கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 2000.09

Page 1
What is
 
 

20/- a ROMERCI
Educational Magazine
Hypnotism?

Page 2
மூளைக்கு வேலை
விவேக வினாக்கள் ஏழு
(1) இரகசியக் குறியீட்டு முறையொன்றின் படி GRADUATION என்ற ஆங்கிலச் சொல் (48)(25)(60)(54)(20)(50)(22)(44)(32)(34) என எழுதப்பட்டது. இதே முறையைப் பயன்படுத்தி FAWOURITE என்ற சொல்லை எழுதுவது எப்படி?
(2) பின்வரும் தொடரில் அடுத்து வரவேண்டிய இரு எண்களும் எவை?
1357, 2Ꮞ68, 3579, Ꮞ680, ........, , .
(3) ஒர் உளச்சார்புப் பரீட்சையில் 100 கேள்விகள் வழங்கப்பட்டன. அதற்காகக் கொடுக்கப்பட்ட மொத்த நேரம் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களாகும். வழங்கப் பட்ட கேள்விகளுள் 25 கணிதம் சம்பந்தப்பட்டவை எனையவை மொழிபற்றியவை. மொழி பற்றிய கேள்வியொன்றுக்கு ஒதுக்குவதைவிட இருமடங்கு நேரத்தைக் கணிதம் பற்றிய கேள்வியொன்றுக்கு ஒதுக்குமாறுபரிட்சார்த்திகள் கோரப்பட்டனர். அப்படியாயின் கணித விளாக்கள் 25க்கும் ஒதுக்கப்பட வேண்டிய மொத்த நேரம் எவ்வளவு?
(4) வியாபாரியொருவர் ஒன்று 300/= ரூபா வீதம் கொள்வனவு செய்த சாரிகளுக்கு விற்பனை விலையொன்றைக் குறித்தார். அந்த விலையிலிருந்து 10% கழிவு வழங்கினாலும் அவருக்கு 20%இலாபம் கிடைத்ததாயின் அவர் குறித்த விற்பனை விலை யாது?
(5) மாணவனொருவன் 5 பாடங்களில் பெற்ற புள்ளிகள் 4060, 65, 80, 70 என்பனவாகும். அடுத்த பரீட்சையின் போது மேற்குறித்த பாடங்களில் அவனுடைய சராசரியை70ஆக அதிகரிக்கச்செய்யவேண்டுமாயின் அவன் இன்னும் எத்தனை புள்ளிகளைக் கூடுதலாகப் பெற வேண்டும்?
(6) முகங்கள் ஆங்கில எழுத்துக்களினால் குறிக்கப்பட்டுள்ள கனக் குற்றியொன் றின் வெவ்வேறு நிலைகளைப் பின்வரும் படங்கள் காட்டுகின்றன.
ZC.
E19I B t! び A
இக்குற்றியில் முகம் Fக்கு எதிர்ப்புறமாக உள்ள முகத்தின் எழுத்து பாது? () ஒரு கடையில் 325 ரூபாவுக்குப் பொருட்களை வாங்கிய ஒருவர் 1000 ரூபா நோட்டொன்றைக் கடைக்காரரிடம் கொடுத்தார். அதளை மாற்றிக் கொள்வதற்குப் போதுமான பனம் கைவசம் இல்லாமையால் அடுத்த கடையில் அதனை மாற்றியெடுத்த கடைக்காரர் மீதி 675 ரூபாவை வாடிக்கையாளருக்குக் கொடுத்தார். வாடிக்கையாளர் போய்ச்சிறிது நேரத்தின் பின்னர் அடுத்த கடைக் காரர் வந்து அந்த 1000 ரூபா நோட்டுப்போலியானது எனக் கூறி தனக்கு வரவேண் டிய 1000 ரூபாவையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். விற்ற பொருட்களின் கொள்விலை 275 ரூபாவாயின் கடைக்காாருக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு?
(விடைகள் 22ம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன)
 

பொது அறிவுச் சஞ்சிகை இதழ் 18
ஆசிரியர் எம். ஹாபிஸ் இஸ்ஸதீன் Editor: M. Hafiz 55 adeen
Published By:
Issဒု႕ၾဝှိဖြူးဖြုံး ஜிழ்ச்
147, Main Street, Dhia Try O90
Sri Larika Phone:O34-7D 151 E-Mail: royalaleureka, Ik
Web Sité ! WWW
Type-setting & Co er Lay-Dut by.
Royal Computer Centre, 147, Main Street, Dharga Town, Sri Lanka
Printed by: A.J. Prints, 44, Station Road, Dehiwala,
உள்ளே . .
இறை விசுவாசம் ஹிப்னோட்டிஸம் என்றால் என்ன? 3 பஸ்லுர்ரஹ்மான் கான் வங்காள விரிகுடா உடல் கொழுப்பதற்கு ஒரு வைரஸ் . 10 மீண்டும் அமெரிக்காவை நோக்கி 13 கீத மோபஸ்ஸான் நவீன விமானங்கள் I} வியட்னாம் யுத்தம் 23. இண்டர்னெட் வழங்கும் நீண்டதூர
தொலைபேசிச் சேவைகள் 27 ஆர்ஜெண்டினா 9 நீர்மூழ்கிகள் 3. பைதகரஸ் 37 விட்னி மாநகர் 38 யுனிவர்ஸ்ல் ஸ்டூடியோவில் ஒரு நாள் 40
கழுதே நியுமோனியா AB பொது அறிவுப் போட்டி-17
அன்பு வாசகர்கள் எமது நல்
N
EEEE
உங்களுடன் ஒரு நிமிடம்.
அன்புள்ள வாசகர்களே!
பாடசாலை மாணவர்கள் ஆசி ரியர்கள் உட்படப் பல்வேறு அறிவுத் தரமுடையவர்கள் இன்று அரும்பின் வாசகர்களாக உள்ளனர். எனவே அரும்பின் உள்ளடக்கம் எப்படிப்பட்
இருக்க வேண்டும் என்பதை 1 நிர்ணயிப்பது சற்றுச் சிரமமான காரியமாக இருக்கின்றது.
சில சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கலைச் சொற் களைப் பயன்படுத்தாது பொதுவழக் கிலுள்ள சொற்களை நாம் பயன் படுத்துகின்றோம். ஆழமான் விஞ் ಟ್ವಿ" அறிவு இல்லாதவர்களும் விடயங்களை எளிதாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற எமது நோக்கமே இதற்குக் காரணமாகும்.
அத்தோடு, சில விசேட பிரி 1வினர்களின் தேவைகளை நிறை வேற்றும் வகையில் சில விடயங் களைப் பிரசுரிக்குமாறும் கோரிக்கை 1 Iகள் அடிக்கடி எமக்குக் கிடைக்கின் |றன. எனினும் அரும்பு பொதுவான ஒரு வாசகர் கூட்டத்தை இலக்காகக் கொண்டுள்ளதால் தனிப்பட்ட ஒரு சாராருக்கு மட்டும் பயன்தரக்கூடிய விடயங்களைப் பிரசுரிக்க நாம் விரும்பவில்லை.
லெண்ணத்தைப் புரிந்து கொள்வார் கள் என நம்புகிறோம்.
நன்றி எம். ஹாபிஸ் இஸ்ஸதீன்
ரியர் 2O, O9.2OOO ஆசி
W

Page 3
சிந்தனைக்கு ஒரு குட்டிக் கதை
இறை விசுவாசம்
ஒர் ஊரிலே நல்ல மனிதர் ஒருவர் இருந்தார். எவருக்கும் தொந்தரவின் றித்தனிமையாக வாழ்ந்த அவர் இறை பக்தி மிக்கவர். இறை வணக்கத்திலும் தியானத்திலும் அதிக காலத்தைக் கழித் தார். அயலவர்கள் அனைவரும் அவரை மிக்க மரியாதையோடு நடாத்தி வந்த னர்.
கடும் மழை காரணமாக ஒருநாள் அவ்வூருக்கு அண்மையிலிருந்த ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கியது. இத னால் ஊருக்குள் பெருவெள்ளம் ஏற்பட் டது. ஊர்மக்கள் அனைவரும் பாதுகாப் பான மேட்டு நிலங்களை நோக்கி இடம்பெயரலாயினர். அந்தப் பெரிய வர்மாத்திரம் தன்வீட்டைவிட்டு வெளி யேறாமல் தியானத்தில் ஈடுபட்டிருந் தார்.
அவரது வீட்டுக்குள் நீர் மட்டம் அதிகரிப்பதைக் கண்ட சில இளைஞர் கள் ஒர் ஒடத்தில் சென்று அவரை மீட்க முயற்சித்தனர். "நான் இறைவனை நம்பி அவனுக்கு முற்றாக வழிப்பட்டு நடப்பவன். அவன் என்னை ஒருபோ தும் கைவிடமாட்டான். நிச்சயமாக அவன் என்னைக் காப்பாற்றுவான்" என்று கூறிய பெரியவர் ஒடத்தில் ஏறிக் கொள்ள மறுத்துவிட்டார். இளைஞர் களும் தம் வழியே சென்று விட்டனர்.
வெள்ள மட்டம் படிப்படியாக அதிகரித்துப் பெரியவரின் வீட்டுக்குள் நீர் முற்றாகப் புகுந்துவிட்டது. அவர் ஒருவாறு வீட்டுக் கூரையின் மீது ஏறிக் கொண்டார். அவ்வேளையில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இன்னொரு கூட்டத்தினர் ஒடத்தில் அவரை மீட்கச் சென்றனர். "நான் இறைவனை நம்பு கிறேன். அவ்ன் என்னைக் காப்பாற்
2
றுவான்’ என்று கூறிய பெரியவர் அவர் களோடு செல்லவும் மறுத்துவிட்டார்.
அன்று மாலையாகும் போது அவரது வீட்டுக் கூரைக்கு மேலாகவும் வெள்ளம் ஒடத் தொடங்கியது. பக்கத் திலிருந்த உயரமான மரக்கிளையொன் றில் ஏறிக்கொண்ட அந்த மனிதர் அதி லிருந்தவாறு தியானத்தில் ஈடுபட்டார். அப்போது படகில் அவரைத் தேடிவந்த இன்னொரு மீட்புக் குழுவினர் அவ ரைத் தம்மோடு வந்துவிடுமாறு கெஞ் சினர். எனினும் பெரியவரோ "இறை வன் என்னைக் காப்பாற்றுவான்' எனக் கூறிப் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
அன்றிரவு வெள்ளம் கடுமையாக அதிகரித்ததனால் பெரியவர் வீற்றிருந்த மரம் நீரினுள் சாய்ந்தது. மரத்தோடு நீருக்குள் மூழ்கிய அவர் மூச்சுத் திணறி இறந்து போனார்.
இறந்த பின்னர் மறுமையில் எழுப்பப்பட்ட அந்த மனிதரை அமரர் கள் இறைவனின் சந்நிதியில் கொண்டு போய் நிறுத்தினர். "என்மீது அளவிலா பக்தியும் விசுவாசமும் கொண்டு நற் காரியங்கள் புரிந்த இந்த அடியானை சுவர்க்கத்துக்கு அனுப்புங்கள்” என்று கட்டளையிட்டான் இறைவன்.
அந்த மனிதர் சற்றுத் தயங்கிய படியே"இறைவா என்னைச்சுவர்க்கத் துக்கு அனுப்புவது பற்றி மகிழ்ச்சிதான். ஆனால் உன்னை முழுமையாக நம்பி யிருந்த என்னை நீ அன்று காப்பாற்றா மல் கைவிட்டது ஏன்?" என்று கேட் டார்.
அதற்கு இறைவன் "அடியானே! நான் உனக்கு உயிர்தப்ப மூன்று சந்தர்ப் பங்களைத் தந்தேன். ஆனால் நீ தான் அவற்றைப் புறக்கணித்து விட்டாயே!” என்று பதில் கொடுத்தான். -
 

நாம் விழிப்போடு இருக்கும் போது எமது சூழலில் ஏற்படும் மாற் றங்களை நன்கு உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாகவும் அவற்றுக்குத் தூண்டற்பேறு காட்டக்கூடியவர் களாகவும் இருக்கின்றோம். உதார னமாக ஒருவர் எம்மிடம் எதையும் வினவினால் அதற்குப் பதில் சொல் லக்கூடியவர்களர்க நாம் இருப் போம். இத்தகைய முழு உணர்வு நிலையை உளவியலாளர்கள் நனவு signal) (conscious state) stair Luftfar, sir!
நாம் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட பின் இந்நிலை மாற்றமடைந்து சுய உணர்வு அற்றவர்களாக மாறி விடு கின்றோம். எவ்வித குழப்பமுமற்ற ஆழமான நித்திரையாயின் சூழலில் ஏற்படும் ஒலி, ஒளி போன்ற தூண்டி களுக்குத் தூண்டற்பேறு காட்டும் ஆற்றலை நாம் முற்றாக இழந்து விடுவோம்.
விழிப்பு நிலையிலுள்ள ஒரு வரை உளவியல் ரீதியாகத் தூண்டு வதன் மூலம் ஒருவகையான அரைத் துயில் நிலைக்கு (hypnosis) மாற்ற முடியும். இந்நிலைக்கு ஆளானவர் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பது போல் தோன்றினாலும் அவருடைய உணர் வு நிலை ஓரளவு உயர் மட்டத்தில் காணப்படும். தன்னை அரைத்துயில் நிலைக்குத் தூண்டிய நபர் (hypnotist) கேட்கும் வினாக்களுக்கு விடையளிக் கவும் அவரது அறிவுறுத்தல்களுக்கு இணங்கி நடக்கவும் இ படுவார்.
வர் தலைப்
(Hypnotism)
என்றால் என்ன?
இவ்வாறு ஒருவரை hypnosis என்னும் அரைத்துயில் நிலைக்கு ஆளாக்கி அவரது சிந்தனையையும் செய்கைகளையும் ஒருவர் தான் விரும்பியபடி கட்டுப்படுத்தும் கலை யையே hypnotism என்கிறோம்.
ஆதி காலம் தொட்டே மாந்திரீ கர்களும் சூனிய வித்தைக்காரர்களும் இவ்வாறான வசியப்படுத்தும் செயன்முறைகளைப் பல்வேறு நோக் கங்களுக்காகக் கையாண்டு வந்துள் ளனர். எனினும் நவீன ஹிப்னோட் டிஸ்க் கலைக்கு வழிவகுத்தவர் Franz Anton Mesmer (or Giuliff) a girl ஜெர்மன் தேச வைத்தியராவார்.
இதன் காரணமாகவே ஆரம்ப காலத்
தில் இக்கலை மெஸ்மரிஸ்ம் (Mesmerism) என்ற பெயராலும் அழைக் கப்படலாயிற்று.
1784இல் ஜெர்மனியின் ஸ்வா பியா பிரதேசத்தில் பிறந்த மெஸ்மர் 1766ம் ஆண்டு தனது ஆய்வுக் கட்டு ரையை வியன்னா பல்கலைக்கழகத் துக்குச் சமர்ப்பித்தார். மனித உடலி லும் இயற்கைப் பொருட்கள் அனைத்திலும் கண்ணுக்குப் புலப் படாப் பாய்பொருளொன்று ஒடுவ தாகவும் இதன் ஓட்டத்தை விண் வெளியிலுள்ள கோள்களின் ஈர்ப்பு விசை பாதிப்பதாகவும் மெஸ்மர் கருதினார். இப்பாய் பொருளின் ஓட்டத்தில் குழப்பம் ஏற்படும் போதே மனித உடலில் நோய்கள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட் டார்.

Page 4
1775இல் அவர் தனது கொள்கை யில் முக்கிய மாற்றங்களைச் செய் தார். மனித உடலிலுள்ள கண்ணுக் குப் புலப்படாப் பாய்பொருள் காந்தவியல் விதிகளுக்கு ஏற்பச் செயற்படுவதாகவும் பயிற்றப்பட்ட ஒருவரினால் காந்தமாக்கப்பட்ட பொருளொன்றைப் பயன்படுத்தி இப்பாய்பொருளின் ஓட்டத்தைச் சீர்படுத்த முடியும் எனவும் அவர் விளக்கினார். இந்த அடிப்படையி லேயே அவருடைய ஹிப்னோட்டிஸ் முயற்சிகள் உருவாகின.
மெஸ்மர் ஓர் ஏமாற்றுக்காரன் என வியன்னாவிலிருந்த வைத்தியர் கள் குற்றம் சாட்டியதனால் அவர் அவுஸ்திரியாவை விட்டு நீங்கி 1778இல் பரிஸ் நகரில் குடியேறினார். அங்கும் வைத்தியர்களின் எதிர்ப்புத் தோன்றியதால் மெஸ்மரின் வைத் திய முறையைப் பற்றி ஆராய் வதற்கென ஒர் ஆணைக்குழுவைப் பிரெஞ்சு மன்னர் நியமித்தார். இக் குழுவில் அமெரிக்கக் கண்டுபிடிப் பாளரான பென்ஜமின் பிராங்க்ளின், பிரெஞ்சு இரசாயன மேதை அந்து வான் லவுவாஸியே ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். மெஸ்மரின் முறைக்கு எவ்வித விஞ்ஞான அடிப் படையும் ல்லை என அக்குழு தீர்ப்பளித்தது. இதனால் மெஸ்ம ரிஸம் செல்வாக்கிழந்து போயிற்று. மெஸ்மர் 1815 மே 15ம் திகதி கால மானார்.
எனினும் மெஸ்மரைப் பின் பற்றியவர்கள் தொடர்ந்து செய்த ஆய்வுகள் இன்றைய நவீன ஹிப் னோட்டிஸ்க் கலை விருத்தியடையக் காரணமாக அமைந்தன. 19ம் நூற் றாண்டின் நடுப்பகுதியில் James Braid என்ற ஆங்கிலேய வைத்தியரே ஹிப்னோட்டிஸம் என்ற தோற்றப் பாட்டை விஞ்ஞானரீதியில் ஆராய்ந்
#Tii, Hypnotism, Hypnosis S. L.
சொற்களும் அவராலேயே அறிமுகப்
படுத்தப்பட்டன.
ஹறிப்னோ எபிஸ் (hypnosis) என்னும் அரைத்துயில் நிலையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நுட்ப முறைகள் யாவிலும் சில பொதுத் தன்மைகள் காணப்படுகின் றன. முக்கியமாக hypnosis நிலைக்கு ஆளாகப் போகிறவர் அதற்கு விருப்ப முள்ளவராகவும் ஒத்துழைப்பு வழங் குபவராகவும் இருத்தல் அவசியம். அத்தோடு, தன்னை அரைத்துயில் நிலைக்கு ஆளாக்க முயற்சிக்கும் நப ரின் (hypnotist) மீது நம்பிக்கை வைத் திருக்கவும் வேண்டும்.
முதலில் அரைத்துயில் நிலைக்கு ஆளாகப் போகின்றவரை எவ்வித உடல் - உள இறுக்கமுமின்றித் தளர் வாகவும் ஓய்வாகவும் இருக்கும்படி hypnotist பணிப்பார். பின்னர் அவரது பார்வையை ஏதேனும் பொரு ளொன்றின் மீது தொடர்ந்து நிலைக் கச் செய்யுமாறு கூறுவார்.
அதன் பின்னர்தாழ்ந்த, அமைதி பான ஏகதொனியில் “உமது உடலின் தளர்ச்சி படிப்படியாக அதிகரிக்கப் போகிறது. விரைவில் உமது கண்கள் களைப்படையப் போகின்றன’ என்று திருப்பித் திருப்பிக் கூறிக் கொண்டே போவார். இந்நிலையில் அவரது கண்கள் உண்மையிலேயே களைப்பின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து "இப்போது உமது கண்கள் மூடிக் கொள்ளப் போகின்றன. அவை விரைவில் மூடிக்கொண்டுவிடும்" என்றவாறு hypnotist உளவியல்
ரீதியாகத் தூண்டுதல் வழங்கத் தொடங்குவார்.
இறுதியில், சம்பந்தப்பட்ட
வருடைய கண்கள் மூடிக்கொண்டு

விடும். இந்நிலையில் அவரது உடல் முற்றாகவே தளர்ச்சியடைந்து போய் g, Guń hypnotic trance GTiTgJń வசியத் துயிலுக்கு ஆளாகி விடுவார். அவரது கைகால்கள் சோர்வுற்றுப் போய்ச் சுவாசமும் ஆழமானதாகி விடும்.
இவ்வாறு hypnosis என்னும் துயில் நிலைக்கு ஆளாகும் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடும். தான் அந்நிலைக்கு ஆளாக முடியும் என்ற நம்பிக்கையுடையவர்கள் விரைவில் துயில் நிலையை அடைவர். அதே போன்று ஏற்படும் துயில் நிலையின் தரத்திலும் பெரிய தனிநபர் வேறு பாடுகள் காணப்படும்.
Hypnosis g/ sai saa surssi இருப்பவர் சூழலிலுள்ள புறத் தூண்டிகளுக்கு உறுத்துணர்வு காட்ட மாட்டார். எனினும் தன்னைத் துயில் நிலைக்கு ஆளாக்கியhypnotist கூறும் விடயங்களை மட்டும் உணர்ந்து கொள்வார். அவர் கேட்கும் பல் வேறு வினாக்களுக்கும் துயில் நிலை யிலேயே பதில் கூறுவார். அவரு டைய பேச்சு எளிமையானதாகவும் ஒளிவு மறைவின்றியும் இருக்கும். அவருடைய புரிந்துணர்வு செய்கை கள், உண்ர்ச்சி வெளிப்பாடுகள் அனைத்தும் சிறுபிள்ளைகளுக்குரி பவை போன்று காணப்படும்.
Hypnotistஇன் திறமை, அனுப வம் என்பவற்றுக்கு ஏற்ப இத்துயில் நிலையைப் பல்வேறு தேவை களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். உள்ளத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏக்கங்கள், பயங்கள் போன்றவற்றையெல்லாம்
துயிலிலிருப்பவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அவரிட முள்ள தீய பழக்கங்களைக் கைவிடச் செய்யவும் hypnosis நிலையைப் பயன்படுத்தலாம். அந்நிலையில் மனதில் ஜினட்டப்படும் விடயங்கள் பிற்காலத்தில் அவரது நடத்தையில் செல்வாக்குச் செலுத்த வல்லனவாக இருக்கும்.
ம்முறையைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் துயிலுக்கு ஆளானவரில் உளப் பாதிப்புக்களை ஏற்படுத்தித் தீங்கு செய்யவும் முடியும். தீவிர hypnosis நிலைக்கு ஆளானவர்கள் hypnotist சொல்லும் எந்த வேலையையும் செய்யத் தயங்க மாட்டார்கள், துயில் நிலையிலேயே எழுந்து நடக்கவும் செயற்படவும் முனைவர். இதன் காரணமாகப் பல நாடுகளில் பகிரங்கமான முறையில் ஹறிப்னோட்டியைத்தைப் பிரயோகிப் பது தடைசெய்யப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில்hypnotism பன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. பிரசவத்தின் போது வேத னையைக் குறைக்கவும், உளநோய் களால் பாதிக்கப்பட்டவர்களில் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும் இது உதவுகின்றது. ஒருவர் உள்ளத்தில் மறைத்து வைத்திருக்கும் உண்மைகளை அவர் வாயினாலேயே கேட்டறிவதற்கும் hypnotism பயன்படுகின்றது. எனி னும் hypnosis நிலையில் ஒருவர் கூறும் விடயத்தை நீதிமன்றங்களில் சான்றாகப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படுவதில்லை. ஊ
எதையும் செய்வார்கள் "அப்பா. வழக்கறிஞர்கள் உண்மை பேசுவதும் உண்டா?’ என்று அந்தச்
சிறுவன் தந்தையிடம் கேட்டான்.
"அவர்கள் தம் கட்சிக்காரரை வெற்றிபெறச் செய்வதற்கு எதையும் செய்வார்கள்’ என்று பதிலளித்தார் தந்தை.

