கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2007.01-03

Page 1
ன்றம்
而 No
 

Quartery of Ceylon Hindu congress

Page 2
ஆன்மீக எழு (16.12.20(
6)
விவேகானந்த சபைத் தலைவர் திரு.
சிவபூநீ ம. பாலகைலாசநாதசர்மா சிறப்
பேராசிரியர் சி. பத்மநாதன் சிறப்புரை
பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களு அமரர் செல்வம் கல்யாண சுந்தரம் அ
வாகீசகலாநிதி க. நாகேஸ்வரன் சிறப்
தமிழ்மணி அகளங்கன் அவர்கள் சிற
7, 8) கருத்தரங்கிற்கு வருகை தந்தோர்.
 
 
 
 

ச்சிக் கருத்தரங்கு 26, 17.12.2006)
ஏ. ஆர். சுரேந்திரன் உரையாற்றுகிறார்.
புரையாற்றுகிறார்.
பாற்றுகிறார்.
க்கு திரு. தே. ம. சுவாமிநாதன் அவர்கள் மக்கட்டளையின் விருதை வழங்குகிறார்.
புரையாற்றுகிறார்.
ப்புரையாற்றுகிறார்.

Page 3
ਹਣ பஞ்சபுராணங்கள்
-திருச்சிற்றம்பலம்
தேவாரம் உருவமு முயிருமாகி யோதிய வுலகுக்கெல்லாம் பெருவினை பிறப்புவீடாய் நின்றவெம் பெருமான்மிக்க அருவிபொன் சொரியுமண்ணா மலையுளயண்டர்கோவே மருவிநின் பாதமல்லான் மற்றொரு மாடிலேனே.
திருவாசகம் கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்
கிளையிலான் கேளாதே யெல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்
கேளாதனவெல்லாம் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே.
திருவிசைப்பா அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டோ
அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின் சொற்பதத் துள்வைத் துள்ளம் அள்ளூறும்
தொண்டருக் கெண்டிசைக் கனகம் பற்பதக் குவையும் பைம் பொன்மா ஸரிகையும்
பவளவா யவர்பணை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
திருப்பல்லாண்டு சீருந் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும்பெறாத அறிவுபெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில்
ஊரும் உலகுங் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் மார்பாரப் பொழி கண்ணிர் மழைவாருந்
திருவடியும் மதுரவாக்கில் சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின்
மாலைகளும் செம்பொற்றாளே சார்வான திருமணமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார்வாழ திருவீதிப் பணி செய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்.
--திருச்சிற்றப்பலம்

தெய்வத்திருமகனின் அடிச்சுவட்டின்.
யாழ் மண்ணின் புனிதத்தை மேம்படுத்தும் புண்ணிய வழியில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமை தெய்வத்திருமகள் : தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களைச் சாரும்.
சொற்பொழிவுப்பணிமூலம்சமயபிரசாரத்தொண்டாகத் தனது சேவை வரலாற்றை ஆரம்பித்த சிவத்தமிழ்ச்செல்வி சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி இந்நாட்டில் மட்டுமல்ல : பாரெல்லாம் வாழும் இந்து மக்கள் போற்றிப் பாராட்டும் வகையில் ஆலயப் பணியுடன் மக்கள் சேவையை ஆற்றி ! வருகிறார். அமெரிக்காஹாவாய் பரீசுப்பிரமணிய சுவாமி : ஆச்சிரமம் 2005ம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி : விருதை அம்மையாருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. : கெளரவ கலாநிதிப்பட்டம் வழங்கி தெய்வத்திருமகளைப் : போற்றிநின்றது யாழ் பல்கலைக்கழகம்,
அகில இலங்கை இந்து மாமன்றம் 2005 ஜூலை : மாதத்தில் யாழ் மண்ணில் பொன்விழாவையொட்டிஇந்து மாநாடு நடத்தியபோது அன்னைக்கு"தெய்வத்திருமகள்” ! என்ற பட்டம் வழங்கி மாமன்றம் பெருமை தேடிக்
கொண்டது. அதுமட்டுமல்லாமல் மாமன்றத்தின் துணைத் ; தலைவியாகப் பல ஆண்டுகள் தெய்வத்திருமகள் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரை தெரிவு செய்து கெளரவம்
தேடிக்கொண்டதுடன், மாமன்ற அறங்காவலர் சபை அங்கத்தவராக அவரை உயர்த்திப் பாராட்டி நிற்கின்றது ! மாமன்றம்.
தெய்வப்பணிகளின் மகுடமாகதுர்க்காபுரத்தில் மகளிர் இல்லம் அமைத்து இந்துப் பண்பாட்டினைப் பேணி நமது : நங்கையர் பலர் வாழ வழிகாட்டி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சேவையாற்றும் எங்கள் சேவைகளின் : தாயை வணங்கி, அந்த மகளிர் இல்லத்தின் இருபத்தைந் தாவது ஆண்டு நிறைவு சிறப்பிதழாக “இந்து ஒளி”யை ஏற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
தெய்வத்திருமகளின்வழியில் இன்னும்பலஅன்னையர் : நமது சமூகத்தில் தோன்ற வேண்டும்; இறைபணியில் நின்று எமது சமூகம் மேன்மையுற உழைக்கவேண்டும். அதற்கு பரீ சிவகாமி அம்பாள் சமேத பரீ நடராஜப் : பெருமானின் திருப்பாதங்களை வணங்கி நிற்கின்றோம்.

Page 4
శ్రీపత్రిత్రత్తఢిల్హత్రి డ, ఢ డైమ్స్టోడ
6fissé- asi-Lifléo........
பஞ்சபுராணங்கள் O1
துர்க்காபுரம் மகளிர் இல்லம்
வாழ்த்துச் செய்திகள் O3.
ஒளி ஏற்றிய துர்க்காபுரம் மகளிர் இல்லம் 06
சிவத்தமிழ்ச் செல்வி எனும் சிகரத்திற்கு O7
* அறத்தில் குளித்தல் O8
மகளிர் இல்லம் நிகழ்வின் நினைவுகள் O9
மருத்துநீரின் மருத்துவப் பண்பு 10
2 அன்பே சிவம் 11
உள்ளத்தை நெறிப்படுத்தும்
மகா சிவராத்திரி 13
சைவ பாரம்பரியத்தின்
மூலவிசை நந்திக்கொடி 15
நந்திக் கொடிதான் சைவக்கொடி 16
திருவண்ணாமலை - கிரிவலமும்
உடல் நலமும் 17
தீதும் நன்றும் பிறர்தர வாரா 18
சங்கரர் வேதாந்தத்தில் பிரமம் 2Ο
சிறுவர் ஒளி 21
மாணவர் ஒளி 22
லிங்கமூர்த்தியின் பக்திச் சிறப்பு 3
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் 32
Who was Swami Vivekananda 37
சித்திரை - ஆனி

eAeeAeeeeeeeeeeSeeee0Jeeee0ee0eeseeee0seLeLLeeMeeeeeA కొతొళ్ళి
வாழ்த் து வானொடு வையம் வாழ்க வளமெலாம் பொலிந்து மேலும் தானமுந்தவமு மோங்கித்தரணியிலுள்ளோர் வாழ்க’ ஆனைந்து மாடுவான்த்ன்னருளினாலென்று மெங்கள் s தேனினுமினிய தெய்வத் தமிழொடு சைவம் வாழ்க. s
O இந்து ஒளி அகில இலங்கை இந்து மாமன்றத்தின் விய வருடம் தை-பங்குனி இதழ்
மாசித்திங்கள் 26" நாள்
1.32O7 ஆசிரியர் குழு :
பேராசிரியர் அ. சண்முகதாஸ் திரு. கந்தையா நீலகண்டன் திரு. க. இராஜபுவனிஸ்வரன் திரு. த. மனோகரன் s திரு. கு. பார்த்தீபன் ஒரு பிரதியின் விலை EHUII 2o.oΟ வருடாந்தச் சந்தா (உள்நாடு) ரூபா 80.00 வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம் |
A.C. H. C. Giolly Lú 91/5,சேர் சிற்றம்பலம் ஏ.கார்டினர் மர்வத்தை,கொழும்பு-2,
இணையத்தளம் : http:/www.hinducongress.org மின்னஞ்சல் : adminOhinducongress.org தொலைபேசி எண்: 2434990, தொலைநகல் : 2344720 ( இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் Y தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்
.ஆக்கியோன்களுடையதே - ܠ
s HNDU OL Thai - Pankuni ALL CEY LON HIN | DU (SONGRESS 10th March 2007 Editorial Board
Prof. A. Shanmugadas Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. D. Manoharan Mr. G. Partheepan
Price: RS. 20.00 per copy i Annual Subscription (inland) Rs. 80.00 Annual Subscription (Foreign) U. S. $ 10.00 (including Postage)
ALL CEYLON HINDU CONGRESS A.C.H.C. Bldg. 9115, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo , 2 Sri Lanka. Website : http://www.hinducongress, org E-Mail: adminGhinducongress.org Telephone No. 2434990, Fax No. 2344720 Next issue :
Sithirai . Aani i Views expressed in the articles in Hindu Oli are those of the contributors.
恕

Page 5
கடந்த இருபத்தைந்து வருடகால சேவையின் துர்க்காபுரம் மகளிர் இல்லத்திற்கு அகில இலங்ை தெரிவித்துக் கொள்ளுகின்றது.
மாமன்றத்தின் காலாண்டிதழான “இந்து ஒளி'ய இல்லத்தின் வெள்ளிவிழா சிறப்பிதழாக மலர்ந்திருக் 1982ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதியன்று ஒ மகளிர் இல்லம், ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதரவ உடை, கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு உதவி வருகின்றது. இப்பொழுது இந்த இல்லத்தில் 65 பெண் இந்த மகளிர் இல்லப் பிள்ளைகள் சைவ ஒழுக் என்ற நன்னோக்குடன் இவர்கள் அயலிலுள்ள பாட கொடுக்கப்பட்டுள்ளன. மல்லாகம் கனிஷ்ட வி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றி இருபத்தைந்து வருட காலத்தில் இந்த மகளிர் இ பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்வி கற்று பட்டதா பெற்றிருப்பதும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க விடயமா இவர்கள் பாடசாலைகளில் கற்கும் காலப்பகுதி ஈடுபட்டு பாடசாலைக்கும் மகளிர் இல்லத்திற்கும் பெரு மாவட்ட மட்டங்களில் நடைபெற்ற இயல், இசைத் தங்கப்பதக்கங்களும் பனப்பரிசில்களும் பெற்றுள்ள இல்லப் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் மற்றும் புலமைப்பரிசில் வகுப்புகளில் கல்வி பயிலும் கல்விப் பாடபோதனைகள் வழங்கப்பட்டும் வருகிறது தெல்லிப்பழை முநீ துர்க்காதேவி தேவஸ்தான பணிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் அறப்ப மூலம் ஆலய அறப்பணிகளை பல்வேறு துறைகளே இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய சிவத்தமிழ்ச்செல்வி தெய்வத் திருமகள் கலாநிதி காலமாகவே தேவஸ்தானத்தின் நிர்வாகப் பணிக அவர்களது “கடவுளின் பெயராலே கருணைமிகு ஜீ கொள்கையும், பெரு விருப்பும் இன்று வெற்றிகரமா6 அவரது சமய, சமூகநல அறப்பணிகள் அவரை ஏனை யோரும் பின்பற்றக்கூடிய விதத்தில் முன்னு சிறப்பாகக் குறிப் பிடலாம். மாமன்றம் 2005 ஜூலி மாநாட்டின்போது அன்னையின் அரும்பெரும் பணிை என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்திருந்தது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முகாமைப் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் மாம அங்கத்தவராகவிருந்து மாமன்ற வளர்ச்சிக்கு அரும் துர்க்காபுரம் மகளிர் இல்லம் வெள்ளிவிழா காணு அவர்களது அறப்பணிகள் மேலும் சிறப்பாகத் தொட வாழ்த்தி, அன்னையைப் பாராட்டிப் போற்றுகின்றது.
இந்து ஒளி s
 

ா ஊடாக வெள்ளிவிழா காணும் தெல்லிப்பழை க இந்து மாமன்றம் தனது நல்வாழ்த்துக்களைத்
பின் இந்த தை- பங்குனி இதழ், துர்க்காபுரம் மகளிர் கிறது. ன்பது பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட துர்க்காபுரம் ற்ற பெண் பிள்ளைகளை அரவணைத்து, உணவு, விகளின் ஊடாக சகல பராமரிப்புகளையும் வழங்கி ண் பிள்ளைகள் தங்கியிருப்பதாக அறியமுடிகிறது. $கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் சாலைகளில் கல்வி கற்பதற்கான வசதிகள் செய்து த்தியாலயம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, ல் இவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். கடந்த }ல்லத்தில் இணைந்திருந்த பிள்ளைகளுள் பலர் ரிகளாக வெளியேறியிருப்பதுடன், ஆசிரிய நியமனம் கும்.
களில் சமயத் தொண்டிலும், சமூகத் தொண்டிலும் நமை ஈட்டிக் கொடுத்திருப்பது மட்டுமன்றி, மாகாண, துறைப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு Sorr.
) நோக்குடன் க. பொ. த சாதாரண தரம், உயர்தரம் பிள்ளைகளுக்கு பிரத்தியேகமாக ஆசிரியர்கள் மூலம்
.
ம் தமது சமயப் பணிகளுடன் ஆற்றிவரும் சமூகப் ணி துர்க்காபுரம் மகளிர் இல்லப் பணியாகும். இதன் டு இணைத்து ஆற்றுகின்ற தனித்துவமான சிறப்பை பெரும் சேவைகளுக்கு மூலகாரணமாகவிருப்பவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களாகும். நீண்ட ளைப் பொறுப்பேற்று நடத்திவரும் அன்னையார் வகாருண்ணியப் பணிகள் ஆற்றவேண்டும்” என்ற ெைதாரு நிலையில் வளர்ச்சிபெற்று உயர்ந்துள்ளது. தெய்வீக நிலையில் உயர்த்தி வைத்திருப்பதுடன், தாரண தொண்டராகவும் திகழ்கிறார் என்பதையும் லை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்திய இந்து யப் போற்றி மதிக்கும் வகையில் ‘தெய்வத்திருமகள்”
பேரவையின் கெளரவ உறுப்பினர்களுள் ஒருவரான ன்றத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையிலும் பணியாற்றி வருவதையும் சிறப்பாகச் சொல்லலாம். ணும் இந்த மகிழ்ச்சிகரமான வேளையில், அன்னை வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம்
விய வருடம் தை - பங்குணி)

Page 6
翰
எங்கள் தே இல்லத்தின் { öITOOTGöoTıp B மிகவும் மகிழ் nasofflir &6. எடுக்கும் முய வல்ல துர்க் நாட்டிலும் ே சிறப்புற்றுவி இல்லத்தில் இன்று வை இல்லப்பிள்ளைகள் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். எ வல்லவர்களாக திகழ்ந்து எமக்கு பெருமை சேர்த்துள்ள பொலிவு பெற்று என்றும் சிறக்க நல்லாசி கூறி வாழ்த்தி ஆற்றும் அறப் பணிகளைப் போற்றுகின்றேன்.
静
துர்க்காபுரம் மகளிர் இ மாமன்றப் பொதுச்செயலாளர் திரு வாழ்த்து
மக்கள் சேவையே மகேசன் பூசை. மக்களுக்குச் 6 நமது நாட்டில் ஆலயத்துடன் இணைந்த வகையிலான சமு ஆலயமாக தெல்லிப்பழை முறிநீ துர்க்காதேவி தேவஸ்தான பல்வேறு துறைகளோடு இணைத்து ஆற்றுகின்ற தனித் அந்த வகையில் ஆலயத்தின் பெரும் பணிகளுள் ஒரு மகு சொல்லலாம். ஆதரவற்ற பெண் பிள்ளைகளுக்காக 1982 சிறப்பான பணியில் இருபத்தைந்து வருடங்களை நிறைே என்பது இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிதரு சமுதாயம் போற்றி மதிக்கும் வகையில் அவர்களை வா!
தெல்லிப்பழை முந் துர்க்காதேவி ஆலயத்தின் நிர்வாக கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது நீண்டகால இல்லத்தையும் குறிப்பிட வேண்டும். இறைவனின் ஆற்றவேண்டும் என்ற அன்னையின் உயர்ந்த கொள் வளர்ந்து வந்திருப்பதை சிறப்பாகச் சொல்லலாம்.
அண்மையில் அகவை எண்பத்திரண்டை நிறை அப்பாக்குட்டி அவர்கள் அகில இலங்கை இந்து மாப வகையிலும், மாமன்றத்துடன் அவர் வைத்திருக்கும் நீ அவர்களது தீவிரமான சமய, சமூகநலப் பணிகளுக்காக
வெள்ளிவிழா காணும் துர்க்காபுரம் மகளிர் இல்லத் மாமன்றத்தின் சார்பில் இதயபூர்வமாக வாழ்த்துகிறோம்.
(இந்து ஒளி
 
 

, .
ய்வத்திருமகள், சிவத்தமிழ்ச்செல்வி திதங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது
ஆசிச் செய்தி
வஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் துர்க்காபுரம் மகளிர் வெள்ளிவிழா குறித்து அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஜான “இந்து ஒளி’ சிறப்பிதழாக வெளி வருவதை அறிந்து ச்சியடைகிறேன். இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுபெறும் லத்தை மேன்மைப்படுத்துவதற்காக இந்து மாமன்றம் ற்சிகளை அறிந்து நன்றியோடு வாழ்த்துகிறேன். எல்லாம் கை அம்பாளின் திருவருளாலும், உள்நாட்டிலும் வெளி வாழும் அன்பர்களின் பேருதவியாலும் இவ் அறப்பணி ளங்குகிறது. பல ஆதரவற்ற சைவ பெண் பிள்ளைகள் எமது வசித்து நல்வாழ்வு பெற்றுள்ளனர். 1982ம் ஆண்டு முதல் ர அம்பாளின் அருளால் எவ்வித குறையுமின்றி எமது : ங்கள் இல்லப்பிள்ளைகள் கல்வியில் கலைகளில் பக்தியில் [னர். வெள்ளிவிழா காணும் துர்க்காபுரம் மகளிர் இல்லம் வணங்கி அமைகிறேன். அகில இலங்கை இந்து மாமன்றம்
நல்லத்தின் வெள்ளிவிழா
கந்தையா நீலகண்டன் அவர்களது O O
ச் செய்தி
laFui uqh , uGoofluíloör 200MILITES Đ6ooooooooooTijö jöfflöist56oTh. முதாயப் பணிகளை முன்னுதாரணமாகச் செயற்படுத்துகின்ற ாம் விளங்குகின்றது.ஆலய அறப்பணிகளை சமுதாயத்தின் துவமான சிறப்பை இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. நடமாக துர்க்காபுரம் மகளிர் இல்லம் விளங்குகின்றது என்று ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மகளிர் இல்லம், தனது வுசெய்துகொள்ளுவதன் ஊடாக வெள்ளிவிழா காணுகிறது ம் செய்தியாகும். ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்து, ழவைப்பதில் மகளிர் இல்லம் பெரும் வெற்றிகண்டுள்ளது.
Sப் பணிகளுக்குப் பொறுப்பாகவிருக்கும் தெய்வத் திருமகள் சிறப்பான சேவையின் வெளிப்பாடாக துர்க்காபுரம் மகளிர் பெயரால் கருணைமிகு ஜீவகாருண்ணியப் பணிகளை கையும், விருப்பமும் இன்று வெற்றிகரமான பாதையில்
வுசெய்துள்ள தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா நன்றத்தின் அறங்காவலர் சபையின் உறுப்பினர் என்ற ண்டகால நெருங்கிய உறவின் காரணமாகவும் அன்னை
மாமன்றம் அவரைப் போற்றிப் பாராட்டுகிறது.
நின் சேவைகள் மேலும் சிறப்பாகத் தொடரவேண்டும் என
விய வருடம் தை - பங்குவி

Page 7
செஞ்சொற் செல்வர் ஆறு
GS
“ஏழைகளின் சிரிப்பில் இறைவனை சோறிட வேண்டும், வாழும் மனிதர்க்கெல்ல என்றார் மகாகவி பாரதியார். இக் கூற்றுக் செயற்படுத்தியவர் எங்கள் அன்னை சிவத்தமி ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதி அன்னை துர்க்காபுரம் மகளிர் இல்லம். ஆலயங்கள் அ சொற்பொழிவில் பேசிவந்த அன்னை அ நிதர்சனமாக்கினர். பன்னிரண்டு பிள்ளைகே
பெற்றது. உலகம் முழுவதும் இவ் இல்லம் பற்றிய சிறப்பு பேசப்ப
அள்ளிக் கொடுத்தனர். மகளிர் இல்லம் மாடிக்கட்டடமாக பரிணா சேர்ந்து பயன் பெற்றனர். ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழ பெருமைப்படுத்தினர். ஆலயப்பணி என்பது கிரியைகள், சடங்குகள் உதவ வேண்டும் என்ற மகத்தான கொள்கையையுடைய அ6 வெள்ளிவிழா காண்கின்றது.
கடந்த 25 வருடகாலத்தில் நாட்டில் ஏற்பட்ட சொல்லில் வடி நிலைத்திருக்கிறது. போரின் அனர்த்தத்தினால் செல்வீச்சில் மகளிர் 8 மிக்க அன்னை அவர்கள் ஏனைய குழந்தைகளுடன் இராமநாதன் ப்பாற்றினார்கள். இடப்பெயர்வுவந்தபோதுஉசன்கந் (3SII குறையின்றி வாழ அன்னை அவர்கள் வழிகாட்டினார். துர்க்காட போட்டியிலும்பங்குபற்றிஉயர்பரி பெர் கின்றனர். பல வெளி க்கு வெளிப்படுத்தினர். சைவ Šksoir, ég6ou எடுத்துரைக்கும் முன் உதாரணதிருப்பணியாக மகளிர் இல்லப்பணி சிறப்பிக்கும் வகையில் அகில இலங்கை இந்துமாமன்றம்“இந்துஒள துர்க் fiர் இல்லவெள்ளிவிழா குறித்து இந்து ன்றம் ெ
அநாதரவான குழந்தைக6ை
(தமனே இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் தெல்லிப்ப6ை திலகமாகத்துலங்குகின்றதுஎன்றால் அது மிகையல்ல. துர்க்காமகளி சூழலிலே கோயில் கொண்டுள்ளதுர்க்கை அம்மனின் கருணைமிகு கோபுரமும், அழகியதிருக்குளமும் கண்முன்னே காட்சியளிக்கின்ற சேர்ந்த அன்னை துர்க்கா துரந்தரிதங்கம்மா அப்பாக்குட்டி அவர்க மட்டும்நின்றுவிடாதுகோயிலை ஒருசமுதாயக்கூடமாகமாற்றி, அநா மாற்றிய சிறப்பு சிவத்தமிழ்ச்செல்விதங்கம்மா அப்பாக்குட்டிஅம்ை தற்போது அறுபத்தியேழு பெண்பிள்ளைகள் துர்க்கா மகளிர் இe பெறுகின்றனர். அவர்களது கல்வி, ஒழுக்கம், பண்பாடு ஆகியை நற்குடிமக்களாக உருவாகி வருவது மகிழ்ச்சிக்கும், மனநிறைவுக்கு மேற்பட்டபெண்குழந்தைகளின் தாய்வீடாக இம்மகளிர் இல்லம்செய வாழ்வில் வளம்பெற்றபலர் பலதுறைகளில் தொழில் செய்துவருகின் இலங்கையில் ஒரு திருக்கோயிலின்நிர்வாகத்திற்குட்பட்டதாகச தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திலேயே என்று துணிந்து அம்மன் ஆலயநிர்வாகமும், அதன் அச்சாணியாக இருந்து செயற்பட் வாழ் இந்துக்களினதுமட்டுமல்ல உலக இந்துக்களின் மத்தியிலும்பே நாட்டிலே நல்லாட்சி, நற்பண்புகள் உருவாகி அநாதரவான கு அழித்துதர்மத்தைக் காக்க அவதரிக்கும் துர்க்கை அம்மன் வழிசெய்
இந்து ஒளி 5
 
 
 
 

ಸ್ಲೀಷಿನಿಸಿಪಿಸಿಸಿಪಿಳಿಪಿಳಿಪಿ
திருமுருகன் அவர்களது
ழ்த்துச் செய்தி
க் காண்போம்” என்றார் சுவாமி விவேகானந்தர், “வயிற்றுக்கு ாம் பயிற்றிப் பல கல்வி தந்து பாரினை உயர்த்திட வேண்டும்” கள் மிகவும் உன்னதமானவை. இவற்றின் பொருள் அறிந்து ழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். 1982ம் அவர்களால் துர்க்காதேவி தேவஸ்தானத்தில் தொடக்கப்பட்டதே ஆத்மாக்களுக்கு ஆறுதல் அளிக்கும் நிலையங்கள் என தனது அவர்கள் இவ் இல்லத்தைத் தோற்றுவித்து அக்கருத்தை ளாடு தொடங்கிய துர்க்காபுரம் மகளிர் இல்லம் துரித வளர்ச்சி ட்டது. உள்ளூர் மக்களும் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும் மித்தது. காலத்துக்குக் காலம் பலநூறு பிள்ளைகள் இல்லத்தில் கம் வரை சென்று துர்க்காபுரம் மகளிர் இல்ல வரலாற்றைப் i, சம்பிரதாயங்களோடு முடிவதில்லை. ஆலயங்கள் மக்களுக்கு ன்னையின் அயராத உழைப்பினால் இன்று மகளிர் இல்லம்
க்க முடியாத போர்ச் சூழலிலும் இவ் இல்லம் தளர்வுறாது நின்று இல்லபிள்ளையொன்றின் உயிர்பிரிந்தது. என்றாலும்மனவலிமை ன் கல்லூரி விடுதிச் சாலையில் குடிபுகுந்து, மகளிர் இல்லத்தைக் யில்பரிபாலகர் இல்லத்தில் மகளிர் இல்லத்தைநடாத்திபிள்ளைகள் ரம் மகளிர் இல்ல பிள்ளைகள் எத்துறை சார்ந்த விளையாட்டுப் மாணவிகள் தங்கப்பதக்கம்பெற்றுமகளிர் இல்லத்தின் மகிமையை யில் ஆதரவற்றசிறார்களுக்கு உதவலாம்என்பதைஅகிலஉலகுக்கு மேன்மை பெற்றுள்ளது. மகளிர் இல்லத்தின் வெள்ளிவிழாவை ரி”சஞ்சிகையைசிறப்பிதழாக வெளியிடுவதுபோற்றுவதற்குரியது. வளியிடும் இச்சிறப்பிதழைவாழ்த்திமகளிர் இல்லத்தையும் போற்றி
r அரவணைக்கும் இல்லம்
ாகரன்
ா துர்க்காபுரம் மகளிர் இல்லம் இலங்கையின் இந்து சமூகத்தின் iர் இல்லத்தைநினைவில் மீட்டும்போதுஅல்வில்லம் அமைந்துள்ள தோற்றமும், அன்னையின் எழுச்சியுடன் தோற்றமளிக்கும் இராஜ ன. அதுமட்டுமன்றிதன்பணியால் நமது சமுதாயத்திற்குச் சிறப்புச் ளூம் மனக் கண்ணில் தோன்றுகிறார். கோயில் வழிபாடுகளுடன்
மயாரைச் சாரும். ல்லத்தில் தங்கி ஆறுதல் பெறுகின்றனர். அரவணைப்பு, பாதுகாப்பு வ பேணப்பட்டு மேம்படுத்தப்படுவதால் அங்குள்ள பிள்ளைகள் நம் உரியது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் டு Bன் இங்கிருந்துபடித்துபரீட் floo δόξ5 o троотп. மூகநலசேவைக்காக இவ்வாறான ஒரு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது கூறலாம். சமூகப்பணியே சமயப்பணியென்று இயங்கும் துர்க்கை டுவரும் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும் இலங்கை ாற்றப்படுகின்றனர். ழந்தைகள் உருவாகாத எதிர்காலத்தை உறுதிசெய்ய, அதர்மத்தை வாள் என்று நம்புவோம்
KKKKKKKK
விய வருடம் தை - பங்குனி)

