கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 1999.07-09
Page 1
விந
21L Ceylon OHir
JD LI Jh
ல்லூரி பநீக
நதுக் க
ல இலங்கை இந்து மாமன்ற
காலாண்டிதழ் இரத்மலானை - கொழும்பு இ
국
பிரமாதி வருடம் ஆடி புரட்டாதி இதழ்) ாயகர் மண்டலாபிஷேகப் பூர்த்தி சிறப்பிதழ்
ty of du Congress
Page 2
இரத்மலானையிலுள்ள கொழும்பு இந்துக் கல் விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகக் வெளியீட்டு கை
லூரி வளவில் அமைக்கப்பட்டிருக்கும் பூணு கற்பக கிரியைகள் மற்றும் கும்பாபிஷேக சிறப்பு மலர் வபவக் காட்சிகள்
Frĉvorto Péro
Page 3
N
பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம்
தேவாரம்
சுந்தரமூர்த்தி நாயனார் பண் - நட்டராகம்
நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே தலைவா நின்னிணையப் பணித்தாய்ச லமொழிந்தேன் சிலையார் மாமதில்சூழ் திருமேற்ற எளியுறையும் மலையே யுன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
திருவாசகம் (மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது)
சீல மின்றி நோன்பின்றிச்
செறிவே யின்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூதாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி
வாரா வுலக நெறியேறக் கோலக் காட்டி ஆண்டானைக்
கொடியே னென்றோ கூடுவதே.
திருவிசைப்பா (கருவூர்த் தேவர் அருளியது)
சித்தனே அருளாய் செங்கணா அருளாய்
சிவபுர நகருள்வீற் றிருந்த அத்தனே அருளாய் அமரனே அருளாய்
அமரர்கள் அதிபனே அருளாய் தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டியக் குடியுள்ஏ பூழிருக்கை முத்தனே அருளாய் முதல்வனே அருளாய்
முன்னவா துயர்கெடுத் தெனக்கே.
திருப்பல்லாண்டு (சேந்தனார் அருளியது)
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற்றேன்பெற்ற
தார்பெறுவார் உலகில் ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம்
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம் (சேக்கிழார் சுவாமிகள் அருளியது)
மண்ணினிற் பிறர்தார் பெறும்பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர்நல் விழாப் பொலிவு கண்டார்தல்
உண்மையாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார்.
திருச்சிற்றம்பலம்
பிரமாதி வருடம்
1408.1999
'இந்து ஒளி' எனும் தீபத்தின் இன்னும் ஒரு சுடர் இன்று ஏற்றப்படுகின்றது. இரத்மலானை, கொழும்பு இந்துக் கல்லூரி வளாகத்தில் திருவருள் எழுந்தருளி மண்டலாபிஷேகப் பூர்த்தி காண்கின்ற பரீ கற்பக விநாயகருக்கு விசேடமாக ஏற்றப்படும் சுடர் இது.
மக்கள் சேவையே மகேசுவரன் சேவை என்ற பாதையில் எங்களால் ஆன மட்டும் மக்கள் துயர்துடைத்து அவர்களுக்கு செய்கின்ற உதவிகளை இறை பணியாகக் கருதி நிற்கின்றோம். அவர்கள் இறைவனின் குழந்தைகள். எங்களின் உடன் பிறப்புக்கள். அவர்கள் இன்று படும் வேதனைகள் வார்த்தைகளால் வடித்தெடுக்கப் படக்கூடியவை அல்ல. அவர்களுக்கும் எங்களுக்கும் ஆண்டவன் தந்திருக்கும் சோதனைகளோ இது என்று கூட எண்ணத்தோன்றுகின்றது.
வன்னியிலே எங்கள் உடன்பிறப்புக்கள் உணவு, உடை, மருத்துவ வசதி இன்றி வாடுகின்றனர். அதனைக் கேள்வியுற்று எங்கள் உள்ளங்கள் துடிக்கின்றன. எங்களாலான மட்டும் தியாக சிந்தை மிக்க அன்பு உள்ளங்கள் அள்ளி வாரி வழங்கும் ஆதரவுடன் உதவிய பொருட்களை லொறிகளில் அனுப்புகின்றோம். வவுனியா அரச அதிபரும் மற்ற அரச ஊழியர்களும் உதவுகின்றனர். இது பெரு வெள்ளத்தில் ஒரு சிறு துளி. இன்னும் எங்கள் உதவி பெருக வேண்டும். அதற்கும் ஆதரவு தர சகல சகோதரர்களும் முன் வரவேண்டும்.
இக் கால கட்டத்தில் இரத்மலானை - கொழும்பு இந்துக் கல்லூரியில் நாற்பது பிள்ளைகளை எங்களின் பிள்ளைகளாக வளர்க்கிறோம். அத் தொகை அறுபது ஆக உயர பரீகற்பக விநாயகர் அருள் கிடைத்திருக்கின்றது.
கொழும்பு இந்துக் கல்லூரி வளாகத்தை ஒரு புண்ணிய பூமியாக மாற்றி பரீ கற்பக விநாயகர் 01.0799 முதல் எழுந்தருளியிருக்கின்றார்.
நாங்கள் செய்கின்ற தியாகங்கள் சிறியவையாக இருந்தாலும், அவை யாவும் பரீ கற்பக விநாயகருக்கு நாங்கள் அடிக்கும் சிதறு தேங்காய், தேங்காய் உடைக்கும் அந்த உயர் தத்துவத்தை நினைவு கூர்ந்து தியாக உணர்வுடன் மக்கள் சேவையை தொடருவோமாக. பரீ கற்பக விநாயகர் நிச்சயமாக அருள் பாலிப்பார்.
Page 4
(இரத்மலானை) கொழு அருள்மிகு கற்பக
1951ம் ஆண்டில் கொழும்பு மாநகரில் வாழ்ந்த 24 இந்து மகான்களின் எண்ணக்கருவூலம் தான் இந்து வித்தியாவிருத்திச் சங்கம். அகில இலங்கை இந்து மாமன்றம் 1955 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட காரணமாக இருந்த ஸ்தாபக சங்கங்களில் இதுவும்
ஒன்று.
கொழும்பு மாநகளிலும் சுற்றுப்புறங்களிலும் வாழும் இந்துப் பிள்ளைகள் தங்கள் பண்பாட்டுச் சூழலில் கல்விகற்று வளரமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை அன்றையநிலை. அதனை மாற்றி அமைத்த பெருமை இந்து வித்தியாவிருத்திச் சங்கத்திற்கு உரியது.
24 இந்துப் பெரியோர்களும் கூடி அமைத்த இந்துவித்தியாவிருத்திச் சங்கம் பம்பலப்பிட்டியில் பிள்ளையார் பாடசாலை என்ற பெயரில் ஒரு கொட்டகையில் ஆரம்பித்த கல்விக்கூடம் இன்றுகொழும்பு மாநகரில் முதலாவது தமிழ் தேசிய பாடசாலையான இந்துக்கல்லூரி, கொழும்பு ஆக வளர்ந்து இருக்கிறது. 1951ல் பிள்ளையார் பாடசாலையை பம்பலப்பிட்டியில் ஆரம்பித்த அந்த தீர்க்க தரிசனம் மிக்க கனவான்கள் இரத்மலானையில் பரந்த காணியை வாங்கி அங்கு கொழும்பு இந்துகல்லூரி என்ற பெயரில் பெரும் கல்விக் கூடத்தை 1953 ல் ஆரம்பித்தனர். பம்பலப்பிட்டியில் அமைத்த பிள்ளையார் பாடசாலையில் சிறுவர்கள் படித்து பின்பு கொழும்பு இந்துக்கல்லூரிக்கு சென்று கற்று வளரட்டும் என்பதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் 1958ல் நடந்த கொடூர இனக் கலவரம் இத்திட்டத்தைத் திசைமாற வைத்தது. அப்பெரியார்கள் பலதியாகங்களைச் செய்து பல்கலைக்கழகம் போல் எழுப்பிய கொழும்பு இந்துக்கல்லூரி இரத்மலானையில் இருந்த காரணத்தினால் அங்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப கொழும்பு வாழ் தமிழ் பெற்றோர்கள் தயங்கினார்கள். 1962ல் இரு பாடசாலைகளும் கொழும்பு இந்துக்கல்லூரியும் பம்பலப்பிட்டியில் பிள்ளையார் பாடசாலை என ஆரம்பமாகி பம்பலப்பிட்டி இந்து கனிஷ்ட வித்தியாலயமாக வளர்ந்த இன்றைய இந்துக்கல்லூரி, கொழும்பு அரச பாடசாலைகளாக சுவீகரிக்கப்பட்டன. அந்த மாற்றத்துடன் பம்பலப்பிட்டியில் இருந்த கல்லூரி பெற்றோர்களின் ஆர்வத்தால் நிறுவியவர்களின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக வளர்ந்தது.
1983 நடந்த இனவாதக் கொடூரங்கள் மேலும் இரத்மலானைகொழும்பு இந்துக் கல்லூரியின் வளர்ச்சியை பெரிதும் பாதித்தன. அதுமட்டுமல்லாமல் இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகே பாரிய கட்டிடங்கள் கொண்ட இக் கல்விக்கூடம் பூரீலங்கா அரச படையினரின் தஞ்சமாக மாறியது. பாடுபட்டு புனித நோக்குடன் கட்டப்பட்ட இந்து கல்விநிலையம் இராணுவ முகாமாக மாறியது. மீண்டும் இந்து மாணவர்களின் பாடசாலையாக இதனை மீட்க இந்து வித்தியாவிருத்திச் சங்கமும்
ம்பு இந்துக் கல்லூரியில் விநாயகர் ஆலயம்
அகில இலங்கை இந்து மாமன்றமும் எடுத்த முயற்சிகளினால் அதற்கு அன்றைய கொழும்பு மாநகர பிரதி முதல்வர் திரு. க. கணேசலிங்கம், கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி இராசமனோகரி புலேந்திரன் ஆகியோர் தந்த ஆதரவினால் 15.3.1992 அன்று அன்றைய ஜனாதிபதி ஆர். பிரேமதாச கல்லூரி வளவுக்கு வந்து மீண்டும் கொழும்பு இந்துக் கல்லூரியை எங்கள் மாணவர்களின் கல்விக் கூடமாகத் திருப்பித் தர உத்தரவு பிறப்பித்தார். அதற்காக அல்லும் பகலும் உழைத்த இந்து வித்தியா விருத்திச் சங்கத்தில் அன்றைய செயலாளர் கலாநிதி க. வேலாயுத பிள்ளையுடன் சிறியேனும், அன்றைய பிரதி அதிபர் இன்றைய அதிபர் திரு. ந. மன்மதராஜனும் கல்லூரியைப் பொறுப்பேற்கவந்த கல்லூரி அதிகாரிகளுடன் இருந்தோம். "இக்கட்டிடங்கள் ஒரு பல்கலைக்கழகத்திற்கு உகந்தவை” என ஜனாதிபதி பிரேமதாச குறிப்பிட்டார். மீண்டும் எங்கள் கல்விக்கூடம் பறிபோய்விடுமா என்று அந்தக் குறிப்பு எங்களுக்கு ஏக்கத்தை தந்தது. அவ்வேளையில் கணேசலிங்கம் கூறினார் “நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு இப்பாடசாலையைக் காப்பாற்றி வளர்க்க வேண்டும் . முதலில் இங்கே பிள்ளையாருக்கு ஓர் ஆலயம் அமையுங்கள்”
இப்பாடசாலையில் பிள்ளையார் ஆலயம் அமைக்கும் திட்டம் 1992 முதல் இருந்தும் கூட, அதனை நிறைவேற்றி வைத்த துணிவும் பாக்கியமும் இன்றைய அதிபர் திரு. மன்மதராஜனுக்கு உரியது.
பலவருடங்களாக எழும்பாது இருந்த அகில இலங்கை இந்து மாமன்றத் தலமையகக் கட்டிடம் 1990 ல் அன்றைய தலைவர் திரு. வே. பாலசுப்பிரமணியத்தின் முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு 1996 ல் பூர்த்தியான பின், மக்கள் சேவையே மகேசுவரன் சேவை என்ற பாதையில் சமூக நலன் பணி செய்வது எமது கடன் என மாமன்றம் ஆரம்பித்த முதற் பணி, இக்கல்லூரியில் தேவையான மாணவர்களுக்கு ஒர் இலவச விடுதி ஆரம்பிப்பதே. அம்முயற்சியிலும் வெற்றிகண்டு 15.3.1998 அன்று கலாநிதி வேலாயுதபிள்ளை மண்டபத்தில் மாணவர் விடுதி ஆரம்பிக்கப்பட்டது. அத்திட்டம் நிறைவேறி இன்று தொடர்ந்தும் மாமன்றம் வெற்றிகரமாக விடுதியை நடத்துவதற்கு காரணகர்த்தா அதிபர் மன்மதராஜனே.
இவ்விடுதியில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தொகை 60 ஆக இன்னும் ஒரு சில நாட்களில் கூடும். இப்புனித பணிக்கு உதவுபவர்கள் பலர்.
இந்தப் பின்னணியில் பூரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு 1.7.1999 அன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. 14. 8. 1999 அன்று மண்டலாபிஷேக பூர்த்திவிழா
Page 5
நடக்கின்றது. சிவாகம சிரோமணி கிரியாகலாய முக்தாமணி பிரதிஷ்டாரத்தினம் சிவபூரீ சி. குஞ்சிதபாதகுருக்கள் தலைமையில் சிவாசாரியார்கள் இந்துக் கல்லூரி மாணவர்களின் 'அரோகராகோஷத்துடன் 17,1999 அன்று நடத்திய மகாகும்பாபிஷேகம், இக்கல்லூரி வளாகத்தில் பூரீ விநாயகரின் திருவருளை நிலைநாட்டி வைத்திருக்கிறது. அப்பேரருளுடன் கல்லூரி மானவ சமுதாயம் சிறப்புற வழிபிறந்திருக்கிறது.
மகா கும்பாபிஷேகத்தையொட்டி அதிபரும் ஆசிரியர்களும் எடுத்த நன் முயற்சியால் கும்பாபிஷேக மலர் ஒன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மலருக்கு ஆசியுரை வழங்கிய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு பூநீ காஞ்சி காமகோடி சங்கராசாரிய சுவாமிகள் குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுவது சாலப் பொருந்தும்,
"விநாயகமூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன அம்சத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்னேசுவரர் தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து "உன் சிரசையே எனக்குப் பலிகொடு" என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ, அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்கு பிரிதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியானம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனையும் போலவே மூன்று கண்களுடைய தேங்காயை சிருஷ்டித்து அந்தக்காயை அவருக்கு தாம் அர்ப்பணம் பண்ணுபடியாக ஈசுவரன் அணுக்கிரகிக்கிறான்
உயர்ந்த பொருட்களைத் தியாகம் செய்கின்ற புனித உயர் நோக்கை நிறைவேற்றும் புனித பூமியாக இன்று இரத்மலானை, கொழும்பு இந்துக் கல்லூரி வளர்ந்து வருகின்றது.
'பாடசாலை வளவுக்குள் ஆலயம் அமைத்திருப்பது மாணவர்கட்குக் கல்விச் சிந்தனைகளையும் தெய்வநம்பிக்கையையும் ஊட்டுவதற்கு சாலப் பொருத்தமானது" என நல்லை ஆதீனம் குரு மகா சந்நிதானம் பூநீலரீ சோமசுந்தர பரமாசார்ய சுவாமிகள் அருளியிருக்கின்றார்.
A " " ' " " ' " " " " ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' '
மாமன்ற அறிவித்தல்
ஆண்டுப் டெ
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆண்டுப்பிபா 03.10.1999) ஞாயிற்றுக்கிழமை காலை 10 00 மணிக்குமா இதுசம்பந்தமான் அறிவித்தல், மாமன்றத்தில் அங்க ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் தேவையானோர் மன்றத்துடன் ெ
LSLS S S S S L S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
"கல்லூரியின் வளாகத்தில் அமையும் இவ்வாலயம் அங்கு ஒரு இறைசூழலை ஏற்படுத்தி மாணவர் மனதைப் பண்படுத்தும் என்பதில் ஐயமில்லை" என்பது இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமிஜி ஆத்மகானந்தஜியின் திருவாக்கு.
மாண்புமிகு நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஒரு அன்பான - ஆழமான - வேண்டுகோளை விட்டிருக்கிறார் -
இரத்மலானை இந்துக்கல்லூரி கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொளளப்போகும் சகலரிடத்தும் அன்புடன் கேட்டுக்கொள்வது ஒன்றுண்டு. அறிவுக்கும் கிரியைகளுக்கும் அப்பாற்பட்டவன் கணபதிநாதன். அவன் உருவந்தான் பிள்ளையார் ரூபம், அவன் அன்பு எங்கும் வியாபித்துள்ளது. கால்சட்டைப்பையில் மணிப்பர்சை சதாகாலமும் கொண்டு செல்வது போல, அடையாள அட்டையைக் கொண்டு செல்வது போல, உங்கள் கல்லூரிப் பிள்ளையார் அப்பன் எண்ணத்தையும், வடிவத்தையும் எங்கு சென்றாலும் உங்கள் நெஞ்சங்களில் கொண்டு செல்லுங்கள். அவன் வாழ்வளிப்பான். விக்கினங்கள் தீர்ப்பான். வளம் தருவான். வற்றாத அறிவினையும் செல்வத்தையும் என்றென்றும் வாரி வாரி அருளிக் கொண்டிருப்பான்"
இந்துக் கல்லூரி எனும் இப் புண்ணிய பூமியில் இறையருளும், மகேசுவரன் சேவையாக மக்கள் தொண்டும் பலரின் தியாகங்களாக தொடரட்டும்.
செல்லொண்ணா வேதனைகளாலும் சோதனைகளாலும் வாடும் எங்கள் இளம் சமுதாயத்தின் உள்ளங்களில் இறையருளுடன் நல்ல எண்ணங்களையும் பண்புகளையும் வளர்த்து அவர்களின் பசிகளையும் ஏனைய தேவைகளையும் போக்கி, அவர்களின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் வளர இறை பணி நின்று சேவையாற்றுவோமாக.
கந்தையா நீலகண்டன்
. . . . . . ாதக கூடடம
துக் கூட்டம்பிரமாதி வருடம் புரட்டாதி மாதம் 17 நாள் மன்றத் தலைமையகத்தில் நடைபெறும் ம் வகிக்கும் இந்து பன்றங்களுக்கும் அறநிதியங்களுக்கும் ம
தொடர்பு கொள்ளலாம்
மாமன்றப் பொதுச் செயலாளர்
T L S S S S S S S S S S S S S S S SL L L L LS
பிரமாதி வருடப்
Page 6
புலவர்மனி ஏ. ெ
SLSSSLS S S SSSSLS SSSSSLS SSLSSS SSSSLSSSSS SSS SLSSS - - - - - - - - - - س،
ஜ"E) 19ம் திகதி சுவாமி விபுலானந்தர் நி3 புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களால் எழுதப்ப
இருபதாம் நூற்றாண்டின் ஈழ நாட்டுச் சோதியாகிய விபுலானந்த அடிகளார் ஈழ நாட்டிற்கும், தென்தமிழ் நாட்டிற்கும் பொதுவாகவும், தாம் பிறந்த மட்டக்களப்பு மாநகரத்திற்குச் சிறப்பாகவும் ஆற்றியுள்ள கல்வித் தொண்டு பற்றி எழுதுவதென்றால் அது ஒரு கட்டுரையில் அடங்காது. பல நூல்கள் எழுதி விமர்சனம் பண்ணுவதற்கு ஏற்றதாக அது விரிவு பெற்றுள்ளது.
1892ம் ஆண்டு பிறந்து, 1911ம் ஆண்டுவனமானாக்கராயிருந்து 1912 தொடக்கம் 1947 முடியவுள்ள காலப் பகுதியில் தமிழ், ஆங்கிலம், வடமொழி முதலிய பன்மொழிப் புலமையால் அறிவொளி பரப்பிய ஈழ நாட்டுச் சோதியின் கல்வித் தொண்டு பழமையிற் புதுமையும், புதுமையிற் பழமையும் காட்டிய அதியற்புத சாதனையை நிலை நாட்டியுள்ளது.
LILIllii fut, FFILT) என்னும் பிள்ளைப்பெயர் பெற்ற அடிகளார் 1912ம் ஆண்டுக்கும் 15ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சாமிதாச மயில்வாகனனார் என அழைக்கப் பெற்றார். 1916ம் ஆண்டு தொடக்கம் 1922ம் ஆண்டுவரையுள்ள காலப் பகுதியில் பண்டித மயில்வாகனனார் எனப்பெயர் பெற்று விளங்கினார்.1922ம் ஆண்டு தொடக்கம் 1924ம் ஆண்டுவரையும் பூரீ ராம கிருஷ்ணசங்கத்துப் பிரமச்சாரியாகவிருந்து பிரபோத சைதன்னியர் எனும் புனித நாமத்தால் வழங்கப் பெற்றார். 1925 தொடக்கம் விபுலானந்த அடிகள் என்னும் துறவுப் பெயரால் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்த் தம்மை மக்களுக்காக அர்ப்பணம் செய்து, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் தியாக சிந்தை பூண்டவராக, 1947ம் ஆண்டுவரை தன்னலங்கருதாத சேவைபுரிந்து இறந்தும் இறவாதவராக உலக மக்களின் உள்ளங் கலந்து வாழ்கின்றார்.
நீடுவாழ் விபுலானந்த அடிகளாரின் கல்வித் தொண்டு 35 ஆண்டுகள் கொண்ட காலப் பகுதிக்கு உட்பட்டதாயினும், அது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து அப்பாற் சென்று நிலைநாட்டிய சாதனைகளைக் கொண்டது. மிகுந்த சக்திவாய்ந்த இதனைச் சுருக்கமாக இங்கே எடுத்துக் கூறுவதற்கு ஒருவாறு முயல்கின்றேன்.
அடிகளார் பயிற்றப்பட்ட ஒர் ஆங்கில ஆசிரியர் பொறியியற் கலையில் டிப்ளோமா பெற்றவர். இலண்டன் பல்கலைக்கழகத்து விஞ்ஞானப் பட்டதாரி, மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண்டிதர். இத்தனை வாய்ப்புகளையும் பெற்றிருந்த அடிகளார் அவற்றைத் துணையாகக் கொண்டு இல்லற வாழ்க்கையிற் பிரபலம் பெற விரும்பாது, துறவு நெறியிற் புகுந்தமையால் தேசிய சமுதாயத்தை
னவு தினம். இதனையொட்டி, 1978ம் ஆண்டு ட்ட இக்கட்டுரையை "இந்து ஒளி" மறுபிரசுரம் செய்கிறது)
ரியதம்பிப்பிள்ள்ை
நமது கல்விமான்கள் உருவாக்கித் தர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வங்கொண்டு உழைத்தவர் நமது மயில்வாகனனார். அன்றியும் தேசியதாகத்துடன் கல்விக்கொள்கையிலே புரட்சிகரமான மாற்றம் செய்வதற்காகப்பாடுபட்டவர். உதவாதகல்வியில் நின்றுவிடுதலை பெற்றுஉதவும் கல்வியை நாட்டு இளைஞர்களுக்கு ஊட்டிவைத்தல் என்பது அவரின் புதிய திட்டமாகும். எல்லா அறிவும் மேற்கிலிருந்து தான் இறக்குமதியாக வேண்டும் என்கின்றகொள்கையை அவர் அடியோடு வெறுத்தார். உதவாத கல்வியை நாம் சந்ததி சந்ததியாகப் பெற்று அன்னியர்க்கு உழைத்தது இனிப்போதும் நமக்கு வேண்டியது கையாலாகுங் கல்வியே. கல்வி தேடு கல்வியாய் அமையவேண்டும். பொருளைத் தேடுங் கல்வி, கடவுளைத் தேடுங் கல்வியென அது அமைய வேண்டுமென அவர் கொண்டிருந்த எண்ணம் இன்று செயல்முறைக்கு வந்திருப்பதைக் கண்டு மகிழ்வு கொள்வதற்கு அவர் இங்கில்லை. எனினும் ஆவி வடிவிலேனும் நிச்சயமாக அவர் இதைக் கண்டு மன நிறைவு கொள்ளாமலிரார்.
1922ம் ஆண்டுவரை பண்டித மயில்வாகனனார் என வழங்கிவந்த நிலைமாறி, உலகியல் நெறி வழியே நின்று நேர்மையாகவும், கூர்மையாகவும், சீர்மையாகவும் கலைத் தொண்டு செய்துவந்த நிலைமாறி, துறவு நெறி பூண்டு 1925ம் ஆண்டு தொடக்கம் அருள்நெறியை நோக்கி விபுலானந்தரின் கல்வித் தொண்டு விரிவடையலாயிற்று.அவரது கல்வி, செல்வம், அறிவு, ஆற்றல் எல்லாம் உலகுக்கு உரிமையாகிவிட்டன.
1922 தொடக்கம் 1925 வரையுள்ள காலப் பகுதியில் அடிகளாரின் அறிவாற்றல், சிந்தனா சக்தி முதலிய உள்ளமைப்புகளும், உடல் நிலையும் புதிய சக்தியும் வளர்ச்சியும் பெற்று ஆராய்ச்சித் துறையில் ஆழ்ந்து அகன்று நுண்ணிதாகச் சென்று புதிய சாதனைகளை நிலைநாட்டும் திண்மைபெற்றுத் திகழ்ந்தன.
1925ம் ஆண்டு தொடக்கம் 1947 வரை அடிகளார் செய்து நிலைநாட்டிச் சென்ற கல்வித் தொண்டுகள் குறிப்பிடத்தக்க சிறந்த அம்சங்கள் உடையனவாகும். யாழ்ப்பானத்தில் ஆறுமுகநாவலர் காலத்தில் சமூகம் அடைந்திருந்த இரண்டும் கெட்டநிலை விபுலானந்தர் ஈழம் திரும்பி வந்த காலச் சூழ்நிலையிலே மட்டக்களப்புத் தமிழ்ச் சமுகத்திலும் நன்றாக வேரூன்றிக் கிடந்தது. யார் உண்மைச் சைவர்? யார் உண்மைக் கிறிஸ்தவர் என்பது அறியமுடியாதபடி சமயவாதிகளிடையே அரசியற் செல்வாக்கே தலைவிரித்தாடிய காலத்தில் விபுலானந்த சுவாமிகள் தமது கல்விப் பணியை ஆரம்பிக்கலானார்.
Page 7
சுவாமிகள் சமூகத்தைப் பிடித்திருந்ததொரு பெரிய நோயை முன்புகளைத்தெறிந்தார். அதுதான் அச்சம் என்கின்ற நோய். மேல் நாட்டு மிஷனரிகளையும், அவர்களுக்குப் பக்கபலமாக ஆதரவளித்து நின்ற வெள்ளை அதிகாரிகளையும் கண்டு தமிழ்ச் சமூகம் அஞ்சிக்கிடந்த அவலப்பிணியினை மாற்றி, மக்களிடையே அன்புப்பிணைப்பினை உண்டாக்கிவைத்து, மனித உரிமைகளைப் பாதுகாத்த ஆரம்பப் பணியானது அடிகளாரின் கல்வித் தொண்டுக்கு அத்திவாரமாக அமைந்தது. அதிகாரத் திமிர்பிடித்திருந்த அதிகாரிகளின் உள்ளம் உணர்ச்சி பெற்று அன்பில் நெகிழ்ந்தது. பரஸ்பர நல்லெண்ணத்தை வளர்ப்பதிலே அடிகளார் வெற்றி பெற்றார். அடிகளாரின் சேவை அப்பழுக்கில்லாத புனித சேவையாய் திகழ்ந்தமையால் எல்லா மதத்தினரும் இனத்தவரும் தம் முன்னே பேத உணர்ச்சி நீங்கப் பெற்று ஒருமுகமாக வாழும் சுமுக நிலைமை நாட்டில் ஏற்படலாயிற்று. இதனால் அடிகளாரின் கல்வித் தொண்டு தமிழர், கிறிஸ்தவர், முஸ்லிம், பெளத்தர் முதலிய எல்லோரையும் இணைத்து வைத்த ஒருமைப்பாட்டுக்கு ஒரு வித்தாக வேரூன்றியதை இந்த நாடு மறக்க முடியாது. மறக்கவும்படாது.
1925ல் நாட்டில் இருள் நீங்கி, ஒளி பரந்து மக்களிடையே கல்வித் துறையில் ஒரு உத்வேகம் உண்டாயிற்று. சைவப் பள்ளிகளைத் தாபிப்பதும், அவற்றுக்கு அரசினர் நன்கொடை வழங்குவதும் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டு வந்த நிலை மறைந்துபோயிற்று.
1925ம் ஆண்டிலே மட்டக்களப்பு காரைதீவு, ஆனைப்பந்தி, மண்டூர், ஆரையம்பதி என்னும் ஊர்களிலுள்ள சைவப் பாடசாலைகளை நடத்தும் பொறுப்புவிவேகானந்த சபையினரால் அடிகளாரிடம் வழங்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி உப்போடை யிலே தாபிக்கப் பெற்றுள்ள சிவானந்த வித்தியாலயமே கிழக் கிலங்கையில் அடிகளாரின் திருவுருவம் போன்ற தோற்றமுடையது. அக்கலாசாலை அமைந்துள்ள நிலப் பகுதியானது பூரீ ராமகிருஷ்ண ஆச்சிரமத்தையும், மாணவர் குருகுலத்தையும் கொண்டுள்ளதாய் ஈழநாட்டின் தபோவனம் போன்று காட்சியளிக்கின்றது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் ஆகிய எல்லோரையும் கவர்ந்து நிற்கின்ற சிவானந்த வித்தியாலயம் அடிகளாரின் விசாலமான நோக்கத்தைப் பிரதிபலித்து விளங்கும் காட்சியானது வெளியுலகினைப் பெரிதும் கவர்ந்து நிற்பது குறிப்பிடத்தக்க தொரு செய்தியாகும்.
திருகோணமலை இந்துக் கல்லூரியும் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயமும் அடிகளாரின் தன்னலமற்ற கல்வித் தொண்டினால் மிகவும் உயர்நிலையடைந்து விளங்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து மட்டக்களப்பின் பல பாகங்களிலும் தோன்றிய பல கல்விச் சாலைகளால் நாடு மறுமலர்ச்சி யடைந்துள்ளதைப் பிரத்தியட்சமாகக் காணமுடிகின்றது.
ஈழநாட்டில் அடிகளார் இட்ட கல்வி வித்தானது ஆரம்பக் கல்வியையும், உயர்தரக் கல்வியையும் விருத்தி செய்து ஈழ நாட்டில் பல்கலைக்கழகம் என்னும் கலா விருட்சத்தைத் தோற்று வித்தற்கேற்ற அங்குரார்ப்பணமாயிற்று. தென்னிந்தியாவிலும் ஈழநாட்டிலும் பல்கலைக் கல்வியை உச்சநிலையில் வைப்பதற்குரிய மார்க்கங்களை ஆராய்ந்து அறிவாளிகளுக்கு அடிகளாரின் நல்லாலோசனைகள் மிகவும் பயன்பட்டன. 1927ல் சென்னையில் நிகழ்ந்த ஆராய்ச்சி மகாநாட்டில் பேரறிஞர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை உருப்படுத்தும் வகையில் அடிகளார் கூறிய ஆலோசனையின் பயனாகவே சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகம் தோன்றியதென்று கூறினும் அது புனைந்துரையாகாது. 1931-33 வரை அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது
தமிழ்ப்பெரும் பேராசிரியராக அப்பீடத்தினை அணி செய்த நிகழ்ச்சியும் இதனை அரண்செய்து நிற்கின்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் தொண்டு செய்த காலப்பகுதியிலேதான் அடிகளாரின் யாழ்நூல் கருக்கொண்டதெனக் கூறுவது பொருத்தமாயிருக்கும்.
1943 தொடக்கம் 1947 தமது உடற்பொறை நீங்கும் வரை இலங்கைப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பீடத்தின் பெரும் பேராசிரியராயமர்ந்து அளப்பரிய பணிபுரிந்து தமது இறுதி மூச்சினை அடிகளார் அங்கேயே விடும் பேற்றுக்கு உரியவரானார். ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளில் விரிவுரை நிகழ்த்துவோரைப் பேராசிரியர்களெனவும் வழங்கவேண்டு மென்பது அடிகளாரின் அபிப்பிராயமாகும்.
அடிகளார் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்னும் எல்லைகளையும் கடந்து அப்பால் நின்று செய்த கலைத்தொண்டு சாசுவதமானது. அவரது மரணத்தின் பின்பு உலகம் அறிந்து கொள்ளும் வண்ணம் அது எஞ்சி நிற்கின்றது.
தக்கார்தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்"
என்னும் திருக்குறளுக்கு உதாரணமாக விளங்குகின்ற இருவருள்ளே முதற்பெருந்தகையார் ஆறுமுகநாவலர். அடுத்தவர் நமது விபுலானந்து அடிகளார். இருவரும் துறவிகளாயிருந்தும் எச்சம் உடையவர்களாயிருப்பதை நாம் காண்கின்றோம். எச்சம் என்பது பிள்ளைகளை மாத்திரம் குறிக்கும் சொல்லன்று அடிகளார் நமது நாட்டுச் சிறுவர் சிறுமியரை நோக்கி உள்ளமுருகினார். மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் குருகுல வாசகங்களை அமைத்து மாணவர் ஆசிரியர்களோடு உடனிருந்து, உடனுண்டு, உடன் பழகி, உயர்கலை பயின்று, நாட்டின் நவசிற்பிகளாக உருவாகும் வாய்ப்பினை உண்டாக்கிவைத்தார். அடிகளாரின் உள்ளக்கருணையை நமது இளஞ்சந்ததி இன்று அனுபவிக்கின்றது. மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள குருகுலவாசம் சாதி, சமய பேதமின்றிஎல்லோராலும் பாராட்டப்படும் ஒரு சிறந்த முன்மாதிரியான தாபனமாகும்.
இக்குருகுலத்தின் மூலம் நம் நாட்டுச் சிறுவர்கள் தன்னம்பிக்கையும், சுயதேவைக்கு உழைக்கும் ஈடுபாடும், தியாகசேவை செய்யும் உளப்பண்பும் உள்ளவர்களாக நாடு முழுவதிலும் பரந்து வாழும் தகுதியுடையபோதனை, சாதனைகளில் சித்திபெற்றவர்களாகத் தம்மை உருவாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம், சமசந்தர்ப்பம் உள்ளவர்களாக உதவும் கல்வியினை, தேடு கல்வியினைப் பயின்று வருகின்ற தேசியத் திறனை வேறெங்கும் காணமுடியாது.
