும்.
Mutual Funds (UJ65uy Égs)
தன்னுடைய பங்குதாரர் மற்றும் முதலீட்டாளர்களின் சார்பில் பல்வேறு நிதி ஆதாரங்களை நிர்வகிக்கின்ற முதலீட்டுக் கம்பெனி, கூட்டுநிறுவனங்களில் உள்ள பாகுங்களைப் போலன்றி, பரஸ்பர நிதி நிறுவனம் தன்னிடம் உள்ள 'யூனிட்களை விற்பதுமட்டுமின்றி திரும்பவும் வாங்கிக்கொள்ளும்,
ஜூலை - 2006 ~36〜

தமிழ் திரைப்பு:ங்கள்4931-2005)
நிழல் ப.திருநாவுக்கரசு சென்னை
திரைப் படம் கண் டுபிடிக் கப்பட்ட அடுத்த ஆணி டே துணி டுப் படங்கள் திரையிடப்பட்டன. 1916 ஆம் ஆணி டு தென்னிந்தியாவில் முதல் மெளனப்படமான கீசகவதத்தை நடராஜ முதலியார் தயாரித்தளித்தார்.
1931 தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளிவந்தது.
1932 இல் நான்கு தமிழ்படங்கள் வெளிவந்தன. அவற்றில் குறிப்பிட வேண்டிய படம் காலாவா. இப்படம் சம்பந்த முதலியாரின் காலவரிஷி என்ற நாடகத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது. இதனை இயக்கியவர் சர்வோத்தம் பாதாமி.
1933 இல் ஏழு படங்கள் எடுக்கப்பட்டன. இவை அனைத்தும் புராண நாடகங்கள். புயோனியர் பிலிம் கம்பெனி எடுத்த வள்ளித் திருமணம் படத்தில் டி.பி.இராஜலெட்சுமி வள்ளியாக நடித்தார். தினைபுனத்தில் குருவி விரட்டும் பாடலில் ஆங்கிலேயரை நையாண்டி செய்யும் முகமாக இரு பொருள்படும் சொற்களைக் கொண்டு பாடினார்.
1934 சென்னையிலேயே தயாரிக்கப்பட்ட சீனிவாச கல்யாணம் ஏ.நாராயணனால் இயக்கப்பட்டு வெளிவந்தது.
1935 தமிழ்த்திரைப்பட உலகில் பெரும் மாற்றம் நிகழ்ந்த வருடம். இந்த ஆண்டில் மட்டும் 37 படங்கள்தயாரிக்கப்பட்டன. நாடக நடிகையான கே.பி.சுந்தராம்பாள், ஆண் வேடம் ஏற்று நடித்த பக்தி நந்தனார் பேரளவு பேசப்பட்டது. இந்திய அளவில் முதன் முதலாக, திரைப்படத்தில் நடித்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றவர் இவர்தான். இந்த ஆண்டில் வெளியான் மேனகா சிறந்த சமூகப்படமாக கொண்டாடப்படுகிறது. வடுவூர் துரைசாமி ஜங்காரரின் நாவலை, டி.கே.எஸ்.சகோதரர்களை வைத்து, ராஜா சாண்டோ இயக்கினார். இப்படத்தில் டி.கே.முத்துசாமிபிராமண விதவைக் கோலத்தில் நடித்தார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் முதல் படம் இது.
2006 - ஜூலை یہ 357 ۔

Page 21
1936 கே.சுப்பிரமணியத்தின் ས་ ༢༡ இயக் கத்தில குசேலா 7, வெளிவந்தது. எஸ்.டி.சுப்புலட்சுமி, : የሩ குசேலர் மனைவியாகவும் , கிருஷ ணனாகவும் இரு 4. வேடங்களில் நடித்தார்.
** స్టేజి
தியாகராஜ பாகவதர் இரு (சதிலீலாவதி) வேடங்களில் நடித்தார். இதே ஆண்டு வெளியான சதிலீலாவதி மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும், டி.எஸ்.பாலையாவுக்கும் முதல் படமாக இருந்தது. கதாநாயகன் எம்.கே.ராதா, அமெரிக்கரான
எல்லிஸ் ஆர்.டங்கன் அப்படத்தை இயக்கினார்.
புகழ் பெற்ற தேவார பாடகரான எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த பட்டினத்தாரும் 1936 இல் வெளிவந்தது. பட்டினத்தாரின் பாடல்களுக்காகவே இப்படம் ஓடியது முதல் தமிழ் பேசும் பட கதாநாயகியான டி.பி.ராஜலட்சுமி தானே கதை, வசனம் எழுதி, நடித்து இயக்கிய படம் மிஸ்.கமலா. இப் படத்தின் மூலம் முதல் பெண் பட இயக்குனர் என்கிற சிறப்பையும் பெற்றார் இவர்.
‚ፉ 1937 இவ் வாணி டு தானி தியாகராஜ பாகவதருக்கு பெரும் புகழ் கிடைத்து சூப்பர் ஸ்டார்
ஆனார். அவர் நடித்த அம்பிகாபதியும், சிந்தாமணியும் 52 வாரங்கள் வெற்றி நடை
போட்டன. இது தமிழ் (அம்பிகாவதி) பாடல்களுக்கு கிடைத்த பரிசு என்றும், பாகவதரின் தங்க குரலுக்கு கிடைத்த பரிசு என்றும் பத்திரிகைகள் எழுதின. இதே ஆண்டு வெளியாகின நவயுவன் என்ற படத்தில் பிரபல சங்கீத வித்துவான் வி.வி.சடகோபன் நடித்தார். இப்படத்தின் சில காட்சிகள் இலண்டனில் படமாக்கப்பட்டது. வெளிநாட்டில் எடுத்த முதல் தமிழ் படமாக இதனை கூறலாம்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வெற்றிகரமாக ஓடிய படமான பாலயோகினியைக் கூறமுடியும். இப்படத்தில் பேபி சரோஜா நடித்தார்.
1938 இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் சங்கீத வித்துவான்கள் ஏராளமானோர் பாடி நடித்தனர். கம்பர் படத்தில்
ஜூலை - 2008 - 38 -
 
