கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகமஞ்சரி 1999.01

Page 1
ܕܐܬ
மஞ்சரி: 04 தை
* வாசகர்களுடன் சில வார்த்தைகள் () கட்டிளம் பருவப் பெண்களும்
போசாக்கின்மையும்
* தாய் சேய் நலன்
O ஒரு குடும்பம் சுகமாக இருப்பதர்
பெண்ணின் பங்களிப்பு O குழந்தைகளில் போசாக்கு ஆய்வு
* நோய்கள்
() எயிட்ஸ் பற்றி அறிந்து கொள் O வாந்திபேதி (கொலரா) அறிவிக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைக
* போசாக்கு
O இலை சேர் பால் கஞ்சி O உணவுப் பொருள்களின் கூறயை
* உளவியல்
() நெருக்கீடுகளும் அவற்றைக் கை
* அறிவியல்
O கொழுக்கிப் புழுத் தொற்றும்,
பெண்களில் ஏற்படும் குருதிச்சோ
* கேள்வி - பதில்
---- ' :کی حد۔۔۔'وجہ .: " ";
季 3
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின்
പ
 
 
 
 
 
 
 
 
 
 
 

வோம்
; υυς ω του
2ύς/
யாளும் முறைகளும்

Page 2


Page 3
Jr blo
மஞ்சரி: 04 தை
ஆசிரியர்
வைத்திய கலாநிதி ந. சிவராஜா MBBs. DTPH. M.D.
துணை ஆசிரியர் :
லைத்தியகலாநிதி செ. சு. நச்சினார்க்கினியன் MBBS . DPH.
ஆலோசகர்கள்:
பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் MBBS. DPH. Ph. D. D. Sc.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் BA. MBBs. MD. (Pshyche)
வைத்தியகலாநிதி எஸ். ஆனந்தராஜா AMD , YMRCP . OCH
வெளியீடு:
சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

ஞ்சரி
1999 மலர்; 01
வாசகர்களுடன் சில வார்த்தைகள்.
கட்டிளம் பருவப் பெண்களும் போசாக்கின்மையும்
பிறக்கும் பொழுது ஆண் குழந்தைகள் கூடுதலாக பிறந்தபோதும் அதிக காலம் வாழ் பவர்கள் பெண்கள். ஆண்களில் பெரும்பாலா னோர் குறைந்த வயதல் இறந்து விடுகிறார் கள். பெண்கள அதக காலம் வாழ்ந்தாலும் பின்தங்கிய நாடுகளில் அவர்களின் சுகாதார நிலை ஆண்களை விட குறைவாகவே உள்ளது, இகற்கு பெரும பாலும் போசாக்கின் மையே அடிப்படைக்காரணமாக அமைகிறது.
வீட்டில் உணவு பரிமாறும்போது ஆண்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண் களுககு ஏதும் மிஞ்சினால் மாத்திரமே கிடைக் கும்.
இது பருவமடையும் பெண்களை பெரிதும் பாதிக்கின்றது. 10, 15 வயதல் பெண பிள்ளை களின் வளாசசி வேகம் மிகவும் கூடுதலாக இருக்கும். இந்த வயதில் தான் அவர்களுககு கூடுதலாக சத்துள்ள உணவு தேவை, - முககிய மாக பருவமடைவதற்கு முன்னர் உள்ள 2 வரு டங்களில். பருவமடைதல் அந்த வளர்ச்சிககா லப்பகுதியின் உச்சகசட்டமே அனறி ஆரமப மல்ல. உடல வளர்ச்சி பருவமடைவ கற்கு 2 வருடங்களுக்கு முன்பே ஆரமபமாகிவிடும்.
இந்த வளாச்சி ஆரம பிக்கும் கால கட்டத் தில் போதிய போசாக்கான உணவு இல்லை யெனில் பெண் கன்வரின் வளர்ச்சி குன்றி விடும்.

Page 4
உணவில் குறைவாக உள்ள உணவுக் கூறுக ளைப்பொறுத்து நிரந்தர பாதிப்புகள் உண்டா கும்.
போதுமான புரதம் உணவில் இல்லையா னால் உயரம் குன்றிவிடும். உணவில் கல்சியம். உயிர்ச்சத்து குறைபாடு இருப்பின் கூவகம் வளைந்துவிடும். உயரம் 145 CM க்கு குறை வாக இருப்பின், அல்லது கூவகம் வளைந்து இருப்பின் அந்தப் பெண்ணின் சாதாரண பிர சவத்திற்கு அது இடையூறாக இருக்கும். இரும் புச்சத்துள்ள உணவுக் குறைபாடு இருப்பின் குருதிச்சோகை ஏற்பட்டு பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படும்.
பருவமடைந்ததும் மாதத்திற்கு முட்டை, நல்லெண்ணெய், கொடுப்பதால் குறிப்பிடத்
குழந்தைகளுக்கு இனி
பெண்கள்
அபிராமி அருந்ததி
966)//7 அர்ச்சனா அகல்விழி அகலிகை அமிர்தா
அனுசுயா அஞ்சலி
அனுராதா
2 மஞ்சரி: 04 - மல

O
தக்க அளவு நன்மைகள் இல்லை. இந்த உண வுகளை பருவமடைவதற்கு 2 வருடங்களுக்கு முன்பே கொடுக்க ஆரம்பித்து தொடர்ந்து கொடுக்கப்பட வேணடும்.
எங்கள் சமுதாயத்தின் எதிர்காலம் எங்கள் பெணகளின் கல்வியிலும், சுகாதாரத்திலும் தங்கியுள்ளது.
குடும்பநல சேவையாளர்களும், பொது சுகாதார பரிசோதகர்களும, மற்றும் சுகாதாரத் தொண்டர்களும் இந்த விடயங்களை பெற்றோ ருக்கு எடுத்துக்கூறி சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருதல் அவசியம் ஆகும்.
- gaits.
ய தமிழ்ப் பெயர்கள்:
ஆண்கள்
அகிலன் அரவிந்தன் அகத்தியன் அசோகன் அச்சுதன் அனந்தன் அருணன் அமிர்தன் அறிவழகன் gy6ö7ug é6ö7
ர்: 01 - தை 1999 சுகமஞ்ச

Page 5
ஒரு குடும்பம் சுகமாக இருப்ப, பெண்ணின் பங்களிப்பு
குடும்பம் சுகம், பெண்
மிகவும் விசாலமான அர்த்தங்கள் கொண்ட, அதேவேளையில் ஒன்றுக்கு ஒன்று தெரு ங் கி ய தொடர்பு கொண்ட இவற்றைச் சுருக்கமாகப் பார்ப் பது இக் கட்டுரையின் நோக்கம ஆகும்.
குடும்பம் ஒரு சமூகத்தின் அடிப்படை அமைப்பு (அலகு). அங்கேதான் இன்பம துன்பம், மகிழ்வு, துக் கம், சுகம் நோய் இவற்றின் ஆரம்பமும் முடிவும். ஒரு குடும்பத்தின் அமைப்பும் செயற்பாடும் இவற்றை நிர்ணயிக்கின்றது. குடுமப அமைப்பு முக்கியமாக இருவகைப்படும்.
* அடிப்படை (தனி) க் குடும்பம் * கூட்டுக் குடும்பம்
அடிப்படைக் குடுமபம, தகப்பன், தாய், பிள்ளை கள் கொணடது. கூட்டுக்குடும்பத்தில், இவர்களுடன் மிகக் கிட்டிய வேறு உறவினர் இருப்பர். அதாவது குடும்ப தலைவன தலைவியின் பெற்றோர், சகோதர/ சிகள் ஆகியோர். இவர்கள் ஒரே குடும்ப வருமானத் தைப் பங்கிடுவர்; ஒரே சமையலில் உணவைப் பரி மாறுவர். எமது பாரம்பரிய குடும்ப அமைபபு கூட் டுக் குடும்பம் ஆகும, அத்துடன் அயலில் உள்ள கூட்டுக் குடும்பத்தினரும் உறவினராகவே இருந்தனர். இந்த நிலையில் சுகததிற்குப் பாதுகாப்பும், நோய்க்கு பராமரிப்பும், தக்க சமயததில் கை உதவியும் கிடைத் தன. ஆனால் எலலா நாடுகளிலும், நாகரிகத்தின் பல்வேறு உந்தல்களால் கூட்டுக் குடும்பங்கள் குலைந் தது மட்டுமலல, தனிக்குடும்பமே உடைந்தது. வயோ திப தம்பதியினர் தனிககுடும்பமாக இருப்பதும், இளம் தம்பதியினர் பெற்ற குழந்தையைப் பராமரிக்க ஒருவர் இலலாது தவிப்பதும் சர்வ சாதாரணம். எமது பிரதேசங்களைப் பொறுத்தவரை உளநாட்டுப போரின் விளைவால் இவை விரைவாகவே நடை பெற்றன. உறவினர், உற்றார், அயலவர் சொந்த தாட்டை விட்டே மிகவும் அன்னியமாகி விட்டனர். தற்காலிகமாக அங்கிருந்து வரும் பொருளாதாரம் உதவி தந்தாலும், உள்ளத்தின் பாதிப்பையும சமூக
பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் சமுதாய மருத்துவத்துறை, விருத்துவபீடம் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ககமஞ்சரி மஞ்சரி: 04 - ம

ற்கு
சீர்குலைவையும் எவ்விதத்திலும் அது ஈடுசெய்ய இயலாது. சில வருடங்களில் வெளிநாட்டு தொடர் புகள் தளர, பிற நாட்டு பிரஜா வாய்ப்புகளும் அற்றுப்போக மீணடும் ஆரோக்கியமான கூட்டுக் குடும்பங்கள் தோன்றும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
குடும்பத்தின் செயற்பாடுகள் பல வகைப்பட்டன. அவை குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவருடைய உடல் , உளம், ஆன்மீகம், சமூக பழக்க வழக்கங் கள் ஆகியவற்றுடன் ஆதிக்கத் தொடர்பு கொண் டவை. இந்தத் தொடர்புகள் தாம் தனி மனித சுகத்தையும் நிர்ணயிக்கின்றன.
ஆகவே சுகம் என்பதன் அர்த்தத்தைப் பார்த்த பின், குடும்பத்தின் செயற்பாடுகளையும் அதில் குடும் பத்தின் பெண்களின் பங்குகளையும் தோககுவோம். சுகம் என்பது வெறுமனே நோயறற வாழ்வு அல்ல. அது உடலுக்கு ஒருவரின வயதுக்கு ஏற்ற உறுதியும, உள்ளத்திற்கு ஆன்மீக அமைதியும், சமூகத்துடன் சம்மதமாக வாழக்கூடியதுமான சீலம் நிறைந்த சீரிய வாழ்வாகும். ஆகவே சுகம் சம்பந்தப்பட்டவை , இவையாகும்.
事
all-6)
உளம்
Fp 35 b ஆன்மிகம
:
குடும்பத்தில் பெண்
அவள் தாயாக, மனைவியாக, சகோதரியாக, பாட்டியாக, மாமியாக, மருமகளாக, பலச்சாளாக உறவு முறையில் பாத்திரம் ஏற்கிறாள். இனி தொழி லாற்றும் முறையில் அவள் வீட்டிலே குடும்பத்தில் ஒரு
தொழிலாளி
ஆசிரியை
தாதி
வரவேற்பாளர் பொருளாளர்
நிர்வாகி இப்படிச் Я6).
அவள் வீட்டுக்கு வெளியே தொழில் பார்த்தால் இத்தப் பாத்திரங்களைச் சமூகத்திலும் வகிக்கிறாள்.
லர்: 01 - தை 1999 3

Page 6
குடும்பத்தின் செயற்பாடுகள்: சுக நிலைக்குப் பெண் விர்ை பங்கு
**பி என்பதன் அம்சங்களான உடல், உளம் ,
** நிலை, ஆன்மிக நிலை ஆகியவற்றில், ஒரு குடும்பத்தின் செயற்பாடுகள் நுண்மையாகக் கலந்துள் ଶTଙt .
2-li)
இனவிருத்தி
ஒரு குடும்பத்தின் தலையான தார்மீகமான பிற்பாடு மனித இனத்திற்குச் சந்தி"நத்தி "ாகும். இந்தக் கடமை திட்ட்மிடப்பட்டு செயற்பட் -7ல் தான் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும்.
_தனது குடும்பத்தின் எண்ணிக்கையை நிர்ணயிக்க
வேண்டியது குடும்பத் தலைவியின் பொறுப்பாக
இருக்க வேண்டும். பெண் குலத்திற்கு ஒரு சமூகம் 一二一
அளிக்கக் கூடிய மிக அடிப்படையான உரிமை இது தான். சரியான குடும்பத் திட்ட முறையைத் தகுந்த நேர காலத்தில் உபயோகிப்பதன் மூலம் குடும்பத் தின் சுக நிலையைத் தலைவி, சீராகப் பேண முடி Ավմ: ,
போஷாக்கு
தாய்ப்பால் தானாக தனியாக சில மாதங்கள் கொடுத்து ஒர் உயிரைப் பேண முடியும் என்ற தகமை யின் மூலம், பெண் தான் ஒரு குடும்பத்தின் போஷாக்கு நிலையின் பாதுகாவலர் என்ற நிலையை உறுதிப்ப டுத்துகிறாள். குடும்பத்தில் இருக்கும் அனைவருக் கம் போஷா க்கான உணவை அளிப்பதற்கு ஏற்ப பெண்கள் தகுந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். குழந்தை, சிறுவர் பராமரிப்பு மட்டுமல்ல வயது வந்தோர், வயோதிபர், நோயுற்றோர் ஆகிய சகல ருக்கும் உணவுப் பராமரிப்பின் முறைகளைக் குடும் பத்தில் உள்ள பெண்கள் தெரிந்திருக்க வேண்டும்.
சென்ற தலைமுறையில் வாழ்ந்த நமது பெண் கள் பலர் ஆபத்தான ஒரு போஷாக்குச் சிந்தனை யைக் கொண்டிருந்தனர். அதாவது தமது ஆண்கள் - கணவன், மகன், சகோதரன் - உடல் பருமனாக, முகம் மொத்தமாக, வண்டி தொந்தியாக இருந்தால் தான் சுகத்தின் உச்சம் என்று நினைத்தார்கள், உண்மையில் பருமனாக, கொழுப்புள்ள உடலாக இப்பது பல நோய்களுக்கு காரணம் என்பது சாதா ரன அறிவு. பருமன், அதாவது வயதுக்கும் உயரத் திற்கும் அதிகமான நிறை, இதய வியாதி, அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய பாரிய நோய்களுக்கு வழி வகுக்கின்றன.
:மஞ்சரி: 04 - மலர் 4۔
0

இத்தகைய நோய்களின் அடிக்கல் இளமையி லேயே ஆரம்பமாகின்றன. ஆகவே அறிவுள்ள பெண் தனது பள்ளிப் பிள்ளைகளுக்கே அதிகமான கொழுப்பு உணவுகளைக் கொடுத்து, அவர்கள் உணவுப் பழக் கத்தைக் கெடுக்க மாட்டாள்.
அண்மைக் காலத்தில் தாவர் உணவு வகைகள் மாமிச உணவுகளிலும் பார்க்க நல்ல ஆரோக்கிய மான உணவு என்ற கருத்து வலுவடைகிறது. ஆகவே பருப்பு, சோயா, பயறு, காய்கறிகள், பழங்கள், இலை வகைகள் ஆகியவற்றிற்கு முக்கியம் கொடுப்பது புத் தியாகும்.
* நோய் தடுப்பு
நோய் தடுப்பு முறைகள் குடும்பத்திலேயே ஆரம் பமாகின்றன. ஒரு குழத்தையைப் பராமரிப்பு நிலை, யத்திற்கு கொண்டுசென்று பி. சீ. ஜி, முக்கூட்டு ஊசி, போலியோ துளிகள், சின்னமுத்து தடுப்பு ஊசி ஏற் றுவதன் மூலம் ஒரு தாய் மிகச் சிறந்த நோய் தடுப்பு முறையைக் கையாள்கிறாள்.
நமது நாட்டில் கபரோகம் (கசம்), முக்கூட்டு ஊசி தடுக்கும் நோய்களான தொண்டைக் கரப்பன்" குக்கல், ஏற்பு ஆகியனவும், இளம்பிள்ளை வாதம் (போலியோ), சின்னமுத்து என்பனவும் குறைந்ததற் கும், அதனால் குழந்தைகளின் இறப்பு மிகவும் குறைந்ததற்கும் இதுவே காரணம். தாய்மாரின் கல்வியும், ஆர்வமும், செயற்பாடும் தான் குழந்தை களைக் காப்பாற்றின. இந்த தடுப்பு மருந்துகள் பற்றி எத்தனை ஆண்களுக்குத் தெரியும்?
நோய் தடுப்புக்கு ஆரோக்கியமான பழக்கவழக் கங்கள் அவசியம்.
ஒரு சில உணவின் பின் பல்துலக்குவது, மலகூடம் உபயோகிப்பது, அதன் பின் சோப் போட்டு கை கழுவுவது. உணவின் முன் கைகழுவுவது, கொதித்து ஆறிய நீர் குடிப்பது, தினமும் குளிப்பது Tač7 Gor இவற்றை பிள்ளைப் பராயத்திலேயே பழக்கக் கூடியவர் யார்? இனி, வீட்டு விபத்துக்களிலிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடியவரும் அவரே.
* நோயாளரைப் பராமரித்தல்
வீட்டிலே ஒரு பெண், எத்தகைய உறவினள் ஆனாலும, ஒருவருக்கு நோய்வந்த போது நேர்ஸ் (தாதி) ஆகிறாள். முதல் உதவி கறபிப்பது எவ்வளவு முக்கியமோ, வீட்டு தாதியம் பெண்களுக்கு கற்பிப் பது அத்தகைய தேவையாகும். இந்தக் கல்வி பாட சாலைகளில் நடைபெற வேண்டும்.
தை 1999 சுகமஞ்சரி