பூரீ ராமகிருஷ்ண சங்கத்தின் இலங்கைக் கிளையினை அரசாங்க சபையில் நிறைவேற்றிய சட்டத்தின் மூலமாக நிலையும் மதிப்பும்பெறச் செய்த பெருமை குருதேவரின் அருள் நோக்கம் பெற்ற விபுலானந்தருக்கு எளிதாகக் கைகூடியது ஒரு வியப்பன்று. பூரீராமகிருஷ்ண சங்கத்தினரின் சமய, கலாச்சாரத் தொண்டுகள் விபுலானந்த அடிகளை நமக்கு என்றும் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
உயர்தர வேதாந்த சஞ்சிகைகளாகிய பிரபுத்த பாரதா, ‘வேதாந்த கேசரி,இராமகிருஷ்ண விஜயம் என்னும் வெளியீடு களின் ஆசிரியராகவும், கொழும்பு 'விவேகானந்தன்' என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் அடிகளார் புரிந்த சமய, கலாசாரத் தொண்டுகள் இன்றும் பயன்படும் ஆக்கபூர்வமான சாதனங்களாகத் திகழ்கின்றன. 1939-41ம் ஆண்டுப் பகுதி பத்திரிகையாசிரியராகத் தொண்டு பூண்ட காலமாகும்.
இலங்கைக் கல்விச் சீர்திருத்த சபையிலும் சென்னைப் பல்கலைக்கழகம் முதலியவற்றின் ஆலோசனைச் சபைகளிலும்,
Page 8
யாழ் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்க ஆலோசனைச் சபையிலும்,பிற கல்வி ஆலோசனைச் சபைகளிலும் அங்கம் வகித்து நமது அடிகளார் கூறிய ஆலோசனைகளால் கலாபீடங்கள் அடைந்த புதுமை கலந்த உயர்ச்சி அளப்பரியதாகும்.
பன்மொழிப்பண்டிதராய் விளங்கிய அடிகளார்க்கு மொழி பெயர்ப்புக் கலை கைவந்ததொரு பொருளாயிற்று. இதனால் மேல்நாட்டு இலக்கியங்கள், சேக்ஸ்பியர் நாடகங்கள், மகாகவி தாகூர் போன்ற கவிஞர்களின் புதுமைக் கவிகள் பல அடிகளாரின் நாநலங்கனிந்த தமிழ்ப் பாடல்களாலும் உரைநடைகளாலும் உலகுக்கு உபசரிக்கப்பட்டுள்ளன. மதங்கசூளாமணி என்னும் நாடகக் கலை நூல் செகசிற்பியாரின் கவிதைச் செல்வத்தைத் தமிழ் மக்களுக்குத் தொகுத்து உபசரிக்கின்ற விழுமிய நிதிப் பேழையாகும். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் இயற்றிய மண்ணியற் சிறு தேர்' என்னும் நாடகத்துக்கு அடிகளார் எழுதியுள்ள அணிந்துரை நூல் அன்னாரின் வடமொழி நாடக இலக்கணத்தின் நுண்ணிய அறிவினைப் பரக்கக் காணலாகும். பூஞ்சோலைக் காவலன் என்னும் பாடற்பகுதியில் மகாகவி தாகூரின் பாடல்களை மொழிப்பெயர்த்து இனிமை ததும்ப உபகரித்துள்ள அடிகளார் மூல நூலையும் பார்க்கத் தமிழ் மொழிபெயர்ப்பினை இனிதாகச் சுவைக்கும் வண்ணம் தந்திருக்கும் நாவன்மை எல்லார்க்கும் அமைவதில்லை.
சொல்லாக்கத் துறையில் அடிகளார்க்கு நிகரான திறமையுடையோரைக் காண்பது அரிதாகும். சொல்லாக்கம் செய்யும்போது முதலிலே தமிழ் நூல்களிற் பரந்து கிடைக்கும் சொற்களைக் கண்டு எடுத்தாண்டு பயன்கொள்ளவேண்டும். தமிழில் பெறமுடியாத சொற்களை வடமொழியிலிருந்து பெறவேண்டும். இரு மொழியிலும் பெறமுடியாதபோதுதான் வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். சொற்கள் எழுத்துச் சிக்கனமும், நாவுக்கு உச்சரிக்க எளிதாயும் இனிதாயும் அமையும், அமைதியும் கொண்டு வழங்கவேண்டும் எனக் கூறி உதாரணங்களும் காட்டிச் செல்லும் அடிகளாரின் சொல்லாக்கத் திறமை போற்றுதற்கு உரியதாகும். 1936ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த சொல்லாக்க மகாநாட்டுக்கு அடிகளார் தலைமைதாங்கிய செய்தியும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.
இனி நூலாசிரியரான அடிகளார் செய்த ஆக்கபூர்வமான தொண்டுகள் பலவற்றுள்ளே சிலவற்றைக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன். செய்யுள் நடையிலும் உரைநடையிலும் அடிகளர் இயற்றித்தந்துள்ள நூல் மிகப்பலவாகும். அவற்றுள்ளே யாழ்நூல் என்னும் பெயர்கொண்ட ஆராய்ச்சிப் பெருநூலானது இசைத்தமிழ்பற்றியதொரு மூல நூலாகும்.
இது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மறைந்துகிடந்த தமிழ் இசைக் கலையின் நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விரித்து விளக்கி வெளிப்படுத்துகின்றதொரு பெருநூலாகும். மறைந்து ஒளிந்துபோன இசை நுணுக்கங்களையும், சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையிலும் சங்கநூல்களுள்ளும் தலைமயங்கிச் சிதறுண்டு கிடந்த இசைமரபுகளையும் ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாகவும், இசையிலக்கண வரம்பு காட்டி, இதுதான் சங்ககாலத்துத் தமிழர் கையாண்ட இசை மரபு இவைகள் தான் பழந்தமிழ் மக்கள் வாசித்த யாழ்க் கருவிகள் என வரையறுத்துக் கூறுகின்றஇந்நூல் தமிழ் இசை ஆராய்ச்சியாளர்களுக்கு இசைக்
கடலைக் கடப்பதற்கேற்ற கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றது.
அடுத்துக் குறிப்பிடுதற்குரியது மதங்கசூளாமணியென்னும் நாடகக்கலை பற்றிய நூலாகும். மதங்கர் என்பது நாடக ஆசிரியர்கள். சூளாமணியென்பது சிரோரத்தினம்.நாடக ஆசிரியர்களுக்கெல்லாம் சிரோமணிபோல
விளங்குகின்ற ஆசிரியர் செகசிற்பியரின் பெயரைத் தாங்கி வெளிவந்துள்ளது இந்நூல். இந்நூலின் கண்ணே தமிழ்மொழி, வடமொழி நாடக இலக்கண அமைதிகளையும், ஆங்கில நாடக இலக்கண அமைதிகளையும் எடுத்துக்காட்டி ஒப்புநோக்கிக் கண்ட முடிவுகளை உலகுக்கு உபகரிக்கின்ற இந்நூல் அடிகளாரின் மொழி பெயர்ப்புத் திறமைக்கும் ஒர் உரைகல் போன்றதாகும். உலகம் முழுவதையும் ஓர் நாடக மேடையாகவும், ஆண் பெண் இருபாலாரையும் நடிகர்களாகவும் உருவகஞ்செய்து காட்டிய செகசிற்பியாரின் கற்பனை வனப்பிலும், கவிதாசால சாமர்தியத்திலும், அறிவாற்றலிலும் ஈடுபட்டு இயற்றிய இந்நூல் அடிகளாரின் மனப்பண்பும், கனிவுபெற்ற நானலமும், ஆழ்ந்த புலமையும் விளங்கித் தோன்றுவதை நாம் காணலாம்.
இன்னும் விவேகானந்த ஞானதீபம், கருமயோகம், ஞானயோகம், நம்மவர் நாட்டு ஞானவாழ்க்கை, விவேகானந்த சம்பாஷனைகள் முதலிய நூல்களும் குறிப்பிடத்தக்க சிறந்த பயன்தரும் நூல்களாகும். விபுலானந்தர் பிரபந்தத் திரட்டு என்னும் பெயருடன் ஒரு தொகை நூல் வெளியிடப்படுமேல் அடிகளார் இயற்றிய நூல்கள் பலவற்றை உலகம் அனுபவித்தற்கு வசதி ஏற்படும்.
அடிகளார் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிஉபகரித்துள்ள கட்டுரைகளோ மிகமிகப் பலவாகும். அவற்றுள்ளே வண்ணமும் வடிவும், நிலவும் பொழிவும், மலையும் கடலும், கவியும் சால்பும், நாடும் நகரமும், ஆங்கில வாணிமுதலிய கட்டுரைகள் நம்மிடையே வாழ்ந்து மறைந்துபோன இளம் எழுத்தாளர் அருள் செல்வநாயகம் அவர்களால் 1963ல் வெளியிடப்பட்டுள்ளன. அன்னார்க்குத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.
குருதேவர் வாக்கியம், கங்கையில் விடுத்த ஒலை, செகசிற்பியார் நாடகக் கவிதைகளின் மொழி பெயர்ப்புகள் இறைவனுக்கும் மூன்று மலர்கள், மகாலக்குமி தோத்திரம், மகாகவி தாகூரின் கவிதைகள் சிலவற்றின் மொழி பெயர்ப்புகள், முதலாக ஆயிரக் கணக்கான கவிதைகள் மூலம் அடிகளார் செய்துள்ள கல்வித் தொண்டுகள் அளவில் அடங்காதன. அடிகளாரின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தன. நெகிழ்ச்சியும், தெளிவும், எளிமையும், இனிமையும் வாய்ந்தன.
உண்மையும், அழகும், செம்மையுமாகிய வனப்புகள் ஒருங்கேயமைந்த இக்கவிதைகள் அறிவும், உணர்ச்சியும் தந்து, செவிக்கும் மனத்துக்கும் இனிமையூட்டி உயிர்த்தளிக்கச் செய்யும் அமைதியுடையனவாகும். அடிகளாரின் கவிதைகளுட் சில அன்பர் அருள் செல்வநாயகத்தின் முயற்சியால் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடிகளாரின் கல்வியறிவு பல ஆக்க வேலைகளிற் பயன்பட்டுள்ளது. அடிகளார் மேல்நாட்டுக் கல்வி முறைகளிலே நன்கு திளைத்தவர். எனினும், மேல்நாட்டிலுள்ள உதவாத போக்குகளில் அவர் மோகங் கொள்ளவில்லை. மேல்நாட்டு நாகரீகப் பண்புகளை அவர் நன்கு கடைப்பிடித்து நமது நாட்டுக் கல்வி முறையிலே பயன்படுத்தியமை ஒரு முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கது.
ஒருவர் உண்மையான நிபுணரானால் அவரது நிபுணத்துவம் ஆக்கவேலைகளில் பிரதிபலிக்க வேண்டும். ஒரு கணித மேதை மற்றவர்களுக்கு மேலால் கணக்குவிடாமல் தமது நிபுணத்துவத்தை ஆக்க வேலையில் பயன்படுத்தி உலகம் நன்மையடையச் செய்யவேண்டும் என்பார். அடிகளாரின் இந்த விசாலமான கல்விக்கொள்கைக்கு அவர்கள் இயற்றித்தந்துள்ள யாழ் நூலே சான்றாக அமைந்துள்ளது. கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது யாழ் நூல்.
கற்ற கல்வியினால் பிறரை வெருட்டக்கூடாது. தன்னையும் பிறரையும் ஆளாக்கிக்கொள்ள வேண்டும் என்று
Page 9
அடிகளார் அடிக்கடி சொல்வார். ஒருவர் மற்றவரின் அறிவைத் தம்முடைய அறிவால் கூர்மை பார்ப்பதைவிட இருவரின் அறிவையும் கூட்டாகப் பயன்செய்தல் நாட்டை உருவாக்குதற்கு ஏற்ற வழியாகும் எனக் கூறுவார்.
நம் நாட்டுக் கல்விமான்களும், நிபுணர்களும் நாட்டின் இயற்கையைத் துணையாகக் கொண்டு செயல் புரிந்து, புதுப்புது முறைகளைக் கண்டு, அவற்றைக் கையாண்டு நாட்டை முன்னேற்றப் பாதையிலே செலுத்தப் பழக வேண்டும் என ஆலோசனை கூறுவார். அடிகளார் சர்வதேசிய நோக்கம் உடையவராயினும், தேசிய நோக்கத்தில் நிலைத்து நின்று தனித் தன்மையைப் பேணிக்கொண்டு அகில உலக நாடுகளுடன் தோழமை பூணவேண்டும், தனது தேசிய நோக்கை மறந்து அயல் நாடுகளுடன் தோழமை கொள்ளப்போவது அவமானம் ஆகும் என உணர்ச்சிததும்பக் கூறுவார். இந்த எண்ணங்களை எல்லாம் அடித்தளமாகக்கொண்டு பல்கிப் பெருகியதே அடிகளாரின் கல்வித் தொண்டு என்பது நினைவில் வைத்தற்கு உரியதாகும்.
அடிகளார் ஒரு தீவிர விஞ்ஞானி. அதே நேரத்தில் தெய்வ நம்பிக்கையில் உறுதிபூண்ட துறவியாய் மெய்ஞ்ஞானத்தில் நிலை நின்றார். நாட்டு மக்களை
கொழும்பு சைவ முன்னே ஆண்டு நிறைவினையெ வரவழைக்கப்பட்ட நந்திக் இந்து சமய நிறுவனங்க என்பவற்றுக்கு வழங்கி வைபவங்கள், மற்றும் நந்திக்கொடிகளை ஏற்றிவைத்து, அதற்கு மு விடுத்துவருவதும் சிறப்பான விஷயமாகும். இது கொழும்பு சைவமுன்னேற்றச் சங்கம் வழங்கியிரு
அகில இலங்கை இந்து மாமன்றத்தி சைவமுன்னேற்றச்சங்கம் அன்பளிப்பாக வழங்கிய நந்திக் கொடி ஏற்றப்பட்டு, அதற்கு முக்கியத் செய்தியாகும்.
இந்து சமயத்தின் தத்துவங்களையும், சிற கொண்டிருக்கும் நந்திக்கொடியை இலங்கை மு பெருமக்கள் வாழும் சகல இடங்களிலும் நடைெ போது ஏற்றிவைத்து, அதற்குரிய முக்கியத்துவம் ( கொழும்பு சைவ முன்னேற்றச்சங்கம் கொண்டிருச்
மாமன்றம் தனது முழுமையான ஆதரவை தெரிவி
விஞ்ஞானத்தின் துணைகொண்டு மெய்ஞ்ஞான வழிக்குத் திசை திருப்பிய ஒளிபடைத்தவர் நம் அடிகளார்.
அவர் ஒரு கவிப்புலவர். அதேநேரத்தில் இனிய உரைநடை கைவந்த பேராசானாய் விளங்கினார். அவர் ஒரு இலக்கிய விற்பன்னர். அதே நேரத்தில் ஒரு கணித மேதையாக விளங்கி அழகுக் கலைகளையும், நூல்களையும் இணைத்து வைத்து அருஞ்செயல் புரிந்தவர்.
இத்தகைய அதி அற்புத சாதுரியமும் மாதுரியமும் ஒருங்கிணைந்த அடிகளாரின் கல்வித்தொண்டு, வெறும் வறண்ட அறிவை மாத்திரம் துணையாகக் கொண்டதல்ல. அது உயிர்ப்பூட்டுவது. உண்மை காட்டுவது. தன்னப்பிக்கை தருவது. சுயதாபரிப்புக்கு வழி செய்வது. மனிதனையும் மனத்தால் இணைத்து வைப்பது. அக நிறைவும் புற நிறைவும் அளிப்பது. மனிதனை மனிதனாக வாழச் செய்வது. மனிதனுக்காக வாழப் பண்ணுவது.
அடிகளாரின் இந்தக் கல்விக் கொள்கையின் ஒளிவழியே நமது இளம்சந்ததி செல்வதாக, அடிகளார் காட்டிய இந்தக் கல்விப் பாதையிலே சென்று நாடு மறுமலர்ச்சி பெறுவதாக.
ாற்றச் சங்கம், தனது 45ம் ாட்டி, இந்தியாவிலிருந்து க்கொடிகளை ஆலயங்கள், ள், மற்றும் பாடசாலைகள் வருவதுடன், அவற்றின்
உற்சவங்களின் போது 0க்கியத்துவம் கொடுக்கும்படி வேண்டுகோள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட நந்திக்கொடிகளை ப்பதாக அறிகிறோம்.
ற்கும் மூன்று நந்திக்கொடிகளை கொழும்பு பிருப்பதும், மாமன்றத்தின் சகல வைபவங்களிலும் துவம் கொடுக்கப்பட்டு வருவதும் சிறப்பான
ப்பம்சங்களையும் வெளிப்படுத்தும் தன்மையைக் ழவதிலும் மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் இந்துப் பறும் சமய நிகழ்வுகள் மற்றும் உற்சவங்களின் கொடுத்து பெரிதும் மதிக்கப்பட வேண்டும் என்பதில் கும் பெருவிருப்பத்திற்கு, அகில இலங்கை இந்து ந்துக் கொள்ளுகிறது.
Page 10
புதுமைக்கும் ெ I66 56óIGOTGlf
ஆ. குெ
‘வாழ்தல் வேண்டும் இ
தமிழகம் மூவேந்தர்க்கும்
பொதுவானதோர் நாடு. இதனைச் சான்றோர்கள் மிகப் பண்டைக் காலம் தொட்டே வற்புறுத்தி வந்திருக்கிறார்கள். எமக்குக் கிடைத்துள்ள ஆகப் பழைய நூலாகிய தொல்காப்பியம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. “வண் புகழ் மூவர் தண் எழில் வைப்பு” (தொல்-செய் 78) தொல்காப்பியருக்குப் பின்னர் ஏனைய பெரு மக்களும் மீண்டும் வற்புறுத்தியுள்ளார்கள்.
"குன்றுதலை மறைந்த மலைபிணித்து யாத்த மண் பொதுமை சுட்டிய மூவருலகம்'- புறநானூறு 357
இந்நிலையில், இம் மூவேந்தரும் தம்முட் பகைத்துப் பொருது செல்வரேல், வேறு நாட்டவர் புகுந்து, தமிழகத்தைக் கைப்பற்றித் தமிழியன் பண்பாட்டைச் சிதைத்துத் தமிழ் நாட்டுச் செல்வம், கலை, சமயம்,மொழி, ஒழுக்கம் முதலியவற்றைச் சிதைத் தழிப்பரென்று அறிந்திருந்த முன்னோர்கள் தகுந்த எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். மூவேந்தரும் இதனைப் பொருட்படுத்தாது தம்முட் பொருது கெட்டனர். தமிழகமும் கெட்டது.
ஒரு சந்தர்ப்பத்தில், சேரமான் மாவண் கோவும், பாண்டியன் காணப்பேர் தந்த பெரு வழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒரிடத்தே அன்புடன் ஒருங்கு கூடியிருந்தனர்.
இவ்வரிய காட்சியைக் காணக்கூடிய வாய்ப்பு ஒளவைப் பிராட்டியாருக்குக் கிடைத்தது. இதனைக் கண்ட பிராட்டியாரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இவ்வரிய சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உறுதுணையாக ஒரு அறிவுரை வழங்கலாம் என்று கருதுகின்றார். வழங்குகின்றார்.
“தேவருலகத்தைப் போன்ற வளவிய பகுதிகளையுடைய நிலப்பரப்புத் தமமேயாயினும், அதனை ஆளும் வேந்தர் இறக்கும் போது, அது அவருடன் செல்லாது. அவர்க்குப்பின் வரும் வேந்தர், ஒரு தொடர்பும் இல்லாத வேற்று நாட்டவராக இருப்பினும், வலிமையுடையவராயின் அவர்க்கு அது உரியதாகி விடும்.
ஆதலினாலே, ஈதல் இசைபட வாழ்தலே நலம். அதாவது, இரந்து நின்ற பார்ப்பனருக்கு, அவருடைய வளைந்த கை நிறையும் படியாக, பொற் பூவும், பொற் காசும் நீர் வார்த்து கொடுப்பீராக. மேலும், அரச வாழ்வு மகிழ்ச்சிகரமாக அனுபவிக்கப்படல் வேண்டும் எனக் கருதினால், இழை அணிந்த மகளிர் பொன் வள்ளங்களில் எடுத்துக் கொடுத்த, நாரால்
காட்டிகளாகப்
IGOIS L56i
நாயகம்
வண் வரைந்த வைகல்”
வடிக்கப்பட்ட கள் தெளிவை உட்கொண்டு களித்து, இரவலர்க்கு, அவர்கள் வேண்டிய அரிய பொருள்களைக் குறைவறக் கொடுப்பீராக.
இவற்றிற்கெல்லாம் மகிடம் சூட்டுவது போல்வதான கட்டாய கடமையொன்று உள்ளது. அதுதான் “வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்’ இவ்வுலகில் வாழ்தற்கென வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும், வாழவேண்டிய முறைப்படி வாழ்தல் வேண்டும் என்பதே வேண்டப்படுகின்றது. வாழ்வு நல்ல வண்ணம் அமைவதற்கு இன்றியமையாதது நல்வினையேயாகும். வாழ்தற்கு ஏதுவாகிய அந் நல்வினையேயன்றி, இறக்கும்போது உயிர்க்குத் துணையாவது வேறே யாதும் இல்லை. வீடு பேறு ஒன்றையே விரும்பிப் புலன் கண்ட மேற் செல்லும் ஆசைகளை அடக்கியமைந்த அந்தணர் எடுக்கும் முத்தீயைப் போல அழகு தக வீற்றிருந்த, வெண் கொற்றக் குடையும், கொடி உயர்த்திய தேருமுடைய வேந்தர்களே, யானறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும். ஆகையினாலே இவ்வாறு நல்வாழ்வு வாழ்ந்து, வானத்தில் விளங்கித் தோன்றும் விண்மீன்களிலும், இம்மென்று முழங்கிப் பெய்யும் பெரிய மழைத்துளியினும், மிக்கு மேம்பட்டு, நும்முடைய வாழ் நாட்கள் விளங்குவனவாக !
இதற்குரிய பாடலை இனிப் பார்ப்போம்:
நாகத் தன்ன பாகாற் மண்டிலம் தமவே யாயினும் தம்மொடு செல்லா வேற்றோராயினும் நோற்றோர்க்கு ஒழியும் ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்தி நாரலி தேறல் மாந்தி மகிழ்சிறந்து இரவலர்க்கு அருங்கலம் அருகாது விசி வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் வாழச் செய்த நல்வினையல்லது ஆழுங் காலை புணை பிறிதில்லை ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர் முத்திப் புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தோர் வேந்திர் யானறிஅளவையோ இதுவே வானத்து வயங்கித் தோன்றும் பீனினும் இம்மென இயங்கும் மாமழை உறையினும் உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக நுந்நாளே
-புறநானூறு 367
Page 11
மூவேந்தர்களுடைய அரசு, அந்தணர்கள் முறையாக வளர்க்கும் முத்திபோல் ஒளிகான்று பிரகாசித்து விளங்கி நின்றன. இந்தநிலை அழியாது என்றென்றும் பாதுகாக்கப்படல் வேண்டுமென்பதே ஒளவைப் பிராட்டியார் போன்ற ஆன்றோர் களின் வேனாவா. இதனை உணர்ந்து அவர்கள் காலத்துக்குக் காலம் அவ்வேந்தர்களுக்கு அறிவுரை வழங்கி வந்திருக் கிறார்கள். வேந்தர்களோ அவ்வறிவுரைகளைத் தக்கவாறு செவிமடுத்துச் செயலாற்றியதாகத் தெரியவில்லை. இவற்றிற்கு மாறாக ஒவ்வோர் வேந்தர் மனத்திலும் ஒரு விபரீத எண்ணம் உண்டாவதாயிற்று. தாமே தலைமைப் பீடம் வசிக்க, மற்றைய இருவரும் தமக்குக் கீழ்ப்பட்டவராக ஒழுகுதல் வேண்டும் என்னும் சிந்தனை ஒவ்வொருவர் உள்ளத்திலேயும் உண்டாவதாயிற்று. இதனால், தம்முட் பொருது, கெட்டார்கள். தமிழகமும் அழிந்தது.
தமிழ் மூவேந்தர்க்கும் வழங்கப்பெற்ற அறிவுரை நம்மனோராகிய ஸாதுமக்களுக்கும் மிகப் பொருத்தமாக அமைகின்றது.
"வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகள்'
இந்நிலவுலகிலே எமக்கென வரையறுக்கப் பெற்றுள்ள காலத்தின் போது நாம் வாழுதல் வேண்டும் என இவ்வுரை கூறுகின்றது. "ஏன் ஐயா, நாம் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றோம். அப்படியிருக்கவும் இவ்வேண்டாச் சொல்
سیم
一壹_ இடம்பெயர்ந்தவ:
இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள அகதிமு ஒரளவேனும் குறைக்க வேண்டும் என்ற நோக்கது நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் ! அவ்வப்போது அனுப்பிவைத்து வருகிறது.
நிவாரணப் பொருட்கள் லொறியொன்றில் ஏ
WN
இந்து ஒளி
எதற்காக ?' என்று கேட்கச் சாதாரணமாக மனிதன் விழைகின்றேன். வாழ்வு என்றால், வாழவேண்டிய முறைப்படி வாழ்தலே, வாழ்வு இவ்வாறு வாழும் ஒரு மனிதன் இந்நிலவுலகிலே இருப்பினும் அவன் தெய்வமாகவே கருதப்படுவான் என்பது திருவள்ளுவப் பெருந்தகையின் பொய்யா மொழி, ஒளவைப் பிராட்டியார் கூறியது போன்று, நல்வாழ்வுக்கு இன்றியமையாதது, தீவினையொழிந்த நல்வினையேயாகும். நல்வினை வர்க்கத்தில் அமைந்துள்ள பல்வேறு அம்சங்களுள் மிக விசேடமானது ஒன்று உண்டு. அதுதான், 'தனக்கென மாத்திரம் வாழாது, பிறர்க்குரியனாகும் தன்மை' இப்பண்பு, எமது முன்னைய கட்டுரைத் தொடரில், எடுத்துக் காட்டப்பட்டது.
"வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப் பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பாவின் பேத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் விழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே"
இங்கு மாணிக்கவாசக சுவாமிகள் நெஞ்சத்தை விளித்துக் கூறுகின்றார். நீ வாழ்வதாகத்தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றாய். உண்மையில் நீ வாழவேயில்லை. உனக்குக் கேட்டினையே வருவித்துக் கொண்டு இருக்கின்றாய். அவலக் கடலினின்றும் உன்னைக் காப்பாற்றுதற்கு ஒருவன் இருக்கின்றான். அவனைத் தஞ்சம் அடைந்தாயாபிள் நீ காப்பாற்று அடைவாய்.
காம்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களின் துயரத்தை ந்துடன், அகில இலங்கை இந்து மாமன்றம், ஏனைய உதவியுடன் நிவாரணப் பொருட்களை சேகரித்து
ற்றப்படுவதை இங்கு காணலாம்.
آگئےــــــــ=
(3) பிரமாதிவருடம் ஆடி-புட்டாதி
Page 12
பிரணவப் பொருளாய், முதற் தெய்வமாய் போற்றப்படும் விநாயகப் பெருமானின் விரத விழாக்களில் முதன்மைபெறுவது "விநாயகர் சதுர்த்தி'யாகும். இஃது ஆவணிமாத அமாவாசை கழிந்த 4ம் நாள் அமையும் விரதமாகும். இந்நாள் உலகமெங்கும் உள்ள விநாயக வழிபாட்டு ஸ்தலங்களிலே மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகும். இத்தினமே விநாயகப் பெருமான் அவதார நாளென்றும், கஜமுகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட நாளென்றும் கூறப்படுவதுண்டு. இத்தினத்தில் விநாயகப் பெருமானை உள்ளன்போடு வழிபடுவோர்க்கு விநாயகர் திருவருள் கடாசும் கிடைக்கும் என்பது மெய். பொதுவாகவே மற்றைய தெய்வ வழிபாடுகளிடையே விநாயகப் பெருமான் வழிபாடு எளிமையானதாகவும், எளியதாகவும் அமைவது கண்கூடு.
விநாயகரை வழிபடுவதற்கு அவர் திருஉருவத்தையோ திருஉருவப்படத்தையோ, தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்வை மஞ்சள்மாவை கூம்புபோல் செய்து அறுகம்புல் வைத்தால் அது விநாயகர். அதேபோன்று பசும் சாணத்தில் கூம்பு செய்தால் அது விநாயகர் தர்ப்பைப் புல்லில் சர்ச்சம் செய்து வைத்தால் அது விநாயகர். இப்படி எந்தவித உருவமும் சார்ந்தவராக எளிதில் வழிபடக் கூடியவரும் எளிதில் பக்தர்களுக்கு அருளக் கூடியவரும் விநாயகர் ஆவார். இதனால் விக்கினங்கள் தீர்க்கும் விக்னேஸ்வராக முதற்பூஜை உடையவராக எங்கும் போற்றப்படுகின்றார்.
இந்து ஒளி
துன்னை யூர் ராம். தேவலோகேஸ்வ ரகுருக்கள்
அந்த அற்புத தெய்வத்தின் சதுர்த்தி விழாவானது சகல கஷ்டங்களையும் தீர்க்கும் புண்ணிய விரதநாளாகும். இந்நாளில் விநாயகரின் சாபம் பெற்ற இருவர் அவரை பூஜிக்கும் பேறு பெறுகின்றனர். விநாயக பெருமான் கைலங்கிரியில் "நடனம்" புரியும் போது அவர் உருவத்தை கண்டு எள்ளிநகையாடினான் சந்திரன் (தன்னை விட அழகானவர் இல்லை என்ற கர்வமும் கொண்டவன்). இதனால் கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை தேய்ந்து போகும்படி சாபம் கொடுத்தார். அத்தோடு விநாயகரின் பிரிய நாளான சதுர்த்தி தினத்திலே அவரைப் பார்த்து நகைத்தமையால் அன்றைய தினத்தில் சந்திரனைப் பார்ப்போர் அனைவருக்கும் கஷ்டங்கள் நேரிடும் எனவும் சபித்தமையால் சதுர்த்தியில் சந்திரதரிசனம் (நான்காம்பிறை சந்திரன்) யாரும் செய்வதில்லை. பின் இந்த சாபத்தினால் சந்திரன் கடும் தவம் இருந்து, தான் நகைத்த சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு பிரியமான உபசார பூஜைகள் செய்து அவரை மகிழ்வித்து தன் தவறுக்கு மன்னிப்புகோரி மீண்டும் வளர்பிறை சந்திரனானான். சந்திரனுடைய பூஜாவுபசாரங்களுக்கு மகிழ்ந்த விநாயகர் "ஆவணி சதுர்த்தியன்று உன்னை தரிசிப்பவர்களுக்கு என்னை தரிசித்த பலனும் சகல செல்வங்களும் கிடைக்கும்" என சாப விமோசனம் கொடுத்தருளினார். அதே போன்று துளசி என்ற பெண் விநாயகரை மணந்து கொள்ள வேண்டி நித்தம் அவரை வற்புறுத்தி அவர் தனிமைக்கு இடையூறு செய்தமையால் அவளை செடியாகபோகும்படி சபித்து துளசி செடியால் தன்னை பூஜிப்பவர்களும், கஷ்டங்கள் எதிர்கொள்வார்கள் என சாபமிட்டார். இதனால் மனம் வருந்திய துளசி தன் தவறை உணர்ந்து ஒருநாளேனும் தங்கள் திருமேனியை அர்ச்சிக்கும் பேறு தனக்கு வேண்டுமென பன்றாட ஆவணி சதுர்த்தியில் மட்டும் துளசியால் அர்ச்சிப்பவர்க்கு திருமணப் பேறும் சகல போகங்களும் கிடைக்கும் என சாப விமோசனம் கொடுத்தார்.
இப்படி விநாயகரால் சாபம் பெற்றவர்கள் கூட அவரை அர்ச்சிக்கும் பேறு பெற்ற நாள் இந்த விநாயக சதுர்த்தியாகும். எனவே இந்நாளில் திரிகான சுத்தியோடு விநாயகப் பெருமானை வனங்கி நற்பேறுகள் பலவும் பெற்றுய்வோமாக.
கிரணுகும் மண்ணுலகும் வாழ மறை வாழ
பான்மைதரு செய்தமிழ் பார்மிசை விளங்க
குதான்மத ஐந்துகர மூன்றுவிரிநால்வாய்
ஆசின் முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்
சுபமஸ்து
خٹک
Qჯ0
D பிராதி வருடம் ஆடி-புரட்டாதி
Page 13
வேத இலக்கியங்கள் இந்து சமயத்திற்கும் இந்து தத்துவத்திற்கும் அடிப்படையாக அமைந்த நூல்கள். வேதங்களின் சாரமாகவும், வேதத்தின் அந்தமாகவும் அமைந்தவை உபநிடதங்கள். ஆகையால் அவற்றை வேதாந்தம் என்ற சிறப்புப் பெயரினால் அழைப்பது வழக்கம். உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்று பிரதான நூல்களும் இந்துசமயத் தத்துவ வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தவை. இவை மூன்றையும் பிரஸ்தான திரயம் என்ற பெயரினால் அழைப்பர். பிரஸ்தான திரயத்தினுள் முக்கியம் பெறுவது உபநிடதம். உபநிடதம் என்ற பெயரினால் வழங்கப்படும் நூல்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டவை. ஆயினும் நூற்றெட்டு உபநிடதங்களே எமக்குக் கிடைத்துள்ளன. இவற்றுள்ளும் பதினான்கு உபநிடதங்கள் மிகப் பழமையானவை. சங்கரர் பத்து உபநிடதங்களுக்கு உரை எழுதியுள்ளார். உபநிடதங்கள் விரிந்து பல நூல்களாகக் காணப்பட்டாலும் அவை மெய்ப் பொருள் ஆராய்ச்சியிலேயே ஈடுபடுகின்றன. எனவே விரிந்து கிடந்த உபநிடதங்களைத் தொகுத்து சுருங்கிய நடையில் பாதராயனர் ‘வேதாந்தசூத்திரம்' என்ற பெயரில் ஒரு நூலைச் செய்தார். இது பிரம்ம சூத்திரம்' எனவும் அழைக்கப்படும். இந்நூல் மிகவும் சுருங்கிய நடையில் அமைந்தமையால், மீண்டும் இந்நூலுக்கு உரை எழுதி உபநிடதங்களின் பொருளை விரித்துக் கூறவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்நிலையில் சங்கராச்சாரியார் உபநிடதங்களுக்கு உரை எழுதினார். இது "பிரம்ம சூத்திர பாஷ்யம்” என்று அழைக்கப்படும். இராமானுஜர் உழுதிய உரை “பூரீ பாஷ்யம்” எனப்படும். இவர்களைத் தொடர்ந்து மத்துவர், நீலகண்டர் போன்றோரும் வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதினார். ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் பிரம்ம சூத்திரத்திற்குக் கொடுத்த விளக்கம் காரணமாக அவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட தத்துவங்களும் தமக்குள் வேறுபடுவதைக் காணலாம். எவ்வாறாயினும் இந்திய தத்துவ வரலாற்றில் சங்கர வேதாந்தம், இராமனுஜ வேதாந்தம், மத்துவ வேதாந்தம் போன்ற வேதாந்தக் கோட்பாடுகளின் தோற்றத்திற்கு உபநிடதங்களே மூலமாக அமைந்துள்ளன. சைவ சித்தாந்திகளும் ‘வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்' என்று வேதஉபநிடதங்களைத் தமது தத்துவத்திற்குப் பொதுநூலாகக் கொள்வர். இந்நிலையில் உபநிடதங்கள் தத்துவ நூல்களாக மெய்ப்பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் நூல்களாக இந்தச் சிந்தனை மரபில் முக்கியத்துவம் பெறுகின்றன.
