கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 1999.11

Page 1


Page 2
4.
முளைக்கு வேலை
விவேக வினாக்கள் ஏழு
ஒருவரிடம் 10 ரூபா, 20 ரூபா, 50 ரூபா நோட்டுக்களாக மொத்தம் 28 பன நோட்டுக்கள் இருந்தன, அவற்றின் பொத்தப் பெறுமதி 1000 ரூபாவாகும். அவற்றில் 10 ரூபா நோட்டுக்களை விட 4 மடங்கு கடடுதலான 50 ரூபா நோட்டுக்கள் இருப்பின் அவனிடமுள்ள ஒவ்வொரு வகை நோட்டினதும் எண்ணிக்கை யாது?
சிறு நேர் கோடுகள் நான்கினைப் பயன்படுத்தி எழுதப்படக்கூடிய ஆகச்சிறிய (நேர்ப்பெறுமானமுடைய எண் எது?
ஒரு மாணவன் சில வண்டுகளையும் சிலந்திகளையும் பிடித்துப் பெட்டி பொன்றினுள் போட்டான். அவற்றுக்கு மொத்தமாக 8 தலைகளும் 54 கால் களும் இருந்தனவாயின், பெட்டிக்குள் போடப்பட்ட வண்டுகள் எத்தனை? சிலந்திகள் எத்தனை?
பென்சில், அப்பியாகக் கொப்பி, அழி இறப்பர் ஆகிய மூன்று பொருட்களையும் வாங்குவதற்கு 20 ரூபா செலவாகியது. கொப்பியின் விலை பென்சிலின் விலையை விட 9 ரூபா கடடுதலாகும். அவை இரண்டினதும் விலைகளின் கூட்டுத் தொகை அழி இறப்பரின் விலையை விட 16 ரூபா கூடுதலானது. ஒவ்வொரு பொருளினதும் தனித்தனி விலைகளைக் காண்க,
ஒரு சதுர மீட்டர் பரப்பளவுள்ள செவ்வக வடிவான உலோக்த் தகடொன்றை ஒவ்வொன்றும் 1 சதுர TT பருமனுள்ள செவ்வக வடிவத்துண்டுகளாக வெட்டி, அத்துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வைத்தால் அவற்றின் பொத்த நீளம் எவ்வளவாக இருக்கும்?
. ஒரு நாட்டில் முதன் முதலாக A என்ற ஊரிலிருந்து B என்ற ஊர் வரை
ரெபில்வே சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்த ரெபில்வேப் பாதையில் A,B உட்பட மொத்தம் 20 ரெயில்வே நிலையங்கள் அமைக்கப்பட்டன. எல்லா ரெயில் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுவதற்காக பொத்தம் எத்தனை வகையாள 3ம் வகுப்பு டிக்கட்டுகள் அச்சிடப்பட வேண்டும்? .
தீக்குச்சிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பின்வரும் சமன்பாடு பிழையானது என்பது தெரிகிறதல்லவா? ஒரேயொரு தீக்குச்சியை மாத்திரம் இடமாற்றம் செய்து இதனைச் சரியான சமன்பாடொன்றாக மாற்றுவது எப்படி?
XV =: X
(விடைகள் 16ம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன)
 
 

பொது அறிவுச் சஞ்சிகை இதழ் 13 ஆசிரியர் எம், ஹாபிஸ் இஸ்ஸதீன்
Editri M. Hafiz SGadee
Published By: LSGSGADE EN MEMORTAL EDUCATIONAL FOUNDATION
Computer lay-out & Type-setting by: ROYAL COMPUTER CENTRE, 147, Main Street, Dharga Town. Printed by: A.J. Prints, 44, Station Road, Dehiwala,
147, Main Street, Dharga Town-12090 | Phone: 034-70151 E-Mail: royal Geureka. Ik
உள்ளே .
நாட்டு நிலைமை தகவல் தொடர்புச் செய்மதிகள் 3. இலக்ட்ரோனிக் வர்த்தகம் 도 நியூஸிலாந்து B தபாற் குறியீடு
பொக்ஸிங் என்னும் குத்துச்சண்டை 13 தீக்கோழி 15 ஆஸ்த்மா சோவியத் யூனியன் քI] அல்பேர்ட் ஐன்ஸ்டைன் 24 காலம் கணிக்கும் முறைகள் 2富 வில்லியம் ஷேக்ஸ்பியர் 29 எமது சந்திரன் 3. பழைய ஐரோப்பாவில் ஆனந்த குமாரஸ்வாமி 3B ஆள் அடையாளம் காணும் முறைகள் 40 புனிளெப் பொய்யாகிவிட்ட தீர்க்கதரிசனம் 44 எல்லாம் தற்செயலாக நிகழ்ந்தவையா? 47 பொது அறிவுப் போட்டி AB
ܟܐ -- -- -- -- -- --- -- -- -- -- 2
உங்களுடன் ஒரு நிமிடம் .
உதயமாகப் போகும் புதிய மில்லென்னியத்தில் உலகம் எவ்வா றான மாற்றங்களுக்கு உள்ளாகப் |போகின்றது என்பது பற்றி எவரா லும் திருத்தமாக எதிர்வு கூற முடி யாதுள்ளது.
மனித வாழ்க்கையில் பல்வேறு புரட்சிகரமான தொழில்நுட்பங்கள் பாரிய செல்வாக்கைச் செலுத்தப் போகின்றன என்பது மட்டும் உறுதி யாகத் தெரிகிறது. ஆனால், இந்த மாற்றங்களுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோமா? இந்த மாற்றங்களால் மனிதப் பண்புகளும் ஒழுக்க முறைகளும் எந்தளவுக்குப் பாதிக்கப்படப் போகின்றன? என் | USPT கேள்விகள் சிந்திப்போர்மனதை
அருட்டத் தொடங்கி உள்ளன.
நவீன சமூக பொருளாதார சிந்தனைப் போக்குகள் பற்றி விழிப் போடு இருந்து அவதானிப்பது போட்டிகள் மிக்க எதிர்காலத்தில் நாம் பிழைத்து வாழ்வதற்கு அத்தியா வசியமாக இருக்கும்.இந்த வகையில் புதுயுகத்தின் இயல்புகள், சவால்கள் என்பன பற்றி வாசகர்களுக்கு விளக் கமளித்து உதவும் முயற்சிகளுக்கு அரும்பு எப்போதும் முன்னுரிமை வழங்கும்.
மவரப் போகும் புதிய யுகத்தில் உங்கள் அனைவர் வாழ்வும் நிம்ம தியும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிரம்பி யதாக அமைய வேண்டும் என
அன்புடன் வாழ்த்துகிறோம்.
15, 11 1999 ஆசிரியர்
N
محہ -------------------------ــــــــــــــــــــ

Page 3
ട്രെ குட்டிக் கதை
முடிவெட்டும்போது தம்வாடிக்கை பாளர்க்ளுடன் ஊர் வம்புகளையெல்லாம் பேசித்தீர்ப்பது நாவிதர்களின் வழக்கம்.
ஒருநாட்டின் அரசன் தனக்குத்தின மும் சவரம் செய்ய வருகின்றநாவிதனிடம் பேச்சுக் கொடுத்து நாட்டு நடப்புக்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வழக்கமுடைய வனாக இருந்தான். நாவிதனும் தனக்குத் தெரிந்த, தான் கேள்விப்பட்ட செய்தி களையெல்லாம் அரசனிடம் கூறுவதில் பெருமகிழ்ச்சியடைந்தான்.
"நாட்டு மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது? சந்தோஷமாக இருக்கிறார்களா?" என்று அரசன் ஒரு
நாள் காலையில் நாவிதனிடம் கேட்டு
வைத்தான்.
"ஆம் அரசே! மக்கள் மிகவும் திருப் தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கின் றார்கள். ஒவ்வொருவரும் வீட்டில் ஒரு கோழி முட்டையளவுதங்கத்தைச் சேமித்து வைத்திருக்கிறார்கள்" என்று நாவிதன் மகிழ்ச்சியோடு பதிலளித்தான்.
அன்று பகல் தன்னைக் காணவந்த அமைச்சரிடம், "அமைச்சரே! நாட்டில் மக்கள் ஓரளவு கஷ்டத்தோடு இருப்பதாக நீர் கூறுகிறீர். ஆனால் ஒவ்வொருவரும் வீட்டில் ஒரு கோழி முட்டையளவு தங்கத்தைச் சேமித்து வைத்திருப்பதாக நாவிதன் கூறுகிறானே!" என்று அரசன் (all Irish IIITsir.
'நாவிதன் தன்னிடம் அப்படி இருப் பதை வைத்துக்கொண்டு தான் எல்லோ ரிடமும் இருப்பதாகக் கூறியிருப்பான். வேண்டுமானால் மீண்டும் அதே கேள்வி யை அவனிடம் நாளையும் கேட்டுப் பாருங்கள்" என்றார் அமைச்சர்.
நாட்டு நிலைமை
மறுநாள் காலையில் நாவிதன் அரண்மனைக்கு வந்தான்.அவனதுமுகம் சோர்ந்திருந்தது. சவரம் செய்யும் போது "நாட்டு மக்களின் பொருளாதார நிலை எப்படி? அவர்கள் சந்தோஷமாக இருக் கிறார்களா?" என்று முதல் நாளைப்
போன்றே அரசன் கேட்டான்.
"அரசே! நாட்டு நிலைமை வரவர மோசமாகிக்கொண்டுபோகின்றது. எங்கு பார்த்தாலும் திருடர்கள் தொல்லை அதி கரித்து வருகின்றது. மக்கள் மிகவும் கஷ்டத்தோடு இருக்கிறார்கள். இப்போது முட்டையளவுத் தங்கம்கூட ஒருவரிடமும் இல்லை" என்று விரக்தியோடு பதில் வந்தது.
இதைக் கேட்டு அரசனுக்கு வியப்பு ஏற்பட்டது. நாவிதன் சென்ற பின் அமைச் சரை அழைத்து "நாவிதன் இன்று வேறு விதமாகச் சொல்கிறானே! நீர் என்ன செய்தீர்?" என்று கேட்டான்.
"அரசே! நேற்றிரவு நாவிதன் அறி யாத முறையில் அவனது வீட்டுக்குப் பணியாட்களை அனுப்பினேன். நான் சொல்லி அனுப்பியபடி அவர்கள் அவனிட மிருந்த முட்டையளவுத் தங்கத்தைத் திரு டிவந்து விட்டார்கள். அதுதான் இப்போது இப்படிப் பேசுகிறான். பெரும்பாலானவர் கள் தமது நிலைமையை அடிப்படையாக வைத்துத்தான் மற்றவர்களை மதிப்பீடு செய்கிறார்கள். எனவே ஒருவர் சொல் வதை மட்டும் வைத்துக்கொண்டு நாம் உலகத்தை மதிப்பிடக் கூடாது" என்று விளக்கமளித்தார் அமைச்சர்
 

Lனிதனால் விண்வெளிக்கு ஏவப் படும் விண்கலமொன்று (spacecraft)புவி பிள் ஈர்ப்புச்சக்தியிலிருந்து முற்றாக விடு படாத பட்சத்தில், புவியை வலம் வரத் தொடங்குகிறது. இவ்வாறு புவியை வலம் வரும் விதத்தில் விண்வெளிக்குச் செலுத் தப்பட்ட விண்கலமொன்றையே நாம்
செய்மதி (செயற்கைச் சந்திரன்) என்கின் றோம்.
நீண்ட தூரங்களினூடாகத் தகவல்
தொடர்பை வழங்குவதற்காகப் பயன்படும்
லாத் திசைகளிலும்
செய்மதிகளையே தகவல்தொடர்புச்செய் மதிகள் என அழைக்கின்றோம். ரேடியோ |Брат (Radio-frequency) (алтбогLசமிக்ஞைகளைத் (signals) தெறிக்கச் செய்வதன் மூலம் அல்லது அஞ்சல் செய்
இத்
வதன் மூலம் இவை தூர இடங்களுக்கு இடையில் தகவல் தொடர்பை ஏற்படுத்து கின்றன. இன்று உலக நாடுகளுக் கிடையில் TV, ரேடியோ மற்றும் தொலை பேசிப் பரிவர்த்தனைக்கு இந்தத் தகவல் தொடர்புச் செய்மதிகளே காரணமாக உள்ளன.
ஆரம்பகாலத் தகவல் தொடர்புச் செய்மதிகள் உயிர்ப்பற்றவையாகவே(இருந் தன. அதாவது புவியிலுள்ள அலைபரப்பும்
"(transmitting) நிலையங்களிலிருந்து
மேலே செலுத்தப்படுகின்ற சமிக்ஞை களைத் திருப்பித் தெறிக்கச் செய்கின்ற வேலையை மாத்திரமே அவை செய்தன. இவ்வாறு தெறிக்கச் செய்யும் போது எல் சமிக்ஞைகள் செலுத்தப்படும். இவற்றைப் பூமியிலுள்ள
ആ
அலைவாங்கி நிலையங்கள் பொறுக்கி எடுத்துக்கொள்கின்றன.
இந்த வகையில் ஏவப்பட்ட முதலா வது தகவல் தொடர்புச் செய்மதி 12.08.1960இல் அமெரிக்காவினால் அனுப் பப்பட்ட Echo-1 என்பதாகும். இது 30m விட்டமுடைய அலுமீனியம் பூசப்பட்ட பிளாஸ்திக் பலூன் ஒன்றைக் கொண்டி ருந்தது. 1964இல் ஏவப்பட்ட Echo-2இல் 41m விட்டமுடைய பலூனொன்று பொருத் தப்பட்டிருந்தது. புவியிலிருந்து மேலே வரும் சமிக்ஞைகளின் வலுவைக் கூட்டு வதற்கான வ்லுபெருக்கும் சாதனம் (Signal Amplifier) sigish gigi Glafli மதிகளில் இருக்கவில்லை. எனவே இவற் றினூடாகத் தகுவல் பரிமாற்றம் செய்வ
Bielo osudu:ingsá
(Communication Satellites)
தற்காகத் தரையிலுள்ள அலை பரப்பும் நிலையங்களும் அலைவாங்கும் நிலையங் களும் வலுக் கூடியனவாக இருப்பது அவசியமாகிறது.
தற்போது உயிர்ப்பான (active) வகைத் தகவல் தொடர்புச் செய்மதிகளே பயன்பாட்டில் உள்ளன. இவ்வகைச் செய் மதிகளில் ரேடியோ மீடிறன் அலைகளை உள்வாங்கவும் ஊடுகடத்தவும் விசேட உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இயங்குவதற்குத்தேவையானமின் சக்திசெய்மதிகளில் பொருத்தப்பட்டுள்ள சூரியக் கலங்களிலிருந்து பெறப்படு கின்றது.
American Telephone & Telegraph Company (AT&T) என்ற நிறுவனம்

Page 4
1962இல் விண்வெளிக்கு அனுப்பிய Telstar-1 GTsåT) செய்மதி அமெ Iக்காவுக்கும் ஐரோப்பா, ஜப்பான் ஆகிய பிரதேசங்களுக்கும் இடையில் நேரடிTV ஒளிபரப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. எனினும் Tesla, புவியைச் சற்றிவரும்போதுகுறித்த இருதரைநிலை பங்களுக்கு இடையில் குறுகிய காலத் துக்கே தகவல் பரிமாற்றம் செய்யக் கூடிய தாக இருந்தது. இதற்குக் காரணம் புவி தொடர்பாக அச்செய்மதியின் அமைவிடம் தொடர்ந்து மாற்றமடைந்ததே ஆகும்.
தரையிலிருந்து சுமார் 22300 மைல் (35,800km) உயரத்தில் ஒரு செய்மதி புவியை வலம் வருமாயின், புவியை ஒரு தடவை சுற்றிவர அதற்கு 24 மணித் தியாலங்கள் பிடிக்கும்.இது புவிதன்னைத் தானே சுற்றுவதற்கு எடுக்கும் காலத் திற்குச் சமனாகும். எனவே அப்படியான செய்மதிபுவிக்கு மேலாக எப்போதும் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். இவ்வாறு புவியோடு ஒன்றித்துச் சுழலும் Glerul Inglison GIT geosynchromus Satellites என்பார்கள்.
எமது நாட்டின் கெளரவப் பிரஜை பாக மாறிவிட்ட விஞ்ஞான எழுத்தாளர் ஆர்தர். ஸி. கிளார்க் அவர்கள் 1944ம் ஆண்டில் எழுதிய ஒரு கட்டுரையில் புவி போடு ஒன்றாகச் சுழலக்கூடிய மூன்று செய்மதிகளை அத்திலாந்திக் பசுபிக், இந்து சமுத்திரங்களுக்கு மேலால் இருக் கும்படி செய்வதன்மூலம் உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் இடையில் தகவல்தொடர் புக்கு வழி செய்ய முடியும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.இக்கருத்தே செய்மதி களைப் பயன்படுத்தி தகவல் தொடர்பை ஏற்படுத்தும் நவீன முறைக்கு வழிகோலி Ligi TEOTTL).
புவியோடு ஒன்றாகச் சுழலும் செய் மதியொன்றின்நிலை எப்போதும் பூமத்திய கோடு சார்பாக ஒரே இடத்திலேயே
இருக்கும். எனவே தரையிலுள்ள இரு புள்ளிகளுக்கின்டயில் தகவல் பரிமாற்றத் தைத் தொடர்ச்சியாக மேற்கொள்வது சாத்தியமாகின்றது. இந்த வகையில் முதலாவதாக ஏவப்பட்ட தகவல்தொடர்புச் செய்மதி Syncom-2 என்பதாகும். இது 1963ம் ஆண்டு NASA நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அனுப்பப்பட்ட பெரும்பாலான தக வல் தொடர்புச் செய்மதிகள் ge) synchronus வகையைச் சேர்ந்தனவாகும்.
1963gi) Communication Satellite Corporation (COMSAT) Tsirl) sig வனம் உருவாக்கப்பட்டதோடுவர்த்தகரீதி யில் தகவல் தொடர்புச் செய்மதிகளை இயக்கும் போக்கு ஆரம்பமாகியது. 1964இல் சர்வதேசதகவல்தொடர்புச்செய் மதி அமையம் (INTELSAT) உருவாக் கப்பட்டது. சுமார் 120 நாடுகள் இவ்வமை பத்தின் பங்குதாரர்களாக உள்ளன. Early Bird என்றழைக்கப்பட்ட Intelsat-1 செய் மதி 1965ம் ஆண்டு ஏவப்பட்டது. அத னைத் தொடர்ந்து 1960களிலும் 1970 களிலும் கொள்ளளவ்மும் வலுவும் கூடிய Intelsat-234 சந்ததிகளைச் சேர்ந்த செய் மதிகள் தகவல் தொடர்புக்காகப் பயன் படுத்தப்பட்டன.
1980g si Intelsat-5 Gustafë Glarit மதிகள் பயன்பாட்டுக்கு வந்தன.1989இல் Intelsat-6 என்ற தொடரைச் சேர்ந்த அதி சக்திவாய்ந்த செய்மதிகள் சேவையில் ஈடு படுத்தப்படுதல் ஆரம்பமாகியது. இந்த தசாப்தத்தின் ஆரம்பப்பகுதியில் உலகெங் கும் சுமார் 15Intelsatசெய்மதிகள் தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட்டன.
இப்போது வேறு நிறுவனங்களும் INTELSATக்குப்போட்டியாகச் செய்மதிச் சேவைகளை வழங்குகின்றன. இவற்றுள் அமெரிக்காவின்9lsar, Galaxy, Space net என்பனவும் ஐரோப்பாவின் Euraisat, Telecom Ts|ILITs|||| குறிப்பிடத்தக்க

நவீன தகவல் தொழில் நுட்பத் துறையின் விருத்தி காரணமாக இன்று வர்த்தகத் துறையில் புரட்சிகரமான மாற் றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வங்கிக் கொடுக்கல்-வாங்கல்கள் சந்தைப்படுத் தல், விளம்பரம் செய்தல் பொருட்கொள் வனவு போன்ற பல்வேறு செயற்பாடுகளை கம்பியூட்டர், இண்டர்நெட், ஈ-மெயில் போன்ற தகவல் தொழில்நுட்பங்களின் உதவியோடு மேற்கொள்வதையேe-Commerce என்கின்றோம்.
இன்று வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் e-Commerce நடை முறைகள் நன்கு வியாபித்துவருகின்றன. ஆசிய-பகபிக் நாடுகளிலும் e-Commerceஐ அறிமுகப்படுத்திப்பரவலாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. இந்த வகையில் UNCTAD அமை 'யத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆசியபசுபிக் பிராந்திய e-Commerce மாநாடு 1999 ஒக்டோபர் 25 முதல் 27 வரை கொழும்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக் கதாகும.
வர்த்தக நிறுவனங்கள் தமக்கிடை யேயும் தம் வாடிக்கையாளர்களுடனும் தகவல்களை இலகுவாகவும் மிக விரை வாகவும் பரிமாறிக் கொள்வதற்கு இண் டர்நெட், ஈ-மெயில் என்பன பெரிதும் உதவுகின்றன. உதாரணமாக ஒரு வர்த் தக நிறுவனம் சந்தைப்படுத்துகின்ற
e-COMMERCE
பண்டங்களைப் பற்றி அல்லது வழங்கு கின்ற சேவைகளைப் பற்றி இண்டர்நெட் டிலுள்ள அதன் வெப்தளத்தின் (Website) மூலம் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும், அத்தோடு தமக்குத் தேவையான பொருட்களை ஈ-மெயில் மூலம் ஒடர் பண்ணவும் அவற்றுக்கான கட்டணத்தை தனது Credit card ஐப் பயன்படுத்தி ஈ-மெயில் ஊடாகச் செலுத்தவும் வசதியேற்பட்டுள்ளது. *
1T மொத்தத்தில், விற்பனை நிலையங் களுக்குச் செல்லாமலேய்ே அங்கு விற் பனைக்குள்ள பண்டங்களின் விபரங்க ளையும் விலைகளையும் அறிந்து கொள் ளவும் வீட்டிலிருந்தவாறே அவற்றுக்குரிய விலையைச் செலுத்தி அவற்றைத் தரு வித்துக்கொள்ளவும் முடிகிறது. எனவே பொருட்களைத் தேடி வாங்குவதற்காக வெளியே அலையவேண்டிய அவசியமோ பண நோட்டுக்களைக் காவித் திரிய வேண்டிய தேவையோ இல்லாமற் போகி 四虹
சில்லறைவியாபாரத்தில் மட்டுமன்றி மொத்த விற்பனை, உற்பத்தி போன்ற துறைகளிலும் e-Commerce நடை முறைக்கு வந்துள்ளது. உற்பத்தியாளர் ஒருவர் தமக்குத் தேவையான் மூலப் பொருட்களைக் கொள்வனவு செய்யவும் தான் உற்பத்தி செய்யும் பண்டங்களைப் பற்றி விளம்பரம் செய்யவும் அவற்றுக்கான

Page 5
கொள்வனவுக் கட்டளைகளைப் பெற்றுக் கொள்ளவும் இண்டர்நெட் உதவுகிறது. உற்பத்தியாளர்கள் முன்புபோல் தமது உற் பத்திப்பொருட்கள் பற்றிய விவரண நூல் (ISGYNIGIT (catalogues) (l'IOLIITIggjöfi” (5) வெளியிடுவதில்லை, மாறாக அவை பற் றிய முழு விபரங்களையும் இண்டர்நெட் டிலுள்ள தமது வெப்தளத்தில் வைத்திருப் பார்கள். பத்திரிகைகளிலும் சஞ்சிகை களிலும் பிரசுரிக்கப்படும் விளம்பரங்களில் அல்லது Yellow Pages போன்ற தகவல் தொகுப்புக்களில் அவர்களது வெப்'தள முகவரி தரப்படும். தேவையான வர்கள் அந்த 'வெப்' தளத்தை அணுகி முழு விபரங்களையும் பெற்றுக்கொள்வதோடு கொள்வனவுக்கட்டளைகளையும் அனுப்ப முடியும்,
கோளமயமாதல் காரணமாக இன்று வர்த்தகச் செயற்பாடுகள் தேசிய எல்லை களைக் கடந்து சர்வதேசமயமாகி வரு கின்றன. எனவே அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள் தமது உற் பத்தி ஆலைகளையும், சேவை நிலையங் களையும் உலகின் பல்வேறு பிரதேசங் களிலும் நிறுவி நிர்வாகித்து வருவதற்குப் புதிய தகவல் தொழில் நுட்பம் வழிவகுத் துள்ளது. மிக இலகுவாகவும் விரைவாக வும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வசதியேற்பட்டுள்ளதனால்தான் இந்நிலை சாத்தியமாகி இருக்கிறது.
உதாரணமாக ஓர் அமெரிக்கக் கம் பணியின் உற்பத்தி ஆலைகள் தாய்வா னிலும், பிலிப்பைன்ஸிலும் கொரியா விலும் இருக்கின்றன என வைத்துக் கொள்வோம். இந்த ஆலைகளின் முகா மையாளர்களுடன் ஏதேனும் முக்கிய விட யமாக தாய்க் கம்பனியின் நிர்வாகிகள் உடனடி மாநாடொன்றைநடத்தவேண்டிய தேவை ஏற்பட்டால் ஒவ்வொருவரும் தத் தமது காரியாலயங்களில் இருந்தவாறே இண்டர்நெட் மூலமாக மாநாடு நடத்த
லாம். இந்த நுட்ப முறையை Video Conferencing என்கின்றோம். இதனால் கால விரயமும் பிரயாணச் சிக்கல்களும்
தவிர்க்கப்படுவதோடு உடனடி முடிவு
களை எடுக்கும் வாய்ப்பும் ஏற்படுகின்றது. வங்கிக் கொடுக்கல் வாங்கல் களிலும் இண்டர்நெட்டின் ஆதிக்கம் அதிகரித்துவருகின்றது.இப்போது ஒருவர் நேரடியாகத் தன் வங்கிக்குச் செல்லா மலேயே வங்கியோடு தொடர்புகொள்ள இண்டர்நெட்டும் கம்பியூட்டர் வலைய மைப்புக்களும் உதவுகின்றன. ஒருவர் தனக்கு மாதாந்தம் வரவேண்டிய சம்பளத் தையோ வேறு வருமானங்களையோ நேரடியாகத் தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்து விட்டு அதிலிருந்து யார் யாருக்கு எந்த அளவு பணம் செலுத் தப்பட வேண்டும் என்பதை இண்டர்நெட் மூலம் வங்கிக்கு அறிவுறுத்த முடியும். அதற்கு ஏற்ப வங்கியும் குறித்த தொகை யை உரியவர்களின் வங்கிக் கணக்கு களுக்கு மாற்றிவிடும். இந்தப் பரிமாற்றங் களின் போது பணம் (cash) நேரடியாகக் கையாளப்படுவதில்லை.
e-Commerce துறையில் விருத்திய டைந்துவரும் மிகப்புதிய கருத்துப் படிவம் electronic Wallet (gsuä'(SJITsoflä, பணப்பை) என்பதாகும். இதன்படி இனி எவரும் எந்தத் தேவைக்கும் பன நோட் டுக்களைக் காவித் திரிய வேண்டிய அவ சியமிருக்காது. உங்களது வருமானத் தையெல்லாம் முன்கூறியதுபோல் உங்கள் வங்கிக் கணக்குக்கு வரச் செய்ய வேண் Gh. Guils, gild,slåg, electronic Wallet என்னும் ஒரு விசேட கார்டைத் (card) தரும். இந்தக் கார்டில் மிக நுண்ணிய புரோஸஸர் ஒன்று பொருத்தப்பட்டிருக் கும். இந்தக் கார்ட் தான் உங்கள் பணப் பையாக இருக்கும்.
நீங்கள் ஏதேனும் தேவைக்காக வெளியே செல்லும்போது உங்கள் வங்கிக் கம்பியூட்டருடன் பொருத்தப்பட்டுள்ள