Page 7
●
92.6
இதனை மூளை நரம்புத்தொகுதி அவற்றின் செயற்பாட்டுடன் பார்ப்பது உண்டு, உளவியல் சிந் தனை சில கருத்துக்களைத் தருகின்றது. அதன்படி உளத்தின் நல்நிலை ஒருவரின் உடல் சுகத்திற்கும் துரண் ஆகின்றது. அத்திவாரம் என்று கூட கணிக் கலாம். ஒருவரின் ஆளுமை, தனித்துவ சிந்தனை, பாதுகாப்பான உணர்வு எல்லாம் சிறு வயதில் குடும்ப சூழலிலேயே உருவாகின்றன, இந்தக் கைங் கரியத்தில் ஒரு பெண் (தாய்) முக்கியத்துவம் பெறு கிறாள்.
சமூகத் தொடர்பும் சிந்தனையும்
சுக வாழ்வில் சமூகத்தின் பங்கு சரித்திர சம்பந் தமானது; அது கலாச்சாரப் பழக்க வழக்க வடி வில் உள்ளது. சில பழக்கவழக்கங்கள் சுகத்திற்கு உறுதுணையாக உள்ளன. சில கேடு விளைவிக்கின் றன . இவற்றை மூட நம்பிக்கைகள் என்கிறோம். ஒரு குழந்தைக்கு 4-6 மாதங்களில் 2 -u 2-60.076 ஆரம்பிக்காதது, பிரசவம் நடந்த தாய்க்கு போதிய நீர் கொடுக்காதது, வயிற்றோட்டம் உள்ள பிள் ளைக்கு உணவு நிற்பாட்டுவது ஆகியன, ஆகாத வழக் கங்கள் ஆகும். தகுந்த பெண் கல்வி இத்தகைய தவறான செயல்களைத் திருத்த வேண்டும்.
மேலும் ஒரு குடும்பத்தில் தான் சீரான சுக சிந்தனைகள் வேர் ஊன்றுகின்றன. உணவு முறை, நோய் பராமரிப்பு, நித்திரை நேரம், தேகாப்பியாசம் ஆகியவற்றிற்கு குடும்பம் அளவும் தரமும் வகுக்கின் றது. குடும் பங்களின் மாதிரி வாழ்வு தான் கலாச் சாரப் பண்புகள் ஆகின்றது. பண்புகளின் தெய்வம் சரஸ்வதி. இது கலாச்சாரத்தில் பெண்ணின் பங்கை வலியுறுத்துகின்றது.
ஆன்மிகம்
அந்தக்காலத்தில் ரிஷிகள் கூறிய சுகம் - ஆன் மிகத் தொடர்பு, இப்போது 21ம் நூற்றாண்டிற்குத் தேவைப்படுகிறது. ஆன்மிகம் ஆத்மாவுடன் சம்பந் தப்பட்டது. ஆத்மா அழியாதது. கடவுளுடன்
கர்ப்பவதிய கர்ப்பமான ஒரு பெண்ணன் நிறை இதில் முதல் 28 வாரங்களில் (7 மாத/ மீதி 12 வாரங்களில் 5 - ) கிலோ சராசரி, வாரத்திற்கு 3 கிலோ விதம் சிகிச்சை நிலையததிற்கு வரும்பொழுது அதைவிட அதிகம் கூடினாலும், ஆபதி
n
அசுகமஞ்சரி மஞ்சரி: 04 - 1

நேரடித் தொடர்பு உள்ளது. அதற்குத் தேவை - சிந்தனையிலும் செயலிலும் - ஒழுக்கம். ஒழுக்கம் தன்னம்பிக்கையை வளர்க்கின்றது. நம்பிக்கை சுக வாழ்விற்கு ஆணிவேர். நோய்களைக் குணப்படுத்தும் மா மருந்து. ஆன்மிக வாழ்விற்கு தியானம், பிரார்த் தனை, அமைதி, சாத்விக உணவு ஆகியவற்றின் தேவையை விளக்குகின்றது. காமம், கோபம், குரோத உணர்வு என்பவற்றின் சுக நாச வேலைப்பாட்டைக் காட்டுகின்றது. சிறிய குடும்பத்தின் சுகத்திற்கு மட் டுமல்ல, உலகத்தின் சுகத்திற்கும் ஆன்மிகத்தின் உறு துணை அவசியம் என்பதை அறிஞர், விஞ்ஞானி கள் உட்பட உணர்த்து விட்டனர்.
குடும்பத்தில் இன்னுமொரு பெண்
குடும்ப நலனில் பங்கு என்னும்போது குடும்பத்தில் உள்ள எல்லாப் பெண்களையும வைத்துத்தான் இக் கட்டுரை எழுதப்பட்டது. ஐந்தாம் வகுப்பில் படிக் கும் சிறுமி கூட குடும்ப உணவு, நல்ல பழக்க வழக் கங்கள் ஆகியவற்றைக் கூறத் தகுதி பெறுகிறாள். ஏனெனில் அவள் பாடசாலையில் சுகாதாரம் சம்பந்த விடயங்களை நிறையப் படிக்கின்றாள். உண்மையில், தங்கள் பிள்ளைகளின் சமூக - சூழல் புத்தகங்களைப் பெரியோர் படிப்பதன் மூலம் தங்கள் அறிவை விருத்தி செய்யலாம். இப்போ கூறப்படுவது இன்னுமொரு குடும்பப் பெண்ணை, அவர்தான் குடும்பநல மாது. நாட்டின் சுகாதார சேவையில் அடி மட்டத்தில் தொழில் பார்க்கும் மாது, பொதுச் சுகாதார மருத் gja upmg 676ör GLIn Lð. (PUBLIC HEALTH MIDWiFE - FAMILY HEALTH WORKER) auti and குடும்பங்களுடன இரண்டறக கலந்து செயற்படும் ஒரு சேவை செய்பவர். நமது நாட்டின் சுக நிலை மேம்பாட்டிற்கு 1926 ஆம் வருடம் தொடககம் அடி வேராக இருப்பவர். ஒவ்வொரு குடும்பமும் தமது வட்டார குடும்ப நல மாதுவை அறிந்து, உடன் பிறவா சகோதரியாக்கிக்கொள்ள வேண்டும்.
தற்போது ஒரு குடும்ப நல மாது சராசரி 3,000 மக்களுக்கு பொறுப்பாக இருக்கிறார். அவர் 500 மக்களுக்கு அதாவது 100 குடும்பங்களுக்குச் சேவை செய்யும் நாள் எப்போது வரும் ? அன்று குடும்பங்க
A
ளில் " " சுகம்" என்பது புதிய பரிமாணம் பெறும். A
பின நிறை
0 - 12 கிலோ வினால் அதிகரிக்கும். /களில) அரைவாசி நிறை அதிகரிக்கும். அதிகரிக்கும. 28 வாரங்களின பின் அதிகரிக்கும். அதாவது மாதம் ஒரு முறை சராசரி 2 கிலோ அதிகரிக்கவேண்டும். தைக் குறிக்கும்.
லர்: 01 - தை 1999 5

Page 8
வன்னியிலிருந்து திரும்பும் மூன்று வய குழந்தைகளில் போசாக்கு பற்
(சமுதாய மருத்துவ பாடத்திற்காகச் செய்யப்ப
நாட்டின் யுத்த சூழ்நிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வது எண்பதுகளிலிருந்து இலங் கையில் சாதாரண நிகழ்வாகும். இடம்பெயரும் போது குழந்தைகள் பல போசாக்குப் பிரச்சனைகளை எதிர்நோக்குவது அவதானிக்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு ஒக்டோபரி மாதம் யாழ் குடா நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நட வடிக்கை காரணமாகப் பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்து வன்னிப் பிரதேசத்துக்குச் சென்றனர். அவர்கள் மீளவும் 1996 ஏப்ரல் மாதத்திலிருந்து
செ. செந்தில்குமரன், வே. ஜெகரூபன் 4ம் வருட மாணவர்,
மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
அட்டவணை 1 பால் அடிப்படையில் போசாக்குக்
Lunta) வயதுக்கேற்ப வயதுக்ே
நிறையின்மை aluTufai
% 9
ஆண் 45 3.
Guair 38 24
இருபாலாரும் 4. 19
அட்டவணை 2 வயது அடிப்படையில் போசாக்குக்
வயது வயதுக்கேற்ப வயதுக்ே (மாதங்களில்) நிறையின்மை உயரமின் % %
0-11 23 O
丑2一2岛 57 1.
2 44 کا 3 ست۔ 24
Ol-35 4. I
6 LDEberfl: 04 – ud

துக்குட்பட்ட
றிய ஆய்வு
۔
ஆய்விலிருந்து சில பகுதிகள்)
யாழ்ப்பாணத்திலுள்ள தமது பழைய இடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் வள்ளங்களில் வருபவர்கள் குருநகர் சீ-நோர் கட்டடத்தில் இயங்குகின்ற அகதிமுகாமில் இராணுவத்தினரால் தங்கவைக்கப்படுகின்றனர். அவ ரவர்க்குரிய பகுதி கிராமசேவகர்கள் வந்து அழைத் துச் செல்லப்படும்வரை அவர்கள் வெளியே அனு மதிக்கப்படுவதில்லை.
இந்த ஆய்வு மேற்படி குருதகர் சீ-நோர் முகா மில் தங்கியுள்ள குழந்தைகளில் 36 மாதத்திற்குட் பட்டவர்களில் மேற்கொள்ளப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தொடக்கம் Qi, Gyrir Luri il 5 வரை வந்த குழந்தைகளில் தெரிவு செய்யப்பட்ட 75 குழந்தைகளை ஆய்வுக்குட்படுத்தியதன மூலம் பின்வரும் தரவுகள் பெறப்பட்டன.
குறைபாடுடைய பிள்ளைகளின் சதவீதம்
கற்ப உயரத்துக்கேற்ப பிள்ளைகளின் GR) O நிறையின்மை எண்ணிக்கை 6
50 38
4á 37
47 75
குறைபாடுடைய பிள்ளைகளின் சதவீதம்
கற்ப உயரத்துக்கேற்ப பிள்ளைகளின் o)) நிறையின்மை எண்ணிககை
%
36 22
7 21
38 品2
47 75
př: 0 1 - 625 1999 சுகமஞ்சரி

Page 9
* ஆய்வுக்குட்பட்டோரில் 87% பிள்ளைகள் வன்னி யில் பிறந்துள்ளார்கள். அவர்கள், யாழ்ப்பாணத் தில் பிறந்து வன்னிக்குச் சென்று திரும்பிய குழந்தைகளை விட அதிகளவு போசாக்குக் குறைபாடு உள்ளவர்களாகக் காணப்பட்டனர்.
ஆய்வுக்குட்பட்டோரில் 23% பிள்ளைகள் பிறப்பு நிறையை 2.5 கி. கிராமிலும் குறைவாகக் கொண்டிருந்தார்கள். இவர்கள் மற்றைய பிள் ளைகளிலும் பார்க்க அதிகளவு போசாககுக் குறைபாட்டை வயதுக்கேற்ப நிறையின்மை யிலும், வயதுக்கேற்ப உயரமின்மையிலும், உய ரத்துக்கேற்ப நிறையின்மையிலும் காட்டினார்
56
* ஆய்வுக்குட்பட்ட 75 பேரில் மூவர் தந்தையை இழந்தும் இருவர் தாயை இழந்தும் காணப்
பட்டார் கள்.
12% தந்தையரும் , 17% தாய்மாரும் 5ஆம் வகுப் புக் கல்வியைப் பூர்த்தி செய்யாமல் இருந்தனர். இவர்களது பிள்ளைகள் மற்றையவர்களின் பிள் ளைகளை விட அதிகளவு போசாக்கு குறை பாட்டை மேற்கூறிய மூன்று பிரிவுகளிலும் காட் ις 6αν π .
21% பிள்ளைகளுக்கு, 3 அல்லது அதனிலும் கூடிய சகோதராகள் இருக்கின்றார்கள். இவர்கள் மற் றைய பிள்ளைகளை விட அதிகளவு போசாக்குக் குறைபாட்டைக் காட்டினர்.
11% பிள்ளைகளின் பெற்றோர் மட்டுமே தமக்கு ஒழுங்கான நிவாரணம் அரசினாலோ, அரச சார்பற்ற நிறுவனங்களாலோ கிடைத்ததாகக் கூறியுள்ளனர். எனினும் இந்தப் பிள்ளைகளுக்கும் மறறைய பிள்ளைகளுக்கும் இடையில் குறிப்
அட்டவணை 3: வன்னியிலிருந்த காலப்பகுதியில் பிள்
சதவீதமும்.
வயதுக்கேற்ப வயதுக்கேற் நோய்கள் நிறையின்மை % உயரமின்ை
சுவாசநோய்கள் 34 18
வயிற்றோட்டம் 63 45
o Geofuum 52 34
பொக்குளிப்பான் 33 17
சின்னமுத்து 夏3 00
ஏனையகாய்ச்சல் 40 6
சுகமஞ்சரி மஞ்சரி: 04 - மலர்

பிடத்தச்க வேறுபாடு போசாக்கின்மையில் காணப்படவில்லை.
9% குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டப்பட வில்லை. 7% குழந்தைகள் 6 மாதங்களுக்குட் பட்ட காலத்திற்கு மட்டுமே தாய்ப்பாலைப் பெற்றுள்ளனர். இந்தக் குழந்தைகள் மற்றைய குழந்தைகளை விட அதிகளவு போசாக்கு குறை பாட்டை மேற்கூறிய மூன்று பிரிவுகளிலும் காட்டினர்.
* குழந்தைகளுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து கொடுக்கவேண்டிய உப2உணவு வகைகளில் 15% மான பிள்ளைகள் மட்டுமே திருப்திகரமான உணவைப் பெற்றனர். ஏனையவர்கள் பிஸ்கட் இனிப்புவகைகள் போன்றவற்றையே பெற்றனர். திருப்திகரமான உப2உணவு பெற்ற 15% மான பிள் ளைகள் அனைவரும் தேவையான உயரம, நிறை கொண்டிருந்தனர்.
வன்னியில் பிள்ளைகள் வாழ்ந்த சூழல் பின்வரும் காரணிகளைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. வீட்டின் தரையின் அமைப்பு, காற்றோட்ட வசதி, நன்னீர் கிடைக்கும் தன்மை, மலகூட வசதி. சுகாதார சேவைகளை இலகுவில் பெறக் கூடிய தன்மை. 8% பிள்ளைகள் மிகவும "மோச மான* சூழலிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். 85% பிள்ளைகள "நடுத்தரமான" சூழலிலே வாழ்ந திருக்கிறார்கள். பிள்ளைகள் வாழ்நத சூழலின் தரம் உயர்வாக இருக்கிற பொழுது போசாக் கிைைமயின் அளவு குறைவாக இருப்பது அவ தானிக்கப்பட்டுள்ளது.
90% பெற்றோா தங்கள் பிள்ளைகளுக்கு பி.சீ.ஜி. முக்கூட்டு ஊசி, போலியோ சொட்டு மருந்து, சின்னமுத்து தடுப்பு ஊசி போன்றவற்றை உரியகாலத்தில் கொடுத்திருக்கிறார்கள்.
ாளைகளைப் பீடித்த நோய்களும் போசாக்கின்மையின்
உயரத்துக்கேற்ப பிள்ளைகளின °光 நிறையின்மை % எண்ணிக்கை
40 44
54 24
34 29
50 O6
38 t 08
18 35
01 - தை 1999

