கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2000.01-03

Page 1

அகில இலங்கை இந்து மாமன்றம் காலாண்டிதழ்
Quarterկց օի Z Legion OHiina Сопgreи

Page 2
கட்டிடப் பூர்த்
மாமன்றத் தலைமையகக் கட்டிடப் தலைமையகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இன் பெரியார்கள் சம்பந்தப்பட்ட வரலாறுகள் மற்று இந்துமத ஸ்தாபனங்களின் பணிகள் தொடர்ப படங்கள் என்பவைகளைத் தாங்கியுள்ள சிற பெறுவதானால், ருபா 175-க்குரிய காசுக் க கொள்ளலாம். (பணம் பெறுபவர் பெயர்-அகி
வேண்டும்.)
இந்து
மாமன்றத்தின் காலாண்டிதழான இந்து ஒளி - இந்து சமய தத்துவங்களை விளக்கும் கட்டுரைகள் விலை ரூபா 20-வருடாந்தசந்தா ரூபா 80/- சந்தாப்ப கொள்ளலாம்,
GLоклES or
சைவப் பெரியார் எஸ். சிவபாதசுந்தரம் அவர் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது. பிரதி ஒன்றில்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதியன்று, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் ஜெனன விழாவின் சில காட்சிகள்.
f5? e4f27E7E / Ifá DIŤ
பூர்த்தி சிறப்பு மலர் பிரதிகளை மாமன்றத் 2ங்கைத் திருத்தலங்கள், இலங்கையின் இந்துப் /ம் இலங்கையில் இந்து மதம், இறைவழிபாடு, ான கட்டுரைகள் மற்றும் கவிதைகள், அழகிய "பு மலர் ஒரு பிரதி ரூபா 150 தபால் மூலம் ட்ளை அல்து காசோலை அனுப்பிப் பெற்றுக் ல இலங்கை இந்து மாமன்றம் என்று எழுதப்பட
g) Бrf)
மானவர்களுக்கும், ஏன்னயோருக்கும் பயன்படத்தக்க கவிதைகளுடன் வெளிவருகின்றது. பிரதி ஒன்றின் |ணத்தை அனுப்பி வைத்து, தபால் மூலமாகப் பெற்றுக்
SH AI v AIsM1 )
களால் எழுதப்பட்டமேற்படி நூலை மாமன்றம் விலை ரூபா 30/- (தபாற் செலவு ரூபா 5/-)

Page 3
ད།། r- சிவமயம்
பஞ்ச புராணங்கள் திருச்சிற்றம்பலம் தேவாரம் பண் : தக்கேசி (சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது)
கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோளரவு சுற்றிக் கடைந்தெ ழுந்த ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி நீல மார்கடல் விடந்தனை யுண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொழில்திருப் புன்கூ ருளானே.
திருவாசகம் (மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது) யானே பொய்யென் நெஞ்சும் பொய்யென் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவேதித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந்துறுமாறே.
திருவிசைப்பா
பண் ; பஞ்சமம் (கண்டராதித்தர் அருளியது)
களிவான் உலகில் கங்கை நங்கை
காதலனே அருளென்
றொளிமால் முன்னே வரங்கிடக்க s
உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
உறுவதும் என்று கொலோ.
திருப்பல்லாண்டு பண் ; பஞ்சமம் (சேந்தனார் அருளியது)
மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள்
வஞ்சகர் போயகலப் பொன்னின் செய்மண்டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்னநடைமடவாளுமை கோண்டியோ
முக்கருள் புரிந்து பின்னைப் பிறவியறுக்க நெறி தந்த
பித்தற்குப்பல்லாண்டு கூறுதுமே. திருப்புரானம் (சேக்கிழார் பெருமான் அருளியது)
ஆலமே யமுதமாகவுண்டுவானவர்க்களித்துக் காலனைமார்க் கண்டற்காக் காய்ந்தனையடியேற்கின்று ஞாலநின் புகழேயாக வேண்டுநான் மறைகளேத்துஞ் சீலமேயாலவாயிற் சிவபெருமானேயென்றார்.
திருச்சிற்றம்பலம் لام
 

சிவமயம்
இந்து ஒளி
தீபம் - 4 சுடர் - 2 பிரமாதி வருடம் மாசி 21ம் நாள்
0.08.2000
'தவமிவன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்வன்
ബീബ്ബ് ഗ്രീക്ഷണ' என்று கூறுகின்றது திருவருட்பயன். அதாவது எமது முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானானவர் தம்மை அன்போடு வழிபடாதவர்களுக்கு நன்மை செய்யாதவர் என்பதும் தம்மை அன்போடு வழிபடுபவர்களுக்கு நன்மை செய்பவர் என்பதும் சகலருக்கும் சுகத்தைக் கொடுப்பவர் என்பதும் இதன் பொருளாகும்.
மேலும்,
தனூக்குவமையில்வாதான் தாழ் சேர்ந்தாற் கல்வால் es മഖങ്ങഖ മ0%ബ്ള' s அதாவது தனக்கு யாரும் ஒப்பில்லாதவராகிய சிவபெருமானது திருப்பாதாரவிந்தங்களைத் தஞ்ச 6) சரணடையாதவர்களது சஞ்சலங்கள் தீருவது
முடியாததொன்றாகும்.
“சிவனுக்கு உகந்தது சிவராத்திரி' என்ற திருவாக்கிலிருந்து சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த காலம் சிவராத்திரி நாள் என்பது ஐயந்திரிபறப் புலப்படுவதைக் காணலாம். எனவே இத்திரு நாளில் முறைப்படி உபவாசமிருந்து சிவவழிபாட்டில் ஈடுபட்டால் எமது சஞ்சலங்கள் அனைத்தும் தீர்ந்து நல்வாழ்வு வாழ்வதற்கு வழிபிறக்கும் என்பதில் எவ்வித ஐயமும் உண்டாவதற்கு இடமிருக்க முடியாது.
எமது சஞ்சலங்கள் தீருவதற்கு இதுவரை எம்மால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத இத்தருணத்தில் அவற்றைத் தீர்ப்பதற்கு ஒரே வழி இறைவழிபாடு ஒன்றுதான்.
எனவே, எமது முழுமுதற் கடவுளாகிய சிவனுக்கு உகந்ததாகிய சிவராத்திரியில் முழு மனதுடன் சிவவழிபாட்டில் ஈடுபட்டு அவனே தஞ்சம் என்று சரணடைந்து பிரார்த்தித்து இம்மையில் சகல செளகரியங்களுடனும் இன்புற்று வாழ்ந்து மறுமையிலும் பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்வோமாக.

Page 4
கா. சிவகு
மாசித் திங்களில் வரும் சதுர்த்தசி திதி சைவ உலகிற்கோர் புனிதமான நாள். சைவம் என்ற சொல்லின் விளக்கம் துலங்கிய நாள். நான்மறை உதித்த நாள். சிவராத்திரித்திருநாள். சிவனைத் தன் நாயகனாகக் கொண்ட உமையவள் நோற்ற புனித நோன்பு நஞ்சுண்ட கண்டனின் நலன் நாடி தேவர் நோற்ற தபசு. எண்ணுவார் நெஞ்சில் நண்ணிடும் ஈசனின் அருள்நாடி நானிலத்தாரும் நயந்து நோற்கும் இந்நோன்பு இம்மை மறுமை இருமைக்கும் சித்தி அளிப்பதொன்றாகும்.
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளினையும் தொகுத்தும் விரித்தும், இணைத்தும்,பகுத்தும் விளக்குவது சைவம். பசு என்பது ஆன்மா - உயிர். இது பாசத்தின் வயப்பட்டு மயங்குகிறது. அம்மயக்கம் தவிர்ந்தகாலை பதியை உணர்கிறது. அவ்வுணர்வு மெய்யுணர்வு எனப்படும். மெய்யுணர்வு ஏற்பட்டால் ஆன்மா பரான்மாவாக மாறும். அதுவே பேரறிவுடைமை ஆகும்.
பதி ஒரு மேலான பொருள். அது அருவும், உருவும் அற்ற குணமும், குறியுமற்ற, காய்தல், உவத்தலற்ற வேண்டுதல் வேண்டாமையற்ற, ஒரு தன்னிறைவு. அது ಙ್ சின்மயமாய், மன வாக்குக் காயங்களைக் கடந்து நிற்கும்பே ஸ் அதனை அறிவாலறிந்து ஆனந்தமுறுவதே முத்திக்கு வித்து.
இப்பேரொளியை சிவம் என்று சைவசமய நூல்கள் விளம்பும். இச்சிவனை முழுமுதற் பொருளாகக் கொண்டது சைவ சமயம். சைவம் என்றால் சுத்தம். சுத்தம் என்பது அகத்தம் நீங்கியது. அசுத்தமாவது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாம். இம்மலங்கள் ஆன்மாவோடு சேர்ந்து அதை மாசுபடுத்துகின்றன. அவற்றை நீக்கி ஆன்மாவை தூய்மைப் படுத்துவதே சைவம். இச்சமயத்தின் மூலமுதலாகிய சிவன் ஆன்மாக்களைப் பந்தித்த மலங்களை நீக்கித் தன்னிலை சாரச் செய்வதற்காகத் தன் திருவருட் சக்தியைப் பிரித்து பற்பல மூர்த்தங்களாக்கி பஞ்சகிருத்தியங்களையும் செய்விக்கின்றார்.
இம் மூலமுதலை நினைத்து நோற்கும் நோன்புகள் பல. அவற்றுள் சிறப்பானதாகப் போற்றப்படுவது சிவராத்திரியாகும். இது மாதா மாதம் அமாவாசைக்கு முந்திய சதுர்த்தசி திதிகளில் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் பன்னிரண்டு இரவுகளில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகாசிவராத்திரி எனச் சிறப்பித்துக் கூறப்படும். அதற்குக் காரணம் சாத்திர ரீதியானது மட்டுமன்றி தத்துவார்த்தம் பொதிந்ததாகவும் இருக்கிறது.
மாசிமாதத்தில் சூரியபகவான்கும்பராசியில் இருக்கிறார். அப்போது சந்திரனும் அதே ராசிக்கு வரும். முன்னுள்ள சதுர்த்தசி திதி சிறப்புடையதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணம் உண்டு.
 
 

FOų
கும்பராசி எமது காயத்தின் சுழிமுனையை அடுத்த பகுதியைக் குறிக்கும். இங்கு சூரியன் சஞ்சரிப்பதென்பது சூரியகலை மேலோங்கி நிற்பது. சந்திரகலை அதனோடு இணைகின்ற நேரத்தில் சூரிய சந்திர கலைகள் மறைந்து அக்கினி கலை ஏற்படுகிறது. இதுவே ஜோதி தரிசனத்திற்கு வழி. அதனால் இத்திதி தனித்துவம் பொருந்தியது. இதனை ஒளவையார் சிறப்பாக எடுத்தாண்டிருக்கிறார்.
ருநாதன்
“சத்தியாஞ்சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில் முத்திக்கு மூலம் அது”
இது குறித்த பல புராண வரலாறுகள் உள்ளன. அவையாவும் மெய்யறிவாம் பேரறிவு பெற்றவர்களால் வரையப்பட்ட தத்துவப் பெட்டகங்களாகும். அவற்றை கருத்துற அறிந்து கொள்வது அவசியமாகும்.
மனிதன் தன்னகத்துள்ள மாசுகள் அற்றிடமனம், வாக்கு, கர்யங்கள் ஒன்று பட வழிபடுவதற்குரிய மாதம், மாசிமாதம். அது மாசு +ஈ என விரிந்துகுற்றங்களை அழித்தல் என்று பொருள்காட்டி நிற்கிறது. இத்திங்களில் வரும் சிவராத்திரி, சிவராத்திரிகளில் மேலானதாகக் கூறப்படுகிறது.
இமயத்திறைவன் - வெள்ளியங்கிரியன் மோனத்தில் ஆழ்ந்திருந்தான். அப்போது அங்கு வந்த அவருடைய பாகக்கிழத்தி அவர் பின் சென்று அன்னவர் கண்களைப் பொத்தினாள். உலகெலாம் வியாபித்து ஒளி கொடுத்து நின்ற பரமன் கண்கள் அருட்சக்தியால் மூடப்பட எங்கும் இருள் கவிந்தது. தேவர்கள் திகைத்தனர், மானிடர்கள் மருண்டனர், நரகர்கள் நடுங்கினர், என்ன ஆகுமோ என்று அஞ்சினர். இரவு பகலாக முழுமனதுடன் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் சிவனை வழுத்தினர். சிவன் கருணை கொண்டு தமது நெற்றிக்கண்ணைத் திறந்தார். பேரொளி பிரகாசிக்க எங்கும் இன்பம் பெருகியது. இவ்வாறு நிகழ்ந்த நாளே சிவராத்திரி நாள் எனக் கூறப்படுகிறது.
இவ்வரலாறு எவ்வளவிற்கு உண்மை என்பது கேள்வி? மொழிநடை பொதுக்கருத்தை எடுத்துப் பார்க்கின் எல்லாம் கற்பனை போலத் தோற்றினும் சிறப்பியல் தத்துவத்தை ஆராயின் பேருண்மைகள் பொதிந்திருக்கக் காணலாம்.
இமைகளின் மையமாகிய இமையத்தில், புருவ நடுவில், சிதாகாயத்தில், வெள்ளிப்பனிபோன்ற அமுதகலசத்தில் உறையும் சிவச்சுடரை, பார்பதியாகிய நீலமேனியளாம் கண்ணின் மணிகள் பின் வளைந்து அணைந்து கண்களை மூட, புறத்தோற்றங்கள்

Page 5
யாவும் மறைந்து இருளும் ஒளியும் விளங்காத நிலையில், மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்று பட்டுக்குவிய கருணை கொண்ட சிவப்பிரகாசம் புருவ நடுவினின்றும் பிரகாசித்தது. அதனால் ஆன்மா தன்னிடத் துற்ற மாசுகள் நீங்கி பேரறிவு பெற்றது என்பது உட்பொருள்.
மேலும் முன்னொரு காலம் தேவனுக்கும் விஷ்ணு தேவனுக்கும் இடையில் யார் பெரியார் என்ற கேள்வி தலை தூக்கவே ஒரு போட்டி ஏற்பட்டது. பிரமன் உயிர்களைப் படைக்கும் தானே பெரியவன் என்றார். திருமாலோ படைத்த உயிர்களைக் காக்கும் யானன்றோ பெரியவன்? நான் இல்லாது போகில் உனது படைப்புகள் உயிர் தரிப்பது எங்ங்ணம் என்றார். அதற்கு பிரமா நல்லது நான் படைக்காவிட்டால் நீ காப்பது எவரை என்றார். இவ்வாறு தோன்றிய தர்க்கம் பெரிதடைந்தது. அப்பொழுது மூலமூர்த்தியாகிய ஆதிசிவனார் பேரருட் ஜோதியாகத் தோன்றி எமது அடியையும் முடியையும் யார் காணவல்லரோ அவரே பெரியர் என்றனர்.
அது கேட்ட பிரமன் தன் வாகனமாகிய அன்னப்பறவை மீதேறி முடியினைத் தேடிப் பறக்கலானார். திருமாலோ பன்றி உருவங்கொண்டு பூமியை அகழ்ந்து அடியினைக் காணச் சென்றார். அடியைக் காணச்சென்ற திருமால் தன் எயிறு முறிந்து கால் சேர தோற்று மீண்டும் பூவுலகுற்றார். முடிதேடிச் சென்ற பிரமாவும் சோர்ந்துகளைத்து திரும்ப எத்தனிக்கையில் ஒருதாழம் பூவைக் கண்டார். அப்பூ இறைவனின் திருமுடியினின்றும் வீழ்வதாகக் கூற அதனைப் பொய்ச்சாட்சி கூறப் பணிந்து தாம் முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார்.
எல்லாமாய் அல்லவுமாய் எங்கும் நீக்கமற நிறைந்திருக் கும் இறைவன் நகைத்து. “பிரமா நீவேதவித்தகன், கலைமகளின் நாயகன், தூய்மையின் இலக்கணமான அன்னத்தை வாகனமாகப் பெற்றாய். எதற்குத் தெரியுமா? ஞானத்தின் துணை கொண்டு, அன்னத்தை வாகனமாகப் பெற்றாய். எதற்குத் தெரியுமா? ஞானத்தின் துணை கொண்டு, அன்னத்தைப் போலப் பாலுடன் கலந்த நீரில் பாலை உண்டு நீரை விடுதல் ஒப்ப தீயதை விட்டுத் தூயதைப் பேண அன்றோ. அறிவின் - கலைமகளின் - நாயகன், வித்தகன், படைப்பின் கர்த்தாவெனப் புகழ்பெற்ற நீஆவணத்தால், நான் என்ற மமதையால், பொய் கூறத் துணிந்தாய். அதனால் நீ மனிதரிலும் கேவலமானவனாகி விட்டாய். ஆதலால் உனக்குப் பூவுலகில் ஆலயங்கள் அமைக்கப்படமாட்டா. உனக்குப் பொய்ச்சாட்சி கூறிய தாழம்பூ தேவாலயங்களில் பூசனைக் கெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது" என்றனர்.
சத்தியமே பேசிய திருமால் தாம் கேவலம், மலத்தை உண்டு வாழும் பன்றி உருவம் கொண்டபோதும் சத்தியம் தவறாமையின் சிவனுக்கு இணையாக மக்களால் வழுத்தப்படும் மூர்த்தியாக இடம் பெற்றார். இவ்வாறு பிரமா விஷ்ணு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட அறியாமையாம் ஆணவ இருளைக் கடிந்து ஞான ஒளியை ஊட்டிய நந்நாள்; நான் என்னும்
 

ஆணவத்தை அழித்து நான்மறை செய்த நந்நாளே சிவராத்திரி நாள் என்று கூறப்படுகிறது. தாம் இழைத்த பிழையை உணர்ந்து மன்னிப்புக் கோரிய பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்து உனக்கு நான் முகன் என்னும் பெயர் வழங்கப்படும். நான் என்ற அகந்தையால் அறிவிழந்து, முகத்தை இழந்த உனது உருவம் மக்களுக்கு நல்ல பாடமாக அமையட்டும் என்று கூறி, தாழம் பூவிற்கு அன்றைய தினம் அது பூசனைக்கு உபயோகிக்கப் பட்டமையால் அத்தினமான சிவராத்திரி தினத்தில் மட்டும் பூசனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவாய் என்றனர்.
மனமாகிய மாதவனும், கலையாகிய பிரமாவும் தமக்குள் வேற்றுமை கண்டு பிரிந்து, மனம் தான் ஆட்சி செலுத்தவும், கலைதான் ஆட்சி செலுத்தவும் முயலும்போது, அறிவு தடுத்து தன் பிரகாசத்தைக் காட்டி அவற்றின் கொட்டத்தை அடக்குகிறது. மனம் மனச்சாட்சி எனும் உள்ளறிவுடையதால் தோல்வியை ஏற்றுக் கொள்ள கலை கட்டுப்பாடு அற்றதால் தோல்வியை ஏற்க மறுத்து, ஆணவங்காட்ட அதனை அடக்க பேரறிவு பிரகாசித்து நான் எனும் ஆணவ மலத்தை மறைத்து ஞானத்தை அருளுகிறது. இதுவே நான்மறையெனக் கூறப்படுவது. நான்மறையே மெய்ஞானம் என்பதை, நான் என்னும் ஆணவம் மறைதலே மெய்ஞானத்திற்கு வழி எனப் பொருள் கொள்ள வேண்டும்.
மேலும் இவ்விரதம் இரவு நான்கு யாமத்திலும் இறைக்கு நால்வகைப் புட்பங்கள் சாத்தியும், நிவேதனங்கள் செய்தும், வேதங்கள் ஒதியும் நோற்கப்படும். முதல்யாமம் கமலமும், இரண்டாம் யாமம் துளசியும், மூன்றாம் யாமம் வில்வமும், நான்காம் யாமம் நீலோற்பலமும் அர்ச்சிக்கப்படும். இவை முறையே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்களை இறைவனிடத்தில் அர்ப்பணித்து அவனிடம் சரணடைவதைக் குறிப்பதாகும். நிவேதனங்களும் முறையே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பனவற்றின் செய்கைகளான நினைவு, எண்ணம், துணிவு, செயல் முதலியவற்றை அர்ப்பணித்தலென விளங்கும்.
அவ்வவ் யாமங்களில் ஒதப்படும் வேதங்கள் நான்கும் முறையே இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்று கூறப்படும். பொதுவாக மனம் இறைவனிடம் ஒன்றும் போது புற நினைவுகள் மறைந்து அவனது பூரண நினைவு உள்ளத்தெழுகிறது. அவ்வாறே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நான்கு அந்தக் கரணங்களும் சிவத் தியானத்தால் மறைவதை நான்மறை என்று கூறி, நான்மறைக்கு பொருள் கொள்வர் மெய்யுணர்ந்தோர்.
இத்தகைய மாண்புமிகு நோன்பை நோற்று உய்தியடைந்தோர் பலர். அவர்களின் வரலாறு விரிக்கிற் பெருகும். ஆதலின் அவற்றை இங்கு கூறாதொழிகிறேன். நாமும் இவ்விரதத்தின் உண்மை உணர்ந்து இறைவனைப் புற ஆராதனைகளினால் மட்டும் சேவிக்காது அகமுகமாகவும் கண்டு மனம், புத்தி, சித்தம், அகங்காரமாகிய புட்பங்களை அர்ச்சித்து வழிபடுவோமாக.

Page 6
རྒྱུ་མི་
- ܠ ܐ"ܠ ܐܨ% ஆசி 5- -
、考_W ܬܼܼܲ
గీళ్కీ 6նծՐ 혹 /) இன'ய $== "&>||J“ 5
எத்திக்
i. கர - ஓங்கா 翠
கருன்ை கிருடை குகள்ை i. கெதியி பிப்திப்)ப் 뜻 G-F5, TD
- ܒܕܬ
த்தி சித்தர்க சுகங்க சென்ை சைனி சோதிய چ 를
பரம் ெ folyio Ly புண்ண பெரும ( JULU ܢܹܐ போற்று -
தந்தை திக் குகி துன்ப தெளி தைரிய 후 கோக்க தாதது ܝܲܬ
ܒ̣ܬ̇
೬.
,ே
ܕܒ̇ܬܰܪ
இந்து ஒளி"
 
 

한
றியாளனே ஆறுதலளிப்பாய் நல்வாழ்வை ஈந்திடவருவாய் பவள் நாதா ஊற்றிடுகருணையை நம் ஐயனே ஏற்றிடு ஒளியை நீ ன் தந்தையே ஒருபொழுதெமைப்பார் ர விளக்கமே ஒளடதமாகிடு
ரைக்கடலே காட்சி கொடுத்திடு
வேண்டும் கிதம் நாடியே ாப் பெற்றாய் கற்றுவன் தடுத்தாய் ல் வருவாய் கேடுகள் கை ளவாய்
வாசியே கொடுமைகள் தொலைத்திடு னே எம்மைக் கெளவிப் பிடித்திடு
ம் நீயே சாட்சியும் நீயே
ள் போற்றிடும் சீலனும் நீயே ள் தருவாய் ததுகள்களைவாய் ரியில் திருவடி சேர்தே யருள்வாய் பம் நடத்திடும் சொற்பெரு நாதா பாயிருக்கும் செளமிய மூர்த்தியே
பாருள் நீயே பாடல் பெற்றோனே டி பட்டாய் பீடமமர்ந்தாய் ரியர் போற்றிடும் பூமகள் நாதா
3னம் கொண்டோய் பேதமையகற்று 출 வே வந்து பொன்மனம் தந்திடு i. றுவோம் உன்னை நாம் பெளதிகமூலமே
பும் நீயே தாயுமாயுள்ளாய் ளெங்கும் தீமைகள்களைவாய் ங்கள் போக்கி தூய்மையைத் தருமாய் ந்து நல் வாழ்வைத் தேடிடும் எமக்கு பம் தந்து நீ தொல்லைகள் போக்கிடு
s நிரம் உனக்கு தெளலமாயிருந்திடு. ܧܼܝܲܬ
த. மனோகரன் 후
후
o பிரமாதி வருடம் தை-பங்குனி

Page 7
விரதச் சிறப்பு :
திருச்சிற்றம்பலம் நெய்யும்பாலுங்கொண்டாட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கிப்புகழ்ந்திலர் ஜயன் வெய்ய அழல்நிற வண்ணனை மெய்யைக் கானலுற்றாரங்கிருவரே. (5ம் திருமுறை)
சிவபெருமானுடைய சந்நிதியில் இரண்டு பேர்கள் சிவலிங்கப் பெருமானுக்குப் பஞ்ச கெளவியங்கள் கொண்டு பரிந்து திருமுழுக்கு ஆட்டினார்கள் இல்லை. நினையாமல் நினைந்தார்கள் இல்லை. உள்ளம் பொய் தான் தவிர்ந்தார்கள் இல்லை. வஞ்சனையை நீக்கி வழிபட்டார்கள் இல்லை. செம்மேனி அம்மானாருடைய ஆதியும் அந்தமுமற்ற அரும் பெருஞ் சோதியினுடைய அடியினையும் முடியினையும் முந்திக் காண்போம் என்று ஆணவ முனைப்புக் கொண்டு தேடலுற்றார்கள். அவர்கள் இருவரும் நான்முகன் நாரணன் ஆவார்.
கற்பாந்தம் அந்நாள். அந்நாளில் பிரளய வெள்ளம் பெருங் கடலாகும். பிரமதேவருடைய ஆயுள் அழியும். எம்பெருமான் பிரம கபாலம் விஷ்ணு கபாலம் தரிப்பார். எம்பெருமான் கங்காளராக நின்று நல்ல வீணையினை வாசிப்பார். அந்நாள் புனர் உற்பவம் நிகழும்.
அவ்விரவில் உமாதேவியார் திருவுள்ளத்தில் அன்பு சிறக்கும். பரமபிதாவின் மீது பத்தி வெள்ளம் பாய்ந்து ஒடும். கொன்றை வேணிக் குழகனாரைக் கும்பிடுவது கரம் தரும் பயன் எனக்கருதுவார். வேதாகம விதி வழி நின்று பூரணி பூசனை புரிவாள். எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் உண்மையாவது பூசனை என உரைத்தாராகலின் அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரிப்பார் அம்பிகை.
அந்நாள் பொன்னாள். மாசி மாத மகாசிவராத்திரி நன்னாள். அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகர் ஏகநாயகனாகத் திகழ்ந்த நாள். அண்ட புவனங்கள் அனைத்தையும் பெருங்கடல் மூடிய நாள். பிரளயங் கொண்ட நாள். பிரமதேவர் போனநாள். நாரணன் நலம் கெட்டநாள். சிவை
சிவனை சீரிதர்ச்சனை செய்த நாள். சிவன் நாள். பகலற்ற நள்ளிரவாக நலம் சிறந்த இருள் நாள். அது ஒரு இரவா? பகலற்ற இருண் மயமாதலின் எத்தனை இரவோ ஆரறிவார்? அந்த நீண்ட இராக்காலம் சிவன் இரவு ஆயிற்று.
 
