கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2000.10-12

Page 1
இலங்கை இந்து மாமன்றம் Quarter of
காலாண்டிதழ் | || CIU (Ceylon 70 indlu (20au
 


Page 2
鸟
蠶g@g@g@麗@g@墨@g
(கந்த சஷ்
காப்பு நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம் போம் - நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் - கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலனருள் கந்தர் சஷ்டி கவசந்தனை
குறள் வெண்பா அமரர் இடர்திர அமரம் புரிந்த குமரன் அடிநெஞ்சே குறி.
சஷ்டியை நோக்கச் சரவணா பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கினசரி பாட 输 மைய நடஞ்செயும் மயில்வாகனனார்
வாலெண்னக் காக்கவென்றுவந்து ് வரவரவேலா புதனார் வருக 鹤 リ
வருக வருக மயிலோன் வருக E_ இந்திரன் முதலா எண்டிசை போற்ற 8ހޮ மந்திர வடிவேல் வருக வருக * வாசவன் மருகா வருக வருக * 2; நேசக் குறமகள் நினைவோன் வருக * ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவன பவனார் சடுதியில் வருக JrīlīCITIT LuñJEF TITI JTJ TTTTTT IfE, ETITT LI JIF Iffif fil விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவன நிறநிற நிறென வசர வனப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிவங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி பொவ்வும் குண்டலி பாம்சிவ குகன் தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பள்ளிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ டிேனமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவEண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்கீராவும் இருதொடை பழகும் இனைமுழந் தாளும் திருவடி பதனில் சிலப்பொலி முழங்க செககன செககன செககன செகன
ggggggggggg
 
 

g gg gg g
IQ 356) I Frib)
பொபொக பொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுதுகி1ே டிகுடிது டிகுகுனா டிகுனே IIITIII IITIII II IT III |FlլTiflirl Iflifrr:Fl Ifl:Frii:Fl rii:Tiiri @@ତ ତତ ତକ୍ରତ ପ୍ରତୋଃ டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ! மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று உன்திரு வடியை உறுதிபென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதளம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டு கண்ணிளைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேஸ் காக்க கன்ன பிரண்டும் கதிர்வேல் காக்க என்னினங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே விருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நானாங் கயிற்றை நல்வேல் காக்க =இ ஆண்குறி பிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பயினைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கனைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைக கிளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை பிரண்டும் முரண்வேல் காக்க பின்னக பிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுனை பாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அண்ைபவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்க தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
தொடர்ச்சி பின் அட்டையின் உள்பக்கம். @
gggggggggggg g

Page 3
受一 பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம் (656)ITUrb அப்பர் சுவாமிகள் அருளியது. மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப் பொய்மையாங் களையை வாங்கிப்
பொறையெனு நீரைப் பாய்ச்சித் தம்மையு நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்பராகிற்
சிவகதி விளையு மன்றே.
திருவாசகம்
மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது
கேட்டாரு மறியாதான் கேடொன் றில்லான்
கிளையிலான் கேளாதே யெல்லாங் கேட்டா னாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயினேர்க்கே காட்டாதன வெல்லாங் காட்டிப் பின்னும்
கேளாதன வெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டா
னெம்பெருமான் செய்திட்ட விச்சைதானே.
foL6603 LIT
கண்டராதித்தர் அருளியது களிவான் உலகில் கங்கை நங்கை
காதலனே அருளென் றொளிமால் முன்னே வரங்கிடக்க
உன்னடி யார்க் கருளும் தெளிவா ரமுதே தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்தள் ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
உறுவதும் என்று கொலோ
திருப்பல்லாண்டு சேந்தனார் அருளியது மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட் செய்மின் குழாம்பு குந் தண்டங் கடந்த பொருள் அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே,
jßbÈLUTT 600Tb சேக்கிழார் சுவாமிகள் அருளியது கருப்புவில் லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர்மன்னி விருப்புறும் அன்புமேன்மேல் மிக் கெழும் வேட்கைகூர ஒருப்படும் உள்ளத்தன்மை உண்மையால் தனக்கு நேர்ந்த திருப்பணி பலவுஞ் செய்து சிவபத நிழலிற் சேர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்
 

S.
சிவமயம்
SAr-AI AGrf"
தீபம் - 5 4ነLሰi– 1 6fidD 6)(5Lib ஐப்பசித் திங்கள் 10ம் நாள்
26. 10. 2000.
கந்த ஷஷ்டி விரதச் சிறப்பு
முழு உலகமும் உய்யும் பொருட்டுத் திருவவதாரம் செய்த கந்தப் பெருமானின் விரதங்கள் வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் என மூவகைப்படும்.
இவற்றில் வாரவிரதமானது ஒவ்வொரு சுக்கிர வாரமும் பெருமானை நினைத்து அனுஷ்டிக்கப்படுவதாகும்.
கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் கந்தப் பெருமானை நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதம் நட்சத்திரவிரதம் எனப்படும்.
மேலே சொல்லப்பட்ட இரண்டு வகையான விரதங்களும் தவிர அவற்றிற்கு மேலானதும் சிறப்பானதுமான முருகப்பெருமானின் விரதம் திதி விரதமான கந்த ஷஷ்டி விரதமாகும். இந்த விரதமானது ஐப்பசி மாதத்தில் தீபாவளியை அடுத்து வருகின்ற அமாவாசை திதியை அடுத்து வருகின்ற பிரதமை திதியில் ஆரம்பிக்கப்பட்டு ஷஷ்டித் திதி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் அனுட்டிக்கப்படுவதாகும்.
கந்த ஷஷ்டி விரதமானது இம்மையில் நாம் விரும்பும் சகல செல்வங்களையும் சுகபோகங்களையும் தரவல்லதோடு த்திரலாபத்திற்குரிய சிறப்பான விரதமுமாகும். இவ்விரதத்தை அனுட்டிப்போர் இம்மையில் மேலே கூறப்பட்ட சகல ாக்கியங்களையும் பெறுவதோடு மறுமையில் பேரின்பப் பெருவாழ்வு பெற்று முருகனடியில் நிரந்தர இன்பம் எய்துவது திண்ணம்.
இவ்விரதத்தின் சிறப்பு முசுகுந்த சக்கரவர்த்தியின் சரிதை மூலம் கந்தபுராணத்தில் மிகத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தனது அரசு, செல்வங்கள் அனைத்தையும் இழந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டித்ததன் பயனாகத்தான் இழந்த அரசு, மற்றும் செல்வங்களனைத்தையும் மீளப் பெற்று இம்மையில் இன்புற்று வாழ்ந்து இறுதியில் தனது சுற்றத்தோடு முருகனடியில் பேரின்ப பெருவாழ்வு பெற்றார் எனக்கூறப்பட்டுள்ளது.
இன்னும் பல அரசர்கள், முனிவர்கள், தேவர்கள் ஆகியோர் இவ்விரதத்தின் பயனாக பெரும் பேறுகள் பெற்றமை புராணங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது.
கந்தவுஷ்டி ஆறுநாட்களும் முருகப்பெருமான் சூரபன்மன் முதலாய அசுரர்களை அழித்தொழித்ததன் மூலம் இந்த உலகத்திலே அதர்மத்தையும் அக்கிரமங்களையும் அழித்தொழித்து தர்மத்தை நிலைபெறச் செய்தார். ஆறு நாட் போரும் ஆறு பகைகளை வெற்றி பெறுதலைக்குறிக்கும். முப்பொருளின் உண்மையை விளக்குதலே ஷஷ்டிவிரதத்தின் குறிக்கோளாகும். மேலும், ஆன்மாக்கள் தம்மைத் துன்பத்துள் வீழ்த்தும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மாற்சரியம் ஆகிய ஆறு பகைகளையும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் வெற்றி கொண்டு இறைவனடியில் இணைந்து பேரின்பப் பெருவாழ்வு பெறுதற்கும் கந்த ஷஷ்டி விரதமே மேலானதும் உகந்ததுமாகும்.
எனவே, இந்த விரதநாட்களில் முருகப்பெருமானிடம் சரணடைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு நாமும் நமது மக்களும் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் துயரங்களெல்லாம் நீங்கப் பெற்று இன்பமாய் வாழ்ந்து மறுமையிலும் பேரின்பப் பெருவாழ்வு பெற்றுய்வோமாக.

Page 4
நல்லவர்களைப் பாதுகாக்கவும், தீயவர்களை அடக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும், யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகிறார். உருவமும் பெயரும் இல்லாத ஒரே பரம்பொருளே, மக்களுக்கு அருள்புரிய, பெருங்கருணையினால், அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காப்பாற்ற, தீயவர்களிடமிருந்து நல்லவர்களை காக்க, தீயசக்திகளை ஒழித்து நல்ல சத்திகளை மேம்படுத்த பல சமய மூர்த்திகளாக, பல திருநாமங்களுடன் தோன்றி காத்தருளுகிறார். அத்தகைய ஒரு அவதாரமே, சிவபெருமானின் அம்சமே, முருகப்பெருமானாகும்.
முருகன், கந்தன், குமரன், மயில்வாகனன், காங்கேயன், வேலாயுதன், குகன், சுவாமிநாதன், சுப்பிரமணியன், சரவணபவன், விசாகன், தேவசேனாதிபதி, வள்ளிமணாளன், சூரசம்ஹாரன் என்னும் பலவித நாமங்களால் அழைக்கப்படும் ஆறுமுகப்பெருமான், சூரபத்மன் என்ற அசுரனை அழிக்கத் தோன்றிய அவதாரமே!
'காசியர் என்ற முனிவருக்கும் மாயை' என்ற அசுரகுலப் பெண்ணிற்கும் பிறந்தவர்களே, சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், அசமுகி என்பவர்கள். சூரபத்மன் தன் தாயின் உபதேசத்தின்படி உத்திர பூமிக்குச் சென்று சிவபெருமானை நோக்கி பதினையாயிரம் வருடங்கள் கடும்யாகம் செய்தான். அப்படியும் சிவபெருமான் காட்சி அளிக்காததால் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.
சூரபத்மனின் தவவலிமையையும், உயிரையும்விடத் துணிந்த தியாகத்தையும் மெச்சி, அவனுக்கு உயிர் கொடுத்து அவன் கேட்கும் வரத்தையும் அளித்தார் சிவபெருமான். சூரபத்மனுக்கு வரமளித்தது பிரம்மா என்றும் ஒரு வழக்கு உண்டு.
சூரபத்மன் கேட்ட வரம் என்ன? “எம் பெருமானே! அனைத்து அண்டங்களுக்கும் நான் அரசனாக வேண்டும்.நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமை வேண்டும். தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும் வேண்டும். சிவபெருமானே! உங்களைத் தவிர வேறு எவராலும் என்னை அழிக்க முடியாது என்ற நிலை வேண்டும்" என்று வேண்டினான். அவ்வாறே வரமும் அளிக்கப்பட்டது. வரம் பெற்ற சூரபத்மன், அனைத்து அண்டங்களையும் அடக்கி ஆண்டு, தேவர்களை பெருமளவில் துன்புறுத்தி மகிழ்ந்தான். அவனது அக்கிரமங்களை சகித்துக்கொள்ள இயலாத நிலையில் தேவர்கள் வரமளித்த சிவபெருமானையே சரணடைந்தனர்.
தேவர்களின் குறை தீர்க்க, சிவபெருமான் தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசான, அகோரம் முதலிய ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோ முகத்தையும் கொண்டு ஆறுவதனங்களுடன் திகழ்ந்தார். அப்போது ஒவ்வொரு திருமுகத்திலுள்ள நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது. இவை அனைத்தையும் சிவபெருமான் ஒரே தழற்பிழம்பாக்கி வாயு தேவனையும் அழைத்துக் கொடுத்து, கங்கையில் சேர்க்கக் கட்டளையிட்டார். கங்கையும் அப்பொறிகளை இமயமலைச்சாரலில் சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் விட அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.
தேவி, பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரி சேர்த்து அணைக்கவே, ஆறு முகங்களுடன், பன்னிரெண்டு கைகளுடன் முருகப்பெருமான் தோன்றினார். பின் கார்த்திகைப்
 
 

பெண்களால் வளர்க்கப்பட்டார். சூரனை அழிக்கும் வயதும், வல்லமையும் வந்ததும் சூரபத்மனை எதிர்த்துப்படை எடுத்து வந்தார். வழியில் எதிர்பட்ட தாரகாசுரனையும் அவனுக்குத் துணைநின்ற கிரெளஞ் மலையையும் அழித்து, தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கியதாகவும் அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கித் தேவ குருவாகிய வியாழபகவானால் பூஜிக்கப்பெற்று அசுரர்களை அழித்ததாகவும் வரலாறு கூறகிறது.
வியாழன் பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால், திருச்செந்தூர் பிரசித்தி பெற்ற குரு கூேடித்திரமாகப் போற்றப்படுகிறது. இங்கிருந்து முருகப்பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல் அறிரைகளை கூறச் சொன்னார்.
நல் அறிவுரைகளை சூரபத்மன் கேட்க மறுக்கவே சூரபத்மன் மீது போர் தொடுத்தார் முருகப் பெருமான். சூரபத்மன் ஆணவத்துடன் முருகனை 'பல் முளைக்காத பாலகன்' என்று இகழ்ந்து பேசி தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது என்று வீரவாகு தேவரிடம் கூறிவிடவே, பெரும் யுத்தம் தொடங்கியது. முருகனின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து பத்து நாட்கள் யுத்தம் நடத்தினர். முதல் ஆறு நாட்கள் சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகன் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப் பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.
ஏழாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை முருகனுடன் சூரபத்மன் போர் புரிந்தான். மாயப் போர் நடத்தி, சூரபத்மன் கடலில் மாமரமாக நின்றபோது, முருகன் தனது வேலால் மரத்தைப் பிளந்து, மறக்கருணையால் அவனை ஆட் கொண்டார். அழியாவரம் பெற்ற சூரபத்மன், மாமரத்தின் இரண்டு பாகங்களிலிருந்தும், சேவலும், மயிலுமாக மாறினான். முருகப்பெருமான் கருணையுள்ளம் கொண்டு சேவலைக் கொடியாகவும், மயிலைத் தன் வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார்.
சூரனை வெற்றி கொண்டதால் ஆதியில் வடமொழியில் ஜெயந்திபுரம், பிறகு ‘சயந்தி மறுவி செந்தில் 'திருச்செந்தூர் என்ற தமிழ்ப் பெயர் பெற்றது. மாமரமாக நின்ற சூரபத்மன் பிளவுபட்ட இடம், திருச்செந்தூரிலிருந்து ஆறு மைல் தூரத்தில் உள்ள மாப்பாடு என்ற ஸ்தலம்.இந்த இடம் இன்றுமணப்பாடு என்றழைக்கப்படுகிறது. என்ன விஷேசம் என்றால் இந்த இடத்தில் மாமரங்கள் இன்றளவும் தழைப்பதில்லை.
சூரசம்ஹாரம் நிகழ்த்திய பிறகு சிவபூஜை புரிந்து, அபிஷேகத்திற்காக தன்கை வேலினால்'ஸ்கந்தபுஷ்கரணிதீர்தத்தை தோற்றுவித்த சூரசம்ஹாரமூர்த்தியான பாலசுப்பிரமணியர் சிவபூஜை புரியும் வகையில் நான்கு திருக்கரங்களில், இரண்டு அபயவரத ஹஸ்தங்களாகவும், ஒரு கரம் ருத்ராக்ஷ மாலை தாங்கவும் மற்றொரு கரம் புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யவும் உள்ள திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து ஆட்கொண்ட விழா கந்தஷஷ்டி விழாவாக பெரிய அணவில் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி விழா, அறுவடை வீடுகளிலும் அதிகப் புகழும் சிறப்பும் பெற்றதாகும்.
நன்றி : ஞான ஆலயம்)

Page 5
இந்த இந்து ஒளி இதழ் கந்தவுஷ்டி சிறப்பிதழாக மலர்ச் வாரியாரின் சொற்பொழிவுச் சுருக்கத்தைப் பிரசுரிப்பதி
பாவங்களில் எல்லாம் மிகப்பெரிய பாவம் நன்றி கொல்வது.
கொலை புலை, களவு முதலான பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் உண்டு. ஆனால், நன்றி கொன்ற பாவத்துக்குப் பிராயசித்தம் கிடையாது.
நாம் எந்தப் பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி கொன்ற பாவத்தைத் தெய்வம் மன்னிக்காது.
செய்த நன்றியை மறந்து விடுவது ஒன்று. நன்றி கொல்வது ஒன்று. நன்றி மறத்தல் பாவம். நன்றி கொல்வதுதான் மிகப்பெரிய பாவம். "
அதாவது,உதவிசெய்தவனுக்கு மேற்கொண்டுகெடுதல் பண்ணுவது நன்றி கொல்லல். *メ
நன்றிகொன்றவன் நிச்சயமாக உய்வு பெற மாட்டான் என்ற ஒரே தர்மத்தை வலியுறுத்துவது கந்த புராணம்.
சூரபத்மனுக்கு 1008 அண்டங்களை ஆளும் உரிமையையும், 108 யுகங்கள் வாழும் ஆயுளையும் வஜ்ஜிரயாக்யையும், இந்திரலோகத் தேரையும் அள்ளி அள்ளி வழங்கியவர் சிவபெருமான்.
அவரது திருக்குமாரர் முருகப்பெருமான் வந்தவுடனே சூரபத்மன் அவரை வணங்கி, “சிவபெருமானே! உமது தந்தையார் கொடுத்த வரம் எனக்குப் பெருவிழா தந்தது. தேவரீர் தந்தையாலே நான் வாழ்கிறேன்” என்று நன்றி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவன் அவ்விதம் செய்யாமல் சிவகுமாரனை அழிக்க முயன்றான்.
ஆகவே, சூரபத்மனை முருகனின் வேலாயுதம் அழிக்கவில்லை; அவன் கொன்ற நன்றி அவனை அழித்துவிட்டது.
ஆகவே, எல்லோரும் நன்றி மறக்கக்கூடாது. நன்றி பாராட்ட வேண்டும். இதுதான் கந்த புராணத்தினுடைய சாரம்.
சூரபத்மன் பரதார கமனம் (பிறன்மனை நயத்தல்) செய்தான். பொய் சொல்லவும் கொடுமைகள் செய்யவும் தன் தாயாகிய மாயையினால் உபதேசிக்கப்பட்டான். இவற்றை எல்லாம்
செய்யவும் செய்தான். இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் செய்நன்றி கொன்றான். அதனாலேயே குலத்தோடு அழிந்துவிட்டான்.
காஞ்சீரபுரத்தில் வாழ்ந்தவர் கச்சியப்பர். அவர் கந்த புராணத்தை தமிழிலே மொழிபெயர்த்து அருளினார். அவரது
 
 

ன்ேறது. எனவே, திருமுருக கிருபானந்த ல் இந்து ஒளி பெருமையடைகிறது.
கனவிலே முருகப்பெருமான் காட்சி கொடுத்து திகட சக்கரச் செய்முகம் ஐந்துளான்' என்று அடியெடுத்துக் கொடுத்தார்.
ஆண்டவன் கொடுத்த அந்த முதல் வார்த்தையை வைத்துக்கொண்டு பாடப்பெற்ற நூல் கந்த புராணம்.
கச்சியப்ப சிவாச்சாரியார் ஒவ்வொரு நாளும் 200 பாடல், 300 பாடல் எழுதி அவற்றைக் காஞ்சியில் குமரக்கோட்டம் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானுடைய திருவடியிலே வைத்துவிட்டுப் போவார்.
மறுநாள் காலையில் அவர் வந்து பார்த்தால் அதிலே முருகன் செய்த திருத்தங்கள் இருக்கும். அவ்விதம் முருகவேளே திருத்திக் கொடுத்த நூல் கந்த புராணம்.
உலகம் தோன்றிய நாள் தொட்டு தாய்மார்கள் தான் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பேர் வைப்பார். இதற்கு மாறாக முருகன் திருவவதாரத்தின்போது நிகழ்ந்தது. இங்கே அப்பா குழந்தை பெற்று, அம்மா பேர் வைக்கிறாள்.
உலகத்திலே எங்குமே ஆண்களுக்கு மகப்பேறு மருத்துவ விடுதி கிடையாது. ஒர் ஆண்பிள்ளை, குழந்தை பெற்றான் என்று சரித்திரம் கிடையாது.
கயிலாயத்தில்தான் சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்கினார். எனவே ஆண்பிள்ளை முருகன் ஒருவர்தான். நாமெல்லாம் பெண் பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண்பிள்ளைகள் தானே!
தேவர் எல்லோரும் பரமேஸ்வரனிடம் சென்று "ஆண்டவனே!சூரபத்மன் ஆட்சியின் கொடுமைஎங்களால் தாங்க முடியவில்லை. நாங்கள் தவம் செய்ய முடியவில்லை. எங்களை யெல்லாம் அவன் துன்புறுத்துகிறான். அநேக தேவர்களையும், தேவமாதர்களையும் அந்த அரக்கன் சிறையில் அடைத்துவிட்டான், சுவாமீ" என்று முறையிட்டார்கள்.
இந்திரனுக்கு ஒரே ஒரு மகன். அவன் பெயர் ஜயந்தன். அந்த ஒரே மகனை ஜெயிலில் போட்டு அடைத்து வேதனைப் படுத்துகிறான் சூரபத்மன். நாம் ஜெயிலில் இருந்தால் அப்பா, அம்மாவுக்கு வேதனை.
ஆகவேஇந்திரனும்இந்திராணியும்."சுவாமி சூரபத்மனுடைய ஆட்சியின் கொடுமை எங்களாலே தாங்க முடியவில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று சிவபிரானிடம் வேண்டினர்.

Page 6
ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும் ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும்துன்பும் இன்றி வேதமும் கடந்துநின்ற விமல, ஓர் குமரன் தன்னை நீர்தரல் வேண்டும்நின்பால் நின்னையே நிகர்க்க” என்றார்.
- கந்த புராணம்
'நீர் தர வேண்டும்,' "ஆண்டவனே சூரபத்மனைக் கொல்லத்தக்க குழந்தையை நீரே எமக்குத் தரவேண்டும். அது தங்களிடத்திலிருந்து வரவேண்டும். அந்தக் குழந்தை நின்னையே நிகர்க்க விளங்க வேண்டும்' என்று கூறி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள்.
சிவனுக்குச் சமானம் கிடையாது.
இதைத்தான் ‘சமான ரஹிதம் விபும்' என்று வேதம் சொல்லுகிறது. தனக்குவமையில்லாதான்' என்று திருவள்ளுவரும் குறிப்பிட்டார்.
சமானம் இல்லாத ஆண்டவனைப் பார்த்து, "உனக்குச் சமானமான குழந்தையைக் கொடு? என்றால், என்ன பொருள்? "நீயே குழந்தையாக வா" என்று சொல்ல மாட்டார்கள். “ராத்திரி சாப்பாட்டுக்கு நெய் வேணும்' என்பார்கள். நெய் வேணும் என்பதற்குப்பொருள் வேறு வாங்கிவா என்பதற்கு பொருள் வேறு. முன்னதில் அன்பு பின்னதில் அதிகாரம்
தேவர்கள் ஆண்டவனைப் பார்த்து, “சுவாமி நீயே குழந்தையாக வா" என்று சொன்னால் உத்தரவு போட்ட மாதிரி இருக்கும். அப்படிச் சொல்லக்கூடாது. "உனக்குச் சமானமான குழந்தையை கொடு" என்றால், “தேவரீரே குழந்தையாக வரவேண்டும்" என்று அர்த்தம்
"வந்திக்கும் மலரோன் ஆதிவானவர் உரைத்தல் கேளாய் புந்திக்குள் இடர்செய்யற்க புதல்வனைத் தருதும் என்னா"
- கந்தபுராணம்
தேவர்களிடம் சிவபெருமான்,துன்பத்தை விட்டுவிடுங்கள். இப்பொழுதே குமரனைத் தருகிறேன்" என்றார்.
சிவபெருமானுக்கு ஐந்து திருமுகங்கள், அவை முறையே ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனப்படும். ஆறாவதாகிய மேல்நோக்கிய திருமுகம் அதோமுகம். அது ஞானிகளுக்கு மட்டுமே தெரியும். அதாவது ஞானிகள் தங்கள் தவத்தினால் அறிந்துகொள்வது அதோமுகம்.
 

சிவபெருமானுடைய அந்த ஆறு திருமுகங்களிலும் நெற்றியிலே ஒரு கண் இருக்கும். அது ஞானக்கண். அது மேல்நோக்கி இருக்கும் அவ்விதம் மேல்நோக்கிய கண்ணை உடையவன் என்பதனால்தான் சிவபெருமானுக்கு விருபாக்ஷன் என்ற ஒரு பெயரும் ஏற்பட்டது.
சிவனார் தமது ஆறு நெற்றிக் கண்ணைத் திறந்தார். உடனே அவற்றிலிருந்து ஆறு அருட்பெறும் ஜோதிகள் வெளிப்பட்டன. அதன் வெம்மைதாங்கமாட்டால் தேவர்களெல்லாம் திசைக்கு ஒருவராக, மூலைக்கு ஒருவராக ஒடிப்போய் ஒளிந்தார்கள்.
சிவன் தமது திருமுகத்திலிருந்து வெளிப்பட அருட்பெரும் ஜோதியை வாயுதேவனிடம் கொடுத்தார். தாங்க முடியாத அந்த ஜோதிப்பிழம்பை சிறிது தூரம் வாயுவும், சிறிது தூரம் அக்கினியும் மாறி மாறி எடுத்துச் சென்றனர். முடிவில் அக்கினி, ஆகாச கங்கையில் கொண்டு வந்துவிட்டது. ஆகாச கங்கை வெப்பம் தாங்கமாட்டாமல் வற்ற ஆரம்பித்தது. பின்னர் கங்கை வழியாக அந்த ஜோதிப்பிழம்புநிலத்துக்கு வந்தது. அது வந்து சேர்ந்த இடம் இமயமலை அருகிலுள்ள சரவணப் பொய்கை, சரம் என்றால் தர்ப்பை, வனம் என்றால் காடு, சரவணன் என்றால் தர்ப்பைக்காடு கரையோரங்களில் தர்ப்பைப் புல் காடுபோல் வளர்ந்திருந்த இயற்கையான ஒரு நீர் நிலையாக அந்த சரவணப் பொய்கை விளங்கியது.
தர்ப்பைக்கு மின்சாரத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு.
சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட அக்கினிப் பிழம்பு வானத்திலிருந்து, வாயுவிலிருந்து, அக்கினி தேவனிடம் மாறி, தண்ணிரில் இறங்கி வருகிறது.
1008 இதழ்களைக் கொண்டதாமரைப்பூக்கள் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்தன. அங்கிருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு தீப்பொறிகளும் சென்று தங்கி அழகிய ஆறு குழந்தை வடிவம் பெற்றது.
இவ்விதம் சிவபெருமானின் கண்களிலிருந்து புறப்பட்ட ஆறு தீப்பொறிகளும் வானம், வாயு, அக்கினி, தண்ணிர், நிலம் என்ற பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அழகிய ஆறு குழந்தைகளாக ஆயிற்று.
இதனை அறிந்து சரவணப் பொய்கையின் கரையில் தேவர்களும் முனிவர்களும் கூடினார்கள்.
திருமால், நான்முகன், இந்திரன் முதலியோர் அனைவரும் அந்தக் குழந்தையைக் கண்டு ஆனந்தம் கொண்டனர்.
சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களாகிய அகஸ்தியர், ஆங்கீரசர், கெளதமர், காசிபர், புலஸ்தியர், மார்க்கண்டேயர்,வசிஷ்டர் (அல்லது அத்திரி, ஆங்கீரசர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர், வசிஷ்டர், விசுவாமித்திரர்) ஆகியோர் அந்தக் குழந்தையைப் பார்த்து மிகவும் மகழ்ச்சியடைந்தார்கள்.

Page 7
வசிஷ்ட மகரிஷியின் மனைவி அருந்ததியைத் தவிர, மற்ற ஆறுரிஷிகளின் மனைவியார் ஆறுபேரும் அந்தக் குழந்தைகளைப் பாலூட்டி வளர்த்தனர்.
அந்த ரிஷிபத்தினிகள் ஆறுபேரையும் கார்த்திகைப் பெண்கள் என்று சொல்வது மரபு. அவர்கள் கிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதைகள்.
புராணம் என்றால் பழைமை என்பது பொருள். புராதனம் என்ற சொல் புராணம் என்று வந்தது.
சில பேர் புராணம் என்றால் புளுகு என்பார்கள். நரம்பில்லாத நாவிலே எதையும் சொல்வார்கள்.
திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலிலே பாடினது சிவபுராணம். அங்கே புராணம் என்றால் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள்.
ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழைமை என்பது பொருள்.
வியாசபகவான் 18 புராணங்களைப்பாடி அருளினார்கள். அவற்றில் சிவபுராணம் 10, விஷ்ணுபுராணம் 4, பிரும்மபுராணம் 2, அக்கினி புராணம் 1, சூரிய புராணம்1 ஆக மொத்தம் புராணங்கள் 18. இந்தப் புராணங்கள் எதற்காக என்ற ஒரு வேள்வி எழும்.
இந்தக் கடிகாரம் கெட்டுப்போனால் இதைப் பழுது பார்ப்பவன் பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பான். நுண்ணிய சக்கரங்களைப் பார்க்கும் ஆற்றல் இந்தக் கண்களுக்கு இல்லை. ஆகவே நுண்ணியச் சக்கரங்களை விரித்துக் காட்டுவது பூதக் கண்ணாடி,
அதுபோல வேதங்களிலே வரும் நுண்ணிய தர்மங்களை விரித்துக் காட்டுவது புராணம்
புராணம் வேண்டுமா, வேண்டாமா என்பதை இப்போது நீங்களே தீர்மானம் பண்ணிக் கொள்ளுங்கள்.
பழுது பார்க்கிறவனுக்குப் பூதக் கண்ணாடி இன்றியமையாதது போல, வேதத்திலே உள்ள நுண்ணிய தர்மங்களை நமக்கு விரித்துப் புலப்படுத்துவது புராணம். ஒன்று, இரண்டு உதாரணத்துக்குச் சொல்கிறேன்.
"சத்யம் வத" என்ற வேதம் சொல்கிறது. சத்தியத்தைப் பேசு. அந்த ஒரே ஒரு தர்மத்தை நமக்கு விரிவாக எடுத்துக் காட்டுவது ஹரிச்சந்திர புராணம், “தர்ம சர"தர்மத்தை செய் அந்த உண்மை விரிவாக எடுத்துக் காட்டுவது மகாபாரதம்.
இப்படி வேதத்தில் உள்ள நுண்ணிய தர்மங்களையெல்லாம் விரிவாக எடுத்துக் காட்டுவது புராணம். இந்த உண்மையை நன்றாக மனதிலே பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
 

மனிதன் செய்நன்றி மறத்தல் கூடாது என்ற உண்மையை விளக்க வந்த நூல் கந்தபுராணம்.
சிவபெருமானை அவமதித்து தட்சன் யாகம் செய்தான். அதில் கலந்து கொண்டதால் தேவர்கள் பெரும் பாவத்துக்கு ஆளானார்கள்.
அந்த பாவவினை காரணமாகவே சூரபத்மனால் தேவர்கள் கொடுந்துன்பம் அனுபவிக்க நேர்ந்தது.
சூரபத்மனின் கொடுமையைத் தேவர்களால் தாங்க முடியவில்லை. எனவே அவர்கள், “சூரபத்மனின் கொடுமையிலிருந்து எங்களை காத்தருளுங்கள்’ என்று சிவபிரானிடம் பிரார்த்தித்தார்கள்.
தேவர்களை சூரபத்மனின் ಇನ್ನು:ಞ! விடுவிக்கும் பொருட்டு இறைவன் திருமுருகில் அவத செய்வித்தார்.
கார்த்திகைப் பெண்களால் ஏடுத்து வளர்த்கப்ப்ட்டதால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற வ்ெர் ஏற்பட்டக்ட
கங்கை வழியாக வந்ததால் காங்கிேயின் என்றும், அக்கினியிலிருந்து தோன்றியதால் அக்கினிப்பூ என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும், வைகாசி மாதம் விசாக நட்சத்திர தினத்தில் தோன்றியதால் விசாகன் என்றும், ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஒரே குழந்தையாக மாறியதனால் ஸ்கந்தன் என்றும், பேரழகுடன் விளங்கியதால் முருகன் என்றும், தேவர்களின் சேனாதிபதியாக விளங்கியதால் தேவ சேனாதிபதி அல்லது சேனானி என்றும், சக்திவேல் உடையவனாதலால் சக்திதரன் என்றும், சேவல் கொடியை உடையவன் என்பதால் குக்குடக் கொடியோன் என்றும், ஆறு திருமுகங்களைக் கொண்டவன் என்பதால் ஷண்டுக்ன் என்றும் சிவக்குமரன் போற்றப் பெறுகிறான்.
பஞ்சபூதங்களின் வழியா மூருகனின் தாரம் நடைபெறுகிறது. சிவபெருமானின்டுநீற்றியிலிருந்துதோன்றிய ஆறு தீப்பொறிகளும் அப்படியேஜிதிருக்குழிே ல் அவற்றின் உஷ்ணத்தை ஒருவராலும்திங்க (plg. *போயிருக்கும். அதனால்தான் அந்தப் றிகள் வா வானம், நிலம் ஆகிய பஞ்ச பூதங்களி ழியாக வந்து, மெல்ல மெல்ல மென்மை உடையதாக மாறிப்பிறகு குழந்தையாக அவதாரம் ஆகிறது.
எப்படி மின்சாரம் அதிக சக்தி உடையதாக இருக்கும் பொழுது, அதைத் தாங்கமுடியவில்லை என்று மின்மாற்றி (Transformer) யின் மூலமாகச் சக்தியைக் குறைத்துத் தேவைக்கேற்ப, ஆறுஅருட்பெரும் ஜோதிகளும் பல நிலைகளையும் கடந்து உலகம் தாங்கும் தன்மை பெற்றதாகி மென்மைமிக்க குழந்தையாக ஆயிற்று.