Page 10
* ஆய்வுக்குட்பட்ட பிள்ளைகள் தாயின் கருவிலிருக்கு
தாக்கத்திற்குள்ளாகியுள்ளார்கள்.
அட்டவணை 4: விற்றமின்கள், புரத குறைபாட்டு நே மேற்கொண்டபோது கிடைத்த பெறுே
முடிவுரை:
வன்னியிலிருந்து திரும்பும் ளவு பேர் போசாக்கின்மையால் கள். இவற்றைத் தீர்க்கின்ற
குறைபாட்டு அறிகுறி ஆண்கள்
குருதிச்சோகை 19
கடைவாய்ப்புண் 12
தேரைத்தோல் O6
முரசு கரைதல் 05
தோல் அழற்சி O6
இரும்புச்சத்துக் குறைபாடு 03 (கொயிலோனைக்கியா)
குழந்தைகளில் அதிக பாதிக்கப்பட்டுள்ளார் நடவடிக்கைகள் அரசி
யல், இராணுவ, பொருளாதார காரணிகளுடன் பின் னிப் பிணைந்துள்ளன. எனினும் பிள்ளைகளின் எதிர்
புகைத்தலால் பெண்களுக்கு
亲
米
尝
Saa OY dS
;رلS
Se
கருப்பை வாசல் புற்று
கருச்சிதைவு
நிறை குறைந்த பிள்ை
குறைந்த வயதில் மாத
மாதவிடாய் நின்றபின்
சுவாசப்பை புற்றுநோ
மாரடைப்பு
(, ணகள் தாங்கள் புகைக்காவிட்
புகைத்தாலும்
பெண்களுக்கு இப்பா
... ; ) is: World Heath. April - Ma
மஞ்சரி: 4ே - மலர்: 01

ம் போது 50% தாய்மார்கள் மலேரியா நோயின்
ாய்கள் பற்றிய பரிசோதனைகளைப் பிள்ளைகளில் பறுகள்.
பெண்கள்" மொத்தம் சதவீதம்
ret %
20 39 52
08 20 27
02 08 11
07 2 6
I 17 23
04 G7 09
காலம் கருதி பின்வரும் நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
1. திரிபோசா, முட்டை மா, உழுத்தம்மா களி
முதலியவை கொடுத்தல்.
2. விற்றமின்கள், கனியுப்புக்கள் நிறைந்த குளிசைகள் வழங்கல் . A
ஏற்படும் பாதிப்புகள்.
/நோய்
ளைகளைப் பெறுதல்
:விடாப் நின்று விடுதல்
எலும்புகள் எளிதில முறியக்கூடிய நிலை.
ιό
டாலும், வீட்டிலுள்ள ஆண்கள் திப்புககள் ஏற்படலாம். ly 1990
- தை 1999 சுகமஞ்சரி

Page 11
எயிட்ஸ் பற்றி அறிந்து கொள்
எயிட்ஸ் 1981 ம் ஆண்டு அமெரிக்காவில் முதன் முதலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பதி னேழு வருடங்கள் கழிந்த பின்பு, இன்றும் கூட மக் கள் அது பற்றிய பயத்திலிருந்து முற்றாக விடுபட வேயில்லை.
இலங்கையில் முதல் எயிட்ஸ் நோயாளி 1986 ம் ஆண்டு இனங்காணப்பட்டார். இன்றுவரை 250 பேர் வரை இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐவர் யாழ். மண்ணில் இனங்காணப்பட்டுள்ளனர். வெளி தாடுகளிலிருந்து தாய் மண்ணிறகுத் திரும்பும் இலங் கையரே இந்நோயையும் தமமுடன் இறக்குமதி செய் துள்ளனர். இவர்களில பலர் \வேறோர் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, வைததயசாலையில அனு மதிக்கப்பட்டபோதே எயிட்ஸ் நோயிருப்பது அறியப் பட்டது. அதாவது இவர்கள் தற்செயலாகவே எயிட்ஸ் நோயாளிகளாகக் காணப்பட்டனர். எனவே இலங்கையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட வாகள் மேற் சொன்ன எணணிக்கையை விட அதிக மாகவே இருக்கும். எம்மத்தியில் அணமையில் எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டாலும் கூட, தயக்கு தொற்றியிருப்பது எயிட்ஸ் தான் என்பது தெரியாம லேயே சிலர் எம்மத்தியில் இருக்கக் கூடும். எனவே, எயிட்ஸ் பற்றிய விழிப்புடன இருப்பதே நல்லது.
6Tu'l 6a) 6Tai, Ugs. Acquired Immune Deficiency Syndrome என்பதன் சுருககமாகும. இதை ஒரு நோய் என்று சொல்வதிலும பார்க்க நோய்களின் கூட்டு அதாவது பல நோய்கள் ஒரே நேரத்தில் காட் டும் அறிகுறிகள் என்று சொல்வதே பொருத்தமான தாக இருக்கும்.
இந்நோயை ஏற்படுத்துவது ஒரு வைரஸ் கிருமி unrg D. Human immune Deficiency Virus (HIV) என்று இதை அழைக்கலாம் . இவ்வைரஸ் கிருமிகள் உடலில் காணப்படும் பாதுகாப்பு படையணிகளான T நிணணிர்க்குழியங்களைத் தாக்கியழிப்பதனால் இந்நோய் ஏற்படுகிறது.
பொதுவாக T நிணணிர்க்குழியங்கள் தான் எமது உடலைத் தொற்று தோய்க் கிருமிகளிலிருந்து பாது காக்கின்றது. இக்கலங்கள் அழிக்கப்படும்போதோ
எஸ். குருபரானந்தா, பி. ஜெசிதரன் 4ஆம் வருட மருத்துவபீட மாணவர்க்ள், மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
ககமஞ்சரி மஞ்சரி: o4

வோம்
அல்லது எண்ணிக்கையில் குறைவடையும் போதோ உடல் இலகுவில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகிறது.
இந்த எச். ஐ. வி நுண் கிருமிகள், கலங்களை அழிப்பது மட்டுமல்லாது அதனுள்ளேயே பெருகி தம்மை எண்ணிக்கையில் அதிகரித்துக் கொள்கின் றன. இவ்வாறு பெரும் தாக்குதலுக்குத் தம்மைத் தயார் செய்துகொண்ட எச். ஐ. வி நுண் அங்கிகள் வீறுகொண்டு உடலைத் தாக்கும்போது உடல் எதிர்க் கும் சக்தி இழந்து இலகுவில் அதன் தாக்குதலுக்குட் பட்டு நோய்வாய்ப்படுகிறது.
இவ்வாறு நோய்வாய்ப்பட்டவர்கள் சாதாரண தடிமனைக்கூட எதிர்க்கும் திராணியற்றுக் காணப் படுவார்கள். எச். ஐ. வி தொற்றிய உடனேயே நோ ய் க் குறி க ள் தென்படமாட்டாது. வைரஸ் தொற்றி 7 - 12 வருடங்களின் பின்பே அவருக்கு நோய்க்குறிகள் தென்படுகிறது. இக்காலம் ஆளுக்காள் வேறுபடலாம். ஒருவரின் வயது, நோயெதிர்க்கும் தன்மையைப் பொறுத்து இது வேறுபடும். ஒருவரின் குருதியை அடையும் இவ் வைரஸ், CD4 அடைய7 ளம் உள்ள கலங்களையே முக்கியமாக T நினணிர்க் குழியங்களையே தாக்கி உள் நுழைகின்றது. அங்கு அது உறங்கு நிலையிலிருக்கும். இந் நி ைல யில் நோயாளி இடையிடையே ஏனைய வேறு நோய்க ளுக்கு ஆளாகும் போது இந்த T நிணணிர்க்குழியங் கள் எண்ணிக்கையில் அதிகரித்துப் பெருக்கம் அடை யும். அப்போது அதனுள் உள்ள இவ்வைரஸ்களும் பெருகும. ஒரு கட்டத்தில் இவை அந்நினணிக்குழி யத்தினுள் இருக்கமுடியாது போகும்போது, அக் *வம் வெடித்து உடைந்து இவ் வைரசுக்கள் குருதி யில் விடப்படும. இவை புது நிணணிர்க்கலங்களை த தாக்கி உள நுழையும், இவ்வாறு வைரசுக்களின் எண்ணிக்கை கூடும் போது குருதியில் T நிணணிர்க் குழியங்களின் எணணிக்கை குறைவடைய, 5ோய் எதிர்ப்பு சக்தியும் குறையும .
நோயறிகுறிகள் எதுவும் காண்பிக்காது காவி நிலையிலுள்ள நோயாளியுடன், ஒருவர் உடலுறவு கொள்வாரேயானால் அவருக்கும் இந்நோய் தொற் றும. எனவே காவி நிலையிலுள்ளவருக்கு எயிட்ஸ் இருப்பது கண்டறியப்படுவதற்கு முன்பாகவே அவர் பலருக்கு இநநோயை வழங்கியிருப்பார் . எனவே எயிட்ஸ் நோயாளியை விட இக காவி நிலையிலுள் ளவர்களே மிகவும அபாயகரமானவர்கள்.
எயிட்ஸ் நோயின் குனம் குறிகள் என்று நாம் சொல்வது அமையத்திற்கேற்ப நோயாக்கிகளின் Opp0rtunistic infection குணங்குறிகளையே. ஆரம்பக் கட்டத்தில் வயிற்றோட்டம் நீண்டகாலத்திற்கு இருக்
மலர்: 01 தை 1999 9.

Page 12
(5th (More than one month), all-gi) G& Thugi)
உடல் நிறை குறைதல், இரவு நேரத்தில் வியர்த்தல்,
வீங்கிய நினணிர் முடிச்சுக்கள், வீங்கிய கல்லீரல் என்பன இருக்கும். நோய்கள் குறிப்பாக நியூமோ னியா, தோலில் கழலைழகள் போன்ற வெளிவளர்ச் 856ŷr (Kaposis Sarcoma ) 5Füb, Gay rrufløör du soub பூ வளர்தல் (Oral thrush), ஞாபகசக்தி இழத்தல், மூளை மாறாட்டம் என்பனவும் இருக்கலாம்.
இந் நோ யா ன து பாலு ற வு கள் மூலமே பெரும்பாலும் பரவுகின்றது. அதாவது பல ஆண்க ளுடனான பெண்களுடனான உறவு-குறிப்பாக விலை மாதர்களுடனான உறவுகள் மூலமே பரவுகின்றது. ஆண் பெண் இலிங்க உறுப்புக்களிலுள்ள புண்கள் . உடலுறவின்போது ஏற்படும் காயங்கள் இவ்வைரஸின் தொற்றுதலை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.
அடுத்து முக்கிய இடம் வகிப்பது தன்னினச் சேர்க்கை (Homo Sex) ஆகும். ஆண்களிற்கிடையி லான தன்னினச் சேர்க்கையின் போது வழமைக்கு மாறாக குதவழிப் புணர்ச்சி நடைபெறுகிறது. இங்கு குதச்சீதமென்சவ்வில் ஏற்படும் கிழிவுகள் மூலம் வைரஸ் இலகுவாகக் குருதியை அடைகின்றது.
மேலை நாடுகளில் பொதுவாகக் காணப்படும் போதைப் பொருள் பாவனையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரே ஊசி மூலம் போதைப்பொருளை உடலினுள் செலுத்தும் போது நோயாளியிடமிருந்து, நேரடியாகவே ஏனையோருக்கும் தொற்றும் வாய்ப் புக்கள் உளது.
நோயுள்ள தாயிடமிருந்து அவளுடைய குழந்  ைதக்கு தொப்பூழ் நாண் ஊடாகவோ, முலைப்பா லினுரடாகவோ கூட இவ்வைரஸ் தொற்றலாம்" அடுத்து தொற்றுதலடைந்த குருதியை ஏற்றுவதன் மூலமும் இந்நோய் ஏற்படலாம். இது பற்றி யாழ்ப் பாணத்தில் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் மக்களின் நலன் கருதி, குருதி ஏற்றுமுன் எயிட்ஸ் வைரஸிற்கான சோதனைகள், யாழ் போதனா வைத்தியசாலையில் செய்து, எச். ஐ. வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னே, அக் குருதியை ஏற்றுகின்றனர். என்றாலும் கூட மக்கள் தங்கள் உறவினர்கள் எவருக்கேனும் குருதி ஏற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது, பணம் கொடுத்து குருதி வாங்கி ஏற்றுவதற்குப் பதிலாக, நெருங்கிய நம்பகரமான ஒருவரின் (உறவினர்) குரு தியை வழங்குவதன் மூலம் இது பற்றிய பயத்திலி ருந்து விடுபட முடியும்; அல்லது மேலதிக பாது காப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்நோய் தொற்றுதலை எவ்வாறு தடுக்கமுடி μΗ ιο Ρ
:10 மஞ்சரி: 04 - மலர்:

- ஒருவனுக்கு ஒருத்தி என்ற எமது பண்பாட்டி னைப் பேணி நடத்தல், பலபெண்கள் உட்னான உறவைக் குறிப்பாக விலைமாதர்களுடனான உறவைத் தவிர்த்தல்.
- தன்னினச் சேர்க்கையைத் தவிர்த்துக் கொள்ளு
தல்.
- (Condom) ஆணுறைகளைப் பாவித்தல்.
- ஊசிமூலம் மருந்தேற்றும் போது - (Disposable Syringe) பாவித்தல். அதாவது ஒரு முறை பாவித் தவுடன் வீசக்கூடிய சிரிஞ் பாவித்தல்.
- ஆய்வுகூடங்களில் இரத்தம், விந்து போன்ற பொருள்களுடன் வேலை செய்பவர்கள் இரட் டைக் கையுறைகளை அணிதல், பாவித்த ஊசி, பிளேட் போன்றவற்றைத் தகுந்த முறைகளில் அகற்றுதல் மூலம்
இந்நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற enti.
கேள்வி:
எயிட்ஸ் நோயாளி பக்கத்து வீட்டில் இருந்தால் *சி மக்குத் தொற்ற வாய்ப்புக்கள் உள்ளதா ?
பதில்
தொற்றுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. ஏனென் A07ல் எயிட்ஸ் காற்றின் மூலமோ, மூச்சின் மூலமோ
ரவாது.
கேள்வி:
மூட்டைப்பூச்சிகளினால் எயிட்ஸ் நோய் கடத். தப்படுவதில்லையா? தியேட்டர்களில் எயிட்ஸ் நோயாளிகளைக் கடித்து இரத்தம் குடித்த மூட் டைப்பூச்சிகள் அடுத்து நம்மைக் கடிக்கும்போது இது பரவ வாய்ப்பிருக்கிறது தானே? மற்றும் நுளம்புகளி னால் மலேரியா நோய் பரவுவது போன்று இதுவும்: பரவலாம் தானே?
பதில்
மேற்கூறிய இரு முறைகளினாலும் எயிட்ஸ் நோய் பரவுவதில்லை. ஏனென்றால், நுளம்புகளோ, மூட்டைப்பூச்சியோ, ஒருவரைக்கடித்துக் குருதியை உறிஞ்சும் போது, முதலில் கடித்தவரின் குருதியை இரண்டாமவரின் உடலினுள் செலுத்துவதில்லை. இதன் காரணமாக எயிட்ஸ் வைரசுகள் அடுத்தவரின் குருதியை அடையமுடியாது போகின்றது. மற்றும்
01 - தை 1999 சுகமஞ்சரி