Page 5
உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் பஸ்லுர் ரஹ்மான் கான் (Fazlur Rahman Khan)
ক্ষু ஐக்கிய அமெரிக்காவிலே உள்ள வானளாவிய கட்டடங்களுள் மிகவும் உயர்ந்தது சிகாகோ நகரி sysfrast sri Luigiu Lari (Sears Tower) a girl 5 Tg5. Sears Roebuck & Co. என்ற வர்த்தக நிறுவனத்துக்குச் சொந்தமான் இக்கட்டடம் 110 மாடி களைக் கொண்டது; 443 மீட்டர் உயரமானது. மலேஷியாவின் கோ q'Tour, i pas 17 si Petronas Towers என்ற இரட்டைக் கோபுரக்கட்டடம் கட்டி முடிக்கப்படும்வரை உலகின் மிக உயர்ந்த கட்டடம் என்ற புகழுக் gifu: it 5 Sears Tower 33 piggy.
இந்த ஸியர்ஸ் டவர் கட்டடத் தைத் திட்டமிட்டு நிர்மாணிப்பதற் குப் பொறுப்பாக இருந்த கட்டடக் கலைஞர் பஸ்லுர் ரஹற்மான் கான் என்பவராவார். இவர் இந்தியாவின் Dacea நகரில் (இன்றைய பங்களா தேஷின்)haka நகரில்) 1929 ஏப்ரல் 3ம் திகதி பிறந்தார். Dacca பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்ற பஸ்லுர் ரவற்மான் 1950ம் ஆண்டு பொறியியற் துறையில் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற பின்னர் இந்திய நெடுஞ்சாலைகள் திணைக்களத்தில் உதவிப் பொறியியலாளராகப் பணி புரிந்த அவர் பிறகு Dacca பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமை புரிந்தார். 1952இல் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்காவுக்குச் சென்ற பஸ்லுர் ரஹற்மான் இலி"
6
னோய் பல்கலைக்கழகத்தில் (University of Illinois) g(Burrs' Guirg. யியல், கட்டமைப்புப் பொறியியல் ஆகிய இரு துறைகளிலும் முதுமானி (MS) பட்டத்தைப் பெற்றுக் கொண் டார். அதனையடுத்து கட்டமைப்புப் பொறியியலில் கலாநிதி (Ph.D) பட்டத்தையும் பெற்றார்.
இடைக்காலத்தில் பாகிஸ்தா லுக்குத் திரும்பி வந்த அவர் கராச்சி நகர அபிவிருத்தி அதிகார சபையில் நிறைவேற்றுப் பொறியியலாளரா கக் கடமை புரிந்தார். நிர்வாகப் பணி கள் காரணமாக கட்டட வடிவமைப் பு வேலைகளில் ஈடுபட முடியாமற் போனதால் விரக்தியுற்ற பஸ்லுர் ரஹற்மான் 1955இல் மீண்டும் அமெ ரிக்காவுக்குத் திரும்பிச் சென்று Skidmore, Owings & Merrill Graingo பிரபல கட்டட நிர்மானக் கம்பனி யில் சேர்ந்தார். 1965இல் அவர்அக்கம் பணியின் பங்காளராக மாறினார். 1967இல் அவர் ஓர் அமெரிக்கப் பிர ஜையாக அங்கீகரிக்கப்பட்டார்.
அமெரிக்காவிலே வானைத் தொடும் உயர் மாடிக் கட்டடங்களை நிர்மாணிப்பதில் பஸ்லுர் ரஹற்மான் கான்முதலிடம் பெற்றுத் திகழ்ந்தார். 1970இல் சிகாகோ நகரில் அவர் வடி GAJ SOM Lng John Hancock Center Tsirgo உயர் மாடிக் கட்டடம் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. அதனையடுத்து 1973இல் அவர் வடி
 
 

66, Ligg, Sears Tower 1998 Gugig D.G. கின் மிக உயர்ந்த கட்டடமாகத் gas biggs. “Bundled tube' Gigiri)
நவீன கட்டமைப்பு முறையை அவர்
ஸியர்ஸ் டவரின் வடிவமைப்பில் பயன்படுத்தினார். இந்தக் கட்ட மைப்பு முறை கட்டட நிர்மானக் கலையில் புரட்சிகரமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹஜூஸ்டன் நகரில் இருக்கும் Shell Plaza என்ற பிரபல கட்டடத் தொகுதியும் பஸ்லுர் ரஹற் மானாலேயே வடிவமைக்கப்பட் டது. பிற்காலத்தில் அவர் ஸ்வூதி அரேபியாவிற்குச் சென்று பல அரிய கட்டட நிர்மாணப் பணிகளை நிறை வேற்றினார்.
இவற்றுள் ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஸீஸ் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணையும் கருத்தையும் கவரும் ஹஜ் விமானத் தரிப்பிடம் (Haj Terminal) விசேடமாகக் குறிப்பிடத்தக் கது. ஜித்தாவிலுள்ள மன்னர்அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகம், ஸ்வூதி தேசிய வர்த்தக வங்கித் தொகுதி என்பனவும் இவராலேயே வடி வமைக்கப்பட்டன.
சிகாகோவிலுள்ள ஸ்லூர் corris, கானின் நினைவுச் சின்னத்திற்கு முன்னால்
உலகின் மிகச் சிறந்த கட்டடக் கலைஞர்களுள் ஒருவராகக் கருதப் பட்ட பஸ்லுர் ரஹற்மான் கான் தனது 53வது வயதில் 1983 மார்ச் 27ம் திகதி ஜித்தா நகரில் காலமானார். அவரது அரும்பணிகளை நினைவுகூரும் முக மாக சிகாகோ நகரிலுள்ள வியர்ஸ் டவரின் சுவரிலே பித்தளையினா லான நினைவுச் சின்ன மொன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் "The Structural Engineers Association of Illinois recognizes Fazlur Rahman Khan as one of the Great Structural Engineers of Our Time” STGAT LI பொறிக்கப்பட்டுள்ளது. T
Idefia). ஒரு கடையின் முன்னால் “உள்ளே இருக்கும் நாயைப் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்" என்ற எச்சரிக்கை வாசகம் தொங்கவிடப்பட்டிருந்தது.
அதனை வாசித்த ஒரு வாடிக்கையாளர் கவனமாகக் கடையினுள் நுழைந்தார்.உள்ளே நலிந்து போன கிழட்டு நாயொன்று ஒரு மேசை அருகே தூங்கிக் கொண்டிருந்தது.
"இந்தச் சாதுவான நாயைப் பற்றியா அப்படி எச்சரிக்கை செய்திருக்கிறீர்கள். அப்படிப் பொல்லாததாக இது தெரியவில்லையே” எனக் கடைக்காரரிடம் கேட்டார் வாடிக்கையாளர்.
"உண்மை தான்! ஆனால் அந்த அறிவித்தலைத் தொங்கவிட முன்பு கடைக்கு வருபவர்கள் இந்த நாயைத் தவறுதலாக மிதித்து விடுவது சகஜமாக இருந்தது. இப்போது யாரும் அருகே போகாததால் அது தொல்லையின்றித் தூங்க முடிகிறது" என்று பதில் வந்தது
கடைக்காரரிடமிருந்து.

Page 6
இந்து சமுத்திரத்தின் வடகிழக் கில் அன்மந்துள்ள வங்காள விரிகுடா 5' முதல் 28 வரையான வட அகலக் கோடுகளுக்கும் 80 முதல் 90° வரை யான கிழக்கு நெடுங்கோடுகளுக்கும் டையில் வியாபித்திருக்கின்றது. தன் மொத்தப் பரப்பளவு சுமார் 2,173,000 சதுரkI ஆகும்.
இதன் மேற்கெல்லையாக இந் தியா இலங்கை என்பனவும் வடக் கெல்லையாக பங்களாதேஷ"ம், கிழக்கெல்லையாக மியான்மார் மற் றும் மலாய தீபகற்பத்தின் வடபகுதி என்பனவும் அமைந்துள்ளன. சர்வ தேச நீர் வரைபுப் பணியகத்தின் (International Hydrographic Bureau) வரைவிலக்கணத்தின்படி வங்காள விரிகுடாவின் தெற்கெல்லையானது, மேற்கில் இலங்கையின் தேவேந்திர upanga (Dondra Head) upg, si Spi; கில் இந்துனேஷியாவின் சுமாத் திராத் தீவினுடைய வடஅந்தம் வரை நீண்டிருப்பதாகக் கருதப்படுகின்றது. வங்காள விரிகுடா ¿iril Dorri I.600 km அகலமானது. அதன் சராசரி ஆழம் 2600 மீட்டர்களாகும். அதன் ஆகக்கூடிய ஆழம் 4,9ே4 m என மதிப் பிடப்பட்டுள்ளது. மேற்கிலிருந்து மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி, காவேரி ஆகிய பெருநதிகளும் வடக் கில் கங்கை, பிரஹற்மபுத்ரா ஆகிய
விரிகுடா
வையும் வங்காள விரிகுடாவில் வந்து கலக்கின்றன. இவ்விரிகுடா விலுள்ள ஒரே தீவுக் கூட்டம் அந்த மான் - நிக்கோபார் தீவுக் கூட்ட மாகும். இத்தீவுகள் வங்காள விரி குடாவை அந்தமான் கடலிலிருந்து பிரிக்கின்றன.
வங்காள விரிகுடாவின் வடக் கெல்லையில் அகலமான கண்ட மேடையொன்று காணப்படுகின்றது. தெற்கு நோக்கி ஒடுங்கிச் செல்லும் இதில் ஆறுகளின் நீரோட்டம் காரண மாகக் குடைவுகள் ஏற்பட்டுள்ளன. கங்கை நதியின் காரணமாக விரிகுடா வில் ஏற்பட்டுள்ள படிவுப் படைஅக லத்திலும் தடிப்பிலும் உலகிலேயே பெரியதாகக் கருதப் படுகின்றது.
வங்காள விரிகுடாவின் மீது நிகழும் காலநிலை பருவக் காற்றுக் களினாலேயே (Mans00ns) நிர்ண் யிக்கப்படுகின்றது. நவம்பர் முதல் ஏப்ரல் வரையான காலத்தில் விரி குடாவுக்கு வடக்கே கண்டப் பிரதே சத்தில் ஏற்படும் உயரமுக்கம் காரண மாக வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசுகின்றது. இதுவே வடகீழ் பருவக்காற்று எனப்படுகின்றது.
வடக்கே கோடை காலமாக
இருக்கும் போது (ஜூன் முதல்
செப்டம்பர் வரை) கடும் வெப்பம் காரணமாக கண்டப் பகுதியின் மீது தாழமுக்க நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் கடலிலிருந்து வீசும் காற்று தென்மேல் பருவக் காற்று எனப்படும். இது பெருமளவு மழை யைப் பொழியச் செய்கின்றது. '
 

ஏப்ரல் -மே காலப்பகுதியிலும் ஒக்டோபர் - நவம்பர் காலப் பகுதி யிலும் வங்காள விரிகுடாவில் அடை மழையுடன் கூடிய சூறாவளிகள் தோன்றுவதுண்டு. 1970இல் கங்கை நதியின் கழிமுகப் பகுதியிலும் 1991இல் பங்களாதேஷின் கிழக்குக் கரையோரத்திலும் ஏற்பட்ட வலிமை யான சூறாவளிகள் கடுமையான உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கடல் மேற்பரப்பிலிருந்து குழல் போன்று நீர்த்தாரை மேலே இழுக் LLGoffrpa sir (Water Sprouts) கோடை மாதங்களில் இடம்பெறுது வழக்கம்.
விரிகுடாவில் மேற்பரப்பு நீரின் அசைவு பருவ காலத்திற்கு ஏற்பத் திசை மாறுகின்றது. வடகீழ் பருவக் காற்றின் போது வலஞ்சுழியாக அசையும் நீர், தென் மேல் பருவக் காற்றின் போது இடஞ் சுழியாக அசையத் தொடங்குகின்றது.
ஆவியாதலின் காரணமாக
இழக்கப்படும் நீரைவிடக் கூடுத லான நீர் ஆறுகளினால் கொண்டு வரப்படுவதனால் விரிகுடாவிலுள்ள நீரின் அளவு வருடந்தோறும் நிகர அதிகரிப்பைக் காட்டுகின்றது.
வங்காள விரிகுடாவின் வடக் குப் பகுதியில் வந்து சேரும் பெரு மளவு ஆற்று நீர் காரணமாகவும் சூழவுள்ள சதுப்பு நிலங்கள் காரண மாகவும் கரைசார்ந்த மீன் இனங்கள் கணிசமான அளவில் உற்பத்தியாகின் றன. எனினும் இம்மீன்வளம்போதி யளவில் பயன்படுத் தப்படுவதில் லை. ஆற்றுக் கழிமுகங்களுக்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் (குறிப்பாக 15° வடக்கு அகலக் கோட்டுக்குத் தெற்கே) பெருமளவு சூறை (Tuna) மீன் இனங்கள் காணப் படுகின்றன. எனினும் இறாலே விரி
மனைற்று,
குடாவிலிருந்து பெறப்படும் பிரதான ஏற்றுமதிப் பொருளாக விளங்கு கின்றது.
விரிகுடாவின் பல பகுதிகளில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட் டுள்ள போதிலும் இதுவரை வர்த்தக ரீதியில் அகழ்ந்தெடுக்கப்படவில் லை. இலங்கையில் வடகிழக்குக் கரைக்கு அப்பால் பெருமளவு தைத் தானிய உலோகப் (titanium) படிவு கள் இருக்கின்றன. இந்தியாவின் வடகிழக்குக்கரைக்க ப்பால் அருமண் உலோகப் படிவுகள் உள்ளன. சென்னைக்கு அண்மையிலுள்ள தஞ் சாவூர் பகுதியிலும் விசாகப்பட்டினத் தைச் சூழவுள்ள பகுதிகளிலும் இல் எயிர்கன், ரூட்டைல், மாங் கனைற்று போன்ற பாரமான கனிய மணற்படிவுகள் காணப்படுகின்றன. வங்காள விரிகுடாவினூடாகச் சர்வதேச கப்பற் போக்குவரத்து பெருமளவு இடம் பெறுவதில்லை. லங்கை, ப்ங்களாதேஷ், இந்தியா வின் கிழக்குக் கரையோரத் துறை முகங்கள்ான கல்கத்தா, விசாகப்பட் டினம், சென்னை போன்றவற்றுக்கு இடையிலான கடற்போக்குவரத்து வங்காள விரிகுடாவினூடாக நடை பெறுகின்றது. மியான்மாரின் துறை முகமான Sittwe என்பதும் இவ்விரி குடாவிலேயே அமைந்துள்ளது.
வங்காள விரிகுடா பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் 20ம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகின. டென்மார்க்கின் Galathea, சோவியத் Vityaz, gj, Giu e Gllofia, Pioneer மற்றும் Anton Baun ஆகிய ஆய்வுக் கப்பல்கள் இரண்டாம் உலகப்போ ரின் பின்னர் கணிசமான ஆய்வுகளை நடாத்தின.1960-65 காலத்தில் இடம் பெற்ற சர்வதேச இந்து சமுத்திர ஆய்வுப் பயணத்தின் போதும் வங் காள விரிகுடா பற்றிப் பெருமளவு தகவல்கள் சேகரிக்கப் பட்டன. L

Page 7
கிடந்த சில தசாப்தங்களாக உலகில் மிகையாகக் கொழுத்தவர் களின் சதவீதம் அதிகரித்து வந்திருக் கின்றது. 1980இன் பின்னர் அமெரிக் காவிலே மட்டுமீறிக் கொழுத்தவர் களின் தொகை 30% ஆல் அதிகரித் துள்ளது. இன்று வளர்ந்த அம்ெரிக்கர் களில் 23 சதவீதத்தினரும் பிரித்தானிய ரில் 20 சதவீதத்தினரும் மிகைக் கொழுப்புடையவர்களாக இருக்கின் தனர். Samoa போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நிலைமை இதை விட மோசமாக உள்ளது. Samoaவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் மிகை கொழுத்த வர்களாக உள்ளனர்
ஒருவர் மிகையாகக் கொழுத் தவர்(Obese) என்ற தரத்தில் அடங்கு கின்றாரா என்பதைக் கணிப்பதற் உடற் திணிவுச் சுட்டி (Body Mass' dex-BMI) என்ற பெறுமானம் பயன் படுத்தப்படுகின்றது. கிலோகிராமில் அளக்கப்பட்ட ஒருவரின் உடல் நிறை யை மீட்டரில் அளக்கப்பட்ட அவரது உயரத்தின் வர்க்கத்தினால் பிரிக்கும் போது கிடைக்கும் பெறுமானமே அவரது உடற் திணிவுச் சுட்டி எனப் படுகின்றது.
உதாரணமாக ஒருவரின் உடல் நிறை 65 kg ஆகவும் உயரம் 1.5 m ஆகவும் இருப்பின் 65ஐ 1.5இன் வர்க்கத்தினால் (அதாவது 2.25 இனால்) பிரிக்க வேண்டும். இவ் வாறு பிரிக்கும்போது வரும் விடை யான 28.88 என்பதே அவரது உடற் திணிவுச் சுட்டியாகும். இந்தச் சுட்டி
கொழுப்பதற்குக் காரணம் ஒரு வைரஸா?
10
O
யின் பெறுமானம் 30ஐ விடக் கூடுத லாக உள்ளவர்கள் மிகைக் கொழுப் புடையவர்களாகக் கருதப்படுவர்.
மிகையாகக் கொழுத்தவர்கள் தம் உடல் நிறையைக் குறைப்பதற் காக உணவைக் குறைத்தல், உடற் பயிற்சி செய்தல் போன்ற பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். மிகைக் கொழுப்பு காரணமாக விரை வில் இதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்ற பயம் பலரை ஆட்டிப் படைப்பதே இதற்குக் காரணமா கும்.
ஆட்கள் மிகையாகக் கொழுப் பதற்கு ஒரு வகை வைரஸ் தொற்றுக் கிTTETTத் ருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் இப்போது வெளி வந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த நிகில் துரந்தர் என்ற வைத்திய நிபு னரின் முன்னோடி ஆய்வுகள் இப் புதிய கொள்கைக்கு உறுதியான அத்திவாரத்தை இட்டுக் கொடுத்துள் ளேன. நிகில் துரந்தர், இந்தியாவின் மும்பாய் நகரில் மிகைக் கொழுப் புடையவர்களுக்குச் சிகிச்சை அளித்து வந்தவராவார். அவரது தந்தையும் இதே துறையில் நிபுணராக இருந் துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கோழிப் பண்னை களில் பரவிய வைரஸ் நோயொன் தின் காரணமாக ஆயிரக் கணக்கான கோழிகள் இறந்தன. இறந்த கோழி களின் உடல்களை வெட்டிப் பரிசோ தித்த போது அவற்றில் பெருமளவு கொழுப்புப் படிந்திருப்பதையும்
 
 

ஆச்சரியத்தையே
வழமைக்கு மாறாக அவற்றின் குருதி யில் கொலஸ்திரோலின் அளவு குறைவாக இருப்பதையும் நிகிலின் நண்பரான சாரத் அஜிங்க்யா என்ற விலங்கு வைத்தியர் அவதானித்திருந்
'தார். தனது அவதானங்களை அவர்
நிகில் துரந்தருக்கு அறிவித்தார்.
நிகிலுக்கு இவ்வவதானங்கள் ஏற்படுத்தின. நோயுற்று இறக்கும் பறவைகளில் அவ்வளவு கொழுப்புக் காணப்படு வது சாத்தியமல்லவே என்று அவர்
யோசித்தார். அத்தோடு கொழுப்பு ,
மிகுதியாக இருக்கும் போது குருதி யில் கொலஸ்திரோலின் அளவு குறைவதும் புதுமையான நிகழ் வாகவே இருந்தது. எனவே இது பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்ய நிகில் முடிவுசெய்தார்.
மேற்குறித்த நோய்க்குக் காரன மான SMAM-1 என்ற வைரஸைப் பிரித்தெடுத்து அதனை ஆய்வுகூடத்தி லுள்ள சுகதேகிகளான கோழிகளுக் குச்செலுத்திப் பார்த்தார். ஆறு வாரங் களின் பின்னர் அவதானித்த போது அக்கோழிகளில் 50% கூடுதலாகக் கொழுப்புப் படிந்திருப்பது தெரிய வந்தது. அத்தோடு அவற்றின் குருதி யிலுள்ள கொலஸ்திரோல், மூகிளிச ரைட்டு என்பவற்றின் அளவுகளும் கணிசமாகக் குறைந்திருந்தன.
தனையடுத்து தம்மிடம் வந்த மிகைக் கொழுப்பு நோயாளிகள் 52 பேரின் குருதியை அவர் சோதித்து' பார்த்தார். அவர்களுள் 10 பேரில் மேற்சொன்ன SMAM-1 என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் கண்டுபிடித்தார். இந்தப் பத்துப் பேரும் ஏனையவர்களை விடக் கூடுதலாகக் கொழுத்திருந்த தோடு அவர்களின் குருதியில் கொலஸ்திரோவின் அளவும் வீழ்ச்சி
11
யடைந்திருந்தது. இந்த அதிசயமான கண்டுபிடிப்பினால் உந்தப்பட்ட நிகில், தொடர்ந்து ஆய்வுகளை மேற் கொள்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்றார்.
பல சிரமங்களின் பின்னர் Madi801 நகரிலுள்ள விஸ்கொன்ஸின் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை 5 Lit 53 Guig, Richard Atkinson என்பவரின் துணை நிகிலுக்குக் கிடைத்தது. Atkinson கூட மிகைக் கொழுப்புக்கு ஏதேனும் நோய்க் கிருமி காரணமாக இருக்கலாமோ என்ற எண்ணத்தில் ஆய்வுகளை நடாத்தி வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
நிகிலும் அட்கின்ஸனும் கூட்டா கச் செய்த ஆய்வுகள் இந்த வைரஸ் கொள்கைக்கு மேலும் ஆதாரங் களைத் தேடிக் கொடுத்துள்ளன. SMAM- வைரஸை இந்தியாவி விருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு வர அமெரிக்க அரசு அனுமதி வழங்க வில்லை. எனினும் பல நூறு பரிசோத னைகளின் பின்னர் அதே போன்ற வைரஸொன்று அமெரிக்காவிலும் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்
Grrr.
Ad-36 என்ற இந்த வைரஸைக் கோழிகள், சுண்டெலிகள், குரங்குகள் போன்ற பல்வேறு வகை விலங்கு களுக்கு அவர்கள் செலுத்திப் பார்த் தனர். வைரஸ் செலுத்தப்பட்ட விலங்குகளில் கொழுப்பு அதிகள வில் படிவதும் குருதியில் கொலஸ்தி ரோல் குறைவதும் எதிர்பார்த்தபடி யே நிகழ்ந்தன.
மேற்குறித்த விலங்குகளில் இவ்வைரஸ் அதிகளவு கொழுப்புப் படிவை ஏற்படுத்துவது உண்மை யென்றாலும் மனிதர்களிலும் இதே போன்ற விளைவு ஏற்படுமா என்பது

Page 8
சோதித்தறியப்படவேண்டியிருந்தது. தமது கருதுகோளை மேலும் சோதிப் பதற்காக விஸ்கொன்ஸின், புளோ ரிடா, நிவியோர்க் ஆகிய நகரங்களி லிருந்து தெரிவு செய்யப்பட்ட 313 மிகைக் கொழுத்தவர்களினதும் 92 ஒல்லியானவர்களினதும் குருதி மாதிரிகளை நிகிலும் அட்கின்ஸனும் பகுப்பாய்வு செய்து பார்த்தனர்.
ஒல்லியானவர்களில் f பேரில் மாத்திரமே Ad-36 வைரஸ் தொற்று காணப்பட்டது. ஆனால் கொழுத்த a fighlight 100 Grif இவ்வைரஸி னால் பாதிக்கப்பட்டிருந்தனர். அத் தோடுAd-36 வைரஸ் தொற்றியிருந்த கொழுத்தவர்களின் குருதியில் கொலஸ்திரோல் மட்டம் வீழ்ச்சி யடைந்திருந்தது.
மிகைக் கொழுப்புக்கும் வைரஸ் தொற்றுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதை மேற் குறித்த ஆய்வுகள் நன்கு எடுத்துக் காட்டியுள்ளன. எனினும் இது தொடர்பாகத் தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு மேலும் பல வருடங்கள் செல்லக்கூடும். நிகில் துரந்தர், ரிச்சர்ட் அட்கின்ஸ்ன் ஆகியோரின் ஆய்வுகள் பற்றிய அறிக்கை 2000 ஒகஸ்ட் மாதத் gQasio Garsfaujögs International Journal of Obesity என்ற வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றியவர் களில் குருதியிலுள்ள கொலஸ்தி ரோல் குறைவடைவது எப்படி என் பது தான் தெளிவாகத் தெரியவில்
லை, கொலஸ்திரோல் கரைக்கப் பட்டு நீக்கப்படுமாயின் அது நன்மை யானதே. அப்படியின்றி அது குருதிக் குழாய்களின் சுவர்களில் போய் படிவுறுமாயின் தீங்கையே ஏற்படுத் தும். YA
ஏற்கனவே ஓரளவு கொழுத்துள் னவர்களில் தான் ந்த வைரஸ் மிகைக் கொழுப்பை உண்டாக்கு கின்றதுஎன்பதும் கவனிக்கத் தக்கது. யற்கையாகவே ஒல்லி யானவர் களுக்குள் இந்த வைரஸ் சென்றாலும் அவர்களில் கொழுப்புப் படிவு ஏற்படுவது மிக அரிதாகும்.
இந்த வைரஸினால் பாதிக்கப் பட்ட ஒருவர்தும்மும் போதும் இரு மும் போதும் அவரைச் சூழ உள்ள வர்களுக்கு அது தொற்றக்கூடும். அதற்காக, மிகையாகக் கொழுத்தவர் களுடன் உறவாடுவதற்கோ, அவர் களுடன் ஒன்றாக பஸ்ஸில் ரெயிலில் செல்வதற்கோ பயப்பட வேண்டிய தில்லை என்கிறார்கள் ஆய்வாளர் கள். ஏனெனில் வைரஸினால் பாதிக் கப்பட்டு மிகையாகக் கொழுத்து விட்டவர்கள் இந்த வைரஸைப் பரப்புபவர்களாக இருக்க மாட்டார் கள். மாறாக வைரஸ் தொற்றியும் கொழுக்காமல் ஒல்லியாக இருப்ப வர்களால்தான் மற்றவர்களுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே ஒல்லியானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் கொஞ் சம் கவனமாக இருப்பது நல்லதே
(5girls: New Scientist)
விற்பனை முகவர்கள் தேவை காத்தான்குடி, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நிந்த ஆர், வவுனியா,
பண்டாரவளை, பதுளை, வெலிமடை, அநுராதபுரம்,
பொலன்னறுவை
போன்ற அரும்பு ஒழுங்காகக் கிடைக்கப் பெறாத பிரதேசங்களில் விற்பனை முகவர்களாகச் செயற்பட விரும்புவோர் ஆசிரியருடன் தொடர்பு கொள்
எலாம். தொலைபேசி: 034-70151
E-mail: royal Geureka. Ik

