கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1994-1995

Page 1


Page 2
“எங்கள் வாழ்வும் மங்காத தமிழென்று
இதழா செல்வன். எச்.
வெளி
தமிழ்ச் பேராதனைப் பல்
பேராத
 

b எங்கள் வளமும்
று சங்கே முழங்கு”
Finui:
எம்.கலால்தீன்
யீடு:
சங்கம், )கலைக் கழகம்,
66.

Page 3


Page 4
பெருந்தலைவர் வ
தமிழியலின் பன்முகப்பட்ட வளர்ச்சி வெளிவரும் சஞ்சிகைகளும் ஆண்டுமலர்களும் ஆ இவ்வகையிற் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்
ஆற்றி வரும் பணிகள் விதந்தோதத்தக்கவை.
பல்கலைக்கழக மாணவர்களின் உள்: சிந்தனைகளையும் பிரச்சினைகளையும் வெளிப்படு தசாப்தங்களுக்கும் மேலாக இளங்கதிர்ச்சஞ்சிகை ெ இடையூறுகளும் சவால்களும் எதிர்ப்பட்டபோதும் இளங்கதிர் வளம்மிக்க மலர்களை மலர்வித்து வருவ புளகாங்கிதம் அடையலாம்.
இளமைத் துடிப்பும் செயலூக்கமும் மிக்க விளங்கும் இளங்கதிர்ச் சஞ்சிகை இவ்வாண்டும் ம இறும் பூதெய்துகின்றோம். மாணவர்களதும் மா போற்றுகின்றோம்; பாராட்டுகின்றோம்; வாழ்த்துகி
தமிழ்த்துறைத் தலைவர்,
பேராதனைப் பல்கலைக் கழகம்,
பேராதனை
 

ாழ்த்துகின்றார்.
க்குப் பல்கலைக்கழகங்களும் அவற்றிலிருந்து ற்றிவரும் பணிகள் அலட்சியப்படுத்த முடியாதவை. pச் சங்கமும் அதன் ஆண்டு மலரான இளங்கதிரும்
ளார்ந்த ஆற்றல்களையும் அனுபவங்களையும் த்ெதுவதற்கேற்ற அரிய சாதனமாகக் கடந்த நான்கு வளிவந்து கொண்டிருக்கின்றது. இடையிடையே பல , மாணவர்களது ஒத்துழைப்பினாலும் இன்றுவரை தையிட்டுநாம் பெருமிதம் கொள்ளலாம்; நம்நாடும்
இளசுகளின் அயரா உழைப்பினது அறுவடையாக கச் சிறந்த முறையில் வெளிவருவதையிட்டு நாம் ணவியர்களதும் ஆர்வத்தையும் ஆற்றலையும் ன்றோம்
கலாநிதி. க. அருணாசலம்
பெருந்தலைவர்,
தமிழ்ச்சங்கம்.

Page 5
from C عag کر کع)اسے 4رے
I have great pleasure in writing this messag Tamil Society - Ilankathir
It is heartening to note that the tamil Societ exemplary society this year because of its abil and cultural events to enrich the academic a
Ilankathir has a rich tradition and through dards and fostered noble values and attitudes and national development. It gives a sense o have in later years become the editors off known Tamil scholars had their maiden atte,
I'm also happy to note the enormous effort i among the various social, cultural and politi
are efforts that would go a long way in achi
I congratulate the Editor, and the Working C
UNIVERSITY oF PERADENIYA.
FEBRUARY 16 -1996

ut (Mae - Chancellor
e of greetings to the Annual Magazine of the
y of Peradeniya Campus has energed as an ity in organizing so many quality programmes ind aesthetic life of the campus Community.
out its history it has maintained high stanto sustain social harmony, cultural upliftment fachievement to find that some of its editors lational daily newspapers and a few of the mpts published in this journal.
f had taken to urge amity and understanding cal group that co-exist in this campus. These 2ving the much needed national integration.
ommittee for their achievement
PRoF.C.M. MADDUMA BANDARA
Vice - CHANCELLOR

Page 6
(
பெரும்பொருளாளர்
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பழ நெருக்கடிகள் மிகுந்த இன்றைய சூழ்நிலையிலும் தி சிறந்த முறையில் வெளியிடுவதையிட்டு பெருமகிழ் உழைப்பைப் பாராட்டுகின்றேன்.
பல்கலைக் கழக மாணவர்களது உள்ள களங்களுள் ஒன்றாகக் கடந்த பல தசாப்தங்கள் சஞ்சிகையின் பணிகள் விதந்து கூறத்தக்கவை. ம பலவகை ஆக்கங்களையும் தாங்கிஇவ்வருடமும் இ
இளங்கதிரைச் சிறந்த முறையிலும் க பாராட்டுக்குரியவர்.
கடந்த காலத்தைப் போன்றே எதிர்கால இளங்கதிரும் தமிழியலின் பன்முகப்பட்ட வளர்ச்சி ஐயமில்லை. அவற்றின் பணிகள் தொடர வாழ்த்துக்
புவியியல்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை.

வாழ்த்துகின்றார்.
2ம்பெரும் சங்கங்களுள் ஒன்றான தமிழ்ச் சங்கம், ட்டமிட்டபடி அதன் ஆண்டுமலரான இளங்கதிரைச் வடைகிறேன்:தமிழ்ச்சங்க உறுப்பினர்களது அயராத
ாார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கேற்ற ாாக வெளிவந்து கொண்டிருக்கும் இளங்கதிர்ச் ாணவர்களதும் ஆசிரியர்களதும் அறிஞர்களதும் இளமைப் பொலிவுடன் வெளிவருகின்றது.
ாலதாமதமின்றியும் வெளியிட்டுள்ள ஆசிரியர்
த்திலும் தமிழ்ச் சங்கமும் அதன் ஆண்டுமலரான க்குக் காத்திரமான பங்களிப்பினைநல்கும் என்பதில்
ன்றேன்.
வை-நந்தகுமார்,
பெரும்பொருளாளர்,
தமிழ்ச்சங்கம்

Page 7
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அதி: தாண்டவமாட, முழுநாடே யுத்தபீதியில் இருந்து அறுபத்தொராவது வயதிலும் இளங்கதிரை பிரசவி சாதனை என்று கூடச் சொல்ல வேண்டும்.
ஆனால் என்னால் அப்படிச் சொல்ல மு பணம், நேரம் என்பவற்றை கவனத்தில் கொள்ளு பிரயோசனப்படப் போகிறது என்பதிலேயே சாதை
இது பற்றி அறியக் கடந்த வருடம் செய்த க சதவீதத்தினரே கருத்துக்களை அனுப்பினார்கள். அ போதும் எல்லோருடைய கருத்துக்களையும் கருத்தி
எனிவரும் இளங்கதிர்கள் இன்னமும் மிள இம்மலர் வெளியீடு உட்பட தமிழ்ச் சங் பெருந்தலைவர், பெரும்பொருளாளர் உட்பட அை
நன்
வாழ்க தமி
வாழ்க நி
வாழிய வ
பொறியியற் பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை
 

காரம் கொண்ட மேல்மட்டங்களிலேயே இனவாதம் விடுபட முடியாமலிருக்கும் போது தமிழ்ச்சங்கம் ப்பது சந்தோஷமே. உண்மையில் இதைப் பெரும்
)டியவில்லை. இம்மலருக்காக செலவழிக்கப்பட்ட
ம் போது இது உங்களுக்கு எவ்வளவு தூரத்திற்கு னயின் அளவுதங்கியுள்ளதாக எண்ணுகிறேன்.
ருத்தெடுப்பு போதிய வெற்றி அளிக்கவில்லை. பத்து அவர்களுடைய கருத்துக்களைக் கருத்தில் கொண்ட ல் கொள்ள முடியாமல் போனது கவலையே. ரிர உங்கள் கருத்துக்களும் பிரயோசனப்படலாம். கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய னவரும் பெருமைக்குரியவர்களே.
ாறி
ழ்மொழி
ரந்தரம்!
ழியவே!!!
LIIT. Uravgsõ535DTi
தலைவர்,
தமிழ்ச்சங்கம்

Page 8
தமிழ்ச் சங்கத்தின் அறுபத்தொராவது செ 29வது இளங்கதிர் மலர் மக்கள் மத்தியில் மணம் பர
நாட்டின் நாற்றிசையிலிருந்தும் கல்வி க தங்கள் பாடநெறிகளை மட்டும் பயில் வதோடு பங்கேற்றுள்ளனர் என்பதைப் பறைசாற்றும் ஏடாக இ
காலக் கண்ணாடியின் விம்பமாகப் பிரதிப சமூக, கலாசார, பண்பாட்டு அறிவியல் மேம்ப மிகையாகாது.இவ்விதழைச் சிறப்புற வெளிக்கெ ஆசிரியர்களையும் நண்பர்களையும் நன்றியுடன் நே
தனது பொற்கதிர்களால் அகிலத்தை வாழ இளங்கதிர்களைப் பரப்பி, தமிழ்த்தாயை வளமுடன் இணைகின்றேன்.
விஞ்ஞான பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை
-
 

வாழ.
யற்குழுவினர் நாம் உங்கள் கைகளில் தவழவிடும் ப்புவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
ற்க இங்கு வரும் தமிழ் பேசும் மாணவர்கள், தாம் நின்றுவிடாமல் கலை, இலக்கிய சேவையிலும் இளங்கதிர் அமைவது திண்ணம்.
லிக்கும் இளங்கதிர், தமிழுக்கு வளம் சேர்ப்பதுடன் பாட்டிற்கும் துணை நிற்கின்றது என்றால் அது ாணர ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைத்து ாக்குகின்றேன்.
வைக்கும் கதிரவன் போல் தமிழ்ச் சங்கமும் அதன் வாழவைக்க வேண்டுமென வாழ்த்துவதில் நானும்
கி. ஜுட்ஸ் இராஜநாதன்,
செயலாளர்
தமிழ்ச்சங்கம்

Page 9
பெருமகிழ்வ:
பேராதனைப் பல்கலைக்கழகதமிழ்ச்சங் சஞ்சிகை உங்கள் கரங்களில் தவழ்வது கண்டு ெ தமிழ்பேசும் மாணவர்களின் கலை இலக்கிய ஆ வாய்ப்புக்களை வழங்குவதுடன் தமிழிற்கே உரி அயராது உழைத்து வருகின்றது. இந்த வகையில் த.
இளங்கதிர் வெளியீடு அமைந்து வருகின்றது.
காலத்தின் கோலங்கள் எமக்கு கை கொ காலத்தில் நிகழ்வுகளை நடத்த முடியாமல் போன பணிகளை முழு முயற்சியுடன் செய்ததென்ே சிரமங்களோடுதான் உதயம் கண்டிருக்கிறது. வழை உயர்ந்து வரும் விலைவாசிகளும் இவ்விதழ் வெளி பணிகளை பல்கலைக் கழகத்தினுள் மட்டும் நிறுத நிகழ்வுகளுக்காக நிதி திரட்டுவதும் வழமையானது ஒழுங்குபடுத்தமுடியாமல் போனது கூட ஒரு தாக்கத்
இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் கூ இவ்விதழை வெளியிட்டிருக்கின்றதென்றால் அது உள்ளங்களையுமே சாரும். இதேபோன்று எதிர்கா பணியை மேலும் தொடர வேண்டும், மென்மேலும் ச் தனது புத்தொளியை இலக்கிய உலகெங்கும் பரப்ப (
வாழ்க தமிழ்மொ
மிருக வைத்தியபிடம்,
பேராதனைப் பல்கலைக் கழகம்,
பேராதனை
 

த்தின் 29வது மலராக மலர்ந்திருக்கும் இளங்கதிர்' பருமகிழ்ச்சியடைகின்றேன். தமிழ்ச்சங்கமானது ர்வத்தையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள த்தான கலாசாரத்தை பேணுவதிலும் இன்றுவரை மிழ்ச்சங்க செயற்பாட்டின் முக்கிய அத்தியாயமாக
டுக்காமல் போனதால் திட்டமிட்டபடி குறிப்பிட்ட ாலும் இம்முறையும் தமிழ்ச் சங்கம் தன்னாலான ற கூறலாம். இம்முறைகூட இளங்கதிர் பல ம போன்று நிதிப்பற்றாக்குறையும் நாளுக்கு நாள் பீட்டை பாதிக்காமல் இல்லை. தமிழ்ச் சங்கம் தனது திவிடாது வெளியிடங்களிலும் செய்வதும், சில 1. ஆனால் இம்முறை அவ்வாறான நிகழ்ச்சிகளை தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
- எமது செயற்குழு நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி, நிச்சயமாக இங்குள்ள ஒவ்வொரு தமிழ் பேசும் லத்திலும் எவ்விடர்வரினும் தமிழ்ச் சங்கம் தனது றப்படையச் செய்ய வேண்டும் என்றும் இளங்கதிர் வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.
ழி வளர்க இளங்கதிர்
சூசை அன்ரனிதாசன்
இளம் பொருளாளர்,
தமிழ்ச் சங்கம்

Page 10
இதழாசிரியரின் இ
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் கரங்களில் தடம் பதிப்பதையிட்டு, பெரும் மகிழ்ச்சி அ எனது பல்கலைக்கழக வளாக வாழ்க்கையி நிகழ்வுகளுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைய கொண்டிருக்கும் போது, என்ன செய்வது எதைச் செ ஏற்பட்டது என்றாலும் என் கொள்கையை விடுவதில்ை இதழாசிரியராக இருக்கும் காலத்தில் ட தெரியாதோர் யாரும் இல்லை என்றொரு பெருமை இருக்க வேண்டும் என்ற ஆசையும் எழுந்தது.
இடி'இடித்தாலும் 'வெடி வெடித்தாலும் உ ஆதங்கம் ஒருபுறம் அதனை அழகாகச் செய்து எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்ட நான் இவ்வி
மாறி வரும் உலகினிலே மாற்றம் ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனையானது சுமுகமா சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ே உணர்வுகளையும் சிந்தனைகளையும் தொட்டுச் செல் பொதுவாக எமது தமிழ்ச்சங்கம் தமிழ்த்தெ இருந்து வருகிறது. அந்தவகையில் கலாநிதி ஏ.எம். அன்று கொண்டாடியது பெருமைக்குரிய விடயமாகுட இவ்விதழுக்கு ஆக்கங்களைத் தந்து உதவி ஆர்வமும் ஊக்கமும் தந்த தமிழ்த்துறை, பெருந்த இவ்விதழில் பிரசுரிக்க ஆக்கங்கள் ஏற்றதாவெனப் ப மனோகரன் அவர்களுக்கும் எமது தமிழ்ச்சங்கத் த பொருளாளர் வை-நந்தகுமார் அவர்களுக்கும் ஏன் உபவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் அeை இலக்கிய வரலாற்றில் என்றுமே நிலை பதிப்புகளை இனிவரும் காலங்களிலும் பதிக்கும் ( பாரெங்கும் பரப்ப வேண்டும் எனப் பிரார்த்திக்கின்ே
'குற்றம் களைந்து குறை பெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன்' என்ற வள்ளுவ மன்னிக்குமாறும் வேண்டுகிறேன்.
கலைப் பீடம்,
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை.

தயத்திலிருந்து.
தனது இருபத்தொன்பதாவது, ஆண்டுமலரை உங்கள் அடைகின்றது.
ல் இந்த இதழாசிரியர் பொறுப்பானது, என் எதிர்கால பும் என நினைக்கின்றேன். இம் மலரைத் தொகுத்துக் ய்வது , எப்படிச் செய்வது என்ற ஓர் உணர்வு எனக்கு }ல என்ற எண்ணத்தோடு செயல்படத் தொடங்கினேன். ழகாத பல புதுமுகங்களோடு பழகும் வாய்ப்பும், பும் மீண்டும் இன்னொரு முறையும் இதழாசிரியராக
ரிய காலத்திற்குள் இதழை வெளியிட வேண்டும் என்ற வெளியிட வேண்டும் என்பது இன்னொரு புறம், பிதழை வெளியிடத் துணிந்தேன். வேண்டும் என்பது அனைவரதும் ஆசையாகும். நம் ான முறையில் தீர்க்கப்படவேண்டும். புதிய தொரு நாக்கோடு இளங்கதிர் 95 இதழானது உங்கள் லும் பல ஆக்கங்களையும் தாங்கி வந்துள்ளது. ாண்டு புரிந்த பெரியார்களை நினைவு கூறுவது மரபாக ஏ.அஸிஸ் அவர்களின் நினைவு விழாவை 27.02.96 δ.
யதுடன் அடிக்கடி அதன் செயல்பாடுபற்றி விசாரித்து தலைவர் கலாநிதி க.அருணாசலம் அவர்களுக்கும் ார்த்து எந்நேரமும் உதவி செய்(யும்) த கலாநிதிதுரை லைவர் பா.பாலநந்தகுமார் அவர்களுக்கும் பெரும் னைய உறுப்பினர்களுக்கும் ஆக்கங்கள் தந்துதவிய னவருக்கும் எனது நன்றி. த்து நிற்க கூடிய இவ்விதழானது அதன் நிரந்தரப் என்ற நம்பிக்கையுடன் இளங்கதிர் தனது ஒளியைப் றன்.
ன் வாக்கிற்கேற்ப குறையிருப்பின் பெரும்மனதோடு
எச்.எம். கலால்தீன்,
இதழாசிரியர்,
தமிழ்ச்சங்கம்.

Page 11
அட்டைப்பட விளக்கம்.
பல கலையும் கற்பத பல்கலைக்குள் நுை நண்பர்களே! கல்விதனைக் கற்று புத்தகப்பூச்சியாய் சிந்தனைச் சிக்கல் எ சிலந்திவலைக்குள் சிந்தனைச் சக்கரத்ை கால ஓட்டத்தில் - நீ கற்ற கல்விதனை இளங்கதிர் போல் ப
இவ்வையகத்தில்
அட்ை
ஆக்கங்கள் அனைத்திற்கு

ற்காய்
ளந்துவிட்ட
ானும்
சிக்காமல் - உம்
2த சுழற்றி விட
ரப்பிடுவாய்
டப்படம்: எம்.எல். பெளசுல் அமீர்
ம் ஆக்கியவர்களே பொறுப்பு
- ஆசிரியர்

Page 12
புகழ் திகழ் தமிழ் மகள்
பொன்னாள் வ மகிழ்வுறு தமிழ் நிலமா
மலைவிளக்கா சகலரும் ஒருதாய் தன்பி சமத்துவமாகே தனித்துவம் காத்திட எழு தமிழ்க் குறளற தாயக மணிக்.ெ பனித்திடு மலைசூழ் பழ தனையுயுர்தமி வளர்க! வளர்க! வளர்க! மாநிலம் போற்
வளம்தரு மாவலிநதிமரு ராதனைப் பல்க விளைந்திடு பயிராய் வி வீறு கொண்டில இளந்தமிழ் மாணவர் இ6 இவ்வுலக குளவி ஈழமணிநாடுயுயர்க! எங் நாளைய வாழ்வு நமதிறை அருண் பாளையின் குளிர்தரு ம6
தனைத் தமிழ்ப் வாழ்க! வாழ்க!வாழ்க!
பல்லாண்டு யர்
மெட்டு: ஜன கண
ஆக்கம்: சக்திதா
 

கக் கீதம்
விமீதாளும் ருக! வருக! ந்தர்கள் பண்பு கவே ஒளிர்க ள்ளைகள்போல் வ வாழ்க pக! எங்கள் நெறிதழைக்க காடி துலங்க, நகர் பேரா ழ்க்கலை மன்றம்
றிட வளர்க!
நங்கமைந்தபே லை மன்றில் ளங்கிடு சங்கம் ங்கி மிளிர்க ன்கலைக் கோட்டம் 1ரை துலங்க
கள்
1ம் உயர்க "வழி பொலிக லைசூழ் பேரா பணியகம் வாழ்க!
வுடன் வாழ்க.
மன' எனும் இந்திய தேசிய கீதம் :ன்

Page 13
பெருந்தலைவர்:
பெரும் பொருளாளர்
தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்
இளம் பொருளாளர்:
இதழாசிரியர்:
செயற்குழு உறுப்பினர்கள்:
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வ
செல்வி
 

தி. க.அருணாசலம்
ந்தகுமார் M.A
lன். பா.பாலநந்தகுமார்
1ன்.இ.லெ.அப்துல் நசார்
ன். கி.ஜூட்ஸ் இராஜநாதன்
ன். சூசை அன்ரனிதாசன்
ன். ஹ.மு.கலால்தீன்
ன்.ஞா.காந்திஜி lன். ச.கண்ணன் |ன், ப.பிரதீபன் |ன். அ.ராஜ்குமார் ன். இரா.இரவிசங்கர் ன். அ.லெ.மு.நியால் ன். வ.சிவலோகதாசன் ன். தெ.சிவதாசன் . இரா.சுகந்தி

Page 14

soos osso so vớso igoriogae (soos) ,folosā, un'un œnogae,-: Norter, og stoņotë?
SLLLLL000S YYLLLLLLSKK LL LLLKKK KSLLL L0L LL LL L L K LLLK‘M&rT義MT wr
KTYL0 SLL00L L KLKKL YJJLLLLL LL LLLLLK LLL0S0L0YSLLLLL LLLLLLS'isotoo oso-osoɛɛgraone osoɛyɩ-7Ğ) geogrŵr, rosssssssssss
|ssssssssssssssss!!! (yngaeae; rro) y los sosiosae sẽ gorossoos 's suolle@url.s, gŵr!) yw Tŵaessae susținos),() aeriTsosT'Trosso prostoji sors, os storio:8s%)rīs) qisaeos@sooof¡, SJJ00S0LLSYYLLYKKSYY SLLLLL SLLLL00LLLYSJJTLLLY0LLKIgorosoɛɛ|-z^*, torto xogosyo-zōs) gewogaer, sgogorsogogo-vrr pasë?

Page 15


Page 16
மானுடத்தை இதய சுத்தியோடு ே முதுபெரும் எழுத்தாளர் எஸ். அக
கலாநிதி. க. அருணாசலம், தமிழ்த்துறைத்தல்
தமிழ் இலக்கிய உலகில் அகஸ்தியர் என்ற ெ கூறும் குறுமுனிவர் அகஸ்தியர்இந்தியாவின் வடபுலத்தி மொழிஅமைப்பையும் புதிய நெறியிலே வளர்த்தார் என இலங்கையின் வடபுலத்திற் பிறந்து வளர்ந்து தென் மேலைப்புலத்திற் சங்கமமாகிவிட்ட அசுர எழுத் கோட்பாடுகளைத் தம்மகத்தே கொண்ட நூற்றுக்கண குறிப்பிடத்தகுந்ததாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
தனக்கெனவும் தனது குடும்பத்திற்கெனவும் வளர்ந்த சமுதாயத்துக்காகவும் நாட்டுக்காகவும் வாழ்க்கையையும் சுகபோகங்களையும் உடல்.பொ மனிதனிலிருந்து உயர்ந்து நிற்கிறான்; இறந்து போற்றுதலுக்குள்ளாகின்றான். அத்தகையவர்களுள் அ யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையிற் பிறந்து பிரான் அவரது முற்போக்குச் சிந்தனைகளும் உயர்ந்த கருத்து பிரதேச, இன, மத, மொழி, நாட்டு எல்லைகளைத் த
பயப்பவை.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆனைக்கோட்ை அன்னம்மாதம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்து, தொடங்கி, எஸ்.எஸ்.ஸி வகுப்புடன் பாடசாலைக் க போதும் தமது அறுபத்தொன்பதாவது வயதில் அமர தத்துவம், அரசியல், தர்க்கவியல், அறிவியல், சித்தாந்தக் கீழைத்தேய, மேலைத்தேய இலக்கியங்களையும் இ சலிப்பின்றி எழுதி வந்தார். மரணப்படுக்கையில் இருந்து
தமிழ், சிங்களம், ஆங்கிலம் முதலிய மொழிக தமது பதினேழாவது வயதிலிருந்து நாடோடி வாழ்க்ை கண்டியிலும் தியத்தலாவையிலும் திருகோணமலை அளுத்கமவிலும் பண்டகசாலைப் பொறுப்பாளராகவும் உத்தியோகஸ்தராகவும் தீயணைக்கும் படைப்பிரிவு அ ஆண்டு இடம்பெற்ற வன்செயல்களால் தாம் பிறந்த மண் பொருள் பண்டம் முதலியவற்றை மட்டுமல்லாது நீண்ட பாதுகாத்து வந்த பெருந்தொகை நூல்களையும் தமது ெ வேதனையுடனும் பிரான்சுக்குச் சென்று தீவிர நோய்க்கா6 நிலையிலும் கூட அவர்தமது எழுத்து முயற்சிகளை நிறு;
சிறந்த பாடகனாகவும், மிருதங்க வித்துவான இனஉணர்வுகளைக் கடந்த மனிதாபிமானியாகவும் சிற தந்தையாகவும் திகழ்ந்த அவரது உள்ளம் இரவு பகல் ச சிந்தித்தது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக இரவு பக

நசித்த ஸ்தியர்
லைவர், பேராதனைப் பல்கலைக்கழகம்
பயர் மிகப் பிரபலமான ஒன்றாகும். பெளராணிக கதைகள்
லிருந்து தென்புலத்திற்கு வந்து தமிழிலக்கியத்தையு(ள)ம் க் கூறப்படுகிறது. இதே போன்று இருபதாம் நூற்றாண்டில் புலத்திலும் மத்தியபுலத்திலும் வாழ்ந்து பூமிப் பந்தின் தாளர் எஸ்.அகஸ்தியர், புதிய இலக்கிய அரசியற் ாக்கான ஆக்கங்களைத் தந்து தமிழ் இலக்கிய உலகிற்
தனது சுற்றத்துக்கெனவும் மட்டும் வாழாது தான் பிறந்து அவற்றையும் கடந்து மனுக்குலத்துக்காகவும் தனது ருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பவன் சராசரி தும் இறவாது வாழ்ந்து கொண்டிருக்கின்றான்; அமரரான அகஸ்தியரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. சின் தலைநகரான பாரிஸ் மாநகரத்திற் சங்கமமாகிவிட்ட க்களும் இலங்கைக்கோ தமிழ் உலகுக்கோ மட்டுமன்றி ாண்டிய அனைத்துலகுக்கும் சொந்தமானவை; நன்மை
- என்னும் கிராமத்தில் 1926ம் ஆண்டு சவரிமுத்துஆனைக்கோட்டைத் தமிழ்ப்பாடசாலையிற் கல்விபயிலத் ல்விக்கு - வரன்முறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகும் வரையும் கீழை நாடுகளதும் மேலைநாடுகளதும் கோட்பாடுகள் முதலிய பலதுறைகள் சார்ந்த நூல்களையும் டையறாது கற்று வந்தார். இறுதி மூச்சுவரை அலுப்புச் த போதும் அவரது கை எழுதுவதை நிறுத்தியதில்லை.
ளிற் புலமை பெற்றிருந்த அகஸ்தியர், தொழில் காரணமாகத் கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கொழும்பிலும் யிலும் களுத்துறையிலும் அம்பலாந்தோட்டையிலும் பொலிஸ் அதிகாரியாகவும் இராணுவமுகாமின் அலுவலக அலுவலகராகவும் கடமையாற்றிய வேளையிலும் 1983ம் ணான யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் 'வீடு வாசல், - நாட்கள் முயன்று சேகரித்து அரும்பெரும் செல்வமாகப் சொந்த ஆக்கங்களையும் ஒன்றாக இழந்து விரக்தியுடனும் ாாகிமருந்தும் வைத்தியசாலையும் படுக்கையும் என்றிருந்த த்திக் கொண்டதில்லை.
ாகவும்நாட்டுக்கூத்து நடிகனாகவும் பிரதேச, மொழி, சமய, ந்த எழத்தாளனாகவும் அன்புக் கணவனாகவும் பாசம்மிக்க முதாய மாற்றத்தையும் இலக்கியத்தையுமே இடைவிடாது ல் அலுப்புச் சலிப்பின்றி அவரது கரம் எழுதித் தள்ளியது.

Page 17
உண்மையில் ஐம்பது ஆண்டுகள் அவர் இலக்கியத்த
அவரது இத்தகைய ஐம்பது ஆண்டுகால மேற்பட்ட சிறுகதைகளும் எழுபது உருவகக் குட்டிக் நூற்றுக்கு மேற்பட்ட விமர்சன ஆய்வுக் கட்டுரைகளு நாடகங்களும் பிரமுகர்பேட்டி, நடைச்சித்திரம், உணர் புதிய இலக்கியப் பரிசோதனை வடிவங்களும் ெ எண்ணிக்கையின் அடிப்படையில் இவற்றைக் கொள்ள பற்றிய ஆழமான கருத்துக்களும் முற்போக்குச்சிந்தனை ஆக்கங்கள் அவரது ஆத்மாவையும் கொள்கைப் பற்று வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
இரண்டாம் உலக மகாயுத்த காலச் சூழ்நி எழுதத்துண்டிய சூழ்நிலைகளைப் பின்வருமாறு வி பிறந்தவன். எனது தந்தையார் தொழில் வளத்தில் மிக ( கொடுமைகளை நேரடியாகவும் உரைத்ததன் காரண ஆவேசித்தேன். சோஷலிச சித்தாந்தம் ஆகர்சித்தது. அ இருந்தது. அக்காலத்தில் (1945) கல்லூரியில் புத்தகக் தொடர்பு கிடைத்தது. அகோரித்த என்அறிவுக்கு பசிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர். அவரை எனக்கு அ சோஷலிசதத்துவ நூல்களையும், இலங்கையில் அ பெரிமிதத்துடன் நினைவுகூர்ந்து வருகின்றேன். காந்தி என்னைக் கவர்ந்தன. நானும் ஒரு படைப்பாளி ஆனே
'கவிதையே என் முதல் இலக்கிய எழுத்து தொடங்கினேன். சிறுவயதில் பாட்டும் பயனும், படித் நாட்டுக்கூத்துப்பாடல்கள் பாடவும் இயற்றவும் வாலாய சிங்கராசா, எனது முத்த சகோதரர் சிலுவைராசா சித்த விளங்கினர். உறவினர் வசந்தகுலசிங்கம் கர்நாடக இை கலைக்குடும்பப் பின்னணியுடன் மானிப்பாய் மிருந் பயின்றேன். இவ்வழித்தோன்றல்களும் எனது எழுத்து
'தொழிலாளர், விவசாய, பாட்டாளி மக்க சனாதனவான்களால் கீழ் மட்டத்தில் தள்ளப்பட்ட அவ
இவ்வாறு தமது எழுத்துப்பணியைத் தெ மகாகவிபாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், தி கம்பன், லெனின், ஸ்டாலின், மாவோ, டாள்ஸ்டா முதலியோரது நூல்களை விரும்பிப் படித்தார். அதனா:
1947ஆம் ஆண்டிற்சிறுகதைகளை எழுத ஆ அவரது ஆரம்பகாலக் கதைகள் சுதந்திரன் பத்திரிகையி அவரை நெறிப்படுத்தலாயிற்று. இலங்கையின் முற்போ சண்முகதாசன், பீட்டர்கெனமன், டானியல் முதலியே மார்க்சிய சித்தாந்த நூல்கள், மார்க்சிய அறிஞர்களி தில்லைநாதன்முதலியோருடன் கொண்டிருந்த மிக நெ சஞ்சிகைகளின் ஊக்குவிப்பு, அவரிடம் இயல்பாகவே ( வீறு கொண்ட முற்போக்கு இலக்கியவாதியாக வளர்த்

ம் புரிந்தார் எனலாம்.
இடையறா முயற்சியின் விளைவாக முந்நூற்றறுபதுக்கும். தைகளும்பத்துக் குறுநாவல்களும் ஒன்பதுதாவன்களும் இருபது வானொலி நாடகங்களும் நாற்பது நாட்டுக்கூத்து வூற்றுருவகச் சித்திரங்கள், விவரணச்சித்திரங்கன் என்னும் பளிவந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது. வெறுமனே " து இவற்றினூடாக அவர் வெளியிட்டுள்ள சமுதாயமாற்றம் களும் உன்னிப்பாக நோக்கத்தக்கவை.மேற்கண்.அவரது தலையும் இலட்சியப் பிடிப்பையும் மானுட நேசிப்பையும்
லையில் எழுத்துப் பிரவேசம் செய்த அகஸ்தியர் தம்மை பரிக்கின்றார்; 'நான் ஒரு தொழிலாளியின் குடும்பத்திற் நர்மையான மகாபராக்கிரமசாலி. அப்போதுள்ள சமுதாயக் ஈமாக இக்கொடுமைகளில் இருந்து விடுதலை அடைய தன் வாயிலாக நான் தேர்ந்தெடுத்த ஆயுதம் இலக்கியமாக கடை வைத்திருந்த அமரர் எஸ். ராமசாமி ஐயர் அவர்கனின் த்தீனியிட்டவர் அவர் அவரே எனது இலக்கியவர்ைச்சிக்கு மிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் டானியல். அக்காலத்தில் அறிமுகப்படுத்திய இராமசாமி ஐயரை நான் என்றும் , பாரதி, கார்க்கி, டாள்ஸ்டாய் முதலியோரின் கருத்துக்கன் 1 ܫܐ
T.
1. கவிதை இலக்கணம் 1944/45 காலப்பகுதியில் எழுதத் ந்தும் கேட்டும் மகிழ்வதில் அலாதி மோகம், காலகதியில் மாகியது. எனது பேரன், தந்தையார், தாயாரின் சகோதரர் ப்பா ஆசீர்வாதம் ஆகியோர்நாட்டுக்கூத்துகலைஞர்களாக சயில் புல்லாங்குழல் வித்துவானாகதிகழ்ந்தார்.இத்தகைய தங்க வித்துவான் கா.செல்லையாவிடம் மிருந்தங்கமும் லகப் பிரவேசத்துக்கு உந்துதல் தான்'?
ள் படும் துயரம், அவர்கள் ஓயாமல் உழைத்த போதிலும்! லம் என்பன என்னை எழுதத் தூண்டின. , وو ாடங்கிய அகஸ்தியர், ஆசுகவி கல்லடி வேலுப்பின்னை, ! ந.வி.க. சங்கச் சான்றோர், வள்ளுவன், இளங்கோ, மாக்ஸ், ! ப், மாஜினி, காண்டேகர், வாழ்டேயர், எமிலிசோலா ) அவரது எழுத்தார்வம் மென்மேலும் பெருகலாயிற்று. ரம்பித்தார். 'பிரேத விசாரனை'பங்காளிச் செய்தி முதலிய ம் வெளியாகின. அவற்றைத் தொடர்ந்து மார்க்சியதத்துவம் க்குச் சிந்தனைகள் கொண்ட கார்த்திகேசன், வைத்திலிங்கம், ாரின் உறவு, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ண் ஆக்கங்கள், பேராசிரியர்கள் கைலாசபதி சிவத்தம்பி, நங்கிய தொடர்பு, மல்லிகை, தாமரை முதலிய முற்போக்குச் டிகொண்டிருந்த தீவிரமானுட நேயம் முதலியவை அவரை தடுத்தன.

Page 18
மார்க்சியதத்துவத்தை வரித்துக் கொண்ட அக எழுதினார்.இலங்கைமுற்போக்கு எழுத்தாளர்சங்கத்தின்ய முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினராகவும்திகழ்ந்த சனாதனிகளின்எதிர்ப்பைமட்டுமல்லாதுதனது தந்தையாரி இதுபற்றி அவரே, 'மாக்ஸ், ஏங்கல்ஸ் முட்டாள்தனம்", நாசகாரர்களைத் தோற்றுவித்திருக்கின்றது.' என்று போ நாசகாரர்களில்நானும் ஒருவன்.இதனால் 'ஊரோடு ஒத்தே ஆரம்பமான எழுத்துக்குப் பின்னாளில் அவரும் எனது எனவும், ". நைந்து போனமனிதர்களை ஈடேற்றும் வழிம பெறச் செய்து கொள்கிறேன். . சிறுகதைகள், குறுநாவல் முதலியனஇவ்வாறு அமைந்து கொள்வதால் சுரண்டும் மே கண்டனங்களுக்கும் மடாலயப் போதகர்களின் ஆக்ரோ6 எழுத்தின் ஆத்ம பலமாகும். மனிதனை அனைத்து வி சிந்தனாவாதிகளின் வெறுப்புகளுக்குப்பாத்திரமாகும்பே என்பதை உணர்த்துகிறது." 5 எனவும் கூறியுள்ளமை ஆ
வணிகமயப்படுத்தப்பட்ட கலை-இலக்கியசீரழி குறைபாடுகளையும் அரசியல் பொருளாதார அக்கிரமங்க இறுதி மூச்சுவரை ஆக்கிரோஷத்துடன் கண்டித்தும் தாக்கி அசுர உழைப்பாளி; மனுக்குலத்தை உள்ளன்போடு நேசித்த மேற்கொண்ட இலட்சியவாதி அகஸ்தியர், சமுதாய மாற பயன்படுத்தினார். தான் சரியெனக்கருதும், மனதில் தோன்
துணிச்சலுடன் தமது படைப்புகளிலும் கட்டுரைகளிலும் ெ
'செல்லரித்துப் போன அறுபதாண்டுத் தமி
தரமான கலையாக உருவாகுமா? என்று எதிர்பார்த்தக இதே சாக்கடைச் சினிமா எக்கச்சக்கமான இலக்கியப் பிர தமிழ் இலக்கியத்திற்கு இனிமேல் 'பஞ்சம் 'இல்லை.
புட்டுவத்தில் செப்பமாகக் குந்தியிருந்து 'சிந்த கதைக்களஞ்சியம் கத்தைகத்தையாக சிலருக்கு வந்து விடு இதயத்தில் தேங்கித்துள்ளுவர். மாடேறிக் கொம்பன்களு தமக்கே இயல்பாகவுரிய நையாண்டி வார்த்தைகளில், கன 'பணம்பண்ண'முயல்வோரையும் பிரபல்யம் தேடியலை
இலக்கியத்தின் சமூகப் பணி பெறுமதி மிக் சமூகத்துக்கு நன்மைபயக்கும். கருத்துக்களை வற்புறுத்த பிரச்சினைகளுக்கான அடிப்படைக்காரணங்களை இனங்க காட்டுதல் வேண்டும்; "கஞ்சிகுடிப்பதற்கிலார், அதன்கார மக்களைத் தட்டியெழுப்பி உண்மையை உணர்த்தி விழி உறுதியுடன் பின்பற்றி இறுதிவரை செயற்பட்டார், 'கலை நிராகரித்தார்.
"கைதேர்ந்த நிபுணத்துவம் வாய்ந்த வைத்தி உள்ளவனாக இருந்தாலே தகுதியுள்ள இலக்கியவாதிய புரிந்து குணப்படுத்தவும் நோய் மறுபடி அணுகாமல் ச் ஆராய்ந்து விமர்சிக்கவும் அதனை உன்னத நிலைக்கு கூடியவனே யதார்த்த இலக்கியவாதி'7எனவும், 'இயக்

ஸ்தியர் இறுதிவரை தடம்புரளாது வாழ்ந்தார் தடம்புரளாது ாழ்ப்பாணக்கிளையின்தலைவராகவும்மக்கள் எழுத்தாளர் ார். மார்க்சியம் என்றாலே வெகுண்டு நோக்கிய அன்றைய டமும் அகஸ்தியர்வசைமொழிகளைப் பெற்றுக்கொண்டார்.
முட்டையிலிருந்து மயிர் பிடுங்கிற இலட்சக்கணக்கான ன கிழமை ஓர் அறிஞர் கூறினார். அந்தப் பாவத்துக்குரிய ாடு ஒருவனோடு கேட்டோடு' என்ற பிதாவின் 'ஆசியோடு' அபிமான வாசகராகியது என் மாதாவுக்கே அதிசயம்'. 4 ார்க்கங்களையும் கூற முனைவதால் கருத்தியலில் அழுத்தம் 5ள், உணர்வூற்றுருவச் சித்திரங்கள், விவரணச் சித்திரங்கள் ல்தட்டுவர்க்கத்தினரதும் சமூக விரோதிகளினதும் பலமான ஷமான தூஷிப்பிற்கும் ஆளாயின. இது ஒன்றுதான் எனது பழிகளிலும் சுரண்டும் கொடிய முதலாளிய அமைப்புச் து என்இலக்கியங்களில் எனது பார்வை குறிதவறவில்லை சூழ்ந்த சிந்தனைக்குரியவை.
வுெகளையும்நச்சுக்கருத்துக்களையும் ஊழல்களையும் சமூகக் ளையும் பல துறைகள் சார்ந்த சுரண்டற் கொடுமைகளையும் யும் புத்துலகம் சமைக்க இடையறாது பாடுபட்ட போராளி, மனிதாபிமானி; சமுதாய உயர்விக்காகஇலட்சியப்பயணம் ற்றத்திற்கேற்ற கருவியாகவே அவர் தமது ஆக்கங்களைப் றும் கருத்துக்களை ஒளிவுமறைவின்றிக்கூச்சப்படாது அசுரத் வளியிட்டார்.
ழ்ச்சினிமா இனியாவது சிறந்த இலக்கிய ஆக்கங்களால் லை இலக்கியவாதிகள் ஏமாந்துதான் போயினர். ஆனால் "ம்மா’க்களை வலு சுளுவாக உற்பத்தி பண்ணியிருக்கிறது.
னைத்தூபி'யைச் சினிமாவிலே தங்க'விட்டு விளாசினால் கிறது. கேட்பானேன், ஆளுக்கொரு ‘மானசீகக் காதலர்கள் க்கும் காடேறி வயிறவர்களுக்கும் யோகம்தான்.' 6 ଗtଶ0];$ லஇலக்கியம் என்னும் பெயரில் தகிடு தத்தங்கள்' செய்து வோரையும் கண்டித்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
கது. இலக்கியமானது சமுதாயத் தீமைகளை அகற்றிச் வேண்டும்; பிரச்சினைகளை அலசுவதுடன் நில்லாது அப் 1ண்டு அவற்றைத்தீர்ப்பதற்கானவழிவகைகளையும் விண்டு ணம் இவை என்னும் அறிவுமிலார் என்றநிலையில் வாழும் 'ப்புறச் செய்ய முயல வேண்டும் என்னும் கருத்துக்களை கலைக்காகவே என்னும் கருத்தினை வன்மையாக ஓங்கி
யன் போன்று சமுதாயத்தை ஆய்ந்து அறிவதில் தேர்ச்சி பாகின்றான். நோயாளியைப் பரிசோதிக்கவும் நோயைப் கிச்சையளிக்கும் வைத்தியன் போன்று சமுதாயத்தினை மாற்றவும் நாசங்கள் அணுகாமல் வழிகாட்டவும் எழுதக் கவியல் என்பது, எதுவும் இருக்கிற இடத்திலேயே இருந்து
محم۔

Page 19
கொண்டிருப்பதுமில்லை, எதுவும் இருக்கிற தன்டை நேரடியான அர்த்தம் இயக்கம் இயக்கத்தினோடு உண் கண்ணோட்டத்தோடு நிகழ்ச்சிகளைப் பார்த்தால்தான் ! நிலையில் மாறுகிறநிலையில் வைத்துப் பார்க்க முடியும். போது உலகம் இன்றிருப்பதுபோல் எப்போதும் இருந்த உருமாற்றங்கள் குணமாற்றங்களையும் உண்டாக்குகி செய்யும். இதுவே இயக்கவியல்வாதக் கண்ணோட் இயக்கவியல் பற்றியும் கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது.
அல்லற்பட்டு ஆற்றாதுதவிக்கும் அப்பாவிக
சமூகத்தின் மேலாதிக்க சக்திகளால் விபச்சாரக் குகைக்குள்
அல்லலுறும் தொழிலாளர்கள், சமூக -பொருளாதார ரீதி துயரங்களைக் கண்டு அடையும் மனக்குமுறல்களுக்கும்
ஆத்திரமும் அக் கொடுமைகளை அகற்றிச் சமத்துவமும் என்ற தீவிரமும் அத்தகைய முயற்சிக்கு இலக்கியத்தையும் அவரது ஆக்கங்களாக மலர்ந்துள்ளதை அவதானிக்கலா,
'சகல மட்டங்களிலும் உழைக்கும் மக்களை அ
மாற்றி, விடுதலை, ஜனநாயகம் முதலியவற்றை நிலைற தத்துவத்தை உணர்த்தி, மானுட தர்ம நேயத்தை வளர்த நிராகரித்து, விஞ்ஞானபூர்வ மெய்யியல் வாழ்வை மைய படைப்புகளின் அடிப்படை அம்சங்களாகும். '9 எனத் குறிப்பிட்டுள்ளமையும் மனங்கொள்ளத்தக்கது.
இறுக்கமான கொள்கைப் பற்றுதல் கொண் இலங்கையின் வீரகேசரிப் பத்திரிகை முதல் தமிழகத்தி மறுத்ததும், காலப்போக்கில் அகஸ்தியரது எழுத்தாற்ற ஆக்கங்களைப் பொதுவாக இலங்கையின் எல்லாத்தினசரி வெளியிட்டமையும் வியத்தற்குரியது. தமிழகத்தின் வணி அவரது ஆக்கங்களை விரும்பிப் பிரசுரித்தன. “தாமை மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளமையும், 1970ஆ அட்டையிற் பிரசுரித்துக் கெளரவித்தமையும் மனங் கொண்டிருக்கும் ஓசை, பாரிஸ் ஈழநாடு, தமிழன், பாரிஸ் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் சில மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அகஸ்தியரது 'சுவடுகள் முதலிய ஒரு சில குறுநாவலான 'வில்லூன்றி மயானம்' 1953ம் ஆண்டி அவருக்கு எச்சரிக்கைகளும் பயமுறுத்தல்களும் விடுக்கப் தமது கொள்கைகளிலும் கருத்தியலிலும் விடாக்கண்ட குறுநாவலாக எழுதப்பட்ட, 'வில்லூன்றி மயானம் 'எரிகோளமாகவும் படிப்படியாக விரிவடைந்ததுடன் இ நாவலாகத் தமிழகத்தில் 1992ஆம் ஆண்டில் வெளிவந் நோர்வே, கனடா அவுஸ்திரேலியா முதலிய மே ஏற்படுத்தியதுடன் இலங்கை, தமிழகம் என்ற எல்ை விட்டது.10
அகஸ்தியரின் ஆக்கங்கள் சில, சனாதனிக
- ܠ

யிலேயே இருந்து கொண்டிருப்பதுவுமில்லை. இதன் ாகும் மாறுதல் என்பதாகும். அதனையும் இயக்கவியல் கெழ்ச்சிகளையும் அவற்றின் தளங்களையும் இயங்குகிற இயக்கவியல் வகையில் உலகின் வரலாற்றை ஆராய்கிற ல்லை; அதில் பல உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. *றன. எதிர்காலத்தில் பல உருமாற்றங்கள் ஏற்படவே மாகும். ' 8 எனவும் யதார்த்த இலக்கியம் பற்றியும்
ர், பெண்கள் - குறிப்பாக அடிமைநிலையில் வாழ்வோர், தள்ளப்பட்டவர்கள், கொடூரமான சுரண்டல்களுக்காளாகி யாகத் தாழ்த்தி ஒதுக்கப்பட்டோர் முதலியோரின் துன்ப அவற்றுக்குக் காரணமானவர்கள் மீது பொங்கி எழும் சுதந்திரமும் மிக்கதோர் சமுதாயத்தைக் காண வேண்டும் ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதலும் D,
அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் முதலாளிய வர்க்க அமைப்பை 1ாட்டவும் தாய்மையின் பெண்ணிலைவாத மகோன்னத ந்து, கற்பனாவாத மதங்களின் கலாசார விழுமியந்களை ப்படுத்தும் கருவான மையப்பொருள்களே என்இலக்கியப் த் தமது ஆக்கங்களின் முக்கிய அம்சங்கள் பற்றி அவரே
ட அகஸ்தியரின் ஆரம்பகால ஆக்கங்கள் பலவற்றை ன் முக்கியமான பல சஞ்சிகைகள் வரை பிரசுரிப்பதற்கு லையும் கொள்கைப் பற்றுதலையும் உணர்ந்து அவரது ரிகளும் மாதாந்தகாலாண்டு சஞ்சிகைகளும் ஆர்வத்துடன் கமயப்படுத்தப்பட்ட சில சஞ்சிகைகள் தவிர ஏனையவை }ர' சஞ்சிகையில் மட்டும் அகஸ்தியரின் எழுபதுக்கும் பூம் ஆண்டு 'மே' மாதத் தாமரை இதழ் இவரது படத்தை கொள்ளத் தக்கவை. மேலை நாடுகளில் வெளிவந்து ஈழமுரசு முதலிய பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள் சிங்கள, மலையாள, ரஷ்ய மொழிகளில்
ஆக்கங்கள் நூல்வடிவம் பெறாது தடைசெய்யப்பட்டன. ல் பத்திரிகைகளிற் பிரசுரிப்பதற்கு மறுக்கப்பட்டதுடன் பட்டன. ஆயினும் அகஸ்தியர் அவற்றுக்கு அடிபணியாது னாகவே இறுதிவரை வாழ்ந்தார். 1953ஆம் ஆண்டில் என்னும் ஆக்கமே பின்னர் 'எரிமலையாகவும் " றுதியில் 'எரிநெருப்பில் இடைபாதை இல்லை’ என்னும் து இலங்கையிலும் தமிழகத்திலும் பிரான்ஸ், ஜேர்மனி, லைநாடுகளிலும் பெரும் வாதப் பிரதிவாதங்களை 0களைக் கடந்து அகஸ்தியரையும் உலகறியச் செய்து
ள் பலரின் தீவிர கண்டனத்திற்குள்ளாகின. அவர்கள்

Page 20
'வில்லூன்றி மயானமாக' 1953ஆம் ஆண்டில் தோன்றிப்
இடைபாதை இல்லை' என்னும் நாவலாக விஸ்வரூ இவ்வாக்கம் காரணமாக 1953ஆம் ஆண்டு முதல் இற்: கொண்டிருப்பதையும் முற்போக்குவாதிகள் புகழ்ந்து இவ்வாக்கம் 'எரிகோளம்' என்னும் பெயரில் வெளிவ பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அகஸ்தியரது "மேய்ப்பவர்கள்’ (1990) என்னு பரிசில்கள் வழங்கிக் கெளரவித்துள்ளன. இதே போன் கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு வரலாறு' ஆகிய வழங்கப்பட்டன. அகஸ்தியரது ஆக்கங்கள் அவரது ( பெயர்களிலும் வெளிவந்துள்ளமை சிந்திக்க வேண்டியெ வேண்டி நிற்கும் தீவிரப் போக்கும் அசுரத்தனமான எ அசுரத் துணிச்சலுடனும் நையாண்டியுடனும் கண்டிசி எரிச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. அதனால் அ முறையில் விமர்சித்தனர். தூவித்தனர். அத்தகையவ அகஸ்தியருடையதா, பிறருடையதா எனத்திணறச் செய் ஆலடியம்மான், காலன், தீட்சண்யன், எஸ்.ஏ, அருளம் ஈழத்துச் செல்வன், சத்தியமூர்த்தி, நவமணி, நவஜோதி, கலைதாசன், புதுமைப்பிரியன் முதலிய அவரது புனை நவமணி முதல் ஜெகனி ஈறாக உள்ள ஐந்து புனைடெ பிள்ளைகள் நால்வரினதும் சொந்தப் பெயர்களாகும்.
என்றுமே சத்தியத்தை இதய சுத்தியோடு நேசி ஆக்கங்களையோ செயற்பாடுகளையோ கண்டிக்க வேண் பாராட்டவும் தவறுவதில்லை. அத்தகைய சந்தர்ப்ப மாறானவர்களையும் மனம் திறந்து போற்றியுள்ளா விமர்சகர்களுள் ஒருவரான க.நா.சுப்பிரமணியத்தின் எழு சுட்டிக் காட்டியுள்ள அதே சமயம் அவரது எழுத்தின் த எழுத்திற் பொதிந்திருப்பதாகவும் அவரது ஆக்கங் விளங்குவதாகவும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதுபோன்றே ஆறுமுகநாவலரை விமர்சிக்குப் தனமானது, தமிழ் இனத்துக்கே சாபக்கேடாக அமைந் (ஆறுமுகநாவலர்) மேல்நாட்டுக் கலாச்சாரத்தையும் க. புருஷர் என்பதில் ஐயமில்லை. ' 12 எனவும், 'மனி விஞ்ஞான இயக்கவியல் தத்துவத்தை தோற்றுவித்த கா மக்கள் ஜனநாயக சமத்துவ சமுதாய நீதியை நிர்ணயிக்க பரப்பில்நமது ஆறுமுகநாவலரைநழுவவிட்டு எவ்வாறு அவ்வாறே ஈழத்துத் தமிழ் சிருஷ்டி இலக்கியப் பரப்பில் ஜனாப் சித்திலெவ்வை அவர்களை மறைத்து விட்டுத்தமி (1Քlգայո3յl. '' 13 எனவும் கூறியுள்ளமை அவதானிக்கத்தச்
அகஸ்தியர் பதிவுகள் என்னும் பெயரில் ெ நூற்றாண்டின் இரு தமிழ்நாவல்கள், மானிட தரிசனங்கள் மத, மொழி, பிரதேச உணர்வுகளைக் கடந்த அவரது விரி மனோ பக்குவத்தையும் ஒருங்கே காண முடிகின்றது. பண்புகளுள் இதுவுமொன்றாகும் என்பதில் மாற்றுக் கரு

படிப்படியாக வளர்ந்து 1992ஆம் ஆண்டு 'எரிநெருப்பில் பமெடுத்த ஆக்கம் விதந்து கூறக்கூடியதொன்றாகும். றைவரை சனாதனிகள் பலர் அகஸ்தியருக்கு வசைபாடிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கலாம். அதே சமயம் ந்தபோது ‘ஈழநாடு’ பத்திரிகையின் விசேடப் பரிசையும்
|ம் சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசும்தமிழக அரசும் று இவரது 'மண்ணில் தெரியுதொரு தோற்றம்', 'நாட்டுக் வற்றுக்கும் இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசில்கள் சொந்தப் பெயரில் மட்டுமன்றி இருபத்து நான்கு புனை தான்றாகும். அகஸ்தியரது கருத்துவீச்சும் சமுதாய மாற்றம் ழத்து வேகமும் கண்டிக்க வேண்டியவற்றைத் தயங்காது கும் இயல்பும், அவர்மீது சிலருக்கு குரோதத்தையும் அகஸ்தியரது ஆக்கங்களை அத்தகையவர்கள் பண்பற்ற ர்களைத் 'திக்குமுக்காட வைக்கும் வகையிலும் இவை பும்நிலையிலும் அவரது புனைபெயர்கள் பல விளங்கின. பலனார், குறுமுனிவர், வித்தக பண்டிதர், யாழ்ப்பாணன், ஜெகா, ஜீவா, ஜெகனி, நாவலன், வசந்தன், லெனினிஸ்ட், பெயர்கள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பயர்களும் உண்மையில் அவரது துணைவியாரினதும்
க்கும் இயல்பு கொண்ட அகஸ்தியர் ஒருவரையோ அவரது ாடியவிடத்துக் கண்டிக்கவும் பாராட்ட வேண்டியவிடத்துப் ங்களில் தனது கருத்தியலுக்கும் கொள்கைகளுக்கும் ர். தமிழகத்தின் சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களுள் - ழத்துகளிலும் விமர்சனங்களிலும் தாம் கண்ட குறைகளைச் ார்மீகம் தம்மைக் கவர்ந்ததாகவும் மனித நேயம் அவரது கள் பல ஆழஅகலமான பரிசோதனை முயற்சிகளாக
.
பிடத்து, அவர் பரப்பிய 'கலாசாரப் பண்பாடு' பிற்போக்குத் தது எனக் கண்டித்துள்ள அதே அகஸ்தியர், ". அவர் ாலனியாதிக்கத்தையும் எதிர்த்துச் சமராடிய ஒரு தேசிய தகுலத்தின் ஒளிமயமான வாழ்வுக்கென்று புதிய சமூக ர்ல் மாக்ஸை நிராகரித்துவிட்டு உலகில் எவ்வாறு புதிய முடியாதோ, ஈழத்துத் தமிழ்க் கலை கலாசார இலக்கியப் ஈழத்துத்தமிழ்ப் பாரம்பரியத்தைப் பறைசாற்றமுடியாதோ, நாவல் இலக்கியத்தை முதன் முதலில் தோற்றுவித்த நமது ழ்நாவல் இலக்கிய வளர்ச்சிவரலாறு பற்றிப்பிரஸ்தாபிக்க கது. வளிவந்துள்ள அவரது கட்டுரைத் தொகுதி முதல் ஒரு முதலியன ஈறாகவுள்ள அனைத்து ஆக்கங்களிலும் இன. ந்த மனப்பாங்கையும் சத்தியத்தைநித்தியமாகப் போற்றும் ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் த்துக்கு இடமில்லை.
N

Page 21
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கண்டியில் அவர் வாழ்ந்த பதினேழு ஆண்டுகள் மிக முழுத்தகைமையுள்ள தொழிலாளவர்க்கத்தைக் கொண் போது மலையக தொழிலாளர்களின் அவலங்களை 2 அவர்களிடமிருந்து கற்றவற்றைப் புடம்போட்டுச் சிறு படைப்பதற்கும் ஏற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
கண்டியில் அவர் வாழ்ந்த போது மலைய இரா.சிவலிங்கம், கே.கணேஷ் முதலிய முதுபெரும் எழு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சங்கம், அமைத்துப் பலதரத்துமக்களுடனும் இணைந்து! மலையகத்தில் வசித்த அனுபவம். பாரதி சொன்ன உண் வஞ்சிக்கப்பட்டு மரத்துப்போன ஒரு வாழ்க்கை முறை மலையக மக்கள் குமுறுவதை அவதானித்தேன். மலையக
எனவும் "மலையகம், யாழ்ப்பாணத் தமிழ் இணைத்து எத்தனையோ சிறுகதைகள், நாவல்கள் எழு தங்களை இணைத்துக் கொண்டதால் மட்டுமல்ல, அப்பா புத்துணர்வையும் ஊட்டியதாகப் புரிந்துணர்வு கொண் என்பால் அன்பு கூர்ந்து அன்றாடம் சந்தித்து, பாசத்துடன் சம்பவங்கள் ஏராளம்.' 15 எனவும் அவர் கூறியுள்ளன அகஸ்தியரின் நீ என்னும் (உணர்வூற்றுருவ கண்டி, மாத்தளை ஆகிய நகரங்களில் முறையே இரா. ச் இடம்பெற்றதுடன் அகஸ்தியருக்குப் பாராட்டு விழா அகஸ்தியரின் இலக்கியப் பணிகளைக் கெளரவிக்கும் திரு.நாகலிங்கம் அவர்களது தலைமையில் பாராட்( சேவையிலிருந்து ஓய்வுபெற்றபோது திரு.கே.கணேஷ் அ
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வ காரணங்களால் தோட்டங்களிலிருந்து விரட்டியடிக்கட் கொழும்பு முதலிய நகர்ப்புறங்களில் தெருவோரங்களிலு வாழ்க்கைப் போராட்டம் நடாத்துவோரையும் மையம பிராத்தனை, இரத்தசாட்சிமுதலிய பல சிறுகதைகளையும் தெரியுதொரு தோற்றம் முதலிய நாவல்களையும் அவர்
அகஸ்தியரது ஆக்கங்களுள் அதிகமான யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு அங்கு வாழ்வியலம்சங்களையும் பலவேறுபட்ட பிரச்சினை இறுக்கம், அதனடியாகத் தோன்றும் அவலங்கள் மு. இற்றைவரை யாழ்ப்பாண மண்ணில் நிகழ்ந்து கொ விழுமியங்களையும் சீரழிவுகளையும் உயிர், உடைமை கெடுபிடிகளையும் அற்புதமான முறையிற் படம்பிடித்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட யாழ்ப்பாணத்தைப் அவதானிக்கத்தக்கது.
அவரது ஆக்கங்கள் சித்திரித்துக் காட்டும் யா நாவலர் காலத்திலிருந்து 1950களின் முற்பகுதி வரை 1970களின் இறுதிவரையிலான யாழ்ப்பாணம், கடந்த

அரசாங்க அலுவலராக அவர் கடமையாற்றிய போதும்
மக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலங்கையின் - மலையகத்தின் தலைநகரான கண்டியில் அவர் வாழ்ந்த ள்ளபடி உணர்வதற்கும் அவர்களோடு பழகுவதற்கும் கதைகளாகவும் குறுநாவல்களாகவும், நாவல்களாகவும்
கத்தின் சண்டமாருதம்' எனப்பட்ட சட்டத்தரணியான த்தாளர்கள் முதல் இளந்தலைமுறையினர் வரை பலரதும் pதலியோரதும் ஆதரவுடன் 'மலையககக் கலைஇலக்கியச் இலக்கியப் பரிவர்த்தனைபுரிந்தார். 'பதினேழு ஆண்டுகள் மை ஒளிஅவர்கள் வாழ்வில்தவழ்கிறது. நெடுங்காலமாக யில் சகிக்க முடியாத வேதனையை அடக்கிக் கொண்டு எழுத்தாளர்கள் என்அன்பிற்குப்பாத்திரமானார்கள்." 14ه
மக்களையும் முஸ்லிம் மக்களையும் கதாபாத்திரங்களாக தியுள்ளேன். இப்படைப்புகளில் பிரதான பாத்திங்களாகத் த்திரங்கள் மூலம் சமுதாயப் பற்றையும் புதிய யுகத்தையும் ட பெருவாரியான மலையகத் தமிழ், முஸ்லிம் மக்கள் பழகி, தங்களில் ஒருவனாக என்னையும் ஆக்கிக் கொண்ட ம மனங்கொள்ளத்தக்கது.
கச் சித்திரம்) நூல் வெளியீட்டு விழா 1968ஆம் ஆண்டு சிவலிங்கம், ஏ.வி.பி.கோமஸ் ஆகியோரது தலைமையில் வும் இடம்பெற்றது. இதேபோன்று 1978ஆம் ஆண்டு வகையில் கண்டியில், "செய்திப் பத்திரிகை ஆசிரியர் விழா நடைபெற்றது. 1981ஆம் ஆண்டு அரசாங்க அவர்களது தலைமையில் பிரிவுபசார விழாநடைபெற்றது.
பாழ்க்கைப் போராட்டங்களை மட்டுமல்லாது பல்வேறு பட்டுத் தொழிலாளர் சமூகத்தின் உதிரிகளாகக் கண்டி, ம் ஒதுக்குப்புறப்பகுதிகளிலும் பரிதாபகரமான முறையில் ாகக் கொண்டு மேய்ப்பர்கள், கள்ளத்தோனி, பிரசாதம் நீ என்னும் உணர்வூற்றுருவகச்சித்திரத்தையும் மண்ணில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வையும் பல கட்டுரைகளும் அவர் பிறந்து வாழ்ந்த வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களின் ளையும் சாதீயக் கொடுமைகளையும் சீதன முறையின் தலியவற்றையும் ஆறுமுகநாவலர் காலத்தில் இருந்து ண்டிருக்கும் பலதுறை மாற்றங்களையும் மாறிவரும் இழப்புகளையும் மனிதவதைகளையும் பலப்பரீட்சைக் ரக் காட்டி, அலசி ஆராய்பவையாகவும் கடந்த ஐம்பது பற்றிய வரலாற்று ஆவணங்களாகவும் விளங்குதல்
ழ்ப்பாணத்தை, ஆறுமுகநாவலர் காலத்து யாழ்ப்பாணம், பிலான யாழ்ப்பாணம், 1950களின் பிற்பகுதியிலிருந்து பதினைந்து ஆண்டுகால யாழ்ப்பாணம் என வகுத்து

Page 22
நோக்குதல் பொருந்தும். இவ்வகையிலே அவரது நூற்றுக் அகஸ்திர் கதைகள், எவளுக்கும் தாயாக முதலிய தொ சீடர்களும் (நாடகம்), அலைகளின் குமுறல் (நாடகம்), நரகத்திலிருந்து . (குறுநாவல்களின் தொகுப்பு) திரு எரிநெருப்பில் இடைபாதை இல்லை (நாவல்) மானிடத என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பல யாழ்ப்பாணத்தை இந்தக் காலத்து இளந்தலைமுறையின(
இலங்கையில் சமகால வடக்கு, கிழக் அனைத்திலங்கையினது நிலைமைகளையும் சமகால அலசுபவையாகவும் அமையும் வகையில் மரணப் போர 'மரண சாஸனம்' (கருத்தியல் சார்ந்த பிரகடனநூல்) ஆகிய தொகுப்பு: கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம் 6 'எனது இலக்கிய வாழ்க்கை' என்னும் நூலையும் எழுதி இத்துயர் நாட்டிலே’ என்று எண்ணியோ எவ்வவோ அவற்றைப் பூர்த்தி செய்வார் யாரோ!
அகஸ்தியரின் அதிகமான ஆக்கங்கள் இலக்கி மொழியியல் ஆய்வாளர்களுக்கும் உதவும் வகையில் ச வலராற்று ஆவணங்களாகவும் மண்வாசனையை மிகத்தி கூறத்தக்க ஒன்றாகும். மறைந்து கொண்டு வரும் பேச்சு கொண்டிருக்கும் சொற்கள், பழமொழிகள், புதுமொழிகள், தொடர்கள், அவரது ஆக்கங்களில் இடம்பெற்றுள்ள வெ முதலியன தனியாக ஆராயத்தக்கவை.
அகஸ்தியர் அமரத்துவம் அடைந்ததையடு அவுஸ்திரேலியா வரை உலகின் பல பாகங்களிலும் அன்ன கூட்டங்களும் நினைவஞ்சலிகளும் இடம்பெற்றுள்ளன; இ நூற்றுக்கணக்கான ஆக்கங்களைதுல் வடிவம் பெறச்செய்தg
சான்றாதாரங்கள்.
1. அகஸ்தியர் பதிவுகள், 1993, பக். 159-160. 2. எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், சந்திப்பு - லெ.மு 3. மேலது பத்திரிகை. 4. அகஸ்தியர் பதிவுகள், 1993, பக் 87 5. இக் கட்டுரையாசிரியர் அகஸ்தியருடன் நேர்க
தகவல்கள். 6 அகஸ்தியர் பதிவுகள், 1993, பக்.91 7. அகஸ்தியர், எஸ். கலை இலக்கியமும் வர்க்கநி 8. அகஸ்தியர், எஸ். இயக்கவியல்வாதம்', தினகர 9. இக்கட்டுரையாசிரியர் அகஸ்தியருடன் நேர்கான 10. அகஸ்தியர் பதிவுகள், 1993, என்னும் நூலில் இ 11. மேலது நூலில் இவை பற்றிய விபரங்களைக் கா 12. மேலது நூல், பக். 131-132. 13. அகஸ்தியர், எஸ். ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் 14. அகஸ்தியர் பதிவுகள். 1993, பக்.50 15. மேலது நூல், பக்.12.

ணக்கான சிறுகதைகள் (இலவு காத்த கிளி, மேய்ப்பர்கள், குதிகள் உட்பட), நவீன பரமார்த்த குருவும் அவர்தம் மகாகனம் பொருந்திய. (குருநாவல்களின் தொகுப்பு), மணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் (நாவல்), ரிசனங்கள் முதலிய ஆக்கங்களும் அகஸ்தியர் பதிவுகள் பும் விதந்து கூறத்தக்கவை, இவை அந்தக் காலத்து நக்கு அறிமுகப்படுத்துபவையாகவும் விளங்குகின்றன.
குப் பகுதிகளின் நிலைமைகளை மட்டுமல்லாது உலகப் போக்குகளையும் பிரதிபலிப்பவையாகவும் "ட்டத்தின் மத்தியிலும் "போரும் சமாதானமும் (நாவல்) பவற்றையும் 'அர்த்தமுள்ள மக்கள் வாழ்க்கை (கட்டுரைத் ான்னும் நூலுக்கு மறுப்புவாதமாக), என்னும் நூலையும் க் கொண்டிருந்தார். இதற்கிடையில் 'ஏன் பிறந்தனன் அவற்றைப் பூர்த்தி செய்யாமலே இவ்வுலகை நீத்தார்.
ய ஆய்வாளர்களுக்கு மட்டுமன்றிச் சமூக, பண்பாட்டு, மூக பண்பாட்டு வாழ்வியலம்சங்களைப் பிரதிபலிக்கும் 0ம்பட வெளிப்படுத்துபவையாகவும் விளங்குதல் விதந்து வழக்குச் சொற்கள், புதிதாகப் பேச்சுவழக்கிற்கு வந்து உவமைகள், உருவகங்கள், உவமைத் தொடர்கள், மரபுத் வ்வேறு வகையான நடை, புதிய சொல்லுருவாக்கங்கள்
த்து பிரான்ஸ் முதல் கனடா வரை இலங்கை முதல் எாரது உன்னத பணிகளை நினைவு கூருமுகமாக இரங்கற் டம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவரது லும் அன்னாருக்குநாம் செய்யும்நன்றிக்கடனாக அமையும்.
ருகபூபதி. தினகரன் வாரமஞ்சரி, 31.12.1995 பக் 23
ாணல் (எழுத்து மூலம்) மூலமாகப் பெற்றுக் கொண்ட
லைப்பாடும், 1991.
ன், 4.9.1984, பக்.4, னல் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்கள். வை பற்றிய விபரங்களைக் காணலாம். னலாம்.
நாவல்கள், 1988, முன்னுரை.