 
 

எஸ்.வி.சுப்பையாபாகவதர்,சேவாசதனதில்எம்.எஸ்.சுப்புலடசுமி,தஷயக்ஞம் படத்தில் செல்வரத்தினம் பிள்ளை, தாயுமானவரில் எம்.எஸ்.தண்டபாணி தேசிகர், துகாராம் படத்தில் மாதிரி மங்கலம் நடேச அய்யர், நந்தகுமாரில் டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோர் நடித்து புகழ் பெற்றனர்.
ழரீ ராமானுஜர் மணிக்கொடி எழுத்தாளர்களால் உருவானது. வசனம்: வரா: பாடல்கள்: பாரதிதாசன், சங்கு சுப்பிரமணியம், என்.ராமரத்தினம், பிச்சமூர்த்தி முதலிய எழுத்தாளர்கள் நடித்தனர். படம் பேசப்பட்ட அளவு வியாபார வெற்றி பெறவில்லை.
ஹோமி வாடியா தயாரிப்பில் வெளிவந்த வனராஜா டார்ஸன் படத்தில் கே.ஆர்.செல்லம், டார்சானின் காதலியாக கிளாமராகத் தோன்றினார்.
பரத நாட்டியத்தின் புகழை பரப்புவதற்கென்றே எடுக்கப்பட்ட படம் ஜலஜா. டாக்டர்.வி.ராகவன், மஞ்சேரி ஈஸ்வரன், ஜி.கே.சேஷகிரி முதலியோரின் ஆர்வத்தால் உருவானது. இதில் பந்தநல்லுார் ஆடலரசி பானுமதி பாடி நடித்தார்.
1939 கல்கியின் தியாகபூமி நாவலை கே.சுப்பிரமணியம் 1939 இல் திரைப்படமாக எடுத்தார். பாவநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலட்சுமி முதலியோர் நடித்தனர். பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததால் தடை செய்யப்பட்டது.
ஏழிசை மன்னரான தியாகராஜ பகவதரின் திருநீலகண்டரும் இதே ஆண்டு வெளியாகி 52 வாரங்கள் வெற்றி நடைபோட்டது. 'மறைவாய்ப்புதைத்த ஒடு', 'ராஜன் மகா ராஜன், போன்ற பாடல் மூலம் அழியாப்புகழை தேடிக்கொண்டார்.
பி.யு. சின்னப்பா, டி.வி.குமுதினி நடிப்பில் மாத்துரு பூமி வெளியானது. இரண்டு லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட வரலாற்றுப் படம். மறைமுகமான முறையில் ஆங்கிலஅரசை தாக்குவதாக கருதி தடைசெய்தனர். பின்னர் இது வெளிவந்தது. இதில் குமுதினியின் கத்திச் சண்டை, தேசப்பக்திப் பாடல்களுக்காக ஓடியது.
1940 மார்டன் தனியேட்டர்ஸின் உத்தம புத் திரன் டி.ஆர்.சுந்தரத்தின் இயக்கத்தில் 1940 இல் வெளிவந்தது. தமிழ் சினிமாவில் முதல் முதலாக டaடம் முழுவதும் பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் தோன்றினார். காளிதாசனின் காவியமான சகுந்தலை படத்தில் இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியும், ஜி.என்.பாலசுப்பிரமணியமும் நடித்தனர். கலைவாணரும், டி.எஸ்.துரைராஜாவும் படத்துடன் இணங்கி வழங்கிய நகைச்சுவை பகுதியை மறக்கமுடியாது.
۔ 359 سے
ஜூலை - 2006

Page 22
1941 இந்த ஆணி டின் தியாகராஜா பாகவதர் நடித்த அசோக்குமார் வெளிவந்தது. இதே ஆண்டு வெளியான ஆர்யமாலாவில் பரி. யு. சின் னப் பா நடித தார். கே.சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் 8്& வெளியான கச்சதேவயானி மூலம் (சபாபதி) தமிழகத்தின் முதல் கனவுக் கன்னியான டி.ஆர்.ராஜகுமாரி அறிமுகப்படுத்தப்பட்டார். ஏ.வி.எம்மின் சபாபதியும் வெளியானது. மூலக் கதை பம் மல் சமி பந்த முதலியார்.காளி.என்.ரத்தினமும், கே.சாரங்கபாணியும் விலா நோக சிரிக்க வைத்தப்படம். இதற்கு முன்னரே சில படங்களில் டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்திருந்தாலும் இந்தப்படத்தின் மூலமே அவர் கதாநாயக அந்தஸ்தை அடைந்தார். தமிழ்திரையுலக வரலாற்றில் என்றென்றும் பார்க்கக்கூடிய படங்களில் ஒன்றாக இன்றளவு வாழ்ந்து வருகிறது சபாபதி அனைத்தும் நுாறு நாட்கள் ஓடி வெற்றிப்பட வரிசையில் இடம் பிடித்தன.
1942 ஜிபிடரின் கண்ணகி வெளிவந்தது. தமிழ் சினிமாவுக்கு எளிய, இனிய முறையில் அழகானத் தமிழில் இளங்கோவன் வசனத்தை இப்படத்தின் மூலம் கொண்டு வந்தார். சின்னப்பாவின் பாடல், கண்ணம்மாளின் நடிப்பு, ஐம்பெரும் காவியங்களின் ஒன்றான சிலப்பதிகார கதை போன்ற கட்டுமானங்களால் இப்படம் வெற்றிப் பெற்றது.
தமிழிசை வாத்தியக்காரரான கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திர கீர்த்தனையை அடிப்படையாக கொண்டு ஜெமினியின் நந்தனார் இதே ஆண்டு வெளிவந்தது. படம் முழுவதும் கீர்த்தனைகள் மூலமே சென்றாலும், எம்.எம்.தண்டபாணி தேசிகரின் கணிரென்ற குரலுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டது.
1943 இவ்வாண்டு 11 படங்களே வெளியானது. காரணம், இரண்டாம் உலகப்போர், கச்சா பிலிம் தட்டுப்பாடு. பூரீராமுலு நாயுடுவின் பட்சிராஜா ஸ்டுடியோ மூலம், பாகவதரின் சிவகவி வெளியானது. 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து', 'வள்ளலை பாடும் வாயால் போன்ற பாடல்கள் மூலம் மீண்டும் தனது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டார் பாகவதர். புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதையை, ஜெமினி நிறுவனம் மங்கம்மா சபதமாக எடுத்தனர்.
1944 இவ்வாண்டு பத்துப் படங்கள் வெளியானது. இதில் கே.ஆர்.இராமசாமி நடித்த பூம்பாவையும் பி.யு.சின்னப்பா நடித்த ஜகதல
go soeo - 2006 سہ 240 سہ
 