Page 8
மேலும், பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் அமைந்த உலகம் முழுவதற்கும் தலைவன் முருகன் என்பதற்கு அடையாளமாக, அவன் பஞ்சபூதங்களின் வழியாலும் சேர்க்கையாலும் தோன்றினான்.
முருகப்பெருமானுக்குப்பதினெட்டுக் கண்கள். அநேகம் பேர் பன்னிரெண்டு கண்கள் தானென்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். பதினெட்டு கண்கள் என்பது பலருக்குத் தெரியாது.
சிவபெருமான் சிவகுமாரன். அப்பாவைப் போலத் தானே பிள்ளையும் இருக்கும்? அப்பாவுக்கு மூன்று கண்கள் என்றால் முருகனுக்கும் மூன்று கண்கள் தானே! எனவே முருகனின் ஆறு முகத்திலே 6 3 = 18 பதினெட்டு கண்கள் உள்ளன.
சிவனே முருகன். முருகனே சிவன். சிவபெருமானுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது.
“செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்று அருணகிரியாரின் கந்தரனுபூதி கூறுகிறது.
“கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரெண்டும், ஒரு திருமுகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய’ என்று கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு ‘உதித்தனன்’ என்றால் பிறந்தான் என்று அர்த்தமில்லை. சூரியன் உதித்தான் என்றால் பிறந்தான் என்றா அர்த்தம்? என்றைக்குமே உள்ள ஆதித்த பகவான் சில காலம் மறைந்திருப்பார். இப்போது வெளிப்படுகிறார். அது போலவே என்றைக்கும் உள்ள எம்பெருமான் முருகன் அப்போது சரவணப் பொய்கையில் வெளிப்பட்டுத் தோன்றினார். இதைத்தான் உபசாரமாக ‘உதித்தனன்' என்று கந்தபுராணம் கூறுகிறது.
இறைவனும் இறைவியும் சரவணப்பொய்கையின் கரைக்கு எழுந்தருளினார்கள்.
இறைவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக எடுத்து அணைத்தாள். அது காரணமாக ஆறு திருமுகங்களும் பன்னிரெண்டும் திருக்கரங்களும், ஒரே உடலும் உடைய ஸ்கந்தனாக முருகன் மாறினான்.
ரிஷப வாகனத்தில் அமர்ந்து இறைவனும் இறைவியும் குழந்தையை கயிலைக்கு எடுத்துச் சென்றார்கள்.
இறைவியின் கால்சிலம்பில் உள்ள நவமணிகளிலிருந்து நவசக்திகள் தோன்றினார்கள். நவசக்திகளிடமிருந்து நவ வீரர்களும், லட்சம் வீரர்களும் தோன்றினார்கள். அவர்கள் எல்லோருடனும் முருகன் அற்புதத் திருவிளையாடல் புரிந்தான்.
 

இந்திரனும் திருமாலும் முருகன் யார் என்று உணராமல் அவனுடன் போர்புரிந்து தோற்றனர். பிறகு உண்மையை உணர்ந்து முருகனைப் போற்றித் துதித்தார்கள்.
ஆணவம் கொண்ட நான்முகன் தலையில் குட்டி அவனை முருகன் சிறையிலிட்டான். பின்னர் தந்தையின் ஆணையால் நான்முகனை முருகன் விடுதலை செய்தான்.
நாரத முனிவர் ஒரு யாகம் செய்தார். அதில் பிழையான மந்திர உச்சரிப்பால் ஓர் ஆட்டுக்கடா தோன்றியது. அந்த ஆட்டுக்கடாவை வீரபாகு அடக்கிக் கொண்டு வந்தபோது, அதை முருகன் வாகனமாக ஏற்று'அஜவாகனன்' என்று பெயர்பெற்றான்.
அந்தப் பிரபு முருகன் ஞானமே உருவாகிய நாயகன். அதனால்தான் ஞானபண்டிதன் என்ற பெயரைப் பெற்றான். தந்தைக்கே அவன் பிரணவத்தை உபதேசித்ததை, "ஒரெழுத்தில் ஆறெழுத்தை ஒதுவித்த பெருமாளே!” என்று அருணகிரிப் பெருமான் அற்புதமாக வியந்து பாடியிருக்கிறார்.
இந்தப் பிரணவத்தை சாஸ்திர ரீதியாக அப்பாவுக்கு முருகக் கடவுள் சொன்னாராம். அதனால்தான் அவருக்கு சுவாமிநாதன், சிவகுரு, குமரகுரு, பரமகுரு, குருசுவாமி, குருபரன் என்று அநேக நாமங்கள் உள்ளன.
மாயைக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் முறையே
சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று அசுரர்கள் ஆவார்.
இவர்களுள் சிங்கத்தலையுடன் பிறந்தவன் சிங்கமுகன். யானைத்தலையுடன் பிறந்தவன் தாரகன்.
இந்த மூன்று அசுரர்களையும் எம்பெருமாள் அடக்கி வைத்தார், அப்படி என்றால் என்ன பொருள்?
நம்முடைய துன்பங்களுக்கொல்லாம் காரணம் ஆணவமலம். இப்பொழுது நான் சொல்வதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாத் துன்பங்களுக்கும் மூல காரணம் ஆணவமலம்தான்.
அந்த ஆணவ மலம் ஆன்மாக்களுக்கு இடையே வந்ததல்ல. ஆன்மா என்றைக்கும் உண்டோ அன்றைக்கே ஆணவமலம் உண்டு. செம்பு என்றைக்கு உண்டோ அன்றைக்கே களிம்பு உண்டு. அரிசி என்றால் தவிடு இருக்கும். செம்பு என்றால் களிம்பு இருக்கும். நீர் என்றால் சேறு இருக்கும். குழந்தைகள் என்றால் சேட்டை இருக்கும். மனைவி என்றால் அடம்பிடிப்பாள்.
அதுபோல ஆன்மாவுக்கு ஆணவமலம் உண்டு. இந்த ஒரு மலத்தைப் போக்குவதற்குப் பகவான் இரண்டு மலங்கள் கொடுத்தார். அவை முறையே கன்மமலம், மாயாமலம் எனப்படும். ஒரு மலத்தைப் போக்க இரு மலத்தைக் கொடுத்தார். உங்களுக்கு என்ன தோன்றும்? ஒன்றைப் போக்க இரண்டா? காலிலே முள் தைக்குமானால் பெரியமுள்ளை எடுத்துக்குத்துவார்கள். முள்ளை

Page 9
முள்ளாலே போக்கவேண்டும். வைரத்தை வைரத்தாலே அறுக்க வேண்டும். துணியிலே இருக்கிற அழுக்கை உவர்மண் போட்டுத் துவைக்கிறார்கள். வாயை மூடு என்ற பெரிய சத்தத்தாலே சிறிய சத்தங்களை அடக்குகிறார்கள். அதுபோல மிலத்தை மலத்தாலே போக்க வேண்டும். அதாவது ஆணவ மலத்தைக் கன்ம மலம், மாயா மலங்களினாலே போக்க வேண்டும்.
எனவே எல்லாவற்றுக்கும் மூல மலம் ஆணவ மலம். அதனைப் போக்கவல்லது கன்மமலம், அதனைக் கழிக்க வல்லது மாயாமலம். ஆக மலங்கள் மொத்தம் மூன்று. சூரபத்மன் ஆணவ மலம். பல தலைகளை உடைய சிங்கமுகாசுரன் கன்ம மலம், தாரகாசுரன் மாயா மலம். நீங்கள் கேட்டு கொண்டிருப்பது கந்தபுராணத்தின் நுண்பொருள்.
தேங்காய் மேல் பச்சையாய் இருக்கிற மட்டை மாயாமலம். உரித்து உரித்து எடுக்கிற நார் கன்ம மலம். இறைவன் சந்நிதானத்திலே உடைத்து எடுக்கிற ஒடு ஆணவ மலம். ஆசார்யன்தான் உடைக்கிறார். அது ஆணவமலம்,
ஆணவம் சட்டென்று போகாது. சில தாய்மார்கள் சொல்வார்கள். "ஆணவம்பிடித்து அலைகிறான்” என்றும்,"அவன் கர்மத்தை அவன்தானே தொலைக்கணும்” என்றும், “மாயையிலே மூழ்கி இருக்கிறான்” என்றும் தாய்மார்கள் பேசுவது வழக்கத்தில் உள்ளது.
இந்த மூன்று மலத்தை எதனால் அழிக்க வேண்டும். ஞானத்தினால் அழிக்க வேண்டும்.
ஞானம்தான் வேல். அறிவு என்றாலும், வேல் என்றாலும் ஞானம் என்றாலும் கருத்து ஒன்றுதான்.
அறிவு பரந்து இருக்கவேண்டும். பிறகு கூர்மையாக இருக்க வேண்டும். வேலாயுதத்தைக் கவனியுங்கள் அடிப் பகுதி ஆழமாக இருக்கிறது நுனிப்பகுதி கூர்மையாக இருக்கிறது.
அதுபோல ஞானமும் ஆழமாக இருக்கவேண்டும். அகலமாக இருக்க வேண்டும். கூர்மையாக இருக்கவேண்டும்.
வேல் என்றால் ஞானம். எல்லாவற்றையும் ஞானம் தான் வெல்லும். அப்படிப்பட்ட ஞானவேலால் குமரக் கடவுள் முதலில் மாயா மலமாயிருக்கும் தாரகனை வென்றார். பிறகு அதே ஞானவேலினால் கன்மமலமாயிருக்கின்ற சிங்கமுகாசுரனை வென்றார். ஆணவ மலம் தான் கடைசிவரைக்கும் இருக்கும். அதைச் சட்டென்று வெல்ல முடியாது. அது கடைசி மலம். சூரபத்மன் பல்வேறு வடிவங்கள் எடுத்தான். அந்த ஞானவேலினால் அத்தனை வடிவங்களையும் எம்பெருமான் அழித்து அருளினார்.
கடைசியில் அவன் ஆயிரம் கோடி அமாவாசையாக ஆனான். இருட்டு - ஆணவ இருள். ஆணவத்தின் தன்மை இருளாக இருக்கும். இந்த பூலோக இருள் எந்தப் பொருளையும்
భ
 
 
 
 

காட்டாது, தன்னையும் காட்டாது. சிலபேர் திருடிவிட்டு அவனும் நம்கூட இருப்பதுபோல. அதுபோல் ஆணவமலம் அது எதையுமே காட்டாது தன்னையும் உணர விடாது, ஆணவ மலம். ஆயிரம்கோடி அமாவாசையாக அவன் வடிவெடுத்தான். அந்த இருள் மீது முருகன் நூறுகோடி சூரியப்பிரகாசம் பொருந்திய ஒளியாகிய வேலைச் செலுத்தினான். என்று குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.
சூரபத்மனை முருகப்பெருமான் ஞானவேலால் 'அழித்தார்’ என்று சொல்வதும் சரியல்ல.
ஏனென்றால் முருகன் சூரனது உள்ளத்தில் இருந்த ஆணவ இருளைத்தான் அழித்தார். நரசிம்ம அவதாரம், ராம அவதாரம் போன்றவற்றில் திருமால் பகைவர்களை அடியோடு அழித்திருக்கிறார். ஆனால் அவ்விதம் முருகன் சூரனை அடியோடு அழிக்கவில்லை. ஆணவ மலம் அடியோடு அழியாது அதை மேலே கிளம்பாமல் அழுத்தித்தான் வைக்க முடியும். தன்னைப் பகைத்த சூரனையும் முருகன் அப்படித்தான் செய்தான் சூரன் மயிலாகவும், சேவலாகவும் மாறியபின், அவனை முருகன் தன் காலால் அழுத்தியும் கையில் பிடித்தும் அழுத்தி வைத்தான்.
சுண்டைக்காய், பாகற்காய் முதலிழ்வை கசக்கின்றன. அதனாலேயே பலர் அவற்றை விரும் ல்லை, ஆதலால் அவற்றைப் பக்குவமாக வேக ை இறார்கள் லமுறை
பிழிந்தெடுக்கிறார்கள், பிறகு காரம் சர்த்து வுற்க்கிறார்கள், வற்றலாக மாற்றுகிறார்கள், அப்பெருழ்து கசப்பூ ஜ்றிவிடுகிறது. அதுவரையில் வேண்டாம் என் வெறுத்த திளும் இப்போது
அந்த வற்றலை விரும்பிச் சாப் றிார்கஜ் இது போலத் தான் முருகனும் சூரனைச் செய்தீர்ன். சூரத்ஸ்து மனதில் இருந்த ஆணவமலத்தை ஞானவேல்ால் முருகன் ச் செய்தான்.
மயிலாகவும் சேவலாகவும் வந்த சூரனை முறையே
வாகனமாகவும் கொடியாகவும் முருகன் ஏற்றது, அவனது அளவற்ற கருணையின் அடையாளமாகும்.
முன்பே முருகனுக்குச் சேவலும் மயிலும் உண்டு. அந்தச் சேவலுடனும் மயிலுடனும் இப்போது சூரபத்மன் ஐக்கியமாகி முருகனுடன் என்றென்றும் இருக்கும் பெரும் பேறு பெற்றான்.
சேவல் கொடிக்கும் ஒரு தத்துவம் உண்டு. இருளைச் சூரியன் விரட்டுகிறது. அந்தச் சூரியன் வருகையைக் கொக்கு அறுகோ' என்று கூவி அறிவிக்கிறது. சேவல் கொக்கு என்றால் மாமரம், அறு என்றால் பிள, கோ என்றால் தலைவன் என்பது பொருள். எனவே'கொக்கு அறுகோஎன்பது மாமரத்தைப்பிளந்த முருகன்’ என்ற பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
முருகனிடமுள்ள சேவலும் தன் தலைவன் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறது.
தீயவை புரிந்தாரேனும் குமரவேல் திருமுன்உற்றால் தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை

Page 10
ஆயவும் வேண்டு கொல்லோ அசடுமர் இந்நாள் செய்த மாயையின் மகனும் அன்றோ வரம்பு இலாவரம் பெற்று உய்ந்தான்
-கந்தபுராணம்
முருகனுடைய ஞான வேலாயுதத்தின் பெருமை சிந்தைக்கு எட்டாதது. ஞானம் தான் முருகனின் வேல் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது வெறும் ஆயுதம் அல்ல.
ஞானசக்தி, இச்சாசக்தி,கிரியாசக்தி என்றுமுருகனுக்கு மூன்று சக்திகள். இவற்றுள் ஞானசக்திதான் வேல்.
இச்சாசக்தி வள்ளிநாயகி. கிரியாசக்தி தெய்வ யானை. இதைப் புரிந்து கொள்ளாமல் முருகனுக்கு இரண்டு பெண்டாட்டி என்று யாரும் நினைக்கக் கூடாது.
இன்னோரு விஷயம் முருகனுக்கு தெய்வயானையை விட வள்ளியிடம் பிரியம் அதிகம். இதற்கு காரணம், தெய்வயரனையைவிட வள்ளிக்குத் தவம் அதிகம் என்பது தான்.
கிரியாசக்தியாகிய தெய்வயானை இடப்பக்கம் இருக்க வேண்டும். வள்ளி எந்தப் பக்கம் இருக்க வேண்டும்? வலப்பக்கம்.
எல்லாவற்றுக்கும் ஒர் அடையாளம் உண்டல்லவா? திருநீறிட்டால் சைவன். நாமம் தரித்தால் வைஷ்ணவன். சிலுவை அணிந்தால் கிறிஸ்துவன். இப்படி அடையாளம் இருப்பதுபோலவே வள்ளிக்கும் தெய்வயானைக்கும் என்ன அடையாளம்? நீலோற்பலம் என்ற மலர் கையில் இருந்தால் தெய்வயானை, தாமரை கையில் இருந்தால் வள்ளி அம்மையார்.
இன்றைக்கு நூற்றுக்கு நூறு முருகன் படத்தைப் பாருங்கள். வள்ளி கையிலும் தெய்வயானை கையிலும் தாமரையைத்தான் வைத்து எழுதுவார்கள் ஓவியக்காரர்கள். அவர்களுக்குப் படிப்பு கிடையாது. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் கிடையாது. ஏதாவது வைத்து எழுதிவிட வேண்டியது. தெய்வயானை கையிலே நீலோற்பலம் இருக்க வேண்டும் என்ன காரணம்? சிவனைப்போலவே முருகனுக்கு மூன்று கண்கள். வலப்பக்கம் சூரியன் இருக்கிறான். இடப்பக்கம் சந்திரன் இருக்கிறான். நெற்றி நடுவில் அக்கினி இருக்கிறான். சந்திரனை கண்டு மலர்வது நீலோற்பலம். சூரியனைக் கண்டு மலர்வது தாமரை. சுவாமிக்கு எப்பொழுதும் திறந்த கண்கள் இருபத்துநான்கு மணிநேரமும் அவரது நயனங்கள் திறந்திருக்கும் இமையா நேத்திரங்கள். நமக்குத்தான் கண்கள் மூடுகின்றன. தூங்குகிறோம். சுவாமிக்குத் தூக்கம் கிடையாது. ஆகவே இருபத்து நான்கு மணி நேரமும் திறந்த விழி. அந்த இடப்பக்கமாயிருக்கிற தெய்வயானையின் கரத்தில் உள்ள நீலோற்பலம் இருபத்து நான்கு மணி நேரமும் மலர்ந்திருக்கும்.
வலப்பக்கம் இருக்கிற வள்ளியம்மையார் கரத்தில் உள்ள தாரையிலே இருபத்து நான்கு மணிநேரமும் சூரிய ஒளி பட்டு இருபத்து நான்கு மணிநேரமும் மலர்ந்திருக்கும்.
 

தெய்வயானை கையில் தாமரை இருந்தால் சந்திர ஒளி பட்டு இருபத்து நான்கு மணிநேரமும் தாமரை மலராது (சந்திரனைக் கண்டு தாமரை மலராது). ஆகவே தெய்வயானைக் கையில் நீலோற்பலம் இருக்க வேண்டும்.
/ー N
வெவ்வேறு விதமான மின்சார சக்திகள் உலகில் இல்லை. இருப்பது ஒரே மின்சார சக்திதான். அந்த ஒரு ஆற்றல் தான் மின்விளக்கு முதலான எண்ணற்ற மின்சாதனங்கள் மூலம் உலகம் முழுவதும் வெளிப்படுகின்றது; இயங்குகிறது.
மின்சார சக்தி போன்ற ஈடு இணையற்ற அருள் சக்தி பரப்பிரம்மம். அந்தப் பரப்பிரம்மமே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய வடிவங்கள் கொண்டு ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தும் பொருட்டு படைத்தல், காத்தல், அழித்தல் என்ற உலக கிருத்தியங்களைச் செய்கிறது.
(சுவாமி கமலாத்மானந்தர்)
வள்ளி அம்மையார் கையிலே தாமரை மலர் இருக்க வேண்டும். இதன் உட்பொருள் என்ன? முருகப் பெருமானை நிஷ்காம்யமாகப்பலாபலன்கள் வேண்டாமல் வழிபடும் அடியார்கள் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும். கூம்பிப் போகாது. ஒரு நாள் உயர்ந்திருக்கும். ஒரு நாள் தாழ்ந்திருக்கும் என்று இல்லாமல் என்றும் ஒன்றும் போல அவர்கள் வாழ்வு சிறந்து விளங்கும். சில பேருக்குத் திடீரென்று பெயர் வரும். பிறகு வந்தது போலவே மறைந்துவிடும். அப்படி இல்லாமல் என்றைக்கும் ஒன்று போல் அடியார்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்ற தத்துவத்தை விளக்குவது தான் அந்த தெய்வயானை கரத்திலே மலர்ந்து இருக்கும் நீலோற் பலமும், வள்ளியின் கையிலே இருக்கிறதாமரை மலரும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் எல்லோரும் முருகப் பெருமானை நிஷ்காம்யமாக வழிப்பட்டால் உங்கள் வாழ்வு என்றும் மலர்ந்த வண்ணமாகவே இருக்கும்.
ஆகவே வள்ளி என்பது இச்சா சக்தி. தெய்வயானை என்பது கிரியா சக்தி, முருகன் கையிலே இருக்கிற வேல் ஞான சக்தி. இந்த மூன்று சக்திகளின் தலைவனான அந்த சுப்பிரமணி ஒரு மாமணியாக விளங்குகிறான்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய சொற்பொழிவைத் தொகுத்து எழுதியவர்:
கே. ஆர். நாகராஜன்

Page 11
குமாரசாமி ே
சிவபெருமானை முக்கண்ணன் என்பர். மூன்றாவது கண் நெற்றிக்கண். அது ஞானக் கண் ஆகும். அந்த ஞானக் கண்ணிலிருந்து தோன்றியவன் ஆறுமுகன். ஆறுமுகன் ஆண் மகன். சிவன் தோற்றுவித்த பிள்ளை. ஞானத்தின் திருவுருவாக விளங்குபவன். “ஞானப்பழம் நீ”என்று அம்மையாலும் அப்பனாலும் அழைக்கப்பட்டவன். எனவே, முருகன் வெறும் ஞானத்தின் வடிவினன் மாத்திரமல்ல முற்றிய, பழுத்த ஞானத்தின் திருவுருவானவன்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம்சத்தியோஜாதம் ஆகிய ஐந்து முகங்களோடு அதோமுகமுஞ் சேர்ந்து ஆறுமுகங்களுடன் பொருந்தியநிலையில், சிவபெருமான்தம் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தினார். அந்த ஆறு பொறிகளும் சரவணப்பொய்கையில் போய் விழுந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. கார்த்திகைப்பெண்கள் அறுவர் அக் குழந்தைகளை வளர்த்து வந்தனர். சில நாட்கழித்து சிவபெருமானும் உமையம்மையாருஞ் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளினர். அழகிய ஆறுகுழந்தைகளையும் ஆங்கு கண்டனர். அப்பொழுதுஉமையவளை நோக்கிய சிவபெருமான், "உனது சொரூபமும், எமது சொரூபமும் சேர்ந்துஉருவாகியதே ஆறுமுகன் வடிவம்’எனக்கூறினார். சிவசக்தி சங்கமத்தின் வடிவமாக முருகன் மிளிர்கின்றான் என்ற தத்துவம் இதனால் உணர்த்தப்படுகிறது. சக்தி பின்னமிலான் சிவபிரான் என்பதும்,சிவன்வேறுமுருகன் வேறல்ல என்பதும் தெளிவாகின்றன. உமையம்மையார் ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைத்துக் கையிற் கொள்ள, அவை ஆறுமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும்கொண்டஒருதிருமுருகன் ஆயின. சிவபெருமானின் ஆறுகுணங்களாலான முற்றுணர்வு வரம்பிலின்பம்,இயற்கையுணர்வு தன்வயமுடைமை, பேரருள், வரம்வில் ஆற்றல் என்பனவே முருகனின் ஆறுமுகங்கள் என்பர்.
ஆறுமுகங்களும் அறுவகைச் சமயங்களின் ஒருமைப்பாட்டினை உணர்த்தி நிற்கின்றன என்றும் கூறுவர். வேற்றுமையில் ஒற்றுமை எனும் அரிய தத்துவப் பொருளை விளக்குகின்ற கோலமாக இது அமைகின்றதல்லவா. ஆறுமுகக் கடவுளை வழிபாடு செய்வதுடன் அப்பெருமான் காட்டும் வாழ்க்கை முறைகளையும் அநுசரித்து நடக்கும் போதுதான் நம்மிடையே வேற்றுமையுணர்வுகளை மறந்து ஒற்றுமையுடன் கூடி வாழ்ந்து, சாந்தியையும், சமாதானத்தையும் நிலைபெறச் செய்யமுடியும்.
சண்மதங்களும் சண்முகத்துள் அடங்கிவிடுகின்றன. சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்தியம், கெளமாரம், செளரம் என்பனவே அந்தச் சண்மதங்களும், அவற்றின் கடவுளர்களாக முறையே சிவன், விஷ்ணு, சக்தி,கணபதி,முருகன், சூரியன் என்போர் உள்ளனர். ஆறுமுகங்களும் அவற்றை உணர்த்த, பன்னிரண்டு கரங்களுள் பத்துக் கரங்களில் இத்திருமேனிகளுக்குரிய பத்து க்கக் காணப்படுகின்றன. அதேவேளை, பிரதான
 
 
 

சோமசுந்தரம்
முகத்துடன் இணைந்த இரண்டு கரங்களிலும் அன்புகாட்டி அபயமளித்தலும், அருள் பாலித்தலும் நிறைவாக இருத்தலைக் காண்கிறோம். ஆயுதங்கள் அழித்தல் கருவிகள், அன்பும், அருளும் ஆக்கற் கருவிகள். முருகன் அன்பையும், அருளையும் பொழிவதன் மூலம், எம்மை ஆள்கிறான்; எமக்கு அநுக்கிரகம் செய்கின்றான். எமது அச்சங்கள் நீக்கப்படுகின்றன; எமக்கு ஆறுதலை அளிக்கிறான், ஆறுதலைகளைக் கொண்ட ஆறுமுகன். அன்பும் அருளும், உலகமகாசக்தியின் கூறுகள். ஆயுதங்களைவிட, அன்பும் அருளும் உலகினை வெற்றி கொள்வதற்கு மிக மிகப் பலம் பொருந்தியவை, சக்தி வாய்ந்தவை, நம்பிக்கையானவை என்ற உணர்வினை ஆறுமுகனின் இத்திருக்கோலம் எமக்கு உணர்த்துகின்றது.முருகன் கை வேல், வெறும் ஆயுதம் அல்ல. அது ஞான வேல், முருகனின் ஞானசக்தி. எனவேதான் வேல் வழிபாட்டிற்குரியதாக விளங்குகின்றது. சூரபத்மன் கொடுமைகள் இழைத்துக் கொடுங்கோலாட்சி புரிந்தவன். அகங்கார மமகாரங்களின் கூட்டு மொத்தமாக விளங்கியவன். அப்படிப்பட்ட சூரபத்மன் மீது ஆறுமுகனால் ஏவப்பட்ட வேல், கொடுவேல் அல்ல; அது ஞானவேல். எனவே, அது சூரனைக் கொல்லவில்லை; ஞான ஒளியை அவனுள் பாய்ச்சியது. அறிவு பெற்றான் ; அதனால் அகங்கார மமகாரங்கள் நீங்கப் பெற்றான். சூரபத்மன், சேவலும், மயிலும் ஆகிறான்: நாதமும், விந்துவும் ஆகினான். ஆறுமுகனின் வெற்றிக் கொடியில் சேவலாக அமர்ந்து விடிவிற்கு நாதமிசைக்கும் சிறப்பையும்,மயிலாக அமைந்து ஆறுமுகனைத்தாங்கும் ஊர்தியாக மிளிரும் பாக்கியத்தையும், இதனால் எஞ்ஞான்றும் ஆறுமுகனுக்கு அண்மையில் இருக்கும் பேற்றையும் பெற்றவன் சூரபத்மன். ஆறுமுகமான பொருளுணர்ந்து நாளும் அவன் பாதம் தொழுது, சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல் போற்றிப்போற்றி வாழ்வும் வளமும் பெற்று உய்வோமாக.
"விரதமாவது யாது? விரதத்தை அனுட்டிப்பதன் நோக்கம் என்ன? விரதத்தை எவ்வாறு அனுட்டிக்க வேண்டும்? விரத காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஆசாரங்கள், ஒழுக்கங்கள், சீலங்கள் யாவை? சைவத்தில் விரதங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருத்தலின் காரணம் என்ன?” போன்ற பல்வேறு வினாக்கள் எம்மத்தியில் எழுவது இயற்கையே. இவ்வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியம். ஒரு கருமத்தை நன்கு அறிந்து கொள்ளாமல், அதில் ஈடுபாடு கொள்வதால், தவறுகள் ஏற்பட இடமுண்டு. குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்டவர்கள் ஆகிவிடக்கூடாது. அல்லவா?
கற்றுத் தெளிந்த சிவாச்சாரியார்கள், சைவ சமயப் பெரியார்கள், அறிஞர்கள் என்போர் சைவ மக்களின்ஐயங்களைத் தீர்த்து, சரியான பாதையில் அவர்கள் செல்வதற்கு வழிகாட்ட வேண்டும். சைவமக்களும் தான் தோன்றித்தனமாகந் சமய காரியங்களைச் செய்யாமல், பெரியோரின் துணையை நாடிப்பெற்று, சமய ஆசாரங்களையும், ஒழுங்கு முறைகளையும் தெளிந்து, சமயச் செயற்பாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும்.

Page 12
கந்த விரதங்களுள் கந்தசஷ்டி என்றதும் உபவாசம் என்பது எம் நினைவிற்கு வந்து விடுகிறது. உபவாசம் என்றால் உடன் உறைதல் அல்லது உடன் இருத்தல் என்பது பொருள். கந்தசஷ்டி உபவாசம் என்று கூறும் போது கந்தனோடு நெருங்கியிருந்து வாசம் செய்தல் என்ற கருத்தினைத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். கந்தக் கடவுளுடன் மிகவும் நெருங்கியிருப்பதற்கு நாம் நம்மைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கிக் கொள்ளுதல் அவசியம். தகுதிகளுள் ஒன்று புறந்தூய்மை, மற்றையது அகந்தூய்மை, புறந்துாய்மை என்பது எமது உடலையும், உடையையும், நாம் வாழுகின்ற வீடு, சுற்றாடல் என்பவற்றையும், வழிபாடு செய்கின்ற கோயில் பிரகாரங்களையும் சுத்தமாக வைத்திருத்தல். புறந்துய்மை நீரால் அமையும் என்கிறார் வள்ளுவப் பெருமான். எனவே எமது உடலை, நீராடுதல் மூலமும், உடைகளை நீரில் தோய்த்து சூரிய வெப்பத்தில் உலர்த்துவதனாலும், வீடு சுற்றுப்புறங்களைக் கூட்டிக், கழுவித் துப்பரவு செய்வதனாலும்; ஆலயம், அதன் பிரகாரங்களை அலகிடுதல், மெழுகுதல், கழுவுதல் மூலமும் புறந்தூய்மை ஏற்படுகின்றது. துப்பரவு செய்தபின்னர், நம்மையும், நாம் வாழுகின்ற சூழலையும் அசுத்தம் செய்யாதிருப்பதும் புறந்துய்மையாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் நன்று. ஆரோக்கிய வாழ்விற்கு புறந்துய்மை இன்றியமையாதது. அவ்வாறே ஆன்மீக வாழ்விற்கும் புறந்துாய்மை மிகவும் இன்றியமையாதது. புறந்தூய்மை, அகந்தூய்மையைப் பேணுவதற்கும் ஆதாரம். கந்தனோடு நெருங்கியிருத்தலுக்கு, அதாவது கந்தசஷ்டி உபவாசத்தின் போது, புறந்துய்மை பேணுவதன் மூலம் நாம் நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
அடுத்து, உபவாசத்திற்கு வேண்டற்பாலது அகந்தூய்மை எனுந் தகுதி. உள்ளத்தில் உண்மை ஒளியை ஏற்றுதல், எமது மனத்தினை மாசுபடாது வைத்திருத்தல் என்பவை அகந்தூய்மையைத் தரும். அழுக்காறு, அவா,வெகுளி,பொறாமை, செருக்கு, அகந்தை, மமதை போன்றவைகள் எமது மனங்களில் "படியக் கூடிய மாசுகள், அசுத்தங்கள் என்பன. அவை அகற்றப்படும்
போதுதான் மனந்துய்மை உண்டாகின்றது. மெய், வாய், கண்,
மறைந்த மாமன்றத் தலைவர் திரு.வே.பா6 ஜூலை மாதம் 23 ம் திகதியன்று மாமன்றத் த6ை பற்றிக் ஹரிகன் அவர்கள் "கதிர்காமத்தின் மகிமை”
மாமன்றத்தின் உபதலைவரும், சமய தலைவருமான திரு. த. கணநாதலிங்கம் மேற்படி நி பேருரை நிறைவேறிய பின் அமரர் பாலசுப் பாலசுப்பிரமணியம் அவர்களின் ஏற்பாட்டில் அை அன்றைய நினைவுப் பேருரை நிகழ்வின் ே (தீபம் 4, சுடர் 4சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கட்
 
 
 
 
 
 

நினைக்கும்தன்மையுடையவன்மனிதன் நினைவை வெளிப்படுத்தும் கருவி வாய். உணவை அருந்துகின்ற வாய்க்குப் பெருமை கிடையாது. வாயிருந்தும் விலங்குகளை வாயில்லாப்பிராணிகள்என்றுகூறுகின்றோம்.கருக்கக்களை o॰ಣ್ಣೆ:ಞ್ಞ w : இநத உடமபையுமவாககையும நமகசூததநதவன இறைவன் நினைக்கநெஞ்சையும் உரையாட வாயையும். தாங்கி:நின்று தொழிற்படுகின்ற உடம்பையும் தந்த இறைவனை நாம் நன்றி மறவாமையின் பொருட்டுப் பூவும் நீரும்கொண்டு பூஜை செய்ய வேண்டும். :: * : ' ' ' ' ' . . . . .
திருமுருக கிருபானந்த வாரியார். மூக்கு, செவி என்கிற பஞ்சப்புலன்களின் வழிமனதைப்போகாமல் தடுப்பதன் மூலமே மனத்தைப் பாதுகாக்க முடியும். பஞ்சப் புலனைந்தும் நமக்கு வஞ்சனையையே செய்கின்றன என்கிறார். மாணிக்கவாசகர். இவ் ஐந்து புலன்களும் உடலில் உள்ளமையினால் உடலின் செயற்பாடுகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல் அவசியம். மனம், பொறிகள், உடல் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதானால், அவற்றின் வழமையான செயற்பாடுகளைத் தவிர்த்து, வேறு நல்ல செயற்பாடுகளுக்கு அவற்றைத் திசைகோட்படுத்த வேண்டும். நல்லனவற்றையே நினைத்தல், இறைவனைச்சிந்தித்தல்; வாயால் இறைவனின் திருநாமங்களை உச்சரித்தல், அவன் புகழ் பாடுதல், பேசுதல்; இறைவன் பெருமையையே கேட்டல், உடம்பால் இறைபணிசெய்தல், நன்னடத்தை பேணுதல் போன்ற செயற்பாடுகளால் இந்த நல்ல நோக்கத்தை எய்தமுடியும். விளைவு மனந்தூய்மை பெறுதல் ஆகும்.
‘விரதமாவது மனம் பொறிவழிப் போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு விதிப்படி விசேடமாக வழிபடல்" என்பது நாவலர் பெருமான் விரதத்திற்குத் தரும் வரைவிலக்கணம். விரதம் என்பது தவம் எனக் கொண்டு தமக்கு உற்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாது விடுதலும் எனும் கொள்கையை விரதகாலங்களில் மாத்திரமன்று எக்காலங்களிலும் வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகுவதால் கந்தனுக்கு மிக அருகில் அவனுடன் உபவாசம் செய்யும் பேற்றினைப் பெற்றவராவோம்.
G, VI V V V V (ganwyr wyf
லசுப்பிரமணியம் நினைவுப் பேருரை நிகழ்வுகடந்த லமையகத்தில் நடந்தேறியது. வணக்கத்திற்குரிய
என்ற பொருளில் பேருரை நிகழ்த்தினார். விவகாரங்கள், குருகுலம், விழாக்கள் குழுத் கழ்வுக்கு தலைமை வகித்தார். பிரமணியம் அவர்களின் நினைவாக திருமதி.சாந்தி னவருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டது. பாது மாமன்றத்தின் காலண்டிதழான இந்து ஒளி பட்டது.

