கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 2001.05

Page 1


Page 2
LLLLSSSLLL L qSqTS SMSSSS
(; மூளைக்கு வேலை
விவேக வினாக்கள் ஏழு
() ஒரு செவ்வகத்தின் நீளம் அதன் அகலத்தின் இரு மடங்கைவிட 1m குறைவாகும். அதன் அகலத்தை 3m 驚 அதிகரித்து நீளத்தை 2ா ஆல் குறைத்தால் அது ஒரு சதுரமாகி விடுமாயின் அச்செல்வகத்தின் நீளம் யாது?
(2) 1980இல் ஒரு தந்தையின் வயது அவரது மகனின் வயதைப் போல் நான்கு மடங்காக இருந்தது. 1996இல் அவரது வயது அந்த மகனின் வயதினது இருமடங்காக மாறியது. 2001இல் மகனின் வயது என்னவாக இருக்கும்?
(3) 836N5N என்ற எண் 9ஆல் மீதியின்றிப்பிரிக்கப்பட வேண்டுமாயின் N
என்ற எழுத்துக்குப் பதிலாக இருக்க வேண்டிய இலக்கம் யாது?
(4) பின்வரும் எண் வரிசையில் அடுத்து வரவேண்டிய எண்கள் இரண்டும்
5T505)| ?
12, 14, 28, 26, 13, 15, 30, ---------
(5) A ஒரு குறிப்பிட்ட வேலையை 2 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையை B 3 நாட்களில் செய்து முடிப்பார். அதனைச் செய்து முடிப்ப தற்கு C க்கு 5 நாட்கள் தேவைப்படும். அவ்வேலையை மூவரும் சேர்ந்து செய்ய முடியுமாயின் அதனை அவர்கள் எத்தனை நாளில் செய்து முடிப்பர்?
(6) பின்வரும் சாதாரண கூட்டலில் ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஓர் இலக்கத்தைக் குறிக்குமாயின் இக்கூட்டல் சமன்பாட்டை இலக்கங்களில் எழுதுங்கள் :
SEND + MORE = MONEY
(7) ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 23ம் திகதி ஞாயிற்றுக் கிழமையாக இருந்தது. அடுத்து வரும் மாதத்தில் 23ம் திகதி செவ்வாய்க் கிழமையாக
இருக்குமாயின் முன்னர் குறிப்பிட்ட மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது?
(விடைகள் 45ம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன)
 
 
 

அரும்பு
பொது அறிவுச் சஞ்சிகை இதழ் 22
ஆசிரியர் எம். ஹாபிஸ் இஸ்ஸதின் Editor: M. Hafiz Issadeen Published By:
70, Main Street, Dharga Town-12090 Sri Laska
Web site: WWWarumbu.itgo.com
Type-setting & Computer Lay-out by: RONAL COMPUTERs. 70, Main Street, Dharga Town, Sri Lanka
Printed by:
Issadeon Memorial Educational Foundation.
Phone: 034-70151 E-Mail: royalgieureka. Ik
A.J. Prints, 44, Station Road, Dehiwala.
உள்ளே.
அற்புதம் நீரிழிவு நோய் துருவக் கரடி தான்னபானியா பெளத்த வேத நூல்கள் நெப்சூன் சிகாகோவில் சில நாட்கள் இலங்கையின் ஜனாதிபதிப்பதவி செவ்வாய்க்கோளை நோக்கி |'Patent' என்னும் ஆக்கவுரிமை 24
கிறிஸ்தோபர் கொலம்பஸ் 27 ஜூபோ 3. ஈஸ்ட்மண் கொடெக் கம்பணி குடல் வால் அழற்சி 37 அணுகுண்டுத் தயாரிப்பின். 39 ஹராகிரி 2 டில்லியும் செங்கோட்டையும் ஆர்தர்ன்பீ கிளார்க் 46 பொது அறிவுப் போட்டி-21- As
(g உங்களுடன்ருேநிமிடம். அன்புள்ள வாசகர்களே!
அரும்பு-21 இதழில் வெளிவந்த "உண்மையாகவே மனிதன் சந்திர னுக்குப் போனானா?” என்ற கட்டு ரையை வாசித்தவர்கள் மனக் குழப் l, அடைந்திருப்பார்கள் என்றே நினைக்கிறோம். குறிப்பாகப் от |சாலை மாண்வர்களிடையே அதன்
தாக்கம் கூடுதலாக இருந்திருக்கும்.
அரும்பு-8 இதழிலே சந்திரனில் மனிதன் தரையிறங்கியது பற்றி முழு விபரங்களையும் நாம் வெளி 1யிட்டிருந்தோம்.சந்திரப் RATICI; கள் பற்றி அண்மையில் சந்தேகங்கள் ž: அச்சந்தேகங் கள் தர்க்கரீதியானவையாக எமக்குத் தென்பட்டன. எனவே அவை பற்றி யும் எம் வாசகர்கள் அறிந்திருப்பது அவசியம் என நினைத்தே அவற்றைத்
தொகுத்து வழங்கினோம்.
அத்தோடு இக்குழப்புநிலைக் | oಿ தெளிவு காண நாடி, NASA நிறு
வனத்திடம் விளக்கம் கோரி நாம் ஈ
1மெயில் அனுப்பினோம். எனினும் இதுவரை எவ்விதப்பதிலும் கிடைக் கவில்லை.மேலும்,200 ஜனவரி0ம் திகதி முதல் இன்றுவரை NASA வெளியிட்டுள்ள செய்தி ಶೌ: 岛*T அனைத்தையும் பெற்று ஆராயத
தோம், அவற்றில் கூட இச்சந்தேகங் Iகள் பற்றி எதுவும் குறிப்பிடப்பட ! வில்லை. எனவே NASA இந்த விட யத்தில் என்ன பதில் கூறுகிறது என் : :ಜ್ಜೈಣಿ தர முடியாத
&մյելյան նա D-ճr"Լճճrr:FԱյ.
அறிவுசார் தகவல்களைத் |திறந்த மனதோடு பக்கச்சார்பின்றித்
தருவதே எமது நோக்கமாகும்.
நன்றி எம். ஹாபிஸ் இஸ்ஸதீன் 120.05.2001 ஆசிரியர்
بھی
\-------====

Page 3
வாய்ப்பட்டுக் கட்டிலிலேயே கிடப்பதைக் கண்டு அந்தச் சிறுமி கவலைப்பட்டாள். தம்பிக்கு என்ன நோய் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஒரு நாள் தனது தாயும் தந்தையும் தம்பியின் நோய் பற்றி அந்தரங்கமாகப் பேசிக்கொள்வதை அவள் உறங்குவதுபோல் பாசாங்கு செய்துகொண்டே செவிமடுத்தாள். :ܕ
'பிள்ளையைக் காப்பாற்றுவதற்கு நரம்புச் சத்திரசிகிச்சை தான் செய்ய வேண்டுமாம். அதற்கு நிறையப் பணம் தேவை இருந்த பன மெல்லாம் செலவாகிவிட்டது. இனிமேல் ஓர் அற்புதத்தால்தான்பிள்ளையின் உயிரைக் காக்க முடியும்" என்று கூறிப் பெருமூச்சு விட்டார் அவ ௗது தந்தை.
மறுநாட்காவையில் எழுந்த சிறுமி தான் பணம் சேர்க்கும் சாடியிலிருந்த பணத்தை இரகசி யமாக வெளியே எடுத்துப் பலமுறை எண்ணிப் பார்த்தாள். மொத்தமாக ஒரு டொலரும் பதி னொரு சதங்களும் இருந்தன. அவற்றை எடுத் துக் கொண்டு பின் கதவால் வெளியேறி அதே தெருவிலுள்ள பாமஸிக்குச் சென்றாள். பாமஸி உரிமையாளர் உள்ளே யாருடனோ உரையாடிக் கொண்டிருந்ததால் அச்சிறுமி வந்ததைக் கவ எரிக்கவில்லை.
பொறுமையிழந்த சிறுமிஒரு நாணயத்தால் கண்ணாடித் தட்டின் மீது தட்டினாள். திரும்பிப் பார்த்த உரிமையாளர் "கொஞ்சம் பொறு பெண்னே சிகாகோவிலிருந்துநீண்டகாலத்தின் பின் வந்துள்ள என் தம்பியோடு நான் பேசிக் கொண்டிருக்கிறேன். உனக்கேன் இவ்வளவு அவசரம்?' என்றார்.
"நான் என் தம்பியைப் பற்றிப் பேச வந் தேன். சுகமின்றி இருக்கும் அவனைக் குன மாக்க ஓர் அற்புதம் தேவை என என் அப்பா சொன்னார்.ஓர் அற்புதம் என்ன விலை?" என்று கேட்டாள் அந்தச் சிறுமி
"இங்கு அற்புதமும் இல்லை. கிற்புதமும் இல்லை. தொல்ல்ை கொடுக்காமல் போய்விடு என்றார் பாமஸிக்காரர்.
"ஐயோ அப்படிச்சொல்லாதீங்கடங்களுக் குத் தேவையான பணத்தை நான் தருவேன். ஓர்
2
அந்தச் சிறுமி.
அவளது கெஞ்சலைக் கேட்ட பாமஸிக் காரரின் தம்பி வெளியே வந்தார். நேர்த்தியாக உடையணிந்திருந்த அந்த மனிதர் "உனது தம் பிக்கு என்ன வகையான அற்புதம் வேண்டும்?" என்றுகனிவோடு சிறுமியைப்பார்த்துக்கேட்டார். "எனக்குத் தெரியாது. ஆனால் அவனுக் குச் சத்திரசிகிச்சை ஏதோ செய்ய வேண்டுமாம். அதற்கு ஓர் அற்புதம் தான் தேவை என்று அப்பா சொன்னார். என்னிடம் அதற்குரிய பனம் இருக் கிறது”என்று கண்கலங்கியவாறு விளக்கினாள் சிறுமி
சரி உன்னிடம் எவ்வளவு பணம் இருக் கிறது?" என்று அந்தமனிதர்கேட்க"ஒரு டொலர் பதினொரு சதங்கள்' என்றாள் சிறுமி பெருமிதத் தோடு,
"என்ன பொருத்தம் சரியாக அதே அளவு பணம் தான் அந்த அற்புதத்துக்குத் தேவை முத வில் உன் வீட்டைக் காட்டு' என்று கூறிய அந்த மனிதர் சிறுமியின் கையைப்பிடித்தவாறு அவளது வீட்டுக்குச் சென்றார்.
அங்கு அவளது பெற்றோரைச் சந்தித்த அவர் தான் ஒரு நரம்பியல் ಕಣ್ಣೀಳ್ಗಿ நிபு னர் என்றும் தன் பெயர் Dr. கார்ல்ட்டன் ஆர்ம்ஸ்ட்ரோங் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். சிறுவனின் நோய் பற்றிய விபரங் களை அறிந்துகொண்ட அவர் முற்றிலும் இலவச மாக அவனுக்குச் சத்திரசிகிச்சை செய்ய ஒப்புக் கொண்டார்.
சிறுவனுக்குச் சத்திர சிகிச்சை வெற்றிகர மாக நிகழ்ந்து அவன் பூரண குணமடைந்தான். 'உண்மையில் இந்த சத்திரசிகிச்சை ஓர் அற் புதம்தான்! இல்லாவிட்டால் அதற்கு எவ்வளவு பணம் செலவாகியிருக்கும்' என்று பூரிப்படைந் தாள் சிறுமியின் தாய்.
அந்த அற்புதத்தின் விலை ஒரு டொலரும் பதினொரு சதங்கள் என்பதை நினைத்துப்பார்த்த சிறுமி புன்முறுவல்பூத்தாள்.
ஆம் அற்புதம் என்பது இயற்கை விதி பொன்றின் இடைநிறுத்தமல்ல, மேலான விதி யொன்றின் செயற்பாடே அது ம
22 - پاظ ترقیاتی
 
 

மெது குருதியில் சாதாரண மாக இருக்க வேண்டியதைவிடக் கூடிய செறிவில் குளுக்கோஸ் காணப்படும் நிலையே நீரிழிவு(Diabetes mellitus) எனப்படுகின்றது. உடலில் உற்பத்தியாக்கப்படும் இன் ஸ"லின் என்னும் ஒமோனின் அளவு குறைதல், அல்லது இன்ஸ்"லினின் செயற்றிறன் நலிவடைதல் காரண மாகவே நீரிழிவு ஏற்படுகின்றது.
மனிதனில் ஏற்படும் மிகச் சகஜமான
அகஞ் சுரப்பிக் கோளாறு இது வாகும்.
நீரிழிவு என்பது தனியான ஒரு
நோயல்ல. அது உடலில் பலவித மான கோளாறுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு சிக்கல் நிலையாகும். நீரிழிவில் முதல்நிலை நீரிழிவு (Pri
may diabetes), துணை நிலை நீரிழிவு
(Secondary diabetes) 6T637 g) joir(s) பிரதான வகைகளை முடியும்.
G3Tr, T GINT
முதல் நிலை நீரிழிவில் இன்ஸ்" லினில் தங்கியுள்ள நீரிழிவு (InsulinDependent Diabetes Mellitus or DDM), இன்ஸாலினில் தங்கியிரா ffygfey (Non Insulin dependent diabetes mellitus or NIDDM) sigli (3) (5 வகைகள் உண்டு.
உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுகின்ற வேறு நோய்களுக்குரிய செயல்முறைகளின் காரணமாகவும் ஒருவரில் நீரிழிவு நோய் தோன்ற லாம். இத்தகைய நீரிழிவே துணை நிலை நீரிழிவு எனப்படுகின்றது. துணைநிலை நீரிழிவுக்கு ஆளாகின்ற அரும்பு-22
நீரிழிவு நோய்
A (Diabetes Mellitus)
வர்களின் சதவிகிதம் மிகச் சிறிதா கும்.
பொதுவாகக் கருதப்படுவது போல் நீரிழிவு ஒரு பரம்பரை யிலிருந்து அடுத்த பரம்பரைக்குக் கடத்தப்படக்கூடிய நோயொன் றல்ல. எனினும் ஒருவர் நீரிழிவுக்கு ஆளாகக்கூடிய தன்மை பரம்பரை உரிமையாக்கப்படுவது நிரூபிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஒருவர் பரம் பரை உரிமையாக்கல் மூலம் பெற் றுக்கொள்ளும் சில காரணிகளும், அவரது சூழற் காரணிகள் சிலவும் ஒன்றிணைந்தே நீரிழிவைத் தோற்று விக்கின்றன.
IDDM என்னும் முதலாம் வகை (Type 1) நீரிழிவு பொதுவாக 40 - 50 வயதுக்குட்பட்டவர்களையே பாதிக் கின்றது. இந்த நோயாளிகள் சாதா ரண உடல் நிறை உள்ளவர்களாக வோ அல்லது உடல் நிறை குறைந்த வர்களாகவோ இருப்பார்கள். இவர் களுள் பெரும்பாலானவர்களில் நீரி ழிவுக்குரிய அறிகுறிகள் சடுதியாகத் தோன்றிக் குறுகிய காலத்துக்குள் நோய் தீவிரமடையும். இவர்களுக் குச்சரியான முறையில் இன்ஸ்"வின் சிகிச்சை வழங்கப்படாது போனால் Ketoacidosis என்னும் குருதி நச்சு நிலை விரைவாகத் தீவிரமடைந்து மரணம் விளையக் கூடும்.
NIDDM என்னும் இரண்டாம் வகை (Type I) நீரிழிவு பொதுவாக நடு வயதினரை அல்லது முதியவர் களைப் பாதிக்கும். இந்நோயாளர் களில் பெரும்பாலானோர் மிகைக்
3

Page 4
கொழுத்த உடலைக் கொண்டிருப் பர். உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் அல்லது வாய்மூலம் உட்கொள்ளக் கூடிய மருந்துகளின் மூலம் இவர் களது நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும், சிலர் சிகிச்சை எதுவும் பெறாமலேயே நீண்ட காலம் வாழக்கூடும். இப்படியான வர்கள் Keloacidosis (குருதியில் கீற் றோன் என்னும் சேர்வையும் அமிலத் தன்மையும் அதிகரித்த நிலை) கார ணமாக உண்டாகும் "கோமா நிலைக்கு ஆளாவது அரிதாகும்.
மேற்குறிப்பிட்ட இருவகை வெளிப்படையான நீரிழிவு நோ யாளிகளுக்கு மேலதிகமாக நீரிழி வினால் பாதிக்கப்படுவதற்கு அதிக சாத்தியமுடையவர்கள் (potential diabetics), மறைவான நீரிழிவு நோ Lur Gísla, sir (latent diabetics) GT507 gCU5 பிரிவினர் உள்ளனர். முதலாம் பிரி வினர் தம் குருதியில் சாதாரண அளவில் குளுக்கோஸைக் கொண்
டிருந்த போதிலும் பரம்பரை இயல்
புகள் காரணமாக நீரிழிவுக்கு ஆளா கும் சாத்தியத்தை அதிகளவில் கொண்டிருப்பர். நீரிழிவுள்ள பெற் றோருக்குப் பிறந்தவர்கள், நீரிழி வுடைய முதல் மட்ட உறவினர் களைக் கொண்டவர்கள் ஒரு கரு இரட்டையராகப் பிறந்து மற்றவர் நீரிழிவு நோயாளியாக இருப்பவர் போன்றோர் இந்தப் பிரிவில் அடங் குவர்.
இரண்டாம் பிரிவினரிலும் சாதாரண நிலைமைகளில் குருதி குளுக்கோஸ் சோதனை சாதாரண பெறுபேற்றைக் காட்டும். எனினும் கர்ப்பம், தொற்றுநோய்கள், கடுமை பான உள அல்லது உடல் களைப்பு உடல் நிறை அதிகரித்தல், Crtisine போன்ற மருந்து வகைகளை உட்
4
கொள்ளல் போன்ற விசேட நிலை மைகளின் கீழ் அவர்களது குருதி குளுக்கோஸின் செறிவு மிகையாகி நீரிழிவு நிலைமையை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயைச் சோதித்தறி வதற்கு சிறுநீரை குளுக்கோஸ் சோத னைக்கு உட்படுத்துவதே எளிய முறையாகும். எனினும் சிறுநீர கத்தின் குளுக்கோஸ் சகிப்புத்தன்மை ஆளுக்காள் வேறுபடுகின்றது. சிறு நீரக குளுக்கோஸ் சகிப்புத்தன்மை கூடியவர்களில் குருதி குளுக்கோ ஸின் செறிவு மிகையாக இருக்கும் நிலையிலும் சிறுநீரில் குளுக்கோஸ் கழிக்கப்படாமல் இருக்கலாம். இந்நிலையில் அவர் நீரிழிவு நோயா
ளியாக இருந்தாலும் சிறுநீர்ச் சோத
னை அதனை எடுத்துக் காட்டாது. அதேபோன்று சிறுநீரக குளுக்கோஸ் சகிப்புத்தன்மை குறைந்தவர்களில் நீரிழிவு இல்லாத நிலையிலும் சிறுநீரில் குளுக்கோஸ் வெளியாகக் கூடும்,
எனவே நீரிழிவை அறிந்து கொள்வதற்குரிய மிகச் சிறந்த வழி குருதி குளுக்கோஸின் (bl00d glucose) செறிவைச் சோதித்தறிவதா கும். எழுந்தவாறான (Random) சோதனையொன்றின் போது குருதி யில் 100 ml இல் 180 mgக்கு மேல் குளுக்கோஸ் காணப்படின் அது நீரி ழிவு நிலையைக் குறிக்கும்.
நீண்ட நேரம் பட்டினியிலிருந்த பின் சோதனை செய்யப்படும் போது (58.5-iGs, Tsu Garga (fasting blood glugose) சாதாரண ஒருவரில் 5 - 90 mg/100ml ஆக இருக்கும். அப்பெறு மானம் 120 mgக்கு மேற்பட்டால் அவர் நீரிழிவுடையவராகக் கருத்ப் பட வேண்டும். சோதனைப் பெறு மானம் 90 mgக்கும் 120 mgக்கும் இடைப்பட்டதாக உள்ளவர்கள்
அரும்பு-22

மேலும் சோதனைகளுக்கு உள்ளாக் கப்படுவதும் தொடர்ந்து அவதானிக் கப்படுவதும் நல்லது.
நீரிழிவின் பிரதான நோயறிகுறி களுள் கடுமையான தாகம், அதி களவு சிறுநீர் வெளியேறல், இரவில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை, களைப்பு, நிறை இழப்பு, ஆடை களில் வெள்ளை ப்டுதல், இலிங்க உறுப்புக்களில் தொற்று ஏற்படுதல்,
வீரியக் குறைபாடு, பார்வைக் குறை பாடு (பொதுவாகக் குறும்பார்வை
நிலை), கை, கால் வலித்தல் என்பன குறிப்பிடத்தக்கவை. நோயாளி ஒரு வரில் மேற்குறிப்பிட்ட அறிகுறி
களில் ஒன்றோ பலவோ காணப்பட
லாம். நோயைக் கண்டறிவதற்கு குருதிச் சோதனையோடு இவ்வறி குறிகளும் உதவுகின்றன.
நீரிழிவு கடுமையாகி Ketoacidosis என்ற நிலைமை ஏற்பட்ட வர்களில் நீரிழப்பின் அறிகுறிகளே முனைப்பாகக் காணப்படும். கண் கோளத்தினுள் அமுக்கம் குறைவ தோடு நாடித்துடிப்பு விரைவடை தல், தாழ் குருதியமுக்கம் என்பனவும் ஏற்படும். சுவாசம் ஆழமானதாகவும் பெருமூச்சு விடுவது போன்றும் இருக்கும். வெளிமூச்சு முடை நாற் றம் கொண்டதாகக் காணப்படும். அதில் அசற்றோன்(acetone) என்னும் சேர்வைக்குரிய இனிய ஆனால் வெறுப்பேற்படுத்தும் மணம் கலந்து வருவதை அவதானிக்கலாம். இறுதி யில் சுய உணர்வற்ற கோமா (Coma) நிலை உருவாகும். வயது முதிர்ந்த நோயாளிகள் ketoacidosis நிலை ஏற்படாமலேயே (குருதியில் குளுக் கோஸ் செறிவு அளவுக்கதிகம் அதி கரிப்பதன் காரணமாக) கோமா நிலைக்கு ஆளாகலாம்.
நீண்டகாலம் நீரிழிவின் பாதிப்
புக்கு உட்பட்டவர்களில் சிறுநீரகக்
அரும்பு-22
கோளாறுகள், குருதிக் குழாய் தொடர்பான கோளாறுகள், பார் வையைப் பாதிக்கும் விழித்தினர யோடு சம்பந்தப்பட்ட கோளாறு கள், நரம்புக் கோளாறுகள் போன்ற பல்வேறு பாரதூரமான பிரச்சினை கள் தோன்றலாம்.
நீரிழிவுள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் பெரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி நேரிடும். சரியான முறையில் குருதி குளுக் கோஸின் அளவு கட்டுப்படுத்தப் படாது போனால் குழந்தை இறந்து பிறப்பதற்குரிய சாத்தியம் அதிகமாக இருக்கும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் நீரிழிவால் பாதிக்கப்பட் டிருப்பின் முதலில் இரு வாரங் களுக்கொரு தடவையும் கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் வாரந்தோறும் வைத்திய சோதனைக்கு உட்படுவது அவசியமாகும். கடுமையான நீரி ழிவு நோயாளிகளைப் பொறுத்த மட்டில் கர்ப்ப காலம்பூர்த்தியடைய முன்னரே செயற்கையாகப் பிரச வத்தைத் தூண்டியோ, சீசரியன் முறையிலோ குழந்தையை வெளி யே எடுக்கவேண்டி ஏற்படலாம்.
நீரிழிவு நோயாளிகள் எதிர் நோக்கும் இன்னொரு பிர்ச்சினை உடலில் ஏற்படும் காயங்கள் எளிதில் குணமடையாமல் புரையோடத் தொடங்குவதாகும். சாதாரண ஒரு வருக்கு ஏற்படும் புண்னொன்று ஒரிரு வாரங்களுக்குள் குணமடையத் தவறினால் குருதி குளுக்கோஸ் செறிவைச் சோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. நீரிழிவு நோயா ளிகளின் அவயவப் பகுதிகளில் ஏற்படும் புண்கள் புரையோ டிப் போவதனால் அவயவங்களையே வெட்டி நீக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.
5