பிரதாபனும் வெற்றிப் பெற்றன. நமக்கினி பயமேது என்ற பாடல் காட்சியில் பல்வேறு இசைக்கருவிகளை மீட்டும் கலைஞராக சின்னப்பா, பல வேடங்களில் பாடி நடித்தார்.
பாகவதரின் ஹரிதாஸ் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டை எட்டிப் பிடித்தது. பாகவதருக்கு ஈடுகொடுத்து டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். சென்னை பிரிட்வே தியேட்டரில் 1944 ஆம் ஆண்டு தீபாவளி நாளன்று வெளியாகி, மூன்று தீபாவளியைக் கண்டது. 110 வாரங்கள் (718) நாட்கள் ஓடியது. இது வரை வேறு எந்தப்படமும் இந்தச் சாதனையை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1945 கல்கியின் கதை, வசனத்தில மீரா (1945) படம் வெளிவந்தது. இது தமிழ், இந்தி மொழியில் எடுக்கப்பட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் "காற்றினிலே வரும் கீதம்' எங்கும் பரவியது. மிகப் பெரிய வெற்றிப்படம். இது போலவே தமிழ் நாடகமேடைக்கே உரித்தான வள்ளித்திருமணம் நாடகத்தை பூரீ வள்ளி என்கிற பெயரில் ஏ.வி.எம் தயாரித்தது. இப் படத் தில டி.ஆர்.மகாலிங்கம் , எஸ்.ஜி.கிட்டப்பாவை நினைவு கூறும் முகமாக அவர் பாடிய 'காயாத கானகத்தே', 'வண்ணத்தாமரையைக் கண்டு', 'கோடையிலே இளைப்பாறி என்ற பாடல்களை பாடியதால், வசூலை வாரிக்குவித்தது.
1946 தியாகராஜ பாகவதர் சிறை சென்றதால், அவருக்காக பேசப்பட்ட படங்கள் அனைத்தும் ஹொன்னப்ப பாகவதருக்குச் சென்றன. வால்மீகி, சுபத்திரா, ழரீமுருகன் முதலிய படங்களில் இவர் நடித்தார். மார்டன் தியேட்டர்ஸின் ‘சித்திரா” நவீன முறையில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் டி.எஸ்.பாலையா பாடி நடித்தார்.
ջ՞ : ' ' 'S 3 : 1947 நாடு விடுதலைப் பெற்ற 1947 ஆம் ஆண்டு வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸின் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி பெருத்த வெற்றி பெற்றது. புலிக்குட்டி கே.எஸ்.கோவிந்தன் கதாநாயக னாக நடித்தப்படம். 20,000 அடி நீளமான படமாக நாம் இருவர் வெளிவந்தது. பழைய ராஜாகாலத்துக் கதையாக இருந்தாலும் கதையின் வேகத்தால் வெற்றி பெற்றது. இது போலவே ஏ.வி.எம். தயாரிப்பில் நாம் இருவர் வெளியானது. டி.ஆர்.மகாலிங்கம், பட்டமாள் குரலில் பாரதி பாடல்கள் வெகுவாக மக்களை சென்றடைந்ததன் மூலம் படம் வெற்றி அடைந்தது. சிறையிலிருந்து கலைவாணர் வெளிவந்து எடுத்தப்படம் ‘பைத்தியக்காரன். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதிலும் வெற்றியடையவில்லை. இதே ஆண்டு வெளியான ஜிபிடரின் ராஜகுமாரி எம்.ஜி.ராமச்சந்திரனை கதாநாயகனாக்கியது. கலைஞர் கருணாநிதியின் வசனம்.
- 41 - ஜூலை - 2006

Page 23
அட்டைப்படக் கட்டுரை
ஜார்ஜ் பெர்னாட்ஷா
ஆங்கில இலக் கியத் தில புதிய கிளர்ச்சியையும் ஒரு எழுச்சியையும் உண்டாக்கியவர் ஷா. இலக்கிய உலகம் ஷாவின் பாணி’ என்று அவரது படைப்புகளுக்கு மகுடம் சூட் டி வாழ்த்தியிருக்கிறது. நகைச்சுவையாக, மிக gey, 4p LD T 60T செய்திகளை அழகாக வெளிக்காட்டுவதில் வல்லவர். உலக இலக்கியத் திறனாய்வாளர்களில் பலர் அவரது வாழ்க்கை ஒரு சிக்கல் - ஒரு புதிர் ஒரு மர்மம் எனப் பலவாறு அறிவித்துள்ளார்கள்.
26.07.1856இல் அயர்லாந்தில் டப்ளினில்: மேல் தெருவில் உள்ள மூன்றாம் கதவிலக்க வீட்டில் ஜாாஜ் கார்ஷா - நுகிண்டா எலிசபெத் - ஷா ஆகிய பெற்றோர்களுக்குக் கடைசிக்குழந்தையாகப் பிறந்தார்.
குடும்பமோ ஏழ்மை நிலையில் - பொறுப்பில்லாத குடிகாரத் தகப்பன் தாயின் உழைப்பாலேயே குடும்ப ஜீவனம். ஷாவின் இளமையில் வறுமைக்குப் பஞ்சமில்லை.
தொடக்கக் கல்வியின் போதே லத்தீன் மொழியைக் கற்றுக் கொண்டார். 1867இல் டபுனில் பள்ளி வாழ்க்கை துவங்குகிறது. 1870இல் சென்ட்ரல் மாடல் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கின்றபோதே வறுமையாலே 1871இல் படிப்பைத் தொடர முடியவில்லை. 1871இல் ஒரு எஸ்டேட்டில் ஏஜெண்டாக மாதம் 18 வழில்லிங் சம்பளத்தில் பணியேற்கிறார்.
தாய் இசையாசிரியை. ஷாவுக்கும் சிறு வயது முதல் இசையார்வம் உண்டு. சுருக்கெழுத்து - தட்டச்சு கற்றுக் கொள்கிறார். ஷா நல்ல புகைப்படக் கலைஞர்.
ஆங்கில இலக்கியங்களை நிறையப் படிக்கத் தொடங்கினார். சிட்னிவெப், எட்வொர்டு கார்பெண்டர், வில்லியம் மோர்ஸ் போன்ற இலக்கியச் சிந்தனையாளர்களது நட்பு கிடைக்கிறது.
கலை - இலக்கியம் - இசை - வாழ்வியல் போன்ற துறைகளில்
ஜூலை - 2008 سر 42 ۔ہ
 