Page 13
இவ்வைரசுக்கள் நுளம்பின் உடலிலோ, மூட்டைப் பூச்சியின் உடலிலோ பெருகுவதில்லை. இவற்றின் இரைப்பையிலுள்ள உதரச்சாறிலுள்ள சில நொதி யங்கள் இவ் வைரசுக்களைச் செயலிழக்கச் செய்வ தாகவும் நம்பப்படுகிறது.
ஆனால் மலேரியாநோயை ஏற்படுத்தும் புரட்டோ சோவன்கள் நுளம்பின உடலினுள் பெருகி, உமிழ் நீர்ச் சுரப்பியில் செறிவாகிக் காணப்படும். நுளம்பு ஒருவரைக கடித்து குருதியை உறிஞ்சுவதற்கு முன் eாக உமிழ்நீரை உட்செலுத்தும். அப்போது உமிழ் நீருடன் இந்த புரட்டோசோ வன்களும் உட்செலவ தாலேயே மலேரியா ஏற்படுகிறது. ஆனால எயிட்ஸ் வைரசுக்கள் நுளம் பின் உடலினுள் பெருகுவது மில்லை. அவற்றின் உமிழ்நீர். சுரப்பியை அடைவது மில்லை,
கேள்ளி:
உணவகங்களில் எயிட்ஸ் நோயாளி சாப்பிட்ட அதே தட்டில் நாமும் சாப்பிடுவதால் எயிட்ஸ் தொற் றிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளதா?
பதில் :
இல்லை. ஏனென்றால் எயிட்ஸ் உமிழ்நீரினுT டாகத் தொற்றுவதில்லை. எனவே இது பற்றி பயம கொள்ளத்தேவையில்லை. இதே காரணத்தால் தான் முத்தம் கொடுப்பதால் கூட எயிட்ஸ் தொற்றுவ தல்லை. ஆனாலும் முத்தமிடுபவர்களின் வாயில் காயம் அல்லது புண்கள் இருப்பின், இவறறினுT டாக எயிட்ஸ் வைரஸ் தொற்றும் வாய்ப்புகள் உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது.
கேள்வி
எயிட்ஸ் நோயாளி இருமுவதாலோ, அல்லது துப்புவதாலோ சுறறியுள்ளவர்களுக்கு எயிட்ஸ் வர வாய்ப்புகள் உள்ளதா?
Lu Sesä:
கவலை வேண்டாம். காசநோய், நியூமோனியா, இன்புளூவென்சா போன்ற நோய்களே மேற் சொன்ன முறைகளினால் பரவும் நோய்களாகும. எயிட்ஸ் அவ்வாறு அல்ல.
கேள்வி:
எய்ட்ஸ் நோயாளியைத் தொடுவதாலோ அல்லது
அவருக்கு நோய் இருப்பது தெரியாமல் கை குலுக்கு வதாலோ அல்லது பஸ்ஸில் நெருக்கமாக எயிட்ஸ்
ககமஞ்சரி மஞ்சரி: 04 - மல

நோயாளியுடன் பயணம் செய்வதாலோ, எயிட்ஸ் எமக்குத் தொற்ற வாய்ப்புகள் உள்ளதா?
பதில்;
ஒருபோதும் அப்படித் தொற்ற வாய்ப்புகள் இல்லை. எயிட்ஸ் நோயானது பாலுறவுகள் மூலமாகவோ அல்லது எயிட்ஸ் நோயாளியின் இரத், தத்தை ஏற்றுவதாலோ தான் முக்கியமாகத் தொற் றுகின்றது. தொடுகைகள், உரசலகள், வியர்வைகள், மூச்சுக்காற்று இவற்றின் மூலம் ஒரு போதும் எயிட்ஸ் பரவுவதில்லை. மற்றும் எயிட்ஸ் நோ பாளியின் ஆடை களை மாற்றி அணிவதாலோ, ஒரே நீச்சலகுளத்தில் அவருடன் சேர்நது நீந்துவதாலோ கூட எயிட்ஸ் தொற்றுவதில்லை என்று இப்போது அறியப்பட்டுள் ளது. எனவே எயிட்ஸ் நோயாளியுடன் எவ்வித தயக் கமுமின்றி சகஜமாகப்பழக முடியும்.
கேள்வி:
Quits distful uan p56iai) ( Public to ile t ) உள்ள கொமோட் பாவிக்கும் போது 6 tu u Gño பரவ வாய்ப்புகள் இருக்கின்றதா? அவ்வாறு இருக்கு மாயின் விடுதிகள், ஹோட்டல்களில் தங்குபவர்கள் கூடுதலாகப பாதிக்கப்படும சந்தர்ப்பங்கள் இருக் கிறதலலவா ?
பதில்;
கொமோட் உபயோகிப்பதனால் எயிட்ஸ் பரவிய தாக எந்த ஒரு அறிக்கைகளும் சொல்லவில்லை . மிக மிக அரிதாக இதன்மூலம எயிட்ஸ் பரவலாம். அவ்வாறு பரவ வேண்டுமாயின் கீழே சொல்லப்படும் நிகழ்வுகள் நடைபெற வேண்டும் .
குறிப்பிட்ட எயிட்ஸ் நோயாளிக்கு மூலநோய் அல்லது ஏதாவது புண்கள் அவர் மலவாசலருகே இருக்க வேண்டும , அவர் மலங்கழிககும் போது இவற்றிலிருந்து இரத்தம் வெளியேறி கொமோட்டில் படிய வேணடும. இவ்விரத்தம் கழுவப்படாமலும் காயாமலும் இருக்கும்போது அடுத்தவர் வந்து அதே கொமோட்டில் அமர வேணடும. அவருக்கும் அமரும் பாகங்களில் ஏதாவது புணகள் இருந்து அதனுTடாக முன்னைய உறையாத குருதியிலுள்ள வைரசுக்கள் இவரின் உடலை அடைய வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தாலே, பின்னை யவருக்கு எயிட்ஸ் வரலாம் . இவ்வாறு நடைமுறை வாழ்க்கையில நடப்பது குறைவு. எனவே இதனுாடாக எயிட்ஸ் பரவும் என்ற பயம் தேவையில்லை. என்றாலும் கூட முன்னெச்ச ரிக்கையாக கொமோட்டில் உறையாத இரத் தம் இருப்பின் அதைக் கழுவிய பின் கொமோட்டை உப யோகிப்பது நல்லது. அத்துடன் உடலுக்கு வெளியிலோ
h; 01 - தை 1999 ... 1

Page 14
அல்லது உடல் பாயத்திற்கு வெளியிலோ, இந்த வைர சுக்கள் நெடுநேரம் உயிர் வாழ்வதில்லை என்றும் அறியப்பட்டுள்ளது.
கேள்வி
சலூன் - சிகை அலங்கார நிலையங்களில் எயிட்ஸ் நோயாளிக்கு சவரம் செய்த அதே கத்தியால் எமக் கும் சவரம் செய்யும்போது எயிட்ஸ் பரவலாம் தானே!
பதில்:
இதுவும் முன்னைய கேள்வியைப் போன்றதே. இவ்வாறு எயிட்ஸ் பரவியதாக இதுவரை எந்த அறிக்கைகளும் கூறவில்லை. இதனூடாகப் பரவும் வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு, இதனூடாக எயிட்ஸ் பரவ வேண்டுமாயின், இனிக் கூறப்போகும் செய் முறைகள் ஒரு தொடராக நிகழவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே எயிட்ஸ் பரவ முடியும்.
முதலில் சவரம் செய்யப்படும் எயிட்ஸ் நோயா ளிக்கு, பாவிக்கப்படும் சவரக் கத்தியினால் ஒரு வெட் டுக்காயம் ஏற்பட வேண்டும். அக்கத்தியில் படியும் இரத்தம் துடைக்கப்படாமலும் கழுவப்படாமலும் இருக்க வேண்டும். அடுத்து வரும் சில நிமிடத்துக்குள் ஒரு சுகதேகி அதே சவரக்கத்தியினால் சவரம் செய் ப்ப்பட வேண்டும். அப்படிச் செய்யும் போது அவ ருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட வேண்டும். இக்கா யத்தினூடாக, அக்கத்தியிலுள்ள முன்னைய குருதியி ஆலுள்ள எயிட்ஸ் வைரசுக்கள் (எச் ஐ வி) இவரின் உடலினுள் செல்ல வேண்டும்.
எனவே முன்னெச்சரிக்கையாக, புதிதாக ஒரு பிளேட் வளங்கிக் கொடுத்து சவரம் செய்வதால் இப்பிரச்சனையைத் தீர்ப்பதுடன் எம் மனப்பயத்தை யும் தீர்க்கலாம். அத்துடன் சவரத் தொழிலாளர் களும், இதை உணர்ந்து தமது சவர பிளேட்டுக்களைத் தொற்று நீக்குவதன் மூலம் இதனை உறுதி செய்ய லாம். தொற்று நீக்குவதற்காக, கொதிநீரில் 20 நிமி டங்கள் சவர உபகரணங்களை அவிய விட்டோ அல் லது ஸ்பிறிற். டெற்றோல் போன்ற தொற்றுநீக்கி களினால் கழுவியோ உபயோகப்படுத்தலாம்.
கேள்வி
எயிட்ஸ் நோய் தனக்கு இருக்கலாம் எனச் சந்
தேகிக்கும் ஒருவர் எவ்வாறு வைத்திய சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்?
* சமூகம் தன்னைத்
எயிட்ஸ் நோய் ஒ
2 மஞ்சரி: 04 - மலர்

O
பதில்
இவரி ஒரு பெரிய வைத்தியசாலைக்குச் (General Hospital) சென்று வெளிநோயாளர் பிரிவில் (OPD) காட்டாமலேயே நேரடியாக அறை இல 33 ல் காட்டி சிகிச்சை பெற முடியும். இங்கு நோயாளியின் வருகை பதியப்பட்டு இவருக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கம் வழங்கப்படும். இவ்விலக்கமே, இவரின் பெயருக்குப் பதிலாகப் பாவிக்கப்படுவதால், இவர் பற்றித் தக வல்கள் வெளியே தெரிய வராமல் இரகசியம் பேணப்பட்டு சிகிச்சை அளிக்க இப்போது வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே நோயாளிகள் சிறிதும் தாமதியாமலும் பயமேதும் இன்றியும் இவ்வசதிகளைப் பயன்படுத்திக கொள்ள முடியும். இவ்வசதிகள் யாழ். போதனா வைத்தியசாலையிலும் இருக்கின்றது என் பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இவ்வசதிகள் எல்லா பெரிய மருத்துவமனைக ளிலும் அறை இல 33ல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே ஒருவர் தனககு வசதிப்பட்ட ஏதாவது ஒரு பெரிய மருத்துவமனையில் த ைசிகிச்சையைத் தொடர முடியும்.
கேள்வி:
எயிட்ஸ் நோயாளிக்கு சமூகம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
பதில்
எயிட்ஸ் நோயாளியும் சமூகத்தில் ஒருவரே இந்நோயாளிகள் உடலால் மட்டுமல்லாது o6itats தாலும் நொந்துபோயிருப்பார்கள். எனவே இவர் க. ளின் மனத்தை மேலும் காயப்படுத்தத்தக்க வகை யில் நடப்பதோ, கதைப்பதோ கூடாது. அவர்க ளைக் காட்சிப் பொருள் போல் நோக்காது, அவர்க ளின் தேவைகளை நிறைவு செய்து கொடுக்க வேண் டும். இவர்களைத் தனிமைப் படுத்தி வைக்க வேண் டும் என்று அவசியமில்லை. அவர்களுடன் சகஜமா கப் பழக முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் எஞ்சிய வாழ்க்கைக் காலத்தை அமைதி யாக அவர்கள் கழிக்க உதவலாம். இதையே தான் அவர்களும் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்
A.
திருத்திக் கொண்டால் ருவருக்கும் பரவாது.”
01 - தை 1999 சுகமஞ்சரி

Page 15
வாந்திபேதி (கொலரா) அறிவி
எடுக்கப்பட வேண்டிய நடவடி
வாந்திபேதி இலங்கையின் பல பாகங்களிலும் பரவிவருகிறது. சுகாதார வைத்திய அதிகாரிகள்/ பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான சரிபார்க்கும் பட்டியல் (Check list) தரப்படுகிறது.
1. வைத்தியர், வைத்தியசாலை ஊழியர் மூலம் நோய் அறிவித்தல்கள் சரியானவையா என உறுதி செய்தல். கிடைக்கும் தகவல்கள் போது மானதாக இல்லாவிடின் சிகிச்சை பெறும் இடத் திலிருந்து மேலதிக விபரங்கள் பெறுதல். வைத் தியசாலையில் நோயாளியை, அவரது உறவி னர் ஆகியோரைச் சந்தித்து உரையாடி தொற் றின் மூலம் (Source), தொடர்புடையவர்கள் நோயாளி சென்றுவந்த இடங்கள் ஆகியவை பற்றிய விபரங்களைப் பெறுதல்.
2. சிகிச்சை பெறும் இடத்திலுள்ள ஊழியர்களு
டன் பின்வருவன பற்றிக் கலந்துரையாடல்,
.1 சவரிக்காரம் இட்டு கை கழுவுதல்.
2. நோயாளியைச் சுத்தம் செய்யும்போது,
கையுறை பாவித்தல்.
3. நோயாளி பாவித்த உடைகள் வைத்திய சாலைத் துணிகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்தல் . ( 10% TCL கரைசலில் துணி களை 20-30 நிமிடம் ஊறவிட்டுக் கழுவி வெயிலில் காயவிடலாம் அல்லது சலவைக் குக் கொடுக்கலாம்.)
4. நோயாளி படுக்கையில் மலம் கழித்திருந் தால் படுக்கையில் விரித்துள்ள இறப்பர் விரிப்பை உடனே அப்புறப்படுத்தல்,
மும்ை: வாராந்த தொற்றுநோய் பரவுவியல்
அறிக்கை .
தமிழாக்கம் எஸ். இராஜேந்திரா •
பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம். c
ககாஞ்சரி upérfl: 04 — toa

க்கப்பட்டால் க்கைகள்
5. மலகூடங்களை எப்பொழுதும் சுத்தமாக
வைத்திருத்தல்.
6. கழிவு அகற்றும் அமைப்பும், வடிகாலும்
சுத்தமாக வைத்திருத்தல்.
7. இலையான் உற்பத்தியாகும் இடங்கள் இல்
லாது ஒழித்தல்.
பின்வருபவை தேவையான அளவு கையிருப்பில் உள்ளதை உறுதி செய்தல்
1. நாளம் மூலம் ஏற்றும் திரவம் (IV Fluids) Ringer's Lactate asq5titu55áásg. (Hartmann's Solution)
2. நுண்ணுயிர்க் கொல்லிகள் (doxycycline,
tetracycline and erythromycin) இறப்பர் விரிப்புகள் (Mackintosh) as goiuyanr (Cannulas)
வைத்தியர்கள், குழந்தை வைத்திய நிபுணர் ஆகியோருடன் நோயாளர் பராமரிப்பு, பாவிக் கப்பட வேண்டிய நுண்ணுயிர்க் கொல்லிகள் பற்றி ஆலோசித்தல்.
தினமும் எல்லாச் சந்தேகத்திற்கிடமான, மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளரையும் அவ்வப் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி, பிராந்திய தொற்று நோயியல் அதிகாரி ஆகியோருக்கு அறிவிக்க வேண்டும். இதன் அவசியத்தைப் பற்றி வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி களுடன் ஆலோசித்தல். பின்வரும் விபரங் கள் தேவை:
l . Golu uuriř
2. வயது
3. Luт 6)
4. நோய் ஆரம்பித்த திகதி 5. வைத்தியசாலையில் அனுமதித்த திகதி 6. நோய் உறுதி செய்யப்பட்ட திகதி 7. நோயாளர்கள் படுக்கை இலக்கம் &. Fflun 6ar 6é6Mars'td
0.
- தை 1999 3

Page 16
9. நோயாளி நோய் ஆரம்பமாகுமுன் சென்ற இடங்கள் (தொடர்புடையவர்களைக் கண் டுபிடிக்க உதவுதல்.)
6. நோயாளியின் மலம் மாதிரியை எடுத்து அண்மை யில் உள்ள ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வாந்திபேதி நுண்உயிரிகளை (Cholera wibrios) இனங்காண ஒழுங்குகள் செய்தல். இதற்குத் தேவையான போதியளவு உரிய ஊட கம் கொண்ட கண்ணாடிக்குப்பிகள் இருத்தல் வேண்டும்.
7. வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவ அதி காரிகள், மாவட்ட வைத்திய அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி,
1. கிரமமாக சுகாதாரக்கல்வி நிகழ்ச்சிகளை
ஒழுங்கு செய்வித்தல்.
2. போதுமான அளவு சுகாதார வசதிகளைச்
செய்து கொடுத்தல்,
3. வைத்தியசாலை நீர் விநியோகத்திற்குப் போதுமான அளவு குளோரின் இடப்படுவ தைச் சரிபார்த்தல்.
4. Dadill gy(upasai) assrl (9-, (Seticic tank)
கசிவுகளை அடைத்துத் திருத்துதல்.
5. கிரமமாக கழிவு அகற்றல்.
8. வாந்திபேதி நோயினால் இறப்பவரின் மரணச் சடங்கில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை யைப் போதியளவு குறைக்க எல்லா முயற்சிக ளும் மேற்கொள்ளுதல். (சந்தேகிக்கப்படும் அல் லது உறுதிசெய்யப்பட்ட) மரணச்சடங்குகளை இறந்த இடத்துக்கு அண்மையிலுள்ள இடத்தில் நிகழ்த்துவது நன்று. சடங்குகளில் கலந்து கொண்ட யாவரும் ஆகக்கூடிய அளவு தற்சுகா தாரம் பேணவேண்டும்.
9. பின்வருவனவற்றை இன ங் கா ன் ப த நிற் குத் தேவையான விபரங்களைப் பெறுவது பற்றிப் பொறுப்பதிகாரிகளுடன் ஆராய்தல்.
1. தொற்றின் மூலம்
2 . தொற்றிய முறை
பிழைதி சென்ற இதழில் வெளிவந்த "நுளம்புகள் பற்றிய நுளம்புகளின் முட்டைகள் கூட்டம் கூட்டமாகவும், கி வும் இடப்பட்டிருக்கும் என்று தவறுதலாக வெளியிடப்ட் தனியாகவும் சியூலெக்ஸ் நுளம்பின் முட்டைகள் கூட்டம் கூ
l4 மஞ்சரி: 04 - மலர் 0