Page 5
நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற் குரிய சிறந்த வழி உடல் நிறையைக் குறைத்து, உணவில் பேணுதலாய் இருப்பதாகும். வைத்திய ஆலோச னையின்படி நியமிக்கப்படும் மருந்து களைக் கிரமமாய் உட்கொண்டு, உணவு விடயத்திலும் கட்டுப்பாட் டுடன் நடந்து கொண்டால் நீரிழிவு நோயுடன் சாதாரண வாழ்க்கை யொன்றை நடாத்திச் செல்ல வழி யேற்படும்.
நீரிழிவை முற்றாகக் குணமாக் குவோம் என விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் அல்லது ஆட்கள் பற்றி யும் ஜாக்கிரதையாக இருப்பது நல் லது. முற்றான குணம் பெறுவதற் காக மற்றவர்கள் சிபாரிசு செய்யும் கண்ட கண்ட மருந்துகளையெல் லாம் - அவை இயற்கை மூலிகை களாக இருந்தாலும்-உட்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைக்கக்கூடும் என்பதை மறத்தல் ஆகாது. ப
வருகின்றது யூரோ
ரோப்பிய ஒன்றியத்தின்பன அலகான யூரோ (Euro) 1999 ஜனவரி 01ம் திகதி முதல் கணக்கியல் தேவை களுக்கும் இலத்திரோனிக் பணப் பரி மாற்றத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை வாசகர்கள் அறிந்திருப்
சீர்கள்.
யூரோ பன நோட்டுக்களும் நாணயங்களும் 2002 ஜனவரி 01ம் திகதி முதல் புழக்கத்துக்கு வரவுள் ளன. அவுஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, லக்ஸம் பேர்க், நெதர்லாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய 11 நாடுகளில் யூரோ நடைமுறைக்கு வரும்போது அந்நாடுகளின் சுதேச பண நோட்டுக் களும் நாணயங்களும் செல்லாக் காககளாக மாறிவிடப் போகின்றன. ஒரு யூரோ 100 சதங்களைக் கொண்டிருக்கும். 5, 10, 20, 50, 100,200 மற்றும் 500 யூரோ பெறுமானமுள்ள நோட்டுக்களும் 1, 2, 5, 10, 20 மற்றும் 50 சத நாணயங்களோடு யூரோ, 2 யூரோ நாணயங்களும் வெளியிடப் படவுள்ளன.
சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளி லும் பன நோட்டுக்கள் ஒரே விதமா
6
கவே வடிவமைக்கப்பட்டிருக்கும். எனினும் ஒவ்வொரு நாடும் தமக் குரிய நாணயக் குற்றிகளை (coins) தாமே தயாரித்துக் கொள்ளப் போகின்றன. இந்நாணயங்களின் ஒரு புறம் பொதுமையான வடிவ மொன்றைக் கொண்டிருக்கும். மறு புறத்தில் அதனை வெளியிடும் நாட் டின் தேசிய சின்னம் அல்லது அலங் காரம் பதிக்கப்பட்டிருக்கும்.
இங்கிலாந்து, கிரேக்கம், ஸ்வி டன், டென்மார்க் ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நான்கு நாடு களும் தொடர்ந்து தமது சொந்தப் பண அலகுகளையே பயன்படுத்தப் போகின்றன.
யூரோவை வெளியிடும் உரிமை ஜெர்மனியின் பிரங்பேர்ட் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மத்திய வங்கிக்கே (ECB) உண்டு. து
அரும்பு-22
 

டெ துருவத்தைச் சூழவுள்ள ஆர்க்டிக் கடலின் உறைந்து போன பகுதிகளில் வாழும் வெண்ணிறக் கரடிகளே துருவக் கரடிகள் (PlaT Bears) என அழைக்கப்படுகின்றன. Gaugir J.J. (White Bear), iii, TL. (Water Bear), JLib 57lj (Sea Bear), பனிக் கரடி (Ice Bear) போன்ற பெயர்களாலும் இவை அழைக் கப்படுவதுண்டு. நீரில் வாழ்வதற்கு ஏற்ற உடலமைப்பைக் கொண்ட இவ்வினம் உலகிலுள்ள ஒரேயொரு கடல் வாழ் கரடி இனமாகக் கருதப் படுகின்றது.
ஏனைய கரடி இனங்களைவிட நீளமான உடலமைப்பைக் கொண்ட துருவக் கரடிகளின் பாதங்கள் முழு மையாக நிலத்தைத் தொடக்கூடிய வாறு தட்டையாகக் காணப்படுகின் றன. ஒவ்வொரு காலிலும் உள்ள கூரான வளைந்த நகங்கள் ஐந்தும் இரைகளைப் பற்றிப் பிடிக்கவும் பனித்தரையைப் பற்றிப் பிடித்து நடக்கவும் உதவுகின்றன. பாதங் களின் அடிப்பகுதியில் காணப்படும் நீண்ட மயிர்கள் கடுங்குளிரிலிருந்து பாதங்களைப் பாதுகாப்பதோடு பனியின் மீது வழுக்காமல் நடமாடு வதற்கும் துணைபுரிகின்றன.
துருவக் காடியின் முன்னங்கால் களில் உள்ள விறைப்பான மயிர்
களும் அகன்ற பாதங்களும் அவ் விலங்கு நீரில் நீந்துவதற்கு உதவுகின் றன. பொதுவாக எல்லாத் துருவக் கரடிகளும் வெண்ணிறம் கொண்டன வாகவே இருக்கும். எனினும் கோடைகாலத்தில் அவற்றின் உரோ மங்கள் பழுப்பு நிறமாக மாறக் கூடும்,
ஆண் துருவக் கரடி ப்ெண்ணை விடப் பருமனில் பெரியதாக இருக் கும், அதன் நிறை 300kg முதல் 800kg வரை இருக்கலாம். பெண் விலங்கு களின் சராசரி நிறை 250 kg ஆகும். ஆண் விலங்கொன்று பாதம் முதல் தோள் மட்டம் வரை சுமார் 1.6 m உயரம் கொண்டதாகவும், 2.2 முதல் 2.5 m வரை நீளமுடையதாகவும் வளரக்கூடும். அதன் வாலின் நீளம் 7 cm முதல் 12 cm வரை இருக்கலாம். துருவக் கரடிகள் கூரிய மண நுகர்ச்சிப் புலனைக் கொண்டுள்ளன. அத்தோடு திசையறிந்து வழிதேடிச் செல்வதிலும், உணவைப் பெறும் முயற்சிகளின்போது தோன்றும் பிரச் சினைகளைத் தீர்த்துக் கொள்வதிலும் அவை நல்ல புத்திசாதுரியத்தைக் காட்டுகின்றன. துருவக் கரடியின் மயிர்ப் போர்வையின் நிறம் சூழ வுள்ள பனிப்பாறைகளினதும் வெண் பனியினதும் நிறத்தை ஒத்திருப்ப தால் அவற்றால் ஏனைய விலங்குக ளின் கண்களுக்கு எளிதில் புலப்படா மல் நடமாடித் திரிய முடிகின்றது.
துருவக் கரடியினால் விரைவாக நடக்கவும் நன்றாக நீந்தவும் முடியும், கரையிலும் கடலிலும் அவை நெடுந் தூரம் இரைதேடிச் செல்வது சகஜ மான நிகழ்வாகும். அவற்றின் பிர தான உணவு Scal எனப்படும் கடல் நாய்களாகும். சில வேளைகளில் Wairus என்னும் தந்தம் கொண்ட கடல் நாய்களையும் வெண் திமிங் F? Givry (White Whale), Lðsäray, Gir
7
அரும்பு-22

Page 6
போன்றவற்றையும் அவை பிடித்து உண்பதுண்டு. பதுங்கியிருந்து பாய் வதன் மூலமே அவை கடல் நாய் களைப் பிடித்துக் கொள்கின்றன. கடல் நாய்கள் தெற்கு நோக்கி இடம் பெயரும் காலங்களில் அவற்றைப் பின்தொடர்ந்து செல்லும் துருவக் கரடிகள் கனடாவில் செயின்ற் லோரன்ஸ் வளைகுடா வரையும் ரஷ்யாவில் ஆமுர் நதியின் கழிமுகம் வரையும் செல்வது அவதானிக்கப் பட்டுள்ளது. இரை கிடைக்காத வேளைகளில் அவை கடற்பாசி, புல், பறவைகள், பழங்கள் போன்றவற் றைப் புசிப்பதுண்டு.
மே, ஜூன் மாதங்களிலேயே துருவக்கரடிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. ஏனைய காலங் களில் ஆண் விலங்குகள் தனியே அலைந்து திரிவது வழக்கம். துருவக் கரடிகளின் கர்ப்ப காலம் 240 - 270 நாட்களாகும். ஒரே சூலில் 1-4குட்டி கள் குளிர்காலத்தில் ஈனப்படுகின் றன. பிறப்பின்போது குட்டிகள் சுமார் 1 kg நிறையுடையனவாக இருக்கும். சுமார் 40 நாட்கள் வரை அவற்றின் கண்கள் மூடிய நிலையி லேயே இருக்கும், 10 முதல் 24 மாதங் களுக்குக் குட்டிகள் தாயின் அரவ ணைப்பிலேயே வளர்கின்றன. துரு வக் கரடிகளின் ஆயுட்காலம் 25-30 வருடங்களாகும்.
பல்வேறு காரணங்களுக்காக மனிதனால் துருவக் கரடிகள் பெரு மளவு வேட்டையாடப்படுகின்றன. அவற்றின் தோல், கொழுப்பு, இறைச்சி என்பவற்றுக்காக எஸ்கி மோ வர்கள் துருவக் கரடிகளைக்
கொல்கின்றனர். எனினும் அவற்றின் ஈரல் நச்சுத்தன்மை உடையதாக இருப்பதால் அதனை எவரும் உட் கொள்வதில்லை. ஈரலில் விட்டமின் A மிகைச் செறிவில் இருப்பதே இந்நச்சுத் தன்மைக்குக் காரணம் என நம்பப்படுகின்றது.
துருவக் கரடிகள் ஏனைய வில்ங்குகளைப் பொருட்படுத்து வதில்லை. மனிதர்களையும் அவை பொருட்படுத்தாமல் ஒதுங்கிச் சென்றுவிடுகின்றன. எனினும் பய
முறுத்தப்பட்டால் அல்லது தாக்கப்
பட்டால் அவை பயங்கரமானவை யாக மாறிவிடுகின்றன. -
1973இல் செய்துகொள்ளப் பட்ட ஒரு சர்வதேச உடன்படிக்கை யின் மூலம் துருவக் கரடிகள் பாது காக்கப்பட்ட விலங்குகளாகப் பிர கடனப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பிரதேச மக்கள் பாரம்பரிய ஆயுதங் களைப் பயன்படுத்தி அவற்றை வேட்டையாடுவதை இவ்வுடன் படிக்கை அனுமதித்துள்ளது. பொது வாக துருவக் கரடிகளின் வாழிடங் களில் மனித நடமாட்டம் மிகக் குறைவாக இருப்பதால் அவற்றுக்கு அச்சுறுத்தல் குறைவாகவே காணப் படுகின்றது. எனினும் கப்பற்போக்கு வரத்து, பெற்றோலிய அகழ்வு போன்றவற்றால் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Ursidae என்னும் கரடிக் குடும் பத்தைச் சேர்ந்த துருவக் கரடிகள் முன்னர் Thalarctos marimus எனப் பாகுபடுத்தப்பட்டிருந்தன. எனினும் MÜGLI ITJI SJ GOMOJ, Ursus maritimus என்றே பெயரிடப்பட்டுள்ளன. ய
விற்பனை முகவர்கள் தேவை
அரும்பு இதழ்களை ஒழுங்காகப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள பிரதேசங்களில் விற்பனை முகவர்களாகச் செயற்பட விரும்புவோர் "அரும்பு ஆசிரியருடன் தொடர்பு கொள்ளலாம். முகவர்களுக்கு 20% கழிவு வழங்கப்படும்.
8
22 - بالا 5 sy

blதன் கிழக்கு ஆபிரிக்கா விலே அமைந்துள்ள தான்ஸ்பானியா ஐக்கியக் குடியரசானது தங்கனிக்கா (Tanganyika), Giu7 sárgró"LITii (Zanzibar) ஆகிய இரு நாடுகள் 1964இல் ஒன்றிணைக்கப்பட்டதன் விளை வாக உருவாகியது.
இதன் வடக்கில் கென்யா, உகண்டா ஆகிய நாடுகளும் கிழக்
கில் இந்து சமுத்திரமும் தெற்கில்
மொஸாம்பிக், மாலாவி, ஸாம்பியா ஆகிய நாடுகளும் மேற்கில் கொங் கோ ஜனநாயகக் குடியரசு (முன்
னைய Zaire), புருண்டி, ருவாண்டா
ஆகியனவும் எல்லைகளாக அமைந்
التي
துள்ளன. இந்து சமுத்திரத்திலுள்ள
எபான்னபிபார், பெம்பா என்பனவும் இன்னும் பல தீவுகளும்தான்ஸானி யாவுக்குள் அடங்குகின்றன. இதன் படி நாட்டின் மொத்த நிலப்பரப்பு 95,100 சதுர km ஆகும்.
தான்ஸ்பானியாவின் நிலப் பரப்பு பெரும்பாலும் தட்டையான தாகவும் கரையோரப் பகுதியில் தாழ்வாகவும் இருக்கின்றது. எனி னும் சில மலைத்தொடர்கள் நாட் டின் வடகிழக்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகளில் காணப்படு
கின்றன. ஆபிரிக்காவின் மிக உயர்ந்த
மலைச் சிகரமான கிலிமஞ்சரோ
(உயரம் 5895m) நாட்டின் வடகிழக்கு
எல்லையருகே அமைந்துள்ளது. ஆபிரிக்காவின் பெரிய ஏரிகளுள் மூன்றுதான்ஸானியாவின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன. விக் டோரியா ஏரி வடமேற்கிலும் நயா ஸா (Nyasa) ஏரி தென்மேற்கிலும்
22 - پالنازولJقه
தான்ஸானியா
(Tanzania) தங்கனிக்கா ஏரி மேற்கிலும் காணப் படுகின்றன.
எபான்ஸிபார் தீவு பிரதான நிலப்பகுதியிலிருந்து கடற் கால்வா யொன்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் 90 km நீளமும் 40 km அகலமும் கொண்டது. தான்ஸ்ா னியாவின் இந்து சமுத்திரக் கரைப் பகுதி வெப்பவலயக் காலநிலை யைக் கொண்டுள்ளது. அங்கு சராசரி வெப்பநிலை 27°C ஆகவும் வருடாந்த மழைவீழ்ச்சி 750 mm - 1400 mm ஆகவும் இருக்கின்றன. மத்திய மேட்டுநிலப் பகுதியில் வறண்ட காலநிலை நிலவுகின்றது. அங்கு வருடாந்தம் 500 mm க்கும் குறைவான மழையே பெய்கின்றது.
தான்ஸ்ானியாவில் 120க்கும் மேற்பட்ட கறுப்பு ஆபிரிக்க மக்கள் கூட்டத்தினர் வாழ்கின்றனர். இவர் களுள் பெரும்பான்மையினர் Bantu வகை மொழியொன்றையே பேசு கின்றனர். இவர்களோடு இந்திய, பாகிஸ்தானிய வம்சாவழியினரும் அரபு மற்றும் ஐரோப்பிய சமூகத் தினரும் ஒரளவு காணப்படுகின்றனர். 2000ம் ஆண்டு மதிப்பீட்டின்படி தான்ஸ்ானியாவின் சனத்தொகை 31,962,769ஆகும். மக்கட்தொகையில் கால் பகுதியினர் கிராமப் புறங்களி லேயே வசிக்கின்றனர்.
தான்ஸ்ானிய மக்களில் மூன்றி லொரு பங்கினர் பாரம்பரிய சமயங் களைப் பின்பற்றுகின்றனர். இன் னொரு மூன்றிலொரு பங்கினர் முஸ் லிம்களாவர். கிறிஸ்தவ சமயப் பிரிவு 9

Page 7
靛、 தாருஸ்ஸலாம்
களைப் பொறுத்தமட்டில் கத் தோலிக்கர்களே கூடுதலாக உள்ள னர். ஸ்வாஹிலி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் தான்ஸானி யாவின் அரசகரும மொழிகளாக விளங்குகின்றன. எனினும் பலர் தொடர்ந்தும் தங்கள் இனங்களுக் குரிய பாரம்பரிய மொழிகளைப் பேசுகின்றனர்.
தான்ஸானியாவின் தலைநக ராக தாருஸ்ஸலாம் விளங்கியது. இப்போது Dodoma என்ற நகர் நாட்டின் தலைநகராக மாற்றப்பட் டுள்ளது. விக்டோரியா ஏரிக் கரை யில் உள்ள துறைமுக நகரான MWanza, கடற் துறைமுகமான Tan ga, தீவிலே உள்ள Zamzibar என்பன வே நாட்டின் ஏனைய பிரதான நகர்களாகும்.
ஆரம்பக் கல்வி கட்டாயமாக் கப்பட்டிருந்த போதிலும் போதி யளவு பாடசாலைகள் இல்லாமை காரணமாக உரிய வயதுடைய சிறு வர்களில் 67% மாத்திரமே பாட சாலைக் கல்வியைப் பெறுகின்றனர். 15 வயதுக்கு மேற்பட்டோரில் 68 சதவீதத்தினர் எழுத வாசிக்கத் தெரிந் தவர்களாக உள்ளனர். 1961இல் நிறு G F " L " University of Dar es Salaam, 19849) så stynjin IL"LSokoine University of Agriculture Tsirugo Gali
10
நாட்டின் பிரதான உயர்கல்வி நிறு வனங்களாக விளங்குகின்றன.
தான்பைானியாவின் கலாசாரம் ஆபிரிக்க, அராபிய, ஐரோப்பிய மற்றும் இந்திய கலாசாரங்களின் செல்வாக்கைக் காட்டுகின்றது. பாரம்பரிய ஆபிரிக்க விழுமியங்கள் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்து வருவதை அங்கு காணமுடியும்.
தான்ஸானியாவின் பொருளா தாரம் விவசாயத்தை அடிப்படை யாகக் கொண்டது. பொருளாதார ரீதியில் உயிர்ப்பா புள்ள சனத் தொகையில் 84 சதவீதத்தினர் விவ சாய முயற்சிகளில்ே ஈடுபட்டுள் ளனர். நாட்டின் ஏற்றுமதிப் பண்டங் களில் பெரும்பகுதி விவசாய உற்பத்திப் பொருட்களாகவே இருக் கின்றன. Sisal என்னும் தாழையின நார்களினதும் கராம்பினதும் உற்பத் தியில் தான்ஸ்ானியா உலகிலேயே முதலிடம் வகிக்கின்றது.
உலகிலுள்ள மிகவும் வறிய நாடுகளுள் தான்ஸானியாவும் ஒன் றாகும். அங்கு வருடாந்த தலா வரு மானம் சுமார் 190அமெரிக்க டொலர் கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. Tf லும் அந்நாட்டில் அதிகளவு வைரப் படிவுகள் காணப்படுகின்றன. அத்தோடு பொன், நிலக்கரி, வெள் எளியம் என்பனவும் அகழ்ந்தெடுக்கப் படுகின்றன. தான்ஸ்ானியாவின் மின்சக்தியில் 88% நீர்மின் நிலை பங்களிலேயே உற்பத்தி செய்யப்படு கின்றது.
தான்ஸானியாவின் நாணயம் தான்ஸ்ானிய ஷில்லிங் என்பதாகும். முன்னைய கிழக்கா பிரிக்க ஷில்லிங் குக்குப் பதிலாக 1966இல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. கோப்பி, பருத்தி, புகையின் ல, கராம்பு,
22 - اانقاری ey
 

தேயிலை, மரமுந்திரிகை, Sisal நார் போன்றவையே பிரதான ஏற்றுமதிப் பண்டங்களாகும். பெற்றோலியம், இயந்திரங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், இரும்பு, உருக்கு, உணவுப் பொருட்கள் முதலியன இறக்குமதி செய்யப்படுகின்றன. சுற்றுலாத் துறையினூடாகவும் தான்னபானியா கணிசமான அளவு அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்கின்றது. கிலிமஞ்சரோ சிகரத் தையும், சிங்கங்கள் வாழும் Scren geti தேசிய வனத்தையும் பார்ப்பதற் காகவே பெரும்பாலான வெளிநாட் டவர்கள் அங்கு வருகின்றனர்.
1977ம் ஆண்டின் அரசியல் யாப் பின்படி இந்நாடு நிர்வகிக்கப்படு கின்றது. தான்ஸானியாவின் செயல் நிறைவேற்று அதிகாரியாக ஜனாதி பதி இருக்கின்றார். ஐந்து வருடத் தவனைக்கு பொது வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படும் ஜனா திபதியே உதவி ஜனாதிபதியையும் பிரதம மந்திரியையும் அமைச்சரவை யையும் நியமனம் செய்கின்றார்.
நாட்டின் சட்டவாக்க நிறுவன மாகத் தனிச் சபையைக்கொண்ட Gyg. Lu (5 Juang (National Assembly) விளங்குகின்றது. இதில் 274 உறுப் பினர்கள் இருப்பர். இவர்களுள் 232
பேர் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு
செய்யப்படுகின்றனர். ஏனையோர் தேசிய பேரவையாலும் ஜனாதிபதி யாலும் நியமிக்கப்படுகின்றனர்.
எUான்ஸிபார் தீவின் உள்விவ காரங்களை நிர்வகிப்பதற்குத் தனி
யான ஜனாதிபதியொருவர் பொது வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய் யப்படுவார். அத்தோடு 75 உறுப் பினர்களைக் கொண்ட தனியான பாராளுமன்றம் ஒன்றும் அங்கு செயற்படுகின்றது.
ஸ்ான்ஸிபார் முற்காலத்தில் சுதந்திரமான முஸ்லிம் ராச்சிய மொன்றாக இருந்தது. 16ம் 17ம் நூற் றாண்டுகளில் போர்த்துக்கேயர்கள் அங்கு ஆட்சி செய்தனர். பின்னர் 18ம் நூற்றாண்டிலே ஒமான் நாட்டு எU"ல்தானின் ஆட்சியின் கீழ் அது வந்தது. 1890இல் ஸான்ஸிபாரின் ஆட்சிப் பொறுப்பை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது. இறுதியில் 1963 டிசம்பரில் ஸான்ஸிபாருக்குச் சுதந் திரம் வழங்கப்பட்டது.
19ம் நூற்றாண்டின் இறுதியில் தங்கனிக்கா ஜெர்மன் ஆட்சியின் கீழ் வந்தது. முதலாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மன் படைகள் தோற். கடிக்கப்பட்ட பின் 1918இல் அது சர்வதேச சங்கத்தின் பொறுப்பில் பிரிட்டிஷ் நிர்வாகத்தைப் பெற்றது. 1961 டிசம்பரில் தங்கனிக்கா சுதந்திரம் GML gih rogi ir Tanganyika Africall National Union (TANU) 5 TGöīgo ay "Ffair தலைவர் ஜூலியஸ் நியரேரே நாட் டின் பிரதமரானார். அடுத்த ஆண்டில் அந்நாடு குடியரசானபோது நிய ரேரே ஜனாதிபதியானார். அவரது முயற்சியால் தங்கனிக்காவும் ஸ்பான் ஸிபாரும் 1964 ஏப்ரல் 26ம் திகதி ஒன் றிணைக்கப்பட்டு ஒரு சமஷ்டி அரசா கத் தான்ஸானியா உருவாகியது.து
66 எவர் தனது ஆயுட் காலத்தை நல்ல முறையில் பயன்படுத்துவதோடு ஒவ்வொரு நாளையும் அதுதான்கடைசிநாள் எனக்கருதித்திட்டமிட்டுக்கழிக்கிறாரோ அவர் அடுத்த நாளுக்காக அவசரப்பட வேண்டியதில்லை. அத்தோடு எதிர்காலத்துக்கு முகம் கொடுக்க அஞ்ச வேண்டியதுமில்லை. அவருடைய ஒவ்வொரு மணித் தியாலத்தையும் அவர் முழுமையாக அனுபவித்துப் பயன்பெறமுடி பும்99 -- GyĜENTAT
அரும்பு-22
11.