உபநிடதங்களிற் பிரம்ம விசாரணை
உபநிடதங்கள் அனைத்துமூலமாக உள்ள பொருள் எது? அது ஒன்றா? பலவா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. பெரும்பாலும் மூலப்பொருள் ஒன்று என்ற கூற்றுகளே உபநிடதங்களில் மிகுதியாக இடம் பெறுகின்றன. தத்துவ விசாரணையில் ஈடுபாடுள்ளோர் குருவிடம் சென்று, அனைத்திற்கும் அடிப்படையாக உள்ள பொருள் எது? பிரபஞ்சம் இயங்குவதற்கு காரணம் என்ன? பிரபஞ்சம் எதிலிருந்து தோன்றியது? ஆன்மா என்றால் என்ன? உடல் அழிந்த பின்னர் உயிருக்கு என்ன நிலை ஏற்படுகின்றது? போன்ற வினாக்களை வினாவியிருப்பதையும், சீடர்களின் பக்குவத்திற்கேற்ப குரு விடையளித்திருப்பதையும் உபநிடத உரையாடல்கள் தெளிவு படுத்துகின்றன. இந்நிலையில் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும், நிலைபேற்றிற்கும் காரணமாக உள்ள பொருள் "பிரம்மம்" என்று
نام جیبیسیم:
டிணவேனிT
துண்கலைத்துறை Hi லைக்கழகம் ン Y
அழைக்கப்படுவதனைக் காணலாம். பிரம்மம் என்பது பரம்பொருளாக வர்ணிக்கப்படுகின்றது. மேலும் வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத, விளக்க முடியாத ஒரு பொருளாக அது விளக்கப்பட்டுள்ளது. சூரியன், மின்னல், ஆகாயம் இடைவெளி யாவும்பிரம்மமாகக் கூறப்பட்டு பின் இதுவல்ல என்று மறுக்கப்பட்டு இறுதியில் இவை அனைத்திற்கும் அடிப்படையாக உள்ள பொருள் எதுவோ அதுவே பிரம்மம் என்று விளக்கப்படுவதையும் அவதானிக்கலாம்.
சாந்தோக்கிய உபநிடதத்தில் சுவேதகேதுவுக்கும் உத்தாலகருக்கும் இடையே நடைபெற்ற விசாரணையில் 'மிக நுண்ணிய ஆலம் வித்தில் இருந்து பெரிய ஆலவிருட்சம் தோன்றியது போல கண்ணுக்குப் புலனாகாத பிரம்மத்திடம் இருந்தே இப்பிரபஞ்சம் யாவும் தோற்றம் பெற்றது. நீரிலே கலந்த உப்பு அதன் எல்லாப்பகுதியிலும் கலந்து வியாபித்து இருப்பது போலப் பிரம்மமும் உலகனைத்தும் பரந்தும் விரிந்தும் காணப்படுகின்றது” என்ற விளக்கத்தைப் பெறுகின்றோம். பிருகதாரண்யக உபநிடதத்தில் இவ்வுலகமெல்லாம் பிரம்மமாக இருந்தது என்ற குறிப்பு இடம் பெறுகின்றது.
பிரம்மம் உலகத் தோற்றத்திற்குக் காரணமாக உள்ளது. பிரமத்தில் இருந்தே பிரபஞ்சம் தோன்றியது என்று உபநிடதங்கள் கூறுவதனால், உபநிடதங்களில் பிரம்மத்திற்கு இரண்டு நிலைகள் பேசப்படுகின்றன.
1. பிரம்மம் பிரமஞ்சத்தோடு கூடிய நிலை. இது சப்பிரபஞ்சம் எனப்படும். இந்நிலையில் பிரம்மம் தஜ்ஜலன்’ என்ற பெயரைப் பெறுகின்றது. தஜ்ஜலன்' என்ற பெயர் உலகத் தோற்றம், ஒடுக்கம் நிலைபேற்றிற்குக் காரணமாக உள்ளது என்ற அர்த்தத்தில் பிரம்மத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
2. பிரம்மம் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டு நிற்கின்ற நிலை. இது நிஷ்பிரபஞ்சம் ' எனப்படும். இந்நிலையில் பிரம்மம் குணங்குறிகளற்ற நிற்குணப் பிரம்மம்மாகப் பரப்பிரம்மமாகக் கொள்ளப்படுகின்றது.
உபநிடதங்கள் கூறும் பிரம்மத்தின் இருநிலைகளையும் சங்கரர் தமது வேதாந்த தத்துவத்தில், பிரம்மம் குணங்குறிகளோடு கூடிய நிலையைச் சகுணப்பிரமம் எனவும், பிரம்மம் குணங்குறிகளைக் கடந்து நிற்கும் நிலையை நிற்குணப்பிரம்மம் என்றும் விளக்கியுள்ளார். சங்கரரைப் பொறுத்த மட்டில் சகுணப் பிரம்மமாகிய ஈஸ்வரனே உலகத் தோற்றத்திற்குக் காரணமாக இருப்பது. ஆனால் நிர்க்குணப்பிரம்மம் மிக உயர்ந்த பரப்பிரம்மம் என்பது சங்கரரின் கொள்கை. சைவ சித்தாந்திகளும் பதியாகிய இறைவனுக்கு இரண்டு நிலைகளைக் கூறுவர். அவை தடஸ்த்தம், சுவரூபம் என்ற இரண்டுநிலைகளாகக்கொள்ளப்பட்டுள்ளது.தடஸ்த நிலையில் பஞ்ச கிருத்தியங்களும் நடைபெறுவதாகவும், சுவரூப நிலையில் பதியாகிய இறைவன் அனைத்தையும் கடந்து நிற்பதாகவும் கூறுவர். உபநிடதங்கள் பிற்காலத் தத்துவச் சிந்தனை மரபின் வளர்ச்சிக்கு வழிவகுத்த நூல்கள் என்பதனையும் கருத்திற்கொள்ள வேண்டும். மூலப் பொருள் ஒன்று அதுதான் பிரம்மம். அதுவே பிரபஞ்சத் தோற்றத்திற்கு அடிப்படை எனக்கூறிய உபநிடதங்கள், இந்தப்பிரம்மமும் மனிதனுக்கு அடிப்படையாக அமைந்த ஆன்மாவும் ஒன்று என்ற ஒருமைக் கோட்பாட்டினை வலியுறுத்தியமை உபநிடதங்களின் சிறப்பு என்றே கூறல் வேண்டும். இதனால் உபநிடதங்கள் ஆன்மா பற்றிய எத்தகைய கருத்தினைக்
Page 14
கொண்டிருக்கின்றன என்பதனையும் கருத்திற்கொண்டு ஆராய்தல் வேண்டும்.
உபநிடதங்களில் ஆன்ம விசாரணை
ஆன்மா என்பது உயிர், சீவன், பசு போன்ற பல்வேறு பெயர்களினால் அழைக்கப்படுகின்றது. உடல் இயங்குவதற்குக் காரணமான சக்தியே ஆன்மா. ஆத்மா' என்றால் என்ன? அதற்கும் அது தங்கியுள்ள உடலுக்கும் இடையே உள்ள உறவு என்ன? உடல் அழிவுக்குரியது. அவ்வுடல் அழிந்த பின்னர் உயிர் எத்தகைய நிலையை அடைகின்றது போன்ற வினாக்களுக்கு விடை கூறப்பட்டுள்ளமையினையும் உபநிடத உரையாடல்களில் காணலாம்.
சாந்தோக்கிய உபநிடதத்தில் இடம்பெறும் இந்திரன் - பிரஜாபதி உரையாடல் ஆன்மா பற்றிய உபநிடதத் கருத்தைத் தெளிவுபடுத்துகின்றது. ‘தேவர்களின் தலைவனான இந்திரனும் அசுரர்களின் தலைவனான விரோச்சனனும் பிரஜாபதியுடன் ஆன்ம விசாரணையில் ஈடுபடுகின்றனர். பிரஜாபதி ஒருவனது தேகம் தான் ஆன்மா’ என்று கூறுகின்றார். இவ்விடை இந்திரனுக்குத் திருப்தி அளிக்காததினால் அவன் மீண்டும் ஆன்ம விசாரணைல ஈடுபடுகின்றான். அப்போது தேகம் அழிவுக்குரியது. தேகந்தான் ஆத்மா எனின் ஆத்மாவும் அழிவுக்குரிய பொருளாக இருத்தல் வேண்டும் என்று வினாவுகின்றான். இந்நிலையில் இந்திரனின் பக்குவத்தை உணர்ந்த பிரஜாபதி 'ஆத்மா' பற்றிய உண்மை விளக்கத்தைப் போதிக்கின்றார். வண்டியிலே கட்டப்பட்டுள்ள குதிரையைப் போல ஆத்மா சரீரத்திற் கட்டப்பட்டுள்ளது. வண்டி வேறு. குதிரை வேறு. காண்பது கண்ணல்ல. கண்ணைக் கருவியாகக் கொண்டு காண்பது ஆன்மா. பேசுவது நாக்கல்ல. நாக்கைக் கருவியாகக் கொண்டு பேசுவது ஆத்மா. மனதும் ஆத்மா அல்ல. மனதைக் கருவியாகக் கொண்டு எண்ணுபவனும் மனதை அடக்கி ஆள்பவனுமே ஆத்மா என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.
தைத்திரிய உபநிடதம் ஆன்ம பஞ்ச கோஷங்களால் சூழப்பட்டு ஒன்றுள் ஒன்றாக மறைந்துள்ளது என்ற உண்மையை விளக்குகின்றது. அவை அன்னமயகோஷம், பிராணமயகோஷம், மனோமயகோஷம், விஞ்ஞான மயகோஷம், ஆனந்தமயகோஷம் என்பன. அன்னமயகோஷம் உடலையும், பிராணமய கோஷம் பிராணன் அல்லது மூச்சினையும், மனோமய கோஷம் மனநிலையையும், விஞ்ஞான மயகோஷம் அறிவினையும் குறித்து நிற்கின்றது. ஆனந்த மயமான ஆன்மா இவ்வாறு பல்வேறு கவசங்களினாலும் சூழப்பட்டு, அவை அனைத்தும் இயங்குவதற்குக் காரணமாக உள்ள பொருள்.
உபநிடதங்களின் கருத்துப்படி ஆன்மாக்கள் எண்ணி க்கையில் பல. ஒவ்வொரு உடலோடும் ஒவ்வொரு ஆன்மா உண்டு. மரக்குற்றியில் மறைந்த அக்கினி போன்று எல்லா உடல்களிலும் ஒரே தன்மையான ஆன்மாக்கள் உள்ளன. அது எரியும்போது எரியும் பொருளுக்கேற்ப வடிவம் பெறுகின்றது.
கர்மம் மறுபிறப்பு மோட்சம்
உபநிடதங்கள், ஆன்மாக்கள் பல பிறவிகளுக்குட்படுகின்றன எனவும் அதற்குக் காரணம் அவை செய்யும் கர்மம் எனவும்
கூறுகின்றன. கர்மம் என்றால் செயல் அல்லது வினை என்று பொருள்படும். ஒருவன் செய்யும் செயல், அது நல்ல செயல் எனினும், தீய செயல் எனினும் எதிர்விளைவை உண்டு பண்ணும். நல்ல செயலால் ஒருவன் நல்லவனாகின்றான். தீய செயலால் ஒருவன் தீயவனாகின்றான் என்று பிருகதாரண்ய உபநிடதத்தில் குறிப்புண்டு. தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. நற்செயல்கள் நல்ல பிறவியையும், தீய செயல்கள் தீய பிறவியையும் கொடுக்கின்றன. எனவே எந்த ஒரு செயலும் ஆன்மாவுக்குப் பிறவியையே கொடுக்கும்.
ஆன்மாவின் உயர்ந்த குறிக்கோள் வீடுபேறடைதல் அல்லது மோட்சம் என்று கூறும் உபநிடதங்கள், அதனை அடைவதற்குரிய வழியாக ஞானமார்க்கத்தைக் கூறுகின்றன. ஞானம் என்றால் உபநிடதங்களின் கருத்துப்படி பிரம்மஞானம், பிரமத்தின் இயல்பு சத், சித், ஆனந்தம் என்று கூறும் உபநிடதங்கள், எவனொருவன் பிரமத்தை சத், சித் ஆனந்தமாக அறிந்து கொள்கின்றானோ அவனே பிறவியினின்றும் விடுபடுகின்றான் என்று கூறுகிறது. ஞானம் என்று கூறும் போது அது கர்மம், பக்தி போன்ற ஏனைய மார்க்கங்களுக்கு இடமில்லை என்பது அர்த்தமல்ல. பற்றற்ற கர்மம், மெய்ப்பொருளை அறிவதில் உள்ள ஈடுபாடு தியானம் போன்ற மார்க்கங்களின் மூலம் ஞானத்தைப் பெற்று மோட்சத்தைப் பெறுகின்றான். மோட்ச நிலையில், பிறவியில் இருந்து விடுபட்ட நிலையில் ஆன்மா பிரமத்தோடு ஒன்றிப் பிரம்மமே ஆகிவிடுகின்றது.
ஆன்மாவும் பிரம்மமும் ஒன்று என்ற உண்மை
உபநிடதங்கள் பிரபஞ்சத்தின் தோற்றம் நிலைபேற்றிற்குக் காரணமாக உள்ள பிரமத்தையும், மனிதனுக்கு அடிப்படையாக அமைந்த ஆன்மாவையும் ஒன்று என்று வலியுறுத்தியமையே அவற்றின் சிறப்பாகும். சாந்தோக்கிய உபநிடதத்தில் சுவேதகேது உத்தலாகர் உரையாடல்களின் இறுதியில், சுவேதகேதுவை நோக்கி உத்தலாகர்தத்-த்வம்-அஸி நீஅதுவாக இருக்கின்றாய். 'அகம் - பிரம்மோ - அஸ்மி நான் பிரம்மமாக இருக்கின்றேன் என்று கூறுகின்றார். இவை உபநிடத மகாவாக்கியங்கள் . ஆன்மாவும் பிரம்மமும் அடிப்படையில் ஒன்று என்ற உயர்ந்த உண்மையை வெளிப்படுத்தும் வாக்கியங்கள்.
ஆன்மாவும் பிரம்மமும் ஒன்று என்ற காரணத்தினால் உபநிடதங்கள் பிரமத்தை ஆத்மன் என்ற பதத்தினாலும் அழைத்துள்ளன. பிரமத்தின் உண்மைக்கு ஆதாரம் ஆத்மனே. ஒவ்வொரு உடல் இயக்கத்திற்கும் காரணமாக ஆத்மன் இருப்பதனைக் கொண்டு, பிரபஞ்சம் முழுவதன் தோற்றத்திற்குக் காரணமாகவும் ஒருபொருள் இருக்க வேண்டும் என்று சுவேதாஸ்வரத உபநிடதம் கூறுகின்றது.
இந்து சமயம், இந்து தத்துவத்திற்கு மூலமாக அமைந்த உபநிடதங்கள், வேதங்கள் கூறும் சமயக் கருத்துக்களை வளர்த்து பிற்கால இந்து தத்துவத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந்துள்ளன. இந்து தத்துவ வரலாற்றில் உபநிடதங்களின் பங்கு மிகக் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
SKN SNSSRSSSSSSSSS $R$$$$$
NRK
Page 15
பண்ணிசைக் கலாநி
Guam fflui GTIG பன்னிரு திருமுறை வரலாற்றில், திருமுறை வகுப்பிற்குப்பின் கோயில்களில் அக்காலத்தே, பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வோர் பாடலைப் பாடும் வழக்கமே, தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றது. தேவாரக் காலத்திற்கு முன்னும் சில தலங்களில் பதிகம் ஒதும் வழக்கு இருந்து வந்ததென்பதை, சாசனங்கள் நன்கு தெரிவிக்கின்றன. தேவார வகுப்பு ஏற்பட்டு பன்னிரு திருமுறைகளும் திருக்கோயில்களில் ஒதப்பட்டு வந்ததின் பின் திருக்கோயில் கிரியைகளுக்கு ஏற்ற விதத்தில், பூசையின் போது, பஞ்ச புராணம் ஒதும் வழக்கு ஏற்படலாயிற்று. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் போன்ற பாடல்களில் ஒவ்வோர் பாடலைப் பாடும் ஒழுங்கு முறையே பஞ்புராணம் ஒதல் எனப்படும். இவ்வழக்குஅக்காலத்தே திருப்பதிகம் விண்ணப்பித்தல் என்றே சாசனங்களில் குறிக்கப்பட்டிருப்பதால், அக்காலத்தே ஒருபதிகமாகவே பாடல்களை ஒதியும் இருக்கலாம். மேலும் பன்னிரு திருமுறைகளில் ஒரு திருமுறைக்கு ஒரு பதிகம் வீதம் பாடி வந்தார்கள் போலும்.
பிற்காலத்தே இவ்வழக்கு மாறி, இன்று திருகோயில்களில் பஞ்சபுராணம் ஒது வழக்கமே நடைமுறையிலுள்ளது, இவ்வழக்கிற்கு தக்க் ஆதாரம் பற்றி சான்றுகள் இல்லை. வயது முதிர்ந்த ஒதுவாமூர்த்திகளும் இது மரபு என்கின்றனர். ஆனால் பஞ்சபுராணத்திற்கு ஒரு தோற்றுவாயைத் திருகோவையாருண்மை என்ற நூலில் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நூலில் தொடக்கத்திலுள்ள ஒரு பகுதி இங்கு ஆராயத்தக்கது. "சந்தானாசாரியர் திருவாக்குகள் சாத்திரமாயிருக்கும். சமயாசாரியர் திருவாக்குகள் அதன் அனுபவப்பயனாகியதோத்திரங்களாயிருக்கும், அத்தோத்திரங்களாகிய மெய் ஞானத் தேவாரம். திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருத்தொண்டர் புராணம் எனும் திருப்பாடல்கள் சைவத்திற்கும், சிவபூசைக்கும், சிவாலயநித்திய நைமித்தியத்திற்கும் அடியவர் பூசைக்கும், நியம மந்திரங்களாயிருக்கும்" எனவரும்பகுதிநோக்கற்பாலது. இம்முறையே பின்னர் பஞ்சபுராணம் ஒதும் வழக்கு ஏற்படுவதற்குத் தோற்றுவாயாய் அமைந்திருக்கலாம் எனக் கருதலாம். இதில் திருவாசகத்தையும். திருக்கோவையாரையும் ஒரு பாடலாகக் கொண்டு எண்ணினால் ஐந்து நூல்கள் கிடைக்கின்றன. மேலும் பஞ்சபுராணம் எனும் பதத்தின் ஈற்றில் வழங்கும் புராணம் என்பது கூட, ஈற்றில் வழங்கும் பெரிய புராணம் காரணமாக அமைத்துக்கொள்ளப் பெற்ற தென்றும் ஊகிக்க இடமுண்டு.
திருக்கோவையாருண்மை ஆசிரியர் கூறிய இன்னோர் கருத்தும் இங்கு நோக்கற்பாலது, “இத்தோத்திரங்கள் சைவத்திற்கும், சிவபூசைக்கும், சிவாலய நித்திய நைமித்தியத்திற்கும் அடியவர் பூசைக்கும் நியம மந்திரங்களாயிருக்கும்” என்று கூறுகின்றனர். இதன் பொருளாவது சிவாலயத்தில் சிவாச்சாரியார் சிவபூசை செய்து முடித்துவேதமந்திரங்களை ஒதுவதுபோல, இத்தோத்திரங்கள் தமிழில் ஓதத்தக்க மந்திரங்களாயிருக்கும்” என்று கூறுகின்றனர். இதன் பொருளாவது சிவாலயத்தில் சிவாச்சாரியார் சிவபூசை செய்து முடித்து வேத மந்திரங்களை ஒதுவது போல, இத்தோத்திரங்கள் தமிழில் ஒதத்தக்க மந்திரங்களாகும் என்பதே இதன் கருத்தாகும். மேலும் வேதமந்திரங்களை வடமொழியில் வேதியர் ஒத, திருமுறை
சங்கித வித்துவன்
(GJ. GJIJ TOG
மந்திரங்களை ஒதுவார் மூர்த்திகள் தமிழில் ஒதி வந்தார்கள் எனவும் அறியலாம். இக்குறிப்பு இன்றுள்ள நடைமுறைக்கும் மிகப்பொருந்தும். சித்தாந்த அட்டகம் இயற்றியருளிய ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார் காலம் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கமாகும். திருக்கோவையாருண்மை ஆசிரியர் சந்தான குரவர் எனக்குறிப்பிடுவதால், அவர் இதற்குப் பிற்பட்டவர் என்பது தெளிவாகும். இந்நூல் செய்த காலம் பதினைந்தாம் நூற்றாண்டாயிருக்கலாம் எனக்கருத இடமுண்டு.
ஈழத்து ஆறுமுகநாவலர் அவர்கள்அருட்பா'என்ற தலைப்பில் மேற்குறிப்பிட்ட ஐந்து நூலையும் ஒரே நூலாக அச்சிட்டதும் கவனித்தற்பாலது. தேவாரம் என்பது நூல் பெயராகியும் கூட, அது மிகவும் விரிந்த தானபடியால், சிறுநூலாக்கக் கருதியே நாவலர் அவர்கள் அகத்தியர் தேவாரத்திரட்டை மட்டுமே தம்தொகுப்பினுள் சேர்த்துக்கொண்டார். அவர் அச்சிட்ட அருட்பாத் தொகுப்பு பின்வரும் ஐந்து நூல்களை அடக்கியதாகும். அகத்தியர் தேவாரத்திரட்டு, திருவாசகம் முழுமையும்,பெரியபுராணம் செய்யுள் திரட்டுமுப்பத்தேழு பாடல்கள்) என்பவையாகும். இவைகளே பஞ்சபுராணம்பாடுவதற்கான ஆதார நூல் என்ற கருத்தோடு, பாடுகின்ற ஒதுவார் மூர்த்திகளுக்கு உதவியாக இருக்கவல்ல அடக்கமான நூலாக இருக்க வேண்டி, வெளியிடப்பட்டதென்று எண்ணலாம். பெரியபுராணச் செய்யுள் திரட்டு ஆறுமுக நாவலர் காலத்திற்கு நெடுநாள் முன்னதாகவே வழக்கில் இருந்ததென்பதும் அறியக்கிடக்கின்றது. இத்திரட்டு பாட்டு வழக்கிலும் பயின்று, ஏட்டுவழக்கிலும் இருந்து வந்திருக்கின்றது.
நாலாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்கள் கொண்ட திருத்தொண்டர் புராணத்தில், பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடுதல், ஒதுவார் மூர்த்திகளுக்கு எளிதன்று என்ற காரணத்தால், அவர்கட்குப் பயன்பெறும் பொருட்டே இத்திரட்டு நம் முன்னோரால் தொகுக்கப்பெற்றிருத்தல் வேண்டும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய மாயூரப்புராணம் எனும் தலபுராணத்தின் சிவாலய தரிசன விதி ஆறாம் பாடலில், சிவபிரான் முன்நின்று பாடப்படவேண்டிய அருட்பாடல்களைப் பின்வருமாறு கூறுகின்றார். அச்செய்யுள் வருமாறு:
”مجھے مجaیے زرعی Z ZZZZتریر%برa222ZZتکبر“ ഗ്ര ബഗ്ഗ്മ ഗീമമ ടെ ബ6മീ
-§രമുള്ബ്രീമി ബ്രബീഗ്ഗരത്തുളിരീത
6ീകരിഗ്രക്ര൧) ബജ്ര Zത്രഗ്ഗ ബക്ര’ 6ീമീ
ബല്ല്ലീമ, ബകZ) ബ്രിക’
இங்கு பஞ்சபுராணம் என்ற பெயரைக் குறிப்பிடாமல் ஐந்து அருள் நூல்களையும் பாட வேண்டும் என்று அவர்கள் குறிப்பதிலிருந்து, இம்மரபின் பழமையை நன்குணரலாம்.
நன்றி பண்ணிசைத் தத்துவம்)
Page 16
சமய பாடப்பரீட்சையில் எனது பிள்ளை அதிவிசேட சித்தி பெற்றுள்ளான் எனப் பெருமைப்படும் பெற்றோரைக் காண் கின்றோம். அது மகிழ்ச்சிக்குரிய விடயம் தான். இங்கு நாம் ஒரு விடயத்தையிட்டு சிந்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம். பிள்ளை அதிவிசேட சித்திபெற்றது பாடப்புத்தகத்திலுள்ள பாடங்களை மட்டும் கிரகித்தா அல்லது சமயம் காட்டும் வழிமுறைகளை நன்கு கற்றுத் தெளிந்தா என்று நோக்கும் போது சமய அறிவையிட்டு திருப்தியடைய முடியாது.
பாடப்புத்தகத்திற்கப்பாலும் சமய அறிவு உண்டென்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட பாடத் தொகுதிகளில் அடங்கியுள்ள ஒரு பாடமான சமய பாடத்தில் பெறும் சித்தியால் கல்வியைத் தொடர அல்லது பரீட்சைப் பெறுபேற்றை முழுமையாக்கிக் கொள்ள முடியும் என்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் தேவை தான்.
இருப்பினும், மாணவர்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள தமது பண்டைய பெருமக்களை, கலை, கலாச்சாரங்களை, இறைதத்துவங்களை, வாழ வேண்டிய வழிமுறைகளை அறிந்து கொள்ள பாடசாலைப் புத்தகக் கல்வி போதுமானதல்ல. ズ
இன்றைய நிலையை உற்று நோக்கினால் பின்வரும் உண்மைகள் புலப்படுகின்றன. பாடசாலைகளில் குறிப்பிட்ட சில மணித்திளாலங்களுக்கு மட்டுமே வாரத்தில் சமய பாடம் போதிக்கப்படுகின்றது. பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட சில பகுதிகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் போதிக்கின்றனர். சில விசேட தினங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவை சமயம் சார்ந்தவையாகக் கொள்ளப்பட்டாலும், கலை
நிகழ்ச்சிகளாகவே அமைந்து விடுகின்றன.
பாடப்புத்தகத்திலுள்ள சிலபாடங்களால் மட்டும் சமய அறிவைப் பெற்றுவிட முடியாது. அவ்வாறே விசேட நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மட்டும் சமய அறிவைப் பெற்றுவிட முடியாது என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
சமயம் என்பது வாழ்வுக்கு வழிகாட்டி, இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்க்கை நெறியைப் போதிப்பது. மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்தி பண்பட்டவனாக வாழவழி காட்டுவது சமயம்.
:
நீமதி நித்தியறுநீ மகாதேவ
மாமன்றத்தினால் பராமரிக்கப்பட்டுவரும் இரத்மலா வளர்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னிந்திய இ நித்திய பூரீ மகாதேவன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி புதிய கதிரேசன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
“இன்னிசை விருந்து சிறப்பிதழாக வெளிவந்த " மேற்படி இன்னிசை நிகழ்ச்சியின் போது வெளியிட்டுளை
سٹ
مس
سف
سن
عسق
س
سمیہ
سلاح
سم、
سلاح
صفح
இதனை உணர்ந்து கொண்டு அதற்கான வழிமுறையை அதாவது சமய அறிவை இளஞ்சிறார்கள் மத்தியிலே போதிக்கும் வழிமுறைகள் காணப்பட வேண்டும்.
பண்டைய காலங்களில் எவ்வாறு கல்வி போதிக்கப்பட்டதென்று நமது புராண, இதிகாசங்களிலுள்ள கதைகள் மூலம் அறியலாம். பிறப்பு முதல் இறப்பு வரை இப்படித் தான் வாழவேண்டும் என்ற விதி சமய வழியில் கற்ற அன்றைய கல்வி முறையில் போதிக்கப்பட்டுள்ளது. ஆயகலைகள் அறுபத்துநான்கு என்று கூறப்படும் அத்தனை கலைகளும் அன்று சமய ஒழுக்க நெறியில் நின்று கற்பித்த கல்விமான்களால் போதிக்கப்பட்டன. குருகுலக் கல்வி என்று பண்டைய நாளில் சிறப்புப் பெற்றிருந்தது அக்கல்வி முறையேயாகும்.
கால மாற்றத்தால் கல்விநிலை மாறிவிட்டது. அன்று சமயம் சார்ந்த கல்வி கற்றவர்களால் நாகரிகங்கள் வளர்த்துப் பேணப்பட்டன. என்றும் நிலைத்து நிற்கும் கலைகளும், இலக்கியங்களும் ஆக்கப்பட்டு இன்றும் நிலைத்து நிற்கின்றன. மனித குலம் மாண்புற ஆட்சி நடத்திய அரசர்களாகட்டும், வைத்தியமுறைகள், நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டறிந்த பெரியோர்களாகட்டும், வானசாஸ்திரம், சோதிட சாத்திரம் என்பவற்றில் கரைகண்ட நம்முன்னோராகட்டும் எல்லோருமே சமய வழிநின்று கற்றவர்களே.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது இந்துக்களின் கூற்று. ஒரு பிள்ளைக்கு பத்துமாதம் சுமந்து பெற்ற தாயும், வளர்த்து ஆளாக்கும் தந்தையும் தெய்வத்திற்கு இணையானவர்கள் என்று கூறிய இந்து சமய முன்னோர்கள், கல்வியை ஊட்டி வழியைக் காட்டிமனிதனாக வாழ நெறிப்படுத்திய குருவாகிய ஆசிரியரையும் தெய்வத்துக்கு ஒப்பிட்டுள்ளனர்.
இன்றைய தேவை என்ன? நிம்மதியில்லா மனத்தை நிம்மதிக்கு இட்டுச் செல்லவும், வாழ்வில் இலட்சியப் பிடிப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் சமயக் கல்வி அவசியம் தேவைப் படுகின்றது. குடும்ப உறவு, சகோதர பாசம், சுற்றத்தவருடன் இணைந்து செயல்படல், ஒற்றுமை எல்லாவற்றிற்கும் மேலாக மனநிம்மதி பெற சமயக் கல்வி அவசியமாகின்றது. சமய அறிவால் சகல நலன்களையும் அடையலாம்.
னின் இன்னிசை யிெருந்து لمانا
னை, கொழும்பு இந்துக்கல்லூரியின்இலவசமாணவர்விடுதி அ இசைக்கலைஞர்"இன்னிசைமாமணி"யுவகலாபாரதி பூரீமதி , கடந்த ஏப்ரல் மாதம் 10ம், 11ம் திகதிகளில் பம்பலப்பிட்டி */
இந்துஒளி சித்திரை - ஆனி இதழ், ஏப்ரல் 10ம் திகதியன்று பக்கப்பட்டது.
Page 17
SDésa இலங்கை இந்து மாமன்றம் திருநாவுக்கரசு நாயனார் குருபூசையை முன்னிட்டு, மே மாதம் 9ஆம் 10ஆம் திகதிகளில் சிறப்பு வைபவங்களை ஏற்பாடு செய்திருந்தது. 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில், காலை 10.15 மணிக்கு அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேதழரீ நடராஜப் பெருமானுக்குச் செய்யப்பட்ட பூசை, வழிபாடுகளைத் தொடர்ந்து மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
தலைவர், தமது உரையின் போது பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “இன்றைய காலகட்டத்தில் ‘சமயமும் சமூகசேவையும்” என்ற பொருள் மிகவும் பொருத்தமானதாகும். அகில இலங்கை இந்து மாமன்றம் மூலமாக பரவலாகச் சமூக சேவையை ஆரம்பித்திருக்கின்றோம். எமது மக்கள் நாடளாவிய நிலையில் முக்கியமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் மிகவும் கஷ்ட நிலையில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் எவ்வகையில் உதவ வேண்டும் என்பதைப்பற்றி மாமன்றம் ஆராய்ந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாமன்றத்தின் தூதுக்குழுவொன்றின் சார்பாக அண்மையில் வவுனியா சென்று நிலமைகளை நேரில் கண்டறிந்தோம். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் உட்பட மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலும் பங்கு பற்றினோம். இந்தக் கூட்டத்தில் மக்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் கஷ்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இந்த விடயத்தை ஆராய்வதற்கென தெரிவு செய்யப்பட்ட சிறப்புக் குழு, அதற்குரிய தேவையான நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இந்தக் கட்டத்தில் நாம் இப்படியான ஒரு சொற்பொழிவையும், கலந் துரையாடலையும் ஏற்பாடு செய்து நடாத்தி எமக்குக் கிடைக்கும் கருத்துக்களின் அடிப்படையில் மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தேசித்துள்ளோம்"
மாமன்றத் தலைவரின் உரையைத் தொடர்ந்து, வைபவத்தின் சிறப்பு அம்சமாக, சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வாகீச கலாநிதி திரு. கனகசபாபதி நாகேஸ்வரன் “சமயமும் சமூக சேவையும்” என்ற பொருளில் சிறப்புச் சொற் பொழிவாற்றினார்.
"சமயமும் சமூக சேவையும் சைவத்தோடு இணைந்தது. இதற்கு எப்பொழுது அழுத்தம் வந்தது என்று சொன்னால், கிறிஸ்தவ மதகுருமார்கள், தங்களுக்குரிய சமய உடையை அணிந்து சமூக சேவை செய்யும் போதுதான் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆனால், முதலில் சமூக சேவை செய்தவர்கள் இந்து மக்களே. அந்த வகையில் சிவபெருமான்தான் முதலில் சமூக சேவை செய்தார் என்பதும், பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்த போதே சமூக சேவை ஆரம்பமாகி விட்டது என்பதும் திருவிளையாடற் புராணம் தரும் சமய வரலாறு.
ந்துரையாடலும்
இராமகிருஷ்ண பரமகம்சரின் சீர்திருத்த மரபிலே, சுவாமி விவேகானந்தரின் எழுச்சியாலே சமூக சேவை உந்து சக்தி பெற்றது. புராணங்களும், இதிகாசங்களும், இலக்கியங்களும் தந்திருக்கின்ற நம்பிக்கைத் தரத்திலேதான் உலகம் சென்று கொண்டிருக்கிறது. சைவ சித்தாந்தக் கோட்பாட்டிலே இதற்கான சரியான விளக்கம் இருக்கிறது. நாங்கள் சமூக சேவையை சொல்லிச் செய்வதில்லை. அப்படி உணர்த்துகின்ற ஒரு சமயத்திற்கு நாங்கள் சொந்தக்காரர்கள்.
கஷ்டத்தினுள்ளேதான் வாழ்க்கையினுடைய புனிதத்தைக் காணலாம். கர்ம பலனை நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும். இயற்கையாலேயே ஒவ்வொரு நிகழ்வுகளும் அமைகின்றன. ஆழமான அறிவுச் சிந்தனை யுள்ள ஒரேயொரு சமயம் இந்து சமயம். வாழ்வியல் உண்மைகளை எந்த மனிதனுக்கும், எக்காலத்திற்கும், எச்சமயத்திற்கும், எப்பிறவிக்கும் பொருந்தக் கூடியதாகப் பேசிய ஒரேயொரு சமயமும் அதுதான். உண்மைத் தத்துவங் களைப் பேசியிருக்கிறது. தீர்க்க முடியாத பிரச்சனைகளை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும் என்று, தர்மக் கோட்பாட்டின் தத்துவத்தைப் பேசியிருப்பதும் இந்து சமயம். அன்பின் சிறப்பையும் அழகாகச் சொல்லியிருக்கிறது.
