கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1975.03-04

Page 1
மலர் 1 இதழ் 1
 
 


Page 2
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் ஒரு அரசாங்கச் சார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனம். சமூகங்களிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள், ஜனநாயக பண்புகளை நிலைநாட்டுதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்ட இந்நிறுவனம், சகல இன பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க முற்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்கள் நிலைபற்றிய பல்வேறு அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்தல் இதன் முக்கிய நோக்கம். இலங்கையில் பெண்கள் சம்பந்தமான ஆவணங்கள், வளங்கள் ஆகியவற்றை சேகரிக்கும் இந்நிறுவனம், மூன்றாம் உலகிலே பெண்களின் நிலைபற்றி ஆய்வு செய்யும் அமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும்.
எமது குறிக்கோள்களில் சில
LTல் வேறுபாடு காரணமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்.
பெண் எழுத்தாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவித்தல், அத்துடன் பெண்களால் எழுதப்படும் சிங்கள, தமிழ், ஆங்கில நுல்களை வெளியிடுதல்,
பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரப்புதலும், பெண்நலம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அக்கறையைத் தூண்டுதலும்.
இலங்கையிலுள்ள ஒடுக் கப்பட்ட ஒதுக் கப்பட்ட குழுக்களுக்கான (அகதிகள், வேலையற்றோர், சேரிவாசிகள்) மீளக்குடியமர்வு முயற்சிகளில் ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் நலகல.
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்

இந்த இதழில் . இதழாசிரியரின் சிந்தனைக்கீற்றுக்கள் சில
பத்திரிகைகளில் பெண்களுக்கென பக்கம் ஒதுக்கப்படுதல் தேவைதாணு
லஷ்மி
கட்டுக்கட்டாக கணங்கள்
கமலினி செல்வராஜன்
என் மனைவிக்குத் தொழில் இல்லை
அம்ருதா பிரீதம்
பெண்ணிலைவாத இலக்கியமும் பிரசாரமும்
செல்வி திருச்சந்திரன்
டோனி மொரிசன்
இலங்கையில் கல்வியின் பால் சமத்துவநிலை
சுல்பிகா இஸ்மாயில்
"மறுபடியும்"இல் மாற்றுத் திரைப்படத்தின் தரிசனம்
பவானி லோகநாதன்
காலணியின் பிரயோகம்
பத்மா சோமகாந்தன்
தொழிலாள வர்க்கத்தின் அசமத்துவ பால்நிலைப்பாடு தேயிலைத்தோட்ட பெண்களின் அனுபவங்கள்
மலர்மதி
இலங்கையில் தமிழ்பேசும் மக்களிடையே
எழுத்தறிவும் வாசிப்புத்திறனும்
வள்ளி கணபதிப்பிள்ளை
அடிமைப் பெண்ணும் இலட்சியப் பெண்ணும்
அப்துல்காதர் லெப்பை
பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலும் இருபதாம்
நூற்றாண்டு முற்பகுதியிலும் வெளிவந்த சில
பத்திரிகைகளில் பெண்கள் பற்றிய நோக்கு
நளாயினி கண்பதிப்பிள்ளை
இலங்கையின் சமூக, ஜனநாயக, சீர்திருத்த இயக்கங்களில் முன்னோடிகளான சில தமிழ்ப்பெண்கள்
சித்திரா மெளனர்ஜந
(பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்)

Page 3
இச்சஞ்சிகையில் பிரசுரமாகும் கட்டுரைகளை ஆசிரியரின் அநுமதியுடன் மட்டுமே மறு பிரசுரம் செய்யலாம். கட்டுரைகளிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கும் கருத்துக்கள் ஆசிரியர்களின் சொந்தக் கருத்துக்களே,
இதழாசிரியருடையவை அல்ல.
s
பணிப்பாளர் குழு கலாநிதி குமாரி ஜயவர்த்தனா
கலாநிதி ராதிகா குமாரசாமி
பேர்னடீன் சில்வா
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
அன்போரியா ஹனிபா
இதழாசிரியர் கலாநிதி செல்வி திருச்சந்திரன்
அட்டைப்படம் :- கட்டுகளை மீறல்
சுதாத் புஷ்பலால் லியனகே
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் 17, பாக் அவனியூ கொழும்பு 05, இலங்கை, 7, 582,798
-ܓܠ
འཛོད་༽
ク
ISSN : 1391.0353
விலை: ரூபா 75/-

ஆசிரியரின் சிந்தனைக்
கீற்றுக்கள் சில
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ஒரு குறிக்கோளை நிறைவேற்றுமுகமாக நிவேதினி 1994ம் ஆண்டு தை மாதம் தோன்றுகிருள். இவ்விதழை வெளிக்கொணர இதன் ஆசிரியர் என்றமுறையில் பல பொறுப்புக்களை ஏற்கவேண்டி இருந்தது. பெண்கள் விடயத்தில் அக்கறையும், அவதானிப்பும் உள்ளவர்கள் சிலராகவே இன்றும் இருக்கிறார்கள். அந்தச் சிலரில் எழுத முன்வந்தோர் மிகச் சிலரே. எழுத முனைந்தோருக்கு ஓயாதவேலை இரட்டைப்பளுவைவிட சமூகப்பணி செய்வோராகவும் இவர்கள் இருக்கின்றபடியால் நேரம் கிடைத்து அந்நேரத்தில் ஆய்வடங்கிய ஒரு நீள்கட்டுரையோ சிறுகட்டுரையோ எழுதுவதற்கு எழுதும் மனோநிலை ஏற்படவேண்டும். எல்லாம் ஒன்றுகூடிய தரமான ஒரு படைப்பைத் தோற்றுவிப்பது மிகவும் கஷ்டமானதொரு காரியமாகவே பலருக்குத் தோன்றியது. கடிதங்கள் தொலைபேசிச்செய்திகள் என்று ஒன்றுமாறி ஒன்றை ஏவி இறுதியில் சிலரை எழுதுவிக்க முடிந்தது. இதை ஆசிரியர் என்ற சார்பில் ஒரு சாதனை என்றே நான் கூறலாம்.
இலங்கையில் பெண்ணிலைவாதக் கருத்துக்களை தமிழிலும் நிலைநிறுத்தவேண்டும், அவை பெண்களைச் சேர்ந்து, அவர்களை சிந்திக்கச் செய்யவேண்டும் என்பதே எமது பேரவா. இந்தக் குறிக்கோளை பெண்ணின் குரல் என்ற சஞ்சிகை இடைக்கிடை ஒலித்ததன் மூலம் ஓரளவிற்கு நிறைவேற்றியது என்று கூறலாம். இப்பொழுது அதன் ஒசை அடங்கிவிட்டது போல பலநாட்களாக அது வெளிவரவில்லை. நங்கையும் சிலநாட்களில் காட்சிதருகிறாள். இன்று நிவேதினியும் தல்ைகாட்டி விட்டாள். சிறு முயற்சிகளாக இவை தற்போது ஒரு தேவையை நிரப்புகிறது என்று நாம் கூறினாலும் இவை போதாது. பெண்களைத் தீவிரமாக சிந்திக்க வைக்க, அடிமைத்தளைகளை அகற்ற இன்னும் பல வெளியீடுகள் தமிழில் வெளிவர வேண்டும். பெண்ணடிமைவாதமும் பல் முனைப் பட்டது, பல கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சமயம், கலை, கலச்சாரம், குடும்பம், அரசு, தேசியவாதம் போன்ற கூறுகளுக்கு ஊடாகத் தோன்றிய
4

Page 4
ஆனாதிக்க கட்டமைப்புக்களும் கருத்துநிலைகளும் ஒன்றை ஒன்று வலியுறுத்துவனவாகவும் ஸ்திரப்படுத்துவனவாகவும் உள்ளன. விண்டு விண்டு அவற்றை அலசி ஆராய வேண்டி உளளது.
அபிவிருத்தி என்ற பெயரில் அபிவிருத்தித் திட்டங்கள் மனிதரை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்கின்றன என்று பொதுவான ஒரு வாதத்தை அடிப்படையாகக் கொண் ட அர சின் தTட் டங்கள் பெண் களை முன்னேற்றத்திலிருந்து ஒதுக்குவதை நாம் காணலாம். சுதந்திரவர்த்தக வலயம் அந்நியச்செலாவணியை அள்ளித்தரும் ஒரு அபிவிருத்தித் திட்டம். அங்கு வேலை செய்யும் ஆயிரமாயிரம் பெண்கள் நீண்டநேர வேலையிலும் அலுக்கும் சலிக்கும் நுண்பொருள் பாவிப்பு வேலையிலும் தங்கள் கண் பார்வையை இழக்கிறார்கள். உடலும் உள்ளமும் ஒருங்கே துவண்டுபோக அவர்களது வேலையின் தரம் கூட இரண்டாம் பட்ச வேலையாக மதிப்பிழக்கிறது. அதன் லாபம் போதியளவு அவர்களைச் சேர்வதில்லை. வேலையில் இருந்தும் அதனால் பெறப்படும் லாபத்திலிருந்தும் அவள் விலக்கப்பட்டு அந்நியப்படுத்தப் படுகிறாள். குறைந்த ஊதியமும் வலுவிழந்த, நோய்வாய்ப்பட்ட அவளது உடலும் ஆசைகள் நொறுங்கிய அவளது இதயமுமே அபிவிருத்தியின் பயன் பேருக அவளுக்குக் கிடைக்க அந்நியச் செலாவணி தொடர்ந்து அரசுக்கு கிடைக்கிறது. ஆனால் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பெண்களின் வேலையில்லாத் திண்டாட்டம் இவ்வளவு சதவீதமாக இவ்வரசினால் இறக்கப்பட்டுவிட்டது என்று வெளியான செய்தியை மத்திய தர, மேல்மட்ட பெண்களும் ஏனையோரும் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இதை விளங்கிக் கொள்ள அந்த பெண்களின் தொடர்பு இந்தப் பெண்களுக்கு வேண்டும். இதற்கு ஆய்வுப்பரிவர்த்தனை வேண்டும். கருத்தரங்குகள் பிரசுரங்கள் மூலமாகவே இந்த ஆய்வுப்பரிவர்த்தனை நடக்கலாம். இதுவே நிவேதினியின் முக்கிய நோக்கம்.
தற்போதய இலங்கையின் அரசியல் தளத்தில் அறிவு
ஜீவிகள் தாக்கப்படுவதும், இகழப்படுவதும் இலங்கையின்
துர்அதிர்ஷ்டங்களுக்கு எண்ணிக்கை இல்லையோ என்று
எண் ன வைக்கிறது. அறிவு ஜீவிகளின் வெளிப்பாடுகளின் 5

மகிமையை காலம் நிர்மாணித்தாலும் அதன் இன்றைய தேவையை நாம் புறக்கணிக்ககூடாது.
இன்றைய காலகட்டத்தை வரலாற்றில் முரண்பாடுகள் நிறைந்த கலியுகம் என்று கூறத் தோன்றுகிறது. மேலே கூறிய அபிவிருத்தியும் அவ்வபிவிருத்தியால் அல்லலுறும் பெண்ணும் இதற்கு ஒரு சான்று. இந்த முரண்பாடுகளுக்கு இன்னும் சில உதாரணங்கள் உள. கேரளநாட்டின் கல்விநிலை மிகவும் பாராட்டத்தக்கது. மகளிர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் அங்கு உண்டு. ஆனால் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் இந்த உயர்ந்த கல்விநிலையால் என்ன பயன் என்று கேட்க வைக்கிறது. 1986ல் சிரியன் கிறிஸ்தவப் பெண்களுக்கு சொத்திலே சரிபாதி கொடுக்க வேண்டும் என்ற உரிமை சுப்ரீம் கோட்டால் நிறுவப்பட்டது. இப்பொழுது கேரள அரசாங்கமும் கிறிஸ்தவப் பாதிரிமாரும் ஒன்றிணைந்து அவ்வுரிமையைப் பறித்து 1986க்கு முன்னிருந்த அசமத்துவ சொத்துரிமையை நிறுவ முன்வருவது கேலிக்குரியவிடயமாக எமக்குத் தோன்றினாலும் 21ம் நூற்றாண்டை எட்டிக் கொண்டிருக்கும் ஒரு படித்த சமூகத்தில் இப்படி நடக்கிறது என்பது உண்மையே. இம்முரண்பாட்டுக்கு என்ன காரணம்? கல்வியின் குறைபாடா? ஆண் ஆதிக்கத்தின் பலப்பரீட்சையா? பின்னயதை முன்னயது தடுக்கிறதா? நிலையான நீதியை நிறுவ கல்வி பயன்படாதா? இது ஒரு முரண்பாடே.
இலங்கையில் பெண்களது நிலைமை எப்படி என்று வெளிநாட்டார் கேட்டாலோ அன்றி வேறு அரசசார்புடைய நிறுவனங்கள் ஆய்வு செய்ய முற்பட்டாலோ பெண்களது வாழ்க்கைநிலை இங்கு மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது என்றும், அதை பெண்களின் எழுத வாசிக்க தெரியும் அறிவுநிலை, சிசுக்களின் இறப்புவீதம் குறைந்திருத்தல், இலவசக்கல்வியினால் பால்ரீதியில் கட்டுப்பாடற்ற சமகல்வி பெறும் வாய்ப்பு போன்றவற்றை புள்ளிவிபரங்களில் காட்டி நிரூபிப்பர். ஆனால் புள்ளிவிபரங்களில் அடங்காத பெண்களின் கொடூர நிலையை தெரிந்தோ, தெரியாமலோ மறைத்துவிடுவர். மேற்கூறிய யந்திர மயமாக்கப்பட்ட சுதந்திரவலயம் பெண்களது நிலையோ அல்லது வீட்டுக்குள் நடக்கும் இரட்டைப்பளுவை தாங்கும் பெண்களோ அவ்வீட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளை அங்கு குய்யோ முறையோ என்று
6

Page 5
வலிதாங்காமல் அடிக்கும் கணவனை எதிர்க்க சக்தியற்ற அவர்களது முறைப்பாடுகளோ , தோட்டங்களிலும் வயல்வரப்புக்களிலும் அல்லலுறும் பெண்களது நிலையோ பெரும்பாலும் புள்ளிவிபரங்களில் அடங்குவதில்லை. இவை அரசியல் ரீதியில் மறைக்கப்பட, சமூகரீதியில் மக்கள் பார்வையில் இருந்து ஓரங்கட்டப்படுகிறது. பொதுவாக இப்பிரச்சினைகளை அரச சார்பற்ற நிறுவனங்களும் பெண்கள் இயக்கங்களுமே தங்களது பொறுப்பாக தீர்க்கப்படவேண்டிய நிதர்சனங்களாக எடுத்துக்கொள்கின்றன.
19ம் நூற்றாண்டில் எழுந்த தேசபக்தி, தேசாபிமானம் போன்ற சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தத்துவங்கள் புரட்சிகரமானதாகவும் முன்னேற்றக் கொள்கைகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த முன்னேற்றத்தையும் சுயகெளரவத்தையும் அடிப்படையாகக் கொண்ட தேசியவாதம் பெரும்பாலும் பெண்களுக் கெதிராகவே அமைந்தது இன்னுமொரு முரண்பாடு. சிரியன் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த பாதிரிமார்கள் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்குவது (சிரியன்) சமூகத்துக்கு ஆபத்து அபாயம் என்று கூறினர். CommunityinPeri என்று பாதிரிமார்களால் அந்தச் சட்டத்திற்கெதிராக ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பு இருந்தது எம்மை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியதெனினும் அதன் பிற்போக்குத் தன்மை எம்மை ஆத்திரங்கொள்ளவும் வைக்கிறது. இந்தத்தேசபக்தி, தேசஅபிமானம் போன்றவற்றின் மறுகூருக இருப்பது தங்களது மார்க்கத்தில் அல்லது சமயத்தில் வைக்கும் அதீத பக்தி. இந்த அதீத பக்தி ஒரு புனிதநோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு புறநோக்கு. தங்கள் சமயமும் தங்கள் கலாச்சாரமும் உயர்ந்தது, புனிதமானது என்றுவாதிக்க முற்பட்டு அவற்றிற்குப் புறம்பானது எல்லாம் இழிநிலையில் உள்ள "மற்றையவை" அதாவது எம்முடையதல்ல ஆகவே அவை புறக்கணிக்கப்படவேண்டும் என்று தொடங்கிய வாதம் நீண்டது. இறுதியில் அவற்றை எமது சமயத்தின் பேரில் அழிக்கவும் செய்யலாம், எமது சமயத்துக்குச் செய்யும் புனிதப்பணிகளில் ஏனையவற்றை எள்ளிநகையாடுதல், புறக்கணித்தல், அழித்தல் என்பனவும் அடங்கும் என்ற நிலைக்கு தள்ளப்படும் மானிட ஜனமக்கள் இன்று மிருகங்களாகிக் கொண்டிருக்கின்றனர். இதில் பெண்களது
7

நிலை என்ன என்பது ஒரு பொருத்தமான கேள்வியே. கலாச்சாரமும் சமயமும் எப்பொழுதுமே பெண்களுக்கு தனிவிதிகளை அமைப்பதில் முன் நின்றன. பெண்ணை அடக்கி ஒடுக்குவதில் தான் பெண்ணின் புனிதம், நிலைத்து நிற்கிறது. பெண்களது புனிதமும் தூய்மையும் சமயத்துக்கும் கலாச்சாரத்துக்கும் துணைபோகும் தூண்கள் ஆகவே சமயத்தையும், கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட தேசாபிமானம் பெண்ணை மையமாக வைத்து தங்களது தனித்து விளங்கும் சிறந்த ஆசாரக்கோட்பாடுகளை பாதுகாக்க முற்படுகிறது. இதனால் கலாச்சாரத்தின் போக்கிற்கிணங்க தாங்களாகவும் சமூக நெருக்கத்தாலும் காலப்போக்கில் களைத்தெறிந்த அடக்க ஒடுக்க ஆசாரங்களை பெண்கள் திரும்பவும் அனுசரிக்க வேண்டிய நிலை ஒன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. இல்லாவிட்டால் எங்களது கலாச்சாரம் அதன் வீர்யத்தை இழந்து அந்நியமாக்கப்பட்டுவிடும் என்ற வாதத்தில் சதியும், மொட் டாக் கிடலும் தேசபக்தி மயமாக்கப்பட்டுவிட்டன.
அண்மையில் நடந்த ஒரு சிறு சம்பவம் எவ்வளவு கேலிக்குரியது என்பதையும் விளக்கிவைக்கிறேன். ஷப்னா அஸ்மி என்ற நடிகை 75 வயதான நெல்சன் மண்டேலாவுக்கு NeWS maker of the year 6T airp Lull gigog, glypsigid Gung, கேப்டெளனில் (Capetown) அவருக்கு முத்தம் கொடுத்து அந்தப் பரிசை அளித்தார். இந்தப் புனிதமான அன்பு, மதிப்பு போன்றவற்றின் வெளிப்பாடான முத்தம் - தந்தை ஸ்தானத்திலிருக்கும் அதாவது வயதும், பண்பும் மிகுந்த ஒரு வரலாற்றுப்புருஷனுக்கு அளித்த களங்கமற்ற ஒரு செயல் டெல் கியில் இந்தியப்பத்திரிகைகளில் ஒரு அவதூரு ன சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. இது எம்மில் பலரை ஆச்சரியப் பட வைத்ததும் அல்லாமல் அருவருக்கவும் வைத்து விட்டது. இந்தியப்பண்பாடு (அந்த நடிகை இந்தியாவைச் சேர்ந்தவர். ஒரு ஆணாக இருந்தால் நான் அந்த நடிகன் ஒரு இந்தியன் என்று கூறியிருப்பேன் பெண்பாலாக இருப்பதால் இந்தியை அல்லது இந்தியள் என்று பெண்பாலாக்கும் மரபு தமிழில் இல்லாதபடியால் நீட்டிமுழக்கி இந்தியாவைச் சேர்ந்தவள் என்று கூறுவதும் ஒரு மொழியின் ஆண் ஆதிக்க கூறுகளை வெளிப்படுத்துகிறது என நாம் கொள்ளலாம்.) முஸ்லிம் ஆசாரம் (அவள் ஒரு முஸ்லிம் பெண்) - ஆகியன அவளது
8

Page 6
செய்கையால் பண்பிழந்து மதிப்பிழந்துவிட்டது என்று ஒரு கூக்குரல், பட்டுறிஇஸ்மாயில் என்னும் இந்தியனால் எழுப்பப்பட்டது. 'பக்கா முஸ்லிமும் இந்தியனுமாகிய தனக்கு அவளது செய்கை அவமானத்தை உண்டாக்கியது என்று கூறும் இவர் அலிகா முஸ்லிம் பல்கலைக்கழக்கத்தில் ஆசிரியராகக் கடமை ஆற்று கிரு ர். இந்தியத்துக்கும் இஸ்லாமுக்கும் எதிரானதும் முரணானதுமாகிய இச்செயல் அவளை நாளை தனது படுக்கை அறைக்கும் ஒருவனை அழைக்க வழிவகுக்கும் என்று கூறும் இவரது பண்பிழந்த வார்த்தைகளை நாம் கண்டிக்கிருேம். மானிட தர்மத்துக்கு முரணுன வன்முறைச் சொற்களை உபயோகிக்கும் இவர் மரியாதை தெரியாத மனிதன் எனக் கூறுவதில் தப்பில்லை. இது ஒரு முஸ்லிம் ஆணை மாத்திரம் தாக்கிய ஒரு செயலாக்கப்படவில்லை. இந்து இந்தியன் ஒருவனும் (குமார்) இந்தப் பல்லவியை வேறு ராகத்தில் பாடுகிறான். அஸ்மி செய்தது உலக அரங்கில் இந்தியப் பெண்களுக்கு இருந்த ஒரு உன்னத நிலைக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது என்பது அவரது வாதம், சீத்தாவும் சாவித்ரியும் முன்காட்டிச்சென்ற வழியில் செல்ல வேண்டிய பெண் ஒருத்தி மாபெரும் தவறிழைத்து விட்டார் என்று சாடும் இவர் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு அதாவது பெண்ணுக்கெதிராக் குரல் எழுப்புவதற்கு மாத்திரம் தோன்றும் இந்த ஒற்றுமைக்கு ஒரு உதாரணம். அமினா ஜயால் என்னும் பெண், பட்டுறி இஸ்லாமின் வாதத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியபோது இன்னுமொரு (விதண்டா) வேடிக்கையான வாதம் முளைத்தது. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அமீனா, இஸ்லாம் மதத்தைச் சேராத ஜயாலை மணமுடித்ததன் பேரில் இஸ்லாம் மதத்தினைப் பற்றி பேசும் உரிமையை இழந்து விட்டார் என்பதே அவ்வாதம் - ஆக ஆண்கள் தமது தேசத்தைச் சேர்ந்தவரும் தமது மதத்தைச் சேர்ந்தவருமாகிய ஒரு பெண்ணுக்கெதிராக பகிரங்கமாக வன்சொற்களை உபயோகித்து அவளை மனவருத்தமடையச் செய்வதற்கு அவர்களது இந்தியத்தன்மையும் மதச்சார்பும் துணைபோயின. மதப்பற்றும் தேசியப்பற்றும் தனது தேசத்தின் தூய்மையையும் மதத்தின் தூய்மையையும் பாதுகாக்க வேண்டி, தனது தேசப்பெண்ணையும் தன் மதப் பெண்ணையும் கூட அவதூறு செய்ய முற்படுவது விநோதமே.

பெண் மை வரை யறைக் குள் இருந்த ரால் அது தேசீயத்திற்குள்ளும் மதப்பண்புக்குள்ளும் தெய்வீகமாக இருக்கும். அந்த வரையறையை அவள் உரிமை என்றும் மானிடதர்மம் என்றும் மீறமுற்பட்டால் அவளைத்தரங்குறைந்த விலைமாதாக்கிவிடுவர். தெய்வீகம் விலைமாதாக்கப்பட்டுவிடும். இந்தநடிகை தனது படுக்கை அறைக்கும் ஒருவனைக் கூப்பிடுவாள் என்று அவர் கூறியது இந்தியன் பீனல்கோட் 499 ஷரத்தின்படி சட்டநடவடிக்கை எடுக்கப்படக்கூடிய ஒரு செயல். இது நீதி விவகாரம். இது மட்டுமல்ல இச்செயலின் தாற்பரியம். எப்படி பெண்ணொருத்தியின் பாலியல் பகிரங்கமாக பத்திரிகையில் இழுக்கப்பட்டு அவள் சொற்களால் மானபங்கப்படுத்தப்படுகிரு ஸ் என்பதற்கும் இது ஒரு உதாரணம். மிக இலகுவில் காரணகாரியத் தொடர்புகள் எதுவுமின்றி பெண்ணொருத்தி பாலியல் பார்வையில் மாட்டப்பட்டு விடுகிருள். அவளது மனம் அந்த மனதில் ஏற்படும் கிலேசங்கள் உணர்ச்சிக்கூறுகள் போன்றன பெரும்பாலும் கணக்கெடுக்கப்படுவதில்லை. அவள் ஒரு பாலியல் உருவம் என்பதே மேலோங்கிய எண்ணமாக
இருக்கிறது.
தற்போதைய நடைமுறைச்செயல்களை பார்க்கும் பொழுது பெண் ணுக்கும் பெண் மைக் கும் இ ைழக்கப் படும் அவலங்களையும் அவலட்சணப்பார்வைகளையும் பார்க்கும் போதும் இன்னும் எவ்வளவு தூரம் நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும், ஒரு சமத்துவ சமரச கட்டமைப்புகளையும் கருத்து நிலைகளையும் சமுதாயம் முழுவதும் பரப்பி தேசிய எல்லைகளைக் கடந்து பெண்களை இரண்டாம் பட்ச மானிடராக்குவதை தவிர்க்க எவ்வளவு தூரம் நாம் இன்னும் நடக்க வேண்டும் என்ற கேள்வி எம்மை மலைக்க வைக்கிறது. முளைக்கும் புதுப்பிரச்சினைகளும் இந்த முரண்பட்ட முரண்பாடுகளும், கல்வி இருந்தால் மட்டும், புரட்சிகர இயக்கங்களில் பங்கேற்பதால் மட்டும் தீர்க்கக் கூடியவை அல்ல. இவற்றால் மட்டும் பெண் பூரண பெண் உரிமையை பெற்றுவிடமாட்டாள் என்ற பேருண்மையை நாம் உணர்ந்து கொண்டு புள்ளிவிபரங்களுக்கு அப்பால் இருக்கும் பூரண சமத்துவத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். இதற்கு நாம் எல்லோருமாக தேசிய, வர்க்க, மத, வரம்புகளைக் கடந்து செயற்படவேண்டும்.
10

Page 7
பத்திரிகைகளில் பெண்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படுதல் தேவைதானா?
- லக்ஷமி
தேசியப் பத்திரிகைகள் வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றினை வாசிப்பவர்களில் பெண்களின் தொகை கணிசமானது. வீட்டில் தமது அன்றாடக் குடும்பக் கடமைகளை முடித்துவிட்டு, ஒய்வாக இருக்கையில் பெண்கள் தமது நேரத்தினை பத்திரிகைகளைப் படிப்பதில் செலவிடுகின்றனர் என்பது ஒரு பொதுவான கணிப்பாகும். அதிலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள் மற்றும் அம்சங்களை உள்ளடக்கிய வாரப் பத்திரிகைகளை விரும்பிப்படிக்கின்றனர் என ஏற்கப்படுகின்றது.
இந்நிலையில், பத்திரிகைகளில் பெண்கள் பக்கம் ஒரு முக்கியமான அம்சமாகக் கருதப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் இதுவோர் முக்கிய அம்ச மெனப் பத்திரிகைகளினால் கருதப்படுகின்ற போதும், பெண் பாலாரையும் தமது வாசகர்களை கவரும் நோக்கில்தான் இவ்வம்சம் 1950களில் தொடங்கப்பட்டது என்று கூறுவது தவறாகாது.
வீட்டில் கணவனையும், பிள்ளைகளையும் குடும்ப அங்கத்தவர்களையும் எவ்விதமாகக் கவனிப்பது, பெண்கள் எவ்விதமாக வாழ வேண்டும் என்பன போன்ற விடயங்களை மாதர் பக்க தயாரிப்பு தொடக்ககாலத்தில், ஆண் பத்திரிகை எழுத்தாளர்களே, பெண்களின் பெயரில் செய்து வந்தனர் என்பதும் பத்திரிகைத் துறையில் பெண்கள் காலடி எடுத்து வைத்த பின்னர் அவர்களிடம் அக் கருமம் ஒப்படைக்கப்பட்டதும் தெரிந்தவிடயங்களே.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழி தேசிய வாரப் பத்திரிகைகளிலும் மகளிருக்கான பக்கங்கள் நீண்ட நெடுங்காலமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இப்பக்கங்களில் குடும்பத்தினைப் பேணுதல், கணவன்
பிள்ளைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பராமரித்தல்,
அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், ஆடை l

அலங்காரம், வீட்டலங்காரம், சமையல்கலை, தையல்கலை, விருத்தினர்களை உபசரித்தல் போன்ற விடயங்கள் இடம் பெற்றன. அவை தொடர்ந்தும் சேர்த்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.
மாறிவரும் சமுதாய அமைப்பில் மகளின் அபிவிருத்தியும் மதிப்பும் உயர்ந்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முக்கிய கா ர னமா க இந் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக்கல்வியைக் குறிப்பிடலாம்.
இது மகளிரைப் பொறுததவரை ஒரு வரப்பிரசாரம் என்றே குறிப்பிடவேண்டும். வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடந்த பெண்கள் பாடசாலைக்குச் சென்று படிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து பெண்கள் சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது என்பதனை எவரும் ஒப்புக்கொள்வர்.
கல்வியறிவு பெற்ற பெண்கள் ஆசிரியர்கள், தாதிகள், டாக்டர்கள் எனப்பல்வேறு தொழில்களையும் பெறக்கூடியதாக இருந்தது. அவர்களது உலகமும் குடும்ப எல்லையை மீறி விசாலிக்கும் போக்கு ஏற்பட்டது. புெண்களது சேவையும் நிர்வாக சேவையையும் மகளிரை ஒரளவு அனைத்துக் கொண்ட போது அவர்களது மதிப்பு மேலும் உயர்ந்தது எனலாம்.
தவிர, சிற்சில காரணங்களினால் விரல்விட்டு எண்ணத்தக்க பெண்கள் அரசியலிலும் பிரவேசஞ் செய்துள்ளனர். சிற்சில அரசியல் காரணங்களினால் வசதிபடைத்த குடும்பத்துப் பெண்கள் சிலர் அரசியலுக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.
உள்நாட்டில் வேலை பார்ப்பது ஒருபுறமிருக்க பெண்கள் வெளிநாடுகளில், அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளை நாடிப் பெருமளவில் செல்லுகின்ற ஒரு நிலைமையும் கடந்த ஒரு தாசாப்தத்துக்கு மேலாக எற்பட்டு வரும் ஒரு மாற்றம் என்பதனையும் குறிப்பிடவேண்டும்.
பெண்கள் பக்கங்கள் வழமையான குடும்ப விடயங்களோடு இத்தகைய மாற்றங்களைப் பிரதிபலிக்கும் விடயதானங்களையும் அவ்வப்போது பிரசுரித்து வந்துள்ளன என்பதனையும் குறிப்பிட வேண்டும்.
12

Page 8
இந்த மாற்றப் போக்கில் முற்போக்குச் சிந்தனை கொண்டோர் மற்றும் பெண்ணுரிமைவாதிகளின் பங்கும் கணிசமானதாக இருந்து வந்துள்ளது என்பதைக் கூறவேண்டும்.
பெண்கள் பக்கங்கள் பெண்களுக்கான விஷயதானங்களைத் தாங்கிவருகின்றன என்பது ஒரு புறமிருக்க, பத்திரிகைகளில் மகளிருக்கென ஒரு பக்கத்தினை ஏன் ஒதுக்கிவிடப்படுதல் தொடர வேண்டும்? பெண்கள் விடயங்களைப் பெண்கள் தான் வாசிக்கவேண்டுமா? அவர் தம் விடயங்கள் ஆண்பாலாருக்கு ‘உப்புச்சப்பற்ற ஒன்றா? பெண்களின் விருப்பு வெறுப்புகள், தேவைகள், எதிர்பார்ப்புகள், பிரச்சினைகள் ஆண்பாலாரைப் பொறுத்தமட்டில் தேவையற்ற ஒன்றாகுமா? சமையல், தையல், அலங்காரம் போன்ற விடயங்களில் ஈடுபடும் ஆண்கள் இல்லையா?
தந்தையாய்,சகோதரனாய், கணவனாய் பெண்களின் வாழ்வில் பங்கேற்று இணைந்து வாழும் ஆண்கள் பெண்களுக்கான விட்யங்களையும் அறிந்திருத்தல் வேண்டும். எனவே அவ்விடயங்கள் பத்திரிகைகளில் ஏனைய விடயங்களைப் போல் பொதுவானதாகப் பிரசுரிக்கப்பட வேண்டும் என மகளிர் கருத்தரங்குகளில் கடந்த சில வருடங்களாகவே ஒரு சிலரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இவ்விடத்தில் ஒரு சிறு உதாரணத்தைக் குறிப்பிடுதல் பொருத்தமானது. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண் எழுத்தாளர், பெண்களின் பிரச்சினை சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரையைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்திருந்தார். அக்கட்டுரை பெண்கள் பக்கத்தில் பிரசுரமானது. அக்கட்டுரை குறித்து அந்த எழுத்தாளர் ஒரு கல்விமானிடம் பிரஸ்தாபித்தார். பெண்கள் பகுதியில் அக்கட்டுரை வெளியானதாகக் கூறினார். குறிப்பிட்ட திகதிப் பத்திரிகையைத்தான் வாசித்ததாகவும், குறிப்பிட்ட கட்டுரை பெண்கள் பக்கத்தில் வந்ததால் தான் அதனைக் கவனியாது விட்டிருக்கலாம் எனவும் அவர் கூறினாராம். அக்கட்டுரையைப் பொதுவான பக்கம் ஒன்றில் பிரசுரித்திருந்தால் பலரும் வாசித்திருப்பார்கள், பெண்கள் பக்கத்தில் வந்தால் முக்கியத்துவம் பெறாமல் போயிற்று என்று அந்தப் பெண் வருத்தப்பட்டார். எனினும், பத்திரிகைகளில் தொடர்ந்தும் “பெண்கள் பக்கம்” வெளியாகி வருகிறது.
13

மகளிர் பக்கத்தினை ஆண்வாசகர்கள் பார்ப்பதில்லை என்று கூறுவதற்கில்லை. இன்று நமது இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் மத்திய கிழக்கு நாடுகளிலும் மற்றும் மேற்கு நாடுகளிலும் வாழ்கின்றனர். பெரும்பாலும் “தனித்து" வாழும் இவர்கள் தமது உண வினைத் தாமே சமைத்து உண்ணுகின்றனர். சமையல் முறைகளை அறிந்து கொள்ள எமது பத்திரிகைகளின் சமையல் தயாரிப்பு முறைகளை ஆவலுடன் பார்க்கின்றனர்; அவற்றினைச் சேகரிக்கின்றனர் என ஒருவர் தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்துக்கேற்ப பெண்கள் தமது முன்னேற்றம் கருதியும் நாட்டின் நலன்கருதியும் துணிவோடு செயற்படவேண்டும் என்று ஊக்கமளித்துக்கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதுகின்ற ஆண்களும் இருக்கின்றனர். இவ்விடயத்தில் மகளின் விடயதானங்களைப் பிரசுரிக்கத் தற்போது இருப்பதுபோல மகளிர் பக்கம் ஒதுக்கப்படுவது அவசியந்தானா? அல்லது பொதுப்படையான விடயங்கள் போல பக்கங்களில் ஆங்காங்கு இடம் பெற வேண்டுமா? என்பது குறித்து பெண்களே சிந்திக்கவேண்டும். இவ்விடயத்தில் சகோதரிகளின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி : 'வீரகேசரி'
6-6-93.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் செயற்திட்டக் குழுக்கள்
அ. பிரசுரங்களுக்கான ஆசிரியர் (35(Լք.
பெண்கள் கல்வித்துறைகளுக்கான குழு.
ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளை இரண்டாம் மொழிகளாகக் கற்பிப்பதற்கான குழு.
ஈ. செய்தித்துறையை அவதானிக்கும் குழு.
14

Page 9
கட்டுக்கட்டாக கனங்கள்
விட்டு விடுதலை யாகி நிற்க என்னை விட்டு விடுங்கள் ஜயா - இந்தச்
சிட்டுக் குருவி போய், விண் வெளி எல்லையை
ஒட்ட விடுங்கள் ஜயா!
தந்தை தாய் காதலர் பாசங்கள் என்றெந்தன்
கால்களைக் கட்டாதீர் - பற்றும்
இந்த உலகத்து மாயச் சுகங் கொண்டென்
இறக்கையை வெட்டாதீர்!
ஒட்டும் புளியினிற் பட்டும் படாதுள்ள
ஒடு, உயிர் வாழ்க்கை ஜயா - வெறும்
கட்டுகடல் பெற்றிடும் காமச் சுகங்கள்
கனநிலை வேட்கை ஐயா!
புரட்டுப் பொய்ப் போலிப் பொச்சாப்பு மண்வாழ்விற்
புரட்டி எடுக்காதீர் - என்னை விரட்டிக் கபட நடிகப் பிறவி
விலங்கில் மடுக்காதீர்!
பட்டம் பதவி உயர்வுகள் உமக்கு வேண்டும் என்றெனைப்
பற்றி யிழுக்காதீர் -என்மேற்
சட்டங்கள் திட்டங்கள் குற்றங்கள் தீட்டி என்
சால்பை மழுக்காதீர்!
கட்டுக் கட்டாய் என் முதுகில் நீர் இட்ட
கனத்தை எடுங்கள் ஐயா - முற்றும்
விட்டு விடுதலை யாகி நிற்க என்ன்ை
விட்டு விடுங்கள் ஐயா!
- கமலினி செல்வராசன்
15

“என் மனைவிக்குத் தொழில் இல்லை!”
"என் மனைவிக்குத்
தொழில் இல்லை!"
ஆனல் -
பாட்டாளியையும் பயிராளியையும் படைத்து இந்தப் பாரை நடத்துவது இந்தப் பாரை நடத்துவது யார் ?
சமைத்துப் படைப்பதும் கழுவித் துடைப்பதும் துணிகள் துவைப்பதும் யார் ?
தண்ணிர் சுமப்பதும் குழந்தையை வளர்ப்பதும் நோய்களைத் தணிப்பதும் யார் ?
தோழருடன் கணவன்கூடிக் குடிக்கவும் கும்மாளம் அடிக்கவும் புகைக்கவும் சூதாட்டங்களில் திளைக்கவும் அவகாசம் சேமித்து அளிப்பவள் யார் ?
ஆண்மகன் சம்பள ஆதார சக்தியை அன்றன்று பெற வீட்டின் அலுவல்கள் அனைத்தும் தன் தலைச் சுமப்பவள்; தனயர்கள் கல்வி பெற முன்செல்ல, அவர்கள் பணிமுற்றும் முடிப்பவள் ιμπίτP untir? ιμ πή Ρ
கண்ணில் தெரியாத,
காதிலே கேட்காத, கூலி கொடுக்காத, சம்பளக்குறைவான கருத்திலே கணிக்காத, வேலையால் உலகுய்ய வினை செய்வாள் வேறு யார்?
என் மனைவிக்குத் "தொழில்" இல்லை - ஆனல் --
“வேலை" உண்டு!
மூலம் - அம்ருதா பிரீதம் மொழிபெயர்ப்பு - கமலினி செல்வராசன்
6

Page 10
பெண்நிலைவாத இலக்கியமும் பிரச்சாரமும்
- செல்வி திருச்சந்திரன்
இலக்கியங்கள் சமூக தாரிசனங்கள். சமூகக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதாக வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் எழுத்தாளரும் உளர். அதேபோல் சமூக அவலங்களை அவதானித்து அவற்றை அக்குவேறு ஆணிவேரு கப்பிரித்து உடைத்துத்துல்லியமாக்கும் எழுத்தாளர்களும் உளர். அவற்றை எள்ளி நகையாடி அங்கத (Saire) இலக்கியமாக்குவோர் சிலரும் உளர். ஆகவே இலக்கியம் தன்னளவில் ஒரு கோட்பாட்டுடனும் கொள்கையுடனும் ஒரு கருத்தியலை(Ideology) மையமாகக் கொண்டு எழுதப்பட்டாலும் இதனால் பயன் பேறுகள் ஏற்படத்தான் செய்யும். சமுதாய மாற்றம் முதலியன இவ்விலக்கியங்களின் பயன்பாடுகள் என நாம் கொள்ளலாம். இதைவிடுத்து உள்ளதை உள்ளவாறு கூறுவது, வர்ணிப்பது போன்ற இலக்கியங்களும் உள்ளன. இவற்றுக்கு இன்ப நுகர்ச்சி என்ற பயன்பேறு உண்டு என நாம் கூறலாம். இலக்கிய கர்த்தாவின் நுண்ணிய அவதானிப்பு, உவமை உவமேயங்களின் ஒற்றுமைத்தன்மை, நடை, சொற்ருெடரின் அழகு என இனங்கண்டு அவற்றை வியந்தும் பாராட்டியும் இன்பம் காண்பதும் கூட ஒரு பயன்பேறுதான். ஆகவே எவ்விலக்கியமானாலும் நல்லிலக்கியமாய் அது இருந்தால் அதற்கு கட்டாயமாக ஒரு பலன் இருந்தே ஆகும்.
தற்போதய காலகட்டத்தில் இவ்விலக்கியம் பல்வேறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். பழைய இலக்கியங்கள் செந்நெறி இலக்கியங்களாகவும், தற்போதைய இலக்கியங்கள் நவீன இலக்கியங்கள் எனவும் கூறும் ஒரு மரபு உண்டு. நாட்டுப்புற பாடல்கள் என சாதி, வர்க்கப் பாகுபாட்டில் கீழ்மட்டத்திலிருப்போரது வாய்மொழி பாடல்கள் வகுக்கப்பட்டு விட்டன. இவை காலவரையறைக்குள் அடங்குவனவாக இல்லை. பழைய நாட்டுப் பாடல்களும் உண்டு. புதியனவும் உண்டு. இதைவிட மத, சாதி, வர்க்க மேலாண்மையை தகர்க்கும் விதமாக எழும் இலக்கிய கூறுகள்,
17

மேலாண்மையை தகர்க்கும் விதமாக எழும் இலக்கிய கூறுகள், (சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, புதுக்கவிதை) மாற்று (alternative) இலக்கியங்கள் எனக் கூறப்படும். இவை பெரும்பாலும் மறுக்கப்பட்ட உரிமைகளையும், சாதி, சமய, இன, வர்க்க ரீதியில், ஒடுக்கப்பட்ட மக்களது பிரச்சினைகளை
அடிப்படையாகக் கொண்டனவாகவும் இ
ருக்கும். இவை இம்மக்களால் மட்டுமன்றி சமுதாய பிரக்ஞை சமுதாய மேம்பாடு போன்ற உணர்ச்சி கொண்டோ ரா லும் எழுதப்படுவதை நாம் அவதானிக்கலாம். இந்த வகையில் இப்பொழுது பெண்நிலைவாதிகள் பலர் இலக்கியம் படைக்க முன்வந்துள்ளார்கள். இவ்வகை இலக்கியங்களும் கூட மாற்று இலக்கியங்களாகவே கருதப்பட வேண்டும். மேலை நாட்டு பெண் நிலைவாத எழுத்தாளர் பலர் இம் முயற்சியில் ஈடுபட்டிருக்கிரு ர்கள். பெண்ணடிமையின் பரிமானங்களை விளக்கும் பொருட்டு பல நடைமுறை சமூக பேதங்களை மையமாக வைத் து சிறுகதைகளும் நாவல் களும் இயற்றப்பட்டுள்ளன.
பெரும்பாலும் இப்படைப்புகள் பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் வன்முறைகளையும், பால் வன்முறைகளையும் சாடுவனவாகவே உள்ளன, ஆணி ஆதிக்கமும், ஆண் மேலாண்மை சார்ந்த நிலைப்பாடுகளும் (Patriarchy) ஆண்களதும் பெண்களதும் பால் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்ற ஒரு மேலோட்டமான கொள்கையை பெணி நிலைவாதிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
சமூகப் பிரக்ஞையுடன் முன்வைக்கப்பட்ட ஒரு இலக்கிய வடிவில் இலக்கியத்தின் இ லக் கணத்துக்குட்பட்ட கோட்பாடுகளையும் வரையறைகளையும் அவதானித்து இயற்றப்பட்டிருந்தால், நாம் அவற்றை நல்லிலக்கியம் என்றே கூறவேண்டும். இவ்வகைப்பட்டதே மாற்றிலக்கியங்கள். பிரச்சாரத்தன்மை பூசி மெழுகப்பட்டு கருத்தியல் ஒன்று புதைக்கப்பட்டு அழகான சிருஷ்டியாக அது இருத்தல் வேண்டும். அதை பிரச்சார காரர்களிடமே விட்டுவிடலாமே. அதை ஏன் இலக்கியப்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் கூட எழுப்பப்படலாம் . இங்கு நாம் அரசியலை இலக்கியத்திலிருந்து பிரிந்து மதில்சுவர் எழுப்பி தனிமைப்படுத்த எத்தனிக்கிருேம். சமுதாயப் பிரச்சினைகளை, அதன்
S