கதை, கட்டுரை, நாடகம் போன்றவைகளைப் படைக்கத் தொடங்கினார்
ஷாவின் நாடகங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. 50 ஆண்டுகளாக இந்த ஐரிஷ்காரரது நாடகங்கள் பிரிட்டிஷ் உலகத்தையே அடிமைப்படுத்தியது என்று கூறுகின்ற அளவுக்குச் சிறப்பு வாய்ந்தவை. இவரது நாடகங்கள் லண்டன் கலை அரங்கிலே ஆண்டுக்கணக்கில் நிகழ்ந்தன என்பதொன்றே இவரது நாடகத்தின் சிறப்புக்கு ஒரு முத்திரையாகும். லண்டன் நதிக் கரையில் தனக்கென நாடக அரங்கையே உருவாக்கிக் கொண்டவர்.
1925இல் ஷாவுக்கு இவரது கலை இலக்கிய நாடக சாதனைகளுக்காக ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பிறப்பால் ஐரீஷ் இனத்தவரான ஷா, சோவியத் மண் வாசனைச் சித்தாந்தத்திற்குத் தலை வணங்கி ஆங்கிலப் பேரரசுகளின் ஒட்டுமொத்தப் பாராட்டுதலைப் பெற்றவர்.
‘' எண் மரணத்திற்குப் பிறகு கல்லறை அமைக்க வேண்டியதில்லை. கல்லறைகள் காணாமல் போகின்றன. நான் இறந்த பிறகு என் சாம்பலை, என் மனைவி கார்லட்டின் சாம்பலோடு கலந்து என் வீட்டுத்தோட்டத்தில் தூவி விடுங்கள். அயட்ஸெயுண்ட லாரண்ஸ் புனிதமாகட்டும்’ என்று சொன்னவர் ஷா,
தனது 95ஆவது வயது வரை படித்துக் கொண்டே இருந்தார். ஷா, லாகிரிப் பொருள்களை அவர் உட்கொண்டதில்லை. வாரத்திற்கு ஒரு நாள் உண்ணா நோன்பிருப்பஈர். புலால் மறுத்தலையே வேள்வியாகக் கொண்டவர் ஷா, 1950இல் காலமானார்.
வதிவா
பெர்னாட்ஷாவின் பொன்மொழிகள்
உலகில் விஞ்ஞானத்தின் பெயரால் பரவி வரும் நம்பிக்கைகளில் சில முட நம்பிக்கைகளும் உண்டு. விஞ்ஞானத்தின் பெயரால் பழைய முடக் கருத்துக்களையே தெரிவித்தால், கண்டுடித்தனமாக ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள்
ஜார்ஜ் பெர்னாட்ஷா
2006 . ஜூலை ۔ 43 ۔

Page 24
அண்ணல் காந்திஜி குறித்து அமரர் கல்கியின் கருத்து
தாய் நாட்டுக்காக காந்தி செய்த தியாகம் இப்போதுள்ள இளம் தலைமுறைக்கு தெரியவில்லை. நூறு ஆண்டுகளுக்குமுன்பு தமிழ் நாடு எப்படி இருந்தது, ஆங்கிலேயர் எப்படி அதன் செல்வத்தைச் சுரண்டிச் சென்றனர்’ போன்றவற்றை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
இருபதாயிரம் வெள்ளைக்கார அகதிகள், இரண்டு லட்சம் இந்திய இராணுவ வீரர்களைப் பயன்படுத்தியும், துப்பாக்கி, பீரங்கிகளை பயன்படுத்தியும் பாரத தேசத்தை ஆண்டனர். மக்கள் வரிப்பணத்தில் இராணுவ வீரர்களுக்குச் சம்பளம் கொடுத்தனர். அந்த வலிமைமிக்க அரசுக்கு எதிராக வறுமையில் வாடிய இந்திய மக்களால் வீரத்துடன் ஆயுதம் ஏந்தி போரிட முடியவில்லை. அஹிம்சை முறையில் சுயகட்டுப் பாட்டுடன் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பாரதம் வெற்றி பெற்றது.
அந்தப் போராட்டத்திற்கு அழைத்துச் சென்றவர் காந்தியடிகள். உலகவரலாற்றில் மாபெரும் சாதனைப்படைத்தவர் அவர், காந்திக்கு தமிழ் மக்களிடம் அதிக அன்பு உண்டு. தமிழகத்திற்கு முதன் முதலாக 1896ஆம் ஆண்டு காந்தி வந்திருக்கிறார். கடைசியாக 1946ஆம் ஆண்டு ஜனவரியில் வந்திருக்கிறார். காந்திக்கு ஏற்பட்ட சோதனைக் காலங்களில் தமிழகம் எத்தனையோ முறை அவருக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது.
அவரின் தமிழக சுற்றுப் பயணத்தின்போது. ‘பாரதியை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் எவரும் இல்லையா? என்று காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். பாரதி இளம் வயதில் இறந்ததைப் பார்க்கும்போது காந்தி கூறியபடி தமிழகத்தில் பாரதியைக் காப்பாற்ற யாரும் அப்போது இல்லை என்பது தெளிவாகிறது.
நம் நாட்டில் நடந்த உப்புச் சத்தியாகிரகம் பற்றி ஒரு நூலில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் அற்புதமானது. அக் கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு கூறுகின்றேன்.
ஜூலை - 2008 - 44 -