இந்த சமூக சேவையிலிருந்து வந்ததுதான் தொண்டு. தொண்டு செய்தவனுக்கு தொண்டன் என்று பெயர். இறைவன் மீது அன்பை வெளிப்படுத்தி, தனது பிள்ளையையே கறிசமைத்துக் கொடுத்தான் அவனது தொண்டன். திருநாவுக்கரசு நாயனாரின் தொண்டுக்கு அவரது திருவருள்தான் சாட்சி . அவர் எல்லாவற்றையும் ஆண்டவன் மேல் பழிபோட்டுச் செய்தார். இறைவனின் திருவருளை துணைகொண்டு செய்து, அடிப்படைத் தத்துவங்களை மிகவும் எளிமையாகச் சொல்லித் தந்துள்ளார்.
நீ என்ன செய்தாய் என்பதை விட, செய்யச் சிந்தித்தாயா என்று கேட்கிற அந்த உணர்வை நாம் வளர்த்துக் கொண்டோமென்றால், எமக்கு மேம்பட்ட பொருள் ஒன்று இருக்கிறது. அது எல்லாவற்றையும் ஏற்கும் என்பதாகிய தத்துவத்தைப் புரிந்துகொள்ளுவோம்” என்று திரு.நாகேஸ்வரன் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சிறப்புச் சொற்பொழிவைத் தொடர்ந்து "சமயமும் சமூக சேவையும்” என்ற பொருளிலேயே ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலை நெறிப்படுத்தும் பொறுப்பை மேற்கொண்ட மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தபோது "இன்றைய நிலையில் சமயமும் சமூகமும் என்ற நோக்கிலே பார்ப்பது நல்லது என்பதை எங்கள் சமய விவகாரக் குழு தீர்மானித்து, திருநாவுக்கரசு நாயனார் குருபூசைத் தினத்திலே இந்த இரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தோம். சொற்பொழிவின்போது முன்வைக்கப்படும் கருத்துக்களையும்,
Page 18
அந்தக் கருத்துக்களிலிருந்து எழுகின்ற சிந்தனைகளைப் பற்றியும் ஆராய்வதற்கு இப்படியான கலந்துரையாடலை வைத்தால், வந்திருப்பவர்கள் சொற்பொழிவைக் கேட்பது மட்டுமன்றி, அந்தச் சொற்பொழிவிலே சொல்லப்பட்ட கருத்துக்களைச் சிந்திக்கின்ற ஒரு நிலையும் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, வாகீச கலாநிதி நாகேஸ்வரன் அவர்களின் சொற்பொழிவைத் தொடர்ந்து, இந்தக் கலந்துரையாடலை ஆரம்பிக்கின்றோம்.
“யாருடைய நெஞ்சு ஏழைகளுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே மகாத்மா என்று கூறுவேன்” என்றார் சுவாமி விவேகானந்தர். அந்த வழியிலே சமயத்தை சமூக நலனுக்காக, சமுதாய மேன்மைக்காக எடுத்துச் சென்று கொண்டிருக்கின்ற எங்கள் சமய இயக்கங்களுக்கும் உலகிலுள்ள சகல மத நிறுவனங்களுக்கும் முன் மாதிரியாகத் திகழ்கின்றது இராமகிருஷ்ண மிஷன். இதன் இலங்கைக் கிளைத் தலைவரான சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்கள், இதன் தலைவராக மட்டுமன்றி இன்று இந் நாட்டிலே இந்துக்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்ற குருவாக, எந்தவொரு நிகழ்வுக்கும் அவர் வழிகாட்டலை நாங்கள் தேடி ஒடுகின்ற நிலைமையை அவரது அன்பும், பண்பும் அவரது சமய வாழ்வும் ஏற்படுத்தியிருக்கின்றது. உழவாரப் பணிசெய்து, சமூகத் தொண்டிலே ஒரு வழிகாட்டியாகத்
. . . . . . . . . . . . . .
D க்கள் கிடைத்தற்கரிய பேறுகளைப் பெறுவதற்கும் நன்மைகளாக வாழ்ந்து இறைவனடி எய்துவதற்கும் ஆலயதரிசனமும் அங்கு நடைபெறும் விசேட பூசைகளும் உதவுகின்றன என்பதில் ஐயமில்லை. பெரிய மகோற்சவங்கள், தினமும் நடைபெறும் திருப்பூசைகளிலும் வழிபாட்டிலும் ஏற்படும் பிழைகளை நிவர்த்திக்கும் பொருட்டு ஆலயத்தில் நடைபெறும் 9 பெரியவிழாக்களாகும். மகோற்சவங்களில் ஆலயதரிசனம் செய்வது உத்தமமானது. மகாகும்பாபிஷேகம் ஆலயத்தில் நடைபெறுவதும், அப்போது இடம்பெறும் தேவப்பிரதிஷ்டை * முதலான சகல கிரியா பூஜைகளும், யாகங்களும், வீதி உலாக்களும் இடம் பெறுவதும் அதைக்காணுவதும், தரிசிக்கப் பெறுவதும் புண்ணியப் பேறாகும். கும்பாபிஷேக காலங்களில் ஆலயத்தில் மக்கள் கூடிச் சிவாசாரியார்களினால் இயற்றப்படும் மந்திரங்கள் வழிபாடுகள் தீபாராதனைகள் அபிஷேகங்கள் ஆகியவற்றைப் பக்தியுடனும் இறை உணர்வுடனும் தரிசிப்பது கிடைத்தற்கரிய பேறாகும். இவற்றினால் உடலும் உள்ளமும் குற்றம் நீங்கி தூய்மைபெற்று நல்வினைப் பேறு அடைய வழி ஏற்படும்.
கும்பாபிஷேக காலத்தில் இடம் பெறும் யாக பூசைகள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் தரிசிப்பதற்கும் கிடைத்தற்கரிய சந்தர்ப்பங்களாகும். இக்காலங்களில் இறையருள் எங்கும் பரவி ஆனந்த சொரூபமாய் எல்லா மூர்த்திகளையும் பாவனையால் வரவழைத்து அவர்களை வழிபட்டு நிறைந்த அருளைப் பெற வாய்ப்புண்டாகின்றது.
மகா கும்பாபிஷேக காலங்களில் மக்கள் உடல் உள்ளத்தூய்மையோடு ஆலயத்துக்குச் சென்று சகல
V. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
திகழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரைப் போன்று, அந்த பொதுநலத் தொண்டு முறையிலே வாழ்ந்து கொண்டிருக்கும் சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்கள், இந்தக் கலந்துரையாடலில் கருத்துக்கள் வழங்க வந்திருப்பதும் எங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. சுவாமிஜி அவர்களையும் இங்கு கருத்துக்களை முன்வைக்க வந்திருக்கும் ஏனைய அறிஞர் பெருமக்களையும் அன்புடன் வரவேற்கிறேன்” என்று கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்களுடன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு. சி. தில்லை நடராஜா, பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி அதிபர், திரு. த. முத்துக்குமாரசுவாமி இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி ஆசிரியை திருமதி. ஆர். ழரீகாந்தா, யாழ். பல்கலைக்கழக இசைப்பகுதி விரிவுரையாளர் திரு. மு. நவரத்தினம், மாமன்ற உபதலைவரும், சமய விவகார, குருகுலம், விழாக்கள் குழுத் தலைவருமான திரு. த. கணநாதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான பயனுள்ள கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடினார்கள்.
இறுதியில் மாமன்ற சமய விவகாரக் குழுச் செயலாளர் திரு.க.இ. ஆறுமுகம் நன்றியுரை வழங்கினார்.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . N
பூசைகளிலும் இறை சிந்தனையோடு கலந்து வழிபாடாற்றி ஆரோக்கியமான ஆயுள் விருத்தியான அதியுன்னத வாழ்வைப் பெறுவர். மகாகும்பாபிஷேக காலத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்ச்சிகளான இயந்திரபூசை, தேவப்பிரஷ்டை, எண்ணெய்க் காப்பு சாத்துதல், கும்பகலச அபிஷேகங்கள், தூபிகள் விமானங்களின் அபிஷேகங்கள் சிறப்பானவையும், பார்ப்பதற்கும் வழிபடுவதற்கும் உகந்த கிடைத்தற்கரிய நிகழ்ச்சிகளுமாகும். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்று முடிவில் சங்காபிஷேகம் இடம் பெறுவது முறையான கும்பாபிஷேக நிகழ்ச்சியாகும். இக்காலங்களில் மூலமூர்த்திக்கு சிறப்பான பூசைகளும் திருவிழாக்களும் இடம்பெறும்.
மகா கும்பாபிஷேகத்தின் முக்கிய நோக்கம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஆலயத்தில் முறைப்படி இருத்தி வழிபாடாற்றும் பொருட்டு அனே கற்றுணர்ந்த சிறந்த ஒழுக்கமுடைய பிராமணக் குருக்கள்மாரைக் கொண்டு விசேட சமய ஆராதனைகளை நடாத்தி இறைவனைப் பிரதிஷ்டை செய்து அவன் அருளைப் பெற மக்களின் வழிபாட்டுக்கு வழியமைத்துக் கொடுத்தலேயாகும். கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ஆலயங்களில் மக்கள் இறைவனைத் தரிசிப்பதால் இறைவனது குறைவிலா பெருங்கருணையும் வற்றாத அருளையும் பெற்றுய்வர் என்பது உண்மையாகும்.
நன்றி . பெருவிழா சிறப்பு மலர்
ஆனைப்பந்தியூரீசித்திவிநாயகர் ஆலயம் (1997)
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 1
Page 19
ஆTக்கம் மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு மிக அவசியம். ஆரோக்கியம் கெட்டால், அதனை எடுத்துக் காட்டுவது தூக்கமின்மையாகும். ஒரு நோயாளி மருந்துவரிடம் சென்றால், அவர் முதலில் மருத்துவரிடம் எதிர் நோக்கும் கேள்வி “உங்களுக்குத் தூக்கம் எப்படி? நன்றாகத் தூங்குகிறீர்களா, இல்லையா,” என்பதாகும். தூக்கம் நன்றாக இருந்தால் நோய் எது? நொடி ஏது? மருத்துவரிடம் போகவேண்டிய அவசியம் தான் எது? தூக்கமின்மைக்கு உடல் நோய் மட்டும் காரணம் அன்று. வேறு பல காரணங்களும் உண்டு.
அரை வயிற்றை உணவினால் நிரப்பிவிட்டு, மிகுதி அரை வயிற்றை வெறுமையாக வைத்துக் கொண்டு படுக்கப்போனால், நித்திரையா வரும்? கொட்டாவி தான் வரும். முழு வயிற்றையும் வெறுமையாக்கிக் கொண்டவன் கதி சொல்லுந்தரமன்று பசி வந்திடப் பத்துப் பறந்து போம்” என்றவர்கள் அந்தப் பத்தினுள் தூக்கத்தையும் ஒன்றாகச் சேர்க்க மறந்தமைதான் வியப்பாக உள்ளது.
மனதை அங்கும் இங்குமாக அலைத்தாலும் தூக்கம் வராது. இளமையில் காதல் வயப்பட்டு உள்ளங்கள் அலைக்கப்படுகின்றன; கலியாணத்தின் பின் உள்ளங்கள் ஒன்று சேரமறுப்பதால் அவை உளைச்சலுக்கும் அலைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. பின்னர் பிரிவினால் மனம் உடைந்து போகின்றது. கடன் பட்டால் கலக்கம், தொழிலில் நட்டமேற்பட்டால் நடுக்கம்; பதவியுயர்வு இல்லையென்றால் பதற்றம்; எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் ஏக்கம் தோல்வி கண்டால் துயரம் - இவ்வாறு ஏதோ ஒரு வகையில் மனம் அலைக்கப்படுகிறது, அதனால் தூக்கம் மறுக்கப்படுகின்றது. கவலைகள், துயரங்கள், ஏமாற்றங்கள், விரக்திகள், அவாக்கள், பொறாமை, உணர்வுகள், கோப உணர்ச்சிகள், அங்கலாய்ப்புக்கள், நெருக்கடிகள் என்பவற்றால் மனங்கள் நிரப்பப்பட்டிருந்தால், தூக்கம் கிட்டவும் நெருங்க மாட்டாது. அளவுக்கதிகமான மகிழ்ச்சியும் தூக்கத்தைக் கெடுக்கத்தான் செய்யும்.
தூக்கமின்மையானது உடல் ஆரோக்கியக் குறைவினாலும், உள ஆரோக்கியக் குறைவினாலும் ஏற்படுகின்றது. எனவே, மனிதர்களுக்குத் தூக்கம் வேண்டுமென்றால், உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமான நிலையில் வைத்துப்பேணி வரவேண்டும். மனிதன் வேண்டுமென்றே தன்னைக் கெடுத்துக் கொண்டு தூக்கம் இன்றி அலைகின்றான்.
தூக்கம் அமைதியையும் நிம்மதியையும் நமக்குத் தருகிறது. தூங்காதவன் கோபிக்கிறான். சீறி விழுகிறான்; எரிச்சல் ஊட்டப் பெற்றவனாக தனது நிம்மதியையும் கெடுத்துப் பிறர் நிம்மதியையும் கெடுக்கிறான்.
தூக்கமில்லாமல் தவிப்பவர்களும், பிறரைத்தவிக்க வைப்பவர்களும் ஒருபுறம். மறுபுறத்தில், தூக்கத்திலேயே வாழ்நாளை வீணாள் ஆக்குபவர்களும் இருக்கின்றனர். இளவயதினருக்குத் தூங்குவது ஒரு கலையாகிவிட்டது. படுத்துத்தான் உறங்க வேண்டும் என்ற நியதி அவர்களுக்கு இல்லை. இருந்த இருப்பிலே உறங்குவார்கள்; வாசிக்கும் போது தூங்குவார்கள்; பிரயாணத்தின் போது துயில் கொள்வார்கள்; பாடசாலை வகுப்பிலே தூங்குவார்கள். பகலிலும் இரவிலும் தூங்குவார்கள். தூக்கத்திற்கென்று நேரக்கணக்கில்லை, இவர்களுக்கு. இவ்வாறு தூக்கத்திலேயே காலத்தைக் கடத்தித், தூங்கு மூஞ்சி என்று பெயரும் கேட்டு, வாழ்விலும் கோட்டை விட்டவர்கள் எத்தனையோ பேர். பிள்ளைகளின் தூக்கத்தைப் பெற்றோர்கள் குழப்பிவிடுகின்றனர். வகுப்புக்களில்
குமாரசாமி சோமசுந்தரம்
ஆசிரியர்கள் மாணவர்களின் உறக்கத்தைக் கலைத்து விடுவதுமுண்டு. உதாசீனஞ் செய்வதுமுண்டு. தூங்கும் மாணவன் எழுந்திருந்தால் வகுப்புக்குழம்புமென்று தெரிந்தால், உதாசீனஞ் செய்து விடுவது பலருக்கு நன்மைபயக்கும் செயல்தானே. இத்தகைய சூழ்நிலையில் தூக்கம் முன்னேற்றத்தின் விரோதியாகி விடுகின்றது. அதனாலேயே இளைய சந்ததியினரை விழித்து, "தூங்காதே தம்பி தூங்காதே; சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’ என்று கவிஞர் ஒருவர் பாடுகிறார்.
தூக்கத்தினால் கிடைப்பது அமைதியும் நிம்மதியும் என்பதில் மறுப்பதில்லை. ஆயினும் எதற்கும் ஒர் எல்லையுண்டு; அளவும் உண்டு என்பதை மறந்துவிடலாகாது. அளவிற்கு அதிகமாகத் தூங்கினால் நாம் வாழ்வில் வெற்றி இழப்போம், செல்வம் இழப்போம், கல்வி இழப்போம். கடின உழைப்பே, வெற்றியைத் தரும். கருமமே கண்ணாக உழைப்பவர் கண்துஞ்சார்.
உழைப்பின் பின்னர் ஒய்வு வேண்டும். தூக்கம் அந்த ஒய்வினை நேர்த்தியாகத் தருகிறது. உழைப்பவனுக்கே ஒய்வெடுக்க உரிமையுண்டு. தூக்கம் வராமல் கஷ்டப்படுபவன், எளிதில் தூக்கம் பெறவிரும்பினால் அவன் கடினமாக உழைக்க வேண்டும். உழைப்பாளி கட்டாந்தரையில் படுத்தாலும் உடனே தூக்கம் வந்துவிடும்.
தூக்கமில்லாமல் தவிப்பவர்கள் நித்திரை மாத்திரைகளை நாடுகின்றனர்; நித்திரை ஊசியையும் போட்டுக் கொள்கின்றனர். இது பழக்கத்தில் வந்துவிட்டால், இத்தகைய மாத்திரைகளும், ஊசிமருந்தும் இல்லாமல் தூக்கமே வரவே வராது. தூக்க மருந்துகள் துயிலையும் கொண்டுவரும் சாவையும் விரைவாக்கும். சாவும் மீளாத்துயில் தானே.
குழந்தைகள் தூங்கவேண்டுமென்றால் தாலாட்டுத் தேவை. பெரியவர்கள் தூங்கவேண்டுமென்றால் கவலையில்லாத மனம் தேவை. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே; எல்லாம் விடிந்தபின் பார்ப்போம் என்று தன்னை முழுமையாக ஆண்டவன் கையில் ஒப்படைத்துவிட்டு, நல்ல காரியம் ஒன்றைச் சிந்தித்தபடி படுத்தால் உடனே தூக்கம் வந்துவிடும். அதில் நிம்மதி சோபிக்கும். மனநிறைவு மனக்குவிவு, மனஒருமைப்பாடு என்பன ஒருவனிடம் இருந்தால் தூக்கம் அவனுக்குப் பிரச்சனையான விடயமல்ல. ஆனால் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் சந்தேக விபரீதங்கள் போன்ற மனநோய்களினால் பீடிக்கப்பட்டு விட்டால் தூக்கமின்மையால் தவிக்க வேண்டிவரும். அதனால் தான் மனதுய்மை அவசியம் என்று சொல்லப்படுகிறது. உறங்கும் முறை கூட நம் முன்னோர் வகுத்துத் தந்துள்ளனர்.
"கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி”
என்று ஆசாரக் கோவை கூறுகிறது. படுக்கும் போது கைகுவித்து இறைவனை வணங்கி, நன்றி கூறவேண்டும். வடக்குத் திசையை நோக்கியும், கோணத்திசையிலும் தலையை வைக்காமல் போர்வையால் உடலைப்போர்த்திக் கொண்டுபடுத்தல் ஒழுக்கமாகும்.
வாழ்க்கையில் திருப்தி வேண்டும். “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்பது மறக்கக்கூடாத பழமொழி. “என்னிடம் இருப்பது போதும்" என்ற மனநிறைவுடன் இருப்பவர்க்கு
Page 20
வாழ்வு இன்பமயமாக விளங்கும். தூக்கத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை. ‘நிம்மதியின்மையால் தூக்கம் கெடுகிறது; தூக்கமின்மையால் நிம்மதி கெடுகிறது. எதிலும் திருப்தி காணாது வாழ்வதுதான் நரகவாழ்க்கை. எனவே சுகம் வேண்டுமானால், வாழ்க்கையில் கிடைப்பதைக் கொண்டு திருப்தியடையவேண்டும்.
“மனநிறைவைப் போன்ற நலமும், ஒழுக்கத்தைப் போன்ற அணிகலமும், உடல் நலத்தைப் போன்ற பேறும் உலகில் வேறெதுவும் இல்லை” என்பதில் எத்துணை உண்மை உள்ளது.
தூக்கத்திற்கு உடலாரோக்கியம் தேவை என்று கண்டோம். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி தேவை. “இன்று நன்றாக நடந்தேன். அதனால் இரவெல்லாம் நன்றாகத் தூங்கினேன்” என்று சொல்பவனைக் காண்கிறோம். “இன்று முழுவதும் ஒரே வேலை. நல்ல அலுப்பு. அதனால் நித்திரையில் ஒரு குழப்பமும் இல்லை” என்று ஒருவகைத் திருப்தியோடு கூறுபவர்களையும் பார்க்கின்றோம். உடல் உழைப்பு, உடற்பயிற்சியாகவும் ஆகிவிடுகின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். மூளை உழைப்பு அப்படியல்ல. எனவே மூளையை மூலதனமாகக் கொண்டு உழைக்கின்ற உடை நலங்கா உத்தியோகத்தர்கள் தினசரிஉடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது இரவில் தூக்கம் கெடும்.
சிலர் வேலை செய்கின்ற இடங்களில் பகலில் தூங்கி விடுகிறார்களே. அதனால் எத்தனையோ வேலைகள் கருமங்கள், செயற்பாடுகள் எல்லாம்துங்கிவிடுகின்றன. பகலில் தூங்கினால் இரவில் எப்படித் தூக்கம் வரும் தத்தம் கடமைகளை அசட்டை செய்பவர்களுக்கு ஏதோ வகையி ல் தண்டனை கிடைத்துத்தானே ஆக வேண்டும் ズ
பகலில் நித்திரை செய்யாதே’ என்று கம்மாவா சொல்லி வைத்தார்கள். பகலில் நித்திரை செய்தால் விரயங்கள்தான் மிஞ்சும். நாங்கள் இயங்குகின்ற காலம்பகல்; அந்தப்பகலை உறங்குகின்ற காலம் ஆக்குவது இயற்கைக்கு மாறானது. பகலை இரவாக்குவதும், இரவைப் பகலாக்குவதும் சிலரின் பழக்கமாக வந்துவிட்டது. இரவில் நடுநிசிக்குப் பின்னரும் கண்விழித்துக் களியாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, விடிந்த பின்னர் நண்பகல் வரை உறங்குபவர்கள், இன்று நகரங்களில் சர்வசாதாரணமாகக் காணக்கூடியதாக உள்ளது. இதனால் உடல்நலம் படிப்படியாகக் கெட்டு, இறுதியில் வாழ்க்கை சுகம் பறிபோய்விடுகிறது. பிறகு, இரவிலே தூக்கமே வருவதில்லை என்றோ, நோய் வந்துவிட்டது என்றோ புலம்புவதில் எதுவித கருத்தும் இல்லை. வாழ்க்கையில் ஒழுங்கு வேண்டும் என்று அழுத்திச் சொல்லப்படுவது ஏன் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் பகலை இரவாகக்கொள்வதோ,இரவைப்பகலாகக் கொள்வதோ வாழ்க்கை ஒழுங்கு அல்ல.
நேரத்தோடுபடுக்கைக்கு போய் நேரத்தோடு அதிகாலையில் நித்திரை விட்டெழுவதைப் பழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், உடலாரோக்கியத்துடனும், செல்வத்துடனும், புத்திசாலியாகவும் மிளிர்வர் என்ற கருத்துப்பட ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. “வைகறைத் துயலெழு” என்று நம் முன்னோர்களும் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதுவே இயற்கையோடு ஒட்டியதும், இயல்ப்ானதுமான வாழ்க்கை ஒழுங்கு. இந்த வாழ்க்கை ஒழுங்கு ஒரு மனித விழுமியம் ஆகும். அதனை வாழ்க்கையில் போற்றி வாழ்வோருக்கு ஒரு குறையுமில்லை.
வாழ்க்கையில் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பவர்கள்,
இரவில் நிம்மதியாக நித்திரை செய்வதற்குச் சில முன் ஆயத்தங்கள் செய்வதும் நல்லது.
தூக்கத்திற்குச் செல்ல முன் மனதை ஒருவழிப்படுத்தி நல்ல சிந்தனையில் ஈடுபடவேண்டும். தெய்வசிந்தனையிருந்தால் பயமோ, கவலையோ இருக்காது. படுக்கைக்குப் போகமுன் யாரையும்
திட்டவோ, கோபிக்கவோ கூடாது. சந்தேகம், தப்பபிப்பிராயம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் மனம் விட்டுப் பேசித் தீர்த்து, மனப்பாரத்தைத் தணித்து விடவேண்டும். இரவு நேரம் சென்று சாப்பிடுதலோ சாப்பிட்டவுடன் படுக்கைக்குப் போதலோ ஆகாத செயல்கள். தின்றால் நூறடி உலாவ வேண்டும் என்று பெரியோர் சொல்வார்கள். சாப்பிட்ட பின்னர் கொஞ்சத் தூரம் நடந்துவிட்டுப் படுத்தால் தூக்கம் வரும். அருகில் யாரும்படுத்திருந்தால், நல்லவற்றைப் பற்றிப் பேசிக் கொள்வதே தூக்கத்தைக் கெடுக்காத செயல் ஆகும். படுக்கைக்குப்போக முன் நல்ல நூல்களை வாசிக்கலாம்; இனிமையான இசையைக் கேட்கலாம்; அப்போது அலுப்பில்லாமல் தூக்கம் வந்தாலும், பின்னர் இடையில் தூக்கம் கலையுமேயானால், மீளவும் தூக்கத்தைப் பெறுவது சிரமம். அதனால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் புரிந்துணர்வு இருக்க வேண்டியது அவசியம்.
இரவில் தயிர், கீரை வகைகள் சிலவகைப்பழங்கள், சில உணவுவகைகள், வாயுப் பதார்த்தங்கள் எனப் பலவற்றைச் சாப்பிடக் கூடாது என்று நம் முன்னோர் கூறியிருக்கின்றனர். அவை தூக்கத்தைக் கெடுக்கக் கூடும் என்பதால்தான். நம்பிக்கைகள் என்று கருதப்பட்டவை பெரும்பாலும் நல்ல நம்பிக்கைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதை இன்று பார்க்கின்றோம். தலையணைக்கு அடியில் சிறிது விபூதியோ, குங்குமமோ வைத்துக்கொண்டு படுத்தால் கெட்ட கனவுகள் தோன்றித் தூக்கத்தைக் கெடுக்காது என்ற நம்பிக்கை உண்டு. அதை நம்பி அவ்வாறு செய்து வந்தவர்கள் நன்மை பெற்றுள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. நமது மனத்திற்குத் தைரியம் தரக்கூடிய யாவும் நமக்கு நன்மையே செய்யும். உண்டு என்பார்க்கு உண்டு; இல்லை என்பார்க்கு இல்லை. எல்லாமே மனத்தைப் பொறுத்த விஷயம் தான்.
பணம் படைத்தவர்களின் தூக்கம் குழம்புவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமான ஒன்று அவர்கள் பயன்படுத்தும் ஆடம்பர மெத்தையே யாகும். மெத்தை மேலும் கீழும் எழுந்து தாழ்வதால், உடம்பு உலுக்கலுக்கு உள்ளாகிறது. அதனால் அடிக்கடி விழித்துக் கொள்கிறார்கள். ஒப்புரவான தரையில், பாயை விரித்துப்படுத்துறங்கிய நம் முன்னோர் சுகமாகத் தூங்கி எழுந்தனர் என்ற சங்கதி இக்காலத்தவருக்கு எங்கே தெரிகிறது. சாணத்தினால் மெழுகிய மண் நிலத்தில் படுத்துறங்கினால் எவ்வளவு சுகம் பேசும், அலுப்பு நீங்கும், உடம்பு வலி அகலும் என்றெல்லாம் முன்னர்க்காலத்தில் நம் மூத்தவர்கள் பேசுவதைக் கேட்டவர்கள், கண்டவர்கள் கூட, இன்று யன்னல்கள் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில், அடைத்த அறைக்குள் மெத்தையில் படுத்து அவதிப்படுகிறார்கள். காலத்தின் கோலம் - அது தடுக்கமுடியாததாகி வருகின்றது.
வாழ்க்கையில் ஒழுங்கு வேண்டும். நூறாண்டு நோய் நொடியில்லாமல், சுகமாக, நிம்மதியாக வாழலாம். நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இன்றுபோல் மருத்துவ வசதிகள், வாழ்க்கை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத முன்னைய காலங்களில் மக்கள் சுகமாக, ஆரோக்கியமாக, அமைதியாக வாழ்ந்தமைக்குக் காரணம், அவர்கள் வாழ்க்கையில் ஒழுங்கினையும், மனக்கட்டுப் பாட்டினையும் கடைப்பிடித்து வந்தமையே ஆகும். இன்று இத்துணை விஞ்ஞான முன்னேற்றங்கள், மருத்துவவசதிகள், வாழ்க்கை வசதிகள் ஏற்பட்டிருந்தும், மனிதர்கள் அமைதியின்றித் தவிக்கிறார்கள்; சுகமாக வாழ முடியாமல் ஏங்குகிறார்கள்; கேவலம் தூக்கமின்றித் துயரப்படுகின்றனர். இவற்றிற்கெல்லாம் காரணம் வாழ்க்கையில் ஒர் ஒழுங்கு முறைமையைக் கடைப்பிடிக்காமையே என்பதைக் காலங் கடந்த நிலையில் தன்னிலும் உணர்ந்து கொண்டால் சீராக்கம் செய்து கொள்ளலாம்.
Page 21
LT. க. பொத யாழ்ப்பாணம்
“கிலத்தை வெல்ல வேண்டும் அன்றேல் காலனை வெல்ல வேண்டும்” என்ற கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்திலேயே, சமயப்பற்றுப் படிப்படியாக குறைந்து வருகின்றது. “பொய்மையைப் பெருக்க போதிய சமயம் உண்டு மெய்மைக்கு தான் நமக்குச் சமயம் இல்லை’ என்ற விழுமியம் எங்கும் பரந்து காணப்படுகின்றது. இவ்வகையில் நம் சமயத்தில் சக்தித் தெய்வத்தின் மகத்துவங்களை அறிவுக் கெட்டியவரை தொட்டுப் பார்ப்போம். “சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்” என்ற சைவ சித்தாந்தக் கூற்று சக்தியின் மகத்துவத்தை பொட்டிட்டுக் காட்டுகின்றது. ஒருநாமம் ஒரூரும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி வழிபடுவதல்லவா நம் சமயத்தின் உன்னதம், இத பெருமான் “நின்றும் இருந்தும் கிடந்தும் xxxz நடந்தும் நினைப்பதுன்னை” என்ற பாடல் : மூலம் தெளிவுபடுத்துகின்றார்.
ஒவ்வொரு மனிதனையும் மனிதனாக்கும் தெய்வமாக சக்தித் தெய்வம் காணப்படுகின்றாள். அவள் ஆற்றல்,
தனந்தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனந்தரும், தெய்வ வடிவுந்தரும், நெஞ்சில் வஞ்சமிலா
இனந்தரும், நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே” என்ற பாடல் மூலம் இனிது விளங்குகின்றது. சக்தியின் மகத்துவங்களுக்குச் சான்றாக அமைபவர்களில் ஒருவர் பாரதி "நாட்டார் தம் சிந்தையெல்லாம் நாட்டுவெறியூற்றெடுக்கப் பாட்டாலே முரசெறிந்தவன்” அவன். பாரதியின் நாவிலும் மனத்திலும் சக்தி குடிகொண்டிருந்தாள். அதனால் அவன் வாழ்வும் தெய்வீகத் தன்மை பெற்றது.
"அண்மையில் என்றும் நின்றே எம்மை ஆதரித்தருள் செய்யும் விரதமுற்றாய்” என்ற அடிகள், சக்தியானவள் எவ்வாறு எங்களெல்லோருக்கும் உதவுவதற்காக துணிந்து நிற்கிறா ளென்பதைக் காட்டுகின்றது.
"தன்னை மறந்து சகல உலகினையும் மன்ன நிதம் காக்கும்” அன்புக்குரிய சக்தியின் மகத்துவத்தை பாரதிக்கு தாசனாகிய பாரதிதாசன்,
எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்மி
ஏழுகடல் அவள் வண்ணமடா!-அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஒடுமடா! என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார். வண்டியுருண்டோட எவ்வாறு அச்சாணி அவசியமோ அதுபோல் நம் வாழ்க்கைச் சக்கரமுருண்டோட அந்த சக்தியின் கருணை, அவளது அருள் அவசியமாகுகின்றது. "வையக மாந்தரெல்லாம், தஞ்சமென்றே யுரைப்பீர் அவள்நாம்” என்று நம்மை இறைநிலைக்கு இட்டுச் செல்கிறான் பாரதி. சக்தியை வாழ்த்தப் புகுந்த பாரதி,
துன்பமிலாத நிலையே சக்தி
தூக்கமிலாக்கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி
சோம்பல் கெடுக்கும் துணிவே சக்தி
gàಶಾಖಸಿಕೆ
லகோபி (உயர்தரம்) இந்துக் கல்லூரி :
என்றவாறு கள்ளங்கபடமற்ற உள்ளத்தால் புகழ்ந்துரைக்கின்றான். “போதுமிங்கு மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம் ஆதிசக்தி தாயே அருள் புரிந்து காப்பாய்” என்று ஒவ்வொருவரும் சக்தியின் பாதங்களைச் சரண் புகவேண்டும்.
அபிராமிப்பட்டர் பெருமானது வாழ்க்கை வரலாறு சக்தியின் மகத்துவத்துக்குச் சான்றாக அமைகின்றது. மன்னன் இன்று திதி என்ன ? என்று பட்டரை வினவ, நிலவனைய அம்மையின் திருவுருவைப் பேரானந்த ஒளியால் தரிசித்து கிடந்த அவர், “இன்று பெளர்ணமி’ என்று திதிமாறிக் கூறி, இறுதியில் மன்னன் தண்டனைக்குள்ளாகின்றார். “அம்மையின் விழிகளில் அருளுண்டு, ண அவளைப் போற்ற என்பால் மனமுண்டு; பழிபாவம் கொண்டுழலும் மாந்தருடன் இனி ஏன் எனக்குத் தொடர்புண்டு ?’ என உள்ளத்தால் நினைந்துருகி எழுபத்தொன்பதாவது unt L-6) Taitu “விழிக்கே அருளுண்டு” எனும் பாடலைப் பாட பல கோடி நிலவுகள் ஒளி வீசுவதற்கொப்பான தன் திருச்செவித் தோட்டை வானத்தில் விட்டெறிந்தாள். அமாவாசை பெளர்ணமியாகியது. அது அத்தனையும் தன் அன்பனுக்காக அன்னை செய்த மகத்துவம்,
“சக்தியில்லையேல் சிவமுமில்லை” என்ற அடி மூலம் சிவனும் சக்தியும் இணை பிரியாததன்மை வெளிக்காட்டப்படுகின்றது. சக்தி நாமங்கள்தான் எத்தனை? பயிரவி, பஞ்சமி, பஞ்சபாணி, சண்டி, காளி, வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி என்று mm-WMMmm " தொடர்கிறது. "இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால் சென்று இழிவு பட்டு நில்லாமை நிலையைக் கொண்டு வருபவள் சக்தி” “வந்தே சரணம்புகும் அடியவர்களுக்குவான் உலகம் தந்திடும்" பெருமையுடையவள். இவர் அருள் பெற்ற புலவர்கள்தான் எத்தனை பேர். அன்னையின் அழகை பாடப்புகுந்த பட்டரும்,
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பணிமுறுவல் தவளத்திருநகையும் துணையாம் எங்கள் - சங்கரனைத் துவளப் பொருதுகுடியிடை சாய்க்கும் துனைமுலையாள் அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே! என்கிறார்.