 

அந்த இருளில் சகல சீவான்மாக்களும் பாவத்தி னின்றும் உய்வடையச் சிவபரம் பொருள் திருவுளங் கொள்வர். யோக நிலை எய்தப்பெறுவர். படைப்பு நிகழும். அது மாசி மாதம். சந்திரன் கலைகள் தேய்ந்து வரும் அபரபக்கம். பதினான்காம் திதி. சதுர்த்தசி தினம். நள்ளிரவில் சோதி தோற்றியமைக்குச் சான்றுகள் அனேகம்.
"எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணுநாள் ஆதியீறின்றி
வல்லையாய் வளர்ந்தாய் - என்பது ஒன்று.
மாசிமாத மகாசிவராத்திரி விரதம் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்க சிவராத்திரிகளுக்குள் மேன்மையானது. விரதங்களுக்குள் உன்னதமானது.
வேதங்களுக்குள் சாமவேதம் சிறந்தது. யாகங்களுக்குள் அசுவமேத யாகம் சிறந்தது. மலைகளுக்குள் கைலாசம் சிறந்தது. நதிகளுக்குள் கங்கை சிறந்தது. பூதங்களுக்குள் ஆகாயம் சிறந்தது. தேவர்களுக்குள் இந்திரன் சிறந்தவன். அதுபோல விரதங்களுக்குள் சிவராத்திரி சிறந்தது.
விரதப் பலன் :
பசுவினைக் கொன்ற பழி பாறும். அந்தணர்க்கு இழைத்த பாவம் அகலும். குழந்தைகளுக்கு இழைத்த குற்றம் நீங்கும். பெண்களைப் பிழைத்த பெரும் பழி பெயரும். சூரியன் முன் இருள் நீங்குவது போல மகாசிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பதால் தீராத வினை தீரும், வாராத செல்வம் வரும் மாறாத துயர் மாறும். ஆறாத பிறவி ஆறும். சித்திக்காத சிவப்பேறு சித்திக்கும்.
விரத அநுட்டானம் :
மாசி மாத திரயோதசியில் ஒரு பொழுது உணவு கொள்ளுதல். சதுர்த்தசி திதியில் உபவாசம் இருத்தல். இரவில் நித்திரையைத் தவிர்த்தல், இரவு நாலு சாம சிவபூசையில் கலந்து கொள்ளுதல், அமாவாசைத் திதியில் பாரணம் பண்ணல். சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தல். பாரணம்: சூரியோதய ஆறு நாழிகைமுன், பகல் உறக்கம் தவிர்த்தல்.

Page 8
மோட்சத்தை விரும்புவோர் 24 ஆண்டுகள் சங்கற்பித் விரதத்தை நிறுத்தல் முறையாகும்.
நான்கு சாமங்களிலும் செய்யத்தகுவன. சிவபுராணம் ட சிவ கைங்கரியங்களில் ஈடுபடுதல். இவை அல்லாதன எல்லாம்
dostotb அபிடேகம் நைவேத்தியம்
1 பஞ்ச கெளவியம் பயற்றன்னம் 2 பஞ்சாமிர்தம் பாயசம்
3 தேன் எள்ளன்னம் 4. கருப்பஞ்சாறு சுத்தான்னம்
(ஆகமம், தேசவழமை, திருக்கோயில் வழமை, பாரம்பரியம்
சிறப்புக்கள் :-
மாசிமாத மகா சிவராத்திரியின் சிறப்புகள் அளவிடற் கரியது. அவற்றுள் ஒருசில பின்வருமாறு அமையும். சிவார்ச்சனைக்கும் சிவார்ப்பணத்திற்கும் சிறந்தநாள். உலகம் இலிங்கமதாக உருஎடுத்த நாள். ஆணவ இருைைள ஊடறுத்துச் சிவஒளிதோற்றிய நன்னாள். தன்னிழப்புவந்த சதுர்முகன் சங்கு சக்கரதாரி சிவபரம்பொருளைக் கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது, மனமார வாழ்த்திப் பெருவாழ்வு பெற்ற பெருநாள். அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறும் நாள்புறத்துப்பூத இருளைப்போக்கிய நாள்.
*Xჯგ ത്തം. 'ത്ത', ܥܘܢܝܣܚܵܝܵܐ reas serosoee/eavsafesYe
சிவ
(
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமா
வழிபட்டு இந்த நாட்டில் சாந்தியும், சமாதா தினத்தை இதற்கென அர்ப்பணிக்கவும்.
á
أمير
இருபத்தொராம் நூற்றாண்டின் முதலாவது மகா முயற்சியினால் மீண்டும் பொது விடுமுறையாக்கப்பட்டு, இ சிவகாமி அம்பாள் சமேத பூரீ நடராஜப் பெருமானின் அநு வேறொரு வகையிலும் முக்கிய தினமாக அமைந்துள்ளது
வரும் போரை சுமுகமான வகையில் தீர்ப்பதற்கான
x
ہ محمد
ଛୁ
தலையீட்டினால் சமாதானத்துக்கான பேச்சு வார்த்தைக சமாதானத்தையும் வேண்டி நிற்கும் மக்களுக்கு சிவவழி வாழும் மக்களுக்கு இது மேலும் முக்கிய தினமாக அமை வாழ்க’ என்ற கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண் மதக் கலாசாரமும் ஆகும். அன்பு, கருணை, அமைதி, அ யாவும் எமது வாழ்வில் அமைவதற்கு இந்த மகாசிவராத்தி வந்துள்ளது. வேதம் ஒதி வெண்ணுரல் பூண்டு வெள்ளை வருவான் அவன் - சிவன். எனவே இந்தப் புனித தின செலுத்தி, அவனது ஆசியைப் பெற்று, எல்லாம் வல்ல இ மீண்டும் சாந்தி, சமாதானம் ஏற்பட இந்த மகாசிவராத்தி பஞ்சாட்சர உச்சாடனம் கூடிய சிவவழிபாட்டுடன் அர்ப்பன
)
f
*
 
 
 
 
 
 

து அனுட்டிக்க வேண்டும். 24ம் ஆண்டில் உத்தியாபனம் செய்து
டித்தல், கேட்டல், பஞ்சாட்சர செபம். திருக்கோவில் வலம் வரல். செய்யத்தகாதன.
வேதம் சாந்து
வில்வம் இருக்கு சந்தனம் தாமரை யசுர் அகில் சந்தனம் சிறுசண்பகம் Fm Loh கர்ப்பூரப்பொடி நந்தியா வர்த்தம் அதர்வணம் குங்குமம்
முறைகளுக்குத் தக நடந்து கொள்ளுதல் தவறல)
அகத்தே ஆணவ இருளை அகற்றும் நாள். செம்பொருளைச் சிந்தையுள் சிந்தித்துத் திளைக்கும் நாள் அனைத்துத் தெய்வ வழிபாட்டிற்கும் அனைத்துத் தேவர் வழிபாட்டிற்கும் ஆதாரமாக விளங்கும் சிவன் வெளிப்பட்டு அருள்பாலித்த அரியநாள். திருக்கோவில்களில் வானளாவிய கோபுரம், கர்ப்பக்கிரக விமானம், சப்பறம், தேர் ஆதியன அனைத்தும் வானோக்கி உயர்ந்து விளங்குவது மகா சிவராத்திரியில் தோற்றிய அந்தமற்ற சோதியின் உயர்வை உய்த்து உணர வைக்கும் சின்னங்கள். உலகம் இலிங்கமதாக உருவெடுத்த சிவராத்திரியின் சிறப்புக்களில் சொன்னவை சில. சொல்லாதவை சொல்லில் அடங்கா.
*%% *య9% ×2wex4 rസ&
2.
மயம்
s
னை நினைந்து மனம், வாக்கு, காயத்தினால் னமும் ஏற்பட இந்து மக்கள் மகாசிவராத்திரி
சிவராத்திரி தினம், அகில இலங்கை இந்து மாமன்றம் எடுத்த Nந்து மக்கள் யாவரும் சிறப்பாக வழிபாடு செய்ய அருள்மிகு க்கிரகம் எமக்குக் கிடைத்துள்ளது. இவ்வழிபாட்டுத் தினம் . அதாவது, இந்த நாட்டில் இரு தசாப்த காலமாக நடந்து அனுகூலமான சூழ்நிலை அதாவது, உலக நாடுகளின் ளுக்கு ஆயத்தங்கள் தென்படும் வேளையில் சாந்தியையும், பாடு மூலம் அதனைப் பெற முடியும் என்ற எண்ணத்துடன் ந்துள்ளது. "அன்பே சிவம்”, “இன்பமே சூழ்க”, “எல்லோரும் უბ ட தத்துவத்தில் கட்டி எழுப்பப்பட்டதே இந்து மதமும், இந்து ருளே உருவான சிவபெருமானை வழிபடுவதினால் இவை w ரி தினம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு
எருதேறி வருவான், தோடுடைய செவியனாக விடையேறி ჯი த்தில் சாந்த ரூபமான இடபக் கொடிக்கு முதல் வணக்கம் & இறைவனாகிய சிவபெருமானைத் தொழுது, இந்த நாட்டில் வழிபாட்டை வேத பாராயணம், திருமறைப் பாராயணம், பூரீ
விரிப்போமாக.

Page 9
செ. வேலா
இறைவனின் அடிமுடி தேடிய செய்தி கதைவடிவிலே புராணங்களிற் கூறப்பட்டிருப்பினும் அதற்குள் அரிய தத்துவப் பொருள் பொதிந்திருப்பதைப் பெரியோர் விளக்குவர். திருமூலர் ஒரு விளக்கந் தருகின்றார். திருமால் சிவலிங்க மூர்த்தியின் அடியை அறியமுடியவில்லையென்றால், அவன் சிவபெருமானது சத்தியை, அதாவது அருளை உணரமுடியவில்லை என்பதே உட்பொருளாகும். அடி என்பது சத்தியைக் குறிப்பது; சத்தியே திருவருளாகும். பிரமன் முடியைக் காணாதபோதும் கண்டதாகப் பொய் சொன்னான். சிவலிங்கத்தின் முடி சிவஞானமாகும். ஆகவே பிரமன் சிவஞானத்தை உணரமுடியவில்லை என்பதே உட்பொருள். பிரமன் வேதங்களை ஒதுபவன் என்று சொல்லப்படுவதால், வேதங்கள் சிவஞானத்தை உணரவில்லை என்று கொள்ளல் வேண்டும். உண்மையான சிவஞானத்தைச் சிவாகமங்களே உணர்த்தவல்லன. அவ்வாறாகவும் இருக்கு முதலாம் நான்மறைகள் சிவஞானத்தை (மெய்ப்பொருளை) உணர்த்துவன எனக்கூறுவது பொய்யுரையாம். இதுவே பிரமன் முடியைக் கண்டதாகப் பொய் சொன்னான்’ என்பதன் விளக்கமாகும். இது பற்றியே மணிவாசகரும்,
"வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’
(சிவபுராணம் வரி 34-35)
என்று அருளிச் செய்தார். திருமூலர் அடிமுடி தேடிய கதைக்குத்
தரும் இவ்விளக்கம் பின்வரும் பாடல்களில் அமைந்துள்ளது:
காலந்தலையும் அறியார் கலதிகள் காலந்தச் சத்தியருளென்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார்தலையுயிர் காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகுமே.”
தலையடி யாவதறியார் காயத்தில் தலையடி உச்சியில் உள்ளது மூலந் தலையடி யான அறிவை அறிந்தோர் தலையடி யாகவேதானிருந்தாரே.”
இப் பாடல்களுள் அடியே முடியைக் காட்டவல்லது என்பதும், அவ்வாறு கண்டவரே வீடுபெற்றவராவர் என்பதும், பிரமவிட்டுணுக்கள் காலுந் தலையும் அறியாமையினாலேயே கலகம் விளைத்தனர் என்பதும், அடியின் உதவியால் முடியை அறிந்தோர் அந்த அடியிலே தம்முடியை வைத்து அமர்ந்திருப்பார் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளன.
இனி, அடிமுடி தேடிய புராணக்கதைக்கு திரு. வி. கலியாணசுந்தர முதலியார் இன்னுமொரு நுட்ப விளக்கந் தருகின்றார். அதன் பொழிப்பு வருமாறு:
 
 

NA II/
義
M Se佳
புதயிள்ளை
更多°
“பெயரில்லா இறைவனுக்கு வழங்கும் பல பெயர்களுள் சச்சிதானந்தம் என்பது தனிச்சிறப்புடையது. சத் (உண்மை) - சித்(அறிவு) - ஆனந்தம் (இன்பம்) என்னும் மூன்றுஞ் சேர்ந்ததே சச்சிதானந்தம். இம்மூன்றும் தனித்தனியே பிரிந்து நிற்பனவல்ல. அகலம்,நீளம், உயரம் என்னும் முப்பரிமாணங்களும் ஒருபொருளிற் பிரிவின்றிக் கிடத்தல் போலச் சத்தும் சித்தும் ஆனந்தமும் முதல்வனிடத்திற் பிரிவின்றிக் காணப்படுவன. இம் மூன்றுமே முறையே பிரமன், திருமால், சிவன் என்று நூல்வழக்குப் பெற்றுள்ளன. பிரமன் படைப்பவன் என்றும், திருமால் காப்பவன் என்றும், சிவன் அழிப்பவன் என்றும் நூல்கள் கூறும். பிரமன் படைப்பால் உலகம் தோன்றுகின்றது என்பது நூற்கூற்று. கண்ணுக்குப் புலனாகும் உலகைக் கொண்டே கடவுளுண்மை உணரப்படுகின்றது. காரியப் பொருளாய உலகத்துக்குக் காரணம் ஒன்று உண்டு. அக்காரணமே சத்து (உண்மை) எனப்படுகிறது. காரணமாகிய சத்து உலகமாகக் காரியப்படுவதே படைப்பு என்று சொல்லப்படும். சத்தாகிய இறை உலகைப்படைக்கும்போது பிரமன் என்று பெயர்பெறும். ஆகவே அப்பிரமன் சச்சிதானத்தத்தின் ஒரு கூறாகிய சத்தே என்பது தெளிவாம்.
உலகை ஆராயும் தத்துவஞானி அதன் உண்மை கண்டபின், மேலுந் தொடர்ந்து ஆராய்கையில், அவனுக்கு உலகெனுஞ் சத்தினூடே நீக்கமின்றிக் கலந்துள்ள சித்தின் (அறிவின்) உண்மை விளங்குகின்றது. சித்தும் சச்சிதானந்தத்தின் ஒரு கூறாகும். அது நீக்கமற நிறைந்திருப்பதால், அதற்கு 'விஷ்ணு எனப்பெயர்சூட்டப்பட்டது. விஷ்ணுஎன்னுஞ்சொல் எங்கும்நீக்கமற நிறைந்துள்ளது என்னும் பொருள் கொண்டது. இப்பெயரே தமிழில் திருமால் எனப்படுவது. சத்தினுடே கலந்துள்ள சித்தின் உண்மை உணர்ந்ததும் தத்துவ விசாரகனுக்கு ஒர் ஐயம் பிறக்கின்றது. சத்திலிருந்து (பிரமணிலிருந்து) சித்து (விஷ்ணு) பிறந்திருக்குமா, அல்லது சித்திலிருந்து சத்துப் பிறந்திருக்குமா என்பதே அந்த ஐயம். இந்த ஐயத்தாற்கலக்குண்டு உண்மை காணக் கீழும் மேலும் நோக்கி நோக்கிச் சிந்தித்து அலையும் ஒரு நிலை உண்டாகின்றது. இதனையே பிரமவிட்டுணுக்கள் சிவனது முடியையும் அடியையும் தேடி அலைந்ததாகப் புராணங்கள் கதை கட்டிவிட்டன.
பின்னர் சிந்தனையால் தெளிவுபிறக்கின்றது. தெளிவில் ஆனந்தம் தோன்றுகின்றது. ஆனந்தம் சச்சிதானந்தத்தின் மற்றொரு கூறு. ஆனந்தமாகிய சிவம் விளங்கியதும், அச்சிவத்தின் வேறாகச் சத்தும் (பிரமனும்), சித்தும் (விஷ்ணுவும்) விளங்காமை புலனாகும். புராணக் கதையின் இந்த நுட்பத்தை விளங்கிக் கொண்டால் பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளும் முதல்வனின் பிரிவில்லாக் கூறுகளே என்னுந் தெளிவு பிறக்கும்.
(நன்றி :ஈழத்துச் செவ்வேள் படையல்கள்)

Page 10
1 ga6u 6001 Oás Cabo fo 6), M பண்டே நின் f JGoof us f. Of
JLi - 7
“கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதுரஉம் குறை கொடாது நெடு நுகத்து ஆணிபோல நடுவுநின்ற நன்றெஞ்சினோர்
தமிழ் மொழியின் தொன்மை இவ்வளவினது என்று அறுதியிட்டுக் கூறுதல் முடியாத காரியமாக உள்ளது. தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று தமிழ்ச் சங்கங்கள் செயற்பட்டன என அறிகின்றோம். அவை ஒன்வொன்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலதாகச் செயற்பட்டன என்றும் கூறப்படுகின்றது. இச்சங்கங்களின் முன்னிலையிலேயே புதிய நூல்களாயுள்ளனவெல்லாம், சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற்று, அதன் பின்னரே தகுதி வாய்ந்த நூல்களாகப் பொது மக்களுக்கு விடுக்கப்படும்.
ஆ. குை
இம்மூன்று சங்கங்களின் காலத்திலும், பல்வேறு நூல்கள், பல்வேறு துறைகளில் உருவாகின. அச்சு வசதி இல்லாத காரணத்தால் அவையெல்லாம் ஏட்டு வடிவிலேயே இருந்தன. இக்காரணத்தை முன்னிட்டு, அவற்றின் அருமை நோக்கிய சிலர், அவற்றைப் பாதுகாப்பாகப் பேணி வந்தார்கள். பலர், அவற்றை வேண்டாச் சுமை என்று கருதியதும் உண்டு. இவ்வர்க்கத்தினர் தமது அறியாமை காரணமாக, தமது குடும்பத்தில் உள்ள ஏடுகளைக் கொண்டு போய் ஆற்றில் விடுவார்கள். வேறு சிலர், தாம் வதிந்திருக்கும் வளவின் ஒரு மூலையில் அவற்றைக் குவித்துத், தீ வைத்து, அழித்து விடுவார்கள். அந்தோ தமிழன்னைக்கு அளிக்கப்பட்ட உபசாரத்தின் சிறப்பு இருந்தவாறு !
இவ்வாறு அழிந்தவை போக, இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவு மிகப் பெரியது என ஆராய்ச்சியாளர் கூறுவர். மிகப் பண்டைக் காலத்தில் நிகழ்ந்த கடல்கோள் சம்பவம் பேரிழப்பை உண்டு பண்ணியது. அவ்வாறு அழிந்த நூல்கள் யாவை என்னும் விவரங்களும் சரியாகச் சொல்லிக் கொள்ள முடியவில்லை. அழிந்தன என்பதற்கு மாத்திரம் சான்று உண்டு.
ஒருவாறு தப்பிப் பிழைத்துள்ள, இப்போது எமது கைகளில் இருக்கும் நூல்களில், பல்வேறு நூல்கள் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன. நூல்களின் பெயர்கள் மாத்திரம் தெரிகின்றனவேயன்றி, நூல்களோ இல்லை. அவை அழிந்து போயின.
அழிந்த நூல்களையிட்டு ஏன் கவலைப்படவேண்டும் எனச் சிலர் கருதவும் கூடும். இப்போது எமக்குக் கிடைத்துள்ள சில நூல்களைப் பார்க்கும் பொழுதும், அவற்றின் கண்ணேயுள்ள
 

ýPa5fJLA g-aS6JJJa5ů ரறொனரிரும் Saif afrif lffas6jur
ாநாயகம்
பொன்மொழிகளைக் கவனிக்கும் பொழுதும், இவற்றிற்கு முன்னதாகத் தோன்றிய நூல்களும் இவ்வாறு தரம் வாய்ந்தனவாகவோ, அல்லது இவற்றிற்கு மேம்பட்டதாகவோ இருந்திருத்தல் வேண்டும் என ஊகிப்பது பிழையாகாது. இவையெல்லாம் தமிழினத்தின் அரும்பெரும் செல்வங்கள். இவற்றை நாம் போற்றாது விட்டால், எமது இனம் வெறுவிலி இனமாக மாறுவதில் ஐயம் இல்லை.
இப்போது எமக்குக் கிடைத்துள்ள நூல்களில் முக்கியமானவை தொல்காப்பியம், திருக்குறள் பெருங்காப்பியங்களில் மூன்று, (சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை) பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களேயாகும். இவற்றின், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களை ஏடுகளிலிருந்து அச்சேற்றிய பெருமை திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், டாக்ரர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், வேறும் சில சான்றோர் ஆகியோரைச் சாரும். இப்பணியை அவர்கள் நிறைவேற்றும்போது பட்ட துன்பம், சொல்லொணாதது. ஏட்டுப் பிரதிகள் கிடைக்காமை, கிடைத்தவிடத்து அவை தெளிவாக இல்லாமை, மூலப்பிரதிகளில் வேறுபாடு இருந்தமை ஆகியவையும் பிறவும் இத்துன்ப அனுபவத்தில் அடங்கும்.
இவ்விலக்கியங்கள் எல்லாம் தூய தமிழ் மொழியிலேயே உள்ளன. பெரும்பாலும் வடமொழிக் கலப்பு இல்லையென்றே கூறலாம். பொதுவாக, எமது தமிழ் மொழி அறிவின் குறைவினால் இவ்விலக்கியங்களை நாம் வாசித்து விளங்கிக் கொள்ளுதல் சிறிது கடினமாகும். இதனை மனதில் உட் கொண்டு போலும் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் என்னும் பெருமகனார், பெரும்பாலான நூல்களுக்கு உரை எழுதியிருக்கின்றார். அது எமக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. அல்லது, இந்த நூல் விளங்காது என்று ஒதுக்கித் தள்ளிவிடுவோம்.
இந் நூல்களின் பெருமை தான் என்ன? ஒரு சொல்லிற் சொல்வதானால், இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தவன் எப்படி வாழ்தல் வேண்டும். வாழ்க்கையின் பின் குறிக்கோள் எது, அதனை எவ்வாறு எய்தலாம் என்பனவற்றை யெல்லாம் பல கோணங்களிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கியுள்ளன. இலக்கியநயம் ஒருபுறம் இருக்க, இந்த ஒரு காரணத்தால் மாத்திரம் நாம் இவற்றைப் போற்ற வேண்டாமா? அங்குள்ள அறிவுரைகள் எமக்கு வழிகாட்டிகளாக அமைதல் வேண்டும்.
“பத்துப்பாட்டு” என்னும் தொகுப்பில் “பட்டினப்பாலை” என்னும் ஒரு பாடல் உள்ளது. 301 அடிகளைக் கொண்ட