‘விறுவிறுப்பாகவும், கடுமையாகவும் விடுதலை போராட்டம் நடைபெற்ற ஆண்டு 1930. அந்த ஆண்டில் தான் உப்புச் சத்தியாகிரகம் தண்டியா திரை நடைபெற்றது. வரிகொடா இயக்கமும் தொடங்கப் பெற்றது. வெளிநாடடுத் துணிமணிகள் வெளியே தலைகாட்ட முடியாது. மறியல்கள் நடைபெற்றன. லட்சத்திற்கும் மேற்பட்ட சத்தியாகிரகிகள் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டனர். 1930இல் காந்தி துவங்கிய சட்டமறுப்புப் போராட்டத்தில் தமிழகம் நல்ல பங்கு பெற்றது.
உப்பிற்காக அறப்போர் நடத்தியது உலகத்திற்கு புதுமை. ஆனாலும் அது இந்திய விடுதலைப் போராட்டங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. பிரிட்டிஷ் அரசு போட்ட வரிகளில் எல்லாம் உப்பு வளியே மிகவும் அநீதியானது. காந்தியடிகள் நடத்திய சுதந்திரப் போரில் உப்பு சத்தியாகிரகமே மிகவும் முக்கிய கட்டம், அதோடு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உண்மையில் முடிந்துவிட்டது. அதன் பிறகு 1947ஆம் ஆண்டு நாடு முழு சுதந்திரம் அடைந்தது, என்ற பகுதி நமது சிந்தனையை தூண்டும் பகுதி.
நாட்டின் எதிர்காலம் பற்றியும் காந்தி நன்கு சிந்தித்திருக்கிறார். 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி ‘ஹரிஜன்’ இதழில் கேள்வி பதில் பகுதியில் ஒரு முக்கியமான கேள்வியும் அகற்கான பதிலும் இடம் பெற்றிருக்கிறது. "பம்பாயில் சமீபத்தில் நடந்த தேர்தலில் நடந்த காலித்தனங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இத்தகைய சந்தர்ப்பத்தில் அஹிம்சையின் போதகர் மெளனமாக இருப்பது அழகா?’ என்ற கேள்விக்கு காந்தி பதில் கூறியிருக்கிறார். அவர் பதில் கூறுகையில்.
‘இந்தக் காலித்தனம், வரவிருக்கும் தொற்று நோய்க்கு அறிகுறியாக இருக்கலாம். தாங்கள் சொல்வது மாத்திரமே சரி. மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று சிலர் கருதுகின்றனர். தங்கள் கருத்துக்கு மற்றவர்கள் உடன்பட வேண்டும் என்று வற்புறுத்துவது பயனில்லாதது என்று அவர்கள் கருதவில்லை. இதைத் திருத்தியாக வேண்டும்.
இந்த பலவீனம் தொடர்ந்து இருந்து வந்தால் பிரிட்டிஷ் ஆட்சி போனதும் இரத்த ஆற்றுப்பெருக்கிடையே நாம் செல்ல வேண்டிருக்கும். இன்னுமொரு வல்லரசின் ஆதிக்கத்தில் நாம் போய்விட நேரிடக் கூடும் அல்லது இடைவிடாத போரில் பலமான ஆயுதம்
- 45 - m ஜூலை - 2008

Page 25
உள்ளவர்களுக்குப் பணிய வேண்டியும் இருக்கலாம்’ என்று கூறியிருக்கிறார். நாட்டில் உணவுப் பஞ்சம் வந்தபோது ‘ஹரிஜன் இதழில் எழுதியிருப்பது அவரது தொலைநோக்கை காட்டுகிறது. ‘நமக்கு இப்போதுள்ள உணவு நெருக்கடியில் கூட, ரஷ்ய கோதுமையை நாம் எதிர் பார்க்கக்கூடாது. வெளிநாட்டின் தானத்தை நம்பிக் கொண்டிருப்பதைவிட நம் பூமி நமக்கு அளிப்பதைக் கொண்டு வாழும் ஆற்றலும், தீரமும் நமக்கு வேண்டும். அப்படியில்லை என்றால் நம் நாடு சுதந்திர நாடாக இருக்கத் தகுதியுடையது அல்ல என்று கூறியிருக்கிறார்.
நம் நாட்டை அடிமைப்படுத்தி 150 ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயர்களிடமும் காந்திக்கு துவேஷம் கிடையாது. ஆங்கிலேயரிலும் நல்லவரும், கெட்டவரும் இருக்கிறார்கள். நம் மிடத்திலும் குற்றம் குறைகள் இல் லாமல் இல்லை. ஆங்கிலேயரிடமும் நல்லது இல்லாதிருந்தால் இப்பொழுது இருக்கும் பலத்தை அவர்கள் அடைந்திருக்க மாட்டார்கள். நாம் நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு நம்மைச் சரண் அடைய அனுமதித்தோம். அதனால் அவர்கள் வந்து இந்தியாவைச் சுரண்டினார்கள் என்று காந்தி கூறியிருக்கிறார்.
இப்பொழுது எம்.பி. பதவிக்கும், எம்.எல்.ஏ. பதவிக்கும் அடிதடி, சண்டை போடும் அரசியல்வாதிகளுக்கு என்றே காந்தி தன் எண்ணத்தைக் கூறியிருக்கிறார். அவர் அந்தக் கருத்தை எழுதும்போது அரசியல் நிர்ணய சபையை உருவாக்கிய காலம், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாக யார், யார் இருக்க வேண்டும் என்று அவர் தன் கருத்தை கூறியுள்ளார்.
'சட்டப்பயிற்சியும் விஷேசத் திறமையும் அந்தந்த வேலைக்கு விஷேசத் தகுதியுள்ளவர்கள் மட்டுமே அதற்குப் போக வேண்டும். தியாகம் புரிந்ததற்கு வெகுமதியாக அப்பதவியை நாடக்கூடாது என்று எழுதியுள்ளார்.
நம் நாடு நல்வழியில் செல்வதற்கு காந்தியின் சில முக்கியக் கருத்துக்கள் இப்பொழுது நமக்குத் தேவை. எனவே மாணவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் காந்தியின் கருத்துக்களைத் தெரிந்துகொண்டு நல்வழியில் நடக்கவேண்டும்.
ஜூலை - 2008 - 46 -