"தெள்ளுற்றசக்தியவள் பெருமை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்" அதாவது சக்தியின் அருமை, பெருமையை, இனிமையை இவ்வுலகில் இருந்தவாறே அறிந்தவர்கள் இங்கிருந்தவாறே தேவர்களுடைய சிறப்புக் காணும் உயர்நிலையை எய்துவர்.
சக்தியானவள் நம் வாழ்க்கைப்பிணியை அழித்து அணியைத் தருகின்ற அன்புள்ளம் கொண்டவள். அவள் பெருமைகள் நாவினால் நவிலற் பாலதன்று, அவளின்றி அணுவும் அசையாது. அவளே நம் வாழ்வின் அச்சாணி, அவள் பாதம் சரம் புகுந்தால் எமக்கேது பிணி.
செய்கையாய் ஊக்கமாய் சித்தமாய் அறிவாய் நின்றிடும்தாயேநித்தமும் போற்றி இன்பங் கேட்கின், ஈவாய் போற்றி துன்பம் கேட்கினும் அளிப்பாய் போற்றி அமுதம் கேட்கின் தருவாய் போற்றி சக்தி போற்றி தாயே போற்றி முத்தி போற்றி மோனமே போற்றி
Page 22
===="#e5e5=5."_" === அமரர் G&GDI. ITTGDJI LÎ TID607
■■■ - ཡོད། -------
அகில இலங்கை இந்து மாமன்றம் வருடந்தோறும் 6 அமரர் வே. பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவுப் பேரு மாதம் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாமன்றத் தலைமையக
அன்றைய தினம் காலை 10.15 மணிக்கு நடைபெற்ற விகயிலாசபிள்ளைதலைமையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இசைக்கல்லூரி இயல், இசை விரிவுரையாளர் பண்ணிசைச் ெ தேவாரத்தில் அற்புதங்கள் என்னும் பொருளில் நிகழ்த்திய ஆர்
மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகள்
நிகழ்வின் இறுதியில் அமரர் வே.பாலசுப்பிரமணியம்
பேரவை உறுப்பினருமான திருமதி சாந்தி பாலசுப்பிரமணி. பேர்சனம் வழங்கினார்.
நினைவுப் பேருரை
*_****_-_-。
ពីរ நினைவுப் பேருரை
- - - - ■ - - **** من أهمية" -- تا
ற்பாடு செய்து நடத்திவரும், மாமன்ற முன்னாள் தலைவர் ஒரத் தொடரில், நான்காவது பேருரை நிகழ்வு கடந்த ஜூன்
பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்றது.
பூசை வழிபாட்டைத் தொடர்ந்து, மாமன்றத் தலைவர் திரு. தலைவரின் உரையின் பின்னர் தமிழ்நாடு அடையார்.அரசு ல்வி திருமதி சுப்புலக்ஷ்மிமோகன் அவர்கள் ஞானசம்பந்தர் மிகப் பேருரை, நிகழ்வின் சிறப்பு அம்சமாக இடம்பெற்றது.
ண்டன் நன்றியுரை வழங்கினார்.
நினைவாக அவரது துணைவியாரும், மாமன்ற முகாமைப் ம் அவர்கள் வருகை தந்திருந்த அனைவருக்கும் மதிய
இ) பிரமாதி வருடம் ஆடி- புரட்டாதி
Page 23
இந்து சமயத்தவராகிய நாம் ஆதியும், அந்தமுமில்லாத வரும் எங்கும் நிறைந்தவரும், அண்ட சராசரங்களின் இயக்கத்திற்குக் காரணமானவருமாகிய இறைவனைச் செந்தமிழால் சிவன் என்று அழைக்கின்றோம். சிவனுக்கு பற்பல திருப்பெயர்கள் வழக்கிலுள்ளன. ஒவ்வொரு இடத்தில் கோயில் கொண்டுள்ள போது அவ்விடத்திற்குரிய சிறப்புத்திருப்பெயரை சிவன் பெறுகின்றது. இவ்வாறு பல்வேறு திருப்பெயர்களில் குறிப்பிட்டப்பட்டாலும் எல்லாப் பெயர்களும் ஒருவனையே ஏகவு
இறைவனையே குறிப்பிடுகின்றின் சிவினைக்குறித்கும் சிறப்புப்
பெயர்களில் மிகவும் சிறப்புமிக்கதும் T கெஸ்ட்
- - . 7 P
எனும் போது மிகப்பெரியமிகத்துவம் வெளிப்படுகின்றது மகேஸ்வரனுக்கென்று செய்யப்படும் பூசை
|- மிகவும் சிறப்பான இம்பெறுகிறதுஆ மகேஸ்வர பூசை
என்பது பசிபோக்கும் சிறந்துவிழிபாட்டு முறையாக அமைகின்றது. இந்து சமயத்தவரின் வழி றைகளில் முக்கியமானது, முதன்மையானது ब्रुिरू- வரபூசைன்யக்கு i.
இந்துக்கோயில்களிலே இறைவனின் திருவுருவங்களுக்கு
வழிபாடாற்றப்பட்ட பின்னர் வழிபட வந்தவர்களுக்கு தீர்த்தம், திருநீறு, சந்தனம், குங்குமம், பூ என்பன வழங்கப்பட்ட பின்னர் பிரசாதமாக பொங்கலோ, கடலையோ, பஞ்சாமிர்தமோ வழங்கப்படுகின்றது. இறைவன் திருவடியை வழிபடவந்த பக்தர்கள் யாவருக்கும் அறுசுவை உணவு வயிராற வழங்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படும் தானம் அன்னதானம் எனக் கூறப்பட்டாலும், அதை மகேஸ்வர பூசை அல்லது சிவவழிபாடு என்றே நாம் குறிப்பிடுகின்றோம்.
மகேஸ்வர பூசையின் தத்துவத்தை நாம் நன்கு ஆய்ந்து நோக்கினால் தெளிவாவது என்ன? சற்றே சிந்தித்துப்பார்ப்போம். இறைவனின் படைப்பான உயிர்களுக்கு உணவளித்தல் என்பது இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று என்பது இந்து சமயம் காட்டும் நெறி
■。_臀 ■■」*。」轉。。軌 翡。。翡。_速 ##########._# 翡。。韩 脾。_臀。_翡 * ----
உலகம் வேண்டுவது ஒழுக்கமே. கொழுந்து விட்டெரி 9 کے
* அவரையே உல்கம் வேண்டிநிற்கின்றது.
பெரிய செயல்களைப் பெருந்தியாகத்தால் மட்டுமே
量
மிகச் சிறந்த பணியை நாம் செய்வதும், மிகப் பெரிய தி நிலையை அறவே மறந்து உனக்கென ஒன்றுமின்றி இ அப்போது தான் நீ உண்மையாக ஏதாவது பணி செ (لیکے
量
를
量 ZSSS SS SS SS SS SS SS SS SSAAASASA S SAAAS YSY 轉一上壘上上輕。主轉 喇上壟上三壘 LT SLkLLL kk LLSLL LLLLLLLLS S0 kkS kkLS A0S AkkA AkkA AT ST . . . . . . . . .
இந்து ஒளி இ
இந்துக் கோயில்களிலே மகேஸ்வர பூசை நடைபெறும் போது அதாவது பக்தர்கள் உணவு உட்கொள்ளும் போது நிலத்திலமர்ந்து ஏற்றத்தாழ்வு அற்ற முறையில் சமபந்திப் போசனம் நடைபெறுகின்றது. இறைவன் சந்நிதானத்திலே எல்லோரும் சமமானவர்கள் என்ற கோட்பாடு இங்கே வலியுறுத்தப்படுகின்றது. தாம் உழைத்துச் சம்பாதித்தவற்றை சூழ இருப்போரின் உணர்வுக்காக, பசிபோக்குவதற்காக உதவும் சிந்தனை எவ்வளவு உயர்ந்தது? அதனால் ஏற்படும் மனத்திருப்தி எத்தகையது? நன்கு >சிந்தித்துப் பார்த்தால் மகேஸ்வர பூசையின் பலன், மனத்தை
அதிளவுக்குப்படுத்துகின்றதுளின்புலத EILGIOINTITELJITñ,
- కా- _ "_ܨ
>இறைவனின்டிடைப்புக இறைவனின் உருவைக்
காணும் பக்குவம் கொண்டவர்கள் இந்துக்கள். காயமே கோயிலாக ம்பைக்துே வீாகக் குறிப்பிடுவது
மை:திருக்கோபி ல் மட்டுமல்லாது சிவரவேற்று மகேஸ்வர தாம் உண்ணுமுன்பிறறொருவருக்கு உணவளித்து மகிழ்ந்த பின்பே உண்ணும் பண்பு வெளிப்படுகின்றது. உணவைச் சமைத்து விட்டு யாராவது வெளியாரொருவரை வரவேற்க வாசலில் காத்திருந்து அழைத்து, உணவு பரிமாறி மகிழ்ந்தவர்கள் மகான்களாக இந்து சமயத்தவர் மத்தியிலே போற்றப்படுகின்றனர்.
மனிதவாழ்வின் இலட்சியமே மற்றவருக்கு உதவுவதுதான் என்பது இந்து சமயத்தின் வழிகாட்டிகளாக வாழ்ந்த உத்தமர்களின் வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டப்படுகின்றது.
இந்து சமயத்தின் வழியை உறுதியாகப் பின்பற்றும் மனப்பாண்மையை நாம் வளர்த்துக் கொள்ள மகேஸ்வர பூசையின் தத்துவம் உதவும். உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது முதுமொழி வாடிய பயிருக்கு நீர் ஊற்றுவதும், பறவை, விலங்குகளுக்கு உண்வு அளிப்பதும் கூட மகேஸ்வரபூசை ஆகும். எனவே மகேஸ்வர பூசையின் அடிப்படைத் தத்துவத்தை உணர்ந்து நாம் நம்மால் முடிந்தவரை மகேஸ்வரபூசையில் ஈடுபட்டு சிறந்த இறைபக்தராவோம்.
點。」壘上壘----上輕_壘。上壘。上萼_蠱上工藝__轟 ■。』*」獸。」輯。」軒 輕_二輕。上壘 扈。_毽 ********** ----------
種
பும் அன்பு-தன்னவற்ற அன்பு பாரிடம் இருக்குமோ, ܛܛ
=
=சுவாமி விவேகானந்தர்.
+
செய்ய முடியும்,
-சுவாமி விவேகானந்தர்,
றமையைக் காட்டுவதும் எப்போது? நான் என்னும் இரு வருவது வரட்டும் என்று சிறிதும் கவலையற்றிரு. ப்ய முடியும்,
-சுவாமி விவேகானந்தர். ஆ
量
■。壘。軟 *上輕一上壘_上車。上壘 惠。_臀__德。_棒。_量_■。_量 轉_壟上輕_藝_二壘_輕__睡__量
***************
)
பிரமாதிவரும் ஆடி புரட்டாதி
Page 24
Uண்ணிசைக் கலாநிதி, சங்கீத வித்துவா எழுதப்பட்ட "பண்ணிசைத் தத்துவம்' என்ற நு மாமன்றத்தின் அனுசரணையுடன், இம்மாதம்
மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை மண்டப
மாமன்றத் தலைவர்திரு. வி. கபிலாசபிள்ை நூல் அறிமுக விழாவில் கொழும்பு மாவட்டப் பார விருந்தினராகக் கலந்து கொண்டார். கலாசார, சம திரு.ந. பரஞ்சோதி, இந்து கலாசார அலுவல்கள் வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டு உதவிப் பணிப்பாளர்திரு. செ. எதிர்மன்னசிங்கம், திரு. சிவா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்து அவர்கள் நூலை ஆய்வுரை செய்தார்.
மாமன்ற உறுப்பினர்களும் மற்றும் விழா பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். பாரா நூலாசிரியருக்குப் பொன்னாடை போர்த்திக் ெ அவர்கள் பதிலுரையும் மாமன்றப் பொதுச் ெ
நன்றியுரையும் வழங்கினார்கள்.
ள் பேராசிரியர் எஸ். கே. சிவபாலன் அவர்களால் ாலின் அறிமுக விழா, அகில இலங்கை இந்து (ஜூலை) 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை
த்தில் நடைபெற்றது.
எா அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி ாளுமன்ற உறுப்பினர்திரு. இ. யோகராஜன் பிரதம ய விவகாரங்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் நினைக்களப் பணிப்பாளர்திரு. சி. தில்லைநடராஜா, அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக்கல்லூரிஆசிரியர் ரை வழங்கினார்கள். கம்பவாரிதி இ. ஜெயராஜ்
வுக்கு வருகை தந்திருந்த பலரும் நூலின் சிறப்புப் ருமன்ற உறுப்பினர் திரு. இ. யோகராஜன், களரவித்தார். நூலாசிரியர் எஸ். கே. சிவபாலன்
ஈயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் அவர்கள்
பிரமாதி வருடம் ஆடி- புரட்டாதி
Page 25
நிTன்பாடக் கூடல் நன்மாடம் மலி மறுகுகள் மல்கியது. மதுரைக்கு நான்மாடக் கூடல் மற்றொரு நாமம். மதுரைக்கு வந்த சோதனைகள் பலையச் செய்வன.காலத்திற்குக் காலம் கவின் கெட்டு அழிந்தமை வரலாறு கண்ட உண்மை. புராணங்கள் புகலாநிற்கும். இலக்கியங்கள் இரங்கிப்பாடும். சரித்திரம் சான்றுரைக்கும்.
ஒவ்வொன்றும் வெவ்வேறு காலங்களில் விளைந்தன. வேறு வேறான விளைவுகளை ஏற்படுத்தின. மதுரை கடல் கோழ்களினால் கலக்கம் கண்டது. கற்பரசி கண்ணகியால் கன்னர் வடித்தது. புறச்சமயத்தால் போற்றொழிந்தது. வடநாட்டரசர் படை எடுப்பால் தன்னிலை தவிர்ந்தது அந்நியர் ஆதிக்கத்தால் ஆட்டங் கொண்டது.
இவ்வாறு பல சோதனைக் காலங்களில் மங்கியது மதுராபுரி, சாதனை புரிந்த காலத்தில் புகழ் பூத்துப் பொங்கியது.
ஆவணி மூலம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவும் மதுரை அல்லோஸ் கல்லோவப்பட்டது. ஆவணி மாசம் அது மூல நட்சத்திரம் செறிந்த நாள். குதிரைகளின் வருகையைக் கண்டு களிக்க மாந்தர் கூட்டம் கூட்டமாகக் குழுமினார்கள். விதிகள் எங்கும் விழாக் கோலம் வாயில்கள் எல்லாம் அலங்காரம், பொற்குடம், பூரண கும்பம், மனிவிளக்கு,
LIEiff LiflLITilisu.
வானம் மறைந்த பந்தர்கள். அணி
அணியாகக் கதவி, கமுகு, தோனம், தேன்மொழித் தெரிவையர் தெரு நிறைய பூவையர் பொழியும் திருவீதி, பாவையர் பயிலும் பல விடயங்கள். ஆடவர் நிறைந்த அரசவிதி.தூரிய முழக்கம். பேரிசைக்கீதங்கள். பின்பணித் தூவல் போல் பன்னீர் நறுமணம் எங்கும். கண் கொள்ளாக்காட்சி, மதுரையில் - மாளிகையில் கூடங்களில் மாடங்களில் சந்தி சதுக்கம். எங்கும் எங்கும் முந்தி வந்தார்கள் கந்துகம் கான,
ஆலவாய் அண்ணலின் அருள் ஆடலை ஆர்அறிவார். ஆவணி மூல தினத்தன்று மதுரைக்கு வந்த சோதனை முப்புவனங்களாலும் போற்றப்படுவது. முதன்மையானது. அடியவருக்காகப் பரம்பொருள் பரிமேலழகராகப் பரிணமித்தார். நாட்டிலுள்ள நரிகளை நல்ல பரிகளாகப் பண்ணினார். செம்மனச் செல்வி அம்மையாரிடத்தில் பிட்டமுது செய்தார். அடியார்க்கு எளியான் சிற்றம்பலத்தான் என்ற உண்மையை அனைத்துப் புவனங்களும் உணர்ந்தன. கொன்றை முடியார் கொட்டுடைத் தோழரானார். கூடையில் மண் சுமந்தார். அஞ்ஞானிகளும் திருவருளை நன்குனா வைத்தது. அடியவனின் அன்பை ஆண்டவன் ஏற்ற நாள். அடியார் வான் புகழ் வானளாவப் பரவிய நாள். இவ்வனைத்துக்கும் உரியநாள் ஆவணி மூலம் முப்புவனங்களிலும் முதன்மை பெற்ற நாள்"
மும்மலம்றுேக்கும் fըրճuւն
நரி பரியாதல் - மணிவாசகப் பெருமானுடைய ஞானகுரு கைலாசபதி, கைலாசபதி-கோகழி ஆண்ட குருமனி குருமணி திருப்பெருந்துறை கொடுத்த வாக்கு இது
"ஆவணி மாசத்தில் மூல நட்சத்திரம் செறிந்த தினத்தில் உலகம் மதிக்க நல்ல குதிரைகள் கொண்டு வருவோம். மதுரை மன்னவனுக்கு வழங்குவோம்."
சிவசண்முகவடிவேல்
வாக்கு வாய்மையானது.
அழகு விளங்கும் மதுரை இராசானிக்குக் குதிரைகள் வந்தன. அன்று ஆவணி மாத மூல நாள் வாதவூரடிகள் வழங்கிய பொருளுக்கு வந்த குதிரைகள் அவை அல்ல. உலகு எங்கும் விபூதி திருவைந்தெழுத்துத் தழைத்து ஓங்க வந்தன. அதனால் நாட்டிலுள்ள நரிகளை நல்ல குதிரைகள் ஆக்கி வந்தார் நான் மாடக் கூடற்பெருமான். களிப்பு:பாண்டிய மன்னன் மட்டும் தானா மகிழ்ந்தான் ? மதுராபுரி மாந்தர்கள் அனைவரும் குதிரைகள் கண்டு களித்தார்கள், பரிமேலழகர் பார் மன்னனிடத்தில் பகர்வார்.
"இந்தக் குதிரைகளைக் கயிறு மாறிக் கொள்வதினால் உன்னுடையனவாகும். நாளை இவை என்ன தன்மையை அடைந்தனவாயினும் உன்னுடையனவாம். அது பற்றி உனக்கும் எனக்கும் எது ஒரு வழக்கும் இல்லை. இது குதிரை வியாபாரமுறையாகும்."
அரசன் மனமகிழ்ந்து ஒப்புக் கொண்டான். பரம்பனியாப்பரமர் இலக்கணம் பகர்ந்தார். கயிறு மாற்றப்பட்டது. அரசன் குதிரைகளை ஏற்றான்.
வரலாற்று உண்மை
சிவபிரான் நரியைப் பரியாக்கிய செய்தி திருமுறைகளில் அருமையாகவே காண்ப்படும். திருவாசகத்தில் நிறையவரும். திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாரூர்த் திருப்பதிகம் ஒன்றில் பின்வருமாறு பாடுவார்.
"நரியைக் குதிரைசெய் வானும்" என்று.
இந்நிகழ்வு மணிவாசகப் பெருமானுக்கு இறைவன் இயற்றிய திருவிளையாடலாகும். அந்நிகழ்வு திருவாசகத்தில் பாக்கக் காணப்படுவதே சான்று அல்லாமலும் தம்மோடு இணைந்தும் அந்த அற்புதத்தை பாடுவார். அவற்றிலே ஒரு சில பின்வருமாறு அமையும்,
"குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தான்எழுந்தருளியும்"
"நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்"
"பாண்டியன் தனக்குப் பரிமா விற்று"
ஈண்டு கனகம் இசையப் பெறாது ஆண்டான்'
பிரமாதி வருடம் ஆடி-புரட்டாதி
Page 26
"ஞாலம் மிகப்பரிமேற்கொண்டு நமை பாண்டான்" "நான்பொன் மேனிச்சுவடு ஒத்த நற்பரிமேல்வருவானை' "சிந்தனை செய்து அடியோங்கள் உய்ய ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன்"
"நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெலாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்"
"பந்தம்பரியற் பரிமேற் கொண்டருளி'
"நரிகள் எல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றே உன் போருளே. இப்படி இன்னும் அனேகம் அனேகமாகக் காணலாம்.
பிட்டமுது
சிவபிரான் திருவருளால் பரிமீண்டு நரியானது. நரியானதால் வாதவூரடிகள் தண்டிக்கப்பட்டார். தண்டனையைச் சுடுமணல் மீது நின்று அனுபவித்தார். அன்பனின் வெப்பத்தை ஐயன் தனித்தார். கங்கை ஆறு வைகைப் புது வெள்ளமாகப் பெருக்கு எடுத்தது. வைகை ஆற்றில் செம்மணச் செல்வியார்பாகம் அடைக்கக் கூவியாள் தேவைப்பட்டது. ஆலவாய் அண்ணல் அடியவளுக்காகக் சுடலியாளராக உருமாறினார். தவச்செல்வி பிட்டினை கூவியாளருக்குக் கொடுத்தாள். கூலியாளரும்பிட்டினுக்கு அளவாக மண்ணினைக்கோலறைப்பாகத்தில் கொட்டினார். பிரம்படியும்பட்டார்.
எடுத்துச் சுமந்தார்.
மதுரை நாயகன் மண் சுமந்து அடியாபட்டார்? செம்மனச்செல்வி அம்மையார், வாதவூரடிகள், தவசீலர்களுடைய எஞ்சிய வினையை எடுத்துச் சுமந்தார். அவர்கள் வினைப்போகமே பிரம்படிபடுதல்,
நிக ழ்ச்சி ப் பிணைப்பு
வாதவூரடிகளுக்காகக் குதிரை வந்தமை, செம்மனச் செல்வியாருக்காக பிரம்படி உண்டமை- இரண்டும் ஒன்றோடுஒன்று
இணைந்துள்ளமை சிறப்பு. வைகையாறு பெருகியது வாதவூரருக்காக, வைகையில் அடியுண்டமை பிட்டு வாணிச்சியம்மையாருக்காக,
வரலாற்று உண்மை
அப்பாடிகள் சிவபிரான் வைகைக்கரையில் நின்ற காட்சியைக் காட்டுவார் திருத்தாண்டகத்தில்,
"மனியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந்தோன்றும்" பெருமான் பிட்டமுதுசெய்தமை,பிரம்படிபட்டமை, மண்சுமந்தமை ஆகியனவற்றைத் திருவாசகத்தில் நிறையக் காணலாம். "ஆங்கது தன்னில் அடியவருக்கு ஆகப் பாங்காய் மண்சுமந்தருளிய பரிசும்" "பிட்டு நேர்பட மண்சு மந்தபெருந்
eAi i eAAA AAAAS AAAAS AeAS eA eAA e AeA AeAk ekA ee Akk ekeK eTk eK ekOk eke ஆகி
செய்திக் குறிப்பு జ్ఞాత్ தெல்லிப்பழை யூனி விருடர்ந்த
மேற்படி தேவஸ்தானத்தின் வருடாந்த மலுே التقيقة
தி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
ஆகஸ்ட் 23ம் திகதி திங்கட்கிழமை சப்பறத் திருவி மறுநாள் 25ம் திகதி புதன்கிழமை தீர்த்தத் திருவிழாவும் ந
AA AK AA AK AeAS AAAAA AeAeA AA eA TekA eeS eT ee ek ek AkS A
- (
துறைப் பெரும் பித்தனே' "மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட" "கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு." இவை போல்வன அனேகம் திருவாசகத்தில் சான்று பகர்வன,
ஆவணி மூலச் சிறப்பு
வாதவூரடிகள் முத்தரானார். அரிமர்த்தன பாண்டிய மன்னன் சிவானந்தக் கடல் மூழ்கினான். சிவகனத்தவர்கள் கதிர்விடுவிமானத்தில் அன்னையை ஏற்றினார்கள். சிவபுரத்தில் சேர்த்தார்கள். உலகு எங்குமாக மறைந்துள்ள அனைத்துஉயிர்களையும் ஆனந்த வெள்ளத்து அழுத்திய நாள். அஞ்ஞானிகளையும் மெய்ஞ்ஞானத்தைச் சிந்திக்க வைத்த சீரிய நன்னாள். உரிப்பொருள்-ஆவணி மூலத்தில் குதிரை வந்தது. நரி பரியானது. வைகைப்பெருக்கு இவை வெளிப்படை இவற்றின் உரிப்பொருள் பாது ? நரி - குணம், நரிக்குனம் மனிதரிடத்தில் நிறையவுண்டு ஆசையை வளர்த்துக் கற்பனை பண்ணுதல்,
"நரிவிருத்தமதாகுவர் நாடரே" என்பது அப்பர் வாக்கு
சுருக்கக் கூறின் புலன் நுகர்வு விருத்தி,
குதிரை - குணம், குதிரைக்குனம் மனிதரிடத்தில் மறைந்துள்ளது. புலன் ஒடுக்கம், இலக்கை நோக்கிப் பாய்ந்து செல்லுதல் - யோகம்,
பெருமான் நாட்டிலுள்ள நரிகளை நல்ல பரிகளாக்கினார் என்றால் - மாந்தரின் மன மயக்கத்தை மாற்றினார். சிவலோக நெறியில் நிறுத்தினார். சிவலோகநெறியில் தலைப்பட்ட மாந்தர் திருவருள் வெள்ளத்தில் திளைத்தார்கள். அது தான் வைகையில் புது வெள்ளப் பெருக்கு. அருள் மழை - அருள்வெள்ளம் ஆற்று வெள்ளமாகப் பெருகும்.
"அண்ண லார் அருள் வெள்ளத்தை நோக்கி அங்கயற் கண்ணி கம்பை வெள்ளமாகக் கருதினர்"
"அடியனேன் ஆரூரர் கழல் போற்றிப் புரசையானைமுன் சேவித்து
வந்தனன். பொழியுநின் கருனைத்தென் டிரைசெய் வெள்ளமுன்
கொடுவந்து புகுதலின் திருமுன்புவரப்பெற்றேன்"
என்பது சேரர் திருவாக்கு.
"..எங்கோமான் அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும்
இன்னருளே என்னப் பொழியாய் மழை" என்பது திருவாவூரரின் மணிவாக்கு.
நன்னாள் ஆவணி மூலம் அரிய நாள். அருந்துணை அடியார்க்கு அருள் புரிந்த நாள் அருள் வெள்ளம் மேதினிமேல் வெளிப்பட்ட நாள். சொல்லற்கரியான் அல்லற் பிறவி அகற்றி ஆனந்த வெள்ளத்து அழுத்தும் நாள். பிறவிக்கு மூலமான மும்மலங்கள் அறுக்கும் நாள். அந்நாளில் பரமன் அடியினை பரவிப் பயன் பெறுவோம்.
eA AeA Aeii TA ee ei ei Aee eK eeK ekeA eA ee eA ekk ekik e kkk اللg
స్టాక్ க்காதேவி தேவஸ்தானம் آقای ರಾ? ஹோற்சவம் (1999) స్ట్రో జ్ఞాశ్ மாற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 14ம் திகதி சனிக்கிழமை து
ழாவும், 24ம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழாவும், తో டைபெறவிருக்கின்றன. 。 AeA eA AeA TA eA ekA AeA ei eK KK ek ee ee ee eeee A eA ekA
பிரமாதி வருடம் ஆடி-புரட்டாதி
Page 27
N
சிகில இலங்கை இந்து மாமன்றம் இலங்கையிலுள் கூட்டமைப்பாகும். இந்த நாட்டின் வடக்கு, கிழக்கில் அல்லலு நோக்குடன் மாமன்றம் இந்த நிர்க்கதியற்ற மக்களு தீர்மானித்துள்ளது.
யோகர் சுவாமிகள் திருவடி நிலையம் : வடக்குக் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்து நிர்க்கதிய பராமரிக்கப்படுகின்றனர். ஒரு நபரை ஒரு வருடத்திற்குப் அடிப்படையில் முதியோர் இல்லத்தை பராமரிக்கும் செலவு
இனிய வாழ்வு இல்லம், முல்லைத்தீவு : வன்னி காரணமாகக் கட்புலனிழந்த 17 சிறார்கள் இங்கு வைத்துப் இதில் சேர்க்கப்படுவதற்குக் காத்திருக்கின்றனர். ஒரு பிள் = வீதம் இல்லத்தை ஒரு மாதம் பராமரிப்பதற்கு ரூபா 125,0
கொழும்பு இந்துக்கல்லூரி இரத்மலானை மாண 40 நிர்க்கதியற்ற சிறுவர்கள் தற்சமயம் இந்த விடுதியில்
100 ஆக்கும் நோக்கத்துடன் விடுதி விஸ்தரிக்கப்பட்டுக் ெ பராமரிக்கும் செலவு ரூபா 16, 800/ ஆகும். விடுதியை ஒரு
மாமன்றம் ஒர் அரச சார்பற்ற நிறுவனமாகச் செ1 365 000/= செலவில் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்ெ விடுதியை தற்போதுள்ள 40 மாணவர்களுடன் 7 அனுசரணையாளர்களை ஒழுங்கு செய்துள்ளது. உண் அனுசரணை வழங்கி உதவுமாறு வெளிநாடுகளில் வதி வேண்டுகோள் விடுக்கின்றது. தற்சமயம் இருக்கு அனுசரணையாளர் தேவைப்படுவதோடு மாமன்றம் மேலும் ே வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றது. விடுதியின் ம
தயவுசெய்து உங்கள் உதவு தொகைகளை “அகில இ
எந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டுமென்பதை
வி. கயிலாசபிள்ளை கந்தையா தலைவர் கெளரவ பெ7
தலைமையகம் : இல91/5 சேர்சிற்றம்பலம் ஏ கொழும்பு 2.
தொலைபேசி:434990
தொலைநகல் : 344720
ாள பல்வேறு இந்துமத நிறுவனங்களை ஒன்றிணைத்த ஒரு லுறும் எமது உடன் பிறப்புக்களின் துன்பங்களைத்துடைக்கும் க்காக பின்வரும் வதிவிடங்களைப் பராமரிப்பதற்குத்
கிழக்கில் நடந்து கொண்டிருக்கின்ற யுத்தம் காரணமாகத் பற்ற நிலையிலுள்ள 54 முதியோர் இங்கு வைத்துப் பராமரிப்பதற்கு ரூபா 22, 500 / செலவாகின்றது. இதன் மாத மொன்றிற்கு ரூபா 100,000 ஆகும்.
ரி மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற யுத்தம் பராமரிக்கப்படுகின்றனர். இதைவிட மேலும் 30 சிறார்கள் ளையை ஒரு வருடத்திற்குப் பராமரிப்பதற்கு ரூபா 30,000/ 00/= தேவைப்படுகின்றது.
வர் விடுதி: தங்கள் பெற்றோரை இழந்து, பாதுகாப்பாரற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை கொண்டிருக்கின்றது. ஒரு பிள்ளையை ஒரு வருடத்திற்குப் மாதத்திற்கு பராமரிக்கும் செலவு ரூபா 140,000/=ஆகும்.
பற்பட்டுக் கொண்டு இந்த நிலையங்களையும் மாதாந்தம் கொண்டுள்ளது. கொழும்பு இந்துக்கல்லூரி, இரத்மலானை மாதத்திற்கு நடத்துவதற்கு மாமன்றம் உள்ளுரில் ாமையில் உதவி செய்யப்பட வேண்டிய மாணவர்களுக்கு யுெம் நம்மவர் உட்பட சகலருக்கும் மாமன்றம் அன்பான ம் 40 மாணவர்களுக்காக மிகுதி 5 மாதங்களுக்கும் சேர்க்க உத்தேசித்துள்ள 20 மாணவர்களுக்கும் அனுசரணை ாதாந்த அனுசரணைத் தொகை ரூபா 75 000 /= ஆகும்.
இலங்கை இந்து மாமன்றம்” சார்பில் அனுப்பி, உதவு தொகை உங்கள் கடிதத்தில் குறிப்பிடவும்.
நீலகண்டன் மு. கந்தசாமி gJóë GaFuGDATGmTi கெளரவ பொருளாளர்
1. கார்டினர் மாவத்தை,
Page 28
என்னும் போத செயலாற்றுதல் அல்லது தொழிலாற்றுதல் அல்லது வினையாற்றுதல் எனப்பொருள்படும். அது சமயத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது சடங்குக் கொள்கை என அழைக்கப்படும். வடசொல்லாகிய கிறு என்ற வினையடியிலிருந்து கிரியையென தோற்றம் பெற்றது. சமயம் தொழிலைக் கிரியா மார்க்கத்துடன் தொடர்புறுத்துகிறது.
சரியை மார்க்கம், கிரியை மார்க்கம், யோகமார்க்கம், ஞானமார்க்கம், பக்திமார்க்கம், தியானமார்க்கம் என ஆறுவகை மார்க்கங்கள் உண்டு. ஆறுவகை மார்க்கங்களையும் இரு பிரிவினுள் அடக்கலாம். அறிவில் முதிர்ந்தவர்களுக்கு யோக தியான மார்க்கங்கள் உகந்தன. ஏனையவர்களுக்கு அது பொருந்தாது. இந்த இரண்டையுமே ஞான மார்க்கத்தினுள் அடக்கலாம். கிரியை, பக்தி மார்க்கங்களை கிரியை மார்க்கத்தினுள் அடக்கலாம். கிரியை மார்க்கமானது சமயத்துறையினை உள்ளடக்கியது. சமயம் நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டது. நம்பிக்கையற்றவருக்கு சமயமுமில்லை கிரியையுமில்லை எனலாம்.
மனிதன் இல்வாழ்க்கையினை நெறிப்படுத்தவும் சீர்ப்படுத்தவும் கிரியைகள் வழி வகுக்கின்றன. அவன் வாழ்க்கையில் அறிவு வழி மூலமும் செயல் வழி மூலமும் முன்னேற முடிகின்றது. அறிவு வழிமார்க்கம் சைவசித்தாந்தமாகவும், செயல் வழிமார்க்கம் கோயில் கிரியை நெறியாகவும் வகுக்கப்பட்டுள்ளது. வேதமும் ஆகமமும் கிரியை நெறி பற்றி பல்வேறு விதமான செயல்களையும் பொருள்களையும் கொண்டுள்ளன. வேதங்களில் கிரியையைப் பற்றி அறியமுடிகின்றது. கிரியையின்றி வேதமில்லை. இவை மரபுவழிக்குட்பட்ட வேதாகபக் கிரியைகளாகும். விஞ்ஞான அறிவினால் கிரியை முறைகள் நடைமுறை வாழ்விலே குறைந்து வருகின்றன. எனினும் அவை அடியோடு மாறவில்லை எனலாம்.
