கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2010.12

Page 1


Page 2
三 |
| s.|-|-- |-! - | _ | ||||-|·- ·|(111|||||||||||||||||「다. 주를 |-||- ||-- -.- *)
│ │ │ -Ħ
*No.
| ||.- -壯闊 -北端訊
|-
 

01 _、
Best Queen Foundation வெளியீடு
பூங்காவனம்
இதழ் 03 - 2010 டிசம்பர்
ISSN 2012 - 6700
ஆசிரியர் குழு
ரிம்ஸா முஹம்மத் எச்.எப். ரிஸ்னா டப்ளியு.எம், வளர்
ஆலோசகர்கள்
திருமதி. ஐரீனா முஸ்தபா கிளியனூர் இஸ்மத்
வங்கித் தொடர்புகளுக்கு
Commercial Bank, Mount Lawinia Branch, Best Queen Foundation, AVCNO - 893 OO677.
என்ற இலக்கத்திற்கு காசு காசோலைகயை வைப்பிலிட்டு அவற்றின் பற்றுச்சீட்டுக்களையும், அல்லது காசுக் கட்டளைகளாயின் (M.R. Rimza) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச்சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.
தனிப்பிரதி - 8(M= தபால் மூலம் - 100/= வெளிநாடு - 2.5
தொர்புகளுக்கு
"Poomgavamam"
21 E, Sri Dharmapala Road, Mount Lawinia, Sri Lanka.
Elai:- bestaueen 12Qyah00.COm
Website:- Ww bestaueen 12 blogspot.com
Ph опе:-
O094 (O) 77 5009 222 O094 (0) 714403.251 O094 (O)71 9200 580
புதிய ஆக்கங்களும், இச்சஞ்சிகை பற்றிய விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனத்துக்கு அனுப்புபவர்கள் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.
படைப்புகளுக்கு படைப்பாளிகளே பொறுப்பு செவ்வைப்படுத்த ஆசிரியர் குழுவுக்கு | _உரிமையுண்டு._
L- - - -
கலை இலக்கிய சமுக சஞ்சிகை

Page 3
  

Page 4
Лilғыт6ә6ілші, | . &group O3
வாங்கும் ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளை வாசிப்பதிலும் துணுக்குகள் கேலிச் சித்திரங்களில் கண்ணோட்டம் செலுத்துவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. விகடனில் கோபுவின் சித்திரங்களும் கேலிகளும் மனதை பெரிதும் ஈர்க்கும். இத்தகைய ஒருநிலை வாசிப்பையும் தூண்டி விட்டதெனலாம்.
சில விடயங்களை வாசிக்கும் போது எமது மனதிலும் சில எண்ணங்கள் தோன்றும். அப்படியே நாமும் அவற்றை எழுத்தில் வடித்தால் எப்படியிருக்கும் என்ற யோசனை எழுதத்துாண்டியது. சுதந்திரன் பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் எனது முதல் கதைக்கே பரிசும் பச்சை லைட்டும் காட்டப்பட்டு விட்டதால் இன்று வரை இப்பயணம் தொடர்கிறது. அத்தோடு தினக்குரலில் 'சாதனைப் பெண் பகுதியில் தொடர்ந்து எழுதி வருவதோடு அவ்வப்போது ஏனைய பத்திரிகைகளில் கதை, கட்டுரை என எழுதுவதும் உண்டு. இவற்றை விட காலாண்டிதழாக வெளிவந்த 'பெண்ணின் குரல்" என்ற பத்திரிகையின் ஆசிரியராக 11 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். அவ்வப்போது 'சொல்' என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் தொழிற்பட்டுள்ளேன்.
உங்கள் படைப்புக்கள் பெண்ணிய கருத்துக்களை அதிகம் பிரதிபலிப்பதற்கான காரணம் என்ன?
நான் எழுத ஆரம்பித்த காலங்களிலே பெண்கல்வி தேவையா? பெண் வீட்டை விட்டு வெளியே போய் வேலை பார்க்கலாமா? பெண்ணை கொடுமைக்குள் ஆழ்த்தும் சீதனப்பேய், வறுமை, கணவன் குடியால் சிதறும் குடும்பங்கள், ஒழுக்கயினங்கள் என்பனவே சமுதாயத்தைக் கெளவி கபளிகரமிடும் முதன்மைப் பிரச்சனைகளாக என் மனதில் உருவெடுத்தன. அதனால் இத்தகைய பின்னணியைக் கொண்டே எமது எழுத்துக்களும்,
கற்பனைகளும் முகிழ்த்தன.
இவற்றில் ஊறிய அனுபவத்தில் நாம் வளர வளர குடும்பத்திலும், சமூக தளத்திலும் ஆண் பெண் என்ற வேற்றுமைகள் உணரப்படுவதையும், பெண்கள் சக்தி, காளி, லக்ஷ்மி, துர்க்கை, சரஸ்வதி என கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டாலும் மானிட நிலையில் தாழ்வாக, இண்டாம் பட்டசமாக மதிப்பிடுவது மனதில் சுரீர் எனத் தைத்தது.
இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றி சொல்லுங்கள்?
பெண்களுடைய ஆற்றல் திறமைகள் முடக்கி வைக்கப்பட்டது போலவே அவர்களைப் பற்றிய செய்திகளும் ஆளுமைகளும் பலரால்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 

Filaыө60й
அறியப்படுவதில்லை. இதனை மனதில் கொண்டே 'ஈழத்து மாண்புறுமகளிர் என்ற நூலில் ஒவ்வொரு துறையிலும் முதன்மை நிலை வகிக்கும் 24 பெண்கள் பற்றி எழுதியுள்ளேன்.
இது தவிர மூன்று சிறுகதைத் தொகுதிகளோடு சிறுவர் இலக்கிய நூல்கள் இரண்டையும் வெளியிட்டுள்ளேன். இன்னும் பாராமுகங்கள் சில பார்வைகள்', 'நெஞ்சுக்கு நிம்மதி பதில் தருகிறார் பத்மா' என்று இளைஞர் யுவதிகளுக்கான ஆலோசனை கூறும் நூல்களையும் வெளியிட்டதோடு இன்னும் இரு சிறுகதைத் தொகுதிகளுக்கான கதைகள் கைவசம் உண்டு. கூடிய விரைவில் அவையும் நூலுருப்பெறும்.
உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி கூறுங்கள்?
இலங்கையிலேயே முதன்முதல் சிறுகதைப் போட்டியை நடாத்திய பெருமை சுதந்திரன் பத்திரிகைக்கே உரியதாகும். முதலில் கூறியது போல இப்போட்டியில் நானும் கலந்து கொண்டேன். நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. 2ம், 3ம் பரிசுகள் முறையே பிரபல நாவலாசிரியர் டானியலுக்கும், மல்லிகை ஆசிரியர் ஜீவாவுக்கும் கிடைத்ததாக மல்லிகை கேள்வி பகுதியில் டொமினிக் ஜீவா ஒரு தடவை கூறியிருந்தது ஞாபகத்திலுண்டு. இதற்கு முன்னரும் நான் சிறுவர் பகுதியில் எழுதியிருக்கிறேன். அத்துடன் "கடவுளின் பூக்கள்' என்ற நூலுக்கு இந்து பத்திரிகையில் சிலாகித்து விமர்சனம் செய்யப்பட்டிருந்து. ‘புதிய வார்ப்புகள் என்ற நூலுக்கு ‘லில்லி தேவசிகாமணி' பரிசு கிடைத்தது. 'வேள்வி மலர்கள் என்ற நூலுக்கு சார்க் பெண்கள் அமைப்பின் பரிசும், பிரான்சில் வைத்து 'புதைகுழி’ சிறுகதைக்கான பாராட்டும், கல்கியில் "காற்றில் கலந்த சோகம்’ எனும் சிறுகதைக்கு பரிசும் பாராட்டும் கிடைத்தது.
இது கால வரை நீங்கள் பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அதில் மறக்க முடியாத நிகழ்வாக எதை கருதுகிறீர்கள்?
தலைநகரில் நடக்கும் பெரும்பாலான விழாக்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அத்துடன் கனடாவிலும் பல இலக்கிய கூட்டங்களில் கெளரவ விருந்தினராக கலந்து சிறப்பித்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அங்கு வைத்துத்தான் எனக்கும் எனது கணவர் சோமகாந்தன் அவர்களுக்கும் ‘இலக்கிய தம்பதியர்' என்ற பட்டத்தை தந்து கெளரவித்தார்கள். அது என்னால் மறக்க முடியாத இனிய சம்பவமாகும்.
966 இலக்கி சமூக சஞ்சிகை
哈

Page 5
இதழ் 03
இன்றை இலக்கிய உலகில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?
மரபு வழி சமூகமானது பெண்களின் ஆற்றலை, திறமையை வெளிப்படுத்துவதை ஆதரிப்பதற்கு மாறாக முடக்கியே வைத்துள்ளது. திருமணமான பிறகு பெண்கள் எழுத்துத்துறையில் காலூன்றி நிற்பது சிரமம் என்றதொரு கருத்தும் நிலவி வருகிறது. பெண்கள் மேடையில் பேசித்தான் சமுதாயம் திருந்தப்போகிறதா என்ற கருத்து நிலையும் பரவலாயிருக்கிறது. பெண் களின் முன்னேற்றத் தை சமூகம் வரவேற்பதில்லை. எழுத்துத் துறையை தவிர்த்து நோக்கினாலும் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் ஏராளம் என்றே சொல்லலாம். பெண்கள் ஒன்றிணைந்து தான் சமத்துவத்தை கட்டிக்காக்கலாம் என்பது எனது கருத்தாகும்.
ஆண்களின் எழுத்தாற்றலை விட பெண்களின் எழுத்தாற்றல் குறைவானது என்று கூறப்படுகிறதே. அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பெண்களுக்கு காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்டிருந்த நிலை மாறி தற்போது தான் பெண்கள் கல்வி கற்று முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். எனவே எழுத்துத்துறையில் ஈடுபடும் எல்லா பெண்களும் திடீர் பாய்ச்சலாக ஆண்களுக்கு சமமாக வளர்ந்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆனால் முன்பும் கூட சந்தர்ப்பம், சூழ்நிலை, வாய்ப்புக்கள் தான் பெண்களை வளரவிடவில்லையே தவிர பெண்களே தகுதியற்றவர்கள் என்ற கருத்து தவறானது. ་་་་་་་་་་་་་
இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
திறமை குறைவாக இருந்தால் ஒழிய பெண் என்ற காரணத்தால் பெண் கள் ஒதுக் கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மானிட வாழ்வில் ஆண் பெண் தோற்றங்கள் இயற்கையாகவே படைக்கப்பட்டன. இரு இனமும் சமநிலையில் உரிமைகளைப் பொறுத்தவரையில் சமத்துவமாக வாழ்ந்தால் தான் இப்பூவுலக வாழ்வு செழிப்புறும் என்பது எல்லா சிந்தனையாளர்களாலும் சீர்திருத்தக்காரர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனவே இந்த உண்மையை நோக்கியே எமது சிந்தனை செயல், எழுத்து, பேச்சு என யாவும் அமைய வேண்டும் என்பது எனது தீராத ஆசையும் நோக்கமும் ஆகும்!!!
岸呜
ubog spatias
9 பார்வைகள்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 
 

ЫБіњпюєтѣ 4: 07 3}}":م{{}M4 ;8 پ)
இழி, ଖୁଁ କୀର୍ତ!
- க்லைமகன் பைருல்
ஓடிவிளையாடு நீ - ஓய்ந்திருக்காது விளையாடு ஒருநாள் முடிந்திடும் மூச்சினை யெண்ணாது துடிதுடிப்பாய் விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு! தூங்கியபின் ஆட்டமில்லை - ள்ண்ணாது ஆடு!
கனவுகள் நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்! கண்டவரையெலாம் கரண்டையின்கீழ் எடுத்திட ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு! உலகமுந்தன் பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு!
யானுயர்ந்தவ னெனநினைந்தே உதைக்கின்றாய் நீ யாவுமறிந்தவன் நிலையெண்ணா துதைக்கின்றாய்! வானும்வசமாகும் வின்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு வாழ்க்கை - பார் ஏதெனநீ யுணருங்காலே உதை நீ!
சாதிகளி லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்! சாதியென்ன சாதி உந்தனுக்குள் எங்கேயோகம்? நீதியை நிலத்தினி லழித்திட உதைக்கின்றாய் நீ நிலையிலா வாழ்வின் முடிவேதென யறியாது நீ!
ஒற்றைப் பந்தின் வாழ்வன்னது வாழ்க்கை - அது ஒய்ந்திடும் வேகமறியாது உதைத்தாடுகிறாய்! இற்றைப்பொழுதில் உந்தனாட்டம் கண்டுசிரித்திட இருக்கின்ற சாரார் எண்ணி யாடுகிறாய் - நீயாடு!
இழுத்தடிப்பதில் தப்பேது உனைப்பந்தாடுவார்தனை இழுத்தடிப்பதில் தப்பேது உனையிகழ்வார்தனை! வீழ்ந்துமடிந்தாலும் ஆகும் வீணரை வீழ்த்திடஆடின் வம்புக்கும் வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 6
பூங்காவனம் နို်ဇ္ဇီ | &#ị) oa
உலகை உய்வி நிற்கும் இயற்கை
- நூணாவிலூர் கா. விசயரத்தினம்
இயற்கை என்ற பதத்திற்குப் பிரபஞ்சம், ஆற்றல், இயற்சக்தி, இயலுலகு, இயற்கை நிலை, இயற்கை மரபு, இயல் நடைமுறை, இயலாற்றல், இயலாட்சி, இயல்நிலை ஒழுங்கு, இயல்பு, இயலுணர்ச்சிப் பண்பு, குணம், உயிராற்றல், ஆடையற்ற நிலை, இயல் வளர்ச்சித் திறன், இயல் வாய்மை, இயல்பான தன்மை, உள்ளார்ந்த பண்பு, உள்ளுரம், மனப் பண்பு, இயல்புடையோர், வகை, மாதிரி, தன்மை, தரம், தர அளவு, வகைத் திறன், உள்ளாற்றல், உயிரியக்கம், முல இயற்கை நிலை, மர உணவுச் சாறு, சாவு, மாழ்வு போன்ற கருத்துக்களை அகராதி அடக்கி நிற்கின்றது.
இயற்கை என்பது மனித முயற்சியால் உண்டாக்கப்படாததும், தானாகவே காணப்படுவதுமாம். மனித ஆற்றல் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது. இயற்கைக்கு அபார சக்தி உண்டு. இயற்கையின் ஆதியந்தம் புரியாதவிடத்து, இயற்கைதான் கடவுள் என்று கூறி நழுவி விடுவோர் பலர். கடவுள்மேற் பாரம் போட்டதும் கதை முடிந்து விடுகின்றது.
பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்ச வெளியிற் காணப்படும் சூரியன், சந்திரன், பல கோடி நட்சத்திரங்கள், ஒன்பது பெரும் கிரகங்கள், பற்பல சிறு கோளங்கள், நம் கண்ணுக்குத் தோன்றாத அறுபத்தொரு (61) சந்திரன்கள், கோடிக்கணக்கான கற்பாறைகள் ஆகியவை அந்தரத்தில் சுழன்றுகொண்டும், ஒவ்வொன்றின் ஈர்ப்புத் தன்மையால் மிதந்த வண்ணமுள்ளன. இவ்ை யாவும் இயற்கையன்னையின் வரம்புக்குள் அடங்குகின்றன.
மேலும், பூமி, தானாகவே தோன்றும் மழை, மின்னல், இடி முழக்கம், நெருப்பு, காற்று, எரிமலை, பூகம்பம் ஆகிய இயற்கைச் சக்திகளும், மலை, நீர் வீழ்ச்சி, அருவி, கடல், தாவரம், பறவை, விலங்கு, மனிதன், மற்றைய உயிரினங்கள், ஐந்திணைகள், பெரும் பொழுது, சிறு பொழுது, பூமியில் அமைந்த இயற்கைக் காட்சிகள் அனைத்தும் இயற்கையின் பிரதிபலிப்பேயாம். இயற்கைக் காட்சிகளைப் பார்த்து, இன்புற்று, மயங்கிப் பாத்தொடுத்து நிற்கும் பாவலரும், நாவலரும் தமிழ்த் தாயின் கணக்கிலடங்காப் புதல்வர்கள்.
நூலாசிரியர்கள் தாம் எழுதும் நூலில் முதற்கண் கடவுளரை நினைந்து, அவர் பாதம் தொழுது, கடவுள் வாழ்த்தோடு நூலை எழுதி முடிப்பது ஒரு மரபு தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் வேங்கடமலை, குமரியாறு, கடல் போன்ற இயற்கையை முன்நிறுத்திப் பாயிரம் அமைத்தமை நோக்கற்பாலது.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