சேட கருவியொன்றினுள் இக்கார்டைச் செலுத்தி உங்களுக்குத் தேவையான ாம் எவ்வளவு என்பதை அதில் பதிவு சய்து கொள்ளலாம். பின்னர் பஸ்ஸிலோ ாடகைக் காரிலோ செல்லும் போது ந்தக் கார்டை வண்டியிலுள்ள கருவி துள்செலுத்தினால் உங்கள் பிரயாணக் ட்டணம் அதிலிருந்து கழிக்கப்பட்டு டும். சொந்த வாகனத்தில் செல்லும் ாது எரிபொருள் நிரப்பத் தேவையா ால் பெட்ரோல் நிலையத்திலுள்ள கரு க்குள் கார்டைச் செலுத்தி எரிபொரு க்குரிய கட்டணத்தை அதிலிருந்து
க்கச் செய்யலாம்.
இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொள் நம்சேவைகளுக்கும் பண்டங்களுக்கும் ரிய கட்டணங்கள் அந்தந்த இடங்களில் ள்ள கருவிகளால் உங்கள் கார்டில் ருந் து கழிக்கப்படும். இவ்வாறு கழிக்கப் ம்ெ கட்டணங்களுக்குரிய தொகைகள் ங்கள் வங்கிக் கணக்கிலிருந்து குறிப் ட்ட நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு
. இப்படியே கார்டில் நீங்கள் பதிவு சய்த தொகை செலவழித்து முடிக்கப் ட பின் மீண்டும் முன்போல் தேவை
பானதொகையைப் பதிவுசெய்துகொள்ள முடியும். உங்கள் வங்கிக் கணக்கில் போதியளவு பணம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இப்போது வழக்கில் உள்ள கிரெடிட்கார்ட்முறையிலிருந்து இது வேறுபடுகின்றது. கிரெடிட் கார்டுக்குச் செலுத்துவது போன்ற வட்டி, சேவைக் கட்டணம் என்பன இங்கு செலுத்தப்படத் (Bg5sen 6 Juliu Gansu. Electronic Wallet பணப்பைக்கு ஒரு மாற்றீடாகவே இருக் கும்.
e-Commerce செயல்முறைகளில் பல பிரதிகூலங்களும் இருக்கின்றன. சிறிய அளவிலான வியாபாரங்கள் இத னால் பாதிக்கப்படலாம் எனக் கருதப்படு கின்றது.அத்தோடுதகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் குழறுபடிகளும் திட்டமிட்டுச் செய்யப்படும் நாசகாரச் செயல்களும் வர்த்தகச் செயற்பாடுகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடும். எனினும் இவ்வாறான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குரிய வழிமுறைகளை விருத்தி செய்து கொண்டு இலக்ட்ரோனிக் வர்த்தக முறைகள் உலகெங்கும் வியாபிக்கும் என நாம் நம்பிக்கை கொள்ளலாம்.
எமது ஆக்கங்கள் - ஒரு விளக்கம் அரும்பில் வெளிவரும் ஆக்கங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றனஎன்பதுபற்றிநாம் குறிப்பிடுவதில்லையே எனச் சில வாசகர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர். ண்மையில் அரும்பில் வெளிவரும் கட்டுரைகளுள் பெரும்பாலானவை ஆசிரி ரினால் அரும்புக்கென விசேடமாக எழுதப்படுவனவாகும். தேவையான தகவல் soil Encarta, Grolier, World Book, Britannica, Americana, New Caxton போன்ற கலைக்களஞ்சியத் தொகுதிகளிலிருந்தும் Internet இலிருந்தும் பெற்றுக்கொண்டு எமது வாசகர்களுக்கு ஏற்ற வகையில் கட்டுரைகள் தொகுத்து ழுதப்படுகின்றன.மருத்துவக் கட்டுரைகளுக்குத் தேவையான தகவல்கள் நவீன ருத்துவப் பாடநூல்களிலிருந்து நேரடியாகப் பெறப்படுகின்றன. வேறு வெளி களிலிருந்து கட்டுரைக்கான விடயம் பெறப்படும் சந்தர்ப்பங்களில் அவ்வெளி பீடுகளின் பெயர்கள் கட்டுரையின் முடிவில் குறிப்பிடப்படும். பொதுவாகக் ட்டுரைகள் யாவும் சஞ்சிகை ஆசிரியரின் தனிப்பட்ட ஆக்கங்களே. மொழி பயர்ப்புக்களுக்கும் அவரே பொறுப்பாவார்.

Page 6
ଜୋଗ ன் பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியாவுக்குத் தென் கிழக்கே அமைந்துள்ளநியூஸிலாந்து வடதீவு, தென் தீவு ஆகிய இருபிரதான தீவுகளையும் பல சிறுதீவுகளையும் கொண்டது.இதன்நிலப் பரப்பு 270,534 சதுர km ஆகும். (இலங் கையைவிட 4 மடங்கு பெரியது) எனினும் 1997 கணிப்பீட்டின் படி நியூஸிலாந்தின் சனத்தொகை 3.587275 மாத்திரமே. இது இலங்கையின் சனத்தொகையில் 15 பங்காகும்.
நியூஸிலாந்தின் ஆதிக் குடிமக்கள் மயோரி (Madri) இனத்தவர்களாவர். இவர்கள் கி. பி. 1200ம் ஆண்டளவில் பசுபிக்கில் உள்ள பொலினீஷியத்தீவுகளி லிருந்து வந்து குடியேறியவர்கள் என வரலாறு கூறுகின்றது. நியூஸிலாந்துத் தீவுகளை முதன் முதலாக (1842இல்) கண்ட ஐரோப்பியர், டச்சு மாலுமியான Abel Jamzoom Tasman GTETLISLIITITELJITIŤ. 1769இல் பிரிட்டிஷ் ஆய்வாளரான கப்டன் ஜேம்ஸ் குக் என்பவர் நியூஸிலாந்துக்கு விஜயம் செய்து அதனை பிரிட்டன்சார்பாக உரிமை கோரினார். எனினும் 75 வருடங் களின் பின்னரே பிரிட்டிஷ் அரசு அவரது உரிமை கோரலை அங்கீகரித்தது.
18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி யிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பிரிட்டிஷ் திமிங்கில வேட்டைக்காரர்களும் மதப் பிரசாரகர்களும் நியூஸிலாந்தில் குடியேற்றங்களையும் வர்த்தக மையங் களையும் நிறுவலாயினர்.இம்முயற்சிகளை
Wellington
TSCHLFC
GEOLTI I SY'N )
TEWkHT |ናl...ኒኤ1ክ
மபோரி மக்கள் கடுமையாக எதிர்த்தனர் இறுதியில் 1840இல் பிரிட்டனுக்கும் மபோரி இனத்தினருக்கும் இடையி வைதாங்கி (Waitang) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதையடுத்துபிரித்தா பர்கள் திட்டமிட்ட முறையில் அங்கு கு யேறத் தொடங்கினர். இவ்வுடன்படிக்கி யில் பிரிட்டிஷ் பிரதிநிதி ஒருவரும் மயோ தலைவர்கள் 50 பேரும்கைச்சாத்திட்டன
நியூஸிலாந்தின் ஆட்சியுரிமையை பி டன் பெற்றுக்கொண்டது. அத்தோ மயோரி மக்களின் நிலவுரிமைகை மதித்து நடக்கவும் பிரிட்டன் இணங்கிய முதலில் அவுஸ்திரேலியாவின் NB South Wales மாநில நிர்வாகத்தின் கீ வைக்கப்பட்டிருந்த நியூஸிலாந்து 1841இ பிரிட்டனின் முடிக்குரிய குடியேற்றநாடா மாறியது.
இன்று நியூஸிலாந்தின் சனத்தெ கையில் 73% ஐரோப்பியர்களின் (குறி பாக பிரித்தானியர்களின்) வழித்தோ றல்களாகவே உள்ளனர்கதேசமக்களா மயோரிகள் 12% மாத்திரமே இருக்கி றனர். ஏனையோர் பொலினிஷிய மற்று ஆசிய மக்கள் கூட்டங்களின் சந்ததிக வர். மொத்த சனத்தொகையில் முக்க பகுதியின்ர் வட தீவிலேயே வசிக்கி றனர். மயோரிமக்களில் 95 சதவீதத்தின் அங்குதான் வாழ்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியூஸிலாந்து மக்களில் பெரும்பான் மையினர்கிறிஸ்தவர்களாவர்.அங்கு ஆங் கிலமும் மயோரி மொழியும் அரசகரும மொழிகளாக இருந்த போதிலும் மயோரி கள் உட்படப் பெரும்பான்மையோர் ஆங் கிலமே பேசுகின்றனர். நாட்டில் சுமார் 50,000 பேர்மட்டுமே மயோரி மொழியைச் சரளமாகப் பேசக்கூடியவர்களாக உள்ள ErlITT
நியூஸிலாந்து ஒரு மலைப்பாங்கான நாடாகும். அங்கு?500 அடிக்குமேல் உயர முடைய சிகரங்கள் 220க்குமேல் உள்ளன. இரு பிரதான தீவுகளிலும் பல மலைத் தொடர்கள் காணப்படுகின்றன. வட தீவில் உயிர்ப்பான மூன்று எரிமலைகள் உள்ளன. நாட்டின் மிக உயர்ந்த சிகரமான Mount Cook தென் தீவிலுள்ள தெற்கு அல்ப்ஸ் மலைத் தொடரின் மத்தியில் அமைந்துள் ளது. இதன் உயரம் 3754 m (12316 அடி) ஆகும். நாட்டின் மிக நீண்ட நதியாகிய Goblig-Gg|ITEff) (Waikato River) 425 km நீளமானது.இது வட தீவில் இருக்கின்றது. LakeTaupo (606 சதுரkm) என்பதே நியூ ஸிலாந்திலுள்ள மிகப் பெரிய ஏரியாகும்.
மிதமான காலநிலையே நியூஸிலாந் தில் நிலவுகின்றது. அங்கு பருவகால மாற்றங்கள் மிகக் குறைவாகவே ஏற்படு கின்றன. சராசரி வெப்பநிலை ஜனவரியில் 209-23°c ஆகவும் ஜூலையில் 5'-8?c ஆகவும் காணப்படுகின்றது. சராசரி மழைவீழ்ச்சி1230 mm முதல் 1850 mm வரையாகும்.
நியூஸிலாந்தின் இயற்கை வளங் களுள் நில வளமே முக்கியமானதாகும். பயிர்ச் செய்கை, கால்நடை வளர்ப்பு என்ப வற்றுக்கு முற்றிலும் ஏற்றதாக அது திகழ் கின்றது. நிலக்கரி, பொன், சுண்ணாம் புக்கல், களி, டொலமைற்று, மக்னசைற்று போன்ற கணிப்பொருட்களும் இயற்கை வாயுவும் அங்கு பெருமளவு காணப்படு கின்றன.
அந்நாட்டில் 2000க்கும் மேற்பட்ட சுதேச தாவர இனங்கள் வளர்கின்றன. இவற்றுள் சுமார் 1500 இனங்கள் உலகில் வேறெங்கும் காணப்படுவதில்லை. இரு வெளவால் இனங்களைத் தவிர நியூ ஸிலாந்துக்குரிய சுதேச விலங்கினங்கள் எதுவும் இல்லை. இப்போதுள்ள வனவிலங் குகளில் மான்கள், முயல்கள், ஆடுகள், usòTJÓlafsfir, Weasels, Opossum GuITGäTp)
முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட விலங்
குகளின் சந்ததிகளே காணப்படுகின்றன.
அங்கு பாம்புகள் அறவே இல்லை, பூச்சி களிலும் மிகச் சில இனங்களே அங்கு
வாழ்கின்றன.
நியூஸிலாந்தில் பெருந்தொகையான பறவையினங்கள் உண்டு. இவற்றுள் 23 அந்நாட்டுக்கே உரிய சுதேச இனங்க ளாகும். பறக்க முடியாப் பறவைகளான கிவி, ககாபோ, தகாஹே, வேகா என்பன இவ்வினங்களுக்குள் அடங்கும். இந்தப் பறவைகள் தப்பிப் பிழைத்திருப்பதற்குக் காரணம் அங்கு இரைகெளவிமிருகங்கள் இல்லாமையே. பல்வேறு இனங்களைச் சேர்ந்த கடற் பறவைகளும் குடிபெயர்ந்து வரும்பறவைகளும் நியூஸிலாந்தில் பெரும ளவுகாணப்படுகின்றன.
நாட்டின் தலைநகரான வெலிங்கடன் மாநகர் வட தீவின் தென் முனையில் அமைந்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய நகரம் Aபckland ஆகும். வட தீவிலுள்ள இது பிரதான துறைமுகமாகவும் கைத் தொழில் மையமாகவும் திகழ்கின்றது. வட தீவிலுள்ள Hamilton தென் தீவிலுள்ள Christchurch, Duned in Teilustral ஏனைய பிரதானநகரங்களாகும்.நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையினர் இந்நகரங்களிலும் அவற்றின் சுற்றுப் புறங்களிலுமே வாழ்கின்றனர்.
பிரிட்டிஷ் மகாராணியால் நியமிக் கப்படும் கவர்னர்-ஜெனரலே பெயரளவில் நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட
Hill

Page 7
தலைவராக இருக்கிறார். எனினும் அவரை பும், பிரதம மந்திரி அமைச்சர்கள் ஆகிய வர்களையும் கொண்ட செயல் நிறை வேற்றுச்சபையே உண்மையான அதிகாரத் தைக் கொண்டுள்ளது.
நியூஸிலாந்துப்பாராளுமன்றம் தனிச் சபையைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை என அழைக்கப்படும் இதில் சர்வ ஜன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும்
120 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு
வாக்காளரும் தேர்தல் தொகுதிரீதியான வாக்கு, கட்சிரீதியான வாக்கு என இரு வாக்குகளை அளிக்கலாம். தேர்தல் தொகுதிரீதியான வாக்குகளின் மூலம் தனி மபோரி தொகுதிகளிலிருந்து 5 மயோரிஉறுப்பினர்களும் மயோரிஅல்லாத தொகுதிகளிலிருந்து 60 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படுவர்.
கட்சிரீதியான வாக்கின் மூலம் மக்கள் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அரசியல் கட்சியைத் தெரிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவர். கட்சி ரீதியான வாக்களிப்பில் ஆகக்குறைந்தது 5% வாக்குகளைப்பெற்ற அல்லது தேர்தல் தொகுதிரீதியான வாக்களிப்பில் ஆகக்
குறைந்தது ஒர் உறுப்பினரையாவது பெற் றுக்கொண்ட ஒவ்வொரு கட்சிக்கும் அவை பெற்ற வாக்குகளின் விகிதாசாரப் படி மீதி 55 ஆசனங்களும் பகிர்ந்தளிக் கப்படும்.
கவர்னர்ஜெனரலினால் பெரும்பான் மைக் கட்சியிலிருந்தே பிரதமர் நியமிக் கப்படுவார். அமைச்சர்களும் அக்கட்சியி லிருந்தே தெரிவுசெய்யப்படுவர். எவ்வளவு காலத்துக்கு பிரதிநிதிகள் சபையின் நம்பிக்கையைப் பேணிக்கொள்ள முடியு மோ அவ்வளவு காலத்துக்கு ஒர் அரசாங் கத்தின் ஆட்சிக்காலம் நீடித்தது.எனினும் 1993இல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி ஆட்சிக்காலம் 3 வருடங்கலாக மட்டுப் படுத்தப்பட்டது.
தொழிற் கட்சி, தேசியக் கட்சி என் பனவே நியூஸிலாந்தின் பிரதான கட்சி AFGITIITS). The Alliance, The New Zea land First Party gol|L Lg|L 5 flăit முறையே 1991,1993 ஆகிய வருடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய கட்சி பைச் சேர்ந்த Jenny Shipley என்பவர் 1997இல் நியூஸிலாந்தின் முதலாவது
பெண் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
ஏன் இந்தக் கைெல? ஒரு விவசாயி அடுத்த ஊர்ச் சந்தையில் விற்பதற்காகச் சில கோழிகளைப் பெட்டியில் அபுைத்து அடுத்த வீட்டு இளைஞனிடம் கொடுத்து அனுப்பினான். கிராமத்து வீதியினூடாகச் செல்லும்போதுவழியில் பெட்டி கவிழ்ந்துவிடவே கோழிகள் வெவ்வேறு திசைகளில் ஓடி விட்டன. இளைஞன் நாள் முழுவதும் சிரமப்பட்டு ஒருவாறு சில கோழிகளை பிடித்துப் பெட்டியில் அடைத்துக் கொண்டான். அதற்குள் மாலையாகி விட்டதால் சந்தைக்குச் செல்லாமல் ஊருக்குத் திரும்பிவிவசாயியிடம் நடந்ததைக் கூறிக் கவலைப்பட்டாள்.
"நீ ஏன் இப்படிக் கவலைப்படுகின்றாய்? அப்படியொன்றும் நஷ்டமாகி விடவில்லையே" என்று கேட்டான் விவசாயி. "எவ்வளவோ முயன்றும் பதினொரு கோழிகளைத் தான் என்னால் பிடித்துக்கொள்ள முடிந்தது" என்றான் இளைஞன் பரிதாபமாக, "பதினொன்றா? நான் ஆறு கோழிகளைத் தானே தந்தேன்" என்று வாயைப் பிளந்தான்
55 JEFITLIúil.
1)

ல்ங்கைத் தபாற் பகுதியினர் அண்மைக் காலத்தில் நாட்டிலுள்ள எல் லாத் தபாற் காரியாலயங்களுக்கும் உரிய gLTi (55.5Gd,6061T (Post Code) girl ပြိုးနှီး அத்தோடு கடிதங் களுக்கு முகவரி எழுதும் போது அவை போய்ச் சேர வேண்டிய தபாற் காரியா லயத்தின் குறியீட்டையும் கடித உறையில் தவறாது எழுதுமாறு பொதுமக்கள் வேண்
டப்பட்டுள்ளனர்.
இன்று இலங்கையில் 2000க்கும் மேற்பட்ட தபால் காரியாலயங்கள் மூலம் தபால் வினியோகம் நடைபெறுகின்றது. இவற்றுள் சில காரியாலயங்கள் நாட்டின் ஒதுக்குப்புறமான கிராமங்களில் அமைந் துள்ளன. அத்தோடு சில தபாற் காரியா லயங்களின் பெயர்கள் ஒன்றையொன்று பெரிதும் ஒத்தனவாக உள்ளன. இதனால் ஒழுங்காகவும் தெளிவாகவும் முகவரி எழுதப்படாத போது கடிதங்கள் தவறிப் போவதற்குரிய வாய்ப்புநிறைய உண்டு.
நம் நாட்டில் மூன்று மொழிகளும் பயன்படுத்தப்படுவதனால் தபால் ஊழியர் களின் மும்மொழியறிவுக் குறைபாடு காரணமாகவும் சில சமயங்களில் கடிதங் கள் தவறான இடங்களைச் சென்றடை கின்றன. அல்லது அவற்றின் வினியோகத் தில் வீணான காலதாமதம் ஏற்படுகின்றது. தபால் குறியீட்டெண்களைப் பயன் படுத்துவதன் மூலம் மொழித் தடையினா லும் தவறான எழுத்துக் கூட்டலினாலும் ஏற்படக் கூடிய சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்ள முடிகின்றது. அத்தோடு கடிதங் களைத் துரிதமாக வகைபிரிப்பதற்கும் திருத்தமாகவும் விரைவாகவும் வினியோ கிப்பதற்கும் வழி ஏற்படுகின்றது.
தபாற் குறியீ
(Post Code)
11
தற்போது ஒவ்வொரு தபால் அலுவல கத்தையும் ஐந்து இலக்கங்களைக் கொண்ட எண்ஒன்றினால் குறிக்கும் குறி பீட்டு முறை இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.இவ்வெண்ணின் முத லாவது இலக்கம் தபால் அலுவலகம் அமைந்துள்ள மாகாணத்தைக் குறிக்கின் றது. ஏனைய நான்கு இலக்கங்களும் தபால் அலுவலகம் அமைந்துள்ள ஊரைக் குறிக்கின்றன.
மாகாணங்களுக்கென வழங்கப்பட் டுள்ள இலக்கங்கள் பின்வருமாறு: மேல் =1, மத்திய=2, கிழக்கு =3,வட=4, வடமத்திய=5,வடமேல் = 6, சபரகமுவ = 7, தென் =8,ஊவா =9.
இக் குறியீட்டு முறையின்படி ஒரு தபால் அலுவலகத்தின் குறியீட்டைக் கொண்டு அவ்வலுவலகம் எந்த மாகாணத் தின் என்ன மாவட்டத்தில் இருக்கின்றது என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக 10280 என்ற குறியீட்டைக் கொண்ட அலுவலகம் மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலும், 1870 என்பது அதே மாகாணத்தில் கம்பஹா மாவட்டத் திலும், 12500 என்பது அதே மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்திலும் அமைந்துள் ளன என்பதை அறிந்து கொள்ளலாம். இங்கு இரண்டாவது இலக்கமே மாவட் டத்தைக் குறித்து நிற்கின்றது. ஒரு மாகா ணத்தில் மூன்று மாவட்டங்கள் இருப்பின் பிரதான மாவட்டம் 0 இனாலும் அடுத்த வை 1, 2 என்பவற்றாலும் குறிக்கப்படு கின்றன.
பெரும்பாலான உலகநாடுகள் நீண்ட காலத்துக்கு முன்னரேயே தபால் குறியீடு

Page 8
களை அறிமுகப்படுத்திவிட்டன. அமெரிக் கா, இந்தியா, கனடா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகளில் இப்படியான குறியீட்டு முறையொன்று இல்லாதபட்சத்தில் தபால் வினியோகம் செய்வது சாத்தியமாகாது.
அமெரிக்காவில் மாநிலங்களை வல யங்களாகத் (Zones) தொகுத்து வகைப் படுத்தும் செயற்றிட்டம் ஒன்று அறிமுக ப்படுத்தப்பட்டது. இதனை 20 nal Improvement Program (ZIP) start அவர்கள் அழைத்தனர். இச்செயற்றிட் டத்தின்படி ஒவ்வொரு பிரதேசத்துக்கும் வழங்கப்பட்ட ஐந்திலக்கக் குறியீடு Zip C0de என அழைக்கப்படுகின்றது. இக்குறியீட்டு முறையை மேலும் திருத்த மாக்குவதற்காக பிற்காலத்தில் மேலதிக மான நான்கிலக்கக் குறியிடொன்று பின் னால் சேர்க்கப்பட்டது. பிந்திய குறியீட் டைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப் படவில்லை. எனினும் சில மாநிலங்களில் இரண்டு குறியீடுரும் முழுமையாக எழுதப்பட்ட கடிதங்களைக் குறைந்த முத்திரைக்கட்டனத்தில் அனுப்புவதற்குச் சலுகைவழங்கப்பட்டுள்ளது.
எமது நாட்டில் தபால் அலுவலகங் களிலும் பிரதான வகைப்படுத்தல் 605 LILL-Irāiel, 5tfajliib (Sorting Centres) TAL-ġBIiiI களை அவை சென்றடைய வேண்டிய இடங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தும் வேலை இன்னும் கைகளாலேயே செய்யப் படுகின்றன. எனினும் அபிவிருத்தி படைந்த நாடுகளில் இது இயந்திரங் களைப் பயன்படுத்தியே செய்யப்படு கின்றது.
இயந்திர முறையில் வகைப்படுத்தல் (Mechanical Sorting) agilang ibig குறியீட்டு முறையொன்றைப் பயன்படுத் துவது அத்தியாவசியமாகும். எதிர்காலத் தில் இலங்கையில் இம்முறையை அறிமுகப் படுத்துவதற்குத் தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளதனால் தபாற் குறியீடு
12
களைப் பயன்படுத்தும் பழக்கத்தை மக்களி டையே முதலில் பரவலாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இயந்திர முறையான வகைப்படுத் தலின் போது கடிதங்கள் அசையும் பட்டி பொன்றின் (moving belt) மீது வரிசை பாக முகவரி தெரியக் சுட்டியவாறு அடுக் கப்படுகின்றன. அசையும் பட்டியில் செல் லும் கடிதம் இயந்திரத்தை இயக்குபவரைக் கடந்து செல்லும் போது அவர் தனக்கு முன்னாலுள்ள கீபோர்டில், கடிதஉறையில் எழுதப்பட்டுள்ள குறியீட்டெண்ணைப் பதிவு செய்வார். உடனே அக்கடிதஉறை பின் மீது கண்ணுக்குப் புலப்படாத அடையாளமொன்று இயந்திரத்தினால் இடப்படும்.
இவ்வாறு கடிதங்களின் மீது இடப் படும் வெவ்வேறு அடையாளங்களை உணர்ந்து இனங்கண்டு அவை சென்ற டைய வேண்டிய இடங்களுக்கு ஏற்ப அவற்றை வகைபிரிக்கும் தானியங்கிச் சாதனங்கள் அந்த இய்ந்திரத்தொகுதியில் அமைந்துள்ளன. இப்படி வகை பிரிக்கப் படும் கடிதங்கள் வெவ்வேறு தொகுதி களாகப் பிரிக்கப்பட்டு தனித்தனிப் பொதி களாக அடைக்கப்படுகின்றன. பின்னர் இப்பொதிகள் உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
தற்போதைய நவீன வகைபிரிக்கும் இயந்திரங்கள் கம்பியூட்டர்களின் உதவி போடு இயங்குவதால் அவைமிக விரைவா கவும் திருத்தமாகவும் கடிதங்களை வகை பிரிக்கக் கூடியனவாக இருக்கின்றன. எனினும் முகவரிஎழுதுவோர்குறியீட்டைத் திருத்தமாகவும் தெளிவாகவும் எழுதாத பட்சத்தில் அவை உரிய இடத்தைச் சென்றடையத்தவறிவிடுகின்றன. எனவே இப்போதிருந்தே தபால் குறியீடுகளைத் திருத்தமாகப் பயன்படுத்தும் வழக்கத்தை நாம் கண்டப்பிடிப்பது அவசியமாகும்.

| Þ/t:1_{
பொக்ஸிங் (Boxing) என்பது
இரு போட்டியாளர்கள் ஒருவரையொருவர் வீழ்த்தும் நோக்கத்துடன் விரல்களை
மடித்தவாறு கை முஷ்டிகளால் (fists) சண் டையிடும் ஒரு விளையாட்டாகும். இவ் விளையாட்டின் போது போட்டியாளர்க்ள் தம் கைகளில் விசேட பொக்ஸிங் கை யுறைகளை (Gloves) அணிந்திருப்பர்.
ஒவ்வொரு போட்டியாளரும் தனது
எதிரியின் தலைக்கும் முண்டத்திற்கும் பலமான குத்துக்களை விடுவதன் மூலம்
அவரைத் தரையில் வீழ்த்த முயற்சிப்பார். விழுந்தவர் 10 வினாடிகளுக்குள் எழுந்து நின்று மீண்டும் சண்டையிட முடியாது போனால் அவர் தோல்வியுற்றவராகக் கருதப்படுவார்.
புராதன கிரேக்கத்தில் பொக்ஸிங் ஜனரஞ்சகமான விளையாட்டாகத் திகழ்ந் தது. முதலாவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் அது இடம்பெற்றிருந்தது. பண்டைய ரோம் நகரில் இடம்பெற்ற குத் துச் சண்டைகளின் போது போட்டியாளர் கள் Cestus எனப்படும் உலோகத்துண்டு கள் பொருத்தப்பட்ட தோல் கையுறை களை அணிந்திருந்தனர். எதிரியின் ஆடல் உருக்குலையும் வரை அல்லது அவன் கொல்லப்படும் வரையில் இச்சண்டைகள் நீடித்தன.
ரோமசாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியோடு
குத்துச் சண்டையின் மீதான ஆர்வமும்
மங்கிப் போயிற்று. 18ம் நூற்றாண்டில் லண்டன் மாநகரில் இவ்விளையாட்டு
குத்துச் சண்டை
13
என்னும்
மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியது. கையுறை எதுவுமின்றி வெறும் முஷ்டிகளி னாலேயே அக்காலக் குத்துச் சண்டை வீரர்கள் போட்டியிட்டனர். பெரும்பாலும், பனப் பரிசொன்றைப் பெறுவதற்காகவே போட்டியாளர்கள் சண்டையில் ஈடுபட்ட னர். எனவே இவ்வகைக் குத்துச்சண்டை Prize fighting என அழைக்கப்பட்டது. தற்காலத்தில் பணப்பரிசுக்காக நடை பெறும் குத்துச்சண்டையை Professional Boxing எனவும் பணப் பரிசு சம்பந்தப் LLIrg, 61505,60L Amateur Boxing GTGOT வும் அழைக்கின்றனர். *
அதிபாரக் குத்துச் சண்டைச் சம்பி யன் என முதன் முதலாக 1719இல் அங்கீ கரிக்கப்பட்டவர் James Figg என்பவ ராவார். பின்னர் சம்பியனாக வந்த John Broughton என்பவர் 1743இல் குத்துச் சண்டைக்கான சட்டவிதிகள் சிலவற் றைத் தொகுத்தளித்தார். அப்போது நடைமுறையிலிருந்த சில செயல் முறை களை நியமப்படுத்தவும் வேறு சிலவற்றை நீக்கி விடவும் இவரது விதிகள் வழிவகுத் தன.உதாரணமாக எதிரிதரையில் விழுந்த பின்னர் அவரை அடித்தல், தலைமுடியைப் பற்றிப் பிடித்தல் போன்ற செயல் களை இவ்விதிகள் தடைசெய்தன.
18386lj60J Broughton 6.15j slil களே குத்துச் சண்டைப் போட்டிகளைக் கட்டுப்படுத்தின. அந்த வருடத்தில் இதே விதிகளின் அடிப்படையில் உருவாக்கப் LILL- London Prize Ring Rules STGÖTAM) விதித் தொகுதி அமுலுக்கு வந்தது.