இந்துக்களின் வாழ்க்கையோடு கிரியைகள் சடங்குகள் என்பன பிணைக்கப்பட்டுள்ளன. கிரியைகளை கோயிற்சிரியை வீட்டுக்கிரியை என இரு வகைப்படுத்தலாம். மேலும் கோயிற் கிரியைகளை நித்திய கிரியை, நைமித்திய கிரியை எனவும் வீட்டுக் கிரியையினை பூர்வகிரியை அபரக்கிரியை எனவும் பிரிக்கலாம். இக்கிரியைகளெல்லாம் ஆன்மீக ஈடேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டவையாகும். கோயில்கள் பராத்தக் கிரியைக்காகவே
உருவாக்கப்பட்டவை. இங்கு சமூக நலன் கருதியே பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில்களில் தினந்தோறும் உசங்காலம், காவைசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாங்காலம், அர்த்தசாமம் ஆகிய ஆறு பூஜைகளும் நித்திய கிரியைகளாகும், பெரிய கோயில்களில் பன்னிரண்டு காலப் பூசைகளும் நடைபெறுவதுண்டு. சில ஆலயங்களில் விசேட தினங்களில்
த் 6 پاورقی go
__ E 一「_
மாத்திரம் வழிபாடு இடம்பெறும். இத்தினங்களில் விசேட அபிடேகமும், ஆராதனைகளும், வழிபாடுகளும் நடைபெறும். திருத்திகை சதுர்த்தி, உத்திரம், ஆடிப்பூரம், ஆவணி மூலம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், தைச் சங்கராந்தி, தைப்பூசம், மாசிமகம், மகாமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற விசேட தினங்களில் செய்யப்படும் கிரியைகள் நைமித்திய கிரியைகள் எனப்படும்.
நித்திய கிரியைகளும் நைமித்திய கிரியைகளும் பலன் கருதி செய்யப்படும்பொழுது அவை காமியகிரியைகள் ஆகின்றன. பொதுவாக ஆலயங்களில் சங்கற்பம் விக்னேஸ்வரர் பூஜை, பண்ணியாகாவாசனம், பஞ்சகெளவியம், பஞ்சாபிர்பூசை முதலியவற்றோடு அலங்காரம், அபிடேகம், நைவேத்தியம், தீபாராதனை, அர்ச்சனை, தோத்திரம் போன்ற கிரியைகளும் நிகழ்கின்றன.
சமூக வாழ்க்கையே கிரியையின் அடிப்படையாகும். துதிபாடுதல் முறையும் கிரியையில் குறிப்பிடப்படுகின்றது. தேவாரம், திருவாசகம் பாடும் முறை இவ்வாறே வெளிவந்தன. கிரியை முறைகள் இல்லறத்தானுக்கு மட்டுமே சொல்லப்படுகின்றன. வாழ்வினை உயர்த்துவதும் தாழ்த்துவதும் அவனவன் செய்த செயலேயாகும். இந்துசமயம் தழைத்தோங்கிய காலத்தில் அவற்றிற்கேற்ப வழிபாட்டு முறையும் அதாவது பல்வகைக் கிரியைகளும் அக்கால வழிபாட்டில் இடம் பெற்றிருக்கலாம். வேதத்தில் அரைவாசி செயல் கிரியைகளுக்கு முக்கியம் கொடுக்கின்றது. இவை பழமையினைப் பேணுவன. வேதக்கிரியையின் முக்கிய நோக்கம் தானம் கொடுப்பதாகும். கொடுத்துப் பெறுவதே முக்கிய வழிபாடாகும். இருக்கு வேதப் பாடல்களில் பெரும்பாலானவை தெய்வத்தினை விளித்து "நான் நெய், தேன், பால் முதலியவற்றினை உனக்குத் தருகின்றேன். நீ பெரு வீரர்களான புத்திரர்களையும் மாடு முதலிய செல்வங்களையும் நோயற்ற நீண்ட வாழ்வினையும் தா" என வேண்டும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கு வேதப்பாடல்கள் பயனை அவாவிச் செய்யப்படும் நிலையினையே தெளிவுறுத்துகின்றன.
இந்திரம்,அக்கினி, வர்ணன், விஷ்ணு, உருத்திரன் முதலிய தெய்வங்களை விளித்துப் பாடப்பட்ட பாடல்கள் இருக்கு வேதத்தில் அதிகமுண்டு. இத்தெய்வங்கள் எல்லாம் விளித்தழைக்கப் படுகின்றன. இவ்வாறு கூவியழைத்தல் ஒரு கிரியையாக அமைந்துவிடும். ஏன்? ஆகமங்களும் ஏனைய துணைநூல்களும் கிரியை வழிபாட்டினால் ஏற்படும் பயன்கள் பற்றி எடுத்துக் கூறுகின்றன. அக்கினி விட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தலைவனாக விளங்குகின்றான். இவன் மக்களையும்
பிரமாதி வருடம் リーエ
Page 29
தேவர்களையும் தொடுக்கும் பிணைப்பாகவுள்ளான். இவ்வாறு முக்கியம் பெறும் அக்கினியை பலமுறை விளித்து நாம் அளிக்கின்ற அவியினை ஏற்று எனைய தேவர்களிடம் சேர்ப்பிப்பாய் எனவும் அவர்களை யாகத்திற்கு அழைத்துவா எனவும் கேட்பவன் பலவாறு வேண்டுவதை இருக்கு வேதப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன. துதிப்பாடல்களும், பிரார்த்தனைகளும் இருக்கு வேதத்தில் முக்கியம் பெறுகின்றன. செல்வம் பெருக மக்களின் கிரியை முறைகளும் அதிகரிக்கத் தொடங்கின.
தேவர்களுக்கு பாகங்களில் அவிகொடுக்கும் முறையினை யசூர் வேதம் விளக்குகின்றது. தீயினை வளர்த்து அத்தீயினுள் பல பொருட்களை முறையாகச் சொரியும் முறையும் பற்றியும் அக்கினி வளர்ப்பதற்கு வேண்டிய குண்டங்கள் யாகவேத முதலியவற்றை அமைக்கும் முறையினையும் யகுர் வேதம் விளக்குகின்றது. அத்தோடு பலவகை யாகங்களையும் பசூர் வேதம் குறிப்பிடுகின்றது. வேதகாலங்களில் ஒதப்பட்ட மந்திரங்கள் பண்ணுடன் அமைந்திருப்பதைக் காண்கிறோம். வழிபாடுகளில் சாம வேதம் இசைப்பது அன்றாட கிரியையாக இடம்பெறுகிறது. நைமித்திய கிரியைகளில் சாம வேதம் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இசையின் மூலம் மனிதனையும் இறைவனையும் இணைக்க முடிகிறது.
அதர்வ வேதத்தில் மாந்திரிகம் பேரிடம் பெறுகிறது. நன்மை-தீமை ஆகிய இருவினைகளை விளைவிக்கும் fifil GT:LLEHETETTI பற்றி இருக்கு வேதப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன. தானும் தன்னைச் சார்ந்த உறவினர்களும் நன்மை பெறுவதற்காக செய்யப்படும் கிரியை பெளஷ்டி காளி எனப் பெயர் பெறுகிறது. தன் பகைவன் வேருடன் அழிய மேற்கொள்ளும் கிரியை அடி சாரணி எனப்படும். அதர்வவேதப் பாடல்கள் மந்திர சக்தி வாய்ந்தவை. இச்சக்தி ஆக்கல் அழித்தல் என்னும் இரு தொழில்களையும் செய்யும்
1.
வாரியார் பேசுகிறார்
படம் என்றால் முனிவர்கள் இருக்கும் இடம், மடம் என்றால் புத்தி அம்மடத்திலுள்ள்முருகளிடம் தீட்சை கேட்கிறார் அருணகிரிநாதர் சட்டித் என்றால், மின் வரிசையாகத்தான் முட்டையிடும். பின்னர்தான் பார்த்தால் குஞ்சுபொரிக்கும் அதோடுபட்டுமல்ல, மீனுக்கு ஸ்தன பார்வையின்ால் பெற்று பார்வையின்ால் வளர்க்கிறது. மீ. "மீனாட்சி" என்று அம்பிகைக்குப் பெயர் அருளசிரிநாதர்.
கரைபொழிதிருமுக அருகாயில் உங்கெழு
கடல்நிலை பெறுவார்காயேந்திய பைங்கிளிமாசாம்பவி என்று சொல்கிறார் கரே என்றால் இரண்டு ஓரங்கள். டபு:ாக் கோபி பார்வை விழும் நேருக்கு நேராக இருக்கக்கூடாது எதிரிலிருந்தால் எதிரி
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முகாை அண்மையில் காலமானார். அவரது மறைவையொட் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
இந்த ஒளி (
கிரியைகளைப் பற்றி விரித்துக் கூறுவனவாக பிராமணங்கள் விளங்குகின்றன. யசூர் வேதம் இவற்றின் தோற்றுவாய் எனலாம். இங்கு கிரியைகளின் விளக்கம் பசூர் வேதத்தில் இருப்பதைக் காட்டடிலும் விரிவாகவுள்ளது. கிரியை முறைகளின் முழுவியல்பினையும் பிராமணங்களில் அறியலாம். கிரியைகள் பற்றிய அபிப்பிராய பேதங்களும் சர்ச்சைகளும் முரண்பாடுகளும் ஆராய்ந்து அறியும் முடிவுகளும் பிராமணங்களில் உண்டு, சுருங்கச் சொல்லின் கிரியையின் பொக்கிசம்
பிராமணமாகும்.
ஆரண்யங்களில் பிராமனத்தில் கூறுவதைப் போன்று கிரியைகள் முக்கியம் பெறவில்லை. உபநிடதங்களிலும் கிரியைகள் முக்கியம் பெறவில்லை. வேதாங்கங்கள் அனைத்தும் கிரியைகளை முக்கியம் அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. இவற்றின் மூலநூல்கள் சூத்திரங்களால் ஆனவை. இவை வேதங்களுடன் தொடர்புறுவதனால் வேதாகமங்கள் எனப்படலாயின. இவற்றுள்ளே தர்மசூத்திரங்கள், திரெள சூத்திரங்கள், கிருஷ்ய சூத்திரங்கள் முக்கியமானவை. திரெள சூத்திரங்கள் வேதங்கள் குறிப்பிடும் கேள்விகளைப் பற்றிக் சுடறுகின்றன. கிருஷ்ய சூத்திரங்கள் வைதீக கிரியைகள் பற்றி எடுத்தியம்புகின்றன.
மேற்கூறப்பட்டவற்றிலிருந்து இந்து சமயத்தில் கிரியைகள் ஆங்காங்கே முக்கியம் பெறுவதோடு சமய நம்பிக்கையினையும் ஆன்மீக ஈடேற்றத்திற்குரிய வழிவகைகளையும் காட்டி நிற்கின்றன என்பது புலனாகின்றது. கலைகளும் பண்பாடுகளும் இருக்கும் வரை கிரியை நெறிகளும் இருக்கவே செய்யும் எனலாம்,
W LÉ.
《༽
ஏற்றவர்கள் பெரிய படம் என்னும் சேர்த்திரம் கும்பகோணத்தில் இருக்கிறது. ட்சை; அதாவது பார்வையிளாேேய்ஞானத்தை உண்டாக்குவது எதுபோல் இட்ட முட்டைகளைப் பார்க்கும், தன் கண்ணால் ஒரு பார் ங்கள் கிடையாது உண்பு ஊட்டவும் முடியாது பால்கொடுக்கவும் முடியாது ன் தன் குஞ்சுகளைப் பார்ப்பதுபோல் நம்மைப் பார்ப்பதால்
வில் பக்கங்களிலிருந்து சேவிக்கவேண்டும் அப்பொழுதுதான் கடைக்கன்
நாம் அடியவர்களாக ஆக வேண்டும்.
திருமுருசுகிரு பானந்தவரிய If
(கந்தரநுபூதி விரிவுரை நூல்) ノ
ாபம் மப் போவை சிறப்பு உறுப்பினர் திரு. வி. கங்காதரன் டி, அவரது குடும்பத்தினருக்கு மாமன்றம் ஆழ்ந்த
பிரமாதிவரும் ஆடி - புரட்டத்
Page 30
நமது நாட்டில் மீண்டும் அமைதியும், சமாதானமும் ஏற்பட்டு சகல மக்களும் நிம்மதியாக வாழ ஆண்டவன் அருள்வேண்டி அகில இலங்கை இந்து மாமன்றம் மாதந்தோறும் பிரார்த்தனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திவருகின்றது.
இந்த தொடரில் முதலாவது பிரார்த்தனை நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் 2ம் திகதி வெள்ளிக்கிழமை காலை வெள்ளவத்தை புதிய கதிரேசன் கோவிலில் நடைபெற்றது. அபிஷேகம், பூசை என்பவற்றைத் தொடர்ந்து, கூட்டு வழிபாடு இடம்பெற்றது.
இரண்டாவது பிரார்த்தனை நிகழ்வு, கடந்த மே மாதம் 29ம் திகதி சனிக்கிழமையன்று, கொட்டாஞ்சேனையூரீவரதராஜவிநாயகர் ஆலயத்தில் ஆதரவுடன், மேற்படி ஆலய ஐங்கரன் மண்டபத்தில் நடைபெற்றது. அன்றைய தினம், காலை விநாயகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட அபிஷேகம், பூசை, சகஸ்ரநாம அர்ச்சனை என்பனவற்றை தொடர்ந்து, ஐங்கரன் மண்டபத் வழிபாே இடம்பெற்றது. இறுதியில், பிரார்த்தை . ഛി கொண்ட அனைவருக்கும் அன்னதானம்
மாமன்றத்தின் மூன்றாவது பிரீர்த் மாதம் (ஜூன்) 27ம் திகதி ஞாயிற்று விவேகானந்த சபையின் (கொழும்பு) ஆதர்ஷ்ன்* மண்டபத்தில் நடைபெற்றது. விசேட பூசை, அர்ச்ச கூட்டுவழிபாடும் இடம்பெற்றது.
இதே தினத்தன்று
விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், அ 1999) தமிழகத்திலுள்ள, ஐம்பதுக்கும்.ழற்ப அந்தந்த ஆலயங்களின் சிவாச்சாவூத் விசேட பூஏ ※ நடாத்தியிருந்தார்கள். அத்துடன், திருஇடைச்சுரம் தி Հ திருமதி ஆன்மசக்தி வெங்கடேசன், ஒதுவார் தருமபுரம் கிழிததித் அவர்கள், மயிலாப்பூர் முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்கள், திருச்செந்தூர் கண்ணன் அவர்கள், சிதம்பரம் சுந்தரமூர்த்தி தீட்சிதர் அவர்கள் ஆகியோர் தலைமையில் அந்தந்த இடங்களில் அன்றைய தினம் விசேட பிரார்த்தனைகள் நடந்தேறின. கடந்த சில மாதங்களுக்கு முன்னரும், திரு. திருமதி. ஆன்மசக்தி வெங்கடேசன் இலங்கையில் அமைதியும், சாதானமும் வேண்டி சென்னையில் தொடர்ச்சியாக 24 மணித்தியாலயம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
மாமன்றம், மாதாந்த பிரார்த்தனை சம்பந்தமாக பின்வரும் வேண்டுகோளை விடுத்திருக்கிறது.
இந்த நாட்டில் மீண்டும் அமைதியும் சமாதானமும் நிலவ, சொந்த நாட்டிலேயே முகாம்களிலும் பிற இடங்களிலும் அகதிகளாக வாடும் மக்களுக்கு விமோசனம் வேண்டி, பல ஆண்டுகளாகச் சொல்லொண்ணா வேதனையால் அல்லலுறும் மக்களின் துயரங்கள் நீங்க, தமிழ் மக்களின் அபிலாசைகளைத் திருப்திப்படுத்துவதற்கான அரசியல் தீர்வு கிடைக்க, போரும் ஏனைய கொடுமைகளும் நிறுத்தப்பட்டு இந்நாட்டில் சகல மக்களும் நிம்மதியாக வாழ ஆண்டவன் அருள்வேண்டி நாடளாவியரீதியிலும், உலகளாவிய ரீதியிலும், சகல சமய தாபனங்களிலும், ஆலயங்களிலும், விசேட பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அன்பர்களைப் பணிவன்புடன் வேண்டுகின்றோம். இந்த வகையில்
མa60un மிகவும் வலிமையானது. இதனை மது நாட்டில் இரு தசாப்த காலமாக
துவத்திற்கும் வழிவகுக்குமாறு ஆன்க வழியில் வண்டத் தீர்மானித்துள்ளோம்.
f லும் பார்க்க, உலகளாவிய ー மக்கள் கூட்டு வழிபாடு, சயமாகச் செவிசாய்த்து எமது சுபீட்ச வாழ்க்கையும் திரும்பவும்
வொரு மாதமும் கடைசி ண்டொரு மணித்தியாலம் இந்தப் iங்கையிலும் ஏனைய நாடுகளிலும் அன்பர்கள் எல்லோரையும் இறைவனைக் கூட்டாகப் டூமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
இந்துமத நிறுவனங்களினதும் அறக்கட்டளைகளினதும் ஒன்றியமான அகில இலங்கை இந்துமாமன்றம்,தனது அங்கத்துவ சங்கங்களுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள் ஒன்றில், சமாதானத்திற்கான இந்தப் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை தங்கள் பகுதிகளில் ஒழுங்கு செய்து நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
Page 31
%ኻ S @鷲 ২)
==
རྫུང་སྔགས་སྔགས་སྔ་འབྲེལ་
டுெ சிவசித்தாந்தம் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் உண்மை கொண்டது. இம்மூன்றும் அநாதியானவை, அநாதியானவற்றிற்கு சூக்கும தூல செயற்பாடுகள் உண்டு அடங்கி நிற்கும் நிலை வியாபக வியாப்பியம் பதிவியாபகம் பசுவும், பாசமும் வியாப்பியம், பாசம், பசுவில் வியாத்தியாயிருக்கும். சூக்கும துலம் இரண்டிலும் இவ்வாறு அமைந்து இருக்கும்.
பதியும், பசுவும் சித்துப் பொருள்கள். பாசம் சடம் பதியும் பசுவும் சித்தும் பொருள்களாக விருந்தாலும், பதி அறிந்தாங் கறியும் சித்து பசு சுட்டியறியும் சித்து. இவையே இரண்டு சித்துக்களுக்கு முள்ள வேற்றுகம,
s
*
N N N
NNNNNS
रूं
பிரபஞ்சசிருஷ்டிக்கு முதற்காரணம் மானிய, நிமித்தகாரனன் பதி துணைக்காரணம் சிவசத்தி, பிரபஞ்ச சிருஷ்டியில் இரு நிகழ்வுகள் காணப்படுகின்றன. ஒன்று விருத்தி மற்றது பரிணாமம் சித்துப் பொருள்கள் விருத்தியும், சடப்பொருள்கள் பரிணாமமும் அடைகின்றன.
விருத்தி என்பது படம் குடிலானாற்போல்வது; அதாவது சீலை தன் இயல்புமாறாது கூடாரம், பலவகை ஆடை வகைகளாய் விருத்திப்படுவது. பரிணாமம் என்பது பால் தயிரானாற் போல் திரிபடைவது உயிர்கள் சித்துப் பொருளேயாயினும், அவற்றிற்கு உடம்பு மாயையாதலின் உடம்பிருக்கும் வரையும் ஏகதேசபரிணாமம் அட்ையும் நெய்யிற் புழுத்தோன்றுவது போல்,
பிரபஞ்ச சிருஷ்டியின் போது காரணனான பதியின் துணைக்காரனமான சிவசத்தி பரை, ஆதி, இச்சை, ஞான், கிரியா சத்திகளாகவும், நலந்தரு வேதங்களாகவும் விருத்திப்படுமன்றி அது பரிணாமமாவதன்று. பிரபஞ்சத்துக்கு முதற் காரணமாகிய மாயை சிவசத்தி அநுட்டிப்பதால் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம் கலைகள் எனப்படும் ஆறு அத்துவாக்களாகப் பரிணமிக்கும். அத்துவாமூர்த்திகளாகச் சிவசக்தி வியாபித்து விருத்திப்படும்.
மானிய சடம், எவ்வாறு காரியப்படுமெனின், சித்தாகிய சிவசத்தி அநுட்டிப்பதால் காரியப்படும். எமது உடம்பு சடம் ஆன்ம அறிவு சேர்வதனால் உடம்பு காரியப்படுகின்றது. இவ்வாறே ஆன்ம அறிவோடு Քվեմն քն கன் Li சேர்வதனால் அணிவதோழிற்படுகின்றன. சடங்களின் காரியப்பாடு பரிணாமம்
பச்சிலை நாவி நச்சுப் பொருள் சடம்; காரியப்படாமல் இருக்கின்றது. அதை ஒருவர் வாயிற்போட்டதும் அது ஆன்ம அறிவோடு சேர மயக்கம் சோர்வு முதலிய பரிணாம செயற்பாட்டைக் கொடுக்கின்றது.
"சித்துப் பொருள் ஒன்றிலிருந்து சிவம், சத்தி உயிர்கள், மலம் என்பன பரிணாமம் ஆகின்றன" என்று எவ்வாறு கூறலாம்? கண்டிதப் பொருளுக்கே பரிணாமம். அகண்டிதப் பொருளுக்குப் பரிணாமம் இன்று அது எல்லையற்றது.
00 00 00 00 0 00 00 0 00 0 00 00 0 0 C 0
அகில இலங்கை இந்து மாமன்ரம் மாணவர்களுக்கு : நடத்திவருகிறது. இந்த வகையில், கடந்த மே மாதம் 2ம் தி 2கிம், 27ம் திகதிகளில் பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக்கல்லுரிய
192 மாணவர்கள் சிவதீட்சை பெற்றுக் கொண்டார்கள்.
நயினை சிவநிதி. பரமேஸ்வரக் குருக்கள் சிவ திட்சை
00 00 00 00 00 00 00 0 00 0 0 0 00 00 0 0 0
N Nلا پ
SS R Nਲ ২১১ <స్ట్ గ్స్ట్న
பதி, பசு, பாசம் மூன்றும் தனித்தனிப்பொருள்கள். அவற்றின் காரணத்திலிருந்தே காரியம் தோன்றும் ஒன்றிலிருந்து மூன்றும் பரிணாமம் ஆகும் என்பது வியாபக வியாப்பிய நெறியறியாரதும், பிரபஞ்சதோற்றத்துக்கு முதல் துணைநிமித்தம் அறியாரதும், காரணகாரிய சம்பந்தம் அறியாரதும் கூற்று. சித்திலிருந்து சடம் தோன்றாது சடத்திலிருந்து சித்துத் தோன்றாது.
ஏகான்ம வாதிகள், மாயா வாதிகள் முப்பொருள் உண்மை கொள்ளாதவர்கள். பிரபஞ்சம் பரவான்மாவின் பரிணாமம் என்பர். மாயையை அநிர்வசனம் எனவுங் கூறுவர். இவர்கள் கூறும்பரிணாமம் பொருத்தமற்றது.
சிவாத்துவித சைவர் சிவமேபரம் பொருள். சித்துச் சடமாகிய யாவும் சிவசத்தியின் பரிணாமம் என்பர். இவ்வாறு சிவசக்திப் பரிணாமம் கூறுபவர்களின் கூற்றும் எவ்வாறு பொருந்தும்?
பரம்பொருள் பிரபஞ்சத்தைக் கடந்தும் கலந்தும் சர்வ வியாபகமாக நிற்கின்றது. எனவே, உடலுயிர் கண்னருக்கன், அறிவொளிபோல் ஒன்றாய், வேறாய், உடனாய் நின்று உபகரித்துப் பிரபஞ்சத்தை நடத்தும் அத்துவிதக்கலப்பைக் கொண்டு பிரபஞ்சம் பரம்பொருளின் பரிணாமம் என்றால் பொருந்தாது. அது பரம்பொருளின் வியாபகவிருத்தி
திருவருட்சந்நிதியில் பிரபஞ்சம் விருத்திப்படும். சிவசத்தி அவ்வக்காரியங்களின் உன்முக மாதலாகிய சங்கற்பமே ஈண்டுச் சந்நிதி எனப்படும் விருத்தி என்பதும் உபசாரம் சங்கற்ப மாத்திரையே
"இறைவன்தன் சந்நிதிக்கன் உலகின்தன்சேட்டையென்னும்
மிறைகளும் பந்தாய் மாகிய மருவிடாள்கினவள் இன் உரதராதசோத்தாள்
(சி. சித்தி 5ம் சூ 6)
பதியிலிருந்து பிரபஞ்சம் பரிணாமமாவது என்று கூறுவது கிழங்கிலிருந்து தோன்றுந்தாமரையை "பங்கயம்" என்று கூறுவது போலாகும் பங்கயம்-சேறு சேற்றிலிருந்து தாமரை தோன்றியது என்று கூறுவது உபசாரம். இதுபோன்றதே பதியிலிருந்து பிரபஞ்சம் தோன்றியதும் என்பதாகும் சேறு கிழங்குக்கு ஆதாரம் மாயையிலிருந்து தோன்றும் பிரபஞ்சத்துக்கு பதியின் சத்தி ஆதாரமாகும்
அநாதிமுத்தசித்துரு வாகிய முதல்வன் கொள்ளும் திருமேனிகளும் பரிணாமமன்று ஆணவம் அகன்ற அறிவோடு ஐந்தொழிலையார்ந்து நிற்றலின், தான் நினைத்ததொரு திருமேனியைத் தனதாக்கிக் கொள்வன்.
"குறித்ததொன்றாக மாட்டாக் குறைவிலன் ஆதவானும் நெறிப்படநிறைந்த ஞானத்தொழிலுடை நிலைமையானும் வெறுப்பொடு விருப்புத் தன்டாங் மேவுதல் இலாமையாதும் நிறுத்திடும் நினைந்தமேனி நின்மவன் அருளி னாவே"
(சி. சித்தி 1ம் சூ 45)
இலவச சிவ தீட்சை வழங்கும் வைபவங்களை ஏற்பாடு செய்து கதியன்று கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும், பிலும் சிவதீட்சை வழங்கும் வைபவங்கள் இடம்பெற்றன். இதில்
க்குரிய கிரிபைகளை நடத்தி வைத்தார்.
0 0 0 00 00 00 00 00 00 0 0 0 0 0
9) பிரமாதி வருடம் ஆடி-புரட்டாதி
Page 32
57 C, புதிய நக அன்பு வே
ஓம் சரவணபவ
சின் திர்காமத்தின் பெருமைகளை அறிவீர்கள். இந்து யாத்திரீகர்களின் வசதிக்காக 30 மடங்கள் இருந்தன. புனித நகர் ஆகும்போது வேறு இடம் கொடுக்காமலே அகற்றப்பட்டன. எஞ்சியதாக இராம கிருஷ்ணமடம் நல்ல சேவை செய்தது. அதனையும் இல்லாமல் செய்தனர்.
கால் நடையாகவே பல நூற்றுக் கணக்கான அடியார்கள் வடக்கு-கிழக்குப் பகுதியில் இருந்து கதிர்காமம் வந்தனர். யுத்தம் காரணமாக கடந்த 20 வருடங்களாக அடியார்கள் வருகை கதிர்காமத்தில் குறைந்துவிட்டது. 1990 ஆம் ஆண்டு நாம் சென்ற போது கோவில் பெரிய கப்புறாளை மிகவும் மனம் வருந்தி திருவிழா உபய காரர் கூட காளாஞ்சி பெறுவதற்கு வருவதில்லை என்றார். வரும் நீங்களாவது கந்த புராணம் படிக்கலாம் என்றார்.
முருகப் பெருமான்தான் அவர் மூலம் சொல்கிறார் என்ற நம்பிக்கையில் 1991 ம் ஆண்டு தொடங்கி கதிர்காமம் பழனி ஆண்டவர் முன் கந்தசஷ்டியின் போது கந்தபுராணம் படிப்பது, பயன் சொல்வது நடைபெறுகின்றது.
நாம் அனுபவித்த வசதியீனங்கள் பல. இரவில் படுப்பதற்கு இடம் இல்லாது மரங்களின் கீழ் உறங்கினோம். சைவச் சாப்பாடும் கிடைப்பது அருமையிலும் அருமை. அடியார்களில் பலரை பொலிசிலும் அடைந்தனர். சட்டத்தரணிகள் மூலம் வெளியில் எடுத்தோம்.
மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் கதிர்காமக் கந்தன் துணையால் பெரியார்கள் பலர் பால், பழம் முதலியனவற்றை தொகையாக வேண்டி வந்து தந்து நூற்றுக்கணக்கான உபவாசம் இருக்கும் அடியார்களுக்குக் கொடுக்க உதவினர். தானங்களில் சிறந்த அன்னதானமும் செய்யப் பலருடைய உதவிகள் கிடைத்தன. கண்குளிர பழனி ஆண்டவருடைய பாலாபிசேகமும் காணக் கூடியதாய் இருந்தது.
அடியார்களுடைய வசதிக்காக ஒரு இடம் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து 40 அடி தூரத்தில் பூரீ வள்ளி மடம் என்ற பெயரில் அமைத்துள்ளோம். அதனைச் சிறப்பாக நடத்த முருகன் பக்தர்களுடைய அன்பும், ஆதரவும், அனுசரணையும் தேவை.
"ஆம் பொருள் நமதேயானால் அறம் பிறர்காவதுண்டோ" என்ற நீதி வாக்கியம் உண்டு. சிறு துளி பெருவெள்ளம். உங்கள் மூதாதையர்கள் நாமத்தில் ஒரு சில அடியார்களுக்காவது அன்னதானம் கொடுக்க மனம் வையுங்கள். சிவபதம் அடைந்த உங்கள் தாய் தந்தையர்களுக்கு புண்ணியம் சேர அவர்கள் நாமத்தையும் திதியையும் அறிவித்தால் மோட்ச அர்ச்சனை செய்து விபூதி பிரசாதம் அனுப்புவோம்.
பூரீவள்ளி அன்னதான மடம் பதிவுசெய்யப்பட்டு, இலங்கை வங்கியில் கதிர்காமத்தில் கணக்கும் உண்டு. இல944T
(Bank of Ceylon, Kataragama, A/C No. 944T)
*%
هسی
NS
Z
ரம் கதிர்காமம்
ண்டுகோள்
கந்தப் பெருமானை நம்பி கதிர்காமம் வரும் கஷ்டப்படும், அடியார்களுக்கு நாம் தொண்டு செய்யவேண்டும். கந்தப்பெருமான் கதிர்காமத்தில் உலாவித்திரிகிறார். தொண்டமானாறு சன்னதிக்குத் திடீர் என வருவார் என்றும் அவர் களைப்பாற வேண்டும் என்ற நம்பிக்கையில் செவ்விளநீரும் பயறும் படைப்பார்கள்.
செல்லக் கதிர்காமத்தில் முருகப் பெருமான் வேங்கை மரமாக நின்றதை அறிவீர்கள். ஓம் கணபதியே நமக என்ற மந்திர ஓசையுடன் பாய்ந்து ஒடும் புனித மாணிக்க கங்கை ஒரத்தில் இருக்கும் பெரிய, பெரிய வேங்கை மரங்கள் போல் வேறு எங்கும் காண முடியாது. ஞானப் பழமாகிய கந்தனுக்கு உதவ கணநாதராகிய கணபதி யானை ரூபமாக வந்த இடம் செல்லக் கதிர்காமம்.
தவ வலிமையினால் ஆயிரத்து எட்டு அண்டங்களையும் நூற்று எட்டு யுகம் ஆட்சி செய்த சூரபதுமனை சங்காரம் செய்ய அகில அண்டகோடி பிரமாண்ட நாயகி தன் சக்தியை எல்லாம் திரட்டிய வேலை முருகப்பெருமானிடம் கொடுத்தார். அந்த வேலின் சக்தி ஆயிரம் அணுகுண்டுகளை விட சக்தி வாய்ந்தது. சூரபதுமனின் மகேந்திரபுரி வேலின் தாக்கத்தால் அழிந்தது. வேலின் தாக்கத்தால் உண்டாகும் கதிர்வீச்சு மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதால் மகேந்திரபுரியை கடலில் ஆழ்த்தினார். இன்றும் அந்த மகேந்திரபுரி கதிர்காமத்துக்கு அண்மையில் உள்ள கடலில் இருப்பதாய் சொல்கிறார்கள்.
சூர சங்காரம் செய்த வேல் ஆகாய கங்கையில் நீராடிய பின் முருகப்பெருமானிடம் வந்தது. அதே வேலை சுவாமிமலை உச்சியில் இருந்து அடியார்களுக்கு அருள்புரிக்கும் வண்ணம் கட்டளையிட்டார் என்கிறது புராணம்,
செல்லக் கதிர்காமத்திலும் சுவாமி மலையிலும் இருந்து களைப்புடன் வரும் அடியார்களுக்கு உணவு கொடுத்து ஆதரிக்க வேண்டும். அதற்காக பூரீ வள்ளி அன்னதான மடம் அமைத்துள்ளோம்.
தருமம் செய்பவர்களுக்கு சகல சம்பத்தும் நிறைந்த தெய்வீக வாழ்வு கிடைக்கும். தெய்வீகத் தன்மை ஆத்மாவை மோட்ச சாம்ராட்சியத்துக்கு அழைத்துச் செல்லும் சிவலோகம் எங்கே இருக்கிறது ? பக்தி ஞானம் நிரம்பிய திருஞானசம்பந்தர் அழுத ஒசை (சத்தம்) எவ்வளவு தூரம் சென்றதோ அங்கே கூப்பிடும் குரலுக்கு முருகன் வருவார்.
ஒம் சரவணபவ
சு. சிவப்பிரகாசம் (முருகன் அடிமை)
நிர்வாகி 3 கட்சன் வீதி, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 3. தொ. பேசி: 01- 448352, 072 - 65.7065.
Page 33
ஈழத்துத் தமிழ் இல பண்டித மணியும்
இவ்வுலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்தும் இன்பத்தை அடைதலிலும் துன்பத்தை விலக்குவதிலும் கண்ணும் கருத்தமாக இருப்பதை உணர முடிகின்றது. மனிதவினமும் இதற்கு விதிவிலக்கல்ல. மனித வாழ்வின் அடிப்படை இலட்சியமும் இதுவாகவே உள்ளது. இலட்சியம் ஒன்றுதான். ஆனால், இதனை அடைவதற்கு உலகின் பல்வேறு மக்களினக் குழுக்களும் வெவ்வேறு வழிகளைப் பின்பற்றி வருகின்றன. மனித நாகரிக பண்பாட்டு வரலாறுகள் இத்தகைய முயற்சிகள், வழிகள், வளர்ச்சிகள், முடிவுகள் ஆகியவனவற்றை உள்ளடக்கியனவாகவே பெரும்பாலும் உள்ளன.
தமிழ் மக்கள் மிகத் தொன்மையான நாகரிக வரலாற்றைக் கொண்டவர்கள். கல்விக்கும், பண்பாட்டிற்கும், வாழ்க்கைக்கும் இடையே ஒருமைப்பாட்டினைக் கண்டவர்கள். உலகை ஒன்றாகக் காண்பதே கல்வி எனும் வியத்தகு, தத்துவத்தை முதன்முதலாக உலகிற்களித்துப்பெருமை பெற்றவர்கள். தமிழ்மக்களின் வாழ்க்கைத் தத்துவங்களே கல்வித்தத்துவங்களாகவும் பரிணமித்தன.
வாழ்க்கையினின்று மலர்வதுதான் இலக்கியம். அவ்வாறு மலர்ச்சி பெற்ற இலக்கியம் பின்னர் வாழ்க்கையை வளம்படுத்த உதவுகின்றது. இவ்வாறு பெறப்பட்ட கல்வித்தத்துவங்களும் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் செந்நெறிப்படுத்துவனவாக அமைந் துள்ளன. இலக்கியம்,கல்வி, வாழ்க்கை என்பன ஒன்றோடொன்று தொட்ர்புற்று வளர்ந்து வந்த மரபுப் பாங்கினைச் சங்க காலந் தொடக்கம் தற்காலம்வரை தமிழ் மக்களிடையே காணக் கூடியதாக உள்ளது.