Page 23
தன்னிகரில்லாத் தலைவர்களும் தம
கலாநிதி.துரைமனோகரன், முதுநிலை விரிவுரை
தமிழ்நாட்டு அரசியலில் முதன்முதலாகப் டெ தமது செல்வாக்கைப் பரப்பியவர்கள் சோழப் பெரு ஆகியவற்றைக் கொண்டும் பெரும் வெற்றிகளை உயர்ந்தோங்கிய கோயில்களை அமைத்தும் பெரும் ( அவர்கள் விளங்கினர். அத்தகைய பெரும் பேரரசர்கள்க ஏற்படுத்திய காலமாக விளங்குகின்றது. என்றும் இல்லா மன்னர்களைத் தன்னிகளில்லாத் தலைவர்களாகச் சித்தி பெருவாரியாகத் தோன்றின. சோழர் காலத்தில் எழு நாரணர்களாகவே - திருமாலின் உலக வடிவாகவே - க தம்மை அழைப்பதையே பெரிதும் விரும்பினர். மக்கள் பொருந்திய தன்னிகரற்ற தலைவர்களாகவே தம்மைக் தோன்றிய பல்வேறு இலக்கியங்களும் பல்துறை நூல்களு
சோழப் பேரரசர்களைத் தன்னிகரில்லாத் த தோன்றிய அணிநூலான தண்டியல்காரத்தின் பங்களிட அணிநூலின் தழுவலான அந்நூலில் காவியத்தின் இ குறிப்பிடும்போது காவியத்தின் இன்றியமையாத அம்சா வேண்டும் என்பதையும் கூறுகின்றது. தண்டியலங்காரம் நோக்குவோம்.
'பெருங்காப்பியநிலை பே வாழ்த்து வணக்கம் பருபொ ஏற்புடைத்தாகி முன்வர விட நாற்பொருள் பயக்கு நடைெ தன்னிகரில்லாத் தலைவனை
மலைகடல் நாடு வளநகர்ப இருசுடர்த் தோற்றம் என்றி நன்மணம் புணர்தல் பொன் பூம்பொழில் நுகர்தல் புனல் தேம்பிழி மதுக்களி சிறுவை புலவியிற் புலத்தல் கலவியி
இன்னன புனைந்த நன்னை மந்திரம் தூது செலவுகால் ெ சந்தியில் தொடர்ந்து சருக்க பரிச்சேதம் என்னும் பான்ன நெருங்கிய சுவையும் பாவ கற்றோர் புனையும் பெற்றிய
எனத் தண்டியலங்காரம் காவியம் பற்றிக் வணக்கம் நூலில் எடுத்துக் கூறும் பொருள் ஆகிய இவ அமைந்து, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு ( தலைவன்ைக் கொண்டமைந்து, மலை, கடல் நாடு, நகர் வருணனைகள் கொண்டு விளங்கி, திருமணம், முடிசூட ஊடல் கலவி முதலியவற்றையும் கொண்டு சிறந்த ந

ழ்ப்படக் கதாநாயகர்களும்
/ாளர், தமிழ்த்துறை.
ரும் பேரரசு ஒன்றை ஏற்படுத்தி, கடல் கடந்தநாடுகளிலும் 5மன்னர்கள் ஆவர். சிறந்த தரைப்படை, கடற்படை ஈட்டியும், தமது ஆட்சிப் பரப்பை விசாலமாக்கியும் பேரரசர்களாகவும் தன்னிகரில்லாத் தலைவர்களாகவும் ாலம் தமிழ் இலக்கியப் போக்கிலும் பெரும் சாதனைகளை த அளவுக்குப் பேரிலக்கியங்களாகிய காவியங்கள் சோழ ரிக்கும் பல்வேறு சிற்றிலக்கியங்கள் அக்காலகட்டத்திற் ந்த பல்வேறு இலக்கியங்களும் அவர்களை 'அவனி ாட்ட முனைந்தன. சோழப் பெருமன்னர்களும் அவ்வாறு ரின் முன் வெறும் மன்னர்களாக அன்றி, தெய்வாம்சம் காட்டப் பெரிதும் முயன்றனர். இதனை அக்காலத்தில் நம் மெய்க்கீர்த்திகளும் திறம்படப் புலப்படுத்துகின்றன. தலைவர்களாகக் காட்டும் முயற்சியில், அக் காலத்திற் பும் குறிப்பிடத்தக்கதாகும். வடமொழியில் தோன்றிய இயல்பு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு வ்களுள் ஒன்றாகத் தன்னிகளில்லாத் தலைவன் இடம்பெற காவியத்துக்குரிய இயல்புகள் குறித்து கூறுவதை முதலில்
சுங் காலை ாருள் இவற்றினொன்று பன்று நெறித்தாகித் ா யுடைத்தாய்
ருவம் னையன புனைந்து முடி கவித்தல் விளையாடல் ரப் பெறுதல் ற் கலத்தலென்று
டத் தாகி
'வன்றி ம் இலம்பகம் மயின் விளங்கி மும் விரும்பக்
தென்ப"
கூறுகின்றது. இவற்றைத் தொகுத்து நோக்கின் வாழ்த்து ற்றுள் ஒன்று பொருத்தமாகக் காவியத்தின் முற்பகுதியில் பொருள்களையும் கொண்டதாக விளங்கி, தன்னிகரில்லாத்
பருவங்கள் குரிய சந்திரரின் உதயம் போன்ற இயற்கை ல் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் குழந்தைப்பேறு, டையில் அமைந்து மந்திராலோசனை, தூது செல்லல்,

Page 24
படையெடுப்பு போர் செய்தல், வெற்றியீட்டுதல் ஆகிய பரிச்சேதம் என்னும் உட்பிரிவுகளையும் கொண்டு புை இவற்றுள், 'தன்னிகரில்லாத் தலைவனை யுடைத்த வேண்டியதாகும். காவியம் இந்த அம்சத்தையே தண்டியலங்காரத்தின் உட்கிடையாகும்.
தமிழில் காவியங்கள் சங்கமருவிய காலம் தோன்றியுள்ளன. தமிழின் முதற்காவியமாகிய சிலப் மணிமேகலையும் அக்காலத்திலே தோன்றியவையாகும். அம்சம் பேணப்படவில்லை. காவியத் தலைவியரே ( காலத்திலிருந்தே தன்னிகரில்லாத் தலைவன் பற்றிய ே கட்டத்திலிருந்தே காவியங்களிலும் கதைத்தலைவன்பா சோழர் காலப் பிற்பகுதியிலிருந்து தோற்றம் பெற முப்பொருள்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் பதியின்இ சாயல் இருப்பதை இலக்கிய விமர்சகர்கள் சுட்டிக் காட்டு
சோழர்காலக்காவியங்களில் ஒருசில காவியங் தன்னிகரில்லாத்தலைவன் என்ற கோட்பாடே ஆர்வத்தோ தேவரின் சீவகசிந்தாமணியே தண்டியலங்காரம்கூறும் பல் அம்சத்தையும் பலமாகப் பின்பற்றுகின்றது எனலாம். ந தண்டியலங்காரம் கூற, சீவகசிந்தாமணியின் கதைத்தலைவி பொன் முடிகவிழ்தல் (முடிசூடி அரசாளல்) பூம்பொழில்நு (நீராடி மகிழ்தல்) போன்ற அம்சங்களும் சீகவசிந்தாமண வீரம் தோற்றப்பொழிவு கொடைத்திறம், காதல், வாழ் தன்னிகரில்லாத் தலைவனுக்குரிய அம்சங்களாகச் சீவக சி தோன்றிய இன்னொரு காவியமான கம்பராமாயணத்தில் அதேவேளை ஓர் இலட்சிய புருஷனாகவும் படைக்க காவியமாகவும் அது விளங்குகின்றது. ஆனால், சீவக் தன்னிகரில்லாத் தலைவன் என்ற கோட்பாட்டையும் கொண்டே சீவகன் என்ற பாத்திரம் படைக்கப்பட் அளிக்கப்படவில்லை. v -
இதனைநமது தமிழ்த் திரைப்படக் கதாநாயகர் ஆய்வாகும். தண்டியலங்காரம் மூலம் சீவகசிந்தாமணிக்க கோட்பாடு காலப்போக்கில் தன்னையறியாமலை தமி இன்னொரு வகையிற் கூறுவதாயின் இலக்கியத்தளத்தி நூற்றாண்டிற் திரைப்படத்துறையில் செல்வாக்குச் செலு நோக்கின் அவற்றுட் பெரும்பாலான தன்னிகரில்லா உருவாக்கப்பட்ட கதாநாயகர்களைக் கொண்டு விளங்குe
பொதுவாகவே தமிழ்த் திரைப்படக் கதாந எதிர்பார்க்கப்படுகிறது. வீரதீரச் செயல்கள் புரிந்து எதி செய்வது, சமூகநீதியை நிலைநாட்டுவது போன்ற அம்சா சில விதிவிலக்குகள் இருப்பினும், தமிழ்த்திரைப்படங் பொதுவிதியாக இது அமைந்துள்ளது.
தமிழ்த் திரைப்பட நடிகர்களுள் எம்.ஜி.ஆர் & தன்னிகரில்லாத் தலைவன் என்ற கோட்பாட்டுக்கு கதைத்தலைவன் பாத்திரத்துக்கும் ஒத்தவையாக வில் திரைப்படத்திலும் ஒரே சாயலில் வார்க்கப்பட்டவர்களாக வீரதீரச் செயல்கள் புரிந்து எதிரிகளை வெற்றி கொள்

னவும் தொடர்ச்சியாக அமைந்து, சருக்கம் இலம்பகம் னயப்படுவது பெருங்காவியம் என்பதை அறியலாம். ய்' என்ற அம்சமே நாம் இங்கு கருத்திற் கொள்ள முக்கியமாகக் கொண்டமைய வேண்டும் என்பது
எனப்படும் களப்பிரர் காலத்திலேயே முதன்முதல் பதிகாரமும், அதனோடு கதைத் தொடர்பு கொண்ட
ஆனால், அவற்றிலே தன்னிகரில்லாத் தலைவன் என்ற ழக்கியத்துவம் பெறுகின்றனர். சோழப் பெருமன்னர் காட்பாடு வளர்சிபெறத் தொடங்கியமையால் அக்கால த்திரம் முதன்மை பெறத் தொடங்குவதைக் காணலாம். * தொடங்குகின்ற சைவசித்தாந்தத் தத்துவத்திலும் லக்கணத்தில் சோழர்காலத்தன்னிகளில்லாத்தலைவனின்
II.
களைத்தவிர்த்து நோக்கும் போது பெரும்பாலானவற்றில் டு பின்பற்றப்படுவதைக் காணலாம். இவற்றுள், திருத்தக்க வேறு அம்சங்களோடு தன்னிகளில்லாத் தலைவன் என்ற iன்மணம் புணர்தல் (நல்ல திருமணம் செய்தல்) எனத் பன்சீவகன் எட்டுப் பெண்களைத்திருமணம் செய்கிறான். கர்தல் (சோலையில் உலாவிவரல்). புனல் விளையாடல் ரியில் போதிய இடத்தைப் பெற்றுள்ளன. சுருங்கக்கூறின் க்கையை உல்லாசமாக அனுபவித்தல் போன்றவையே ரிந்தாமணியில் உணர்த்தப்படுகின்றன. சோழர் காலத்தில் ) இடம்பெறும் இராமனும் தன்னிகரில்லாத் தலைவனே. ப்பட்டுள்ளான். சிறந்த கதையமைப்பைக் கொண்ட சிெந்தாமணி அப்படியன்று. தண்டியலங்காரம் கூறும் பொழுதுபோக்கு அம்சங்களையும் அடிப்படையாகக் டுள்ளது. கதைச்சிறப்புக்கு அதில் முக்கியத்துவம்
பாத்திரங்களோடு பொருத்தி நோக்குவது சுவாரசியமான ாவியத்தைப் பாதித்ததன்னிகரில்லாத்தலைவன் என்னும் ழ்த் திரைப்படங்கள்ையும் பாதிக்கத் தொடங்கியது. ம் ஆதிக்கம் செலுத்தி வந்த இக் கோட்பாடு இருபதாம் ரத்தத் தொடங்கிற்று. நமது தமிழ்த் திரைப்படங்களை த் தலைவன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பதைக் காணலாம்.
ாயகன் சகலகலாவல்லவனாக இருக்க வேண்டுமென ரிகளை வெற்றி கொள்வது பாடுவது ஆடுவது, காதல் களைக் கொண்டதாக அப்பாத்திரம் வார்க்கப்படுகிறது. 5ள் உட்படப் பொதுவாக இந்தியத் திரைப்படங்களின்
ாற்ற கதாநாயகப் பாத்திரங்கள் தண்டியலங்காரம் கூறும் சீவக சிந்தாமணியில் இடம்பெறும் சீவகன் என்ற ாங்குகின்றன. எம்.ஜி.ஆரின் கதாநாயகர்கள் எந்தத் வே விளங்குவதைக் காணலாம். தனியொருவராகநின்று வது, ஆடல் பாடல்களில் வல்லவராக விளங்குவது,
N
الم

Page 25
பூஞ்சோலைகளில் காதலிப்பது, காதலியுடன்நீர்விளைய இயல்புகளைக் கொண்ட ஒரேமாதிரியான பாத்திரங் விவசாயியாக, ரிக்ஷாக்காரனாக, மீனவ நண்பனாக, ஏற்றிருப்பினும் அவை அனைத்தும் தன்னிகரில்லாத்தன விளங்குகின்றன.
இத்தகைய தன்னிகளில்லாத் தலைவன் பாத்தி மாயைக்குள்ளேயே சிக்க வைக்கின்றன. திரைப்பட எதிர்பார்ப்புக்களையும், இயலாமைகளையும் தன்னிகளில் போன்ற ஓர் உணர்வை அடைகின்றனர். மறுபுறம் திரைட 'இமேஜை' உயர்த்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற் பணப்பெட்டிகளையும் இத்தகைய பாத்திரங்கள் நிரப்பி (பொதுவாக இந்தியப்படங்கள்) இத்தகைய போக்கினின் ஏற்ற தன்னிகளில்லாத் தலைவன் பாத்திரங்கள் அவரின் பின்தமிழ்த்திரைப்படங்களில் தன்னிகளில்லாத்தலைவன் ரஜனிகாந்த். அவரது அரசியல் உயர்வுக்கும் இப் பாத்திர
இத்தகைய தன்னிகரில்லாத்தலைவன் பாத்தி ஏற்று நடித்தவர்களாக இரு முக்கிய நடிகர்களைக் குறி கமலஹாசன். இருவரும் வழிவழிவந்ததன்னிகரில்லாத்த வித்தியாசமான பாத்திரங்களையும் அவர்கள் தாங்கியு காரணமாகும். தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரையி அம்சங்கள் முழுவதையும் முழுமையாக உடைத்தெறிந்த வயதினிலே என்ற திரைப்படத்தில் கமலஹாசன் ஏற்று தலைவனை மனத்திற் கொள்ளாமல் இயல்பாக உருவாக்
/ போற்றுபவர் போற்றட்
புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டு
தொடர்ந்து செ6 ஏற்றதொரு கருத்தை
உள்ளம் ஏற்றா6 எடுத்துரைப்பேன்; எவ நில்லேன் அஞ்
உள்ளத்துள்ளது கவிை உருவெடுப்பது தெள்ளத் தெளிந்த தமி தெரிந்துரைப்ப
கவி ܢܠ

ாடுவது,சமூகநீதியைநிலைநாட்டப்பாடுபடுவது போன்ற களாக அவை உருவாக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் படகோட்டியாக, மாட்டுக்காரனாகப் பல பாத்திரங்கள் லவன் என்ற அடிப்படையிலேயே வார்க்கப்பட்டனவாக
ர வார்ப்பு, திரைப்பட ரசிகர்களை யதார்த்தத்தை மறந்த ரசிகர்கள் தங்கள் கனவுகளையும், ஆர்வங்களையும் லாத்தலைவன்பாத்திரம்திரையில் நிறைவேற்றிவைப்பது ப்படநடிகர்கள் இத்தகைய பாத்திர வார்ப்பு மூலம் தங்கள் படுகின்றது. அத்தோடு, படத் தயாரிப்பாளர்களின் விடுகின்றன. அதனால், பெரும்பாலான தமிழ்ப் படங்கள் iறும் முற்றுமுழுதாக விடுபட முடிவதில்லை. எம்.ஜி.ஆர் அரசியல் உயர்ச்சிக்கும் வழிகோலின. அம்.ஜி.ஆருக்குப் பாத்திரத்தைத் தற்போது பயன்படுத்திக் கொண்டிருப்பவர் "ம் அனுசரணையாக அமையக் கூடும்.
ரத்துக்கு மாறான பாத்திரங்களையும் தமிழ்த் திரையுலகில் ப்ெபிட வேண்டும். ஒருவர் சிவாஜி கணேசன், மற்றவர் லைவர் பாத்திரங்களையும் ஏற்றுநடித்துள்ளனர். எனினும் ள்ளனர். அவர்கள் இருவரதும் நடிப்பாற்றலே அதற்குக் ல் தன்னிகரில்லாத் தலைவன் என்ற பாத்திரத்துக்குரிய பாத்திரமாக விளங்குவது, பாரதிராஜாஇயக்கிய பதினாறு நடித்த சப்பாணி என்ற பாத்திரமாகும். தன்னிகரில்லாத் கப்பட்ட பாத்திரமாக அது விளங்குகின்றது.
.டும்; N
b;
ல்வேன்!
ான(து)
பர்வரினும்
சேன்
கவியரசு கண்ணதாசன் மத - இன்பம்
கவிதை; ழிெல் - உண்மை து கவிதை மணி தேசியவிநாயகம்பிள்ளை ノ

Page 26
நலமுடன் வாழ்க
எம்.வை.எம்.அலி -
மலையருவி சலசலக்கும் அழ குறிஞ்சிநிலக் கோட்டையிலே கலையுலகின் விலையறியா (
கனியமுதே! இளங்கதிரே! ந6
கதை, கவிதை கட்டுரைகள்
கருத்துள்ள ஆக்கங்கள் பலத இதயத்தில் இதமாக அமர்ந்தி இளங்கதிரே. நீயெங்கும் சுட
அறுபத்து ஒன்றோடு அவதார அயராது தமிழுக்காய்ப் பணிெ இருபத்து ஒன்பதாம் இதழ்தன் எழுகின்ற இளங்கதிரே! நிலை
இனபேதம் இல்லாது எல்லோ இணைதற்கு வழிசெய்து தருகி மனதாறப் பலகோடி வாழ்த்து மடிமீது சொரிகின்றேன் நீநீடு
கலகங்கள் உலகெங்கும் நிை காலத்தில் ஞாலத்தில் அறிெ உலவிவரும் இளங்கதிரே! “உ அரும்பணியால் பெரும்புகழ்நீ

இளங்கதிரே !
விடுகை வருடம்
குமலை நாட்டின் உருவெடுத்து நின்று இலக்கியங்கள் தாங்கும்
ஸ்முடன் நீ வாழ்க!
கல்வியறிவு வென்று ாங்கி வந்து
lன்ப மூட்டும்
ர்வீசி வாழ்க!
LDT35
செய்து இன்று னைத் தாங்கி
)யாய்நீ வாழ்க!
ரும் ஒன்றாய் கின்ற கதிரே. $கள் உந்தன்
வாழ்க!
லகொண்டு விட்ட
வாளியை வார்க்க
உலாவரும் கலாவின்"
அடைந்துநிதம் வாழ்க.

Page 27
புதுமைகளும் மாறுதல்களும் ட
பேராசிரியர்சி. தில்லைநாதன், நிபுணத்துவ ஆ
ஒரு பண்பாடோ சமயமோ நிறுவனமோ தோன்றும் மாறுதல்களுக்கும், தேவைகளுக்கும் முகங்கெ பழைய பெருமைகளிலும் சாதனைகளிலும் தன்னை இழந் உகந்தவற்றைப் பேணிக் கொள்ளத்தயாராயிருத்தல் வேை துணையாகக் கொள்வதோடு, எதிர்கால வளர்ச்சிக்குவே பழையதைச் சற்றும் விடாமலும் புதியதை முற்றும் வே பழையன கழிதலும் புதியன புகுதலும் பற்றி எண்ணிப்ப 'மாறுதல் இந்த ஜகத்தின் முதலாவது விதி' எ மொழி, இலக்கியம், நடையுடை பாவனை முதலான பல் உள்ளன. அத்தகைய மாற்றங்கள் எல்லாக் காலப்பகு திரும்பிப் பார்க்குமிடத்து மாறுதல்களின் வேகம் எமது மாறுதல் குறித்த நோக்குக் கூடப் பெரிதும் மாறியுள்ள அப்படியே கடைப்பிடிக்கும் தன்மையும் புதியவற்றை தென்படினும், புதிய மாறுதல்கள் பெரும்பாலும் வரே மாறுதல்களின் தாக்கம் ஏற்படவே செய்கிறது.
புதிய கருத்துக்களையும் வல்லமைகளையும் விளங்குகிறது. 'பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் வளர்வதைப் பார்த்த பாரதி, 'சென்றிடுவீர் எட்டுத்திக்கு என்று பாடவில்லையா? பதினைந்தாம் நூற்றாண்டில் ஐ முன்னேற்றம் காணும் பிரக்ஞைபூர்வமான முயற்சிகள் வசப்படுத்திப் பயன்படுத்தும் வேட்கை விஞ்ஞான, தொ விளைவான மாறுதல்களினால் பழைய பல பழக்கவழக் தொழில்நுட்ப, கைத் தொழில் வளர்ச்சிகளுக்கெதி தோன்றவில்லை. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப சாதை திரும்புவது வரலாற்றுச் சாத்தியமானதல்லவென்பதையு நாடோ இனமோ நிலைபெற்றிருப்பது ஐயத்துக்கிடமாவ கைத் தொழில் வளர்ச்சி, நகரமயமாக்கம் சமூகத்துறைகளில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றன. அ இரண்டாகும். மனிதனின் மதிப்புயர்வு, மனித சமூகத்தை விதியை நிர்ணயிக்க வல்லவனாகவும் சமூக, பொருளா இன்று நோக்கப்படுகின்றான். பிரெஞ்சுப் புரட்சி ஆக்கப்பட்டனவேயன்றி எந்த ஒரு தாபனத்துக்காகவு சகோதரத்துவ சிந்தனைகளும் முக்கியத்துவம் பெற்றன.
மாறாத அல்லது மாற்ற முடியாத உலகில் அழிவுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டவனாகத் செலுத்தி உள்ளதோடு திருப்தியுற்ற நிலையில் மாற்றம் சக்திகள் பற்றியும், புதியன புகுவதும் பழையன கழில் புதியனவற்றைப் புறக்கணித்துப் பழைய பாரம்பரிய வ உலகில் இன்று அபூர்வமாகவே காணவியலும், விந்த6ை

பூலோசகர், தேசிய கல்விநிறுவகம், மகரகம,
நிலைத்திருக்க வேண்டுமாயின், காலத்துக்குக் காலம் ாடுக்கும் ஆற்றல் பெற்றதாய் அது இருத்தல் வேண்டும். துவிடாது, பழையவற்றுள் உதவாதவற்றை ஒதுக்கிவிட்டு ண்டும். முன்னைய காலங்களில் ஈட்டிய அனுபவங்களைத் ண்டிய புதிய முயற்சிகளிலும் முனைந்துநிற்க வேண்டும். ண்டாமலும் இருத்தல் சாத்தியமன்று. அந்த வகையில், ார்த்தல் பயனுடையதாகும்.
ன்றார் மகாகவிபாரதியார். சமுதாயம், அரசியல், சமயம், வேறு துறைகளிலும் மாறுதல்கள் இடம்பெற்ற வண்ணம் திகளிலும் நிகழ்ந்துள்ளனவேயாயினும், வரலாற்றைத் காலத்தில் மிகுந்து காணப்படுவதை அவதானிக்கலாம். மையினைக் காணவியலும் பாரம்பரிய வழிமுறைகளை க் கைக்கொள்வதில் துணிச்சற் குறைவும் ஆங்காங்கு வற்கப்படுகின்றன. வரவேற்கப்படாதவிடத்துத்தானும்
தேடி வளர்க்கும் ஆர்வம் இக்காலத்தில் துலாம்பரமாக கூறும் புத்தம் புதிய கலைகள்' மேலைத்தேயங்களில் ம் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' ரோப்பாவில் இடம் பெற்ற மறுமலர்ச்சி மனித வாழ்வில் மேற்கொள்ளப்படுவதற்குக் காலாயிற்று. இயற்கையை ழில்நுட்ப வளர்ச்சியினை வேகமடையச் செய்தது. அதன் கங்களும் , விழுமியங்களும் வலுவிழந்தன. விஞ்ஞான, ரான குறிப்பிடத்தக்க வலுவான இயக்கம் எதுவும் னகளைப் புறக்கணித்துப் பழைய கிராமப்புற எளிமைக்குத் ம், புதிய வளர்ச்சிகளைச் சுவீகரித்துக் கொள்ளவியலாத தையும் உலகம் உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டது.
ஸ் முதலானவற்றினால் பொருளாதார , அரசியல், வற்றுள் முக்கியமாக மனங்கொள்ளப்பட வேண்டியவை மாற்றியமைக்கும் உறுதி என்பனவே அவையாகும். தன் தார மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவனாகவும் மனிதன் சிக்குப் பின் தாபனங்கள் யாவும் மனிதனுக்காக ம் மனிதன் இல்லை என்ற கருத்தும் சுதந்திர சமத்துவ,
கழிந்து போன பொற்காலத்துக்கும் வரப்போகும் உலக தன்னை கருதிக் கொண்ட மனிதன், கிடைத்ததற்கு நன்றி மெல்ல மெல்லப் பரவியது. வரலாற்றை நிர்ணயிக்கும் பதும் குறித்தும் மனிதன் விளங்கிக் கொள்ளலானான். பாழ்க்கையை விடாப்பிடியாக நடத்துபவர்களை நாகரிக ன வேடர்களை அந்த வகையில் குறிப்பிடலாம்.
2

Page 28
தமிழ் கூறும் நல்லுலகினைப் பொறுத்தவ.ை காரணமாயிற்று. ஆட்சிபுரிந்த ஆங்கிலேயரின் அதிகார இயக்கங்கள், வர்த்தக நலன்கள், கைத்தொழில் வளர்ச்சி முதலானவை புதிய மாறுதல்களைத் துரிதப்படுத்தின. மொழியும் இலக்கியமும் பெருவாரிமக்களைச் சென்றடை தேசிய உணர்வு முதலானவை வளரவும் உதவிய அச்சிய
புதியன புகுந்தபோது பலர் அவற்றை எதிர்க் மாறுதல்களை ஆதரித்த பலர் உத்வேகத்துடன் செயற்ப பாரதியார் புதுமைக்கவி எனப்பட்டதும், பாரதிதாச புதுமைப்பித்தன் என்று புனைபெயர் சூட்டியதும் எண்ணி தூண்டப்பட்டவர்கள் பலவிடங்களில் முற்போக்கு இய இலக்கிய வளர்ச்சிக்குக் கட்டியங்கூறிய கே. ராமநாதன், 'பாரதி' என்ற சஞ்சிகை 'பாரதி தமிழுக்குப் புதுவழிகாட் காட்டும்' நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.
சமுதாயம், அரசியல், சமயம், மொழி, கலை, மாறுதல்களும் புகுந்திருப்பது மேலோட்டமாக நோ வாய்ப்புக்களை வளர்த்துக் கொள்வதற்கும் அந்தஸ் அதிகரித்துள்ளன. அறிவை ஈட்டும் வசதி இன்று கூடுதல
'வயிற்றுக்குச் சோறிட வே6
வாழு மனிதரக் கெல்லாம்; பயிற்றிப் பல கல்விதந்து - பாரை உயர்த்திட வேண்டும் பிறப்பினால் உயர்வு, தாழ்வு பாராட்டி ஒரு தாழ்வுபடுத்துவதை இன்றைய நாகரிக உலகம் ஏற்றுக் கெ "தகரென்று கொட்டு முரசே சாதி வகுப்பினையெல்லாம் பெண்களை அடிமைகளாகக் கருதி அவர்களு உத்தியோகமில்லை, உரிமையில்லை என்று அலங்கோல
'காதலொருவனைக் கைப்
காரியம் யாவினும் கை கொ
மாதரறங்கள் பழமையைக் கி
மாட்சிபெறச் செய்து வாழ்வமடி' என்று பாடு விட மாட்சிபெற அறங்களை நிலைநாட்டும் புதுமைப்டெ அரசியலைப் பொறுத்தவரை 'மன்னன் உயி வாழ்ந்த நிலை மாறிவிட்டது. நிலமானிய, முடியாட்சி பெரும்பாலான தமிழ் மக்கள் இன்னமும் விடுபடவில்லை! வேண்டுமென்ற பாரதிவாக்கே இக்காலத்தின் குரலாகும்
சமயத்தைப் பொறுத்தவரையில் சடங்கு சம்பி நிலை மாறிவருகிறது. அன்பே சிவம், எல்லோரும் இன்பு மக்கள் சேவையே மகேசன் சேவை போன்ற கூற்றுக்களே நரகம் முதலானவை பற்றிய பேச்சுக்கள் அருகியும் இக் பயன்படுத்தும் முயற்சிகள் பெருகியும் காணப்படுகின்ற6

ர புதியன பல புக மேல்நாட்டுத் தொடர்பே பெரிதும் த்துடன் பல மாறுதல்கள் நுழைந்தன. சமயம் பரப்பிய , நகரமயமாக்கல், சர்வசன வாக்குரிமை, இலவசக்கல்வி சிலருடைய ஏகபோக சொத்துக்கள் போல் விளங்கிய யவும் வரலாற்றுணர்வு, பண்பாட்டுணர்வு, இன உணர்வு, ந்திரம் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். கவும் செய்தனர். எதிர்ப்புக்கள் தோன்றியதனாலே தான் ட்டனர்; இயக்கங்களையும் அமைத்தனர். சுப்பிரமணிய ன் புரட்சிக்கவி எனப்பட்டதும், சொ. விருத்தாசலம் Eரிப்பார்க்கத்தக்கவை. புதுமை படைக்கும் ஆவலினால் பக்கங்களைத் தொடங்கினர். இலங்கையில் முற்போக்கு கே.கணேஷ் ஆகியோர் 1946 தை மாதம் தொடங்கிய டியது போலவே. தமிழிலக்கியப் போக்குக்கும் புதுவழி
இலக்கியம் முதலான துறைகளில் புதிய சிந்தனைகளும் க்குமிடத்துத் தானும் புலப்படும். தனி நபர்களுக்கு தை மாற்றிக் கொள்வதற்குமான சந்தர்ப்பங்கள் இன்று ானவர்களுக்குக் கிடைக்கிறது.
ண்டும் - இங்கு
இந்தப்
).
பகுதி மக்களை இழிசினர் என்றும் தீண்டாதார் என்றும் 5ாள்வதில்லை.
- பொய்மைச் ' என்ற பாரதி குரலே இக்காலத்துக்குரியது. நக்குச் சுதந்திரமில்லை, கல்வியில்லை, மறுமணமில்லை, ப்படுத்தியநிலை மாறி வருகிறது.
பிடித்தே யவன்
டுத்து
5ாட்டினும்
மிடத்து, விரும்பிய ஒருவனைக் கரம்பிடித்துப் பழமையை 1ண்ணை மகாகவி பாரதி போற்றுகிறார்.
tத்தே மலர்தலை உலகம்' எனக்கொண்டு கோல்நோக்கி சிக்கால மனோபாவங்களிலும் சிந்தனைகளிலுமிருந்து பாயினும் 'குடிமக்கள் சொன்னபடி குடிநிதிமேன்மையுற'
ரதாயங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் முதன்மை தரும் ற்றிருக்கநினைப்பதுவேயல்லாமல் வேறொன்றுமறியேன், T பெரும்பாலான மேடைகளில் ஒலிக்கின்றன. மோட்சம், கால வாழ்வினை நெறிப்படுத்தும் ஒன்றாகச் சமயத்தைப்
T.
N

Page 29
முன்னொரு காலத்தில், ஆதிக்கஞ் செலுத் வெகுஜனங்களின் ஊடகமாக அது வளர்ந்துள்ளது இழித்தொதுக்கப்படுவதில்லை. பேச்சு வழக்கும் இலக்கிய வருகின்றன. கூடியளவு மக்களுக்குக் கருத்துக்களையும் மொழியை வளர்க்கும் முயற்சிகள் அதிகரித்து வருகின்ற
கலை, இலக்கியங்களைப் பொறுத்தவரையில் இருக்கவேண்டுமென்ற கருத்து மேலோங்கியுள்ளது. இலக்கியங்களைப் போலன்றி புதிய இலக்கியங்கள் சாதா பெருமைகளையும் சிறுமைகளையும் எதார்த்தமாக நே மாறிவிட்டது. தமிழ் இலக்கியங்களுக்குத் தேசிய பூ இலக்கியங்களும் புதிய பரிமாணங்களை அளித்துள்ள6 பெற்றுள்ளது. பேச்சு வழக்குகளும் நாட்டுப் பாடல் ப அனுபவங்களையும் சிந்தனைகளையும் நயம்பட ெ சேர்த்துள்ளன.
வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் இன்று அ6 ரசனைகளிலும் கூடிய செல்வாக்குச் செலுத்துகின்றன. அவைகாரணமாகின்றன.
சமீக காலத்திய புதுப் போக்குகள் சிலவற்ை வளர்ச்சியினாலும், உலகச் சந்தையில் நாம் புகுந்துள் தேவைகளும் பெருகியுள்ளன. முகமற்ற அல்லது முகம் ெ பண்டங்களுட் கலை, இலக்கியங்களும் அடங்குகின் விளம்பரங்களின் மூலமாக மக்களின் ஆசைகளும் தேவை கருதாது. குறுகியகால பாவனையின் பின் பொருட்கை விற்பனை பெருக்கப்படுகின்றது.
எதிர்பாராத தேவையற்ற அலங்காரப் டெ கவர்ச்சியிான விளம்பரங்களினால்தூண்டப்படுகின்றது. கருதாது காசைக் கருதியே பயிர் செய்கின்றனர். இவற்றி உறுதியாகின்றதேயன்றி மக்களின் வாழ்க்கைத் தரம் உ விளைவுகள் குறித்து பாராமுகமாய் இருத்தல் சாலாது.
சஞ்சிகைகளும் புத்தக வெளியீட்டு நிறுவன சம்பாதிக்கும் எண்ணமும் பெருகலாம். அளவு கடந்த பு எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான உறவு எட் சிந்திக்க வைத்தோ போராட்ட உணர்வைத் தூண்டியோ ( கிளர்ச்சியூட்டும் வகையிலும், ஆறுதல் நல்கும் வகையிலு அவசரத்துக்கும் கையறுநிலைக்கும் ஆட்பட்ட வாசகர்க பொழுதைக் கழிக்க கைகொடுப்பனவாக அமைவதே அ
இன்று பலர், பிரசித்தி பெறுவதையும், பெயை நிறைவேறப் பத்திரிகைகள் முதலாயன இடம்தருவதாலு பலவாக வெளியிடப்படுகின்றன. வெகுஜன சாதனங்கள் பெறுமிடத்து எழுத்தாளரும், வாசகரும் ஏதாவதோர் அg பாதிப்புக்குள்ளாகலாம். அரசியல் கூச்சல்களும், வெகுஜ அனுபவ வெளிப்பாடுகளை அமுக்கி விடுகின்றன.

திய சிலரின் வல்லமையாக மொழி இருந்தது. இன்று 1. சாதாரண மக்களின் பேச்சுவழக்குகளும் இன்று வழக்கும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்தும் உதவியும் அனுபவங்களையும் எடுத்துச் சொல்லத்தக்க கருவியாக
ଜୋt.
அவை மக்கள் வாழ்வினை வளம்படுத்த உதவுவனவாக இறைவனையும் மேன்மக்களையும் சித்தரித்த பழைய ரண மக்கள் வாழ்வினைப் பிரதிபலிக்கின்றன. அவர்களின் ாக்குகின்றன. "மானிடத்தைப் பாடோம்' என்ற காலம் இலக்கியங்களும் பிரதேச இலக்கியங்களும் புகலிட ன. கவிதை காலப் போக்கில் எளிமையும், நெகிழ்ச்சியும் ாணிகளும் கவிதையில் எடுத்தாளப்படுகின்றன. புதிய வளியிடும் சில புதுக் கவிதைகளும் தமிழுக்கு வளம்
ன்றாட வாழ்வின் அம்சமாகிமக்களின்நடைமுறைகளிலும் புதிய விழுமியங்களும் புதுமையில் நாட்டமும் வளர
றக் கருத்தில் கொள்ளல் நன்று. சந்தைப் பொருளாதார ளதினாலும் கடப்பாடுகள் தளர்ந்தது மட்டுமல்லாமல், தரியாதநுகர்வோருக்கு விற்பதற்கென்றுதயாரிக்கப்படும் றன. கவர்ச்சியான, புலனுணர்வுகளைத் தூண்டுகின்ற பகளும் வளர்க்கப்படுகின்றன.நீண்டகால பயன்பாட்டைக் ள எறிந்து விடும் பண்பாட்டை வளர்ப்பதன் வாயிலாக
1ாருட்களையும், உடைகளையும் வேண்டும் உணர்வு காய்கறித் தோட்டம் வைப்பர்கள் கூட தேவைகளை சற்றும் ன்ெ காரணமாக உலகச் சந்தையில் தங்கியிருக்கும் நிலை பர்வதாகத் தெரியவில்லை. இத்தகைய புதிய போக்கின்
ாங்களும் பெருக அவற்றுக்கு ஏற்ற வகையில் எழுதிச் த்தகங்களும், சஞ்சிகைகளும் வெளிவரலாம். ஆயினும் படி அமையும் என்பது கேள்விக்குரியதாகும். வாசகரைச் தொல்லை தராது ஆதிக்க சக்திகளுடன் முரண்படாதவாறு ம் எழுதப்படுபவை பெருவாரியாக விற்பனையாகின்றன. ள் வாழ்க்கைப் பிரச்சினைகளினின்றும் இலேசாகநழுவிப் வற்றின் நோக்கம் என்று தோன்றுகிறது.
ர அச்சில் காண்பதையும் விரும்புவதாலும், அவ்விருப்பம் ம் அர்த்தபுஷ்டியற்ற குழப்பமான சொற்சிலம்பங்களும் ர் எனப்படுபவற்றுக்குத் தீனி போடும் தேவை பிரதானம் னுபவத்தில் ஈடுபட்டு அதனை பகிர்ந்து கொள்ளும் நிலை ன சாதன விளம்பரங்களும், ஆளுமை வாய்ந்ததனித்துவ

Page 30
கட்டுப்பாடுகளை அகற்றி வளர்ச்சிக்கு நடவடிக்கைகளுமே புதிய கட்டுப்பாடுகளையும் நி மறந்துவிடலாகாது. மனிதருக்கு வியத்தகு வல்லமை ஆபத்துக்கள் பலவற்றிற்கு இடமாகவும் உள்ளன. முரண்பாடுகளும் மாறுதல்களும் வரலாற்றில் முடிவுறா நாகரிகங்களும் பரப்பளவில் குறுகியனவாக இருந்தன அனர்த்தங்கள் ஏற்படுமிடத்து மனித குலம் மிகுதி மாறுதல்களையும் ஏற்பதில் கூடிய அவதானமும், பொறு புதுமையில் மோகம் கொள்வதும், நாகரி கவரப்படுவதும் சாதாரண மனித இயல்பு. உடை, நடை வித்தியாசமானவற்றை வியக்கும் போக்கினைக் காணலா மட்டும் ஒன்றினைக் கொடிகட்டிப் போற்றுவது அவசிய துறையில் வித்தியாசமானது, புதியது என்று ஒன்றி6ை யாருக்காக, எப்படி வழங்குகிறோம் என்பது கவனிக் பொறுப்புக்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ள உடையவனாகிறான்.
பொதுவாக நோக்குமிடத்து, மனிதன் பூரண வேண்டுபவனாகவும் காணப்படுகிறான். இன்றைய கால பலன்களை பெரிதும் எதிர்பார்க்கும் மனிதனிடத் எதிர்பார்க்கவியலாது என்றும் கூறுவர்.
அது எவ்வாறாயினும், புதிய வடிவங்களை வேட்கையில் எம்மைச் சூழ உள்ள மக்களையும், அவர் -நன்று. மகாகவி பாரதி வேண்டிய, 'தெளிவுறவே அற மறந்துவிடாது, உண்மைகளை கண்டறிவதிலும் உரிய வன வேண்டும்.
/
"கலையிற் சிறப்பு உளகe
விஞ்ஞான அறிவின்
புகழ் ஈட்ட அறிவுத்திறன்
ஆடையழகால் அறிவு வளி
இலட்சிய நோக்கே இன்றி

அடிகோலும் கண்டுபிடிப்புக்களும் சாதனைகளும் ப்பந்தங்களையும் ஏற்படுத்தக் கூடும் என்பதையும் யினை வழங்கும் கருவிகளும் தொழில்நுட்பங்களும் பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் இடையிலான தனவாகவே காணப்படுகின்றன. பண்டைய அரசுகளும் இன்றைய நாகரிகம் உலகளாவியது. அந்த வகையில் பாகப் பாதிக்கப்படும் என்பதால் புதுமைகளையும் ப்புணர்ச்சியும் வேண்டப்படும். தத் திணிசுகளாலும் வித்தியாசமான பாணிகளினாலும் முதலியவற்றில் மட்டுமன்றி, கலை இலக்கியங்களிலும் ம்.வித்தியாசமானது அல்லது புதுமையானது என்பதற்காக பமான என்பதை எண்ணிப் பார்த்தல் நன்று. இலக்கியத் ா அணைத்துக் கொள்ளும் அவரசரத்தில் என்னத்தை, 5ப்படாது போய்விடக்கூடாது. பல வல்லமைகளையும் மனிதன்தன் செயல்களுக்குப்பதில் கூறும் கடமைப்பாடும்
ன திருப்தி அற்றவனாகவும் மேலும் பல மாறுதல்களை த்துப் புதுமைகள் நாளைய பழமைகள் ஆகும். உடனடிப்
து எதிர்காலம் குறித்த தூர நோக்கினை அதிகம்
யும் நடைமுறைகளையும் பிரச்சினைகளையும் தேடும் களின் தேவைகள் இயல்புகளையும் உதாசீனம் செய்தல் பிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்' என்பவற்றை கெயில் அவற்றைத்துலக்குவதிலும் ஆர்வத்தை வளர்த்தல்
N
ரிதரும்
வேண்டும்
TipišślGbluont
யமையாதது"
அல்லாமாஇக்பால்
N

Page 31
தம்பி
தே. சேந்தன், பொறியியல்பிடம், இரண்டாம்
6Tனக்கெண்டால் சாகலாம் போல கிடக் கேட்டாலும் திட்டுறா. அப்பாவுக்கு மட்டும்தான் அன்ை அம்மம்மாநிண்டாலாவது பறவாயில்லை. அவவும் அ6 கனடாவுக்குப் போட்டா. அப்ப அம்மாதான் ராணி வ எல்லாம் தம்பியாலைதான். தம்பிப்பாப்பா பிறந்திருக்கு நான் 'பெட்டைதானே' எண்டு என்னை ஒதுக்கிப்பே காலம்! அவவும் பெட்டையெண்டதை மறந்துபோனா,
யாழ்ப்பாணத்திலை இருக்கேக்கை எவ்வ "சுசிக்குட்டி, இன்னுங் கொஞ்சம் சாப்பிடும்மா. சாப்பிட அச்சாக்குஞ்சல்லோ' எண்டெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி சான்டில்சையும் சொக்சையும் கழட்டி விட்டு, பாக்கையும் நான் உடுப்பு மாத்தி வந்தோடனை சாப்பாட்டைப் ே கூத்தாடித் தீத்திவிடுவா, இப்ப எல்லாம் மாறிப்போச் எவ்வளவு சின்னவயிறு? பிறந்தே இரண்டோ மூண்டு ம குடுக்கிறா? அவனுக்கு வயிறு நிரம்பி, புரையேறி வெளி 8 என்ன, எல் லோரும் ஒருமாதிரிப் பாக்கிறி "எண்டோ? நான்சின்னப்பெட்டைதான், ஆறு வயசுதான்.
அப்பிடியே ஞாபகம் இருக்கு.
கொஞ்சநாளைக்கு முந்தி பெரிய பிரச்சினை ( பயமாய் இருந்திச்சு, அம்மா எனக்கும் தம்பிக்கும் சத்தமெண்டாலும் மெல்லமாய்த்தான் கேக்கும். இரவென அம்மாவைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு படுப்பன். 'சத்
மெல்லிசா சொல்லுவா, கொஞ்சநாளிலை சத்தமெல்லா
அண்டைக்கு இரவு இருந்தாப்போலை மு படுத்திருந்தான். ஜாம் போத்தில் விளக்கு சரியான சி மெல்லிசாய் கூப்பிட்டுக் கொண்டு பக்கத்தில் தட இருட்டுக்குள்ளை உற்று, உற்றுப் பாத்து குசினுக்குள்6ை சமையல் பாத்திரங்களை எடுத்து உரபாக்கிலை கட்டிக் ெ
"ஏன் எல்லாம் எடுத்துக் கட்டுறிங்கள்?"
'சசி எழும்பிற்றியா? எல்லோரும் சாவகச்ே படுத்திரு. ஆயத்தப்படுத்திப்போட்டு எழுப்பிறம்'
எனக்கு அப்ப ஒண்டுமே விளங்கேலை சாவகச்சேரிக்குப் போப்போறமெண்டு நல்ல சந்தோக சித்தப்பா என்னை மடியிலை வச்சுக் கொண்டுநிறையக சொல்லித் தருவார். எனக்கு சந்தோசத்திலை நித்திரைே சட்டையை. இல்லை, பிறந்தநாள் சட்டையைப் பே

வருடம்
த. அம்மாவுக்கு என்னிலை அன்பே இல்லை. என்ன ரிலை ஆசை. அவரும் நெடுக எங்கையோ போயிர்றார். ர்ரிக்கு 'குட்டிப் பாப்பா பிறக்கப்போகுதெண்டு சொல்லி ாவர என்னைக் கண்டாலை அவவுக்குப் பிடிக்குதில்லை. தெண்டு எவ்வளவு சந்தோசப்பட்டன். இப்ப பார்த்தால் "ட்டு அவனோடைதான் செல்லம் பொழியிறா. எல்லாம்
ளவு சந்தோசமாய் இருந்தம். அப்பேக்கையெல்லாம் ட்டாத்தான் அம்மா மாதிரி பெரியாளாய் வரலாம். என்ரை சிக் கதைப்பா, பள்ளிக்கூடத்தாலை வந்தோடனை ஓடியந்து ட்ரிங் போத்தலையும் எடுத்து ஆணியிலை கொழுவிவிட்டு பாட்டுத் தருவா. நான் வடிவாச் சாப்பிடாட்டிகெஞ்சிக் சு. பசிச்சாலும் சாப்பாடில்லை. தம்பிக்கு என்னைவிட சந்தான். எண்டாலும் ஒருநாளைக்கு எத்தினைதரம் பால் யிலை வருது.
ங்கள்? 'இவள் சின்னப்பெட்டை ஏதோ அலட்டுறாள்' எண்டாலும் எனக்கு எல்லாம் விளங்கும்.நடந்ததெல்லாம்
தொடங்கிச்சு. ஒரே ஷெல், குண்டு சத்தம். எனக்கு சரியான காதுக்குள்ளை பஞ்சு வச்சுவிடுவா. அப்ப பெரிய ன்டால், 'அம்மா, ஷெல், ஷெல்' எண்டு கத்திக் கொண்டு தம்போடாதை - தம்பி எழும்பிடுவான்' எண்டு அம்மா ம் பழகிட்டுது. சத்தங் கேக்காட்டித்தான்நித்திரை வராது. pழிப்புவந்திட்டுது. பக்கத்திலை தம்பி மட்டும்தான் ன்னனாய் எரிந்து கொண்டிருந்திச்சு. 'அம்மா' எண்டு விப் பாத்தன், குசினுக்குள்ளை கதைச்சுக் கேட்டுது. ா போனேன். அம்மாவும் அப்பாவும் அவதி அவதியாய் காண்டிருந்தினம்.
சரிக்குப் போகப்போறம். நீ போய் தம்பிக்கு பக்கத்திலை
, என்ன நேரமெண்டும் தெரியேலை எண்டாலும் ம். அங்கை சித்தப்பா வீட்டைதான் போவம். அச்சாச் 2தயெல்லாம் சொல்லுவார். மனக்கணக்கு கேப்பார். நொடி ய வரேலை. எந்தச் சட்டையைப் போடலாம்? சிவப்புச் டுவம். சப்பாத்தோ, சாண்டில் சோ..? எண்டெல்லாம்

Page 32
யோசிச்சுக் கொண்டு படுத்திருந்தன். "சமையல் சாம
நிக்கப்போறம்போல, ஆண்டு-2 புத்தகங்களையெல்ல
இருக்கலாம்.
அம்மா வந்து தம்பியை வெளிக்கிடுத்தினா. { 'எனக்கு உது வேண்டாம், என்ரை பிறந்தநா "அது குட்கேசுக்குள்ளை மடிச்சு வச்சிற்றன்.
இப்ப இரவெண்டாலும் போகேக்கைவிடிஞ் விசர்தான் எண்டு நினைச்சுக்கொண்டு 'இப்ப எத்தினை
'பன்னிரெண்டு மணி' - அழுத்தமாய் சொ எனக்கு 'திக் எண்டது. பன்னிரண்டு மணிெ 'அம்மா, விடிஞ்சாப் போலை போவம். எ
'கனசனம் றோட்டாலை போய்க்கொண்டிரு கேட்டுக்கொண்டு, என்ரை பள்ளிகக்கூட பாக்கை எடு உடுப்புத்தான் இருந்ததாலை பாரமே இல்லை. வாசலி கொண்டிருந்தார். சைக்கிள் நிறையச் சாமான்.
'அப்பா, நான் எதிலை இருக்கிறது?" 'சைக்கிளிலை இடமில்லைக் கண்ணு. எல்லா
அம்மா சொன்ன மாதிரி றோட்டாலை நிறைய சாவகச்சேரிக்குத்தான் போகினம் போலை,
"ஏனம்மா, எல்லாச்சனமும் போகுது?"
'பள்ளிக்கூடம் லீவெல்லோ? அதுதான் எ6 வரப்போகினம்’
எனக்கு ஒரே ஜாலிதான். கனபேர் லாம்புகளே கொழுவியிருந்தது. நான் அம்மான்ரைசாறியைப் பிடித்து சனம் கூடிக் கொண்டிருந்திச்சு. நடக்கவே இடமில்லை. தை கொண்டு ஏன்தான் அந்த இரவிலை எல்லோரும் வெளிச்
கனதூரம் நடந்திற்றம். எனக்குக் காலெல்லாம் போலை இரண்டு பேரும் றோட்டுக்குக் கரையிலை இரு பிறந்தநாள் சட்டையைப் போட்டுக் கொண்டு வரேலை.
விடியத் தொடங்கிற்றுது. கனதூரத்துக்கு ஒரே ஒரே நெரிசல். ஆனால் இதுகள் நிறையச் சாமான்களை ஒண்டா ஏன் வெளிக்கிட்டுதுகள் எண்டுதான் எனக்கு அம்மாட்டையும் ஒண்டும் கேக்கேலை. அப்பாதான் பாவ நிண்டார். கெதியாய் சித்தப்பா வீட்டை போட்டமெ நேரங்கிடைக்கும். அதாலை பல்லைக் கடிச்சுக் கொண்டு சாதுவாய் மழை துமிச்சுக் கொண்டு இ( இருந்தாப்போலை நல்லாக் கொட்டத் தொடங்கிற்று --ܠ

ானெல்லாம் கொண்டு போறதாலை அங்கை கனநாள் ாம் வச்சுக்கொண்டு மல்லுப்பிடிக்காமல் சந்தோசமாய்
ான்க்கும் பழஞ்சட்டையொண்டைத் தந்தா. ள் சட்டையைத் தாங்கோ'
இப்ப இரவுதானே? உதையே போடு' எண்டா. சிடும். சனமெல்லாம் சிரிக்கப்போகுது. இந்த அம்மாவுக்கு
மணி?' எண்டு கேட்டன்.
iனா.
பண்டால் பேய் எல்லாம் றோட்டிலை திரியுமெல்லோ? ாக்குப் பயமாய்க் கிடக்கு."
க்கு. அம்மாவோடை வரேக்கை என்ன பயம்?' எண்டு ந்து முதுகிலை கொழுவிவிட்டா. அதுக்குள்ளை என்ரை லை அப்பா சைக்கிளிலை சாமான்களை வச்சுக் கட்டிக்
ருமா பையப்பையநடந்து போவம், என்ன?”
பச் சனம் நடந்து போய்க் கொண்டிருந்திச்சு. எல்லோரும்
ஸ்லோரும் கொஞ்சநாள் சாவகச்சேரியிலை இருந்திற்கு
T60 வந்திச்சினம். எங்கடை சைக்கிளிலேயும் ஒரு லாம்பு க் கொண்டு துள்ளித்துள்ளிநடந்தேன். வரவரறோட்டிலை pலயிலையும் கையிலையும் நிறையச்சாமான்களை வச்சுக் கிட்டிச்சினமோ?
உழையத் தொடங்கிற்று. அம்மாவுக்கும் அப்பிடித்தான் ந்த கல்லிலை கொஞ்ச நேரம் இருந்தம். நல்லகாலமாய் இல்லாட்டி அது பழுதாய்ப் போயிருக்குமெல்லோ?
சனமாய் தெரிஞ்சிது. நல்லூர்த் தேருக்கு இருக்கிறமாதிர் |ம் காவிக் கொண்டு கஷ்டப்படுதுகள். எல்லாச் சனமும் விளங்கேல்லை. சரியான களைப்பா இருந்ததாலை ம். இருக்கவும் ஏலேலை. சைக்கிளை பிடிச்சுக் கொண்டே ன்டால்தான் அப்பாவுக்கு ஆறுதலாய் இருக்கிறதுக்கு திரும்பநடக்கத் தொடங்கினோம்.
ந்திருக்கு. அதைப் பணி எண்டுதான் நினைச்சன். து. திரும்பவும் எனக்கு ஒரே ஜாலி. மழைக்குள்ளை
༄།
أر

Page 33
நனையிறதெண்டால் எனக்குச் சரியான ஆசை. நனைஞ் குடை கிட்டடியிலைதான் ஒரு கம்பி முறிஞ்சு கட்டக் காணேலை. அதாலை இருக்கிற குடையை அம்மா த வரச்சொன்னா. பக்கத்திலை போனாலும் காற்று சொப்பிங்பாக்குக்குள்ளை வச்சுக் கட்டியிருந்ததுநல்லத
சனநெரிசல் இன்னும் சரியாகக் கூடிற்றுது. நா வந்துதுகள். மழையிலை நல்லா ஊறிநடுங்கவும் தொடர் கொண்டிருந்தான். எனக்குகாலுழைவு ஒரு பக்கம், குளிர் அழுகையும் வந்துது. அப்பான்ரைசேட்டைப்பிடிச்சுக் செ ஏதோ கிடங்கொண்டு வெட்டிக் கொண்டிருதிச்சினம். வடிவாய்த் தெரியேலை. ஆரோ கிழவனொன்டு இரவு அதிலைதாக்கப் போறாங்களாம். எனக்கு சரியான பயம. கொண்டு ஒரு மாதிரிச் சித்தப்பா வீட்டை வந்தம். அப்ட பயத்திலை அப்பிடிப் பிடிச்சுக் கொண்டு வந்தன். சித்த தெரிஞ்சவங்கள், சொந்தக்காரங்கள் எண்டு ஒரு இடமு அறைக்குள்ளை. தலையெல்லாம்துடைச்சிற்று ஒரு ரீகுடி சாப்பாடு தந்தா. அதுக்குப் பிறகுதான் நல்ல உசார் வந கொஞ்ச நேரத்திலை பழகிற்றன். நாங்கள் ஓடிப்பிடி விளையாடேக்கை ஒரு கிழவன் வந்து பேசிச்சுது. வேணு எனக்கு அழுகையா வந்துது. இவரை ஆர் எங்கடை சி போய்ச் சொன்னேன். அவதான் 'சின்னப் பிள்ளையஸ் என்னடா எண்டால் அவவும் என்னை இருந்து விளைய விளையாடவே பிடிக்கேலை, அதைவிடப் படிக்கலாம்.
கேட்டன். அதைக் கொண்டுவரேல்லையாம். என்ரைபா
'எனக்குத்தெரியா, எனக்கு இப்ப புத்தகம் கோவம் வந்திட்டுதாம். முதுகிலை அடிச்சுப் போட்டா, புத்தகங்தான் இல்லாத குறையாம். சனம் அகதிகளாய் அ அழுதன். குசினிக்குள்ளைநிண்ட சித்தி ஓடியந்தா. சித்திக் முகத்தை மூடிக்கொண்டு விம்மினேன். அவவோடைகை சொன்னேன். அப்பா நல்ல பேச்சு. அவவுக்கு இதுவும் ே
இரவு அப்பாதான் சாப்பாடு தீத்தி விட்டார். சுவரைப்பாத்துக் கொண்டு படுத்திற்றன். அடுத்தநாள் அ ஒருமாதிரி அம்மா கிண்ணத்திலை தண்ணி வாங்கித் தந் போட்டு வந்து, குட்கேசுக்குள்ளை இருக்கிற பிள்ளையா
கொஞ்ச நேரத்தாலை பசி கிளம்பிற்று. அப்பு போனவையாம். இன்னுமு வரேலை. எனக்குப் பசியிை பால் குடுத்துக் கொண்டிருக்கிறா. எனக்கு எரிச்சல் வ ar மெல்லிசாய்த்தனா நுள்ளினான். அவன் பெரிசாப்
அடிச்சுப்போட்டா. முதல்நாள் மாதிரி. அவவோடை க நானும் விசரி.
ஒருமாதிரி பாண் வந்து, சம்பலோடை சாப்பு

சால் அம்மா பேசுவா. இருப்பது ஒருகுடைதான். என்ரை கொடுத்தனாங்கள். இப்ப அந்தக் குடைக்காரனையேம்பிக்காண்டி பிடிச்சிருந்தா. என்னையும் பக்கத்தினை
க்கு நல்லாத் தோய்ஞ்சு போனன். உடுப்புகள் ாய்ப்போட்டுது.
ன் நடக்காமல் நிண்டாலும் என்னைத் தள்ளிக் கொண்டே
ங்கிற்றுது. தம்பி அம்மான்ரை தோளிலை இருந்து சிரிச்சுக் ஒரு பக்கம். அவனைப் பார்க்க ஆத்திரமாகவும் இருந்தது. ாண்டு கொஞ்சத்தூரம்நடந்தன். வழியிலை கொஞ்சப்பேர்
சனமெல்லாம் எட்டிப் பாத்துதுகள். எனக்கு ஒண்டும் சனங்களுக்குள்ளை மிதிபட்டுச் செத்துப் போட்டுதாம். ாய்ப் போட்டுது. அம்மான்ரைஇடுப்பைக் கட்டிப்பிடிச்சுக் வே அவவோடை சாதுவான கோவந்தான். எண்டாலுமு ப்பா வீட்டை வந்தால் அங்கையும் ஒரே சனம். ஆராரோ ம் இல்லை. நான், தம்பி, அம்மா, சித்தி எல்லோரும் ஒரு ச்சிற்று,நான்படுத்து நல்லநித்திரை. பிறகு அம்மா எழுப்பி தது. என்னை மாதிரி மற்றச் சின்னப்பிள்ளைகளோடை ச்சு விளையாடினம். சனங்களுக்குள்ளை ஒடிப்பிடிச்சு மெண்டால் ஒரு இடத்திலை இருந்து விளையாடட்டாம். த்தப்பா வீட்டை வரச் சொன்னது? நான் அம்மாட்டைப் ஒடியாடி விளையாடோணும்' எண்டு சொல்லுவா. இப்ப ாடுற விளையாட்டா விளையாடட்டாம். எனக்கு அப்பிடி அம்மாட்டைப் போய் என்ரை புத்தகம் எங்கையெண்டு ாக்குக்குள்ள அதை வச்சு விட்டிருக்கலாம்தானே?
வேணும்' எண்டு அடம்பிடிச்சன். அதுக்கு அவவுக்குக் சனமெல்லாம் அகதியளாய் அலையிதுகளாம். எனக்கு அலைஞ்சாநான் படிக்கிறேலையே? நான் சத்தம் போட்டு குமுன்னாலை அழ வெக்கமாய் இருந்திச்சு. பெற்சிற்றாலை தக்கவே இல்லை. பிறகு அப்பாவரத்தான் எல்லாத்தையும் வணும்; இன்னும் வேணும்.
அப்பா வெளியிலை படுத்ததாலை நான் சுவர்க்கரையா ழும்பினால் முகங்கழுவ கிணத்தடியிலை சரியான சனம். தா. அந்த ஒரேஞ் கலர் தண்ணியலை முகத்தைக் கழிவிப் ர் படத்தைக் கும்பிட்டுக் கொண்டு தேவாரம் பாடினேன்.
பாவும் சித்தப்பாவும் காலமை வெள்ளன பாண் வாங்கப் ல வயிறு சத்தப் போட்டுது. அம்மா எண்டால் தம்பிக்குப் ராதே? போய் நைசா அவனுக்கு நுள்ளி விட்டிட்டன். அழத் தொடங்கிற்றான். அதுக்கும் அம்மா எனக்கு தைக்காமலை இருந்திருந்தால் சரியாய் இருந்திருக்கும்.
விட்டிட்டு சித்திற்றை கதை சொல்லச் சொல்லிக் கேட்டன்.
:

Page 34
அவவும் தம்பியோடைதான் கொஞ்சிக் கொண்டிருக்கிறா. பேசாமல் வீட்டையே நிண்டிருக்கலாம். அப்பாட்டை இ பிரச்சினையாம். அது முடியத்தான் போகலாமாம். எனக்
என்ன வாழ்க்கை?
ஒரு கிழமையா இப்பிடியே போட்டுது. நெரு குடிக்கவே அருவருக்கும். நாங்களெல்லாம் அகதியளாம். தவிர மற்ற எல்லோரும் அகதியள்தான். அந்தப் பிள் வேணுமெண்டுதானே இப்பிடியெல்லாம் விட்டிட்டு இரு
எல்லாரும் இப்ப கிளிநொச்சிக்குப் போ ஆயத்தப்படுத்துகினம். அங்கை காணியும் காசும் தருகின அங்கை கடையிலை ஹாயாய் இருந்து கொண்டு காசுக் கன் போறாரோ.
ஐ!படகு என்னமாதிரி ஆடுதுபாருங்கோ அணி கண்ணெல்லாம் எரிஞ்சிது. இப்ப பழகிற்றுது. ஒருநாளும் முதன்முதலாய் போறன். தம்பிக்கு பொலித்தீனாலை மூடி சொல்லுறா என்னெண்டு கேப்பம்.
'பிள்ளை, பெடி கவனம். இப்பிடித்தான் ஒ போட்டுதாம்.' எனக்கு 'திக் எண்டுது. தம்பியும் விறைச் ஏதும் நடந்தால் என்னாலை தாங்கவே ஏலாது. குனிஞ்சு நான் வளந்திற்றன். எனக்கு பசி, குளிரெல்லாம் தாங்க ஏ அவனை உங்களுக்கு முன்னாலை திட்டிப் போட்டன், பரவாயில்லை. அவனுக்கு தேவையானதையெல்லாம் செ போறான்? 'கடவுளே அவனுக்கு ஒண்டும் நடக்ககக்
ty
மடிய வேண்டுே
மனசுக்குள்ளைநினைக்கிறன்.
மனமும் உறுதிய
மடிய ஆசையெ
மரணமும் வரு

N கதை தெரியாதாம். எனக்கு இஏசை வந்ததே பிடிக்கேலை. தைப் பற்றிக் கேட்டன். அப்பதான் சொன்னார், அங்கை த 'சீ' எண்டு போட்டுது. ஒரு சுதந்திரமும் இல்லாமல் இது
ட பாண்தான் சாப்பாடு. இருந்திற்று கஞ்சி காய்ச்சினம். இதுக்கெல்லாம் பழக்கப்படோணுமாம். ஓம். தம்பியைத் ளையாரையும் கும்பிட எனக்கிப்ப பிடிக்கேலை. அவர் ந்கிறார்.
峰****
"கினமாம். நாங்களும் போகோணுமாம். எல்லாம் மாம். அப்பாதோட்டந்தான் செய்யோணுமாம். பாவம்
னக்குப் பாத்தவர். எண்ணெண்டுதான் தோட்டஞ் செய்யப்
舒婷婷婷
லைத்தண்ணியெல்லாம் உள்ளுக்கை அடிககுது. முதலிலை இப்பிடி படகிலைநான் போகேலை. இண்டைக்குத்தான் யிருக்கு. பக்த்திலை இருக்கிற மஷசி அம்மாவுக்கு ஏதோ
}ரு பிள்ளை நேற்று போட்டுக்கை விறைச்சுச் செத்துப் சுச் செத்திற்றால். நினைக்கவே அழுகை வருது. அப்பிடி தம்பியின்ரை பக்கம் அலையடிக்காத மாதிரி இருக்கிறன், லும், அவன் பாவம் கைக்குழந்தை. ஏதோ ஆத்திரத்திலை அதை மறந்திடுங்கோ, எனக்கு சாப்பாடில்லாட்டியும் ய்யோனும், அவன் வளர்ந்து எங்களுக்குத்தானே உதவப் கூடாது. ' குட்கேசுக்குள்ளை இருக்கிற பிள்ளையாரை
மென்றால் - இந்த
பில்லை
ன்றால் - அந்த
ததில்லை
இளவேனில் ‘சோமு’

Page 35
கவிஞர்களின் கரங்களில் கூரிய வ
இந்தத் தலைப்பே கொஞ்சம் வித்தியாமா வைத்திருக்காதது போல் ஏமாற்றுகின்றதா? அப் புதுக்கவிதைகளிலிருந்து கிளம்பிய புதுமைக் கவிதைக ஹைகூ கவிதைகள், பிறப்பிடம் என்னவோ ஜப்ட உள்வாங்கப்பட்டு வருகின்றன இந்த ஹைகூக்கள். இ ஆனால் சிந்தனைக்குரிய முறையில் மறைமுகமாய், ஹைகூக்கள் 3 அடிகளைக் கொண்டதுடன் ஒவ்வெ கொண்டதுமாக அமைந்திருந்தன. அதிலும் முதலிரு அ வர்ணலின போன்ற விளக்கத்தை வழங்க உயிர்நாடியாக அத்துடன் தொடர்பற்றது போலிருக்கும் ஆனால் ஆழ் அவ்விடயத்தைப் பற்றிய எம் சிந்தையைத் தூண்டும் கவிதைகள்தான் இந்த ஹைகூ.
ஆரம்பகால ஜப்பானிய ஹைகூக்கள் மே பிறப்பிடமான 'சென்' பெளத்த மதத்தின் தத்துவங்க ஹைகூவை தமிழ் தத்தெடுத்தபோது 3 வரிகளைக் கொ அடிப்படை அசைக் கணக்குகைவிடப்பட்டது. ஹைக ஈற்றடியில், இவ் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் ெ இதைவிடப் பாடுபொருளால் இயற்கையையும், சமகால தமிழ் ஹைகூவின் தத்தெடுப்பு வடிவம்.
தமிழில் ப்ரிசோதனை முயற்சிகளாகப் ட அறிமுகத்திற்காய்ச் சில ஹைகூக்கள் இங்கு இடம்பெற கர்த்தாக்கள் இங்கு முக்கியத்துவம் பெறாததால் அவர்கள் என்று ஒன்று
மன்மதக் கரங்களில் மறைந்து கிடந்தது ஒரு கங் சிவன் எரிந்தான்.
காமத்துடன் தனக்கெதுவித தொடர்புமில்லை எஞ்சிக் கிடக்கும் அதன் கங்குகள் ஆவேசமாய்ச் சீறியெ
'விட்டில் பூச்சிகள்' என்று இ முட்டி முட்டி பால் குடிக்கின் நீலக்குழல் விளக்கில் விட்டில் பூச்சிகள்
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எதற்கே பூச்சிகளாய் தெரியவில்லையா?
அனேகமான ஹைகூக்கள் மேலோட்டமாகட்

ாள் ஹைகூ
க இருக்கின்றதா? முதல் வாசிப்பில் தனக்குள் எதையும் படியெனில் அதுதான் ஹைகூ, மரபுக் கவிதைகள், ! ளிலிருந்துகிளம்பிய புதுமைக்கவிதை வடிவம்தான் இந்த பானாக இருப்பினும் எம் தமிழிலும் மெதுவாகவே க் கவிதைகள் சொல்லவந்த விடயங்களைச் சுருக்கமாக, ! அழகாய் வெளிப்படுத்துகின்றன. ஆரம்ப ஜப்பானிய ாரு அடிகளும் 5, 7, 5, என்ற அசைக் கணக்கையும் டிகளும் எடுத்துக் கொள்ளப்பட்ட விடயத்தைப் பற்றிய ஈற்றடி முன்பகுதியில் வர்ணனையால் எதிர்பார்திருக்காத, ந்த தொடர்புள்ள விடயத்தைத் திடீரென வெளிப்படுத்தி . இவ்வகையிலான சூடான கவிநயம் கொண்ட கடுகுக்
ர் சொன்ன அமைப்பு விதிகளுடன் கூடவே அவற்றின் - ளையே பாடுபொருளாகக் கொண்டிருந்தன. ஆனால் ண்டதான பொதுவிதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் கவிதைகளின் முழு ஆற்றலும் அழகும் வெளிப்படும் பயர்ச் சொற்கள் பாவிப்பது என்பதும் பொது விதியானது
நிகழ்வுகளையும் ஏற்றுக் கொண்டது. இதுதான் தற்காலத்
பலராலும் ஹைகூக்கள் பாடப்பட்டுள்ளன. ஒரு சிறு ற்றிருக்கின்றன. கவிதைகளின் கருத்துக்கனவு அவற்றின் ரின் பெயர்கள் இங்குஇடம்பெறவில்லை. முதலில் 'காமம்’
கு
ஸ் என நினைக்கும் மனிதனின் இதயத்தின் ஒரு மூலையில் ழுந்து அவனையே எரிப்பதைக் கூறுகின்றதல்லவா?
இன்னொன்று
ன்றன
ா காலத்தை விரயமாக்கும் எம் போன்றவர்கள் விட்டில்
ததை கு tg
பார்த்தால் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கும்.'
Ο Ύ

Page 36
r
உதாரணமாய் ஒன்று
நேரத்தை பார்த்து
வசதியாய் படுத்து
ரெயில் பாதையில்
அவன் சரிபார்த்துக் கொண்டது ரயில் வரும் (
ஆழம் அதிகரிக்க அதன் மையக் கருத்து நோக்கி சிந்த:ை
மழைக்குப் பயந்து
ஆட்டம் போட்ட6
துவைத்த துணிகள்
இதில் என்னதான் இருக்கிறது? சமூகத்தின்
கொண்டிருக்கும் அந்தரங்க உணர்வுகள் வெளியாவதை
ஹைகூக்களுக்கு தனியான விளக்கம் தேவை
விளக்கம் அளிப்பது என் நோக்கமல்ல. அவ்வாறு செ துரோகமாகவே அமையும். ஏனெனில் கவியின்
கொடுக்கப்படலாம். அத்துடன் அக் குறுங் கவிதையின் 6
இறுதியாய் விளக்கமில்லாமல் இரு சமகால அ
இருள் குரிய கதிர்கள் கற்றையாய் புறப்பு
நகரம் இருண்டது.
'கனவு’ மணலில் உருண்டு பறக்கவும் தொடா கடற்கரையிலே கா
இவற்றிற்கு அர்த்தம் சொல்ல விரும்பவில்லை அர்த்தம் பிறக்கும்.
ஹைகூக்கள் புதுக்கவிதையின் குஞ்சு மட்டும6 இருப்பினும் புதுக்கவிதைகளுடன் நெருக்கம் கொஞ் உரியவைகளாய் இருப்பினும் கூட அவற்றின் மீது விமர்ச தலையெடுத்தபோது கூட மரபுக் கவிதைவாதிகளால் க நவீன தமிழிலக்கியத்தில் புதுக்கவிதைகள் முக்கிய இடத்ை (மொழியில்) பிறக்கவில்லை எனினும் தமிழால் இன்று த முறையில் எம் மண்வாசனை சுவாசிக்க வைத்து எம் கற்பனைகளில் அதிக அழுத்தம் கொடுக்காது அ கருப்பொருளாகக் கொண்டு இக் கவிதைகள் படைக்கப்ப சென்றடையும். இவ்வாறான ஒழுங்குபடுத்திய வளர்ச் தடம்பதிக்க வைக்கும்.
-ܠ

க் கொண்டான்
மனிதன்.
நேரத்தை என்று இறுதி வரியில் புலப்பட்டதும் கவிதையின் னதுண்டப்படுகிறதல்லவா? “உள்ளே' என்று ஒன்று
அறைக்குள்
凉了
r கட்டுப்பாட்டினால் எமக்குள் அட்டகாசம் பண்ணிக் க் கொள்ளலாம்தானே?
என்பது உண்மைதான் ஆனாலும் இவ்வாறு கவிதைக்கும் ப்யினும் கூட அது தொடர்பான கவிஞருக்குச் செய்யும் உண்மையான கருத்துக்குப் பிழையான விளக்கம் விசாலமான கருத்துப் பரப்பு ஒடுக்கப்படலாமல்லவா?
அரசியல் ஹைகூக்கள்.
لڑتیکاتال
புரண்டு கியது ாகிதப்பை
. உங்கள் மனநிலைக்கேற்ப சிந்திக்கும் போதுநிச்சயமாய்
ஸ்ல, மரபுக் கவிதைகளுக்கும் கொஞ்சம் கிட்டிய சொந்தம். சம் அதிகம்தான். ஹைகூக்கள்என்னதான் ரசிப்பிற்கு னக் கணைகள் தொடுக்கப்படாமலில்லை. புதுக்கவிதைகள் டுமையாக விமர்சிக்கப்பட்டதுதான். ஆனால் இன்றைய தைப் பிடிக்கவில்லையா ஹைகூ என்னதான் எம் மண்ணில் த்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தத்துப் பிள்ளையை உரிய மண்ணில் சொந்தப் பிள்ளையாக்க வேண்டும். அதீத ன்றாட வாழ்வின் பிரச்சினைகள், போராட்டங்கள் டும் போது இலகுவாகவும் விரைவாகவும் அவை மக்களை சிதான் ஹைகூவை நாளைய தமிழிலக்கியத்தில் இறுகத்

Page 37
/ー
இன்றைய சமூகம் எதையும் கருத்துச் செறிவ மறைமுகமாகவே செய்வதில் ஆர்வம் கொண்டது. அ தெரிவாக அமையும். நிலையான அமைப்பு முறை, அ இருக்கிறது என கேட்கவைக்கும் குறியீட்டு கவிதை கொண்டிருக்கின்றது இந்த ஹைகூ. எனவே சுருக்கமாய்க் மிகச் சிறந்த கவிதை வடிவம் இந்த ஹைகூவே.
எதிர்காலத்திலும் இது போன்ற இலக்கிய 6յգ ஏன் இன்றைய உலகப் பிரசித்தமான இலக்கியங்கே மொழியையோ இலக்கியங்களையோ மரபுவாதிகள் க ஏனைய மொழி இலக்கியங்களையும் அவற்றின் வடிவ கொண்டதால்தன்னையும் வளர்த்து அவற்றையும் வளர் எமது புராதன இலக்கியப் பெருமை மட்டும் பாடிக் ( கொடுக்காத வாழ்க்கையிலும் ஏராளமாய் கண்டுணர்ந் எமது மொழியை செம்மையாய்த், தூய்மையாய் வைத் என்பதற்காய் அறிவியல் இலக்கியம் கட்டுக்குள்ளே அறிவியல் யுகத்தில் கூட தமிழ் அறிவியல் இலக்கியம் செந்தமிழ் அழிய விடப்பட வேண்டுமென்பதில்லை வன எல்லாம் எக்காலத்துக்கும் பொருந்துபவை அல்ல. புரா இல்லை. வாழும் காலத்திற்கேற்ப எம்மையே மாற்றிக் விடுவோம். சிறு உதாரணம் ஒன்று. கல்தோன்றி மன உருவாக்கப்பட்ட கணணிக்காகத் தன் வரிவடிவை சீர் ெ
•్యస్
தமிழ் ஹைகூக்கள் இதுவரை சோதனை இந்தியாவில்தான். எம் மண்ணும் ஹைகூவை ஏற்றுக் கவிதைகளில் எம் கருத்துக்களைச் சுருக்கமாய் வெளிப்பு மரபுகள் வைத்துக் கொண்டு எம் மொழி, கலாசார, சமூக எம் மண்ணின் மொழியின் புதல்வியாக ஹைகூவை மா
இறுதியாய் எங்கி இந்த பூமி உருண்டைன புரட்டக்கூடிய நெம்புகோல் கவி உங்களில்
யார் பாடப் போக
அக் கவிதை ஹை

கச் செயல்திறனுடன், அத்துடன் வெளிப்படையாகவன்றி வ்வகையில் கவிதைத்துறையில் ஹைகூ மிகச் சிறப்பான லங்காரமற்ற தந்திமொழி முதல் வாசிப்பில் இதில் என்ன யமைப்பு எனப் பல இளைய சமுதாயப் பண்புகளை கருத்தாழம் மிக்க செய்திகளை மறைமுகமாய்த் தெரிவிக்க
வங்கள் தமிழுக்கு வருதல் அவசியம். ஆங்கில மொழியோ 'ளா இன்றுள்ள வளர்ச்சியை அடையக் காரணம் அம் ாவல்போட்டு தூய்மையாய் வைத்திருந்ததால் அல்லவே! ங்களையும் தன்னுள் ஏற்று தனக்கேற்ற பாணியில் மாற்றிக் $&! விட்டமையாலேயே இன்றையநிலையை அடைந்தன. கொண்டிருந்தாலோ காலத்துக்கேற்ப எம்மை வளைந்து திருக்கிறோம். உணர்ந்து கொண்டுமிருக்கிறோம். அன்று திருப்பதற்காய் ஏனைய மொழிச் சொற்கள் புகுந்துவிடும் யே வைக்கப்பட்டிருந்தது. இதன் விளைவு இன்று இவ் - தன் பிஞ்சுக் கால்களால் தளர்நடை போடுகிறது. எனவே 1ளந்து கொடுத்துப் பின்நிமிர்ந்துநிற்க வேண்டும். மரபுகள் தன இலக்கியப்புகழ்பாட நாம் இப்போதும் அவ்யுகத்தில் கொள்ளாவிட்டால் காலத்தின் காலடியில் புதைக்கப்பட்டு ன் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழ் நேற்று சய்து கொள்ளவில்லையா?
முயற்சிகளாகவே இருக்கின்றன. அதுவும் இங்கல்ல. கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் உருமறைப்புக் படுத்த ஹைகூ ஒரு சிறந்த ஆயுதமாகவே திகழும். முக்கிய போராட்ட வாழ்க்கைமுறைகளுக்கு ஏற்றவகையில் மாற்றி ற்றிக் கொள்ள வேண்டும்.
ருந்தோ உங்களிடம் ஒரு புதுக்கவிதை
தையை
கிறீர்கள்?
கூவாகக் கூட இருக்கலாம்.

Page 38
திருகோணமலை மாவட்டநாட்டாரிய
எச்.எம்.கலால்தீன், (இதழாசிரியர்), தமிழ்த்துறை, இ
இலக்கியங்களுக்கெல்லாம் தாயாகக் கருதப்ட பற்றி உலகின்இன்று பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்ப மக்களின் வாய்மொழியாக வந்த பாடல்களையே நாட்டார் நாட்டார்பாடல்கள்,நாட்டுப்பாடல்கள், வாய்.ெ எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் நாட்ட குறைந்த பாமர மக்களால் இயற்றப்பட்டவை என அம்மொழிகளுக்கெல்லாம் காலத்தால் முற்பட்ட இலக்க அவற்றிலிருந்தே ஏட்டிலக்கியம் தோன்றின என்பதையும் அ Folk எனும் ஆங்கிலச் சொல் தமிழில் நாட்ட நாட்டார்' என்றே வழங்கப்பெறுகின்றது. பொதுவாகஇலங் திருகோணமலை, மலையகம் உட்பட ஏனைய இடங்களிலு இது மருத்துவிச்சிப் பாடல் முதல் மருத்துவப் பல்வேறு இடங்களிலும் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள காணலாம். திருகோணமலை மாவட்ட நாட்டாரியலில் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா புல்மோட்டை, குச்சவெளி, நிலாவெளி, காக்காமுனை, கு வாழ்கிறார்கள். இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மட்டக்களப்பு அதனால் மட்டக்களப்பு மக்களிடமிருந்து பெறப்பட்ட ஊடுவியிருக்கலாம் என நம்புவற்கு இடமுண்டு.
w நாட்டார்பாடல்களில் காணப்படும் பல பாடல்க மறக்கவியலாத ஒன்றாகும். காதல் பொருண்மை அமை பாடல்களிலும், விளையாட்டுப் பாடல்களிலும் மிகுதியாக காதலர்களுக்கும் பயன்படுகின்றன. இப்பகுதியில் காணப்ே
காதல் என்பது 'தேன்கூடு' என்பார். கண்ண சொல்வது போன்று, "காதல்’ என்பது ஒரு சைத்தான், ஒரு நெ இன்பம் ஆகியவற்றைப் பெறுகின்றோம்.
வேறொரு வகையில் காதலைப் பற்றிக் கூ வெளிப்பாட்டின், இணைப்பு எனக் கூறலாம். இரு மனங்க காதலின் எண்ணம் அவர்களின் மனக்கண்முன்காட்சிதரும் நொந்து வெந்து போய்விடுமல்லவா! பொதுவாகக் காத கதைப்பதும் உண்டு. இக் காதலர்களிடமும் அது ஊடுருவிய ஒரு நாள், தனது காதலி குளத்துக்குள் இறா கொண்டிருந்தான். குளத்தைப் பற்றி நன்கு அறிந்திருந் அறியாதவளாய் இறங்கித்தனது வேலையைச் செய்ய முை
"லைகொசுவி லைகொசுவப் போற பெண்ணே! லை வருவுது பையில் ஏறு'

ாலில் காணப்படும் காதல் சுவை
இறுதிவருடம், கலைப்பிடம்
படுவனநாட்டார் பாடல்களே. இந்நாட்டார் பாடல்களைப் ட்டு வருகின்றன. எழுத வாசிக்கத் தெரியாத காலகட்டத்தில் பாடல் எனக் குறிப்பிடுவர். Dாழிஇலக்கியம், கிராமியஇலக்கியம்,நாடோடிப்பாடல்கள் ார் பாடல்கள் பொதுவாக ஏட்டுக் கல்வி இல்லாத அறிவு க் கொள்ளலாம். உலகின் எந்த மொழியாயினும் கியமாகத் திகழ்வது நாட்டார் பாடல்களே என்பதையும் அறிஞர் உலகம்இன்று ஏற்றுக் கொண்டுள்ளது.
3.
ார்' என அழைக்கப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் கையில்நாட்டார்பாடல்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, ம் காணப்படுகின்றன.
பாடல் வரைக்கும் பாடப்பட்டிருக்கின்ற, இலங்கையின்
மக்களிடமும் நாட்டாரியலின் தாக்கம் காணப்படுவதைக் b காணப்படும் காதல்சுவை அம்சங்களை அலசுவதே
, மூதூர் தோப்பூர், கந்தளாய், முள்ளிப்பொத்தானை, றிஞ்சாக்கேணி போன்ற பிரதேசங்களில் மக்கள் செறிந்து மக்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர். பாடல்களின் தாக்கமே திருகோணமலை மக்களிடத்தில்
ளில் காதல் பாடலும், மக்கள் மனதில்நிலைகொண்டிருப்பது ந்த பாடல்கள், தொழிற் பாடல்களிலும், தெருக்கூத்துப் இருக்கும். இப் பாடல்களின் துணுக்குகள் சில நேரங்களில் போகும் பாடல்களும் அத்தகையனவே.
தாசன் எப்படிச் சொன்னால் என்ன? ரிச்சர்டு பாம் பீல்டு ருப்பு, ஒரு சொர்கம், ஒருநரகம்.அதனின்று அன்பு, மகிழ்ச்சி,
றப்போனால் காதல் என்பது மன ஆசைகளின் நிரந்தர ளின், இறுக்கமான வெளிப்பாடு என்றும் சொல்லலாம். தன் ). அவ்வாறானபுனிதகாதலுக்கு ஏதாவது நேர்ந்தால், மனம் நலர்கள் மறைமுக மொழியைப் பயன்படுத்தித் தமக்குள் பிருக்கிறது. ங்குவதைக் காதலன் குளக்கட்டிலிருந்து அவதானித்துக் த அவள் தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை னயும் போது காதலன்,

Page 39
என்று கூற அவள்திடீரென அம்மொழியைக் ( விட்டு இறங்கி அவனருகே உருகலானாள். என்ன நான் காதலியோ, "என்னைக் காதலிப்பதற்காக இதை விட ஆ காப்பாற்றுவதற்காக சொன்னது புரியாமலாஇருக்கும்?"
'லைகொசுவி. ை
லை வருவுதுடை 'சீலை (சேலை) கொசுவி, இலை பறிக்கப் ே என்று கருத்தைக் கூறினாள்.
இப்பாடலில் அக்கால மக்கள் குளத்தில் கா போக்காட்டியுள்ளார்கள் என்பது புலனாகின்றது. இதில் காணப்படுவதைக் காணலாம்.
உயிரைக்காப்பாற்றியவனுடன் வாழ வேண்டு திருமணம் நடந்து விடுகின்றது. இல்லறம் நல்லறம் என் பரிமாற்றமும் விடுகதை விளையாட்டும்.நடைபெறுகின்றது நான்ஒன்று சொல்லுவேன்.அதற்கு விடையிறுத்தபின்னர்
"அப்படியா? என்னசுறு பார்க்கலாம்' என்றான்.
'சிரிக்கி மகளொ அவளைத்திறத்தி இருக்கி முடிஞ்ச
பெண்களுக்குப்பிடித்தபூமல்லிகைப்பூத்தாே என்றும் உலகில்தனக்குத் தெரிந்த பூவெல்லாம் சொன்னா தடையானது. விடைகாணாது மனமுடைந்தது. யாரை ந வீட்டாரிடமும் விடை கேட்டான் விடையிறுப்பார் யாரும் சென்றான். அவரோ, 'தம்பி, அதற்கு விடை உடும்பு' எ6 'விடையைக் கண்டேன். தடையில்லாமல் தாழ்ப்பாளை என்னைவிட்டுவிட்டுஇருட்டாகும் வரையாருக்கிட்ட செ சஞ்சலப்படுத்துகின்றது. 'விடை காணவே பல வீடுகள் செ என்று அவள் ஊடலுடன் கூறவே, மீண்டும் ஒரு விடுகை
'மாட்டில் கறக்க
மரத்தில் வெட்ட
நிலத்தில் முளை கூடலும் வேண்டும், ஊடலும் வேண்டும் அ தெரிந்தவரிடம் ஓட வேண்டும். அம் முதியவரிடம் சென்
'மாட்டில் கறக்க
மரத்தில் வெட்ட
நிலத்தில் முளை என்று விடையைச் சொன்னார். விடையைத் ெ இல்லை. 'அன்பே உன்பால் வந்தேன். எழுந்திராய்' என கவலையை இவன் மறந்தான். சொர்க்கம் சொர்ணகானத் காதலர்கள் என்றால்நகைச்சுவையுடன்கதை நோக்கமாகச் சென்றிருந்த கணவனை பிரிந்திருந்த ஒரு போற பெண்ணே உன் வீட்டுக்கு வர வழியைச் சொல்லு

கேட்டு அதன்படி செய்தாள். பின்னர்சிரித்தபடி அவள்மரத்தை சொன்னது எப்படி உனக்கு விளங்கியது எனக் கேட்டான். pமான வார்த்தைகளெல்லாம் சொன்னநீங்கள், என் உயிரைக் என்று கூறினாள். அப்படியென்றால் நான் சொன்னது?
லகொசுவப் போற பெண்ணே
யில் ஏறு' பாகின்ற பெண்ணே முதலை வருகுது, இலுப்பையில் ஏறு" !
ணப்படும் (இலையை) கீரையைப் பறித்து வாழ்க்கையைப் இனிமையும், தெளிவும், புதுமையும், புலமையும், திறமையும்
ம்ெ என்ற எண்ணம் வாலை அவளிடம் எழவே, இருவருக்கும் பார்கள். இவர்களுக்கிடையில் கள்ளம்கபடமில்லை. காதல் 1 து. காதலிகூறலானாள், 'அன்பானவரோஎன்னைக்கூட முதல் ான்னைத்தொடலாம்'என்றொரு கட்டளையை பிறப்பித்தாள்.
ருத்தி போறாள் திப்புடிச்சி பூ என்னபூ?"
என வினாவினாள்
னஎனநினைத்துக்கொண்டுமல்லிகைப்பூ என்றும், மாதுளம்பூ ன். எல்லாப்பூக்களுமே பிழையானது. பொழுது புலர்ந்து ?டல் ாடுவது? யாரிடம் கேட்பது? படையெடுத்தான். ஒவ்வொரு மில்லை. இறுதியாகவும், உறுதியாகவும் முதியவர் ஒருவரிடம் ன்றார். விடையைக் கண்டுபிடித்து வந்துசேரஇரவாகிவிட்டது க் கழற்றி விட்டு கதவைத் திற என்றான். 'முடியாது தனித்து ன்றதோ?" என்று சந்தேகத்துடன் கேட்கிறாள். சந்தேகம்இங்கு ான்றேன். விடைகண்டேன்கதவைத்திற'என்றான். 'முடியாது தயை தூக்கிப் போட்டு விடுகிறாள்.
ாத பாலும்
ாத தேனும்
பாததிராயும் என்ன? " என்றாள். அதை அனுபவிக்கவும் வேண்டும் அப்படியென்றால் விடை றான். அம்முதியவரோ
ாத பால் - உன்பால்
ாத தேன் - வந்தேன்
யாததிராய் - எழுந்திராய்' தெரிந்து கொண்டஇவனுக்கு எழுந்த ஆசைகளுக்கு எல்லையே *று கூறவே, அவள் ஆனந்தமுற்று எழுந்துகதவைத்திறந்தாள். தை மீட்டியது. ப்பதும், பேசுவதும், வழமைதானே - பலநாட்களாக வியாபார த்தி சந்தைக்குப் போய்வரும்போது, ஒருத்தன் 'மணம் வீசிப் ’ என்று கேட்கிறான். அதற்கு அவள்,
24

Page 40
'பாலுக்கும் பா6ை ஊசிக்கும் நூலுக்கு இந்த ராஜா போய் பட்ட மரமும் பட்ட சம்பளமில்லாத ம உறங்கினதுக்குப்பி
கேட்டவனோ வழியும் தெரியாது, விடையும் அவளின்விட்டை அடைய அவனுக்கு எழுந்த ஆசைஇந்த மறுபுறம். அவள் போனபாதையை நன்றாக அவதானித்த அ சென்றதன் பின்னர், ஒரு புறத்தில் பால்கடையும் மறுபுறத்தி தூரம் சென்றபிறகு ஊசிக்கடையையும் மறுபுறம்நூற்கடை வேளையில் சூரியன் மெதுவாக மறையத் தொடங்கினான் பட்டமரமாகிய மரப்பலகையினாலானகதவுகள் ஒன்றையெ குறட்டை விட்டு தூங்கிக் கிடந்தது. மனதுக்குள் திருப்தி நெருங்கினான். கதவைத் தட்டினான். எட்டிப் பார்த்துப் ை விழுந்தது.
இவர்களின் தொடர்புநீண்டநாட்களாக இருந்த வெளியூர் சென்ற கணவன்வந்தால்இருவரினது காதல்(கள் வாட்டி வதைத்தது.
இவ்வாறு தொடர்பு நீண்டிருந்த வேளையில் தி காதலனும் வந்துவிடுகிறான். கொல்லைப்புறமாகநின்று கா தனது கணவன்வந்திருப்பது தெரியாமல் வீட்டுக்குள்ளே Ø. கறியிடாமல் ஓடி விடுகிறாள். கணவனோ ஏதோ அவசரத் வந்த விடயத்தை காதலனிடம் எடுத்துச்சொல்ல, கோபமை வெட்டிய கூந்தலுடன் வீடு வருகின்றாள். அவளது கூந்தல் என வினாவுகிறான். அதற்கு அவள்,
'பாயேத்திப் பரிே நோயற்றுப்பிணிய சோறிட்டகையாே பூவிட்ட கொண்ை என்று கூறினாள். அதாவது, நீண்டநாட்களாக, ஆகக்கூடாது என்றும், நோய் பிணி இல்லாமல் திரும்பி கொண்டையை பிடாரியுடன் வெட்டிவீசுவதாக நேர்த்தி6ை மறைத்து விடுகின்றாள்.
இவ்வாறு சுவையும் புலமையும் கொண்ட காணப்படுகின்றன. இலக்கியச்சுவையும், அங்கதச்சுவை பொதுவாக காதலர்களுக்கிடையில் ஏற்படும் இன்று சினிமாத் திரையுலகில் புதிய வடிவம் பெற்று மிள கைவிட்ட பல பாடல்கள் இன்று நாடுகளிடையே போட
எழுவதைக் காணலாம்.