Page 9
1853இல் இவ்விதிகள் மேலும் சில திருத் தங்களுக்கு உள்ளாகின.
தற்போது நடைமுறையிலுள்ள Queensberry விதிகள் 1857ம் ஆண்டு John Graham Chambers என்ற குத்துச் சண்டை வீரரினால் வரையப்பட்ட்ன. Queensberry பிரதேசத்தின் கோமானாக 35E, John Sholto Douglas 5 situal ரின் அனுசரணையுடன் இவை வரையப் Q]Ljug:IIIổi Queensberry Rules 6TũT அழைக்கப்படலாயின.
குயீன்ஸ்பெரி விதிகளின் படி குத் துச் சண்டைப் போட்டியொன்று 24 அடி (7.3 m)நீளமான பக்கங்களைக் கொண்ட சதுர வடிவக் கயிற்று வளையமொன்றி னுள் (Ring) இடம்பெறல் வேண்டும். போட்டியொன்று 3நிமிடம் நீடிக்கும் சுற்றுக் 55TTL (rounds) llaflictúLIL (EL ESOL பெறும் இரு சுற்றுக்களுக்கிடையில் ஒரு நிமிட நேர ஓய்வு வழங்கப்படும், 10 செக் கன்களுக்குத்தொடர்ச்சியாகத் தரையில் வீழ்ந்த நிலையிலோ அல்லது ஒரு முழங் காலைக் குத்தியவாறோ ஒரு போட்டி யாளர் இருந்தால் அவர் தோல்வியடைந் ததாகத் தீர்மானிக்கப்படும். வெறும் முஷ்டிகளால் சண்டையிடுதல், மற்போரி டுதல் (wrestling), கட்டிப்பிடித்தல், எதிரி தளர்ந்து விழுந்த பின்னர் அடித்தல் போன்ற செய்கைகளை குயீன்ஸ்பெரி விதிகள் தடைசெய்துள்ளன. இவை அமு லுக்கு வர முந்திய காலத்தில் பொக்ஸிங் என்பது காட்டுமிராண்டித் தனமான சண்டையொன்றாகவே திகழ்ந்தது.
குத்துச்சண்டைப் போட்டிகள் போட் டியாளர்களின் உடல் நிறையின் அடிப் படையில் 17 பிரிவுகளாகப் பாகுபடுத்தப் பட்டுள்ளன. எனினும் இவற்றுள் எட்டு வகையான பிரிவுகளிலேயே குத்துச் சண் டைப் போட்டிகள் பெரும்பாலும் நடாத்தப் படுகின்றன. இப்பிரிவுகள் பின்வருமாறு: போட்டியாளரின் உச்ச நிறை அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது)
14
(1) Flyweight (50.7 kg (2) bantamweight (53.5 kg) (3) featherweight (57.1 kg) (4) lightweight (61.2 kg) (5) Welterweight (66.6 kg) (6) middleweight (72.6 kg) (7) light heavyweight (79.4 kg) (8) heavyWeight (88.5 kg or ower)
Heavy Weight என்னும் அதிபாரப் பிரிவின் கீழ் போட்டியிட்ட அமெரிக்க வீரர் கள் பலர் உலகப் புகழ் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களுள் Joe Louis என் பவர் 1937 முதல் 1949 வரை சம்பியனாகத் திகழ்ந்தார். இக்கால இடைவெளிக்குள் இவர் 25 தடவைகள் போட்டியிட்டுத் தனது சம்பியன் பட்டத்தைக் காத்துக் கொண்டார். 1952 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற Floyd Patterson என்பவர் 1958இல் அதிபாரப் பிரிவுச் சம்பியனாக வந்தார். 1962இல் Patterson ஐத் தோற்கடித்தSonny Liston என்பவரே எல்லோராலும் அஞ்சப்பட்ட குத்துச் சண் டைச் சம்பியனாவார். எனினும் 1964இல் அவர் முஹம்மத் அலியிடம் தோல்வியுற் றார். உலகக் குத்துச் சண்டை வரலாற்றில் அழியாப் புகழ்பெற்ற முஹம்மத் அலி அதி பாரக் குத்துச்சண்ட்ைப் போட்டிகளின் புக ழையும் உலகம் முழுவதும் பரவச் செய்தார். 1904ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் அமெச்சூர் பொக்ஸிங் போட்டிகள் இடம் பெறுகின்றன. மேற் குறிப்பிட்ட8பிரிவுகளோடு lightlyweight, light Welterweight, light middleweight, super heavyweight gasilu 4 GLDG);55, பிரிவுகளையும் சேர்த்து மொத் தம் 12 பிரிவுகளில் போட்டிகள் நடாத்தப் படுகின்றன. இங்கு போட்டிகள் மூன்று சுற்றுக்களுக்கு மேல் நீடிப்பதில்லை. ஒவ் வொரு சுற்றும் 2-3 நிமிடங்கள் நீடிக்கும். Professional boxing girl LILLJairu(Bli, தப்படும் கையுறைகளை விடப்பாரம் கூடிய கையுறைகள் இங்கு உபயோகிக்கப்படுவ தோடு தலையைக் காப்பதற்கான கவசங்களும் அணியப்படுவது வழக்கம். சர்வதேச ஒலிம்பிக் விதிகளுக்கு ஏற்பவே போட்டிகள் நடாத்தப்படுகின்றன. ம

ற்போது பூமியில் வாழும் பறவை இனங்களுள் தீக்கோழியே உருவத்தில் மிகப் பெரியதாகவும் வலிமை மிக்கதாக வும் திகழ்கின்றது:Struthionidae என்னும் விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்த தீக் கோழியை Struthio camelus என விலங்
கியலாளர்கள் பாகுபடுத்தியுள்ளனர்.
பறப்பதற்கு முடியாத பறவையான தீக்கோழி இப்போது ஆபிரிக்காவில் மட் டுமே இயற்கையாகக் காணப்படுகின்றது. முன்னொரு காலத்தில் இவ்வினம் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்துள்ள போதி லும் காலப்போக்கில் அங்கு முற்றாக அழிந்து போய் விட்
இருக்கலாம். 3 m (10 அடி) உயரமும் இ 150 kg நிறையும் " கொண்ட பறவைகளும் காணப்பட்டுள் ளன. தீக்கோழிநீண்ட கழுத்தையும் சிறிய தலையையும் பெரிய கண்களையும் கொண்டிருக்கும். அதன் அலகு குறுகியும் தட்டைபாகவும் இருக்கும். அதன் வலிமை மிக்க நீண்ட கால்களில் கூரான நகம் கொண்ட இரண்டு விரல்கள் காணப்படு கின்றன. எதிரிகளால் நெருக்கப்படும் போது தீக்கோழி தனது வலிமையான கால்களால் பயங்கரமாக உதைக்கும்.
தீக்கோழியின் இறக்கைகள் சிறிய வை. அது ஒடும் போது தன் இறக்கை களை விரித்துக் கொள்ளும், பறவை களுள் மிக வேகமாக ஓடக் கூடியது தீக்கோழியே. மணிக்கு50 km வேகத்தில் அதனால் நீண்ட நேரம் ஒட முடியும்.
15
-
*
-
ஆபத்து வேளைகளில் மணிக்கு 70 km வேகத்தில் குறுகிய துரங்களை அதனால் கடக்க முடியும்.
ஆண் பறவை கறுப்பு நிறமானது. அதன் இறக்கைகளிலும் வாலிலும் உள்ள பெரிய இறகுகள் வெண்ணிறமாக இருக் கும். மிருதுவான இவ்விறகுகள் பொருளா தார முக்கியத்துவம் உடையவை. தொப்பி களிலும் ஆடம்பர உடுப்புக்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. பெண் தீக் கோழிகள் மங்கலான நரை கலந்த கபில நிறத்தைக் கொண்டவை.
தீக்கோழிகள் சதைப்பாங்கான தாவ ரங்கள், பழங்கள், புல் போன்றவற்றை உேணவாகக் கொள் 隱 கின்றன. சில சம இயங்களில் பூச்சிகள், :ஒணான்கள், சிறு பறவைகள், எலிகள் முதலியவற்றையும் து உட்கொள்வதுண்டு. நீண்ட காலத்துக்கு அருந்தாமல் - இவற்றால் வாழ முடியும். எனினும் இறுதியில் நீர் கட்டாயம் தேவைப்படும். பறவைகளுள் சிறுநீரையும் மலத்தையும் தனித்தனியாகக் கழிக்கும் சிறப்பியல்பு தீக்கோழியில் மாத்திரமே காணப்படுகின்றது.
ஓர் ஆண் தீக்கோழி 3-4 பெண் பறவைகளோடு சேர்ந்து வாழும். நிலத்தில் தோண்டப்பட்ட பெரிய குழிவொன்றையே அவை தம் கூடாகப் பயன்படுத்தும். எல் லாப் பெண் பறவைகளும் அதே குழிவில் தான் தம் முட்டைகளை இடுகின்றன. அவை கூட்டாக 15 முதல் 30 முட்டைகள் வரை இடக்கூடும். எனினும் எல்லா முட் டைகளும் பொரிப்பதில்லை.
மஞ்சள் கலந்த வெண்ணிறமுடைய தீக்கோழி முட்டை சுமார் 150mm நீளமும்

Page 10
127 mm அகலமும் கொண்டது. 1400 g முதல் 1600 g வரை பாரமுடைய முட்டை ஒவ்வொன்றினதும் உள்ளடக்கம் சுமார் 1.4 வீற்றர் கனவளவைக் கொண்டிருக் கும். முட்டையின் ஒடு 197mm தடிப் புடையது. தற்போதுள்ள பறவை முட்டை களுள் மிகப்பெரியது இதுவாகும்.
முட்டைகளைப் பகல் வேளையில் சிரேஷ்ட பெண் பறவை அடைகாக்கும். பெண் பறவையின் உடல் நிறம் சூழல் நிறத்தை ஒத்திருப்பதால் எதிரிகளிலி ருந்து முட்டைகளைப் பாதுகாக்க இது உதவுகின்றது. மாலை முதல் மறுநாட் காலை வரை ஆண் பறவை அடைகாத் தலைப் பொறுப்பேற்கும். முட்டையிலி ருந்து குஞ்சு பொரிப்பதற்கு 43 நாட்கள் பிடிக்கும் பொரித்தவுடனேயே குஞ்சுகள் ஒடித் திரியக்கூடியனவாக இருக்கும். அவை 6 மாதங்களுக்குள் முழு வளர்ச்சி அடைந்துவிடுகின்றன. எனினும் இலிங்க முதிர்ச்சி அடைவதற்கு 3-4 வருடங்கள் செல்லும்,
இயற்கையான சூழலில் தீக்கோழி களின் சராசரி ஆயுட்காலம் 30 வருடங் களாகும். எனினும் அடைத்து வளர்க்கப் படும் பறவைகள் 50 வருடங்களுக்குமேல்
வாழக் கூடும். ஆபத்து நேரிடும் போது தீக்கோழிகள் அவற்றின் தலையையும் கழுத்தையும் நிலத்தோடு சேர்த்து நீட்டி உட்கார்ந்து கொள்கின்றன. ஆபத்து வேளையில் தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக்கொள்கின்றதுஎன்ற தவறான நம்பிக்கை ஏற்பட இதுவே GTJ GOOTLOTILDI.
அவற்றின் மிருதுவான இறகுக்கா கவும் தோலுக்காகவும் தீக்கோழிகள் வர்த்தக ரீதியில் வளர்க்கப்படுகின்றன. 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தென்னாபிரிக்கா, அல்ஜீரியா, அவுஸ்தி ரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் தீக்கோழிப் பண்ணைகள் பெருமளவு காணப்பட்டன. பின்னர் தீக் கோழி இறகுகளுக்குரிய கேள்வி வீழ்ச்சி புற்ற காரணத்தினால் இத்துறையில் ஆர்வம் குறையலாயிற்று. இப்போது இறைச்சிக்காகவே தீக்கோழிகள் வளர்க் கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் கொழுப் புத்தன்மை குறைந்த அதன் இறைச்சி சுவையில் மாட்டிறைச்சியைப் போன்றது. ஆடம்பரமான தோற்பொருட்களைச் செய் வதற்கு தீக்கோழியின் தோல் பயன்படு கின்றது. து
மூளைக்கு வேலை - விடைகள் () 10 ரூபா நோட்டுக்கள் 4, 20 ரூபா நோட்டுக்கள் 8, 50 ரூபா நோட்டுக்கள் 16
-- (2) T
(3) 5வண்டுகள், 3 சிலந்திகள் (வண்டுக்கு 6 கால்கள், சிலந்திக்கு 8 கால்கள்) (4) கொப்பி ரூ 13:50, பென்சில் ரூ 4.50, அழிறப்பர் ரூ.2.00 - 5) 1000 மீட்டர் அல்லது 1km (அத்தட்டிலிருந்து 1 சதுர mm பருமனுள்ள 1000,000
துண்டுகள் வெட்டலாம்)
(6) 380 வகையான டிக்கட்டுகள் (ஒவ்வொரு ரெயில் நிலையத்திலுமிருந்தும் அடுத்த
19நிலையங்களுக்கும் டிக்கட் வழங்கப்பட வேண்டும்.
ஆகவே 20x19= 380)
XVI-XII:V
 
 

குழாய்களின் சிறு கிளைகள் அடைக்கப் படுவதனால் மூச்சுத் திணறலும் மூச்சி ரைப்பும் (Wheezing) ஏற்படும் நிலை bronchial asthma TGITILIGL). g.gional Ti, தமிழில் ஆஸ்த்மா அல்லது ஈளை நோய் என்பார்கள். நுரையீரற் சிறுகுழாய்களைச் சூழ்ந்துள்ள தசைகளில் ஏற்படும் திடீர்ச் சுருக்கம், குழாய்களினுள் இருக்கும் சீதப் படை வீங்குதல், பிசின் போன்ற இறுக்க மானசளி சுரக்கப்படுதல் போன்றவை இக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்குரிய காரணங்களாக அமையலாம்.
மேற்குறிப்பிட்டவாறு குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதும் மூச்சுவிடுவது கஷ்ட மாகும். அத்தோடு மூச்சுவிடும் போது Wheezing என்னும் இரைச்சல் ஒலி உண் டாகும். குழாய்களினுள் ஒட்டி அடைத்துக் கொண்டிருக்கும் சளியை இருமி வெளி யேற்ற முடியாதிருக்கும். கடுமையான ஆஸ்த்மா தாக்குதலுக்கு உள்ளானவர் களில் பெருமளவிலான நுரையீரற் சிறு குழாய்கள் சற்றும் அசைந்து கொடுக்காத தடிப்பான சளியினால் முற்றாகத் தடைப்
படக் கூடும். உடன் பரிகாரம் செய்யப்படா
மல் இந்நிலை நீடித்தால் நாடிக் குருதியில் ஒட்சிசனின் செறிவு படிப்படியாகக் குறைந்து இதயம் செயலற்றுப் போய் மர னம் ஏற்படலாம்.
பெரும்பாலானவர்களில் ஆஸ்த்மா நோய் சிறுவயதிலிருந்து அல்லதுநடுவயதி லிருந்து தொடங்கலாம். சிறுவயதிலிருந் தே உண்டாகும் ஆஸ்த்மா வகை ஆண்
களில் ஓரளவு கூடுதலாகக் காணப்படும்.
17
இதேபோன்று பிந்தித் தோன்றும் வகை பெண்களிடையே அதிகமாக இருக்கும். முதல் வகை ஆஸ்த்மா எமது உடலில் ஏற் படும் ஒவ்வாமைத்தாக்கங்களாலேயே (allergic reactions) sjiuGálirpg).
நாம் சுவாசிக்கும் வளியில் கானப் படுகின்ற சில நுண்ணிய பொருட்கள் எமது உடலில் சில குறிப்பிட்ட வகைப் பிற பொருளெதிரிகளை உருவாக்க வல்லவை. இப்படியான பொருட்களைக்கொண்டவளி யை உள்ளெடுக்கும்போது சிலரில் கடுமை யான ஒவ்வாமைத் தாக்கங்கள் உருவா கின்றன. தாவரங்களின் மகரந்த மணிகள், நுண்ணிய பூச்சி(mites)களைக்கொண்ட வீட்டுத் தூசு, பறவை இறகுகள், மிருகங் களின் உரோமம், பங்கசுத் தாவரங்களின் வித்திகள் போன்றவை இவ்வாறு உடலில் ஒவ்வாமைத் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வாமைக் காரணிகளாக (allergens) g(5th flairpoT,
மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு உனர்திறனுடையவர்கள் அவற்றை உட் சுவாசித்தால் அவர்களது உடலில் IgE என்ற வகைப் பிறபொருளெதிரி உருவா கின்றது. இப்பிறபொருள் எதிரி உடலுக் குள் வந்த ஒவ்வாமைக் காரணிகளுக்கு எதிராகச் செயற்படும் போது பலவிதமான உடல் தாக்கங்கள் ஏற்படுகின்றன. மூக் கின்சீதப்படைவீங்கித்தும்மலும் மூக்கிலி ருந்து நீர் வடிதலும் ஏற்படுகின்ற Rhinis என்ற நிலை, தோலில் ஏற்படும் எக்ஸிமா (eczema) என்ற சொறி, இளவயதில் தொடங்கும் ஆஸ்த்மா என்பன இவ்விதம் உண்டாகின்ற ஒவ்வாமைத் தாக்கங்களா

Page 11
கும். பொதுவாக இவ்விதமான ஒவ்வா மைத்தாக்கங்களுக்கு ஆளாவோரிடையே அவை தொடர்பான குடும்ப வரலா றொன்று இருப்பதை அவதானிக்கலாம்.
சிலவேளைகளில் மீன் வகைகள், முட்டை, பால், மதுவம் (Yeast), கோதுமை போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது அவற்றில் அடங்கியுள்ள ஒவ்வா மைக் காரணிகள் குருதியினூடாக நுரையீ ரற் சிறுகுழாய்களை அடைந்து ஆஸ்த்மா நிலையை ஏற்படுத்தவும் கூடும்.
பொதுவாக, பல ஒவ்வாமைக்காரணி கள் சேர்ந்தே ஆஸ்மாநிலையைத் தோற்று விக்கின்றன. எனவே அதற்கான தனி யொருகாணியை இனங்கண்டுகொள்ள முடியாதிருக்கும். சில சந்தர்ப்பங்களில் அஸ்பிளின் போன்ற மருந்துகளாலும் கைத் தொழிற்றுறை இரசாயனப் பொருட்கள் காரணமாகவும் திடீர் ஆஸ்த்மாத்தாக்கங் கள ஏறபடலாம.
இளவயது கடந்த பின் தொடங்கும் ஆஸ்த்மாவுக்கு வெளியிலிருந்து வரும் ஒவ்வாமைக் காரணிகள் காரணமாக இருப்பதில்லை. எனவே இது அகக் காரணி களால் உண்டாகும் ஆஸ்த்மா (intrinsic asthma) என அழைக்கப்படுகின்றது.
சிகரெட் புகை, தூசு, அரிப்புத் தன் மையுடைய ஆவிகள் போன்றவையும்,சுவா சத் தொகுதிசம்பந்தமான தொற்றுநோய் களும், மனதில் ஏற்படும் அழுத்த நிலை களும் ஏற்கனவே உள்ள ஆஸ்த்மா நிலை யை மோசமாக்கலாம். சிறுவர்களிலும் இளைஞர்களிலும் கடுமையான உடல் முயற்சியின் பின்னர் அல்லது குளிர் காற் றுக்கு முகங்கொடுத்த பின்னர் திடீர் ஆஸ்த்மாத்தாக்குதல் ஏற்படுவதுஉண்டு, நுரையீரற் சிறுகுழாய்கள் தொடர் பான் ஆஸ்த்மாவை காலத்துக்குக் காலம் சடுதியாக உருவாகும் வகை (episodic type) எனவும் நீண்ட காலத்துக்குரிய வகை (chronic type) எனவும் இரு வகை
18
காாகப் பிரிக்கலாம். சில வேளைகளில் இவ்விரு வகைகளையும் பிரித்தறிவது சிர மமாக இருக்கும்.
முதல் வகையில், மூச்சடைப்பும் மூச் சிரைச்சலும் இரவிலோ பகலிலோ எந்த நேரத்திலும் திடீரெனத் தோன்றலாம். தாக் குதல் ஆரம்பிக்க முன்னர் நெஞ்சில் இறுக்க உணர்வு உண்டாகும். பின்னர் வெளிமூச்சுகளைப்பை உண்டாக்கும் அள வுக்குக் கஷ்டமானதாகவும் உள்மூச்சு குறு கியும் திணறல் உடையதாகவும் மாறும் சுவாசத்துக்கு உதவும் தசைகளுக்குத் துணைசெய்யும் விதத்தில் நோயாளிதனது தோள் வளையங்களை இறுக்கி வைத்துக் கொண்டு நேராக உட்கார்ந்திருக்க முயற் சிப்பார். வெளிமூச்சின் போது இரைச்சல் ஒவி ஏற்படும். சிலவேளைகளில் சளியை வெளியேற்றாத இருமல் ஏற்படும். இது மூச்சுத் திணறலை மேலும் மோசமாக்கும். கடுமையான தாக்குதல்களின் போது இத பத்துடிப்பு வேகம் அதிகரித்தல், வெளிச் சுவாச வேளையில் நாடித்துடிப்பின் வலி GOLD gyflafirflğgiu (Pulsus paradoxus), வாயில் சீதப்படைகளும் நாவும் நீலநிறமா தல் (Central Cyanosis) போன்ற அறிகுறி கள் தோன்றலாம்.
இவ்விதமான தாக்குதல் ஓரிரு மணித்தியாலங்களுக்குள் சடுதியாக முடிந்துவிடக் கூடும்.இவ்வேளையில் இரு மலோடுதடித்த சளி வெளியேற்றம் நிகழ லாம். சில சந்தர்ப்பங்களில் பல மணிநேரம்
அல்லது பலநாட்களுக்குத் தாக்குதல் நீடிக்
கலாம் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய விதத்தில் சுவாசத் தடையும் நாடிக்குருதி யில் ஒட்சிசன் குறைபாடும் ஏற்படுகின்ற சடுதியான ஆஸ்த்மா தாக்குதல் severe acute asthma TGTJUG i. UpsiTGOTrigg status asthmaticus GT GUT gjati gëdijLL" டது.
நீண்ட காலத்துக்குரிய (Chronic) ஆஸ்த்மாவில் குறிப்பிடத்தக்க அளவுகடு