Page 13
Nህዛረ
義
()
}
更多秘
(B.A. Dip. 9ங்கல விளக்கேற்றல் என்பது மங்கலம், விளக்கு,
ஏற்றுதல் என்னும் மூன்று சொற்கலாய தொடர் மொழி. அவற்றுள் மங்கலமென்பது நன்மை, நலம், காரியசித்தி, பொலிவு அறம் என்னும் பல பொருள்களைக் குறிக்கும். ஆகவே மங்களத்தைத்
தரும் விளக்கையேற்றி வணங்குதல் என்பது அதன் பொருளாகும்.
பாரத நாட்டிலே எல்லா மங்கல கருமங்களையும் விளக்கேற்றி வணங்கித் தொடங்கும் வழக்கம் மிகப் பழைய காலந்தொட்டு நிலவி வருகின்றது. அது தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயர்ந்த கடவுள் கொள்கையையும் காட்டுகின்றது. விளக்கேற்றி வழிபடுவதற்கு முன்பு செயலால் சில கருமங்களை அறிவது அவசியம்.
மங்கல கருமந் தொடங்கும் இடத்தையும் அதன் அயற் புறத்தையும் தூய்மை செய்து பொதுவிடயமாயின் அங்கே ஒரு பீடம் வைக்க அதனை வெண்டுகிலால் மூடி அழகு படுத்துக. அழகு படுத்திய பீடத்திலே தலைவாழையிலைத் துண்டையிட்டு ஒருபிடி நெல்லையாயினும் நீருடன் சேர்ந்த மஞ்சள் பொடி கலந்த பச்சையரிசியையாயினும் அதன் மேல் பரவி, ஒப்பஞ் செய்து நிறை குடம் வைக்க எடுத்த கருமம் முட்டின்றி முடித்தற் பொருட்டுக் காப்புத் தெய்வமாகிய பிள்ளையாரை வாழையிலையின் தலைமாட்டில் மாவிலையின் மேல் வைக்க வேண்டும்.
பழம் பாக்கு, வெற்றிலை மஞ்சள் மலர்வகை சந்தனம் திருநீறு குங்குமம் முதலிய மங்கலப் பொருள்களை ஆங்காங்கே, அழகுற வைக்க வேண்டும். மலர்களுள் செம்மலரும், வெண்மலரும் சிறந்தவை. குத்து விளக்கு கிழக்கும் புறமாக வைக்க நிறைகுடம் குத்துவிளக்கு என்பவற்றின் முடியிலே பூச்சூடுக. பிள்ளையாருக்குச் சந்தனங்குங்குமம் முதலியன அணிந்து பூவும் அறுகுஞ் சாத்துக. குத்து விளக்கு அவ்வாறே அழகு படுத்தி நாற்புறமுந் திரியிட்டுத் தேங்காய் நெய் இட வேண்டும்.
சாம்பிராணி ஊதுவத்தி முதலியவற்றின்ால் நறும் புகை எடுக்க இவ்வாறு நிகழ்ந்த வழித்திருநீறு பெய்த ஒரு சிறு தட்டிலே கருப்பூரத்தையிட்டுச் சுடர் கொளுத்தித் தேங்காய் உடைக்கப் பல்லியங்கறங்க மங்கல விளக்கேற்றித் திரிகரண சுத்தியும் காரிய சித்தியும் அருள் வாயென்று பிள்ளையத்ரை நீடு நினைக்க நினைந்த பின்பு அருட்பாடலோதி வணங்கித் தங்கருமத்தைத் தொடங்குதல் வேண்டும்.
இச்சடங்கு வகையெல்லாம் சைவத்தைச் சார்ந்தவை.
பழந்தமிழர் வாழ்வுடன் சைவச் சடங்கு வகை இறுகப்பின்னிக்
 
 

N ク
ܠܓ
S
き
عی
க்கேற் காந்திமதி s
in Ed.) கிடந்தையாரும் மறுக்கார். பல்வேறு காரணங்களாற் சைவச் சார்பு நிலை தளர்ந்து வரும் இந்நாளிலே நிறைகுடம் வைத்து விளக்கேற்றித் தங் கருமத்தைத் தொடங்குவர்.
இலங்கையில் பெரும் பாலானோர் எக் கருமத்தைத் தொடங்கும்போதும் விளக்கேற்றித் தொடங்குதல் பெருவழக்காகி விட்டது. அதனால் அத்துணை ஏற்றமாகக் கலாசாரமும் அன்பும் வணக்கமுமின்றி விளக்கேற்றிக் கருமந் தொடங்குதல் அருவருக்கத்தக்க செயலாகும்.
பலவகைத் திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டுதல் முதலிய வைபவங்களை விளக்கேற்றித் தொடங்குகின்றனர். அது மிக நன்று, பழைய பண்பாடு அழியாமற் காக்கப்படுகின்றது. விளக்கிலே விளங்குஞ்சோதியைக் கடவுளாகப்பாவித்து நெஞ்சார நினைந்து வாயார வாழ்த்தி வணங்கி எடுத்த கருமம் இனிது முடியுமாறு வேண்டுதல் இன்றியமையாததாகும். பலர் ஒரு கையில் வெண்சுருட்டு எரியக் கால்களில் சப்பாத்து செருப்பு முதலிய பாதங்கள் மிளிரத் தெய்வசிந்தனையின்றி சித்தம்பிறிதாகிச் சிதற விளக்கேற்றிக் கொண்டு வைபவங்களைத் தொடங்குதல் உய்தியில் குற்றமாகும். பல்லாண்டுகாலம் உயர்ந்த நோக்கத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பண்பாடு இவ்வகை வேண்டாப் பழக்கவழக்கங்களால் இகழப்படுகின்றது. காணவுங் கருதவும் முடியாத கடவுளை ஒளிவடிவில் வைத்து வழிபடும் விழுமிய கருத்து நிந்தனை அடைவதுமன்றிக் கடவுளும் நிந்திக்கப்படுகிறார். ஆ இதுவோமங்கள விளக்கேற்றதலின் தத்துவம்? இதனைத் தடுத்து உண்மையுரைப்பார் இல்லையா? வைபவங்களை விளக்கேற்றித் தொடங்குதலே சாலப்பயன் தருமென்று நம்புவோர், செருப்பு சப்பாத்துமுதலியவற்றைக் சுழற்றி விட்டுத்தம்மை தூய்மை செய்து தாம் வழிபடுந் தெய்வத்தை அவ்விளக்கின் சுடராகப் பாவித்து வாழ்த்தியும் வணங்கியுந் தொடங்கக் கடவர். அதுவே முறை. அதுவே சிறந்த கலாசாரத்தை மதித்து வளர்த்துப் பாதுகாக்கும் நெறி.
நாட்டின் எதிர்காலச் செல்வங்களாகிய இளைஞர் அந்த நல்ல முறையைப் பார்த்து பழகிக் கொள்வர். அவர்கள் கருத்தில்லாத வெறும் போலிச் செய்கைகளைக் கண்டு அவற்றை உண்மையென்று நம்புவர்களாயின் அவர்கட்கு விளக்கேற்றித்
தொடங்குதலின் தத்துவத்தை அறிவுறுத்துதல் அரிதாகும்.
இனி விளக்கின் சுடர்கொழுந்து சிவத்தின் வடிவமாகும். ஒம் என்பது பிரணவம், அது அகரம் உகரம் மகரம் என்றும் மூன்று
ళ్ల

Page 14
எழுத்துக்களாலாகிஉலகத்தேற்றத்துக்குக்காரணமான முதலோசை அது தூய ஒளிவடிவானது. சிவலிங்கமும் பிரணவ வடிவமுடையது. ஆகவே சிவலிங்கமும் ஒளி வடிவமுடையது. அவையிரண்டும் சிவத்தின் அருட்குறிகள்.ஒங்காரம் அருவப்பொருள். சிவலிங்கம் அருவுருவப் பொருள்.
இற்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னிருந்த ஆசிரியர் தொல்காப்பியரும் “கொடிநிலை வள்ளி கந்தழியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங்கடவுள் வாழ்த்தொடு கண்ணியவருமே என்று கூறியருளியதுங் காண்க கொடியநிலை -ஞாயிறு வள்ளி - திங்கள். கந்தழி - தீப்பிழம்பு.
இனி அம்மூன்று சுடர்களையும் சிவத்தின் கண்களாகச் சைவநுால்கள் கூறும். “சுடர் மூன்றுங் கண் மூன்றக் கொண்டான்றான் காண்’ என்னுந் தேவாரத் திருமுறையும் அதனை வலியுறுத்தும். இதன் கருத்து மூன்றிலுங் கலந்து எம்பெருமான் அம்மூன்றிலுங் கலந்து நின்று அவற்றை தொழிற்படுத்துவர். ஞாயிறு - வலக்கண் திங்கள். இடக்கண் செந்தீ - நெற்றிக் கண் ஆகும்.
திருக்கோயில் சடங்குகளுக்கும் தீவளர்த்தலும் விளக்கேற்றி வைத்தலும் அவற்றைச் சிவமாகவே கருதி வழிபடுவதும் இதுவரை நடைபெற்று வரும் நிகழ்ச்சியாம். சுருக்கமாகச் சொன்னால் வைதீக சைவச் சடங்குகளிலே தீ வளர்த்து வழிபடுதல் முதன்மையுடையது. இனி ஐம்பூதங்களும் சிவன் விளக்கத்திற்கு இடமாயினும், தீப்பிழம்பு ஒன்றே அவரை உருவ வடிவில் வழிபடுவதற்கு இயைந்த கருவியாய் ஏனைய பூதங்களைக் காட்டிலும் மேலோங்கி தூயதாய் நிற்பது.
சிவம் மன்னுயிர்களின் அகத்தே நின்று தன்னருள் ஒளியால் மல இருளைப் போக்கி அறிவு விளக்கந்தருதல் போலத் தீப்பிழம்பும் மன்னுயிர்களின் புறத்தேயுள்ள இருளைப்போக்கி விளக்கந் தருகின்றது. சிவம் அருவாயும் உருவாயும் நீக்கமற நிற்றல் போலத் தீப்பிழம்பும் பொருள்களில் அருவாயும் உண்டாய வழி உருவாயும் நீக்கமற நிறைந்து நிற்கின்றது.
இணைத்துப் பார்
".நாளைய அறிஞர்களும், பெரிய அதிகாரிகளு இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் எல்லோரும் எ முன்னேற்பாடுடன் நடந்து கொள்ளுங்கள்"
"நீஎப்பொழுதும்,பசித்திரு ż: விழித்திரு” பசித்திருசுறுசுறுப்புள்ளவர்களிடேயே தான் பசிய த்திரு.இது கற்றவற்றையெல்லாம்செயல்பட விழித்திரு: எந்த ஒரு காரியத்திலும் விழிப்புடனிரு பேச்சைச் சற்று நிறுத்தினார்.
“எதுங்க தானே வரும்.?" என்று துடுக்குடன் கே "நான் கூறிய மூன்று பதத்தின் முதல் எழுத்துக்கை நாகுக்காக,
 

திருத்திவிடு நாட்டை
. தானே புரியும் ம், மேதைகளும் சிறியோர்களாகிய உங்களிடையே தான் பொழுதும் பிற்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்
என்று பேசியவர் விளக்கமும் தந்தார்:
பிருக்கும்.
வாய்ப்பாகும். க்கப் பழகிக்கொள். தானே வரும்”இப்படிக் கூறி வாரியார்
ட்டான் ஒரு சிறுவன். ள இணைத்துப் பார் உனக்குப் புரியும்" என்றார் வாரியார்
- திருமுருக கிருபானந்த வாரியார்

Page 15
புதுமைக்கும் வழிகாட்டிகள்
UGØÕITUATU (
ஆ. குெ
இந் நிலவுலகில் பல சமயங்கள் நிலவுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவற்றிற்கு, ஒவ்வொன்றிற்கும், ஒரு தலைமைப் பீடம் உண்டு. இப்பீடத்தின் ஆதிக்கத்தின் கீழ், சமயத் தொண்டு புரிதற்காகத் தகுதி வாய்ந்த சேவை அதிகாரிகள் ஆங்காங்கு நியமிக்கப் பெறுகின்றனர். இந்நிலையில், குறித்த சமயங்களில்
சமயத் தொண்டு ஒரு சுமுகமான சீரிய முறையில் நடைபெறுகின்றன.
எமது சைவ சமயத்தைப் பொறுத்த வரையில் இத்தகையதோர் ஒழுங்கு முறை இல்லையென்றே கூறலாம். இச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் தத்தம் சிந்தனைக்கு எட்டியவாறு சமய முறைகளை அனுசரித்து வருகின்றனர். இத்தகையதோர் நிலை குறைபாடுடையது என்று சிலர் கூறும் அதே வேளை, அது சைவ சமயத்தின் சிறந்த அம்சம் எனவும் வேறு சிலர் கூறுகின்றனர். அதாவது, கட்டுபாடு எதுவும் இன்றி மக்கள் சமய சுதந்திரம் உடையவராய், தமது இயல்புக்கும் போக்கிற்கும் உவந்த வழிபாட்டு முறை எதுவோ அதனைக் கடைபிடிக்கக் கட்டியதாக உள்ளது என்று மெச்சுகின்றனர். י /•
இந்த விடயம் எவ்வாறு இருப்பினும், வேறொரு துறையில், சைவ சமயத்தின் கண்ணே, ஒரு சீரிய முறை பண்தொட்டு வழங்கி வருகின்றது. அதுதான் திருக்கோயில் இருப்பதுவும், அங்கு திரு விழாக்கள் நடைபெறுவதும் இவையாவும் சில ஆகமங்களில் வகுக்கப்பெற்றுள்ளவாறே நிகழ்தல் வேண்டும் என்பது நியதி. இங்கு நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆன்மீகத் தொடர்புடைய சீரிய அர்த்தமுடையதாகவே இருக்கின்றது. திருக்கோயில் அமைப்புந் தானும், மக்கள் தாம் நினைத்தவாறு அமைத்துக் கொள்ளுதல் விலக்கப் பெற்றுள்ளது. கட்டிடக் கலை தெரியாத காரணத்தால் போலும் சைவ சமயத்தவர் தமது கோயில்களை இருட்டறை போல அமைந்துள்ளனர் எனச் சிலர் ஏளனம் செய்வதுமுண்டு. ஒரு மனிதன் நிலத்தில் மல்லாந்து படுத்திருப்பின், அவனது உடல் உறுப்புகள் எந்தெந்த நிலையில் இருப்பனவோ, அவற்றிற்கு ஈடாகவே திருக்கோயிலினது வெவ்வேறு பகுதிகளும் அமைகின்றன.
சைவ சமயத்தின் வேறு எது இல்லாது இருப்பினும், ஆங்காங்கே திருக்கோயில்கள் இருப்பதன் காரணமாகவே இச்சமயம் அழியாது பாதுகாக்கப் பெற்று வந்தமையும், நாம் வரலாற்று வாயிலாக அறியக் கூடியதாக உள்ளது.
6ம் நூற்றாண்டினரான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது"திருமயிலாப்பூர்”(பூம்பாவை) திருப்பதிகத்தில், அக் காலத்தில் நடைபெற்று வந்த பத்துத் திருவிழாக்களைக் குறிப்பிடுகின்றார்கள். தாம் ஒதிய பதிகத்திற்கு தக்கவாறு பத்துத் திருவிழாக்களைக் குறிப்பிட்டார்கள். இவற்றிற்கு மேலதிகமாக வேறு எத்தனை, எத்தனை திருவிழாக்கள் இருந்தனவோ தெரியவில்லை.
புரட்டாதி மாதத்தில் நடைபெறுவதாகிய உருத்திர பல்கணத்தார்க்கு அட்டிட்டல் விழாவையே பெருமான்
 

7ாகப் பண்டே நின்றொளிரும் நிச் சுடர்கள் ணநாயகம்
கூறுகின்றார்கள். அதாவது திருவமுது ஆக்கி, அடியார்க்கு இடுதல். இவ்வைபவத்தின் சிறப்பைச் சம்பந்தமூர்த்தி நாயனாரின் திருவாய் மொழியாகவே, உயிரைப் பறி கொடுத்த பூம்பாவைப் பெண் மணியை விளித்துக் கூறியதாகச் சேக்கிழார் சுவாமிகள் தமது பெரிய புராணத்தில் ஒரு பாசுரத்தில் இயம்பியுள்ளார்:
"மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன்மதி ஆடும் அண்ணலார் அடியார்தமை அதுமு செய்வித்தல், கண்ணினால் அவர்நல் விழாப் பொலிவு குண்டார்தல், உண்மையாமெனில், உலகர் முன் வருக”என உரைப்பார். இரண்டாவது ஐப்பசி மாதத்து ஒணவிழா. இது திருமாலுக்குரிய விழா காலம் தொட்டே மிக விமரிசையாகக் கொண்டாடப் பெற்று வந்தது என்பதற்குப் பண்டை இலக்கியங்களிலே சான்று இருக்கிறது. இவற்றின் விவரம் கட்டுரையின் இறுதிப்பகுதியில் காண்க. நான்காவது மார்கழி மாதத்துத் திருவாதிரை திருநாள். ஐந்தாவது, தைமாதத்துத் தைப்பூசம் சம்பந்தப்பெருமான்,நெய்யால் மறைக்கப்படும் தெள்ளியசோறு இவ்விழாவின் போது அடியார்க்கும் வறியவர்க்கும் அளிக்கப்படும் எனப்பாடியுள்ளார்கள் ஆறாவது, மாசி மாதத்தில் நிகழும் கடலாட்டு விழா. ஏழாவது பங்குனி மாதத்து உத்திரத் திருநாள். எட்டாவது, அட்டமி நாள் இக் காலத்தில் இது சித்திரைப் பெளர்ணமியாகக் கொண்டாடப்படுகின்றது. ஒன்பதாவது, பொற்றாம்பு விழா இது பொன் + தாம்பு என விரியும்: இது வைகாசியில் நிகழும் ஊஞ்சலாடும் விழா. பத்தாவது பத்திரோற்சவம், கும்பாபிஷேகத்திற்குப் பதிலாக இவ்விழா ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாதி மாதங்களில் சில தினங்களில் நடைபெறும். ஆண்டு முழுவதும் இக் கோயில் திரு விழாக்கள் நடைபெறும் என்பதற்கோர் சான்றாக இவ்விழாக்கள் அமைகின்றன. பவித்திரம் என்பது தருப்பை மோதிரம்.
சிறப்பான இவ்விழாக்களைக் கண்ணுற்றுப் பார்த்து, உள்ளத்தால் அனுபவிக்காது, இவ்வுலகை விட்டுப் போதல் தக்கதோர் செயலாகுமோ என்று கேட்பது போலச் சம்பந்தப் பெருமானுடைய விண்ணப்பப் பதிகம் பூம்பாவையை நோக்கி அமைந்திருக்கின்றது.
திருகோயில்களில் நிகழும் திருவிழாக்கள் மிக அர்த்த முடையன என்று சொன்னோம். இவற்றின் தாற்பாரியங்களை எடுத்து மக்களுக்கு விளக்குவார் இல்லாதது பெரும் குறை. இவற்றை நடாத்துகின்ற அந்தணர்கள், உரிய வடமொழி மந்திரங்களை ஒதிக் கிரியைகளை நிறைவு செய்கின்றார்கள் ஆனால் இவற்றின் கருத்துக்களை விளங்க வைப்பது கிடையாது.
திருக் கோயில்களில் நடைபெறுகின்ற கொடியேற்றம் என்னும் நிகழ்ச்சியைப் பார்ப்போம். இங்கு கொடி மரம் சிவபெருமானைக் குறிக்கும். கொடிச் சீலை ஆன்மாவாக அமைகிறது. கயிறு ஆன்மாவைப்பந்திக்கும் பாசத்தைக் குறிக்கும். ஆன்மாவும் பாசமும் வெளிப்படைத் தோற்றம் பெற்ற பின்னர், சிவத்தை ஆதாரமாகக் கொள்ளும். இது, கொடிச் சீலையும் கயிறும் கொடி மரத்திலே தங்கி இருப்பதனால் குறிக்கப்படும். கொடிச்

Page 16
சீலையில், ஆன்மாவை குறிப்பதாகிய இடபமும், ஆன்மாவை இரட்சிப்பதாகிய அஸ்திர தேவரும், கும்பம் முதலிய பொருள்களும் எழுதப்படும்.
விழாக்கள் பற்றிய முன்னுரையை இத்துடன் நிறுத்திக் கொண்டு விளக்கீடு மீதான செய்தியைப் பார்ப்போம். 1999ம் ஆண்டின், அக்டோபர், நவம்பர் காலத்தைய “சிவதொண்டன்” சஞ்சிகையில் “கார்த்திகை தீபம்’ என்னும் தலைப்பின் கீழ், இவ்விழா பற்றிய அக்காலத்துப் பாடலொன்றும் அதன் கருத்தும் பிரசுரிக்கப் பெற்றிருந்தது. அதனை இங்கு நாம் அப்படியே தருகின்றோம்.
அறுமீன் பயந்த அறஞ்செய்திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போலப்
பல்பூங் கோங்கம் அணிந்த காடே”
இச் செய்யுளிலே சிவந்த கோங்க மலர்கள் பூத்துத் திகழும் பொலிவு கார்த்திகை விழா நாளில் ஏற்றப் பெற்ற விளக்கு வரிசைகள் ஒத்திருந்தமை கூறப்பெற்றிருக்கிறது. இவ்வண்ணம் சான்றோர் செய்யுள்களில் கார்த்திகை விளக்கீடு உவமானமாகக் கையாளப்பட்டிருந்தமையால் பண்டைக் காலத்தில் அது மக்கள் மனதில் நன்கு பதிந்திருந்தது என்பது தெளிவு.
இந்தப் பாடல் எந்த நூலில் உள்ளது, ஆசிரியர் யார் என்பது குறிக்கப்படவில்லை. ஆனால் சங்க இலக்கியப் பாடல் என்பது தெளிவு.
'அக நானூறு' என்னும் சங்க இலக்கியத்திலே “விளக்கீடு" தொடர்பான சுவையான செய்தியொன்று சொல்லப் பெற்றுள்ளது. தலைவன் பொருள்தேடுவதற்காகப் பிற இடம் சென்று விட்டார். அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது தெரிய வில்லை. இதனைத் தலைவியும் தோழியும் பல நாள் ஆலோசித்து இருக்கும்போது, தலைவியின் மனதில் ஒரு துணிவு உண்டாயிற்று. நற் கனவு கண்டுள்ளார், நற் சகுனமும் காட்சிக்கு தென்பட்டன. இவற்றின் காரணமாகத் தலைவன் வந்து சேரக் கூடிய நாளை ஒருவாறு ஊகித்து குறித்துச் சொல்லக் கூடியதாக இருந்தது. இதனைத் தோழிக்குச் சொல்லுகிறார்.
தோழியே, கேட்டாயாக சகல கருமங்களும் வெற்றிபெற ஆற்றப்பெற்றுவரும்எமது ஊரின் கண்ணே உழவுத்தொழிலும், வயல் வேலைகளும் நிறைவுற்றுள்ள இப் பருவத்திலே, மழை வீழ்ச்சியும் ஒய்ந்து விட, வானத்திலிருந்து இருளும் நீங்கிவிட, சந்திர மண்டலத்திலேயுள்ள குறுமுயல் வடிவம் தெளிவாத் தோற்றம் அளிப்ப, அறுமீன் என்னும் பெயர் வாய்க்கப் பெற்ற கார்த்திகை நட்சத்திரமும் சந்திரனை வந்து சேரும், இருள் அகன்ற நள்ளிரவில், எமது ஊர் மக்கள் எல்லாரும் கூடி, வீதிகள் தோறும் விளக்குகளை நிரை நிரையாக வைத்து, மாலைகள் தூக்கி விளக்கீட்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாவார்கள். ஊரின் சக மக்களோடுதானும் ஒன்று சேர்ந்து இவ் விழாவைக் கொண்டாடுவதற்காக இந் நன்னாளிலே எமது தலைவர் இங்கு வந்து சேர்வார். இதற்குரிய பாடற் பகுதியைப் பார்ப்போம்
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கியமாக விசும்பில்
குறுமுயல் மறுநிறங் கிளர, மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்,
மறுகு வியுக் ந்து, மாலைதூக்கிப்
 
 

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர வருகதில் அம்ம
அகநானூறு - 141 பாலை (ஒரு பகுதி)
-நக்கீரர்
நாஞ்சில் துஞ்சி - கலப்பைகள் மடிந்து உலகு தொழில் உலந்து - உலகின்கண் உழுதொழில் முடிந்து விட, மழைகால் நீங்கியமாக விசும்பில் மழைபெய்தல் ஒழிந்தவானின் கண்ணே; குறுமுயல் மறு நிறம் கிளர - குற்றமுயலாகிய மறுவின் நிறம் விளங்க,மறுகுவிளக்கு உறுத்து- தெருக்களெங்கும் விளக்குகளை நிரல்பட ஏற்றி; விழவு உடன் அயர வருக - விழாவினை நம்முடன் சேர்ந்து கொண்டாடத் தலைவர் வருவார்.
விளக்கீட்டு விழாவின் போது நிரல் பட ஏற்றப்பெறும் விளக்குகளின் வரிசைகள் பண்டை இலக்கியங்களில் பல இடங்களில் உவமையாகக் கையாளப் பெற்றிருத்தலைக் காண்கிறோம்.
இதுவும் அகநானூறு' என்னும் இலக்கியத்திலே காணப்படுவதாகி ஒன்று தலைவன் வேற்று நாட்டிற்குப் பொருள் வயிற் பிரிந்திருந்த சந்தர்ப்பத்தில் தலைமகள் தோழிக்குக் கூறியது. "வானில் ஊர்ந்து செல்லும், ஒளி விளங்கும் ஞாயிற்று மண்டிலம் தீயெனச் சிதைந்து எரிந்த வெப்பம் விளங்கும் காட்டகத்தே, சிலையில்லாதனவாய், அரும்பில்லாத இலவம் பூக்கள், ஆர்வமிக்குடைய மகளிர் கூட்டம், மகிழ்ந்து கூடி எடுத்த அழகிய கார்த்திகை விளக்கின் நெடிய ஒழுங்கு போலத் தோன்ற,குளங்கள் நீரற்றுத் துகள்பட்டிருக்கும் வளம் தப்பிய காட்டில்” இதோ, இதற்குரிய பாடற் பகுதி: "வானம் ஊர்ந்த வயங்கொளிமண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பு அவிர்அம் காட்டு இலையில் மலர்ந்த முகையில் இலவம் கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அம்சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றிக் கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
-அகநானூறு 1(பாலை) - ஒளவையார்
உருப்பு அவிர் அம் காட்டு - வெப்பம் விளங்கும் காட்டகத்தே கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த - ஆர்வம் மிகக்கொண்ட மகளிர் கூட்டம் மகிழ்ந்து கூடி எடுத்த அம் சுடர் நெடுங்கொடி போற்பத் தோன்றி - அழகிய கார்த்திகை விளக்கின் நெடிய ஒழுங்கு போலத் தோன்ற கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் - குளங்கள் நீரற்றுத் துகள் பட்டிருக்கும் வளம்தப்பிய காட்டில்,
அக நானூறு 185ம் பாடலிலேயும் இந்த உவமை தரப்பெற்றுள்ளது.
"வான் உலந்து அருவி ஆன்ற உயர்சிமை மருங்கின்
பெரு விழா விளக்கம் போலப் பலவுடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலையுயர்பிறக்கல்மலை இறந்தோரே'-185(ஒருபகுதி) இங்கு விளக்கீட்டுவிழா பெரு விழா எனவே குறிக்கப் பெறுகின்றது. இவ்வாறு விளக்கீட்டு விழா பண்டு தொட்டு இன்றும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப் பெற்று வருகின்றது.
திருச்சிற்றம்பலம்

Page 17
பெருமாளே துயிெ
பாற்கடலில் பள்ளி கொள்ளு காத்தருளும் கடமைகொண் அலைகடலில் தத்தளிக்கும் ஏங்கித் துடி துடிக்கும் எமக்
காப்பதுவுன் கடமையென கடமையினை மறந்து நீ து துயில் கொண்டு நீயிருக்க துயிலெழுந்து வந்திடுவாய்
பிள்ளைகள் எங்கெங்கோ, ( செத்தொழிந்து போனாலும் ஏனைய்யா இந்த இழி நிை நீ மட்டும் துயில் கொண்டு
குடியிருக்கும் வீடுகளும், ே பாடுபடும் நிலபுலமும் படும் நாடிருக்கும் நிலைப்பாட்டில் ஓடி வந்து போக்கிடவே கரு
போது முந்தன் மறுதலிப்பு ! நாடிவந்து கருணை செய்து தேடுகின்றோம் உன் துணை நாடுகின்றோம் உன்னடியை
 
 

glöggil 6 bâtbi:ITV
நம் பாராளும் பெருமாளே ட கருணைமிகு பேரருளே படகுபோல் பரிதவித்து கு அருள் தந்திடுவாய்
வேதங்கள் கூறிடினும் யில் கொள்ளப் போனதென்ன துன்ப மெம்மை வாட்டுதய்யா
துணையாக நின்றிடுவாய்
பெற்றோரும் வேறெங்கோ முகம்பார்க்க முடியாது ல எமக்களித்து நிம்மதியாய் இருக்கின்றாய்.
காவிருக்கும் ஆலயமும் பாட்டைப் பார்த்திடு வாய்
நாமடையும் வேதனையை ணை நீ செய்திடுவாய்
இனிவேண்டாம் புறக்கணிப்பு
எங்களை நீ காத்திடுவாய் யைத் துரிதமாய் வந்திடுவாய் நிம்மதியைப் பெற்றிடவே.
த. மனோகரன்
உமாபதி கொழும்புத்துறை