Page 11
அவலங்களை அரசியலே கவனிக்கட்டும். இலக்கிய கர்த்தாக்கள் நல்ல காதல் காவியங்கள் படைத்த இன்பலாகிரியில் சஞ்சரித்து வெண்ணிலவின் அழகையும், அரச பவனியின் கம்பீரத்தையும் விபாரித்துக் கொண்டிருக் கட்டும் என்று கூறுவது காலத்துக்கொவ்வாத வாதம். இதில் இரண்டு விடயங்கள் தொக்கி நிற்கின்றன, ஒன்று இலக்கிய கர்த் தாக்கள் அரசியிலிருந்து விலகி ஒரு கூட்டு க்குள் வளரும் கூட்டுப்புளுக்கள் அல்லர், அவர்களுள் பலர் தங்களது இலக்கியங்களுக்கு ஊடாக தங்களது சமூகப் பிரக்ஞைகளை பரப்ப சமுதாய அவலங்களை கேள்விக்குறியாக்கி அவற்றுக்கு பரிகாரந்தேட மக்களை ஊக்குவிக்க, பேரவா கொண்ட நன்மக்களாக இருப்பதால் அப்படி அவர்கள் எழுகிறார்கள். இரண்டாவதாக இப்படியான ஒரு கருத்தியலைச்சார்ந்த கருத்தியல் வலியுறுத்தப்படும் இலக்கியப் படைப்புக்கள் பிரச்சார இலக்கியங்கள் அல்ல. வாக்குக் கேட்டு எழுதப்படும் அரசியல் கட்சிகளின் துண்டுப் பிரசுரங்களுக்கும் இவற்றிற்கும் வேறுபாடு உண்டா என்று நாம் கேள்வியை எழுப்பினால் ஆம் இல்லை என நாம் ஒரே சொல்லில் பதிலளித்து விடமுடியாது. ஏனெனில் இங்கு பிரச்சாரம், இலக்கியம், என்று ஒரு எதிரெதிர் கோட்பாட்டை நாம் எழுப்பிவிடுகிருேம். கருத்தியலில்லாத ஒரு சூன்யப் படைப்பு எங்கும் இருக்க முடியாது. நாம் பேசும் மொழியில், எடுத்தாளும் சொற்பிரயோகங்களில் கூட ஒரு கருத்தியலின் சிறு சாயலையேனும் நாம் இனங்கண்டுவிடமுடியும். ஆகவே இலக்கியம், நல்லியக்கியம், பிரச்சார இலக்கியம் எல்லாவற்றிலும் நா ம் கரு த் தரிய  ைல உள் ள ட க் கியே அ வற் றை வெளிப்படுத்துகிறோம்.
பிரச்சார இலக்கியம் என கொச்சைப்படுத்தப்பட்ட இலக்கியத்தில் கூட பிரச்சாரக் கருத்தியலின் பாற்பட்ட இலக்கியத்தன்மை மேம்பட்டிருந்தால், சீர்பெற்றிருந்தால், வலிவு பெற்றிருந்தால் அதுவும் நல்லிலக்கியமே. ஒரு அரசியற்கட்சியின் துண்டுப் பிரசுரத்திலும் கூட, ஒரு வாக்குமூலத்தில் கூட கருத்தின் வலிவு, எடுத்தாளப்பட்ட சொற்ருெடர், எழுதப்பட்ட நடை, போன்றவற்றை வைத்து அதில் இலக்கியத்தன்மை உண்டு என்று நாம் கூறலாம். இப்படியான வாக்குமூலமோ கட்சிப்பிரகடனமோ ஒரு கருத்தியலை முழுமையாகக் கொண்டு அதை மற்ருேருக்கு
Q

பிரசாரம் செய்யும் நோக்கிலேயே செய்யப்பட்டது. இரண்டாவதாக அவர்களும் அவற்றை வாசிப்போரும் வாசிக்கமறுப்போரும் உணர்ந்த பேருண்மை ஒன்று உண்டு. காத்திரமான எழுத்தால் மனமாற்றத்தையும் கருத்து மாற்றத்தையும் ஏற்படுத்தலாம் என்பதே அது. பேசி முடிந்தபின் உணர்ச்சிகளுக்கு வலுவிழந்து போகும் தன்மை இருக்கலாம். ஆனல் எழுத்து வல்லமையில் வாசிக்க வாசிக்க செயலூக்கம் பெறும் தன்மை உண்டு. ஆகவே சமூகப்பிரக்ஞையுடைய ஒரு கருத்தியலை வைத்து மாற்றிலக்கியம் படைக்க முன்வருவோரை பரிர ச்சார இலக் கரியம் படைப் போர் எனக் கூறி கொச்சைப்படுத்தக் கூடாது. இவ்வகை இலக்கியம் படைப்போர் ஊசிமுனையில் நடப்போர் என்பது வெள்ளிடைமலை,
பிரச்சாரம் பிரச்சாரத் தன்மையை இழக்க வேண்டும். அழகியலூடாகக் கையாளப்பட்ட கருத்தியலினால் வாசகரைச் சிந்திக்கச் செய்யவேண்டும். சிந்தனைத்தூண்டலுக்கு வலுவான ஒரு கரு, ஆழமான ஒரு உரு, அழகான ஒரு நடை கட்டாயமாக வேண்டும். தமிழ் இலக்கியங்கள் எழுந்த காலம் தொட்டே பெண்ணிலைவாதக் கருத்துக்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்த இலக்கியங்கள் இருந்துவந்தன. சாதி, வர்க்க சமரச மனப்பான்மை இலக்கியங்களில் தோன்றுவதற்கு முன்பே பெண்சமத்துவம் பேசும் இலக்கியங்கள் இருந்துவந்தன. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று ஆணுதிக்கம் காலப்போக்கில் இறுகிக்கொண்டு வந்தது. ஆண் ஒடுக்குமுறையும், அடக்குமுறையும் மிகக்குறைந்திருந்த காலத்தில் பெண்ணிலைவாதக் கருத்துக்கள் ஒரு மாற்று இலக்கியப்பகுதியில் அடக் கப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை. இந்தப் பெண் சமரச மனப்பான்மை இலக்கியங்கள் காலகட்டத்தில் வரலாற்றிலிருந்து விலக்கப்பட, அவற்றை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இப்பொழுது பெண்ணிலைவாதிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். பொதுவாக, இவை உலகமட்டத்தில் சமயச் சார்புடையனவாகவே இருக்கின்றன. உதாரணமாக பக்தி இலக்கியத்தையும் தாந்திரீக இலக்கியத்தையும் சொல்லலாம். இவை சாதிப்பாகுபாட்டையும் கூட எதிர்ப்பவையாகவே இருந்தன. இப்போதைய கண் னோட்ட த்தில் இவை மாற்று இலக்கியமாக வகுக்கப்படலாம். ஏற்றுக்கொள்ளப்படாத தாந்திரீகம் விலக்கப்பட அது ஓடி ஒஓஇகாண்டது. இப்:ெகழுது
2)( ` ٭

Page 12
அதை மறுபடியும் நிறுவ ஆராய்சியாளர் முனைகிறார்கள். இலக்கிய நீரோட்டத்தில் மாற்று இலக்கியப்பகுதிகளும் கூட இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனல் காலம் வளர வளர பல்வேறு ஆண் மேலாதிக்கக் கொள்கைகளும் கோட் பாடு களும் சமூக-சமயச் சட்டங் களாகவும் விழுமியங்களாகவும் நீதி (LaWS) யாகவும் மாறிக்கொண்டு வந்து இப்போது ஒரு சமுதாய மாற்றம் தேவை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆண் , பெண் சமரச சமத்துவநிலை ஒன்று வேண்டும் என வேண்டி நிற்கும் பெண்கள் இந்த ஆணுதிக்க வளர்ச்சியையும் இறுக் கத்தையும் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அலசி ஆராய முற்பட்டுவிட்டார்கள். வரலாறு, மானிடவியல், சமூகவியல் போன்ற பல்வேறு கலைத் துறைகளிலும் நுண் ணரிய ஆராய் ச் சரிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இந்த ஆணுதிக்க தரிசனங்களை சமூக மட்டத்தில் இனங்கண்டு அவற்றை மையப்படுத்தி எழுதும் இலக்கியங்களே பெண் நிலைவாத இலக்கியங்கள் என்று இன்று கணிக்கப்படுகின்றன.
ஆங்கிலேய, பிரான்சிய பெண் நிலைவாத இலக்கியங்கள் இன்று பெரு வாரியாக எழுதப்பட்டு வருகின்றன. பாலியல் வன்முறை தொடங்கி பெண் களின் பால் நிலை தொடர்பாக எழும் வ க் கர ங் கள் வ ைர கரு ப் பொரு ளாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் இங்கு ஒரு முக்கிய கேள்வி எழும்பாமல் இல்லை. இந்தக் கருத்தியல் ஒன்றை மையப்படுத்தி அதைப் பிரச்சினையாக்கி ஆணித்தரமான ஒரு நடைமுறையில் எழுதும் இவ்விலக்கியத்துக்கும் ஒரு பிரச்சார (Propaganda) துண்டுப் பிரசுரத்துக்கும் வேறுபாடு உண்டா? இப்படி எழுதுவதும் ஒரு பிரச்சாரம் தானே? இது ஒரு தனிப்பிரச்சார மா? அன்றி பிரச்சார இலக்கியம் என்று ஒரு கூறும் இதில் உண்டா? இலக்கியத் தன்மை ஏற்றப்பட்ட ஒரு வெறும் பிரச்சாரம் என்று நாம் இதை கொச்சைப்படுத்தலாமா? இவையெல்லாவற்றையும் கேள்வியாக எழுப்பும் நான் உங்கள் சிந்தனையினை மட்டும் தூண்டவில்லை. எனது சிந்தனை உணர்வினையும் சிறிது தட்டிப்பார்க்கிறேன். இந்தப் பிரச்சாரத்தன்மைக்கும் ஒரு தூய இலக்கியத்துக்கும் முடிச்சுப் போட முடியாதா? முடியும் என்பதே விடை என்று நினைக்கிறேன் அதைக்கூறும் அதேசமயத்தில் இலக்கியப் பண்புகள் யாது? அவற்றை நாம் எமது கருத்தியல்களின்
21

மீதுஏற்றி அழகிய இலக்கியங்களைப் படைக்கமுடியும் ஒன்று கூறும் அதேசமயத்தில் நல்லிக்கியம் என்ருல் என்ன, ரசனையைத்துரண்டும் இலக்கியத்தின் பண்புகள் என்ன என்பதையும் கூற முற்படுகிறேன். பெண் நிலைவாத இலக்கியத்தைப் பிரச்சாரம் என்று கொச்சைப்படுத்தியதைத் தவிர்த்து அவையும் பயன்படு நல்லிலக்கியங்களே என்று கூறும்பொழுது அவற்றிற்குரிய பண்புகள் யாவை என்று கூறும் எனது பணியை இறுதியில், இச்சிற்றுரையில் இரண்டாவது கட்டமாக வைத்துக்கொண்ட நான், மேலே கூறியவற்றுடன் தொடர்புகொண்ட இன்னும் இரண்டு விடயங்களை இப்பொழுது கூறவிரும்புகிறேன்.
முதலாவதாக இலக்கியம் சமூகதரிசனம் என்று நான் முன்கூறியதை விரிவுபடுத்தி அது ஒரு தனிப்பட்ட இலட்சிய நிகழ்வு அல்ல அது ஒரு சமூக இயக்கங்களில் புறநிலையான விளைவே என நாம் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். இக்கூற்றுக்கும் பிரச்சாரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இக்கூற்று ஒரு வகை மாக்சிய சிந்தனையாளராலேயே முதன்முதலில் வைக்கப்பட்டது. (Frankfurt School) இதனின்று பெறப்படும் இன்னொரு மாக்ஸிய கருத்து, இலக்கியம் சமூகமாற்றத்துக்கான ஒரு ஆக்கமாகவே இருத்தல் வேண்டும் என்பது இங்கு அதன் பெறுமானம் சமூகமாற்றத்துக்கான கருவியாக மாற்றப்பட்டு ஒரு யந்திரத்தன்மையைப் பெறுகிறது (Tools). இங்குதான் பிரச்சாரமும் தொடர்புபடுத்தப்படுகிறது. இங்கு இலக்கியத்தின் கலையம்சம் நிராகரிக்கப்பட்டு அது வேண்டாத ஒரு வீண் அலைப்பு - அதன் மாய சக்தியை அகற்றிவிட்டால் அது ஒரு G3Lu Tans? GJIT 35 GLD GunT ana? :D -- GOST ft G36 u (False ConsciousneSS)
சமுதாய மாற்றமே அதன் பெறுபேருகும் என வாதிடும் மாக்ஸிய வாதிகளால் தமிழ் இலக்கியத்துக்கு பாதகமான ஒரு விளைவு ஏற்பட்டது. இதற்கு நேர்மாருக மாக்ஸியத்தை மறுக்கும் வேறு சிலர் இலக்கியம் ரசிப்பதற்கே அங்கு சமுதாயப் பண்பு, சமுதாயப் பெறுமானம் என்றெல்லாம் பேசுவது அபத்தம் என்று கூறிடுவர். இந்த இரண்டிற்கும் மாறுபட்ட ஒரு நிலையே என்னுடையது என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். மாக்ஸிய சித்தாந்தத்தில் ஈடுபாடுடைய நான் அதன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களில்
റ്റ

Page 13
எனது இளமைப் பருவத்திலிருந்தே பழக்கப்படுத்த பட்டிருந்தேன். அதேசமயம் எனக்கு இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு. அது தமிழ் இலக்கியத்தில் மாத்திரமல்ல. கலை, கலாச்சாரம், இலக்கியம் போன்ற அழகுணர்ச்சி சார்ந்த துறைகள், போலி உணர்வுகளை (FalSe ConsciousnCSS) அடிப்படையாகக் கொண்டவை என்றும், இவை எல்லாம் ஒரு அலங்கார மயக்கம் என்றும் வாதாடும் மாக்ஸிசவாதிகள் சிலர் அவற்றை முக்கிய சமூகசம்பவங்களாக ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவர். அவை ஒரு சமூகத்தின் பொருளாதார தளத்தின் வெளிப்பாடுகள் எனக்கொண்டு அதன் ரசனை உணர்வுகளையும் இலக்கியத் தன்மையையும் கணக்கிலெடுக்கார், இந்நிலையிலிருந்து மாறுபட்டதே எனது நிலை. மாக்ஸிச வாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நான் எற்றுக் கொண்டாலும் கூட அழகியல் பண்பை ரசித்து மகிழவும், அதனால் பெறும் இன்பத்தையும் இழக்க நான் விரும்ப வில்லை . அவை போ லி உணர்வுகளோ மயக்குமொழிகளோ அல்ல என்பதே எனது வாதம்.
கலையின் சமூகதன்மையுடன் அழகியலையும் இணைத்து நாம் காணும் ஒரு காட்சியே பெண் நிலை வாத இலக்கியமாக பரிணமிக்க வேண்டும் என்பதே எனது வாதம் , பெண் நிலைவாதக் கருத்தியலின் தோற்றம், அவற்றின் காரணிகள், அவற்றின் ஊடாகப் பிரதிபலிக்கும் சாதி - வர்க்கத்தன்மை, அதனால் ஏற்படவேண்டிய சமூக மாற்றம், படைப்பாளியின் சமூகப் பொறுப்பு போன்றவற்றை நிரா காரிக் கா மல் ஏற் று, க் கொண்டு இவற்றினுTடாக இரண்டறக் கலந்து நிற்கும் இலக்கியத்தன்மை ஆக்கியல் (Creativity) அழகியல் போன்றவற்றையும் நாம் ஏற்றுக்கொண்டு ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் , கருப்பொருளின் தாற்பரியத்தை இழக்காமல் அது எதுவாக இருந்தாலும் அதை எடுத்தாளும் விதத்திலும் அதன் தேவையின் நியாயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இங்கு கலையின் அம்சம் ஏன் தேவைப்படுகிறது என்று ஒரு கேள்வி நியாயமானாலும் கலைப்பணியில் திளைத்த ஒரு கருத்தியலை ஏன் நாம் நிராகரிக்கவேண்டும் என்பது எனது கேள்வி, கலையுடன் ஒன்றிய வாழ்க்கையை ஏன் நாம் இழக்கவேண்டும்? கலைப்பண்பு ஒரு ஆத்மாவின் வெளிப்பாடு. கலையுணர்ச்சி ஒரு உன்னத உயிர்த டிப்பு.
23

பெண் நிலைவாத கலை இலக்கியத்துக்கு தேவையான தனிப் பண்புகள் யாவை? மொழிநயம் கட்டாயமாகத் தேவைப்பட்டாலும் ஐனரஞ்சகமாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். தமிழலக்கிய பரம்பரையில் பெண்னை பாதாதி கேசமாக வர்ணித்து உவமை உருவகங்களின் முலம் அவளது உடம்பை ரசிக்கும் ஒரு பொருளாக ஆக்கிய மரபு ஒன்று உண்டு. அவளது பாலியல் வலியுறுத்தப்படுவது பென் ரிைன் எல்லாமே அவ்ளது உடற்பாங்கு தான் என்ற ஒரு இலக்கிய மரபைப் தோற்றுவித்துவிட்டது. அவளது மின்னலிடையும், காந்தள் விரல்களும், உருண்டு திரண்ட அங்கங்களுமே பெண்ணாக மாற்றப்பட இவற்றிற்கு பின்னால் இருக்கும் அவளது உணர்ச்சிகளும் அறிவூட்டங்களும் மழுங்கப்பட்டு, பெண் என்றால் அவளது வெளிப்புற அங்கங்களே என்ற கருத்து நிலையை அதாவது ஆண் பார்வையில் அவளை அவளின் உடல் அவயங்களில் அடக்கப்படும் ஒரு நிலை உருவாகிவிட்டது. உள்ளத்தை கிளர்ச்சி செய்ய பெண் னின் உறுப்புகள் மிக இலகுவான ஏதனமாக அமைத்து விடுகின்ற பண்பு தவிர்க்கப்படவேண்டும். பெண்ணின் உடலமைப்பில் அழகு இல்லையா என்பது வேறு கேள்வி. வாசகர்களை உயர்பீடத்தில் வைத்து நாம் இலக்கியம் சமைத்தல் வேண்டும். அந்த அனுமானம் எங்களுக்கு வேண்டும். பிரச்சார மொழி நடை தவிர்க்கப்பட வேண்டும். இயல்பான நடை ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும் வாழ்க்கையின் அவலங்களை வக்கிரங்களை கூறவேண்டாம் என்பது என் வாதம் அல்ல. -916) lib Gop gift L, 335i if 5 gig ai). (SuggestiveneSS) eupauld வெளிக்கொனை ர லாம். நயமும் லலிதமும் விண்டு விர சமாகக் கூறுவ தரில் இல்  ைல. ஒரே வார் த்  ைத களையோ சொற்ருேடர்களையோ திரும்பத்திரும்ப உபயோகிப்பது தவிர்க்கப்படவேண்டும். மிகைப்படுத்தி உணர்ச்சிகளை வார்த்தைகளில் கொட்டி வெளிப்படுத்துவதில் பிரச்சார உண்மை வெளிப்பட்டுவிடும். கலையம்சம் ஒளித்துவிடும். அழகியல் செயல்பாடு முதன்மைவகிக்க வேண்டும். இதே சமயம் ஒரு இலக்கியத்தில் தொழில்நுட்பமே அழகியலாக உருவெடுக்கவேண்டும். கரு முக்கியம், அதன் பயன் பேறு மானிடரைச் சிந்திக்க வைத்தல், அழகுணர்ச்சியை ரசித்து விட்டுப்போவது ஒரு தனிமனித இன்ப உணர்ச்சி என்பதை மறுக்காமல் ஒரு நல்ல பாரிய சிறப்பான கருவை எடுத்துக்கொண்டால் அதை விண்டு விடுவதால் சிந்தனையும்,
2.4

Page 14
சிந்தனை மாற்றமும் ஏற்படலாம். எலும்புக்கூட்டுக்கு சதை ஊட்டி விட்டால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அழகுருவத்தை பார்ப்போர் அதனுள்ளே இருக்கும். எலும்புக்கூட்டையும் உணரவேண்டும். இதற்குப் பின்னால் எழுத்தாளர்களது ஆத்மாவும் உண்டு. இதுதான் உள்ளெழுச்சி. இது வெளிவரும் போது கரு தொழில்நுட்பம் போன்றவற்றின் சங்கமம் வெளிவரும். இப்படி பலவிதமான உத்திகள் உள்ளன. சித்தரிப்பு (Narative) தொகுப்புமுறை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
மாற்று இலக்கியத்தின் தேவையும் அதன் பண்பும்
மாற்று இலக்கியம் ஏன் தேவைப்படுகிறது என்று ஒரு கேள்வியை நாம் எழுப்பினால் இங்கு நாம் மாக்ஸியக் கோட்பாட்டின் ஒரு அம்சத்தை அதன் விஞவாக கொள்ளலாம். பொதுவான வாழ்க்கை ஒட்டத்தில் ஓரங்கட்டப்பட்ட பல குழுக்கள் உண்டு. அவை வர்க்க பேதங்களையோ அல்லது சாதி பேதங்களையோ அன்றி பால்ரீதியான வேறுபாட்டிலோ (ஆண், பெண் என்ற ரீதியில் ) அமைந்தனவாக இருக்கலாம். மேலாதிக்க நிலையில் (Hegemonic) உள்ள குழுக்கள் தங்களது உயர்நிலையை உறுதிப்படுத்தவும் நிலைநாட்டவும் பல முயற்சிகளை எடுப்பர். தொடர்பூடகங்களும் இலக்கியங்களும் பொதுவாக மேலாதிக்க நிலையை ஸ்திரப்படுத்தும் சாதனங்களாக அமைவதை நாம் அன்ருட வாழ்க்கையில் காணலாம். ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களது உணர்ச்சிகளுக்கும் ஏக்கங்களுக்கும் வடிகால்களாக அமையும் இவ்விலக்கியங்களும் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டு விடுகின்றன. வரலாறு எழுதுவோர் பெரும்பாலும் அவற்றைச விலக்கிவிடுவர். தற்போது அந்நிலைமை மாறிவிட்டது. தொடர்பூடக சாதனங்கள் நவீனமயமாக்கப்பட யாவரும் அதனை எளிதில் பெறலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. “செந்நெறி" இலக்கியத்துடன் "நாட்டார்” இலக்கியமும் படிக்கலாம், படிக்கப்படவேண்டும் என்ற நிலைமை மாறியதும் Subaltern Studies என்ற ஒரு பகுதியும் ( சமுதாயத்தில் கீழ் மட்டத்தில் உள்ளோர் பற்றிய ஆராய்ச்சி) தோன்றிவிட்டது. இவற்றைப் பெரும்பாலும் அவ்வக்குழுக்களைச் சார்ந்தவர்களே
25

உணர்ச்சிபூர்வமாக எழுதக்கூடியதாக இருக்கும். அவர்களது அனுபவங்களை அவர்களே அறிவர்.
கர்நாடக இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்றும் வசனகார இலக்கியம் (வசன இலக்கியமல்ல இது கீழ்சாதி என கூறப்படும் மக்களால் எழுதப்பட்டது) என்றும் பண்டாய இலக்கியம் என்றும் அழைக்கப்படும் மாற்று இலக்கியவகைகள் தோன்றின. எப்படித்தான் கற்பனையில் அவர்களது உண ர் சி சரி கள்ை மற்ற வர்கள் எழுதனாலும் அனுபவரீதியாகபட்ட துன்பங்கள்ை அவர்களே எழுதுவது போல் இருக்காது. ஆனல் மற்றவர்களும் தங்களது திறமையினாலும் யுக்தியினாலும் அவர்களைப் போலவே எழுதலாம் என்பதும் உண்மை. இங்கு எழுத்து வன்மையும் அதன் பிரத்தியேக சக்தியையும் நாம் புறக்கணிக்க முடியாது. இதுபோலவே பெண்மையின் அவலங்களையும் ஏக்கங்களையும் கொடுமைகளையும் பெண் எழுத்தாளர்களைப் போல ஆண்களால் எழுத முடியாது என்று நான் கூறவில்லை. ஆனல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆத்திரமும் அவலமும் வன்செயலின் கொடுமையையும் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தியால்தான் வெளிக்கொணர முடியும். அந்த உந்தல் சக்தியுடன் எழுத்து வன்மையும் சேர வேண்டும். ஆகவே நான் இக்கட்டுரையின் முலம் விளக்குவது என்னவென்றால் இலக்கியத் தரமுள்ள மாற்று இலக்கியம் வெறும் பிரச்சார இலக்கியமல்ல என்பது.
தற்போதய பெண் விழிப்புணர்ச்சிக் காலத்தில் பல பெண்கள் தரமுள்ள உணர்ச்சிகளை உயிர்துடிப்புடனும் உரிமைகளை ஆவேசத்துடனும் எழுதத் தொடங்கிவிட்டார்கள். தமிழலக்கியத்தில் இப் புதிய விழிப்புணர்ச்சி மிக அண்மையிலேயே தோன்றியது. அம்பை, (வீட்டின் மூலையில் ஒரு சமையல்அறை, சிறகுகளும் முறியும்) ராஜம் கிருஷ்ணன் (வீடு) போன்றோர் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அறுபதுகளில் பவானி ஆழ்வாப் பரிள்ளை எழுதிய சிறுகதைகளிலும் இத்தகைய விழிப்புணர்ச்சி மேலோங்கி நிற்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. அண்மையில் வெளியான சுமைகள் என்ற சிறுகதைத்தொகுதி முஸ்லிம் பெண்களினால் எழுதப்பட்டு முஸ்லிம் மாதர் ஆராய்ச் சரி, செயல் முன்னணியினால் பிரசுரிக்கப்பட்டது) இலக்கியத் தரத்தில்
γές

Page 15
வைத்து மதிக்கமுடியாவிட்டாலும் ஒரு புதுமுயற்சி என்று பாராட்டப்படலாம்.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் பலர் வெளிநாடுகளில் பல சிறு சஞ்சிகைகளைத் தோற்று வித்துள்ளனர். அகதி வாழ்க்கை வாழும் இவர்களுக்குப் பல்முனைப்பிரச்சினைகள் உண்டு. இவர்களது படைப்புக்கள் அவற்றிற்கு வடிகாலாக உள்ளன. கோசல்யா கவிதைகள் என்று ஜெர்மனியில் இருந்து வெளியான கவிதைத் தொகுதியும் மறையாத மறுபாதி என்று பிரான்சிலிருந்து வெளியான கவிதைத்தொகுதியும் பெண்களுக்கு ஏற்படும் அநியாயங்களை வரிசைப்படுத்தியுள்ளன. இவ்வாக்கங்கள் அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவை. மறையாத மறுபாதியின் முன்னுரையில் அதில் வரும் கவிதைகளின் கருக்கள் இனங்காணப்பட்டது ஒரு முக்கிய அம்சம். இக்கவிதைகள் அடிமைத்தனத்தை இனங்காணல், ஆணுதிக்க எதிர்ப்பு, சீதனம், அடிமைத்துவ கலாச்சார எதிர்ப்பு, புதிய சூழலில் பழைமையின் பலவந்தம் போன்றவற்றின் வெளிப்பாடுகளாக உள்ளன என்று கூறப்பட்டுள்ளது மீண்டும் கவனிக்கத்தக்கது.
டோனி மொரிசன்
இளம்வயதில் கறுப்பர்களுக்கெதிரான வன்முறைகளின் கொடுமைகளை அனுபவித்த டோனி மொரிசன் பெரும்பாலும் அக்கொடுமைகளைய்ே கருப்பொருளாகக் கொண்டு இலக்சியம் படைத்தவர். ஒரு சிறுதொகை, இத்தொகை பாக்கியாக இருந்ததாகக் காரணம் காட்டி தாங்கள் வசித்த வீட்டைக் கொழுத்தி எரிக்க முற்பட்ட வெள்ளையரின் கொடுர சிந்தையை அனுபவித்த அவரின் மனதில் இந்தப் பருவம் ஆழமாகப் பதிந்துவிட்டது அமெரிக்க நீக்ரோ எழுத்தாளராகிய இவருக்கு இலக்கியத்துக்கான 1993ஆண்டு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இவ்வாறான பரிசை பெறும் எட்டாவது பெண் என்ற ஸ்தானத்தையும் பதிஞெராவது அமெரிக்கர் என்ற ஸ்தானத்தையும் இவர் பெறுகின்றார். எம்மவர்க்கு இது மகிழ்ச்சியே தன் 29வயதில் எழுத ஆரம்பித்தவர். ஆறு நாவல்களை எழுதியுள்ள இவரின் நாவல்களில் மூன்று எமது ஆங்கிலேயே நிவேதினியில் நெலுகா சில்வாவின் ஆராய்ச்சிக் குட்படுத்தப்பட்டது ஒரு தற்செயலான செயலோ தீர்க்கதரிசனமோ தெரியவில்லை. வரலாற்று ரீதியாக அமெரிக்க நீக்ரோக்களுக்கு இழைக்கப்பட்ட இனக்கொடுமைகளை ஆதாரசுருதியுடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் விவரிக்கும் இவரின் நடையழகும் கூட சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கின்றது. நீலக்கண்கள், சூவா, கலாமனின் பாட்டு, பில்வட் போன்ற அவரது நாவல்களில் பிலவட்டிற்கு புலிட்சர் பரிசு கொடுக்கப்பட்டதும் நினைவு கூரப்பட வேண்டும். w
27

இலங்கையில் கல்வியில் பால் சமத்துவநிலை
- சுல்பிகா இஸ்மாயில் -
சர்வதேச மனித உரிமைப் பிரகடனமானது கல்வி உரிமை பற்றி பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றது.
தலைப்பு வாசகம்: உறுப்புரை: 2
பின்வரும் மனித உரிமைப் பிரகடனத்தால் வழங்கப்படும் உரிமைகளும் சலுகைகளும் கடப்பாடுகளும் சகலருக்கும், பால், இனம், சமயம், பிராந்தியம் ஆகிய எல்லைகளுக்கு அப்பால் உரியதாகும்.
எல்லோர்க்கும் கல்வி
உறுப்புரை: 26
1. கல்வி கற்பதற்கான உரிமை எல்லோர்க்கும் உண்டு, அடிப்படை அல்லது ஆரம்ப நிலையிலாவது இலவசமாக வேண்டும். அடிப்படைக் கல்வி கட்டாயமாகவும் இருக்கவேண்டும். தொழில்நுட்ப, தொழிற் கல்வி எல்லோரும் பெறக்கூடியதாக இருக்கவேண்டும். திறமை அடிப்படையில், உயர்கல்வி வாய்ப்புக்கள் எல்லோருக்கும், சமமாக அமைதல் வேண்டும்.
உறுப்புரை 26 - 3
பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வி வகையை தெரிவு செய்வதற்கான முன்னுரிமையை கொண்டுள்ளனர்.
28

Page 16
கல்வி அமைப்பு பின்வரும் அம்சங்களைக் கொண்டது.
1. 32.67 GiG (Input) 2. F, Giv 6îáj Gg ugibu TGJ, GİT (Educational process) 3. வெளியீடு (Output)
உள்ளீடுகள்
உள்ளீடு என்பது கல்வி பெறுவதற்காகச் செய்யப்படும் முதலீடு என நாம் கொள்ளலாம். உயிருள்ள உள்ளீடு, உயிரற்ற உள்ளீடு, சேவையும் சேவையைப் பெறும் தகவும் உள்ளீடுகளாகும். இவற்றில் மாணவர்கள், ஆசிரியர்கள் உயிருள்ள உள்ளீடுகளாகும். மாணவர்களைக் கருதும்போது அவர்களின் உள்நிலைத்திறன், ஆற்றல், தேவையைப் பெறுவதற்கான ஊக்கம் ஆகியனவும், ஆசிரியர்களின் கல்வித்தகைமையும் ஆளுமைப்பண்புகளும் பிரதானமாய் அமைகின்றன.
கல்விச் செயற்பாடுகள்
கல்விச் செயற்பாடு என்பது பாட ஏற்பாடு, வாய்ப்புக்கள், பங்குபற்றுதல், தெரிவு, தெரிவிற்கான வாய்ப்பு, பயன்படுத்துதல், ஆகியவற்றை உள்ளடக்கும். பாட ஏற்பாடு பாட உள்ளடக்கம், கற்பித்தல்முறை, துணைச் செயற்பாடுகள், கற்றலுக்கான வாய்ப்புக்கள் வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.
வெளியீடுகள்
கல்விச் செயற்பாட்டுக்குட்படும் உள்ளீடுகள் உயிருள்ள, உயிரற்ற அம்சங்களானாலும், வெளியீடு என்பது உயிருள்ள அம்சங்களில் ஏற்படும் ஏற்புடைய மாற்றங்களையே கருத்திற் கொள்ளும். இவ்வகை வெளியீடு குறுகியகால அடைவு, பயிற்சிகள், அனுபவங்கள் முலம் காண்பிக்கப்படுகின்றன. வெளியிடுகளின் நீண்டகால சாதகமான விளைவுகளே (out Comes) கல்வி அமைப்பின் இறுதி இலக்காகும். இவை பொதுவாக தொழில் வாய்ப்புக்கள் மூலம் கணிக்கப்படுகின்றன.
29

கல்வி அமைப்பிலுள்ள ஒவ்வொரு நிலையிலும், பால் சமத்துவ நிலை எவ்வாறு காண்பிக்கப்டுகின்றது; குறிப்பாக இலங்கையின் கல்வி அமைப்பில் இந்நிலை எவ்வாறு வெளிப் படுத்தப்படுகின்றது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கற்றலுக்கான உள்நிலைத்திறன்
குழந்தையின் உள்நிலைத் திறனிலிருந்தே கல்வியினால் உருவாக்கப்படும் நடத்தை மாற்றம் ஆரம்பிக்கப்படுகின்றது. கற்றலுக்கான உள்நிலைத்திறன் (Potentiality) ஆற்றல் (abity) ஆகியன ஆண், பெண் வேறுபாட்டுக்கு ஏற்ப மாறுபடுவதில்லை என்பது உயிரியல் விஞ்ஞான அடிப்படையில் அமைந்த உண்மையாகும். எனினும், சமூக கலாச்சார மரபு வழிவந்த தாக்கங்கள், கருத்தோட்டங்கள் கல்விச் செயற்பாடுகளிலும் வேறுபட்ட நிலைமைகளை உருவாக்குகின்றன. இதனாலேயே ஆண், பெண் ஆற்றல்கள் (உள்ளீடு) அடைவு (வெளியீடு) பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களும் உருவாகின்றன. கல்வி அமைப்பின் முழுச் செயற்பாடும் சமூகத்தில் நிலவும் மே லா தரிக்க கருத்துக் களின் அடிப்படையிலேயே
அமைக்கப்படுகின்றன.
கல்வரிச் செயற்பாட்டில் , இக் கருத்துக் களரின் அடிப்படையில் அமைந்த பால் முதன்மை பற்றிய கருத்தோட்டம், பலநிலைகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. இது சிலவேளைகளில் மறைமுகமாகவும், சிலவேளைகளில் நேரடியாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது. இவ்வாறான கருத்தோட்டம் நாட்டின் அபிவிருத்தி நிலையுடன் நேர் தொடர்புடையது என்று கொள்ளமுடியாது. ஏனெனில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், உள்நிலைத்திறனில் பால் முதன்மை நிலை பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலைத்தேய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் "கல்வி கற்பதிலுள்ள உள்நிலைத்திறன் பால் நிலைக்கேற்ப வேறுபடுகின்றது என்ற அபிப்பிராயம் இன்றும் இருந்து வருகின்றது.
கல்விச் செயற்பாடுகளை மதிப்பீடு செய்ய அடைவு
முக்கியமான காரணியாகக் கொள்ளப்படுகின்றது.
இங்கிலாந்தில் அறியப்பட்ட கணிப்புக்கள் பெண்கள்
3()

Page 17
மொழியறிவுடன் தொடர்புடைய பாடங்களிலும், ஆண்கள் கணித ஆற்றலுடன் தொடர்புடைய பாடங்களிலும் முதன்மை நிலையில் இருப்பதாக காட்டுகின்றன. இதன் காரணமாகவே இதனுடன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் இம்முடிவை சர்ச்சைக்குட்படுத்தியுள்ளன. ஐக்கிய அமெரிக்க கல்வியியலாளர்களான தோண்டைக் (1973) உசன் (1969)சேர்மன் (1977) ஆகியோரது ஆய்வு முடிவுகளின்படி
1. இப்பாடங்களில் தேர்ச்சி பெறுவதில் பால் வேறுபாடு காணப்பட எதுவிதமான உயிரியல், உடலியல் அடிப்படையும் இல்லை.
2. இப்பாடங்களின் கல்வித் தேர்ச்சியில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைவிட ஆண்களுக்கும் ஆண்களுக்குமிடையிலும் பெண்களுக்கும் பெண்களுக்குமிடையிலும் காணப்படும் வேறுபாடு அதிகமானது.
3. குறித்த பாலில் காணப்படும் வேறுபாடு போன்றே
ஆண், பெண் அடைவு வேறுபாடும் இயல்பான்தே.
4. கல்வித் தேர்ச்சியில் காணப்படும் பால் வேறுபாட்டுக்கு ஒரு பாடத்தைப் பயில வழங்கப்படும் கல்வி வாய்ப்புக்களே காரணம்.
என இவ்வாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
Lu ITL 6J bust (6 (Curriculum)
இந்தியா, அவுஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் பாட ஏற்பாடுகளில் பால் சமநிலை காணப்படுகிறது. பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் பாடநூல்களில் பெண்களுக்கு எவ்வித இடமும் வழங்கப்படவில்லை. ஆய்வாளர்களின் கருத்துப்படி ஆசிய ஆபிரிக்க நாடுகளில் கல்வியியல் நூல் ஒன்றிலாவது (Literature) பெண்கள் பற்றிக் குறிப்பேதுமில்லை. ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்ப, இடைநிலை, பின் இடைநிலை, ஆசிரியர் பயிற்சி தொடர்பான பாடநூல்களை ஆராய்ந்தவர்கள் பெண்களின் வீட்டுப்பணி பற்றிய குறிப்பைத் தவிர அவர்கள்
31

பற்றிய வேறெந்த விடயமும் பாட ஏற்பாட்டில் இடம் பெறவில்லை எனக் கண்டறிந்துள்ளனர். பெண்கள் பற்றிய குறிப்புக்களில், அவர்கள் அறிவீனர்கள், சொன்னபடி கேட்க வேண் டியவர்கள் , சுறுசுறுப் பரில் லா தவர் கள், மந்தமானவர்கள் என்றே குறிப் பரிடப் பட்டுள்ள ன. குழந்தைகளுக்கான துணைநூல்கள் ஆண்கள் உழைப்பவர்கள். ஆண்பிள்ளைகள் பாய்ந்து ஏறி விளையாடுவர். பெண்பிள்ளைகள் அழுவர் என்ற குறிப்பிட்டன. (ஆதாரம் - கல்விக் கலைக்களஞ்சியம்)
இலங்கைப் பாடசாலைப் பாடநூல்களை ஆராய்ந்தவர்கள் பெண்களுக்குப் பாதகமான சில சமூக மனப்பாங்குகள் அவற்றில் இயல்பாகவே வெளிப்பட்டுள்ளதாக எடுத்துக் காட்டுகின்றனர். 1970களின் பிற்பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஆங்கில மொழிப் பாடநூல்களில் ஆண்பாத்திரங்களுக்கு கூடிய கெளரவமும், பெறுமதியும் வழங்கப்பட்டுள்ளன. பெண்களும் சிறுமிகளும் சமூக வாழ்வில் துணைப் பாத்திரங்களாக விளங்குவதாகவும் அப்பாட நூல்கள் சித்தரிக்கின்றன.
ஆண்கள் வெளியே சென்று உழைப்பவர்கள், மாலை வேளைகளில் பத்திரிகை வாசிப்பவர்கள்; பெண்கள் வீட்டுப் பணிகளைச் செய்பவர்கள், சிறுவர்கள் பாடம் படிப்பவர்கள், சிறுமிகள் வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், பொம்மைகளுடன் விளையாடுவர் என்ற முறையில் பட விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
ஆனால் நாட்டின் சமூக நிலை வேறுபட்டதாக உள்ளது. ஆண் களைவிட அதிகமான பெண்கள் இடைநிலைப் பாடசாலைகளில் சேர்ந்து பயிலுகின்றனர். பெரும்பாலான பெண்கள் இன்றைய வாழ்க்கைச் செலவுகள் காரணமாக குடும்பப் பெண்ணாக மட்டும் இருக்கமுடியாத நிலையுள்ளது. இதனால் உழைக்கும் வர்க்கத்தில் கணிசமான பெண்கள் இன்று இணைந்துள்ளனர்.
உண்மையில் இலங்கைச் சமூக அமைப்பு நியமங்களில் கட்டுண்டுள்ள பாட ஏற்பாட்டு அமைப்பாளர்கள் தம்மையறியாமலே இயல்பாகவே இவ்வாறான சமத்துவமற்ற
32

Page 18
பாடவிடயங்களை இணைத்துள்ளனர் என்பது கவனிக்கத் தக்கதாகும். ஆனால் இவ்வாறான சமூக சமத்துமற்ற நியமங்களை அகற்றுவதற்கான அவசியத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை; அத்துடன் அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் அம்சங்களை பாடவிதானத்தில் இணைக்க வேண்டும் என்ற நிலைபாட்டையும் அவர்கள் உணர்ந்திருக்க வில்லை என்பதையும் பாடவிதான ஆய்வாளர்களால் காண முடியும்.
இன்று இந்தியா,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடும்பத்திலும் சமூகத்திலும் இரு பாலாரும் சமஅந்தஸ்து உடையவர்கள் என்ற வகையில் பாட ஏற்பாடுகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் பாட ஏற்பாட்டினுடாகப் பெண்களின் அந்தஸ்தைப் பேணுவதை வலியுறுத்தும் ஆசிரியர் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எதிர்கால சமூகம் பெண்கள் பற்றி எத்தகைய நிலைப்பாடுகளைக்கொண்டிருக்க வேண்டும் என்பதை அவுஸ்திரேலியப் பாடசாலை அரசாங்க ஆணைக்குழுக்கள் கருத்திற் கொண்டு செயலாற்றுகின்றன. யுனெஸ்கோவின் பாடநூல் பற்றிய ஆய்வுகளின்படி (1983) சீன நாட்டின் பாடநூல்கள் பெண்களும் ஆண்களும் சமமான முறையில் பயிலுவதையும் வேலைசெய்வதையும் உறுதி செய்வனவாகவும், பெண்கள் கூடிய தன்னம்பிக்கையுடன் செ யற் படுவதை மேம்படுத் தும் அம்சங் களைக் கொண்டனவாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்புப் பாட ஏற்பாடுகளில் மரபுரீதியான குடும்ப நிலைகளில் காணப்பட்ட பங்கு (Role) நிலைகளின் தொடர்ச்சியை அவதானிக்கலாம். இலங்கையில் இப்பாட ஏற்பாடுகளில் தேர்வு செய்வதில் பால் வேறுபாட்டு நிலைகள் காணப்படுகின்றன. மனைப் பொருளியல், தையல், கைப்பணி அலங்காரம் போன்றவற்றினை அதிகம் பெண்பிள்ளைகள் தெரிவு செய்பவர்களாகவும், கேந்திர கணிதமும், வரைதலும், வர்த்தகம், விவசாயம் போன்ற பாடங்களை ஆண்பிள்ளைகள் தெரிவு செய்பவர்களாகவு மிருக்கிருர்கள். பாடஏற்பாட்டுக்கு அப்பால் பெண்பிள்ளைகள் உடற்கல்வி பெறுவதும் ஊக்குவிக்கப்படுவதில்லை. அதிக
33