Page 8
புத்தர் பெருமானின் மறைவுக் குப் பின்னர் அவரது போதனைகளின் அடிப்படையில் சமயக் கோட்பாடு களை வகுப்பதற்காக பிக்குமார்கள் பங்குபற்றிய சங்க சண்பக் கூட்டங்கள் இடம்பெற்றன. இச்சபைகளில் வாசிக்கப்பட்ட சமயக் கருத்துக்கள் மனனம் செய்யப்பட்டு வாய்மொழி மூலமாகவே அடுத்தடுத்த பரம்பரை களுக்குக் கடத்தப்பட்டன.
புத்தர் மரணித்துப் பல நூற் றாண்டுகளின் பின்னரே (கி.மு. 1ம் நூற்றாண்டளவில்) அவரது போத னைகளும் கருத்துக்களும் எழுத் துருவில் பதிக்கப்படலாயின. அக் கால பிக்குகளுள் ஒரு பிரிவினர் புத் தரின் போதனைகளை எழுதிவைப் பதற்கு சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினர். எனினும் சமஸ் கிருதத்தில் எழுதப்பட்ட முழுமை யான பெளத்த வேத நூல் எதுவும் இன்றுவரை நிலைத்திருக்கவில்லை. சமஸ்கிருதத்தின் வழிவந்த மொழியான பாலியில் எழுதப்பட்ட திபிடக' (திரிபிடகம்) என்ற நூலே இன்றைய தேரவாத பெளத்த சம யத்தின் பிரதான வேத நூலாக விளங் குகின்றது. திபிடக' என்பதன் கருத்து “மூன்று கூடைகள்” என்பதாகும். இந்நூல் மூன்று பகுதிகளை உள் ள டக் கி யிருப் பதனா லே யே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.
புத்தரின் போதனைகள் அடங் கிய "ஸ"ஆத்ர பிடக, துறவிகளுக்குரிய ஒழுக்கசீலத்தை வரையறுக்கும் 12
பெளத்த ஆ வத நூல்கள்:
ܢ
量
(Buddhist Scriptures)
'வினய பிடக', தத்துவங்களையும், கோட்பாடுகளையும் விவரிக்கும் 'அபிதர்ம பிடக' என்பனவே இம் மூன்று பகுதிகளுமாகும்.
புத்தருக்கும் அவரது சீடர்களுட் பட ஏனையோருக்கும் இடையில் நிகழ்ந்த கலந்துரையாடல்களே ஸாஸ்த்ர பிடகவில் இடம்பெற்றுள் ளன. இதில் ஐந்து வகையான தொகுப்புக்கள் காணப்படுகின்றன.
3G). I Tal a T:
(1) நீக்திர நிகா - நீண்ட போதனைகள் (2) மஜ்ஜிம நிகாய'- மத்திம நீளமுடைய போதனைகள் (3) என்wத்த நிகாய-கூட்டங்களாக வகைப்படுத்தப்பட்ட போதனைகள் (4) அங்குத்தர நிகாய இலக்க மிடப்பட்ட தலைப்புக்கள் மீதான போதனைகள் (5) குத்தக நிகாய - பல்வகைப் பாடங்கள்.
ஐந்தாவது தொகுப்பான 'குத் தக நிகாய'வில் தான் ஜாதக கதா' (ஜாதகக் கதைகள்), தம்மபத (தர்ம வாக்கியங்கள்) போன்ற ஜனரஞ் சகமான பகுதிகள் அடங்கியுள்ளன. புத்தரின் முற்பிறப்புக்களைப் பற்றிக் கூறும் கதைகளே ஜாதகக் கதைகள் எனப்படுகின்றன. மனக் கட்டுப் பாடு, ஒழுக்கம் என்பன பற்றி புத்தர் வழங்கிய போதனைகளின் சுருக்க வடிவமே தம்மபத' எனப்படுகின் றது.
பெளத்த பிக்குகளும் பிக்குனி களும் கடைப்பிடிக்க வேண்டிய
ஒழுக்கங்கள் பற்றிய 225க்கும் மேற்
22- بظاڑی ہو
 
 
 
 
 
 
 
 
 
 

பட்ட விதிகள் வினய பிடகவில் அடங்கியுள்ளன. மேற்கூறிய ஒவ் வொரு விதியும் அவ்விதி தோற்றம் பெறுவதற்கான மூல காரணத்தை விளக்கும் ஒரு கதையையும் கொண் டிருக்கிறது. இவ்விதிகள் யாவும் அவற்றை முறிப்பதனால் விளையக் கூடிய குற்றத்தின் பாரதூரத்தன்மைக் கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
'அபிதர்ம பிடகவில் ஏழு தனி யான ஆக்கங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உளவியற் தோற்றப் பாடுகள் பற்றிய விரிவான வகைப் படுத்தல்களும், அதீத பெளதிகப் Li glu'r LI TT i Gay, Siri (metaphysical
analysis), கலைச் சொற்களுக்குரிய
ஒத்த சொல்லகராதியும் அடங்கியுள் ளன. இப்பகுதிகள் சாதாரண பெளத் தர்களின் வாழ்க்கை முறையில் எவ்விதச் செல்வாக்கையும் கொண் டனவாக இல்லை.
முழுமையான திபிடக நூலின் சற்று விரிவாக்கப்பட்ட பதிப்புக்கள் திபெத்திய மற்றும் சீன மொழிகளில் காணப்படுகின்றன.
திபிடகத்துக்கு மேலதிகமாக தேரவாத பெளத்தர்களினால் பெரி தும் மதிக்கப்படுகின்ற சமய நூல் களுள் "மிலிந்த பன (மன்னன் மிலிந் தவின் வினாக்கள்), "விஸ் இத்திமக
தூய்தாக்கல் வழி) என்பன முக்கிய மானவை. கி. வ. 2ம் நூற் றாண்டில்
எழுதப்பட்ட "மிலிந்த பன நூல்,
பெளத்த சிந்தனையின் அடிப்படைப்
பிரச்சினைகள் பற்றிய சம்பாஷணை யொன்றைக் கொண்டுள்ளது.
'விஸ"த்திமக’ என்பது கி. வ. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற பெளத்த விளக்கவுரையாள ரான புத்தகோஸ் என்ற பிக்குவால் எழுதப்பட்டது. இது பெளத்த சிந் தனை, தியான முறைகள் முதலி யவற்றை விளக்கும் பெருநூலொன் றாகும்.
தேரவாத பிரிவைச் சேர்ந்த பெளத்தர்கள் திபிடகத்தில் உள்ள வற்றை கெளதம புத்தரின் வார்த் தைகள் என்றே கருதுகின்றனர். இத னால் திபிடகத்தையே அவர்கள் பிரதான வேத நூலாகக் கொள்கின் றனர். எனினும் மஹாயான பிரிவு பெளத்தர்களோ கௌதம புத்தரின் போதனைகளுக்கு மாத்திரம் தமது சமயத்தை மட்டுப்படுத்திக் கொள் வதில்லை. எனவே அவர்கள் திபி டகம் மாத்திரமே அதிகாரபூர்வமான வேதநூல் எனக் கருதுவதில்லை.
வரலாற்றின் பல்வேறு காலப்
பிரிவுகளில் வித்தியாசமான மஹா
யான பெளத்த குழுக்கள் வேறுபட்ட சமய நூல்களைத் தம் பிரதான வேதநூலாகக் கொண்டிருந்தனர். இவற்றுள் சத்தர்ம புந்தாரிக்ஸஇத்ர (தாமரைச் சூத்திரம்), 'விமலகீர்தி ஸ்ஜித்ர', 'அவதம்ஸ்கஸ்ஜித்ர (பூமா லைச் சூத்திரம்), "லங்காவதார ஸஇத்ர (புத்தரின் இலங்கை வருகை பற்றிய சூத்திரம்), பிரஞ்னாபரமிதா' என்பன குறிப்பிடத்தக்கவை.
கனவின் அர்த்தம் "நீங்கள் எனக்கு முத்து மாலையொன்றை வாங்கி வந்திருப்பதாக நேற்றிரவு கனவு கண்டேன். இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?' தன் கனவனிடம் அன்பாகக் கேட்டாள்
ஒரு பெண்.
"அதன் அர்த்தத்தை இன்று மாலையில் நீர் அறிந்துகொள்வீர்”என்று புன்னகையோடு கூறிய அவளது கனவன் தனது வேலைத் தளத்துக்குப் புறப்பட்டான்.
மாலையில் வீடு திரும்பும் போது அவன் ஒரு பார்சலைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்தான்.ஆர்வமும் சந்தோஷமும் மேலிட அவள் அதனைப் பிரித்துப் பார்த்தாள். "கனவுகளின் அர்த்தங்கள்' என்ற புத்தகம் அதனுள்ளே இருந்தது.
அரும்பு-22
13

Page 9
மெது ஞாயிற்றுத் தொகுதி யிலே சூரியனிலிருந்துள்ள தூரத்தின் படி எட்டாவது நிலையில் நெப்சூன் (Neptune) என்னும் கோள் அமைத் துள்ளது. சூரியனைச் சுற்றிவரும் கோள்களிலே பருமனில் ஜ"பிட்டர், சட்டர்ன், யுரேனஸ் என்பவற்றுக்கு அடுத்ததாக நான்காவது பெரிய கோளாகவும் இது திகழ்கின்றது.
சூரியனிலிருந்து சராசரியாக 4,500,000,000 km தூரத்தில் நெப்சூன் வலம் வந்துகொண்டிருக்கின்றது. அதன் விட்டம் சுமார் 19:00 km ஆகும். இது பூமியின் விட்டத்தை விட 3.8 மடங்கு பெரியது. கனவள வின்படி நெப்சூன் பூமியைவிட 73 மடங்கு பெரியதாக இருப்பினும் அதன்திணிவு பூமியின் திணிவைவிட 17 மடங்கு மாத்திரமே கூடியதாக இருக்கின்றது.
நெப்சூனின் கருப்பகுதி இரும் பு, சிவிக்கன் ஆகியவற்றாலான பாறைகளைக் கொண்டிருப்பதாக வும் அதனைச் சூழ நீரையும் பாறைப் பதார்த்தங்களையும் கொண்ட விசா வமான சமுத்திரமொன்று காணப் படுவதாகவும் வானியல் நிபுனர்கள் கருதுகின்றனர். இச்சமுத்திரம் (L) நோக்கிப் பரவிச் சென்று வாயுக்
14
களால் ஆன வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்கின்றது. ஆழமான இவ்வளிமண்டலத்தில் ஐதரசன், ஈலி யம் ஆகிய வாயுக்களே பிரதானமா கக் காணப்படுகின்றன. அத்தோடு மெதேன் வாயுவும் சிறிதளவு உண்டு. இந்த மெதேன் வாயுவின் காரணமா கவே இக்கோள் பிரகாசமான பசிய நீல நிறம் கொண்டதாகத் தொலை காட்டியினூடாகத் தென்படுகின்றது. ஜ"பிட்டர், சட்டர்ன் ஆகியவற் றின் கருப்பகுதியில் உள்ளதைவிடக் கூடுதலான அளவு பாறைகளும் உலோகங்களும் நெப்சூனின் கருப் பகுதியில் பொதிந்துள்ளதாக நம்பப் படுகின்றது. இதனாலேயே - மேற்குறிப்பிட்ட கோள்களைவிட அடர்த்தியில் கூடியதாகத் திகழ்கின் றது. நெப்சூனுக்கு ஒரு காந்தப் புல மும் உண்டு. இது சுழற்சி அச்சுக்கு 50 சாய்வானதாக அமைந்துள்ளது.
நெப்சூன் ஒரு தடவை சூரிய னைச் சுற்றி வருவதற்கு 164.79 புவி வருடங்கள் பிடிக்கின்றன. அது 16 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை தன்னைத் தானே சுற்றிக்கொள்கின் றது. அவ்வாறு சுற்றும் போது அதன் அச்சு சுழற்சித் தளத்திற்கு 29.6' சாய் வானதாகக் காணப்படுகின்றது. இந்த வகையில் இது பூமியை ஒர ளவு ஒத்திருக்கின்றது. பூமி தனது சுழற்சித் தளத்துக்கு 23.5' சாய்வா கவே சுற்றிக்கொண்டிருப்பது குறிப் பிடத்தக்கது.
நெப்சூனின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியில் 8% தெறிக்கச் செய்யப்படுகின்றது. எனினும் அது புவியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் அதனை வெறுங் கண் களால் கண்டுகொள்ள முடிவதில் லை, தொலைகாட்டியினூடாகப் பார்க்கும் போது அது பச்சை கலந்த
அரும்பும் 22
 

நீலநிறத்தட்டுப்போல் தோற்றமளிக் கின்றது. எனினும் அதன் மேற்பரப் பில் எவ்வித அடையாளங்களும் தென்படுவதில்லை.
சூரியனிலிருந்து நெப்சூன் உறிஞ்சும் வெப்பத்தைவிட 8.7
மடங்கு கூடுதலான வெப்பத்தை
அதன் மேற்பரப்பு வெளிவிடுகின் றது. இதற்குக் காரணம் கோளின் கருப்பகுதியில் உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் பிரமாண்டமான வெப்பமேயாகும். நெப்சூனின் கருப் பகுதியின் வெப்பநிலை சுமார்க30°C வரை இருக்கலாம் என மதிப்பிடப் பட்டுள்ளது. இது சூரியனின் மேற்ப ரப்பு வெப்பநிலையைவிட அதிகமா கும்.
1989இல் நெப்சூனைக் கடந்து சென்ற அமெரிக்காவின் Voyager-2 என்ற விண்வெளி ஆய்வுக் கலமும் 1994இல் நெப்சூனை அவதானித்த "ஹப்ன் விண்வெளித் தொலைகாட் டியும் அக்கோளின் மேற்பரப்பு இயல்புகளைத் தெளிவாகக் காட் டும் படங்களைப் பிடித்துள்ளன. நெப்சூனின் வளிமண்டலத்தில் இயங்குகின்ற ஒளிப்புள்ளிகளும் கரும் புள்ளிகளும் இருப்பதை இப் படங்கள் காட்டுகின்றன. அதன் வளி மண்டலத்தில் ஏற்படும் சூறாவளி களையே இப்புள்ளிகள் குறிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நெப் சூனின் வளிமண்டலத்தில் மணிக்கு சுமார் 2400 km வேகத்தில் காற்று வீசுவதாக Woyager-2 ஆய்வுக் கலம் கணிப்பீடு செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.
நெப்சூன் கோளைச் சுற்றி நான்கு வளையங்களும் (rings) எட்டு உபகோள்களும் வலம் வந்துகொண் டிருப்பதாக இதுவரை அறியப்பட் டுள்ளது. இவ்வளையங்கள் 15 முதல்
22 - پهbازوالانو
5800 km வரை தடிப்புடையனவாகக் காணப்படுகின்றன. உபகோள்களுள் இரண்டைப் பூமியிலிருந்து தொலை காட்டி மூலம் அவதானிக்கக் கூடிய தாக இருக்கின்றது. நெப்சூனின் உப கோள்களுள் மிகப் பெரியது Triton என்பதாகும். 1846இல் கண்டுபிடிக் கப்பட்ட இது 2705km விட்டமுடை யது. இது எமது சந்திரனைவிடச் சற்றே சிறியதாக உள்ளது.
Triton நெப்சூனின் சுற்றுகைத் திசைக்கு எதிர்த்திசையிலேயே அத னை வலம் வந்துகொண்டிருக்கின் றது. Tritonஇன் வளிமண்டலம் நைதரசனால் ஆக்கப்பட்டுள்ளது. அதனுடன் சிறிதளவு மெதேனும் காணப்படுகின்றது.Triton, படிப்படி யாக நெப்சூனை அண்மித்து வருவ தாகவும் இன்னும் 10 மில்லியன் முதல் 100 மில்லியன் வருடங்களில் அது நெப்சூனின் ஈர்ப்புக்கு உட்பட் டுச் சிதறிப் போய்விடும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நெப்சூனின் இரண்டாவது பெரிய உபகோள் Nereid என்பதா கும். 1949இல் கண்டறியப்பட்ட இது 320 km விட்டத்தைக் கொண்டுள்ளது. ஏனைய ஆறு உபகோள்களும் Proteus, Larissa, Naiad, Thalassa, Despina, Galatea s TGIT' GML (LI FILL' பட்டுள்ளன. இவற்றுள் ஐந்து 1989ம் ஆண்டு Woyager-2 ஆய்வுக் கலத்தி னால் கண்டறியப்பட்டனவாகும்.
நெப்சூனை அடுத்துள்ள புளூட் டோவின் சுழற்சிப் பாதை நீள்வட்ட மானதாக இருப்பதனால் 248 வரு டங்களுக்கு ஒரு தடவை அக்கோள் நெப்சூனைவிடச் சூரியனுக்கு நெருக்
கமாக வந்து விடுகின்றது. இந்நிலை
சுமார் 20 வருடங்களுக்கு நீடிப்ப
தோடு அவ்வேளையில் சூரியனிலி
ருந்து மிகவும் தொலைவிலுள்ள
15

Page 10
கோளாக நெப்சூன் மாறிவிடுகின் றது. கடைசியாக 1979 முதல் 1999 வரை இந்நிலைமை காணப்பட்டது. நெப்சூன் கோள் கண்டுபிடிக் கப்பட்ட நிகழ்வு கணித ரீதியான வானவியல் துறைக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகக் கருதப்படுகின் றது. யுரேனஸ் கோளின் சுழற்சியில் காணப்பட்ட சீரற்ற தன்மையை விளக்க முயற்சித்த 10hn Couch Adams GTG:STA) ?rfolg. Giş GT GOf LuGJ 77 ளர் யுரேனஸ்"க்கு அப்பால் புதிய கோளொன்று இருக்க வேண்டும் என்பதை 1845இல் கண்த முறையில்
இக்கோ ளுக்குச் சூட்டினார்.
நிரூபித்துக் காட்டினார். அதே Gaugmort Urbain Jean Joseph Leverrier என்ற பிரெஞ்சு வானியலாளரும் 1846 இல் சுயாதீனமாக இதே முடிவுக்கு வநதாா.
இவர்களின் கணிப்புக்களின் -gy Lill LG: Lifai Johann Gottfried Gale என்ற ஜெர்மன் தேச வானிய லாளர் முதன் முதலாக 1846இல் நெப்சூன் கோளை அவதானிப்பதில் வெற்றிபெற்றார். முன்னர் குறிப் பிட்ட Leverrier என்பவரே புராதன கிரேக்கர்களின் கடற் தெய்வமான நெப்சூனின் (Neptune) பெயரை
இசையும் கவனமும்
சையைக் கேட்டு ரசித்தவாறே பாடங்களைக் கற்பதற்குச் சிலர் பழகியிருக்கிறார்கள். இவ்வாறு இசையைக் கேட்கும் போது கற்பவரின் கவனம் கலைக்கப்படுகின்றது என்பதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வொன்று எடுத்துக் காட்டியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள Florida Atlantic University என்ற பல்கலைக் கழகத்திலேSarah Ransdel என்ற உளவியலாளர் இது பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டார். பின்னணியில் இசை ஒலிக்கும் சூழலிலும் ஒலிக்காச் சூழலிலும் மாணவர் குழுக்கள் அமரச்செய்யப்பட்டு கட்டுரைகள் எழுதுமாறு பணிக்கப்பட்டன. இசையைக் கேட்டவாறு கட்டுரை எழுதியோரின் எழுதும் வேகம் சராசரியாக மணிக்கு 60 சொற்களால் குறைவடைவது அவதானிக்கப் பட்டது. இந்தப் பாதிப்பு பாரதூரமானதாக இல்லாவிடினும், இசைக்குச் செவிமடுப்பதையும் எழுதுவதையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாமல் மான வர்கள் திண்டாடுவது நிரூபணமாகியது. எனினும் இசைப் பயிற்சி பெற்றவர் களின் கவனம் பெருமளவு கலைக்கப்படவில்லை.
வாய்ப் பாடலை விட வாத்திய இசை குறைவாகவே கவனத்தைக் குழப்பும் எனப் பலர் கருதுகின்றனர். எனினும் எல்லா வகை இசைகளும் ஒரே அளவு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன என்பதை மேற்குறிப்பிட்ட ஆய்வு எடுத்துக் காட்டியுள்ளது.
அரும்பு இதழ்களைத் தபால் மூலம் பெற்றுக்கொள்ளல் அரும்புஇதழ்களைத்தெர்டர்ச்சியாகத் தபால் மூலம்பெறவிரும்புவோர்.அடுத்துவரவுள்ள6 இதழ்களுக்கும்ருபா 130/-மணியோடர்மூலம் அனுப்பலாம்.தனிப்பிரதி தேவைப்படுவோர்தபாற் கட்டணத்தையும் சேர்த்துரூபா 2200 அனுப்பவும்.
மனியோடர் அனுப்பும்போது பணம் பெறுபவர் பெயர் M. Hafiz Issadeem எனவும் தபாற் கந்தோர் Dharga Town எனவும் குறிப்பிடத்தவறாதீர்கள்.
இல:36,14,17,1920 ஆகிய இதழ்களின் பிரதிகள் மாத்திரமே கைவசம் உள்ளன. 1 5 அரும்பு-22

îJLIITTGJOI 6N6OTG56ÏT
சிகாகோ 5 figy in GT Field Museum என்னும் அரும் பொருட்காட்சிச் சாலை உலகிலுள்ள மிகப் பெரிய இயற் கை வரலாற்று மியூஸ்பியங்ககளுள் (Nalral History Museum) sity)/75, F55 a'r படுகின்றது. அத்தோடு ஐக்கிய அமெரிக் காவிலுள்ள எல்லா வகையான மியூஸி யங்களிலும் மிகப் பெரியதாக அது திகழ் கின்றது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட் டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 19 மில்லியனுக்கும் மேலாகும். அதனை நிறு வுவதற்கு நிதியுதவிசெய்தMarshal Field என்பவரின் நினைவாகவே அதற்கு Field Museum எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நான் சிகாகோவுக்குப் போயிருந்த காலத்தில் அந்த மியூஸியத்துக்கு விஜயம் செய்வோரின் தொகை பெருமளவு அதி கரித்திருந்தது. இதற்குக் காரணம் 2000 மே 17ம் திகதி முதல் அங்கு காட்சிக்கு வைக் #LILIL'_L}{I}{5%. TỵTamT10saurus TeX ãTaẳTT) இனத்தைச் சேர்ந்த டைனசோர் விலங் கொன்றின் முழுமையான எலும்புக் கூடாகும். இதுவரை கண்டெடுக்கப்பட் டுள்ள இவ்வகை டைனசோர் எலும்புக் கூடுகளில் மிகப் பூரணமானதும், நன்கு பேணப்பட்டதும், மிகப் பெரியதுமாக இது கருதப்படுகின்றது. Susan என்ற பெண்ஆய்வாளரினால் இது கண்டுபிடிக் கப்பட்ட காரணத்தால் அதற்கு $பE (ஸ்ஜி) எனப் பெயரிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே திட்டமிட்டபடி மறு நாட் பகலுணவின் பின்னர் நாம் அந்த மியூஸியத்துக்கு விஜயம் செய்தோம். பிரமாண்டமான அதன் வாயிலினாலே Sue இன் பெரிய படமொன்று தொங்க
அரும்பு-22
சிகாகோவில்
சில நாட்கள் - II
விடப்பட்டுள்ளது தொலைவிலிருந்தே தெரிந்தது. ஆளுக்கு எட்டு டொலர் வீதம் அனுமதிக் கட்டணம் செலுத்தி நாம் உள்ளே நுழைந்தோம். முன் மண்டபத் திலே முழு அளவிலான ஆபிரிக்க யானை கள் இரண்டின் பஞ்சடைத்த உடல்கள் தத்ரூபமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந் தன. அவை உயிரோடு இருப்பது போன்ற பிரமையே ஏற்பட்டது, மியூஸி யத்தின் ஏனைய மண்டபங்களிலும் இது போன்று உலகிலுள்ள எல்லா வகையான மிருகங்களும் பறவைகளும் அவற்றுக் குரிய இயற்கைச் சூழல்களில் இருப்பது போன்று அவற்றின் பஞ்சடைக்கப்பட்ட உடல்கள் இயல்பான தோற்றங்களில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றையெல்லாம் பேணி ஒழுங் குபடுத்திக் காட்சிக்கு வைப்பதற்கு எவ் வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை நினைக்கும் போது வியப்பே ஏற்பட்டது. சில இடங்களில் குறித்த விலங்குகளின் வாழ்க்கை முறைகளைச்சித்தரிக்கும் விடி யோப் படங்கள் ஒழுங்கு செய்யப்பட் டிருந்தன. எழுத்து மூலமும் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு காட் சிக் கூண்டின் முன்னாலும் பல நிமிடங் கள் மெய் மறந்து நின்று கொண்டிருந் தேன். நண்பரொருவர் முக்கியமான காட்சிப் பொருட்களை வீடியோக்கமரா வினால் பதித்துக் கொண்டிருந்தார்.
பூமியில் கிடைக்கின்ற எல்லா வகையான உலோகங்கள், இரத்தினக் கற்கள், கணிப்பொருட்கள், பாறை வகை கள் போன்ற இன்னோரன்ன பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
17

Page 11
அத்தோடு ஆரம்ப கால அமெரிக்க வீதிகள், வீடுகள், கடைத் தெருக்கள், வாகனங்கள் போன்றனவும் முழு அளவில் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் ஆறுதலாகப் பார்ப் பதற்குப் பல நாட்கள் அங்குதங்கியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண் டேன்.
மியூவியத்தின் பிரதான மண்டபத் தில் தான்Suc எலும்புக் கூடும் வைக்கப் பட்டிருந்தது. ஏனைய உலக மியூஸியங் கள் பலவற்றில் வைக்கப்பட்டுள்ளடைன சோர் எலும்புக் கூடுகளில் பெரும்பாலா னவை செயற்கையாகத் தொகுக்கப்பட் டவை என்றும் ஆனால் "SIG முற்றிலும் இயற்கையானது என்றும் அங்கு குறிப் பிட்டிருந்தார்கள்,
இன்னொரு பகுதிக்குள் துழைந்த போது நாம் நிலத்துக்கு அடியில் சென்று விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. எம்மைச் சுற்றிவரத் தாவரங்களின் வேர் களும், மண்புழுக்களும், வேறு மண்வாழ் உயிரினங்களும் காணப்பட்டன. அவை பருமனில் பெரிதாகத் தெரிந்ததால் நாம் உருவில் சிறுத்துவிட்டதுபோன்ற பிரமை ஏற்பட்டது.
இவ்வா று கால்கள் வலியெடுக்கும் வரைசுற்றிப்பார்த்துவிட்டு இரவானதும் இருப்பிடம் திரும்பினோம். மியூஸியத் தின் காட்சிகளை வீடியோ நாடாவில் பதித்துக் கொண்டதால் நாடு திரும்பிய பின் குடும்பத்தவர்க்கும் அவற்றைக் காட்டி மகிழலாம் என நினைத்தேன்.
அன்றிரவு நண்பரொருவரின் இல் லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றில் கலந்துகொண்டேன். அப்பகுதியில் வாழ்ந்த இலங்கையர்கள் பலர் அதில் பங்குபற்றினர். அங்கு இலங் கையின் அரசியல் மற்றும் புத்த நிலை மைகள் பற்றி அன்பர்கள் அலசிக் கொண்டனர். அங்குள்ள சிலர் இண்டர் நெட் மூலம் 'சக்தி FM இன் நிகழ்ச்
18
சிகளைக் கேட்டு வருவதாலும் அடிக்கடி இங்குள்ள குடும்பத்தவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதா லும் உடனுக்குடன் நம் நாட்டு நடப்புக் களை அறிந்து கொள்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் இங்கு இடம்பெறும் சில சம்பவங்களை நாமறிந்து கொள் வதற்கு முன்னரே அமெரிக்காவிலுள் ளவர்கள் அறிந்து கொள்கின்றனர்.
மறுநாள் இன்னொரு நண்பருடன் சிகாகோவில் உள்ள விஞ்ஞான, கைத் GlgTýlgi: LÉly6ríluš50gť (Museum of Science and Industry) Li Tiid G. Fair றேன். கூட்டமாகச் செல்லாது இருவர் மட்டுமே சென்றதால் ஆறுதலாகச்சுற்றிப் பார்க்க அவகாசம் கிடைத்தது. காண் பதற்கரிய பல காட்சிப் பொருட்கள் அங் கிருந்தன. ஆரம்பகால நீராவிக் கார்கள், பெற்றோல் என்ஜின் வாகனங்கள், ரெயில் என்ஜின்கள், ஆஃாய் விமானங்கள் போன்ற பல்வேறு சாதனங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. முழுமையான ரெயில் வண்டியொன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. அமிழ்ந்து போன டைட் டானிக் கப்பலிலிருந்து மீட்டெடுக்கப் பட்ட சில பகுதிகளும் கண்ணாடிக் சுண்டொன்றினுள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
விமானங்களின் கட்டமைப்பை விளங்கிக் கொள்ளக்கூடிய முறையில் சில பகுதிகள் வெட்டி நீக்கப்பட்ட நிலையில் பெரிய போயிங் வகை ஜெட் விமான மொன்று வைக்கப்பட்டிருந்தது.அதனுள் ஏறி அதன் செயற்பாட்டை அவதானிக்க முடியும். அதற்கு அண்மையில் கன் னாடிக் கவசம் கொண்ட ஜெட் என்ஜி னொன்று இருந்தது. அவ்வகை என்ஜின் இயங்கும் முறையை விளங்கிக்கொள்ள அது உதவியது.
மொத்தத்தில் சொல்வதானால் அண்மைக்காலத் தொழில்நுட்ப வளர்ச் சியை விளக்கும் வகையிலும் விஞ்ஞானக்
22 - اپالا تقی لاوی