Page 8
táskolásátáskáláskiekkelskicsikat 翰 ஒளிஏற்றிய துர்க்கா
நுண்கலைமாணி செல்விவிவ
இருபத்தைந்து வருடங்களுக்குமுன் துர்க்காபுரம்மகளிர் இல் ஒருவர்செல்விவி வடிவாம்பிகை இவர்கல்வியில் உயர்ந்து பல்கலைக்க ஒரு இசைஆசிரியராகப்பணிபுரிந்துவருகிறார். தன்னை பாதுகாத்துவ6 சிவத்தமிழ்ச்செல்விதங்கம்மா அப்பாக்குட்டி அவர்களையும் நன்றிமறவ
ல்ெலாம் வல்ல தெல்லியூர் துர்க்கை அம்பாளின் திருவருளையும், தாயினும் சால அளவு கடந்த அன்பையும் சொரிந்து அரவணைத்துஆதரித்த பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய எனது தெய்வத்தாய் கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டிஅம்மா அவர்களின் ஆசியையும் நன்றியுடன்நிலை நிறுத்தி, ஆதரவற்ற எனக்கு அடைக்கலம் தந்த தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு, இல்லத்தின் மூலம்நான் அடைந்தநன்மைகளின் சிறுதுளிகளை இந்து ஒளி-மகளிர் இல்லம் வெள்ளிவிழா சிறப்பிதழின் ஊடாக வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன்.
1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 3ம் திகதி ஒன்பது பெண்
நானும் ஒருவராகத் திகழ்ந்தேன். உலகமே அறியாத அந்தக் குழந்தைப் பருவத்தில் ஆலயத் திருவீதியும், இலுப்பை மரச் சோலையும், தெய்வீகச் சூழலும், அன்பான அம்மாவினதும் அம்மாவைச் சார்ந்தவர்களினதும் அரவணைப்பும் என்னைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. உற்றார், உறவினர் யாவரதும் ஆதரவு இல்லை என்றநிலை அன்று எனக்குத் தெரியவில்லை. நான் தேம்பி அழவும் இல்லை. அன்பும் ஆதரவும் பாதுகாப்பும் ஒருங்கே கிடைத்தது. இது என் குழந்தைப்பருவம்.
ஆலயமணியின் ஓசையும், ஒலிபெருக்கியில் கேட்கப்படும் துர்க்கை அம்பாளின் துதிப்பாடல்களும், பெரியம்மா அவர்களின் கூட்டுப் பிரார்த்தனைப் பாடல்களும், பிரசங்கங்களும் பஞ்ச புராணங்களும், அந்தணர்களின் மந்திர உச்சாடனமும் அன்று எனது பிஞ்சு உள்ளத்தில் ஆழப்பதிந்துவிட்டன. உள்ளார்ந்தமாக என்னிடம் இருந்த ஆற்றல் னரித்த எமது இல்லத்தாய் அவர்கள் பண்ணிசைப் பாடல்களையும் கூட்டுப்பிரார்த்தனைப் பாடல்களையும் சொல்லித்தந்து இசைத்துறையில் இன்று நுண்கலைமாணி, கலாவித்தகர் என்ற பட்டங்களைப் பெற்று மேன்மையடைய அத்திவாரம் இட்டார். அம்மா அவர்கள் நாம் எல்லோரும்நற்பிரஜைகளகவரவேண்டும் என்றபேரார்வத்துடன் புத்திமதிகள் கூறி, தனது நேரடிக் கண்காணிப்பில் எம்மைக் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும், கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தும், நேரம் பொன்னானது என்று ஓய்வான நேரத்திலும்கூடசைவத்தையும்,தமிழையும் கற்பித்து அதன்மூலம் இன்று பல வெற்றிகளையும் கண்டுள்ளர். துர்க்காபுரம் மகளிர் இல்லம் இன்று 25வது ஆண்டு விழாவை வெற்றியுடன் கொண்டாடுகிறது என்றால் அவ்வெற்றி அம்மா அவர்களின் தனித்துவமே ஆகும். அம்மா அவர்களின் வழிகாட்டலுடன், கோப்பாய்ஆசிரியபயிற்சிக்கலாசாலை முன்னாள் இசைத்துறை விரிவுரையாளரான திருமதி தர்மபூபதி சிதம்பரநாதன் அம்மா தர்ம சிந்தனையடன் தானே முன்வந்து எனது
இந்து ஒளி 6

:::ಜ್ಜಯಿ!
கலாவித்தகர் டிவாம்பிகை
ம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதில்இணைந்து கொண்டவர்களுள் ழகம் சென்று இன்றுகொழும்புஇராமநாதன்இந்துமகளிர்கல்லூரியில் ார்த்தெடுத்த மகளிர்இல்லத்தையும் அரவணைத்து ஆதரித்த அன்னை ாது போற்றுகிறார்.
நுண்கலை வளர்ச்சிக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் தந்த இசைத்தாய் ஆவார்.
எனது பல்கலைக்கழகப் புகுமுகப்படிப்பையாழ். மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியில் கற்றேன். அப்பொழுது முதன் முறையாக பண்ணிசைப் போட்டியில் பங்குபற்றி யாழ் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்திற்குரிய தங்கப் பதக்கத்தைப் பெற்றேன். தங்கப்பதக்கம் வழங்கும் வைபவம் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்றது. அச்சமயம் சபையோர் மத்தியில் நல்லை ஆதீன முதல்வர் தங்கப்பதக்கம் வழங்கவும், பின்னர் நான் பண்ணிசைக் கச்சேரி செய்ததையும் சபையோர் கைகொட்டி மகிழ்வதையும் நேரில் கண்ட சிவத்தமிழ்ச் செல்வி அம்மா அவர்கள்,
'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்தன்மகனைச் சான்றோன்எனக் கேட்டதாய்' என்ற நிலையில் அடைந்த சந்தோஷம் என் வாழ்வில் மறக்கவே முடியாத சம்பவமாகும். மேலும்படிப்படியாகபலபோட்டிகளில்பங்குபற்றிஅகில இலங்கை ரீதியாகவும் பல தங்கப்பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டேன்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு என்னுடன், செல்விகள் த. தவனேஸ்வரியும், சயாரூபியும் முதன் முறையாக துர்க்காபுரம் மகளிர் இல்லத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டோம். அங்கும் எமது இல்லமாணவர்கள் கல்வியில் முதல் மாணவர்களாகத் திகழ்ந்து பல்கலைக்கழக சமூகத்திடமிருந்தும்பாராட்டுக்களைப்பெற்றனர்.
கொண்டு அவர்களின் பல்துறை வளர்ச்சியால் பேருவகை அடைந்தார். இன்றும் எமது இல்லத்தில்பாலர் வகுப்புத்தொடக்கம், பல்கலைக்கழகம் வரையுள்ள மாணவிகள் பல்கலைகளிலும் முன்னணியில் உள்ளர்கள்என்றால் மிகையாகாது. துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகள் வழிபாடு, பஜனை, கோசாலை, கோட்டம் e த்தொழில்கள்,யோகாசனம், இயல், இசை, நாடகம், நடனம்- அது மட்டுமன்றி கணணித்துறையிலும் சிறப்பான பயிற்சிகளைப் பெற்று வளர்ச்சியடைந்த பூரண நிலையில் மேலும் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று பல்கலைக் கழகம் சென்று பல சாதனைகளைப்புரிந்தும் வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக பல இடங் களுக்கு இடம்பெயர்ந்த வேளையிலும், அம்மா அவர்கள் எமக்கு எதுவித குறையும் இல்லாது பாதுகாத்தார். இல்லத்துப்பிள்ளை களுக்குபிறந்தநாள்விழாவையும்,பூப்புனிதநீராட்டுவிழாவையும், திருமணவைபவங்களையும்பெற்றதாய்போல் முன்நின்று நடாத்தி அதிலே இன்பம் காண்பார். இவ்வாறு மகளிர் இல்லம் மட்டு மல்லாது அன்னையர் இல்லத்தையும் நிறுவி வயோதிபர்களை
Pok96ýok)ýok:Gyok)Nipkryok)ýpk96ýok
விய வருடம் தை - பங்குணி)

Page 9
--
சேவைகளை ஆற்றிவருகின்றார். அம்மா அவர்களின் பெயரால் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தில் இன்று எமக்கென்று ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது.
செல்வச் செழிப்புமிக்க பல ஆலயங்கள் இருந்தாலும் கிடைக்கும்செல்வங்களைஅறப்பணிக்காகதர்மவழிக்குச்செலவு செய்ய வேண்டும் என்ற சிந்தனை துர்க்காதேவி தேவ ஸ்தானத்தின் தலைவியான அம்மா அவர்களுக்கே உதித்தது. இதனால் பயனடைந்தவர்கள் பலர்.
நான் யாழ்பல்கலைக்கழகத்தில் தற்காலிகவிரிவுரையாளராக மூன்று ஆண்டுகள் கடமையாற்றினேன். என்னைப் போன்று எமது இல்லத்து மாணவர்களும் பல்வேறு துறைகளில் தொழில் புரிந்துவருகின்றனர். எதிர்பாராதவிதமாகனனக்கு ஆசிரியநிரந்தர நியமனம் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில்
"N-A-N-A "NA-NA "N-A"N-A "NA-NA "N-A-NA "N-A-N-A "N-A-N-A "N-A-N-P-N-A-N
சிவத்தமிழ்ச் செல்விஎ
கம்பவாரிதி இ
சமூக வாழ்க்கை என்பது எத்தனை பெரிய பாரச் ஆயிரம் கல்லெறிகள், ஆயிரம் விமர்சனங்கள், ஆ இவற்றையெல்லாம் தாங்கித் தளராது நடப்பதென் தமிழையும் சைவத்தையும் தோள்மேற் சுமந்து தாங்கள் செய்த பயணத்தின் பெருமையின் விஸ்த இப்பொழுது தான் முழுமையாய் உணரமுடிகிறது. தனியொரு பெண்ணாக இந்தச் சாதனையைச் ெ பெண் விடுதலையாளர்கள் எல்லாரும் உங்களைப் ஆழ்ந்த புலமை அசைவுறா ஒழுக்கம் நீண்ட பக்தி இத்தனையையும் ஆயுதங்களாய் கொண்டு வெறும் நாவாற் போர்ாடி, ஈழத் தமிழ் உள்ளங்களை வென்றீர்கள். அவ் வெற்றியை உங்கள் நலத்திற்காய்ப் பயன்படு: ஒலைக் குடிசையாய் இருந்த கோயிலை கோபுரமா துர்க்காபுரம்'என ஒரு நகரத்தையே உருவாக்கிய சைவ உலகில் இதுவரை எவர்க்கும் வாய்க்காத ஒ இனியும் அது எவர்க்கேனும் ஆகுமென்று எண்ணி
இன்றைய யாழ்ப்பாணத்தில் சைவத்துறையோடு ( ஏதோ வகையில் உங்கள் அடையாளம் பதிந்திருக் தெல்லிப்பழையில் ஆலயத்தினூடு ஒரு சமுதாயப் உங்கள் நடவடிக்கைகளால் சைவத்திற்கு ஒரு புதி கோயிலைக் கடந்து முதன் முதலாய் சமுதாயம் நே மக்கள் தெய்வக் கரங்களாகவே நினைந்தனர்.
ஆதரவற்ற அநாதைக் குழந்தைகள், பெண்கள், மு நீங்கள் அனைத்து ஆதரித்தது கண்டு உலகமே 6 சைவ உலகு உயிர்ப்புற்றது. இன்று ஆயிரமாய் விரிந்திருக்கும் அநாதையில்ல) உங்கள் முயற்சியே முதலில் இடப்பட்ட பிள்ளையா (சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் வழங்கியிருந்த வ நன்றி : தினக்குரல் 14.01.2007)
(Gjög sí

கிடைத்தது. ஆசிரிய நியமனம் காரணமாக கொழும்பில் வசித்தாலும் மாதத்தில் இருமுறை அம்பாளையும் அம்மாவையும் தரிசித்துவந்தேன். தற்பொழுதுபோக்குவரத்துத்தடைகாரணமாக அங்கு செல்ல முடியவில்லையே என்று துடியாய்த் துடிக்கின் றேன். இருந்தும் எனது உள்ளம் அம்பாளின் திருவருளையும்
ம்மாவின் பேரன் e. ம் என்றும்நன்றியுடன் நினைந்த வண்ணம் இருக்கின்றது. என்னை உயர்த்திய அம்பாளுக்கும், அம்மா அவர்களுக்கும், துர்க்காபுரம் மகளிர் இல்லத்திற்கும் என்ன கைமாறு செய்வேனோயான் அறியேன். எனது இதயசிம்மாசனத்தில்சிவத்தமிழ்ச்செல்விஅம்மாஅவர்கள் வீற்றிருந்து என்னை வழிநடாத்தி ஆட்சி செய்து வருகின்றார். மேலும் அம்பாளின் அருளாலும், அம்மாவின் ஆசியுடனும் இயன்றளவு கல்விச் சேவையைச் செய்து மேன்மையடைவேன் என்றநம்பிக்கை எனக்குண்டு.
1/N 1/N 1/N 1/N 1/N, 1N/N 1/N 1/N 1/N
னும் சிகரத்திற்கு.
ವಿನ್ಡಿಯ್ಲೆ
ாரத்தை,
சய்த ஆற்றல் அதிசயமானதுதான்.
பின்பற்றுவார்களாக!
தி நிமிர்ந்த முயற்சி
த்தாமல் துர்க்கையின் திருவடிக்காக்கி ய் உயரச் செய்து,
உங்கள் நாவலிமை
ன்று.
0ബിബൈ,
தொடர்புபட்ட எவரிலும்
கிறது. புரட்சியையே நடத்திக் காட்டினிர்கள். ய வியாக்கியானம் எழுதப்பட்டது. ாக்கிநீண்ட உங்கள் கரங்களை
இ.ஜெயராஜ்
யிரம் தடைகள்,
பது சாதாரண காரியமா?
தியோர் என அத்தனை பேரையும்
வியந்தது.
ங்களுக்கு,
* சுழி ダ அவர்களது 82வது பிறந்ததினத்தையொட்டி ாழ்த்துச் செய்தியிலிருந்து சில பகுதிகள்.
κογκογκ, γκρεγκ γκρεγκ γκ
விய வருடம் தை - பங்குணி)

Page 10
அறத்தில்
அது ஒரு வெட்டவெளி. கோடை வெயில் “உச்சி மண்டை யைப்பிளக்கிறேன்பார்”என்றுஎரித்துக்கொண்டிருக்கிறது. அங்கே “சிவன் கோயில்" ஒன்று கட்டும் திருப்பணி நடந்து கொண்டி ருக்கிறது. வேகும் வெயிலில் பலர் சீமெந்துக்கட்டிகளைச் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். அங்கே வந்த சான்றோர் ஒருவர் கல்சுமந்துகொண்டிருந்த ஒருவனைஅழைத்து'நீஎன்னசெய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன்
கொண்டிருக்கிறேன்”என்றுபதிலளித்தான். சற்றுநேரம்பொறுத்து
"நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று கேட்டார். அவன் கவலையுடன் “எனது குடும்பத்திற்கு அடுத்த நேர உணவிற்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். இன்றுமாலை நான் கொண்டு போகும்பணத்தில்தான் அங்குகஞ்சிஏதாவது வேகும்” என்றான். சற்றுத் தள்ளிச் சென்ற சான்றோர் இன்னொருவனிடம் இதே கேள்வியைக் கேட்டார். அவன் கோபத்துடன் "கொதிக்கும் வெயிலில் வேலைசெய்துசாகவேண்டும் என்பது என்விதி.என் தந்தையார் கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டார். செத்துக் கொண்டி ருக்கிறேன். உங்களுக்கு என்ன விடுப்பு?” என்று எரிந்து விழுந்தான். சற்றுநேரம் பொறுமையுடன்நின்ற சான்றோர் வேறு ஒருவனிடமும் அதே வினாவைத் தொடுத்தார். அவன் “நான் தெய்வத்துக்குக் கோயில் கட்டும் காரியத்தை மிக மகிழ்வுடன் செய்துகொண்டிருக்கிறேன்” என்றுமிகுந்த அமைதியுடன் பதில் தந்தான். இது சுவாமிசுகபோதானந்தா கூறிய ஒரு கதை.
வாழ்க்கை பற்றிய புலக் காட்சியும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருமாதிரி இருக்கிறது. கதையில் வந்த இறுதிமனிதனின் வர்க்கம் நிஜத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சிவத்தமிழ்ச்செல்விகலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஒரு சான்று.
03.02.1982இல் ஆரம்பிக்கப்பட்டதுதெல்லிப்பழை துர்க்கா புரம்மகளிர் இல்லம், “இருக்க இடமின்றி,உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி கற்க வாய்ப்பின்றிக் கலங்கிக் கொண்டி ருக்கும் இவர்களை நேசக் கரம் நீட்டி அணைத்துக் கொள்ள வேண்டியவர்கள்நாங்கள்” எனஅம்மா அவர்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சிந்தித்தார். எத்தகைய கஷ்டங்கள்,
லயான்னுயர் தெல்லியூர் வாழ் பூரணி துர் அன்னையே நீனது பூசை ஆனந்தங் கா நீன்னடி யார்கள் எல்லாம் வநடுநாளாய் முன்னைய நினைப்பை எண்ணி முகங்கு
βογκνγκ γκογκογκογκογκ»
(இந்து ஒளி

பிரச்சினைகள்வந்தபோதிலும் இன்றுவரைஅதைஒருதெய்வீகப் பணி என நினைத்துமகிழ்வுடன் செய்து வருகின்றார்.
“ வாழ்தல் என்பது உள்ளமும்மனமும்
பயமெனும்பேய்பிடித்திருத்தலை எதிர்த்தல் எழுதல் என்பதுஒருவரின் ஆன்மா
இத்ததீர்வி எழுதிடஇருத்தல்”
என்பதுநாடகாசிரியர் இப்சனின் ஒரு கவிதை.
கடந்த இருபது வருடங்களாகத் தெல்லிப்பழை பிரதேசம் எத்தனை யுத்த அனர்த்தங்களைக் கண்ட போதிலும், துர்க்கா துரந்தரியின்மனம்பயமெனும்பேயால் பீடிக்கப்படவில்லை. மிக உன்னதஇலக்கிணைஅடைதல்என்றதிர்வினை அவரதுஆன்மா திடமாக எழுதி அவரை மிக உயர்வாக எழ வைத்து விட்டது. ஆதரவற்றபலபிள்ளைகள் பல்கலைக்கழகக் கல்வியைக் கூடப் பெறும்நிலை அந்த எழுதலால் ஏற்பட்டதில் வியப்பில்லை.
“மொழிவதற மொழியென்னும் மூதுரையும் தெளிந்து, அழுக்கறுத்த துயசிந்தை, அந்தண்மை அடக்கம் அணியிலை தாமெனக் கொண்டு அறநெறியில் நின்று'அன்னை செய்யும் பணிகாலத்தால் அழியாதது.
ஏபிரகாம்லிங்கன் தனதுமகனின் ஆசிரியருக்கு ஒரு நீண்ட கவிதைக் கடிதம் எழுதினார். அதில் ஒரு வரி- “அவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை வரக் கற்றுக் கொடுங்கள். அதன்பின் எப்போதுமவன் மனிதர்களிடம்நம்பிக்கைகொள்வான்"என்பது துர்க்காபுரம்மகளிர் இல்லப்பிள்ளைகள் தம்மிடத்திலும்,தம்மைச் சுற்றியுள்ள மனிதரிடத்திலும், இறைவனிடத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக வளர்க்கப்படுகிறார்கள் என்பது நான் நேரில் &66oorL2_ooroon.
அருவை அறிந்தவர்ஆயிரத்துளென்று பிந்தவர்இலட்சத்திலொன்று குருவை அறிந்தவர்கோடியிலொன்று கருவை அறிந்தவர்க்காண்டதுமரிதே என்பது செய்கு அலாவுதீன் புலவரின் ஒரு பாடல். வாழ்வின் கருவை அறிந்து செய்யப்படும் அறப்பணி இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைக்க இறை அடிதொழுவோம்.
க்காதேவி
ண்பதற்கு
காத்திருந்தார்
fர்ந்தமைதிகண்டார்.
- அருகேவி சீ. விநாசித்தம்பி
pkepkwpkylepkefaklepkepkypk
விய வருடம் தை - பங்குனி

Page 11
ஆண்டுகள் நிறைவின்போது [2032] SIGITECTIF சிவத்தமிழ் செல்வியுடன் இங்கப் பிள்ளைகளும் இல்லத்தின் அலுவகப் பணியாளர்களும்
ܛ .
¬ 1 1 7 ܒ ܬܐ.¬¬ ܡ¬¬ ¬ .
குெப்பன் 黜
■■
இல்லப்பிள்ளைகளின் கலை நிகழ்ச்சி (2002)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதினைந்து ஆண்டுகள் நிறைவின் போது [੩]
இல்லப்பிள்ளைகளின் இசை விருந்து (2002)
விய வருடம் தை - பங்குனி

Page 12
மருத்துநீரின் (
வைத்தியகலாநிதி
திமிழ் புத்தாண்டின்போது மருத்துநீர் தலையில் தேய்த்து நீராடுவது தமிழ்மக்களின் வழக்கமாகும். இந்த வழக்கம் புத்தாண்டில் அறிமுகமாக்கப்படும் நல்ல பழக்கங்களுள் ஒன்றாக எண்ணவேண்டும். ஒரு நாள் ஒரு வேளை பாவிக்கும் ஒரு மருந்து நிரந்தரமான நோய் நீக்கத்தையோ நோய்த் தடுப்பையோ ஏற்படுத்தும் நிவாரணியாக ஏற்றுக்கொள்ளல் விஞ்ஞானக் கோட்பாட்டுள் அமையாது என்பதும் அறியப்படல் வேண்டும்.
இம் மருத்து நீர் பற்றிய ஆய்வுகூட ஆராய்ச்சி ஏதும் நடத்தப் பட்டதாகவும், ஆதாரங்கள் விஞ்ஞான உலகு அறிந்ததாகிய தகவல் களால் தெரிவிக்கப்படவும் இல்லை. இந்நிலையில் இது மருத்துவத் தன்மை அற்றது எனப் புறக்கணிக்கத்தக்க நிலையிலும் இல்லை. பல காலங்களாக மக்களால் பாவிக்கப்பட்ட ஒரு முறைமை பலன் தருவதாகப் பலராலும் நிருபிக்கப்பட்ட பின் அதை ஏற்றுக் கொள்ளலை விஞ்ஞானக் கோட்பாடுகள் மறுக்க முடியாது. விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மருத்துநீர் உட்படுத்தப்பட்டு முடிவுகளை வெளிப்படுத்தல் இன்றைய எமது விஞ்ஞானிகளின் கடமையாகும். இத்தகைய முடிவுகள் வெளியாகும் வரையும் எமது பாரம்பரிய வழக்கங்கள் பற்றி எமது பழந் தமிழ் சான்றோர் கூறிய சிலவற்றை இன்றைய தர்க்க ரீதியாக ஆராய்ந்து கொள்ளல் இக் கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
உடம்பை சுத்தஞ் செய்ய நீரைப் பாவிக்கின்றோம். தலையை இப்படிச் சாதாரணமாக கழுவிச் சுத்தஞ் செய்ய முடியாது.தலையில் வேறு சில பொருட்களைத் தேய்த்து அதனுடன் அழுக்கையும் இணைத்து இரண்டையும் ஒன்றாக வெளியேற்றல் சுலபம். இம் முறையே சீயாக்காய், அரப்பு முதலியவற்றின் பாவனையின் உள் உறைகின்றது. இதே போன்ற முறைதான் சம்பு என்ற மேலைநாட்டு அறிமுகமாகும். இப்படிக் கழுவப் பாவிக்கப்படும் பொருள் வேறு நன்மைகளையும் உடலுக்கு உதவுவதாயின் அது கூடுதலாய் விரும்பப்படும்.
தலையில் பல தடவைகள் கைகளாற் தேய்க்கப்படும்போது எழும் சூடு தலையின் சருமத்துள்ள நுண் நாடிகளையும் நாளங் களையும் விரிவாக்குவதால் சருமத்திற்கும் தலை முடிக்கும் கூடிய இரத்தஞ் செல்கிறது. இம்முறை சில காரணங்களால் முடி உதிர்வதற்குப் பரிகாரமாகக் கையாளப்படுகின்றது.
சர்வசித்து சித்திரை
வாக்கிய பஞ்சாங்கப்படி சிததிரைப் புதுவருடம் 2007 ஏப்ர உதயமாகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி அதே தினம்
இந்தப் புதுவருடத்தின் பெயர் சர்வசித்து என்பதாகும் , 21வது வருடமாகும்.
(இந்து ஒளி
 

(55gUů usil i
மருத்துநீரில் பல ஊட்டச்சத்துக்கள் உண்டு. அவை தேய்ப்பின்போது உட்சென்று உதவுவன. இவற்றுள் விட்டமின் கூட்டுள் ஒன்றான பான்டொதினிக் அமிலம் உண்டு. இது முடி உதிர்வு, நரைமுடி உண்டாதல் ஏற்படாவண்ணம் தடுப்பதுமன்றி இவற்றிற்கு நிவாரணமாயும் அமைவதாக விஞ்ஞானிகள் கண்டனர். தாவரங்களுட் காணப்படும் பச்சயம் துர்நாற்றத்தை நீக்கவல்லது. மருத்து நீருள் காணப்படும் பல பொருட்கள் உடலைத் தாக்கும் கிருமிகளை அழிக்க வல்லன.
மருத்து நீரில் உள்ள தாழம்பூ வியர்வை நாற்றத்தை மறைப்பதுடன் சொறி நீக்கமுஞ் செய்யும். தாமரைப் பூவும் கிருமி நாசினியாகவும் வாசனையாகவும் செயல்படுகின்றது. மாதுளைப்பூ உடம்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். காயங்களில் இருந்து இரத்தம் வெளியேறாது கட்டுப்படுத்த வல்லது. கட்டிகள் இருப்பின் அவற்றைப் பழுக்கச் செய்யும். கண் சிவந்திருத்தல் கண்ணெரிவு முதலானவை குணமுறும்.
துளசி பீனிசம், இருமல், தொண்டைக் கடுப்பு முதலியவற்றைக் குணமாக்கும். காயத்துள் கிருமிகள் அடைந்து புண்ணாவது தடுக்க உதவும். இதற்கு நுண்உயிர் எதிர்ப்புச் சக்தியுண்டு.
விஷ்ணு கிராந்தி காய்ச்சல், உட்சூடு முதலியவற்றை மாற்றும் வலிமை உடையது. இருமல் நீக்கி, சவரத்தால் பிறந்த காயத்திற்கு சிறந்த நிவாரணி. செங்கழுநீர் காயமாற்றஞ் செய்யும்.
வில்வம் - இதனுள் அமைந்த டானிக் அமிலம் சருமத்திற்கு நிறத்தையும் அழகையும் தரும். கண் சிவந்தால் குணமாக்கு வதுடன் பார்வை மங்காது காக்கும்.
அறுகம்புல் கண்ணோய், தலைவலி, தலையிடி முதலியவற்றில் இருந்து உய்திதரும். கோசலம், கோமயம், கோரோசனை ஆகியன கிருமி நாசினிகள். சுவாச மேல் உறுப்புக்களைத் தாக்கும் வைரசுக்கள், பட்டீரியங்களைக் கொல்லும் தன்மையுடையன.
மஞ்சள், மிளகு, திற்பலி ஆகியனவும் கிருமிநாசினிகளாவது மன்றி சருமத்தை, காதுகளை சுவாச உறுப்புக்களை காக்க உதவுகின்றன.
இவற்றை உணர்வோர் மருத்துநீரை பன்னாட்கள் பாவித்தற் பொருட்டு வருட பிறப்பின்போது அறிமுகஞ் செய்யப்பட்ட நல் வழிகளுள் ஒன்றெனவே கருதுவர்.
ப் புதுவருடப் பிறப்பு
ல் 14ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணி 42 நிமிடத்தில் நண்பகல் 12 மணி 28 நிமிடத்தில் புதுவருடம் உதயமாகிறது. அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் இது
o -- விய வருடம் தை - பங்குணி)