பணம் செலவழிக்கப்படும் சாரணர் குழு (Camping) போன்ற புறச் செயற்பாடுகள் ஆண் பிள்ளைகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.
வகுப்பறைப் பராமரித்தற் பணிகள், விளையாட்டுத்திடல் செயற்பாடுகளிலும் இவ்வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான வேறுபாடு கள் பாட ஏற் பா ட் டி ல வெளிப் ப ைடய 1ாக க் கூறப் பட வரில்  ைல எனனும் கல்வியியலாளர்கள் மரபுரீதியாகப் பால் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பணிகளை பாடசாலைப்பாட ஏற்பாடுகள், பேணி வருகின்றன எனக் கூறுவர். இவ்வாறான பாடஏற்பாடு மறைமுகப்பட ஏற்பாடு என அழைக்கப்படுகின்றது. (Hidden Curriculam)
இங்கிலாந்தில் பாட ஏற்பாட்டில் செய்யப்பட்ட ஆய்வுகளும், இவ்வகையான முடிவுகளையே தருகின்றன. அதாவது பெண்கள் அறிவாற்றலிலும் உயர் தொழிலிலும் பிரகாசிக்க வேண்டியதில்லை; ஆனால், இனவிருத்தி, வீட்டுப்பணிகள் தொடர்பாக அறிந்திருத்தல் அவசியம் என்பன போன்ற சிந்தனைப்போக்கே பாட ஏற்பாட்டில் மிகைப்படக் காணப்படுகின்றது. (ஆதாரம் : கல்விக் கலைகளஞ்சியம்)
கல்வி வாய்ப்புக்களும் கல்வி கற்றலும். (Access & Participation)
பால்நிலமையைப் பொறுத்தவரை உலகளாவிய அளவில் கல்வி வாய்ப்புக்கள் எல்லா நாடுகளிலும், சமவாய்ப்புக்களாக உள்ளன. ஆண், பெண் என்ற வேறுபாடு கொள்கையளவில், இல்லையாயினும் நடைமுறையில் சில தடைகள் உள்ளன. இலங்கைத் தேசிய அரசுக் கொள்கைப்படி ஆண், பெண் கல்வி பெறுதலில் எந்தவிதமான பால் சமத்துவமின்மையும் காணப்படமுடியாத போதிலும், சமூக பொருளாதார நடைமுறைகள் இதனைப் பேணுவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கையில் இலவசக்கல்வி அறிமுகத்தின் முன் கல்விக்கான செலவை பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. இதனால் ஆண்பிள்ளைகளின் கல்விக்கே பெற்றோர் முதன்மை (Priority ) கொடுத்தனர். இதன் காரணமாகவே கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை
34

Page 19
குறைந்திருந்தது. இன்றுகூட இலவசக்கல்வி இருந்தபோதும் உயர் கல்வி பெறுவதற்கான செலவீடு காரணமாக கட்டணம் செலுத்திப் பெறக்கூடிய கற்கைநெறிகளில் ஈடுபடுவதற்கு ஆண் பிள்ளைகளுக்கே பெற்றோர் முதன்மையளிக்கின்றனர். எவ்வாறாயினும் பெண் கல்வி வரலாற்றில் இலவசக்கல்வி பாரிய வரப்பிரசாதமேயாகும்.
தேசிய ரீதியாக பெண்கள் விகிதசாரம் கணிசமானவளவு சமநிலையைக் காண்பித்தபோதிலும் மதக் குழுக்களுக்கிடையிலும், பிராந்தியங்களுக்கிடையிலும், அபிவிருத்தி நிலைகளுக்கும் ஏற்ப வேறுபடுவதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. சில பின்தங்கிய தனித்துள்ள (solated) பிரதேசங்களில் பெண்களின் பங்குபற்றுதலானது மிகக் குறைவாக உள்ளது. இலங்கையில் முஸ்லிம் பெண்களில் பங்குபற்றுதலானது ஏனைய மதப் பெண்களின் பங்குபற்றுதல் வீதத்திலும் குறைவாக உள்ளதாக பேராசிரியர் ஐயவீர குறிப்பிடுகிறார்.
கல்வியில் பெண்களின் ஈடுபாடு
1981இல் தனியார் பாடசாலைகளிலும் அரச பாடசாலைகளிலும் முறையே 46.8%, 49.5° ஆகும். இது பெண்களுக்கு பணச்செலவுடன் கூடிய கல்விக்கு முதன்மை அளிக்காமையையே சுட்டிக்காட்டுகின்றது. ( அட்டவணை - 02 )
1981இல் பாடசாலை செல்லும் வயதினரில் பெண்கள், ஆண்கள் முறையே 83.6%, 83.7% வீதமாக இருப்பதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அத்துடன் அரச பாடசாலைகளில் முறையே 49.5%, 50.5% ஆண்களும் பெண்களும் கல்வி கற்கின்றனர் (அட்டவணை - 2 ). இது ஒரளவு சமவாய்ப்பை காட்டுகின்றது.
1981இல் கிராம, நகரப்புற வீதங்கள் (15 -19 ) வயதுப் பிரிவினரில் 48, 18 ஆகக் காணப்படுவதால் இவ்வீதம் சிறிதளவு குறைந்துள்ளது. ( அட்டவணை- 1)
கிராம நகரப்புறத்தில் ஆண்களின் பங்குபற்றுதலானது பெண்களின் பங்குபற்றதலிலும் பார்க்கக் குறைவாக உள்ளது
35

குறிப்பிட்ட வயதெல்லையின் பின் (14இற்குப் பின்) பெண் மாணவர்களின் பங்குபற்றுதல் கூடுதலாக உள்ளது. (1991இல் 58.25%). இதற்கு ஆண்களுக்கு உழைப்பாளராகச் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இளமையிலேயே கிடைப்பதுதான் கார ணம் என பேராசரி ரியர் சுவர் னா ஐய வீர எ டு த்து க் கா ட் டு கிறா ர் இ த னா ல் சிரே ஷ்ட , இடைநிலைக் கல் வரியை முடித்து க் கொள் ள பெண் மாணாக்கர்கள் முனைகின்றனர்.
பாடசாலைக்குச் சேராமையும் இடைவிலகலும் (No Schooling and drop outs)
பாடசாலைக்கு அறவே செல்லாது விடுதல் இலங்கையில் பொதுவான ஒரு நிலைப்பாடாக இல்லாவிட்டாலும், சில சமூக, பொருளாதார அந்தஸ்தில், குறைந்த பின்தங்கிய பகுதிகளில், அது மிகக் கூடியளவில் காணப்படுகின்றது. இவ்வாறான பகுதிகள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் அடங்குகின்றன. பெருந்தோட்டப் பகுதிகள், மிகப் பின்தங்கிய பிரதேச நகரங்களை அடுத்து வரும் சேரிப்பகுதிகள் ஆகியவற்றில் இவ்வாறான நிலமையைக் காணலாம்.
பெரு ந் தோட்டங் களவில் ஆரம்பக் கல் வரிக் கான வயதெல்லையினரில் 30% பாடசாலையில் அறவே சேரவில்லை. 1985இல் அனுராதபுர மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களில் செய்யப்பட்ட ஆய்வொன்று (6-8) 14% வீதமானோ ரும் (9-14)இல் , 19% வீதமானோரும் பாட சாலையரிலிருந்து இடை விலகியுள்ள னர் எனக் காட்டுகின்றது. 1984இல் கொழும்பை அடுத்து கானப்படும் சேரிகளில் செய்யப்பட்ட ஆய்வொன்று (6 - 8) வயது 20% வீதமானோரும் (9 - 14) வயது 10% வீதமானோரும் பாடசாலையில் ஒரு போதும் சேரவில்லை எனக் காட்டுகிறது.
1986இல் இடைவிலகியோரில் கூடியளவு வீதத்தினர் ஆண்கள்
என புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன ( அட்டவணை -5)
மொத்தத்தில் பாடசாலை சேராமை, இடைவிலகல் போன்றன
குறித்த சமூகங்களிலும் பிராந்தியங்களிலும் கூடுதலாக உள்ளன.
பெருந்தோட்டத்தில் 30% வீதமும், அநுராதபுரம் போன்ற
பின்தங்கிய பிரதேசங்களில் 19%உம் பாடசாலைக்குச்
R (M

Page 20
செல்வதில்லை. 1991இல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், மன்னார், வவுனியா போன்ற பகுதிகளில் இடைவிலகல் வீதம் கூடுதலாகவுள்ளது அட்டவணை - 6). இந்நிலமை 1984 உடன் ஒப்பிடும்போது பெருமளவு வேறுபடுகிறது. அதாவது 1984இல் கல்முனை, புத்தளம் போன்ற மாவட்டங்களில் இடைவிலகல் வீதம் கூடுதலாக இருந்தது.
மீளக் கற்போர் (Repeaters) மீளக்கற்போர் வீதம் 1991இல் கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் பெண்கள் வீதம் ஆண்களை விட அதிகமாகக் காணப்படுகின்றது. (ஆண், பெண் = 9.29 : 10.16 கிளிநொச்சி) ஆனால் ஆண்டு ரீதியாக நோக்கும்போது 11/12 ஆண்டுகளில் மீளக் கற்கும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாகவுள்ளது. (அட்டவணை - 7)
(56)65 Souso)LD (Educational attainment) (ஒரே பார்வையில்) வருடம் 10 + )
1971 1981 ஆண் பெண் ஆண் பெண்
1. பாடசாலைக்குச் 16.0 29.7 8.7 75
சேராமை (No schooling) 2. எழுத்தறிவு வீதம் 85.6 70.9 90.5 82.8 3. ஆரம்பக்கல்வியை
முடிக்காதோர் 128.9 22.7 13.6 11.4 4. இடைநிலைக்
கல்வியை
முடிக்காதோர் 50.7 42.4 68.2 62.3 5. G.C.E. O/L
சித்தியடைந்தோர் 4.5 4.5 70 70 6. G.C.E. AVL
சித்தியடைந்தோர் 1.2 O.9 1.4 1.4 7. பட்டம்
பெற்றோர் 0.6 0. 0.9 0.5 8. பட்டப்பின் 19-tilt பெற்றோர் 0.01 மிகமிகக் 0.01 மிகமிகக்
குறைவு குறைவு

பரீட்சையில் சித்தி அடைதல் (Achievement)
பொதுவாக சித்தி எய்தல் கல்வி நிலையின் பிரதான சுட்டியாக கருதப்படுகின்றது. இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் பரீட்சை அடைவுகள், கற்றலின் சரியான அளவீடாக அமைவதில்லை. எனினும் குறித் தளவு அண்ணளவான பெறுமானமாகவாவது கல்வி நிலையைக் காட்டும் சுட்டியாக அடைவு/பரீட்சைப் பெறுபேறுகள் கொள்ளப்படலாம். ஏனெனில் இலங்கை போன்ற நாடுகளில், மனிதவலு மதீப்பீட்டுச் சுட்டியாக வேலை கொள்ளப்படுகின்றது. வேலை வாய்ப்பினை பெறுவதற்கான, பொருளாதார அந்தஸ்தை பெறுவதற்கான வலுவான தகமையாக பரீட்சைப் பெறுபேறுகள் கொள்ளப்படுவதாலும் இவற்றின் பெறுமானம் கணிசமானவளவு கவனத்திற் கொள்ளக்கூடியதேயாகும்.
பரீட்சைப் பெறுபேறுகள் (க. பொ. த. (சா. த) புலமைப்பரிசில், போன்றவற்றில்) பால் சமத்தவ நிலையையே காட்டுகின்றன. (6-10) ஆண்டு மாணவர்களிடையே அறிவு கிரகித்தல், பிரயோகம், பகுப்பு, தொகுப்பு, மதிப்பீடு பற்றி செய்யப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை ஒன்று ஆண்/பெண் மாணவர்களிடையே வேறுபாடு காண்பிக்கப்படவில்லை எனக் காட்டுகின்றது.
இலங்கையில் காணப்படும் பொதுப்பாட ஏற்பாடு க. பொ. த. (சாத) வகுப்பு வரை தொடர்வதால், மாணவர்களுக்கு பாடங்களை தெரிவு செய்யும் கட்டாயம் இல்லையாதலால் எல்லா நிலைகளிலும் எல்லா பாடங்களுக்கும் சமஅளவு - (குறிப்பாக மொழி, கணிதம்) ஈடுபாட்டையும்,தேர்ச்சியையும் அவர்களுக்கு உண்டாகிறது. ( அட்டவணை - 10 ) எனினும் உயர்தர பரீட்சைக்கு இவை தெரிவுப் பாடங்களாக அமைகின்றன. இதனால் தெரிவு சமூக நியமங்கள், மனப்பாங்குகள் அடிப்படையிலேயே இடம்பெறுவதால்,உ/த பரீட்சைக்குத் தோற்றும் கணித மாணவர்களில் பெண்களின் ஈடுபாடும் தேர்ச்சியும் குறைவாக உள்ளதை அட்டவணை எடுத்துகாட்டும்.
இந்நிலமை தொடர்ச்சியாக நீடிப்பதன் காரணமாகவே
பல்கலைக்கழகப் பங்கு பற்றுதலிலும், அடைவிலும் பால்
38

Page 21
வேறுபாட்டு நிலமை களை தெளிவாகக் காணக் கூடியதாகவுள்ளது.
பயிற்சிக்கற்கைகள்
தொழில்நுட்பக் கல்லுரிகளில் 1973இல் தொழில்நுட்பம் தொடர்பாக கற்கைநெறிகளில் மொத்தமாக 175 பேரே பெண்களாகும். இது, மொத்தத் தொகையில் 3.4% மட்டுமேயாகும். கணக்கியலில் 31.8% பேர் பெண்களாகும். இந்தப் பரம்பல் நிலையானது 1987ல் சிறிது வேறுபாடும் வளர்ச்சியும் காணப்படுகின்ற போதும், பெண்கள் விகிதாசாரம், வர்த்தகம்ஆங்கிலம் தவிர்ந்த தையல் துறையில் மாத்திரமே அதிகமாகக் காணப்படுகின்றது. இதுவும் மீண்டும் மரபு ரீதியான பால்நிலைபாட்டின் பிரதிபலிப்பாகவே உள்ளது. (அட்டவணை - 15)
திறந்த பல்கலைக்கழக அனுமதியில், பெண்கள் முன்பாடசாலைக் கல்விக் கற்கை நெறிக்கு 97.3%த்தினர் 8996) இடம் பெற்றுள்ளனர். மொத்தமாகப் பார்க்கும் போது எல்லாக் கற்கைநெறிகளிலும் 16.7% மட்டுமேயாகும். (அட்டவணை - 19)
ஒப்பிட்டு நோக்கும்போது தொழில்சார் ஆங்கிலம் கற்பதில் பெண்கள் பங்குபற்றும் வீதம் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் (54%) திறந்த பல்கலைக்கழகத்திலும் (45%) கணிசமான தாகவுள்ளது. வரைபடக் கலைஞர்களுக்கான கற்கையிலும் இவ்விகிதம் சாதகமானதாக (47%) உள்ளது. (அட்டவணை-16)
தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நெறிகளில் தையல்வேலை, பாய் இளைத்தல், தைத்தல் ஆகியவற்றில் மாத்திரமே பெண்கள் பங்குபற்றுகின்றனர். ஏனைய மின்னிடல், உலோகவேலை, படகு திருத்துதல் கட்டிட அமைப்பு, குடிநீர் வழங்குதல், போன்ற பயிற்சி நெறிகளில் எவரும் இதுவரை பயிற்சி பெறவில்லை.
தொழில்நுாட்பக் கல்லூரிக்கான அனுமதி 1973 (14.9) உடன் ஒப்பிடும்போது இருமடங்காக 1987 (28.3)ல் அதிகரித்துள்ள போதும், கைவினை, தையல், மனையியல்,
39

விவசாயம் போன்ற கற்கை நெறிகளில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதே இவ்வதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் நோக்குதல் வேண்டும். (அட்டவணை - 16)
இவ்வாறான நிலமையை நாம் தொழில்பயிற்சிக் கற்கை நெறிகளிலும் காணமுடிகின்றது இங்கு 1977ல் 29.2% ஆகக் காணப்பட்ட வீதம் 1982ல் 77.37% அதிகரித்து 1987ல் 56.4 ஆக கா னப் படுகின்றது. இதற்குக் கார ணம் 1987ல் விவசாயத்துறையை தேர்ந்தெடுக்காமையே ஆகும். 1982ல் 100% பெண்கள் விவசாயத் துறையில் பங்குபற்றினர். (அட்டவணை-15)
2 tuir sai)a? (Higher education)
1980களில் கலைத்துறையில் அனுமதிபெற்ற மாணவர்களில் 65% பெண்கள் ஆயினும் பொறியியல், கட்டிடக்கலை, விவசாய விஞ்ஞானம் போன்ற விஞ்ஞானப் பயிற்சி நெறிகளில் பெண்கள் விகிதாசாரம் 17%த்திலும், குறைவாக உள்ளது. மருத்துவம் சட்டத்துறை ஆகியவற்றில் பெண்களின் தொகை கணிசமாக உள்ளது.
விஞ்ஞானத்துறையில் ஒர் முக்கிய அம்சத்தை அவதானிக்க முடியும். அதாவது உயிரியல் துறைக்கும், பெளதிகக்துறைக்கும் இடையில் கூட இந்த வேறுபாட்டு நிலையை அவதானிக்க முடியும். மிகக் கூடியளவு பெண்கள் உயிரியல் துறையையும், ஆண்கள் பெளதிக துறையையும் தெரிவு செய்கின்றனர். 1970களில் உயிரியல் துறைக்கு 65% வீதமான பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். பெளதிக விஞ்ஞானப் பயிற்சி நெறிகளில் அனுமதிக்கும் சிறுதொகையான மாணவிகள்கூட ஆய்வுகூட பணிகளை பெருமளவில் கொண்டுள்ள இரசாயனப் பொறியியல்போன்ற துறைகளைச் சிறப்புத்துறைகளாகத் தெரிவுசெய்கின்றனர். இயந்திரப் பொறியியல் போன்ற துறைகளில் இவர்கள் பங்குபற்றுதல் குறைவாகவே உள்ளது.
பெண்கள் பல்கலைக்கழக பங்குபற்றுதலை ஒப்பீட்டு நோக்கும் போது கணிசமான அளவு பெண்கள் இடம்பெற்ற போதிலும் விஞ்ஞானக் கற்கை நெறிகளுக்கான பங்குபற்றுதல் வீதம் குறைவானதாகவே உள்ளது. 1989ல் மொத்தப்பங்கு பற்றுதல் (பெண்) வீதம் 42.5% ஆகக் காணப்பட்ட போதும்
40

Page 22
விஞ்ஞானக்கற்கை நெறிகளுக்கான விதம் 34.56 ஆகவும் கட்டடக்கலை எந்திரவியலுக்கான வீதம் 14.3% ஆகவும் உள்ளது. இது நாம் முன்பு குறிப்பிட்டது போன்று க. பொ. த. வகுப்பில் தேர்வில் காண்பிக்கப்படும் குறைவு நிலையையே பிரதிபலிக்கின்றது. அத்துடன் இத்துறைகளுக்கு குறித்த சமூக வகுப்புப் பெண்கள் பங்குபற்றுதல் குறைவானதுமே காரணமாகும். கடந்த பத்தாண்டுகளில் எந்திரவியல் கற்ற 2000 மாணவிகளில் நான்குபேர் மட்டுமே முஸ்லிம் பெண்களாகும். கட்டடக்கலைக்கு ஒரு வரும் அனுமதி பெறவில்லை. (அட்டவனை 17, 18, 20, 21)
முடிவுரை
பெண்கள் பற்றிய மரபுரீதியான இரண்டாம்நிலை, பாட ஏற்பாட்டிலும் பெண்கள் பாடங்களைத் தெரிவு செய்யும் நோக்கிலும் பிரதிபலிக்கின்றது. அத்துடன் இது எதிரான கருத்துக்களுக்கும், கருத்தோற்றங்களின் வளர்ச்சிக்கும் மேலும் இடமளிக்கின்றது. இதில் மிக முக்கியமான அம்சம் பெண்களிடையே தன்னிலை பற்றிய குறைவான கருத்துணர்வை உருவாக்குதலாகும். கல்வி ஸ்தாபனங்களின் சமூகக் கல்விநிலையும், பாட உள்ளடக்கங்களும், சமத்துவமற்ற பால்நிலைக் கடமைக் கூறுகளையும் பற்றிய உண்மையற்ற புலக்காட்சிகளையும் உருவாக்குகின்றது. இன்று οτ ου 6υ π. பெண் களும் இவ் வாறா ன நிலை மை யை ஏற்றுக்கொள்ளாத போதிலும் கல்வி வாய்ப்புக்களிலும் பங்குபற்றுதலிலும் காட்டப்படும் சமத்துவநிலைமை, சமூகத்திலும், குடும்பத்திலும் நிலவும் பால் நிலைப்பாட்டினை சுட்டுமா? என்பது கேள்விக் கிடமானதேயாகும்.
கற்கை நெறிகள் தேர்வுக்குரியதாக அமையும்போது அவை சாதகமற்ற, சமத்துவற்ற போக்கையே மீளவும் ஏற்படுத்துகின்றன.
எனவே கல்வியானது சமூக கலாச்சார அம்சங்களின் கூட்டாகவும் அதன் தளத்தில் மட்டுமே நின்றும் தொழிற்படுமாயின் அது பால் நிலையில் சமத்துவமின்மையையும், எதிர்மாறான புலக்காட்சியையுமே நிலைநிறுத்தும். எனவே கல்வியானது கல்விச் சமத்துவத்தைப் பேணக்கூடியதாக அமைவதோடல் லாது சமத்துவத்தன்மையை முன்னேற்றுவதற்காகவும் அமைக்கப்பட வேண்டும். அவ்வகையில் பால் சமத்துவமின்மையைக் களையக்கூடிய அம்சங்களையும் கொண்டதாக கல்வி புனரமைக்கப்படவும் வேண்டும். அது பெண்களிடையே சாதகமான தன்னிலை நோக்கை ஏற்படுத்த உதவும். சாதகமான தற்றுணிபுடன் கூடிய சமத்துவ நோக்கு ஏற்படும்போதுதான் விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற பொருளாதாரப் பயன்பாடு மிக்க துறைகளை பெண்கள் தேர்வு செய்யும் சமூக அந்தஸ்துடன் கூடிய முகாமைத் துவக் கடமைக் கூறுகளையும் ஏற்று நடத்தும் உறுதியையும் கொடுக்கும்.
4

"
பாடசாலை அனுமதி R (மாணவர் தொகை, வீதம் பால்- நிலை அடிப்படையில்)
6 - 10/ 11- 12/ 1 - 12/ நிலை 1 - 5 6-11 (1989 11-13 1-13 (1989 இலிருந்து (1989 இலிருந்து இலிருந்து மொத்தம் 1680245 897.296 4561.2 262,315.3 1970 பெண்கள் 78.1708 446527 23225 1257.460
% 46.5 49.8 50.9 48. மொத்தம் 94.2663 923007 1779.59 Josses 1978 பெண்கள் 91874.7 4578&6 97630 ፱ 47 4863 ነሩ 473 49.6 54.9 48.4 மொத்தம் 21.211157 12091.97 13002 3460375 1983 பெண்கள் 1022647 61947 77946 1720064. % 会8.2 51.8 59.9 49.7 மொத்தம் 2O78680 1776.919 188000 404.3599 1989 பெண்கள் 1002895 898776 106060 200753
4母。2 S0.6 5704 49.68 மொத்தம் 208082 188803 18887 41272 990 பெண்கள் 100.397 935.837 103470 多{}42644 % 48.2 50.6 57.04 49.68 மொத்தம் 2081104 36744s 186567 4 f35 II4 பெண்கள் 1002716 947776 108680 2059.72
48.18 50.7 58.25 49.7
அட்டவணை - 1
42

Page 23
'clocoqouto-Trısı 1999 uso @ urıs@reg) qe uri oqo longắqıf@s@ a9&o u s-a ura
„ursosee eeue-uri gregoori x og eeușește o sottovo
(1919-1&sriņớiko (gun) og suấtoșioso įrsızsın
z mosessrs-n-ıke
/ ̊ክ”ሪ9°O i stro'92 || 169‘99,2'y | GĻO'Off999'ɛɛ |6'&# | 669'O; | !! 19 || 1/9’zy | # ! ! '9€1'#| 9’6ț» No1|'690'Z|| Z'OG| Ży6'9/0'Z||66|| 6’yzCS S000S0000LSKLS 000S0L S L00SL0 LLL 000SLLL 000SLLSLLLSLLLSYS LS0L SLL0SLLLSLSLS00S000S000SLS 0000 6’o?€'Z İZy/'G6 I OZG'6/|oo || 699'19919'ɛɛ |O'6v I GCO‘lo | O || 9 | 19/'zo | G48'/90'y| Z'6ỳ |ɛwɛ'G10'Z|| 0:09 || ZZo'ZÞ0'Ż| 6861 9??Z’Z 1991'60|| 9/1'990'w | Oļ9'/9| 26'29 |Gozo | 9v,6ɛ | GozG | GzG‘cy | 266'296'ɛ| Z'6ỳ |GZ!‘ 1/6'1 | € 09|| Z. 18'166' || 9861 €”țwa6′Z |8| sy'0|| || 909'y/6'ɛ | 190'/9GGG'zg |+'/'; || OGL'6ɛ | gozg | Goo'cy | 610'998'ɛ| 9’6# |G99'9.16" | | Z OG|| #9€'9€6' || 1961 O‛$yሪO'C |990's» || || 181',99'ɛ | 299'2C116'6/ |/'/'; 1 czlogo | €rzg i #6/o so | 90/'19/'ɛ| 8′6ț» IGG€'/98"| | Z OG | CSC'y88"| || 986|| A1’83Z’E 1999'y! !! 19:}"OG/'ɛ | Go!“Zo906'// |rzy loạı'Zc|cozg | 92/'ow | 080'O+9'ɛ| 2:6y|996'608') { cos||v60'0c8'||S861 QQN€'Z |6țyw'29 | 9Zo'999'ɛ | 926'926zɛ'69 |ɛrɛw |zzy'ɛɛ|2,49 || Zgg'çe | Zzz'6ɛɛ'ɛ| 9,6% |190’294’1 | y09 | 191’294’1|| 9861 !"£2O‘Z 199€'99 || ZZO'ɛGG'ɛ | -2G9'26 |---|- sze'oewel roolvoo ozae'ıl sogl lle'ow'ılc061 6°ZZLL SL0LSLL000SLLLL LLSLL S L0LS00 L00 L00S0LLL00LLSLL00LS00LSK LS0L S000S000S0LS000S0LLS K000 O’920S LL00S0000LSLLLSL LLLSL0 S 0L0S00 LS0L000SLLLL0 LLSLS0LYY00S000SK LS0L SLL0S000SYS LLS0LLS0LS0000 șị}脚脚quoşuonoquos ugno*×--**qigoș ugno** „...” 暖概ș7ș了ussreogugadessu e~auri į umựssoquourou-o-n un o sí sáo@besef, M 7 7 }

மாணவர் தொகை 1991
(ஆண்டு வாரியாக 100 ஆண்பிள்ளைகளுக்கு)
ஆண்டு பெண்
94 2 92 3 92 4 93 5 94 6 96 7 99 8 102 9 109 O 107 11 115 12S 83 12 Ο 106 12A 222 13 S 87 13 C 108 13A 242
அட்டவணை - 3
ஆண்டுடன் நோக்கும்
போன்றவற்றில் பெண்கள் தொகை
காணப்படுகின்றது.
போது பெண்கள் கூடியளவு பாடசாலையில் கல்விகற்கின்றனர். உயர்வகுப்பு கலைப்பிரிவு
44
இருமடங்காகக்

Page 24
பாடசாலை இடைவிலகல் 1986
ஆண்டு ஆண்கள் % பெண்கள் % மொத்தம் %
8 1.8 1.9 1.8 3 1.9 1.9 19 4 4.2 3.3 3.7 5 5.7 4.4 5.1 மொத்தம்2-5 3.3 2.8 3.1 6 6.4 5.2 5.8 72 5.7 65 8 8.6 5.6 7. மொத்தம்6-8 5.8 Ꮞ,Ꮽ 5.0 9 8.3 5.9 71 மொத்தம்2-9 5.1 4.02 Ꮞ.6
மொத்தம் 67156 SO971 18127
பெண் 43.1%
அட்டவணை - 5
மாணவர் தொகை (பால் ரீதியாக விகிதம்)
ஆண்டு பெண்கள்/400 ஆண்கள்
5 96 6 96 7 96 8 96 9 96 O 95 II 97 12 98 13 99 14 100 15 103 16 104 17 108 18 127 19 127 20 138 21 151 22 140
அட்டவணை - 4
வயதுடன் நோக்கும்போது பெண்களே கூடியளவு பாடசாலையில்
கல்விகற்கின்றனர்.
45

பாடசாலை இடைவிலகுதலும் விலகல் வீதமும் - 9 வரை பால், மாவட்ட அடிப்படை 1990A991
மாவட்டம் ஆண் பெண் மொத்தம் மாகாணம் இல வீதம் இல வீதம் இல வீதம்
கொழும்பு 6,781 5 5,381 4 12,162 4.90 கம்பஹா 4793 4 2,990 3 7,783 3.28 களுத்துறை 3,491 4 2.516 3 6,007 3.92 மேல் 15,065 5 10,887 3 25,952 4.03
கண்டி 2,829 3 2,583 3 5,412 2.68 மாத்தளை 1964 5 1470 4. 3,484 4.50 நுவரெலியா 2,415 4 I,585 3 4000 3.62 மத்தி 7,208 4 5,638 3 12,846 3.31
காலி 3,256 4 2,255 3 5,511 3.53 மாத்தறை 3,012 5 1862 3 4874 3.93 ஹம்பாந்
தோட்டை 2,975 6 1964 4 4939 4.99 தென் 9,243 5 6,081 3 丑5,324 4.04
யாழ்ப்பாணம் 4,326 8,958 7 7284 7.56 கிளிநொச்சி 455 4 -16 O 489 2.09 ιρ6ότουτπή 43 06 38 8,944 36 8,2SO 37.15 முல்லைத்தீவு 603 7 268 3 871 5.52 வவுனியா Ꮽ ,Ꮾ83 35 ○,292 33 6,975 3422 6 L 13,373 2 10,446 9 23,819 10.59
மட்டக்களப்பு -29 -1 .1.64- 1,091- 2-- 800س அம்பாறை 471 1. 373 844 0.86 திருகோணமலை 2,029 7 2,082 8 4.111 7.18 கிழக்கு 2,209 2 1655 2 3,864 1.75
குருநாகல் 5,268 4. 3,615 3. 8,883 3.59 புத்தளம் 3,327 6 3,083 6 641O 5.97 வடமேல் 8,595 5 6,698 4 15,293 4.3
அநுராதபுரம் 3,839 5 2,665 4. 6,504 4.53 பொலன்னறுவை 1427 5 859 2,286 3.79 வடமத்தி 5,266 5 さ,524 4 8,790 4.31
பதுளை 3,ፖ51 6 2,761 4. 6 Ꭿ512 5,05 மொனராகலை 1.653 5 1412 4. 3,065 4.3球 AZ Ós 5.404 5 417.3 4 9,577 4.79
இரத்தினபுரி Ꮞ,Ꭿ21Ꮞ Ꮌ 2,860 3 7,074 4.24 கேகால்ை 2,69丑 4 1628 3 4,3丑9 5.48 சப்பிரகமுவ 6905 5 4488 3 11,393 3.92 பூரீலங்கா 73,268 5 53.590 4. 126,858 437
46

Page 25
பாடசாலை மீளக்கற்போர் 1986
ஆண்டு ஆண்* பெண்% மொத்தம்
6.7 7.7
0.0 7.5 3.8
0.6 . 9.
4 0.9 79 9.
5 9.6 6.7 &。怒
மொத்தம்1-5 9.9 7. 8.6 53 6.5
7 6.9 48 5.9
莎。多 39 4.5
மொத்தம்6-8 6.8 会。7 5.7 9 4. 2.9 s
O 2. 1.5 1.8
68 7.9 74
மொத்தம்9-1 1 86 3.9 8.8
2 0.08 0. 0.09
2 0.05 0.08 0.04
2 O.O. O.O. O.O.
199 29. 24,°
I5.7 2.7 9.7
மொத்தம்12-13 8.7 翼む.5
அட்டவணை -7
மீளக்கற்போர் வீதம் 1991
ஆண்டு ஆண் பெண்
1305 9,061
2 21,528 14,049
22,684 夏4,693
会 22,006 1970
17971 1,407
14,277 8,459
7 9,869 6479
6,091 402
9 3,732 27 32
O 1889 1480
53,025 65,099
2 罗莎 14
அட்டவணை - 8
47

19ஆம் ஆண்டு வரை மீளக்கற்போர் வீதம் (மாவட்ட, பால் அடிப்படையில்) 1991
casglir! Ll-alawPawr - 09
மாவட்டம்/ ஆண் பெண் மொத்தம் tonasırevarın எண்ணிக்கை வீதம் எண்ணிக்கை வீதம் எண்ணிக்கைவீதம்
கொழும்பு 99 787 4. 18 7. st கம்பஹா 0 9. SS S.0 9 7 5.?፤ களுத்துறை 9 7.4 17 09 7.7 மேல் 9 A7 F. is 4. 8.4 SS is s
δεύτες- 0. 14 84 99 SS 0.59 மாத்தளை 5. As 0. 5 OS 9.4 10 470 .4 துவரெலியா o 414 S.0 50 1.9 9 04 1. மத்திய 10.40 0 07 0.
asra) 9 s 759 7.71 4 மாத்தறை 2.99 5 9.07 8 90 0. அம்பாந்தோட்டை 9 307 7 99 0.99 is 50 II.
தென் . 0.97 4 is 8.5 5 49 .0
யாழ்ப்பாணம் AS O 087 9.4 Ο Ε. s கிளிநொச்சி 379 48 0. 57 象。罗塞 pasirsairnrif 90 .94 00 . 9 S7 முல்லைத்தீவு | 94 1.0 4 109.9 A 0. auayaufaunt s .8 93.9 7.9 0 FA R 7 A 7 7
மட்டக்களப்பு ..S. 3 SJ 7.77 7. 990 9.04 அம்பாறை 9 7 S. 7 54 1.7 7 1.90 திருகோணமலை 4 55 a. st .7 is 0. கீழ் 0.50 . 4 9 799 0.94
es(55masson 9 0. as 574. . . A 0. 9. புத்தளம் OS 10. 90s as 9.7 வடமேல் 57 0. R 065 4 ፬.ሃ7
அநுராதபுரம் 0 75 10.91 8 97 9.09 9 7 9.8 பொலன்னறுவை 4 27 10.45 is 8. 7 90 வடமத்திய A ps 0.7 9 e.g. e7 7 象。虏5
பதுளை 90 0.91 0 0 A 40 மொனராகலை 5 份乡皇 . S 0.97 0 858 1.49 00 9. A 7 99 49e .0
இரத்தினபுரி 1.0 0 7 9.9 9 499 10. Casasmrasuay 0. 9. 17 4s 9. VůLíprasopa 0 0.4 9 08 9. 0 908 9.9 Gaviivaamas 0 9AA 9.94 17 489 8. 979 409 9.
1991 9% மாணவர்கள் 1990இல் அவர்கள் இருந்த ஆண்டை மீளக்கற்கின்றனர். (979,500 பேர்) மீளக்கற்போர் வீதம் மேற்கு மாகாணத்தில் மிகக் குறைவாகவும் (6%) ஊவா, (2) மாகாணங்களில் கூடுதலாகவும் உள்ளது.
48

Page 26
தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களின் பெறுபேறுகள் க. பொ. த (சா) 1993
unt Lib பரீட்சார்த்திகளின் X
எண்ணிக்கை
சிங்களம் c 1ጰ1787 3.0 37.ዷ 36.2 2$.6
பெ 1597 9 43.3 35.9 7s
தமிழ் c 15568 1.2 198 43,3 5.8
பெ 1579s 2.0 25.4 42.7 荔纷。奥
கணிதம் <器 15495 Ꮽ Ꭿ5 . 2.4 6.9
பெ 194ов» 2. 9. 22.9 65.4
விஞ்ஞானம் ܛ3ܦ݂ܰܗ A4742 0.9 10. 50.6 98.2
பெ ፲71845 0.4 6.6 46.0 47.0
சமூகக்கல்வி s 7908 6.6 S0.8 29.8 2.7
பெ 96. 7.6 54.7 28.0 9.0
வர்த்தகம்/ s 87ጳ81 5.4 ጳ9,7 93.7 1.2
கணக்கியல் பெ 3.990 5.5 92.7 $2.2 39.5
s 8028 09 25.8 4.1 98.2
விவசாயம் பெ 99.87 0.7 ጶ0.7 Ꮞ1Ꭿ 7.4
அட்டவணை - 10
க. பொ. த.(சா) பரீட்சையில் சித்தியடைந்தோர் விபரம் - 1992
golyn. Llau swpermwr - 11
வீதம்
ash
4.0unt.S. (aut) awg" bg AsgsA9 GQLubogpmrft
oux
брегру древине, šд புடன் பாடங்களுக்கு Guadi atauanulisasrt
s
0.9%
ஆறு பாடங்களுக்கு மேல் தமிழ், கணிதம் allt"-nuit. ABADatab-js:Osir hir
.
.7
49

28 உயர்தர வகுப்பு மாணவர் சனத்தொகை
பூரீலங்கா
விஞ்ஞானம் asse) இடம் ஆண் பெண் மொத் 100 ஆண் பெண் மொத்தம் 100
தம்
கொழும்பு 4,885 A2s 8,908 70 1,001 251.8 s.59 雳52 கம்பஹா 2.55 1966 48 9, 999 2,657 3550 ፭68 களுத்துறை 1,383 595 2957 17 983 S,093 3,995 sis வடக்கு 8,402 6,984 15,388 83 2,957 8,807 III64 ጳ78
σπεύσις- 2,612 2,525 537 97 2,559 5,907 8,466 மாத்தளை 448 827 85 77 ,850 2,567 S8 துவரெலிய 38. ፭06 587 54 55J 987 340 7 மத்திய 944, 320 55' 90 3,829 8,744 1857 28
Jsrev) 1,732 1854 3,588 07 a.48 9,878 5,924 露移& மாத்தறை S2 880 2,213 3 3,267 4,998 R89 அம்பாந்தோட்டை 914 99s 907 09 1290 2,74 4,096
தென் 3.97e 3,727 7,705 g4 e67 ses. 13,758. 255
um púLunsaria aos 1,776 s,870 84 750 994 ,75s 9. கிளிநொச்சி 9. 79 170 e7 07 97. A78 7 pasirasarnrňr ss A8 0 87 232 s 74 முல்லைத்தீவு 78 56 134 72 Iss 304 Ap 225 aunstfunt 37 s 90 8 露巫5 வடக்கு 2,364 2013 437 85. 203 A, 5,38 42
மட்டக்களப்பு 9. 18 8s. 64 7s 221 1972 அனுராதபுரம் 1,083 826 1,709 38 1,389 po 9,890 7 திருகோண்மலை 248 .27 370 S2 A87 ses 1,077 2 கிழக்கு 1,821 07 2,892 59 ,824 3,715 6,39 4.
குருநாகல் 1924. 1,914 538 84 9,830 T324 10,954 20 புத்தளம் 58 527 20 90 78 544, 233 97 nu Gubesiv 0L00 S SLLLL00 SYLLLLLLL0 S S SS00S S SYLLL0L0 S SLLSSLLLL00 S S S L0LLLL00 S SL000L
அனுராதபுரம் 685 S02 87 7s 985 2,092 Ꮽ077 22 பொலன்னறுவ 25 0. 458 79 43s 1,100 1,595 253 வடமத்திய 9A. 704 1,845 75 A20 993 4,6 225
tu 57ego6,77 1,025 98 1949 90 12s 2,793 49 2. மொனாறாகலை 151 ፲70 Ꮽ2Ꭵ 1ᎥᏭ Ꮥ92 1,055 1447 发份9 2 AU 1,176 1088 24 p. 78 3,848 s,s, A.
இரத்தினபுரி ,07s 959 2,03 e 133 3,299 4520 密*0 CasakinTsuncu) LLLLLLLL00 S S S 0L00 S0L0 S SSSSS S SL0 SLLLL00L S SS0SL00 S S S 0L00S00L0 Füptaspau 295 2,081. 4,256 94 370 sp85 9,896 258
26,835 22,898 49,72 e5 24,79 57,567 820 2.
அட்டவணை - 12
50

Page 27
ஆண்டு - பெண் விகிதம் (பாவாரியாக) 1991
வர்த்தகம் ஆண் பெண் மொத்தம் 100 ஆண் பெண் மொத்தம் 100
A,10 50.98 ,848 o 1049 10Ꭿ79 21Ᏹ475 105 As as 39 A. s,800 Mé,082 19,82 144 s 09 998 s 9,ፀ?7 8,883 040 18 8,414 20,593 8,947 s 19 Ꮴ7Ꮽ 25,724. 4597 130
as 5,918 8,00ጻ 1097 18919 138 As 398 , 40 16s 07 23 O 41 1809 9950 117 387 SA8 iss 9. 1,141 153ste 25.479 138
0. le. , 04 4,980 7s 2,878 iss se 130 2.988 9, s77 8,998 A. As 20 1109 2. 287 4,959 7,04Ꭶ 1Ꮫ2
34A 7 7.59 17394 8, 154
1,729. 2,280 4009 192 45.95 7,050 12,835 54 A. s 900 940 949 79 s ጳ00 4. 7. 40 7 47 7ፀ 144 塞纷豹 《堂岛 77 4s ss 08 8. 建辞0 979 st 29s ,084 2,79 4,910 8,850 8,880 1450 157
80 82. 77 . 1,74 1,899 9,813 1 80 1499 3,383 J,430 A2 98 spp. 4. 1,009 2,04 9. 2,74 A ,980 7. 8,098 its
1,702 1414 s 8. 7,ጶ56 109s 7,808 143 70 78 A72 107 2,074 2ᎯᏭᏭ 4907 17 2A 27 se? 990 ses 251s 14
s 50 A. 90 905 300 SAOS 134 s 1,055 ,871 ጳ,7፥8 158
87፵ 1,874 9,980 ᏎᏤ7Ꭲ 8, 14
J1 1079 04 9. 8. 4,784 8, 197 94. 盛怒& 777 148s O 9 95 is , 9. As 867 10, 147
4. 20. A 1ጸ7 34 sa59 8,ሻ0፤ 168 4. ,095 3ፓጳ5 5,7፲0 Pass 153 208 2, 4,284 89.7 189 8s 80
929 8s 34,398 07 77ee7 108,880 1857 40
51