10 .
1.
12.
3.
14.
15.
16.
3. நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள்
4. பொருத்தமான தடுப்பு. கட்டுப்பாட்டு நட
வடிக்கைகள் .
5. குறிப்பிட்ட மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமான சுகாதாரச் செய்திகள். இச்செய்திகளை எந்த முறை களில் கிடைக்கச் செய்வது.
பெற்றுக்கொண்ட தகவல்களைப் பகுத்து ஆராய்தலும், வரைபடம், வரைபு, Spot maps ஆகியவை தயாரித்தல்,
ஊழியர்களுடன் கலந்துரையாடி அவர்களது அபிப்பிராயங்களை அறிதல். இவர்களுடன் சேர்ந்து செய்யப்பட வேண்டிய உரிய செயற் பாடுகளை இனங் காணுதல்.
அவர்களுக்குப் பொருத்தமான பொறுப்புக் களை வழங்குதல்
முன்னேற்றத்தைக் காலத்திற்குக் காலம் கணித் தல், பிராந்திய தொற்று நோயியல் அதிகாரி, பிரதி மாகாண சுகாதார சேவைப் பணிப்பா ளர் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட தடுப்பு கட்டுப்பாட்டு முறைகள் பற்றிய முன்னேற் றத்தை அறிவித்தல். தேவையேற்படின் முக்கிய உபாயங்களில் மாற்றத்தை ஏற்படுத்துதல்.
திடீரென முடிவுகளுக்கு வருதல் கூடாது. ஒழுங்கு முறையில் செயல்படல்.
தனிப்பட்ட வைத்தியர்களுடன் கலந்துரையா டல் இவர்களுக்கு நோய்பற்றியும் கையாளும் முறைகள் பற்றியும் போதியளவு விபரங்கள் அளித்தல் •
மாகாண, பிரதி மாகாண சுகாதார சேவை கள் பணிப்பாளர்கள், பிராந்திய தொற்று நோயியல் அதிகாரி, தொற்று நோயியல் அதி காரி ஆகியோருக்கு தடுப்பு. கட்டுப்பாட்டு நட வடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவித்துக் கொண்டிருத்தல். A
$. ଅstd 鬍蠶。」 *" என்ற கட்டுரையில் அனோபில்ஸ் யூலெக்ஸ் நுளம்புகளின் முட்டைகள் தனித்தனியா பட்டுள்ளது. அனோபிலிஸ் நுளம்பின் முட்டைகள் தனித் ட்டமாகவும் இருக்கும் என்பதே சரியாகும். -ஆசிரியர்
مست. I |
தை 1999 சுகமஞ்சரி

Page 17
இலை சேர் பால் கஞ்சி
இலை சேர் பால் கஞ்சி இலகுவாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வீட்டில் சுலபமாக தயா சிக்கும் நிறை உணவு. குறிப்பாக சிறு பிள்ளைகளுக் கும், பாலூட்டும் தாய்மாருக்கும் , கர்ப்பவதிகளுக்கும் மிகச்சிறந்தது. குடும்பத்தில் உள்ள அனைவரும் இதனை உணவாகக் கொள்ளலாம்.
ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு இலை சேர் பால் கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான பொருள்கள்,
சிவப்புப் பச்சை அரிசி
- 165 கிராம் (1 சில்வர் ரம்ளரி)
சீனி - 50 கிராம் (6 தேக்கரண்டி - நிரம்பியது)
பயறு - 30 கிராம் (5 தேக்கரண்டி - நிரம்பியது)
* மரக்கறி எண்ணெய் அல்லது மாஜரின்
- 05 தேக்கரண்டி
LJ76) Ofir
- 50 கிராம் (7 தேக்கரண்டி - நிரம்பியது)
தேங்காய் துருவல்
- 50 கிராம் (10 தேக்கரண்டி - நிரம்பியது)
இலை வகை (சிறிதாக வெட்டியது)
- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணிர்
ட 2500 மில்லி லீற்றர் (12 சில்வர் ரம்ளர்)
செய்கை முறை
பயற்றை முதல் நாள் தண்ணிரில் நன்கு கழுவி சிறிது நேரம் ஊறவைத்து வடித்து சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி முளைவர வைக் கவும்.
~ Na. Na
மலையரசி சிவராஜா சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
க்கமஞ்சரி மஞ்சரி: 04 - மல

2 பால்மாவையும் சீனியையும் சேர்த்து ஒரு சில்வர்
ரம்ளர் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
3 முதலில் அரிசியை கழுவி, தண்ணிரில் அவிய விடவும். அரிசி அரைப் பதத்திற்கு அவிந்த பின்னர் முளை பயற்றை சேர்த்து அவிய விடவும். இவை நன்கு அவிந்தபின் சிறிதாக வெட்டிய இலைவகைகளை சேர்த்து 5 நிமிடங் கள் அவிய விடவும்: பின்னர் கரைத்து வைத்த பால்மாக்கலவை, தேங்காய் துருவல், மாஜரின் அல்லது மரக்கறி எண்ணெய் என்பவற்றை சேர்த்து அவித்து சிறிது நேரத்தில் இறக்கி பரிமாறலாம்.
* இலை சேர் பால் கஞ்சி தயாரிக்க மேலே எடுக்கப்பட்ட பொருள்களில் இருந்து ஏறத் தாழ 1580 கிலோ கலோரி சக்தியும் 34 கிராம் புரதமும் கிடைக்கிறது. சேர்க்கும் இலைவகைகளிற்கேற்ப இந்த அளவுகளில் சிறு வேறுபாடுகள் காணப்படலாம்.
* முளை விட்ட பயற்றினால் ஏற்படும் நன்மை
கள் .
-> புரதம், மாப்பொருள் இலகுவில் சமிபா
L6-56 - 100 கிராமுக்கு விற்றமின் சீ 10 - 12
கிராம் அதிகரித்தல் நியசின் 50% அதிகரித்தல் உடலில் உறிஞ்சப்படக்கூடிய இரும்பு அதிகரித்தல்
a»
ab
* 4 தொடக்கம் 12 மாதங்கள் வரையான குழந் தைகளுக்கு இலை சேர் பால் கஞ்சியை வடித்துக்கொடுக்கலாம்.
* ஒரு வயது முதல் 6 வயதுடைய பிள்ளை களுக்கு தேவையான இலை சேர் பால் கஞ்சி
4 - 1 சில்வர் டம்ளர் ஆகும்.
* உபயோகிக்கப்படக்கூடிய இலைவகைகள்
உதாரணமாக:
முளைக்கீரை, முருங்கை இலை, பொன்னாங் காணி, வல்லாரை, சண்டி இலை, மு ல  ைல,
முசுட்டை, அகத்தி போன்றவை.
01 - தை 1999 5

Page 18
உணவுப் பொருள்களின் கூறை
சுகாதார சேவையாளரின் நலன் கூறமைப்பு அட்டவணைகள் தெ களில் வெளியிடுவதற்கு ஒழுங்குக
இங்கு வாழுகின்ற தமிழ் மக்க கள் பற்றிய விபரங்கள் இதில் 4
போசாக்கு பற்றி சுகாதாரக் க என்று நம்புகின்றோம்.
பின்னர், இவற்றை புத்தக வ எமக்கு இருப்பதால் இதில் உள்ள களையும் எமக்கு அறிவித்தால், மு சமூகத்திற்கு அளிப்பதற்கு உதவிய
உணவுப் பொருள்களின் கூறமைப்பு அட்ட
வணைகள் பற்றிய குறிப்புகள்
l,
அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கக் கூறுகளின் அளவுகள் உணவுப் பொருள்களின் உண்ணக்கூடிய பகுதிக்கே பொருந்தும். எனவே தேவைப்படும் திருத்தங்களைச் செய்தபின்பே o upg” el6076gú பொருளுக்குப் பாவிக்கலாம். அட்டவணையின் இறுதியில் * முழு உணவுப் பொருளாக வாங்கும் போது அதில் உண்ணமுடி, யாத பகுதியாக எஞ்சும் கழிவு, வீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
"அண்ணளவான நைதரசன் டுதான்வாளவு அள விடப்பட்டே உணவுப் பொருளின் புரதக் கொள்
தொகுப்பு: ந. சிவராஜா
மலையரசி சிவராஜா மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
I6
upé5g fl: 04 – dødf:

மப்பு
ர கருதி உணவுப் பொருள்களின் ாடர்ந்து வரும் சுகமஞ்சரி மலர் sள் செய்யப்பட்டுள்ளன.
ள் பாவிக்கும் உணவுப் பொருள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ல்வி அளிப்பதற்கு இது உதவும்
டிவில் வெளியிடும் நோக்கமும் குறைகளையும் உங்கள் கருத்துக் முழுமையான ஒரு வெளியீட்டை பாக இருக்கும்.
- ஆசிரியர், சுகமஞ்சரி
ளளவு கணக்கிடப்பட்டுள்ளது. எல். உணவு களுக்கும் மாற்றீட்டு அலகாக 6.25 பாவிக்கப் பட்டுள்ளது.
3. குறிப்பிடப்பட்டுள்ள காபோவைதரேற் கொள் ளளவு, ஈரலிப்பு, புரதம், கொழுப்பு, நார், சாம்பல் என்பவற்றினை கணக்கிடப்பட்டபின் பெறப்பட்ட ஒரு பெறுமதியாகும்.
4. உணவுப் பொருள்களின் சக்திக் கொள்ளளவு. காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு என்ப வற்றின் கொள்ளளவுகளில் இருந்து கணக்கிடப் பட்டுள்ளது. ஒரு கிராமுக்கு முறையே 4, 4, 9 கிலோ கலோரி சக்தி வெளிப்பாடு காபோவைத ரேற்று. புரதம், கொழுப்பு, என்பவற்றிற்கு இருக்கும் என எடுத்துக் கொள்ளப்படுகிறது.
5. முன்னரே உருவாக்கப்பட்ட விட்டமின் ஏ விலங்
குணவுப் பொருள்களிலேயே காணப்படுகிறது. அதன் கொள்ளளவு குறிப்பிட்ட அளவு "மைக்
01 - தை 1999 சுகமஞ்சரி

Page 19
கிரோ கிராம்கள் ரெட்டினோல் "*{Micrograms of retinol) ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது, தாவர உணவின் கரோட்டீன்கள் (விட்டமின் ஏ முன் னோடி) கொள்ளளவு மைக்கிரோ கிராம்களில் (m8ே ) குறிப்பிடப்பட்டுள்ளது. சில உணவுகள் உதாரணமாக முட்டை முன்பே உருவாக்கப் பட்ட விட்டமின் ஏ, கரோட்டின் (முன்னோடி) ஆகிய இரண்டையும் கொண்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவும்.
பின்வரும் தொடர்புகளைக் கவனிக்கவும்:
1. சர்வதேச அலகு (1, U) விட்டமின் ஏ = 0.3
மைக் கிரோ கிராம்கள் ரெட்டினோல் .
1, சர்வதேச அலகு (1. U) விட்டமின் ஏ - 6.6
மைக்கிரோ கிராம்கள் கரோட்டீன் .
தரப்பட்ட உணவுப் பொருளின் போசனைக் கொள்ளளவிற்கும், பாவனையில் உள்ள உணவின் ஆக்கக்கூறு அட்டவணைகளிற்கும் இடையே கொள்ளளவில் வித்தியாசங்கள் (அநேகமாக சிறி
சுகமஞ்சரி மஞ்சரி: 04 -

தளவு) இருக்கக்கூடும் . இவை இனங்களுக் கிடையே வேறுபாடுகள், மண், காலநிலைவேறு பாடுகள், கணிப்பீட்டு முறைகளிலான வேறுபாடு கள் என்பனவற்றால் ஏற்படுகின்றன.
7. அட்டவணைகளில் பாவிக்கப்படும் பின்வரும்
குறிப்பீடு முறைகளை அவதானிக்கவும்.
அ) ஒரு உணவுக்கூறு இல்லாமல் போனால் அல்லது மிகக் குறைந்த அளவில் மட்டும் காணப்படும் போது பூச்சியத்தினால் (0) குறிக்கப்படுகிறது.
ஆ) இரண்டு குற்றுக்கள் (, , ) குறிப்பிடப்பட்ட தரவு இல்லாமல் இருப்பதை குறிக்கிறது.
இ) எழுதப்படாத இடம் பொருத்தமற்ற இடங்களில் விடப்படுகின்றது. உதாரண மாக தாவர உணவில் முன்னரே உரு வாக்கப்பட்ட விட்டமின் ஏ இன் அளவு.
லர்: 01 - தை 1999 17

Page 20
cz | C | | g9 | 1:0 || 0 || Oz | SIç (o | OZ | 06 | 6:0 || || 0:1 || So I || 69 | 9'98± &#Uyı ıseo lo | Wulu Oţ | 9 ' 0 || 69 || I - 0 || 0ZI | 00Z || 8IZ * I || 6OZ | 3' 0 | | | | 0 | fy '0 | 9ț7 | 8' L8qi finɲɛɛ ŋmɔ ŋɔ ko | €0.20 6Z || ' ' | 9ç | + ' I || 0Z | 09 | 90ZÇ’0 || L99ç ị # ZH | I | 0 | Z | O || 9ţ | 6'98Augog af c ra nfo | ZOLO 91 | 0° I | I0′ 0 || ' ' | ' ' | 00:1寸TOI Į į Ķ Ļ ļ ç' 0 | Z ’0 | 6ç | 9 * #81ļos, silo | IOLO 安斑%Ú;安根.§§)§),安安Q)门Q的G 咖一一雄一雌一一一曝一一概一一一一瞬一一一\ē, 旭S概 一郎一四一班一涵一卧一鹰座。 加 涯&动。 一副一挪一。一嘲一)都一万?一F, 到 一册「・ *•3 列,授<<巧心 •~Q心 ^~}仰sẽ四$}>仰随例わ儒圆prino, geys@unc) sıfelosoo魔g) »!»%-~\ *•=

Page 21
常L' 0 | Çț7 || 00寸0| L' 0 || OZ | Oɛ | 9 | L | € 0 || L' 0 || çg | ç’06(Frognosố) șco ș11, | Izuo £” 0 || 0Z | OZIz 0 | 0c | oc | 0:0 | 1:0 || 0:1 | sw | soosocoș (11191 || OzLO ÇZ£ * 0 | 09ÞOI ‘ siƐ * 0()Ż93 | 6' Os | Z’0 || L’08ț7 | 9’ 18qıđỉriq-luogo | 6ILO 0#79 | # * 0 | 0Z | 09 | 9 |L’ 0 | 6Ş | 6" I || I ’0 | Z’0 | 6 || L' L6sĩ Jos@-ı Log) | 3ILO 6寸:09£' 0 || 001 || 0ț7 | 99 I9:0 | Z | | 0 | | I - II || S’0 | l°0 || ZS || 6'98 || (ngoạiuesi) pasqore awezi u dg | LIŁo
I级Is安3@安安安 如一酶哪一姆所鲤一碗曙一一雌一雄一的 一册鹰 旭力。ls$)の留弘伍S・$D阳刀\o像D伊g %倒娜院)→ §鹰[”.娜わ班狮}吧S・倒朋T.
●^ •©§婴四$>四随四心力图~ | 4ırmri@. Igogo@lung) sasto 1999-æ@
• -+姻S•~\ -~,•~ 安•),^•引鹰感s) 應昭***初。德姆德$} š || ~ |& & | & | Ể|(一遇一女一&懿
----~~<~~
9I I ÇI | #71%. I|ZI|| 101 || 60 || 80 || LO | 90 || ç0 | y0 | £0 | ZO | 10+ @ Nomoro)
loop-muose) ș»ørøơon