Page 13
“அன்ே
கலாநிதிகுமாரசு
சிவம் ஒன்றே பசுபதி எனப்படுகிறது. பசு என்றால் ஆன்மா, பதியென்றால் தலைவர். ஆன்மாக்கள் பல உள்ளன. அவை அனைத்திற்கும் தலைவர் ஒன்றே. அதுவே சிவம். மற்றைய எல்லாத் தெய்வங்களுக்கும் பிறப்பு உண்டு, இறப்பு உள்ளது. ஆனால் இறை ஆகிய சிவம் மட்டும் தோன்றுவதும் இல்லை; அழிவதும் இல்லை. ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருள் சிவம் மாத்திரமே.
பரம் பொருளாம் சிவத்தைத் தவிர, எல்லாக் காலங்களிலும், ஏன் ஊழிக்காலத்திலும் நிலைத்து இருப்பவர்கள் வேறு அமரர் களோ, தேவர்களோ, தெய்வங்களோ இல்லை.
“அவனை ஒழிய அமரரும் இல்லை” என்கிறார் திருமூலர். “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” என்கிறார் அப்பர் அடிகள். “நின்னாவார் பிறரன்றி நீயேயானாய்’ என்பது அப்பர் வாக்கு. “தன்னேரில்லோன் தானே காண்க” என்றும், “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என்றும் மணிவாசகப் பெருமான் சிவத்தின் அருமையையும் பெருமையையும் உணர்த்துகிறார். இவ்வாக்குகள் அனைத்தும் திருமூலர் அருளியுள்ள
“சிவன் ஒடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவன் ஒடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை” என்னும் திரு மந்திரப் பாடல் அடிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக உள்ளன. சிவன் ஒன்றே முழுமைத்துவமானது. அதனால் சிவத்திற்கு ஈடானது, இணையானது, மேலானது என்று மற்றொன்று இருக்க முடியாது என்பதைச் சைவ அருளாளர்கள் எல்லோருமே ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே மும்மூர்த்திகளுக்கும் மூத்தவரான சிவத்தின் அன்போடும், கருணையோடும், அருளோடும்தான் சகல காரியங்களும், செயற்பாடுகளும் இவ்வுலகிலும் ஏனைய அண்டங் களிலும் நடைபெறுகின்றன என்ற பேருண்மையை நாம் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். அதனாலேதான், “அவனன்றி ஓர் அணுவும் அசையாது” என்கின்றனர்.
“தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்’ எம் எல்லோருக்கும் “அப்பனும் ஆய் உளன்” என்கிறது திருமந்திரம். அந்தப் பரம்பொருளே எம் எல்லோருக்குந் தந்தையாவான். அது மட்டுமா, அவன் எம் தாயும் ஆனவன். “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே” என்று இறைவனை விழிக்கிறார் மாணிக்கவாசக கவாமிகள்,
"அப்பன் நீஅம்மை நீஜயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ இப்பொன் நீஇம்மணி நீஇம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறுTர்ந்த செல்வன் நீயே’
இந்து ஒளி
 

99 சிவம்
மிசோமசுந்தரம்
ふ至エテミエ登壺
என்று நாவுக்கரசர் எமக்கும் இறைவனுக்குமுள்ள உறவுமுறையை எடுத்துக் காட்டுகிறார். எமக்கு உண்மையான தந்தையும், தாயும், துணையும், சுற்றமும், மற்றெல்லாப் பொருளும் யாவுமே சிவ பெருமான் ஒருவரே என்பதை மிகத் தெட்டத் தெளிவாக அப்பர் அடிகள் இத்திருப்பாடலில் எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வுண்மையை உணர்ந்து கொண்டவர்க்கு எந்நாளும் இன்பமே அன்றித் துன்பமில்லை என்பது உறுதி.
இவ்வுலகில் வாழுகின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே இறைவனின் பிள்ளைகள், ஒரே மூலத்திலிருந்து தோன்றியவர்கள் என்பதை உணரும்போது, பேதங்களுக்கோ,வேற்றுமைகளுக்கோ, ஏற்றத்தாழ்வுகளுக்கோ இடமில்லாமல் போய்விடுகிறது. எல்லாம் சிவமயம். அதற்குள் நாமெல்லோரும் அடக்கம். சமத்துவம், சகோதரத்துவம், சமாசம், உலக ஒருமைப்பாடு, சாந்தி, சமாதானம் என்பன ஓங்கி வளர்வதற்கு ஒரு தடையும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும்.
சிவம், தாமாகவே இப்பூமியையும், அதன் மீதுள்ள வானையும் தாங்கிக் கொண்டு, விண்ணாகவே உயர்ந்து நிற்கின்றது. அந்தப் பரம்பொருளே அக்கினியாகவும், சூரிய சந்திரர்களாகவும் விளங்குகின்றது. அதாவது குரு, தந்தை, தாயாகவும் உள்ளது. அதுவே கருணை மழை பொழியும் சுத்த சக்தியாகவும், மலைகள் ஆகவும், கடல் ஆகவும் விளங்குகின்றது. "எல்லா உலகமும் ஆனாய் நீயே" - என்கிறார் அப்பர் சுவாமிகள்.
“தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலும் ஆய்நிற்கும் தானே தடவரை தண்கடல் ஆமே 99 என சிவத்தின் சர்வ வியாபத்தைத் திருமந்திரம் செப்புகிறது. மண்ணையும், விண்ணையும் அளந்து ஆராய்ந்த விஷ்ணு, பிரமா முதலாம் தேவர்களாயினும் சரி, விஞ்ஞான அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் இன்னும் பரம்பொருளை ஆய்ந்து அறிந்து கொள்ள முடியாதுள்ள மனிதர்கள் ஆயினும் சரி, அண்டசராசரம் முழுவதும் எங்கும் எல்லாமாய்க் கடந்து நிற்கின்றபரம்பொருளைக் கண்டுகொள்ளமாட்டாமல் திகைத்து நிற்கின்றனர். ஆனால் பக்தி வலையில் படுபவன் இறைவன். சர்வம் சிவமயம் என்பது உறுதி. “ஈசன், கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே’ என்பது திருமந்திரம்.
பரம்பொருள் எல்லாவற்றையுமே கடந்து நின்று எங்கும் அருள் நிறைந்த, கருணை நிறைந்த காட்சியை வழங்குகின்றது.
எங்கள் சிவன் தென்னாடு உடையவன். ஆயினும் அவன் இவ்வுலகில் வாழ்கின்ற எந்நாட்டவர்க்கும் இறைவனாகவும் உள்ளான். சைவர்களாகிய நாம் இறைவன் ஒருவனே, அவன் பெயர் சிவன் என்கிறோம். அந்த ஒரே இறைவனை நாம் ஆயிரம் நாமங்களால் அழைக்கிறோம்; அர்ச்சிக்கிறோம்; தோத்திரங்கள் பாடுகிறோம்; நாமசங்கீர்த்தனம் செய்கிறோம்; இதே
விய வருடம் தை - பங்குணி)

Page 14
இறைவனையே ஏனைய நாட்டவர்க்ள், தங்கள் அறிவு, அனுபவங்கள், ஆன்ம ஞானத்திற்கேற்ப வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். நாமங்கள் ரூபங்கள் வெவ்வேறாக இருப்பினும் அவற்றால் கருதப்படும் இறை பொருள் ஒன்றே என்பதில் ஐயத்திற்கிடமில்லை. இதையே மணிவாசகப் பெருமான்,
"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று பாடித் தமது முதிர்ந்த, முற்றிய ஆன்மா ஞானத்தை வெளிப்படுத்துகின்றார்.
“ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்பது திருமூலர் அருள் வாக்கு. இறைவன் ஒருவனே என்று அழுத்திக் கூறும் திருமூலர், குலமும் ஒன்றே, அதுவே மனித குலம் என்கிறார். மனிதர்கள், சாதி, இனம், நிறம், குலம், கோத்திரம், மதம் என்னும் வகையால் பிரிக்கப் பட்டு நிற்கிறார்கள். தம்மிடையே ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டு சண்டை சச்சரவுகள், மனித அழிப்புக்கள் என்பவற்றில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இவற்றைக் கண்ணுற்றும், எதிர் பார்த்தும்தான், இறைவன் ஒருவனே, அவனே எந்நாட்ட வர்க்கும் உரிய ஒரே இறைவன் என்றும்; மனித குலம் ஒன்றுதான், அங்கு உயர்வு தாழ்வுகள் இல்லை; எல்லோரும் சகோதரர்களே, எனவே சமத்துவமுடையவர்கள்; என்றும் மனிதர்களாகப்பட்டவர்கள் ஈர நெஞ்சம் கொண்டவர்கள், எனவே பரஸ்பரம் அன்புடையவர்களாக விளங்க வேண்டிய அடிப்படை உரிமையைக் கொண்டவர்கள் என்றெல்லாம் நமது அருளாளர்கள் கூறியுள்ளார்கள்.
எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துதல் மனித நேயத்தை மதித்தல், மனித குலத்தின் பிரதான அடிப்படை உரிமையாகும். இங்கு அடிப்படை உரிமையை மீறுதல் என்பது மனித குலத்திற்கு இழுக்காகும். எனவே, அன்பு, அருள், கருணை, காருண்ணியம், தயை, பரிவு என்னும் மனித குலத்தின் உரிமைகளை, அக்குலத்தின் உறுப்பினர்களாகவுள்ள மனிதர்கள் யாபேரும்
/ー
நினைவலைகள் இரத்மலா
celeDJC & D6)
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் மூத்த உபத
பெருமைக்குரியவர் வைத்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளை. ம இல்லாத வேளைகளில் பல தடவைகள் முகாமைப் பேரவைக் ச யிருக்கிறார். மாமன்றத்தின் தலைமையகக் கட்டிடம் பூர்த்தியாவ
மாமன்ற குழுக்கள் பலவற்றில் பங்கு கொண்டு பெரிதும் சமூக நலன் குழுவிற்குத் தலைமை தாங்கி செய்த இவரது சி இரத்மலானையில் மாணவர்களுக்கான விடுதியொன்று இயா வேண்டும். வசதிகுறைந்த பிள்ளைகளுக்காக ஒரு விடுதி ஆரப் அரும்பாடுபட்டு, ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு, அக்டோபர் மாதம் 26ம் திகதியன்று அவர் இறைவனடி சேர்ந்து 16ம் திகதியன்று இரத்மலானை மாணவர் விடுதி ஆரம்பமாகியத அந்தவகையில் இவரை இரத்மலானை மாணவர் விடுதியின் த
இரத்மலானை மாணவர் விடுதியின் ஆண்டு நிறைவு நாளில் கூர்ந்து மாமன்றம் வருடந்தோறும் நினைவுப் பேருரையையும் விடுதி ஒன்பது வருடங்களை நிறைவு செய்து கொண்டு, பத்தா க. வேலாயுதபிள்ளை அவர்களது மறைவின் பத்தாவது வருடமு
இரத்மலானை மாணவர் விடுதியின் ஒன்பதாவது வருட பேருரையும் இம்மாதம் (மார்ச்) 18ம் திகதி ஞாயிற்றுக்கிழ நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைச் அம்மையாரின் மறுபக்கம்” என்ற பொருளில் பேருரையாற்றுவ
இந்து ஒளி

GUDGUT DATGUVUIDå filiflaðilö jobőUDj5 த்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளை
லைவராக நீண்டகாலம் பணியாற்றிய ாமன்றத் தலைவரும், பிரதித் தலைவரும் isட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி தற்கு உதவியவர்களுள் இவரும் ஒருவர்.
உழைத்து வந்தவர். இறுதிக் காலத்தில் றப்பான சேவையின் ஊடாகவே இன்று ங்கிக்கொண்டிருக்கிறது என்று சொல்ல ம்பிக்க வேண்டும் என்ற நன்னோக்குடன்
பேணிவர வேண்டியது அவர்களின் கடப்பாடு ஆகும். இந்த அன்பு என்னும் மனித உரிமையை மதித்து வாழ்வதன் மூலமே, மனித குலத்திற்கு இழுக்கு ஏற்படா வண்ணமும், அழுக்கு ஏற்படாத விதத்திலும், மனித அழிப்பு ஏற்படாத வகையிலும், மனித குலத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
வன்முறை மனித உரிமையன்று, மனித இயல்புமன்று, மனிதத் தன்மையுமன்று; அத்துடன் சைவநெறியுமன்று. சைவம் சிவம் சம்பந்தப்பட்டது. சிவம் அன்போடு இயைந்த பொருள். அன்பும் சிவமும் ஒன்றே. இரண்டும் வேறல்ல என்பதும் முடிந்த முடிவு. அன்பினை மனிதரிடமிருந்து பிரிப்பது என்பது மனிதரிடமிருந்து சிவத்தைப் பிரிப்பதற்குச்சமம்.
சிவத்தை மனிதரிடமிருந்து பிரிக்க முடியாது. சிவம் எங்கும் நிறைந்த பொருள் அல்லவா? அப்படியானால், அன்பையும் மனிதரிடமிருந்து பிரிக்க முடியாது. அன்பே சிவம்; சிவம்தான் அன்பு. “அன்பினில் விளைந்த ஆரமுதே' என மணிவாசகப் பெருமான் சிவத்தை விளிக்கிறார்.
நாம் சிவத்தின் பொருள் அன்பு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மைச் சைவர்களாக வாழமுடியும். எது மனித இயல்பு? எது மனிதத் தன்மை? என்று வினா எழுப்பிப்பார்த்தால், உண்மை புலப்படும்.
அன்பு செய்தல்தான் மனித இயல்பு. அன்புடைமைதான் மனிதத் தன்மை. அன்புநெறிதான் மனிதரின் வாழ்க்கை நெறி. மேலே எழுதப்பட்ட வினாக்களின் விடைகள் இவைதான். இதை உணர்ந்துவிட்டால் அந்தக்கணமே மனிதன் சைவசமயி ஆகி விடுவான். ஒவ்வொரு மனிதனும் சைவ சமயி ஆக முயற்சித்து, சைவசமயியாகப் பரிணாமம் பெறவேண்டும். அதுவே மனித வளர்ச்சியின் அதி உச்ச நிலையாகும்.
அன்பும் அறனும் வாழ்க்கையின் பண்பும் பயனும் எனக்கொள்வது சைவநெறி என்பதை உணர்வோமாக.
༄༽
விடுதி வேலைகள் பூர்த்தியாவதற்கு முன்னரே 1997ம் ஆண்டு விட்டார். எனினும் அவரது விருப்பம், 1998ம் ஆண்டு மார்ச் மாதம் ன் ஊடாக முழுநிறைவுபெற்றிருப்பதை சிறப்பாகக் குறிப்பிடலாம். ந்தை என்று சொல்வது பொருத்தமாகவிருக்கும். , வைத்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளை அவர்களையும் நினைவு ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது. இரத்மலானை மாணவர் வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில் அமரர் ம் இதுவாகும் என்பதை மாமன்றம் நினைவுபடுத்துகிறது.
நிறைவு வைபவமும், அமரர் க. வேலாயுதபிள்ளை நினைவுப் மை மாலை இரத்மலானை “சக்தி இல்லம்” மண்டபத்தில் கழகப் பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் “காரைக்கால்
T.
لر
2. விய வருடம் தை - பங்குணி)

Page 15
ந்து சமயத்தவர் கைக்கொள்ளும் பல விரத நாட்களில் மகா சிவராத்திரி விரதம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது. மகா சிவராத்திரி ஆண்டுதோறும் மாசிமாதத்து தேய்பிறை பதினான்காம் நாளான சதுர்த்தசி திதியன்று கைக்கொள்ளப்பட்டு வருகின்றது.
சிவராத்திரி ஐந்து வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்க சிவராத்திரி என்பவை மேற்படி ஐந்துமாகும்.
மகாசிவராத்திரி ஆண்டில் ஒருநாள் கைக்கொள்ளப் படுகின்றது. திங்கட்கிழமைகளில் இரவில் நான்கு சாமங்களிலும் தேய்பிறைச் சதுர்த்தசி தொடர்ந்து இருக்குமாயின் அது யோக சிவராத்திரியாகக் கொள்ளப்படுகின்றது. அத்தோடு திங்கட் கிழமைகளில் வரும் அமாவாசை தினமும் யோக சிவராத்திரியாக அமைகின்றது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறைகளில் வரும் சதுர்த்தசி தினங்கள் நித்திய சிவராத்திரிகளாகும். நித்திய சிவராத்திரிகள் மாதத்தில் இரண்டாக ஆண்டொன்றில் பன்னிரண்டு திங்கள் கைக்கொள்ளப்படுகின்றன.
மாதத்திலொருமுறை வரும் மாதசிவராத்திரியானது சித்திரை மாதம் தேய்பிறை அட்டமியிலும், வைகாசி மாதம் வளர்பிறை அட்டமியிலும், ஆனிமாதம் வளர்பிறை சதுர்த்தியிலும், தேய்பிறைப் பஞ்சமியில் ஆடி மாதத்திலும், ஆவணி மாதத்தில் வளர்பிறை அட்டமியிலும், புரட்டாதி மாதம் வளர்பிறை திரயோதசியிலும், ஐப்பசி மாதம் வளர்பிறைத் துவாதசியிலும், கார்த்திகைமாதம் வளர் பிறைச் சப்தமி, தேய்பிறைசதுர்த்தசிகளிலும், மார்கழி மாதத்து வளர் பிறை, தேய்பிறைசதுர்த்தசிகளிலும், தை மாத வளர்பிறை திருதியை யிலும், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியிலும், பங்குனி மாதத்தில் வளர்பிறைத் திருதியையிலும் கைக்கொள்ளப்படுகின்றது.
பக்க சிவராத்திரியானது தை மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி தினம் வரையான பதினான்கு நாட்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
சிவராத்திரி விரதம் தொடர்பாகப் பலகதைகள் உள்ளன. அடி முடி தேடியமை, சோதிப்பிழம்பாகத் தோன்றியமை, வேடுவன் துயில் துறக்க வில்வம் இலையை பறித்துப் போட்டமை இவ்வாறு பல கதைகள் உள்ளன.
சிவராத்திரி தொடர்பிலான சகல கதைகளும் மனிதகுலம் கைக்கொள்ள வேண்டிய மாண்புறு பண்புகளையே வலியுறுத்திக் கூறுகின்றன, ஆணவம் அடக்கப்படவேண்டும், பக்தியுடன் வழிபட வேண்டும், அன்ட செலுத்த வேண்டும், பண்புடன் நடக்க வேண்டும், துன்பதுயரங்களைத் தாங்கும் மனப்பக்குவம் பெற வேண்டும், பசிபோக்கும் மகேஸ்வர பூசையை ஒரு அறமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வாழும் வழி முறைகளைக் காட்டும் சீரிய தத்துவங்களை உள்ளடக்கிய விரதத்தின் சாரம் நம்பிக்கையை உள்ளத்திலே இருத்தி வாழ்வில் உயர்வு காண்பதாகும்.
(இந்து ஒளி W 1.
 

நறிப்படுத்தும் ராத்திரி ாகரன்)
விரதமிருப்பதால் நம்பிக்கை எவ்வாறு ஏற்படும் என்று ஐய மடையத் தேவையில்லை. எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த உலகையே படைத்து, காத்து, அழித்து, அருளி மறைக்கும் ஐம்பெருந்தொழில்களை ஆற்றும் இறைவனைப் பக்தியுடன், நம்பிக்கையுடன் வழிபடுவதே விரதமாகக் கொள்ளப்படுகின்றது. பிறப்புண்டு. அது இறைவன் வகுத்த விதி. இறப்பும் நிச்சயமுண்டு. அதுவும் படைத்த இறைவன் கணித்து வைத்த காலத்தில் நடப்பது. இவையிரண்டுக்கும் இடைப்பட்ட காலம் வாழ்க்கைக்காலமாகும்.
ஒரு உருவைக் கொடுத்து உலகிற்கனுப்பிய இறைவன் அந்த உருவைக் கொண்டு நல்ல முறையில், சீரிய நெறியில், சிறப்பாக வாழ நமக்கு என்றும் துணையிருந்து அருள் செய்ய வேண்டும் என்று அப்பரம் பொருளைப் பக்தியுடன் பிரார்த்தனை செய்யும் காலமே விரதகாலங்களாக அமைகின்றன.
நம்மைவிட மேலான சக்தியொன்று உள்ளது. அந்த சக்தியே இறைவன். அவனின்றி ஓரணுவும் அசையாது” என்போம். அந்த ஆட்டிப்படைக்கின்ற இறை சக்தியே நமக்கு பாதுகாப்பளித்து நல் வாழ்வைத்தரும், நிம்மதியைத்தரும் என்ற நம்பிக்கையை ஞாபகப் படுத்திக் கொள்ளும் நாட்களே விரத நாட்களாக விளங்குகின்றன. ஆன்மா நிலையானது, அழிவற்றது, உலக வாழ்க்கைக் காலத்தில் செய்யும் நன்மை, தீமைகளுக்கேற்ப இன்ப, துன்பங் களை அனுபவிக்கின்றது என்பது நமது சமயக் கொள்கையாயுள்ளது. இறைவனால் வழி நடத்தப்படும்போது எவ்வாறு தீயவழியில் செயல்படமுடிகின்றது, அதன்மூலம் துன்பங்களை அனுபவிக்க வழி ஏற்படுகின்றது என்று நாம் சிந்தித்துப் பார்ப்பதும் உண்டு.
உயிரினங்களிலெல்லாவற்றிலும் உயர்ந்த பிறப்பான மானிடப் பிறப்பைத்தந்த இறைவன் நல்லது எது, கெட்டது எது என்று பகுத்தறியும் ஆற்றல் கொண்ட ஆறாவது அறிவாகிய ஒரு அறிவையும் மனிதகுலத்திற்கு வழங்கியுள்ளமையை நோக்க வேண்டும். அதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.
இறைவன் வகுத்த விதிப்படி தாவரங்கள், ஊர்வன, பறப்பன, நடப்பன, நீர்வாழ்வன எனப்பலஉயிரினங்களும் தமதுவாழ்க்கையை ஒட்டுகின்றன. அவை உண்கின்றன, உறங்குகின்றன. சந்ததியைப் பெருக்குகின்றன. இவ்வாறு விதித்தபடி இயங்கி மடிகின்றன.
ஆனால், மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் தந்து அதன் மூலம் பகுத்தறிந்து உயர் சிந்தனையுடன் வாழும் வழியையும் கருணைக் கடலான இறைவன் தந்துள்ளான். இதை உணராது, பகுத்தறிவைப் பயன்படுத்தாது மனித உருவில் மிருகங்களாக வாழும் பலர் மனித குலத்தை இழிவு செய்கின்றனர்.
அன்பு, பண்பு, அறம், நேர்மை, தூய்மை, பற்று, பக்தி, பாசம், ஒழுக்கம், ஒற்றுமை, நட்பு போன்ற நல்லனவற்றை நாடவேண்டிய மனிதகுலம் கொலை, கொள்ளை, கடத்தல், அடித்தல், முறித்தல், அழித்தல், சிதைத்தல் போன்ற வெறுக்கத்தக்க பாதக வழியில் நடக் கின்றமை மனிதநீதிக்குப்புறம்பானது என்பதை உணர்வதில்லை.
விய வருடம் தை - பங்குணி)

Page 16
மனிதகுலம் மனிதப் பண்புகளுடன் வாழ வழிகாட்டி, நெறிப் படுத்துவதே சமயம் காட்டும்நெறி. மனிதன் இறைவன் மீது பக்தி, நம்பிக்கை கொள்வதன் மூலம் தன்நம்பிக்கை பெறுகின்றான். தனக்கு மேலான ஒரு சக்தி தனக்கு வழிகாட்டி, துணை நிற்கின்றது என்ற நம்பிக்கையை சமய நம்பிக்கை இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை ஏற்படுத்துகின்றது.
இறை நம்பிக்கை ஏற்படும்போது எமது ஒவ்வொரு செயலையும் இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் மேலோங்குவதால் தவறுகள் செய்வதற்கு அச்சம் ஏற்படுகின்றது. நல்வழியில் நடக்க வேண்டும் என்ற மன உறுதி ஏற்படுகின்றது.
நாம் கைக் கொள்ளும் விரதங்கள் யாவும் இறை தத்துவத்தை உணர்த்துவதுடன், நாம் வாழ வேண்டிய நெறி முறையை நமது நினைவிலே நிறுத்தும் தன்மை கொண்டவையாகவும் விளங்குகின்றன.
மனத்திலே தீய சிந்தனைகள், நோக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து தீய செயல்களில் ஈடுபடாது காப்பவை விரதங்கள். காப்பது விரதம் என்று அதனால்தான் சொல்லப்படுகின்றது போலும்,
இந்த வகையிலே சிவ விரதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சக்தி விரதங்கள், விநாயக விரதங்கள், முருகனுக்குரிய விரதங்கள்,திருமாலுக்குரிய விரதங்கள் எனப்பல விரதங்களும் இந்துக்களால் கைக் கொள்ளப்படுகின்றன.
சிவ விரதங்களில் மகா சிவராத்திரி விரதம் முதன்மை பெறுகின்றது. பசித்திருத்தல், தனித்திருத்தல், விழித்திருத்தல் என்பன இவ்விரதத்தின்போது கைக் கொள்ளப்படும் விதி முறைகளாகும். சம்பிரதாயப்படி நோக்காது தத்துவார்த்த அடிப்படையின் விரதங்களை நோக்க வேண்டும்.
உணவை விடுத்து, உறக்கத்தைவிடுத்து, ஒதுங்கியிருப்பது தான் சிவராத்திரி விரதமென்று கருதிவிடக் கூடாது. இவை விரதத்தின் ஒரு அங்கமே. இவை உடல் சம்பந்தப்பட்டவை. உடம்போடு கூடிய அனுஷ்டிப்புகளால் மட்டும் பயனில்லை. அதற்கும் மேல் ஒன்று உண்டு என்பதைத் தெளிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் விரதத்தை முறையாக மேற்கொண்டு உடல், உள மேம்பாட்டை அடைய முடியும்.
பசித்திருத்தல் என்பது உணவை மட்டும் துறப்பது அல்ல. அத்துடன் உண்மையை அறியும் ஆர்வத்தை கொண்டிருத்தல், நல்லனவற்றை அறிய ஆவலாயிருத்தல், நற்காரியங்களில் ஈடுபட மனதில் உற்சாகத்தைக் கொண்டிருத்தல் போன்ற மனது தொடர்பான பக்குவத்தை காண்பதில் ஈடுபாட்டுடன் இருத்தல் பசித்திருத்தலாகக் கொள்ளப்படுகின்றது.
புசிப்பதற்கு உணவில் காட்டும் நாட்டம் போன்று நல்லன வற்றால் உள்ளத்தை உயர்த்தி, வளப்படுத்தும் தேவையை எதிர்பார்த்திருப்பது, அதற்கு வழிகாண்பது பசித்திருந்து விரதம்
மாமன்றச்செய்தி
பேராசிரியர் சி. பத்மநாதன் அவ நூல் வெளி
அகில இலங்கை இந்து மாமன்றமும், திருக்கேதீஸ்வர ஆலய ஏற்பாடு செய்திருந்த மேற்படி நூல் வெளியீட்டு விழா கடந்த பெ சரஸ்வதி மண்டபத்தில் மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள் இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. சி. வி. விக்னே கனகநாயகம் கனக ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையின் தலைவர் திரு. இ.
இந்து ஒளி S.