மையான தாக்குதல்கள் இருக்காது. தொடர்ச்சியான மூச்சு இரைச்சலும் உடல் முயற்சியைத் தொடர்ந்து மூச்சுத் தினற லும் காணப்படும். அடிக்கடி ஏற்படும் சுவா சத் தொற்றுக்கள் காரணமாக இருமலும் சிதம் போன்ற சளி வெளியேற்றமும் இருக் கும்.
சடுதியான வகை ஆஸ்த்மா சிறுவய தினரில் திடீரென அற்றுப் போகக்கூடும். நீண்ட காலத்துக்குரிய வகையில் இவ் வாறு நிகழ்வதில்லை. இரு வகைகளிலும் காலநிலைக்கு ஏற்ப வேறுபாடுகள் ஏற் படும்.ஒவ்வாமைக் காரணிகளுக்கு உணர் திறனுடையவர்களில் ஏற்படும் சடுதியான ஆஸ்த்மா கோடைகாலத்தில் மோசமாகும். இதற்குக் காரணம் அக்காலத்தில் பெரு மளவு ஒவ்வாமைக் காரணிகள் வளியுடன் சேர்வதாகும். நீண்ட காலத்துக்குரிய ஆஸ்த்மா உடையவர்கள் குளிரான கால நிலையில் அதிக பாதிப்புக்கு உள்ளாவர். தொற்றுக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரிப் பதே இதற்குக் காரணமாகும்.
ஆஸ்த்மாவை முற்றாகக் குணப் படுத்துவது சாத்தியமல்ல. எனினும் பின் வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அதனால் ஏற்படும் பாதிப்புக்களிலி ருந்து ஓரளவு தப்பிவாழமுடியும்.
1ஆஸ்த்மாத்தாக்குதல்களை ஏற்படுத்தும் ஒவ்வாமைக் காரணிகளை இனங்கண்டு முடிந்தளவு அவற்றைத் தவிர்த்துக்கொள் եlTE11
2. சுவாசப் பைத் தொற்றுக்கள் (infection) ஏற்படாமல் கவனித்துக் கொள்ளல். 3. மனநிலைப்பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளல். 4 வைத்திய ஆலோசனையின்படி உரிய மருந்துகளை உரிய அளவில் பயன்படுத் தல்,
ஆஸ்த்மா நோயாளிகள் வேறுநோய் களுக்காக மருந்து பெறச் செல்லும் போது கட்டாயமாகத் தமது ஆஸ்த்மா நோய் பற்றி வைத்தியரிடம் கூறிவிட வேண்டும். ஏனெ னில் சில மருந்துகள் ஆஸ்த்மா நோயாளி களில் ஆபத்தான பக்க விளைவுகளை ஏற் படுத்தக்கூடும். அத்தோடு ஆஸ்த்மாவை முற்றாகக் குணமாக்குவோம் எனக் கூறி ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத மருந்து களைச் சிபாரிசு செய்பவர்களின் வலை யில் சிக்காமல் தம்மைக் காத்துக் கொள் வதும் முக்கியமானதாகும்.
Severe Acute Asthma Tsarsh
கடுமையான தாக்குதல் ஏற்பட்டுள்ள வேளையில் காலம் தாழ்த்தாது அவசர சிகிச்சைப் பிரிவொன்றில் அனுமதிப்பது வீணான உயிரிழப்பைத் தவிர்க்க உதவும்,
மனக்குறை
ஒரு தொழிற்சாலையின் அதிபர் தமது அறையை விட்டு வெளியே வந்து பார்க்கும் போதெல்லாம் தமது தொழிலாளர்களில் சிலர் அங்குமிங்கும் உலவிக் கொண்டும் வம்பளந்து கொண்டும் இருப்பதைக் கண்டார். இதனைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என எண்ணிய அவர் அத்தொழிலாளர்களிடம் சென்று 'இனிமேல் இவ்வாறான அசிங்கமான காட்சிகளைக் காண நான் விரும்பவில்லை. உங்களுக்கு ஏதேனும் மனக்குறைகள் இருப்பின் நேராக என்னிடம் கூறுங்கள். அல்லது ஒரு துண்டில் எழுதி அந்த ஆலோசனைப் பெட்டியில் போடுங்கள்'என்று
sil".
மறுநாள் ஆலோசனைப் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதில் ஒரு தாள் துண்டு இருப்பதைக் கண்டு எடுத்து வாசித்தார் அந்தத் தொழிலதிபர்.
"ஐயா! நீங்கள் இறப்பர் அடிகொண்ட சப்பாத்துக்களை அணிய வேண்டாம், நடந்துவரும் போது சப்தம் கேட்கின்ற தோல் சப்பாத்துக்களையே இனிமேல் அணியுங்கள்'என அதில் எழுதப்பட்டிருந்தது.
19

Page 12
'
s
بیشی پیش بود.
-
ரஷ்யா என்ற நாடு முன்னர் ஸார் (Isar) என்னும் அரச வம்சத்தினரால் ஆட் சி செய்யப்பட்டு வந்தது. இந்த மன்னராட் சியின் போது நிகழ்ந்த சமூக அநீதிக ளுக்கு எதிராக ரஷ்ய சோஷலிஸ் இயக்கத் தினர் போராட்டம் நடத்தி வந்தனர். இவ் வியக்கத்தின் போராட்டக் குழுவினர் போல்ஷெவிக்குகள் (Bolshewiks) என அழைக்கப்பட்டனர். விளாடிமிர் லெளின் (V , Lenin) என்பவர் ஆரம்பம் (1903) முதல் போல்ஷெவிக்குகளின் தலைவராக விளங்கினார்.
போல்ஷெவிக்குகளின் அயராதபோ ராட்டம் காரணமாக ஸார் மன்னரான இரண்டாம்நிக்கல்ஸ் 1917 மார்ச்சில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன்ைபடுத்து லெனின் தலைமையிலான குழுவினர் புரட்சி செய்து 1917 ஒக்டோபர் 25ம் திகதி (புதிய கலண்டரின் படி நவம்பர் 7ம் திகதி) ரஷ்யாவின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். இதுவே வரலாற்றில் "போல் ஷெவிக் புரட்சி அல்லது மகத்தான ஒக் டோபர் புரட்சி என அழைக்கப்படுகின்றது. இப்புரட்சியில் போல்ஷெவிக்குகளுடன் இணைந்து ஏனைய சோஷலிஸக் கட்சி களும் செயல்பட்டன.
புதிய ஆட்சியாளர்கள்நாட்டில் பாரிய சமூக மாற்றங்களுக்கு வழிவகுத்தனர். பெரும் நிலச் சொந்தக்காரர்களின் நிலங் களை உழைப்போருக்குப் பகிர்ந்தளித்தல், அரசுக்கும் திருச்சபைக்கும் (Church) இடையிலிருந்த இணைப்பை ஒழித்தல், எல்லாத் தேசிய இனங்களுக்கும் சுய
தோற்றமும் மறைவும் க்க ""+a. *。*
Wladimir Leir நிர்ணய உரிமை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இவற்றுள் அடங்கின. அத் தோடு நடந்துகொண்டிருந்த முதலாம் உலகப்போரில் (1914-1918) இருந்து இவர் கள் ரஷ்யாவை வாபஸ் பெறவும் செய்தனர்.
லெனின் தலைமையிலான ஆட்சி மன்றம் சோவியத் கோங்கிரஸ் என அழைக்கப்பட்டது.1918 ஜூலையில் ரஷ்யா வின் புதிய போல்ஷெவிக் அரசியல் யாப்பு சோவியத் கோங்கிரஸினால் அங்கீகரிக் கப்பட்டது. இதன்படி அந்நாடு "ரஷ்ய சோவியத் சமஷ்டி சோஷலிஸ்க் குடியரசு" (RSFSR) என அழைக்கப்படலாயிற்று.
முதலாம் உலகப் போரின் இறுதியில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன் படிக்கை சம்பந்தமாக ரஷ்யாவின் புதிய ஆட்சியாளர்களிடையே கருத்து முரண் பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக போல் ஷெவிக் தலைவர்களைக் கொலை செய்வ தற்கு அதிருப்தியாளர்கள் முனைந்தனர். லெனினும் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளா கிப்படுகாயமுற்றார். இறுதியில் அதிருப்தி யாளர்களை அடக்கி ஒழிப்பதில் போல்ஷெ விக்குகள் வெற்றி கண்டனர். இதன் விளைவாக சோவியத் ஆட்சி முறை தனிக்கட்சி அமைப்புடையதாக மாறிற்று.
ஆரம்ப காலத்தில் போல்ஷெவிக் ஆட்சிக்கு எதிராகப்பல உள்நாட்டு, வெளி நாட்டுச் சக்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கின. இதனால் சோவியத் ரஷ்யா பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. எனினும் லியோன்
 
 
 

ட்ரொஸ்கி (Leon Trotsky) என்பவரின் தலைமையிலான செஞ்சேனை (Red Army) தீவிரமாகப் போராடி 1920இல் எதி ரிப் படைகளைப் பின்வாங்கச் செய்தது. இறுதியில் 1922 ஒக்டோபரில் இப்போராட் டங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. உடனடி ஆபத்துக்கள் இல்லாத நிலையில் புதிய ஆட்சியினர் செயல்படுவதற்கு இது வழிவகுத்தது.
அதுவரை சோவியத் அரசின் அதி காரம் ரஷ்யக் குடியரசுக்குள் மட்டுமே செல்லுபடியாகியது. முன்னைய ரஷ்யப் பேரரசின் சுற்றுப் பிரதேசங்களான உக் ரேன், பெலோரஷ்யா போன்ற பகுதிகள் இதற்கு உட்படவில்லை. 1922 டிசம்பரில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி ரஷ்யா, உக்ரேன், பெலோரஷ்யா, ட்ரான்ஸ் கவ்காஸியன் (Trans-cauca sian) குடியரசு ஆகியநான்கு குடியரசுகள் இணைந்து சோவியத் சோஷலிஸக் குடியா சுகளின் ஒன்றியம் (USSR) என்ற சமஷ்டி அமைப்பு உருவாகியது. இதுவே சுருக்க மாக சோவியத் யூனியன் என அழைக்கப் பட்டது.
லெனின் 1924 ஜனவரி 21ம் திகதி காலமானார். அதற்குச் சில தினங்களுக் குப் பின்னரே ஜனவரி 31இல்) சோவியத் யூனியனின் முதலாவது அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்பட்டது. இச் சமஷ்டி அமைப் பில் சேர்ந்துள்ள எல்லாக் குடியரசுகளுக் கும் சமமான உரிமைகள் இருப்பதாக அந்த யாப்புக் கூறியது. எனினும் ஆளும் கட்சி பான் கம்யூனிஸ்ட் கட்சிபன்முகப்படுத்தப் படவில்லை.இதனால் அதிகாரத்தை முற்றி லும் பரவலாக்காது கட்சியின் வசம் வைத் திருப்பது சாத்தியமாகியது.
வல்லரசு நாடுகளுள் பிரிட்டனே முதன்முதலாக (1924இல்) சோவியத் யூனி பனை ராஜதந்திர ரீதியில் அங்கீகரித்தது. அமெரிக்கா அதிக காலம் தாழ்த்திய பின் 1933இல் அதனை அங்கீகரித்தது. லெனி
21.
னின் மறைவுக்குப் பின் ஆளும் கட்சியில் லியொன் ட்ரொஸ்கிக்கும் கட்சிப் பொதுச் செயலாளராக இருந்த ஜோஸப் ஸ்டாலி னுக்கும் (Stalin) இடையில் அதிகாரப் போராட்டம் ஏற்பட்டது. இதில் ஸ்டாலினே வெற்றிபெற்றார்.1927இல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ட்ரொஸ்கி 1929இல் சோவியத் யூனியனை விட்டு வெளியேற் றப்பட்டார். மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்த அவர் 1940இல் சோவியத் ஏஜண்ட் ஒருவனால் கொலையுண்டார்.
ஸ்டாலின் இரும்புப் பிடியோடு ஆட் சி செய்தார். அவரோடு கருத்து முரண் பட்டவர்கள் ஒழித்துக் கட்டப்பட்டனர். அவரது ஆட்சிக் காலத்தில் 10 இலட்சம் பேர்சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மேலும் 20 இலட்சம் பேர் குற்றவாளிகளுக்கான முகாம்களில் இறந்ததாகவும் கணக்கிடப் பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர் களுள் கட்சியின் மேல்மட்டப்பிரமுகர்கள், பாதுகாப்புப் படைத் தளபதிகள், உயர் அதி காரிகள் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.
ஸ்டாலினின் காலத்தில் மொத்தம் 15 குடியரசுகளைக் கொண்டதாக சோவியத் யூனியன் மாறியது. 1924இல் ரஷ்யாவின் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து துர்க் மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு புதுக் குடியரசுகள் உருவாக்கப்பட் டன. 1929இல் உஸ்பெகிஸ்தானின் ஒரு பகுதியிலிருந்து தாஜிகிஸ்தான் உருவாக் கப்பட்டது. 1936இல் ரஷ்யாவிலிருந்து களபாகிஸ்தான், கிர்கீஸியா ஆகிய

Page 13
குடியரசுகள் உருவாகின. அதே ஆண்டில் ட்ரான்ஸ் கவுகாஸியன் குடியரசின் கூறுகளான ஜோர்ஜியா, ஆர்மேனியா, ஆஸர்பைஜான் என்பன தனித்தனிக் குடியரசுகளாக மாற்றப்பட்டன. ரோமானிய ாவிலிருந்து பெறப்பட்ட ஒரு பகுதியைச் சேர்த்து மோல்டேவியா உருவாக்கப் பட்டது.1940இல் லட்வியா, லிதுவேனியா, எஸ்டோனியா ஆகிய குடியரசுகளுக்குள் புகுந்த சோவியத் இராணுவம் அந்நாடு களில் சோவியத் ஆதரவுள்ள பொம்மை ஆட்சிகளை ஏற்படுத்தியது. இறுதியில் 1940 ஓகஸ்டில் இம்மூன்று குடியரசுகளும் சோவியத் யூனியனின் பகுதிகளாக மாற்
OULILL60T.
இதனால் சோவியத் யூனியன் நிலப் பாப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய நாடாக விளங்கியது. அதன் பரப்பளவு 22,402,000 சதுர km ஆகும்.இதுபூமியின் மொத்த நிலப்பரப்பில் ஆறில் ஒன்றாகும். மேற்கிலிருந்து கிழக்காக அதன் நீளம் 10,000 km ஆகவும் வடக்கு கிழக்காக ஆகக்கூடிய நீளம் 5000 km ஆகவும் இருந்தன. சோவியத் யூனியனுக்குள் 11 நேர வலயங்கள் (Time Zones) அமைந் திருந்தன. அதாவது அதன் மேற்கெல் லைக்கும் கிழக்கெல்லைக்கும் இடையில் நேர வித்தியாசம் 11 மணித்தியாலங்களா கும். சோவியத் யூனியனின் நிலப்பரப்பில் 75%ரஷ்யக் குடியரசிலும் 12%களuாக்கிஸ் தானிலும் காணப்பட்டது.
1941இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாகிய போது இத்தாலி, ரோமே னியா, ஹங்கேரி,பின்லாந்து போன்ற அச்சு (axis) நாடுகள் சோவியத் யூனியன் மீது போர்ப் பிரகடனம் செய்தன. இறுதியில் ஜெர்மெனியும் சோவியத் யூனியனைத் தாக்கியது.இப்போரில் சுமார் 27 மில்லியன் சோவியத் போர் வீரர்களும் பொதுமக்க ளும் உயிரிழந்தனர். பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டது. எனினும் இவ்வளவு இழப்புக்கு மத்தியிலும் சோவியத் படைகள்
22
கிழக்கு ஐரோப்பா வில் போலந்து, செக்கோஸ்லொ வேகியா, ஹங்கே ரி, ரோமேனியா, பல்கேரியா,புகோ ே ஸ்லாவியா, அல் 2 பேனியா, கிழக்கு ே INGER ஜெர்மனி ஆகிய நிகிட்டாகுருஷேவ் பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டது. இறுதியில் இந்நாடுகளில் சோவியத் சார்பு டைய கம்யூனிஸ்ட் அரசுகள் உருவாக்கப் பட்டன. அவை சோவியத் யூனியனின் விருப்பப்படி செயற்படும் அடிவருடி நாடு களாக மாறின. யுகோஸ்லாவியா மட்டுமே இதற்கு விதிவிலக்காக அமைந்தது.
ஸ்டாலின் 1953இல் இறந்த பின்னர் 7 பேரைக்கொண்ட ஆட்சிக் குழுவொன்று நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்றது. குழு அங்கத்தினரிடையே ஏற்பட்ட அதிகா ரப்போட்டியின் விளைவாக முரண்பாடுகள் அதிகரிக்கலாயின. இறுதியில் Nikita Khrushchew(குருஷ்சேவ்) என்பவர் ஏனை பவர்களைப் படிப்படியாக ஒதுக்கிவிட்டு சோவியத் யூனியனின் சர்வ அதிகார முள்ள தலைவரானார்.அவருடைய காலத் தில் சர்வதேச அரங்கில் கணிப்புக்குரிய பெரு வல்லரசாக சோவியத் யூனியன் மாறியது. உலகில் அமெரிக்காவின் ஆதிக் கத்துக்கு எதிரான ஒரு சக்தியாக அது திகழ்ந்தது. உலகம் இரண்டு முகாம்களா கப் பிரிந்து போனதும் இந்தக் காலத்தி லாகும். அணுகுண்டு, ஐதரசன் குண்டு போன்ற நவீன ஆயுதங்களைத் தயாரிப்ப திலும் விண்வெளி ஆய்விலும் சோவியத் யூனியன் முன்னணியில் திகழ்ந்தது.
குருஷ்விேன் ஆட்சி 1964 ஒக்டோ பரில் முடிவடைந்தது. பிரதமர், கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளி விருந்து அவர் நீக்கப்பட்டார். லியோனிட் பிரெஸ்னேவ் (Brezhnew) என்பவர் கட்சி பின் புதிய பொதுச் செயலாளராகவும்
 

பின் யூரி அண்ட்ரோபோவ் (Andropow) நாட்டின் தலைவரானார். பல சீர்திருத்தங் களை ஏற்படுத்த முன்னந்த அவர் நோயுற்று 1984 பெப்ரவரியில் காலமானார். gog650,768TILGlæg Konstantin Cherenen ko என்பவர் ஆட்சிபீடம் ஏறினர். அவரது ஆட்சி 13 மாதங்களே நீடித்தன. அவரும் இறந்துபோகவே1985 மார்ச்11ம் திகதி 54 TWAALF AL வயதுடைய மிக்காயில் கொர்பசேவ் பிரெஸ்னேவ் கொண்பிஜின் (Gorbache w) Geffrssluff g606u say Ten
g;
*
- 当 蔷
அலெக்ஸிகொஸிஜின் என்பவர் பிரதமரா தெரிவுசெய்யப்பட்டார். கவும் தெரிவு செய்யப்பட்டனர். எனினும் கொர்பசேவ் அவர்களின் ஆட்சியின்
படிப்படியாக பிரெஸ்னேவ் தனது அதிகா போதே சோவியத் யூனியன் சிதறுண்டு ரத்தைப் பலப்படுத்திக் கொண்டார். மறைந்துபோகும்நிலை ஏற்பட்டது சோவி 1980இல் கொளபிஜின் இறந்தார். யத் யூனியனின் சிதைவுக்கு வழிகோலிய பிரெஸ்னேவ் 18 வருடங்கள் ஆட்சி நிகழ்வுகள் பற்றி அடுத்த இதழில் ஆராய் செய்தார். அவர் 1982 நவம்பரில் இறந்த வோம். ம
îTfL 6ðfai) (C8HTTÍLIGJIGI
முன்னைநாள் சோவியத் ஜனாதிபதிகொர்பசேவ், உச்சிமகாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்தார். அவர் தங்குவதற்காக அரசாங்க மாளிகையொன்றின் மேல் மாடியில் அறையொன்று ஒதுக்கப்பட்டிருந்தது. பிரெஞ்சு ஜனாதிபதி கீழ் மாடியிலுள்ள அறையில் தங்கியிருந்தார்.
தனது தொலைபேசி உரையாடல்களையும் நடவடிக்கைகளையும் இரகசியமாகப்
பதிவு செய்வதற்கு அறையினுள் கருவிகள் பொருத்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் கொர்பசேவுக்கு ஏற்பட்டது. இது பற்றி சோவியத் ரகசியப் பொலீஸாரும் அவருக்கு அறிவுறுத்திஇருந்தனர். எனவே அறை முழுவதையும் துருவித்துருவித்தேடிப்பார்த்தார். இறுதியில் தரை விரிப்புக்கு அடியில் ஏதோ பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.
உபகரணங்கள் எதுவும் கைவசம் இல்லாததால் அவர் மிகவும் கஷ்டப்பட்டுக் கைகளாலேயே திருகித்திருகி அந்தப்பொருளைக் கழற்ற முயற்சித்தார்.நடுஇரவுவரை முயற்சித்த பின்னரே அப்பொருளைக் கழற்றி அகற்ற முடிந்தது. அதன் பின்னர் தான் கொர்பசேவ் நிம்மதியாகத் தூங்கினார்.
மறுநாள் காலையில் பிரெஞ்சு ஜனாதிபதியைச் சந்தித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார் கொர்பசேவ் அதைக் கேட்ட பிரெஞ்சு ஜனாதிபதிமித்திரோங் "நான் உங்கள் அறைக்குக் கீழுள்ள அறையில்தான் இருந்தேன்.இந்தபிரிட்டிஷ்காரர்கள் பொல்லாதவர்கள்.என்னைக்கொலைசெய்யவே முயற்சித்தார்கள்.திடீரெனநள்ளிரவில் சீலிங்கில் பொருத்தப்பட்டிருந்த பெரிய விளக்குக் கொத்து கழன்று கீழே விழுந்தது. நல்லவேளை நான் அப்பால் நகர்ந்து தப்பிக் கொண்டேன்" என்று கூறிப் பெருமூச்சு filü'LT. இது மேற்குலகப் பத்திரிகையாளர்களின் கற்பனையாகத் தான் இருக்கும்)
23

Page 14
Einstein
ருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஞ்ஞானிகளுள் ஜெர்மனியில் பிறந்து பின்னர் அமெரிக்கப் பிரஜையாக மாறிய அல்பேர்ட்ஜன்ஸ்டைனைப்போன்று அதிக புகழ் பெற்றவர் வேறு எவருமிலர்
ஐன்ஸ்டைன், ஜெர்மனியிலுள்ள உல்ம் (UIm) என்ற இடத்தில் 1879 மார்ச் 14ம் திகதி பிறந்தார். மூன்று வயதாகும் வரை பேச முடியாதவராக இருந்த இவர் தனது இளமைக்காலத்தை மூனிச்நகரில் கழித்தார்.இளம்வயதிலேயே கணிதத்தில் தீவிர ஆர்வம் காட்டியஐன்ஸ்டைன் தனது 12வது வயதிலே யூக்லிட்டின் கேத்திர கணிதத்தைச் சுயமாகக் கற்றுக் கொண் LIī.
மூனிச்சில் இருந்த பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உப்புச் சப்பற்ற கல்வி முறையை அவர் உள்ளுற வெறுத் தார். அவர்களது குடும்ப வியாபாரம் வீழ்ச்சியுறவே அவர் தமது 15வது வயதில் குடும்பத்தினருடன் இத்தாலியிலுள்ள மிலான் நகருக்குச் செல்லவேண்டி ஏற்பட் டது. பின்னர் ஸ"விட்ஸர்லாந்திலுள்ள பாடசாலையொன்றில் சேர்ந்து தனது இடைநிலைக் கல்வியைப் பூர்த்தி செய் தார். அடுத்து, ஸூரிச்சில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி யைத் தொடர்ந்தார்.
அங்கிருந்த கற்பித்தல் முறைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே
20li blji pТојот10651 புகழ்மிக்க விஞ்ஞானி
அல்பேர்ட்
24
ஐன்ஸ்டைன்
(Albert Einstein)
அடிக்கடி வகுப்பைக் கட்' பண்ணிவிட்டு அந்த நேரத்தில் சுயமாகப் பெளதிகவிய லைக் கற்றுக்கொண்டார். சில வேளை களில் தனக்கு விருப்பமான வயலினை வாசித்து மகிழ்ந்தார். வகுப்புத் தோழன் ஒருவனின் குறிப்புக்களைப் படித்து 1900 இல் பட்டப் பரீட்சையில் சித்தியடைந்தார். அவரது பேராசிரியர்கள் ஐன்ஸ்டைனைப் பற்றி எவ்வித உயர்வான அபிப்பிராயமும் கொண்டிருக்கவில்லை. எனவே அவரைப் பல்கலைக்கழகப் பதவிகளுக்குச்சிபாரிசு செய்யவும் இல்லை.
தற்காலிக ஆசிரியராக இரண்டு வருடங்கள் கடமையாற்றிய பின்னர் 1902ம் ஆண்டு ஸாவிஸ் பேடண்ட்' உரிமைப் பதிவுப் பணியகத்தின் பரீட்சகராக ஐன்ஸ் டைன் நியமகாம்பெற்றார்.1903இல் தனது வகுப்புத் தோழியான மிலேவா மாரியே என்ற பெண்ணை அவர் திருமணம் செய் தார். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந் தைகள் பிறந்தன. எனினும் பின்னர் அவர் கள் விவகாரத்துச் செய்து கொண்டனர்.
ஸ9ரிச் பல்கலைக்கழகத்தில் மூலக் கூறுகளின் பரிமானங்கள் பற்றி ஐன்ஸ் டைன் செய்த ஆய்வுக்காக 1905இல் அவ ருக்குக்கலாநிதிப்பட்டம்கிடைத்தது. 20ம் நூற்றாண்டில் பெளதிகவியலின் விருத்திக் குக் காரணமாக அமைந்த மூன்று முக்கிய விடயங்கள் பற்றியும் அதே காலத்தில் அவர் கொள்கை விளக்கங்களை
 

வெளியிட்டார். இவற்றுள் முதலாவது பிரவுணியன் அசைவு எனப்படும் பாய் பொருளொன்றில் நிகழும் துணிக்கை களின் அசைவு பற்றியதாகும். இதுபற்றி ஐன்ஸ்டைன் முன்வைத்த கொள்கை பிற் காலத்தில் பரிசோதனை மூலம் நிரூபித் துக் காட்டப்பட்டது.
ஒளியின் இயல்பு பற்றியும் புரட்சி கரமான கருதுகோள் ஒன்றினை ஐன்ஸ் டைன் முன்வைத்தார். சில நிபந்தனை களின் கீழ் ஒளியானது போட்டோன் (Photon) என்னும் துணிக்கைகளாகக் கடத்
தப்படுகின்றது என அவர் கூறினார். ஒளி
தொடர்ச்சியான அலைவடிவில் செல்வ தாகக் கூறும் பாரம்பரியக் கொள்கைக்கு இது முரணாக இருந்ததால் ஏனைய விஞ் ஞானிகள் ஐன்ஸ்டைனின் கொள்கையை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். சுமார் பத்து வருடங்களின் பின்னர் அமெரிக்கரான ரொபர்ட் அண்ட்றுாஸ் மில்லிகன் என்பவர் செய்த பரிசோதனைகள் ஐன்ஸ்டைனின் இக்கொள்கை சரியானது என நிரூபித்துக் காட்டின.
ஐன்ஸ்டைனுக்கு இறவாப் புகழைத் தேடிக் கொடுத்தது அவர் 1905இல் வெளி பிட்ட சார்பு பற்றிய சிறப்புக் கொள்கை" (Special theory of Relativity) gjuh. ஐஸக் நியூட்டனின் இயக்க விதிகளை அடிப்படையாகக் கொண்டிருந்த பெளதிக வியலை, ஐன்ஸ்டைனின் சார்புக் கொள் கையானது புரட்சிகரமான திசையில் வழிநடத்தியது. நேரம், வெளி (space) என்பன பற்றிய அளவீடுகள் தொடர்பாக சார்புக் கொள்கை கூறும் உண்மைகளைப் பெரும்பாலோரினால் சிறிதும் கிரகித்துக் கொள்ளமுடியவில்லை. அந்த அளவுக்குச் சிக்கலானதாகவும் பரிசோதனைகளுக்கு உட்படுத்த முடியாதனவாகவும் இவ்வுண் மைகள் இருந்தன. எனினும் இவை கணித ரீதியாகநிரூபிக்கப்பட்டனவாகும்.
1909 முதல் ஐன்ஸ்டைன் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பெளதிகப் பேரா சிரியராகக் கடமையாற்றினார். இக்காலத் தில் ஜெர்மன் மொழிபேசும்மக்களிடையே அவரது புகழ்நன்கு பரவத் தொடங்கியது. 1916இல் அவர் "சார்பு பற்றிய பொதுக் கொள்கை"யை வெளியிட்டார்.ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களின் அசைவில் ஏற்படுகின்ற இதுவரை விளக்கப்பட முடி பாதிருந்த மாறல்களைத் தனது சார்பு பற்றிய பொதுக் கொள்கை மூலம் ஐன்ஸ் டைன் விளக்கினார். அத்தோடு சூரியன் போன்ற பிரமாண்டமான பொருட்களுக்கு அண்மையில் செல்லும் போது நட்சத் திரங்களிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் வளைந்து செல்லலாம் என்றும் அவர் விளக்கினார்.
1919இல் நிகழ்ந்த சூரிய கிரகணத் தின் போது ஒளியின் பாதை வளைவது பற்றிய ஐன்ஸ்டைனின் கூற்று உண்மை யானது என்பது ஊர்ஜிதமாகியது. இத னால் அவரது புகழ் உலகெங்கும் பரவியது. உலகப் பத்திரிகைகள் யாவும் அவரது திறமையை மெச்சிப் பாராட்டலாயின. ஐன்ஸ்டைன் தனது வாழ்க்கையின் மீதிக் காலத்தில் சார்பு பற்றிய பொதுக் கொள் கையை மேலும் விரிவாக்குவதிலேயே
கவனம் செலுத்தினார்.
25
1919இன் பின் ஐன்ஸ்டைன் சர்வ தேசப் புகழ் பெற்ற மனிதரானார். பரிசு களும் கெளரவங்களும் அவரைத் தேடி வரலாயின. 1921இல் பெளதிகத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் எந்தநாட்டுக்கு விஜயம் செய்தாலும் அதுவொரு தேசிய விழாவாகக் கொண் டாடப்பட்டது. பத்திரிகையாளர்களும் படப் பிடிப்பாளர்களும் அவரை எப்போதும் பின்தொடர்ந்தனர். தனக்குக் கிடைத்த இந்தப் புகழை அவர் தனது சமூக அரசி யல் கருத்துக்களைப் பரப்புவதற்கு ஏற்ற சாதனமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