பாட வாரியாக மாணவர் வீதம் - 1991 பால் வாரியானது
மாவட்டம் பெண் மொத் ஆண் மொத் | மாகாணம் விஞ்ஞானம் கலை வர்த்தகம் தம் விஞ்ஞானம் கலை வர்த்தகம் தம்
கொழும்பு Ji-l . As 00.0 s As 00.0 கம்பஹா . . 4. 0. ses 7.7 S. O.0 களுத்துறை is 45s 90. 100.0 97.0 J. 00.0 Ошоєü 盛?。及 S. A. 00.0 As 8.0 A. 00.0
கண்டி 84. . 000 J. S.0 S.A. 2000 Lorrissana As 70. .7 00.0 .0 44. 7, 200.0 துவரெலிய I-4 A. 9. 00.0 嘉4.7 95. JV-4 100.0 மத்திய to. 57.0 . 00.0 90 s. At 000
akwa, A so 4. 00. 94. 2.0 SJ. 290.0 LDrtisap . 0.8 . Σ00,0 J. J. 9.0 00.0 uyuristml is so 14. 00.0 94.0 to 8.0 00.0 தெள் 57 2. 000 sis. J4. 90.5 000
un büurtarrib s. 45 J.J uolo.o 43. u. 7. Joo áðasagráð 9.0 .0 00.0 J. 95 A. Oo. 0 pairswintit 0 7. S0. 000 0 A. 2000 முல்லைத்தீவு S. s. s.s. 00.0 J.7 A. 7 000 avayafiawy 57 .7 00.0 3. As 4.4 000 avušies .7 4.B. Joe 100.0 4. As SM. 00.0
மட்டக்களப்பு 4. 9.0 00.0 9. 7. 00.0 Jy bunt Rungo 0.0 0.7 p. 00.0 5. 4. S 000 APQasntsuruoana 7 5 . 00. . .4 30, 200. கிழக்கு 7. Ji.J Bo,7 100.0 9. 4. 87.4 ፲00.0
குருநாகல் is 70.7 s.7 ፲00.0 B.S. 80.0 is 100.9 புத்தளம் 9. 3. . 00.0 97.7 4. 00.0 au Lupsio 7. Us ፲00.0 2. 47. is 00.0
அதுராதபுரம் 7.5 . 00.0 9.7 4.7 79 000 பொலன்னறுவை 8.8 100.0 4. A .8 000 வடமத்திய . . . .8. 100.0 8.0 A. 9.7 000
usya at 9. 3.4 . 100.0 . . ses too. மொனறாகலை புத 7 7. A 100.0 A SOS 90. 00.0 7. . 00.0 7. 40. 9.0 000
Gprisiadauwynt? 7. 0.4 to 00.0 sy 7.7 9. 00. Casasnysway s 4. 000 90. A0.9 3SO.) 020.60 «Fooprascopant 83 is . 100.0 9s 99. 9. 00.
பூரிலங்கா so Jo 00.0 94.4 9. J. 00.0
அட்டவணை - 13
5

Page 28
க.பொ. த. (உயர்) தெரிவு செய்யப்பட்ட பாடங்களுக்கான பெறுபேறுகள் - 1983
பாடம் தோற்றிய A B C S% F%
Lorwrań GosTRIDS
தூயகணிதம் 9376 M 1.9 2.8 9.9 26.6 霸4.7
4971 F 0.7 1.8 7.4 I9. 7.
prums 8709 M 1.6 2. 8,4 6.7 70.9 கணிதம்
4016 F 6.2 0.6 3.9 10.03 85.2
பெளதீகம் 18154 M 0.1 0.8 6. 29. 63.6
1887.2 F 0.01 0.4 2. 20.9 769
Sprafntuan 20108 M 0.4 2.2 1.5 23.l 63.8
வியல்
20569 F 0.2 1.4 10.1 23.4 64.9
தாவரவியல் 11206 M 1.1 6.2 2. 21 .Ꮺ 莎盛。3
15988 F 0.9 5.6 29 24.4 649
afavifaauoaiv || 11681 M || 0.2 2.7 8.4 22. 56.6
1665.2 F 0.1 罗.5 18.9 25.5 52.7
வர்த்தகமும் 14163 M 0.1 1. 6.7 47.2 34.9
நிதியும் 18955 F 0.02 0.4 11.8 47.9 40.5
* விஞ்ஞானப் பாடங்களுக்கான விருப்புத்தேர்வு வர்த்தக
பாடங்களுக்கான விருப்புத்தேர்வுடன் ஒப்பு நோக்குக.
அட்டவணை - 14
53

அட்டவணை - 15
*998&G喀99&&Ꭶ" ᏰᏰ.9 gjogos 20×2.Iar 6x , xs&警球g龄quș$ ugno �*001{翻&論qannu prisgs ∞∞∞qi duorsuasko googjve - -693,jos{响9iᎭᎭᏓ--喇纳gasusreo os sono sostotrrog9 &&s*蛟9asusreso o șo - --�*00100:06:DQQ、鲍Tgaelqøșşđivas go spuri QQQ碱60?? GQ购纳so sɛ给每每聆第本动静Ꮎ"38Ꮄ ᎦᎷᎦ098asesreo qsmoses 0’001. g.) II gaessoooo, ogro动9动鹃asiasreo qønnows 岭封封qoffi ușoșotas qsors,fire įgi-bio !oos
Hırianusko -- 7iso – – 6 I- -6封-Ꭴ0Ꮳasesorso souoso-os – – g2I--哈喇---ஒதரிவித இாr -- 时事---qs喻I姆增白瑜4日塔了 gro » zoo 婚:G 的ᎤᎦᎨ--响铃徽qømựssaesnym loogiurato x ışsaesne, quoșuantox ipsaesne, qu§$ uomox ış olmas no qu§§uanto .864Tz的實物經LŁ64gígitosowasqĝo
qņusæęussos qịğluošto
zņmtsog Goglŷnqjğiuoto
54

Page 29
தொழில்நுட்பக் கல்லூரி அனுமதி
கற்கைநெறி ፲፱73 1987
மொத்தம் பெண் % மொத்தம் பெண் %
தொழில்நுட்ப தேசிய 278 99 7.7 16 4. 0.
கற்கைச் சான்றிதழ் தொழில்நுட்பவியலில்
1369 75 5.5 @48巫 479 1Ꮽ 8 சான்றிதழ் வரைபடக் கலைஞர்
சான்றிதழ் 7.8s 375 479
தொழில்நுட்பத் தொழில்
தாழில்துட்பத் த As 2400 s 0. 5464 4烈 0.8
கைவினை
s 4. 7. தையல்
ss 859 மனையியல்
விவசாயம் 4 00
வர்த்தகAணக்கியல் 24 66 90.8
டிப்ளோமா
99 07 9 428 44.罗 வர்த்தகவியாபார
4J&2 3052 60. சான்றிதழ்
ஆங்கிலம் 2O7 62 99 O 82 54.?
மொத்தம் 8453 I358 49 0A 584 28.3
ஆதாரம் : தொழில்நுட்பக் கல்விப் பிரிவு உயர் கல்வி அமைச்சு,
அட்டவணை - 18

திறந்த பல்கலைக்கழக அனுமதி
கற்கைநெறி 1981 1989
m 63 3. 4.8
H - - 2089 1044 499
-- - 18S 548 2.
8 28
தேசிய கற்கை
சான்றிதழ்
1. விஞ்ஞானம் 32 88 98.7
2. கணிதம் 199 54 烈7.】
3. முகாமைத்துவம் 54. 204 7.7 7s 24 19 4. தொழில்நுட்பங்கள் 2063 27雳 19.2 தொழில்சார் கல்வி s 20,Ꮽ 74 2 A. முன்பாடசாலைக் கல்வி A. 290 92.4 84 568 97. தொழில்சார் ஆங்கிலம் | 45.7
944 54 8.7 மொத்தம் AS 1407 44.7
ஆதாரம் : திறந்த
பல்கலைக் கழகம், நாவல.
புள்ளிவிபரக் கையேடு 1984,
பல்கலைக் கழகக் கல்வி ஆணைக்குழு.
* புடவைக் கைத்தொழில் தொழில்நுட்பவியல்,
56
அட்டவணை - 17

Page 30
பல்கலைக் கழக அனுமதி
பீடம் ・・ 197s 1989
மொத்தம் பெண் % மொத்தம் பெண்
மருத்துவம் 239 584 47. 2909 .268 45.6
பல்மருத்துவம் 193 108 559 45 202 48.7 கால்நடை மருத்துவம் 108 s 49. ጰ288 88 37.8
nilalar ntub 90 100 25.6 197 468 39.
ந்திரவியல் 120 126 10.4 9055 424 9
ட்டடக்கலை 73 . 28。8 28S 07 37.5
ஞ்ஞானம் 1797 660 6.7 SS40 2144 98.7
காமைத்துவம் 889 263 29.6 554 2441 44.
ல்வி 97i. 61Ꮽ 6.
சட்டம் 144 6. 参雾.4 Ꮽ70 492 SO.7
சமூக விஞ்ஞானமும்/
மானிடவியலும்/கலை 54. 255 45.5 9643 537 5盛.烈
மொத்தம் 双雳伤48 5及5& 0.7 2978 . .267 42.5
ஆதாரம் : பல்கலைக்கழக அலுவலகம் (1944).
புள்ளிவிபரக் கையேடு திட்டமிடல், ஆராய்ச்சித்
துறை. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு - 1989.
gyulauapaw - 18
57

ᎦᏋ*ᏃᏤ ᏤᏣᏭ
go 6o
»gogo،ggs soos
3"68Ꮄ008ᎪᎬ 8Ꭶ0Ꮅ
9g* ᎭᎵff69aes go 19 || ožogs.sestgɛ9qașşuono Ꮳ0"ᎵᎵogggsogg | color81ᏛaᏃᎮᎭgog10.I£'ም?”A.69;99鹤0ᎭᏋ9#II06Ꮅ6ợɛɛ £0' goᏋᏃᎵᏭᏃ野野69“好929869°9#3Ꭽ3© II63球! ± %ᏣᎩa?00' ᏮᎵ#& IIᎯᏪᎭ83/28 8Ꮽ" ᎪᏋ966 izg.), † 26°9'IZᎵᎵ;060Ꮓ"0Ꭽ&&I09AlᎦ*ᎵᎭ勾99ᎪᎬᎩᏃ24", soto:ᎦᎵᎵ28/98 Grooß090828. || 0£”). I03 g1600"0Ꭽ0619.s.gogogioᏭᏋᏣ硝酸时*I*9*Ꭽ0ᎦIZo99/g8 ᎦᎭ*ᏭᎵ£123908 | 10° GIgᎴᏮᎭjoae0"ᎪᏋ8219919° gožogᏮᎵᏋᏃ90*Ꮛ3Ꭸ08016.gs.gợ’we Agogo的封&2&Iae | I6's II090 £9iᏭ* ᎭᎵg0g04groso909;£03Iorogo9I0IᎦᎪᏪ»ę/cs 起g、 Zgsɛ9.g. | 06’ GI!oog08ᏮᏃ"ᎦᏛsoos贺知II“ ĮgᎪ8Ꭽ&0&ᏛᎴ" ᎪᏪᎵ6468ᎦᎴcę/xɛ 89"0Ꮅ960g off9 || 20**I&Igo.s.8ᎴᎪᏪ*ᏋᏴᎵgossog„I’OssoᎵᎪᎬᏤ06I3ᎪᎬ*ᎭᎵ6ᎴᏮ9 zợ18 峨„Į x qioșuơno aerito qx qoỹuono ngorioHX穩**Hx ooșuvre) oorse) |ạirefoșønn -iestąpus4 x groșuwito aerito@impso quos uomoonogurioqimu orogogirefoș@ơi qorı###@ခးခံgဇ’soosq, sự
ராதேவிர
(6861 – 1861)
ữns@ko įrensinn isuso?@sergi-iŋ wu@@ışs
er – «asasrw-rako
58

Page 31
விஞ்ஞானக் கற்கைநெறி அனுமதி
83/84
- 86/87
கற்கைநெறி 1982 1988 1984 1985 83/84 84/85 85/86 86/87
பெளதீகம் மொத்தம் 1184 280 106 766 விஞ்ஞானம் பெண் 227 234 208 154
F 9% 1917 18.28 1960 20.0
உயிரியல் மொத்தம் 228 1384 丑346 1230 விஞ்ஞானம் பெண் 545 628 653 598
F% 44.38 47.48 48.5及 48.62
அட்டவனை - 20
எந்திரவியல் கற்கைநெறி அனுமதி 83/84 - 87/88
வருடம் பெண்கள் மொத்தம் 1 பெண்கள் | விஞ்ஞான எந்திரவியல்
வீதம் பீடங்களில் கற்கும் வீதம்
மாணவர்
தொகை
83/84 84 489 夏3,6$ 79 8.90
84/85 57 4.67 盈盛。6@ 83 7.26
85/86 75 489 IᎦ.Ꮥ4 83 9.25
86/87 72 53 4.08 752 957
87/88 73 560 ፲3,03 922 7.9
அட்டவணை 21
59

References :-
1.
CHANDRA GUNAWARDANA. 'Education and the Future of Muslim Women' Challange for Change, Profile of a Community, Muslim Women's Research and Action Forum Publication, 1990.
CHANDRA GUNAWARDANA, "Higher Education of Women"
Higher Education Review, 1984.
JAYASURIYA D.L. "Development in University Education" The growth of the University of Ceylon. 1942-65. The University of Ceylon Vol: 23 1965
KING E.M. Education of Girls and Women Investing in Development. The World Bank Report 1990, UNESCO Bulletin NO; 31
SUMANASEKARA . H.D. Measuring the Regional Variations of the Quality of life in Sri Lanka. (P27-40). Sri Lanka journal of Agrarian Studies (210)
SWARNA JAYAWEERA "Women in Education' Centre for Women's Research Publication, 1985.
TINKER -II and BARMEN I.B.M. Proceedings of the Seminar on Women in Development
60

Page 32
10.
11.
12.
13.
14.
15.
16.
Census of Ceylon Hand Books. 1971-1989.
Statistical Hand Books, U.G.C. 1971-1989.
School Performance Indices. Examination Department, Sri Lanka.
Statistical Hand Book - 1992. Planning Department, Education and Higher Education Ministry.
Open University of Sri Lanka, Statistical Hand
Books 1984-1989 - UGS
Technical Education Division Report University of Higher Education, 1987
National Youth Service Council Report, Ministry of Youth Affairs and Employment - 1989.
Education & Training in Sri Lanka. Volume 1, 2, 4, ............. Asian Development Bank Project Report Ed-CPC India 1989.
Encylopedea of Education, Sri Lanka Volume 15 - 1987.
61

திரைப்படங்களில் பெண்கள்
“ԼDց)յւյգամ) O O
- ஒரு மாற்றுத்திரைப்படத்தின்
தரிசனம்
- பவானி லோகநாதன்
திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் எனும் விட்யம் சமீபகாலமாக பெரும் சர்ச்சைக்குரிய ஒன்ருக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கதாநாயகி, மற்றும் உதிரிக்கதாபாத்திரப் பெண்களது குணநலன்களும், செய்கைகளும், அவர்கள் சந்திக்கும் முடிவுகளும் 'பெண்' என்ற பாரம்பரிய, பாலியல் அடிப்படையில் சித்தரிக்கப் படுதலேயாகும். அவர்களது நடை, உடை, பாவனைகள், பேசப்படும் வசனங்கள் யாவும் 'கலாச்சாரம்' என்னும் போர்வையின் கீழ் அதீதமாகக் கையாளப்பட்டு ஒரு தனிப்பட்ட "சினிமாக்கலாச்சாரத்தை தோற்றுவிக்கின்றன. சமீபத்தைய திரைப்படமான "மறுபடியும்" இதற்கு விதிவிலக்கு எனக் கூறலாம்.
மகேஷ் பாட் வசனமெழுதி இயக்கி, இந்தியில் வெளியிடப்பட்டு அரசு விருது பெற்ற "அர்த்” எனும் திரைப்படம் பாலுமகேந்திரா அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு "மறுபடியும்" என வெளிவந்துள்ளது.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ராமாயி, நடுத்தரக் குடும்பத்துத் தலைவி துளசி, மேல்தட்டு வர்க்கத்துச் சினிமா நடிகை ரோகிணி ஆகிய வேறுபட்ட பொருளாதார மட்டத்தைச் சேர்ந்த பெண்களது இயல்பான, இயற்கையான, நடைமுறை வாழ்க்கைப் போராட்டங்களும் இறுதியில் அவர்கள் எடுக்கும் வேறுபட்ட முடிவுகளும் இதன் கருவாக அமைந்துள்ளது.
துளசி ஒரு படித்த, நடுத்தரவர்க்கப் பெண். கணவன், வீடு என்ற சிறிய உலகத்துக்குள் தன்னைத் திருப்தியாக உட்படுத்திக் கொண்டு வாழ்பவள். இவளது கணவன் முரளிகிருஷ்ணு ஒரு "இரண்டாவது வரிசை' சினிமா இயக்குனர்; பிரபல நடிகையான ரோகிணியுடன் உறவு வைத்துக் கொண்டிருப்பவன். ரோகிணி முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு திரைநட்சத்திரம். பாரம்பரியக் குடும்ப அமைப்பு எதுவுமின்றித் தனியே வாழும் இவள் தனது மனவெழுச்சிகளைச்
62

Page 33
கட்டுப்படுத்த எண்ணி போதைமருந்துகளின் துணையை அவ்வப்போது நாடுபவள். இப்பலவீனமான நிலையில் துளசியின் கணவனைத் தனது 'பாதுகாவலனா'கச் சுவீகரிக்கிருள். அவனை விவாகரத்தும் பெற்று தன்னைத் திருமணம் செய்யுமாறு கோரு கிருள். இதற்கு ஈடாகத் துளசியின் பேரில் வீடொன்றை வாங்கி அளிக்கிருள். இது துளசிக்குத் தெரிவருகிறது. நடுத்தரக்குடும்பத்து அபிலாஷைகள், வெளியுலக அச்சம், பொருளாதாரச் சார்பு, இவற்றால் உந்தப்பட்டு,
“எனக்கு உங்களைவிட்டால் யாருமே இல்லை என்னைக் கைவிட்டுடாதீங்க”
என கணவனிடம் கெஞ்சவும் செய்கிருள். "நீ விட்டுக் கொடுத்தால் நமது எதிர்காலத்துக்கு அது நல்லது” என வெகு இயல்பாகக் கணவன் கூறுகையில் அவளது உள்மன உணர்வுகள் விழிப்படைந்து கொள்கின்றன. தனது தாம்பத்தியம் பலவீனமான, முழுக்க முழுக்கப் பொருளாதார அடிப்படையிலே அமைந்துள்ள ஒரு பந்தம் என்பது புலனகிறது. தனது வீட்டுப் பத்திரத்தைக் கிழித்தெறிந்துவிட்டு வெளியேறியவள் வேலைபார்க்கும் பெண்கள் விடுதியொன்றில் புகலிடம் தேடி, தன் சொந்தக் காலில் நிற்க முயற்சிக்கிருள்.
துளசியின் வீட்டு வேலைகளைச் செய்யும் பணிப்பெண் ராமாயி குடிகாரக் கணவனால் கொடுமைக்குள்ளாகும் ஒரு சாரசரிப் பெண். இவளுக்கும் இவளது பெண் குழந்தைக்கும் துளசியின் தோழமையும், அனுசரணையும் கிடைக்கின்றன. ராமாயியின் கணவன் துளசியின் வீடு தேடிவந்து பணம் கேட்டு அவளைத் துன்புறுத்துகையில் துளசியின் கணவன் ராமாயியையும் குழந்தையையும் வெளியேறச் சொல்கிருன். துளசி இதற்கு மறுக்கிருள்.
"அவள் புருஷன் கலாட்டா பண்ணிஞல் அதுக்கு அவ என்ன பண்ணுவா?”
என மனிதாபிமானத்துடன் கேட்டு அக்குழந்தையைப் பாடசாலையில் சேர்க்க உதவுகிருள்.
"அம்மா எம்பொண்ணு உங்கமாதிரி நல்லபடிப்புப் படிக்கனும்”
என்பது ராமாயியின் வாழ்க்கைக் குறிக்கோளாகிறது. பெண் கல்வியின் முக்கியத்துவமும் அதன்மூலம் அவர்கள் பெறக்கூடிய அறிவும், மன உறுதியும் இவ்விரு பாத்திரப் படைப்புக்கள் மூலம் தெளிவாகப் புலணுகிறது.
63

துளசியின் வெளியேற்றமும், அவள் கணவனுக்கு அளித்த விவாகரத்தும், ரோகிணியை விழிப்படைய வைக்கின்றன. தனது பாதுகாப்பற்ற நிலைமையை முரளிகிருஷ்ணு தனக்குச் சாதகமாக பயன்படுத்துவதை உணர்கிருள். முன்னொரு சமயம் துளசி டெலிபோனில்,
"என் புருஷனை எனக்குக் கொடுத்துவிடு, எனக்கு அவரைவிட்டா நாதியில்லை",
என இறைஞ் சரியதை நினைவு கூர்கிருள். துளசியின் கதி தனக்கும் ஏற்பட அதிக நாளாகாது என உணர்ந்து, தனது திருமண ஏற்பாடுகளை நிறுத்திவிடுகிருள்.
“துளசி தன் புருஷனுக்காகக் கெஞ்சிய மாதிரி என்னால் செய்யமுடியாது"
என ஆணித்தரமாகக் கூறி அவனைத் தனது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றி விடுகிருள்.
கணவனது கொடுமைகளைத் தாங்க இயலாத ராமாயி அவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைகிருள். தனது மகளுடைய எதிர்காலத்தையும், அவளது கல்விப் பொறுப்பையும் ஏற்குமாறு துளசியைக் கேட்டுக்கொள்கிருள். வேலைக்குப் போகும் பெண்ணான துளசிக்கு மெல்லிசைப் பாடகனாகிய அரவிந்தின் நட்புக்கிட்டுகிறது. புதிதாகத் தான் வளர்த்துக் கொண்டிருக்கும் சுயநம்பிக்கையின் ஒளியில் தன்னை ஒரு புதிய கோணத்தில் அவளால் காணமுடிகிறது. தனது எதிர்காலப்பாதுகாப்புக்கு மனவுறுதி, பொருளாதார சுதந்திரம் இவைகளே வழிகோலும் என்ற முடிவுக்கு வருகிறாள். அரவிந்தின் ஒரு தலைப்பட்சக் காதலை மறுத்து,
"நான் முன்பு துளசியாக இருந்து பின்னர் துளசி முரளிகிருஷ்ணாவாக மாறினேன். இனிமேல் மறுபடியும் துளசியாகவே இருக்க விரும்புகிறேன்" எனக் கூறுகிறாள். ராமாயியின் பெண்ணின் கல்விப் பொறுப்பு அவளது வாழ்வை அர்த்தம் நிறைந்ததாக மாற்றுகிறது.
துளசி, ரோகிணி, ராமாமி இம்மூன்று கதாபாத்திரங்களும் ஒரே விதமான பிரச்சினைகளை அவரவர் சமூக, பொருளாதார மனப்பாங்குகளுக்கூடாகக் கையாண்டு முடிவு தேடிக்கொள்கின்றனர். இதன் மூலம் 'பாலியல் மரபு' என்ற சட்டவரையறையைத் தாண்டி, மானுடம் என்ற எல்லையை மிதிக்கின்றனர்.
64

Page 34
காலணியின் பிரயோகம்
- பத்மா சோமகாந்தன்
அந்தப் பிஞ்சுகளிரண்டுக்கும் பசி!
மூத்த குழந்தைக்கு இரண்டு வயசு அடுத்தது ஆறுமாதத் தவ்வல். தனது வயிற்றுப் பசியையும் பொருட்படுத்தாமல் அந்தப் பாலன்களின் பசியைச் சமாளிப்பதில் அவளுக்கு எவ்வளவு வேதனைகள். ஒழுங்கான சாப்பாடு இல்லாததால் அவளின் மார்பில் சுரப்பதற்கு எதுவுமில்லை. அவள் எதிர்நோக்கும் கஷ்டங்களினால் அடிக்கடி கண்கள்தான் நீரைச்சுரக்கும்.
கஞ்சி காய்ச்சிக் குடிப்பதற்கு அரிசியே ஒரு கொத்து நாற்பத்தைந்து ரூபா என விற்கப்படுகின்ற அந்த யுத்த பூமியில் குழந்தைகளின் பால்மாவகைகள் கிடைப்பதற்கு அரிதாகி அவற்றின் விலை பனைமரத்தின் உச்சியையும் தாண்டிவிட்டன. கறுப்புச் சந்தையில் ஒரு 'பைக்கெற்’ பால்மா நானுாறு ரூபாவுக்கும் அதிகம்; அதையும் தேடிக் கண்டுபிடித்து வாங்க அலையவேண்டுமே.
வானத்தில் ஹெலிகளும் குண்டுவீச்சு விமானங்களும் வட்டமிட்டு, அவர்கள் வசித்த குடியிருப்பில், குண்டுகளை வீசி எக்காளமிட்டபோது, குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு, உடுத்தியிருந்த உடையோடு இரவோ டிரவாக பத்து மைல்களுக்கப்பாலிருந்த அவளின் ஒன்றுவிட்ட அக்கா வீட்டுக்கு ஓடிவந்து தஞ்சம் புகுந்தவள்தான்.
கையிலே பணமில்லை. உழைத்துக்கொண்டிருந்த கணவனையும் சுற்றிவளைப்பின்போது இராணுவம் கைது செய்துவிட்டது. கையிலும் காதிலும் கிடந்த நகைகள் ஒவ்வொன்ருக கடந்த மூன்று மாசங்களாக விலைபோய், கழுத்துத் தாலி மட்டும் எஞ்சியிருந்தது.
இலை குழைகளையும், ஒடியல், குரக்கன், வரகு போன்ற மறந்த, மறைத்த உணவுகளாலான கூழையும் கஞ்சியையும்

ஆக்கி அவற்றால் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்த அக்கா குடும்பத்தார், அதிலொரு பங்கை அவளுக்கு கொடுத்தனர்.
அவள் தனது பசியைப்பற்றிக் கவலைப்படவில்லை. கவலைக்குக் குழந்தைகளின் பசிதான் பூதாகாரமாய் அவளை உலுக்குகிறதே!
“துே . ங்ே . ա ...... ங்ே ய்" பிஞ்சில் ஒன்று பாலுக்கு அழுதது.
"அம்மா . பா. ப் . பா” மூத்தவளும் தனக்குப் பால்வேணுமென்று சுருதி கூட்டினாள்.
அவள் அடிவயிறு கனன்று கொதித்தது.
"ஏன்ரி கமலா . உங்கினேக்கை கடையிலை ஏதாவது பால் பைக்கெற் வந்திருக்கோ எண்டு . ஒருக்கா விசாரித்துப் பாத்தியே”
“ஓம் அக்கா . டேவிற்றிற்ரை கடையிலை கிடக்காம் 420 சொல்ருன்”
"அறுவான்கள் எரிஞ்ச வீட்டிலை புடுங்கின அறுதியென்று குழந்தையளின்ரை மாவைக்கூட பணம் குவிக்க துடிக்கிருன்கள். எங்கடை நாட்டிலை இதனால்தான் இத்தினை கொடுமை குடிகொண்டு கிடக்குது" - அக்காவின் மாமியார் சாபமிடத் துவங்கிவிட்டாள்.
"இஞ்சை பிள்ளை கமலா . உந்த அநியாயம் நடத்திருக்காவிட்டால், உந்தக் கொள்ளை லாபக்காரரிட்டை உன்னைக் கையேந்த விடுவமே? . தள தளவெண்டு
கொழுத்து கண்டு போடற நாளிலை அரக்கன்கள் குண்டைப் போட்டு அந்த அதிர்ச்சியிலை வாயிலும் வயித்திலுமாயிருந்த எங்கடை செங்காரிப் பசு துடிதுடித்துச் சாகாமல் இருந்திருந்தால் இந்தக் குழந்தைகளுக்கு மட்டுமே இன்னும் இருபது குழந்தைகளுக்கும் பால் கொடுக்க முடியுமே ..? அக்காவின் மாமா ஆத்திரத்தோடு பெருமூச்சு விட்டுவிட்டுத் தன் இயலாமையை வெளியிட்டார்.
66

Page 35
அக்கா சுள்ளிகளைத் தேடிப் பொறுக்கிவந்து அடுக்களையில் அவசர அவசரமாக தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
"கூப்பன் கடையில மா 'பக்கெட் வந்திருக்காம் மாமா, பிள்ளையளின்ரை பிறப்புச் சாட்சிப் பத்திரத்தைக்காட்டி கிராம சேவகள் அத்தாட்சிப்படுத்தினால், அத்துண்டுக்கு மா தருவாங்களாம் கட்டுப்பாட்டு விலையில்"
“விதானை யார் நல்ல மனுஷன், எங்களுக்குப் பழக்கந்தானே . அந்தப்பத்திரங்களை இருந்தால் எடு
எத்தனை தரம் கச்சேரிக்கும் வீட்டுக்குமாக நடந்து நடந்து அலைக்கழிந்துவிட்டாள். நினைக்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
குழந்தைகளுக்கோ பாலில்லை. பால் இல்லாமல் அவர்களை ஒரு நிமிடமேனும் தாக்காட்டுவது பெரும்கள்டம்.
பால்மா வாங்குவதற்கு - அத்தாட்சிப்பத்திரம் வேண்டும். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எடுக்கக் கச்சேரிக்கும் வீட்டுக்குமாக நடந்து களைத்துப் போனாள். "சீ என்ன வாழ்க்கை' என கமலாவுக்கு மனம் அலுத்துக் கொண்டது.
'கருவில் உருவான குழந்தையையே பத்து மாசத்தால் பெற்றெடுத்து விடலாம். அது பிறந்த அத்தாட்சிப்பத்திரத்தைப் பெற . pg
"குண்டு வீச்சுக்குப் பயந்து உயிரையும் குழந்தைகளையும் கையில் பிடித்தபடி, பாய்ந்து விழுந்து ஓடிவந்த போது வீட்டில் கிடந்த பிறப்புச்சாட்சிப் பத்திரங்களையும் தேடி எடுத்துக் கொண்டுதான் ஒடவேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் வரும்? -பைத்தியக்காரத்தனமான சட்டங்கள், விதிகள்.” மனிசத் தன்மையில்லாத அரசாங்கச் சட்டங்களை மனதாரச் சபித்தாள் கமலா.
67

குழந்தைகளின் அத்தாட்சிப்பத்திரம் பெற இரு மாசங்களுக்கு முன்பே கமலா விண்ணப்பத்திரம் எழுதி கச்சேரியில் நேரில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டாள்.
"இரு கிழமை கழித்து வா"
இரு கிழமைகளைத் தள்ளிவிட்டாள்.
"இன்னும் ஒரு கிழமேக்கை தபால்ல வரும் நீ வீட்டை * חו ש$)
ஒரு மாசமாகத் தபால்காரனைப் பார்த்து அவள் கண்கள் பூத்துவிட்டன.
அடிக்கடி "ஷெல்லும் வானத்தில் 'சுப்பர் சோனிக்’ விமானங்களின் உறுமல்களும்தான் கேட்டன. தபால்காரனின் மணிச்சத்தம் அந்தக்கிராமத்தில் கிலுகிலுக்கவில்லை.
அச்சமூட்டும் சூழ்நிலையையும் பொருட்படுத்தாது அவள் அந்தக் கந்தோருக்குப் போனாள். பல மைல் தூரம் நடந்ததில் களைப்பு, காலையில் வாயிலூற்றிய கஞ்சி சேமித்து அடுத்த வேளைக்காக கும்பி கொதித்தது.
கழுத்திலும் நெற்றியிலும் வழிந்த வியர்வையைப் புடவைத் தலைப்பால் ஒற்றிவிட்டாள்.
சூழ்நிலையைப் பற்றியே கவலைப்பாடத ஒரு கழுகின் கண்கள் அவள் முன்பக்க உடலின் மேற்புறத்தை மேய்ந்து கொண்டிருந்தன.
அவளைக் கண்டதும் வெற்றிலைக் காவிப்பற்கள் வெளியே
தெரிய விஷமத்தனமான சிரிப்புடன் அந்தச் சிற்றுாழியன் ஒரு இருக்கையைக் காட்டி அதில் இருக்கச் சொன்னான்.
"ஐயா! பிள்ளையள் . பால் இல்லாமல் துடிக்குதுகள் .”
“கன நாளாய்ப் போச்சு. இரு . இரு . வாற ன்" அவளின் விண்ணப்பத்தைத் தேடிச்செல்பவன் போல உள்ளே சென்ருன்.
68

Page 36
வழமைபோல கதிரைகளை நிரப்பியிருப்போரை அப்பிரிவில் காணவில்லை.
ஏதாவது சத்தியாக்க கிரகத்துக்கோ அல்லது ஊர்வலத்துக்கோ விடுப்புப் பார்க்கப் போயிருப்பார்களோ?
இல்லை, இங்கேதான் எல்லோரும் இருக்கிருேம்' என்பது போல, அருகிலிருந்த ஒய்வு அறையிலிருந்து கலீரென்ற சிரிப்பொலி மிதந்து தவழ்ந்தது.
பால வேணுமென்ற குழந்தைகள் அடம்பிடித்து அழும் ஒலி காதுகளைப் துளைப்பதுபோல கமலா துடித்தாள். இன்ருவது எப்புடியும் பிறப்புச் சாட்சிப் பத்திரங்களைப் பெறவேண்டுமென அவள் மனம் அங்கலாய்த்தது.
காலையில் கண் விழிக்கும் போதே சின்னப்பயல் வீரிட்டழுதது இன்னும் அவள் கண்களை விட்டு அகலவில்லை. புழுவாகத் துடித்த குழந்தைக்கு ஆறவைத்த மல்லித் தண்ணியைப் பருக்க அதைக் குடித்து அன்னை முகத்தையும் கன்னத்தையும் பூங்கரங்களால் தடவி நெஞ்சை வருடி விளையாடியது. தாயின் மடியில் தவழும் சுகத்தில் மல்லித்தண்ணியைத் தாயின் பாலெனச் சுவைத்தது - தம்பி சூப்பி உமிழ்வதைப் பார்த்த இரண்டுவயதுப் பிஞ்சு அவள் மடியில் விழுந்து, ஒரு பகுதியைத் தனது உரிமையாக்கியது. அவனுக்கு அந்த வெற்றுச் சுவைப்பில் பசி அடங்கவில்லை.
“ւմn ........ נם • g5 ...... Llis T ...... L ...... List .... 25ft ....' எனத்தாயின் தலைமுடியை இழுத்துக் குழப்பி அடம்பண்ணி அழுதான்.
மடியில் கிடந்த பாலகனைத் தடுக்கில் கிடத்தி அருகில் தலையணைகளை வைத்து அனைத்து பழைய சேலையால் போர்த்திவிட்டு எழுந்தாள். மூடியில்லாத பக்கீசுப் பெட்டிக்குள் கையை விட்டுத் துழாவினாள். ஹோர்லிக்ஸ் லேபல் ஒட்டிய போத்தல்கள் வெறுமையாகக் கிடந்தன. தகரப் பேணிகளை எடுத்து ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தாள். அங்கும் வெறுமையே விழித்து முழித்தது. ஒரு பேணியின் அடியில்
69

தட்டிக்கிடந்த பொட்டளவிலான மாவை சுரண்டி கவனமாகத் தாளில் தட்டிக் கொட்டினாள்.
ஒரு தேக்கரண்டி தேறியது. மலையளவு மகிழ்ச்சி அவளுக்கு
அப்பாடா! அந்தக் கொஞ்சூண்டு மாவை பிளெயின் ரியோடு கலந்தபோது அது வெள்ளை காட்டியது.
"பாலனுக்கு ந.ல்.ஸ்.ல . வெள்ளைப் பா .ப் .பா." தனது வாயை உறிஞ்சி உறிஞ்சி அந்தத் தேநீரைப் பாலெனச் 'குக் காட்டிக் குழந்தை நம்பும்படி நடித்தாள்.
பாலனின் உதடுகள் மாலையில் முகையவிழும் மல்லிகையாக விரிந்து பொக்கைச் சிரிப்பாகப் பொலிந்தபோது மேல் முரசில் இருந்த இரு சிறு பற்கள் முத்தாக ஒளிர்ந்தன.
அம்மாவின் அணைப்பில் பால் பருகும் மகிழ்வில் பாலன் துள்ளித் துள்ளி மகிழ்ந்தான்.
அவள் கண்கள் துளிர்த்துக் கசித்தன. “இன்று எப்படியும் பிறப்புச்சாட்சிப் பத்திரம் எடுக்கவே வேண்டும்"
உள்ளே போன அந்தச் சிற்றுாழியன் இன்னும் வெளியே வரவில்லை.
கடதாசிக் கூட்டத்திலோ - கரம்போட்டிலோ- புதினப் பத்திரிகைகளிலே - அப்படி உள்ளே அவர்கள் மூழ்கிக் கிடந்தார்கள்.
தேநீர்க் கோப்பைகள் உறிஞ்சப்படும் சத்தம். "என்ன அன்ரன், ரீக்கு இண்டைக்குப் பால் காணுதுகாணும். ஏன் சொட்டுருய் . அகதிமுகாம்களுக்குக் குடுக்க எண்டு பால் மா நேற்றுத்தானே வந்து நிறைஞ்சு கிடக்கு" -
இஞ்சே அன்ரன், இநதர் "ர்ேன்ரை கப்பைக் கொண்டே கொஞ்சம் சீனி போட்டுக் கொண்டா இனிப்புப் காணுது 70

Page 37
"சரி சரி கெதியாய்க் குடியுங்கோ சேர். பெரியவர் கண்டால் துலைஞ்சம் . அந்தப் பெட்டையும் வந்து கன நேரமாய் காத்துக்கொண்டிருக்கு. அதுக்கு வீட்டிலை வேலையும் இல்லைப் போல சேர்"
"ஆர் காணும் அது - பெட்டை?”
அது தான் நீங்கள் சொல்லுவியள் சேர் சுதியான குட்டி எண்டு . அந்தச் சிவப்பி, மெல்லியவள், 'மான்குட்டிக் கண்‘ எண்டுவியல் . பேத் சேட்டிவிக்கற்றுக்கெண்டு அடிக்கடி வரும் . அது இண்டைக்கும் வந்திருக்கு சேர்.”
"ஓ அந்த சுவீற்றியோ! . அவளின்ரை பேத் சேட்டிவிக்கற் எல்லாம் சரி காணும் . அவள் என்ரை லைனிலை விழுமட்டும் அலைக்கழிக்கத்தான் வேணும். அவளின்ரை புரியனையும் ஆமி பிடிச்சுக்கொண்டு போட்டான்கள் தானே! பாவம், தனிய . இண்டைக்கு ட்றை' பண்ணிப் பாப்பம். ஆர் கேட்கப் போகினம். ?
"அஹ்ஹஹ்ஹா . ஒஹ்ஹொஹ்ஹோ? ஓங்காரச் சிரிப்பொலிகள்.
அடுத்த அறையிலிருந்து வந்த சம்பாஷணைகளும் சிரிப்புகளும் அவள் செவிகளில் ஷெல்லாக வெடித்து
ஒலித்தன.
"அடப் பாவிகளா? மக்கள் சொத்தில் சதை வளர்ப்பது மட்டுமல்லாமல், மக்களையே உங்கள் சதைப்பசிக்கும் மேயப் பார்க்கிறீர்களா?"
அவள் உள்ளம் கனன்று எரிந்தது. உதடுகளைக் கடித்து எச்சிலால் நனைத்துத் தணித்தாள்.
"இண்டைக்கு எப்படியும் அத்தாட்சிப் பத்திரங்களை எடுக்கவேணும்" -அவள் மனம் உறுதியாக இறுகியது.
வெற்றுக் கதிரைகளை அவர்கள் வந்து நிரப்பியபோது கடிகாரம் பதினொரு மணியை நிறைவு செய்து கட்டியங் கூறியது.
71

அவளுக்கு முன்னாலிருந்த மேசையின் எதிர்புறமிருந்த கதிரையில் வந்து உட்கார்ந்தவர், "ஓ கமலாவா . கன நாள் இந்தப் பக்கம் காணேல்லை . வீட்டிலை வேலை கடுமைபோல . நல்லா - வாடிப்போனாய் . எனக்கும் இங்கை சரியான வேலையப்பா.களைச்சிருக்கிருய் . கூல்றிங்ஸ் ஏதாச்சும்
எடுப்பிக்கட்டே? "அவரின் வரவேற்பு புதிதாக இருந்தது.
கடுகடுப்பான குரலுக்குப் பதிலாக அவர் குரலில் "புதிய இரக்கம் தொனித்தது.
அவளைத் தனது லைனில் விழுத்தவேண்டும் என்பது அவர் நோக்கம்.
"அப்பப்பா . என்ன வெய்யில்? ஃபான் இல்லாமல் வேத்துக் கொட்டுது?" - கண்களால் அவளின் மார்பை மேய்ந்தபடி கதிரையில் நன்கு சாய்ந்தபடி, மேசையின் கீழ்ால் கால்களை முன்னே நீட்டினான். அவளின் கால்களை அந்தப் பாதங்கள் நக்கின.
"இண்  ைடக் குப் பத் த ரங் களை எப் படியும் எடுக்கவேண்டும்" என்ற உணர்வு அவளை எச்சரித்தது.
கால்களால் அவருக்கு உதைப்பது போல, நிலத்தில் உதைத்துப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். தாவணியை இழுத்து கழுத்தைச் சுற்றிப் போர்த்திக் கொண்டாள்.
"நிரப்பிய துண்டு தந்து இரண்டு மாதமாகுது. இன்னும் சேட்டுவிக்கேற் ஒன்றும் வரவேயில்லையே . " அவள் கேட்டாள்.
"ஒ, ரெண்டு மாசமா? . விடாயாயிருக்குமே, வீட்டுப் பக்கம் ஆரும் இருக்கினமே. . நான் இரவைக்குக் கொண்டு வந்து தாறன் . " - அந்த அகட விகடமான கொச்சைப் பேச்சுக்கும் அவரின் எண்ணத்துக்கும் கன்னத்தில் ஓங்கி அவருக்கு இரண்டு அறை அறையவேண்டுமென மனம்மட்டுமல்ல அவளது கரங்களும் துடித்தன.
72

Page 38
"ஏழை எளியதுகள், அகதிச் சனங்கள், . பசியால் துவஞம் குழந்தைகள் படும் கஷ்டம் உங்களுக்குத் தெரியாது. உட்கார்ந்த இடத்தில் மாசச்சம்பளம் வாங்கிற உங்களுக்கு மனச்சாட்சியாவது இருக்கவேண்டும். எத்தனை முறை - அலைஞ்சிட்டான். செமியாப்பாட்டில் . புளிச்சல் ஏவறை - விட்டுக்கொண்டு செல்லம் கொஞ்சிறியளே .? அவள் எரிமலையாக குமுறினாள்.
அவர் அசைந்து கொடுக்கவில்லை. "எங்கடை வேலையும்
- கஷ்டமும் - எங்களுக்குத் தெரியும். . நீ சொல்லித் தரவேண்டாம் . போ . நாங்கள் அதை அனுப்புகிறபோது பெற்றுக்கொள் . போ . போ ..." சட்டைக்கொலரைத்
தூக்கிவிட்டுக் கொண்டு அவர் கொக்கரித்தார்.
சிடு சிடுவென்று அவள் மேலே படியேறிப் போனதை அவர் சற்றுமே எதிர்பார்க்கவில்லை.
அந்த அலுவலக மேலதிகாரியின் கடமையுணர்வும் நேர்மையும் பொதுமக்களுக்கு உதவுகின்ற மனிதநேயமும் பற்றி அவள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிருள்.
கதவைத் திறந்துகொண்டு வந்து கண்ணகிபோலத் தன் முன் நிற்கும் அப்பெண்ணைக் கண்டு அவர் ஒரு கணம் திகைத்துப்போனார். யாருமே அவரது அறைக்குள் அப்படி வந்ததில்லை.
அவள் நடந்தவையனைத்தையும் அவர்முன் எடுத்துக் கூறினாள். அவள் வார்த்தைகளில் அவருக்கு நம்பிக்கை பிறந்தது.
மேசை மணியை ஒலித்தார். வந்த சிற்றுாழியனிடம் சம்பந்தப்பட்ட அலுவலரைக் கோவைகள் சகிதம் வருமாறு கட்டளையிட்டார்.
"ஏன் மிஸ்டர், இந்த அப்ளிகேசனை டிஸ்போஸ் செய்ய இவ்வளவு கணக்கம்?" - மேலதிகாரி பொய் மிடுக்கோடு நின்ற அந்த உத்தியோகத்தரைப் பார்த்து உறுமிருர்.
73