Page 11
இப்பாட்டு, கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரால் ஆக்கப் பெற்றுள்ளது. இப்பாட்டு, சோழன் திருமாவளவன், கரிகாலன் என்னும் அரசனையும் அவனது தலை நகரான காவிரிப்பூம் பட்டினத்தையும், சிறப்பையும் பாடியுள்ளது.
காவிரிப்பூம் பட்டினத்திற்குப் புகார் என்னும் வேறொரு பெயரும் உண்டு. இளங்கோ அடிகள், தமது சிலப்பதிகாரத்தின் முதற் காண்டமாகிய புகார்க் காண்டத்தில் புகார் நகரின் சிறப்பை எடுத்துப் போற்றியிருக்கின்றார்கள் !
"பொதியில் ஆயினும், இமயம் ஆயினும் பதி எழு அறியாப்புகாரே, ஆயினும், நடுக்கின்றிநிலையிய என்பது அல்லதை, ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந்தோரே'
அகத்தியன் வாழும் பொதிய மலையானாலும், இறைவனின் இருப்பிடமாகிய இமய மலையானாலும், ஊரைவிட்டே எக்காலத்தும் பிரிந்து போயறியாத பழங்குடியினர் நிறைந்ததும், பொதுமையின்றித் தனித்த சிறப்பினையுடையதுமான புகார் நகரமாயினும், இங்கெல்லாம் உயர்ந்தோர்கள் வாழ்வதனால், என்றும் அவை நலத்தால் நிலை பெறுவன. இவ்வாறு சொல்வதன்றி, முடிந்த கேள்வி, ஞானங்கள் முழுவதும் உணர்ந்த சான்றோர்கள் இவற்றிற்கும் ஒரு சமயம் கெடுதலோ, அழிவோ உண்டெனக் கூறுவதேயில்லை.
உலகியலில் நாளாந்த வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கும் பொழுது, எந்தத் துறையில் பொய்ம்மை அதிகமாக நிலவுகின்றது என்றால், அது வர்த்தக, வாணிகத் துறை எனக் கூறினால், அது அதிகம் பிழையாகாது என்று நம்ப இடமுண்டு. ஒரு பொருளின் முழு ஆக்கற் செலவு பத்து ரூபாவாயின் அது நுகர்வோர் கைக்கு வந்து சேரும்போதுநூறு ரூபாவாக உயர்ந்து விடுகின்றது. வர்த்தகர், வியாபாரி ஆகியோர் தமது தொழிலுக்கேற்ற இலாபம் ஈட்டவேண்டியது உண்மையே. ஆனால், ஈன இரக்கம் குற்றம் ஆகின்றதே. இக்குறைபாடு தனிப்பட்ட ஒரு வியாபாரியுடன் நின்று விடவில்லை. சர்வதேச அரங்கிலும் இக் கொடுமை நிகழ்கின்றதே.
சமூகத்துறை எழுத்தாளராகப் பிரசித்தி பெற்ற Herbert Spencer என்னும் மேல் நாட்டுப் பெரியார், சர்வதேச அரங்கில், வர்த்தகம் என்னும் போர்வையில், எவ்வாறு சில அரசுகள், பிற நாட்டவரது செல்வப்பொருளையும், ஆதனங்கையும் சூறையாடிக் கொண்டன என்பதனை நன்கு விளக்குகிறார். இங்கு, வன்முறை, சூது, வஞ்சகம், ஏமாற்று, போலி ஆதிக்கப் பிரகடனம் என்பனவும், இன்னோரன்ன பிறவும் சாதுரியமாகக் கையாளப்பட்டன எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முழு மாறாக, 2000 ஆண்டுகளுக்கு முன்னர், சோழன் திருமாவளவன், கரிகாலனது தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்து வர்த்தகர்கள் தமது தொழிலையும், நாளாந்த வாழ்க்கையையும் எவ்வாறு நடாத்தி வந்தார்கள்
 

என்பதனை நாம் அறியும் போது உள்ளம் பூரிப்பு அடைகின்றது. இப்பட்டினம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புடைய பிரசித்த வர்த்தக நகரமாயிருந்த காரணத்தால் அந்நகரின் மேலான பொருளியல்நிலைக்கும், நாட்டின் செல்வக் கொழிப்புக்கும் வர்த்தகர்களே முதுகெலும்பாக விளங்கினர். அவர்கள் நற்குண நற்செயலுடைய உயர்ந்தோராய் இருந்த காரணத்தால் சமூகத்திற்குத் தமது அறிவுரைகளாலும், சீரிய வாழ்க்கையின் பாங்கினாலும், சமூக வழிகாட்டிகளாகவே விளங்கினர்.
பல நாடுகளுக்குச் சென்று வரும் நாவாய்கள், துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டு, தறியிற் கட்டப்பெற்ற யானைகள் அசைவது போல், அசைந்து கொண்டு இருந்தன. பல்வேறு வகையான பொருட்களும் துறைமுகத்தில் வந்து இறங்குகின்றன.
கடலிலே காற்றால் வந்த நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளும், மேருவிலே பிறந்த மாணிக்கமும், சாம்பூநதம் என்னும் பொன்னும், பொதியின் மலையிலே பிறந்த சந்தனமும், அகிலும், தென்திசைக் கடலிற் பிறந்த முத்தும், கீழ்த் திசைக் கடலிற் பிறந்த பவளமும், கங்கையாற்றில் உண்டாகிய பொருளும், ஈழத்து உணவும், பர்மா தேசத்து உற்பத்திப் பொருட்களும், சீன முதலிய இடங்களிலிருந்து வந்த கருப்பூரம், பனிநீர், குங்குமம் முதலியனவும், இவையொழியப் பெரியவையாகிய வேறு பல பொருள்களும், நிலத்தின் முதுகு நெளியும்படி திரண்டு புகாரின் நடுவிடத்தும், கரையினிடத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
நோன்மதி தினமாகையினாலே வலைஞர் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. பிடிப்பார் இல்லாமையினாலே மீனினங்கள் வலைஞர்களில் முன்றிலிலே உயிர் கொன்று, ஊனை உணவாக உண்பாரையும், விலைக்கு விற்பாரையும், இல்லாத காரணத்தால், விலங்கினங்கள், வலைஞர் முற்றங்களிலே, இனம் பெருகிப் பகைக்கு அஞ்சாது சந்தோஷமாக இருந்தன. இவற்றிற்கெல்லாம் தூண்டு கோலாகப் பின்னணியில் திகழ்ந்தவர்கள் அந்நகரத்து வர்த்தகப் பிரமுகர்கள்.
அவ்வர்க்கத்தினர் தமது அறிவுரைகளால் கொலை, களவு ஆகியவற்றை முற்றாகவே களைந்தும், தேவர்களை வழிபட்டும், பாற் செல்வத்தைத் தரும் பசுக்களையும், தமது உழைப்பினால் வரும் விளைவின் வைக்கோலைத் தாம்தின்று, நெல் மணிகளை மனிதனுக்கு உதவும் எருதுக்களையும், பாதுகாத்தும் பேணியும், அந்தணர் தம் தொழிலைத் திறம்படச் செய்ய உதவியும், பல புண்ணியங்களைத்தாமும் செய்து, அவ்வாறு செய்ய முடியாதார்க்குப் பண உதவி புரிந்தும், விளைந்த நெல்லையும், களி வகைகளையும் உணவாக மற்றையோர்க்கு வழங்கியும், இங்ங்ணம் செய்யும் அறத்தொழில்கள் குறைவுபடாது, குளிர்ந்த அருளுடன் வாழும் இல்லறத்தையுடைய நன்நெஞ்சினோர், வளைந்த மேழியால் உழவுத் தொழிலை நடாத்தும் உழவரது நெடிய நுகத்தில்

Page 12
தைத்த பகலாணிபோல, நடு நிலமையென்றும் குணம் நிலைபெற்ற ஒன்றாகிய நெஞ்சினையுடையோர், தமது பல சரக்குக்களையும், பிறரதுசரக்குக்களையும் சமமாகவே கருதி, தமக்கு மாத்திரமேயல்லாது தாம்பிறந்த குடிக்கே வசையாகும் என்பதனை உணர்ந்து, பொய்யென்பதே பேசாது, எப்போதுமே உண்மையையே பேசி, தாம் கொள்ளும் சரக்கைத் தாம் கொடுக்கும் பணத்திற்கு மிகுதியாகக் கொள்ளாமலும், தாம் கொடுக்கும் சரக்கை, தாம் வாங்கும் பணத்திற்குக் குறைவாகக் கொடுக்காமலும், பொருளின் விலை இவ்வளவு தாம் பெறும் இலாபம் இவ்வளவு, என்று வெளிப்படையாகச் சொல்லி விற்பனை செய்தும், நல் வழியால் வந்து பொருளாதலினாலே தொன்மையாக வரும்நிலைபெற்ற செல்வத்தை உடையவருமான நன்நெஞ்சினோர் வாழும்நெருங்கிய குடியிருப்புக்களையும், குறைவுபடாத சிறப்பினையுமுடையது காவிரிப்பூம்பட்டினம்.
பாயிரும் பணிக்கடல் வேட்டஞ் செல்லாது உவா மடிந்து.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் தென்கடல் முத்தும் குணகடற்றுகிருங் கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவுங் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் தெரிய வீண்டி வளந்தலை மயங்கிய தளந்தலை மறுகி னிர்நாப் பண்னு நிலத்தின் மேலு மேமாப்ப வினிது துஞ்சிக் கிளைகலித்துப் பகைபேனாது வலைஞர் முன்றில் மீன்பிறழவும் விலைஞர் குரம்பை மாவீண்டவுங் கொலைகழந்தும், களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் நல்லானொடு பகடோம்பியும் நான்மறையோர் புகழ்பரப்பியும் பண்ணிய மட்டியும் பசும் பதங்கொடுத்தும்
LeSeseLeLeeLqLeSseLeMeLeJekseBeLeLeLeeLsieSsLeLeJeLeeJeseJeTeSLseeLeeLSeeeeLSeLeee SeeeSLeSeeeeeSeLeLeLeeLeeeeeeS
()
Se བ་པོ་ཤེལ་
சித்திரை தமிழ்ப் புதுவருடம், ஏப்ரல் மாதம் 13ம் திக அன்றைய தினம்பிற்பகல் 3.45 க்கும்,திருக்கணிதப்பஞ்சா (இவை தற்பொழுது நடைமுறையிலிருக்கும் மாற்றத்திற்கு
பிறக்கவிருக்கும் புதிய வருடத்தின் பெயர் “விச் வருடங்களின் சுற்று வட்டத் தொடரில், இது 14 வது வருட
 
 
 

புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் கொடு மேழிநசையுழவர் நெடு நுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சிவாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வதுரம்உம்மிகைகொளாது, கொடுப்பதுTஉம்
- குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும்’ தொல் கொண்டித்துவன்றிருக்கை
முட்டாச் சிறப்பின் பட்டினம்
பட்டினப்பாலை
92.93, 185 - 218
இங்கு, நாம் எமது வாழ்வின் நலன் நோக்கிக் கவனிக்க வேண்டிய பல அரிய கருத்துக்கள் உள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு - 豪
i.
2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் எமது ஈழ வள நாட்டிலிருந்து உணவு பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாயிற்று.
2. எமது முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய சீரிய முறைமை நாமும் பின்பற்ற முற்படுவது சாலச் சிறந்ததல்லவா ? 3. உணவுக்காக உயிர்க் கொலை செய்தலை எம்முன்னோர்கள் வெறுத்தனர். இதனை நாமும் பின்பற்ற வேண்டாமா ? 4. வர்த்தகத் துறையில் நேர்மையை அனுசரிக்க வேண்டியது
சமூக நலனுக்கு இன்றியமையாத தொன்றாகும். 5. பொய் பேசுதல் தமக்கு மாத்திரமேயல்லாது தாம் பிறந்த
குடிக்கே அவமானமாகும். 6. பகை பேணாது யாவருடனும் ஒற்றுமையாக வாழுதல்
வேண்டும். 7. விலங்கினங்களைப் பாதுகாக்க வேண்டும். 8. கொலை, களவு ஆகியன இல்லாததோர் ஒற்றுமை நிலவும்
சிறந்த சமூகத்தைப் பேணுதல் வேண்டும். 9. திரைகடலோடியும், நல்ல வழியில் திரவியம் தேடுதல்,
போற்றற்குரியது.
முற்றும்
தி வியாழக்கிழமை உதயமாகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி ங்கப்படி மாலை 5.51க்கும் சித்திரைப்புதுவருடம் பிறக்கிறது. ரிய நேரப்படியாகும்.)
க்கிரம” என்பதாகும். மொத்தமாகவுள்ள அறுபது தமிழ் மாகும். *
eeeeekeeekeeeeekeeeeeeeeeeeeeeeeeeekeeeekeeekee
సి
ॐ

Page 13
கடந்த நூற்றாண்டின் தனிப் பெருஞ் சிறப்பு எதுவாக இருக்கும் என்பதை உடனேயே சொல்லிவிடலாம். விஞ்ஞான, தொழில் நுட்பங்களில் ஏற்பட்டுள்ள அதிதீவிர விருத்தியே அத்தனிப்பெருஞ் சிறப்பு என்பதில் எதுவித ஐயமுமில்லை. மனித சாதனை இந்த வகையில் மகத்தானதுதான். அதுபெருமைதரும் விடயமும் ஆகும்.
ஆனால், மற்றொரு மிகமுக்கியமான துறை, முன்னரைக் காட்டிலும், பெரிதும் பின்னடைவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் போது, பெற்ற பெருமையெல்லாம் சிறுமையாகிப் போகிறதே என்ற உணர்வு உள்நின்று நம்மை உறுத்துகிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஆமாம். மனிதப் பண்புகள், மானுடம், மனித விழுமியங்கள் உள்ளிட்ட ஆன்மிகம் முன்னர் என்றுமே காணாத அளவிற்குப் பின்னடைவு பெற்றுள்ளது. கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய எதிர்மறைச் சாதனை இதுவாகும்.
அந்த வகையில், உலகியல் சார்ந்த வளர்ச்சியில் பெருமைப்படக் கூடிய சாதனை படைப்பதிலும், ஆன்மிகம் சார்ந்த பண்பு விருத்தியில் சிறுமையை ஏற்படுத்துவதிலும் கடந்த நூற்றாண்டு வெற்றி கண்டுள்ளது.
உலகியல், ஆன்மிகம் ஆகிய இரண்டினதும் ஒருங்கிசைந்த, சமநிலை வளர்ச்சியே மனிதகுல சுபீட்சத்திற்கும், சாந்தி, சமாதானத்திற்கும் வேண்டற்பாலது. ஆனால், கடந்த நூற்றாண்டில் நாம் கண்டவை, உலகியலின் பெருவளர்ச்சியும், அதேவேளை ஆன்மிகத்தின் படுவீழ்ச்சியுமே.
இச் சமத்துவமின்மையே, இவ்வுலகில், தனியாள், குடும்பம், சமூகம்; தேசம், மண்டலம் ஏன், ஒட்டுமொத்தமாக முழு உலகமும் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள், வன்முறைகள், குழப்பங்கள், அமைதியின்மை யாவற்றிற்கும் மூல காரணமாக உள்ளது.
உலகியல், ஆன்மிகம் ஆகிய இரண்டிற்குமிடையிலான சமத்துவமின்மையே இன்று உலகில் காணப்படுகின்ற பல்வேறு சமத்துவமின்மைகளையும் உருவாக்கியுள்ளது. சமூகங் களுக்கிடையே சமத்துவமின்மை, பொருளாதார சமத்துவமின்மை, ஆண் பெண் சமத்துவமின்மை, மற்றும் எல்லாச் சமத்துவ மின்மைகளும், தொடர்ந்தும் வளர்ச்சி பெற்றுக் கொண்டே போகின்றன. எந்த முயற்சிகளும், எத்தனங்களும், போராட்டங்களும் சமத்துவத்தை நிலைநாட்டுவதில் வெற்றி காணமுடியாதுள்ளன. "சாண் ஏற, முழஞ்சறுக்கும்” என்பார்கள். இவற்றிற் கெல்லாம் என்ன காரணம் என்பது ஆராயப்பட வேண்டியது. ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுதான்
- குமாரசாமி சே
 
 

مسلم
மசுந்தரம் -
இருக்கின்றன. ஆனால் ஆய்வுமுறையின் பிழையோ என்னவோ, முடிவுகள் தவறானவையாகவே உள்ளன. உண்மை நிலையை அறிந்தவர் எவருமில்லை. காலங்கடந்ததுதான் மிச்சம் உண்மைக் காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. "எண்ணைச் செலவே தவிரப் பிள்ளை வளர்த்தி இல்லை” என்றொரு பழமொழி உள்ளது.
பிரச்சினைகள் முற்று முழுதாக உலகியல் அடிப்படையிலேயே அணுகப்படுகின்றன. ஆன்மிகம் அங்கு செறிவதில்லை. தோல்விக்குக் காரணம் புரிகிறதல்லவா?
“மெய்ப்பொருள் காண்பது அறிவு”என்கிறது வள்ளுவம் மெய்ப்பொருள் என்பது உண்மைப் பொருள். உண்மையை, உண்மை அறிவினாலேயே அறிந்து கொள்ள முடியும். ஆன்மிகம் சார்ந்த அறிவே உண்மை அறிவு. உலகியல் சார்ந்த அறிவு, பொய்யறிவு, பொய்பற்றிய அறிவு, பொய்யறிவினால் உண்மையை அறிந்து கொள்ள முடியாது. “பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்குகின்ற மாந்தர்களின் அறிவு பொய்யோடு புணர்ந்ததாகவே இருக்கும். அந்த நிலையில் உலகில் சமத்துவம், சாந்தம், அமைதி என்பவற்றை எவ்வாறு ஏற்படுத்த முடியும். இவையில்லாமல், மனிதருக்கு வாழ்வில்லை. எனவே உலகம் இன்று வேண்டிநிற்பது ஆன்மிகமேயாகும். மனித வாழ்க்கையில் ஆன்மிகம் செறியும் போதுதான், அது நல்லவண்ணம் அமையும்.
ஆன்மிகம் என்றால் என்ன? முதலில் ஆன்மிகம் உணர்த்தி நிற்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆன்மிகம் என்ற சொல்லைக் கேட்டதுமே பலர் அஞ்சுகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், ஆன்மிகத்திற்கு இப்போது என்ன அவசரம், பின்னர் பார்த்துக் கொள்வோம் என்கின்றனர். “பின்னர்” என்பதன் பொருள் வயோதிபம் வந்த பின்னர் என விரித்துப் பார்க்கும் போதே விளங்குகிறது. சமயமும் ஆன்மிகமும் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும் என்று கருதப்படுகிறது போலத் தெரிகிறது.
இளைய பருவத்தினர் என்போர் “வாழும் பிள்ளைகள் வளரும் பிள்ளைகள்’. அவர்கள் வாழ்க்கையை நன்றாகச் சுவைத்து அனுபவிக்க வேண்டியவர்கள். அந்த இளம் வயதில் அவர்களுக்கேன் சமயம், ஆன்மிகம் என்கின்றனர் ஒரு சாரார். சமயமும் ஆன்மிகமும் வாழ்க்கையை நன்றாக வாழவிடாமல் தடுக்கும் தன்மையையுடையன என்ற கருத்து இவர்களிடம் இருப்பது போலத் தோன்றுகிறது.
சமயம் மூடநம்பிகைகளின் தொகுப்பு. விஞ்ஞானம் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் எதற்கு ஏன் எப்படி என்னும் வினாக்களை எழுப்ப வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. சமய நம்பிக்கைகள், சடங்குகள்,

Page 14
சம்பிரதாயங்களுக்கு விஞ்ஞான அடிப்படையில் அறிவுபூர்வமாக விளக்கம் பெறப்பட முடியாதுள்ளது. விஞ்ஞானத்திற்கு உட்படுத்தப்படாத எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமுடியாதது என்பது மற்றொரு சாராரின் நிலைப்பாடு. அந்தவகையில், ஆன்மிகம் இந்த நூற்றாண்டில் பெரிதும் அலட்சியப்படுத்தப்பட்டு வந்துள்ளது. விஞ்ஞானம் சடப்பொருளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட வேண்டியது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆன்மிகம் விஞ்ஞான எல்லைகளைக் கடந்து நிற்பது. அதனால் விஞ்ஞான அறிவிற்கு எட்டாதது. ஆன்மிகத்தை விஞ்ஞான அளவுகோல் கொண்டு அளக்க முற்படுதல் அறியாமையாகும்.
உண்மையில் ஆன்மிகம் என்பது வாழ்க்கை; நல் வாழ்க்கை கல்வியை எப்படி வாழ்க்கையிலிருந்து பிரித்து விடமுடியாதோ, அவ்வாறுதான் ஆன்மிகத்தையும் பிரித்து விடமுடியாது. கல்வியானது பிறப்பு முதல் இறப்புவரை தொடர வேண்டியது. இளமையிற் தான் கல்விகற்றவேண்டும், முதுமையில் தேவையில்லை என்று கூறமுடியாது. “கற்க மறுப்பவன் வாழ மறுக்கிறான்” என பூரீ இராமகிருஷ்ண பாமஹம்சர் கூறுகிறார். அவ்வாறே ஆன்மிகமும் இளமை தொட்டு மரணபரியந்தம் மனிதனுடன் வாழ வேண்டியது. ஆன்மிகத்தை மறுப்பவனும் மனிதனாக வாழ மறுக்கிறான் என்றே கூற வேண்டும். எனவே, ஆன்மிகம் இன்ன பருவத்திற்குத்தான் உரியது இன்ன பருவத்தில் தேவையில்லை என்று கூற முடியாது. ஆன்மிகம் வாழ்க்கையின் சுவையை ஒரு போதும் குறைப்பதில்லை. உண்மையில், வாழ்க்கையை வாழ்வாங்கு வாழச் செய்து, அதன்வழி வாழ்க்கையைத் தூய்மையாக்கி, வாழ்க்கைக்குச் சுவையையும் இன்பத்தையும் தருவது ஆன்மிகம் என்றால் அது மிகையாகாது.
ஆன்மிகம் என்பது மறுமைக்குரியது; முத்திக்கு வித்தாவது என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அத்துடன் நிறுத்தி விடக்கூடாது. ஆன்மிகம் இம்மைக்கும் உரியது ஆகும். இம்மையிலும், பிற்பட்ட காலப்பகுதிக்குரியது ஆன்மிகம் எனப் பலர் நினைக்கிறார்கள். அது இளமைக் காலத்திற்கும் உரியது என்பதை மறந்து விடலாகாது. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்பார்கள். எனவே, ஆன்மிகம் எக்காலத்திற்கும் உரியதாகும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆன்மிகம் வாழ்க்கையுடன் இரண்டறக் கலக்க வேண்டியது அவசியம்.
இன்றைய மனிதரிடம் ஆன்மிகம் வற்றி விட்டது. அதனாலேயே உலகில் இத்துணை அவலங்களும் அழிவுகளும் பெருகியுள்ளன.
மனிதர்கள் அன்பினை ஆராதிக்கிறார்கள் இல்லை; பிறர் மீது அன்பு செலுத்துகிறார்களில்லை. சில சந்தர்ப்பங்களில் தம்மீதும் அன்பற்றவர்களாகவே காணப்படுகின்றனர். எவரிலும் கரிசனை கொள்வதில்லை. அன்பிருந்தால்த்தானே கரிசனை கொள்வதற்கு. ‘அன்பிலார் எல்லாந் தமக்குரியர்” என்கிறது வள்ளுவம். ‘அன்புடையர் என்புமுடையர் பிறர்க்கு” என்றும் வள்ளுவம் கூறுகிறது. பிறர்மீது கரிசனை கொள்வதற்கு அன்புதான் காரணம். "அன்பு ஈனும் ஆர்வமுடைமை" என்கிறது
 

வள்ளுவம். ஆர்வமுடைமை என்பது கரிசனை கொள்ளுதல் ஆகும். இன்று ஒருவர் இன்னொருவர் மீது கரிசனை கொள்வதை எங்காவது காணக்கூடியதாக உள்ளதா? இல்லை. ஏன்? அன்பு வற்றிவிட்டது. அதனால் ஆன்மிகம் வற்றிவிட்டது. ஆன்மிகத்தின் ஒரு தூண் அன்பு,
அன்பு, உண்மை, அஹிம்சை, அறம் என்பன ஆன்மிகத்தைத் தாங்கும் தூண்கள். இந்த நான்கு தூண்களும் உறுதியாகவும் உரமாகவும் இருக்கும் பட்சத்திலேயே ஆன்மிகம் வற்றாத நீர்ச்சுனையாக விளங்கும். ஆன்மிகம் வாழ்ந்தாலேயே இந்த உலகில் சகல செல்வங்களும் சுபீட்சமும் நிலைத்திருக்கும்.
அன்பு, கரிசனை, கருணை இல்லாவிட்டால் அவ் விடத்தை வன்முறை, கொடுமை, குழப்பங்கள் பற்றிக் கொள்ளும். பின்னர் அவற்றிலிருந்து மீள்வது கடினம். ஆன்மிகம் குறைந்து வன்முறைகள், கொடுமைகள் பெருகுவதற்கு இக்கால மனிதர்களின் நடத்தைகளிலும், அவர்கள் வாழுகின்ற முறைகளிலும்தான் காரணம் அமைந்துள்ளது. நடத்தைகளில் புனிதம் இல்லை; வாழ்க்கை முறைகளில் தர்மம் இல்லை. தர்மம் என்றால் அறம். அறவழியில் வாழவேண்டியது மனிதனின் கடமை. அந்தக் கடமை புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை, அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு” என்பது வள்ளுவர் மறை, அறநெறியில் வாழ்வதால் எல்லா நன்மைகளும் உண்டாகும். அதனை மறத்தலால் எல்லாக் கேடுகளும் உண்டாகும்.
மனித வாழ்க்கை முறைகள், நடத்தைகள் என்பன அறந் தழுவியதாக இல்லை; அன்பு தழுவியதாகவும் இல்லை. அப்படியாயின், ஆன்மிகம், இருதூண்களை இழந்த நிலையில் ஐம்பது சதவீதம் ஆட்டம் காண்கிறது.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்பது பொய்யா மொழி. அன்பும் அறமும் வாழ்க்கைக்குப் பண்பும் பயனும் பயப்பன. அவ்விரண்டும் இல்லையாயின் வாழ்க்கைக்குப் பண்பும் இல்லை, அத்தகைய வாழ்க்கையை வாழ்வதால் எவ்வித நற்பயனும் இல்லை. வாழ்வில் ஆன்மிகம் செறியாவிட்டால் துர்நடத்தைகளும் வன்முறைகளும் வழக்கில் இருக்கத்தான் செய்யும்.
ஆன்மிகம் என்பது தீமையின் சுவடே இல்லாததும் அன்பும் அறனும் நிறையப் பெற்றதுமான நன்னடத்தை, நல்லொழுக்கம் ஆகும்.
நன்னடத்தையில்லாத கல்வியினாலோ, செல்வத் தினாலோ, பதவி அந்தஸ்தினாலோ, புகழ் கீர்த்தியினாலோ, சொத்து சுகங்களினாலோ ஒரு பயனும் இல்லை. மனிதர்கள் தத்தம் துறைகளில் தலைவர்களாகவோ, நிபுணத்துவ மேதைகளாகவோ இருக்கலாம்; பெரும் விஞ்ஞானிகளாகவோ, கலைஞர்களாகவோ, கல்விமான்களாகவோ, நிருவாகி