Page 18
WAAM* VMA ஏன் தத்தி
மாண்புமிகு நிதியரசர் நிலையற்றது உலகம் நிரந்தரமானது சிவம். நிலையற்ற உலகத்தினுள்ளும் நீக்கமற நிறைந்துள்ளது சிவம். காலத்தால் அழிவது உலகம். அழியாதது சிவம். பிறத்தல், வளர்தல், தளர்தல், அழிதல் இவை காலத்தின் கோலங்கள். காலத்தினுள் அமிழ்ந்து விட்டால் பிறப்பும் இறப்பும், உதித்தலும் உதிர்வும் நடந்தே தீரும். சாஸ்வதமாக என்றென்றும் நிலையாக இருக்கும் சிவம் பிரபஞ்சமாக உருவெடுக்கின்றது. அதற்கு காலத்தை வாகனமாகப் பாவிக்கின்றது சிவன். அதாவது காலத்திற்கு அப்பாற்பட்டிருப்பதும் சிவம், காலத்தின் உள் நிற்பதும் சிவம். அது எப்படி?
கடல் அலையானது கடல் நீர்தான். கடல்நீரே அலையாக மாறுகின்றது. அது மேலெழுந்து நிற்கும் போது அது அலை. கீழே சாய்ந்து கடலில் கலக்கும் போது அலையென்ற சொல்மாறி கடல் நீராகக் கருதப்படுகின்றது. கடல் நீரும் கடல் அலையும் ஒன்றுதான். காலத்திற்குட்பட்டு சூழலுக்குட்பட்டு கடல் நீரானது உருவம் பெறும் போது, வெறும் கடல்நீரானது'கடல் அலை என்று அழைக்கப்படுகின்றது. நிலையற்ற கடல் அலை என்ற உருவம் காலத்தின் பாற்பட்டு சிதைந்து அழிந்ததும், அதன் உட்பொருளான பழைய கடல் நீர் சமுத்திரத்தை சந்தித்து அதனுடன் சங்கமமாகி விடுகின்றது. உலகம் யாவும் அணுக்களின் சேர்க்கையே என்று விஞ்ஞானம் கருதுகின்றது. ஆகவே ஒரே உட்பொருள் இவ் வுலகமாக பரிணமித்துள்ளது என்பதே விஞ்ஞான முடிவு.
ஆகவே, இயற்கையில் இரண்டு நிலைகள் இருப்பதை நாம் அவதானிக்கலாம். ஒன்று நிரந்தர உண்மை நிலை. (Being). மற்றையது மாறுபடும் தற்காலிக நிலை (Becoming). அதை மாய நிலையென்றும் வர்ணிக்கலாம். நிரந்தர நிலையிலிருந்து மாற்ற நிலைக்கு அல்லது மாறுபடும் நிலைக்கு வர ஏதுவாக இருப்பது காலம். காலத்திற்கு எது உட்பட்டாலும் உடனே மாறுபடும் நிலை வந்துவிடுகின்றது. ஆகவே நிரந்தரமான, மாற்றமில்லாத சிவம் மாறுபடும் நிலையை அடைய அதன் ஏதாக அல்லது வாகனமாகப் பாவிப்பது காலத்தையே (Time).
சிவம் யோக நிஷ்டையில் இருக்கின்றது. அந்நிலை காலமற்றநிலை. படைக்கப்பட்ட உலகில் சிவம் சஞ்சரிப்பதனால் உடனே காலத்தை உபயோகிக்க வேண்டும். அதாவது காலம் என்ற வாகனத்தில் ஏற வேண்டும். அது மட்டுமல்ல, உலகத்தை வழி நடத்துவதற்கு உலக தர்மத்திலும் இணைய வேண்டும். தர்மமானது காலத்திற்குக் காலம் மாறுபடுகின்றது. ஆனால் காலமும் அந்தக் காலத்தின் தர்மமும் ஒன்றே. காலம் என்றாலே அதன் அர்த்தம், அதன் உட்பொருள் தர்மம் தான். பால் வெண்மையானது. வெண்மை நிலை போய்விட்டால் அது பாலாக இருக்காது. கால தர்மம் இல்லையேல் காலம் இல்லை. இந்துக்களின் கணக்குப்படி காலமானது நான்கு யுகங்களைக் கொண்டதாகும். அவை சத்ய யுகம் அல்லது கிரேதயுகம்; அடுத்தது திரேதா யுகம்; மூன்றாவது துவாபரயுகம்; கடைசியானது கலியுகம். தற்பொழுது கலியுகம்
 

க் கெSாடி?
க. வி. விக்னேஸ்வரன்
நடந்து கொண்டிருக்கின்றது. கலியுகத்தில் 5100 வருடங்கள் கழிந்துவிட்டன. ஒவ்வொரு யுகமும் சர்வ நலமுடைய நன்னிலையில் இருந்து படிப்படியாக கீழ் நிலை நோக்கி வந்து கடைசியில் பிரளயத்தில் அழிகின்றது. தர்மத்தின் உள்ளடக்கமும் யுகத்திற்கு யுகம் மாறுபடுகின்றது. துவாபரயுகம் போய் கலியுகம் வந்த காலமே மகாபாரதக் காலம் என்பர். யாரோ காலணிகளைக் கழற்றாமல் உள்ளே வந்ததை அவதானித்த கிருஷ்ணபரமாத்மா கலிகாலம் பிறந்துவிட்டது என்றாராம் அவரின் காலணிகளைப் பார்த்தவாறே யுகங்கள் மாறும் போது மனிதர்களின் குணாதிசயங்களும் மாறுபடுவன. உலகமானது இறைவனால் இயைவிக்கப்படுவதற்கு அது ஒர் எடுத்துக் காட்டு.
காலமானது தொடங்கும் போது நான்கு யுகங்களையுந் தன்னுள் அடக்கி நிற்கின்றது. பின்னர் படிப்படியாக நலிவடை கின்றது, சோர்வடைகின்றது. ஒவ்வொரு யுகமும் முடிவடைந்து நான்கும் இறுதி நிலையை அடையும் போதுதான் பிரளயம் ஏற்படுகின்றது. அந்தந்த யுகத்திற்கு ஏற்ப அதனதன் தர்மமும் நிலை நாட்டப்படுகின்றது. பிரளயத்தை நோக்கிச் செல்லும் காலத்தை வழிநடத்த அவ்வக் காலத்தின் தர்மமானது உறுதுணை யாக இருக்கின்றது.
யுகங்களின் தர்மத்தை விளங்கப்படுத்துவதனால் நவீன விஞ்ஞானத்தின் துணைகொண்டு ஒரு உதாரணத்தைத் தரலாம். காலத்தில் முன்னுக்குப் பின் சஞ்சரிக்கக்கூடிய ஒரு இயந்திரம் இருப்பதாக எண்ணிக் கொள்வோம். அந்த இயந்திரத்தில் ஏறி உட்கார்ந்ததும் கலியுகத்திலிருந்து எங்களைத் திடீரென்று துவாபர யுகத்திற்கு அந்த இயந்திரம் எடுத்துச் செல்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அங்கு நுழைந்ததும் நாங்கள் மக்களின் பொதுவான குணாதிசயங்களைப் பார்த்தோமானால் கலியுகத்திலும் பார்க்க ஒழுக்கநிலை துவாபர யுகத்தில் மேம்பட்டிருப்பதை பார்க்கக்கூடியதாக இருக்கும். துவாபரயுகத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய குணாதிசயங்களை இயல்பாகவே மக்கள் கடைப்பிடித்து வருவதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். கலியுகத்தில் மேற்படி குணாதிசயங்கள் எந்தளவிற்கு கைவிடப்பட்டு வருகின்றதோ அந்தளவிற்கு முன்னைய யுகங்களில் அக்குணாதிசயங்கள் பொது மக்களாலும் மக்கட் தலைவர்களாலும் பொதுவாகவும், வெகுவாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை மேற்படி இயந்திரத்தில் உள்ளவர்கள் கண்கூடாகப் பார்ப்பார்கள்.
ஆகவே, சிவமானது பிரபஞ்சமாகப் பரிணமிக்கும் போது காலத்தையும் அவ்வக் காலத்தின் தர்மத்தையும் தன் வாகனமாக்கியே பரிணமிக்கின்றது.
நந்தி என்ற சொல்லிற்கு வடமொழியில்"ஃபிரிஷ்”(ரிஷய) என்பார்கள். இந்தச் சொல் பல பொருள் கொண்டது. சிவம் என்றும், எருது என்றும், தத்மம் என்றும் பொருள்படும்.
Sဒွိ

Page 19
சிவம் பிரபஞ்சமாக உருவெடுக்கும் போது எருவை வாகனமாக்கி வருகின்றார் என்பது புராணக் கதை. சிவனின் வாகனமாகும் பேற்றைப் பெற்ற நந்திதேவர், கோடி வருடங்கள் உக்கிர தவம் செய்தார் என்றும், அதனால்தான் வாகனமாகவும் துவாரபாலகராகவும் ஆக்கப்பட்டார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமானுக்கு முதல் மாணாக்கரும் இவரே என்று புராணங்கள் இயம்புகின்றன.
புராணங்கள் இந்துமதத்தில் ஒரு பெரிய நற்காரியத்தைப் புரிகின்றன. எந்தவொரு சிக்கலான வேதாந்த சித்தாந்தக் கருத்தையும் கதை ரூபத்தில் எடுத்துக் காட்டுகின்றன புராணங்கள். பாமர மக்கள் கதையோடு நின்று களிப்பெய்துவர். அறிவுவழி நிற்பவர்கள், அப்பாலும் செல்வார்கள். ஆனால் இறைவன் எல்லாம் வல்லவன், எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்தவன், எல்லாவற்றிலும் உறைபவன் என்பதால் புராணங்கள் கதையாக உருவாக்கிய புராண பாத்திரங்களில் எவன் ஒருவனாவது அன்புடனும் பக்தியுடனும் ஒன்றி அப்பாத்திரங்களை வலிந்து அழைத்தால் அல்லது மனதில் நிலை நிறுத்தினால் அந்த புராண ரூபத்தில் சிவமானது வரக்கூடும், வந்துள்ளது, வரும். அதற்கு அன்பும் நம்பிக்கையுந்தான் அவசியம். மனித அன்பும், நம்பிக்கையும் மலைகளைப் புரட்ட வல்லன.
இறைவன் சத்து சித்து ஆனந்தம் என்ற மூன்று தன் ஆனந்தம்-முருகன். சித்தலத்தில் உயர்ந்தது சிதம்பரம். தேவி திருச்செந்தூர், திருச்செந்தூரில் தந்தையாராகிய சிவமூர்த் அரிய திருத்தலம் செந்திலம்பதி, திருச்செந்தூர் மூலவருடைய கொண்டிருந்தார். அமரர்கள் வந்து வணங்க பூவேந்திய கரத் பின்புறத்தில் ஈசானம் தத்புருஷம், அசாகமரம், வாமதேவம்,
செந்தில்நாயகனை வழிபடுகின்ற போத்தி, முரு பின்புறம் உள்ள சிவமூர்த்திக்கும் செய்வார். இது உற்றுப்ப திருக்கோயிலுக்குச் சென்றால் அங்கு நடைெ திருமேனியையும் நன்கு பார்த்து உண்மைகளை உணர் வேடிக்கைகளையும் பார்த்து ரசிக்கக் கூடாது.
நந்திதேவர் ஒரே நேரத்தில் ஒரு உன்னத கருத்தாகவும் உள்ளம் கொள்ளை கொள்ளும் உயரிய உயிருள்ள ஒரு பாத்திரமாகவும் படைக்கப்பட்டுள்ளார். நிரந்தர நிலையிலிருந்து மாறுபடும் அல்லது விழையும் நிலைய அடைய, காலமும், காலத்தின் தர்மமும் இறைவனுக்கு அவசியம் என்பது தத்துவார்த்த கருத்து. சிவபெருமானின் உயிருள்ள வாயிற்காப்போன் என்பது புராணப் பாத்திரம். ஆகவே ஞானமார்க்கத்தினர்க்குக் கருத்தாகவும் பக்திமார்க்கத்தினர்க்குக் கருவியாகவும் நந்தி தேவர் விளங்குகிறார்.
இறைவன் பிரபஞ்சத்தினை ஏற்படுத்த காலத்தை உபயோகிக்கின்றான் என்பதையும் மனிதன் இறைநிலையடைய காலம் என்ற தடையைக் கடக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் கைலாசத்தில் நிஷ்டையில் இருக்கும் சிவனின் வாயிலில் வாயிற்காப்போனாக நந்தி வீற்றிருக்கின்றது.
భ K ჯ 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நந்தியின் ஆசன அமைப்பை அடுத்து ஆராய்வோம். மூன்று கால்களை, மடக்கி ஒரே ஒரு காலை மட்டும் நிமிர்த்தியும் நிமிர்த்தாமலும் அரை நிலையில் மடக்கி வைத்திருக்கின்றது நந்தி, மற்றைய மூன்று கால்களையும் காண முடியவில்லை. அவை உள்ளடங்கிவிட்டன. சத்ய யுகம்,திரேதா யுகம்,துவாபரயுகம் வந்து கடந்து சென்று விட்டன. இருந்த இடம் தெரியாமல் காலத்தோடு காலமாக இந்து மூன்று யுகங்களும் அடங்கிவிட்டன. ஆனால் கலிகாலம் நடக்கின்றது. அதுவும் ஒரு தொகைக் காலம் (5100 வருடங்கள்) முடிவடைந்த நிலையில் காலம் என்பது பிரளயத்தை நோக்கிநிற்கின்றது. அதே போல் தர்மமும் மிகவும் நலிந்த தளர்ந்த நிலையில் இருப்பதை எடுத்துக் காட்ட நந்தியானது எழும்பாத நிலையிலும், முற்றிலும் தளர்ந்து உறங்காத நிலையிலும் ஒரு காலை மட்டும் மடக்கி உட்கார்ந்திருக்கின்றது.
காலத்தின் வயப்பட்ட நடைமுறை உலகத்தை உணர்த்துகிறது நந்தி. காலம் சாஸ்வத இறைமையின் வாகனம். காலத்தைக் கடந்தால்தான் உயிர்களுக்கு விமோசனம், நந்தியைக் கடந்தால் கிடைப்பது இறை தரிசனம். காலம் தற்பொழுது ஒரே ஒரு காலை ஊன்றியே செயற்படுகின்றது. தர்மமும் அதனால் மழுங்கிவிட்டது. நான்கு கால்களையும் நந்தி உள்ளடக்கினால் பிரளயம் வந்துவிட்டது என்பதற்கு அது அடையாளமாக விளங்கும்.
சந்தூர்
மைகளையுடையவன். சத்து-உண்மை, சித்து-உமாதேவி, தலத்தில் உயர்ந்தது மதுரை. முருகன் தலத்தில் உயர்ந்தது தியை ஐந்து சிவலிங்கங்களை அமைத்து முருகன் பூசித்த பதிருக்கரத்தில் மலர் இருக்கின்றது. அப்பாவை வழிபட்டுக் துடன் திரும்பி காட்சியளித்தார். செந்திலாண்டவனுடைய சத்யோஜாதம் என்ற ஐந்து சிவலிங்கங்கள் இருக்கின்றன. கனுக்குத் தீபாராதனை செய்து அத் தீபாராதனையைப் ார்த்தவர்க்குத் தெரியும். பறும் வழிபாட்டு முறைகளையும் எம்பெருமானுடைய தல் வேண்டும் மடைப்பள்ளிப் பிரசாதத்தையும் மற்ற
- திருமுருக கிருமானந்த வழுவி
* VgaKS~GŠය | ↓:කුණි.
இந்த உண்மை நிலையை உ e நந்திக்கொடி, இந்துக்கள், வாழ்க்கைை 0. பிரதிபலிக்கின்றது இக்கொடி. ஆகே கொடியை, அதாவது நந்திக்கெர&ன்பப் பா நன்றாகப் பாவிக்கலாம். நாஇன் நலமை நஞ்சிவனை நினைப்பூட்டப் பாவிக்கல வாழ்க்கையில் நாம் கடக்க வேண்டிய காலபிஎனும் தடையை நினைத்துப் பாவிக்கலாம். கலிகாலம் கடைகாலம் என்றாலும் நந்தியின் நலன் பெற்றால் இறைவனின் சகல வரமும் பெறலாம் என்பதை நினைந்துருகிப் பாவிக்கலாம். நந்தியே நம் இறைவன். நம் இறைவனே நந்தி.
நந்திஇணையாடி யான் தலைமேற் கொண்டு புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றி செய் தந்தி மதிபுனை அரனடி நாடொறுஞ் சிந்தை செய்தாகமஞ் செப்பலுற்றேனே. -(திருமந்திரம்)
क्षु

Page 20
உ. சுரேந் யா/கிறிஸ்தவ கல் இந்துக்களது வாழ்வியலில் விழாக்களும் விரதங்களும் முக்கியமான ஒரு பங்கினை வகிக்கின்றது. சைவசித்தாந்த நோக்கில் ஆன்மா தனது இலட்சிய சிறப்பினை அடைவதற்குரிய வழிகளில் ஒன்றாக விரதத்தை முக்கியத்துவப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் விழாக்கள் விரதங்கள் என்பவற்றை மாற்றி வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் விட்டுக் கொடுத்தல், அகத்தூய்மை புறத்தூய்மை ஏற்படுத்தல், திரிகரண சுத்தியை ஏற்படுத்தல் போன்ற நற்பயன்களை பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமன்றி இவற்றைப்பற்றி அறிவதனூடாக அவற்றினது உட்பொருள், தத்துவம், வழிபாட்டுமுறை, பலாபலன், மரபுக் கதைகள், பாரம்பரியங்கள் என்பவை பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
இந்த வகையில் இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகத் திகழும் "தீபாவளி’ பண்டிகை பற்றி நோக்கும்போது இப்பண்டிகையுடன் தொடர்புடைய மரபுக்கதைகள் வடநாட்டில் வேறாகவும், தென்நாட்டில் வேறாகவும் அமைந்து காணப்படுகின்றது. வடநாட்டவரின் கதையின்படி இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்கு வரும்பொழுது அயோத்திமக்கள் தீபங்களை ஏற்றி இராமனை வரவேற்ற தினமே தீபாவளி குறித்து நிற்கின்றது என்று கூறப்படுகின்றது.
ஆனால் தென் நாட்டின் கதைப்படி பூமாதேவிக்கும் திருமாலுக்கும் மகனாக பிறந்த நரகாசூரன்" கடுந்தவம் புரிந்து பல கொடுமைகளை செய்து வந்தான்.இதனால் கிருஷ்ண பகவான் கிருஷ்ண அவதாரத்தில் சத்தியபாமாவுடன் சேர்ந்து பஞ்ச ஆயுதங்களை கொண்டு நரகாசூரனைவதை செய்த தினமே தீபாவளிதினம் என குறிப்பிடப்படுகின்றது. இதனால் அன்றைய தினமான ஐப்பசி தேய்பிறை சதுர்த்தஷியை தீபாவளி தினமாக இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்டது.
தீபாவளிப் பண்டிகையை அனுஷ்டிக்கும் முறைபற்றி நோக்கும் போது ஐப்பசி மாத தேய்பிறை சதுர்தஷித் திதியன்று இரவு விடிய முன்பு உதயத்தில் எண்ணெய் முழுக்குச் செய்து புத்தாடை புனைந்து வீட்டில் தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்த உணவுப் பண்டங்கள், பழங்கள், வெற்றிலை, பாக்கு போன்ற மங்களப் பொருட்களை வைத்து கண்ணனையும் சத்தியபாமாவையும் வழிபடவேண்டும்.
அன்றுவிடிந்ததும் அமாவாசைத் திதிஎன்பதனால் விரதம் இருந்த பிதிர் தர்ப்பணங்களையும், தவறிய சிரார்த்தங்களையும் செய்தல் வேண்டும். அத்தோடு ஆலய தரிசனம் பெரியோரைக் காணல், ஆசீர்வாதம் பெறல் போன்ற நற்கருமங்களை செய்தல் வேண்டும். மேலும் இத்தினத்தில் மது மாமிசம் உட்கொள்ளாமல், தீமைகள் செய்யாது இருத்தல் வேண்டும். பசுக்களில் பால் கறவாமலும் எருதுகளை வண்டியிலே பூட்டி வேலை வாங்காமலும் இருத்தல் வேண்டும். இதன் மூலம் கிருஷ்ணருடைய வாகனமாகிய பசுவை வழிபட்டு தீபாவளி தினத்தை கொண்டாடுவதன் மூலம் பல அரிய நற்பலன்களை பெறலாம்.
 
 

திரகுமார்
லுரரி, கோப்பாய்
அடுத்து இப்பண்டிகை கூறும் தத்துவம் ஆனது ஒவ்வொருவரது மனதில் இருளை அகற்றி ஞான ஒளியினை அடையச் செய்வதனையே குறித்து நிற்கின்றது. அதாவது நல்லெண்ணம் என்னும் எண்ணெய்யை எமது உடலில் பூசி சித்தம் என்னும் அரப்பினால் அழுக்காகிய கோபம் ஆகியவற்றை தேய்த்து போக்கி ஞானமாகிய புதிய ஆடைகளை உடுத்தி புனிதமானவர்களாக விளங்குதல் வேண்டும். வடஇந்தியாவில் இப்பண்டிகை வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகின்றமை இதன் முக்கியத்துவத்தையே சுட்டி நிற்கின்றது.
அடுத்து விழாக்களில் ஒன்றாக விளங்கும் “கார்த்திகை தீபம்’பற்றி நோக்கும் போது அது இந்துக்களால் திருக்கார்த்திகை விளக்கீடு எனவும் அழைக்கப்படுகின்றது. இங்கு விளக்கீடு என்னும் சொல்லானது விளக்கு+ஈடு என வகுக்கலாம். இங்கு ஈடு என்பது இடுதல் அல்லது வைத்தல் என்பதனையே குறித்து நிற்கின்றன. இப்பண்டிகை கார்த்திகை மாதத்தில் வரும் “கார்த்திகை நட்சத்திரத்தில்” கொண்டாடப்படும். இதில் கார்த்திகை மாதம் பூரணை கூடிவரின் சர்வாலய விஷ்ணுவாலய தீபமாகவும், அத்துடன் கார்த்திகை நட்சத்திரத்தில் கூடினால் குமராலயதீபமாகவும் கொள்ளப்படும்.இத்தினத்திலே தீபம் ஏற்றல், தீபதரிசனம் ஆகியவற்றால் பாவ நிவர்த்தி பெறலாம். இத்தினத்திலே எல்லாத்திருக்கோயில்களிலும் தீபங்கள் கொண்டு உயரமாக கட்டப்பட்டிருக்கும் “சொக்கப்பானை' எரிப்பது வழக்கமாக காணப்படும். இதில் விளக்கு வைத்து எரிக்கும் போது அதை சிவனுடைய சோதி வடிவமாக பாவனை செய்து திருவெண்ணாமலை தீபமாக வழிபடவேண்டும் எனவும் கூறப்படுகின்றது. இதன் பெருமையை அப்பர் சுவாமிகள்
விளக்கீட்டார்பேறு சொல்லின் மெய்நெறிஞானமாகும்” என்று கூறுகின்றார்.
இக்கார்த்திகை தீபத்தின் தத்துவம் பற்றி நோக்கு போது மணி என்றும் உடம்பிலுள்ள பாத்திரம் எனும் உள்ளத்தில் நெய் எனும் உணர்வினை ஊற்றி திரி எனும் உயிரினை இட்டு காற்று எனும் பிராணண நிறுத்தி சுடர் எனும் அறிவாகிய அன்பினால் இடைவிடாது தீண்டினால் ஆணவமாகிய இருள் அகன்று சோதி ஆகிய இறை தரிசனம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தைப்பொங்கலும் ஒன்றாகும். இது சூரிய பகவானுக்கு நன்றிக்கடனாக தைமாதப்பிறப்பு அன்று பொங்கல் படைத்து வழிபடப்படும். அறுவகைச் சமயப்பிரிவினர்களுக்கும் பொதுவானதாக விளங்கும் தைப்பொங்கல், சூரியப்பொங்கல், மகரப்பொங்கல், உத்தராயண புண்ணிய காலம்’ போன்ற பெயர்களினாலும் அழைக்கப்படுகின்றது.
பொங்கல் வழிபாட்டு முறைபற்றி நோக்கும் போது இத்தினத்திலே அனைவரும் காலையில் நீராடி புதிய ஆடைகளைத் தரித்து முற்றத்தில் கோலம் இட்டு பொங்கல் பொங்கி அமுதை சூரியபகவானுக்கு நிவேதிக்க வேண்டும். இவ்வழிபாட்டின் போது

Page 21
சூரியமூர்த்தியை தியானித்து “சிவசூரியாயநம’ என்று செந்தாமரைப்பூ முதலிய செம்பூக்கள் தூவி தோத்திரம் பண்ணி இரண்டு தரம்"ஆண்மப்பிரதட்சணம்’செய்து"வைகர்த்தயாயநம” எனும் பன்னிரு திரு நாமங்களை சொல்லி பன்னிரு நமஸ்காரங்களை செய்து விரும்பிய வரங்களை வேண்டிக் கொள்ளுதல் வேண்டும்.
தைப்பொங்கலுக்கு முதல் நாளிலே “போகி பண்டிகை” கொண்டாடப்படும். இது பூரீ ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து பூரீ வைகுண்ட நாதனை அடைந்து பல போகங்களை பெற்றதனைக் குறிக்கின்றது. இப்பண்டிகை இந்திரனை நினைத்து கொண்டாடப்படும். சூரியனுக்கு நன்றி பாராட்டும் மக்கள் தமக்கும் தம் உழவிற்கும் உறுதுணையாக இருந்த பசுக்களையும் எருதுகளையும் மறுநாள் நீராட்டி அலங்கரித்து மாட்டுப்பட்டியில் பொங்கி அவற்றிற்கு கொடுத்து தாமும் உண்பர். இது “பட்டிப் பொங்கல்” எனவும் அழைக்கப்படும். இவ்வாறு இந்துக்கள் வாழ்வில் முக்கியம் பெறும் இவ்விழாக்கள் அனைத்தும் ஒரு சமுதாய விழாக்கள் என்றே கூறிக் கொள்ள முடிகின்றது.
இந்துக்களது வாழ்வியலில் விழாக்கள் மட்டுமன்றி விரதங்களும் முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்விரதம் ஆனது மனம் பொறிவழி போகாது நிற்பதற்காக உணவை விலக்கியேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் இறைவனை விதிப்படி உண்மை அன்போடு விஷேடமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்விரதமானது "நோன்பு, கிழமை” போன்ற பல்வேறுபட்ட பெயர்களினால் அழைக்கப்படுகின்றது. இவ்விரதம் பற்றி ஆகமங்கள் முதல் ஒளவையார் பாடல் வரை விதந்துரைக்கப்பட்டுள்ளது. இவ் விரதங்களில் மிகவும் சிறப்பான விரதங்களாக பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை போன்றவை கடைப்பிடிக்கப்படுகின்றது.
இந்த வகையில் இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் பிரதோஷ விரதம் பற்றி நோக்கும் போது இது சிவனுக்குரிய விரதங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இங்கு பிரதோஷம் என்பதன் பொருள் “இராக்காலத்தின் முன்’ என்பதாகும். சந்திரனது வளர்ச்சியையும் தேய்வினையும் கருத்தில் கொண்டே வளர்பிறைக்காலம், தேய்பிறைக்காலம் என அழைப்பர். இவை முறையே சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம் என அழைக்கப்படும். இவை இரண்டும் “உவாக்கள்” என அழைக்கப்படும். இவ்வாறு அமையும் இரு உவாக்களிலும் 13ம் நாள் “திரயோதஷி திதி எனப்படும். அன்றுமாலை சூரியன் மறைவதற்கு முன் 1% மணிநேரத்திற்கு முன்பும் அது மறைந்து 1% மணி நேரத்திற்கு பின்பும் உள்ள மூன்றுமணி நேரமே “பிரதோஷ காலம்” எனக் கணிக்கப்படுகின்றது.
சிவபெருமான் நஞ்சினை உண்டு தேவர்களை காத்தருளிய வளர்பிறையும் திரயோதஷியும் சனிக்கிழமையும் கூடிய நாட்களே பிரதோஷ விரதகாலமாக கொள்ளப்படுகின்றது. இப் பிரதோஷ நாளிலே பகல் உணவின்றி சூரியன் மறைவதற்கு முன்பு நீராடி சிவபூஜை செய்து கோயிலில் நந்தியின் இரு கொம்புக்களுக்கிடையே பூக்களை தூவி வழிபாடு செய்தல். வேண்டும். இப்பிரதோஷத்தில் சனிப்பிரதோஷமே சிறப்பானது என்பதனால் பிரதோஷ விரதத்தை சனிப்பிரதோஷ நாளை முதலாக கொண்டு ஆரம்பித்தல் சிறப்பானதாகும்.
 

இவ்விரத நேரங்களில் உணவு உண்ணல், நித்திரை செய்தல், நீராடல், விஷ்ணுதரிசனம், எண்ணெய் தேய்த்தல், பிரயாணம் செய்தல், கதைப்புத்தகம் படித்தல் போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும். இவ்விரத்தினை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு நோய், வறுமை, பஞ்சம், பாவம், பயம், மரணவேதனை என்பன நீங்கி நன்மையும் செல்வமும் பெருகி ஆன்ம ஈடேற்றத்திற்கு வழி பிறக்கும் என்றும் கூறப்படுகின்றது.
பிரதோஷ விரதத்தைப் போன்றே சிவராத்திரி விரதமும் கொள்ளப்படுகின்றது. இது மாசி மாதத்தில் வரும் தேய்ப்பிறைக் காலமாகிய அபரபட்சத்தில் பதினான்காம் நாள் இரவு சதுர்த்தஷி கூடிய தினமாக அமைகின்றது. இவ்விரதம் பற்றிய மரபுக் கதையை நோக்கும் போது ஒரு காலத்தில் படைத்தல் கடவுளாகிய பிரமாவும், காத்தல் கடவுளாகிய விஷ்ணுவும் தாமே உயர்ந்த பிரமம் என அகந்தை கொண்டு வாதிட்டு கலகம் செய்தனர். அப்பொழுது பரப்பிரமமாகிய சிவபெருமான் அவர்களது அகந்தையை போக்கும் முகமாக அவர்கள் இருவருக்கும் மத்தியிலே அடியும் முடியும் அறிய முடியாதவாறு ஒரு சோதிப்பிளம்பாக தோன்றினார். இவ்வாறு சிவன் சோதிப்பிளம்பாக தோன்றிய இரவே “மகாசிவராத்திரி” தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இவ்விரதத்தினை அனுஷ்டிக்கும் பொழுது முதல் நாள் ஒருவேளை உணவு உண்டு சிவராத்திரி அன்று உபவாசம் இருந்து நித்திரை கொள்ளது சிவத்தியானம், இறைபுகழ் கேட்டல், சிவாலய தரிசனம் என்பதற்கு மேற்கொள்ள வேண்டும். ஆன்மார்த்தமாக சிவபூஜை செய்வோர் நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்தல் முறையாகும். இங்கு முதலாம் ஜாமத்தில் "பஞ்ச கௌவ்வியமும்” இரண்டாம் ஜாமத்திற்கு பஞ்சாமிர்தமும், மூன்றாம் ஜாமத்திற்கு பாலும், நான்காம் ஜாமத்திற்கு சந்தனமும் பன்னிரும் உரியனவாகும்.
அவ்வாறே அர்ச்சனைக்கு முதலாம் ஜாமத்திற்கு “வில்வமும் தாமரையும்” இரண்டாம் ஜாமத்திற்கு “குருங்கை பத்திரமும் துளவியும்" மூன்றாம் ஜாமத்திற்கு கிளுவைபத்திரமும் விளாத்திபத்திரமும், நான்காம்ஜாமத்திற்கு கருநொச்சிபத்திரமும், நந்தியாவர்த்தமும் உரியனவாகும். நான்கு ஜாமதத்திலும் தோத்திரங்களையும் ஒதுதல் வேண்டும். இவ்விரதத்தினை முறைப்படி அனுஷ்டிப்பவர்கள் இம்மை மறுமையில் நற்கதியினை அடைவர் எனக் கூறப்படுகின்றது. இதற்கு சான்றாக "திருநந்திதேவர்” சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து பிரம்மா விஷ்ணு போன்றோரின் இஸ்ட சித்திகளை பெற்றிருந்தமையும், இவ்விரதத்தை கடைப்பிடித்தே பிரமாவும் விஷ்ணும் முறையே சரஸ்வதியையும், ழரீதேவியையும் பெற்ற தன்மையும் குறிப்பிட்டு கூறலாம்.
அடுத்ததாக நாம் சிவவிரதங்களில் ஒன்றாக விளங்கும் திருவெம்பாவை விரதம் பற்றி நோக்கும்போதுமார்கழி மாதத்திலே பூரணையும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் காலமே திருவாதிரை ஆகும். இத்தினத்திலே சிதம்பரத்திலே விசேட உற்சவமும் அபிஷேகமும் நடக்கும். நடராஜர் அபிஷேக திருவிழா மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இது ஆருத்திரா தரிசனம் என அழைக்கப்படும். இதற்கு முன்னுள்ள பத்து நாட்களும் திருவெம்பாவை விரதமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இவ்வாறு விளங்கும் திருவெம்பாவை விரதத்தினை கடைப்பிடிக்கும் முறைபற்றி நோக்கும் போது இம் மாதத்தில் வீட்டு
ឆ្នា 真

Page 22
வாசலில் அழகிய கோலம் இட்டு சாணத்தில் பிடித்த பிள்ளையாருக்கு அறுகம்புல் மலர் என்பன சாத்துவது வழக்கமாகும். மார்கழி மாதம் ஒவ்வொரு தினமும் இவ்வாறாக பிடித்த பிள்ளையாரை வீட்டில் வைத்து தைமாதப்பிறப்பு அன்று பொங்கல் இட்டு பூஜை செய்வதற்காக வரிசையாக அவற்றை வைத்து பொங்கல் நிவேதித்து சிறுதேரில் அவற்றினை ஏற்றி மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருளச் செய்து ஆறு கடல் போன்ற நீர் நிலைகளில் சேர்த்துவிட வேண்டும் என கூறப்படுகின்றது.
திருவெம்பாவை விரதத்தின் தத்துவம் பற்றி நோக்கும் போது மனம் ஆகிய இருளிலே ஆன்மா கிடந்து வருந்தாமல் திருவருளில் படிந்த மலபரிபாகத்தை அடைய வேண்டும் என்பதேயாகும். இவ்விரதத்தினை ஒழுங்காக அனுஷ்டிப்பதன் மூலம் கன்னிப்பெண்கள் உத்தம கணவரையும், நாட்டில் மழை வளத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்றாக விளங்கும் 'ஏகாதசி விரதம்” ஆனது விஷ்ணுவுக்குரிய விரதமாக கொள்ளப்படுகின்றது. ஆயினும் இது சிவ விரதமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இங்கு ஏகாதஷித் திதி சிவனுக்கு, துவாதஷித்திதி விஷ்ணுவிற்கும் உரியனவாகும். இவ் இரு திதிகளும் சேர்த்து வருவதே"ஏகாதஷி” விரதமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.இவ்விரதத்தினை "நித்தியம்”“காமியம்" எனும் இரண்டிற்குமாகச் சேர்த்தே அனுஷ்டிப்பார்கள். 人
Ο ΚΣ ΚΣ ΚΣ
ܗܝ r
முலையினும் பெரியது
தேன் நிலை அறிந்து அடக்கமாக வாழ்பவன் மலையை விட:
பெரிதாகத் தோற்றமளிப்பான்.