கோட்பாடுகளைச் சுயமான செயற்பாடு களின் மூலம் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலும் இந்த மியூஸியம் ஒழுங் கமைக்கப்பட்டிருந்தது. பாடசாலை மாணவர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் பயன்தரக்கூடியதாக இருந் தது. நமது நாட்டிலும் இப்படியொரு மியூஸியத்தை அமைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் எனச் சிந்திக்கலானேன். அந்த மியூஸியத்தின் பாதியைப் பார்த்து முடிப்பதற்குள் நாம் முற்றாகக் களைப்படைந்து விட்டோம். மீண்டும் ஒருமுறை வந்து மீதியைப் பார்த்துக் கொள்வோம் என மனதிற்குச் சமாதானம் கூறிக்கொண்டு ஒருவாறு அங்கிருந்து வெளியேறினேன்.
அன்று பகலுணவுக்காக என்னை நகருக்கு வெளியேயுள்ள அராபிய உண
வகமொன்றுக்கு அழைத்துச் செல்வதாக
நண்பரொருவர் கூறியிருந்தார். கூறியது போன்றே அவர்தமது காரில் என்னையும் இன்னும் சிலரையும் ஏற்றிக்கொண்டு அந்த உணவகத்தைத் தேடி விரைந்தார். மேலும் இரண்டு கார்களில் இன்னும் சில நண்பர்கள் எம்மைத் தொடர்ந்தனர். நெடுந்தொலைவு சென்ற பின்னர் பாதையோரத்திலிருந்த ஓர் உணவகத்துக் கருகே கார் நின்றது. இறங்கி உள்ளே சென்று பார்த்தபோது வயிற்றுக்கு ஏமாற் றம் தான் காத்திருந்தது நண்பர் நினைத் திருந்தது போல் அது அராபிய உணவக மொன்றல்ல. யூதர்களே அதை நடாத் துவது தெரியவந்தது. எனவே திரும்பி நகர்ப்புறம் நோக்கிப் பயணமானோம்.
வழியில் அராபிய உணவகமொன் றின் பெயர்ப் பலகையைக் கண்டு அத னுள் நுழைந்தோம். அப்போது பிற்பகல் 3.00 மணியும் பிந்தியிருந்ததால் பசிக் களைப்பு என்னை வாட்டியது.உணவுக்கு ஒடர் பண்ணிவிட்டு அமர்ந்திருந்தபோது 'சூப்' என்ற பெயரில் எதையோ ஆளுக் கொரு பாத்திரம் வீதம் கொண்டுவந்து
நாலு
தந்தனர். அதனைச்சுவைத்துப் பார்த்ததும் அனைவருக்கும் சிரிப்புத்தான் ஏற்பட் டது. வெறும் பருப்புக் கறியையே நீர்ப் பாக்கித் தந்திருந்தனர். எனினும் வீட்டில், சமைக்கும் பருப்புக் கறியை அது நினை ஆட்டியதால் அதனோடு வைத்திருந்த எலுமிச்சைத் துண்டைப் பிழிந்து சாற் றைக் கலந்தவாறு அதனைக் அருந்தி முடித்தோம். பின்னர் கொண்டுவரப் பட்ட உண்வை உண்டு முடித்து இருப் பிடம் திரும்பிய போது இரவு நெருங் கியிருந்தது.
இவ்வாறு அன்பர்களோடு சேர்ந்து சுற்றித் திரிவதில் காலம் பொறுப்பின் றியே கழிந்தது. சிகாகோவும் கொழும்பு போன்று பரிச்சயமான நகரொன்றாக மாறியிருந்தது. எனது சிகாகோ விஜயம் விவளவு சிறப்பாக அமைவதற்கு அங்கு தொழில் செய்யும் ஊர் இளை ஞர்களேமுக்கிய காரணமாக இருந்தனர். நான் சிகாகோவில் தங்கியிருக்கும் காலத்தை நீட்டவும் அவர்கள் முயற் சித்தனர். எனினும் விமான டிக்கட்டில்
மாற்றம் செய்ய முடியாமற் போய்
விட்டது."உங்களுக்கு ஐந்து வருட வீளா இருக்கிறது தானே மூன்று மாதங்கள் ஏதாவது தொழில் செய்துவிட்டு மூன்று லட்சத்தைச் சம்பாதித்துக் கொண்டு போகலாம் தானே" என்றும் சிலர் ஆலோசனைகறினர்.
எனது பிரயாணத்தின் நோக்கம் வேறாக இருந்ததால் உரிய நாளில் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு விமானம் மூலம் லொஸ் ஏஞ்ஜலிஸ் மாநகர் நோக்கிப் பிரயாணத்தை மேற் கொண்டேன். நாலரை மணிநேர ஜெட் பிரயாணத்தின் போது வழிநெடுகிலும் தென்பட்ட அமெரிக்காவின்தரைத்தோற் றங்களை அவதானித்தவாறே சென்றேன். அரிஸோனா மாநிலத்தின் மீதாகப் பறக்கும் போது Gand Canyon என்னும் உலகப் புகழ்பெற்ற நிலக்குடைவுகளைத் தெளிவாக அவ்தானிக்க முடிந்தது.ா
19
22- بظازyق

Page 12
லங்கைக் குடியரசின் அரசிய லமைப்புச் சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒரு வரே நாட்டின் தலைவராகவும், ஆட்சித் துறையினதும் அரசாங்கத்தினதும் தலை வராகவும் ஆயுதப் படைகளின் படைத் தலைவராகவும் இருப்பார். இவரது பத விக் காலம் ஆற
ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற் கான வாக்கெடுப்பு, பதவியிலுள்ள ஜனா திபதியின் பதவிக் காலம் முடிவடை வதற்கு முன்னர் நடாத்தப்பட வேண்டும். வாக்கெடுப்புத் தினத்திற்கும் பதவிக் கால்ம் முடிவடையும் தினத்திற்கும் இடைப்பட்ட காலம் ஒரு மாதத்துக்குக் குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு மேற்படாமலு &: அவசியம்,
ஜனாதிபதிப் பதவிக்கு ஏற்கனவே இரண்டு தடவைகள் மக்களால் தெரி புசெய்யப்பட்ட எவரும் மீண்டும் அப்பத விக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
முதன்முறையாக ஜனாதிபதிப்பத வியை ஏற்ற ஒருவர் தனது பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து நீான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்நேரத்திலும் மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப் பதற்காகத் தேர்தல் மூலம் மக்கள்ஆணை யைக் கோர முடியும். இந்நிலையில் தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதித் தேர் தல்ை நடாத்த ஒழுங்குகள் செய்வார்.
விவாறு உரிய காலத்துக்கு முன் னேர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டிருக்கையில் வாக் கெடுப்பு முடிவடைய முன்னர் பதவியி லுள்ள ஜனாதிபதி இறந்துவிட்ட ால், அத் தேர்தல் ரத்துச் செய்யப்படும். எனினும்
2O
இலங்கையின் ஜனாதிபதிப் பதவி
அத்தகைய தேர்தலில் வாக்கெடுப்பு முடி வடைந்தது முதல் தேர்தல் முடிவு அறி விக்கப்படும் வரையான காலப்பகுதியில் வேட்பாளர் எவரேனும் இறந்தால் னைப் பொருட்படுத்தாதுவாக்கு எண்ணு தலைத் தொடர்ந்து நடாத்தி தேர்தலின் முடிவை வெளிப்படுத்துவது தேர்தல் ஆணையாளரின் கடமையாகும், ஆனால் அம்முடிவின்படி ஜனாதிபதியாகத் தேர்ந் தெடுக்கப்பட உரித்துடையவர் இறந் திருப்பின் தேர்தல் முடிவை வெளிப்படுத் தாது புதிய ஜனாதிபதித் தேர்தலொன்றை நடாத்தத் தேர்தல் ஆணையாளர் நடவடிக் கை எடுக்க வேண்டும்.
இறப்பின் காரணமாக ஜனாதி பதிப் பதவி வெற்றிடமாகுமாயின் அது முதல் புதிய ஜனாதிபூதியொருவர் பதவி யேற்கும் வரை பிரதம அமைச்சர்ஜனாதி பதிப் பதவியில் பதிற் கடமையாற்றுதல் வேண்டும். அத்தோடு அமைச்சரவை பிலுள்ள ஏனைய அமைச்சர்களுள் ஒரு வரைப் பிரதம அமைச்சராகப் பதிற் கட மையாற்றுவதற்கு நியமிக்கவும் வேண் டும்.
அந்நேரத்தில் பிரதம அமைச்சர் பதவி வெற்றிடமாக இருப்பின் அல்லது பதிற் கடமையாற்ற முடியாத நிலையில் பிரதம அமைச்சர் இருப்பின், பாராளு மன்றச் சபாநாயகரே ஜனாதிபதியாகப் பதிற் கடமையாற்ற வேண்டும். இந் நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட் டிருப்பின், அது கலைக்கப்பட முன்னர் சபாநாயகர் பதவி வகித்தவர் இதற்கு உரித்துடையவராவார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர் பதவியேற்க முன்னர் இறந்
அரும்பு-22
 

துவிட்டால், புதிய ஜனாதிபதித் தேர்த லொன்றை நடாத்தத் தேர்தல் ஆணை யாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவியிலிருக்கும் ஜனாதிபதியான வர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடாத பட்சத்தில் அல்லது போட்டியிட் படுத் தோல்வியடையும் பட்சத்தில், அத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தப்பட்ட திகதியோடு அவரது பதவிக் காலம் முடிவடைந்துவிடும். ஜனாதிபதித் தேர் தவில் வெற்றியீட்டி ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் தேர்தல் முடிவு வெளியான நாளிலிருந்து இரு வாரங்கள் பிந்த முன்னர் பதவியேற்க வேண்டும்.
இவ்வாறு புதிய ஜனாதிபதி பதவி யேற்கும் வரை பதவியிலிருக்கும் ஜனா திபதி அப்பதவிக்குரிய அதிகாரங்களை | யும், கடமைகளையும், பணிகளையும் தொடர்ந்து பிரயோகித்தலும் புரிதலும் வேண்டும். ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர்தமது பதவிக்காலம் தொடங்கிய திகதி முதல் இரு வாரங் களுக்குள் வேண்டுமென்றே பதவியேற் கத் தவறினால் ஜனாதிபதிப் பதவி வெற் றிடமாகிவிடும். இந்நிலையில் முன்னர் குறிப்பிட்டது போல் பிரதம அமைச்சரோ அவருக்கு முடியாதவிடத்து சபாநாயக ரோ பதிற் கடமையாற்றத் தொடங்கும் வரை பதவியிலுள்ள ஜனாதிபதி அக்கடமைகளை நிறைவேற்றல் வேண் டும்.
பின்வரும் சந்தர்ப்பங்களில் ஜனாதி பதிப் பதவி வெற்றிடமாகும்:
(1) அவர் இறத்தல் (2) அவர் தம் கைப்பட எழுதி சபாநாயகருக்கு முகவரி பிட்டுஅனுப்பும் கடிதத்தின் மூலம் பதவி விலகுதல் (3) அவர் இலங்கைப் பிர ஜாவுரிமையை இழத்தல் (4) ஜனாதி பதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் உரிய காலத்துக்குள் பதவியேற்கத் தவறு தல் (5) உயர்நீதிமன்றத்தீர்ப்பின்படிஅவர்
பதவியிலிருந்து அகற்றப்படல் (6) அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட் டமை செல்லுபடியாகாது என உயர் நீதிமன்றம் தீர்மானித்தல், வேறொருவர் ஜனாதிபதியாக முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானிக்காத நிலையில்)
ஒருவர் ஜனாதிபதிப் பதவியை வகிக்கும்போது, உத்தியோக ரீதியில் அல்லது தனிப்பட்டமுறையில் அவரால் செய்யப்பட்ட அல்லது செய்யாது விடப் பட்ட எந்தவொரு விடயம் தொடர் பாகவும் அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கவோ, வழக்கு நடவடிக்கை களைத் தொடர்ந்து நடத்தவோ முடியாது. எனினும் ஜனாதிபதிப் பதவியிலுள் எவர் மனப் பலவீனத்தால் அல்லது உடற் பலவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் நிலையில் அவரைப் பதவி துறக்கச் செய்வதற்குரிய நடவடிக்கை களைப் பாராளுமன்றம் மேற்கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர் பின்வரும் குற்றங்களில் எதனையும் செய்திருந்தால் அதுபற்றிய குற்றச்சாட் டொன்றைப் பாராளுமன்றத் தீர்மானம் மூலம் உயர்நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்க முடியும்,
(1) அரசியலமைப்பை வேண்டு மென்றே மீறுதல் (2) தேசத்துரோகம் புரி தல் (3) இலஞ்சம் பெறுதல் (4) பதவி யைத் துஷ்பிரயோகம் செய்தலுட்பட துர்நடத்தையில் அல்லது ஊழலில் ஈடு படல் (5) ஒழுக்கக் கேட்டுடன் தொடர் புடைய ஏதேனும் சட்டத்தின் கீழ் தவறு புரிதல்,
இவற்றுள் எதற்கேனும் ஜனாதிபதி
குற்றவாளியாக உள்ளார் என்றோ அல்
லது தனது பணிகளை மேற்கொள்ளமுடி யாத அளவுக்கு அவர் நிரந்தரமாக உள், உடல் ரீதியில் பலவீனமாக உள்ளார் என்றோ உயர்நீதிமன்றம் தீர்மானித்தால் அதனைப் பாராளுமன்றத்துக்கு அறி
21
அரும்பு-22

Page 13
விக்கும். இந்நிலையில் மொத்த உறுப் பினர்களில் மூன்றிலிரண்டு பங்குக்குக் குறையாதவர்கள் சாதகமாக வாக்களித்து நிறைவேற்றும் தீர்மானமொன்றின் மூலம் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து அகற்ற முடியும்.
ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே வெற்றிடமானால், ஜனாதிபதியாவதற் குத் தகைமையுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பாராளுமன்றம் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந் தெடுத்தல் வேண்டும். அவ்வாறு தேர்ந் தெடுக்கப்படுபவர், பதவியிலிருந்தஜனா திபதியின்தவணையில் முடிவுறாது எஞ்சி யிருக்கும் காலத்துக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும்,
மேற்குறித்தவாறு பாராளுமன்றம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச் சி, ஜனாதிபதிப் பதவி வெற்றிடமான திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் இடம் பெற வேண்டும். எனினும் பாராளு மன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலை யில் அவ்வெற்றிடம் ஏற்பட்டால், புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு முதலாவது கூட்டம் நடைபெற்ற திகதி யிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுதல் வேண் டும்.
வெற்றிடம் ஏற்பட்டதற்கும் மேற் கூறியவாறு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுப் பதவியேற்பதற்கும் இடைப்பட்ட காலத்தின் போது முன்னர் குறிப்பிடப்பட்டதுபோல் பிரதம அமைச் சரோ அவருக்கு முடியாதவிடத்து சபா நாயகரோ ஜனாதிபதியாகப் பதிற் கடமையாற்ற வேண்டும்.
சுகவீனம் அல்லது வெளிநாட்டுப் பிரயாணம் போன்ற காரணங்களால் ஜனாதிபதி தமது கடமைகளை நிறை வேற்ற முடியாதிருப்பின், அத்தகைய காலத்தின் போது தமக்குப் பதிவாகக்
22
கடமை புரிய அவர் பிரதம அமைச்சரை நியமிக்க முடியும். அத்தோடு பிரதம அமைச்சராகப் பதிற் கடமையாற்ற ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம். பிரதம அமைச்சர் பதவி வெற்றிடமாக இருப்பின் அல்லது அவர் கடமையாற்ற முடியாத நிலையில் இருப் பின் பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் நியமிக்கப்படலாம்.
ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒருவர் உயர் நீதிமன் றத்தின் பிரதம நீதியரசர் முன்னிலையில் அல்லது அந்நீதிமன்றத்தின் வேறு எவ ரேனும் நீதிபதியின் முன்னிலையில் சத்தி யப் பிரமாணம் செய்து பதவியேற்றல் வேண்டும், அவ்வாறு பதவியேற்ற பின் வேறு எந்த உத்தியோகபூர்வ பதவி யையும் அவர் வகிக்காதிருத்தல் வேண் டும். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பின் அப்பதவியையும் துறத்தல் வேண்டும். இலாபந்தரும் வேறு எந்தப் பதவியையும் அவர் வகிக்க முடியாது.
எந்நேரத்திலும் பாராளுமன்றத் துக்கு வருகை தருவதற்கும், அதில் உரை யாற்றுவதற்கும் அதற்குச் செய்திகள் விடுப்பதற்கும் ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. அவ்வுரிமையைப் பிரயோகிக் கும் போது பாராளுமன்றத்தில் வாக்களிக் கும் உரிமை தவிர, பாராளுமன்ற உறுப் பினர்களுக்குரிய அத்தனைச் சிறப்புரிமை களுக்கும் அதிகாரங்களுக்கும் ஜனாதிபதி உரித்துடையவராவார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண் டிய சம்பளத்தையும் ஓய்வூதியத்தையும் பாராளுமன்றமே தீர்மானிக்கும். முந்திய சேவையொன்றின் காரணமாக அவருக் குரிய ஓய்வூதியத்துக்கு மேலதிகமாகவே இந்த ஓய்வூதியம் அமைதல் வேண்டும். பாராளுமன்றத் தீர்மானமொன்றின் மூலம் ஜனாதிபதிக்குரிய சம்பளத்தை அல்லது ஓய்வூதியத்தை அதிகரிக்கலாம்; ஆனால் குறைக்க முடியாது. து
அரும்பு-22

செவ்வாய்க் கிரகத்தை ஆராய் augija TT “2001-Mars Odyssey" sтсšд பெயருடைய தானியங்கி விண்கல் மொன்றை ஐக்கிய அமெரிக்காவின் NASA நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. 2001 ஏப்ரல் 7ம் திகதி புளோரிடாவிலுள்ள கேப் கெனவரல் விமானப்படை நிலை யத்திலிருந்து அனுப்பப்பட்ட இவ்விண் கலம் Delta II என்ற வகை ரொக்கட் ஒன்றின் மூலம் விண்வெளிக்கு ஏவப் பட்டது.
ஆர்தர் ஸ்ரீ கிளார்க்கின்2001-Space 0dyssey என்ற திரைப்படத்தை நினை ஆட்டும் வகையில் இவ்விண்கலத்திற்கு 2001-Mars Odyssey எனப் பெயரிடப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விண்கலத்தில் கொண்டு செல்லப்படும் விஞ்ஞான உபகரணங் FST5 sir THEMIS (Thermal Emission Imaging System) என்ற கமராத் தொகுதி முக்கியமானது. சாதாரண கமராக்களைப் போன்று ஒரு பொருளிலிருந்து வெளி வருகின்ற கண்ணுக்குப் புலனாகும் ஒளி யைப் பயன்படுத்திஅதனைப் படம் பிடிப் பதோடு, கண்ணுக்குப் புலனாகாத கீழ்ச் Four Li Jr.5ifraseT (Infra red rays) பயன்படுத்தியும் இத்தொகுதியினால் படங்களைப் பிடிக்க முடியும்.
செவ்வாயின் தரைத்தோற்றத்தை வரைபுபடுத்தவும் அதன் மேற்பரப்பில் அரும்பு-22
நோக்கி 2001 – Mars Odyssey
வ்வாய்க் கோளை
என்ன வகையான கணிப்பொருட்கள் காணப்படுகின்றன என்பதைக் கண்டறி
யவும் THEMISகமராத் தொகுதி உதவும்.
ஏப்ரல் 19ம் திகதி இவ்விண்கலம் புவி யிலிருந்து சுமார் 3 மில்லியன் kmக்கு அப்பால் சென்று கொண்டிருந்த போது அதன் கமராத் தொகுதி புவி நோக்கித் திருப்பப்பட்டு புவியின் தோற்றம் படம் பிடிக்கப்பட்டது. பிறை வடிவமாகத் தெரி பும் புவியின் அந்தப் படம் மேலே காட் டப்பட்டுள்ளது. தென் துருவத்தை அண் மித்த பகுதியே அந்நேரத்தில் கமராவை நோக்கி இருந்துள்ளது.
அதேவேளையில் தென்துருவத்தின தும் அவுஸ்திரேலியாவினதும் வெப்ப நிலைகளையும் THEMIS பதிந்து கொண்டு அறிவித்துள்ளது. இவ்வள வீடுகள் அன்றைய உண்மையான வெப் பநிலைகளுக்கு மிகக் கிட்டியனவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே பல மில்லியன் கிலோ மீட்டர்களுக்கு அப்பா விருந்தே செவ்வாயின் தரை வெப்பநிலையை அளக்கும் ஆற்றல்
THEMISக்கு உண்டு என்பது இதன்மூலம்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
2001-Mars Odyssey Gű sista, Glyi பற்றிய மேலதிக தகவல்களை இண்டர் G l'1gys767 WWWmars.jpl.nasa.gov) (dyssey என்ற வெப்தளத்திலிருந்து பெற் றுக் கொள்ளலாம். ஊ
23

Page 14
புதிய கண்டுபிடிப்பொன்றை அல்லது புத்தாக்கமொன்றைச் செய்த ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதனைத் தயாரிப்பதற்கு அல் லது பயன்படுத்துவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு அரசாங்கத் தினால் வழங்கப்படும் தனி உரிமை யே Patent என அழைக்கப்படுகின் {Tlჭil.
புதிய, பிரயோசனமான இயந் திர சாதனங்கள், தயாரிப்புப் பொ ருட்கள், கைத்தொழிற் செயன்முறை கள், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள செயன்முறைகளில் செய்யப்படும் முக்கியமான திருத்தங்கள் போன்ற வற்றுக்கு Patent உரிமை வழங்கப் படுகின்றது. அத்தோடு தம்மால் ஆக் கப்பட்ட புதிய இரசாயனச் சேர்வை கள், உணவுப் பொருட்கள், மருந்து கள் முதலியவற்றுக்கும் அவற்றைத் தயாரிப்பதற்கான செயன்முறை களுக்கும் ஒருவர் Patent உரிமை பைப் பெற்றுக்கொள்ள முடியும். இப்போது பரம்பரை அலகுப் GLTS usual: (genetic engineering) முறைகளினால் உருவாக்கப்படும் புதிய தாவர, விலங்கு வடிவங்களுக் கும் கூட Patent வழங்கப்படுகின்றது.
வரலாற்றில் பதிவு செய்யப் பட்ட முதலாவது "பேட்டன்த்" உரி மை இத்தாலியின் புளோரன்ஸ் நக rfaði 5, 7 jogii, Filippo Brunelleachi என்ற பொறியியலாளருக்கு 1431இல் வழங்கப்பட்டுள்ளது. சலவைக் கற்க ளைக்கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் பாரந்தூக்கியொன்றைக்
24
கொண்ட வள்ளமொன்றைத் தயா ரிப்பதற்காக அவருக்கு இவ்வுரிமை 3 வருட காலத்துக்கு வழங்கப்பட் டிருந்தது. கண்டுபிடிப்பாளர்களுக்கு
ஆக்கவுரிமை வழங்கும் இவ்வழக் கம் அடுத்த இருநூற்றாண்டுகளிலும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுக் குப் பரவியது. முதலாம் எலிஸபெத் மகாராணியின் காலத்தில் இங்கி லாந்திலும் இம்முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.
இவ்வாறான ஆக்கவுரிமை களை கால எல்லை மட்டுப்படுத் தலின்றி வழங்கும் போது அது ஒரு சிலரின் ஏகபோக உரிமைக்கு (m0nopoly) வழிவகுப்பதாய் அமைந் திதி தைைத த பபதிநகக் 配门 கிலாந்துப் பாராளுமன்றம் 1828இல் ஏகபோக உரிமை பற்றிய சட்ட மொன்றை இயற்றியது. பெரும் பாலான ஏகபோக உரிமை கோரும் நடைமுறைகளை இச்சட்டம் தடை செய்தது. எனினும் புதிய உற்பத்திப் பொருட் கண்டுபிடிப்புக்களுக்கு 14 வருடங்கள் வரை Patent என்னும் உரிமைப் பத்திரங்களை வழங்க இச் சட்டம் வழிவகுத்தது.
ஐக்கிய அமெரிக்காவின் அரசி
பல் யாப்பிலும் கண்டுபிடிப்பாளர் களுக்கு "பேட்டன்ற் உரிமை வழங்
குவதன் அவசியம் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. அமெரிக்கப் பாராளு மன்றம் 1790இல் முதலாவது பேட் டன்ற் சட்டமூலத்தை அங்கீகரித்தது. பிரான்ஸ் 1791இல் பேட்டன்ற் முறை யை அமுல்படுத்தத் தொடங்கியது.
அரும்பு-22
 