மேற்கொள்வதன் பொருளாக அமைகின்றது. உடல் நலத்தைப் பேண நல்ல சத்துள்ள உணவு எவ்வாறு தேவையாக உள்ளதோ அதேபோன்று உளநலத்தைப்பேண நல்ல சிந்தனைகள், நோக்கங்களால் மனதை தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும். தெளிந்த சிந்தனை, சீரியநோக்கு, பண்பட்டவாழ்வு, பகுத்தறியும் தன்மையைக் கடைப்பிடித்தால் இறை நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் தானாகவே வந்துவிடும்.
விழித்திரு என்னும் போது கண்களை மூடாது, நித்திரை கொள்ளாது இருப்பது மட்டுமல்ல, அதற்கும் மேல் ஒன்று உண்டு. தீய எண்ணங்கள் மனதிலே புகுந்து தீயவழியில் எம்மை வழிநடத்தாமலிருக்க நாம் என்றும் விழிப்புடன் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
இரவு, பகல் என்றில்லாமல் எந்தவொரு வேளையிலும் நமது அமைதியை, நிம்மதியைக் கெடுக்கும் தீய சிந்தனைகள் நம்மை நாடாமலிருப்பதில் விழிப்புடன் இருப்பதே, உள்ளத்தை, சிந்தனையை துயிலாது விழிப்பாக வைத்திருப்பதே விழித்திரு என்பதன் ஒரு பொருளாக அமைகின்றது. நல்ல சிந்தனைகளுடன் செயற்படும்போது நல்ல செயல்கள் விரிவடைய அது இறை பணியாக உய்ர்வு பெறும். வாழ்வின் சிறப்புக்கு வழி கோலும்.
தனித்திரு என்பது எங்கோ ஒதுங்கி தனித்து மறைந்திருப்பது என்று பொருளாகாது. சுய சிந்தனையுடன், மனச்சாட்சியை முன்னிருத்தி, நேர்மை, உண்மை, அன்பு, பாசம், பண்பு, ஒழுக்கம் போன்ற உயர்குணங்களுடன் தனித்துவமாக இருப்பதே தனித் திருப்பதாக உள்ளது. தனித்துவம் பேண வேண்டும் என்பார்கள். தனித்துவம் என்றால் என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சமுகத்துடன் ஒட்டி உறவாடாது ஒதுங்கியிருப்பதுதான் தனித்திருப்பதாகாது. தனித்துவம் பேணுவது என்பது நல்ல முறையில் வாழ்வதன் மூலம் சமூகத்தில் தனி இடத்தை உயர் இடத்தைப் பெறுவதாகும். அதற்காக தனித்துவமான, உயரிய நோக்கில் சிந்தித்து செயற்படவேண்டும். அதுவே சமய நெறி நின்று வாழும் பெருவாழ்வாகும்.
அடி முடி தேடிய கதையின் மூலம் ஆணவத்தால் அறிவிழந்து, பெருமை இழந்து, தாழும் நிலை கூறப்படுகின்றது.
மனிதன் மாண்புகள் கொண்ட பெருவாழ்வு வாழ வேண்டும். வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும். அப்போதுதான் மனித வாழ்வின் பயனை அடைய முடியும்.
நல்ல நெறியிலே வாழ்வைச் செப்பனிட்டுக் கொள்ள வழியமைப்பவையே சமயங்கள் கூறும் விரதங்களாகும். இந்த வழியிலே சிறப்புகள் மிகப்பெற்ற மகாசிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்து உடல், உளத்தூய்மையும் இறை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் மேலோங்க பண்பட்ட வழியில் சமய நெறி நின்று வாழ வழிகாண்போம்.
ties6fi Hindu Temples of Sri Lanka ஸ்பீட்டு விழா
ப திருப்பணிச் சபையும் குமரன் புத்தக இல்லத்துடன் இணைந்து ப்ரவரி மாதம் 10ம் திகதியன்று மாலை 4.30 மணிக்கு பம்பலப்பிட்டி ளை தலைமையில் நடைபெற்றது. ஸ்வரன் பிரதம விருந்தினராகவும், ஜனாதிபதி சட்டத்தரணி திரு கொண்டதுடன், இவரே நூலின் மதிப்புரையையும் வழங்கினார். நமசிவாயம் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
4. விய வருடம் தை - பங்குவி

Page 17
ܒ
சைவ பாரம்பரிய நந்திச்
ஆசிவே
நந்தி சைவ உலகில் பிரசித்தமானது. நந்தியில்லாச் சைவ
மில்லை. ஏன்? தமிழுமே இல்லை!சைவம் வேறு தமிழ்வேறு அல்ல. இரண்டுமே பிரிக்க முடியாதவை - உள்ளமும் உணர்வும்போல, உரையும் ஒன்று பொருளும் போல. எந்த ஒரு சைவசமயிக்கும் நந்தி என்பது மிகபரிச்சயமானது.
சிவன் கோயில்களிலே வீரபத்திரர் கோயில்களில் கொடிக் கம்பத்துக்கு முன்னமைந்துள்ள பலிபீடத்துக்கு முன்னால் கவாமியை நோக்கியவண்ண்ம் அமர்ந்திருப்பவர் நந்தி. இக்கோயில் களில் உற்சவகாலங்களிலே அடியார் கொடி, குடை, ஆலவட்டம் தாங்கப் பெருமான் வீதிவலம் வருவார். இவற்றில் இலங்குபவர் நந்தி. வாகனமாக அமைவது நந்தி. நந்திவர்மன், அருணந்தி சிவாச்சாரியார், அருணந்தி, நந்தினி என்னும் பெயர்கள் தமிழ் மக்களிடையே பிரபலமானவை. நந்தி பொறித்த நாணயங்கள் முற்காலத்தில் தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்துள்ளன.
சிந்துவெளி நாகரிக காலத்தைய நந்தி உருவங்களும், நந்தி பொறித்த நாணயங்களும் மொகஞ்சதாரோ, கரப்பா ஆகிய இடங் களிற் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது வெளி வந்தமையுங் கருத்திற்குரியது. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தும் உபயோகத்தில் இருந்தன. நந்திக் கொடியும் இருந்துள்ளது. நந்திக் கலம்பகம் எனப் பெயரிய தமிழ்ப் பிரபந்த நூலொன்றும் உள்ளது என்பதையும் நாம் மறந்து விடலாகாது. சோதிடத்தில் நந்திவர்க்கியம் என இருப்பதையும் உன்னுக. ஆகவே நந்தி என்பது எங்கட்குப் புதிதான ஒன்றல்ல.
“நந்தி” என்றதும் சைவப் பெருமக்கள் உள்ளத்தில் ஓடி வருபவர் இடபதேவரே! நந்திக்கு இன்னொரு பெயர் இடபம். உண்மையில் “நந்தி” என்பது சிவனையே குறிக்கும். "நந்தி ஈச்சுரன் ஏறுார்ந்தான் நக்கன் மாஞானமூர்த்தி’ எனச் சூடாமணி நிகண்டு சிவன் பெயர்களைச் சொல்லும்போது நந்தி என்பதையே முதற்கண் குறிப்பிடுகிறது. திருமூலரும் சிவபிரானை ‘நந்தி” என்றே தமது திருமந்திரத்திற் பல இடங்களிலும் குறிப்பிடுவார். "நந்திமகன்றனை”, “நந்தியை எந்தையே” “நந்தி திருவடி நான் தலை மேற்கொண்டு” என ஆங்காங்கு வருகின்றது.
“நந்தி” என்பதன் அர்த்தம் என்ன? கொழும்பு அருளொளி நிலையத்தைச் சேர்ந்த அருட்டிரு அடியார்க்கடியான் கே. சிவகுருநாதன் அவர்கள் “ஒரு யோகியா னவன் பத்மாசனமிட்டுத் தவத்தில் இருக்கும்போது அவனது மூலாதாரத்தில் மூண்டெழும் அனலைச் சூரிய சந்திர கலை களாகிய சுவாசத்தால் மேலெழச் செய்து ஆறாதாரங்களிலுமுள்ள தடைகளைக் கடந்து சிதாகாயத்திற் சுழுனை வழியே ஏற்றி
இந்து ஒளி
 

நிராதாரத்துட் செலுத்த, அது அங்கு ஒளிமயமாகப் பிரகாசிக்கும். இப்படிப் பிரகாசிக்கும் (அனல்) தீ எமது காயக் கோயிலிற் பிரகாசிக்கும்போது நம் + தீ - நந்தி என்று பெயர் பெற்றது. “மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக் காலால் எழுப்புங் கருத்தறி வித்து”என்ற ஒளவைப்பாட்டியின் “விநாயகர் அகவல்”அடிகளை
நோக்குக. அனல் - கனல் - தீ என்பன ஒரு பொருட் சொற்கள். நம் + தீ= நந்தி என்றதில் நம் என்பது நமது, எமது எனப் பொருள் படும். தீ என்பது குறுக்கல் விகாரத்தால் “தி” ஆகியது.
இந்த நந்தி நாமம் இடபத்துக்கு ஆகியது எப்படி? சிலாதர் என்ற முனிசிரேஷ்டர் ஒருவர் யாகம் ஒன்று செய்ய விரும்பினார். வேண்டிய ஆயத்தங்களைச் செய்தார். யாகசாலை அமையும் இடம் சுத்தி செய்யப்பட வேண்டியது முதற் கவனிக்கப்பட வேண்டும். இதற்காக அந்த இடம் உழப்பட்டது. உழுதபோது பெட்டகம் ஒன்று மேலே கிளம்பியது. அப்பெட்டகத்தைச் சிலாதர் திறந்தார். குழந்தை ஒன்று பெட்டகத்துள் இருந்தது. முனிவர் மிக மகிழ்ந்தார். குழந்தைக்கு “செபேசர்” எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். செபேசர் பதினாறு ஆண்டுகால எல்லைக்குள் சகல கலைகளிலும், வேதாகம புராண இதிகாசங்களிலும் வல்லுநரானார். சிவனடி மறவாசிந்தையரானார்.ஐந்துவகை நீர்கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகஞ் செய்தார். சிவபெருமான் பெருமகிழ்வெய்தினார். திருவடித் தீட்சை செய்து அவரை ஆட்கொண்டருளினார். திருநந்தி தேவன் என்னும் தனது நாமத்தையே செபேசருக்குஞ் சூட்டினார். செபேசர் நந்தியான - நந்திகேஸ்வரரான வரலாறு இது. நந்தி கேஸ்வரர் கைலாயஞ் சென்றார். மாதொருபாகர் அவருக்குச் சாரூப பதவியை அளித்தார். அன்றுதொட்டு நந்திகேஸ்வரர் சிவ பெருமானுக்குத் தொழும்படியரானார். வாயிற்காவலராகவும் ஆனார். சிவபெருமானைப்போல் நந்திக்கும் நெற்றிக்கண்ணும், நாலு புயமும், நெருப்பு உருவமும், பிறைமுடியும், கையிற் பிரம்பும் உண்டு. சிவபெருமானின் அதேரூபத்தைக் கொண்டிருக்கும் பதவிசாரூபப் பதவி. இப்பதவி வாயிற் காவலர் பதவியாக மாத்திரம் அமைய வில்லை. முன்னர் தருமதேவதையும், பின் விஷ்ணு மூர்த்தியும் வெள்ளை எருதாகச் சிவனைத் தாங்கிவகித்த பதவியும் நந்திகேஸ் வாருக்கு அமைந்தது. வேதமோதி வெண்ணுரல் பூண்டு வெள்ளை யெருதேறி, நன்றுடையானை தீயதிலானை நரை வெள்ளேறு ஒன்றுடையானை', 'எருதேறி ஏழையுடைனே', 'உமையோடும் வெள்ளை விடைமேல், விடையேனும் நங்கள் பரமன்', 'மால்விடை பாடி', 'விடைமேல் மாதோடு மகிழ்ந்து, நத்தார் படை ஞானன் பசுவேறி' எனத் தேவார திருவாசகங்களிலும், ஏறுர்ந்தானேறே எனத் திருமுருகாற்றுப் படையிலும் வருவன காண்க.
5. விய வருடம் தை - பங்குணி)

Page 18
நந்தி சிவசந்நிதான வாயிற்காவ்லனாகவும், சிவனுTரும்
வாகனமாகவும் அமைந்ததன்றிக் கொடியாகவும் அமைந்துள்ளார். திருவாசகத்துத் திருத்தசாங்கத்திலே சிவனார் கொடிபற்றி
கூற வந்த மணிவாசகப் பெருமான் கிளி ஒன்றை விளித்துக்
கூறுவதாக அமைந்த பாடல் இது.
சோலைப் பசுங்கிளியே!துநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும் ஏதிலார் துண்னென்ன மேல்விளங்கி ஏர்கட்டும் கோதிலா ஏறாங் கொடி
縫
நந்திக்கொடிதா
சைவ நீதியை அகிலத்திற்கு எடுத்துக் காட்டுவது நந்திக்கொடி அறிவின் ஆழம், அருளின் தெளிவு. அமைதியின் மேன்மை, ஆண்மையின் வீரம், கருணையின் கம்பீரம் அனைத்துமாக இருப்பது ‘நந்திக்கொடி’ என்னும் சைவக் கொடி ஆகும்.
சைவமக்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமானே. அவனன்றி வேறு தெய்வமில்லை.
&
“சிவனொடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை அவனொடெரப் பார் இங்குயாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரையானே” - திருமந்திரம்)
விநாயகர், முருகன், வைரவர், அம்பிகை எல்லோருமே சிவனின் பிரதி பிம்பம்தான். அதனால், நந்திக்கொடியை எல்லா ஆலயங்களிலும் அமைப்பது நமது சமயத்திற்கு நாம் காட்டும் விசுவாசம்.
சிவன் பரிபூரண ஞானநாயகன். நந்தியும் ஞானத்தின் அடையாளம் , திருமூலர் ஏறக் குறைய ஒன்பது இடங்களுக்கும் மேலாக ‘நந்தியை’ சிவன் என்றே போற்றுவார். நந்தி என்பது பல பொருள் குறித்த ஒரு சொல். நந்தி - சிவன். சிவனாலயத்தில் பலிபீடத்தில் பக்குவம்
-----------------------------x--X---------->
LomodbpěF
நூலகம் திறப்பு விழா
அகில இலங்கை இந்து.மாமன்றத்தின் பராமரிப்பில் இயங்கி வரும் இரத்மலானை விடுதி மாணவர்களது பயன் கருதி நூலக மொன்று புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இரத்மலானை சக்தி இல்லத்தில் கடந்த டிசெம்பர் மாதம் 30ம் திகதியன்று இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் பிரதி கல்வி அமைச்சர் கெளரவ மு. சச்சிதானந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
(இந்து ஒளி
 

சிவனார் கொடி “ஏறாங்கொடி’ என்கிறார். ஏறாங்கொடி ஏற்றுக் கொடி, “ஏற்றுயர் கொடியுடையாய்” என மணிவாசகரே தமது திருப்பள்ளியெழுச்சியில் மேலும் கூறுவார். இதற்கு ஆதாரமான மேற்கோள்கள் பல எமது சாத்திர நூல்களிலும் தோத்திர நூல்களிலும் புராணங்களிலும் தமிழிலக்கியங்களிலும் மலிந்து கிடக்கின்றன. ஆகவே நந்திக்கொடி சைவக்கொடி. சைவநெறி என்பது தப்பு. "மேன்மைகொள் சைவநீதி’ என்றார் ஆன்றோர். எனவே நந்திக்கொடி சைவநீதிக் கொடி.
ன் சைவக்கொடி
பெற்ற ஜீவான்மா திருக்கைலையில் வேத்திரப்படை ஏந்தி நிற்கும் தொண்டன் கொடியாக ஒளிரும் பொழுது வெற்றியின் சின்னம் ஊறும் விடையாகக் காணும்பொழுது அதுவே அறத்தின் திருவுருவம்.
இத்தகு சிறப்புகள் பொருந்திய நந்தி தேவனை பல்லவ மன்னர்கள் தங்கள் கொடியாகவும், நாணயமாகவும் கொண்டனர். முதலாம். இரண்டாம். மூன்றாம் ‘நந்திவர்மன்” என்றே தங்கள் பெயரிலே நந்தியைத் தாங்கினர். மூன்றாம் நந்திவர்மன் “தெள்ளாறு’ எறிந்த தனது வீரத்தை ‘நந்திக் கலம்பகக்” காப்பியமாக்கினான். தன்னையும் “தமிழ் நந்தி” என்று அழைத்து அகம் பூரித்தான்.
இத்தகு பெருமைகள் கொண்ட நந்தியைத் தமிழர்கள் மறவாது போற்ற வேண்டும். ஆலயங்களில், சமூக சமய விழாக்களில் நந்திக்கொடி ஏற்றுவதை ஒரு மரபாகப் பேண வேண்டும். அதுவே, நாம் பிறந்த சமயத்திற்கு நாம் காட்டும் நன்றியாகும். இலங்கைத் திருநாட்டில் நந்திக்கொடியையே தனது மூச்சும் பேச்சுமாகக் கொண்டிருக்கும் சைவப் பெரியார் சின்னத்துரை தனபாலா அவர்களை இத்தருணத்தில் நினைவில் கொள்வது நன்றியின் நினைவாகும்.
“நந்தி நாமம் வாழ்க’ -திருமதி வசந்தா வைத்தியநாதன் நன்றி தினக்குரல் - 26082006)
-----------X----X---->- -X----X----X--X----x- - - -X- -X-
செய்திகள்
சிவராத்திரி வழிபாடு
மாமன்றத்தின் சிவராத்திரி பூசை வழிபாடு, 2007 02, 16ம் திகதியன்று மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை வரை மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில் நடை பெற்றது. நான்கு சாமமும் விசேட பூசைகளுடன், லிங்கோற்பவ கால விசேட அபிஷேகமும் இடம்பெற்றது.
லேக்ஹவுஸ் இந்து மன்றத்தினர் வழங்கிய பஜனைப் பாடல் நிகழ்ச்சியும், இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள் வழங்கிய இசை, கலை நிகழ்ச்சிகளும் சிறப்பு அம்சங்களாக இடம்பெற்றன.
f
விய வருடம் தை - பங்குணி)

Page 19
தமிழகம் பண்டைக் காலந்தொட்டுச் சிவவழிபாட்டில் சிறந்து விளங்கியிருக்கின்றது. சங்க இலக்கியங்கள் சிவனை முக்கண் (மூன்று கண்கள்)கொண்டவன் என்றும், அவன் கோயில் கொண்டி ருந்த இடத்தை முக்கட்செல்வன் நகர் என்றும் சிறப்பிக்கின்றன. தமிழர்கள் சிவனை நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங் களின் வடிவாய் வணங்கி வருகின்றனர். சிவன், நிலமாக காஞ்சி புரம் மற்றும் திருவாரூரிலும், நீராகத் திருவானைக்காவிலும், தீயாகத் திருவண்ணாமலையிலும், காற்றாகத் திருக்காளத்தி யிலும், வானாகச் சிதம்பரத்திலும் வீற்றிருப்பதாகக் கருதி வழி படுகின்றனர். இறைவன் ஐம்பூதங்களின் சாரமாய் இருக்கிறான். ஐம்பூதங்களே உடலை இயக்குகின்றன என்னும் தத்துவம் சிவவழி பாட்டால் உணர்த்தப்படுகின்றது.
ஐம்பூதங்களின் வழிபாட்டில் “தீ” அக்கினிக்குரியது திரு வண்ணாமலை. இது சென்னையிலிருந்து நூற்றுத் தொண்ணுாறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மலையின் பெயரே ஊரின் பெயராய் வழங்கப்படுகிறது. தல இறைவனின் பெயர் அண்ணாமலையார்; இறைவியின் பெயர் உண்ணாமுலை அம்மை. திருவண்ணாமலை தானே தோன்றிய காரணத்தால் சுயம்பு இலிங்கமாக வணங்கப்படுகிறது. மலை சிவலிங்கமாகக் கருதப் பட்டு வழிபாட்டிற்குரியதாக விளங்குகிறது. இறைவனைக் கோயிலில் வழிபட்ட பக்தர்கள் மலை வடிவமாய் எழுந்தருளி யிருக்கும் சிவனை வலம் வந்து மகிழ்வடைகின்றனர். சற்று ஏறக் குறைய பத்து ஆண்டுகளாகத் திருவண்ணாமலை கிரிவலம் புகழ் பெற்ற ஒன்றாய் விளங்கியிருக்கின்றது. பதினான்கு கிலோமீற்றர் சுற்றளவு கொண்ட கிரிவலம் பாதையைப் பக்தர்கள் பெளர்ணமி நாளில் வலம் வருகின்றனர். சந்திரனின் ஒளிக்கதிர்கள் மலையில் பட்டு எதிரொலித்து மனிதனது உடம்பில் பரவுவதால் உடலுக்கு அளவற்ற சக்தி கிடைக்கும் என்ற செய்தி திருவண்ணாமலையின் புகழ்பாடும் நூல்களில் பரவலாகக் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அருணாசலப் புராணம் கிரிவலம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் புராண நோக்கில் பேசுகின்றது. பக்திச் சிந்தனையையும், புராணக் கருத்துக்களையும் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டுப் பொது வான கண்ணோட்டத்தில் கிரிவலத்தை நோக்கினால் அதனால் மனித சமுதாயம் பெறும் நன்மைகள் தெளிவாகப் புலனாகும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளும் வாகனப் பெருக்கமும் மிகுந்து விட்ட இந்நாளில் நடப்பதற்கே யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நடந்தே பல இடங்களுக்குச் சென்ற காலம் மலை யேறி, ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டராவது நடைப்பயிற்சி வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கும் அளவு நாகரிகம் வளர்ந்துவிட்டது. அக்காலத்தில் ஊரின் ஒதுக்குப்புறத்தில் மற்றும் மலைமேல் கோயில்கள் கட்டியதில் உட்பொருள் ஒன்று இருக்கின்றது. இறைவனை வழிபடவேண்டுமென நினைத்துக் கோயில்களை நாடிச் செல்வதில் மன அமைதி கிடைக்கிறது.
இந்து ஒளி
 

OD6)6O
L6lb6 (LPLs).
கேசன்
திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலம் பலவகைகளில் மனிதனுக்கு நன்மைகளை வழங்கும் நிகழ்வாக நடைபெற்று வருகின்றது. பதினான்கு கிலோமீட்டர் சுற்றளவுடைய மலைப் பாதையில் கோவில்கள், புனிதநீர்நிலைகள் மடங்கள் ஆசிரமங்கள் முதலியன நிறைந்திருக்கின்றன. இவை கிரிவலம் வருவோரின் சிந்தனைகளைச் சிதறவிடாவண்ணம் கட்டிக் காக்கின்றன. மனிதனுக்கு மன ஒருமைப்பாடு அவசியம். மன ஒருமைப்பாட்டை வளர்க்கச் சிறந்த வழியாகக் கிரிவலம் அமைகிறது. கிரிவலப் பாதையைச் சுற்றியுள்ள கோயில்கள் மற்றும் புனித நீர் நிலைகள் புராணங்களோடு தொடர்புபடுத்தப்பட்டு வழிபாட்டிற்குரியனவாக இருப்பதால் கிரிவலம்வருவோரின் நினைவுகள் இறைசிந்தனையை விட்டு விலகுவதில்லை. நான்கரை மணிநேரம் நடைப்பயணமாக அமைவதால் மனதைச் செம்மைப்படுத்தவும் நினைவுகளை ஒருமுகப்படுத்தவும் சிறந்த வழியாகக் கிரிவலம் அமைகிறது.
மூலிகை வளம் நிறைந்த மலை என்று திருவண்ணாமலை கூறப்படுவதுண்டு. குறிப்பாக மழைக்காலங்களில் மட்டுமே இங்கு மூலிகைகள் காணக்கிடைக்கின்றன. கோடைக்காலத்தில் திருவண்ணாமலைப் பகுதியில் மிகுதியான வெப்பம் நிலவுவத னால் மூலிகைகளைக் காணமுடிவதில்லை. மிகச் சமீப காலத்தில் பாதையில் தொடங்கப்பட்ட இரமண மகரிசி இயற்கை வைத்திய சங்கம், இயற்கையின் குரல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு முதலியன மூலிகைகளைப் பயிரிட்டு அதன் பயன்பாடுகளை மக்களுக்கு உணர்த்தி வருகின்றன. மக்களுக்கு நன்கு அறிமுக மான வல்லாரை, தூதுவளை, ஆடாதொடா, சிறு குறிஞ்சான், சோற்றுக் கற்றாழை, அருகம்புல், அத்தி, கடுக்காய், வெள்ளைக் கரிசலை, கற்பூரவல்லி, கீழாநெல்லி, வில்வம், துளசி, நாவல், சிறியாநங்கை, வேம்பு, செம்பருத்தி, தான்றிக்காய், நெல்லிக்காய், ஆவாரம்பூ காசினிக்கீரை, குப்பைமேனி, மணத்தக்காளி, முடக்கத்தான், ஒரிதழ் தாமரை முதலிய மூலிகைகள் மற்றும் அவற்றினின்று கிடைக்கும் பொருட்களின் மூலமாக மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன. இதில் தயாரிக்கப்படும் மருந்துகள் சளி, இருமல், இளைப்பு, காய்ச்சல், தலைவலி, சர்க்கரைநோய், வயிற்றுவலி, உடற்சூடு, நரம்புத்தளர்ச்சி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாயு கோளாறுகள், வெள்ளைபடுதல், சிறுநீரகக் கற்களால் ஏற்படும் சிக்கல்கள், மூட்டுவலி, ஆண்மைக் குறை பாடு ஆகியன உடல்நலக் குறைபாடுகளை நீக்கும் தன்மை பெற்றவையாகும். கிரிவலப் பாதையின் மேற்குப்புறம் மருத்துவச் சாலையின் முன்பு பெளர்ணமி நாளின் முழு இரவும் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
திருவண்ணாமலை அரசுக் கலைக்கல்லூரியின் எதிரில் திருவண்ணாமலை பசுமைச் சங்கத்தின் அங்கமாய் இயற்கையின் குரல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. மக்களிடம் இயற்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்,
7. விய வருடம் தை - பங்குணி)

Page 20
மூலிகைகளின் பண்பாடுகளை உணரச் செய்ய வேண்டும் என்னும் நோக்கங்களைக் கொண்டு இச்சங்கம் செயற்பட்டு வருகின்றது. மலைச்சரிவில் இருபது ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டத்திற்குள் சென்றதும் மூலிகை மணம் வீசத் தொடங்குகிறது. காதால் கேட்டுக் கண்களால் பார்த்திராத, வாயால் உச்சரித்து மூக்கினால் முகர்ந்தறியாத பல மூலிகைகளை இங்கே காணமுடிகிறது. மூலிகைகளின் மணம் உடலுக்குப்புத்துணர்வையும், அங்கு நிலவும் பசுமையான சூழல் மனதுக்கு அமைதியையும் தருவதாக இருக்கின்றது.
இயற்கையின் குரல் சுற்றுச் சூழல் அமைப்பின் மூலமாக எலுமிச்சை, கருவக்கனை, அவனி, பீடி இலைமரம், நானா, காட்டு நரத்தை, காட்டு கறிவேப்பிலை, கறிவேப்பிலை, காட்டு எலுமிச்சை, குங்கிலியம், விளா வில்வம், அகில், வால், சூரா, மாகோணி, சொக்கனா, சவுட்டுச் செடி, பெருமரம், இலந்தை, பூவரசன், மருதாணி, குகமதி, கண்ணிரா, அடம்பா, குமிழமரம், அழிஞ்சில், நாவல், மூங்கில், முள்முருக்கன், கல்யாணமுருங்கை, சிசு, அடுக்குவாகை, வேங்கை, சரக்கொன்றை, அந்திமந்தாரை, அத்தி, இருவாட்சி, புளியன், ஆசன், வன்னி, கருங்காலி, வாகை, குறிஞ்சி, கருவாகை, கொடுக்காப்புளி, தூங்குமூஞ்சி, வாதாம், நீர்மருது, கடுக்காய், பிள்ளைமருது, தான்றி, இலுப்பை, ஆயா, பலா, மகிழ மரம், நீர், கடம்பு, கும்பி, செந்தணக்கு, பொலவு, வலம்புரி, அரளி, கருபாலை, தேத்தான் கொட்டை, மா, புங்கன், கிளுவை, கறிவேம்பு, குட்டிபலா, முள் அரசன், வெள் இலம்பு, காட்டாமணக்கு, ஒடுவன், இஞ்சி, அரசன், ஆலன், ஒதியமரம், தேக்கு, நொச்சி, நீர்நொச்சி, பாதிரி, மயிலாடி, குமளா, திருநீற்றுப் பச்சை, செம்பருத்தி, மாதுளை, நீர்மருதி ஆகிய மரங்களும் மூலிகைகளும் வளர்க்கப் படுகின்றன. இங்கு கூறப்பட்ட மரங்களும், மூலிகைகளும் மருத்துவக்குணம் கொண்டவை. இம் மூலிகைகளின் மணத்தைச்
தீதும் நன்றும்
6Iல்லாமே விதி என்கிறான் கோழை, ஆற்றலுள்ளவன், என் விதியை நானே தீர்மானிப்பேன் என்கிறான். மனவலிமைதான் நமக்குத் தேவை. துன்பத்திற்கு முக்கிய காரணியாகத் திகழ்வதே, இந்த மன பலவீனந்தான். மன பலவீனத்தால், அறியாமை ஏற்படுகிறது. அறியாமையால் பயம் என்ற உணர்வு, நமது ஆழ் மனதில் விதைக்கப்பட்டு, எமது வாழ்நாள் முழுவதுமே தொடர் கதையாகிவிடுகிறது. ۔۔۔۔۔۔
ஊழ்வினை என்ற ஒன்றும், இந்த பயத்திற்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. இதை உள்ளத்தால் உணர்ந்த வள்ளுவன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஊழ்வினை என்ற ஒன்று உலகில் இல்லை; அப்படியே இருந்தாலும், மதிநுட்பம் உடையார்க்கு ஆங்கே விதிநுட்பம் எவ்வகையிலேனும் இடையூறை ஏற்படுத்திவிடமுடியாது, என அறுதியிட்டுச் சொல்லுகிறான். அத்தோடு,
"ஊழ்ையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உருற்றுபவர்”
இந்து ஒளி
 