Page 23
K. LGöIGööfluc!
விநாயகர் வழிபாடு ஆரியர் இந்தியாவிற்கு வந்த காலத்திற்கு முன்னரே அதாவது சிந்துவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்கள் வழிபட்டு வந்திருக்கவேண்டுமென இந்திய வரலாறு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தக் கருமத்தையும் செய்ய முற்படுகையில் இந்துக்கள் கணபதியை வழிபட்டே செய்யத்தொடங்குவர். 'ஓம்' என்ற பிரணவப்பொருளின் உருவமாயுள்ள கணபதியை முழுமுதலாக வழிபடுபவர்களை காணபத்தியர்கள் என்பர், கணபதியே பரம்பொருள் என்றகோட்பாடு காலங்காலமாக இந்து மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
۴- مسیریه ۹ام بیست t۸۸۹بع 2NES
axes?
காணபத்திய நெறியின் தொடக்கம் பற்றிய சிந்தனைகள் வேத, உபநிடதங்களிலும், ஆகமங்களிலும் காணப்படுகின்றன. இதிகாச புராணங்களில் விநாயரைப் பற்றிச் சிறப்பான கருத்துக்கள் காணப்படுகின்றன. வனவாச காலத்தில் பஞ்சபாண்டவர் சூதமுனிவரின் உபதேசத்திற்கிணங்க விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்துள்ளார்களென வரலாறு கூறுகிறது.
சிவபுராணம், கந்தபுராணம் சுப்பிரபேதம் போன்ற நூல்களில் விநாயகர் தோற்றமும், வளர்ச்சியும் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.முத்கலபுராணம், கணேசபுராணம் என்பனவும் விநாயகர் பெருமையை எடுத்து விளக்குகின்றன. ஆகமங்களில் கணபதி ஹோமத்திற்கு முதன்மையளிக்கப்படுகிறது. கி. பி. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரர் இந்து சமயத்தை அறுவகைச் சமயங்களாகப் பிரித்தார். இருந்த போதும் விநாயகர் அறுவகைச் சமயங்களிலும் முதன்மை கொடுத்து வணக்கப்படுகிறார். கணபதி வழிபாட்டின் தொன்மை பற்றி கணேசபஞ்சரத்தினம், விநாயகர் கவசம், விநாயகர் அகவல், மூத்த விநாயகர் மும்மணிக்கோவை, திருநாரையூர் விநாயகர் இரட்டைமணிமாலை ஆகிய நூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. இவற்றை விட காணபக்தர்களுக்கு ஆதாரமான முக்கிய நூல்கள் கணபதி உபநிடதம், ஹேரம்ப உபநிடதம் என்பனவாகும்.
புத்த மதத்தினரும் கணபதி வழிபாட்டிற்கு மதிப்பும், மரியாதையும் அளித்தனர். தமது சீடர் ஆனந்தர் என்பவருக்கு புத்தர் கணேசரைத் துதிபாடும் அநுபூதி மந்திரம் ஒன்றை அருளி வழங்கியதாக வரலாறு கூறுகிறது. “கணபதி இருதயம்" என்பது அம் மந்திரத்தின் பெயர் ஆகும். பெளத்தர்கள் விநாயகரை புத்த நாயகர் என்று பிரிக்கிறார்கள். இன்றும் கூட“கணதெய்யோ” என பெளத்தர்கள் விநாயகரை வழிபடுவதைக் காணலாம்.
வைணவர்கள் சிறப்பாக “விஷ்வக் சேனர்” என்றும், தும்பிக்கையாழ்வார் என்றும், சேனை முதலி என்றும் துதித்து வணங்குகிறார்கள். ஜைனர்கள் இவரை அருகநாயகர் என்று போற்றுகின்றனர். பிற மதத்தவர்கள் கூட கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடுகிறார்கள்.
 
 
 
 

of 53, (B.A/Dipin Edu, M. E. D)
விநாயகர் பெயர்களும் விளக்கங்களும் :-
விநாயகர் - தனக்குமேலே தலைவர் இல்லாதவர்
கணபதி - பூதகணங்களுக்கெல்லாம் தலைவர் கஜானனர் - யானை முகமுடையவர் வக்கிரதுண்டர் - வளைந்த துதிக்கையை உடையவர் லம்போதரர் - யானைவயிற்றை உடையவர்
ஆகுரதன் - எலிவாகன முடையவர் விக்னேஸ்வரர் - விக்கினங்களைத் தடுப்பவர் சித்தி தாதா - தம்மை நம்புவர்களுக்குச் சித்திகளைத் தருபவர் ஐங்கரன் - ஐந்து கரங்களை உடையவர்
ஏகநாதன் - ஒற்றைக்கொம்பை உடையவர்
விநாயகர் தொடர்பான வரலாற்றுக்கதைகள் :-
கயமுகன் எனும் அசுரன் கடுந்தவம் புரிந்து சிவனிடம் பல வரங்கள் பெற்றுத் தேவர்களை எல்லாம் துன்புறுத்தினான். இத்தொல்லை தாங்காத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்பொழுது கயமுகாசுரனை அடக்கித் தேவர்களுக்கு அருள் புரியுமாறு சிவபெருமான் கணபதிக்குக் கட்டளையிட கணபதியும் கயமுகனுடன் பெரும்போர் புரிந்தார். ஆனால் அவன் சாகாவரம் பெற்றவன் என்பதால் அவனை அழிக்க முடியவில்லை. எனவே தனது வலது கொம்பை ஒடித்து அவன்மீது எறிந்தார். அப்போதும் அவனது உடல் பிளந்ததே தவிர அவன் இறக்கவில்லை. பெருச்சாளி வேடம் கொண்டு மீண்டும் பொருதினான். அப்பொழுது கணபதி அவனுக்கு மெய்யறிவுபுகட்டி அருள் புரிந்தார். ஞானம் பெற்ற அவ் அசுரன் “ஜயனே நான் உனக்கு அடிமை” என்று கணபதியின் பாதங்களைச் சரணடைந்தான். அப்போது தேவர்கள் கயமுகனுக்குச் செய்தது போல் ஆயிரத்து எட்டு (1008) தரம் தோப்புக்கரணம் போட்டனர். ஆனால் தனக்கு மூன்றுமுறைதோப்புக்கரணம் போட்டால் போதும் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதுவே இன்றும் வழக்கத்தில் உள்ளது.
அகத்தியரது கமண்டல நீரைக் கவிழ்த்து காவிரிநதியை உண்டாக்கியமையும் அம்மை அப்பனை வலம் வந்து மாங்கனி பெற்றமையும் விநாயகரைப் பற்றியாவரும் அறிந்த கதைகளாகும்.
இயமனின் திருக்குமாரர்களில் ஒருவனான அளவாகரன் எனும் கொடியவனை சிவன் ஆலகாலவிஷத்தை மகிழ்ச்சியுடன் அருந்தியது போல் விநாயகரும் அவனே உண்டு அடியவர்களைத் துன்பத் தளையிலிருந்து காத்தருளினார். அதே நேரம் எல்லா உயிர்களின் வயிற்றிலும் கொடிய வெப்பம் உண்டாகி அல்லலுற ஆரம்பித்தனர். அப்போது இறைவனைக் குளிரச் செய்வதற்காக முனிவர்கள் அறுகம்புல் மாலையாகச் சொரிந்தனர். இதனால் விநாயகரின் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி பெருகியது.

Page 24
அம்பிகையின் சாபத்திற்கு ஆளாகி கண்ணிழந்த பாம்பாக மாறிய திருமால் விநாயக விரதத்தை அனுஷ்டித்துத் துன்பம் நீங்கி சுயவடிவம் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. விக்கிரமாதித்தனின் மனைவி இலக்கண சுந்தரி விநாயக சஷ்டி விரதத்தை அனுஷ்டிப்பதாக உறுதி பூண்டு சில நாள் நோற்றபின் அவ் உறுதியை மறந்ததால் இன்னல் பட்டாள். பின் ஒளவையாரின் அறிவுரைப்படி முறையாக அனுஷ்டித்து அருள் பெற்றாள்.
இவைதவிர விநாயகர், ஒளவையாரை விநாயகர் அகவல் பாடச்செய்து கைலை சேர்ப்பித்தார். அத்துடன் தக்கன், இந்திரன், மன்மதன், சந்திரன், இராவணன், பாண்டவர்கள், மெய்கண்டதேவர், நம்பியாண்டார் நம்பி, முதலியோர் விநாயகரை வழிபட்டு வரம் பெற்றுள்ளனர்.
விநாயகரும், தத்துவ விளக்கமும் :-
இந்துக்கள் எதனை எழுதும்போதும் பிள்ளையார் சுழி இட்டே தொடங்குவது வழக்கம். இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும். பிள்ளையார் சுழி (உ) ஓங்காரத்தின் (ஒம்) சுருங்கிய வடிவமாகும். ஒலிவடிவமாகிய வட்டமும், வரிவடிவமாகிய கோடும் சேர்ந்தது பிள்ளையார் சுழி எனக் கருதப்படுகிறது. கணபதியின் துதிக்கை ஓங்காரத்தையே குறித்து நிற்கிறது.
கணேசர் ஐந்தொழில்களையும் செய்வதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இவரது எழுத்தாணி பிடித்த கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தலையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம் கொண்டகை மறைத்தலையும், அமுதகலசம் ஏந்திய கரமான துதிக்கை அருளலையும் குறித்து நிற்கிறது.
“கணபதி”யில் உள்ள“க” என்பது ஞானம் என்றும்“ண” என்பது மோட்சம் என்றும், “பதி” என்பது இருப்பிடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. 'கணேசன்’ என்ற சொல்லில் “க” மனோவாக்குகள் என்றும்"ண” என்பது அவற்றைக் கடந்த நிலை என்றும் ஈசன்’ என்பது இறைவன் என்றும் கொள்ளப்படுகின்றது.
அனைத்துத் தெய்வங்களின்தும் கூட்டு அமைப்பே கணபதி என்று சங்கரர் கூறுகிறார். கணபதியின் உருவ அமைப்பில் அனைத்து தெய்வங்களும் “மந்திர ஒளி’ ரூபமாக இணைந்துள்ளன. கணபதியின் நாபி (வயிற்றுச்சுழி) பிரம்ம ரூபம், முகம் திருமால் வடிவு, கண் சிவவடிவம், இடப்பாகம் சக்தி ரூபம், வலப்பாகம் சூரிய வடிவம் என சங்கரர் கூறுகிறார்.
கணபதியின் முகம் மிருகமுகம், உடல் தேவ உடல், கால்கள் பூதகணங்கள், ஒற்றைக்கொம்பு ஆண்யானை, ஒடிந்த கொம்பு பெண்யானை, எனவே விநாயகர் தேவ உடல் பெற்றிருப்பதால் உயர்திணையாகவும், மிருக முகம் அமைந்திருப்பதால் அஃறிணை வடிவமாகவும் அதிசய தோற்றமளிக்கிறார். ஆகவே உபநிடத மகாவாக்கியமாகிய “தத்துவமஸி’ என்பதின் வடிவமே மகாகணபதி எனலாம்.
விநாயரின் பெருவயிறு பிரபஞ்சம் முழுவதையும் தம்முள் அடக்கியவர் என்று பொருள்படும். விநாயகருக்கு விருப்பமான
 

மோதகம், விநாயகர் எல்லோருக்கும் இன்பமயமாக இருக்கிறார் என்ற ஞானதத்துவத்தையே எடுத்து விளங்குகின்றது. அவருடைய வாகனமாகிய பெருச்சாளி நமக்குள்ளிருந்து நம்மையே அழிக்கும் கள்ளத் தன்மையான உலகப்பற்றுக்களைக் குறித்து நிற்கிறது. பல இடங்களில் விநாயகர் நின்ற உருவிலும் அமர்ந்த நிலையிலும் நடனமாடும் நிலையிலும் காணப்படுகிறார். அவரது உருவத்தின் வலம்புரி, இடம்புரி என்று இரண்டு விதம் உண்டு. துதிக்கை வலப்புறமாகத் திரும்பியிருந்தால் “வலம்புரி விநாயகர்” என்றும் இடதுபுறம் திரும்பியிருந்தால் "இடம்புரி விநாயகர் என்றம் அழைக்கப்படுகிறார். எனவே விநாயகர் தத்துவ சொரூபமாகவே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் எனலாம்.
6fig5Tu85Í 6ljLIT(BÉb 663FL j36ÖIThlab(65Íb :-
சுக்கில சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய இரண்டு விசேட நாட்களும் கணபதி உபாசனைக்கு மிகச் சிறந்த புண்ணிய நாட்களாகும். இந் நாட்களில் ஹோமம், செபம் இரண்டும் அதிகளவில் செய்தால் வெகுவிரைவில் மந்திரசித்தி கிட்டும் என்பதே சித்தர்கள் வாக்கு ஆகம். “ஓங்கார ரூபாய நம” என்பது கணபதிக்கு வழிபாடு செலுத்தும் மந்திரம் ஆகும். இதன் பொருள் “ஓம் என்ற பிரணவ மந்திர வடிவினருக்கு வணக்கம்” என்பதாகும்.
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாயதி மஹி தந்தோதந்தி பிரசோதயாத்”
என்பதே கணபதியின் மூல உபாசனா மந்திரம். இம் மந்திரத்தை சிறந்த உபாசகர் மூலம் உபதேசம் பெற்று, விடாமல் தினமும் 108 தடவை செபித்து வந்தால் எல்லாத் தடைகளையும் கடந்து ஒருவர் வெற்றிபெறமுடியும் என ஞானிகள் கூறுகின்றனர்.
விரும்பிய வேளையில், விரும்பிய இடத்தில் ஆவாஹனம் ஆகும். கடவுள் கணபதி ஆவார், ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் ஆலமரத்தடியிலும் வீற்றிருந்து அருள்புரிவாராவார். பசும் சாணத்திலும், அரைத்த மஞ்சளிலும், அறுகம்புல்லிலும், வெல்லத்திலும் கல்லிலும் அடியார்களுக்காக எழுந்தருளி விநாயகர் அருள் பாலிக்கிறார். மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் பிள்ளையாரை மஞ்சலில் அல்லது சாணத்தில் பிடித்து பூசணிப்பூ வைத்து வணங்குவார். பிள்ளையாரின் உருவத்தை கருங்கல்லில் பொழிந்து எடுப்பார். வேறு சிலர் ஐம்பொன்னால் அமைப்பர். பிரதிஷ்டை செய்யும் விக்கிரகங்கள் கருங்கல்லால் செய்யப்படும் எழுந்தருளிவிக்கிரகம்ஐம்பொன்னால் அமைக்கப்படும்
கணபதி பூசையில் அறுகம்புல் 21, புஷ்பம் 21, அதிரசம் 21, மோதகம் 21, பழம் 21 என இருபத்து ஒன்றாக வைத்து வழிபடுவர். விநாயகருக்கு வெண்பொங்கல், அவல், அரிசி, கரும்பு, வில்வம், வாழைப்பழம், தேங்காய், கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், வடை, அப்பம், எள்ளுருண்டை, பாயசம் என்பவற்றுடன் கொய்யாப்பழம், விழாம்பழம், நாவற்பழம், பிரப்பம் பழம், வெற்றிலை பாக்கு என்பவற்றை வைத்து வழிபடுவர். இவை அவருக்கு உவப்பான பொருட்கள் ஆகும்.
விநாயகருக்கு இருபத்தியொரு பொருட்கள் வைத்து வழிபடுவதற்குரியதத்துவவிளக்கத்தைச் சங்கரர் கூறியுள்ளார்.நமது

Page 25
உடம்பில் ஞானேந்திரியம் - 5 அவை செயற்படும் காரியங்கள் - 5 அது போலவே கர்மேந்திரியம் -5, அவற்றின் செயல்கள் -5, இவ் எண்ணிக்கை - 20 உடன் மனம் எனும் கருவியையும் இணைத்து 21 ஆக கணபதியை பூசை முறையில் வழிபடுவர். விநாயகரை தோப்புக்கரணம் இட்டும், தலையில் குட்டியும் வழிபடுவர். களி மண்ணினால் செய்தபிள்ளையாரையே பூசை செய்வது சிறப்பானது என்று நீண்ட காலமாகவே மக்கள் பூசை செய்து வருகின்றனர். சிலர் புற்று மண்ணாலும் பிள்ளையார் பிடித்து வழிபடுவதுண்டு. பிள்ளையாருக்கு உகந்தது எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, தும்பைப் பூ. சங்குப்பூ ஆகியவை ஆகும்.
விநாயகர் விரதங்கள் :-
விநாயகர் விரதங்களில் விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சஷ்டி, சுக்கிர வாரம் என்பன முக்கியமானதாகும். சுக்கில பட்ஷத்தில் வரும் சதுர்த்தி தினத்தில் விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படும். இவ்விரதத்தை பெளத்தர்களும் ஜைனர்களும் அனுஷ்டிக்கின்றனர். இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், கணேச அஷ்டகம் போன்ற நூல்களைப் படித்த பின்பே உணவு உண்பர். விநாயகர் சஷ்டி விரதம் கார்த்திகை மாதத்து கிருஷ்ண பக்ஷ பிரதமை தொடக்கம் மார்கழி மாதத்து சுக்கில பக்ஷ சட்டி ஈறாகவுள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கப்படும். இவ் விரதம் அனுஷ்டிக்கப்படும் போது ஆண்கள் இருபத்தொரு இழையோடு கூடிய க்ாப்பை வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிய வண்ணம் முதல் இருபது நாட்களும் ஒவ்வொரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசமும் இருப்பர். இருபது நாட்களும் விநாயக புராணம் படிப்பதும் திருவிளையாடல்களைக் கேட்பதும் அடியவர்களின் வழமை ஆகும்.
சுக்கிரவாரம் வைகாசி மாத வளர்பிறை வெள்ளி தொடக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அநுஷ்ட்டிக்கப்படும். பூரண உபவாசம் இருந்தே இதனைப் பலர் அநுஷ்டிப்பர். ஒரு சிலர் பால், பழம் அருந்துவர். இந் நாள் முழுவதும் திருமுறை ஒதுதல், புராணம்படித்தல் கேட்டல், இறைதொண்டுகள், சமயப்பிரசாரங்கள் கேட்டல் போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவர்.
மேற்கூறிய விரதங்களை விட சித்தி விநாயக விரதம், சங்கவுடஹர சதுர்த்தி விரதம், தூர்வா கணபதி விரதம் என்ற மூன்றும் காந்தம் முதலிய புராணங்களில் கூறப்படுகிறது. சித்திவிநாயக விரதம் காரிய சித்தியையும் பழி நீக்கத்தையும் பெற நோர்க்கப்படுகிறது. கிருஷ்ணர் இதனை நோற்று பிரசன சித்தைக் கொன்று சியமந்தக மணியைத்திருடிக் கொண்டதாக நேர்ந்த பழியிலிருந்து விடுதலை பெற்றார். சங்கள்;டஹர சதுர்த்தி விரதம் நோய் கடன், சிறைவாசம், வனவாசம் எனும் துன்பங்களிலிருந்து தம்மைக் காக்க அனுஷ்டிக்கப்படுகிறது. தூர்வா கணபதி விரதம் வளர்பிறைச் சதுர்த்தியில் சிறப்பாக ஆவணிமாத சதுர்த்தியில் அல்லது கார்த்திகை மாதச் சதுர்த்தியில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் அனுஷ்டிக்கப்படுகிறது. இது சந்ததியை அடைவதற்காகவும், செல்வத்தைப் பெறுவதற்காகவும் நோர்க்கப்படுகிறது.
భ
 

தென்கிழக்காசிய நாடுகளில் விநாயகர் வழிபாடு :-
காணபத்தியம் இந்தியாவிற்கேயுரிய ஒரு தனிச்சமயம். எனினும் அது உலகம்முழுவதும்பரந்துவியாபித்துக் காணப்படுகிறது. திபெத்து, பர்மா, ஜாவா, இந்தோசீனா, யப்பான், சீனா எனப் பல நாடுகளிலும் வழிபடப்படுகிறது. தமிழ்நாட்டில் தஞ்சைமாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் கணபதி அக்ரகாரம் எனும் ஊரில் விநாயக வழிபாடு சிறப்பாக வழிபடப்படுகின்றது. தமிழ்நாட்டில் கணபதிஈச்சரம் எனும் தலம் விநாயக வழிபாட்டிற்குப் புகழ் பெற்றதாகும். மகாராஷ்ரத்திலும் மும்பையிலும் ஆவணிச்சதுர்த்திபெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.வடநாட்டில்கணேசபூஜையைபத்துநாள்வரை விமரிசையாகக் கொண்டாடுவர். கடைசி நாளன்று விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்செல்வார்.
தாய்லாந்தில் மன்னனின் முடிசூட்டுவிழாவின் போது மன்னன் ஊர்வலமாகச் செல்லும் வேளையில் அந்தணர் ஒருவர் விநாயகர் சிலையைக் கையில் ஏந்திச்செல்வார் சம்பா நாட்டில் விநாயக வழிபாடு நிலவியமைக்கு சான்றுகள் உள்ளன. 'போ' நகரில் ஒரு தனிக்கோயிலும் மைசனில் இரு கோயில்களும் விநாயகர் கோயிலாக அமைந்துள்ளன.
பொராபுத்தூரில் கணபதியின் உருவம் தமிழ்நாட்டில் காணப்படுவது போலன்றி வேறுபட்டுக் காணப்படுகிறது. இக் கணபதியைகபால கணபதிஎன்டர்.கணபதியின் பீடத்தில் வரிசையாக கபாலங்கள் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பது, ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ் உருவம் குறுகி உட்கார்ந்திருப்பது போலக் காணப்படுகிறது. சிங்காசாரி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கணபதியின் உருவம் சிவனைப்போன்று மூன்று கண்கள் உடையதாகவும், கபாலமும்,இளம்பிறையும் கொண்டதாகவும் விளங்குகின்றன. இங்கு கணபதியின் உருவம் ஒவ்வொரு வீட்டின் வாசற்படியிலும் இருக்கும் என்பர். பெருச்சாளியுடன் சிங்கமும் விநாயகரது வாகனங்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சில உருவங்கள் கபாலங்கள் மீது அமர்ந்திருப்பது போன்றனவாகவும் உள்ளன. மகுடத்திலும், கைகளிலும் கூட கபாலங்கள் இடம்பெற்றுள்ளன.
சுமாத்திராவிலும் பல விநாயகர் ஆலயங்கள் அழிந்த நிலையிலுள்ளன. மலேசியாவில் மலாய் மொழி பேசும் இந்துக்கள் தமது வீடுகளில் விநாயகர் படங்களை வைத்து வழிபாடு செய்கிறார்கள். சிங்கப்பூரில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த செண்பக விநாயகர் ஆலயம் பிரசித்திபெற்றதாகும். சிருங்கேரியில் ரத்னகற்க கணபதி சிறப்பாக வழிபடப்படுகிறது. ரத்ன கற்ப கணபதி, சுவர்ண கற்ப கணபதி ஆகிய இரண்டும் கணபதி உபாசகர்களின் குடும்பச் சொத்தாகும். மைசூர் மகாராஜா சுவர்ண ஆஹர்ஷன கணபதி பற்றி ஒரு சிறந்த நூலை எழுதியுள்ளார். நேபாளத்திலும் இக் கணபதி சிறப்பாக வழிபடப்படுகிறார்.
தற்காலத்தில் உலகம் முழுவதும் பரந்துவாழும் இந்துப் பெருமக்கள் குடியேறிய நாடுகளில் விநாயகர் ஆலயங்களை உருவாக்கிச் சிறப்பாக வழிபாடு நடத்தி வருகின்றனர். பிற மதத்தவர்களும் எம் மதத்தை நாடும் வண்ணம் இச் செயற்பாடு அமைந்துள்ளது. ஐங்கரனை வழிபட்டு அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக.
fe
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”

Page 26
பேராசிரியர் இலக்கிய கலாநிதி அ பேராசிரியர் - கலாநிதி தலைவர் - இந்துநாகரிகத்து
பேராசிரியர் அமரர் ா. கைலாசநாதக் குருக்கள் இருபதாம் நூற்றாண்டிலே எமது பண்பாட்டு *விழுமியங்களின் பாதுகாவலனாகவும் கலங்கரை விளக்காகவும் திகழ்ந்தவர். இவர் 15. 08, 1921 ஆம் நாளில் நல்லூரில் சிறப்பும் பெருமையுமிக்க சிவாச்சாரிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பிரம்மழீ கார்த்திகேயக் குருக்களாவர். நல்லூர் பூரீ கைலாசநாத சுவாமி கோயிலின் ஸ்தாபகரும் பரிபாலனகர்த்தராகவும் விளங்கியவர். சேர்.பொன் இராமநாதனின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராக விளங்கியவர். இவரது அரவணைப்பில் பேராசிரியர் குருக்கள் வளர்ந்து அறிவிலும் ஒழுக்கத்திலும் மேன்மைமிக்கவராகத் திகழ்ந்தார். சமயத்துறையிலும் சமஸ்கிருத மொழியிலும் சிறந்த பாண்டித்தியம் மிக்கவராகத் திகழ்ந்தார். அன்னார் தமது எழுபத்தொன்பதாவது அகவையில் 07. 08, 2000 அன்று அவுஸ்திரேலியாவில் மறைந்தமை எமது பாண்பாட்டிற்கும் சமூகத்திற்கும் ஏற்பட்ட பாரிய இழப்பாகும். அவரது மறைவு எவ்வகையிலும் ஈடுசெய்ய முடியாததாகும்.
பேராசிரியர் அவர்கள் தமது ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையர்க்கரசி பாடசாலையிலும் பின்னர் சேர். பொன் இராமநாதனுடைய சிந்தனையில் உருவாகிய பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்விகற்றார். 1941 ம் ஆண்டு லண்டன் மட்ரிக் குலேஷன் பரீட்சையிலும் பின்னர் 1943 ம் ஆண்டு லண்டன் இண்டர் மீடியற் கலைப் பரீட்சையிலும் சித்தியடைந்தார். பின்னர் 1944 முதல் 1947 வரையுள்ள காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மொழியைச் சிறப்புப் பாடமாகப் பயின்று பட்டதாரியானார். இவர் பயிற்சிபெறும் காலத்தில் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த சமஸ்கிருதப் பேராசிரியர் பெட்டி ஹைமனிடம் (Prof Betty Heimann) கல்விகற்கும் வாய்ப்பைப் பெற்றார். இவரது தந்தையார் தமது புதல்வரை சமஸ்கிருதத்திலும் இந்துப் பண்பாட்டிலும் ஆர்வமுள்ளவராகத் திகழச் செய்ய காரணகர்த்தராக விளங்கினார். 1950 ம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுகலைமாணி பட்டம் பெற்றார். பின்னர் 1955 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் புகழ்பூத்த அறிஞராகிய ஆர். என். தாண்டேகார் அவர்களின் வழிகாட்டலில் கலாநிதிப்பட்டத்தினைப் பூனா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் புராணங்களும் இதிகாசங்களும் சித்திரிக்கும் சைவசமயம் மற்றும் அதன் பிரிவுகள் பற்றி தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் நிலவும் சைவ சமயக் கிரியைகளுடன் விசேடமாகத் தொடர்பு படுத்தி ஆய்வு செய்தார். இருதொகுதிகளைக் கொண்ட இவ்வாய்வேடு சிவாய மரபில் நிகழும் சிவாலயக் கிரியைகளை விளக்குவதற்கு சிறந்ததொரு பின்னணியைத் தருகின்றது.
பல்கலைக்கழகங்களில் சேர்ந்து தமது அறிவையும் புலமைத்துவத்தையும் வளர்த்துக் கொண்ட பேராசிரியர் தமது
 
 

அமரர் கா.கைலாசநாதக் குருக்கள் ப. கோபாலகிருஷ்ணன், றை, யாழ் . பல்கலைக்கழகம்,
தந்தையாரிடமிருந்தும் பிரம்மழரீ சிதம்பரசாஸ்திரிகளிடமிருந்தும் வேதபாராயணம் உள்ளிட்ட குருகுலக் கல்வியையும் பெற்றவராவார். மேலும் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த பிரம்மபூரீ தி. கி. சீதாராம சாஸ்திரிகளிடம் வியாகரணம், பாணி இலக்கணம் ஆகியவற்றைப் பயின்றார். இவரது ஆதர்ஷகுருவாக விளங்கியவர் பிரம்மழரீ சீதாராம சாஸ்திரிகளே. இவ்வாறு பல்கலைக்கழகக் கல்வியையும் குருகுலக் கல்வியையும் இணைத்து தமது பயிற்சியைப் பெற்றதனால் பிற்காலத்தில் பண்பாட்டுத்துறை சார்ந்த கல்வியை வளர்ப்பதற்கு இவருக்கு சிறந்த வாய்ப்பேற்பட்டது.
பேராசிரியர் குருக்கள் அவர்களது பல்கலைக்கழக ஆசிரியப்பணி குறிப்பிடத்தக்கதாகும். இவரிடம் பல்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள் கல்விகற்றனர். சிறப்பாகச் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும், தமிழ் மாணவர்களும் சமஸ்கிருத மொழியை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேராசியரிடம் கற்கும் அரிய வாய்ப்பைப் பெற்றதோடு பின்னர் அவர்களில் பலர் உயர்பதவிகளில் சிறந்து விளங்கினர். பேராசிரியர் 1947 ஆம் ஆண்டு பல்கலைக்கழக ஆசிரியப்பணியில் தம்மை இணைத்துக்கொண்டார். பின்னர் 1953ம் ஆண்டு நிரந்தரநியமனம் பெற்று, 1960 ஆம் ஆண்டு விரிவுரையாளரகவும் 1967ஆம் ஆண்டு முதுநிலை விரிவுரையாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
1974 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணவளாகம் உருவாக்கப்பட்ட போது, பேராசிரியர் குருக்கள் இந்துநாகரிகத் துறையின் முதற் பேராசிரியராகவும் துணைத் தலைவராகவும் நியமனம் பெற்றார். 1986 வரை ஒய்வு பெறும் வரை பல்வேறு நிலைகளில் இத்துறையை வளர்த்தெடுப்பதில் பேராசிரியர் அரிய பணியாற்றியுள்ளார். இத்துறையின் பாடத்திட்டங்களை பட்டதாரி பயிற்சிக்காக ஒழுங்கமைத்தார். பட்டப்படிப்பு ஆய்வுகளை நெறிப்படுத்தினார். இந்து நாகரிகப் பயிற்சி யாழ் பல்கலைக்கழகத்தில் அதிபுலமைத்துவமிக்க பயிற்சிநெறி பரிணமிக்கப் பெரும்பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதலாவது கலாநிதிப்பட்டத்தைப் பெற்றவர். இந்துநாகரிகத்திலே என்பதும் அவர் அப்பயிற்சி நெறியையும் ஆய்வினையும் பேராசிரியர் குருக்களின் வழிகாட்டலில் மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பலர் முதுகலைமாணி ஆய்வினை இவரது வழிகாட்டலில் மேற்கொண்டார். இந்து கலைக் கூடம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற சிரத்தையில் பேராசிரியர் கண்ணுங்கருத்துமாக இருந்தார்.
மாணவரது கல்விவளர்ச்சிக்கும் அறிவுப்பரம்பலுக்குமாக பல அரிய நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் பேராசிரியர் எழுதி வெளியிட்டார். இந்துநாகரிகம், சமஸ்கிருதம் ஆகிய பாடம்