Page 15
களாகவோ விளங்கலாம்; ஆனால் அப்பெருமக்களிடம் நன்னடத்தை இல்லையேல், அவர்களால் சமூகத்தில் நிலைக்கவும் முடியாது, சாதனைகளை நிகழ்த்தவும் இயலாது.
நன்னடத்தை என்பது ஆன்மிகம். நன்னடத்தை ஆன்மாவுடன் தொடர்புடையது; அதனால் ஆன்மிகமானது . எனவே நன்ண்டத்தை பெரிதும் ஒம்பப்படவேண்டியது.
ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்”என்கிறது தமிழ்மறை ஒழுக்கம் அதாவது நன்னடத்தை உயிருக்கு மேன்மையைத் தருவதினால், அந்த நல்லொழுக்கம் உயிரினும் மேலானதாகக் காக்கப்பட வேண்டும். எனவே ஆன்மிகம் அலட்சியத்திற்குரியதன்று; ஒவ்வொருத்தராலும் நன்கு இலட்சியப்படுத்தற்குரியதாகும். ஆன்மிகம் உடையராக இருப்பதே மானுடத்தின் இயல்பு; ஆன்மிகத்தை இழத்தல் மனிதரை விலங்கு நிலைக்குக் கீழிறக்குவதாகும்.
அன்பு, தர்மம், அஹிம்சை, பொறுமை, கரிசனை, வைராக்கியம், தயை என்பன நன்னடத்தையை உருவாக்குபவை. எனவே அப்பண்புகள், ஆன்மிகப்பண்புகளாக மதிக்கப்படுகின்றன.
மனிதர்கள் உண்மையையும் அஹிம்சையையும் போற்றி வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும். இவ்விரண்டும் உயிர்க்கு உறுதிபயப்பன. எனவே அவை ஆன்மிகமாகும். ஆத்மாக்களை மகாத்மாக்கள் ஆக்குவது
பிரதோஷம்
04 (சனி) மகாசிவராத்திரி 05 (ஞாயிறு) அமாவாசை
09 (வியாழன்) சதுர்த்தி
11 (சனி) சஷ்டி, கார்த்திகை 16 (வியாழன்) ஏகாதசி
17 (வெள்ளி) பிரதோஷம்
世9 (ஞாயிறு) பூரணை
20 (திங்கள்) பங்குனி உத்தரம்
23 (வியாழன்) சங்கடஹர சதுர்த்தி
ஏகாதசி
 
 
 
 
 
 
 
 
 
 

சத்தியமும் அஹிம்சையும் என்பதை மகாத்மா காந்தியடிகளின் வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். அஹிம்சை என்பது எவ்வுயிர்க்கும் இன்னா செய்யாமை; இனியவற்றைச் செய்தல். சமநோக்குள்ள மனிதன், எல்லாப் படைப்புக்களையும் சமமாகவே நோக்குவான். நடுவுநிலைமை அவனின் பண்பாகின்றது. சமநோக்குடைமை ஆன்மிகம் ஆகும். தன்னைப் பிறரில் காணும் பண்புடைமை சம நோக்கினை விருத்தி செய்கின்றது.
சத்தியமும் அஹிம்சையும் ஆன்மிக வாழ்வில் விரதங்களாக அனுட்டிக்கப்பட வேண்டியவை. விரதத்திலிருந்து தவறுவதற்குப் பேராசை, பொறாமை, சுயநலம், பகைமை என்பன காரணமாகின்றன. ஆசையிலும் அகங்காரத்திலும் ஆன்மிகம் மங்கிவிடும் ஆபத்து உண்டு. எனவே ஆன்மிகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இத்தீயவற்றிலிருந்து வெகுதூரம் விலகி யிருத்தல் அவசியமாகும்.
மனிதர்கள் தற்காலத்தில் எவற்றை விட்டுவிடக் கூடாதோ, அவற்றை விட்டுவிடுகிறார்கள். எவ்வெவற்றை விட்டுவிட வேண்டுமோ அவற்றை இறுகப் பிடித்துப் பற்றிக் கொள்கிறார்கள். நல்லொழுக்கம், நன்னடத்தை, நல்ல மனிதப் பண்புகள் ஆகியவை விட்டுவிடக் கூடாதவை. ஆனால், அவற்றை மனிதர்கள் விட்டுவிலகி வருகிறார்கள். ஆன்மிகம் தளர்ச்சிபெற்று வருகிறது. உலகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் ஆன்மிகம் மீண்டும் மலர்ச்சி பெறவேண்டும். ஆன்மிகம் என்பது நன்னடத்தை, நல்லொழுக்கம், நற்பண்புகள் என்பவற்றுடன் இணைதல் என்பதை உணர்வோமாக.
ஏப்ரல் t
ஏப்ரல் 02 (ஞாயிறு) பிரதோஷம் 04 (செவ்வாய்) அமாவாசை 07 (வெள்ளி) கார்த்திகை 08 (சனி) சதுர்த்தி 10 (திங்கள்) சஷ்டி 13 (வியாழன்) விக்கிரம வருடப் பிறப்பு 14 (வெள்ளி) ஏகாதசி 16 (ஞாயிறு) பிரதோஷம் 18 (செவ்வாய்) சித்திரா பூரணை, சித்திரகுப்த விரதம் 22 (சனி) சங்கடஹர சதுர்த்தி

Page 16
Ny
சாதனம் ஒன்றுமின்றிச் சாதிப்பார் உலகில் இல்லை ஆதலின், யாதேனும் ஒன்றைப் பெறவோ, துய்க்கவோ வேண்டுமாயின் அவ்வவற்றிற்குரிய சாதனங்களாலேயே கைகூடக் காண்கின்றோம். அதுபோலவே உயிர்கள் தம்மைப் பற்றியுள்ள மலத்தின் நீங்கிப் பிறவித் தொடர்பு அறுத்தற்கும் வீடுபேறு எய்துதற்கும் ஏற்ற சாதனங் கொண்டாலன்றி அவை கைகூடா. மனிதப்பிறவியின் நோக்கம் மாதேவனை மனத்தால் நினைப்பதற்கும் வாக்கால் வாழ்த்துதற்கும் காயத்தால் வணங்குதற்குமாகும்.
மானிடப்பிறவிதானும் வகுத்தது மனம்வாக்காயம் ஆனிடத்தைந்துமாடி அரன்பணிக்காகவன்றோ" என்ற பூரீ அருள் நந்தி சிவாச்சாரியாரின் அருள் வாக்கிற்கமைய அகப்புற வழிபாடும், தவமுதலியபிறவும் அச்சாதனங்களாகும். ஆண்டவன் அருட்பேறு குறித்து உயிர்கள் மேற்கொள்ளும் தவங்கள் சிந்தை முதலிய கருவிகளால் நிகழ்வனவாகும். சிந்தையால் சிவன் திருவுருவை நினைதல் உடற்செய்கைகளாற் தொழுதல், இறைவன் புகழ்மொழிகளைப்பிறர் கூறக்கேட்டல், தான் கூறல் இவற்றை,
"சிந்தை செய்கை கேள்விவாக்குச் சீரில் ஜம்புலங்களான முந்தையான காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்” என்ற மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகத்தின் மூலம் கூறுமாற்றால் அறியலாம். இங்ங்ணம் நினைதலும், தொழுதலும், கேட்டலும் கூறலுமாகிய இவை சிந்தை - செய்கை - கேள்வி - வாக்குக்ளால் நிகழும் தவச்செயல்களாகும். இத்தவச்செயல்களை யுடையார்க்கு மெய் - வாய்-கண் - மூக்கு - செவிகள் வாயிலாக நுகரப்படும் புலன்கள் எல்லாம் சிவமயமாகவே நிகழும். இங்ங்ணம் சிவமயமாக நிகழும் நிலை சித்தம் சிவமாகப் பெற்றவர்க்கே இயல்வதாகும்.
சித்தம் - மெய் - வாய் முதலிய பொறிகளின் வாயிலாக உலகியற் புலன்களை விரும்பும், அதனை அறிவினால் தடைப்படுத்த வேண்டும். அங்ங்ணம் தடைப்படுத்தியவர்களே சிவஞானிகள் மெய்யடியார்கள். உலகியற் பொருள்களைப் பற்றிக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியுமது ஜம்புலன்களின் இயல்பு இங்ங்ணம் உலகியற் பொருளைப் பற்றாமல் ஐம்புலன்களையும் சிவமயமாகவே கண்ட சிவஞானிகள் பலராவர். அவர்களுள் ஒருவர் அன்பின் வரகுணதேவர் சிறந்த சிவபக்தர். பார்த்தவிடமெல்லாம் பரமனாகக் காணும் உணர்வுடையவர். அவ்வன்பர் உதிர்ந்து கிடந்த வேப்பங் கனியை ஆண்டவன் அருள்குறியென்று கண்டார். இதுபோல் குளத்திலுள்ள தவளை கத்துவதை இறைவன் திருப்பெயரை இயம்பினதாகக் கேட்டதுமாகியவை சிவமயமான புலன் நுகர்ச்சிகளாகும். இதனை
காம்பவிழ்ந்துதிர்த்த கனியுருக் கண்டு
வேம்பு கட்கெல்லாம் விதானம் அமைத்தும் குவளைப் புனலிற்றவளை அரற்ற
ஈசன்தன்னை ஏத்தின என்று காசும் பொன்னும் கலந்து (தூ)வியும் என்ற பட்டினத்தடிகள் கூறியவாற்றாலுணரலாம். ஒரு சிவஞானி உலகியலில் நுகரப்படும் ஜம்புல இன்பங்களைச் சிவார்ப்பணம்செய்ய வேண்டுமென்பது திருவைந்தெழுத்தின் பொருள். அதாவது,
சிவநெறி அறநெறி அன்பர்
 
 

Ny
நுகல் பொருள் எல்லாம் சிவனுக்கே சீவனுக்கில்லை. இன்னும்
சிவோதாதா சிவோ போக்தா சிவோசர்வமிதம் ஜகத் சிவோ யஜதி சர்வத்ரயஸ்சிவோகம் ஏவது” என்ற அப்பையதிக்கிதர் சிவார்ச்சனாசந்திரிகை என்ற நூலில் விளக்கியுள்ளார். இதற்கும் ஒர் எடுத்துக்காட்டாக விளங்கியவர் வரகுணதேவர். அவர் உலகியல் மூலமாக நுகரப்படும் ஐம்புலன்களைத் தமக்கெனக் கொள்ளாமல் சிவார்ப்பணம் செய்தார். இதனை,
விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவர்” என்ற பட்டினத்தடிகள் பாடற் பகுதியால் அறியலாம். உலகியல் பற்றிய ஜம்புலன்களைச் சிவனுக்குச் சமர்ப்பணம் செய்து சிவமயமாகப் புலன்களை மாற்றிக் கொள்ளுதலே ஜம்புலன்களால் இறைவனை அடைதற்குரிய வழியாகும்.
சிந்தை, செய்கை,கேள்விவாக்குகளில் நிகழ்த்தவேண்டிய தவச் செய்கைகளையும், அத்தவச் செய்கையுடையார் தாம் நுகரும் ஐம்புல இன்பங்களைச் சிவார்ப்பணம்செய்யவேண்டும்மென்பதையும் முன்னமே அறியாத அடையாத “மூர்க்கனேன்” என்று மாணிக்கவாசகப் பெருந்தகை கூறிக் கொள்வது நம்போலியரைக் குறித்ததேயாகும். பண்டைப் பிறவிகளில் சிந்தை முதலிய கருவிகளாலும், மெய் முதலியவற்றாலும் சிவனைப் பற்றி இருந்தால் இப்பிறவியில் திருவடியின்பம் எளிதில் பெற்றிருக்கலாம். பண்டைப் பிறப்புக்களில் உண்மைப் பொருளை உணர்ந்து சாதனங்களை மேற் கொள்ளுவதற்கு உரிய அறிவு கைவரப் பெறவில்லை. ஆதலின் தம்மை மூர்க்கனேன் என்கிறார். அம்மட்டோ முத்தி நெறியறியாதவன் மூர்க்கன்-அவனோடுதலைப்பெய்ததன்னையும் “மூர்க்கன்” என்கிறார் அடிகளார். அன்றியும் உயிர்களால் என்றும் நினைத்தற்குரியவன் நிமலன். அவனை நினையாதவன் நீசன் - மூர்க்கன் ஆதலின் “முன்னாக நினையாத மூர்க்கனேன்” என்றும் திருவொன்றியூரில் சங்கிலியாரை மணந்திருந்தபோது திருவாரூர் நினைவுவர ஆரூர்ப்பெருமானை எண்ணி
முத்திணைமா மனிதன்னை வயிரத்தை மூர்க்கனேன் எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே’ என்று சுந்தரர் கூறினார். இருவரும் தம்மை - “மூர்க்கன்” என்பதற்குக் கூறும் காரணங்கள் ஒத்துள்ளன. சமயகுரவர்களாகிய ஆளுடைய அடிகளும், ஆளுடையநம்பியும் தமது தவற்றினை யுணர்ந்து நீங்கிப்போற்ற முற்படுவதை நம்மில் பலர் அறிந்து தவற்றிணை ஒர் இத்தலைவனைப் போற்றியுய்வோமாக அவர்கள் மேற்கொண்டு ஒழுகிய அகப்புற வழிபாடும் பிறவும் அதற்குச் சாதனங்கள் என அறிவோமாக.
செல்வர் வ. ச. சுப்பையா
நீநாளும் நினைகண்டாய் நல்நெஞ்சே
நல்நெஞ்சே உனையிரந்தேன்நம்பெருமான் திருவடியே உன்னஞ் செய்திரு”
- என்ற ஞானசம்பந்தர் வாக்குகளும் "வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுறநினைந்தவாறே” இராமேச்சுரத்தை நாடிவாழ் நெஞ்சமே நீ”
என்ற திருநாவுக்கரசர் வாக்குகளும் இதனை வலியுறுத்தும்.

Page 17
செல்வி. க. மட்/ செங்கலடி
செங்
பெறுதற்கு அரிய மானிடப் பிறவியைப் பெற்ற மனிதன் ஒழுக்க நெறிநின்று வாழாது வீணே காலத்தைப்போக்குகின்றான். தன்னை உணர்ந்து தலைவனை அறிதலே இவன் கடமையாகும். இதனையே வள்ளுவரும்“தவம் செய்வோர்தம் கருமம் செய்வோர்” என்று குறிப்பிடுகின்றார். மனிதனாகப் பிறந்து மனிதனாக வாழாதவனே இறைவனைப்பற்றியும் உருவ வழிபாட்டைப் பற்றியும் குறை கூற முற்படுகின்றான்.
மனிதர்க்கு ஐம்பொறிகளை அடக்கவும் மனதை ஒரு நிலைப்படுத்தவும் உருவ வழிபாடு உதவுகின்றது. உலக இன்பங்களிலே கிடந்து உழலும் ஒருவனை நன்னெறியில் வாழச்செய்வது ஆலயமும் உருவ வழிபாடுமாகும். இவ்வுருவ வழிபாடு இன்று நேற்று எழுந்ததல்ல, எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நமது சமய தத்துவ ஞானிகளால் ஆக்கப்பட்டதொன்றாகும். இதில் கலைஞானமும் தத்துவ ஞானங்களும் சேர்ந்திருப்பதை தெரியாதோரே குறைகூற முற்படுகின்றனர். இறைவனை அருவ உருவ அருவுருவத்திலும் அதற்கப்பாலும் கண்டவர் நம் முன்னோர்.
இறைவன் பல நாமம் உடையவனாக இருக்கின்றான். ஆதலாலேதான் எல்லா மதங்களும் அவன் ஒருவனையே பல நாமத்துடன் வாழ்த்துகின்றன. நமது இந்து சமயத்தை எடுத்து ஆராய்ந்தால் அதனுள்ளேயே பல பிரிவுகளும் பலவடிவ உருவங்களும் இருப்பதைக் காணலாம். ஒருநாமம் ஒரு உருவம் இல்லா இறைவனுக்குப் பல்லாயிரம் நாமங்கள் கூறுவதைக் காண்கின்றோம். இத்தனைக்கும் மூல காரணம் பக்தியின் தன்மையே. பக்தன் தான் விரும்பியவாறெல்லாம் இறைவனை வாழ்த்த முற்படுகின்றான். இறைவனின் உண்மைத் தத்துவங்களை வெவ்வேறு வழியிலே உருவத்திலே காணமுற்படுகின்றான். சுருக்கமாகக் கூறின் இறைவனின் வெவ்வேறு உண்மைத் தன்மையைப் பக்தன் அடைய விரும்புகின்றான் என்பது தெளிவாகின்றது. மற்றைய மதங்களும் ஒரு வழியில் வெவ்வேறு உருவில் வழிபடுவதை நன்கு அறியலாம்.
இந்து மதத்தினுள்ளே பல பிரிவுகளும் அதற்குரிய தெய்வ உருவங்களும் இருப்பதை நாம் நன்கு அறியலாம். யாம் சைவ சமயத்தினர். எமது தெய்வம் சிவன். இவர் பல வடிவமாகத் தோன்றி அடியார்களுக்கு அருள் புரிந்ததாக நம்முன்னோர் கூறி இருக்கின்றனர். சிவனின் உருவ வழிபாட்டிலே மான், மழு வேற்றியவராகவும் உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டுள்ளவராகவும் வலது இடது காலைத் தூக்கி ஆடும் நடராஜனாகவும் கையில் டமாரத்தையும் அக்கினியையும் கொண்டவராகவும் முயலகனைக் காலால் உதைத்தவராகவும் சுடலையில் நீறுபூசி ஆடுபவராகவும் புலித்தோல் உடுத்திய
 
 

காந்திமதி மத்திய கல்லூரி
கலழ
வராகவும் யானையுரி போர்த்தவராகவும் பாம்பைக் கையிலும் கழுத்திலும் ஆபரணமாக அணிந்தவராகவும் தலையில் கங்கையையும் சந்திரனையும் பூண்டவராகவும் எருதை வாகனமாகக் கொண்டவராகவும் இன்னும் பலவாகவும் குறித்து உருவங்களை அமைத்துள்ளனர். இத்தனை வேறுபாடுகள் ஏதோ உண்மைத் தத்துவங்கள் இல்லாமல் நம் முன்னோர் இதனை வகுத்தும் எழுதியும் பாடியும் இருப்பார்களா? அப்படிப் பாடிய பாடல்கள் இன்றுமுள்ளனவே.
ஏன் என்று சிந்திக்கின்றானா மனிதன். சைவ சமய உண்மைத் தத்துவங்களை யார் உணர்ந்தால் எம்மையாம் உணரக் கூடியவராவோம். இத்தகைய சிறப்பு வாய்ந்த உருவ வழிபாட்டை மனித நிலையில் நின்று எல்லாவற்றையும் நாம் அறிய முயல வேண்டும். மான் எவ்விதம்துள்ளிக் குதிக்கின்றதோ அதே மாதிரி மனிதனின் மனமும் நேரத்திற்கு நேரம் துள்ளிக் குதிப்பதாகவும் அத்தகைய மனதை அடக்க வேண்டியதே மனிதனுக்கு முதற் கண் உரியது என்பதைக் காட்டலும் இறைவனின் அருட்சக்தியால் எம் ஆணவ மலத்தை வெட்டி நீக்குவதைக் காட்டிலும் ஞான நிலையிலுள்ள ஆன்மாக்களை இறைவன் விரும்பித் தன்முடியில் வைத்திருப்பதை சந்திரன் குறிப்பிலும் உணர வேண்டியதே.
நடராஜனின் ஆனந்தக் கூத்து உலகம் இயங்குவதையும் ஐந்தொழில் புரிவதையும் ஐந்தெழுத்து நிலையையும் ஆணவத்தை நீக்குதலையும் மூச்சு இயங்குவதையும் நெற்றிக் கண்ணையும் காட்டி நிற்கின்றது. ஒரு குழந்தை பிறந்த உடனே மொழி பேசவோ உண்ணவோ நடக்கவோ முடியாத நிலையில் இருப்பது தெரிந்ததே. ஆனால் அக்குழந்தை காலம் செல்லச் செல்ல உண்ணவும் பேசவும் நடக்கவும் பயிற்சி பெறுதலை எடுத்துக்கூற வேண்டியதில்லை. மனிதன் ஆத்ம நிலைக்கு அதாவது அனுபூதி மானாக, ஞானியாக உயர வேண்டிய நிலை ஒன்றுண்டு. அவன் எந்நிலையை அடைவதற்கு இவ்வுருவ வழிபாடு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றதை உணர வேண்டும்.
மனிதன் காம குரோத லோப மத மாச்சரியம் என்கின்ற ஆசைவலைப்பட்டு அல்லலுறுகின்றான். இவன் தனது ஐம்புலன்களையும் அடக்கப் பழகுவானாகில் மனம் ஒருமைப்படுவதைக் காணுவான். ஐம்புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை உணரவே நம்முன்னோர் ஆலயத்தையும் உருவ வழிபாட்டையும் உண்டாக்கி இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகும். நமது சமய குரவர்கள் நால்வரும் பாடிய தேவார திருவாசகங்களில் இதனுண்மை தெளிவுறுகின்றது. கீழ் நிலையிலிருக்கும் ஒருவனுக்கு மேல் நிலையை அடைய வழி வகுப்பதும் விரும்பிய இறைவனின் குணங்களை அடைய முற்படச் செய்வதும் உருவ வழிபாட்டின் சிறப்பு என்பதை உணரலாம்.