"இல்லை சேர் . சரியான டேற்றை பதிவுக் கொப்பியிலை ட்ரேஸ் பண்ணவேண்டியிருந்தது. நேற்றுத்தான் அந்த றெஜிஸ்ரரைத் தேடி எடுத்தம். இன்று போஸ்ட் பண்ண றெடி. இதோ! ." - அரச நிர்வாக விதிமுறைகளில் நொண்டிச்சாட்டுக்குக்கென எத்தனை ஒட்டைகள்,
அதை அவள் வாங்கிக் கொண்டு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டாள்.
கீழே இறங்கி அந்த அலுவல் பிரிவைக் கடக்கும் போது அந்தப் பிரிவிலிருந்து வந்த குரல்கள் அவள் செவிகளில் தெளிவாக விழுந்தன.
“தேவடியாள், நெஞ்சைத் திறந்துகாட்டி கிழவனை மயக்கிப் போட்டாள் . pp.
அந்த அத்தாட்சிப் பத்திரம் அவளது வயிற்றில் பாலை வார்த்தது. இரண்டு பிஞ்சுகளும் பாலைச் சப்பைக்கொட்டில் சுவைத்துக் குடிக்கும் காட்சியில் மூழ்கியவளாய் விடுவிடென நடந்தாள் கமலா.
சுருண்டு நெளிந்து காற்றின் வீச்சுக்கு அநாயாசமாகத் தவழும் அவளது குட்டை முடிகளை இழுத்து இறுக்கிப் போடப்பட்ட கொண்டையும், கடைந்தெடுத்தது போன்ற உடலும் பின்புறத்துக்கு எழிலூட்டின.
“u rrit ..... குலுக்கிக் கொண்டு போருள் . மான்குட்டி போல . 妙针
"என்ன சுவீற்! - சுவீற்றி!" அவளை நோக்கி குரல் வீச்சுக்கள். ஒரு கணம் தரித்து நின்று திரும்பிப் பார்த்தாள்.
அவளரின் கோ ப நெருப்பு தம்மைச் சுட்டு ப் பொசுக்கிவிடுமோ என்ற பயத்தில் குரலெழுப்பிய அத்தனை தலைகளும் குட்டிச் சுவருக்குக் கீழே பதுங்கிக் கொண்டன.
74

Page 39
சிறிது தூரம் அவள் காலடி எடுத்து வைத்திருப்பாள். வலக்கால் செருப்பு காலை உறுத்தியது.
மீண்டும் அக்கட்டிடத்திலிருந்து குரல்கள் “சுவீற்றீ . ..... சுவீற்றீ கைகளால் முத்தங்கள் அவளுக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவள் குனிந்து காலைக்கடித்த செருப்பைக் கையில் எடுத்தாள்; அடுத்த செருப்பையும் கழற்றினாள்.
நூல் நிலையம்
எமது நிறுவனத்தில் ஒரு நூல்நிலையம் உண்டு. இங்கே சமூகவிஞ்ஞானம் பற்றிய நூல்கள், சிறுகதைகள், சிங்கள, ஆங்கில, தமிழ் ஆகிய மொழிகளிலான சமகால நாவல்கள், சஞ்சிகைகள், செய்திப் பத்திரிகைகள் ஆகியன உள்ளன. பெண்கள் சம்பந்தமான சஞ்சிகைகள், சமகாலத்தகவல்கள் அடங்கிய வெளியீடுகளையும் எமது நிறுவனம் தருவிக்கின்றது. அனைவரும் பார்வையிட் டு பயன் பெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகவல்கள் பிரதிகளைப் பெறும் வசதிகளும் உள. கல்விமான்களும், ஆய்வாளர்களும் மற்றும் ஏனையவர்களும் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு நூல்நிலையம் வார நாட்களில் மு. ப. 9.00 பி, ப. 4.00 மணிவரை திறந்திருக்கும். மேலும் எமது நிறுவனத்தில் தொலைகாட்சிகளையும், சினிமாக்காட்சிகளையும் பார்ப்பதற் கும், பதிவு செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
秀

தொழிலாளவர்க்கத்தின் அசமத்துவ பால் நிலைப்பாடு
தேயிலை தோட்டப்பெண்களின் அனுபவங்கள்
- மலர்மதி -
ண் மேலாதிக்க உலகில் பெண்களின் நிலை இன்னும் தாழ்ந்துதான் இருக்கின்றது. மேலைத்தேய நாடுகள் கீழைத்தேய நாடுகள் என்ற பாகுபாடு காணப்பட்டாலும் இம்மேலாதிக்க மனோபாவத்தில் பெருமளவு வேறுபாடு இல்லை. நாடுகளிற்கு நாடுகள் பெண்களை அடக்கும் செயற்பாடுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே யொழியப் பெண்ணின் இரண்டாந்தர நிலை மாறுவதாக இல்லை. இந்நிலை மாறுவதற்கே இன்று பெண்நிலைவாதிகள் முற்படுகின்றனர்.
இலங்கையிலும் சிராம, நகர, பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த பெண்கள் இம்மேலாதிக்க மனோபாவத்தால் பாதிக்கப்டுகின்றனர். இவர்களிலும் குறிப்பிடத்தக்களவில் பாதிக்கப் படுபவர்கள் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்தவர்களே. இலங்கையில் பெண்களின் நிலையை நோக்குகையில் வாழ்க்கைத்தரம் குறைந்தவர்களாக இவர்களே காணப்படுகின்றனர். சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் இவர்களைப் பாதிப்பதில் முன்னிற்கின்றன.
இந்நிலையில் எமது “பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்” (WERC) பெருந்தோட்டத்துறைப் பெண்களின் இன்றைய நிலை பற்றிய ஒரு ஆய்வினைச் செய்வதற்கு முன் வந்தபோது இதற்கான ஆதரவு எப்படியிருக்குமோ என ஐயப் பாடுடையதாகவே இருந்தது. ஆனால் பெருந்தோட்டதுறைப் பெண்கள் இதற்களித்த ஆதரவும் தமது நிலை பற்றியும், தாம் வேண்டுவன பற்றியும் தெளிவாக எடுத்துரைத்த தன்மையும் "பெண்நிலைவாதக் கருத்துக்களும் பெருந்தோட்டத்துறைப் பெண்களது இன்றைய நிலையும்" என்ற கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த உதவின.
76

Page 40
இக் கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பெருந்' தோட்டங்களைச் சேர்ந்த முப்பது பெண்கள் பங்குபற்றினர். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்து கலந்து கொண்ட இப்பெண்களுக்கு தங்குமிடவசதியையும் உணவுவசதியையும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் செய்து கொடுத்ததோடு போக்குவரத்துச் செலவையும் பொறுப்பேற்றுக் கொண்டது. இவ்வாறான வசதிகள் பெண்களை ஒரு சுமுகமான சூழ்நிலைக்குக் கொண்டு வந்ததால் எண்ணங்களை மனம்விட்டு வெளிப்படுத் துவதற்கும், புதிய கருத்துக் களையோ, விவாதத்துக்குரிய கருத்துக்களையோ மனக்கலக்கமின்றி விவாதிக்கவும் வழிவகுத்தது.
கருத்தரங்கின் கருப்பொருளாகப் பெண்நிலைவாதம், பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள், பெருந்தோட்டத்துறை பெண்களின் இன்றைய நிலை, எதிர்நோக்குகின்ற மாற்றங்கள் என்பன பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும் பங்குபற்றிய பெண்களின் அபிப்பிராயமும் பெறப்பட்டது. கருத்தரங்கைத் தொடர்ந்து மேலதிக விபரங்களைப் பெற மீண்டும் பெருந்தோட்டத்துறைப் பெண்களைச் சந்திப்பதற்கு பலாங்கொடவிலிருக்கும் ஒரு பெருந்தோட்டத்திற்கு WERC இனர் சென்று அங்கும் பல விபரங்களைப் பெற்றுக் கொண்டனர்.
கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியோர் மிகத் தெளிவாகவும் இலகுவகாவும் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை பெருந்தோட்டதுறை பெண்களால் வரவேற்கப்பட்டது. இதுவரை தாம் அறிந்திராத பல புதிய விடயங்களைத் தாம் அறிந்து கொள்வதற்கு இக்கருத்தரங்கு உதவியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இக்கருத்தரங்கின் மூலம் பெண்கள் தமது ஆளுமையை வளர்த்தெடுக்கவும், விடுதலையை வென்றெடுக்கவும் தடையாக நிற்கும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றை எவ்வாறு தாண்டிப் பெண்கள் தம்மை வளர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றிக் கருத்துக்கள் பரிமாறப்பட்டதோடு, கல்வி கற்றுவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளம்பெண்களுக்கு தொழிற்
77

பயற்ச கொடுக்கவும் டீபண்கள் கல்வ ஆய்வு நறுவனம் முன்வந்துள்ளது.
ஆனால் பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரை இது 'யானைப் பசிக்குச் சோளப் பொரி' என்பது போன்ற நிலையைக் கருத்திலெடுத்து அரசும், ஏனைய அரசசார்ப்பற்ற நிறுவனங்களும் அதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை இன்னும் முன்னெடுத்துச் செல்லலாம்.
பெருந்தோட்டத்துறை பெண்களது வாழ்க்கைத்தரம் உயர்வடையவும், பெண்களின் இரண்டாந்தர நிலை மாற்றமடையவும் உழைப்பதற்கும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மரபுகளும் விழுமியங்களும் தமது காலடிகளை அழுத்தமாகப் பதிந்துள்ள ஒரு சமுதாயத்தில் மாற்றம் என்பது மாமலையைப் புரட்டுவதற்கு ஒப்பானது. அதிலும் குறிப்பாகச் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மட்டும் மாற்றம் வேண்டுவது நினைத்தே பார்க்க முடியாதது. சகலதுறைகளிலும் அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே பெண்களின் நிலை இரண்டாந்தரமாக இருக்கையில் அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டின் புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரிவினராகிய பெண்களது நிலையோ சொல்லுந்தரமன்று. நூற்றைம்பது ஆண்டுகளாகச் சொந்தத்தாய்நாடு எதுவெனத் தீர்மனிக்கப்படாமல் எங்கிருந்து வந்தார்களோ அங்கே அகதிகளாகவும் வந்தேறிய நாட்டில் நாடற்றவர்களாகவும் உள்ளவர்களின் நிலை பரிதாபகரமானதுதான். இம் மக்கள் தம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்குப் போராட வேண்டிய சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் இன்னும் மாறாத நிலையில் இச்சமுதாயப் பெண்கள் போராடவேண்டிய எ தாரிக ளோ இ ன் னும் பல வாக இரு க்கன் றன. இவையாவற்றையும் எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்திப் போராடுவதற்குப் பெருந்தோட்டத்துறைப் பெண்களிடம் வலிமையுள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
பெருந்தோட்டத்துறைப் பெண் எந்தவிதத்திலும் உலகிலுள்ள ஏனைய பெண்களைவிட மாறுபட்டவளல்ல.
78

Page 41
அவளும் மத, சமூக அடக்குமுறைகளை எதிர்கொள்வதில் எல்லோரையும் போலவே துன்பப்படுகிறாள். ஆனால் அத்துன்பங்கள் அவள் சார்ந்த சமூகத்தில் மத பாரம்பரியக் கலாச்சாரத்தில் சிறப்பானதாகக் கூறப்பட்டிருக்கையில் அவளால் அதை எதிர்த்துப் போராட முடிவதில்லை. தன் துன்பத்துக்குத் தீர்வு தேவையென உணர்ந்தாலும் மரபுகளும் விழுமியங்களும் அவளைக் கட்டுப்படுத்துகையில் வாய்மூடி மெளனியாக இருக்கவே அவள் நிர்பந்திக்கப்படுகிறாள். மாற்றங்களை யாராவது பெற்றுத்தரு வார்களா என அங்கலாய்க்கிறாள். தம்மை அடிமைப்படுத்தும் சகல அம்சங்களையும் ஏனைய பெண்களைப் போலவே அவள் உணர்ந்திருந்தாலும் அவளை வழிநடத்திச் செல்லவோ அல்லது அதற்கான சரியான வழியை ஆற்றுப்படுத்தவோ யாரோ ஒருவர் தேவையாயிருக்கிறது. தன்னை வழிநடத்தும் ஒரு வரைக் கண்டுபிடிப்பதே இன்றைய தலையாய பிரச்சினையாக இருக்கிறது அவளுக்கு.
தனிமனிதனுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கே போராடவேண்டிய நிலையில் பெருந்தோட்டத்துறை மக்கள் காணப்படுகின்றர். பெண் தனது விடுதலையை வேண்டித் தன்னளவில் மட்டும் போராட முடியாது. அவள் சார்ந்த குடும்பத்தினருக்காகவும் அவள் போராட வேண்டியுள்ளது. உணவு, உறையுள், உடை என்பனவே சரியாகக் கிடைக்காத நிலையில் பெண்ணும் சரி ஆணும் சரி முதலில் அவற்றைப் பெறவே தமது சக்தியைச் செலவிடுவர். இதனால் அவர்களது போராட்ட காலம் மேலும் பின் நோக்கித் தள்ளப்படுகிறது.
உணவும் பால்நிலை அடிப்படையில் பகிரப்படுதல்
பெருந்தோட்டத்துறையின் மக்களைப் பொறுத்தவரையில் ஆண், பெண், முதியோர், குழந்தைகள் என்ற வேறுபாடின்றி அனைவரும் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை உணவு பற்றியதாகும் . காலை , மதிய உணவாகப் மிகப் பெரும்பான்மையான குடும்பங்களில் ரொட்டியும் சம்பலுமே காணப்படுகின்றது. வேலைக்குச் செல்லும் கணவன், பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள், குழந்தைகள் *ாப்பகத்திற்குக் கூட்டிச்செல்ல வேண்டிய குழந்தை என அனைவரும் செல்வதற்கு முன்னும், தான் "பிரட்டுக்களத்திற்குப்
7ς

போவதற்கு முன்னும் பெண் இருவேளை உணவையுஞ் சமைக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறாள். வாட்டுங்குளிரில், புகைமண்டிய சமையறையில் கண்ணைக் கரிக்க ரொட்டி சுடுவதே அவளுக்குக் கடினமான காரியம். எழுந்தவுடன் அழும் குழந்தையைச் சமாதானப்படுத்துவதா, நேரஞ்சென்று எழுந்த அவசரத்தில் வேலைக்கு விரைய வேண்டிய கணவனது தேவைகளைக் கவனிப்பதா என்பதே பெரிய பிரச்சினையாக இருக்கின்ற நிலையில் ரொட்டியைத் தவிர வேறு உணவு என்பது எண்ணிப்பார்க்கவே முடியாத காரியம். அவ்வாறின்றி அனுசரணையாகத் தாய்க்கு உதவி செய்யும் பிள்ளைகளும் கணவனும் அமைந்து விட்டாலும் கூட அவளால் ரொட்டி மட்டுந்தான் இருவேளை உணவாகவும் சமைக்கமுடிகிறது. ஏனிந்த நிலைமை? நேரம் இருந்தாலும் போஷாக்கான உணவைச் சமைப்பதற்கு அவர்களது பொருளாதார நிலை இடமளிப்பதில்லை. குடும்பத்தில் இருவர் அல்லது மூவர் உழைத்தாலேயே மூன்றுவேளை உணவை ஒரளவேனும் பெறக்கூடிய பொருளாதார நிலையை அடையக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில் ரொட்டி தவிர்ந்த ஏனைய உணவுகளின் செலவு கூடியதாக இருக்கின்றது. இரவு உணவு சோறும் ஒன்றோ இரண்டோ கறிகளையும் கொண்டதாக அமைகின்றது.
பெண்களைப் பொறுத்தவரையில் குடும்பத்தினர் வயிறு நிறைய உணவு படைப்பதே முக்கிய நோக்கமாகவுள்ளது. நிறையுணவு என்பது பற்றிக் கேள்விப்பட்டதில்லை. அவ்வாறு கேள்விப்பட்டாலும் அவற்றைப் பெறுவதில் அவள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியவளாக இருக்கிறாள் வீட்டுக்குத் தேவையான அனைத்துப்பொருட்களையும் பெறுவதற்கு நகரப் பெண்களைப் போல அவளுக்கு வசதிகள் தோட்டத்தில் இல்லை. மாதம் ஒருமுறையோ இருமுறையோ தோட்டத்திற்கு அருகிலுள்ள நகரத்திற்குச் சென்றே அவள் உணவுப் பொருள் உள்ளிட்ட சகல பொருள்களையும் பெறகூடியதாகவுள்ளது. தோட்டத்திலிருந்து அண்மைய நகரத்திற்குச் செல்வதற்குப் பெரும்பாலான தோட்டங்களில் போக்குவரத்து வசதி குறைவு. பல மணி நேரம் வாகனத்திற்காகத் காத்து நிற்பதிலேயே நாளின் பெரும்பகுதி வீணாகி வருகிறது. அவ்வாறு வாகனம் கிடைத்தும் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்தலும் நீண்டகாலத்திற்குப்
80

Page 42
பழுதடையாத உணவுப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கே முதலிடமளிக்கிறாள். அவளிடம் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதற்கான குளிர்சாதனப்பெட்டிதான் இல்லையே. அப்படி ஒரு குளிர்சாதனபெட்டி கிடைத்தாலும் அதை இயக்குவதற்கான மின்சாரத்தை எந்தக் கடையில் கொள்வனவு செய்வது?
பெரும்பாலும் சம்பளம் கிடைத்த தினங்களிலேயே நகரத்திற்குச் சென்று பொருட்கள் கொள்வனவு செய்வது வழக்கமாயிருக்கிறது. அவ்வாறு செல்லும் நாட்களில் கொள்வனவு செய்யக்கூடிய அனைத்துப் பொருள்களையும் கொள்வனவு செய்வதிலேயே கவனஞ்செலுத்துகின்ருளே ஒழிய போஷாக்கினையும் அதனை நாளாந்தம் பெறுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதிலும் போதியகவனஞ் செலுத்தப் படுவதில்லை. சம்பளம் கிடைக்கும் தினம்வரை ரொட்டியையும் ஒரு கறியுடன் சோறையும் உண்டு சம்பள தினம் அன்று மரத்துக்கிடந்த நாக்கிற்கு தகரத்திலடைத்த மீனும், இறைச்சியும், கரு வாடும், சோயாமீற்றும் என விதம் விதமாகப் படைக்கின்றனர். ஒரேநாளில் இவ்வாறு உண்பதால் எதுவிதப் பிரயோசனமும் இல்லையென்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அதைப் புரிய வைப்பதிலும் எவரும் நாட்டங் கொள்ளவில்லை. சம்பளப் பணமும் ஒரு சில தினங்களில் கரைந்துவிட மீண்டும் 'பழைய குருடி கதவைத் திற கதைதான,
இப் பரிர ச்சினைகள் பொதுவாக ஆண் பெண் வேறுபாடின்றிக் காணப்பட்டாலும் இவை தவிர மேலும் ஒரு பிரச்சினையைப் பெண் தனியே எதிர்நோக்குகிறாள். உணவு பங்கிடுவது என்பதுதான் அப்பிரச்சினை. வீட்டில் ஆண்கள் உணவு உண்பதற்கு முன்பு பெண்கள் எவ்வளவு பசித்தாலும் உணவு உண்பது என்பது ஒரு மரபை மீறிய செயலாகக் கீழேத்தேயப் பண்பாட்டில் காணப்படுகின்றது. போதும் போதாததான உணவைக் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் பங்கிட்டுவிட்டு எஞ்சினால் உணவையும் எஞ்சாவிட்டால் தேயிலைச் சாயத்தையும் குடித்துவிட்டுப் பெண் மலைக்குச் செல்கின்றாள். இரவும் இதே நிலை. பசித்தாலும் தான் முதலில் உண்ணாது கணவன் குழந்தைகளுக்குப் பரிமாறிவிட்டு எஞ்சியதை உண்டு தன்வயிறை அரைகுறையாக நிரப்பிக் கொள்கிறாள்.
8.

விடிந்தது முதல் இரவு வரை ஓய்வில்லாத வேலையும் போஷாக்கற்ற அரைவயிற்று உணவும் பெண்ணைப் பலவீனமாக்குகிறது. நோய்எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றது. வலுவில்லாத எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதற்கு இது துணையாகிறது. இலங்கையின் வாழ்க்கைத்தரம் பற்றிய புள்ளிவிபரங்களின்படி நகர, கிராமப்புறப் பெண்களை விட பெருந்தோட்டத்துறைப் பெண்களே குறைந்த வயதில் மரணமடைபவர்களாகவும், கர்ப்பிணித்தாய்மார் மரணம், சிசு மரணம் என்பனவற்றில் அதிகளவு உயர்ச்சியைக் காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் பின்தங்கியிருப்பதில் இதிலாவது உயர்வைக் காட்டுவோம் என நினைத்தார்களோ தெரியவில்லை சம்பந்தப்பட்டவர்கள்.
இல்லம் இல்லாத இல்லக்கிழத்தியர்
உணவுப் பிரச்சினை ஒருபுறமிருக்க, அதைவிடப் பெரும்பிரச்சினையாக நூற்றாண்டு காலம் கடந்தும் மாறாத "லயன்கள்” பெருந்தோட்டத்துறையில் காணப்படுகின்றன. மாக்களைக் கட்டிவைக்கக் கட்டப்பட்ட லயத்தில் மக்கள் மாக்களாகக் கருதப்பட்டு ஆரம்பகாலத்தில் குடியமர்த்தப் பட்டனர். ஆனால் அந்தநிலை இருபத்தோராம் நூற்றாண்டை அண்மித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலும் இன்னும் மாறவில்லை. தலையைத் தொடும் கூரை, பரப்பளவு குறைவான அறை சமையலறை என்ற பெயரில் புகைபோக்கியும் இல்லாத இடம், இதுதான் பெருந்தோட்டத்துறை மக்களது வீடு. இயற்கைக் கடன்களைக் கழிக்கத் தனியான கழிப்பிட வசதிகள் இல்லை. இருப்பதும் போதுமானதாக இல்லை. ஒருவர் வாழ்வதற்கே போதுமான அறையில் ஒரு குடும்பம் - ஆறு தொடக்கம் பத்து அங்கத்தவர்களைக் கூடக் கொண்டிருக்கும் வாழ்வதென்றால் விந்தைதான். சமையலறைப் புகை முழுவதும் வெளிச் செல் ல வழயரி லி லா மல் வீட் டி னுள் சுற்றிக்கொண்டிருக்கும். சூரிய வெளிச்சமும் உள்வருவதைத் தடைசெய்யும் பதிவானகூரை. இவையெல்லாம் எக்காலமும் இம்மக்களது வாழ்க்கை ஒளியறியாத வாழ்க்க்ையென்பதைத் தெளிவாக்கும் அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. தன் வீட்டுப் பிரச்சினைக்கே தீர்வு காணமுடியாத நிலையில் தவிக்கையில் அயல்வீட்டுப் பிரச்சினையும் விரும்பியோ விரும்பாமலோ அறியக்கூடியதாக இருக்கிறது. சுவரெனும்
82

Page 43
தடுப்பு பார்வையை மறைத்தாலும் அயல்வீட்டுச் சத்தங்கள் காதில் விழாமலிருக்கக் காதொன்றும் செவிடு இல்லையே; அல்லது அயல்வீடுதான் அரைமைல் தொலைவில் உள்ளதா? பொது ச் சுவர் எ ல் லாவீட் டு ப் பரி ர ச் சரினை யும் பொதுப்பிரச்சினையாக்குகிறது.
ஒரு அறையே எல்லாவற்றுக்கும் பொதுவறையாகின்றது. வரவேற்பறை, படுக்கையறை, அணியறை என எல்லாம் ஒன்றே. ஒவ்வொரு வரும் தத்தமது அந்தரங்கத்தைப் பேணுவதென்பது முடியாத காரியம். வயதுவந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் என எல்லோரும் ஒரேயறையினிலேயே வசிக்கின்றனர். இதனால் பெண்கள் தான் மிகுந்த தர்மசங்கடத்துக்குள்ளாகின்றனர்.
மேலும் குடும்ப உறவும் சீர் குலைகின்றது. பொழுதெல்லாம் உழைத்துப் புகலிடமாக வீட்டை நாடிவருவதே வெறுப்பைத்தருகின்றது. ஆண்கள் வந்தவுடன் மீண்டும் வெளியே சென்று விடுகின்றனர். நண்பர்களோடு வெளியுலக நடப்புகளைக் கதைத்துக் கொண்டு காலம் போக்கிவிடுகின்றனர். ஆனால் பெண்ணோ வீடு திரும்பியதும் நீர் சேகரிப்பதும், விறகு சேகரிப்பதும், சமையல் செய்வதும் போன்ற இன்னோரன்ன பலகடமைகள் அவளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. வீடும் அவளுக்கு ஓய்வைத் தருவதில்லை. உறங்குவதற்கு மட்டுமே, வீடு திரும்பும் கணவனும், களைத்து உறங்கிவிட்ட குழந்தைகளும், எப்போது துரங்கச் செல்வோம் என ஆவலுடன் காத்திருக்கும் மனைவியும் ஆறஅமரத் தம் குடும்பத்தின் சுகதுக்கங்களைக் கவனிக்க நேரமில்லாமல் குடும்ப உறவு சீர்குலைகிறது. புரிந்துணர்வு இல்லாமல் பெண் மேலும் மேலும் அல்லல்படுகின்ற நிலையே நீடிக்கின்றது. கூரை உயர்ந்து வீட்டின் பரப்பு என்று அதிகரிக்கின்றதோ அன்றே மலையகப் பெண்ணின் வாழ்க்கைத்தரத்திலும் ஒரு மாற்றத்தை எதிர்பாார்க்கக்கூடியதாக இருக்கும்.
2 -ᎶᎼᎧᎿ --
பெருந்தோட்டத் துறையைப் பொறுத் தவரையில்
இலங்கையின் மலையகப்பிரதேசத்தில் அமைந்துள்ளதால்
அதிகூடிய வெப்பநிலை வீழ்ச்சியையுடையதாக விளங்குகின்றது.
வாட்டும் குளிரில் அதிகாலையில் எழுந்து கொழுந்தெடுக்கச்
83

செல்லும் பெண்ணும் சரி, "கவ்வாத்து மலைக்குச் செல்லும் அவள் கணவனும் சரி குளிரைத் தாங்குவதற்கு அணிவது சாக்குகளே. கதகதப்பை வழங்குவதற்கு கம்பளி ஆடைகள் பெறுவதற்குப் பொருளாதார நிலை இடமளிப்பதில்லை. பாரம்பரிய உடையான சேலையும் அதன் மேல் கட்டிய சாக்குமாக அவள் மலைக்குச் செல்கின்றாள். ஒழுங்கான பாதையற்ற மலையில் காலிடறும் கற்களுக்கும், குருதி உறிஞ்சும் அட்டைகளுக்குமிடையில் தனது பணியை அவள் ஆரம்பிக்கிறாள். காலைத்தடுக்கும் சேலையும், பாரமான சாக்கும் போதாது என்று கொழுந்துக் கூடையின் சுமையும் அவளைப் பாதிக்கிறது. உயரமான மலைகளில் ஏறுவதே சிரமாயிருக்கிற பொழுது மலையேறுவோர் போலச் சுமையைத் தாங்கிய படி பெண் தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்துள்ளாகிறாள்.
கலாச்சாரம் என்பது உடை விடயத்தில் பெண்களைத் தடைசெய்தாலும் தோட்ட நிர்வாகம் ஒர் குறிப்பிட்ட ஆடையைத் தெரிவு செய்து அணியவேண்டுமென வலியுறுத்தினால் தொழில்செய்யும் நேரங்களில் அணியத்தயராகவே இன்றைய பெண்கள் காணப்படுகின்றனர். முந்தைய சந்ததியினர் தமக்கு சேலை அணிவது பழகிவிட்டதால் இலகுவாக இருக்கின்றது எனக்கூறினாலும் நிர்வாகம் அணியச் சொன்னால் அணிவோம் எனக் கூறுகண் றனர் . குளிரை த் தாங்க கூடியதும் மலையேறுவதற்கு வசதியுமான உடைகளையும் பாதவணிகளையும் நிர்வாகம் கொடுக்குமானால் பெண்கள் அவற்றை அணிய முன்வருகிறார்கள். கலாச்சாரம், பண்பாடு என்று கூறிதப்பிக்கொள்ளாமல் இவ்வாறான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதற்கு பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.
பெரு ந் தோட் டத் து ைறயரின் பெண் களே 1ாடு பின்னிப்பிணைந்தாகக் கொழுந்தெடுக்கும் வேலையென்பது காணப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வயதடைந்த பின்பு பெண்கள் கொழுந்தெடுக்க மலைக்குச் செல்கிறார்கள். முழு நேரமும் தேயிலை கொய்வதால் விரல்கள் காய்த்துப் போய்விடுகின்றன. இதனைப் தடுப்பதற்குச் சில இளம் பெண்கள் விரல்களில் சிறிய துணியைச் சுற்றிக் கொண்டு கொழுந்தெடுக்கின்றனர். ஆனால் அதுவும் பூரண
84

Page 44
பலனளிப்பதில்லை. எனவே விரலுக்கு ஏற்றவகையில் அதைப் பாதுகாப்பதற்குக் கையுறைகள் போன்ற ஏதாவது ஒன்றை வழங்குவது பனிக்குளிரில் விறைத்து கரடுமுரடாகி விட்ட விரல்களுக்குப் பரிகாரமாக இருக்கும். இவ்விரல்களை நம்பித்தான் எத்தனையோ குடும்பங்கள் உயிர் வாழ்கின்றன என்பது வெளிப்படையுண்மையாகும். அவ்விரல்களைப் பாதுகாப்பதற்கு அவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் காப்புறுதி போன்றவை கிடைப் பதற்கு ஏற்பாடு செய்யப் பட வேண் டு மென இன்றைய பெண் கள் விரும்புகிறார்கள்.
கல்வி
இலங்கையின் இலவசக்கல்வி வரலாறு உலக நாடுகள் பலவற்றாலும் உயர்ந்த தெனப் போற்றப்படுகிறது. தெற்காசியாவிலேயே அதிகளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்ட நாடு இலங்கையே. இவ்வாறு கல்வித்தரம் என்பது மிக உயர்வாக இருந்தபோதும் பெருந்தோட்டத்துறையினரின் கல்வித்தரம் இன்றும் பின்தங்கியதாகவே உள்ளது. அதிலும் குறிப்பாகப் பெண்களின் கல்வித்தரம் மோசமானதாகவே உள்ளது. "அடுப்பூதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு" என்ற நிலை ஏனைய பிரதேசங்களில் மாறிவிட்டபோதும் மலையகப் பெண்களைப் பொறுத்தவரையில் இன்னும் பாரிய மாற்றமெதனையும் கொண் டதாக அமையவில்லை. பெரும் பா லான தோட்டப்பாடசாலைகள் ஆரம்பக் கல்வியை மட்டுமே வழங்கக் கூடிய நிலையிலிருக்கின்றன. கட்டிடவசதியின்மையும் ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவுகிறது. கஷ்டப்பட்டு ஆரம்ப கல்வியைப்பெறுவதில் பூர்த்தி செய்தாலும் இடைநிலை, உயர் நிலைக்கல்வியைப் பெறுவதில் பலத்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது. நகரத்துக்குச் சென்று கல்வி கற்பதற்கான வசதி பெரும்பாலான குடும்பங்களில் இல்லை. அப்படிக் கல்வியை வழங்க விரும்பும் குடும்பங்களும் ஆண் குழந்தைகளுக்கே கல்வி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன.
பெரும்பாலான பெண்கள் ஆரம்பக் கல்வியைப் பெற்றவுடன் அவர்களது கல்விக்கு முற்றுப்புள்ளி
85

வைக்கப்படுகின்றது. தனது தாய் வேலைக்குச் செல்லும் நேரத்தில் சகோதரர்களைக் கவனிப்பதற்காகவும், உணவு தயாரிப்பதற்காகவும் அவள் தனது கல்வியைத் தியாகஞ்செய்ய வேண்டிய கட்டாயத்துக்குட்படுகிறாள். க.பொ.த. சாதாரணதரம் வரையிலான கல்வியைப் பெறுவதே இப்பெண்களைப் பொறுத்தவரையில் மிகுந்த கடினமானது. மேலும் உயர்கல்வியைப் பெற்றாலும் அவர்களுக்கு வேறு தொழில்வாய்ப்புக்களும் குறைவு. கல்விகற்காத தாய்மரைப் போன்றே அவளும் கொழுந்தெடுக்க மலைக்குச் செல்கிறாள். எவ்வளவு கல்வி கற்ருலும் கொழுந்தெடுப்பதே அவளின் வாழ்வின் இலட்சியம் போலத் தோன்றுகிறது. உயர்கல்வியைப் பெறுவதிலும் பார்க்க ஆரம்பக் கல்வரியுடனேயே கொழுந்தெடுக்கும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விடுகிறாள்.
ஆனால் உயர்க்கல்விக்கான ஆர்வம் இளம்பெண்களிடம் அதிகமிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. சரியான வாய்ப்பும் வசதியும் வழங்கப்படுமானால் பெருந்தோட்டத்துறைப் பெண்ணும் இலங்கையின் கல்வித்தரம் உலகநாடுகளில் உயர்ந்து நிற்கத் துணைபுரிவாள் என்பதில் சந்தேகமில்லை. கல்விகற்ற இளம் பெண்களுக்குச் சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதின் மூலம் பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் துணைப்புரியலாம்.
பெண் களது கல்வி இடையில் தடைப்படுவதற்கு இன்னொரு காரணம் திருமணமாகும். இளவயதிலேயே; அதாவது பாடசாலைக்கல்வி கற்க வேண்டிய பதினைந்து, பதினாறு வயதிலேயே பெண்கள் திருமணம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது. பருவமடைந்த பெண்ணை அதிககாலம் வீட்டில் வைத்திருப்பது அவமானத்துக்குரியது என்னும் காரணம் பரவலாகக் கூறப்படுகிறது. அதனாலேயே விரைவில் திருமணம் செய்து வைத்து விடுவதாகத் தாய்மார் கூறுகின்றனர். கல்வியை இடையில் நிறுத்த இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.
சுகாதாரம்
சுகாதார சேவை யெ ன் பது இலங்கையில்
உயர்தரமுடையதாகவே இருக்கின்றது. நோய்த் தடுப்பு
86

Page 45
நடவடிக்கைகளும், போதிய மருத்துவ வசதிகளும் இலங்கை மக்களுக்கு இலவசமாகக் கிடைப்பது போன்று ஏனைய வளர்முகநாடுகளில் கிடைப்பது சந்தேகத்துக்குரியதே. அதிகரித்த சுகாதார சேவைகள் இலங்கை மக்களின் ஆயுட்காலத்தை அதிகரித் திருக்கிறது. இறப்பு வீதம் மட்டுப்படுத்தபட்டிருக்கிறது. தாய்மார் மரணவீதமும், சிசு மரணவீதமும் மிகக் குறைவாகவே இலங்கையில் காணப்படுகின்றன. இலங்கைவாழ் மக்கள் எல்லோருக்கும் பொதுவான இச்சேவையும் வழமைபோலவே நகர, கிராமப்புற மக் களு க் குக் கிடைப் ப ைத விட குறைவாகவே பெருந்தோட்டத் துறையினைச் சேர்ந்த மக்களுக்குக் கிடைக்கிறது. எல்லாத் தோட்டங்களிலும் சுகாதார நிலையங்களோ, மருந்தகங்களோ இருப்பதில்லை. சில தோட்டங்களிலேயே சுகாதார நிலையங்கள் காணப்படுகின்றன. இருக்கின்ற சுகாதார நிலையங்களிலும் போதுமான மருந்துகளோ, மருத்துவரோ எந்நேரமும் இருப்பதில்லை. அவசரமான சிகிச்சைகளைப் பெறுவதென்பது மிகவும் கடினமான காரியம். மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் செல்ல வேண்டுமெனின் தோட்டத்துக்கணக்கப்பிள்ளையிடம் இருந்து கடிதம் பெற்றுச் செல்ல வேண்டிய தேவையும் இவர்களுக்கு உள்ளது.
தோட்டத்திலிருந்து அண்மையிலுள்ள மருத்துவ மனைக்குச் செல்வதற்குப் போதிய வாகன வசதிகளும் இல்லை. விபத்து பிரவசம் போன்ற அவசரத்தேவைகளுக்குத் தோட்ட நிர்வாகம் வாகனத்தை வழங்கினாலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவ்வாறு சிடைக்குமென்பதில்லை என்பது கவனதிற்குரியது. மாதந்தோறும் கிடைக்கும் கர்ப்பிணித் தாய்மாருக்கான மருத்துவவசதிகளும் மருத்துவமாதின் ஆலோசனையும் கிடைப்பதில்லை. பிரவசத்தைத் தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சிக்கும், போஷாக்குப் பெறுவதிலும் கிடைக்கும் கவனிப்பும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதில் இவர்கள் சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். இதனால் கர்ப்பிணித்தாய்மார்கள் மரணமும், சிசு மரணமும் பெருந்தோட்டத்துறையில் அதிகமாகவே காணப்படுவது ஆச்சரியப்படத்தக்கதல்ல.
87

பொழுதுபோக்கு
ஓய்வு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. உறங்குகின்ற பொழுதுமட்டுந்தான் ஒருவனுக்கு ஓய்வு கிடைக் குமென்றால் அவனுக்கும் இயந்திரத்திற்கும் வித்தியாசமெதுவுமில்லை. ஒய்வு என்பது மனிதனின் ஆளுமையையும் அறிவையும் விருத்தி செய்யக் கூடிய பொழுது போக்கு வசதிகளைக் கொண்டதாக அமைவது அவசியம். அவ்வாறான ஒய்வு தினம் மறுநாளைக்கு உழைக்க வேண்டிய மனிதனின் உடல்வலுவையும், உளவலுவையும் அதிகரிக்க உதவும். வாசித்தல், வானொலிகேட்டல், தொலைக்காட்சி பார்த்தல் முதலிய பொழுது போக்கு அம்சங்கள் இவ்வாறானவை. நாடெங்கும் சனசமூக நிலையங்களும், இளைஞர் முன்னேற்றக் கழகங்களும் இதற்குத் துணை செய்கின்றன. ஆனால் தோட்டங்களில் சனசமூக நிலையம் என்பது அரிதாகவே காணப்படுகின்றது. அன்றாடச் செய்திகளைத்தானும் பத்திரிகை மூலம் அறிந்து கொள்வதற்கும் வசதியற்ற பாமரர்களாகவே இன்றும் தோட்டத்தொழிலாளார் காணப்படுகின்றனர். வானொலி, தொலைக்காட்சி என்பன இவர்களைப் பொறுத்த மட்டில் மிகவும் ஆடம்பரமானவை. ஆண்கள் தாம் வெளியே செல்லுகையில் அன்றாட உலக நடப்புகளை ஒரளவேனும் அறிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் இது முயற்கொம்புதான். சனசமூகநிலையம் சிலவேளைகளில் தோட்டத்தில் காணப்பட்டாலும் அங்கு சென்று பத்திரிகை படிக்க எந்தப்பெண்ணும் முன்வருவதில்லை. அது ஆண்களின் ஏகபோகராச்சியமாகவே இருக்கிறது. பெண்கள் அவ்வாறு சென்று வாசிப்பது அவமரியாதைக்குரிய ஒரு செயலாகவே கருதப்படும் நிலையும் இங்கு காணப்படுகின்றது.
இவர்களின் பிரதான பிடித்தமான பொழுதுபோக்காக அமைவது திரைப்படம் பார்ப்பதே. திரையரங்குகள் எதுவும் தோட்டங்களில் இல்லை. தோட்டத்துக்கு அண்மையில் உள்ள நகரத்தில் அமைந்துள்ள திரையரங்குகளுக்கே செல்ல வேண்டியுள்ளது போக்குவரத்துச் செலவு, சிற்றுண்டிச்செலவு, நுழைவுச்சீட்டுச்செலவு என்று ஒரு படம் பார்ப்பதற்கு செல்லும் செலவே வருமானத்தின் கணிசமான ஒரு பகுதியை விழுங்கிவிடுகிறது. எனவே திரைப்படம் பார்ப்பதென்பதும்
88

Page 46
இவர்களைப் பொறுத்தவரை ஆடம்பரமான ஒரு பொழுதுபோக்கே. இப்பொழுதுபோக்கு அம்சமும் பெண்களைப் பொறுத்தவரை எட்டாக்கனியே. நாளின் பெரும்பகுதியையும் பணச்செலவையும் ஏற்படுத்தும் இப்பொழுதுபோக்கு பெண்களுக்குச் சரிவருவதாக அமையாததில் அதில் நாட்டமின்றியே இருக்கிறனர். ஆண்களே பெரும்பாலும் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படத்தினைப் பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. இளம்யுவதிகள் திரைபடம் பார்க்க ஆசைப்பட்டாலும் அவர்களது சகோதரர்களைப் போன்று இலகுவில் இவர்களுக்கு அனுமதியும் கிடைப்பதில்லை. மாதத்தில் இரண்டு அல்லது மூன்றுமுறை திரைப்படம் பார்க்கச் செல்லுகின்ற பெண்ணையும் இவர்கள் மதிப்பதில்லை. இவ்வாறு திரைபடம் பார்க்கச் செல்லும் பெண் குடும்பத்திற்கு ஏற்றவளில்லை என்ற கருத்து நிலவுகின்றது. அதனால் பெருந்தோட்டப் பெண்களும் இவ்வாறான பொழுதுபோக்கு களில் தமது கவனத்தைச் செலவிடுவதும் குறைவாகவே உள்ளது.
தொழிலாளர் நலவுரிமைகள்
வேலை நேரத்தின் போது மதிய உணவிற்காக விடப்படும் இடைவேளை, மலையிருந்து பெண்கள் கொழுந்தை கொழுந்து சேகரிக்கும் இடத்தில் சேர்த்துவிட்டுத்திரும்புவதற்கே போதும் போதாததாயிருக்கிறது. மதிய உணவை உண்பதற்கும், 'பிள்ளை மடுவத்தில் விட்டுவந்த கைக்குழந்தைக்குப் பாலுட்டுவதற்கும் போதிய நேரம் கிடைப்பதில்லை. அங்குமிங்குமென ஓட்டம் ஓடுவதிலேயே மதியவுணவு நேரத்திற்கான காலமும் முடிந்து விடுவதால் ஓய்வென்பதே பெறாமல் பெண் மீண்டும் விட்ட இடத்திலிருந்து கொழுந்து பறிப்பதற்காக மலையில் ஏறுகிறாள். மிகுந்த பாரத்தைச் சுமப்பதாலும் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதாலும் உடற்றொழிலியியல் ரீதியாக பல சிரமங்களை எதிர்நோக்குகிறாள். பெரும்பாலான பெண்களைப் பொறுத்தமட்டில் முதுகு எலும்பு, இடுப்பெலும்பு என்பவற்றில் நோவும் "வரிக்கோசுவையினும்" காணப்படுகின்றது. போஷாக்கற்ற உணவும் இவற்றோடு சேர்ந்து அவளை மேலும் பலவீனமாக்குகிறது. இளமையிலேயே முதுமை வந்தடைகிறது.
89

பிரவச விடுமுறை என்பது பெருந்தோட்டத்துறைப் பெண் களைப் பொறுத்த வரை இன்னும் சாரியாக அமுல்படுத்தப்படாத சட்டமாகவே இருக்கிறது. பிரவசம் நடைபெறும் தினம் வரையுமே பெண்கள் தோட்டத்தில் வேலை செய்ய வேண்டிய நிலையிலுள்ளதைப் பல தோட்டங்களிலும் இன்று காணக் கூடியதாகவுள்ளது. பிரவசத்திற்குப் பின்பும் பெண்கள் விடுமுறை எடுப்பது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. விரைவிலேயே வேலைக்குத் திரும்பி விடுகின்றனர். தமது உடல்நலத்தைக் கவனிப்பதற்கே அவர்களுக்குப் போதுமான நேரம் கிடைக்காமல் வேலைப்பளு அவர்களை அழுத்துகிறது. இதை விட மேலும் ஒரு பிரச்சினையாக இருப்பது குழந்தைக்குப் பாலுட்டுவது என்பதுதான். பாலூட்டுந் தாய்மாருக்கு காலையில் 9மணிக்கு வேலைக்குச் சென்றால் போதுமானது. பின்பு மதியஇடைவேளையில் மீண்டும் பாலுரட்டச் செல்வதற்கும் அனுமதி உண்டு. ஆனால் பெரும்பாலான தோட்டங்களில் ஒரு மாதம் முடிவடைந்த பின்பு பெண்களுக்கு இவ்வாறான அனுமதி கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. மற்றப் பெண் களைப் போலவே பாலுTட்டுத் தாய்மாரு ம்
அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறு குறித்த நேரத்தில் வராத பெண்களை மேற்பார்வையாளர் கண்டிப்பது,
சம்பளத்தில் பிடித்தம் செய்வதும் நடைபெறுகிறது. பெண்கள் இதைப்பற்றி யாரிடம் முறையிடுவது என்பது பற்றி யோசிக்கிறார்கள். தோட்டநிர்வாகத்திடம் இதுபற்றிக் கூறுவதற்கும் அஞ்சுகிறார்கள். எனவே தொழிற்சங்கங்களும் மலையக மாதர் சங்கங்களும் இவற்றில் கவனமெடுப்பது அவசியமாகின்றது. மேலும் தொழிலாளர் உரிமைகள், அவர்கள் அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது பற்றியும் பெண்கள் என்ற ரீதியில் அவர்களுக்கான தொழிலாளர் சட்டங்கள் உரிமைகள் பற்றியும் போதிய விளக்கமளிப்பது அவசியம்.
ஆண் மேற்பார்வையாளர் என்ற காரணத்தினாலும் பெண் கள் Li G) சிர மங் களை எ திர் நோ க்க வேண்டியவர்களாவுள்ளனர். பெண்களின் கஷ்டங்களை உணராதவர்களான ஆண்கள் அவர்களை அதட்டி உருட்டி வேலைவாங்குகிறார்கள். ஆணாதிக்க மனப்பான்மையும்
90

Page 47
பெண்களின் பணியிடத்தில் அவர்களின் வேலையைக் கடினமாக்குகிறது. குடும்ப வேலைகள் காரணமாகத் தாமதமாக வந்தால் அதை மேற்பார்வையாளர்கள் கடும் குற்றமாகக் கருதுகின்றனர். மேலும் உடல்நலக் குறைவினால் வேலையின் இடையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தாலும் அதைப் புரிந்து கொள்ளாமல் மேற்பார்வையாளர்களால் சீறுகின்ற நிலையும் காணப்படுகின்றது. சில தோட்டங்களில் பாலியல் சம்பந்தமான சீண்டல்கள், இம்சைகள் என்பனவும் மேற்பார்வையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. மேற்பார்வையாளரை விரோதித்துக் கொள்வதால் தமது வருமானத்தில் குறைவு ஏற்படுமேயெனச் சகித்துக் கொள்ளும் பெண்களைச் சகபெண்கள் மதிப்பதில்லை. இக்கட்டான நிலையில் பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் குடும்ப அங்கத்தினர்களும் அவளைத் தூற்றுவதால் அவள் தன் சுமையை யாரிடம் கூறுவது எனத் தெரியாமல் தவிக்கிறாள். பெண் கண்காணிப்பாளரை நியமிப்பதால் பல பிரச்சனைகள் திரு மெனப் பெருந்தோட்டத்துறைப் பெண்கள் நினைக்கிறார்கள். பெண்ணின் கஷ்டம் பெண்ணினாலே புரிந்து கொள்ளக் கூடியது என்பதால் பெரும்பான்மையான பெண்கள் மேற்பார்வையாளர் பெண்ணாக இருப்பதை விரும்புகிறார்கள்.
சிறார்கள்
குழந்தைகள் காப்பகங்களிலும் பெண்கள் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒரு காப்பகத்தில் 25 குழந்தைகளைப் பராமரிப்பதற்கு மூன்று பேர் தேவையாக இருக்கையில் ஒருவர் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. மேலும் எல்லாக் குழந்தைகளுக்கும் போதிய கவனிப்புக் கிடைப்பதில்லை. குழந்தையைக் காப்பகத்தில் விட்டுச் செல்லும் பெண் தன் குழந்தை அங்கு என்ன செய்கிறதோ என்ற தவிப்பில் தனது கடமையைச் சரிவரச் செய்ய முடியாமல் இருக்கிறது. சில வேளைகளில் இக்கவனக்குறைவு விபத்துக்களுக்கும் காரணமாகின்றது. ஒரு சிறிய இடத்தில் அதிக குழந்தைகளை வைத்துப் பாரமரிப்பதும் போதிய மலசலகூட வசதி, குடிநீர்வசதியின்றி இருப்பதும் பல குழந்தைக் காப்பகங்களின் நிலையாய் உள்ளது. மேலும் மிகப்பெரும்பாலான காப்பகங்களில் வேலை செய்யும்
9.