சுமந்துவரும் காற்று உடலுக்கு நலம் தரக்கூடியது. சாதாரண நாட்களில் இப்பகுதியில் அதிகாலை அல்லது மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் தூய்மையான காற்றையும் மூலிகை மணத்தால் உடல் நலனையும் பெறலாம்.
கிரிவலப் பாதையில் உடல் நலத்திற்கு நன்மை தரும் உணவு வகைகளாகத் தேன், நெல்லிக்கனியும், மூலிகை ரசமும் விற்பனை செய்யப்படுகின்றன. இவை சித்த மருத்துவச் சாலைகளால் தயாரிக்கப்படுகின்றன. நெல்லிக்காய்களைத் தேனில் ஊறவைத்து உணவாகத் தருகின்றனர். நெல்லிக்காய் விட்டமின் சத்துக்கள் கொண்டது. தேன் பல்வேறு தாதுப் பொருள்களை உள்ளடக்கியது. தேன் நெல்லிக்கனி உடற்சோர்வு, நரம்புத்தளர்ச்சி, இரத்தசோகை முதலியவற்றைக் குணப்படுத்தும் தன்மையுடையது. மூலிகை இரசம், மிளகு, புளி, சீரகம், மிளகாய் உட்பட பத்துக்கு மேற்பட்ட மூலிகைப் பொருட்கள் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. கால், கைவலி, உடற்சோர்வு, வாயுக்கோளாறு முதலியவற்றை நீக்கும்
தன்மையதாக மூலிகை ரசம் பயன்படுகிறது.
திருவண்ணாமலை கிரிவலம் வழிபாடு சார்ந்த நிலையில் புகழ் பெற்றிருந்தாலும் அனைவருக்கும் தேவையான உடல் நலத்தை வழங்குகிறது. மலையை வலம் வருவதால் ஒருமுகச் சிந்தனை வளர்கிறது. நடப்பதனால் உடல் உறுப்புக்கள் சீராக இயங்குகின்றன. இயற்கை மருத்துவப் பொருட்கள் நோயற்ற நல்வாழ்வை வழங்கத் துணை நிற்கின்றன. ஆன்மீகத்தை மனித சமுதாயம் வளம் பெறப் பயன்படுத்த வேண்டும் என்னும் தத்துவத்தைத் திருவண்ணாமலை கிரிவலம் அமைதியாக உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. அதன் பலன்களை அனைவரும் பெறவேண்டும்.
(நன்றி:தாமரை - அக்டோபர் 2006)
பிறர்தர வாரா
மனம் தளராத விடாமுயற்சி உடையவர்கள், ஊழ்வினை என்ற ஒன்று இருந்தாலும் அதைப் புறமுதுகுகாட்டி ஒடிடச் செய்திடுவர் என்கிறான். மன பலவீனமும், அதனால் ஏற்படும் துன்பமும், பயமும் மனிதனுக்கு ஏற்படுவதற்கு மூல காரணியாக அமைந்து விடுவது, இந்த ஊழ்வினையை அவன் நம்புவதுதான். “என் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ, அதன்படிதானே எல்லாமே நடக்கும்” என, அவன் தன்னையே நம்பாததால், அவன் தானே தன் அழிவுக்கு வழிவகுத்துக் கொள்ளுகிறான். நம்பிக்கை என்ற ஒரு சொல் சாதாரணமானதாகத் தெரியலாம். ஆனால் அதன் சக்தியை, வலிமையை நாம் பரீட்சித்துப் பார்ப்பதில்லை. நம்பிக்கை என்பது, முடிவாகத் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அது ஆழ் மனதில் ஊறிப்போன எண்ணத்தின் வெளிப்பாடு. இதை எப்படியும் செய்து முடிப்பேன் என்ற ஒருவித உந்துதல் சக்தி. இது நிச்சயம் நடக்கும், நடக்க வேண்டும் என்ற தணியாத வெறி. இவைகள் எமது ஆழ் மனத்தட்டிலிருந்து மேலெழும்புதல் அவசியம்.
“மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்’ என்கிறான் பாவலன் பாரதி மனதில் தழும்பலற்ற
விய வருடம் தை - பங்குணி)

Page 21
எண்ணம்; தடுமாற்றமடையாத உறுதியான உள்ளம் எத்தகைய சூழலிலும் எதையும் சமாளிக்கக்கூடிய அறிவாற்றல்; அத்தோடு விடாமுயற்சி இருக்குமானால், நிச்சயமாக ஒருவன் வாழ்வில் உயர்நிலை அடைந்திட முடியும். இவைகள் அத்தனையும் குறைந்து, நிலை குலைந்து போவதற்கு முக்கிய காரணமே இந்த “மனப்” பயமே என்பதை நாம் சற்று சிந்தைக்கு இடம் கொடுத்தல் நன்று. சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டிடும் போது, பயம் காட்டி உணவு ஊட்டுவதைப் பார்க்கிறோம். இப்பயம் குழந்தைகளின் ஆழ் மனதில் பதிந்து, அதுவே அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கப் போகிறது என்பதைப் பற்றி, எந்தத் தாய்மார்களும் எண்ணிப் பார்ப்பதில்லை. மனித வாழ்வில் விதைக்கப்படும் முதலாவது நிகழ்வே இந்த பயம் தான். துணிவு, பரிவு, பாசம் இவைகளையும் உணவுடன் ஊட்டியிருந்தால், அவன் எதிர்கால வாழ்வில் எதையும் துணிந்து செயலாற்றக் கூடிய ஆற்றலை, அறிவை அவன் இயல்பாகவே பெற்று விடுவான். பயம் என்ற ஒன்று இருப்பதாகவே அவன் எண்ணிட இடமில்லாது போய்விடும். பயம் என்பது ஒரு உணர்வு. அவ்வுணர்வை அழித்தொழிப்பதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது; தெளிந்த பகுத்தறிவுடன் கூடிய துணிவு. தெளிந்திட்ட அறிவின்றி எம்மால் எதையும் சாதித்திட முடியாது. எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை, ஆர்வம் இருக்க வேண்டும். அறிவாற்றல் நிறைந்த கேள்விகள், சிந்தனையில் முளைவிடல் வேண்டும். உயர் சிந்தனைகளின் விளைவே, இன்றைய விஞ்ஞான அறிவியல் வளர்ச்சி என்பதை நாம் நமது எண்ணத்தில் கொள்வது நல்லதல்லவா?
அறிவ என்றால் என்ன? அதற்கு உருவம் உண்டா? அறிவுக்கு வரைவிலக்கணம் கூறத்தான் முடியுமா? உணர்வுக்கு, உருவம் கிடையாதே முடியும் என்றான் எமது பண்பட்ட பண்டைய தமிழன். முருகன் என்ற பெயரிலே சிலை வடித்து, அறிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விளக்க, கூர்ந்து, அகன்று நீண்டிருக்க வேண்டும் என வேலையும், சுடர்விட்டு ஒளிசிந்தும் விழிகளிலே அன்பையும் அழகையும் வடித்தான். எம்மதத்தவர்களும் எண்ணியும் பார்த்திடாத ஒன்றை, புரிந்து கொள்ள முடியாத ஒன்றை நாம் பெற்றிருக்கிறோம். பெருமையும் அடைகிறோம் அறிவு, அன்பு, துணிவு, சமயோசித புத்திசாலித் தனம் அத்தனையும் ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த உருவமே முருகன். “யாமிருக்கப் பயம் ஏன்?” என முருகன் கூறுவதாக கற்றறிந்தோர் கூறுவர். இதன் உண்மையான தத்துவக் கருவூலம் என்ன? அன்பு, பணிவு, துணிவ இவை எல்லாமே உள்ளத்தில் ஊற்றெடுத்து வருவதே “அன்பே சிவம்” எனவும், அன்புதான் இறைவன் எனவும், அன்பு நிறை நெஞ்சங்கொண்ட இல்லமே
தியானம் செய்யும் போது இறைவனது நாமமும் ! முழ்கியிருக்க வேண்டும். ஒருவரது பெயரைச் சொல்லும்ே நாமத்தை உச்சரிக்கும்போது அவனது உருவத்தையும் நி
நம் உயிர்க்குயிராய் இருப்பவர் கடவுள். நம் உ வாழ்ந்திருக்கிறேம் என்று உணருகிறோம். நாம் வாழ்ந்திரு பெருவாழ்வு ஆக்கிவிட்டால் இந்த உடலோடு சம்பந்தப்பட
இந்து ஒளி

கோவில் எனவும், இறைவன் ஒருவனே எனவும் எல்லா மதங்களுமே கூறுகின்றன. “இறைவன் என்பவன் வெளி உலகில் இல்லை. உனது இதயத்தில் இருக்கிறான். உனது பக்கத்திலும், ஏன் உலக முழுவதுமே நிறைந்திருக்கிறான். ஆகவே நீ ஏன் பயப்பட வேண்டும்? இறைவன் உன்னுள்ளே, உன் இதயத்தி னுள்ளே எப்போதும் இருக்கிறான் என்பதை, நீ ஏன் உணர்ந்திட மறுக்கிறாய்? உன் இதயம் உன்னுள்ளே இருக்கும் வரை, அதில் உண்மையாகவே இறைவன் இருக்கிறான் என, நீ உளமாற நம்பினால், நீ எவருக்கும் அஞ்சிடத் தேவையில்லை. அச்சம் கொள்ளத் தேவையில்லை. அன்பு, பண்பு, புத்திசாலித் தனம், சகோதரத்துவம் இவை அத்தனையும் உன் இதயத்தினுள்ளேதான் இருக்கின்றன. நீ நினைத்தால் அவைகளை வெளிக்கொணர முடியும். நான் உன்னுள்ளேதான் இருக்கிறேன். நீ உன் இறை வனாகிய முருகன் வாழ்ந்திடும், உன் இதயமாகிய இறைவனிடமே கேள். அந்த இதயத்தில் நான் இருக்கும் வரை, நீ எதற்கும் அஞ்சாதே. உன்னை, நீயே நம்பு நம்பிக்கையில்தான் உன் வாழ்வு தங்கி இருக்கிறது” என, உன் இதயமே உன்னிடத்தில் கூறுவது தான் யாமிருக்க பயம் ஏன்? இதயம் ஒரு கோவில் எனவும், மனம் போல வாழ்வு எனவும், உள்ளத்தனையது உயர்வு எனவும் எமது பண்டைய தமிழ் அறிவறிந்த அறிவாளிகள் கூறிச் சென்றதையும் சற்று சிந்தனை கண் கொண்டு பார்த்திடல் அவசியமல்லவா?
“நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். உன்னை வலிமை படைத்தவன் என்று மனப்பூர்வமாக நம்பினால், உன்னால் எதையும் சாதித்திட முடியும். எல்லாவித ஆற்றல்களும் உன்னில் உண்டு” என்கிறார் சுவாமி விவேகானந்தர். நம் உயர் வாழ்வில் தடைக்கல்லாக அமைந்திருப்பது இந்த மனப்பயம் என்ற பகையாளியே!“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்பது புறநாநூறு எமக்குத் தந்திடும் அறிவுக்கு விருத்தி படைத்திடும் பகுத்தறிவு பாடம். நல்லவைகளாகட்டும், தீயவைகளாகட்டும் பிறரால் நமக்கேற்படுவதல்ல. ஆகவே, என்னிடமிருந்தே, என்னிடமிருந்தே, என் ஆழ் நல் மனமே, என்னை உன்னைப் போல வாழ வழிகாட்டு. சற்று பொறுங்கள். அதோ வான வீதியிலே தவழ்ந்து வரும் அந்த மெல்லிய தத்துவ, கருத்தாளம் கொண்ட, கவிஞர் கண்ணதாசனின் பழம் பாடல் ஒன்று மாலை இளந்தென்றலில், எம் சிந்தையை எங்கோ சிறகடித்துப் பறந்திடச் செய்கின்றதே. அதையும் சற்று கேட்போமா?
'நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே கொஞ்சு மனமும் குளிர்ந்த வார்த்தையும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே.”
இறைவனும் ஒன்றே என்ற எண்ணத்துடன் இறையுணர்வில் பாது அவரது உருவம் தோன்றுகிறது. அதுபோல இறைவன் னைவில் கொள்ளவேண்டும்.
(சுவாமி தரியானந்தர்)
யிரை நாம் கண்ணால் காண முடியாது. ஆயினும் உயிர்
ப்பதைக் குறித்து நமக்குச் சந்தேகமில்லை. நமது வாழ்வைப்
ாத பேருயிர் நிலை நமக்கு உண்டு என்பதை உணருவோம். (சுவாமி சித்பவானந்தர்)
9. விய வருடம் தை - பங்குணி)

Page 22
இந்து, இந்திய தத்துவஞானங்களில் ஒன்றாக வேதாந்த மானது காணப்படுகிறது. வேதத்தின் இறுதிப்பகுதியாகக் காணப் படும் உபநிடதங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்கி தெளிவினை ஏற்படுத்துவதற்கு தோற்றம் பெற்ற தத்துவங்களே வேதாந்தங் களாகும். வேதாந்த தத்துவத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் சங்கரர், இராமானுஜர், மத்துவர் போன்ற பலர் குறிப்பிடத்தக்க வர்களாவார். இவற்றுள் சங்கரரின் வேதாந்தம் அத்வைதம் என்றும், இராமானுஜரின் வேதாந்தம் விசிட்டாத்வைதம் என்றும், மத்துவரது வேதாந்தம் துவைதம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்து, இந்திய மெய்ப்பொருளியல் எனும் பெரிய அமைப்பு முழுவதையும் பிரமம், ஆன்மா என்ற தூண்கள் தாங்குவனவாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வகையில் வேதங்களில் ஆரம்பித்து உபநிடதங்களில் விரிவுபெற்ற பிரமம், ஆன்மா பற்றிய தத்துவ சிந்தனைகள் உள்ளிட்ட பிரமம், ஆன்மா, பிரபஞ்சம், முத்தி அடை வதற்குரிய வழிமுறைகள், ஒழுக்கவியல் சிந்தனைகள் என்ப வற்றினை தெளிவுபட எடுத்துரைத்த வகையில் சங்கரரின் அத்வைத தத்துவத்திற்கும் பெரும் பங்குள்ளது எனலாம்.
இவ்வகையில் சங்கரரின் வேதாந்தம் அத்வைதமாகும். இதன் பொருள் இரண்டல்ல ஒன்றாகும் (அ-அல்ல, துவைதம்-இரண்டு = இரண்டல்ல) அதாவது பிரமம் மட்டுமே உண்மைப் பொருள். ஏனைய பொருட்களாகிய ஆன்மா, உலகம் என்பன கானல் நீரினைப் போன்று வெறும் தோற்றங்களாகும். இவரது முக்கிய போதனை யாக “ஆன்மாவே பிரமம்” என்பதாகும். அதாவது சங்கரர் வேத உபநிடத மகாவாக்கியமான ஏகம்ஷத் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரமம் மட்டுமே உள்ளபொருள் எனக் கூறினார்.
சங்கார் தனது தத்துவத்தில் பிரமம் மட்டும் உண்மைப் பொருள் என்பதை விவர்த்தவாதத்தினூடாக நிரூபித்துக் காட்டுகிறார். இவ்வகையில் விவாதவாதம் என்பது ஒரு பொருள் மாறாமல் இருந்ததை மாற்றிவிட்டது எனக் கூறுதலாகும். இதைக் கொண்டு எவ்வாறு பிரமம் உலகமாகவும், ஆன்மாக்களாகவும் தோன்றுவதை நாம் பின்வருமாறு நோக்கலாம். 1. பிரமம் உலகமாக மாறுதல் - உ+ம்: கயிறு பாம்பாக தோன்றுதல். இங்கு பொருள் மாற்றமடைவதைக் காணலாம். அதாவது காரணம் உண்மை, காரியம் பொய்யாகும். எனவே காரணமாகிய பிரமம் உண்மை, அக்காரணத்தில் இருந்து தோன்றிய காரிய மாபை பாம்பு பொய்யாகும் இதே போலவே பிரமம் மாயையின் காரணத்தினால் உலகமாக தோன்றுகிறது. 2. பிாமம் ஆன்மாவாக மாறுதல் - உ+ம்: வெண்ணிறப்பூவை செந் நிறகண்ணாடியில் பார்த்தல். இங்கு இயல்பு மாறுகிறது. அதாவது வெண்ணிறப்பூவை செந்நிறக் கண்ணாடியில் பார்க்கும்போது வெண்ணிறப்பூ செந்நிறமாக தெரிகிறது. கண்ணாடியை அகற்றினால் வெண்ணிறப்பூவாகவே இருக்கும். இதேபோலவே பிரமம் மாயையின் காரணத்தினால் ஆன்மாவாக தோன்றுகிறது எனலாம்.
இவ்வாறாக பிரமம் ஆன்மாக்களாகவும், உலகமாகவும் தோன்றக் காரணம் மாயை எனக் கூறுகிறார். இதனால் சங்கரரை
(இந்து ஒளி
 

மாயாவாதி என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும் சங்கரர் மாயைக்கு இருவகையான இயல்பினை கொடுக்கின்றார். அவை 1. ஆவரணம் - உள்ளதை மறைக்கும் இயல்பு. 2. விஷேபம் - இல்லாததை தோற்றுவிக்கும் இயல்பு. எனவே, உள்ளபொருளாகிய பிரமத்தினை ஆவரணசக்தியினால் மறைத்து, இல்லாதபொருட்களாகிய ஆன்மா, உலகம் என்பதனை விஷேப சக்தியினால் தோற்றுவிக்கிறார்.
உபநிடதங்களானவை பிரமத்தினை உலகத்தோடு தொடர்புபடுத்தி பிரமத்திற்கு சப்பிரபஞ்சநிலை, நிஸ்பிரபஞ்சநிலை என இரண்டு நிலை வழங்கியது போல சங்கரரும் பிரமத்திற்கு இரண்டு நிலை வழங்குகிறார். அவை,
1. நிர்க்குணபிரமம்.
2. சகுணப்பிரமம். இங்கு நிர்க்குண பிரமம் என்பது காலங்கள், தேசங்கள், நாமங்கள், ரூபங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டு குணங்குறிகளற்ற நிலை யாகும். சகுணப்பிரமம் என்பது அனைத்திற்கும் உட்பட்டு குணங் குறிகளுடன் சேர்ந்தநிலையாகும். இங்கு சகுணப்பிரம நிலை யிலுள்ள இறைவனுக்கு ஈஸ்வரன் என்ற பெயரானது வழங்கப் படுகிறது. எனவே ஈஸ்வரனே ஐந்தொழில்களை மேற்கொள்கிறான்.
சங்கரரது கருத்துப்படி ஐந்தொழிலினை மேற்கொள்ளும் ஈஸ்வரனுக்கு முதல்தரநிலை வழங்காது இரண்டாம் நிலையே வழங்குகிறார். இதற்கு சங்கரர் காரணம் கற்பிக்கையில், இவரின் கருத்துப்படி உள்ள பொருள் ஒன்றாகும். அது மாயையின் காரணத்தினால் ஆன்மா, பிரபஞ்சம் என்று இரண்டாகிறது. எனவே இரண்டு என்பதற்கு சங்கரர் முதல்நிலை வழங்கவில்லை. அத்தோடு ஈஸ்வரனின் படைப்புத் தொழிலால் பல பொருட்கள் படைக்கப்படுகின்றன. எனவே இவரின் வேதாந்தத்தில் பல என்பதற்கு இடமில்லை. இத்தகைய காரணங்களினால் ஈஸ்வரனுக்கு இரண்டாம் நிலையே வழங்கப்படுகிறது.
மேலும் சங்கரரின் கருத்துப்படி பரமாத்மாவே உண்மை. இதைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அதாவது பரமாத்மா மட்டுமே உண்மை. அது அவத்தையின் (அறியாமை) காரணத்தினால் ஜீவாத்மாவாக தோன்றுகிறது. அதனை 'பிரதிவிம்பவாதத்தி னுாடாக விளக்கிக் காட்டுகிறார். உதாரணமாக சந்திரனின் விம்ப மானது பூமியிலுள்ள கிணறு, குளம், ஆறு, அருவி போன்றன வற்றில் எல்லாம் காணப்படுகிறது. இவை யாவற்றையும் அழித்தால் வானில் இருக்கும் சந்திரன் மட்டும்தான் உண்மையாகும். அது போல பரமாத்மாவும் அவத்தையின் காரணமாக ஜீவாத்மாவாக தோன்றுகிறது எனக் கூறினார்.
எனவே மேலே கூறப்பட்டவற்றை எல்லாம் தொகுத்து நோக்கும்போது பிரமம் மட்டுமே உண்மைப் பொருள் என்பது இவரது கருத்தாகும். சங்கரர் முத்தி பற்றிக் கூறும்போது இந்த உடலோடு சேர்ந்து அடையும் முத்தியாகிய சீவன் முத்தியை வலியுறுத்துகிறார். அதனை அடைவதற்குரிய வழிவகையாக ஞானத்தினை குறிப்பிடுகின்றார். இதுவே சங்கரரின் அத்வைதம் பற்றிய கருத்துக்களாகும்.
20 விய வருடம் தை - பங்குணி)

Page 23
இது சிறுவ்ர்களுக்கான சி சிலவற்றை இங்கு தருகிறே இக்கதைகளைப் படித்துக் கா
சிங்க
அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் ஏழை; நேர்மையானவர். நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. இப்பொழுது யார் அந்தணனுக்கு உணவுப்பொருள் கொடுப்பார்கள் ? பூஜை செய்ய அவரை யார் அழைப்பார்கள்? பல நாட்களாக அவருக்குச் சரியான உணவு கிடைக்கவில்லை.
பசியால் சிறுகச் சிறுக இறப்பதைவிட, உயிரை மாய்த்துக் கொள்வது மேல் என்று அவர் நினைத்தார்.
இறக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் காட்டுக்குச் சென்றார். இறப்பதற்கு முன்னால் அவர் தூய மனதோடு கடவுளின் பெயரைச் சொல்லிப் பிரார்த்தித்தார். இதற்குள் பசியோடு ஒரு சிங்கம் பாய்ந்து வந்தது. 'நானே இறக்க வந்திருக்கிறேன். இது என்னைச் சாப்பிட்டு விட்டால் நல்லது தானே' என அந்தணர் நினைத்தார்.
சிங்கம் பக்கத்தில் வந்து, நீ ஏன் பயப்படவில்லை? என்று கேட்டது.
அந்தணர் எல்லா விஷயங்களையும் கூறிவிட்டு,'இப்பொழுது நீ பசித்திருக்கிறாய். என்னை உடனே கொன்று தின்று விடு என்று சொன்னார். உண்மை என்னவென்றால் அந்த வனத்தின் தேவதைக்கு அந்த அந்தணர் மேல் இரக்கம் வந்துவிட்டது. அதுவே சிங்கத்தின் உருவில் வந்தது. அந்த தேவதை அந்தணருக்கு ஐந்நூறு பொற்காசுகள் அளித்தது. அந்தணர்
நல்லதே நினை குருநாதர் ஒருவர் தன்னுடைய நான்கு சீடர்களுக்கும் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பானையைக் கவிழ்த்து வைத்துவிட்டு சீடர்களைப் பார்த்து “இதற்குள் என்ன இருக்கிறது?’ என்று கேட்டார்.
முதல் சீடன், “ஒன்றும் இல்லை” என்றான். இரண்டாவது சீடன் பானையை லேசாகத் தூக்கிப் பார்த்துவிட்டு “ஒன்றுமில்லை” என்றான்.
அடுத்தவன். பானைக்குள் கைவிட்டுப் பார்த்து விட்டு “ஒன்றுமில்லை’ என்றான்.
நான்காவது சீடன் “பானைக்குள் காற்று இருக்கிறது’ என்றான். w
குருநாதர் “இந்தக் காற்றை எப்படி வெளியேற்றுவது என்று உங்களுக்குத் தெரியுமா?’ எனக் கேட்டார். முதல் மூவரும் விழித்தார்கள். நான்காவது சீடன் “பானையில் தண்ணீரை நிரப்பினால் காற்று வெளியேறி விடும்” என்று சொன்னான்.
“அதுபோல்தான், மனதில் உள்ள தீய எண்ணங்களை போக்க நல்ல எண்ணங்களை மனதில் புகுத்த வேண்டும். தல்லதையே நினைக்க கெட்ட எண்ணங்கள் விலகிவிடும்’ என்று சொன்னார் குரு.
− நன்றி பக்தி)
இந்து ஒளி
 
 
 
 

றப்புப் பகுதி. சிறுவர் சிந்தனைக் கதைகள் ாம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ட்டி அதன் தத்துவத்தை விளக்குவது கடன்.
த்தின் தண்டனை
வீடு திரும்பினார். காலையில் அந்தணர் பொற்காசை எடுத்துக் கொண்டு அங்குள்ள வியாபாரியிடத்தில் அரிசியும், பருப்பும் வாங்கச் சென்றார். அப்பொழுது வியாபாரி உனக்கு எங்கிருந்து பொற்காசு கிடைத்தது என்று கேட்டான். அந்தணர் நடந்ததைக் கூறிவிட்டு அரிசி, பருப்பு முதலியன வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார்.
வியாபாரி பெரிய பேராசைக்காரன். அவன் பொற்காசுகள் மேல் உள்ள பேராசையால் இரவு காட்டுக்குச் சென்றான். அவனுடைய வாய் கடவுள் பெயரை உச்சரித்தது. கடவுளைப் பிரார்த்தித்தான். சிங்கம் வந்தது. வியாபாரி சிங்கத்திடம், நீ உடனே என்னைச் சாப்பிட்டு உன் வயிற்றை நிரப்பிக் கொள் என்று கூறினான்.
சிங்கம் சொன்னது, “நான் உன்னைப் போன்ற பேராசைக்காரனைக் கட்டாயம் சாப்பிட்டு விடுவேன். ஆனால் வெளிவேஷம் என்றாலும் கடவுள் பெயரை நீ கூறிவிட்டாய். ஆகையால் உன்னைக் கொல்ல மாட்டேன். சிறிது தண்டனை மட்டும் கொடுக்கின்றேன்!”
சிங்கம் வியாபாரியை ஓங்கி அறைந்தது. அவனுடைய ஒரு காது நார் நாராகக் கிழிந்தது. ஒரு கண்ணும் பாதிக்கப்பட்டு விட்டது. அவனுடைய பேராசைக்குச் சரியான பரிசு கிடைத்தது.
(கருத்து பேராசை பெருநஷ்டம்)
பேராசை பெருநஷ்டம்
ஏழை ஒருவன். தன் வறுமையைப் போக்கும்படி தினமும் இறைவனிடம் வேண்டுதல் செய்துவந்தான்
ஒருநாள் இறைவன், கோயிலுக்கு அருகே உள்ள அரசமரத்தின் கீழ் பெரும்புதையல் இருப்பதாகவும், அதில் பாதியை எடுத்துக்கொள்ளும்படியும் அசரீரியாக அவனிடம் சொன்னார்.
மகிழ்ந்த அவன், அப்படியே அரசமரத்தினடியே தோண்டினான். அங்கிருந்த பெரும்புதையலைக் கண்டதும், கடவுளின் கட்டளையை மறந்து முழுவதையும் எடுத்துக்கொண்டு ஓடினான்.
வழியில் திருடர்கள் சிலர் அவனை மிரட்டி புதையலைப் பறித்துக் கொண்டார்கள்.
மீண்டும் கடவுளிடம் வந்து அழுதான் அந்த ஏழை
“இப்படி நடக்கும் என்பது தெரிந்துதான் பாதியை எடுத்துப் போகும்படி சொன்னேன். அப்படிச் செய்திருந்தால் மீதிப்பாதி புதையல் இப்போது உனக்குக் கிடைத்திருக்கும். உன் பேராசையால் நீயே தேடிக்கொண்ட இந்தக் கஷ்டத்திற்கு நான் எதுவுமே செய்ய முடியாது” அசரீரியாய் சொல்லி மறைந்தார் இறைவன்.
நன்றி பக்தி)
விய வருடம் தை - பங்குணி)

Page 24
இது மாணவர்களுக்கான SbCypGoogp Uoo LDII GOOI GJữaB6 விஷயங்கள் மாணவர்களிட
புலவர் போற்றும் புகழ் அமைந்தது பாண்டி நாடு. பழங் காலத்திலிருந்தே பல்வகைச் சிறப்புகளாலும் மேலோங்கி நிற்பது இந்நாடு, கொற்கைத் துறையினையும் நதிக் கரையோரங்களையும் கொண்டது. அங்கெல்லாம் முத்துகள் ஒதுங்கிக் குவியும் வளத் தினைப் பெற்றது. இந்நாட்டின் தலைநகர் மதுரையாகும். குளிர்ந்த தென்றல் வீச, அமுதச் செந்தமிழ் ஒலிக்க, இசைமயமான நகரம் இது. இங்கு இறைவரே சங்கத் தலைவராய் அமர்ந்து, அருந்தமிழின் திறன் விளங்க ஆய்வு நடத்தினாரென்றால் இதன் சிறப்புக்கு வேறு என்ன் வேண்டும்
இந்நகரில், பரம்பரையாகச் செல்வப் பெருக்கும் சீரும் பெற்ற வணிகர் குலத்தில், மூர்த்திநாயனார் என ஒருவர் இருந்தார். இவர் சிவபெருமானது திருவடிகளே தம்மை உய்விக்கும் என்ற உணர்வு கொண்டவராய் அப்பெருமான்மீது, நீங்காத அன்பைக் கொண்டி ருந்தார். சுந்தரேசப் பெருமானுக்கு நாள் தோறும் சந்தனக்காப்பு அணிவதே இவரது திருப்பணியாக இருந்தது.
இந்நாட்களில் கருநாடக தேசத்து வடுக மரபு மன்னன் ஒருவன் பிற நாடுகளை வெற்றி கொள்ளும் நோக்கத்தில், வலிமை மிக்க நால்வகைச் சேனைகளோடு தென்திசை நோக்கி வந்தான். தன் படை வலிமையால் இவன் வீரமிக்க பாண்டியனோடு போர் செய்து, அவன் நாட்டை வெற்றி கொண்டான். பின்னர் அவன் மதுரை மாநகரில் தன் இருக்கையை வலுப்படுத்தி அங்கிருந்தே ஆட்சி செய்தான்.
இம்மன்னனைச் சமணர்கள் வசப்படுத்திக் கொண்டனர். அவர்களது போதனைகளை நாள்தோறும் கேட்டு வந்த இவன், அவர்கள் சமயமே மெய்ச் சமயமென எண்ணி அதில் சேரவும் செய்தான். அதோடு அமையாது, சைவ அடியார்கள் மீது இவனுக்குப் பகைமையும் வளர்ந்தது. பலவழிகளிலும் அவர்களைத் துன்பப்படுத்திவந்தான். இந்தத் துன்பத்துக்கு மூர்த்தி நாயனாரும். தப்பவில்லை.
வடுக மன்னன் மூர்த்திநாயனார் செய்துவரும் சந்தனக் காப்புத் திருப்பணி நடைபெறாதிருக்கத் திட்டம் தீட்டினான். அவன் அவருக்குச் சந்தனக் கட்டைகள் கிடைத்து வந்த இடங்களில் அவற்றை அவருக்குக் கொடுக்கக் கூடாது என ஆணை வழங்கி னான். கொடுங்கோல் மன்னனைக் கண்டு அனைவரும் அச்சம் கொள்ளுவது இயல்புதானே! எனவே, சந்தனக் கட்டைகள் வைத்தி ருந்த எவரும் மூர்த்திநாயனாருக்குக் கொடுக்க மறுத்தனர்.
வடுகதேவனின் இந்தக் கொடுஞ்செயலைக் கண்டு மூர்த்தி நாயனார் உள்ளம் மிகவும் வேதனை" கொண்டது. இந்தக் கொடுங் கோல் மன்னன் ஆட்சி எப்போது ஒழியும்? சிவபிரானை வழிபடும் செம்மனத்துத் தமிழ் அரசனை இந்நாடு என்று பெறும்?” என்று அவர் எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்து ஒளி 2.
 