Page 18
திருமதி. உ. சுரேந்தி யா/கோப்பாய் கி
கோ
"வினைப்பயனை வெல்லுவதற்கு வேதமுதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை”
என்பது ஒளவையின் அருள்வாக்கு. தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. காரணமின்றிக் காரியமில்லை என்பது பொதுவிதி. கன்மம் என்பது ஒருவன் ஆற்றுக்கின்ற செயலுக்கு ஏதோ ஒரு பலன் அமையப்பெரும் என்பதினை அடிப்படையாகக் கொண்டு இந்து மதத்தில் கன்மம் மறுபிறப்புக் கோட்பாடு கட்டி எழுதப்பட்டுள்ளது. கன்மமானது நல்வினை, தீவினை என இருவகைப்படும். அத்தோடு செயல், வினை, ஊழ் போன்ற பெயர்களாலும் சூட்டப்படும்.
இக்கன்மம் பற்றிய கருத்துக்களை நாம் வேதம், உபநிடதம், தர்ம சாஸ்திரம், திருமுறைகள், கொன்றை வேந்தன், ஆத்தி சூடி போன்ற நீதி நூல்கள் போன்றவற்றின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. இந்து மதத்தின் மூல நூல்களாக காணப்படும் வேதங்கள் கன்மம் பற்றிய கருத்துக்களை மறைபொருளாக எடுத்துக்காட்டி நிற்கின்றன.
வேதத்தின் ஆரம்பப்பகுதிகளில் கன்மம் பற்றிய தெளிவு காணப்படவில்லை ஆயினும் அதன் பிற்பகுதியில் இக்கோட்பாடு தெளிவுற விளக்கப்பட்டுள்ளது. நியதி, ஒழுங்கு, விரதம் போன்ற பொருள்களைச் சுட்டி நிற்கும் விதம் ஆனது இயற்கை ஒழுங்கினை சுட்டுவதாகவுள்ளது. இவ்வொழுக்கத்தின் பாதுகாவலனாக வருணன் சுட்டப்பட்டுள்ளான். இவன் பாவகாரியங்களை ஆற்றுபவர்களைத் தண்டிப்பவன் ஆகவும், பாவமன்னிப்பு கோருபவனை ஆதரிப்பவனாகவும் இருக்கு வேத சூக்தங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளான்.
வேதத்தில் அமைந்துள்ள ஜம சூக்தம்' எனும் பகுதியில் காணப்படும் சுத்தமான பூதங்களோடு செல்வாயாக என்பது கன்மத்தினை விளக்குவதாகவுள்ளது. அதாவது ஒர் ஆன்மா சொர்க்கம் நரகம் எனும் இரு உலகங்களில் தனது செயலுக்கு ஏற்ப ஒன்றை அடையலாம். இவ்வாறே வேள்விகள் பசுக்கள் போன்றவற்றின் விதிகளை எடுத்துக் காட்டும் பிராமணமும் வேள்விகள், யாகங்கள் போன்றவற்றினை ஆற்றுவதற்குரிய ஒழுக்கங்களையும், அவற்றினை ஆற்றுவதால் கிடைக்கும் பலாபலன்களையும் எடுத்துக்காட்டி செயலையும் பலனையும் விளக்கி நிற்கின்றன.
வேதங்களில் மறை பொருளாக நாட்டப்பட்டு இருந்த கன்மம் மறுபிறப்புக் கோட்பாடு பற்றிய கருத்துக்கள் வேதத்தின்
 
 

(6ossi B. A, Dip, Ed. றிஸ்தவக் கல்லூரி,
ւյլ յոան
அந்தமாகக் காணப்படுகின்ற உபநிடதங்களிலே தெளிவு பெறுகின்றது. பிருகதாரண்ய உபநிடதமானது 'ஒருவனது ஆசை எவ்வாறோ அவ்வாறு அவன் கருத்தாகும். கருத்து எப்படியோ அப்படியோ கருமஞ் செய்கின்றான், கன்மம் எப்படியோ அப்படியே அதனைப் பெறுகின்றான் எனக் கூறுகின்றது. மேலும் ஒருவன் எங்ங்னஞ் செய்கின்றானோ எங்ங்ணம் ஒழுகுகின்றானோ அங்ங்ணம் ஆகின்றான். நன்மை செய்பவன் நல்லவனாகின்றான். பாவம் செய்பவன் பாவியாகின்றான். புண்ணியம் செய்வதனால் புண்ணியனாயும் பாவம் செய்கையினாற் பாவியும் ஆகின்றான். இவ்வாறு கன்மத்தை செய்வதனால் அதனை அனுபவித்தற்காகவே இந்தக் கன்ம பூமியை அடைகின்றான்” என்று கூறுகின்றது.
நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பது நாம் எப்படி இருந்தோம் என்பதைப் பொறுத்தாகும். உனது இன்றைய நிலைக்கு நீயே பொறுப்பு மற்றவர்களைப்பழி தூற்றுவது தவறாகும் என்று கன்மக் கொள்கை வலியுறுத்தும். அதேபோல் இனி நாம் எப்படி இருப்போம், என்ன சூழ்நிலைக்களாவோம்' என்பதும் இன்று நாம் எப்படியுள்ளோம் என்ன சூழ்நிலையிலுள்ளோம் என்பதைப் பொறுத்ததாகும். நாம் செய்யும் செயல்கள் அப்போதைக்கப்போது அழிந்து விட்டாலும் அதன் பயன்கள் அழியாது அவை பாவ புண்ணியமாய் அருவமாய் இருக்கும். இத்தகைய புண்ணிய பாவங்கள் உயிர்களை எடுக்கின்ற ஒவ்வொரு பிறப்பிலும் சேர்ந்து குவிந்து விடுகின்றன. இதுவே புத்தி எனப்படும். ஆனால் தனக்குரிய புண்ணிய பாவம்தன் புத்திதத்துவத்திற்கு துணையாக தன்னோடு இருக்கிறது என்று எந்த உயிர்க்குமே தெரியாது. இத்தகைய வினைத் தொகுதியே சஞ்சிதம் என்று அழைக்கப்படும்.
இச்சஞ்சித கன்மமே ஒரு உயிர் உடலைப் பெறுவதற்குக் காரணமாய் அமைகின்றது. அதாவது தான் செய்யும் செயலுக்கு ஏற்பவே இப்பிறப்பு கிடைக்கின்றது. இதனையே உமாபதி சிவாச்சாரியார் தனது சிவப்பிரகாசத்தில் பின்வருமாறு விளக்குவர்.
"கன்ம நெறி திரிவிதநற் சாதியாயு போகக்
கடனதென வருமூன்று முயிரொன்றிக் கலத்தல் தொன் மையதா ழல்லதுணவாகா”
மேலும் கன்மம் பயன் தரும்முறையானது மூன்று வகைப்படும். அவை
1) ਲTਸੁੰ
2) ஆயுள்
3) போகம்

Page 19
என்பனவாகும். இவை மூன்று ஒர் ஆன்மாவில் கூடும் பழவினைகளாகும். ஊழ் அல்லாத எவையும் ஆன்மாவுக்கு அநுபவமாய் வராது. மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் ஆன்மாவிற்கு சுக துக்கங்களைக் கொடுக்கக்கூடிய கன்மங்கள் உண்டாகும். அவற்றில் மனத்தினால் ஏற்படும் புண்ணியங்களில் அருள், நினைவு, பொறை, பிறர் பொருள் விரும்பாமை, செய்நன்றி மறவாமை, அபிமானம் போன்றன. வாக்கினால் உண்டாவன புறங்கூறாமை, உண்மை பேசுதல் போன்றன. காயத்தினால் நந்தவனம், குளம், துவல் பள்ளி அமைத்தல் போன்ற புண்ணியங்கள் ஏற்படும்.
கன்மம் செய்கின்றவன் மனதினால் செய்ததை மனதாலும், வாக்கினால் செய்ததை வாக்கினாலும், உடலினால் செய்ததை உடலினாலும் அனுபவிப்பான் என்கின்றது தர்மசாஸ்திரம். அதாவது மனிதன் உடலினால் செய்த பாவத்தினால் அசையாப் பொருட்களாகவும், வாக்கினால் செய்த பாவத்தினால் பட்சி, மிருகம் போன்றனவாயும், மனதினால் செய்த பாவத்திற்காக மனிதர்களில் இழிந்த பிறப்புக்களை எடுப்பர் என்றும் கூடுகின்றது. மேலும் ஒர் உயிரானது பாவத்தினை சொற்ப அளவிலும் புண்ணியத்தை அதிக அளவிலும் செய்திருக்குமாயின் அதன் பூதசரீரம் சுவர்க்கத்தில் இன்பத்தை அனுபவிக்கும்.
ஆன்மாக்கள் கன்மத்தை அடைவதற்கும் இறைவனை பற்றுவதற்கும் காரணமானவை அத்துவாக்கள் என அழைக்கப்படும். அவை மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், Ց56060 எனும் ஆறாகும். இவற்றில் கலை, தத்துவம், புவனம் ஆகியவை திரவிய வடிவாயும் மந்திரம், பதம், வன்னம் என்பவை ஒலி வடிவாயும் அமைந்திருக்கும். இவை ஒன்றை ஒன்று பற்றி நிற்கும். இவற்றை முறைப்படி உச்சரித்தல் புண்ணியமாயும், உச்சரிக்கத் தவறுதல் பாவமாயும் கொள்ளப்படுகின்றது.
அடுத்து மாயையின் காரியங்கள் உயிர்களுக்கு நிலைக்களனாகிய உடம்பு தனு எனவும் உணர்வதற்குரிய கருவி கரணங்கள் எனவும் வாழ்க்கை நடத்தும் இடம் புவனம் எனவும் கன்மத்தின் காரியம் போகங்கள் எனவும் பேசப்படுகிறது. போகங்களே சுகதுக்கத்திற்கு காரணமாகும். கேவல நிலையில் உயிர்களின் அறிவை முழுமையாக ஆணவம் மறைத்து நிற்கும் கன்மம் சஞ்சிதமாய் பயன்தராது மாயையில் இருக்கும். சகல நிலையில் உலகத்தைப் படைக்கும் போது அனைத்தையும் ஒரு தன்மையாய் அல்லாமல் அவற்றை ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர், தேவர், முனிவர் என ஏழ்வகைப் பிறப்புக்களில் பல்வகை உடல்களையும் கருவி கரணங்களையும் படைத்தலின் அடிப்படை முற்பிறப்பில் அவை செய்த பயன்களின் அடிப்படையில் ஆகும். எனவே கன்மமே சரீரங்களுக்குக் காரணமாகும். இதனையே மணிவாசகர் புல்லாகிப் பூடாய், புழுவாய். எனக்குறிப்பிடுவர். உமாபதி சிவாச்சாரியாரோ இதனை மாயை வடிவாதி கன்மத்து வந்து” எனக் கூறுவர்.
செயல்களை செய்யும் போது அது ஆகாமியம் எனப்படும். சூக்குமமாய் காணப்படாததாய் பக்குவமாகும் வரைக்கும்
 

மாயையிலே கிடக்கும் பொழுது சஞ்சிதம் எனவும் இன்ப துன்பம் அனுபவமாகும்போது பிரார்த்தம் அனுபவிக்கும்போது முன் செய்த கன்மம் அழியும். ஆனால் அனுபவிக்கும் பொழுது அதற்குத் துணையாகச் செய்யும்முயற்சியால் பிறர்க்குச் செய்யும் நன்மையால் புதுவினை வந்து சேரும். இவ்வினை ஆகாமியம் எனப்படும். ஆகாமியம் சஞ்சிதத்துடன் சேர்ந்து கொள்ளும். இப்படி சஞ்சிதம் பிராரர்த்தமாக வந்து பிராரர்த்த அழிவில் ஆகாமியம் வந்தேறி பிரவாகம் போலத் தொடர்ச்சியாகத் தொன்று தொட்டு வருதலால் கன்மம் பிரவாகானாதி எனப்படும். பிரவாகானாதி இடையறாது ஒடும். நீர்ப்பெருக்குப் போலத்தொடர்ச்சியாகத் தொன்று தொட்டு வருதல் ஆகும். இம்மூவகை வினைக்கும் மூலம் கன்மம் உயிர்களின் அனாதி சிவசம்பந்தம்.
செய்யப்பட்ட செயல்கள் சுகதுக்கமாக அனுபவத்திற்கு வரும் முறையிலும் வேறுபாடுகள் உண்டு. திருஷ்ட ஜன்மோப போக்கிய கன்மம் என்பது இப்பிறப்பிலேயே செய்து இப்பிறப்பிலேயே அனுபவித்தலாகும். அதாவது இப்பிறப்பிலே செய்யப்படும் கொலை, களவுஎன்பவற்றிற்கு இம்மையிலேயே அரசினால் தண்டிக்கப்படுதல் இவ்வகை சாரும். அத்தோடு அறக்கொடிய பாவமும், மிக உயர்ந்த சிவபுண்ணியமும் செய்த பிறவியிலேயே துன்ப இன்பங்களை தருவதுடன் அதுமறுபிறவிக்கும் தொடரும் என்பர். பக்குவமின்மை காரணமாக அனுபவத்திற்கு வராது இன்ன காலத்திற்கு பக்குவமாகும் என்றும் இன்ன காலத்திற்கு அனுபவிப்பதற்கு வருமென்றும் சொல்லுதற்கு இடமின்றி நின்று காலாந்தரத்திற் பக்குவமுற்று ஏதேனும் ஒரு ஜன்மத்தில் அனுபவிப்பதற்கு வரவிருக்கும் கன்மம் அநியதகாலோப போக்கிய கன்மமாகும்.
சஞ்சிதமாய் உள்ள கன்மங்கள் எவ்வாறு பிராரர்த்துவ மாகின்றன என்பதும் நோக்கற்குரியது. அவ்வகையில் இவை எப்போதுமே அறிவற்ற ஜடமானபடியால் தாமாக வந்து பயனைத்தரா. உயிர்தானாகத் தெரிந்து இவற்றை எடுத்துக் கொள்ளுமோ என்றால் அதுவும் நடக்காத காரியம். ஏனெனில் வினைகள் உயிருக்குத் தெரியாமலேயே உயிரின் புத்தி தத்துவத்தில் பற்றுக் கோடாகக்கிடப்பன. அதனால் உயிருக்குதன் படிவினையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் ஆகி விடும். ஆனால் உயிர் தானாகவே எடுத்துக்கொள்வதனால் தனக்கு இதமானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ளும் எந்த உயிரும் தனியே இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவிப்பதில்லை. அவை இவற்றை மாறி மாறியே அனுபவிக்கின்றன. ஆதலால் தனது அனுபவத்துக்குரியதை உயிர் தானே எடுத்துக் கொள்ளும் என்பது ஒரு பொருத்தமற்ற விடயமாகும்.
உயிரோடு உடனாயும் ஒன்றாயும் வேறாயும் இருக்கும் இறைவன் சக்தி தான் உயிரின் வினைப்பயன்களை உயிரின் அனுபவத்திற்குக் கொடுக்கிறது என்பர். அது திரோதானம் எனப்படும். அதுவே உயிரின் வினைத் தொகுதியை அது அறியாதவாறு அதற்கு திரையை காண்பித்து அனுபவிக்க வைக்கிறது. இதனாலேயே நம் எல்லோருக்கும் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை அறியமுடியாமலும் நாம் நினைப்பதொன்று நடப்பது ஒன்றுமாய் உள்ளது. இதனையே ஒளவையார் தமது நல்வழியில்

Page 20
“ஒன்றை நினைக்கின்
அதுவொழிந்திட்டொன்றாகும்
அன்று யதுவரினும்
வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன் வந்து
நிற்பினும் நிற்கும்
எனையாளு சேன் செயல்”
எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரு உயிரின் பேரில் உள்ள பாவ புண்ணியங்களை அவற்றின் தரம் அறிந்து, அவை ஊட்டப்படவேண்டிய முறையறிந்த இறைவன் வகுத்த நியமம் என்று ஒன்று உள்ளது. இது நியதி எனப்படும். இது மாயையால் ஆக்கப்பட்ட தத்துவமாகும். கால தத்துவம் நியதி தத்துவம் என்ற இரண்டும் சேர்ந்தே வினைப்பயனை அனுபவிக்க வைக்கின்றன. காலமே உயிரின் கன்மத்தை கூட்டி விடுகிறது. இதனையே ஒளவை தனது வாக்குண்டானில்
அடுத்து முயன்றாலும் ஆகு நாளன்று எடுத்த கருமங்கள்ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா.
என்பர். நியதியானது கன்மத்தை வரைந்து அதன் பயனை ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அனுபவிக்க செய்யும். அதாவது ஒரு செய்த கன்மத்தின் பயன் வேறொருவரை அடையாமலும் அவரவர் செய்த கன்மத்தின் பயன் அவரவரையே விட்டு நீங்கா வண்ணம் கூடாமலும், குறையாமலும் பொருந்தச் செய்து விடும். இதனை வள்ளுவர்.
"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" எனக் குறிப்பிடுவர். இந்நியதியை ஆக்குவதும், நிர்வகிப்பதும், நடைமுறைப்படுத்துவதும் தெய்வ சித்தமே. அதனாலேயே உயிர்கள் வினைகளை ஈட்டிக் கொள்ள அவை புத்தி தத்துவத்தில் பதியப்படுகிறது. ஆயினும் உயிர் தான் விரும்பியதை அனுபவிக்க இயலாது. அவ்வற்றின் வினைத் தொகுதி வினைப் பயனைக் கொடுத்து “இதுவே உனக்கு இதனையே அனுபவி” என்று அதற்குரிய உடல்களையும் கருவி கரணங்களையும் கொடுத்து அவ்வுயிர்களின் ஊடே மறைந்து நின்று அதை அனுபவிக்கவும் செய்கிறது இந்த தெய்வ சக்தி. இச் சக்தியினையே சைவ சித்தாந்திகள் திரோதான சக்தி என்பர் எனவே பிரார்த்தம், நியதி, தெய்வ சக்தி. இம் மூன்றின் இணைவே அனுபவத்தின் இயக்கமாகும்.
கன்மமானது செய்த முறையில் அன்று பக்குவமான முறையில் பயன் தரும். அதனால் முன் செய்த வினைப்பயன் பின்னும், பின்செய்த வினைப்பயன் முன்னுமாக மாறிவரும். அது விவசாயி ஒருவன் தனதோட்டத்தில் கத்தரி, மிளகாய், வெண்டி, பயிற்றை போன்ற பயிர்களில் அவை செய்த முறையில் அல்லாமல் அதன் விளைவினை பெற்ற முறையில் முன் பின்னாக பயன்
 

தருதல் போல நல்வினையால் தீவினையும், தீவினையால் நல்வினையும் அழியமாட்டாது. எனினும் அவை அனுபவிக்கப்பட்டால் அழிந்து போய்விடும்.
அத்தோடு பிராரர்த்த கன்மம் அனுபவிக்கப்படும்பொழுது இச்சை, பரேச்சை, அநிச்சை என மூன்று விதமாகும். பிரார்த்து வத்தால் வரும் துன்பங்கள் ஆதி தெய் வீகத்தாலும், ஆதி பெளதீகத்தாலும் ஆதி ஆன்மீகங்களாகிய அசேதன, சேதனங்கள் வாயிலாகவும் வரும். இந்த வினைகள் உலகம், வைதீகம், ஆத்தி ஆன்மீகம், அதி மார்க்கம், மாந்திரம் என ஐவகைப்படும். இவை ஒன்றிற்கொன்று உயர்வுடையதாய் முறையே நிவிர்திகலை, பிரதிஷ்டாகலை, வித்தியா கலை, சாந்திகலை, சாந்தியாதீதகலை என்பவற்றில் அடங்கி அசுத்த போகம், மிச்சிரபோகம், சுத்த போகம் என்பவற்றைக் கொடுக்கும்.
பிராரர்த்துவ வினை நுகரும் காலத்து அதில் வைத்த விருப்புவெறுப்புக்களால் ஆகாமியம் உண்டாகும். நுகரும் காலத்து அவை ஊழின் பயனென்று உணராமல் நான் செய்கிறேன், நான் அனுபவிக்கின்றேன்' என்னும் முனைப்போடு விரும்பி வெறுத்து இதம் அகிதங்களைச் செய்தலால் நான் என்னும் முனைப்பின் பயனாய் ஆகாமியம் உண்டாகும். அவ்வினைகள் புத்தி பூர்வம், அபுத்திபூர்வம் என இரு வகைப்படும். அவை புத்திபூர்வ நல்வினை தீவினை, அபுத்தி பூர்வ நல்வினை தீவினை என மேலும் இரு வகைப்படும். இவை கன்மமாய் உயிருடன் பொருந்தியிருக்கும்.
கன்மங்கள் உயிரை எவ்வாறு வந்துபொருந்தும் என்பதை நோக்கிய நாம் இனி உயிரானது இக் கன்மச் சுழற்சியினின்று எவ்வாறு நீங்கி விட முடியும் என்பதை கவனிப்போம். இப்பிறவியில் உயிர் பிறந்திறந்து உடல் போக்குவரவு செய்து கொண்டிருப்பதுதானா உயிரின் கதி? இப்பிறவிச் சக்கரத்தில் நின்று விடுதலையே கிடையாதா? அதற்கு யாது செய்ய வேண்டும் என ஆராய்ந்து பார்த்தால் பிராரர்த்த கன்மம் அனுபவித்தே தீரவேண்டும் ஆகின் ஆகாமிய வினை வந்து சேராமல் இருக்க உயிருக்கு சுதந்திரமுண்டு. ஒருவர் செயலைச் செய்யும் பொழுது "நான் செய்கிறேன்" என்றுதன் நினைப்போடு செய்வதனால்தான் அது புத்திதத்துவத்தில் பதிவாகிறது. அதனை தன்னலப்பற்றின்றி இறை அர்ப்பணமாகச் செய்யும் பொழுது செயலின் விளைவு செய்தவரை பற்றாது இங்கு இறைவன் அச்செயலை செய்வதாக கருதுவோமானால் ஆகாமியம் வந்து சேராது.
மனதில் விருப்பு வெறுப்பு இருக்கும் வரையே பிரச்சனை. கன்மற் சுழற்சியில் இருந்து விடுபட முதலில் தீவினையில் வெறுப்பும் நல் வினையில் விருப்பும் கொள்ள வேண்டும். மற்ற உயிர்களுக்கு நன்மை செய்து வரும்பொழுது சிவனை நோக்கிச் சிவ புண்ணியம் செய்து வரல் வேண்டும். தீவினையைப் போலவே நல்வினையும் பந்தப்படுத்தும் என்பதை உணர்ந்து நல்வினை செய்வதில் உள்ள விருப்பத்தையும் விட்டுவிடல் வேண்டும். இவ்வாறு நல்வினை தீவினைகளில் விருப்பு வெறுப்பு இன்றிப் போதல் இருவினையொப்பு எனப்படும். இருவினையொப்பு ஏற்பட மலபரிபாகம் ஏற்படும். அதாவது திருவருளே குருவாக வருவதால் ஆணவத்தின் வலி குன்றும். இதனை உமாபதி சிவாச்சாரியார்,

Page 21
ஈட்டிய தவத்தினாலே
யிறையருளுருவாய் வந்து சூட்டிடு மிவற்றை நீக்கிக்
குரைகழல் குறுகுமாறே
எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மெய்கண்ட தேவர்,
ஐம்புல வேடரினயர்ந்தனை
வளர்த்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணந்தவிட் டன்னிய மின்மையி
ரைன்கழல் செலுமே என்பர். அதாவது உயிரானது பிறவி தோறும் ஈட்டி வந்த சிவ புண்ணிய விசேடத்தினால் இதுவரை காலமும் மறைந்து திரோதானமாக நின்று உயிருக்க உபகரித்து வந்த இறை சக்தி அருட் சக்தி குருவாய் வரும்.
சிவபுண்ணியங்களை சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வழியாக ஈட்டிக் கொள்ளப்படும். சரியையானது சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என இவை மேலும் நான்கு வகைப்படும். சரியையில் உபாயச் சரியை, உண்மைச் சரியை என இருவகையுண்டு. இவ்வாறு உபாயச் சரியை கிரியாதிகள்
/ー
செய்திக் குறிப்பு) س
யாழ் நகரில் சுவாமி விே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தம்பர் மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்றமும், யாழ். மத்திய கல்லூரி இந்து மாமன்றமும் அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கமும் இணைந்து கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதி சுவாமி விவேகானந்தர் ஜெனனதின விழாவை ஏற்பாடுசெய்து நடத்தியிருந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறைத் தலைவர் பேராசிரியர் ப. கோப்ாலகிருஷ்ணன், விவேகானந்தரின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில் "நற்போதனைகள் செய்து வழி காட்டிகளாக விளங்குவதற்கு வயது ஒரு கட்டுப்பாடல்ல. மூன்று வயதில் திருஞானசம்பந்தர் இறைபக்தியை ஊட்டும் தேவாரங்களைத் தந்தருளினார். ஆதிசங்கரர் முப்பத்திநான்கு ஆண்டுகளே உலகில் வாழ்ந்தாலும் பழமையும், பண்டைச்சிறப்புகளும், அளவிடற்கரிய தத்துவங்களைக் கொண்டதுமான இந்து சமயத்திற்குப் புத்தெளிச்சியூட்டினார். அவ்வாறே சுவாமி விவேகானந்தரும் முப்பத்தொன்பது ஆண்டுகளே இவ்வுலக வாழ்வைக் கொண்டவராக இருந்தாலும் உலக மக்கள் மத்தியிலே இந்து சமயத்தின் தத்துவங்களை, பெருமைகளை, பண்டைய சிறப்புக்களை எடுத்துரைத்து பேரெழுச்சியேற்படுத்தியதுடன் மனித குலம் நாடு, இனம், மொழி எல்லாம் கடந்த ஒரே குடும்பம், எல்லோரும் சகோதரர்கள், மனிதர் மத்தியில் பேதமில்லை என்ற இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாட்டை அமெரிக்க நாட்டின் சிக்காக்கோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டிலே எடுத்துரைத்து இந்து சமயத்திற்குப் பெருமை சேர்த்தார். எவ்வளவு காலம் வாழ்வது என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்வது என்பதே |முக்கியமென்பதை நாம் சம்பந்தர், சங்கரர், விவேகானந்தர் போன்ற பெரியோர்களின் வரலாற்றை அறிந்து தெளிய வேண்டும்" என்றார். யாழ். மத்திய கல்லூரி உப அதிபர்திரு.எல்.ஒங்காரமூர்த்தி ஞரவேற்புரையாற்றினார் மேற்படி கல்லூரி அதிபரும், கல்லூரி இந்து
 

பதினாறும், உண்மைச் சரியை கிரியாதிகள் பதினாறும் என முப்பத்திரண்டு வகை உண்டு. உபாயச் சரியை கிரியையில் இருந்தே உண்மைச் சரியை கிரியைக்கு உயிர் செல்கிறது. உண்மை நிலையை அடையும் போதே திருவருள் குருவாகும்.
சரியை நெறியைக் கடைப்பிடிப்பவர் குறைந்தது சமய தீட்சையை பெற்றவராய் இருக்கவேண்டும் சமய தீட்சை பெற்றவரே விசேடத் தீட்சை பெறத் தகுதி உடையவர். இத்தீட்சையினை பெற்றவரே சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று நெறிகளையும் அனுட்டிப்பதற்கு தகுதியாகின்றார். இதன் பின்பே நிர்வாண தீட்சையை பெறமுடியும்.
உயிர் இவ்வாறு குருவின்மூலம், நயன, பரிச, வாசக, மானச, சாத்திர, யோக, ஒளத்திரு முதலிய ஏழுவகைத் தீட்சை மூலம் பாசத்தை நீக்கும். இதில் பாசம் நீங்கி அதில் உள்ள கன்மம் மாயை என்பனவும் நீங்கி விடும்.
"எல்லையில் பிறவிநல்கு மிருவினையெரி சேர்வித்தின் ஒல்லையினகலு மேன்றவுடற்பழவினைகளுட்டு” குருவின் திருநோக்கம் புண்ணிய பாவ சஞ்சித வினையை வறுத்த வித்து போல் ஆக்கிவிடும். எனவே குரு வரவு உயிரின் விமோசனத்திற்கு அவசியம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே'
༽
கானந்தரின் ஜெனன விழா
மாமன்றக் காப்பாளருமான திரு. க - இராசதுரை தனது ஆரம்ப உரையில் "கடந்த மூன்றாண்டுகளாக அகில இலங்கை இந்து மாமன்றம், அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து யாழ். மத்திய கல்லூரி இந்து மன்றம் சுவாமி விவேகானந்தர் பிறந்த நன்னாளை சர்வ சமய சமரச தினமாகக் கொண்டாடுவதில் பெருமையடைகின்றது" என்று குறிப்பிட்டார்.
விழாவிற்குத் தலைமை வகித்த அகில இலங்கை இந்து மாமன்றத்துணைச்செயலாளர்திரு.த. மனோகரன்'ஏகன் அநேகன் இறைவன் என்ற திருவாசக அடியின்படி அநேக திருநாமங்களால் அழைக்கப்பட்டானும் இறைவன் ஒருவனே என்ற இந்து சமய அடிப்படைத் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய உத்தமர் சுவாமி விவேகானந்தருக்குவிழா எடுப்பதுடன்நின்றுவிடாது அவர் காட்டிய வழியில் தூயசிந்தனையுடன் ஒன்றுபட்டு உழைத்து நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்.
யாழ். தமிழ் கன்னியர் மட அதிபர் அருட் சகோதரி மேரி வில்பிரட் உரையாற்றிய போது சமயங்கள் வேறுபட்டாலும் அவை காட்டும் வழி ஒன்றே என்றும், மக்கள் யாவரும் இறைவனின் குழந்தைகள் என்பதை உணர்ந்து மனித குலம் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டால் உலகில் அமைதி நிலவும் என்றும் கூறினார்.
அருட்சகோதரன்ஜோதிநாதன் தனதுரையில் சமயங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஒவ்வொருவரும் கூறிக் கொண்டிருப்பது பயனற்றது. சமயங்கள் காட்டிய வழிகளில் நின்று ஒழுகுவதே உண்மையான சமயவாதியின் கடமை சமயப் போட்டிகளை மறந்து சகோதரத்துவ உணர்வை மேம்படுத்த உழைக்கவேண்டும் என்றார்.
யாழ். பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறை விரிவுரையாளர் திரு. கிருஷ்ணானந்த சர்மாவும் கலந்து கொண்ட இவ்விழாவின் இறுதியில் யாழ். மத்திய கல்லூரி இந்து மாமன்றப் பொறுப்பாசிரியர் ஞான. திருக்கேதீஸ்வரன் நன்றியுரையாற்றினார்.
W தகவல் - க. செந்தில்குமரன்)