&እዟክ!!) { ) : }
பூங்காவனம் ጆ፲፱፻፩ ̊ t −− − 09
"வடவேங்கடந் தென்குமரி. மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த.”
திருவள்ளுவர் யாத்த திருக்குறளில், நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும், உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டுமென்று இயற்கையை முன்னிலைப்படுத்திக் கூறுகின்றார்.
“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்” . ( குறள் 637 )
இன்னும், சிலப்பதிகாரத்தை யாத்த இளங்கோ அடிகளார், மேலும் ஒரு வித்தியாசமான மாறுபட்ட முறையில் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகிய இயற்கையை முன்வைத்துக் கடவுள் வாழ்த்து அமைத்தமை காண்க.
"திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!"
இற்றைக்கு ஏழரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் மனிதன் பூமியில் தோன்றினான். அப்பொழுது பூமியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த தன் மூத்த பிறப்பான ஒரு சில விலங்குகளையும், பாம்பினங்களையும் கண்டு, பயந்து, ஒதுங்கி வாழ்ந்தான். காலப் போக்கில் தன் விடாமுயற்சியினால் அவற்றைத் தூரத் துரத்தி ஆதிக்கத்தைத் தனதாக்கிக் கொண்டான். ஆனால், தனக்குப் புரியாத ஒரு சில இயற்கை நிலைகளைக் கடவுளாக மதித்து, வணங்கி, காணிக்கையும் செலுத்தி வந்தான். இவ்வண்ணம், சூரியன், சந்திரன், கோள்கள், கடல், ஆறு, உச்சி மலை, எரிமலை, பூகம்பம், கடற்கோள், சூறாவளி, தீ போன்றனவற்றை வணங்கி வருகின்றான். பாம்பையும் வணங்கிப் பால் கொடுத்தும், புற்றில் பால் வார்த்தும், வணங்கி வருகின்றான். ஈண்டு அவனுக்கு இயற்கை கடவுளானமை கனடீர.
இயற்கை இன்றேல் உலகம் இல்லை. மனிதன் இல்லை. உயிரினங்கள் இல்லை. செடி, கொடி, பூண்டு, மரம் முதலியனவும் இல்லை. இயற்கையான சூரியன், நீர், காற்று ஆகியன இல்லையெனின் உலகில் உயிரினங்கள் வுழ்த்லரிது. சூரியன் நமக்கு வெளிச்சத்தையும், சக்தியையும், உணவையும் தருகின்றான். நீர் நம் தாகத்தைத் தீர்க்கின்றது. நல் விளைச்சலைத் தந்து, மக்கள் பசியைத் தணிக்கின்றது. காற்றைச் சுவாசித்து உயிர் வாழ்கின்றோம்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 7
-- 10 Đbį ()3
| Tšebf)6ä
இயற்கையின் நடுநாயகமாகத் திகழ்பவன் சூரியனே. சூரியன் இல்லாவிடில் உலகம் இருள் மயமாகி உறைநிலையடைந்துவிடும். இயற்கை எனக் கூறப்படும் சூரியனின் வாழ்நாள், ஆயிரம் (1,000) கோடி ஆண்டுகள் என்பது விஞ்ஞான ஆய்வாளர் கருத்தாகும். இற்றைவரை சூரியன் ஐநூறு (500) கோடி ஆண்டுகள் வாழ்ந்து விட்டான். இன்னும் ஐநூறு (500) கோடி ஆண்டுகளின்பின், சூரியன் பாரிய பிரகாசமடைந்து, வெடித்துச் சிதறி இறந்து விடுவான். இயற்கைக்கும் மிக நீண்ட வாழ் நாள் உண்டென அறிக.
அப்பொழுது சூரியனுக்கு அண்மையிலுள்ள புதன், சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் நீராவியாகிக் கரைந்து விடுவர். அதே சமயம் நாம் வாழும் பூமியும் எரிந்து சாம்பலாகிவிடும். மற்றைய ஆறு கிரகங்களும் செயலிழந்து விடுவர். இது ஓர் உலக அழிவாய் அமையும். இதைப் பிரளயம் எனலாம். இதையடுத்து ஒரு புது யுகம் தோன்றும்.
இயற்கை உலகில் வாழ் உயிரினங்களுக்கு அதிக நன்மைகளைத் தந்து உதவுகின்றது. அதே சமயம் இயற்கை தரும் தீங்கும், அவலங்களும் கணக்கிலடங்கா. சூரிய வெப்பம் தாங்க முடியாது மக்கள் ஆண்டுதோறும் மடிகின்றனர். கடற்கோள் இடைக்கிடை தோன்றி மக்களையும், மண்ணையும் ஏப்பம் விடுகின்றது. காட்டுத் தீயாலும், நெருப்பாலும் ஏற்படும் அழிவுகள் கணக்கிட முடியாதவை. சூறாவளி, எரிமலை, பூகம்பம் ஆகியனவும் மக்களை வாட்டி வதைக்கின்றன. இவ்வாறான அழிவுகளுக்கு நாம் கடவுள்மேல் பாரம் போட்டு நிம்மதி அடைகின்றோம். இதைவிட மனிதனால் என்னதான் செய்ய முடியும்? நாம் பிறந்து, வாழ்ந்து, இறப்பதும் இயற்கை நியதியாம்.
மாமுனிவர்கள் உச்சி மலையிலும், காட்டிலும், மர நிழலிலும் இருந்து தவம் புரிந்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்து, காய் கனி உண்டு, நீண்ட ஆயுள் பெற்று மக்களை ஆத்மீகத் துறையில் வழி நடத்தினர். நாமும் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து பேரின்பம் அடைவோம்!!!
※兹、
Gent:ಟ್ವಿಟ್ಚೆ ற அன்பளிப்புக்களை வழ சிகையின் தொடர் வளர்ச்சி
பூங்காவனம்” கிடைக்குமிடங்கள்
பாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு - 1 பாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு - 0 டெளல் குயின் பவுண்டேஷன் - கல்கிசை
0ல இலக்கி மு. (சி),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bFGETENJIGUEL
என்னைக் கடத்தி வந்து கைகுலுக்கிக்கொண்ட உங்கள் ஒற்றுமையைக் கண்டு உணர்விழந்தேன்!
என்னுடலை உதைத்துத்தள்ளி கைகளைககடடி வாய்க்குள் துணியிட்டு உங்கள் துப்பாக்கி முகம் என் சுஜூது நெற்றியை முத்தமிட்ட பொழுதை எண்ணிப்பார்க்கிறேன்!
உங்களால்
எந்தனாயுள் அநாதரவாக்கப்பட்டு பெறுமதிக்கால ஓடம் கண்ணிராற்றில் கரைந்த சம்பவங்களை கணக்கிடுகிறேன்!
ஏகத்துவச்சோதரரை இலட்சியமில்லாத இலட்சங்களுக்காகவும்
காட்டிக்கொடுப்புகளுக்குமாய்
நீங்கள் சமர்ப்பித்த தீப்பரிசுகளையும்
வீண் உத்தரவாதங்களையும்
நினைத்துப்பார்க்கிறேன்!
லை இல, 11 (1,
י ו) ווו. ווייW
ஆனாலும் என் ஈமானியவுணர்வின் இருப்பிடம் தெரியாது தொலைந்தவுங்கள் உள்ளங்களையும் உடல்களையும் நினைத்தே வேதனைப்படுகிறேன்!
உலகத்தியோனின் மதி மயக்கத்திலே நீங்கள் ஆடிய ஆட்டப்பகைவனை அடக்கிய இறைவனை அறிந்துமறியாத அப்பாவியானிர்கள் நினைவிருக்கட்டும் உங்கள் சந்ததிக்காவது மறுமையின் விளைநிலமே இவ்வுலகம்!!!
மருதூர் ஜமால்தீன்
(, "flail,

Page 8
பூங்காவன் ki. O3
வெலிகம ரிம்ஸா முஹம்மதின் *தென்றலின் வேகம்” நூல் விமர்சனம்
அர்ச்சுனன்
இலக்கிய கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், நூல் வெளியீடுகள், நூல்விமர்சனங்கள் போன்ற கலை இலக்கிய செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடாத்தி வரும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக முஸ்லிம் தமிழ் இளம் பெண் படைப் பாளியான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘தென்றலின் வேகம்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
ஈழத்துப் பெண் எழுத்தாளர்களின் இன்றைய எழுத்துக்கள் மிகவும் உன்னதமானவையாகவும், இலக்கியத் தரம் வாய்ந்தவையாகவும், பேசப் படத்தக்கவையாகவும் காணப்படுகின்றன. அதிலும் முஸ்லிம் எழுத்தாளர்களான கெகிராவ ஸஹானா, கெகிராவ ஸ?லைஹா, மஸீதா புண்ணியாமீன், பஹிமா ஜஹான், வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச்.எப்ரிஸ்னா ஆகியோர் தொடர்ந்து இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்களை தந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தனியே பெண்ணியம் மட்டும் பேசாது, யதார்த்த உலகைப் புரிந்துகொண்டு சிறுகதை, கவிதை, கட்டுரைகள் வாயிலாக தாம் சொல்ல வந்த கருத்தை மிகச் சிறப்பாக உலகிற்கு எடுத்தியம்புகின்றனர்.
ஈழத்து இலக்கியம் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்படுவதற்கு இங்கு மாதா மாதம் வெளி வந்து கொண்டிருக்கும் நூல்களுக்கும் பெரும் பங்குண்டு. அந்த வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘தென்றலின் வேகம்’ கவிதைத்தொகுப்பு பூரீதர் பிச்சையப்பாவின் அழகிய ஓவியத்துடனும், கவிஞள் ஏ. இக்பாலின் முன்னுரைக் குறிப்புடன் 64 பெருங் கவிதைகளையும், 29 சிறு கவிதைகளையும் தாங்கி அழகான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.
நூலாசிரியையின் என்னுரையிலிருந்து அவரது இலக்கியம் மீதான பற்று வெளிப்படுகின்றது. இத்தொகுதியில் உள்ள கவிதைகளின் பாடு பொருளாக காதல், நட்பு, பிரிவுத்துயர், மனிதாபிமானம், பெண்ணியம், வறுமை, ஆன்மீகம், தாய்ப்பாசம் என்பன பாடப்பட்டுள்ளது. 64 கவிதைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட கவிதைகள் காதல் பற்றியதாகவே காணப்படுகின்றன. காதலைப்பாடாத கவிஞர்கள் இல்லை. அந்த வகையில் ரிம்ஸா ஒரு இளம் படைப்பாளி, அவுரின் இத்தொகுப்பில் காதல் மிகுந்து நிற்பது புதிதன்று. இவருடைய காதல் கவிதைகள் காத்திருப்பு, பிரிவுத்துயர், ஏமாற்றம், எதிர்பார்ப்பு, ஊடல் நிறைந்தவையாக வெளிப்பட்டு நிற்கின்றன்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

இதழ் 03
காதலில் வெற்றி பெறுபவர் சிலரே. ஆனால் தோல்வி கண்ட உள்ளங்களின் துயரானது அவர்களின் எழுத்துக்கள் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது. இவருடைய காதல் கவிதைகள் மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டவையாகவும் வாசகர்களை இலகுவில் பற்றி இழுக்கக் கூடியவையாகவும் காணப்படுகின்றது. காதல் சார்ந்த கவிதைகளின் மொ சிறப்பாக உள்ளது. உதாரணமாக;-
குரலுடைந்த குயில் 1
“சோலை மலர்களே. அந்த சுந்தரனின் pിഞ്ഞുങ്ങfഖfബ சோர்ந்து போய் இச்சுந்தரி இருப்பதை அறிவீர்களா?
ஓடும் மேகங்களே. மன்னனின் மெளனத்தால் இம் மங்கையின் மாறாத மனம் மங்கிக் கிடப்பதை மொழிவீர்களா? y
நட்பு பற்றிய கவிதைகள் அதீத பாசத்தை வெளிப்படுத்துபவையாகக் காணப்படுகின்றன. சமூகம் மீது கரிசனையுடன் சமூக மாற்றம் வேண்டி சில கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. மனிதாபிமானம் சார்ந்த கவிதைகள் இயல்பாகவே கூறப்பட்டுள்ளது. “கண்ணில பிறந்த காவியம்” கவிதையில் இருந்து உதாரணமாக சில வரிகள்:-
மரத்து விட்ட மனித மனங்களில் மருந்துக்குக் கூட மனிதாபிமானம் இல்லாமலாகியது! சுயநல வேட்டையிலே சுழியோடும் குதாட்டக்காரர் மலிந்த சமுகச் சூழலில் சுமுக உறவையும் சுற்றாடல் ஓம்பும் திறனையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?
பெண்ணியம் சார்ந்த சில கவிதைகளும் உள்ளன. அத்துடன் இவரது கவிதைகளில் வறுமையின் கொடூரமும் அதிகமாக பேசப்படுகின்றது. எளிய மொழிநடை, வாசகர்களை ஈர்க்கும் பாணி, சிறந்த உவமைகள், சிறந்த சொற்பதங்கள் என்பனவற்றின் மூலம் தன் கவிக் குழந்தைக்கு சிறந்த
கலை இலக்கிய சமுக சஞ்சிகை

Page 9
!,rläങ്ങ
உருவம் கொடுத்து இத் தொகுப்பை வெளியிட்ட வெலிகம ரிம்ஸர் பாராட்டுக்கு உரியவர். இத் தொகுப்பானது இளைஞர்களையும்' யுவதிகளையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை.
“இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது மட்டுமன்று வாழ்க்கையில் தீவிர பங்கெடுப்பதும், வாழ்க்கையை ஆராய்வதும், அதன் நிறைகுறைகளை எடுத்தியம்புவதும் அதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதுமே” என்பதற்கு எடுத்துக்காட்டாக இவரது கவிதைகள் அமைந்துள்ளன. வளர்ந்து வரும் படைப்பாளி என்ற வகையில் இவர் பாராட்டுக்குரியவர்.
இவரிடம் இன்னும் பல நல்ல கவிதைகளை தரக்கூடிய ஆற்றல் உண்டு. ரிம்ஸாவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இன்னும் பல சிறந்த கவிதைகளை வெலிகம ரிம்ஸா முஹம்மத் தருவார் என்ற நம்பிக்கையை இந்நூல் தருகின்றது!!!
குறிப்பு - இப்புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள்,
Bank Of Ceylon, Dehiwala Branch, M.F. Rimza, A/C No.:- 2017143. என்ற இலக்கத்திற்கு 170/= ரூபாவை காசு/காசோலையாக வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டையும், காசுக் கட்டளையாயின் (M.F.Rimza) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச்சீட்டையும் பூங்காவனம் முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
ஐயிரண்டு மாதம் நித்தமும் தந்திடுவேன் நொந்து பெற்றாய்
பிஞ்சு கால்களால் நீ புரியும்
முந்தித்தவம் கிடந்து a 冷 முன்னுறு நாள் சுமந்து தாணடவம. ܓܬܰ அந்தி பகலாய் அணைத்தாயே! பொய் பேசாத క్టీ
2-60, 961160) D35560)LD. மார்பிலும் தோளிலும் 6 மெய் சொல்லும் உன் જી” கிடத்தி எனை சீராட்டி மழலை முகம. 念 மூச்சு முட்டும் முத்தத்தால் d @ உன் அன்பைச் சொரிந்தாயே! மொழிகளின்றி S
பேசும் உன் கண்கள். శ్లో நொந்து பெற்றாலும் - எனை இமை வெடுக்கி நீ 3 நோவாமல் ஏந்திட்டாய். தா செய்யும் நளினங்கள். ரத்தத்தைப் பாலாக்கி
யே 11 உன் கன்னம் படைக்கையிலே
என்னுயிரைக் காத்திட்டாய்!
வண்ணம் தேடி இறைவன் எங்கு
முகத்தோடு முகம் உரசி அலைந்தானோ? செல்லமாய் அழைத்திட்டாய். உன் அன்பு மட்டும் போதும் இம்சையிலும் நான் உயிர் வாழ என் தாயே!!! இனிமை செய்யும் எழிலே
96.08585FU
நுகேகொடை எஸ். சாந்தி
நித்தமும் தருவேன் என் அன்பை
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