12 || · : , : : || : : 1 이지T적 1 : ,국───하───타──아니라디1이斗구하이-라이히하고히1디자화 £{6’ € į 86’ 0 || OZ | OI9Zgo į | 0ç | OZI | 8' SL | †” 0 || S’ZLI 9 | 9 ‘ŞI鱷%"ZƐL0
•L g | ' ' | ' ' | • • ! ' ' | ' '• •gg | ZZ || 8' £9 | 7' 0 | Zo [ | soos | Z'69qi finquosoging) | ÍSLO #Z | O’I | IZ° 0 | 09 | 09 | 8Žç: 0 | Ş | | 3 || 6" I I | Zo 0 || 9° 0 | 29 | 0'98In Loșụng) || 0£LO Z9 | * * | 9| * I || 0:3 || OZZ || 0 Iç. I || 93 | 13 | L '99 || Z’ 0 || 9° Z | WIZ ! L’88qińrışım gishi || 6ZLO #9 || ' ' ! ZI | 7' 0 || 0ç | 0$ I || 0 ||L' 0 | 6Z || 3ç | Z' LI | I - 0 || o'z | I || || S’6Lquaerosofi | szlo
· · ] ç’ 0 || ~ ~ || ' ' | ' ' | ' ' | ' '• • | 99 || 6 || L’ OZ | Zo 0 || L' 0 || L8 i Z’LLqi firmąı içer 1 || LZLO 0L ] [ ′ ] [ L#7' 0 | 9 I - 0 | €0' 0 || SLI9 ° 00ZI “ O || 6" I || 88Tińrīņ voor | 9ZLO 0£ | 3' 0 || Lç | Z’0 | 0çZ | 0ỹ | 999ç: 0 | ÇI | LI | Z - L | I ’0 || 9° 0 | Zo || 8°06qiớin Zaļo urısır; || çZLO ZI | #o g | 009 | Z 0 || 0 | | 08 | 6z · I | OZ | Oç | Log I || I ’0 || So0 || 89 || 8° 18习4塔将窗9食阁5)一寸ZL0
• ’ | Ç’ 0 || #7Zo 0 || OI || 0 | | 0ç• 0 || Oz | O | ç’ 9 || I ’0 || 9° 0 | 6Z | € ‘Z6@ņus | çZLO #g | * * | 3I | Zo 0 || 0 | | 0£ | 87z · I | g | | çI || 0: # I | € 0 || L' 0 | Z9 | L | 88qıfîrıąffte ugi | ZZLO

Page 22
요 % frogfig $ 39
2 (கு) பய9
G7ge( maxw • وي ۰ ) 玄 O ரனாge | F 3
ef ངའ་ (கு மு) ஒருாது | 3 3
( 3 σπω9) C em 3 ། ig9ge19g)(, 71in ng acoe S
C) ( (5 (nc) leging Sる 三
(கு Tige) C er 으 .geon Turgణా ミ en
( கு σ ω9) ***r
v geografiqí go
rr 영 · G'ya) F7q14DE | G |
ed S (* 9 g) agent Pure) 은
లో 용 (கு ரா) ரா குge ; - *
l (கு) Ur). ON C ( (f{grregurg Lణ SF so
ཅ, ། 芭 (கு) H ரசி) பழகு es c
awasa
S (கு) ரசிபி ; - அ
བ་རྒྱུ་ S {ழய(eஐக * கு) குஒசி YP T
お (g) K’nгng9йы ー 。
ܡ» s
Cs 湾 甲
G) 5 •S
Cs 翡 s 5 器 སྤྱི་ བྲི་ 德 :5N .s bs - } S S
༤ l qns9#a93 (90.75migoj 4G? S S

······qi@-i uge, qoyasqa qoỹ@ko
çZ || Z. I | C | y’O | 0ç | 0 | | If Iç 0 | 09 s OI ! ç' 8 || Z° 0 || L’0 | 6€ | I '68리해「|편히T 9ç | ' ' | £ç | ? '0 | 09 | 0 | | 06. I | ŞI | Oz | ç’91 || I - 0 | 0° I || #9 | 0°281,9 u-n-ı Hi qaaf į &#LO Lz || ~ ~ || Oz | #o 0 || 0 II | 0Z | 099I. z | 6z | 31 | z'9I | Z * I | Z” I | ZL + Z^08reas seo | zolo �0' 9 | €8° O | OLI || 0ț7 | 199:0 | 01 I || 0ɛi | I 81 || Log | I - L | +{1 | zoo9qđfinquulego | IŴLO +I || 0:1 | zɛ | 9,0 || 0y | 06 | 81s·s |oi | gl | sc | € 0 | soo | 61 | ***6rm uso? [5] qigo 39 | 0710 £8 || ? 0 || L.9' 0 | 08 s 09 | 8L6-0 || 99 || LI | Z LZ | £°0 || Z. I || 9 || I || I ’0Lqnfirmņđĩ«» une || 69 LO 0Ż# 0 | 9z i € 0 | 08 || 0 || I || 69I# · I || VI | Zoçoç | z 0 | ç: 0 | | | | z ç5 so seunsıųoË Tổiriciovoosse | 8CL0 09 | Zo 0 \ II - 0 | 0,7 || 0:2 | 06. I | Zi i II | € £ | Z’0 || Z’0 | 91 || 8'S6qđînrı otos@sore | LOELO 6z | 6'0 | 081 | † 0 | 09 | 0% | €Zz 0 | 01 || 0 | gozi | 1:0 | zoo | Is | c'98qi đỉrīņų gąsdi) | 9€LO

Page 23
நெருக்கீடுகளும்
அவற்றைக் கையாளும் முறைக
முன்னுரை
அண்மைக்கால அசம்பாவிதங்களும், நெருக் கீடுகளும் மாணவர் மத்தியில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது கண்கூடு. இன்றைய யுத்த சூழ்நிலையினால் தோன்றியுள்ள பாதுகாப்பற்ற நிலை, நிச்சயமற்ற உணர்வு பயவுணர்வு, உயிர் உடைமை இழப்பு, தீவிர மான காயங்கள், அகதி வாழ்க்கை போன்ற அவல அனுபவங்கள் உளவியக்க ரீதியாகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் மாணவர்கள் மத்தியில் உடல் உள நோய்கள், மற்றும் கற்றலில் இடர்பாடுகள், பாடசாலை செல்ல மறுத்தல், கருத்தூன்றிக் கற்க முடியாமை, ஞாபகசக்தி குன்றல், நடத் தைக் கோளாறுகள், உணர்ச்சிக் குழப்பங்கள் உறவுகளில் குறைபாடுகள் போன்ற பலவித பிரதிபலிப்புக்களைக் காணலாம்.
* பாதிப்பினால் ஏற்படும் விளைவுகள்
அ) இயற்கையான சாதாரண எதிர்த்தாக்கம்
ஆ) அசாதாரண பாதிப்பின் அறிகுறிகள்
அ) நெருக்கீடுகளால் இயற்கையாக உண் டாகும் உடல் உளவிளைவுகளும், உணர்ச்சிகளும் ஆ ரே ராக் கி யத்தின் துலக்கங்கள், ஏனெனில் இ  ைவ எம்மை அபாயமான சூழலில் இருந்து விலக்கிக்கொள்ளவும் தற்பாதுகாப்பு முயற்சிகள் எடுக்கவும், மற்று ம் மனச்சமநிலையைப் பேணவும், நெருக் கீட்டைக் கையாளவும் ஊக்குவித்து நம்மை இயைந்து வாழ்க்கையைத் தொடர வழிவகுக்கும்.
ஆ) சிலவேளைகளில் இப்படியான நெருக் கீடுகள் தீவிரமாக அல்லது தொடர்ச்
பேராசிரியர் தயா. சோமசுந்தரம் தலைவர், உளநலத்துறை, கருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ககஅஞ்சரி மஞ்சரி 04 -
மலர்

சியாக நீடித்தால் அவற்றின் தாக்கம் நம்மால் தாங்கும் சக்திக்கு அப்பாற் பட்டு பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கும்.
மாணவர்களைத் தாக்கக்கூடிய நெருக்கீடுகள்
அதிர்ச்சியையும், மனக்குழப்பத்தையும் உண் டாக்கும் அசாதாரண நிகழ்வுகளையே இங்கு நெருக்கீடு" எனக் குறிப்பிடுகின்றோம். நெருக் கீடு நிகழ்வானது உள இயக்க ரீதியாக ஒரு மனிதனின் மன எண்ணக் கருக்கள், உ ல க மாதிரிகள், எதிர்பார்ப்புக்கள், நெருங்கிய உறவு கள், தொடர்புகள் போன்றவற்றைச் சிதைத்து நிர்க்கதியான மூழ்கடிக்கப்பட்ட að). & tII g}} நிலையை உருவாக்கும். இவைபோன்ற அதிதீவிர மான அசம்பாவிதங்கள், மனதில் ஊடுருவி ஆழமாகப்பதிந்து மன வடுக்களை விட் டு ச் செல்லும். பெரியோர்களிலும்பார்க்கசிறுவர்களில் இத்தாக்கங்கள் குறைவாகக் காணப்படுகின்றன. சிறுவர்களின் ஆர்வம், துருவி ஆராயும் ஆவல், கபடமற்ற அப்பாவித்தன்மை, நிகழ்வுகளின் அர்த்தங்களையும், விளைவுகளையும் முற்றாகப் புரிந்து கொள்ளாமை போன்ற குணாதிசயங்க ளால், நெருக்கீடுகளைச் சுலபமாகவும் விளை யாட்டுத் தன்மையுடனும் எதிர்கொள்வர்.
ஆயினும் பெற்றோர் க ளிட மிருந்து (முக்கியமாகத் தாய்) குழந்தைகள் பிரிந்திருப் பின் பாரதூரமான தாக்கங்கள் ஏற்படும்.
பெற்றோர் பாதிக்கப்பட்டிருப்பின் அது பிள்ளைகளில் பிரதிபலிக்கலாம். அவர்களின் பாதகமான கையாள்கை பிள்ளைகளுக்கு கடத் தப்படலாம்.
நீடிக்கும் நாட்பட்ட மாற்றங்கள் - பழகிய சூழலில் இருந்து பிரிந்திருத்தல், சொத்துக் களை இழந்து நண்பர்கள் உறவினர்களைப் பிரிந்து, புதிய சூழலில் நிலையில்லா அகதி வாழ்க்கையைத் தொடர நேரிடல், சிறார்கள் மத்தியில் உணர்ச்சிகளிலும் நடத்தைகளிலும் அசாதாரண மாற்றங்களையும் மனோ சமூக விருத்தியில் பின்னடைவுகளையும் காணலாம். இதனால் பிள்ளைகளில் உடன் தாக்கங்கிளை விட நீண்ட கால விளைவுகள் கூடுதலாக
ஏற்படுகின்றன.
01 - 6a, 1999 21

Page 24
போர்க்காலச் சூழலினால் மானவர்கள் மத்தியில் நெருக்கீடுகளை ஏற்படுத்தக்கூடிய பொதுக் காரணிகள்
அ) போசாக்கின்மையும் வறுமையும் (பெற் றோரில் வேலைவாய்ப் பின்மை: பொரு ளாதாரக் கஷ்டங்கள் வீடுகள், சொத் துக்கள், தோட்டம் வயல்கள் போன் றவற்றின் அழிப்பும் அழிவும்)
ஆ) நோய்வாய்ப்படும் நிலை (நோய் எதிர்க் கும் சக்தி குறைவு தொற்றுநோய்கள் அதிகரிப்பு, சுற்றாடல் சுகாதாரம் பாதிப்பு, சுகாதார சேவைகள் சரிவர அளிக்கப்படாமை முதலியன)
இ) இழப்புக்கள் (பெற்றோர் இறப்பு
காணாமற்போதல், குடும் பங்களிலி ருந்து பிரிந்திருத்தல்)
ஈ) வன்முறைகளைக் காணுதல் (கொடுர மான முறையில் உறவினரின் மரணங் களை நேரடியாகக் காணுதல் குண்டு வீச்சுக்கு இலக்காதல், கத்தி, கோடரி களால் வெட்டப்படுதல், குருதி ப் பெருக்கம், வேதனை, நோவு மரண
அவஸ்தைகளைக் காணுதல், அங்க வீனப்பட்ட உருக்குலைந்த அழுகிய பிரேதங்களைக் காணுதல், g5 to gi
வீடு, முக்கிய நிறுவனங்களின் அழிப் புக்களை அவதானித்தல்)
உ) வன்முறைகளை தாம் அனுபவிததல் (விமானக் குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல், இராணுவம் தேடி அழிக் கும் நடவடிக்கைகள், சுற்றிவளைப்பு சிததிரவதை, உயிருக்கு அச்சுறுத்தல், பலாத்காரம்)
ஊ) வன்முறைகளில் ஈடுபடல் (கொலை,
வன்செயல்.)
எ) கல்விப் பிரச்சனைகள் (இடம்பெயர் Gurr Gii) Li nru 9FT60o 6)567 அ டி க் க டி மாறுதல், பாடசாலை வசதியின்மை, தேசிய பரீட்சைகளைப் பற்றிய நிச்சய மற்ற நிலைமை. கல்விக்கான அமைதி யான பாதுகாப்பான சூழலின்மை. டோக்குவரத்து கஷ்டங்கள், மாணவர் களைத் தடுத்து வைத்தல். சேர்த்தல் கடத்துதல், வேறு செயல்களில் ஈடுபடச்
மஞ்சரி 04 - மலர் 0

செய்யப்படல், மாணவர்கள் வேறு இடங்கள் அல்லது அயல் நாடுகளுக்கு வெளியேறுதலை அவ தா னித் த ல், கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப் பின்மை, கல்விக்கான உபகரணங்கள் இல்லாமை)
நருக்கீடுகளால் மாணவர்களில் பிரதிபலிக்கும்
அறிகுறிகள்
Gunrif67 frøão ஏற்படும் வெளிக்காயங்களை
விட பாதிக்கப்பட்டோரின் உள்ளத்தில் ஏற்படும் ஊறுகள் கூடுதலாகக காணப்படுகின்றன.
பிள்ளைகளில் ஏற்படும் பாதிப்புக்கள் -
அ) உணர்ச்சிப் பிரச்சனைகள் ஆ) நடத்தைக் கோளாறுகள் இ) அறிவாற்றற் குறைபாடுகள் ஈ) மெய்ப்படுத்தல்
அ) உணர்ச்சிப் பிரச்சனைகள்:
கவலை, பயம், அங்கலாய்ப்பு, குழப்பம்,
சோர்வு, நாணம், அஞ்சி ஒதுங்கும் சுபாவம், இலகுவாக அழுதல், தொட்டாச் சினுங்கித் தன்மை, கலகலப்பற்ற நிலை, எல்லைமீறிய கோபம், சீறி எதிர்க்கும் தன்மை, நெருங்கிப் பழகுபவர்களுடன் உறவுகளில் குறைபாடுகள், சந்தேகிக்கும் தன்மை முதலியன,
ஆ) நடத்தைக் கோளாறுகள்:
A
அளவு மீறிய தொழிற்பாடு அல்லது எதிர் மாறாக செயலாற்றல், குன்றுதல், ஈடுபாடு குறைதல், ஆர்வமின்மை, குறும்பு, வலிந்து சண்டைக்குப் போதல், வன்முறையில் ஈடுபடல். தொடர்ந்து தொல்லை கொடுத்தல், பொய் பேசுதல், களவு செய்தல், பெரியோரை எதிர்த்தல், மதியாமை, கீழ்ப் படியாமை மது, போதைவஸ்து அல்லது மருந்துத் துாப்பாவனை பாடசாலைக்குச் செல்லாமை, ஒழுங்கின்மை பாடசாலையில் இடர்தரு நடத்தை. நெறிபிறழ்தல், சமூக விரோத செயற்பாடுகள். மனோசமூக விருத்தியில் தாமதம் அல்லது பிறழ்வுகள்
தை 1999 சுகமஞ்சரி

Page 25
A வளர்ச்சியடைந்த செயலாற்றல் திறன்களை இழத்தல் போன்ற நடத்தைப் பின்னடைவு கள நிகழும். (உ-ம் வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரைக் கட்டித் தழுவுதல், அவர்களுடன் நித்திரை செய்ய வற்புறுத்தல்)
சி) அறிவாற்றற் குறைபாடுகள்
A அறிவாற்றல், கல்வி, பேச்சுத் திறன் பின் னடைவு (உ-ம் கொன்னை தட்டுதல், பேச முடியாமை)
A கற்றல் இடர்பாடுகள், கிரகிக்கும் தன்மை
குறைதல்.
A சிந்திக்கும் தன்மையில் அமுக்கம், மறப்பு,
சுருக்கல், தடைகள்
கருத்துரன்ற முடியாமை, எதிர்கால எண் ணங்கள் அற்றுப்போதல் போன்ற நீண்டகால பாதிப்புக்கள் உண்டாகின்றன. இக்குறை Luit Gd530) at LuiT L. Firaa) Gully பிள்ளைகளில் அவர்கள் வரையும் சித்திரங்களிலும், விளை யாட்டுக்களிலும் ஆசிரியர்களால் அவதா னிக்கமுடியும்.
4.
ஈ) மெய்ப்பாடு (உளம் சார்ந்த உடல்) அறிகுறிகள்
சிலவேளைகளில் நெருக்கீடுத் தாக்கங்களின் மனப்பாதிப்பினால் உடல் ரீதியான முறையீடு களாக வெளிப்பட முடியும். அதாவது உடலில் ஒரு நோயோ தக்க காரணங்களோ இன்றி உடல்சார் முறையீடுகள் தோன்றலாம். சில மெய்ப்பாடு அறிகுறிகளாவன.
A தலையிடி, தலையம்மல், தலைச்சுற்று, மயக்
கம், வலி, நடுக்கம்
A நெஞ்சுநோ, படபடப்பு, சுவாசிக்கக் கஷ்டம்,
மூச்சுவாங்கல், முட்டு.
A வயிற்றுக்குத்து, ஓங்காளம், சத்தி, Lu5)
யின்மை, வயிற்றோட்டம்
A சலம் அடிக்கடி போதல்
A உளைவுகள், நோவுகள், விறைப்புகள்,
களைப்பு
" நித் திரைக் குழப்பங்கள்
பயங்கரக் கனவுகள் முதலியன
ககமஞ்சரி மஞ்சரி 04 LDGavrit