பிரயாண நினைவுகள்
அமெரிக்காவின் பிட்ஸ்பேர்க் ரில் இடம்பெறவிருந்த 2000ம் ஆண் கான DMD நோய் பற்றிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நான் மீண்டும் அங்கு செல்லவேண்டிய தேவை ஏற்பட் டது. இந்தத் தடவை மேற்குத் திசையில் லண்டன் ஊடாக அத்திலாந்திக்கைக் கடந்து செல்லலாமே என யோசித்தேன். "அடுத்த தடவை அமெரிக்காவுக்கு வரும் போது கட்டாயம் சிகாகோ நகருக்கு வாருங்கள்" என அங்குள்ள எனது ஊர் அன்பர்கள் ஏற்கனவே அழைப்பு விடுத் திருந்தனர். எனவே பிட்ஸ்பேர்க் மாநாட் டின் பின்னர் சிகாகோவுக்கும் அங்கிருந்து லொஸ் ஏஞ்ஜலிஸ்"க்கும் செல்லும் வகையில் பிரயான ஏற்பாடுகளைச் செய்தேன்.
நான்சென்ற பூரீலங்கன் எயார்லைன் வின் எயார்பஸ் வகை விமானம் கட்டு நாயக்கவிலிருந்து நண்பகலில் புறப்பட் டது. எங்கும் தரிக்காமல் நேரடியாக லண்டன் செல்லும் அந்தப் பிரயா னத்திற்கு சுமார் 104 மணித்தியாலம் எடுக்கும் எனக் குறிப்பிட்டிருந்தனர். அதற் குள் பகலுணவு, மாலை டிபின், இர வுணவு என மூன்று தடவைகள் உணவு பரிமாறினார்கள், யன்னலுடாகத் தெரிந்த தரைத்தோற்றஅமைப்புக்களையும் முன் னால் இருந்த சிறிய TVயில் ஒளிபரப் பப்பட்ட நிகழ்ச்சிகளையும் ரசித்துச்சென் றதால் நேரம் போவது முன்போல் சிரம மானதாக இருக்கவில்லை. எனது பக் கத்து ஆசனம் காலியாக இருந்ததனால் கையைக் காலை நீட்டி அமர்ந்துகொள் வதற்கு வசதி கிடைத்தது.
ಲಿ0ು ತಿನ್ದಿಕ್ಕಿ
*。釜 リ。
- SKY| நீகம்
13
്റ്റ്
醇
ኋነ ;
'
000 மீற்றர் உயரத்தில் சுமார் 960km' மணி வேகத்தில் பறந்தது. பிரான்ஸைக் கடந்து இங்கிலாந்தை நெருங்கியபோது அது தாழ்வாகப் பறக் கத் தொடங்கியது. ஆங்கிலக் கால்வா யைக் கடக்கும் போது பிரான்ஸின் Calais இங்கிலாந்தின் Dower ஆகிய பகுதிகள் மிகநெருக்கமாக இருப்பது போல் தென் பட்டன. இங்கிலாந்தை அடைந்ததும் விமானம் லண்டன் மாநகரின் மீது மிகத் தாழ்வாகப் பறந்தது. தேம்ஸ் நதியும் அதன் கழிமுகமும் தெளிவாகத் தெரிந் தன. இறுதியாக விமானம் ஹீத்ரோ விமா ன நிலையத்தில் தரையிறங்கிய போது லண்டன் நேரப்படி மாலை 5.30 ஆகியிருந் தது. ஆனால் எனது கடிகாரமோ இரவு 10.3ஐயே காட்டியது.
நான் லண்டனிலிருந்து நிவ்யோர்க் நோக்கிச் செல்லவேண்டிய அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானம் மறுநாட் காலை 8.00 மணிக்கே புறப்படுவதாக இருந்தது. அதுவரைவெளியே சென்றுவர முடியாது ஒன்றும் விமான நிலையத் திலேயே இரவைக் கழிக்க வேண்டும் என்றும் எனது பிரயான முகவர்அறிவுறுத் தியிருந்தார். இது பற்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசாரித்தபோது அவர்களும் அப்படித்தான் கூறினார்கள்.
எனினும் 14 மணித்தியாலங்களை விமானநிலையத்தில் உட்கார்ந்தே கழிப் பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியா திருந்தது. எனவே ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று எண்ணி, கையோடு கொண்டு சென்றிருந்த சிறுபையைத் தூக் கிக்கொண்டு பிரிட்டிஷ் குடிவரவு அதி

Page 9
காரியொருவரை அணுகினேன். "எனக்கு பிரிட்டிஷ் வீஸா இருக்கின்றது. நான்
வரலாமா?" என்று தயக்கத்தோடு அவரி டம் கேட்டேன். "அருமையான யோச
னை நன்றாகப் போய்வாருங்கள் என்று: கூறிய அவர் எனது பாஸ்போர்ட்டில் முத் திரையைக் குத்தி என்னை வாழ்த்தி வழி யனுப்பி வைத்தார்.
எதிர்பாராமல் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நான் விமானநிலையத்தை விட்டு வெளி யேறினேன். இரவைக் கழிப்பதற்கு எங்கு செல்வது எனத் திண்டாடவேண்டிய அவ சியம் இருக்கவில்லை. அரும்பின் அபி மான வாசகரும் எனது முன்னாள் மான வியுமான விஞ்ஞான ஆசிரியை ஒருவர் தனது கணவர், பிள்ளைகளுடன் லண்ட னில் நீண்டகாலமாக வசித்து வருகின் றார். விமான நிலையத்திலிருந்து போன் பண்ணினால் 20 நிமிடங்களில் வந்து அழைத்துச் செல்ல முடியும் என அவர் ஈ மெயில் மூலம் அறிவித்திருந்தார். எனவே நான் அவருக்கு போன் பண்ணினேன். கூறியது போலவே கணவனும் மனைவி யும் காரில் வந்து என்னை அழைத்துச் சென்றனர். சுமார் 10 வருடங்களுக்குப் பின் அவர்களைக் கண்டதில் எனக்கு ஏகப் பட்ட சந்தோஷம், அவர்களுக்கும் அப் படித்தான் இருந்திருக்க வேண்டும்,
லண்டன் நகர வீதிகளினூடாகச் செல்லும் போது புராதன நகரொன்றில் இருப்பது போன்ற எண்ணமே ஏற்பட் டது. பாதை நெடுகே இருந்த பெரும்பா லான வீடுகளின் முன்பகுதிக்ள் மிகப் பழைய தோற்றத்திலேயே காணப்பட் டன. தமது பாரம்பரிய கட்டடக் கலை வடிவங்கள் பேணப்பட வேண்டும் என் பதில் பிரிட்டிஷ்காரர்கள் பிடிவாத மாக இருக்கிறார்களாம். "அமெரிக்க நகர் களைப் பார்த்துப் பழகிய உங்களுக்கு லண்டனைக் கண்டால் கொழும்பி லிருந்து மஹியங்கனைப் பக்கம் போனது
போன்ற உணர்வுதான் ஏற்படும்" என்று
நண்பரொருவர் ஹாஸ்யமாகக் கூறியது வெளியேபோய் இரவைக்கழித்துவிட்டு நினைவுக்குவந்தது:
நான் சென்ற வீடு வடழேற்குத் နူ၍f, திருந்த்து அதன் முன்பகுதியும் பழை மைத் தோற்றத்துடனேயே காணப்பட் டது. எனினும் உட்பகுதி நவீனமுறையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆசிரியையின் மூத்த மகனுக்கு என்னைக் கண்டதும் பெரிய சந்தோஷம். ஏனெனில் சில மாதங்களாக அவர் என்னோடு ஈ-மெயில் மூலம் அடிக்கடி தொடர்புகொண்டு வந்தார். அங்கு குளித்து உடைமாற்றிக் கொண்டு இரவுணவையும் உட்கொண் டேன். அது கோடைகாலமாக இருந்த தால் பி. ப. 9.00 மணிக்குப் பின்னரே
இரவாகியது. ஆனால் அதிகாலை 4.00
மணிக்கே சூரியன் உதித்துவிடுகின்றது.
மறுநாட்காலை ஆறு மணிக்கு மீண் டும் ஹீத்ரோ விமானநிலையத்தை நோக் கிச் சென்றேன். அமெரிக்காவுக்கு விமா னம் ஏற முன் சோதனைக் கெடுபிடிகள் கொஞ்சம் மும்முரமாகவே நடப்பது வழக்கம். எனினும் பயணப் பொதி களைத் திறந்து சோதிப்பது மிக அரிது. ஏதோ ஒரு வகை இரசாயனப் பதார்த்தம் தோய்க்கப்பட்ட தாள் துண்டொன்றால் பொதிகளின் வெளிப்புறங்களைத் தடவு வார்கள். பின்னர் அத்தாளை ஒர் இலக்ட் ரோனிக் சாதனத்தினுள் வைப்பார்கள். அது அசாதாரணமான விளைவுகளைக் காட்டாத பட்சத்தில் உள்ளே செல்ல அனு மதிப்பார்கள். வெடிபொருட்கள் உள்ளே இருக்கின்றனவா என்பதை அறிந்து கொள்ளவே இச்செயன்முறை உபயோ கிக்கப்படுகின்றது என நினைத்தேன்.
அமெரிக்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான அந்த போயிங்-747 வகை ஜம்போஜெட் விமானம் உரியநேரத்தில் பயணத்தை ஆரம்பித்தது. பல்வேறு நாட் டவர்களும் அதில் பிரயாணம் செய்தனர்.
அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானங்
14

களில் கிடைக்கும் உணவு, பானங்கள் ஏனைய உபசரிப்புக்கள் என்பவற்றோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது நமதுபூரீலங் கன் எயார்லைன்ஸின் உபசரிப்பு முறை எவ்வளவோ மேலானது என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன். எமது விமானப் பணிப்பெண்களின் பணிவும் கனிவும் அங்கு அவ்வளவாகக் காணப்படவில் லை. இந்த வகையில் அவர்கள் இலங் ᏯᎦhᏍᏒ . ಟ್ಲಿ: சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.
அத்திலாந்திக் சமுத்திரத்தின் மீதாக சுமார்8 மணித்தியாலங்கள் பறந்த பின்னர் விமானம் நிவ்யோர்க்கிலுள்ள ஜோன் எப். கென்னடி சர்வதேச விமான நிலை யத்தில் போய் இறங்கியது. உலகிலுள்ள மிகப்பெரிய விமான நிலையங்களுள் இதுவும் ஒன்றாகும். அமெரிக்காவுக்குச் செல்லும் ஒருவர் இறுதியாகச் சென்றடை யும் இடம் எதுவாக இருப்பினும் முத வில் போயிறங்கும் விமான நிலையத் திலேயே குடிவரவுப் பகுதியினரின் நுழைவு அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
5 வருடங்களுக்குச் செல்லுபடியா கின்ற அமெரிக்க வீஸா என்னிடம் இருந் தது. எனினும் குறித்த பிரயாணத்தின் போது எவ்வளவு காலம் அந்நாட்டில் தங் கலாம் என்பதை விமான நிலையத்தில் றங்கிய பின்தான் நிர்ணயிப்பார்கள். &: தடவை 3 மாதங்கள் தங்கியிருப் பதற்கு அனுமதிதந்தார்கள். அதன்பின்னர் சுங்கப்பகுதியினரின் சோதனைகளை முடித்துக்கொண்டு பிட்ஸ்பேர்க்நோக்கிச் செல்லும் அடுத்த கட்டத்திற்குத் தயாரா னேன்.
நிவ்யோர்க்கிலிருந்து பிட்ஸ்பேர்க் செல்வதற்கு அமெரிக்கன் ஈகிள் என்ற விமான சேவையையே ஏற்பாடு செய் திருந்தனர். அமெரிக்கன் ஈகிள் என்பது அமெரிக்கன் எயார்லைன்ஸ்ஸின் கூட்டு நிறுவனமொன்றாகும். பிட்ஸ்பேர்க்செல்
லும் விமானத்தை நோக்கி பஸ் மூலமே எம்மை அழைத்துச்சென்றனர். அமெரிக்க விமான நிலையங்களில் இவ்வாறு பஸ் மூலம் விமானத்துக்கு அழைத்துச் செல் வது மிக அரிதாகவே நிகழ்கின்றது. பொது வாக விமான நிலையக் கட்டடத்திலிருந் தே நேரடியாக விமானத்துக்கு ஏறுவதற் குரிய வசதிகள் அங்குள்ளன. அந்தச் சிறிய விமானத்தைக் கண்டவுடன் எனக்கு மன தில் ஒருவகை ஏமாற்றமே ஏற்பட்டது. அதில் ஏறி உட்கார்ந்ததும் ஏதோ எங்கள் நாட்டுத்தனியார் பஸ் வண்டியொன்றில் ஏறியது போன்ற உணர்வே ஏற்பட்டது.
அந்த SAB-80 வகை விமானத்தின் உட்பகுதி மிக ஒடுக்கமாக இருந்தது. ஒரு வரிசையில் 3ஆசனங்கள் வீதம் மொத்தம் 8 வரிசைகள் இருந்தன. நடுவயது தாண் டிய ஊழியர் ஒருவர் பஸ் நடத்துனரைப் போன்று ஆசனங்களில் இருந்தவர்களைத் திருப்பித் திருப்பி விரல் நீட்டி எண்ணிக் கொண்டிருந்தார். அவரது நடத்தையைக் காணும் போது எமது பஸ் நடத்துனர்கள் தான் மனத்திரையில் தோன்றினர். பிர யாணி ஒருவர் வந்துசேரத் தாமதமான தால் விமானம் குறித்த நேரம் கடந்தே
புறப்பட்டது. அவ்விமான நிலையத்தில்
சூழவிருந்த விசாலமான ஜெட் விமானங் களோடு ஒப்பிடும் போது எமது விமா னம் சுறாக்களுக்கு மத்தியில் ஒரு நெத்தலி மீன் போன்றே தோன்றியது.
ஒருவாறு விமானம் மேலே கிளம் பிப் பறக்கத் தொடங்கியது. ஜெட் விமா னங்களைப் போலன்றி ஒரளவு தாழ் வாகவே அது சென்றது. ஜன்னலுக்கருகில் அமர்ந்திருந்த நான் கீழே தெரியும் நிலப்பரப்புக்களை -குறிப்பாக வளைந்து நெளிந்து செல்லும் நீண்ட ஆறொன்றை அவதானித்தவாறே சென்றேன். திடீரென விமானம் ஆட்டம் காணத் தொடங்கியது. Air tublance என்னும் வளிக் குழப்ப முள்ள பகுதியொன்று எதிர்ப்பட்டுள் ளதாக விமானி அறிவித்தர்ர்.

Page 10
திடீர் திடீரென விமானம் கீழ் நோக்கி விழுவதும் மேலெழும்புவதுமாக இருந்தது. இடுப்பைச் சுற்றிக் கட்டி யிருந்த பட்டிகூட கழன்று வந்துவிடும் போல் தோன்றியது. ஆசனத்தின் அடிப் பகுதியை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டேன். எனினும் ஏற்பட்ட குலுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில் லை, குடல் முழுவதும் வாய்க்கு வந்து விடுமோ என்று நினைத்தேன். பக்கத்தி விருந்த பெண் பிரயாணிகள் சிலர் கூச்ச லிடத் தொடங்கினர். சுமார் 30 நிமிடங்
களுக்கு மேல் இந்த அவதியை அனுப விக்க வேண்டியிருந்தது.
எனது பிரயாணத்தின் அடுத்த கட் டத்தை விமானத்தில் செல்லாமல் பஸ் விலோ ரெயிலிலோ செல்வதுதான் நல் லது என்றுகூட எண்ணலானேன். அவ் வளவு சலிப்பையும் விரக்தியையும் ஏற் படுத்தியது அந்த அனுபவும். சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் விமா னம் ஒருவாறு பிட்ஸ்பேர்க்கில் தரையிறங் கியது. அதன் பின்தான் மனதில் ஆறுதல் ஏற்பட்டது.
(தொடரும்)
பாராட்டுக்கள்
செவ்வாய் போன்ற கோள்களில் நுண்ணறிவுள்ள உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்குரிய நவீன தொழில்நுட்ப மொன்றைத் தாம் கண்டு பிடித்துள்ளதாக அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதைக் கேள்வியுற்றதும் உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களிட மிருந்தும் பாராட்டுத்தந்திகள் நாளாவில் வந்து குவிந்தன.
இலங்கை ஜனாதிபதியிடமிருந்தும் தந்தியொன்று பறந்தது.அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
"மிகப் பயனுள்ள புதிய தொழில்நுட்பமொன்றைக் கண்டுபிடித்தது குறித்து மனமாரப் பாராட்டுகிறேன். இத்தொழில்நுட்பத்தை எமது பாராளுமன்றத்தின் விடயத்திலும் பயன்படுத்த முடியுமா என்பது பற்றி தயவு செய்து அறிவிக்கவும்."
வழிப் பறி இரவு நேரத்தில் அந்த வர்த்தகர் தனியாகக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தார். பாதையோரத்தில் நின்ற ஓர் இளைஞன் கையை அசைத்துத் தனக்கு வண்டியில் இடம் தர முடியுமா எனக் கேட்டான். அவனுக்கு உதவ நினைத்த அந்த மனிதர்காரை நிறுத்தி இளைஞனை முன் ஆசனத்தில் அமர்த்திக்கொண்டு பிரயாணத்தைத் தொடர்ந்தார்.
சிறிது தூரம் சென்றதும் வர்த்தகருக்கு இளைஞன் மீது ஓரளவு சந்தேகம் ஏற்படலாயிற்று. இரண்டுஆசனங்களுக்கும் இடையில் வைத்திருந்த தனது கோட் சட்டையின் பொக்கட்ட்ை மெதுவாகத் தடவிப் பார்த்தார் அவர் அங்கே அவரது பணப்பையைக் காணவில்லை. அவருக்குத் தூக்கிவாரிப் போட்டதுபோல் இருந்தது.
உடனே காரை நிறுத்திய அவர், "டேய் மரியாதையாகப் பர்ஸைத் தந்துவிட்டுக் கீழே இறங்கு இல்லாவிடில் உன்னை என்ன செய்கிறேன் பார்' என்று ஆவேசத்துடன் மிரட்டினார். திடுக்கிட்ட இளைஞன் ஒன்றும் பேசாமல் தனது சட்டைப் பைக்குள் வைத்திருந்த பர்ஸை எடுத்துக் கொடுத்துவிட்டுக் காரின் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான்.
அவசரமாகக் காரைச் செலுத்திச் சென்று தன் வீட்டை அடைந்த வர்த்த்கர், தனக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தைத் தன் மனைவியிடம் கூற ஆரம்பித்தார். அவரை இடைமறித்த மனைவி'அதெல்லாம் இருக்கட்டும். இன்று உங்கள்'பர்ஸை கட்டிலின் மேல் வைத்துவிட்டுப் போய்விட்டீர்களே! ஏனிப்படி மறதி உங்களுக்கு?" என்று கேட்டாள். வாயடைத்துப் போனார் விர்த்தகர்.
6.

சிறுகதை இலக்கியத்துக்கு மெருகூட்டிய
($[[DITUର୍ଲ) ଭ୍ୟୁ)[[ସ୍ପି
Guy de Maupassant
பத்தெரன்பதாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை உலகச் சிறுகதை இலக்கியத்தின் மீது அபரிமிதமாகச் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ள புனைகதை ஆசிரியர்களுள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கீ த மோபஸ் ஸ்ான் முதலிடம் வகிக்கின்றார். பிரெஞ்சு மொழியில் பல நாவல் களையும் சிறுகதைகளையும் எழுதி வெளியிட்ட இவரது இயற்பெயர் Henri René Albert (GTGărif Gg Ga07 அல்பேஃ) என்பதாகும்.
இவர் 1850ம் ஆண்டு பிரான் வின் நோர்மண்டி பகுதியில் உள்ள Fécamp என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் நடுத்தர வகுப் பினராகவும் பண்பாடு மிக்கவர்களா கவும் திகழ்ந்தனர். பாடசாலைப் பருவத்தில் மோபஸ்ஸான் திறமை கள் எதனையும் வெளிக்காட்ட வில்லை, பாடசாலைக்குச் செல்வதற் குப் பதிலாக ஆங்கிலக் கால்வாயில் அமைந்திருந்த ஓர் உல்லாசப் பயணத் தரிப்பிடத்தில் தங்கியிருந்துகொண்டு நீந்தவும் படகோட்டவும், மீன்பிடிக் கவும்ே அவர் விரும்பினார்.
பரிஸ் நகரில் அவர் சட்டத்துறை யில் கல்வியை மேற்கொண்டிருந்த போது பிரெஞ்சு - பிரஷ்ய யுத்தம் (18701871) ஆரம்பித்ததால் அவரது படிப்புக் குழம்பியது. போரில் அவ ரது குடும்பச் சொத்துக்கள் யாவும் அழிவுற்றன. தன் விளைவாக அரசாங்கக் காரியாலயமொன்றில்
蠱
இலிகிதராக வேலை செய்யவேண் டிய நிர்ப்பந்தம் மோபஸ்ஸானுக்கு ஏற்பட்டது. அலுப்புத் தரும் அந்த வேலையிலிருந்து தனது சிந்தனை களைத் திசைதிருப்புவதற்காக அவர் நீந்துதல், படகோட்டுதல் என்பவற் றோடு எழுத்துத் துறையிலும் ஈடுபட
all IT FնIIT T
பிரெஞ்சு நாவலாசிரியரான Gustave Flaubert & TešТLJEuff (BLDIT LIGU ஸானின் தாயாருடைய சிறுபருவ நண்பராக இருந்தவர்" அவர் 1870; örgü Gırrı Lustugur Gai G7 L/r?Giu நகர இலக்கிய சமூகத்துக்கு அறி முகஞ் செய்து வைத்தார். அக்காலத் தைய பரிஸ் நகர இலக்கிய சமூகத் 8göı Lğı Emile Zola GTçSTp g)aujiğu கர்த்தாவின் ஆதிக்கம் பரவலாகக் காணப்பட்டது. இவர் இயற்கை வாதம் (Naturalism) என்ற கோட்
பாட்டை இலக்கியத்துறையில் கடைப்பிடித்து வந்தார். மனித நடத் தையைக் கட்டுப்படுத்துகின்ற
இயல்பூக்கங்கள், மனவெழுச்சிகள் போன்ற இயற்கைச் சக்திகளைச் சித்தரிப்பனவாகப் புனைகதைகள் அமைய வேண்டும் என இக்கோட் பாடு வலியுறுத்தியது.
க் கோ ட்ப ாட்டினால் கவரப்பட்ட மோபஸ்ளபான் விரை வில் தானும் ஓர் இயற்கைவாதியாக மாறினார். அவர் எழுதிய "Boule de suit (கொழுப்புப் பந்து) என்ற கதை 1880ம் ஆண்டு இயற்கைவாதிகளால்

Page 11
G}Gussou7)L'ILL.L. Les Soirées de Medan என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றது. இக்கதை மோபஸ் ஸ்ானைத் திடீரெனப் புகழின் உச் சிக்கே கொண்டு சென்றது. Emile Zolaவுக்கு அடுத்ததாக பிரான்ஸிலே மிகவும் ஜனரஞ்சகமான கதாசிரி பராக மோபஸ்ஸான் மாறினார்.
அடுத்து வந்த பத்தாண்டுகளி லும் வியக்கத்தக்க அளவு ஆக்கங் களை மோபஸ்ஸான் எழுதி வெளி யிட்டார். இவற்றுள் சுமார் 300 சிறு கதைகள், 200 செய்தித்தாள் கட்டுரை கள், 6 நாவல்கள், 3 பிரயான நூல்கள் என்பன அடங்கின. அவருடைய நூல்கள் நாடெங்கும் பெருமளவில் விற்பனையாகின. இதனால் அவர் பெருஞ் செல்வந்தராக மாறினார். தனது செல்வத்தையெல்லாம் படா டோபமாகச் செலவுசெய்த அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ளத் தவறி விட்டார்
இறுதியில் சிபிலிஸ் என்னும் சமூக நோயினால் பிடிக்கப்பட்ட மோ பஸ்ஸான் 1880களின் இறுதிப் பகுதியில் மனநோய்க்குரிய அறிகுறி களைக் காட்ட்லானார். 1892 புது வருடத்தினத்தில் தற்கொலை செய்ய அவர் எடுத்த முயற்சி தோல்வியுற் றது. அதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையொன்றில் அனு மதிக்கப்பட்டார். அங்கிருந்தபோது 1893ம் ஆண்டில் அவர் தனது 43வது வயதில் காலமானார்.
மோ பஸ்ஸானின் இலக்கிய ஆக்கங்களில் தெளிவான தத்துவங் களோ கோட்பாடுகளோ புலப்படு வதில்லை. எனினும் அவருடைய சமூகக் கண்ணோட்டம் நேர்மை யானதாகவும் மாறாத் தன்மை புடையதாகவும் காணப்பட்டது.
18
அவருடைய பார்வையில் இந்த உலகம் இரக்கமற்றதாகவும் வரண்டு போனதாகவும் நம்பிக்கை தராத தாகவுமே காட்சி தந்தது. கருணை மிக்க இறைவனொருவனின் அத் தாட்சி எதுவும் காணப்படாத இவ் வுலகில் மனித முயற்சிகள் யாவும் பயனற்றவை எனவும் இறுதியில் அவை யாவும் அர்த்தமற்றவையாக மாறும் எனவும் மோபஸ்ஸான் கருதினார்.
சில மனிதர்களின் ஆத்மீகப் பெருந்தன்மையையும் துணிவையும் மோபஸ்ஸான் போற்றிப் புகழ்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய் தன. எனினும் அவ்வாறான மனிதர் கள் ஒருபோதும் நடுத்தர வகுப்பின ராகவோ உயர் வகுப்பினராகவோ இருந்ததில்லை. அத்தோடு மனித ஆத்மாக்கள் கீழ்த்தரமான இயல்பூக் கங்களால் தோற்கடிக்கப்பட்டுப் போவதையே அவரது கதைகள் பெரும்பாலும் சித்தரித்தன. "Boule de Suit' என்ற அவரது கதையில் ஒன்றாகப் பிரயாண்ம் செய்யும் நடுத் தர வகுப்புக் கனவான்களைவிட இழிதொழில் புரியும் பெண்ணொ ருத்தியே மிக மேன்மையானவள் என்ற அபிப்பிராயத்தை அவர் வாசகர் மனதில் தோற்றுவிகின்றார்.
மோ பஸ்ஸானின் சிறுகதை களுள் உலகளாவிய ரீதியில் புகழ் பெற்றுப் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்துள்ள கதை "La Paure" (கழுத்து மாலை) என்பதாகும். இக்கதையில் ஒரு பெண் ஆடம்பர விருந்தொன்றில் கலந்துகொள்வதற் காக தோழி ஒருவரிடம் விலைமதிப் பற்ற வைர மாலையொன்றை இரவ லாக வாங்குகின்றாள். துரதிர்ஷ்ட வசமாக அம்மாலை காணாமற் போகவே மிகுந்த கடன்பட்டு அதே