ாக்கும் நடுவர்லே, ம் நடுவாலே அந்த ராஜா வந்த பிறகு
மரமும் ஒட்டினபிறகு திரி பிறகு'
என்று கூறிவிட்டு அவள் சென்று விட்டாள். புரியாது தடுமாறுகிறான். மனதில் பல எண்ண ஓட்டங்கள் விடுகதை மூலம்நிராசையாகிவிடுமோ என்ற அங்கலாய்ப்பு வன், அவள் சென்ற பாதையில் செல்லலானான். சிறிதுதுரம் ல் பானைக்கடையும் இருப்பதைக்கண்டான்இன்னும் சற்றுத் பும் இருப்பதைக்கண்டான். இவ்வாறு சென்று கொண்டிருந்த சந்திரன் எழத் தொடங்கினான். நேரம் இரவை எட்டியது. பான்று ஒட்டி கொண்டன. சம்பளமில்லாத மந்திரியாகியநாய் அவள் சொன்ன விடையை தெரிந்து கொண்டான். வீட்டை பங்கிளியவள் உள்ளே அழைத்தாள். பழம் நழுவிப் பாலில்
தால் ஒருத்தரையொருத்தர் பிரியமுடியாதநிலை. ஆனால், ாளத்) தொடர்பு சஞ்சலமாகிவிடும் என்ற பயம்இருவரையும்
திடீரென ஒருநாள் கணவன் வந்து விடுகிறான். அதேசமயம் தலன் அவளைவரவழைக்க (சீட்டியடித்து) தூதுவிடுகிறான். ந்து விடுவானோ எனப்பயந்து கணவனுக்குச்சோறிட்டவள் தில் போகிறாள் என்று விட்டு விடுகிறான். தனது கணவன் டந்தகாதலன் அவளதுநீண்ட கூந்தலை வெட்டி விடுகிறான். வெட்டப்பட்டிருப்பதை அறிந்த கணவன்"என்னநடந்தது'
யத்திப் போன கப்பல்
பற்று வந்தேயானால்
லகறியிடமுன்னம்
டயை பிடாரிக்குக் கொடுப்பேன்"
நீங்கள் வராததால் பயந்து போனநான், உங்களுக்கு ஒன்றும் வந்தால் சோறிட்ட கையாலே கறியிட முன்னர் பூச்சூடிய வத்தேன்' என்று கணவனிடம் கூறித்தனது (கள்ளக்) காதலை
நாட்டார் பாடல்கள் பல திருகோணமலை மக்களிடம் பும் இப்பாடல்களில்நிறைந்து காணப்படுவதைக் காணலாம். உணர்வுகளைவாய்மொழியாக வெளியிடும் பல பாடல்கள் ர்வாைக் காணலாம். ஆகவே நாட்டார் பாடல் என்று நாம் டாபோட்டி போட்டுக் கொண்டு பொங்கும் அலையென

Page 41
FLDITg5IT6OTG
றஹீம்.எஸ்.எம் - கலை
ஒ. சமாதானமே!
யுத்தமேகங்கள் ரத்தத்துளியை நித்தம் பொழிய
மட்டும் எங்குசென்று சுகமாய்க்குளிர் காய்கின்றாய்?
கொஞ்சம் காஷ்மீர், ஆப்கானிஸ்தான், பொஸ்னியா, செச்சினியா..! இவைகளைப்பார்! ஏன் எங்கள் நாட்டையும் எட்டிப்பார்! இங்கு ஓடுவதெல்லாம் நீரோடைகளல்ல ரத்த ஓடைகளே!
ஏவுகணையால் எரிந்த இதயங்களோ கோடி!
குண்டு வீச்சு(க்) களால் துடித்திறந்த அப்பாவி உயிர்கள் தான் -இம் மண்ணில், எத்தனை எத்தனை!
கண்ணிவெடிக்கு இரையாகி சாக்குகளில் அள்ளப்பட்ட தசைத்துண்டுகளும் -இன்று சரித்திரம் கூறும்.
இன்று மானிட உயிர்களைப்

LD 9.g. or
ப்பீடம் - இரண்டாம் ஒருடம்
பதம்பார்க்கவே பரீட்சிக்கப்படுகின்றன நவீன ஆயுதங்கள்.
"66i."
இதயத்திலிருந்து இடறிஎழுகிறது ஓர் வினா! இது! விந்தைகள் நிறைந்த விஞ்ஞான யுகமா? இல்லை
ரத்தம் ஒட்டும் யுத்த யுகமா?
சமாதானமே! எங்கு சென்றாய் இத்தனை தசாப்தங்களாக? எங்கு நின்றாய்? வா! விரைவில் வந்திடு!
இருண்ட இதயங்களுக்கு எழில் மழை பொழிந்து உருண்ட உலகெங்கும் சமாதானக் கீதத்தை ஒலிக்கச் செய்திடு!
"போர்" என்ற சொல்லை இச்சகத்திலிருந்து நீக்கி "சமாதானம்" என்ற முத்திரையை
மானிட முகத்தில் பதித்திடு!
நொந்து கிடக்கும் -எங்கள் இதயங்களுக்கு சமாதான ஒத்தடம் போட்டிடு! சமாதானமே! சமாதான ஒத்தடம் போட்டிடு!

Page 42
சூனிய வெளியும் இனிச் சுகம்தான்
பா.பிரதீபன், பொறியியல்பிடம், இரண்டாம் வரு
வீட்டை போகிறதுக்கான ஆயத்தங்களை ெ பதட்டமாய் வந்து சொன்னாங்கள்.
'அக்பரிலை செக்கிங் நடந்ததாம். நாலைந்து ே ஏதேனும் கிடந்தால் எறிஞ்சு போடுங்கோடாப்பா'
படிச்சுக் கொண்டிருந்தவங்கள் எல்லாம் பதறி கிடைக்காம வெளியிலை இருந்த நேரம், புதினத்தை த புதினத்தை அறியும் ஆவல் எங்களுக்கு.
'ஏன் என்னத்துக்குப் பிடிச்சவங்களாம்?" எல்லோருக்கும் அறிவதிலை ஒரு அவசரம்தா 'ஏதோ புத்தகம் கிடந்ததாம். அதுதான்பிரச்சை 'கம்பஸ் ஸ்ருடன்ட் என்றால் புத்தகம் வாசிக் 'ஏதோ கெரில்லாத்தாக்குதல்கள் பற்றினதாம் 'சிங்களப் பெடியள்தான் காட்டிக் கொடுத்தல் 'அவங்களோடை பிரச்சனையாம்'
"இவையும் வடிவாப் பழகலாம்தானே. அே பெடியள் காட்டிக் கொடுத்தவங்கள்' அவர்கள் கம்பஸில் விட்டார்கள்.
எனக்கு மனசுக்கை ஒரு நெருடலாய் இருந்: பிடிச்சதை நியாயப்படுத்திப் போடுவாங்கள். நாளைக்குற
'தொடர்பிருந்தாலும் இருக்கும்' என்று. என்ரை 1C படமும் தெளிவு இல்லை. படம் எ வந்தது. நான்தான் ஆசையிலையும் அவசரத்திலையும் அ வெள்ளையாய் படம் எடுக்கிறது கரைச்சலெண்டது அலுப்படிப்பாங்கள் என்ற அவசரமும் கூட.
இவ்வளவு நாளும் கம்பஸ் ஐசியைக் காட்டி கம்பஸிற்கேயே செக்கிங் என்றபடியால் கட்டாயம் ந பிடிபட்டாலும் எங்களுக்காண்டி கதைப்பதற்கு யார் ! பண்ணுவினம். தமிழ்ப்பெடியள் கண்டபாட்டுக்கு வெளிக் என்றெல்லாம் அட்வைஸ் வரும், கொஞ்சநாள் விட்ட அக்பருக்குள்ளையே நல்ல வசதிகள்தானே ரோட்டிலை
ஏன் இந்தப் பிரச்சினையை, உடனடியாக இந்: வளருமோ எண்டு பார்க்க எத்தனை மாதமாய் ஆசையாய சொல்லி விற்ற புத்தகத்தை ரூமிற்குள் வைச்சு வாசிச்சவன தமிழனாக இருந்து கொண்டு எனக்கெண்டு தனிய ஒரு போகத்தான் வேண்டி வரும் என்று உள்மனசு சொல்லிச்சு

--tb
சய்து கொண்டு இருக்கேக்கை அக்பருக்கு போனவங்கள்
பேரைக் கொண்டு போறாங்களாம். அடுத்ததுஇஞ்சைதான்.
படிச்சு எழும்பிவந்தாங்கள். அப்ப எங்களுக்கு ஹொஸ்டல் ான் தான் முதலிலை சொல்லுற சந்தோஷம் அவனுக்கு.
ன்.
}னயாம். ஆனால் அதுகண்காட்சியிலை வித்த புத்தகமாம். y கத்தானே வேணும். ஏன் என்ன புத்தகம்?"
பங்களாம்'
தோட கன பிழையள் விட்டுட்டினம். அதுதான் சிங்களப் செய்த பிழைகள் எனச்சிலவற்றை பட்டியலிடத் தொடங்கி
திச்சு. பொலிஸ் துப்பறிய முதலே எங்கடை பெடியளே நான் பிடிபட்டாலும் சொல்லுவாங்கள்
ாடுக்கேக்கை அது பிளாஷ் லைற் கூடி வெள்ளையாத்தான் ப்பிடியே படத்தை அனுப்பிப் போட்டன். இப்படி என்னை ஒரு பிரச்சினை. மற்றது A/L Testக்கு இல்லாட்டி
க் காட்டியே எல்லா இடமும் தாண்டி வந்திட்டன். இப்ப ஷனல் ஐ.சிதான். பிடிபடுறதுக்கு சான்ஸ் கூட எனக்கு. இருக்கினம்? ஹோல் மீட்டிங் கூடி அட்வைஸ் மட்டும் கிட்டுத்திரியாதையுங்கோ. கண்டிக்குப் போகாதையுங்கோ ால் பேராதனைக்கு போக வேண்டாம் என்பினம். பிறகு இறங்காதையுங்கோ என்று சொல்லவும் சான்ஸ் இருக்கு. நத்தாடியை வழிக்கோணும். தாடி வளர்த்தா அடர்த்தியாய் வளர்த்தது. கண்காட்சியிலை யாரும் வாசிக்கலாமெண்டு னத் தமிழன் வாசிச்சது பிழை என்று பிடிக்கிறாங்கள். நான் தாடி வளர்த்தால், என்ரை தோற்றத்துக்கு உள்ளுக்கை து. வழிப்பம்.

Page 43
தாடியை மட்டுமில்லாமல் மீசையையும் சே தப்பலாம்.
தாடி, மீசையை வழிச்சிற்று கண்ணாடியைட சிங்களவன்மாதிரிஇருக்கும் என்று நினைத்தால் அது அச அதென்ன அசல் சிங்களவன்? முந்தி கொழும்புப் பக்க மீசையில்லாத முரட்டுமுகம் தான் எனக்கு ஞாபகம் வரும் பார்த்தவுடன் தான் வடிவான, நல்ல சிங்கள ஆட்களும் ! எனக்கு இப்பவும் நல்லநினைவிருக்கு. நானும் கேதீஸ0ம் வயலுக்குள்ளாலை வாறனாங்கள். அப்ப எனக்கும் அவ இழுத்து விழுத்திப் போட்டன். அவன் அடுத்த நாள் எல்லோருக்கும் முன்னாலை என்ன நடந்ததென்று கேட் குடையாலை இழுத்து விழுத்திப் போட்டான்' என்று. வழமையாய்ப்பிடிக்கிறது குடை குடைப்பிடியின்ரைஅடி என்று புதுவிளக்கம் சொன்னான். அது போலத்தான் என்: இப்ப என்னைக் கண்டால்மீசைஎடுத்ததற்குக! என்று போக கணக்காக என்னைக் கண்டுட்டாங்கள். 'இே
'போடா பேயா சல்மான்கான் மாதிரி எல்லே
ஆளாளுக்கு ஒவ்வொரு உவமானம், உருவக இனி விட்டால் பிழை.
"நெடுக ஒரே மாதிரி ஸ்ரைல் இருக்காம, கட் பிளான்" பயத்திலைதான் வழிச்சது என்று காட்டக்கூட பார்த்தால் நாட்டுப்பக்கச் சிங்களவன் மாதிரி உனக்கு ஒ
இனிச் சரணடையுறதுதான் ஒரே வழி. இப்ப விமர்சனம் பண்ணிப் போடுவாங்கள். திரும்பவும் போ பொருந்திற மாதிரிக் கிடக்கு. ஆனால் அப்பிடியே தொட மாதிரி ஒரு உணர்ச்சி. ஒரு சின்னச் சந்தோஷத்தோட கட்டி
கட்டில்ல இருந்து ஒரே யோசனை தான். மு. கடவுளின்ரைதீர்க்கதரிசனத்தைப் பாரன். கண்ணிலைவா மூக்கிலைதான் நிக்கோணும் என்று அப்பவே நினைச்சு யோசிக்கிற மாதிரி. அதற்குப் பிறகுநானும் ஏதாவது வித்தி யோசிக்கேக்கை 'இந்த நுளம்பேன் காதுக்கைதான் ரீங்க
உடம்பிலை எவ்வளவு இடம் இருக்கு? ஏன் பிறகுதான் எனக்கு விளங்கிச்சு. எங்கை ரீங்காரிச்சாலும் கா கண்டுபிடித்ததாய் ஒரு சந்தோஷம். ஆனால் இப்ப என்ை சாகோணும்?நிம்மதி எங்கட வாழ்க்கையிலை வராதோ? நாளைக்கு வீட்டை போறவழியில் ஒரு இட அர்ச்சனை செய்து போட்டு வெளிக்கிடோனும், கண் இருக்குதெண்டது என்ரை அபிப்பிராயம். கோயில் வாசலு தமிழாக்கள்தான் கூடப்போறவை. ஆனால் ஒரு வித்தியா வெறுத்துப் போய்த்தான் வரோணும். கோயிலுக்குப் டே விபூதி, சந்தனம் எல்லாம் பூசினன். கோயிலைத் தாண் பார்க்குதோ என்று ஒரு பார்வை. கைலேஞ்சியை எடுத்துவ

ர்த்து எடுப்பம், சிங்களவன் மாதிரி இருக்கும். சுகமாகத்
ப் பார்த்தா என்னைப் பார்க்க எனக்கே பிடிக்கேல்லை. ல் சிங்களவன்மாதிரியெல்லே என்னை மாத்திப் போட்டுது. ம் வராமை இருக்கேக்கை சிங்களவன் என்றவுடன் ஒரு 1. அதுதான் அசல் சிங்களவன். ஆனால், இஞ்சாலை வந்து இருக்கினம் என்று விளங்கிச்சு. முந்தி நடந்த ஒரு சம்பவம் பள்ளிக்கூடம் விட்டு வரேக்கை வெள்ளம் அலசிறகிற்காக பனுக்கும் கொழுவல் வந்து, நான் குடையாலை அவனை அதிபரிட்டைச் சொல்ல, பிரார்த்தனை மண்டபத்தில் ட்க, அவன் சொன்னான் ‘இவன் என்னை அம்பிறில்லா அதென்ன அம்பிறல்லா குடை என்று கேட்க 'நாங்கள் யிலை வளைஞ்சுUமாதிரிஇருக்கிறது அம்பிறில்லாகுடை" னைப் பார்க்க அசல் சிங்களவன் மாதிரிஇருந்திச்சு. டிச்சே கொண்டு போடுவாங்கள். நைசாகரூமிற்குள்படுப்பம் தன்ன அடிபட்டு நெழிஞ்சலொறி மாதிரி இருக்கு'
இருக்கு' 'உது பொலிஸ் பயத்திலை’
ம் செய்யத் தொடங்கி உண்மையையும் பிடிச்சிட்டாங்கள்.
மல் மாதிரி இடைக்கிடை ஸ்ரைல் மாத்திறதுதான் என்ரை ாது. காட்டினால் நக்கலடிச்சே கொண்டு போடுவாங்கள். ரு ஸ்ரைல் தேவைப்படுதோ?”
டியே விட்டால் பகிடி பகிடியாய் என்ரை வடிவைப் பற்றி ப் கண்ணாடியைப் பார்த்தன். சொன்னதெல்லாம் சரியாப் iந்து கண்ணாடியைப் பார்க்க முகத்திலை ஒரு சாந்தம் வாற டில்ல அப்பிடியே விழுந்தன். ந்தி வாசிச்ச ஒரு கதையிலை எழுதியிருந்திச்சு, 'இந்தக் றபிழையை நிவர்த்தி செய்ய போட வேண்டிய கருவிஇந்த ஈத்தான் மூக்கை இப்பிடி படைச்சிருக்கிறாரோ?' என்று கியாசமா யோசிக்கோணும் என்று ஆசை. அப்டித்தான்நான் ாரிச்சுக் கொண்டு நிக்குது' என்று யோசிச்சன்.
ா காதுக்கை மட்டும்? ஆனால் கனநாள் யோசனைக்குப் துக்கைதான்சத்தம் கேட்குமென்று. அண்டைக்கு பெரிசாய்க் ரயோசனை எல்லாம் 'ஏன்இப்படி எல்லாத்துக்கும் பயந்து 'என்றுதான்.
மும் பிடிபடாம இருக்கக் கட்டுக்கலைப் பிள்ளையாருக்கு டி கட்டுக்கலை கோயில் தூர திருஷ்டி இல்லாமக் கட்டி லுக்கு நேர்முன்னுக்கு பொலிஸ் ஸ்ரேசன். இரண்டுக்கையும் சம். ஒண்டுக்கை போனால் வாறதுகஷ்ரம். வந்தாலும்மனம் 1ாய்க் கடவுளைக் கும்பிட்டுட்டு பெரிய பக்திமான் மாதிரி ாட முதல் ஒருக்கா யாரேனும் தெரிஞ்ச சனம் என்னைப் பியர்வை துடைக்கிறமாதிரிவிபூதி, சந்தனம் எல்லாத்தையும்

Page 44
/ー
ஒரே துடை துடைச்சுப் போட்டு, நான்தமிழன் என்று காட் தாண்டினவுடன் தான் மனசுக்கை ஒரு தெம்பு. பிள்ளைய கொழும்பு போய் அங்கிருந்து யாழ்தேவியின் எல்லாச் சனமும் என்னைத் தான் பாக்குதுகள், மீசை, வ தமிழன் என்று தலை இழுப்பு காட்டிக் கொடுக்குதோ? அ பயப்பிடுதோ? இப்படித்தான் டென்ரல் பிள்ளை ஒன்று ெ பக்கத்திலை இருக்க, சீற்றிலை இருந்த சிங்கள மனிசி எ பெட்டையள் வேக் உடன் வந்தாலே இப்ப சனத்துக்குச் சரி தனுமாதிரிஇருந்திற்றுதோ, எழும்பிப் போறளவுக்குப்பய அம்பிடாமத்தப்ப முதல் வேலையாய் மணிக்கூட்டைக் கழ கதையைத் தொடங்கினால் பிரச்சினை. மற்றது ஜன்னல்க முடியுமட்டும் நடிக்கிறது.
நானும் மணிக்கூட்டைக் கழட்டிப் போட்டு இரு என்று போட்டு உடனேயே நான் நித்திரைதான். அவன் ே கொள்ளுதெண்டு. அவனுக்கு எங்கை விளங்கப் போகுது நித்திரைதான் என்ரைதற்காப்பு ஆயுதம்.
லெற்றர் ஒன்றும் கொண்டு போகேலாதாம், ! கொடுமை. சாப்பாடு, மண்ணெண்ணெய் விடாட்டி கூட விடாட்டி யாரின்ரை கடிதத்தை வாசிக்கிறது ஏன் இ உலகத்திலுள்ள ஆயுதங்கள் எல்லாம் அப்பிடியே ஒருநா வழமையான கெடுபிடிகள் எல்லாம் தாண்டி, ! 'ஐ.சிதாங்க"
எடுத்துக் கொடுக்க அவன் என்ரை முகத்தை அவன்ரைமுகத்தைப் பார்த்தால் அவன் தன்னைப் பார்த் கீழ பார்ப்பம். ஆனால் கீழ பார்க்க தன்னை மதிக்காமல் அப்பாவி மாதிரி முகத்தை வைச்சுக் கொண்டு நீங்கள் த முகத்திலிருந்து கீழ பார்த்துக் கொண்டு வந்தவன் காலைL செருப்பு: அக்பர் பழக்கம் ஆயுசு வரைக்கும். பாத்ளும் ச்ெ சுற்றிவர எல்லாரையும் பார்த்தன். எல்லாம் சோலாப்புரியு ஒரு டவுட், ஒரு முறைச்சல் பார்வையோட கேள்வி கொ வைச்சுக் கொண்டு சரியாய்ச் சொல்லித்தப்பிற்றன்.
இனிச் சென்றியடி தாண்டி விட்டாச் சரி. சென் தலையாட்டியும் இருக்கும். அங்கை எங்கேன் எறும்பு க பார்த்துக் கொண்டுநடந்தாலும் ரெக்கி எடுக்கிறானோ என் தூக்கிற மாதிரி தோளிலை வைச்சுமுகத்தை ஒரு பக்கம் மன பிஸியாய் போற மாதிரி எல்லாம் தாண்டியாச்சு, ஆனால் எல்லாற்றை முகத்தைப் பார்த்தாலும் ஒருசந்தோஷம். என என்ற சந்தோஷமோ? சூனிய வெளியையும் சுகமாகத்தா

டாத மாதிரி ஒரு ஸ்ரைல் நடையோடை பொலிஸ் ஸ்ரேசன் ர் கைவிடேல்லை.
லதான் போகோணும். கொழும்பு பஸ்ஸoக்கை ஏறினால் ழிச்சது வடிவாயிருக்குதோ? அல்லது மீசை வழிச்சாலும் புல்லதுபெரிய வேக் உடன் ஏற குண்டு கிண்டென்று சனம் ாட்டும் வைச்சுக் கொண்டு பாக் உடன் ஏறி ஒரு மனிசிக்குப் ழும்பிப் பின்னாலை போயிருந்திற்றுதாம். தமிழ்ப் பெடி யான பயம்தான். அல்லது அந்தப் பிள்ளை பார்க்கிறதுக்கு ப்பிட எங்கட பெடியள் பஸ்ஸிலை ஏறினால்தமிழன் என்று ட்டிப் போடுவாங்கள். தற்செயலாய் வெலாவ கீயத' என்று ரையாய் அப்பிடியேநித்திரை கொள்ளுறது மாதிரி பயணம்
நக்க, பக்கத்திலை இருந்தவர் சிரிச்சார். இது விஷயம் பிழை பாசிச்சிருப்பான் இது என்ன எருமைமாடு மாதிரிநித்திரை எங்கடைநிலை. இப்படியே வவுனியா போகும் மட்டும்
உதிலை இருக்கிற பெட்டிக்கை போடட்டாம். இது என்ன டக் காசுக்கு வேண்டியெண்டாலும் பாவிக்கலாம். கடிதம் ப்படி மனிசத்தன்மையில்லாமல் இருக்கிறாங்களோ? ளிலை அழிஞ்சு போனால் எவ்வளவு நல்லாயிருக்கும்!
செக்கிங் இடத்திற்கு வந்தாச்சு.
தப் பார்த்தான். அவன் என்னைப் பார்க்கேக்கை நானும் துநான் முறைக்கிறதெண்டு நினைக்கப்போறான். பேசாமக் ) விலாசமாய் நிக்கிறான் என்று நினைச்சிற்றால். பேசாம ான் தெய்வம் எண்ட மாதிரிநிக்கிறதுதான் சரியான வழி. பார்த்துட்டு அப்பிடியே நின்றிட்டான். காலிலை பாத்ளும் ருப்புத்தான் கிளாலிக்குத் திறம் என்று வந்ததன் விளைவு. ம் அதற்கு மேலயும். அவனுக்கு என்னைக்கம்பஸோ என்று ஞ்சம். நானும் என்ரை பங்கிற்கு முகத்தை அப்பாவியாய்
றி தாண்டுறதுதான் கொஞ்சம் கவனமாய் இருக்கோணும். டிச்சு தலையாட்டினாலும் நான் உள்ளுக்கைதான். எங்கை று டவுட் படுவாங்கள். ஒரு வழியாய் வேக்ஐகஷ்ரப்பட்டுத் றச்சிட்டன். முகத்திலை வியர்வையைதுடைச்சுக் கொண்டு ) இனித்தான் சூனியப் பிரதேசம் தாண்டோனும், ஆனால் க்கும்தான். இனித்தமிழன் என்று தங்களைப் பிடிக்கேலாது ண்ட வைக்கிறது.
ཡོད

Page 45
என் கறு எம்.விஜிலி -
கனத்த பக் நமுத்துப்பே நினைவுகை நிகழ்வுகளை நிரப்பிக் கெ
மீத வெளிக தனிமையும்வெறுமையுப
மடிப்பு ஓரங் பிரிவு அவள் ஆச்சரியக் கேள்விக் கு தான்
முட்டி மோத விழுகின்றன 6JJT6TLDITuj...
இரத்தம் தே கனவுகளும்UITgu Jä585 கண்ணிர் வி
சே.
a560DL fu ule வேறு ஒருநா பிறிதொருஆயுத தேச நானும் தனித்துப்பே
(
V,

ப்பு டயறி
விடுகை வருடம்
5ங்கள்
TTuqLİD Iեւյմ)
களில் ல்தைகளும்குறிகளும்(!) றிகளும்(?)
நிக் கொண்டு
ாய்க்கப்பட்ட
ங்களுக்குள் டுகிறது.
5கத்தில் ள் இரவு
த்தில்
T.
30

Page 46
இலங்கை அரசியலில் சாதிச் செல்வி
எம்.ஐ.எம்.நஸார், அரசியல்துறை, இறுதிவரு
இந் யா, இலங்கை போன்ற தென்னாசிய ஒட்டியதான குடும்பச் செல்வாக்கும் முக்கிய சக்திகளாக மற்றும் குடும்பச் செல்வாக்கு இந்தியாவின் அளவிற்கு இ அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இலங்கையில் சி காணப்படுகின்றன.
சாதிகளும், குடும்ப அமைப்புக்களும் இலங் அவற்றின் கொள்கைகள், வழிமுறைகள் என்பவற். பிரதிநிதித்துவத்தையும் நிர்ணயிக்கின்றன.
சிங்கள மக்களினாலும் புத்திஜீவிகளாலும் சா இந்தியாவில் சாதிகள் பற்றிய ஆய்வு பரந்ததாகவும் இலங்கையில் அவ்வாறான நிலை இல்லை என்றே க ஆய்வாளர்களினால் கிராமிய மட்டத்துடன் குறுகியதா எண்ணிக்கையான எழுத்தாளர்களே இலங்கை அரசியல் செலுத்தும் செவ்வாக்கினை விளக்குவதற்கு முயற்சித் மெளனமாக இருப்பது புரிந்து கொள்ளத்தக்கது. ஏ வெளிப்படையாகப் பேசப்படுகின்றது. ஆனால், அதிகள் காணப்படுகின்றன. இலங்கையரின் மத்தியில் காணப்படு பெற்றிருக்கும் போற்றத்தக்க தன்மைகளையும் பற்றி உதாரணமாக, மீன்பிடித் தொழிலாளர்கள் கரவா (Kar இலங்கையின் தென்பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் வ என்று கூறிக் கொண்ட போதும் தாம் சார்ந்துள்ள சாதியில் செயற்பாட்டினைநீண்டகாலம் அவதானித்தவரான H.A. மேனாடு மயப்படுத்தப்பட்ட நகர்ப்புறச் சிங்கள மக்களி "கல்விகற்ற இலங்கையர்கள் சாதிபற்றிப் பேச விரும்புவ சாதிகளையும், சேர்ந்த பிள்ளைகள் படிக்கும் பாடசாலை நண்பன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்பதை அறிவத
கிராமியச் சிங்கள மக்கள்நகர்ப்புறச் சிங்களவ வேளை புதியவர் ஒருவர் சாதி பற்றிய ஆய்விற்காக அ சரியான விடை கிடைப்பதில்லை.
குடும்ப உறவுகளில் உண்மையில் சாதித்தொ அங்கத்துவம், குலம், திருமணத் தொடர்புகள் என்பன பற்றி அவர்கள் வெளிப்படையாகப் பேசுவர். திருமண வி பெரும்பாலானவர்கள் தமது பெயர்களுடன் சாதி மற்றுப பிற் சேர்க்கைகளையும் செய்துள்ளனர்.
தினக்குறிப்புகள், ஆவணங்கள் என்பன கு தரத்தினையும் உறுதிப்படுத்துகின்றன. எனினும், அ6ை சிலருக்கு மாத்திரமே கையளிக்கப்பட்டிருக்கின்றன சென்றடைந்து விடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு

வாக்கும் அதன்தாக்கமும்
நடம்
நாடுகளின் அரசியல் நடைமுறையில் சாதிகளும் அதனை விளங்கிவந்துள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை சாதி இறுக்கமானதாக இல்லாவிட்டாலும் புறக்கணிக்க முடியாத ங்கள, தமிழ் சமூகத்தினரிடையே இச் சாதி வேறுபாடுகள்
பகையின் நவீன அரசியல் சிந்தனை, அரசியல் கட்சிகள், றில் செல்வாக்குச் செலுத்துவதுடன் பாராளுமன்றப்
தி என்பது 'மிக முக்கியமானது' எனக் கருதப்படுகின்றது. கூடியளவு விடயங்கள் பெறத்தக்கதாகவும் உள்ளது. sற வேண்டும். இங்கு சாதி பற்றிய ஆய்வு சமூகவியல் ாகவே ஆராயப்பட்டுள்ளது. உண்மையில் மிகச் சொற்ப மில் கிராமிய மட்டத்திலோ அல்லது தேசிய மட்டத்திலோ துள்ளனர். பெரும்பாலான அறிஞர்கள் இது விடயமாக னெனில், சாதிகள் சம்பந்தமாக மிகக் குறைவாகவே ாவான சுட்டிக்காட்டத்தக்க வரையறுக்கப்பட்ட பேச்சுக்கள் கின்ற வேறுபட்ட சாதிக்குழுக்களையும் சமூகத்தில் அவை ச் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. (awa) சாதியினர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ாழ்பவர்கள் 'எல்லோரும் உறவினர்கள்' (Okkomanada) னரையே இது குறித்துநிற்கின்றது. இலங்கையின் அரசியல் J. Hulugalle 1947b6õóT69 G5i56w Lupiipól 67 (upgulið Gung, னி மனோநிலையினைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். பதில்லை. ஆனாலும் பல இனங்களையும், மதங்களையும், யின் கல்விகற்கப் போவார்கள் ஆயின்தன்னோடு பழகும் நில் ஆர்வம் உடையோராக இருப்பர்.
ருடன் மிக அபூர்வமாகவே சாதிகள் பற்றிப் பேசுவர். அதே து பற்றி அறிய வேண்டி வினாவும் போது பெரும்பாலும்
டர்புகள் கூடிய பங்கினை வகிக்கின்றன. அதாவது குடும்ப இவற்றின் அடிப்படையிலேயே காணப்படுகின்றன. இது பிசாரணைகளின் போது இது முக்கியவிடயமாக இருக்கும். ம் குடும்பப் பெயர்களை அடையாளப்படுத்தும் வகையில்
தறிப்பிட்ட குடும்பத்தவரின் செல்வாக்கினையும் உயர் வ தொடர்பான பதிபுகள் வரையறுக்கப்பட்டு குறிப்பிட்ட காரணம் தாழ்த்தப்பட்டவர்களின் கைகளில் அவை செய்யப்பட்டதாகத் தெரிகின்றது.
31

Page 47
r
ஏலவே, குறிபபிட்டது போல இலங்கையில் விபரங்களோ நம்பத்தகுந்த சாதிரீதியான சனத்தொகை சிங்களச் சனத்தொயில் 50%க்கும் அதிகமானோர் கெ ஜிக்கின்ஸ் 1979ம் ஆண்டு செய்த கணிப்பீட்டின் படி அடிப்டையாகக் கொண்டஇவர்கள் மரபுரீதியாகநாட்டில் இலங்கை அரசியலில் சிங்களத்தலைவர்களை எடுத்து ே இலங்கையின் பெரிய அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. ஐ.தே.கட்சியின் கட்சியின் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்ட" செனநாயக்க கரைநாட்டைச் சேர்ந்தவராக இருந்த போது பிரித்தானியராட்சியில் இவரை உயர்ந்த அந்தஸ்திற்கு 2 குடும்பம் "ரத்வத்தை' என் அழைக்கப்பட்டது. இது ! முக்கியத்துவம் பெற்று விளங்கிய பிரபுத்துவ குடும்பமா சாதியையும் சேர்ந்தவர்கள் என்ற முடிவிற்கு வரலாம். த பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் சிறிமாவோ பம் ரத்வத்தே போன்றோர் ரத்வத்தை குடும்பத்தினைச் சே கொய்கம சாதியினர் பெரும்பாலும் பெளத் தேசிய விடயங்களில் சங்கவுக்காகக் குரல் கொடுப்போர் பரவலாகக் காணப்படுகின்றனர். இச்சாதியினரிடையே இ ரீதியாக அடையாளப்படுத்தப்படுகின்றன. கண்டிபெ என்பனவே அவ்விரு பிரிவுகளுமாகும். இவை .ெ உடையனவாகக் காணப்படுகின்றன.
கண்டிய கொய்கம சாதியினர் 1815 இன் பின் கரையோர கொய்கம சாதியினர் தமது பொருளாதாரத்;ை எனினும் பெரும் எண்ணிக்கையிலான 'கொய்கம'சாதி
சிங்கள மக்களிடையே கொப்கம சாதியின்: கETக்கிடப்பட்டுளன்னது சில சாதியினர்தாங்களும் கொ அதை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை.
கராவ, சலாக துவார ஆகிய சாதியினரின் க் பிரதேசங்களில் காளப்படுகின்றது. கரவா சாதியி: காணப்படுவதால் குறிப்பிட்ட அப்பிரதேசங்களில் எனக்கூறுகின்றனர். எனினும் கரையோரப்பிரதேசங்க பிரித்தானியர் ஆட்சிக்காலததில் இவர்கள் குறிப்பிட்ட ஒ. கிறிஸ்தவ சுரண்பா சாதியினர் என்றும் பெளத்த கரவா பெளத்தவர்களே பெரும்பான்மையினராவர் இருப்பினு குடும்பங்களும் காணப்படுகின்றன. கிறிஸ்தவ 'கீரவா' தெற்கிலும் சிலாபம் முதல் மொரட்டுவை வரை கான தென்பகுதியில் காணப்படுகின்றனர். புவியியல் ரீதியாக இச்சாதியினர் பெளத்த தலைவர்களாக உயர்ந்துள்ளது. காண்ப்படுகின்றனர். இவர்களின் செல்வாக்கு என அழை பகுதிகளுக்கும் வியாபித்துள்ளது. மேலே குறிப்பிட்ட பொறுத்தமட்டில் கரவாசாதியினர் மீன்படித் தொழிலையு சாதியினர்கள் இறக்குவனையும் கொண்டுள்ளனர். இம்

ாதியியல் ரீதியான ஆய்வு குறைவு என்பதனால், புள்ளி படிவமோ கிடைக்ககக் கூடியதாகவில்லை. இருப்பினும் ப்ரு: {Krylgara) சாதியினைச் சேர்ந்தவர்களாவர்
56.2 சதவீதத்தினர் இச் சாதியினரே விவசாயத்தினை தலைவர்களாக வரும் தகுதியினைப் பெற்று வந்துள்ளனர் ாக்கினால் இதன் உண்மைநிலைமையை உணரமுடியும் பும், பூநீலங்கா சுதந்திரக் கட்சியும் இந்நாட்டில் தமக்கென தலைவரான டீ.எஸ் சேனநாயக்கவும், பூநீலங்கா சுதந்திரக் ரநாயக்கவும் 'கொய்கம' சாதியினராவர். டீ.என். ம் நல்ல குடும்பப் பின்னணியும் பொருளாதார வளமும் பர்த்தி விட்டது. அதே போன்று பண்டாரநாயக்கவினது மிகச் சக்தி வாய்ந்த மரபு ரீதியான கண்டிய சமூகத்தில் கும். எனவே இரு தலைவர்களும் உயர் குடும்பத்தையும் ற்போதைய இலங்கையின் ஜனாதிபதி திருமதி சந்திரிகா ன்டாரநாயக்க, பாதுகாப்புப் பிரதியமைச்சர் அநுருத்த *ந்தவர்கள் என்பதுடன் கொய்கம சாதியினருமாவர்.
தர்களாகவும் சியாம் நிக்காயவைச் சேர்ந்தவர்களாகவும், 5ளாகவும் காணப்படுகின்றனர். இவர்கள்நாடு முழுவதும் ரு பிரிவுகள் காணப்படுகின்றன. இப் பிரிவுகள் புவியியல் காய்கம சாதியினர் கரையோரக் கொய்கம சாதியினர் பாருளாதார ரீதியாகவும் வேறுபட்ட தன்மைகளை
னர் அரச காணிகளுக்குச் சொந்தக்காரர்களாகவும் இருக்க த விவசாயத்தின் மூலம் மேம்படுத்திக் கொள்ளலாயினர் பினர் வர்த்தகத்திலும், கைத்தொழிலிலும் ஈடுபடுகின்றனர். ரைத் தவிர ஒன்பது உப-சாதியினர் காணப்படுவதாகக் ப்சும சாதியினர் என கூறிக்கொண்டபோதும் ஏனையோர்
டினமான அமைப்பு மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் ஊர் 'கொப்சும' சாதியினரிடத்தில் தொடர்பற்றுக் உயர்ந்த சாதியினர் தாங்களே உயர்ந்த சாதியினர் னிலே கூடியளவு இச்சாதியினர் வாழ்ந்த போதிலும், ரு பகுதியினர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியதன் மூலம் சாதியினர் என்றும் இரு பிரிவுகள் ஏற்பட்டன. இதில் ம் கணிசமான அளவு கத்தோலிக்கச் செல்வாக்கு உள்ள
சாதியினர் புவியியல் ரீதியாக கொழும்பு வடக்கிலும், ப்படுகின்றனர். எஞ்சிய பெளத்த 'கரவ" சாதியினர் ாழ்ந்த பகுதியான கரைநாட்டுப் பிரதேசங்களில் இருந்து -ன் சங்க வேலைகளில் ஈடுபாடுகொண்டவர்களாகவும் க்கப்படும் அம்பலாங்கொடை காலி மாத்தறை, ஆகிய மூன்று சாதியினரதும் மரபு ரீதியான தொழில்களைப் ம், சலாகம சாதியினர் கறுவாப்பட்டை உரித்தலும், துராவ மன்று சாதியினரும் வர்த்தகத்துறையிலும், கைத்தொழில்

Page 48
துறையிலும் அவர்களின் எண்ணிக்கைக்குப் புறப காணப்படுகின்றனர். கரவா சாதியினரின் பொருளாதார
'கராவ' சாதியினரின் பொருளாதார நடவடி எண்ணிக்கையானோர் தச்சுத் தொழிலிலும் கணிசமா காட்டுகின்றனர். பழைய 'கராவ'குடும்பத்தினரும் பின் பீரிஸ் குடும்பம், டீ சொய்சா குடும்பம் போன்றவை அ இறப்பர் தோட்டங்களே கணிசமான அளவினைத் கிறிஸ்தவர்கள்ணவர்த்தக்த்துறையில் செல்வாக்குச் செலு என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை மட்டுமன்றி சில மேற்கொள்வதன் மூலம் கண்டிப்பகுதியில் செல்வாக்கு L
'சலாகம' சாதியினர் கறுவாப்பட்டை உரி என்பதோடு, கராவ சாதியினரைப் போல் தோட்டத்து மாகாணத்தில் பலப்பிட்டியவைச் சேர்ந்த ராஜபக் பிரித்தானியரால் பெறப்பட்டது. தற்போது இது ட அழைக்கப்படுகின்றது. பெருந்தோட்டத்துறையில் இடம் பிடித்திருந்தனர். உதாரணமாக SirCeyril De ஆரம்பித்ததுடன் தமது வாழ்நாளில் இலட்சாதிபதியாகவு
இன்னும் சில சாதியினர் குறிப்பிடப்பட்ட பே கடினமாக உள்ளது. இருப்பினும் சாதி அடிப்படையில் ( இவர்களுக்குச் சற்று மேம்பாடனவர்களாக 'பத்கம் ச காலத்தில் அரசனின் படையில் காலாட்படையினராகவும் மேற்படி சாதியினரின் சனத்தொகைக்குச் சற்றுச் சமமான சாதியினராவர். இவர்களின் மரபுரீதியான தொழி வேலைக்காரர்களாகவும் காணப்படுகின்றனர். இச்சாதியி மதத்தினையும் இலங்கைக்குக் கொண்டு வந்த போதுபெ சேவகர்களாகவும் இலங்கைக்கு வந்ததாகக் குறிப்பிடுகின் காணப்படுவதுடன் இரத்தினபுரிப் பகுதியிலும் ஆங் கேகாலைக்கும் மாத்தளைக்கும் இடைப்பட்ட கிராமா மாகாணத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் சப்பி கரையோரப்பகுதிகளில் வகும்புர சாதியினர் சிறுசிறு குழு
'கொய்கம', 'வகும்புர' 'பத்கம்' சாதியின காரணமாகக் கணிசமான அளவு எண்ணிக்கையுடைய செய்வோர்), Berawa (மேளம் அடிப்போர்), Navandana பெயர்களின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கள மக்கள் மத்தியில் 'கொய்கம' சாதியி தமிழ் மக்களிடையே வேளாளர் சாதியினர் உயர்ந்த ஆ சமுதாயத்தின் அரசியல், சமூக, பொருளாதார ஸ்தாபன ஆண்டு அவர்களின் கணிப்பீட்டின் படி 50வீதத்திற்கு! மக்களிடையே காணப்படுகின்றனர். வெள்ளாளரின் பி நிலையில் இருப்போர் கோவியர் (வீட்டு வேலைக்காரர்க 'கரையார்' 'முக்குவர் ஆகிய சாதியினராவர். இரு சாதி சாதியினர் வடக்குக் கரையோரப் பிரதேசங்களிலும் 'முக் அதிகமாகக் காணப்படுகின்றனர். இதன் பின்னர் 5 சாதிய - ܢܠ

பான விகிதாசாரத்தில் முக்கியத்துவம் பெற்றுக் வசதி சற்று விசாலமானது.
க்கையானது மரபு ரீதியாக மீன்படித்தலே ஆயினும், சிறு ன அளவானோர் கைத்தொழில் துறையிலும் ஆர்வம் வரும் பெயர்கள் மூலம் அடையாளம் காணலாம். டிமெல், ஆகும். அத்துடன் பெருந்தோட்டத்துறையில் தென்னை,
சொந்தமாகக் கொண்டிருந்தார்கள். இவர்களிறல் த்துகின்றனர். உதாரணமாக, மெக்வூட்ஸ் லிமினட்டெட்,
சிறிய குடும்பங்கள் நாடளாவிய ரீதியில் வர்த்தகத்தை
மிக்கவர்களாக உள்ளனர்.
த்தலைத் தொழிலாகக் கொண்டவர்களாக இருந்தனர் 1றைகளிலும் ஆர்வம் காட்டினர். உதாரணமாக, மேல் ஷ என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோட்டம் 1ண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் என மாத்திரமன்றி வர்த்தகத்துறையில் நுழைந்தும் Soyza என்பவர் தென்மேற்கு பஸ் கம்பனி ஒன்றை |ம் இருந்தார்.
ாதும், அவர்களின் படித்தரம் பற்றி விளங்கிக் கொள்வது இறுதியில் காணப்படுவோர் "ரொடியர்' சாதியினராவர். ாதியினர் காணப்படுகின்றனர். இவர்கள் தாம் புராதன ம், வாள் வீரர்களாகவும் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
வர்களாகவும் ஒத்தவர்களாகவும் இருப்போர் 'வகும்புர'
ல் கருப்பட்டி தயாரித்தலாகும். அத்துடன் வீட்டு பினர், தாங்கள் மகிந்தர் போதிமரக்கிளையையும் பெளத்த ளத்த மதத்தின் காவலர்களாகவும் மகிந்தரின் தனிப்பட்ட றனர். "பகும்புர'சாதியினர் கேகாலைநகரத்தில் அதிகம் காங்கே காணப்படுகின்றனர். 'பத்கம்' சாதியினர் ப்களில் காணப்படுகின்றனர். இச் சாதியினர் வடமேல் ரகமுவா பகுதிகளிலும் காணப்படுகின்றனர். தென் க்களாப் பரவி வாழ்கின்றனர்.
ர்களின் மரபுரீதியான சேவைகள் மற்றும் சடங்குகள் சிறுசிறு சாதிகள் உருவாகிவிட்டன. Hunu (சுண்ணாம்பு (பொற்கொல்லர்கள்), இவர்களின் தராதரம் மரபுரீதியான
னர் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பது போன்று இலங்கைத் அந்தஸ்தில் காணப்படுகின்றனர். இச் சாதியினர் தமிழர் ங்களில் கூடிய செவ்வாக்குச் செலுத்துகின்றனர். 1984ம் ம் அதிகமான வேளாள சாதியினர் யாழ்ப்பாணத் தமிழ் தான தொழில் விவசாயமாகும். அவர்களுக்கு அடுத்த ள்) சாதியினராவர். இதற்கு அடுத்தநிலையில் இருப்போர் பினரதும் தொழில் மீன்பிடித்தலாகும். 'கரையார்' என்ற குவர்'என்போர் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களிலும்
னர் தீண்டத்தகாதவர்களாகக் கணிக்கப்படுகின்றனர்.
N

Page 49
1 நளவர் (கள் இறக்குவோர்). 2. பள்ளர் அலங்காரம் செப்வோர்), 4. பறையர் (துப்புரவு : தொழிலாளர்கள்)
இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தில் ே அங்கத்தவர்கள் எனும் விடயத்தின் கீழ் 'நீண்டத்தகாத' சேர்ந்த கொம்யூனிஸ்ட் அங்கத்தவர் ஒருவர் நியமிக்கப்
1977ம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் சாதியைச் சேர்ந்த ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு இலங்கைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட
இலங்கைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு சிலர் இதற்குப் புறநடையாக உள்ளனர். அத்துடன்தமி தலைமைத்துவம் என்பவற்றிலும் வேளாளர் சாதியினரை
மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலும் சாதிய ஏற்படுத்தப்பட்டபோது அது சாதிமுறை வெளிப்படும் வ பஞ்சம் என்பவர்ரான் சாதிக் கொடுமைகள் நீங்கிய போ தொழிற்சங்கங்களின் உயர்சாதியினரே ஆதிக்கம் செ சாதியினரே கூடியளவு செல்வாக்குப் பெற்றுள்ளனர். சாதியினரும், இதற்கு அடுத்தபடியாக 'தேவர்' 'ஆ உள்ளடக்கிய "முக்குலத்தோர்' காணப்படுகின்றனர். மன் சாதியினராகக் கருதப்படுகின்றனர். அவர்கள் அனைவரு அரசியல் ஆதிக்கம் மிகக் குறைவானது அல்லது முற்றாக
சாதிரீதியான் அடையாளப்படுத்தல்கள் தவிர்க் தேர்தல் காலங்களின் போது எதிர்த்தரப்பினருக்குச் சிறந்: தன்மைகளாகும். எனவே, இன்றுவரை சாதிகளின் அரசிய
锣 $
/ தணலிலேநின்றிரு தண்ணிரில்தாவுத எழுத்தினை விழிக இதயத்தால் வாசிக்
ஒருத்தியைப் தேர்ந் அவளது அழகுக்கா
உயர்பண்புகளுக்க

(விவசாயத் தொழிலாளர்கள்), 3. அம்பட்டர் (சிகை சப்யும் தொழிலாளர்கள்), 5. வண்ணார் (சலவைத
ால்பரிஅரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமையநியமன "ன்ற வரையறைக்குட்பட்டிருந்தவராக யாழ்ப்பானத்தைச் பட்டார்,
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலின் போது 'பள்ளர் ானார் "தீண்டத்தகாத" என்று வருணிக்கப்படும் ஒருவர் து அதுவே முதல்தடவையாகும். நளில் பெரும்பாலானோர் "வெள்ளான்' சாதியினராவர் ழ் அரசியல் கட்சிகளின் தலைமைப்பீடம் மற்றும் அரசியன் ச்சுற்றியதான நடைமுறையை கானக்கூடியதாக உள்ளது. ஐமப்பு காணப்படுகின்றது. ஆரம்பத்தில் குடியிருப்புகள் கையிலேயே அமைக்கப்பட்டது. ஒரேவகையான வேவை திலும் சாதிமுறை இல்லாமல் போய்விடவில்லை. பெரிய லுத்தி வருகின்றனர். மலையக அரசியலில் 'கள்ளர்"
இதற்கு அடுத்த நிலையில் "மொட்டை வேளாளர்" கம்படியார்' 'மறவர்' ஆகிய மூன்று சாதிகளையும் லையகச் சாதிக்கட்டமைப்பில் அதிகம்பேர்தாழ்த்தப்பட்ட நம் "சக்கிலி' என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் கப் பங்களிப்பில்லாதது எனலாம். கப்பட வேண்டும் என்ற வாதம் அதிகம் காணப்பட்டாலும் த ஆயுதமாக அமைவது இந்தச் சாதிபற்றிய அடிப்படைத் பல் இருத்தல் தவிர்க்க முடியாததாகவே உள்ளது.
y
ப்போர்
ஸ்போல்,
ள்தாவ
கின்றேன்.
பாரதிதாசன்
தெடு,
க அல்ல;
.
இமாம் சவுதி .الم

Page 50
r
காதல் ஓர் அலசல்
ந.சுரேந்திரன், பொறியியற் பீடம்
A. 'உடம்பொடு உயிரிடை என்னம, மடந்தையொடு எம்மிடை நட்பு' (கு
உடம்பொடு உயிர்க்குள்ள நட்புக்கள் - ெ அத்தன்மையானது இம் மடந்தையோடு எம்மிடை உள6
இவ்வாறு காதலின் ஆழம் பற்றித் திருவள்ளு
இவ்வுலகில் பலராலும் பலவிதமாக அன்பு ப எவரும் மறுக்கப் போவதில்லை.அந்த அன்பு ெ உணரப்படுகின்றது. தாயிடம், தந்தையிடம், சகோதரனிட எனினும் பெயர்கள் வேறுபடுகின்றன.
பக்தனால் இறைவனிடம் செலுத்தப்படும் அ வடிவம் 'காதல்' எனக் கருதப்படுகின்றது, அல்லது ஆதஸ்கமாகத் திகழ்கின்ற போதும், அது பலவாறான வ
ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை கா உணர்விக்க - உணர வேண்டிய சந்தர்ப்பங்கள் எழுந்தா6 இது அவர்களது சமுதாயமுறைக்கு ஒத்து வரக்கூடியதாகஇ மிகும்போது அதனை வெளிப்படுத்த முத்தமிடுவதையே கருதலாம். அன்பானது உணர்ச்சிபூர்வமான இதயவெ6 சந்தர்ப்பத்தை நாம் குழந்தைகள் மீது பாசம்மிகும்பே அசிங்கமான சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். அவற்றை
ஐரோப்பியநாடுகளில் ஆண், பெண்இருபால அவர்கள் ஒருவரோடொருவர் இயல்பாகப் பழகுவது எதிர்காலத்துணையைத் தேர்ந்து எடுப்பதில் பிரச்சினைக குறிப்பாகதமிழ் பேசும் மக்களிடம் ஆண், பெண் இருபால சகஜமாகப் பழகுவதினை வித்தியாசமான கண்ணோட்ட நிலையிலுள்ள வட கிழக்குப் பகுதி மக்களிடம் இக் காதல் வயதுகளின் முதிர்ச்சியின்மையையும் மறுசாரார் எதிர்கா அல்லது ஆதரிக்கின்றனர். காதலை வெறுப்பவர்கள் (திரு நாம் ஏற்கத்தான் வேண்டும். ஏனெனில் தற்போதைய கால குடி கொள்கிறது. இக் காதல் எதுவரை செல்லும் என்பது ப6 திருமணத்தில் முடியுமா? என்பதனை ஆராயும் திறன் ட இதற்கு எமது கல்விமுறைமையும், வளர்ப்புமுறைமையுட தவறுகள் காதலை ஏற்காதவர்களுக்கு அல்வா கொடுப்பது
இதேவேளை காதற் திருமணங்களை ஆதரி காதலைக் காட்டுகின்றனர்.இன்று இலங்கைத் தேசிய தசாப்தங்களிலும் பார்க்கக் குறிப்பிடத்தக்க அளது அதி அதிகரித்திருப்பதும் அவதானிக்கத்தக்கது.
3

ற்று அன்ன
றள் 1122)
தாடர்புகள் தொடர்பான முக்கியத்துவம் என்னவோ, பாய நட்புக்ககள்.
வர் 'களவியல்'இல் எடுத்தியம்பியுள்ளார்.
கிரப்படுகின்றது. வாழ்வின் அடிப்படை அன்பு என்பதை வவ்வேறு பெயரில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் டம், மனைவியிடம், பிள்ளையிடம் உள்ளவை அன்புதான்
ன்பு குறிப்பிடத்தக்கது. இத்தன்மைவாய்ந்த அன்பின் ஒரு அமைகிறது. இக் காதல் உளவியல் ரீதியான அன்பின் ழிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது.
தலின் வெளிப்பாடு இயல்பானது. அதாவது அன்பினை ல் அதனை அவ்விடத்திலேயே வெளியிடும் வகையானது. இருப்பதால் இதனை ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் பாசம் பா, கையை இறுகப்பற்றுவதையோ உடனடி வடிகாலாகக் ரிப்பாடே என்பதே இதற்குக் காரணம். இம் முத்தமிடும் ாது செய்யும் செய்கையுடன் ஒப்பிடலாம். சிலவேளை நாம் காதல் வரையறைக்குள் கொண்டு வராமல் விடலாம்.
ாரும் பெரும்பாலும் சமநிலையிலேயே காணப்படுகின்றனர். ம், தாய் தந்தையரின் உறவுகள் வரைறைப்படுவதாலும் ள் எழுவதில்லை. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரை ாரும் வெவ்வேறு ஸ்தானத்திலேயே வைக்கப்படுகின்றனர். த்தில் நோக்கும் நிலையே இங்கு உள்ளது. அப்படிப்பட்ட பெரும் சர்ச்சைக்குரியது. ஒரு சாரார் கலாசாரங்களையும், ல பந்தத்தையும் காரணம் காட்டி காதலை எதிாக்கின்றனர். மணத்திற்கு முந்திய காதல்) கூறும் காரணிகளில் சிலவற்றை கட்டத்தில் பாடசாலை மட்டத்திலேயே காதல் அதிகமாகக் iளிமாணவர்களுக்குத் தெரியாது. இக்காதல்நிதர்சனமாகித் ள்ளி மாணவர்களிடையே நிச்சயமாக இருப்பது கடினம். ம் காரணமாக இருக்கலாம். மற்றும் சில காதலர்கள் செய்யும் து போலவும் உள்ளது.
ப்போர் தமக்கு ஆதரவாகப் பல்கலைக்கழக மாணவரது பல்கலைக் கழகங்களில் காதலிப்போர் தொகை கடந்த கரித்துள்ளது. அதிலும் தமிழ்பேசும் மாணவர்களிடையே

Page 51
-
இந்தக் காதலானது பல்கலைக் கழக மட்ட எப்படியான கண்ணோட்டத்தில் சிந்திக்கிறார்கள்? இே பல்க:ை வளாகத்தினுள் பலருடன் உரையாடிய போது, அலசலின் போது இன்னுமொரு விடயமும் நோக்கப்ட ஆனால் சாதாரணமான கேள்வி "காதலர்கள் எந்நாளு
பேராதனை வளாகத்தில் குறிப்பிடத்தக்களவு ஒரு தம்பதியினரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது ஆரம்பித்து வளாகம் வரை தொடர்ந்த அவர்கள் விரும்பாவிட்டாலும், காதல் இனிதாக இன்று வரை இருந்தமையால் பாடசாலை ரியூசன் இரண்டிலும் அதி: தமது காதலைப் பெருமளவு விஸ்தரிக்க சமகாலத்தில் இருந்ததாம். பாடசாலையில் ஏற்பட்ட காதல் வெளிக்க பண்பான இயல்பான பாசமும் ஏற்படும். இது இளவய என அவர்கள் தெரிவித்தனர். ஆகவே, இளவயதுப் பாட அக்காதல் தூய்மையானதாக இருக்கும் என இருவரும் 2 இவர்கள், சில் காலத்தில் காதலின் உறைவிடமாகவும், ! பந்தத்தினுள் புக இருக்கின்றனர். எனினும், இவர்களிட இவர்கள் சந்திக்கும் நேரம் மிகக்குறைவு. சிலவேளை, இதனைப் பற்றிக் கேட்ட போது தமக்கு வேலைப்பழு அ புரியும் என்றனர். அத்தோடு, மனத்துடன் இப்போதைக்
பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற வருடங்களாக பல பிரச்சினைகள் எழுந்ததாகவும்.தற்டே தான் பிரச்சினைகள் எனவும்,தம்மிருவரிடமும் காதல் வ முடியாது என இருவரும் தனித்தனியாகக் கூறினர்.
குறுகிய காலத்தில் நிறைவான பாசம் பரிய தொடரும் எனத்தெரிவித்தனர். எல்லோரும் எதிர்பார் தங்களிடம் கூறிக்கொள்ளவில்லை. இருவரும் ஒருவர் அறியாமலேயே எல்லா விடயத்திலும் செலுத்தியதால் முக்கியமான ஒரு கருத்தையும் தெரிவித்தனர். அதாவது வீதத்தை விட மெளனமாகப் பார்ப்பதனால் காதல் உருe உணர்ந்த போது அது சாத்தியமாகுமா இல்லையா என்பன எவ்வாறு தீர்க்கலாம் என்பதையே சிந்தித்ததாக ஞாபகப் இழக்கத்தயாரில்லை. வாழ்வில் வரும் பிரச்சினைகள் எல் நிரந்தரமில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தனர் (கா பற்றிக் கேட்டபோது, அது அவரவர் அன்பு அறிவு வசப் எனினும், சில அளவுக்கு மீறிய நடவடிக்கைகள் அவசி என்றும் இனிமையானதாக இருக்க இவை அவசியம் என் ஏதாவது ஒரு விடயம் இருக்கும். அவர்களது குடும்பங் பொதுவிடயங்களில் தங்கள் காதல் புகுத்தப்படுகின்ற நாடலைத்தீர்க்கவே ஒவ்வொருநாளும் கதைக்கவேண்டி ஏற்படும் அன்பு அனுபவித்தால்தான் புரியும் என்றனர்.
பல்கலைக்கழகத்திலேயே காதல் பூத்த பல பெற்றோரிடமிருந்து தனிமையால் ஏற்பட்ட இடைெ
--

தில் எவ்வாறு சித்திரிக்கப்படுகின்றது? அதை அவர்கள் வ முக்கியமானவையாகும். இதனை அறியும் பொருட் அவசப்பட் கருத்துக்களில் சில கீழேதரப்படுகின்றன.இன் ட்டது. அதாவது எல்லோருக்குமே எழும் ஆச்சரியமான ம் என்ன கதைக்கிறார்கள்' என்பது
காலம் (சுமார் 10வருடங்கள்) காதலித்துக் கொண்டிருக்கு . அதாவது பாடசாலைக் காலத்திலிருந்தே காதலினை தமது காதலின் ஆரம்பம் பற்றித் தெளிவாகக் கூற தொடரப் பல காரணிகளைக் கூறினர். ஒரே இடமாக நேரம் பார்கக்கூடிய வசதியேற்பட்டதாகவும் கூறினார் ஏற்பட்ட பல்கலைக்கழக வாழ்க்கை பெரும் உதவியாக வர்ச்சியாக இருந்திருக்கலாம். அதேநேரம் பழகும் போது தில் நிகழ்வதினால் நிச்சயமாகப் போலியாக இருக்கலாது சாலைக்காதலை தொடரக்கூடிய ஒரு வழி இருக்குமாயின் றுதியுடன் தெரிவித்தனர் உறுதியான காதலுடன் இருக்கும் காதலின் ஒரு வெற்றிப்படியாகவும் கருதப்படும் திருமண ம் ஆச்சரியமான ஒரு விடயம் காணப்பட்டது. அதாவது இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவைகூட அமைகிறதாம் திகம் எனக்கூறியதுடன் இது காதவித்துப் பார்த்தால்தான் *கு அன்பு இருந்தால் போதும் என்றனர். பின்னர் விரும்பிய இருவருடன் உரையாடிய போது, பல பாது சந்தோசமாக இருப்பதாகவும் கூறினர் பெற்றாரினால் ஊர்வதாகவும் எக்காரணம் கொண்டும் தம்மால் இனிப்பிரிய
ாறப்பட்டதினால், உண்டான பந்தம் தமது இறப்புவரை ப்பது போல் இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புவதாகத் மீது ஒருவர் அதிக அக்கறையும் பாசத்தையும் அவர்களை தமக்கிடையே காதல் துளிர்விட்டதாம். அதேவேளை ஆண், பெண் இருவர் கதைப்பதனால் காதல் உருவாகும் ாகும் வீதம் மிக அதிகம் என்பதாகும். இருவரும் காதவை தவிடதிருமணத்திற்கு ஏற்படும் தடைகள் என்ன், அவற்றை படுத்தினர் எப்பிரச்சினைக்காகவும் தம் காதலை அவர்கள் றோ ஒருநாள் இல்லாமல் போகும் வாழ்க்கையில் எதுவும் தன் உட்பட). இப்பல்கலைக்கழத்தில் நிலவும் காதலர்நிலை பட்டதெனவும், சரி, தவறு கூறமுடியாதது எனவும் கூறினர் பமாயினும் தற்போது அவசியமற்றவை என்றனர் காதல் தையும் மறுக்கவில்லை. எப்போதும் தாங்கள் கதைப்பதற்கு கள் பற்றி பிரச்சினைகளைப் பற்றி பேசுவர். அத்தோடு, து என்றனர். தங்கள் இருவரிடமும் அடிக்கடி ஏற்படும் து அவசியமாகிறது எனவும் தெரிவித்தனர். ஆாடலின் பின்
ரிடம் சில பொதுவான கருத்துகள் காணப்பட்டன. இங்கு பளியை இக்காதல் நிவர்த்தி செய்வதாகவும், அடிக்கடி

Page 52
/ー
மற்றவரைக் கண்டு பழகியதும் காதல் ஆரம்பிக்கக் தூண்டுதலையும் மறுக்கவில்லை. சிலர் "இல் காதல் ம இங்குதான் என்பதையம் காரணமாக்கினர். சிலர் காதலி என்பன ஏற்படுவதாகவும் கூறிய போது, பெற்றோரு எனக்கேட்டேன். அதற்கு அவர்களால் தெளிவான க வைத்திருந்தாலும் (தாயன்பு, பிள்ளையன்பு, சகோதர அ உணர்ச்சிஎன்பதையும் அடித்துக்கூறினர். எமது கலாசார தான் ஏற்படுகிறது என்பதும், அதனால் காதல் ம தனித்தனியாகவும் பின்னர் சேர்த்து இருந்தபோதும் ஆழம்பற்றிச் சிந்திக்க வைத்தது. இதேவேளை, பல் கல்விநிறுவனத்தில் எனப்பல காதலரைக் கொண்ட சிலரு இவ்வெவ்வேறானதொடர்புகள்முறிந்து/முறிக்கப்பட்டு ஒரு வரையறையினுள்ளும் உட்படுத்தாமல் அகற்றுவது சற்று வித்தியாசமான முறையில் காதலை அணு நேரடியாக சம்பந்தப்பட்ட பெண்ணிடமோ, அன்றி வென்றவர்களையம் தோற்றவர்களையும் காணலாம்.
முதலில் காதலர் போல் பழகியவர்கள், பின்ன நண்பர்களாகவே(மற்றவர்கள் பார்வைக்கு) இருப்போரு குதித்தவர்களின், குடும்பத்தினரால் பின்னர் பிரச்சினைக புரையேறிப்போன விழுமியமான சீதனப் பிரச்சினை இங் பல்கலைக்கழகத்தில் இன்னுமொரு சுவாரசிய பெரும்பாலும் பூச்சியமாகவும், சில சந்தர்ப்பங்களில் பெ பற்றிக் கேட்டபோது, காதலுக்கு கண்ணேயில்லை, பிறகு இங்கு காதலிக்காத பலர் தாம் எல்லாவிட எடுப்பதாகவும், தனிமையில் அனுபவிக்கும் சுதந்திரம் ஆ ஒரே விடயத்தைத் தொடர்ந்து வெவ்வேறு தொனிகள் கற்பனைகளில் மிதப்பதாகவும் இவர்கள் கூறினர். எனினு காதலிக்காமைக்கு முக்கியமான காரணம் எனக்கூறினர். ஆக மொத்தத்தில் உள்ளத்தெளிவுடன் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றன வைக்கவேண்டும் எனஇவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாழ்க்கையைச் சந்தோஷமாக்குவது அவர6 தனிமையை அனுபவிப்பதிலும் ஓர் இன்பம். எனினும் வ
குறிப்பு:- தமது கருத்துக்களைத் தெரிவித்த
敬 $

காரணமாக இருந்ததாகவும் கூறினர். நண்பர்களின் Uர, முதன் முதலில் வேறு பலருடன் பழகும் சந்தர்ப்பம் ந்த பின்னர் தமக்குப் புத்துணர்ச்சி, வாழ்க்கையில் பற்று iடன் இருக்கும் போது அவ்வாறு இருக்கவில்லையா ரணம் இயம்ப முடியவில்லை. எல்லோரிடமும் அன்பு ன்பு) காதலில் ஒரு சிறப்பு இருப்பதாகவும் அது ஒரு வகை முறையினால், முதன்முதலில் கதைக்கும் வாய்ப்பு:இங்கு லர்கிறது என்பதும் முக்கியமானது. பல காதலரைத் உரையாடியபோது ஏற்பட்ட வேற்றுமைகள் காதலின் கலைக்கழகம் புகுமுன், பல்கலைக்கழகத்தில் வேறு ம் இங்கு உள்ளனர். குறிப்பிட்ட காலஇடைவெளிகளில் புதியவர்காதலராகினார்.இவர்களைக் காதல்பற்றியனந்த நல்லது.
றுகிய சிலரையும் காணக்கூடியதாக இருந்தது. அதாவது, ஆணிடமோ கேட்காமல் பெற்றோருடன் உரையாடி
ார்நண்பர்களாகி விடைபெற்றவர்களும், தொடர்ச்சியாக ம் உளர். எனினும், பெற்றோருடன்உரையாடிக் காதலில் ளைச் சந்தித்தவர்களும் உளர். அதாவது, வட்பகுதியின் கும் தன்னை நுழைத்தது. பமான விடயமும் நோக்குதற்குரியது. வயது வேறுபாடு ண்ணின் வயது சற்று அதிகமாகவும் இருப்பதுண்டு. இது வயது எங்கே எனக் கேள்விஎழுப்பினர்.
பத்திலும் தனித்தன்மையான சுதந்திரமான முடிவுகள் அதிகம் எனவும் கூறினர். காதலித்துக் கொண்டிருப்போர் ரில் கதைப்பார்கள் எனவும், பலர் தங்களைப் பற்றிய றும் தமக்குக் காதலிக்கச் சந்தர்ப்பம் கிடைக்காததுதான்,
காதல் கொண்டால் அதை உயர்கல்வி கற்கும் ர் . இத்தகைய காதல் சமூகத்தினரை சற்றுச் சிந்திக்க
பரிலேயே தங்கியுள்ளது. காதலிப்பதிலும் ஓர் இன்பம், ாழ்க்கையின்நிகரபலன்பூச்சியமே.
அனைவருக்கும்.நன்றிகள்.
༄༽

Page 53
இதுவா
இரா. நித்தியானந்தன் - உதவி
புத்தனின் சுவட்டில்
தோய்ந்த புனித இரத்தங்கள்
இன்னும் காயவில்லை
எந்த "அங்குலிமாலாவும்” எந்த ஆத்மாவுக்கும் இங்கு 8FJ600T60)Lu தயாராக இல்லை போர் மரணிக்காத பூமி இது.
சமாதானம் இங்கு தோண்டப்படும் ତୁ!
எத்தனை சமாதிகள் தோண்டப்பட்டன. எலும்பும் தசையும் எப்படியோ! இடையில் வந்த தேர்தலை வென்றன.
சமாதிகள் எல்லாம் அவசர அவசரமாய் தோண்டப்பட்டன ஒவ்வொரு எலும்பும் எத்தனை வாக்குகள்?
ரூபவாஹினியில் அமைதிப்பாடல், குயில்கள் -கூட தோற்றுப் போயின.
புலியும் -சிங் குலவின காதல் கடிதத பகிர்ந்தன. விலங்குகள் இவ் விந்தை6 வியப்புற நோ உதய சூரிய குளிர்ந்து பே
தேர்தல் தேை தேய்ந்து போ அரியணையில் அமர்ந்த, ஆதாம்களும் ஏவாள்களும் கனியை உை தன்னை மை கதைத்துக் க மறைந்த போ வண்ணில் ெ விமானங்கள், மண்ணில் பத கண்ணி வெடி
மீண்டும் கோ அப்பா இட்ட மங்கையர் இ திலகம் தம்பியர் மன சுள்ளென உறைத்தது.
ஒரே இரவில் ரூபவாஹினிய புறாவின் உ6 கழட்டப்பட்ட6 போர் உடை

நிதர்சனம்? விரிவுரையாளர் - அரசியல் துறை
5(!plb போர்த்தப்பட்டன.
இது
நதை சமாதானத்திற்கான
போர்.
56)6OID
O LITLDJi -g6cí...!
க்க வேட்டையாடப்படுவர்
ன் கூட இனிமேல்
Tulsor61. சீதைகள் சுமக்கப்படுவர்
துச்சாதனர்
ரிலவு காத்துக்கிடப்பர்
னது, தாய்மார்கள்
üb தன் மகனுக்காக
பிச்சாபாத்திரம் சுமப்பர். முகாம்களில் தவமாய்க்கிடப்பர்.
iTG
றத்து மனைவியர் இனிமேல்
களைத்து மாங்கல்யத்துக்காக
İğşi: "ஆமிகாரனிடம்”
தறித்தன யாசகம் கேட்பர்
அகதிகள் வெள்ளம்
நித்தன e960)6ubuUTuÜ uTuqLib
}கள். வீதியில் -மனிதர்
விதியாய்க் கிடப்பர்.
ட்டையில்
சபதம் தங்கை அங்கே
tl- கன்னிமையோடு
காலம் கடப்பாள்
தில் அந்த.
கிழவியின் உருவில் நினைவுகள் மட்டும் நிலைத்துப்
ligulp.
பில்
DL856ir இந்த வேறுள
. குழுவையெல்லாம் - எம்
அதற்குப் LDIT6f lib - 616örg
வெல்லும்.
38

Page 54
கிழக்கு மாகாணத்தமிழ் - முஸ்லீம்
ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்
ஐ.எல்.அப்துல்நசார், அரசியல்துறை, இறுதி
தமிழ் சிங்கள மக்களிடையே முனைப்படை உயிர்களைப் பழிவாங்கியிருப்பதுடன் பெருமளவிலான தோற்றுவித்துள்ளது. இலங்கையின் அரசியல், பொருள இப்பிரச்சினை, பிராந்திய மற்றும் சர்வதேச - ரீதியில் டெ
வரலாற்று ரீதியாக, அரசியல் ரீதியாக, புவி மண்ணின் வரலாற்று ஓட்டத்தில் ஒரு கறைபடிந்த அத இன்னொருவகையான இனமுரண்பாட்டைக் கிழக்கு மா அந்த மக்களிடையே சந்தேகப் பார்வையையும், இ ஏற்படுத்தியுள்ளமை துரதிர்ஷ்டமானதாகும்.
எனவே எனது இந்தக் கட்டுரையின் நோக்கம் இன முரண்பாடு தோன்றியமைக்கான காரணங்களை ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதுமேயாகும்.
இந்தவகையில் இனமுரண்பாட்டுக்கான காரண குறிப்பிடலாம் என நினைக்கிறேன். பல்கலைக்கழகப் பி மொழி, தமிழ் - முஸ்லீம் மக்களின் காணிகள் நிய வேண்டுமென்றே கடைப்பிடிக்கப்பட்ட ஓரினவாதக்கொ சிங்களப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டமை போன்ற ச வந்தனர். இதன் காரணமாக இலங்கையில் தமிழ்த்தலை தமிழ்த்தீவிரவாத இயக்கங்கள் தோன்றிய போதும் முள மனிதத்துவ ரீதியிலும் உதவிசெய்தனர். காரணம் தமிழ் ம நடந்தது என்ன? பிட்டும் தேங்காய்ப்பூவும் போல சந்தேகப் பார்வையை ஏற்படுத்தும் வண்ணம் இந்த பள்ளிவாசல்களில் அத்துமீறி இறை வணக்கத்தில் ஈடுப உயிர்களைப் பலிகொண்டனர். கோடிக்கணக்கான எல்லாவற்றையும் விட ஒரு சமூகத்தின் அரசியல் உ முடியாதவர்களாக்கி யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட
மணித்தியாலயத்திற்குள் வெறியேற வைத்தனர்.
2. இலங்கைக்கு இந்திய இராணுவத்தின் வருை கொள்ளப்பட்டபோது இந்திய இராணுவம் இலங்கை வறு இவர்கள் நிலை கொள்ளத் தொடங்கினர். அது மாத்திரம ஆயுதங்களோடு நடமாட அனுமதி வழங்கப்பட்டது. இத உயிர்ப்பலிகளும் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்ப
பெற்றன. கல்முனை நகர்தீப்பற்றி எரிந்தது. இதன் விலை

இனமுரண்பாட்டின் காரணங்களும் கான சில ஆலோசனைகளும்ட
வருடம்
ந்துள்ள இன முரண்பாடு பல்லாயிரக்கணக்கானோரின் அழிவுகளை ஏற்படுத்தும் ஓர் உள்நாட்டு யுத்ததையும் ாதார விடயங்களில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ரும் கரிசனை பெற்றுள்ளதை நாம் காணலாம்.
பியல் ரீதியாகப் பல மாற்றங்களைக் கண்டுவந்த இந்த தியாயமாகத் தோன்றியுள்ள இந்த உள்நாட்டு யுத்தம் காணத் தமிழ் - முஸ்லீம் மக்கள் மத்தியில் தோற்றுவித்து, னத்துவேஷத்தையும், பழிவாங்கும் உணர்வையும்
கிழக்கு மாகாணத்தமிழ் - முஸ்லீம் மக்களின் உள்ளத்தில் சுருக்கமாக ஆராய்வதும், அவர்களுக்கிடையில் சமூக
ரிகளில் முதலாவதாகத் தமிழ் இயக்கங்களின் வளர்ச்சியை ரவேசத்தில் தரப்படுத்தல், சிங்களம் மட்டும் அரச கரும பாயம் இன்றிப்பிடிக்கப்பட்டமை, உயர்பதவிகளில் ள்கை, பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பக் கல்லூகள், ாரணங்களால் தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வர்களினால் சத்தியாக்கிரகம் நடாத்தப்பட்டபோதும் பல ஸ்லீம் மக்கள் அவர்களது செல்வங்களின் மூலமாகவும், க்களது போராட்டம் நியாயமானது என்பதற்காக. ஆனால் ) வாழ்ந்து வந்த தமிழ் - முஸ்லீம் மக்களிடையே இயக்கத்தினர் கிழக்கு மாகாணத்தின் பல முஸ்லீம் ட்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லீம் அப்பாவி மக்களின் முஸ்லீம்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இது ரிமையான வாழ்விட உரிமையைக் கூட அனுபவிக்க
ங்களில் வாழ்ந்த முஸ்லீம் மக்களை இருபத்தி நான்கு
க:-1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்து தமையுடன் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இடங்களில் ன்றி, தமிழ் இயக்கங்களான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ன் காரணமாகவும் பல கொள்ளைச் சம்பவங்களும் மனித ற்று, மருதமுனை போன்ற முஸ்லீம் கிராமங்களில் இடம் "வால் தமிழ் - முஸ்லீம் மக்கள் அகதிகளாயினர்.