ಇತ್ಲಿ
a ܥ ܐ rov
மூக சஞ்சிகை

Page 10
listഖങ്ങb పళ్ల 85p O3
பெண்ணியமும் பெண்கள் மீதான வன்முறையும் பெண் மீட்சியும்
(க.பரணிதரன்)
பெண்ணியச் சிந்தனைகள் இன்று உலகளாவிய ரீதியில் பரந்து விரிந்து வளர்ச்சி பெற்று வருகின்றன. பெண்ணிய சிந்தனைகளை, முன்வைப்பதன் மூலம் பெண்ணின் ஆரோக்கியமான வளர்ச்சி தூண்டப்படுகின்றது. பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள் பிரெஞ்சில் ஆரம்பித்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பின்னர் பரிணமித்தது.
“பெமினிசம்’ (Feminism) என்ற ஆங்கிலச் சொல் ‘பெமினா’ (femina) என்ற இலத்தீன் சொல்லில் இருந்து பிறந்தது. பெமினா என்பதற்கு “பெண்ணின் குணாதிசயங்கள் நிறைந்தது” என்பது பொருள். பெண்ணியம் தொடர்பான இச்சொல் முதலில் பாலியல் அணுகுமுறைக்காக பயன்படுத்தப்பட்ட சொல்லாக காணப்பட்டது. ஆனால் தற்போதைய காலத்தில் பெண்ணியம் என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விளக்கங்கள் பல்வேறு வேறுபாடுகளையும், வரன்முறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளபோதும் பெண்ணின் உரிமைக்காக, பாலியல் சமத்துவத்திற்காக, பெண் விடுதலைக்காக, பெண்ணின் சுய மதிப்பை உயர்த்துபவையாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
பெண்ணியம் தொடர்பான கருத்தாக்கங்களில் பின்வரும் கருத்தாக்கங்களும், வரைவிலக்கணங்களும் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. அந்த வகையில்,
1. சார்லட் பன்ச் :- “பெண்ணியம் என்பது எல்லாச் சிக்கல்களையும் புரிந்து கொண்டு அவற்றை நீக்க முயல்வதாகும். அதன் மூலம் உலகளாவிய அரசியலிலும் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்”
2. பார்பரா ஸ்மித் :- “பெண்ணியம் என்பது எல்லாப் பெண்களையும் அரசியல் மற்றும் பிற அடிமைத் தளையிலிருந்து விடுவித்தல் என்ற கொள்கை உடையதாகும். இளம் பெண்கள், தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஏழைப் பெண்கள்,
தன் பால் சேர்க்கையுடைய பெண்கள், வய்தான மூதாட்டிகள் மற்றும் பொருளாதார நிலையிலும் மரபு மண முறையிலும் துன்புறும் பெண்கள் ஆகிய அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் இலக்காகும்”
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

'')
3. கமலா பாசினும் - நிசாத் செய்து கானும் :- “சமூகத்திலும், குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் பெண்கள் தாழ்த்தப்படுவதும் சுரண்டப்படுவதுமாக உள்ளனர். இவற்றைப் பற்றிய உணர்வும், இச்சூழலை மாற்ற வேண்டிப் பெண்களும், ஆண்களும் எடுக்கும் உணர்வு நிலை உடைய செயற்பாடுகள்’
4. புட்சர் :- “பெண்கள் பாலினப் பாகுபாட்டால் அனுபவிக்கும் தனிப்பட்ட பொருளாதார துன்பங்களை எதிர்த்து மேற்கொள்ளும் இயக்கமே பெண்ணியம்’
5. பிரித்தானியக் கலைக் களஞ்சியம் :- “பெண்ணியம் அண்மைக் காலத்தில் தோன்றி வளர்ந்து வருகின்றது. அது பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு புதிய இயக்கமாகும். அத்தோடு பெண்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய அரசியல் பொருளாதார சூழ்நிலைகளிலும் அவர்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் எனும் உயர் நெறியை நிலை நாட்டும் நோக்கத்தைக் கருதிக் கொண்டு இயங்குகின்றது’
6. பெண் ணியம் தொடர்பாக பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவிலக்கணமாக - “சமூகத்திலும் பொருளாதாரத்திலும் குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்களின் உணர்வு நிலைகளும் இந்நிலையை மாற்றுவதற்கு பெண்களும் ஆண்களும் எடுக்கும் உணர்வு பூர்வமான நடவடிக்கைகளும்’
இவ்வாறான பெண்ணியம் தொடர்பான கருத்துகள் பல எழுந்துள்ளன. அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து நோக்குகின்ற போது “சமுதாயத்தின் எல்லாப் படிநிலைகளிலும் விடுதலை கோருவதே பெண்ணியத்தில் அடிப்படையாக திகழ்வதுடன், பெண்ணியம் தொடர்பான கருத்துகள் அனைத்துப் பெண்களின் பிரச்சினைகளையும், அடக்குமுறைகளையும் வெளிப்படையாக பேசி அவற்றுக்குரிய தீர்வுகளை இனங்காண வேண்டும் என்ற முனைப்பை ஏற்படுத்துவனவாக மொழியப்பட்டுள்ளன. பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றபோதிலும் பெண்கள் மீதான வன்முறைகளும் உருவத்திலும் வடிவத்திலும் வெவ்றுே வகையில் அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே பெண்களை விட ஆண்கள் அதிக வன்முறையாளர்களாக காணப்படுகின்றனர். பெண்கள் மீது நடந்தேறும் வன்முறைகள் யாவும் பாலியல் அடிப்படையில் நிகழ்வது கண்கூடு. பால் நிலை அடிப்படையிலான வன்முறைகள் யாவும் சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டாலும் அங்கு மிகுந்த தாக்கத்திற்கு உள்ளாகுபவள் பெண் தான். குறிப்பாக இளம் பெண்களில் தான் இதன் தாக்கம் அதிகமாக நிகழ்த்தப்படுகிறது.
பெண்கள் மீது வன்முறை புரியப்படும் இடங்களாக வீடு, வேலைத்தளம், பாடசாலை, ப்ொது இடங்கள், அகதி முகாம்கள், தனியார் நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், தனியே பிரயாணம் செய்யும் இடங்கள், பஸ் நிலையங்கள், அடைக்கலம் தேடும் இடங்கள், ஆண் துணை இல்லாது
கலை இலக்கிய சமூக சஞ்சி!

Page 11
பூங்கா
!
தங்கியிருக்கும் இடங்கள் என்பவற்றை குறிப்பிடக் கூடியதாக உள்ளது. இவ்வாறான இடங்களில் பெண்கள் தனியே வசிப்பது, செயற்படுவது, பயணிப்பது என்பன ஆபத்து நிறைந்ததாக காணப்படுகின்றன.
பெண்கள் மீதான வன்முறையை நிகழ்த்துவதில்
குடிக்கு அடிமையான கணவன் மற்றும் தந்தை, சகோதரர்கள் கல்வி அறிவு குறைந்த கணவன்மார்கள் ஆணாதிக்க போக்கு கொண்டவர்கள் வேலைத்தள தொழில் வழங்குநர்கள் / முதலாளிகள் தனிநபர் மற்றும் குழுக்கள் யுத்த காலங்களில் ஆயுததாரிகள் பாலியல் பிறழ்வு நடத்தை உடையோர்
மாமிமார்
என்போர் கடுமையாக பெண்களில் உடல், உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர்.
பெண் மீதான வன்முறை குடும்ப அமைப்பினுள் உருவெடுத்து அது பல்வேறு அமைப்புக்குள் சென்றுள்ளது. பெண்ணிய வன்முறைகளின் பிரிவுகளையும் அவற்றின் மூலம் ஏற்படும் கொடுமைகளையும் கீழ்காணும் தலைப்புக்களில்
gJITu 6Tb.
1. குடும்ப வன்முறை பெண்கள் வீட்டிற்குள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இங்கு மனைவியை அடித்தல் பிரதான வன்முறையாக காணப்படுகிறது. இள வயதுத் திருமணங்களிற்கு பெண் கட்டாயப்படுத்தப்படுகின்றாள். சீதனம் கேட்டு துன்புறுத்தப்படுகின்றாள். இங்கு கணவனின் ஆணாதிக்கப் போக்கும், கணவனால் மனைவி உடலியல், உளவியல் அடிப்படையில் அடக்கப்படுகின்றாள். பெண்ணை பழி கூறும் தன்மையையும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எல்லாம் பெண்ணை காரணம் காட்டலும் இங்கு நிகழ்கின்றது.
i. சமூக வன்முறை
பெண்களை பாரபட்சம் காட்டி நிகழ்த்துவது, சமூகத்தில் இருந்து விலக்கி வைத்தல், பாலியல் பலாத்காரங்கள், பெண் சிசுக் கொலை, குழந்தை தொழிலாளர் மீதான வன்முறை, சில சட்டவாக்க, மத ரீதியான அடக்குமுறைகள் மூலம் சமூக ரீதியாக வன்முறை நிகழ்த்தப்படுகின்றது.
i. வேலைத்தள வன்முறை பாகுபாடுகளை காட்டுதல், பதவி உயர்வு, வேலைப் பகிர்வு என்பவற்றில் பாகுபாடு காட்டி நடத்தல், வேலைக்கு ஏற்ற ஊதியத்தை வழங்காமை, பெண்களுக்கான வசதி வாய்ப்புகளை குறைத்தல், மேலதிகாரிகளாலும் தொழில் வழங்குநர்களாலும் அடிமைப்படுத்தப்பட்ட நிலையும், பாலியல் துன்புறுத்தல்களும் வேலைத்தளத்தில் பொதுவாக இடம்பெறும் வன்முறைகள் 6606).T.D.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 

k98), ) ( )" |
iv. கல்வி ரீதியான வன்முறை பெண்களை விட ஆண்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகளை அதிகம் வழங்குதல், பாடசாலை, கல்வி நிறுவனங்களில் பெண்களை நக்கல் (teasing) செய்தல் என்பன கல்வி ரீதியான வன்முறையாக கொள்ளப்படுகின்றன.
V. பாலியல் வன்முறை பாலியல் வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல், பாலியல் உறுப்புகளை சிதைத்தல், பாலியல் துன்புறுத்தல், தகாத உறவு, பெண் சிசுக் கொலை, பணத்தைக் காட்டி பாலியலில் ஈடுபட வைத்தல் என்பன பாலியல் வன்முறையில் அடங்கும்.
Vi. உடலியல் ரீதியான வன்முறை உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அடித்தல், உதைத்தல், சித்திரவதை செய்தல், காயப்படுத்தல், நெருப்பினால் சுடுதல், பொருட்களை அவர்கள் மீது வீசுதல் என்பன நிகழ்த்த்ப்படுகின்றன. w
wi. உளவியல் ரீதியான வன்முறை தகாத வார்த்தைகள் மூலம் திட்டுதல், பேசுதல், வெளித் தொடர்புகள் ஏற்படாது தடுத்து வைத்தல், பெண்களின் செயற்பாடுகள் அனைத்திலும் குறைகளை மட்டும் சுட்டிக் காட்டல், சுய மரியாதையை, சுய மதிப்பை அவமானப்படுத்தும் வகையில் நடாத்தப்படல் என்பன உளவியல் ரீதியான தாக்கத்தை பெண்கள் மீது ஏற்படுத்துகின்றன.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இவ்வன்முறைகள் காரணமாக பெண்ணானவள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றாள். உடலியல் ரீதியான காயம், தீராத உடல் உபாதைகள், நாட்பட்ட வலி, இரைப்பை, குடல் சம்பந்தமான கோளாறுகள், உணவு உண்ணல் ஒழுங்கீனங்கள், நித்திரைக் குழப்பம் போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகளையும், அதிர்ச்சிக்கு பின்னரான மன வடு நோய், மனச் சோர்வு, அச்சம், கோபம், அவமானம், பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு, தன்னைத் தானே வெறுத்தல், தற்கொலை எண்ணம், மனப் பதட்டம் என்பன உளவியல் ரீதியான பாதிப்புகளாக காணப்படுகின்றன.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இவ்வன்முறைகள் உச்சகட்டத்தை அடையும்போது மனப் பிறழ்வு, உளச் சிதைவு நோய் என்பன பெண்ணை ஆட்கொள்கின்றன. இவ்வன்முறைகள் மூலம் பெண்ணை சமூக ரீதியாக ஒதுக்கும் நிலையும் காணப்படுகின்றது. பெண்கள் மீதான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும். பெண் மீட்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிந்தனைகளையும், நடத்தைக் கோலங்களையும் ஆராய்வோம். மீட்சி என்பது தம் மீதான கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் விடுதலை பெறுவது எனக் கூறலாம். அதாவது பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறை, வன்முறை என்பவற்றில் இருந்து அவளை மீட்டெடுப்பதும், அவள் அவற்றில் இருந்து மீளுவதும் எனக் கொள்ளலாம். அந்த வகையில்,
1. பெண் தன்னுடைய பெறுமதி பற்றி பெருமையாகவும், தன் சுகப் பெறுமானங்கள் பற்றி உயர்வான எண்ணக்கருக்களையும் தன்னகத்தே கொண்டு இருத்தல் பெண்ணை தன்னுணர்வுடன் செயற்பட ஊக்குவிக்கும்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
་ ༡༠་༡༡་༧་༡༡

Page 12
இதழ் 03
i. தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்ளலும், தலைமை தாங்கி ஒரு நிகழ்வை, நிர்வாகத்தை நடாத்தக்கூடிய தகைமையை பெற்று இருத்தலும் வேண்டும். அத்துடன் தலைமைத்துவ கட்டமைப்பில் தீர்மானம் எடுப்பதிலும் ஆண், பெண் பால் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.
i. பெண்கள் தம் சுய மதிப்பீட்டிற்குப் பிறரில் தங்கியிருக்காது தன் சொந்தக் கருத்துக்கள், உணர்வுகள் என்பவற்றில் தங்கியிருக்க வேண்டும். நண்பர்கள், கணவன், பெற்றோர், சமூகம் தன் மீது செலுத்தும் தாக்கத்தை, எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு தம் மதிப்பீட்டை எடை போடாது சுய எதிர்பார்ப்பின் அடிப்படையில் தன்னை மதிப்பிட்டு நடத்தல் வேண்டும்.
iv. மற்றவர்களில் தங்கி வாழும் தன்மையை விடுத்தல்.
V, உரிமைகளை வலியுறுத்த வேண்டும்.
wi. தனது உடலின் தோற்றம் பற்றி கவலை கொள்ளாது தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற மனப்பாங்கை கொண்டிருக்க வேண்டும் / வளர்க்க
ഖങ്ങi(b,
wi. அரசியல் ரீதியான விழிப்புணர்வும், சமூகச் செயற்பாடுகளில் பங்கு கொள்வதும் அவசியம்.
Vi. கல்வி ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்வதுடன் பொருளாதார ரீதியிலும் தன்னை விருத்தி செய்தல். அதாவது குடும்பத்திலிருந்து தனித்து வாழத்தக்க அளவு பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
x. பொருளாதார ரீதியாக தன் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.
X குடும்பத்தில், மாமி - மருமகள் இடையேயான நல்ல உறவு பேணப்பட வேண்டும்.
x. பெண்ணிற்கு உரிய சொத்துரிமைகளை ஆண்களுக்கு வழங்கப்பட்டது போல வழங்க வேண்டும்.
xi. மனப்பாங்குகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பெண் பற்றிய தவறான அபிப்பிராயங்கள், பெண் ஆணுக்காக படைக்கப்பட்டவள் என்ற கருத்தாக்கங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
xi. சமூக, கலாசார விழுமியங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். xiv. பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதாவது பாலியல் : இனப்பெருக்க சுகாதாரம் சம்பந்தமாக அறிவுறுத்தல்களை வழங்க
வண்டும்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