சலிய்யும், சாதனாவும்
றிறீரவிசங்கள்
சலிப்பு என்றால் என்ன?
அக்கறையும், அன்புமின்றி ஒரு காரிய தி தைத் திருமி பத் திரும் பச்
செய்கிறபோது, சலிப்பூட்டும் ஒரு மனநிலை ஏற்படுகிறது. அது ஆன்மாவை மறைக்கிறது.
ஆன்மீகப் பயிற்சிகளின் (சாதனா) நோக்கம், சலிப்புணர்வை அழித்து உங்களை மறுபடியும் ஆன்மாவுடன் இணைப்பதாகும். அவை திரும்பத் திருப்பச் செய்யப்படுவது தான். பயிற்சி என்பதே சலிப்பை ஏற்படுத்தும். ஆனால், அதைத் தொடர்ந்து செய்யும் போது, அது சலிப்பை ஊடுருவிச் சென்று, சலிப்பை என்றென்றும் இல்லாதபடி அழித்து விடுகிறது. பயிற்சி உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் சரி, சலிப்பைக் கொடுத்தாலும் சரி, அது தொடர்ந்து செய்யப்படவேண்டும். நீங்கள் பயிலும் பயிற்சிகள், சாதனா இவற்றால் தான் மனத்தை வெல்ல முடியும்.
ஆன்மா என்பது அன்பின் வடிவம். அன்பு எப்போதும் திரும்பத் திரும்ப தோன்றும் தன்மையது. அதனால்தான் காதல் கடிதங்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், அங்கு சலிப்பு என்பதே'இல்லை.
உங்களிடமே உங்களுக்குச் சலிப்பு என்றால், மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வளவு சலிப்பைத் தரக் கூடியவர்களாக இருப்பீர்கள்?
உங்களுக்குள் உறையும் சலிப்பை ஆழ்ந்த, தொடர்ந்த தியானத்தின் வாயிலாக வேரோடு எடுத்து விடுங்கள் விழித்தெழுங்கள், முன்னேற நடைபோடுங்கள்.
மற்றவர்கள் செய்ய முடியாததைச் செய்து முடிக்கக் கூடிய ஆற்றலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தல் பெற்றிருக்கிறார்கள்.
۔ 47 سید
ஜூலை . 2008

Page 26
அச்சுறுத்தல் ஆபத்து
Dr. M.R. BITiCIDurir
சிலர் , தங்களுக்குத் தாங்களே ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணராமலே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
வன்முறைகளில் சொத்துக்களை அழித்தல், தனி நபர்களுக்கு ஆபத்தை விளைவித்தல் போன்ற மிகவும் மோசமான வன்முறைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம்.
இதற்கான காரணத்தைப் புரிந்து கொண்டால், பொறுப்பாக சிந்திக்கத் தெரிந்தவர்களாவது, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இதனால் விளையக்கூடிய தீமைகளைப் பற்றி எண்ணிப் பார்க்க இடமுண்டு.
வன்முறைக்குப் பின்னே உள்ள மனோதத்துவக் காரணம் நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, வரலாற்று ஆதாரங்களுடன் ஏற்கப்பட்டு இருக்கிறது.
எளிமையான முறையில் இந்த ஆபத்து பற்றிய ஒரே ஒரு காரணத்தை மட்டும் ஆராயலாம்.
பிறரை பயமுறுத்தும் போது ஆபத்தை நாம் விலைக்கு வாங்குகிறோம்.
இது என்ன என்று முதலில் தெளிவு படுத்தலாம். மற்றவர்களை பயமுறுத்தி, அச்சத்தை ஏற்படுத்தி அதிகாரத்தைப் பெற முயல்கிறவர்கள், ஆபத்தை எதிர்நோக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
பயமுறுத்தப்படுகின்றவனுக்கு அபாயம் இருப்பது உண்மைதான். அதேசமயம் பயமுறுத்துகின்றவனும் அபாயத்தை எதிர்நோக்க வேண்டியவனாக இருக்கிறான்.
ஒருவன் இன்னொருவனை பயமுறுத்தும் போது, பயமுறுத்தப்படுகின்றவனின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் அவன் ஆளாகிறான். இதுவே பெரிய அபாயம்.
மிரட்டுவதின் நோக்கம் பயத்தை ஏற்படுத்துவதாகும். அதோடு அது நிற்பதில்லை. பாதுகாப்பு அற்ற உணர்ச்சியினையும் அது ஏற்படுத்துகிறது. கோபத்தையும் வெறுப்பையும் வன்முறையாக உடனடியாக வெளிப்படுத்த முடியாத சமயங்களில், அந்த உணர்ச்சிகள் அழுத்தி வைக்கப்படுகின்றன. ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. அப்போது பயத்தைப் போக்கிக் கொள்ளும் வழிகளை அது தேடுகிறது. அதனால் பயமுறுத்தியவனுக்கு நிரந்தரமான ஆபத்தாக அது இருந்து கொண்டே இருக்கிறது.
ஜூலை - 2006 - 48 -