 

19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி பாகும் போது பெருந்தொகையான
நாடுகள் தமக்கேயுரிய "பேட்டன்ர்' சட்டங்களை வகுத்துக்கொண்டிருந்
தின்
ஒரு கண்டுபிடிப்பு அல்லது புத் தாக்கம் "பேட்டன்த்" உரிமையைப் பெற வேண்டுமாயின் அது புதுமை யானதாகவும் பிரயோசனமுள்ள
தாகவும் இருத்தல் வேண்டும், ஒரு
பேட்டன்ற் உரிமையாளர்
குறித்த துறையில் ஏற்கனவே
இருக் கும் நிலைமையைவிட மேம்பட்ட நிலைமைக்கு வழிகோலுவதாக அது அமைய வேண்டும். ஏற்கனவே
இருக்கும் அறிவில் சிறிய மாற்றங்
களைச் செய்வதன் மூலம் ஒருவர்
புதிய "பேட்டன்ற் உரிமையொன் றைப் பெற்றுக்கொள்ள முடியாது.
எனினும் முன்னர் "பேட்டன்ந் உரி
மை பெற்ற ஆக்கமொன்றில் அல்லது செயன்முறையொன்றில் மேலும்
குறிப்பிடத்தக்க திருத்தங்களைச் செய் வதன் மூலம் ஒருவர் புதிய "பேட் டன்ற் உரிமையொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும்,
"பேட்டன்ற் உரிமையானது ஒருவகைச் சொத்தாகவே கருதப்படு கின்றது. ஏனைய சொத்துக்களைப் போன்று ஒருவர் அதனை இன்
னொருவருக்கு விற்கவோ, அடகு
வைக்கவோ முடியும். அதேபோன்று இறந்
துவிட்டால் அந்தப் பேட்டன்ற்றுக்கு அவரது வாரிசுகள் உரித்துடையவர்
களாக மாறுவர்.
ஒருவர் "பேட்டன்த்" உரிமை பெற்றுள்ள ஆக்கமொன்றை அவ ரைத் தவிர வேறெவரும் உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ, விற் பனை செய்யவோ முடியாது. எனி னும் பேட்டன்த் உரிமையாளர் தனது மேற்குறித்த உரிமைகளைப் பயன் படுத்த இன்னொருவருக்கு அதி
22 - پاشاقلاق
காரம் வழங்க முடியும். இவ்வாறு செய்வதற்குப் பிரதியுபகாரமாக அவர் Royalty எனப்படும் உரிமைத் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ள உரித்துடையவர் ஆவார். "பேட்டன்ற் உரிமை பெறப்பட்ட ஆக்கமொன்றை உரிமையாளரின் அதிகாரமின்றி யாரேனும் பயன் படுத்தினால் அவருக்கெதிராக வழக் குத் தொடுத்து நஷ்டஈடு கோரவும், அவ்வுரிமை மீறலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும் உரிமையாளருக்கு உரிமை உண்டு. (இந்த இதழில் ஈஸ்ட்மன் - கொடெக் கம்பனி பற் றிய கட்டுரையைப் பார்க்க)
பெரும்பாலான நாடுகளில் ஒரு பேட்டன்ற உரிமைக்குரிய காலக் கெடு 16 முதல் 20 வருடங்கள் வரை வேறுபடலாம். பிரான்ஸ் போன்ற சில நாடுகளில் பொதுப் பயன் பாட்டுக்குரிய ஆக்கங்களுக்குரிய "பேட்டன்த் உரிமை குறுகிய காலத் துக்கே வழங்கப்படுகின்றது. ஒரு கண்டுபிடிப்பு அல்லது ஆக்கத்துக் கான "பேட்டன்ற் காலக்கெடு முடி வடைந்த பின் அக்கண்டுபிடிப்பு அல் லது ஆக்கம் பொதுமக்களுக்குரி யதாக மாறிவிடும்.
தமது கண்டுபிடிப்பொன்றுக் குப் பேட்டன்த் உரிமையைப் பெற் றுக்கொள்ள விரும்பும் ஒருவர் அதற் கான விண்ணப்பமொன்றைப் பேட் டன்ற் காரியாலயத்துக்குச் சமர்ப் பிக்க வேண்டும். பயிற்றப்பட்ட பரி சோதகர்கள் முன்னைய கண்டுபிடிப் புக்களையும் "பேட்டன்த்"களையும் பரிசீலித்துப் பார்த்த பின்னரே அவ் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதைத் தீர்மானிப் LITT
ஒரே கண்டுபிடிப்புக்குப் பலர் உரிமை கோரும் சந்தர்ப்பங்களில் முதலில் பேட்டின்ற் விண்ணப்பத்
25

Page 15
தைச் சமர்ப்பித்தவருக்கே அவ்வுரி மையைப் பெரும்பாலான நாடுகள் வழங்குகின்றன. எனினும் ஐக்கிய
அமெரிக்காவில் முதலில் கண்டு
பிடித்தவர் தாமே என எவர் நிரூபிக் கின்றாரோ அவருக்கே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேட்டன்ற் வழங் கப்படும்.
சர்வதேச வர்த்தகம் அபரிமித மாக வளர்ச்சியடைந்து வரும் இக் காலத்தில் நாடுகளுக்கிடையில் இரு பக்க பேட்டன்ற் உடன்படிக்கைகள் தேவைப்படுகின்றன. 1970இல் கைச் சாத்திடப் பெற்ற "பேட்டன்ற் ஒத்து
உலகப் புகழ் பெற்ற இந்திய எழுத் தாளர்களுள் ஒருவ ரான RK நாராயண் அண்மையில் தமது 85வது வயதிலே கால மானார். 1906ஆம் ஆண்டு சென்னையிலே பிறந்த அவர் அங்கும் பின்னர் மைசூரி லுள்ள மகாராஜாக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே எழுதிய RK நாரா யணின் இயற்பெயர் ராசிபுரம் கிருஷ்ண ஸ்வாமிஜயர் நாராயணஸ்வாமி என்ப தாகும். ஆரம்ப காலத்தில் அதே பெயரில் எழுதிய அவர் பிற்காலத்தில் தமது நண்பர் கிரஹம் கிரீன் என்பவரின் ஆலோசனைப் படி RK நாராயண் என்ற பெயரில் தமது ஆக்கங்களை வெளியிடலானார்.
அவரது முதலாவது நா விொன் “Swami and Friends" 1935g)si: GM51 Giffo வந்தது. RK நாராயணின் புனைகதை களுள் பெரும்பாலானவை மல்குடி என்ற கற்பனைக் கிராமத்தை மையமாகக் கொண்டிருந்தன. அவரது கதைகளுள் ஒரு சிலவற்றை வாசித்து முடித்ததும் நாமும்
25
ழைப்பு உடன்படிக்கை, ஒரே கண்டு பிடிப்புக்குப் பல நாடுகளில் பேட்
டன்ற் உரிமையைப் பெறுவதற்கான
நடைமுறையை எளிதாக்கி வைத் தது. 1977இல் முழு ஐரோப்பாவுக் குமான மத்திய பேட்டன்ற் காரியால ய்மொன்று திறக்கப்பட்டது. இக் காரியாலயத்தினால் வழங்கப்படும் ஐரோப்பியப் பேட்டன்ற், விண்ணப் பதாரியினால் குறிக்கப்படும் அங் கத்துவ நாடுகளில் அந்நாடுகளின் தேசிய பேட்டன்த்" போன்று கருதப் பட்டு அங்கீகரிக்கப்படும். ப
R.K. நாராயண்
மல்குடி கிராமத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாத தாகிவிடுகிறது.
RKநாராயண் பல நாவல்களையும் ஐந்து சிறுகதைத் தொகுதிகளையும் இரண்டு பிரயாண நூல்களையும் நான்கு கட்டுரைத் தொகுப்புக்களையும் எழுதி புள்ளார். அவரது Malgudi Days என்ற சிறுகதைத் தொகுதியுலுள்ள சிறுகதைகள் தொலைக்காட்சி நாடகங்களாக ரூபவா ஹினியிலும் ஒளிபரப்பப்பட்டது நினை விருக்கலாம்.
அவர் தனது வாழ்க்கை நினைவு களை My Days என்ற பெயரில் எழுதி வெளியிட்டுள்ளார். இராமாயணம், மகா பாரதம் போன்ற பண்டைய இலக்கியங் களையும் அவர் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளார்.
அவரது The Guide என்ற நூலுக்கு 1958ஆம் ஆண்டு சாகித்திய அகடெமி விருது கிடைத்தது. 1980இல் இங்கிலாந் gair Royal Society of Literature, R.K நாராயணுக்குA.C.BEISOnவிருதை வழங் கிக் கெளரவித்தது.1989இல் அவர் இந்திய ராஜ்யசபாவின் உறுப்பினராக நியமிக்கப் பட்டிருந்தார். பா "
அரும்பு-22
 

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நாடுகாண் கடற் பிரயாணங்கள் பலவற்றை மேற் கொண்டவரான கிறிஸ்தோபர் கொலம்பஸின் பெயரைக் கேள்விப் படாதவர்களே இல்லை எனலாம். அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேற்குத் திசை நோக்கிச் சென்று கரீபியன் தீவு கள் பலவற்றையும் அமெரிக்கக் கண் டத்தின் கிழக்குக் கரையோரப் பிரதே சங்களையும் அடைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற புகழை இவர் பெற்றுக்கொண்டார். இதனா ல்தான் "அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர்" என்ற சிற்ப்புப் பெயர் இன்றும் அவ ருக்கு வழங்கப்படுகின்றது.
கிறிஸ்தோபர் கொலம்பஸ் (இத்தாலிய மொழியில் CristOfor) Colombo) இத்தாலியில் உள்ள ஜெ னோவா (Genoa) நகரிலே 1451இல் பிறந்துள்ளார். அவரது இளமைக் காலம் பற்றிய விபரங்கள் அவ்வள வாகப் பதியப்படவில்லை. ஆரம்பத் தில் தனது தந்தையைப்போன்று கம் ப்ளி நெய்தல் தொழிலில் ஈடுபட்ட கொலம்பஸ் பின்னர் துறைமுக நக ரான ஜெனோவாவிலிருந்து கப்பற் பிரயாணங்கள் பலவற்றை மேற் கொண்டுள்ளார் எனத் தெரிய வரு கின்றது.
இவ்வாறு 1478ல் இங்கிலாந்து நோக்கிச் சென்ற கப்பற் கூட்ட மொன்றில் கொலம்பஸ் பிரயாணம் செய்தபோது கடற்கொள்ளையர் அரும்பு-22
GlgsST65L6)
(Christopher Columbus)
களின் தாக்குதலில் அவரது கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. அண்மையி விருந்த போர்த்துக்கல் நாட்டுக்கு நீந் திச் சென்று அவர் உயிரைக் காப்பாற் றிக் கொண்டார். அவரது சகோதரன் பார்தலொமியு கொலம்பஸ் என்ப வர்அங்கேயே தொழில் புரிந்து வந்த தால் அவரும் போர்த்துக்கல் நாட்டி லே வசிக்கத் தொடங்கினார். 1479இல் அங்கு திருமணம் செய்து கொண்ட கிறிஸ்தோபர் கொலம் Lugn wig, 1480gal guGal; it (Diego) என்ற மகன் பிறந்தான்.
அக்காலத்தில் ஐரோப்பாவி லிருந்து ஆசியாவுக்குச் செல்வதற் குரிய தரைவழிகள் யாவும் முஸ்லிம் களின் கைகளில் இருந்ததால் கடல் மார்க்கமாக ஆசியாவை அடையும் முயற்சிகளில் ஐரோப்பாவின் கிறிஸ் தவ ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர். தனது பிரயாணங்களின் போது சேக ரித்துக்கொண்ட தகவல்களையும் தேசப்படங்களை ஆராய்ந்ததன் மூலம் கிடைத்த அறிவையும் அடிப் படையாகக் கொண்டு அத்திலாந்திக் சமுத்திரத்தில் மேற்கு நோக்கிச் செல் வதன் மூலம் ஆசியாவை அடைய முடியும் எனக் கொலம்பஸ் நம் LST 7 ff.
இம்முறையில் ஆசியாவை அடைவதற்கான திட்டமொன்றைப் போர்த்துக்கேய மன்னர் இரண்டாம் ஜோனிடம் 1484இல் சமர்ப்பித்த கொலம்பஸ் அதற்காக மன்னரிடம்
27

Page 16
நிதியுதவி கோரினார். அக்கோரிக்கை யை ஆராய்ந்த அரச ஆய்வுக் குழு வொன்று அவரது தூரக் கணிப்புக்கள் பிழையானவை எனக் காரணம் கூறி அதனை நிராகரித்துவிட்டது.
அதன் பின்னர் கொலம்பஸ் ஸ்பெயினுக்குச் சென்று அங்கு வசிக் GJIT SITT T. 148இல் ஸ்பெயினின் ஆர FLunTanT இஸபெல்லாவுக்கு அறிமுக மான் கொலம்பஸ் தனது கடற் பிர யானத் திட்டத்தை அரசவையில் முன்வைத்தார். அங்கும் அரச குழு வொன்று அதனை நிராகரித்துவிட் டது. எனினும் சளைக்காமல் தனது திட்டத்துக்கு ஆதரவு தேடுவதில் கொலம்பஸ் ஈடுபட்டார். இதன் விளைவாக 189இல் மன்னர்ஐந்தாம் பேர்டினண்ட், அரசி இஸபெல்லா ஆகியோர் கொலம்பஸின் திட்டத் துக்கு உதவ முன்வந்தனர்.
முதவில் கடற் பிரயாணத்தின் நிபந்தனைகள் பற்றிய உடன்படிக் கையொன்று கைச்சாத்திடப்பட்டது. கொலம்பஸ் புதிதாகக் கண்டுபிடிக் கும் நிலப்பகுதிகள் ஸ்பெயின் நாட் டுக்கே சொந்தமாகும் எனவும் அவற் றுக்குக் கொலம்பஸ் அரச பிரதி நிதியாக இருப்பார் எனவும், அப்பிர தேசங்களில் கண்டெடுக்கப்படும் தங்கம், வெள்ளி போன்ற திரவியங் களில் பத்திலொரு பகுதி அவருக்கு வழங்கப்படும் எனவும் இவ்வுடன் படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்
ჭoნჭნI.
கொலம்பஸின் முதலாவது நாடுகாண் பிரயாணம் 1892 ஒகஸ்ட் 3ம் திகதி ஸ்பெயினிலிருந்து ஆரம்ப மாகியது. 'சாந்தா மாரியா','பிந்தா, நிஞா’ என்ற பெயர்களையுடைய மூன்று கப்பல்களில் சுமார் 90 பேர் இப்பிரயாணத்தில் கலந்துகொண்
டனர். அக்கப்பல்களுள் பெரியதான
"சாந்தா மாரியாவின் தலைமை மாலுமியாக கொலம்பஸ் இருந் தார். இடைவழியில் ஏற்பட்ட பல் வேறு இடர்ப்பாடுகளின் பின்னர் ஒக்டோபர் 12ம் திகதி அதிகாலையில் பஹாமாஸ்ைச் (Bahamas) சேர்ந்த தீவொன்றில் அவர்கள் தரையிறங் கினர். ஸ்பானிய மொழி தெரியாத சுதேச மக்களின் முன்னிலையில் அத் தீவை ஸ்பெயினுக்காக உரிமை கோரிய கொலம்பஸ் அதற்கு "பைான் எuல்வடோர்’ எனப் பெயரிட்டார். அடுத்த சில வாரங்களில் இன்றைய கியூபா, டொமினிேக்கன் குடியரசு, ஹயிட்டி போன்ற பிரதேசங்களை பும் கொலம்பஸ் கைப்பற்றிக் கொண்டார்.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்கள் யாவும் ஆசியாவின் பகுதிகளே எனக் கொலம்பஸ் திடமாக நம்பினார். கியூபாவை ஜப்பான் என அவர் நினைத்துக் கொண்டார். ஏனைய பகுதிகளுக்கு இந்தியா (Indies) எனப் பெயரிட்டார். அங்குள்ள மக்களை இந்தியர்கள் என்றே அவர் அழைக் கலானார். இதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் மேற்கிந்தியா', 'சிவப்பு இந்தியர்கள்' போன்ற சொற் பிரயோகங்கள் வழக்கத்தில் வரலாயின.
1892 டிசம்பரில் 'சாந்தா மாரி யா' கப்பல் தரைதட்டிச் சிதைந்து போயிற்று. அருகிலிருந்த கரைப் பகு
அரும்பு-22
 

gus. “La Navidad argiro GL Lña தற்காலிகக் கோட்டை ஒன்றைக்கட் டுவித்த கொலம்பஸ், அக்கப்பலிலி ருந்த பொருட்களோடு சுமார் 40 பேரை அங்கு நிறுத்திவிட்டு எஞ்சி யிருந்த இரு கப்பல்களிலும் ஏனை யோரோடு 1493 ஜனவரியில் ஸ்பெ யின் நோக்கிப் பயனமானார். மார்ச் மாதத்தில் அவர் ஸ்பெயினை அடைந்த போது அரசரும் அரசியும் அவரைக் கோலாகலமாக வரவேற் றதோடு அவருக்குப் பல்வேறு பட் டம் பதவிகளையும் வழங்கினர்.
மீண்டும் 1493 செப்டம்பரில் கொலம்பஸ் இரண்டாவது கடற் பயணமொன்றை மேற்கொண்டார். இதில் 17 கப்பல்களில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். முதலில் Dominica, Guadelope, Antigua போன்ற தீவுகளில் தரையிறங்கிய GJ: gar. Los Puerto Rico gigro சிறிது தரித்து நின்றார். நவம்பர் 27ம் gig “La Navidad (33, y "3 Lig, அருகில் தரை இறங்கிப் பார்த்த போது அக்கோட்டை அழிக்கப் பட்டு அங்கிருந்தோர் அனைவரும் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந் தது. பின்னர் இன்றைய டொமினிக் கன் குடியரசு இருக்கும் பகுதியில் அவர் "இஸபெல்லா' என்ற பெயரில் குடியேற்றமொன்றை நிறுவினார். புதிய உலகில் அமைக்கப்பட்ட முத லாவது ஐரோப்பியக் குடியேற்றமாக இது கருதப்படுகின்றது.
1494இன் வசந்த காலத்தில் மேலும் பல பகுதிகளுக்கு விஜயம் செய்துவிட்டு செப்டம்பரில் இஸ பெல்லா குடியேற்றத்துக்கு கொலம் பஸ் திரும்பி வந்தபோது அவரது ஆட்களிடையே அதிருப்தியும் கிளர்ச் சியும் ஏற்பட்டிருந்தது. சிலர் ஏற்கன வே ஸ்பெயினுக்குச் சென்று கொலம்
பளப"க்கு எதிராக முறைப்பாடுகள் செய்திருந்தனர்.
இதனால் அரச விசாரனைக் குழுவொன்று இஸபெல்லாவுக்கு அனுப்பப்பட்டது. அக்குழு கொலம் பவின் மீதே குற்றங்களைச் சுமத்தி யதால் கொலம்பஸ் ஸ்பெயின் சென் று நேரடியாக அரசரிடம் தன் நிலை யை விளக்கித் தப்பித்துக் கொண் டார். அவ்வாறு செல்ல முன்னர் Santo Domingo 67sirp GL Liai 15 L I
தலைநகரொன்றை அமைத்து அதற்
குத் தனது சகோதரன் பார்தலொமியு வைப் பொறுப்பாக கொலம்பஸ் நியமித்திருந்தார்.
கொலம்பஸின் மூன்றாவது பிர பானம் 198 மே 30ம் திகதி ஸ்பெயி னிலிருந்து ஆரம்பமாகியது. எட்டுக் கப்பல்கள் பங்குபற்றிய அப்பிரயா னத்தின் போது முதலாவது கரை யிறக்கம் மூன்று சிகரங்களைக் கொண்ட Trinidad தீவில் இடம் பெற்றது. அதன் பின்னர் இன்றைய வெனிஸியூலாவைக் கண்டதோடு மேலும் பல தீவுகளையும் கண்டு பிடித்தார். ஓகஸ்ட் 31ம் திகதி Sant) Doming0வுக்குச் சென்ற அவர் தனது சகோதரனுக்கு எதிராகப் பெரும் பகுதியினர் கிளர்ந்து எழுந்திருப் LISTIG RTL T.
கொலம்பஸின் எதிரிகள் செய்த முயற்சியின் காரணமாக அரசர் கொலம்பளைபப் பதவிநீக்கம் செய்து விட்டு 1499 மே மாதத்தில் Franciscப் de Bobadilla என்பவரைப் புதிய பிரதேசங்களின் ஆளுனராக நியமித் தார். 1500 ஒகஸ்ட்டில் அங்கு வந்து சேர்ந்த புதிய ஆளுனர் கொலம் பஸையும் அவரது சகோதரனையும் கைது செய்து சங்கிலிகளால் பிணைத் து ஸ்பெயினுக்குத் திருப்பி அனுப்பி வைத்தார்.
29
அரும்பு-22

Page 17
தன்னைப் பிணைத்துள்ள சங்கி விகளை அரசியே தன் கைகளால் அகற்றும் வரை அவற்றை அவிழ்க்கக் கொலம்பஸ் இடமளிக்கவில்லை. கொலம்பலையும் பார்தலொமி யூவையும் மன்னித்து விடுவித்த அரசனும் அரசியும் அவர்களுக்குப் பல வெகுமதிகளை வழங்கினர். எனி னும் புதிதாகக் கண்டுபிடித்த பிரதே சங்களின் ஆளுனராக மீண்டும் கொலம்பஸை நியமிக்க மறுத்துவிட் டனர்.
நான்காவது கடற் பயன மொன்றை மேற்கொள்ள கொலம் பஸ் அரச ஆதரவைப் பெற்றுக் கொண்ட போதிலும் பூச்சி அரித்த கப்பல்கள் நான்கே அவருக்குக் கிடைத்தன. 1502 மேயில் ஆரம்ப மான் அப்பயணத்தின் போது அவர் ஹொண்டுராஸ்"க்கு அருகால் சென்று பனாமாவில் கரை இறங் கினார். அங்கு குடியேற்றமொன்று நிறுவப்பட்ட போதிலும் அது பின் னர் கைவிடப்பட்டது. இரு கப்பல் கள் மாத்திரமே எஞ்சியிருந்த நிலை யில் அவர் Santo Doming) நோக்கிப் பயனமானார். வழியில் ஜமாய்க் காவுக்கு அருகில் 1503 ஜூன் 23ஆம் திகதி உக்கிப்போன அவ்விரு கப்பல் களும் நீர் உட்சென்றதன் காரணமாக அமிழ்ந்துவிட்டன.
தனது ஆட்களுடன் ஜமாய்க் காக்கரையை அடைந்த கொலம்பஸ் 40-55îF, rt rf Santa Domingos ligj
செய்தி அனுப்பினார். எனினும் உதவி வந்துசேர ஒருவருடத்துக்கு மேல் பிடித்தது. பின்னர் கொலம் பஸ7ம் குழுவினரும் 1504 ஜூன் 28ம் S3,5 Santo Domingo Garaig) egyi கிருந்து ஸ்பெயினுக்குப் பயன மாயினர். அவர்கள் நவம்பர் 7ம் திகதி ஸ்பெயினை அடைந்தனர். அத் தோடு கொலம்பஸின் கடற் பிரயா ணங்கள் முடிவுக்கு வந்தன.
கிறிஸ்தோபர் கொலம்பஸின் இறுதிக் காலத்தில் அவர் நோய் வாய்ப்பட்டிருந்தார். தான் இழந்த பட்டம் பதவிகளை மீட்டுப்பெற அவர் முயற்சித்தும் அது நிறை வேறவில்லை. அவர் 1506 மே 20ம் திகதி Walladolid என்ற இடத்தில் Far TagTT. La TGT அவரது பூதி வுடல் ஸ்பெயினிலுள்ள Seville நக ரில் அடக்கம் செய்யப்பட்டது. பின் SITst Sigf Santo Domingo slå Sir அங்கிருந்து கியூபாவிலுள்ள ஹவா னா நகருக்கும் கொண்டு செல்லப் பட்டு இறுதியில் 1899ஆம் ஆண்டு மீண்டும் Seville நகருக்குக் கொண்டு வரப்பட்டது. எனினும் Santo Doming0விலிருந்து ஹவானாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது வேறு ஒரு வரின் சடலமே என்றும் கொலம் பஸின் பூதவுடல் இப்போதும் Santo Doming0விலேயே அடக்கப்பட் டிருக்கிறது என்றும் வரலாற்றா சிரியர்கள் சிலர் கருதுகின்றனர்.
நீயும் தான்! தமது கடைசிப் பிள்ளையையும் பாடசாலையில் சேர்த்த பின்னர் ஒரு கணவனும் மனைவியும் அருகருகே அமர்ந்து நிம்மதியாகப் பேசிக்கொண்டிருந்தனர். தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக்கையில் வைத்துக்கொண்டிருந்த கணவனைப் பார்த்து"மூக்குக் கண்ணாடி இல்லாமல் பார்க்கும்போது நீங்கள் இன்னும் இளம்ை அழகோடு காட்சி
தருகிறீர்கள்” என்றாள் மனைவி.
"அப்படியா! எனது மூக்குக் கண்ணாடி இல்லாமல் உன்னைப் பார்க்கும் போது நீயும் இளமையாகத்தான் தெரிகின்றாய்” என்றான்கணவன்.
30
3
22 - بالایی eyق

g"ಲಿ3_r என்பது இரண்டு போட்டியாளர்கள் தம் கைகளைப் பயன்படுத்தி நடாத்தும் ஒரு சண்
டைப் போட்டியாகும். இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் உடலசைவு சமநிலை, நெம்புகோல் கோட்பாடு என்பவற்றைப் பிரயோ கிப்பதன் மூலம் மற்றவரை மடக்கி வெற்றிகொள்ள முயற்சிப்பார். விசையோடு வரும் தாக்குதல் களுக்கு வழிவிடுவதன் மூலம் அணு கூலத்தைப் பெற்றுக்கொள்வதை இவ்விளையாட்டு வலியுறுத்து கின்றது.
ஜப்பானிய மொழியில் ஜூ டோ' என்பதன் பொருள் 'மிருது வான வழிமுறை என்பதாகும். 'ஜூஜிட்ஸ்" என்னும் ஜப்பான் நாட்டுப் பாரம்பரியச் சண்டைக் கலையிலிருந்தே இவ்விளையாட்டு உருவாகியுள்ளது. *
ஜூடோவில் உபயோகிக் கப்படும் பிரதான சண்டை துட்பங் கள் பின்விருமாறு: (1) நின்ற நிலை
யில் தூக்கி எறியும் நுட்பமுறைகள் (i) இறுகப் பற்றிப் பிடிக்கும் நுட்ப முறைகள்(i) அடிக்கும் நுட்பமுறை * Հեքի
ஜூடோப் போட்டியாளர் தம் எதிரியைத் தூக்கி எறிவதற்கு அல்லது அவரைத் தரைவிரிப்ப்ோடு அழுத் திப் பிடிப்பதற்கு அல்லது அவரை
அசைய முடியாதவாறு இறுகப்
"பற்றிப் பிடிப்பதற்கு மேற்கூறிய
நுட்ப முறைகளைப் பயன்படுத்து வார்.
ஜூடோப் போட்டிதரை விரிப் பொன்றின் (mat) மீதே இடம்பெறு கின்றது.ஒவ்வொரு பக்கமும் 14-16 மீட்டர் கொண்ட சதுர வடிவானதாக இருக்கும் இவ்விரிப்பு, இரண்டு வலயங்களாகப் (Zones) பிரிக்கப்பட் டிருக்கும். மத்தியிலுள்ள போட்டி இடம்பெறும் பரப்பு 8-10 n சதுர மாக இருப்பதோடு அதனைச் சுற்றி வர மீட்டர் அகலமான சிவப்புக் கரையொன்று (border) இருக்கும். இப்பிரதேசம் ஆபத்து வலயம் (Danger Zone) STsSTLLG) Lo. GL To. இடம்பெறும் பரப்புக்கு வெளியே (சிவப்புக் கரைக்கு அப்பால்) 3 m அகலமுள்ள பாதுகாப்புப் பகுதி யொன்று (safety area) இருக்கும்.
ஜூடோப் போட்டியொன்றின் போது இரண்டு தீர்ப்பாளர்களும் (judges) ஒரு நடுவரும் (referee) கடமையாற்றுவர். இரு போட்டியா ளர்களும் வழக்கப்படி ஒருவருக் கொருவர் சிரம் தாழ்த்துவதன் மூலம் போட்டிஆரம்பிக்கப்படும். போட்டி நீடிக்கும் 4 லம் ஒவ்வொரு சுற்றுப் போட்டிகளின் விதிகளுக்கும் ஏற்ப வேறுபடுகின்றது. உலகச் சம்பியன்
31
அரும்பு-22