ыВіфп66зий
XV. பெண் மீதான சுரண்டல்களை விடுத்து பெண்களுக்கு சம ய ரிகா வழங்க வேண்டும்.
XVi. பெண்ணிய இயக்கங்கள் பெண்ணின் மீட்சியை வலியுறுத்தல் வேண்டும்.
XVi. இலக்கிய ரீதியாக பெண் விடுதலை சார்ந்த, பெண் மீட்சி சார்ந்த படைப்புகள் இலகு மொழிநடையில், பெண் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பெண்ணின் பிரச்சினைக்குரிய தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.
XVi. தொழில் வழங்கும் ஸ்தாபனங்களில் தன் சுய உரிமையை விட்டுக் கொடுக்காது நடத்தல் வேண்டும்.
சுருக்கமாக சொல்லின் பெண்ணின் சமத்துவம், பெண் விடுதலை என்பன வெறும் பேச்சிலும் எழுத்திலும் மட்டுமல்லாது, நடைமுறையிலும் அநுசரிக்கப்பட வேண்டும். இவை தொடர்பான மனப்பாங்குகளை மக்கள் பெற்றுக்கொள்ள செய்யப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்!!!
With Best Compliments From...
Amja Travels (Pvt) Ltd
GAir Line Ticketing & Tour operators)
D.C.A. LICENCE No. A324 HAJJ & UMRAH OPERATORS
|lead Office: K. G, H, Gunasinghepura, Dias place. Colombo – | 2, Sri || Ink). le - 1 (). I G 35(957. Fx i 1373()8, Direct - 238843
|-mail - amjativ Slunet.lk
Branches.
No. 61, Yatinuwara Road, Kandy, Sri Lanka. Tel - 081 4476041, Fax - 081 4472772. I No. 671, Anuradhapura Road, Dambulla, Tel- 066 4924954, Fax. 0664468032.
No. 8. Kadurgas Junction,Colombo Road,Kurunegala, Tel-0374932441, Fax. 0374690452.
கலை இலக்கிய சமூக சஞ்சில

Page 13
பேதம் வேண்டாம் !
ஏழை செல்வந்தர் பாகுபாடு மனிதருள் இருத்தல் ஆகாது ஏழை பணக்காரன் வெறும் பாசாங்கு வரும்போது கொண்டு வந்தவன் யாவன்? எடுத்துச்செல்பவன் எவன்?
உயர்வு தாழ்வு இதனால் ஏது? ஏன் வீண் பிரலாபம்? எல்லாம் இறைவன் சுயம் நித்தியமாய் எவனுக்கும் எதுவும் இல்லை.
தற்காலிக பணம் கை நெகிழ்ந்து போகலாம் இழந்தவன் முயற்சித்தால் மீண்டும் பெறலாம். இல்லாதவன் முயற்சித்தால் அவன் கைக்கும் எட்டும்!
செல்வந்தன் ஏழை என்றில்லை ஆதலில் மனிதர் அனைவரும் சமம். பணம் செல்வம் அது செல்லத்தக்கது. வல்லமை இருந்தால் எவரும் பெறக்கூடியது!
உரிமையாளன் தருவான் மீட்டுப்பெறுவான். உயர்வு பேச இது காரணமாகா! நீ மனிதன் - நானும் மனிதன் பணக்காரன் ஏழை எதுவுமில்லை பேதம் மறந்து மனிதனாய் வாழ்வதே தேவை!
வெலிப்பன்னை அத்தாஸ்
இலக்கிய சமூக சஞ்சிகை
அறிவு
தலைமீது முடிசூடி தாமரையில் ஆடினாலும் குல மதியாப் பெண்ணவளே குடும்பத்திற் கேடாவாய்!
தலைநிமிர்ந்து நடந்தாலும் தாழ்பணிய மறவாதே நிலை மறந்து வீணாகி வெட்கம் கெட்டு அலையாதே!
அன்றைய பெண்களினம் அடக்கத்தின் பொக்கிஷமாம் இன்றைய பாவையரோ இத்துறையில் மிக அரிது!
கட்டிய கணவனை கண்போல காத்திடுக மட்டில்லா மகிழ்வெய்து மனை விள்ங்க வாழ்ந்திடுக
முக்காடு பெண்ணழகு முகநகையோ பொன்னழகு இக்கால குலம்ாதே இதை என்றும் மறஷாதே!
மூதூர் கலைமேகம்
 
 
 

பூங்காவணம்: இதழ் ():
|எம்ரிஷான் ஷெரீப் - மாவனல்லை.
கூரையில் பகல்நேர வெளிச்சத்திற்காகப் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடித்துண்டு வஞ்சகமின்றி நிலா வெளிச்சத்தைப் பாய்ச்சியதில் வீட்டின் நடுப்பகுதியில் விளக்கைப் போடாமலேயே நடமாட முடிந்தது. இருப்பது இரு அறைகள் கொண்ட வீடு. இதில் அப்பாவுக்கு ஒரு அறை. அம்மாவுக்கும் இவளுக்கும் சுதாவுக்கும் ஒரு அறை. இவர்களது அறை கொஞ்சம் பெரியது. அதில்தான் ஆடைகளையும், சில பாத்திரங்களையும் இவளுக்கு மிகவும் பிடித்த வானொலிப் பெட்டியையும் வைத்திருந்தார்கள்.
இவளுக்குத் தூக்கம் வரவில்லை. என்ன முடிவெடுப்பது என்றும் தெரியவில்லை. நாளை தண்ணிர் எடுத்துவரப் போகும்போது இது சம்பந்தமாகப் பேசலாமா சரவணனிடம்? அவரென்ன? என்னை விரும்புகிறாரா இல்லை இந்த வீட்டை விரும்புகிறாரா எனக்கேட்டு விடலாமா?
மூத்த மகளின் 31 வயதுக்குப் பின்னர் ஒரு வழியாக அமைந்த வரன் சீதனமாகப் பணமும் நகையும் பெருந்தொகையாகக் கேட்பதில் தனியார் கம்பனியொன்றில் சாதாரண பியூனாக வேலை செய்யும் அப்பாவுக்கு வீட்டை விற்றுத் திருமணத்தை நடத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அவரும், அம்மாவும் பலநாட்கள் தூக்கமின்றித்தவித்து, சேர்ந்து இம்முடிவுக்கு வந்திருந்தனர். வீடு அப்பா வழி வந்தது. ஒரு மகளின் திருமணத்தை வீட்டை விற்றாவது ஒப்பேற்றிவிட்டால் வரும் மருமகன் இளையவளின் திருமணத்துக்கு எப்பாடுபட்டாவது உதவுவார் என்ற நம்பிக்கையை மலையாய்ச் சுமந்தனர் இருவரும்.
அவளும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். ஒருத்தி திருமணத்திற்காக இன்னொருத்தியும், பெற்றவர்களும் நடுத்தெருவில் நிற்பதனை அவள் சிறிதேனும் விரும்பவில்லை. வேறொரு வரன் பார்க்கலாமென வாதாடித் தோற்றாள். கெஞ்சிப் பார்த்தாள். பெற்றவர்களின் முடிவில் எந்தச் சலனமும் இல்லை. எதுவும் செய்ய இயலாதவளாக சுதாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
காலம், காலமாக பரம்பரைகள் பலகடந்து வந்து அப்பாவுக்குச் சொந்தமான புராண வீடதனை விற்பதொன்றும் இலகுவாக அமையவில்லை. பல ஒட்டைகள் கொண்ட கூரையும், இப்பொழுதோ, அப்பொழுதோ என இடிந்துவிழப் பார்த்துக்கொண்டிருந்த சுவர்களும், வீட்டிற்கான பெறுமதியை தங்களால் இயன்றவரை குறைத்துக் கொண்டிருந்தன. இறுதியில் ஊர்ப்
கலை இலக்கிய சமூக சஞ்சி

Page 14
IğEmenleri 6glp O3
பெரியவரே விலையைக் குறைக்கப் பல காரணங்கள் சொல்லி வீட்டை வாங்கினார்.
தெரு முச்சந்தியில் அமைந்திருந்த அந்த வீட்டை உடைத்து கடை அமைக்கலாமென்பது அவரது எண்ணமாக இருந்தது. அவரது எண்ணத்திற்கேற்ப அதிஷ்டமும் சேர்ந்ததில் அப்பாவின் இயலாமையால் போட்டி போட முடியவில்லை. இருப்பினும் ஊர்ப்பெரியவருக்கும் நெஞ்சின் ஒரு மூலையில் இரக்கமிருப்பதை திருமணத்திற்கும், அதன் பின்னர் ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து அதில் தங்குவதற்கான அனுமதியும் அளித்தமை காட்டியது. வீட்டை விற்ற பணத்தில் திருமணச் செலவுக்கும் ஒதுக்கி, மணமகளுக்கான உடைகள், நகைகளோடு, ஒரு சோடித் தங்கக் காதணி, அரைப்பவுனில் ஒரு சங்கிலி, ஒரு நல்ல சேலை தங்கைக்கும் கிடைத்தது.
நிலவு, கண்ணாடித்துண்டில் முகம் பார்த்துத் தாண்டிப் போயிருக்க வேண்டும். அவ்விடத்தை மெல்ல இருள் ஆழ ஆரம்பித்தது. அவளுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை. அருகிலிருந்த சுவரை மெதுவாகத் தடவிக்கொடுத்தாள். சிறுவயது முதல் அவளைத் தாலாட்டிய வீடு. முதன்முதலாகத் தவழ்ந்து, நடந்து விழுந்த தரையிது. அவளை முழுவதுமாகத் தாங்கிச் சுமந்த நிலமிது. சிறுவயது முழங்கை, கால் சிராய்ப்புகளுக்கு இதே சுவற்றின் சுண்ணாம்பைத் தொட்டுத் தடவியிருக்கிறாள். சமையலறையில் படிந்திருக்கும் கருப்புக் கரியை விஷேட நாட்களில் விழிகளில் பூசியிருக்கிறாள். அவளைப் பொறுத்தவரையில் இது அவளது விருப்பத்துக்குரிய ஒரு உயிர். இது அவளோடு பேசும். இவள் சொல்லும் கதைகள் எல்லாவற்றையும் கேட்கும். சிரிக்கும். அழும். சரவணன் அன்று முதன்முதலாகத் தந்த காதல் கடிதத்தை இந்த வீடு மட்டும் குறுகுறுப்பாய்ப் பார்க்க, இரகசியமாக இரவில் எழுந்து படித்து மகிழ்ந்திருக்கிறாள். இனி எதுவும் அவளுக்குச் சொந்தமில்லை.
அக்கம்பக்கத்து வீட்டுத் தோழிகள் மணமகளின் இரு கரங்களுக்கும் மருதாணியிட்டுக் கொண்டிருந்தனர். மருதாணியின்றிச் சிவந்திருந்தன அவளது விழிகள், சிந்தனையோட்டம் சகோதரியைப் பற்றித் திரும்பியது. பாடசாலைக் கல்வியைப் பாதியில் நிறுத்தியவள், அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்தபடி இருக்கிறாள். முன் துருத்திய பற்கள் குறையாக இருந்தது. இந்த லட்சணத்தில் வீடுமில்லையென்றால் எந்த ராஜகுமாரன், எந்தக் குதிரையில் வருவான் இவளைப் பொக்கிஷமாக அள்ளிக் கொண்டு போக? அப்பாவைச் சொல்லிக் குற்றமில்லை. அம்மாவைச் சொல்லியும்தான். வீடு முழுக்க உறவினர் மற்றும் அயலவரின் மகிழ்ச்சி ஆரவாரம் நிறைந்திருக்க பெற்றவர்களின், சகோதரியின் விழிகளில் துயரத்தின் சாயல் மிகக் கடுமையாகப் படிந்திருப்பதை சுதாவும் உணர்ந்தே இருந்தாள்.
திருமணம் நல்லபடியாக நடந்துமுடிந்தது. கழுத்தில் தாலி கட்டப்படும் சந்தர்ப்பத்திலும் வீடு பற்றிய எண்ணங்களே மிதந்திருந்தன அவளுக்கு. பலரிடமிருந்தும் மகிழ்ச்சியாக வாழ்கவென்ற ஆசிர்வாதங்கள் பல கிடைத்தபோதும் அத்தனையும், இழந்த அவளது வீட்டை மீட்டுத் தருமா என்ன? மணமகளின் உடல் சுமந்திருந்த ஆபரணங்கள் மாமியாரின் முகத்தில் பெரும் புன்னகையைத் தீட்டின. தம்பதியினை வழியனுப்பி வைக்கையில்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

лівыI66лій இதழ் ()
அப்பா, அம்மா, சுதாவின் விசும் பல்கள் மகளைப் பிரிவதற்கு மட்டுமேயானதல்ல எனவும் புரிந்தது அவளுக்கு.
சரவணனிடம் இன்று பகலே இதுபற்றிப் பேசப்போகிறாள். திருமணத்திற்காக, ஆண்டாண்டு காலம் தன்னைச் சுமந்த வீட்டை விற்க நேர்ந்ததனைச் சொல்லப் போகிறாள். நிர்க்கதியாகி நிற்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவவேண்டுமெனக் கோரப் போகிறாள். சரவணன் என்ன சொல்வான்? ஒருமுறை ஏதோ தேவைக்காக இவளது ஊருக்கு வந்த சமயம் தண்ணிர் எடுத்துவர வெளியே வந்த இவளைப் பார்த்ததில், அவனுக்கு இவளைப் பிடித்துப் போனது. பேசிய சிலநாட்களிலே அவ்வளவு முரடன் இல்லை என்பது தெரிந்து விட்டது. லொறி ட்ரைவராக வேலை செய்வதில் எப்படியும் மாதாந்தத் தேவைகளுக்கான பணத்தைச் சம்பாதித்துவிடுவான். அதில் தான் மிச்சம்பிடித்து தனக்கென்று ஒரு சொந்தவீடு வாங்கி பெற்றோரை, அவர்களது இறுதிக் காலங்களில் தன்னுடனேயே வைத்துக்கொள்ள
வேண்டும் என்பதைக் கனவாகச் சுமந்தலைந்தாள்.
பகல் அவனுடன் பேசியதில், பிற்காலத்தில் நல்லதொரு நிலைமைக்கு வந்ததன் பிற்பாடு சொந்த வீடு வாங்கி அப்பா, அம்மாவைக் கூடவே வைத்துக் கொள்ளலாம் என்று அவன் அளித்த காதல் வாக்குறுதியை நம் பரி, இரவானதும் புதுச் சேலையையும் , நகைகளையும் அணிந்துகொண்டாள். தனக்கு மிகவும் பிடித்தமான வானொலிப்பெட்டியையும் தனது உடைகள் சுமந்த பையில் போட்டுக் கொண்டு, வீட்டின், தெருவின் அனைத்து சந்தடிகளும் ஓய்ந்ததன் பிற்பாடு தெருமுனையில் காத்திருந்த சரவணனின் லொறியில் ஏறிக்கொண்டாள். அது வீட்டைத் தாண்டிப்போகையில் ஏக்கமாக ஒருமுறை வீட்டைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.
தங்கை லொறி ட்ரைவருடன் ஓடிப்போன விடயம் மாப்பிள்ளை வீடுவரை போய்ச் சேர்ந்ததில், மணமுடித்து இரண்டு நாட்களிலேயே வாழாவெட்டியாக வீடு வந்து சேர்ந்தாள் மூத்தவளான சுதா,
காணவில்லை !
கனவுகளில் உயிர் போல
If air attainant கடற்கரை வெண்மணலில் 影 நானிருப்பேன் என்றாய்! Bijb LóLL- காரிருள் வி
ருள வடியுமுன பேசாதவீணையாய் 露 உன் உடலும் கூட நின்றாய்!. لـ காணாமற்போயிற்று!
விழிகளின் நடனம் இரக்கமற் இதயத்தை நனைத்தது. ே J ? உன் உதிரத்தில் உன் குரல்வளையை உறைநத 丽 நசுக்கிற்றா?
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 15
இதழ் 03
திருக்குறளின் கல்விச்சிந்தனை
சமூக நோக்கில் ஒரு மறுவாசிப்பு நித்தில நேசன் தம்புசிவா நூல் - திருக்குறளின் கல்விச்சிந்தனை
ஆசிரியர் - கலாநிதி ந. இரவீந்திரன் வெளியீடு - விஞ்சு & கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் விலை - 300/=
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பால்களாக வகுக்கப்பட்டு 1330 குறள்களைத் தன்னகத்தே கொண்டு, தெளிந்த பார்வையும், விரிந்த கருத்துடனும் எல்லோருக்கும் ஏற்ற ஒரு பொதுமறையாக இடம்பெற்றுள்ளது. திருக்குறள் கருத்துக்கள் சாதி மத இன மொழி எல்லை கடந்தவை. எதிலும் சமத்துவந்தான் திருக்குறளின் உயிர்மூச்சு. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற நான்கு இயல்களாகவும், பொருட்டால் - அரசியல், அங்கவியல், பொருளியல், ஒழிபியல் என்ற நான்கு இயல்களாகவும், காமத்துப்பால் - களவியல் கற்பியல் என்ற இரண்டு இயலாகவும் வகுத்துள்ளனர்.
திருக்குறளில் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடமை ஆகிய நான்கு அதிகாரங்களில் கல்விச் சிந்தனைகள் பற்றி கூறியிருந்தாலும் பல்வேறு அதிகாரங்களிலும் இச்சிந்தனைகளைப் பரவலாகக் காண முடியும். வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கூறும் திருக்குறள் அறிவு வேட்கையை உருவாக்குவதற்குரிய அனைத்து தளங்களிலும் தனது சிந்தனை களத்தை விரிவு படுத்தியுள்ளது.
மார்க்சியம் சார்ந்த தமது சிந்தனை கருவூலங்களை நூலாக்கம் செய்த முனைவர் ந. இரவீந்திரன் திருக்குறளில் கூறப்பட்டுள்ள கல்வியியல் சார்ந்த கருத்துக்களை ஆய்வின் வெளிப்பாடாக 'திருக்குறளின் கல்விச்சிந்தனை - சமூக நோக்கில் ஒரு மறுவாசிப்பு என்ற நூலை ஆக்கியுள்ளார். இது அவரது முனைவர் பட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும்.
‘ஒரு குறித்த காலத்திற்கான கல்விக்கோட்பாட்டைத் திருக்குறள் வகுத்து வழங்கவில்லை. வளர்ந்து வரும் இன்றைய கல்விச்சூழலுக்கேற்பவும் மாறி வரும் சமூக வளர்ச்சிக்கு ஏற்புடையதுமான கல்விச்சிந்தனையை திருக்குறள் வழங்கியுள்ளது. அறிவைப்பற்றி அறிந்து கொள்ளும் புதிய துறையாக கல்விப்புலத்தைத் திருக்குறள் காட்டும். இன்று உலகம் எதிர்பார்க்கும் கல்விமுறைக்கு திருக்குறளின் கல்விச்சிந்தனை பெரிதும் பொருத்தப்பாடு உடையது என்பதை நூலாசிரியர் கல்வியியல் பின்னணியில் நின்று நன்கு விளக்கியுள்ளார்' என்று நூலின் முன்னுரையில் முனைவர் இ. சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பல அம்சங்களில் பொருள் முதல்வாதக்கண்ணோட்டளுத்தையும், இயங்கியல் அணுகுமுறையையும் கொண்டிருக்கும் இயல்பு முதலான பல்வேறு பார்வைகளைக்கொண்டது திருக்குறள். கல்வி சமூக பொருத்தப்பாட்டிற்கு மட்டுமன்றிச் சமூகமாற்றச் செயற்பாட்டிற்கும் வழிகாட்டும். வள்ளுவச் சிந்தனைகள் இத்தகைய மாற்றத்திற்கும் வழிவகுக்கும் முறையில் அமைந்துள்ளன.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 