கல்வியானது மனிதப் பண்புகள் நிறைந்த சான்றோர்களை உருவாக்க வேண்டுமென்று கொள்வது தமிழ்க் கல்வி மரபு"மெய்ப் பொருள் காண்பது அறிவு,” அறிவினை அளிப்பது கல்வி. கல்வியின் நோக்கம் மெய்ப் பொருள் காண்பதற்கு மனிதனை இட்டுச் செல்லல்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்”
நன்றும் தீதும் பிறர்தரவாரா”
ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்”
"கல்வியழகே அழகு"
போன்ற அனைத்துலகுமே வியக்கக் கூடிய அற்புத முடிவுகளை அறிஞர்கள் எடுத்ததற்கு அஞ்ஞான்று பண்டைத் தமிழகத்தில் நிலைகொண்டிருந்த முதிர்ந்த கல்விப் பாரம்பரியமே ஆதாரமாக இருந்தது.
தமிழ் கல்வியை அளித்து வந்த "ஆன்றவிந் தடங்கிய" அறிஞர் ஆயம் அறிவோடு, அறம் பரப்பியவர்கள் அவற்றுடன் உணர்வுக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் உரம் ஊட்டியவர்கள்.
க்கிய கல்வி வழியில் புலவர் மணியும்
மக்களின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி அவர்களை உட்புற அழிவு, சிதைவுகளிலிருந்து பாதுகாத்த நல்லாசான்கள். உலகியல் சார்ந்த கல்வியையும் அளித்து மக்களின் வெளிப்புறச் சீரமைப்புக்கு வழிவகுத்தவர்கள். சுருங்கக் கூறின் மக்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழவும், வளமாக வாழவும் தேவையான கல்வியை அவர்களுக்கு வழங்கியவர்கள் இவ்வறிஞர் பரம்பரையினர்.
தமிழ் வழங்கும் ஈழ மண்டலம் தமிழ் நாட்டுடன் ஏறத்தாழ கி. மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்தே பண்பாட்டுத் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தமை பற்றி அண்மைக் கால ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. இந்த வகையில் , தமிழ்க் கல்வி மரபு ஈழத் தமிழர்களிடமும் தொன்றுதொட்டுத் தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறது எனலாம்.
“அரச கேசரியில் இருந்து நமது கண்முன் இருந்த கணேசையர் பரியந்தம் ஓரிலக்கிய வழி தொடர்ந்து வந்திருக்கின்றதென்பது ஊகிக்கத்தக்கது. இந்த வழிஇடையிடையே செடிகொடிகளில் மறைந்து தொடர்பு புலப்படாது போனாலும், வழி ஒன்று எவ்வாறோ தொடர்புற்று வந்திருக்கிறதென்பதற்குச் சான்றுகள் உண்டு”
பண்டிதமணி கணபதிப்பிள்ளை காட்டிய ஈழத்துத் தமிழ் இலக்கிய வழி இதுவாகும். அரசகேசரி எனும் புலவர் யாழ்ப்பாணத் தமிழ் வேந்தர் காலத்தவர். தமிழ் மன்னர்கள் காலம் ஏறத்தாழ கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆரம்பத்திலிருந்து கி. பி. 1619 போர்துக்கீச அரசு யாழ்ப்பாண அரசைக் காப்பாற்றும் வரையிலான காலப் பகுதியாகும். தமிழ் அரச வம்சத்தைச் சேர்ந்த அரசகேசரி யாழ்ப்பாண அரசின் இறுதிக் காலத்திலேயே இரகுவம்சம் எனும் நூலை இயற்றினார் எனக் கருதப்படுகிறது.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை ஒரு நீண்ட புலமை மிக்க இலக்கிய வழி ஈழத் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்று கொள்ள வேண்டும். ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய குறிப்பு சங்கப் புலவர் வரிசையில் உள்ளது. அரச கேசரியில் இருந்து தொடங்கும் முறையான இலக்கிய வழி இதன் தொடர்ச்சியேயாகும். அரச கேசரியைத் தொடர்ந்து, போர்த்துக்கேயர் காலம் முடிய,அதன் பின் ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலம் வரை ஈழத் தமிழ் இலக்கிய வழி புலப்பாடில்லாதாயினும் ஆங்காங்கே புலவர்கள் தலைமறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவர், அவர் காலத்திலே வாழ்ந்த சுன்னாகம் வரதபண்டிதர், மாதகல் மயில்வாகனப் புலவர் ஆகியோர் புலமைப் பரம்பரையைத் தொடர வைத்தவர்கள். நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளனர். இத்தகையோர் நீண்டதொரு புலமைப் பரம்பரையொன்றிலேயே தோன்றியிருக்க முடியுமென்பது பண்டித மணியின் முடிபு ஆகும். இன்னும் பலர் கிராமங்கள் தோறும் இலக்கிய வழியையும் கல்வி வழியையும் தொடர வைத்துள்ளனர். ஆனால், அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் உள்ளோம்.
Page 34
ஈழத்துத் தமிழ் இலக்கிய வழியும் கல்வி வழியும் இவ்வாறு தலைமறைவாகஇக்கால கட்டத்தில் நடந்து வந்ததற்குத் தமிழ் மன்னர்கள் தமிழ்குடிமக்களை ஆண்டுவந்த காலம்மறைந்து அந்நிய ஏகாதிபத்தியப் போர்த்துக்கேய ஒல்லாந்த அரசுகள் அடக்கு முறை ஆட்சியில் இருந்தமையே காரணமாகும். அன்னிய அரசுகள் புற மதங்களைப்பரப்புவதிலும் நம்நாட்டுச் சூழலுக்கு முற்றிலும் புறம்பான கல்வி முறையினையும் கலாசாரத்தினையும் புகுத்துவதிலும் கண்ணாக இருந்தமையினால் இந்நிலையில் ஏற்பட்டது. இக்காலப் பகுதியில் ஒருவித அச்ச உணர்வுடனேயே சைவத் தமிழ் இலக்கிய, கல்விப் பாரம்பரியம் தொடர்ந்திருக்க வேண்டும்.
போர்துக்கேயரே முதன் முதலாக இலங்கையில் பாடசாலைகளை அமைத்து முறைசார்ந்த கல்வி முறையினைப் புகுத்தியவர்கள் ஆகின்றனர். இதற்கு முன்னைய காலங்களில் குரு சீட முறையில் கோயில்களிலும், ஆச்சிரமங்களிலும், ஆசானின் இல்லங்களிலும் கல்வி போதிக்கப்பட்டு வந்தது. போர்த்துக்கேயர் காலத்திலிருந்து ஈழத் தமிழர் மத்தியில் இரண்டு வகைக் கல்வி முறைகளைக் காணக்கூடியதாக உள்ளது. ஒன்று ஈழத்து இலக்கிய வழியோடு இணைந்து தொடர்ந்து வந்த ஈழத் தமிழ்க் கல்வி வழி. மற்றையது ஐரோப்பியர்கள் வருகையால் தோற்றுவிக்கப்பட்ட மேலைத்தேயக் கல்வி வழி. இந்த இரண்டாவது கல்வி வழியின் பேறாக ஐரோப்பிய கல்வி முறை, உலகியல் சார்ந்த பண்பாடு, கலாச்சாரம் என்பன படிப்படியாக நம் மக்கள் மத்தியில் படியத் தொடங்கின. மக்களிடையே மதிப்பும் செல்வாக்கும் பெற்றுத் திகழ்ந்தன. *
இரண்டாவது கல்விப் பாரம்பரியம் “உயர்குழாம்” எனும் சமூகக் குழுவினரை உருவாக்கியது. அரசறிய வீற்றிருக்கும் வாழ்வை அளித்தது. இவர்களே சமூகத்தில் “கற்றவர்கள்’ எனப்பட்டனர். நாலுந் தெரிந்தவர்கள் என்றும், நாகரிகம் படைத்தவர்கள் என்றும் ஏற்றிப் போற்றப்பட்டனர். கல்வி அதி உயர்ந்த பெறுமதியைப் பெற்றது. ஆங்கிலேயர் காலத்தில் இக்கல்வி வழி அதியற்புத வளர்ச்சி கண்டது. ஏகாதிபத்திய அரசின் ஆசியும் பல்வேறு உதவிகளும் இக்கல்விக்கே கிடைத்தன. அதேவேளை தமிழ்க் கல்விப் பாரம்பரியம் உதவுவாரும் ஊக்குவிப்பாரும் இன்றி மங்கி மறையும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இரண்டாவது கல்வி வழியின் நோக்கம், “உண்டிருந்து எப்படியோ வயிறு வாழ்வதுதான் உடம்பு எடுத்த நோக்கம்’ என்பதற்கு உற்ற துணையாக இருந்தது. அது உலகியலைப் பெரும்பாலும் சார்ந்தது. முதற்கல்வி வழியான தமிழ் மரபுக் கல்வியின் முதன்மை நோக்கம், “இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்” என்பதற்கு உறுதுணையாக இருந்தது. அது ஆத்மீகம் சார்ந்தது. “வாழ்க்கைக்கு உறுதுணையாய் வருவது தூய நற்கல்வி” என்ற திருமூலர் திருவாக்கில் “வாழ்க்கை” என்பது எப்படியும் வாழலாம் என்ற வாழ்க்கையல்ல. இப்படிதான் வாழவேண்டும் என்ற வாழ்க்கையையே என்பதும் நோக்கற்பாலது.
முத்துக்குமார கவிராயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் ஆறுமுகநாவலர், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், முருகேச பண்டிதர், நீர்வேலி சிவசங்கர பண்டிதர், கோப்பாய் சபாபதி நாவலர், காசிவாசி செந்திநாதையர், புலோலி நா. கதிரைவேற்பிள்ளை, வித்துவ சிரோன்மணி
பொன்னம்பலபிள்ளை, சாவகச்சேரி பொன்னம்பலம் பிள்ளை, மட்டுவில் க. வேற்பிள்ளை, சுன்னாகம் குராசுவாமிப் புலவர், மகாலிங்கசிவம், வித்துவான் சுப்பையாபிள்ளை ஆகியோர் ஒல்லாந்தர் கால முடிவிலும் ஆங்கிலேயர் காலத்திலும் யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பாரம்பரியக் கல்வி வழியைத் தொடர வைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேற்கூறிய நீண்ட ஈழத்துத் தமிழ் இலக்கிய, தமிழ்க் கல்வி வழியில் இந்நூற்றாண்டில் வாழ்ந்து, அதனைப் பேணிப் பாதுகாத்து வந்தவர்களுள் மிகச் சிறந்தவர்களாகப் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளையையும், புலவர் மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளையையும் குறிப்பிட வேண்டும். பூநீலழரீ ஆறுமுக நாவலர் ஸ்தாபித்த காவியப் பாடசாலையில் சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரிடம் ஒருமித்துத் தமிழ் மரபுக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தவர்கள் இவர்கள். “சி. கணபதிப்பிள்ளையும் நானும் ஒரே மரத்தின் இரண்டு கிளைகளில் ஒருமிக்கப் பழுத்த இரண்டு பழங்கள்” என்று புலவர் மணி அவர்கள் தாங்கள் இருவரைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளமைபொருள் பொதிந்தது.
“பொய்யும் வழுவுந்” தோன்றிய இக்கால கட்டத்தில் ஒரு சிலர் களவு நிலை” யில் இருந்தனர். “களவு நிலை என்றால் பிரபஞ்சப் பந்தங்களை விடவும் முடியாமல், கண்ட உண்மையைத் தொடராமல் இருக்கவும் முடியாமல் அன்பு அங்குமிங்கும் பிரிநிலைப்பட்டு நிற்கும் நிலை” என்று பண்டிதமணி விளக்கந் தந்துள்ளார். ஆங்கிலக் கல்வி அதனால் கிடைக்கும் உலகியல் சார்ந்த அனுகூலங்கள் ஒருபுறம், சைவத் தமிழ்க்கல்வி, அதனைப் பேணிப் பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்கு அளிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு உந்தல்கள் மறுபுறம். இரண்டிற்குமிடையில் ஊசலாட்டம். ஆயினும் ஈற்றில் “பொய் கெட்டு மெய்யானார்கள்", “களவுநிலை”கைவிட்டுக்“கற்புநிலை”யைக் கைக்கொண்டனர். தமிழுக்கு மறுமலர்ச்சி செய்யக் கிளர்ந்தெழுந்தனர். தம் முன்னோர்கள் போலத் தலைமறைவாக இருந்தல்ல. அடங்காது கிளர்ந்தெழுந்தோர் வரிசையில் ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை, கனகசபைப்பிள்ளை, சுவாமி விபுலானந்தர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
நாவலர், சைவத் தமிழ் மறுமலர்ச்சிப் பணிகளில் வெளிப்படையாகவே ஈடுபட்டுத் தனியொரு மனித இயக்கமாகவே செயற்பட்டார். நாவலருக்குப் பின் அவரது ஞான பரம்பரை தொடர்ந்தது. வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, நாவலரின் தமையனார் புதல்வர் த. கைலாசபிள்ளை, சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் ஆகியோர் நாவலர் பணியைத் தொடர்ந்து ஆற்றினர். இந்த நூற்றாண்டில் பண்டிதமணி இப்பரம்பரையைத் துலங்க வைத்தார்.
புலவர் மணி அவர்கள் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மண்டூர்க் கிராமத்தில் 1899ஆம் ஆண்டில் பிறந்தவர். அதே ஆண்டிலேயே பண்டிதமணியாழ்ப்பாண மாவட்டம், மட்டுவில் கிராமத்தில் பிறந்தார்.
மண்டூர் அருள்மிகு முருகப் பெருமான் விரும்பி உறையும் தல விசேடம் பெற்ற திருநிறை பதி. சைவத் தமிழ்க் கல்வி மரபு குரு சீட முறையில் ஓங்கி வளர்ந்திருந்த கிராமம். யாழ்ப்பாணத்திலிருந்தும் பிற தமிழ் மாவட்டங்களிலிருந்தும் கரைப் பாதையால் கால்நடையாக கதிர்காம யாத்திரை செய்யும் அடியார்கள் மண்டூர் முருகனையும் தரிசித்துசில நாட்கள் தங்கியிருந்துசெல்வது
Page 35
அக்கால வழக்கம். இவர்களுக்கு விருந்தளித்து, ஓம்பி வழியனுப்பும் உயர் பண்பாட்டினைக் கொண்டவர்கள் இவ்வூர் மக்கள். இதனால் நல்லோரிணக்கமும் சைவத் தமிழ்க் கல்வி, பண்பாட்டுப் பரிவர்த்தனைகளும் இடம் பெற்றிருந்தன.
புலவர் மணியின் முதல் தமிழ் ஆசிரியர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியாயர் ஆவார். இவர் மட்டக்களப்பில் தமது இனத்துள் கலந்து கொண்டவர் என்றும், புத்தகம் பாராமலே பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆற்றல் மிக்க முதுபெரும் புலவர் என்றும் புலவர்மணி குறிப்பிட்டுள்ளார். சூடாமணி, நிகண்டு, திருச்செந்தூர்ப் புராணம், கந்தபுராணம், பாரதம் போன்ற நூல்களைப் புலவர் மணி கற்றுத் தேர்ந்தார்.
பதினான்காம் வயதில் புலவர் மணியின் கல்வி வாழ்க்கையில் திருப்பம் ஒன்று ஏற்பட்டது. கல்முனைக்குச் சென்று ஆங்கிலக் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆங்கிலக் கல்வியால் கிடைக்கும் அனுகூலங்களை எண்ணிப் பார்க்கிறார். தமிழ்க் கல்விக்கு இடை நிறுத்தம் ஏற்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ‘களவு நிலை’க்குப் புலவர் மணி உள்ளாக்கப்படுகின்றார். ஆங்கில மோகம் ஒரு புறம், தமிழ்க் கல்விப் பற்று உணர்வு மறுபுறம். இதயம் ஊசலாடுகிறது.
1917ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் ஒருநாள். மண்டூர் முருகனின் திருவிழாவிற்கு மட்டுவிலில் இருந்து தம்பிமுத்துப் பிள்ளை எனும் தமிழ்ப் பற்றுமிக்கவர் வருகை தந்தார். அவர் தமிழ் நூல்களை விற்பனை செய்பவர். அத்தோடு தமிழில் புலமை பெற்றுத் திகழ்ந்தார். புலவர் மணியின் வீட்டிலேயே தங்கியிருந்தார். புலவர் மணியின் தமிழ் ஆர்வத்தை உணர்ந்தார். மட்டுவில் மகாலிங்க சிவம் மூலமாக யாழ்ப்பாணத்தில் தமிழ் படிக்க வசதி செய்து தருவதாகக் கூறிச் சென்றவர் சில நாட்களுள் செயற்படுத்தியும் விட்டார்.
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் அங்கமாகிய காவிய பாடசாலையில் தமிழ்க் கல்வியை மரபுவழியில் பயிலச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். நாவலர் நிதியில் இருந்து கல்விநன்கொடையும் கிடைத்தது. சுன்னாகம் அ. குமார சுவாமிப்புலவர் நல்லாசானாக வாய்த்தார். இதே வகுப்பில் ஏற்கனவே பதினொரு மாணவர்கள் இருந்தார்கள். அவர்களுள் ஒருவர்தான் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையாவார்.
இறைவன் சித்தப்படியும் தமிழர் தவத்தின் பேறாகவும் சி. கணபதிப்பிள்ளையும் ஏ. பெரியதம்பிப் பிள்ளையும் நாவலர் சந்நிதியில் ஒன்றிணைந்தார்கள். இந்நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் இலக்கிய வழியையும், அதனோடிணைந்த தமிழ்க் கல்வி வழியையும் தொடர வைப்பதற்குக் கால்கோள் இடப்பட்டது. இலங்கைத் தமிழர் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந் நிகழ்ச்சி, தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களின் ஆத்மீக, தமிழ்க் கல்வி, பண்பாட்டு இணைப்பாக விளங்கியது.
அன்றைய நிலையைப் பண்டிதமணி பின்வருமாறு படம்பிடித்துக் காட்டுகிறார்:
"ஆங்கில மோகம் தலைக்கு மீறித் தாண்டவமாடிய அக் காலத்திலே - தகுதியானவர்கள் தமிழைப் புறஞ் செய்த அந்தக் காலத்திலே, படிப்பு வாசனையின்றியிருந்த என்னையும் அவர்கள் அந்தக் காவிய வகுப்பில் சேர்க்க நேர்ந்தது.
மட்டக்களப்பிலிருந்தும் ஒருவர் வந்து சேர்ந்தார். அவருக்கு ஆங்கில அறிவும் உண்டு. கவிதை புனையும் ஆற்றல் இயற்கையில் அவர்பால் இருந்தது. அங்கே தகுதி வாய்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். ஆங்கிலத்தை மேலும் விருத்தி செய்து புருஷ இலட் சணமான உத்தியோகமொன்றைப் பெற்றுக் கொள்ள விரும்பாமல் தமிழ் படிப்பதற்கென்று அவர் அங்கிருந்து இங்கு வந்தது எங்களுக்குப் பெரிய ஆச்சரியமாய் இருந்தது. அவர் தாம் எ. பெரியதம்பிப்பிள்ளை, புலவர்மணி"
இவ்விரண்டு தமிழ் மணிகளுக்கும் குருமணியாக விளங்கியவர் குமாசுவாமிப்புலவர். இம்மூன்று தமிழ் உள்ளங்களும் ஒன்று கலந்தன.
தமிழ்க் கல்வி மரபில் குருவைத் தெய்வமாகக் கொண்டு வணக்கமும் மதிப்பும் செலுத்தும் பண்பு வளர்ந்திருந்தது. எக்காலத்திலும் எந்நிலையிலும் இவர்கள் தங்கள் ஆசானைப் போற்ற மறந்ததில்லை.
ஆங்கில மோகத்திற்கும் தமிழ் உணர்வுக்கும் இடையில், பெரியதம்பிப்பிள்ளையில் ஆடிய ஊசல் முனை தமிழ் உணர்வுக்கு நேர் வந்து ஆடாமல் அசையாமல் நின்றது. பொய்கெட்டு மெய்யானார். முன்னைய “களவு நிலை”, “கற்பு நிலை” நிலையாயிற்று. தமிழ் இலக்கிய வழியையும் கல்வி வழியையும் தொடரவைக்கப் புறப்பட்டார்.
தமிழ், என்பது வெறும் கருத்துப் பரிமாற்றம் செய்யும் மொழி மாத்திரமன்று. 'தமிழ் என்னும்போது பரந்த, விரிந்த, ஆழ்ந்த, நுண்ணிய விடயங்கள் பலவற்றை உள்ளடக்குகின்றது. தமிழின் கருத்தை விசாரித்து, அறிந்து, தெளிந்தவர்களே, தமிழ் செய்ய வேண்டும் என்று பண்டிதமணி கூறுவார். இவ்வாறு தமிழ் செய்தவர்களையே தமிழ் இலக்கிய வழியிலும், கல்வி வழியிலும் வெளிப்படுத்தியுள்ளார் பண்டிதமணி.
புலவர்மணியும் பண்டிதமணியும் தமிழின் கருத்தை நன்கு உணர்ந்தே தமிழ் செய்தவர்கள். தமிழ் காத்தவர்கள்.
புலவர்மணி நாவலர் காவிய பாடசாலையில் தமிழ்க் கல்வி கற்ற காலத்தில் பண்டிதர் மயில்வாகனனாரின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று தமக்குத் தெரியாதவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். பண்டிதர் மயில்வாகனனார் பின்னர் சுவாமி விபுலானந்தர் ஆனவர். விஞ்ஞானத்திலும் பட்டம் பெற்ற இவர் அஞ்ஞான்று யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராகவும் இருந்தவர்.
“புலவரையாவிடம் கற்று அறிவை ஆழமாக்கிக்
கொண்டேன். பண்டித மயில்வாகனனாரின் சேர்க்கையால் மனம் விசாலமாயிற்று" என்று புலவர்மணி குறிப்பிடுவது நோக்கற்பாலது.
பண்டிதமணி தமிழை நன்குணர்ந்தது போன்று நாவலரையும் நன்குணர்ந்தவர். அதனாலேயே நாவலரின் ஞான பரம்பரையில் வந்தவராகக் கொள்ளப்படுகின்றார். நாவலர் காவிய பாடசாலையில் கற்றகாலத்தில் திருநெல்வேலியில் அமைந்த"ஈரப் பலாச் சங்கம்” பண்டிதமணிக்குப் புதியனவற்றையும் அளித்தது. திருவாளர்கள் நடராசா, கைலாசபதி, சிவப்பிரகாசம் ஆகியோர் இச் சங்கத்தில் இருந்தனர். ஆங்கிலமும், விஞ்ஞானமும், தத்துவ
Page 36
சாத்திரமும் கற்பவர்கள் இவர்கள். பழமையில் பற்று வைக்கும் பண்பையும் புதுமையில் கருத்தைச் செலுத்தும் பாங்கினையும் பண்டிதமணி பெற்றிருந்தார்.
பண்டிதர்கள் என்றால் ஒருவகைத் தனிப்போக்கு உடையவர்கள். மக்களோடு உடன்போக்கு அற்றவர்கள் என்ற அபிப்பிராயத்தை மாற்றியமைத்தவர்கள் பண்டிதர் மணியும், புலவர் மணியும் என்றால் அக்கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதே. இவர்களின் பேச்சிலோ, எழுத்திலோ கடின நடையினைக் காணமுடியாது. கற்றாரும் கல்லாதவரும் விளங்கிக்கொள்ளும்படி எளிய, அழகிய, புதுமையான முறையில் பேசினார்கள், எழுதினார்கள். தமிழர் சமுதாயத்தின் பண்டைய மரபுகளை ஆராய்ந்தவர்கள். இவற்றை இக்கால ஆய்வு முறைகளில் விளக்கமும் விமரிசனமும் தர முயற்சித்தார்கள். இதற்கு மேனாட்டு இலக்கியத்திலும் ஆக்க இலக்கியத்திலும் ஈடுபாடும், ஆங்கிலம் கற்று இத்துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தோருடன் தொடர்புகளும் கொண்டிருந்தமையே காரணம். மரபு வழி வந்த நல்ல கருத்துக்களை, வளர்ச்சி பெற்று வருகின்ற சம காலச் சமுதாயத்தின் தேவைகள், பண்புகள், நோக்கங்கள் என்பனவற்றிற்கு ஏற்ப உருவாக்கி இணைக்கும் முயற்சிகளில் இவர்கள் இருவரும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் நமக்களித்த நூல்கள் இதற்குச் சான்று பகருகின்றன.
பண்பாட்டு மரபுகள், பாரம்பரியங்கள் என்பன நமது இன வரலாற்று ஆரம்ப காலத்திலிருந்து உருவாகி ஒவ்வொரு தலைமுறையிலும் மேலும் சேர்க்கப்பட்டு அல்லது வேண்டாதவை தாமாகவே கழிய இடம் கொடுக்கப்பட்டு அவை அளவிலும் தரத்திலும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. குறிப்பிட்ட இனத்தின் நாகரிக வளர்ச்சியை மதிப்பீடு செய்ய இவை உதவுகின்றன. புகழ்மிக்க விஞ்ஞான மேதை நியூட்டன் இது தொடர்பாகத் தந்த கருத்துப் பின்வருமாறு : “எனது முன்னோரைக் காட்டிலும் என்னால் அதிக தொலைவு காண முடிந்தமைக்கு காரண்ம் அவர்களின் தோள்களின் மீது நின்று நான் பார்த்ததே" இது நம்மால் சிந்திக்கப்பட வேண்டிய பொருள் நிறைந்த கூற்றாகும். முன்னோர்களின் தோள்கள் என்பதும் நம் முன்னோர்கள் நமக்குத் தேடித்தந்த அருஞ் செல்வங்களையும், பண்பாட்டு மரபுகளையுமே குறிக்கின்றன. புதுயன காண்டலுக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் இவையின்றியமையாதன. நமது பண்பாட்டு மரபுகளை, வரலாறுகளை நாம் பின்னோக்கிப்பார்ப்பது, ஆராய்வது பற்று வைப்பது என்பது பிற்போக்கு ஆகாது. தமிழ்க் கல்வி முறைமையும், வழி வழி வந்த எமது பண்பாட்டையும், சமூக இயலையும் அறிந்து கொள்ள உதவின. எமது வாழ்க்கையை நெறிப்படுத்தும் மனித மேம்பாட்டுக் கல்வியாக அமைந்தது.
இந்த நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் இலக்கிய, கல்வி வழியில் வந்து பண்டித மணியும் புலவர் மணியும் இருபதாம் நூற்றாண்டுக்குரிய “யுக தர்மத்தை'யும் கருத்திற் கொள்ள மறுக்கவில்லை. “தொண்மையவாம் எவையும் நன்றாகா; இன்று தோன்றிய நூலெதுவுந் தீதாகா” என்று பண்டிதமணி குறிப்பிட்டதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். பண்டிதமணி நாவலர் பெருமான் வழி நின்று. “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே" என்றவாறு, பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தார். புலவர்மணி, நாவலர் கோட்டத்தில் குமாரசுவாமிப்
புலவரால் ஆட்கொள்ளப்பட்டவர். ஆயினும் பின்னர் சுவாமி விபுலானந்தரின் அருள் நோக்கிற்குள்ளாகி இராமகிருஷ்ண சங்கத் தத்துவத்தை ஏற்று சமய, சமரச, சமூக, சமத்துவ, சன்மார்க்க நெறியைக் கைக்கொண்டவர் ஆனார்.
இலக்கிய உணர்வு இலக்கிய ரசனை மேலோங்க ஆரம்ப காலத்தில் திகழ்ந்த பண்டிதமணி பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் ஊறித்திழைத்து பண்டிதமணி, உள்பொருள் காணும்முயற்சியில் ஈடுபட்டார். இலக்கியத்துடனே ஒன்றித்திருந்த காலத்திலும் நீதிநெறி, அறம் ஆகியவற்றை இலக்கியத்துடன் இணைத்தே விமர்சித்து வந்தார். தமிழ் மரபு கல்வியினைத் தொன்று தொட்டு ஆத்மீக உணர்வுகளே சைவசித்தாந்தம். ஆகவேதான், பண்டிதமணி முதிர்ச்சி பெற்ற காலத்தில் சைவசித்தாந்தம், தமிழிலக்கியம் ஆகியவற்றினை இணைத்து நோக்குபவராக விளங்கினார். தாம் விரும்பி எழுதி வெளியிட்ட கந்தபுராணம் - தக்ஷகாண்டம் - உரை நூல் இதற்குச் சான்றாகும்.
புலவர் மணி பிறப்பினாலேயே கவிதைகள் இயற்றும் ஆற்றல் கைவரப் பெற்றவர். “வெண்பாவில் பெரியதம்பி” என்று பண்டித மணியால் அழைக்கப் பெற்றவர். சிறந்த இலக்கிய இரசிகர். யாழ்ப்பாணம் எப்படிக் கந்தபுராண கலாசாரத்தைக் கட்டி வளர்த்து வருகிறதோ, அவ்வாறு மட்டக்களப்புக் கலாசாரம் பாரதமே தான்” என்று புலவர் மணி கூறுவர். திரெளபதி வழிபாட்டின் வாயிலாக வில்லிபுத்தூரார் பாரதம் இந்நாட்டில் நிலை கொண்டுள்ளது என்பர். பாரதத்தில் வரும் பல நிகழ்ச்சிகள் நாட்டுக் கூத்து வடிவம் பெற்று ஊர்கள் தோறும் ஆடப்பட்டு வருவதும் இதற்குக் காரணம். இந்த வகையில் “பகவத் கீதை” புலவர் மணியை ஆட்கொண்டதில் வியப்பில்லை. கீதையின் சுலோகங்கள் வெண்பாக்களாகத் தமிழில் உருவெடுத்தன. புலவர் மணியின் “பகவத்கீதை வெண்பா” நூல் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் ஆதரவில் 1951 ஆம் ஆண்டு தமிழறிஞர் சு. நடேசபிள்ளையின் தலைமையில் அரங்கேற்றப்பட்டமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். சுவாமி விபுலானந்தர் வழி நின்று, இந்து சமயத்தை அடிநாதமாகக் கொண்டு, கவிதைகள் வாயிலாக வேதாந்த தத்துவ நெறி வளர்த்தவர், பரப்பியவர், அந் நெறியில் ஒழுகியவர் புலவர்மணி அவர்கள்.
"வேதாந்தத்தின் தெளிவாம் சைவ சித்தாந்த” நெறியை நாவலர் வழி நின்று, சைவத்தை அடிநாதமாகக் கொண்டு, பெரும்பாலும் உரைநடை வாயிலாக வளர்த்தவர், பரப்பியவர், அந்நெறியில் ஒழுகியவர் பண்டிதர்மணி அவர்கள். “உண்மை ஒன்று வழிகள் பல” என்ற அடிப்படையில் இருவருக்கும் பேதம் இல்லை.
மகாபாரதத்தில் அறத்தை நிலைநாட்டும் முயற்சியில் கிருஷ்ணன் தூது வெற்றி காணவில்லை. கந்த புராணத்தில் வீரவாகு தேவர் தூதுக்கும் அதே கதிதான். இவை வெறும் சம்பிரதாயங்களாகவே அமைந்தன. எனினும் ஈற்றில் அறம் வென்றது, மறம் தோற்றது. உண்மை ஒன்றுதான்.
பண்டிமணி தாம் ஆராய்ந்து, தெளிந்து சரியென்று கண்டவற்றைப் பகிரங்கப் பண்ணுதற்குத் திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை சிறந்த களமாக விளங்கியது. ஒரு விளக்கில் இருந்து பல விளக்குகள் ஏற்றப்படுமாப்போல் இக் கலாசாலையில் கற்ற ஆசிரிய மாணவர்கள் நாட்டின்
Page 37
நாற்புறங்களிலும் எடுத்துச்சென்று பரப்பினர். முப்பது ஆண்டுகள் இவ்வாய்ப்பினைப் பெற்றவர். புலவர் மணியவர்கள் பல இடைநிலைப் பாடசாலைகளிலும், உயர் கல்லூரிகளிலும், மட்டக்களப்பு புனித அகஸ்தீன் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலும் தமிழ்ப் பணியாற்றி நல்ல சிறந்த மாணவர்களை உருவாக்கியவர்கள்.
இவ்விரண்டு மணிகளும் தமிழ்க்கல்வி கற்றுக் கிணற்றுத் தவளைகள் ஆகவில்லை. மாறாக இந்நூற்றாண்டிற்கே உரித்தான "ஜனரஞ்சகப்' போக்கிற்குள்ளும் சிக்கவில்லை. தமிழின் கருத்தை அறிந்து தமிழ் செய்தவர்கள் இவர்கள். பழைமையை விட்டு விலகாது புதுமை கண்டவர்கள். புதுமை என்ற பெயரில் புதுப்புது வடிவங்களில் பெருகி வருபவைகள், எங்கே தமிழ் வளர்ச்சிக்கு வழி செய்யாது போனாலும், இருக்கிற அறிவையாவது பழுது பண்ணாமல் விட்டு வைக்குமோ என்று ஏங்கி, அபாயச் சங்கொலி எழுப்பியவர்கள். தமிழுக்கு நல்லவை செய்தல் முடியாதாயினும் அல்லவை செய்தலையாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்காகத்தான் பண்டித மணி கண்டனகாரர் என்ற பட்டத்திற்குள்ளாக நேர்ந்தது. குறுகிய மனப்போக்கு அவரிடம் அறவே இல்லை,
"ஈழமண்டலம் தாய் நாடாகிய தமிழ்நாட்டின் ஒரு சிறு துளி. தமிழ் நாட்டின் இலக்கிய வளம் மகா சமுத்திரம்' என்று கூறுவதிலிருந்து பண்டித மணி விசால மனம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஈழத்து இலக்கிய வழித் தோன்றல்களின்
எல்லாவற்றைமரம் விட் நேரந்தான் மிகுந்: விரயமாக்குவது மாபெரும் ஊதாரித்தன்றாகு
பிறர்க்கென எல்லாவற்றையும் திமாகம் செய்
ஒருவன் நன்றாக முன்னால் தாண்டிக் குதிக் போகத்தான்வேண்டும்
நீங்கள் உங்களை மட்டும் நல்லவராக்கித்விக கூட்டத்தில் ஒருவர் குறைந்திருக்கிறார் என்று
அறியாமைகளிலெல்லாம் பெரியதோர் அறி தனக்குத் தெரிந்திருப்பதாகக் கற்பனைசெய்து அனைத்திற்கும் மூலகாரணமாயிருக்கிறது.
மனச்சாட்சியின்படி நடப்பவன் நீதிமன்றங்கள்
தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ
தமிழ் அறிவையும், தமிழ்ப் பணியையும் குறைத்து மதிப்பிட்ட தமிழ் நாட்டார் சிலருக்குத் தக்க பதில் கொடுத்து உண்மையை நிலைநாட்டத் தவறியதில்லை.