பெண்கள் பெரும்பான்மை இனப்பெண்களாக இருப்பதில் மொழிப்பிரச்சினை குழந்தைகளையும் அவர்களையும் அந்நிய மாக்குகிறது. இவ்வாறான காரணங்களினால் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு அவர்களின் மூத்த சகோதரிமார் பாடசாலைக்குச் செல்வது தடைசெய்யப்பட்டு வீட்டிலிருந்து குழந்தை பராமரித்தலை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். பள்ளிக்குச் செல்லும் மாணவப் பருவம் பெருந்தோட்டச் சிறுமிகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் குழந்தைப் பராமரிப்பாளர் களகவே காணப்படுகின்றது.
இச்சிறுமிகளைப் பொறுத்தவரை காணப்படும் மிகமுக்கிய பிரச்சினைகளில் இன்னொன்று நகரப்புறங்களில் வீட்டு வேலைக்கெனச் செல்வதாகும் குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்கவும் மூன்றுவேளை நல்ல உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் பல சிறுமிகள் நகரப் புறவீடுகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். சிலவேளைகளில் நன்றாகக் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவி கூட இடைநடுவில் படிப்பு நிறுத்தப்பட்டு அனுப்பப்படுகிறாள். சிறிய தோள்களில் பெருஞ்சுமையைக் சுமக்கமுடியாமல் சுமக்கிறாள். பெருந் தோட்டத்துறைச் சிறுவர்களின் நிலையும் பெரும்பாலும் இதையே ஒத்திருக்கிறது. கடைகளில் எடுபிடிப்பையனாகவும் வீட்டு வேலைக்காரனாகவும் மாற அவனும் நிர்பந்திக்கப் படுகின்றான். பெருந்தோட்டத்தைப் பொறுத்தவரையில் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை ஏனைய நகர கிராமப்புறப் பாடசாலைகளை விட மிகவும் அதிகமானது.
பெண்களின் அசமத்துவ நிலை
பெரு ந் தோட் டத் துறையில் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற மிகமுக்கிய பிரச்சினை வேலை நேரமும் ஊதியமும் என்பதாகும். தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் மாதத்தில் 20 நாட்களுக்கு வேலை வழங்கப்படவேண்டுமெனக் கூறப்பட்ட போதிலும் எல்லா மாதங்களிலும் இது சாத்தியப் படுவதில்லை. குறிப்பிட்ட சில மாதங்களிலும் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு வேலை கிடைப்பதே மிகக்கடினமாக இருக்க, சில மாதங்களில் வேலை என்பதே முடிவில்லாமல் நீண்டு போவதாயும் உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில்
92

Page 48
ஊதியம் குறைவடைந்தும், உயர்வடைந்தும் செல்லும். நிலையான ஒரு சம்பளம் இன்மையால் சிலவேளைகளில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் முடியாத நிலை காணப்படுகின்றது. வேலைக்குச் செல்லாத நாட்களில் சம்பளம் வெட்டப்படுகின்றது. இதனால் சுகவீனமுற்றிருந்தாலும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே தங்களுக்கு அரசாங்க, தனியார்துறை போன்று மாதாந்த சம்பளத்தை வழங்கும்படியும், குறிப்பிட்ட லீவுகளை அவர்களைப் போலத் தங்களுக்கும் வழங்கும்படியும் தோட்டத்தொழிலாளர் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தாலும் அதை முன்னெடுத்துச் செல்ல ஒரு வருமில்லை.
இவ்வாறு ஆணுக்குச் சமமாகத் தானும் பாடுபட்டு உழைக்கும் பணத்தைச் செலவழிக்க ஆணைப்போல் பெண்களுக்கு உரிமையில்லை. உழைக்கின்ற பணத்தைக் குடும்பத்துக்காக மட்டுமே செலவழிக்கப் பெண்களுக்கு அனுமதியுண்டு. ஆனால் ஆண்கள் தமது உடல் அலுப்பை மறப்பதற்கும், சம்பளம் வந்த சந்தோஷத்தைக் கொண்டாடவும் மது அருந்தச் செல்கிறார்கள். பெரும்பாலன மலையக குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மது அருந்தும் ஆண்களாகும். இளையத்தலைமுறை ஆண்கள் LDB) அருந்துவது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் முதிய தலைமுறையினரிடம் மது அருந்துவது என்பது ஒரு நாளாந்தக் கடமையாகவே காணப்படுகின்றது. உழைக்கும் பணத்தின் பெரும்பகுதியை விழுங்கும் மதுவரக்கனால் குடும்பச்சுமை மேலும் ஏறுவதால் பெண்ணே பெரிதும் பாதிக்கப்படுகிறாள். மதுவால் மதியை மட்டுமா இழக்கிறார்கள்? உயிரையும் அல்லவா இழக்கிறார்கள்! இரட்டிப்பு வேலைச் சுமையுடன் இரட்டிப்புக் குடும்பச்சுமையும் பெண்ணின் தலையிலேயே விழுகிறது.
இன்றைய பெருந்தோட்டத்துறைப்பெண் முன்புபோல நாட்டு நடப்புகளை அறியாதவளால்ல. ஆனாலும் ஏனைய கிராம, நகரப்புறப் பெண்களோடு ஒப்பிடுகையில் கிணற்றுத் தவளையாகவே இருக்கிறார்கள். படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்ணை விடப் படிப்பறிவுள்ள பெருந்தோட்டத்துறைடெண் நாட்டு நடப்புகளைத் குறைந்தவளாகவே அறியக்
93

கூடியதாகவுள்ளது. கிராமத்தின் பட்டி தொட்டிகளிலும் இன்று தொலைக்காட்சியென்பது காணப்படுகிறது. அதன் மூலம் வெளிவிவகாரங்களை அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. மேலும் கிராமப் புறத்திலிருந்து நகரத்திற்குச் செல்வது இலகுவாகவும் இருக்கிறது. ஆனால் பெருந் தோட்டத்துறையைப் பொறுத்த வரையில் மின்சாரம் என்பது எட்டாக்கனி. இந்நிலையில் தொலைக்காட்சியென்பது ஒரு கனவு. அதேவேளை அருகில் உள்ள கிராமத்துடனேயே தொடர்பு என்பது குறைவாக இருக்கையில் நகரத்துடன் தொடர்பு என்பது ஆபூர்வமாகவே காணப்படுகின்றது. மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறையே இத்தொடர்பும் ஏற்படுகிறது. இவையாவும் பெருந்தோட்டத்துறை பெண்ணை உள்நாட்டு விவாகாரங்களிலிருந்தே ஒதுக்கி வைத்திருக்கிறது வீட்டு நடப்பைக் கவனிப்பதற்கே நேரம் போதாமல் இருக்கையில் நாட்டு நடப்பு அறிய ஏது அவசாகம்?
அரசியல் நிலைபற்றிய அறிவும் யாரோ சொல்லிச் செய்வதாகவே உள்ளது. தேர்தல் சமயங்களில் மட்டுமே அரசியல் பற்றிய செய்தி பெண்களின் செவிகளுக்கு எட்டுகிறது. அதுவும் பூரணமாக அல்ல. இன்னொருவருக்கு அல்லது இன்ன கட்சிக்கு வாக்கைப்போடு எனக் கணவனோ மகனோ கூற அதை நிறைவேற்றுவதோடு அவளது அரசியல் கடமை முடிந்து விடுகிறது. நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் பற்றி அறியாதவளாகவே (இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், தொண்டமானும் விதிவிலக்கு) காணப்படுகிறாள். "இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன" என்ற மனப்போக்கே காணப்படுகிறது. அவளைச் சொல்லியும் குற்றமில்லை. ஏனெனில் எந்த ஆட்சி மாற்றமும் பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரை வெறும் பூச்சியமே.
இவ்வாறு எல்லா விதத்திலும் பின்தங்கியிருக்கும் பெருந்தோட்டத்துறையில் பெண்களின் நிலையோ இன்னும் பின்தங்கியே காணப்படுகின்றது. அவர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதோடு பெண் என்ற நிலையில் இன்று காணப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பெண்கள் போராட வேண்டியுள்ளனர்.
94

Page 49
பெருந்தோட்டத்துறைப் பெண்கள் வேண்டி நிற்கும் அடிப்படை மாற்றங்கள்
பெருந்தோட்டத்துறையின் பங்களிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை அத்துறையினைச் சேர்ந்த சாதாரண மக்கள் பெற்றிருக்க வில்லை என்பது வெளிப்படை. பெருந்தோட்டத்துறையை அண்டிய சகல உயர்மட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்க அத்திவாரமான தொழிலாளர் மேலும் மேலும் பழமையிலேயே அமிழ்ந்து கொண்டிருக்கின்றனர் எல்லாவகையிலும் அவர்கள் புறக்கணிக்கபப்டுகின்றனர். மாற்றங்கள் அவர்களிடையே ஏற்படுவதை ஒரு வரும் விரும்பவில்லை.
இந்நிலையில் பெருந்தோட்டத்துறைப் பெண்களைச் சந்தரித்த போது நுாற் றாண்டு காலமாகத் தாம் புறக்கணிக்கப்படும் நிலைமாற வேண்டும் என விரும்புகின்றனர் என்பது தெளிவாகின்றது. அதற்காகப் பல வழிகளிலும் போராட அவர்கள் தயாராகவுள்ளனர். பெண்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல பழமையை மாற்றவும் புதியனவைப் பெறவும் போராட வேண்டியுள்ளனர்.
பெண்களைப் பொறுத்தமட்டில் முதலில் மாற்றம் என்பது அவர்களது கருத்தியலிலேயே ஏற்பட வேண்டியுள்ளது. காலாகாலமாய் ஆணை விடத் தான் இளைத்தவள் என்ற எண்ணக்கரு ஆழ்மனத்திலே வேரூன்றிவிட்டது. அதனைக் கருத்திரங்கில் கலந்துகொண்ட பெண்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் கருந்தரங்கின் முடிவில் பெண்களில் பெரும்பான்மையோர் ஆண்களுக்குத் தாம் சளைத் தவர்களல்ல என்பதை ஏற்றுக்கொண்டனர். இவ்வாறான கருத்துக்களை எல்லாப் பெண்களும் தெரிந்திருக்க வேண்டுமென்றும் தாம் தமது தோட்டங்களுக்குச் சென்று அதனை தெரிவிப்பதாகவும் ஆர்வத்துடன் தெரிவித்தனர். ஆனால் அதேவேளையில் வேறொரு அச்சத்தையும் வெளிப்படுத்தினர். இவ்வாறான கருத்துக்கள் தமது குடும்ப உறவு முறையைச் சீர்குலைப்பதற்கு வழிவகுத்து விடுமோ எனத்தயங்கினர். பெண்களின் நிலையைப் பெண்கள் மட்டும் புரிந்து கொண்டால் போதாது, ஆண்களும் அறிய
95

வேண்டுமென விரும்பினர். எல்லாப் பெண்களும் பெண்நிலைவாதக் கருத்துக்கள் ஆண்களைக் கட்டாயம் சென்றடைய வேண்டுமென விரும்புவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆண்களின் மனமாற்றமுமே தங்களது சமத்துவத்துக்கு வழிவகுக்கும் என்பதில் அவர்கள் எள்ளளவும் ஐயப்படவில்லை. தங்களது முன்னோர் விட்ட தவறுகளைத் தாம் விடமாட்டோமென்றும் தமது பிள்ளைகளைச் சமத்துவமாய் வளர்ப்போம் எனவும் தெரிவித்தனர்.
அதேவேளை சமூக அமைப்பு மிகவும் இறுக்கமாக இருப்பதால் மாற்றங்கள் ஏற்படுவது கடினம். தந்தை வழிச் சமூக அமைப்பில் எப்போதும் பெண் ணின் முக்கியத்துவம் குறைத்தே மதிப்பிடப்பட்டு வந்துள்ளது. அதற்கு மதமும் துணை செய்கின்றது. பெரும்பாலான சமூகக் கட்டுப்பாடுகள் இதன் காரணமாக எழுந்து பெண்ணை மேலும் அடிமைப்பட வைத்தது.
'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பது தமிழ்ப்பழமொழி. இக்கருத்து அந்நாள் முதல் இந்நாள் வரை புகுந்தவீடு செல்லும் புதுமணப்பெண்ணிற்கும் கூறப்பட்டு வரும் அறிவுரை . பெண் எப்படியான கணவனாயினும் பொறுத்து குடும்பவாழ்க்கையைச் கொண்டு சென்றாலே அவள் மதிக்கப்படுவாள் என்ற நிலை காணப்படும் ஒரு சமூகத்தில் பெண் பல்லைக்கடித்துக் கொண்டு ஆண் மேலாதிக்கத்தைப் பொறுக்க வேண்டியவளாக இருக்கிறாள். பெருந் தோட்டத்துறையில் ஆண்களில் பெரும்பாலானோர் தமது உழைப்பின் பெரும்பகுதியை மதுவிற்கே செலவழிக்கும் அவலநிலை காணப்படுகின்றது. இவ்வாறான குடும்பங்களில் பெண்ணே குடும்பச்சுமையைத் தாங்குகிறாள். அதேவேளை கணவனைக் கண்டிக்க முடியாமல் தடுமாறுகிறாள். மதுவின் மயக்கத்தில் மனைவியை உதைக்கும் கணவன்மார்களும் ஏராளம். உடல் அலுப்பை மறக்கக் குடித்து விட்டு வந்து மனைவி, குழந்தைகளை அடித்து உடற் சோர்வைப் போக்கும் கணவர்கள் உணர்வதில்லை தமது மனைவியும் நாளெல்லாம் உழைத்து மேலதிகமாக வீட்டு வேலைகளையும் செய்கின்றனர் என்பதை. ஆனாலும் இச்சந்தர்ப்பங்களில் பெண் கணவனை விட்டுப் பிரிந்து செல்வதில்லை. தன்னை நாளும் வதைக்கும் கணவனிடமிருந்து பிரிந்து வாழ அவளுக்குப் பொருளாதார
96

Page 50
பலமிருந்தாலும் ‘வாழாவெட்டி' என்ற சொல் அவளை மதிப்பிழந்தவளாக்குகிறது. அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத பெண்கள் பலர் அடியைத் தாங்கிக் கொண்டு தத்தம் கணவருடன் தொடர்ந்தும் குடும்பம் நடத்துவது பெருந்தோட்டத்துறையில் கண்கூடு.
இவ்வாறு அல்லற்படும் பெண்களுக்கு உதவ பெண்கள் அமைப்புகள் முன்வரவேண்டுமென்றும் தமது கணவர்மாருக்கு இதனைச் எடுத்துச் சொல்ல வேண்டுமெனவும் பெண்கள் விரும்புகின்றனர். ஆயினும் விவாகரத்துப் போன்ற ஒன்றை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை என்பதும் தெளிவு.
பெண்கள் ஆண்களில் தாங்கி நிற்கும் சார்புநிலையும் இன்னும் மாறவில்லை. தந்தை, கணவன், மகன் என யாராவது ஒரு ஆணைச் சார்ந்தே வாழவேண்டுமெனப் பெரும்பான்மையான பெண்கள் கருதுகிறார்கள். இளம் பெண்கள் பலர் முதுமைக் காலத்தில் தமது தாய்தந்தையரைக் கவனிக்கத் தாம் தயாரெனக் கூறினாலும் தமது வருங்காலக் கணவர்மாரின் அபிப்பிராயப்படியே முடிவெடுக்க வேண்டி வருமென்பதையும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் இந்நிலை மாறித் தமது சம்பாத்தியத்தில் ஆண்களைப் போலவே தாமும் தமது பெற்றோரைப் பராமரிக்க வேண்டுமென விரும்புகின்றனர்.
கணவனை இழந்த கைப்பெண் பொட்டு, பூ, நகைகள் அணியலாம் என்பதைப் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த பெண்கள் பலர் ஏற்றுக் கொண்டாலும் சமூகத்திற்காக அவ்வாறு அணிவதைத் தாங்கள் விரும்பவில்லையென்றுங் கூறினர். சமூகம் தம்மைத் தூற்றும் என்பதில் அவர்கள் இதனை விரும்பவில்லையே ஒழிய அணிவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் தயாராகவேயுள்ளனர். விதவைகள் மறுமணம் என்பது இவர்களைப் பொறுத்தமட்டில் பெரிய விடயமாகவே காணப்படுகின்றது. விதவைகள் ஒதுக்கப்படுவதை எதிர்த்தாலும் மறுமணத்திற்குப் பெருமளவு ஆதரவு கிடைக்கவில்லை. சிலவேளை பெண் விரும்பினால் மணக்கலாம் எனக் கருதுகின்றனர். அதேவேளை இன்னொரு கருத்தையும் முன்வைத்தனர். பொல்லாத கணவனாக இருந்து இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டிருந்தால் மீண்டும் அவ்வாறான ஒரு
97

விலங்கை மாட்டிக் கொள்ள விரும்பவில்லையென்கின்றனர். ஒப்பீட்டளவில் கணவனோடு வாழும் பெண்ணை விடக் கைம்பெண் சுதந்திரம் கூடியளவளாகக் காணப்படுகிறாள். குடும்பத்தைக் கொண்டு நடத்தவும், தன்னிஷ்டப்படி முடிவெடுக்கவும் சுதந்திரமுடையவளாக இருக்கிறாள். இன்னும் சில தசாப்தங்களில் மறுமணம் செய்வதற்கான மனமாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
பின்துரங்கி முன்னெழும் பெண்ணாகவே இன்றும் பெருந்தோட்டத்துறை பெண் காணப்படுகின்றாள். காலை எழுந்ததும் பெண்ணின் முக்கிய கடமைகளில் ஒன்றாக அமைவது தனது கணவனுக்கு வெந்நீர் வைத்துக் கொடுப்பதாகும். விறைக்கும் குளில் நேரம் கடந்து எழும் கணவனைக் கவனிப்பதும் அவளது முக்கிய கடமையாகின்றது. வேலைக்குச் செல்லாத வீட்டிலிருக்கும் பெண்ணானால் அவளுக்கு இது கடினமான பணியன்று. ஆனால் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போல அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெந்நீர் கொடுப்பது, எண்ணெய் கொடுப்பது போன்ற சிறிய கருமங்களுக்கும் அவளையே எதிர்நோக்கியிருக்கும். கணவன் அவளது சிரமங்களை உணர்வதில்லை. பெண்ணாகிய தனக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை தன்னுடைய தேவைகளை ஆண்களே பூர்த்தி செய்து கொள்வதில் பெண்ணின் சிரமம் குறைகிறது. அதேவேளை ஒரு சில ஆண்கள் பெண்ணின் சிரமம் புரிந்து உதவி செய்கின்றனர் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனாலும் இவர்களைப் பெண்டாட்டி தாசர்கள் என்று மற்றைய பெண்களே கேலி செய்யும் அவலமும் இன்னும் மாறவில்லை. ஆணின் மனமாற்றம் மட்டுமன்றிப் பெண்களின் மனமாற்றமே இங்கு தேவையாகின்றது.
படிப்படியான மனமாற்றமே சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும். கல்வியறிவும், வெளியுலகத் தொடர்பும் மாற்றங்களை விரைவில் கொண்டுவரத் துணை செய்யும் காரணிகளாகும் இவையிரண்டும் பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரையில் மிகவும் குறைவே. இக்காரணிகள் இரண்டும் பொது மக்களைச் சென்றடைந்தால் மன மாற்றமும் அதன் மூலமான சமூக மாற்றமும் ஏற்படும்.
98

Page 51
பெரு. தோ. துறைப்பெண்கள் தொழிலாளர் படையில் மிகவதிகளவாக இருந்தாலும் அவர்களைச் சரியான முறையில் ஒன்றிணைந்து வழிநடத்திச் செல்லும் தலைமையோ அமைப்போ இல்லை. தொழிற்சங்க அங்கத்தவராகச் சந்தாப் பணம் கட்டுவதோடு பெண்ணின் தொழிற்சங்க உரிமைகள் நிறைவேற்றப்பட்டு விட்டன போலத் தோன்றுகிறது. தொழிற்சங்கத்தில் ஐம்பது சதவீதமானோர் பெண்கள். ஆனால் தொழிற்சங்க நிர்வாகத்தில் ஒருசில பெண்களே பங்குபற்றுகிறார்கள். மாதர் சங்கத்தில் மட்டுமே பெண்கள் தலைவிகளாகவும் செயலாளர்களாகவும் விளங்குகிறார்கள். எனினும் மாதர் சங்க நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்துபவர்களாக ஆண்களே காணப்படுகிறார்கள். இந்நிலையில் பெண்கள் எவ்வாறு தமது உரிமைகளை வென்றெடுப்பது?
தொழிலாளி என்ற நிலையில் பெண்கள் பல மாற்றங்களை வேண்டி நிற்கிறார்கள். நாளெல்லாம் வேலை செய்வதென்பது கடினமானது. எனவே மாதத்தில் இருபது நாட்களுக்குக் குறையாத வேலையும், நாளுக்கு 6மணித்தியால வேலையும் வேண்டுமெனப் பெண்கள் விரும்புகின்றனர். பெரும்பாலும் 8மணித்தியாலங்களுக்கு மேல் வேலைசெய்ய வேண்டியேற் படுகிறது. ஆனால் வருமானத்தில் பெரிய மாற்றமெதுவும் இல்லை. பெண்கள் மேலதிகமாகச் செய்யும் வேலைக்கு வழங்கப்படும் ஊதியம் மணித்தியாலக் கணக்கு அன்றி பறித்தெடுக்கும் கொழுந்தின் நிறைக்கே கிடைக்கிறது. இதனால் பாதிக்கப்படுவதும் பெண்களே. ஏனெனில் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு பெண்களும் ஒரேயளவான சக்தியைச் செலவிட்டே வேலை செய்கின்றனர். ஆனால் கொழுந்தின் நிறை அவர்களது வருமானத்தில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது. எனவே அவர்கள் செய்யும் வேலைக்கு மணித்தியாலக் கணக்கிற்கு ஊதியம் பெறுவதையே பெண்கள் விரும்புகின்றனர்.
உடலுழைப்பினால் மிகவும் தளர்ந்து போகும் பெண்களுக்கு 6மணித்தியால வேலையே போதுமானது. இவ்வாறான மாற்றம் பெண்களின் ஒய்வு நேரத்தை அதிகரிப்பதில் அவர்கள் தமது ஆளுமையை விருத்திசெய்யும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாக இருக்கும்,
99

ஏனைய அரச- தனியார்துறை ஊழியர்களைப் போன்று இவர்களும் தமக்கு மாதச்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர். சுகவீன லீவுகளுடன் கூடிய அரசாங்க ஊழியர்களது போன்ற சம்பளத்தை விரும்பினாலும் அதைப் பெறுவதற்கு வழிவகை தெரியாது தடுமாறுகின்றனர். நிரந்தரமான ஊதியம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த உதவுமென்தில் சநதேகமில்லை.
பெண்களுக்கு இரவுநேர வேலை நிறுத்தப்பட வேண்டும். இரவுநேர வேலை பெண்களிற்கு ஒய்வென்பது சிடைப்பதையே தடைசெய்கின்றது. காலையில் குடும்பத் தலைவியாகக் கடமைபுரிய வேண்டிய கட்டாயத்தில் அவள் இருக்கிறாள். மேலும் இரவு வேலை பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் பல சந்தர்ப்பங்களில் வழிவகுக்கின்றது. எனவே இரவு நேர வேலையென்பது பெண்களால் விரும்பப்படாததாகவே இருக்கின்றது.
மலையேறுவதற்கு வசதியாகவும், குளிரைத் தாங்ககூடியதாகவும், தேயிலைச் செடிகளிலிருந்து பாதுகாப்பளிக்கக் கூடியதுமான ஆடை பெண்களுக்கு அவசியம். அவ்வாறான கவச உடை ஒன்றைச் சீருடையாகப் பெண்கள் வேண்டி நிற்கின்றனர். அதனைத் தோட்ட நிர்வாகங்கள் கவனத்திலெடுத்து இலவசமாக வழங்குவது அவசியம். நூற்றாண்டு கடந்த பின்பும் இன்னும் பெண் குளிருக்குச் சாக்கையே கட்டிக் கொள்ளும் அவலநிலை மாறவில்லை.
பெருந்தோட்டத்துறைப்பெண்களுக்கு தொழிற்சங்கங்கள், அரசுசார்பற்ற சமூக நிறுவனங்கள், அரசுநிறுவனங்கள் என்பவற்றில் சமபங்கு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக முடிவெடுக்கும் பதவிகளில் இவர்களுக்கும் சமபங்கு வழங்கப்பட வேண்டும். இதற்கு பெ. தோ. து. பெண்களுக்காகப் பாடுபடும் அமைப்புகள் முன்வந்து அவர்களை வழிநடத்த வேண்டும்.
பெண்கள் வேண்டி நிற்கும் மிகமுக்கிய மாற்றம் பெண் கண் கானிப்பாளர் என்பதாகும். பெண் தொழிலாளர்களுக்குப் பெண் கண்காணிப்பாளர் தேவையென்பது மறுக்கமுடியாதது. பெண் களின் பிரச்சினைகளையும்
100

Page 52
கஷ்டங்களையும் பெண்களே உணர்வார்கள் என்பது உறுதி. மேலும் இக்கண்காணிப்பாளர்கள் பெ.தோ.துறையைச் சேர்ந்த படித்த பெண் களாய் இருப்பதையும் பெண் கள் விரும்புகின்றனர். இவ்வாறான மாற்றம் ஒரு புரிந்துணர்வை நிர்வாகத்திற்கும் தொழிலாளருக்குமிடையில் ஏற்படுத்துவதால் பிரச்சினைகள் பல இலகுவாகத் தீர்க்கப்படுமென்பதில் சந்தேகமில்லை.
பெண், கண்காணிப்பாளர் மட்டுமன்றி நிர்வாகத் துறையிலும் பெண்களுக்கு சமபங்கு வழங்கபட வேண்டும். தட்டெழுத்தராகவும், எழுதுவினைஞராகவும் மட்டுமன்றி உயர்பதவிகளையும் பெ. தோ, துறைப்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். உயர்பதவிகளில் வழங்கப்படும் சமவாய்ப்பு பெண்ணை ஆளுமையுள்ளவளாக்குகிறது.
மேலும் பெண்களுக்குத் தமது கடமைகளைப் பூரணமாக நிறைவேற்ற உதவும் வகையில் பூரணத்துவமான குழந்தைக் காப்பகங்கள் அவசியம். குழந்தையைக் காப்பகத்தில் விட்டு வேலைக்கு செல்லும் பெண் மனநிம்மதியோடு வேலையைச் செய்து முடித்துவிட்டுத்திரும்புவதற்கேற்ற முறையில் குழந்தைக் காப்பங்கள் அமைதல் வேண்டும். குழந்தைகளைப் பராமரிப்பதற்கான பயிற்சியைப் பெ.தோ.துறைப் பெண்களுக்கு வழங்க அவர்கள் மூலம் குழந்தைக் காப்பகங்களை பராமரிப்பதும், குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப காப்பாளர்களை நியமிப்பதும் அவசியம். வயது வேறுபாட்டின் படி குழந்தைகளைப் பராமரிக்கும் வசதிகளைக் கொண்டதாக அமைந்த காப்பங்களையே பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
இளஞ்சிறார்களை வீட்டுவேலைக்கு அமர்த்துவதைத் தடைசெய்ய வேண்டியதன் அவசியத்தை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனாலும் பெதோ, துறையைச் சேர்ந்த சிறார்கள் இன்றும் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவில்லை. இதைத் தடைசெய்து அச்சிறார்களும் நாட்டின் நற்பிரசைகளாக வளர வழி செய்யவேண்டும். அதற்காக எல்லோரும் பாடுபட வேண்டும்.
தோட்டங்கள் தோறும் இளைஞர் சங்ககள், சிறிய நூல் நிலையம் என்பன அமைக்கப்பட வேண்டும். வானொலி,
101

தொலைகாட்சி என்பன அவ்வாறான இடங்களிலாவது வைக்கப்பட வேண்டும். பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி என்பன மூலமே புதிய கருத்துக்களும், உலக நடப்புக்களும் பெ. தோ. துறையைச் சென்றடையும். இளைஞர் சங்கங்கள், மாதர் சங்கங்கள் என்பன இளைஞர்களினதும் பெண்களினதும் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பவையாகிய செயற்திட்டங்களை தீட்டி முறைப்படுத்துவதற்கு அரசசார்பற்ற சமூகநிறுவனங்களும் துணை புரிய வேண்டும்.
பொதுவான தீர்வுகள்
வறுமை என்பது ஆண் பெண் என்ற வேறுபாடின்றி இருபாலாரையும் சமமாகவே தாக்குகின்றது. இந்நிலையில் ஏற்படும் பாதிப்புக்களும் சமமாகவே இருக்க வேண்டும். ஆயினும் பெ. தோ. துறையைப் பொறுத்தவரையில் பெண்ணே ஆணை விடவும் அதிக பாதிப்புக்குள்ளாகின்றாள் என்பது வெளிப்படை. சமமான வறுமைநிலையிலும் அசமத்துவநிலை ஏன் காணப்படுகின்றது என்பதை ஆராய்ந்தால் கருத்தியலே அதற்குக் காரணமாக அமைகின்றது. பெண்ணை இரண்டாந்தரமாக எண்ணுவதால் அவள் பல விதத்திலும் ஒதுக்கப்படுகின்றாள். அடிப்படைத் தேவைகளைப பெற்றுக் கொள்வதிலேயே சிரமங்களை எதிர்நோக்குகிறாள். கருத்தியல் ரீதியான மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்படுவது தவிர்க்க (Մ)ւգ-մմn 55].
ஆனால் அடிப்படை உரிமைகளைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாதவராகப் பெதோ, துறையினைச் சேர்ந்த மக்கள் இன்றும் இருப்பது கவலைக்குரியதே. 2000 ஆண்டில் எல்லோருக்கும் வாழ்வதற்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கையில் பெ. தோ, துறையினர் புறக்கணிக்கப்படுவது வருத்தத்திற்குரியது. வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். இந்நாட்டின் பிரசைகளிடையே இவ்வாறு வேறுபாடு காட்டப்படுவது அடிப்படை உரிமைகளை மீறும் செயலே. எனவே பெதோ. துறை மக்கள் ஏனையோர் போன்று வாழ அவர்கள் குடியிருக்கும் காணியை அவர்களுக்கே உரிமையாக்குவதுடன் வீட்டுவசதிகளையும் ஏற்படுத்தித் தருவதற்கு அரசைத் தொழிற்சங்கங்கள் கோர வேண்டும்.
102

Page 53
மேலும் கல்வி கற்றுவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாவட்டம் தோறும் அமைக்கப்படும் ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பரம்பரையாகக் கொழுந்தெடுத்தலும், கவ்வாத்து வெட்டுதலுமே இவர்களுக்கு விதிக்கப்பட்டது என எண்ணாமல் இவ்வாறான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது தோட்டங்களுக்கு வெளியேயும் ஒரு பரந்த உலகம் விரிந்து கிடக்கிறது என்பதைப் புலப்படுத்தும். இது இளைஞர் சமுதாயம் விரக்தியடைவதைத் தடுப்பதோடு நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான மனித வளத்தையும் பெற்றுத்தரும்.
தோட்ட நிர்வாகத்துறையிலும் பெ. தோ. துறையைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் வேலை வாய்ப்புக்கள் நிர்வாகத்துறையின் சகல மட்டங்களிலும் வழங்கப்பட வேண்டும்.
பெ. தோ. துறைப் பாடசாலைகளின் கல்வித்தரம் ஏனைய பிரதேசங்களை விடக் குறைந்தே காணப்படுகின்றது. பாடசாலைகளில் கட்டிடவசதிகளை அதிகரிக்கப்படுவதோடு பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தோட்டங்கள் தோறும் க. பொ. த. சாதாரணதரக்கல்வியைக் கற்க வசதியாகப் பாடசாலைகள் வகுப்புக்களைக் கொண்டிருக்க வேண்டும் உயர் தரப் பாடசாலைகள் தோட்டங்களுக்குப் 10 மைலுக்குட்பட்ட சுற்றளவில் இருப்பதும் சீரான போக்குவரத்து வசதி இருப்பதும் அவசியம்.
பெருத்தோட்டத்துறையைப் பொறுத்தவரை தீர்வு காணப்படக் கூடியதும் அவசியம் தீர்வு காணப்பட வே ண் டிய துமான பிரச் சரினை மின்சார மாகும். தொழிற்சாலைகள் மின்சாரத்தில் இயங்குகின்றன. நிர்வாசத்துறையினரின் வீடுகளில் மின்சாரம் இருக்கின்றது. தோட்டங்களைச் சுற்றியுள்ள கிராமப் புறங்கள் மின்சார ஒளியைப் பெறுகின்றன. ஆனால் தொழிலாளர் குடியிருப்புக்கள் இருட்டில் ஆழ்ந்துள்ளன. இந்நிலை மாறவேண்டும். எல்லாக் குடியிருப்புக்களுக்கும் மின்சாரவசதி செய்து தரப்படவேண்டும்.
G3

ஒவ்வொரு தோட்டத்திலும் நியாய விலைக்கடைகள் இருப்பது அவசியம். அக்கடைகள் நிறையிலும், தரத்திலும் ஏமாற்று வேலைகள் செய்யாமல் இருப்பது அதைவிட முக்கியமானது. இவ்வாறு நியாய விலைக் கடைகள் இருப்பது தொழிலாளரின் சுமையைக் குறைக்க வழி செய்யும்.
சுகாதார மருத்துவ வசதிகளைக் கருத்திலெடுத்துத் தோட்டங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களாவது அமைக்கப்படுவது அவசியம். இலகுவில் மருத்துவ வசதிகளைப் பெறும்வகையில் அண்மையில் உள்ள வைத்தியசாலைக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பதும் முக்கிய கடமையாகும்.
பெருந்தோட்டத்துறையினைப் பொறுத்தவரையில் அடிப்படை உரிமைகள் பூர்த்தி செய்யப்பட்டு அவர்களும் இலங்கை மாதாவின் பிரசைகள் என்பது நிரூபிக்கப் பட்டுவிடுமானால் வறுமைநிலையும், பெண்களின் அசமத்துவ நிலையும் ஒரளவேனும் தீர்ந்து விடுமென்பதில் சந்தேகமில்லை. இதைப் பொறுப்பானவர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
/ ༄།
துடைப்பமும் பெண்ணும்
ஐப்பானியப் பெண்கள் போராடித் தம் நிலையைக் காப்பாற்ற முன்வந்தள்ளனர், "ஃப்யூஜின்” - என்றால் ‘துடைப்பம் பிடிப்பவள்’ என்று அர்த்தம். ஐப்பானியர்கள் பெண்களை இதுவரை "ஃப்யூஜின்’ என்றே அழைத்து வந்தனர். இன்றைய பெண்கள் அவ்வாக்கத்தை மாற்றி, தம்மை பெண்ணென்றே அழைக்கவேண்டுமெனப் போராடி வெற்றி பெற்றுள்ளனர். இப்போது 'ஐஸிய்" - அதாவது பெண் என்றே அழைக்கும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ノ 104

Page 54
இலங்கையில் தமிழ் பேசும் மகளிரிடையே எழுத்தறிவும், வாசிப்புத்திறனும்
- வள்ளி கணபதிப்பிள்ளை -
தமிழ் பேசும் பெண்கள் என்று சொல்லும் போது, நான் இக்கட்டுரையில், அரசாங்க குடிசனமதிப்பீட்டின் படி நாட்டிலுள்ள வெவ்வேறு இனத்தவர்கள் எவ்வாறு வகுக் கப்பட்டிருக்கின்றனரோ அவ்வாறே நானும் வகுத்துள்ளேன். அதாவது, இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவழித்தமிழர், இலங்கை முஸ்லிம்கள் என்ற பிரிவுகளை வைத்தே ஆய்வு செய்துள்ளேன்.
முதலில் எழுத்தறிவும், வாசிப்புத்திறனும் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டும். ஒர் ஆணோ, பெண்ணோ வெவ்வேறு அளவீட்டுப் பிரமாணங்களைக் கொண்டு எழுத்தறிவும், வாசிப்புத் திறனும் உள்ளவர் என்று வரையறுக்கப்படலாம். அதாவது மேலை நாடுகளில் எழுத்தறிவும், வாசிப்புத்திறனும், வெவ்வேறு வரையறைகளால் மதிப்பிடப்படுகின்றன. ஆனல், இலங்கை போன்ற கீழைத்தேயங்களில் ஒருவருக்கு எழுதவும், வாசிக்கவும் தெரிந்தாலே எழுத்தறிவுள்ளவர் என்று வரையறை செய்யப் போதுமானதாகும்.
எழுத்தறிவும் வாசிப்பும் பெற கல்விப்பயிற்சி முக்கியம். ஆகவே , தமிழ் ப் பெண்களிடையே எழுத்தறிவும் , வாசிப்புத் திறனையும் பற்றிக் கூற வேண்டுமானால் அவர்களுடைய கல்விப்பயிற்சியைப் பற்றியும் எழுத வேண்டும். முக்கியமாக, அவர்களிடையே முறைசார்ந்த (Formal) பாடசாலைகள் மூலமாக பெறும் கல்விப்பயிற்சியை பற்றியே எடுத்துக் கூறவேண்டும்.
நான் ஏன் குறிப்பாக தமிழ் பேசும் பெண்களைப் பற்றி
எழுத வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுகிறது. உலகிலுள்ள
அனைத்து இனங்களையும் சேர்ந்த பெண்களைப் போலவே
தமிழ் பேசும் பெண்களும் ஒடுக்கப்பட்டு, தாழ்ந்த நிலையிலேயே
இருக்கின்ரு ர்கள். இந்நிலையின் அடிப்படை விளக்கம்
05