Page 55
.ே அப்போதைய அரசியல் தலைவர்களின் ந. சர்வகட்சிமாநாட்டின் போது அம்பாறை தொகுதிநீங்கள் விடுதலைக் கூட்டு முன்னணியின் கோரிக்கை இரு முஸ்லீம்களைப் புறக்கணித்தமை, தமிழ் தலைவர்கள் மீ: ஏற்படுத்தின. இது கூட இன்று கிழக்கு மாகாணத்தில் த. காரணமாகியது.
இதுமாத்திரமன்றி வட - கிழக்கு இணைப்பு அமைச்சர்களோ அல்லது எதிர்க்கட்சியினரோ அல்லது எனவே 1987ல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - தலைமைத்துவத்தைப் பாதுகாக்க அப்போதைய சனாதி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்களுக்கு எதிரா என்ற இரண்டு அமைச்சர்களை நியமித்தார். எனவே ! கிழக்கு மாகாணத்திலே தமிழ் - முஸ்லீம் உறவு சீர்குலை
அத்தோடு நிற்கவில்லை. இலங்கையின் = முரண்பாட்டைத் தோற்றுவித்தமையும் ஒரு காரணமாக தெரிவித்துள்ளனர். இதன் விளைவே காரைதீவு மாளி: இதன் காரணமாகத் தமிழ் - முஸ்லிம் மக்களில் அதிகமா வாழவேண்டியேற்பட்டது.
4 முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் உயர்வ இருப்பது தமிழ் மக்களின்டயே ஒரு சந்தேகத்தை ஏற் காரணம் முஸ்லீம்கள் தமிழ் மக்களது சொத்துக்களைச் உண்மையில் நடந்தது அங்கே இரண்டே இரண்டு காரண
1. முஸ்லீம்கள் குறிப்பாக அம்பாறை மாவட்
2 தமிழ் மக்களது சாதி அமைப்பு தமி பொருளாதாரத்தில் முன்னேறத்தடையாக இருந்தமை இ வாய்ப்பாக இருந்தது. இது தவிர முஸ்லீம்கள் தமிழர் முன்னேறினார்கள் என்றால் பாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போதும், அவர்கள் பொருளாதார ரீதியில் தமிழ் மக்க: யாழ்ப்பானத்தமிழ் மக்கள் அந்த முஸ்லீம் மக்களினது 4
எனவே மேற்கூறிய காரணிகள் அனைத்தி ஏற்பட்டுள்ள தமிழ் - முள் வீர் மக்களின் இடைே இனமுரண்பாட்டை நீக்கி, இரண்டு சமூகத்தவர்க பண்புள்ளவர்களாக மாற்றப்பின்வரும் காரணிகள் ஓரள
உண்மையில் ஒருமைப்பாடு என்பது சமூக மனிதனின் உடல் பகுதியில் நெருக்கமான உறவை ஏற் பிறுகின்றன. எனவே இழந்து போன உறவைப் புதுL வேண்டிய காரணிகளில் வெகுசனத் தொடர்பு சாதனத் இந்தத் தொடர்புச் சாதனங்கள் பொறுப்பறிந்து செயல்பு ஒலிபரப்புச் செய்ய வேண்டும் வெளியிட வேண்டும்.

டவடிக்கைள்: 1884ம் ஆண்டு சனவரி மாதம் தொடங்கி பாக, வட கிழக்கு இணைந்த மாநிலம் என்பதாகவேதமி= நதது இருந்தும் அவர்கள் நடாத்திய மகாநாடுகளி து முஸ்லீம் மக்களுக்குச் சந்தேகத்தையும் பகைமையைபு மிழ் - முஸ்லீம் மக்களிடையே இன் முரண்பாடு தோன் =
க்கான பிரேரணையை இலங்கை அரசாங்கத்தின் முத்திட பெரும்பான்மைச்சிங்கள மக்களோ ஆதரவளிக்கவில்=ை இந்திய ஒப்பந்தத்தை அமுள் செய்து தனது அரசிய பதியாக இருந்த திரு. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் கப் பிரசாரம் செய்ய ஏ.சி.எஸ் ஹமீத், எம்.எச்.முஹம்மது இந்த இரண்டு அமைச்சர்களின் தீர்க்கதரிசனமின்மையாள் ந்து இன் முரண்பாடு உருவாக்கப்பட்டது.
அரசபடைகள் தமிழ் - முஸ்லீம் மக்கள் மத்தியில் இன அமைந்தது எனச் சில அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் கைக்காடு, சம்மாந்துறை, வீரமுனை இனக்கலவரமாகும்
னோர் அகதிகளாகி அகதிமுகாம்களில் அவல வாழ்க்கை
டைந்தமை-முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் முன்னேறி படுத்தி அங்கு இனமுரண்பாடு தோன்றகாரணமாகியது துறையாடி இருக்கலாம் என்ற சந்தேக உணர்வு. ஆனால், ாங்கள்தான்.
டத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தமை.
ழ் மக்களைத் தொழில் ரீதியாகத்தடுத்து அவர்கள் 1வை இரண்டும் முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் முன்னேற களது சொத்துக்களைச் குறைபாடி, பொருளாதாரத்தில் முஸ்லீம்கள் எவ்வளவோ சொத்துள்ளவர்களாக இருந்த EE விடக்குறைந்தவர்களாகவே இருந்தார்கள். எனவே,
சொத்துக்களைச் சூறையாடினார்கள் எனக் கொள்வதா?
னதும் கூட்டு மொத்தமே இன்று கிழக்கு மாகாணத்தில் ப ஏற்பட்டுள்ள இனமுரண்பாடாகும். எனவே இந்த 3ளயும் ஒருமைப்பாடுள்ளவர்களாகவும் சகோதரப்
ாவுதுணை செய்யலாம் எனக் கருதுகின்றேன்.
ஒத்தின் அங்கத்தவர்களிடையே அல்லது உயிர் வாழும் படுத்தலாக இருக்க வேண்டும் என மெய்யியற் சொற்கள் பித்து இரண்டு இனங்களிடையேயும் உறவை வளர்க்க தின் பங்கு முக்கியமானதாகக் கொள்ளப்பட வேண்டும்.
படுவதோடு ஒருமைப்பாட்டை வளர்க்கும் நிகழ்ச்சிகளை
40

Page 56
2. பாடசாலைகளில் தமிழ் - முஸ்லீம் மாண அது பற்றிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும்
3. கலந்துரையாடல் - தமிழ் - முஸ்லீம் ம8 தேவைகளையும் அவசியத்தையும் பற்றிக் கலந்துரையா
4. தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள்:- உண் எழுத்தாளர்கள் தங்களது எழுத்துக்களைப் பயன்படுத்த அழிவுகளையும் பயங்கரத்தையும் பற்றிய கருத்துக்கை மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திப் பரஸ்பரம் புரி
5. பொது ஸ்தாபனங்களில் வேலை செய்யு இடங்களில் வேலை செய்யும் உயரதிகாரிகள் இன கடமைகளைச் செய்கின்றனர். அத்தோடு அடுத்தவர் தள்ளுகின்றனர். எனவே இவைகளைத் தவிர்த்து இன,
ஒருமைப்பாட்டை வளர்க்கலாம்.
6. எல்லாவற்றையும் விட மேலாக அரசியல் முஸ்லிம் மக்களின் இன முரண்பாட்டிற்கு அரசியல் த6 கொள்ளப்படுகின்றது. எனவே, அதனை விடுத்து அரசி பேசும் சிறுபான்மை இனங்கள் என்ற நோக்கின் அடி முன்வைத்துள்ள அதிகாரப் பரவலாக்கல் திட்டம் விரை இனங்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதோடு, இழந் அது மாத்திரமன்றி பயமும், பீதியும் கொள்ளையும், கொ இரண்டு சமூகத்தையும் விடுவித்து, அவர்களைப் புரிந்துணர்வுள்ளவர்களாகவும் மாற்றலாம்.
பழையதை மறந்து இந்தப் புது வருடத்தில் ஐ: முஸ்லிம் உறவுநிலை. மறப்போம் இன முரண்பாட்டை.
(
锣 饰
/
கத்தியின்றி
யுத்தமொன்
சத்தியத்தின்
நம்பும் யாரு

பர்களிடையே இன ஐக்கியத்தின் தேவையை வலியுறுத்தி, ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.
கள் அடிக்கடி ஒரு பொது இடத்தில் கூடி சமாதானத்தின் டி மக்களுக்கு அறிவிப்புச் செய்ய வேண்டும்.
மையில் சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்கு தமிழ் முஸ்லிம் லாம். சமாதானத்தின் தேவையை வலியுறுத்தி யுத்தத்தின் ள உணர்த்தி எழுதுகின்ற போது ஓரளவு தமிழ்- முஸ்லிம் ந்துணர்வையும் அவர்களிடையே கொண்டு வரலாம்.
ம் உயரதிகாரிகள் நீதியாக நடத்தல்:- இன்று பல பொது ம், உறவு, பிரதேசம் என்ற அடிப்படையில் தங்களது களை தங்களது அதிகாரச் செருக்கின் மூலம் ஒதுக்கித் பிரதேச உறவுக்கப்பால் செயற்படுகின்ற போதும் ஓரளவு
தலைவர்கள் பொறுப்புடன் நடத்தல்:- உண்மையில் தமிழ், லைவர்களின் தீர்க்கதரிசனமற்ற தன்மையும் காரணமாகக் சியல் தலைவர்கள் முஸ்லிம், தமிழ் என நோக்காது தமிழ் ப்படையில் செயற்படுவதோடு, தற்போது அரசாங்கம் வில் ஒன்று பட்டுச் செயற்படுவதன் மூலமாக சிறுபான்மை து போனதமிழ், முஸ்லிம் உறவுகளையும் புதுப்பிக்கலாம். லையும் நிறைந்து காணப்படுகின்றநிலையில் இருந்து இந்த
பரஸ்பரம் நண்பர்களாகவும் சகோதரர்களாகவும்
க்கியமாக வாழ அனைவரும் முயல்வோம். வாழ்க தமிழ் -
ாத்தமின்றி
று வருகுது
நித்தியத்தை
ம் சேருவீர்
இராமலிங்கம்பிள்ளை

Page 57
கதகளி - கேரளத்தின் தேசியக் கை
அம்பிகை வேல்முருகு, தமிழ்த்துறை, இறுதி
இந்தியக் கல்ை உலகெங்கும் பிரசித்தமா அனைவரினாலும் பேனப்பட்டு வருகின்றது. இது அருங்கலைகளுள் ஒன்றாகும். இந்திய நாட்டு நடனங்
--Shiro. & i !!UTୋ}}୍t"-
பரத நாட்டியம் (தமிழ்த
கதகளி (கேரளம்)
கதக் (உத்தரப்பிரதேசம்,
மணிப்புரி (வடகிழக்கு)
இவற்றுள் கேரளத்தின் தேசிய நடன வன பலவற்றைக் கொண்டுள்ளது. இதில் நாடகத்துக்குரிய நாட்டிய நாடகம் என்றும் வழங்கப்படுகின்றது. கதி: வேஷக்கட்டும். பேச்சு இல்லாத அபிநயமுமாகும். கதகள் ஆட்டம் என்பது பொருள் ஆட்டக்கதை என்றும் இது நாடகமேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும் தேவ:ை தோன்றியுள்ளது. தமிழ்நாட்டில் பரதநாட்டியம் பரதரின் நாட்டியக் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலை எ
கேரள அரங்கினைப் பிரதிநிதித்துவப்படுத் ஒருவகை அழகையும், ஒப்ப:ேள் நிறங்களையும், அங் காட்சிகள், கொலைகள், இரத்தம் குடித்தல் போன்ற க விதிகளுக்கு சவால் விடுவதாகவும் அமைந்துள்ளது. கதி: கட்டுப்பாடுகள் ஓரளவிற்குத்தளர்ந்து போயின. அமானு நடிகரினாஸ் அணியப்படுகின்ற தலையீரியானது கி. பயன்படுத்தப்படுகின்ற முகமூடிகளை ஒத்துள்ளது.
கதகளியின் தோற்றம் பற்றி பல்வேறு விதம! இடைப்பட்ட காலப்பகுதியில் கொட்டாரக்கரை கிருஷ்னாட்டத்திற்குப் போட்டியாக தோற்றுவி ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும், கேரள அறிஞர்கள் முற்பட்டது என்று கருதுகின்றனர். கேரளத்தின் சமஸ்கி நூற்றாண்டில் கேரளத்தில் வழக்கில் இருந்த நடன காணப்படுகின்றமை கவனத்தில் கொள்ளப்பட்ட வேண்
கதகளி ஆட்டம் கோயில் விதிகளிலே ஆரம்பிக்கப்படும் ஆட்டம் விடியற்காவையில் முடிபென் உயரமான மேடை பூக்களினாலும் இவைகளினாலு ஜோடனைகள் ஒன்றும் இல்லை. நடிகின் தனது அபிநய வேண்டும். மேடை முழுவதற்கும் ஒளியைப்பரப்ப மேல் இடத்தில் வேக்கப்படும். மத்தளம் வாசித்தல் கதகளியி:
N

Dல வடிவம்
வருடம்
னது, அதிலும் நாட்டியம் தொன்று தொட்டு இன்றுவரை பிற நாட்டவரின் கவனத்தையும் தன் பாப் கவர்ந்த களை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்
ாடு}
கயான கதகளி தன்னகத்தே தனித்துவமான சிறப்புகள் அம்சங்கள் பலவும் பொருத்திக் காணப்படுவதனால் இது களி என்றவுடன் எமது கண்முண்ணே வருவது அதன் ரிஎன்ற சொல்லுக்கு கதையை அடிப்படையாகக் கொண்ட பொருள்படும். இந்த நாட்டிய நாடக வகையானது பழைய ந வழிபாடுகளில் நடைபெறும் ஆட்டங்களிலிருந்தும் *நிருத்தியக் கலைக்குப் பிரசித்தி பெற்றது போல, பரதரின் படிவமாக இக்கதகளிநடனவகை விளங்குகின்றது.
தும் கதகளி நாட்டிய நாடகமானது மனதைக் கவர்கின்ற ாக அசேவகராயும் உள்ளடக்கியதாகவும், கொடூரமான ாட்சிகள் தடைசெய்யப்பட்ட இந்திய நாட்டிய சாஸ்திரீய களியின் தோற்றத்துக்குப்பின்னர் கேரள நாடக மேடையின் விஷ்யமான தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கதகளி ரேக்க தேசத்து இன்பியல், துன்பியல் நாடகங்களுக்குப்
ான கருத்துகள் நிலவுகின்றன. கி.பி.1575ற்கும் 1630ற்கும் அரசனால், மானதேவன் என்ற சாமூதிரி அரசனது க்கப்பட்டது என்பதே பொதுவாக எல்லோராலும் * சிலர் இக்கூற்றை மறுத்துக் கதகளி இன்னும் காலத்தால் ருத நாடகங்களான குட்டியாட்டம், கிருஷ்னாட்டம் (17ம் வகைகள்) ஆகியவற்றின் செல்வாக்கு கதகளியிலே ாடியதோர் அம்சமாகும்.
யே பெரும்பாலும் ஆடப்படுகின்றது. மாலையில் டயும் பதினாறு அடி நீள் அகலத்தைக் கொண்ட சிறிது ம்ே அலங்களிக்கப்படும் கதகளி மேடையிலே காட்சி த்தின் வாயிலாகவே அவற்றைச்சபையோருக்கு உணர்த்த படயின் மத்திய பகுதியில் ஒர் எண்ண்ை விர்க்கு உயரமான ன் ஒரு முக்கிய அம்சமாகும். மத்தளம் வாசிப்போர்நாடகம்
42

Page 58
தொடங்குவதற்கு பல மணி நேரத்திற்கு முன்னதாகே நடக்கவிருக்கின்றது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற். ஈழத்து நாட்டுக்கூத்துக்கள் பலவற்றிலும் நாம் காணக்கூடி ஆரம்பத்தில் கதகளி 'இராமனாட்டம்' என் மகாபாரதக் கதைகளையும் நாடகமாக நடிக்கத் தொ மறைந்து'கதகளி' என்ற பெயர் நிலைத்தது புராண இ இந்நாடக வகை கடவுளர்களினதும், வீரர்களினதும் அறக்கருத்துக்களும் போதிக்கப்படுகின்ற, தர்மத்திற்கும் தர்மத்தின் வெற்றியும் கதையிலே காண்பிக்கப்படும். முக்கியத்துவம் பெறுகின்றன.
சாஸ்திரீயநடனத்தின் மூன்று முக்கிய கூறுகள இடம் பெறுகின்றன. தோடி, சங்கராபரணம், கல்யாண கதகளியில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. கதகe கிடைக்கப்பெறாத காரணத்தால் கதகளியில் இன்றும் பய உள்ளன. கதகளிஇசையில் வழங்கிவரும் தாளங்கள் அ அழைக்கப்படும். இவை, கர்நாடக இசையில் வழங்கி வ(
ஆரம்ப காலங்களில் தேவர், அசுரர், அரசர் வழக்கமே கதகளியில் காணப்பட்டது. முகமூடி அணிவத கண், வாய், இமை, புருவம், போன்ற மறைக்கப்படுகின் அணியும் வழக்கம் தவிர்க்கப்படலாயிற்று. முகமூடி : முகத்திலேயே பலவித வர்ணங்கள் கொண்டு ஒப்பை மிகத்தெளிவாக நடிகர்களது முகப்பாவங்களால் புலப்ப(
கண்கள், கண்புருவங்கள், முகத்தசைகள், கழு உடம்புநிற்கும்நிலை, உடம்பின் அசைவுகள் என்பனவற் புரியவைக்கப்படும். கதக் நாட்டியத்திலும், பரத நாட கலைகளிலும் இல்லாத வகையில் கதகளியில் கண்ணின் கொடுக்கப்பட்டுள்ளது. பாவம், ரசம், என்பனவற்றை சோகமோ, சிரிப்போ, கோபமோ எதுவாயினும் கண்கள் அபிநயத்தின் நான்கு அம்சங்களான ஆஹ வாசிகத்தைத் தவிர மற்றயவை கதகளியில் நன்கு இடம் சொற்குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இச்சொற்கு தொடர்புடைய கை முத்திரைகளை அடிப்படையாக் கெ போது கால் அசைவுகளுக்குரியதாள லயக் கூறுகளில் நடி கதக் நடனத்திலும், பரதநாட்டியத்திலும் பயன்படுத்தப்ப கதகளியில் ஒப்பனை மிகவும் இன்றியமை பயன்படுத்தப்படுகின்ற நிறங்களைப் பற்றிய அறிவில்லி வேடிக்கை,வினோதம் நிறைந்ததொன்றுபோன்றும் காட் காணக்கூடிய ஒருவருக்கு கதகளியின் குறியீட்டு முக்கியத் சூழ்நிலைக்கு இட்டுச்செல்லும், தேவர்களும், புகழுக்கு மூக்கின் கீழிருந்து கண்வரை கத்திரி போல் வெள்ளை அட கொண்டிருப்பர். இதைவிட சிவப்புத்தாடி, கறுப்பு உடை கொடியவர்களைக் குறிக்கும். பிராமணர், மற்றும் அரக்கிய மினுக்கு பூசப்படும்.

வ மத்தளத்தை வாசிக்கத் தொடங்குவர். இது கதகளி காகச் செய்யப்படுகின்றது. இத்தன்மையை தென்னிந்திய, யதாக உள்ளது.
றே வழங்கப்பட்டது. இராமாயணம் கதைகளைத் தவிர டங்கியதிலிருந்து, 'இராமனாட்டம்' என்ற பெயர் }திகாசக் கதைகளுக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கும் புகழைப் பாடுகின்றது. இதில் நீதிக்கருத்துக்களும், அதர்மத்திற்ம் இடையிலான போராட்டமும் இறுதியில் வீரம், ரெளத்திரம் ஆகிய ரசங்கள் இந்நாடகங்களில்
ாகிய பாவம், ராகம், தாளம் என்பன கதகளியிலே முக்கிய ரி, முகாரி, பைரவி, மோகனம், முதலான இராகங்கள் ரியின் இசையைப் பற்றிக் கூறுகின்ற நூல்கள் எதுவும் ன்பாட்டில் உள்ள இராகங்கள் சில கண்டறியப்படாமல் டந்தை, செம்படை, ஜம்பை, பஞ்சாரி என்ற பெயர்களால் நம் தாளங்களை ஒத்துள்ளன. போன்ற பாத்திரங்களுக்கு முகமூடிகள் அணிந்து ஆடும் ால் உயிர்த்துடிப்புள்ள முகம் பாவத்தைப் பொழியவல்ல ன்றன என்ற காரணத்தால் பிற்காலத்தில் முகமூடிகளை தரும் ஒப்பற்ற பெரும் தோற்றத்தினைப் பெறுவதற்கு ன செய்தனர். இதனால் அசைவுகளும், பாவங்களும் டுத்தத் தொடங்கின.
த்தின் அசைவு, கைகளினால் புரியப்படும் அபிநயங்கள், றின் மூலமாகநாடகத்தின் கருத்து பார்வையாளர்களுக்கு ட்டியத்திலும், மற்றைய ஏனைய பண்டைய இந்தியக் ாதும், புருவத்தினதும், அசைவுகளுக்கு முக்கியத்துவம் ச் சிறப்பான முறையில் இவை வெளிப்படுத்துகின்றன. மூலமாகத்தான் வெளிப்படுத்தப்படும். ார்யம், வாசிகம், ஆங்கீகம், சாத்வீகம் ஆகியவற்றில் பெறுகின்றன. கதகளியிலே எண்ணுறிற்கும் மேற்பட்ட றியீடுகள் அனைத்தும் 24 தனித்த அன்றி ஒன்றுடன் ஒன்று ாண்டு தோற்றம் பெற்றுள்ளன. நீண்ட உரையாடல்களின் டிகர் முக்கிய கவனம் செலுத்துவர். இத்தாளலயக் கூறுகள் டும் அசை சார்ந்த சந்தங்களை ஒத்துள்ளன. யாத ஒன்றாக உள்ளது. கதகளி நாடக ஒப்பனைக்குப் 0ாத ஒருவருக்கு நாடகம் நகைப்புக்குரியது போன்றும், சிதரும். ஆனால் நிறங்களைச் சுலபத்தில் தாரதம்மியம் துவமும் அதன் அசாதாரண ஆற்றலும், இன்பமூட்டுகின்ற ரிய வீரர்களும் பச்சைநிற ஒப்பனையையும், அசுரர்கள் டித்து அதிலே இரத்தச் சிவப்புபூசியமுக ஒப்பனையையும் போன்றவை முறையேதுச்சாதனன், குர்பனகை, போன்ற பர் அல்லாத மற்றைய பெண்களைக் குறிப்பதற்கு உடம்பில்

Page 59
புராண சம்பந்தமான பாத்திரங்கள், நாடகத் மனிதத்தோற்றத்திலிருந்து அமானுஸ்யமான கதாபாத்திரா நடிகர்களிடையே பணிவோடு கூடிய அச்சமும், அமைதியு பல மணிநேரங்கள் நீடிக்கும். இதன் போது நடிகர் அசைய தியானநிலைக்கோ அன்றி உறக்கநிலைக்கோ உட்படுத்திவி தோற்றத்தை இழந்த அமானுஸ்ய தோற்றம் கொண்ட மித இறுதியாக முடிக்கிரீடம் தலையில் வைக்கப்படும். இதன் ே நிலையுடன் நடிகர் மேடையை நோக்கிநுணிக்கால் நிலத் நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்படுகின்றது.) பெரிய ெ மேடையில் தோன்றுவதற்கு முன்னர் எல்லாவ படி செய்து கொள்வர். இதற்கு ஒருவகைக் காட்டுமலர் பய இக்காட்டு மலரை நடிகர்கள் கண்களில் ஒன்றிக் கெ இரத்தச்சிவப்புடைய நிறமாக்கும். பச்சை, கறுப்பு நிற மு பிரகாசமானவையாகவும், உயர்ந்த உணர்ச்சிகளைப் புல கதகளி ஆட்டத்தின் வடிவம் தாண்டவம்' எ நிறைந்த கடின ஆட்டத்தின் காரணமாக கதகளி ஆண்க வயதிற்குக் கீழ்ப்பட்ட ஆண்கள் பெண் வேடங்களை ஏற நடிகரின்தலை, முகம் மட்டும் தெரியும்படியிருக்க மிகுதிமு பெண் வேடங்களுக்குமுள்ள பொதுவான ஒப்பனை முை பத்து அல்லது பன்னிரண்டு வயதில் ஆர அளிக்கப்படுகின்றது. உடம்பில் எண்ணையைப் பூசி, உ பயிற்சிகள் ஆரம்பத்தில் கொடுக்கப்படுகின்றன. பி சிறுமிகளுடைய உடலைப் போல் சிறுவர்களுடைய உட கடுமையான பயிற்சி பெற வேண்டி இருக்கின்றது. உட6 திருப்புவதற்கும், உடலிலுள்ளதசைகளைநன்றாக அழுத் அழுத்திப் பக்குவப்படுத்துவதைக் கைகளால் செய்வதில் பன்னிரண்டு வருடப் பயிற்சியின் பின்ே நடிகனாகின்றான். பரம்பரை ரீதியாகவே கதகளிநடிகர் தெ விலகிக் கற்பனையாகிய புதிய கர்ட்சிகளைநடிப்பதுண்டு கொண்டு நடிகரின் திறமை மதிப்பிடப்படுகின்றது.
கதகளியினைப் பேணிக்காத்த பெருமை குஞ்சு கிருஷ்ணபாணிகர், கேசவ குறுப், சங்கரன்நம்பூர்த்தி, க கதகளிக் கலைஞர்களைச்சாரும். பாகவததுது, சிவதக்கய மகாபலி, ருக்மணி கல்யாணம், பிரஹ்லாத சரிதம் என்பை நாட்டியநாடகங்களாகும்.
இறுதியாக ஒன்றைக் கூறியாக வேண்டும். கதக் நேரில் பார்ப்பதற்கு ஈடாகாது. கதகளியின் தனிச் சிற தங்கியுள்ளது. இந்த ஒப்பனை மூலம் நடிகனானவன் கற்பனையில் உதித்த அத்தனை சிறப்பியல்புகளையும் உலாவ விடுகின்றான். பாத்திரத்துக்குள்நடிகனானவன்த6 சாஸ்திரம் கூறுவது கதகளியிலே முழுமை பெறுவதை நா
锣代

தில் இடம் பெறும் காரணத்தால் நடிகர்களைச் சாதாரண களாக்க வேஷக்கட்டு உதவுகின்றது. ஒப்பனையின் போது ம்நிலவும். கதகளிஒப்பனைமிகவும் சிரமமானது. ஒப்பனை க்கூடாது என்ற காரணத்தால் ஒப்பனையாளர் நடிகர்களை விடுவார். அந்நிலையில் இருந்து அவர்மீழும் போது, மனிதத் மிஞ்சிய பாவனைகளைச் செய்யும் ஒருவராக மாறுகின்றார். போதுநடிகர் உரு ஏறியநிலைய அடைவார். இவ்வுரு ஏறிய நில் படும்படி (பறப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் பெரிய காலடிகளாக எடுத்து வைத்து நடந்து செல்வார். கைப்பாத்திரங்களும்தங்கள் கண்கள் சிவப்பாகத் தோன்றும் பன்படுத்தப்படுகின்றது. மேடைக்குச் செல்வதற்கு முன்னர் ாள்வர். இது கண்களை அரிக்கச் செய்து உடனடியாக ]க ஒப்பனைகளின் காரணமாக இச் சிவப்பு நிறக் கண்கள் ப்படுத்துவனவாகவும் இருக்கும். ன்று அழைக்கப்படுகின்றது. இது சுறுசுறுப்பும், உற்சாகமும் ளினால் மட்டுமே ஆடப்பட்டு வருகின்றது. பத்தொன்பது று நடிப்பர். இவ்வாறு பெண் வேடமேற்றுநடிக்கும் ஆண் மந்தானையால் மறைக்கப்படும்.இது கதகளியின் அனைத்து றயாகும். ம்பிக்கப்பட்டு நடிகர்களுக்கு கடுமையான பயிற்சிகள் டம்பு வளைந்து கொடுப்பதற்குரிய இலகுவான தொடக்கப் ன்னரே கடுமையான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும். ல் இலகுவில் வளைந்து கொடுக்காது. ஆகவே, அவர்கள் லை நினைத்தபடியெல்லாம் வளைப்பதற்கும், சுலபமாகத் திப் பக்குவப்படுத்த வேண்டியிருக்கின்றது. இப்படி உடலை : லை. பாதங்களால் மிதித்துச் செய்கின்றார்கள். பே ஒரு பயிற்சியாளன் முழுமையான கதகளி நாடக ரிவு செய்யப்படுகின்றனர்.நடிகர்இடையே கதையைவிட்டு :
சந்தர்ப்பத்திற்குத்தகுந்தவாறு அவை அமைந்திருத்தலைக்
குறுப், றாவுனிமேனன், பரசுபட்டர், ஈஸ்வரபிள்ளை, குஞ்சு : லாமண்டலம் கிருஷ்ணன், கோபிநாத் போன்ற கேரளத்துக் ாகம், அரிச்சந்திரா, சீதாகல்யாணம், ராமசரிதம், வாமணன்
1 மீண்டும் மீண்டும் அரங்கேற்றப்படும் புகழ்பெற்ற கதகளி !
5ளிநாட்டியநாடகத்தை எவ்வளவுதான் விபரித்தாலும் அது
ப்பே அதற்கெனப் புரியப்படுகின்ற ஒப்பனைகளிலேயே முற்றிலும் மறைக்கப்பட்டு விடுகின்றான். கதாசிரியரின் கொண்ட பாத்திரத்தை ஒப்பனைக் கலைஞன் மேடையில் ானைமுற்றாக மறைத்துக்கொள்ளல் வேண்டும் எனநாட்டிய ம் காணக்கூடியதாக உள்ளது.
44

Page 60
மனித வாழ்வில் இரும்புச்சத்தின் மு
கலாநிதி.இரா.சிவகணேசன், உயிரிரசாயனவி
இவ்வுலகில் தோன்றிய உயிரினங்கள் யான ஒன்றாகும். உணவில் பல கூறுகள் உள்ளன. உடலுக்குத் ( வழங்குகின்றன. புதிய இழையங்கள் உருவாகவும், சிதை இந்த வகையில் கனியுப்புக்களும் உடலின் பல தெ கனியுப்புக்களை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று வகையாகும். இரும்பு, நுண் மூலகங்கள் வகையைச் சார்
பூமியில் இரும்பு பெருமளவில் காணப்பட்ட பிரச்சனையாகத் தலைதூக்கியுள்ளது. இரும்பு பற்றா பருவத்திற்கு முந்திய பிள்ளைகளிலும் கூடிய அளவில் க பல நாடுகளிலும் அவதானிக்கக் கூடிய பொது விடய தோற்றுவிக்கின்றது. உலக வங்கியின் 1994ஆம் ஆண்டு காணப்படுவதனால் ஆரோக்கிய் பொருளாதாரப் பிரச்ச இப்படியான ஒரு மிக முக்கிய பிரச்சனையில் இரும்பு எந் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
இலங்கையைப் பொருத்தமட்டில் குருதிச்சே நிவிர்த்தி செய்யும் முகமாக நதி, திட்டமிடல், இனவிவ மூன்றாவது தேசிய உணவு, ஆரோக்கிய குருதிநிறச்சத்து கொண்டிருந்தது. இந்த உபயோகமான ஆராய்வினால் ப 6 தொடக்கம் 59 மாதங்கள் வயதைக் கொண்ட 1,924 பிள்ளைகளையும் கருவுற்றிராத 1,268 பெண்களையும், குருதிநிறச்சத்துச் செறிவு 100மி.லீட்டருக்கு 11 கிராம் அ எனக் கணிப்பிடப்பட்டு மேற்கூறிய முடிவுகளை நோக் சோகை இருப்பது தெரியவந்தது. குருதிநிறச்சத்துச் ச்ெறி பார்த்த பொழுது 5 தொடக்கம் 10 வயதுடையவர்களில் 36 வீதத்தினரும், கருவுற்றிராத பெண்களில் 45 வீதத் அவதானிக்கப்பட்டது. கருவுற்றிருந்த பெண்களில் 39வி கிராம் மட்டததிற்குக் கீழ்) குருதிச் சோகையுடையவரா கவலையையும் தரக்கூடியதென்பதை எவரும் மறுத்துவி திட்டமிடல் அமைச்சு தீவிரமாக முனைந்து வருகின்றது.
இரும்பு, சகல உயிரினங்களிலும், சகல க புரதத்தோடு இணைந்தேயிருக்கின்றது. எமது உடலில் கா ஆகும். இதில் 2.5 தொடக்கம் 3.0 கிராம் செங்குருதிக் எலும்பு மச்சை ஆகிய உறுப்புக்களில் 200 தொடக்கம் சேமிப்புப் பொருட்களாககக் காணப்படுகின்றது. தசைக மி.கிராம் இரும்பு உண்டு. திரவவிழையத்தில் 3 தொ நொதியங்களில் 300 மி.கிராம் அளவிலும் இரும்பு இரு

மக்கியத்துவம்
பியல்துறை, மருத்துவபீடம்
பும் வாழ்வதற்கு அத்தியாவசியமானதில் உணவு முக்கிய தேவையானசக்தியினை மாப்பொருள்களும், கொழுப்பும் ந்த கலங்களை சீர்செய்யவும் புரதம் தேவைப்படுகின்றது. ாழில்களுக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. பெரும் மூலகங்கள் வகை, மற்றையது நுண்மூலகங்கள் ந்தது.
ாலும், மனித உடலில் இரும்பு பற்றாக்குறை ஒரு பாரிய க்குறை குழந்தைப் பேறுடைய பெண்களிலும், பள்ளிப் ாணப்படுகின்றது. இது இலங்கையில் மட்டுமன்றி உலகின் பமாகும். இரும்பு பற்றாக்குறை குருதிச் சோகையைத் அறிக்கையின்படி குருதிச்சோகை உலகில் பரந்த அளவில் னைகள் ஏற்படுகின்றதென்பது தெளிவாகின்றது. எனவே த அளவில் ஈடுபடுகின்றது என்பதையிட்டுநாம் யாவரும்
ாகை பற்றிய விபரங்கள் இல்லை எனவே கூறலாம். இதை கார, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு 1994இல் அதன் துச் செறிவினை அளவிடுவதை ஒரு பகுதியாகக் சேர்த்துக் ல முக்கியதகவல்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆராய்வு பிள்ளைகளையும், 11 தொடக்கம் 19 வயதுடைய 708 கருவுற்றிருந்த 88 பெண்களையும் உள்ளடக்கியிருந்தது. ளவுக்குக் கீழே காணப்பட்டால் அதுகுருதிச்சோகைநிலை கிய பொழுது 5 வயதுக்குட்பட்டவர்களில் 45% குருதிச் வினை 100மி.லீற்றருக்கு 12 கிராம் அளவெனக் கொண்டு 58 வீதத்தினரும், 11 தொடக்கம் 19 வயதுடையவர்களில் தினரும் குருதிச் சோகையினால் பீடிக்கப்பட்டிருந்தமை தத்தினர் (குருதிநிறச் சத்துச் செறிவு 100மி.லீற்றருக்கு 11 கக் காணப்பட்டனர். இந்தத் தகவல்கள் அதிர்ச்சியையும் ட முடியாது. இந்த சீரற்ற நிலையைத் திருத்துவதற்கு நிதி,
iலங்களிலும் காணப்படுகின்றது. அது எப்பொழுதும் ணப்படும் இரும்பின் மொத்த அளது 3 தொடக்கம் 5கிராம் கலங்களில் குருதி நிறச்சத்தில் உள்ளது. ஈரல், மண்ணீரல், 1500 மி.கிராம் இரும்பு, பெரிற்றின், கீமோசிடரின் என்ற ாளில் மயோகுளோபின் என்ற நிறச்சத்தில் ஏறத்தாள 150 டக்க 4 மி.கிராம் அளவிலும் சகல கலங்களிலும் சுவாச க்கின்றது.

Page 61
-
இரும்பின் தொழில்கள்
செங்குருதிக் கலங்களில் காணப்படும் கு ஈடுபடுகின்றது. சுவாச வாயுக்களாகக் கருதப்படுவது சுவாசப்பையில் இருந்து உடலின் கலங்களை நோக்கி காபனீரொட்சைட்டைக் கலங்களிலிருந்து சுவாசப்பைக்
தசைகளில் காணப்படும் மயோகுளோபின் ட கடலில் சீவிக்கும் மீன்களின் தசைகளில் பெருமளவில் தசைகள் செந்நிறமாக இருக்கின்றது.
இழைமணிகளில் காணப்படும் இலத்திரன்க இரும்பினை ஒரு பகுதியாகக் கொண்டிருக்கின்றன. இரு இருநிலைகளில் தொழிற்படக்கூடிய இரும்பு, இலத்திரன் சிறுபிள்ளைகளில் அறிவு விருத்திக்கும், நோ தேவைப்படுகின்றது.
இரும்பு அகத்துறிஞ்சல்
நாம் உட்கொள்ளும் உணவில் சராசரியா பெரும்பாலும் சேதன வடிவத்தில் இருந்தாலும் சிறித உணவுகளில் காணப்படும் இரும்பு சேதன வடிவமானது பலவகையான தாவர, மாமிச உணவுகளில் இரும்பு உள் அளவு அது எந்த வடிவத்தில் இருக்கின்றது என்பதைப் (Haem) நிலையில் இருப்பதால் அது எதுவித சிரம உறிஞ்சப்படுகின்றது. தாவர உணவுகளில் காணப்படும்பி ஆகியவற்றுடன்இணைந்துநீரில் கரையாத சிக்கல் பொரு விடுகின்றது. இருந்தாலும் தாவர உணவுகளில் காண உறிஞ்சலைக் கூட்டுகின்றது. இவ்விரு உணவுப் பதா அமிலத்தினையும் சற்று நோக்கும் பொழுது அவை இரண அவதானிக்கலாம். இது இறைவன் படைப்பில் மனிதனு பச்சை இலைகளை வெகுநேரம் அவித்து அஸ்கோபிக் கிடைக்கவிடாமல் செய்து விடுகிறான். எனவேதான் கீ உண்ணுவதற்கு முன்புதயாரித்து உட்கொள்ளும் படியும் , கீரை வகைகளில் Fe+++ நிலையில் உள்ள இரும்பை நீரில் கரையக்கூடிய பொருட்களைக் கொடுப்பதாலும் இ
வயது வந்த ஒருவரில் சேமித்து வைத்திருக்கு உணவில் உள்ள இரும்பில் 5-10 வீதமானது உறிஞ்சி எடு இரும்பின் அளவு குறையும் போது உறிஞ்சும் வீதம் சு உறிஞ்சி எடுப்பதற்கு எமது உணவுக் கால்வாய் துணை
இரும்புச்சத்துக் குறைபாடு
உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் இரும்பு ட குறைபாட்டு குருதிச் சோகை ஏற்படுகின்றது.

ருதி நிறச் சத்து சுவாச வாயுக்களைப் பரிமாறுதலில் பிராண வாயுவும் (ஒட்சிசன்) காபனீரொட்சைட்டாகும். பிராண வாயுவையும் அனுசேப விளைவாகக் கிடைக்கும் நம் காவுவது குருதிநிறச் சத்தின் தொழிலாகும்.
ராண வாயுவை சேமித்து வைத்துக் கொள்கின்றது. ஆழ் மயோகுளோபின் உண்டு. எனவேதான் அம் மீன்களின்
வு சங்கிலியில் பல நொதியங்கள் உள்ளன. இவற்றில் சில ம்புமாறுநிலை மூலகமாகும். எனவே Fe++, F+++ என்ற ாகள் கடத்துவதில் உதவி செய்கின்றது.
ப் பாதுகாப்புத்தன்மை சீராகவிருப்பதற்கும் இரும்புச்சத்து
க 10 தொடக்கம் 20 மி.கிராம் இரும்பு உள்ளது. இது ாவு அசேதன வடிவத்திலும் காணப்படுகின்றது. மாமிச தாவர உணவுகளில் அது அசேதன வடிவத்தில் உள்ளது. ளது. உணவில் இருந்து நாம் உறிஞ்சி எடுக்கும் இரும்பின் பொறுத்திருக்கின்றது. மாமிச உணவுகளில் இரும்பு, கீம் முமின்றி குடல் நாய் மேற்படைக் கலங்களின் ஊடாக ற பொருட்களாகிய பைற்றேற்று, பொசுபேற்று ஒக்சலேற்று நட்களைத் தோற்றுவிப்பதால் உறிஞ்சப்படுவது சிரமமாகி ப்படும் வைற்றமின் சீ (அஸ்கோபிக் அமிலம்) இரும்பு ர்த்தங்களையும் அதாவது இரும்பையும் அஸ்கோபிக் எடும் கடும் பச்சை இலைகளில் பெருமளவில் இருப்பதை க்குக் கிடைக்கும் அனுகூலமாகும். ஆனால் மனிதனோ அமிலத்தினை அழித்து, இரு உணவுச் சத்துக்களையும் ரை வகைகளை அவிக்காமலும், பெரிதும் நறுக்காமலும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அஸ்கோபிக் அமிலம், F++ நிலைக்கு மாற்றுவதாலும், இரும்போடு இணைந்து ரும்பு அகத்துறிஞ்சுவது எளிதாகின்றது. ம் இரும்பின் அளவு சாதாரணமாகக் காணப்படுமிடத்து, க்கப்படுகின்றது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் டுகின்றது. எனவே உடலுக்குத் தேவையான இரும்பை ரிகிறது.
டிப்படியாகக் குறைந்து செல்லும் பொழுது இரும்புக்

Page 62
ஆறு மாதம் தொடக்கம் 5 வயதுடைய குழந் எட்டிப் பிடிக்கும் குழந்தைகளிலேயே குறைபாடு பெரும
நான்கு கி.கிராம்நிறையுடைய ஒரு குழந்தையி இரும்பினைப் போதுமான அளவில் கொண்டிருக்கும் உை எடையை, அதாவது 2.5 கி.கிராம்நிறையைக் கொண்டிரு அக் குழந்தை 4 அல்லது 5 கி.கிராம் எடையை அடை குழந்தைகள் திண்ம உணவினை உட்கொள்ள ஆரம்பி இரும்பினைத் திரவ விதத்தில் கொடுக்க வேண்டும். சாத தொடக்கம் 0.9 மி.கிராம் இரும்பு தேவை. இத் தேை செய்யாது. எனவே தான் இவர்களுக்கு மேலதிக இருப உணவின் மூலம் பெற்றுக் கொள்ளும் வரை, அவை கரு இரும்பினால் நிவர்த்தி செய்யப்படுகின்றது.
ஆண்களை விட பெண்களிலேயே இரும்பு வளர்முக நாடுகளில் நடாத்தப்பட்ட கணக்கீடுகளின் குறைபாடும் 1.5 வீதத்தினருக்குஇரும்புச்சத்துக் குறைபா பெண்களில் 10 வீதத்தினரில் இரும்புக் குறைபாடும் உண்டெனவும் அறியப்பட்டுள்ளது. எம்நாட்டில் அண்ை இது மிகவும் குறைந்த அளவே ஆகும்.
ஆண்களைப் பொறுத்தமட்டில் இரும்புச் சத்து வயதுக்கு மேலுமே பெருமளவில் காணப்படுகின்றது. ஆt 50 வயது வரையுமே அதிகளவில் காணப்படுகின்றது.
இரும்புச்சத்துக் குறைபாட்டுக் காரணிகள்
இரும்புச் சத்துக் குறைபாடு இரு காரணங்களி
1. நாள் தோறும் உட்கொள்ளும் உணவிலும், ! உறிஞ்சப்படாமை.
2. உடலில் இருந்து குருதி வெளியேறுதல்
உணவில் காணப்படும் இரும்பின் அளவு கு கலங்களில் உறிஞ்சல் பொறி முறையில் இடர்பா உறிஞ்சப்படுவதில்லை.
உடலில் இருந்து குருதி பல வகைகளிலும் ெ இழக்கின்றோம். மூலநோய் காரணமாகவும், பெண்களி: இழக்கப்படுகின்றது.
பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் சராசரிய 60 மில்லிமீற்றர் அல்லது அதற்குக் கூட குருதியை இழ இரும்பின் அளவு மிகவும் குறைவாகவேயுள்ளது. கல்லூ ஆராய்ச்சியின் பயனாக, அவர்களில் 25 வீதத்தினரில் மி குறைந்த அளவிலும், 5 வீதத்தினரில் மட்டுமே 500 ெ இருப்பது தெரியவந்தது. மாதவிடாய் காரணமாக தொ செய்து கொள்ள சேமிப்பில் இருக்கும் இரும்பு பாவிக்க

தைகளில் இக் குறைபாடு காணப்பட்டாலும் ஒரு வயதை ளவில் காணப்படுகின்றது.
ல் காணப்படும் இரும்பு 6 மாதங்கள் வரை போதுமானது ஈவினைக் கொடுக்க வேண்டும். பிறக்கும் பொழுது குறை ந்கும் குழந்தையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இரும்பு யும் வரையும் போதுமானதாகும். இது பெரும்பாலும் விக்க முன் நிகழ்வதால் அக் குழந்தைகளுக்கு மேலதிக ாரணமாக வளரும் குழந்தைகளுக்கு நாளொன்றிற்கு 0.5 வயினை முலைப்பாலோ அல்லது பசுப்பாலோ பூர்த்தி }பு தேவைப்படுகின்றது. இதனைக் குழந்தைகள் திண்ம iப்பையில் வளர்ந்த காலத்தில் சேமித்து வைத்திருக்கும்
ச் சத்துக் குறைபாடு கூடியளவில் காணப்படுகின்றது. படி ஆண்களில் 4.5 வீதத்தினருக்கு இரும்புச் சத்துக் ட்டுடன்இரத்தச் சோகைஇருப்பதும் தெரியவந்துள்ளது. , 10 வீதத்தினால் குறைபாட்டுடன் இரத்தச் சோகை மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிடும் பொழுது
துக் குறைபாட்டு இரத்தச் சோகை 10 வயது வரையும், 50 னால் பெண்களில் மகப்பேற்றுக்காலமாகிய 30 தொடக்கம்
னால் ஏற்படுகின்றது.
பானங்களிலும் இருந்து போதுமான அளவு இரும்புச்சத்து
குறைவாக இருக்கும் பொழுதும், குடல் வாய் மேலணிக் ாடுகள் ஏற்படும் பொழுதும், போதியளவு இரும்பு
வளியேறலாம். விபத்து நேரும் பொழுது நாம் குருதியை ல் மாதவிடாய் காரணமாகவும் நீண்ட காலத்திற்குக் குருதி
பாக 35 மில்லிமீற்றர் குருதியை இழக்கின்றனர். ஒரு பெண் pக்கும் தருணத்தில் அவர்கள் சேமித்து வைத்திருக்கும் ரி செல்லும் பெண்களில் (19-25 வயது வரை) நடாத்திய கவும் சொற்ப அளவிலும், 65 வீதத்தினரில் 350கிறாழுக்கு தாடக்கம் 1000 கிறாம் அளவிலும் இரும்பு சேமிப்பில் டர்ச்சியாக வெளியேறும் குருதியின் அளவை உற்பத்தி கப்படுவதனாலும், குருதியுடன் இழக்கப்படும் இரும்பின்
الصـ

Page 63
அளவு நாம் சாதாரணமாக உறிஞ்சிக் கொள்ளும் அளன பாரிய வீழ்ச்சி ஏற்படுகின்றது.
எம் குடலில் குடிகொண்டிருக்கும் கொழுக்கிப் வண்ணமேயிருக்கின்றன. இந்நிலமை நீண்ட காலத்து கொழுக்கிப் புழுக்களை அகற்றும் மாத்திரைகளை 6 மார் பாவிப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். வளரு அகற்றுவதன் மூலம் அவர்களின் சீரான வளர்ச்சியை நிச்
இரும்புச் சத்து குறைபாட்டு குருதிச் சோகை குருதிச் சோகையின் அறிகுறிகளாக சோர்வ.ை ஏற்படுதல், இரத்தம் வெளியேறுதல்,நாக்கின் மேற்பகு அசாதாரண நகம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில்தாயின் உடலில் இரும்புச் சத்து தேவைப்படுகின்றது. கர்ப்பமுற்றிருக்( இருந்தால் அது இறுதியில் ஆபத்தை ஏற்படுத்தலாம். ஏ வெளியேறினால் அவர் இறக்க நேரிடலாம். இரத்தச் சே குழந்தைகள் பெரும்பாலும் நிறைக்குறைவுள்ளவர்களா இரத்தச் சோகை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளநட இது தாய்பால் ஊட்டுபவருக்கும் பொருந்தும்.
இரும்புச் சத்துள்ள உணவு
இரும்புச்சத்து அதிகளவில் காணப்படும் அடங்குகின்றன. குருதியில் இரும்பு பெருமளவில் காண
எமது பிரதான உணவாகியதானியங்களில் (அ முற்றாகத் தவிடு நீக்கும் முறைகளைக் கையாள்வதால், அ இழக்க வேண்டி நேரிடுகின்றது. ஓரளவுக்கு அவித்த போசாக்குடையதாகும். நாம் பாவனைக்கு எடுக்கும் சே காணப்படும் தவிடு முற்றாக நீக்கப்படுவதனால் கோதுை சொற்ப அளவில் தான் காணப்படுகின்றன. தவிடு நீக்க எனக்குறிப்பிடுகின்றோம். இதனை உணவாகப் பய
பயனளிக்கக்கூடியதென சொல்லித்தெரியவேண்டியதில்
தேயிலைத் தோட்டங்களில் வசிப்பவர் உட்கொள்கின்றனர். அவர்கள் உணவை ரொட்டியாகத்தய சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும் ஒரு விடயமாகும்.
நாம் உணவாக உட்கொள்ளக்கூடிய எல்லாவ சத்து உள்ளது. முன்பு குறிப்பிட்டபடி , துரதிஸ்டவசமா இரும்புச்சத்தை உடல் உறிஞ்சிக்கொள்ளும் அளவைக் அடங்கியுள்ள இரும்புச் சத்தின் ஐந்து சதவீதம் மட்டுமே முறையின் மூலம் அதனை அதிகரித்துக் கொள்ளலாம். ெ காணப்படும் விற்றமின்சீஅழிந்து விடுகின்றது. இருந்தாஜ் எலும்பிச்சம் சாற்றை சேர்த்துக் கொள்வதனால் இரு

வவிடக் கூடியதாக இருப்பதாலுமே சேமிப்பு இரும்பில்
புழுக்களும் சிறிதளவு குருதியைநாள் தோறும் உறிஞ்சிய கு நிகழுமாயின் இரத்தச் சோகைக்கு வழி கோலும் , ங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது ம் பிள்ளைகளின் கொழுக்கிப் புழுக்களை கிரமமாக யப்படுத்திக் கொள்ளலாம்.
பின் அறிகுறிகள்.
-தல், களைப்பு பலவீனம், வாயிலும் குதவாயிலும் நோய் தி மென்மையாதலும், நோவுடையதாகவும் இருத்தல்,
அதிகரிக்கும் இரத்தத்தின் அளவைப் பூர்த்தி செய்யவும், தம் தாய்மார் இரத்தச் சோகையைக் கண்காணியாமல் "னெனில் குழந்தை பிரசவத்தின் போது அதிக இரத்தம் கையினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தாய்க்குப் பிறக்கும் 5வே இருப்பர். ஆகவே கர்ப்பமுற்றிருக்கும் தாய்மாரை வடிக்கை எடுப்பது மிக மிக அவசியமானதொன்றாகும்.
உணவுகளில், ஈரல், இறைச்சி, மீன் போன்றவை ப்படுவதால் அதனையும் உணவாகக் கொள்ளலாம்.
ரிசி, கோதுமை, குரக்கன், தவிடு)இரும்புச்சத்து உண்டு. வற்றில் உள்ள இரும்புச்சத்தையும், பிற சத்துக்களையும் அரிசியை வேகவைத்து தயாரிக்கப்படும் சோறு கூடிய ாதுமை மா தயாரிக்கும் பொழுது, கோதுமை மணியில் 0 மாவில் கனியுப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் மிகவும் மல் தயாரிக்கப்பட்ட கோதுமை மாவினை ஆட்டாமா பன்படுத்துவது, சாதாரண கோதுமை மாவை விட D6).
5ள் கோதுமை மாவினையே பிரதான உணவாக ாரிக்கும் பொழுது அதற்குள் கடும் பச்சைநிறக்கீரைகளை
கைக் கீரைகளிலும் 100கிறாழுக்கு 10 மி.கிறாம் இரும்புச் இவற்றில் அடங்கி உள்ள ஏனைய மூலப்பொருட்கள் ாட்டுப்படுத்துகின்றன. பெரும்பாலும் இத்தவாரங்களில் உடலுக்குக் கிடைக்கின்றது.ஆனாலும் சிறந்த சமையல் பரும்பாலும் எமது சமையல் முறைகளினால் கீரைகளில் ம் சமைத்து குடாறிய பின்பு விட்டமின் சீயைக் கொண்ட புச் சத்தின் உறிஞ்சலை அதிகரித்துக் கொள்ளலாம்.
༽
لم

Page 64
நாள்தோறும் உணவுடன் மாமிசம் அல்லது மீனைச் சி இருக்கும் இரும்புச் சத்து உறிஞ்சப்படுதல் மிகைப்படுத்
பயறு வகைகளும் உயிர்ச்சத்துக்களையும் க இரும்பு முதலியவற்றைக் கூடுதலாகக் கொண்டு மணித்தியாலங்களுக்கு நீரில் ஊறவைத்து விதைகளை விற்றமின் பீ போன்றவற்றின் அளவு கூட்டப்படுகின்றது போஷாக்கு நன்கு உறிஞ்சப்படுகின்றன.
தேயிலையில் அடங்கியுள்ள டனின் 6 உறிஞ்சப்படுவதைத் தடை செய்கின்றது. அதனால் உணவுடனோ தேநீர் அருந்துவதை தவிர்த்துக் கொள்வது அருந்துவது மிகப் பொருத்தமாகும்.
உணவைப் பரிமாறும்போது இரும்புச் சத் கர்ப்பமுற்றிருக்கும் தாய்க்கும், தாய்ப்பாலூட்டும் தாய் பெண்களுக்கும் வளரும் வயதில் உள்ள சிறுவர்களுக்கு பின்வருவனவற்றைக் கொள்ளலாம். ஈரல், இறைச்சி, மீ பொண்ணாங்கானி, பசளி, புழுங்கள் சிகப்பரிசி, குரக்க
இரும்புச்சத்து மாத்திரைகள்.
கர்ப்பமுற்றிருக்கும் போது இரும்புச் சத்துத் இருந்து மட்டும் பெற்றுக் கொள்வது கஷ்டமானதொ6 அன்றாடம் உட்கொள்ளும் உணவுக்கு மேலதிகமாக :ை உட்கொள்ள வேண்டும். கர்ப்பமுற்றிருக்கும் எல்லாத் கர்ப்பக்காலம் முழுவதும் இரும்புச் சத்து மாத்திரைகளை
இரும்பு மாத்திரைகளை வெறும் வயிற் உறிஞ்சப்படுகின்றது. எனினும் சில பெண்களுக்கு உட்கொள்வது கஷ்டமாக இருக்கலாம் இவர்கள் மாத் மாத்திரைகளுடன் விற்றமின் சீ வில்லையொன்றைய உறிஞ்சப்படுதலை நிச்சயித்துக் கொள்ளலாம்.
(
இளங்கதிரின் இன்முகத்ை
உளைந்திருந்ததாமரையி நோக்காமல் கீழ்வானில் (
பூக்காமற் போகுமோ பூ!

றிதளவு சேர்த்துக் கொள்வதனால் அச் சேதன நிலையில் தப்படுகின்றது.
னியுப்புக்களையும் விசேடமாக கல்சியம், பொஸ்பேற்று, ள்ளது. கடலை, பயறு , அவரை விதைகளை 24 "ச் சற்று முளைக்கவிடுவதனால் அவற்றின் விற்றமின் சீ 1. இவற்றை உணவாக உட்கொள்வதனால் அவற்றிலுள்ள
ானப்படும் இரசாயனப் பொருள் இரும்புச் சத்து பிரதான உணவு வேளையைத் தொடர்ந்தோ அல்லது து நன்று. பிரதான உணவு வேளைகளுக்குஇடையில் தேநீர்
து அடங்கிய உணவாகிய இறைச்சி, மீனை கூடுதலாகக் மாருக்கும் பொதுவாகக் கூறப்போனால் வயதுவந்த சகல ம் வழங்க வேண்டும். இரும்புச் சத்துள்ள உணவுகளாகப் ன், கருவாடு, சோய், பயறு, உழுந்து, கெளமீ, வல்லாரை,
T.
தேவை அதிகரிப்பதால் அதனை உணவு, பானங்களில் ன்றாகும். எனவே கருவுற்றிருக்கும் காலத்தில் ஒரு தாய் வத்திய ஆலோசனைப்படி இரும்புச் சத்து மாத்திரைகளை தாய்மார்களும் கர்ப்பமுற்று 3, 4 மாதங்களில் இருந்து ாத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
றில் உட்கொள்ளும் போதே அது மிகவும் நன்றாக வெறும் வயிற்றோடு இரும்புச் சத்து மாதிரைகளை திரைகளை உணவின் பின் எடுக்கலாம். ຫຼິ சத்து
பும் சேர்த்து உட்கொள்வதால் இரும்புக் த்து நன்றாக
த எண்ணியிரவெல்லாஜி ன் ஒற்கம் - களைந்திடவோ
நோக்கினான் ஆதித்தன்!
க.இராமதாசன்
N

Page 65
இலங்கையில் தேசிய ஒருமைப்பா
எம்.ஏ.எம்.பைசல், (இக்ராம்), அரசியல்துறை
விதந்திர இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னி காணப்பட்டது. ஆனால், இலங்கை முழுவதையும் அந்! மக்களிடையே பிரித்தாளும் தந்திர உபாயம் என்னும் ஒருமைப்பாட்டினை உடைத்தெறிந்தார்கள். இதிலிருந்: தெற்காசியாமுழுவதையும்தமது கட்டுப்பாட்டின்கீழ் கொன ஆகையால் அந்நியரின் காலனித்துவப்பிடிக்கு நாடொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக தேசிய ரீதிய அமைப்பு வடிவங்கள் மூலம் தேசிய சுதந்திரத்தினைப் ெ ரீதியாக ஒருமைப்பட்டு அகிம்சைரீதியான போராட்டத்தி: ஆனால் கலாசாரப் பேதமின்றிமக்கள் தேசிய உணர்வுடன் அடையாளப்படுத்தியது எனலாம்.
இவ்வாறு மேற்கொண்ட தேசியத்துவ உணர்வ தொடங்கியது. ஆனால் அது இன்று வரையும் வெடித்து சுபீட்சமும் நிலவ வேண்டுமானால் அந்நாட்டு மக்களின வேண்டும். அந்தவகையில் இலங்கையில் மீண் இடம்பெறச்செய்யலாம் என்ற வினா அரசு, அரசசார்பற் வருகின்றது. தேசிய ஒருமைப்பாடு பற்றிMyramwerner கலாசார ரீதியிலும், சமூக ரீதியிலும் வேறுபடும் கு அடையாளத்தினை உருவாக்கும் (Process) வழிமுறை பிரதேச ரீதியிலான ஒருமைப்பாடும் இன ரீதியிலான ஒ பெற வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.
ஆகையால், தேசிய ஒருமைப்பாடு மதம், கலா இருந்து மக்களை வேறுபடுத்திக்காட்ட இடம் கொடா மதக்குழுக்கள், இனக்குழுக்கள், சாதிக்குழுக்கள் ே ஒற்றுமையினை ஏற்படுத்துவதே தேசிய ஒருமைப்பாடு ஆனால் மெய்யியல் வாதிகள் ஒரு சமூகத்தின் அங்க உடற்பகுதிகளில் நெருக்கமான பரஸ்பரம் தங்கிஇருத்த
இதன் அடிப்படையில் இலங்கையில் எவ் கொண்டால், ஒரு சமூகத்தில் காணப்படுகின்ற இனக்குழு ஆனால் இச்சாதிப்பிரிவுகள் எந்தச் சமூகத்தில் அல்லது நிச்சயமாக அச்சமுகங்களிடையே தேசிய ஒருமைப்பாடு நாம் எதிர்பார்க்க முடியாது.
ஆகவே, ஒருமைப்பாட்டிற்குரிய வழிமுறைச் அகற்ற வேண்டும்.
1. இனக்குழுக்களிடையே காணப்படுகின்ற
2 நீண்டகாலமாக இனங்களிடையே நிலவு
தமிழ், முஸ்லீம்)

டு
, இறுதிவருடம்
னர் ஒருமைப்பாடானது தேன் கூட்டுக் கலன்கள் போன்று நியர்கள் ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதற்காக இலங்கை ஆயுதத்தினைப் பயன்படுத்தி மக்களிடையே நிலவிய
து அந்நியர்கள் இந்த ஆயுதத்தினைப் பயன்படுத்தியே ண்டுவந்தார்கள்என்பதனை அடையாளப்படுத்துகின்றேன்.
5ள் இருந்தநாடுகள் தமக்கென ஒரு தேசிய சுதந்திரமுள்ள பில் ஒருமைப்பாட்டினை வளர்த்துக் கொண்டு பல்வேறு பற்றுக் கொண்டன. அந்த வகையில் இலங்கையும் தேசிய ன் பயனாக தேசிய சுதந்திரத்தினைப் பெற்றுக் கொண்டது. * பங்கேற்றுள்ளார்கள் இது ஒரு தேசியவாத உணர்வினை
ானது சுதந்திரத்திற்குப்பின்னர் பூகம்பம் போல் வெடிக்கத் துக் கொண்டே இருக்கின்றது. ஒரு நாட்டில் அமைதியும் டயே ஒருமித்த தேசிய ஒருமைப்பாடு இடம்பெற்று வர டும் ஒரு தேசிய ஒருமைப்பாட்டினை எவ்வாறு றநிறுவனங்களிடத்திலே பாரியதாக்கத்தினை ஏற்படுத்தி என்ற அறிஞர் குறிப்பிடுகையில் ஒருமைப்பாடு என்பது ழுக்களை தனியொரு பிரதேச அலகினூடாக தேசிய யையே தேசிய ஒருமைப்பாடு என்றார். மேலும் அவர், ருமைப்பாடும் தேசிய ரீதியிலான ஒருமைப்பாடும் இடம்
சாரம், சாதி, இனம், போன்ற வேற்றுமையானபார்வையில்
ாமல் இருக்க வேண்டும். மக்கள் கலாசாரக் குழுக்கள்,
போன்ற பல தன்மையுள்ள சமூகக் குழுக்களிடையே
என எளிமையான வரைவிலக்கணத்தினை வழங்கலாம்.
த்தவர்களிடையே அல்லது உயிர் வாழும் மனிதனின் லை ஏற்படுவதே ஒருமைப்பாடு என்கின்றனர்.
வாறு ஒருமைப்பாடு முரண்படுகின்றது எனக் கண்டு க்களிடையே பல்வேறு சாதிப்பிரிவுகள் தோன்றுகின்றன. எந்தவொரு இனக்குழுக்களிடையே தோன்றுகின்றதோ தோன்றுவதற்குரிய எவ்விதமான சாத்தியக்கூறுகளையும்
ளை ஏற்படுத்துவதாயின் பின்வரும் தடைகளை முதலில்
சாதிப்பிரிவினையை அகற்ற வேண்டும்.
கின்ற இனமுரண்பாடுகளை அகற்ற வேண்டும். (சிங்கள,
SSSMSSSSSSSSSSSSSLSSSSSSSSSSS ----

Page 66
3. இந்திய வம்சாவளியினர் அந்நியர்கள் ே
4 ஜனநாயக அரசியலில் அரசியல் கட்சிக
வாதங்களை அகற்றப்பட வேண்டும்.
5. எந்தவொரு சமூகத்திலும் காணப்படு
அகற்றப்பட வேண்டும்.
மேற்கூறிய காரணிகள் முற்றாக நீக்க்ப்படுமாய மனிதன் பல தேவைகளைக் கொண்டவன் ஆனால் தனிம ஆகவே அவன் மற்றவனின் தேவைக்கென வாழும்பே அடையாளப்படுத்தலாம்.
இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்ப
1. இனவிகிதாசாரமும், தரப்படுத்தலும் முற்
பேணப்பட வேண்டும்.
2. தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுததுவ தற்போதைய பொதுசன ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. இத்தகைய அை கிராமங்களிலும் நகரங்களிலும் சுவரொட்டிகளையும் வெளியிட வேண் கடமையானது மக்களிடையே நிலவும் த
3. வெகுசன செய்தித் தொடர்புசாதனங் தொலைக்காட்சி, நாடகங்கள், சினிமா பே வளர்க்க உதவும் வகையில் பயன்படுத் திரைப்படம் காட்டும்போதுதமிழ் கதை 6 சிங்களக்கதை விளக்கக் குறிப்புக்களும் ஒருமைப்பாட்டிற்கு வெகுசன தொடர்புச இச்சாதனங்களை திட்டமிட்ட முறை அவசியமாகும்.
4. பாடசாலைகளை மும்மொழிப்பாடசாை வளவில் சகல இன, மத மாணவர்களும் க: உருவாவதற்கான சந்தர்ப்பத்தை உண்டா வளர்க்கலாம். முக்கியமாக பாடவித ஒருமைப்பாட்டினை வற்புறுத்தும் பா வயதினில் இருந்தே கற்பிக்கப்பட வே ஆசிரியர்களை அழைத்து போதியள6 சமத்துவம், சகிப்புத்தன்மை, புரிந்துணர் முடியும்.
5. மொழிரீதியான வேற்றுமைகளில் இ காண்பதற்காக தேசிய ரீதியில் சிங்கள் பாடசாலைகளில் சிங்கள மொழியினை நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
6. அரசு அரசசார்பற்ற நிறுவனங்கள் தே பங்குபற்றச் செய்து அவர்களை சர்வதேச

பால் நடத்தப்படுவது முற்றாகத் தீர்க்கப்பட வேண்டும்.
ள் தோற்றுவிக்கின்ற இனவாதம், பிரதேசவாதம் போன்ற
கின்ற (முதலாளி / தொழிலாளி) வர்க்க உணர்வுகள்
பின் ஒருமைப்பாடு செழுமையாக வளரும். சமூக வாழ்வில்
னிதனால்தன் முழுத்தேவையைப்பூர்த்திசெய்யமுடியாது. ாதே தேசிய ஒருமைப்பாடு அவசியம் பெறுகின்றது என
டுத்துவதற்கான வழிமுறைகள்(Process)
றாக நீக்கப்பட்டு அரச நியமனங்களில் இனவிகிதாசாரம்
வதற்கான தனியான ஒரு அமைச்சினை உருவாக்கலாம், ணரி அரசாங்கத்ததில் சனாதிபதியின் கீழ் இத்தகைய பிரிவு மச்சு தேசிய ஒருமைப்பாட்டின் அவசியத்தினையும் கருத்தரங்குகளையும் துண்டுப்பிரசுரங்களையும் டும். இத்தகைய அமைச்சின் அல்லது திணைக்களத்தின் ப்பபிப்பிராயங்களை நீக்குவதாக அமைதல் வேண்டும்
கள் அச்சாதனங்களாவன: வானொலி, பத்திரிகை, பான்றவற்றை நாட்டினுடைய தேசிய ஒருமைப்பாட்டினை த வேண்டும். அத்துடன் தொலைக்காட்சியில் சிங்களத் விளக்கக் குறிப்புகள் தமிழ் திரைப்படங்கள் காட்டும்போது இடம்பெற வேண்டும். தற்போது இலங்கையின் தேசிய தனங்கள் பெரும்தடையாகஇருந்து வருகின்றன. ஆகவே யில் நிகழ்ச்சி நிரல்கள் தயாரித்து பயன்படுத்துவது
லகளாக ஆக்கவேண்டும். ஆரம்ப வயதில் இருந்து ஒரே ல்விகற்பதனால் அவர்களிடையே பரஸ்பரம், புரிந்துணர்வு க்கிஅவர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வினை ான நூல்களை மாற்றியமைத்து அவற்றில் தேசியண டங்கள் சகல இன மாணவ மாணவிகளுக்கும் ஆரம்ப பண்டும், இதற்காக கல்வி நிறுவனங்களில் கற்பிக்கும் வு பயிற்சி வழங்குவதன் மூலம் மாணவர்களிடையே வு, தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளையும் வளர்க்க
ருந்து ஒற்றுமையினையும் ஒருமைப்பாட்டினையும் ாப்பாடசாலைகளில் தமிழ் மொழியினையும், தமிழ்ப் ாயும் கற்பிக்க வேண்டும். இதற்கு அரசு அரசசார்பற்ற
சிய விளையாட்டுகளில் சகல இன இளைஞர்களையும் சமட்டங்களிலும் பங்குபற்றச் செய்தல் வேண்டும்.