Page 15
ஐன்ஸ்டைன் யூத இனத்தைச் சேர்ந் தவர். எனவே அவர்ஸியோனிஸ் ஆதரவா ளராகத் திகழ்ந்தார். அத்தோடு அமைதி யானமுறையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் நம்பிக்கை வைத் திருந்தார். ஜெர்மனியில் ஹிட்லர் அதிகா ரத்துக்கு வந்ததும் அவர் நாட்டை விட்டு வெளியேறிஅமெரிக்காவில் குடிபுகுந்தார். அங்குநியூஜெர்ஸியிலிருந்த பிரின்ஸ்டன் உயர் கற்கை நிறுவனத்தில் பதவியொன் றை ஏற்றுக்கொண்டார்.
1939இல் வேறு சில பெளதிகவிய லாளர்களுடன் கூட்டாகச் சேர்ந்து அமெ ரிக்க ஜனாதிபதியான பிராங்கிளின் ரூஸ் வெல்ட்டுக்கு ஒரு கடிதத்தை ஐன்ஸ் டைன் அனுப்பிவைத்தார். அணுகுண்டு ஒன்றைத் தயாரிப்பதற்கு வழியுண்டு எனவும் நாஸி ஜெர்மனியர்கள் அதைத் தயாரித்துவிடக்கூடும் எனவும் குறிப்பிட்ட அக்கடிதத்தில் ஐன்ஸ்டைன் மட்டுமே கையொப்பமிட்டிருந்தார். இக்கடிதமே
அணுகுண்டுத் தயாரிப்பில் அமெரிக் காவை ஈடுபடச் செய்தது.எனினும் அதன் தயாரிப்பில் ஐன்ஸ்டைன் எவ்விதப்பங்கும் கொள்ளவில்லை. ஹிரோஷிமாவில் அணு குண்டு போடப்பட்ட செய்தியை வானொ லியில் கேட்டதும் அவர் மனமுடைந்து (ELITECTITŤ.
* இரண்டாம் உலகப்போரின் பின்னர் சர்வதேச ஆயுதக் குறைப்பு, உலக அர சொன்றை ஏற்படுத்தல் என்பன தொடர் பாக ஐன்ஸ்டைன்தொழிற்பட்டார்.ஸியோ னிஸ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த போதிலும் இஸ்ரவேல் நாட்டின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக்கொள்ளு மாறு அந்நாட்டுத்தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஐன்ஸ்டைன் மறுத்து Gllu"LITri.
ஐன்ஸ்டைன் 1955 ஏப்ரல் 18ம் திகதி அமெரிக்காவிலுள்ள Princeton நகரில் JITEl IITETTTTIT,
IDS is சில காலத்துக்கு முன்னர் இங்கிலாந்திலுள்ள பாடசாலை ஒன்றில் 7ம் வகுப் புக்கு மாணவனொருவனைச் சேர்ப்பதற்காக விண்ணப்பம் ஒன்று வந்தது. அவ் விண்ணப்பத்தோடு குறித்த மாணவன் ஆறாம் வகுப்பில் பெற்றுக்கொண்ட முன்
னேற்ற அறிக்கையின் பிரதியொன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
அவற்றைப் பரிசீலித்த போது அந்த மாணவன் கணிதத்திலும் மொழியிலும் திறமையற்றவன் என்பதும் ஏனைய பாடங்களில் கூட அவன் திருப்தியான மட்டத் தில் இல்லை என்பதும் நன்கு புலனாகியது. எனவே அந்த விண்ணப்பத்தை நிரா கரித்த பாடசாலை நிர்வாகிகள் அந்த மாணவனுக்குத் தமது பாடசாலையில் இடமளிக்க முடியாதென அறிவித்தனர்.
பின்னர் அந்த விண்ணப்பத்தை அனுப்பியவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில்,
"ஐயா, நான் அனுப்பிய விண்ணப்பம் கற்பனையானது. ஆனால் அதில் இணைக்கப்பட்டிருந்த முன்னேற்ற அறிக்கையானது அரசியல் மேதை என நாம் போற்றிப் புகழ்கின்ற நம்முன்னாள் பிரதமர் எபர்வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் ம்ே வகுப்பில் பெற்றுக்கொண்ட உண்மையான புள்ளிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும். எமது பாடசாலைகள் பிள்ளையொன்றின் திறமைகளை எவ்வாறு மதிப்பீடு செய்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காகவே அவ்வாறு செய்தேன்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
26

காலம் கணிக்கும் முறைகள் CHRONOOG,
21ம்நூற்றாண்டு தொடங்குவது 2000ம் ஆண்டிவா?அல்லது 2001இலிருந்தா? கிறிஸ்து வருடக் கணிப்புமுறை எப்போது ஆரம்பமாகியது? கிறிஸ்துவருடமுறையில் பூச்சிய (Zero) வருடம் ஒன்று இருந்ததா? இன்று பலரின் மூளைகளைக் குழப்பிச் சர்ச்சைகளைக் கிளறிவிட்டுள்ள இக் கேள்விகளுக்கு விடையளிக்க முயல்கின்றது.இக்கட்டுரை.
திகாலம் தொடக்கம் வரலாற் றுச் சம்பிங்ங்களைக் குறித்து வைப்பதற் காகப் பலவிதமான காலக் கணிப்புமுறை களை மனிதன் பயன்படுத்தி வந்துள் ௗான். ஒவ்வொரு நாட்டிலும் அல்லது மனித சமூகத்திலும் இடம்பெற்ற ஏதேனும் முக்கிய நிகழ்வொன்றை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிப்பதே பொது நடைமுறையாக இருந்து வந்துள்ளது.
பெரும்பாலான நாடுகளில், ஆட்சி புரிந்த புகழ்பெற்ற அரசனொருவனின் ஆட்சிக் காலத்தைத் தொடக்கமாகக் கொண்டு வருடங்களைக் குறிக்கும் முறையே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. சுமே ரியர்கள், அஸிரியர்கள், பபிலோனியர்கள் போன்றோரின் தாயகமான புராதன மெஸோபொட்டேமியாவில் முதலாம் எபார்கன் என்ற பண்டைய மன்னனின் ஆட்சிக் காலத்தை (கிமு 2335-2279) அடிப்படையாகக் கொண்டே வருடங்கள் கணிக்கப்பட்டன. இதே போன்று பண் டைய சீனாவில் மஞ்சள் சக்கரவர்த்தி என்பவன் ஆட்சி பீடம் ஏறிய வருடத்தைத் தொடக்கமாகக் கொண்டு காலக் கணிப் பீடு செய்யப்பட்டது.
புராதன எகிப்திலே முதல் அரச வம் சத்தைச் சேர்ந்த முதல் மன்னனாகிய Menes என்பவனின் ஆட்சிக் காலத்தி விருந்து (கிமு 3100-3066), வருடங்கள் கணக்கிடப்பட்டன. கிரேக்கர்கள் முதலா வது பண்டைய ஒலிம்பிக் விலீளயாட்டுக்
2
கள் இடம் பெற்ற தினத்தை (கி.மு 776 ஜூலை 1) ஆரம்பமாக வைத்துத் தமது வருடங்களைக் கணக்கிட்டு வந்தனர்.
யூதர்கள், உலகம் சிருஷ்டிக்கப்பட்ட நாளைத் தொடக்க நாளாகக் கொண்டு தமது கவண்டரை அமைத்துக் கொண்ட னர். கிறிஸ்து பிறப்பதற்கு 3780 வருடங் களுக்கு முன்னர் உலகம் படைக்கப்பட்டது என்பதே அவர்களது கணிப்பீடாகும். எனவே கி.மு 3750 இலிருந்து யூத வரு டம் ஆரம்பமாகின்றது. யூதர்கள் இன்றும் பயன்படுத்துகின்ற இந்தக் கணிப்பீட்டு முறை கி.பி. 10ம் நூற்றாண்டளவிலேயே வழக்கத்திற்கு வந்தது.
ரோமர்கள், ரோம்நகர்நிர்மானிக்கப் பட்டநாளை (கி.மு 753 ஏப்ரில் 22) ஆரம்ப மாகக் கொண்டு தமது வருடங்களைக் கனக்கிட்டனர். இவ்வருடங்கள் AUC (ab urbe condita - நகர் நிறுவப்பட்ட நாள் முதல்) என்ற எழுத்துக்களால் குறிக் கப்பட்டன.
முஸ்லிம்கள் இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனா வுக்கு(ஹிஜ்ரா) சென்ற நாளிலிருந்து(கி.பி 622 ஜூலை 16) தமது வருடக் கணிப்பீட் டைச் செய்கின்றனர்.
இன்று உலகம் முழுவதும் பொது வாகப் பயன்படுத்தப்படும் மேற்கத்திய காலக் கணிப்பீட்டு முறை யேசு கிறிஸ்து (நபி ஈஸா) அவர்களின் பிறப்பை அடிப் படையாகக் கொண்டதாகும், இம்முறை

Page 16
யின்படி யேசு நாதர் பிறந்த வருடம் AD1 (Anno Domini = #ffğrflsčiT 5 lub Luin) எனக் குறிக்கப்படலாயிற்று.
தமிழிலும் எனைய மொழிகள் பல Ghiyyih AD (Anno Domini) GTGTUGON கிறிஸ்துவுக்குப் பின் (கி.பி) எனக் குறிப் பிடுவது தவறான முறையாகும், கிறிஸ்து பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே கி.பி.1 வந்திருக்கும் என்ற தவறான எண் னத்தை இது ஏற்படுத்துகிறது. எனவே கி.பி. என்பதற்குப்பதிலாக இதனை கி.வ. (கிறிஸ்து வருடம்) எனக் குறிப்பிடுவதே மிகப்பொருத்தமானது.
மேற்குறிப்பிட்ட தவறின் காரணமா கவே கி.பி.1ம் வருடத்திற்கு முந்திய வரு டம் பூச்சிய (zero) வருடமாக இருந் திருக்க வேண்டும் எனப் பலர் கருது வதற்கு வழி யேற்பட்டது. உண்மையில் யேக நாதரின் பிறப்புக்கு முந்திய வருடம் கி.மு.1என்றே குறிக்கப்படுகின்றது. கி.மு. 1க்கும் கி.பி. 1க்கும் இடையில் பூச்சிய (zero) வருடம் என ஒன்றிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
யேசு நாதர் பிறந்த காலத்திலேயே இவ்வாறு வருடங்களைக் குறிக்கும்முறை நடைமுறைக்கு வரவில்லை என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். கிறிஸ்துவிள் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வருடங்களைக் கணிக்க வேண்டும் என்ற ஆலோசனையை முதன் முதலில் முன்வைத்தவர் கி.பி. 6ம் நூற் றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த டியோனி GYŰL||siu (Dionysius Exiguus) GTsiTyo மதகுரு ஆவார். கிறிஸ்து பிறந்து சுமார் 525 வருடங்கள் கடந்த பின்னரே இவர் இந்த ஆலோசனையை முன்வைத்தார்.
அதுவரை காலமும் ரோமப் பேரரசில், ரோம்நகரின் தோற்றத்தை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்பட்ட AUC வருட முறையே அமுலில் இருந்தது. பேசு
நாதரின் பிறப்பு AUC 753இல் நிகழ்ந்த தாகக் கணக்கிட்ட டியோனிஸியுஸ், அந்த ஆண்டை AD1 எளப் பெயரிட்டார். இத னைத் தொடக்க ஆண்டாக வைத்தே வரு டங்கள் கணிக்கப்படவேண்டும் என அவர் கருதினார். (எனினும் பைபிளில் வரும் வரலாற்றுக் குறிப்புக்களின்படி, AUC 750ம் ஆண்டுக்குச் சிறிது முன்பாகவே யேசுநாதர்பிறந்திருக்கவேண்டும் என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. எனவே இப்போது நாம் பயன்படுத்தும் கிறிஸ்து வருடங்கள் உண்மையில் பேசு நாதரின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டன வல்ல)
டியோனிஸியுஸ், கி.பி. 525இல் இக் காலக் கணிப்பீட்டு முறையை அறிமுகப் படுத்திய போதிலும் யாரும் அதுபற்றி அவ்வளவு அக்கறை காட்டவில்லை. அவர் கூட வேறு முறையொன்றையே உப போகித்திருந்தார். கி.பி. 8ம்நூற்றாண்டில் 6JITupig5 Bede the Wenerable sTetãTLI52 Iri எழுதிய வரலாற்றுக் குறிப்புக்களிலேயே இந்தக் முறை முதன் முதலாகப் பயன் படுத்தப்பட்டது. எனினும் 11ம் நூற் றாண்டு வரை ஐரோப்பாவில் கிறிஸ்து வருட முறை பொது வழக்கத்தில் வர வில்லை. ஸ்பானியாவில் 14ம் நூற் நாண்டிலும் கிரேக்கத்தில் 15ம் நூற்றாண் டிலுமே இது நடைமுறைக்கு வந்தது.
டியோனிஸியுஸின்கணிப்பீட்டின்படி முதலாவது நூற்றாண்டு கி.பி.1ம் ஆண் டிலேயே ஆரம்பமாகியது. அதேபோன்று2ம் நூற்றாண்டு கி.பி.101இலும் 3ம் நூற் றாண்டு கி.பி. 201இலும் தொடங்கின. இதன்படி எதிர்வரும் 21ம் நூற்றாண்டு 2001ம் ஆண்டிலேயே உதயமாகும் என் பது நள்கு தெளிவாகின்றது. புதிய மில்லென்னியத்தைப் பொறுத்தமட்டில் அது 2000வது ஆண்டிலேயே உதய மாகும் எனப் பொதுவாக ஏற்றுக் கொள் விளப்பட்டுள்ளது.

உலக இலக் கிய வரலாற்றிலே வில் லியம் ஷேக்ஸ்பியரைப் போன்று தம் எழுத் துக்களினால் மனித
Aே உள்ளங்களைப் பெரி
தும் கவர்ந்திழுத்தவர்கள் வேறு எவரும் இல்லை எனலாம். மனித உள்ளத்தின் வேட்கைகள், துயரங்கள், ஆசாபாசங்கள் அத்தனையையும் ஒர் உளவியலாளரைப் போன்று தனது நாடகங்கள் மூலமாகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியதன் மூலம் அவர் இறவாப்புகழ்பெற்றுவிட்டார். எனினும் ஷேக்ஸ்பியரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகமானோருக்குத் தெரியாது. அவரால் எழுதப்பட்ட கடிதங் களோ, நினைவுக் குறிப்புக்களோ, டயரி களோ இல்லை. ஆயிரக்கணக்கான எழுத் தாளர்கள் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை யும் கவிதைகளையும் நுணுகி ஆராய்ந்து அவைபற்றி எண்ணிறந்த நூல்களை எழுதியுள்ள போதிலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிப் பெரிதாக எவரும் எழுதியதில்லை.
வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564ம் ண்டு வடமேற்கு லண்டனில் உள்ள Stratford-on-Avon STsip gi-ågflåylp, துள்ளார். இந்த இடம் மத்திய இங்கிலாந் தினூடாகச் செல்லும் Avon நதியின் கரை யில் அமைந்துள்ளது. எனவே தான் (Salisio Suri Bard of Avon (Avongsit கவிஞன்) என அழைக்கப்பட்டார். அவரது தந்தை நகராட்சிமன்ற உறுப்பினராகவும் நகர பிதாவாகவும் இருந்துள்ளார். ஷேக்ஸ்பியரின் தாயாரான Mary Arden நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இளம் ஷேக்ஸ்பியர் Stratfordஇல் உள்ள இலக்கணப் பாடசாலையில் ஆங் கிலம், லத்தீன் வரலாறு முதலியவற்ற்ைக் கற்றுள்ளார்.1580 அளவில் பாடசாலையை விட்டு விலகிய அவர் அடுத்த சில ஆண்டுகளில் என்ன செய்தார் என்பது
29
மகா கவி
வில்லியம் ஷேக்ஸ்பியர்
பற்றிச் சரியாகத் தெரியவில்லை. பாடசா லை ஆசிரியராகவும், சட்டத்துறை இலிகி தராகவும் அவர் பணிபுரிந்ததாகச் சொல் லப்படுகின்றது.
ஷேக்ஸ்பியர் தனது 18வது வயதில் Anne Hathaway என்ற26 வயதுப் பெண் ணைத் திருமணம் செய்தார். 1583இல் Susanna 6Tsiris LD565th 1585gs Ham net, Judthஎன்ற ஆண் பெண் இரட்டைக் குழந்தைகளும் அவர்களுக்குப் பிறந்த னர். பிற்காலத்தில் ஷேக்ஸ்பியர் தன் குடும்பத்தைப் பிரிந்து, தனியே லண்ட னுக்குச் சென்றுநாடக நடிகரானார். அவர் தமது மனைவி, பிள்ளைகள் மீது அதிக அன்பு செலுத்தி வந்ததோடு இடையி டையே ஊர்சென்று குடும்பத்தினரைப் பார்த்தும் வந்திருக்கிறார்.
1592ம் ஆண்டாகும் போது இளை ஞர் ஷேக்ஸ்பியர் சிறந்த நடிகராகவும் கவி ஞராகவும் லண்டனில் பெயர் பெற்றுத் fildpurts ITi. "Wenus and Adonis” (1593) என்ற உணர்ச்சி ததும்பும் காதல் காவி யமே அச்சில் வெளிவந்த அவரது முதல் ஆக்கமாகும். அது அவருக்கு நல்ல புக ழைப் பெற்றுக் கொடுத்தது. அதனை படுத்து அவர் வெளியிட்ட "The Rape of LபCrece" என்ற ஆக்கமும் பெரு வெற்றி பீட்டியது.
Lord Chamberlain's Men GTSOT அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகர் குழு வில் 1594ம் ஆண்டு ஷேக்ஸ்பியர் சேர்ந்து கொண்டார். இக்குழுவினரே பிற்காலத் fili) the King's Men 5TGOT gysonypåhagÜLJI" டனர். சுமார் 1610ம் ஆண்டு வரை ஷேக்ஸ் பியர் இக்குழுவின் பங்காளியாகவும்,நடிக ராகவும், நாடகாசிரியராகவும் திகழ்ந்தார். அக்காலப் பிரிவில் தம் குழுவினரிடையே

Page 17
புகழ்மிக்கவராக அவர் இருந்துள்ளார். நாடகத்தில் தனக்கு வழங்கப்படும் எந்தப் பாத்திரத்தையும் ஏற்றுநடிக்க அவர் தயங் கியது இல்லை. தனது சொந்த நாடகக் கதைகளை எழுதியதோடு நில்லாமல் குழுவிலிருந்த ஏனையவர்களின் கதை களையும் திருத்தி எழுதிக் கொடுத் துள்ளார்.
ஷேக்ஸ்பியரின் காலத்தில் ஆங்கில மொழியானது குழப்பநிலைக்கு உள்ளாகி பிருந்தது. சொல்நடை சொற்றொடரியல், சொற்றேர்வு என்பன பற்றி எவ்வித நிய மங்களே விதிகளோ காணப்படவில்லை. இத்தாலியில் நிகழ்ந்துவந்த மறுமலர்ச் சியின் தாக்கம் பிரிட்டனிலும் உணரப் பட்டு வந்த அந்த வேளையில் புதிய சொற் கள், சொற்றொடர்கள், உவமைகள் எள் பவற்றைத் தான் நினைத்தவாறு உருவாக் கும் சுதந்திரம் ஷேக்ஸ்பியருக்குக் கிடைத் தது. அதனை அவர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
அவருக்கு 32 வயதாகும் போது அவரது வருமானம் உயர்நிலையை அடைந்துவிட்டது. புகழ்பெற்ற GlobeTheatre என்ற நாடக அரங்கின் பங்கான ராகவும் அவர் இருந்ததனால் அதன் வரு வாயில் ஒரு பகுதியும் அவருக்குக் கிடைத் தது. அக்காலத்தில் அவர் தனது குடும்பத் துக்காகப் பெரிய விடொன்றை Stratford இல் வாங்கினார். எனினும் அவர் தொடர்ந் தும் லண்டனிலேயே தங்கியிருந்தார்.
ஆங்கில வரலாறு, பாரம்பரியக் கதை
E75 cir, Plutarch, Ovid (ELIITGGTGOTiflist
ஆக்கங்கள் முதலியவற்றிருந்து இரவல் பெற்றே ஷேக்ஸ்பியர் தனது கதைகளை அமைத்தார் எனப்பலர் குற்றம் சுமத்துவது உண்டு உண்மை தான். அக்காலத்தைய பெரும்பாலான எழுத்தாளர்கள் அப்படித் தான் செய்து வந்தனர். ஆனாலும் நன்கு அறியப்பட்ட அந்தக் கதைகளுக்குப்புதிய பாத்திரங்களைச் சேர்த்துப் புது வடிவம்
3)
கொடுத்து மெருகேற்றி அமர காவியங் களாக மாற்றிய ஷேக்ஸ்பியரின் திறமை யை எவரும் புறக்கணிக்க முடியாது.
அவருடைய கற்பனைத் திறன், அழ கான மொழிநடை, கதைசொல்லும் திறன், மனித நடத்தைகள் பற்றிய உள்ளார்ந்த அறிவு என்பனவே ஷேக்ஸ்பியரை உலகம் போற்றும் கவிஞனாகவும் நாடகாசிரியனா கவும் மாற்றியது. ஒழுக்கம் போதிக்கும் போதகர் போன்றுகதைசொல்லாது, மனித இயல்பின்நன்மை தீமை இரண்டையும் தம் பாத்திரங்கள் மூலம் அவர் வெளிப்படுத் தினார். மனித உள்ளங்களின் ஆசை களையும் அங்கலாய்ப்புக்களையும் உள் எது உள்ளவாறே சித்தரித்தார். இதனால் தான்"ஷேக்ஸ்பியரின் ஆக்கங்கள் ஒழுக்க நோக்கம் அற்றவை" என ஸாமுவேல் ஜோன்ஸன் போன்றோர் பிற்காலத்தில் விமர்சனம் செய்தனர்.
ஷேக்ஸ்பியர் மொத்தம் 38 நாடகங் களையும் 154 Sonnets என்னும் பதி நான்கு வரிப் பாடல்களையும் எழுதினார். அவரது நாடகங்களுள் சுமார் 15க்கு மேற் பட்டவை சாகாவரம் பெற்றவையாக மாறி இன்றும் பல மொழிகளில் மேடையேற்றப் LIG flirror. Macbeth, Othello, Hamlet, Romeo and Juliet, Merchart of Wenice, As you like it, Mid-Summer Night's Dream, King Learபோன்றவை இவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகும்.
1811இல் ஷேக்ஸ்பியர் லண்டனை விட்டு நீங்கித் தனது குடும்பத்தோடு இணைந்துகொண்டார். அங்கு 1616 ஏப்ரல் 23ம் திகதி தனது 52வது வயதில் அவர்
FITELLOITEITTI.
அவரது சமகாலத்தவரான Ben Jonson அவரைப் பற்றிக் கூறும் போது "ஷேக்ஸ்பியர் ஒரு யுகத்துக்கு மட்டும் உரியவரல்லர். அவர் எல்லாக் காலங் களுக்கும் உரியவர்" என்று குறிப்பிட் டுள்ளார்.

GTIDJI
ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களைச் சுற்றி வருகின்ற உப கோள் களையே பொதுவாகச் சந்திரன் (M00m) என அழைக்கின்றோம். எனினும் எமது பூமியின் ஒரேயொரு உபகோளுக்கே நாம் இப்பெயரைக் குறிப்பாக வழங்குகின் றோம்.
கனவளவின்படி எமது சந்திரன் பூமி யை விட 50 மடங்கு சிறியது. (அதன் விட் டம் சுமார் 3480 km). எனினும் புவியானது சந்திரனை விட 81 மடங்கு திணிவு கூடி யது. சந்திரனின் அடர்த்திபுவியின் அடர்த் தியில் 3/5 பங்காகும். அதே வேளை சந்திரத் தரையின் மீதுள்ள ஈர்ப்பு விசை பானது புவியின் ஈர்ப்பு விசையில் 16 பங் காகவே இருக்கின்றது.(சந்திரனின் ஈர்ப்பு காரணமான ஆர்முடுகல் 1.82 TW's ஆகும்)
புவியிலிருந்து சந்திரனுக்குள்ள சரா சரித்தூரம் 384,403 km ஆகும், மணிக்கு 3700 km என்ற சராசரி வேகத்தில் சந்திரன் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது. இவ்வாறு ஒரு தடவை புவியைச் சுற்றுவதற்கு அதற்கு 27நாட்கள்
31
7 மணித்தியாலம் 43 நிமிடம் 15 செக்கன் கள் பிடிக்கும். ஒரு பெளர்ணமி நிலை யிலிருந்து அடுத்த பெளர்ணமி நிலையை அடைவதற்கு சந்திரனுக்கு 29 நாட்கள் 12 மனித்தியாலம் 44 நிமிடம் 28 செக்கன் கள் செல்லும்,
பூமியைப் போன்று சந்திரனும் தனது அச்சுப்பற்றிச் சுழன்று கொண்டிருக்கின் றது. இவ்வாறு ஒரு தடவை சுழல்வதற்கு எடுக்கும் காலம் அது புவியை ஒரு தடவை சுற்றிவர எடுக்கும் காலத்திற்குச் சமனாக இருக்கின்றது. இதன் விளைவாகச் சந்தி ரனின் ஒரு பக்கமே எப்போதும் புவியை நோக்கித் திரும்பி இருக்கும்,
சந்திரனின் மேற்பரப்பில் 59 சதவீத மே பூமிக்குத் தோற்றமளிக்கின்றது. (அதி லும் 18 சதவீதம் சந்திரமுகத்தில் ஏற்படும் Libration என்னும் அலைவு காரண மாகவே தென்படுகின்றது) மீதி 41 சதவீத மும் பூமிக்கு ஒரு போதும் தென்படு வதில்லை.
எமது கண்களுக்குச் சந்திரன் பிரகாசமாகத் தோன்றியபோதிலும் அதன் தரையில் விழும் சூரிய ஒளியில் 7%ஐ மாத்திரமே அது தெறிக்கச் செய்கின்றது. சந்திரத் தரையின் தெறிப்புத் திறன் 0.07 ஆகும்.இதுநிலக்கரித்தூளின் தெறிப்புத் திறனை ஒத்தது.
புவியிலிருந்து நோக்கும்போது சந்தி ரனின் தோற்றம் நாளுக்கு நாள் மாற்ற மடைகின்றது. இவ்வாறு சந்திரனில் ஏற் படும் வெவ்வேறு தோற்ற நிலைகளைச் சந்திரக் கலைகள் என்கின்றோம். பூமி யைப் போன்றே சந்திரனிலும் எப்போதும் ஒரு பாதியில் சூரிய ஒளி பட்டுக் கொண்டே இருக்கின்றது. எனினும் புவியி விருந்து பார்க்கும் போது ஒளிபடும் பாதி பின் எந்த அளவு தெரிகின்றது என்பதைப் பொறுத்தே வெவ்வேறு சந்திரக் கலைகள் தோன்றுகின்றன.