போன்ற மாலையொன்றை வாங்கி, தோழிக்கு ஒப்படைக்கிறாள். பட்ட கடனை அடைப்பதற்காக உழைக் கும் அப்பெண்ணும் அவளது கண வனும் வறுமையின் அடித்தளத்துக் கே போய்விடுகின்றனர். தான் இரவலாகப் பெற்றது ஒர் இமிட் டேஷன் மாலையே என்ற உண்மை யைப் பல ஆண்டுகள் கழித்துத்தான் அப்பெண் தன் தோழியிடமிருந்து தெரிந்து கொள்கிறாள். "அவர் களுடைய சோகமான நிலைக்குக் காரணம் அவர்களது தலைவிதியா அல்லது அப்பெண்ணின் வீண் பகட்டும், போலிப் பெருமையுமா என்பதை வாசகர்களே தீர்மானித்
பிரிட்டனிலும் ஐக்கிய அமெரிக்
காவிலும் மோபஸ்ஸான் ஒரு சிறந்த சிறுகதையாசிரியா ' மதிக்கப்படுகின்றார். எனினும் சீவி ரது தாய்நாடான டிரான்ஸில் ஆTே சிறந்தவொரு வலாசிரியராகவே போற்றப்படுகின்றார். அவரது st orgboig Gir Une Vie (9o "o Gams - 1883), Bel-ami (297 49"o" P*' Lusit - 1885), Pierre et Jeal டரும ஜோனும் 188)என்பது புகழ்பெற் றனவாகும். இவற்றுள் இறுதியாகக் குறிப்பிடப்ப்ட்ட்தே மோ' னின் படைப்புக்களுள் தலைசிறந்தது &T ցիր இலக்கிய a)*" கிருது
துக்கொள்ள நேரிடுகிறது. கின்றனர்.
- طيسيسيسي
நான் யார் தெரியுமா? ~~~~~ ங்களோடு மிஸ்டர்ஸில்வாவும்மிஸிஸ் ஸில்வாவும் தமது பெட்டி பொட்ட?"
G ஸ்வாவும் தமது Լդ էք ாத்திருந்தனர்.
துபாயிலிருந்து கொழும்பு செல்வதற்காக விமான நிலையத்தில் அங்குள்ள பிரயாணிகள் தங்குமறையில் ஒரு கம்பியூட்டருக்கு அருகே டிருந்த அறிவித்தல் பலகை அவர்களது கவனத்தைக் கவர்ந்தது. "சி நோட்டைச் செலுத்தினால் உங்களைப் பற்றி நீங்கள் கேட்கும் *ே இந்தக் கம்பியூட்டர் பதில் சொல்லும்" என அதில் குறிப்பிடப்பட்டிரு?
மிஸ்டர்ஸில்வா ஆவலோடு ஒரு டொலர் நோட்டை உள்ளே ፴]ቻŠW "நான் யார் தெரியுமா?" என்று கம்பியூட்டரிடம் கேட்டார்.
"நீங்கள் மிஸ்டர் பீட்டர்ஸில்வா, கொழும்புக்குச்செல்லும் விமீ" காத்திருக்கிறீர்கள்' என்று தெளிவாகப் பதில் வந்தது கம்பியூட்டரிடமி
ஸில்வா தம்பதிகளுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. "நா பார்க்கிறேனே" என்று கூறிய மிஸிஸ்ஸில்வா டொலர் நோட்டைச்ெ "நான் யார் சொல்லு பார்ப்போம்" என்றார்.
"நீங்கள் மிஸிஸ் மாலினி வில்வா, நீங்களும் கொழும்பு செல்ஜ் துக்காகக் காத்திருக்கிறீர்கள்' என்றது கம்பியூட்டர்.
"அதே பதிலைச் சொல்லுமோ வேறேதும் சொல்லுமோ ஒருமுறை சோதித்துப் பார்ப்போமா?" என்று தம் கணவனைத்தூண்டி ஸில்வா, டொலர்நோட்டு கைவசம் இல்லாததால் அங்குமிங்கும் தை மாற்றி வந்த மிஸ்ட்டர் ஸில்வா நோட்டைச் செலுத்திவிட்டு கூறு பார்ப்போம்” எனக் கம்பியூட்டரிடம் கேட்டார்.
"நீங்கள் மிஸ்டர் பீட்டர்வில்வா, கொழும்பு செல்லக் காத்தி ஆனால் உங்கள் விமானம் சற்று முன்னர் புறப்பட்டுச் சென்றுவிட்
கம்பியூட்டர்.
இவக்கப்பட் டொலர் ஒள்விகளுக்கு
தீது,
த்திவிட்டு
வித்துக்காகக் ருந்து னும் கேட்டுப் லுத்திவிட்டு
ம் விமானத்
ன்று மீண்டும் ாார்மிஸிஸ் அலைந்து பணத் "if it யாரென்று
ருக்கிறீர்கள். ' என்றது

Page 12
Modern Airplanes
அமெரிக்காவின் Boeing விமா னக் கம்பனி 1933இல் அறிமுகப் படுத்திய, முழுமையாக உலோகத்தி னாலான Boeing-247 என்ற விமா னமே முதலாவது நவீன போக்கு வரத்து விமானமாகக் கருதப்படுகின் றது. பறக்கும் போது சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்ளக்கூடிய இவ் விமானத்தில் 10 பேர் பயணம் செய்ய முடியுமாக இருந்தது. உடனடியாக United Air Lines sTarso esso) oli, விமானச் சேவை நிறுவனம் அறுபது Boeing-247 விமானங்களுக்கு ஒடர் கொடுத்தது. இந்தப் பெரிய ஒடரின் காரணமாகBoeingநிறுவனத்தினால் வேறு எவரது தேவைகளையும் நிறைவேற்ற முடியாமற் போய்விட் L-தி-
இந்நிலையில் அமெரிக்காவின் மற்றுமொரு விமான சேவையான Trans World Airlines (TWA), 3,35) போர்னியாவில் Long Beach என்ற இடத்தில் அமைந்திருந்தMcDonnel Douglas என்ற விமானத் தயாரிப் பாளரை நாடியது. TWA இன் தேவையை நிறைவேற்றுவதற்காக Douglas solucify (Egg Gigi DC-1,
DC-2, DC-3 ஆகிய விமான வகை
களை உற்பத்தி செய்து வழங்கியது.
விமானப் போக்குவரத்து வர லாற்றில் பெருஞ் சாதனை படைத்த „RLDTFTLDT5, Douglas gešr DC-3 கருதப்படுகின்றது. 21 பிரயாணிகள் செல்லக்கூடிய இந்த விமானத்தில்
DC-3
1000 - பரிவலுவுடைய இரண்டு பெற்றோல் என்ஜின்கள் பொருத்தப் பட்டிருந்தன. 1930களில் விமானப் போக்குவரத்துத் துறையில் புகழ்க் கொடி நாட்டிய இந்த DC-3 வகையில் சுமார் 40,000 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. 1960 - 70களில் இலங்கையில் உள்நாட்டுப் போக்கு வரத்துக்கு DC-3 விமானங்களே பயன்படுத்தப்பட்டன. சில நாடு களில் இன்றும் DC-3 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதைக் காணலாம்.
1940இல் போயிங் கம்பனி ssair Boeing-307 Strotoliner GTaip புது விமானத்தை அறிமுகஞ் செய் தது. வளியமுக்கம் சீர்செய்யப்பட்ட இவ்விமானத்தில் 33 பேர் செல்ல முடியும். இது சுமார் 6100 m உயரத்தில் மணிக்கு 32km வேகத்தில் செல்லக்கூடியதாக இருந்தது.
ரண்டாம் உலகப் போரின் போது போர் விமானங்களின் உற் பத்தி வருடத்துக்கு 50,000 அளவில் அதிகரித்தது. போர் முடிவடைந்த பின் பெரும்பாலான இராணுவப் போக்குவரத்து விமானங்கள் வர்த் தகப் போக்குவரத்துச் சேவைகளுக் குப் பயன்படலாயின. Douglas கம் LI gisf7u57 Gir DC-6, " Lockheed · 495) Lu Gufufsir Constellation - FLUGF) au இவ்வாறு பயன்பாட்டுக்கு வந்த விமான வகைகளுள் முக்கியமான வையாகும். இவை கடல் கடந்து
நெடுந்தூரம் பறக்கக்கூடியனவாக
2O
இருந்தன.
 

யுத்த காலத்தில் மேற்கொள்ளப்
பட்ட தொழில்நுட்ப விருத்திகள்
காரணமாக ஜெட் என்ஜின்கள் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தன. இதன் விளைவாக விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியே ஏற்பட்டது எனலாம். 1952இல் பிரிட்டனில் தயாரிக்கப் LL". De-Havilland Comet GTGår ugi முதலாவது பொதுப் போக்குவரத்து ஜெட் விமானமாகும். நான்கு என் ஜின்கள் பொருத்தப்பட்ட இவ்விமா னம் மணிக்கு 885 km வேகத்தில் பறக்கக் கூடியதாக இருந்தது. எனினும் இரு Comet விமானங்கள் நொருங்கி வீழ்ந்த காரணத்தால் அவை சேவையிலிருந்து வாபஸ் பெறப்பட்டன.
அதேவேளை அமெரிக்கத் தயாரிப்பாளர்களானBoeing மற்றும் Douglas நிறுவனங்கள் தமது ஜெட் விமான வகைகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தின. போயிங் கம் பனியின் Boeing-707 என்ற விமானம் 1958 ஒக்டோபரில் Pan American World AirwaySa Tair) filosug:Tip Tai முதன்முதலாகச் சேவையில் ஈடு படுத்தப்பட்டது. 112 பிரயாணி களைக் கொண்டு செல்லக்கூடிய இந்த நவீன விமானம் நிவ்யோர்க் கிலிருந்து லண்டன் செல்வதற்கு எடுக்கும் நேரத்தை அரைவாசியாகக் குறைத்தது. அக்காலத்தில் உருவில் மிகப் பெரியதாகக் கருதப்பட்ட Boeing-707 இல் ஜெட் என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. டக்ளஸ் கம்பனியினரின் DC-8 விமானமும் இதனை ஒத்ததாகவே இருந்தது.
குறுகிய தூரம் செல்வதற்கான ஜெட் விமானங்களுக்குக் கேள்வி ஏற்பட்ட போது போயிங் கம்பனி Boeing-727 என்ற மூன்று என்ஜின்
21
;1- ,","بيپيي+++++HTha======!-لا- ::"
as
الليفينشيطين طبيعية"
Boeing-747 Jumbo jet
விமானத்தையும் Boeing-737 என்ற விமானத்தையும் அறிமுகம் செய்தது. அதேவேளை ட்க்ளஸ் கம்பனிDC-9 என்ற வகையைத் தயாரித்துச் சந் தைப்படுத்தியது.
1960களின் பிற்பகுதியில் ஏற்பட் ட பெரிய திருப்பம் ஜம்போ ஜெட் கள் என அழைக்கப்பட்ட அகன்ற உட லுடைய விமானங்களின் உற்பத்தி யாகும். போயிங், மெக்டொன்னல் டக்ளஸ், லொக்ஹீட் ஆகிய மூன்று உற்பத்தியாளர்களும் த்தகைய அகன்ற உடல் விமானங்களைத் தயாரிக்கலாயினர். போயிங் தயா ரித்த Boeing-747 என்பதே ஜம்போ ஜெட் என்ற பெயரைப் பெற்ற முத லாவது விமானமாகும். நான்கு என் ஜின்களைக்கொண்ட இவ்விமானங் களை போயிங் கம்ப்னி இன்றும் உற்பத்தி செய்கின்றது.
மெக்டொன்னல் டக்ளஸின் DC-10 விமானம் பருமனில் ஒரளவு சிறியது. இது மூன்று என்ஜின்களைக் கொண்டது. இப்போது இது சிறிது மேம்படுத்தப்பட்ட வடிவில் MD-11 என்ற பெயரில் உற்பத்தி செய்யப் படுகின்றது. லொக்ஹீட் கம்பனியின் L-1011 Trista என்பதும் 3 என்ஜின் களைக் கொண்டது. அண்மைக் காலம் வரை எமது எயார் லங்கா நிறுவனம் L-1011 Tristar விமானங் களைச் சேவையில் ஈடுபடுத்தி வந் தது. லொக்ஹீட் நிறுவனம் இப் போது L-1011 விமானங்களை உற் பத்தி செய்வதில்லை.
1990களில் மக்டொன்னல் டக்ளஸ் கம்பனி இரண்டு என்ஜின்

Page 13
களைக் கொண்ட MD-80 விமானங் களை அறிமுகஞ் செய்தது. இவை குறுந்துரர சேவைகளில் ஈடுபடுத்தப் படுகின்றன. போயிங் நிறுவனம் Boeing-757 என்ற ஒடுங்கிய உடல் விமானத்தையும் Boeing-767 என்ற அகன்ற உடல் விமானத்தையும் உற்பத்தி செய்தது. இவையிரண்டும் ஈரென்ஜின் விமானங்களாகும். 1995இல் 400 பேர் செல்லக்கூடிய அகன்ற உடல் கொண்ட Boeing-777 அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஆரம்பித்த Airbus Idustrie என்ற நிறுவனம் 1970களில் A300 என்னும் அகன்ற உடல் விமானத் தை விருத்தி செய்தது. 1980 - 90களில் Airbus நிறுவனம் மேலும் பல நவீன விமான வகைகளை அறிமுகப்படுத் தியது. A-310, A-320 ஆகிய இரட் டை என்ஜின் விமானங்கள் இவற் றுள் குறிப்பிடத்தக்கவை.
பிற்காலத்தில் Airbus கம்பனி யினர் பருமனில் பெரிய A-330 வகை யையும் சி என்ஜின்களைக் கொண்ட A-340 வகையையும் உற்பத்தி செய் தனர். இப்போது பூரீலங்கன் எயார் ல்ைன்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் விமானங்கள் யாவும் Airbus உற்பத் திகளே என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் அந்நாடுகளின் சுதேச விமான வகைகள் சேவையில் ஈடுபடுத்தப் படுகின்றன. ரஷ்யாவின் Antonov, Tupollow, Ilyushin Jaisir Jatin
COCO"de SST புகழ்பெற்றவை. எனினும் அவை சர்வதேச ரீதியில் உபயோகிக்கப்படு வது குறைவு.
1976இல் பிரிட்டிஷ்- பிரெஞ்சுக் கூட்டுத் தயாரிப்பான Concor என்னும் மிகையொலிப் போக்கு வரத்து விமானம் (Super80nic Transport or SST) Gafayahu angl. FFGLIGj தப்பட்டது. இது ஒவியின் வேகத்ை தப் போல் இருமடங்கு வேகத்தில் பிரயாணம் செய்ய வல்லது. இது வரை காலமும் பிரிட்டிஷ் எயார் வேஸ் நிறுவனமும் எயார் பிரான்ஸ் நிறுவனமும் லண்டன் பரிஸ் நகரங்க ளுக்கும் நிவ்யோர்க்குக்கும் இடை (7) zij Concorde GTLDIT GRT spirg, Gin GITij: சேவையில் ஈடுபடுத்தின.
எனினும் கடந்த ஜூலையில் பரிஸ் விமானநிலையத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தை அடுத்துச் சகல கொன்கோர்ட் விமானங்களும் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. உலகின் முதலாவது மிகையொலிப் பிரயாணிகள் விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டTU-144 என்பதா கும். முதன் முதலாக விபத்துக்குள் ளான மிகையொலிப் போக்குவரத்து
விமானமும் இந்த TU-144 gigs.
யைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
மூளைக்கு வேலை-விடைகள்
(1), (50)(60) (18)(32)(20)(25)(44)(22)(52)
(4). LIT 400/= (7). 950/=(LIT
(3), 40 நிமிடங்கள் (6). A
(2).5791, 6802 (5). 35
 

வியட்னாம் யுத்தம் முடிவுற்று 85 வருடங்கள் கடத்துவிட்டன. எனினும் மாபெரும் வல்லரசான அமெரிக்காவைக்கட வியட்னாம் போன்ற சிறிய தாடொன்றினால் படுதோல்வியுறச் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய அந்தப் போர் அண்மைக் கால உலக வரலாற்றிலே ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதை ஒருபோதும் மறக்க முடியாது.
பியென்பூ(DienBien Phu) என்ற இடத் தில் வைத்து பிரெஞ்சுப் படைகள் முற்
ငြှုနှုံးနှီ உலகப் போருக்கு முன் விய்ட்னாம், கம்போடியா, லா வோஸ் ஆகிய நாடுகள் பிரான்ஸின் பிடியில் சிக்கியிருந்தன. அக்காலத்தில் இந்நாடுகளைக் கொண்ட பிரதேசம் பிரெஞ்சு இந்தோசீனா (French Ind) chia) என அழைக்கப்பட்டது. உலகப் போரின் போது இந்நாடுகளை ஜப்பா னியப் படைகள் கைப்பற்றிக் கொண் டன. வியட்னாமிய கம்யூனிஸ்ட் தலை a) Titat (3apT g). L'Êlair (Ho Chi Minh) என்பவரும் அவருடைய வியட் மின் இயக்கமும் ஜப்பானியர்களுக்கு எதிரா கக் கிளர்ச்சி செய்யவாயினர்.
1945இல் வியட்னாமை ஒரு சுதந் திரக் குடியரசாக ஹோ சி மின் பிரகட னம் செய்தார். அவருடைய கம்யூனிஸ்க் கொள்கை மற்றப் பகுதிகளுக்கும் பர வும் எனப் பயந்த ஐக்கிய அமெரிக்கா அங்கு பிரெஞ்சு ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முழு ஆதரவு வழங்கியது. 1947இல் பிரான்ஸ்"க்கும் வியட் மின்போராளிகளுக்கும் இடையில் யுத் தம் வெடித்தபோது அமெரிக்கா பிரெஞ் சுப் படைகளுக்கு உதவியளிக்கலா யிற்று. 1953 ஆகும் போது பிரான்ஸின் புத்தச் செலவில் 8%ஐ அமெரிக்காவே பொறுப்பேற்றிருந்தது. 1954ல் டியென்
23
றாகத் தோற்கடிக்கப்பட்டன. இதன் விளைவாக பிரான்ஸ் இந்தோசீனா விலிருந்து வாபஸ் பெறத் தீர்மானித் ჭნჭნI
இறுதியில், இந்தோசீன நாடு களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிடம் வழங்கப்பட் டது. அம்மாநாட்டின்போது 17'அகலக் கோட்டின் நெடுகே வியட்னாமை (வடக்குத் தெற்கென) இரு நாடுகளா கப் பிரிப்பதெனத் தீர்மானிக்கப்பட் டது. இரு வருடங்களுக்குள் பொதுத் தேர்தலொன்றை நடாத்தி இறுதி முடி வெடுக்கும் வரை இத்தற்காலிகப் பிரி வினைக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஹோ சி மின்னுக்கு ஏற்பட்
-i.
இப்பிரிவினையைத் தொடர்ந்து வடக்கில் கம்யூனிஸ் அரசொன்றும் தெற்கில் அமெரிக்க ஆதரவுடனான அர சொன்றும் உருவாகின. வடக்கிலிருந்த கத்தோலிக்கர்கள் ஆயிரக்கணக்கில் தெற்குக்குக் குடிபெயர்ந்தனர். அத் தோடு தெற்கிலிருந்த கம்யூனிஸ்ட்டுக் கள் வடக்குக்குச் சென்று குடியேறினர்.

Page 14
ஐக்கிய அமெரிக்காவும் தெற்கு வியட் னாம் அரசும் இவ்வுடன்படிக்கைகளில் கைச்சாத்திட மறுத்துவிட்டன. அதே வேளை கம்போடியாவும் லாவோ R"ம் சுதந்திர நாடுகளாக மாறின.
வட வியட்னாமிலிருந்து கம்யூனி "
ஸம் பரவும் என்று அஞ்சிய அமெரிக்
கா, தென் வியட்னாமுக்கு ஆபத்து நேர்ந்தால் தலையிடுவதற்கென தென்
கிழக்காசிய உடன்படிக்கை ஸ்தாபனம் (SEAI0) என்ற பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது. இந்தோசீன நாடுகள் வ்வமைப்பில் சேர்ந்துகொள்ளவில்
Eնելի
தென் வியட்னாமுக்குப் பொரு விளாதார, இராணுவ உதவிகளை அமெ
ரிக்கா அபரிமிதமாக வழங்கியது. ஒப்
பந்தப்படி பொதுத் தேர்தலொன்றை நடாத்தினால் ஹோ சி மின் அபார வெற்றி பெறுவார் என்று பயந்த தென் வியட்னாமின் தலைவர் Ngo Dinh Diem என்பவர் அத்தேர்தலை நடாத்த மறுத்துவிட்டார். அவரது போக்கை அமெரிக்காவும் ஆதரித்தது. அதேநேரத் தில் தெற்கில் எஞ்சியிருந்த கம்யூனிஸ் டுகளை அழித்தொழிப்பதில் Diciஇன் வியட்னாமிய குடியரசு இராணுவம் மும்முரமாக ஈடுபட்டது. இந்த இரா வத்துக்கு உதவியாக அமெரிக்கா 700 ஆலோசகர்களை அனுப்பி வைத்தது.
தென் வியட்னாமை ஆட்சி செய்த
னும் அப்போதைய சோவியத் யூனிய னுடனும் நெருங்கிய உறவுகளை வளர்த் துக்கொண்ட வட வியட்னாம் தீவிர மான நிலச் சீர்திருத்தங்களை அமுல் படுத்தியது. அடிப்படையில் ஒரு விவ 4FTL 5|TLT55 இருந்த போதிலும் அங்கு கைத்தொழில் துறையிலும் நல்ல வளர்ச்சி காணப்பட்டது. தலைவர் ஹோவின் வழிகாட்டலின் கீழ் சோவி யத் யூனியன், சீனா ஆகியவற்றின் மாதிரிகளிலிருந்து வேறுபட்ட கம்யூ னிஸ் சித்தாந்தமொன்று வட வியட் னாமில் வேரூன்றியது.
இந்நிலையில் தென் வியட்னா LENG Diem இன் ஆட்சிக்கெதிராக முன் னாள் வியட் மின் இயக்கத்தினர் ஆயு தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இவர்கள் வியட் கொங் (வியட்னா மிய கம்யூனிஸ்டுகள்) என அழைக்கப்ப டலாயினர். முன்னர் வடக்கு நோக்கிச் சென்ற கம்யூனிஸ்டுகள் மீண்டும் திரும் பி வந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
1960இல் வியட் கொங் இயக்கத் தினர் தேசிய விடுதலை முன்னணி
(NLF) என்ற பெயரில் அமைப்பொன்
Diem ஒரு கத்தோலிக்கராவார். இவரது
ஆட்சியில் நகர்ப்புற மக்கள் நன்மை யடைந்த போதிலும் கிராமப் புறங்கள் ற்றாகப் புறக்கணிக்கப்பட்டன. தன் விளைவாகப் பெரும்பான்மை யினரான பெளத்தர்கள் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கலாயினர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் போராளி களுக்கு கிராமப்புற மக்களிடையே ஆத ரவு பெருகலாயிற்று.
வடக்கிலே ஒரு கம்யூனிஸ் அரசை ஹோ சி மின் நிறுவினார், சீனாவுட
24
றை உருவாக்கினர். கம்யூனிஸ்டுகளால் வழிநடாத்தப்பட்டு, வட வியட்னாமி னால் நெறிப்படுத்தப்பட்ட இவ் வமைப்பில் Diem இன் ஆட்சிக்கும் அவருக்குத் துணை நின்ற அமெரிக்கா வுக்கும் எதிரான சகல குழுக்களும் ஒன்று திரண்டன.
சீனத் தலைவர் மாவோ சேதுங் கின் போர் உத்திகளைப் பின்பற்றிNLF போராளிகள், பொதுமக்களை அரணா க வைத்துக்கொண்டு மறைந்திருந்து சடுதியானதாக்குதல்களை நடாத்தினர். கெரில்லாப் போர்முறை என அழைக் கப்பட்ட இந்த வகைத் தாக்குதல்கள் நாட்செல்லச்செல்லத்தீவிரமடைந்தன. இப்போராளிகளுக்குத் தேவையான உணவும் ஆயுதங்களும் கம்போடியா,

லாவோஸ் ஆகிய நாடுகளினூடாக மிக இரகசியமானமுறையில் வினியோகிக் கப்பட்டன. இந்த வினியோகப் பாதை GT F. Lfilar5L (Ho Chi Minh Trail) என அழைக்கப்பட்டது.
தென் வியட்னாமில் நிலைமை மோசமாகியதும் Diem அமெரிக்கா வின் மேலதிக உதவியை நாடினார். தென் வியட்னாம் கம்யூனிஸ்டுகளிடம் வீழ்ந்தால் தென்கிழக்காசியா முழுவ தும் கம்யூனிஸம் பரவிவிடலாம் என அஞ்சினார் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடி. எனவே தென் வியட் னாமிலிருந்த அமெரிக்க இராணுவ ஆலோசகர்களின் தொகையை அவர் 16,000 வரை அதிகரித்தார். ஹெலிகொப் டர் படையணியொன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் 1963இல் ApBac என்ற இடத்தில் தென் வியட்னாமிய இராணுவம்NLF இடம் படுதோல்வியடைய நேரிட்டது.
1963இன் நடுப்பகுதியில் தென் வியட்னாமில் நிலைமை மேலும் மோசமாகியது. தலைநகர் சைகோனின் (Saigon) வீதிகளில் அரசுக்கு எதிராகப் பல பெளத்த பிக்குகள் தீக்குளித்தனர். இதனால் சர்வதேச கவனம் அத்திசை யில் ஈர்க்கப்பட்டது. எனினும் Diem பெளத்தர்களைத் திருப்திப்படுத்த மறுத் துவிட்டார். விரக்தியடைந்த அமெரிக் கா இதனால் போரில் தோல்வி நேரு மேர் எனப் பயந்தது. எனவே இராணு வச் சதியொன்றின் மூலம் 1963 நவம்பர் 1ம் திகதி Diem பதவி கவிழ்க்கப் பட்டார். இச்சதிமுயற்சியின் பின்னணி யில் அமெரிக்காவே இருந்தது.
அடுத்து வந்த இரு வருடங்களி லும் அடுத்தடுத்து சதிப்புரட்சிகள் இடம்பெற்றதனால் தென் வியட்னா மிய அரசு மேலும் நலிவுற்றது. இந் நிலைமையைத் தனக்குச் சாதகமாக் கிக்கொண்ட வட வியட்னாம், பல படைப் பிரிவுகளைத் தெற்கு நோக்கி
25
அனுப்பியது. அத்தோடு 35,000க்கு மேற் பட்ட கெரில்லாக்களும் சுமார் 80,000 தொண்டர் படையினரும் தென் வியட் னாம் இராணுவத்துக்கு எதிராகப் போ ராடினர். அதிகரித்த சோவியத் மற்றும் சீன உதவிகள் இப்போராட்டங்களுக்கு வலுவூட்டின.
கென்னடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்காவில் லிண்டன் B. ஜோன்ஸன் ஜனாதிபதியானார். இவர் தென் வியட்னாமுக்கு அதிகளவு துருப்புக்களை அனுப்பியது மாத்திர மன்றி வட வியட்னாம் மீது விமானத் தாக்குதல்களை நடாத்தவும் உத்தரவிட் டார்.B.52 வகைப் போர் விமானங்கள் தினந்தோறும் வடவியட்னாம் நிலை களின் மீது குண்டு மழை பொழிய லாயின. எனினும் கம்யூனிஸ்டுப் போ ராளிகளின் எதிர்ப்புக் குறையவேயில்
են ցլի
வியட்கொங் கெரில்லாக்கள் சுரங் கப் பாதைகளினூடாகச் சென்று தென் வியட்னாம் மற்றும் அமெரிக்க இரா ணுவத் தளங்களைத் தாக்கிவிட்டு நழு விச் செல்வது வழக்கமான நிகழ்வாக மாறியது. இவர்களையும் இவர்கள் மறைந்திருக்கும் கிராமங்களையும் காடுகளையும் அழிப்பதற்காக அமெரிக் கா நேபாம், வெண்பொசுபரசு வகைப் பயங்கர எரிகுண்டுளையும் நச்சுத்தன் LITT இரசா பனப் பொருட்களை யும் பெருமளவில் பிரயோகித்தது.
போர்தீவிரமடைந்ததும் அமெரிக் காவில் கட்டாய ராணுவ சேவை
அமுல்படுத்தப்பட்டது. எனினும் மத்