Page 67
7. இளைஞர் விவகார அமைச்சுக்களை அன மத்தியிலும் இளைஞர் அமைப்புக்களை 2 கூட்டங்களையும் மாணவர்கள் சாகித்திய ஒன்று கூடலுக்கு மேலாக இளைஞர்க ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களை வாழ்கின்ற அனுபவங்களையும் பெறக்கூடி அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்காலக்க குறிப்பிட்ட வயதினை அடைந்த ஆண் காலத்திற்குள் இத்தகைய கலப்புக்கு குயே
8. அரசு அரசசார்பற்ற நிறுவனங்கள் எல் பொருளாதார சமூக கலாசார அபிவிரு வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் அ மத்தியில் அமைதி, சமத்துவம், விட்டுக் புரிந்துணர்வு, போன்றவற்றினை ஏற்படுத் ஒற்றுமையினையும் ஒருமைப்பாட்டினை
9. தமிழ் அரச கருமமொழியாக இருந்தும் . புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதனை அமைச்சு அறிக்கைகள் தயாரிக்கப்டும் பே மாகாண மட்டங்களிலும் நிர்வாக சுற்றுநி
10. இந்த நாட்டில் உள்ள 25 அமைச்சுக்களுக் செயலாளர்கள் தான் தமிழர் . இதுபோ நோக்கினால் சிறுபான்மையினரை கவனத் அரசசார்பற்ற நிறுவனங்கள் கவனத்தில் சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்
11. இனக்குழுக்கள் யாவும் வெவ்வேறு வ இரண்டறக்கலவாது தனித்தனியாக ஒ உணர்ச்சியும் வேறுபடும்.இதனால் தேசிய நிறுவனங்கள் வெவ்வேறு இனத்தவர்களி: அந்நிய நாட்டுப்படைகள் வந்து எமது ந என்ற உணர்வுகளை ஏற்படுத்தும் நிகழ்
வேண்டும்.
ஆகவே, இலங்கை அரசியலில் ஆரம்பகால அரசியலில் இருந்து பிரித்தால் இலங்கையில் தேசிய ஒரு
கொண்டு செல்ல முடியும்.
5

மத்தல் இவ்வமைச்சுக்கள் மூலம் சகல இன இளைஞர்கள் உருவாக்குதல் வருடந்தோறும் இளைஞர்கள் ஒன்று கூடும் விழாக்களையும் நடாத்தி வருதல். ஆனால், இத்தகைய ரிடையே உண்மையான தேசிய ஒருமைப்பாட்டினை குறிப்பிட்ட சில காலப்பகுதிகளில் ஒன்றாக இணைந்து யசந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அரசு லப்புக் குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதில் அல்லது பெண் சகல இன இளைஞர்களும் குறிப்பிட்ட ற்றத்திற்குள் தங்கி வாழுதல் வேண்டும். லா மத , இன இளைஞர்களையும் சேர்த்து அரசியல் நத்தி, விளையாட்டு, மாணவர்கள் சாகித்திய விழா, புவர்களை ஈடுபடச் செய்து எமது நாட்டு இளைஞர்கள் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, பரஸ்பரம் ந்தி தேசியவாதம், தேசிய உணர்வினை வளர்த்து தேசிய பும் கட்டியெழுப்ப முடியும். அது நீண்டகாலமாக தொடர்ச்சியாக சகல துறைகளிலும் 1 அரசு அரசசார்பற்ற நிறுவனங்கள் கவனத்தில் எடுத்து ாதே, தமிழிலும் தயாரிக்கப்படல் வேண்டும். தமிழ் பேசும் ருபங்களை தமிழிலே அனுப்புதல் வேண்டும்.
கும் 25 செயலாளர்கள் உள்ளனர். ஆகஇரண்டே இரண்டு ால ஒவ்வொரு திணைக்களத்தையும் தனியாக எடுத்து தில் கொள்ளவில்லை என்பது தெரியவரும் இதனை அரசு எடுக்க வேண்டும். இல்லை எனில், ஒருமைப்பாடு என்ற
D.
ழிகளில் சிந்திக்கின்றன. வெவ்வேறு இனத்தவர்கள் ரிடத்தில் வாழ்ந்தால் அவர்களுடைய சிந்தனையும் ஒருமைப்பாடும் தடைப்படும். மாறாக, அரசு அரசசார்பற்ற ன் சிந்தனைகளை ஒன்று குவிக்க வேண்டும். உதாரணமாக, ாட்டை ஆக்கிரமிக்காமல் நாம் எவ்வாறு பாதுகாக்கலாம் ச்சிகளைத் தயாரித்து சினிமா படங்களில் காண்பிக்க
ம் தொட்டுநிலவிவருகின்ற சாதிப்பாகுபாட்டை இலங்கை மைப்பாட்டை மேற்கூறிய வழிமுறைகளுடன் இலகுவாக
N

Page 68
புதுவாழ்வு
செல்வி.சந்திரவதனி ஐயனார் - இரண்ட
முதற் பிறப்பில் புரிந்திட்ட ஒ இப்பிறப்பில் மானிடனாய் இங் எப்பாதை நல்லதென்று அப்ப எப்போதும் நன்னெறியில் தப்
ஈழமணித்திருநாடு ஈன்றெடுத்த ஈனப்புத்திகள் தாம் இழையே நாணச் செய்து விடும் சாதிக கானமிசைத்து ஆனந்தமாய்
ஆதியிலே வந்த ஜாதி ஆண் பாதியிலே முளைத்ததுவோ ! ஜாதிமத பேதமதை ஆதியோ மேதினியில் என்றென்றும் மே
சண்டையிட்டுச் சண்டையிட்டு வன்மங்களை வாழ்வினிலே வி அன்பதை நெஞ்சினிலே அனு இன்பமுடன் வாழ்ந்திட்டால் இ
மனித உள்ளங்களின் மாறுப மனதில் நாம் நிறுத்தி மதிப்ட மறைந்திடும் மண்ணில் வேற் மகிழ்ந்திடலாம் நாமென்றும்
பிறந்திட்ட புத்தாண்டில் புதுை சிறந்த பல தீர்வுகளைச் சீக் இறந்தகால நிகழ்வுகள் இருவ நிறைந்த வாழ்வதுமே மண்மீ

மலரட்டும்
ாம் வருடம் - புவியியல் விசேடதுறை
ர்சில புண்ணியத்தால் கு நாம் பிறந்திட்டோம் ாதை வழி சென்று பாது நாமிருப்போம்.
நம்மிடையே ாடும் இது ஏனோ? ளை நாம் நீக்கிக் நாமிருப்போம்.
பெண் இரண்டேதான் உண்டிங்கே. பல நூறு உண்டிங்கே. ாடு நாமழித்து ன்மையாய் இருந்திடுவோம்
சாவதிலே என்ன பயன் பழர்த்திட்டு சென்றிடுமே தினமும் சுரந்திங்கே இனிமையிங்கே நாளும் வாழும்
ட்ட உணர்வுகளை 1ளித்து வாழ்ந்திடுவோம் றுமைகள். அதனாலே மானுடராய் ஒற்றுமையாய்
)மகள் வந்திடட்டும் கிரமாய் தந்திடட்டும் ரினிலே மறைந்திடட்டும் து மலர்ந்திடட்டும்

Page 69
ܢܠ
அவைக்காற்றுகையின் அனுபவத்தின்ஊட ஒருநாடகத்தின் வெற்றியைத் தீர்ம
TKR. சங்கர், பொறியியல் பீடம், இறுதிவரு
நாடகம் என்பது மேடையில் உள்ள உயிர்ப் மொழியாகும். எந்த ஒரு மொழியும் பேசப்படுவதற்கு புல மாத்திரமே முறையாகப் பேசப்பட முடியும். அந்த வகையி உருவாக்கமுடியாது. நாடகம் பலவற்றில் ஈடுபட்ட அனுட என்பது எனது நம்பிக்கை, அந்த வகையில் எனது குறுகிய தீர்மானிக்கும் காரணிகளை ஆராயமுற்படுகிறேன்.
நாடகத்தின் மூலக்கரு ஒருநாடகத்தின் வெற்றி வழங்கும் செய்தியை பார்வையாளருக்கு என்ன கூறப்டே மக்களால் இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இ படித்துணரப்பட்டிருப்பதால் இலகுவாக விளங்கிக்கெ விளைவுகள் ஏற்கனவே தெரிந்திருப்பதால் சுவை ஓரள ஆராயப்படும்போதுநாடகத்தின் காத்திரத்தன்மை அதிகா 'நாடகத்திற்கான கருவைத் தெரிவு செய்தலில் எனது அனு விரும்புகின்றேன். கடந்த வருடம் எனது வளாகத்தின் த கிடைத்ததும் நாங்கள் ஒரு குழுவாககக் கூடி நாடகத்ை நாடகத்தின் கருவிற்கான யோசனைகளை முன்வைக்கும முதலாவதாக முன்வைக்கப்பட் விடயம் எமது ஐந்தாம் 6 என்கிற கதையாகும். இதில் குறிப்பிட்ட நபர் ஒருவ6 அந்நபரைத் தவிர ஏனைய எல்லோரும் பாவிகள் என்பத நோயினால் துன்பப்படும் ஏழைக் கிழவனையும் அவ (அரசியல்வாதிகள், போலிச்சாமியார்கள், பத்திரிகையா பயன்படுத்துகின்றது என்பதைச் சித்தரித்தலாகும். இறுதி வெளிவந்து கொண்டிருந்த தண்ணிர்த் தேசம் என்னும் கு திசை செரியாது தத்தளிக்கும் படகில் உள்ளவர்கள் எதி நிலையும் சித்தரிக்கும் கருவைப் பிரேரித்தார். அவர் அக் உள்ளார்ந் மறைபொருள் கருவை வெளியிட்டதும் அது இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய சமகாலப் பிரச்சனை வெற்றிக்கும் ஒரு காரணியாக அமைந்தது.
இந்த இடத்தில் நான் இன்னுமொரு விடயத் மறைபொருள் கரு ஒன்று இருக்குமானால் அது நாடகத்தி ஆனால் மறைபொருள் கரு வெளிப்படையாகக் கூற முடி! பயன்படுத்த வேண்டும் வெளிப்படையாகக் கூறக் கூ பார்வையாளர்களிடம் சலிப்பையும் நெறியாளரிடம் ஆ நாடகத்தின் வெற்றிக்கு அந்நாடகத்தின் கருவும் அ வழங்குகின்றன.
மூலக்கரு தெரிவு செய்யப்பட்டபின் அதனை 6 வேண்டும். நாடகத்தை நகர்த்திச் செல்வதற்காக பல

ானிக்கும் காரணிகள்
-ab
புள்ளநடிகனையும், அவையோரையும் தொடர்புபடுத்தும் மை மாத்திரம் போதுமானதன்று. அது பேசிப்பழகுவதால் ல்நாடகம் பற்றிய அறிவு மாத்திரம் ஒரு சிறந்தநாடகத்தை வங்கள் மாத்திரமே சிறந்தநாடகத்தை உருவாக்க முடியும் அனுபவங்களில் இருந்து ஒருநாடகத்தின் வெற்றியைத்
யில் முக்கியமான பங்களிப்பை வகிக்கிறது. இதுநாடகம் ாகிறோம் என்பதைத்தீர்மானிக்கிறது. கூறப்படும் கருத்து இருத்தல் வேண்டும். வரலாற்று நாடகங்கள் ஏற்கனவே ாள்ளப்படுகின்றன. எனினும் நாடகக் கதையின் பின் வுக்குக் குறைகின்றது. எரிகின்ற சமகாலப் பிரச்சனைகள் ரிக்கின்றது. மக்கள் இலகுவாக விளங்கிக் கொள்கிறார்கள். பவங்களுள் ஒன்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மிழ்ச் சங்கத்தின் நாடகப் போட்டியிக்கான அறிவித்தல் தத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். ாறு குழு உறுப்பினர்களிடம் கேட்கப்பட்டது' இதற்காக பகுப்புப் பாடப்புத்தகத்தில் இருக்கும் யார் அந்தப் பாவி ரை பாவி என்று எல்லோரும் கருதுகிறார்கள் ஆனால் ாகக் கதை முடிகிறது. அடுத்து முன்வைக்கப்பட்ட விடயம் னது நோயை மாற்றத் துடிக்கும் மகளையும் சமுதாயம் ளர்கள்) எவ்வாறு தமது தேவைகட்கு நயவஞ்சகமாகப் பாக அப்போது ஆனந்தவிகடன் சஞ்சிகையில் தொடராக றும் கவிதைத் தொடரால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடலில் ர்நோக்கும்ப பிரச்சனைகளையும் அவர்களின் உணர்வு கருவை கிளாலி மரணப் பொறியுடன் இணைக்கும் தனது
எல்லோராலும் வரவேற்கப்பட்து. இது எல்லோராலும் ாயைத் தழுவியிருந்ததால் பின்னர் 'வரும் நாடகத்தின்
தைக் குறிப்பிட வேண்டும். அது 'மறைபொருள் கரு' ன்ெ காத்திரத்தன்மையை அதிகரிக்கும் என்பது உண்மை பாத மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கு மாத்திரமே டிய விடயங்கள் மறைபொருளாகக் கூறப்படும் போது ளுமைக் குறைவையும் ஏற்படுத்துகின்றன. எனவே ஒரு தைத் தெரிவு செய்தலும் கணிசமான பங்களிப்பை
)மயமாகக் கொண்டுநாடகம் பிரதியாக்கம் செய்யப்படல் உபகருத்துக்கள் சம்பவங்கள் என்பன மூலக்கருவின்

Page 70
நோக்கோடு இசைந்ததாக பிரதியாக்குபவரால் கோர்க்கப் கருத்து செறிவு மிக்க வசனங்கள், அடுக்கு வசனங்கள் தயாரிக்கப்பட்ட காத்திரமான பிரதி என்ற அடிப்படை குறிப்பிடப்பட வேண்டிய ஒரு பிரதியாகும். இதில் சில காட்சியில் போர்த்தளபதி ஒருவன்தான் அடக்குமுறையி மூலம் தனது சக தளபதிக்கு விளக்குகின்றான்
"ஒருவனுக்கு கன்னத்தைப் போத்தி அடிக்கே அது அடிச்சவனிலை பிழை" மேலும் புரட்சியொன்றின்டே என்பதைப் பின்வரும் கூற்றுக்கள் எவ்வளவு அபூ பொறுத்தவரைக்கும் மனச்சாட்சிப் படி நடப்பதுதான் ம விட்டதவறும் அதுதான்.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கிறதை தடு; இல்லை காந்தியின் மனச்சாட்சிதான். வரலாற்றில் பெரிய காந்தி போன்றவர்கள்தான் அரசியலிலை எப்பவும் மனச் மட்டுமல்ல இன்னும் நாடகப் பிரதி முழுவதும் கருத்தா திறமையை ஆசிரியர் வெளிக்காட்டியிருக்கிறார். பெ காரணமாகவே 'வரும் நாடகப் பிரதியும் பிரதியாக்குவ சிலவற்றை அப்பிரதியில் சேர்த்தார். பிரதியாக்கத்தில் குறியீடுகள் என்பவற்றைக் கூறலாம்.
அவைக்காற்றல் என்பது அவையோருக் எதிர்பார்க்கப்பட்ட விளைவைக் கொடுக்க வேண்டுமாய் வேண்டும். பாமர மக்களுக்கான அளிக்கை ஒப்பீட்ட சென்றடைதலை இலகுவாக்கும். நாடகததைப் பொறுத்தவ விடக்குறைவாகவே உள்ளது. எனவே அங்கே கையாள கையாளப்படுமாயின் அது முழுமையாகப் பார்வையாளர் மேடையேற்றப்பட் “கொள்கரி என்கிறநாடகம் பல சிக்க உள்ளடக்கி மேடையேற்றப்பட்டது. இதன் பின்னர் அந் கலந்துரையாடல் ஒழுங்கு செய்திருந்தோம்.
கலந்துரையாடலிலிருந்து நாம் பெற்ற முடிவு விளங்கிக் கொள்ளமுடியவில்லை என்பதாகும். 'இது பற் அவசியமாகிறது. இது ஒரு பரீட்சார்த்த முயற்சி நாங்கள் செய்கிறோம். எனினும் சொல்லப்பட்ட கருத்து கறுப்பாக ஆனால் நிச்சயமாக வெள்ளையாக உணரப்படமாட்டாது
எனினும் கறுப்பு கறுப்பாகவோ அல்லது அதற் உத்திகள் கையாளப்படும்போது பார்வையாளர்களின் தர உயர்த்துவதற்கு முற்படுதலும் அவசியமாகின்றது.
நாடகமொழி பேசப்படும் இடம் அரங்கமா அரங்கங்கள் மூன்று புறமும் மூடப்பட்டு நான்காவது திறந்தவெளியரங்குகளும் சுழலும் மேடையமைப்புக்களு உள்ள சரத் சந்திர திறந்தவெளியரங்கில் இப்போதும் மேடையமைப்பைத் தவிர்ந்த ஏனைய மேடையமைப்ட வடிவமைப்புநாடகத்தின் வெற்றியில் செல்வாக்குச் செலு

டுகின்றது. சம்பவங்கள் கோர்க்கப்படும் முறை ஆழமான என்பனவும் பிரதியை மெருகூட்டும் எமது வளாகத்தில் யில் (எனது நோக்கில்) ‘ம்ொஸ்கோ விசாரணைகள் வசனங்களை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். ஒரு ன்மேல் கொண்டுள்ளநம்பிக்கையை பின்வரும் கூற்றின்
க்கை அவன் மற்றக் கன்னத்தையும் காட்டினான் என்றால் ாது மனிதம் என்பதை விட மக்கள் என்பதுதான் முக்கியம் காகக் கூறுகின்றன என்று பாருங்கள். என்னைப் பெரும் தேசத்துரோகம். பெரிய பெரிய புரட்சிவாதிகள்
ந்துக் கொண்டிருக்கிறது பிரித்தானியாவின்ரைதுவக்குள் தேசத் துரோகிள் நீரோமன்னன் போன்றவர்களில்லை. சாட்டி மலட்டுத்தன்மையைத்தான் கொண்டு வரும்'இது ழமிக்க வசனங்களைக் கையாளுவதில் தனக்கிருக்கும் ாஸ்கோ விசாரணைகள் நாடகப் பிரதியின் பாதிப்பு தில் உதவிய ஒருவர் காத்திரமான ஆழமான வசனங்கள் கையாளப்படும் உத்திகளாகக் கவிதைகள், பாடல்கள்
கு ஆற்றுதல் என்று பொருள்படுகிறது. நாடகம் பின் பார்வையாளர்களின் தரம் கருத்தில் கொள்ளப்பட ளவில் எளிமையாக இருத்தல் நாடகம் அவர்களைச் 1ரை இலங்கையின்நாடகத்தரம் மேலைத்தேயநாடுகளை ப்படும் உத்திகள் உடனடியாக மாற்றமின்றி அப்படியே களைச் சென்றடையாது. கடந்த ஆண்டு அரங்காடிகளால் லான மறைபொருளையும் பல்வேறு புதிய உத்திகளையும் நாடிகம் ஏற்படுத்திய பாதிப்பை அறியும் முகமாக ஒரு
பெரும்பாலானவர்களால் அந் நாடகத்தை முழுமையாக கொள்கரியின் நெறியாளரின் கூற்றையும்நினைவுகூறல் பார்வையாளர்களின் தரத்தை உயர்த்துவதற்கு முயற்சி இருக்கும் போது அதை நரை நிறமாக உணரப்படலாம்.
p p.
குக் கிட்டியதாகவோ உணரப்படுமாயின், மறைபொருள் ம் கருத்தில் கொள்ளப்படுவதுடன் அவர்களின் தரத்தை
தம். தற்காலத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பக்கம் அவையோருக்காகத் திறந்திருக்கும். எனினும் ம் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. எமது வளாகத்தில் பல நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன. மூடிய குகளில் பங்காற்றியஅனுபவம் எனக்கில்லை. அரங்க ந்தும் மற்றைய காரணியாகும். அரங்க வடிவமைப்புக்கள்

Page 71
மூலம் நாடகத்திற்கேற்ற சூழ்நிலையை தோற்றுவிக்க மு அவையோர் முன்னிறுத்தப்படும்போது நாடகத்துடன் g நாடகங்களில் மேடையமைப்புக்கான தேவைப்பாடு
நாடகத்தில் மேடையமைப்பில் அதிகளவு கவனம் ெ குறைவாகவே இருந்தது. வெறும் கரும்பலகையை பிரிசு சிறையதிகாரிக்கும் கைதிக்கும் இடையிலான உரையாட காட்டப்பட்டது. மேலும் ஒப்பனையில் கூடிய கவனம்
இராணுவ அதிகாரியை இராணுவ அதிகாரியாகவும் பார்த் அது மேடையமைப்பில் இருந்த குறைபாட்டைநிவர்த்திெ கவனம் செலுத்தாமை ஒரு குறையாகச் சுட்டிக் காட்டப் அடுத்த நாடகத்தில் போட்டியில் தயாரிக்கப்பட்ட வரும் பரப்பிற்காக நீலநிற ஒளியூட்டல் அலை அடிப்பது ே கொந்தளிப்பிற்குரிய ஒலியமைப்பு, ஒளியமைப்பு போன் வெளிப்படுத்த முயன்றோம்.
குழந்தைகளுக்கான நாடங்களிலும் மேடைய நாடகம் நிகழும் சூழலை மேடையில் காட்டுவதன் மூலே அரங்காடிகள் 'பொறுத்து போதும்' என்னும் தாசியசின் குழந்தை சண்முகலிங்கத்தின் சிறார்களுக்கான நாடகத்தை இதன் போது பொறுத்தது போதும் நாடகத்தின் மேடை ஆனால் முயலார் முயல்கிறார் நாடகத்தில் இயன்றவரை இதன் மூலம் குழந்தைகள் காட்டில் சம்பவங்கள் நடப்பது வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்திருந்தது.
அடுத்து,நாடக மொழியைப் பேசும் நடிகர்கை வேண்டிய முக்கிய குணாம்சம் நடிக்க வேண்டும் என்ற ஆ மேடைக் கூச்சம். இவ்விரண்டும் இருந்தால்தான் நெறியா தெரிவு செய்யும் போது குரல் வளம் , உடலமைப்பு, இசை வேண்டும். நாடகத்திற்கு உயிர் ஊட்டுபவர்கள் நடிகர்கே நாடகமும் உயிர் பெறுகின்றது. உண்மையில் மேடையில் அசைவு முகபாவகம் கையாளும் பொருட்கள் என்பவ வேண்டும்.
நாடகத்தில் ஒரு நடிகன் தனது நடிப்பினனா முடியும் எமது வளாகத்தில் தமிழ்ச்சங்கம் 92ம் ஆண்டு க நிகழ்வில் இறுதியாக நடைபெற இருந்த இசைநிகழ்ச்சிக்க தேவைப்பட்டது. இந்த இடைவேளையில் 15நிமிட நேர அவகாசம் தரப்பட்டது. போதிய பயிற்சி இன்றி காத்தி மேடையேற்றினோம். அதில் முக்கிய பாத்திரமேற்று நடி உணர்ச்சிபூர்வமான நடிப்பு பார்வையாளர்களை மெய்மற நடிப்பாற்றல் மட்டுமே.
இங்கே இன்னோர் விடயத்தைக் குறிப்பிட்டே. செய்து நாடகத்துடன் ஒன்றிப் போகச் செய்வதால் அவ உணர்ச்சி வேகத்தில் நடிகன் அழும் போது அவர்களு! சிரிக்கிறார்கள். ஆனால் அதற்கு மேல் நாடகத்தைப் இந்நாடகம் மூலம் கூறப்பட்ட செய்தி அடிபட்டுப் போ

டியும். மேடையமைப்பின் மூலம் நாடகம் நிகழும் சூழல் ன்றிப் போவதற்கான குழல் உருவாகின்றது. குறியீட்டு குறைவாகவேயிருக்கும். மொஸ்கோ விசாரணைகள் லுத்தப்படவில்லை அதற்கான தேவைப்பாடும் மிகக் வராகக் கொண்டு சிறைக்கூடம் காட்டப்பட்து. எனினும் ல் மூலம் அது சிறைக்கூடம் தானென்பது தெளிவாகக் செலுத்தப்பட்டதால் அதாவது கைதியை கைதியாகவும் 5 மாத்திரத்திலேயே இனம்காட்டக்கூடியதாக இருந்ததால் சய்து விட்டது. எனினும் நடுவர்களால் மேடையமைப்பில் பட்டது. இதனால் இக்குறை கவனத்திற் கெடுக்கப்பட்டு நாடகத்தில் படகு ஒன்றின் முன்னரங்க அமைப்பு, கடல் பால் தண்ணீர் தெளித்தல் போன்றவற்றாலும் அலை ரவற்றிலும் நடுக்கடலுக்குரிய சூழ்நிலையைத் தத்ரூபமாக
மைப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் ம சிறார்களுக்குநாடகத்தை விளங்க வைக்கக முடிகிறது. சமூக நாடகத்தையும் 'முயலார் முயலுகிறார்" என்னும் யும் ஒன்றாகவே பல இடங்களில் மேடையேற்றினார்கள். பமைப்பு அதிகளவு கவனத்ைதில் எடுக்கப்படவில்லை. முயன்று காடும் காடு சார்ந்த குழலை ஏற்படுத்தினோம். போன்ற உணர்வைப் பெற முடிந்தது. இது நாடகத்தின்
ளக் கவனத்தில் எடுப்போமாயின் ஒருநடிகனுக்குஇருக்க பூசை. ஒரு நடிகன் தவிர்க்க வேண்டிய முக்கிய குணாம்சம் ளரால் அவனைநடிக்கச் செய்யமுடியும். ஒருநடிகனைத் ந்து போகும் தன்மை என்பன கவனத்தில் கொள்ளப்பட ள. அவர்கள் அதில் ஆழ்ந்து ஈடுபட்டு நடிக்கும் பொழுது நிற்கும் நடிகன் ஒவ்வொரு கணமும் தன் நகர்வு உடல் ற்றின் மூலம் நாடக மொழியை பேசிய படியே இருக்க
ல் ஏனைய குறைபாடுகள் எல்லாவற்றையும் நீக்கி விட ண்டி இந்து கலாசார மண்டபத்தில் நிகழ்த்திய வருடாந்த கஇசைக்கருவிகள் ஒழுங்கு செய்வதற்கு கால அவகாசம் நிகழ்வு ஒன்றை வழங்குமாறு எமக்கு மிகக் குறுகியகால, Tமான கரு இன்றின், மனிதம் என்கின்ற குறு நிகழ்வை த்தவர் ஒரு தேர்ந்த நடிகராதலால் அவரின் தத்ரூபமான க்கச்செய்து விட்டது. மனிதம் வெற்றியின் முக்கிய காரணி
ஆக வேண்டும். பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படச் ர்களின் அறிவு பூர்வமான சிந்தனை தடைப்படுகின்றது. 5 அழுகிறார்கள். நடிகன் சிரிக்கும் போது அவர்களும் பற்றி சிந்திக்க முடியாதவர்கள் ஆகிறார்கள். இதனால் கிறது. மனிதம் நிகழ்வின் போது உணர்ச்சிவசப்பட்ட
5
༄༽

Page 72
எத்தனை பார்ைைவயாளர்கள் அதன் பின் அதில் சு சிந்தித்திருப்ாபார்கள் என்பது கேள்விக்குறியே. எனவே செய்யும் நாடகங்களில் நடிகன் வெற்றி பெறுகிறான். நாட நடைபெறும் நாடகங்களில் மிகை உணர்ச்சி வசப்படுதல் நாடகங்களில் இது தவிர்க்கப்பட வேண்டும். அது ெ பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தப்படுதல் அவசியம்.
இத்தகைய அந்நிய உணர்வை ஏற்படுத்துவ நினைப்பதை அறிவதற்காகவும் நாம் அண்மையில்
'நிரபராதிகளின் காலம்' என்கின்றநாடகத்தில்நாடகம் இ நாடகத்தைப் பற்றி கலந்துரையாடினார்கள். பின் நாடக தோல்விகள் காலத்தால் உணர்த்தப்படும்.
எமது வளாகத்தைப் பொறுத்தவரை நடிகர்கள் ஏனையோர் வளாகத்திலேயே தமது கன்னிஅரங்கேற்றத் நடிகர்கள் பயிற்றப்பட வேண்டும் என்பதிலும் பார்க்க தம: கவனம் செலுத்தப்படுவதால் புதிய நடிகர்களைத் தேர் செய்திெேலயே நெறியாளர்கள் கவனம் செலுத்துதல் ஆகு
ஒரு சிறந்த நடிகனை உருவாக்குவது பயிற்சிய ஆகக் கூடியது. 5 அல்லது 6 நாடகங்களையே ஒரு மான அனுபவத்தையும், பயிற்சியையும் நடிகனுக்குத் தர முடிய கல்வியின் ஒரு பகுதியாக இருந்தும் மேடை நிகழ்வ எனக்குப்பட்டது. ஆனால், எனது கலைப்பீடநண்பர்களு மறுத்துத் தங்களுக்குப் பல பிரச்சினைகள் இருப்பதாகக்
சமாளிப்பதாகவே எனக்குப்பட்டது.
இறுதியாக நெறியாள்கையை கருத்தில் எடுத் நடிகர்களைத் தேர்ந்தெடுத்து இசை ஒளி என்பவற்றை உ ஒரு படைப்பாக மாற்றும் ஒரு செயன்முறையே நெறியாள் மேடைச் சமநிலையைப் பேணுதல், காட்சி அமைப் நெறியாள்கையில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய ஒவ்வொருபடியிலும் நெறியாளன் செல்வாக்குச் செலுத்து
தற்காலத்தில் நெறியாள்கையின் முக்கியத்து எழுப்பப்படுகின்றது. அதாவதுநாடகப்பட்டறை முறையி கருத்து முன்வைக்கப்படுகின்றது. எமது வளாகத்தில் லே தயாரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினு முற்றுமுழுதாக வெற்றியளிக்கவில்லை. இந்த முறைமை க பங்கு பற்றுபவர்கள் ஒரே மனப்பான்மையைக் கொண்ட ே
அரங்க அளிக்கை என்பது குழு முயற்சியா ஒத்துழைப்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, சகிப்புத்த
கணிசமான அளவு தங்கியுள்ளது.

பறப்பட்ட செய்தியான மனிதத் தன்மையைப் பற்றி வ பார்வையாளர்களை மிகையாக உணர்ச்சிவசப்படச் கம் தோற்றுப்போகிறது. வெறும் பொழுதுபோக்கிற்காக வரவேற்கப்படலாம். ஆனால் சிந்தனையைத் தூண்டும் வறும் நாடகம் தான் என்கின்ற (அந்நிய உணர்வு)
வதற்காகவும் பார்வையாளர்கள் நாடகத்தைப் பற்றி ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொண்டோம். டையில் நிறுத்தப்பட்டு பார்வையாளர்களுடன் நடிகர்கள் ம் மீண்டும் தொடரப்பட்டது. இம்முயற்சியின் வெற்றி
பெரும்பாலும் அறிமுக நடிகர்களே. ஒரு சிலரைத் தவிர தைநிகழ்த்துபவர்கள். மேலும் இங்குள்ள ஒரு குறைபாடு துநாடகம் வெற்றிபெற வேண்டும் என்பதிலேயே அதிக ந்தெடுப்பதிலும் பார்க்க தேர்ந்த நடிகர்களை தெரிவு கும்.
பும் அனுபவமுமே. ஆனால் கலாசாலை வாழ்க்கையில் ாவனால் நடிக்கக் கூடியதாக இருக்கிறது. இது போதிய ாது. மேலும் கலைப்பீடதமிழ் மாணவர்கள் கலை தமது களில் பங்கு பற்றுவது குறைவாகவே இருப்பதாக டன் இது பற்றிக் கலந்துரையாடிய போது அவர்கள் இதை க் கூறினார்கள். ஆனால் பிரச்சினைகளை இளக்கமாகச்
துக் கொள்கிறேன். நாடகச் செய்தியை தேர்ந்தெடுத்து, ரிய முறையில் உரிய அளவில் பயன்படுத்தி நாடகத்தை கை ஆகும்.நடிகர்களின் அசைவுகளைக் கட்டுப்படுத்தல், பின் தொடர்பு நிலையைப் பேணுதல், போன்றன
அம்சங்களாகும். சுருக்கமாகக் கூறின் நாடகத்தின் கிறான்.
வம் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக ல்நடிகர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்ற பலி என்கின்ற நாடகத்தை நாடகப்பட்டறை முறையில் ம் அந்நாடகம் புதிய மாணவர்களால்நடிக்கப்பட்டதால் ணிசமான வெற்றியைத் தர வேண்டுமாயின் நாடகத்தில் தேர்ந்த கலைஞர்களாக இருக்கக வேண்டியது அவசியம்.
ாகும். ஒரு அளிக்கை ஒன்றின் வெற்றி அக்குழுவின் ன்மை, பொறுமை, அயராது உழைத்தல், என்பவற்றிலும்

Page 73
மகாத்மாவின் வாழ்வும் அவரது சி
ஏ.எல்.முகம்மட்றியால், மெய்யியல்துறை, மூ
அண்ணல் காந்தி சாதாரண மனிதராய் 18 வைஷ்ணவ மரபில் பிறந்து, கஸ்தூரிபாயைதிருமணம் பு சகிப்புத்தன்மை பற்றியும், பிற மதங்களின் தனித்துவ பெற்றிருந்தார். 18 வயதில் ஐக்கிய ராஜ்யம் சென்று பரிஸ் நிர்ப்பந்திக்கப்பட்டு தென்னாபிரிக்கா சென்றார். அங்கு பெறக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அங்கேதான் கா சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் முதலிய சாத்வி கண்டார். தீண்டாமை எனும் தீய கொடுமையை ஒழி தென்னாபிரிக்காவில் வாழ்ந்த போது அங்குள்ள மக்களு 'வேண்டுவன கிடைக்கும்வரை அமைதியாகப் போர யாவருக்கும் அறிவுறுத்தி வந்தார்.
தமது வக்கீல் தொழிலினூடாகச் சமுதாயத்தி வழக்கில் பிரித்தானிய சாம்ராஜ்யத்துடன் மோதி வெற்றி அறிந்து கொள்வதற்காகத் தன்னை அர்ப்பணித்தார். 18 தெரிவு செய்து கொண்டு ஏழை மக்களின் பங்காளன. அணிந்து இந்திய சமுதாயத்தில் அகிம்சை, சத்தியாக தயார்ப்படுத்திமக்களின் சமுதாய, அரசியல், பொருளாத மதித்துத் தொழிற்பட்டதனால்தான் அன்றும், இன்றும் அகிம்சாமூர்த்தி என்றும், அடைமொழிகளால் அழை சித்திரிக்கும் நூலாகச் சத்திய சோதனை என்ற நூல் காண அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள் பிறக்கு அரசியல் மேதையும் அல்ல; தத்துவ ஞானியும் அல்ல. எ குழாமையும் சார்ந்தவரும் அல்ல. அப்படியானால் காந்: அரசியல், பொருளாதாரம் பற்றி அவர் கொண்டிருந்த எனக்கூறின் மிகையாகாது.
இது பற்றி அண்ணல் காந்தி அவர்கள் கொண்டிருக்கவுமில்லை. படைக்கவுமில்லை. எதையும் அடிப்படை உண்மைகளை எனது தினசரி வாழ்க்கையி கூறினார். சத்தியமும் அகிம்சையும் இவரது வாழ்க்கையி அறிவு, சமூக சமத்துவம் போன்றவை அண்ணல் க இக்குறிக்கோளை அடைவதற்கு வன்முறை அற்றமுறை. சட்டமறுப்பு, வேலை செய்ய மறுத்தல், உண்ண நடைமுறைப்படுத்திக் காட்டினார். இவைகள்தான் காந்தி
சாதாரண மனிதராகப் பிறந்த மோகனதாஸ் க செல்வாக்குச் செலுதுதிய காரணிகளை அடையாளம் கா பெளத்த , இஸ்லாமிய மதங்களின் கருத்துக்கள், பகவத் அளித்த பொன்மொழிகள் என்ற கருத்தும், லியோடாள் ரஸ்கியினுடைய இறுதிநிலை முடியும் வரை அன்பு என். என்ற நூலும், டேவிட் தாருவின் 'சட்டப்படி மறுத்துவி

ந்தனைகளும்
]ன்றாம் வருடம்
59ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி போர்பந்தரில் ரிந்தார். தம் இளம் பருவத்தில் தாயின் மூலம் குடும்பத்தில் ம் பற்றியும், சத்தியம் பற்றியும் தாயின் பாலூட்டலுடன் டர் பட்டத்தினைப் பெற்றார். பின்னர் வக்கீல் தொழிலுக்கு தான் அண்ணல் மகாத்மாவுக்குரிய ஆளுமைப்பண்புகள் ந்திக்கு சத்தியாக்கிரகம் என்ற எண்ணம் உருவாகியது. கப் போராட்டத்தை மக்களுக்குகற்பித்து அதில் வெற்றியும் க்க பெரிதும் பாடுபட்டார். அண்ணல் காந்தி அவர்கள் 1க்கு "பகைவனை நேசி', "எதனையும் துன்புறுத்தாதே', ாடு' என்ற மூன்று பொன்மொழிகளையும் எப்போதும்
ன் கொடுமைக்கு விடிவு கண்டார். சமுதாயத்தின் எதிர்ப்பு 5ண்டதுமட்டுமல்லாமல் சுயமரியாதையின் அடித்தளத்தை 915இல் இந்தியா வந்து அங்கு சபரிமலையை இடமாகத் ாகவும், எளிய வாழ்க்கையையும், எளிய உடையையும் க்கிரகம் என்ற அறவழிப் போராட்டத்திற்குத் தன்னை ாரவிடிவிற்காக உடல், பொருள் ஆகியவற்றைத்துச்சமென அண்ணல் மகாத்மா என்னும் தியாக புருஷர் என்றும், க்கப்படுகின்றார். இவருடைய வாழ்க்கை வரலாற்றைச் ப்படுகின்றது.
ம் போது எந்தத் தத்துவத்துடனும் பிறக்கவில்லை. அவர் ந்தத்தத்துவத்தையும் ஏற்படுத்தவும் அல்ல, எந்த அறிஞர் தீயம் என்பதன் கருத்து என்ன என்றால் சமுதாயம் மதம், எண்ணங்களின் ஒட்டுமொத்தமான திரட்டே காந்தியம்
குறிப்பிடும் போது 'நான் எந்தத் தத்துவத்தையும் கண்டுபிடிக்கவும் இல்லை. நான் எளிய முறையில் சில ல் எழும்போது அதனைப் பயன்படுத்துனேன்' என்று ல் இரு கற்தூண்கள். அத்துடன் பிற மதநங்களைப் பற்றிய ாந்தி அவர்கள் விரும்பிய கருத்துக்களாகும். காந்தி பலாத்காரமற்றமுறை, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, rாவிரதம் போன்றவற்றை அமைதியான வழியில் யம் என்பதன் உட்கருத்தாகும். Tம் சந்திரகாந்தி அகிம்சா மூர்த்தியாக வெளிப்படுவதற்கு ண முயல்வோமாயின், இந்தியப் பண்பாட்டுடன், இந்து, கீதை, விவிலியத் தூபியிலுள்ள மலையினின்று கிறிஸ்து இல்டானி 'அன்பு, அகிம்சை" என்ற கருத்தும், யோன் கருத்தும் ஸ்பென்சர் வால்டெனின் "சகிப்புத் தன்மை' த்தல்' என்ர கருத்தும், லியோடால்ஸ்டானின் 'அன்பு,
الم

Page 74
அகிம்சை" என்ற கருத்தும், ஜோன்ரஸ்கிவினுடைய இறுதி வால்டனின் 'சகிப்புத்தன்மை' என்ற நூலும், டேவிட் லியோ டால்ஸ்ரனின் 'இறைவனின் அரசு உன்னுள்ளே பெற்றுக் கொண்ட தமிழ் மொழிப் பாண்டித்தியமும் பே காந்தியை அகிம்சா மூர்த்தியாக உலகிற்கு அறிமுகப்படுத்
அண்ணல் காந்தி அவர்கள் சத்தியம், அகி உற்றுநோக்குகின்றார். இழிவுநிலையிலிருந்த அரசியலை பாவித்துப் பிரித்தானிய சாம்ராஜ்யத்துடன் மோதி இவர் அன்பு கடந்த தத்துவமாகக் காட்டுகின்றார். அகிம்சை 'ஒத்துழையாமை' என்பதாகும். அதாவது பலாத்காரம சொல் உண்மை, கிரக - என்ற சொல் சத்தியத்தைக் எண்ணிக்கொள்ளும் தன்மையை குறிக்கும் என்பர். மேலு கருத்தும் கூட.
காந்திஅவர்கள் அகிம்சை பற்றி பல கருத்துக்க என்றும், தீங்கு செய்யாமை என்றும் கொடூர மனதைஇள எதிர்க்கும் கருவி என்றும், குரோதம், விரோதம் முதலி என்றும், நேரான வழி என்றும், மனவழிமையைக் கொடுக விஞ்ஞானம் என்றும், ஒரு ஆக்க சக்தி என்றும், தோல் சக்தினன்றும் விளக்குகின்றார்.
சத்தியாகிரகம் என்பது இது அன்பின் வலி!ை என்றும், தோல்வியைக் கண்டு தயங்காது என்றும் இப் முக்தி நிலை என்றும் இந்திய விடுதலைக்கான வழி எ இவற்றிலிருந்து நாம் காந்தியத்தின் உண்மைப் பொருளை வழியாகவும் - வழிமுறையாகவும் அகிம்சை, சத்தியாக்கி இதைச் செய்வதற்குரிய மன வலிமையையும் ஊட்டின பங்களிப்பில் சுயராச்சியம் பற்றியும் குறிப்பிட்டார். அ பிழையாகப் பயன்படுத்தப்படும்போது அது தடுத்து நி என்றார். அத்துடன் அரசைநிறுவுவது குறிக்கோளல்ல மக்
காந்தியின் மதரீதியான, சமூகரீதியான கருத்து என்று கூறியதுடன் எம்மதமும் சம்மதம் என்ற உயரிய ஒருவனே தேவன்' என்ற விழுமிய கருத்தைக் கொண் போன்றவராவோம். நம்மிடையே வேற்றுமை தோற் அறிவுறுத்திய கொல்லாமை என்ற கருத்தையும், இே கடைப்பிடித்த சகோதர நேயம், வள்ளுவர் வகுத்துக் குடிகொண்டிருந்த பல்வேறு சமயங்களில் உள்ள நன்மை பயன்படுத்திக் கொண்டார். கொல்லாமையையும், வாய்ன் மக்களை அழிக்கும் அறிகுறி' என அனைவருக்கும் எடுத் விரும்பி இந்து முஸ்லீம் ஒருமைப்பாட்டையும், தீண்டான ஒழித்தல், மதுஒழிப்பு போன்றவற்றை எடுத்துக் காட்டிச்
மேலும், நாம் காந்தியின் பொருளாதார நோக் எதிரானவராக இருக்கவில்லை. அவை குடிசைக் கைத் என்றார். பொருள் உற்பத்தியை அரசுடைமையாக்க வே அனைவருக்கும் சமமான பொருளாதாரம் வேண்டும் என்

திநிலை முடியும் வரை அன்பு என்ற கருத்தும், ஸ்பென்சர் ராருவின் 'சட்டப்படி மறுத்துவித்தல்' என்ற கருத்தும், இருக்கின்றது' என்ற நூலும், தென்னாபிரிக்கச் சிறையில் ாயர் யுத்தத்தில் பெற்ற ஊழியத் தொண்டும் அண்ணல் தீதியது எனலாம். w
ம்சை என்ற இரண்டு கருத்துக்கள் மூலம் அரசியலை ப் புனிதநிலைக்குக் கொண்டு வந்தார். இவ்விரண்டையும் அகிம்சை பற்றிக் கூறும் போது இதை எல்லையில்லாத என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதன் நேர்கருத்து ற்றது என்பதாகும். சத்தியாக்கிரகம் என்பது சத் - என்ற குறிக்கின்றது. சத்தியம் என்பது கடவுள் கடவுளை தும் அகிம்சை சத்தியம் என்பது வேறுபட்ட சொல்பதமும்
ளை அடையாளப்படுத்துகின்றார். இது வீரர்களின் கருவி கச் செய்யும் ஆயுதம் எனவும், பயங்கரமான இம்சையை யவற்றை எதிர்க்கக் கூடியது என்றும் ஒழுக்கமான வழி *கும் சக்தி என்றும், பலவான்களின் ஆயுதம் என்றும், ஒரு வியே இல்லாதது என்றும், சனநாயகத்தை உருவாக்கும்
D என்றும் எதிரியை மெய்வருத்தத்தால் எதிர்க்கும் சக்தி போரின் சிறைச்சாலையின் விடுதலையின் வழி என்றும், ன்றும், காந்தி அவர்கள் அடையாளப்படுத்துகின்றார். உணர முடியும், காந்திஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் ாகம் என்ற கருவிகள் மூலம் போராட்டத்தைநடாத்தினார். ார். அத்துடன் காந்தி அவர்கள் அரசியலுக்கு வழங்கிய அதிகாரத்தினைப் பிரிப்பது சுதந்திரமல்ல என்றும். அது றுத்தப்பட வேண்டும் என்றும் அதுதான் சுயராச்சியம் களின்நலமே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார்.
க்களை நோக்கும்போது இறைபக்தியின்றி அரசியலில்லை கொள்ளைகயைக் கடைப்பிடித்தார் "ஒன்றே குலம் , டார். நாம் எல்லோரும் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர் றத்திற்குச் சிறிதேனும் இடமில்லை என்றார். புத்தர் யசுநாதர் காட்டிய அன்புநெறி, நபி (ஸல்) அவர்கள் காட்டிய அறநெறி இவையெல்லாம் காந்திகளிடத்தில் யான கொள்கைகள் அனைத்தையும் தம் வாழ்க்கைக்குப் மையுமே கடவுளாகக் கருதிவந்தார். அத்துடன் 'மதவெறி ந்துக்கூறினார். அத்துடன் சமுதாயத்தில் சமத்துவ வழியை மை ஒழிப்பு, மறுமணம் புரிதல், இளம் வயதில் திருமணம் சமுதாய வளர்ச்சிக்கு வித்திட்டார்.
கினை அவதானிக்கும் போது அவர் கனரகத் தொழிலுக்கு தொழிலை அழிக்காத கனரகத் தொழிலாக இருக்கலாம் ண்டும் என்றும் சுயபூர்த்திக்கு வித்திட வேண்டும் என்றும் றும், அரசின்கட்டுப்பாட்டில் பொருளாதாரத்துறை இருக்க
N

Page 75
வேண்டும் என்றும் குடிசைக் கைத்தொழிலுக்கு ஆக் கைத்தொழிலின் அவசியத்தை வலியுறுத்திஅதற்குப்பரி புரட்சியாகும். கைராட்டைஇந்தியாவின் வளர்ச்சியின் மூ என்று கூறி வாழ்நாள் பூராகவும் நூல்நூற்றார். இதுமட எலும் புக் கூடாக இருக்கும் இந்திய மக்களின் உய கட்டியெழுப்புவதற்காக ஒத்துழையாமை என்ற தத்துவ பகிஸ்கரித்தார். சுதேச பொருட்களை நுகர்வதற்கெதிரா வழங்கிய பங்களிப்பை எடுத்துக் காட்டுகின்றது.
எனவேதான் நாம் மேலே குறிப்பிட்ட கருத் அவர்கள் சமுதாயத்தின் சீர்திருத்தவாதியாகவும், தான் என்ற பலாத்காரமற்ற வழிகள் மூலம் சமுதாயத்தின் அத்துடன் காந்தியின் உயர்ந்த கருத்துக்களாகவும் சுதேச இந்து முஸ்லீம் ஒற்றுமை, மதுவிலக்கு, தீண்டாடை என்பவற்றைக்குறிப்பிடலாம்.
மேலும் நாம் இந்தியாவில் காந்தியின் இடத் போன்றவர்களையும் ஒப்பிடலாம். ஏன்? புத்தரின் இட ஒப்பற்ற தலைவராகவும் இந்திய மக்களின் ஏக பிர, தனிமனிதராகவும் கூடப்பார்க்கலாம். எது எவ்வாறாக பூ மேலோங்குவதற்குக் காரணம் அவரின் எளிய வாழ்க்ை உலகத் தலைவர்களில் ஒப்பற்றவராகத் திகழ்ந்த அண்ண வழிபாட்டுக் கூட்டத்திற்கு காந்தியை விநாயக்நாதுராம் மனித சமுதாயத்தின் மனச்சான்றின் எதிரொலி ஒன்றைக் காந்தி அடிகள் இறுதியாக உலகத்திற்கு விட்டுச்சென்ற பர 'உண்மை நெறி. 'அவருடைய போர்க்கருவி 'அன்பு ெ சின்னம் . இப்பொழுது அவர் மனித இனத்தின் மாபெரு
கலையின் அரசியே கன்னித அலைகடல் உண்டும் அருக ஆல் போன்றாய்; உன்னை ஆ
தாள்பணிய வைத்தல் தலை.

மும் ஊக்கமும் வழங்க வேண்டும் என்றும், குடிசைக் ாரநடவடிக்கையையும் எடுத்தார். அதுதான் கைராட்டைப் லதனம் எனவும், இந்தியாவின் வறுமைப்பிணிக்கு மருந்து டுமல்ல கதர் இயக்கப் புரட்சியையும் வழிநடத்தினார். ரிது என்றார். சுயதேவைப் பொருளாதாரத்தினைக் தை நடைமுறைப்படுத்தி பிரித்தானியப் பொருட்களைப் 6 விரதம் பூண்டார். இவ்வம்சங்கள் அரசியலுக்கு காந்தி
நுக்கிளைத் தொகுத்து நோக்கும் போது,அண்ணல் காந்தி கூறியவற்றைச் செயலில் காட்டினார். சத்தியம்- அகிம்சை அரசியல், பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பினார். இயக்கம், கதர் இயக்கம், கைராட்டைப் பொருளாதாரம், ), மறுமணம் புரிதல், இளவயதுத் திருமண ஒழிப்பு
தில் அமெரிக்க ஜோர்ஜ் வாசிங்டன், ஆபிரகாம் லிங்கன் த்திலும் காந்தியை வைத்துப்பார்க்கலாம். இந்தியாவின் திநிதியாகவும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தை எதிர்த்த இருந்தாலும் சர்வதேச மட்டத்தில் காந்தியக் கருத்துக்கள் கயும் எளிய உடையுமாக இருந்தது எனலாம். இவ்வாறு ல் காந்தியை 1948ம் ஆண்டு ஆவணித்திங்கள் 30ம் திகதி கோட்சே என்பவனால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது ஈட்டுக்கொன்றதற்குச் சமமாகக் கருதப்பட்டது. அண்ணல் ம்பரைச்சொத்து'அஞ்ஞானம்’’அவர்கள் கற்பித்த பாடம், நறி', அவரது வாழ்க்கையே அவரது மாபெரும் நினைவுச் ம் தலைவர்.
தமிழே ாய்-நிலைபெற்றே அழிக்க முனைவோருன்
ஆ.கோவிந்தராசன்
N

Page 76
போத செல்வி. ஞானாம்பிகை விஸ்வநாதன்
அந்த அரச மரத்தடியில் தான் இலைகளின் சலசலப்புடன் சயனித்திருக்கிறது: ஒரு மஞ்சளழகு. நல்லமைதியும் நற்காட்சியும் நல்லூற்றமும் நற்செய்கையும் என்று, அவழ்டாங்க மார்க்கத்தை அமைதியாகப் போதிக்கிறது, காற்று வெளியில்.
ஆளுக்கொரு பக்கமாய் 96.8FU 96.8FJLDTul ஓடிக்கொண்டிருக்கும் மனித இயந்திரங்கள். இடிபட்டு, மிதிபட்டு நசுங்கலுற்று, முனங்கிக் கொண்டிருக்கும் மனிதம்
மஞ்சளழகும் போதனை செய்யும்
அந்தக்
காற்று வெளியில்,
நம் மண் நம் மண் என்றிரு திசையும் எகிறிக் குதிக்கும் மானுடம், ஒரு பக்கம் சிவப்பில் மெழுகிட்டு சீயத்தின் சீற்றமுடன் தேசியம் பேசுகின்றது.

6)6.
- கலைப்பீடம் - விடுகை வருடம்.
மறுபக்கம் மரணம் மரணமென்று மண்ணுக்கு மெத்தையிட என்புகள் குவிகிறது. கல்லறைகள் மகுடங்களாய் கணக்கின்றி எழுந்து நின்று தனித்துவம் பேசுகிறது,
மறுபடியும் தீப்பிழம்புகள் எங்கும் தோன்றி தாண்டவம் புரிகிறது,
LD6sgb
தாட்சண்யம் சரிகிறது.
நிமிட நிம்மதியும்
துரும்பாகிப் போக
இருப்பின் விலாசம் விந்தையாய் போனது. வாழ்க்கையில் பிரச்சினை
அழிதலாகி, வாழ்தல் பிரச்சினை என்றாகி விட்டது.
சுயநல மனிதம் பற்றியெரிந்து நிர்மல வானைக் கறைப்படுத்த, மனிதம்
மரித்து மக்கி விட, மஞ்சள் அழகொன்று கொஞ்சம் கண்மூடி போதி மரத்தடியில் போதனை செய்கிறது காற்று வெளியில்.

Page 77
ஊனங்கள்
மு.விஜேந்திரா, பொறியியல்பீடம், இறுதிவ
67ல்லாம் அமைதியாகிப் போய்க்கிடந்தது.
இரத்தம் துளிதுளியாக அந்தக் குழாய் வழியே இறங்கிக் இழந்திருந்தது. அந்த அழகு தேவதை வாடி, அடங்கிப்
'தீபிம்மா. தீபிக்குட்டி..!" மென்மையான தலையை பாசத்துடன் தடவ முயன்றது. மீண்டும் மெதுவ கண்களைத்திறக்க அவள் மிகவும் பிரயத்தனம் செய்வது உணர்த்தியது.
'ஐயோ ...! தீபிம்மா!, அண்ணா. அண்ணா உந்த நிலை! இஞ்சை பாரம்மா. உன்ர அண்ணன் வந்தி ஒருக்கா. ஒரே ஒருக்கா முளிச்சு என்னைப் பாரம் அடக்கமுடியாத அவனின் சோகம் கண்களை உடைப்டெ
தீபிகாவிற்கு உடம்பைக் கட்டிப்போட்டது கொண்டிருந்தது; சத்தங்கள் தெளிவில்லாமல் கேட் முயற்சித்தாள். உருவங்கள் தூரத்தில் மங்கலாகத் தெரிற புரியவில்லை! எல்லாம் குழப்பமாக இருந்தது. கண்க ஞாபகப்படுத்த முயன்றாள். முதலில் 'ஹாய்த்தித்தி'- 6 'சுஜி.!"அவளின் அந்த சிறுமுனகல் கவனத் கைகள் மகளின் தலையை பாசத்துடன் தடவிக்கொடுத்த என உதிர்ந்தது. 'அம்மா. எங்கட. சுஜி எங்கை அம்ம கவனம் பக்கத்தில் நின்றிருந்த தமக்கை மீது பதிந்தது - அ 'அண்ணா. அண்ணா..! எங்கட சுஜிக்கு இல்லையே. நான் இப்பவே அவளைப் பாக்கோணும். கலவரம் அழுகையாக மாற, ரகு முழுவதுமாக உடைந்து விம்ம ஆரம்பித்தான்.
ஒருத்தரும் பதில் கூறாது விம்ம ஆரம்பிக்க இரண்டரை வயது மழலையும் குண்டுக்கு இரையாகிவிட்
சுஜியின் அந்த பிஞ்சு முகம் ஒரு கணம் ஞா! கன்னத்தில் விழும் அந்தக் குழியை இனிக்காணவே முடி அந்த மழலைக் குரல் இனிக் கேட்காது! அந்த இளம் றோஜி தாக்க தீபிகாவின் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தன இழப்பு அவளுக்கு பெருவலியாக இருந்தது.
மெதுவாகச் சரிந்து மறுபக்கம் திரும்பிப்படுக் முடியவில்லை! பெரிதாக வலிக்க ஆரம்பித்தது 'அம்மா 'அம்மா. என்ர. என்ர. காலைத் தூக்கமுடியேல...! மாதிரி.." அவள் பேசி முடிக்கவில்லை; தீபிகாவிற்கு மெதுவாக விலக்கினாள்; திகைத்துப் போனாள் அவளி

நடம்
தீபிகா மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்! கொண்டிருந்தது. அவளின் அந்த அழகியவதனம் சோபை போய்க் கிடந்தது. குரலில் அழைத்தான் ரகு, அவனின் கைகள் தீபிகாவின் ாக 'தீபி.!" என்றழைத்தான் ரகு, பதிலில்லை. ஆனாலும், தெரிந்தது. அவளின் முகத்தில் விழுந்த சுருக்கங்கள் இதை
. எண்டு ஆசையோட ஓடி வருவியே. உணக்காம்மா ருக்கிறன். வெளிநாட்டிலை இருந்து ஓடி வந்திருக்கிறன். மா...' ரகுவின் மனம் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. படுக்க வைத்தன. தன்னையும் மீறி விம்ம ஆரம்பித்தான்.
போலிருந்தது; தலைக்குள் விண்விண் என்று வலித்துக் டுக் கொண்டிருந்தது. மெதுவாக கண்களைத் திறக்க தது. தான் எங்கே இருக்கிறாள் என்பதே அவளுக்குப் ளை மீண்டும் மூடிக்கொண்டாள். மெதுவாக பழையதை என்ற கலகலப்புடன் சுஜி வந்து கண்கள் முன்நின்றாள்.
தையும் கவர-தீபிகாவிடம் ஒடிச்சென்ற அவளின்தாயின் து. இருவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் பொல பொல ா..? அம்மா. சுஜி.!திக்கித்திக்கி பேசிய தீபிகாவின் அவள் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டு இருந்தாள். என்ன ஆச்சுது? அவளுக்கு. எங்கட சுஜிக்கு. ஒண்டும் அவளை உடன கூட்டிக்கொண்டு வாங்கோ' அவளின் போனான். தன்தங்கையின் கைகளைப் பிடித்துக்கொண்டு
தீபிகாவிற்கு எல்லாமே புரிந்து போயிற்று. சுஜிதா - டது என்பது -
கத்தில் வந்து போனது. சிரிக்கும் போது அந்த பிஞ்சின் யாது! 'தித்தி. தித்தி." என்று அவளையே சுற்றி வரும் ாவின் கலகலப்பு இனிஇல்லை என்ற உண்மை நெஞ்சைத்
உடம்பில் இருந்த வலி எல்லாவற்றையும் விட, சுஜியின்
5 முயன்றவள், மெதுவாக காலைத்திருப்ப முயற்சித்தாள். .'அவளின் கதறல் வைத்தியசாலையே அதிர வைத்தது. ஏதோ எல்லாம் விறைச்சமாதிரி. உணர்ச்சியே இல்லாத ஒன்றுமே புரியவில்லை. காலின் மேலிருந்த துணியை இடதுகால் முழங்காலிற்கு கீழ் துண்டிக்கப்பட்டிருந்தது.
2
أبر

Page 78
தீபிகாவிற்கு வாய்விட்டு கதறி அழ வேண்( எல்லாமே வெறுமையாகிப் போனது போல இருந்தது. கை வந்துநின்றாள். சுஜியையும் அவளின் காலையும் இழக்க
அகதியாக மக்கள் ஓடிக்கொண்டிருந்த நேரம் உணவில்லாமல் மக்கள் அந்தரித்துக் கொண்டிருந்த வேe அந்த சொற்ப பொருள்களை வாங்க தீபிகா வெளிக்கிட்(
'தித்தி. நானும் வரத்தா..? அவளின் காை கேட்டாள். அந்தப் பிஞ்சின் அழகும், மழலைக் கதையும் இருக்கவே, 'பிதீஸ்தித்தி.நான் குதப்பதி ஒன்தும் தெய வந்தது. சுஜி எங்கிருந்துதான் அந்த "ப்ளீஸ்" என்ற வார்த் அந்த வார்த்தையைப் பாவிக்கப் பழகியிருந்தாள்.
சுஜியையும் கூட்டிக்கொண்டு போகும் வ கத்தினாள் - 'தித்தி. பொம்பர் எமன் வாதான். பெ பிஞ்சை அணைத்துக்கொண்டு ஒரு மதகுக்குள் ஒதுங்கின ஒண்டு வெடித்ததும் மனித மரண ஒலங்கள் எழுந்ததும் : பயத்துடன் இறுகக் கட்டிக் கொண்டாள். தொடர்ந்து இ தீபிகாவிற்கு ஞாபகம் இல்லை.
'தீபி என்னம்மா யோசிக்கிறாய்?' என்ற அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். திடீெ எல்லாருக்கும் அன்பு குறைஞ்சிடும் என்ன. அண்ணா பக்கத்திலேயே இரு அண்ணா..!" ரகுவின் கைகளை இ
ரகுநிமிர்ந்து தாயைப் பார்த்தான். அம்மா6ை ஒரு ஜெய்ப்பூர் கால் போட, எங்கடதீபிபழையபடி ஆயி 'அவனின் சமாதானத்தை மீறிக்கொண்டு 'இல்லடா ரகு வரேக்குள்ள. 'ஒப்பிரேசன்' செய்யக்கூடிய "டொக்ட துடிச்சு. துடிச்சு... ' அம்மா விம்மத் தொடங்கின இல்லாததால்தான் வெட்ட வேண்டி வந்துதெண்டு கe எத்தனையோ கெட்டிக்கார டொக்டர்மார் இருக்க, இங்க
தன் சொந்த இன மக்கள் டொக்டர் இல்ல வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இ செய்கையால்தான்தாழ்ந்து போனது போல ஒரு மனநிை வெட்கப்பபட்டான். தாய் மண்ணில் தடம் பதிக்க கால்க வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கைக்காக தங்கியிருக்கு வேதனையும் அடைந்தான்.
தன் தங்கையின் நிலை குறித்து அறிவதற்க திகைத்துப் போனான். அவனால் தன் கண்களையே நம் 'நளினி. நீ. நீ. நீங்களா..!?' ரகுவால் மே உணர்ச்சியும் இருக்கவில்லை. ரகுவையே வெறித்துப் ட ரகு கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.
நளினி இன்னும் அதே பூத்துக்குலுங்கும் அ காயப்படுத்தி இருக்கவில்லை. முகத்தில் மட்டும் ஒருவி

ம்ெ போல இருந்தது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார். ண்களை மூடிக்கொண்டாள்சுஜிமீண்டும்நினைவுகளுக்குள்
வைத்த அந்த நாள்
-இருக்க இடமில்லாமல் உடுக்க உடையில்லாமல் உண்ண ளை. பகட்டுக்குநிவாரணம் என்ற பெயரில் வழங்கப்படும் டுக்கொண்டிருந்தாள்.
லக் கட்டிக் கொண்டு தமக்கையின் இரண்டரை வயது சுஜி அங்கு எல்லாருக்கும் பிடிக்கும். தீபிகா ஒன்றும் கூறாமல் ப்யாமல் வதுவன்' என்றபோதுதீபிகாவிற்கு சிரிப்புத்தான் தையை பொறுக்கினாளோ தெரியாது; தகுந்த சமயங்களில்
ழியில்தான் அந்தப் பயங்கரம் நடந்தது. திடீரென சுஜி ாம்பர் எமன் வாதான்.' பயந்து நடுங்கி நிண்ட அந்தப் ாள் தீபிகா - அப்போது மிகப் பயங்கர சத்தத்துடன் குண்டு தீபிகாவிற்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது. சுஜிதீபிகாவை இரண்டாவது குண்டும் வெடித்தது. அதன் பின் எதுவும்
அண்ணனின் குரல் கேட்டு நினைவுகள் கலைந்த தீபிகா, ரன்று கேட்டாள். "அண்ணா. இனி இந்த நொண்டியில . எனக்கு என்னவோ பயம்பயமாக கிடக்கு. எனக்குப் றுகப் பிடித்தபடி அவள் மெல்ல உறங்கத் தொடங்கினாள்.
வப் பார்க்க அவனுக்கு பரிதாபமாக இருந்தது. 'அம்மா. டுவாள். அதுக்கு பிறகு அவளால என்னவும் செய்யேலும். 5. எங்கட சுஜிக்குட்டியை இங்க காயத்தோட கொண்டு *’ ஒருத்தரும் இருக்கேல. அதனால. எங்கட சுஜி. ாள். 'அது மட்டுமில்ல தீபியின்ர காலும் "டொக்டர் தைச்சினம், ஐயோ கடவுளே. எங்கட இனத்திலேயே
சனங்கள் செத்துக்கொண்டிருக்குதுகள்.'
ாமல் தவித்துக் கொண்டு இருக்க, தான் ஒரு டொக்டர் ருந்த வேதனை முதன்முதலாக அவனுள் எழுந்தது; தன் ல அவனுள் எழுந்தது. தாயின்முகத்தை பாத்துகதைக்கவே ள் கூசின. சொந்த மண்ணின் அவலங்களைச் சிந்திக்காது, ம் ஒவ்வொரு மருத்துவன் சார்பாகவும் அவன் வெட்கமும்
ாக "டொக்டரின்' அறைக்குள் நுழைந்த ரகு ஒருகணம் ப முடியவில்லை. அங்கு நளினி உட்கார்ந்து இருந்தாள். லே பேசமுடியவில்லை. நளினியின் முகத்தில் எவ்வித ார்த்தாள். அந்தப் பார்வையின் உக்கிரம் தாங்க முடியாது
ழகுடன் தான் இருந்தாள். காலங்கள் அவள் அழகினை 5 சோகம் பரவியிருந்தது.
لم ـ
N

Page 79
மெதுவாக கதிரையை விட்டு எழுந்தாள் ந6 மாதிரி உங்கட தங்கச்சியையும் எல்லாரும் சேந்து ஒதுக் அடித்தது போலிருந்தது.
'என்னபாக்கிறீங்க. எங்க எழும்பிநிற்கிற ஆனா சில ஏமாத்துக்காரங்களை விலகி ஓடாமல் பு வார்த்தைகளும் சாட்டையாக வந்து விழுந்தது. எதுவும்
மெளனமாக இருந்த சூழலைக்கலைக்க ரகு ெ துரோகம் சாதாரணமானதில்லை. அவன் கோழை போல பிழையை விட்டுட்டம். உங்களிட்ட மன்னிப்புக் கேட்கி
'மன்னிப்பு. ரகு, போர்நடக்கிறநாடுகளி: பங்களாதேஷ் ஆம்பிளையஸ் கற்பிழந்த எத்தனையோ ெ உடைஞ்சிட்டுது எண்டதுக்காண்டி உங்கட அண்ணன் ஒ அவள் விழிகள் நனைந்தன.
பொறியியல் துறையில் பட்டப்படிப்பை மு பண்ணியிருந்தார்கள். அவ்வளவு அழகான பெண் த6 இருந்தான். திருமணத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு இ குடும்பத்தவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா நேரத்தில்தான் "ஷெல்' ஒன்று அவளின் வாழ்க்கைக்கு வெடித்த "ஷெல்' அவளின் வலது பாதத்தைக் கொண்டு
'ரகு உங்கட அண்ணன் என்னை அம்பே பூட்டினாங்க. நான் எழும்ப ஆரம்பிச்சன். ஆனா வா பிறகுதான் விளங்கிச்சு எனக்கு பேசிவந்த கல்யாணம் வேற ஒருத்தனோடகத்தினது எண்டுறதும்தான் அதுக்கு பிரச்சனை ஏதும் இல்லை. ஆனா பெண். அவள் பேச் நின்றான்.
'பிறகுதான் அந்தநல்ல இதயம்; அரவிந்த் எ நாள் வாழ எனக்குக் கொடுத்து வைக்கேல, எங்களுக்குக அலுவலா போன அவர் . கிளாலிக் கடலில. நளினா (
திடீரென்று அழுகையை நிறுத்திச் சொன்ன வந்தவரிட்டை நான் சும்மா என்னைப் பற்றி அலட்டி கவலைப்பட மாட்டீங்களே?' ரகு சொல்லுங்கோ என்ட
'உங்களைப் போல ஒரு 'சேர்ஜன் இங்க தப்பியிருக்கும். இன்னும் எத்தனையோ பேர் உயிர்தப்
ரகு நிதானமாகச் சொன்னான் "ப்ளீஸ்; வார் பிணம் கூட என்ர மண்ணை விட்டு வெளியால போகாது
அடுத்து வந்த நாட்களில் ரகு அந்த வைத்தி அவனுக்குமிடையில் ஒரு சுத்தநட்புத் தோன்றியதும், நள ஏற்பட்டுப் போனதும் நடந்து போன சம்பவங்கள்.
நளினியின் அந்த அழகு, அமைதி, அடக்க

ரினி. திடீரென்று சொன்னாள். 'என்னை ஒதுக்கி வைச்ச கிவைச்சிடாதீங்கோ' - ரகுவிற்கு தலையில் சுத்தியலால்
ன் எண்டாlஇப்ப என்னாலஓட. ஏன் ஆடக்கூட முடியும். பிழையொண்டை விட்டுட்டன்' அவளின் ஒவ்வொரு
பேசத்தோன்றாதவனாக அமர்ந்திருந்தான்.
சான்னான்- 'நளினி, என்ர அண்ணன் உங்களுக்குச் செஞ்ச எடுத்த முடிவை எங்கட குடும்பமும் எதிர்க்காமல் பெரிய றதுக்குக் கூட எங்கள் ஒருத்தருக்கும் தகுதி இல்லை!.
ல எத்தனை எத்தனையோ விதமானதியாகங்கள் நடக்குது. பெண்களுக்கு வாழ்க்கை குடுத்திச்சினம். ஆனா. ஒரு கால் ஒரு கதிரை போல. ஜடம் போல. தூக்கி எறிஞ்சிட்டு.'
முடித்தபின் தமையன் சுரேஸ்ஸுக்கு நளினாவை நிச்சயம் னக்கு கிடைக்க போகிறது என்று சுரேஸ் மகிழ்ந்து போய் நந்தது. எனவே இருவரும் ஒன்றாகத் திரிந்தார்கள். இரு கையால் இருவருக்குமிடையில் நெருக்கம் வலுத்தது. இந்த எமனாகியது. அவளின் படுக்கைக்கு அருகில் விழுந்து போனது.
ா எண்டு விட்டுட்டு போனதுக்கு பிறகு ஜெய்ப்பூர் கால் ழ்க்கையில் பாதாளம் நோக்கி விழுந்திருக்கிறன் எண்டு எல்லாம் குழம்ப ஆரம்பிச்சது. பொய்க்கால் எண்டுறதும் க்காரணங்கள். பாத்தீங்களாரகு. சேந்து சுத்தினஆணுக்கு சை சற்று நிறுத்தினாள். ரகு அவளையே பாத்துக் கொண்டு
ானக்குக் கிடைச்சார். அந்த அற்புத மனிதரோடு கூட அதிக ல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் இருக்கும். கொழும்புக்கு தலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
எாள். "ஐ ஆம் சொறி, தங்கச்சியைப் பற்றி விசாரிக்க க் கொண்டு நிக்கிறன். ரகு ஒண்டு சொன்னா கோவிக்க; து போல தலையை நிமிர்ந்து பார்த்தான்.
இருந்திருந்தால் சிலநேரம் உங்கட தங்கச்சியின்ரை கால் பியிருப்பினம்'.
த்தைகளால என்னைக் கொல்லினது போதும். இனி என்ர 51'''
கியசாலைக்கு டொக்டரா வந்து சேர்ந்ததும், நளினிக்கும் ரினாவுக்கும் தீபிகாவிற்கும் இடையில் ஒரு பாசப்பிணைப்பு
5ம் எல்லாமே ரகுவிற்கு நிரம்பப் பிடித்து போனது. தன்
64

Page 80
/
விருப்பத்தை அவளிடம் வெளியிட வழியில்லாது தவித் சாப்பாட்டிற்காக சென்றிருந்த வேளை தயங்கித் தயங்கி
நளினா அவனைநிமிர்ந்து பார்த்தாள். ரகு. பரிதாப உணர்ச்சி. ஐயோபாவம் எண்டு என்னைக் கட்ட நான் ஒரு விதவை. ராசியில்லாதவள். என்னைக் கட்டுற ஊரும் ஒரு மாதிரிப் பாக்கும்'
ரகுவெடித்தான் "இஞ்சைபாருங்கோ, பெண் லாயக்கு. அப்படியான புரட்சிகளை ஏற்றுக் கொள்கிற ம புருசனை இழந்தால் வெள்ளைச் சீலை கட்டிக் கொ நினைக்கிறியள். நீங்க விரும்பின வாழ்க்கை வந்தாலும் பெண்களுக்கு இல்லை. எல்லாம் இருக்கட்டும், நீங் சொல்லுங்கோ இதைப்பற்றிஇனிநான் கதைக்காமல் வி
நளினா ஒன்றும் சொல்லாமல் அழ ஆரம்பித் பெண் அழுவது ரகுவை என்னவோ செய்தது. இத( உங்களுக்காண்டியே காத்துக் கொண்டு இருக்கப்போ மனப்பக்குவம் துணிவு வருதோ அப்ப பாப்பம்'
நளினா ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அப்ே 'நளினர்கா இஞ்சை வாங்களன்' என்று அவளை எதற்:
அக்கா என்ற அந்த அழைப்பு அண்ணி என்று
அவளையே பார்த்தபடிநின்றான்.
எங்களதுதாயகம் இலங்கைநாட்
இனபேதம் மொழிபேதம்
பங்கமுறப் பகைவளர்த்தே கலக பச்சோந்தி மனிதர்களை சிங்களவர் செந்தமிழர் முஸ்லிம்க சேர்ந்தொருதாய் மக்களெ பொங்கிவரும் அன்புறவால் இன
புனித மனங்கொண்டவ

தான். அன்றும் அப்படித்தான் லஞ்ச்ரூம் இல் இருவரும் தன் விருப்பத்தை ஒருவாறு சொல்லி முடித்தான்.
உங்களுக்கு என்னிலை ஏற்பட்டிருக்கிறது காதல் இல்லை; .ப்பாக்கிறீங்க, ஐஆம் சொறிரகு! என்னால. என்னால. தில உங்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை. அதோட
சுதந்திரம், புரட்சி அது இது கதைக்கத்தான்நீங்களெல்லாம் னப்பக்குவம் படிச்ச பெண்களுக்கே இன்னும் ஏற்படேல. ண்டு நாலு சுவருக்குள்ள அடங்கோணும் எண்டுதான் இதை ஏற்றுக் கொள்ளுற பக்குவம் மனத்துணிவு அனேக க வாயைத் திறந்து என்னில விருப்பம் இல்ல எண்டு நிறன்'
தாள் வாழ்க்கையில் பலதடவை அடி வாங்கிய அந்தப் முடன் மெதுவாகச் சொன்னான். 'சரி நளினா, நான் றன். உங்களுக்கு என்னை ஏற்றுக் கொள்ள எப்ப ஒரு
போது ஊன்றுகோலின் உதவியுடன்தீபிகா அங்கு வந்தாள். காகவோ அழைத்தாள்.
மாறும் குழ) எப்போது வரும் என்ற ஆதங்கத்துடன் ரகு
η 6ύ
பேசி எம்மை
ஞ் செய்யும் ஒதுக்கிவைப்போம்
ளெல்லாம்
ானச் செகமே போற்ற
)ணந்துநித்தம் ாய் ஒன்றாய் வாழ்வோம்!
தமிழ்மணி.ஆர்.ஆறுமுகம்
N

Page 81
செல்வந்த நாடுகளுக்கும் வறியநா இடையிலான ஏற்றத்தாழ்வைப் டே
யே. யோக்கியம், பொறியியல் பிடம், மூன்றா
༦་ உலகில் இன்றைய பொருளாதார நெருக்க இடையில் பாரிய இடைவெளிதோன்றுவதற்கும், அபிவி நாடுகள் பலவற்றால் கடைப்பிடிக்கப்பட்டுவரும்திட்டம ஸ்திரமற்ற அரசியல் நிலையும், சில செல்வந்த கைத்தொ நாடுகளில் நிலவும் வறுமை நிலையையும் இனங்களுக் தமது சித்தாந்தத்தை அந்நாடுகளில் பரப்ப வேண்டுெ நடவடிக்கைகளுமே மூல காரணங்களாக அமைகின்றன
இவைகளை விட வேறு காரணிகள் இருப் ஆராய்ந்து நேரத்தைப் போக்குவதைவிட, வறிய ஏற்றத்தாழ்வை எப்படிப்போக்கலாம் என்பதே எம்முன்
உலகுக்கான எரிபொருள் விநியோகம்:
இயற்கையாகவே மத்திய கிழக்கு நாடுக எரிபொருள் எண்ணெய், அதன் இன்றைய பெறுமதி பொருளாதாரத்தின் முக்கிய உறுப்பாக அமைந்திருப்ப அபிவிருத்தியடைந்துவரும்நாடுகள் என அழைக்கப்படு எண்ணெய் விலையுயர்வாகப் பாதிக்கப்பட்டு தமது ( நிலையிலிருந்தன. கைத்தொழில் உற்பத்தி நாடுகளுங் நெருக்கடியான பொருளாதாரத்தை எதிர்நோக்கின. எண்ணெய் உற்பத்திநாடுகளின் "ஒபெக்'நிதியிலிருந் பொருளாதார சீர்குலைவுக்கு ஒரு நிரந்தரமான ட விலையுயர்த்துவதன் மூலமும் எண்ணெய் உற்பத்தியில் எதிர்காலத்திற்குமான தமது பொருளாதாரத்தை ஸ்தி செய்யும் நாடுகள் எதிர்பார்த்திருந்தன.
செல்வந்த - கைத்தொழில் அபிவிருத்திநாடு சுமார் 20 வருடங்களுக்கு முன், உலகப் பொருளாத பொருளாக இருந்து வந்ததையும், அதையொன்றை மட் எண்ணெய் வளநாடுகள் விரக்தியடைந்த நிலையில் மூலவளங்களுக்குரிய ஸ்தானத்தை நிலையாகப் வெளிக்காட்டவும் விரும்பிய எண்ணெய் வளநாடுகள், அடைந்துவரும் நாடுகளும் தாங்கிக் கொள்ளும் அ பொருளாதார நெருக்கடி தோன்றியிராது என்றே எண்: மனதிற் கொண்டு மட்டுமல்லாது, சில அரசியற் க எரிபொருள்களில் விலையை அவ்வப்போது உயர்த்தி அரசியற் காரணம், 1967 - இஸ்ரேல் - அரபு யுத்த யுத்தத்தையும், அடுத்து எழுந்ததென்றாலும் அக்காரண

டுகளுக்கும்
IITig256)
ம் வருடம்
டிஞக்கும், செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் ருத்திஅடைந்துவரும்நாடுகள் என அழைக்கப்படும் வறிய ற்ற பொருளாதாரக் கொள்கைகளும், அந்நாடுகளில்நிலவும் ழில் உற்பத்திநாடுகளின் ஒருதலைப்பட்சமான போக்கும், கிடையிலான குழப்பங்களையும், சாதகமாகப்பயன்படுத்தி மன்ற நோக்கத்துடனான சில பலம்பொருந்திய நாடுகளில் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
பினும், அவை எதுவாக இருந்தாலும், அவற்றையிட்டு நாடுகளுக்கும் செல்வந்த நாடுகளுக்குமிடையிலான
உள்ள உடனடிக் கேள்வியாகும்.
ளில் பெருமளவில் அமைந்துவிட்ட உலகின் முக்கிய யைக் கருத்திற் கொண்டு பார்க்குமிடத்து அது உலகப் தைக் காண்கிறோம். மிக வறியநிலையிலுள்ளநாடுகளும், ம் எண்ணெய் வளமற்றநாடுகளும் மிகக்குறுகியகாலத்தில் பொருளாதார நிலையைச் சீராக்க முடியாத இக்கட்டான கூட எரிபொருளுக்கு மாற்றுக் கண்பிடித்தாகவேண்டிய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிற் சிலவற்றுக்கு, து கணிசமான உதவி கிடைக்கப் பெறினும் அது அவற்றின் பரிகாரமாக அமைந்துவிடவில்லை. மேலும் மேலும் அளவுக்குறைப்பைச் செய்வதன்மூலமும் தற்போதையதும் ரநிலையில் வைத்திருக்கலாமென எண்ணெய் உற்பத்தி
களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்ற எண்ணெய், ாரத்தில் அதிமுக்கியமாகப் பிரஸ்தாபிக்கப்படாத ஒரு டுமே தமது பொருளாதாரத்தில் மூலமாகக் கொண்டிருந்த இருந்தமையையும் உலகம் மறந்துவிட முடியாது. தமது
பேணிவைத்திருக்கவும் தமது முக்கியத்துவத்தை தமது உற்பத்திகளுக்கான விலையை, வறிய - அபிவிருத்தி 4ளவுக்கு உயர்த்தியிருந்தால் இவ்வளவு பாரதூரமான ணவேண்டியுள்ளது. தமது எதிர்காலப் பொருளாதாரத்தை ாரணங்களுக்காவும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் க் கொண்டே வந்திருக்கின்றன என்பது புரிந்தது. குறித்த த்தையும், அதனையடுத்து 1973 - இஸ்ரேல் - எகிப்து ங்கள் புறக்கணித்துவிடக்கூடியனவுமல்ல. لـ
66

Page 82
கைத்தொழில்நாடுகளிலும் அபிவிருத்தியடை - குறிப்பாக - உணவுப்பொருட்களின் விலைவாசி ட விலையுயர்வே காரணம் எனப்படுவதை ஏற்றுக்ெ பொருட்களினதும், மற்றும் அத்தியாவசியமற்ற பா விலையேற்றத்தால் ஏறியிருந்தாலும் அதனால் வறிய - பாதிப்படையவில்லை. முக்கிய உணவுப் பண்டங்கள் கைத்தொழில் உற்பத்தி நாடுகளைப் பார்க்கிலும் எண் நிலையிலிருந்தன. இந்நிலையில் உலகப் பொருளாதார நாடுகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைப் போக்கவு செய்வதன் மூலம், எண்ணெய் உற்பத்திநாடுகள் முக்கிய
உலகில் தானிய ஏற்றுமதி நாடுகள் தமது ஏ, உயர்வுக்கு ஏற்றாற்போல் அதிகரிக்காது விட்டதன் மூலம் வந்ததென்றே கொள்ள வேண்டும். தமது பண்டங்களி உற்பத்திநாடுகள் இதன் பொருட்டு வறியநாடுகளால் பா
மேலும் எண்ணெய் வள ஆய்வுகளில் முன்ன நாடுகளில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் உள்ள ந ஈடுபட்டுள்ள செல்வந்த நாடுகளும், வறிய- அபிவிருத் துறைகளை கொடுத்து உதவுதன் மூலம், அந்நாடுகளில் பங்களிப்புச் செய்யலாம்.
மொத்தத்தில் பார்க்குமிடத்து தற்போதைய குறைப்புச் செய்யபுபடுமாயின் பொதுவாக உலக நாடு ஆயினும் சடுதியான விலைக்குறைப்பை அடுத்து எண்ெ ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கி பெற வேண்டியது என்பது கவனிக்கப்படவேண்டியதொ
எண்ணெய் வளநாடுகள், எரிபொருட்களில் உதவுவதை விட, வேறு வகையிலும் அதாவது தமக் வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு சமாதான வழிகள் மூ வல்லரசுகளிடமிருந்து வாங்கச் செலவிடும் பெருந்தொை அபிவிருத்திக்காகக் கொடுத்து உதவலாம். இப்படியா6 போதும் சர்வதேச ஸ்தாபனங்கள் மூலமாக உதவிகளைக் ஆட்சிநிலவும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதும் க
அபிவிருத்தி அடைந்து வரும் வறிய நாடுக கடனுதவிகளில் தங்கியிருக்கும் நிலையப் படிப்படியா ஸ்திரப்படுத்தும் , மூலவளங்களைக் கொண்டு தமது சுய எடுப்பதில் கவனம் செலுத்துதல் அவசியம் ஆகும். இ அடைந்து வரும் வறியநாடுகள் முன்னுரிமை அளித்துற
தற்போது பெரும்பாலும் வெளிநாடுகளின் உ பொருளாதாரத்தை சீராக்கும் முகமாக,
1. தமது நாட்டில், ஸ்திரமான அரசிய தெரிந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் ெ
2. யுத்தக்கெடுபிடிகளுக்குஇடம் கொடா
6

டந்துவரும் நாடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் டிப்படியாக ஏறிக்கொண்டே போனதற்கு எண்ணெய் காள்ளாதிருக்கக முடியாது. ஆடம்பர - நாகரீகப் வனைப் பொருட்களினதும் விலைகளும், எண்ணெய் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அவ்வளவாகப் ரின் இறக்குமதியில் தங்கியிருக்கும் வறிய நாடுகள், ாணெய் விலையுயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாத த்தைச் சீரமைக்கவும்; செல்வந்த நாடுகளுக்கும் வறிய ம், எண்ணெய் விலையில் கணிசமான அளவு குறைப்புச்
பங்கை வகிக்க முடியுமாக இருந்தது.
ற்றுமதிப் பொருட்களின் விலையை எண்ணெய் விலை > உலகை பெரும் பொருளாதாரத்ச் சீரழிவிலிருந்து காத்து ன் விலையை அபரிதமாக அதிகரிக்காதிருக்கும் தானிய ராட்டப்பட வேண்டியனவே.
ரின்று , தமது சுயதேவையில் ஒரு பகுதியையேனும் தமது ாடுகளிலும் சித்திகரமான எண்ணெய் வள ஆய்வுகளில் தி அடைந்து வரும் நாடுகளக்கு தமது தொழில்நுட்பத் ன் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் பெரும்
நிலையில் எண்ணெய் விலையில் கணிசமான அளவு கள் பலவும் அதனால் பயனடையும் என்று நம்பலாம். ணய் உற்பத்திநாடுகளின் பொருளாதாரத்தின் சீர்குலைவு யமாகையால், விலைக்குறைப்பு படிப்படியாகவே இடம் ன்றாகும்.
ன் விலையை ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைத்து கிடையில் உள்ள எல்லைப்பிணக்கு மற்றும் சித்தாந்த லம் தீர்வு காண்பதன் மூலமும், யுத்தக ஆயுதங்களை கயான பணத்தில் ஒரு பகுதியையாவது வறியநாடுகளின் ன / அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு உதவும் * செய்வதும், தனிமனித சுதந்திரம் மதிக்கப்படும், மக்கள் வனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ள், தொடர்ந்தும் உதவி வழங்கும் செல்வந்த நாடுகளில் கக் குறைந்தது தமது சொந்தப் பொருளாதார நிலையை தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நடவடிக்கைகளை தன் பொருட்டு பின்வரும் விடயங்களுக்கு அபிவிருத்தி 5டவடிக்கை எடுத்தல் பொருத்தமானதாகும்.
தவியில் தங்கியிருக்கும் நிலையில் உள்ள நாடுகள் தமது
1ல் கொள்கையைக் கொண்ட மக்களால் முறைப்படி காண்டிருத்தல் வேண்டும்.
வண்ணம் தமது அண்டைநாடுகளுடனான பிணக்குகளை
༄༽

Page 83
1.O.
11.
12.
சமாதான வழிகளில் தீர்த்துக்கொள்ள தவிர்த்துக் கொள்வதோடு சில அபி செலவிடும் பெருந்தொகைப்பணத்தை
தமது கொள்கைகளை , சித்தாந்தக் வேண்டும் என்ற நிலையைக் கடைப் அண்டை நாடுகளில் சுதந்திரத்திற்கு தவிர்த்துக்ெெகாள்ளல் வேண்டும். தமது நாட்டில் உள்ள தேசிய இனங் முகமாக, சகலருக்கும் பொதுவாழ்வில் என்னும் வேற்றுமைகளுக்கு இடம் கெ கலாசாரம், என்பன முறைப்படி பேண நோக்காது, மக்கள் யாவரும் சமமாக அரசியல் அமைப்பைக் கொண்டிருந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவை கட்டி எழுப்புவதில் திருப்தியுடன்பங்கு நாட்டின் தனிமனித சுதந்திரம் பேணப்பு இயங்கவும். பேச்சு, கருத்துச் சுதந்திரம் உணவுப்பொருட்கள், அத்தியாவசிய கிடைக்கவும், தனியார் வர்த்தகம் ஊ மயமாக்கும் கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.
கூடுமானவரை உள்ளூர் மூலவளங்க6ை
குடும்பத் திட்டப் பிரசாரத்தை மக்கள் பெருக்கத்தைக் குறைக்கச் சாத்தியம பெருக்கத்தை பொருளாதாரநிலைக்கு: முடியுமான கட்டங்களில் மனிதசக்திை சுறுசுறுப்பானவர்களாக இருக்கச் செய்ய அத்தியாசிய தேவைகளின் போது மட்( வங்கிகள் கொடுக்கும் வட்டிவீதத்தில், வேண்டும். இதன் மூலம் அனாவசிய ஓரளவு தடுக்கலாம். பெருந்தொகை பெருந்தொகைப்பணத்தை முடக்குவ: திட்டங்களுக்குப் பயன்படுத்துவதாலு என்பது தற்போது புலனாகிறது. தமது நாட்டில் நிலப்பரப்பிலும், கடற்பர மற்றும் கணிப்பொருள் வளங்களைக் வேண்டும்.
ஆடம்பரப் பொருட்களின் இறக்கு அத்தியாவசிய உணவுப்பண்டங்களை செய்வதில் கவனம் செலுத்த வேண்டுப்
68

வேண்டும். இதன் மூலம் ஆயுதபோட்டா போட்டியை பிருத்தி அடைந்த நாடுகள் யுத்தத்தளபாடங்களுக்கு அபிவிருத்தி வழிகளில் பயன்படுத்த முடியும். கோட்பாடுகளை ஏனைய நாடுகளும் ஏற்றுக்கொள்ள பிடிக்கக் கூடாது. தமது நாட்டில் எல்லைக்கு வெளியே ஆபத்து ஏற்படக்கூடிய செயல்களில் ஈடுபடுதலைத்
ளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வைப் போக்கும் சம சந்தர்ப்பம் அளித்து, பெரும்பான்மை, சிறுபான்மை ாடா வண்ணம் அந்தந்த இனங்களின் பிரதேசம், மொழி, படவும், இனம் ,நிறம், மொழி மற்றும் வேற்றுமைகளை நடத்தப்படவும், அதை உறுதிப்படுத்தக்கூடியதுமான அது அமுல்நடத்தப்படவேண்டும். சிறுபான்மை இன ப்பதன்மூலம் அவர்களும்நாட்டின் பொருளாதாரத்தைக்
கொள்ளச் செய்ய முடியும். படுவதுடன், நீதித்துறையும் பத்திரிகைளும் சுதந்திரமாக
பாதுகாக்கப்படவும் வேண்டும். ப் பண்டங்கள் பொதுமக்களுக்குத் தடையில்லாமல் க்குவிக்கப்பட வேண்டும். கண்மூடித்தனமான தேசிய ாமல், சுதந்திர வர்த்தகம் உறுதி செய்யப்பட்டிருத்தல்
ாப் பயன்படுத்தியே திட்டங்களை உருவாக்க வேண்டும். ர் மத்தியில் பரப்புவதன் மூலமும் மக்கள் தொகைப் ான பல வழிகளை கையாள்வதன் மூலமும் குடிசனப் ரற்றபடி மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். பக் கூடுமானவரை பயன்படுத்துவதில் மூலம், மக்களை ாவும், வேலையில்லாப்பிரச்சியைக் குறைக்கவும் செய்து, ம்ெ இயந்திரங்களைப் பாவனைக்குட்படுத்த வேண்டும். சர்வதேச ரீதியாக கணிசமான அளவு குறைப்புச் செய்ய பணவீக்கத்தையும், ஏறிவரும் விலைவாசிகளையும் பான வட்டிவீதத்தை விளம்பரப்படுத்தி, வங்கிகளில் ால், அல்லது அப்பணத்தை அரசு தமது அபிவிருத்தி 1ம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீராக்கக முடியாது
ப்பிலும் எண்ணெய் வளஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்டறியும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட
மதிக்காக அந்நியச் செலவாணியை வீணாக்காது, பும் ஏனைய அவசியப் பொருட்களையுமே இறக்குமதி

Page 84
13. பாரம்பரிய ஏற்றுமதியிலேயே நாட் குறைத்துக்கொள்வதோடு, சொந்த நடவடிக்கைகளையும் உடனடியாகத்த வறிய நாடுகளுக்கும் தமக்குமிடையேயுள்ள பொருளாதாரத்தை நிலைபெறச் செய்வதில் செல்வந்த, வகிக்க முடியும். இதன் பொருட்டு செல்வந்த, கைத்தொழ கவனம் செலுத்துதல் அவசியமாகும்:
1. பின்வரும் விடயங்களைக் கவ அடிப்படையிலேயே வறிய, வளர்மு தொழில்நுட்ப உதவிகளோ செய்தல் நிலையிலுள்ள வறிய மற்றும் வளர்முக
அ) தனிமனித , மற்றும் தொழில சுதந்திரங்கள் சர்வதேச அடிப்ட ஆ) மக்களால் தெரிவு செய்யப்
பெறுவதோடு பல கட்சி ஆட்சி
இ) நிறம், மதம், பிரதேசம் மற்றும், ! சமநீதி வழங்கவும், நீதித்துறை
FF) சர்வதேச சட்டங்களுக்கு இண உ) வெளிநாடுகளின் உதவியிலே பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்கி வேண்டும்.
ஊ) உள்ளுர் வர்த்தகத்தில் அரசின் உறுதி செய்யப்பட்டிருத்தல் 6ே
எ) எண்ணெய்வள , மற்றும் கனி
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி
2) மேற்படி விடயங்களில் கூடுமானவரை நாடுகளுக்கே உதவிகள் வழங்கப்ட உறுதிப்படுத்த வேண்டும்.
3) இயற்கை அழிவுகள் போன்ற திடீர்துய மக்களுக்கு எவ்வித முன்நிபந்தனைே சர்வதேச ஸ்தாபனங்களும் உதவ முன் பயன்படுத்தப்படுகின்றனவா எ உறுதிப்படுத்துவதோடு இவ்விடயத் திருப்திப்படுத்த வேண்டிய நடவடிக்ை
4) நாடுகளுக்கிடையிலான ஆயுதப் ( எண்ணெய்வளநாடுகளும் நடவடிக்.ை செலவாகும் பணத் தைமிச்சப்படுத் பயன்படுத்தலாம்.
5) சுதந்திர, தன்னாதிக்கமுள்ளநாடுகள்த
6.