ஒருவன் பயமுறுத்தப்படும்போது அவன் பயமுறுத்தியவனைப் பழிவாங்க நேரம், இடம், வழிமுறை ஆகியவற்றை தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்ற நிலைமையில் இருக்கிறான்.
ஒருவனை பயமுறுத்தும்போது, பயமுறுத்துகின்றவன் நேரப்படி வெடிக்கும் குண்டினை தன்னுள்ளேயே வைத்து விடுகிறான். அது எப்போது வெடித்து அவனை அழிக்கும் என்று அவனுக்கே தெரியாது.
இருந்தும் இம்மாதிரி ஆபத்தான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒருவனை இன்னொருவன் பயமுறுத்துதல், ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை பயமுறுத்துதல், ஒரு அரசை இன்னொரு அரசு பயமுறுத்தல் போன்ற செய்திகளை தினசரி பத்திரிகைகளில் படித்துக் கொண்டு, வானொலியில் கேட்டுக் கொண்டு, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டும் தான் இருக்கிறோம்.
பயமுறுத்துகின்றவன் தனக்கு ஏற்படுகின்ற ஆபத்துக்களை உணராமலே பயமுறுத்திக் கொண்டு இருக்கிறான். மற்றவர்களை பயமுறுத்தி விட்டு அதன் விளைவுகளில் இருந்து யாரும் தப்பித்துவிட முடியாது.
லாபத்துக்காக உழைப்பதும், நஷ்டத்தை தவிர்க்கப் போராடுவதும், வாழ்க்கையின் ஆதார உண்மையாகும். சிலர் வெளிப்படையாகச் சண்டையிட விரும்பாமல் இருக்கலாம். வேறு சிலர் உடனடியாகச் சண்டையிட முடியாதவர்களாக இருக்கலாம். ஆனால் இழப்பு ஏற்படும் என்கிற மிரட்டலுக்கு ஆளாகின்ற எவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திருப்பித் தாக்கவே செய்வார்கள்.
ரோம் சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ‘செனக்க்கா சொல்லியுள்ள ஒரு வாசகம் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூறத்தக்கது. “யாரைக்கண்டு பலர் பயப்படுகிறார்களோ, அவர் பலரைக் கண்டும் பயப்பட வேண்டியிருக்கும்.”
பிறரை பயமுறுத்துகின்றவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் படுகொலை செய்யப்படும் நிலைக்கு ஆளாகாமல் போயினும், அவ்வாறு நிகழ்கின்ற அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் வன்முறைக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை எந்த நிறுவனமும் தங்களுடைய நிர்வாகத்தில் ஏற்றுக் கொள்வதில்லை.
உண்மை இப்படியிருந்தும் பயமுறுத்தல்கள் தொடர்கின்றன. பெருகிக் கொண்டே போகின்றன. பயமுறுத்தல் மூலம் அதிகாரத்தை பெறுகின்றவர்களை ஆபத்து எப்போதும் சூழ்ந்திருக்கிறது. வரலாறு உணர்த்தும் இந்தப் பாடத்தை புரிந்து கொள்வது நல்லது.
- A19 -
ஜூலை - 2006

Page 27
பழங்களும், குணமடையும் நோய்களும்
1. தலைவலி2. காய்ச்சல்
3. சீத பேதி
4. வயிற்றோட்டம் -
5. கீல் வாதம் -
.ே சளிச் சவ்வு 7. பசியின்மை 8. மஞ்சட் காமாலை - 9. மலச்சிக்கல் -
10. பித்தம்
11. வாயுத் தொந்தரவு -
12. தொண்டைப்புண் -
13. கல்லடைப்பான் 14. சருமநோய் 15. மேக நோய் 16. குஷ்டம்
ஜூலை - 2006
எழுமிச்சம் பழ ரசம் ஆப்பிள் டீ, எலுமிச்சம் பழரசம், வாழைப்பழ உணவு (டைபாய்டு), மங்குஸ்தான் (தாகம் திர்க்க), உலர்ந்த திராட்சை, இலந்தை வேர்க் கசாயம், மாதுளம் பழம் (3) 666T6) TEB). ஆப்பிள் பழக்கூழ், (குழந்தைகட்கு), உலர்ந்த மாம்பூ, மாங்கொட்டைப் பருப்பு (பத்து முதல் இருபது அரிசி எடை), மாஇலைச் சாறு (பாலுடன், தேனுடன், நெய்யுடன்), மாதுளம் பழச்சாறு, மாதுளம் பிஞ்சு கசாயம், மாதுளம் பழத்தோல் கசாயம், மங்குஸ்தான் பழத் தோல் கசாயம், வில்வப்பழம் அல்லது காய் கசாயம், முலாம்பழம், எலுமிச்சம் பழச்சாறு, விளாம் பழம், வாழைப்பழக்கூழ், நாவல் பழம், நாவல் பழக் கொட்டை. ஆப்பிள் பழக்கூழ் (குழந்தைகட்கு), வில்வப்பழம் விளாம்பழம், எலுமிச்சம் பழம், உலர்ந்த மாம்பூ, வாழைப்பழக்கூழ், பலா மர வேர்க் கசாயம், திராட்சை ரசம், வாழைப்பழம், ஆப்பிள் ரசம், எலுமிச்சம் பழம் ரசம், முலாம் பழம், இலந்தை வேர்க் கசாயம், திராட்சை ரசம், வாழைப்பழம். ஆப்பிள் பழம், எலுமிச்சம் பழரசம். ஆப்பிள், மாம்பழம், எலுமிச்சம் பழம் ரசம். ஆப்பிள், நெல்லிக் கனி, எழுமிச்சம் பழம், ஆப்பிள், ஆரஞ்சுப் பழம், வாழைப்பழம், மாம்பழம், கொய்யாப் பழம், தக்காளிப் பழம், அன்னாசிப் பழம், எலுமிச்சம் பழம், முலாம் பழம், வெள்ளரிப் பழம், வில்வப்பழரசம், வாதுமைப் பழம், பேரீச்சம்பழம், நெல்லி.
ஆப்பிள், வாழைப்பழம், எலுமிச்சம் பழம், திராட்சைப்பழம். வாழைப்பழம் , ஆப்பிள், எலுமிச்சம் பழம், திராட்சைப்பழம் ஆப்பிள், பப்பாளி, அன்னாசி, மாதுளை, எலுமிச்சம் பழங்கள். ஆப்பிள், எலுமிச்சை, நாவல், அத்தி, பேரிப்பழங்கள். அத்தி, எலுமிச்சை, பலாதுளிர் இலை தப்பளம். எலுமிச்சை, அத்தி, வில்வம், முலாம் பழங்கள் வில்வம், எலுமிச்சம் பழங்கள்
سے 50 ۔