Page 22
ஆறுமுகம் ஆசிரியர் கமு/உவெ ۔۔۔ ح^
மக்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தியே சமயம். இதன் முடிவான குறிக்கோள் மனித நேயத்தை வளர்ப்பதே. சமயங்கள் பல இருப்பினும் அவற்றுள் அகத்தே விளங்கும் ஒற்றுமையே முக்கியம். சமய புறவெளிப்பாடுகள் முக்கியமல்ல. இந்த சமரசமயக் கோட்பாட்டை முதலில் உணர்ந்து வெளிப்படுத்தியவர் இராமகிருஷ்ண பரமஹம்சர். சிக்காக்கோ சர்வமத மகா நாட்டின் மூலம் தெய்வீக வீரமுழக்கம் செய்து உலகெல்லாம் ஞான ஒளி பரப்பிய பெருமை சுவாமி விவேகானந்தரையே சாரும்.
சுவாமிகள் அமெரிக்காவிற்கு செல்லும் முன் திருவனந்தபுரம் தமிழ்நாட்டிற்கும் வருகை தந்தார். அமெரிக்கா - சிக்காக்கோ சர்வமத சபைக்குச் செல்லச் சிந்தனைகளைக் கூட்டிய காலம் அது. சென்னையில் சுவாமியின் உள்ளம் கவர்ந்த சீடர் அழகிய சிங்கம் பெருமாளும் இன்னும் சிலரும் வீடுதோறும் இரந்து சிக்காக்கோ பயணத்திற்காக நிதி திரட்டினர். சுவாமி விவேகானந்தர் அதனைப் பெறக் காலம் வரவில்லை என மறுத்துவிட்டார். பாஸ்கர சேதுபதியவர்களும் சுவாமியை அன்போடு வரவேற்று உபசரித்தார். இவரும் சிக்காக்கோ பயணச் செலவுக்குப் பணம் தரச் சித்தமானபோது சுவாமி அதை ஏற்கவில்லை. இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதியவர்கள் சுவாமியின் மீது பற்றும் பக்தியும் வைத்திருந்ததோடு சிக்காக்கா பயணத்திற்கு தூண்டு கோலாகவும் விளங்கினார்.
சிக்காக்கோ மகாநாடுமுடிந்தபின் தாய்நாட்டிற்கு வருகை தரும் வழியில் இலங்கைக்கும் விஜயம் செய்தபின் தமிழ்நாட்டில் 1897ம் ஆண்டு தைத் திங்கள் 27ம் திகதி தனது திருப்பாதத்தைப் பதித்தார். பாம்பன் துறைமுகத்தில் இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி தமது குழுவினரோடு வந்து வணங்கினார்.
சுவாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வருைைகயைக் குறித்து நாற்பது அடி உயரத்தில் வெற்றித் தூண் ஒன்றைப் பாஸ்கர சேதுபதியவர்கள் நிறுவினார்கள். இராமநாதபுரத்தில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் “வெற்றி
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத்தறிந்த குறள்.
- இடைக்காடர்)
 
 
 
 
 
 
 

மதியழகன் (பி. ஏ.)
ஸ்லி உயர்தர பாடசாலை, கல்முனை.
இராமநாதபுரம், பரமகுடி மனாமதுரை, மதுரை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இந்து சமயத்தின் தனித் தன்மையை உலகளாவிய வேதாந்த சமயத்தின் மேன்மை சுவாமிகளால் எடுத்துரைக்கப்பட்டதன் வாயிலாக இந்து மக்கள் பெரும் பெருமிதம் அடைந்தனர்.
கும்பகோணத்தில் பேசும்போது “உலகின் விளங்கிக் கொள்ள முடியாத ரகசியங்களை ஊடுருவிப் பார்க்க வேண்டுமென்றால் மனவாற்றல் நமக்குத் தேவை” என்றார்.
1897ம் ஆண்டு மாசி மாதம் 6ம் திகதி சென்னை நகர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அங்கும் பக்தி மிகுந்த வரவேற்பும் உபசாரமும் கிடைத்தது.
8ம் திகதி விக்டோரியா பொது மண்டபத்தில் வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. சென்னைநகர் பேருரைகள் பொதுவாக சுவாமிஜியின் ஆன்மீகக் கண்ணோட்டம், தேசியக் கண்ணோட்டிழ் சமூக சீர்திருத்தக் கண்ணோட்டம் ஆகியவற்றின் பரிமாணங்களாக விளங்கின. “எனது போர்முறை', "வேதாந்தமும் இந்திய வாழ்க்கையும்”, “இந்தியப் பெரியார்கள்”, “வருங்கால இந்தியா” என்பன அவரது பேருரைத் தலைப்புக்களுள் சில. நூல்கள் சிலவும் வெளியிடப்பட்டன. கொழும்பு முதல் அல்மோரா GIGOTuSlso "The only authorised edition" 6Tsiru60T 96 libpair fa). சுவாமியின் சொற்பொழிவுகள் மொழிபெயர்க்கப்பட்டு ஞானத்திரட்டு என்ற நூலும் “லோகோபகாரி” என்ற மாத சஞ்சிகையும் வெளிவந்தன. பூரீமத் சுவாமி விவேகானந்த சுவாமிகள் கோத்திரமாலை என்ற கவிதை நூலை சின்னைய முதலியார் இயற்றினார்.
தமிழ்நாடெங்கும் சாதி, மத, பேதமகற்றி தீண்டாமை அகற்றி அருள் பாலித்தார் வீரபுருஷர் சுவாமி விவேகானந்தர். இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திலே என்னையும் சுவாமிகள் பற்றியும் சிந்திக்கச் சந்தர்ப்பம் அளித்தது ஆவர் பேரருளே என ம்புகின்றேன்.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்.

Page 23
விஞ்ஞானத்தை ලෝපීන திருத்தா ÖRS GuoJ. d (பேராதனைப் பல்கலைக் நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
பாதியா பொன்றாகியிரண்டாய் மூன்றாய்ப் பரமானுவாய்ப் பழுத்த பண்களாகிச் சோதியாயிருளாகிச் சுவைகளாகிச் சுவை கலந்த அப்பாலாய் விடாய் வீட்டின் ஆதியாய் அந்தமாய் நின்றான் தன்னை ஆரூரிற் கண்டடியேன் அயந்தவாறே
- திருத்தாண்டகம் -
திருநாவுக்கரசரின் ஆறாந் திருமுறையிலே அமைந்து விளங்குகின்றது இத்திருத்தாண்டகம். இவ்வாறாந்திருமுறை முழுவதும் தாண்டக யாப்பினால் அமைக்கப்பெற்றது. இதனாலே அப்பர் சுவாமியவர்கள் “தாண்டக வேந்தன்” என்ற சிறப்புப் பெயராலே அழைக்கப்படுகின்றார்.
இவர் இவ்வுலக பொருள் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நோக்க, பொருள் ஒன்றுதான் மூலம், பிறரால் அறிவிக்க அறியும் நிலையில்லாத அறிவுடையதாய், அதே சமயத்தில் பிற எல்லாப்பொருள்களும் தம்மையின்றி அறிவைப் பெறமுடியாததாய் அமைந்த பொருள்தான் மூலப்பொருள். முதன்மைப் பொருள் எனக்கொண்டு அப்பரம் பொருளையே கோயில் கொண்ட மூர்த்தியாக கண்டு வழிபட்டார்.
அவ்வகையிலே திருவாரூர் திருப்பதிகத்திலே பாடப்பட்ட இப்பாசுரத்தின் உட்பொருளை நோக்கின் இச்சடவுலகையும் அதனுள்ளே உயிர் வாழும் தங்கி சகல ஜீவராசிகளையும் நீதிபரிபாலனம் செய்பவனாகவும், நிலம், நெருப்பு நீர், ஆகாயம், காற்று எனப்படும் பஞ்சபூதங்களையும் தனது கட்டளைப்படி ஒழுங்குபடுத்துபவனாக அதாவது வன்மை முதலிய பண்புகளையும், பொறுத்தல் முதலிய தொழில்களையும் செய்பவனாக எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாக பரமசிவமாக, சிவனும் சக்தியுமாக, அரன், மால், அயன் என்ற மும்மூர்த்திகளாகவும் அணுவுக்கு அணுவாகவும், ஏழிசையும் செவ்வனம் நிரம்பிய பண்களனைத்தாகவும், சகலதையும் அறியும் அறிவாயும் அறியாமையைச் செய்யும் மலத்தின் ஆற்றலையும் அச்செயலைச் செய்யுமாறு தூண்டி அதன்வழி நிற்றலின், "இருளாய்” என்று அருளியுள்ளார். மேலும் உலகில் உள்ள அறுஞ் சுவைகளாகி, அச்சுவை கலந்த தன்மையுடைய பாலாகி ஞானமாகிய வீடாகி, ஞானத்தின் அந்தமாகிய பயனாகி நிற்பவனைத் திருவாரூரிலே கண்டு கொண்டேன் என்பதே இப்பாடலின் உட் கிடை. உலகத்திலுள்ள சகலதுமாக அதாவது உலகை இயக்கும் சக்தியாக அப்பர் சுவாமிகள் அன்று கண்டுகொண்ட இப்பதியினை இன்று விஞ்சிநிற்கும் விஞ்ஞானமும் சிந்தித்தே நிற்கின்றது.
 

5 விஞ்சி நிற்கும் ண்டகபம் வானி G2)
கழக வெளிவரித் துறை) CVVN)
இவ்வுலகத் தோற்றம், பிரபஞ்சத் தோற்றம், பூமியைச் சுற்றிக் காணப்படும் மற்றைய கோள் தொகுதிகள் பற்றி ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகளே இப்பிரபஞ்சத்தில் வேறோர் சக்தியும் தொழில்பட்டு வருகின்றது எனக் கருதுகின்றனர். இதற்கு உதாரணமாகப் பிரித்தானிய நாட்டுப் பேராசிரியரான "ஸ்மார்ட்” பூமியின் தோற்றம் என்ற நூலில் “எல்லோருக்கும், விஞ்ஞானிகளுக்கும், விஞ்ஞானியல்லாதவர்களுக்கும் தெய்வீக படைப்பாளி ஒருவனிடத்தில் முன்பு எவ்வளவு நம்பிக்கை இருந்ததோ அதேபோல் இப்பொழுதும் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளமையை நோக்கலாம்.
இப்பரந்த அண்டவெளியிலே எல்லாம் ஒரு நெறியைப் பின்பற்றிச் சுழல்கின்றன. ஓரணுவும் இவ்வண்டத்தில் இயக்கமற்று இருப்பதில்லை. அணுக்குள் இயங்கும் சிற்றணுக்களும் சுழன்று கொண்டே இவ்வண்டத்தை இயக்கி வருகின்றன, என எல்லாம் ஆராய்ந்து வரும் விஞ்ஞான ஆய்வுகள் யாவும் ஆராய்பவனைக் கணக்கிலெடுக்காமல், தனியே ஆராயப்படுகின்ற பொருளை மட்டுமே ஆராய்ந்து வந்துள்ளன. ஆனால் ஜன்ஸ்ரீன் காலமும், இடமும் பொருள்களல்ல. காண்பவனின் மனக்குறிப்புகளே காலம், இடம் எனப்படுகின்ற பொருள்களில் உள்ள பொருள்கள் என்கிறார். எனவே ஆராய்விற் காண்பானைத் தழுவாது, ஆராய்வது தவறு என்றும், கண்பானும் காட்சிப் பொருளுமாய் இயைந்து காண்பதே முறைமையாம் என்கிறார். உதாரணமாக ஓரணுவில் இயங்கியும், இயங்காததுமான தன்மைகளை நோக்கியறிவது பார்க்கிறவனின் சார்பு நிலையிற் தங்கியிருக்கிறதென்பதும் சார்புநிலை கெட்டான் தான் அணு இயங்கியும் இயங்காததுமான இருநிலைகளில் அதன் நியதி இருக்கிறது என்ற உண்மையைப் புரிவான் என்கிறார். எனவே ஜன்ஸ்ரின் தனது விஞ்ஞான ஆய்வுக்கப்பாலான, புரிந்து கொள்ள முடியாத சக்தியைப் பற்றிச் சிந்தித்து இருக்கின்றார் என்பது புரிகின்றது.
எனவே திருநாவுக்கரசர் திருவாயால் அனுபவ மொழிகளாக உதிர்ந்த திருப்பதிகங்களில் மேல்கூறப்பட்ட - திருத்தாண்டகம் இன்று விஞ்ஞானிகளின் ஆய்வுக்கும் மேற்பட்டது. அன்றே அவர் அனைத்துப் பொருள்களுக்கும் மூலமாய், கருவாய் நின்ற பொருள் ஒன்றே. அது ஏனைய பொருள்களுக்கெல்லாம் அறிவுணர்த்தும் நிலை பெற்ற தைைலமைப் பொருள். அதுவே இறைவன் என தன் கண்டு வழிபட்டமை வியக்கத்தக்கதல்ல,
த்த்க்கதே.

Page 24
செல்வி. கிருஷ்ணவே ஆசிரிய ஆலோசகர்(ச
"பண்ணும் பத மேழும் பலவோசைத் தமிழவையும் உண்ணின்றதோர் சுவையுமுறு தாளத்தொலிபலவும் மண்ணும் புனலுயிரும் வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும் முழு தானானிடம் விழிம் மிழலையே”
இது திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் அருள் வாக்கு. இசையும் இறைவனும் பாலுடன் கலந்த நெய் போல பிரிக்க முடியாதுள்ளது என்பது ஆன்றோர் கருத்து. “இறைவனையடைய இலகுவான வழி இசையே” என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலங்கை மன்னன் இராவணேஸ்வரன் இசைபாடிக் கயிலாய மலையையே பெயர்த்தான் என்பதை இதிகாச வாயிலாக அறிய முடிகின்றது.
ஆலயம் என்பது ஆன்மாக்கள் லயப்படும் இடமாகும். எனவே ஆன்மாக்களை இசை மூலம் நல்வழிப்படுத்தி இறைவனை அடையச் செய்வதில் ஆலயங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பெரும் பங்காற்றி வருகின்றன.
சிந்து வெளி அகழ்வாராய்ச்சியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளிற் பல இசை வாத்தியங்களுடன் காணப்படுகின்றன. இவை ஆதி காலத்திலேயே மக்கள் இசை மூலம் வழிபட்டனர் என்பதற்குச் சான்றாகும். இந்து மதத்தில் மட்டுமன்றி எல்லா மதங்களும் ஆன்மீக நெறியில் முதிர்வடையவும் இறைவனையடையவும் இசையையே கைக் கொள்ளுகின்றனர். அவ்விசை ஆன்மீக சிந்தனையை ஊட்ட வல்லதாக அமைய வேண்டும். களியாட்டங்களில் காணப்படும் இசை ஆன்மாவை பக்தி மார்க்கத்துக்கு இழுத்துச் செல்லமாட்டாது. தமிழிசை, பண்ணிசை, கர்நாடக இசை என்பன தெய்வீக இசையாக அமைகின்றது.
நாம் தூரத்திலே வரும் பொழுது வானுயர ஓங்கிநிற்கும் கோபுரம் எம்மை வரவேற்கிறது. இது எமக்கு இறையுணர்வை யூட்டுகின்றது. இக் கோபுரத்தின் அமைப்பை நோக்கினால் இராகங்களின் ஆரோகண அவரோகணத்தை எம்முன் நிறுத்துகின்றது. கோபுரத்தின் சிற்பத்தில் இசைக்கருவிகள் காணப்படுகின்றன. நாம் உட்செல்லும் பெரும் வாயில் ஒன்று அதற்கு மேலாக 5, 6, 7 எனச் சிறு வாயில்கள். இவை கோவில்களுக்குக் கோவில் வேறுபடுகின்றன. 7 ஸ்வரங்கள் கொண்ட இராகங்கள் சம்பூர்ண இராகளையும், 6 ஸ்வரங்கள் கொண்டவை ஷாடவ இராகங்களையும், 5 ஸ்வரங்கள் கொண்டவை ஒளடவ இராகங்களையும் குறிக்கின்றன. ஷட்ஜம் ஆதாரமாக இருப்பதுபோல மூல வாயில் அமைந்துள்ளதைக் காணலாம்.
ஆலயத்தினுள் இறை விக்கிரங்களை நோக்கினால் சிவனின் கையில் உடுக்கு, கண்ணனின் கையில் வேய்ங்குழல், சரஸ்வதியின் கையில் வீணை என்னும் இசைக் கருவிகள் காணப்படுகின்றன. பூசை நேரத்தின்போது மணி, சேமக்கலம், சங்கு, பேரிகை, முரசு என்னும் வாத்தியங்கள் இசைக் கப்படுகின்றன. பூசைக் காலத்தின்போது தேவார பாராயணம் நடைபெறுகின்றது. பஞ்ச புராணம் ஒதப்படுகின்றது. இன்னும் விஷேட காலங்களில் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்ப்ாவை,
 
 

ணி மயில்வாகனம்
ங்கிதம்) யாழ். வலயம்
தேவிதோத்திரம், அபிராமியந்தாதிப் பாடல்கள், சகலகலா வல்லி மாலை என்பன பாடப்படுகின்றன. இசையோடு இறைவனை வழிபடும் பொழுது இறைவனுடன் நாம் ஒன்றித்துவிடும் உணர் வினைப் பெறுகின்றோம்.
உற்சவ காலங்களில் ஆலயக் கொடியேற்றத்தின் பொழுதும் கொடியிறக்கத்தின் பொழுதும் நவசந்திகளிலும் நவசந்திப் பண்கள் பாடப்படுகின்றன.
சுவாமி வீதி உலாவின் பொழுது கொம்பு வாத்தியம் இசைக்கப்படுகின்றது. நாதஸ்வரத்தில் மல்லாரி வாசிக்கப் படுகின்றது. அதற்குத் தகுந்தாற்போல் பஞ்ச நடைகளிலும் தாளலய வேலைப்பாடுகள் தவிலில் வாசிக்கப்படுகின்றன. திருவூஞ்சலின் போது ஊஞ்சற் பாக்கள் பாடப்படுகின்றன. சுவாமி உலா வரும் பொழுது சுவாமிக்குப் பின்னால் பஜனை நிகழ்த்தப்படுகின்றது. இங்கு தேவாரப்பாக்கள், பக்திப்பாடல்கள் இறைவனை இறைஞ்சிப் பாடப்படுகின்றன.
இன்னும் திருவிழாக் காலங்களில் இசைக்கச்சேரிகள், சங்கீத உபநியாசம் என்பன ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இவை கர்நாடக இசையைத் தழுவியவையாகவோ, பண்ணிசையாகவோ அமைகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காணப்படும் இசைத்தூண்கள், ஆலயங்கள் இசையுடன் இணைந்துள்ளமையை உணர்த்துவதாக உள்ளது.
சம்பந்தருக்குச் சிவபெருமான் பொற்றாளம் வழங்கிய சரிதையிலிருந்து இறைவன் இசையுடனும் லயத்துடனும் பாடும் பாடலில் லயித்துவிடுகிறான் என்பது தெளிவாகிறது. ஆலயங்கள் தத்தமக்கென ஒதுவார்களை நியமித்து அவர்களுக்குமானியங்கள் வழங்கி வந்தமையை அறியமுடிகிறது.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரச நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்போர் தேவார இசையாலும் மணிவாசகர் திருவாசகத்தேனமுதாலும், அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாமாலைகளினாலும் இறைவனைப் போற்றி வழிபட்டு உயர் நிலை யெய்தினர். அவர்களைப் பின்பற்றிப் பிற்காலத்திய அடியவர்களும் இறைவனை அடைய இசையை ஊடகமாகப் பிரயோகித்துள்ளனர். அபிராமிப்பட்டர் அபிராமியந்தாதி பாடி இறைவியைத் தனக்குத் துணையாக்கினார். இவ்வாறு இறைவனை இசை மூலம் அடைந்தவர் பெருந்தொகையானோர். இவர்களெல்லாரும் தமது சாதனைகளை நிலைநாட்டியதற்கு நிலைக்களமாக விளங்கியது ஆலயங்களே.
ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சி புரிந்த காலத்தில் இசை வளர்ச்சி குன்றியது மட்டுமன்றி அழியும் நிலையிலிருந்தது. இக்கால கட்டத்தில் ஆலயங்களில் நாதஸ்வரம், தவில் என்பனவும் ஒதுவார்களுமே பாதுகாத்து வளர்ந்து வந்தனர்.
எனவே ஆலயங்களே இசையைப் பாதுகாத்து வளர்த்து வந்துள்ளன. இசையே இறைவனையடைய, ஆலயங்கள் மூலமாகத் துணை புரிந்துள்ளன என்பதையறிய முடிகின்றது.

Page 25
ீணவர் ஒளி)இது மாணவர்களுக்கான பக்க
TOLU G OG GODIOI I
செல்வி. சுப
<级° tun/2-6afli உடல் அழுக்கை நீக்க நாம் நாள் தோறும் பல்துலக்கி, வாய்கழுவி, குளிக்கின்றோம். தலை வாருகின்றோம். அத்துடன் தோய்த்த, அழுக்ககற்றிய உடைகளை அணிகின்றோம். உடலில் ஏற்பட்ட நோய்களைப் போக்க மருந்து உட்கொள்கின்றோம். உடலுக்குத் தேவையான ஊட்டம் பெற உரிய உணவை, பானத்தை உட்கொள்கின்றோம். உடலைப் பாதுகாக்க ஏற்ற உடைகளை அணிகின்றோம். இவையாவும்நாம் நமதுஉடலைப்பேன, சுத்தமாக, திடமாக வைத்திருக்க மேற்கொள்ளும் செயற்பாடுகளாகும்.
இவற்றில் நாம் உரிய முறையில் கவனம் செலுத்தாது விட்டால் உடல் நலம் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் உள்ளமும் பாதிக்கப்படும்.
உடல் நலனை மட்டும் பேணுவதால் ஒரு பயனும் மனிதனாகப்பிறந்த ஒருவனுக்கில்லை. உள்ளத்தில் நிம்மதி மகிழ்ச்சி நிலவவேண்டும். அப்போதுதான் மனிதன் மனிதனாக வாழலாம்.
உள்ளத்தில் நிம்மதி பேண என்னவழி என்று சிந்திப்போமானால் சமயவழி நின்று ஒழுகும் ஆன்மீக வழியே சிறந்ததாக விளங்குகின்றது.
சமய நெறிகள் காட்டும் வழிகள் மனதில் அன்பு, கருணை, பண்பு, ஒழுக்கம் போன்ற உயரிய உணர்வுகளைப் பதிப்பனவாகும். சமய வழிமுறைகள் கைக்கொள்ளப்பட்டால் நாம் நாளாந்தம் எதிர் நோக்கும்பல வேதனைகளிலிருந்து மீளலாம்.
“எல்லாம் அவன் செயல்” என்று இறைவன் திருவடியை நம்பிக்கையுடன் தொழுது, சரணடைவதே சமய முடிவாக அமைகின்றது.
காலையில் துயில் எழுவது முதல் இரவு துயில் கொள்ளச் செல்வதுவரை நமது ஒவ்வொரு செயலும் சமயவழி சார்ந்ததாயமைவது சிறப்புடையது. இறை சிந்தனையுடன் எழுந்து அதே சிந்தனையுடன் துயிலச் செல்லும் போது அந்தப் பரம் பொருளின் அருளலே எல்லாம் நன்மையாக நடைபெறும். என் செயலாவது யாதொன்றுமில்லை. எல்லாம் அவன் செயலே என்று நமது செயல்களையெல்லாம் இறைவன் நல்வழியில் நடத்தும் செயல்களகக் கொள்ள வேண்டும்.
சமய வழிநிற்கும்போது தீய எண்ணங்கள் மனதில் எழமாட்டாது. பஞ்சமாபாதகங்கள் என்று ஒதுக்கப்பட்ட தீய செயல்களைத் தூண்டும் சிந்தனைகள் நெருங்கமாட்டாது. உள்ளம் நல்லவற்றையே சிந்திக்கும். செயல்களும் நல்லவைகளாகவே அமையும்.
 