பண்டித மணிக்கு, 1978 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. புலவர் மணி இதனை மனங்கனியப் பாராட்டியிருந்தார். “பண்டித மணி சற்றே இளையவர். அக்கிரபூசை பெறுவதற்கு உரியவர்" என உவகை கொண்டார். "என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ" என்று மகிழ்ந்தார். தமிழ் மரபு வழி வந்த ஆசிரமக் கல்வியின் அருமையையும் பயனையும் இங்கு காண்கிறோம்.
தமிழ் மருந்து, நோயின் மூலவேரை அறுத்து உடல் நலத்தைத் தருகின்றது என்பர். ஏனைய போல அது நோயை இன்னொரு நோயாக மாற்றுவதன்று. தமிழ் மரபுக் கல்வியும் மனித உள்ளத்தை அடைந்து, அங்குள்ள மாசுகளையகற்றி உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி மன நலனையளிக்கின்றது. உள்ளத்தில் உண்மை ஒளி யுண்டாகில், வாக்கினிலே ஒளியுண்டாகும். வாழ்க்கை யிலும் எழில் உண்டாகும். மனநலன், ஏனைய மனித நலன்கள், மேம்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படையாகும். இத்தகைய மனநலனை அளிப்பதை நோக்காகக் கொண்ட ஈழத்துத் தமிழிலக்கிய, கல்வி வழியில் இருபதாம் நூற்றாண்டில் வந்த பண்டித மணியும் புலவர் மணியும் நமக்கு நல்ல வழிகாட்டும் கலங்கரை விளக்காக அமைந்துள்ளனர். இவர்களின் ஞானபரம்பரை மாணவர்களால் தொடரப்பட வேண்டும்.
S S S S S S SS SS SSL S S S S S S S S S S S S S LSL S SLS S S S S
Ν
மதிப்பற்றது என்பதால் காலத்தை
பெஞ்சமின் பிராங்கவின்)
வனுக்கேமுக்தி கிடைக்கும் , (சுவாமிவிவேகானந்தர்)
வேண்டும் என்றால் அதற்காகப் பின்னாலும்
(மாண்டெயின்) Бутагт துர் அப்போது, உலகின்தீப்பவர்கள்
பாரு
πάάσσαουσέ)
ன் தண்டனைக்குப்ப்பப்படுவதே இல்லை.
ವ್ಹಿ.
Page 38
புத்த சூழ்நிலை காரணமாக தங்கள் சொந்த இடங்களிலிருந்து இடம் பெயர்ந்து வன்னிப் பகுதியில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வரும் அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்த பகிரங்க வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப் பகுதியில் ரூபா 553, 482 = நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. அகில இலங்கை இந்து மாமன்றம் தனது பங்களிப்பாக ரூபா 103, 980 = வழங்கியிருக்கிறது. ஐக்கிய இராஜ்சியத்திலுள்ள ஸ்கொட் நிறுவனம் ரூபா 70,000 = நிதியுதவியாக அனுப்பி வைத்திருக்கிறது. அண்மையில் நடைபெற்ற திரு இ. நடராஜா எழுதிய"இலங்கைத் தமிழர் கண்ணீர்" என்ற நூலின் வெளியிட்டு வைபவத்திற்கு வருகை தந்திருந்த ஐரோப்பாவில் தொழில்புரியும் இல்ங்கை தமிழ் அன்பர் ஒருவர், விழாவின் இறுதியில் ரூபா 13, 500 = ஐ வன்னி மக்களின் நிவாரண உதவிகளுக்காக, அகில இலங்கை இந்து மாமன்றத்திடம் கொடுத்துதவியிருக்கிறார். வன்னி மக்களின் துயரங்களை ஒரளவேனும் குறைக்க வேண்டும் என்ற ஜீவகாருண்யமான நோக்கில் செயற்பட்டுவரும் இந்து மாமன்றத்தின் வேண்டுகோள்ை கேள்வியுற்ற அவுஸ்திரேலியா -சிட்னி நகரத்திலுள்ள அன்பர் ஒருவர் ரூபா 25,000/=நிதியுதவி செய்திருக்கிறார். ஐக்கிய இராஜ்சியத்தைச் சேர்ந்த திரு.ஈஸ்வரன் குடும்பத்தினர் 300 ஸ்டேர்லின் பவுண் நிதியுதவியாக அனுப்பி
வைத்திருக்கிறார்.
மாமன்றத்திற்கு நிதியுதவியாகக் கிடைக்கும் பனத்திற்கு நிவாரணப்பொருட்கள் கொள்வனவு செய்து வவுனியா அரசாங்க அதிபர் அனுப்பிவைக்கும் லொறிகளில் உடனுக்குடன் வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருக்கும் பாடசாலை மானவர்களுக்கான சீருடைகளுக்குரிய வெள்ளை பப்ளின் துணிகள், அப்பியாசப் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற எழுதுகருவி வகைகள், கணித உபகரணப்பெட்டிகள், மற்றும் சகல மக்களுக்கான பாய், படுக்கை விரிப்புகள், அரிசி, பருப்பு போன்ற
உணவுப் பொருட்கள் என்பன கொள்வனவு செய்யப்பட்டு
அனுப்பிவைக்கப்பட்ட பொருட்களில் அடங்குகின்றன.
நக்கான உதவி
இவை தவிர, மாமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று, ஏராளமான பொதுமக்களும், சமூக நல நிறுவனங்களும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம், வெள்ளவத்தை இராமகிருஷ்ன மிஷன், கொழும்பு விவேகானந்த சபை, கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் ஆகிய நிலையங்கள் ஊடாக தந்து உதவிய பலவிதமான நிவாரணப் பொருட்களும், வவுனியா அரசாங்க அதிபரின் உதவியுடன் மாமன்றம் வன்னிக்கு
அனுப்பிவைத்துள்ளது.
இது விடயத்தில், கொட்டாஞ்சேனை பூநீ வரதராஜ விநாயகர் அறநெறிப் பாடசாலை நிர்வாகமும், மானவர்களும், பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்களும் அளித்த பெரும்பங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அவர்கள், அப்பியாசப் புத்தங்கள், உடுபுடவைகள் உட்பட அத்தியாவசியமான பல பொருட்களையும் சேர்த்து மாமன்றத்திற்கு தந்து உதவினார்கள். இந்தப் பெருமுயற்சியில் முன்னின்று உழைத்த கொட்டாஞ்சேனை பூரீ வரதராஜ விநாயகர் ஆலய அறங்காவலர் திரு பொன். பாலசுந்தரம் கொழும்பு இந்துக்கல்லூரி அதிபர் திரு.த. முத்துக்குமாரசாமி ஆகியோரின் முன்மாதிரியான சேவை வெகுவாகப் பாராட்டப்படவேண்டும்.
அகில இலங்கை இந்து மாமன்றம் வன்னி மக்களுக்கு வழங்கிவரும் நிவாரண உதவிகளுக்காக, பொதுமக்களும் தங்களால் இயன்ற வகையில் உதவிகளை வழங்கும்படி மாமன்றம் அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றது. நிதியுதவி செய்ய விரும்புபவர்கள், மாமன்றத்தின் அதற்குரிய தனியான வங்கிக் கனக்கிற்கு பணத்தை அனுப்பிவைக்கலாம். பணத்தை வங்கிக் கனக்கிற்கு அனுப்பிவைத்துவிட்டு மாமன்றத்திற்கு அறிவித்தால் அதற்குரிய பற்றுச் சீட்டு தவறாது அனுப்பிவைக்கப்படும்.
கணக்கு இல362-7 |வங்கி இலங்கை வங்கி லேக்ஹவுஸ் கிள்ை
S S
- S S S SLSLSLSLS S
நன்றி அகில இலங்கை இந்து மாமன்றம்.
Page 39
N 女 முனைவர் மு Cz தலைவர் தமிழ் இந்திய மொழிகள் கிராமியப்பல் ܬܵܓܓܐܶ NSV. காந்தி கிரா
தமிழ்நாடு பேச்சு வழக்கில் ஒரு எழுத்து கூடினாலும் குறைந்தாலும் மனித இனமும் சமுதாயமும் துன்பத்திற்கு உள்ளாவதை உணர்த்துகின்றவை பழமொழிகள்.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து
பந்திக்கு முந்துவதா ? மரணத்தை வெல்லுகின்ற சக்தி வாய்ந்த அமுதமே கிடைத்தாலும் தானாகவும் தனியாகவும் உண்ண விரும்பாதது தமிழ்ச் சமுதாயம். உழைக்காமல் உண்பவன் பாவத்தைத் தின்கிறான் என்பது காந்தியடிகளின் கருத்து. ஒசிச் சோற்றில் உடம்பை வளர்க்க ஒரு யோசனையா?
படைக்குப் பிந்துவதா ? “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி” என்று முழங்கும் தமிழ்ச் சமுதாயத்தில் படைக்குப் பிந்துவதா? புண்ணோ அதுவும் புகழின் கண்ணே என்று தனது முகத்தில் தொண்ணுாற்றி ஒன்பது விழுப்புண்களைப் பெற்ற விஜயாலயச் சோழன் போன்ற வீர்மறவர் பிறந்த மண்ணில் கோழைகளை உருவாக்க ஒரு பழமொழியா?
அன்று வீரனுக்கு அணிகலனாய் விளங்கியது வில்லும் அம்பும். சிவதனுசு விஷ்ணுதனுசு என்பது வில்லைக் குறிக்கும் சொல். இராமனின் வில்லுக்கு வேலை முடிந்து ஒய்வுபெற்ற இடம் தனுஷ்கோடி. சாரங்கம் என்பது திருமாலின் வில். விஜயம் என்பது கர்ணனின் வில். காண்டீபம் என்பது அர்ச்சுனன் வில். சாரங்கபாணி என்று திருமாலும், கோதண்டபாணி என்று இராமனும் வில்லின் காரணமாகவே பெயர் பெற்றனர். அந்தக் காலத்தில் வில் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு பல போட்டிகள் நடத்தப்பட்டன. இடதுகையில் வில்லும் வலது தோளில் அம்புத்தொட்டிலும் வீரருக்குரிய அணிகலன்கள், சீதையின் சுயம்வரத்தில் வில்லின் நாண் ஏற்றுவதை போட்டியாக்கினர்.
பாஞ்சாலி சுயம்வரத்தில் சுழலுகின்ற அச்சின் மையப் பகுதியிலிருக்கும் பறவையின் கண்ணை நீரில் தெரியும் நிழலை நோக்கி அன்பு எய்து வீழ்த்துவதைப் போட்டியாக்கினர். வில்லாளரை எண்ணில் விரல் முன் நிற்பவன் விஜயன் என்று அர்ச்சுனன் புகழப்பட்டான். ஒரே அம்பால் ஏழு மராமரங்களைத் துளைத்தான் என்று இராமன் பாராட்டப்பட்டான். வெற்றிகளோடு சாபங்களையும் பெற்றுத் தந்தவை வில்லும் அம்பும். தசரதனும் பாண்டு மகாராஜாவும் வேட்டைக்குச் சென்று சாபத்தை பெற்றுவர காரணமாகியது அவர்கள் ஏவிய அம்பு அம்புப் படுக்கையில் மரணத்தின் வாசலில் நின்ற பீஷ்மருக்கு கடைசித் தீர்த்தமாகிய கங்கையை வழங்க பூமியைப் பிளந்தது அர்ச்சுனன் ஏவிய அம்பு. இப்படி பல சாதனைகளுக்குக் காரணமாகிய வில்லும் அம்பும் நடைமுறை வாழ்க்கையில் அவசியக் கருவியாகிய காலத்தில் தோன்றியதுதான் இந்தப் பழமொழி.
தன்னைக் காக்க உணவும் மண்ணைக் காக்கப் படையும் அவசியம். அறுசுவை உணவை கவளமாக்கி உண்ணும்போது வாயருகில் கொண்டு செல்ல முன்நோக்கி வருவது கட்டை விரல். போரிடும் போது அம்பை எடுத்து வில்லில் நாண் சேர்த்து
குருவம்மாள்
மற்றும் கிராமியக் கலைகள் புலம்,
கலைக்கழகம்,
மம் 624302
இந்தியா,
விசையோடு இழுத்து இயக்குவதற்கு பின்நோக்கிச் செல்லுவதும் கட்டை விரல். துரோணாச்சாரியரை மானசீகக் குருவாகக் கொண்டு பயின்ற ஏகலைவன் குருதட்சணையாக வழங்கியதும் கட்டை விரல். எனவே “பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்" என்று கட்டை விரலுக்காக வழங்கி வந்த பழமொழி காலப்போக்கில் பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று மாற்றம் பெற்றது. ஒரே ஒரு எழுத்தை இழந்ததால் தமிழ்ச் சமுதாயமே இன்று வெறும் சோற்றுப் பட்டாளமாகவும் கோழைச் சமுதாயமாகவும் கருதுவதற்குக் காரணமாகி விட்டது ஒரு எழுத்து இழப்பினால்தான்.
ஆடிக்காத்துல அம்மி பறக்குது
ஆடிக்காத்துக்கு அவ்வளவு சக்தியா? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது இந்த உலகம். பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று, நிலத்துடன் கலந்து மண்ணுடன் எழுந்து செங்காற்றாகிறது. நீருடன் கலந்து குளிர் சாரலில் கொடுங்கூதல் எனப்படும் ஊதக்காற்றாகிறது. நெருப்புடன் சேர்ந்து அனல் காற்றாகிறது. மனித உடலுக்குள் மூச்சு காற்றாகவும் உணவுப் பொருட்களின் சேர்க்கையினால் வாய்வுத்தொல்லையாகவும் மாறுகிறது. அழுத்தம் குறைந்து இளங்காற்றுபூங்காற்று எனப்படும் மென்காற்றாகிறது. அழுத்தம் நிறைந்த அச்சுறுத்தும் புயல் காற்று சூறைக்காற்றாகிறது. கட்டுக்கு அடங்காத பேய்க் காற்று சூறாவளியாகிறது. தெற்கில் இருந்து தென்றலாகவும், வடக்கில் இருந்து வாடையாகவும், கிழக்கில் இருந்து கீழ்க்காற்றாகவும் மேற்கில் இருந்து மேல் காற்றாகவும் மலரில் தவழ்ந்து நறுமணமாகவும் மலத்தில் தோய்ந்து பெருநாற்றமாகவும் மலையில் மிதந்து மூலிகை மணமாகவும், கடலில் அலைந்து உப்புக் காற்றாகவும், சோலையில் நுழைந்து சுகந்த மணமாகவும், சுடலையில் நுழைந்து பிணவாடையாகவும் ஆலயங்களில் தூப தீப புகையாகவும் அடுக்களையில் தாளிதப் புகையாகவும் நலத்தைக் கொடுக்கும் சந்தனக் காற்றாகவும் நலத்தைக் கெடுக்கும் சாக்கடை வீச்சமாகவும் பல்வேறு அவதாரம் எடுக்கும் காற்று, சுற்றுச் சூழலைப் பராமரிக்கும் பணியில் சம்பளம் வாங்காத துப்புரவுத் தொழிலாளி. இந்தக் காற்றுக்கு ஆடி மாதத்தில் மட்டும் அப்படி என்ன அபூர்வ சக்தி. அம்மியைத் தூக்கும் அளவிற்கு?
மன்னர் திருமலை காலத்தில் தான் சித்திரையை முதல் மாதமாகக் கொண்டு தமிழ் ஆண்டைக் கணக்கிட்டார். அதற்கு முன்பு ஆடி மாதத்தில் இருந்துதான் தமிழ் வருடம் கணக்கிடப்பட்டது. வேளாண் பெருமக்களின் வரவேற்புக்குரியது ஆடி மாதம். முதுவேனில் வெம்மையிலிருந்து பூமி குளிர ஆரம்பிக்கும் காலம் இது. சித்திரை உழவு பத்தரைத் தங்கம் என்பதை நன்குணர்ந்து, கீழ் மண் மேல் மண் ஆகும்படி உழுது உலரவிட்டு மூன்றுமாத காலத்திற்கு இடையில் பயிரைத் தாக்கும் பூச்சி புழுக்கள் மடிந்த பிறகு ஆடிப்பட்டம் தேடி விதைக்க காத்திருப்பார்கள். இந்த நேரத்தில் பச்சைக் காற்கறிகள் கிடைக்க வழியில்லை. விதை நேர்த்தி செய்து பதர் நீக்குவதால்
Page 40
களத்து மேடுகளில் தூசி பறக்கும். எல்லாக் காலங்களிலும் பொதுவாகப் பறக்கும் இந்தத் தூசுகளில் இருந்து மாறுபட்டது ஆடிக் காலத்தில் அம்மியிலிருந்து கிளம்பும் தூசி. விதைப்புக் காலத்தில் விவசாய இடு பொருட்களுக்குப் பயனற்றது என்று ஒதுக்கப்பட்ட பயறு பச்சைகளைத் தொடுகறிகளாக்க அம்மியின் உதவியை அதிகம் நாடும் காலம் ஆடி மாதம். திடீர் உணவு வகைகளுக்கு பரிச்சயப்படாத கிராமங்களில், மிக்ஸி, கிரைண்டர் இல்லாத வீடுகளில், அதிக விலை ஏறிவிட்ட பச்சைக் காய்கறிகளுக்குப்பதிலாகத் துவையலை பயன்படுத்தும் நோக்கில் வறுத்த வயறு பச்சைகளை நொறுக்கிடும் போது ஒவ்வொரு வீட்டிலும் அம்மியில் இருந்து தூசு பறக்கும். எனவே 'ஆடிக்காலத்திலே அம்மி பறக்கும்" என்று வழங்கி வந்த பழமொழி நாளடைவில் ஆடிக்காற்றிலே அம்மி பறக்கும் என்றாகி உள்ளது.
மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்
இந்தப் பழமொழியைச் சொல்லிக் கொண்டே தொடர்ந்து பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். அளவான கும்பம்தான் அழகான குடும்பம் என்றால் கேட்பதில்லை. சாமி கொடுத்த வரம் என்று சொல்லி பதினாறும் பெற்றுபடாதபாடுபடுகிறார்கள். மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான் என்றால், பாட்டன் வச்ச மரத்துக்குப் பாட்டனும் அப்பன் வச்ச மரத்துக்கு அப்பனும் மகன் வச்ச மரத்துக்கு மகனுமா வந்து தண்ணி ஊத்துவான்?
சரித்திரத்தில் பாடல்களில் எந்த அரசரைப் பற்றிய வரலாறாக இருந்தாலும், சாலை ஓர மரங்களை நாட்டின்ார் என்ற வரிகள் கட்டாயமாக இடம்பெறக் காணலாம். நிழலுக்காகவும் மாசுக் கட்டுப்பாட்டுக்காகவும் மழை வளம் பெருக்கவும் அரசர்கள் காலத்தில் மரம் வளர்த்திருக்கிறார்கள். மாதம் மும்மாரி பொழிந்து வளம் செழித்திருக்கிறது. இன்று புகை வனத்தின் பகை என்று சொல்லியும் கேளாமல் காடுகளைக் கரியாக்கி விட்டோம். புகை வனத்திற்கு மட்டுமல்ல வானத்திற்கும் பகை என்பதை ஒசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டைகள் உணர்த்துகின்றன.
@@@@@@@@@@@@@@@
OTITUTI
அருணகிரிநாதர்கட்டிமுண்டகர'என்று தொடங்கும் பாடலி: கண்டார். உடனே விவேகானந்தராக மாறினார். தொட்டவுடனே தீட் பட்டால் அங்கே கூேடிமம் வரும். பார்வையில் நல்லது வரும் என்பதை வந்தார் புரட்சி வீரர் இராமலிங்கர். கண்ணால் மீன்; பரிசத்தால் ப அதாவது வெகுதூரத்தில் இருப்பது. மனத்தால் நினைத்தால் போ, இருந்த இடத்தில் இருந்து நினைக்கும். நினைத்த உடனே குஞ்சு கண்ணபிரானுக்குக் குழந்தை இல்லை. கானகத்தில் சிவபூஜை செய் உபமன்யு முனிவர். கண்ணபிரான் அறிஞர் அல்லவா! அருச்சனை என்று கேட்டார். விலாசம் எழுதாத கடிதத்தைத் தபால் பெட்டியில் கேட்டார் தீட்சை பெற்றார்.மறிபுனல் நீரின் நோக்கி ஆமைபோல் மன போலப் பார்த்து ஆமை போல நினைத்து, பட்சி போலத்தீண்டி, இ இரும்பாக இருக்கும் அருணகிரிநாதரைப் பார்வையி அருணகிரிநாதர் பரகதி பெற்றார். பார்வை என்ன செய்தது? அநுபூதியைப் படைத்தான்.
@@@@@@@@@@@@@ @ &
நிலமும் நீரும் காற்றும் புகையினால் அழுக்கடைந்து பூமி இப்போது வறட்சிக்கு உள்ளாகி இருக்கிறது. புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தோல் நோய்க்கு உள்ளாகின்றனர். மண்ணும் மக்களும் நலத்தோடும் வளத்தோடும் வாழவேண்டுமென்ற தீர்க்கதரிசனம்தான் “மரத்தை வைத்தால் தண்ணீர் ஊற்றும்” என்ற பழமொழி. மழை வளம் பெறவும் பூமியின் பசுமையைத் தக்க வைக்கவும் மண் அரிமானத்தைத் தவிர்க்கவும் காடுகளைப் பெருக்கவும் மரம் வளர்ப்பதன் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்கள் நமது முன்னோர்கள். “மரம் வச்சா தண்ணி ஊத்தும்” என்ற பழமொழி இன்று மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான் என்று மாற்றம் பெற்றது கவனிக்கத்தக்கது.
நாற்பது வயதில் நாய்க்குணம்
நாற்பது வயதில் மனிதனுக்கு நாய்க்குணமா? பண்டிதரோ பாமரரோ, ஆண்களோ, பெண்களோ அவரவர் நிலைக்கேற்ப பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நடத்த வேண்டிய வயது நாற்பது. உள் உறுப்புகளில் பழுதும் வெளித்தோற்றத்தில் முதுமையும் இடம்பெறும் வயது நாற்பது. குடும்பச் சூழலும் சமூகச் சூழலும் பொருளாதாரச் சூழலும் பணிச் சூழலும் ஒரு மனிதனை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வயது நாற்பது. குழந்தைகளின் ஏக்கங்களையும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற வேண்டிய வயது நாற்பது. இந்த வயதில் பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியமாகிறது. தனது உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொண்டு, தன்னைச் சுற்றி இருப்பவர்களிடமும் பண்போடு நடந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. எனவே ஒவ்வொருவரும் நாற்பது வயதை அடையும்போது உணவைக் கட்டுப்படுத்த நாக்கையும், உணர்வைக் கட்டுப்படுத்த வாக்கையும் தேவைக்கு அளவாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தில் அமைந்தது "நாற்பது வயதில் நா குணம்” என்ற பழமொழி.
நா குணம் என்ற சொல் நாய்க்குணம் என்று மருவியது கவலைக்குரியது.
8 g g g g g g g g g g g g g g g
ல் சிவயோகத்தை அள்ளித் தெளிக்கிறார். அந்தக் காட்சியை நரேந்திரர் சை பெற்றார். அது பரிச தீட்சை மெய்யன்பர்களே ! ஞானிகள் பார்வை மறுதலிக்க மாட்டார்கள். கண்மூடிப்பழக்கத்தை மண்மூடித் தொலைக்க ட்சி ; இதற்கும் மேலாக ஒன்று இருக்கிறது; அதுதான் மானச தீட்சை தும் ஆமை முட்டை போட்டு எங்கேயாவது போகும். மறுபடி போகாது
பொரிக்கும். உபமன்யு முனிவர் கண்ணனுக்கு உபதேசஞ் செய்தார். கின்றார். அவர் அர்ச்சித்த மலர்களைக் கொண்டு வாருங்கள் என்றார் பண்ணியதை எடுத்துக்கொண்டு போகிறார்கள். அப்படி விதி உண்டா போட்டது போலாகும் தீட்சை இல்லாத பூசை என்றார். கண்ணபிரான் த்தால் எண்ணி. என்று அதிவீரராம பாண்டியன் சொல்லுகிறார். மீன் ரும்பாகிய மனத்தைத் தாங்கிக் குரு உபதேசம் செய்தார். அப்படி னால் பார்த்துக் கையினால் தீண்டி முருகன் வேதித்தார். ஆணவ அழுக்கை அழித்தது; அநுபூதியாக வைத்தது; பார்வையினால்
திருமுருக கிருபானந்தவாரியார்
(கந்தரநுபூதி விரிவுரை நூல்) 岛
,@@@@@@@@@@@@@@@@
Page 41
மட்டக்கள
மட்டக்கள்
அமைக்க
எங்கள் ப
காப்பது முதியோரைக் காப்பது
கட்டத்தின் முன்
事 இன வன்செயலிற் பிள்ளைகளை இழந்துவிட்ட மு: |量 வலுவிழந்து வறுமையில் வாடும் முதியோரைக் காக் :: நமது கலாசாரத்திலிருந்தே இறுதிக் காலத்தை நிறை: | Eէ: வாரிசுகள் உறவினர்கள் இல்லாத முதியோரைக்காக் வளமிருந்தும் துனையில்லாது தனிமையில் வேதை
இவ்வாறு பல வினாக்களை அடுக்கிக் கொண்ே வீணாகிப் போகிறது. ஆகவே, விடை காணும் நோக் நாம் முதியோர் இல்லத்துக்கான அடிக்கல்லை 199710: தலைவர் பூஞரீமதி சுவாமி ஜீவனானந்தஜீ மகராஜ் அ மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இந் மதிப்பீட்டுத் தொகை இருபத்தாறு மில்லியன் ரூபாயா
இவ் இல்லத்தின் முன் முகப்புத் தோற்றம் மேலே இந்த முதியோர் இவ்வத்தை விரைவாகக் கட்டி முடிக் ஆதலால் அன்பானவர்களே.
எமது மன்றச் செயற்பாடுகளுக்கு உதவி வருவதுபோல் உங்கள் உதவியைப் பெருமனதோடு எதிர்பார்க்கும் மட் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது.
-->/gi, ''IJ' LIGJTE ñi
(2) கட்டடத்துக்குத் தேவையால் (3) கட்டடத்தின் ஒரு பகுதியை இவற்றுள் ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்டவற்றையே மன்றம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
வங்கிக் கணக்கு இல: C 9190
L।
தல்ைீர்
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம், 41. தாமரைக்கேணி வீதி,
மட்டக்களப்பு
QEffengl. f : D65 – 24322
இந்த ஒளி (
ப்பு இந்து இளைஞர் மன்றம், ப்பில் முதியோர் இல்லமொன்றை முன் வந்துள்ளது.
ண்பாட்டில்,
līcī.ī E. 360aTGLITTf651 35 L (3301
முகப்புத் தோற்றம்
துமையுற்று பெற்றோரைக் காக்க வேண்டாமா? க வேண்டாமா? / செய்ய வழிகாட்ட வேண்டாமா? க வேண்டாமா? னயுறும் முதியோரைக் காக்க வேண்டாமா?
ட போகிவிபTம் வினாக்களைக் கேட்டுக் கேட்டேகாவம் கில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தினராகிய 20 ஆந் திகதி மட்டக்களப்பு பரீ இராமகிருஷ்ண மிஷன் வர்களைக் கொண்டு நாட்டி வைத்தோம் என்பதை ந்த முதியோர் இல்ல நிருமாணிப்பிற்கான உத்தேச தும்,
காட்டப்பட்டுள்ளது.
க்க வேண்டிய அவசரத் தேவை இன்று அவசியமாகியுள்ளது.
ல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை நிற்கும் இந்த நற்பணிக்கு டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் உங்கள் உதவியைப்
னே பொருள்கள்
முடித்துத் தருதல். ா நீங்கள் செய்வீர்களென்று மட்டக்களப்பு இந்து இளைஞர்
வங்கி இலங்கை வங்கி, மட்டக்களப்பு
ாம் வல்ல இறைவன்
III.ii.
|E1gðIln
ਪg ஆர். சீனித்தம்பி
செலுTTர் பொருளாளர்
Batticaloa YTMIHA 4/1, Thamaraikerney Road, Battical Oa.
9) பிரமாதி வருடம் - புரட்டாதி
Page 42
இந்துக்களின் விசேஷ திை 19
ஜ"லை -
09 ஏகாதசி, கார்த்திகை 10 சனிப்பிரதோஷம் 12 அமாவாசை 16 சதுர்த்தி
18 சஷ்டி
24 ஏகாதசி 25 பிரதோஷம் 28 பூரணை
05 கார்த்திகை 07 ஏகாதசி 09 பிரதோஷம் 11 ஆடி அமாவாசை 13 ஆடிப்பூரம் 15 சதுர்த்தி 17 3F6ñq Lq22 ஏகாதசி 24 பிரதோஷம் 25 ஆவணி ஒணம் 26 பூரணை
02 கார்த்திகை 06 ஏகாதசி 07 பிரதோஷம் 09 அமாவாசை 13 ஆவணி சதுர்த்தி 15 சஷ்டி 21 ஏகாதசி 23 பிரதோஷம் 25 பெளர்ணமி 29 கார்த்திகை
மாமன்றத் தலைமையகப்
நடைபெறவிருக்கும்
19
ஜலை
25.08.1999 (புதன்கிழமை) சுக்கிலபட்ச சதுர்த்தசி 24.09.1999 (வெள்ளிக்கிழமை) சுக்கிலபட்ச சதுர்த்தசி 23.12.1999 (வியாழக்கிழமை) திருவாதிரை
99
டிசம்பர்
05 ஏகாதசி 06 பிரதோஷம் 08 கேதாரேஸ்வர விரதம் 09 அமாவாசை 10 நவராத்திரி விரதாரம்பம் 13 சதுர்த்தி
15 சஷ்டி 18 சரஸ்வதி பூஜை 19 விஜயதசமி 21 ஏகாதசி 22 பிரதோஷம் 24 பெளர்ணமி 26 கார்த்திகை
04 ஏகாதசி 05 பிரதோஷம் 07 அமாவாசை,
கேதார கெளரி விரதம் 08 ஸ்கந்த சஷ்டி விரதாரம்பம் 12 சதுர்த்தி 14 ஸ்கந்த சஷ்டி விரதம் 19 ஏகாதசி 21 பிரதோஷம் 22 பெளர்ணமி 23 திருக்கார்த்திகை 24 விநாயக விரதாரம்பம்
03 ஏகாதசி 05 பிரதோஷம் 07 அமாவாசை 1 சதுர்த்தி 13 விநாயக சஷ்டி விரதம் 14 திருவெம்பாவை பூஜாரம்பம் 19 சுவர்க்கவாயில் ஏகாதசி 20 பிரதோஷம், கார்த்திகை 22 பூரணை 23 ஆர்த்திரா தரிசனம்
பிரார்த்தனை மண்டபத்தில் சமய வைபவங்கள்.
8 16.07.1999 (வெள்ளிக்கிழமை) மாணிக்கவாசக சுவாமிகள் 19.07.1999 (திங்கட்கிழமை) சுவாமி விபுலானந்தர் 17.08.1999 (செவ்வாய்க்கிழமை) சுந்தரமூர்த்தி நாயனார் 05.12.1999 (ஞாயிற்றுக்கிழமை) பூனிலழறீ ஆறுமுக நாவலர்
Page 43
கடந்த ஏப்ரல் மாதம் 10ம், 11ம் திகதிகளில் ப சுவாமி விபுலானந்தர் அரங்கில் நடை வழங்கிய இன்னிசை விருந்து
-、
■■
S S S S S S S S S S S S D S ܒܐܠܡܘܡܬܐܫܬܡܡܐ
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் அை கட்டிடவேலைகள் நடைபெறு
- -
ܨ ܒ -- ܕܐܒܕ1+1: ܩܵܠܵܐ ܠ ܵ
ம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தின் பெற்ற பரீமதி நித்தியபூணு மகாதேவன்
நிகழ்ச்சியின் 9 Gl J., III. GP J, iT
மைக்கவிருக்கும் முதியோர் இல்லத்திற்கான துவதை சித்தரிக்கும் படங்கள்
Page 44
இந்தச் சுடரில் .
10
1
13
14
15
16
17
19
20
21
22
25
26
28
29
30
31
36
37
39
40
பஞ்ச புராணங்கள்
இரத்மலானை - கொழும்பு இந்துக் கல்லூரியில், அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம் விபுலானந்த அடிகளாரின் கல்வித் தொண்டு பண்பாட்டுச் சுடர்கள் 7 விநாயகர் சதுர்த்தி விரதம்
உபநிடத தத்துவம்
திருக்கோயில்களில் பஞ்சபுராணம் ஒதும் வழக்காறு ஏற்பட்டமை
வாழ்வை நெறிப்படுத்தும் சமயக் கல்வி திருநாவுக்கரசுநாயனார் குருபூசை மகா கும்பாபிஷேக மகிமை தூக்கமும் தூக்கமிலாத போழ்திலும் சக்தியின் மகத்துவம் ,
மாமன்றச் செய்தியும்
மகேஸ்வர பூசை ' பண்ணிசைத் தத்துவம் - நூல் அறிமுக விழா
ஞாலமெல்லாம் மூலமான மும்மலம் அறுக்கும் ஆவணி மூலம்" "א - ה-"־
R
மாமன்றத்தின் வேண்டுகோள்
இந்து சமயத்தில் கிரியைகள் பெற்றுள்ள முக்கியத்துவம்
மாமன்றம் நடத்தும் பிரார்த்தனை பிரபஞ்சவிருத்தி பரிணாமம்
பூரீவள்ளி அன்னதான மடம் - அன்பு வேண்டுகோள்
பண்டிதமணியும் புலவர்மணியும்
மாமன்றம் வழங்கிவரும் வன்னி மக்களுக்கான உதவி
வாய்மொழிக் குறள் அன்பு வேண்டுகோள்
இந்துக்களின் விசேஷ தினங்களும் விரத நாட்களும்
(அடுத்த சுடர்)
பிரமாதி வரு
剑呜 வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்கமன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை யறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
இந்து ஒளி அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரமாதி வருடம் ஆடி- புரட்டாதி இதழ்
ஆடி மாதம் 29ம் திகதி 4.08.1999
ஒரு பிரதியின் விலை খbt || fr : 20,00 வருடாந்தச் சந்தா e burr 80.00 வெளிநாடு வருடச் சந்தா டொலர் 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம் A. C. H. C. gilliq to 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2. இலங்கை தொலைபேசி எண் 434990; தொலைநகல் எண் 344720
/ இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் N தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
Aadi Puraddathy issue of ALL CEYLON HINDU CONGRESS 4TH AUGUST 1999. EDITORIAL BOARD:
MR. A. GUNANAYAGAM MR. R. SIVAGURUNATLAN MR. K. RAAPUVANEESWARAN | || || || || MR. KANDHAH NEELAKANDAN
Price Rs. 20.00 per copy.
Annual Subscription Rs. 80.00 Foreign Subscription U.S. $10.00 (Including Postage)
LON HINID
A. C. H. C. Bldg.
91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha, Colombo - 2, Sri Lanka. Telephone No.: 434990; Fax No. 344720.
Next issue
/29/A2/9S/ - /M/39/PA4/9 ZA//
views expressed in the articlesin Hindu Oli are those of the contributors.
ܢܬ