Page 15
திய தர மற்றும் உயர்தரக் குடும்பங் களைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டு கட்டாய இரா ணுவ சேவையிலிருந்து தப்பித்துக் கொண்டனர். எனவே பெரும்பாலும் வறிய, சிறுபான்மை இன இளைஞர் களே இராணுவத்தில் சேர்க்கப்பட் டனர். இந்நிலையில் வியட்னாம் போ ரில் அமெரிக்காவின்நிலைப்பாட்டுக்கு உள்நாட்டிவேயே கடும் எதிர்ப்புத் தோன்றியது. அமெரிக்காவின் நகரங் கள் தோறும் யுத்த எதிர்ப்பு ஊர்வலங் களும் ஆர்ப்பாட்டங்களும் பாரிய அள வில் இடம்பெறலாயின.
1968இன் ஆரம்பத்தில் வியட் கொங் படையினர் தென் வியட்னாமின் கேந்திர நிலையங்கள் மீது கடும் தாக் குதலை நடாத்தின. அத்தோடு சைகோ னிலிருந்த அமெரிக்கத் தூதரகமும் தாக்குதலுக்கு இலக்காகியது. இப்போ ரில் அமெரிக்கா ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை மேற்படி தாக்குதல்கள் அமெரிக்கப் பொதுமக் களுக்கு எடுத்துக் காட்டின. இத்தாக் குதல்களில் 10,000 கம்யூனிஸ்ட் படை யினர் பலியாயினர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மேலும் துருப்புக்களை அங்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் 549,000 அமெரிக்கத் துருப்புக்களும், தென் கொரியா, தாய்லாந்து, அவுஸ்திரே லியா மற்றும் நியூஸிலாந்தைச் சேர்ந்த 70,000 வீரர்களும் சுமார் 1,500,000 தென் வியட்னாமியப் படையினரும் கம்யூ னிஸ்டுகளுக்கு எதிராகப் போர்புரிந்தது குறிப்பிடத்தக்கது.
1969இல் தென் வியட்னாமில் புரட்சி அரசொன்றைத் தாம் நிறுவி யிருப்பதாக NILF குழுவினர் அறிவித் தனர். சோவியத் யூனியன் இவ்வரசை அங்கீகரித்தது. இதற்கிடையில் புதிய அமெரிக்க ஜனாதிபதியாக ரிச்சர்ட் நிக் ஸன் பதவியேற்றார். போரில் தோல்வி
26
நிச்சயம் என்பது உணரப்பட்டதும் தென் வியட்னாமிலுள்ள அமெரிக்கப் படை களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டது. போரைத் தென் வியட்னாமிய இராணுவமே முன்னின் று நடத்த வேண்டுமென அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. எனினும் வட வியட் னாம், கம்போடியா, லாவோஸ் என்ப வற்றின் மீது விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றன.
வ்வாறு தொடர்ந்த போர்
1975ம் ஆண்டு வரை நீடித்தது. இறுதி யில் வட வியட்னாமியப் படைகளும் வியட்கொங் கெரில்லாக்களும் ஒன்றி ணைந்து தென் வியட்னாமை முழுமை யாகக் கைப்பற்றிக்கொண்டன. அமெ ரிக்கா எஞ்சியிருந்த தன் துருப்புக்களை அவசர அவசரமாக அங்கிருந்து வாபஸ் a Tri 55 Ga, Itality. Nguyen Van Thieu என்பவரின் தலைமையிலான தென் வியட்னாம் அரசாங்கம் கம்யூ னிஸ்டுகளிடம் வீழ்ச்சியடைந்தது. 1976இல் வியட்னாமின் இரு பகுதி களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடாக மாற்றப்பட்டன. தென் வியட் னாமின் தலைநகராக இருந்த சைகோ னின் பெயர் ஹோ சி மின் நகர்(Ho Chi Minh City) என மாற்றப்பட்டது.
இப்போரின் f, "Y TG63TLDT AF FLOT 7,3 மில்லியன் இந்தோசீனர்கள் உயிரிழந் தனர். கொல்லப்பட்ட அமெரிக்கர் களின் எண்ணிக்கை 58,000 ஆகும். போருக்காக அமெரிக்கா செலவு செய்த தொகை 150 பில்லியன் டொலர்களுக் கும் மேலாகும்.அமெரிக்க குண்டு வீச்சு காரணமாக வட வியட்னாமின் தலை நகரான ஹனோய், துறைமுக நகரான ஹைபோங் என்பன கடுமையாகச் சேத முற்றன. எனினும் ஒரு மாபெரும் வல் லரசின் இராணுவத்தைப் படுதோல் வியுறச் செய்த வீரர்கள் என்ற அழியாப் புகழை வியட்னாமியர்கள் பெற்றுக் கொண்டனர்.

நTம் வெளிநாடுகளுக்குத் தொலைபேசி அழைப்புக்களை மேற் கொள்ள வேண்டுமாயின் எம்மிடம் International Direct Dialing (IDD) என்னும் சர்வதேச நேரடி அழைப்பு வசதி ருத்தல் வேண்டும். TDD வசதி இருந்தாலும் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களுக்கு உயர் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
இத்தடைகளைத் தகர்த்தெறிந்து மிகக் குறைந்த செலவில் வெளிநாட் டுத் தொலைபேசித் தொடர்புகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை இன்று இண்டர்னெட் வழங்குகின் றது. இண்டர்னெட்' இணைப்பைப் பெற்றுள்ள கம்பியூட்டரொன்றும் மைக்கிரபோனுடன் கூடிய "ஹெட் போன் செட் ஒன்றும் இருந்தால் இவ்வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். TDD இணைப்பு இருக்கவேண்டிய அவசியமே இல் եil all
இலங்கையுட்பட உலகின் எந் தப் பாகத்திலிருந்தும் ஐக்கிய அமெரிக்காவுக்குத் தொலைபேசி g) Son GMTÜLJi5GONGITWww.dialpad.com என்ற வெப்தளம் முற்றிலும் இலவச மாக வழங்குகின்றது. ଛାର୍ରାtLit னெட்டில் விவெப் தளத்தை அணுகினால் எவ்வித சிரமமுமின்றி ஐக்கிய அமெரிக்காவிலுள்ள எந்த இடத்துக்கும் தொலைபேசி அழைப் பை மேற்கொள்ளலாம். எனினும் எண்களை டயல் செய்யும் போது
இண்டர்னெட் வழங்கும் இலவச நீண்டதூரத் தாலைபேசிச் சேவைகள்
அமெரிக்காவுக்குரிய தேசக் குறியீ டான00ஜ டயல் செய்யாது ஏனைய எண்களை மாத்திரமே டயல் செய்ய வேண்டும். இச்சேவையில் டியாக இணைப்புக் கிடைப்பதோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பேசலாம். அடுத்த பக்கத்திலுள்ளவருக்கு அதுவொரு சாதாரண தொலைபேசி அழைப்புப் போன்றே இருக்கும். அவரிடம் கம்பியூட்டர் இருக்க வேண்டிய அவசியமில்லை. அழைப்பு நேரடி யாக அவரது தொலை பேசிக்கே செல்லும்,
இவ்வாறான தொலைபேசிச் சேவை இலவசமானது எனக் கூறப் பட்டாலும் நாம் பேசும் அளவுக்கு உள்நாட்டுத் தொலைபேசிக் கட்ட னமும் இண்டர்னெட் கட்டணமும் செலுத்தப்பட வேண்டி இருக்கும். எனினும் TDD தொலைபேசிக் கட் டணத்தோடு ஒப்பிடும் போது இது மிகச் சொற்பமானதே. உதாரணமாக இரவு 10.00 மணிக்குப் பின் பயன் படுத்துவோமானால் அமெரிக்கா வுக்குப் பத்து நிமிட நேரம் பேசு வதற்கு சுமார் 40-50 ரூபா மாத்திர மே செலவாகும். நாம் பெற்றுக் கொண்டுள்ள இண்டர்னெட்சேவை யின் வகை, நாம் வாழும் இடம் என் பவற்றுக்கு ஏற்ப இது வேறுபட லாம். கொழும்பில் இருப்பவர் களுக்கு உள்ளூர்த் தொலைபேசிக்
கட்டணம் குறைவாகவே இருக்கும்.
27

Page 16
أ| || gsör DI 2.GSFNsi www.dialpad. 0ேm வெப்தளத்தை உபயோகிப் போரின் எண்ண்ணிக்ைைக 9 மில்லிய னையும் தாண்டிவிட்டது. உபயோ கிப்பதற்கு மிக எளிதானதாக இருப் பினும் ஐக்கிய அமெரிக்காவுக்கு மாத்திரமே இணைப்புக்களைப் பெறக்கூடியதாக இருப்பது dialpad. C இன் குறைபாடாகும்.
www.MyFreeLid.com stairp வெப்'தளமும் சிறப்பான சர்வதேச தொலைபேசி இணைப்புக்களை வழங்குகின்றது. அமெரிக்கா, ஐக்கி இராச்சியம் (UK), நெதர்லாந்து, சுவிட்ஸ்ர்லாந்து, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கு இதன் மூலம் சேவைகளைப் பற்றுக்கொள்ள முடியும். இச்சேவைகளும் மேற் சொன்னபடி இலவசமாகவே வழங் கப்படுகின்றது.
www.hottelephone.com GTGäTyp வெப்தளம் இன்னுமொரு L. மேலே சென்று 30 நாடுகளுக்கு இல வசத் தொலைபேசிச் சேவையை வழங்குகின்றது. எனினும் முதன்முத லாக இச்சேவையைப் பயன்படுத்த முன் சிறிய ஸொப்ட்வெயார் பகுதி யொன்றை இண்டர்னெட் ஊடாக நாம் பெற்று எமது ஹார்ட் டிஸ்கில் பதித்துக் கொள்வது அவசிய LDT ÁFENGST grog. hottelephone, com Egi'r பயன்படுத்திப் பெறப்படும் தொலை பேசி அழைப்புக்கள் இடையில் அறுந்துவிடுவது சகஜமாக உள்ளது.
-
மேற்குறித்தவை தவிர WWW freephone.com, www.mediaring.com போன்ற பல வெப்தளங்கள் இவ்வா நான இலவச சேவைகளை வழங்கி வருகின்றன. இத்தகைய வெப்தளங் களை நாம் உபயோகிக்கும் போது அவற்றினூடாக வரும் வர்த்தக விளம் பரங்கள் எமக்கு இடையூறானவை போல் தோன்றலாம். எனினும் இவ் விளம்பரங்களின் மூலமே மேற் குறித்த சேவைகளை வழங்குவோர் தமது வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
இவை தவிர கம்பியூட்டரி லிருந்து கம்பியூட்டருக்குத் தொலை பேசித் தொடர்புகளை வழங்கும் இண்டர்நெட் சேவைகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. இரு சாரா ரிடமும் PC-Camera என்னும் கருவி இருந்தால் கம்பியூட்டர் திரையில் முகத்தைப் பார்த்தவாறே உரை யாடிக்கொள்ள இச்சேவைகளுள் சில உதவுகின்றன.
உலகம் ஒரு சிறு கிராமம் போல் குறுகிவிட்டது என்ற கருத்து மேலும் உண்மையாகி வருகின்றது. இந் நிலையில் செலவுமிக்கTDD வசதிகள் இன்றியே உலகத்தில் எந்த மூலை முடுக்கிலுள்ளவர்களுடனும் தொடர் பாடக்கூடிய வசதிகள் விரைவில் வந்துவிடும் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். ப
அரும்பு இதழ்களைத் தபால் மூலம் பெற்றுக்கொள்ளல் அரும்பு இதழ்களைத் தொடர்ச்சியாகத் தபால் மூலம் பெறவிரும்புவோர் அடுத்து வரவுள்ள 6 இதழ்களுக்கும் ரூபா 130/= மணியோடர் மூலம் அனுப்பலாம். தனிப்பிரதி தேவைப்படுவோர் தபாற்கட்டணத்தையும் சேர்த்து ரூபா 22.00 அனுப்பவும்.
மணியோடர் அனுப்பும்போதுபணம்பெறுபவர் பெயர் M. Hafiz Issadeem எனவும் தபாற்கந்தோர் Dharga Town எனவும் குறிப்பிடத் தவறாதீர்கள்.
இல:3, 5,11,13,14,17 ஆகிய இதழ்களின் பிரதிகள் மாத்திரமே கைவசம் உள்ளன. அரும்பு கிடைக்காத பிரதேசங்களில் விற்பனை முகவர்களாகச் செயற்பட விரும்புவோர் ஆசிரியருடன் தொடர்புகொள்ளலாம்.

| | 6UTT ஆர்ஜெண்டினா, தென் அமெரிக் காவிலுள்ள ஒரு சமஷ்டிக் குடியரசா கும். இதன் வடக்கில் பொலிவியா, பரகுவே ஆகிய நாடுகளும் கிழக்கில் பிரேஸில், உருகுவே, அத்திலாந்திக் சமுத்திரம் என்பனவும் தெற்கில் அத்தி லாந்திக் சமுத்திரமும் சிலி நாடும் மேற் கில் சிலி நாடும் எல்லைகளாக அமைத் துள்ளன.
தென்னமெரிக்கக் கண்டத்தின் தெற்குப் பிரதேசத்தின் பெரும்பகுதி யை உள்ளடக்கியுள்ள ஆர்ஜெண்டினா உருவில் ஒரளவு முக்கோண வடிவ மானது. வடக்குத் தெற்காக அந்நாட் டின் நீளம் சுமார் 3330km ஆகும். கிழக்கு மேற்காக ஆகக்கூடிய அகலம் 1384 km ஆகும்."சுற்றியுள்ள சிறுதீவுகள் உட்பட நாட்டின் மொத்தப் பரப்பு 2,780,400 சதுரkm என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரேவிலுக்கு அடுத்ததாகப் பரும னில் பெரிய தென் அமெரிக்க நாடாக இது விளங்குகின்றது. போக்லண்ட் தீவுகள் உட்படப் பல தென் அத்திலாந் திக் தீவுகளையும் அந்தார்டிக்காவின் ஒரு பகுதியையும் ஆர்ஜெண்டினா உரி மை கோருகின்றது. எனினும் சர்வதேச சமூகம் இதனை அங்கீகரித்ததாகத் தெரி
29
யவில்லை. சுமார் 5000 km நீளமான கடற்கரைப் பிரதேசம் ஆர்ஜெண்டினா வுக்குச் சொந்தமாக உள்ளது.
ஆர்ஜெண்டினாவின்தரைத்தோற் றவமைப்பு மலைகளையும், மேட்டு ' நிலங்களையும் சமவெளிகளையும் கொண்டது. நாட்டின் மேற்கெல்லை முழுவதும் அண்டிஸ் மலைத்தொடருக் குள்ளேயே அமைந்துள்ளது. ஆர்ஜெண் டினாவின் வடக்கில் அமைந்துள்ள அகொன்காகுவா சிகரமானது (உயரம் 9ே60m) மத்திய ஆசியாவுக்கு வெளியே உள்ள உலகின் மிக உயர்ந்த சிகரமா கும். அந்நாட்டிலுள்ள மரங்களற்ற "பம் பாஸ்’ என்னும் சமவெளிகள் பயிர்ச் செய்கைக்கு மிகவும் ஏற்றவை.
பரனா, உருகுவே, பரகுவே முத லிய பல நதிகள் ஆர்ஜெண்டினாவை ஊடறுத்துச் செல்கின்றன. சில நதிகள் சேற்று நிலங்களிலும் சதுப்பு நிலங்களி லும் போய் வடிகின்றன.
மழைவீழ்ச்சியானது பிரதேசத்துக் குப் பிரதேசம் பெரிய வேறுபாட்டைக் காட்டுகின்றது. வடபகுதியில் வருடாந் தம் 1520 mmக்கு மேல் மழை பதிவா கின்றது. எனினும் தெற்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் செல்லும் போது படிப்படியாக வறள் நிலை அதிகரிக் கின்றது.
தலைநகரான பியூனொஸ் எயர ஸில் (Beun08 Aires) வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி சுமார் 950 mm ஆகும். வளிமண்டல வெப்பநிலை ஜனவரி யில் 17-20°C வரையும் ஜூலையில் ரீ1' வரையும் வேறுபடுகின்றது. வட கிழக்குப் பகுதியில் மாத்திரம் வெப்ப வலயக் காலநிலை நிலவுகின்றது.
1997ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி ஆர்ஜெண்டினாவின் சனத்தொகை 35,797,981ஆகும். நாட்டின் சராசரிசனத் தொகை அடர்த்தி சதுர kIக்கு 13 பேர்களே, சனத்தொகையில் சுமார்ஃ

Page 17
ஐரோப்பியர்களின் வழித்தோன்றல் களாகவே உள்ளனர். ஐரோப்பியர் களின் வருகை முன்னர் உத்தியோகபூர் வமாக ஊக்குவிக்கப்பட்டது. 1850க்கும் 1940க்கும் இடைப்பட்ட காலத்தில் ேே08,70ஐரோப்பியர்கள் நாட்டில் குடி யேறினர். இவர்களுள் ஸ்பானியர் களும் இத்தாலியர்களுமே பெரும் பான்மையினராக இருந்தனர். இவர் கள் தவிர பிரெஞ்சு, பிரிட்டிஷ், ஜெர் மன், ரஷ்ய மற்றும் போலந்து பிரஜை களும் பெருமளவில் அங்கு குடியேறி புள்ளனர்.
தலைநகரான பியுனொஸ் எயரஸ் நகரே நாட்டின் மிகப்பெரிய நகராகும். ganggg6ñTCórdoba, Rosario, La Plata போன்ற பெரிய நகர்கள் பலவும் இருக் கின்றன. மக்கட் தொகையில் ஃ நக ரங்களிலேயே வசிக்கின்றனர். நாட்டின் பிரதான சமயமாகக் கத்தோலிக்கம் திகழ்கின்றது. சனத்தொகையில் 98% கத்தோலிக்க சமயத்தையே பின்பற்று கின்றனர், யூதர்கள், புரட்டஸ்தாந்து மதத்தினர் போன்றோரும் அங்கு வசிக் கின்றனர். எனினும் சட்டப்படி நாட் டின் ஜனாதிபதி, உப ஜனாதிபதிப் பதவிகளை ரோமன் கத்தோலிக்கர்கள் மாத்திரமே வகிக்க முடியும்.
ஆர்ஜெண்டினாவின் அரசகரும மொழி ஸ்பானிய மொழியாகும். மிகப் பெரும்பான்மையான மக்கள் இம் மொழியையே பேசுகின்றனர். கலை கலாசார அம்சங்களிலும் ஸ்பானியர் களின் செல்வாக்கு மிகைத்துக் காணப் படுகின்றது. இத்தாலிய மொழியையும் பல சுதேச அமெரிக்க மொழிகளையும் பேசுவோர் குறிப்பிடத்தக்க எண்ணிக் கையில் உள்ளனர்.
6 வயது முதல் 14 வயது வரை ஆரம்பக்கல்வி இலவசமாகவும் கட்டா யமாகவும் வழங்கப்படுகின்றது. ஆர் ஜெண்டினாவின் எழுத்தறிவு வீதம் 98%
3O
ஆக உள்ளது. இது லத்தீன் அமெரிக் காவில் மிக உயர்ந்த மட்டமொன் றாகும்.ஆர்ஜெண்டினாவில் 25 தேசிய பல்கலைக்கழகங்களும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. நாட் டின் பிரதான உயர்கல்வி நிறுவனமான பியுனொஸ் எயரஸ் பல்கலைக்கழகம் 1821இல் ஆரம்பிக்கப்பட்டதாகும். நாட்டிலுள்ள மிகப்பழைய பல்கலைக் hyper. In TaST University of Cordoba, 1613இல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜெண்டினாவின் பொருளா தாரம் விவசாய உற்பத்திப் பொருட் களையும் விலங்கு வேளாண்மையை யும் அடிப்படையாகக் கொண்டது. எனினும் கைத்தொழில் மற்றும் சுரங்கத் தொழில் துறைகள் அண்மைக் காலத் தில் துரிதமாக அபிவிருத்தியடைந்து வந்துள்ளன. 1996இல் ஆர்ஜெண்டினா வின் மொத்தத் தேசிய உற்பத்தி 2947 பில்லியன் டொலர்களாக இருந்தது. க்ால்நடை வளர்ப்பு, இறைச்சி உற் பத்தி, தானிய உற்பத்தி என்பனவே வெளிநாட்டுச் செலாவணியைப் பெற் றுத் தரும் பிரதான தொழில்களாக உள் ளன. ஆர்ஜெண்டினாவில் 88.9 மில் வியன் ஏக்கர் பரப்பில் காடுகள் வளர்ந் துள்ளன. இவை பெரும்பாலும் பயன் படுத்தப்பட்ாமலேயே இருக்கின்றன.
கணிப்பொருள் உற்பத்தியில் பெற் றோலியம் முக்கிய இடத்தை வகிக் கின்றது. நாட்டின் தேவைக்கு மேலதி கமாக அகழ்ந்தெடுக்கப்படும் பெற்றோ லியம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இது தவிர நிலக் கரி, இரும்பு, பொன், வெள்ளி, ஈயம், நாகம், வெள்ளியம் போன்ற உலோகங்களும் மைக்கா, சுண்ணாம்புக்கல் போன்றவையும் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன.
ஆர்ஜெண்டினாவின் நாணயம் Pe30 எனப்படும். 1980களில் Pe30வின் பெறுமதி வீழ்ச்சி அடைந்ததனால்

1985இல் Austral என்ற புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. தன் பெறுமதி 1000 முன்னையP3ே0க்களுக் குச் சமனாக இருந்தது. எனினும் தொடர்ச்சியான பணவீக்கத்தின் காரண மாக 10,000 Australகளுக்குச் சமனான புதிய Pe30 நாணயம் 1992 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆர்ஜெண்டினாவில் மொத்தம் 34,059kmதூரத்துக்கு ரெயில் பாதைகள் உண்டு. சிலி, பொலிவியா, பரகுவே, உருகுவே, பிரேஸில் ஆகிய அண்டை நாடுகளுக்கும் ஆர்ஜெண்டினாவுக்கும் இடையில் ரெயில் பர்தை இணைப்புக் Gir 35 TG37 'IL ESF sirgo aoT. Aerolineas Argentinas என்ற தேசிய விமான சேவை 1990இல் தனியார்மயப்படுத்தப் பட்டது.
சுமார் 193 தினசரிப் பத்திரிகைகள் ஆர்ஜெண்டினாவில் வெளியிடப்படு @ gŵr pair. g. Ga i jôg)) sir La Pren sa, La Nacidn என்பன சர்வதேசப் புகழ் பெற்றவை.
1853இல் அங்கீகரிக்கப்பட்ட அரசி பல் யாப்பின்படிஆர்ஜெண்டினா ஒரு சமஷ்டிக் குடியரசாகும். அரசின் தலை வராக ஜனாதிபதியும் அவருக்கு உதவி பாக ஒர் அமைச்சரவையும் உள்ளன. சட்டவாக்க அதிகாரம் தேசிய கோங்
கிரஸ் என்னும் பேரவையிடம் உள்ளது. இது பிரதிநிதிகள் சபை, செனட் சபை என இரண்டு சபைகளால் ஆனது.
1949இல் ஒரு புதிய அரசியல் யாப்பு அமுலுக்கு வந்த போதிலும் 1956இல் அது வாபஸ் பெறப்பட்டது. 1966இலும் 1976இலும் நிகழ்ந்த இரா ணுவச் சதிப்புரட்சிகளைத் தொடர்ந்து அரசியல் யாப்பு இடைநிறுத்தம் செய் யப்பட்டது. எனினும் 1983இல் நாட் டில் சிவில் ஆட்சி மீண்டும் ஏற்பட்ட தோடு 1853ம் ஆண்டின் அரசியல் யாப்பு மீண்டும் அமுலுக்கு வந்தது. இந்த யாப்பு ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் யாப்பைப் பெரிதும் ஒத்ததாக உள்ளது. 1994இல் இந்த யாப்பில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன.
தேசிய கோங்கிரஸின் கீழ்ச் சபை யான பிரதிநிதிகள் சபைக்கு 257 உறுப் பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுவர். மேல் சபையான செனட்டில் 72 உறுப்பினர் கள் இருப்பர். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளுக்கும் வாக்குரி, மை உண்டு, புதிய திருத்தங்களின்படி நாட்டின் ஜனாதிபதியின் பதவிக் காலம் 4 வருடங்களாகும். -
ஆரோக்கியத்தின் ரகசியம் 90 வயதாகியும் ஆரோக்கியமாக வாழும் ஒருமுதியவரை அணுகிய பத்திரிகை ஒரு நிருபர் அவரது நீண்ட ஆயுளுக்கான காரணத்தை வினவினார்.
"திருமணம் செய்யும் போது நாமிருவரும் செய்து கொண்ட ஓர் உடன்படிக்கை தான்
காரணம்' என்றார் முதியவர்.
"அப்படியென்ன அதிசயமான உடன்படிக்கை” என்று கேட்டார் நிருபர்.
"நான் கோபம் வந்து கத்தும் போது மனைவி ஒன்றும் பேசாது அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொள்வது என்றும் அவளுக்கு என் மீது கோபம் ஏற்பட்டு அவள் கத்தத் தொடங்கினால் நான் எதிர்த்துப் பேசாமல் முன்புறத் தோட்டத்துக்குப் போய் அமர்ந்து கொள்வது என்றும் நாம் உடன்படிக்கை செய்துகொண்டோம்” என்றார் கிழவர்.
"அது சரி அதற்கும் உங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்?" என்று
புரியாமல் கேட்டார் நிருபர்.
"அதுவா? நான் எனது வாழ்க்கையில் பெரும் பகுதியைத் தோட்டத்துத் திறந்த வெளியிலே கழித்துவிட்டேன். அது தான் என் ஆரோக்கியத்துக்குக் காரணம்” என்று
விளக்கினார் முதியவர்.