சமூகத்தின் ஆளுதிக்கத் (Patriarchy) தன்மையே ஆகும். ஆளுதிக்கம் என்பது ஒரு சமூகத்தின் எல்லா அமைப்புகளிலும், சமூகத்தின் கருத்தியலிலும் (Ideology) ஆண்களுடைய மேலாட்சி இருப்பதாகும். குடும்பம், அரசு போன்ற அனைத்திலும் இந்த ஆணுதிக்கப் பிரதிபலிப்பு இருப்பதை நாம் காணலாம். இதனால்தான் ஆண்கள் சமூகத்தில் சக்திமிக்கவர்கள், மேலானவர்கள் என்றும், பெண்கள் வலுவற்றவர்களாகவும், சமூகத்தில் தாழ்ந்தவர்களாகவும் நோக்கப்படுகின்றார்கள். ஆண்களின் ஆதிக்கம் சமூகத்தின் எல்லாப் பரப்புகளிலும் மேலோங்கியுள்ளது. ஆனல் பெண்களுக்குரிய வெளி குறுகியது, எல்லைகள் வரையறை செய்யப்பட்டதாகவும், பெருமளவுக்கு இல்லறமே அவர்களுடையே நல்லற வாழ்க்கையாகவும் வகுக்கப்பட்டுவிட்டது.
புராதன காலத்தில் பெண்களும், ஆண்களும் சேர்ந்து அறிவைத் தோற்றுவித்தார்கள். ஆனல் கடந்த ஈராயிரம் (2000), மூவாயிரம் (3000), ஆண்டுகளுக்குள் அறிவுத் திட்டத்தையும், அறிவைத் தோற்றுவிக்கும் முறைமைகளையும், வலுவையும் ஆண்கள் தமக்கேயென அபகரித்துக் கொண்டனர். அதுவும் இச்சக்தி உயர்குலத்தைச் சேர்ந்த ஆண்களுக்கே உரியதாகும் ஆண்கள் சமயத்தின் கோட்பாடுகளை சுவீகரித்து, பெண்களுக்கு காலங்காலமாக சமய வழிபாடுகளிலும் சடங்குகளிலும் இருந்து வந்த அதிகாரத்தையும் குலைத்தனர். இக்காலத்தில் சமய வழிபாடும் அறிவும் ஒருசேர இயங்கியதால் பெண்கள் இதன் பிறகு அறிவோ, சமயத்தில் தனிச் சக்தியோ, இல்லாமல் தாழ்த்தப்பட்டு விட்டனர். 16ம், 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியாவில் அறிவும், வலுவும் பெற்ற பெண்கள் சூனியக்காரிகள்" (Witches) எனச் சொல்லப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டார்கள். அதே போல புராதன இந்தியாவில் பெண்களுக்கு இந்து சமய வேதத்தை ஒதும் சக்தியோ, கேட்கும் சக்தியோ இருக்கக்கூடாது எனக் கோட்பாடு ரீதியாக வரையறை செய்யப்பட்டது.
ஆனல், இன்றைய நவீன யுகத்தில் கல்விப்பயிற்சி மூலமும், பாடசாலைகள் மூலமும் பெண்கள் அறிவையும் கல்வியையும் பெறும் வாய்ப்புப் பெற்றிருக்கின்றனர். குறிப்பாக, இலங்கையில், ஒல்லாந்து, பிரித்தானிய குடியேற்ற ஆட்சியின் பின் கல்வி நிறுவனங்கள், பாடசாலைகள் என்பன மூலம், ஏற்பட்ட
106

Page 55
முறைசார்ந்த (Formal) கல்விப் பரவலால் பெண்களும் நன்மையடைந்தனர். தொடக்கத்தில், பெண்கள் கல்வி, முக்கியமாக படித்த ஆண்களுக்கு ஏற்றவாறு நல்ல மனைவிகளை “உற்பத்தியாக்கும்" நோக்கத்துடனேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனல், காலம் செல்லச் செல்ல பெண்கள் தமக்கென தொழில் வாய்ப்புகள் பெறுவதற்காக கல்வியை நாடினர். இதனால் இலங்கை இன்று ஆசியாவிலேயே மிகக்கூடிய கல்வியறிவாற்றலுடைய பெண்களைக் கொண்ட நாடு என்ற சாதனையைக் கொண்டுள்ளது.
பெண்களுக்கு கல்வியென்பது ஒரு அவசியமான, பயன்மிக்க தேவைபாடு. கல்விமுலம் பெண்களுக்கு ஒரு புது உலகமே திறக்கப்படுகின்றது. அவர்களுக்கு வலுவும், முக்கியத்தவமும் கொடுப்பதோடும், தங்கள் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வல்லமையையும் கொடுத்து, புதிய தொழில்களில் ஈடுபட ஏற்ற வழியையும் கல்வி தருகிறது. இதனால் அவர்களுக்கு பாரம்பரிய வீட்டு வேலைகளிலிருந்து விமோசனம் கிடைக்கக்கூட்டும். அறிஞர்கள், பெண்கள் கல்விகற்பதனால் குடும்பங்களின் ஆரோக்கியம் பலமடங்கு ஏற்றம் பெறுகிறது என்பர். கட்டுப்படுத்தப்பட்ட சிறிய குடும்பங்கள் தோன்றவும் கல்வியறிவுடைமை ஒரு காரணமாகிறது.
இலங்கை வாழ் தமிழ்ப் பெண்கள்
இலங்கை வாழ் தமிழ்ப் பெண்கள் எனும்போது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பெண்களே குறிக்கப்படுவர். இத் தமிழ்ப் பெண்கள் பிரித்தானியர்களுக்கு, தம் அரசாட்சியும் பொருளாதார நடவடிக்கைகளும் வளர்வதற்கு, இலங்கை மக்களிடமிருந்து விகலாசமான, சமர்த்தர்களான நிருவாகிகள் தேவைப்பட்டது. பிரித்தானியர் ஆங்கிலக் கல்வி முழுவதும், சுதேச மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதன் மூலம் இத்தேவைகளையும் பூர்த்தி செய்ய கிறிஸ்தவ சமயப்பிரசாரகர்கள் நன்கு உதவினர். இச்சமயப்பிரசாரகர்கள் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களில் பாடசாலைகளை நிறுவினர். ஆரம்பத்தில், இப்பாடசாலைகள் ஆண்களுக்கென்றே தொடக்கய் பெற்றன. பின்னர், ஆண்களுக்கான பாடசாலைகளுக்கு இணையாக
107

பெண்கள் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதில், முதலாவதாக உடுவில் பெண்கள் கல்லூரி 1824இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது வட்டுக்கோட்டை செமினரி (VaticotaSeminary) என்ற ஆண்கள் கல்லூரிக்கு இணையாக ஸ்தாபிக்கப்பட்டது. இதன் பின் 1841இல் British Church Missionary Society 6Teip grf55neofu dipsinson நிறுவனம் பெண்களுக்கான விடுதிவசதியுடன் கூடிய கல்லூரி ஒன்றை நல்லூரில் ஆரம்பித்தது. இதன் பின் இன்னும் பல பெண்கள் பாடசாலைகள் யாழ்ப் பாண த்திலும் மட்டக்களப்பிலும் கொழும்பிலும் ஆரம்பிக்கப்பட்டன.
ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு கல்வி கற்பித்தலின் நோக்கம் கல்வி பயின்ற ஆண்களுக்கு தகுந்த மனைவிகளை உருவாக்குவதற்கே என்று ஏற்கனவே குறிப்பிட்டேன். இதற்குச் சான்று, கற்பிக்கப்பட்ட பாடவிதானமே ஆகும். அதாவது பெண்களுக்கு முக்கியமாக தையல்வேலை, சமையல் கலை, ஆங்கிலம் போன்ற இல்லற வாழ்க்கைக்கு தகுந்ததெனக் கருதப்பட்ட பாடங்களே கற்பிக்கப்பட்டன.
இக்காலத்தில், ஆங்கிலக் கல்வியும், அரசாங்கத்தில் உத்தியோகமும் பெற்றவர்கள் முக்கியமாக உயர்சாதியைச் சேர்ந்தவர்களே. பேரின்பநாயகம் இதற்கு விளக்கமாக, பிரித்தானிய குடியேற்றவாதத்தின் பின் அறிமுகப்படுத்தப்பட்ட மூலதன பொருளாதாரத்தினால் ஏற்பட்ட சமூக மாற்றங்களே என்பார். பின் 19ம் ஆண்டின் பின் அறிமுகப் படுத்தப்பட்டதாலும், பிரித்தானிய காலத்தில் விளங்கிய சமனற்ற கல்வி முறை ஒழிந்து, எல்லா சமயங்களையும் சாதிகளையும் சேர்ந்த சகல பெண்களுக்கும் கல்வி பெறும் வாய்ப்புக் கிடைத்தது. இம்மாற்றங்களுக்குப் பின் தமிழப் பெண்களிடையே கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது.
ஆங்கில குடியேற்றக்காலத்திலிருந்து தமிழர் சமுதாயத்தில் பெண் கல்விக்கு ஆதரவு இருந்ததை எப்படி விளக்க முடியும்? பெண்கள் இல்லற வாழ்விற்கே உரியவர்கள் என்ற கருத்து நிலை யாழ்ப்பாணத்திலும் இருந்தது. ஆனல் தென்னிந்தியாவில் இருந்த மிகஉக்கிரமான சமூகத் தடைகள், இலங்கையில் வாழும் பெண்களுக்கு இருக்கவில்லை என்று

Page 56
  

Page 57
முஸ்லிம் Gou Gaav s6nfesso Gau எழுத்தறிவையும் கல்வியறிவையும் நோக்குவதானால் இரு விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஒன்று, பொதுவாக முஸ்லீம் மக்களிடையே இருக்கும் குறைந்த கல்விநிலை, இரண்டாவது முஸ்லிம் பெண்களின் ஒதுக்கப்பட்ட தன்மை.
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது மற்ற சமூகத்தினரைப் போலன்றி முஸ்லிம்கள் ஆங்கிலேயரின் கீழ் அறிமுகப் படுத்தப்பட்ட கல்வி முறைகளால் நன்மையடையவில்லை. இவர்கள் முக்கியமாக வியாபாரத்தையே மையங்கொண்ட ஒரு சமூகமாக இருந்தனர். கல்வி கற்பதில் பெருமளவு பிரயோசமில்லையென்ற கருத்து வலுவாக இருந்திருப்பதற்கு சாத்தியங்களுள்ளன. மேலும் பெரும்பாலான பாடசாலைகள் கிறிஸ்தவ சமயப்பிரசாரர்களால் நடத்தப்பட்டவை. பெரும்பாலாக இப்பாடசாலைகளில் படிப்பதற்கு கிறிஸ்தவ சமயத்திற்கு ஒருவர் மதம் மாற வேண்டியிருந்தது. இதை முஸ்லிம்கள் மறுத்தனர். அவர்கள் தம்மிடையே இருந்த அராபிய, குரான் சம்பந்தமான படிப்பைக் கொண்ட இஸ்லாமியப் பாடசாலைகளுக்கே தம் பிள்ளைகளை அனுப்பினர்.
முஸ்லிம்களின் குடிப்பரம்பலும் ஒரு முக்கியமான காரணியாகும். முஸ்லிம்கள் பல கிராமங்களிலும் ஆங்காங்கு சிதறி இருந்தனர். ஆனல் ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஒரு சில தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களிலேயே இருந்ததனால் முஸ்லிம்களுக்கு, முக்கியமாக கிராமத்து முஸ்லிம்களுக்கு இதனால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.
இந்தப் பிரச்சினைகளை விட முஸ்லிம் பெண்கள் தாம் சமுதாயத்தில் பெற்றிருந்த தாழ்ந்த நிலையாலும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். மற்றைய சமுதாயத்தினரையும் விட இப்பெண்கள் அதிகம் ஒதுக்கப்பட்டவர்கள். புனித கொரானை வியாக்கியானஞ் செய்தவர்கள், பெண்கள் வீடுகளினுள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும், அதனால் அவர்களுக்கு கல்வியறிவு தேவையில்லையென்றும் கருதினர். இதனோடு இச்சமூகத்தினரிடையே மிகக் குறைந்த வயதில் பெண்கள் மணமுடிக்கும் வழக்கமும் இருந்தது. பன்னிரண்டு வயதுக்குக்
111

குறையாத சிறு பெண்களும் முஸ்லிம் சட்டத்தின் படி மணமுடிக்கலாம். இதனால் கிராமத்துப் புறங்களில் பெண்கள் சிறுவயதிலேயே படிப்பை விட்டு விட்டு மணமுடிப்பதைக் காணலாம்.
அதனால் கடந்த இருபது ஆண்டுகெளாக இச் சமூக மக்களிடையே கல்வி பெறுபவரின் எண்ணிக்கை கூடியிருக்கின்றது. கல்வியின் முக்கியத்தை அறிந்து பெற்றோர்கள் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினர். மற்றது, முஸ்லிம்களுக்கா ன பாடசாலைகள் கூடுதலாக அமைக்கப்பட்டன. பெண்களிடையேயும் கல்வி பயிலுபவர்கள் கூடியிருக்கின்றனர். அதன் முக்கியத்துவத்தை இச் சமூகத்தில் இருந்த பல பெரியோர்கள் எடுத்துக் கூறினார்கள். (Sir Razik Fareed) சார் ராசிக் பரீட் என்பவர் 19ம் நூற்றாண்டிலேயே முதல் முஸ்லிம் பெண் பாடசாலையை தொடங்கி வைத்தர். அதன் பின் ஞ. து. து. டூகூடியுஆயு போன்றவர்கள் பெண் கல்வியின் முக்கியத்தை எடுத்துரைத்தனர். எனினும் கல்வி கற்கும் பெண்கள் பெரும்பாலும் கலை சம்பந்தமான பாடங்களையும், சமயம் சம்பந்தமான பாடசாலைகளையுமே தேர்ந்தெடுக்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டவது முக்கியம்.
பெண்களின் தாழ்ந்த நிலையின் மீது கல்வியின் தாக்கம்
இலங்கையில் தமிழ் பேசும் பெண்கள் பொதுவாக கூடு தலா ன எழுத்தறி வும் , வா சபிப் புத் திறனு ம் பெற்றவரெனலாம். ஆஞலும் எல்லாப் பெண்களுக்கும் சமமான கல்வி கற்கும் சந்தர்ப்பம் இன்னும் இல்லையென்றுதான் கூற வேண்டும்.சிறு வயதிலேயே பல பெண்கள் வீட்டில் தம் தாய்மாருக்கு உதவியாக வேலைசெய்வதற்காக கல்வரியைத் தொடராது பாடசாலைகளிலிருந்து ஒதுங்கிவிடுகிறார்கள்.
மேலும் கல்வியினால் பெண்களின் நிலை எவ்வளவு
முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என்று நோக்கினால்,
ஆராய்ச்சிகளின் படி தற்போதைய பாடசாலைப் பாடங்கள்
சமுதாயத்தில் உள்ள பால் வேறுபாடுகளை உறுதிப்
2

Page 58
படுத்துவதாகவே இருக்கின்றன. ஆசிரியர்களும் கூட இவ்வித நோக்கங்களை கொண்டிருக்கின்றனர்.
இதனால் பெண்கள் கலை சம்பந்தமான பாடங்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஆண்கள் விஞ்ஞான ரீதியான பாடங்களை படிக்கின்றனர். சர்வகலாசாலைகளில் பெண்கள் sq és S5GM Gv (Architecture) GLumi gólurîulu Giv (Engineering) போன்ற பாடங்களை தவிர்த்து கூடுதலாக சமூக விஞ்ஞானம், கலை, சட்டம் போன்ற பாடங்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.
தொழில்முறைக் கல்வி (Vocational training) முறைகளிலும் பெண்களுக்கு வீட்டு வேலைகளுடன் சம்பந்தப்பட்டவற்றிலேயே பயிற்சி கொடுக்கின்றனர். அதாவது தையல், மனையியல் போன்ற “பெண்களுக்குரியவை" எனக் கருதப்படும் பாடங்களை கற்பிக்கின்றனர்.
கல்வி கற்ற பின்னும் கூட பெண்கள் சமுதாயத்தில், ஆணுதிக்கத்தை வலியுறுத்துகின்ற வேறுபாடுகளை கடைப் பிடித்து வருவதைப் பார்க்கலாம். ஒழுங்கு செய்த திருமணங்களையும், சீதனம் வாங்குதலையும் ஏற்றுக் கொள்கின்றனர். படித்த பின்னும் சமுதாயத்திலிருக்கும் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.
சமுதாயத்தில் ஆண் பெண் இருபாலரும் கல்விகற்றுள்ள போதும் பெண்களுக்கு எதிரான அபிப்பிராயங்களும் நோக்கங்களும் இன்னமும் பரவலாக செயற்படுகின்றன. பெண்களுக்கெதிரான பலாத்காரம், கொடுமை, பாலியல் வன்முறை போன்ற தீய செயல்கள் இன்னும் இருக்கின்றன. ஆண் ஆதிக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு பெண்களை அடிமைப்படுத்தும் கருத்துக்களும் இன்னும் பரவலாக நிலவுகின்றன.
113

அடிமைப் பெண்
சுற்றவர வேலியும் மதிலுமாய்க் கட்டியொரு சுந்தர மனை யமைத்துச் சொகுசான மணைகளும் அணைகளும் போட்டதில் சுந்தரி யவளை வைத்து மற்றவரை நோக்: "த வகையிலே தலைமீது மறைந்திர்ேத் திரையு மிட்டு மண்ணையும் விண்ணி னயும் அன்றியொரு காட்சியும் மருவிடn வகையுஞ் செய்து பெற்றவரின் வார்த்தையை அன்றியொரு
Gu Frff g5 25.351; in பேசாத வகையில் வைத்துப் பெருமைதரு காதையும் கண்ணையும் மூட ஒரு பெரிய உட் டிரையுந் தூக்கி இற்றைவரை பெண்ணினம் இருந்துவருநிலையினை என்னென்று சொல்ல வல்லேன் இறையருள் கொண்டஒரு மறைதனைக் கண்டதயி ஏந்தலே யா றசூலே!
இலட்சியப் பெண்
ஆண்களைப் போலவள் வெளியிலே செல்லுலாள் ஆடைகள் உடலை மூடும்: அழகிய தலைமுடி காலணி போடுவாள், ஆபரணம் நீக்கி விடுவாள், வீண்கதை கூருத வகையிலே முன்னேற்ற வேலையிற் பங்கு கொள்வாள், வெளியிலும் உள்ளிலும் அவள் சேவை தன்னையே வேண்டிடும் சமூகம் என்றும் துரண்களைப் போலவள் குடும்பமே தாங்குவாள், துலங்கிடும் கல்வி கற்பாள், துன்பங்கள் வந்திடில் ஆளுேடு சரிநின்று தூக்குவாள் வீர வாளை, ஈண்டிவை கொண்டபெண் இன்றுநம் தேவையே எவ்விதம் கண்டு நிற்போம் இறையருள் கொண்டஒரு மறைதனைக் கண்டநபி ஏந்தலே யா றசூலே!
கவிஞர் அப்துல் காதர் லெப்பை இயற்றிய இறைசூல் சதகத்திலிருந்த இவ்விரு கவிதைகளும் எம்மைக் கவர்ந்தன.
114

Page 59
19ம் நூற்றாண்டு இறுதி
20ம் நூற்றாண்டு ஆரம்பகாலப்பகுதிகளில் பத்திரிகைகளில் பெண்கள் பற்றிய நோக்குகள்
- நளாயினி கணபதிப்பிள்ளை
பெண்களின் நிலைபற்றிய வரலாற்றுப் போக்கினை ஆராய்வதற்கும் பெண்கள் சமூக பொருளாதார சமய வரலாற்றுத் தளங்களில் எவ்வாறு பங்காற்றியிருக்கிருர்கள் என்பதற்கும் சுவடிகள் எத்தகைய உதவி புரிகிறது என்பது முக்கியமானது. வரலாற்றில் பெண்நிலைப் போக்கானது எவ்வளவு தூரத்திற்கு சுவடிகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இங்கு இணைந்து நோக்கப்பட வேண்டியது.
இந்தவகையில் பத்திரிகைகள் பெண்கள் பற்றி என்ன சொல்லுகின்றன என்பது இங்கு நோக்கப்படுகிறது. இன்று பொதுவாக பெண்நிலைவாதம், பெண்நிலை இலக்கியம் என பெண்நிலை வளர்ச்சிப்படிநெறிகள் என ஆய்வுகள் விரிவடைந்து செல்லுகின்றன. இன்றைய பத்திரிகைகள் பெண்கள் தொடர்பான பல கருத்துகளுக்கு தளம் அமைத்துக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்காக ஒதுக்கப்படும் பக்கங்களில் கருத்து நெறி விஸ்தரிப்புகள் பெண்ணை தனித்துவப் போக்குடன் காட்டுகின்றன. இவ்வாறாக இவை ஒரு வித பிரச்சினைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் போது 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 20ம் நூற்ருண்டு ஆரம்ப காலப்பகுதியிலும் பத்திரிகைகளில் அதன் தோற்றக்காலங்களில் பெண்கள் பற்றிய நோக்குகள் எவ்வாறு வெளிக்கிளம்பின என நோக்கல் பொருத்தமானதே.
சமயக்கோட்பாடுகளில் பொதுவாக பெண்ணுக்குரிய இடம்
உயர்ந்ததாகவும் மதிப்பிற்குரியதாகவும் கருதப்பட்டது.
புராணங்கள் சமய நம்பிக்கைகள் இவற்றில் பெண்ணை
மதித்தார்கள். ஆயினும் சூழ்நிலைக்கு ஏற்றவாறான
அத்தனித்துவமும் பெருமையும் எவ்வகையில் பெண்நிலை
115

நின்று செயற்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. காலனித்துவ ஆதிக்கம், மேனட்டாதிக்கம், அரசியல் சமூக வரலாற்றுச் சூழ்நிலைகளின் படிமுறை வளர்வு இவை பெண்ணினது மனப்பாங்குகளும் சிந்தனைகளும் மாற்றமடைய வழிவகுத்தன. ஆயினும் மேற்குறிப்பிட்ட காலப்பகுதிகளில் இதுவரை கருதப்பட்டுவந்த பெண்ணுருவமும் பெண்கோட்பாடுகளும் பாரிய மாற்றமெதனையும் ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண்களின் நிலையானது தோன்றிய காலத்திலிருந்து ஒரு வடிவத்தையே பெற்றிருக்கிறது எனக் கூற முடியாது. பெண்களுக்கான வாக்குரிமை, கல்வி மற்றும் அடிப்படை உாரி ைமகளுக்கான போராட்டம் எனத் தொடரும் ஒவ்வொருவடிவங்களும் ஒவ்வொரு கால அமைவுகிளுக்கும் பல்வேறு சமூக மாற்றங்களுக்கும் ஏற்பவும் அமைகிறது.
பெண் நிலை வாத மென்ற சொற் ருே டரானது 19ம் நூற்றாண்டு இறுதிப்பகுதியிலும் 20ம்நூற்ருண்டு ஆரம்பப் பகுதியிலும் முதன் முதலாக உலக அரங்குகளில் பயன்படுத்தப்பட்டது. ஆசியாவில் அரசியல் விழிப்புணர்வு உச்சக் கட்டத்தை அடைந்த குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டங்களில் பெண்நிலைவாத விழிப்புணர்வும் ஏற்பட்டது. குறிப்பாக இக்காலப்பகுதியில் அந்நிய ஆதிக்கத்திற்கெதிராகவும் உள்ளூர் சர்வாதிகார, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளருக் கெதிராகவும் போராட்டங்கள் ஏற்பட்டபோதே பெண்நிலை உணர்வு ஆரம்பத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அப்போது உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளாக கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள், சொத்துடைமைக்கான உரிமை வாக்களிக்கும் உரிமை, பிறப்புக்கட்டுப்பாடு செய்யும் உரிமை விவாகரத்துச் செய்யும் உரிமை போன்ற பெண்களின் ஐனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தையே குறித்தது.
இக்காலப்பகுதியில் மேனுட்டார்வருகை, ஆங்கிலக்கல்வி
மத்தியதரவர்க்க தோற்றம், மதப்பிரச்சாரம், பண்பாட்டுமாற்றம்
என பலதர நிலைகளில் கருத்து மாற்றத்தைக் கொணர்ந்தது.
சமூக அமைப்புகளிடையே புதிய அம்சங்கள் தோன்றின.
ஆங்கிலக்கல்வி கற்று அரசாங்க சேவையில் ஈடுபட்ட
மத் திய தர வர்க்க மொ ன்று தோ ன்றியது. 116

Page 60
இவ்வர்க்கத்தினரிடையே கிறிஸ்தவ மதமாற்றம், மேனுட்டு மயப்படுத்தல் போன்றனவும் நடைபெற்றன.
நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு சிதைவடைய அதன் சிதைவிலிருந்து தோன்றி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூகமுறையும் அதன் விளைவான நவீனமயமாதலும் அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களும் 19ம் நூற்றாண்டு ஆரம்பப் பகுதிகளைக் கொள்கின்றன. சமய நெறியிலிருந்து சமூக நெறிக்கு மாறிக் கொண்டிருந்த அமைப்பினைக் காணலாம். தெய்வங்களும் திருத்தலங்களும் புராணங்களும் பெற்ற இடத்தை பொதுமனிதனும் நடைமுறைவாழ்வும் பெற்றன.
மேற்போந்த காரணிகளினால் முன்னைய பகுதியில் நிலவிய வாழ்க்கை நடைமுறையில் கால அமைவில் தளர்வு ஏற்படவேண்டிய அவசியமேற்பட்டது.
மேலும் 19ம் நூற்றாண்டு இறுதிப்பகுதியில் எழுந்த பெருந்தொகையான இலக்கியங்கள் சமய உள்ளடக்கம் கொண்டனவாகவே அமைந்தன. பல்வேறு சமயப்பிரச்சார நோக்கங்கள் காரணமாக கல்வி கற்றோரை மட்டுமன்றி மற்றோரையும் எட்டும்படி அவை சம்பந்தமான ஆக்கங்கள் அமையவேண்டியதாயிற்று. இலக்கியம் பரந்துபட்ட மக்களை எட்டவேண்டி யதாயிற் று. இவ் வகையில் தோன்றிய பத்திரிகைச் சூழலும் சமயஅடித்தளம் கொண்டதாக அமைந்தது. கிறிஸ்தவ மிசனரிமாரே மதம் பரப்புவதற்கெனப் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இதனால் ஏற்பட்ட எதிர்ப்பிரசாரம், சமூக-சமய பாதுகாப்பு உணர்வு, அமைப்புமுறைகள் மாற்றம் காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்வு ஒழுக்கம், பண்பு, ஆசாரம், கட்டுப்பாடு ஆகியன வற்புறுத்தப்பட காரணமாயிற்று.
பத்திரிகை வளர்ச்சியினால் இலக்கியம் தவிர்க்கமுடியாதபடி பரத்துபட்ட மக்களை எட்டவேண்டி ஏற்படுகிறது. பத்திரிகைகளின் தோற்றத்துடன் தமிழலக்கியம் பொதுத்தகவற் தொடர்புச்சாதனப் பண்பைப் பெற்றது.
அச்சுவசதி, வசனநடை வளர்ச்சி, பத்திரிகையின் தோற்றம் என்பவற்றுடன் கூட இக்காலத்தில் பரவலாகிய கல்வித்துறையும் 1 17

தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்கது. ஆங்கிலக்கல்வியின் மூலம் மேல்நாட்டு இலக்கியத் தொடர்பு ஏற்பட்டது. பழைய இலக்கிய வடிவங்களிலிருந்து விடுபடத் தொடங்கி சிறுகதை,நாவல் போன்றன தோன்றத் தொடங்கின.
இவ்வகை இலக்கியங்கள் மரபின் மாற்றத்துக்கும் புதுமையின் தோற்றத்துகுமிடையே தோன்றிய படைப்புகளாகப் பரிணமிக்கின்றன. பெண்களின் கல்வி, முன்னேற்றம் பற்றி பலரும் சிந்தித்து எழுதத் தொடங்கினர். ஆங்கிலக்கல்வி கற்ற தமிழ் அறிஞர்கள் மத்தியில் பெண் விடுதலைச் சிந்தனையின் ஆரம்பக்கூறுகள் சுருக்கொண்டிருந்தன. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சிறுகதை நாவல் படைக்கத்தொடங்கியிருந்தனர்.
சமூ க சம ய க எ லச சா ர வரிமு மிய ங் களினா லும் நம்பிக்கையினாலும் பெண்களின் நிலைமை மாற்றப்பட்டு சமுதாயத்திலும் வீட்டிலும் பெண்களின் நிலைமை மாறியதாக உருவெடுத்தது. இவை சமுதாய உளப்பாங்குகளினால் மட்டும் நிர்ணயிக்கப்பட்டன.
ஆயினும் பெண்களின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் மீண்டும் வீட்டைச்சுற்றியே விரிவுபடுத்தப்பட்டது.
பொதுவாக இக்காலப்பகுதியில், பெண்கள் தொடர்பாக பத்திரிகைகளில் பெண்களிற்கான கல்வி, பெண்களுக்கான கற்பு ஒழுக்கம், பெண்ணிற்கான கடமை, பெண் தொடர்பான செய்திகள் விமர்சனங்கள் ஆசிரியத் தலையங்கள் வெளியுலக பெண்கள் தொடர்பான கருத்துகள் சம்பவங்கள் போன்றன இடம்பெறத் தொடங்கின.
இவ்வகைப்பாடுகள் ஆண்களின் நோக்கு, பெண்களின் நோக்கு, ஆசிரியத் தலையங்கள், பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் என வகைப்படுத்திப் பார்க்கலாம்.
பெண் களிற்கான கல்வி என்பது பெண் களைப்
பொறுத்தவரையில் முதன்மையாக இடம்பெற்ற ஒன்று.
ஆனல் இக்கல்வி பெண்களின் கற்பு ஒழுக்கம், பெண்ணிற்கான
கடமை, கணவனுக்குச் சேவை செய்தல் போன்ற தர்மங்களை வலியுறுத்துவனவாக இருந்தது.
118

Page 61
இக்காலப்பகுதியில் முக்கியமாக பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டன . பண் பாடு என்ற வு டன் அதனுடன் நேரடித்தொடர்புள்ள ஒரு பார்வை பெண்மேலேயே விழுகிறது. அதனல் பெண்ணை மாற்றங்களுக்குள் உட்பட்டுப்போகாது பாதுகாக்கவேண்டிய சமூகத்தேவை ஏற்பட்டிருந்தது.
1894, 96 இலங்கைத்தின வர்த்தமானியில் -
நற்பெண்டாட்டிக்கு ஒரு சொல் என்ற பகுதியில் பெண்களுக்கு உபதேசம் செய்யும் வசனக்கோர்வைகள் பிரசுரமாகின. உதாரணமாக ("கணவனுக்கு மனைவி புத்திசாலியாக இருக்கவும்கூடும். அப்படியிருந்தலும் அதை அவள் கணவனுக்கு காண்பிக்கலாகாது") கணவனுக்கு விட்டுக்கொடுத்தும் அநுசரித்தும் எவ்வாறு நடத்தல் என்பது பற்றிய வற்புறுத்தல்கள் இடம்பெற்றன.
1886. 05, 20 இலங்கைத்தின வர்த்தமானியில் - ஸ்திரி புருஷர்களின் நிலைமை என்ற ஆசிரியத் தலையங்கத்தின்கீழ், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வகுக்கப்பட்டனவான சில பண்புகளை ஆண், சுறுசுறுப்பு மனேதைரியம் வீரம் உடையவராகவும் பெண், அடக்கம் சாந்தம் உடையவளாய் இருக்க வேண்டும் என வரையறுக்கப்படுகிறது.
மற்றையது வயோதிபனுக்கும் இளம்பெண்ணுக்கும் நடந்த சம்பாஷணை என்ற பகுதி. அதில் அக்காலத்திற்கேற்ற சில மாதர் முன்னேற்றம் பற்றி சிந்திக்கப்படுகிறது
செய்தியாக வெளியிடப்பட்டது -
" சீனசக்கரவர்த்தினி கராட்டி குஸ்தி இவைகள் பழகுவதில் நித்தியாப்பியாசம் செய்துகொண்டு வருகிறதாக ஒரு பத்திரிகை மூலமாயிறிகிருேம். அதில் நாகரிகமடைந்த தேசங்களிலுள்ள ஸ்திரிகள் புருடர்களுக்குரித்தான தொழில்களில் எல்லாம் தலையிட்டு தங்களுக்குள்ள பெண்தன்மையை முற்றிலுமிழந்து வருகிருர்கள். ஆ . இதென்ன வினுேதம். ஆயினும் பால்யவிவாகம் சதி என்பவற்றிலும் அவை சமூகத்தை விட்டுப் போகவேண்டியது என்பதும் மெதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
119

இவற்றைத் தொடர்ந்துவரும் 20ம் நூற்றாண்டு. பகுதிகளில் 1910 களிலும் ஏறத்தாழ இதே நிலை தொடர்கிறது.
1915, 1916 - பாலபாஸ்கரன் பத்திரிகையில் பெண்கள் பாலர் பக்கம் எனும் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்கீழ் கிருகபரிபாலனம், கல்வியினால் அடையும் நாகரிகமும் அல்லாமையால் அடையும் துன்பமும் என்ற தலையங்கள் வந்தமை குறிப்பிடத்தக்கது. இவை பெண்களுக்கும் பிள்ளைகளுக்குமான உபதேசப் பக்கமே. தம்பதியர் வாழ்க்கை என்பதின் கீழ் உதாரணமாக
தன் கணவன் அழகென்பதே இல்லாதவனாகவும் மிகவும் பரிணியானா கவும் தளர்ந்து மூப்புடையவராகவும் தரித்திரனாகவும் இருந்தாலும் பழுதுகூருமல் நறிகுணத்தோடு இணங்கி வாழ்கின்றவளே உத்தமி.
பெண்களின் உரையாடல் என்ற பகுதியின் கீழ் -
பெண் அடைத்துவைத்து கட்டுப்பாடுகள் விதித்து வைக்கப்படக்கூடியவள் அன்று. சாதாரணமாக அவள் வெளியில் திரிந்து கல்வி கற்று அதன் மூலம் பயன்பெற வேண்டும். ஆயினும் பெண் கல்வி எந்நிலையில் கூறப்பட்டது என்பது புரிகிறது. கல்வியின் பயனாக பெற்றோர்கள் சந்தோஷிக்கும்படி நடக்கலாம். நல்வழியிற் பிரவேசிக்கலாம். கணவனிடம் முறையாக நடந்துகொள்ளலாம். கற்பு, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பவற்றை பழகிக்கொள்ளலாம்.
பின்பு 20களில் இதுவரையில் இருந்துவந்த சில கட்டுப்பாடுகள் பொதுவாக தளர்த்தப்படுகிறது. ஆங்கிலக்கல்வி கற்றோர் ஆண், பெண் இருபாலரும் வெளிநாட்டு இலக்கியங்களுடன், வெளிநாட்டு பெண்களுடன் ஒப்பிட்டு நிலைமைகளை விளக்குகின்றனர்.
தமிழ் மகளிர் பாடசாலை விடயங்கள் பற்றி முக்கியத்துவம்
கொடுத்து செய்திகள் பிரசுரிக்கப்படத் தொடங்கப்படுகிறது.
ஆயினும் தமிழ் மகளிர் கழகங்களில் பேசப்பட்டனவும்
விதந்துரைக்கப்பட்டனவும் பெண்களுக்கான இல்லற
அறிவுறுத்தல்களும் பெண்களின் ஒழுக்க கட்டுப்பாடுகளுமே.
120

Page 62
1928 ஈழகேசரியில் சரவணர் அவர்கள் -
“நங்கையரின் மனவுரிமை பற்றி - பெண்ணிற்கு அநியாயம் இழைக்கப்படக்கூடாது என்பதையும்"நல்லணி மகளிரை ஆண்மக்கள் தம் முறுக்கால் கட்டுப்படுத்தி தங்கள் நலத்துக்கே பெண் மக்கள் உயிர்வாழவேண்டுமென பெருவழக்கிட்டு அங்ங்னமாக்கிக்கொண்டார்கள். அவற்றால் பெண்ணுலகு சீர்குலைந்து அல்லோலகல்லோலப்படுகிறது. பெண்ணின் திருவினார்க்கு பண்டைக்காலத்து பழங்குடித் தமிழ் மகளிர்கள் பெற்றுவந்த மணவுரிமையை வழங்கவேண்டும்" என கூறுகிறார்.
திராவிடன் 1928இல் மேனன்மணி அவர்கள் - "இல்லறம் நடத்துவதிலும் கற்றதெதனிலும் சம உரித்துடையவர்களென தெரிந்துகொண்டு ஆடவர் மகளிர் ஒருவரையொருவர் மீறி நடவாமல் சம உரித்துடன் ஒருவர்க்கொருவர் அன்னியோன்ய பாவத்துடன் நடத்தல் வேண்டும் என சம உரிமைக் கோட்பாட்டின் தொனி ஒலிக்கிறது. தேசாபிமானி 1924இல் பாலம்மாள் என்பவர் தற்கால பெண்கல்வி செல்வப்பெருக்கும் மனவலிமையும் நீண்டகாலம் அதிலேயே செலவழிக்கக்கூடிய செளகரியமும் உள்ள பெண்மணிகளுக்குள் சிலருக்கே உபயோகமாகிறது. பெண் சமூகத்திற்கு பயனளிக்கத் தக்கதாயில்லை. பெண்கள் அனைவரும் பயனடைந்தனர் என்றில்லை" என புள்ளிவிபரங்கள் மூலம் காட்டுகிருர்,
ஆயினும் தமிழர் போதினி 1925இல் பெண் பண்டிதைகளின் கணிப்பு வேருகத் தொனிக்கிறது. நாகரிகக்கல்வி கற்காது தாய்மொழிவல்ல கல்வியை பண்டைய முறைப்படி பயின்று ருேவதே சிறப்பானது என கூறுகின்றார். தற்கால மகளிரையும் - பண்டைக்கால மகளிரையும் ஒப்பிட்டு விளக்குகிறார்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக உழைப்பதனையும் நோக்கங்களில் ஒன்ரு கக்கொண்டு இயங்கிய தேசபக்தன், தேசாபிமானி போன்ற பத்திரிகைகளும் அவற்றில் பெண்நிலை தெ: . ர்பான கருத்துக்களை தெரிவித்த மங்களம்மாள் மீனாட்சியம்மாள் போன் ருே?ரின் தொடர்ச் சரியான கருததக்கங்கள் குறிப்பிடத்தக்க:ப.
,4 ھ ۂ

Af
மற்ருோர் அலுவலில் தலையிடாது நமது விஷயத்தில் மனதைச் செலுத்தி நமக்கு விதிக்கப்பட்ட நியதிகளின் உண்மைகளை உள்ளபடி விளங்கப் பிரயத்தனம் செய்யவேண்டும்" என 1925. 04 08 குறிப்பிடும் மங்களம்மாளின் கருத்துக்கள் அக்காலச் சூழ்நிலைக்கு ஏற்பவே பெரும்பாலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை.
இவ்விரு வரும் தமிழ் மகளிர் கழகங்களை தோற்றுவித்து, அதனை தொடர்ந்து இயக்குவதற்கு உதவி செய்திருக்கிறார்கள். இவ்விரு வரும் இவர்கள் பெண் கள் தொடர்பாக அச் சூழ் ந ைலக்கேற்ப சு மூக மான போக் கை கொண்டவர்களாயினும், அவர்கள் சமூகத்திற்காற்றிய சமூகவிழிப்புணர்வு முயற்சிகள், சமூக சேவைகள், பெண் முன்னேற்றம் தொடர்பாக கொண்டிருந்த அமைப்பு முறைமையும் , பொதுமக் களரிடம் தொடர்ந்தும் வற்புறுத்திக்கொண்டிருந்த போக்கும் சிலபடிநெறி வரைபுகளை கொணர்ந்தன என்பது உண்மையே. நாட்டிற்கு சுயராஜ்யம் கிடைக்கிறது போல, அதற்கு எவ்வளவு உழைக்கிருேமோ அதேபோல பெண்விடுதலையும் மெதுமெதுவாக போராடித் தான் பெறவேண்டும் என 1923. 04, 17 தேசாபிமானியில் மங்களம்மாள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கெல்லாம் மாறாக முரண்பாடான ஒன்றாக 1930 இல் ஈழகேசரிப்பத்திரிகை பெண் நிலையினை வன்மையான முறையில் எதிர்த்த பத்திரிகையாகக் காணப்படுகிறது.
ஈழகேசரி 1930.09.10 இல் -பெண்களும் வாக்குரிமையும் என்ற ஆசிரியத் தலையங்கத்தின் கீழ்
டொனமுர் அறிக்கையின் பின் பெண்கள் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. ". தமது சுதந்திரங்களை சரிவர நடாத்தும் ஆற்றல் ஆண்களாயுள்ளோரில் பெரும்பாலார்க்கே கைவரப் பெற்றிருக்கின்றமையை எவரும் ஒத்துக்கொள்வர். தமக்கென்றவோர் சொந்த அபிப்பிராயமும் விஷயங்களைப் பூரணமாக ஆலோசனைசெய்து சரியிழையறியும்
ஆற்றலும் பெண்களிடத்திருக்கிறதா . வாக்குரிமையாவது 122

Page 63
என்னவென்று ஆண்களே அறியாதிருக்கப் பெண்கள் எப்படி அறியப்போகிருர்கள். இவர்கள் தங்கள் நாயகர் வழியே செல்லுதல் உசிதமென்று எண்ணுவர். சரிபிழையறியும் ஆற்றல் இலராகும் இவர்க்கு நன்மையேது தீமையேது ஆண்கள் வாக்குரிமையைப் பெற்றும் பொறுப்பாட் சரியில் ஈடுபடாதிருக்கும்வரை பெண்களுக்கு இதனை வழங்கியதன் நோக்கம் நன் மை யைக் கொண் டு வரு மென்பது ஐயத்திற்கிடமென்பதாகும். . g
ஈழகேசரி 1930. 06, 22 பெண்கள் பகுதியில்
"பெண் கள் நன் னிலையடைய வேண்டுமாயின் இளமையாயிருக்கும்போதே ஊக்கமாய் கல்விபயில வேண்டும். பன்னிரண்டு வயதுக்குமேல் கல்விக்கழகத்துக்குச் சென்று பயிலுதல் நமக்கு மரபல்லவாகலின் வீட்டிலிருந்து குடும்பத்தை நடாத்த வேண்டிய சமைத்தல் முதலான சகல வேலைகளையும் கற்றுக்கொள்ளல் வேண்டும் வீட்டைச் சுத்தமாயும் அழகாயும் வைத்துக்கொள்ளவும், வீட்டிற்கு வேண்டிய உபகரணங்களைச் செய்து கொள்வதற்கும், நூல் நூற்றல் நெய்தல் முதலியனவும் கற்றுச் செய்தல் மிகவும் நன்று.
கல்வியை விட்டுவிடாமல் வேலையில்லாத வேளைகளில் நல்ல நூல்களைக் கவனமாகப் படித்தல் வேண்டும். மனதைக் கெடுக்கும் இக்காலக்கதைகள் (நாவல் முதலியன எப்போதும் பார்க்கவே dň L-ITg5!. கடவுளிடத்தில் பக்தியை உண்டுபண்ணக்கூடிய தேவார திருவாசகம் முதலிய தோத்திரங்களை நன்கு பழகுதல் வேண்டும். பெண்கள் அடிக்கடி அயல் வீடுகளுக்குச் செல்லுதல் கூடாது. அவமானம், இடையூறு, வீட்டுவேலைகள் கெட்டுவிடும் என்பதால் .”
ஈழகேசரி 1930. 10, 22இல்
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பதின் கீழ் " ........ தமிழ்நாட்டிற்கேற்றவண்ணம் பெண் கல்வியை வளரச்செய்யவேண்டியவசியம் வலியுறுத்தப்பட்டு கலியுகத்திற்
123