Page 27
பயிலும் மாணவர்களுக்கு இந்நூல்கள் வரப்பிரசாதமாக அமைந்தன. வடமொழி இலக்கியவரலாறு (1962), சைவத் திருக்கோயிற் கிரியை நெறி (1963) இந்துப்பண்பாடும் சில சிந்தனைகள் (1985) ஆகிய நூல்கள் பெரும்பாலாரது வரவேற்பைப் பெற்ற நூல்களாகும். சமஸ்கிருத மொழி வளத்திற்காகவும் பேராசியர் பலநூல்களை எழுதியுள்ளார். பேராசிரியரிடம் கல்வி கற்ற மாணவர்கள் இந்து பேராசிரியர்களாகவும் விரிவுரையாளராகவும் மற்றும் பல்வேறு உயர் பதவிகளிலும் சிறப்புறப் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பேராதனையில் பேராசிரியர் பல மாணவர்கள் தமது பயிற்சிக்காலத்தில் உணவு வசதி பெற உறுதுணையாக இருந்தவர். தமது இல்லத்திலேயே மாணவர்கள் பலருக்கு உணவு வசதி அளித்து உதவினார்.
யாழ்பல்கலைக்கழகத்தில் இணைப்பீடாதிபதியாகவும், நுண்கலைத்துறைத் தலைவராகவும் பணிபுரிந்தவர் பேராசிரியர். அத்துடன் பூரீவித்தியா குருகுலத்தை நிறுவியும் மாணவர்களுக்கு சமயம் சமஸ்கிருதம் ஆகிய துறைகளில் பயிற்சியளித்துள்ளார்.
பேராசிரியர் சிறந்த சாக்த உபாசகர். நல்லூர் சிவன் கோவிலிலும் பூரீ முன்னேசுவர தேவஸ்தானத்திலும் நவராத்திரி விரத காலங்களில் சிறந்த முறையில் கிரியைகளை முன்னின்று நடத்தியவர். இவ்வாலயக் கும்பாபிஷேகங்களிலும் முதன்மையாகப் பணிபுரிந்தவர். இவர் கிரியைகள் நிகழ்த்தும் போது அதிலீடுபடுபவர்கள் பக்தி மேலீட்டினால் தம்மை மெய் மறந்து நிற்பர். அந்த அளவுக்கு கிரியைகளை நிகழ்த்துவதில் அனுபவமிக்கவராகத் திகழ்ந்தார்.
பேராசிரியரின் சமஸ்கிருத மொழித்திறனை மெச்சிப் பாராட்டும் வகையில் காஞ்சி காமகோடி பெரியார் அவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது. பல அகில உலக இந்துமகா நாடுகளிலும்
இந்துக்களின் விசேட தில்
நவம்பர் - டி
02 வியாழன் கந்தசஷ்டி விரதம் 07 செவ்வாய் ஏகாதசி விரதம் 09 வியாழன் பிரதோஷ விரதம்
11 சனி பூரணை விரதம்
12 ஞாயிறு கார்த்திகை விரதம் 15 புதன் சங்கடஹர சதுர்த்தி. 22 புதன் ஏகாதசி விரதம்
23 வியாழன் பிரதோஷ விரதம்
ଅଭୀଆଁ அமாவாசை விரதம்
சதுர்த்தி விரதம்
 
 
 
 
 
 
 
 

பேராசிரியர் பங்கேற்று எமது பண்பாட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தந்தவர் ஒய்வுபெற்றதன் பின்னர் பல உலக நாடுகளுக்குச் சென்று சமயப் பணியாற்றினார்.
இவர் முதன்முதலாக யாழ்பல்கலைக்கழகத்தின் வாழ் நாட்பேராசிரியராக 1991ஆம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டார். இவரது புலமையைப் பாராட்டும் வகையில் யாழ்பல்கலைகழகத்தில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுப் பட்டமளிப்பு விழாவில் இலக்கியக் கலாநிதி என்ற கெளரவப் பட்டம் அளிக்கப்பட்டது. பேராசிரியர் அரும்பணியாற்றிய பண்பாட்டுத்துறைக்குக் கிடைத்த அரிய கெளரவமாக இது அமைந்தது.
பேராசிரியரின் துணைவியார் திருமதி திரிபுர சுந்தரி அம்மாள் பேராசிரியரின் வாழ்விலும் கல்விப்பணிசிறக்கவும் அருந்துணையாக விளங்கியவர்- 1999 ஆம் வருடம் உலக சுற்றுப்பயணத்தின் போது லண்டனில் இவர் கால மானத்தைத் தொடர்ந்து பேராசிரியரின் உடலும் உள்ளமும் பாதிப்படைந்தன. தமது துணைவியாரை இழந்ததினால் அவர் பெரிதும் பாதிப்படைந்தார். எமது நாட்டின் யுத்தசூழ்நிலை காரணமாக இவரும் அவுஸ்திரேலியாவில் தமது புத்திரியுடனும் மருமகனுடனும் வாழ்ந்துவந்த போது அந்நாட்டில் வாழும் இந்துக்களின் பண்பாட்டுத் தேவைகளுக்குப் பெரிதும் உதவின்ர். பல ஆலயங்களின் வளர்ச்சிக்கு தக்க ஆSேர்சனைகள் வழங்கியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு நிலைகளில்&ன்றக்குழிை ஆண்டுகளுக்கு மேலாக அரிய பணியாற்றியூப்ேராசிரியர்
07. 08, 2000 நாளன்று அவுஸ்திரேலிப்ாவில் ஆர்
அமரத்துவம் அடைந்த பேராசிரியரின்&ரிய சிந்தின்கள் பல இன்றும் செயலுருவம் பெற မြို့ကြီးရွီးရွီဇိချွဲ மறைவு எமக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் தேனையாக உள்ளது. எவ்வாறாயினும் பேராசானின் குருவருள் என்றென்றும் எம்மை வழிநடாத்தும் என மனதார நம்புவோமாக - அன்னாரின் ஆத்மா சாந்தி பெறுவதாகுக!
னங்களும் விரத நாட்களும்
செம்பர் 2000.
02 சனி சஷ்டி விரதம் 07 வியாழன் ஏகாதசி விரதம் 09 சனி பிரதோஷ விரதம்,திருக்கார்த்திகை விரதம் 10 ஞாயிறு சர்வாலயதீபம் (வீடுகளில் தீபம்)
11 திங்கள் பூரணை விரதம்
12 செவ்வாய் விநாயக விரதாரம்பம்
14 வியாழன் சங்கடஹர சதுர்த்தி
21 வியாழன் ஏகாதசி விரதம்
23 சனி பிரதோஷ விரதம்
25 திங்கள் அமாவாசை விரதம்
29 வெள்ளி சதுர்த்தி விரதம்
31 ஞாயிறு விநாயக சஷ்டி விரதம்
திருவெம்பாவை பூஜாரம்பம்

Page 28
வேண்டுகின்ற விதி!
லோ, துஷிகரன் (மாணவன், வைத்திய ஆராய்ச்சி தாபனம், கொழும்பு -8)
அனலிலும் தணலிலும் வெந்துமே உருகி
புனலிலும் வளியிலும் மிதந்துமே அலைந்தும்! மனதினில் மையச் சுழற்சியாய் அமுக்கி
கனமாய் நிறைந்த கஜமுகா போற்றி!
வினைகளைத் தீர்த்தும் துயர்களைத் துடைத்தும்! மனைகளில் மாக்களின் அமைதியைப் பூண்டும்! சுனைகளில் சுரங்களின் வளங்களைத் தூண்டி
துணையது செய்வாய் கஜமுகா போற்றி!
கரங்களை உயர்த்தி மனங்களில் இருத்த சிரங்களை வணங்கி உலகினைத் திருத்த புரமெலாம் சென்று அவனருள் சாற்ற வரமெலாம் தருவாய் கஜமுகா போற்றி!
ஒமெனும் வடிவின் முகமது கொண்டே தாமெனும் நினைவார் அகமது அடக்கும் வம்பினில் விளைவார் வளர்வினைத் தடுக்கும்
நம்பத் தகுபொருள் கஜமுகா போற்றி!
(Gong))
அயர்வுறா உழைப்பும் - அதில் துயர்வுறா நெஞ்சும் ! குறைவுறா வலியும் - அதில் மறைவுறா அன்பும் ! இசைவுறு மதியும் - அதில் திசைவுறு அறிவும்! விரைந்தே வளர்ந்திட
விதியது வரைவாய் !
 
 

இந்து ஒளி சஞ்சிகை நான்கு வருடங்களை நிறைவு செய்துகொண்டு ஜந்தாவது வருடத்தில் அடியேடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில், கடந்த காலங்களில் இந்து ஒளி சஞ்சிகை வாயிலாக பெரும் பயனடைந்த பலர், தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
கடந்த காலங்களைப் போலவே, இனிவரும் காலங்களிலும் ஆக்கபூர்வமான விஷயங்களுடன் "இந்து ஒளி” வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்ளுவதுடன், உங்கள் ஒவ்வொருவரினதும் பேராதரவு இந்து ஒளி சஞ்சிகைக்கு தொடர்ந்து கிடைக்கவேண்டும் எனவும் விரும்புகின்றோம்.
“இந்து ஒளி" தொடர்பான உங்கள் கருத்துக்கள் சிலவற்றை இங்கு பிரசுரிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
"இந்து ஒளி"இந்து சமயத்தின் தொன்மையையும், சிறப்பையும், மகிமையையும் வெளிக்காட்டுகின்ற ஒரு உன்னத சஞ்சிகையாக உள்ளது. இதில் இடம்பெறுகின்ற தரமான ஆக்கங்கள் மனித சமுதாயத்திற்கு குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடியதாக இருக்கிறது. இந்த சஞ்சிகை மேலும் சிறப்புடன் வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
வே. தீபா சந்தை விதி செங்கலடி
"இந்து ஒளி" சஞ்சிகை எல்லா மக்களுக்கும் பயன்ரதக்கூடியதாகக் காணப்படுகின்றது. குறிப்பாக தரம் ஆறு தொடக்கம் க. பொ. த. உயர்தரம் கற்கும் மாணவர்கள் வரை சமய ரீதியான விளக்கங்கள், கோவில்கள் சம்பந்தமான விளக்கங்கள், சைவ சித்தாந்த கருத்துக்கள், வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க நெறிகள், சமயத்தில் மனிதன் எவ்வாறு பற்றுவைத்து செயல்படவேண்டும் என்பது பற்றிய பூரண விளக்கங்கள் என்பவைகளை "இந்து ஒளி” சஞ்சிகையிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்த சஞ்சிகை மேலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வி. கமலினி. ஆண்டார்குளம் செங்கலடி.
"இந்து ஒளி" சஞ்சிகை ஊடாக இந்து சமயம் பற்றிய தெரியாத பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு பயனுள்ள சஞ்சிகையாகத் திகழும் "இந்து ஒளி" மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
கே. வி. இலட்சுமன் எலமன் டிவிசன் பிற்றமாறுவ போஸ்ட்
“இந்து ஒளி' சஞ்சிகையின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

Page 29
கெளரி. இரத்தினவேல் (B. கொஇராமநாதன்!
மூவேந்தர்களுள் சமயப் பற்றுநிறைந்தவர்கள் சோழர்கள். நூற்றுக்கணக்கான சிவன்கோவில்கள் சோழர்களால் கட்டப்பட்டன. பல்லவரைத் தோற்கடித்து சோழப்பேரரசை எற்படுத்திய பின்பு சோழர்கள் சைவத்தை வளர்ப்பதிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்தார்கள்.
கோயில் என்பது இறைவன் வீற்றிருக்கும் இடமாகும். கோயில்கள் மக்களின் வாழ்க்கையோடு பல விதங்களிலும் ஒன்றி அதனைப் பலவகைகளிலும் வளம்படுத்தியது. இம்மையில் நல்லவாழ்வையும் மறுமையில் வீடு பேற்றையும் கருதிய சான்றோர்கள் ஆலய வழிபாட்டில் மன அமைதியைக் கண்டனர். வேதாந்தங்கள், திருப்பதிகங்களான தேவாரம் முதலிய பன்னிருதிருமுறைகள், திரு வாய்மொழியை உள்ளடக்கிய நாசாயிரத்திவ்யப்பிரபந்தம் முதலிய மதநூல்களைக் கற்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பரகேசரி வர்மனான முதல் பராந்தகன் சோழர்காலத்தில் காப்பலூரில் சாந்தோக்கிய கிடைப்புறமாக ஒரு நிலத்தினை கொடையாக வழங்கினான். இராசகேசரிவர்மனான சுந்தரசோழன் ஆட்சியில் திருவாதிரை திருநாளன்று இரவு சாமத்தை ஒதுகின்றவர்களுள் மிகச்சிறந்தவர்க்குப் பொற்பரிசுகளை வழங்கினான். இந்நிகழ்ச்சி ஆண்டு தோறும் மார்கழித்திங்கள் தேவாரயன் பேட்டை என்ற கோயிலில் கொண்டாடப்பட்டது.
இரண்டாம் குலோத்துவர்கள் காலத்தில் திருவாமத்தூரில் தேவாரம் விண்ணப்ப செய்யக் குருடர் பதின்மர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு வழி காட்டிகளாக இருவர் அமைக்கப்பட்டனர். இம்மன்னன் இத்தகைய குருடர்குழாத்தின் ஊதியம் வழங்கப்பழைய நன்கொடையோடு மீண்டும் 12 வேலி நிலத்தை நன்கொடையாக வழங்கிய செய்தி உணரப்படுகிறது. திருமால்புரக் கோயிலில் நம்மாழ்வாருடைய பதிகங்கள் உள்ளிட்ட நாலயிரத்திவ்வியப் பிரபந்தத்தை ஒதுவார்க்கு ஊதியம் வழங்கத் திருமால்புரத்தின் பக்கத்துச் சிற்றுாராகிய கோலிந்த பாடியில் ஒருநிலம் நன்கொடையாக வழங்கப்பட்டது இவற்றால் கோயில்களில் சமயசம்பந்தமான கல்விகற்பதற்கும் நூல்கள் ஒதுவதற்கும் தாராளமான நன்கொடைகள் வழங்கப்பட்ட செய்தியை உணரலாம். விஜயாலய சோழன் படைகளுக்குப் பொருத்தமான துர்க்கை தேவிக்கு தஞ்சையில் “நிசும்பசூதனி” என்ற ஆலயத்தை கட்டினான். திருத்தணிப்பக்கம் “விஜயாலயர்” என்ற பெயருடைய கோவில் பற்றி விஜய நகரப்பேரரசின் குறிப்பு வருகிறது. புதுக் கோட்டையைச்சார்ந்த நார்த்தர் மலைப்பக்கம் உள்ள குன்றில் “விஜயாலயச் சோழேச்சரம் என்றகற்கோயில் ஒன்றையும் இவன் கட்டினான். கோவில் கட்டுதலும், அந்தணர்க்கு நிலம் வழங்கலும் சோழ அரசியலில் இடையறாமல் பின்னி வருகின்ற சமுதாய நலங்கள் ஆகும். தஞ்சைப்பெரியகோவில்
 
 

A: DP-N-EDUCATION)
இந்துமகளிர் கல்லூரி
கல்வெட்டில் காணப்படும் விஜயாலயச்சதுர்வேதிமங்கலம் என்ற குறிப்பு இதனை உணர்த்துகின்றது. இவ்வகையில் சோழநாட்டுக்குரிய அரசியல் போக்கை மட்டுமல்லாமல் அரசு அதிகாரத்தோடு இயங்குகின்ற சமய வாழ்வினையும் தொடக்கி வைத்தவன் விஜயாலயனே எனக் கூறின் மிகையாகாது.
ஆதித்தன் திருப்புறம்பியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்குக் கற்றளி ஒன்றை எழுப்பி அதற்கு “ஆதித்தேஸ்வரம்’ என்ற பெயரும் வழங்கினான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆதித்தன் காவிரிக்கரை நெடுக சாயத்திரி மலைதொடக்கம் வங்கக்கடல்வரை ஏராளமான சிவன்கோயில்களைக் கட்டினான் என அன்பில் செப்பேடுகள் குறிக்கின்றன. 'சோழநாடு கோவில்களுள்ள திருநாடு” என்ற உலகப் புகழுரை தோன்றுவதற்கு முதல் காரணமாக விளங்குபவன் ஆதித்த சோழனே ஆவான். பராந்தகன் தன்தந்தை ஆதித்த சோழனைப் பின்பற்றி தில்லைச்சிதம்பர நடராசனுக்கு உரிய திருநடமாடும் அம்பலத்தைப் பொன்னால் அழகு படுத்தினான். பொன்வேய்ந்த “திருமன்றங்காதலாற்பொன்வேய்ந்த காவலனும்” என்று ஒட்டக்கூத்தர் தம்முடைய விக்கிரம சோழன் உலாவில் பராந்தகனைப் பற்றிக்குறிப்பிடுகிறார். கண்டராதித்தியன் ஒன்பதாம் திருமுறையாக திருவிசைப்பாவைப் பாடினான். திருச்சி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் “கண்ட ராதித்தியச் சதுர்வேதிமங்கலம்" என்ற பிரமதேயம் இவனால் வழங்கப்பட்டது. இவன் அந்தணரைப் போற்றியது போல ஏனைய சம்யத்தவரையும் இவன் மனங்கிளர்ந்து ஆதரித்தான். கண்டராதித்திய சதுர்வே திமங்கல நகரில் வைணவத்திற்கான திருமால் கோட்டம் ஒன்றைச் சமைத்து அதற்குத்திருவிசைப்பா பாடிய சைவனான தன்னுடைய பெயரினையே“கண்டராதித்திய விண்ணகரம்’ என்று வழங்கினான்.
இராஜராஜ சோழன் தஞ்சைப்பெரிய கோவிலைக் கட்டினான். இக்கோயிலில் தெய்வத்திருமேனிகளையும் நாயன்மாரின் படிமங்களையும் அவன் எழுந்தருளச் செய்தான். ஒவ்வொன்றுக்கும் விலையுயர்ந்த நகைகள் அணிவித்தான். நாள் வழிபாட்டிற்கும் திருவிழாக்களுக்கும்பலஊர்களை மானியங்களாக வழங்கினான். தஞ்சைப் பெருங் கோயிலில் இசையையும் நாட்டியத்தையும் வளர்க்கத் தமிழகத்தின் பலகோயில்களிலிருந்து 400 பதியிலாரைத் தஞ்சையில் அவன் குடியேற்றினான். ஒவ்வொருவருக்கும் ஒருவீடும் ஒரு வேலிநிலமும் கொடுக்கப்பட்டன். இராஜராஜ சோழன் சைவசமயத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பணிகளுள் தலைசிறந்தது திருமுறை கண்டதாகும். திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்ற பெரியாரைக் கொண்டு சைவ சமயத்தின் திருமறையாகிய தேவாரத்திருப்பதிகங்களைத் தொகைவகை செய்து, உலகிற்கு
ஐ 28

Page 30
உதவிய பெருமை அவனையே சாரும். அவன் காலத்திற்கு முன்பே சில கோயில்களில் திருப்பதிகம் ஒதப்பட்டு வந்தன. இதை நாம் கல்வெட்டுக்களால் அறிகிறோம். ஆனால் அவை அந்தந்தக் கோயிலுக்குரிய தேவாரப்பாடல்களாகும். ஆனால் இராசராசனுடைய இத்திருப்பணியால் நாயன்மார்கள் காதலாகி கசிந்துருகி இறைவனுடைய திருவருட்பேற்றினைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் நாட்டு மக்களிடையே நன்கு பரவத்தொடங்கியது. அதன் மூலம் சைவசமயப்பற்றும் பக்தியும் ஆக்கமும் உள்க்கமும் பெற்றன. பல கோயில்களில் திருப்பதிகம்ஒதுவதும் மக்கள் அதைக் கேட்டுக் கசிந்துருகுவதும் அன்றாட நிகழ்ச்சியாயின.
தஞ்சைப் பெரியகோயிலில் இறைவன் திருப்பதிகம் விண்ணப்பஞ் செய்வதற்காக இசைத்தமிழில் வல்லார் நாற்பத்தென்மர், உடுக்கை வாசிப்பான் ஒருவன் கொட்டிமத்தளம் கொட்டுவான் ஒருவன் ஆக ஐம்பதின்மர் அமர்த்தப்பட்டனர். இவ் ஐம்பதின்மருக்கும் நாள்தோறும் முக்குறுணி நெல் ஊதியமாகக் கொடுக்கப்பட்டது.
இவர்களைப் பிடாரர் (பட்டாரகர்) என்று கல்வெட்டு கட்டுகிறது. இம்மைம்பதின்மருடைய பெயர்களிலும் சிவன் என்னும் பட்டப்பெயர் அணி செய்தது. இராசராசபிச்சனான சதாசிவன், மகாதேவன், திருஞானசம்பந்தனான ஞானசிவன் என்னும் பெயர்கள் இதைத்தெரிவிக்கும். இறைவன் முன்னிலையில் தமிழ்ப்பாடல்களை ஒதிவழிபாடு செய்யும் நிலை இராஜராஜ சோழன்காலத்தில் வழக்கில் இருந்தமை இங்கு கருத்தக்கதாகும். இவர்கள் அல்லாமல் கானபாடி, ஆரியம்பாடுவாரும், தமிழிசை பாடுவாரும் திருக்கோயில்களில் பணிபுரிந்தனர்.
திருக்கோயில் அமைப்பு முறைகளையும், வழிபாட்டுநெறிகளையும் எடுத்துரைப்பன ஆகமங்கள். அவை சோழர் காலம்முதற் கொண்டு தமிழகத்தில் நன்கு பரவலாயின.
s=
ங்ெகும் நிறைந்து இருப்பவர், எல்லாவற்றையும்
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான். தினமும் சிவனை சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அப விடும் என்று நல்வழி கூறுகின்றது. சிவாய நமவென்ற திருநாவுக்கரசு நாயனார் எப்போதும் சிவபெ வந்தார். சிவத்தொண்டுகள் செய்து வந்தார். அதனா ஏற்பட்ட பெரிய ஆபத்துக்களிலிருந்தும் தப்பினார். நம திருநாவுக்கரசருடைய வரலாறு எமக்கு ஒரு சிவபெருமானை எந்நேரமும் நினைத்து நமசிவா! சிவத்தொண்டுகள் செய்து வந்தால் கவலைகளும் மை
 
 

அதனால் சைவசமயத்திற்குப் புதியதோர் பொலிவும் வலிவும் உண்டாயிற்று சைவசமயகுரவர்கள் நால்வரும் தம்பாடல்களின் மூலம் சிவவழிபாட்டையும், நடராச தத்துவத்தையும் பல்லவர் காலத்திலேயே நாட்டு மக்களிடை நன்கு பரப்பினர் எனினும் அவர்களுடைய தமிழ்மறையில் பொதிந்துகிடந்த மெய்ப்பொருள் கருத்துக்களைத் தனியே அகழ்ந்து எடுத்து சிலைகளில் வடித்துத்தந்த சிறப்பு இராசராசனுக்கும் அவன்வழிவந்த சோழமன்னர்க்குமே உரியதாகும். இராசராசன் சகம் 926 (கி. பி. 1004) இல் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பல நிவந்தங்கள் வழங்கினான் என்று “கொங்கு தேசராசாக்கள்” என்னும் நூல் கூறுகிறது.
சைவசித்தாந்த சாஸ்திரங்கள், பெரியபுராணம், கந்தபுராணம், போன்ற நூல்களும் சோழர்காலத்திலேயே எழுந்தன. சமுதாய வாழ்க்கையின் சிறந்த பண்பாகிய கூடிப்பணிபுரியும் கூட்டுமுயற்சிக்குக் கோயில் ஒரு பயிற்சிக்களமாக விளங்கியது. சிறிய அளவில் செங்கல், சுதைகளால் கட்டப்பட்டும் இருந்தன. கோயில்வழிபாட்டின் தேவைகளை நிறைவேற்ற அன்பர்கள் பலர் ஆர்வத்தோடு அறக்கட்டளைகளை நிறுவினர். இதன் பயனாகப் பொன்னும், பொருளும் நிலங்களும் கோயில்களின் கருவூலங்களை நிறைத்தன. செல்வச் செழிப்பும் வளமிக்க வாழ்வும் கோயிலைச்சார்ந்து வாழ்ந்தோரை எளிதில் அடைந்தன.
இவ்வாறு மக்கள் ‘மண்ணில் நல்லவண்ணம்’ வாழ்வதற்குரிய பலபணிகளைச் சிறப்பாகக்கோயில்கள் செய்தன. அவற்றோடு அமையாமல் மக்களின் ஆன்மீகக் கடைத்தேற்றத்திற்குரிய நெறிமுறைகளை வகுத்து வழிகாட்டும் வான்பொருளாகவும் திருக்கோயில்கள் திகழ்ந்தன. இவ்வாறாக சைவசமயவளர்ச்சியில் சோழப் பேரரசர் அளப்பரிய பணிகளை ஆற்றி சைவசமயத்தை மேன்மையடையச் செய்தனர்.
ཡས༽།
கடந்து இருப்பவர் இறைவன். அவரே நாம் வணங்கும்
ாயே நினைத்தால் நமக்குக் குறையொன்றும் இல்லை. ாயமொரு நாளும் இல்லை. உபாயம் இதுவே மதியாய்
மந்திரத்தை நாம் எந்நாளும் ஒதுதல் வேண்டும். ருமானை நினைத்து நமசிவாய என்ற மந்திரத்தை ஒதி ஸ் துன்பங்கள் வந்த போதும் அஞ்சாதிருந்தார். தனக்கு சிவாய என்ற மந்திரம் அவரை காப்பாற்றியது.
நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. ஆகவே, நாமும் என்னும் மந்திரத்தை விருப்பத்துடன் உச்சரித்து றந்துவிடும்.
செல்வி. சோனியா மகேந்திரராஜா,
ஆண்டு 4B கொ/புனித அந்தோனியார் மகளிர் மகாவித்தியாலயம்

Page 31
* تعصي கார்த்திகேசு இந்து சமயத்திற்கு ஆதாரமானது வேதம். வேதம் கூறும் நெறிமுறைகளை வைதிகம் என்பர். இவ் வைதிகம் நாளாவட்டத்தில் தன்னிலை திரிந்து தெளிவற்ற சம்பிரதாயங்களாக மாறி இன்று பெரும்பாலும் யாவராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை ஐதிகம் என்பர். மாறாக வேதங்களின் மெய்ப் பொருளை உணர்ந்து தன்னில் தன்னையும் இறையையும் உணர்ந்து தன்மயமாக துணை நிற்பது தெய்விகம். இவற்றில் முன்னைய இரண்டும் கன்மகாண்டம், பின்னையது ஞானகாண்டம்
வேதத்தில் முதற்பகுதி கரும காண்டம் அல்லது கன்ம காண்டம் எனப்படும். வேள்விகள், செய்யவேண்டிய முறைகள் அதாவது மனிதகுலத்திற்கு, நன்மை விளைவிப்பதற்காக, வேதியர் செய்யத் தக்க கருமங்களையும், அதனால் விளையும் பலாபலன்களையும், செய்யும் போது ஏற்படக்கூடிய இடையூறுகளையும், அவற்றைத் தவிர்க்கும் மார்க்கங்களையும் பற்றிச் சொல்வது. இதையே சரியை, கிரியை எனும் இரு பிரிவுனுள்ளும் அடக்குவர். . .»
“எது தெளிவை ஏற்படுத்துகிறதோ? எது சாந்தியை அருள்கிறதோ? எது தன்மயம் ஆக்குகிறதோ அதுவே ஞானகாண்டம்”
ஞானகாண்டத்தில் கூறப்பட்டவை தெய்விகம். மெய்யில் செய்யப்பட வேண்டிய சடங்குகளை பாமரருக்கு மறைபொருளாக கூறி வைத்தவை வைதிகம். அவற்றின் உண்மை விளக்கம் இன்றிப் பின்பற்றுபவை ஐதிகம். இன்று உலகில் ஐதிகம் தலைவிரித்தாடி வைதிகம் மறையும் நிலையெழுந்துள்ளது. சந்தர்ப்ப வாதிகளும், பொய்மை வாதிகளும் வைதிகங்களாகவும் அவையே தெய்விகம் என்றும் மக்களை நம்ப வைத்து வருகிறார்கள். ஐதிகங்கள் வைதிகங்களாகவோ அன்றி தெய்விகங்களாகவோ எக்காலத்தும் மாறமுடியாது. இதனாலேயே இன்று வைதிக முறைப்படி ஐதிகமாக செய்யும் கடமைகள் வெற்றி அளியாது போவதோடல்லாமல் பாரிய நாசத்தையும் மனிதகுலத்திற்கு ஏற்படுத்தி வருகிறது.
இன்று உலகில் சத்தியம் மறைந்து அசத்தியம் முன்னிலைப்பட்டு அநீதி தலைதூக்கி இருப்பதற்கு இந்த மயக்க நிலையேகாரணம்.
கன்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல ஞான காண்டத்திலும் வேள்வி உண்டு.
வைத்திகத்தில் கூறப்பட்டுள்ளவை ஐதீகச் சடங்குகளாகிவிட்ட நிலையில் தெய்விகச் சடங்குகளை யார் அறிவார். உலகளாவிய நிலையில் ஏகசேட்டம் ஒரு சிலர் இலைமறைகாயாக விருந்து தெய்விக சடங்குகளைத் தம்மளவில் செய்துவருவதால் இன்று மனித இனம் ஓரளவாவது வாழமுடிகிறது.
 
 

வகுருநாதன்
இறையருள் நிறைந்து காணப்படும் பெரிய ஸ்தலங்கள் எல்லாம் இத்தகைய தெய்விக யாகங்கள் செய்துகொண்டிருக்கும் தெய்விக மக்களான தபசிகளின் உறைவிடமாக (சமாதிகளாக) இருக்கக் காணலாம்.
ஆதிகாலத்தில் தில்லையில் திருமூலர் அழகர் மலையில் ராமதேவர் அனந்தசனத்தில் கும்பமுனிவர் நல்ல அருணையில் இடைக்காடரும் வாதவைத்தீஸ்வரன்கோவிலில் தனவந்திரிவான்மீகர் எட்டுக்குடி பாதசெங்களனி ஆருரிலே கமலமுனி பழனியில் போகநாதர் திருப்பரங்குன்றினில் மச்சமுனியும் தெய்வத்திருப்பதியில் கொங்கணவரும் சேதுராமேஸ்வரம் தன்னிலே பதஞ்சலியும் சேர்காசிநந்திதேவர் சோதிரங்கத்திலே சட்டமுனி மதுரையில் சுத்தரானந்தமூர்த்தி திருவடமா மருதூரில் பத்ரகிரியும் திருவொற்றியூர் பட்டினத்தாரும் குற்றாலம் தன்னில் அகத்தியரும் ஆவுடையார் கோயிலில் மாணிக்கரும் அருந்தபசு புரிந்தென்றும் அழியாத புகழெய்தி ஒளிகண்ட திவ்ய ஸ்தலமாம்.
ஞான வேள்வியில் ஓம குண்டம் என்பது ஓம் எனும் பிரணவ வடிவான சிரகிரி. இங்கு வளர்க்கப்படும் தீ என்பது கும்பகத்தீ, அவிஎன்பதுகும்பக் கனலினால் சிரகிரியின் நின்றும் ஊற்றெடுத்து வழியும் அமிர்தம். அக்கணலில் இடப்படும் ஆகுதிகள் 1. இவ்வுடலை வேண்டும் இடத்திற்குத் தூக்கிச்செல்ல உதவும் அசுவம் ே ன்ற மூச்சு. (மூச்சு இல்லாவிட்டால் எங்கும் போக முடியாது$2. இரையைக் காட்டி வா என்றால் வந்தும், அல்லாதபோதுஇழைத்தலு வெகுதூரம் பிடிபடாமல் ஒடியும்,சும்மாயிருந்தால்இன்இஸ்டத் கண்டகண்ட தளைகளை மேய்ந்து திரிவதுமான் ஆடு (:4 ற மனம், 3. இருளாகிய இரவு மறைந்து ஒளிழ்ாகிய 85 蓝 னின் வருகையை உணர்த்தி உலகை துயிலெழுப்பூம் சேவல்இான்ற நா. (நாவே அறியாமை இருளைப் போக்கி மெய்ஞ்ஞ் காணவும்,தான் கண்டு இற்ற ஒளிடிை இன்புற அனைவருக்கும் சின்மார்க்கத்தைறிேவுறுத்த உதவுவது)
உயிர்வாழ ஆதாரமாக இருக்கும் மூச்சிற்குக் கால், குதிரை, வாசி, பரி, அசு எனப்பல பெயர்களுண்டு. இம்மூச்சை ஒம குண்டமாகிய - சிரகிரியில் அமைந்த திரிபுடைஎனும் "ஃ"வடிவான குண்டத்தில் சேர்ப்பதே வாய்மையான அசுவமேதயாகம். எமது பிராணனாகிய, மூச்சை சுழிமுனையூடாகக் கும்பித்தலே இதன் பொருள். அவ்வாறு செய்யும்போதுவாசியாக எம்மை உயிர்ப்பிக்கும் பிராணன் திரிபுடையில் பிரவேசித்த காரணத்தால் திருவாசியாகிறது. அந்த நிலையில் அது ஒளிமயமாக பிரகாசிக்கிறது. இதனை விளக்குவான்வேண்டியே நடராஜ மூர்த்திக்கு மேல் திருவாசியை அமைத்து வைத்தார்கள். இதனையே சிதம்பர இரகசியமாகவும் வைத்துப் போற்றுகிறார்கள். இதுவே ஞான காண்டத்தில் கூறப்பட்ட அசுவமேதயாகம்.
கெளதம புத்தரும் மூச்சைத் தியானி என்று உயர் பாவனைகளை கூறும்போது கூறுகிறார்.