Page 18
ஷிப் போட்டிகளிலும் ஒலிம்பிக் போட்டிகளிலும் பெண்களுக்கான ஜூடோப் போட்டிகள் சி நிமிடங் களும் ஆண்களுக்குரியவை 5 நிமிடங் களும் நீடிக்கும்.
போட்டியாளர்களில் ஒருவர் இப்பொன்' என்னும் புள்ளியொன் றைப் பெறும் பட்சத்தில் அவர் போட்டியில் வெற்றிபெற்றவராகக் கருதப்படுவார். பின்வரும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஓர் இப்பொன்' வழங்கப்படுகின்றது :
(i) தெளிவாகவும் பலமாகவும்"
எதிரியைத் துரக்கி எறிதல் (ii) எதிரியை 30 செக்கன்களுக்குத் தரையோடு அழுத்திப் பிடித்தல் (ii) மூச்சுத் திணறக்கூடிய விதத்தில் எதிரியை விடாது இறுக்கிப் பிடித் தல் அல்லது முழங்கைப் பூட்டுக்கு உட்படுத்தல்,
மேற்குறிப்பிட்ட செயல்களில் ஒன்றையேனும் சாதிக்க முடியிாமற் போயினும் அவற்றுக்கு ஓரளவு கிட் டிய செய்கைகள் இரண்டைச் சாதிப் பதன் மூலம் ஓர் இப்பொனைப் பெற்றுக்கொள்ள முடியும், ஒரளவு தரம் குன்றிய எறிகை, எதிரியை 25 செக்கன்களுக்குத் தரையோடு அழுத் திப் பிடித்தல் என்பன இவற்றுள் அடங்கும். இத்தகைய தரம் குன்றிய செய்கை "வரை - துரி” எனப்படும்.
எந்தப் போட்டியாளரும் ஓர் இப்பொனைப் பெறாத நிலையில் போட்டி நேரம் முடிவடையுமாயின் ஒவ்வொருவரும் சாதித்த வணிா - அyரிகளின் கூட்டுத்தொகைகளை மதிப்பீடு செய்து தீர்ப்பு வழங்கப் படும்.
மோதலைத் தவிர்க்க முயற் சித்தல், கைகளைச் சட்டவிரோத மான் முறையில் பயன்படுத்தல் போன்ற தவறுகளை ஒருவர் செய் தால் மற்றவருக்குத் தண்டப் புள்ளி
32
கள் (penalty points) வழங்கப்படும். வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் போது இத்தண்டப் புள்ளிகளும் கணக்கிலெடுக்கப்படும்.
ஜூடோப் போட்டியாளர்கள் அணியும் சீருடை ஜூடோகி' எனப் படும். இது வெண்ணிற மேலங்கி பையும் நீளக் காற்சட்டையையும் கொண்டிருக்கும். மேலங்கி நிறம் கொண்ட வாரினால் (belt) கட்டப் பட்டிருக்கும். வாரின் நிறம் போட்டி யாளரின் படித்தரத்தைக் (Rank) குறிக்கும். ஜூடோவில் ஒருவரின் நிபுணத்துவம் அதிகரிக்கும் போது அவர் அணியும் வாரின் நிறமும் மாற்றமடையும். வெள்ளை மிகக் குறைந்த படித்தரத்தையும் கறுப்பு ஆக உயர்ந்த படித்தரத்தையும் குறிக்கும். ஜூடோப் போட்டியா எார்கள் பாதணிகளையோ, காலுறை களையோ அணிவதில்லை.
ஏழு நிறைப் பிரிவுகளின் (weight classes) if s 2G Lt. "I போட்டிகள் நடாத்தப்படுகின்றன. ஆண்களுக்கான பிரிவுகள் 0ே kgக்கு கீழ் முதல் 95 kgக்கு மேல் வரையும் பெண்களுக்கான பிரிவுகள் 48kgக்குக் கீழ் முதல் 72 kgக்கு மேல் வரையும் வகுக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் நாட்டுக் கல்லீயாள ரான கானோ ஜிகோரோ என்பவரே 1880களில் ஜூடோ விளையாட்டை உருவாக்கினார். ஜூஜிட்ஸ்" என் னும் சண்டைக் கலையின் சில நுட் பங்களை ஒழுங்குபடுத்தி அதிலிருந்த சில ஆபத்தான நுட்பங்களை நீக்கிய அவர் 1883இல் ஜூடோ என்னும் புதிய விளையாட்டை அறிமுகப் படுத்தினார். அத்தோடு "கோடோக் கான்' என்ற முதலாவது ஜூடோப் பாடசாலையையும் அவர் தோக் கியோ நகரில் ஆரம்பித்தார்.
அரும்பு-22

ஜூடோவின் கட்டுப்பாட்டுச் | failulutas International Judo Federation, 1951இல் ஆரம்பிக்கப்பட்டது.
இப்போது இச்சபை தென்கொரியா வின் ஸியோல் நகரில் அமைந்திருக்
கின்றது. தோக்கியோவில் இடம் பெற்ற 1964ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின்போது ஆண்களுக்கான
ஜூடோப் போட்டிகள் ஒலிம்பிக்
நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளப் பட்டன. 1968இல் மெக்ஸிகோவில்
நடந்த ஒலிம்பிக்கில் ஜூடோ இடம் பெறாவிடினும் மீண்டும் 1972 மூனிச்
(மேற்கு ஜெர்மனி) போட்டிகளில் அது சேர்த்துக்கொள்ளப்பட்டது.
பெண்களுக்கான ஜூடோ 1968இல் ஸியோல் நகரில் இடம் பெற்ற ஒலிம்பிக்கின் போது கண் காட்சிக்குரிய விளையாட்டாக இடம்பெற்றது. ஸ்பெயினின் பார்ஸி லோனா நகரில் நிகழ்ந்த 1992 ஒலிம்பிக்கின் போது தான் முதன் முதலாக அது பதக்கம் வழங்குவதற் குரிய உத்தியோகபூர்வப் போட்டி நிகழ்ச்சியாகச் சேர்த்துக்கொள்ளப் L Illi l-ġl...
என்ன காரணம்?
தனது பல்லொன்றைக் கழற்றியதற்காகப் பல் வைத்தியர் அனுப்பியிருந்த
பில்லைக் கண்டதும் அந்தப் பெண் அதிர்ந்து போனாள்.
உடனே அந்த வைத்தியருடன் போனில் தொடர்புகொண்ட அவள் "டொக்டர்,
நீங்கள் வழமையாக அறவிடுவதை விட மூன்று மடங்கு கட்டணத்தை என்னிடம்
கேட்கிறீர்களே! இது என்ன நியாயம்?" என்று படபடப்புடன் கேட்டாள்.
"அம்மணி அன்று பல்லைக் கழற்றும் போது நீங்கள் போட்டகூச்சலையும்
அலறலையும் கேட்டு வெளியே காத்திருந்த இரண்டு நோயாளிகள் ஓடிவிட்டனர். அதனால் தான் இப்படி அறவிடவேண்டி ஆகிவிட்டது" என்று ஆறுதலாகப் பதில் கூறினார் அந்தப் பல் வைத்தியர்.
SIÚIDIGÍslóðI sJIIÍjö606ÖI
ஒரு பெண் தனது அயலவர்களையெல்லாம் ஒரு நாள் இரவு விருந்துக்காக அழைத்திருந்தாள். அவர்களும் பிள்ளை குட்டிகளோடு வந்து குழுமியிருந்தனர். ஒருவாறு விருந்து ஆரம்பமாகிய போது, முதலில் கடவுள் பிரார்த்தனையை நிகழ்த்துமாறு அந்தப் பெண்ணின் மகளை அனைவரும் வேண்டிக் கொண்டனர்.
"ஐயோ! எனக்கு எப்படிப் பிரார்த்தனை புரிவதென்று தெரியாதே' என்று தயங்கினாள் அந்த எட்டு வயதுச் சிறுமி
"பரவாயில்லை! உனது அம்மா கடவுளை வேண்டுவதைக் கேட்டிருப்பாய் தானே! அதேமாதிரி வேண்டிக் கொண்டால் போதும்" என்று தைரியம் கொடுத்தாள் அடுத்த வீட்டுக்காரி.
அதனை ஏற்றுக்கொண்ட சிறுமி தன் கைகளைக் கட்டித் தலையைத் தாழ்த் தியவாறு "கடவுளே! நான் ஏன்தான் இவர்களையெல்லாம் விருந்துக்கு அழைத் தேனோ! என்புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும்' என்றாள்.
அரும்பு- 22
33

Page 19
கம்பனி
(Eastman Kodak Company)
ஒளிப்பட (photo)கமராக்களை யும் பில்ம் சுருள்களையும் மேலும் பல ஒளிப் படத்துறை உபகரணங்களையும்
தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் ஈஸ்ட் மன் கொடெக் கம்பனி Kodak என்ற
பெயரிலேயே பிரபல்யம் அடைந்துள் ஊது கடதாசியை அடிப்படையாகக் கொண்ட ஒளிப்படப்படலங்கள்(films), முதலாவது சுருள் வடிவாக்கப்பட்ட ஒளிப்படப்படலம், முதலாவது கையடக் கமான கமரா இருட்டறை இன்றியே ஒளிப்படப் படலங்களை டெவலப் செய் யும் இயந்திரம் போன்றவற்றை உருவாக் கி உலகுக்கு வழங்கிய பெருமை இந்த கொடெக் கம்பனியையே சாரும். இதன் தலைமையகம் ஐக்கிய அமெரிக்காவின் நிவ்யோர்க் மாநிலத்திலுள்ள ரொச் செஸ்ட்டர் நகரில் அமைந்துள்ளது.
கொடெக் கம்பனியை ஜோர்ஜ் ஈஸ்ட்மன் என்பவரே ஆரம்பித்தார். ரொச்செஸ்ட்டர் நகரில் வங்கி இலிகித ராக வேலைசெய்த ஈஸ்ட்மன் 1870களின் பிற்பகுதியில் ஒளிப்படத் துறையில் ஆர் வம் காட்டலானார். அக்காலத்தில் ஒளிப் படங்கள் உலோகத் தட்டுக்களிலேயே பதியப்பட்டன. இதற்காக ஈரத்தட்டு முறை என்ற மிகவும் அசெளகரியமான ஒரு செயன்முறையே உபயோகிக்கப் பட்டு வந்தது.
ஈஸ்ட்மன் மூன்று வருடங்களுக்கு மேல் உழைத்து ஒளிப் படங்களுக்கான உலர் தட்டுச் செயன்முறையை விருத்தி செய்தார். இச்செயன்முறைக்கு பேட் டன்ற் (Patent) என்னும் ஆக்கவுரிமை யைப் பெற்றுக்கொண்ட ஈஸ்ட்மன் ஒளிப்
34
படத் தட்டுக்களை அதிக எண்ணிக்கை யில் தயாரிக்கக்கூடிய இயந்திரமொன் றையும் வடிவமைத்தார்.
1881 gav Eastman Dry Plate Company என்ற பெயரில் ஒரு வர்த்தக நிறு வனத்தை ஈஸ்ட்மன் ஆரம்பித்தார். மூன்று வருடங்களின் பின்னர் கடதாசியின் மீது ஜெலற்றின் பூசப்பட்ட புது வகையான ஒளிப்பட பில்ம் ஒன்றை அவர் அறிமுகப் படுத்தினார். சுருள்வடிவான இந்த பில்ம் அக்காலத்தைய தட்டு வகைக் கமராக் களிலும் உபயோகிக்கப்படக் கூடியதாக இருந்தது. இதனால் இப்புதிய பில்ம் விற்பனையில் அமோகவெற்றிகண்டது. எனவே 188இல் ஈஸ்ட்மன் தனது கம்ப sfilair (GL Lang Eastman Dry Plate and Film Company எனமாற்றிக்கொண்டார். 1888இல் இக்கம்பனி எளிதாக எடுத் துச் செல்லக்கூடிய கமரா ஒன்றை 25 டொலருக்கு விற்பனை செய்ய ஆரம்பித் தது. இக்கமராவில் நூறு படங்களுக்குப் போதுமான படச்சுருள் உள்ளடக்கப்பட் டிருந்தது. படங்களைப் பிடித்து முடித்த பின்னர் வாடிக்கையாளர்கள் கமராவைக் கம்பனிக்கு அனுப்ப வேண்டியிருந்தது. அங்கு படச்சுருளை டிவலப் செய்து புதிய படச்சுருள் ஒன்றைக்கமராவினுள் இட்டு வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தனர். இக்கமராவுக்கு Kodak Camera என்ற பெயரை ஈஸ்ட்மன் வைத்தார், K எழுத் தானது வலிமையும் கூர்மையும் உடை யது என ஈஸ்ட்மன் கருதினார். எனவேK யில் தொடங்கி K யில் முடியக்கூடிய
22 - پالا g5 لاوی
 

முயற்சியின் விளைவாக Kodak என்ற
சொல்லை அவர் கண்டுபிடித்தார். கொ டெக் கமராவின் சிறிய பருமன் இலகு வான உபயோகமுறை என்பன காரண மாக அது ஒளிப்படத்துறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது. அத்தோடு ஒளிப்படத் துறையை ஒரு பொழுது போக்கு வழியாகவும் அது மாற்றியமைத் திதி
சொல்லொன்றை ஆக்க அவர் எடுத்த
1889இல் ஈஸ்ட்மனும் இன்னோர் ஆய்வாளரும் இணைந்து முதலாவது ஒளிபுகவிடும் படச்சுருளைத் தயாரித் தனர். 1891இல் தோமஸ் அல்வா எடிஸன் சலனப் பட்க் கமராவை (Motion Picture Camera) தயாரிப்பதற்கு இது வழிவகுத் தது. 1892இல் கம்பனியின் பெயர் East man Kodak Company GTIGT LID Tjh)' lur" டது.1896 ஆகும்போது இக்கம்பனி உற் பத்தி செய்த கமராக்களின் எண்ணிக்கை 100,000ஐத் தாண்டியது.
1900இல் இக்கம்பனி Brownie Camera stairp புகழ்பெற்ற கமராவை அறிமுகப்படுத்தியது. ஒரு டொலருக்கு விற்கப்பட்ட இக்கமராவில் உபயோகிக் கும் படச் சுருளின் விலை 15 சதங்களாக இருந்தது. 1923இல் கொடெக்கம்பனி 16 m திரைப்படக் கமராவையும் அதற்
டும் புரொஜக்ட்டரையும் அறிமுகப்படுத் தியது.
மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராக விளங்கிய ஈஸ்ட்மன் தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதிலும் திறமை காட்டினார். அவரது வாழ்வு காலத்திற்குள் முழு ஐக்கிய அமெரிக்கா விலும் ஒளிப்படச் சாதனங்களின் உற்பத் தியில் ஏகபோக உரிமையை அவரது கம்பனி அனுபவிக்கலாயிற்று. எனினும் 1932ஆம் ஆண்டு ஜோர்ஜ் ஈஸ்ட்மன் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தின் பின்னரும் கொடெக்கம்பனி புதிய உற்பத்திகள் பலவற்றை உலகுக்கு
குரிய படச்சுருளையும் திரைப்படம் காட்
mရ ကြီး ရုရ။ எடிஸனும்
வழங்கியது. இவற்றுள் 1935இல் அறிமுக மான Kodachrome நிறப்படச் சுருள், 1951இல் சந்தைக்கு வந்த கையடக்கமான Brownie திரைப்படக் கமரா என்பன குறிப்பிடத்தக்கவை.
1963இல் கொடெக் கம்பனி Instmatic Camera 57 Giggyún Liga J &LDT FT GYMGAI அறிமுகப்படுத்தியது. இலகுவாகப் பொருத்தப்படக்கூடிய Carridge film இதில் பயன்படுத்தப்பட்டது. ஒளிப்படக் கமரா வரலாற்றிலே மிகக்கூடுதலாக விற் பனையான கமராவாக இது கருதப்படு கிறது. 1973 ஆகும்போது இக்கமராக் களின் விற்பனை 50 மில்லியனைத்
ஈஸ்ட்மனு
தாண்டி இருந்தது.
1976 g). Polaroid Corporationarcity).
கம்பனி உடனடியாக போட்டோவை வெளியே தரும் Instant Cameraவை அறி முகப்படுத்தியபோது கொடெக் கம்ப Gifuyo főGOTg Instant Camera GMG 5 LITT ரித்துச் சந்தைப்படுத்தியது. எனினும் PGlaroid கம்பனியின் Patent ஆக்க உரிமை யை மீறியதாக கொடெக் கம்பனியின் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதன் விளைவாக925 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாக வழங்கவும், Instant கமரா உற்பத்தியை உடனடியாக நிறுத்தவும், விற்கப்பட்ட அத்தனை கமராக்களையும் திருப்பிப் பெறவும் கொடெக் கம்பனி நிர்ப்பந்திக்கப்பட்டது.
1983-1993 காலப்பிரிவில் கொடெக் கம்பனி சுமார் 40,000 ஊழியர்களை
35
அரும்பு-22
:41

Page 20
வேலையிலிருந்து நீக்கியது. அத்தோடு இரசாயனப் ப்ொருட்க்ள் மருந்துகள் வீட்டுப் பாவனைப் பொருட்கள் போன் றவற்றைத் தயாரிக்கும் தனது ஏனைய வர்த்தக முயற்சிகளை வெளியாருக்கு விற் கத் தொடங்கியது. அதேவேளை ஒளிப் படத் துறையில் தனது முழுக் கவனத் தையும் அது மீளச் செலுத்தலாயிற்று. குறிப்பாக டிஜிட்டல் ஒளிப்படத் துறை பில் பெருமளவு பணத்தை அது முதலீடு செய்தது. 1992இல் Kodak நிறுவனம் தனது Photo CDSystem என்ற ஒளிப்படச் செயன்முறையை அறிமுகப்படுத்தியது.
- இப்போது அமெரிக்க ஒளிப்பட பில்ம் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கை ஜப்பானின் Fuji பில்ம் கம்பனி கைப்பற் நிக்கொண்டு விட்டது. இதனால் Kodak இன் உற்பத்தியும் வருமானமும் கணிச மான அளவு குறைந்துள்ளன. இதன் விளைவாக 1999 ஆகும் போது ஆட் குறைப்பின் காரணமாக அங்கு வேலை செய்த சுமார் 20,000 தொழிலாளர்கள் தமது தொழிலை இழக்க நேரிட்டது. இன்று Fuji கம்பனியின் உற்பத்திகளே Kodakஇற்குப் பெருஞ் சவாலாக மாறி புள்ளன.
ஏன் செய்தீர்கள்? ஞாயிற்றுக் கிழமைச் சமய வகுப்புக்கு வந்த மாணவனொருவன் அடிக்கடி மற்றவர்களைப் பார்த்துமுகத்தைக் கோணலாக்கிச்சுளித்துக்காட்டிக்கொண்டிருந்தான். இதைக் கண்ட ஆசிரியை அவனிடம் சென்று"இப்படி மற்றவர்களுக்குமுகத்தைக்
கோணலாக்கிக்காட்டுவதுகூடாது. நான் சிறுவயதில் அப்படிச்செய்தபோது இப்படி
முகத்தை அசிங்கமாக்கிச் சுளித்துக் காட்டினால் உன் முகம் அப்படியே ஆகிவிடும்!" என்று எனது ஆசிரியர்கள் எச்சரித்தார்கள்' என அன்போடு கூறினார்.
'உச்சர் உங்களை அவர்கள் எச்சரித்த பின்னரும் நீங்கள் அப்படிச் செய்திருக்கிறீர்கள்
போல் தெரிகிறதே! என்றான் சிறுவன்,
மிகவும் விருப்பமானவர்
அமெரிக்க நகரொன்றிலே உயர் மட்டத்தவர்கள் அங்கம் வகிக்கும் Club ஒன்றில் புத்தாண்டை வரவேற்பதற்கான வைபவமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கத்தவர்கள் அனைவரும் தமது மனைவிமாருடன் அங்கு சமுகமளித்திருந்தனர்.
புத்தாண்டு உதயமாகும் நேரம் வந்ததும் நிகழ்ச்சி அமைப்பாளர் எழுந்து"முதலில் அங்கத்தவர் ஒவ்வொருவரும் தமக்கு மிகவும் பிரியமுள்ளவரிடம் சென்று அவருடன் நெருங்கி நின்று கொள்ளுங்கள்" என அறிவித்தார்.
திடீரெனத் தன்னைச் சுற்றி ஏற்பட்ட நெரிசலில் Club மதுபான சாலையில் மது விநியோகிக்கும் Barman மூச்சுத் திணறிப் போய்விட்டான்.
கோரிக்கைகள்
நிவ்யோர்க் நகரின் புரூக்லின் பகுதியில் திடீரென வேலைநிறுத்தத்தில் இறங்கிய வைத்தியர்கள் தமது கோரிக்கைகளை அட்டைகளில் எழுதிப்பிடித்தவாறு "பிக்கட்டிங்
செய்யலாயினர்.
அவர்களது கோரிக்கைகள் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பிய வைத்தி யசாலை அதிகாரிகள்அட்டைகளில் எழுதப்பட்டிருந்தவற்றை வாசித்துக்கொள்வதற்கு பாமஸிஸ்ட் ஒருவரின் உதவியை நாடவேண்டியதாயிற்று.
36
அரும்பு-22