க்கம். வழமைபோல பெரிய புராணக் கதையுடன், து ஆக்கங்கள் இடம்பெறுகின்றன. இது போன்ற மிருந்து தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
புராணக் கதைகள் FJIIor 9l gum
சந்தனக்கட்டைகள் கிடைக்காததினால் மூர்த்தி நாயனார் மனத்தளர்ச்சி பெற்றாரேனும் அவர் தமது திருப்பணியை நிறுத்தி விட எண்ணவில்லை. சந்தனக்கட்டைக்கு முட்டு வந்தாலும் என் கைக்கு எவ்வித முட்டுப்பாடும் இல்லையே' எனத் தம்முள் எண்ணி யவராய் சந்தனக் கல்லின் மீது தம் முழங்கையை வைத்துத் தேய்க்கத் தொடங்கினார். என்ன துணிச்சலான செயல் இது அவர் கையிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்தோடியது. தோல் தேய்ந்து சதை கரைந்து எலும்பும் வெளிப்பட்டது. மூர்த்தி நாயனாரின் இந்த அரும் பெரும் அன்புச் செயலைத் தண்பிறை அணிந்த தம்பிரான் பார்த்துக் கொண்டிருப்பாரா?
அன்றிரவு இறைவன் வான்குரல் ஒன்றை மூர்த்திநாயனார் கேட்டார். இறைவன் நாயனாரிடம், “அன்பனே, உன் பக்தியின் உறுதிப்பாடு சிறந்தது. அதைக்கொண்டு நீ இப்படிப்பட்ட செயலை இனிச் செய்யாது இருப்பாயாக! உனக்கு மிகுந்த துன்பத்தை அளித்துக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்கோல் வேந்தன் அழிவான். அவன் கவர்ந்திருக்கும் இந்த அரசு உன்னைச் சேரும் அவன் செய்துள்ள கொடுமைகள் அனைத்தையும் நீ தீர்த்து, நன் முறையில் செங்கோல் செலுத்துவாயாக! நீ எமக்குச் செய்துவரும் சந்தனக் காப்பையும் விடாது செய்து, பின்னர் நம்மிடத்தை வந்து சேர்வாயாக’ எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
இம்மொழிகளைக் கேட்ட மூர்த்திநாயனார் மெய் நடுங்கிப் போனார். இறைவரின் பேரருளையும் பெருங் கருணையையும் உணர்ந்து அவரது நெஞ்சம் சிலிர்ப்புக் கொண்டது. கைம்முட்டைத் தேய்த்து அரைப்பதை அவர் உடனே நிறுத்தினார். புண்பட்டிருந்த அக்கை காயம் மாறி முன்போல் நல்லதாக ஆயிற்று. இரத்த நாற்றம் மாறி அவர் மேனியெல்லாம் நறுமணம் கமழ்ந்தது.
இறைவனார் திருவாக்குப்படியே அன்றிரவு வடுக மன்னரின் வாழ்நாள் முடிந்தது. சிவனடியார்களுக்குத் தீங்கு செய்தவர்கள் விரைவில் அழிந்து போவார்கள் என்பதை இந்நிகழ்ச்சி மெய்ப்பித்துக் காட்டிற்று.
வடுக மன்னன் மடிந்து போகவே நாட்டிலுள்ள அமைச்சர்கள், அவனுக்குச் செய்யவேண்டிய ஈமக்கடன்களைச் செய்து முடித்தனர். பின்னர் நாட்டின் ஆட்சியைக் குறித்து அவர்களிடம் சிந்தனை எழுந்தது. வடுக மன்னனுக்கு மக்கள் என யாரும் இல்லை. அப்படி யிருந்தால் அவர்களில் ஒருவனுக்கு முடிசூட்டிக் கொள்ளலாம். இப் போது என்ன செய்வது? ஆட்சியை நடத்த ஒரு மன்னன் இருந்தே ஆகவேண்டும்.அமைச்சர்கள் ஒருங்கு கூடி ஒருமுடிவுக்கு வந்தனர். அம்முடிவு என்ன? ஒரு யானையை நன்கு அலங்கரித்து அதன் கண்களைக் கட்டித் தெரு வீதியில் விட்டு விட வேண்டும். அந்த யானை எவரை எடுத்துக் கொள்கிறதோ அவரே நாட்டின் ஆட்சிக்கு உரியவர் என்பதுதான் அவர்கள் கொண்ட முடிவு.
விய வருடம் தை - பங்குணி)

Page 25
இம்முடிவுப்படி மதச்செருக்கு கொண்ட யானை ஒன்றுக்கு நெற்றியில் பட்டம் கட்டி, அழகு புனைந்து வெளியில் விட்டனர். அது அம்மதுரை மாநகர்த்தெரு வீதிகளின் வழியாகச் சென்று திருவால வாய் என்னும் ஆலயத்தின் கோபுரத்துக்கு முன்னே போய் நின்றது. அங்கே கோயிலின் புறத்தே மூர்த்திநாயனார் நின்று கொண்டி குந்தார். அவர் மனதில், சென்ற நாள் இரவு கேட்ட வான்குரலைப் பற்றிய எண்ணம் ஒடிக்கொண்டிருந்தது.'இறைவனின் திருவுள்ளம் அதுவாக இருக்குமானால், நான் இந்த மண்ணின் ஆட்சியை ஏற்றுக் கொள்வேன்' என முடிவுசெய்து தன் மனத்துயரை ஒழித்துநின்றார். இந்நேரம் அந்தப் பட்டத்துக்கு யானை மூர்த்தி நாயனார் முன்னே வந்துதலைதாழ்ந்து அவரை எடுத்துத் தன் முதுகில்மேல் வைத்துக் கொண்டது. இறைவரின் திருவிளையாடலை என்ன வென்று சொல்வது பட்டத்து யானை தன் முதுகில் ஏற்றிக் கொண்ட மூர்த்தி நாயனாரைக் கண்டு, அமைச்சர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அனைவரும் அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கினர். எங்கும் சங்குகள் முழங்கின. தாரை, பேரிகை போன்ற இசைக் கருவிகள் நாலா திசைகளிலும் ஒலித்தன. மக்கள் வாழ்த்தொலி வானை முட்டிற்று.
அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரைப் பட்டத்து யானை பினின்றும் இறக்கி, முடிசூட்டும் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர் ஆசனத்தில் அமர்த்தப்பட்டார். பின்னர் முடி சூட்டு விழாவிற்குரிய செயல்கள் நடைபெற்றுக் கொண்டி குந்தன. மூர்த்தி நாயனார், அப்போது அங்கே நின்று கொண்டி குந்த அமைச்சர்களையும் ஏனையவர்களையும் பார்த்து, “சைவ சமயம் செழித்தோங்க வழி செய்தால்தான் நான் இந்த மண்ணரசை ஏற்பேன்’ என்று கூறினார்.
இதுகேட்ட அங்கு நின்றவர்கள், “பெருமானே தங்கள் கட்டளைப்படி நடப்பதேயன்றி அதை மீறி நடக்க இங்கு யார் இருக்கிறார்கள்?’ என்று பதில் அளித்தார்கள்.
தொண்டுகள்
s செந்தில்குமரன் அச்சுதன்
தரம்-5 கொபம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி
வ்ெவித கைமாறுகளையும் எதிர்பாராது செய்யும் சேவையை "தொண்டு” என்பர். சேவைகள் செய்பவர்கள் எவரும் மற்றவரிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. எமக்கு, மற்றவர்கள் எதனை செய்ய வேண்டும் என எண்ணுகின்றோமோ, அதனை நாம் பொதுத் தொண்டாக நினைத்து மற்றவர்களுக்குச் செய்வோம். எனவே நாம் தொண்டுகளை வேண்டா வெறுப்பாக செய்யாது விருப்புடன் செய்ய வேண்டும்.
தொண்டுகளிலே பலவிதங்கள் உண்டு. அவையாவன, ஆலயத் தொண்டு- இதில் பூப்பறித்தல் மாலைகட்டல், விளக்கேற்றல், தோரணம் கட்டல், ஆலயத்தை சுத்தப்படுத்தல், தோத்திரம் பாடல் என்பன ஆகும்.
அடுத்தது சமூகத்தொண்டு- இதில் வயோதிபரை பேணல், நோயாளருக்கு உதவுதல், ஏழைகளுக்கு உதவுதல், பொதுச் சொத்துக்களை பராமரித்தல் போன்றவையாகும்.
இந்து ஒளி

“நான் ஆட்சியை நடத்துவதாக இருந்தால் திருநீறே அபிஷேகப் பொருளாகவும், எம்பெருமான் அடியான் என்பதைக் காட்டும் உருத்திராக்க மாலையே நான் அணியும் நகையாகவும், என் சடை முடியே நான் சூடிக் கொள்ளும் கிரீடமாகவும் இருக்கும்” என்று இயம்பினார்.
அமைச்சர்களும் ஏனைய சான்றோர்களும், “பெருமானே, தாங்கள் இங்கே அருளிய மொழிகள் பெருஞ் சிறப்புக்குரியன. இதற்கு வேண்டியவாறு நாங்கள் நடந்து கொள்வோம்” என்று மறுமொழி கூறினார்கள்.
பின்னர் மூர்த்தி நாயனார், தமது சடையையே முடியாகக் கொண்டு, மங்கல இசைகள் முழங்க, திருவாலவாய் சென்று சொக்கலிங்கப் பெருமானை வணங்கினார். பின்னர் பட்டத்து யாைைன மீதேறி தெரு வீதிகளின் வழியாகப் பவனி வந்தார். அரண்மனை அருகே வந்ததும் யானை விட்டுக் கீழே இறங்கி, அரியணைக்கு வந்து அதில் வீற்றிருந்தார். வெண் கொற்றக் குடை நிழலமர்ந்து ஆட்சியை மேற்கொள்ளலானார்.
மூர்த்தி நாயனார் ஆட்சியில் நலங்கள் பல விளைந்தன. சைவம் தழைத்தது. அறமும் நீதியும் நிலைப்பு கொண்டன. மக்களெல்லாம் மகிழ்ச்சியில் மூழ்கி வாழ்ந்தனர்.
இவ்வாறு தெய்வ நெறியை வளர்த்து, நாட்டுக்கு நன்மைகள் புரிந்து, தம் நெறியிலும் கொள்கையிலும் வழுவாமல் நின்று, ஆட்சி புரிந்த மூர்த்தி நாயனார், இறுதியில் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.
இறைவன் அடியார்களின் துன்பத்துக்கு இரங்குவான் என்பதும், அவன் அவ்வடியார்களுக்கு உயர்ந்த பேறு அளித்துக் காப்பான் என்பதும் மூர்த்தி நாயனார் வரலாறு நமக்கு உணர்த்துகின்றதல்லவா!
மேலும், சமயத் தொண்டுகளில் சமய ஒழுக்கங்களை கடைப்பிடித்தல், விபூதி முதலான சிவ சின்னங்களை வழங்குதல், அன்னதானம் செய்தல், சிவனடியார்களை உபசரித்தல் மிகச் சிறந்தனவாகும். இதற்கு உதாரணமாக நமிநந்தியடிகள், இளையான் குடிமாறநாயனார், காரைக்காலம்மையார், அப்பூதியடிகள், சிறுத்தொண்ட நாயனார் போன்றவர்களை நினைவு கூறவேண்டும்.
பாடசாலையில் செய்யக்கூடிய சேவைகளாக, பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளலாம். மற்றவர்களுக்கு தெரியாத விடயங்களை புரிய வைத்தல், பாடசாலை உபகரணங்கள் தளபாடங்கள் என்பவற்றை பேணல், கஷ்டப்பட்ட மாணவருக்கு புத்தகம், பென்சில், கொப்பி, பேனை போன்றவற்றை கொடுத்து உதவுதல்.
இவற்றைவிட பண்பாக பேசுதல், யாவருக்கும் மதிப்புக் கொடுத்து மரியாதையுடன் பழகுதல், யாவரிடத்திலும் அன்போடு இருத்தல், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, ஒற்றுமையாக இருத்தல், உயிர்கள் மீது கருணை காட்டுதல் என்பவையும் நாம் செய்யக் கூடிய சிறந்த விழுமியத் தொண்டுகளாகும்.
“தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே'
s விய வருடம் தை - பங்குனி)

Page 26
சைவசமயசாரம்
அனிதாசிவமணி தரம்37 கொ/பிரஸ்படேரியன்பெண்கள்பாடசாலை
இவ்வுலகில் மனிதராகப் பிறந்தவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பொருள்கள் மூன்று ஆகும். முதலின் நாம் நம்மைப்பற்றி நன்றாய் அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின் நம்மை நடத்துகின்ற இறைவனைப் பற்றியும் அறிந்து தெளிய வேண்டும். நமக்கும் இறைவனுக்கும் இடையில் நின்று இறைவனை அடையமுடியாதபடி தடுக்கும் தடைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இம்மூன்றையும் பதி, பசு, பாசம் எனவும், உயிர், இறை, தளை எனவும் ஆன்றோர் கூறுவர்.
நாம் இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் பற்றி ஆராய்கின்றோம். ஆனால் நாம் நம்மைப் பற்றி ஆராய்வதில்லை. “நான்” என்பது ஆன்மா அல்லது உயிர் எனப்படும். இவ்வான்மா என்ற ஒன்றில்லை எனச் சிலர் கூறுவர். வேறு சிலர் உடம்பே ஆன்மா என்றும், இந்திரியங்களே ஆன்மா என்றும், அந்தக் கரணங்களே ஆன்மா என்றும், பிராண வாயுவே ஆன்மா என்றும் கூறுவர். இவர்கள் கூற்றைச் சிவஞானபோத ஆசிரியர் மறுத்து, ஆன்மா தனிந்த பொருளென நிலை நிறுவுகின்றார்.
நெல்லில் உமியும் தவிடும் முளையும் அரிசியைச் சூழ்ந்து உறைவது போல, ஆன்மாவை ஆணவம், கன்மம். மாயை என்னும் மும்மலங்கள் செம்பில் களிம்பு போல, ஒட்டி வாழ்கின்றன. இவைகள்தான் கடவுளை அடைய முடியாதபடி நம்மைத் தடுக்கும் தடைகள். இத்தடைகளை அகற்றி இறைவனை ஆன்மா அடைந்து இன்புற்று வாழ்வதற்கு அமைந்தவைகளே சமயங்களாகும்.
இம்முப்பொருள் உண்மையை ஆலயங்களில் விளங்கக் காட்டியுள்ளார்கள். எல்லா ஆலயங்களிலும் மூலஸ்தானம் அல்லது கர்ப்பகிருஹம் என்ற ஒன்று உண்டு. அம்மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மூர்த்தியே இறைவன் ஆவான். அவ்விறைவனை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் நந்தி, மயில், கருடன் முதலியவைகளே ஆன்மாவாகும். அதன் பின் நிறுவப்பட்டிருக்கும் பலிபீடமே பாசம் அல்லது தடை ஆகும். எல்லாக் கோயில்களிலும் இம்மூன்றையும் அமைத்து முப்பொருள் உண்மையை விளக்கியுள்ளார்கள். ஆகவே சமயத்தின் சாரம் இம்முப்பொருள் உணர்வே ஆகும் என கூறலாம்.
இறைவன் ஒருவன் ‘உளன்” எனவோ “இலன்” எனவோ கூறாது இவ்வுலகம் இனிது நடக்க இறைவன் என்ற ஒருவன் வேண்டும் என நமது சமயம் கூறுகின்றது. அவ்விறைவன் அகள னாகவும் அதாவது வடிவம் இல்லாதவனாகவும், சகளனாகவும் அதாவது வடிவம் உள்ளவனாகவும் இருக்கின்றான். அகளனாய் அவன் இருக்கும் போது அவனை நமக்கு அறிந்து கொள்ள முடியாது. அதற்காகவே இறைவன் அகள நிலையிலிருந்து சகள நிலைக்கு வருகின்றான். அச்சகளநிலையினையே ஆலயத்திருவுரு வங்களாக அமைக்கப்பட்டுள்ளன. நம் பொருட்டு ஆண்டவன் சகள உருவம் தாங்கி வந்தால் அவனை ஆன்மாக்களாகிய நாம் ஆலயங் களில் அமைத்து வழிபட்டு, பூசித்து விழாக்கள் கொண்டாடி வாழ் வதை 'சதாசிவமூர்த்தி” என்பர். சிவலிங்கத்தின் அடிப்பாகம் நான்கு பக்கமாய் அமைக்கப்பட்டு "அயன்” அல்லது பிரமனையும், நடுப்
(இந்து ஒளி 2.

பாகம் எட்டுப்பட்டமாய் அமைக்கப்பட்டு “மால்” அல்லது விஷ்ணு வையும், மேல்பாகம் நீண்ட உருண்டை வடிவமாக அமைக்கப்பட்டு உருத்திரனையும் உணர்த்துகின்றன. இம்மூர்த்திகளுள் சதாசிவ மூர்த்தி தன்னுள் கொண்டு தண்ணளி புரிகின்றார். இறைவன் உலகுக்குச் செய்யும் பேருபகாரம் அழிந்தொழிந்த உலகத்தைத் திரும்பவும் ஆக்கி கேவல நிலையில் கிடந்த ஆன்மாக்கள் வாழ்வதற்கு உலகம், உடம்பு, உடம்பின் உட்கருவிகள், போகப் பொருள்கள் இவற்றை அமைத்துத் தருவதே ஆகும்.
உலகம் மாசங்காரத்தால் அழிக்கப்பட்ட போது பராபரையாகிய இறைவி பரணை வேண்டிக்கொள்ள பரைக்கு இரங்கிய பரன், அவள் வேண்டுதலின்படி நமக்கு தனு, கரண, புவன போகங்களை அளித்து ஆக்கல், அழித்தல், அளித்தல், மறைதல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் இனிது நடத்தி வருகின்றான். அவற்றை நடராஜர் திருவுருவம் நன்கு விளக்கும். ஆக்கல் தொழிலை உடுக்கையும், அழித்தல் தொழிலை தீயும், அளித்தல் தொழினை அபயக்கரமும், மறைத்தல் தொழிலை ஊன்றிய திருவடியும், அருளலை தூக்கிய திருவடியும் உணர்த்துகின்றன. இவ்விறைவள் உலகத்தை மாயையிலிருந்து தோன்றச் செய்கின்றான். உலகம் ஒரு பருப்பொருள். மாயை ஒரு நுண்பொருள். விஞ்ஞானத்தாலும், விஞ்ஞானக் கருவிகளாலும் பருப்பொருளை ஆராய முடியுமே தவிர, நுண்பொருளை ஆராய முடியாது. நுண்பொருளை ஆராய்வதற் குரிய கருவி மெஞ்ஞானம் ஆகும். அழிந்த உலகம் சிதறிச் சிதறி பரமாணுவாகப் போய்விடுமென்பர். விஞ்ஞானிகள் பரமாணுவை நசுக்கி விட்டால், அது எங்கோ போய் விடுகிறது. அது எப்படி ஆகிறது என்று எங்களுக்கு விளங்கவில்லை என்பது விஞ்ஞானி களின் கொள்கை. அதனை நன்றாக விளக்குவது சமயம். பருப் பொருள் அழித்தால் ஒரு நுண்பொருள் ஆகும். பருப்பொருள் மாய்ந்து போவதை “மாய்” எனவும், அதிலிருந்து எல்லாம் ஆகி வருவதால் “ஆ” எனவும் கொண்டு ‘மாயா” என்று அந்த நுண் பொருளைக் கூறினர். அம்மாயையே உலகம் தோன்றுவதற்கு முதற் காரணமாயிற்று. விஞ்ஞானத்தால் அறிந்து கொள்ளமுடியாத இடத்தில் மெஞ்ஞானம் தோன்றுகிறது.
இவ்வம்மையப்பராய் போகவடிவில் இருந்து உயிர்களாகிய நமக்கு போகத்தை புணர்த்துகின்றான். அவன் ஞானச்சாரியனாய் “தகூழிணா மூர்த்தி” என்ற பெயரோடு கல்லால் நிழலில் சின் முத்திரை தாங்கி அருள் புரிகின்றான். சிவ முத்திரையின் கருத்து ஆணவம் முதலிய மலங்களிலிருந்து நீங்கி உயிர் இறைவனை அடைந்து ஒன்றி வாழ வேண்டுமென உணர்த்துவதேயாகும். ஆணவம் முதலிய பாசங்கள் அனாதியாகவே உள்ளன. அவை இருள்போல நின்று உயிர்களின் அறிவை மறைப்பன. இப்பாசங்கள் கதிரவன் முன் நிற்க ஆற்றாது அழிந்து ஒழியும் இருள்போல இறைவனைச் சென்று அணுகாது. இருள் நம்மை அணுகித் துன்பத்திலிருந்து நீங்குவதற்கு ஏக மார்க்கமாயிருப்பது இறைவனை அடைதலேயாகும்.
இறைவன் எங்கும் இருக்கிறான். எனினும், அஞ்ஞானம் காரணமாக மனிதன் அதை உணராமல் இருக்கிறான்.
(சுவாமி கமலாத்மானந்தர்)
மனதைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் ஆத்மா நன்கு பிரகாசிக்கும்
(ஆத்மபோதம்)
விய வருடம் தை - பங்குணி)

Page 27
சைவ சமயசாரம்
அனிதாசிவமணி தரம்3Tகொ/பிரஸ்படேரியன்பெண்கள்பாடசாலை
இவ்வுலகில் மனிதராகப் பிறந்தவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பொருள்கள் மூன்று ஆகும். முதலின் நாம் நம்மைப்பற்றி நன்றாய் அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின் நம்மை நடத்துகின்ற இறைவனைப் பற்றியும் அறிந்து தெளிய வேண்டும். நமக்கும் இறைவனுக்கும் இடையில் நின்று இறைவனை அடையமுடியாதபடி தடுக்கும் தடைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இம்மூன்றையும் பதி, பசு, பாசம் எனவும்; உயிர், இறை, தளை எனவும் ஆன்றோர் கூறுவர்.
நாம் இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் பற்றி ஆராய்கின்றோம். ஆனால் நாம் நம்மைப் பற்றி ஆராய்வதில்லை. “நான்” என்பது ஆன்மா அல்லது உயிர் எனப்படும். இவ்வான்மா என்ற ஒன்றில்லை எனச் சிலர் கூறுவர். வேறு சிலர் உடம்பே ஆன்மா என்றும், இந்திரியங்களே ஆன்மா என்றும், அந்தக் கரணங்களே ஆன்மா என்றும், பிராண வாயுவே ஆன்மா என்றும் கூறுவர். இவர்கள் கூற்றைச் சிவஞானபோத ஆசிரியர் மறுத்து, ஆன்மா தனிந்த பொருளென நிலை நிறுவுகின்றார்.
நெல்லில் உமியும் தவிடும் முளையும் அரிசியைச் சூழ்ந்து உறைவது போல, ஆன்மாவை ஆணவம், கன்மம். மாயை என்னும் மும்மலங்கள் செம்பில் களிம்பு போல, ஒட்டி வாழ்கின்றன. இவைகள்தான் கடவுளை அடைய முடியாதபடி நம்மைத் தடுக்கும் தடைகள். இத்தடைகளை அகற்றி இறைவனை ஆன்மா அடைந்து இன்புற்று வாழ்வதற்கு அமைந்தவைகளே சமயங்களாகும்.
இம்முப்பொருள் உண்மையை ஆலயங்களில் விளங்கக் காட்டியுள்ளார்கள். எல்லா ஆலயங்களிலும் மூலஸ்தானம் அல்லது கர்ப்பகிருஹம் என்ற ஒன்று உண்டு. அம்மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மூர்த்தியே இறைவன் ஆவான். அவ்விறைவனை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் நந்தி, மயில், கருடன் முதலியவைகளே ஆன்மாவாகும். அதன் பின் நிறுவப்பட்டிருக்கும் பலிபீடமே பாசம் அல்லது தடை ஆகும். எல்லாக் கோயில்களிலும் இம்மூன்றையும் அமைத்து முப்பொருள் உண்மையை விளக்கியுள்ளார்கள். ஆகவே சமயத்தின் சாரம் இம்முப்பொருள் உணர்வே ஆகும் என கூறலாம்.
இறைவன் ஒருவன் “உளன்” எனவோ “இலன்” எனவோ கூறாது இவ்வுலகம் இனிது நடக்க இறைவன் என்ற ஒருவன் வேண்டும் என நமது சமயம் கூறுகின்றது. அவ்விறைவன் அகள னாகவும் அதாவது வடிவம் இல்லாதவனாகவும், சகளனாகவும் அதாவது வடிவம் உள்ளவனாகவும் இருக்கின்றான். அகளனாய் அவன் இருக்கும் போது அவனை நமக்கு அறிந்து கொள்ள முடியாது. அதற்காகவே இறைவன் அகள நிலையிலிருந்து சகள நிலைக்கு வருகின்றான். அச்சகளநிலையினையே ஆலயத்திருவுரு வங்களாக அமைக்கப்பட்டுள்ளன. நம் பொருட்டு ஆண்டவன் சகள உருவம் தாங்கி வந்தால் அவனை ஆன்மாக்களாகிய நாம் ஆலயங் களில் அமைத்து வழிபட்டு, பூசித்து விழாக்கள் கொண்டாடி வாழ் வதை 'சதாசிவமூர்த்தி”என்பர்.சிவலிங்கத்தின் அடிப்பாகம் நான்கு பக்கமாய் அமைக்கப்பட்டு "அயன்” அல்லது பிரமனையும், நடுப்
(இந்து ஒளி