Page 18
அமாவாசை தினத்தில், புவிக்குத் தெரியும் சந்திரப் பகுதி முழு நிழலில் இருக்கும். எனவே சந்திரன் தெரியாது. ஒரு வாரத்தின் பின், ஒளிரும் அரைவட்டம் போல் அது தெரியும், இன்னும் ஒரு வாரத் தில் முழுச்சந்திரனாயத் தோற்றமளிக்கும். மூன்றாம் வாரத்தில் மீண்டும் அரைவட் டமாகத் தெரியும். இவ்வாறு தொடர்ந்து ஆவர்த்தனமாக மாறிக் கொண்டிருக் கின்ற சந்திரக் கலைகளின் ஒரு வட்டம் பூர்த்தியாக எடுக்கும் காலம் சந்திர மாதம் எனப்படும்.
அமாவாசையின் போது சந்திரன் பூமியை விடச் சூரியனுக்கு அண்மையாக இருக்கும். பெளர்ணமியின் போதுபூமியை விடச் சூரியனுக்கு அது சேய்மையாக இருக்கும்.
சந்திரனில் ஒருநாள் என்பது28 புவி நாட்களுக்குச் சமனானது. எனவே அங்கு இரவுபகல் என்பன ஒவ்வொன்றும் 14 புவி நாட்கள் அளவு நீளமானதாக இருக்கும். இதன் விளைவாகச் சந்திரத் தரையின் வெப்ப நிலையில் தீவிர வேறுபாடுகள் காணப்படும். சந்திர நாளின் நடுப்பகல் வேளையில் வெப்பநிலை 1279C வரை அதிகரிக்கலாம். அதே போன்று சந்திர இரவு விடிவதற்குச் சுற்று முன்னர் -173°C வரை வெப்பநிலை வீழ்ச்சியடை பக் கூடும்.
சந்திரனில் திரவநீரோ வளிமண்டல மோ இல்லை. எனவே அதன் மீது எவ்வித மான வானிலை மாற்றங்களும் ஏற்படுவ தில்லை. ஆதிகாலத்தில் சந்திரனை அவதானித்து ஆராய்ந்தவர்கள் சந்திர மேற்பரப்பில் இருளாகத் தோன்றும் பகுதி களைக் கடல்கள் எனவும் பிரகாசமான பகுதிகளைக் கண்டங்கள் எனவும் கருத லாயினர். இதனால் தான் சந்திரத் தரை பிலுள்ள பல பகுதிகளுக்கு அமைதிக் கடல், புயற் கடல், மழைக் கடல் போன்ற பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. தொலை
32
நோக்கியின் விருத்தியோடு சந்திரத்தரை பற்றிய அறிவு நன்கு வளரலாயிற்று. அண் மைக் காலத்தில் அங்கு அனுப்பப்பட்ட ஆளற்ற விண்கலங்கள் மூலமும் தரை பிறங்கிய விண்வெளி வீரர்கள் மூலமும் பெருமளவு அறிவும் விளக்கமும் பெறப் பட்டுள்ளன.
சந்திரத் தரையில் பெரிய குழிவுகள், மலைத்தொடர்கள், சமவெளிகள் போன்ற பல்வேறு தரைத்தோற்ற அமைப்புக்கள் காணப்படுகின்றன. எமது கண்ணுக்குப் புலப்படும் பகுதியில் மாத்திரம் 1 km ஐவிட விட்டம் கூடிய 30,000க்கும் மேற்பட்ட பெருங்குழிவுகள் (Craters) இருக்கிள் றன. மறுபுறத்தில் இதைவிடச் செறிவாகக் குழிவுகள் காணப்படுகின்றன. சந்திரத் தரையிலுள்ள மிகப் பெரிய குழிவு Baily எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 295 km அகலமும் 3960 m (13,000 அடி) ஆழமும் கொண்டது. பெரிய விண்கற்கள் விழுந்து மோதியதனால் இக்குழிவுகள் தோன்றி யிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
சந்திரக் கடல்களுள் இவை உண் மையான கடல்களல்ல) மிகப் பெரியது Mare Imbrium GTGTGJJulio Ln60ypěh GL, GUIT கும். இது சுமார் 1200 km அகலமானது. சந்திரனிலுள்ள மலைத் தொடர்களுக்கு அல்ப்ஸ், அப்பினைன் போன்ற பெயர்களே சூட்டப்பட்டுள்ளன. அங்குள்ள மிகவும் உயர்ந்த மலைகள் சந்திரனின் தென் துரு வத்துக்கு அண்மையிலுள்ள Leibnitz, Doerfel ஆகிய தொடர்களில் அமைந் துள்ளன. இவற்றில் சுமார் 6100 m வரை உயரமான மலைச் சிகரங்கள் உண்டு. இவை உயரத்தில் புவியிலுள்ள இமாலய மலைத் தொடரை ஒத்தவை.
சந்திரத் தரையில் மோதிய முதலா வது விண்கலம் 1959 செப்டம்பர் 14ம் திகதி சோவியத் யூனியனினால் அனுப்பப்பட்ட Luna-2 என்பதாகும். அந்நாட்டின் தேசிய சின்னமொன்றை இது சந்திரத் தரையில்

போட்டது. 1959 ஒக்டோபர் 7ம் திகதி அனுப்பப்பட்ட Luna-3 தானியங்கி விண் கலம் சந்திரனின் சேய்மைப் பக்கத்தை முதன் முதலாகப் படம் பிடித்துப் பூமிக்கு அனுப்பியது. அமெரிக்கா அனுப்பிய Ranger-7என்ற விண்கலம் 1964 ஜூலை 31ம் திகதி சந்திரத் தரையை நெருங்கிச் சென்று படம் பிடித்தது.
சோவியத்யூனியன் அனுப்பிவைத்த Luna-9 தானியங்கி விண்கலம் 1966 பெப்ரவரி 3ம் திகதி சந்திரத் தரையில் பாதுகாப்பாக இறங்கி வரலாறு படைத்தது. அதேயாண்டு ஏப்ரல் 3ம் திகதி Luna:10 விண்கலம் சந்திரனைச் சுற்றி வலம் வந்து அதன்முதலாவது செய்மதியாக மாறியது.
1994இல் அமெரிக்காவினால் அனுப் பப்பட்ட Clementine என்ற விண்கலத் தினால் 4 மாதங்களாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்த சில விஞ்ஞானி கள் சந்திரத் தரையின் தென் துருவப் பகுதியில், உறைந்த நீர் மண்ணுடன்
கலந்து காணப்படுவதாக அறிவித்தனர். 1998இல் NASA நிறுவனம் அனுப்பிய Lu. mar Prospector என்ற தானியங்கி விண் கலம் இதனை ஊர்ஜிதம் செய்துள்ளது.10 மில்லியன் மெட்ரிக் தொன் முதல் 1200 மில்லியன் தொன் வரையான அளவு நீர் இவ்வாறு சந்திரனின் துருவப்பகுதிகளில் உறைந்த நிலையில் மண்ணுடன் கலந்து காணப்படுவதாக இப்போது மதிப்பிடப் பட்டுள்ளது.
சோவியத் விண்கலங்களினால் எடுக்கப்பட்ட சந்திரத் தரையின் படங் களை அடிப்படையாக வைத்துத் தயாரிக் கப்பட்ட சந்திரனின் முழுமையான 560 ITULupi (Complete Map of the Moon) righly (SEITsiTupi (Lunar globe) 1967ம் ஆண்டு சோவியத் யூனியனில் வெளியிடப்பட்டன. அதன் பின்னர் சந்தி ரனின் தரைத்தோற்றங்களைக் காட்டும் Atlas ஒன்று அமெரிக்காவிலும் பிரசுரிக் diliull-gi).
நன்றி அறிவித்தல் அமெரிக்காவில் Waltham என்ற நகரில் வெளிவரும் News-Tribune என்ற பத்திரிகையில் பின்வரும் அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டிருந்தது
"கடந்த நகரசபைத் தேர்தலில் 5ம் வட்டாரத்தில் நான் போட்டியிட்டபோதுஎனக்கு
வாக்களிப்பதாக உறுதி கூறிய 600 வாக்காளர்களுக்கும், கூறியது போன்றே எனக்கு வாக்களித்துவிட்டதாகச் சொன்ன 400 வாக்காளர்களுக்கும் நான் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். அத்தோடு,எனக்குவாக்களித்திருந்த92 பேருக்கும் எனது விசேட நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்-ரேமண்ட்A ஹேய்ஸ்"
எனக்குத் தெரியும்!
காலஞ்சென்ற எழுத்தாளர் 'கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு தடவை தனது நண்பரொருவருடன் உலாவச் சென்றிருந்தார். அப்போது அவர்களின் பின்னால் நாபொன்று குரைத்தபடி ஓடிவந்தது.இதனைக் கண்ட 'கல்கி"பபந்து ஒடத்தொடங்கினார். அப்போது அவருடன் கூட வந்தவர் "ஏன் இப்படி ஒடுகிறீர்கள்? குரைக்கின்ற நாய் கடிக்காது என்ற பழமொழி தமிழறிஞரான தங்களுக்குத் தெரியாதா?" என்று GeFLLITÍ.
"அது எனக்குத் தெரியும், ஆனால் அந்தநாய்க்குத் தெரியாதே" என்று கூறியவாறு ஓட்டத்தைத் தொடர்ந்தார்'கல்கி' "33

Page 19
á
Tன் சென்ற KLM விமானம் ஸாவிட்ஸர்லாந்தின் ஸஒரிச் விமான நிலையத்தை அடைந்தபோது இரவு 9 மணியாகிவிட்டது. எனக்காக அங்கு காத்திருப்பதாகக் கூறியநண்பர் விமானம் தாமதமாகியதால் திரும்பிச் சென்றிருப் பாரோ என்ற ஐயம் என் மனதுக்குள் அருட்டத் தொடங்கியது. எனவே விரை வாகச் சென்று குடிவரவுப் பகுதியினரிடம் நுழைவு அனுமதியைப் பெறுவதற்காகக் கியூவரிசையில் நின்று கொண்டேன்.
அந்தக் கியூவை முன்னும் பின்னும் நோக்கிய போது என் மனதில் ஒரு வகை பான சஞ்சலம் ஏற்பட்டது. அங்கு என் னைத் தவிர ஏனைய அனைவரும் வெள் ளையர்களாகவே இருந்தனர்.எனது கருத் த உருவம் அந்த இடத்திற்குப் பொருத்த மற்றது என்பது போல் சிலர் என்னை ஒரு விதமாகப் பார்த்தனர்-அல்லது அப்படி
பொரு பிரமை எனக்கு ஏற்பட்டது. அப்
போது தொலைவில் நின்றுகொண்டிருந்த இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேராக என்னையே குறிவைத்து நடந்து வருவதைக் கண்டேன்.
ஆம். அவர்கள் நேராக என்னிடம் தான் வந்தார்கள். "எங்கிருந்து வருகி றிர்கள்? சொந்த நாடு எது?" என்று கேட் டார்கள். "நெதர்லாந்திலிருந்து வருகின் றேன். சொந்த நாடு பூரீலங்கா" என்றேன். "பாஸ்போர்ட், டிக்கட் என்பவற்றைக் காட்டுங்கள்" என்றனர். அவர்கள் மரியாதையாகவே பேசினர். எனினும் குர
ர்ப்ப ாலி 鲑
34
জড়িত:
வில் கண்டிப்பும் அதிகாரமும் இழையோ டின. கேட்ட ஆவணங்களையெல்லாம் கொடுத்தேன். அவற்றை எடுத்துக் கொண்டு "ஐயா! நாங்கள் வரும்வரை அங்கே போய்உட்கார்ந்துகொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அவர்கள் எங்கோபோய் மறைந்துவிட்டார்கள்.
என்னை அறியாமலேயே என்னில் பதட்டம் அதிகரித்தது. "ஒன்றும் பேசாமல் பாஸ்போர்ட்டையும் டிக்கட்டையும் அவர் களிடம் கொடுத்து விட்டேனே" என்று என்னையே நொந்து கொண்டேன். சில நிமிடங்கள் கழிந்தன. கியூவில் நின்றவர் கள் அனைவரும் அனுமதி பெற்று வெளி யே போய்விட்டனர். அங்கு வேலைபார்த்த குடிவரவு அதிகாரிகளும் தமது காரியால யத்தை மூடிவிட்டு நகர்ந்தனர். வெறிச் சோடிப்போன அந்தப் பகுதியில் நான் மட்டும் பொதிகளோடு உட்கார்ந்திருந் தேன். "இனி நண்பர் திரும்பிப் போய் விடுவார்.இந்தத் தெரியாத நாட்டில் இந்த இரவில் நான் எங்கு போவது? கையில் ஸ"விஸ் நாணயங்கள் கூட இல்லையே!" என்றெல்லாம் மனம் அங்கலாய்க்கத் தொடங்கியது.
இப்படிச் சிறிது நேரம் கழிந்த பின் தொலைவில் அந்தப் பாதுகாப்பு அதிகா ரிகள் கையைக் காட்டி என்னை அழைப்ப தைக் கண்டேன். அவ்விடம் சென்றபோது "மன்னிக்க வேண்டும். உங்களைத் தாம திக்கச் செய்து விட்டோம். உங்கள் நாட்டி லிருந்து நிறையப் பேர் போலி ஆவணங்
 
 
 
 
 
 
 
 

களோடு வருகின்றனர். அதனால் தான் இப்படிக் கண்டிப்பாகச் சோதிக்க வேண்டி யிருக்கிறது" என்று சமாதானம் கூறினா ர்கள். அவர்களே பாஸ்போர்ட்டில் அனுமதி முத்திரையைக் குத்திவிட்டு என்னை அழைத்துச் சென்று வேறாக வந்த எனது சூட்கேஸையும் எடுத்துத் தந்தனர். ஒரு வாறு விமான நிலையத்திற்கு வெளியே வந்த போது நண்பர் பொறுமையோடு காத்திருந்தார். விமான நிலையத்திலேயே நின்றிருந்த ரெயில் வண்டியில் ஏறி இருவரும் ஸ்திரிச் நகருக்குச் சென்று அங்கிருந்துபஸ் மூலம் தங்குமிடத்துக்குச் சென்றோம்.
நான் எப9ரிச்சில் தங்கியிருந்தது நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்கன நண்பர் ஒருவருடன். அவரும் அவரது தங்கையும்
தம்பியும் ஸாவிஸ் பிரஜைகளைத் திரு
மனம் செய்து அந்நாட்டுப் பிரஜைகளாக மாறிவிட்டவர்கள். என்னை அன்போடு வரவேற்று இலங்கை உணவுகளைத் தயார்செய்து தந்து உபசரித்தார்கள். அத் தோடு ஸ்திரிச்சைச் சூழவுள்ள பல பகுதி களுக்கும் அழைத்துச் சென்று காண் பித்தனர்.
ஐரோப்பாவில் ஸ்" விட்ஸர்லாந்து தனி ரகமான நாடொன்றாகும். அங்கு பழைமையும் பாரம்பரியங்களும் நன்கு பேணப்படுகின்றன. எனவே தான் நாள் ஸுவிட்ஸர்லாந்துக்குச் செல்லப் போகின் றேன் என்று கூறியபோது ரொட்டர்டாமில் சந்தித்த ஏனைய ஐரோப்பிய நாட்டினர் சிலர் "பழைய ஐரோப்பாவைப் பார்க்கப் போகின்றீர்களா?" என்று ஒருவகை ஏள னப்பார்வைபோடு கேட்டனர். ஸ்ாவிட்ஸர் லாந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒன்றிப் போகாமல் தனித்திருக்கவே விரும்புகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதா இல்லையா என்ற அபிப்பிராய வாக்கெடுப்பின் போதும் சேரக் கூடாது என்றே பெரும்பான்மையினர் வாக்களித்
GGOTIT.
35
உடை, நடை, பாவனை முறைகளி லும் ஸ"விஸ் மக்களுள் பெருந்தொகை பானோர் பழைமை பேணுபவர்களாகவே காணப்பட்டனர். ரொட்டர்டாமிலும் அம்ஸ் டர்டாமிலும் நாள் கண்ட நாகரிக வேகம் ஸ"ரிச்சில் காணப்படவில்லை. பஸ் தரிப் பிடத்தில் பதட்டமின்றி உட்கார்ந்து கொண்டு பின்னல் வேலை செய்யும் பெண்களையும் பொது இடங்களில் பாரம் பரிய இசைக் கருவிகளை மீட்டிப் பனம் சம்பாதிக்கும் ஆண்களையும் கண்ட போது இந்த வித்தியாசம் நன்கு புலப்பட் 나--
ஸ9ரிச் மிக அழகான பிரதேச மொன்றாகும். அங்குள்ள Limmat என்ற நதியும் Lake Zurich ஏரியும் அதன் அழ குக்கு மெருகூட்டி நிற்கின்றன. ஸாவிட் ஸர்லாந்தில் பெரிய ஏரிகள் பல உண்டு. இவற்றில் கப்பல் போக்குவரத்துக்கூட நடைபெறுகின்றது. படகில் ஏறி நதியில் அல்லது ஏரியில் பிரயாணம் செய்வதன் மூலம் ஸ்திரிச் நகரின் ரம்மியமான தோற் றத்தினைக் கண்டு ரசிக்க முடியும்.
ஸாவிட்ஸர்லாந்தில் பஸ், ரெயில், ட்ராம்(Tram), கப்பல் சேவைகள் ஒன்றி ணைத்தேநடத்தப்படுகின்றன. ஒரேசீஸன் டிக்கட்டை வாங்கிக் கொள்வதன் மூலம் நான்கு சேவைகளையும் ஒருவர் பயன்படுத்திக் கொள்ள முடியும், தேவைக் கேற்றபடி குறித்த பிரதேசத்துக்கு மட்டுப் படுத்தப்பட்டதாக அல்லது முழு நாட்டுக் கும் உரியதாக சீஸன் டிக்கட்டைப் பெற் றுக் கொள்ளலாம்.
தனியாகவும் நண்பர்களோடு சேர்ந் தும் ஸூரிச் நகரைச் சுற்றிப் பார்ப்பதற்குப் பல தடவைகள் வாய்ப்புக் கிடைத்தது. உலகப் புகழ்பெற்ற எப"விஸ் வங்கிகள் அங்கேயே அமைந்திருக்கின்றன. எவரும் அறியாமல் இரகசியமாக வங்கிக் கணக்கு களை வைத்திருப்பதற்கு அங்கு வாய்ப் பளிக்கப்படுவதால் உலக நாடுகளின்

Page 20
தலைவர்கள் பலரும் தமது செல்வத் தையெல்லாம் ஸாவிஸ் வங்கிகளிலேயே வைப்பிலிடுகின்றனர். எனது நண்பரின் மைத்துனரான Conrad என்பவர் அங் குள்ள வங்கியொன்றில் பொறுப்பான பதவி வகிக்கின்றார். "உங்கள் நாட்டு அரசியல்வாதிகள் பலருக்கும் எங்கள் வங்கிகளில் இரகசியக் கனக்குகள் இருக்கின்றன" என அவர் என்னிடம் கூறினார்.
இரண்டாம் உலகப் போருக்கு முன் னர் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூத தனவந்தர்கள் பலர் பெருந்தொகையான பணத்தை ஸ்விஸ் வங்கி இரகசியக் கணக்குகளில் வைப்பிலிட்டிருந்தனர். போரின் போது அவர்களில் பெரும்பாலா னோர் ஹிட்லரினால் கொல்லப்பட்டனர். எனவே கோடிக்கணக்கான பணம் உரி மை கோரப்படாமல் எu"விட்ஸர்லாந்துக் குச் சொந்தமாகிவிட்டது.
ஸூரிச் நகரிலுள்ள தேசிய நூதன சாலையில் அதிக நேரத்தை நான் செல விட்டேன். ஸாவிட்ஸர்லாந்தின் வரலாற் றைப் பற்றித் தெளிவான விளக்கமொன் றைப் பெறுவதற்கு அங்குள்ள காட்சிப் பொருட்கள் உதவின. ஸூரிச்சின் மத்திய ரெயில் நிலையம் மிகப்பிரமாண்டமானது. அதற்குக் கீழே நிலத்துக்கடியில் பாரிய விற்பனை நிலையத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது.ஒருநாள்பகல் உணவுக்காக அங்குள்ள சிற்றுண்டிச் சாலையொன்றை அணுகினேன். அங்கு வேலை செய்த சிலர் என்னைக்கண்டதும் "From India?" GTIGTIUJ CEEHÜLGÜTri. "No. Sri Lanka" என்றேன். பார்த்தால் அங்கிருந்த ஊழியர்கள் அனைவருமே இலங்கைத் தமிழ் இளைஞர்கள். நான் தமிழில் பேசிய தும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். எனக்கு அலாதியான உபசாரம் அங்கு கிடைத்தது. கடமை காரணமாக அவர்களால் அதிக நேரம் என்னோடு பேச முடியவில்லை.
36
ஒரு நாள் மாலையில் தொலை விலுள்ள பிரமாண்டமான கிறிஸ்தவ தேவாலயமொன்றைப் பார்ப்பதற்காக என் னைக் காரில் அழைத்துச்சென்றனர். வழி நெடுக இருந்த பசுமையான புல்வெளி களும் பனிமூடிய மலைத்தொடர்களும் அப்பழுக்கற்ற பாதைகளும் மனதைக் கிறங்க வைத்தன. அந்தத் தேவாலயத் தினுள் இருந்த சிற்ப வேலைப்பாடுகளும் ஒவியங்களும்இராட்சதஇசைக்கருவியும் பார்ப்போரைமலைக்கச் செய்தன.
鷗」
எப9ரிச் நகரிலுள்ள Bahnhof Strasse என்ற வீதி மிகப் பிரபலமானது. விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்கள் இங்கு தான் அமைந்துள்ளன. ஸ"விட்ஸர்லாந் தின் பெருந்தனவந்தர்கள் பொருள்வாங்க
இங்குதான் வருகின்றனர். எனவே இவ்விதியைத் தங்கம் பதித்த விதி என அழைப்பார்கள் வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் மட்டும் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும். எனவே வியா ழக்கிழமை இரவில் நானும் அங்கு போய் விற்பனைக்கிருந்த பொருட்களைப் பார் வையிட்டேன். பொருட்களின் விலையைக் கேட்ட போது தலை சுற்றியது. ஒரு கடை யில் காட்சிக்கு வைத்திருந்த ஆடம்பர மோட்டார் சைக்கிள் ஒன்றின் விலையை நமது ரூபாவில் கணக்குப் பார்த்தேன். சுமார் 18 இலட்சம் வந்தது. ஆனால்
 
 

பொருள் வாங்குவோருக்குக் குறைவு இருக்கவில்லை. "இது ஒரு வகைப் பைத் தியக்காரர்கள் பைத்தியக்கார விலை களுக்குப்பொருட்களை வாங்குகிறஇடம்" என்று எனக்கு விளக்கம் தந்தார் Conrad. Conradஒரு வகை யதார்த்தவாதி. எப்போதும் அந்தக் கண்ணோட்டத்தில் தான் எதனையும் நோக்கினார். ஒருமுறை அவரோடு இரவுணவு உட்கொள்ளும் போது என்னிடம்"உங்கள்நாட்டுக்கு வந்த போது நான் அவதானித்தேன். உங்கள் நாட்டுச் சஞ்சிகைகளும்பத்திரிகைகளும் எப்போதும் அட்டையில் பெண்களின் கவர்ச்சிப்படங்களையே பிரசுரிக்கின்றன. மகத்தான கலாசாரங்களைக் கொண்ட நீங்கள் ஏன் இவ்வாறான இழிந்த மேற் கத்திய முறைகளைப் பின் பற்ற வேண்டும்?" என்று கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குப் புரியவில்லை.
இறுதியில் ஸ"விட்ஸர்லாந்தில் இருந்து நாடு திரும்புவதற்காக ஸ்திரிச் விமான நிலையத்திற்குச் செல்லும் போது இந்த அழகான அமைதியான நாட்டை இனி என்று காணக் கிடைக்குமோ என்ற கவலைதான் மேலிட்டது. விமான நிலை பத்தில் விமானமேறுவதற்குரிய இடத்தில் எனது டிக்கட்டைக் காட்டி உள்ளே செல்ல முயன்ற போது அங்கிருந்த பெண் அதிகாரி "ஆமிஸ்டர் ஹாபிஸ் நீங்களா?
உங்களைப் போகவிட முடியாது!" என்றார் குறும்புத்தனமாகச்சிரித்துக்கொண்டு.
- يا
இதென்னடா அநியாயம் வரும் போதுதான் சோதனை என்றால் வெளி யேறும் போதுமா இப்படி என்று எரிச்ச லோடு அவரைப் பார்த்தேன்."கவலைப் படாதீர்கள்.இங்கு ஒரு பெண் உங்களைத் தேடி வந்தார். நீங்கள் வந்தால் உங்களை நிறுத்தி வைத்துக் கொள்ளும்படி என் னிடம் கூறிச் சென்றார். இப்போது வந்து விடுவார். கொஞ்சம் அப்படி உட்கார்ந்து கொள்ளுங்கள்!" என்று விளக்கம் தந்தார் அந்தப் பெண் அதிகாரி.
சிறிது நேரத்தில் என்னைத் தேடிக் கொண்டு அந்த ஸ்விஸ் பெண் வந்தார். அவர் எனது தம்பிக்கு அறிமுகமானவர். விமான நிலையத்தில் பணிபுரிபவர். நான் செல்லும் விமானம் எதுவெனத் தேடிக் கொண்டு வந்திருந்தார். பெருந்தொகைச் சொக்கலேட்டைக் கொண்ட பொதி பொன்றை அன்பளிப்பாகத் தந்துவிட்டுச் சென்றார். ஏற்கனவே ஏனைய நண்பர் களும் பெருமளவு சொக்கலேட் கட்டி களைத் தந்திருந்தனர்.உலகப் புகழ்பெற்ற ஸாவிஸ் சொக்கலேட்டுகள்ளயும் இனி மையான ஸ"விஸ் நினைவுகளையும் சுமந்த வண்ணம் நான் விமானத்தில் ஏறினேன். து
அறிவுரை
மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல விரும்பிய ஒரு மாணவன், வியாபாரியான தன் தந்தையிடம் சென்று, "அப்பா, நான் இதய சத்திரசிகிச்சை நிபுனராக வர
ஆசைப்படுகின்றேன்" என்றான்.
"ஒரு மனிதனுக்கு எத்தனை இதயங்கள் இருக்கின்றன?" என்று அப்பா கேட்டார். "ஒன்று தானே அப்பா"- மகன் பதிலளித்தான். "ஒருவனிடம் எத்தனை பற்கள் இருக்கின்றன?"-இது அப்பாவின் அடுத்த கேள்வி.
"முப்பத்து இரண்டு" என்றான் மகன்.
"அப்படியானால் நீ பல் வைத்தியனாக வருவது தானே நல்லது" என்று அறிவுரை
பகர்ந்தார் அந்த அப்பா.