Page 32
ஆதலால் ஞான வேள்வியில் முதலில் எமது சுவாசமாகிய அசுவமும், அதனை அடுத்து ஆட்டைப் போல எம்மை அலைக்களிக்கும் மனமும் பலியிடப்படுகின்றன. மனமும் வாயுவாகிய மூச்சும் இணை பிரியா நண்பர்கள். இவர்களின் செயற்பாட்டைப் பொறுத்தே மனிதன் மனிதனாகவோ அல்லது மிருகமாகவோ அல்லது தெய்வமாகவோ மாறுகிறான். தெய்வமாக மாறும்போது சிவஞானம் சித்திக்கிறது.
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப்பார்க்கு மன்மனத்துள்ளே மனோலய மாமே என்றார் திருமூலர்.
இவற்றை ஊனக் கண்ணால் காணமுடியாது. அனைத்தும் பரிபாசையில் கூறப்பட்டிருப்பதனால் கன்மகாண்டிகளால் புரிந்துகொள்ள முடியாது. புரிந்துகொள்ள முற்பட்ட போலிகளும் உண்மை விளக்கமின்றி தவறான விளக்கங்களுக்கு இடம் கொடுத்து சமயத்தின் புனிதத்தையே கெடுத்து கொலைப் பாதகத்தைச் செய்ய தூண்டிவிட்டார்கள். பாமரமக்களும் இப்பாதகச் செயல்களை அறியாமை காரணமாகப் பழகிவிட்டு இன்று அதினின்றும் விடுபடமுடியாமல் தவிக்கிறார்கள். * *
மனிதன் பழக்கத்திற்கு அடிமையாகும் மிருகம்.
இருள் அகலவும் ஒளிபரவவும் அறிவாம் அறிவை பெறத் துணையாம் நிற்கும் நா வாகிய சாவலை அடுத்து குண்டத்தில் சேர்க்கிறார்கள். இந்த நாவின் நிலை கண்டே வள்ளுவரும்
யாகாவளராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு என்று நாவினைக் காக்க வேண்டும் என்கிறார்.
இத்தகைய வேள்விகள் எதற்காக? யாருக்காக செய்யப்படுகின்றன?
அவை நம்மை நாம் அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட முறைகள். இஞ்ஞானவேள்வி பற்றி அறியத் திறந்த மனமும் திண்ணிய அறிவும் தேவை. அவற்றுடன் நல்ல சற்குரு வழிகாட்ட வேண்டும். இந்த விடயத்தில் “குருவில்லாத வித்தை பாழ்” என்ற வாக்கு சிந்திக்கப்பட வேண்டிய தொன்று. நல்ல குரு கிடைக்காத பின் அதுவே பழக்கமாகி அதனின்றும் மீளமுடியாது போய்விடும்.
இந்த ஞானவேள்வியைச் செய்யும்போது, எமது காயக் கோவிலின் ஒன்பது வாயிலும், ஐம்புலக் கதவுகளும் அடைக்கப்பட்டு, பேச்சற்ற நிலையில், ஒங்காரத்து உள்வெளிக்குள்ளே அருளொளி பிரகாசிக்கும். அவ்வொளி நிறைவில் சீவனும் சிவனும் ஒன்றுபட்டு நிற்பர். இந்த ஞான வேள்வியை நடந்துபவர்களை யமன் அண்டான். அவர்கள் மரணத்தை வென்ற நித்திய ஜிவன்கள். இத்தகையோரின் ஞான மோன நிலையே சமாதி. இவர்களது அருட் பிரகாசத்தால் தான் இந்த கலியுகத்தின் அழிவுகளினின்றும் எம்மால் தப்பி பிழைத்து வாழ முடிகிறது.
 

அத்தகைய ஞான சித்தர்கள் உலக நலத்திற்காக தம்மை ஒறுத்து, இறை அருளை நாடி தனித்து பசித்து விழித்து முற்கூறியபடி ஞான வேள்வி நடத்துவார்கள். அதன் பயனால் உலகில் தலைவிரித்தாடும் கொடிய யுத்த மேகங்கள் அகன்று நிம்மதி ஒளி பிரகாசிக்கும்.
சங்குஇரண்டு தாரைஒன்று சன்னல்பின்னல் ஆனதால் மங்கிமாளுதே உலகில் மானுடங்கள் எத்தனை சங்குஇரண்டையும் தவிர்த்து தாரைஊத வல்லிரேல் கொங்குமங்கை பாகருடன் கூடிவாழ்தலாகுமே என்று ஒரு சித்தர் இந்த ஞான வேள்வி நிலையை விளக்குகிறார்.
இவ்வாறு வேதங்களில் மறைபொருளாய்க் கூறிவைக்கப்பட்டிருந்த ஞானத்திரவியங்களை வெட்டவெளிச்சமாக எளிமையாக மக்களுக்கு உணர்த்தியவர் சித்திர முத்தெனும் சீரார் சிவஞானி அவர் ஆக்கிவைத்த அருளொளி எனும் நூலில்,
சாதுவாக நீஇனிமேல்
வாதுகள் புரிந்திடாது
தாது நடுநாடியூடவே - பிராணனதை
ஊதுவாய் சிரசில் ஏறவே.
நாக்கை மேல்மடித்து வச மாக்கிட வன்மையுண்டானால் தாக்கலாம் சுவாசம் அதனை - கபாலத்திலுண் டாக்கலாம் பிரகாசநாதனை. மூலமதை மேலே எக்கி காலதைப் பிடித்தடைத்தால் ஆலமுண்டோனை அறியலாம் - அவனருமை பாலனாயுலகில் வாழலாம்
நாவினை மடித்து உயர்த்தி ஆவியை நிறுத்திஊதத் தேவியுனைத் தேடுவாளையா - அவளொனியில் தாவிவியை ஆடலாம் ஐயா.
தவம் எனும் சுவாலையில் பவம் எரிந்து பொன்றிடும் சிவனருள் சுரந்து தோன்றுமே - அல்லாதவர்கள் சவம் போலிருப்பர் என்றுமே,
என்று ஞான வேள்வி பற்றிய வேதத்தின் உட்பொருளை வெட்டவெளிச்சமாக கூறியுள்ளார்.
இந்த வேள்வி நிலையை திருமூலர் பின்வருவாறு விளக்குகிறார்.
நாவின் நுனியை நடுவே விசிரிடில் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து தோற்றுவர் சாவதும் இல்லை சதகோடி ஊனே. சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து ஒத்தறிகின்றி இடமும் அறிகிலர் மெய்த்தறிகின்ற இடமறிவாளர்க்கு அத்தன் இருப்பிடம் அவ்விடம்தானே.

Page 33
J Bli {@ଗ
திருமதி. G. சரோஜினி( கொ/முகத்துவா,
கி. பி 6ம் நூற்றாண்டு - 9ம் நூற்றாண்டுகள் வரை தென்னகத்தில் வளர்ச்சி பெற்ற பக்தி இயக்கம் காட்டுத்தீயினைப் போன்று பாரதம் முழுவதும் பரவி இருந்தது. இவர்கள் அமைத்த மத நெறிகளான சமணத்தையும் பெளத்தத்தையும் எதிர்த்தே இந்து சமயத்தினை வளர்ச்சியடையச் செய்திருந்தனர். இதே போன்றே வடநாட்டிலும் இஸ்லாமை எதிர்த்து மக்கள் இந்துசமயத்தை வளர்க்க முற்பட்டிருந்தனர். இதனால் மதத்தினை மாற்றம் செய்து இந்துசமய உணர்வினை ஊட்டி இந்து சமயத்தை மறுமலர்ச்சியடையச் செய்வதற்கு மகா பாகவதர்கள் பலர் தோன்றி இயக்கமாக நின்று மறுசீரமைத்து இருந்தனர். இவர்கள் “வடநாட்டில் பக்தி இயக்கம்” எனப்படுகின்றனர்.
கி. பி 8ம் நூற்றாண்டில் தொன்னாட்டில் வாழ்ந்த சங்கராச்சாரியார் அத்வைத தத்துவக் கருத்துக்களைப் பரப்பி வந்திருந்தார். அவரைத் தொடர்ந்து இராமானுயநம் வடநாடுவரை சூறாவளிப் பயணத்தை மேற்கொண்டு வசிட்டாத்துவைத கருத்துக்களைப் பரப்பி வந்தார். இப்பணியினை வட நாட்டில் தோற்றம் பெற்றிருந்த மகா பாகவதர்களே ஆற்றி இருந்தனர். பாகவதர் என்பதன் பொருள் மகாவிஷ்ணுவின் பக்தியில் ஆழ்ந்தவர்கள் என்பதே பொருளாகும். எனவே பக்தி இயக்கத்தை வளர்த்த மகாபாகவதர்கள் ஒவ்வொருவரையும் நாம் தனித்தனியே நோக்குவோம். •
துளசிதாசர் :
வடநாட்டில் தோற்றம் பெற்ற மகா பாகவதர்களுள் துளசிதாசரும் சிறப்புமிக்கவராவர். இராமாயணத்தை (ஹிந்தி) இந்தி மொழியில் பாடியவர் இவரேயாவர். இதன் பலாபலனாக இராமனை இவர் வழிபாட்டுப் பொருளாக ஆக்கியமை குறிப்பிடத்தக்கது. ஹிந்தி மொழியில் இராமாயணத்தைப் பாடியதனால் சாதாரண மக்கள் கூட விஷ்ணுவின் பெருமைகளையும் அவரது குணங்களையும் அறிந்து இருந்தனர். இராமனது பாத்திரம் இவரினால் எடுத்துக் கூறுப்பட்டதனால் மகா விஷ்ணுவின் அவதாரம். சிறப்புப் பெற்றுத் துன்பப்படும் வேளையில் இராமன் அவதாரம் எடுப்பார் மக்கள் நம்பிக்கை கொண்டு இந்துமதமானது வடநாட்டில் வளர்ச்சி பெற துளசிதாசரே காரணமாகின்றார்.
இராமாயணத்தில் அனுமானது பாத்திரம் சிறப்பிற்கு உரியதாகும். அதாவது இராமனை எசமானாகவும் தன்னை அடிமையாகவும் நினைத்து ஆற்றும் தொண்டு சிறப்புக்குரியதாகும். இதனைப்பின்பற்றியே துளசிதாசரும்தாசமார்க்கத்தின் மூலமாகத் தனது பக்தியினை செலுத்தி வந்திருந்தார். எனவே இவரை அடியொற்றி வடநாட்டில் சமயம் வளர்ச்சி பெற இவரே காரணமாக இருந்தார். துளசிதாசர் இராமனை நினைத்து உள்ளம் உருகிப்பாடிய பாடல்களில் “விஜயபத்திரிகா” என்னும் பாடல் மகத்தானதாகக் காணப்படுகின்றது
 
 
 
 
 

56. B. A Dip. in. Edu. ம் இந்துக்கல்லூரி
கபீர்தாசர் :
வடநாட்டு பக்தி இயக்கத்திலுள்ள மகா பாகவதர்களுள் கபீர்தாசரும் குறிப்பிடத்தக்கவராவார். இந்திய மெய்ஞானிகளுள் கபீர்தாசர் சிறந்தவராகக் கருதப்படுகின்றார் இவர் 1440-1518 வரை வாழ்ந்தவர். இவர் தெய்வீக மனிதர் எனப் பேற்றப்படுகின்றார். சகல மதங்களிடையேயும் சமரசத்தை ஏற்படுத்துவது இவரது குறிக்கோளாகும் ஹிந்து மொழியில் பாடல்களைப்பாடி"ஆதிகவி” எனப் பாராட்டப்பட்டவர். சமயத்திலும் கமூகத்திலும் காணப்படும் குறைபாடுகளைப் போக்கி ஒரு சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். இராமதாசர் மீது அதிக பக்தியுள்ள இவர் அவரையே ஞானகுருவாக ஏற்றிருந்தார். சர்வசமய சமரச சன்மார்க்க கொள்கையை உடையவராக விளங்கிய இவர் இராமன் என்றால் என்ன? ரஹ்மான் என்றால் என்ன? இரண்டும் அடிப்படையில் ஒன்று எனக் கூறிவந்திருந்தார்.
கபீர் தாசரின் இத்தகைய போக்கினைப் பொறுக்காத இஸ்லாமிய மக்கள் இவரது உடலுக்கும் உயிருக்கும் தீங்கு விளைவதற்குப் பல்வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தனர். இவற்றினைக் கண்டு கலங்காத கபீர் அவர்கள் இராமன் மீது அதீத பக்தி செலுத்தி மேலும் பக்தியினை வளர்த்தார். இவர் ஏழை எளிய மக்களுக்கு உணவு உடை போன்ற வசதிகளை வழங்கி வந்தார். காலப்போக்கில் இவர் வறுமையினை எதிர்நோக்கியபோதும் தன் பக்தியிலிருந்து சிறிதும் வழுவாது தன் பக்தியை மேற்கொண்டு வந்திருந்தார். சர்வ சமய சமரச சன்மார்க்க கொள்கையினை கொண்டுள்ள கபீர்தாசரை அடியோற்றி பல இஸ்லாமியர்கள் இவரது பணியினைத் தொடர்ந்திருந்தனர். இவர்களும் இந்து சமயத்திற்கும் இஸ்லாமிய சமயத்திற்கும் இடையே ஒருமைப்பாடுகாண முற்பட்டவர்களாகவே இருந்தனர். இவர்கள் இதனை இயக்கமாகவே நின்று ஆற்றி இருந்தனர். எனவே இந்த இயக்கம் “கபீர் இயக்கம்” என்று அழைக்கப்பட்டிருந்தது.
சமயத்திலும் சமூகத்திலும் காணப்படும் குறைபாடுகளைப் போக்கி ஒரு சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். இவரது பிறப்பு பற்றிய கதை மற்றவர்களை நம்ப முடியாது செய்கின்றது. காசியிலுள்ள நீரு என்ற நெசவாளியின் மனைவி நீ மா என்பவள் வகர்காலா என்னும் ஏரியின் நடுவில் உள்ள தாமரைப்பூவில் ஒரு குழந்தையைக் கண்டெடுத்ததாகவும் முஸ்லிம்களான பெற்றோர்கள் தமது குருவானவரின் உதவியுடன் பெரியமனிதர் என்னும் பொருள்பட குர்ஆனில் இருந்து கபீர் என்னும் பெயரை தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகின்றது. இவர் இளமைப் பருவத்தில் செயற்கரிய செயல்களைச் செய்து மற்றவர்களை வியப்படையச் செய்தாகத் திருவள்ளுவரைப் போல நெசவுத் தொழிலை தனது தொழிலாகச் செய்தார். இராமானாயரின் பக்தி மார்க்கத்தைப் பரப்பிய இராமானந்தர்

Page 34
என்பவரைக் குருவாகக் கொண்டார். கபீர்தாசர் தான் கண்ட இன்பத்தை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார். அரியும் அல்லாவும் ஒன்றென உணர்த்தினார். மாணிக்கவாசகரைப் போன்று ஆண்டவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் கருதி பாடல்களைப் பாடினார். மந்திரங்களை உச்சரித்து செபம் செய்வதன் சிறப்பை வலியுறுத்தினார். இறைவன் கோயிலில் இருந்தால் கோயிலுக்கு வெளியில் இருப்பவர்கள் யார் என்னும் கருத்துப்பட பாடல்களைப் பாடினார். வட இந்தியாவில் சீக்கிய மதத்தை நிறுவிய குருவான "நானக்” என்பவர் கபீரின் சீடராவார். பிறப்பிலே முஸ்லிம்மாகப் பிறந்து இந்துவாக மாறி சகல மதங்களுக்கும் இறைவன் ஒன்று என்ற கொள்கையை நிலைநாட்டிய சமூக சீர்திருத்த வாதியான கபீர்தாசர் வட இந்திய மெய்ஞானிகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றார்.
மீராபாய் :
தென்னாட்டில் ஆண்டாள் கண்ணனைக் காதலனாக நினைத்துப் பக்தியினைச்ன செலுத்தி பல பக்திப் பாசுரங்களைப் பாடியது போலவே வடநாட்டில் மீராபாயும் கண்ணனிடம் அதீத பக்தியினைச் செலுத்தி, பக்தியினை வளர்த்து வந்தார். அரச குடும்பத்தில் இவர் பிறந்திருந்த போதும் எளிமையையே விரும்பியிருந்தார். கண்ணன் மீது பக்தி செலுத்துவதற்காக தமது உடமைகளையும் உறவினர்களையும் துறந்து பஜனைகள் போன்றவற்றினை ஆற்றி பக்தியினை வளர்த்து இருந்தார். கட்டாயத்தின் பெயரில் இல்வாழ்க்கைக்கு வந்திருந்த இவருக்கு கண்ணன் மீது பக்தியைச் செலுத்த இல்வாழ்க்கை தடையாக காணப்பட்ட போது அதனை உதறி எறிந்துவிட்டு “கிரிதர கோபாலனே சரணம்’ என்று பக்தி மார்க்கத்தினை மேற்கொண்டிருந்தார். இவர் அடியவர்களுடன் சேர்ந்து தெருதெருவாகச் சென்று பஜனைகளைப் பாடி பிச்சையெடுத்து உண்டு பக்தியை வளர்த்திருந்தார். இவரது உறவினர்கள் இவருக்குப் பல்வேறுபட்ட இன்னல்களை விளைவிக்க முற்பட்ட போது தன்னிலையில் இருந்து சிறிதும் வழுவாது கண்ணன் மீது அதீத பக்தி கொண்டு பக்தியினை வளர்த்து இருந்தார்.
கிரதர கோபாலன் மீது அதீத பக்தி கொண்ட மீராபாய் அவன்மீது பல பக்திப்பாசுரங்களைப் பாடியிருந்தார். இவை முழுமையும் ஆழமான கருத்துக்களையும் கொண்டவையாகவும் சொற்சுவை பொருட்சுவை என்பவற்றினை உள்ளடக்கியதாகவும் காணப்பட்டிருந்தது. இவர் ஆடம்பரமான வாழ்க்கையையும் போலிவாழ்க்கையையும் வெறும் கிரியைகளையும் எதிர்த்துவந்தார். இத்தகைய செயற்பாடுகளில் மோட்சத்தினை அடைய முடியாது எனவும் உண்மையான பக்தியினாலேயே இறைவனை அடைய முடியுமெனவும் கூறி வந்துள்ளார்.
தாவரங்களை மட்டும் உண்டு வாழ்ந்தால் ஒருவர் மோட்சம் அடைய முடியுமென்னும் கருத்தினை இவர் எதிர்த்து வந்தார் இதனை ஏற்றிருப்பின் சதா தாவரங்களையே உண்டு வாழும் ஆடு, மாடுகளும் தாவரபட்சிகளும் இலகுவில் மோட்சம் அடைந்துவிடும், இதனைப் போலவே தினமும் நீராடுவதன் மூலம்
 

மோட்சம் அடையலாம் எனக் கூறினர். சதா நீரில் வாழும் மீன்களும் தவளைகளும் மோட்சம் அடைந்துவிடும் என கூறினார். எனவே போலி வாழ்க்கையினாலோ வெறும் கிரியைகளினாலோ மட்டுமே மோட்சம் அடைய முடியாது என்று கூறினார். கண்ணனின் மீது உண்மையான பக்தியினைச் செலுத்துவதனாலேயே இந்நிலையினை அடைய முடியுமெனக் கூறினார்.
மகாபாரதத்தில் வழிபட்டு வந்தவரே மீராபாய் ஆவார். கண்ணனைக் காதலனாகவும் தன்னைக் காதலியாகவும் நினைத்து நாயக, நாயகி பாவத்தில் வைத்து வழிபடப்பட்டு வந்தவரே மீராபாய் ஆவார். இவரினை அடியொற்றிப் பலரும் பக்தியியற்றி வந்திருந்தனர். இதனால் வடநாட்டு பக்தி இயக்கத்தில் மீராபாயும் சிறப்பிற்குரியவராக விளங்குகிறார்.
ஜெயதேவர் :
வடநாட்டு பக்தி இயக்கத்தில் பக்தி கொண்ட இன்னொருவர் ஜெயதேவராவார். கண்ணனை வழிபடுவதன் மூலம் பக்தி கொண்ட இன்னொருவர் இவராவர். கண்ணனை வழிபடுவதன் மூலம் ஆன்ம ஈடேற்றத்தைப் பெறமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்தினார். கிருஷ்ணாமிருதம், அஸ்ட்டபதி போன்ற பாடல்களைத் தந்த இவர் மன உறுதி, கடின உழைப்பு போன்றவை கண்ணனை அடைவதற்கான வழிமுறைகளெனக் கூறிவந்தார்.
இராமானந்தர் :
மகா பாகவதர்களுள் ஒருவரான இராமானந்தரும் விஷ்ணு மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவர் ஒரு புலவராவார். பல மாணவர்களுக்கு போதித்த இவர் பணத்திற்காகக் கல்வியைப் போதிக்கவில்லை. மாணவர்கள் பலரும் இவரின் மீது பக்தி கொண்டிருந்தனர். மண்ணாசை, பொன்னாசை, என்பன நிலையற்றவையாகும் இராமனிடம் வைக்கும்ஆசையேநிரந்தரமானது எனக் கூறிவந்தார்.தவறு செய்பவர்களை நாம்மன்னிக்க வேண்டும். அவர்களைத் தண்டித்தல் பாவமான செயலாகும் எனக் கூறி வந்திருந்தார்.இறைவன் மீது அதீத பக்திகொண்டிருந்த இவர் வறுமை நிலையடைந்திருந்த போதும் நன்னிலையில் இருந்து சிறிதளவேனும் வழுவாது இராமன் மீது பக்தி செலுத்தி வைணவத்தினை வளர்த்து இருந்தார். ஏற்றத் தாழ்வுகள் பாராட்டுபவர்கள் அறிவீனமானவர்கள் எனவே நாம் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டுமெனக் கூறினார். வட நாட்டில் பக்தியினை வளர்த்து வந்தார். இவர்களைப் போலவே சைதன்யர், ஜெயதேவர், இராமதாசர் போன்றவர்களும் வடநாட்டிலே பக்தி நெறியை வளர்த்து வந்தவர்களாவர்.

Page 35
செல்வி. ப. ச
ஓர் இடத்தில் அல்லது ஓர் நாட்டில் இருந்த நாகரீகத்தினை அங்கு கண்டு பிடிக்கப்படும் கட்டிடங்களை வைத்துத்தான் வரலாற்று அறிஞர்கள் விபரிக்கின்றனர். கட்டிடக்கலை வளர்ச்சி மக்களின் அறிவியல் வளர்ச்சி வாழ்க்கை முறை, சமயம் பொருளியல் வளர்ச்சி சமுதாய அமைப்பு முதலியவற்றின் எதிரொலியாக விளங்கும். எடுத்துக்காட்டாக கிரேக்கரின் கட்டிடங்கள் அறிவியல் வளர்ச்சிக்கும் பிரெஞ்சுக்காரர்களின் கட்டிடங்கள் உணர்ச்சி வயப்படுதற்கும் இத்தாலியரின் கட்டிடங்கள் மறுமலர்ச்சி அறிவிற்கும், இந்தியரின் கட்டிடங்கள் ஆன்மீகத்திற்கும் சான்றுகளாக விளங்குகின்றன.
இந்தியர்கள் மிக்க தொன்மைக் காலத்திலிருந்தே கட்டிடக்கலை அறிவைப் பெற்றுத் திகழ்ந்தனர். சிந்துவெளி நாகரீகத்தின் கட்டிடங்கள் 6) அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டன. இந்தியர் கி. மு 3000ல் ஒரு சிறந்த நாகரீகத்தை மேற்கொண்டிருந்ததை இவை வெளிப்படுத்துகின்றன. வேத காலத்தில் கட்டிடக்கலை பெரிதும் தாழ்த்திருந்தது. இந்தியாவில் சிற்பக்கலை நூல்கள் பல இருந்தன எனத் தெரியவருகிறது. அவற்றுள் மானசாரம் என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. மண் சுதையால் கட்டப்பட்ட ஒலைக் குடிசைகளே வேத காலத்தில் பெரிதும் இருந்தன. இந்தியா, பாரசீகம், அரேபியா போன்ற நாடுகளுடன் வாணிகத் தொடர்பை மேற்கொண்டமையால் இந்தியக்கட்டிடக் கலையில் கி. மு 6ம் நூற்றாண்டில், குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டது. இந்தியக்கலையும் மேலைநாட்டு கலையும் இணைந்த கட்டிடங்கள் பல கட்டப்பட்டன. காந்தாரக்கலை எனும் கலை வளர்ந்ததும் காந்தாரம்பாடலிபுத்திரம் போன்ற நகரங்கள் சிறந்த கட்டிடங்களும் அரண்களும் பெற்றுத்திகழ்ந்தன.
பெளத்த மதம் பரவ, அந்த மதம் சார்பான பெளத்த கட்டிடங்கள் சிறப்பிடம் பெற்றது. இந்தியாவை ஆட்சிபுரிந்த இந்து அரசர்கள் இந்து சமயத்தை வளர்த்ததுடன் பல கோயில்களையும் அமைத்தனர்.
அடுத்து இஸ்லாமியர் வருகையினால் இஸ்லாமியத் தாக்கமும் இந்தியத் தாக்கமும் இணைந்த இந்திய இஸ்லாமியக் கட்டிடக்கலை இந்தியாவில் வளர்ச்சி அடைந்தது.
குப்தர்காலக் கட்டிடக்கலை
குப்தர் காலம் கட்டிட சிற்பக் கலையின் உதயகாலமாகவே காணப்படுகிறது. இக்காலம் கோயில்கள் சிறியனவாக இருந்தாலும் நான்கு விதமான அமைப்புக்களைக் கொண்டவை. சதுர வடிவிலான இறையகம் முகமண்டபம் இவற்றுக்கின்டயிலான அந்தராளம் ஆகியவையே கோயிலின் அடிப்படை அம்சமாகும். சில இடங்களில் இவற்றைச் சூழ்ந்து திரு நடமாழிகைகளும் தூண்கள் பொருந்திய மேடைகளுடன் கட்டிய பிரகாரங்களும் காணப்பட்டன. சாஞ்சி, பித்தர்கோன், கார்வா, வில்சட் திகாவா, ஏரான் ஆகிய இடங்களிலும் இவை காணப்படுகின்றன. தக்கணத்திலும் இதனைப்போன்ற கோயில்கள் உருவாக்கப்பட்டன.
 
 

கனகசூரியம்
பல்லவர் காலக் கட்டிடக்கலை
பல்லவ அரசனான முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலேயே கற்கோயில் அமைக்கும் முறை தோன்றியது. பல்லவர்க்காலக் கட்டிடக்கலையை விளக்குவதற்கு அதை இரு கட்டங்களாகவும் நான்கு பாணிகளாக பகுத்து நோக்கலாம். அப்பாணிகளாக முதலாவது கட்டத்தில் கட்டிடங்கள் முழுவதும் கல்லினால் செதுக்கப்பட்டவையாகும். இரண்டாவது கட்டத்தில் இராசசிம்மன் பாணிக் கோயில்களும், நந்திவர்மன் பாணிக்கோயில்களும் காணப்படுகின்றன. பல்லவர்காலக் கட்டிடக்கலை முற்பட்ட திராவிடக் கோயில்களின் மரபுகளின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். இக்காலத்தில் எழுந்த கோயில்களில் கர்ப்பக்கிருகமும், தூண்மண்டங்களும் கல்லில் செதுக்கப்பட்டன. மகேந்திரன் காலத்தூண்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கபிடெல் எனப்படும் தலைப்பாகம் நடுப்பாகம் அடிப்பாகம் என்பவையே அவையாகும்
அடுத்த கட்டமாகிய நரசிம்மன் பாணிக் கோயில்களில் மகேந்திரன் பாணியின் தொடர்ச்சியுடன் மண்டபங்கள், இரதங்கள் எனும் கோயில் வடிவங்கள் அறிமுகமாயின. மண்டபங்களில் தர்மராஸ் மண்டபம், கொடிக்கால் மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம் போன்றவை குறிப்பிடத்தக்கன. நரசிம்மன் பாணியில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட வடிவம் இரதக் கோயிலாகும் தனிப்பாறையில் குடைந்து எடுக்கப்பட்ட கோயில்களை ரதங்கள் என்பர்.இங்கே திரெளபதி,அர்ச்சுனன், வீமன்,தருமன்,சகாதேவன், கணேசர் பெயரில் ரதங்கள் உள்ளன. சகாதேவன் ரதம் வில்வளைவு போன்றது. இதை கசப்பிரிட்டம் (யானையின் முதுகு) என்பர்.
இக்கால கட்டத்துடன் கற்கோயில் கட்டும் மரபு கைவிடப்பட்டுக் கோயில்களில் சாந்து கொண்டு கட்டும் மரபு ஆரம்பிக்கின்றது. இராசசிம்மன் காலத்தில் கட்டப்பட்ட மாமல்ல புரம் கடற்கரைக்கோயில் ஈஸ்வர ஆலயம், முகுந்த ஆலயம், காஞ்சி கைலாசநாதர் கோயில், காஞ்சி வைகுத்தப் பெருமாள் என்பவை குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் காலத்தால் முந்தியது கடற்கரைக் கோயிலாகும். கடற்கரை கடல்நீர் கடற்கரை மணல் சிதைவுக்குட்படாமல்இன்றுவரை பழுதுறாமலிருந்துவருகிறது.காஞ்சி கோயில், கடற்கரை ஆலயத்துக்கு சற்றுப்பிந்திக் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் பெரும்பகுதி இராசசிம்மன் காலத்தில் கட்டப்பட்டபோதும்இராசசிம்மன்மகனாகியமகேந்திரவர்மனே இதைப் பூரணமாக்கினான். காஞ்சி வைகுத்தப் பெருமான் கோயில் பல்லவ கட்டிடக்கலைக்கு சிறந்த ஒர் எடுத்துக்காட்டாகும்.இதன் மூலத்தானம் 90 அடி சதுரமாகும். இக்கோயிலைச் சுற்றி உயரமான ஓர் மதிலுண்டு இவ்வெளியின் மேல்வளைவுகூரையுண்டு சிங்க முகத்தூண் வரிசை உண்டு. பல்லவ வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்கள் இத்தூண்களில் உண்டு
இராசசிம்மன் பாணிக் கோயில்களில் பல்லவர் காலத்துத் தூண் மிகவும் கவர்ச்சியானது. புடைத்து நிற்கும் தூண்களின் கரையில் செய்யப்பட்டுள்ள சிங்க வேலைப்பாடுகளில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கட்டியக்காரரைப் போல் நிமிர்த்து நின்று திராவிடமுறையிலமைந்த தூண்களின் மேற்பக்கத்தை தாங்கும் சிங்கம் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வெளியே தெரியும்படி

Page 36
நின்ற நிலையில் உள்ளது. பல்லவர்காலக் கட்டிடக்கலைகளின் இறுதிப்பிரிவாகும். நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட சிறிய கோயில்கள் ஆகும். காஞ்சிபுரம் முத்தேசுவரர், மதங்கேசுவரர் ஆலயம், திருத்தலம் வீரட்டானேஸ்வரர் கோயில், குடிமல்வம் பரசுராமேஸ்வரர் என்பவை குறிப்பிடத்தக்கவை. இவ்வாறுபடிமுறை வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து மரபுகளின் தொடர்ச்சியாகவும் பல புதிய பாணிகளின் நுழைவுடன் சிறப்புப் பெற்று பல்லவர் கோயில் கட்டிடக் கலையின் அடிப்படையில் இருந்து பிற்காலத் திராவிடக் கோயிற் கட்டிடக்கலை வளர்ச்சியை ஆரம்பித்தது.
சோழர்காலக் கட்டிடநிலை
சோழர் காலத்தில் இந்துக் கோயில்கள் கட்டிட அமைப்பில் வளர்ச்சி கண்டதோடு பரிபாலன சொத்துடமை முயற்சிகளிற் சிறப்புப் பெற்றது. கோயிலை அடிப்படையாகக் கொண்ட சமயநெறி சமூக அமைப்போடு பிரிக்கமுடியாதிருந்தது. பாடல் பெற்ற ஆலயங்கள் விண்ணகரங்கள் பெருஞ்சிறப்புப் பெற்றிருந்தன. மன்னர் அவற்றைப்புனர் நிர்மாணம் செய்தும் பல மண்டபங்களைச் சேர்த்தும் கட்டியதோடு அவற்றை நிர்வகித்தும் வந்தனர். விஜயாலயன் காலம் முதலான மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை உருவாக்கினார்கள். இராசராசசேகரன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். இவன் மகன் இராஜேந்திரன் கங்கை கொண்ட சோழிச்சரத்தைக் கட்டுவித்தான். விஜயாலய சோழிச்சரம் அரஞ்சிகை ஈஸ்வரம், ஜராவதேஸ்வரம், திரிபுவனம் இராஜ இராஜேஸ்வரம், சூரியனார் கோயில் போன்ற கோயில்கள் குறிப்பிடத்தக்கன. பிரமாண்டமான அமைப்புக்கள் வளர்ச்சி கண்டன. சோழர் காலத்தில் தூண்கள், மண்டபம், அடித்தளம் ஆகியவற்றின் அமைப்பில் புதிய பரிமாணம் பெற்றது. பல்லவகாலத் தொடர்ச்சியின் கட்டிடங்கள்,திராவிடக் கட்டிடக்கலைப்பாணியைச் சேர்ந்தன. தன்ஞ்சைப் பெரிய கோயிலின் விமானம், இடைநிலை, பெருமண்டபம், விடைமண்டபம் யாவும் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டவை. கருவறையின் மேநிற்கும் விமானம் 216 அடி உயரமுடையது. இதை இராசராசன் தக்கணமேரு என்று கூறுவர். விமானத்தின் அடித்தளம் சதுர வடிவானது. நிலத்தில் நிழல்விழாது, சிவன் கோயிலில் அம்பாள் சந்நிதி அமைக்கும் மரபு ஏற்பட்டது. கங்கை கொண்ட சோழிச்சர ஆலயத்தின் விமானங்கள்,தளங்கள், சிற்ப வேலைப்பாட்டில் சிறந்தவை. ஐராவதேஸ்வரம் ஆலயம்
இந்துக்களின் விசேட திை
ஜனவரி - ெ
சனி ஏகாதசி விரதம், கார்த்திகை விரதம் ஞாயிறு பிரதோஷ விரதம் செவ்வாய் நடேசர் ஆர்த்திரா தரிசனம்,
பூரணை விரதம் சனி சங்கடஹர சதுர்த்தி ஞாயிறு தைப்பொங்கல் சனி ஏகாதசி விரதம் ஞாயிறு பிரதோஷ விரதம் புதன் 59LDIGGA), Gifigih ஞாயிறு சதுர்த்தி விரதம்
Gagist சஷ்டி விரதம்
 