பாகம் எட்டுப்பட்டமாய் அமைக்கப்பட்டு “மால்” அல்லது விஷ்ணு வையும், மேல்பாகம் நீண்ட உருண்டை வடிவமாக அமைக்கப்பட்டு உருத்திரனையும் உணர்த்துகின்றன. இம்மூர்த்திகளுள் சதாசிவ மூர்த்தி தன்னுள் கொண்டு தண்ணளி புரிகின்றார். இறைவன் உலகுக்குச் செய்யும் பேருபகாரம் அழிந்தொழிந்த உலகத்தைத் திரும்பவும் ஆக்கி கேவல நிலையில் கிடந்த ஆன்மாக்கள் வாழ்வதற்கு உலகம், உடம்பு, உடம்பின் உட்கருவிகள், போகப் பொருள்கள் இவற்றை அமைத்துத் தருவதே ஆகும்.
உலகம் மாசங்காரத்தால் அழிக்கப்பட்ட போது பராபரையாகிய இறைவி பரனை வேண்டிக்கொள்ள பரைக்கு இரங்கிய பரன், அவள் வேண்டுதலின்படி நமக்கு தனு, கரண, புவன போகங்களை அளித்து ஆக்கல், அழித்தல், அளித்தல், மறைதல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் இனிது நடத்தி வருகின்றான். அவற்றை நடராஜர் திருவுருவம் நன்கு விளக்கும். ஆக்கல் தொழிலை உடுக்கையும், அழித்தல் தொழிலை தீயும், அளித்தல் தொழிலை அபயக்கரமும், மறைத்தல் தொழிலை ஊன்றிய திருவடியும், அருளலை தூக்கிய திருவடியும் உணர்த்துகின்றன. இவ்விறைவன் உலகத்தை மாயையிலிருந்து தோன்றச் செய்கின்றான். உலகம் ஒரு பருப்பொருள். மாயை ஒரு நுண்பொருள். விஞ்ஞானத்தாலும், விஞ்ஞானக் கருவிகளாலும் பருப்பொருளை ஆராய முடியுமே தவிர, நுண்பொருளை ஆராய முடியாது. நுண்பொருளை ஆராய்வதற் குரிய கருவி மெஞ்ஞானம் ஆகும். அழிந்த உலகம் சிதறிச் சிதறி பரமானுவாகப் போய்விடுமென்பர். விஞ்ஞானிகள் பரமாணுவை நசுக்கி விட்டால், அது எங்கோ போய் விடுகிறது. அது எப்படி ஆகிறது என்று எங்களுக்கு விளங்கவில்லை என்பது விஞ்ஞானி களின் கொள்கை. அதனை நன்றாக விளக்குவது சமயம். பருப் பொருள் அழித்தால் ஒரு நுண்பொருள் ஆகும். பருப்பொருள் மாய்ந்து போவதை ‘மாய்” எனவும், அதிலிருந்து எல்லாம் ஆகி வருவதால் “ஆ“ எனவும் கொண்டு ‘மாயா” என்று அந்த நுண் பொருளைக் கூறினர். அம்மாயையே உலகம் தோன்றுவதற்கு முதற் காரணமாயிற்று. விஞ்ஞானத்தால் அறிந்து கொள்ளமுடியாத இடத்தில் மெஞ்ஞானம் தோன்றுகிறது.
இவ்வம்மையப்பராய் போகவடிவில் இருந்து உயிர்களாகிய நமக்கு போகத்தை புணர்த்துகின்றான் அவன் ஞானச்சாரியனாய் “தகூரிணாமூர்த்தி” என்ற பெயரோடு கல்லால் நிழலில் சின் முத்திரை தாங்கி அருள் புரிகின்றான். சிவ முத்திரையின் கருத்து ஆணவம் முதலிய மலங்களிலிருந்து நீங்கி உயிர் இறைவனை அடைந்து ஒன்றி வாழ வேண்டுமென உணர்த்துவதேயாகும். ஆணவம் முதலிய பாசங்கள் அனாதியாகவே உள்ளன. அவை இருள்போல நின்று உயிர்களின் அறிவை மறைப்பன. இப்பாசங்கள் கதிரவன் முன் நிற்க ஆற்றாது அழிந்து ஒழியும் இருள்போல இறைவனைச் சென்று அணுகாது. இருள் நம்மை அணுகித் துன்பத்திலிருந்து நீங்குவதற்கு ஏக மார்க்கமாயிருப்பது இறைவனை அடைதலேயாகும்.
இறைவன் எங்கும் இருக்கிறான். எனினும், அஞ்ஞானம் காரணமாக மனிதன் அதை உணராமல் இருக்கிறான்.
(சுவாமி கமலாத்மானந்தர்)
மனதைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் ஆத்மா நன்கு பிரகாசிக்கும்
(ஆத்மபோதம்)
4. விய வருடம் தை - பங்குணி)

Page 28
அறுகம்புன்லின் சிறப்பு
சுகுரோஜினி தரம்50.இராமநாதன்இந்துமகளிர்கல்லூரியம்பலப்பிட்டி
அறுகம்புல் தரையில் படர்ந்து வளரும் ஒரு தாவரமாகும். பார்க்க அழகாக இருக்கும் மிகவும் கூர்மையான இலைகளை கொண்ட தாவரமாகும். அறுகம்புல் பல மருத்துவ குணம் வாய்ந்தது. ஆதிகாலத்திலிருந்தே இதை மருந்தாக பாவித்தார்கள். அறுகம்புல் சாற்றை தினமும் காலையில் ஒரு வேளை குடித்து வந்தால் பல நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். சிறுநீரகநோய், தோல்நோய் என்பவற்றிக்கு மட்டுமல்ல பல நோய்களுக்கும் இது உயர்ந்தது.
இந்துக்களிடையே அறுகம்புல் மிகவும் முக்கியத்துவத்தை பெறுகின்றது. பிள்ளையாருக்கு விருப்பமான அபிஷேக பொருள் அறுகம்புல் ஆகும். அறுகம்புல்லில் மாலைகட்டி, பிள்ளையாருக்கு அணிவிப்பார்கள். மஞ்சள் அல்லது சாணியில் பிள்ளையார் பிடித்து அதில் அறுகம்புல்லை செருகி வைப்பார்கள். சமயக் கிரிகைகள் அனைத்திலும் அறுகம்புல் முதலிடம் பெறும்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் தோன்றும் காலங்களில் கூட உணவுப் பொருள்களில் எல்லாம் அறுகம்புல்லை போட்டு வைத்தால் தோஷம் எல்லாம் நீங்கும் என்று இந்துக்களிடையே நம்பிக்கை உண்டு. பூஜை பொருளாகவும் அறுகம்புல்லை பாவிப்பார்கள். அடிபட்ட காயத்துக்கு அறுகம்புல்லை அரைத்துப் போட்டால் காயம் சுகமாகி விடும்.
ஜனக மகாராஜன் என்ற மன்னன் மிதிலாபுரி என்ற பட்டணத்தில் ஆட்சி புரிந்து வந்தான். தன்னைவிட வேறெந்தப் பரம்பொருள் இல்லையெனும் அவனிடம் ஓர் அகந்தை குடி கொண்டிருந்தது. அதனைப் போக்க பிள்ளையார் திருவுளங் கொண்டார். ஒரு ஏழை வடிவம் எடுத்து அரண்மனைக்குச் சென்றார். காவலர்கள் அவரை அனுமதிக்கவில்லை. அதற்கு பிறகு அரசனிடம் சென்று முறையிட்டனர். ஏழை ஒருவர் பசி என்று வந்திருப்பதாக கூறினர். மன்னன் அதிர்ச்சியுற்றான்; அவரை வரச் சொன்னான். −
அவர் மன்னனிடம் சென்றார். மன்னன் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார். எனது பசியைப் போக்க வேண்டும் என்றார். அரசனும் உணவு பரிமாறச் சொன்னான். காவலர்கள் உணவு பரிமாறிய வண்ணம் இருந்தார்கள். பானையில் இருந்த உணவும் தீர்ந்து போனது. ஊர் மக்களிடம் வாங்கி வந்து கொடுத் தார்கள். ஆனாலும் அவர் பசி பசி என்றே பரிதவித்தார். என்ன செய்வது என்று தெரியாமல் அவரை வேறு இடம் நாடி செல்லச் சொன்னான் மன்னன், ஏழைக்கு கோபம் வந்தது. நானே பரம் பொருள் என அகந்தை கொள்ளாதே என்று கூறினார்.தன்னுடைய அகங்காரம் இந்த ஏழையால் தவிடுபொடியாகி விட்டதே என்று மன்னன் வேதனையுற்றான். திரிசுரன், விரோசனை என்பவர்கள் விநாயகாைத்தான் இடையுறாது வழிபட்டு வந்தனர். அரண்மனை யிலிருந்து வெளியேறிய ஏழை அவர்களின் வீட்டிற்குச் சென்றார். அவர்களிடம் எனது பசியைப் போக்கிக் கொள்ள அரண்மனைக்குச் சென்றேன். அவர்கள் கொடுத்த உணவு போதவில்லை என்று கூறினார். இப்போது எங்களிடம் இருப்பது விநாயகருக்கு பூஜை செய்து வைத்திருக்கும் அருகம்புல்லே என்று கூறினர்.
இந்து ஒளி

அதனைக் கேட்ட ஏழை விருப்பமின்றிக் கொடுக்கும் கோடி பொன்னைவிட விருப்பமுடன் கொடுக்குஞ் சிறு பொருளும் எனக்கு விருப்பமுடையதே என்று கூறி அறுகம் புல்லை வாங்கி உண்டார். அவரின் வயிறு நிறைந்து விட்டது; பசியும் நீங்கியது. அந்தக் கணமே திரிசுரனுடைய குடிசை பெரிய மாளிகை யானது. சகல செல்வங்களும் நிரம்பி வழிந்தன. இருவரும் வியப்புற்று ஏழையை நோக்கினர். அவர் தம் சுய உருவத்தை காட்டி அருள் பாலித்தார். அதே சமயம் மிதிலாபுரிப்பட்டணத்தில் இருந்த அனைவரின் வீடும் மாளிகையாயிற்று. அரண்மனையிலும் செல்வம் செழித்தது. மன்னனும் இதனை உணர்ந்தான். அவனது அகந்தையும் ஒழிந்தது. அகந்தையோடு வழங்கப்பட்ட அரண்மனை உணவை விட அன்போடு வழங்கப்பட்ட அறுகம்புல் உயர்வானது என்பதை இக்கதை விளக்குகிறது.
இறைவனே
துணை
ஹரன்மாயாவதி தரம்6 தெகிவளைதமிழ்மகாவித்தியாலயம்
நாம் இப்பூமியில் பிறந்தது இறைவனை வழிபட்டு அவன் திருவடியை அடைவதற்கேயாகும். நாம் முற்பிறவிகளில் செய்த நன்மை, தீமைகளுக்கேற்ப பூமியில் பிறக்கின்றோம். இறைவனை அடைவதற்கு ஏற்ற பிறவி மானிடப் பிறப்பேயாகும். தேவர், அசுரர் கூட மானிட உரு எடுத்தே இறைவனை வழிபட்டு உய்வு பெற்றி ருக்கின்றார்கள். பதஞ்சலி, இந்திரன், இராமன் போன்றோர் இவ்வாறு மானிடப்பிறவி பெற்றவர்களாவர்.
ஆதியும், அந்தமுமில்லா அருட்பெரும் சோதியான இறைவன் கருணையே வடிவானவன். ஆன்மாக்களை அவர்கள் உய்யும் வண்ணம் பரிபாலித்து வருகின்றார். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவன் வீற்றிருக்கின்றார். அடியார்க்கு அடியவனாக, எளியார்க்கு எளியவனாக தன்னை நாடும் உயிர்களுக்கு அபயம் அளிக்கின்றார்.
அருட்கடலான சிவபெருமானை நாம் இறைஞ்சித் தொழுதால் நமக்கு சகல நன்மைகளையும் தருவார். சிவபெருமானை தாயில் சிறந்த தயாவானதத்துவன் என்றும் கூறுவார்கள்.
பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்தமை, வந்திக் கிழவிக் காக மண்சுமந்தமை, மாமனாக வந்து திருச்சபையில் வழக்குரைத் தமை, விறகு வெட்டியாக ஏமநாதனின் ஆணவம் அடக்கியமை, காரைக்கால் அம்மையாருக்கு பேயுருவம் தந்து அருளியமை போன்ற மகாதேவனின் மகிமைகள் பல உள்ளன.
சிவபெருமானை தந்தையாக மட்டுமல்ல தாயாகவும் நாங்கள் வணங்குகின்றோம். அதனால் அவருக்கு தாயுமான சுவாமிகள் என்றும் திருநாமம் உள்ளது. இறைவனைத் துணையாக நம்பிக்கையுடன் வழிபட்டால் நன்மை கிடைக்கும்; நல்வாழ்வு கிடைக்கும். எல்லாமே நல்லனவாக அமையும்.
அதனால், மானிடப்பிறவி பெற்ற நாங்கள் இறைவன் துணை என்று நம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
5. விய வருடம் தை - பங்குணி)

Page 29
அன்பு நெறியில் வாழ்வோம்
ஜனனிஜெமினிகணேசன் தரம்9புனித அந்தோனியர்மகளிர்மகாவித்தியாலயம்
அன்பும் சிவமும் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே -திருமந்திரம்
*அன்பே சிவம்” என்றார் திருமூலர். அன்பு வேறு சிவம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. அன்புதான் சிவம் ஆகவும் சிவம் தான் அன்பு ஆகவும் விளங்குகின்ற உண்மையை இத்திருமந்திரப் பாடல் உணர்த்துகிறது.
அன்புதான் சிவம்.அதனால் அன்பினை உள்ளத்தில் இருத்தி அதனை எப்பொழுதும் நினைந்து செயற்படுதல் நம் கடமையாகும். அன்பையே மலராகவும், பத்திரங்களாகவும், நீராகவும், மந்திரங்களாகவும் கொண்டு அர்ச்சிக்கலாம், படையல் செய்யலாம். பிரசாதம் ஆகத்தமர், பிறர் என்னும் வேறுபாடு இன்றிச் சமமாக எல்லோருக்கும் வழங்கலாம். அதனை எல்லோருக்கும் வழங்குவதில் ஏற்படும் மாற்றம் எல்லையற்றது.
சிவத்தியானமாக, சிவவழிபாடாகக் கருதி, தினந்தோறும் பிற உயிர்களுக்கு அன்பு செய்து வர வேண்டும். அப்போதுதான் அது மாபெரும் சக்தியாக அமையும். அன்பினால் ஆகாதது ஒன்றும் இல்லை. அன்பு வாழ்வுதான் சைவ சமய வாழ்வு. அன்பு நெறியே சைவ நெறி.
இறைவன் எவ்வழி, அவ்வழியிலேயே அடியாரும் ஒழுக வேண்டும். அதுதான் உண்மைச் சைவர்கள் ஒழுகும் வழி. இறைவன் அன்பே வடிவானவன். எனவே, சைவர்களும் அவ்வழி நின்று வாழ வேண்டியது முறையாகும்.
சைவ சமயத்தின் நோக்கம் உயிர்கள் கடவுளை அடை தலாகும். அதற்குச் சைவர்கள் கடவுள் மீது பக்தி செலுத்துதல் வேண்டும். கடவுளை காலையிலும் மாலையிலும், மற்ற வேளை களிலும் பூசித்தல், தியானித்தல், திருக்கோயிலில் வழிபாடு செய்தல், அவன் புகழ் பாடுதல், பரவுதல் முதலியன மூலம் பக்தி செலுத்தலாம். அதேவேளை இந்த உலகில் உள்ள அனைத்திலும் கடவுள் நிறைந்திருப்பதால், எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்தல் அவசியமாகின்றது. உயிர்களுக்குச் செய்யும் அன்பு இறைவனுக்குச் செய்யும் அன்பாகும். உயிர்களுக்குச் செய்யும் தீமை இறைவனுக்குச் செய்யும் தீமையாகும்.
பிற உயிர்களுக்கு அன்புசெய்தல், பேணுதல் என்பன அன்பே வடிவான கடவுளுக்குப் பிரியமான தொண்டாக அமையும். அதனூடாகச் சமய நோக்கமான கடவுளைப் பின்பற்றுதல் என்பதை இலகுவில் அடைய முடியும்.
எல்லா தன்மைகளும் அன்பிலிருந்துதான் ஊற்றெடுக் கின்றன. அன்பே சிவம். எல்லாத் தீமைகளும் அன்பின்மை யிலிருந்தே உருவாகின்றன. அன்பின்மை சிவநிந்தை ஆகும். அது சுயநலத்தை வளர்க்கின்றது.
இந்து ஒளி
 

சிவத்தை மறுப்பவர்கள் அன்பை மறுக்கின்றார்கள் என்னும் உண்மையைச் சைவ நெறி காட்டுகிறது.
"எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே” எனத் தாயுமானவர் இறைவனை வேண்டுகின்றார். “அன்பின் வழியது உயர் நிலை” என்றார் திருவள்ளுவர். எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துகையில் இரக்கம் காட்டுவதையும். சைவர்கள் வாழ்க்கைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிந்தனை, பேச்சு, செயல் என்பவற்றினால் அன்பு வெளிப்படும் போதுதான் சிவ தரிசனம் செய்வதாக அமைகின்றது. அப்போது தான் சர்வம் சிவமயம் என்பது உணரப்படுகிறது.
“யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி” என்பது திருமூலர் திருமந்திரம். கடவுள் எம்மீது கருணை கூர்ந்து ஈய்ந்த பொருளை நாம் மட்டுமே அனுபவிக்கக் கூடாது. பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்புதலே முறையாகும்.
அன்பே சொரூபமாய் விளங்கும் யாவும் வணக்கத்திற் குரியவை. அந்த வகையில் கடவுள், தாய், தந்தை, பெரியோர், குரு ஆகியோர் வணக்கத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர்.
அன்பே சிவம். சிவபெருமானைச் சகல சீவ தயாபரன் என்றும், கருணாமூர்த்தி என்றும் அன்பினில் விளைந்த ஆரமுது என்றும் நூல்கள் சிறப்பிக்கின்றன.
அன்பு நெறியை மேற்கொள்வதன் மூலம், மனிதர் சிறந்த நிலையை எய்துவதுடன், மேலும் வளர்ச்சிபெற்று அருள், கருணை கைவரப்பெறும்போது தெய்வீக வாழ்வு அடையப்பெறுகின்றனர்.
சிவராத்திரி விரதம்
நளினாசெல்வநாதன் தரம்70இந்துமகளிர்கல்லூரி வெள்ளவத்தை
வசம்பந்தமுடையது சைவம். சிவம் அன்பு சம்பந்தப்
பட்டது. எனவே சைவ வாழ்வு என்பது அன்பு வாழ்வு. சைவக் குடும்பத்தில் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள், அனுட்டிக்க வேண்டிய விரதங்கள், கொண்டாட வேண்டிய பண்டிகைகள் பல உள்ளன. இவற்றுள் மகா சிவராத்திரி மிகவும் முக்கியமானது.
“விரதமாவது மனம் பொறி வழிப்போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனும், சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடல்” என்று நாவலர் பெருமான் கூறுகிறார். விரதங்கள் கடவுள் வழிபாட்டைச் சிறப்பாகச் செய்யவும், கடவுள் மீது பக்தி கொள்ளவும் உதவுகின்றன. விரதம், நோன்பு, உபவாசம் என்பன ஒத்த பொருள் தருவனவாகும்.
மகாசிவராத்திரி விரதமானது மாசி மாதத்தில் வரும் தேய்பிறை பதின்நான்காம் நாளிலே (கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசியில்) வரும் விரதமாகும்.
சிவபெருமான் செல்வச் செருக்குக்கும் கல்விச் செருக்குக்கும் எட்டாத பரம்பொருள் என்பதனை விளக்குவதற்கு, இலக்குமி நாயகனாகிய திருமாலுக்கும் சரஸ்வதி நாயகனாகிய பிரம்மாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையே அடி முடி தேடிய கதை என்பர்.
விய வருடம் தை - பங்குணி)

Page 30
முன்னொரு கற்பாந்தத்தில் உலகங்கள் எல்லாம் அழிந்து விட்டன. அப்பொழுது விஷ்ணு மூர்த்தி திருப்பாற்கடலில் ஆதிசேடனாகிய சயனத்தில் அறிதுயில் செய்து கொண்டிருந்து விட்டு, மீளவும் உலகங்களை படைக்க எண்ணி தமது உந்திக் கமலத்தில் இருந்து பிரம்ம தேவனைப் படைத்து விட்டார். பிரம்ம தேவன் தன் படைப்புத் தொழிலால், அழிந்துபோன உலகை மீண்டும் படைத்தார். தான் படைத்த உலகங்களைப் பார்க்க எண்ணி, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, தன்னை வியந்து இறுமாப்படைந்தான். பாற்கடலை கடைந்து பார்த்தபோது, நீல மலைபோல் ஓர் உருவம் உறங்குவதைக் கண்டு வியப்புற்றான். இதை அறியவேண்டும் என்ற அவாவினால் அருகில் சென்று தட்டி எழுப்பி “நீ யாவன்?” என்று கேட்டான். அதற்கு அவர் “உன் தந்தை” என்றார். “நானே எல்லாவற்றையும் படைத்த பிரம்மம் எனக்கு மேல் ஒரு பிரம்மம் இல்லை” என்றான் பிரம்மா. விஷ்ணு, “நானே பிரம்மம்” என்றார்.இவ்வாறு இருவரும் மாயையால் மயக்கப்பட்டு பல ஆண்டுகள் யுத்தம் செய்தனர்.
இந்த யுத்தத்தினால் தேவர்கள் முதலிய ஆன்ம கோடிகள் வருந்தினர். விஷ்ணு சக்கராயுதத்தையும், பிரம்மன் பிரமாஸ்திரத் தையும் பிரயோகிக்கத் தொடங்கும் நேரத்தில், அவர்கள் மத்தியில் இலிங்க வடிவான ஓர் ஒளிப்பிழம்பு ஆகாயத்தையும், பூமியையும் அளாவியதாய், அவர்கள் முன்னே தோன்றிற்று. இவ்வுரு நிற்பதை இருவரும் கண்டு இதன் அடியை அல்லது முடியை நம்மில் அறிபவர் யாரோ, அவரே நம்மில் பெரியவர் ஆவர் என்று பொருத்தம் பேசிக் கொண்டு அடி முடி தேடத் தொடங்கினர். விஷ்ணு மூர்த்தி வராக (பன்றி) வடிவெடுத்துக் கொண்டு அச்சோதியின் அடியைக் காணப் பூமியைத் தோண்டிக்கொண்டு போனார். பிரம்ம தேவர் அன்னப் பட்சி வடிவு எடுத்துக்கொண்டு அதன் முடியைக்காண மேல்நோக்கிப் பறந்து போனார். எண்ணிறந்த காலம் இருவரும் தேடியும் கண்டுகொள்ள முடியவில்லை. விஷ்ணு பகவான் முடியாமையால், அதன் அடிவாரத்தில் களைத்துப்போய் வந்து நின்றார், பிரமன் பறக்க முடியாமையால் கீழ்நோக்கி வரும்போது, சிவபெருமான் திருமுடியில் இருந்து, தாழம்பூவொன்று தவறிக் கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது. பிரம்மன் தாழம்பூவை, தான் இச்சோதியின் முடியைக் கண்டதாக ஒரு பொய் சொல்லும்படி கேட்டான். தாழம்பூவும் அதற்கிசைந்து விஷ்ணுவிடம் அப்படியே கூறிற்று. அச்சமயம் திருவருள் சிறிது அவர்கள் மாயையை அகலச் செய்ய, தங்கள் இருவருக்கும் மேல் ஒரு பிரம்மம் உண்டென்றும், அவரே சிவபெருமான் என்று உணர்ந்து, கர்வம் அடங்கி அப்பரம் பொருளை வேண்டி நின்றனர். சிவபெருமான் அவர்களது வேண்டுதலுக்கிரங்கி வெளிப்பட்டு, அவர்கள் வேண்டியவாறே அருள் செய்தார். அவர் சோதி வடிவமாய் நின்ற திருத்தலமே திருவண்ணாமலையாகும்.
பிரம்மன் பொய் சொன்ன குற்றத்தை, காஞ்சியில் வழிபாடு செய்து நீங்கப் பெற்றான் என்றும், பிரம்மன் பொய் சொன்னமையால் அவருக்கென்றொரு தனிக்கோயில் கட்டக் கூடாதென்றும், தாழம்பூ பொய் சாட்சி கூறியபடியால், சிவ பூசைக்கு விலக்கப்பட்டதென்றும் கூறுவர் பெரியோர்.
சிவராத்திரி நாள் முழுவதும் உணவை விடுத்து இரவு முழுவதும் கண் விழித்து முழு நேரத்தையும் சிவசிந்தனையிலும் சிவனடியார் கூட்டத்திலும் சிவகதை கேட்பதிலும் கழிப்பது புண்ணியமாகும். நள்ளிரவு காலமே இலிங்கோற்பவ காலமாகும். இக் காலத்திற் சிவதரிசனம் செய்வது மிகவும் விசேடமாகும். இந்துக்களின் மிக முக்கிய விரதமாக இது விளங்குகிறது.
இந்து ஒளி

அன்புப் பரிசாக அறிவூட்டும் நூலகம்
தரணியிலே தத்தளித்த தமிழன்னையின் குழந்தைகள் நமக்கு தன்னிகரில்லா உதவிகள் செய்த அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கு அனைவரும் தலை வணங்குகிறோம். அகிலமெங்கும் உதவிகள் அரங்கேற்றும் இந்து மாமன்றம் அலைபாயும் எம் மனங்களை அடக்கி வைத்து அறிவூட்ட உத்தம நெஞ்சங்களின் உதவியுடன் உவந்தளித்த நூலகம் அன்பும் அறிவும் கொண்ட அன்பர்களின் பரிசு இது திறந்து வைக்கும் நூலகத்தில் நூல்களைப் படித்து நாம் திறமைகள் பல காட்டி - உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம். நன்றிகள் பல கோடி நல் உள்ளங்களுக்கு நல்லாசிகள் நாம் பெற்று நன்றே உயர்ந்திடுவோம்.
- க. நிஷாந்தன்.
(2006 டிசெம்பர் 30ம் திகதியன்று நடைபெற்ற இரத்மலானை மாணவர் விடுதி நூலகத் திறப்பு விழாவின் போது, விடுதி மாணவர்கள் வழங்கியது.)
சிவதீட்சை
புதிய கலைகளை ஆரம்பிக்க விஜயதசமி - தைப்பூசம் போன்ற நல்ல நாட்களை தெரிவு செய்கிறோம். ஆனால் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தெரிவு செய்ய வேண்டிய தினம் சிவராத்திரியாகும். சிறப்பான சிவலிங்க பூஜையை ஒரு குருவிடமிருந்து பெற்று சிவ பூஜை செய்ய தொடங்கவும் சிவதீட்சை பெறவும் இந்த சிவராத்திரி தினம் விசேடமானதாகும்.
ஏனைய நாட்களில் சிவதீட்சை பெறுவதைவிட இந்த சிவராத்திரியன்று தீட்சை பெறுவது பலமடங்கு பலனைத் தரும் சிவராத்திரியின் லிங்கோற்பவ காலத்தில் சிவனின் திருவுருவம் சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அருவுருவமாக சிவபக்தர் களுக்கு காட்சிதரும் நேரமாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் சிவதீட்சை பெறுவதும் சிவபூஜையை ஏற்றுக் கொள்ளலும் மிகவும் சிறப்புடையது.
-செல்வி வி. லாவண்ணியா
விய வருடம் தை - பங்குணி)