文イ சிறுகுடலின் பின் அந்தத்தில், பெருங்குடல் ஆரம்பிக்கும் இடத் தில் aேecum என்னும் குருட்டுக் குடல் காணப்படுகின்றது. இந்தக் குருட்டுக்குடலுடன் தொடர்புடைய g, T-5 appendix vermiformis stairgo) in புழு வடிடிவமுடைய குடல் வால் காணப்படுகின்றது.
குடல் வளரி எனவும் அழைக்கப் படும் இது குறிப்பிடத்தக்க உப்யோ கம் எதுவுமற்ற ஒரு பதாங்க அமைப் பாகும். ஒரு சாதாரண பென்சில் அளவுக்குத் தடிப்புடைய குடல்
mm வரை வேறுபடலாம். அத்தோடு இது வயிற்றறையில் அமைந்திருக் கும் இடமும் ஆளுக்காள் பெரு மளவு வேறுபடும். எனினும் பொது வாக வயிற்றறையின் வலப்புறத்தில் இடுப்பெலும்புக்கும் தொப்புளுக் கும் இடைநடுவில் குடல் வளரி அமைந்திருக்கும்.
குடல் வளரியில் தொற்று ஏற்
யார்களைவிடச் சிறுவர்களிலும் ளைஞர்களிலுமே அதிகம் ஏற்படு ன்றது. எனினும் எந்த வயதினரும் ந்நிலைக்கு ஆளாகக் கூடும். பாதுவாக மனிதர்களில் பத்துப் பேரில் ஒருவர்தம் ஆயுளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் குடல் வால் அழற்சி யினால் பாதிக்கப்படுவதுண்டு.
அரும்பு-22
Appendicitis
麗 (jla GITà 9IUji
வளரியின் நீளம் 50.8 mm முதல் 152:
பெரும்பாலும் இந்நிலை திடீ ரெனவே தோன்றுகிறது. வலியும் வயிற்றுத் தசையின் மிருதுத் தன்மை யுமே இந்நிலையின் ஆரம்ப அறிகுறி களாக இருக்கும், வலி விரைவில் கடுமையானதாக மாறும். பெரும் பாலானவர்களில் முதலில் இந்த வலி குடல் வளரி இருக்கும் பிரதே சத்தில் தோன்றுவதில்லை. மாறாக வயிற்றின் எல்லாப் பகுதிகளிலும் - குறிப்பாக நடுப்பகுதியிலும் மேற் பகுதியிலும் - வலி உணரப்படும். சிறிது பிந்தியே குடல் வளரிப் பிரதே சத்திற்குரியதாக அது மாறுகிறது.
தொற்று ஏற்பட்ட இழையங் களில் அரிப்புக்கள் ஏதும் ஏற்படாத வாறு கவனித்துக் கொள்வதோடு உரிய வேளையில் நுண்ணுயிர் கொல்லி (antibiotic) மருந்துகளும் வழங்கப்பட்டால் குடல் வால் அழற்சி மேலும் மோசமடையாது படிப்படியாகக் குறைந்துவிடக் கூடும்.
வயிற்றுப் போக்கைத் தூண் டக்கூடிய மருந்துகள் (laxatives) எது வும் இந்நிலையில் உட்கொள்ளப் படலாகாது. அவ்வாறு உட்கொண் டால் குடற் தொழிற்பாடு அதிக சித்து, குடல் வளரி பிளவுறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு தொற்று ஏற்பட்ட குடல் வளரி பிள வற்றால் வயிற்றறை முழுவதும் தொற்றுப் பரவி உயிருக்கே ஊறு விள்ைவிக்கக்கூடிய Peritonitis என்ற

Page 21
ஆபத்தான நோய் நிலை ஏற்பட வாம். இந்த நிலையில் சத்திரசிகிச் சை செய்வதும் பெரும் சிரமமாகி விடும்.
வலியும் வயிற்றின் குறித்த பகு தியில் மிருதுத் தன்மையும் மாத்திரம் குடல் வாலழற்சி நிலையைச் சுட்டிக் காட்டாது. எனினும் வயிற்றின் வலது புறத்தில் தொப்புளுக்குச் சிறிது கீழான மட்டத்தில் தசைகளில் மிருதுத் தன்மை, விறைப்புத்தன்மை ஆகிய இரண்டும் காணப்பட்டால் அது பெரும்பாலும் குடல் வால ழற்சி நிலையைக் குறிப்பதாக இருக் 5եւելյIT III
குடல் வாலழற்சியி ஏற்பட்டுள் ளவர்களில் இருமும் போதும், ஆழ மாக மூச்செடுக்கும் போதும் வலி மேலும் தீவிரமாகும். ஆரம்பத் திலிருந்தே காய்ச்சல் கானப் படும். அத்தோடு மலச்சிக்கல், LIF யின்மை, குமட்டல், வாந்தி என்பன ம்ெ காணப்படும். கட்டிலில் படுத்தி ருக்கும் போது வலது காலை வயிற் றை நோக்கி மடித்துக்கொள்ள நோயாளி நாடுவார்.
ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட உடனேயே வைத்திய உதவியை நாடு வது அவசியமாகும். தொற்றுக் கடு 鹭1凸山了品 இருப்பின் உடனடியாகச் சத்திரசிகிச்சை செய்ய வேண்டி ஏற் படலாம். வீணாகக் காலம் தாழ்த்து தல் மிகவும் ஆபத்தானிது என்பதை மறத்தல் கூடாது. வைத்திய உதவி கிடைக்கும் வரை நோயாளியைக் கட்டிலிலேயே வைத்திருக்க வேண் டும்.
வலியைக் குறைப்பதற்காக வலியுள்ள பிரதேசத்தின் மீது பனிக் கட்டிப் பை (ice bag) ஒன்றை வைக்க
முடியும். நோயாளிக்கு உணவுப்
பொருள் எதனையும் உட்கொள்ளக் கொடுத்தல் ஆகாது. அத்தோடு வயிற்றுப் போக்கை ஏற்படுத்துவதற் கான மருந்துகளோ, சிகிச்சைகளோ வழங்கப்படுதல் கூடாது.
குருதிக் கலங்களின் எண்ணிக் கையைச் சோதித்தறிதல் (blood - count) போன்ற பல்வேறு சோதனை கள் மூலம் ன் வத்தியர்கள் குடல் வாலழற்சியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். ப
ஆறுதல் கணவன்! நீ சமையலறையில் வேலை செய்யும் போதெல்லாம் எனது போட்டோவை உனக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டிருக்
கிறாயே, ஏன்?
மனைவி. எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது உங்களுடைய போட்டோவை எடுத்துப் பார்ப்பேன். அது எவ்வளவு பெரிய
| NU jšfigy) s TL TJ இ
விடும்.
குந்தாலும் உடனே மன ஆறுதல் கிடைத்து
கணவன் என்னிடம் ஓர் அற்புத ஆற்றலும் சக்தியும் இருப்பதை இப்போ
தாவது உணர்ந்து கொண்டிருக்கிறாயே, அது போதும்!
மனைவி. ஆம் நான் உங்கள் போட்டோவைப் பார்க்கும்போது 'எந்தப் பிரச்சினையும் இந்த மனுஷனை விடப் பெரியதாகவா இருக்கப் போகின்றது' என நினைத்து மனம் ஆறதலடைந்து விடுகின்றது.
38
அரும்பு-22

முதலாவது அணுகுண்டைத் தயாரிப்பதில் முன்னோடிகளாகப் பல விஞ்ஞானிகள் பணிபுரிந்தனர். இவர்களுள், முதன் முதலாகக் கட் டுப்படுத்திய கருத்தாக்கமொன்றை நிகழ்த்துவதில் வெற்றியீட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ Griff (Enrico Fermi). GTaiy Ly Gu5in முதலாவது அணுகுண்டுத் தயாரிப்புச் செயற்திட்டத்தை நெறிப்படுத்திய அமெரிக்கரான ரொபர்ட் ஒப்பன் sing Didi (Robert Oppenheimer) என்பவரும் முக்கியமானவர்கள்.
என்ரிகோ பெர்மி
GT3 FK33, IT (NL) i f7 9.CJ (NAF 'N LLIW பர் 29ம் திகதி ரோம் நகரில் பிறந்தார். цѓауuт பல்கலைக்கழகத்திலும் ஐரோப்பாவிலிருந்த புகழ்பெற்ற பெளதிகவியல் மையங்களிலும் உயர் கல்வியைப் பெற்ற இவர் 1926இல் ராம் பல்கலைக்கழகத்தில் கொள் கைசார் பெளதிகவியல் துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
அங்கு அவர், இலத்திரன்களின் நடத்தையை விளக்குவதற்கு ஏற்ற புதுவகையான புள்ளிவிபர முறை பொன்றை விருத்தி செய்தார். 193இன் பின்னர் அவர் மூலகங்களை நியூத்திரன்களால் மோதியடிக்கும் போது உருவாகும் செயற்கைக் கதிர்த் அரும்பு-22
அணுகுண்டுத் தயாரி ଐଶୀ
முன்னோடிகள் :
தொழிற்பாடு பற்றி ஆய்வுகளை மேற்கொண்ட்ார். இதற்காக அவ ருக்கு 1938ம் ஆண்டின் பெளதிகத் துக்கான நோபல் பரிசு வழங்கப்பட் டத்.
பெர்மியின் மனைவி பூதராக இருந்த காரணத்தால் இத்தாலியின் அன்றைய பாஸியை ஆட்சியாளர் களின் அட்டூழியங்களுக்குப் பயந்து பெர்மியும் குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினர். அங்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெளதிகவியற் பேராசிரியராக அவர் நியமிக்கப்பட்டார்.
அணுசக்தியைப் பிறப்பிப்பது தொடர்பான தனது பரிசோதனை களின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெர்மி அவற்றின் மீது தொடர்ந்து கவனம் செலுத்தலானார். இதன் விளைவாக 1942 டிசம்பரில் கட்டுப் படுத்தப்பட்ட கருப்பிளவுச்சங்கிலித் தாக்கமொன்றை முதன்முதலாக நிகழ்த்தி அவர் சாதனை படைத்தார். இந்நிகழ்வு சிகாகோ பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.
அது முதல் இரண்டாம் உலகப் போரின் முடிவு வரை அணுகுண்டுத் தயாரிப்புச் செயற்றிட்டத்தில் அவர் பிரதான பங்குகொண்டு செயலாற்
றினார். இம்முயற்சி நிவ் மெக்ஸி
கோ மாநிலத்திலுள்ள Los Alamps 39

Page 22
என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட் டது. பிற்காலத்தில் ஐதரசன் குண் டைத் தயாரிப்பதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகளை பெர்மி எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போரின் பின்னர் 1946இல் சிகா கோ பல்கலைக்கழகத்திலே அமைக் I, "LL"L.Institute of Nuclear Still dies என்னும் கருக்கற்கை நிறுவனத்தின் பணிப்பாளராகவும் அப்பல்கலைக் கழகத்தின் பெளதிகவியற் பேரா சிரியராகவும் பெர்மி கடமையாற் றினார். அவரிடம் கற்பதற்காக உல கின் பல பகுதிகளிலிருந்தும் மான வர்கள் சிகாகோவுக்கு வரலாயினர். எனினும் புற்றுநோய் காரணமாக அவர் 1954 நவம்பர் 28ம் திகதி தனது 53வது வயதில் சிகாகோவிலே கால பானார்.
அவரது நினைவாக, நூறாவது இரசாயன pallis, Fermium (Frn) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அத் தோடு கருப் பெளதிகவியலில் நீளத் தை அளக்கப் பயன்படும் அலகு (ermi என அழைக்கப்படுகின்றது. இது 10' mேக்குச் சமனாகும். பெர் மியினால் அறிமுகப்படுத்தப்பட்ட உப அணுத் துணிக்கைகள் தொடர் Lutgat laitgila7lugailugi Fermi-Dirac Statistics எனஅழைக்கப்படுகின்றது. இப்புள்ளிவிபரவியலுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் மூலகத் துணிக் கைகள் termions எனப் பெயரிடப் பட்டுள்ளன.
அணு சக்தியின் விருத்திக்கு அல் லது பயன்பாட்டுக்கு அல்லது கட்டுப் பாட்டுக்கு அதிகளவு பங்களிப்புச் செய்த ஒருவருக்கு இவரது நினை வாக என்ரிகோ பெர்மி விருது (Enrico Fermi Award), G (5Lsi தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
4()
ரொபர்ட் ஒப்பன்ஹைமர்
ஒப்பன்ஹைமர் 1904 ஏப்ரல் 22ம் திகதி நிவ்யோர்க் மாநகரிலே பிறந் தார். ஹாவார்ட் பல்கலைக்கழகத் திலும் பின்னர் கேம்பிரிஜ் மற்றும் கொட்டிங்கன்’பல்கலைக்கழகங்களி லும் உயர்கல்வி பெற்ற அவர் 192829ம் ஆண்டுகளில் சர்வதேச கல்விச் சபையில் பணியாற்றினார். பின்னர் கலிபோர்னியா பல்கலைக் கழகத் திலும் கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்திலும் அவர் பெளதி கவியற் பேராசிரியராக நியமிக்கப் பட்டார். அங்கு அவர் கொள்கை ரீதி யான பௌதிகவியல் கல்வித் துறை யைப் பெரிதும் விருத்தி செய்தார்.
சக்திச் சொட்டுக் கொள்கை (quantum theory), சார்புக் கொள்கை (Theory of Telativity), s git Li 3,5)i கள் பொசித்திரன்கள், நியூத்திரன் g) Elija; sir (Neutron Stars) 5 7 săTIL GIT பற்றிய ஆய்வுகளில் ஒப்பன்ஹை மரின் பங்களிப்பு அளப்பரியதாகும். 1943 - 5 காலப் பிரிவில் நிவ் மெக்ஸிகோவில் உள்ள Las Alamps இல் மேற்கொள்ளப்பட்ட அணு குண்டுச் செயற் திட்டத்தின் பணிப் பாளராக அவர் கடமையாற்றினார். அவரது தலைமைத்துவத்திறன்களும் நிர்வாக ஆற்றலும் 1946இல் ஜனா திபதி விருதொன்றைப் பெற்றுக் கொடுத்தன.
1947இல் நிவ் ஜெர்ஸி மாநிலத் திலுள்ள பிரின்ஸ்டன் நகரில் அமைந் துள்ள உயர் கற்கை நிறுவனத்தின் பனிப்பாளராக நியமிக்கப்பட்ட ஒப் பன்ஹைமர் 1986 வரை அப்பதவியை வகித்தார்.அதேவேளைஐக்கிய நாடு கள் சபையின் அணுசக்திக் கமிஷனின் பொது ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் பின்னர் அதன் ஆலோசகராகவும் 1954 வரை கடமை யாற்றினார்.
22 - پا ظاقهلاكي

எனினும் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட் டின் பேரில் 1954ம் ஆண்டு அவரது இப்பணி இடைநிறுத்தி வைக்கப் பட்டது. ஐதரசன் குண்டு உருவாக் கப்படுவதை அவர் எதிர்த்ததனால் அவர்மீது ஆத்திரம் கொண்ட சில அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இக்குற்றச்சாட்டைச் சுமத்தியிருக் கலாம் எனக் கருதப்பட்டது.
பிற்காலத்தில் அவரை குற்ற மற்றவராக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வகை
யில் அணுசக்திக் கமிஷனும் 1963இல் தனது உயர் விருதான் என்ரிகேள் பெர்மி விருதை அவருக்கு வழங்கிக் கெளரவித்தது. ஒப்பன்ஹைமர் தமது அந்திமக் காலத்தை விஞ்ஞானத் துக்கும் சமூகத்துக்கும் இடை யிலுள்ள தொடர்பு பற்றி ஆராய் வதில் கழித்தார். அவர் 1967 பெப் ரவரி 18ம் திகதி பிரின்ஸ்டனில் கா மானார். அவர் எழுதிய நூல்களில் Science and Common Understanding, 'Lectures on Electrodynamics' என்பன முக்கியமானவை. ப
நிபுணர் ஒருவர்.
நாம் உட்கொள்ளும் எண்ணெய்ப்
தொல்லை தரும் உணவு
பல்வேறு உணவு வகைகளை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய தொல்லை களையும் தீய விளைவுகளையும் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் போசணை
பொ ருட்கள் குருதிக் குழாய்களையும்
இதயத்தையும் பாதித்து எம்மை நிரந்தர நோயாளிகளாக்குகின்றன. இனிப்புப் பண்டங்கள் உடலைப் பருக்கச்செய்து நீரிழிவை உண்டாக்குகின்றன. மரக்கறி வகைகள் கூட பலவிதமான இரசாயன நச்சுப் பொருட்களை உடலுக்குள் செலுத்தி ஒன்று செய்கின்றன.” என்று விவரமாக விளக்கிச் சென்ற அவர், "ஒரு தடவை உட்கொண்ட பின் நீண்ட காலத்துக்குத் தொல்லை தந்து எமது வாழ்க்கையை நிம்மதியற்றதாக மாற்றக்கூடிய உணவுகளும் இருக்கின்றன. அப்படியான உணவொன்றை யாருக்காவது குறிப்பிடமுடியுமா?" என்று சபையோரைப் பார்த்துக் கேட்டார்.
சுமார் 75 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் எழுந்து நின்று "Wedding Cake" என்று பதிலளித்தார்.
அநியாயக்காரன்
ஒரு வழக்கறிஞர் பாதையோரத்தில் நிறுத்தியிருந்த தமது புத்தம் புதுக் காரில் ஏறுவதற்காகக் கதவைத்திறந்தபோது விரைவாக வந்த லொறியொன்று காரில் மோதி அதன் கதவைக் கழற்றிச்சென்றது.
"ஐயோ! 60 இலட்சம் ரூபா பெறுமதியான எனது BMW காரை நாசமாக்கி விட்டானே அநியாயக்காரன். அவனை நான் சும்மா விடமாட்டேன்!" எனக் கத்தலானார்.அவ்வழக்கறிஞர்.
அப்போது அவ்விடத்துக்கு வந்த ஒரு போலீஸ்காரர் வழக்கறிஞரைப் பார்த்து, "ஐயா! ஏன் வீணாக உங்கள் காரைப்பற்றிக் கதறுகிறீர்கள். நீங்கள் கவனிக்கவில்லையா? உங்கள் இடதுகையையும் அல்லவா அந்த லொறிகழற்றிச்சென்றுள்ளது" என்றார்.
அதைக் கேட்டதும் "ஐயோ! 50 ஆயிரம் ரூபா பெறுமதியான எனது Rolex கடிகாரத்தையும் கொண்டுபோய்விட்டானே பாவி'எனஅலறத் தொடங்கினார்.அந்த வழக்கறிஞர். அரும்பு-22 41

Page 23
(سمیہ جین)
ப்பானிய அரச வம்சத்தி னரும் உயர் குடியினரும் வைபவ ரீதி யாகத் தம் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமே ஹரா - கிரி எனப்படுகின்றது. ஜப்பா னிய மொழியில் ஹரா - கிரி என் பதன் பொருள் வயிற்றைக் கிழித்தல் என்பதாகும். உயர் குடும்பத்தவர் களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப் பட்டிருந்த இவ்வழக்கத்தைப் பிற் காலத்தில் சாதாரண தர மக்களும் கைக்கொள்ளலாயினர். இப்போது, சுய கெளரவத்துக்காகச் செய்யப் படும் எந்தவொரு தற்கொலையை யும் குறிப்பதற்கு இச்சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது.
நிலப் பிரபுத்துவ முறைச் சமூக அமைப்பிருந்த முற்கால ஜப்பா னிலே வாழ்ந்த உயர்குடிப் போர் வீரர்கள் 'ஸ்முராய்"கள் என அழைக் கப்பட்டனர். இவர்கள் தாம் எதிரி களின் கைகளில் சிக்கும் அவமானத் தைத் தவிர்ப்பதற்காக ஹரா - கிரி யைப் பயன்படுத்தினர். பிற்காலத் தில் மரணதண்டனை வழங்கும் ஒரு முறையாக அது மாறியது.
அரச குடும்பத்தின் நலனைப் பேணுவதற்காக உயர் குடியினர் ஒருவர் கொல்லப்பட வேண்டும் எனச்சக்கரவர்த்தி நினைத்தால் அவர் அது பற்றி எழுத்துமூலம் குறிப்பிட்ட நபருக்கு அறிவிப்பார். அரசரின் அறிவிப்புக் கிடைத்ததும் அந்த நபர் வைபவ ரீதியாக ஹரா - கிரியைச் செய்துகொள்வார். - 42
Drir-lif
(Hara - Kiri)
மேற்குறித்தவாறு அரக் ஆணைப்படி ஹரா - கிரி இடம் பெறும் சந்தர்ப்பங்களில் அரசரின் செய்தியோடு அலங்கரிக்கப்பட்ட குத்துவாள் ஒன்றும் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும். ஹரா - கிரி வைபவத்துக்குத் தயாராவதற்காக அவருக்குச் சில நாட்கள் அவகாசம் வழங்கப்படும். வைபவத்துக்காக செங்கம்பளம் விரித்த மேடை பொன்று அவரது இல்லத்தில் அல் லது அருகிலுள்ள ஆலயத்தில் ஏற் பாடு செய்யப்படும்.
குறித்த தினத்தன்று அவர் வைபவ ரீதியான ஆடைகளை அணிந்துகொண்டு நண்பர்களும் அரச அதிகாரிகளும் புடைசூழ மேடைக்கு ஏறுவார். பின்னர் முழங் கால்களில் நின்றவாறு சிரம் தாழ்த் திக் கடவுளை வழிபடுவார். அதன் பின்னர் அரச பிரதிநிதியிடமிருந்து குத்துவாளைப் பெற்றுக்கொண்டு, தான் செய்த குற்றத்தைப் பகிரங் கமாக ஒப்புக்கொள்வார். அடுத்து தமது ஆடையை இடுப்புவரை விலக்கும் அவர் குத்துவாளைத் தனது வயிற்றின் இடப்புறத்தில் குத்தி அதனை மெதுவாக வலப்புறம் வரை இழுத்து வயிற்றின் உள்ளுறுப்புக்கள் வெளியே வரும் வண்ணம் ஆழமான வெட்டொன்றை வயிற்றில் ஏற்படுத் திக் கொள்வார். இறுதிக் கட்டத்தில் அவரது நண்பர் அல்லது உறவினர் ஒருவர் வாளினால் அவருடைய தலையை வேறாக்கி விடுவார். இரத் தம் தோய்ந்த குத்துவாளைப் பாரம்
அரும்பு-22
 
 

பரிய முறையில் சக்கரவர்த்திக்கு அனுப்பி வைப்பதன் மூலம் குறித்த நபர் ஹரா - கிரிமூலம் கொல்லப்பட் டார் என்பது அறிவிக்கப்படும்.
குற்றம் புரிந்த உயர் குடியினர் ஹரா-கிரிக்கான அரச ஆனைவரும் முன்னரே தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு தானே ஹரா - கிரி செய்து கொள்வதும் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த நபரின் கெளரவம் பேணப்படுவதோடு அவரது சொத்துக்கள் யாவும் அவரது குடும்பத்தினருக்கே உரித்தாகும். மாறாக அரச ஆணைப்படி ஹரா - கிரி இடம்பெற்றால் கொல்லப்பட் ட்வரின் சொத்தில் பாதி அரசுடை மையாக மாறிவிடும்.
மேற்குறித்த ஹரா - கிரி மரண தண்டனை முறை 1868ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டது. எனினும் தமது மதிப்புக்குரிய ஒருவர் இறந்துவிட் டால் அவருக்குத் தமது அர்ப்பணிப்
பைக் காட்டும் முகமாகவும், அரசாங் கத்தின் ஏதேனும் நடவடிக்கைக்கோ கொள்கைக்கோ எதிர்ப்புத் தெரிவிக் கும் முகமாகவும் ஹரா - கிரியில் ஈடு படும் வழக்கம் தொடர்ந்து இடம் பெறலாயிற்று.
ஜப்பானிலே வருடந்தோறும் 1500க்கும் மேற்பட்டோர் ஹரா - கிரி மூலம் மரணத்தைத் தழுவி வந்துள் ளனர். இரண்டாம் உலகப் போர் உட் படி அண்மைக் காலப் போர்களின் போதும் தோல்வியிலிருந்து அல்லது எதிரியிடம் பிடிபடுவதிலிருந்து தப்புவதற்காக ஜப்பானியப் போர் வீரர்கள் பலர் ஹரா - கிரி செய்து கொண்டனர்.
தற்காலத்தில் சுயமாகத் தற் கொலை செய்வோர் ஹரா - கிரி யைப் பயன்படுத்தும் நிகழ்வுகள் மிக மிக அரிதாகவே இடம்பெறுகின் றன. ப
வைத்திருந்தேன்."
நிச்சயமாக! -
கொலை வழக்கொன்றின் போது பிரதிவாதி வழக்கறிஞர், பிரேத பரிசோதனை நடத்திய வைத்தியரைக் குறுக்கு விசாரணை செய்துகொண்டிருந்தார்.
"பிரேத பரிசோதனை செய்ய முன்னர் அந்த ஆளின் நாடித்துடிப்பைச்சோதித்துப் பார்த்தீரா?" என்று வைத்தியரைப் பார்த்துக் கேட்டார் வழக்கறிஞர்.
"இல்லை' என்ற பதில் வந்தது வைத்தியரிடமிருந்து. "அவனது குருதி அமுக்கத்தையாவது அளந்து பார்த்தீரா?" என்று கேட்கப் பட்டபோது அதற்கும் "இல்லை" என்றார்வைத்தியர்
"அப்படியானால் நீர் பிரேத பரிசோதனை நடத்தியபோது அந்த ஆள் உயிரோடு இருந்திருக்கலாம் அல்லவா?" என்று கேட்டார் வழக்கறிஞர்
"நிச்சயமாக உயிரோடு இருந்திருக்க முடியாது. ஏனெனில் அவனது மூளை வெளியே வந்திருந்ததால் அதனை ஒரு சாடியில் இட்டு எனது மேசையின் மீது
"அந்தநிலையிலும் அவன் உயிரோடிருந்திருக்கலாம் தானே?'விடாப்பிடியாகக்
Gad"LLIT வழக்கறிஞர்.
"நிச்சயமாக அந்த நிலையில் அவன் உயிரோடிருந்தால் எங்காவது நீதிமன்றத்தில் யாரையாவது இப்படிக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக்கக் கூடும்" என்றார்
வைத்தியர் எரிச்சல்ோடு, அரும்பு-22
43