kish) ()'s
பல நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய திருக்குறளில் இன்றைய கல்வியலாளர் கூறும் அடிப்படைக் கல்விச்சிந்தனைகள் அனைத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளமையைப் பார்க்கும்போது உலகம் இன்று எதிர்நோக்கும் விழுமியக்கல்விக்குரிய ஊற்றுக்களமாக இது இருப்பதை உணர்ந்து ို (1ՔւՁԱվԼք.
திருக் குறளில் காணப்படும் பொதுமைச் சிந்தனையையும் , புதுமைச்சிந்தனையையும், அறிவுச்சிந்தனையையும் ஒருசேரப்புலப்படுத்தும் திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் இவ் ஆய்வு நூல் திருக்குறள் ஆராய்ச்சி வரலாற்றில் புதுவரவாகத்திகழ்கிறது. ‘கல்வி தொடர்பாக அடிப் படையான சில கருத்துக் களை மட்டும் திருக் குறள் கொண்டிருக்கவில்லை. வலுவான கல்வித்தத்துவத் தளமுடைய கல்விச் சிந்தனையைத் திருக்குறள் வகுத்து வழங்கியுள்ளது.
குறிப்பாக திருக்குறளின் முழுமையான பயன்பாட்டினை போலவே தன் கல்விச் சிந்தனையுங்கூட முன்னரை விடவும் இன்று தான் அதிகம் பொருத்தப்பாடுடையதாக உள்ளமையையும் காணக்கூடியதாகவுள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டுக்கான கல்வியின் அடிப்படைத்தூண்களாகச் சர்வதேச சமூகத்தால் நான்கு அம்சங்கள் முன்மொழியப்பட்டன. அறிதலுக்காகக் கற்றல், வாழக்கற்றல் ஆகிய கல்விச் சிந்தனையின் அடிப்படைகளாகவும் இருப்பதைக்காணலாம்.
சமூக மாற்றம் காலத்துக்குக் காலம் மாற்றம் கண்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிற அதே வேளையில், கல்வியாளர்களது பங்கைத் திருக்குறள் சிறப்புற எடுத்துக்காட்டுகிறது. கல்வியல் செல் நெறியில் அவ்வவ் காலப்பொருத்தப்பாட்டுடன் சமூக முன்னேற்றத்துக்கான கல்விசார்ந்த சிந்தனைகளைச் சோக்கிரடீஸ், பிளேட்டோ, அரிஸ்ரோட்டில், ரூசோ போன்ற தத்துவவியலாளர்கள் முன்வைத்துள்ளனர். ஆயினும் எந்தச் சிந்தனையாளர்களையும்விட வள்ளுவம் கல்வி சார்ந்த அனைத்து அம்சங்களையும் இணைத்து சமநிலையுடையதாக அமைந்திருப்பது சிறப்பு
திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியுள்ளார்கள். பரிமேழலகர் உரையே எல்லா அறிஞர்களாலும் பேசப்பட்டு வந்துள்ளது. பின்வந்த பலர் மிக எளிமையான உரைகளை எழுதி வந்துள்ளனர். அவர்களுள் டாக்டர் மு. வரதராசன், பேராசிரியர் க.ப. அறவாணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எத்தனையோ பேரறிஞர்கள் உரைகள், கட்டுரைகள் எழுதியிருந்த போதிலும் கல்விச் சிந்தனை எனும் ஆய்வுநூலை முதலில் தந்தவர் கலாநிதி ந. இரவீந்திரன் தான் என்பதைத் துணிந்து சொல்லலாம்.
'தெர்ட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு
தோண்டத்தோண்ட மணலிடையே அமைந்துள்ள ஊற்று ஊறும். அதுபோல மாந்தர்க்கு நூல்களைக் கற்கக்கற்க அறிவு ஊறி மேம்படும். அந்த வகையில் தமது தேடலின் மூலம் கிடைத்த கல்வியியல் கருத்துக்களை மிக நுட்பமாகத் தமது நூலில் தந்துள்ளார் ஆசிரியர்.
கலை இலக்கிய சமூக சஞ்சி),

Page 16
தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காழுறுவர் கற்று அறிந் தார்
வர் கற்ற கல்வியால் தாம் அடையும் இன்பமானது, அவர் மற்றவர்களுக்குச் சால்லும் போது கேட்போரும் இன்பமுறுதலைக் காணவும், கேட்கவும் மேதைகள் விரும்புவர்.
இந்த குறளுக்குத் தக்க உதாரண புருஷராக கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் எம்முன் நிற்கிறார். "தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வகையில் அவரில் தேடல் அமைந்துள்ளது.
கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் தமது ‘கல்விச்சிந்தனை' என்ற நூலை ஐந்து இயல்களாக வகுத்து தமது ஆய்வினை மேற்கொண்டுள்ளார். இயல் - ஒன்று ‘அமைப்பும் உலகப்பார்வையும் என்ற தலைப்பில் நோக்கப்பட்டுள்ளது. திருக்குறளின் அடிப்படைப் பண்பாகிய பொதுமை நாட்டமும், உழைப்பின் மீதான மதிப்பும், வாழ்வு நேசிப்பும், புற நிலையின் இருப்பையும் இயங்கியல் செல்நெறியையும் நுண்மான நுழைப்புலத்துடன் கண்டறிந்து பொருந்திச்சென்று முன்னேறும் மெய்யறிவைப் பெறுவதற்கு வழிகாட்டும் மாண்பும் குறலாசிரியருக்கு வந்தமைந்த பாங்கு கவனிப்புக்குரியது. அத்தகைய இயல்புகளுக்கு உரிய அடித்தளத்தைக் கண்டறிய இந்த இயல் முயலும் என்கிறார் நூலாசிரியர்.
'உழைக்கும் மக்கள் பிறரோடு பகுத்துண்டு பல்லுயிரோம்பி வாழ வலியுறுத்துவது திருக்குறள், பிறப்பால் அனைவரும் சமமே என வலியுறுத்தும். உழைப்பு மிக உன்னதமாய் போற்றப்படும். உழுதுண்டு வாழ்வோரை உலகம் போற்றும். சமத்துவம் - உழைப்பைப் போற்றுதல் - அதிகாரத்துவ எதிர்ப்பு என்பன திருக்குறளின் கருத்தியல். இதுவே திருக்குறளின் மிகுந்த முக்கியத்துவமுடைய அடித்தளம். விளக்கவியலா விடயங்கள் சிலவற்றில் கருத்து முதல்வாத நோக்கு இருப்பினும், பெரும்பாலான மக்கள் நலநாட்ட அம்சங்களில் பொருள் முதல் வாத நோக்கையும், இலங்கியல் அணுகுமுறையையும் உலகப்பார்வையாய்க் கொண்டிருப்பது திருக்குறள் என்று ஆசிரியர் விளக்கியுள்ளார்.
இயல் - இரண்டு ‘கல்விச்சிந்தனை பின்புலமி பற்றி எடுத்துக்கூறுகிறது. திரை கடலோடியும் திரவியம் தேடு' எனும் தாரக மந்திரம் இன்றுவரை செல்வாக்கு செலுத்தும் வாழ்முறையை ஆழப்பதித்து வைத்திருப்பது போலவே கல்விக்கு முதன்மையளிக்கும் பண்பையும், தமிழ்ச் சமூகத்திற்கு அக்காலத்திலேயே வணிக வர்க்கத்தால் ஏற்படுத்தித் தரப்பட்டது. இதன் காரணமாக ஒரு கற்றோர் சமூகமாகத் தமிழர் பிரிவொன்று வளரக் களம் அமைக்கப்பட்டது. தமிழ் எழுத்து விருத்திக்கும், கல்வித் தேடல்களுக்கும் வழி சமைத்தது. சமத்துவமும் அதிகாரத்துவ எதிர்ப்பும் எனும் தெளிவான கருத்தியல் தளத்தில் காலூன்றி நின்று அதற்கமைவான வகையில் இந்தியச் சிந்தனை மரபின் வீச்சான கூறுகளை உள்வாங்கியது திருக்குறள்.
தமிழ் மரபின் மனிதநேய விழுமியங்களிற் காலூன்றி நின்று அயல் மரபின் உயரிய பண்புகளை உள்வாங்கிக்கொண்டு, அனைத்துலக மானுடத்துக்கும்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

βλήμ ( ,
பொதுவானதாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட வாழ்வியல் நூலே திருக்குறள்’ என்று கூறப்பட்டுள்ளது.
இயல் - மூன்று கல்வி பற்றி தெரிவிக்கிறது. "சமூகம் தனக்கான அவசியத்திலிருந்து கல்விக்கான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்கிறது. ஆயினும் எந்தச்சமூகத்திற்கும், எந்தக்காலத்திற்கும் அவசியப்படுகிற அடிப்படை இலக்குகள் இருக்க வாய்ப்புண்டு. நயத்தக்க நாகரீகத்தை வடிவமைப்பதும் அதற்கமைவாய்த் தனியாளைத் தகவமைப்பதும் கல்வியின் இலக்காக எல்லா இடங்களிலும் எப்போதுமே வலியுறுத்தப்பட்டமையைக் காணமுடியும்' என்கிறார் ஆய்வு ஆசிரியர்.
அறிவறிதல் என்பதன் வாயிலாக அறிவுக்கோட்பாட்டுக்கான புதிய தளமொன்றைத் தமிழுக்கு சாத்தியப்படுத்தியவர் வள்ளுவர். முதல் அம்சமாய் அமையும் அறிதலுக்காகக் கற்றல்' என்பது குறித்து வள்ளுவம் விரிவாக விளக்கம் தந்துள்ளது. மக்களுக்கும் கல்விக்குமுள்ள தொடர்பு, கல்வியில் உண்மை நிலை, கல்வியின் பயன், கல்வி கற்கும் முறை இவை எல்லாவற்றையும் திருக்குறள் கூறியிருப்பதே அதன் பெருஞ்சிறப்பு. வையத்துள் வாழ்வாங்கு வாழ கல்வியை நெறிப்படுத்தும் வள்ளுவம் தன்னளவில் வாழ வழிகாட்டும் ஒப்பற கைந்நூலாகவும் விளங்குகிறது. தற்காலத்துக்கும் பொருந்தும் கல்விச் சிந்தனைகளை முன்வைக்கும் வள்ளுவம் ஒரு கற்பித்தற் சாதனமாயும் பயன்படுகிறது.
இயல் - நான்கு 'சமூக மாற்றமும் கல்வியலாளரும்' எனும் தலைப்பில் ஆராயகிறது. ‘மனித சமூகம் ஒவ்வொன்றும் தத்தமக்கான பண்பாட்டை உருவாக்கி வளர்த்து வருகின்றன. அந்த வகையில் தனது அடுத்த தலைமுறைக்கு கல்வி வாயிலாகப் பண்பாட்டைக் கையளித்துக்கொள்வது அவசியமானதாய் அமைகிறது.
பண்பாட்டு வளர்ச்சி, பொருளுற்பத்தி விரிவாக்கம் சமூக மாற்றத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. சமூக வளர்ச்சிப்போக்கும், சமூக மாற்றமும் மனித குல வளர்ச்சிச் செல்நெறியில் கல்வியும் கல்வியலாளர்களும் வகிக்கும் பங்களிப்பினை இந்த இயல் ஆய்வுக்குள்ளாக்குகிறது. ஆசிரியர், பெரியோர், அறிவுடையோர் பண்புகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
இயல் - ஐந்து 'கல்வியியல் செல்நெறியில் திருக்குறள்’ என்று சொல்லும் போது உண்யிைல் கல்வி பற்றிய சில கருத்துக்களைத் திருக்குறள் கொண்டிருக்கிறது என்பதை விட ஆழமான கல்விச் சிந்தனை வீச்சு திருக்குறளில் உண்டு. கல்வி வாயிலாக சமத்துவத்தை நோக்கி முன்னேறும் இன்றைய சூழலுக்கேற்ற கல்விச் சிந்தனை திருக்குறளில் வீறுடன் காணப்படுகிறது. கல்வியின பலதளச் செயற்பாடுகளை வெளிப்படுத்துவதாகத் திருக்குறளின் கல்விச் சிந்தனை திகழ்கிறது. உலகப்புகழ் பெற்ற கல்விச் சிந்தனையாளர்கள் இன்று பொருத்தப்பாடு பெறுவதை விட வள்ளுவரின் கல்வித்தத்துவ நிலைப்பாடு இன்று அதிகம் பொருத்தப்பாடுடையதாக இருக்கிறதென்பது முக்கியத் துவங்கொடுத்து கவனிக் கப்படக் கூடியதொன்றாகும்’ என்கிறார்.
இந்நூலை வெளிக்கொண்டு வருவதற்காக கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள்
கலை இலக்கிய சமூக சஞ்சி),

Page 17
இதழ் 03
பூங்காவனம்
திருக்குறளின் ஒவ்வொரு குறளையும் நுணுக்கமாகக் கற்றுத்தேறி, அன்றைய கல்வியியல் சிந்தனையாளர்கள் தொடக்கம் இன்றைய கல்வியலாளர்கள் வரை கூறிய கருத்துக்களையும் உள்வாங்கி, நூற்றுக்கணக்கான நூல்களையும் உசாத்துணையாகக்கொண்டு, பல அறிஞர்களின் கல்விச் சிந்தனைகளையும் உவமானமாக ஏற்று, தமது தேடலின் பிரதிபலிப்பாக தனக்கேயுரிய தனித்துவமான கருத்தியலையும் முன்னிறுத்தி சமூக, பொருளாதார பண்பாட்டு விழுமியங்களுடன் தமது ஆய்வை மேற்கொண்டு, தமிழ் இலக்கிய கல்வியியல் பரப்புக்கு ஒரு புதிய வரவைக் கொண்டு வந்துள்ளார். எவருமே இற்றை வரை முன்வராத புதிய ஆய்வை நுணுக்கமாக மேற்கொண்டு திருக்குறளின் கல்விச் சிந்தனை' என்னும் மிகத்தேவையான ஒரு நூலை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தந்து புகழ் பெற்று நிற்கிறார்.
'ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல்
கவியாய் மலர்வேன் 1 காணாமல் போனவன் !
நிலவென்றான் மலரென்றான்
*ளம் என்ற என் வாழ்வே நீதான் என்றான். ஊற்றுக்குள் உறவென்றான் உணர்வென்றான் ஊற்றெடுத்த என் துணையே நீ என்றான்
உன் இனிய நினைவுகளை கவி என்றான் கனவென்றான்
கவிகளாய் வரைகின்றேன் உன் பாசத்தை போற்றியே!
என் காதல் நீயென்றான். உயிரென்றான் உடலென்றான் என் உலகமே நீ என்றான். உன் உடலில் நான்
கவிகளாய் மலரும் - என் உறவென்றான்.
உன் உணர்வென்றான். இதயம் எனும் உயிர் வாழ காதல் மட்டுமே பூஞ்சோலையில் போதும் என்றான்! சேமித்து விடு!
ஆனாலும். நான் இறந்தாலும் திருமணம் என்று வந்தவுடன் உன் இதய சோலையில் வரதட்சணை
D6)55g வேண்டுமென்றான். மணம் வீசுவேன்!!! ಙ್ಗರಾಗಕೆ ஏழை என்றுரைத்த
60
' eli 1 Tck ! எஸ். மஞ்சுலா காணாமலே போய் விட்டான்!!!
அனபு மலரகளை என் உயிருக்குள் நீ
கிரிஎல்ல.
அன்பு நிலா திருகோணமலை
EGo Go இலக்கி சமூக சஞ்சிகை
 
 

然处川111,
பண்பாட்டு எழுச்சியை நோக்கி.
டப்ளியு. எம். வளிர்
நாகரிகத்தினதும் அறிவியலினதும் நூற்றாண்டு என்று நாம் இந்நூற்றாண்டைக் குறிப்பிடுகிறோம். ஆனால் அக்கிரமங்களும் அநாச்சாரங்களும் மலிந்து போன அமைதியற்ற உலகத்தையே காண் கதிறோம் . கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக சடவாத, மதச்சார்பற்ற சிந்தனைகளின் அடியாகவே இவ்வுலகத்தின் ஒழுங்கு தீர்மானிக்கப்பட்டு வருகிறது. வஹியின் (இறைகட்டளையின்) வழிகாட்டல்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. விளைவு?
1. மனிதர்களின் பண்புகளும் நன் நடத்தைகளும் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மோசமாகியுள்ளன.
2. குடும்ப அமைப்பு சீர்குலைந்து வருகிறது.
3. மதுவும் போதைப்பொருள் பாவனையும் களவும், கொலையும், பாலியல் துஷபிரயோகங்களும் சர்வசாதாரணமாகிவிட்டன.
4. ஆண் - பெண் தொடர்புகளில் பேணப்பட வேண்டிய எல்லா வரையறைகளும் நீக்கப்பட்டு விட்டன.
5. காதலும், சினிமாவும், நட்சத்திர நடன மேடைகளும் பொழுதுபோக்குகளாகி விட்டன.
6. ஆபாசத்திரைப்படங்களும், அரை நிர்வாண ஆடைக்கலாசாரமும் இளைய சமூகத்தை சீரழித்து வருகின்றன.
7. அநீதி, ஏமாற்று, மோசடி, பொய், பிறர் சொத்துக்களை அபகரிப்பது, அடுத்த சமூகங்களின் வளங்களை சுரண்டுவது, சுயநலம், பேராசை. போன்ற பண்புகளே மனித உள்ளங்களை ஆட்கொண்டுள்ளன. மொத்தத்தில் பண்பாட்டு விழுமியங்களை மறந்து பாதாளத்தை நோக்கி நாமெல்லோரும் சென்று கொண்டிருக்கிறோம். பல்வேறு சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் வஹியின் அருளைப்பெற்ற சமூகம் என்ற வகையில் இவ்விடயம் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். இந்நாட்டில் வாளேந்திப் போராடி இருப்பை நிலைப்படுத்திக் கொண்டவர்களல்லர் நாம். எமது மூதாதையரின் பண்புகளும் நடத்தைகளும் இன்று வரை இந்நாட்டில் நாம் நிலைத்து நிற்க காரணமாக இருக்கிறது.
எனவே எமது பண்புகளால் சான்றுபகர்ந்து எம்மையும் எமது குடும்பத்தையும், நாம் வாழும் கிராமங்களையும், நகரங்களையும், முழு நாட்டையும் பண்பாட்டு வீழ்ச்சியிலிருந்து பாதுகாத்து இஸ்லாமிய கோட்பாடுகள், வாழ்க்கை முறை, பண்பாடு நாகரீகம் என்பவற்றின் பால் மனித சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஒரு முன்மாதிரி சமூகத்தை கட்டியெழுப்ப அணிதிரள்வோம்!!!
கலை இலக்கிய சமூக (சி),

Page 18
!,ikiഖങ്
உன்னைப் பிரிந்து ஒதுங்கியிருப்பது எனக்குப் பெரிய பலம் உன்னால் இழந்த பேறுகள், ഖബ5ണt அது ஒரு கோடி பெறும்!
கண்ணை மூடித்திறப்பதற்குள்ளே என்னுள் நீ இருப்பாய். கண்டதையெல்லாம் அடித்து நொறுக்கி வெறுப்பை விதைத்திருப்பாய்!
எங்கும். எதற்கும். பொங்குவாய், அதற்கெலாம் முகங்கள் கொடுப்பவன் நான். என்னுள்ளிருந்து நீ உன் குணம் காட்டுவாய் நெருப்பு குளிப்பவன் நான்!
பேசுவதென்ன. கேட்பவர் யார் என கவலைப்பட மாட்டாய் நீ. பேசியவார்த்தை கூர் ஈட்டி பட்டு விழுந்தவர் இனிப்பேசார்!
இலக்கி
85g. O3
எங்கிருந்தெனக்குள் நுழைகிறாய்
உன்னால் என் பெயர் சகதியிலே. எனை விட்டு நீ போகும் வரைக்கும் இது ஒரு தொடர்கதையே!
என் பலவீனம் என்பது நீயா உனை தோற்கடிப்பேன். என்னுள்ளிருந்து இனி நான் துலங்கிடும் வழியைக் கடைப்பிடிப்பேன்!
உண்மையில் மனித உணர்வினையாளும் சின்ன பிசாசுகளை ஒழித்துச்சரித்து மிதித்துத் துவைத்தால் வாழ்வே குதூகலந்தான்!!!
கவிமணி நீலா பாலன்
க சஞ்சிகை
 
 

பூங்காவன &Phtj ,
ஏ.சீ. ஜரீனா முஸ்தபா வெலிவிட்ட
குழந்தை அழும் சத்தம் கேட்டது. மிக விரைவாக சமையலறை உபகரணங்களை கழுவி வைத்துவிட்டு உள்ளே வந்தாள் கிபாயா. சுகக்குறைவு காரணமாக அன்று வீட்டில் இருந்த கணவரிடம் குழந்தையைக் கையளித்துவிட்டு அவசரமாக வீட்டு வேலைகளை செய்து முடிப்பதில் ஈடுபட்டிருந்தாள். அவளுக்கு நான்கு குழந்தைகள். மூத்தவள் மூன்றாம் வகுப்பிலும், இரண்டாமவன் முதல் தரத்திலும், மூன்றாவது மகன் எல்கேஜிலும் கல்வி பயின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் மூன்று பேருக்கும் தேவையான அனைத்தையும் முடித்து பாடசாலை அனுப்பி வைத்து விட்டு வீடு பெருக்கும் வேலை தொடக்கம் அனைத்தும் செய்து முடிக்க பத்து மணியாகிவிட்டது. அழுக்கு துணிகளை சலவைத்துளில் ஊற வைத்து விட்டு நிமிரும் போது மீண்டும் குழந்தை அழும் சத்தமும், கணவரின் அழைப்புக்குரலும் கேட்டது. நீண்ட நேரமாக குழந்தையை அழவிடாமல் சமாளித்துக் கொண்டிருந்த ருஸ்தியால் அதற்கு மேலும் சமாளிக்க கஷ்டமாயிருந்தது.
குழந்தையைக் கையில் எடுத்தால் அவளுடனேயே சிறிது நேரம் கழிந்து விடும். ஆனால் அரிசியை அடுப்பில் வைத்து விட்டே போகலாம். சோறாவது வெந்து கொண்டிருக்கும் என நினைத்து அரிசியைக் கையில் எடுத்தாள்.
கோலிங்பெல் ஒலித்தது. ஒடிப்போய் கதவைத் திறந்தாள். ருஸ்தியின் நண்பர்கள் இருவர் வந்தரிருந்தனர். ருஸ் தி அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்க, அவள் தேனீர் பரிமாறினாள். அவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு தேவையின் நிமித்தமாக தலைநகரம் வந்திருந்தார்கள்.
நீண்ட காலத்துக்குப் பிறகு நண்பர்களைக் கண்டதில் தலைகால் புரியாத
கலை இலக்கிய சமூ), சஞ்சிை

Page 19
காவன
சந்தோஷத்தில் இருந்தான் ருஸ்தி. தடல்புடலாக சமைத்து அசத்த வேண்டும் என மனைவியைப் பணித்தான். அவளும் அவசரமாக இயங்கினாள். மீண்டும் சரியாக அளவு பார்த்து அரிசியைக்கழுவிய பிறகு தான் தெரிந்தது கேஸ் முடிந்திருப்பது. ஒரு கணம் திகைத்து நின்று விட்டாள். பிறகு சிலிண்டரை மாற்றிக்கொண்டு வரச்சொல்லாம் - என்று எண்ணியபோது அவர்கள் போகத்தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ருஸ்தியோ வலுக்கட்டாயமாக அவர்களை சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு வேண்டிக்கொண்டிருந்தான்.
‘ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கடா. என் வைப் குயிக்கா சமச்சிடுவா’
இந்த நேரத்தில் கேஸ் தீர்ந்துவிட்டதே என்று கூறினால் என்ன நினைப்பார்கள்? உடனே கிளம்பி விடுவார்களே. கூடாது. அவர்களுக்கு உணவு கொடுத்துத்தான் அனுப்ப வேண்டும். சிந்திதத்தபடியே சமையலறைக்கு வந்தவளுக்கு மண்ணெண்ணை அடுப்பு ஞாபகம் வந்தது. துருப்பிடித்திருந்த அதைத்துடைத்து திரிகளை சரிப்படுத்தி எல்லாம் செய்து அரிசியை வைக்கும் போது பண்ணிரண்டு மணியாகி விட்டது.
குழந்தை பசியால் அழுதுகொண்டே இருந்தது. இதில் கை வைத்தால் திரும்பவும் குழந்தையைப் பார்க்க முடியாது. முதலில் குழந்தையின் பசியைத் தீர்க்கலாம் என பாலைக் கலக்கிக்கொண்டு வந்து மடியில் இருத்தி பாலைப் புகட்ட ஆரம்பித்தாள். அவளுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்து. சோறு வெந்து முடியவே ஓரளவு நேரம் பிடித்து விடும். இதில் எத்தனை மணிக்கு மரக்கறிகள் முதல் எல்லாவற்றையும் தனியே வெட்டி சன்மத்து வந்தவர்களுக்கு உண்ணக்கொடுப்பது?
அவள் பல முறை சொல்லியிருக்கிறாள். விறகு அடுப்பு இருந்தால் நல்லது என்று. ஆனால் இப்போது தான் அதன் அவசியம் புரிந்தது. இப்படி அல்லல் படாமல் சிரட்டைகளை உடைத்துப்போட்டாவது சமைத்திருக்கலாம்.
தங்கச்சி நாங்க போயிட்டு வாறம்.
குரல் கேட்டு திடுக்கிட்டாள். கொஞ்சம் தாமதிக்கச் சொல்லியும் அவர்கள் போக தயாரானார்கள். அவளும் இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் சாப்பாட்டுக்கு நிற்பதை விரும்பவில்லை தான். எனினும் கணவனிடம் உண்மை நிலையை விபரித்தாலும், வீடு தேடி வந்தவர்களுக்கு உணவு கொடுக்காமல் அனுப்பிய துக்கம் இருவரையும் பிடித்துக்கொண்டது. அந்த வேதனை இரு உள்ளங்களையும் காயப்படுத்தியது!!!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

\ יי גן ווויWיא
இலக்கியமும் பிற துறைகளும் - ஒரு மேலோட்டம்
பேருவளை றபிக் மொஹிமன்
ஓர் ஆங்கிலக் கவிஞன் சொன்னான் நல்ல இலக்கியம் என்பது நல்லவராக வாழ்வது தானி என்று. அப்படியானால் நல்ல இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியும் தாகமும் எம்முள் கிளர்ந்தெழுவது தவிர்க்க முடியாத 醬 இக்கேள்வி இன்று புதிதாய் முளைத்ததல்ல. மொழியின் காழுகொம்பில் அதன் வரிவடிவம் எழுத்தாய்ப் படர்ந்த காலத்திலிருந்து இன்றைக்குள்ள சாதாரண வாசகனின் நெஞ்சுறுத்தல் வரை இக்கேள்வி தாக்கம் செலுத்துகிறது.
இந்த வகையில் இலக்கியம் என்றால் என்ன? கற்பனை கலைவண்ணம் கலந்து மனிதனுக்கு பயன்படும் வகையில் எழுத்து உருவாவதை இலக்கியம் எனலாம். நீண்ட இலக்கிய வரலாற்றைக் 驚十 தமிழ் மொழியானது காலம் தோறும் புதுப்புது இலக்கிய வகைகளைப் போற்றி வளர்த்து வருகிறது. எது இலக்கியம் என்று உணரலாமே தவிர உணர்த்த முடியாது. இலக்கியம் என்பது மனித நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கும், சமுதாய பண்பாட்டு வளர்ச்சிக்கும் வழிகாட்டுகின்ற உயர்ந்த இலட்சியங்களை கற்பனையும் கலைவண்ணமும் கலந்து தனிமனிதனுக்கும், சமுதாயத்துக்கும் பயன்படும் வண்ணம் எழுத்து வடிவில் உருவானதேயாகும்.
மேலும் இலக்கியம் என்றால் என்ன என்பதற்கு இன்று வரை யாராலும் ஒரு பூரணமான வரைவிலக்கணம் கொடுக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு அறிஞர்கள் பல கருத்துக்களை கூறியுள்ளனர். சாமுவேல் ஜோன்சன் என்பவர் எது இலக்கியம் இல்லை என்று கூறுவது எளிது. எது இலக்கியம் என்று உணர்த்துவது முடியாது’ என்கிறார்.
இலக்கியமானது நிலையானதும் இன்பம் தரவல்லதுமாகும். கவிஞனின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதும் அதைப் படிப்பவர்களின் உள்ளங்களில் உணர்ச்சியைப் பெறுக்கெடுத்து செல்வதுமாகிய ஒரு உன்னதமான மனித வரலாறு அடங்கியதே இலக்கியம் என்பதாக வின்ஸ்ரன் என்ற அறிஞர் கூறுகிறார். இலக்கியம் என்றால் அழகை தேடும் முயற்சி, உண்மையைத் தேடும் முயற்சி, மிக நுண்மையான உணர்ச்சிகளின் வெளிப்பாடு, எல்லா சுவைகளை வெளிப்படுத்துவது அறிவு பூர்வமாகவும் உட்கலந்து வரும் படிமம் என்று பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
சாதாரணமாக ஒரு பெண்ணை நோக்கும் போது அவள் சாதாரண மானிடப் பிறவியாக நோக்கப்படுவாள். ஆனால் அவளை இலக்கிய கண்ணுடன் நோக்கும் போது
'இன்பமது குடமாய் ஞானத் திருவடிவமாய் கான மதுரமாய் கண்ணிறைந்த பேரழகாய்'
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 20
j566
85. O3
நோக்கப்படுவாள். மேலும் இலக்கியம் என்றால் என்ன என்பது பற்றி அமேசன் என்பவர் கூறும் போது இலக்கியமானது சிறந்த கருத்துக்கள் அடங்கிய நூலாகும். இலக்கியமானது கருத்து சார்ந்ததா அல்லது உணர்வு சார்ந்ததா என சிந்திக்கும் போது பிரச்சனைகள் தோன்றுகின்றன என்கிறார்.
இலக்கியம் பற்றி அரிஸ்ரோட்டில் இப்படி குறிப்பிட்டுள்ளார். 'இலக்கியம் என்பது ஒரு வரையறைக்குள் வராது. அது ஒரு கலைச்சொல். நல்ல படைப்பாளியின் இலக்கியத்தை புரிந்து கொள்ள முடியும். எவ்வாறெனில் விவசாயி நல்ல பயிர் எது? களை எது? என தெரிந்து கொள்வது போல என்கிறார்.
இலக்கியம் பற்றி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறும் போது "இலக்கியமானது சொல்லையே குறியீடாகக் கொண்டுள்ளது. மனித உள்ளத்தில் கருதுகோள் தோன்றுவதற்கு மொழி அவசியம். அக்கருதுகோளை வெளியிடவும் மீளாக்கம் செய்யவும் மொழி அவசியம். இதனை கவிஞன் அல்லது வாசகன் பயன்படுத்தும் போது அனுபவத்தொடர்பு வழியாக ஏற்படுகிறது என்கிறார். இலக்கியம் சமுதாயத்தின் முக்கிய அம்சமாகும் என்கிறார்கள் திறனாய்வாளர்கள்.
பேராசிரியர் கைலாசபதி கூறும்போது 'மொழியினை ஆய்வதாலேயே நல்ல இலக்கியத்தைப் பெற முடியும் என்கிறார். டாக்டர் வரதராசன் கூறுகையில் ‘ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலியவற்றை வளர்த்து பயன்படுத்துவது சமுதாயத்தின் இலக்கியம்' என்கிறார். அதுமட்டுமல்ல அனுபவத் தேறலின் கரைசலே இலக்கியமி' என்பதாக கவிஞர் முருகையன் குறிப்பிடுகிறார்.
இலக்கியம் பற்றி டேவிட் க்ரைட் வரலாற்றில் தொழிற்படும் ஆழவேரூன்றிய சக்திகள், அதாவது வாழ்க்கை முறை பற்றி சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடையே இடம்பெறும் போராட்டங்கள் வாழ்க்கை முறையை, மாற்றி அமைக்கின்ற மக்கள் வாழ்வதற்கென ஒழுங்குபடுத்தப்பட்டு உழைக்கும்போது மாற்றி அமைக்கப்படுகின்ற இந்த உறவுடன் (உளவியல், வாழ்வு, உடை, உறையுள்) இந்த மாற்றமைப்பு புதிய தொடர்புமுறை அமைப்புக்கள் தோன்றுவதற்கு இடமளிக்கும். இது ஒரு சார்பினரால் மக்களுக்கான வாய்மொழி பாடமாகவோ கலப்பு சார்பினருக்கான வணிக விநியோக நிலைப்பட்ட அச்சுமுறை ஆக்கங்களாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கலாம். இதன் அடியாக சொல்லால் தோன்றும் பெரும்பாலும் இசையுடன் வரை கலையுடனும் இலக்கியம் தோன்றும். அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களில் புதிய பிரச்சனைகளை எடுத்துக்கூறுவதாக அமையும். இவ்வாறு எடுத்துக்கூறப்படுவது தனிப்பட்ட கலைஞர்களது உள்ளார்ந்த சூழுல் தாக்கம் பெற்ற நிலைமைகளுக்கு இயைந்த பாணியிலேயே அமையும். அத்துடன் அவை அச்சமுதாயத்தில் அக்காலத்திலே நிலவும் தொடர்பு சாதனங்களுக்கேற்றதாக அவற்றின் வழியாக வருவனவாக அமையும்.
பண்டைய இலக்கணம் கூறும் நூல்கள் கூட இலக்கியம் என்றால் என் என்பதற்கு தெளிவான வரைவிலக்கணத்தைத் தரவில்லை. இலக்கணமானது மேலோங்கவும் இலக்கியம் பற்றிய செய்திகள் மழுங்கடிக்கப்படுகின்றன.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

Бl:1ыт66йіні: 鑫 &以川j ()°
இலக்கியம் ஒரு சமுதாயத்தின் உணர்வு பூர்வமான பண்பாட்டு அம்சங்களின் தொகுதியாக விளங்குகிறது. ஒரு நாட்டின், இனத்தின், சமூகத்தின் பழைய புதிய எண்ணப்போக்குகளின் வெட்டுமுகத்தோற்றம் போல இலக்கியம் இருகக் வேண்டும். இவ்வகையான இலக்கியங்கள் நாட்டின் சொத்துக்களாக கருதப்படுகின்றன. ஒரு சமுதாயத்தினுடைய அரசியல், பண்பாட்டு, மானிடவியல் வரலாற்றில் ஆய்வுகளுக்கு இலக்கியமே முக்கிய சான்றாக அமைகிறது. இன்றைய புகலிட சூழலில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கின்ற அதாவது மண்வாசனையுடன் பண்பாடு மாறல் இலக்கியம் படைக்கிற வ.ஐ.ச. ஜெயபாலன் சக்கரவர்த்தி போன்ற நீண்ட பட்டியலைக் குறிப்பிடலாம். இலக்கியங்கள் மனித வாழ்க்கையின் நெருக்கடிகளை துன்பத்தில் உழலும் ஆன்மாவின் பெருமூச்சுகளை அற்புதமான சிருஷ்டிகளின் மூலம் படம்பிடித்து காட்டுபவையாக மிளிர வேண்டும்.
பிரச்சனைகளின் வேர் பற்றி பேசுகிற இலக்கியங்கள் கனவுகளின் இலக்குகள் பற்றியும் பேச வேண்டும். அழகுணர்ச்சி பற்றி பேசுகின்றவை ஆழமாக பேச வேண்டும். அழகியல் தான் இலக்கியங்கள் என்று வாதிட்ட காலம் கடந்து, குப்பைத்தனமானவை வாசிப்புக்குட்பட்டு அவையும் அம்பலமாக வேண்டும் என்ற கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
இலக்கியம் என்ற கற்பனையின் ஊடாக வாழ்வை வெளிப்படுத்தும் போது அதன்மீது மாயத்திரை படிந்து விடுகிறது. இம்மாயத்திரையின்றி நம்மால் இலக்கியத்தை நேசிக்க முடியுமா? வாழ்க்கைக்கு இல்லாத பூச்சை இலக்கியத்துக்கு தந்து அதனை நேசிப்பது வாழ்வை நேசிப்பதாகுமா? குணங்களுடனும், குறைகளுடனும் வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது.
ஓர் இலக்கியம் ஆற்றுகின்ற பணிகளின் தன்மையை பொறுத்தும் அவை இலக்கியம் என பேசப்பட்டது. புதுத்திறனாய்வு, வடிவமைப்பு அமைப்பியல் என்பன ஒன்றிணைந்து உள்ளடக்கியதே இலக்கியம் என்ற இன்னொரு சாராரின் கருத்து முக்கியமானதாக கொள்ளப்படுகிறது.
காலத்துக்குக்காலம் தோன்றுகின்ற வாசகரின் திறனும் ரசனையும் மாற்றமடைகின்ற சூழலில் அவர்கள் இலக்கியம் பற்றி கொண்டிருக்கின்ற கருத்தோட்டங்களும், விமர்சனங்களும் நேர்கோட்டு பார்வையில் அமைந்ததாக இருப்பதில்லை. ஆனாலும் சங்க இலக்கியங்கள் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பாரதியார் கவிதைகள் என்பன தொடர்ந்தும் இலக்கியங்களாக பேணப்பட்டு வருகின்றன.
இலக்கியம் என்பது ஒரு தொழிற்பாடு கலைச்சொல்லே தவிர அதன் உண்மையை அல்லது இருப்பைக் குறிக்கும் பொருண்மை கலைச்சொல் அல்ல என தத்துவ மேதைகள் வாதிடுகின்றனர். அகராதி தயாரித்த ஜோன்சனால் கூட இலக்கியம் என்னவென்று வரையறுக்க முடியாமற் போனது. எப்படியேர் இலக்கியமானது வாழ்க்கை இலக் கரியம் என்ற முக்கோணத்திலிருந்து மணம் வீச வேண்டும். சரியான வரையறை இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட நூல்களை வைத்துக்கொண்டே இத்தலைமுறைகள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் இன்றை இளைய தலைமுறையினர் மத்தியிலும் புதிய கருத்துக்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கலை இலக்கிய சமூக (சி),

Page 21
Jílesne)|6ní
இது வரையில் இலக்கியம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்களை நோக்கினோம். இனி இலக்கியமானது ஏனைய துறைகளுடனும் தொடர்பு பட்டது என்ற வகையில் ஒப்பிட்டு நோக்குவோம்.
நடைமுறை வாழ்க்கையோடு இணைந்து இலக்கியம் மிக சுருக்கமாக இனிமையாக சொல்லும் காலகட்டத்தை பிழிந்து சாறாக தரவல்லது. அழகுணர்ச்சி மிக்கது. இலக்கியத்துடன் விஞ்ஞானத்தை ஒப்பிடும் போது விஞ்ஞானம் எல்லாம் சமன் என்றும் ஆனால் இலக்கியம் எல்லாவற்றையும் நுட்பமாகவும் நுணுக்கமாகவும் உணர்வுகளை பதிவு செய்கின்ற இலக்கியத்தை விஞ்ஞானத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது விஞ்ஞானம் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையை மட்டும் பேசுகிற விஞ்ஞானம் போன்ற துறைகள் நாணயத்தின் ஒரு பக்கத்தையே நோக்குகின்றன. கணக்கியல் போல இலக்கியம் ஒருபோதும் நேராக பேசுவதில்லை.
இலக்கியம் சொல்ல முடியாதளவு பெரும் பரப்பையுடையது. அவை சமூக பண்பாட்டு விழுமியங்களை காட்டுபவை. நவீன இலக்கியத்தின் அம்சங்களில் ஒன்று புதுமையை, மாற்றத்தை பிரஞ்சை பூர்வமாக மேற்கொள்வதாகும் என்று கைலாசபதி குறிப்பிடுகிறார். மனித நடமுறைவாழ்ககையோடு மிக இணைந்து காணப்படுகிறது. வாழ்க்கையை விளக்குவது, வழிகாட்டுவது. தனியெருவனின் அனுபவங்களை கலந்திடச் செய்வது இலக்கியம். இதற்கு ஊடகமாக மொழி அமைகிறது. இதனால் இலக்கியமானது மொழி மூலம் பயன்படும் கலை எனலாம்!!!
with Best Compliments From...
岛 POOBADASIOGAD). BOOK DOPOC
IMPORTERS, EXPORTERS, SELLERS & PUBLISHERS OF BOOKS STATIONERS AND NEWSAGENTS
202, Sea Street, Colombo - 11, Sri Lanka
Tel-2422321, 2435713 Fax-2337313 E-mail-pbdho(asltnet.lk
YBranches
340, Sea Street, 309A-2/3,Galle Road, 4A, Hospital Road, Colombe-s 1, Colonobo O6, Jafna. Sri Larpka. Sri Lanka. Tel: O21-2226693 Tel: 2395665 Tel: 4515775, 25O4266
E}96ỗ) 6ì) கிய சமுக சஞ்சில்):
 
 

||4|ബങ്ങ
Spril ) ( ) 3
சீதையாய் முதிர்கன்னிகள்
என் முகத்தைக் காட்டினேன் நிலைக்கண்ணாடிக்கு குழந்தையாய் மறைக்காமல் பளிச்சென்று சொன்னது என் வயதை வெள்ளி முடிகளை துலாம்பரமாக்கி
முதிர்கன்னிகளுக்கு முண்டுகொடுக்க வருபவர்கள் துச்சாதனர்கள் மட்டுமே இராமனைத்தேடியதில் வயதை உயர்த்தின வருடங்கள்!
கேள்வி எழுப்பி உறுத்துகின்ற இளமை உணர்வுகளின் உணர்ச்சிப்பெருக்கிற்கு தீனி போட முடியாத தீண்டப்படாத முதிர்கன்னி நான்!
இடருறுத்தும் உலகில் இம்சைகளை சகித்தபடி இராமனின் வருகைக்காய் இன்னும் எத்தனை காலம் தான் சீதையாய் வாடுவது?
சந்திரகாந்தா முருகானந்தன்
8 in LF bluff6)
குறைந்து விடுகிறது சின்னவனின் மதிப்பெண்கள்!
நாகரிக மோகத்தில் ஸ்தம்பித்துக் கிடக்கிறது "பெரியவளின் பொழுதுகள்
சின்னத் திரைக்குள் சுழன்று திரிகிறது 'மனைவியின் கடிகாரம்'
வாழ்வியல் சீர்திருத்தம் பெரும் புலம்பலாய்க் கழிகிறது 'குடிகாரத் தந்தைக்கு
ஒருவரை ஒருவர் சுட்டிக் கொள்கையில் செத்துப் போகிறது வாழ்க்கை!!!
மன்னார் அமுதன்
1,63) en 3) onmi, fl.1 *) (IJnei, ( ) (oilbiefst 0), ),

Page 22
போர்க்கால இலக்கியங்கள் சமகாலவியல் நோக்கில்
பார்வை ே துஷயந்தன் QQ5 リ யாழ் - அல்வாய்
ஈழத்து நவீன தமிழ் இலக்கியப் பரப்பானது அதன் காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றாற்போல அபரிமிதமான ஒரு வளர்ச்சிப் படிநிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக இலக்கியங்களின் வளர்ச்சிப் படிநிலை என்பது அடிப்படையில் அவ் இலக்கியங்களின் வெளிப்பாட்டு நிலை உத்திகளில் தங்கியிருக்கிறது. ஈழத்து நவீன தமிழ் இலக்கியப் பரப்பானது தனியே ஒரு தளத்தில் இருந்து விரிவடையாது பல்வேறு தளங்களிலிருந்து விரிவடைவதன் ஊடாக கவனிப்புக்கு உரியனவாகவும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் கருதப்பட்டு வருகிறது. ஈழத்து நவீன தமிழ் இலக்கியப்பரப்பு தம்மிடத்தே கொண்டுள்ள தகைமைகளில் முக்கியம் வாய்ந்தனவாகவும், விதந்து நோக்கத்தக்க வகையிலும் காணப்படுகின்ற ஒரு இலக்கிய வடிவமாக கொள்ளப்படுவது இப் போர்க்கால இலக்கியங்களாகும்.
இன்று சமகால வாழ்வியலில் நாட்டின் சாதகமான போக்குநிலையை வைத்துக்கொண்டு அண்மைக்காலமாக இலக்கியக்காரர்களிடமும் சரி, இலக்கிய ஆர்வலர்களிடமும் சரி அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்ற ஒரு வார்த்தையாக மட்டுமல்லாது அதன் இருப்பு, எதிர்காலம் என பல கோணங்களில் நோக்கத்தக்க வகையில் இப்போர்க்கால இலக்கியங்கள் பற்றியதான சில பிரக்ஞை பூர்வமான கருத்தியல்களை முன்வைக்க முனைவதே இக்கட்டுரையின் நோக்கம். ஈழத்து நவீன தமிழ் இலக்கிய மரபை பொறுத்தவரை அவை முற்போக்கு இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், குழந்தை இலக்கியம், போர்க்கால இலக்கியம், நாட்டார் இலக்கியம் என ஒவ்வொரு வகைமைப்பாட்டினூடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இவற்றினுள்ளே அண்மைக் காலமாக எல்லோராலும் பேசப்படக்கூடிய ஒரு இலக்கிய வடிவமாக விளங்குவது போர்க்கால இலக்கியங்கள் ஆகும்.
போர்க்கால இலக்கியங்கள் என்பவை ஈழத்து போராட்ட காலங்களில் எழுந்த கருத்தியல்களை முன்வைத்து போராட்ட காலங்களில் முகிழ்ந்தெழுந்தவையாக கணிக்கப்படுகின்றன. இவற்றில் போரியலின் முக்கியத்துவம், விளைவுகள், வெற்றி, இழப்பு, பிரிவு போன்ற மனித உணர்வுநிலை சித்தரிப்புக்கள் முதனிலை பெறுகின்றன.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 

இதழ் (:
ஈழத்து போர்க்கால இலக்கியங்கள் யாவும் தனியே போராட்டத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தியனவாக அமைந்திருக்கவில்லை. அவை போராட்ட வலி, போரின் நிமித்தம் ஏற்பட்ட பிரிவு, இழப்பு, வீரதாபங்கள் என்பவற்றையும் தொட்டுச்சென்றிருக்கின்றன. இன்றைய சமகால வாழ்வில் நாட்டின் சாதக தன்மையை பயன்படுத்திக்கொண்டு போர்க்கால இலக்கியங்களின் இருப்பு மீது பல சந்தேகக் கணைகள் முளைவிடத் தொடங்கியிருக்கின்றன.
போர்க்கால இலக்கியங்களின் எழுச்சிக்கும் சரி, தோற்றுவாய்க்கும் சரி, ஈழத் திலும் சரி, ஈழத் திலிருந்து புலம் பெயர் நாாடுகளில் வசித்துக்கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களின் பங்களிப்பு காத்திரமானது. ஈழத்து போர்க்கால இலக்கியயங்களை பல படைப்பாளிகள், தமது படைப்பினூடாக வெளிக்கொணர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரினது தரவுகளைuம் இங்கு கூறுவது அசாத்திwமWகிறது. போர்க்கால இலக்கியப் படைப்பாளிகளுள் கவிஞர் காசி ஆனந்தன், பண்டிதர கா.பொ. ரத்தினம் போன்றவர்களின் பங்களிப்பு காத்திரமானது. விடுதலை உணர்வினை மெருகூட்டும் வகையிலான இவர்களின் பல படைப்புக்கள் 70களில் சுதந்திரன், தீப்பொறி போன்ற ஏடுகளில் பிரசுரமாகத்தொடங்கின.
போர்க்கால இலக்கியங்களுக்குள் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என ஒவ்வொரு பிரிவுகளுக்கூடாகவும் இவை அதிகப்படியாக எழுந்தன. ஈழத்தை பொறுத்தமட்டில் போர்க்கால இலக்கியங்களின் நிலையான இருப்பிற்கு பல படைப்பாளிகள் வலுச்சேர்த்திருந்தார்கள். ஈழத்து நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இப்போர்க்கால இலக்கியங்கள் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது என கூறிக்கொள்ளலாம்.
ஈழத்து போர்க்கால இலக்கியங்கள் எழுச்சிக்கும் சரி, வளர்ச்சிக்கும் சரி அக் கால படைப் பாளிகளின் காத் திரமான படைப் புக்கள் வலுச்சேர்த்திருக்கின்றன. ஈழத்து போர்க்கால படைப்பாளிகளில் இற்றைவரை முக்கியமான ஒருவராக கணிக்கப்படுபவர் கவிஞர் உ. சேரன் ஆவார். கவிஞர் உ. சேரன், அ. யேசுராசா, இ. பத்மநாத ஐயர், பி. நடராஜன் இந் நான்கு படைப்பாளிகளும் சேர்ந்து தொகுத்து வெளியிட்டிருந்த மரணத்துள் வாழ்வோம்' என்ற கவிதைத் தொகுப்பானது இற்றை வரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கொள்ளப்படுகின்றது. ஈழவிடுதலைப் போராட்டம் ஒரு காலகட்டத்தில் உக்கிரமான வளர்ச்சியை அடைந்ததற்கு இப்போர்க்கால இலக்கியங்கள் தான் காரணம் என்று சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கணிக்கப்படுகின்றது. இவ்வாறு ஈழவிடுதலை உணர்வை மென்மேலும் அதிகரிக்கும் வகையிலான பல படைப்புக்கள் வெளியாகின்ற போது பல இளைஞர்கள், யுவதிகள் உணர்ச்சிகளின் உந்துதல்களால் போராட்டத்தில் இணைந்திருந்தார்கள்.
கவிஞர் உ. சேரனைப் போலவே போர்க்கால படைப்பாளிகளுள் வ.ஐ.ச. ஜெயபாலன், புதுவை இரத் தரினதுரை போன்றோர்களும்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 23
பூங்காவ
கவனிப்புக்குரியவர்களாக திகழத் தொடங்கியிருந்தனர். புதுவை இரத்தினதுரையின் 'இரத்த புஷ்பங்கள்', ‘நினைவழியா நாட்களிலிருந்து போன்ற கவித்தொகுப்புக்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்து கவனிப்புப் பெற்றன. இக்காலகட்டத்தில் பல போராளிக்கவிஞர்கள் முகிழ்ந்தெழுந்தனர். மேலும் இக்காலகட்டத்தில் தாமரைச்செல்வி என்ற படைப்பாளியின் 'அழுவதற்கு நேரமில்லை’ என்ற தொகுப்பு கவனிப்புக்குரியதாக கொள்ளப்படுகிறது. அத்துடன் நாடறிந்த எழுத்தாளர் செங்கை ஆழியானும் சில போர்க்கால இலக்கியங்களை படைத்திருக்கின்றார். இவரது "இரவு நேரப்பயணிகளி' என்ற படைப்பு போராட்ட சூழலில் தமிழ் மக்களது அவலங்களை முன்னிலைப்படுத்தி எழுந்த ஒரு படைப்பாகும். இவை தவிர யாழ்ப்பாணத்து இராத்திரிகள்', 'கொழும்பு லொட்ஜ் போன்ற இவரது படைப்புக்களும் கவனிப்புக்குரியனவாய் அமைகின்றன. இப்போர்க்கால இலக்கியங்கள் ஈழத்து நவீன தமிழ் இலக்கியப் பரப்பிற்கு ஒரு உத்வேக நிலையை வழங்கியன என்று சொல்லுமளவிற்கு இவை முக்கியம் பெறுகின்றன. இலக்கியங்கள் என்பவை காலத்தின் கண்ணாடி என்று கூறுகின்ற கருத்து நிலை இப்போர்க் கால இலக்கியங்களால் சான்றாதாரங்களுடன் நிரூபணமாகின்றன.
இன்று போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின் போர்க்கால இலக்கியங்களின் இருப்பு மீதும் அதன் எதிர்காலம் மீதும் பல கருத்தியல்கள் முன்வைக்கப்படுகின்றன. போர் முடிவுற்றிருக்கின்றது, இனி போர்க்கால இலக்கியங்கள் என்ற வகைமைக்குள் எதை எழுதுவது என்று சிந்திக்கும் சில படைப்பாளிகள் அண்மைக்காலமாக போராட்ட காலத்தையும், போராட்டத்தையும் கீழ் நிலைப்படுத்தி சில படைப்புக்களை எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.
"போரியல் வாழ்வு முடிவுக்குகொண்டுவரப்பட்டு விட்டது என்று கருதினாலும் கூட போரியல் வாழ்விற்குள் சிக்குண்டு தவித்த மக்களுடைய இன்னல்கள், துயரங்கள், உறவுகளின் பிரிவுகள், இழப்பு என பல வெளிவராத தகவல்கள் அண்மைக் காலமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று போர்க்கால வாழ்வையும், போராட்ட சூழலையும் கீழ் நிலைப்படுத்தி எழுதிக்கொள்ளும் படைப்பாளிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். போரியல் நடைமுறை வாழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் கூட இத்தனை ஆண்டு இப்போர்க்கால வாழ்வை அனுபவித்த மக்களுடைய பிரிவுத்துயர், இடப்பெயர்வு, அகதி வாழ்வு, இழப்பு போன்ற என்றும் கரைக்க முடியாத துன்பங்கள் இருக்கும் வரை இப்போர்க்கால இலக்கியங்கள், நவீன தமிழ் இலக்கியச் சூழலில் நிலையாக இருந்துவிடத்தான் போகின்றது. இதனுடாக இன்னும் பல புதிய ‘போர்க்கால வாழ்வை முன்னிலைப்படுத்தி படைப்புக்களைப் படைக்க இருக்கின்ற பல புதிய படைப்பாளிகள் நிச்சயமாக முகிழ்ந்தெழுவதற்குரிய சாத்தியப்பாடுகள் நிறையவே இருக்கின்றன என்று சொல்லின் அது மிகையாகாது!!!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

பூங்காவணம் 43 Köhl (J)
ങ്ങ് ീ ഖ O
'(.
அறிவாட்சி தனதாக்கி அதன் சாட்சி நெறி கூட்டி செறிவாக மெருகூட்டும் சிற்றேடே வாழியவே.
அழகான வழிகாட்டி அதன் மாட்சி நடைகூட்டி ஆள்கின்ற அல்லாஹற்வின் அருளோடும் அண்ணலார் ஆசியோடும் பூத்துவரும் பூங்காவனமே பல்லாண்டு வாழ்க நீயே!
மூதூர் கலைமேகம்
Best Queen Foundation eup6)f G66full (686irp classrougOTf சஞ்சிகையின் இரண்டாவது இதழ் கிடைக்கப்பெற்றது. பெருமகிழ்ச்சி. எத்திக்கும் மலர்ந்து மணம் வீசும் பூங்காவனமே! நீ மூத்த கலைஞர்களுக்கு இடம் தருவதுடன் வளர்ந்து வரும் இலக்கியக்காரர்களுக்கும் களம் தருகிறாய். உன் சேவை என்றும் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சுங்காவில் ரியாழ்
புதிய முயற்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் உங்கள் பூங்காவனம் சஞ்சிகையின் முதலிரண்டு இதழ்களும் வாசிக்கக்கிடைத்தது. முதலாவது சஞ்சிக்ையைவிட இரண்டாவது சஞ்சிகை, கனதியான அம்சங்களை உள்ளடக்கியும், மூத்த இலக்கியவாதிகளின் கட்டுரைகளைத் தாங்கியும் வந்திருக்கிறது. இது உங்கள் வளர்ச்சிப்படிக்கு சான்றுகோளாய் இருக்கின்றது. தொடர்ந்தும் பூங்காவனம் மணம் கமழ வாழ்த்துக்கள்!
அஸ்கியா பானு - மாதம்பை
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 24
Filei, T665i
பெயர்-வெறிச்சோடும் மனங்கள் (கவிதை) நூலாசிரியர்-வெ. துஷ்யந்தன் (o)g56oeo3Lusf - O777l855 வெளியீடு-ஜீவநதி
656Oa - 20O/F
பெயர் - வெற்றியின் பங்காளிகள் (நாவல்) தமிழாக்கம் - திக்குவல்லை கமால் தொலைபேசி - O7 6536955 வெளியீடு-தோதென்ன வெளியீடு 656Oa) - 15O/r
பெயர் - தொடரும் உறவுகள் (சிறுகதை) தமிழாக்கம் - திக்குவல்லை கமால் தொலைபேசி - O71 6336955 வெளியீடு-தோதென்ன வெளியீடு விலை - உOO/=
பெயர் - விடை தெரியா விடுகதைகள் (கவிதை) நூலாசிரியர் - கலைமதி யாஸின் (6)gibeoeoG3Lef - O38 2298O2O வெளியீடு-படி பதிப்பகம்
656Oa) - 15O/r
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 
 
 

|}|}|{{{്വങ്ങ if ( ):
பெயர் - கடைசி வரிகள் (கவிதை) நூலாசிரியர் - ஏறாவூர் தாஹிர் தொலைபேசி - O65 22 4O396, O65 49Ol36 வெளியீடு-ஏறாவூர் வரலாற்று ஆய்வு மையம் விலை-25O/=
täitmi Sofie பெயர் - தனித்தலையும் பறவையின் துயர்
கவியும் பாடல்கள் (கவித்ை) நூலாசிரியர்-றகுமான் ஏ. ஜமீல் 6) IT60)6(3Llaf - O77.9689392 வெளியீடு- புதுப்புனைவு இலக்கிய வட்டம் 65606 - 12O/F
பெயர் - விதி வரைந்த கோலங்கள் (கவிதை) நூலாசிரியர்- அனலக்தர் தொலைபேசி - O65 3643541 வெளியீடு-ஏறாவூர் வரலாற்று ஆய்வு மையம் விலை - 15O/=
பெயர்- ரமழான் ஸலவாத் நூலாசிரியர்- மருதூர் ஜமால்தீன் 65IT6066 Jef - O75 3798 958
கலை இலக்கிய சமூக 6

Page 25
பூங்காவன
பெயர்-நிழல் தேடும் கால்கள் (கவிதை) நூலாசிரியர்-நிந்தவுர் ஷிப்லி தொலைபேசி - O7) 6O359O3 வெளியீடு-தென்கிழக்கு பல்கலைக்கழகம் விலை - 120/=
பெயர்-ஆக்கிரமிப்பின் கால் தடம் (கவிதை) நூலாசிரியர் - எல். வஸிம் அக்ரம் தொலைபேசி - O713485OGO வெளியீடு- படிகள் பதிப்பகம்
விலை - IO/= ගිං ගඟීෂී හී
பெயர் - சிகத்த இருட்டு (கவிதை) நூலாசிரியர் - அஸாறுதீன் தொலைபேசி - O67 226O286 வெளியீடு-தென்கிழக்கு பல்கலைக்கழகம் єївоєо — 2oo/=
பெயர்-வேலிகளைத் தாண்டும் வேர்கள்
(கவிதைத் தொகுப்பு) தொகுப்பாளர்கள்- நாச்சியாதீவு பர்வீன்
எல். வஸ்லீம் அக்ரம் 6)S5nra))G\oGL-Jðf - O71 3485O6O வெளியீடு- படிகள் பதிப்பகம் விலை - 15O/=
on இலக்கிய gepas JebefGoa,
 
 
 
 
 
 
 

இதழ் ()
பெயர் - உயிர் வலி (சிறுகதை) நூலாசிரியர் - உ. நிசார்
தொலைபேசி - O352.2484O9, O778 21628) வெளியீடு- பானு பதிப்பகம் விலை -2OO/=
பெயர் - இளையநிலா (சிறுவர் பாடல்கள்) நூலாசிரியர் - உ. நிசார் G5II6O)6C3Llaf - O35 22484O9, O778 21628) வெளியீடு- பானு பதிப்பகம்
6.760)au -1OO/=
பெயர் - பாவிருந்து (சிறுவர் பாடல்கள்) நூலாசிரியர் - உ. நிசார் 6) II6O)6C3Lief - O35 22484O9, O778 21628) வெளியீடு- பானு பதிப்பகம்
6.760)au -1OO/=
பெயர் - ஓயாத அலைகள் (கவிதை) நூலாசிரியர் - உ. நிசார் G) IT6OabC3LJaf - O35 2484O9, O778 21628) விலை - 13O/=
கலை இலக்கிய சமூக சடு

Page 26
பூங்காவன
புரவலர் புத்தகப் பூங்காவினால் வெளியிடப்பட்ட நூல்கள். தொடர்புகளுக்கு - O774161616, O7853185O3, விலை - 150/=
பெயர்-மைவிழிப் பார்வையில்
(மாதர் கட்டுரை) நூலாசிரியர்-ஷாமலா ஸ்டீவன்
பெயர் - நான் நீகடவுள் (உருவகக் கதை) நூலாசிரியர்-கலை அமுதன்
எம். ஸி. எம். இக்பால்
பெயர் - ஒரு மணல் வீடும்
சில எருமைமாடுகளும் (சிறுகதை) நூலாசிரியர்-சிவனு மனோகரன்
பெயர்- ரயிலுக்கு நேரமாச்சு (சிறுகதை) நூலாசிரியர்-கவிப்பிரியா நிஷா
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 
 

with Best Compliments From...
| TOP OUEEN
Digital Printing Art Work
Sign Board Plastic Board Digital Name Board Screen Printing Visiting Card Rubber Stamp All Wedding Decoration Digital Technology
0
()
()
0
()
()
()
()
()
()
All Works are Available With Graphic Designing
Office - Branch - 126/1, Main Street, 20, Main Street, Kalmunai, Maligaikadu, Sri Lanka. Sri Lanka. Te - 077 9027514 Te|| - 067 3673489
O77 9593.559 O774531111
E-mail :- topcueen.adGigmail.com

Page 27