Page 18
முற்றாக நீருக்குள் அமிழ்ந்த நிலையில் நீண்ட காலத்திற்குத் தொழிற்படக்கூடிய விசேட வகைப் போர்க்கப்பல்களையே நாம் நீர்மூழ் கிக் கப்பல்கள் (Submarines) என்கின் றோம். தேவையான போது நீருக்கடி யில் மூழ்கியவாறு பிரயாணம் செய் பவும் ஏனைய நேரங்களில் நீரின் மேற்பரப்பில் மிதந்து செல்லவும் கூடியவாறு வை வடிவமைக்கப் படுகின்றன.
எதிரிகளால் எளிதில் கண்டு பிடிக்கப்பட முடியாதவாறு இரகசி யமாகவும் ஒசையின்றியும் இயங்கக் கூடிய நீர்மூழ்கிகள், பல்வேறு வகை யான ஆயுதங்களைக் கொண்டு செல்கின்றன. Toped0es என்னும் நீருக்கடியில் வெடிக்கும் குண்டுகள், கன்னிவெடிகள், சாதாரண ஏவு கனைகள், அணுவாயுத ஏவுகனை கள் முதலியன இவ்வாறு நீர்மூழ் கிகளினால் கொண்டு செல்லப்படு வதுண்டு.
நீருக்கடியில் மூழ்கிய நிலையில்
பிரயாணஞ் செய்யக்கூடிய கப்பல்
களைச் செய்யும் முயற்சி சுமார் 500
வருடங்களுக்கு முன்னர் ஐரோப் பாவில் ஆரம்பமாகியது. 1578இல் William Bourne 6rgärp g,Éj5 GauLu விஞ்ஞானி நீர்மூழ்கிகளை வடி வமைக்கும் முறைகள் பற்றிச் சில குறிப்புக்களை எழுதியிருந்தார். எனி னும் அவர்நீர்மூழ்கிக் கப்பல் எதனை பும் நிர்மானிக்கவில்லை.
16299)söCornenilDrebbelsrsity டச்சுக் கண்டுபிடிப்பாளர் மரத்தினா
32
நீர்மூழ்கிக் கப்பல்கள்
லான நீர்மூழ்கிக் கப்பல் மாதிரியுருக் களைத் தயாரிக்கலானார். இரண்டு மரத் தோணிகளை ஒன்றன் மீது ஒன்றைக் கவிழ்த்து அவற்றை நீர் புகாதவாறு பதனிட்ட தோலினால் மூடிக்கட்டுவதன்மூலம் இவை தயா ரிக்கப்பட்டன. நீர்புகாமல் அடைக் கப்பட்ட துளைகளினூடாக வெளி நீட்டியதுடுப்புக்களைப் பயன்படுத்தி வை இயக்கப்பட்டன. Drebbel தனது நீர்மூழ்கிகளை லண்டனிலுள்ள தேம்ஸ் நதியினுள் இயங்கச் செய்து சோதித்தாராம். எனவே செயற்படக் கூடிய நீர்மூழ்கியொன்றை முதன் முதலில் வெள்ளோட்டம் விட்டுச் சோதித்த பெருமை Drebbelஐயே சாரும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்
அடுத்த இருநூற்றாண்டுகளிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர் மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களும் செயற்றிறன் மிக்க நீர்மூழ்கியொன்றைத் தயாரிக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றியளித்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் இடையிடையே பல்வேறு நீர்மூழ்கி வடிவங்கள் உப யோகிக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. உதாரணமாக அமெரிக்கப் புரட்சிப் போரின் (1775 - 1783)போது எதிரிக்கப்பலொன்றை மூழ்கடிப்பதற்கு அமெரிக்கர்கள் நீர் மூழ்கியொன்றைப் பயன்படுத்தியுள் எனர். அதேபோன்று அமெரிக்க

உள்நாட்டு யுத்தத்தின் போதும் நீர்மூழ்கிகள் பயன்படுத்தப்பட் டுள்ளன.
காலப்போக்கில் நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவமைப்பில் குறிப் பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட Guit (Sat.18xgai Robert Fulton Taip அமெரிக்கர் Nautilus என்ற பெயரில் 8.4 m நீளமுள்ள நீர்மூழ்கிக் கப்ப லொன்றைத் தயாரித்தார். التي கட்டமைப்பிலும் உருவத்தில் இன் றைய நவீன நீர்மூழ்கிகளைப் பெரி தும் ஒத்திருந்தது.
நீர்மூழ்கியின் நிலைக்குத்தான மற்றும் கிடையான இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கு Fulton சுக்கான் களை உபயோகித்திருந்தார். அத் தோடு நீருக்கடியிலிருக்கும் போது ஒட்சிசனை வழங்குவதற்காக அமுக் கப்பட்ட வளியை அவர் பயன் படுத்தினார். நீருக்குள் மூழ்கியிருக் கும் போது கைகளால் பக்கப் பட்ட செலுத்தும் சுழலியொன்றை (Propeller) Lu LusãTLIGğGCổ Lu Natilus இயங்கியது. நீர் மேற்பரப்பில் பிர யாணஞ் செய்யும் போது அது பாய் மரங்களைப் பயன்படுத்தியது.
நவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவமைப்பு மிகவும் சிக்கலானது. தேவையானபோது விரைவாக நீரினுள் மூழ்கவும், அதே போன்று
ரிதமாக நீரின் மேற்பரப்புக்கு வ ჭ" ඵ්l f 卤 ᏣᏚ
வும், மாதக்கணக்கில் தொடர்ச்சியாகி நீரினுள் செயற்படவும் எதிரிகளி னால் கண்டுபிடிக்கப்பட முடியாத வாறு ஒசையின்றி இயங்கவும் கூடிய
வாறு அவை வடிவமைக்கப்பட
வேண்டும். அத்தோடு எதிரிகளுக்கு அகப்படாமல் வெளி உலகோடு தகவல் பரிமாறிக்கொள்ளவும், அதனுள்ளே பணியாற்றும் மாலுமி களுக்குப் பாதுகாப்பான வாழிடத்
33
தை வழங்கவும் தேவையான நவீன வசதிகள் அதில் குறைவின்றி இருத் தல் வேண்டும்.
நவீன வகை நீர்மூழ்கிகள் நீண்ட சுருட்டு வடிவான உடலைக் கொண் டுள்ளன. உருளை போன்ற இவ்வு டலின் ஓர் அந்தம் ஒடுங்கியும் மறு அந்தம் மழுங்கி உருண்டை வடிவாகவும் இருக்கும். நீருக்கடியில் பாரிய அளவு அமுக்கத்தைத் தாங்க வேண்டி இருப்பதனால் நீர்மூழ்கி களின் உடல் கடினமான உயர்தர உருக்கினால் அல்லது தைத்தானியம் (Titanium) உலோகத்தினால் செய்யப் படுகின்றன.
நீர் மூ ழ் கி .ெ யா ன்  ைற நீருக்கடியில் அமிழச் செய்வதற்காக அதிலுள்ள விசேட அறைகளில் கடல் நீர் நிரப்பப்படும். நீர் நிரப்பப்படும் அளவுக்கு ஏற்ப கப்பல் நீரினுள் மூழ்குகின்ற ஆழம் தீர்மானிக்கப் படுகின்றது. கப்பல் நீரின் மேற்பரப் புக்கு வர வேண்டுமாயின் அறை களில் உள்ள நீர் அமுக்கப்பட்ட வளி
யைக் கொண்டு வுெதியேற்றப்படும். நீர்மட் ಸ್ಧಿ? கீழே இருந்த
முலை அவதானிப் பதற்காக பொருள் காட்டி (Periscope)தின்ற கருவி படுகின்றது. நீழ் யினுள் ருப்பவர்கள்
ளியுலே தாடர்பு கொள்
வாறு சுற்று
வதற்குச் களை அடிப்படை யாகக் நீண்ட தொலைத்தொடர்பு முறை யோகிக்கப்படுகின்றது.
நேரடி ரேடியோ - தொலைபேசித் தொடர்புகள் நீர்மூழ்கி இருக்கும் இடத்தை எதிரிகள் கண்டுபிடிப் பதற்கு உதவக் கூடுமாகையால் அவ் வாறான தொடர்பாடல் முறைகள் தவிர்க்கப்படுவது வழக்கம்.
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களைச் செலுத்து

Page 19
Ggb(5 le raù - L6si (Diesel Electric) என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன இவ்வகை என்ஜின்களில் பெரிய டீசல் உட்தகன என்ஜினால் தைன மோவொன்று இயக்கப்பட்டு மின் சக்தி பிறப்பிக்கப்படும். இம்மின் சக்தியைக்கொண்டு சக்தி வாய்ந்த மின்மோட்டரொன்று (அல்லது பல மோட்டார்கள்) இயங்கச் செய்யப் LGL). (Power-sets &Taitoyū Legraëமின் ரெயில் வண்டிகளிலும் இவ் வகை என்ஜின்களே உபயோகிக்கப் படுகின்றன.) நீர்மூழ்கியொன்றைச் செலுத்துவதற்கு உதவும் செலுத்தி (Propeler) இம்மோட்டரினாலேயே இயக்கப்படுகின்றது.
நீர்மூழ்கியொன்றில் டீசல் என் ஜின்களைப் பயன்படுத்துவதில் பிர தான பிரச்சினையொன்று உள்ளது. இவ்வென்ஜின்களில் எரிபொருள் தகனமடைவதற்கு வளி (ஒட்சிசன்) தேவைப்படும். நீர்மூழ்கி நீருக்கடி யில் இருக்கும் போது தேவையான ஒட்சிசனைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போகின்றது. இதனால் நீருக்கடியில் இருக்கும் காலத்தில் டீசல் என்ஜின்களைப் பயன்படுத்து வது சாத்தியமாகாது.
இந்நிலையில் மின்மோட்டர் களை இயக்க பற்றரிகளே பயன்
படுத்தப்படுகின்றன. டீசல் என்ஜின் கள் இயங்குகின்றபோது மாத்திரமே'
இந்த பற்றரிகளை மீண்டும் மின் னேற்றிக்கொள்ள முடியும். எனவே
கட்டுப்பாட்டு
ஐயம் G
அணு உலை
இவ்வகையான நீர்மூழ்கிகள் வளி யைப் பெற்றுக் கொள்வதற்காக இடையிடையே மேற்பரப்புக்கு வரவேண்டியது அவசியமாகின்றது. இது யுத்த காலத்தில் ஆபத்த்ை விளைவிக்கக்கூடிய செயலாகும்.
இரண்டாம் உலகப் போரின்' போது ஜெர்மனி தயாரித்த U-boat என்னும் விசேட வகை நீர்மூழ்கியில் நீரின் மேற்பரப்புக்கு மேலிருந்து வளியைப் பெற்றுக் கொள்வதற்காக Snorkel எனப்படும் நீண்டு வளைந்த குழாய் உபயோகிக்கப்பட்டது. தேவையற்றபோது உள்ளிழுத்துக் கொள்ளக் கூடிய இந்தக் குழாயி னுரடாகவே டிசல் என்ஜின் வெளி விடும் கழிவுப் புகையும் வெளியேற் றப்பட்டது. இந்த ஏற்பாடு காரண மாக U-boat வகை நீர்மூழ்கிகள் அடிக்கடி மேற்பரப்புக்கு வராமல் சுமார் 18 m ஆழத்தில் தொடர்ந்து இயங்கக் கூடியனவாக இருந்தன.
1950களில் அணுசக்தி பற்றிய ஆராய்ச்சிகளில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக நீர் மூழ்கியொன்றினுள் பாதுகாப்பாகச் செயற்படக்கூடிய சிறிய அணு
உலைகளின் தயாரிப்பு சாத்திய
சூழ்பொருட்ಜಿಗಿ ೩ - ಲಿ?
Lilայոց plin
சோனார் ஐ.ஜார்
கருவி
பற்றரிகள்
ஒர் அணுசக்தி நீர்மூழ்கியின் அகக் கட்டம்ைப்பு
 
 
 
 
 
 
 

மாகியது. இத்துறையில் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த Hyman G Rickover என்பவரின் தலைமை யிலான ஆய்வுக் குழு முக்கிய பங்
களிப்பைச் செய்தது.
அணு உலையில் உருவாகும்,
பெருமளவு வெப்பச்சக்தியைக் கொண்டு நீரைக் கொதிக்கச் செய் வதன் மூலம் கொதிநீராவி உருவாக் கப்படும். இக்கொதி நீராவி பெரிய சுழலியொன்றை (turbine) சுழலச் செய்யும். இச்சுழலியின் இயக்கச் சக்தி நீர்மூழ்கியின் செலுத்தியை (PTO peller) இயக்கவும் தைனமோ மூலம் மின்னைப் பிறப்பிக்கவும் பயன் படுத்தப்படும்.
அணு உலையொன்றில் வெப்ப சக்தியைப் பிறப்பிப்பதற்கு வளி தேவைப்படுவதில்லை. எனவே அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கள் நீரின் மேற்பரப்புக்கு வராமல் தொடர்ந்து 60-70 நாட்களுக்கு மேல் நீருக்கடியிலே இயங்க முடிகின்றது. நீர்மூழ்கியினுள் வசிப்போருக்கு சுவாசிக்கத் தேவையான ஒட்சிசன், நீரை மின்பகுப்பதன் மூலம் பெறப் படுகின்றது.
உலகின் முதலாவது அணுசக்தி யால் இயங்கும் நீர்மூழ்கி 1955ம் ஆண்டு அமெரிக்காவினால் வெள் ளோட்டம் விடப்பட்டது. Robert Fulton இன் ஆரம்பகால நீர்மூழ்கி யை நினைவுகூரும் முகமாக இந்த Siepp Saig, USS Nautilus 67 at . பெயரிடப்பட்டது. சோதனை ஒட்ட மொன்றின் போது அது மேற்பரப் புக்கு வராமல் சுமார் 8 மணித்தி பாலத்தில் 2170kmதூரத்தைக் கடந்து சாதனை படைத்தது. இன்றைய அணுசக்தி நீர்மூழ்கிகள் சுமார்460 m (1500அடி) ஆழத்தில் பிரயாணம் செய்யக் கூடியனவாக உள்ளன. "
35
1950களில் ஐக்கிய அமெரிக்கா வுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் தோன்றிய கடுமையான ஆயுதப் போட்டி காரணமாக இரு நாடுகளும் தமது நீர்மூழ்கிக் கப்பற்
படையைப் பெருமளவு விருத்தி
செய்யலாயின. 1960களின் இறுதிப் பகுதியாகும் போது இரு வல்லரசு களிடமும் கூட்டாகச் சுமார் 650 நீர்மூழ்கிகள் இருந்தன. இவற்றுள் தாக்குதலுக்குரிய நீர்மூழ்கிகள் (attack Submarines), ஏவுகணை கொண்ட fifeng Sargir (ballistic missile submarines) என இரு வகைகள் காணப் பட்டன.
தாக்குதலுக்குரிய நீர்மூழ்கிகள் . பருமனில் ஒரளவு சிறியவை. எதிரி நீர்மூழ்கிகளையும், கப்பல்களையும் தாக்கியழிப்பதற்கு இவை பயன் படுத்தப்படுகின்றன. அமெரிக்கா G5? Lf5&#glo Los Angeles Gu Gorisë தாக்குதலுக்குரிய நீர்மூழ்கி 109.7 m நீளமுடையது. இதில் 111 மாலுமிகள் பணிபுரிகின்றனர்.
ஏவுகணை கொண்ட நீர்மூழ்கி கள் நீளத்தில் கூடியவை. அமெரிக் காவின் Ohio வகை நீர்மூழ்கி பொன்று 170.7 m நீளமுடையது. அதில் 163 பேர் பணிபுரிகின்றனர். அண்மையில் விபத்துக்குள்ளான ரஷ்யாவின்uேrsk என்ற நீர்மூழ்கியும் இந்த வகையைச் சேர்ந்ததே. இவ் வகை நீர்முழ்கிகள் அணுவாயுதங் களைக் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை எதிரி நிலைகள் மீது ஏவக்கூடியன்வ. ஆழ்கடலில் மர்மமாக உலவித் திரியும் இந்த நீர்மூழ்கிகளுக்கே எல்லா நாடுகளும் பயப்படுகின்றன. 1991இல் சோவியத் யூனியன் சிதைவுற்றதும் உலகிலுள்ள நீர்மூழ்கி களின் தொகை வீழ்ச்சியுற்றது.

Page 20
இப்போது ஐந்து வல்லரசு நாடு இவைதவிர பல்வேறுவிதமான களிடமும் மொத்தமாகச் சுமார் 150 சாதாரண மற்றும் சிறிய ரக நீர் உயர் ரக நீர்மூழ்கிகள் உள்ளன. முழ்கிகள் பல நாடுகளின் கடற்
இவற்றுள் பெரும்பாலானவை படையினரால் இன்னும் பயன்படுத் அணுசக்தியால் இயங்குவனவாகும். தப்படுகின்றன. பு r
பிறமொழியறிவு ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்தசுவிஸ் பிரஜையொருவர் சிட்னிநகரில் காரைச்செலுத்திக்கொண்டிருந்தபோது பாதை தவறித்தடுமாறலானார். ஒரு பஸ்தரிப்பிடத்தில் இரண்டு அவுஸ்திரேலியர்கள் நிற்பதைக் கண்ட அவர், அவர்களிடம் சென்று
"Entschuldigung, Können Sie Deutsch Sprchcn?" (STGäTFYaYT LIDGäTaffluyrir SG Gir, Eriks Går ஜெர்மன் பேசுவீர்களா?) என மரியாதையுடன் ஜெர்மன் மொழியில் கேட்டார்.
அவுஸ்திரேலியர்கள் இருவரும் ஒன்றுமே புரியாமல் முகத்தைப் பார்த்த வண்ணம் நின்றன்ர்.
"Excusez-moi, parlez vous Français?" (STsignait LDEiTGafluyúlgair. É'Égoï LÎGT555 பேசுவீர்களா?) எனப் பிரெஞ்சு மொழியில் கேட்டார் சுவிஸ்காரர்.
அவுஸ்திரேலியர்களுக்கு அதுவும் புரியவில்லை, சுவிஸ்காரர் மனந்தளராமல் "Parlaretalianc?"(இத்தாலி மொழிபேசுவீர்களா?) எனஅம்மொழியிலேகேட்டார். அவர்களிருவரும் பேசா மடந்தையர்களாய் நின்றனர்."HablanusedesEspaர்ol?" (ஸ்பானிய மொழி பேசுவீர்களா?) என்று ஸ்பானிய மொழியிலே கேட்டார் சுவிஸ் பிரஜை.
அதற்கும் பதிலெதுவும் வராததைக் கண்ட அவர் விரக்தியுடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
அவர் சென்ற பின், அந்த அவுஸ்திரேலியர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து "நாம் பிறமொழி யொன்றைத் தெரிந்திருப்பது அவசியம் என்பதை இது காட்டுகிற தல்லவா?" என்று வினவினார்.
'உமக்குப் பைத்தியமா? அந்த ஆள் அத்தனை மொழிகளைத் தெரிந்து வைத்தி ருந்தும் அவனுக்கு ஒரு பயனும் கிடைக்கவில்லையே" என்று பதில் வந்தது மற்றவரிடமிருந்து,
ஜாக்கிரதை!
ஓர் அன்னாசித் தோட்டத்தில் பெருமளவு அன்னாசி காய்த்திருந்தது. அவற்றைப் பாதுகாப்பது தோட்டக்கானுக்குப் பெரும்பிரச்சினையாகிவிட்டது. அயலிலுள்ள இளைஞர்கள் இரவில் திருட்டுத்தனமாகப் புகுந்து பழங்களைச் சாப்பிடுவது வழக்கமாகியிருந்தது.
இதனால் கவலையுற்றதோட்டக்காரன் ஓர் உத்தியைக் கையாளத் திட்டமிட்டான்.தான் இரகசியமாக அடையாளமிட்டுக்கொண்ட பழமொன்றுக்கு சயனைட்டை ஊசிமூலம் ஏற்றிய அவன்"இத்தோட்டத்திலுள்ள ஓர் அன்னாசிப் பழத்திற்கு சயனைட் நஞ்சு ஏற்றப்பட்டுள்ளது. ஜாக்கிரதை' எனப் பெரிய எழுத்துக்களில் ஒர் அறிவிப்புப் பலகையைத் தோட்ட வாயிலில் தொங்கவிட்டான்.
மறுநாட் காலையில் அவன் தோட்டத்திற்குச் சென்றபோது பழங்கள் ஒன்றேனும் குறையாமல் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டான்.
ஆனால் அடுத்த நாள் தோட்ட வாயிலில் தொங்கவிடப்பட்டிருந்த புதிய அறிவித்தலை வாசித்ததும் அவன் அயர்ந்து போனான்."இன்னொரு பழத்திற்கும் சயனைட் நஞ்சு ஏற்றப் பட்டுள்ளது. ஜாக்கிரதை' என இளைஞர்கள் எழுதி வைத்திருந்தனர்.
3E

டங்கள் வாழ்ந்த பின் கி.மு.
-- PYTHAGORAS 6)
கிரேக்க தத்துவஞானியும்
கணித மேதையுமான பைதகரளயின் பெயரைக்கணிதம் கற்ற அனைவரும் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். கி. மு. 580ம் ஆண்டளவில் கிரேக்க அயோனியாவிலிருந்த Samos என்ற பகுதியில் பிறந்த பைதகரஸ் 80 வரு
էaնի
காலமானார்.
பைதகரஸின் சகோதரத்துவ
Luš5ún (Pythagorean Brotherhood)
என்றழைக்கப்பட்ட
குழுவினை இவர் ஸ்தாபித்தார். அடிப்படையில் சமயரீதியானதாக இருந்தபோதிலும் இவ்வியக்கத்தினால் உருவாக்கப் பட்ட கோட்பாடுகள் பிற்காலத்தில் பிளேட்டோ, அரிஸ்டோட்டில்
முதலியோரின் சிந்தனைகளில் ஆதிக்
கம் செலுத்தலாயின. அத்தோடு கணிதம், மேற்கத்திய பகுத்தறிவு வாதத் தத்துவம் போன்றவற்றின்
விருத்திக்கும் இவை பங்களிப்புச்
செய்தன.
பைதகரஸ் எழுதிய நூல்கள் எதுவும் நிலைத்திருக்கவில்லை.
எனவே அவர் கூறியவற்றையும் பிற் காலத்தில் அவரது சீடர்கள் கூறிய கருத்துக்களையும் பிரித்தறிய முடியா துள்ளது. அவரது இயக்கத்தைப் பின் பற்றியவர்கள் தமது கோட்பாடு
களுக்கு ஆதாரமாகப் பைதகரஸின்
கூற்றுக்களை முன்வைத்துள்ளனர்.
37
எனினும் இவை உண்மையில் பைத கரஸின் கருத்துக்களா என்பது உறுதி யாகத் தெரியவில்லை.
இயற்கைக்கும் கணிதத்துக்கும் இட்ையில் நெருங்கிய தொடர்பிருப் பதாக பைதகரஸ் கருதினார். இயற் கைப் பொருட்கள், சங்கீதம் போன்ற வற்றைப் பொறுத்தமட்டில் எண்கள் செயற்பாட்டு முக்கியத்துவமுடை பவை என்ற கொள்கையை அவரே முன்வைத்தார். எனினும் இப்போது அவரது பெயரால் கற்பிக்கப்படும் செங்கோண முக்கோணியொன்றின் பக்கங்கள் பற்றிய பைதகரஸின் தேற் per (Pythagorean Theorem), GL Taip கணித எண்ணக்கருக்கள் பிற்கால பைதகரஸ் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டனவாகும்.
கி.மு. 525ம் ஆண்டளவில் பைத கரஸ் உருவாக்கிய சகோதரத்துவ இயக்கம் சமூகத்தின் ஒழுக்க சீர்திருத் தத்தையே நோக்காகக் கொண்டிருந் தது. சக்கரமாக நிகழும் மறு பிறப்புக் களிலிருந்து தப்பிக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தத்தமது ஆத்மாக் களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அது போதித்தது. பைதகரஸ், கெளதம புத்தரின் சம காலத்தவராக இருந்ததும் இரு வருடைய கோட்பாடுகளிலும் பல விதமான ஒற்றுமைகள் காணப்பட் புதும் கவனிக்கத் தக்கது.
ஆரம்பத்தில் கிரேக்கத்தின் பல பகுதிகளிலும் செல்வாக்குச் செலுத் திய இவ்வியக்கம் பைதகரஸின் வாழ்வுகாலத்திலேயே அடக்கி ஒடுக் கப்படலாயிற்று. கி. மு. 5ம் நூற்றாண் டின் நடுப்பகுதியில் அவரது குழு வினர் ஒன்றுகூடும் இடங்கள்தாக்கப் பட்டுத் தீ வைக்கப்பட்டன. சிம் நூற் றாண்டின் நடுப்பகுதியாகும் போது பைதகரஸ் சிந்தனையாளர்கள் முற் றாகச் செயலிழந்து போயினர். து