டின் பொருளாதாரம் தொடர்ந்தும் தங்கியிருத்தலைக் நாட்டின் உணவு உற்பத்திக்குத் தேவையான சகல ட்ெடமிட்டுச் செய்ய வேண்டும்.
இடைவெளியை நீக்குவதன் மூலம் சர்வதேச சமூகப் கைத்தொழில் அபிவிருத்தி நாடுகள் முக்கிய பங்கினை
ஜில் எண்ணெய்வளநாடுகள் பின்வருவனவற்றில் கூடிய
னத்திலெடுத்து அவற்றிற்கான முன்னுரிமையின் 5 நாடுகளுக்கு கடனுதவிகளோ, மற்றும் பொருளாதார, வேண்டும் உதவி கோரும் அல்லது உதவி பெறத்தக்க நாட்டில்,
ாளர் சுதந்திரம் பாதுகாக்கப்படவும், பேச்சுக் கருத்துச் 1டையில் உறுதிசெய்யப்பட்டிருக்கவும் வேண்டும்.
பட்ட ஆட்சி முறைமையைக் கொண்ட அரசு இடம் முறைக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். மொழி வேறுபாடுகள் கடைப்பிடிக்கப்படாது, சகலருக்கும் சுதந்திரமாகச் செயலாற்றச் செய்யப்படவும் வேண்டும்.
ங்கி நடக்கும் அரசைக்கொண்டிருக்க வேண்டும்.
யே தொடர்ந்து தங்கியிராது, நாட்டின் சுயதேவையைப் 5ளில் மக்களைப் பங்குபெறச் செய்யும் அரசாக இருத்தல்
ஏகபோகம் இடம்பெறாதவகையில் தனியார் வர்த்தகம் பண்டும். ப்பொருள் வள ஆய்வுகளில் முயற்சிகள் மேற்கொள்ள ருத்தல் வேண்டும்.
திருப்திப்படுத்தும் வறிய/அபிவிருத்தி அடைந்துவரும்
டுவதை சர்வதேச ஸ்தாபனங்கள் கண்காணிப்பதை
ரங்களுக்குட்படும் - உதவிகள் தேவைப்படும்நாடுகளில் பா அல்லது காரணங்களோஇன்றி செல்வந்தநாடுகளும், வர வேண்டும். இப்படியான உதவிகள் தகுந்த முறையில் ன்பதை சம்பந்தப்பட்ட உதவிபெறும் நாடு தில் உதவி வழங்கும் நாட்டை அல்லது ஸ்தாபனத்தை ககளையும் அது மேற்கொள்ள வேண்டும்.
போட்டாபோட்டியைக் குறைக்க வல்லரசுகளும் 5 எடுப்பதன் மூலம் யுத்த ஆயுதங்களைச் செய்து குவிக்கச் கி, அவற்றை வறிய நாடுகளின் அபிவிருத்திக்காகப்
ம் விரும்ப்பம் போல் தமது அரசுகளைத் தெரிவு செய்யும்
N

Page 85
6)
Zり
8)
9)
10)
11)
12)
உரிமையைப் பெறுவதன் பொரு வலுக்கட்டாயமாகத் திணிக்க முற்படு கொள்ள வேண்டும். இதன் மூலம்
கருமங்களைத் தம் விருப்பப்படி செ
மக்களின் பூரண சம்மதமின்றி, சம்ப பொருந்திய அல்லது செல்வாக்குள்ள
வறிய நாடுகளில் நிலவும் உள்நாட் அவற்றுக்குத் தூபமிட்டு, அந்நாடுக அரசுகளை மாற்றிவைக்கும் முயற்சிக உரிமைகளை மதிக்காத அரசுகளுக்ெ மேற்கொள்ளவும் அவை பின்னிற்கக்
வளர்/ வளர்முக நாடுகளில் எண்6ெ கண்டறிவதற்கான தொழில்நுட்ப, நிதி
தானிய இறக்குமதியில்/உணவுப்பை நிலையைக் கவனத்திலெடுத்து 6 சந்தர்ப்பங்களில், தானிய , உணவுப் செய்து உதவ வேண்டும்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுக் மூலப்பொருட்கள், உற்பத்திப் பொரு
கைத் தொழில் நாடுகளில் உற்பத்தி வர்த்தகத்தில் சமநிலை பேணப்பட வே தமது உற்பத்திகளின் விலையை ஏன நிர்ணயித்துக் கொள்ளல் உறுதிசெய்ய
வறிய/வளர்முக நாடுகளுக்கா உதவி செல்வந்த நாடுகளும், வல்லரசுக கூட்டிக்கொள்ள வேண்டும்.
பாரிய திட்டங்களின் பொருட்டு அ! உதவிகள்நல்ல முறையில், குறித்த கா உறுதிசெய்து கொள்ளல் அவசியமாகு
செல்வந்த நாடுகளுக்கும் வறிய - வளர்
மேற்காட்டிய பல வழிகளால் போக்குவதற்கு, உலக மனப்போக்கும், சமாதான சகவாழ்வுக் கொள்கையும், இ தம் கொள்கைகளை ஏனைய நாடுகளின் மீது திணிக்காத வேண்டப்படுகின்றன.
'அரசியல் சுதந்திரமின்றேல் பொருளாதாரச்

ட்டு வல்லரசுகள், மற்றும் தமது கொள்கைளை ம்நாடுகள், அந்நாடுகளின் மேல் தமக்குள் பிடியைநீக்கிக் அந்நிய நாடுகள் குறிப்பாக வளர்முக நாடுகள் தமது ப்யவும், வழியமைத்துக்கொடுக்க முடியும். ஒரு நாட்டு ந்தப்பட்ட நாட்டின் விவகாரங்களில் எந்த ஒரு பலம் நாடும் தலையிடுதல்நிறுத்தப்பட வேண்டும்.
டுப் பூசல்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி 1ளில் குழப்பத்தைப் பெரிதாக்கி, புரட்சிகளின் மூலம் ளில் எந்தநாடும் ஈடுபடக்கூடாது. அதேபோல் தனிமனித திராக பொருளாதாரத்தடை போன்ற நடவடிக்கைகளை
கூடாது.
ண்ய்வள ஆய்வு, மற்றும் கணிப்பொருள் வளங்களைக்
உதவிகளைச் செய்துகொடுக்க வேண்டும்.
ண்ட இறக்குமதியில் தங்கியிருக்கும் வறிய நாடுகளின் ாண்ணெய் விலையில் குறைப்புச் செய்யப்படும் பொருள் விலைகளிலும் கணிசமான அளவு குறைப்புச்
களிலிருந்து பெறப்படும் பாரம்பரிய ஏற்றுமதி, மற்றும் ட்களுக்கு ஏற்ற விலை வழங்கப்பட வேண்டும்.
தியில் வீழ்ச்சி ஏற்படாவண்ணம் அந்நாடுகளுடனான பண்டும். இதன் பொருட்டு கைத்தொழில் வளர்ச்சிநாடுகள் னைய நாடுகளின் உற்பத்தி விலைகளுக்கேற்றாற்போல் ப்பட வேண்டும்.
பி வழங்கும் ஸ்தாபனங்களுக்கான தமது உதவிகளை, ஒளும், எண்ணெய் வள நாடுகளும் கணிசமான அளவு
பிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வழங்கப்படும் லத்துள் பயன்படுத்தப்படுதலை உதவி வழங்கும் நாடுகள்
5LD.
முக நாடுகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வினை, நாடுகளிடையே ஒன்றுக்கொன்று புரிந்து கொள்ளும் பற்கைச் செல்வங்களைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையும் போக்கும், உலகளாவிய தனிமனித சுதந்திரமும் பெரிதும்
சபீட்சமில்லை'

Page 86
பிரிகின்ற நேரமும்.
வே.இராஜகோபாலசிங்க
சோகம் சுமக்கின்ற இதயங்களோடு. பிரிகின்ற உடல்களேஇனி, வாழ்க்கைச் சுமை தாங்க வரவேற்கின்ற குடும்ப வளாகத்துக்குள் செல்லும் பயணிகளாவோம், நாம்!
செல்லத் தான் வேண்டும் -இந்தச் சிருங்காரபீடத்தை விட்டு! கனாக் காணுகின்ற வாலிப நிமிடங்களைக் கல்வியோடும், கோஸ் - 'வேக் கோடும் கரைத்துவிட்டு -இனி வாழ்க்கைச் சுமைதாங்க வரவேற்கின்ற குடும்ப வளாகத்துக்குள் செல்லும்
பயணிகளாவோம் நாம்!
புதிய வானம் இங்கே தெரிந்தது! புதிய பூமி இங்கே மலர்ந்தது! புதிய எண்ணங்கள் பிறந்தனவா? புரட்சிக் கனவுகள் இருந்தனவா? விடை கொடு நண்பா விலகிடும் வேளை!
இனிமேல் நாங்கள்
மாணவர் அல்லர்! இங்கே தெரிகிற வானம் மறையும்! இங்கே மலர்ந்த பூமி விலகும்! பிரிவினி துயரம் மனதினை அழுத்தும்!
வாழ்க்கையின் தேடல்கள். வறுமையின் பாடல்கள்.

பின்வரும் காலமும்.
ம் - விடுகை வருடம்
நாட்டு நடப்புக்கள் நம்மெதிர் தோன்றலாம்!
பசுமை நினைவுகள். பதிந்த நெஞ்சினை குண்டு துளைத்துக் கொடுமைகள் புரியலாம்!
விலகி விலகி. வேதனை தாங்கி. உலகில் வாழ்தல் உண்மையா நண்பா?
இனி ஒரு புதுமை. இங்கொரு புரட்சி. என்று. என்று. கனவு காண்கிறேன்! விடியும் ஒருநாள் மடியுமித் துன்பம்!
பல்கலைக்கழகம். பசுமை நினைவுகள். புதிய வானம் புதிய பூமி.
6606)TLD..... 616) 6)TLD.... எங்கும் தெரியும்! எங்கும் தெரியும்!
இன்றைய பிரிதலில் நாளை ஓர் உறவுப் புஷபம் உலகில் மலரும்! கனவுகள் ஒருநாள் நனவாய்ப் போகலாம்!
71

Page 87
வறுமை ஒழிப்பில் சமுர்த்தித் திட்ட
ஆர்.ஹிஸ்வான்முகமட், அரசியல்துறை, மூன்
அறிமுகம்
நாட்டில் உள்ள பிரதான கட்சிகள் தேர்த6 திட்டங்களையும், செயற்பாடுகளையும் தேர்தல் 6 முன்வைக்கின்றன. இதனடிப்படையில் ஒன்றில் இரு காணப்படலாம். இதற்கமைய 1994ஆம் ஆண்டு பொதுத் வறுமை ஒழிப்புக்காக வேண்டி சமுர்த்தி வேலைத்திட்டப் முன்வைத்தது. இவ்வாறே 1989ஆம் ஆண்டுப் பொதுத் ஒழிப்புக்கு 'ஜனசக்தி வேலைத்திட்டம்' என்பதை அதா குறிப்பிடத்தக்தாகும்.
இவ்வாறு கட்சிகள் மேற்குறிப்பிட்டவாற முன்வைப்பதன் மூலம் எதிர்பார்ப்பது பலத்த மக்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதுமேயாகும். இத அரசாங்கத்தை கைப்பற்றிக் கொண்ட பொதுஜன ஐக்கிய சமுர்த்தி வேலைத்திட்டத்துக்கான நகல் திட்டத்தினை 18 பண்டாரநாயக்க குமாரணதுங்க அவர்களின் தலைமையி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பனம் செய்து வைக்கட்
சுமுர்த்தி வேலைத்திட்டம்
இலங்கையின் சனத்தொகையானது 1993 ம் சனத்தொகை அதிகரிப்பு 1.2% ஆகக் காணப்படுகிறது கிராமப்புறங்களிலும், 21.4 இனர் நகர்ப்புறங்களிலும் மி ஆவர். மொத்த சனத்தொகையில் 65 - 70% இனர் வறுமை 25 - 30% இனர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்க க்கு 80% இனர் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருவது என் விஷேமான குணாம்சமாகும். எனவே இந்த வறுமையின் விதத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினா வேலைத்திட்டமாகும்.நாட்டு மக்களில் 1,200,000 மக்கள் இளைஞர் விவகார விளையாட்டு கிராமிய அபிவிருத்தி
வறுமை
வறுமை என்ற விடயமானது சர்வதேச காணப்படுகின்றது. இந்த வகையில் வறுமையை ஒழிப் ஆனால் அவைகள் முழுமையான வெற்றிகயைப் பெ உள்ளது. குறிப்பாக வளர்முக நாடுகளிலே வறுமை தொ இதற்கமைய இலங்கையின் வறுமை நிலை மீது கவனத்ை திட்டம் அமைந்துள்ளது என்பதை ஆராய்வதே இந்
7

த்தின் பங்கு
ராம் வருடம்
ம் காலத்தின் போது அவ்வக் கட்சிகளின் கொள்கைத் விஞ்ஞாபனத்தின் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் நந்து ஒன்று வித்தியாமாகவோ வேறுபட்டதாகவோ தேர்தலின் போது பொதுஜன ஐக்கிய முன்னணியினரால் ) என்ற அம்சத்தை அதாவது, தேர்தல் விஞ்ஞாபனத்தில்
தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியானது வறுமை வது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்தது என்பதும்
ான தேசிய திட்டங்களை நாட்டு மக்கள் நலன் கருதி ஆதரவைப் பெற்றுக் கொள்வதும், அதன் மூலம் தமது நற்கமைய 1994 ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின் முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்தின் போது முன்வைத்த, 995 ஜூன் 16ம் திகதி ஜனாதிபதி மேன்மைமிகு சந்திரிகா ல் சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் பட்டது.
ஆண்டாகும் போது 17.6 மில்லியன் ஆகும். வருடாந்த 1. நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 72.3% இனர் குதியாகவுள்ள 6.3% இனர் தோட்டத் தொழிலாளர்களும் பில் வாடுவது புலப்படுவதுடன் மொத்த சனத்தொகையில் ளாகவே காணப்படுகின்றனர். இந்த வறிய மக்களில் 100 பது இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பின் மிகவும் பிடியில் வாழும் மக்களுக்குவிமோசனம் அளிக்கக்கூடிய ல் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு சுபீட்சத்திட்டமே சமுர்த்தி அளவில் நிவாரணம் பெறத்தகுதியான இத்திட்டமானது அமைச்சினால் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகின்றது.
ரீதியாகவும் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாகவே பதற்கான திட்டங்கள் உலகெங்கும் தீட்டப்பட்டுள்ளது. ற்றுக் கொண்டனவா? என்பதில் கேள்விக்குறியாகவே டர்ந்தும் பிரச்சினைக்குரிய விடயமாக இருந்து வருகிறது. தச் செலுத்தி அதற்கு எந்த வகையில் தீர்வாக சமுர்த்தித் த ஆய்வின் பிரதான நோக்கமாகும். இலங்கையின்

Page 88
பொருளாதாரத்தில் வறுமை என்ற விடயத்தின் தாக்கம் தொகை வருடா வருடம் அதிகரித்துச் செல்கின்றது என் ஒழுங்கீனங்கள் அதிகரித்தல், கிராமியமட் டத்தில் சன குன்றுதல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற குறிகாட்டினாலும் ஒரு பொதுவான கொள்கை ஒன்றினை அவசியமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் தேவையான உணவை நுகரும் நிலை இல்லாது போயி அளப்பதற்குரிய அளவு கோலாக கொள்ளப்படுவது குறைந்தளவான 2200 கலோரியை விடவும் நாள் ஒன்றுக் கீழ் வாழ்பவர்கள் எனக் கணிப்பிடப்படுவதற்கமைய, ந கலோரிப் பெறுமானத்தையுடைய குறைந்தளவு உணவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையின்சனத்தெ காணப்படுவதே வறுமை அதிகரிப்புக்கு காரணமாக அை
வறுமை ஒழிப்பு
வறுமை ஒழிப்புக்குத் தேவையான நடவடிக் யாதெனில் குறிப்பிட்ட குடும்பத்தில் வறுமை நிலவுவதற். கிடைக்கக்கூடிய மூலவளங்கள் குறைவு, மூலதனமி அறிவின்மை என்பவை மட்டுமே வறுமைக்குரிய கார அதிலும் மூலதனக் குறைவால் உண்டான வறுமைக்கு எம்முன்னால் இருக்கும் பிரதான சவால் என்னவென்ற வறுமைக்குரிய காரணத்தைக் கண்டறிவதேயாகும். மட்டத்திலும் பரிகாரம் காண்பது மிகவும் இன்றியை ஒழிக்கலாம். இந்தச் செயற்பாடுகளைஇடைவிடாது வகு இன்றியமையாததாகும். எனினும் இதுவரை செய்யப்ட மேற்கூறிய நடவடிக்கைகளுக்குப் பதிலாக எல்லோருக் அல்லது வேறு கொடுப்பனவுகள் என்ற முறைமை அ காரணமாக இருந்தது எனலாம்.
ஆனால் சமுர்த்தித் திட்டம் வறிய குடும்பங் குடும்ப அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்திமற்றும் தேசி இலங்கையில் நிலவும் பிரதான சமூகப் பொ இல்லாது ஒழிப்பதை குறிக்கோளாகக் கொண்டு குடும் திட்டத்தை வகுத்துக் கொள்வதோடு, வருமானத்தை ஒழிப்பில் 40% மானஇளைஞர், யுவதிகள்நாட்டின் அபி பங்குபற்றுவதற்காக வேண்டி கிட்டத்தட்ட 23,000 ! பயிற்றுவிப்பதற்காக 1500நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்
இந்த சமுர்த்தி திட்டமானது 'சுபீட்ச'நிவா இத்திட்டத்தின் அடிப்படையில் வருமானத்தை மை உதவிகளையும் கிடைக்கப் பெறுகின்றன. அதாவது ரூ. 500/=யும் ரூபா 500/-க்கு குறைந்த வருமானமுடையவ கொடுக்கப்படும்.இதற்கமையநாட்டு மக்களில் 1,200 அரசாங்கமானது இத்திட்டத்துக்காக வேண்டி வருடாந் என்பதும் சுட்டிக்காட்ட வேண்டியதோர் விடயமாகும்

பிரதானமானதாகும். நாட்டில் வாழும் வறிய மக்களின்
வேறுவார்த்தையில் குறிப்பிடலாம். வருமானப்பங்கீடு தொகை பெருகிச் செல்லல், பொருளாதார வளர்ச்சி ம்சங்களை நாம் வறுமைக்கான அடையாளங்களாக வகுத்தல் சாத்தியமற்றதாகவே அமையும். வாழ்க்கைக்கு டாத இடத்து வறுமை தலைதூக்குகிறது. 'மனிதனுக்குத் ன் அது வறுமையின் ஒர் அறிகுறியாகும்' வறுமையை உட்கொள்ளும் கலோரிகளாகும். இதற்கமைய மிகக் தகுறைவாக உட்கொள்பவர்களே "வறுமைக் கோட்டின்' ட்டின் சனத்தொகையில் 25-30% இனர் மேற்குறிப்பிட்ட கூட உட்கொள்ளமுடியாத நிலையிலேயே வாழ்கின்றனர் ாகையில் 70% இனரின் வருமானம் மிகவும் கீழ்மட்டத்தில் மகின்றது எனலாம்
கைகளில் அடிப்படை இலட்சனமாக இருக்க வேண்டியது நானஅடிப்படைக்காரணிகளை மேற்கொள்ளுதல் ஆகும். ன்மை, தொழில் நுட்ப அறிவின்மை, முகாமைத்துவ ணம் எனின் அதற்கு இலகுவில் தீர்வு கண்டு விடலாம். தீர்வு காண்பது மிக இலகுவானதாகும். இருந்த போதும் ால் உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் ஏற்பட்டுள்ள இது சம்பந்தமாக தனிநபர் அடிப்படையிலும், குடும்ப 2மயாததாகும். உடல் ரீதியான வறுமையை இல்லாது த்துமுன்னெடுப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளவது பட்டு வந்த வறுஒம ஒழிப்பு செயற்திட்டங்களின் போது கும் பொதுவான பாதிப்பை ஏற்படுத்தத்தக்கதாக "பணம்' அறிமுகம் செய்வதே அத்திட்டங்கள் தோல்வியடையுக்
களில் உள்ள படித்த திறமைமிக்க இளைஞர், யுவதிகளை பஅபிவிருத்தியின் பங்காளர்களாக ஆக்கிக் கொள்கின்றது. நளாதாரச் சிக்கலெனக் கருதக்கூடியதரித்திரத்தன்மையை பத்தொகுதியை அடிப்படையாக வைத்து அபிவிருத்தித் ம், சமூக அந்தஸ்தையும் உயர்த்துவதன் மூலம்லுறுமை விருத்திநடவடிக்கைகளிலும்,நிருவாகத்திலும் ஜீடியாகப் ரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவ்ர்களைப்
ப்ெபட்டுள்ளனர்.
A)
ணத்திட்டம் என்ற பதம் கொண்டும் வி si. மாக வைத்து பின்வருமாறு அவர்லுர்க்கான 5. ா 1000/= க்கு குறைந்த வருமானழுSட்யவர்களுக்தரூபா களுக்குரூபா 1000/=ம் மாதாந் ாரணமசிபெற்றுக் 0பேர் அளவில்நிவாரணம் தகுதி ஜ்ெ
ம் 9 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய S.
இதனைத் தற்போதுள்ள உணவு முத்திரை நிவாரணத்தின்
73
N

Page 89
முன்னே ஒப்பிடும் இடத்து சிறந்ததாகவே காணப்படுகின்
குடும்ப அங்கத்தவர்
எண்ணிக்கை
о сточар: பெறுமதி (
3O
6O
90
120
150
இவ்வாறு கொடுக்கப்பட்ட நிவாரணத் ெ ஒதுக்கப்பட்டதுடன் மீதி நிவாரணத் தொகை பணமா, வழிவகுத்துள்ளது. இந்த விபரத்தை அட்டவணைஇரண்
நிவாரணத்தொகை கட்டாய சேட (ரூபா) (ரூபா)
5OO 1OO
1OOO 200
அட்டவணை
சுபீட்சநிவாரணபயனுகரிகள் குடும்பங்களின் மேலாகத் தேவைப்படுகின்ற ஏனைய தேவைகளைப் ெ
அப்பணத்தை தேவையான சந்தர்ப்பத்தில் தேவைக் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் 'சனசக்தி போ மக்களின் வறுமை நிலை ஒழிக்கப்படும் வரை நிவார அமைக்கப்பட்டுள்ளது. இது இதன் சிறப்பம்மசமாக நோ தங்கி இராது சுயசக்தியுடன் உழைத்து நிரந்தர வருமா6 ஏற்படுத்துவதற்குரிய உதவிகளைப் பெற்றுக் கொடுப்பு கொள்வதற்கும் அவர்களுக்கு வழிவகை செய்யப்படும்.
சமுர்த்தித்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
1. குடும்பமொன்றின் ஒழுங்குபடுத்
நடைமுறைப்படுத்தல்.
2. இளைஞர் யுவதிகளுக்குதலைமைத்து
J3. முதியோர் பங்களிப்பு
4. குறைந்த வருமானமுடையவர்களை ெ கொடுத்தலும், பொருளாதார நடவடிக்

றது. இதனை கீழ் உள்ள அட்டவணை காட்டுகின்றது.
திரை soll's நிவாரண ரூபா) நிவாரணம் (ரூபா) அதிகரிப்பு (ரூபா)
100 70
200 140
500 410
500 380
500 350
தாகையில் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்புக்காக கவும், பொருட்களாகவும் வழங்குவதற்கு இத்திட்டம் ாடு விளக்குகின்றது.
மிப்பு நிவாரணம் நிவாரணம்
பணமாக (ரூபா)
பொருளாக ரூபா)
200 2OO
400 400
- O2
அங்கத்தவர்களுக்கு அவர்களது உணவுத் தேவைகளுக்கு பற்றுக் கொள்வதற்காக பணம் பெற்றுக் கொடுப்பதுடன் கேற்ப பயன்படுத்துவதற்கும் அவர்களுக்கு உரிமை rல் இரு வருடத்துக்கு மட்டுமென வரையறுக்கப்படாமல் ணம் வழங்குவதற்கு அமையவே "சமுர்த்தித் திட்டம்' க்கத்தக்கது. எனவே ஏழைக்குடும்பங்கள் மற்றவர்களில் அத்தைப் பெற்று சுயமரியாதையுடன் வாழும் நிலையை பதுடன் அந்நிலை ஏற்படும் வரை நிவாரணம் பெற்றுக்
தப்பட்ட பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை
வத்தையளித்தல்
தெரிவு செய்து அவர்களுக்கானநிவாரணத்தைப் பெற்றுக் க்கைகளை நெறிப்படுத்தலும்.

Page 90
10.
11.
12.
1.3.
14.
15.
16.
17.
18.
19.
2O.
பொருளாதார அபிவிருத்தியும் நலன்பு
பிரதேச வளங்களைப் பயன்படுத்துவத்
பரவலாக உள்ள பல்வேறு கிராமிய அ விரயம் செய்தலைக் குறைத்தலும்,
நிவாரணம் பெறாத சகல குடும்பங்கள் சமுர்த்தித் திட்டத்தை வகுத்தில்,
வறுமையை இனம்காணும் காரணிகளா எடுத்துக் கொள்ளப்பட்டு வறுமைை தீர்மானிப்பது.
வறுமையை ஒழிப்பதற்காக பணத் 6 பொருளாதார அபிவிருத்தியின் பொ ஆலோசனை, சந்தை வாய்ப்பு, மற்றும் ஏற்படுத்துதல்
ஒழுங்கான சுயவேலைவாய்ப்பை ஏற வழிகோலுதல்.
கிராம மட்டத்தில், அபிவிருத்தி ந கூடுதலாகவுள்ள பொருட்களை உற்பத்
உயர்ந்த கல்வியறிவைக் கொண்ட ( வெளிநாட்டு சந்தையை இலக்காகக் ெ உற்பத்தி, விநியோகம், சந் தைப்படு உள்ளடங்கும் விதத்தில் கிராமிய அட் மூலம் அத்திட்டங்களில் தனித்துவத்ை
இளைஞர் கழகங்கள், விளையாட்டு என்பனவற்றை சமுர்த்தித் திட்டத்தின்
சமுர்த்தித்திட்டத்துக்கு சிறப்பளிக்கத்த 'சமுர்த்தி வங்கியை" ஏற்படுத்தி கிரா செய்தல்
இல்லாமையை அகற்றி புதிய அமை கொடுத்தல்.
சமுர்த்தி மத்திய நிலையத்தினூடாக ஒன்றை பெற்றுக் கொடுத்தல்.
தற்போதுள்ள விரிவாக்க சேவை நி அமைப்புக்களாக மாற்றியமைத்தல்.
அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவ அறிவு, முகாமைத்துவம், நிருவாகப் பயன்படுத்திக் கொள்வதோடு அவற்றி
7.

ரியும்
தில் மிகுந்த அக்கறை கொள்ளுதல்
பிவிருத்திட்டங்களை ஒருங்கிணைப்பதும் மூலவளத்தை
ரினதும் பொருளாதார நிலைமையை உயர்த்துவதற்காக
க வருமானத்தைப் போன்று சொத்து நிலையும் கருத்துக்கு யயும் அதற்கான நலன்புரிக் கொடுப்பனவுகளையும்
தைப் பங்கிடுவதற்குப் பதிலாக குடும்பத்தினுடைய ருட்டு தொழில்நுட்ப அறிவு, தேவையான மூலதனம், ஒழுங்கான ஒரு வருமானத்தைப் பெற வழிவகைகளை
ற்படுத்துவதன் மூலம் கிராமமட்ட வேலைவாய்ப்புக்கு
டவடிக்கைகளில் விரிவாக்கமும், சந்தை வாய்ப்பு தி செய்தல்.
தடும்பங்களின் உயர் உற்பத்தித் திறனை உள்நாட்டு, காண்ட முறையில் உற்பத்தியை ஊக்குவித்தல்.
த்தல், களஞ்சியப்படுத்தல் ஆகிய சகல பிரிவுகளும் பிவிருத்தித்திட்ட வடிவமைப்பை ஒன்றைச் சேர்ப்பதன் தநிலைநிறுத்துதல்.
க் கழகங்கள், கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள் செயற்பாடுகளுடன் ஒருங்கிணைத்தல்.
க்கதான ஒரு அடிப்படை கடமையை உருவாக்குவதற்காக ம மட்டத்தில் சேமிப்பை ஊக்குவிப்பதற்கு உறுதுணை
ப்புகளை உருவாக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்
(சமுர்த்தி மையம்) ஊருக்கு ஒரு 'மூலவள நிலையம்'
லையங்கள் கிராம அபிவிருத்திக்கான துடிப்புமிக்க
னங்களது அனுபவம், தொழில்நுட்ப அறிவு, ஆற்றல், ம், திறமை ஆகியவற்றைச் சமுர்த்தித்திட்டத்துக்காக ன் உதவியையும் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளல்.

Page 91
/
முடிவுரை
காலமாற்றத்துக்கு அமைய கட்சிகள் தட அரசாங்கத்தைப் கைப்பற்றிக் கொண்டதன் பின் வித்தியாசமானதாகும். இந்த வகையில் வறுமை ஒழிப்புக் என்பதையும் அதற்கு முன்ஐக்கிய தேசியக் கட்சி அரசாங் நாட்டில் உள்ள மக்களில் அதிகமானவர்கள் வறுமைக் குறிப்பிட்ட அரசாங்கத்தின் கால எல்லைக்குள் நி உண்மையாகும். இதற்கு சான்றாக நாம் 'மானிய மு செயற்பாட்டினையும், அதன் பங்களிப்பினையும் கண்டு காலத்திட்டமான 'சனசக்தி திட்டத்தை நாம் நோக்கி காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே இதன் வெற்றி நீண்ட காலத்திட்டங்களாக செயற்படுத்தப்பட வேண்டு திட்டங்களுடன் ஒப்பீட்டின் அடிப்படையில் நோக்கின் காணப்படுகின்றது. வாழ்க்கைச் செலவின் அடிப்படையி உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்களின் கட்டுப்பா( குறிப்பிடலாம். Tவ்வாறு இருப்பினும் இது ஒரு சிறந்: முறையில் அமையப் பெற்ற முகாமைத்துவத்தினது குறிப்பிடலாம்.
ஆதாரம்
* இருளும் ஒளியும்
* சமுர்த்தி வேலைத்திட்டம்
* தினகரன் - 1994.12.15
* தினகரன் - 1995.06.16
* தினகரன்- 1995.06.10
* பொருளியல் நோக்கு -வறுமைப் பிரச்சிை
* பொருளியல் நோக்கு 1995
நல்லவளை மணப்பது
வாழ்க்கைப் புயலின் ஒ கெட்டவளை மணப்பது
துறைமுகத்தில் புயல் வ
7

து கொள்கைத்திட்டங்களை முன்வைப்பதன் மூலம்
மக்கள் மத்தியில் முன்வைக்கும் திட்டங்களும் காக வேண்டி மக்கள் ஐக்கிய முன்னணி சமுர்த்தித்திட்டம்' கம் 'சனசக்திதிட்டம்' என்பதையும் அறிமுகப்படுத்தியது. கோட்டின் கீழ் வாழ்வதால் இவ்வாறான திட்டங்கள் ஒரு றைவு பெற முடியாது என்பதும் வெளிப்படையான ]றை', 'உணவு முத்திரைத் திட்டம்' போன்றவற்றின் கொள்வதன் மூலம் அறியலாம். குறிப்பாக மிக அண்மைக் ன் இப்போது அது சமுதாயத்திடை மங்கி மறைவதைக் கு ஆட்சி மாற்றங்கள் இடம் பெற்றாலும் இத்திட்டங்கள் ம். இத்திட்டத்தை 1970 க்கு முன்னர் இருந்த நிவாரணத் இதன் பயன்பாடுகளும், செலவீனங்களும் குறைவாகவே ல் இவ்வாறு குறைவானதாக அமையக் காரணம் நாட்டுக்கு டேயாகும். உதாரணமாக, IMF IBRD போன்றவற்றைக் த திட்டம் என்ற அடிப்படையில் இதன் வெற்றி சிறந்த ம், நிருவாகத்தினதும் கையிலே தங்கியுள்ளது எனக்
ரு துறைமுகமாகின்றது.
சுவது போன்றது.
- ஜே.பி.ஸென்

Page 92
பட்டதாரி
ஏ.எல்.எம்.கைஸ்சர் - இறு
உயர்தர வகுப்பினில் உயர்ந்திட நானும்,
இரவும் பகலும்
படித்தேன்.
இளமைத்துடிப்பை
இழந்து, இன்னல் பலதைச் சகித்தேன். இதயத்தை ஒருமுகப்படுத்தி நானும் பரீட்சையில் சித்தியும் அடைந்தேன்.
பட்டமும் பெற்றிட பல்கலைக்கழகமும் வந்தேன். பகடி வதையின் அறுவடைகளாலே ஒடுங்கி நானும் நின்றேன்.
பகடி வதையும் முடிந்தது பட்டப்படிப்பும் தொடர்ந்தது. இடையில் உறவாடும் பல உறவுகள் அதில் தடைகள் ஆனதும் சில இரவுகள்.
7

பின் துயர்
தி வருடம் - கலைப்பீடம்
ஸ்ரைக்கென்றும் பகிஷ்கரிப்பென்றும் தொடரும் தொல்லைகளாலே வயதும் முற்றிப்போனது. பட்டம் பெறவும் பிந்திப் போனது, பட்டமும் பெற்றேன், கறுப்பு மயிர் வெளுப்பாய் ஆனபோது, வேக்கன்ஸி வரும் இடத்துக்கெல்லாம் விடாது விண்ணப்பமும் அனுப்பி நின்றேன்.
நேர்முகப் பரீட்சைக்குச் சென்றால், வயது அதிகம் என்பான் வயிற்றில் அடித்து நிற்பான் சடுதிதான் வராதோ என்று சாவினை எதிர்பார்த்தால் அதுவும் வந்து சேராது.
இளமையும் முதுமையாச்சு திருமண வயதும் போச்சு. பட்டம் பெற்றதாலே பட்ட மரமாய் என் நிலையும் ஆச்சு.

Page 93
மார்கழித் திருவாதிரை நோன்பும் தி
செ.கிருஷ்ணவேணி, தமிழ்த்துறை, இறுதிவ
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பத பொதுவாக இந்துமதத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வித சுப புதிய தொழில் ஆரம்பித்தல் முதலானவற்றைச் செய்வதி மாதம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. கிருஷ்ண குருஷேத்திரத்தில் அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதையி இறைவனிடத்தில் ஒருமுகப்படுத்தி, இறைவனைத் திய வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாம் இறைவனைப் பற்ற போதும் ஏனைய பிற பிரச்சனைகள் எமக்கு ஏற்பட நடவடிக்கைளையும் எமது முன்னோர்கள் மார்கழி மாதத்
ஒழுகக நெறிகளில் உடலையும். உள்ளத்தைய அதற்குரிய காலமாக மார்கழிமாதம் தேர்ந்து எடுக்கப்பட்
மாரிகாலம் முடிந்து குளிர்காலம் மார்கழியி நன்றாகப் போர்த்தி உறங்கினால் இதமாக இருக்கும் என் வைணவர்கள் நாராயணனை வழிபடும் "வைகுண்ட ஏக திருவாதிரை நாளும் வருகின்றன. இவை உணவை வி அனுஷ்டிக்கப்படும் ஒரு திருநாள் என்று கூறலாம் திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்பட்டு, விரதம் அனு திருவெம்பாவைப் பாடல்கள் கி.பி ஒன்ட திருவெண்ணாமலையில் பாடப்பட்டதாக அறிய திருவெம்பாவையிலும் ஆண்டாள் அருளியதிருப்பாவை சங்க காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மார்கழிநீராடல் ஆயிற்று எனலாம். ஆண்டாளும், மாணி இலக்கியமாகப் படைத்துள்ளனர் என்று கருதலாம்.
திருப்பாவையில் கோபியர் ஒருவரை ஒருவ பிரார்த்திக்கின்றனர். திருவெம்பாவையிலும் பெண்கள் சிவ
பராசக்தி வழிவந்த பல சக்திகள் ஒருங்கு கூடித புகழையும் பராசக்தி புகழையும் பாடிக் கொண்டு பொய் காட்டுகின்றன.
இம் மார்கழி நோன்பு முற்காலத்தில் பெண்கள் பொருட்படுத்தாது நீராடி வாசல் தெளித்து கோலமிட்டு செல்வச் செழிப்புடனும் வாழலாம் என்ற அடிப்படையில்
பாவை நோன்பினை ஐந்து வயதுச் சிறுப நோற்கின்றனர். திருவெம்பாவைப் பாடலில் முதற்பகுதிய சிவனடி மறவாத சீரியோன் கணவனாக வரவேண்டும் எ மழை வேண்டும் எனப் பரவுகின்றனர்.
7

ருவெம்பாவையும்
ருடம்
rவது மாதமாக விளங்குகின்றது. இம் மார்கழி மாதத்தில் 5ாரியங்களையும் அதாவது திருமணம், புதுமனைபுகுதல், ல்லை. ஆனால், இம்மாதம் மிகவும் உயர்ந்த, புனிதமான பகவான் கூட 'மாதங்களில் நான் மார்கழி' எனக் ல் குறிப்பிடுகின்றார். எமது உடலையும் உள்ளத்தையும் ானித்து இறையருளைப் பெறுவதற்கு இம்மாதம் ஒதுக்கி யெதியானத்தில் இருக்கும் வேளையும் நோன்பு நோற்கும் க்கூடாது என்பதற்காகச்சடங்குகளையும் ஏனைய சுப தில் நடத்தாமல் இருந்திருக்கலாம் எனக் கருதஇடமுண்டு. ம் பழக்கப்படுத்திக் கொள்ளப்பண்பட்ட பயிற்சி தேவை. டுள்ளது.
பில் ஆரம்பமாகின்றது. பனிபடர்ந்த அதிகாலை நேரம் ாபது நாம் உணர்ந்ததே. இத்தகைய குளிர் காலத்தில்தான் ாதசியும், சைவர்கள் சிவபெருமானை வழிபடும் மகிழத் டுத்து நோன்பு இருந்து இறைவனை தியானித்தல் மூலம் திருவாதிரை நாளுக்கு முதல் ஒன்பது நாட்களும் ஷடிக்கப்படும்.
தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரினால் முடிகின்றது. இதில் இருபது பாடல்கள் உள்ளன. பிலும் மார்கழி நோன்பு பற்றிப்பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. "தைந்தீராடலும்' 'அம்பாளாடலுமே ' பிற்காலத்தில் க்கவாசகரும் அதனைத்தம் படைப்புத்திறமையால் பாவை
ர் துயியெழுப்பி நீராடி கண்ணனை கணவனாக அடைய னடியாரைத்தம் கணவராக அடையப் பிரார்த்திக்கின்றனர்.
ம்முள் ஒருவரையொருவர் எழுப்பிக் கொண்டு இறைவன் கைக்கு நீராடப் போவதை திருவெம்பாவைப் பாடல்கள்
அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து கடும் குளிரையும் அன்றைய நாளை ஆரம்பித்தால் ஆரோக்கியமாகவும் ) தோன்றியதாக இருக்கலாம்
முதல் கன்னிப் பெண்கள் வரையில் அனைவரும் பில் பெண்கள் ஒருவரையொருவர்துயிலெழுப்புகின்றனர். ா வேண்டிப்பாடுகின்றனர்.அத்துடன்நாடு செழிக்கநல்ல

Page 94
'உன்னடியார்தான் பணிவோம் ஆங்கவர்ககே பாங்காவோம் என்றும் 'எங்கள் பெருமான் உனக்ே எம் கொங்கை நின் அன்பர்ற்க அ அடிக்கமலம் சென்றிரஞ்சும் பெருமை சொல்லிக் கன்னி உறங்கும் உயிர்களை, அத்துயில் விட்டு எழுப்பிட இத்திருவெம்பாவைப் பாடல் பாடி மார்கழி நோன்பு அணு
இவ்வாறு திருவாதிரை நோன்புக் காலத் 'எம்பாவாய்' என்று முடிவதனால், இதனைத் திரும்eெ இத்திருவெம்பாவைப் பாடல்களை பாடிக் கொண்டு வீதி ஏற்படுத்திஇருக்கின்றனர். இவ்வழக்கம் பிற்காலச் சோழர் அறியமுடிகின்றது. இம்முறையை ஆன்மாவின் பொருட் ஏதுவாகவே கடைப்பிடித்து வந்துள்ளனர் எனலாம்.
அதிகாலை காற்றில் நான்கு மணிமுதல் ஆ அளவில் காணப்படும். அத்துடன் மிகத் தூய்மையான கூறுகின்றனர். மனித உடலுறுப்பு செவ்வனே செயல்பட தேவைப்படுகிறது. விஞ்ஞான உலகம் எமது இயற்கை மாசடையச் செய்து கொண்டிருக்கிறது. இதனால், தூய பிர இதேவேளை, மார்கழி மாத அதிகாலையில் நாம் அதிக எனவே இக்காலத்தில் இறைவனைப் போற்றிப் பாடு கொண்டு செல்லும் போதும் அதிக அளவில் பிராணவாய இதனால் உடலும் ஆரோக்கியம் அடைகின்றது.
நான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்'
என்பதற்கிணங்க நாம் இத்திருவெம்பாவை உறங்கிக் கொண்டு இருப்பவர்கள் அனைவரும் எழுற அமைந்து விடுகின்றது. அனைவரும் இப்பாடலைப் பா கூடியதாய் இருக்கிறது.
இவ்வாறு மார்கழி மாதத்தில் திருவாதிரைநை அடியார்கள் அனைவரும்பாடிஇறைவனின் அனுக்கிரகத் என்று கூறினால் அது மிகையாகாது.

கான்று உணரைப்போம் கேள் புல்லாதோள் சேரணர்' என்றும் அண்ணாமலையான் பர் நீராடுகின்றனர். ஆணவமலமாகிய இருளில் வீழ்ந்து பிறவிப் பிணி நீங்க வேண்டும் என்பதற்காகவும், றுஷ்டிக்கப்படுகிறது என்றும் கருதலாம். தில் பாடப்பெறும் 'திருவெம்பாவைப் பாடல்கள்' வம்பாவை என்பர். மார்கழிக் குளிரில் அதிகாலை நேரம் வழியே வரும் வழக்கத்தை இந்து மதத்தவர் ஆதிதொட்டு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகநூல்கள் வாயிலாக டு மட்டுமன்றி ஆரோக்கியமான உடல்நலம் பெறுவதற்கும்
றுமணிவரையுள்ள காலப்பகுதியில் பிராணவாயு அதிக நிலையில் பிராணவாயு காணப்படும் என விஞ்ஞானிகள் இரத்தம் சுத்திகரிக்கப்பட அதிகாலையில் பிராணவாயு அன்னையான பூமியைப் பல புதிய கண்டுபிடிப்புகளால் ாணவாயுவைப் பெற்றுக்கொள்வதிற் சிரமம் ஏற்படுகிறது. அளவு தூய பிராணவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியும். ம் பாடலான திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிக் புவை நாம் உள்ளெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது.
ப் பாடல் பாடிக்கொண்டு வீதிவழியே செல்லும் போது, து விடுகின்றபடியால் இது ஒரு பொதுப் பணியாகவும் டுவதனால் ஏற்படும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக்
*மைகளை முன்னிட்டுத் திருவெம்பாவைப் பாடல்களை 1தைப் பெறுவதோடு, ஆயுட்பலத்தையும் பெறுகின்றார்கள்

Page 95
நாடகவிழா - 9 சாதாரண ரசிகன் என்ற கோணத்திலி
சி.சிவானந்தன், உதவி விரிவுரையாளர், பொ
தமிழ் நாடகங்களின் வரலாற்றை வடக்கு கிழ வளர்ச்சி என இருவகைப்படுத்தி நோக்கலாம். வடக்கு உத்வேகத்தையும் பெற்றுள்ளன என்றே கூறலாம். கு திரு.க.சிதம்பரநாதன், திரு, பாலசிங்கம், திரு. ச.ஜெய்ச பணியில் இன்றும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தென்னிலங்கையைப் பொறுத்தவரை தமிழ் ந விஜித்சிங் போன்றோர் எடுத்துவரும் முயற்சிகள் பாராட் திரு.க.பாலேந்திரா, நாச்சியார் போன்றோரையும் தமிழ், ! தென்னிலங்கை தமிழ்நாடக வரலாற்றில் ப மொறட்டுவ, பேராதனை பல்கலைக்கழகங்களின் ட ஒழுங்கமைப்பட்ட கட்டமைப்பாகஇவர்கள்இருப்பதும் பு: இவர்களிடம் மிகுந்திருப்பதாலும் சமூக பிரக்ஞைஇவர்கள் பங்களிப்பு மெச்சத்தக்கதாக இருப்பதில் ஆச்சரியமில்6ை சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும்நாடகவிழாதமிழ்நா தோறும் தரமான பலநாடகங்கள் இந்தக் களத்தில் உருவா6 பேராசிரியர் சு.வித்தியானந்தன் காலத்திலிருந்து நடந்து வ இந்தத் தொடரில் இவ்வாண்டு நடைபெற்ற ந கட்டுரை முன்வைக்கிறது. கட்டுரையாளர் இந் நாடகப் ே தொடர்பாக ஆழ்ந்த அறிவோ அனுபவமோ உடைய6 சிலவற்றைச் சொல்ல வேண்டியிருப்பதன் விளைவே இக் நடுவர்களாகக் கடமையாற்றிய ஜனாப் எம்.எஸ்.எம்.அ ஆனந்தமூர்த்தி, திரு.மகேஸ்வரன் என்பவர்களது கருத் என்பது கட்டுரையாளளனின் தாழ்மையான வேண்டுகோ பேராதனைப்பல்கலைக்கழகதமிழ்ச்சங்கத்தின் இ.ஓ.ஈ.பெரெய்ரா அரங்கில் மாலை 4.30 மணியளவில் ஆ மீண்டும்', ரி.வி.ஆர் சங்கரின் "காட்டாறு', கே.முரள மணிமாறனின் 'இனியுமா' என்ற நாடகங்கள் மேடையே
முதலில் அரங்கேறிய 'மீண்டும் மீண்டும்' நிறைந்தது. இளைஞர்களிடமிருந்து சமூகத்தின் எதிர்பார் போன இளைஞர்கள் தொடர்பாக சமூகத்தின் ஏளனமனட போக்கும் அதன் விளைவுகளும் என்பனவற்றை நாடகம் வர முயற்கிறார்கள். ஆனால், மேலும் மேலும் பல அவ்விளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டி சமூகம் இவர்க முடிகிறது.
இங்கு நாடகாசிரியர் எடுத்துக் கொண்ட கரு உத்திகளும் பிரச்சனைகளுக்குப் போதிய அழுத்தத்:ை முழுநேரமும் பாத்திரங்கள் இருட்டுக்குள்ளேயே சஞ்சரித்
- ܠ

ருந்து.
றியியல்பிடம்
க்குநாடகங்களில் வளர்ச்சி, தென்னிலங்கைநாடகங்களின் கிழக்கு நாடகங்கள் இன்று ஒரு புதிய பரிமாணத்தையும் ழந்தை ம. சண்முகலிங்கம், கலாநிதி சி. மெளனகுரு, ங்கர் போன்றோர் இந் நாடக அரங்கை வளர்த்தெடுக்கும்
ாடகத்துறையைப் புனர்நிர்மாணம் செய்ய அரங்காடிகள், டப்படத்தக்கன. துரதிர்ஷ்டவசமாக புலம்பெயர்ந்து வாழும் நாடக வரலாற்றில் மறப்பதற்கில்லை. ல்கலைக்கழகங்களின் பங்களிப்பு குறிப்பாக கொழும்பு, பங்களிப்பு குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றது. தியவற்றை தேட வேண்டும். கற்க வேண்டும் என்ற வேட்கை ரிடம் மேலோங்கியிருப்பதாலும்இவர்களின் தமிழ்நாடகப் 0. இந்த வகையில் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் ாடக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்கநிகழ்வாகும். ஆண்டு வதும் அதுநாட்டின் பல்வேறு பாகங்களில் அரங்கேறுவதும் பருகின்றது. ாடகவிழா தொடர்பாக சில கருத்துக்களை இவ் விமர்சனக் போட்டியில் நடுவராக கடமையாற்றியிருந்தாலும் நாடகம் வரல்ல, ஒரு சாதாரண ரசிகன் என்ற கோணத்திலிருந்து கட்டுேைய தவிர இக் கட்டுரை எந்த வகையிலும் அன்று புனாஸ், கலாநிதி. இரா.சிவகணேசன், வைத்தியகலாநிதி. தை பிரதிபலிப்பனவாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது
T.
நாடகவிழா பெப்பிரவரி மாதம் 3ம் திகதி பொறியியல்பீட ரம்பமானது. இவ்விழாவில்இரா.இரவிசங்கரின் 'மீண்டும் ரிதரனின் 'தொடரும்', அன்ரனிதாசனின் 'கட்டு, பா. றின.
நாடகம் எடுத்தாண்ட பிரச்சினை பல சமூகக் சிக்கல்கள் ப்புகள் அவ்வெதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமற் பான்மை, அதனால் இளைஞர்களுக்கு ஏற்படும் விரக்திப் சித்தரிக்கிறது. இடையிடையே இளைஞர்கள் நல்வழிக்கு ர் இன்னிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இறுதியில் ளை மீள ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறி நாடகம்
உன்னதமானது. அதனைச் சொன்ன விதமும் கையாண்ட க் கொடுக்கத் தவறிவிட்டன. நாடகத்தில் ஏறக்குறைய நன. யார் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாதஇருட்டு

Page 96
. நாடகவிழா - 35இல் மீண்டும்
斗 நாடகவிழா - 85இல் "காட்டா
 
 

\\ 参影 |-衡鬚|-
+ |-
மீண்டு."

Page 97
N
პაპა
N
N
N རི་
N S.
3. நாடகவிழா - பி(இல் 'தொடரு
W
'நாடகவிழா - 95இல் "கட்டு .گی
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 98
W'; S N
N
W
XN
5. நாடகவிழா - 85இல் இனியும
Éi. பேராதனைப் பல்கலைக்க
கலாசார காலடிகளில் தTடப்
 
 

W
Ա
W ܔ
ழகதமிழ்ச்சங்கத்தின்
5ம் நிரபராதிகளின் காலம்'

Page 99
7. பேராதனைப் பல்கலைக் கீழி:
கலாசார காலடிகளில் நாட்டும்
3. தமிழ்ச்சங்கத்தால் ஒழுங்கு செய்
கோமல் சுவாமிநாதன்- சில்லையூ
 
 

* தமிழ்ச்சங்கத்தின்
க்கூத்து 'புதுயுகம் படைப்போம்"
N W N 魯 N
R W
Vyr ŵy V y
பூச செல்வராசன் நினைவுக் கூட்டம்

Page 100
ஆனால் மேடையின் முன் இடது மூலையில் மட்டும் ஒரு ெ இயக்குனருக்கே வெளிச்சம். -
நடிகர்கள் தாம் வசனம் பேசும்போது மட்டு உடனடியாகத்தமது இயல்புநிலைக்குத்திரும்புவதை அவத இளைஞர்களின்எழுச்சிகளைமேடைக்கு வெளியிலிருந்து தவிர்த்திருக்கலாம். மாறாக அதனை மேடையில் உள்ள பாத் இந்த இளைஞர் குழாத்தில் ஒரு பெண்ணையும் சேர்த்திரு போக்கைக் வெளிக்கொண்டுவந்திருக்கமுடியும். மேலேகூ இந்தநாடகம் முழுமைபெறவில்லைஎன்றேகூறவேண்டும். அதிகஇரைச்சலுடன்நாடகத்தை விழுங்குபவையாகக் காண கை எதனைக் குறிக்கிறது? அந்தக் கைவிழுந்த பின்னரு புரியவில்லை.
மேடையமைப்பு என்றரீதியில்நாம் நேரில் காண் அமர்க்களப்படுத்தி விட்டார்கள். எனினும் இங்கு நாம் மறக்கப்படக்கூடாது. மேடையில் காணப்பட்ட அந்த உபக கொண்டோ, தனது பாத்திரங்களின்ஊடாகவும் அல்லது ஒரு மேடையமைப்பே தேவையில்லை என்று சொல்ல வரவில் முழித்துக்கொண்டு தெரியாத அளவான மேடையமைப்பே ஒருவராக நடித்த பா. ராமமூர்த்தியின் நடிப்புநன்றாக இருந் இரண்டாவதாக மேடையேறிய நாடகம் "காட்ட அணையை உடைத்துப்பெருக்கெடுப்பதனால் ஊர்மக்கள்! அங்கு அவர்கள் படும் அல்லல்கள் அவர்களது எண்ணவே சித்தரிக்கிறது. இறுதியில் தஞ்சமடைந்த இடத்திலும் கா இடம்பெயர்கிறார்கள். நாடகம் முடிகிறது. இந்நாடக யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறிய இராணுவம் காட்ட மேடையில் தோன்றிய பாத்திரங்களாலும் குறிக்கப்பட்டனர்
இந்நாடகத்தில் நடிகர்களைச்சிறந்த முறையில் மனைவியை இழந்த கணவனாகநடித்த கு.சிவநேசன் முகத் சிறந்த நடிகராகவும் தெரிவு செய்யப்பட்டார். குழந்தையை நடித்திருந்தார். தனது பாத்திரத்துக்கு முக்கியத்துவமில்லாத பிரிவுச்சோகத்தையும்,தவிப்பையும், விரக்தியையும் காண கொண்டார்.கிழவியாக நடித்த மா.சத்தியநாயகி பாராட் வெளிக்கொணர்ந்திருக்கலாம். மற்றும், இளைஞனா ஏற்றஇறக்கத்தினூடாக மேலும் ஆழமாக வெளிக்கொண்டு பிரிவு, இயலாமை காதல், பயம், மகிழ்ச்சி ஆகிய பல 2 பாராட்டப்படத்தக்கது. எனினும்இந்நாடகத்தில்வரும்இெை அழுத்திக் காட்டியிருக்கலாம். குறியீட்டு நாடகம் என் செயற்பாடுகளுடாகவும் சொல்ல இயக்குனர் முயன்றார். நீ எதனையோகையில் எடுத்துஉயர்த்திப்பார்ப்பதன்விளக்க சில அதீத குறியீடுகள் மேடையில் என்னநடக்கிறதுஎன்பை பல்கலைக்கழக மாணவர்கள் எனவே இவற்றை அவர்க நினைத்திருக்கலாம். ஒருநல்லநாடகம்படித்தவனாலும்பா சிறப்பு.
"தொடரும்'நாடகம் மூன்றாவதாக மேடையேற நிலப்பிரபு ஒருவர்தனது அடியாட்களின் உதவியுடன் ஆள்

வளிச்சப் பொட்டு. தொடர்ந்து இருந்தமைக்கான காரணம்
ம் ஒரு நடிப்புப் பாணியில் நின்று வசனம் பேசிவிட்டு ானிக்கமுடிந்தது. எடுத்துக்கொண்ட பிரச்சனை தொடர்பாக ஒருவர்ஒலிபெருக்கியூடாகவசனநடையாக அறிவிப்பதைத் திரங்களுக்கூடாகவே வெளிப்படுத்தியிருக்கலாம். மேலும் நந்தால் பெண்கள் தரப்பில் இன்று காணப்படும் விரக்திப் பிய ஒளிஅமைப்புபிரச்சினை உட்பட தொழில்நுட்ப ரீதியில் உதாரணமாகப்பின்னணிஇசை, பின்னணிக்குரல் என்பவை ாப்பட்டன.நிற்க,நாடகத்தின்நடுவே மேலிருந்துகீழிறங்கும் ம் நடிகர்கள் மேலே எதனைத் தேடுகிறார்கள். எதுவுமே
ாபது போலவே புகையிரதக்கைகாட்டி தெருவிளக்கு, என்று நிகழ்த்திக் காட்டுவது நாடகம், திரைப்படமல்ல என்பது ரணங்களின் தாற்பரியத்தை எழிமையான பொருட்களைக் குறியீட்டினூடாகவோ வெளிப்படுத்தியிருக்கலாம்.இங்கே லை. ஆனால், நடிப்பைப் பின்னுக்குள் தள்ளி முன்னுக்கு விரும்பத்தக்கது.நடிப்பைப் பொறுத்தவரைஇளைஞர்களில் தது.
ாறு'. இதுவே முதல்பரிசு பெற்ற நாடகம். காட்டாறு ஒன்று இடம்பெயர்ந்துஇன்னொருஇடத்தில்தஞ்சமடைகிறார்கள். ாட்டங்கள், அவற்றுக்கான பின்னணி எவ்பவற்றைநாடகம் ட்டாறு பெருக்கெடுப்பதனால் அங்கிருந்தும் அவர்கள் ம் ஒரு குறியீட்டு வடிவத்தில் அமைகிறது. அதாவது -ாறாலும், யாழ்ப்பாண சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினர்
இயக்குனர்இனங்கண்டு பயன்படுத்தியிருந்தார். குறிப்பாக தில் நன்றாகவே பாவங்களை வெளிப்படுத்தினார். அவரே இழந்த தாயாக நடித்த கு.அனந்தவி பாத்திரத்துடன் ஒன்றி * நேரங்களிலும் கூட அவர் முகத்தில் பிள்ளையை இழந்த முடிந்தது.இவர்நினைவில்நின்றநடிகைவிருதைப் பெற்றுக் டுக்குறியவர் எனினும் முகபாவத்தை மேலும் சிறப்பாக 5 நடித்த தி. குமரகுரு பாத்திரத்தன்மையை குரலில் வந்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். சோகம், தவிப்பு, உணர்ச்சிச் சுழல்களினூடாக இந்நாடகம் பிரயாணிப்பது ாஞனுக்கும் யுவதிக்குமிடையே தோன்றும் காதலைஇன்னும் ர வகையில் மேடையில் சிலவிடயங்களைக் குறியீட்டு வெதரணம் வழங்க வருபவர் மக்களின் கழுத்தை நெரித்து ம்இயக்குனருக்குமட்டுமே விளங்கியிருக்கும்.இதுபோன்ற தயே விளங்காமல் செய்து விடுகின்றன. பார்வையாளர்கள் ள் ஆராய்ந்து விளங்கிக் கொள்வார்களென இயக்குனர் மரனாலும் விளங்கிக்கொள்ளப்படும் வகையில்அமைதலே
பியது. அதுஇரண்டாம்பரிசுபெற்றநாடகம். ஒரு கிராமத்தை வதாகவும். அக்கிராமத்துவிவசாயிகளுக்கு வேண்டியநீரை
N
المـ

Page 101
தனது கட்டுப்பாட்டிலுள்ள மதகு ஒன்றின் மூலம் கட்டு காட்டியவாறு நாடகம் ஆரம்பமானது இடையில் நிலப்பிர மதகைத் திறப்பது போலப் பாவனை செய்து அம்மக்களின் கொண்டமக்கள்மதகைஉடைக்கமுயற்சிசெய்கிறார்கள்.இ அடித்து நொருக்குவதாகவும் இந்த அவலம் தொடர்வதாக
கிராமத்துப் பின்னணியில் இந்த நாடகம் ந கைகொடுக்கிறது. கிராமங்களுக்கே உரித்தான பாடல்கள்ந பேசல் எனப்பல கிராமப்பரிமாணங்களைநாடகம் பயன்ப மக்களின் இனப்பிரச்சினையை ஒரு குறியீட்டுவடிவில் உணர்வும் பாராட்ட்த்தக்கது.அந்தப் பாத்திரத்தை ஏற்று ந உள்ளவர் போலும். அவர்நினைவில்நின்றநடிகர் விருதை நிலானியும் சிறப்பாகச் செய்தார். நிலப்பிரபுவாக நடித்த வி வெளிப்படுத்தினார். ஆனால் அவரின் மரணக் காட் பாத்திரங்களுக்கானநடிகர்களின் பொருத்தம் சிறப்பாக இரு
மேடையமைப்பிற்கு பின்புறமிருந்த திரைக் மேடைப்பயன்பாடு தொடர்பாகஇயக்குனருக்குசில குழப் மோதல்களின்போது இடையிடையே குழப்பம்நிலவுவது ( எழுந்தமானமாக இல்லாமல் சரியான பயிற்சிகளினூடாக ஒ
அடுத்து 'கட்டு' நாடகம் இடம்பெற்றது. இது நாடகத்தை அடியொற்றியதாகவே இருந்தது. இந்நாடகத்தி மேடை அதிக நடிகர்களால் நெருக்கமடைந்தும் காணப்பட் திறமை உரிய வகையில் பயன்படுத்தப்படவில்லை. நாடக அவதானிக்க முடிந்தது. ஆரம்பத்திலிருந்துமுடிவுவரைநா என்ன செய்வது?" என்ற தவிப்பை வெளிப்படுத்துவதாக நாடகத்தில் ஒரு பல்வகைத் தன்மையை உருவாக்கியிருக் காட்டினாலும் இவ்வாறு ஒரே உணர்ச்சிப் பாவத்துள்நாடக அமைந்திருக்கலாம்.
இந் நாடகத்தில் இரண்டு விடயங்களை இயக் மற்றையது அவர்களின் ஒற்றுமையின்மை. ஆனால் நா கருவுக்கான தளத்தை நிறுவுவதற்கே மக்களின் அவலம் பய நேரம் செலவிட்டதனால் பிரதான கருவை மேலும் ஆழ முதன்மைப்படுத்திமக்களின் அவலத்தைஇரண்டாம்பட்சம நாடகத்தில் புதிதாக வரும்நபர் தொடர்பான மர்மம்நாடகத் இழையோடிய கதையாகவும் அமைந்தது. சிறப்பு எடு தெளிவாகவும் சொல்லியது.இந்நாடகத்தில் பின்மேடையில் மறைத்துக் கொண்டு நிற்பதைத்தவிர்த்திருக்கலாம். ஒளிய6
பொதுவாகப் பார்க்கின் எல்லாநாடகங்களுமே கடந்த இரண்டு, மூன்று நாடகவிழாக்களை எடுத்து நோக் பிரமிக்க வைக்கும். மேடையமைப்பு, ஒளியமைப்பு, முன்னேற்றத்தைக் காண்கிறோம். பொதுவாக நாடகங்கள் முயற்சியின் ஒற்றுமைத்தன்மை வெளிப்பட்டது. அதாவது வெளிப்படுத்த முனையவில்லை. இதுவே இன்ெ காணப்பட்டதென்னவோ உண்மைதான். இது முற்று திறமையுள்ளவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்குப்

ப்படுத்தி அவர்களை அநியாயமாகச் சுரண்டுவதையும் பு இறந்து விட வெளிநாட்டில் படித்த அவரது மகள் வந்து நிலத்தைப்பிடுங்க முயற்சி செய்கிறாள். இதனைப் புரிந்து றுதியாக அம்மக்களைநிலப்பிரபுவின்மகளின் அடியாட்கள் வும்நாடகம் முடிகிறது. டப்பது சில அழகியல் அம்சங்களில் இயக்குனருக்குக் கைச்சுவை, வெகுளித்தனம், மோதல், ஒற்றுமை ஊர்க்கதை டுத்துகிறது. சொல்லப்போனால் இந்தநாடகம் தமிழ் பேசும் சொல்கிறது. இந்நாடகத்தில் இழையோடிய நகைச்சுவை டித்த யு.கருணாகரன் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு த்தட்டிக்கொண்டார். கிராமப்புறப்பெண்ணாகநடித்த என். உதயசீலன் ஆத்திரத்தையும் ஆக்ரோஷத்தையும் நன்றாக சியை இயக்குனர் வேறுவிதமாக அமைத்திருக்கலாம். நந்தது.இயக்குனருக்குதனிப்பாராட்டுகள். சீலை மட்டும் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. பங்கள்இருந்தமையை அவதானிக்க முடிந்தது. மேடையில் போன்றநிலையையும் காணமுடிந்தது. சண்டைகளைக்கூட ழுங்கமைத்திருக்கலாம். து 3ஆம் பரிசு பெற்ற நாடகம். இது ஏறத்தாள காட்டாறு லும் மேடையமைப்பு அளவுக்கதிகமாக இருந்தது. மேலும் டது. இந்நாடகத்தில் நடித்த பல திறமையான நடிகர்களின் த்தில் அடிக்கடி தொய்வும் குழப்பங்களும் காணப்பட்டதை டகம் ஆற்றுப்பெருக்கைநிறுத்துவதற்கு "என்ன செய்வது? வே இருந்தது. நவரசங்களில் ஏனைய ரசங்களைப் புகுத்தி கலாம். இடையிடையே சில சமூக அவலங்களைச் சுட்டிக் கம் சிக்கியிருந்தமை நாடகத்தின் தொய்வுக்குக் காரணமாக
க்குனர் சொல்ல முனைந்தார். ஒன்று மக்களின் அவலம். டகத்தின் பிரதான கரு ஒற்றுமையின்ைைமயே. பிரதான பன்பட்டது. ஆனால் இந்தத் தளத்தை நிறுவுவதற்கே அதிக மாக அழுத்திச் சொல்ல நேரம் போதவில்லை. கருவை ாக்கியிருந்தால்நாடகம்இன்னும் சோபித்திருக்கும். மேலும் தில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுவே நாடகத்தில் ந்துக் கொண்ட பிரச்சினையை நாடகம் நேரடியாகவும் இருப்பவர்வசனம் பேசும்போதுமுன்மேடையில்நிற்போர் மைப்பின் பயன்பாடுஇல்லையென்றே கூறவேண்டும். தொழில்நுட்பரீதியில் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளன. கினால் இம்முறை நாடகங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி மேடைப் பயன்பாடு, ஒப்பனை என்பவற்றில் அந்த எல்லாவற்றிலும் தனிநபர் சாதனை பின்தள்ளப்பட்டு குழு நடிகர்கள் எவரும் தமது மனம்போன போக்கில்திறமையை னாரு கோணத்தில் நாடகங்களின் பலவீனமாகக் முழுதாக இயக்குனரின் குறைபாடுதான். நடிகர்களில் பொருந்தக்கூடிய பாத்திரங்களை வழங்கி அவர்களின்
༄༽

Page 102
திறமையை முழுதாக வெளிக் கொணரக் கூடிய வகையில் குறைத்து நாடகங்களை இயக்கியிருந்தால் இதனைத் தவி நண்பர்கள். அவர்கள் எல்லோருக்கும் சம அளவில் முக்கி உந்தல்களுக்குஇயக்குனர்கள் பலியாகிஇருக்கலாமோ என பலதிறமைகளை மேலும் வெளிக்கொணர்பவையாகநாட
'மீண்டும், மீண்டும்'தவிர்ந்த ஏனைய நாடகங் தளமாகவும் இனப்பிரச்சனையைக் கருத்தளமாகவும் செ பாரதூரமாகப் பாதிக்கும் இப் பிரச்சனையை நாடகத்தில் ெ அபிப்பிராயத்தின் விளைவே இது. இதனை விட தமிழ்ே எண்ணத் தோன்றுகின்றது. மேலும்இனப்பிரச்சனையும் அத யாழ்ப்பாணம் மட்டும் ஏன் இயங்குதளமாகத் தெரிவு செய் பாதிப்புகளுக்கு உள்ளாகியேவருகின்றனர். இவர்களைஇய உருவாக வேண்டும். மேலும் இனப்பிரச்சனை என்பது எ ஆனால் எமது கவனம், ஆராய்ச்சி, விமர்சனம், தேடல் எ ஏனைய பிரச்சனைகளுக்கு வழி தேடுவதை நிறுத்தி விட சீரழிவு. அந்நிய மோகம், சமூகம் சிதிலமாதல், மனோவியல் உருவாக வேண்டும். அவை இப் பிரச்சனைகளை ஆராய் உதவ வேண்டும்.
பொதுவாகஜந்துநாடகங்களும்தாம் எடுத்துக்( பார்த்து அலசி ஆராய்ந்தன. அவற்றை பல்வேறு குறி நாடகங்களில் பொதுவாக அவதானிக்கப்படும் போக்கு.இ யதார்த்தமான முடிவை நோக்கி இட்டுச் செல்லவில்லை எ முடிவைச் சொல்லாமல், ரசிகர்களை யதார்த்தமான முடிை இருக்க வேண்டும்' என்று தஞ்சைப் பல்கலைக்கழக நாடக வருட இளங்கதிரில் வெளியான பேட்டியொன்றில் கூறியி
இந்நாடகங்களில் ஒவ்வொரு பாத்திரங்களும் ஆ பாத்திரவார்ப்பில் சில குழப்பங்கள்நிகழ்கின்றன. ஒரு சமூக, வெளிப்படுத்தமுனையும்போதுசிக்கல்கள் எழுவதுதவிர்க் பாத்திரங்களை ஆழப்படுத்துவதை இயலாமல் செய்துவிடு
பொதுவாகப் பல்கலைக்கழக நாடகங்களில் ஆ இல்லாமலிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு நாட காதலி, உறவுகளைச்சித்தரிக்கும்போது அங்கேஇயல்பாக மிக்குறைவு. நாடகத்தில் கணவன்-மனைவிபாத்திரங்கள்இ தமது நடிப்பைக் காட்ட வேண்டியுள்ளது. உதாரணமாக ப கணவன்தாங்கிப்பிடிக்க முடியாது. மேடையின் மறுகோடி இது தமிழ்க் கலாசாரப் பின்னணியின் பாதிப்புத்தான்
நாடகவியலாளர்களும் கலாசார ரீதியில் தம்மை மாற்றியை
இறுதியாக இப்படியான சிறந்த நாடகங்க6ை பொறுப்பும்நாடகவியலாளர்களின் தோள்களில் உள்ளது. ட கேலியும் கூச்சலுமாக இருப்பது அவர்களுடைய பெயருச் தமிழ்பேசும் மக்களின் இன்றைய ஜீவமரணப் போராட்டத் இங்கேஇறந்து கொண்டிருக்கும்மக்களுக்காகவாவது அவர் போனால் அம்மக்களுக்கு அஞ்சலி தெரிவிக்கக்கூடத்தயா, செய்தவர்களாவோம்.