Page 21
இலங்கை, இந்தியக்
Ꮿ86Ꮘ)6Ꮣ)Ꮿ56Ꮘ)6YᏛ പ്പ് | உலகறியச் செய்தவர்
“(፪
திசங்களைத் தோற்றுவிப்ப வர்கள் வர்த்தகர்களோ, அரசியல்வாதி களோ அல்லர். மாறாக, கவிஞர்களாலும் கலைஞர்களாலுமே தேசங்கள் உருவாக் கப்படுகின்றன. மிக ஆழமான வாழ்க்கைக் கோட்பாடுகள் கலைகளிலேயே புதைந்துள் ளன"-இவ்வாறு கூறியவர் இலங்கையி னதும் இந்தியாவினதும் பாரம்பரியக் கலைகளை உலகறியச் செய்தவரான ஆனந்த குமாரஸ்வாமி ஆவார்.
ஆனந்த கெண்டிஷ் குமாரஸ்வாமி 1877ஒகஸ்ட் 22ம் திகதி கொழும்பில் பிறந் தார். அவரது தந்தை முத்து குமாரஸ்வாமி ஓர் இலங்கையர். தாயார் ஆங்கிலேயர் குமாரஸ்வாமிக்கு 2 வயதாகு முன்னரே அவரது தந்தை இறந்துவிட்டார். எனவே அவரது தாயார் அவரை இங்கிலாந்திலே யே வளர்த்தார்.25 வயதுவரை இங்கிலாந் தில் வாழ்ந்த அவர் லண்டனில் விஞ்ஞா எனப் பட்டப் படிப்பை மேற்கொண்டு முதல் வகுப்பில் சித்தியடைந்தார். பின்னர் D.Sc பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். அவர் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த புலமையு டையவராகவும் விளங்கினார்.
குமாரஸ்வாமி இலங்கை திரும்பிய பின் கணிப்பொருள் வள ஆய்வுத்துறைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப் போது அவரது வயது 25 மட்டுமே. அவர் மேற்கு நாடுகளிலும், ஆசிய மற்றும் தூர கிழக்கு நாடுகளிலும் பரந்தளவிலான சுற்றுப்பிரயாணங்களை மேற்கொண்டார்.
38
థ్రో ή ξε γι
ஆரம்பத்திலிருந்தே தனது தாய்நாட் டின் பாரம்பரிய ஓவியக்கலை, கட்டடக் கலை, கைப்பணிக் கலைகள் போன்றவை பற்றிக் கரிசனை காட்டிய அவர் காலனித் துவ ஆட்சியின் காரணமாக தமது மக்க ளின் தேசியப் பண்புகளும் தனித்துவமும் அழிந்துசெல்கின்றன என்பதை உணர்ந்து (laFIT6öioTLITif.
பிற்காலத்தில் இந்தியாவே அவரது ஆத்மீகத் தாயகமாக மாறியது. அவர் தனது பதவியைத் துறந்துவிட்டு இந்துக் கலாசாரம்,கலைகள், சமயம்,தத்துவம் என் பன பற்றி ஆராய்வதில் முழுக் கவனத்தை யும் செலுத்தலானார். தம்மைக் கீழைத் தேயவாதிகள் (Orientalists) என அழைத் துக்கொண்ட சில மேலைத்தேய அறிஞர் கள் கிழக்கின் கலைப்பொக்கிஷங்கள் பற் றிப்பிழையான கருத்துக்களை முன்வைப்ப தைக் கண்டு அவர் மனம் வெதும்பினார். எனவே இந்தியக் கலைகள் பற்றிச் சரி பான விளக்கத்தையும் கண்ணோட்டத்தை யும் முன்வைப்பதற்கு அவர் அயராதுழைத் தார்.
ரவீந்திரநாத் தாகூர், சகோதரிநிவே திதா போன்றோரின் பழக்கம் காரணமாக குமாரஸ்வாமி இந்தியத் தேசியவாதத்தின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவராக மாறி னார். அத்தோடு இந்திய ஓவியங்களைச் சேகரிப்பதிலும் அவர் முன்னணியில் நின் றார். தாம் சேகரித்த ஓவியங்களைக்
 

கொண்டு பெனாரஸிலுள்ள இந்து பல் கலைக்கழகத்தில் "இந்திய ஓவியக்கலைக் கான தேசிய மியூஸியம்" ஒன்றை ஆரம் பிக்க அவர் விரும்பினார். எனினும் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.
1916இல் ஆனந்த குமாரஸ்வாமி அவர்கள்தான் சேகரித்த கலைப் பொக்கி ஷங்களுடன் அமெரிக்காவில் குடியேறி னார். அங்கு Bostonஇல் உள்ள நுண் கலைமியூஸியத்தின் காப்பாளராக நியமிக் கப்பட்ட அவர் 1917 முதல் 1947 வரை அங் கேபே சேவையாற்றினார். அக்காலத்தில் இந்திய ஓவியங்களின் காட்சிக்கூடமொன் றை அங்குநிறுவி விருத்தி செய்தார்.
கலாநிதி ஆனந்த குமாரஸ்வாமி அவர்கள் அந்த 30 வருட காலத்தில் சுமார் 40 நூல்களையும் 500க்கு மேற்பட்ட கட்டு ரைகளையும் எழுதினார். அவரது ஆக்கங் களுள் பல ஜெர்மன், பிரெஞ்சு மொழி களுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்
TT.
1947ஒகஸ்ட் 22ம் திகதிBoston இல் அவரது நண்பர்களால் நடத்தப்பட்ட பிரியா விடை இராப்போசனத்தின் போது தான் ஓய்வுபெற்ற பின் இந்தியாவில் போய் வாழப்போவதாகக் குமாரஸ்வாமி அறிவித்
தார். எனினும் அவரது அந்த ஆசை நிறை வேறவில்லை.1947 செப்டம்பர் 09ம் திகதி அமெரிக்காவில் மஸ்ஸகஸெட்ஸ் மாநிலத் தில் உள்ள Needham என்ற இடத்தில் அமைந்திருந்த அவரது இல்லத்தில் தனது 70வது வயதில் காலமானார். அங்கு அவ ருடைய உடல் தகனம் செய்யப்பட்ட பின் அவரது அஸ்தி இந்தியாவில் அலஹபாத் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் கரைக் கப்பட்டது.
இலங்கை, இந்தியப் பெண்களின் சிறப்புக்களைப் போற்றி புகழ்ந்த ஆனந்த குமாரஸ்வாமியின் நான்கு மனைவியருள் எவரும் இந்நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை. அவரது முதல் மனைவி Ethe ஒரு ஜெர்மனியர். இரண்டாவது மனைவியான Ace ஆங்கிலேயர் அவரது பெயர் ரதன்தேவி என மாற்றப்பட்டது) மூன்றாவது மனைவி Stella ஓர் அமெரிக் கர். ஆனந்த குமாரஸ்வாமி இறக்கும் தறு வாயில் அவரோடிருந்த இறுதி மனைவி Donna Lousia LiGggiTL, GOTTGC 6é சேர்ந்தவர்.
Birlf-India Perspectives
மரத்தில் ஏறிக் கொள்வது ஏன்?
முன்னைய சோவியத் யூனியன் இரும்புத் திரை நாடு என அழைக்கப்பட்டது. அந்த நாட்டுக்குள் வெளியார் செல்வதும் அந்நாட்டு மக்கள் வெளிநாடு செல்வதும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஒரு நாள் சோவியத் பிரஜைகள் சிலர் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது "நமது நாட்டின் எல்லைகள் திடீரெனத் திறந்துவிடப்பட்டால் நீ என்ன செய்வாய்?" என அவர்களுள் ஒருவன் இன்னொருவனைப் பார்த்துக்
கேட்டான்.
"நான் உடனே ஒரு மரத்தில் ஏறிக் கொள்வேன்' என்றான் இரண்டாமவன்
“மரத்தில் ஏறுவது எதற்காக?' என்று மற்றவர்கள் கேட்டனர்.
"நாட்டை விட்டு வெளியேற முண்டியடித்துச் செல்லும் சன நெரிசலில் சிக்கிச் சாகாமல் தப்பிக் கொள்வதற்காக” என்று பதிலளித்தான் அவன்

Page 22
ப்போது பல வங்கிக்கிளைகளில் தானியங்கிக் காசு வினியோக இயந்தி ரங்கள் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். SEGON GJ ATM (Automatic Teller Machi nes) என அழைக்கப்படுகின்றன. வங்கி பில் கணக்குவைத்திருப்பவருக்கு விசேட கார்ட் ஒன்று வழங்கப்படும். அத்தோடு அவருக்கேயுரிய இரகசிய அடையாள எண் (Personal Identification Number or PIN) ஒன்றும் கொடுக்கப்படும். காசு பெறத் தேவையான போது ATM உள்ள இடத்திற்குச் சிென்று தனது கார்டை அத னுள் செலுத்தி PIN குறியீட்டை அங்குள்ள கீபோர்டில் அடித்துத் தன்னை அடையா ளம் காட்ட வேண்டும். அதன் பின்னர் தனக்குத் தேவையான காசுத்தொகையை டைப்செய்தால் உரியதொகைக்கான பண நோட்டுக்களை ATM வெளியே தள்ளும்,
வங்கியின் காரியாலய நேரமல்லாத வேளைகளிலும் எமது வைப்பிலிருந்து
ஆள் அடையாளம் காணும் நவீன முறைகள்
தேவையான பணத்தைப்பெற்றுக்கொள்ள
ATM முறை உதவுகிறது. அத்தோடு நாம் கனக்கு வைத்துள்ள வங்கியின் எந்தக் கிளையிலிருந்தும் ATM மூலம் பணம் பெற முடியும். எல்லாக் கிளைகளும் கம்பியூட்டர் வலையிணைப்பினால் தொடுக்கப்பட்டி ருப்பதன் காரணமாகவே இது சாத்திய மாகின்றது. நவீன ATM ஒன்றிலிருந்து ஒருவர் பணம்பெற்றுக்கொண்டதும் அது பற்றிய விபரங்களை ATM பதிவு செய்து கொள்வதோடு வங்கியின் பிரதான கம்பி யூட்டருக்கும் அறிவித்துவிடும். அங்கு உரியவரின் கணக்கில் குறித்த தொகை பற்றில் இடப்படும்.
இலங்கையில் பெரும்பாலும் வங்கிக் கிளைகளில் மாத்திரமே ATM கருவிகள்
AO
பொருத்தப்பட்டுள்ளன. எனினும் அபி விருத்தி அடைந்த நாடுகளில் பிரதான நகரங்கள் தோறும் பல்வேறு இடங்களில் தனியான ATM தொகுதிகள் அமைக்கப் பட்டுள்ளன. தமது வாகனத்தில் இருந்த வாறேகார்டைச்செலுத்திப்பணம்பெற்றுக் கொள்ளும் வசதிஇதனால் ஏற்பட்டுள்ளது. ATM கார்ட் மூலம் பணம் பெறும் போது தன்னை அடையாளங் காட்டுவது முக்கியமானது.இப்போது இதற்காக PIN குறியீடுகள் அல்லது Password என்னும் இரகசியச் சொற்கள் பயன்படுத்தப்படு கின்றன. குறிப்பிட்ட வாடிக்கையாளருக் கும் வங்கியின் கம்பியூட்டர்களுக்கும் மட்டுமே இந்த இரகசியக் குறியீடுகள் தெரிந்திருக்கும். எனவே ATM கார்டை இன்னொருவர் திருடிச் சென்று பணம் பெறுவது சாத்தியமாகாது.
எனினும் PIN குறியீடுகள் PassWord என்பவற்றைப் பொறுத்தமட்டில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின் றன.பல வாடிக்கையாளர்கள் தமது இரகசி பக் குறியீட்டை மறந்துவிடுகின்றனர். சில வேளைகளில் தவறாக டைப் செய்கின் றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ATM இலிருந்து பணம் பெறமுடிவதில்லை. மூன்று தடவைகள் தொடர்ந்து PINஜத் தவறாக டைப்செய்தால் ATM கருவி எமது கார்டைத் திருப்பித் தர மறுத்துவிடும். இப் பிரச்சினைகள் காரணமாக வாடிக்கையா எார்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே வாடிக்கையாளர்களை எளி தாகஅடையாளம் காண்பதற்கான மாற்று வழிகளை உபயோகிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது பல
 
 

நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய முறை பெருவிரல் அடையாள முறையாகும். ஒவ்வொரு மனிதனினதும் விரல் அடையாளங்கள் (finger prints) அவனுக்கே உரிய தனித்துவமுடையனவா கும். எந்த இருவரினதும் விரல் அடையா ளங்களும் ஒரேமாதிரியானவையாக இருப் பதில்லை. எனவே பெருவிரல் அடையாள முறையில் ஏமாற்று முயற்சிகளுக்கு இடமிருக்காது.
வாடிக்கையாளரின் பெருவிரல் அடையாளத்தை Scanning முறையில் படம் பிடித்து வங்கியின் கம்பியூட்டரில் பதிவுசெய்து வைத்துக்கொள்வர். ATM கருவியிலிருந்து பணம் பெறச் செல்லும் போது அங்குள்ள தட்டொன்றின் மீது வாடிக்கையாளர் தமது பெருவிரலைப் பதிக்க வேண்டும். உடனே ATM அதனுடன் இணைக்கப்பட்டுள்ள Scan nerஇனால் அவ்விரல் அடையாளத்தைப் படம் பிடித்து வங்கியிலுள்ள பதிவோடு ஒப்பிட்டுப் பார்க்கும். இரு விரல் அடைய ாளங்களும் சமமாயின் அவரது அடையா ளத்தை ஏற்றுக்கொண்டு பணம்வழங்கும். பெருவிரல் அடையாளத்தை உபயோ கிப்பதிலும் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. கையில் அழுக்குப் படிந்திருக்கும் போது உரிய முறையில் விரல் அடையாளம் பதிவாவது இல்லை. இது கையால் உழைப் பவர்களைப் பாதித்துள்ளது. அத்துடன் கையுறை (glowes) அணிந்துள்ளவர்கள் அதனைக் கழற்ற வேண்டியுள்ளது. ஒரு தடவை வாடிக்கையாளர் ஒருவரின் ATM கார்டைத் திருடிய ஒருவன் அவரது பெரு விரலையும் வெட்டிக்கொண்டு போய்க் கருவியில் பதித்துப் பணத்தை எடுத்துக் கொண்டு விட்டானாம். இவ்வாறான குற்றச் செபலைத் தடுப்பதற்காக விரல் அடையாளத் தோடு அதன் வெப்பநிலையையும் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உடலிலிருந்துநீக்கப்பட்ட விரலின் வெப்பநிலை
உடல் வெப்பநிலையை விடக் குறைவாகவே
இருக்கும்)
41
இந்நிலையில் இன்னோர் அடையா ளங் காணும் முறையை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒருவருடைய கண்களின் கதிராளியைப் படம் பிடித்து அதன் மூலம் ஆள் அடையாளங் காணும் இந்நுட்பமுறை Iris Scanning எனப்படும். விரல் அடையாளத்தைப் போன்றே கதிரா ளியின் அமைப்பும் ஆளுக்காள் வித்தியா சப்படுகின்றது. அதேவேளை கதிராளி பொன்றின் கட்டமைப்பை நிறம், வடிவம் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட அம்சங்க ளாகப் பிரித்து ஆராய முடிகின்றது. இத னால் கதிராளியின் அமைப்பைச் கொண்டு ஆள் அடையாளங் காணுவது மிகமிகத்திருத்தமான முறையொன்றாகச் கருதப்படுகின்றது.
இப்போது சில மேற்கு நாட்டு நிறுவனங்கள் Iris Scanning முறையை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன. வாடிக்கையாளர் ATM கருவியின் முன்னால் போய் நின்றது அங்குள்ள நுண்ணியகமரா அவரது கன் களைத் தேடிப்படம் பிடித்துக் கொள்ளும் அந்தப் படம் உடனடியாக வங்கியில் கம்பியூட்டரில் ஏற்கனவே பதியப்பட்டுள் அவரது கதிராளியின் படத்தோடு மி நுணுக்கமாகச்சரிபார்க்கப்படும்.அதனடி படையில் வாடிக்கையாளரின் அடையாள தை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரி பதா என்பதைக் கம்பியூட்டர் தீர்மாணி கும்.
கதிராளி அடையாள முறை மி நம்பகமானதாக இருப்பதனால் எதிர்கால தில் பல்வேறு தேவைகளுக்காக ஆட்கை அடையாளங் காண்பதற்கு இம்முன பிரயோகிக்கப்படலாம். இதனால் ஆள் றாட்டம் செய்வது சாத்தியமற்றதாகிவிடு Iris Scanning கருவிகள் குறைந்தவின யில் (சுமார் 7500ரூபா) சந்தைக்கு வந்து எான. எனினும் இப்புதிய தொழில்நு பங்கள் எமது நாட்டில் அறிமுகமாவதற்கு பல வருடங்கள் செல்லக்கூடும். இ

Page 23
சிறுவர் நலனுக்காக உழைக்கும்
க்கிய நாடுகளின் சர்வதேச lg|6,íťg|5.JFy EláhLJuh (United Nations ternational Children's Emergency பnd-UNICEF) என்ற நிறுவனம் ஐக்கிய ாடுகள் பொதுச் சபையின் முதலாவது மர்வின் போது (1948இல்) உருவாக்கப் ட்டது. இரண்டாம் உலகப் போரினால் ாதிக்கப்பட்ட ஐரோப்பா, சீனா போன்ற ரதேசங்களில் வாழ்ந்த சிறுவர்களின் ணவு உடை, மருந்து போன்ற அவசரத் தவைகளைக் கவனிப்பதே அதன் பிர ான நோக்கமாக இருந்தது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடு லுள்ள சிறுவர்களின் நீண்டகாலத் நீவைகளைக் கவனிக்கும் வகையில் ரிஸெப்பின்நோக்கத்தை பொதுச்சபை 50இல் மாற்றியமைத்தது. மூன்று ண்டுகளின் பின்னர் இந்நிதியத்தின் |LJ United NatОПS Children'S Furld க்கிய நாடுகள் சிறுவர் நிதியம்) என ற்றப்பட்டது. எனினும் UNICEF என்ற நக்கப் பெயர் தொடர்ந்தும் பேணப்பட யிற்று. | UNICEFநிறுவனத்தின் செயற்பாடு மூன்று அடிப்படை நோக்கங்களைக் ாண்டுள்ளன:
போசனை, சுகாதாரம், கல்வி கியவற்றில் சிறுவர்களின் அடிப்படைத் வைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி பதல், | சிறுவர்களின் ஆற்றல்களை மையாக விருத்தி செய்வதற்கு ஏற்ற ப்ப்புக்களை வழங்குதல்,
3.சிறுவர்களுடன் ஏனையோர் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி சர்வதேச ஒழுக்க நியமமொன்றை உருவாக்குதல்,
உலகச் சிறுவர்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்குதல், சுகாதாரமான முறை யில் கழிவகற்றும் வசதிகளை ஏற்படுத்தல், ஆரம்பக்கல்விவாய்ப்புக்களை அளித்தல், தொற்று நோய்களுக்கு எதிராக நிர்ப் பீடனத்தை ஏற்படுத்தல் போன்ற செயற் திட்டங்களை UNICEFஅமுல்படுத்திவரு கின்றது. வெள்ளப் பெருக்கு, புவியதிர்வு, வறட்சி போன்ற இயற்கை அழிவுகள் ஏற் பட்ட வேளைகளில் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்கள், பாதுகாவ லர்கள் போன்றோருக்கும் நிவாரணங் களை அது வழங்கிவருகின்றது.
அதன் முயற்சிகளுக்காக 1965இல் சர்வதேசச் சமாதானத்துக்கான நோபல் பரிசு UNICEFக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் பற்றிய உலக உச்சி மாநாடொன்றைUNICEF1990ம் ஆண்டு நிவ்யோர்க் நகரில் நடத்தியது. 71 அரசுத் தலைவர்கள் உட்பட 158 நாடுகளின் பிரதி நிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண் LTT.
இவ்வுச்சிமாநாட்டின்போது, சிறுவர் நலன் காக்கும் நோக்கோடு 2000ம் ஆண்டு உதயமாவதற்கு முன் பின்வரும் இலக்குகளை அடைதல் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது () 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில்
 

ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒன்றாகக் குறைத்தல், (1990இல் இவ்வயதெல்லையைச் சேர்ந்த சுமார் 14 மில்லியன் சிறுவர்கள் இறந்தனர்) (2) 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களில் காணப்படும் அல்லூட்டத்தை (போச
ணைக் குறைபாட்டை) அரைவாசியாகக் குறைத்தல், (3) பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவும் மனிதக் கழிவுகளைச் சுகா தார முறையில் அகற்றவும் தேவையான வசதிகளை உலகளாவிய ரீதியில் ஏற் படுத்தல். (4) அடிப்படைக் கல்வி வாய்ப்புக்களை உலகளாவியமட்டத்தில் ஏற்படுத்தல்,
1990இல் உலகச் சிறுவர்களில் 20
சதவீதத்தினரே டிப்தீரியா, ஈர்ப்புவலி, குக்கல், சின்னமுத்து, போலியோ, TB
போன்ற ஆபத்தான நோய்களுக்கெதிராக தடுப்பு மருந்து ஏற்றப்பட்டிருந்தனர். UNICEFஇன் நடவடிக்கைகள் காரண மாக இது 1996 ஆகும் போது 80% ஆக அதிகரித்தது. வயிற்றோட்டத்தால் பாதிக் கப்படும் சிறுவர்களுக்காக வாயினால் மீள ÉGJfüggi (Oral Rehydration) állj தை அமுல் நடத்தியதன் மூலமும் சிறுவர். மரணவீதம் பெருமளவுகுறைக்கப்பட்டது. இன்று சுமார் 160 நாடுகளின் அர சாங்கங்களாலும், பொதுநிதியங்கள், தனி பாட்கள் மூலமாகவும் கிடைக்கும் நன் GaleF ITGWLFF GYNGIT, I GEFGTGTGGIL UNICEF இயங்கிவருகின்றது. எனினும் தொடர்ந்து ஏற்பட்டுவரும் நிதிப்பற்றாக்குறை காரண மாக அதற்குத் தனது செயற்றிட்டங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் சிரமங்
லீவர் பிரதர்ஸ்
இலங்கையில் "என்லைட்' சவர்க்கா ரத்தைப் பற்றி அறியாதவர்கள் யாருமில்லை. முதன்முதலில் இதனைத்தயாரித்து உலகுக்கு grup Tú LIGğELLUGulf William Hesketh Laver என்றபிரிட்டிஷ் பிரஜையாவார்.1851இல் பிறந்த இவர் 16வது வயதிலேயே தனது தந் தையின் மொத்த விற்பனை வியாபாரத்தில் ஈடுபடலானார். வர்த்தகத்தில் புதிய நடை முறைகளை இவர் அறிமுகப்படுத்தியதோடு தந்தையின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பல கிளை நிறுவனங்களை உருவாக்கி வியாபாரத் தை விருத்தி செய்தார்.
1884இல் சவர்க்கார விற்பனைக்கெனத் தனது சொந்த நிறுவனமொன்றை வில்லியம் லீவர் நிறுவினார். தனது சகோதரன் James g. LäTEgipÉg Lewer Brothers GTGT) FáíllLIITLITIT முயற்சியை ஆரம்பித்த அவர் தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தி Bபnlight என்ற பெயரில் சவர்க்காரத்தை உற்பத்திசெய் பத் தொடங்கினார்.அக்காலத்தில் விலங்குக் கொழுப்பைப் பயன்படுத்திச் சவர்க்காரம் செய்வதே பொதுமுறையாக இருந்தது.எனவே
43
கள் ஏற்படக்கூடும். பா
வரவேற்பைப் பெறலாயிற்று.
1888gsi Cheshire Slry (Egerigli, Port Sunlight என்ற பெயரில் பெரிய தொழிற் பேட்டையொன்றை அவர் ஆரம்பித்தார்.அங்கு தொழிற்சாலையோடு தொழிலாளர்களுக்கான வீடுகளும் நிறுவப்பட்டன. தனது வியாபாரத்தைத் தொடர்ந்து விருத்தி செய்த வில்லியம் உலகின் பல நாடுகளிலும் Lever Brothers கிளைகளை ஆரம்பித்தார். 20ம்நூற் றாண்டின் ஆரம்பத்தில் உலக சவர்க்கார உற் பத்தியில் பெரும்பகுதி Lever Brother8இன் கைகளிலேயே இருந்தது.
1905 முதல் 1910 வரை வில்லியம் லீவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் லிபரல் கட்சி உறுப்பினராகப் பதவி வகித்தார். 1917இல் Baron STsöTI L5ñllLh 19225i Wiscount என்ற பதவியும் அவருக்கு பிரிட்டிஷ் அரசரி னால் வழங்கப்பட்டது.1925இல் அவர் காலமா
TTT.
லீவர் பிரதர்ஸ் இப்போது இலங்கையில் யூனி லீவர் என்ற பெயரில் இயங்குகிகின்றது.