Page 21
(SYDNEY)
ட்டிகள் இடம்பெறும்
ஸிட்னி
மாநகர்
புதிய மில்லென்னியத்தின்முத 1973ம் ஆண்டு வரை ஸிட்னி நகரின்
லாவது ஒலிம்பிக் போட்டிகள் இடம் பெறுகின்ற ஸ்பிட்னி மாநகர் தென் கிழக்கு அவுஸ்திரேலியாவிலுள்ள நியு ஸவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகராகத் திகழ்கின்றது. அவுஸ்தி ரேலியாவின் நகரங்களுள் பழை யதும் மிகப் பெரியதுமான ஸிட்னி இன்று நாட்டின் முக்கிய பொருளா தார, கலாசார மற்றும் நிர்வாக மத்திய நிலையமாக விளங்குகின்றது. ஸிட்னியும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் சுமார் 12,400 சதுர km பரப்புடையவை. நகரின் சராசரி வெப்பநிலை 12.60 முதல் 31°C வரை வேறுபடுகின்றது. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1191 mm ஆகும். வருடத்தின் எல்லாக் காலங்களிலும் மழை பெய்கின்றது.
ஸிட்னியின் மத்திய வர்த்தக மாவட்டத்தில், காலனித்துவக் கால அரசாங்கக் கட்டடங்களோடு வாணு யர் மாடிக் கட்டடங்களும் கலந்து காணப்படுகின்றன. 305 m உயரமான Sydney Tower GTạirgọith (39, IT Lụ7ử அண்மைக்காலம் வரை தென்னரைக் கோளத்திலுள்ள மிக உயர்ந்த கட்டடமாகத் திகழ்ந்தது. 1932இல் பூர்த்திசெய்யப்பட்ட ஸிட்னி துறை (ypač u PT GJüri (Sydney Harbour Bridge) அக்காலத்தில் உலகிலேயே மிகப் பெரிய தனி வளைவைக் கொண்ட பாலமாக விளங்கியது.
38
அடையாளச் சின்னமாகவும் இப் பாலமே திகழ்ந்தது.
உலகப் புகழ்பெற்ற கட்டட LDITGCT Sydney Opera House I973D ஆண்டு திறக்கப்பட்டது. கடலில் நீட்டிக் கொண்டிருக்கும் Bennelong Point என்ற இடத்தில் அமைக்கப்பட் டுள்ள நவீன கலைவடிவம் கொண்ட இக்கலை அரங்கே இன்று ஸிட்னி யின் அடையாளச் சின்னமாக விளங் குகின்றது.
பிரிட்டிஷ் கடற்படைக் கப்ட னான ஜேம்ஸ் குக் என்பவர் 1770இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரை யை அடைந்தார். ஸிட்னிக்கு அண் Goldt's gy gir GT Port Jackson stairp பகுதியைக் கண்டுபிடித்து அதற்கு அப்பெயரை ட்டவர் அவரே. அக்காலத்தில் பிரித்தானிய உள்துறை egy Goldja TTa, g}(555 list Wiscount of Sydney எனும் கெளரவப் பட்டம் Gasir Girl Thomas Townshend grgirl வரின் நினைவாகவே இப்பிரதேசத் துக்கு Sydney Cove என்ற பெயர் வழங்கப்பட்டது.
இன்றைய ஸிட்னி அவுஸ்திரே லியாவின் கைத்தொழில், வர்த்தக, நிதி மற்றும் உல்லாசப் பயணத்தலை நகராக விளங்குகின்றது. அவுஸ்திரே லியாவின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களுள் அறுபதின் தலைமை யகங்கள் ஸிட்னியிலேயே அமைந்
 
 

துள்ளன. நாட்டின் வெளிநாட்டு வர்த் தகத்தில் பெரும்பகுதியும் ஸிட்னியி னுாடாகவே இடம்பெறுகின்றது. syrigoirot Kingsford Smith International Airport - 5 TGör gp - GúLDT GMT நிலையமே அவுஸ்திரேலியாவில் அதிகளவு விமானப் போக்குவரத் தைக் கையாள்கின்றது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரித்தானிய சாம்ராஜ்யத்திலிருந்த குற்றவாளிகளை அடைத்து வைக்கும் டமாகவே விட்னி பயன்பட்டது. ப்போது பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் வழித்தோன்றல்களே ஸிட்னி மா நகரில் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். தெற்கு ஐரோப்பா, தென் கிழக்காசியா ஆகிய பிரதேசங் களிலிருந்து வந்து குடியேறுபவர் களின் தொகை ஸிட்னியில் பெரு 'மளவு அதிகரித்துள்ளது. லெபனா
னியர்கள், வியட்நாமியர்கள், ஏனைய ஆசிய நாட்டவர்கள் போன்றோரும் இத்தாலி மற்றும் கிரேக்க நாட்ட வர்களும் அங்கு கணிசமான அளவில் குடியேறியுள்ளனர். நகரின் சனத் தொகையில் மிகச் சிறிய விகிதத் தினரே (0.8%) அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளாக உள்ளனர்.
எபிட்னியில் பல பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் இருக் Sisirpat, University of Sydney 1850L ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். ஸிட்னி நகரிலுள்ள அழகான கடற் கரைகளும் பூங்காக்களும் உல்லாசப் பிரயாணிகளாலும் உள்ளூர்வாசி களாலும் விரும்பிநாடப்படுகின்றன. அங்கு 1879இல் நிறுவப்பட்ட Royal National Park 6Tai Ligi. 2 su8git மிகப் பழைய தேசிய வனங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. து
6) IT) பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் ஓவியக் கண்காட்சியொன்றைப் பார்க்கச் சென்றனர். "சுவர்க்கத்தில் ஆதமும் ஏவாளும்’ என்ற தலைப்பில் பிரபல ஓவியர் ஒருவரினால் வரையப்பட்ட
ஓவியமொன்றின் முன்னால் நின்ற அவர்கள் அதனைப் பற்றிக் கலந்துரையாடத் தொடங்கினர்.
சுவர்க்கத்தில், இலைகளினால் தமது நிர்வாணத்தை மறைத்துக்கொண்டு நின்ற ஆதமும் ஏவாளும் ஓர் அப்பிள் கனியைப் பகிர்ந்துண்ணும் காட்சியை அந்த ஓவியம் சித்தரித்தது.
"இவர்களுடைய கம்பீரமான தோற்றத்தையும் பண்பான சுபாவத்தையும் பார்க்கும் போது இவர்கள் பிரிட்டிஷ்காரர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்" என்றார் பிரித்தானியர்.
“இல்லை. இவர்களுடைய உடலின் வசீகரத்தையும் அவர்களிருவரும் நிற்கும் கவர்ச்சியான போஸையும் பார்க்கும் போது இவர்கள் பிரெஞ் சுக்காரர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்” என்று சொன்னார் பிரான்ஸ் நாட்டவர்.
"நீங்கள் சொல்வதெல்லாம் தவறு. இவர்களுக்கோ உடுக்க உடையில்லை. தின்பதற்கு ஒரேயொரு அப்பிள்தான் இருக்கிறது. ஆனால் தாங்கள் இருக்கும் இடத்தைச் சுவர்க்கம் என்று நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். எனவே நிச்சயமாக இவர்கள் ரஷ்யர்களாகத் தான் இருக்க வேண்டும்” என்று கூறினார் ரஷ்ய நாட்டவர்.

Page 22
曼 :6f) sylls
Uiji ivZilj višjiji fic SYS visiii.6):16) ஒரு நாள்.
மேற்கத்தியத் திரைப்பட உல கின் தலைநகராகத் திகழ்வது அமெரிக் காவின் கலிபோர்னியா மாநிலத்தி 8ygirais (6) in T súilge! I' (Hollywood) பிரதேசமாகும். இந்த ஹொலிவூட்டில் சுமார் #15 ஏக்கர் நிலப்பரப்பில் வியா பித்துள்ள உலகப் புகழ்பெற்ற திரைப் படக் கலைக் கூடம் தான் யுனிவர்ஸ்பல் Gugli Gurt. Universal Studio Inc. GTGirp கம்பனிக்குச் சொந்தமான இந்த ஸ்டூடி யோவைச்சூழவுள்ள பிரதேசம்UniverSal City என அழைக்கப்படுகின்றது.
வசூலில் சாதனை படைத்த பல தொலைக்காட்சித் தொடர்களும் சினி மாப்படங்களும் இந்தக் கலைக்கூடத் தில் தயாரிக்கப்பட்டுள்ளன. The laws, E.T., Jurassic Park, The Lost World. The Submarine, Mummy Gustairplay)lig, மான திரைப்படங்கள் இந்த யுனிவர் ஸல் ஸ்டூடியோவின் தயாரிப்புக்களே.
திரைப்படத்தயாரிப்புத்துறை சம் பந்தமான கலை நுணுக்கங்களையும் தொழில்நுட்பப் பின்னணிகளையும் பொதுமக்கள் கண்டுகொள்ளும் வகை யில் யுனிவர்ஸல் ஸ்டுடியோவை ஒரு பிரமாண்டமான கண்காட்சிக்கூடமாக மாற்றியிருக்கின்றார்கள் அதன் உரிமை யாளர்கள். எனவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் யுனிவர்ஸல் ஸ்டூடியோவுக்கு விஜயம் செய்து அங் குள்ள கண்காட்சிகளைக் கண்டுகளித்து
வருகின்றனர்.
33.733
颚
2000 ஜூலை மாதத்தில் நான் லொஸ் ஏஞ்ஜலிஸ் நகருக்குச் சென்றி ருந்த போது யுனிவர்ஸல் ஸ்டூடியோ வைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்
ஏற்பட்டது. எனவே அமெரிக்க சுதந்திர
40
தினமான ஜூலை 4ம் திகதி காலையில் எனது நண்பரொருவரின்துணையோடு Universal Cityஐ நோக்கிச் சென்றேன். உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்த 20,000க்கு மேற்பட்டவர்கள் அன்று அங்கு விஜயம் செய்திருந்தனர். அவர் களுள் ஜப்பானியர்களும் மெக்ஸிக்கோ நாட்டவர்களுமே கூடுதலாகத் தென் பட்டனர்.
நுழைவுக் கட்டணத்தைச் செலுத் திய பின் முதல் நிகழ்ச்சியாக ஸ்டூடி யோ முழுவதையும் சுற்றிக் காண்பிக்
கும் Studio tourஇல் கலந்துகொள்ளத்
தீர்மானித்தோம். மூன்று பெட்டி களைக் கொண்ட Road trainகள் இதற் காகப் பயன்படுத்தப்பட்டன. காட்சி களை நன்கு பார்க்கக் கூடியவாறு அவற்றின் இரு பக்கங்களிலும் பெரிய கண்ணாடி யன்னல்கள் பொருத்தப்பட் டிருந்தன. இந்த trainகள் சாதாரணபஸ் வண்டிகளைப் போல் டயர்களைக் கொண்டவை; தண்டவாளங்களின்றித் தரையில் ஒடக்கூடியவை. ஆப்படி எத்த னை traiகள் சேவையிலீடுபட்டன வோ தெரியவில்லை. வந்து குவியும் ஆட்களையெல்லாம் தங்குதடையின்றி Studio touாஇல் அனுப்பிக் கொண்டே யிருந்தார்க்ள்.
 

நாம் trainga ஏறுவதற்காக வரிசையில் நின்றபோது Draculaவேசத் தில் அதேமாதிரி பற்களுடன் ஒருவர் அங்கு வந்தார். கியூவில் நின்ற இளைஞ னொருவனின் கழுத்தைக் கடித்து இரத் தம் குடிக்கப் போவது போல் பாசாங்கு செய்தார். அந்த இளைஞனோ திகைத் துப் போய் நின்றான். சூழ இருந்தவர் கள் கைகொட்டிச் சிரித்தனர். யுனிவர் எபல் ஸ்டுடியோவில் நாம் காணப் போகும் விடயங்களுக்கு இதுவொரு முன்னுதாரணமாக இருக்கலாம் என் எண்ணிக் கொண்டேன். பின்னர் Dra Culaவேசமிட்ட அந்த நடிகருடன்நின்று படம் பிடித்துக்கொள்ளப் பார்வையா ளர்கள் முண்டியடித்தனர்.
எமது trainஇன் முன் பெட்டியில் எமக்கு வழிகாட்டியாகவும் அறிவிப்பா |ளராகவும் ஓர் இளம் பெண் அமர்ந் திருந்தார். அவரது அறிவிப்புக்களை அடுத்த இரு பெட்டிகளிலும் உள்ள வர்கள் தொலைக்காட்சிப்பெட்டி பொன்றினூடாகப் பார்க்கவும் கேட்க வும் முடிந்தது. ஸ்டூடியோவின் பல் வேறு பகுதிகளினூடாகவும் வண்டி செல்லும்போது அப்பகுதிகள் பற்றிய விளக்கங்களை அப்பெண் தெளிவான ஆங்கிலத்தில் கூறிக்கொண்டிருந்தார்.
ஸ்டூடியோ நிலப்பரப்பின் ஒரு புறத்தில் பலவிதமான மாதிரிக்கிராமங் களும் நகரங்களும் நிர்மாணிக்கப்பட் டிருந்தன. பல்வேறு கால, இடப் பின்னணிகளுக்கு ஏற்பப் படப்பிடிப் புக்களை நடாத்துவதற்கு இச்செயற் கைக் கிராமங்களும் நகரங்களும் பயன் படுவதாக அறிவிப்பாளர் கூறினார். அதேவேளை இதே பின்னணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பழைய திரைப்படங்களின் பகுதிகளும் TWயில் கொண்பிக்கப்பட்டன.
இக்கிராமங்களிலும் நகரங்களி லும் பாதைகள், கட்டடங்களின் முன் புறம் என்பன தத்ரூபமாக அமைக்கப்
41
பட்டிருந்தன. எனினும் கட்டடங்களின் பின்புறங்கள் வெறுமனே மொட்டை பாக விடப்பட்டிருந்தன. முற்கால நிவ் யோர்க் நகர விதிகள், கலிபோர்னியாப் பகுதிக் கிராமங்கள், Cow boy, பட்ங் களில் வரும் பழங்காலக் கடைத் தெருக் கள் எனப் பல்வேறு பகுதிகளினூட்ாக நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். பிரதேசத்துக்கு ஏற்றவாறு தாவரங் களும் தேர்ந்தெடுத்து நடப்பட்டிருந் தன.
மெக்ஸிகோப் பிரதேச மாதிரிக் கிராமமொன்றின் நடுவே எமது வண்டி போய் நின்றது.அங்கு மழை பெய்யப் போவதாக அறிவிப்பாளர் கூறினார். திடீர் திடீரென மின்னல் பளிச்சிடத் தொடங்கியது. காதைப் பிளக்கும் வகையில் இடிமுழக்கம் கேட்டது. சிறி து நேரத்தில் "ஹோ' என மழை பொழி யத் தொடங்கியது. பாதையோரத்தி விருந்த பழைய வீடுகளின் ஒட்டுக் கூரை களிலிருந்து நீர்வழியத் தொடங்கியது. நான் மெதுவாகத் தலையை வெளியே நீட்டிப் பார்த்தேன். ஒரு விட் டுக்கூரையின் மீது பெரியHalogen மின் விளக்கொன்று விட்டுவிட்டுப் பளிச் சிட்டது. அருகிலிருந்த மரக்கிளையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய ஒலிபெருக்கிகள் இடிமுழக்கத்தைப் பிறப்பித்தன. பாதையோரம் நெடுகே நடப்பட்டிருந்த தந்திக் கம்பங்களின் உச்சிகளில் பொருத்தப்பட்டிருந்த விசேட நீர்குழாய்களே மழையைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தன. மேற் குறித்த பகுதிகள் தெரியாதவாறு கமரா வைக் கையாளும் போது இயற்கை யாக மழைபெய்வது போன்று தானே இருக்கும் என எண்ணிக் கொண்டேன். அப்போது வண்டிக்குள்ளிருந்த வர்கள் திகிலடைந்து கூச்சலிடலாயினர். அவர்கள் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தேன், எதிர்ப்புறத்திலிருந்த அகல மான, ஆழமற்ற கால்வாயில் மடை

Page 23
திறந்து விட்டது போல் பெருவெள்ளம் பேரிரைச்சலுடன் தாவி வந்துகொண் டிருந்தது. பாதையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த மாட்டு வண்டியொன்று அப்பெரு வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றது.
மழை நின்ற பின் எமது வண்டி புறப்பட்டது. வந்த வெள்ளம் எங்கே போனதென்றே தெரியவில்லை. மீண் டும் அடுத்த பார்வையாளர் கூட்டம் அவ்விடத்தால் வரும்போது அத்தனை நிகழ்ச்சிகளும் மீண்டும் நிகழத்தானே போகின்றன. எனவே அந்த நீரெல்லாம் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் சென் றிருக்கும் என நினைத்துக் கொண் டேன். வெள்ளத்தில் அடித்துச்செல்லப் பட்ட மாட்டு வண்டியும் மீண்டும் பழைய இடத்திலேயே போய் நின்றி ருப்பதைக் கண்டேன். இந்த ஸ்டுடி யோவுக்குள் இன்னும் எத்தனை மர்மங் "ள் இருக்குமோ என்ற ஆவலுடன் பிரயாணத்தைத் தொடர்ந்தேன்.
வழியில் ஆறுபோன்ற நீர் நிலை யொன்று எதிர்ப்பட்டது. அதன்மீது தூர்ந்துபோன மிகப் பழைய மரப் பால மொன்று இருந்தது. 50 - 60 வருடங் களுக்கு முன் படப்பிடிப்பொன்றுக் காகச் செய்யப்பட்ட பாலம் அது என விளக்கினார் அறிவிப்பாளர். "இந்தப் பாலத்தின் மீதாக நாம் போகப் போகி றோம். நமது வண்டிச் சாரதி நல்ல அனுபவசாலி. எனவே நீங்கள் பயப்பட வேண்டியதில்லை" என்றும் அவர் கூறினார்.
வண்டியும் மெதுவாகப் பாலத் தின் மீது நகர்ந்தது. அந்தப் பழைய பாலம் கிரீச் கிரீச் என்ற ஓசையுடன் குலுங்கத் தொடங்கியது. பட்ாரென அதன் ஒரு பகுதி உடைந்து விழவே எமது வண்டி அந்தரத்தில் ஆடியது. பிர யாணிகள் பயந்து கூக்குரலிட்டனர். எனினும் சாரதி ஒருவாறு வண்டியை
42
அப்பாற் செலுத்திச் சென்றார். பாலத் தை முழுமையாகக் கடந்த பின்னர் தான் மனதில் ஆறுதல் ஏற்பட்டது.
சிறிது தூரம் சென்ற பின் அந்தப் பாலத்தைத் திரும்பிப் பார்த்தேன். உடைந்து விழுந்த தூண்களெல்லாம் தாமாகவே நேராகிப் பழையபடி பொருந்திக் கொள்வதைக் கண்டேன். பாலத்தின் பகுதிகள்'ஹைட்ரோலிக் முறையில் இயக்கப்படுவது புரிந்தது. சிறிது நேரத்தில் அடுத்து வரும் கூட்டத் தினரைப் பயமுறுத்துவதற்கு அந்தப் பாலம் மீண்டும் தயாராகி நின்றது.
அடுத்ததாக வண்டி சென்ற பாதை அதே ஆற்றின் இன்னொரு பகுதியை நோக்கிச் சென்றது. பாதை ஆற்றின் கரையில் முடிந்ததே தவிர, தொடர்ந்து செல்லப் பாலம் எதுவும் இருக்கவில் லை. என்ன ஆச்சரியம் ஆறு இரண் டாகப் பிளந்து எமது வண்டிக்கு வ விட்டது. அந்த வழியினூடாகச் சென்ற நாம் அடுத்த கரையை அடைந்தோம். பின்னர் ஆறு மீண்டும் முன்போல் இணைந்து கொண்டது. இதுவும் பொறியியலாளர்களின் கைவரிசை தான் என்பது நன்றாகப் புரிந்தது. "Ten Commandments" என்ற திரைப்படத்தில் மூஸா நபிக்கும் (மோஸ்ஸ்) அவரது தோழர்களுக்கும் செங்கடல் பிளந்து வழிகொடுக்கும் காட்சி இவ்வாறு தான் படமாக்கப்பட்டதாம்.
அடுத்து நாம் சென்ற பகுதியில் விசாலமான ஸ்டுடியோக் கூடங்கள் yan Djigo) isgar. Studio No.l.. Studio No.2 என அவை தொடர்ந்து இலக்க மிடப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றின் வாயிலை நோக்கி எமது வண்டி சென் றது. "இன்று விமுறை நாளாக இருப் பதால் இந்த ஸ்டுடியோவில் படப் பிடிப்புக்கள் எதுவும் நடைபெறவில் லை. எனவே நாம் உள்ளே சென்று பார்ப்போமா?" என்று பீடிகை போட்

டார் எமது அறிவிப்பாளர். அதற்குள் வாயிற் கதவுகள் தாமாகவே திறந்து எமது வண்டிக்கு வழிவிட்டன. வண்டி உள்ளே நுழைந்த பின் அவை மூடிக் கொண்டன.
அந்த விசாலமான கூடத்திற்குள் எமது வலப்புறமாகப் பெரிய கொங் கிரீட் மேம்பாலமொன்று நிர்மாணிக் கப்பட்டிருந்தது. பாலத்தின் மேலேகம் பங்களில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. திடீரெனப் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது போல் நிலம் கடு மையாகக் குலுங்கியது. எமது வண்டி ஒருபக்கமாகச் சாய்ந்து விடும்போல் ஆடியது. பூமியின் நடுக்கம் காரண மாகப் பெரிய கொங்கிரீற்றுப் பாலம் இரண்டாகப் பிளந்து சரிந்தது. அதன் மேல் சென்றுகொண்டிருந்த பெரிய BOWSC வண்டியொன்று புரண்டு வந்து எமது வண்டியின் மீது விழப்போய் இடையில் நின்ற ஒரு தூணில் தங்கி விட்டது. அறுந்து விழுந்த மின்கம்பி களிலிருந்து பேரொலியுடன் மின் பொறி பரந்தது. எதிர்பாராத இந்த நிகழ்வுகளைக் கண்ட வண்டியிலிருந்த அனைவருக்கும் கைகால்கள் உதறத் தொடங்கின.
உடைந்து விழுந்த பாலத்திற்கு மேலே பறந்துகொண்டிருந்த பொலி ஸ்ாரின் ஹெலிகொப்டரொன்றுதீப்பற் றியெரிவது தெரிந்தது. பாதையோரத்
திலிருந்த நீர்க்குழாய்கள் உடைந்து நீர் பெருவெள்ளமாகப் பாய்ந்து வந்தது. இடதுபுறமாகவும் ஏதேதோ நடந்தன. வலப்பக்கமாக நடந்தவற்றைப் பார்த் துத் திகைத்துப் போயிருந்தபடியால் மறுபக்கத்தைப் பார்க்க அவகாசம் கிடைக்கவில்லை.
ஒருவாறு சாரதி வண்டியைக் கிளப்பிக்கொண்டு முன்னேறினார். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த் தேன். உடைந்து விழுந்த மேம்பாலம் தானாக நேராகிப் பழைய நிலைக்கு வந்து கொண்டிருந்தது. குடைசாய்ந்த BOWSC வண்டியும் பழைய நிலைக்குப் போய்க்கொண்டிருந்தது. ஹெவிகொப் டரிலும் தீயணைந்திருந்தது. சிறிது நேரத்தில் ஒன்றுமே நடவாதது போல் எல்லாமே பழைய நிலைக்கு வந்திருந் தன.
"இந்தச் சாகச நிகழ்ச்சிகளை யெல்லாம் தினமும் நூற்றுக் கணக்கான தடவைகள் இவர்கள் சலிப்பின்றிச் செய்து காட்டுகிறார்களே இந்த அறி விப்பாளர்கள்கூட இது தான் முதல் தடவை என்பதுபோல் உற்சாகத்தோடு எம்மை ஏமாற்றித் திகைக்க வைக்கி றார்களே இவர்களுடைய ஆற்றலை யும் ஈடுபாட்டையும் எப்படிப் பாராட் டுவது' என்று எண்ணியவாறு பிரயா ணத்தைத் தொடர்ந்தேன்.
(மீதி அடுத்த இதழில்)
ஏன் இப்படி? தனது பேச்சுத் திறமை பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த மதபோதகர்
ஒருவர் விசேட ஞாயிறு ஆராதனையொன்றை நடாத்துவதற்காக ஓர் ஆலயத்திற்கு விஜயம் செய்தார். எனினும் அன்றைய தினம் வழமையைவிடக் குறைந்த தொகையினரே
ஆராதனைக்குச் சமுகமளித்திருந்தனர்.
இதைக் கண்டு விரக்தியுற்ற மதபோதகர் "நான் வருவது பற்றி நீங்கள் அறிவித்தல் பலகையில் போட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது” என்று ஆலய நிர்வாகியிடம் குறை
கூறலானார்.
அதைக் கேட்ட நிர்வாகி "அறிவித்தல் பலகையில் போடாவிட்டாலும் மக்கள் எப்படியோ அறிந்துகொண்டு விட்டார்கள் போல் தெரிகிறதே" என்றார்நாகுக்காக,
4.3