) அப்பாத்திரங்களை முதன்மைப்படுத்தி ஏனையவற்றைக் ர்ெத்திருக்கலாம். "மேடையில் நிற்பவர் எல்லாரும் எனது பத்துவம் கொடுக்க வேண்டும்” என்ற அனாவசிய எண்ண ா எண்ணத் தோன்றுகிறது. இதனைத்தவிர்த்திருந்தால் நல்ல கங்கள் மிளிர்ந்திருக்கும்.
பகள் எல்லாமே வடபகுதி மக்களின் வாழ்க்கையை இயங்கு 5ாண்டு அமைந்திருந்தன. இன்று தமிழ்பேசும் மக்களைப் சொன்னாலே ரசிகர்களைக் கவரும் என்ற இயக்குனர்களின் பேசும் மக்களுக்கு வேறு பிரச்சனைகளே இல்லையா என ன்விளைவுகளையும் எடுத்துச்சொல்ல, வடபகுதிகுறிப்பாக பயப்பட வேண்டும்? கிழக்கிலங்கைதமிழ்பேசும் மக்களும், பங்குதளமாகவும் கொண்டுநாடகங்கள் பல்கலைக்கழகத்தில் "ல்லோரையும் விழுங்கிக்கொண்டிருக்கும் அரக்கன்தான். Fல்லாவற்றையும் அந்த ஓரிடத்தில் குவிப்பதென்பது எமது க்கூடாது. உதாரணமாக பெண்ணடிமைத்தனம், கலாசாரச் ஸ்பிரச்சனைகள் போன்றவற்றிலும் காத்திரமானநாடகங்கள் வதிலும், விமர்சிப்பதிலும், தீர்மானிப்பதிலும் சமூகத்திற்கு
கொண்ட கருப்பிரச்சனையைபல்வேறு கோணத்திலிருந்தும் பீடுகளினூடாக வெளிப்படுத்தின. இது அண்மைக்கால ந்நாடகங்கள் இரசிகர்களைசமூகமுன்னேற்றத்துக்கான ஒரு ான்றே கூறவேண்டும். இது தொடர்பாக 'நாடகங்கள் தாம் வ நோக்கிஇட்டுச் செல்லுமளவுக்குத் தாக்கமுள்ளவையாக நத்துறைத் தலைவர் பேராசிரியர் சே.இராமானுஜம் சென்ற ருப்பது இங்குநினைவுகூரத்தக்கது. அவர் சார்ந்த சமூகத்தைப்பிரதிபலிப்பனவாகஇருப்பதனால் த்தரப்பின்நடையுடைபாவனைகளை ஒருதனிமனிதனூடாக கமுடியுாததே. அதேவேளைஇம்முறைமைதனிநடிகர்களின் கின்றன. ஆண், பெண் உறவைக் காட்டுவதில் ஒரு நிறைவுத்தன்மை கத்தில் கணவன், மனைவி, அண்ணன் - தங்கை, காதலன்க்காட்டப்பட வேண்டிய அந்நியோன்னியம் காணப்படுவது க்கட்டானகுழ்நிலையிலும்கூடஇரண்டு அடிதள்ளிநின்றே மனைவி நோய்வாய்ப்பட்டு விழுந்தாலும் அருகில் நிற்கும் யிலிருந்து இன்னொரு பெண் பாத்திரம் ஓடிவர வேண்டும். இக்குறைபாடுகளைக் களைவதற்கு தமிழ்ச் சமூகமும் மக்க முற்பட வேண்டும். ள ரசிப்பதற்கு ரசிகர்களைத் தயார்படுத்தும் மிகப்பாரிய ல்கலைக்கழக மாணவர்களேநாடக அரங்கினுள் இவ்வளவு குே இழுக்கைத் தேடித்தருவதாகும். மேலும் இந்நாடகங்கள் தை நிகழ்த்திக் காட்டுகையில் தமக்ககாக இல்லாவிட்டாலும் கள் அமைதியைப் பேணவேண்டும். அப்படிநாம் செய்யாது ராகஇல்லாமல், நாம் நேசிக்கும் மக்களுக்குநாமே துரோகம்
༄༽

Page 103
அகதிகள்
கோ.சுரேஷ் - கலைப்பீட
இப்போது நாங்கள் ரத்தத்தில் குளித்துவிட்டு வந்திருக்கிறோம்!
யுத்தம் மென்று துப்பிய சக்கைகளாகக் குப்பைமேடுகளில்
எங்கள் வாழ்க்கை
சொந்த வீட்டில் சொகுசாய் வாழ்ந்தவர்களுக்குச் சொந்த உயிர்கூடச் சொந்தமில்லாமல் போயிருக்கிறது.
தமிழர்கள். ஒற்றுமை இல்லாதவர்கள் என்று நினைத்தா எல்லோரையும் ஒன்று சேர்த்திருக்கிறார்கள்!?

Til. . . . .
ம் -முதலாம் வருடம்
கடவுளைவழிபடக் கூட கூட்டம் கூடாத
கோவில்களிலெல்லாம்
கடவுள் இருப்பதற்கே இடமில்லாமல் போயிருக்கிறது நாங்கள்
அகதியானதிலிருந்து
சிறுவயதில்
புத்தாண்டை
வரவேற்க வான வெடிகளை வெடித்தோம்!
இன்று (குண்டு) வெடிகளினாலேயே வாழ்க்கையைத்
தொலைத்து விட்டிருக்கிறோம்!
இந்நூற்றாண்டு மனிதர்களுக்கு அடை மொழியாய்
அல்லது அடக்கும் மொழியாக
அகதியாய்.

Page 104
வதனமார் வழிபாடு
இரா. வை.கனகரத்தினம், முதுநிலை விரிவுை
ஆகமம் சாரா வழிபாட்டு நெறிகளுளொன்று சார்ந்தது. வதனமார் சிறுதெய்வங்களுள்ளும் பெருந்தெ வழிபடப் பெறும் சிறப்பான சிறுதெய்வ வ மருதநிலப்பிரதேசங்களிலும் முல்லை நிரப்பிரதேசங்கள் இதுவாகும். குறிப்பாக முன்பு வன்னிப் பிரதேசங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு முதலானவன்னிமைகளி இன்றும் போற்றி வருகின்றனர்.
வதனமார் தெய்வத்தின் தோற்றம் பற்றிப் ட தராவிட்டாலும் சில ஏடுகளில் பின்வரும் கதையொ கோடிகாட்டிநிற்கின்றது. அதுவருமாறு:
இந்தியாவின் வடபகுதியில் அமைந்த காசிநக கனகமணி என்னும் அம்மையார் அந்நகரில் எழுந்தருளி செந்தாமரைப்பூவில் உதித்தவரே மங்கலனார் தெய்வம் இதனை வதனமார் யானைகட்டு அகவல் ( (1971, ) 221)
"கிற்றகுழு மல்கவனார் காசியெனு வாய்த்த கமலப்பூமிவில் வந்தவ செப்பரிய பூமுலையாள் சுவாதிய மெய்க்கமல வேல்விழியாள் மா கற்புநெறிமுத்தியுள்ள கனகமணி பக்தியுடன் செந்தாமரைப்பூவில்
மங்கலனாரைக்கண்டவர்பாதம் (
குறிப்பிட்டுப் போற்றுதல் செய்யும்
பொதுவாக இத்தெய்வத்திற்கும் பக்தியா6 நிலைபேற்றுக்கும் அடிப்படை மாடுகளேயாகும். மடு எ வந்தவர்கள் தமிழ் மக்கள் இருபதாம் நூற்றாண்டின் இப்பாரம்பரியத்தில் மிகுந்த நம்பிக்கை உடையர்வர் அவர்களைப் பாதிக்கவில்லை. மேனிலை ஆக்கத்தில் நம்ட பாரம்பரியமாக இத் தெய்வத்தைப் போற்றிவந்தனர். 'வ6 சடங்கு ஆற்றுவதற்கும்;
1. மாடுகள் நோய் பிணியின்றி வளர்தல் வே: 2.பட்டி பெருக்கமடைய வேண்டும் 3. ஒல்லாமை செல்லாமை ஒவ்வொருக்குமுை 4. எல்லோரும் நோய் பிணியின்றி வாழ்தல் (
இந்நோக்கங்கள் அடிப்படைக் காரணங்களா

ரயாளர், இந்துப் பண்பாடு, தமிழ்த்துறை
வதனமார் வழிபாடாகும். இது சிறு தெய்வ வழிபாடு ய்வமன்று. ஆண் தெய்வம், ஈழத்துச் சைவ சமயிகளால் ழிபாடுகளும் இந் நெறியுமொன்று. ஈழநாட்டின் லும் வாழும் மக்களால் நன்கு போற்றப்படும் தெய்வம் என்று கருதப்பட்ட வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், ல் வாழும் மக்களால் இத் தெய்வம் நன்கு போற்றப்பட்டது.
ராண மரபுக் கதைகள் வரன்முறையான செய்திகளைத் ன்று அத் தெய்வத்தில் தோற்றம் பற்றிய செய்தியைக்
ர்த்தில் பார்ப்பனகுலத்தில் பிறந்த கற்புடையமங்கையான யிருக்கும் சுவாதியம்மையின் அருளால் கனகமணியிடம் என்னும் வதனன்.
சி.கணபதிப்பிள்ளை மணமாறித் தேவி திவ்விய கரணி
று மாநகரில் ரலாறு செப்பச் ம்மை தன்னருளால் மறையோர் தம் குலத்தில் க் கன்னியென்பாள்
வந்துதித்த போற்றி செய்து'
ாருக்கும் உள்ள உறவுக்கும் இத்தெய்வ வழிபாட்டின் ன்பது செல்வம். மாட்டினைச் செல்வமாக கருதி வாழ்ந்து முதற் காலாண்டு வரை ஈழத்து வன்னிமை மக்கள் களாகவே வாழ்ந்து வந்தனர். ஒத்த அசைவியக்கமும் பிக்கையும் அக்காலத்தில் அவர்கள் கொண்டிருக்கவில்லை. ன்னிமை மக்கள் இத் தெய்வத்தைப் போற்றி வழிபடுதற்கும்
ண்டும்
ண்டு பண்ணல் வேண்டும்
வேண்டும்.
க அமைந்தன எனலாம்.

Page 105
வதனமார் என்னும் சொல் பலர்பால் நூற்றி கிருமை தாங்கியே நூற்றியறுபது வதனர் குழுமாட்டுக் மங்கலனார்வதனன், பாலர்வதனன், உற்ற வதனை தொ6 வதனன் முதலான வதனமார்கள் அவற்றுள் குறிப்பிடத் தெய்வம் மங்கனார் வதனன் என்னும் தெய்வமாகும். என்றும் தெய்வத்தை முதன்மைப்படுத்தியே போற்றுத கண்டவர் பாதம் போற்றி (நூல் ப.221) என்னும், ! மங்கலனார் என்னும் (மேலது நூல்.ப.22) 222, 223 (மேலது.ப.223)பிரபந்தங்கள் போற்றுவதை எடுத்துக்கா இவ்வதனமார் தெய்வத் தோற்றத்தை பிரபந் அகவல்,
'பன்னிரண்டாண்டு பரிவாகச் ெ முற்றவே பன்னிரண்டு முப்புரீநூg வல்லயம் வில்லம்பு வாய்த்த வெ சொல்லரியழுந்துகிலும் சொக்கா கல்பதித்த மோதிரமுங் கடுக்கன்ே நல்ல சட்டை தொப்பிகளும் நயின எல்லா மனிந்து இருந்தாரோ மங்க
வதனமார் ஊர் அற்றுக் காவியம் . வயதுமே யீரெட்டுகச் சென்றபி செப்பரிய மந்துபோல் கண்டகோ நிறமான பட்டுடன் சட்டை சகலாத் நீள்துனப் மாலையணிபூஷணமை வதனமார் வழிபாடு ஈழநாட்டில் சிறப்பாகப்ே தோற்றமும் வருகையும் பற்றிக் குறிப்பிடும் பொழுது இ வதனமார் தெய்வத்தின் வருகை பற்றியும் நிலைபேறு பற். வகையில் அதனைக் குறிப்பிடும்; அவை (1) வதனமார் ெ (2) ஈழநாட்டில் வதனமார் தெய்வம் உறைந்து விளங்குமி
இவற்றை விரித்து நோக்கின், (1) இந்தியாவிலிந்து ஈழநாட்டிற்கு வந்த வழி அயோத்திநகரில் இருந்து காஞ்சிநகருக்கு வந் கும்பகோணத்துக்கு வந்து இங்கிருந்து கன்னியாகுமரிக்கு வந்தார்.
(2) ஈழநாட்டில் வதனமார் உறையுமிடங்கள் திருகோணமலை, கந்தளாய், கிளிவெட்டி, கெ நாவலூர், நாகமுனை அறுகாமம் (பழுகாமம்) தம்பட்டை, (மன்னம்பிட்டி) முதலான இடங்களில் இத்தெய்வம் உை

அறுபது (160) வதனமார்களைக் குறித்து நிற்கும் 'சிவ காவியம் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது. (ப.231) ரிவதனன், படுவதனன், திருப்பாற்கடல்வதனன், கக்காய் |க்கவர்கள். இவ்வதனமார்களுக்கு நாயகமாக விளங்கு வதனமார் பிரபந்தங்கள் யாவும் மங்கலானார் வதனன் ல் செய்கின்றன குறிப்பிடத்தக்கதாகும். 'மங்கலன்ரைக் இந்தமொழி இன்புற்றார் மங்கலனார்' வண்ணமுள்ள மருமருவு மங்கலருடன் வதனமார் சேர்ந்து' என்னும் ட்டாகக் குறிப்பிடலாம்.
தங்கள் பலவாறு சுட்டுகின்றன. வதனமார் யானை கட்டு
:ன்ற பின்பு அம்மணிந்து ளூக் கோடாலி ப்களுமணிந்து ம லீடுகளும் ாருந்தானணிந்தார்
660TITit'
ன்
டாலி
தும் ரிந்து' எனவும் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது. பாற்றப்பட்ட போற்றப்பட்டபோதும் இத்தெய்வங்களின் இந்தியாவை மையமாகக் கொண்டு பேசப்படுகின்றது. றியும் கூறவந்த வதனமார் ஊர்சுற்றுக்காவியம் இருவேறு தய்வம் இந்தியாவினின்று ஈழநாட்டிற்கு வந்த வழிமுறை
டங்கள்
முறை
து அங்கிருந்து மதுராபுரிக்கு வந்து பின் வைகையில் நீராடி வந்து, அங்கிருந்து ஈழநாட்டிற்கு (திருகோணமலைக்கு)
ாட்டியாரம், தம்பன்கடவை, தம்பலகாமம், கங்கை மலை, பட்டிநகர்தாளங்குடா, காரைநகர், கல்முனை, மணர்பிட்டி
]ந்துள்ளது எனக் குறிப்பிடும்.

Page 106
ஆனால், இந்நூலில் குறிப்பிடப்படாதா வன்னிப்பிரதேசங்களிலும், மட்டக்களப்பில் குருக்கள் ம மக்களிடத்திலும் இவ்வழிபாடு இருந்து வருவது அவதான வதனமார் சிந்து சவராறு, வேப்பங்குளம் மின்னேரிக் உறைபவராகக் குறிப்பிடும். மற்றாஸ் மவில் வன்னிவ வதனமாரின் தோற்றமும் வருகையும் பற்றிக், குறிப்பாக வ செய்திகளை விட, வதனமார் சிந்து தரும் குறிப்புக் தன்மையுடையதாகக் காணப்படுகின்றது எனலாம்.
வதனமார் தெய்வம் (1) மதம் சொரிந்த யானை குழுமாட்டை அடக்கி ஆளல், (3) மதங்கொண்ட வெள் நிகழ்த்தி, மாடுகளுக்கு நோய் பிணிதீர்த்து பட்டி பெ. நம்பிக்கை இத்தெய்வத்தை வழிபடும் மக்களிடம் இன்னு
பரந்த வெளிகளிலும் ஆற்றோரங்களிலும் 4 வழிபாட்டுச் சடங்குகள் நடைபெறுகின்றன.
சிற்ப சாத்திர-ஆகம விதிமுறைக்கமை வைக்கப்படுவதில்லை. முகவாடத்தைக் கொம்பத்தில் ை சட்டை, பட்டு, மணிமாலை, சவ்வாத்து அலரி முதலானவி அருகில் அம்பு, வில்லு, கோடரி. கருங்காலிப் பொல்லு, ெ அலரி, பொன்னாவிரசம் பூ முதலானவற்றாலான மாை இத்தெய்வத்துக்கு உகந்த பூமாலைகளாகக் கருதப்ப தெய்வமாக இத்தெய்வம் அமைவதால் இம்மக்களாலேே
வதனமார் சடங்கு
பட்டிகள் வைத்திருப்போர்கள் ஒன்று சே வைத்திருப்போர் எல்லோரும் ஒன்று கூடிப் பஞ்சாங்கம் ! முதல் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில் இச்சட பஞ்சாங்கம் பார்த்தல் என்பர். திருமலை மாவட்டத்தி நடைபெறும். இவ்வழிபாடுநடைபெறும் எல்லா விடயங்க் முறை, ஒரு நாள் தொடக்கம் மூன்று நாட்கள் வரை நை ஒருநாட் சடங்காகவே நடைபெறும்.
வதனமார் சடங்கு ஆரம்பமாகப் பேணுகிறது தமது இல்லங்களையும், பட்டிகளையும் துப்புரவு செய் நிறுத்திக் கொள்வர். இந்நிகழ்ச்சிகளைப் புறத்தூய்ை வைத்திருப்போர் சடங்கு நடைபெறுவதற்கு முன்பாகவே சாய்த்துச் செல்வர்.
வதனமார் சடங்கின் முதல் அம்சமாக பெட்ட அல்லது கட்டாடியார் வீட்டிலே வதனமதர் தெய்வ வழிப இடமிருக்கும். பஞ்சாங்கம் பார்த்த முற்பாடு வெள்ளிக்கி விபூதி அணிந்து பூசாரியார் சிலம்பும் பிரம்பும் கையில் கெ செய்வார். பின் அடியவர்கள் அப்பெட்டகத்தை அம்! இடத்துக்கு பறைமுழக்கம் முன்னே செல்லவும் ஆண்கள் திடலை அடைந்ததும் பெட்டகத்தை இறக்கி வைத்து வி

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், முதலான டம், தேற்றாத்தீவு, கிரான் முதலான பகுதிகளில் வாழும் ரிக்கத்தக்கது. முல்லைத்தீவுப் பிரதேசத்தில் வழக்கிலுள்ள குளம், கந்தளாய் முதலான இடங்களில் இத் தெய்வம் பள நாட்டுப் பாடல், 1980 பக்.58-61) ஒருவகையில் ருகை பற்றித்தரும் வதனமார் ஊர்காற்றுக்காவியம் தரும் *கள் மரபு வழி ஆய்வின் அடிப்படையில் நம்பகத்
ாயினைக் அடக்கி வாகனமாக ஏற்றல், (2) வெறிகொண்ட ளெருமையை அடக்கி ஆளல் முதலான அற்புதங்களை ருகவும், மக்களின் செல்வம் அருள் பாலித்தவர் என்ற ம் இருந்து வருகின்றது.
காட்டில் பரந்த நிலப்பிரப்பிலும் இத்தெய்வத்துக்குரிய
ந்த படிமங்கள் இங்கு வழிபாட்டின் பொருட்டு ]வத்துவதனமார் தெய்வத்தை உருவகித்துக் கொள்வர். பற்றால் இத்தெய்வத்தை அலங்களிப்பர். இத்தெய்வத்தின் வளுக்கயிறு முதலான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். லகளைத் இத் தெய்வத்துக்குச் சூட்டுவர். இப்பூமாலை டுகினறது. காட்டிலும் பரந்த வெளிகளிலும் உறையும் யே இத்தெய்வம் உகந்தேற்றுகின்றது போலும்.
*ர்ந்து நடத்தப் பெறும் வழிபாடு இதுவாகும். பட்டி பார்த்து, வைகாசிமாதத்து வளர்பிறையை யொட்டி வரும் ங்கை ஆற்றுவதற்கான ஆயத்தங்கள் செய்வர். இதனை திலுள்ள கிளிவெட்டிப் பகுதியில் மூன்று சடை சடங்கு களிலும் இவ்வாறு நடைபெறுவதில்லை. வருடத்துக்கொரு டபெறும். முல்லைத்தீவு வன்னிமைகளில் இவ்வழிபாடு
என்பதை அறிந்ததும் பட்டி வைத்திருப்போர் யாவரும் வதோடு மாமிஷம் புசித்தல் முதலான பழக்கங்களையும் மைக்கு உட்படுத்தல் எனக் குறிப்பிடலாம். பட்டிகள் தமது மாடுகளை சாய் சடங்கு நடைபெறும் இடத்துக்குச்
கம் எடுத்தல் என்னும் நிகழ்ச்சி நடைபெறும். பூசாரியார் ாட்டிற்கும் பெட்டகத்தைக் காப்பதற்குமானதனியாதோர் ழமை வெள்ளை வேட்டி உடுத்து உருத்திராக்கம் தரித்து, ாண்டுவதனமார் தெய்வத்துக்கும் பெட்டகத்துக்கும் பூசை மன் திடல் எனப்படும் வதனமார் சடங்கு நடைபெறும் குரவை போடவும் தூக்கிச் செல்வர். பெட்டகம் அம்மன் ட்டு பூசாரியார் கும்பம் வைத்துப் பூசை செய்வார். பின்

Page 107
காட்டுக்குள் சென்று பல மணிநேரம் தியானத்தில் தவம் தியானம் முடித்து வரும் வரையும் ஆலயத்தில் எவ்விதச் இச்சடங்கை நடத்துவதற்கான ஆனுமதியை வதனமாரிட முடித்து வந்து இறைவனின் அனுமதிசடங்கை நடத்தல் கி கிடைத்ததாயின் சடங்கு தொடர்ந்துநடைபெறும், கிடைக் வீடு செல்வர். இந் நிகழ்ச்சியினை இறை ஆனையைப் வழிபாட்டு நெறியால் இறை ஆணையைப் பெறுதல்' என வருவதை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும். சடங்கு அறிவித்ததும்இளந்தாரிகளை அமைத்தல் என்னும் நிகழ் பூசாரியார் இளந்தாரிமார்கள் ஏழுபேரை அ தெரிந்து மாடுகள் பிடித்து வரும்படி ஆணை பிறப்பிப்பா என்பதையும் எப்படியான மாடுகளைப் பிடித்து வரல் இளந்தாரிமார்கள் ஐந்துக்களால் தீண்டப்படாது இருக்கவும் வழியனுப்பி வைப்பார். இவ்விளந்தாரிமார்கள் சிவப்பு போட்டிருப்பர். இதனை இளந்தாரிமார்களை (மாடு பிடித் ஏழு இளந்தாரிமார்களும் பூசாரியாரின் ஆலை செல்வர். செல்லும் பொழுது வெருக்கயிறு (மான் தோலா எடுத்துச் செல்வர். அவர்கள் அங்கு சென்று மாடுகள் நிற செல்லும் என்பதையும் அறிந்து முக்கிய அதர்களிலே ெ பின்புறமாக தியானத்தில் இருந்து வதனமார் குழுமாடு என்பவற்றைப் பாடி வதனமாரைப் போற்றுதல் செய்து வி மாடுகள்தாம் இயல்பாக வரும் வழியை மறந்து அதர்வழிே எழ முடியாது. கதறி விட்டு களைப்பால் படுத்து விடுக கழுத்திலும் போட்டுக் கட்டி விடுவர். இதன் பின்இடுவன் வந்து குழுமாட்டுடன் பிணைத்துக் கோயிலுக்குக் கொண்
இளந்தாரி மார்களைக் காட்டிற்கு அனுப்பிய கள்ளமடை வைத்து நோன்பிருப்பார். இளந்தாரிமார்கள் இருந்து தம் வரவைக் குறித்துக் கூக்குரல் இடுவர். பத் இளந்தாரிமார்களையும் மாடுகளையும் எதிர்கொண்டு அ அப்பொழுது பூசாரியார் கலைக்கு உட்படுத்தப்பட்டு தூக் தெளிவு பெற்று இளந்தாரிமார்களையும் மாடுகளையு வரப்பட்ட மாடுகள் கொம்பும் கழுத்தும் சினங்கில் படு மாடுகளுக்குத் தீர்த்தம் தெளித்து விடுவார். சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் சடங்கே மிக வதனமாருக்கு மடை பரவுதலும் அன்று நடைபெறும் மு சார்ந்த புனிதத் தொழில்பாடு எனக் குறிப்பிடலாம்.
பொங்கல் மண் பானையில் மூன்று வளர்ந்துக: நேர்வைக்கு உட்படுத்திக் கொடுப்பவர். அவரே மூன்று பா பானையைப் பொங்கி முடிப்பவர்பூசாரியார் ஆகும். ஏனை வளர்ந்து ஏற்றியவுடன் ஏனைய அடியவர்களும் தம் வளர்ந் வளர்ந்துகளென்று இளந்தாரிமாருக்கும் மற்றயது தெய்வங்களுளொன்றுமாகஇருக்கும். பொங்குமிடத்தைப்ெ உதாரணமாக கடல் அருகில் உள்ள வெட்டையில்இச்சடங்கு
- ܠ

இருப்பார். இதனை நோன்பிருத்தல் என்பர். பூசாரியார் சடங்குகளும் நடைபெறமாட்டாது. நோன்பின் நோக்கம் ம் இருந்து பெற்றுக் கொள்வதாகும். பூசாரியார்தியானம் டைத்தா கிடைக்கவில்லை என்பது பற்றிக் குறிப்பிடுவார். கவில்லையாயின் சடங்கினைநடத்தாது பெட்டகத்துடன் பெறுதல் எனக் குறிப்பிடலாம். பொதுவாக சிறுதெய்வ ானும் நிகழ்வு விரும்பியோ விரும்பாமலோ நடைபெற்று நடத்ததற்கு சிறை எனக் கிடைத்தது என்பதை பூசாரியார் *சிநடைபெறும்.
ழைத்து அவர்களுள் ஒரு இளந்தாரியைத் தலைவராகத் * அப்பொழுது மாடுகள் எங்கே பிடித்து வரல் வேண்டும் வேண்டும் என்பதையும் குறிப்பிடுவார். அத்துடன் ) நோய்பீடிக்காது இருக்கவும் காவல் செய்துகாப்புக்கட்டி மஞ்சள் ஆகிய உடைய வாடித் துணியை பூநூல் போல் து வர) வழியனுப்புதல் என்பர். னயை ஏற்றுச்சனிக்கிழமை அவர் குறிப்பிட்ட காட்டிற்குச் ல் திரிக்கப்பட்டது) கண்டற் கோடலிமுதலானவற்றையும் கும் நிலைகளையும் அவை கலைத்தால் எப்பாதையால் வளுக் கயிற்றை வைத்து மாடுகள் நிற்கும் இடத்திற்குப் கட்டு அகவல், வதனமார் குழு மாடு கட்டுக் காவியம் ட்டு, குரல் எழுப்புவர். திடீரென இக் குரலோசை கேட்ட யே செல்லும் பொழுது வெளுக்கயிற்றில் சிக்கிக் கொண்டு கின்றன. பின் இளந்தாரி கயிற்றைப் பின்னங்காலிலும் மாட்டை (பிறையல் மாடு) பறைதட்டித்தட்டிக் கொண்டு டு செல்வர். பூசாரியார் இளந்தாரிமார்களின் நன்மையின் பொருட்டு மாடுகளுடன் ஆலயத்தை அடைவதற்கு சிறிது தூரத்தில் சிலுக்குப் பூசாரியாரும் கூக்குரல் இடுவர். பூசாரியார் ழைத்து வரும் பொருட்டு தீர்த்ததுடன் முன் செல்வார். கி எறியப்படுவார். சிறிது நேரத்தின் பின் கலை கலைந்து ம் கோயிலுக்கு அழைத்து வருவார். அங்கு கொண்டு ம்படியாகக் கட்டுவர். இதன் பின் மீண்டும் பூசாரியார் பூசைஇத்துடன் நிறைவெய்தும். முக்கியமான சடங்கு எனலாம். வதனமார் பொங்கலும்
க்கிய நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சிகளை அகத்தூய்மை
ரில் பொங்குவர். பொங்கல் வளர்ந்துகளைப் பூசாரியார் னையையும் ஏற்றி வைப்பார். ஆயினும் நாயக வளர்ந்துப் ப வளர்ந்துகளை நோன்புக்காரர் பொங்கி முடிப்பர் நாயக தினை ஏற்றுவர். நாயக வளர்ந்துவதனமாருக்கும் ஏனைய கடல்நீர்ச்சியார் நாச்சிமார் கட்டம்மாள் முதலான பாறுத்து, அத்தெய்வத்துக்குரிய வளர்ந்தாக அது இருக்கும். நடைபெறுமானால் அது கடல்நாச்சியாருக்காக அமையும்.
ཡོད
الصـ

Page 108
பொங்கல் நடைபெறும் பொழுது மடைபரவல் கடற் கன்னி, கட்டம்மாள், இளந்தாரி, வயிரவர்நாகதம்பி வாழைப்பழம், மாம்பழம், விளாம்பழம், மாதுளம்பழம் வடை, அரியதரம் முதலான பலகார வகைக்களாலும் முதலானவை கொண்டும், மோர், பாணக்கம் கொண் ஒவ்வொரு கும்பத்தின் அருகிலும் பரவப்படும். கும்ப மடைகளுள் பெரியதாகவும் வதனமார் மடை அமையும் அத்தெய்வத்துக்கான காவியங்கள் படிக்கப்படும். வ கருதப்பட்டாலும் அவரது மடையில் தேன் வைக்கப்படு ஆசையுடன் சேகரித்த தேனை குழுமாடுதட்டி விட்டதி மடையில் அதை வைக்கக்கூடாதென ஆணையிட்டதாக வ இங்குவரக் கூடாது' எனக் குறிப்பிட்டதாகக் குறிப்பிடு காவியம், இளந்தாரிமார் காவியம், கடற்கன்னி காவி நாசதம் பிரான் காவியம் என்பன படிக்கப்படும் கா6 உருக்கொண்டு ஆடுவர். அப்பொழுது மக்கள் நேர்க்கட இருந்தமையின் பொருட்டும் நோய் தவை பின் நோய் ம தன்பொருட்டும், மாடுகள் மூலம் பெற்ற 6. பொருட்டும் தமது நேர்கடன்களை ஆற்றுவார். அவ்வகை மாடுகளுக்கு மாட்டின் வலதுகால் சந்தில் சூலக்குறியி அளித்தல் முதலான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பூசாரியார் பொங்கிப் படைத்தும் மடை பரவி ஆடுவார். அப்பொழுது ஆடியவர்கள் தமக்குள்ள குறை என்பர். பொதுவாக பட்டி சம்பந்தமான வினாக்களை மாடுகளின் நோய்தீர்க்கும் பொருட்டு சிறு மருந்துகளும்நீ படைப்பையும் சுற்றி வைக்கப்பட்டிருந்த கற்பூரத்தையுட கும்பம் சொரிதல் நிகழ்ச்சிக்கு ஆயத்தமாவர்.
பூசாரியார் அம்மனாகப் பாவித்த கும்பத்த அவருக்குக் காவலாக வைக்கப்பட்டிருக்கும் கருங்கா ஆற்றுக்கோ குளத்துக்கோ எடுத்துச் சென்று ஆங்கு இ6 கும்பத்துடன் ஆற்றில் மூழ்கி அதனை ஆற்றுடன் கலந்து நீரில் மூழ்கி எடுத்து வெளியில் வைத்துவிட்டு, பூசாரிய மீண்டும் சுவாமியை அலங்கரித்துப் பூசை செய்த பின் மி மீண்டும் பூசாரியார் பூசை செய்து மடைகள் பொங்கல்யா சந்தனம் குங்குமம் முதலான பிரசாதனங்களை வழங்குவ

ஆரம்பமாகும். மடைகள்வதனமார், நாச்சிமார், கூலாச்சி, ரான் முதலான தெய்வங்களுக்குப் பரவப்படும் மடைகள்
N
முதலான பழவகைகளாலும் கொண்டும் கொழுக்கட்டை,
கொண்டும், வெற்றிலை, பாக்கு இளநீர், கற்கண்டு, டும் அமையும். இம்மடைகள் வெள்ளைச் சேலையில் த்தில் பெரிய கும்பமாக வதனமார் கும்பம் அமையும். ம். ஒவ்வொரு தெய்வத்துக்கும் மடை பரவும் பொழுது தனமார் தெய்வம் பரந்த வெளியில் உறைபவராகக் வதில்லை. மங்கலார் தவிர்ந்த ஏனைய வதனமார்களால் சினால் எச்சில்பட்டதாகக் கருதப்பட்டு தெய்வம் தனது தனமார்குழுமாடுகட்டு அகவல் "எச்சில்பட்டநீங்களினி ம் (மகாமாரித் தேவி திவ்விய கணி.ப.230) வதனமார் யம், கடநாச்சி அம்மன் காவியம் வயிரவர் காவியம், வியம் படிக்கும் பொழுது பலர் அத்தெய்வம் போல் டன்களை ஆற்றுவர். மக்கள் அம்மாடுகள் நோய் வராது ாறியது. &
வருவாயின் பொருட்டும், பட்டிகள் மேலும் பெருகும் யில் மாடுகளைக் கோயில்களுக்கு அளித்தல், அத்தகைய
ட்டு விரல், பாத்திரங்கள், பட்டுத்துணிகள், முகவாடம்
ய பின்னரும் செய்யும் பூசையின் போது உருக்கொண்டு களைக் கேட்டுக் கொள்வர். இதனைக் கட்டுச் சொல்லல்’ அடியவர்கள் பூசாரியிடம் வினாவுவார்கள். றுதியில் ரும் ஒதுக்க கொடுப்பர். பின்னர் மடைகளையும் பொங்கல் ம் கொழுத்தி பூசையை ஆரம்பிப்பார். பூசை முடிந்ததும்
நினையும், வதமாருள் எழுந்தருளித் தெய்வத்தையும் லிப் பொல்லினையும் தூக்கிக் கொண்டு அருகிலுள்ள வற்றுக்கெல்லாம் பூசை செய்த பின் பூசாரியார் அம்மன் விட்டு, முந்தருளியையும் பொல்லையும் மூன்று முறை ாரும் அடியவர்களும் அத்தீர்த்தத்தில் நீராடி வெளிவந்து ண்டும் வெட்டுக்கைக்குக் கொண்டு வருவார்கள். இங்கு வற்றுக்கும்தீர்த்தம் தெளித்து மடையைக் கலைத்து வீயூதி பார். இத்துடன் வதனமார் சடங்குநிறைவெய்தும்.

Page 109
D6)6), 6)
செல்வி. சுமைரா அன்வர் - இர
தன்னையிழந்து மண் மலையக மைந்தர்கே துன்பங்களைந்து துய தழைப்பது எப்போது.
விண்ணையளந்து விர் விஞ்ஞான யுகத்தினிே பண்ணை விலங்கிலும்
பாதகம் தொலையாத
நாளிதழ் வானெலப் ட குவிந்திடும் உலகினி( நாளும் உணவின்றி 6 நிலையது தொலையா
சுரண்டப்படுவோர் சேர் செகத்தை மாற்றிடலா துவண்டு போனால், அ
அடிமைத் தளையதை
தடைகள் நெருங்கத்
அறிவீர் மைந்தர்களே! உடைத் தெறியுங்கள் காண்பீர் மாற்றங்களை
குட்டக் குட்ட குனிபவ அனுபவம் சொன்னகள் கொதித்தெழுந்திடுங்க சிறப்பைப் பெற்றிடுவீர்

LDisassy. . . .
ண்டாம் வருடம் -கலைப்பீடம்.
ணை வளர்க்கும் ள! - நீங்கள்
ரங்குறைந்து
தைகள் புரியும் ல! - நீங்கள்
பணிந்திடும் இந்தப் I...?
பற்பல வசதிகள் லே! - நீங்கள் வீடின்றி நசியும் தோ..?
ந்து நின்றாலே ம்! - நீங்கள் அஞ்சி றின்றால், யாரறுப்பார்
தைரியம்பிறக்கும்.
- நீங்கள் போலித் தனங்களை
F.
6, D60)Luj6ir
த! - நீங்கள் ள், குரல் கொடுத்திடுங்கள்

Page 110
விஞ்ஞான வளர்ச்சியில் கணனியின்
சிவசண்முகம் சுதாகரன், குடிசார் எந்திரவியல்
தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் எ6 அலைந்து திரிந்த மனிதன்நாளடைவில் குடும்பங்களாகிஇ நிறைவேற்ற இலகுவான வழிகளைத் தேடி இயற்கை இதிலிருந்து விஞ்ஞானமும் படிப்படியாக வளர் வளர்ச்சியடைந்துள்ள நவீன விஞ்ஞானத்தை மில் கண ஒன்று பிரிக்க முடியாமல் மாறிவிட்டன.
கணனி என்பதற்கு அகராதிகளில் கொடுக்க முன்னரே சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு செயல் தரப்பட்டுள்ள தரவுகளை எண்ணியல் முறையில் செயல் தருகின்ற ஒரு இலத்திரனியல் கருவி என்பதாகும்.
கணனியானது வெவ்வேறு அளவிலும் வெ ஹார்ட்ட்வெயர்Hardware, ஸாப்ட்வெயர் Software என கணனியை உருவாக்க உபயோகப்பட்ட தகடுகள், ஆணி அழைத்தனர்.இதுவே பின்னர் வழக்கமாக மாறியது. இது அவையாவன மத்திய செயலக அலகு (Memory Unit) நி அலகு (Output Unit)என்பன. அத்துடன் கணனிகளை இ மடங்கக்கூடிய பிளாஸ்ரிக் தட்டுகளில் சேமித்து வை அழைக்கலாயினர்.
கணனியின் முக்கிய அலகுகளான மத்திய ெ அலகே கணனியின் உயிர்நாடியாகும். இங்கு தான் கணன சுற்றுக்கள் (Electronic Circuits) யாவும் இங்குதான் உள்ள செயல்திட்டத்தில் உள்ள கட்டளைகள்(Instructions) என செயலக (Processor) அலகின் பிரதான செயலகம் செயல்ட நினைவகம், கட்டுப்பாட்டு அலகு (Control Unit)கணித மூன்றாகப் பிரிக்கலாம்.
நினைவகத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள (Sto எடுத்துச் செயல்படுத்துவதை கட்டுப்பாட்டு அலகு ெ ஒப்பிடுதல் என்பவற்றுரடாகத்தான் கணனியால் எந்தப்பி செயல்திட்ட (Comparison) கட்டளைகளும் பை தரவுகளுக்கென்று ஒரு சங்கேதக் குறியும் (Code) செய6 எண்களோடு சேர்த்து சேமிப்பதால் இவற்றை இனம் க வகைகள் உண்டு.
(i) Random Access Memory (RAM) - g அளவிலும் எப்போதும் எழுதிக் கொள்ளலாம். மின்சார
(ii) Read Only Memory (ROM) - griø56itGT தான் முடியுமே ஒழிய அவற்றை அழிக்கவோ, புதிதாக எ

அவதாரம்
, பொறியியல் பீடம், மூன்றாம் வருடம்
ன்பதற்கமைய ஆதியில் அங்குமிங்குமாகக் காடுகளில்
திலிருந்து சமூகமாக மாறுகின்றபோது தனது தேவைகளை யின் படைப்புகளை உபயோகிக்கத் தொடங்கினான். ச்சியடையத் தொடங்கியது. இவ்வாறாக இன்று னியின் வளர்ச்சியும் அதன் பிரயோகமும் ஒன்றிலிருந்து
கப்பட்டுள்ள வரைவிலக்கணம் தனது நினைவகத்தில்; ) திட்டத்தின் பிரகாரம், தானாகவே இயங்கித் தனக்குத் படுத்தி உபயோகமான தகவல்களாக வேகமாக மாற்றித்
வ்வேறு உருவிலும் காணப்பட்டாலும் தன் பகுதிகளை இரு பிரதான பகுதிகளாகப் பிரிக்கலாம். ஆரம்பகாலத்தில் கள், கம்பிகள் என்பவற்றை பொதுவாக Hardware என நான்கு அடிப்படை செயல் அலகுகளைக் கொண்டுள்ளது. னைவக அ குஉள்இடு அலகு (Input Unit), வெளிபெறு இயக்கத் தேவைப்பட்ட செயல்திட்டங்கள் மென்மையான பக்கப்பட்டிருந்தாலும் இவைகளை Software என்று
சயலக அலகிலும் நினைவக அலகிலும் மத்திய செயலக ரியின் வேலைகள் யாவும் நடைபெறுகின்றன. மின்னியல் ான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதரவுகள், iபவ்ற்றை வாங்கி மறையாக ஒன்றன்பின் ஒன்றாக மத்திய படுத்தும். தொழில்ரீதியாக மத்திய செயலக அலகை (CPU) Lb -5iásás egyepg5 (Arithmatic Logic Unit - ALU) 61607
red) செயல்திட்டத்தின் கட்டளைகளை வரிசைக்கிரமமாக (Fu Japgs. ALU -96.dai sa Tai Gasai (Calculation), ரச்சனையையும் தீர்க்க முடியும், மற்றும் கணனியில் தரவும் னரி எண்களாகவே சேமித்து வைக்கப்படுகின்றன. ல்திட்ட கட்டளைகளுக்கு இன்னொரு குறியும் அவற்றின் ண்டு பணியை மேற் கொள்கிறது. நினைவகத்திலும் பல
ங்கு நாம் தரவுகளை அழித்தழித்து புதிது புதிதாக எந்த ம் தடைப்பட்டால் யாவும் அழிந்து விடும்.
விஷயங்களை கணனியால் பெற்று உபயோகிக்க மட்டும்
"ழுதவோ முடியாது.

Page 111
(iii) Programmable Read Only Memory (F
(iv) Erasable, Progarmmable Read Onl இயங்கினாலும் புற ஊதாக் கதிர்களைப் பாய்ச்சி அழிக்க
கணனி தோன்ற அடிப்படைக் காரணமே வே. தான். இதன் விளைவே "அபகஸ்' (Abacus) என்ற குறிப்பிடலாம். இதிலிருந்து வளர்ந்த கணிதப் பொறிகள்க 1962ம் ஆண்டளவில் தான் முதன் முதலில் கண்டுபிடிக் (Blaise Pascal) என்ற 19 வயது கணிதமாணவராவார்.இ கொம்பியூட்டர் மொழி ஒன்றுக்கும் 'பாஸ்கல்' (Pascal)
இதைத் தொடர்ந்து 1887 இல் ஷேர்மன் வே அட்டைகளை உபயோகித்து கணக்கிடக்கூடிய இயந்தி அமெரிக்கா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகளில் குடிச6 பெற்றது. இதனால் 1896இல் ஹோலரித்தின் தயாரிப்பு ஸ் பிரசித்தி பெற்ற கொம்பியூட்டர் ஸ்தாபனமான IBM உருவெடுத்தது. IBMஇன் பல ஆஸ்தான விஞ்ஞானிகளி கணிதப் பேராசிரியர் ஹவார்ட் ஐக்கன் (Harvard Aiken) 1' (MARK 1) 6T6ip முதலாவது மின்னியக்க கணிதப்ெ உயரம் 8 அடி. இதனுள்ளே ஏழு லட்சத்திற்கும் அதிக நீளமுடைய வயர்களும் உபயோகிக்ககப்பட்டன. (MAR பத்து இலக்க எண்களை பெருக்கிவிடைதரபத்து செக்கன் பெறுகிறது.
1944ம் ஆண்டளவில் ஜோன் வொன் நியூமன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கொம்பியூட்டர்கள் இதன்படியே செயற்படுத்தப்படுகின்ற crete Variable Automatic Computer) atgirp Guit flap Lpalagas (John Mauchly), Gig 6taisiTill (J Eckert) at 1946இல் 30தொன்நிறையுள்ள 'எனியாக்"ENIAC" (E கொம்பியூட்டரைத் தயாரித்தனர். இதைத் தொடர்ந்து இ கொம்பியூட்டர் என்ற பெருமை கொண்ட யூனிவாக் - 1 ( கொம்பியூட்டரை 1949இல் உருவாக்கினார்கள். யூனிஸ் கொம்பியூட்டரின் உதவியால்தான் ஹைட்ரஜன் குண்டு (F
கொம்பியூட்டர் தலைமுறையில் 'யூனிவ கொம்பியூட்டர்கள் என்று குறிக்கப்படுகின்றன. மே கொய்பியூட்டர் என அழைக்கப்பட்டாலும் இவை வெறும் எழுத்யுைம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிை இவ்வாறாக நாளடைவில் கணக்குப்பார்க்க என்று ஆரம்பி செய்ய ஆரம்பித்த போது அதற்கு கட்டளைகள் கொடுக் (SWICH) "ON" என்ற நிலைக்கு 1 என்ற இலக்கமும் கட்டளைகள் எழுதப்பட்டன. இந்த 1,0களினாலான மெ guage) என அழைக்கப்படுகின்றது.
இயந்திரமொழியில் Mark Univac கொம்பி

ROM) - இது ROM நினைவகத்தைப் போன்றது. y Memory (EPROM) - ggayuió ROM gü GLumrav
TO.
கமாக கணக்கிடுவதற்கு சாதனங்கள் தேவைப்பட்டமை கருவியாகும். இதனை நாம் எண் சட்டம் என்று கூட ண்டுபிடிப்பில் இயந்திரமுறையில் கணக்கிடும் கருவிகள் கப்பட்டன. தனை உருவாக்கியவர் பிலெய்ஸ் பாஸ்கல் தற்குநன்றிசெலுத்துமுகமாக 19ம் நூற்றாண்டில் உன்னத என்று பெயரிடப்பட்டது.
ாலரித் (Herman Holerith) என்ற விஞ்ஞானி துளை ரத்தை அமைத்துக் கொடுத்தார். இது அந்நாட்களில் ா மதிப்பீட்டுக்கு பெரிதும் உதவியதுடன் பிரபல்யமும் தாபனம் பல ஸ்தாபனங்களுடன் சேர்ந்து இன்று உலகின் (International Buisness Machine) aisnugoTLDITs னதும் அமெரிக்க ஹர்வார்ட் (Harvard) பல்கலைக்கழக என்பவரினதும் நீண்ட உழைப்பினால் 1944இல் 'மார்க் பொறி தயாரித்து முடிக்கப்பட்டது. இதன் நீளம் 51 அடி, மான உதிரிப்பாகங்களும் 500 மைல்களுக்கு மேலான K1)பத்துக் கூட்டல்களை ஒரு செக்கனில் செய்ததுடன் எடுத்தது. ஆனது கொம்பியூட்டர்சரித்திரத்தில் தனியிடம்
T (Dr. John Von Neumann) )616ötu6Uff @lsmúb($lgju Lif சில வரைவிலக்கணங்களை வகுத்ததுடன் (தற்கால 607) sigat silaliua)Luilab"EDVAC" (Electronic Disய 1952இல் செய்து முடித்தார். இதற்கிடையில் ஜோன் ன்ற இரு பேராசிரியர்கள் இராணுவத் தேவைகளுக்காக
lectronic Numerical Integrator and Calculator)arcip
இவர்கள் உலகில் விற்பனை செய்யப்பட்ட முதலாவது
UNIVAC - 1: Universal Automatic Computer)6TGötp
பார்க்கின் வழி வந்த 'மெனியாக்' (MANIAC) என்ற
(ydrogen Bomb) உருவாகியதாக சொல்லப்படுகின்றது.
ார்க்' கொம்பியூட்டர்கள் முதலாம் தலைமுறைக் லே விபரிக்கப்பட்ட பொறிகள் யாவும் அந்நாளில் கணிதச் செய்கைகளை மட்டுமே செய்தன. எண்ணோடு ல தோன்றக் காரணமாயிருந்தது 'யூனிவாக்' தான். த்ெத பொறிகள் எண்ணோடு எழுத்தையும் பரிவர்த்தனை க வேண்டியிருந்தது. இதற்கு கொம்பியூட்டரில் சுவிட்ச் OFF"என்ற நிலைக்கு 0 என்ற இலக்கமும் கொடுத்துக் ாழி கொம்பியூட்டரின் இயந்திரமொழி (Machine Lan
பூட்டர்களுக்கு செயல்திட்டம் அமைத்துக் கொடுப்பதில்
2
لم .

Page 112
ஒரு வித்தகராக இருந்தDr. Grace Hopper, (இவர்தான்" காரணகர்த்தா) 1952இல் புது செயல் திட்டம் ஒன்றை காத்திருந்தார். ஆனால் கொம்பியூட்டர் 'கிர்' 'கிர்' எ விட்டில் பூச்சி (ஆங்கிலத்தில் பூச்சியை BUG என்பர்)
ஏற்பட்டது. இதனை அகற்றியவுடன் கொம்பியூட்டர் மீண் தயாரிக்கும்போது அதைத் தயாரிப்பவர் ஏதும் தவ ஊட்ப்படும்போது சரியாக வேலை செய்யாதுநின்றுவிடு ʻuq. காலப்பகுதியை கொம்பியூட்டர் வரலாற்றில் முதலாம் த6
அத்துடன் தவறுகளை களை எடுக்கும் பணியை
இதற்கிடையில் மின்னியல் துறையில் ஏற் டிரான்சிஸ்டர் (TRANSISTOR) கண்டுபிடிக்கப்பட்டது.இ கொம்பியூட்டர் உபயோகம் பல மடங்கு அதிகரித்ததே தயாரித்தது. இதில் தரவுகளையும் செயல்திட்டங்களைய அட்டைகளுக்கும் பதிலாக காந்த நாடாக்களும் தட்டு உபயோகப்படுத்தப்பட்டன. அத்துடன் கொம்பியூட்ட ஆய்வுகளின் விளைவாக 1957இல் FORTRAN (FO உருவானது. இதனைத் தொடர்ந்து வர்த்தகக் கணக்குக:ை Language) என்ற மொழி உருவானது. இந்நேரத்தில்தான் 6tailp fuSci) 1964gai) Sihl lay Dartmouth College Purpose Symbolic Instruction Code) 6Taip Glory கொம்பியூட்டருக்கு செயல்நிர்வாகத் திட்டம் (OPERA ஆரம்பித்த 2வது தலைமுறை கொம்பியூட்டரின் காலம் 1
கணனித்துறையில் வால்வுகளின் இடத்தை டிரா விஞ்ஞானியானHarwick Johnson என்பவர் 1953இல்
2O5 L6ait spjpai) go air at Resistance, Condenser, T உதிரிப்பாகங்களை ஒன்றாக தன்னகத்தே சிறிய வடிவில் இக் காலகட்டத்தில் ஜாக் கில்பி (Jack Kilby) என்ப டிரான்சிஸ்டர்களை ஒரு IC யால் இயக்குவதற்கு ம தொழிற்பட்டதுடன் இவற்றை சிப் (CHIP) என்ற சொல் சிறிய சிப் தான் நாம் அன்றாடம் பாவிக்கும் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறாக மின்னியல்துறையில் பாரிய திரு தொழில்முறையாக இன்று உலகிலுள்ளது. அனேகமா பிரித்தெடுத்து அதனை 99.99999 வீதம் தூய்மையான பெறப்படுகின்றன. இதிலிருந்து 1/2 mm தடிப்பில் தட்( நன்றாக தேய்க்கப்பட்டு ஒரு புறத்தில் ஒளிக்குத்த பூச்சிடப்படுகிறது. இச்சிலிக்கன் தட்டு மேல் எங்கெங்கு திரையால் மறைக்கப்பட்டு புற ஊதாக் கதிர்கள் (Ultra V இடப்படாத பகுதி இறுகிக் கடினமாகும். பின்னர் ஒரு இ இறுகிக்கடினமாகிய சிலிக்கன் பகுதியைத் தவிர மற்றவை Engraving) முறை என அழைப்பர். இவ்வாறு சிலிக்கன்ட மீது பீச்சி அவற்றின் துகள்களை படிய விடுவார்கள். இப்

COBOL"என்ற கொம்பியூட்டர் மொழி உருவாக முக்கிய
"யூனிவாக்'இற்கு ஊட்டிவிட்டு முடிவுகளைப் பெறக் ன்ற சத்தத்துடன் இயங்காமல் நின்று விட்டது. இது ஒரு கொம்பியூட்டரின் உள்ளே சக்கரம் ஒன்றில் சிக்கியதால் டும் இயங்கியது. அன்றிலிருந்து ஒரு செயல்திட்டத்தைத் றுவிட்டால் அச்செயல்திட்டம் கொம்பியூட்டருக்கு ம். இத் தவறை கொம்பியூட்டரில் 'பக்' (BUG) என்பர். பக்' (DEBUG) என்றழைப்பர். இந்த 1946-1959 லைமுறை கொம்பியூட்டர்களின் காலம் என்பர்.
பட்ட படிப்படியான முன்னேற்றத்தினால் 1947இல் இது கொம்பியூட்டரின் உற்பத்திச்செலவைக் குறைத்ததால் ாடு நிறுவனம் -IBM - 7000 என்ற கொம்பியூட்டரைத் ம் சேமித்து வைப்பதற்கு துளையிட்ட நாடாக்களுக்கும் dias (65lb (Magnetic Taoes and Magnetic Discs) ரோடு தொடர்பு கொள்ள இலகுவான மொழி ஒன்றின் Rmula TRANslator) என்ற கொம்பியூட்டர் மொழி Tở 6lớuừ6ìg5ịi)ớ9 COBOL (Common Buisness Oriented மாணவர்களுக்கும் போதிக்க ஒரு கொம்பியூட்டர் மொழி gdifluids6ir epauliga)60iigi BASIC (Beginners All Nயை உருவாக்கினார்கள். இக் காலப்பகுதியில் தான் \TING SISTEM) 2 (56ură al Lil l-gl ei 19599ei) 965இல் 3வது தலைமுறைக்கு அடியெடுத்து வைத்தது.
ான்சிஸ்டர்ஆக்கிரமித்துக் கொண்டிருந்தபோது அமெரிக்க C (Integrated Circuit)gá; sair6) 9lgiri, IC-260TITg Transistor மற்றும் இது போன்ற நூற்றுக்கணக்கான கொண்டு ஒரே நேரத்தில் பல காரியங்களைச் செய்கிறது. வர் கணனியின் CPU பகுதியை அவற்றில் உள்ள பல ாற்றினார். இந்த ICக்கள் குட்டிக் கணனி மாதிரியே லால் அழைக்கவும் தொடங்கினர். இந்த வகையான ஒரு Digital கடிகாரங்களிலும், கல்குலேட்டர்களிலும்
ப்பத்தை ஏற்படுத்திய 'சிப்'தயாரிப்பு கைதேர்ந்த நவீன க கடற்கரை மணலில் இருந்து சிலிக்கனை (Silicon) நாக மாற்றி உருக்கி உருளை வடிவ நீண்ட பளிங்குகள் நிக்களாக சீவப்பட்டு ஒவ்வொரு தட்டும் இருபுறத்திலும் DLuitar (Photo Resist) Satirai) faii Quito), altirai) சிலிக்கன் பகுதிகள் வேண்டுமோ அவை ஒரு மறுப்புத் iolet Light) பாய்ச்சப்படும். இதன்போது மறுப்புத்திரை ரசாயன திராவகத்தினால் இத்தட்டு கழுவப்படும்போது கரைந்து போகும். இதைத் தமிழில் ஒளிச் செதுக்கு (Photo குதிகளை உருவாக்கிய பின்னர் சில வாயுக்களைதட்டின் படி மாசுபடிந்த சிலிக்கன் தூய்மையான சிலிக்கன் என்று

Page 113
மாறிமாறிசிலிக்கன்தட்டில் படைபடையாக ஒன்றன்மே Lingas slgifugait (Semi Conductor) Luairauli Quig பின்னர் அலுமினிய துகள்களைத் தூவி ஒன்றுக்கொ நூற்றுக்கணக்கான IC க்களை உருவாக்கமுடியும். இந்த வரையான காலப்பகுதியை கணனியின் 3ம் தலைமுை விதங்களிலும் முன்னேற்றமடைந்ததோடு IBM நிறுவன கணனியைத் தயாரித்து கொம்பியூட்டர் சந்தையில் ஒரு
1970இன் பின்னர் ஆரம்பித்த 4வது ெ கொம்பியூட்டர்கள் ஒரு மைல் கல்லாகவே விளங்குகின்ற விலைகூடிய சமூகத்தின் அறிவுஜீவிகளுக்கு மட்டும் உ காலகட்டத்தில் ஸ்வே, ஜொப்ஸ், ஸ்டீவ் வோஸ்நியக் என் கணனியின் அளவுதிறன் கொண்ட கணனியைத் தயாரித் பெயரை வைத்து மக்களிடையே பிரபல்யப்படுத்தின வெளியிட்டனர். சமூகத்தின் சகலதரப்பினருக்கும் உதவக் Home Computer, Personal Computer 6tat -960psis சொல்லால் அழைக்கப்படத் தொடங்கிவிட்டன. இதைத் APPLEதயாரிப்புக்களை போட்டியில் வென்றன.
இந்த 4வது கொம்பியூட்டர்களின் தலைமு கைத்தொழில்நாடுகளும் 5வது தலைமுறைக் கொம்பியூ இயங்கும் சக்தி வாய்ந்தவையாகவும், எண்ணையும் எ மனிதக் குரலையும் புரிந்து பணிபுரிவதுடன் பிரச்சினை (Artificial Intelligence) sig pflegặp 6ör (olas5ft6ióT L இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது 'புே கொம்பியூட்டர் மொழியாகும்.
இவ்வாறாக வளர்ச்சியடைந்த கொம்பியூட்ட மக்களின் விஞ்ஞானம், மருத்துவம், வியாபாரம், பே அளப்பரிய சேவையாற்றி வருவதுடன் கணனி வலை மைந்தர்கள் யாவரையும் ஒன்றாகக் கட்டி அணைக்கும் க
மனிதன் சேமிக் சிறந்ததுநல்ல6

ல் ஒன்றாக படியும் போது அவைகள் ஒவ்வொரு பகுதியும் களாக இயங்குகின்றன. ஒவ்வொருTransistor பகுதியும் “ன்று இணைக்கப்படுகின்றன. இத்தட்டுக்களிலிருந்து C தொழிநுட்பத்துறை கணனி உலகில் புகுந்த 1965-1970 2றக்காலம் எனலாம். இதன்போது கணனித்துறை பல மும் IBM - 360 என்ற பல புதிய வசதிகளைக் கொண்ட அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தது.
காம்பியூட்டர் தலைமுறையில் அப்பிள் (APPLE) ன. ஏனெனில் அந்நாட்களில் IBM போன்ற நிறுவனங்கள் தவக்கூடிய விதத்தில் கணனிகளைத் தயாரித்தனர். இக் ாற மாணவர்கள் மலிவான - சிறியஅமைப்புடைய - பெரிய து கண்காட்சியில் அகரவரிசைப்டிமுதலிடம் பிடிக்க என்று ார். இதைத் தொடர்ந்து APPLE - II எனத் தயாரித்து கூடியதாக இருந்த APPLE கொம்பியூட்டர்கள் காரணமாக Liu G 96irati Personal Computer up Guib PC at airp தொடர்ந்துதான்IBM நிறுவனமும்PC க்களைத் தயாரித்து
மறைக்காலம் நடந்து கொண்டிருந்த போது உலகின் பல ட்டர்களின் ஆய்வில் இறங்கி, கண்ணிமைக்கும் வேகத்தில் "ழுத்தையும் மாத்திரமன்றி குறியீடுகளையும் (Symbols) களுக்குத் தர்க்க ரீதியில் அலசி தீர்ப்புக் கூறும் செயற்கை - நவீன கணனிகளை எம்முன் உருவாக்கியுள்ளனர். ரோலொக்' (Pro Log) என்ற செயற்கை அறிவுத்திறன்
துறையானது இன்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி ாக்குவரத்து, குற்றவியற்தடுப்பு என பல துறைகளிலும் Cajapaju9grlitas (Computer Networks) parafiar ாலம் எம்மிலிருந்து வெகு தூரமில்லை.
குஞ் செல்வங்களுள்
வளாகிய மனைவியே
-நபி(ஸல்) அவர்கள்
N

Page 114
அவன் வருவான்
இ.யூரீதர், பொறியியல் பீடம், இறுதிவருடம்
“சா! என்ன இருந்தாலும் இப்படி முடிச் விளையாடிக் கொண்டிருந்த அணில் குஞ்சுகளை வெ 'மாலைமதியை’ மேசையில் போட்டாள். போராட்ட வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தக் கதை அவ: இருந்து மீளமுடியாதவளாய் மீண்டும் முகட்டைப் பார்த்து தனிமையில் அமைதியாய் இருந்தது.
சூரியனின் பொற்கிரணங்கள் மெல்ல யன்ன நித்திரையை விட்டு எழும்பினான். 2 மணிவரை நித்திை சில மணிகள் அயர்ந்து போனதைப் பொறுக்க முடியாதவி தன்னை சிங்காரிக்கத் தொடங்கினாள்.
'எங்கே அவசரமாய் வெளிக்கிடுறாய்? ே முடிப்பதற்குள், 'இல்லையணை, இண்டைக்கு கெமிஸ்றி என்றவாறே அவனுக்குப் பிடித்தமாதிரியே தலையை சீவி ஒட்டுப் பொட்டையும் இமைகளுக்குநடுவில் ஒட்டிக் கொ சைக்கிளில் 'விர்' எனப் பறந்தாள் நிருபா, மகளின் திடீ பார்வதி.
'கொழும்பு பஸ் இவ்வளவத்துக்கும் வந்தி வேகமாக சைக்கிளை உதைந்து கொண்டிருந்தாள் அ6 மெல்லுடலில் மைந்தனின் மலரும் நினைவுகளை வருடிக்
இயற்கையின் எழில் கொஞ்சும் மலையகத்தில் மாணவனான மைந்தன் ஆறு மாத இடைவெளிக்குப் பின், கால் பதிக்கவும், நிருபாவின் சைக்கிள் அவனுடன் மோத
அந்த அழகிய கிராமத்தின் ஒதுக்குப்புற வய6 அவர்களின் சந்திப்பிடங்கள். 'தம்பி எப்ப வந்தனி, இந்த கேட்ட ஏதா வேண்டுதலுக்காகத்தன்னை மறந்து கும்பிட்டு ஊரில நிம்மதியா லவ் பண்ணவும் விடாதுகள்' என்று ம
‘என்னக்கா நீ இப்ப பின்னேரங்களில் வீட்டி கேட்க, சும்மா தொடர்பில்லாத மறுமொழிகள் சொல்லிக் ெ இல்லை. சுத்திச்சுத்தி மடக்கிக் கொண்டு தான் இருந்தாள். என்று சின்னவள் முடிப்பதற்குள், அவளின் வாயைப் பெ பார்வதிக்கும் இவர்களின் கதை விழுந்து கொண்டுதான் இ அடைந்தவளா? இவர்களின் வயதுகளையும் தாண்டித்த பெடியன்தங்கமானவன். இன்னும் மூன்று மாதத்தில படிப் அறிந்து வைத்துக் கொண்டு மகளை கண்டும் காணாதது ே என்ன சாட்டு சொல்லலாம் என்று யோசித்தவாறே தலை

சிருக்கக்கூடாது' என்றவாறே முகட்டில் ஆனந்தமாய் ளித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிருபா, சலிப்புடன் வ்களையும், புரட்சிகளையும் பற்றியே அநேக கதைகள் ரின் நெஞ்சை நெருடத்தான் செய்தது. அந்தக் கதைக்குள் க் கொண்டிருந்தாள். அப்போது ஓர் அணில் குஞ்சு மட்டும்
ல் வழியே எட்டிப் பார்க்க, படபடப்புடன் அவசரமாய் வராமல் புரண்டு கொண்டிருந்த அவளுக்கு தன் கடைசி 1ளாய் அவசர அவசரமாய் காலைக் கடன்களை முடித்து,
தேத்தண்ணி கூட குடிக்கேல' என்று பார்வதி கேட்டு பேப்பர் கிளாஸ் இருக்கு, உனக்கு சொல்ல மறந்திட்டன்' பக்கவாட்டில் பறக்க விட்டுக் கொண்டாள். மறக்காமல் ண்டவளாய் புள்ளிமானெனத்துள்ளிக் கொண்டு லேடீஸ் ர் உற்சாகத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள்
ருக்கும்' என்று எண்ணியபடி அந்தக் கல்லு றோட்டில் வள். இளங்காலையின் மெல்லிய தென்றல், அவளின்
கொண்டிருந்தது.
ன் அந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இறுதி வருட கிள்ாலியின் எழில் கோலத்துடன் அந்தக் கல்லு றோட்டில் வும் கணக்காக இருந்தது.
ஸ்வெளியும், தொப்பிளாத்தை வைரவர் கோவிலும் தான் வரியத்தோட படிப்பு முடியுதோ' என்று தம்பிராயண்ண முடித்தவள் போல மெல்நழுவினாள் நிருபா "சாசனம் னதுக்குள் கடிந்து கொண்டான் மைந்தன்.
ல நிக்கிறதே இல்லை. எங்க போறனி?' என்று சின்னவள் காண்டிருந்தாள்நிருபா, ஆனால் சின்னவளும் விடுவதாக 'எனக்குத் தெரியும் நீஏன் கோவிலுக்கு போறனிஎன்று' ாத்தினாள் நிருபா மாவிடிச்சதை அரிச்சுக் கொண்டிருந்த இருந்தது. அவள் மட்டும் என்ன திடீரென ஐம்பது வயதை rனே வந்தவள். அவளுக்கும் விசயம் தெரியும். 'அவன் புமுடியுமாம்' என்று அவனைப் பற்றிய விபரங்களையும் பால் விட்டிருந்தாள். இப்படியிருக்க இன்று அம்மாவுக்கு வாரிக் கொண்டிருந்தாள் நிருபா,

Page 115
/ー
நாட்கள்நகரத தொடங்கின. ஒரு மாத விடுமு முன்னரை விட இம்முறை நிருபாவுடன் மகிழ்ச்சியாக கனவுகளுடன் பஸ் ஸ்ரான்டை அடைந்தான் மைந்தன் காணப்பட்டாள்நிருபா, 'ஏய் என்ன நீ சின்னப்பிள்ளை வேலை எடுத்துக் கொண்டு வந்துடுவன் தானே, அது மாட்டன்' என்று அவளுக்குச் சமாதானம் சொல்லிக் ( முகத்துடன் வழியனுப்பிய நிருபாவால் இம்முறை முடிய தவித்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு ஏதாவது சொல் வேணும் மாதிரி உ என்று அவளுக்கே புரியவில்லை. 'இண்டைக்கு கிளால் சொல்லிக் கொண்டிருந்தது. இல்லை, அவர் வெளிக்கிடு என்று சற்று தெளிந்தவளாய், பொய்ச்சிரிப்பொன்றை உ கொழும்பு பஸ்ஸில கொடுத்துவிடு' என்றான். அவளுக் அவன் அங்கு படிக்க மாட்டான் என்று. அதனால் நிறைவ. ஏறுங்கோ' என்று ஒருவன் கத்த, வழமையாகநிதானமிழ மனமின்றி, சட்டென்று அவளின் கையைப் பிடித்துக்கடை அவனின் கண்ணிர்த்துளி பட்ட கையால் இறுதிவரை ன சுகமாய் போய்ச் சேர்ந்த கடிதம் வந்தால்தான் அவளைக்
இன்றைக்காவது கடிதம் வராதா, என்று ஏ தெரிந்தான். அவனின் கைவண்ணம் பதிந்த வண்ணமடல் மெளன விரதத்தை வீட்டில் முடித்துக் கொண்டாள். நிரு விடியாது. இன்று கடிதம் வந்திருப்பதை ஊகித்துக் கொண் கூட்டிக் கொண்டு முருகனட்டை போக வேணும் என்று நி
"கனநாளாக பிரச்சனையொன்றும் நடக்கே தெரியேல' என்று தம்பிராயண்ணை ஆருக்கோ சொல்லி தொடங்க "அறுவாங்கள் பழையபடி தொடங்கிட்டாங்க ஓடலாம். இது ஒண்டும் செய்ய ஏலாது' என்று நச்சரித்த6
அமைதியான மர நிழுலுக்கும் சின்ன வட்ட ஆறுதலாக இருந்தது. கந்தரிடம் ஒரு மாதிரிக் கதைச்சு 6 கொடுத்திருந்தான். பெண்கள் என்றுமேதங்கள் சொந்தக் அவளுக்கு நினைவு வந்தது. இன்னும் முப்பதுநாள்தான் வேலையும் கிடைச்சுது என்றால்..' என்றவாறே தன் க நிருபா டீச்சர்.
எங்கோ தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த சத் சனங்கள் வெளியிலஅல்லோலகல்லோலப்பட்டுக் கொண் ரோஜாவை வரைந்து கொண்டிருந்த அவள் பக்கத்து வீ கேட்டு திடுக்கிட்டாள். 'பிள்ளை பார்வதி இன்னும் நீங்க மணியகாரச் சந்தி மட்டும் வந்திட்டாங்களாம்!, ஒரு மண விடுவது? கடைசியாய் நகைப்பெட்டியை மட்டும் எடுத் இந்த நேரம் நீங்க லீவில வந்தது. அல்லது இந்த இரண்டுகு நடக்கத் தொடங்கினாள். திடீரென நிருபா "கொஞ்சம்

றை எப்படி போனது என்றே தெரியவில்லை. என்றாலும் 5க் கழித்த பொழுதுகளை எண்ணியவாறே எதிர்காலக் அங்கு என்றுமில்லாதவாறு பிரமை பிடித்தவள் போல மாதிரி அழுகிறாய்! இன்னும் மூன்று மாதத்தில ஊரோட *குப் பிறகு உன்னை விட்டுவிட்டு ஒரு இடமும் போக கொண்டிருந்தான். முன்னர் பலமுறை அவனைச் சிரித்த வில்லை. ஏதோ இனம்புரியாத ஏக்கத்தால் உள்ளுக்குள்
ள்மனம் உறுத்திக் கொண்டிருந்தாலும் என்ன சொல்வது போட் ஓடாட்டிலும் நல்லம்' என்று அவள் உள்மனம் கிற நேரத்தில நான் 'உம்' என்று கொண்டிருக்கக் கூடாது, திர்த்தாள். நிரு, கடிதம் மட்டும் மறக்காமல் அடிக்கடி கே தெரியும் ஒரு கிழமைக்கு மேல் கடித9ம் வராவிட்டால் ாகத்தலையசைத்தாள். "சரி, பாஸ் எடுத்தாக்கள் பஸ்ஸில க்காத மைந்தன் கூட ஒருகணம் கலங்கியவனாக பிரியவே சியாக ஒருமுறை முத்தமிட்டவனாய் பஸ்ஸில் ஏறினான். கயசைத்துக் கொண்டிருந்தாள் நிருபா, இனி அவனின் கலகலப்பான நிருபாவாகக் காண முடியும்.
ங்கிய அவளுக்கு போஸ்ட்மன் கூட கடவுளாகத்தான் b இவளின் கைகளில் தவழ்ந்தபோதுதான் தனது 10 நாள் பாவின் சிரிப்பொலி கேட்காவிட்டால் பார்வதிக்குக்கூட டவளாய் தனது நேர்த்திக்காக பின்னேரம் நிருபாவையும் னைத்துக் கொண்டாள்.
ஸ், நாடு வலுஅமைதியாய் இருக்கு என்ன அழிவுக்கோ க் கொண்டிருக்க, 'கும்,கும்' என்று ஷெல் சத்தம் கேட்கத் ள் பொம்பர் எண்டாலும் பறவாயில்லை. பார்த்து பார்த்து வாறே மதகுக்குள் பதுங்கிக் கொண்டார் தம்பிராயர்.
னுகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அவளுக்கு மைந்தன் தான் போக முதல் இந்த வேலையை எடுத்துக்
காலில் நிற்பது பாதுகாப்பானது என்ற மைந்தனின் கருத்து
இருக்கு அதற்குப் பிறகு அவருக்கு இந்த ஸ்கூலிலேயே ற்பனைக் குதிரையில் வானில் பறந்து கொண்டிருந்தாள்
தம் கொஞ்சம் கொஞ்சமாய் பெருத்துக் கொண்டிருந்தது. டிருப்பது கூடத் தெரியாமல் எழுதிய மடலில் ஒரு சிவப்பு ட்டு பாக்கியக்காவின் குரல் வித்தியாசமாக ஒலிப்பதைக் வெளிக்கிடேல்லையே முழுச்சனமும் வெளிக்கிடுதுகள் ரித்தியாலத்திலை எழும்பட்டாம்' எதை எடுப்பது எதை துக் கொண்டு வெளிக்கிட்ட பார்வதி. 'நல்ல காலமப்பா மருகளோடநான் என்ன பாடுபட்டிருப்பன்' என்றவாறே ல்ெலனை உடன வாறன்' என்று வீட்டை நோக்கி ஓடிய
ཡོད

Page 116
அவள் அந்தரப்பட்டவளாக கொப்பியின் அடியில் ஒளித் ஓடி வந்தாள், பயத்தினால் சின்னவள் அழத் தொடங்க அ வைக்க ஆறிஞ்சிநிலம் கூட கிடைக்காதவர்களாய் மக்கள்
***鲁
நான் அப்பவும் சொன்னனான். இந்தச் சொந்த சனங்களோட சனங்களாக இந்த மரத்தடியில் இருந்திருக் வந்த சோத்துக் கவளத்தை அவரிடம் கொடுத்தாள்.
இந்தக் கடிதத்தை என்னண்டு அனுப்புறது என் கிடைக்குள்ள இவளொருத்திக்கு எங்கேயோ யோசனை’ உலகுக்கு வந்தவளாக நிருபா 'அணே, குளிச்சு 10 நா: என்றாள். உனக்கு கியூவிலநிண்டு அதில குளிக்கேலாது, 'இவ்வளவு சனத்துக்கு முன்னால போய்நின்று குளிக்கிற விடிய மூன்று மணிக்கு எழும்பி குளிப்பம் என்று மனதுக்
'கிடுகும் சோடி நாப்பது ரூபாயாம் அ போட்டிருக்கலாம் ' என்று சொல்லிக் கொண்டு ெ மனதளவுக்கேனும் சின்ன அறுக்கை தேடினாள். 'அே கொண்டிருந்த சின்வளுக்கு அருகில் நின்றவாறு, நிருபாத சென்ற பார்வதிநிலைமையைப் புரிந்து கொண்டவளாய் போறனோ தெரிலே' என்று ஏங்கினாள்.
'சீர் ஊரில எண்டால் என்ன மாதிரி சாப்பா
சோத்துக் கவளத்தைத் தான் கொடுக்க வேண்டியிருக்கு'
இரவு ஒன்பது மணியிருக்கும் சனம் படபடப்ட "ஐயோ! என்ர சின்னவனும் அங்க கம்பளில தானே படி கணம் நெருப்பாக நின்றாள்.
அங்காலயும் கலவரம் தொடங்கிட்டுதாம். என் ஏங்கிக் கொண்டிருந்த சனம் இரவிரவாக நித்தின் நியூஸ்களையெல்லாம் கேட்டுக் கொாண்டிருந்தது.
விரும்பியோ விரும்பாமலோ அடுத்த நாள் விட்டுவிட்டு பேப்பருக்கு அடிபட்டுக் கொண்டிருந்தது.
'அங்கால சனத்துக்கு வேணும், அதுகளை அ என்று தம்பிராயர் சொல்லிக் கொண்டிருந்தார் அவருக்ெ
'இந்த முறை போனமாதிரி இல்லையாம், இ சொல்ல 'நல்ல காலம் என்ர மனுஷன் இந்த நேரத்தில அா கொண்டிருந்த பார்வதி, மகள் நிருபாவைப் பார்த்தாள். டே பார்வதிக்கே எப்படி அவளை சமாதானப்படுத்துவது என்
'பிள்ளை, நீ ஒண்டுக்கும் யோசியாதை அவ முறையாக தனக்கும் தெரியும் என்பதை மகளுக்கு கா அவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த அழுகையைத் அவள் கண்ணீர் பட்டு, கையில் வைத்திருந்த சிவப்பு (

து வைத்த அந்த லெட்டரை மட்டும் எடுத்துக் கொண்டு அவளின் கையையும் பிடித்துக் கொண்டு றோட்டில் கால்
வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தனர்.
க்காரச்சனங்களோடை இருக்காமல் முதலேதனிய வந்து, கலாம். இந்த மனுசன் கேட்டுதே' என்றவாறே கொண்டு
று யோசித்துக் கொண்டிருந்தாள்நிருபா. 'சனம் கிடக்கிற என்று எரிந்து விழுந்தாள் பார்வதி. அப்பாேதுதான் நிஜ ள் ஆகுது. சட்டையெல்லாம் மணக்கிறமாதிரி இருக்கு' அங்க பார் உன்ன மாதிரி எத்தினைநிக்கிதுகள் என்று', திலும் பார்க்க குளிக்காமல் விடலாம்' என்றவள்நாளை தள் நினைத்துக் கொண்டாள்.
ல்லது இதில ஒரு சின்னக் கொட்டிலைத் தன்னும் காண்டு வந்திருந்த கொஞ்ச பனை மட்டைகளால், ண அம்மா இஞ்சையொருக்காவானை' என்று அழுது 5ாயை ஒரு சின்னச்சிரிப்புடன் கூப்பிட்டாள். வியப்புடன் 'கடவுளே, இந்த நேரத்தில் இதுக்குள்ள என்ன செய்யப்
டு கொடுக்க வேண்டிய நேரத்தில இவளுக்கும் இந்தச் என்று தனக்குள் நொந்து கொண்டது அந்தத் தாய் மனம்,
|டன் ஏதோ கதைத்து ஆரவாரப்பட்டுக் கொண்டிருந்தது. டிக்கிறான் என்ன நடந்ததோ' என்று கேட்ட நிருபா ஒரு
ரமனுஷன் அங்க. அண்ணன் அங்கதம்பிஅங்க. என்று 0ர கூட இல்லாமல் சைக்கிளைச் சுத்தி உலகத்து
பொழுது புலர்ந்தது. சனம் பாண் கூயூவுக்கு நிக்கிறதை
டிச்சுக் கலைச்சால்தான் எங்களுக்கு ஒரு விடிவு வரும்' கன்ன, பெடியள் ரெண்டும் வெளியில.
ாண்டு பக்கமும் சனம் செத்திருக்காம்' என்று பாக்கியம் வ்கிருந்து வந்திட்டுது' என்று மனதுக்குள் ஆறுதல் பட்டுக் பயறைந்தது போல அழுது வீங்கிய கண்களுடன்நின்றாள். ாறு தெரியவில்லை."
ான்ர இடத்தில ஒன்றும் நடந்திராது' என்றவாறே முதல் ட்டிக் கொண்டாள். இதை சற்றும் எதிர்பாராத நிருபா 5 தாயின் மடியில் வைத்துத் தேம்பிப் தேம்பி அழுதாள். ரோஜாவுக்கு தீட்டிய மை கடிதத்தின் மறுபக்கத்தையும்

Page 117
/
சிவப்பாக்கிக் கொண்டிருந்தது.
இரண்டு கிழமையாகநீண்ட மனப் போராட்ட
அவளுக்கு அன்று அகதிக்கப்பல் ஒன்று வருகிறது என்ற
மீண்டும் ஒரு உற்சாகத்துடன் சனத்துடன் சனமாகக் கப் வந்து கொண்டிருந்தவர்களிடம் தன் மைந்தனைத் தேடினா உறவினர்களை கட்டிப் பிடித்து அழுதவர்களாக, தங்க சொல்லிக் கொண்டிருந்தனர். இவைகளை கேட்டுக் கொன சுற்றுவது போல இருந்தது. அப்போது கடைசி ஆளாக திலீப்"பை கண்டவுடன் ஏதோ இனம்புரியாத ஏக்கத்தி கொண்ட திலீப் 'நிருபா ஒண்டும் யோசிக்காத கடை இன்னும் அஞ்சு பேரும் அங்க ஒரு முகாமுக்கு வந்தனாங் கண்டால் தான் எப்படியும் 'வருவன்' என்றும் உன் சொன்னான்' என்று அவன் சொல்லத் தான் நிருபாவுக்கு 'தாங்கள் ஒரு அஞ்சு பேர் தான் சின்னக் காயங்களு மறைவுக்குள் படுத்து வந்தது பற்றியும் இன்னும் நிை கொண்டிருந்தான். கடைசியாக தங்களுடன் படிக்கும் ' வந்ததாகச் சொன்னான். ஆனால் இன்னும் அங்கால பக்க
条**
நாட்கள் மாதங்களாகின. இன்னொரு நாட்டின் நிலவிக் கொண்டிருந்தது. மக்கள் தங்கள் சொந்த மண்ணு
வாழக்கூடியவாறு மாற்றியிருந்தார்கள்.
முகட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சோடி மீண்டும் வந்து இணைந்த போது மனதில் ஒரு ஆ6 என்று மாலைமதியைத்திட்டியவாறு 'என்ர மைந்தனுக்கு என்று சொல்லிவிட்டிருந்தவர். இப்ப பிரச்சனையில்லாதப
பேதை மனம் சமாதானப்பட்டுக் கொண்டது.
இனிமையான காதல் நினைவுகளை இரை தலையசைக்க இதமான தென்றல் மைந்தனின் சேதி சொல் மைந்தன்வாங்கித் தந்த பணத்தைச் சாந்தப்படுத்தும் ம வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருந்
e
இவள் நீங்கினால் சுடுகிற
நெருங்கினால் குளிர்கிற இவ்வற்புதத்தீயை எங்ே

N
துடன் பேப்பரையும், நியூசையும் கேட்டுக் கொண்டிருந்த சேதி எடியது. தனது குல தெய்வத்தை வேண்டியவளாய் பல் வந்த இடத்துக்குச் சென்றாள். பனித்த கண்களுடன், ள். உணர்ச்சிக் கொந்தளிப்பில், மிஞ்சிவந்தவர்கள் தங்கள் ள் மரண அவலங்களை, நெஞ்சை உருக்கும் வண்ணம் Tடிருந்த நிருபாவுக்கு, மைந்தனையும் காணாமல் உலகமே கப்பலிலிருந்து இறந்கிய மைந்தனுடன் கூடப் படிக்கும் ல் அவனிடம் ஓடினாள். அவளின் ஏக்கத்தைப் புரிந்து சியாக அங்க மிஞ்சின ஆக்களில நானும், தமைந்தனும் 5ள். மைந்தன் அடுத்தடுத்த கப்பலில வருவான். உன்னைக் னை ஒன்றும் யோசிக்க வேண்டாமென்றும் சொல்லச் 5 மீண்டும் புத்துயிர் வந்தது போன்ற பிரமை ஏற்பட்டது. டன் இரண்டு இரவு முழுக்க அந்த ஆத்தம் கரையின் ரய நம்பமுடியாத கதைகள் எல்லாம் திலீப் சொல்லிக் பண்டார'வின் உதவியினால் தான் தாங்கள் உயிருடன் ம் நிலைமை பதட்டமாக இருக்கின்றது என்றும் கூறினான்.
ாதலையீட்டால் மீண்டும் ஒரு தற்காலிக அமைதிநாட்டில் க்குத்திரும்பித்தங்கள் "பேய் நகரத்தை'ஓரளவு மனிதர்
நநிருபா தனிமையில் விட்டுச் சென்ற அணிலுடன் அதன் வல் பிறக்க, நிஜ உலகுகக்கு வந்தவளாய், 'விசர்க்கதை' ஒண்டும்நடந்திராது. திலீப்பிடம் எப்படியும்தான் வருவன் டியால் கொஞ்சநாளிலவந்திடுவார்' என்றவாறே அந்தப்
மீட்டியவாறு, வயல் வெளியின் பசும் பொற் கதிர்கள் ல, தன் மனதுக்கு பிடித்த ஒரே வேலையான, போக முதல் ழலைகளிடம் அந்தக் கசங்கிய கடிதத்தை கைப்பைக்குள் தாள்நிருபா டீச்சர்
gil
து;
க பெற்றாள்.
திருவள்ளுவர்.