Page 24
இஜ்
ாறாம் நூற்றாண்டின் நடுப்பகு தியில் பிரான்ஸ் நாட்டிலே நொஸ்ட்ரடா முஸ் (Nostradamus) என்ற பெயருடைய வைத்தியர் ஒருவர் இருந்தார். சோதிடக் கலையிலும் ஈடுபாடுகாட்டிய அவர் 1555ம் ஆண்டில் "நொஸ்ட்ரடாமுஸின்தீர்க்கதரிச ENTIñlaisir" (Les propheties de Me, Michel Nostradamus) sтiТрGLIшfludinТi 1000 நாலடிச் செய்யுள்களைக் கொண்ட நூல் ஒன்றைப் பிரெஞ்சு மொழியில் வெளியிட் டார்.அவருடைய காலம் முதல் உலக முடிவு வரை நடக்கப் போகும் பல நிகழ்ச்சிகள் பற்றிய அவருடைய தீர்க்கதரிசனங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. (கி.பி. 3797ம் ஆண்டில் உலக முடிவு ஏற்படும் என அவர் எதிர்வுகூறியிருந்தார்)
நொஸ்ட்ரடாமுஸின் தீர்க்கதரிசனங் களில் பலர் அபார நம்பிக்கை வைக்கலா பினர். தெளிவற்ற மயக்கமான மொழியில் அவர் குறிப்பிட்டிருந்த கருத்துக்களைப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளோடு பொருத்திப் பார்த்து அவர் சொன்னபடி எல்லாம் நடக்கின்றன என மக்கள் நம்பத் தொடங்கினர். உதாரணமாக "இத்தாவிக் கு அண்மையில் ஒரு பேரரசர் பிறப்பார்; அவரால் சாம்ராஜ்யத்துக்குப் பேரிழப்பு ஏற்படும்" என நொஸ்ட்ரடாமுஸ்ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நெப்போலியனின் பிறப்பைத்தான் இவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும் எனப் பலர் நம்பலாயினர். எனி னும் இத்தாலிக்கு அருகாமையில் பிறந்த பல ஜெர்மனிய மற்றும் அவுஸ்திரியப் பேரரசர்களுக்கும் இது பொருந்தக் கூடிய தாகவே இருந்தது.
20ம்நூற்றாண்டைப் பற்றிய அவரது தீர்க்கதரிசனங்களுள் ஒன்று "1999
44
ஒகஸ்ட் 11ம் திகதி சூரிய கிரகணம் ஏற்படும்" என்பதாகும். அவர் கூறியதுபோன்றே அன்றையதினம் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. 16ம் நூற்றாண்டில் கணிக்கப்பட்டிருந்த கிரகண நாள்காட்டி அட்டவணையொன்றிலிருந்து இச்சூரிய கிரகணத்தைப் பற்றி நொஸ்ட்ரடாமுஸ் அறிந்து கொண்டிருப்பார் என்றே ஆய்வா ௗர்கள் கருதுகின்றனர்.
அவரது இன்னொரு தீர்க்கதரிசனம் "1999ம் ஆண்டு ஏழாம் மாதத்தில் வானத் திலிருந்து பயங்கரமான அரசனொன்று பூமிக்கு இறங்குவான்" எனக் கூறியது. கிறிஸ்தவர்கள் Anti-Christ எனவும் முஸ்லிம்கள் "தஜ்ஜால்" எனவும் குறிப்பிடு கின்றதீயவனின் வருகையைத் தான் இது குறிக்கின்றது எனப்பலர் நம்பினர். பெரிய
விண்கல்லொன்று அல்லது அண்டவெளிப்
பொருளொன்று பூமியில் வந்து மோதப் போகின்றது என்பதையே இத்தீர்க்கதரி சனம் கூறுகின்றது என இன்னும் சிலர் கருதினர்.ஆனால் எந்தவிதமான அசம்பா விதமும் இன்றி ஏழாம்மாதம் கழிந்துவிட்ட பின்னர் தான் நொஸ்ட்ரடாமுஸின் தீர்க்கதரிசனங்கள் பற்றிய நம்பிக்கைகள் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன.
நொஸ்ட்ரடாமுஸ் தென் பிரான்ஸில் உள்ள Saint Remi என்ற இடத்தில் 1503ம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் Michel de Nostradame TsirugiТеђth. பிற்காலத்தில் அவர் தனது பெயரின் லத் தீன் மொழி வடிவமான Nostradamus என்பதையே பயன்படுத்தினார். ரோமன் கத்தோலிக்கரான அவர் 1525இல் வைத்தியராகத் தொழில்புரிய ஆரம்பித்
 
 

தார். அக்காலத்தில் கொள்ளை நோயி னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெற்றிகர மாகச் சிகிச்சையளித்ததன் மூலம் சிறந்த வைத்திபர் என்ற புகழைப் பெற்றுக் | Glg:ITSTLITiŤ.
1550ம் ஆண்டளவில் அவர் வரு
டாந்த பஞ்சாங்கம் ஒன்றை வெளியிடத் தொடங்கினார். இவை நாடு முழுவதும்
பரவலாக விற்பனையாயின. அவர் கடிதம் மூலம் ராசி பலன் கூறும் தொழிலையும்
செய்தார்.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிடிகொடுக்காமல் தப்பிக்கொள்ளும்
விதத்திலேயே சோதிடப்பலன்களை எழுதி
பனுப்பினார். அவரது வாடிக்கையாள
ருக்கு பிரெஞ்சு மொழிதெரியாவிட்டாலும் நொஸ்ட்ரடாமுஸ் பிரெஞ்சில் தான் பதில் அனுப்புவார். அக்காலத்தில் பொது மொழி
யாக லத்தீன் இருந்த போதிலும் கூட
வேண்டுமென்றே இப்படிச் செய்வார். அத் தோடு ஜாதகத்தை அனுப்பும்போது தெளி வாக வாசிக்க முடியாதவாறு தனது சொந்தக் கையெழுத்திலேயே எழுதி யனுப்புவார். மொத்தத்தில் வாடிக்கை பாளர்களை அவரது சோதிடம் திருப்திப்
படுத்தியதுமிகக் குறைவாகும்.
நொஸ்ட்ரடாமுஸ் துணிவு மிக்கவர் அரசர்களுக்கும் அரசிகளுக்கும் பெரிய மதகுருமாருக்கும் தனது கெட்டித்தனங் களைக் கூறிக் கடிதங்கள் எழுதினார். இதனால் பல அரசர்களும் அரசிகளும்
அவருடைய ஆதரவாளர்களாக மாறினர்.
பிரான்ஸ் மன்னரான 2வது ஹென்றியின் LISTITY Catherine, de Medici fTTLfurf நொஸ்ட்ரடாமுளைக் கொண்டு தனது
கணவனினதும் பிள்ளைகளினதும் ஜாத
கங்களைத் தயாரித்துக் கொண்டாள். 1565இல் 14ம் சார்ள்ஸ் மன்னனின் அரசவை மருத்துவராக நொஸ்ட்ராமுஸ் நியமிக்கப்பட்டார்.
நொஸ்ட்ரடாமுஸ் தனது தீர்க்கதரி சனங்களையும் 1550ம் ஆண்டளவில்தான்
எழுத ஆரம்பித்தார். அவரது நூல், ஒவ் வொன்றும் நூறு நாலடிச் செய்யுள்களை உடையபத்து அத்தியாயங்களைக் கொண் டிருந்தது. எந்தவொரு நிகழ்வு பற்றியும் திருத்தமாகவும் தெளிவாகவும் கூறாது பொதுப்படையாகவே அவர் குறிப்பிட்டிருக் கிறார். எனவே ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களுக்கு ஏற்ப அவரது தீர்க்க தரிசனங்களை வியாக்கியானம் செய் தனர்.
நொஸ்ட்ரடாமுஸின் தீர்க்கதரிசனங் கள் 1672இல் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டன. இப்போது பல மொழி பெயர்ப்புக்கள் சந்தையில் உள்ளன. எனி ணும் அவை யாவற்றிலும் மறுமலர்ச்சிக் கால பிரெஞ்சு மொழி வாக்கியங்கள் தவ
றான முறையில் மொழிபெயர்க்கப்பட்டுள்
45
ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நொஸ்ட்ரடாமுளையப் பற்றியும் அவ ரது தீர்க்கதரிசனங்களைப் பற்றியும் gy Irisis Everett E. Bleilier 6TiTUni "நொஸ்ட்ரடாமுஸ் குறிப்பிட்டுள்ள பெரும் பாலான நிகழ்வுகள் - போர்கள், படு கொலைகள்,ஆக்கிரமிப்புக்கள்,வெள்ளங் கள், தீவிபத்துக்கள், புவியதிர்வுகள், சூறா வளிகள் போன்றவை-வரலாற்றில் காலத் துக்குக் காலம் நிகழ்வனவாகும். திட்ட வட்டமாக எதனையும் கூறாமல் பொதுப் படையாகக் கூறுவதன் மூலம் எதிலும் பிடிகொடுக்காமல் தப்பித்துக்கொள்ளவே அவர் முயற்சித்திருக்கிறார்" என்று எழுதியுள்ளார்.
4000 செய்புள்அடிகளைக் கொண்ட ஒருநூலில் எதிர்வுகூறப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான நிகழ்வுகளுள் ஒரு சில, உலகில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளோடு பொருந்திப் போவது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்பதே ஆய்வாளர்களின் பொது முடிவாகும்.
(நொஸ்ட்ரடாமுஸ் 1586இல் காலமா
SITTITIf)

Page 25
நான் எழுதிக் கொண்டிருந்த தாளின் மீது ஒரு வண்ணாத்திப் பூச்சி வந்தமர்ந்தது. அதனைக் குழப்ப விரும்பா
மல் அதையே பார்த்துக் கொண்டிருந் தேன்.அந்தச்சிறிய பூச்சியின் இறகுகளில் எத்தனை வண்ண அலங்காரங்கள்! மெதுவாக ஒர் உருப்பெருக்கும் கண்ணா டியை எடுத்து வந்து அதனூடாகப் பார்த் தேன். அதனுடைய நுண்ணிய கண்கள், கால்கள், உணர்கொம்புகள். 1 நவீன விஞ்ஞானிகள் கூறுவது போல் இவை யாவும் கூர்ப்பு முறையில் தற்செயலாக உருவானவையா?
அதனுடைய இறகுகளை உன்னிப் பாக அவதானித்தேன். அந்த வண்ண அலங்காரங்கள் எவ்வளவு நேர்த்தியாக - சமச்சீராக - இருக்கின்றன மாபொரும் ஓவியர்களின் கலைப்படைப்புக்களை விடவும் மேலானவையாக அல்லவா அவை மிளிர்கின்றன. இத்தகைய ஒரு மகத்தான கலைப்படைப்பு தற்செயலாகத் தோன்றி யது என்பதை என்னால் நம்ப முடிய வில்லை,
ஒரு வண்ணாத்திப் பூச்சியைக் கண்டு வியக்கின்ற நாம் ஒரு மனிதக் குழந்தையின் உடலமைப்பைக் கூர்ந்து நோக்கினால் . . அம்மம்மா! எவ்வளவு சீராக - விகிதாசாரம் தவறாமல் - ஒவ்வோர் அங்கமும் விருத்தியடைகின் றதே! குழந்தையின் மூளைக்கலங்கள் வளரும் போது அது கற்கவும், மழலை மொழி பேசவும் அன்பு காட்டவும் பழகிக் கொள்கின்றதே! இவையெல்லாம் தற்
45
செயல் நிகழ்ச்சிகள் என நம்புவதை விட இந்த அற்புதங்களுக்குக் காரணமான வன் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே என நம்புவது எனக்கு எளிதானதாகத் தோன்றுகின்றது. "விண்னையும் பூமியை பும் அவற்றிலுள்ள அத்தனைப் பொருட் களையும் படைத்த" அந்த வல்ல இறை வனின் மாட்சி என்மனதை நிரப்புகிறது.
விண்ணிலுள்ள ஒவ்வொரு நட்சத் திரமும் ஒவ்வொரு கிரகமும் எவ்வளவு திருத்தமான, சீரான முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். மில்லியன் கணக்கான வரு டங்களாக நடக்கும் இந்தச் சீரான அசை வுகள் அனைத்தும் தற்செயலாக நிகழ்ப 60)6)JLUT?
சந்திரனுக்கு மனிதனை அனுப்பிய NASA நிறுவன விஞ்ஞானிகளின் கணிப் பீட்டுத் திறமைகளை நாம் மெச்சுகின் றோம். அவர்கள் முன்கூட்டியே கணிப் பிட்ட அதே நேரத்தில் தான் நீல் ஆம்ஸ்ட் ரோங்கும் அவரது சகாவும் சென்ற சந்திரக் கலம் சந்திரத் தரையில் இறங்கியது. ஆனால்சந்திரன் தனது சுற்றுப்பாதையில் எவ்வித பிசகுமின்றிச் சீராகப் பயணம் செய்துகுறித்தநிலையை அடைந்ததனால் தான் இந்தத் தரையிறக்கம் சாத்தி யமாகியது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கிறோமா? இவற்றையெல்லாம் தற் செயல் நிகழ்வுகள் என மிக எளிதாக ஒதுக்கிவிடலாமா?
இதனால் தான் சந்திரனுக்குச் சென்று திரும்பி வரும் வழியில் ஆம்ஸ்ட்
 
 

ரோங்கும் அல்ட்ரினும் பூமியிலுள்ளவர் களுக்கு அனுப்பிய தொலைக்காட்சிச் செய்தியில் இறைவனின் மகிமையைப் போற்றி வியந்தனர்."ஒஇறைவனே!உன் படைப்பான இந்த விண்வெளியையும் அதில் நீ அமைத்துள்ள சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும் போதெல்லாம் "ஐயோ! இந்த மனிதப் படைப்பு எம்மாத்திரம் என்று என் மனம் ஓலமிடுகிறது. . " என்றார் எட்வின் அல்ட்ரின்.நீல் ஆம்ஸ்ட்ரோங் தனது செய் தியின் இறுதியில் உணர்ச்சி வசப்பட்டு "உங்கள் அனைவருக்கும் இறைவனின் அருள் கிட்டட்டும்" என்று கூறினார்.
அபொல்லோ-8இல் விண்வெளிக் gáj, Glycito Borman, Lowell, Anders ஆகிய மூன்று வீரர்களும் 1968 டிசம்பர் 24ம் திகதி தமது சந்திரக் கலத்தில் சந்தி ரனை வலம் வந்தனர். சந்திரனின் மறு புறத்தில் சந்திரக் கலம் பயணம் செய்த போது 45 நிமிடங்களுக்கு பூமியோடிருந்த தொலைத் தொடர்புகள் முற்றாக இல்ல ாமற் போயின. அவர்கள் தம் என்ஜினின் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண் டியிருந்தது. அது சிறிதளவேனும் பிசகி யிருந்தால் அவர்கள் மீண்டும் புவிக்குத் திரும்ப முடியாதவாறு அவர்களது வாக னம் சந்திரனைச் சுற்றி வலம் வரும் உப கோளொன்றாக மாறியிருக்கும். ஆனால் எந்தக் கோளாறுமின்றி எல்லாம் திட்ட மிட்டபடியே நிகழ்ந்தன.
மூவரும் வெற்றிகரமாகப் பயணத் தை முடித்துக் கொண்டதும் மனிதனின் தொழில்நுட்பத் திறமையைப் போற்றி யிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை! அவர்கள் பைபிளில் இருந்து பின்வரும் வாசகங்களைத் தான் உணர்ச் சியோடு வாசித்தார்கள் "தொடக்கத்தில் இறைவன் விண்ணையும் பூமியையும் படைத்தான். சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் அவனே படைத் தான். பின்னர் அவை நல்லவையாக அமையச் செய்தான்."
இந்த அண்டசராசரம் அத்தனையும் தற்செயலாகத் தோன்றியவை என்ற விளக்கம் அந்த விண்வெளி வீரர்களுக் குத் திருப்தியளிக்கவில்லை.
இறை விசுவாசி ஒருவரினால் அகி லத்திலுள்ள அத்தனையையும் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். அவருக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படுமாயின் அதற்குக் காரணம் இறைவனருளிய வேதத்தில் கூறப்பட்டுள்ள உண்மை களின் தெளிவின்மையோ குறைபாடோ அல்ல. மாறாக அந்த உண்மைகளை முழு மையாகப் புரிந்து கொள்வதற்கு அவரது உள்ளத்தால் இயலாமல் இருப்பதேயாகும்; அவரது சிந்தனை ஆற்றல் மட்டுப் படுத்தப்பட்டதாக இருப்பதேயாகும். மனித இயல்பே அப்படித்தான்.
(Marcel-Marie Desmarais 57situatif 57géfL "Le Bonheur à Portée de la main"
Tsirl) LITsils sig1, siri-Reader's Digest)
அரும்பு இதழ்களைப் பெற்றுக் கொள்ளல் தபால் மூலம் அடுத்து வரவுள்ள 4 அரும்பு இதழ்களைப் பெற விரும்புவோர் மணியோடர் மூலம் ரூபா ஒ000ஐ அனுப்பிவைக்கவும்.தனியிதழ் பெறவிரும்புவோர் தபாற் செலவையும் சேர்த்து ரூபா 2200 அனுப்பி வைக்க வேண்டும்.அரும்பு பழைய இதழ்களில் 3,6,7,10,ா என்பன மட்டுமே கைவசம் உள்ளன என்பதை வாசகர்கள் தயவு செய்து கவனிக்கவும், மனியோடர் அனுப்பும்போது பனம்பெறுபவர் பெயர் M. Hafiz Issadeen எனவும் பனம் பெறும் தபாற்கந்தோர் DhargaTOWT எனவும்
குறிப்பிடத் தவறாதீர்கள்.

Page 26
(பொது அறிவுப் ே
வாசகர்களே! பின்வரும் பத்து வினாக்களுக்குமுரிய சரியான விடைகளைத் திருத்தமாக ஒரு தாளில் எழுதிக்கடிதஉறையினுள் இட்டுத் தபாலில் அனுப்பி வையுங்கள். விடைத் தாளில் உங்கள் பெயர், முகவரி, மாணவராயின் பாடசாலை யின் பெயர் என்பவற்றை விபரமாக எழுதத் தவறாதீர்கள். அனுப்ப வேண்டிய முகவரி EDITOR - "ARUMBU" ROYAL COMPUTER CENTRE, 147, MAINSTREET, DHARGA, TOWN- 12090. போட்டி முடிவுத் திகதி:1999 டிசம்பர் 31
கீழே தரப்பட்டுள்ள அரும்பு சின்னத்தை வெட்டி விடைத் தாளில் ஒட்டி அனுப்பத் தவறாதீர் கள். இச்சின்னம் ஒட்டப்படாத விடைகள் ஏற்றுக் கொள்ளப்பட IIITL I, II
பத்து வினாக்களுக்கும் சரியான விடைகளை எழுதிபனுப்பும் வாசகர்களுள் அதிர்ஷ்டசாலிபாகத் தேர்ந்தெடுக்கப்படும் மூவருக்குப்பணப் பரிசுகள் வழங்கப்படும்.
முதற் பரிசு ரூபா 500.00 இரண்டாம் பரிசு ரூபா 250.00 மூன்றாம் பரிசு ரூபா.100.00 மேலும் 25 அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அரும்பில் பிரசுரிக்கப்படு வதோடு அவர்களுக்கு அரும்பின் அடுத்த இதழ் இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.
போட்டி இல : 12)
குறிப்பு: இங்கு கேட்கப்பட்டுள்ள வினாக்களுள் சிலவற்றுக்கான விடைகள் இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரை களில் பொதிந்துள்ளன.
வினாக்கள்:
1.சோவியத் யூனியனின் கடைசி ஜனாதி பதியார்? 2. பொன்னியின் செல்வன் என்ற பிரபல தமிழ்நாவலின் ஆசிரியர்யார்? 3. நியூஸிலாந்து நாட்டின் தேசியப் பறவை எது?
4. அல்பேர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த நாடு எது?
5. தீக்கோழியின் விலங்கியல் பெயர் என்ன?
6. முதன் முதலில் சந்திரத் தரையில் பாதுகாப்பாக இறங்கிய விண்கலம் எது? 7. பொக்ஸிங் விளையாட்டுக்கான விதி களை முதலில் வரைந்தவர் யார்?
8. UNESCO நிறுவனத்தின் தலைமையகம் எந்த நகரில் அமைந்துள்ளது?
9. ஷேக்ஸ்பியரின் எந்த நாடகத்தில் ஷைலொக் (Shylock) என்ற பாத்திரம் இடம்பெற்றுள்ளது?
10. Microsoft என்னும் கம்பியூட்டர்
ஸொப்ட்வெயார் கம்பனியின் உரிமை பாளர் பெயர் என்ன?
அடுத்த இதழ்
அரும்பு இதழ்-14 எதிர்வரும் 2000 ஜனவரி 15ம் திகதி வெளிவரும்,
 

ஆரும்பு பொது அறிவுப் போட்டி - 11
சரியான விடைகளும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளும்
கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் பின்வருமாறு:
1. ஒல்லாந்து 2. போர்த்துகல் 3. வங்காள மொழி 4. Pierre FaLuchard 5. ஒகினாவா 6. ஹொன்ஷ்" 7 ஆங்கிலக் கால்வாய் 3. W.D. g|DIJEg;5| 9, Brassica jzyr7Ced 10. அப்துல் கரீம் ஸாகர்னோ
உரிய காலத்துக்குள் சரியான விடைகளை அனுப்பியிருந்தவர்களுள் அதிர்ஷ்ட சாலிகளாகத் தெரிவு செய்யப்பட்டோர் விபரம் பின்வருமாறு:
1iti шfig. (eljuI 500). M.H. M. Ramiz, Makola Muslim Orphanage, Maiwana
2) Lifen (GLI 250). T. Mohamed Raus, Gr-12, T/A|-Aqsa M.V, Kinniya, 3a IIrflah (es5UIT 100). M.T.F. Ansifa, Gr-11, Babussalam Muslim W.
MarTn bulu Wa, Pasyala. இலவசமாக அரும்பு-13 ஐப் பெறும் அதிர்ஷ்டசாலிகள்: . A. B. M. Imth. Isar, GWTFALI idu wa Mstir T1 W. Ha burugală, . Shifa i slisthār, 221/34, Bāri ya School Rd. Ma wynella, . M. M. Fathrma Najla, 291, Main Street, Dharga Town. , M, F. Abdul Majid, Kg WBattlu | Hassal M. M. W. Wara kapolia, , Fazlan Mohamed, 59, Rahula Road, Matara. . /A. H. M. Waffreen, Illkiri golewa, Walharma golle,wa. . M, S, Arsatlı Hussain, 1260, Matal: Road, Ala Wathugoda, . A.C. Ismail, Ariwarul Uloom Arabic College, Makola. S CaaaLHmtHC a0LLaaSSS 000SSSSLLLLLLLCSSSLtmtmLLaaCGatHHLYS . A. L. F. Farrnia, 15682B, Mosque Rd, Napawela, Awissa walia. , F. Mus fika, 35, o l'ira Road Maya nella. . &.S., M., Murnet: f, 23, Goda pola Road, Matale.
M.MI, M. Habeebah, 344, Mai 7th Road, Block ] East, San Finanturai, 5. Urliis, 9A, T, Al-Hilal M. W. M.L. tur-Ö1. 15. M. B. ř1, Azhar, A. L. Arabic College, UdL pila Road MEkola, 16, Maseela FLIrkan, G. Thundu Wa Musii T. W. Ha burugala, 0LSLS0tLLLLaMSSSLSSSGG0 S0SS LLLLLSLLLLaatCLSLLamaaLLLLL LLLLGLLS LLLLLLLCCtLLLLLLS ! 8. M-1. I. Ashik Hassari, 23, Parana wała w wattha, Mawarella. 19. B. Kuril 3, Matugama Road, Meboda. 20. M.N.M. Mifras, 20, Kaleel Place, Kalutarä Scuth, 21. Husina Thoufeck, 192, Kandy Road, Thi hariya, ??. Faheema Ath th35, 143, KLIrma rathunga Mila watha, Matara. 23. M.M. Ml. I'r fam, C4-5.' ! Wadi ya thgaria, Herm mathliagarina. 24. M.o. ofrz Mohased, 405, Waragashirra, kää. 25, l... Will Cent, Islegosrnbul Road, Maiticle Wattala.
ஆண்பருக்கும் 'மது பாராட்டுக்கள்!

Page 27
அரும்பு - 13 fr
ஆசிரியருக்கு (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி எ ஆசிரியருக்கு எ எல்லா மனிதர்களும் நேர்மையாளர்கள் மாட்டார்கள் என்பதை என் மகன் கற்றுக் கொ உலகில் போக்கிரிகள் உள்ள அளவுக்குச் சா6 சுயநல அரசியல்வாதிகள் இருக்கின்ற அள உள்ளார்கள் என்பதையும் அவனுக்குக் கற்று அளவுக்கு நண்பர்களும் உலகில் இருப்பார்கள் இதற்கெல்லாம் காலம் பிடிக்கும் என்பது உழைத்துச் சம்பாதித்த ஒரு டொலரானது பா பெறுமதியானது என்பதை அவனுக்குக் கற் முகங்கொடுக்கவும் வெற்றியில் களிப்படையவ மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு விடுங்கள். முடியுமாயின், அமைதியான சி கொடுங்கள். புத்தகங்களின் அற்புதங்கள் கொடுங்கள். அத்தோடு, வானில் பறக்கும் L பசுமையான மலையடிவாரங்களில் பூத்துக் கு மர்மங்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு அமைதிய ஏமாற்றுவதை விடத் தோல்வியடைவது அவனுக்குக் கற்பியுங்கள். அத்தோடு டெ கடினமானவர்களோடு கடினமாகவும் நடந்துெ வெற்றிபெற்றவர்களின் பின்னால் எல்ே அவர்களைப் பின்தொடராதிருக்கத் தேவைய கள். எல்லோரும் சொல்பவற்றைச் செவிமடு நன்மைகளையும் மாத்திரம் வடிகட்டித் தேர்ந்ெ துயர்வரும் போது சிரிப்பது எப்படி என்பதை மானதல்ல என்பதையும் உணர்த்துங்கள்.
எரிந்து விழுபவர்களை இழித்துரைக்கவ களுடன் கவனமாக இருக்கவும் அவனுக்குக் மூளைப்பலத்தையும் மிக உயுர்ந்த விலைக்கு துக்கும் ஆன்மாவுக்கும் ஒருபோதும் வி:ை கூச்சலிடும் கும்பலுக்கிடையே செவியை துணிந்து நின்று போராடவும் அவனுக்குப் பயி
அவனோடு மென்மையாக நடந்து கொல் காட்டாதீர்கள். ஏனெனில் தீயினால் சுடும் போ குத் தேவையான துணிவையும், துணிச் பொறுமையையும் அவனிடம் விருத்தி செய் நம்பிக்கை வைப்பதற்குக் கற்றுக்கொடுங்கள் மீதும் மேலான விசுவாசம் கொள்வான்.
இவை பெரிய கோரிக்கைகள் தான். என் செய்யுங்கள் ஏனெனில் அவன் ஓர் அருமைய
চাশনাল by A.J. Prints, 4.

Arumbu - 13
3(b) IQg5ID ... ரப்ரஹாம் லிங்கன் தனது மகனின் ாழுதிய கடிதம்) Tாகவும் உண்மையாளர்களாகவும் இருக்க ள்ளத்தான் வேண்டும். ஆனால், அதேவேளை ன்றோர்களும் இருக்கின்றார்கள் என்பதையும், வுக்குத் தியாக உணர்வுள்ள தலைவர்களும்
க் கொடுங்கள். அதே போன்று எதிரிகளின்
என்பதை உணர்த்துங்கள்.
எனக்குத் தெரியும். எனினும் முடியுமானால், தையில் கண்டெடுத்த 5 டொலர்களை விடப் ற்றுக் கொடுங்கள். அத்தோடு தோல்விக்கு பும் அவனைப் பழக்குங்கள். எரிச்சல்படுவதிலிருந்து அவனைத் தூரமாக்கி ரிப்பின் இரகசியத்தை அவனுக்குக் கற்றுக் பற்றியும் முடிந்தால் அவனுக்குச் சொல்லிக் ட்சிகள், வெய்யிலில் உலாவரும் தேனீக்கள், நலுங்கும் மலர்கள் போன்றவற்றின் முடிவிலா ான் அவகாசத்தை அவனுக்கு வழங்குங்கள்.
கெளரவமானது என்பதைப் பாடசாலையில் மன்மையானவர்களோடு மென்மையாகவும் காள்ள அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். லோருமே கூட்டமாகச் செல்ல முயலும்போது ான மனவலிமையை என் மகனுக்கு வழங்குங் ப்பதோடு, அவற்றிலுள்ள உண்மைகளையும் தெடுக்க அவனுக்குக் கற்பியுங்கள். அத்தோடு யும் காட்டிக் கொடுங்கள். கண்ணிர் கேவல
பும் அளவுக்கதிகம் இனிமைவாகப் பழகுபவர் கற்பியுங்கள். அவனுடைய உடற் பலத்தையும் ப் பேரம் பேசவும் - ஆனால் அவனது இதயத் R) குறிக்காதிருக்கவும் கற்றுக் கொடுங்கள். மூடிக்கொண்டிருக்கவும் தேவையானபோது ற்சி கொடுங்கள். -
ாளுங்கள். ஆனால் அரவணைத்துச் செல்லம் துதான் உருக்கும் உறுதிபெறுகிறது. வாழ்வதற் சலோடு செயற்படுவதற்குத் தேவையான புங்கள். இன்னும், அவன் தன்மீது உயர்வான அப்போதுதான் அவன் முழு மனித இனத்தின்
றாலும் உங்களால் முடிந்ததை அவனுக்காகச் ான சின்னப் பையன்!
Station Road, Dehiwala
لهم.