17.
18.
9.
20.
2.
22.
23.
24。
25.
2.
27.
28.
29.
30.
31.
32.
38.
84。
35.
36.
37.
39.
40.
4.
42.
43.
44。
45.
46.
7.
48.
49.
50.
5.
52.
குடற் புண் e
திமிர்வாதம் சர்ப்ப விஷம் - ஜீரண சக்தி குறைவுகீல் வாதம் குண்டிக்காய் வீக்கம். பல்நோய் சொறி நோய் முடக்கு வாதம் WM கருப்பை இரத்தக்கசிவு கருப்பை சீழ் வடிதல்சிறுநீரக நோய்கள்
முலநோய் GaffurteoD இருமல் மார்புச்சளி ஜலதோஷம் வயிற்று உப்புசம் ,
காலரா இசிவு நோய் மனநோய் Dudab ஜன்னி நுரையீரல் நோய் - ஆஸ்துமா ஊளைச்சதை un கரப்பான் தினவு நிமோனியா
விக்கல் -
தினவு இரைப்பை வீக்கம் - முளை வியாதி நரம்பு வியாதி பித்தப் பையில் கல் -
நீரிழிவு --
எலுமிச்சை, வாழை, திராட்சை, வில்வம், பப்பாளி, ஆரஞ்சு, அன்னாசி, வெள்ளரிப் பழங்கள். வில்வப்பழம்
வில்வம், பலா இலைக் கசாயம் மாதுளை, பப்பாளி, ஆரஞ்சு, திராட்சை ஆப்பிள், எலுமிச்சை, திராட்சை, அத்தி வாழை, எலுமிச்சை நெல்லி, ஆரஞ்சு, எலுமிச்சை நெல்லி, ஆரஞ்சு, எலுமிச்சை நெல்லி, எலுமிச்சை, இலந்தை வேர்க் கசாயம், அத்தி -நெல்லி, எலுமிச்சை நெல்லி, எலுமிச்சை, முலாம் பழம் திராட்சை, நெல்லி, எலுமிச்சை, அத்தி, பப்பாளி, தர்ப்பூசணி, பழவிதை, வெள்ளரி விதை, வெள்ளரிக்காய், இளநீர், வாழைத்தண்டு நெல்லி, எலுமிச்சை, அத்தி எலுமிச்சை, நெல்லி
நெல்லி, எலுமிச்சை
மாதுளை, எலுமிச்சை
எலுமிச்சை
வெள்ளரி வில்வம்
வில்வம்
முலாம் பழம்
நெல்லி, எலுமிச்சை
நெல்லி, எலுமிச்சை
நெல்லி, எலுமிச்சை ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை ஆரஞ்சு, எலுமிச்சை ஆரஞ்சு, எலுமிச்சை, அத்தி ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, ஆரஞ்சு, எலுமிச்சை
எலுமிச்சை
மாதுளை
மாதுளை
LDrig56061T
ஆப்பிள், எலுமிச்சை
ஆப்பிள், எலுமிச்சை
எலுமிச்சை வாழைத்தண்டு சாறு, வாழைப்பூ சாறு, மாங்கொட்டை பருப்பு, மாந்தளிர் இலைச்சாறு, நாவற்பழச்சாறு, நாவற் கொட்டைச்சாறு, எலுமிச்சை
۔ 51 ۔
ஜூலை - 2006

Page 28
.
S.
.
58.
A.
D.
i.
2.
3.
64.
፳፱" Éሻhርኒነ – ሂUUû
பெரும்பாடு
!iର୍ଯtuititchଛି।
கல்லீரல் குறைபாடு கிரந்த சீத பேதி
மாதவிடாய் நோய் It iTւIIIւլն: பித்த வெடிப்பு இதய நோய்
புத்துணர்வு கொடுக்க
பலவீனம் (அtuா)
கிழத்தன்பை
WATZ
வாழைப் பழச்சாறு, வா:புத்தண்டுச்சாறு, எலுமிச்சை
மாம்பழம், நெல்லி, எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை மாம்பழம், எலுமிச்சை, முலாம்பழம், அத்திப்பழம் மாங்கொட்டைப் பருப்பு, மாந்தளிர் இலைச்சதறு. நெல்லி, எலுமிச்சை, மாதுனை எலுமிச்சை, தேன் மாங்காய்த் தோல், எலுமிச்சம் பழம்
மாது:ை11 மாமரப் பால், விளாமர இலைக்கசாயம் கொய்.ாப்பழம், மாதுளை, பேயன் வாழைப்பழம் தேன்
தர்ப்பூசணி, மாதுளை, பேரி, வெள்ளரி, சப்போட்டா, ஆரஞ்சு, மங்குஸ்தான் தக்காளி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, திராட்சை, மாதுளை, வாதுமை, பேரீச்சை, அத்தி. நெல்லி, எலுமிச்சை
பப்பாளிக்காய்ப் பால்,
நன்றி - இயற்கைடேனவே நோய்தீர்க்கும் மருந்து
-
சமயத்துறை விஞ்ஞானத்துறை இரண்டும் குறைகள் உடையவை.
ஆனால்
தவறுகளைத் துருவிப் பார்த்து விலகி இரு துறைகளையும் ஆாய்மைப்படுத்துவதே நமது கடமை. அவ்விதம் செய்வதால் இரு ஆறையும் ஒன்று போல் விளங்கும். ஒன்றில் ஒன்று விளங்கக் கூடிய நிலைமை உண்டாகும். அவற்றில் உள்ள வேறுபாடுகள் மறைந்துவிடும். வேறுபாடுகளைக் கண்டு இப்பொழுது ஒதுங்கிச்
செல்வது கோழைத்தனமான செயலாகும்.
ܓ
அவற்றில் உள்ளவையாவும் தவறுடையதல்ல.
།
ஜோர்ஜ் பெர்னாட்ஷா أر
- 5 -

는
в

Page 29