Page 118
மனித ஆளுமை பற்றி பிரச்சனைக
பீ.எம்.ஜமாஹிர், விரிவுரையாளர், மெய்யியல்
தனிமனித சமூக வாழ்க்கையில் நாம் அடிக் அது எதைப் பற்றி ஆராய்கிறது. அது எவ்வாறு வளர்ச் ஆளுமை என்ற எண்ணக்கருவை வரையறை செய்வது கt தொடர்புபட்டும் தொடர்புபடுத்தப்படாமலும் சாதாரண கொள்ளப்படுவதால் ஆகும். ஆளுமை அல்லது அதனை என்னும் ஆங்கிலச் சொல் என்ற (Personality Persona) அர்த்தம் கொள்ளப்பட்டாலும் ஒருவன்தங்கிக் கொள்ளுL பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பதையே குறித்துநிற்கிற பிறரைக் கவர்கின்றார். எவ்வாறு பிறரை ஒரு வேளையில்து எனலாம். ஆனால் இதை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்
இன்று சமூக வாழ்வில் ஆளுமை என்ற மனி விளக்கம் கொடுக்கப்படுவதாகவும், பேசப்படுவத உணரமுடியுமேயன்றி விளக்க முடியாது. இவ்வித மனி தனிநபர்களை அவ்வப்போது உலக அரங்கில் இனங்காட்டி மாகாத்மா காந்தியடிகளின் மோகனப் புன்னகையானது அ நின்றது. தமிழ்நாட்டில் சாதாரண நாடகக் கூத்தாடியாகவும் மக்கள் திலகம் என்ற எம்.ஜி.ஆர். தன் மரணம் வரை நீ அவருக்காக தீக்குழித்ததும், இன்று அது ரஜனிகாந் அலை காரணம் என்ன? இந்த வரைவிலக்கணத்துக்கு உட்ப நிகழ்காலத்திலும் சிலர் அதிகமாக கொண்டு காணப்படுவ நிறைவேற்றிக் கொள்வது வரலாற்று ஆளுமை. அவ்வா, ஆனால், உளவியல் ஆய்வாளர்களின் கருத்தின் படிநாம் சிலர் உற்சாகம் மிகுந்தோராகவும், வித்தியாசமானநடை உ கொண்டவராகவும், துடிப்பு மிக்கவராகவும் இருக்க தனித்துவமான ஓர் ஆளுமையைக் கொண்டுள்ளனர் என்
ஒருநபர் பேசுவது, சிந்திப்பது, மற்றவருடன் ட முறையும் அவருக்கு உரித்தான தனித்துவ இயல்பினைக் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. என நபருக்கே சிறப்பாக அமைந்த சிந்தனைப்பாங்கு, நடத்தை கொள்ளலாம். இந்த தனிநபர் வேறுபாட்டையு ஆளுமைக்கோட்பாட்டாளர்கள் முயன்று வந்துள்ளார்க பிடிப்புகள், உளவியல் கருத்துகள் ஆகியவற்றின் அடி ஆளுமைக் கோட்பாடாகும். ユ
இவ்வகையில் ஸிக்மன்ட் பிராய்டின் (18 பெற்றதாகும். மன வைத்தியரான இவர் தனது கோட்பா பகுதிகளாகப் பிரித்து விளக்குகிறார். அவையாவன

ளும் பிராய்டிய விளக்கமும்
துறை
கடி உரையாடிக் கொள்ளும் ஆளுமை என்பது என்ன? சியடைந்தது போன்ற ஆய்வுகள் அவசியம் எனலாம் டினமாகும். ஏனெனில் பரந்த கருத்தில் உளவியல் ரீதியில் மனித நிலையிலும், கல்வியியல் ரீதியிலும், விளக்கம் விளக்கப் பயன்படுத்தும் 'மனிதக் கவர்ச்சியை குறிக்கும் இலத்தீன் மொழிலிருந்து வந்தது. இது முகமூடி என்று ம் வேடம், அவர் வகிக்கும் கதாபாத்திரம், பிறர் அவரைப் து. இந்நோக்கில் ஒருவர் எப்படித் தோன்றுகிறார். எப்படி ாண்டுகிறார் என்னும் சமூகத்தூண்டல் மதிப்பே ஆளுமை ளலாம் என்பதே இங்குள்ள கேள்வியாகும்.
தக் கவர்ச்சி பெளதீக ரீதியான உடலமைப்பை வைத்தே ாகவும் உள்ளது. உண்மையில் இதை மனிதனால் த ஆளுமை அல்லது கவர்ச்சி மக்களின் மனிதர்களாக டயுள்ளது. இவ்வகையில் இந்திய சுதந்திரப் போராளியான அவர் பக்கம் அன்று கோடிக்கணக்கான மக்களை கவர்ந்து , பின் சினிமாநட்சத்திரமாகவும் இருந்து முதலமைச்சரான ண்ட காலம் ஆட்சிலியிருந்தும், மக்கள் அவ் அப்போது யாகவும், மக்களை தனிமனிதக் கவர்ச்சிவசிகரிப்பதற்கு டுத்த முடியாத பண்பை கடந்த உலக வரலாற்றிலும், தால் மக்களை தம் பக்கம் கவர்ந்து தமது நோக்கங்களை றாயின் இப்பண்பு ஒரு சிலருக்கு மட்டும்தான் உரியதா? ஒவ்வொருவரும் ஒரு ஆளுமையைக் கொண்டுள்ளோம். -டைபாவனையுள்ளவராகவும், வேடிக்கைகளில் விருப்பு முடியும் எனினும் ஒவ்வொருவரும் தமக்கே உரிய பதே உண்மை. -
பழகுவது, தவிரவும் பொதுஇடங்களில்நடந்து கொள்ளும் கொண்டதாக இருக்க முடியும். இது குறிப்பிட்ட நபரை வே தான் ஆளுமை என்னும் பதம் ' ஒரு தனிப்பட்ட , உணர்வுகள்' ஆகிய அம்சங்களைக் குறித்துநிற்பதாகக் ம், வளர்ச்சிப் போக்கையுமே கண்டறிவதற்கு ள். இங்கு ஆளுமையைப் பற்றிய ஆராய்சிகள், கண்டு ப்படையில் ஆளுமை எனும் கருத்தினை விளக்குவதே
56- 1939) ஆளுமைக் கோட்பாடு மிகப் பிரபல்யம் ட்டை விளக்க மனதை ஒரு பரிமாற்று வசதிக்காக மூன்று
༄༽

Page 119
இட் -ld
இதனை ஆங்கிலத்தில் (Instigate) என அழை கூறானது ஒருநபரின் மிக அடிப்படையான உயிரியல் ரீதி குழந்தை இதை மட்டும் தான் கொண்டு பிறக்கிறது. இதுத கிடையாது. எப்போதும் இன்பந்தான் இதற்கு இலக்கு, ! தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.
9&sub- (Ego)
இது காவலாளி போன்றது. வெளியுலகுட6 காரியத்தை செய்யலாமா, அது எம்க்குச்சரிப்பட்டு வரும என்ற உணர்ச்சிக் கூறானது கிளர்ந்து எழும் போது தொழிற்பாடாகும். இவ்வகையில் அகமானது ஒருவனி பொறுப்பாக இருக்கிறது. அதாவது பகுத்தறிவுக்கு ஒவ்ெ கட்டைகளுக்கும் இடையில் ஒரு மத்தியநிலையை அகம்
9isuasib (Super ego)
சட்ட திட்டங்களை மதித்து நல்லொழுக்க கொள்ளல் அதியகத்தின் இயல்பாகும். கிட்டத்தட்ட எ அவசியம் அல்லது நான் செய்ய வேண்டும் என்ற வை இருக்கும் போலீஸ் காரணாக இனங்காணப்படுகிறது.
இந்த இட், அகம், அதியகம் என்ற மூன்று கட்டமைப்பிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. நாம் இ ஹிந்திப்படங்களைப் பார்க்கும் போது அப்படங்கள் இன நக்மா, ஊர்மிலா, மீராபக்ஷி போன்றவர்களின் பட சாதாரணமாக ரசிக்க முடியாமல் அவஸ்தைப்படுவதைநி: இணைந்து இயங்குவது புரியும்.
சிக்மன்ட் பிராய்டின் உயிரியல் ரீதியான ஆளு ஓர் ஊற்றாகச் செயற்பட்டு வருகிறது. இது மனித வ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகவுள்ளது. இது ஒழுங்கு படுத்தி வருவதுடன் சரியான நடத்தையையும், இருந்து வருகிறது இவ்வடிப்படையிலேயே மனித ஆளு
மேற் காட்டப்பட்ட மூன்று நிலைகளையும் வளர்ச்சிக் கட்டங்கள் முக்கியம் பெறுகிறது. ஒரு பிள் வரையிலுள்ள நான்கு வளர்ச்சிக் கட்டங்களை இதில் அ வருடத்துக்குள் பல விதமானநிலைகளைக் கடக்கிறது. இந் தீர்மானிக்கின்றன. இந்தக் கட்டங்ளில் ஏதாவது கு தோற்றுவிக்கும் என்றகிறார் பிராயிட் அந்தநிலைகளைப்
6) ITulely gaitu flapa) - (The Oral State)
இப்பருவத்தில் குழந்தைக்கு பாலியல் இன் குப்புதல், சப்புதல், விழுங்குதல் முதல்
1

க்கலாம் . இந் 'இட்' என்று அழைக்கப்படும உணர்ச்சிக் யான உத்திகளை பிரதிநிதித்துவம் செய்கின்றது. பிறக்கும் ான் மனிதனின் ஆதாரச் சக்தி இதற்கு நீதிநெறியெல்லாம் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டில் இது இன்பம் காணும்
* கவனத்துடன் செயற்படக்கூடியது. ஒரு குறிப்பிட்ட ா என்றெல்லாம் தர்க்க ரீதியாக சிந்திக்கக்கூடியது. 'இட்' ம் அதனைக் கட்டுப்படுத்துவது அகத்தின் பிரதான ன் நடத்தையை ஒருங்கிணைந்து நெறிப்படுத்துவதற்கு ாத "இட்' உணர்ச்சிக் கூறுக்கும் யதார்த்தத்தின் முட்டுக் வகிக்கிறது.
ப் பண்புகளைப் பேணி நடத்தையைக் கட்டுப்படுத்திக் மது மனச்சாட்சி என்று சொல்லாம். இது நான் செய்வது கையிலேய சிந்தித்துச் செயல்படுகின்றது. இது நமக்குள்
றும் ஒருவனின் ஆளுமையின் வளர்ச்சி நிலையிலும் ன்நாட்களில் குடும்பத்தோடு தொலைக்காட்சியில் தமிழ், *றைய கவர்ச்சி நட்சத்திரங்களான மனிஷா கொய்ராலா, ங்களாயிருந்தால் அப்படங்களில் வரும் காட்சிகளை னைத்துப் பாருங்கள். இந்த இட், அகம், அதியகம் மூன்றும்
நமை அணுகுமுறையான "இட்' மனித ஆளுமைக்கான 'ளர்ச்சியின் உந்து சக்தியாகவுள்ளது. இதனை அகம் தவிர அதியகம், இட் என்பதையும், ?அகத்தினையும் தவறான நடத்தையையும் நிர்ணயிக்கும் மனச்சாட்சியாக மைநிர்ணயிக்கப்படுவதாக பிராய்ட் விளங்குகிறார்.
விட பிராய்டின் ஆளுமையில் உளப்பாலியல் பருவ ளையின் பிறப்பிலிருந்து அதன் கட்டிளமைப்பருவம் வர் விளக்குகிறார். ஒரு குழந்தையானது தன் முதல் ஐந்து தநிலைகள்தான் ஒருவரின் பின்னாளைய ஆளுமையைத் றைபாடு ஏற்பட்டால் அது ஆளுமைக் கோளாறைத் பின்வருமாறு பகுத்து விளக்குகிறார்.
பம் தரும் முக்கிய அவயமாக வாய் இருக்கிறது. இதில் யவற்றால் திருப்தியடைகிறது. அதாவது தாயின்

Page 120
முலைக்காம்பைச் சுவைப்பதிலும், கை குப்பு நிலைக்கும் ஒருவரின் ஆளுமைக்கும் உள்ள நிலையில் இன்பம் கொஞ்சம் தோற்றம் ம காணலாம். உதாரணமாக அறிவு வேட்கைய அல்லது மனனோய் வைத்தியர் போன்று பேசு
(556, g5, gaitu flapa) - (The Anal State)
சுமார் இரண்டு வயதில் ஆரம்பமாகும் இப்ப தாமதித்து அதை அடக்கி வைத்து வெளியேற்.
Lingpigli Gait gaitu filapa) (The Phallic State)
இப்பருவம் சுமார் 3வயதில் தொடங்கலாம்.இ மூலமும் காட்டுவதன் மூலமும் இச்சை மிகு மகிழ்ச்சி கொள்கிறது. இப்பருவத்தில் தான் பி ஆண் குழந்தை தாய் மேல் இச்சை கொள்ள தந்தையின் மேல் கோபம் வருவதையும் குறிக்
இதே போன்று பெண் பிள்ளைக்குதன் தந்தை மேல் வெறுப்பு வருவதையும் குறிக்கும். இ:ை தாயின் மேல் ஆசைப்படும் குழந்தை தனது கொண்டால் தன் ஆண்குறியை வெட்டி விடு தந்தையை நேசிக்கவும் தொடங்குகிறான். ந நிலையைப் புரிந்து கொள்கிறான். இதன தொடங்குவதுடன் பிராயிடின் மனப் பிரிவுகள் மூலம் சட்டதிட்டங்களை மதித்து நல்லொழுக கொள்வான் என்பதே பிராயிடின் கருத்த குழந்தையின்நிலை வேறாக அமைகிறது. இங் ஆண் குறி இல்லையே என்பதினால் தான் இவ்வெண்ணம் அடி மனதிலிருந்து வெளிட எதிர்பால் தன்மையும் உண்டாவதாக விளக்கு
LD60psilapa) (The Genital State)
ஐந்து அல்லது ஆறு வயதிலிருந்து குமரப்படு நிலைக்குட்படுகின்றன. மேலே விபரித்த மூ வேகத்தில் ஒரு நீண்ட உறக்க நிலை ஏற்படு ரீதியான பாலியல் முதிர்ச்சி நிலையொன்று ஆரம்பமாகிறது. இதில் தனிப்பட்ட ஒவ்வொ வளர்ந்தோருக்கான பாலியல் நிலை இன்பத்ை
ஆரோக்கியமான ஆளுமை ஒன்றின் வள வருவதாக பிராயிட் கருதினார். இதனால் மேற்கண்ட திருப்தியினைப் பெறுவதற்குஇடமளிக்க வேண்டுமென்று எதிர்கால ஆளுமையில் தாக்கம் ஏற்படுத்துகிறது என். கொள்ளும் அனுபவங்கள் வயது முதிர்ந்த நிலை வரைபு பண்புக் கூறுகளின் அபிவிருத்திக்கான அடித்தளத்தையி
1 (

வதிலும் குழந்தைக்கு இன்பம் கிடைக்கிறது. இப்பருவ தொடர்பு மிகவும் நுட்பமானது. இந்த வாய்வழி இன்ப றி ஒருவர் வளர்த்த பிறகு வேறுவிதங்களில் இன்பம் ால் நிறைய புத்தகங்களை வாசிப்பவராக இருக்கலாம் பவராக இருக்கலாம்.
நவத்தில் குழந்தை மலத்தை வெளியேற்றுவதிலும், சற்று றுவதிலும் இன்பம் பெறுகிறது.
க்கட்டத்தில் குழந்தை பாலுறுப்புக்களைக் கையாளுவதன் த்த கனவுகளைத் தோற்றுவித்துக் கொள்வதன் மூலமும் ராயிட் குறிப்பிடும் ஈடிபஸ் சிக்கல் ஆரம்பமாகிறது. இது பதையும் தாயை அடைய குறுக்கே தடையாக நிற்கும் கும்
மேல் ஆசை வருவதும், தடையாயிருக்கும் அம்மாவின் த பிராயிட் எலக்ட்ரா சிக்கல் என்கின்றார். இவ்வழியில் முறையற்ற பால் தொடர்பு விருப்பை தந்தை தெரிந்து வாரோ எனப் பயம் கொள்கிறது. பின்பு ஒரு கட்டத்தில் ாள் செல்லச் செல்ல குழந்தை குடும்பத்தில் தந்தையின் ால் இந்த ஈடிபஸ் சிக்கலும் மனத்தினுள் மறையத் ரில் ஒன்றான அதியகம் தோன்றத் தொடங்குகிறது. இதன் க்கப்பண்புகளை பேணி நடத்தைகளைக் கட்டுப்படுத்திக் ாகவுள்ளது. அப்பாவின் மேல் ஆசைப்படும் பெண் கு, பெண் குழந்தை தனக்கு ஆண்குழந்தைகளைப் போல் அதிர்ச்சியும், பொறாமையும் உண்டாகிறது என்றும் படுவதன் மூலமாகத்தான் ஆண், பெண் வேறுபாடும் கிறார்.
நவம் வரை பிள்ளையின் பாலியல் ஆசைகள் அமைதி ன்று வளர்ச்சிக் கட்டங்களையும் தொடர்ந்து வளர்ச்சி வதையே இந்நிலை குறிக்கிறது. இப்பருவத்தில் உடல் தோன்றத் தொடங்குவதுடன் கட்டிளமைப்பருவம் ருவரிடமும் எதிர்பாலாரின் மீது விருப்பு ஏற்படுவதோடு தயும் பெற்றுக் கொள்ளும் விருப்பம் உண்டாகும்.
ர்ச்சியில் இப்பருவங்கள் முக்கிய இடத்தினை வகித்து பருவங்களிலுள்ள குழந்தைகளுக்கு போதியளவான ம் அச்சந்தர்ப்பத்தில் ஏற்படும் விரக்திநிலை பிள்ளையின் றும் இப்பருவங்களின் போதும் ஒரு பிள்ளை பெற்றுக் பில் தொடர்ந்து வரக்கூடிய பல்வகைப்பட்ட ஆளுமைப் டுகிறது எனவும் பிராயிட் நம்பினார். உதாரணமாக குத

Page 121
நிலையிப் பருவத்தின் போது இடம்பெறக்கூடிய தண் சுகாதாரப் பழக்கங்களின் பயிற்சிமுறைக்கு எதிர்விளைவு கொடுமை, நாசக்காரத்தன்மை போன்ற மனப்பாங்குகள் கட்டத்திற்கு செல்வதில் எதிர் கொள்ளக்கூடிய ஒழுங்க் கடுமையான மனவெழுச்சி சீர்குலைவுகளை கொண்டு வ
இவையனைத்தையும் தொகுத்து நோக்கு செலுத்துகிறது. ஆளுமை வளர்ச்சியில் உயிரியல் சூழ்நிலைக்கும் தொடர்பு உண்டு என்பது மறுக்க கோட்பாட்டின்படி பாலியல் உணர்ச்சியே முக்கியத்து அனுபவங்கள் வெளிப்பட சந்தர்ப்பம் கிடையாத போது வெளிப்பட்டு அவன் நடத்தையை தீர்மானிப்பதாக இரு பருவத்திலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பருவ முழு ஆளுமை அமைவதாக பிராயிட் கொள்கிறார். இ ஆளுமையின் வளர்ச்சி பற்றியும் முதன் முதலில் சில உt கூறிய கோட்பாடுகள் ஏற்படுத்திய தாக்கம் எந்த உளவி முடியாத உண்மை. இன்னும் புதிய புதிய ஆய்வுகள் பி இதற்குச் சான்றாகவுள்ளது. ஆனால், மனித ஆளுமையி ஆய்வு நிராகரிப்பதாகவுள்ளது. தவிரவும் ஆண் - ெ விவாதத்துக்குரியதாகும். மொத்தத்தில் ஆளுமைக் கோட் எடுகோள்களின் தொகுப்பாக அமைகிறது அது மன தீர்மானிக்கின்றன என்பதை தனிப்பட்ட ரீதியிலும் சமூக
-
மனதில் உறுதிவே வாக்கினிலே இனில்
நினைவு நல்லது ே நெருங்கின பொரு கனவு மெய்பட வே கைவசமாவது விை தனமும் இன்பமும் தாரணியிலே பெரு
1 (

னைகளுடன் கூடிய அடக்குமுறைத் தன்மை கொண்ட னைக் காட்டும் கோபத்தின் வெளிப்பாடாக ஒழுங்கீனம், வளர்ச்சியடைய முடியும். ஒரு கட்டத்திலிருந்து அடுத்த னங்களும் இடர்பாடுகளும் நீண்ட கால ரீதியான மிகக்
முடியுமென பிராயிட் கருதுகிறார்.
பிடத்து, உளவியல் ஆளுமை பற்றி அதிக அக்கறை வறுகளுக்கும், உடலமைப்புக்கும் மரபு நிலைக்கும், முடியாத உண்மையாகும். பிராயிடின் ஆளுமைக் வம் பெறுவதாகவுள்ளது. இளமைப் பருவ பாலியல் அடிமனதில் அடக்கப்பட்டுப் பின் அவனை அறியாமல் க்கின்றது. மேலும் இவர் கருத்தில் ஆளுமை குழந்தைப் திலிருந்து வந்த பெறுபேறுகளிலிருந்துதான் மனிதனின் வ்வகை விளக்கம் மனக் கோளாறுகள் பற்றியும் மனித ண்மைகளை பிராயிட் உளப்பகுப்பு ரீதியில் இனங்கண்டு பல் கோட்பாடும் ஏற்படுத்தியதில்லை என்பதும் மறுக்க ராயிட்டை அடிப்படையாகக் கொண்டு வெளிவருவது ல் கூடுதல் பங்கு கொள்ளும் ஆத்மீகத்தை பிராயிட்டின் பண் வேறுபாட்டில் எதிர்பால் உறவு பற்றிய கருத்து பாடானது மனித இயல்பு பற்றிய அளவையியல் ரீதியான ரித இயல்பைப் பற்றிய அவனது இயல்பை அவை தியிலும் விளக்கிநிற்கின்றது எனலாம்.
ண்டும்,
மை வேண்டும்;
பண்டும்,
ர் கைபட வேண்டும்;
ண்டும்,
ாவில் வேண்டும்;
வேண்டும்,
மை வேண்டும்
- மகாகவிபாரதி
N

Page 122
தண்டனைக் கோட்பாடுகளும் அதி
எம்.ஐ.அப்துல் மஜீட், மெய்யியல்துறை, இரண
தண்டனை என்றால் என்ன என்பதைப் பற் விளக்குவது நலன் பயக்கும். ஏனெனில் குற்றமொ பேசப்படுகின்றது. கண்களுக்குப் புலப்படாத மனிதனில் நேரத்தில் குற்றங்கள் உருவெடுக்கின்றன. இக் குற்றங் பண்ணுவதை நாம் கண்டு கொள்ளலாம். இவ்வாறு மன அவற்றை அகற்றி விடவும் ஒழுங்கீனமான செயல் ஒன கொள்ளப்படுகின்ற ஒரு சாதனமே தண்டனையாகும். ெ செய்கின்றது. இத் துன்பம் மனிதன் புரிகின்ற குற்றச் செய
ஒழுக்கவியல் அடிப்படையில் ஆராயப்படுக தொடர்பைக் கொண்டுள்ளது. குற்றம் தண்டனை, ட பயன்படுத்துவது, சித்திரவதை போன்றவை பாரதூர் சட்டவியலில் தண்டனைப்பகுதியில் எழுகின்ற ஒழுக்கப்
அரசாங்கங்கள் தண்டனையை நிலைநிறுத்து கொள்ளை, களவு, ஊழல், துஷ்பிரயோகம், மோசடி, பே வழங்குகின்றது. சிலவேளைகளில் நேர்மையான அறவ வழங்கப்படலாம். அரசாங்கம் விதிக்கின்ற வரிகளை எதி தண்டிக்கப்படுவதைக் காணலாம். உதாரணமாக மகாத் வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் என்பவ ஆனால் இவரின் போராட்டம் சமூகத்துக்குநன்மையளிக் தீயொழுக்கத்தைப் பரப்பவும், நல்லொழுக்கத்தை தடுக் செயற்படுத்தப்படுவதை அறநூல்கள் நுணுகி ஆராய்கின்
தண்டனையின் முக்கிய நோக்குநாட்டின் விதி நிலைநிறுத்துவதாகும் தண்டனை பற்றிநாம் பார்க்கும் டே ஆராய்வது பயனுள்ளதாகும். இந்த வகையில் தண்ட தண்டனை முறைமைகள் மூன்று விதமாகப் பாகுபடுத்தப்
01. மக்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க ே
02. சீர்திருத்தக் கொள்கை
03. துன்பத்துக்குத் துன்பம் தரும் தண்டனைச்
01. மக்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டு
குற்றம் புரிந்த ஒருவனுக்கு வழங்கப்படும் இருப்பதை உறுதிப்படுத்துவது இக் கொள்கையின் நோ முன்வைக்கப்படுகிறார். மற்றவர்களை நல்வழிப்படுத்தகு இது தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதிக்கவில்லை பூரணத்துவத்தைப் பாதிக்கவில்லையா? என்ற கேள்வி மறந்து அவனை ஒரு விலங்காகவோ அல்லது அறிவற்ற சாத்தியமாகும். என்றும் இதனை ஒரு காட்டுமிராண்டித்த ܢܠ
1

) ல் காணப்படும் பிரச்சினைகளும்ட
7L/zzió GnuGSL Lió
ரிநாம் விளங்கிக் கொள்வதற்கு முதல் குற்றங்கள் பற்றி ன்று நிகழ்கின்ற நேரத்தில்தான் தண்டனை பற்றிப் ) காணப்படுகின்ற தீய பண்புகள் செயலுறுப்பெறுகின்ற கள் தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் தீங்கை உண்டு ரிதனில் காணப்படுகின்ற தீய பண்புகளை இனங்கண்டு ாறை தவறு எனச் சுட்டிக் காட்டுவதற்கும் உருவாக்கிக் மய்யியல் தண்டனை என்பதை துன்பமென வரையறை ல்களுக்கு வழங்கப்படுகின்ற நீதியாகும். கின்ற தண்டனைக் கொள்கைச் சட்டத்தோடு நெருங்கிய பாரபட்சம், நீதி, உண்மை, மனிதனைக் கருவியாகப் rமான பிரச்சினைகளாகக் காணப்படுவதுடன் இவை பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.
வதில் குறிப்பிடத்தக்களவு பங்காற்றுகின்றன. கொலை, ான்ற பல்வேறான குற்றங்களுக்கு அரசாங்கம் தண்டனை ழியில் செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளுக்கும் தண்டனை ர்த்து இயக்கங்களை ஆர்ப்பாட்டங்களை துவங்குவோர் த்மா காந்தி பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ற்றை வழிநடத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். கக்கூடியதாக அமைந்தது. ஆகதண்டனையின் மூலமாக கவும் முடியும். எனவேதான் தண்டனை அற வழிப்படி
றன.
முறைகளைநிலைநிறுத்தி, ஒழுக்கமான கட்டுக் கோப்பை பாதுதண்டனை முறைகளையும், அதன் வரலாறுகளையும் னை வழங்கும் முறைகளை அடிப்டையாகக் கொண்டு படுகின்றன. அவை முறையே
வண்டும் என்பதற்காக தரப்படும் தண்டனை
கொள்கை
ம் என்பதற்காகத்தரப்படுகின்றதண்டனை
தண்டனையைப் பார்த்து மற்றவர் குற்றம் புரியாமல் க்கமாகும். அதாவது குற்றவாளி சமூகத்துக்து மாதிரியாக றித்த குற்றவாளிகருவியாகப் பயன்படுத்தப்படுகின்றான். யா? அவனின் சமூகத்திலான கெளரவத்தை அல்லது களை ஒழுக்கவியல் எழுப்புகின்றது. மனிதன் என்பதை ஒரு பொருளாகவோ கருதிஇம்சைப் படுத்துவது எப்படிச்
னமான செயல் என்றும் உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
المـ
O3

Page 123
இத்தண்டனை வழங்கப்படுகையில் தண்டனை பெறுப என்ன இரண்டும் சமமே. உதாரணமாக ஒருநாட்டைக் ை திறமையற்ற ஆசிரியர்கள் தவறு செய்யாத மாணவ முறைமையின் விளைவாகக் காண்கின்றோம். ஏனையே முன்வைக்கப்படும் வாதமாகும். இது ஆராயப்பட வேண்
குற்றத்துக்கு ஏற்றபடி அல்லாமல் பிறர் அஞ் பின்வருமாறு கூறினார். 'குதிரைகள் திருடிய குற்! திருடியதற்காகவல்ல. இனிமேல் குதிரைகள் திருட்டுட தண்டனை முறையை விளங்கிக் கொள்ளலாம். தூக்கு எண்ணும்போது அவற்றால் தண்டனை பெற்றவன் ம பார்த்தால் மனிதனை வெறும் கருவியாக கையாளவில் மற்றவர்களை எச்சரிக்கும் வகையில் தண்டனை விதிக் கடுமையாகவும் நீதிபதி தண்டனை விதிக்க முற்படுவ செய்தவனுக்கும் மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்தை செ காட்டலாம்.
02. சீர்திருத்தக் கொள்கை
குற்றம் புரிந்தவன் ஒழுக்கத்தைச்சீர்திருத்தமு: தண்டிப்பதில் சீர்திருத்தமா? அல்லது தண்டனை வழங் கொள்கை விளக்குகிறது. அடிப்படையில் துன்பம் இல்ல தண்டனையை வழங்குவது சிறந்தது. இதற்குப் போ, தண்டிப்பதை விட்டுவிட்டு குற்றத்துக்கான காரணத்தை அ தற்காலக் கோட்பாட்டாளர்கள் உடலுக்குக் கடுமையான ஆகவே தண்டனையில் துன்பத்தை குறைப்பதை ஏற்றுக் இச்சீர்திருத்தக் கொள்கையின் படி குற்றம் ெ வேண்டும். கல்வியில் சீர்திருத்தம். மன்னிப்பு, தண்ட6 முக்கிய காரணங்களான வறுமை, அறியாமை, தீயபழக் வேண்டும். குற்றவாளியை சீர்திருத்திக்கல்வி புகட்டவே செலுத்த வேண்டும். கடவுளின் சிறந்த பண்பு அன்பாகும்
ஒருவனைச் சீர்திருத்த அவனுக்குக் கல்வி பு வழிகள் இருக்க இவைகளில் எவ்வகை வழிமுறைகளை பிரச்சினையாகும். இத்தண்டனை முறைப்படி தூக்குத்தல் படி தூக்குத் தண்டனையை எவ்வகையிலும் ஒப்புக் கொ
உடலுக்குத் துன்பம் தரும் தண்டனையை வைக்கப்படுவது என்பவை சில வேளைகளில் பாரியதன காணும்போது ஏற்படும் துன்பம்தான் கடுமையானதண்ட பின்வருமாறு கூறினார்கள். 'சில தீய செயல்கள் உள்ள மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படும் கவ6ை அப்பாவங்களை அழித்து விடுகின்றன". எனவே இக் கெ வைப்பதில்தான் உண்மையான பயன் அமைந்துள்ளது.

ート பன் தீயவனாக இருந்தாலென்ன, நல்லவனாக இருந்தால் ப்பற்றி ஆள்வோர்நிரபராதிகளைத் துன்புறுத்துவதையும், களுக்குத் தண்டனை அளிப்பதையும் அத் தண்டனை ர்திருத்துவர் என்பது இத்தண்டனைமுறைக்குச் சாதகமாக ாடியதாகும். ம்படி தண்டிப்பதை விளக்க மேனாட்டு நீதிபதியொருவர் த்துக்காக உன்னைத் தூக்கிலிடுவது நீ குதிரையைத் போகாமலிப்பதற்காகவாகும்'. இக்கூற்றிலிருந்து இத் த் தண்டனையைத் தவிர மற்றவகைத் தண்டனைகளை ர்றவர்களை விட திருந்த நேரிடுகிறது. இந்த வகையில் லை என்பது புலனாகின்றது என வாதிடுவோரும் உளர். கும் போது நிலைமைக்கு ஏற்றபடி சற்று நிதானமாகவும் து நியாயமாகும். ஆக குற்றமொன்றை முதலாவதாக தவனுக்கும் தண்டனை வழங்குவதில் நீதிபதி வேறுபாடு
னைவதுதான் இக்கொள்கையின் நோக்கமாகும். குற்றத்தை காத முறைமையைக் கைக் கொள்வதா? என்பதை இக் ாத தண்டனையை வழங்குவதிலும் பார்க்க துன்பம் உள்ள திய காரணம் கற்பிக்கலாம். தீவிர சீர்திருத்தவாதிகள் அறிந்து குற்றவாளியை சீர்திருத்த வேண்டும் என்கின்றனர். பாதிப்பை விளைவிக்கும் தண்டனையை எதிர்க்கின்றனர். கொள்ளலாம்.
சய்வதை ஒரு நோயாகக் கருதி அதனைக் குணப்படுத்த னைக் குறைப்பு வழங்குவதோடு குற்றம் செய்வதற்கான கம், கெட்ட குழல் ஆகியவற்றைப் போக்க வழி செய்தல் ண்டும். கைத்தொழில் கற்றுக் கொடுக்க வேண்டும். அன்பு . அன்பால் கடவுள் யாவரையும் திருத்துகிறார்.
கட்டுவது, அன்பு செலுத்துவது மன்னிப்பது போன்ற பல ப் பயன்படுத்தி ஒரு குற்றவாளியைத் திருத்துவது என்பது ண்டனையை ஏற்க வழியில்லை. பண்பட்ட மனச் சான்றின் ள்ள வழியில்லை.
விட சிறைத் தண்டனை இருட்டறையில் அடைத்து ாடனகளாகப்படுகின்றன. சமூகம் தன்னை வெறுப்பதைக் னையாகப்படுகின்றது. எனவேதான்நபி (ஸல்) அவர்கள் ா. இவற்றுக்குப் பிரத்தியேகமான தண்டனை கிடையாது. தான் இவற்றுக்கானதண்டனையாகும். அக் கவலைகளே ள்கைப்படிதான் செய்ததீமையின் தீயவிளைவை சிந்திக்க

Page 124
03. துன்பத்துக்குத் துன்பம் (பழிக்குப் பழி)
மற்றவனுக்கு இழைத்த துன்பத்தை, இழந்த நோக்கமாகும். பொதுவாகப் பார்க்கும் போது இது பழிவ 'கண்ணுக்குக் கண்', 'பல்லுக்குப்பல்' என்பதை இக் கொள் மிகுந்து காணப்பட்டது. மிருகங்களிடம் பழிக்குப் பழிவ வளர்ச்சி வரலாற்றையே முடக்கி விடக்கூடியது என்றும் 6 அனுபவித்தவன் தன் வெறியினால் எதிரிக்கு இழை எண்ணித்தான் பழிக்குப் பழி வாங்குவதை கட்டுப்படு தோன்றுகின்றது. கிராமத் தலைவர்களை தலைமைய தீர்மானிக்கப்பட்டது. இவர்களே அக் காலத்தில் ஒரு நீதி
சமூகத்தை நிலையானதாக வாழவைக்க சமூக எந்தளவு சாத்தியம் என்பது பிரச்சினையாகும். கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இவ்விதிகளை விதிகளென பாதுகாப்பது என்ற கேள்விக்கு கிடைத்த விடைதான் தண்
பெரிய குற்றங்களுக்கு குறைந்த தண்டனை வழங்கப்படுவதையும் நாம் காணலாம். உயிராபத்தி தண்டிக்கப்படுகின்றான். ஆனால் ஒருபிடி சோறு கொடுக் நிரபராதியாக்காட்சியளிக்கிறான் எனLord Macarlary எ அதில் சிறிய மீன்கள் மாட்டிக் கொள்ள பெரிய மீன்கள் இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் கூறினார்கள். இதிலிரு அறியலாம்.
அடிப்படையில் தண்டனைகள் பாரபட்சம், நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் இது நடைமுறைய அமைப்புக்களைப் பொறுத்து நாம் தண்டனைக் கெ முதலாளித்துவத்தைப் பாதுகாக்கவே நடைமுறைப்படுத் இங்கு குற்றச்சாட்டை முதலாளித்துவவாதிகள் சமவுடை ஆதிக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் வசமாகநீதியையும் ச நலனையே பேண முற்படுவதை நாம் அவதானிக்கலாம். செயற்படுத்த விளைவதையும் காணலாம். உண்மையில்,
ஒரு சமுதாயம் அதன் வளர்ச்சியையும் தை சிலவகையான கட்டுக்கோப்புக்கள் இருப்பது அவசி கொள்ளலாம். ஆனால் இத் தண்டனை பொதுவா படைத்தவன்கையில் இல்லாததாகவும் இருத்தல் வேண்டு
锣 $
1

வன் அனுபவிக்கும்படி செய்வதே இத் தண்டனையின் ாங்கும் தன்மையைச் சார்ந்ததெனக் கொள்ள இடமுண்டு. ாகைகடைப்பிடிக்கிறது. பழங்குடியிருப்புகளில் இம்முறை "ங்கும் பண்பு காணப்படுகின்றது என்றும் இது தண்டனை விவாதிக்கப்படுகின்றது. பழங்கால சமுதாயத்தில் துன்பம் குேம் துன்பம் மிகக் கொடியதாக அமைந்தது. இதை த்த சமூதாய அமைப்புக்கள் முயன்றன என எண்ணத் ாகக் கொண்டு தண்டனை பழங்குடியிருப்புக்களில் மன்றமாக விளங்கினர்.
த்தை அழியாமல் வைத்திருக்க இத் தண்டனை முறைகள் சமுதாயம் சிலவகை விதிமுறைகளைக் கொண்டு க் கொள்ள முடியாது. ஆக, சமுதாய விதிகளை எவ்வாறு ாடனை எனலாம்.
யும், சிறிய குற்றங்களுக்கு கூடிய தண்டனைகளையும் ல் இருந்து தன்னைப் பாதுகாக்கத் திருடும் ஒருவன் க மறுக்கின்ற ஈவிரக்கமற்ற பணக்காரன் சட்டத்தின் முன் ானும் சட்டவறிஞர்கூறுகிறார். "சட்டமென்பது ஒரு வலை வலையைக் கிழித்துக் கொண்டு தப்பி விடுகின்றன’ என ந்து தற்போதைய மனித சட்டத்தினுடைய ஒழுங்கீனத்தை
தயவு தாட்சண்யம், பக்கச்சார்பு இன்றிப் பகிரங்கமாக பில் குறைபாடுடையதாயுள்ளது. இப்போதுள்ள சமுதாய ாள்கைகளை ஆராயலாம். நீதி சட்டத்துக்காக அன்றி தப்படுகின்றது என சமவுடைமைவாதிகள் குற்றம் சுமத்த, மைவாதிகள் மீது சுமத்துவதை நாம் கண்டு கொள்ளலாம். ட்டத்தையும் வைத்துக் கொண்டு அதன் மூலமாகத்தங்கள் இவர்கள் தண்டனைகளையும் தாங்கள் விரும்பியவாறே இது மாற்றியமைக்கப்பட வேண்டியதொன்றாகும்.
f மனித சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் யமே எனவேதான் தண்டனை அவசியமெனக் கூறிக் னதாகவும், எல்லோருக்கும் சமமானதாகவும் பலம் ம்ெ.
).5

Page 125
சங்கத்தின் பாதையிலே.
"பேராதனை பல்கலைக் ச (பருவ இதழாம்!) வெளிவரத் தொடங்கி புத்தகம் அச்சிடும் கலாசாரத்திலிருந்துவி( வைக்க முடியாதா'
இளங்கதிர் வெளியீட்டுக்கான போது சந்தித்த நண்பர் ஒருவரின் கேள்வி பொறுப்பேற்றதிலிருந்து இளங்கதிர் வெளி ஆலோசனைகள் கிடைத்தது. நாமும் முடிவுக்கு வருவோம். சிலவேளைகளில் கிடைத்ததுண்டு.
'எங்கட நண்பர் இருவர் க.நந்தகுமார், ஞா. இரவிதரன்) பொலி மாதத்திற்கும் மேலாக ஒருவித விசாரணை தமிழ்ச் சங்கம் தனது செயற்பாடுகளை செய்யப்பட்டதை கண்டிக்க முடியாதா?'6 அவர்கள் இருவரும் கைது செய் செய்யப்படாமலிருப்பது எல்லாம் துயரம் செயற்பாடுகளை நிறுத்துவது என்பது கை ஒன்றுக்கு இடமளிப்பதாகவே இருக்கும் எ இவ்வாறான நீதியற்ற செயல்களுக்கு நா கவலையே.
இலங்கையில் உயர்கல்வி, ப காலத்தில் 1926இல் பேராசிரியர் சி.சுந்: சங்கம் செ. செல்வரூபன் தலைமை செயற்குழுக்களை சந்தித்து விட்டது. ஆன நாம் அதிகம் திக்குமுக்காடினோம் என் கடைசியில் வடபகுதியில் வலிகாம இடம்பெயர்ந்தது தெரிந்ததே. அப் உடன்பிறப்புகள் உறவினர்கள், நண்பர்க என்ற ஏக்கம். இங்கோ மகிழ்ச்சி வெடிக் நேரத்தில் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட நினைவுவிழா வேறு. எமக்குநிகழ்ச்சியில் இருக்கவில்லையாயினும் நிகழ்ச்சியை
1 (

வ(ார்த்)தைகள்
ழகத்தில் தமிழில் நான்காவது இதழும் பிருப்பதால், தமிழ்ச்சங்கம் வழமையான பட்டு புதியதொரு கலாசாரத்திற்கு காலடி
ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த இது. நாம் 03.01.1995 அன்று சங்கத்தை யீடு வரை, இப்படி பல ஆரோக்கியமான அவர்களுடன் கலந்தாலோசித்து ஒரு கோமாளித்தனமான ஆலோசனைகளும்
(பொறியியல் பீட மாணவர்களான ஸொரினால் கைது செய்யப்பட்டு ஆறு ாயுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நிறுத்துவதன் மூலம் இவர்கள் கைது ான்றார்இன்னொருநண்பர். உண்மையில் யப்பட்டது, இதுவரை விடுதலை 0ான சம்பவங்கள். அதற்காக தமிழ்சங்க து செய்தவர்கள் எதிர்பார்க்காத நன்மை ான்று விளக்கமளிக்க முடிந்தது. எனினும் ம் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பது
ல்கலைக்கழக மட்டத்தில் நடைபெற்ற 5ரலிங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் யிலான செயற்குழுவரை அறுபது ால் அவர்கள் எல்லாரையும் பார்க்கிலும் று சொல்ல வேண்டும். 1995 நவம்பர் திலிருந்து எல்லோரும் அகதியாக போது எமக்கோ, பெற்றோர்கள், ள் எங்கு இடம்பெயர்ந்து இருப்பார்கள் ளும் வெற்றிக் (?) கொடிகளும். இந்த டிருந்த பேராசிரியர் க.கைலாசபதியின் கலந்து கொள்ளக்கூடிய மனோநிலைகூட இரத்துச் செய்யக்கூட (பயத்தினால்)

Page 126
முடியாதவர்களாக இருந்தோம். மேலும் இ சேகரித்து அனுப்பக் கூடஉரிமையற்றவ பிரஜையோ? என்று கூடச் சிந்திக்கத் தோ
எனினும் வழமைபோல் நி கவியரங்குகள், நாடகவிழா என்று நடாத பின்னர் இம்முறை நாடகவிழாவில் ஐந்து குறிப்பிடத்தக்க அம்சம், இதை (பேரா.க.கைலாசபதிநினைவு விழாவில் விழாவில்) என்பனவற்றை அறிமுகப்படு
இதைவிட இன்னும் பல பணி அவகாசம், நிதி பற்றாக்குறை போன்ற துரதிஷ்டமே.
எமது காலத்தில் சங்கத்தின்நிர் நிகழ்ந்தது. நாம் சங்கத்தை பொறுப்ே பேராசிரியர் சிதில்லைநாதன் அவர்க ஜனாப்.எம்.எல்.ஏ. காதர் அவர்களும் விடுமுறையில் சென்றிருந்தார்கள். நாம் 6 பதவியேற்ற கலாநிதி. க.அருணாசலப திரு.வை.நந்தகுமார் (முதுநிலை விரிவு பெரும் பொருளாளராகவும் தீர்மா வேண்டுகோளுக்கிணங்கி எம்மோடு ஒத்
எமது முயற்சிகளுக்கு அ ஒத்துழைப்பையும் வழங்கிய பெருந்த அனைவருக்கும் எமது நன்றிகள். இ6 ஒத்துழைப்பு வழங்க வேண்டும் செயற்குழுவினரை வாழ்த்தியும் விடைெ
பொறியியற் பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை

இடம்பெயர்ந்த அவர்களுக்கு எதையாவது களாக இருந்தோம். நாம் இரண்டாம் தர ன்றியது.
னைவு விழாக்கள், பட்டி மன்றங்கள் தி முடித்தோம். நீண்ட இடைவெளிக்குப் நாடகங்கள் மேடையேற்றப்பட்டது ஒரு விடத் தனிநபர் நடிப்புப் போட்டி ), கவிதாநிகழ்வு (இளங்கதிர் வெளியீட்டு த்தினோம்.
கள் செய்யத் திட்டமிட்டிருந்தும் கால காரணிகள் எமக்கு தடையாக இருந்தது
வாக அமைப்பில் முக்கிய இரு மாற்றங்கள் பற்ற போது பெருந்தலைவராக இருந்த 5ளும் பெரும் பொருளாளராக இருந்த பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிக வழக்கம் போல தமிழ்த்துறைத் தலைவராக ம் அவர்களை பெருந்தலைவராகவும், ரையாளா, புவியியல்துறை) அவர்களை "னித்தோம். அவர்களும் எமது துழைத்தார்கள்.
வ்வப்போது ஆலோசனைகளையும் தலைவர், பெரும் பொருளாளர் உட்பட னிவரும் தமிழ்ச் சங்கத்திற்கு இன்னும் என்று கேட்டுக் கொண்டும், புதிய பறுகிறோம்.
Lunt. Lumravspišg5s5D1Ti
தலைவர்,
தமிழ்ச்சங்கம்
07

Page 127
செயலாளர் அறிக்கை
திமிழ் பேசும் மக்களுக்கு அன்று முதல் இன்று வரும் தமிழ்ச் சங்கமானது, கணிதப் பேராசிரியர் செ. ச வைக்கப்பட்ட அமைப்பாகும், காலத்தின் கோ: தடைப்பட்டிருந்தாலும், அதனை மீறி வீரநடைபோட எம தந்ததையிட்டு பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகின்
சங்கப் பணிகள் ஒரு குறித்த வரையறைக்குள் செயற்பாடுகளை ஆரம்பித்தது. அவ்வேளை நாட்டு நில சமாதானத்தையும் எதிர்வு கூறும் வகையில் இருந்தமை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண் அதேபோல் பேராதனை வளாகத்திலும் அடிக்கடி ஏற மட்டுப்படுத்தப்பட்டு விட்டன என்றே சொல்லலாம்.
எமது சங்கத்தின் பெருந்தலைவர் கலாநிதி.க.அ ஆகியோரின் வழிநடத்தலில் எமது சங்கம் ஒழுங்கு செய்து இங்கே தருகிறேன்.
03.01.1995 ஆண்டுப் பொதுக்கூட்டம்
1995/96 செயற்குழு உறுப்பினர் தெரிவுடன் ே இடம்பெற்றது
07.01.1995 கலை விழாவும் இளங்கதிர்வெ6
தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நிகழ்வான கலை கொண்ட நிகழ்ச்சியாக இடம்பெற்றது. காலை 8.30 மண 'எதிர்காலம் குறித்து நாம் எண்ணிப் பார்க்கையில்' எ சமுதாயத்தில் பகைமைகளை வளர்ப்பவர்கள் - அரசியல் முறையே கொழும்பு, மொறட்டுவை, பேராதனைப் பல இடம்பெற்றன. பின்னர் சமாதானத் தீர்வுகள் பற்றிய பத்திரிகையின் அரசியல் ஆய்வாளர் திரு.டி.சிவராம் உை
மாலை அமர்வு பிற்பகல் 5.00 மணிக்கு பொறி இவ்வைபவத்தில் பேராசிரியர் சி.எம்.மத்தும பண்டார (து கண்டி பெண்கள் உயர் பாடசாலையைச் சேர்ந்த மாண தொடர்ந்து இளங்கதிர் வெளியீடு மிகச் சிறப்பாக இடம்ெ நாகலிங்கம் இரத்தினசபாபதி பெற்றுக் கொண்டார். இவ (பிரதம ஆசிரியர், வீரகேசரி) ஆற்ற, பதிலுரையை இத திரு.க.சண்முகலிங்கம் (பணிப்பாளர், இந்து சமய கலாச் சி.சிவானந்தனின் 'அப்பு பாவம்' நகைச்சுவை நாடகரு நாடகமும் இடம்பெற்றன.
0

வரைகலை இலக்கியச் சேவையினை செவ்வனே செய்து ந்தரலிங்கம் அவர்களால் 1926ம் ஆண்டு ஆரம்பித்து 2த்தால் அதன் செயற்பாடுகள் இடையிடையே குமுன் பதவிவகித்த செயற்குழுக்கள் களம் அமைத்துத் ாறேன்.
நேர்த்தியாக்கப்பட்ட நிலையில் எமது செயற்குழு தனது லமையும் பல்கலைக் கழகச் சூழலும் அமைதியையும், பால் தமிழ்ச் சங்கம் தனது நடவடிக்கைகளை இன்னும் டது. ஆனால் அனைவரும் அறிந்தது போல் நாட்டிலும் பட்ட அமைதியின்மையால் எமது செயற்பாடுகுள்
அருணாசலம், பெரும்பொருளாளர் திரு.வை. நந்தகுமார் முறைப்படி நெறிப்படுத்தியநிகழ்ச்சிகளின் தொகுப்பை
பெரும்பொருளாளர் தலைழையில் புவியியல் அரங்கில்
ரியீடும்
விழாவும் இளங்கதிர் வெளியீடும் இரு அமர்வுகளைக் ரிக்கு கலையரங்கில் ஆரம்பமான முதலாம் அமர்வில் னும் தலைப்பில் கவியரங்கமும், தொடர்ந்து 'மனித வாதிகள், செய்தித் தொடர்பாளர்கள், மதவாதிகள் என }கலைக் கழக மாணவர்கள் வாதிட்ட பட்டிமன்றமும் ஒரு கண்ணோட்டம் எனும் பொருளில் த ஐலண்ட் ரயாற்றினார்.
யியல் பீட ஈ.ஓ.ஈ.பெரெய்ரா அரங்கில் ஆரம்பமானது. ணைவேந்தர்) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வியரின் கர்நாடக இசையையும் பரதநாட்டியத்தையும் பற்றது. இளங்கதிரின் முதற்பிரதியை கீலங்கா சிகாமணி விதழின் ஆய்வுரையை திரு.ஆ.சிவனேசச் செல்வன் pாசிரியர் றமீஸ் அப்துல்லா வழங்கினார். தொடர்ந்து சாரத் திணைக்களம்) சிறப்புரையாற்றினார். இறுதியாக )ம், சி. செந்தூரனின் "பண்டார வன்னியன்' சரித்திர

Page 128
Y
23.08.1995 புதிய மாணவர் வரவேற்பு வைப
எமது செயற்குழுவின் கன்னிநிகழ்ச்சியாக புதி பெருந்தலைவர் கலாநிதி. க. அருணாசலம் தலைமையி நாடகம், பாட்டு, வில்லிசை போன்ற கலைநிகழ்ச்சிகளில்
01.11.1995 தமிழ்த்திரைப்படம்
தமிழ்ச் சங்க நடவடிக்கைகளுக்கு நிதி சே
கலையரங்கில் இரு காட்சிகளாக் காண்பிக்கப்பட்டது.
22.11.1995 சில்லையூர் செல்வராஜா, கோம
கலை இலக்கிய சேவையில் பெரிதும் பங்கேற கூர்ந்தது. தேசிய கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த கூர்ந்தும் விரிவுரையாளர் வி. மகேஸ்வரன், சில்லையூ வி. ஞானாம்பிகை, எம்.ஐ.எம்.சதாத், எஸ்.சிங்காரவேல் எனும் கவிதா நிகழ்வொன்றை ப.பிரதீபன் நடாத்தினார்.
06.12.1995 பேராசிரியர் க.கைலாசபதிநின்
இந்நிகழ்வு பொறியியல் பீட ஈ.ஓ.ஈ. பெரெய்ரா நினைவுகூர்ந்து மட்டுமல்லாமல் அவர்நாடகத்துறைக்கு போட்டியொன்றும் இடம்பெற்றது. சிறந்த நடிகனாக கு. தெரிவு செய்யப்பட்டனர். அருட்சகோதரர்கருணாகர், எள் இரு தரப்பிலும் இரண்டாம் இடங்களைப் பெற்றனர்.
17.12.1995 கலாசாரக் காவடிகள்
பா. பாலநந்தகுமாரின் நெறியாள்கையில் 'நிர யூட் முரளிதரன் வடிவமைத்து வழங்கிய 'புதுயுகம் பன அரங்கில் இடம்பெற்றன.
10.01.1996 அகஸ்தியர்நினைவுப் பேருை
சமூக எழுத்தாளர் அகஸ்தியரைப் பற்றிய வி வழங்கினார். தொடர்ந்து 'திருமணத்தின் அடிநாதம் காதலி அமர்ந்தனர். விரிவுரையாளர் வி.மகேஸ்வரன் விவாத ஆ நசீம், எம்.ஐ.எம்.சபீக், எம்.ஐ.எம்.சதாத் ஆகியோரு ஆகியோரும் வாதிட்டனர்.
O

வம்
ய மாணவர்களை வரவேற்கும் வைபவம் இடம்பெற்றது. ல் இடம்பெற்ற இவ்விழாவை புதிய மாணவர்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
ர்க்கும் முகமாக 'வண்ணக் கனவுகள் திரைப்படம்
ல் சுவாமிநாதன்நினைவுக் கூட்டம்
ற்ற தமிழ்த் தொண்டர் இருவரை தமிழ்ச் சங்கம் நினைவு திரு.என். இரவீந்திரன், கோமல் சுவாமிநாதனை நினைவு ர் செவ்வராஜா பற்றியும் உரையாற்றினர். தொடர்ந்து ஆகியோர் பங்கேற்ற 'இரந்தும் உயிர் வாழ வேண்டின்'
னைவுவிழா
அரங்கில் இடம்பெற்றது. பேராசிரியர் க.கைலாசபதியை ஆற்றிய சேவையைப் பிரதிபலிக்கும் முகமாக தனிநடிப்பு சிவனேசனும், சிறந்த நடிகையாக ஏ.கார்த்தியாயினியும் 0.நரேந்திரநாதன், டி.விஜயரேகா, வி.மஞ்சுளா ஆகியோர்
பராதிகளின் காலம்' எனும் மொழிபெயர்ப்புநாடகமும், டப்போம்' எனும் நாட்டுக் கூத்தும் ஈ.ஓ.ஈ. பெரெய்ரா
ர
சேட உரையினை கலைப்பீடத்தைச் சேர்ந்த ந.கமலினி ா? காமமா?' என விவாதிக்கஇருதரப்பினர் மேடையில் அரங்கை நெறியாள்கைசெய்தார். காதல் என ஏ.சி.எம். ம் காமம் என கே.நகீரன், சீகஜன், எஸ்.சந்திரகுமார்

Page 129
r
24,25,26.01.1996 புத்தகக் கண்காட்சியு
ஜெயா புத்தகசாலை அனுசரணையுடன் வி தொடர்ந்து புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இட வைக்கப்பட்டிருந்தன.
03.02.1996 நாடகவிழா
எமது சங்கம்இம்முறை ஈ.ஓ.ஈ.பெரெய்ரா அரா அலங்கரித்தன.டீ.வி.ஆர்.சங்கரின் "காட்டாறு', கு.மு மூண்டு. ' குசை அன்ரனிதாசனின் 'கட்டு', பா.மணிமா இடத்தைப் பெற்றது. சிறந்த நெறியாளராக டீ.வி.ஆர். சங் சிவனேஸ்வரியும் தெரிவாகினர். சிறப்புப் பிரதிக்கான ட பாத்திரங்களாக உ.கருணாகரன், கு.அநந்தவிஆகியோர் 4
27.02.1996 கலாநிதிஏ.எம்.ஏ.ஆஸிஸ் அவ
நினைவுப் பேருரைகளை கலாநிதி எம்.என். இஸ்லாமிய நாகரிகத்துறை) ஜனாப்.எம்.எஸ்.அம்.அனஸ் ஆற்றினர்.தொடர்ந்து எச்.எம்.கலால்தீன், அ.ப.மு.அஷ்ரப், எம்.எச்.எம்.ஜவ்பர், எஸ்.சிங்காரவேல், எம்.எஸ்.எம்.தஸ் இவற்றோடு கொழும்பு பல்கலைக்கழக இ கலைவிழாவில்இடம்பெற்ற விவாத அரங்கில், அவர்களது பொ.நக்கீரன், இருஷாந்தன் ஆகிரோர் பங்குபற்றிச் சிறப்பி எமது செயற்குழு பொறுப்பேற்ற ஆரம்பகால பேராசிரியர் சிதில்லைநாதன், பெரும்பொருளாளராக இரு கல்வி நிறுவனத்திற்கும், தென்கிழக்குப் பல்கலைக் கழகத் அவ்வேளை எமது சங்கத்தின் பெருந்தலைவராக கலாநி திரு.வை.நந்தகுமார் அவர்களும் பொறுப்பேற்று எம்மைச் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது சங்கநடவடிக்கைகளின்போது எமக்கு சக எமது உளங்கனிந்த நன்றிகள். இம்மலர் வெளியீட்டில் சகல நூலகர், பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்கட்கு எமது பட்டிமன்றம்,நினைவுதினவிழாக்கள்,தனிநடிப்புப் போட்ட அனைத்து விரிவுரையாளர்களுக்கும் எமது நன்றிகளை அன்பளிப்புச் செய்த பொறியியற் பீட இறுதி வருட மாணவி எனது பல்கலைக்கழக வாழ்க்கையில் தமிழ்ச்சங் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து வரும் செயற்குழுக் நம்பிக்கையுடன் அவர்களை வாழ்த்தி வரவேற்று விடை ெ
நன்றி
விஞ்ஞானபீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை

விற்பனையும்
ரஞான பீட மாணவர் பொது அறையில் மூன்று நாட்கள் பெற்றன. தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் கண்காட்சிக்கு
கில்நடாத்தியநாடக விழாவினைஐந்து போட்டிநாடகங்கள் ளிதரனின் 'தொடரும்', இரா.இரவிசங்கரின் 'மீண்டும் ரனின் 'இனியுமா” எனும்நாடகங்களில் காட்டாறு முதலாம் ரும் சிறந்தநடிகனாக கு.சிவனேசனும், சிறந்த வடிகையாக ரிசை 'இனியுமா'தட்டிக் கொண்டது. நினைவில் நின்ற தரிவாகினர்.
ர்களின்நினைவுவிழா
எம். காமில் ஆஸாத் (சிரேஸ்ட விரிவுரையாளர் - அறபு (சிரேஷ்ட விரிவுரையாளர் - மெய்யியல்துறை) ஆகியோர் எம்.ஐ.எம்.சதாத், ஞானாம்பிகை விஸ்வநாதன், கோ.சுரேஷ், லீம் ஆகியோர் பங்கேற்ற கவியரங்கமும் இடம்பெற்றன. ந்து மன்றத்தினால் 24.02.1996 அன்று நடாத்தப்பட்ட அழைப்பையேற்று,தமிழ்ச்சங்கம்சார்பில்டீ.வி.ஆர்.சங்கர், பித்தனர். த்தில் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவராக பதவி வகித்த நந்த ஜனாப்.எம்.எல்.ஏ.காதர் ஆகியோர்முறையே தேசிய திற்கும் பணியாற்றச் சென்றமை அனைவரும் அறிந்ததே. தி. க. அருணாசலம் அவர்களும், பெரும்பொருளாளராக சிறப்புற வழிநடத்தியமைக்கு முதற்கண் எமது மனமார்ந்த
லவழிகளிலும் உதவிநல்கிய மாணவர்கள் அனைவருக்கும் வழிகளிலும் உதவியாக இருந்ததிரு.மகேஸ்வரன் (உதவி விசேட நன்றிகள். எம்மால் நடாத்தப்பட்ட கவிதாநிகழ்வு, .நாடகவிழா ஆகியவற்றில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய நவில்கிறோம். தனிநடிப்புப் போட்டிக்குரிய பரிசுகளை ர்கட்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். கத்திற்கு என்னாலியன்ற பங்களிப்பை வழங்கியதையிட்டு களும் தமது சேவையினை செவ்வனே செய்யும் என்ற பறுகிறேன்.
கி.ஜிட்ஸ் இராஜநாதன் செயலாளர்,
தமிழ்ச்சங்கம்

Page 130
- நன்றியுடன் நன்றி.
பொ.துவாக எந்தவொரு விடயமாயினும் ஒத்தாசை வழங்கியவர்களுக்கும் நன்றி கூறுவது கட6 எனக்கும், இதழுக்கும் உதவியவர்களுக்கும் ஒத்துழைப்ட வேண்டும். ஏனென்றால், நாணமுள்ள எந்த மனிதனும் ந
ஒரு வாரத்துக்குள் இளங்கதிரை செய்து முடித் எனலாம். தொடர்ந்து நான்கு நாட்களாக அச்சகத்தில் இதழைக் குறிப்பிட்ட திகதிக்குள் வெளியிட வேண்டும் எ செய்து முடித்தேன். இது கூட ஒரு புதுமையான அனுபவ
இளங்கதிரின் நடவடிக்கைகள் பற்றியும் அதன் ஊக்கமும் தந்த தமிழ்த்துறைத் தலைவர்கலாநிதி.க.அருை ஏற்படுத்திஇதழில் பிரசுரிக்க ஏற்றதாவெனப் பார்த்து எப் உதவி செய்(த)யும் கலாநிதி.துரைமனோகரன் அவர் கொள்கிறேன்
தோளைத் தட்டி எல்லையையே எட்டிப் பிடி ஒத்துழைப்புச் செய்த பெரும்பொருளாளர். வை.நந்த தலைவர் பா.பாலநந்தகுமார் அவர்களுக்கும் மற்றும் ஏை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்விதழுக்கு ஆசிச் செய்திகளையும் ஆக்கா மாணவர்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரி
இவ்விதழுக்கு விளம்பரம் தந்துதவிய வர்த்த மறைமுகமாகவும் தமிழ்ச்சங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கி சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிப்பட்டரீதியில் இளங்கதிர் தொடர்பாக எ றிஸானா, அஸிர் அனைவருக்கும் எனது நன்றி. மேலும் அதற்கான கவிதையையும் தந்துதவிய புவியியல் துறை எனது நன்றி.
குறிப்பிட்ட தினத்திற்குள் இரவு, பகல் என்று ! (அண்ணன் கேசவன் அவர்களுக்கும்) நிறுவனத்தின அனைவருக்கும் எனது சார்பாகவும் தமிழ்ச்சங்கம் சார்ப
நன்
கலைப் பீடம்,
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை.
1

அந்த விடயம் முடிவடைந்த பின், உதவியவர்களுக்கும் மையா(மரபா)க இருந்து வருகின்றது.அந்த வகையில் ப் புரிந்தவர்களுக்கும்.நன்றியினைச் சொல்லித்தான் ஆக ன்றி கூறாமல் விடுவதில்லை.
ததென்பது தமிழ்ச்சங்கம் செய்தது இதுவே முதல் தடவை தங்கியிருந்து எனது விரிவுரைகளையும் நிறுத்தி விட்டு “ன்ற உணர்வுடன் தூக்கத்தையும், இன்பத்தையும் துறந்து ம்தான்.
செயற்பாடுகள் பற்றியும் அடிக்கடி விசாரித்து ஆக்கமும் ாாசலம் அவர்களுக்கும், ஆர்வத்தையும் உற்சாகத்தையும் பொழுதும் எதைக் கேட்டாலும் மறுக்காமல் மறைக்காமல்
களுக்கும் எனது விசேட நன்றியினைத் தெரிவித்துக்
பக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டி எந்நேரமும் குமார் (புவியியல்துறை) அவர்களுக்கும் எமது சங்கத் }னய செயற்குழு உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த
வ்களையும் தந்துதவிய உபவேந்தர், விரிவுரையாளர்கள், வித்துக் கொள்கிறேன்.
தகப் பிரமுகர்களுக்கும், எப்பொழுதும் நேரடியாகவும், வரும் அனைவருக்கும் தமிழ்ச்சங்கம் சார்பாகவும் எனது
னக்கு ஒத்துழைப்புச் செய்த பைசல், அம்பிகை, கமலினி, இவ்விதழுக்கு அழகான அட்டைப் படத்தை வரைந்து யைச் சேர்ந்த மாணவன் பெளசுல் அமீர் அவர்களுக்கும்
பாராமல் அச்சுப்பதிப்புச் செய்து தந்த டெக்னோ பிரின்ட் ருக்கும் எனது நன்றி. நன்றிகூற மறந்த நன்றிக்குரிய "கவும் நன்றியினைக் கூறி முடிக்கின்றேன்
ாறி
எச்.எம். கலால்தீன்,
இதழாசிரியர்,
தமிழ்ச்சங்கம்.

Page 131


Page 132
D.S.S. STREET
No. 2, MAIN STREET KOTAGALA T.Phone : 0512 - 628
 
 
 

CovaringCentre
No. 19, SIDE STREET HATTON
Branch:
SaaraniyaTextiles
No; 90A SIDE STREET
With Best Compliments from
பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கத்திற்கு எமது நல் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க பேராதனை தமிழ் சங்கம்
ஏ.கே.எஸ் பாமசி

Page 133
IVINO Jewellery
Leading Manufacturing of 22 C.T. Gold Jewellery
(Prop:SELVAM)
No.5.Daily Fair, NUWARA-ELIYA
1Best Compliments from
V NAYAGA Dealers In: AGRO Chemicals ||
and Vegetable Seeds
No:52/66 Daily Fair, Shopping Complex Nuwara-eliya
 
 

with Best Compliments from
ViCOnS
Music Corner
20A, Daily Fair Complex Nuwara-Eliya
Specelist in Audio Recording, Video Folming And Photo Graping TP3093
with Best Compliments from
AMUTHA JEWELLERS
No.(20) 52/4 Daily Fair Nuwara Eliya Tee:052-3303
Specelist in 22 Kit gold Jewellers
அமுதா ஜுவலர்ஜ் (20) 524 தினசந்தை நுவரெலியா
ت-م-

Page 134
'With Best Compliments from
BALANdRA's KOTAGALA
eEF==N
'With Best Compliments from
SR N\U)RU)GANʻS
YN/OESAE AND RETA
TEXTE DEAlERS
94, Colombo Street, Kandy
Te:08-23399
 
 
 

s'With Best Compliments from
SANGEEV. NADCA. STORS
DEALERS IN ENGLISHANDAYURVEDC DRUGS 8. GENERAL MERCHARTS
PROP N.SEGAR No:2.RADHA BUILDING, KOTAGALA
r
'With Best Compliments from
AVCO Lanka (pvt) Ltd
importers & Exporters
- Dealers in-books, Stationers
& Papers - Card Merchants - Photo copy Service - Translations
I08, Galle Road, Colombo -6. Telephone: 590884
أصـ

Page 135
No:24-I/4 1st FLOOR, New Bazaar Street Nuwara -Eliya
N
Y
ith Best Compliments from
பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் 29வது ஆண்டு மலருக்கு எமது வாழ்த்துக்கள்
ரோட்டரக்ட் கழகம்
நுவரெலியா
 

esor
TBest Compliments from
MOHAN VIDEO
&
HOME VIDEO ENTERTAINMENT (For Best Qulity Video Movies)
14, Daily Fair Complex Nuwara Eliya
Visit: For All YouR PRESENTATioNS
EveR Silver WARES ETC.,
NEW JEEWA JEWElle Ry
No.40-A, Kandy road Nuwara -Eliya

Page 136
/ー 'With Best Compliments from
FOR 22 KT. FINE &
༄།།་་་་ s:
YN
V
No:55, Yatinu Kar Dial:
-

MOD JEWELLERY
EKA ԱERS
wara Veediya dy. 32430

Page 137
r'With Best Compliments From
வரையறு இலங்கை காப்புறுத
You are in
With Tht
Sri L
InS(Ironce C
ini
Regional Office:
137, Kotugodella Vidiya, | Kandy
NH

க்கப்பட்ட க் கூட்டுத்தாபனம்
Safer Hands e Leader
nkO orporation ited
Telephone: 08-34299 Fax: 08-24036

Page 138
JEYA BOO
importers and Distributers
Med
Engin
Com
Manag Science
SChoo te
Childrei
Referen
General readi
Jeya book Centre NO 91 - 99 Upper ground floor People's park complex Colombo - 1 Tel. 4.38227 Fax. 332939
 
 

DK CENTRE
of all kind of printed books
tical
eering
pulter
ement
books
xt books in books
*e books ngs etc...etc...
Branch: 688, Galle Rd, Colombo - O3.
Tel. 58O594

Page 139
“With Best Compliments from
KULAY T
General & Hardware M Authorized
"Permogloze" ana
"S LO "P2VXC.
"Building
94A, Si(
“With Best Compliments Trom:
SARATA
GENERAL MERCHANTS
NO.1..SHOPP BANDA phone:C
 
 

RADING
archants Estate Suppliers Dealer For:
"Multilac" Paints, ipes and Fittings Constructor
de Street
tOn
TRADNG
Wholes.Ale & REIAil
NG COMPLEX RAWELA 57-219.6

Page 140
'With Best Compliments from
SARASYVATH
PNV NA A M. STORES Specialists in Wedding Sarees
wa
90, Colombo Street, Kandy, Sri Lanka. TEI:221 04, 23.654
KAIAivANi Book
CENTRE
231 Trinco St Kandy Tel: 08-23196, 078-71418
 
 
 
 
 
 

with Best Compliments from
| Orchid Tailors ||
Expert Ladies & Gents Tailoring
Specialist for : WEDDING SUITES
NO. 24, 9/1
NEW BAZAAR STREET
NUWARA - O L'AVA
AJMSAASAASAMMSSMMGLLLLSSSLLLLSSLLLLLSSLLLLLSS LL LLL LLTG MLSMS TMMG S S S S SS SLSSTSSLLSLLSSTTSLLSSLSL
'With Best Compliments from
A \ / ) \ / A V ) SM GAZZA'S TRXTERS
Bata and DSI items Fashionabletor Jents and
Ladies drsses available in Kinniya
Main Street Kinniya -O35 TPO2O-35248
2

Page 141
I иith Best Compliments From,
JUNIDEX GEM
192 FARM ROAD, MATT TEL:523405,071)
யப்பானிலிருந்து தருவிக்கப்பட்ட ந சற்றும் மாறாமல் வாடிக்கையாள விரையுங்கள், விஷேட சலுகைகள்
மேலதிக விவரங்கட் GERARD GJJ 2ND YEAR, F, UNIVERSITY OF PER
TEL:NO.(
"With Best Compliments From:
FRANJITHA
IMPORTERS GENE WHOLESALE & R. PROVI
NO. 180, COLOMB
 
 
 
 
 
 
 

& JEWELLERY
AKKULIYA, COLOMBO-15 34933, (071) 2 1793
வீன இயந்திரத்தால் தங்கத்தின் தரம் கட்கு வழங்கும் ஒரே ஸ்தாபனம். உங்களுக்காக காத்திருக்கின்றது.
தொடர்கொள்ளவும்.
ACULTY OF ENGINEERING, ADNIYA, PERADNIYA.
27I)34933
TRADES
RAL MERCHANTS TAL DEALERS IN SONS
)STREET KANDX
NKA -32350
: s ----مع--

Page 142
'With Best Compliments from
SUbANi
JEWEls
22Kt.Mod. Fine Jewellery & Ever Silver
53A, Daily Fair Complex, Kandy Road Nuwara Eliya
Y
''MM’ith Best Compliments from
Harsinie, Audios & VideO'S
C 24 1/5, 1st Floor New Bazzar Building Nuwara Eliya
Branch: HARSNEPAWNNG CENTRE V.Y.VIDEO'S
 
 

with Best Compliments from
Visit once:
To:
| ORCFD PAZA
No.16, 18, New Bazaar Nuwara -Eliya
S.WIJAYASUNDARAM
Regional Rural Development
Nuwara Eliya phone: 052-3484

Page 143
s 'With Best Compliments from
| DUCO TRADERS
GENERAL MERCHANTS & ESTATE SupplieRS
107, MAiN STREET BANdARAwELA T.P. O57-2759
A TRAdition of Fine OUAliy JEWELLERies FORGURANTEED JEWELS
ORdeRS proMpily ExECUTEC
FRuhaiya
JeWel House
Vidyalaya Road,
Kinniya -04. لم
 
 
 
 
 
 


Page 144
With Best Compliments from
Luxmi
WE PRINT BOOKS, LABELS, TAGS, MACINTOSH COMPUTERS FOR TYP OUTPUTS IN LASER PRINTER AT 800
SHARP CLARI
Residence * 16ó, GCalle ROCCd ColombO-4 | Te -58675
 
 

ר
Printer
CALENDARS, DIARIES, USING APPLE E SETTI.G, SCANNING, DESIGN AND D.P.I. RESOLUTION THUS GIVING VERY
NG TO LETTERS.
Office:
195, WolfendhO|Sfr ColombO-13, Sri LCnkC, PhOne:448545, 330588

Page 145
'With Best Compliments From
SAFANA
Rice, Veg Commission Age
M.B.R.
126, SupAR MARkET KAlMUNAi. Ꭲ.Ꮲ:067Ꮧ2062

TRADERS
etable and nt Local products
No: 1 ShoppinG CoMplex BANCdARAWELA T.P:057, 21 96 057ィ列18列 O72-26 OO

Page 146
TE
6, J
 
 

濡
ဖွံ’ °S) ။
.
ki No PRiNT
yAWARdeNAAVE,
DEliwEA. El:7377.08.