கையாள்கை (நடைமுறைச் சாத்தியமானவை)
அறிவு - ஆசிரியர், பெற்றோர், சமூக முன்னோடி கள், மாணவர்களில் ஏற்படக்கூடிய நெருக்கீட்டுத் தாக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி அறிந்திருத்தல் நன்று. மாணவனின் நடத் தையை அவதானித்து உளச் செயற்பாடுகளை ஊகித்துக்கொள்ளும் ஆற்றலும் தேவைப்படு கிறது.
இனம் காணுதல் - மேற்குறிப்பிட்ட அறிகுறிகளால் அல்லது வேறு தகவல்களால் ஒரு மாணவனுக்கு உளப் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் பாதிக்கப் பட்ட மாணவருடன் சினேகபூர்வமான நல்லு றவை ஏற்படுத்த வேண்டும். அன்பு, ஆதரவு விசுவாசம், அரவணைப்பு போன்றவற்றை நிலை நாட்டி பேசப்படும் கருத்துக்கள அந்தரங்கமாகப் பேணப்படும் என்ற நம்பிக்கையை உருவாக்கல் வேணடும். நெருங்கிய நல்லுறவின் பின் புரிந் துணர்வுடன் நடந்தவற்றையும் அதன் விளைவு களையும் கேட்டு அறியலாம்.
கதைப்பதற்குத் தயங்கினால் அல்லது இயலாது இருப்பின் பெற்றோரை அழைத்துக் கலந்துரை யாடலாம் .
பெரும்பாலும் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்பட்ட் சம்பவங்கள் பற்றியோ அல்லது தங்கள் உணர்ச் சிகள், உணர்வுகள் பற்றியோ தெளிவாக விளங் கவோ, வெளிப்படுத்தவோ இயலாமல இருப்பர். ஆனால் இச் சம்பவங்களை உருவகித்து விளை யாடுவதையும், சித்திரங்களாக வரைவதையும் அவதானிக்கலாம்.
ஆசிரியர்கள் செய்யக்கூடியவை
Gl
செவிமடுத்தல் - அன்புடன் அணுகி, ஆதரவளித்து நடந்தவற்றைப் பகிர்ந்து வெளிப்படுத்த உதவு வது, பல சந்தர்ப்பங்களில் அம்மாணவன் குண மடைவதற்கு வழிவகுக்கும்.
வெளிப்படுத்தல் - நெருக்கீடுகளுக்குப் பின் தோன் றும் விளைவுகளுக்கு அவற்றைப் பற்றிய சிந்த னைகள், உணர்ச்சிகள், உணர்வுகள் முதலிய வற்றை உள்ளே அடக்கி ஒடுக்குவது அல்லது மறுப்பது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பமாணவர்கள் இத் தாக்கங்களை உணராமல்
ஆற்றல் இல்லாதவராயும் இருப்பர். எனவே மாணவர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுதல் வேண்டும். இதன் மூலம் தாக்கத்தின்
தை 1999 23

Page 26
கடுமையைத் தணிக்க முடியும். இந் நிகழ்வுகள், ஊடகப்படுத்தாவிடின், அவை நீண்டகால மன வடுக்களுக்கு வித்தாகி பிற்காலத்தில் பாதிப்பு களை ஏற்படுத்தும்
வெளிப்படுத்தும் செய்முறைகள்
சித்திரம், சிற்பம், களிமண் மாதிரிகள் அமைத் தல், உளமறிநாடகம் பங்கேற்று நடித்தல் கதை சொல்லுதல், எழுதுதல் சங்கீதம், விளை யாட்டு முதலியன.
உளவளத்துணை - செவிமடுத்தலோடு, அன்பு, ஆதரவு பாதுகாப்பு உணர்வு உண்டாக்கி அவர் கள் சிந்தனைகளையும், கவலைகளையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இதன் மூலம் சாதகமான கையாள், கைகளை மேற்கொள்ளவும், பாதகமான முறை களை கைவிடவும் வழிகாட்டல் ஆசிரியர்களின் கடமைகளாகும்
சாந்த வழிமுறைகள் - இவை மெய்ப்பாடு (உளம் பதற் றம், பதகளிப்பு, அச்சம் போன்றவற்றிற்குச் சிறந்த பயிற்சி முறையாகும். அவையாவன சுவாசப் பயிற்சி, சாந்தியாசனம், சவாசனம் மந்திர உச்சாடனம், தியானம் முதலியன.
சமூக பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தல்
இடம்பெயர்ந்த மாணவர், பெற்றோரை இழந் தவர், வறுமை, உணவின்மை, வதிவிடமின்மை, உடையின்மை காணின் அவற்றைச் சீர் செய்யும் முறையில் தகுந்த வழிகாட்டல் அவசியம். நிவா ரணம் பெற்றுக்கொள்ளும் முறைகளை விளக்கு
குறிப்பு:
யாழ்ப்பாணத்தில் gold துணை, சாந்தி வழிமு கூடிய தகவல் பெற விரு லூர் வீதி, யாழ்ப்பான உள்ள "சாந்திகம்" இ
xixe: as
«exxxxxxxx
24 மஞ்சரி 04 - լD6ծri 01

தல், அரச தொண்டர் ஸ்தாபனங்களுக்கு தெறிப் படுத்தல் மிக முக்கிய அம்சங்களாகும். இதன் மூலம் அவர்களில் ஏற்படும் பாதிப்புக்களைத்
ω96 σε ενισσαραθύς/
கடுமையாக உளரீதியாகப் பாதிப்புற்றோரை வைத்தியசாலைகளிலுள்ள உளமருத்துவ பிரிவிற்கு அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களை ஆரோக் கிய வாழ்விற்கு வழிவகுத்தவர்களாவோம். ஆயினும் பெரும்பாலான பாதிக்கப்பட்ட மாண வரை தம் பாடசாலைகளிலோ வதிவிடங் களிலோ (குறிப்பிட்ட முறைகளில்) ஆசிரியர்கள் அல்லது உளவளத்துணையாளர்கள் பராமரிப்
பது விரும்பத்தக்கது.
தொகுப்புரை
அண்மைக்காலப் போர்ச் சூழ்நிலையினால் எம் மக்கள் மத்தியில் குறிப்பாக பாடசாலை மாண வர்களில், பலதரப்பட்ட உடல்-உளப் பாதிப்புக் கள் ஏற்பட்டிருக்கின்றன. வகுப்பாசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் காணப் படும் அசாதாரணமான நிலைகளை இனம் காணக் கற்றுக் கொள்ளல் வேண்டும். அதற் கேற்ற வகையில் மாணவர்கள் நடைமுறைச் சாத்தியமான கையாள்கை முயற்சிகளை மேற் " கொள்ள ஊக்குவித்தல் அவசியம்.
நெருக்கீடு எதிர்தாக்கங்களும் அவற்றைக் கையா ளும் முறைகள் சம்பந்தமான பொருத்தமான கல்வி முயற்சிகளைச் சமூகத்தில் ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தவும், அதன் மூலம் மக்கள் தமது சுகநலன் களைத் தாமே பேணவும் முடியும் . 4.
ளவர்கள் உளவளத் றைகள் சம்பந்தமான ம்பின் 15, கச்சேரி.நல் ம். என்ற முகவரியில் லத்தை நாடவும.
LSCSL
தை 1999 சுகமஞ்சரி

Page 27
கொழுக்கிப் புழுத் தொற்றும், பெண்களில் ஏற்படும் குருதிச்ே
ஒட்டுண்ணிப் புழுக்களான வட்டப்புழு, கொழுக் கிப்புழு, சவுக்குப்புழு என்பனவற்றால் ஏற்படும் தொற்றுக்கள் மனிதனின் வளர்ச்சியையும், போசாக்கு நிலையையும், உடல் வலுவையும். பாடசாலை செல்லும் மாணவரின் கல்விப் பெறுபெறுகளையும் பெரிதும் பாதிக்கின்றன. பாடசாலை மாணவர்கள் வட்டப்புழு, சவுக்குப்புழுத் தொற்றுகளுக்குப் பெருமளவில் இலக்க கின்றனர். கொழுக்கிப்புழுத் தொற்றின் வியாபகமும். அதன் தீவிரமும் வயது ஏற ஏற மெதுவாக அதிகரிக்கின்றது. இதன் *"ரனமாக வயது வந்தவர்களில் கொழுக்கிப்புழுத் தொற்று அதிகமாகக் காணப்படுகின்றது. இலங்கை பில் நெக்காற்றர் அமெரிக்கானஸ் (Nocator amer ***) என்ற கொழுக்கிப்புழு இனமே உள்ளது. இவ்வகைத் தொற்றால் இளம் பிள்ளைகளை விட கட்டிள மங்கையரும், கர்ப்பவதிகளும் அதிகளவில் தொற்றுள்ளவராகின்றனர். மேலும் கொழுக்கிப் புழுத் தொற்றுநோயால் குழந்தைகளின் பிறப்பு விகிதமும் வெகுவாகப் பாதிப்புறுகின்றது. மலட்டுத் தன்மை, இனவிருத்திக் குறைவு போன்றவற்றோடு கருத்தரித்தல் விகிதம் குறைதல், கருச்சிதைவு போன்றவை ஏற்படலாம். புழுத்தொற்றிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இக் குறைபாடுகள் அநேகமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இரும்புச்சத்துக் குறைபாட்டுக் குருதிச்சோகை வளர்முக நாடுகளிலுள்ள கர்ப்பவதிகளில் உண்டா வதற்கு கொழுக்கிப்புழுத்தொற்றே பிரதான பங்களிக் கின்றது. தாய்மாரின் ஆரோக்கியமின்மையும் அவர் ளின் இறப்புவிகிதமும் இப்புழுத் தொற்றோடு இணைந் துள்ளது. ஆகையால் கரிப்பவதிகளில் கொழுக்கிப் புழுத் தொற்று ஏற்படுவதைத் தடுத்தல் மிகவும் அவசி யம் ஆகின்றது. கருவுற்ற முதன் நான்கு மாதங்களின் பின்னர் புழுத்தொற்றுக்கு மருந்து கொடுப்பதுடன், இரும்புச் சத்துச் சேர்ப்பதும் மிகவும் நன்மை பயக் கும். இத்தகைய சிகிச்சை நிடைமுறைப் படுத்தப் பட்டுள்ள பிரதேசத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம்
வைத்திய கலாநிதி இ. இராஜராஜேஸ்வரன் விரிவுரையாளர்,
மருத்துவபீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழம்.
சுகமஞ்சரி மஞ்சரி 04 - மணி

சோகையும்
வெகுவாக அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லாத பெண்களும் இவ்வகைச் சிகிச்சை மூலம் கருவுறும் வாய்ப்பைப் பெற்றிருக் கிறார்கள், ஒழுங்கீனமான மாதவிடாய் சீரடைதல், மலட்டுத்தன்மை குறைவடைதல், கருத்தரிப்பின் எண்ணிக்கை அதிகரித்தல், கருச்சிதைவு விகிதம் குறைதல் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.
கொழுக்கிப்புழுத் தொற்றால் உண்டாகும் நோய்த் தனமை ஒருவரின் போசாக்கு நிலையிலும் இரும்புச்சத்து இருப்பிலும் தங்கியுள்ளது. உணவில் உள்ள இரும்புச்சத்தும், அது உணவுக்கால்வாயால் உறிஞ்*ப்படு ம் தன்மையும் கருத்தில் கொள்ளப்பட் வேண்டியவை. குடற் புண்களும், மற்றும் நோய்த் தொற்றுக்களும் உடலில் உள்ள இரும்புச் சத்தின் நிலையைப் பாதிக்கின்றன .
கர்ப்பவதிகளில் கொழுக்கிப்புழுத் தொற்றை நீக்கியவுடன் அவர்களின் இரும்புச்சத்து இருப்பு நிலையில் ஏற்படும் தாக்கம் குறைந்துவிடுகின்றது. சிறுபராயத்தில் இருந்து கொழுக்கிப்புழுவிற்கு ஒழுங் கான சிகிச்சை அளித்தல் மிகவும் அவசியம். அநேக பெண்கள் பூப் பெய்தும போதும், முதன் முறை கருத்த ரிக்குமபோதும் கொழுக்கிப்புழு த் தொற்றுடன் இரும் புச்சத்துக் குறைபாடு ம் உள்ளவர்களாயிருக்கின்றனர். சிறிய அளவு புழுத்தொற்றுக்கூட பிள்ளைகளின் வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிப்பதுடன், பசி யின்மை, ஆரோக்கியக்குறைவு, கிரகிக்கும் அறிவாற் றல் குறைவு என்பனவற்றை உண்டுபண்ணுகின்றது . பிள்ளைகளின் பாடசாலைப் பெறுபேறு க  ைளப் பெரிதும் பாதிக்கின்றது. பொதுவாக கர்ப்பவதிகள், பாலூட்டும் தாய்மார் ஆகியோரில் ஏற்படும் குருதிச் சோகைக்கு சிகிச்சை அளிக்கும் போது புழுத் தொற் றிற்கு உரிய மருந்தோடு, இரும்புச்சத்து, உயிர்ச் சீத்து ஃ ஆகியவற்றையும் சேர்த்தளித்தல் சிறந்த முறையாகும் .
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் சிகிச்சைப் பிரயோக கால ஒழுங்கு முறைகள் பின் வருமாறு உள்ளது.
ri 0 1 - தை 1999 25

Page 28
ss76vid
பருவமடையும் வயதில் ԱՈ
கர்ப்பகாலம், பாலூட்டும் பருவத்தில் கர்
வயது மூதிர்ந்த பருவத்தில் (36n
விலங்குகளில் மேற்கொண்ட ஆய்வு களின் படி கொழுக்கிப்புழுவின் குடம் பிகள் பெண் விலங்குகளில் நிறையுடலியாக விருத்தியடையாது தம்வளர்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கின்றன. விருந்து வழங்கியின் உணவுக்கால்வாய்க்குப் புறம்பேயுள்ள இழையங்களில் சேமிக்கப்படுகின்றன. ம னி த ரி ல் அங்கைலோஸ்ரோமா டியோடினாலேயின் (Ancylo. stoma Duodenae) குடம்பிகளே இத்தகைய சிறைப் படுத்தலுக்கு உட்பட வாய்ப்பு இருக்கின்றது. இக் குடம்பிகள் தாயின் உடம்பிலிருந்து தொப்பூழ் கொடியூடாக காப்பத்தில் வளரும் சிசுவில் தொற்றை ஏற்படுத்துகின்றன என்று சீன தேசத்தில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இக்குடம்பிகள் உடன் தொற் றில் பெறப்பட்டதாகவோ அல்லது சேமிப்பிலிருந்து பெறப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட குடம்பிகளாகவோ இருக்கலாம. சீனாவில் ஒருமாத வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளின் பலத்தில் கொழுக்கிப் புழுவின் முட்டைகள் காணப்பட்டுள்ளன. கு ழ ந்  ைத த ன் உணவுக்கால் வாயில் புது நிறையுடலியைப் பெற ஆகக்குறைந்தது 56 நாள்களாயினும் தேவைப்படும். ஆகவே இக்கால எல்லைக்கு முன்பே தோலூடாகத் தொற்றுப் பெற்றிருக்க வேண்டும். இது நடை முறைச் சாத்தியமானதாக இல்லை. ஆகையால் தாய் கர்ப்பவதியாக இருக்கும் பொழுதே சேய்க்குத் தொற்றைக் கொடுத்திருக்கிறாள் எனத் தெரிகிறது.
வளர்முக நாடுகளில் கர்ப்பவதிகளில் சோகை 56% மாகவும், தென்கிழக்காசியாவில் 74% மாகவும் இருக்கின்றது. அநேகமான சமுதாயங்களில் பெண் கள் தாயாக மட்டுமல்லாது பலதரப்பட்ட தொழில் கள் புரிகின்றனர். வீட்டுப்பணி, விவசாயவேலை, கூலி வேலை, நீர் காவிச்செல்லல் முதலிய பல தொழில் புரிவோர் கொழுக்கிப்புழுத் தொற்றுக்கு இலக்கா கின்றனர். ஒருவர் குடம்பித் தொற்றிற்கு எவ்
“இரண்டாயிரம் ஆண்டள போலியோவைத் துரத்தி
26 மஞ்சரி: 04 - மல.