பெண்கள் பெரும்பாலும் கொடியராயிருப்பரென்று கூறியிருக்கவும் உலகத்திற்குத் தீமை பயக்கக்கூடிய கல்வியை பெண் களுக்குப் புகட்டுவது கேவலமாகும்." எனக் குறிப்பிடப்பட்டிருப்பது எமது கவனத்திற்குரியது.
முடிவுரை
30ல் தோன்றிய இப்பெருவீச்சு அடுத்துவந்த ஆண்டுகளில் காணப்படவில்லை ஈழகேசரியில் கூட கற்புநிலையும் காரிகையரும், பூவையரும் பூஷணமும், அரிவையரும் ஆகாரமும் என அமைந்தாலும் அவற்றை உணர்த்துவதிலும் வலியுறுத்துவதிலும் ஏற்பட்ட தளர்வு குறிப்பிடத்தக்கது.
ஆண் பெண் இருபாலாருக்கும் கல்வி வேண்டும் என்பது பற்றி முன்னேற்ற நோக்கு புலப்படுகிறது. பெண் கல் வரி பற்றி 3 4.0 3.18 ஈ ழகே ச ரியரில் ராஜகோட்டியப்பன் அவர்கள் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என அரற்றித் திரியும் கிழப்பிணங்கள் ஒழிக. பெண்கள் படிப்பது உத்தியோகம் பார்க்கவா எனக்கூறி இளம் மாணவிகளைப் பரிகசிக்கும் பாமரரும் அழிக எனும் வீச்சு புதிய ஒன்று. பெண்ணுரிமையைப் பற்றி, பெண்களை அடிமைப்படுத்தும் இந்துமதக் கொள்கை பெண்ணுக்கு சமூகம் இழை த்து ஸ்ள கொடு மை  ைய, பெண் முன்னேறவேண்டும் என சாமி சிதம்பரனார் அவர்கள் குறிப்பிட்டு 1934.03. 18 ஈழகேசரி எழுதிய பகுதிகளும் புதிய வீச்சுகளின் தொடர்தளங்களே.
1932முஸ்லிம் நேசனில் முஸ்லிம் பெண்களும் கல்வியும் குழந்தைகளைச் கல்வி பயிலச் செய்யுங்கள். உண்மை பர்தா
முறையை கைக்கொள்ளுங்கள் போன்ற எழுச்சிகள் முஸ்லிம்
124

Page 64
பெண்களிடையே ஏற்படத் தொடங்கியமையை இது காட்டுகிறது.
1930 கள்வரை பெண் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில் வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால் அதனை தெரிவிக்கும் தொனி கட்டுபாடுகளை தோற்றப்பாடுகளை விதிக்கும் முறைமை மெதுமெதுவாகவே தளர்த்தப்பட்டு வந்துள்ளது. மேலும் அவை வெளிவரும் பத்திரிகைகளின்
தளநோக்கை கருதியும் அமைந்தன எனலாம்.
ஐனநாயக உரிமைகள் பற்றியும் அரைவாசி மக்கள் தொகையினருக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை என்ற நியாயமற்ற நிலைபற்றியும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. இவ்வெழுச்சியானது உலக சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தள அமைவுகளுக்கு ஏற்பவும் அவற்றினை கொள்கை கோட்பாடுகளுக்கு ஏற்பவும் மேற்பாந்த பெண்நிலை
படிமுறைகள் மாற்றமடைந்துள்ளன.
இவ்வாறான கருத்து தோற்ற வளர்ச்சி நெறிகளை சமுதாயத்தில் எவ்வகையான மாற்றங்களை, முறைமைகளை ஏற்படுத்தியது சமூகத்தின் பதிலும் ஈடுபாடும் எவ்வாறு அமைந்தன என்பதையும் பலமுனைச் கருத்துத் தளமாக
அமையும் பத்திரிகைகள் வெளிக்கொணர்ந்தது.
125

இலங்கையின் சமூக, ஜனநாயக, சீர்த்திருத்த இயக்கங்களில் முன்னோடிகளான சில தமிழ்ப்பெண்கள் - சித்திரலேகா மெளனகுரு -
இலங்கையின் நவீன சமூக அரசியல் வரலாற்றின் உருவாக்கத்திற்குப் பல பெண்கள் பங்களித்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இவர்கள் சமூக சீர்த்திருத்தம், தொழிலாளர்நலன், அரசியல், ஜனநாயக உரிமைகள் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளனர். எனினும் இலங்கையின் நவீன வரலாற்றுக் கல்வியில் இவர்களுக்குப் போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை; பெண்களது செயற்பாடுகள், தகவல் என்ற அளவிலாயினும் கூட பதிவு செய்யப்படவில்லை. எந்தவித முக்கியத்துவமும் அற்று, பெயரளவிலும் ஆண்களுக்கு அவர்களது செயற்பாடுகளில் உதவியோர் என்ற அளவிலுமே இப் பெண்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வரலாற்றியலில் காணப்படும் ஆண்நிலை நோக்கமே பெண்கள் பற்றிய இத்தகைய அலட்சிய மனேபாவத்துக்கு அடிப்படைக் காரணமாகும்.
எனினும் சமீபகாலமாக, இலங்கையில் மறைக்கப்பட்டுள்ள பெண்கள் வரலாறு பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் எழுபதுகளிலிருந்து ஏற்பட்ட பெண்நிலைவாத எழுச்சியும், பெண்கள் இயக்கங்களின் ஆர்வமும் இலங்கைப் பெண் கள் வர லாற்றை உருவாக்குவதற்குப் தூண்டுகோலாக உள்ளன. இலங்கையின் சமூக முற்பகுதியிலிருந்து ஈடுபட்டு உழைத்த பெண்மணிகள் சிலர் பற்றிய ஆய்வுகள் தற்போது வெளிவந்துள்ளன. 1
இத் தொடர்பில் இலங்கையின் தமிழ் பேசும் பிரதேசங்களில், சமூக சீர்திருத்த, ஜனநாயக இயக்கங்களில் முன்னின்றுழைத்த சில பெண்மணிகள் பற்றி அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவர்கள் சமூக சீர்த் திருத்த வாதிகளாகவும், எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் பணிபுரிந்துள்ளனர். தமது காலத்தில் காணப்பட்ட சமூகப்பழமைவாதத்தையும்,
126

Page 65
பிற்போக்குத்தனத்தையும் கண்டு மனந்தளர்ந்து விடாது பெண்களுடைய உரிமைகளுக்காக இவர்கள் உரத்துக் குரல் கொடுத்தனர். அத்துடன் பொதுவான சமூக நலன்கருதிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.
இப் பெண்மணிகளுள் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மங்களம்மாள் மாசிலாமணி என்பவராவர். இவர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பிரபல வழக்கறிஞராக விளங்கிய கதிரவேற்பிள்ளையின் புதல்வியாவர். மங்களம்மாள் கல்வியறிவும் செல்வாக்கும் மிக்க குடும்பப் பின்னணி கொண்டவர். இவரது உறவினர்கள் சிலர் இந்தியாவில் கல்வி கற்றுத் தொழில் புரிந்தவர்கள்.
மங்களம்மாள் பாடசாலை சென்று முறையாகக் கல்வி கற்றதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் வீட்டிலிருந்து போதியளவு ஆங்கிலமும் தமிழும் கற்றுத் தமது கல்வி அறிவினை விருத்தி செய்து கொண்டார். 2 இவரது கணவர் மாசிலாமணி கேரளத்தில் கல்வி கற்றவர். ஒரு முற்போக்குவாதி. தேசாபிமானி என்ற பத்திரிகையை யாழ்ப்பாணத்திலும், பீபிள்ஸ் மகசீன் (Peoples Magazine) என்ற பத்திரிகையை கொழும்பிலும் வெளியிட்டவர். இத்தகைய குடும்பச் சூழலில் வாழ்ந்த மங்களம்மாள் சமூக உணர்வு உள்ளவராக வளர்ந்ததில் வியப்பில்லை. யாழ்ப்பாணத்திலும், இலங்கையின் எனைய பகுதிகளிலும், உலக நாடுகளிலும் நடைபெறும் விடயங்களை அறியும் வாய்ப்பும் மங்களம்மாளுக்கு இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொதுவாக இலங்கையில் பெண்களைப் பற்றிய பழமைவாதக் கருத்துகளே காணப்பட்டன. பெண்களுக்குக் கல்வி அவசியம் என்ற கருத்தைச் சுதேசிகளும் வெளிநாட்டவரும் அடிக்கடி கூறிய போதும், பெண்கள் பாடசாலைகள் நிறுவப்பட்டபோதும் எத்தகைய கல்வி பெண்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்பது குறித்துக் கருத்து வேறுபாடு நிலவியது. பெண்கள் குடும்ப வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதற்குரிய கல்வி பெற்ருலே போதுமானது என்ற கருத்தினைப் பல ஆண் சமூக சீர்திருத்தவாதிகள் தெரிவித்தனர். பெண்கள் சமூகப் பணிகளிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது பெண்களின் இயல்புக்கு உகந்த காரியம் அல்ல என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இத்தகைய ஒரு
127

பின்னணியிலேயே மங்களம்மாள் பெண்களின் நவீன முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்ததுடன் பத்திரிகை, ஸ்தாபனங்கள் ஆகியவற்றையும் ஆரம்பித்தார்.
சமூகப் பணிகளின் முலம் மக்களை முன்னேற்ற
முடியும் என்ற கருத்துக் கொண்டிருந்த மங்களம்மாள் 1902 ஆம் ஆண்டு அளவில் “பெண்கள் சேவா சங்கம்' எனும் ஒரு நிலையத்தை யாழ்ப்பாணம் வண்ணுர் பண்ணையில் தொடங்கியதாக அறிய முடிகிறது.
"நாமறிந்த அளவில் இச்சங்கமே தேசிய உணர்வு பெற்ற இலங்கைப் பெண்களின் முதலாவது சங்கம் எனலாம். 1902ஆம் ஆண்டின் முன் இத்தகைய ஒரு சங்கம் இருந்ததாக அறிய முடியவில்லை. இச்சங்கம் மதச் சார்பற்றதாய் தமிழ் மகளிருக்குப் புதிய அறிவையும் த ன்னம் பரிக் கை யையும் ஊட்ட வல் லதாய் அமைக்கப்பட்டதால் பெண் விடுதலையை நோக்கிய முதலாவது சங்கம் எனக் கொள்ளலாம்." இராமலிங்கம் 6 : 1985)
மங்களம்மாள் இலங்கையின் முதற்பெண் பத்திரிகையாளர் ஆவர். இவர் நடத்திய பத்திரிகை தமிழ் மகள் என்பதாம். 1923ஆம் ஆண்டு இப்பத்திரிகையை இவர் ஆரம்பித்தார். யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட இச்சஞ்சிகை மங்களம்மாள் இந்தியாவில் சில வருடங்கள் வாழ்ந்தபோது அங்கிருந்தும் வெளிவந்தது.
இச்சஞ்சிகை பற்றி தேசபக்தன் என்ற பத்திரிகையில் வெளிவந்த விளம்பரம் ஒன்றில் "பெண்களின் முன்னேற்றத்தை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒர் இனிய மாதாந்தப் பத்திரிகை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மகள் சஞ்சிகையில் "நாமார்க்கும் குடியல்லோம்”
என்ற வசனம் இலட்சிய வாசகம் போல குறிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் எவருக்கும் கட்டுப்பட்டவர்களோ, அடிமைகளோ
இல்லை என்பதையும் சுயாதீனமானவர்கள் என்பதையும்
இவ்வாசகம் வெளிப்படுத்துகிறது. இச்சஞ்சிகை, பெண்
விடுதலை, பெண் சமத்துவம், சீதனக் கொடுமை போன்ற
2.

Page 66
பெண்கள் தொடர்பான விடயங்களையும் தீண்டாமை, சுயஉற்பத்தியில் ஈடுபடுதல் போன்ற பொதுநல, விடயங்களையும் கொண்ட கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது.
இச்சஞ்சிகை ஆரம்பத்தில் மாதாந்தப் பத்திரிகையாகச் சில வருடங்களே வெளிவந்தது. பின்னர் நிதி நெருக்கடியினாலும் வேறு தடங்கல்களினாலும் காலஒழுங்கற்று வெளிவந்து இறுதிப்பகுதியில் பின்னர் வருடாந்த வெளியீடாக மாறியது. முற்றாக நின்று போயிற்று.
மங்களம்மாள் தமது பத்திரிகை மூலமாக மாத்திரமன்றி அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஏனைய பத்திரிகைகள் மூலமாகவும் தமது கருத்துக்களைத் தெரிவித்தார். தேசபக்தன், இந்து சாதனம், ஈழகேசரி, Hindu Organ போன்றன இவர் எழுதிய எனைய பத்திரிகைகளாகும்.
பெண்களுக்கு அரசியல் உரிமைகள் தேவை என்பதில் மங்களம்மாள் அசையா உறுதியுடையவராயிருந்தார். 1927இல் இலங்கைக்கு வந்த டொனமூர்க் கொமிஷன் அரசியற் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக இலங்கையரின் ஆலோசனைகளையும் கேட்டது. தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பொதுமக்கள் மட்டத்தில் விரிவுபடுத்துவதற்கு சுதேசிகள் மட்டத்திலிருந்து எதிர்ப்பும் கிளம்பியது. சொத்து, கல்வி ஆகியவை உடைய ஆண்களே தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என இவர்கள் வாதாடினர். இக்கருத்தை பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெண்கள் வாக்குரிமைச் afia; to (Women Franchise Union) spoulull-gi. Gaul, டயஸ் பண்டாரநாயக்காவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பில் திருமதி கெராட் வீரக்கோன், அக்னஸ் டீ. சில்வா, டபிள்யூ. ஏ. டி. சில்வா போன்றோருடன் திருமதி ஈ.ஆர். தம்பிமுத்து, திருமதி நல்லம்மா சத்தியவாகீஸ் வர ஜயர் போன்ற தமிழ்ப் பெண்களும் அங்கம் வகித்தனர். இச்சங்கம் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டுமெனக் கோரி டொனமுர்க் கொமிஷன் முன்னர் 1928 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி சாட்சியமளித்தது (The Independent 14 Jan 1928)
129

பெண்களது இத்தகைய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. சேர். பொன்னம்பலம் இராமநாதன் இத்தகைய எதிர்ப்பாளர்களில் ஒருவராக முன்னின்ருர், பொதுவிடயங்களில் ஈடுபடுவது பெண்களுக்குச் சற்றும் பொருத்தமற்றதாகும் என்று கூறினார். இத்தகைய சமூகப் பழமைவாதக் கருத்துகளை அக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் சிலவும் எதிரொலித்தன. யாழ்ப்பாணத்துப் பத்தரிகையொன்று பின்வருமாறு ஆசிரியத் தலையங்கம் எழுதியது.
"சென்ற வருடம் இலங்கைக்கு வந்த அரசியல் விசாரணைச் சங்கத்தார் இங்குச் செய்யத்தக்க அரசியற் திருத்தங்களுள் சட்டநிருபணசபை போன்ற சபைக்கட்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தனுப்பும் விஷயத்தில் பெண்களுடைய சம்மதத்தைப் பெற்றலும் ஒன்றெனக் கூறிவிட்டனர். ஆனால் ஷ விசாரணைச் சபையார் தாமாக இதனைக் கூறினாரல்லர். கொழும்பிலேயுள்ள ஆண்தன்மை பூண்ட தன்னிஸ்டப் பெண் ஜன்மங்கள் சிலர் கேள்விக்கிசைந்தே விசாரணைச் சபையாரும் பெண்ணென்றால் பேயுமிரங்மென்னும் பழமொழிப்படி உடன்பட்டு விட்டார்கள். இத்திருத்தம் எங்கள் சமயம், சாதி, தேசம், பழக்கவழக்கம், கொள்கைகள் என்று சொல்லப்படுவன எல்லாவற்றிற்கும் முழுமாறானதாகும். பெண் தன்னெண்ணத்திற்கு நடந்து கொள்ளுதல் சைவ நன் மக்களுள் எ க் காலத் திலுமரி ல்லை. கற்பெனப்படுவது சொற்றிறம்பாமையென்ற பிரகாரம் நாயகனுடைய சொற்படி ஒழுக வேண்டிய பெண் அவன் சொல்லை மீறி இரு மனப்படுவளேல் அவள் செல்வத்தோடு கூடியவளாயினுமென், பேரழகோடு கூடியவ ளாயினு மென் , கல் வரியறிவு வாக்குச் சாதுரியத்தோடு கூடியவளாயினு மென் அவள் பொதுமகளாவாள் . மேலும் பறங்கியர், ஒல்லாந்தர் முதலாம் அந்நிய சமயத்தினர் இந்த இலங்கையைப் பரிபாலித்தபோது சமயநிஷ்டூரம் செய்தனரேயன்றி இந்த விதமாக எங்கள் சாதிக்கட்டுப்பாட்டையழித்து இங்குள்ள பெண் களைப் பொதுக் கருமங்களிற் பிரவேசிக்கச் செய்து பொதுமகளிராக்கி விடவில்லை. பெண் களு க்கும் ஆண்களுக்குமரிடையே
130

Page 67
பேதிமில்லையென்னும் கொள்கை பூண்ட மேலைத் தேசத்தவர்களாசிய விசாரணைச் சங்கத்தார் தங்களைப் போல எங்களையும் தங்கள் பெண்களைப் போல எங்கள் பெண்களையும் மதித்து தீமைக்கும் கலகத்திற்கும், சா தி சமய மகத் துவங் களையும் பழைய சீர்த்திருத்தத்தையும் கெடுத்தற்கும் ஏதுவாகவுள்ள இந்தப் போலிச சுவாதீனத்தை ஏற்றுக் கொள்ளச் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்ள வேண் டு மென்பது கட்டுப்பாடாகுமா? இந்துசாதனம் 08 - 11 - 1928)
பெண்களது அரசியற் சுயாதீனத்தை மேற்கண்டவாறு மறுத்து எழுதய இந்து சாதனப் பத் திாரிகை யின் ஆங்கிலப்பதிப்பில் பெண்களது வாக்குரிமையின் அவசியம் குறித்து மங்களம்மாள் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
“உலகம் முழுவதும் பெண்கள் தமது நிலையை உணர்ந்து தமது உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் பெண்கள் வாக்களிப்பதற்கு மாத்திரமன்றி முனுசிபல், கவுன்சில், சட்டசபை போன்றவற்றுக்கான தேர்தல்களுக்கு வேட்பாளர் ஆவதற்கும் உரிமையுடையவர்கள். இத்தகைய உரிமைகள் அவர்களுக்கு இலகுவில் கிடைத்துவிடவில்லை. அவர்கள் தாமே தமது உரிமைகளுக்காகப் போராடியுள்ளனர். ஆனால் எமது இலங்கைப் பெண்கள் இத் திசையரில் தமது சுட்டு வரிர  ைலத் தா னும் அசைக்கவில்லை. எனவே சகோதரிகளே நாம் எமது உரிமைகளுக்காகப் போராடுவோம்; அவை கிடைக்கும் வரை சளைக்க மாட்டோம்.
“எமது உரிமைகளை தாமாக எவரும் எமக்கு வழங்கப் போவதில்லை. நாம் வழங்கும் சீதனத்தின் மூலம் வாக்களிக்கவும் சட்டசபைப்பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படவும் உரிமை பெற்ற எமது சகோதரர்கள் எமது பிறப்புரிமைகள் பற்றி ஒரு சொல்லைத் தானும் விசாரனைச் சபையாருக்கு அனுப்பிய பல்வேறு விண்ணப்பங்களில் கூறுவதற்கு நினைக்கவில்லை. நாம் ஆனைகளுடன் சமஉரிமை பெறவேண்டும். வாக்களிப்பதற்கு மாத்திரமல்ல
3.

சட்டசபைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் எமக்குத் தேவையானது. சுருக்கமாகக் கூறின் இப்போது நிலவும் அசமத்துவ நிலை நீக்கப்பட்டு இலங்கைப் பெண்கள் ஆண்களுடன் சமத்துவமான அரசியல் உரிமைகளைப் பெறவேண்டும்." (Hindu Organ 3-10-1927)
சேர். பொன். இராமநாதன் போன்றோர் பெண்களது சமூகப் பங்களிப்பை மறுத்து பெண்களுக்கு வீடே உலகம் என்ற கருத்தை வற்புறுத்தியதற்கு மாறாக மங்களம்மாள், விவாகம் செய்யாமல் சமூகப்பணி செய்வது பற்றியும் குறிப்பிட்டார்.
“பெண்களுக்கு விவாகம் ஒன்றே முடிந்த முடிவு எனக் கருதக் கூடாது. பெண்கள் கன்னிகளாக இருந்து கடவுட் பணியோ சமுதாய சேவையோ செய்ய முடியும்" இராமலிங்கம் வள்ளிநாயகி: 1985; 17) எனவும் எழுதினார்.
மங்களம்மாள் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்லாது இலங்கையின் எனைய பகுதிகள் சிலவற்றிற்கும் தமது பணிகளை விரிவுபடுத்தினார். குறிப்பாக திருகோணமலைக்குச் சென் று அங்கு பெண் கள் அ ைமப் பு களரில் சொற்பொழிவாற்றுவதிலும் ஈடுபட்டார். திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கத்தின் 11ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குத் தலைமை வகித்து மாதர் சங்கங்களின் நோக்கங்கள் பற்றியும் உலகமேம்பாடு குறித்து பெண்கள் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் உரையாற்றினார். (ஈழகேசரி 11 - 3 - 1931) இந்தியாவில் தங்கியிருந்த சிலவருட காலத்தினும் அங்கும் அரசியல் காரியங்களில் ஈடுபட்டார். காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்ட மங்களம்மாள் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து செயற்பட்டார். 1927இல் சென்னையில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். இவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஜஸ்டிஸ்கட்சி வேட்பாளர் மிகக் குறைந்த வாக்குளாலேயே வெற்றி பெற்றார். 3
இத்தகைய பன்முக ஆளுமை கொண்ட மங்களம்மாள் பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. 132

Page 68
அவரது எழுத்துகள் யாவும் அட்டவணைப்படுத்தப்பட்டால் அவரது கருத்துகளின் பரப்பைத் தெளிவாக அறியமுடியும்,
மங்களம்மாளின் சமகாலத்தவரான இன்னோர் முக்கிய பெண்மணி மீனாட்சியம்மாள் நடேசையராவர். தமிழ்நாடு தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் இளமைக் காலத்தில் இலங்கை வந்தார். மலைநாட்டின் முதலாவது தொழிற்சங்கத்தை நிறுவியவரான நடேசைய்யரை மணமுடித்த பீனாட்சியம்மாள் மலையக மக்களுக்கான சேவையிலேயே தனது வாழ்நாளைக் கழித்தார்.
மங்களம்மாளைப் போலவே மீனாட்சியம்மாளும் எழுத்தாளராவர். பத்திரிகைத் துறையிலும் ஈடுபட்டவர். நடேசைய்யர் வெளியிட்ட தேசபக்தன் எனும் பத்திரிகையில் தேவையானபோது தலையங்கங்களும் கட்டுரைகளும் எழுதினார். அத்துடன் இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை என்ற தமது பாடல் தொகுப்பொன்றையும் 1940ஆம் ஆண்டு வெளியிட்டார்.
மீனாட்சியம்மாள் மலையக் தொழிலாளரின் நலனில் பெரும் அக்கறை கொண்டிருந்தார். இக்காலத்தில் மலைநாட்டுத் தொழிலாளர் நிலைமை மிக மோசமானதாய் அமைந்திருந்தது. அரை அடிமை நிலைமையில் தொழிலாளர் வாழ்ந்தனர். தோட்டங்களில் காணப்பட்ட கங்காணிமுறை, துண்டு முறை போன்றவை அதிகளவு சுரண்லுக்குக் காரணமாகின. பெண் தொழிலாளர் நிலைமை எனையவர் நிலையை விடச் சிரமம் நிறைந்ததாய்க் காணப்பட்டது. ஒடுக்குமுறைச் சட்டங்களுக்குத் தமது எதிர்ப்பை எந்தவிதத்திலாவது தெரிவிப் போருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இத் தொடர்பில் பல பெண்களும் கூடக் கடூழிய சிறைத்தண்டனை பெற்றனர்.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே மலையகத்துத் தொழிலாளரின் துயரை விபரிப்பதாகவும், இவற்றை நீக்குவதற்குரிய செயல்களில் ஒன்றிணைந்து ஈடுபடுமாறு துரண்டுவதாகவும் இவரது பாடல்கள் அமைந்தன. தமது கருத்துக்களைப் பரப்புவதற்குரிய சாதனமாக இசையைக் கையாண்டார். அவரது பாடல் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
133

"இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காகத் தீவிரமுடன் போரவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அத்தகைய பிரசாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட்டுகளின் மூலம் எடுத்துக் கூற முன் வந்துள்ளேன். இந்தியர்களைத் தூக்கத்தில் ஆழ்ந்துவிடாது தங்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்குத் தீவிரமாகப் போராடும்படி அவர்களை, இப்பாட்டுகள் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே எனது அவா" (மீனாட்சியம்மாள் நடேசையர்: 1940)
மீனாட்சியம்மாள் பொதுக் கூட்டங்களில் பாடல்கள் பாடித் தொழிலாளாரிடையே விழப் புனர் வைத் தட்டியெழுப்பியது மாத்தரமின்றி எழுத்துத்துறையிலும் ஈடுபட்டிருந்தார். பெண்களது முன்னேற்றம் கருதியதாக இவரது பெரும்பாலான கட்டுரைகள் அமைந்திருந்தன. தேச்பக்தன் பத்திரிகையில் 'ஸ்தீரிகள் பக்கம்' என ஒரு பகுதியை ஆரம்பரித்தார். இது 1928ஆம் ஆண்டு முற்பகுதியிலிருந்து ஆரம்பமாயிற்று. பெண்கள் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை வற்புறுத்திய மீனாட்சியம்மாள் பெண் கல்வி முன்னேற்றம், பெண்கள் தொடர்பான சட்டச் சீர்சித்திருத்தங்கள் ஆகியவை குறித்து இப்பக்கத்தில் அடிக்கடி எழுதினார். பெண்களது சுதந்திரம், முன்னேற்றம் பற்றி பேசியும் எழுதியும் வந்தால் மாத்திரம் போதாது; நடைமுறையில் இவற்றைப் பிரதிபலிக்கும் செயல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என இவர் அடித்துக் கூறினார்.
“ஸ்திரீகள் முன்னேற்றமடைய வேண்டுமெனப் பலபேர்கள் எழுத்து மூலமாயும், வெறும் பேச்சாகவும் பேசுகிறார்களே தவிரக் கையாள்வது கிடையாது. சில மகான்களும் பிரசங்க மேடைகளில் நின்று பெண்களுக்குக் கல்வி வேண்டும், சுதந்திரம் வேண்டும், அவர்கள் முன்னேற்றமடையாவிட்டால் தேசம் முன்னேற்ற மடையாது என்று வாயால் பேசுகிறார்கள். அவர்கள்
134

Page 69
வீட்டில் அம்மாளுக்கோ கோஷா திட்டம். இவ்வாறு விபரம் அறிந்தவர்கள் நிலைமையே மோசமாயிருந்தால் அதிகம் படிப்பறிவில்லாத ஆடவர் தங்கள் மனைவி மார் களை எப்படி நடத்து வார்கள் ? பெண்மக்களில் சிலர் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஈடுபட்டு உழைத்தாலும் அதற்கு ஆயிரம் இடையூறுகள் ஏற்படுகிறதே தவிர அனுகூலங்கள் ஏற்படுவது அரிதாக இருக்கிறது" (தேசபக்தன் 18-6-1928) என எழுதினார் அவர்.
இக்காலத்தில் நிகழ்ந்த பெண்கள் வாக்குரிமை இயக்கத்திற்கும் மீனாட்சியம்மாள் ஆதரவு அளித்தார். பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தில் அங்கம் வகிக்காவிடினும் பெண்களது வாக்குரிமை தொடர்பாக அக் காலத்தில் நிகழ்ந்த செயற்பாடுகளையும் விவாதங்களை இக்கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிட்டது போல பெண்களுக்கு வாக்குரிமை அறிவிப்பது பாரதூரமான தவறு என்ற கருத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக சேர். பொன்னம்பலம் இராமநாதன் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதை மிக வன்மையாக எதிர்த்தார்.
"குடும் ப அங் கத் த வர்களுடைய இதய அமைதியை யும் இ சைவை யும் கு ைலத் து அமைதியின்மைக்கு வழிவகுத்துவிடும்" என்றும் (டெயிலி நியுஸ் 1-12-27) அது "பன்றிகளின் முன்னர் முத்தைத் தூவுவது போலாகும்" எனவும் (டெயிலி நியுஸ் 16-1-1928) அவர் கூறினார். இராமநாதனுடைய இத்தகைய நிலைப்பாடு குறித்துக் பெண்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் காணப்பட்டது. பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் "எதிரியாகவே இவர் கருதப்பட்டார்.
மீனாட்சயம் மாள் தேசபக்தனரில் எழுதிய கட்டுரை யொன் றில் இராமநாதனின் இத்தகைய பிற்போக்குத்தனமான நிலைப்பாடு குறித்துக் கண்டனம் செய்தார்.
" டொனமூர் கமிஷன் முன் இலங்கைப் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும் என
135

வற்புறுத்தி கனம் நடேசையரும் ஹீமான் பெரி. சுதந்திரம் முதலியோரும் சாட்சியம் கொடுத்துள்ளனர். ஆனால் சேர். டென்னம்பலம் இராமநாதனைப் போன்றவர்கள் குறுகிய நோக்கத்துடன் பெண்களுக்குச் சமஉரிமை கொடுக்கக் கூடாதென்ற விஷயமானது 1ெ1ாதுமக்களுக்கு ஆச்சரியமாகத் தானரிரு க்கும் , இந்தியாவை விட முற்போக்கடைந்திருப்பதாகப் பாவிக்கும் இலங்கையில் ஸ் தீரிகளுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாதென்றால் இலங்கை எவ்விதத்தில் முற்போக்கடைந்திருக்கிறது? சமீபத்தில் சேர். ஜெகதீஸ் சந்திரபோஸ் கல்கத்தா பெண்கள் விடுதிச்சாலைப்1ை திறந்து வைக்கையில் “பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் என்ற எண்ணத்தை விட்டுவிட வேண்டும். ஆண்களும் பெண்களும் முன்னேற்றமடைவதற்குப் பெண்கள் வழிகாட்டிகளாக இருக்கவேண்டும். பெண்கள் அத்தகையதொரு நோக்கம் கொண்டு உலகவாழ்க்கையில் இறங்குவார்ளென நம்புகிருேம்" என்றார். இப் பொன்மொழிகளை சேர் இராமநாதன் போன்றோர் கவனிப்பார்களாயின் அவர்கள் நிலை மாறினாலும் மாறலாம். உலக சரித்திரத்தில் பெண்களின் உதவியின்றி விடுதலை பெற்ற நாடு ஏதேனும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. சேர். இராமநாதன் போன்ருேர்க்கு இலங்கையில் பெண்கள் பொதுசன சேவையில் ஈடுபடக் கூடாதென்ருல் ஒரு பெண் கூட எக்காலத்திலும் வெளியில் வரக்கூடாதென்று ஒரு சட்டம் நிரந்தரமாக ஏற்படுத்த முயற்சித்தல் மேலாகும்."(தேசபக்தன் 13-4-1928)
பெண்கள் முன்னேற்றிற்கு எதிரான கருத்துக்
கொண்டிருந்தவர்களை இவ்வாறு காரசாரமாக விமர்சித்த
மீனாட்சியம்மாள் அதே சமயம் பெண்கள் உரிமைக்காகச்
செயல்பட்ட நகரத்து உயர்குழாத்துப் பெண்களுக்கு அவர்களது
நடவடிக்கைகளை மேலும் பரவலாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார். குறிப்பாகப் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் பற்றிக் கூறும் போது,
“இச்சங்கமானது டொனமூர் கமிஷன் இலங்கைக்கு வந்த காலத்தில் ஆரம்பிக்கப் பெற்றதெனினும் தங்கள் வேலையைச் செவ்வனே செய்து முடிந்திருக்கிறார்கள்
136

Page 70
என்றுதான் சொல்ல வேண்டும். இச்சங்கத்தினர் இதுவரை செய்துள்ள வேலை எப்படியிருந்த போதிலும் இனித்தான் அதிக வேலை செய்யவேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேற்படி சங்கத்திற்கு வருஷ சாந்த ரூபா 50 ஆக வைத்திருக்கிறபடியால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதில் சேர்ந்துழைக்க வசதியிராது. பணம் படைத்தவர்கள் மாத்திரம் தங்கள் காரியத்தைச் செய்து முடிப்பது போதுமானதாகாது. எல்லா சகோதரிகளும் கலந்துழைக்க வேண்டிய வேளையில் பணம் படைத்தவர்கள் மாத்திரம் தலையிடுவதைக் கொண்டு அதிக பலன் கிடைக்காது. ஆகவே சகோதரிகள் தாங்கள் கொண்ட காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமானால் ஆங்கிலம் தெரியாத சகோதரிகளிடத்தும் பிரசார வேலையைத் துவக்க வேண்டும்" (தேசபக்தன் 26-1-1929)
மீனாட்சியம்மாள் காந்திய இயக்கத்தாலும் இந்தியாவில் நிகழ்ந்த முற்போக்குச் செயற்பாடுகளாலும் கவரப்பட்டிருந்தார் என்பது அவர் தேசபக்தன் பத்திரிகையின் ஸ்திரீகள் பக்கத்தில் பிரசுரித்த விடயங்களிலிருந்து தெரியவருகிறது. பெண்கள் பற்றிய காந்தியின் கருத்துகள், இந்தியாவில் பெண்கள் தொடர்பாக ஏற்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் பற்றிய செய்திகளை அவர் அடிக்கடி பிரசுரித்தார். அத்துடன் இந்தியாவுக்குச் சென்றிருந்த காலங்களிலும் அங்கு அரசியல் நடவடிக்கைகளிற் பங்கு பற்றினார். கோயம்புத்துாரில் நடந்த சத்தியாக் கிரகமொன்றில் பங்கு பற்றியமைக்காக மங்களம்மாளுக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. (ஈழகேசரி - 27-3-30)
இவர்களை விட டாக்டர் நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐய்யர் (தந்தை பெயர் முருகேசு), நேசம் சரவணமுத்து, திருமதி ஈ. ஆர். தம்பிமுத்து, திருமதி அன்னம்மா முத்தையா, பரமேஸ்வரி கந்தையா, நோபிள் ராஜசிங்கம் போன்றோர் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைக்காலப் பகுதியில் அரசியல்துறையிலும், சமூக முன்னேற்றத்துறையிலும் உழைத்த பெண்களிற் சிலராவர். இவர்களுள் பெரும்பாலோர் பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படாமலே உள்ளன.
137

இவர்களுள் நேசம் சரவணமுத்து இலங்கைச் சட்ட சபைக்கு முதல் முதல் நியமிக்கப்பட்ட பெண் ஆவார். 1931 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இவர் கொழும்பு வடக்கிற்கான அங்கத்தவராயிருந்தார். இவர் சட்டசபை அங்கத்தவராகப் பதவி வகித்த காலத்தில் வறிய மக்கள், பெண்கள் தொடர்பான சட்டத் திருத்தங்களுக்காக வாதாடினார். விதவைகள், அநாதைகள் ஆதரவுப்பணம், சம்பளச் சபை நிறுவுதல், பெண் ஆசிரியர்கள் திருமணமானதும் வேலையிலிருந்து நீக்கப்படும் நடைமுறையை அகற்றுதல் என்பன இவர் சட்டசபையில் எழுப்பிய முக்கிய பிரேரணைகள் சிலவாகும்.
வருமானவரி விதிக்கும் தராதரத்திற்குக் குறைவாகச் சம்பளம் பெறும் தொழிலாளரின் நலன் கருதிச் சில விதிகளை இயற்றுவதற்கான சட்டம் ஒன்றை வர்த்தக, தொழில் அமைச்சு விரைவில் உருவாக்க வேண்டும் என்று பிரேரிக்கப்பட்டது. இச்சட்டம் பல நிலைகளிலுள்ள தொழிலாளருக்கு தராதரச் சம்பள அளவு, சம்பளத்தின் கீழ் எல்லை என்பவற்றை நிர்ணயிப்பதற்கான சம்பளச்சபை (Wages Board) ஒன்றை நிறுவுதல், தொழிலாளரது சுகாதாரம், வீட்டுவசதிகள் ஆகியவற்றுக்குத் தொழில் கொள்வோரைப் பொறுப்புடையவராக்குதல், வைத்தியவசதி, இலவசக்கல்வி, ஓய்வூதியம், காப்புறுதி ஆகியவற்றுக்கான திட்டம் ஆக்குதல் வேண்டும் எனவும் கோரப்பட்டது (The Hansard 11-6- 1936 Āyu} : 586)
ஆசிரியர்களாகத் தொழில் புரியும் பெண்கள் தமக்குத் திருமணமானதும் வேலையிலிருந்து கட்டாயமாக ஓய்வு பெறவேண்டும் எனக் கல்வித் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தது. இப்பிரேரணை நீக்கப்படவேண்டுமென நேசம் சரவணமுத்து வாதாடினார். இது மாணவிகளின் கல்வி நலத்துக்கும், நாட்டினது நலத்துக்கும் உகந்ததல்ல என அவர் கூறினார். இவ்விடயம் பற்றி ஆராய்ந்த கல்விக்கான நிர்வாகக் குழு திருமணமான பெண் ஆசிரியர்களை எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் உட்படுத்தக் கூடாது என முடிவு செய்தது. (The Hansard 26 -1-1939)
நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஜயர் ஒரு வைத்தியராவர். இவரது கணவர் நடேசைய்யருடன் சேர்ந்து மலையகத்தில்
138

Page 71
தொழிற்சங்கத்தை உருவாக்க உழைத்தவராவர். நல்லம்மா மீனாட்சியம்மாளுடன் சேர்ந்து மலையகத் தொழிலாளரிடையே சமூக சேவை செய்தார். அத்துடன் 1928 இல் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் நிறுவப்பட்டபோது அதன் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவரானது மாத்திரமன்றி இணைச் செயலாளராகவும் பணி புரிந்தார்.
திருமதி ஈ. ஆர். தம்பிமுத்துவும் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் ஸ்தாபக அங்கத்தவர். இவரது கணவர் 1923இல் கிழக்குமாகாணத்துச் சட்டசபைப் பிரதிநிதியாக இருந்தபோது பெண்களுக்கு வாக்குரிமை தொடர்பான ஒரு பிரேரணையை அறிமுகப்படுத்தியவர். ஆனால் அப்போது அப்பிரேரணை சட்டசபையில் ஆதரவு பெறவில்லை (The Hansard CNCபக் 649) தொடர்ந்து திருமதி தம்பிமுத்து பெண்களுக்கான வாக்குரிமைக்கோரிக்கையை வற்புறுத்தினார். பெண்கள் வாக்குரிமைச் சங்க ம் நிறுவப்பட்ட போது அதன் உபதலைவர்களில் ஒருவரானார். 1927ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி முதன் முதல் இச்சங்கத்தை ஸ்தாபிப்பதற்காகப் பெண்கள் கூடிய போது திருமதி தம்பிமுத்துவே பெண்கள் Gumi jsegrfa Dj SF fiu 5D — Women Franchise Union GT Gör gp பெயரைப் பிரேரித்தார். (Daily News 8-12 - 1927)
இதுவரை மேலே கூறிய விடயங்களிலிருந்து நகர்சார்ந்த குடும்பத்துப் பெண்கள் மாத்திரமன்றி கணிசமான அளவு வெவ்வேறு பிரதேசங்களைச் சார்ந்த பெண்களும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து சமூக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை புலனாகிறது. எனினும் இலங்கையின் நவீன அரசியல் சமூக வராலற்றில் பெண்களின் பங்களிப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலைக்கு வரலாற்றியலில் காணப்படும் ஆண்நிலை நோக்கு என்கிற காரணம் மாத்திரமன்றி பொதுவாகவே சமூகத்தில் பெண்கள் பற்றி நிலவும் அலட்சிய மனோபாவத்தால் அவர்களைப் பற்றிய சான்றுகள் பாதுகாக்கப்படாது அழிந்து போனதும் இன்னோர் காரணமாகும். இத்தகைய தடங்கல்களைத் துணிவோடு எதிர்கொண்டு தகவல்களைத் திரட்டி பெண்கள் வரலாற்றை மீளமைக்கும் பணி, இன்றைய பெண்நிலை ஆய்வாளர்களின் பாரிய பணியாக உள்ளது.
139

அடிக்குறிப்பும் சான்றாதாரமும்
இத்தொடர்பில் பின்வரும் நூல்களும் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கன:
குமாரி ஜெயவர்த்தனா
Doreen Wikramasinghe, A. Western Radical in Sri Lanka Women's Education and Research Centre Publication Colombo, 1991.
Dr. Mary Rutnam A Canadian Pioneer for Women's Rights in Sri Lanka Social Scientists Association Publication
Colombo, 1993.
சித்திரலேகா மெளனகுரு மீனாட்சியம்மாள் நடேசையர், பெண்நிலைச் சிந்தனைகள் பெண் கல்வி ஆய்வு நிறுவனம் 1993
இராமலிங்கம் வ. மங்களம்மாள் மாசிலாமணி பெண்ணின் குரல் : 8, 1985.
மங்களம்மாளின் இளைய புதல்வராகிய எம். டி. பாஸ்கரனுடன் கடிதக் தொடர்பு மூலமாகப் பெற்ற தகவல்
மேலது.

Page 72

வருடாந்த சந்தா - நிவேதினி
North America : USS 30 UK & Europe US $ 20 India, S. Asia : US $ 10 Sri Lanka : SLR 200
சந்தா விண்ணப்பம் 19. . . . . . . . . .
நிவேதினி சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்.
LL LL LL LLL LLL LLL LL LLL LL LLL LLL LLL L LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LL LLLLS LLL LL LLL LLL LLL LLL LLLL LL LL LLL LL
இத்துடன் காசோலை/ மணிஓடரை மகளிர் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் பேரில் அனுப்பி வைக்கிறேன்.
Women's Education and Research Center 17, Park Avenue Colombo 5
Sri Lanka.

Page 73


Page 74
எமது ெ
නන්දිමිත්‍ර - රොස්ලින්ඩ් මැන්ඩිස් * ඩොරින් වික්‍රමසිංහල ශ්‍රී ලංකාවේ අරගලයෙහි පුරෝගාමී වූ බටහිර
- කුමාරි ජයවර්ධන * ලුහසුකාංගේ පතිවත ඉබ්සන්ගේ බෙ - පරිවර්තනය ධර්මසි: ඇගේ ලෝකය - මොනිකා රුවන් ස්ත්‍රීවාදය අද සමාජයට උචිතයි
- ස්ත්‍රීවාද අධ්‍යයන ක
பெண்விடுதலை வாதத்தின் ட் அது ஒரு மேலைத்தேய கோ
- செல்
வார்ப்புகள் - பார இந்தியர்களது இலங்கை வாழ் - மீனா * பெண்களின் சுவடிகளில் இ - சாந் * மக்கள் தொடர்பு சாதனமும்
- சந்தி * பெண் நிலைச் சிந்தனைகள்
- சித்தி * பெண்ணடிமையின் பரிமாண விளக்கமும். - செல்
* Doreen Wickramasinghe, A W Radical in Sri Lanka - Kumari
* Feminism in Sri Lanka in the
Kumari Jayawardane Fragments of a Journey - Jean Some Literary Woman of Sri L
* The Dilemma Of The Orie.S. a Fé
The Jana saviya Po verty Alle v Case Study from Palenda Vill
இவ்வாண்டின் இறுதி
6TL05
கடவுளரும் மனிதரும் - பவா உருமாறிய பிம்பங்கள். இலக்கியத்தில் பெண்மை
இவற்றை நிறுவன புத்தகசாலைகளிலு
ISSN : 1391-0353
 

1ளியீடுகள்
ජනත9 කාන්තාවක්
త2వాES
| ජයකොඩි
'පතිරණ තුතිහාසය හා ආර්ථික
වය
ரச்சனைமையம் ட்பாடா? வி திருச்சந்திரன் தி
க்கை நிலைமை rட்சி அம்மாள் ருந்து சில அடிகள் தி சச்சிதானந்தன் மகளிரும் ரிகா சோம்சுந்தரம்
திரா மெளனகுரு 瑟 ங்களும் பெண்ணுரிமையின் வி திருச்சந்திரன்
e SterIn
Jayawardena )ecade
Arasanayagam anka - Eva Ranaweera minist. Perspective - Selvy
Thiruchandran lation Programme and Woman, A age - Sepali Kotte goda
யில் வெளிவரவிருக்கும்
நூல்கள்
னி ஆழ்வாப்பிள்ளை (2ம் பதிப்பு)
த்திலும் ஏனைய பிரபல
பெற்றுக்கொள்ளலாம்: