கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எயிட்ஸ் இல்லாத உலகம்

Page 1


Page 2

எயிட்ஸ் இல்லாத உலகம்
Dr. S. Muruganandan RMO (CYE)
பதிவு வைத்திய அதிகாரி (எயிட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மருத்துவ அணி உறுப்பினர்)
நிரந்தர விலாசம் - கரணவாய் கிழக்கு
கரவெட்டி
டாக்டர். ச. முருகானந்தன்
81, மெனிங் பிளேஸ்
வெள்ளவத்தை
மீரா வெளியீடு - 69

Page 3
நூல் விபரம்
நூலின் தலைப்பு ஆசிரியர் மொழி பதிப்பு ஆண்டு பதிப்பு விபரம் -- உரிமை தாளின் தன்மை நூலின் தன்மை அச்சு எழுத்து அளவு - மொத்த பக்கங்கள் - நூலின் விலை அட்டைப்படம் லேசர் வடிவமைப்பு - அச்சிட்டோர்
ISBN 978-955-50232-38
மீரா வெளியீடு 69
எயிட்ஸ் இல்லாத உலகம் டாக்டர். ச. முருகானந்தன் தமிழ்
2008
முதற்பதிப்பு
ஆசிரியருக்கு
63 ebusT 150
Paranan Associates Private Limited, 403 1/1, Galle Road, Colombo - 06, Tel: +94 11 2551241,+94 11 2551641 Fax : --94 11 2507932 E Mail : parananassociate(Gyahoo.com
Dr. S. Muruganandan RMO (Cey)
Divisional Hospital Mulankawil

எனினுரை
இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நோய் எயிட்ஸ் ஆகும். புலப்பெயர்வின் பின் எமது நாட்டையும் எயிட்ஸ் எட்டிப் பார்த்துள்ளது. உலகமயமாதலும், உல்லாசப் பயணத்துறையும் இந்த நோயை எமது நாட்டில் விதைத்து வருகின்றன.
எமது அண்மை நாடான இந்தியாவில் - அதுவும் தமிழ் நாட்டில் எயிட்ஸ் பரவும் வேகம் மிக வேகமாக உள்ளமை எமக்கும் உசார் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே எயிட்ஸ் பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பதும், அதன் மூலம் நோய்த் தொற்றைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.
எயிட்ஸ் பற்றிய நூல்களின் வரவு எமது நாட்டில் குறைவாகவே உள்ளது. எனவே இதன் அவசியம் உணரப்பட்டு இந்நூலை எழுதுகிறேன். இதிலுள்ள கட்டுரைகள் பலவும் அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதப்பட்டவையே. எனவே சொல்வது மீளச் சொல்லல் காணப்படுகிறது. எனினும் இது கூட விழிப்புணர்ச்சிக்கு உந்துகோலாக இருக்கும் என எண்ணுகிறேன்.
காலத்தின் தேவை கருதி நூலை வெளியிட முன்வந்த பரணன் பதிப்பக உரிமையாளர் பரணனுக்கும், மீரா வெளியீட்டு அதிபர் இரத்தினவேலோனுக்கும், இந்நூல் தயாரிப்பதில் ஆலோசனை வழங்கிய நண்பர் டாக்டர் எம்.கே. முருகானந்தனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Dr. ச. முருகானந்தன் 81, மெனிங் பிளேஸ் கொழும்பு - 6

Page 4
அணிந்துரை
ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், முற்போக்குச் சிந்தனை கொண்ட படைப்பாளியுமான, டாக்டர். ச. முருகானந்தன் தேசியப் பத்திரிகைகளில் மருத்துவம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.
கொடிய யுத்த சூழ்நிலையில் வன்னிப் பிரதேசத்தில் கால்நூற்றாண்டு காலமாக மருத்துவராக அரும் பணியாற்றிக் கொண்டே மக்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தி வந்ததுடன் , அவர்களுடைய அவலங்களையும் உணர்வுகளையும் நேரடியாகக் கற்றுத் தேர்ந்து, அவர்களைத் தனது ஆக்க இலக்கிய படைப்புகளில் கருப்பொருளாகவும் கொண்டு பல படைப்புகளை உருவாக்கியவர் டாக்டர். ச. முருகானந்தன்.
சிறந்த சிறுகதை எழுத்தாளராக இனம் காணப்பட்ட இவர் நாவல், கவிதை, விமர்சனம், கட்டுரை ஆகிய துறைகளிலும் கால் பதித்துள்ளார். இது இவரது முதலாவது மருத்துவ நூலாகும். எனினும் இது சாதாரண வாசகனை மனதில் கொண்டே எழுதப்பட்டுள்ளது.
இன்று உலகில் வருடந்தோறும் மில்லியன் கணக்கான இளம் உயிர்களைப் காவுகொண்டு வரும் அதிபயங்கரமான் எயிட்ஸ் பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
எயிட் ஸ் பற்றிய அடிப் படை அறிவையும் விழிப்புணர்வையும் இந்நூால் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
Dr. K. f6).IUTg53ib251b
கொழும்பு - 15

வெளியீட்டுரை
மீரா வெளியீட்டின் 69வது பிரசுரமாக டாக்டர் ச.முருகானந்தனின் எயிட்ஸ் இல்லாத உலகை நோக்கி என்ற தொகுதி எயிட்ஸ் பற்றிய நூலாக வெளிவருகிறது.
நாடறிந்த சிறுகதை எழுத்தாளரும், பல்துறை எழுத்தாளருமான ச.முருகானந்தனின் பத்தாவது நூல் இது எனினும் இதுவே இவரது முதலாவது மருத்துவ துறை சார்ந்த நூலாகும்.
சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், மருத்துவம் என பல துறைகளிலும் மீரா பதிப்பகத்தினர் நூல்களை வெளியிட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். உயிர்க் கொல்லி நோயான எயிட்ஸ் பற்றிய இந்த நூல் இந்நோய் பற்றிய தெளிவை உங்களுக்குத் தருகிறது. சாதாரண வாசகள்களுக்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.
மீரா பதிப்பின் ஏனைய நூல்களுக்கு நீங்கள் அளித்த பேராதரவை நன்றியுடன் நினைவுகூரும் அதேவேளை டாக்டர் ச. முருகானந்தனின் இந்நூலாகும் ஆதரவு வழங்குவீர்கள் என நம்புகிறோம்.
புலோலியூர் இரத்தினவேலோன் மீரா பதிப்பகம் 191/23 ஹைவெலல் வீதி கிரிலப்பனை
TP: 2513336

Page 5
0.
1.
12.
13.
14.
உள்ளே:
எயிட்ஸ் என்றால் என்ன? O1
எயிட்ஸ் உலகை அழித்திடுமா? 04
எயிட்ஸ் எனும் அரக்கன் 10
எயிட்ஸ் வரலாறு 14 கொடிய எயிட்ஸ்ஸின் அறிகுறிகள் 26 எயிட்ஸ் தொற்றை எவ்வாறு அறிந்து 32 கொள்ளலாம்?
எச்.ஐ.வீ கிருமி தொற்றியபின் எயிட்ஸ் நோய்
வருவது எவ்வாறு? 35 எயிட்ஸ் நோய்க்கான மருந்து கண்டுபிடித்தல் சாத்தியமா? 38 சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் எயிட்ஸ் நோய்க்கு மருந்து உண்டா? 42
எச்.ஐ.வீ தொற்றும் பெண்களும் குழந்தைகளும் எச்.ஐ.வீ. தொற்றுடைவர்களுக்கு
உளவளத்துணை 46 எயிட்ஸ் பரவுதலை தடுப்போம் 50 எயிட்ஸ் நோயிலிருந்து எம்மையும் எமது 53 பிரதேசத்தையும் பாதுகாப்போம். 56 எயிட்ஸ் நோயாளியை ஒதுக்க
வேண்டியதில்லை - 60

ஆசிரியரின் நூல்கள்
சிறுகதை
மீன் குஞ்சுகள் தரை மீன்கள் இது எங்கள் தேசம் ஒரு மணமகளைத் தேடி நாம் பிறந்த மண் (அச்சில்)
கவிதை நீ நடந்த பாதையிலே துளிர்த்தெழும் புதுச் செடிகள் (அச்சில்)
கட்டுரை நாளை நமதே எயிட்ஸ் இல்லாத உலகம்
குறுநாவல் அது ஓர் அழகிய நிலாக்காலம் நெருப்பாறு

Page 6

1. எயிட்ஸ் என்றால் என்ன?
மனித உடல் தொற்று நோய்களை எதிர்த்து தடுக்கும் ஆற்றலை இழந்துவிட்டால் என்ன நடக்கும்? ஆம்! எல்லாவித கிருமிகளும் உடலுள் நுழைந்துவுடன் சுயாதீனமாகப் பெருகி, உடலில் அடுத்தடுத்து பல்வேறு தொற்றுநோய்களை ஏற்படுத்தி, மனிதனை மரணத்திற்கே இட்டுச் செல்லுமல்லவா?
ஒருவரின் உடலில் எச்.ஐ.வீ கிருமி தொற்றினால் சில காலத்தின் பின் ஏனைய நோய்களை எதிர்க்கும் ஆற்றல் குறைந்து விடுகிறது. இப்படியான நிலையை உடல் எய்தும் போதே எயிட்ஸ் நோயாளி என்ற நிலையை அடைகிறார்.
எச்.ஐ.வீ தொற்றுக்குள்ளானவர்கள் எல்லோருமே உடனடியாக எயிட்ஸ் நோயாளியாவதில்லை. ஆனால் நோய் ஏற்படும் காலம் சில மாதங்களிலிருந்து பலவருடங்கள் வரை செல்லலாம். நோய் அரும்பு காலம் நபருக்கு நபர் வேறுபடுகிறது.
பாலுறவால் தொற்றும் நோய்களை இரகசிய நோய்கள் அல்லது பால்வினை நோய்கள் என்று அழைக்கிறோம். சில நோய்கள் பால் உறவினால் மட்டுமே தொற்றுகின்றன. இன்னும் சில நோய்கள் பாலுறவாலும், பிற வழிகளினாலும் தொற்றுகின்றன. இதில் எயிட்ஸ் இரண்டாவது ரகம். எனினும் எச்.ஐ.வீ தொற்று ஏற்படும் முக்கியமான மார்க்கம் உடலுறவுதான்.
பால்வினை நோய்கள் பொதுவாக பாலுறுப்பைப் பாதிக்கின்றன. ஆனால் எயிட்ஸ் நோய் பால் உறவினால் தொற்றினாலும், பாலுறுப்புகளில் நோய் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை.
O1

Page 7
எயிட்ஸ் நோய்த் தொற்று பெரும்பாலும் ஒழுக்கத் தவறுகளினால் ஏற்படுகின்றமையால், இந்நோய் இருப்பது தெரிந்துவிட்டால், தமக்குச் சமூகத்திலிருக்கும் மதிப்பு குறைந்துவிடும் என்ற அச்சத்தினால், இந்நோய் பற்றி மருத்துவர்களிடமும், வாழ்க்கைத் துணையிடமும் கூட உரையாடவும், நோய் இருக்கிறதா என்று பரீட்சித்துப் பார்க்கவும் தயங்குகிறார்கள்.
விபச்சாரமும், ஒழுக்கக் குறைபாடும் இந்நோய்த் தொற்றுக்கு முக்கிய காரணம் எனினும், வேறு வழிகளிலும் இந்நோய் பரவும் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
மது, போதைவஸ்து பாவனை, கவனக்குறைவு, பொருளாதாரம், அறியாமை என்பன நோய் ஏற்படக் காரணங்களாகிவிடுகின்றன. விபச்சாரத் தொழில் மூலம் இந்நோய் சமூகத்தில் ஊருடுவி பரவலாகக்கப்படுகின்றது.
பாலுறவினால் தொற்றக்கூடிய நோயிகளில் முக்கியமான சிலவற்றை நோக்குவோம்.
6Tull'6) (AIDS) FJup6opsibifa (HEPAITIS) GuDa5085Tulů / G6JL60DL (SYPHILLIS) G6u6ir6oo6TG35Tu'u (GONORRHOEA) யோஸ்
அரைக்கட்டி
அனரரணம்
மேகப் புண்
இவற்றில் எயிட்ஸ், ஈரல் அழற்சி என்பன வைரஸ் நோய்களாதலினால், இவற்றிற்கெதிராக நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் இல்லாமையினால், இவை மிகவும் ஆபத்தானவை. மரணம் இந்நோய்களின் வாசற் கதவை எந்நேரமும் தட்டலாம்.
O2

ஏனைய பால்வினை நோய்களில் மேகநோயும் வெள்ளைநோயும் ஆபத்தானவை. எனினும் அவற்றை மருத்துவ சிகிச்சை மூலம் குணமாக்க முடியும்.
ஏனைய நோய்களும் குணமாக்கக் கூடியவையே. எயிட்ஸ் நோய் கூட பூரண குணமாக்க முடியாவிட்டாலும் நோயாளியின் நோயரும்பு காலத்தைப் பின்தள்ளவும், அறிகுறிக்கான சிகிச்சைகள் வழங்கவும், உளவளத்துணை வழங்கவும் முடியும் என்பதை நாம் மறந்திடலாகாது.
இவை தவிர கிலாமைடியா, கேர்ப்பிஸ், ஜெனிடல் வாற்ஸ், ஸ்கேபிஸ் முதலான இன்னும் சில நோய்களும் பாலுறவினாலும் தொற்றக் கூடியவை.
எல்லாவித பால்வினை நோய் உள்ளவர்களுக்கு இலகுவில் எச்.ஐ.வீ கிருமி தொற்றும் வாய்ப்புள்ளது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
எல்லாவித பால்வினை நோய்க் கிருமித் தொற்று உள்ளவர்களிலும் நோயின் அறிகுறிகளற்ற காவிகள் இருக்கிறார்கள் என்பதனால், நாம் எப்பொழுதுமே நம்பிக்கைக்கு உரிய ஒருவருடன் மட்டுமே பாலுறவு கொள்ளவேண்டும். ஒழுக்க வரையறையை மீறாமல் வாழ்வது சிறந்தது. முடியாதபோது ஆணுறையை பாவிக்க மறக்கவேண்டாம்.

Page 8
2. எயிட்ஸ் உலகை அழித்துவிடுமா?
எயிட்ஸ் நோயை எச்.ஐ.வி என்ற நுண்கிருமி ஏற்படுத்துகிறது. இது மிகச் சிறியது. ஒரு முற்றுப் புள்ளிக்குற்றளவில் பல மில்லியன் கிருமிகள் இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்த வைரஸ் கிருமிகள் கண்ணுக்கு மட்டுமல்ல சாதாரண நுணுக்குக் காட்டிகளுக்கும் புலப்படாதது.
எச்.ஐ.வி கிருமி தொற்றியவரின் உடல் படிப்படியாக வெண்குருதிக் கலங்களை இழந்து விடுவதால் நோய்களுக்கான எதிர்ப்புச் சக்தியை இதனால் இழந்து விடுகிறது. இந்த நிலையையே எயிட்ஸ் என்கிறோம்.
இவர்களை எல்லாத்தொற்று நோய்களும் இலகுவில் பற்றிக் கொள்ளும் அபாயம் உண்டு. மேலும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிப்பதும் கடினமாகிறது.
நாம் எயிட்ஸ் நோயிலிருந்து தப்புவதற்கு வருமுன் காப்பு நடவடிக்கைகளே சிறந்த மார்க்கமாகும். நோயாளி ஒருவருடைய உடலிலிருந்து எச்.ஐ.வி கிருமி இரத்தத்திலும், இந்திரியத்திலும், காமநீரிலும், உமிழ்நீரிலும், தாய்ப்பாலிலும் வெளியேறினாலும் , உமிழ் நீரால் பரவுதல் சாத்தியக்குறைவாகவே உள்ளது எனினும் அவதானமாக இருத்தல் உசிதமானது.
எச்.ஐ.வி கிருமி பெரும்பாலும் பாலுறவின் போதே தொற்றுகிறது. எனினும் இரத்ததானம், தொற்றுநீக்காத ஊசி, என்பவற்றாலும் தொற்றக்கூடியது. மேலும் எயிட்ஸ் நோயுள்ள தாயின் பிரவசத்தினாலும் தாய்ப்பாலூட்டலினாலும் குழந்தைக்குத் தொற்றலாம்.
மருத்துவ ஊழியர்கள் மருத்துவ உபகரணங்களைக் கையாளும் போதும் புண்களுடாகத் தொற்றக்கூடியது.
04

முத்தம் இடுவதாலும், காற்றினாலும், உணவு, நீரினாலும், காவிகளினாலும், எயிட்ஸ் தொற்றுவதில்லை. நுளம்பு கடியினாலும் தொற்றமாட்டாது.
நோயாளி ஒருவருடைய உடலிலிருந்து வெளியேறிய எயிட்ஸ் கிருமி வெளியே ஒரு சில நிமிடங்களுக்கு மேல் உயிர் வாழமாட்டாது என்பதால் பெரும்பாலான தொற்றுக்கள் பாலுறவினாலேயே ஏற்படுகிறது.
உடலுறவு என்பது மனித வாழ்வின் ஜீவாதாரம். இன்பத்தையளிப்பதோடு, சந்ததி விருத்திக்கும் உதவுவது. மனித வாழ்வில் உடலுறவு என்பது தவிர்க்க முடியாதது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எனவே பாலுறவு வேண்டப்படாத விடயமல்ல என்பது
தெளிவாகிறது. ஆதாமும், ஏவாளும் படைக்கப்பட்ட போது ஓர் ஆணும் ஒரு பெண்ணுமே படைக்கப்பட்டார்கள்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதை இதன் மூலம் இயற்கையே வலியுறுத்தி நிற்கிறதல்லவா? மனித நாகரிகமும் இதையே தெளிவாகச் சொல்கிறது. படைப்பிலும் ஆணும் பெண்ணும் சம அளவில் படைக்கப்படும் ரகசியமும் இதற்காகத்தான்!
திருமணம் என்ற ஒப்பந்தத்தின் நோக்கங்களில் கட்டுப்பாடான பாலுறவும் ஓர் அம்சமாகும்.
திருமணத்தின் போது தாலியைக் கட்டும்போது போடப்படும் மூன்று முடிச்சும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றை வலியுறுத்துகின்றன.
மூன்றாவது முடிச் சான கட்டுப்பாடு என்பது ஒழுக்கத்தைக் குறித்து நிற்கிறது. ஆனால் மனிதனால் அவ்வாறு கட்டுப்பாடாக வாழ முடிவதில்லை.
கணிசமானவர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட உறவுகளை
05

Page 9
வைத்திருக்கிறார்கள் அல்லது திருமணத்தின் முன்னர் வேறு நபர்களுடன் உறவை வைத்திருக்கிறார்கள். குடும்பத்தைப் பிரிந்திருத்தல், வயதாகியும் திருமணமாகாது தடங்கியிருத்தல், இளவயதில் வாழ்க்கைத் துணையைப் பறிகொடுத்தல், வாழிக் கைத் துணை நோயாளியாக அலி லது குறைபாடுள்ளவராக இருத்தல், புறத்தூண்டுதல்கள், மது, போதைவஸ்து முதலான பாவனைகள், கெட்ட சகவாசம் என பல காரணங்களால் ஒன்றிற்கு மேற்பட்ட உறவுகளை நாடுகின்றனர். இதற்கு வாய்ப்பாக விபாசாரமும், சிறுவர் பாலியல் துஷபிரயோகங்களும் பரவி வருகின்றன.
டீன் ஏஜ்’ என்ற கட்டிளமைப்பருவம் புதிய உணர்வுகளும், ஓமோன்களின் ஆட்டிப்படைத்தலும் ஆரம்பிக்கும் காலம். மனம் முதிர்ச்சியுறாத அதேவேளை, உடல் முதிர்ச்சியுற்று வரும் இந்தப் பருவம் புதுமைமிக்கது. இனிமையான எதிர்ப்பாலரின் எண்ணங்கள் ஊற்றெடுக்கும் காலம். புதிதாகத் தோன்றும் இவ்வுணர்வுகள் வலுமிக்கவையும் கூட, உணர்வுகள் ஒன்று திரண்டு இப்பருவத்தில் அறிவை உணர்வு பல சந்தர்ப்பங்களில் தோற்கடித்து விடுகிறது.
இதனால் நெறிமுறைகளை மீறி தகாத உறவுகள் ஏற்படுகின்றன. 15 வயதளவில் தோன்றும் இந்நிலை, ஓரளவு முதிர்வு கண்ட பின்னரும் கூட 25, 30 வயது வரை தொடர்கிறது. இப்பருவத்தில் ஒழுக்கக் கட்டுபாடுகளை மீறி ஏற்படுகின்ற உறவுகள் எயிட்ஸ், மற்றும் பால்வினை நோய்களை உண்டாக்கி உடலையும், உள்ளத்தையும் சீரழித்து எதிர்காலத்தைச் சூனியமாக்கி விடுகிறது.
சர்வதேச ரீதியில் எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் எச்.ஐ.வி தொற்றும் வழிகளை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
இப்போதெல்லாம் ஒருவர் பாவித்த சவர அலகுகளை
06

மற்றவர் பாவிப்பதில்லை. மருத்துவ உபகரணங்கள், ஊசி முதலியவற்றை பக்குவமாகக் கையாண்டு, தொற்று நீக்கிப் பாவிக்கப்படுகிறது. ஒருமுறை மட்டுமே பாவித்துவிட்டு வீசும் பிளாஸ்டிக்காலான சிறிஞ் ஊசி என்பவையே ஊசியேற்றப் பாவிக்கப்படுகின்றன.
இதனால் பாலுறவு தவிர்ந்த ஏனைய வழிகளில் எச்.ஐ.வி கிருமி தொற்றுவது கட்டுப்படுத்தலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரத்தம் வழங்குபவர் எயிட்ஸ் நோயற்றவர் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இரத்ததானம் பெறப்படுகிறது
எனினும் உடலுறவு மூலம் தொற்றுதல் இன்னமும் குறைவதாயில்லை. பாலுறவு மனித உணர்வோடும், இச் சையோடும் , இனி பத் தோடும் தொடர்புடைய விடயமாதலினால் பாதுகாப்பான உடலுறவைக் கைக்கொள்ள பலர் தவறிவிடுகிறார்கள்.
எச்.ஐ.வி தொற்றுடைய ஒருவருக்கு நோய் அறிகுறி ஏற்பட சில வருடங்கள் கூட எடுக்கலாம். கிருமிகளைக் காவிக் கொண்டு இவர்கள் சுகதேகிகள் போலிருப்பார்கள். நோய்க் காவிகளாக இருக்கும் இவர்களில் பலர் தமக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதையே உணராதிருப்பர். இவரோடு பழகுபவர்களும் பயமின்றிப் பழகுவார்கள். எனவே இவர்களோடு உடல் உறவு வைப்பதன் மூலம் நோயை வாங்கிக் கொள்வார்கள்.
ஏனைய பால்வினை நோய்கள் தொற்றியவர்களில் தெரிவதுபோல் உடனுக்குடன் பாதிப்புகள் எயிட்ஸ் தொற்றுபவர்களில் தெரிவதில்லை. பாலுறப்புகளிலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதனால் பரவும் சாத்தியம் அதிகரிக்கிறது. எப்பொழுதுமே பாதுகாப்பான பாலுறவே சிறந்தது. நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவருடன் மட்டுமே உறவு கொள்ள வேண்டும். கணவன்-மனைவி உறவே இதற்கு
07

Page 10
உகந்தது. வாழ்வின் முக்கியமான ஒரு அம்சமாக பாலுறவு இருப்பதால் அதில் தெளிவும், திடமும், பூரண அறிவும் வேண்டும். உடலுறவு வேட்கையைத் தணிக்கும் போது கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிச்சயம் பின்பற்றப்பட வேண்டும். தகாத பாலுறவைத் தவிர்ப்பதன் மூலம் எயிட்ஸ் வருவதைப் பெருமளவில் தவிர்க்கலாம்.
இன்றைய உலகில் போதைப் பொருட்களும்,நீலப் படங்களும், ஆபாச வன்முறைப் படங்களும் பெருகி மனித உறவு முறைகளையே தடம்புரள வைத்துள்ளன. இதனால் பலவிதமான பாலியல் வக்கிரங்கள் உருவாகியுள்ளன.
புனித ஆண் பெண் பாலுறவுக்குப் பதிலாக ஆண் ஆண் உறவு, பெண் பெண் உறவு, சிறுவர் பாலுறவு என தடம் புரண்டு போயுள்ள மனித உறவுப் பிறழ்வுகள் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குகின்றது.
மணமானவர்களிலும் இரு பாலரிலும் சிலர் கற்புநெறியைப் பேணுவதில்லை. மானமுள்ளவர், ஒழுக்கமுள்ளவர் கட்டுப்பாடு காத்து கள்ள உறவு கொள்ளாது கட்டிய துணையுடன் மட்டுமே உடலுறவு கொண்டு என்றும் நிலையான இன்பத்துடன் வாழ்கின்றனர்.
ஆனால் பிறர் மனை நாடுவோர் வாழ் வின் வசந்தங்களை விரைவிலேயே இழந்து விடுகின்றனர். எல்லாம் தெரிந்திருந்தும் ஏவாள் பறித்த கனிபோல் தகாத உறவுகளை வைத்துக்கொள்வோர் ஒரு விடயத்திலாவது கவனமாக இருங்கள். உடலுறவின் போது கட்டாயமாக பிரீதி என்றழைக்கப்படுகின்ற ஆணுறையைப் பாவியுங்கள். ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு எச்.ஐ.வி கிருமி பரவலை இது தவிர்க்கிறது. முதலில் கர்ப்பத் தடைக்காக உபயோகிக்கப்பட்ட ஆணுறை இப்போது எச்.ஐ.வி. தொற்றாதிருக்கவும் பயன்படுகிறது.
08

எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த மிகச் சிறந்த வழி ஒருவனுக்கு ஒருத்தி என்று உறவு கொண்டு வாழ்கின்ற மனித நாகரிக பண்பாடேயாகும். அத்துடன் எயிட்ஸ் நோய் பற்றிய சுகாதாரக்கல்வியறிவும், விழிப்புணர்வும், பாதுகாப்பான முறைகளைக் கடைப்பிடிக்கத் தெரிந்திருத்தலும் எம்மைக் கொடிய ஆட்கொல்லி நோயான எயிட்ஸிலிருந்து காக்கும்.

Page 11
3. எயிட்ஸ் எனும் அரக்கன்
உலகில் அக்கிரமங்கள் அதிகரிக்கும் போது பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்துபோகும் என்பது மத நம்பிக்கையாகும். இப்படி பல யுகங்கள் அழிந்து புது யுகங்கள் தோன்றியதாகவும், இப்போது நடக்கும் யுகம் கலியுகம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கலியுகத்தை அழிக்கும் பிரளயமாகத் தான் எயிட்ஸ் வந்ததாகவும் ஆரம்பத்தில் அச்சம் கொள்ளுமளவுக்கு ஒரு பயங்கர நோயாக HIV தொற்று நோய் அறிமுகமானது.
HIV தொற்று நோயினால் ஏற்படும் எயிட்ஸ் என்ற நிலை மிகவும் ஆபத்தானதாகும். இந்நோய் ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படுவதால் இதற்கான மருந்து ஏதும் இல்லை. சின்னமுத்து, கொப்பளிப்பான், அம்மை போன்ற நோய்களைப் போலவே இதையும் உடல் தனது எதிர்ப்பு வலுவினால் தான் குணமாக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டம் என்னவென்றால் இந்நோயின் அறிகுறியே இதைச் சாத்தியமற்றதாக்கி விடுகிறது.
HIV தொற்று என்றால் என்ன?
HIV தொற்று என்பது மனித நிாப்பீடனக் குறைபாட்டு வைரசு (Human Immunosuppression Virus) 6T6ip dcblfgs (ogbitsis)6OTT6t) ஏற்படுகிறது. பிரதானமாக இது ஒரு பால்வினைத் தொற்று நோய் எனினும், பிற வழிகளாலும் இந்நோய் தொற்றக்
Ց6ւIգեւ15l.
தொற்றம் முறைகள்
1980 களிலே முதன் முதலில் இனம் காணப்பட்ட இந்நோய் முதலில் முற்று முழுதான ஒரு பால்வினை நோயாகவே கருதப்பட்டது. எனினும் பாலுறவு மூலம் மட்டுமல்லாமல்
10

பிறவழிகளிலும் தொற்றக் கூடியது எனக் கண்டு பிடிக்கப்பட்டது. தொற்ற வழிகளாவன
1. பாலுறவு
அ. ஆண் பெண் பாலுறவு
ஆ. ஆண் ஆண் பாலுறவு
இ. பெண் பெண் பாலுறவு
ஈ. குதவழிப் பாலுறவு
2. இரத்த மாற்றீடு, ஊசிகள், சவர அலகுகள் மூலம்
நோயாளியின் இரத்தம் கலப்பதால்.
3. நோயுற்ற தாயின் பிரசவத்தில் பிறக்கும் குழந்தை.
4. நோயுற்ற தாய் குழந்தைக்கு பாலூட்டுதலால்.
பிட்ஸ் என்றால் என்ன?
6Tui'6) (AIDS) 6T6örugs Acquired Immune Deficency Syndrome என்ற வாக்கியத்தின் நான்கு சொற்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவான சொற்பதம்.
பெறப்பட்ட நிர்ப்பீடனக் குறைபாட்டு அறிகுறி என்பது இதன் பொருள். நோய் எதிர்ப்பாற்றலை உடல் இழக்கும் நிலை என்று அர்த்தம்.
HIV தொற்று ஏற்பட்டவர்களுக்கு சில மாதங்களிலிருந்து பல வருடங்களுக்குப் பின்னும் எயிட்ஸ் (AIDS) தோன்றலாம். அதாவது நோய் அரும்பு காலம் மிகவும் நீடித்த காலம் ஆகும். நோயரும்பும் வரை கிருமித் தொற்றுக்குள்ளானவர்கள் சுகதேகிகளாகவே இருப்பர். எனினும் இவர்கள் நோய்க்
11

Page 12
கிருமியைப் பிறருக்குத் தொற்ற வைக்கக் கூடியவராக இருக்கின்ற ஆபத்தான நிலை உண்டு. எயிட்ஸைப் பரப்பும் ஆபத்தானவர்கள் இந்த சுகதேகிகளான காவிகளே.
நோய் எதிர்ப்பாற்றலும் எயிட்ஸ் நோயும்
இயற்கையில் எமது உடலுக்கு நோய்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உண்டு. எமது இரத்தத்திலுள்ள வெண்குருதிக் கலங்கள் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் வல்லமை பெற்றவை. எமது இரத்தத்தில் HIV கிருமிகள் தொற்றி, அவை பெருகி வெண்கலங்கள் எண்ணிக்கை குறைந்து நோய்களை எதிர்க்கும் ஆற்றலை உடல் இழந்து விடுகின்றது. இவ்வாறு இழக்கும் நிலையையே (AIDS) என்கிறோம். HIV உடலைத் தாக்கியவுடன் எய்ட்ஸ் உண்டாகி விடுவதில்லை. இக்கிருமி உடலுக்குள் நுழைந்து, தன்னைப்பெருக்கி, சிறிது சிறிதாக வெண் குழியங்களை அழித்து மனிதஉடலில் நோய் எதிர்ப்பாற்றலை இல்லாது ஒழிக்கிறது. இந்நிலையே எயிட்ஸ்.
வெள்ளையணுக்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அழிந்து நோய்த் தடுப்புச் சக்தியை உடல் இழக்குமானால் அந்த உடலை எந்தத் தொற்று நோயும் எளிதில் தொற்றும்.
அவ்வாறு தொற்றிய நோயைக் குணப்படுத்துவதும் கடினம், எனவே மீண்டும் மீண்டும் தொற்று நோய்கள் ஏற்பட்டு இறுதியில் தொற்று நோய்களின் பாதிப்பினால் அவர்கள் இறந்து போவார்கள்.
எயிட்ஸ"ம் இதர பால்வினை நோய்களும்
இதர பால்வினை நோய்களான சிபிலிலஸ், கொனோறியா
முதலான நோய்கள் தொற்றியவுடன் நோயாளியில்
வெளிப்படையாகப் பாதிப்புத் தெரியும். ஆனால் HIV தொற்றில்
அப்படியல்ல. மிக நீண்டகாலங்களுக்கு பாதிப்பு தெரியாது. 12

அத்துடன் பால் உறுப்புகளில் பாதிப்பு தெரிவதில்லை. இதனால் சிகிச்சையை நாடமாட்டார்கள். பலர் கிருமியைத் தொற்ற வைத்துக் கொண்டிருப்பார்கள். சுகதேகிபோல இவர் இருப்பதால் இவரோடு சுகதேகிகள் பயப்படாமல் உறவு கொள்வர். இதனால் நோய் வாய்ப்படுவர். எனவே தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற எமது பண்பாடு எயிட்ஸ் நோயிலிருந்து தப்ப சிறந்த வழியாகும்.
தொற்றைத் தவிர்க்கும் வழிகள் 1. பாதுபாப்பான உடலுறவு அல்லது பிரீதி பாவித்து உடலுறவு கொள்ளல்.
2. ஒரு முறை மட்டும் பாவித்து விட்டு வீசும் ஊசிகளையே பாவித்தல்.
3. ஒரு முறை மட்டும் பாவித்து விட்டு சவர அலகுகளை வீசுதல்.
4. இரத்ததானம் பெறும்போது எயிட்ஸ் தொற்றற்ற இரத்தம் என்பதை உறுதிப்படுத்தல். 5. எயிட்ஸ் நோய்வாய்ப்பட்ட தாய் கருத்தரிக்காமலிருத்தல். 6. எயிட்ஸ் நோயுள்ள தாய் பாலூட்டாமல் விடுதல்.
7. மருத்துவ ஊழியர்கள் ஊசி மற்றும் சிகிச்சை உபகரணங்களை அவதானமாகக் கையாளுதல். கடமையின் பின் சவர்க்காரம் கொண்டு கைகழுவுதல்.
13

Page 13
சில தகவல்கள்
* எயிட்ஸ் நோயாளிகள் புறக்கணிக்கப்பட்ட வேண்டியவர்கள் அல்லா. பாதுகாப்பான முறைகளுடன் அவருடன் பழகலாம்.
* எயிட்ஸ் நோய்க்கு பூரண குணமளிக்கும் மருந்துகளோ தடை மருந்துகளோ கண்டு பிடிக்கப்படவில்லை.
* வாழும் காலத்தை நீடிக்க உதவும் சிசிஆர் புரதம், இன்ரபெரோன் வகை மருந்துகள் மிகவும் விலையானவை. ஒரு நோயாளிக்கு 60 இலட்சம் ரூபா தேவைப்படும்.
- * பிரதானமாக பால் உறவு மூலம் தொற்றுவதால் இளைய
தலைமுறையினரையே அதிகம் பாதிக்கிறது. * இதுவரை பல மில்லியன் உயிர்களைக் காவு கொண்டுவிட்டது. ஆபிரிக்க நாடுகளிலேயே மிக அதிகம். ஆசிய நாடுகளில் இந்தியா, தாய்லாந்து நாடுகளிலும் வேகமாகப் பரவுகிறது. * எமது நாட்டில் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பினும் அதிகரித்த வண்ணமே இருத்தல் அச்சுறுக்தலாகும். * துர் நடத்தைகள், விபசாரம், போதை வஸ்துப்பாவனைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எயிட்ஸ் நோயைக் குறைக்கலாம், எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்ச்சி சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 

04. எயிட்ஸ் வரலாறு
அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சஸ் நகரின் வைத்திய சாலைகளில் இளவயதுடைய வாலிபர்கள் சிலரது உடலில் நிர்ப்பீடணத் தொகுதி பலவீனமடைந்தமை காரணமாக ஏற்பட்ட நோய்க் குணங்குறிகள் பற்றி 1981களில் தேடியறிய முற்பட்டபோதே எயிட்ஸ் நோய் நிலை உலகில் முதன்முதல் இனம் காணப்பட்டது. இந்த இளைஞர்கள் ஒருவித வைரஸ் தாக்கத்துக்கு உட்பட்டமையே இந்த நிலைக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டதுடன். பின்னர் அந்த வகை வைரசுக்கு எச்.ஐ.வீ வைரஸ் எனவும் பெயரிடப்பட்டது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள லூயி பாஸ்ரர் நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி லுக்மக் டெய்னர் என்பவரும். அமெரிக்க தேசிய நிலையத்தைச் சேர்ந்து விஞ்ஞானி றொபர்ட் கொய்லோ என்பவரும் இணைந்தே இதற்கு எச்.ஐ.வி என 1983 களிலே பெயரிட்டனர் . இது தமிழில் மனித நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் வைரஸ் நுண்கிருமி என அழைக்கப்படுகிறது. இந்த எச்.ஐ.வீ வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்படும் நோய் நிலைமைக்கு எயிட்ஸ் (AIDS) எனப் பெயரிடப்பட்டது. இது தமிழில் “பெறப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் குணம்குறி” என குறிப்பிடப் படுகின்றது.
உலகில் இன்றுவரை இருவகையான எச்.ஐ.வீ. வைரஸ்கள் இனம் காணப்பட்டுள்ளன. அவை எச்.ஐ.வீ.-1, எச்.ஐ.வீ.11 எனப்பெயரிடப்பட்டுள்ளன. இந்த இருவகை
15

Page 14
வைரஸ்களுமே எயிட்ஸ் நோய் நிலைகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இந்த வைரஸ் . தொற்றுக்குட்பட்டவர்களது குருதி, ஆண்களது சுக்கிலப்பாயம், பெண்களது யோனிமடற் சுரப்பி, கருப்பைக் கழுத்துச் சுரப்பி மற்றும் தாய்ப்பாலிலும் பெருமளவில் அடங்கியிருக்கும் என மருத்துவ அறிக்கைகள் உறுதி செய்திருக்கின்றன. இந்த எச்.ஐ.வீ வைரஸ் நுண்கிருமிகள் உயிர் வாழ்வதற்கு உயிர்க் கலங்கள் தேவை. அதனால் பொதுவான சாதாரண சூழலில் இந்த வைரஸ் கிருமிகள் உயிர்வாழ முடியாது. அவைகள் உயிர்வாழவும், பல்கிப் பெருகவும் உயிருள்ள மனிதக் கலங்களுடன் சேரவேண்யுள்ளது. மாறாக எமது சூழலில் உள்ள நீர், வளி, உணவு மற்றும் பொருட்களில் அவை உயிர்வாழ முடியாது என்பதால் இவற்றுக்கூடாக இந்த வைரஸ் கடத்தப்படவும் மாட்டாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எச்.ஐ.வீ வைரஸ் வரலாறு பற்றிய பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டிருப்பினும் விஞ்ஞானிகள் ஆராய்வு முடிவுகளின்படி, ஆபிரிக்கக் காடுகளில் வாழும் பச்சை நிறக் குரங்குகளில் இருந்து தோற்றம் பெற்றிருக்கலாம் என முடிவு செய்யப்படடுள்ளது. ஆபிரிக்கப் பழங்குடி மக்கள் இந்தக் குரங்கினது இறைச்சியையும் குருதியையும் பச்சையாக உட்கொள்ளும் பழக்கமுடையா வர்கள் என பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த வருடத்துக்கான சமாதானத்துக்குரிய நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஆபிரிக்காவின் கென்னிய நாட்டைச் செர்ந்த வங்காரி மாதாய் (Wangai maathai) என்ற சுற்றுச் சூழல் மேம்பாட்டு ஆர்வலரது கருத்துப் படி, எயிட்ஸ் வைரஸ் வேணி டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு உயிரியல் கூறாக இருக்க முடியம் என்ற சந்தேகமும் எழுகின்றது.
16

எயிட்வின் தாக்கம்
இன்று உலகில் பாலியல் தொடர்பால் ஏற்படும் நோய்களுள் மிகவும் பாதிப்பைத் தரக்கூடியதும், இதுவரை தடுப்பு மருந்துகள் எவையும் கண்டுபிடிக்கப்படாததுமான நோயாக எயிட்ஸ் நோய் உள்ளது. உலகைப் பொறுத்தவரை, மேக நோய்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே இனம் காணப்பட்டிருப்பதை வரலாற்றுத் தகவல்கள் காட்டி நின்றாலும் எயிட்ஸ் நோயானது, மிகமிக அண்மைக் காலங்களிலேயே அதாவது மூன்று தசாப்த காலங்களுக்குள்ளாகவே அடையாளம் காணப்பட்டு, பாரிய தாக்கத்தை மனித குலத்தின் மீது ஏற்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.
2002ஆம் ஆண்டின் தகவல்களின்படி உலகம் முழுவதிலும் 5705 மில்லிையனிலும் அதிகமானவர்கள் எச்.ஐ.வீ. தொற்று மற்றும் எயிட்ஸ் நோய் நிலைகளில் வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இதில் 207 மில்லியன் வரையிலானவர்கள் சிறுவர்கள் எனவும், 1706 மில்லியன் வரையிலானவர்கள் பெண்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த எயிட்ஸ் நோய் காரணமாக 2004 ஆண்டுவரை 209 மில்லியன் பேர்வரை உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உலக சுகாதார ஸ்தாபனத்தினது கருத்துப்படி ஒவ்வொரு வருடமும் 5 மில்லியன் பேர் எச்.ஐ.வீ. தொற்றுக்கு உட்படுவதாகவும் ஒவ்வொரு 6 செக்கனுக்கும் ஒருவர் என்ற வகையில் எச்.ஐ.வீ. தொற்றுக்கு உட்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் எயிட்ஸ் அமைப்புக் கூட இவ்வாறான கணிப்பீடுகளையே முன் வைத்தாலும் உண்மையில் இத்தொகைகளை விட எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வீ. தாக்க நிலையின் தொகை அதிகமாக இருக்கக் கூடியமைக்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன. பொதுவாக எச்.ஐ.வீ வைரஸ் ஒருவருக்குத் தொற்றினாலும் இன்றுள்ள இரத்தப் பரிசோதனை முறைகளின்படி, தொற்று ஏற்பட்டு 3 தொடக்கம்
17

Page 15
6 மாதங்களின் பின்னரேயே, தொற்றியவரது குருதியின் மூலம் கண்டறிய முடியும். அது மட்டுமன்றி 5 தொடக்கம் 10 வருடங்களுக்குப் பிற்பாடுதான் எயிட்ஸ் நோய் நிலைமைகள் அவரிடம் வெளிப்படும் என கூறப்படுகிறது. அத்தோடு இங்குள்ள இன்னுமொரு பிரச்சினை என்னவெனில், ஒருவர் தாமாக முன்வந்து இரத்தப்பரிசோதனை செய்து கொள்ளும் போதிலேயே அவர் எச்.ஐ.வீ.தொற்றுக்கு உட்பட்டிருக்கின்றாரா? இல்லையா? என்பதையும் கண்டறிய முடியும். அதுமட்டுமன்றி தனக்கு எச்.ஐ.வீ. தொற்று ஏற்பட்டிருக்குமோ என அச்சமடையும் ஒருவர் ஆகக்குறைந்தது 07 மாத இடைவெளிக்குள் இரு முறையாவது இரத்தப்பரிசோதனை செய்து கொள்ளவது அவசியம்.
இந்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இவ்வாறானவர்கள் கொள்ளும் பாலியல் தொடர்புகள். வழங்கும் குருதிகள் என்பவற்றினுடாக இந்த எச்.ஐ.வீ வைரஸ் மற்றவர்களுக்குக் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம். இத்தகைய மறை நிலையில் இருந்தபடியே இந்த வைரஸ் பல்லாயிரக்கணக்கானவர்களைப் பீடிக்கலாம். எனவே இவ்வாறான நடைமுறை விடயங்களோடு பார்க்கும்போது எச்.ஐ.வீ. தொற்றுக்களின் தாக்கம் அதிகம் என்றே கூறலாம்.
இலங்கையில் எயிட்ஸ். இலங்கையைப் பொறுத்த வரையில் முதன் முதலாக எயிட்ஸ் தொற்றிய நோயாளி 1986 களிலேயே கண்டுபிடிக்கப்பட்டார். வெளிநாட்டு உல்லாசப் பிரயாணியான இவர் எயிட்ஸ் நோயின் முக்கிய நோய்க் குறிகளுள் ஒன்றான காமோசி சார்கோமா என்பதால் பீடிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு வந்திருந்த இலங்கையர் ஒருவருக்கு 1987 இல் எயிட்ஸ் தொற்று
18

கண்டறியப்பட்டது. இது இலங்கைத் தேசத்தின் இரண்டாவது நோயாளியாகப் பதிவு செய்யப்பட்டது. 1986 முதல் 2004 செம்ரெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் இலங்கையில் 59 1 எயிட் ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதில் 316 ஆண்களும் 245 பெண்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியினுள் இந்த நோயால் 129 பேர் உயிரிழந்துள்ளனர். என இலங்கை தேசிய எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித்திட்ட அமைப்பு கூறுகிறது. 1995 களில் அன்றைய சுகாதார பெருந்தெருக்கள் சமூக அமைச்சு அனுசரணை எயிட்ஸ் - மேக நோய்த் தடுப்புத் திட்டமும், யுனிசெப்பும் இணைந்து வெளியிட்ட கைநூல் ஒன்றில் 2000ஆம் ஆண்டளவில் இலங்கையில் எச்.ஐ.வீ. தொற்றியோர் எண்ணிக்கை 17000 ஆகவும், எயிட்ஸ் நோயாளிகளாக 1750 பேர் இருப்பர் எனவும் எதிர்வு கூறிப்பட்டிருந்தது. அதேவேளை 1995 நடுப் பகுதிவரை இலங்கையில் எச்.ஐ.வீ தொற்றியோர் 160 பேர் இனங்காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தரவுகளது அடிப்படையில் நோக்கும் போது 1986 முதல் 1995 வரையில் எயிட்ஸ் நோய்க்கு ஆட்பட்டோர் 160பேராகவும் 1996 முதல் 2004 நடுப்பகுதி வரையான காலப்பகுதியிலான சுமார் ஒன்பது வருட காலத்துள் எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 271 ஆல் அதிகரித்துள்ளது. மொத்தம் 431. ஆய்வு நோக்கிற்காக கணிப்பீடு அடிப்படையில் ஆராயும் போது, 1986 - 1995க்கு இடைப்பட்ட காலத்தில் வருடம் ஒன்றக்கு 16 பேர் என இருந்த எயிட்ஸ் நோயாளரது எண்ணிக்கை 1996 - 2004 காலப்பகுதியில் வருடம் ஒன்றுக்கு 48 பேர் என்ற அளவீட்டில் அதிகரித்திருப்பதை அளதானிக்க முடிகிறது. இதேபோன்றே எச்.ஐ.வீ. தொற்றுக்கு உட்பட்டு இதுவரை அடையாளம் காணப்படாதவாறு எங்களுடன் உலாவி வருபவர்களது
19

Page 16
தொகையும் பல ஆயிரங்களைத் தாண்டியிருக்கலாம். 1995களில் யுனிசெப் கணிப்பிட்டதனைப் போல் இது 17000 ஐத் தாண்டி இருக்கக்கூடிய ஏது நிலைகளே காணப்படுகின்றன.
யாழ்குடாநாட்டில் 1993 இல் முதலாவது எயிட்ஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டார். இவர் வெளிநாட்டில இருந்து மீண்டு வந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் 2004 வரையான காலப்பகுதியினுள் 29 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இருபது பேர் இதுவரை இறந்து விட்டதாக குடாநாட்டுத் தகவல்கள் கூறுகின்றன. இதேபோல் சுமார் 500 பேர் வரையில் காவிகளாகத் திரியக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் இந்த மாவட்டத்தில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளில் ஈடுபடும் தொண்டர்கள் ஊகிக்கின்றனர். இவ்வாறு ஊகிப்பதற்கு எமது பிரதேசங்களின் கிராமிய மட்டங்களில் பல்வேறு தரப்பினரையும் தாம் சந்தித்து, அவர்களோடு உரையாடிப் பெற்ற அனுபவங்களே அடிப்படையாக அமைவதாக அவர்கள் கூறுகின்றனர்.
வடகிழக்கில் 1993 களில் முதலாவது எயிட்ஸ் நோயாளி இனங்காணப்பட்டிருப்பினும், மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் 2001 ஆம் ஆணி டிலிருந்தே ஓரளவு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையிலான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம், சுகவாழ்வு நிறுவனம், இலங்கை செஞ்சிலுவைச் சங்ககிளை நிறுவனங்கள் என்பன தொடர் திட்டங்களாகவும் சமூக செயற்பாட்டு மையம், கியூடெக், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், போரூட்என்பன குறுகிய கால சிறு சிறு திட்டங்களாகவும் செயற்படுத்தி வந்துள்ளன. சுகாதார திணைக்களத்தினூடாக தேசமெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
20

போரூட் தவிர்ந்த ஏனைய நிறுவனங்கள் அனைத்துமே உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களாக இருப்பதால், போதுமான நிதி வசதி இன்மை காரணமாகத் தொடர்ந்தும் இந்த விழிப்புணர்வுச் செயற் திட்டங்களை முன்னெடுப்பதில தடைகளை எதிர்நோக்கியிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கதே.
அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசர ணையுடனேயே எயிட்ஸ் விழிப்புணர்வுச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பினும் தற்பொழுது அவர்கள் எமது சமூகத்தினது நிதிப் பங்களிப்பைத் திரட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தேச நலனில் அக்கறை உள்ள ஒவ்வொரு மனிதருமே இந்த வகையான முன்னெடுப்புக்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பைத் தன்னிடத்தே கொண்டுள்ளதை மறுக்கமுடியாது.
பண்பாட்டு விழுமியங்கள், பழமை மிகு மத ஒழுக்க நெறிகள், கல்வி அறிவு மிக்க சமூகம் என்றவாறான அணிகலன்களால் அழகுபடுத்தப்பட்டு நாகரீகமான ஒரு சமூகமாக மதிக்கப்பட்ட எமது நாட்டு மக்களைப் பொறுத்தவரை கடந்த இரு தசாப்தத்துக்கும் மேற்பட்ட காலப்போரால், ஓரளவு எட்டப்பட்டிருந்த நிலைகள், சுமார் நான்கு வருடத்துக்கு முன் ஏற்பட்டு விட்ட சமாதானச் சூழல் என்ற மாயை நிலை காரணமாக மாற்றமடைய, அடங்கியிருந்த இளைஞர் சமூகத்தின் பெரும் பாலானவர்கள் அணை உடைத்த வெள்ளம்போல திக்குத் திசை தெரியாது தறிகெட்டுத் திரியும் ஒரு ஆரோக்கியமற்ற சூழல் எமது தேசத்தில் ஏற்பட்டுவிட்டது. அத்தோடு வியர் வைத்துளியின் வேதனை அனுபவம் இல்லாமலேயே கைநிறையக் கிடைக்கும் வெளிநாட்டுப்பணமும், அவற்றைக் கொண்டு அனுபவிக்கக் கூடியதாயிருக்கும் இலத்திரனியல் ஊடக வசதிகளும், எமது இளம் சந்ததியினை எவ்வளவுக்கு பாழ்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு பழுதாக்கி
2

Page 17
விடுகின்றன.
எந்த ஒரு நிலையிலும், அங்கே உள்ள நல்ல அம்சங்கள் எம்மைக் கவர்வதைவிட தீய விடயங்களால் நாம் கவரப்படுவது வேகமானதாகவும், அதிகமானதாகவும் அமைந்து விடுவது இயற்கையே. இங்கும் அதே நிலையே ஏற்ப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எரிமலைகளாகப் புகைந்து கொண்டிருக்கிற தென்பது சமூகசேவைகளில் ஈடுபட்டிருக்கும் சேவையாளர்கள் பலரதும் கருத்தாகும்.
மனித உணர்வுகள் என்பது இறங்குவரிசையில் வந்து தற்போது மிருக உணர்வின் எல்லைக் கோட்டைத் தொட்டு நிற்கும் சம்பவங்களை கேட்டறிந்த அனுபவங்களாக அவர்கள் முன் வைக்கும் போது இதேநிலை இன்னும் சில வருடங்கள் தொடருமாயின் எயிட்ஸ் என்பது எமது வீட்டு வாசலைத் தள்ளித்திறந்து விட்டு உள்ளே வந்து குந்திக்கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அது எமது கதவைத் தட்டும் போது எமக்குரிய புதைகுழிகளை ஏற்கனவே வெட்டி விட்டு வந்தே கதவைத் தட்டுகிறது என்பதை நாம் உணரவேண்டும். எனவே எயிட்ஸ் எனும் மரணப் பொறியிலிருந்து தப்பித்துக் கொள்ள அவதானம் தேவை.
விழிப்புணர்வை ஏற்படுத்தவோம்.
எமது இனத்தில் இளம் சந்ததியிரின் கட்டுக்கோப்பை அவர்கள் வாழ்விலக்கை திட்டமிட்டுச் சிதைப்பதில் சில சக்திகள் மறைவாக ஆனால் மிக நேர்த்தியாக செயற்பட்டு வருவதை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். அபாசப் படங்களும் சீடீக்களும், போதை வஸ்த்துக்களும் ஏதோ ஒரு விநியோக வழி முறைக்கூடாக ஊரினுள் ஆங்காங்கே உலாவி வருவதைக் கேட்டறிய முடிகிறது. உல்லாசப்பயண பிரதேசங்களுடன் வடகீழ்
22

மாகாணங்களும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
திக்குத் தெரியாத காட்டில் தத்தளித்த படி போரின் கொடுரங்களுக்குள் வாழ்ந்து வரும் எமது சமுதாயம் இதனால் சீரழிக்கப்படுகிறது. சிறுவர் பாலியல் துஷபிரயோகம் நாடளாவிய ரீதியில் பல்கிப்பெருகி வருகிறது.
இவற்றால் தடுக்கி விழுத்தப்படும் இளைஞர்கள் நெறிமுறையற்ற பாலியல் தொடர்புகளுக்கு தூண்டப்படுகின்றனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கூட இவ்வாறான அனுபவங்களை நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் அனுபவித்திருப்பதாக சமூக சேவைத் தொண்டர்களிடம் ஒப்புதல் அளித்திருப்பது தட்டிக்கழிப்பதற்கான ஒரு விடயமாக இது இல்லை என்பதைச் சுட்டுகிறது.
எயிட்ஸ் என்பது தனியே பாலுறவால் மட்டும் பரவும் நோய் இல்லை என்பது உண்மைதான். ஆனால், இலங்கையில் இனங்காணப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளுள் 84.9 வீதமானவர்கள் ஆணி - பெணி பாலுறவு நடத்தைகள் மூலம் தொற்றுக்குள்ளானவர்கள் என்பதே உண்மையாகும். தன்னினச் சேர்க்கை மூலம் 13.9 வீதமானவர்களும். இரத்தத்தின் மூலம் 1.6 வீதமானவர்களும், தாயிடமிருந்து குழந்தைக்கு என்ற வகையில் 0.8 வீதமானவர்களும் எயிட்ஸ் நோய்க்கு உப்பட்டமை பற்றிய தரவுகள் எமக்கு இந்த முடிவையே தருகின்றன.
வருமுன்காப்பது என்பது எந்த அளவுக்கு முக்கியமோ. அதே போன்றே வந்தவரைக் காப்பதும் முக்கியமானதாகும். உள ஆரோக்கியம் உள்ள எந்த ஒரு மனிதனும் தனது உயிரை பெறுமதியற்ற வகையில் இழக்கத் துணியமாட்டான். ஒருவர் எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றார் எனின் அது அவரைப் பொறுத்து ஒரு விபத்தாகவே அமைந்து
23

Page 18
விடுகிறது.
அந்த விபத்தின் அதிர்வு சமூகத்தைத் தாக்க இடமளிக்காதிருப்பதில் அக்கறை செலுத்தும் சம நேரத்தில் விபத்துக்குட்பட்டவரது உளமேம்பாட்டைக் கருத்தில் கொண்டு செயற்படுவதும் அவசியமானது. எனவே நாம் எயிட்ஸ் நோயாளிகளை மனித நேய கண்களுடன் பார்த்து அவர்களுடன் அன்பாக பழகுவதுடன் அவரது மனக்கிலேசத்தை போக்கிட முயல வேண்டும்.
நாம் முன்னெடுக்கக் கூடிய எந்த ஒரு விழிப்புணர்வுச் செயற்திட்டமும், பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்துச் செல்வதாகவே இருக்க வேண்டியது அவசியமாகும். இங்கு மையப்படுத்த வேண்டியவர்களுள் பாதிக்ககப்பட்டவர்களது நெருங்கிய உறவினர்களையும் உள்ளடக்குவது மிக மிக அவசியமாகிறது. எச்.ஐ.வி கிருமி தானாக வந்து தொற்றிக் கொள்ளதில்லை. விளக்குச் சுடரில் வீழ்ந்து எரியும் விட்டில் பூச்சிகள் போல நாமாகவே நம் தலையில் தேடித் தொற்றிக் கொள்ளும் நோய் தான் எயிட்ஸ்.
24

05. கொடிய எயிட்ஸின்
அறிகுறிகள்
எயிட்ஸ் (AIDS) நோய் எச்.ஐ.வி (H.I.V) என்ற நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது என்பது தெரிந்த விடயம். HUMAN IMMUNODEICENCY VIRUS GIGöra56ögp fb6u6ă பெயரிலுள்ள சொற்களின் முதல் எழுத்துக்களே H.I.V என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இத் தொற்றினால் ஏற்படும் பெறப்பட்ட நீர்ப்பீடனக் குறைபாடு அறிகுறி (ACQUTRED IMMUNE DEFINCY SYNDROME) 6T6ip Luggar BITGorg சொற்களிலுள்ள முதலெழுத்துக்களைக் கொண்டே (AIDS) என்ற பதம் உருவானது. இன்று இது உலகைப் பெரிதும் அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயாக விளங்குவதை அறிவீர்கள்.
இந்நோயின் குணங்குறிகளை ஆரம்பத்திலே அறிந்து கொள்வது பெரிதும் அவசியமாகிறது. கிருமி தொற்றியவுடன் ஒருவருக்கு உடனும் எயிட்ஸ் நோய் ஏற்படுவதில்லை. ஓரிரு வருடங்களிலிருந்து பல வருடங்கள் வரை நோயரும்பும் காலம் இருக்கலாம். கிருமி உடலில் தொற்றிய ஒரு சில வாரங்களுக்குள் சில ஆரம்ப அறிகுறிகள் தோன்றலாம். ஏனைய பால்வினை நோய்கள் போல பாலுறுப்புக்களில் எதுவித அறிகுறிகளும் ஏற்ப்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.

Page 19
ஆரம்ப அறிகுறிகள் மிகவும் சாதாரணமனவை. ஏனைய பல நோய்த் தொற்றுக்களிலும் இவ்வாறான அறிகுறிகள் தோன்றும். ஆகையால் இத்தொற்றை நோயாளிகளும் வைத்தியர்களும் இனம் கண்டுகொள்ள தவறும் நிலையே காணப்படுகின்றது. இந்நோயின் ஆரம்பக் கட்டத்தில் தேக உளைவு, அசதி, தலையிடி, காய்ச்சல், தொண்டைநோவு, பசியின்மை, வியர்வை, தடிமல், இருமல். வயிற்றோட்டம் போன்ற சாதாரணமான அறிகுறிகளே தோன்றுவதால் இந்நோய் பெரிது படுத்தப்படாமல் அலட்சியப்படுத்தப்படுகிறது. இவ் அறிகுறிகள் சிகிச்சையின்றியே ஓரிரு வாரங்களில் மறைந்து விடும். இது ACUTEPHASE என அழைக்கப்படுகிறது.
இரண்டாவது கட்டம் அறிகுறிகளற்ற LATENCY PHASE நோயாளிகளின் உடலில் கிருமிகள் தன்னை ஸ்திரப்படுத்திப் பெருகிக் கொண்டிருக்கும் இக்காலம் சில வாரங்களிலிருந்து சில வருடங்கள் வரை நீடிக்கலாம். இந்தக்கால கட்டம் நோய் பரவலுக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம். நோயை ஏனையவர்களுக்கு தானும் அறியாமல் பிறரும் அறியாமலே பரப்பும் இக்கட்டத்திலுள்ளவர்கள் நோய்க்காவிகள் (CARRIERS) என அழைக்கப்படுகின்றனர். தொற்று ஏற்பட்டு 3 மாதத்தின் பின் இரத்தத்தைப் பரிசோதனை செய்தால் H.I.V கிருமித்தொற்றை அறிந்து கொள்ள முடியும். சநீ தேகத்திற்கு உரியவர்கள் தாமே சென்று இப் பரிசோதனையைப் பெரிய வைத்தியசாலைகளில் மேற்கொண்டு தெளிவு பெறுவது அவருக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நல்லது. நீண்ட காலத்திற்கு நோய்க்காவிகளாக இருப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். தம்மை அறியாமலே பலருக்கு நோயை உருவாக்கும் கிருமிகளை இவர்கள் பரப்பி விடுகின்றனர்.

மூன்றாவது கட்ட அறிகுறியாக நெறிகளைக் கூறலாம். ஏனைய நோய்களில் உண்டாகும் நெறிகள் போல் HIV தொற்றால் ஏற்படும் நெறிகள் இலகுவில் மறையமாட்டாது. உடலில் பல பகுதிகளில் இந்நெறிகள் தோன்றினாலும் பொதுவாக கழுத்து, அக்குள் மற்றும் உறுப்பின் அருகுள்ள INGUINAL REGION Gurtorp lugg5356flo) G.55a56i தோன்றலாம். மூன்று மாதங்களுக்கு மேலாக பெரிய நெறிகள் இருப்பின் HIV என்பதை உணர்ந்து உடனே இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இவ் அறிகுறியைPERSISTANT GENERALISED LYMPHADINOPATHY 6160I அழைக்கிறோம்.
நாலாவது கட்ட அறிகுறிகளை AIDS RELATED COMLEX அதாவது எயிட்ஸ் சார்ந்த குணம் குறிகள் என்கிறோம். இக் கட்டத்தில் எடை குறைதல், நீடித்த காய்ச்சல், இருமல், வயிற்றோட்டம் என்பன தோன்றலாம். ஒரு மாதத்தில் 10% எடை இழப்பு வரை ஏற்படலாம். காச நோய்க்கான சளிப்பரிசோதனையும் செய்து பார்த்தல் நன்று.
ஐந்தாவதும் இறுதியுமான அறிகுறிகள் மிகக் கடுமையான எயிட்ஸ் அறிகுறிகளாகும். முன் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மேலாக தோற் தொற்றுக்களும், வாய், தொண்டை முதலானவற்றில் வெண்படையான பங்களில் தொற்றுக்களும் ஏற்பட்டு நோயாளி பார்ப்பதற்குக் கடும் நோயாளியாகத் தென்படுவார். இந்த அறிகுறி உடல்வலு குறைந்தவர்களில் ஓரிரு வருடங்களுக்கு உள்ளாகவே தோன்றக்கூடும். வலுவான, போஷாக்குள்ளவர்கள் இந்நிலை ஏற்பட சில வருடங்கள் எடுக்கும். சிலருக்கு 10 வருடங்களுக்கு மேலும் செல்லலாம். சாதாரண மனிதர்களில் ஒரு போதும் தோன்றாத தடிப்பான ஒருவகைக் புற்று நோயான ‘KARPOSIS SARCOMA எயிட்ஸ் நோயாளர்களில் ஏற்படும். ஆரம்பத்தில் தடிப்புக்களாக தோன்றி, நிற மாற்றம் ஏற்பட்டு, வளர்ச்சியுற்று,
27

Page 20
கத்தரிப்பூ நிறத்தையுடைய கட்டிகளாக உருவாகும. இப் பகுதிகளில் சொறிவு இருக்காது. இப்புற்று நோய் தோலிலும் வாய், தொண்டை, சுவாசப்பை என்பன வற்றிலும் ஏற்படலாம்.
இந்த காலகட்டத்தில் H.I.V தொற்றுக்குள்ளானவர் முழுமையான எயிட்ஸ் நோயாளியாக உருவெடுக்கிறார். இவரில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து போகும். இதனால் உடலைத் தொற்றும் பலவித கிருமிகளும் அழிக்கப்படாமல், நோய் ஏற்படுத்துகின்ற அவல நிலை உருவாகின்றது. குறிப்பாக நியூமோனியா (PNEUMONLA), 6 buGib. g6.js6flo) SITE(35|Tu (TUBERCULOSIS) LDfbptb வயிற்றோட்ட நோய்கள் இலகுவில் தொற்றிக்கொள்ளும். மலேரியா உள்ள பிரதேசங்களில் அடிக்கடி மலேரியாவும் வரலாம். தோல் தொற்று நோய்கள் மோசமடையும். “என்கபலைற்ரிஸ்” என்னும் மூளைக் காய்ச்சலும் ஏற்படலாம். எயிட்ஸ் நோயின் வரவைத் தொடர்ந்து இதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருந்த காசநோய் மறுபடியும் வேகமாக சமூகத்தில் பரவும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
மறதியும், சிந்தனைத் திறனின்மையும் இவர்களில் ஏற்படும் இன்னொரு அறிகுறி. பலர் காலப்போக்கில் உளப்பாதிப்புக்கு உள்ளாகின்றனர். DEMENTIA என்ற புத்தி சுவாதீன மாறாட்ட நோய் சிலரில் ஏற்படுகிறது.
காலப்போக்கில் கொடிய தொற்று நோய்களால் எயிட்ஸ் நோயாளிகள் இளவயதிலேயே மரணத்தைத் தழுவிக்கொள்கின்றனர். எனவே, எயிட்ஸ் பற்றி விழிப்புடன் இருப்பது அவசியம். ஒழுக்க நெறியும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடும், இருபால் கற்பு நெறியும் எயிட்ஸிலிருந்து தப்பிட உதவுகிறது. மேலும் இரத்தத்தை கையாள்வதிலும், இரத்தத்தானம் பெறுவதிலும், ஊசி மருந்து ஏற்றும் போதும்,
28

சவரம் செய்யும் போதும் எயிட்ஸ் தொற்றக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்பதால் அவற்றின் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குடும்பத்திற்கு அப்பாற்பட்ட பாலுறவு தவிர்க்க முடியாத போது ஆணுறையை (பிரீதி) பாவிப்பது அத்தியாவசியமானது. மருந்தில்லா கொடிய நோய்க்கு இதுவே சிறந்த தற்காப்பு நடவடிக்கையாகும்.
எயிட்ஸ் ஒரு கண்ணோட்டம் சில தகவல்கள்
xx
2004 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 14000 பேர் புதிதாக HIV தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதில் 95% இற்கு அதிகமானவர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உழைக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஏறத்தாழ 12000 பேர் 15 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்களில் ஏறத்தாழ 50% பெண்கள்.
இவர்களில் 50% 15-24 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.
2004 ஆம் ஆண்டு இறுதியில் உலகளாவிய ரீதியில் HIV ஆல் பாதிப்புக்குள்ளாகிய பெண்கள்
மற்றும் சிறுவர்களின் எண் ணிக்கை
அதிகரித்துள்ளது
HIV உடன் வாழும் மக்கள் - 39.4 மில்லியன்
29

Page 21
xx
2004இல் புதிதாக HIV பாதிப்புக்குள்ளானவர்கள் - 4.9 மில்லியன்.
2004 இல் எயிட்ஸால் இறந்தவர்கள் - 3.1 மில்லியன்.
2004 ஆம் ஆண்டு இறுதியில் HIV மற்றும் எயிட்ஸால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரிப்பு.
HIV உடன் வாழும் சிறுவர்கள் 2.2 மில்லியன்.
2004இல் புதிதாக HIV தொற்றுக் கு ஆளானவர்கள் - 6,40,000.
2004 இல் எயிட்ஸ் இறப்புக்கள் - 5,10,000.
R
30
 

06. எயிட்ஸ் தொற்றை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
கடந்த நுாற்றாண்டின் பிற்பகுதியில் இனம் காணப்பட்டு இதுவரை மில்லியன் கணக்கான இளம் உயிர்களை காவுகொண்டு. விஞ்ஞான மருத்துவ துறையினருக்கு சவாலாக இன்றும் கொடிய ஆட்கொல்லி தொற்று நோயாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது எயிட்ஸ்! எச்.ஐ.வி என்ற நுண்ணுயிர்க் கிருமித் தொற்றினாலே எயிட்ஸ் நோய் உருவாகிறது.
எச்.ஐ.வி கிருமி ஒருவரில் தொற்றியவுடன் எயிட்ஸ் ஏற்பட்டு விடாது. ஓரிரு வருடங்களில் இருந்து பல வருடங்கள் வரை நோய் அரும்பும் காலம் இருக்கும் எனினும் கிருமித் தொற்றுக்கு உள்ளானோர் சுகதேகிகள் போல் இருப்பார்கள். நோயைப் பரப்பக் கூடியவராக இருப்பார்கள். இவர்களில் எயிட்ஸ் நோய்க் கிருமி இருப்பதை ஆய்வு கூடபரிசோதனைகள் மூலமே அறிந்து கொள்ள முடியும்.
ஒருவர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி உள்ளாரா என்பதை தெரிந்து கொள்வதற்கு இரத்த பரிசோதனைகள் உள்ளன. பெரிய வைத்தியசாலைகளில் சோதிக்கும் வசதி இருக்கிறது.ஒருவருக்கு எயிட்ஸ் கிருமித் தொற்று இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து அறியக் கூடிய பரிசோதனைகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.அவையாவன:-
31

Page 22
01.616SEIT (ELISA)
6655 T 66oi Lugb(ENZYME LINKED IMMUNO SORBEN ASSES)என்பதன் சுருக்கமாகும். எயிட்ஸ் நோய் உள்ளதா என்று அறியவேண்டியவரின் இரத்தத்தில் இச் சோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனையின் முடிவில் எச்.ஐ.வி(+) அல்லது எச்.ஐ.வி(-)என முடிவு வரும். எச்.ஐ.வி() என்று முடிவு கிடைத்தால் அவரில் எயிட்ஸ் கிருமி இல்லை என்பது முடிவு செய்யப்படுகிறது. எனினும் (+) என்று முடிவு வருபவருக்கு எயிட்ஸ் இருக்கக்கூடும். ஆனால் இது பின்னர் வேறு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் இப்பரிசோதனைகளுக்கு செலவு அதிகம். நிறங்களை வைத்து முடிவு மேற்கொள்ளப்படுவதால் திறமையும், அனுபவமும் உள்ள பயிற்றப் பட்ட மருத்துவ ஆயப் வுகூட பரிசோதகர்களாலேயே செய்ய முடியும். நோய்த்தொற்று ஏற்பட்டு 3மாதத்திற்கு உட்பட்டவர்களில்() என்ற முடிவே வரும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஸ்னவே 3மாத இடைவெளியில் மீண்டும் பரிசோதிப்பது நல்லது.
o2.6MarGwủGg Gai y6lang ' (WESTERN BLOT)
எயிட்ஸ் நோய் இருப்பதை உறுதி செய்யும் பரிசோதனை இதுவாகும். இப்பரிசோதனையின் முடிவுகள் தெரிய இரண்டு வாரம் அளவில் எடுக்கலாம்.எச்.ஐ.வி(+) என்று இந்த சோதனையின் முடிவு வந்தால் அந்நபர் எயிட்ஸ் கிருமியை உடலில் கொண்டுள்ள ஒருவர் என்பது உறுதியாகும்.இப்பரிசோதனையில் எச்.ஐ.வி கிருமியின் பல பாகங்களுக்கு எதிரான பிறபொருள் எதிரிகளை அடையாளம்
32

காண்பதிலேயே முடிவு தங்கியுள்ளது.இப்பரிசோதனையை மிகவும் பயிற்சி பெற்றவர்களாலேயே மேற்கொள்ள முடியும். செலவும் அதிகம் ஆனால் நம்பகரமான பரிசோதனை
03. சீ டீ ஆம் 4- சீ டீ 8 பரிசோதனை முறை
இதுவும் உறுதியான முடிவைத் தரும்.செலவு அதிகம். o4.606ergos Gooss (VIRAL LORD)
இதுவும் நம்பிக்கையானது. ஆனால் செலவு மிகவும் அதிகம்.
நமது நாட்டிலில் முதல் இரு பரிசோதனைகளும் செய்யும் வாய்ப்பு உண்டு. முதலாவது பரிசோதனை பரவலாக்கப்பட்டு வருகிறது. எனவே ஒருவர் தனக்கு எயிட்ஸ் கிருமித்தொற்று இருக்கிறது என சந்தேகிக்கும் பட்சத்தில் தயக்கமின்றி முதலாவது பரிசோதனையைச் செய்து பார்க்கலாம்.ஒரு நபருக்கு எச்.ஐ.வி(+) என முடிவு கிடைப்பின் இவரது வாழ்க்கைத்துணையையும் கட்டாயம் சோதிக்க வேண்டும்.
எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு மூன்று மாதங்கள் கடந்த பின்னர் தான் நோய் இருப்பது தெளிவாக இனம் காண முடியும்.எனவே ஒரு பாதுகாப்பற்ற தவறான உறவால் எச்.ஐ.வி தொற்று ஏற்ப்பட்டு இருக்குமா என்று சந்தேகம் எழுந்தால் மூன்று மாதங்கள் முடிந்த பின்னரே சோதிக்க வேண்டும். சாதாரணமாக எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் தொற்று ஏற்பட்டு ஓரிரு வருடங்களின் பின்னர் தான் வெளித்தெரிய ஆரம்பிக்கும்.நல்ல ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்களில் 5-10 வருடங்கள் கூட தாமதமாகலாம்.
எனினும் நோய்க்கிருமி தொற்றி மூன்று மாதங்கள் கடந்தவர்களின் இரத்தத்தில் நோய்க் கிருமி இருப்பதை ஆய்வு கூடப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.
33

Page 23
இதனால் சமூகத்தில் இந்நபர் நோயைப் பரப்புவதைத் தவிர்க்க முடியும். இந்தநபரும் மருத்துவ ஆலோசனை பெற முடியுமல்லவா?
07. எச்.ஐ.வி கிருமி உடலில் தொற்றியபின் எயிட்ஸ் நோய் வருவது எவ்வாறு?
நோய் உடலுக்குள் பரவும் காலமும் பாதிப்பை ஏற்படுத்தி நோய் வெளியில் தெரியும் காலமும் அவரவர் உடல் நலத்தைப் பொறுத்து அமையும். நல்ல உடல் நலமும் நல்ல போஷாக்கும் உள்ளவர்களில் நோயெதிர்ப்புச்சக்தி அதிகமிருப்பதால் இவர்களில் நோயரும்பு காலம் பல வருடங்கள் செல்லலாம் . சிலரில் பத்து வருட்ங்களுக்குப ’பின்னர் தான் நோய் அறிகுறி தெரிகிறது.திடகாத்திரமில்லாத போஷாக்கு குறைந்தவர்களில் ஓரிரு வருடங்களுக்கு உள்ளாகவே எயிட்ஸ் அறிகுறி தோன்றலாம்.
சுகதேகி ஒருவரின் இரத்தத்தில் கலக்கும்.எச்.ஐ.வி கிருமி இரத்தத்தில் உள்ள வெண்கலங்களான வெண்குருதிச் சிறு துணிக்கைகளில் ஒட்டிக்கொள்கிறது. இக்கிருமியின் வடிவமும் வெள்ளைக் கலங்களை ஒத்திருப்பதால் வெள்ளை அணுக்கள் இவற்றை அழிக்காமல் ஏற்றுக்கொள்கின்றன. குருதி வெண்கலங்களுடன் ஒட்டிக்கொள்ள கிருமி தன்னிடமுள்ள ஒருவகை நொதியத்தின் உதவியால் இவ் இணைப்பை சாத்தியமாக்குகின்றது. இக்கிருமிகள் வெண்கலங்களில் நுழைந்து தம்மை பெருக்கிக் கொள்கிறது.இதனால் அந்த வெண்கலம் அழிந்து போகிறது.பெருகிய எயிட்ஸ் கிருமிகள்
34

ஏனைய வெள்ளைக் கலங்களையும் தாக்கி அழிக்க ஆரம்பிக்கின்றன. அத்துடன் பல்லாயிரக்கணக்கான கிருமிகளை உருவாக்குகிறது. இதனால் இலட்சக் கணக் கான குருதிக்கலன்கள் அழிந்து போகின்றன. புதிதாக உற்பத்தியாகி இரத்தத்தில் தினமும் கலந்து கொணி டிருக்கும் வெண்கலங்களையும் இவை விட்டு வைப்பதில்லை. ஊசிமுனையின் ஆயிரத்தில் ஒரு பங்கை விட மிக சிறிதான எச்.ஐ.வி கிருமி சுகதேகியின் உடலில் புகுந்து அனைத்து வெண்கலங்களையுமே அழிக்கக்கூடிய வல்லமை பெற்றவை என்பதால் தான் எச்.ஐ.வி தொற்றில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டியுள்ளது.
எச்.ஐ.வி கிருமி பெருகி வெள்ளை அணுக்களைத் தொடர்ந்து அழித்துக்கொண்டிருப்பதால் அந்நபரின் நோய் எதிர்ப்புச் சக்தி முற்று முழுதாக அழிந்து கொண்டிருக்கும் இந்நிலையையே பெறப்பட்ட நிரப்பீடன குறைபாட்டு அறிகுறி (ACQUIRED IMMUNO DEFICENCY SYNDROME) அதாவது AIDS(எயிட்ஸ்) என்கிறோம்.
மனித இரத்தத்தில் உள்ள நோயெதிர்ப்பு அலகான வெண்கலங்களின் எண்ணிக்கை சரிபாதிக்கு வீழ்ச்சியடையும் போது எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் வெளியாக ஆரம்பிக்கின்றன.இந்த நிலையில் அந்த நபரை எந்த தொற்று நோயும் இலகுவில் பற்றிக் கொள்ளும் . அவ்வாறு தொற்றிக்கொள்ளும் நோய்களை உரிய மருந்துகளாலும் இலகுவில் குணப்படுத்த முடியாது. நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் எப்போதுமே நேரடியாக நோயைக் குணப்படுத்து வதில்லை. இவை குருதி வெண்கலங்களைத் துாண்டி அவற்றின் மூலம் தான் நோயைக் குணப்படுத்துகின்றன.எயிட்ஸ் நோயாளியில் வெண்கலங்கள் குறைந்து போவதனால் நோய்களை முற்றாக குணப்படுத்த முடியாமல் போய் விடுகிறது.
35

Page 24
இதனால் எயிட்ஸ் நோயாளி அடிக்கடி தொற்று நோய்களுக்கு ஆளாவர்.
ஒரு சுகதேகியின் உடலில் உட்புகும் கிருமிகள் எல்லாம் நோயைத் தோற்றுவிப்பதில்லை.90% ஆன தொற்றுக்களை வெண்கலங்கள் முறியடித்து விடுகின்றன. ஆனால் எயிட்ஸ் நோயாளரில் வெண்கலங்களின் குறைவினால் அப்படி நோய்களை முளையிலே கிள்ளி எறிய முடியாமல் போய் விடுகிறது.இதனால் நோய்கள் அடிக்கடி வருகின்றன.மேலும் ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போது கிருமிகள் முற்றாக அழிவதில்லை. அவை பதுங்கி இருந்து விட்டு மீண்டும் பெருகி மறுபடி நோயை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. (RELAPSE)
எனவே எயிட்ஸ் நோயைப் பொறுத்தவரை வரும் முன் காப்பதே சிறந்த நடடிக்கையாகும். ஒழுக்கத்தையும், சுகாதாரப் பழக்க வழக்கங்களைப் பேணியும் எயிட்ஸ் பெருகி வருவதைத் தடுப்போம்.
36
 

08. எயிட்ஸ் நோய்க்கான மருந்து கண்டுபிடித்தல் சாத்தியமா?
எயிட்ஸ் எனும் கொடிய நோய் இன்றைய உலக சீரழிவின் மொத்த விளைவாகும. சபலமும், இச்சையும், ஒழுக்கமற்ற மனநிலையும் சேர்ந்து கட்டுபாடற்ற வாழ்வு முறையில் மனிதன் சென்றதால் பெறப்பட்ட கொடிய நோயே இதுவாகும். பண்டைய கால சுதேசிய வைத்திய முறையில் குறிப்பிடப்பட்டுள்ள கொடுரமான வெட்டை நோய் இதுவாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது. இந்நோய் 1980 களில் தான் இனம் காணப்பட்டுள்ளது. எனினும் இந்நோய் பண்டைய காலத்தில் இருந்து பின் வலுவிழந்த நோயாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். இது ஒரு பால்வினை நோயாக அறிமுகமானாலும் தவறு செய்கிறவனை மட்டுமின்றி ஒழுக்கமுள்ளவர்களையும் கூட இரத்தத்தானம், ஊசி மருந்து ஏற்றுதல் முதலான வழிகளிலும் தொற்றக் கூடிய அபாயமுள்ளது.
6Tu fill 6m5 (AIDS), 6Të g6nf (HIV) 676oi gojë நுணி னுயிர் க் கிருமியினால் ஏற்படுகிறது. இது நோயாளியிலிருந்து பாலுறவு மூலமும், இரத்தத்தின் மூலமும் பரவுகிறது. இது ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படும்
37

Page 25
நோயாதலினால் இதற்கு மருந்து இல்லை. பக்ரீரியா, பங்கசு போன்ற நோய்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் இருப்பது போல வைரஸ் நோய்களை முற்றுமுழுதாக குணப்படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. எனினும் வைரஸ் நோய்கள் பலவற்றிற்கு தடுப்பு மருந்து (VACCINE) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சைக்காக, கிருமிப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய, நோயின் தீவிரத்தைத் தணிக்கக்கூடிய, நோயின் தாக்கத்தை மட்டுப்படுத்தக்கூடிய அல்லது தள்ளிப்போடக்கூடிய மருந்துகளே வைரஸ் நோய்க்கு பயனபடுத்தப்படுகிறது. அத்துடன் அறிகுறிகளுக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதுடன் உடலின் நோயெதிர்ப்பை அதிகரிக்கக் கூடிய மருந்துகளையும் போஷாக்கான உணவுகளையுமே பாவிக்கின்றோம்.
ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரையில் இன்று பல நாடுகளிலும் தடுப்பு மருந்துகள் உருவாக்குவதற்கும் நோயின் தாக்கத்தை தாமதப்படுத்தி கூடிய காலம் வாழவைக்கக்கூடிய மருந்துகளையும் கண்டுபிடிப்பதிலும் தீவிர முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இன்னும் பூரண வெற்றி கிட்டாவிட்டாலும் சில ஆறுதலளிக்கும் வெற்றிகளை ஈட்டியுள்ளனர். இன்ரபெரோன் வகை மருந்துகள் நோயரும்பிய பின் அதிக பலன் அளிக்காவிட்டாலும் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஆரம்ப காலத்தில் இதனைப் பாவிப்பதன் மூலம் நோயரும்புதலை தடுக்க அல்லது சில வருடங்கள் கூடுதலாகத் தாமதப் படுத்த முடிந்திருக்கிறது. அல்பா இன்ரபெரோன் (INTERFERON) என்ற இம் மருந்து அதிக விலையானது. இலங்கை மதிப்பில் ஒருமாத மருந்துக்கு 2 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. மேலும் எல்லோரிலும் இந்த மருந்து சித்திப்பதில்லை.
38

af GLIT61e6ôr (ZIDOWUDINE) 616öigD g86ôr G60TT(gb மருந்தும் பரிசோதனை நிலையில் உபயோகிக்கப்பட்டு சிலரில் சித்தியளித்திருக்கிறது. HTV கிருமி உடலில் பெருகுவதற்கு fG36 ui6rò JITGóî6ðaffúGBL6ð (REVERSETRANSCRIPTASE) என்ற ஒருவகை நொதியம் தேவைப்படுகிறது. இந்நொதியத்தின் செயற்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் இந்த மருந்து தொழிற்படுகிறது.
அடுத்த CD4 (சிடீ4)ஒத்த புரதத்தை மருந்தாக உபயோகித்து சிகிச்சையளிக்கப்படுகிறது. எச்.ஐ.வி கிருமி மனித உடலில் உள்ள வெண்குருதிக்கலங்களைச் சேர்வதற்கு மனிதக்கலங்கள் சிலவற்றிலுள்ள CD4 என்ற வகைப்புரதம் தேவைப்படுகிறது. இப்புரதத்தை செயற்கை முறையில் வெளியில் உற்பத்தி செய்வதில் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இப்புரதத்தின் கலத்தில் சேரும் தன்மையை அற்றதாக்கிய புரதத்தை உட்கொடுப்பதன் மூலம் எச்.ஐ.வி வைரஸ் களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி சிகிச்சையளிக்கும் முறையும் இன்னமும் பரீட்சார்த்த நிலையிலேயே உள்ளது. எனினும் ஓரளவு வெற்றியளிக்கும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. Retro Virus மருந்துகள் முழுமையாக நோயைக் குணப்படுத்தாது.
எது எப்படியோ எயிட்ஸ் சிகிச்சையில் சிக்கல் உள்ளன. தொற்றுநோய்களைக் குணப்படுவதிலும் மருந்துகள் நேரடியாகத் தொழிற்படுவதிலும் பார்க்க மனித வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால் மருந்துகள் பயன்தருவதைக் கடினமாக்கியுள்ளது. எயிட்ஸ் மருந்து மாத்திரமல்ல, ஏனைய தொற்று நோய்களுக்கான மருந்துகளும் கூட எயிட் ஸ் நோயாளர்களில் பூரணமாகச் சித்திக்காமலிருப்பதற்கு இதுவே காரணம். இன்னொரு சிக்கலும் எயிட்ஸ் நோய் சிகிச்சையில் உள்ளது. எயிட்ஸ் கிருமிகளை
39

Page 26
அழிக்கும் போது வெண்குருதிக் கலங்களும் சேர்ந்தே அழிந்து விடுகின்ற ஆபத்தும் உள்ளது. எச்.ஐ.வி கிருமிகள் வெண்கலங்களுக்கு உள்ளேயே பெருகுகின்றன.
எயிட்ஸ் கிருமிகளின் அமைப்பும் வெண்கலங்களை ஒத்திருப்பதால் அவை அவற்றை அழிக்காது ஏற்றுக் கொள்ளும் நிலையும் உண்டு. தடுப்பு மருந்துகளும் (VACCINES) இன்னமும் எயிட்ஸ் நோய்க்கு எதிராக வெற்றிகரமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.
எச்.ஐ.வி கிருமி தனது சில உயிரியல் இயல்புகளை (BIOLOGICAL HETROGENEITY) 99.d53519 DTipissiniqugs. இவ் இயல்புகளை அடிப்படையாக வைத்தே தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுவதால், இம் மாற்றம் அதைக் கடினமாக்கி விடுகிறது. எனினும் எல்லா எச்.ஐ.வி வைரஸ் உப பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு உயிரியல் இயல்பு இருக்கக்கூடும் என்பதால் அதைக் கண்டு பிடித்து அதன் மூலம் தடுப்பு மருந்து தயாரிப்பதில் வெற்றிகாண தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. பரீட்சார்த்த வெற்றிகள் சிலவும் எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது சாத்தியம்ானால் தடுப்பு மருந்தை உலகம் முழுவதும் ஒழுங்காகப் L6) வருடங்கள் கொடுப்பதன் மூலம் இந்நோயை அழிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
இன்றைய நிலையில் வருமுன் காப்பு முறையில் நோய் பரவுதலைத் தடுப்பதன் மூலமே எயிட்ஸைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்க நெறியும், விழிப்புணர்வும் முன்நடவடிக்கைகளுமே இப்போது பலன் தரும்.

தற்பொழுது எயிட்ஸ் தொற்றுக்குள்ளான தாயிலிருந்து, கருவிலிருக்கும் குழந்தைக்கு நோய்பரவும் அபாயத்தை குறைத்திட மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதைனை செய்து பார்த்து இந்த நோய்க்கிருமிகள் இருப்பின் மருந்து வழங்கப்படுகிறது.
09. சித்த ஆயுள்வேத வைத்தியத்தில் எயிட்ஸ் நோய்க்கு மருந்து உண்டா?
இன்று சர்வதேச ரீதியில் பெரும் சவாலாக விளங்கும் ஆட்கொல்லி நோயான எச்.ஐ.வி. தொற்றினால் ஏற்படும் எயிட்ஸ் நோய்க்கு இதுவரை தடை மருந்தோ, மருந்தோ கண்டுபிடிப்பதில் ஆங்கில மருத்துவ விஞ்ஞானிகள் பூரண வெற்றியை எட்டவில்லை என்பதால், சித்த ஆயுள்வேத மற்றும் சுதேசிய வைத்திய முறைகளில் எயிட்ஸ் நோய்க்கான சிகிச்சை உண்டா என்ற கேள்வி வலுப்பெற்று வருகிறது. இதற்கு சாதகமாக சீனாவிலும், இந்தியாவிலும் சில சித்த ஆயுள்வேத மருந்துகளே எயிட்சைக் குணப்படுத்துவதில் அல்லது நோயின் தாக்கத்தைக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பண்டைய சித்த ஆயுள் வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்ட வெட்டை என்ற நோயே தற்போது இனங்காணப்பட்டு அச்சுறுத்துகின்ற எயிட்ஸ் நோயாக இருக்கலாம் எனிறு சித்த மருத்துவர்கள் கருதுகிறார்கள்.மேலைத்தேய வைத்திய முறையில் பலகோடிக்கணக்கான ரூபா செலவில் எயிட்ஸ் நோய்க்கு தடைமருந்து கண்டுபிடிப்பதில் மேற்கொள்ளப்பட்டுவரும்
4.

Page 27
ஆராய்ச்சிகள் வெற்றியளிப்பதாய் இல்லை. சாண் ஏற முழம் சறுக்குவது போல் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளும் வலுவிழந்து போகின்றன.எயிட்ஸ் நோய் ஒரு வைரஸ் நோய் என்பதால் இதற்கு நேரடியான சிகிச்சைக்கான மருந்து கண்டுபிடிக்கும் சாத்தியம் ஆங்கில மருத்துவத்தில் இதுவரை இல்லாத ஒன்று என்று கூறலாம்.நோயின் வீரியத்தைக் குறைக்கவும் தொற்று ஏற்ப்பட்டவரின் நோயரும்புவதைத் தள்ளிப்போடவும் நோயுற்றவரில் அதன் உக்கிரத்தைக் குறைக்கவும், ஆயுட் காலத்தை நீடிக்கவும், மரணத்தை ஒத்திப்போடவும் சில மருந்துகள் உதவுகின்றனவே அன்றி பூரண சிகிச்சைக்கான மருந்து இதுவரை கணி டுபிடிக் கப் பபடவில் லை. பாவனையிலுள்ள மருந்துகள் கூட குறைந்த வீதத்திலேயே வெற்றியளிப்பதும், விலையதிகமாக இருப்பதும் சாதாரண குடிமகனி சிகிச்சை பெற முடியாத நிலையும் இருக்கிறது.இன்ரபெரோன் வகை மருந்துகளும் சீடிபோ வகைப் புரத மருந்துகளும் பரீட்சார்த்தமாகிப் பயன்படுத்தப்பட்டு வெகு சிலரிலேயே வெற்றியீட்டப்பட்டுள்ளது.
தொற்று நோய் குணப்படுத்தும் மருந்துகள், இரத்தத்தில் உள்ள வெண் குருதிக் கலங்களைத் துாண்டித்தான் நோய்களைக் குணமாக்குகின்றன. எயிட்ஸ் நோயாளியின் வெண்கலங்கள் அழிக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையில் குறைந்திருப்பதால் மருந்துகளால் குணப்படுத்துவது கடினமாயுள்ளது. மேலும் வெண்கலங்களை ஒத்தவையான எயிட்ஸ் கிருமியை பிறபொருளாக இனம் காணாமல் வெண்கலங்கள் அழிக்காமலும் விட்டு விடுகின்ற எயிட்ஸ் கிருமியை வெண் குருதிக்கலங்களில் ஒட்டவைக்கும் நொதியத்தைச் செயலிழக்கச் செய்வதின் மூலமும் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதில் பெரும் முயற்சிகொண்டு பலரில் பரீட்சித்தும் வருகின்ற போதிலும் முழு வெற்றியை இன்னமும் எட்டமுடியாதுள்ளது.
42

இந்த நிலையில் வெட்டைநோய்க்கு என பண்டைய மருத்துவத்தில் குறிப்பிடப்பட்ட மூலிகை மருந்துகளைப் பாவித்து எயிட்ஸ் சிகிச்சையில் முன்னேற்றம் கண்டுள்ளமை மேலும் இதுபற்றி விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்திட வேண்டிய ஒரு அவசியத்தை எடுத்தியம்புகிறது.சில சித்த வைத்தியர்கள் உண்மையான அறிவுபெற்று, திறமையும் அனுபவமும் மிக்கவர்களாக இருந்த போதிலும் சித்தர்கள் ஏடுகளிலேயே முற்றுமுழுதாகத் தங்கியுள்ளனர்.இவர்களிடம் சரியான விஞ்ஞான விளக்கங்களை எதிர்பார்க்க முடியாதுள்ளது.சித்த வைத்திய முறையில் மருந்துகளுடன் சத்தான சாறுகளும் நோயெதிர்ப்பை ஏற்படுத்தும் இலைவகை மற்றும் உணவுவகைகளும் சிகிச்சைக்கு உறுதுணை அளிக்கின்றன.தற்போது எட்டப்படும் சித்த வைத்திய முறையிலான வெற்றிகள் விரைவில் எதிர்காலத்தில் எயிட்ஸ் நோயை முற்றிலும் குணமாக்கமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
எச்.ஐ.வி தொற்றின் நோயின் முதலாம், இரண்டாம் கட்ட நோயாளிகளுக்கு சித்த வைத்தியம் செய்யப்பட்டபோது 97 வீதமான நோயாளிகள் பூரண குணமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் தற்போது இரத்தப் பரிசோதனையில் எச்.ஐ.வி அறிகுறி காட்டவில்லை தகவல் மகிழ்வையும், தெம்பையும் அளிக்கிறது.
அக்கிரகாரம் ,அதிமதுரம் முதலான 108 வகையான மூலிகைச்சரக்குகளின் சூரணங்களைத் தனித்தனியே எடுத்துத்தேனில் கலக்கி கூட்டாக்கி நுாறு நாட்களுக்கு தினமும் இரு வேளைப்படி அருந்தி வந்தவர்களுக்கே இந்த சிகிச்சை வெற்றி கிடைத்துள்ளது என இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகள் செய்திகள் வெளியிட்டன.
43

Page 28
சித்த வைத்திய முறையில் எயிட்ஸ் குணமாவது எப்படி? இம்மருந்துகள் எவ்வாறு தொழிற்படுகின்றன? இம்மருந்துகளில் உள்ள நோயைக் குணப்படுத்தும் இரசாயன பொருட்கள் எவை? இவற்றின் பின் விளைவுகள் என்ன? உள்ளே கிருமி பதுங்கி இருந்து மீளவும் நோய் வெளிக்கொள்ளுமா? என பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.
அற்புதமான நுண்ணியிர்க்கொல்லி மருந்தான பெனிசிலின் கூட சித்த மருத்துவர் பயன்படுத்திய பூஞ்சணத்தில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டமையை நாம் மறந்து விடலாகாது. எனவே ஆராய்ச்சிகளும், அதற்கான அரச உதவிகளும் தேவையென சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சிங்கள வைத்திய முறையிலும் எயிட்ஸ் நோயை
குணப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது .இவற்றை நாம் முற்றுமுழுதாக புறந்தள்ளி விட முடியாது. சீனர்கள் எயிட்ஸ் நோய்க்கான தடை மருந்தைக் கண்டுபிடிப்பதில் அண்மித்து விட்டதாக கூறப்படுகின்றது. விஞ்ஞான பூர்வமான ஆய்வும்,ஆராய்வும் உடனடித் தேவைகளாக உள்ளன. நோயைக் குணமாக்கும், அல்லது தடுக்கும் மருந்தின் இரசாயனக் கூறைக் கண்டுபிடித்து விட்டால் இம்மருந்துகளை செயற்கை முறையில் தயாரிப்பதிலும் வெற்றி காண முடியும். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
சித்த ஆயுள்வேத வைத்திய முறையில் எட்டப்பட்டதாக கூறப்படும் செய்திகளின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.

10. எச்.ஐ.வி தொற்றும் பெண்களும் குழந்தைகளும்
கடந்த சில வருடங்களாக எமது நாட்டிலும் எயிட்ஸ் நோயால் பாதிப்புறும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. எச்.ஐ.வி. தொற்றும் சாத்தியக்கூறு ஆண்களை விட பெண்களுக்கே அதிகமானதாக இருக்கின்றது. இதற்கு பிரதான காரணம் அவர்களது பிறப்புறுப்பு இலகுவில் சிதைவடையும் தன்மை கொண்டதாக இருப்பதே. எனவே இதுபற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் அவசியமாகின்றது. குருதியின் மூலமே, எச்.ஐ.வி. வைரசுக்கள் காவிச்செல்லப்படுகின்றன. இதனாலேயே போதைப் பொருள் ஊசிகளைப் பகிர்ந்துகொள்வோர், எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவரோடு உடலுறவு கொள்பவர்களுக்கு எச்.ஐ.வி தொற்றும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றன. குதவழியினுாடாக உடலுறவு எச்.ஐ.வி தொற்றுக்கான சாத்தியக்கூற்றை மேலும் அதிகரிக்கும்.
எச்.ஐ.வி தொற்றுடைய தாயிலிருந்து சேய்க்கு வைரஸ் கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். தாயின் வயிற்றில் தொற்றுக்குள்ளாகாத குழந்தை கூட, இயற்கையான பிரசவத்தின் போதோ அல்லது, தாய்ப் பாலினுடாகவோ அதனை பெற்றுக்கொள்ளும் அபாயம் இருக்கின்றது. எதையும்
45

Page 29
அறியாத பச்சைக்குழந்தை பிறக்கும் போதே நோயாளியாவது கொடுமை!
எச்.ஐ.வி. தொற்றியுள்ள பெண்களைப் பொறுத்தளவில் மாதவிலக்கு காலங்களில் வெளியேறும் குருதியில் அதிகளவில் எச்.ஐ.வி வைரசுக்கள் காணப்படும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு எயிட்ஸ் தொற்றும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் இவர்கள் எயிட்சை பலருக்கும் பரப்புவார்கள். கருவுற்ற எச்.ஐ.வி. தொற்றுள்ள தாய்மார் தொடர்ந்து சிகிச்சை பெறுவதன் மூலம் குழந்தைக்கு கருவில் இருக்கும் போதே எச்.ஐ.வி தொற்றுவதை தவிர்க்க முடியும்.
மேலும் பிரசவத்தின் போது வைத்தியசாலையில் பிரசவத்தை மேற்கொள்வதன் மூலம் தொற்றை தவிர்க்கலாம் எச்.ஐ.வி தொற்றுள்ள தாயார், குழந்தைகளுக்கு பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் குழந்தைகளுக்கு பால்மா வகைகளை பதிலீடு செய்யலாம். எனினும் புட்டிப்பால் கொடுக்கும் போது பல தொற்று நோய்கள் ஏற்படும் சாத்தியம் இருப்பதால் அவதானமாக் செயற்பட வேண்டும். ஓரளவு வளர்ந்த பின்னர் கரண்டியால் பருக்கலாம்.
பாலூட்டும் போத்தல்களையும் சூப்பிகளையும் உடனுக்குடன் கழுவி நீரில் அவித்துப் பாவிப்பது உசிதமானது. ஒரு தடவை கரைத்த பாலை பின்னர் வைத்திருந்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பிறப்பிலேயே எச்.ஐ.வி தொற்றுடன் பிறக்கும் குழந்தைகள் விரைவிலேயே இறக்கும் சாத்தியம் அதிகம. வளரிளமைப் பருவம் வரை வாழ்வதே அபூர்வம் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன்.
46

ஆணுறுப்பில் முன்பகுதியில் இஸ்லாமியர்கள் செய்துகொள்ளும் சடங்கு ஒரு சத்திர சிகிச்சையை ஒத்தது. இதனால் உறுப்புகளைக் கழுவி துப்பரவாக வைத்திருக்க முடிகிறது. எனவே இஸ்லாமியர்களில் எச்.ஐ.வி தொற்றும் குறைவாகவே ஏற்படுகிறது. சில தேசத்தவர்கள் பெண்ணுறுப்புகளில் செய்யப்படும் சத்திர சிகிச்சையை ஒத்த சடங்கில் இவ்வாறான பாதுகாப்பு கிட்டுவதில்லை என்று தெரிய வருகிறது. எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கு பெண்கள் மிக விரைவில் ஆளாகின்றனர்.
சமூக வறுமை காரணமாக விலைமாதர் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள் இந்த நோயின் தாக்கத்துக்கு இலகுவில் உள்ளாகின்றனர். இன்று உலகில் தினமும் 3000 பெண்கள் எச்.ஐ.வி வைரசினால் பாதிக்கப்படுகின்றனர்.
வளர்முக நாடுகளில் அதிகமான பெண்கள், பாலுறவில் அனுபவமுடைய வயதான ஆண்களுடன் உடலுறவு கொள்வதனால் அதிகமாக எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகின்றனர். பெண்களிடம் எச்.ஐ.வி நோய் தொற்று இருப்பது பற்றிய அறிகுறிகள் பொதுவாகத் தெரிவதில்லை. இதனால் அவர்கள் மிக விரைவில் நலிவடைகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்படும் பெண்கள் நோய்க் குறிகளைக் கொண்டிருந்தாலும் தங்களின் அந்தரங்க வேதனையை இரகசியமாகவே வைத்துக்கொள்கின்றனர். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கு அவர்கள் விரும்புவதில்லை. வசதியும் இருப்பதில்லை.
- சமயங்கள் எல்லாமே திருமண உறவிற்குட்பட பாலுறவை வற்புறுத்திய போதிலும் சமூதாயத்தின் நிலைப்பாடு ஆண்கள் ஏமாற்றுவதற்கு வழி வகுக்கின்றது. ஆண்களின் அத்து மீறிய பாலுறவு வேட்கை சமுதாயத்தில் பெரிதாகக்
47

Page 30
கண்டுகொள்ளப்படுவதில்லை. பெண்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதும் சமூதாயத்தின் வேண்டுதலாக உள்ளது. பெண்கள் எச்.ஐ.வி பற்றிய அபாயத்தைத் தெரிந்திருந்தாலும் அதனைக் கணவரிடம் சொல்வதற்கு மனத் துணிவற்றவர்களாக உள்ளனர். பாலுறவு பற்றி வெளிப்படையாகப் பேசும் பக்குவம் வளர்முக நாடுகளில் வளர்ச்சியடையவில்லை. ஒழுக்கங்கெட்ட ஆண்களைத் தடுக்கக் கூடிய மனத்திடமற்ற பெண்கள் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகி மரணிக்கின்றனர்.
இன்று வளர்முக நாடுகளில் அரசியல் தொட்டு சமூக பொருளாதார மட்டங்கள் வரை சமூகம் குறிப்பாக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பல. இவற்றின் மத்தியில் எயிட்ஸ் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பது கேள்வியாக உள்ளது. பொருளாதார இடர்பாடுகள், பெண்களின் பின்தங்கிய நிலை என்பவற்றுக்கும் எயிட்ஸ் நோய்க்கும் பெரியளவிலான தொடர்பு இருப்பதாகவே தெரிகின்றது. எயிட்ஸ் தடுப்பு தொடர்பாக நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற
48
 

வேண்டுமாயின் வறுமை ஒழிப்பு மட்டுமல்ல, பாலுறவு முறைகளிலும் மாற்றம் வேண்டும். ஆணி, பெண் இருபாலருடனும் நாம் அதிகம் பேச வேண்டும். இதைத் தவிர நாம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை.
11.எச்.ஐ.வி தொற்றுடையவர்களுக்கு உளவளத்துணை
எச்.ஐ.வி தொற்றுடையவர்களுக்கு மாத்திரமன்றி
ஆபத்தான நடத்தை உடையவருக்கும் (risky behaviour) உளவளத்துணை அவசியமாகின்றது. ஆபத்தான நடத்தை உடையவர்கள், HIV தொற்றுக்கு உட்பட்டிருந்தாலும் அல்லாவிட்டாலும் உளவளத் துணை தேவைப்படும். அவ்வாறானவர்கள் HIV தொற்றுக்கு உட்படவில்லையானாலும் மேலும் ஆபத்தான நடத்தையைத் தொடராதிருக்க உளவளத்துணை தேவைப்படுகின்றது. அதேபோல், HIV தொற்றுக்கு உட்பட்டவர், அதனை ஏற்றுக்கொண்டு, இனிமேல் தான் எவ்வாறு சமூகத்தில் ஏனையோருடன் வாழ்வது என்பவற்றை திட்டமிட உளவளத்துணையாளர்களை நாடுவது அவசியம்.
வேறு எந்தப் பயங்கரமான நோய்த் தொற்றுக்கு உள் ளானவர் களிலும் பார்க்க HTV தொற்றுக்கு உள்ளானவர்களை ஒரங்கட்டி ஒதுக்கித்தள்ளும் நிலை எமது சமூகத்தில் காணப்படுகின்றது. இது எயிட்ஸ் நோய்பற்றிய காழ்ப்புணர்வை மக்களிடையே வளர்க்கவும், நோய் பற்றிய
49

Page 31
போதிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படாமல் போகவும் வழிவகுக்கும். அதுமாத்திரமல்ல தொற்றுக்கு உள்ளானவரை விரக்தியின் உச்சத்துக்கே தள்ளி விடவும் வாய்ப்புண்டு.
இன்று சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்குக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறுவர் பாலியல் கல்வியின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. இது எமது சமூகத்தில் தவறானதாகக் கணிக்கப்பட்டாலும், எயிட்ஸ் அற்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப இது அத்தியாவசியமாகின்றது.
சிறு வயது முதற்கொண்டே பாலியல் கல்வி புகட்டுவதில் தாயின் பங்கு முக்கியமானது. அதைப் போலவே ஆசிரியர்களின் பங்குமுண்டு. ஒருவனுக்கு ஒருத்தி, பாதுகாப்பான உடலுறவு என்பன எச்.ஐ.வி. தொற்றிலிருந்து எம்மைக் காக்கின்றன. ஒருத்தருடனேயே பாலியல் உறவென்பது இன்றைய சூழலில் சிலருக்கு சாத்தியப்படாததாக இருக்கலாம். அவ்வாறான சூழ்நிலையில் பாதுகாப்பான, உடலுறவே சிறந்தது. அதாவது ஆணுறை போன்ற பாதுகாப்புக்கள் தேவைப்படுகின்றன.
தம்பதியரிடையே பாலியல் அறிவு மாத்திரமின்றி, அது தொடர்பான கருத்தொற்றுமையும் அவசியம். சேர்ந்து வாழும் ஆண், பெண் இருவரும், தத்தமது துணைகள் பாலியல் ரீதியாக தூண்டப்படும் காலம், நேரம் என்பன பற்றிய அறிவைக் கொண்டிருக்க வேண்டும். இவற்றைத் தீர்ப்பதில் அவர்களிடையே ஏற்படும் அலட்சியம் அல்லது விருப்பமின்மை, ஒருவரை வேறு துணையை நாடச்செய்யலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களும் எச்.ஐ.வி தொற்றுக்கு வழிவகுக்கின்றன.
எப்போதும் அடுத்துவரும் சந்ததி, முன்னைய சந்ததியிலும் பார்க்க முனைப்புடனேயே செயற்படும்.பாலியல் ரீதியாகவும் இது சரியானது தானி என
50

நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. எனவே எதிர்காலச் சந்ததியினர் எச்.ஐ.வி தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாக்க பாலியல் கல்வி அவசியமாகின்றது.
அதேவேளை எச்.ஐ.வி தொற்றிக்கொண்டுள்ளவர் களுக்கான உளவள ஆலோசனைகளில் ஈடுபடுவோரை நாடுவது குறைவாகவே உள்ளது. குறித்த சமூகத்தின் தவறான கண்ணோட்டம் அதற்கு பிரதான காரணமாகின்றது. எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்கள் தம்மை இனங்காட்டாமலேயே உளவளத்துணை ஆலோசனை பெறலாம்.
எயிட்ஸ் பரவாத வழிகள்
1. முத்தமிடல் மூலம் எயிட்ஸ் பரவாது.
2. நுளம்பு, கொசு கடி மூலம் எயிட்ஸ் பரவாது.
3. தொட்டுப் பழகுதலாலோ ஒரே பாத்திரங்களைப்
பாவிப்பதாலோ எயிட்ஸ் பரவாது.
4. துவாய் உடைகளைப் பாவிப்பதாலோ துவைப்பதாலோ,
படுக்கையைப் பயன் படுத்துவதாலோ எச்.ஐ.வி தொற்றாது.
51

Page 32
12. எயிட்ஸ் பரவுவதை தடுப்போம்
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் முதலாம் திகதி எயிட்ஸ் விழிப்புணர்வு நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. மக்கள் உணர்ந்து கொள்ளும் வேகத்தில் எயிட்ஸ் நோய், கட்டுப்பாட்டுள் அடங்கவில்லை. உலகில் எல்லா இடங்களிலும் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்த நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் கூடுதலாகவே இருக்கின்றது.
வட அமெரிக்காவிலும், ஆபிரிக்காவிலும் தான் இந்த நோயின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. எயிட்ஸ் நோயால் இறப்பவர்கள் தமது இழப்போடு பாரிய சமூக பொருளாதார பாதிப்புக்களையும் விட்டுச் செல்கின்றனர். நோயின் பாதிப்புக்குள்ளாகும் ஒருவருக்கு ஏற்படும் வைத்தியச் செலவு சாதாரண குடும்பத்துக்குப் பாரிய சுமையாக உள்ளது. இந்த நோய் காரணமாக அதிகமான பயிற்சி பெற்ற, அனுபவம் மிக்க அலுவலர்களை நாடுகள் இழக்க நேரிடுகிறது. சமூக அடிப்படை அலகுகளான குடும்பங்கள் சீர்குலைந்து போகின்றன. குழந்தைகள், சிறார்கள் அநாதைகளாகின்றனர்.
உலகில் 2000 ஆம் ஆண்டில் சுமார் 80 லட்சம் குழந்தைகளின் தாய்மார், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டனர்
52

என்ற செய்தியை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நோய் விரைவாக அதிகரிப்பதற்கு எச்.ஐ.வி கிருமி தொற்றுவதற்கு காரணமாகவுள்ள பாலுறவு நோய்கள் திடீரென அதிகரித்துக் காணப்படுவதே காரணம் எனக் கூறப்படுகின்றது.
எச்.ஐ.வி கிருமி பரவுவதை எப்படித் தாமதப்படுத்தலாம்?
இதற்கு இலகுவான தீர்வு எதுவும் இல்லை. இதற்கான தனியான மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் இந்த நோயைத் தடுப்பதற்கு ஆக்க முறையான பல அணுகுமுறைகள் இன்று ஒவ்வொரு நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை இந்த நோயின் பரவும் வேகத்தைத் தடுப்பதற்கு உதவியாக அமையலாம். எச்.ஐ.வி. கிருமி பரவுவதற்கு முக்கிய காரணம் பாலுறவு. இந்தத் துறையில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. பாலுறவு நடத்தை முறைமை மாற்றப்படவேண்டும். பாதுகாப்பான பாலுறவுப் பழக்கங்களை உள்ளடக்கும் அணுகுமுறைகள் மக்களைச் சென்றடைய வேண்டும். பாலுறவில் அதிக ஆர்வம் கொண்டவர்கள், பாதுகாப்பான பாலுறவு முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
இந்த நோய் எளிதில் தொற்றும் வாய்ப்புடைய குழுவினரை இலக்காக கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் நன்மை பயக்கும். இளையவர்கள் முக்கியமாக இந்த நோய்த் தொற்றுக்கு எளிதில் உள்ளாகின்றனர். உலகில்
53

Page 33
எச்.ஐ.வி தொற்றிய நோயாளிகளில் 50 வீதத்துக்கு மேற்பட்டோர் 15-24 வயதுக்குட்பட்டவராவர். பாலுறவு கொள்ளும் வயதை அடையுமுன்பே பென் குழந்தைகளுக்கு இந்த நோயின் தாக்கம் பற்றியும் தேவையான அறிவுரைகளும் புகட்டப்படல் அவசியம். எயிட்ஸ் நோய் தடுப்பு முயற்சியில் கருத்தடை உறைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இன்று கருத்தடை உறைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. இவற்றின் பயன்பாடு பற்றிய அறிவு, தெளிவு, விளக்கம் போதிய அளவு மக்களுக்கு எட்ட வேண்டும்.
எச்.ஐ.வி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் கருத்தடை உறைகள், கிருமி நீக்கம் செய்த ஊசிகள், பாலுறவுக் கல்வி போன்றவை தாராளமாகக் கிடைக்க வழி செய்வது அவசியம். நோய்த் தொற்று அபாயம் அதற்கு எதிரான பாதுகாப்பு என்பனவற்றோடு, மக்களுக்கு எயிட்ஸ் பற்றிய தகவல்கள் போதியளவு கிடைக்கவேண்டும். எயிட்ஸ் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் பல முன்னோடித் திட்டங்களைச் செயற்படுத்தி வந்த போதிலும், இதுவரை சரியான எதிர்ப்பு நடவடிக்கைகள், நோயைக்கட்டுப்படுத்துவதற்குப் போதியனவாக இல்லை என்பது கவலைக்குரியது. -
 

இன்று உலகில் பெரும் பீதியை ஏற்படுத்திவரும் எயிட்ஸ் நோயின் வரவு மேலும் பரவவிடாது பாதுகாக்க வேண்டியது சமூகத்தில் ஒவ்வொருவரினதும் பாரிய பொறுப்பாகும்.
13. எயிட்ஸ் நோயிலிருந்து எம்மையும் எமது பிரதேசத்தையும் பாதுகாப்போம்.
எயிட்ஸ் நோய் எம்மையும் எமது பிரதேசத்தையும் பாதிக்காமல் இருக்க வேண்டுமாயின் இந் நோய் பற்றிய பூரணமான அறிவும் விழிப்புணர்வும் சமுகத்தில் ஏற்படுத்தப் பட வேண்டும். மேல்வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் கல விபற்றிய அறிவும் நோய் பற்றிய தெளிவும் ஏற்படுத்தப்படவேண்டும். சமூக மட்டத்தில் செயலாற்றும் சுகாதார திணைக்கள வருமுன் காப்பு பிரிவினர் மக்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் பற்றியும், அது பரவாமல் தடுக்கும் முறை பற்றியும், அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் அறிவுறுத்த வேண்டும்.
எயிட்ஸ் நோய் தொற்றும் பிரதான மார்க்கம் பாலுறவு என்பதால், பாலுறவின் ஒழுக்கம் பேணுதல் பற்றி அறிவுறுத்தப்பபட வேண்டும். எப்பொழுதுமே நம்பிக்கைக்கு உரிய ஒருவருடன் மட்டுமே உறவுகொள்ள வேண்டும்.இதைக்கடைப்பிடிப்பதால் எயிட்ஸ் பரவும் வேகம் தணிந்து விடும். ஒழுக்கக் கட்டுப்பாட்டை பேணமுடியாதவர்கள்
55

Page 34
உடலுறவின் போது பிரீதி பாவித்து நோய்த்தொற்றைத் தவிர்க்கலாம் .இரத்ததானம் பெறும் போது, எயிட்ஸ் நோய்த்தொற்று இல்லாதமையை உறுதிப்படுத்திய பின்னரே தானம் பெற வேண்டும். வைத்தியசாலைகளில் ஊசி மற்றும் இரத்தத்துடன் தொடர்புறும் உபகரணங்களை உரிய முறையில் தொற்று நீக்க வேணடும்.இப்போது ஒருவருக்கு ஒரு முறை மட்டும் பாவித்து விட்டு எறியும் உபகரணங்கள் பாவனையில் உண்டு. எயிட்ஸ் நோயாளி ஒருவர் குழந்தை பெறாமல் இருப்பது நல்லது.
இவை பற்றி நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, எயிட்ஸ் விழிப்புணர்வை உலக மயமாக்க வேண்டும்.
இவ்வாறான இலக்கை எட்டுவதற்கு சுகாதாரக் கல்வி யூட்டல் கருத்தரங்குகள் நிகழ்த்தப்படவேண்டும். நோய்பற்றிய படக் காட்சி, வரைவுபடங்கள் என பன பெரிதும் பயனளிக்ககூடியன. பாடசாலை மட்டத்திலான கருத்தரங்குகளும் வீதி நாடகங்களும் கூட பயனுள்ளவையே.
எமது பகுதிகளில் எயிட்ஸ் குறைவாக இருக்கின்ற போதிலும் வெளிநாட்டின் தொடர்புகளினால் எயிட்ஸ் நோய் பரவும் அபாய அறிகுறி தென்படுகிறது. மக்கள் இனி உச்ாராக இருக்க வேண்டும். நாம் கவலையினமாக நடந்தால் எமது பகுதிகளில் இந்த நோய் பரவி பேராபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே இப்பொழுதிருந்தே நோயற்ற வாழ்வுக்கான முன் நடவடிக்கைகளில் இறங்குவோம். எயிட்ஸ் நோய் கிருமி இரத்தம், ஸ்கலிதம், பெண்காமநீர், மாதவிடாய் உதிரம், உமிழ் நீர், தாய்ப்பால் என்பவற்றில் வெளியேறக்கூடியது என்பதை ஏற்கனவே அறிந்திருந்தோம். உமிழ் நீரில் வெளிறுேம் கிருமி மிகச்சொற்பம் என்பதால் இதனால் நோய் தொற்றமாட்டாது. எனவே முத்தமிடுவதின் மூலமும் எயிட்ஸ் தொற்று அபாயம் இல்லை.

பாலுட்டலின் போது சொற்பமான கிருமியே கடத்தப் படுகிறது எனினும் எயிட்ஸ் நோயாளர் குழந்தைக்கு பாலூட்டாமால் விடுவது நல்லது. வெளியேறும் கிருமி சொற்பமாயினும் இதனால் நோய் ஏற்படாது என்பது உறுதிபடுத்தப்படவில்லை. தொடர் பாலூட்டல் மூலம் நோய் தொற்று ஏற்படுகின்றமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
அடுத்து எயிட்ஸ் நோய் பற்றிய அறிவையும், விழிப் புணர்வையும் ஏற்படுத்த சகல மட்டத்திலும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட வேணி டும் . இதறி கான உதவியையும்,திட்டத்தினையும் அரச கட்டமைப்பும் ,சர்வதேச நிறுவனங்களும் வழங்குகின்றன. இதை முன்னெடுத்துச் செல்வது உள்ளுர் அமைப்புக்களினதும், சுகாதாரத் திணைக்களத்தினதும் பங்காக இருந்து வருகிறது.
இன்று தகவல் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்துள்ள நிலையில் ஊடகத்துறையை இதற்கு பயன்படுத்தலாம் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்பன இதற்காகப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.இன்னொரு முக்கியமான விஷயம், எயிட்ஸ் நோயாளிகள் பரிசோதனை செய்து கிருமித்தொற்றை உறுதிப்படுத்தவும் சிகிச்சை மற்றும் உளவளத்துணை பெறவும் தயங்கக் கூடாது. இதற்கு ஏற்றவாறே நோய்த்தடுப்பு பிரச்சார துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். நோயை மறைப்பதனால், நோயாளிகளுக்கும், சமூகத்திற்கும் கேடு விளையும்.
எயிட்ஸ் நோய் பொதுவாக பாலுறவினால் தொற்றுவதால் இளைய தலை முறையினரே பாதிக்கப்படுகின்றனர். அறியாப் பருவத்தில் பலர் தெரியாமலே
57

Page 35
இந்தக் கொடுர நோய்த்தொற்றுக்கு உள்ளாகி விடுகிறார்கள். எனவே எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலேயே ஏற்படுத்தப்படவேண்டியது அவசியமாகும். ஆசிரியர்கள் இப்பணிகளில் பங்காற்றுவதுடன் வைத்தியர்களை அழைத்து எயிட்ஸ் தினத்தில் கருத்தரங்குகளை 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நடத்தலாம்.
சமுதாய ரீதியில் மருத்துவ ஊழியர்கள் தமது வெளிக்கள குடும்ப தரிசிப்புக்களின் போது எயிட்ஸ் நோய்பற்றியும் கதைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான விடயங்களைக் கதைப்பதற்கு வெட்கம் கூடாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்போடு கற்பு நெறி காத்து வாழ்வது மனித அறிவின் பாற்பட்டது. உலக நாகரீகமும் இதையே வலியுறுத்தி கணவன் மனைவி திருமணம் என்று வரையறுத்துள்ளது. எனினும் திருமணத்திற்கு முன்பும் சில வேளைகளில் பின்பும் கூட மனிதன் தப்புச் செய்கிறான் . இது கொடிய எயிட்ஸ் தொற்றுக்கு வழிவகுக்கலாம் என்பதை ஒவ்வொருவரையும் உணரவைத்தல் வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் நம்பிக்கை இல்லாதவருடன் உறவு கொள்ள நேரிட்டால் பிரீதியை அணிந்து உடலுறவு கொள்ள வேண்டும்.
இன்னொரு முக்கியமான விடயமும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எயிட்ஸ் நோயாளியில் லிங்க யோனி உறுப்புக்கள் பாதிக்கப்படுவதில்லை .அத்துடன் நோய்க்கிருமி தொற்றி சில வருடங்களிலேயே நோய் தோன்றும் அதுவரைக்கும் சுகதேகி போலவே எயிட்ஸ் நோயாளியும் இருப்பார். எனவே ஒருவர் சகதேகியாக காட்சி அளித்தால் அவர் எயிட்ஸ் தொற்று அற்றவர் என எண்ணிவிடலாகாது. எப்போழுதுமே மிக அவதானம் தேவை என்பதையும் வலியுறுத்த வேண்டும்.
58

திருமணம் செய்யும் போது ஆண் பெண் இருவரும் எச்.ஐ.வி தொற்று இருக்கிறதா என்று பரிசோதித்து பார்த்தல் நன்று. அவ்வாறே கருவுறும் போதும் பெண்கள் பரிசோதிக்க வேண்டும். இதனால் எச்.ஐ.வி. தொற்றுடன் பிறக்கும் குழந்தைகளை தவிர்க்க முடியும் அல்லவா?
14. எயிட்ஸ் நோயாளிகளை ஒதுக்க வேண்டியதில்லை.
எயிட்ஸ் (AIDS) நோய் எச்.ஐ.வி (HIV) என்ற வைரஸ் கிருமியினால் தொற்றும் ஒரு நோய் என்பதை அறிவீர்கள் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இனம் காணப்பட்டு மிகக்குறுகிய காலத்துற்குள்ளாகவே உலகில் ஆறுகோடி பேருக்கு மேற்பட்டடோரைப் பீடித்துள்ளது. பல மில்லியன் பேரின் உயிரைக் காவு கொண்டுவிட்ட மிகக்கொடிய நோயாகும்.
ஆரம்பத்தில் பரவிய வேகம், விழிப்புணர்வினாலும், சுகாதார போதனைகளினாலும் குறைக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை குணப்படுத்தலுக்கான மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படாமையினால் உலகில் இவ்வருடம் தினமும் சுமார் பத்தாயிரம் பேருக்கு மேற்பட்ட புதிய நோயாளர்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பித்திலிருந்த அச்சமும், எயிட்ஸ் நோயாளிகளை முற்று முழுதாக ஒதுக்கி வைத்தலும் இப்போது ஓரளவு குறைந்து வருகிறது.
எயிட்ஸ் நோயைத் தொற்றுவிக்கும் கிருமி காற்றாலோ, உணவு, நீர் முதலியவற்றாலோ நோயாளியைத் தொடுகையினாலோ, விலங்குகளினாலோ தொற்றாது
59

Page 36
என்பதனை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.எனவே எயிட்ஸ் நோயாளியைக் கண்டு நாம் அச்சம் கொள்ளவோ, விலகி ஓடவோ, அவரைப் புறக்கணிக்கவோ தேவையில்லை ஏனையவர்களோடு பழகுவதுபோல் அவருடன் பழகலாம்,
மாதகாக்கும் வழி
எயிட்ஸ் நோய் ஒரு நோயாளியிடமிருந்து ஒரு சுகதேகிக்கு எவ்வாறு தொற்றுகிறது என்பதை நாம் அறிந்து கொண்டு செற்பட்டாலே எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். எயிட்ஸ் நோய் பிரதானமாக கிட்டத்தட்ட 90வீதம் உடலுறவினாலேயே பரவுகிறது. எனவே எயிட் ஸ் நோயாளியுடன் பாலுறவு வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே மணமானவராயின் அவரது வாழ்க்கைத் துணையுடன் புணரவேண்டுமாயின் ஆண் உறையைப் (Condoms) பாவிக்கலாம். பிரீதி என்ற பெயரில் மருந்தகங்களில் இதைப் பெற்றுக்கொள்ளலாம். இது குடும்பக்கட்டுப்பாட்டு சாதனமாக அறிமுகமானது. எனினும் இப்போது எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்களிலிருந்து காக்கவும் பெரிதும் பயன்படுகிறது.
திருமணமாகாத எச்.ஐ.வீ தொற்று உள்ளவர் திருமணம் செய்யாதிருப்பது நன்று. ஆனால் எச்.ஐ.வீ தொற்று உள்ள ஒருவரைத் திருமணம் செய்து வாழலாம். எனினும் குழந்தை பெறுவதை ஆணுறையைப் பாவித்து தவிர்த்தல் வேண்டும்.
எயிட்ஸ் வைரஸ் ஒரு சுகதேகியின் உடலில் புகுந்தவுடன் அவர் நோயாளியாக மாட்டார். உடலில் எயிட்ஸ்
60

இருக்கிறதா என்று இரத்த பரிசோதனை செய்து கண்டு பிடிப்பதற்கும் சந்தேகத்திற்குரிய உடலுறவின் பின் மூன்று மாதங்கள் செல்ல வேண்டும். நோய் அறிகுறிகள் வருவதற்கு ஒரிரு வருடங்களிலிருந்து பத்து பதினைந்து வருடங்கள் கூட எடுக்கலாம் என்பதை ஏற்கெனவே அறிவோம். எனவே மிகுந்த அவதானம் அவசியம்
பாலுறவு தவிர்ந்த ஏனைய தொற்று வழிகள் பற்றியும் நாம் அறிந்து கொண்டு பாதுகாப்பான நடவடிககைகளை மேற்கொண்டால் எயிட்ஸ் நோயாளியுடன் ஒரேவீட்டில் வாழ தயங்க வேண்டியதில்லை. மனித உடலை விட்டு இரத்தத்தின் மூலமோ, இந்திரியம் மூலமோ, காமநீர் மூலமோ வெளிவரும் எயிட்ஸ் கிருமி மனித உடலை விட்டு வெளியே வந்தபின் நீண்ட நேரம் உயிர் வாழாது, அவை உலரும் போது கிருமியும் இறந்து விடும். இரண்டு மூன்று நிமிடங்களே வெளியுலகில் தாக்குப் பிடிக்கும். மேலும் சவர்க்காரம், சவலோன், டெற்ரோல் போன்றவை அவற்றை உடனேயே கொன்றுவிடும். கையுறைகள் பாவிக்கலாம். கைகளை நன்றாக கழுவலாம்.
இந்த நடைமுறைகளை எயிட்ஸ் நோயாளி இருக்கும் வீடுகளில் மாத்திரமன்றி நாம் எமது நாளாந்த வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும். இனம் காணப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளை விட பல மடங்கு அதிகம் இனம் காணப்படாத எயிட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். எயிட்ஸ் நோயாளிகளை நீண்டகாலம் சுகதேகிகள் போன்று அறிகுறிகளின்றி இருப்பதால் சமூகத்தில் பல எயிட்ஸ் நோயாளிகள் கட்டாயம் இருப்பார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தெரியாமலே இவர்களுடன் பழகுகிறோம். அறியாமலே நோய்த் தொற்றைப் பெறும் வாய்ப்பு இதனால் ஏற்படலாம்.
61

Page 37
அப்படியிருக்க எச்.ஐ.வீ தொற்று உள்ளவர்களை மட்டும் ஏன் நாம் ஒரேயடியாக பயத்தால் வெறுத்து ஒதுக்க வேண்டும்? நிச்சயமாக அவர்களோடு பழகலாம். பாதுகாப்பாக இருந்தால் சரிதான்.
பரிவுடன் நடப்பத நன்ற
தவறான நடத்தை உள்ளவர்களுக்கு மட்டும் தான் எயிட் ஸ் வரவேணி டும் என்றிலி லை. நல் ல நடத்தையுள்ளவர்களுக்கும் வரலாமல்லவா? மேலும் வாழ்க்கைத்துணையினால் அப்பாவிகள் நோயுறுகிறார்கள் அல்லவா? எனவே எயிட்ஸ் நோயாளியுடன் வெறுப்புக் காட்டாமல் பரிவுடனும் அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களைப் புறக்கணித்துத் துன்புறுத்தி, உள்ளத்தை உடைய வைக்கும் படி நடத்தலாகாது.
எயிட்ஸ் நோய் உள்ள பெண்கள் மாதவிலக்கின் போது வெளியேறும் இரத்தத்திலும் எயிட்ஸ் கிருமி இருப்பதனால் அவற்றை அவரே கையாண்டு புதைக்கவேண்டும். மலசல கூடங்களுக்கு தொற்று நீக்கி மருந்துகள் தெளிக்க வேண்டும்.
உமிழ்நீர், சலம், தாய்ப்பால் என்பவற்றிலும் நோயாளியின் உடலிலுள்ள கிருமிகள் வெளியேற வாய்ப்புண்டு, எனவே தாய்ப்பாலூட்டலையும், உமிழ் நீர் கலக்கும் படி முத்தமிடுவதையும் எயிட்ஸ் நோயாளி தவிர்ப்பது விருப்பத்தக்கது. காயங்கள் ஏற்பட்டு அபூர்வமாக கிருமி பரவும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தி விடக் கூடாதல்லவா?
மருத்தவ கண்காணிப்பு
எயிட்ஸ் நோயாளி கடுமையான நோய்வாய்ப்படும் வேளைகளிலும் பிற தொற்றுக்கள் ஏற்படும் வேளைகளிலும்
62

வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். எனினும் இவரைத் தனிமைப்படுத்த வேண்டியதில்லை. எப்போதும் மருத்துவ கண்காணிப்பு அவசியம்.
எயிட்ஸ் நோய் காரணமாக இறந்தவரின் உடலில் எயிட்ஸ் கிருமி முற்று முழுதாக அழிய நேரம் எடுக்கலாம். மலர்ச்சாலைகளில், குளிர்சாதன அறைகளில் வைக்கப்படும் போது இக்கிருமிகள் வாழும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே அவரது உடலை பொலித்தீன் பையில் சுற்றி பாதுகாப்பாக அடக்கம் செய்தல் விரும்பத்தக்கது. கட்டிப்பிடித்து, விழுந்து, தொட்டு அழுவதைத் தவிர்க்க வேண்டும்.
சமுதாயத்தில் தனித்து வாழ மனிதரால் முடியாது. எனவே எயிட்ஸ் நோயாயர்களுக்கு எப்படி எயிட்ஸ் வந்தது என்பது பற்றி சர்ச்சை கொண்டு ஒதுக்கக் கூடாது, மனிதாபிமான கண்ணோட்டத்துடன் பிறரைப்போலவே அவரையும் மதித்து ஒன்றாக அதேவேளை பாதுகாப்புடன் வாழ்வோம்.
எமக்கும் கூட எச்.ஐ.வி தொற்று ஏற்படகூடும் என்பதை நாம் உணர்ந்து கொண்டால் நிச்சயமாக எயிட்ஸ் நோயாளரை ஒதுக்க மாட்டோம்.
எயிட்ஸ் தொடர்பாக தெளிவு பெற அல்லது சிகிச்சை பெற அல்லது பரிசோதிக்க விரும்புவோர் வைத்தியரை நாடலாம். அரச வைத்திசாலையில் எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு தனி பிரிவு உண்டு. தேசிய எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் தொடர்பான அரச நிறுவனம் மருதானையில் உள்ளது. வத்தளையில் எயிட்ஸ் நோயாளிக்கு உதவும் அரசசார்பற்ற நிறுவனம் இயங்குகிறது.
எயிட்ஸ் நோய் பற்றி பூரணமாக தெரிந்து கொண்டு விழிப்புணர்வு பெற்று, நாம் எயிட்ஸ் இல்லாத ஓர் உலகை நோக்கிப் பயணிப்போம். 63

Page 38


Page 39

துவர்களில் தனக் so is
மருத்துவ நூலாகும் ήύ βήμ ΙΙου ές ഖണൂ
is Private Limited O - 06 Pi 255124, 2507932