பிரயோக ஒழுங்குகள்
டசாலைகள். கல்லூரிகளில் ப்பவதிகளிற்கான சிகிச்சை நிலையங்களில்
லைத் தலங்களில், ஆடை, சிகரெட் உற்பத்தி லையங்களில், தேயிலைத் தோட்டங்களில்
வளவு தூரம் உட்படுகின்றாரோ அவ்வளவிற்குப் புழுத்தொற்றின் தாக்கமும், உடலின் இரும்புச்சத் தின் நிலையும் தங்கியுள்ளது. தொற்றிற்கு உட் படுகையை அவர்களின் பாரம்பரிய கலா சாரங்களும், சமுதாயத் தேவைகளுமே நிர்ணயிக்கின்றன. பல வளர்முக நாடுகளில் பெண்கள் போசாக்குக் குறைந் தவர்களாகவும், அதிக வேலைம்பளு உள்ளவர்களா கவும் இருக்கின்றனர். கொழுக்கிப்புழு மருந்து கொடுப்பதால் கர்ப்பவதிகளின் மட்டுப்படுத்தப்பட் டுள்ள இரும்புச்சத்திருப்பின் மேலுள்ள அழுத்தத் தைக் குறைக்கலாம் என்பதில் சந்தேகமில்லை, இலங் கையில் குருதிச்சோகையுள்ள 56-78% கர்ப்பவதி களில் சராசரி 41 % மானோர் கொழுக்கிப்புழுத் தொற்றுள்ளவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர் •
பரவலாகக் காணப்படும் கொழுக்கிப்புழுத் தொற் றையும், பெருமளவில் உள்ள இரும்புச்சத்துக் குறை பாட்டுச் சோகையையும் உடைய இரும்புச்சத்து உணவு மூலம் குறைவாகப் பெறும் கர்ப்பவதிகளைக் கருத்திற்கொண்டு இலங்கையில் இவர்கள் எல்லோ ருக்கும் கொழுக்கிப்புழு மருந்து கொடுப்பது நியாய பூர்வமான செயலாகும். கடும் குருதிச்சோகையைத் (Hb<7g | 100ml blood) தடுக்கும் பொருட்டு முக்கிய கவனம் செலுத்தல் வேண்டும். இந்த வகையில் குருதிச் சோகையை உண்டுபண்ணக்கூடிய கொழுக்கிப்புழுத் தொற்று 20-30% க்கும் அதிகமாகவுள்ள பகுதிகளில் புழுத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மெபென்ட (3F nr 6ão (Mebendazole), Gou o spað7 GOT 6ão (Pyrental) போன்ற மருந்துகளை உபயோகப்படுத்தல் வேண்டும். இச்செயற்பாடு மூலம் பெண்களின் ஆரோக்கியத்தை யும், அபிவிருத்தியையும், போசாக்கு நிலையையும் உயர்த்துதல் கைகூடும் . A
வில் எமது நாட்டிலிருந்து
விடுவோம்”
01 - தை 1999 சுகமஞ்சரி

Page 29
@ العمر శ్య"
இனியனின் பதில்கள்?
கேள்வி
தாவர புரதத்திற்கும் விலங்கு புரதத்திற்கும் வித்தியாசம் உண்டா? அப்படி என்ன விஷேட வித்தியாசம் உண்டு இறைச்சி, மீன், பால், முட்டை ஆகியவற்றைத் தவிர்த்து தனியே தாவர உணவுடன் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாமா?
எஸ். சிவநாதன் Finravisë GF f.
பதில்
புரதங்கள், அமினோ அமிலங்கள் எனப்படும் குறிப்பிட்ட நைதரசன் சேர்ந்த இரசாயனப் பதார்த்தங்களின் சேர்க்கையினால் உருவாகின் நறன. ஒவ்வொரு இன பிரானிகளுக்கும், தாவ ரங்களுக்கும் குறிப்பிட்ட அமினோ அமிலங்கள் குறிப்பிட்ட வேறுபட்ட விகிதாசாரத்திலேயே இணைந்து புரதமாக விளங்குகின்றன. ஆகவே பிராணிகளுக்கும், தாவரங்களுக்கும் இடையே புரதங்கள் வித்தியாசப்படும். Döntur GOMOT Dnras ஆட்டு இறைச்சியிலும், கோழி இறைச்சியிலும், மற்றைய மாமிச உணவுகளிலும் இருக்கும் புரத அமினோ அமிலங்கள் ஒன்றுக்கொன்று அளவில் வித்தியாசப்படும். எனினும் மாமிசத்திற்குரிய அனைத்து அமினோஅமிலங்களும் இருக்கும். இவ் வாறேஉழுந்துக்கும் பயறு, சோயா முதலிய புரத தானியங்களிடையேயும் தாவர புரதங்களுக் குரிய அனைத்து அமினோ அமிலங்கள் இருந் தாலும் அவை விகிதாசாரத்தில் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படும்.
தாவர புரதங்களுக்கும், மாமிச புரதங்களுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம், மனித உடலுக்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் 10 அமினோ அமிலங்களும் மாமிச புரதத்தில் இருக்கின்றன. தாவர புரதத்தில், இவற்றில் 8 அல்லது 9 மட்டுமே இருக்கின்றன. 10 அமினோ அமிலங்களின் சேர்க்கையும் இல்லாது போனால், மனித உடல் தனது புரத உற்பத்திக்கு இவ் அமினோ அமிலங்களைச் சரியாகப்பயன்படுத்த
ககமஞ்சரி மஞ்சரி 04 - ப
 

முடியாது போய்விடும். இந்த நோக்கில் நிச்சய மாக மாமிச புரதம் உயர்ந்ததுதான்.
ஆனால் எமது மூதாதையர்களின் அற் னுபவ அறிவு மூலம் நாம் தாவர புரதத்தை த் னி உண வாக உட்கொள்வது இல்லை. அரிசி மாவுடனோ, கோதுமையுடனோ பயறு, பருப்பு, உழுந்து முதலியவற்றைக் கலந்து உண்ணுகின்றோம். பயறு, பருப்பில் இல்லாத அமினோஅமிலம் அரி சியிலும், அரிசியில் இல்லாத அமினோ அமிலம் பருப்பு வகையில் இருப்பதாலும் இக் கலவை (தோசை, இட்லி, கொழுக்கட்டை மோதகம்) இறைச்சி, மீன் போன்று அனைத்து அத்தியா வசிய அமினோ அமிலங்களையும் உள்ளடக்கி இருக்கும். ஆகவே தங்கள் கேள்விக்கு பதிலாக, மாமிச புரதம் போன்றே தாவர புரதமும், கலப்பு உணவாக உண்ணும் பொழுது உடலின் தேவையைப் பூர்த்தி செய்கின்றது.
உடல் ஆரோக்கியம் என்று கூறுமிடத்து, புரதத் துடன் மட்டும் நின்றுவிடாது அப்பாலும் நோக்க வேண்டும். உயிர்ச்சத்து B 12 மிருகத்தில் இருந்து பெறும் உணவில் மட்டுமே உண்டு. இது உட லுக்கு மிகவும் அவசியம். இச்சத்து பாலில் இருக்கின்றது. ஆகவே "சைவ" உணவு பாலு டன் இருக்கும் பொழுது, தேவையான சத்துப் பொருள்கள் கிடைக்கின்றன. உடலில் சில நோய்கள் வராது தடுப்பதற்கு நார்ப் பொருள் அவசியம். இது வேண்டிய அளவு மரக்கறி வகையில் இருப்பதால், நோய்த்தடுப்பிற்கு மரக் கறி உணவு உண்பது சிறந்தது என்று மேல்நாட்டு ** அசைவர்கள்'" அடித்துக்கூறுகின்றார்கள்.
கேள்வி
குடற்புழுக்களை அழிப்பதற்கு மூன்று வகையான மருந்துகளைப் பாவிக்கின்றோம். அம்மருந்து களைத் தரும் பொழுது டாக்டர்கள் பழம், எண்ணெய் பாவிக்கும் நேரத்தில் இம் மருந்து களைப் பாவிக்க வேண்டாம் என்று சொல்லித் தருகின்றார்களே...
எஸ். சிவநாதன் சாவகச்சேரி.
பதில்
கேள்வியின் மிகுதிப்பகுதி எழுதப்படவில்லை. காரணம் விடை இப்பகுதியுடன் தரப்படுகின் றது. மிகுதிக் கேள்வி அதற்குள் அடங்கிவிடும். நீங்கள் மருந்து பெறும் டாக்டர் மிகவும் வய தானவராக, இப்பொழுது வெளிவரும் மருந்து கள் புத்தகங்கள் படிக்காதவராக இருக்க வேண் டும், இரண்டு தசாப்தங்களுக்கு முன் வயிற்றுப் புழுக் கொல்லிகளாகப் பாவித்த சிலமருந்து வகை களை உட்கொள்ளும் பொழுது, நீங்கள் கூறியது
மலர் 01 - தை 1999 27

Page 30
போன்று சில உணவு வகைகளைப் பாவிக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால் எம்மிடையே இருக்கும் புழுக்களுக்கு எதிராக இன்று பாவிக்கப்படும் மருந்து வகைகளுக்கு எந்த விதமான "பத்தியமும்" தேவையில்லை. ஆனால் வயது, கர்ப்பம், புழுவகை, திருப்பி எடுக்க வேண்டிய அவசியம் முழுக் குடுமபமும் மருந்து எடுப்பதா என்பன குறித்த தீர்மானம் எடுக்க வேண்டி இருப்பதால், முறையான வைத் திய ஆலோசனை பெறுவது நல்லது.
கேள்வி:
இனிப்பு வகைகளை அதிகம் உண்பதால் குடற்
புழுக்கள் வருகின்றன என்று மக்கள் கருதுகின் றார்கள். இது உண்மையா?
எஸ். சிவநாதன்
சாவகச்சேரி,
பதில்:
rtaxa:
28
--822ہ خح5:ج*:ج:عخبرccجچیچ جیسی
இல்லை, இல்லை நிச்சயமாக இல்லை. குடற் புழுக்கள், முட்டைகள் மலத்தின் மூலமாகவே
ബ==
சுகாதாரம் சம்பந்தeான உங்
வைத்திய கலாநிதி செ. சு
பதில் தருவார். இப் பகுதியில் களை அடிப்படையாகக் கொன வேற்கின்றோம்.
உங்கள் கேள்விகளை அனுப்ப
ஆசிரியர் * சுகமஞ்: சமுதாய மருத்துெ மருத்துவபீ யாழ்ப்பான
மஞ்சரி 04 - மலர் 0

O
பரவுகின்றன. இனிப்பு பொருள்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது, மலத்தில் இருந்து உண்டு களித்து வரும் இலையான், கரப்பான்பூச்சி முதலியவை இவற்றிலும் வந்து இருந்து செல்வதால் மலத்துணிக்கைகளில் இருக் கும் புழு முட்டைகள் முதலியவை பரப்பப் படுகின்றன. இவை குறித்த விரிவான விபரங் களை சுகமஞ்சரி மலர் 3 மஞ்சரி 1 ஐப் பாருங்கள்,
கேள்வி;
மதுசாரம் அருந்துவதால் இவை அழிந்து விடும் என்பதுவும் உண்மையா?
பதில்:
உடலுக்கு வெளியே, மதுசாரத்தில் இப் புழுக் களை விட்டால் இவை இறந்துவிடும் என்பது உண்மையே. ஆனால் அந்த விகிதாசார மது சாரம் குடலுக்குள் இறங்கும் பொழுது நன்றாக இரைப்பை, சிறுகுடலில், இருக்கும் எஞ்சிய உணவு நொதியங்களுடன் கலந்து செல்லும் பொழுது, குடலை எரிக்காது விட்டால் புழுக்க ளையும் ஒன்றும் செய்யாது.
கள் சந்தேகங்களிற்கு
நச்சினார்க்கினியன்
பொதுவான பிரச்சினை ண்ட கேள்விகளை வர
வேண்டிய முகவரி:
gs
வத்துறை, டம்,
ότώ.
产一 தை 1999 சுகமஞ்சரி

Page 31
*சுகமஞ்சரி" யை தொடர்ந்து பெற விரும்பினால் இந்தப் படிவத்தை நிரப்பி உடனடியாக கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும் ஆசிரியர் *சுகமஞ்சரி’ சமுதாய மருத்துவத்துறை,
மருத்துவபீடம்
யாழ்ப்பாணம்.
முழுப்பெயர்: திரு திருமதி செல்வி .
aerfliainrewits arídaonrafth: · · · · · · *************** '
afré0 eflavnreth ;
assán
பிறந்த திகதி
LLLLLL LL LLLLLSY LLLLLL0LLLLLLL LLL0 LLLL0LL LLLY
- :
لـ
நாள் DIT 5
சுகமஞ்சரி. அனுப்பவேண்டிய விலாசம் (பொரு
SL TLSMLSSLSLSSLSLzSLSLLLLLLSLYLLLLL SYLLLL LLL0L LLLLL
காரியாலய விலாசம்:
வீட்டு விலாசம்
a s p a a 8
திகதி
குறிப்பு முன்னர் இந்தப் படிவத்தை அனுப்பியவர்கள்

காரியாலயப் பாவிப்புக்கு
SLLLLLLLL LL LLL LMMMLL LMLMLL LLLLLL LL LLLLL LL LLLLLL 0L0 L LL 0L0 L LL L LLLLL LLLL L C L 00 LLLLLLL LL LLL LLLLLLLA LLLLL LLLL L LLLLLL
LLL YYL LLLL LLSLLLL LLL SL LLLLLL L0L LL LLL LLLLLLYLLL 000L LL L SC 0S0SS 00L0 S CL 00LS 0 Y0 0 0 Y LLLL LL LLLLL Y0LY YYLLLL LL0 LLLLLSL Y 0LL LLLL LL LLL LLL LTLL LLL LLL LLLL LSL LL L LLLLLL
LLLLLL LLLLLLLL0LLLLLY LLL0YL0 LLY0S LLY0LLLLL0LLSSeee eee LLY S 0LLL LLLL LLLLLL 0L0LLL0000LLL LLLLL0 S L0LL YSL0LLLLLSYLLLLLLL S STLLLLLLL LLLLLLLLS
LLLLLLLL0LLL0LLLLLLL LLL LLL LLLL0 LLLLLLL LLLL LLL L0YZLL LL LLL 0LLLLLL AA0LL LMLLLLS LLL LLLLLLLL00LL00 LLLL LL
LL LL LLLLL LLL 0LLL L LLLLL LL LLLLL L L LLLLL L LL LLLLLL LLL LLLLLL LLL LLL LLLL CLLL LLLLLS
aa*s*...pw
ம் ஆண்டு
நத்தமான கூட்டில் அடையாளம் இடவேண்டும்)
8 is a & a saw so is a
கையொப்பம்
திரும்பவும் அனுப்ப வேண்டியதில்லை,

Page 32


Page 33


Page 34
கீழே காணப்படும் அறி
ஏதேனும் இருந்தால் உடனடியாக வைத்திய அ
. * உணவு விழுங்குவதற்கு
* உடம்பில் எங்காவது ெ (முக்கியமாக வாய்க் ெ
* மார்பகத்தில் தழும்பு அ
* நீண்ட நாட்களாக இரு
வாய், மார்பகம், மலவாச மூலமாக குருதி அல்லது
* தோலில் உள்ள தேமல் அவதானிக்கத்தக்கதான
இவை புற் ஆரம்ப அறிகுறி
பாரதி பதிப்பகம் 430, கே.

தறிகளில்
ஆலோசனை பெறுங்கள்
G) TLDLb
வகு5ாட்களாக மாறாத புண் காடுப்பில்)
அல்லது கட்டி
மல் அல்லது குரலில் மாற்றம்
ல், யோனிவாசல், சிறுநீர்வாசல் து நீர்க் கசிவு ஏற்படுதல்
அல்லது மச்சத்தில் மாற்றம்
றுநோயின் மியாக இருக்கலாம்
கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,