Page 24
ல்லி அல்லது பழைய டில்லி
(Old Delhi) என்று அழைக்கப்படும் நகர் வட இந்தியாவிலுள்ள டில்லி யூனியன் பிரதேசம்' என்னும் ஆட்சிப் பிரதேசத்தின் தலைநகராக விளங்கு கின்றது. கங்கை நதியின் கிள்ை யொன்றான யமுனை நதியின் கரை பிலே அமைந்துள்ள இந்நகரின் தெற்கு எல்லையில் இந்தியாவின் தேசியத் தலைநகரான புது டில்லி (New Delhi) அமைந்திருக்கிறது.
1638இல் நிர்மானிக்கப்பட்ட உயர்ந்த கற்சுவரொன்றினால் சூழப் பட்டுள்ள டில்லி நகரை அடை வதற்கு வளைவான நுழைவாயில் கள் ஏழு உள்ளன. இவற்றுள் தெற் கிலுள்ள டில்லி வாயில், கிழக் கிலுள்ள அஜ்மீர் வாயில், வடக் கிலுள்ள காஷ்மீர் வாயில் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.
உயர்ந்த சுவரின் உட்புறத்திலே நெருக்கமான வீதிகளும், குறுந் தெருக்களும், கடைத் தெருக்களும் வலைப் பின்னல் போல் காணப்படு கின்றன. அத்தோடு இந்தியாவின் இந்து-முஸ்லிம் கட்ட்ட் நிர்மாணக் கலையைப் பிரதிபலிக்கும் அழகான கட்டடங்கள் சிலவும் அங்குள்ளன. உலகின் மிகவும் ஆடம்பரமான தெரு வாக ஒரு காலத்தில் கருதப்பட்ட வெள்ளித் தெரு’ என்ற வீதியே, டில்லியின் பிரதான வர்த்தக மைய மாகத் திகழ்கின்றது. 44
டில்லியும்
செங்கோட்டையும்
இன்றைய டில்லி பிரதான போக்குவரத்து, மற்றும் கைத் தொழில் மையமொன்றாகவும் விளங்குகின்றது. அங்கு உற்பத்தி யாகும் பொருட்களில் இலக்ட்ரோ னிக் மற்றும் மின் உபகரணங்கள், துணி வகைகள், ஆபரணங்கள், இர சாயனப் பொருட்கள், நுண் கருவி கள் மோட்டார் வாகன உதிரிப் LJ Tá#, #. #, GīT - G 7 GirLJ GAST அடங்குகின்றன. 1922இல் ஆரம்பிக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழகமும் இந்நகரில்தான் அமைந்துள்ளது.
இன்றைய டில்லி நகர் இருக் கும் பகுதியில் முன்னைய ஆட்சியா ளர்கள் இதே பெயரில் பல நகர் களைக் காலத்துக்குக் காலம் நிறுவி யுள்ளனர். முதலில் பிரிதிவிராஜ் என்ற மன்னரே கி. வ. 12ம் நூற்றாண் டில் டில்லி என்ற பெயரில் நகரொன் றை நிர்மாணித்திருந்தார். 193இல் அது முஸ்லிம்களால் கைப்பற்றப்பட் டது. டில்லியிலுள்ள குதுப் மினார் என்னும் கோபுரத்தைக் கட்டிய குதுபுத்தீன் ஐபாக் என்ற மன்னர் இந்தியாவில் முஸ்லிம் பேரரசின் தலைநகராக டில்லியை மாற்றினார்.
14ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் துருக்கியரான தமர்லேன் என்பவர் டில்லியைக் கைப்பற்றிய போது அது அழிவுக்குள்ளாகியது. இந்தியாவின் முதலாவது முகலா யப் பேரரசரான பாபர் 1528இல் மீண்டும் டில்லியைத் தலைநகராக மாற்றினார். அவரது மகன் ஹூமா யூன் அங்கு புதிய நகரொன்றை நிர்மானித்தார். 1540இல் டில்லி 22 - اپالاژی لاوی
 
 

யைக் கைப்பற்றிய ஆப்கானியர்கள் அதனை அழித்து விட்டனர்.
ஒற இமாயுனின் மகன் அக்பர் மீண்டும் டில்லியைக் கைப்பற்றிய போதிலும் ஆக்ராவையே தமது தலைநகராக்கினார். இதனால் டில்லி நகர் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு சிதைவுறத் தொடங்கியது. அக்பரின் பேரனான ஷாஜஹான் என்பவரே 1638இல் இன்றைய டில்லி நகரை நிர்மாணித்து அதனைத் தமது சாம் ராஜ்யத்தின் தலைநகராக்கினார். 1739 வரை முகலாயர்களின் தலைநகராக டில்லி விளங்கியது.
1739இல் பாரசீக ஆட்சியாள ரான நாதிர் ஷா டில்லியைக் கைப் பற்றியதோடு அதன் அருஞ் செல்வங் களையெல்லாம் சூறையாடினார். அங்கிருந்த புகழ்பெற்ற மயிலா சனமும் அப்போதுதான் பாரசீகத் துக்குக் கொண்டு செல்லப்பட்டது. 1771இல் மராத்தியர்கள் டில்லியைக் கைப்பற்றிக் கொண்டனர். (
1803இல் பிரிட்டிஷ் படையினர் டில்லியைக் கைப்பற்றிக்கொள்ளும் வரை மராத்தியர்களின் ஆட்சி நீடித் தது. பிரிட்டிஷ் இந்தியாவின் தற் காலிகத் தலைநகராக 1912 முதல் 1931 வரைடில்லி திகழ்ந்தது. 1931இல் புது டில்லி இந்தியாவின் தலைநகராகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று மும்பாய், கொல்கட்டா ஆகிய நகர் களுக்கு அடுத்ததாக இந்தியாவின் மூன்றாவது பெரிய நகராக டில்லி திகழ்கின்றது.
டில்லியின் பிரதான அடையா ளச் சின்னமாக அங்குள்ள ஜாமா
மஸ்ஜித் என்னும் பெரிய பள்ளி வாயல் விளங்குகின்றது. அதன் உயர மான மினராக்களும் குமிழ் வடி வான குவி மாடங்களும் நகரின் வானெல்லையை அழகுபடுத்துகின் றன. இப்பள்ளிவாசலுக்கு அண்மை யில் சிவப்பு நிற மணற் கல்வினால் கட்டப்பட்ட செங்கோட்டை கானப் படுகின்றது. மன்னர் ஷாஜஹானின் அரண்மனையான இதன் கட்டட வேலைகள் 1639இல் ஆரம்பிக்கப் பட்டு 1648இல் பூர்த்தியடைந்தன.
செங்கோட்டையைச் சுற்றிவரப் பிரமாண்டமான பாதுகாப்புச் சுவ ரொன்று உண்டு. 2.5 km நீளமும் 33 m (110 அடி) வரையான உயரமும் கொண்ட இச்சுவரில் இரண்டு பெரிய வாயில்கள் உள்ளன. லா ஹ"ஆர் வாயில், டில்லி வாயில் என இவை பெயரிடப்பட்டுள்ளன. சுவ ரின் உட்புறத்தில் பல மாளிகைகளும் மண்டபங்களும் காணப்படுகின்றன. 1859இல் கட்டப்பட்ட முத்துப் பள்ளி வாசலும் அங்கேதான் இருக்கின்றது. இக்கட்டடங்கள் அனைத்தினதும் முகப்புப் பகுதிகள் வெண் சலவைக் கல்லினால் செய்யப்பட்டுள்ளன.
டில்லிக்குச் சற்று வெளியே அமைந்துள்ள வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த இடங்களுள் 3. நூற்றாண்டில் கட்டப்பட்ட குதுப் மினார், 16ம் நூற்றாண்டுக்குரிய ஹல்மா யூன் அரசரின் கல்லறை, மகாத்மா காந்தியின் பூதவுடல் தக னம் செய்யப்பட்ட இடமான "ராஜ் காத்' என்பன குறிப்பிடத்தக்கவை.
மூளைக்கு வேலை (விடைகள்)
(1) 11m (5) 1
(2) 27
(3) 7 (4) 28, 14
(6) 95.67 + 1085 = 10652 . (7) 31
45
அரும்பு-22

Page 25
ஆர்தர் ஸி. கிளார்க்
(Sir Arthur C. Clarke)
ங்கிலேய எழுத்தாளரான ஆர் gir Gi. Got Tili (Arthur Charles Clarke), தனது விஞ்ஞானப் புனைகதைகள் மூலம் மிகச்சிறந்த விஞ்ஞானக்கருத்துப் படிவங் களை முன்வைத்தவராவார். செய்மதி களைப் பயன்படுத்தித் தொலைத்தொடர் புகளை மேற்கொள்வது பற்றி அவர் முன் வைத்த கருத்துக்கள் அவரது ஆயுட்காலத் திலேயே நடைமுறைச் சாத்தியமாகி தொலைத்தொடர்புத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக் கதாகும,
ஆர்தர் ஸீ கிளார்க் இங்கிலாந் ggyi at Somerset syG, rigs Minehead என்ற ஊரிலே 1917 டிசம்பர் 16ம் திகதி பிறந்தார். சிறு வயதிலிருந்தே விஞ்ஞா னத்தில் ஆர்வம் காட்டிய அவர், இளை ஞனாக இருக்கும் போது தான்ே தயா ரித்துக் கொண்ட தொலைகாட்டியொன் றைப் பயன்படுத்திச் சந்திரனின் தரைத் தோற்றப் படமொன்றைத் தயாரித்தார். உயர்கல்வி பெறுவதற்குப் போதிய பண வசதி இல்லாமையால் அவர் 1936 முதல் 1941 வரை அரசாங்கக் கணக்காய்வாளர் ஒருவராக வேலை செய்தார். அக்காலத் Saisyli British Interplanetary Society என்ற உயர்மட்ட விண்வெளிக்கழகத்தில் அங்கத்தவரானார்.
1941 முதல் 1946 வரைகிளார்க், பிரித் தானிய அரச விமானப் படையில் சேர்ந்து 'ரேடார் உபகரணங்கள் பற்றிய போத னாசிரியராகவும் தொழில்நுட்பவியலா ளராகவும் கடமையாற்றினார். விமானப் படையில் பணியாற்றும் போதே அவர் தனது முதலாவது விஞ்ஞானப் புனை கதைகளை எழுதலானார். 1945இல் "Wireless World" Tsirp Tšolonio Extra-Terrestrial Relays (, s).Jig Gaugi Gu 45
/&
அமைந்த அஞ்சல் நிலையங்கள்) என்ற தலைப்புடைய கட்டுரையொன்றை அவர் எழுதினார். வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சமிக்ஞைகளை உல கம் முழுவதும் பரப்புவதற்கு செய்மதி களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை கிளார்க் மிகத் தெளி வாக அக்கட்டுரையில் விளக்கியிருந்தார். அவரது ஆலோசனைகளை அக் கால அறிஞர்கள்கூட சந்தேகத்துடனேயே நோக்கலாயினர். எனினும் இருபது வருடங்களுக்குப் பின்"Early Bird' என்ற வகைத் தொல்ைத் தொடர்புச் செய்மதி களை அமெரிக்கா விண்வெளியில் நிலை நிறுத்தியபோது ஆர்தர் ஸி. கிளார்க்கின் தீர்க்கதரிசனம் எவ்வளவு உண்மையானது என்பதை உலகம் அறிந்து கொண்டது. இதனால்தான் தொலைத்தொடர்புச் செய்மதிகள் பற்றிய எண்ணக் கருவின் மூலகர்த்தாவாக அவர் இன்றும் மதிக் கப்படுகின்றார்.
இந்தியாவில் முதன் முதலாக தூர் தர்ஷன் தொலைக்காட்சிச்சேவை ஆரம் பிக்கப்பட்டபோது அதனைச் செய்மதி யினூடாகக் கண்டுகளிக்க உதவும் தட்டு 'அன்றென்னா ஒன்றையும் தொலைக் காட்சிப் பெட்டியொன்றையும் இந்திய அரசு ஆர்தர்ஸி கிளார்க்குக்கு அன்பளிப் பாக வழங்கியது. கிளார்க்கின் கொழும் பு, பார்ண்ஸ் பிளேஸிலுள்ள வீட்டில் பொருத்தப்பட்ட அத்தொலைக் காட்சி யினூடாக துர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப்
22 - پلاژی لاوی
 
 

பார்த்து ரசிக்க இலங்கையின் பல பாகங்
விஜயம் செய்தனர்.அக்காலத்தில் இலங் கையில் TWஅறிமுகப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரண்டாம் உலகப் போர் முடி வுற்ற பின்னர் லண்டன் கிங்ஸ் கல்லுர ரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டி கிளார்க் தனது 41வது வயதில் BS பட்ட
மொன்றைப் பெற்றுக்கொண்டார்.அவர்
பெளதிகவியலிலும், கணிதத்திலும் சிறப் புச் சித்தி பெற்றார் என்பதும் கவனிக்கத் தக்கது. அதன் பின்னர் விஞ்ஞானப் புனைகதைகளை அவர் அதிகமதிகமாக எழுதலானார்.
அவர் எழுதிய நாவல்களுள் Earth light (1955), A fall of Moondust (1961), The Fountains of Paradise (1979) gigi LJ37 குறிப்பிடத்தக்கவை. அவரது கட்டுரை மற்றும் விரிவுரைத் தொகுப்புக்களுள் Woices from the Sky (1965). The Wiew from Serendip (1977), Ascent to Orbit: A Scientific Autobiography (1984). Astounding Days: A Science Fictional AutobiogTaphy (1989) என்பவை முக்கியமான வை.
1950களில் கடற் கீழ் ஆராய்ச்சியில் நாட்டம் கொண்ட கிளார்க் இலங்கை யில் குடியேறி இங்கு ஒரு கெளரவப் பிரஜையாக மாறினார். இலங்கையிலே கடலுக்கடியிலுள்ள பவளப் பாறைகள் பற்றி ஆய்வுகள் நடாத்திய அவர் தனது முயற்சிகள் பற்றிப் பல நூல்களை எழுதி னார். இவற்றுள் முதலாவது நூல் The Coast of Coral (1956) stairp (Luigi
வளிவந்தது.
ரதியொன்றின் விலைருபா40= '
களிலிருந்தும் மக்கள் அவரது வீட்டுக்கு
அரும்பு முன்ை எமது கைவசம் மேலதிகப் பிரதிகள் இல்லாத முன்னைய அரும்பு இத (ELITGLIT (STSlaisines, Palm Leaf Book Shop, Palm Leaf Hotel, 21111, Olcott MaWatha, Colomb0-11 என்ற முகவரியில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
1960களில் திரைப்பட இயக்குன TT al Stanley Kubrick argi Linii, git இணைந்து 2001-Space Odyssey என்ற பெயரில் திரைப்படமொன்றைத் தயா ரித்து வெளியிட்டார். 1968இல் வெளி யான இத்திரைப்படம்சக்லரதும் பாராட் டைப் பெற்றுக்கொண்டது. கிளார்க் 1951ல் எழுதிய The Sentiel என்ற சிறு கதையை அடிப்படையாகக் கொண்டே இது படமாக்கப்பட்டது. 1988இல் இது விரிவாக்கப்பட்டு 2001-ASpace 0lysSEy என்ற பெயரில் நாவலாகவும் வெளி வந்தது.
இந்நாவலின் அடுத்த தொடரான "2010 - Odyssey Two (1982) gang படமாக்கப்பட்டு 1984இல் வெளிவந்தது. giGst List 2061 : Odyssey Three (1987), 3001: The Final Odyssey (1997) ஆகிய நாவல்கள் பின்னர் வெளிவந்தன.
பிற்காலத்தில் ஆர்தர் ஸீ கிளார்க் அவர்கள் மொரட்டுவை பல்கலைக்கழ கத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார். இன்றும் தொடர்ந்து அவர் இப்பதவியை வகித்துவருகிறார்.அவரது பெயரில் ஆரம் பிக்கப்பட்ட நவீன தொழில் நுட்பங் களுக்கான ஆர்தர் ஸீ கிளார்க் நிறுவனம் (Arthur C. Clarke Institute Modern Technologies) மொரட்டுவையில் இயங்கி வருகின்றது.
லங்கை அரசு அவருக்கு'வித்தி
யா ஜோதி” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.தற்போது 8 வயதை எட்டி புள்ள கிளார்க் இன்னும் உற்சாகமாகவே செயற்பட்டு வருகிறார். எழுந்து நடமாடு வதில் உள்ள சிரமம் காரணமாக அவர் இப்போது சக்கர நாற்காலியைப் பயன் படுத்துகின்றார். ப
னய பிரதிகள்
ழ்களின்
47
அரும்பு-22

Page 26
(பொது அறிவுப் வாசகர்களே! பின்வரும் பத்து வினாக்களுக்குமுரிய சரியான விடைகளைத் திருத்தமாக ፵Uሠj தாளில்எழுதிக்கடிதஉறையினுள் இட்டுத் தபாலில் அனுப்பிவையுங்கள் விடைத்தாளில் உங்கள் பெயர், முக வரி மாணவராயின் பாடசாலையின் பெயர் என்பவற்றை விபரமாக ՃI Աք தத் தவறாதீர்கள்.
எமது புதியமுகவரி பின்வருமாறு: EDITOR - "ARUMBUr ROYAL COMPUTERs, 70, MAINSTREET, DHARGATOWN-12090.
போட்டிமுடிவுத் திகதி:2001 ஜூலை 65
பத்து வின்ாக்களுக்கும் சரியான விடைகளை எழுதியனுப்பும் வாசகர்களுள் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப் படும் மூவருக்குப் பணப் பரிசுகள் வழங் கப்படும்.
முதற் பரிசு ரூபா 500.00 இரண்டாம் பரிசு ரூபா 25000 மூன்றாம் பரிசு ரூபா 100.00 மேலும் 20 அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அரும்பில் பிரசுரிக்கப்படுவ தோடு அவர்களுக்கு அரும்பின் அடுத்த இதழ் இலவசமாக அனுப்பிவைக்கப்படும். குறிப்பு: இங்கு கேட்கப்பட்டுள்ள வினாக்களுள் சிலவற்றுக்கான விடைகள் இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரை களில் பொதிந்துள்ளன.
- - - - - - - --- ہے۔ ہیخS
W Gung 25o sy0 0Կ: I ଅଗ୍ଯ 48.
போட்டி இல : 2)
வினாக்கள்: Y1 இந்திய நகரங்களுள் மிகப்பெரியது
எது?
v2 துருவக் கரடியின் விலங்கியற் பெயர்
என்ன?
3. நெப்சூன் கோள் எத்தனையாம் ஆண் டில் கண்டுபிடிக்கப்பட்டது?
x 4. இலங்கைப் பாராளுமன்றக் கட்டடத்
தைச் சுற்றிக் காணப்படுகின்ற நதியின் பெயர் என்ன?
Yv 5. தான்ஸானியாக்குடியரசின்முதலாவது
ஜனாதிபதியின் பெயர் என்ன? 6.நோபல் பரிசு பெற்ற பௌதிகவியலாளர் என்ரிகோ பெர்மியின் (Enrico Fermi) பிறந்த நாடு எது?
\7. திபிடக என்ற்பெளத்த வேதநூல் எந்த
மொழியில் எழுதப்பட்டது?
\,8. ஆர்தர்-ஸி. கிளார்க் அவர்களின் 2001 Space Odyssey GT5irgilsmů படத்தை இயக்கியவர்யார்? 9. இலங்கையைப் பற்றி நூல் எழுதிய முதலாவது ஆங்கிலேயர் யார்?
10. கிறிஸ்தோபர் கொலம்பஸின் முதலா வது நாடுகாண் பிரயாணத்தின் போது அவர் பிரயாணம் செய்த கப்பலின் பெயர்
TTIT?
அடுத்த இதழ்
அரும்பு இதழ்-23எதிர்வரும் 2001 ஜூலை 25ம் திகதி வெளிவரும்.
அரும்பு-22
 
 

அரும்பு பொது அறிவுப் போட்டி - 20 சரியான விடைகளும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளும்
கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் பின்வருமாறு:
1.76 வருடங்கள் 2. Storting 3. மொரொக்கோ 4. இங்கிலாந்து 5. சார்ள்ஸ் பபேஜ் 6. இரண்டாம் நிக்கலஸ் 7. நோர்வே, ஸ்வீடன், டென்மார்க் 8.(i) ரிக்டர் அளவுத்திட்டம்
| 9. Ailuropoda Melanoleuca 10. Ul'yü GluTe (i) மெர்கால்வி அளவுத் திட்டம்
இந்தத் தடவை நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்குபற்றியிருந்த போதிலும் மொத்தம் பதின்மூன்று பேரே பத்து வினாக்களுக்கும் சரியான விடைகளை அனுப்பியிருந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களா பிருப்பது குறிப்பிடத்தக்கது.
i Lirfie, (eILLIT 500). Fazani Razick,
K / Azhar Central College, Akurana 2h LInflash (el 5 LITT 250): M.H.F. Nusra,
KL V Muslim B.M.W., Kalutara 3Li Life, (es IIT 100): Wathsaladevi Ramajayam,
Arangala, Naththarampotha
இலவசமாக அரும்பு-22ஐப் பெறுகின்ற10 பேரின் பெயர் விபரங்கள்
1. M. Z. M. Yazi, Kurundugaha Ela, Akurama 2. Mazli ya H Lussain, DUmuwi la Road, Akurana
B. M. T. F. АПsifa, 12 C1 Mada crna National School, Siyambalaga skotLIwa, Pahamune
4. M. M. F. Ruzeeka, Akura na Muslim B. M.W., Akurana 5. M. A. M. Finaz, Matale Road, 7th Mile Post, Akurana 5. Farzama Basheer, Mata le Road, Akurarna W. M., Z. Muhammadh, Du nu wila Road, Akura la 8. A. Muhammed Miyas, Muruthaga hamula 9. Fathima Shameela, Gothatuwa, Mullerilyawa New Town 10. M. Z. M. Aslam, Kurundugaha Ela, Akurana
அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!
பிழை திருத்தம் : சென்ற அரும்பு-21 இதழில் பண்டா (Panda) விலங்கின் விஞ்ஞானப் பெயர் தவறுதலாக Altur000da melanoleபca என அச்சிடப்பட்டிருந்தது. அது Aluropoda melanoleபca எனத் திருத்தப்பட வேண்டும்.

Page 27
அரும்பு - 22
go uprigo E
நாம் ஒவ்வொருவரும் தோடு எம்மைப் போன்றே வ சூழப்பட்டிருக்கின்றோம். என வுக்கு மதிக்கின்றோமோ அந்த அ உயிர்களையும் மதித்துப் பேணுவ இந்த வகையில் நோக்குப் பதும் அவற்றுக்கு ஆதரவளிப் அடைய உதவுவதுமே நற்செயல் அமைகின்றன. எனவே உயிர்கை நோவினை செய்பவர்களும், தடையாய் இருப்பவர்களுமே தி
நாம் உயிர்களின் மீது போதாது. அவற்றை மதிக்கவும் உயிரை மதிக்கும் போதுதான் ஆ முள்ளவனாக மாறுகிறான். இ ஏமாற்றிக் கொள்கின்ற அர்த்தம தவிர்த்துக் கொள்வான். மிக உய அவனுள் உருவாகத் தொடங்கு
நாம் ஏனைய உயிர்கை தொடங்கும் போது எம்மைச்கு கத் தொடர்பு எமக்கு ஏற்படும். 2 வனோடு நள்ம் நேரடியாகத் :ெ னும் உயிர்களை மதித்து அவற்றி ளும் போது - அவற்றின் நலனுக் அர்ப்பணித்துக் கொள்ளும் பே மீகத் தொடர்பொன்றை நாம் உ
உயிர்களை உண்மையா பழக்கத்தை விருத்திசெய்து செ களாகவும், ஆழமான உணர் துடிப்புள்ளவர்களாகவும் மாறி
PRINTED BY: A.J. PRINTS -

AFRUMBU-2
ள மதித்தல்
வாழ விரும்புகின்றோம். அத் ாழ விரும்புகின்ற உயிர்களால் வே எமது உயிரை நாம் எந்தள புளவுக்கு எம்மைச்சூழ இருக்கும் பது நமது கடமையாகும். D போது உயிர்களைப் பாதுகாப் பதும் அவை உயர் நிலையை களுக்கெல்லாம் அடிப்படையாக 1ள அழிப்பவர்களும், அவற்றுக்கு அவற்றின் முன்னேற்றத்துக்குத்
5 LI G) 1 f'T55 GITAT G6) I IT.
அன்பு செலுத்தினால் மட்டும் D பழக வேண்டும். ஒருவன் தன் அவன் த்னக்குத் தானே விசுவாச ந்நிலையில் அவன் தன்னையே ற்ற செய்கைகளில் ஈடுபடுவதைத் பர்ந்த, ஆழமான மனிதத் தன்மை ம்.
ள உள்ளுணர்வோடு மதிக்கத் நழவுள்ள உலகத்தோடு ஓர் ஆத்மீ உலகை இரட்சித்து ஆளும் இறை தாடர்புகொள்ள முடியாது. எனி ன் மகத்துவத்தைப் புரிந்து கொள் காகச் சேவை செய்வதில் எம்மை ாது அந்த இறைவனுடனும் ஆத் ருவாக்கிக்கொள்ள முடிகின்றது. ன உள்ளுணர்வோடு மதிக்கும் 5ாள்வதன் மூலம் நாம் நல்லவர் வுடையவர்களாகவும், உயிர்த்
விடுவோம்.
14, STATION ROAD, DEHIWALA