 

1. மாணவர்களிடமிருந்து ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
பழி பேணி
560Urín வினி பூணூரீகரன்
ண்டு - 8 மகளிர் கல்லூரி
சமய வாழ்வு வீட்டிலிருந்தே தொடங்குகின்றது. காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து இறைவனைத் தொழுது, நமது நாளாந்தப்பணிகளைத் தொடங்குவது நாம் கைக் கொள்ளும் முறைமை.
மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று முதலில் இறைவழிபாடு செய்தே தமது கல்வியைத் தொடங்குகின்றனர். அதுபோன்றே ஒவ்வொரு தொழில் செய்வோரும் இறைவனை நினைத்தே தொடங்க வேண்டும் "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற கூற்றிற்கமைய நேர்மையாகப் பணியாற்ற இறைநம்பிக்கை உதவும் செய் தொழிலும் மேன்மையடையும்.
நவராத்திரிப் பூசைகள் நமது அன்றாடப் பணிகளுக்குத் தெய்வீக உணர்வை வழங்குவதைக் கவனத்திற்கொள்ளவேண்டும்.
விரதங்கள், விசேட தினங்கள் என்பன சமய வழியில் எம்மைச் சிந்தித்துச் செயற்படச் செய்கின்றன. உள்ளத்தில் இறை நம்பிக்கையை ஊட்டுகின்றன. உள்ளத்தையும், உடலையும் தூய்மைப்படுத்துகின்றன.
“கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது முதுமொழி. ஏன் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை நோக்க வேண்டும். இறைவன் உறையும் திருக்கோயில்களில் நித்திய, நைமித்திய பூசைகள், விழாக்கள் நடைபெறுகின்றன. நாம் கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே மேற்படி முதுமொழியாகும்.
கோயில்களுக்குச் சென்று வழிபடும் போது மனம் ஒரே நிலையில் புனிதமான சூழ்நிலையில், பக்தியுணர்வு கொண்டதாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மனம் அமைதியுறும். இறைநம்பிக்கை மேன்மையடைவதால் தன்நம்பிக்கை உண்டாகும். உணர்வுகள் சிறப்படையச், செய்வனயாவும் மேன்மையடையும்.
சமயவழி நின்று செயலாற்றும் போதுதான், தருமங்கள் செய்ய உள்ளம் உந்தப்படும். அன்பும், பண்பும் ஊற்றெடுக்கும். இவ்வாறு நல்லன வெல்லாம் நம்மை நாடி வரும்.
மூத்தோரை, அறிவு நிறைந்தவர்களை, பண்பில் முதிர்ந்தவர்களைப் போற்றவும், எல்லோர் மீதும் கருணை பாராட்டவும், உதவி செய்யவும், நல்லவர் என்ற பெயரெடுக்கவும், வாழ்வில் உயரவும் சமயவழிநின்றுவாழ்வது எமக்கு உறுதுணையாக அமையும்.
எனவே, நாம் எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த, எம்மைப்படைத்த இறைவன் திருவடிகளை மனதில் இருத்தி சமயம் காட்டும் சீரிய வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

Page 26
செல்வி. கார்த்திக ஆண்டு 12 (க கொ/இராமநாதன் இ
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் இணையடிக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிற மலருமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
என்ற விபுலானந்தரின் வரிகள் எமக்கு மனித மனத்தின் உயர்வை எடுத்து காட்டுகின்றன. என்றும் எம்மை ஆளும் இறைவன் வேண்டும் இந்த உள்ளக் கமலத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது எம் கடமை அல்லவா?
இறைவன் வேண்டும் உள்ளத்தை நாம் எவ்வாறு கமலமாக வைத்திருப்பது என்று பின்வருமாறு திருவள்ளுவரும் கூறியுள்ளார்:
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால்கள்வேம் எனல்"
எம்மனத்தின் தன்மையை நாம் அறிவது அவசியம். இந்தக் குரங்கு போன்ற மனத்தால் பிறர் பொருளைத் திருட நினைப்பதே தீதாகும். ஆகையால் அப்பொருளை வஞ்சித்துக் கொள்ள ஒருநாளும் முயலாதே! என்று மனித மனம் பற்றி பொய்யா மொழிப்புலவர் கூறியது நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று. இதிலிருந்து எம் மனத்தை எவ்வளவு தூரம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது புலப்படுகின்றதல்லவா?
“பொய் சொல்லக் கூடாது பாப்பா”, “உண்மையே பேசி உத்தமனாய் வாழ்” என்னும் பொன்மொழிகள் எமது வழிகாட்டிகள் ஆகும். எம் உள்ளத்தின் பிரதிபலிப்பே எம் வார்த்தைகளும் செயல்களும். ஆகையால் உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினிலும் செயலினிலும் ஒளிஉண்டாகும். இந்த உண்மையொளியால் பள்ளத்தில் விழுந்திருந்த குருடரெல்லாம் விழிபெற்றுப் பார்வை கொள்வர் என்று பாரதி உண்மையின் வன்மையை கூறியது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பாரதி கூறுவது யாதெனில் நேர்மை, உண்மை, அன்பு போன்ற உயர்ந்த குணங்களே மனித வாழ்வுக்கும், உயர்வுக்கும் அவசியம் என்பதை உணர்ந்தால் துன்பக் குழியில் வாடும் மக்களும் மீண்டுவிடுவார்கள் என்பதுதான்.
உலகம் போற்றும்படி வாழ்ந்த உத்தமர் பலரும் உள்ளத் தூய்மையை வலியுறுத்தி உள்ளனர். இவை வெறும் பேச்சோடும் எழுத்தோடும் இருந்துவிடாது ஒவ்வொருவரது இலட்சியமாக மாற வேண்டும். இவ்வுறுதிமொழியே எம் நல்வாழ்வில் அடிக்கல் என்பதை மறக்கக் கூடாது. எம் வாழ் நாளில் இறைவன் திருவடிக்குச் சமர்ப்பிக்கும் விலைமதிப்பற்ற காணிக்கையும் இத் தூய உள்ளமே ஆகும்.
 
 
 

சிவகுருநாதன் கணிதப் பிரிவு) ந்து மகளிர் கல்லூரி
ஒருமையுடன்நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்
தம் உறவு வேண்டும் உள்ளென்று வைத்துபுறம் ஒன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும்
என்றுவள்ளலார் கூறியதைச் சற்று எண்ணிப்பார்ப்போம். மேற்படி வரிகள் மூலம் நாம் ஏற்படுத்தும் உறவு மனதை ஒருநிலைப்படுத்தி இறை திருவடி தொழுபவர்களுடன் இருப்பது சிறந்தது என்றும், மனமதில் ஒன்று வைத்து பிரிதொன்று பேசுவோர் உறவு களையப்பட வேண்டியது என்றும் நல்வழிகாட்டியுள்ளார்.
மனச் சுத்தமே மனித வாழ்வின் சிறப்பு ஒருவன் கள்ளம், கபடமற்ற உள்ளம் கொண்டவன் என்று பிறர் கூறுவதே அவன் இவ்வாழ்வில் பெறக் கூடிய மிக உயர்ந்த பொக்கிஷம் ஆகும். நல்லவற்றை எண்ணி, நல்லவற்றைப் பேசி, நல்லவற்றைச் செய்து வந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும். இதனையே ஒளவையாரும்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேற்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கிஇருப்பதுவும் நன்றே! என்று குழந்தைகளுக்கு கூறியுள்ளார்.
அன்பும், அருளும், கருணையும் நிறைந்தவர்கள் மனிதருள் மாணிக்கமாகப் போற்றப்படுகின்றார்கள். இவர்கள் சமுதாயத்தின் மரியாதைக்குரியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.
அணுகுண்டால் நகர்த்த முடியாததை அன்பால் நகர வைக்கலாம் என்பதை கேள்விப்பட்டதில்லையா ? அதிகாரம் செய்யாததை அன்பு செய்யும்.
இறைவனை எவ்வாறு அழைத்தும் வழிபடலாம் என்று இந்து சமயம் கூறுகின்றது. இறைவனை “பித்தன்” என்று கூறி அருளைப் பெற்றார் சுந்தரர். இதிலிருந்து நாம் பெறும் ஒரு உண்மை என்னவென்றால் தூய உள்ளம் கொண்டவனின் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு சொல்லும் அன்பின் பாற்பட்டதாகையால் கடும் கருத்துக் கொண்ட சொற்கள்கூட அன்புக்கும், பண்புக்கும், பிணைப்புக்கும் ஏற்றதாக மாறிவிடும்.
அன்பு உள்ளம் கொண்டவரது நெஞ்சம் இறைவனின் உறைவிடம். இன்று உலகிலிருந்து மறைந்தும் மனித மனங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மனங்களில் உறையக் காரணம் அவர்களின் அன்பான மனித மனங்களே. நீங்களும் எல்லோர் மனங்களிலும் இடம் கொள்ள அன்பான மனித மனக் கமலத்தை கொண்டிருங்கள். இறைவனும் உங்கள் உள்ளக் கமலத்தில் உறைவார்.

Page 27
பூரீதர்ஜினி
ஆண்டு 12A, மான
ஆழியால் சூழப்பட்ட இவ் வையகத்திலே தமிழ் தாயக அன்னை என்பவளுக்குப் புதல்வர்கள் பலர். உலகிலே பலர் தோன்றுகின்றனர் மறைகின்றனர். ஆனாலும் அவர்களுள் சிலரே வள்ளுவனின் மொழிக்கு இணங்க புகழோடு தோன்றி வாழ்ந்தனர். ஒரு சிலர் வாழ்கின்றனர். அவ்வாறு வாழ்ந்தவர்களுள் வள்ளுவனின் மொழியின்படி நட்சத்திரமாகப் பிரகாசித்த ஒருவர் தான் எங்கள் தாயக அன்னை பெற்றெடுத்த சைவப் பெரியார் க. சிவபாதசுந்தரம் அவர்கள் ஆவார்.
சமூகப் பணியும், சைவத் தொண்டுமே ஆற்றுவதற்கெனப் பிறந்தவர் சிவபாதசுந்தரம் அவர்கள். இவர் 1878ம் ஆண்டு பருத்தித்துறையில் உள்ள புலோலி என்னும் அழகான நகரிலே அழகுறத் தோன்றினார். நல்லை நகராம் நாவலருக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டளவிலே எமது சைவசமயத்திற்கு ஏற்பட இருந்த பெரும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தியதுடன் மட்டும் அல்லாது சைவ சமயம் வளரத் தொண்டாற்றிய பெருமை சிவபாதசுந்தரம் அவர்களையே சாரும்.
சிவபாத சுந்தரனார் அவர்கள் பல துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். அது மட்டுமல்லாது சென்னைப் பல்கலைக்கழக பி. ஏ. பட்டதாரியும் ஆவார். சிவபாத சுந்தரனார் என்னும் சொல்லை எண்ணவே உள்ளம் இனிக்கவும் நா இனிக்க அதைக் கூறும் வாயும் இனிக்கவே செய்கின்றது. சிவமும் தமிழும் சேர்ந்த பெருஞ் செல்வம் மானிட உருவம் பெற்று எம் உள்ளக் கண்முன் பணிசெய்து நிற்பது நாம் செய்ததவப்பயனே ஆகும். அடிகளார் அவர்களின் தோற்றப் பொலிவும் நன் நடத்தையுமே அதனை எடுத்துக் காட்டியது. நடுத்தர உயரம், மெலிந்த உடலுடன் கூடிய மடித்துக் கட்டுகின்ற எட்டு முழ வேட்டி அங்கவஸ்திரமாக ஆரணியன் சால்வை.
சைவ நூற்பயிற்சியும் தமிழ் இலக்கிய இலக்கண அறிவும் நிரம்பப் பெற்ற அடிகளார் பரமேஸ்வராக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றியபோது எந்த நேரமும் திருநீறு பூசப்பெற்ற பரந்த நெற்றி அறிவையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவரது ஒளிவீசும் கண்கள் காலிலே அணிகின்ற குமிழ் மிதியடி, சுத்த சைவ உணவு,காலைமாலை தியானம்,ஒழுங்கான உருக்கத்தோடுசேர்ந்த ஆலய வழிபாடு என்பன அனைவரையும் கவர்ந்தன.
அது மட்டும் அல்லாது பக்தி ரசம் சொட்டும் தமது சமய எழுத்துக்களால் மக்களின் மனதை வெகுவாகக் கவர்ந்து, சைவ சமயத்தை முழுமையாகக் கவர்ந்து கொள்ள வேண்டுமானால் அதன் வழியே வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டுமானால் கந்த புராண விளக்கத்தை நூல்கள் மூலம் எழுதி
 
 
 

மனோரஞ்சன் humai massamfhif ass66JuTf7
வெளியிட்டார். வாழ்க்கையில் ஏற்படும் துன்பம், துயரம், அவலம்
என்பவற்றை அகற்றும் அருமருந்து கந்தபுராணம் என்பதை விளக்கிக் காட்டியவரும் இவரே.
நாவலருக்குப் பின் சைவத்திற்கும் தமிழிற்கும் உறவை ஏற்படுத்தியவர். சைவ சமய மதத்தவர் அனைவருக்கும் பெருமை வாங்கித் தந்தவர். அவர் ஈழத்து மக்களை தன்னுடைய எழுத்து ஆற்றலாலும் பேச்சு வன்மையாலும் கவர்ந்துள்ளார்.
எல்லாவற்றிலும் விசேடமாகத் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் தலைவராக இருந்து"என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற திருநாவுக்கரசர் திருவாக்குப்படி தனது வாழ்வையே தமிழும் சைவமும் நிலை ஓங்கச் செய்து உள்ளார். ஆலயத்திற்கு வேண்டிய திருப்பணிகளைக் காலந்தோறும் எம் பெருமானுக்கு ஆகம விதிப்படி தவறாது நித்திய நைமித்திய பூசைகள் நடைபெற ஏற்பாடு செய்வதும் ஆலயதலைவராகவும் பணி புரிந்தார். பிற இடங்களிலிருந்து இந்த ஆலயத்தை தரிசிக்க வரும் அடியார்களுக்குத்தங்குவதற்கென திருஞானசம்பந்தர் மடத்தையும் கட்டுவித்தார். நடராஜர் முதலான விக்கிரகங்களையும் அன்பளிப்புச் செய்தார். தெள்ளுதமிழ் அமுதத்தால் நெஞ்சங்களை அள்ளி சைவம் என்னும் முத்துக் கடலில் அமர்த்தியவரும் இவரே. தமிழ்ப் புலமையால் அறிவும் அருளும் வளர்த்தார். 1952ல் திருக்கேதீஸ்வர ஆலயம் இன்று அழகுடன் மிளிரும் இராஜ கோபுரமும் ள்ழில் மிகுந்த திருக்கோயிலாகக் காட்சி தருவதற்கு காரணமே இக்காலப் பகுதியில் திருக்கோயில் கண்காணிப்பாளராகவும் சிவன் பக்தருமாக விளங்கிய பெரியார் சிவபாத சுந்தரனார் நடாத்திய மகா கும்பாபிஷேகம் என்பதை தாயக மக்கள் நன்கு அறிவர். தன் தாய் நாட்டில் மட்டும் அல்லாது பிறநாடுகளிற்கு எழுத்தாற்றல் மூலம் இந்து சமயத்தவர்கள் செய்த தொண்டு அளப்பரியன. "ஜீவ சேவையே சிவசேவை" என்னும் வழி ஒழுகுதலே அன்னாரின் தலையாய இலட்சியம் என்பதை அவரின் எழுத்தாற்றல் மூலம் புலப்படுகிறது. அன்பான உள்ளமும் தொண்டுமே சமயமாகிறது என்ற சமய அடிப்படைக் கருத்துக்களை எழுத்தாற்றல் மூலம் தாயக மக்களிடையே அமிர்தமாக ஊர்வதை எவரும் தடுக்க மாட்டார்கள்.
சைவ சித்தாந்தத்தின் பெருமையைப் பிறர் அறியும் முகமாக எழுதிய அறிவுரை நூல் படிப்போரின் நெஞ்சை விட்டு அகல முடியாதவை. அடியார் அவர்கள் திருவருட் பயன் எழுதிய கருத்துக்கள் படிக்கும்போது “கண்களில் கண்ணீர் மல்க மெய்சிலிர்க்க உள்ளம் இறைவனை நினைத்து நினைத்து நெஞ்சுருக வாசிப்போர் உருகார்” என்று சொல்லும் அளவிற்கு அவருடைய உள்ளமும் உணர்வும் ஒரு தலைப்பட்ட நிலையில்
எழுத்தாற்றல் பெற்றவை என்று நாம் உணரலாம்.
(தொடர்ச்சி 32ம் பக்கம்)

Page 28
"RELIGIOCIS CONVERSION
The Citizen's Committee for Dharma Rakshana Sammelan, Ma Saturday the 17th of July 1999 at Satguru Gnanananda Hall ( is an excerpt of the key Note Address delivered by
I have been thinking on this topic for a longtime. It is very clear to me, and perhaps to many of you, that there are two distinct religious traditions in the world. Some of them have a good following, some others may not have.
One tradition does not believe in conversion. A Jewish person is born of Jewish parents. A Zoroastrian is born of a Zoroastrian mother; a Hindu is born of a Hindu. And so too are the followers of their religions. In other words they do not want to convert anybody. In India when the Parsis, Zoroastrians, came as refugees, being driven from Iran, came to Bombay, they were received and allowed to settle down in India. They lived their religion and they were very faithful and they did not cause any problem. Hindus accommodated them as even they accommodated the Christians, the Muslims and many other small tribal traditions. Our vision of God allows that. We generally accept various forms of worship. We accept many forms of prayers; one more really does not matter to us. In fact, some of our Hindu friends in their Puja rooms have a picture of Jesus and they don't see anything wrong about it, not do I feel anything wrong about it.
I would call the Jewish, the Zoroastrian and the Hindu traditions and the Hindu traditions as nonaggressive traditions. For me, aggression is not just a physical one. It need not be Kargil type. There are varieties of aggression. You can emotionally be aggressive. In the united States, it is a crime to be aggressive towards the children. Simple abuse is looked upon as aggression. Verbally you can be aggressive. Physically you can be very aggressive. And the worst aggression, which I consider more than physical aggression, is cultural aggression of religious aggression.
Hurt is born of many sources. I am hurt physically if somebody encroaches upon my piece of land that is vacant, and the court supports that person and gives me the responsibility of finding a new house for him; it is an aggression. I get hurt. That he encroached upon my property is itself a good source of hurt. It is
 
 

ISAN (ACT OF VIOLENCE"
dras convened a Seminar on "Violence to Hindu Heritage” on larada Gana Sabha), TTK Road, Chennai. Reproduced below
enough to hurt. That the law protects the one who encroached makes me more hurt. That hurt cannot be easily healed, because it leaves you helpless is a source of great hurt. If somebody physically hurts you of course, it is very well known that it is a hurt. It is treated as crime and there is a penalty for it.
If I am emotionally abused, then that also is a great hurt. For example, people in authority can abuse you. The employer can abuse you emotionally. Husband can abuse. Wife also can abuse the husband, In-laws can abuse. For these, I can seek some redress somewhere.
But the worst hurt, I would say, is the hurt of a religious person - whether what the person believes has a basis or not. It is not my domain of enquiry to say whether it has a basis or not. Each one is free to follow his or her religion. Everybody would have a certain belief system. Either the person is convinced or the person needs to be convinced. On the whole, he believes in the whole theology and follows that theology. He has the freedom to follow the theology. That is human freedom.
What is it that one is connected to as a religious person? He is connected not to any particular person here, who is the member of the contemporary society or his family.
I am connected to my parents as their son. I cannot take myself as just a son; Iam connected to other people too. I am son to my parents. I am also father to my children and husband to my wife. I am uncle, cousin, neighbour, employer, employee and citizen. I have a number of hats to wear every day. As the religious 'I', I have different roles to play, day after day.
A son is related to a person outside. A brother is related to a person outside. A citizen is related to a country, a state. As a religious person, who am Irelated to?
Let us for the sake of convenience call that religious person a devotee. To whom is that devotee connected? Definitely, not to anyone here. I may be a

Page 29
religious son. I may be religious father, religious mother, religious wife. In fact, if I am religious, it is going to pervade every role I play.
Basically, first and last, I am a religious person, if I am one. That religious person is the basic person not related to anything empirical. He is related, of course, to a force beyond-whatever that force maybe. One may say that force is God, and He is in heaven. Another one may say, He is in Kailasa. Another may say He is in Vaikuntha. Another may say, He is in Golaka Brindavan. And another may say He is elsewhere. But the person related to that force is the one whom we call a devotee, and that person has an altar. That person is not an empirical person in the sense he is not the father or son or daughter, playing roles. He is the basic person.
The hurt of a basic person is going to be a hurt, which is deep, and true. There is no healing power. There is nothing that can heal that hurt. That is the reason why any religious sentiment, if it is violated, in any way, will produce a martyr. There is a martyr ready to be born in that basic person. And thus the religious sentiment seems to be the most sensitive.
Whenever a religious sentiment is hurt, you will find that, in the Indian press, there is a complete black out, in terms of who did what. Even the names are not given. They will say one community fought with another community. I think it is correct because it prevents further escalation. We generally do guess work and say it must be this community or that community.
This is because, that sentiment is very deep and has to be respected-whether it is a Muslim sentiment or a Christian sentiment, or a Hindu sentiment or a Jewish sentiment. That sentiment has got to be respected. If that respect is not shown, then the State has to protect that sentiment. You tell me whether it is corrector not The state has got the responsibility to protect the religious sentiment of all the people. That I consider is secularism.
In America, the religious sentiment of every individual is protected. You can go to the court and get an answer, if there is something wrong done to you as a religious person. There is justice. They respect. In fact, if you register an institution as a "religious church'/they take it as a religious church. You don't require submitting even an income-tax return. Until there is a public compliant, they respect it. They give you the freedom. Here, if an institution is said to be 'Hindu Religious', there is no tax exemption. It is entirely a different thing altogether.
 

A religious sentiment has got to be respected by every one, whether he believes in my religion or not. Just because I don't believe your ideas, you can't stand on my toes! If you don't like my nose, it is your problem. I don't have any problem. If my ideas and my believe systems are not acceptable to you, I give you the freedom not to accept it. But you don't have any business to stand on my toes to hurt me in any manner. (Long cheers).
In fact I will fight for your freedom to think differently. You must be free enough to differ from me. Bhagavan has given us the faculty of thinking, of discrimination. We are not shy of such enquiries... Our whole method of enquiry is to invite Purvapaksa objections. We will create objections that cannot even be imagined by you and then answer them. We welcome them because we are not shy. We want to explore and find out what the truth is. But that is entirely a different thing. I am citing this much here-that you have the freedom to differ. I have the freedom to differ from you.
This is the attitude of the non-aggressive traditions. On the otherhand, the second category of religions, by their theologies, is committed to convert.
Conversion is not only sanctioned but also is practised by the theologists. And that is their theology. They have got a right to have their own belief systems. But they don't have a right to thrust it on you. They are free to believe that unless one is a Christian, he will not go to heaven. They have a system, a set of non-verifiable beliefs-nitya paroksa-on which they base their theology (Applause)
Some one says, "I have been sent by God to save you'. I can also say the same thing. I will have ten people, because I can talk. If I don't talk and be a mouni baba still there will be ten people. It is easy to get ten people anywhere, especially in India. I can say, "God sent me down to save all of you!”
Once, I went to the Kilpauk Mental Hospital. Just for a visit, understand (Laughter). It is my own imagination. It is not true. The Kilpauk Hospital is one of the most ancientmental hospitals in this country. Next is Agra. We have got the number one status in many things and this is one!
Early morning, all the crows had flown away. Nobody was there. I say a man standing on a huge tree talking in loud voice, "Listen to me, I have come here to

Page 30
save all of you. You please ask for forgiveness of your sins. Those who want to be saved, please raise your hands'. Then he said, "Thank you, thank you, thank you'. He thought that from the audience many people raised their hands. But there was no audience. I was the only one standing behind him. I was naturally amused but I was not surprised, because I knew where I was (Laughter).
As I was enjoying this situation well, I heard a voice from the heaven. It said, "This is God speaking. I did not send him down (Laughter). Don't believe him'. When Ilooked up, there was one more fellow there. (Loud laughter and applause).
This is a non-verifiable belief as you can see. In addition, most of these religions, when they talk of heaven, are promoters of tourism, really speaking (Laughter). I am interested in making my life here, right now. If there is somethingyou have got to say to make my life different, Iam ready to listen to you. If there are some pairs of ears ready to listen to some other thing, let them have the freedom.
That there is a heaven is a non-verifiable belief. That, following this person, I will go to heaven, is a nonverifiable belief. That I will survive death, is a nonverifiable belief. There is nothing wrong in believing. But we have to understand that it is a non-verifiable belief. And having gone to heaven I will enjoy heaven minus cricket match is another non- verifiable belief. The unfortunate thing is another fellow says: "I am the latest and the last. Don't follow that fellow; follow me.' (Laughter). That really confuses me. He has really no argument to give that he is the last. That I am the latest, is another non-verifiable belief and what is promised is again not verfiable.
I say, let those non-verifiable beliefs be there. I want them to have them, even though I will not advocate it. I want them to have freedom. Let them enjoy the freedom to have it. But what is the basis for that person to come and convert me? If you are convinced of something, you can try to convince me and not convert me. Did you ever notice physics Professor knocking at your door, asking for you time, so that he can talk to you about the particles? Never! If you want to learn physics, go to him.
Buthere, everyday, Iambothered. At the airport I am bothered; in the street corners I am bothered. At home, I am bothered. They want to save my soul!
 