Page 24
கிழுதை, Equidae என்னும் உயரமுடையதாகவும் காணப்படு குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. கி. கின்றன. அமெரிக்கக் கழுதைகள் மு. 4000ம் ஆண்டளவில் எகிப்தி சுமார் 167.60m வரை வளர்வதுண்டு. யர்கள் கழுதைகளைச் சாதுவாக்கி கழுதையின் காதுகள் மிக நீள வீட்டு விலங்குகளாக வளர்க்கத் மானவை. அதன் தோல் நிறம் வெள் தொடங்கினர். அக்காலம் முதலே னை முதல் நரை அல்லது கறுப்பு இவை பளுதூக்கும் விலங்குகளாக நிறம்வரை வேறுபடலாம். கழுதை மனிதனுக்குப் பயன்பட்டு வந்துள் யின் வயிற்றுப் புறம், மூக்கு மற்றும் ளன. இவ்வாறு மனிதனால் வளர்க் வாய்ப்பகுதிகள் என்பன வெண்மை கப்பட்ட கழுதை இனங்கள் யாவும் யாக இருக்கும். அதன் பிடரிமயிர்கள் gேus asirus என்னும் ஆபிரிக்கக் குட்டையாகவும் நிமிர்ந்தும் காணப் காட்டுக் கழுதை இனத்தின் வழித் படும், குதிரையின் வாலைப் போ தோன்றல்களாகவே இருந்திருக்கும் லன்றி அதன் வாலின் நுனியில் மாத் எனக் கருதப்படுகின்றது. திரமே நீண்ட மயிர்களால் ஆன குஞ் கழுதையைdonkey எனவும் d0. சம் இருக்கும். பெரும்பாலான கழு வும் ஆங்கிலத்தில் தை வகைகளில் பிடரி மயிர்
リー அழைப்பர். அத்தோடு அமெரிக்கா தொடக்கம் முதுகு நெடுகே வால் வில் Buா0 என்ற பெயரும் இதற்குப் வரை கரிய கோடொன்று காணப் பயன்படுத்தப்படுகின்றது. BபாT0 படும். அத்தோடு தோள்களுக்குக் என்பது கழுதையைக் குறிக்கும் குறுக்காகவும் இவ்வாறான கருங் ஸ்பானிய மொழிச் சொல்லாகும். கோடொன்று காணப்படலாம். (சிங்களத்தில் உபயோகிக்கப்படும் கழுதைகள், குதிரைகளை விட பூறுவா (இ9ே0) என்ற பெயரும் இந்த வும் உறுதியான முறையில் தம் அடிப்படையில் வந்ததோ தெரிய பாதங்களை நிலத்தில் பதித்து நடக் வில்லை). கக் கூடியவை. எனவே மலைப் ஆசியாவிலுள்ள கழுதைகளும் பாங்கான பாதைகளில் சறுக்காமல் ஆபிரிக்கக் காட்டுக் கழுதைகளும் செல்வதற்கு ஏற்ற வாகனங்களாக
*
தோள்பட்டைப் பகுதியில் சுமார் 125 வை பயன்படுகின்றன. அத்தோடு 1ே1 உயரமுடையவை. எனினும் வற்றின் ஆயுளும் குதிரையின் வெவ்வேறு பிரதேச வகைகள் ஆயுளைவிடக் கூடுதலாகும். பொது உயரத்தில் வேறுபடுவதுண்டு. 'வாக 25 முதல் 50 வருடங்கள் வரை உதாரணமாக சிசிலித் தீவுகளில் 'கழுதைகள் உயிர்வாழ்கின்றன. உள்ள கழுதைகள் குள்ளமாகவும் கழுதைகள் வேகமாக ஓடக்கூடி (உயரம் சுமார் 61 CIn)MajorCaவில் யவை. ஆபிரிக்கக் காட்டுக் கழுதை உள்ள பெரிய வகை சுமார் 1575 cm கள்(Equstlsius or Equstricans)
44
 

மணிக்கு 50km வரையான வேகத்தில் ஒடக்கூடியவை. ஆசியாவிலுள்ள காட்டுக் கழுதை வகைகள் மணிக்கு 70km வேகத்தை அடைவதும் உண்டு, இவற்றினால் மணிக்கு சுமார்2 km வேகத்தில் தொடர்ச்சிய்ாக இரண்டு 'மணித்தியாலத்துக்கு மேல் ஓட முடி
ի եւ ԼD.
ஆசியக் காட்டுக் கழுதைகளுள் (Equus her for its) LIG) firga, Gir உண்டு. இவற்றுள் பருமனில் மிகப் பெரியது திபெட் நாட்டு மேட்டு நிலங்களில் வசிக்கும் Kiang என்ப 575 d. gg. Equ t 's hermiontus kiang எனப் பாகுபடுத்தப்படும். மொங் கோலியாவில் காணப்படும் Kபlan бтgšтр бhлбяnл, Egyимs һетіопиs herials எனப்பாகுபடுத்தப்பட் டுள்ளது. 0nager எனப்படும் பாரசீகக் காட்டுக் கழுதைகள் (E. M. Grager) ஈரான், துர்க்மேனிஸ்தான் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்றன. இந் தியா, பாகிஸ்தான், }லங்கை போன்ற நாடுகளில் காணப்படும் வகை Ghorkhar எனப்படும். இதன் விலங்கியற் பெயர் E. M. Khur என்பதாகும். விரியாவில் கானப் Lill-E h, hemippus gitairp 57' (5)á கழுதை வகை இப்போது முற்றாக அழிந்து போய்விட்டதாகக் கருதப் படுகின்றது.
வறண்ட பாலை நிலங்களிலும் மலைப்பாங்கான பிரதேசங்களிலும் நிலைத்து வாழக்கூடிய ஆற்றல் கழுதைகளுக்கு உண்டு. შp?ill |al|| பெரும்பாலும் மழை காலத்திலேயே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. பெண் கழுதையொன்று ஒரு தடவை யில் ஒரு குட்டியை மாத்திரமே ஈனும், அதன் கர்ப்பகாலம் சுமார் 12 மாதங்களாகும். பெண் விலங்கு களுக்கும் அவற்றின் குட்டிகளுக்கும்
45
இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்படுகின்றது. Kulam போன்ற சில வகைகள் பெரிய மந்தைகளாக இணைந்து வாழ்கின்றன.
ஆபிரிக்கக் காட்டுக் கழுதைகள் அவற்றின் இறைச்சிக்காக வேட்டை யாடப்படுகின்றன. இதனால் அவற் றின் குடித்தொகை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அவற்றின் மாமிசம் மான் இறைச்சியைவிட மேன்மையானதாகக் கருதப்படுகின் றது. பதனிடப்பட்ட கழுதைத் தோல் Shagreen எனப்படும்.
ஆண் கழுதையையும் பெண் குதிரையையும் கலப்பு இனப்பெருக் கம் செய்வதன் மூலம் உருவாகும் விலங்கு கோவேறு கழுதை (mule) எனப்படும். இதன் தலை, காதுகள், பின்புறம், வால் என்பன கழுதைக் குரியன போன்று இருக்கும். எனினும் பருமனிலும் உடற்கட்ட மைப்பிலும் அது குதிரையை ஒத் திருக்கும். மதிநுட்பம், தசைப் பலம், உடல் வலிமை, ஆயுட்காலம், பாதங் களை நிலத்தில் பதிக்கும் திறன் முதலியவற்றில் கோவேறு கழுதை யானது தனது இரு பெற்றார்களை விடவும் மேம்பட்டதாகக் காணப் படுகின்றது. ஆண் கோவேறு கழுதை கள் பொதுவாக மலட்டுத் தன்மை புடையவை. எனினும் பெண் விலங் குகளைக் கழுதைகளுடன் அல்லது குதிரைகளுடன் கலப்பு இனப்பெருக் கம் செய்ய முடியும்.
பெண் கழுதையும் ஆண் குதி ரையும் கலப்பு இனப்பெருக்கம் செய் வதன் மூலம் உருவாகும் கோவேறு கழுதை வகை Hinny என அழைக்கப் படும். இது nule வகையைவிடப் பாரமான உடலைக் கொண்டிருக் கும். இதனால் வண்டியிழுப்பதற்கு மிக ஏற்றது. -

Page 25
யுமோ இனியா என்பது நுரை யீரல்களில் ஏற்படக்கூடிய ஓர் அழற்சி (Inflammation) lileo) GALLI Tiġbo... FIT ILLI ro, கிருமித் தொற்று அரிப்பு போன் றவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடல் இழையங்கள் (tissues) தோற்றுவிக்கும் எதிர்த்தாக்கத்தையே அழற்சி என்கிறோம். வலி, வீங்கு தல், சிவத்தல், சூடேறுதல் என்பன அழற்சி நிலையின் பிரதான அறிகுறி களாக இருக்கும்.
நியுமோனியாவில் எத்தனை யோ வகைகள் உண்டு. இவற்றை முதனிலை நியுமோனியா (primary pneumonia), இரண்டாம் நிலை நிபு (3Lrrr saf? Lurr (secondary pneumonia) என இரு வகைகளாகப் பிரிக்கலாம். குறித்த வகை நோய்க்காரணி ஒன்றி னால் உருவாக்கப்படும் நியுமோனி யாக்கள் யாவும் முதனிலை வகை யிலயே அடங்கும். சுவாசத் தொகு தியில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்பு அல்லது அசாதாரண நிலை யொன்றின் காரணமாகத் தீவிரம் குறைந்த நுண்ணங்கிகள் நுரையீரல் களை ஆக்கிரமிப்பதன் மூலம் ஏற் படும் நியுமோனியா நிலைகளே இரண்டாம் நிலை வகையில் அடங் குகின்றன.
கோளவுருவான Strepto: pneumoniae என்ற பற்றீரியாவினால் தோற்றுவிக்கப்படும் நியுமோனி யாவே எங்கும் பரவலாகக் காணப் படுகின்றது. இவ்வகை நியுமோனி யாவை மருத்துவர்கள் Pneumococcal Pneumonia sysi Gug Acute Lobar Pneumonia என அழைப்பர். இது
நியுமோனியா
Pneun Onia
45
தவிர மேலும் பல பற்றீரிய இனங் களாலும் முதனிலை நியுமோனியா உண்டாகக்கூடும்.
சளிச்சுரம் என்னும் இன்ப்ளு வென்சா (influenza) நோய்க்குக் கார னமான வைரஸ்களும் மனிதனில் முதனிலை நியுமோனியாவைத் தோற்றுவிக்கின்றன. இத்தகைய வைரஸ் நியுமோனியாவும் எமது நாட்டில் பரவலாகக் காணப்படுகின் 墅、
நாம் முதனிலை நியுமோனியா வகையில் அடங்கும் Pneumococcal Pneumonia வைப் பற்றி மாத்திரமே இங்கு ஆராய்வோம்.
இந்நோய் எல்லா வயதின ரிலும் ஏற்படலாம். எனினும் முதிர் பருவத்தின் ஆரம்பத்திலும் நடுப் பகுதியிலுமே அதிகளவில் உண்டா கின்றது. இடைவெப்ப வலய நாடு களில் குளிர் காலத்திலேயே கூடுத லான தொற்று ஏற்படுகின்றது. நோ யாளி அல்லது நோய்க் காவி இரு மும் போதும் தும் மும் போதும் வெளிவருகின்ற சிறு துளிகள் மூலம் நோய் பரவுகின்றது.
நோய் திடீரெனவே தோன்றும். சடுதியான குளிரும் நடுக்கமும் ஏற் படும். வாந்தியும் வெளிவரலாம், சிறுவர்களில் சடுதியான தசைச் சுருங் கலும் மயக்க நிலையும் தோன்ற லாம். ஒரு சில மணித்தியாலங்களில் உடல் வெப்பநிலை 39 - 40C (10210°F) வரை அதிகரிக்கும். காய்ச்ச லோடு உடற்சோர்வு, பசியின்மை, தலைவலி, உடல் மற்றும் கை, கால் வலி என்பனவும் காணப்படும்.
 
 

ஆரம்ப கட்டத்தில் நெஞ்சறைப் பகுதியில் நோவு உண்டாகும். இவ் வலி பொதுவாக மார்புச் சுவர்ப் பகுதியிலேயே உணரப்படும். எனி ணும் சில வேளைகளில் தோள் பட் டை அல்லது வயிற்றுச் சுவர்ப்பகு தியில் நோவு கானப்படலாம். குறுகிய, ஆனால் வேதனை தரக் கூடிய இருமல் இருக்கும். ஆரம்பத் தில் உலர்ந்த தன்மையுடைய இவ் விருமல் பின்னர் இலகுவில் கழன்று வராத சளியைத் தோற்றுவிக்கும். இச்சளியானது பெரும்பாலும் இரும் புத் துருவின் (rust) நிறமுடையதாக இருக்கும். சிலவேளைகளில் குருதி தோய்ந்ததாகக் காணப்படும்.
சுவாச வீதம் அதிகரிப்பது நியு மோனியாவின் பிரதான அறிகுறி களுள் ஒன்றாகும். வளர்ந்தவர்களில் நிமிடத்திற்கு 30 - 40 வரையும் சிறு வர்களில் 50-60 வரையும் சுவாச வீதம் அதிகரிக்கும். இந்நிலையில் சுவாசம் ஆழமற்றதாகவும் வேதனை தருவ தாகவும் இருக்கும். நாடித்துடிப்பும்
விரைவடையும். தோல் சூடாகவும்
உலர்ந்தும் இருக்கும். முகம் சிவந்து காணப்படும். கடுமையாகப் பாதிக் கப்பட்டவரில் வாயின் சீதமென்சவ் வுகளும் நாக்கும் நீலம் பாரிக்கும்.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தொடங்கும் போதே வைத்திய உதவி யை நாடுவது அவசியமாகும். உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படா விடில் 30 - 40% நோயாளிகளில் மர னம் ஏற்படலாம், பொதுவாக நோயாளியின் சளி, குருதி ஆகியவற் றை ஆய்வுகூடத்தில் சோதிப்பதன் மூலம் நோய்க்காரணி எதுவெனக் கண்டுபிடிக்கலாம். அதற்கு ஏற்ப நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை (anti-biotics) தெரிவு செய்து சிகிச்சை யளித்தால் சுமார் ஒரு வாரத்திற்குள்
47
நோயாளி வழமையான நிலைக்குத் திரும்பிவிட முடியும்.
நோயாளிக்குப் போதியளவு நீராகாரம் வழங்குவதன் மூலம் அவ ரது தினசரி சிறுநீர் வெளியேற்றத்தை ஆகக்குறைந்தது 1500 II அளவுக் காவது பேண வேண்டும். உணவு உட்கொள்வதில் பெரிய சிரமம் ஏதும் இல்லாததால் புரதங்கள், விட்டமின் கள் ஆகியவற்றைக் கூடுதலாகக் கொண்ட கலோரிப் பெறுமானம் கூடிய உணவுகள் வழங்கப்பட வேண் டும். தேவையேற்படின் ஒட்சிசன் வழங்க வைத்தியர் தீர்மானிப்பார்.
சாதாரண தடுமலைத் தொடர்ந் து நியுமோனியா ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு. உடல் குளிரடைதல், போசனைக் குறைவு, மதுபானப் பாவனை, சிகரெட் புகைத்தல், உடற் பலவீனம் போன்ற காரணிகள் இவ்வாறு நியுமோனியா ஏற்பட வழிவகுக்கலாம். நச்சு வாயுக் கள், துரசுத் துணிக்கைகள் போன்ற வற்றால் சுவாச இழையங்கள் சேத மடைவதும் சின்னமுத்து போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்படு வதும் நியுமோனியா தொற்றுவதற் குரிய சாத்தியத்தை அதிகரிக்கச் செய்கின்றன.
இப்போது மேற்கு நாடுகளில் நியுமோனியா வராமற் தடுப்பதற் குரிய வக்கீன்கள் உபயோகத்துக்கு வந்துள்ளன. நியுமோனியா ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு இவற்றை வழங்குவதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க «LpLq- 4{ rb).
அரும்பின் வெப் தளம் இண்டர்னெட்டில் அரும்பின் வெப் தள முகவரி பின்வருமாறு:
WWWarumbu.itgo.com

Page 26
பொது அறிவுப் போட்டி இல:17,
வாசகர்களே! பின்வரும் பத்து வினாக்களுக்குமுரிய சரியான விடைகளைத் திருத்தமாக ஒரு தாளில் எழுதிக்கடிதஉறையினுள் இட்டுத் தபாலில் அனுப்பிவையுங்கள். விடைத்தாளில் உங்கள் பெயர், முக வரி, மாணவராயின் பா ட்சீலையின் பெயர் என்பவற்றை விபரமாக எழு தத் தவறாதீர்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: EDITOR - "ARUMBU' ROYAL COMPUTER CENTRE, 147, MAINSTREET, DHARGATOWN- 1209).
போட்டி முடிவுத் திகதி 2000 ஒக்டோபர் 31
பத்து வினாக்களுக்கும் சரியான விடைகளை எழுதியனுப்பும் வாசகர்களுள் அதிர்ஷ்டசாலிபாகத் தேர்ந்தெடுக்கப் படும் மூவருக்குப் பணப் பரிசுகள் வழங் கப்படும்,
முதற் பரிசு ரூபா 500.00 இரண்டாம் பரிசு ரூபா 250.00 மூன்றாம் பரிசு ரூபா 100.00 மேலும் 20 அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அரும்பில் பிரசுரிக்கப்படுவ தோடு அவர்களுக்கு அரும்பின் அடுத்த இதழ் இலவசமாக அனுப்பிவைக்கப்படும். குறிப்பு: இங்கு கேட்கப்பட்டுள்ள வினாக்களுள் சிலவற்றுக்கான விடைகள் இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரை களில் பொதிந்துள்ளன.
-------------- س ---------حسیجن S. ரும்பு அறிவுப்
போட்டி
4:
வினாக்கள்:
1.நிவ்யோர்க் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையம் என்ன பெயரால் அழைக்கப்படு கின்றது? 2. Compréfi AlsóT IGE,rf (Hochi Minh City) என அழைக்கப்படும் வியட்னாமியநகரின் முன்னைய பெயர்யாது? 3. கீ த மோபஸ்ஸான் தனது சிறுகதை களையும் நாவல்களையும் எந்தமொழியில் எழுதினார்? 4ஆர்ஜெண்டினாவின்கிழக்கெல்லையில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர் என்ன? 5.வங்காள விரிகுடாவிலுள்ள ஒரேயொரு தீவுக்கூட்டம் எது? 6. பங்களாதேஷின் சர்வதேச விமான சேவை என்ன பெயரால் அழைக்கப்படு கின்றது? : 7.அண்மையில் விபத்தில் சிக்கிய அணு சக்தியால் இயங்கும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன? 8.ஆசியக் காட்டுக் கழுதை இனத்தின் விலங்கியற்பெயர் என்ன? 9. ஆரம்ப காலத்தில் கட்டுநாயக்க சர்வ தேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதியுதவி வழங்கிய நாடு எது? 10இலங்கையிலுள்ள நிர்வாக மாவட்டங் களுள் பரப்பளவில் மிகப்பெரியது எது?
அடுத்த இதழ்
அரும்பு இதழ்-19 எதிர்வரும் 2000 நவம்பர் 10 ம் திகதி
வெளிவரும்."
 

அரும்பு பொது அறிவுப் போட்டி - 16 சரியான விடைகளும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளும்
கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் பின்வருமாறு:
1.அஸ்மாரா 2. ஆற்றுக் குதிரை 3. Lyceum 4. glorTun (gTig units Tri King George (WI) 5, Werneyra-7 6, Penici || iu min notatum 7. LDGINTITLOT (Manama) 8. eftLIIT" (Kyat)
9. William Samuel Henson 10 SoCTssississilu hsiugidalugal offlict, if (USA)
இம்முறை பெருந்தொகையினர் 10 விடைகளையும் சரியாக அனுப்பியிருந்தனர். அவர்களுள் அதிர்ஷ்டசாலிகளாகத் தெரிவு செய்யப்பட்ட மூவரினதும் விபரங்கள் பின்வருமாறு:
ti. Luflai (engun 500). J. M. Shafras, 178, Dodangala, Akurana 2io uflɛH (LLIT 250): M. N. F. Mufeena, 70/3, Nayawela, Mawarmella 3inulg (LIIT100): A. R. Sulfika Naseera, 282, Main Street, Kinniya-03
இலவசமாக அரும்பு-18ஜப் பெறுகின்ற 25 அதிர்ஷ்டசாலிகளின் பெயர் விபரங்கள்:
. S. Shakiram, 101/2, Power Station Road, Trincomalee, - M.M.M. Fazleen, No. 188E, Ranbu kela, Wilanagama, , M.A.M. Mafalz, 237NB, Delgastenna, Akurana.
M.A. Abao Nithal, Yr-10D, Zahira College, Puttalam, , A. G. Mohamed Aslam, Pudawa ikatt, Tiriyai, TriCoralee.
M.M. Shirous, 106, Kurundugahaela, Akurama. - M.H.M. Rismy (98129), CGTTI, 582, Galle Road, Mt. Lawinia. - Arani Loganathan, 38, Inner Falrline Road, Dehivela.
Nameeka Nizar, 13, Hassempura, Ganithapura, Warakāpola, 10, H. M., M. Zahran, 153/2, Dodangolla, Akurana, 11, M.I, Azhruff, 489, Hospital Road, Sainthamaruth I-7, 12. M.H.M. Hifas, 'Pasha Willa, 115, Dematagoda Road, Colombo-9. 13. F. Irfana Shafi, 40, College Road, Madige, Galagedara. 14, M.J. Shaziria, 12O'B, School Road Galhinna. 15, M.H.M., Jiffry, 236 A, Main Street, Matara. 16. M.M. Safraz Ahaned, 3, Maha Weli H., C., 400'52, Off Bullers Rid, Colomb0-7 1 W. M.S. Shafraz Mohamed, 405, Waragashina, Akurana. 18. M.). Mohar Tımadh Ajihadh, 55, Sarıgama, China Bay. 19, A. R. Razaar Ahmed, 15, Lane No. 5, 5th Cross St., Puttalam, 20, A. Mohamed Rau5, 153, Annal Street, Kinni ya -03, 21. M., Riflarn, "Zeernath Manzil", Mlew Road, Akkaramala, Maggorna, 22, M.S.M. Shamiq, 195, Kurmar athunga Mawatha, Matara. 23, 5, Pratheepan, 1222, Kovil Road, Palaiyuthu, Trincomalee. 24. A.M., Ahsan, Co. Kuduburdeen Stores, Husainiya Pural Palawi. 25. B.H. Moorul Farwin, 54, Jayakodi Kanda, AtLulugama, Banda ragama,
அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!
O

Page 27
எது த ஒருவரிடம் இல்லாத, ஆனால், ஒன்றை மனமுவந்து அவருக்கு வழங் கொடை என்கின்றோம். A.
போட்டியும் பூசலும் வன்செயல் மனிதர்களுக்கும் அதிகமாகத் ே சியுமே.எவ்வளவு பணம் கொடுத் இந்த நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமென மாகவோ பகிரங்கமாகவோ ஏங்கிக் இந்நிலையில் ஒருவர் மனநிம்! கொள்வதற்கு எம்மால் ஏதேனும் ஒ விடப் பெரிய கொடை வேறெதுவு கும் எதனையும் இழக்காமலேயே ந மாக இருப்பது ஒரு சுவிசேஷ அம். ஒருவர் நிம்மதியையும் சந்தோஷத் காணும் போது நிச்சயமாக எமது உ அப்படியாயின், அடுத்தவர்கள் பங்களிப்புச் செய்வது எப்படி?
முதலில் எம்மைச் சூழ உள்ள சியையும் குலைக்கக்கூடிய எந்தச்செ எமது எந்தச் செயல்கள் மற்றவர்களு ஏற்படுத்துகின்றன என்பதை நாம் மு இன்று சமயத்தின் பேரிலும் பொ எழுப்புகின்ற அளவுகடந்த ஓசைகள் கெடுக்கின்றனவோ என்பது பற்றிக் இந்த வகையில் அடுத்தவர்களின் ந6 களையும்கூட ஒரளவு விட்டுக் கொ எங்கோ போகின்ற அவலக் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் கொள்ள வேண்டும். துக்கத்தையும் என்ன பயன்? மாறாக, மகிழ்ச்சிை கூடிய செய்திகளைப் பகிர்ந்து ெ இருக்கும் i ஆறுதல் கூறவோ உற்சாகமளி எத்தனையோ பேர் எம்மைச் சுற்ற பிரச்சினைகளாலும் நொந்து போ சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும் உ பேசுவதும் நடந்து கொள்வதும் அமையும். -
“சக மனிதனைப் பார்த்துக் கன் எனக் கூறினார்கள் இறை தூதர் அ
செயற்படுவோம்.

ர்மம் ?
வருக்கு அவசியம் தேவைப்படுகின்ற தவதையே பொதுவாக தர்மம் அல்லது
களும் மலிந்துவிட்ட இவ்வுலகில் சகல வைப்படுவன நிம்ம யும் மகிழ்ச் ாலும் பெற்றுக்- சொளே முடியாத எல்லா மனித உள்ளங்களும் இரகசிய கொண்டே இருக்கின்றன. தியையும் சந்தோஷத்தையும் பெற்றுக் ந விதத்தில் உதவ முடியுமாயின் அதை ம் இருக்க முடியாது. எம்மிடம் இருக் ாம் இந்தக் கொடையை வழங்க முடியு சமாகும். அத்தோடு எமது உதவியால் தையும் பெற்று மலர்ச்சியடைவதைக் ள்ளமும் பேருவகையடையும். ரின் நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் நாம்
வர்களின் மன அமைதியையும் மகிழ்ச் யலிலும் நாம் ஈடுபடலாகாது. எனவே, }க்கு எரிச்சலையும் மனத்தாங்கலையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். ழுதுபோக்கு என்ற பெயரிலும் நாம் ர் எத்தனை பேரின் மன அமைதியைக் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரன்கருதி எமது சுதந்திரத்தையும் உரிமை டுக்க வேண்டி ஏற்படலாம். செய்திகளையெல்லாம் ஆர்வத்தோடு கெட்ட பழக்கத்தை நாம் தவிர்த்துக் அச்சத்தையும் பரப்புவதால் யாருக்கு பயும் முக மலர்ச்சியையும் ஏற்படுத்தக் காண்டால் எவ்வளவு நன்மையாக
கவோ எவருமின்றி விரக்தியில் உழலும்
இருப்பார்கள். நோயினாலும் வேறு பிருக்கும் இவ்வாறான மனிதர்களைச் ற்சாகமும் கொடுக்கும் வகையில் நாம் ச்சயமாகப் பெருங் கொடையாகவே
வோடு புன்னகைப்பதும் ஒரு தர்மமே”
வர்கள். எனவே இது பற்றிச் சிந்தித்துச்
*