 
 

உருளைகள் பூட்டப்பட்ட அமைப்புடையது. அற்புத வேலைபாடு அமைந்த தூண்கள், உருவச் சிற்பங்கள், மண்டபங்களுடன் கூடியதாகும். இலங்கையில், பொலநறுவையில் காணப்படும் இருபதுக்கு மேற்பட்ட, சைவ வைணவக் கோயில்களில் அழிபாடுகள் சோழராட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டன. இரண்டாம் சிவதேவாலயம் எனப்படும் வானவன் மாதேவி எனும் பெயரால் அது வழங்கியது.
“முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே” என்ற திருக்கோணமலையில் உள்ள பழைய கல்வெட்டு குளக்கோட்டன் திருப்பணிகளை எமக்கு உணர்த்துகிறது.
நாயக்கர்காலக் கட்டிடக்கலை வளர்ச்சி
விஜயநகரக் கலைப்பாணியில் கட்டப்பட்ட கோயில்கள் துங்கபத்திரா நதிக்குத் தெற்கிலுள்ள நாடுகள் அனைத்திலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஆனால் மிக அழகியவையும், விஜயநகரக் கலை இயல்புகளின் மிகச்சிறந்த எடுத்துக் காட்டுக்களாய் இருப்பவையும் ஆகிய கோயில்கள் சிதைத்துபோன தலை நகரான விஜயநகரிலேயே இருக்கின்றன. அங்கே இருக்கின்ற கோயில்களுள் விட்டலர் கோயிலும் விறசார ராமசாமி கோயிலும் முதன்மையானவை 500 அடி நீளமும் 310 அடி அகலமும் உடைய முற்றத்தில் கோயில் அமைந்திருக்கின்றது. இவ் விட்டலர் கோயில் மையத்தில் அமைந்துள்ளது. அதன் நீளம் 230 அடி உயரம் 25 அடி. அது கிழக்கு மேற்காய்நீண்டு நிற்கிறது. அந்தக் கட்டத்தில் மூன்று உறுப்புக்களான கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் அமைந்துள்ளது.
ஹசார ராமசாமி கோயில் இரண்டாம் விருப்பாட்சனுடைய காலத்தில் கட்டப்பட்டது. இது விட்டலுர் கோயிலைவிடச் சிறியது, எனினும் அது விஜயநகரப் பாணியின் முழுச் செப்பத்தையும் எடுத்துக் காட்டுகின்ற கோயிலாகும். இவை தவிர வேலூர், காஞ்சிபுரம், சீரங்கம், கும்பகோணம், தாட்பத்திரி ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களும் விஜயநகரப் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவையெல்லாம் நாயக்கர் காலப் புகழ்மிக்க கோயில்கள்.
எங்களும் விரத நாட்களும்
u Jorf 2001
O2 வெள்ளி கார்த்திகை விரதம்
04 ஞாயிறு ஏகாதசி விரதம் 06 (FillIIls பிரதோஷ விரதம்
07 புதன் பூரணை விரதம், தைப்பூசம். 11 ஞாயிறு சங்கடஹர சதுர்த்தி
18 ஞாயிறு ஏகாதசி விரதம்
20 Gld Gilgit பிரதோஷ விரதம்
21 புதன் மகாசிவராத்திரி
22 வியாழன் அமாவாசை விரதம்
27 செவ்வாய் சதுர்த்தி விரதம்

Page 37
OW IO Cele
Mahathm
It would be no exaggeration to say that in this Kaliyuga we have no right to celebrate Diwali with so much jubilation. Our celebrating Diwali implies that we feel we are living in Ramarajya. Do we have Ramarajya in India today?
A king who is not prepared to listen to his subjects, under whose rule the subjects get no milk to drink, no food to eat and no cloth to wear, a king who massacres his innocent subjects, who trades in wine, hemp and opium, who, by eating pork, hurts the feelings of Muslims and by eating beef the feelings of Hindu, who threatens the very existence of Islamand gambles at horseracing - how can the subjects of such a king celebrate Diwali?
Let no one labour under the delusion that this is an exaggerated picture; if there is anyone who has such fear, I shall be only too happy to be able to explain the thing to him in all humility. If I am being in the least unfair to the British, I am ready to be convinced of my mistake and, on being convinced, I shall consider it my religious duty to apologize to them.
I would apply to any Indian Prince the standard. I apply to the British Government. Actually, I apply a much stricterstandard to Indian Princes. Judging it even by the lightest standard, I find British rule repugnant to me. All my admiration for this rule has vanished.
I have the utmost respect for the courage of the British. Their team spirit and organizing power are wonderful. Their literature has much that is admirable. Reading their Bible, Ifeel myselfin bliss. However, their selfishness overshadows their fine qualities. Their activities have done nothing but harm to India. These policies have ruined and emasculated the country. I am convinced that never under Moghul rule, or at any other time, were the people so thoroughly emasculated as they are today. This is no accidental result but has been deliberately brought about, and so I look upon this rule as Ravanarajya. The government we dream of, Idescribe as Ramarajya. Swaraj alone can be such Ramarajya.
How may we establish it?
Informertimes, the subjects did tapascharya when they were oppressed. They believed that it was because of their sins that they got a wicked king and so they tried to purify themselves. The first step in this was to recognize a monster as such and avoid him, to non-cooperate with him. Even non-cooperation requires courage. To cultivate it, one
 

orate Diwali?
a Gandhi
needs to give upcomforts and pleasures. To receiveeducation provided by wicked Government, to accept honours at its hands, to seeksettlementofone's disputes through its agency, to help it in framing laws, to provide it with policemen, to wear cloth produced by it, to do this while desiring that it should perishis like trying to cutoff the branchon which one is sitting. This is nothing but sin. Nor, in this way, shall we succeed in destroying the Government. How, then, should we celebrate Diwali?
1. If our children are attending Government schools, we
should withdraw them from such schools. 2. We should start other schools in their place. 3. We should settle our disputes privately through
panchas. 4. If we are lawyers, we should give up practice. 5. We should resolve, if we are voters, and persuade others, not to vote for any candidate. If anyone from our own locality stands as a candidate, we should send him a "card' requesting him to withdraw his candidature. 6. We should introduce the sacred spinning heel in our
homes. 7. We should get hand-spun yarn wovento clóthair
wear such cloth, bearing the additiosi burden före sake of the country.
All these things need money, Qfcourse. Washould, therefore, donate what we can andsellect contributions from others. If the people liste me, I w them todo nothing during the Diwàfíbutengage femselves in work for swaraj.
This, at any rate, we should not do during Diwali: Treat ourselves to pleasure,
Gamble,
Prepare all manner of sweet dishes, and
enjoy ourselves with fire-works.
The money saved by renouncing these things, we should donate for swaraj work.
This is the duty dictated by these difficult times. When we have the Government of our dream, we may enjoy some innocent pleasures. At present, however, the people are in mourning, they are widowed. At such a time, they can have no celebrations.

Page 38
Professor Kailasanatha
S. Kurukkal, a leading Sri Lankan Brahmin, attained "Sivapatham" on 7th August 2000 in Australia. His demise at the age of seventy-nine years is an irredeemable loss to the Saiva community. He hails from a revered Brahmin family, in Tirunelvely, Jaffna, noted for its scholarly approach of the Agamic ritual traditions prevalent in the Saiva Temples of South India and Sir Lanka. Having completed his early education at the Nallur Mangaiyarkkarasi Vidyasalai and at the then Parameswara College (the fore runner to the Sri Lanka University Jaffna Campus) he proceeded to Peradeniya for his University Education and came under the influence of Swami Vipulananda, a reputed scholar. His lecturer in Sanskrit was Professor Miss Betty Hymen and she had a great respect for him. Kailasanathar's father, a practising priest, was also his Guru in learning the intricacies of Saiva Agama rituals and the Sanskrit language in which he eventually adorned the Professorial chair at the Jaffna university. He was well trained from early child-hood in the intricate liturgy that has been passed down to him from his father. In addition he was privileged to learn for more than a decade at the feet of renowned men like Viakam S.Sithambara Sastri S. Srinivasa Sastri and T.K. Sitharama Sastri, al three of them were popular grammarians. He held in great reverence these learned men for willingly imparting their knowledge and experience in the Hindu Sastras to him. He was proficientin many languages viz.: Tamil, English, Latin, Sanskrit, Pali, German and French. Procuring a working knowledge of the last two languages was considered by him as essential, in sofar as they are relevant to the Hindu Temple cults.
2. Kailasanathar married in August 1940 and entered family life, officiating priests are almost always married men, while their assistants may be unmarried brahmacharis or widowers. He graduated (B.A.Hon's.) in 1947 and completed his M.A. in 1949. His research oriented studies in the Vedas, Agamas and allied texts under the guidance of Professor T.R.Moorthy earned for him the coveted title "Doctor of Philosophy" from the University of Poona, North India. Returning to Sri Lanka he assumed charge of the Sanskrit Section of the University initially in Colombo and later at Peradeniya.
TER ANTE PROF, KI
M.A.
 
 

KAlASANATHA KURUKKAl, . (Ceylon) Ph.D. (Poona)
y S. Ratnapragasam
Along with Professors A.M.Mylvaganam and S.Selvanayagam he was largely responsible for encouraging and helping the University Hindu Students' Association to establish in nineteen sixty eight (1968) the Murugan Temple popularly known as Kunruk Kumaran at the Peradeniya Campus. This helped to propagate the Saiva faith amongst university students and the Hindu Public living in the adjacent areas. It remains a living monument to their memory.
3. Prof. Kailasanatha kurukkal was the first to occupy the Chair of Hindu Civilization setup in 1975 at the Jaffna University. During this period he also headed the Ramanathan Academy of Fine Arts set up at Maruthanamadam, Inuvil, Jaffna. He thus dedicated nearly forty years of his life to the cause of Hindu Education and Culture. The famous Kanchi Kama Kodi Peedathipathy Jagathguru Sri Sankarachariya Swami blessed himpersonally in 1976. Audience with the Swami was a rare privilege and the professor was rejoiced that he had that chance in his life. He reckoned this memorable event as the crowning of all his achievements. He retired from active service in 1986. The Jaffna University Honoured him with the title "Doctor of Literature" in 1998.
4. Apart from being a respected academic in the Hindu Tamil cults, Prof. Kailasanathar also did maintain the family tradition of being a "Practising Priest" with specialized knowledge of the rituals in the temples of Siva, Devi, Ganesha, Subramaniya and Bhairavar. He officiated as the Chief Priest in many consecration ceremonies (Kumbaabishekam) in leading Hindu Tamples at Munneswaram, Chilaw (1963 and 1990) the Nallur Sivan Temple (1988) in Sri Lanka and overseas at the

Page 39
Singapore Hindu Tample (1991) and the Siva-Vishnu Tample (1995) in Melbourne, Australia. Eminent officiating Hindu chief Priests of Sri Lanka fame like Swami Visu wanatha Kurukkal (Nawaly) and Parameswara Kurukkal (Ninathivu) of his time, did respect the Professor's deep Knowledge and experience and sought his counsel for guidance, The reverence was mutual and they took to him warmly as he was not only totally informed about the subject but could put it across cogently and convincingly with a complete absence of pedantry. The learned Professor in Sanskrit was strong in his con Wictions and tremen dously eloquent in giving expression to his thoughts. He was never opinionated. He was invited to read a paper at the World Hindu Congress that was held in Madras, South India in 1976. The 1977 session was chaired by Dr. T.M.Mahadevan and the Professor presided over the seminars held there.
5. He enjoyed a fulfilling and dynamic role in preserving the Hindu Temples. His participation, with great devotion and meticulous observance of the ritualistic practices in conducting the "Sri Chankara Pooja" and the "Chaldi Honia" during the Vasantha Navarathri period at Munneswaram drew large crowds to the temple at Chilaw to witness these festivals. The masterly Ilanner in which he invokes the presence of the Deity through mantrams, mudras, and esoteric ritual during the pooja evoked in
línitiessandsor aisgth;
add to our knowledg
6. While holidaying in London he lost his beloved wife in October 1999 and he was devastated, as she was an ideal housewife and companion to him; an anti-climax in his life began, constraining him to leave his country of birth and move to Australia to join his children. He had many publications to his credit - Two books in Sanskrit for beginners "Ilagu potham" Part I and II., and in Tamil "History of Sanskrit Literature", etc.; His book "Rituals in Hindu Tamples", which has seen two editions first in 1963
通표 C
 
 

and later in 1992, is the most significant. He admits in its Preface that it is only anabridged version, in Tamil, of his comprehensive volume, in English with ten long chaptersthe resultant handiwork of his extensive research,
7. A conservative and enlightened thinker, Prof. Kailasanatha Kurukkal was candid in disclosing to the reader whatever he learnt in his reserch and was always frank about his sources, a hall-mark of a good scholar, He had also been faithful to the rigorous demands of in tellectual discipline. He asserts that nothing undocumented has been recorded. To him, education was a life long process. In him there was a harmonious combination of intellect, the heart and the soul constituting the true economics of education. In a land where prophets go largely un honured and fakes and mediocrities are replacing men of worth we must remember men of talent and commitment like Prof. Kailasanatha Kurukkal. On the eve of his departure to Australia in Januaray 1994 he held the eminent position as the Director of the Sri Muthu Vinayagar Vedagamic Research Institute, the Gurukulam, and Wethagama Pathasala at 233, Sea street, Colombo 11. The onus of replacing himin these institutions with a scholar and a practising priest of his calibre appears a Herculean task with mass emigration of Waluable talent out of the country in the perennial war situation in Sri Lanka for nearly two decades now. The loss of this remarkable man, with his encyclopedic knowledge of the Hindu Sastras, who did so much so deftly to preserve the Hindu Temple Tradition and religious practices in the last quarter of the twentieth century will be sorely felt.
YANG ORGANISMA
Hinduism is a living organism liable to growth and decay subject to the laws of Nature. One and indivisible at the root, it has grown into a vast
ܥ ܕ
tree with innumerable branches. The changes in the seasons affect it. It has its autumn and its summer, its
winter and spiring. It is, and it is not based on scriptures. It does not derive its authority from one book. The Gita is universally accepted, but even then
it only shows the way.
Mahahnagandhi
--
விக்கிரம் வருடம் ஐப்பசி மார்சுழி)

Page 40
2ND INTERNATION CONFERENO
CONFERENCE DATES ANNOUNC
Following recent national elections, the Government of Mauritius has expressed its readiness to host the Second International Conference Seminar on Skanda-Murukan in Mauritius during the period of 2 to 5 May, 2001.
2nd CONFERENCE THEME The theme of the 2nd Conference is: "Murukan Bhakti across the Indian Ocean"
LOCAL AND INTERNATIONAL ORGANISING COMMITTEES The Institute of Asian Studies (Chennai), which organised and hosted the First International Conference on SkandaMurukan in December 1998, will once again coordinate international planning efforts. The Mahatma Gandhi Institute of Moka, Mauritius, will organise local planning efforts in Mauritius to organise the Conference and host the international delegates with accommodation, meals and local transport.
Enquiries about arrangements in Mauritius should be directed to the local organising secretary, Ms. Maga Ramasamy (E-mail: mramasamy Gairmauritius.intnet.mu).Ms Ramasamy's email address can also found on the Murukan Conference home page:
http://www.murugan.org/events/conf2001.htm
IN ABSENTILA PRESENTATIONS
Because of the considerable distance and expense involved for many potential delegates to attend a conference in Mauritius, it has been decided that delegates whose research papers have been accepted
for presentation may also have their papers read at the Conference in absentia. Kindly contact us if you wish to submita research paper without attending the Conference.
LANGUAGE OF PRESENTATION
It has also been decided to accept research papers and presentations in French as well as in English and Tamil languages, as French is the official language of the host
 
 
 
 
 

SEMNAR ON SKAND-MRKAN
D: 2-5 MAY 2001 N MARTS
nation and many qualified scholars are proficient in French.
FULL DETAILS AVAILABLE UPON REQUEST The International Planning Committee based at the Institute of Asian Studies has printed official brochureannouncements for the Conference, including registration forms and full details about the 2nd Murukan Conference. Interested individuals may also contact the Murukan Conference organisers directly at:
Murukan Conference Organising Committee Institute of Asian Studies Asia Gardens Chemmancherry POSholinganallur Chennai - 600 119 India.
E-mail: ias Oxlweb.com Telefax: (091) 44 496-0959 or (091) 44 496-0085
MURUKAN CONFERENCE WEBSITE: For more information and online registration form, go to the official website of the Murukan Conference at:
http://www.murugan.org/events/conf2001.htm
ONLINE CONFERENCE REGISTRATION Conference registration (observers and participants) may be done online at:
http://www.murugan.org/events/mu conf reg.htm
PUBLICATION OF RESEARCH ARTICLES FROM FIRST MURUKAN CONFERENCE Due to the surprisingly large number of papers submitted at the First International Conference on Skanda-Murukan, the editorial process of selecting outstanding papers and finalising them for eventual publication is taking longer than was first planned.
The organisers however have pledged that that Outstanding papers presented at the First Conference will be edited and published - before the Second Conference in Mauritius. Already

Page 41
twenty research papers have been published on the www.Murugan.org website in digital
format, including several with accompanying photo and graphic documentation. The index of articles
is found at:
http://www.murugan.org/research/98papers.htm
CONFERENCE EDITOR ON SABBATICAL IN USA: Murukan Conference secretary and volume editor Patrick Harrigan is currently in the USA on sabbatical, where he is continuing to edit research papers and handle Conference correspondence (and publish this newsletter). He may be contacted by e-mail at: editor GD murugan.org (pronounced "editor at
duism is like the Ganges, pure unsullied :: e the Ganges it is beneficent in its I province, but the inner substance is retained everyw
but religion will remain unaltered.
கந்தனது புராணம் கந்தபுராணம் எனப்படும். கச்சியப்பத் கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராணம் என்னும் அருமை வாய்ந்த அடியெடுத்துக்கொடுக்க, முருகப்பெருமானது பாதார விந்தங்களை நாளும் தாம் இயற்றிய பாடல்களை எழுதி முடித்துக் கயிறு சாத்தி ஏ இல்லத்திற்குத் திரும்புவது வழக்கம். மறுநாட் காலை ஆலயத்திற் போது, சில இடங்களிலே திருத்தம் செய்யப் பெற்றிருப்பதை பார்த்து நெஞ்சாரத் துதித்துக் கந்த புராணத்தைப் பாடி நிறைவு செய்தார் எ கந்தபுராணம் சைவசித்தாந்த சாத்திரங்களுக்குத் தலை உண்மைக் கோட்பாடுகள் விளக்குவன. எனினும் இலகுவில் 6 இறைவனுக்கும், உலகத்திற்கும் இடையிலான தொடர்பையும், திரு எடுத்துக் கூறும் புராணம் கந்த புராணமாகும்.
இறைவன் பூவுலகில் மானிட தேகம் தாங்கிப் பிறவி எடுத் முருகப் பெருமானது தோற்றமாகும் என்பது கந்தபுராணம் எமக்குத்
அருவமும் உருவமாகி அனாதியாய் பலவா யொன்றாய்ப் பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய
 
 
 
 
 
 
 

Murugan.org"). Please write to him if you have any questions or suggestions regarding the Murukan Conference.
FUTURE MURUKAN CONFERENCE NEWSLETTERS IN 2000-2001
The next Murukan Conference Newsletter will appearin November 2000. If you know someone who might be interested, kindly forward this newsletter to them by email.
MURUKAN CONFERENCE WEBSITE . For full details and e-mail addresses (which may not always display properly on this newsletter) go to the official Murukan Conference website at:
http://www.murugan.org/events/conf2001.htm
tits source, but takingin its course the impurities
total effect. It takes a provincial form in every here. Custom is not religion. Custom may change,
தியில் எழுந்தருளியிருக்கும் விகட சக்கர கணபதி துணை கொண்டு புராணத்தைப் பாடினார். முருகப் பொருமானே திகடசக்கர என இதயத்தில் இருத்திப்பாடப்பெற்ற நூல் கந்தபுராணமாகும். ஒவ்வொரு டுகளைச் சந்நிதியில் வைத்துவிட்டு, கச்சியப்ப சிவாச்சாரியார் தமது கு சென்று பூசை முடித்து, ஏடுகளை வழிபட்டு எடுத்துப் பார்க்கும் துக் கச்சியப்ப சிவாசாரியார் பரவசம் அடைந்து முருகப் பெருமானை ன்ற வரலாறு மெய்சிலிர்க்க வைப்பதாகும்.
சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இலக்கியமாகும். சாத்திரங்கள் விளங்கிக் கொள்ள முடியாதனவாயுமிருப்பன. மனிதர்களுக்கும், வருள் ஆன்மாக்களிடத்திலே பதியும் நிலையையும் மிகத் தெளிவாக
த மனிதர்களுக்கு அருள் பொழிவதற்காக எடுத்தருளிய அவதாரமே தெரிவிக்கும் அரிய செய்தியாகும்.

Page 42
இந்துநாகரிக பா
அகிலஇலங்கை இந்து மாமன்றக் கல்விக்குழு கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலையில் இவ்வருடம் ஜூலை 15ம் 16ம் திகதிகளில் கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக நடத்திய இந்துநாகரிக பாடப்பயிலரங்கில் பங்குபற்றிய மாணவமாணவியர்சிலரின் கருத்தக்கள்தொகுத்து வழங்கப்பட்டுள்ளத. அவர்களின் உள்ளத்தில் உதித்த கருத்துக்கள் மாமன்றத்தின் கல்விப்பணியை உற்சாகத்துடன் தொடர உந்து சக்தியாக உள்ளது.
அகில இலங்கை இந்து மாமன்றக் கல்விக்குழுவால் எமக்கு இலவசமாக நடத்தப்பட்ட இந்த இந்து நாகரிக பாடப்பயிலரங்கு பரீட்சையின் வெற்றிப்படியில் எம்மை அடியெடுத்து வைக்க உதவியுள்ளது. இரண்டு நாட்கள் மட்டுமே இல் பயிலரங்கு நடத்தப்பட்டாலும் விரிவான விளக்கங்களை நாம்பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. இது எமக்குப் பூரண பயனுள்ளதயமைந்தது. செல்வன். ஆறுமுகம் சர்மிளகுமார் க/வத்தேகம பாரதி மகா வித்தியாலயம்
இப்பயிலரங்கு எமக்கு உச்ச பயனைத் தந்தது. பரீட்சை நெருங்கும் காலத்தில் நடத்தப்பட்டதால் பரீட்சையைச் சிறந்த முறையில் அணுக வழிவகுத்துள்ளது என்றே கூற வேண்டும். பரீட்சை மண்டபத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும், எவ்வாறு விடைகளை எழுத வேண்டும் என்பன போன்ற பயனுள்ள அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டோம்
செல்வி. செல்லையா விமலதர்சினி க/திகன இராஜவெல தேசிய கல்லூரி
இப்பயிலரங்கு எமக்குப் பூரண திருப்தியைத் தந்தது. நல்ல பயனை அடைந்துகொண்டார் எதிர்வரும் காலங்களில் கூடிய நாட்கள்.இவ்வாறான இந்து நாகரிகபாடப்பயிலரங்குகளை நடத்த அகில இலங்கை இந்து மாமன்றம் முன்வர வேண்டும். மாணவர்களுக்கு அதன் மூலம் கூடிய பயன் கிடைக்கும்.
செல்வி. சமந்தா கணேசன் மோயிறே கல்லூரி கண்டி
நாம் கற்காத பல பகுதிகள் சிறப்பாக விளங்கப்படுத்திக் கற்பிக்கப்பட்டது. வினாக்கள் வினவப்பட்டு அவற்றிற்கு எவ்வாறு விடையளிக்க வேண்டும் என்று விளக்கப்படுத்தப்பட்டது மிகவும்
அதிபர், ஆசி கண்டி ராஜவெல மத்திய கல்லூரி அதிபர் திரு. கே. வேல் திரு. எஸ். தேவமனோகரன் அவர்களும் பின்வருமாறு தெரிவித்து அகில இலங்கை இந்து மாமன்றத்தால் 15.07.2000, 16.07. நடத்தப்பட்ட கருத்தரங்கில் எமது பாடசாலைப் பிள்ளைகளும் ப7 கருத்தரங்கில் பல சிறந்த ஆசிரியர்கள் விரிவுரைகள் ஆற் சான்றிதழ் என்பன கொடுக்கப்பட்டன. மாணவர்கள் மிகவும் தி பகுதியில் செய்தமைக்காக அகில இலங்கை இந்து மாமன்றத்தி கல்விக்குழுச் செயலாளருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கின்ே நேரடியாக வருகை தந்து சகல ஏற்பாடுகளும் செய் கல்விக்குழுச் செயலாளர் த. மனோகரன் அவர்களுக்கு விசேடமா
 

Iடப் பயிலரங்கு
சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்தும் இவ்வாறான பயிலரங்குகள் நடத்தப்பட்டு மாணவர்கள் பயனடைய அகில இலங்கை இந்து மாமன்றம் உதவ வேண்டும்.
செல்வி. பத்மபிரியா ரெங்கையா க/புசல்லாவ சரஸ்வதிமகா வித்தியாலயம்
மத்திய மாகாணத்தில் கண்டி மாநகரில் இந்து நாகரிகப்பாடப் பயிலரங்கு முதன்முறையாக நடைபெறுகின்றது. வினாக்களுக்குச் சிறந்த முறையில் விடை எழுத இல் பயிலரங்கு எமக்கு உதவியுள்ளது.பாடசாலையில் விடுபட்ட பகுதிகளையும் நாம் இந்த இரண்டு நாள் பயிலரங்கில் கற்றுக் கொண்டோம். எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும்.
செல்வன். வீரன் மங்களேஸ்வரன் க/தெல்தோட்டை மலைமகள் மகா வித்தியாலயம்
எமது பாடசாலையில் இந்து நாகரிகம் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. முன்பு இருந்த ஆசிரியை இடமாற்றம் பெற்றுச் சென்றதால் இப்பாடத்தைக் கற்பதில் நாம் பெரும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தோம். இரண்டு நாட்கள் மட்டும் நடைபெற்றாலும் இப்பயிலரங்கின் மூலம் நாம் எமது பாடத்திட்டத்தின் படி சிறந்த முறையில் கற்றுக்கொண்டோம். ஆசிரியர் பாடசாலையில் இல்லாத குறையை இல் பயிலரங்கு நீக்கி விட்டதால் பெரும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அடைகின்றோம். செல்வி. குருசாமி ஞானம் க/கலஹா இராமகிருஷ்ண கல்லூரி
நிறைவுசெய்யமுடியாதிருந்தபகுதிகளைப்பயிலரங்குமூலம் நிறைவு செய்து கொண்டோம். இப் பயிலரங்கு எம்மைப் பரீட்சையில் திறமைச்சித்திபெறவைக்கும்என்றுஉறுதியாக நம்புகின்றோம்.வசதி குறைந்த இந்துமாணவர்களுக்கு இவ்வாறான கல்விப்பயிலரங்குகள் நடத்துவதன் மூலம் அகில இலங்கை இந்து மாமன்றம் நல்ல பணியாற்றுகிறது.இந்துசமயமாணவர்களுக்குவேறுபாடங்களுக்கும் இவ்வாறான பயிலரங்குகள் நடத்தியுதவினால் நன்மை கிட்டும்
செல்வி. கார்த்திகா யோகராஜா மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி (தொகுப்பு:திருமதி. இந்துமதி சுப்பையா)
ரியர் கருத்து சிவானந்தன் அவர்களும், கல்லூரியின் இந்து நாகரிக பாட ஆசிரியர் ள்ளார்கள். 2000 ஆகிய இருநாட்களும் கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலையில் ங்கு பற்றினார்கள். றினார்கள். இலவச புத்தகங்கள், காகிதாதிகள், மதிய உணவு, தேநீர் 3ருப்தியடைந்தார்கள். இவ்வாறான செயலை மனமுவந்து எமது கிற்கும், தலைவர், பொதுச் செயலாளர், கல்விக் குழுத் தலைவர், Οσιρ. து, இருநாட்களும் தங்கி தனது உயர்ந்த சேவையை வழங்கிய க நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

Page 43
&&&&&&&&&&&&&&&&&&&
{}
的ー
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
பெண்களைத் தொடரும் பிரமராக்கதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கைகால் முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பரு அரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துகிக்க உன்திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
&&&&&&&&&&&&&盛&g&g
 
 

說露劉盈盈盈盈盈盈盈盈盈盈盈盈盈盈盈盈盈
செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவ்ஸ் குறமகள் பெற்றவ ளமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியர் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பி பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடனாளும் ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒரு நாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளேர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித் குருபரன் பழனிக் குன்றினி லிருதி சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரசே மயில் நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவ ஒம் சரணம் சரணம் சண்முகா சரணம்.
agg g g g g g g g g g g g g g g g g
፩ኻ

Page 44
இந்தச்சுடரில்.
11,
12.
3.
15.
15.
18.
21,
24.
E.
27,
28.
31.
33.
35.
35.
38.
பஞ்ச புரானங்கள்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்
கந்தபுராணத்தின் சாரம்
கந்த சஷ்டி விரதம்
மங்கா விளக்கேற்றுதல்
திருத்திவிடு நாட்டை
பண்பாட்டுச் சுடர்கள்
பெருமாளே துயிலெழுந்து வந்திடுவாய்
ஏன் நந்திக்கொடி?
விழாக்களும் விரதங்களும் காணபத்திய நெறியின் தோற்றமும் வளர்ச்சியும்
பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள்
வேண்டுகின்ற விதி இதயம் பேசுகிறது.
சைவசமய வளர்ச்சியில் சோழப்பேரரசர் ஆற்றிய பணிகள்
ஞானவேள்வி
வடநாட்டில் நிலவிய பக்திநெறி
சமயத்துறையில் கட்டிடக் கலை
How LC Celebrate Diwali
The Late Prof. K. Kaila sama Lhakul Tukkal
2nd International Conference Selinar on Skanda
Mu Tugan
40. கருத்துரைகள் - இந்து நாகரிக பாடப் பயிலரங்கு
(கந்த ஜெஸ்டி சிறப்பிதழ்)
. . . . அடுத்த சுடர்
■_)
 
 

6) ITT55 கரிமுகன் சுழல்கள் வாழ்க கந்தவேள் சுருளின் வாழ்க அரிபயன் கானொனாத அரனடி நீடு வாழ்க் விரிசடைப் பெருமானார்தம் அடிபவர் எல்லாம் வாழ்க பரிதிசூழ் பாடும் விண்ணும் பொலிவுடன் நீடு வாழ்க
凰蚤豆sf அதில இலங்கை இந்து மாமன்றத்தின் விக்கிரம வருடம் ஐப்பசி-மார்கழி இதர் ஐப்பசித் திங்கள் 10ம் நாள் 26, 10, 2000.
ஆசிரிய குழு :
புலவர் அ. திருநாவுக்கரசு திரு.கந்தையா நீலகண்டன் திரு.க.இராஜபுவனஸ்வரன் திரு. எம். பவளகாந்தன் திரு.த. மனோகரன்
ஒரு பிரதியின் விலை r; . 2. வருடாந்தச் சந்தா ry5 4. //ʻ! . வெளிநாட்டு வருடாந்தச் சந்தா u li VC). ))
அகில இலங்கை இந்து மாமன்றம் "' A, C, H. C கட்டிடம்
95, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவக்கை கொழும்பு - ? இலங்கை, தொலைபேசி எண் : 434990, தொலைநகல் எண் 3
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HINDU GOL Alipasi-Markazhi of ALL CEYLONHINDU CONGRESS 2 Oct 200
EDITORIAL BOARD :
L a L SL C LL LLL LL M T. K: II didh Net luk: In d: In MT. K. Raja Ivan ees Warn MT.M., Polyll ki: Il till: Il Mr. D. M1 H I U IH IH I
PTICE RS. 20.00 per copy Annual Supscription RS. 80.O.) Foreign Supscription U.S. $ 10.00 (Including Postage)
ALL CEYLON HINDU CONGRESS, A. C. H. C. Bldg. 915, Sir Chittampalam A. Gardiner Mawatha. Colombo - 2, Sri La Inka. Telephone No.: 434990, Fax No.: 34,472) Next issue: Tai – Pakuni vievs expressed in the-articlesin IIindu Oli are Those of the contributors,
LLaaLS lL LL L LLLL L a L S SLLSS KS L000