I say this is not merely an intrusion; this is an aggression. There are varieties of intrusions. If the sound is too much outside, with all the loudspeakers, well, it is an intrusion into my privacy. One can complain; not in India, of course! Here also we have got laws. It is not that we do not have laws. But we have in-laws' at the right place, you knowl (Laughter).
So nobody has any business to intrude into my privacy. You come and tell me that I have got to save my soul. But I don't look upon myself as condemned for you to come and save. We, really, don't have, a word, in Sanskrit, equivalent for salvation. Because, 'salvation' means you have been condemned. Unless you are condemned, you need not be saved.
But this man comes and tells me that I am damned. I have to believe that first. Then he appoints himself to save me. This is very interesting. This is how the union leaders work. You create a problem and then appoint yourself as a leader to solve it (laughter). You become inevitable thereafter.
Instead of the word 'salvation, we have a word 'Moksha. Here different gurus are there. All of them talk about Moksha. If you allow them to discuss, there will be a fight. (laughter). But all of them have a common word and that common word is Moksha. Is it not true? For every one of them, it is Moksha.
Moksha is not a word, which is equivalent to salvation. It is derived from the root Much = Bandhanivrttau. It means freedom from bondage. All of them use the word Moksha. Even Sankhyas use this word. Vaisesikas, Naiyayikas and all others use this word Moksha. In fact, if Moksha is not an end in view, we don't even talk about it. We all have a Mokha. Even Charvaka, the materialist has his own concept of Moksha. "Body goes'; that is Moksha for him. He says, bhasmibhutasya dehasya punaragamanam kutah.
So the word Mokshadoes not mean salvation. It refers to freedom from bondage. On the other hand the aggressive religions have this belief system that you are condemned and you have to be saved.
If Ilookinto these theologies, it is very interesting. I need not say anything to prove that they are illogical. I have to only state what they say

Page 31
I would like to illustrate this:
You must have heard about "Godfather'. You know the Mafia don is called the Godfather. He makes an offer that you cannot refuse.
He comes and tells you: "Iambuying your house'. You may say, "I am not selling'. He says, “You are selling'.
This type of approach was existing in Madras for some time, I am told. I hope it does not come back again (loud laughter and applause).
The fellow comes back and tells: "I am buying your house!'
And you reply, this is my house and I am not selling'.
He says, "you are selling it and you are selling it at this price'.
He decides the price also and then tells you, "I know exactly where your children are studying and when they are coming home also'.
He threatens you and buys the house.
Thus, a Godfather is one who makes an offer that you cannot refuse.
Now, what about the God, the Father? He is worse, I tell you because he says either you follow this person or I will condemn you eternally to hell. This is worse than the offer of the Mafia don This too is an offer, which I cannot refuse. And it is worse.
In the other case at least, I can do something. But here He is not even visible. He is sitting in a safe place. I cannot do anything about him. This is the nonverifiable belief on which their religion is based.
He has the right to follow that religion. Let him follow his religion. All that I say is he does not have anything much to offer to me. If he thinks he has something to offer me, let him have the freedom to think so. But he has no freedom to think so. But he has no freedom to intrude into my privacy.
He converts the Hindu by any means - by marriage by some enticementor by some preaching which creates a fear. He talks about the goodies available in heaven- if you go to heaven, you will enjoy this and that.
 

You will have beatitude and be saved. Otherwise, you will go to hell. It will be too hot etc...So more out offear of hell, the fellow chooses to go to heaven.
He says and does all this to convert others to his religion. I say this is wrong because if one Hindu or Jew or a Parsi is converted, and the other members of the family are not converted, they are all hurt. Even the converted one must be hurt underneath. He will be debating whether he was right in doing it. It takes some time for him to heal that. He is also hurt. All other members are definitely hurt. The community that comes to know of this conversion is hurt.
Please tell me, what is violence? What is an act called if it hurts? What do you call this act that hurts? I call it violence. It is not ordinary violence. It is violence of the deepest person-the core person-in the human being. The religious person is the deepest. And if that person is hurt, I say it is violence, rank and simple.
It is pure violence. And what does it do? It wipes our cultures.
I would like to go to Greece and see the live culture of the people who lived there. Where is that culture now? I have to imagine how they might have lived. Ionly see the huge monuments that are left out.
And like this, many other cultures have been totally destroyed. The natives of South America, North America and Australia have all been destroyed. What about the Hawaiian culture? Gone. All the tribal cultures in Africa have been destroyed. How many cultures, for the past two thousand years are methodically destroyed? The humanity is the sufferer and is poorer for it.
We need all the cultures. And let the humanity enjoy the riches of the different cultures. It is a mosaic of cultures. Each one has got some beauty. With the destruction of religion comes the destruction of culture. When a new religion replaces the old, a culture is destroyed.
After converting they may try to preserve the art forms like Baratanatyam with the themes of the new religion. But without Nataraja, where is Bharathanatyam? Without devotion, where is Natyam?
And therefore, the culture cannot be retained if the religion is destroyed. It is true with reference to all other

Page 32
cultures also. But definitely it is true with reference to our culture, because, you cannot separate culture from religion.
Our religion and culture are interwined. The religion has gone into the fabric of culture. When I say Namaste' to you, it is culture. It is religion. When you are throwing rangoli, it is religion; it is culture. There is vision beyond all that. Every form of culture is connected to religion and the religion itself is rooted in the spiritual wisdom. This is because we have a spiritual tradition.
And therefore there is no cultural form unconnected to religion. Destruction of culture is the destruction of religion. Destruction of religion is destruction of culture. If this destruction is not violence, what is violence? I would like to know?
I say conversion is violence. (Thunderous applause). It is rank violence. It is the deepest violence.
Not only that. In our Dharmasastra it is said that if somebody forcefully occupies another's piece of land, the papin is called atatayin. For an atatayi, in our sastra, there is capital punishment.
Occupying another's land or another's house or flat, against the will of the owner is not according to our Dharma. Many times, when the owner asks, "Give me back my house', the tenant invariably replies, "I am sorry Icannot give you the house, because my children are going to the school in this area. Please find a similar house for me. Then I will move'. When the owner finds such a house for him, the tenant says.” It is too far for the children to go to school. Please find something in the same neighbourhood". It means, I would like to be here. If you go to the court, twenty-five years would be gone. But occupying another's land is not as per our culture.
Another's kshetra is another kshetra. It has nothing to do with me. Kshetra apahari is an atatayin. The one who does arson orpoisons somebody is anatatayi, and there is capital punishment for him. One who kidnaps another's wife is anatatayiand there is capital punishment for him. All these actions deserve capital punishment. And if simply for occupation of alandofanother, there is capital punishment, think of what would be the punishment for the destruction of a culture.
Suppose somebody is asastrapani and you kill him, it is not correct. Karna in the Mahabharatha uses this argument when he was completely unarmed. Talking
 

to Arjuna, he said, I am an asastrapani; you should not hit me now. Krishna had to tell him that he was not unarmed, and he was duly disarmed. There is a lot of difference between the two. He had to convince him.
So here, a Hindu is an asastrapani. A Jewish person is an asastrapani. A Buddhist is an asatrapani. A Parsi is an asastapani. That is, they are all non-aggressive. When you try to convert them, it is like hurting an asastrapani.
You cannot ask me to change the genius of my culture, the genius of my religion. It is the tradition of my culture and religion that I do not convert. It is nota situation where you convert and Iconvert. And the one who has a better organisation is going to convert more number of people. It is not a percentage game of the market.
Here it is one-sided. I cannot change the genius of my culture because I do not believe in converstion. I allow you to be a Christian. I allow you to be a Muslim. You be a Christian; you be a Muslim. You pray; it is fine for us. Even though I do not say” All religions lead to the same goal', I let you be a Muslim or a Christian, I don't commit that ubiquitous mistake (Cheers).
But I give you the freedom. You please follow your religion. Don't ask me to convert others to my religion like you, because I cannot convert. It is because I do not believe in it. My parents did not believe in it. My grandparents did not believe in it. My Rishis did not believe in it. And I don't believe in it. You cannot change a culture in order to be on par with the others. It is against the genius of our culture.
It is not only our culture, which is like this; there are other cultures too. The number of the Parsis is dwindling. Iloatheto see the destruction of the Parsi Culture. They are harmless good people. But they are the losers.
Jewish people are also the losers; their numbers are also dwindling. They are fighting to preserve their culture and religion. They are not converting. There is no evangelism in Judaism. There is no proselytization. There was never any inquisition. They were the sufferers; they were the victims of aggression, and planned aggression for ages.
And therefore, conversion is not merely violence against people; it is violence against people who are committed to non violence (Prolonged Cheers).

Page 33
I don't say Hindus do not fight. They can fight very well. You don't tell me, you put your house in order'. I will put my house in order, in my own time and in my own way.
If two brothers are fighting over an empty piece of land that is there next door, and a third man occupies the land saying, "because you two are fighting, I am occupying this piece of land”. What is this logic? Some people advance this logic to me and say that we are all fighting and therefore they are in. We may be fighting amongst ourselves but we have to settle that among ourselves. That does not mean You can be violent. (Applause).
Some body says we must have ecumenical dialogue. I had attended some of the dialogues. And I stopped attending them. Because I don't see any use in it. On one such occasion, Isaid,” I can have a dialogue with a Christian, if he is ready to change after the dialogue'. Is he going to change his hand? Is he going to stop conversion? Don't ask me to have a dialogue with you when you are standing on my toes. You just move away. Then we can have a dialogue.
The world religious conferences that are held are only meant to neutralize any protest against conversion. That is all. (Cheers). Because they don't want to stop conversion. So what is the use of saying. “We are all same. We are all going to the same God'. It is something like saying, you know, your property is my property; my property is your property; your money is my money, my money is your money. Therefore, let my money be with me and let your money also be with me! (Laughter). So this is all wrong thinking.
All forms of prayer are valid. That I can accept. They don't accept that. I can accept because of my understanding of the sastra. The Lord will understand, definitely, if I pray in Tamil or Latin or Greek. There is nothing Latin and Greek to the Lord. He will understand in whichever language the prayer is made. If I pray in Samskritam, definitely, he will understand because it is his language anyway. (Laughter). I am very Catholic, understand. I don't have these kind of silly notions that it has got to be in one language and it had got to be in one form etc.
But we have certain special forms of rituals-vedic rituals, which cannot be compromised with. Because we
 

do not know how they can be different. We have no other Pramana for it. We do not have a means of knowledge to prove that this can be different.
They do not accept any of that. And they preach. It is not that they preach their own religion. They preach against other religions. And I consider that kind of preaching a violence. It breeds violence. I have agenius, which does not permit me to convert. I cannot be asked to convert. That is not possible.
Therefore, the violence against me is a one-sided violence. It is rank one-sided violence. They have gotten away with it for two thousand years. I want them to know that this is violence. Let them prove conversion is non-violence.
I am hurt and many others like me are hurt. Millions are hurt. There are so many other issues to be discussed with reference to conversion But I have only one to discuss here. It is the violence that is allowed to be perpetrated against humanity, against cultures, against religions. That is the only issue here; there is no other issue. (Applause).
Violence is the only issue. Humanity should not stand with hands tied and allow violence to be continued against a person who is non-violent.
There is another important fact in the Indian context, I tell you. I am a Swami committed to ahimsa. A sannyasi’s vow is ahimsa-sarva bhutebhyo abhayam. I am taking this sannyasa and offer a complete assurance to all the beings and to all the devatas, that I am not a competitor to any of them and that I will not hurt any of them-kayena vaca manasa. That is sannyasa. Iam aware of this. I am a Sannyasi.
Now I sit in Rishikesh. These two people come to me. One is a Padiri and another is a Moulvi. I invite both of them. They are religious people. I respect them. I give them seats. They try to argue with me about something. Generally, Ido not argue with them. You can argue with people whom you can convince. I don't want to argue with people who only want to convince me.
So I don't argue. I enjoy their company. I sit with them and talk to them. They pick up a quarrel with me. And then he begins to beat me. Please note that, this

Page 34
is just an imaginary tale. And there is a policeman standing there. They go on beating me black and blue. I implore to the policeman. "Please stop them. I am committed to ahimsa. I don't want to fight them back. You please do something'. I appeal to him.
He says, "this is a matter between religious people. I am secular. (Prolonged cheers). Iam supposed not to interfere'. I appeal to him. Twice, thrice I request him. He does not respond to me positively. Then I think I have to protect myself. My sastra will forgive me. Even though I am given to ahimsa, still I can protect myself.
And therefore I thought I will take care of myself. I am not just a weakling. I have got enough strength. And therefore, I can take care of these two fellows plus one more. I began to defend myself. The best form of defence is offence. That is what every husband does. And therefore, you defend yourself. (Laughter).
But the policeman stops me and says, "They are minorities. They have to be protected and you should not fight against them'. (Prolonged cheers).
சைவப் பெரியார்க. சிவபாதசுர
சிவபாதசுந்தரம் அவர்கள் தனிஎழுத்தாளர் மட்டும் எனச் சிலர் நினைத்திருக்கலாம். அவர் எழுத்தாளர் மட்டுமன்றி ஒர் சிறந்த ஆசிரியராகவும், உய அதிபராகவும், அதிபராகவும் இருந்தார் என்பதை அவர் கற்பித்த தமிழ், சமய, இந்து நாகரீகம் ஆகிய பாடங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
மாணவருக்கு விளங்கக் கூடிய முறையிலும், சலிப்பு ஏற்படாமலும் எந்த விடயத்தையும் நகைச்சுவையுடனும் நளினமாகவும் கவர்ச்சியாகவும் இலகுவாகவும் மாணவர்களுக்குப் புகுத்துவதிலிருந்து ஆசிரியர் தொழிலுக்கு அவர் நிகரானவர் என்று கூறுவதில் ஆச்சரியமில்லை.
* மாமன்றச் செய்தி
நீலழரீ ஆறுமுகநாவலர் நினைவு தினத்தையொ மண்டபத்தில் கடந்த டிசெம்பர் மாதம் 5ம் திகதியன்று, மாமன்ற திருமதி. சந்தனா நல்லலிங்கம் "நாவலர் பணி” எ விருந்தும் இடம்பெற்றது.
மாமன்றத்தின் காலாண்டு இதழான “இந்து ஒளி" வைக்கப்பட்டது. இலங்கைக்கு வருகைதந்திருந்த லண்டன் இ ஆலயத்தின் அறங்காவலருமான திரு. நா. சச்சிதானந்தம்"இ
 
 
 
 
 
 
 
 
 

"Hey, policeman, you are supposed to protect me. You are the government. You are the State. You are supposed to protect me. You cannot be like this'.
This is the situation that prevails in India.
You have to change the whole-blessed things here. If the constitution has to be changed let it be changed for good. (Longcheers). My dharma is not violence. It does not allow conversion. And that dharma has to be protected. The state has to protect. If the protector does not protect, people should have a new protector to protect. That is all. (Prolonged cheers).
Conversion is violence. And it breeds violence. Don’t convert because, by this, you are converting nonviolent to be violent. (Applause). You are doing something wrong. This is drastically wrong. This error has to be realised. The sooner it is corrected, the better it is for all of us-even for Christians and even for Muslims.
I want the Islamic culture to be there. I want the Christian culture to be there. I want the Hindu culture and every other culture to be there. Every culture is to be protected. That is secularism. Thank you. (Prolonged cheers).
ந்தரம் (25ஆம் பக்கத் தொடர்ச்சி)
அடியார் சைவத்திற்கும் தமிழிற்கும் செய்த சேவைகள் சொல்லளவில் அடங்கா. அடியார் சைவத்திற்காக விடுத்த நூல்கள் அளப்பரியன. சைவத்திற்கு பலதுறைகளிலும் விளக்கம் கொடுத்து மாணாக்கரிடமும் பெரியோரிடத்தும் இருக்கும் தகுதி வாய்ந்தது.
அடியாரின் தமிழ்ப்புலமையும் சித்தாந்த பேர் உண்மைகளைத் தெளிவாகக் கற்றறிந்து ஒழுகும் நல் வாழ்வுடையவர்கள் எழுவதால் இவர்கள் நம் செந்தமிழ் மொழிக்கும் சமய வளர்ச்சிக்கும் நெடுங்காலமாகச் செய்து கொண்டு வரும் அளப் பெரும் தொண்டுகள் பாராட்டுவதற்கும் போற்றுவதற்கும் உரியன. சிவபாத சுந்தரம் அவர்கள் செய்த சைவப்பணியும், தமிழ்ப் பணியும் என்றும் ஈரமாக எம் ஈழத் தமிழர்களின் நெஞ்சிலே இருந்து வருகின்றது.
ட்டிய சிறப்பு வைபவம், மாமன்ற தலைமையகப் பிரார்த்தனை த் தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை தலைமையில் நடைபெற்றது. ான்ற பொருளில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். பண்ணிசை
(தீபம் 4 - சுடர் 1) அன்றைய வைபவத்தின்போது வெளியிட்டு ந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் செயலாளரும், லண்டன் முருகன் ந்து ஒளி" சஞ்சிகையின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
పడ: W^m/ ekeSkekekekekeekeekS

Page 35
திங்கள் 31 : 11 17 - - 7" 11 21 2B செவ்வாய் - 1 1 B 25 1 15 2 புதன் 一 5,12,19 空6 2,9 ü,23 வீாழன் — 6 1з (20 27 | з 10 17 24 வெள்ளி - 7 - 21 28 G) 11 18 25 1 8 டு 22 29 5 12 டு 25 ஞாயிறு 2 (9) 16 23 30 E 13 2D 27
oviljai G திங்கள் - 3 1C 17 24 O B 15 22 29 ==FuTi — এ 11 650 25 2 9 5, 23 3D புதன் - 5 (2) 19 26 3 10 GE) 24 31 வியாழன் - 6 டு 20 27 11 டு 25 வெள்ளி - 1.1 (2) 28 5, 12 ||g 2E 1 B 15, 2 호 F. 13 II) 2구 ஞாயிறு 2 g is 23 3D 7 14 21 2B
923.0). ஆகஸ்ட் திங்கள் |31 3 10 17 24 - 7 (2) 21 28 செவ்வா| - 1 11 18 25 1 H TB 22 23 LIT – 5 12 19. 26 ? - TE 23 3 வியாழன் I - 5 13 20 27 11 17 H1 allirlf - 7 1.1 21 23 事 11,廿& 25 =Fঢ়য়া 1 F. 15 22 2도 5 1? IH 2E ஞாயிறு |2 9 டு 23 30 5. 13 21 2구 ஒக்ரோபர் நவம்பர் திங்கள் |30 2 9 16 23 - 6, 13 21 27 (latifulfill 31 3 10 17 24 = 7 1-1 || 2B புதன் - 11 || 2F 1 B 15 22 2B வியாழன் - 5 டு 19 டு 2 g is 23 3D வெள்ளி | = 6 13 20 27 1[} 17 2 Ffgif 1의 효1 2B 4 GB 18 25 ஞாயிறு 1 : 15 호2 29 5. 12 19 2B
(இந்துக்களின் со7) 21 ஜூன் - தைப்பூசம் 18 பெப் - நடேசர் அபிஷேகம் 19 („L'I – LIT-flLrléFin 04 மார்ச் - மகா சிவராத்திரி 17 மார்ச் - யோக சுவாமிகள் குருபூசை 20 மார்ச் - பங்குனி உத்தரம் 06 ஏப்ரல் - செல்லப்பா சுவாமிகள் குருபூசை 10 ஏப்ரல் - நல்ல்ை குருமணி குருபூசை 12 ஏப்ரல் - பூரீராம நவமி 13 ஏப்ரல் - தமிழ் வருஷப்பிறப்பு 18 ஏப்ரல் - சித்திரை பூரனை சித்திரகுப்த விரதம் 27 ஏப்ரல் - நடேசர் அபிஷேகம் 29 ஏப்ரல் - திருநாவுக்கரச நாயனார் குருபூசை 1፳ (Eum - வைகாசி விசாகம் பூரனை விரதம் 21 ! - திருஞானசம்பந்தர் குருபூசை 05 ஜூலை - மாணிக்கவாசகர்குருபூசை
திருப் பெருந்துறை தேர் 06 ஜூலை - இரவுநடேசர் அபிஷேகம், சிதம்பரம் தேர் 07 ஜூலை- ஆனி உத்தர தரிசனம் 30 ஜூலை = ஆடி அமாவாசை விரதம்
 

சு இந்து மாமன்றம் - č5 TIL - L2
LD/77ij Y (தமிழ் மாதப் பிறப்பு நாட்கள்) - 6 13 20 27 ஜன. - 15 25061) - 16 - 14 2. 2B - 13 ஆகஸ், - 17 ; ; ; ; மார்ச் - 14 (-) EFs. — 17 3 10 ᏫᎧ 24 31 ஏப்ரல் - 13 ஒக்ரோ - 1 டு 11 18 25 மே - 14 IEi. - 16 5 12 டு 26 ஜூன் - 15 டிசம்பர் - 16
ஜூன் ( விடுமுறை நாட்கள் ) - 5 12 19 25 | 09 ஜன. - றம்ழான் பண்டிகை - 5 13 20 27 15 ஜன. - தைப்பொங்கல் - 7 14 21 23 20 ஜன. - போபா தினம் 1 8 டு 22 29 04 பெப். - தேசிய தினம் 2 9 டு 23 30 | 19 பெப். - போபா தினம்
I} 17" 24 []4 |rirsá — UET FFll'Isláff 4. 11 1B 25 17 மார்ச் - ஹஜ் பெருநாள்
19 மார்ச் - போயா தினம் 二 12 ஏப்ரல் - புதுவருட முதல்நாள் செப்டெம்பர் 13 ஏப்ரல் - :: - g 25 18 ஏப்ரல் - போபா தினம் - 5 2 g ஐ | 21 ஏப்ரல் - பெரிய வெள்ளிக்கிழமை — 5 (3 2 27 01 LI - மே தினம் - 7 14 21 28 || 17 LI - வெசாக் போபா தினம்
3 15 22 29 18 மே - வெசாக் அடுத்தநாள் 2 9 15 23 30 | 15 ஜூன் - நபிகள் நாயகம் 3 1I) 17 2 பிறந்த தினம் 16 ஜூன் - போயா தினம் gaff / 16 ஜூலை- போபா : - 4 11 18 இ | 14 ஆகஸ் - போபா தினம் - 5 12 19 25 | 13 செப். - போபா தினம் - 6 13 20 2 12 ஒக்ரோ - போபா தினம் - 7 14 21 இ | 26 ஒக்ரோ - தீபாவளித் திருநாள் 8 5 22,29 |11 Em - போபா தினம் 2 9, 16 23 30 | 10 டிச - போபா தினம் 3 டு 17 24 31 I 25 டிச. - நத்தார்ப் பண்டிகை 28 டிச. - றம்ழான் பண்டிகை சேஷ தினங்கள்)
05 ஆகஸ். - நல்லூர் கந்தசுவாமி கொடியேற்றம் 05 ஆகஸ் - சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை 11 ஆகஸ், - வரலஷ்மி விரதம் 23 ஆகஸ், - பூரீகிருஷ்ண ஜெயந்தி 28 ஆகஸ் - நல்லூர் கந்தசுவாமி தேர் 07 செப் - ஆவணி மூலம் 10 செப். - ஆவணி ஒனம் 12 செப். - நடேசர் அபிஷேகம் 14 செப் = மஹாளயபட்சம் ஆரம்பம் 28 செப் - நவராத்திரி விரதாரம்பம் 06 ஒக்ரோ - மகாநவமி சரஸ்வதி பூசை 26 ஒக்ரோ - தீபாவளித் திருநாள் 27 ஒக்ரோ - கேதாரகொரி விரதம் 28 ஒக்ரோ - ஸ்கந்தசஷ்டி விரதாரம்பம் 02 நவம். - சூரன் போர், கந்தசஷ்டி விரதம் 19 நவம் - ஆறுமுகநாவலர் குருபூசை 09 டிச - திருக்கார்த்திகை விரதம், குராலயதீபம் 10 tạ (P, - சர்வாலயதீபம் (வீடுகளில் தீபம்)
விஷ்ணுவாலயதீபம் திருவெண்னாமலை தேர் 31 டிச - விநாயக சஷ்டி விரதம்

Page 36
இந்தச் சுடரில்.
1 1 -
14 -
15 -
16 -
20 -
} 1 --
22 -
23 -
24 --
25 -
26 -
பஞ்ச புராணங்கள்
மாசு அழிக்கும் மகா சிவராத்திரி நோன்பு
சிவ தோத்திரம்
மகிமைச் சிறப்பு மிக்க மகா சிவராத்திரி
இறைவனின் அடிமுடி தேடிய நிகழ்வு
பண்பாட்டுச் சுடர்கள்
எது ஆன்மிகம்
சாதனம்
உருவ வழிபாட்டின் சிறப்பு
சைவ சித்தாந்த நோக்கில் கன்மம்
தென்நாட்டில் சுவாமி விவேகானந்தர்
விஞ்ஞானத்தை விஞ்சிநிற்கும் திருத்தாண்டகம்
ஆலயங்களும் இசையும்
சமய வழிபேணி மேன்மை காண்போம்
மனித மனம்
சைவப் பெரியார் க. சிவபாதசுந்தரம்
Religious Conversion is an Act of Violence
 

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரமாதி வருடம் தை - பங்குனி இதழ் மாசி மாதம் 21ம் நாள்
திரு. த. மனோகரன் ஒரு பிரதியின் விலை
அகில இலங்கை இந்து ம
A. C. H. C. கட்டிடம் S 95, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை,
ՀՀ:ՀՀՀ - நகல் எண்:344720 இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் Y
தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்
Printed By Unie Arts (Pvt) Ltd. T. P 330195