Page 31
தல யாத்திரை
தேசஹானா தேவி ஆண்டுgபுனித அந்தோனியர்மகளிர்மகாவித்தியாலயம்
*ஆலயந்தானும் அரன் எனத்தொழுமே” என்கிறது சிவஞான போதம். இறைவன் ஆலயத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக ஊர்கள் தோறும் கோயில்கள் அமைத்தனர். இவ்வாலயங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புக்களை உடையனவாய் விளங்குவதன் காரணமாக பல்வேறு தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு இறைபக்தியை வளர்ப்பது சாத்தியமாகின்றது.
காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாகப் பாவனை செய்து வழிபடும் பக்குவநிலையை அப்பர் சுவாமிகள் பெற்றிருந்தாலும் தல யாத்திரை மேற்கொண்டு, ஒவ்வொரு தலத்திலும் உள்ள மகிமைகளை தம் தேவாரத் திருப்பதிகங்கள் வாயிலாக எடுத்துக் கூறி வழிபட்டார். தலயாத்திரையின் அவசியத்தையும் வெளிப் படுத்தினார். மக்களையும் ஆலய வழிபாட்டிற்கு நெறிப்படுத்தினார். சமயகுரவர் நால்வரும் ஆலயங்களுக்குச் சென்று பக்தி கனிந்த திருப்பாடல்களை இசையோடு பாடினர். அதன் மூலம் மக்களை ஆலய வழிபாட்டிலே ஈடுபடுத்தினர். தலயாத்திரை செய்யும் பொழுது திருமுறைகளிலும் திருப்புகழ்களிலும் குறிப்பிட்ட தலங்கள் முக்கியமானவை. அவ்வாறே இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய தமிழ்க் கலைகளை அழிந்து போகாவண்ணம் காத்துக் கொள்வதற்கும், பக்தி காரணமாக மக்கள் ஒன்றுகூடும் ஆலயங்கள் முக்கிய இடங்களாகத் திகழ்கின்றன. வெவ்வேறு ஆலயங்களிலே மேற்கொள்ளப்படும் பல்வேறு சடங்கு முறைகள் அக்கலைகளைப் பாதுகாப்பதற்கு உதவுகின்றன.
அழகினாற் கவரப்பட்டு அதில் ஈடுப்படாதிருப்பவர் இவ்வுலகில் யாரும் இல்லை. ஆலயங்களிற் காணப்படும் கட்டிட சிற்பக்கலைகளின் சிறப்பு எம்முன்னோர் வாழ்க்கையிற் பொதிந்து கிடக்கும் பண்பாட்டுப்பெருமையை எடுத்துக் கூறுவதாய் உள்ளது. ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தங்களில் கலையழகும் தெய்வீகப் பேரழகும் ஒரு சேரப் படைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீச் சரம், திருக்கோணேச்சரம் என்பனவும், பழமை வாய்ந்த முன்னேச் சரம், நகுலேச்சரம் போன்றனவும், வெவ்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஆலயங்கள் பலவும் தலயாத்திரை மேற் கொண்டு வழிபடுவதற்கு உரியன. குறிப்பிட்ட இடத்தில் இறைவன் விரும்பி உறைகின்றான் என்ற அகநோக்கோடுதலயாத்திரை மேற் கொள்ளப்படுகின்றது. அதனால் அத்தலத்திலுள்ள இறைவனைச் சிறப்பாக பூசிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
யார் தன்னை அன்பு மீதுTரப் பெற்று வணங்குகிறார்களோ, அவர்களிடத்து ஆட்பட்டிருப்பான் ஆண்டவன். அடியார்களின் பக்தி வலையிற்படுபவன் அவன். எனவே, தன்னை நினைப்பவர் நெஞ்சில் தன் திருவடி புனைவான். அதனாலேதான் தாயுமான சுவாமிகளும் -
"எங்கனும் பெருவழக்காய், யாதினும் வல்ல வொரு சித்தாகிச் சித்தமிசைகுடிகொண்ட தேசோமயானந்தமேன்ன்று பாடினார்.
(இந்து ஒளி 고

திருக்கோயில்களைச் சென்று பார்ப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன. கலை, பண்பாடு, தெய்வீகம் என்னும் பலவற்றிற்கும் உறைவிடமாக விளங்குவன திருக்கோயில்கள் ஆகும். ஆங்காங்கே உள்ள கோயில்களின் கோபுரங்களிலும், சுவர்களிலும், தூண் களிலும் உள்ள கலை நுட்பங்களும் சிறப்புக்களும் மக்களின் கலை யார்வத்தை வளர்க்கவல்லன. கோயில்களிலும், கோயிற்சூழலிலும், புதைந்தும் வெளிப்பட்டும் உள்ள கல்வெட்டுக்கள் தலங்களின் மகிமையையும், வரலாற்றுப் பெருமைகளையும் எடுத்துரைப்பன.
பல்வேறு தலங்களைச் சென்று தரிசிக்கும்போது ஆங்காங்கே எழுந்தருளி இருக்கும் இறைவனின் அருள் கிடைக்கின்றது. அத்துடன் தெய்வங்களின் தெய்வீகப் பொலிவும் அற்புதங்களும் இறைநம்பிக்கையை வளர்த்து, வழிபடுவோரின் மனநிறைவுக்கும் ஆன்ம ஈடேற்றத்திற்கும் துணைபுரிகின்றன.
அன்புள்ள அன்னைக்கு
அர்த்தமுள்ள பிறவி எடுத்த அன்புள்ள தாயே எம் நெஞ்சங்களில் என்றும் அகலாமல் வீற்றிருக்கும் புனித தேவதையே!
அன்பெனும் விடயத்தில் அட்சய பாத்திரத்தில் அழகான உள்ளம் கொண்டவரே நாம் இப்பூமியில் உள்ள வரை தரிசிக்கும் ஒவ்வொரு நாளிலும்
உங்களைப் படைத் ததற்காய் உவகையுடன் கூறுகின்றோம் உலக நாயகனுக்கு நன்றிகள் பலகோடி!
வானம் பூமி உள்ள வரை மனிதம் மரணிக்காதிருப்பதற்கு நீங்கள் வேண்டும் என்றென்றும்
ஒளிமயமான எதிர்காலத்தில் ஒளிரப் போகும் தீபங்களுக்கு அணைந்து போகாமல் ஒளி கொடுக்கும் தாயே எந்தப் பிறப்பிலும் சீரும் சிறப்பும் பெற்று சீதேவியாய் நீங்கள் வாழ்ந்திட வேண்டுகிறோம் இறைவனை
உங்கள் நெற்றிக்கண் திறவாமல் வெற்றிகள் பல கண்டு புகழ் மாலைகள் பல சூடி உங்கள் அர்ப்பணிப்பை அர்த்தமாக்குவோம்! அன்புள்ளவர்கள் ஆவோம்!
-இ விவேக் இரத்மலானை மாணவர் விடுதி
விய வருடம் தை - பங்குணி)

Page 32
மக்கள் சேவை
செ.சஹானாதுஷ்யந்தி ஆண்டு7D,சைவமங்கையர்கழகம்
*அம்மையே அப்பா” என்று மாணிக்கவாசக சுவாமிகளும் "அப்பன் நீ அம்மை நீ” என்று நாவுக்கரசரும் இறைவனைப் பாடியதிலிருந்து நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்பது தெளிவாகின்றது. மக்களிற் பலர் வாழ்வில் அல்லற் படுவதை நாம் அவ்வப்போது காண்கின்றோம். இவ்வாறு அல்லற்படும் மக்களுக்கு உதவுவதே மக்கள் சேவை எனப்படும். இதுவே சைவ சமயம் காட்டும் அன்புநெறி, அதாவது தொண்டு நெறி ஆகும். எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான். எனவே, மக்களுக்குச் செய்பவன் ஆகின்றான். “மக்கள் சேவை கேசன் சேவை”என்றவாக்கியம் இக்கருத்தினை விளக்குகின்றது.
நடமாடும் கோயில் நம்பர்க் கொன்றியில் படமாடும் கோயில் பகவற்கதாமே” என்றும் திருமந்திரப் பாடலடிகள் மேற்கூறிய கருத்துக்களை விளக்கும்.
“உலகில் வாழும் உயிர்களுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் மேலான அறம் எதுவும் இல்லை” என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். நாம் உயிர்கள் மேல் காட்டும் அன்பு, மக்கள் சேவைக்கு அடிப்படையாக உள்ளது.
உண்மை, நேர்மை, பணிவு என்னும் உயர்ந்த பண்புகளை சமயப்பணி, மக்கள்சேவை செய்பவர்கள் கொண்டிருத்தல் வேண்டும். மக்கள் சேவை செய்யும் ஒருவர், அவற்றை நான் செய்கிறேன் என்ற முனைப்புடன் செய்யாது இறைவனின் திருவருள் செய்விக்கின்றது என்ற சிந்தனையுடன் செய்ய வேண்டும். இச்சேவையை ஆலயத் தொண்டாகச் செய்யின் அது சரியையில் அடங்கும்.
“பசி வந்திடப் பத்தும் பறந்து போம்” என்ற பழமொழி பசி மிகவும் கொடுமையானது என்பதை விளக்குகின்றது. பசியானது ஒருவனின் நற்பண்புகளை இழக்கச் செய்யும். இத்தகைய கொடுமைமிக்க பசியை நீக்க உதவுவது மக்கள் சேவைகளுள் உயர்ந்ததாகும். திருத்தொண்டர்புராணம் கூறும் இளையான் குடி ாறனார், காரைக்கால்அம்மையார், இடங்கழியார் முதலிய நாயன் பார்கள் பசிப்பிணியைப் போக்குவதை உயர்ந்த சேவையாக செய்து வாழ்ந்தவர்கள். திருவிழிமிழலையில் ஒரு காலத்தில் கடும்பஞ்சம் ஏற்படடது. அப்போது அங்கு வந்த சம்பந்தரும், திருநாவுக்கரசரும் இறைவனைப் பாடி பொற்காசு பெற்று மக்களுக்கு உணவளித் தார்கள். ஆறுமுகநாவலரும் கஞ்சித் தொட்டி அமைத்து உணவுப் பசியை நீக்கினார். எமது நாட்டிலுள்ள ஆலயங்களில் அன்னதான மடங்கள் அமைத்து பசித்து வருவோருக்கு உணவளித்து வருகின்றனர். நோயினால் வருத்தமுறும் நோயாளர்களுக்கு அவர்களின் துன்பத்தைப் போக்க உதவுவது மிக உயர்ந்த சேவை பாகும். மேலும், நோயுற்று இருக்கும் ஒருவரைச் சென்று பார்த்து ஆறுதல் கூறுவது அவரின் துன்பத்தைப் பெரிய அளவில் குறைக்கும். கல்வி அறிவு அற்றோருக்குக் கல்வி அறிவைப் புகட்டுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தல் வேண்டும். மானிடப்பிறவி கிடைத்தற்கரியது. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அப்பர் சுவாமிகளின் வாக்கிற்கு இணங்க இக்கள் சேவை செய்து, பிறவியின் பயனை அடைவோமாக.
இந்து ஒளி I

சந்தனத்தின் மகிமை ச.அருள்மொழி
தரம்98,புனித அந்தோனியர்மகளிர்மகாவித்தியாலயம்
சிந்தனம் இந்துக்களின் வாழ்வோடு இணைந்த ஒன்றாக விளங்குகிறது. நறுமணமும், குளிர்ச்சியும் கொண்டதாக இது உள்ளது. சந்தன மரக்கட்டைகளில் இருந்து சந்தனம் பெறப் படுகின்றது. மதச் சடங்குகளிலும், வரவேற்பு போன்ற நல்ல முகூர்த்தங்களிலும் சந்தனம் கொடுப்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்துக்களின் பூசைப் பொருளாகவும் இது விளங்குகிறது. சந்தனத்திற்கு மருத்துவ குணங்கள் பல உள்ளன. நோய்க் கிருமிகள், தோல் வியாதிகள் போன்றவற்றை அழிப்பதும், குளிர்ச்சி அளிப்பதும், இதயத்திற்கு நலம் அளிப்பதும், நாவின் ருசியின்மையை அகற்றுவதும், மலம், பித்தம் ஆகியவற்றை முறைப்படுத்துவதும் சந்தனத்தின் குணங்களாகும் என்று ஆரோக்கிய சாஸ்திரம் கூறுகிறது.
பலம், நிறம், உடல் நலம், மன உணர்வு, ஐஸ்வர்யம் ஆகிய வற்றையும் சந்தனம் தருகின்றது. சந்தனப் பொட்டு வைக்கும் போது பின்வரும் நினைவுடன் வைத்துக் கொள்ள வேண்டும். சந்தனம் சாந்தி, ஐஸ்வர்யம், மனஉறுதி, சுகம், செளபாக்கியம், பலம் ஆகியவற்றை வழங்குகின்றது. தினமும் பூசை செய்யும் வீடுகளில் எல்லாம் சந்தனத்தை வைத்திருப்பர். பகவானுக்கு சந்தனம் சாத்திய பிறகு பக்தன் அதனைத் தனது நெற்றியில் வைத்துக் கொள்கிறான்.
மருத்துவ குணங்கள் உள்ள சந்தனத்தை அணிவது நமது உடலுக்கு நன்மை பயக்கும். அதனால்தான் ஆலயங்களிலும், பூசை சமயங்களிலும் இதைக் கட்டாயமாக உபயோகிக்கின்றனர். சந்தனக் கட்டையின் விலை அதிகமாக இருந்தாலும் சிறிய துண்டு சந்தனமாவது வைத்திருப்பர்.
மரணத்திற்கு பிறகு இறுதிக் கிரியைகள் செய்யும்போது சந்தனக்கட்டை உபயோகித்தல் வழக்கம். சந்தனம் பலவகைப்படும். அதில் பெரும்பாலும் இரக்த சந்தனம் வழக்கத்தில் உள்ளது. இது அழகை அதிகரிக்கச் செய்வதுடன் பல மருத்துவ குணங்களும் கொண்டது. எப்போதும் பிறருக்கு நன்மை செய்பவர்களான நன் மக்கள் கஷ்டகாலத்திலும் தங்களை நாசம் செய்பவர்களிடம் கூட பகைமையை பாராட்டுவதில்லை. தன்னை வெட்டும் கோடரியின் முனைக்கு கூட சந்தன மரம் நறுமணம் அளிக்கிறது. இவ்வாறான குணநலம் பொருந்திய சந்தனத்தை பூசி ஐஸ்வர்யம், மனவுறுதி, சுகம், பலம் ஆகியவற்றைப் பெற்று இன்புற வாழ்வோமாக.
பலமற்றவன் நேர்மையுள்ளவனானால் அவனும் பலவானே.
(Jégß)
நேர் வழியில் நடப்போர்க்கு எங்கும், என்றும் சுதந்திரம்.
(பக்தி)
கீர்த்தி வேண்டுமானால், நேர்த்தியாக உழைக்க வேண்டும்.
(பக்தி)
ஆண்டவன் விரும்பும் இருப்பிடம் இரக்கமுள்ளோர் இதயம்.
(பக்தி)
விய வருடம் தை - பங்குணி)

Page 33
கடவுள் ஒன்று -
பிரியதர்சி øSJuh 12E(Com), Gast/gram
5டவுள் ஒருவரே. அந்தப் பரம்பொருள், பிரம்மம், உண்மை எல்லாம் ஒன்றே. ஆனால் நாம் பல்வேறு நாமங்களில், ரூபங்களில் அந்த இறைவனை வழிபடுகிறோம். எமது அலைபாயும் மனத்தை ஒரு நிலைப்படுத்தி உண்மைப்பரம் பொருளை உணர, அதுவாகவே இருக்க, குறிப்பிட்ட நாம ரூபம் அவசியம் ஆகின்றது. மனதால் உருவகிக்கக்கூடிய ஒன்றிலேயே மனம் ஒருமுகப்பட முடியும். எனவேதான் விக்கிரஹங்கள் தேவைப்படுகின்றன.
மக்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட இயல்புடையவர் களாகவும் வெவ்வேறு ஆன்மீக நிலைகளிலும் காணப்படுகின் றனர். எனவே அவர்களின் அந்தந்த நிலைக்கேற்ப, இயல்புக் கேற்ப இறைவனை நாம் பல்வேறுபட்ட நாம ரூபங்களில் வழிபடு கின்றோம். நாம் குறிப்பிட்ட ஒரு நாம ரூபத்தை மட்டும் கொண்டி ருந்தோமானால் எமது மதம் இன்று அழிந்திருக்கும். தூக்கியெறி யப்பட்டிருக்கும். மக்களுக்காகவே மதம்; மதத்திற்காக மக்களல்ல. ஒவ்வொரு நாம ரூபத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு வரலாறு உண்டு. ஒவ்வொரு விக்கிரஹமும் ஒரு தத்துவத்தை எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கின்றது. ஆகவே அவரவர் தமக்கேற்ற, தமக்குப் பிடித்த வடிவத்தை இஷ்ட தெய்வமாக வழிபட்டு அந்தத் தத்துவநிலையில் உயர்ந்து செல்லலாம்.
சுவாமி விவேகானந்தர் கடவுட் தத்துவத்தைப் பற்றிக் கூறுகையில் “பிரபஞ்சத் தலைவரும், பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பவருமான முழுமுதற் கடவுள் ஒரு நிர்க்குணத் தத்துவம். அந்தத் தத்துவத்தின் உருவத் தோற்றங்களாகிய நீங்கள், நான், பூனை எல்லாம் சகுனக் கடவுள்கள்” என்கிறார்.
உடலின் துணைக் கொண்டு உள்ளிருக்கும் ஆத்மாவை அறிந்து கொள்ள முயல்வது போன்று, சகுன கடவுள் ஆகிய விக்கிரஹத் துணைக் கொண்டு நிர்க்குணத் தத்துவமாகிய கடவுளின் சான்னிததியத்தை தெரிந்து கொள்ள முயலுகின்றோம். இந்துமத ஞானிகள், ரிஷிகள் “ஏஹம்சத் விப்ரா பஹுதா வதந்தி” என்றே மக்களுக்கு போதித்து வந்திருக்கின்றனர். அதாவது “உண்மை ஒன்றே, அதனை ரிஷிகள், ஞானிகள் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கின்றனர்” என்பதே அந்தச் சுலோகத்தின் உட்பொருளாகும்.
ஒவ்வொரு மனிதருக்கும் கடவுள் பல்வேறு வடிவங்களில் தான் தோன்றுகின்றது. அதாவது சிலர் கடவுளை தாயாகவும், தந்தையாகவும். இன்னும் சிலர் நண்பராக, அல்லது உறவினராக என பல தோற்றங்களில் வழிபடுகின்றனர். ஆனால் அனைவரும் வழிபடும் இறைவன் ஒருவனே ஆவான். ஒவ்வொரு மனிதனும்
T
சிவனின் எட்
சிவராத்திரியின் போதுகண்விழிந்திருப்பவர்கள் சிவனின் எட்டுநாமங்களை
1) பூரீபவாயநம; 2) பூரீசர்வாயநம; 3) 5) யூரீஉக்ராயநம; 6) பூரீமகாதேவாயநம; 7)
இதை விட-ஓம் நமசிவாய என்ற சிவமந்திரத்தை தினந்தோறும் ஜபிப்பே பத்துசொற்களா,ஐந்தேஐந்து எம்மால்தினமும் உச்சரிக்கமுடியாதா?
இந்து ஒளி

நாம ரூபங்கள் பல
ரிசிவமணி நாதன்இந்துமகளிர்கல்லூரி
இறைவனை பல ரூபங்களில் வழிபடுகின்றான். இவ்வாறு ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வெவ்வேறு வடிவங்களில் வழிபட்டால்தான் இறைவன் கூட இருப்பதாகவும், தான் நினைப்பதையும், கேட்பதையும் தருவதாகவும் மனிதன் உள்ளத்தில் எண்ணுகின்றான். இதனால்தான் இறைவனின் ரூபங்கள் பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றது.
இறைவனானவர் பல ரூபங்களாக காணப்படுவதற்கு பல காரணங்கள் காணப்படும். சமயகுரவர்களும் இறைவனை பல்வேறு ரூபங்களில்தான் வழிபட்டனர். இறைவனை இறைவ னாகவே நினைத்து வழிபட்டால் இறைவனை வேறொருவராக தான் எமக்கு நினைக்க தோன்றும். ஆனால் இறைவனை எம்முன் ஒருவராக அதாவது தாய், தந்தை, அல்லது நண்பன், அல்லது குழந்தையாக நினைத்து வழிபட்டால் இறைவன் எம்முடனேயே இருப்பதாகவும், எம் கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் பங்கெடுப்ப வராகவும் காணப்படுவார். இதனால்தான் இறைவன் இறைவனாக இல்லாமல் பல ரூபங்களில் காணப்படுகின்றார்.
நடைமுறை வாழ்க்கையை எடுத்துக் கொண்டோமேயானால், ஒரு வீட்டுக்குத் தலைவராக இருப்பவர், தன் மனைவிக்கு அன்பான கணவராகவும், பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், அலுவலகத்தில் அதிகாரியாகவும், தன் அப்பாவிற்கு அன்பு மகனாகவும், நண்பர்களுக்கு நண்பனாகவும் இருப்பது போன்றே தெய்வமும் பல்வேறு பரிணாமங்களில், நாம ரூபங்களில் வழிபடப் பெற்றாலும் உட்தத்துவ உண்மை ஒன்றே; கடவுள் ஒன்றே.
இறுதியாக, இறைக் காட்சி பெற்ற பிறகுதான் அவரைபற்றி (இறைவனை) சரியாகப் பேசமுடியும். அப்படி இறைக்காட்சி பெற்றவனுக்கு, உணர்ந்தவனுக்கு, அதுவாயேயிருப்பவனுக்கு, இறைவன் உருவமுடையவர், அதே வேளையில் உருவம் அற்றவர் என்பது தெரியும். அவர் இன்னும் என்னென்னவாகவோ உள்ளார் என்பதுவும் அவரைப் பற்றி கூறுவதும் சாத்தியமில்லை என்பதுவும் தெரியும். யார் எப்போதும் கடவுள் நினைப்பில் இருக்கிறானோ அவன்தான் அவர் என்ன உருவத்தை உடையவர் என்பதை அறியமுடியும். அவர் பல உருவங்களில் காட்சி யளிக்கிறார், பல நிலைகளில் காட்சியளிப்பார். அவர் குணங்கள் உடையவர், அதேநேரம் குணங்களற்றவர் என்பதை அவனே அறிவான். “பச்சோந்தி பல நிறம் கொண்டது, நிறமற்றதும் கூட” என்பதை மரத்தடியில் இருப்பவனே அறிவான். அவனாலேயே அறியமுடியும். ஆகவே நாம் இறை நினைப்பிலேயே மூழ்கி அந்த பிரம்மத்தை உணர்ந்து அதுவாகவேயிருப்போமாக !
டு நாமங்கள் ஜபிப்பார்களானால் சிவனருள் கிட்டும் என சொல்லப்படுகிறது. அவை என்ன? பூரீருத்ராயநம; 4) பூரீபசுபதயே நம;
பூரீ பீமாயநம ; 8) பூரீ ஈசானாயநம;
மானால் அதற்குரியபலன்பலமடங்காகும். ஆயிரம்சொற்களா,நூறுசொற்களா,
-செல்வி.வி.இலக்ஷிணியா o விய வருடம் தை - பங்குணி)

Page 34
லிங்கமூர்த்தியின்
செல்வி.வி.ல
அடி முடி தேடிய விஷ்ணுவுக்கும், நான்முகனுக்கும் பெரிய சோதிப்பிழம்பாக லிங்க வடிவில் காட்சிகொடுத்தான் சிவன். அந்த லிங்கத்தின் அடி எது முடி எது என்று அறிய முடியாமல் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தவர்கள் பிரம்மா விஷ்ணு
அந்த லிங்கம் எத்தகையது? பிரம்மா தான் கண்டதை அழகாக வர்ணிக்கிறார். பல்லாயிரம் கோடி ஜுவாலைகளால் பூரணமாகவும் காலாக்கினிக்கு இணையாகவும்,நாசவிருத்திகள் இல்லாததாகவும், ஒப்பற்றதாகவும், வாக்குக்கும் மனதுக்கும் எட்டாததாகவும், உலகங் களை உண்டுபண்ணத்தக்கதாகவும், விளங்கியதாம் அந்த லிங்கம்! அந்த லிங்கத்தின் தென்பகுதியில் அழிவில்லாததும் முதலா வதுமான அகாரம் சூரியமண்டலம் போலவும், வடபகுதியிலிருந்த உகாரம் அக்கினியின் காந்தியைப் போலவும், நடுவிலிருந்த மகாரம் சந்திரமண்டலம் போலவும், உயரத்தில் 'ஓம்' என்ற ஒலி நாதத்தின் விசேஷத்தையும், எல்லாம் சேர்ந்து ஸ்படிகக் கல்போன்ற சிவனை லிங்கத்தில் கண்டு வியந்து நின்றனராம்.
லிங்கத்தில் சிவனின் உருவை நினைந்து பூஜித்தால் சகல பலன்களையும் தந்தருள்வதாக பிரம்மா விஷ்ணுவுக்கு அருள் வாக்களித்தவர் சிவன்.
எவர் மனதில் எப்பொழுது துக்கம் உண்டாகிறதோ அப்போது அவர் இந்த லிங்க மூர்த்தியை பூஜித்தால் துக்கம் ஒழிந்துவிடும் மாபெரும் ஆற்றல் உருவாகும். லிங்கம்தான் எல்லாம்! சரஸ்வதியும் லிங்கம்தான், மகாலஷ்மியும் லிங்கம்தான், மகாகாளியும் லிங்கம், பிரம்மாதி தேவர்களும் லிங்கம், சிவபெருமானும் லிங்கம் என எடுத்துரைக்கிறார் சூதமாமுனிவர்.
நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன் பலத்தை அளிக்கும் சதாசிவன், பரநாதம் நன்மையைத் தருகின்ற சத்திசிவன் என்ற ஒன்பது வடிவமாய் பயன்களைத் தருகின்றது லிங்கம! மேலானது இதுவே என கூறுகிறது திருமந்திரம்.
இத்தகைய லிங்கம் ஏன் முட்டை வடிவத்தில் இருக்கிறது? சிவனுக்கு உருவம் கொடுத்து வழிபடலாம்தானே! ஆலயங்களில் இருக்கும் லிங்கோற்பவருக்குரிய தாத்பரியம் என்ன? என கேட்பவர்கள் உள்ளனர்.
வட்டமான சொரூபத்துக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என காட்டுகிறது இந்த உருவம். சரியான வட்டமாக
“இந்து நாகரிகம்” - நு
க பொ.த. (உயர்தர) வகுப்பில் “இந்து நாகரிகம் பாடத்திட்டத்திற்கு அமைவான கட்டுரைகளைத் நூலின் வெளியீட்டு விழா இம்மாதம் 17ம் திகதியன் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது
இந்து ஒளி
 

பக்திச் சிறப்பு
இல்லாமல் லிங்கம் நீள்வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சத்தின் சுழற்சியே இப்படி ஒரு நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பது தெரிந்ததே! எங்கள் சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டாலும் கிரகங்களின் அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது என விஞ்ஞானிகள் கருத்துக் கூறுவர். லிங்கரூபத்துக்கு இது மிகப் பொருத்தமாக அமைகிறது.
நாம் எமக்கு வேண்டியவர்களை மனதில் நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நினைப்பவரை நேரில் பார்த்தால் இன்னும் மகிழ்ந்து போகிறோம். உருவம் இல்லாத சிவன் உருவத்துடன் காட்சிதந்தால் எப்படி இருக்கும்? ஞானிகளுக்கு மட்டும்தான் பரமாத்ம சொரூபத்தின் உருவம் இல்லாத பண்புபுரியும். உருவத்தைப் பார்த்து மகிழும் எமக்கு ஈஸ்வரனை உருவத்தில் கண்டால் மகிழ்ச்சி எண்ணிலடங்கா. அதற்காகவே அருவமான ஈஸ்வரன் அருவுருவமான லிங்கத்துடன் நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்விய சொரூபம் காட்டும் லிங்கோற்பவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும் தமக்கு அடியும் இல்லை முடியும் இல்லை - ஆதியும் அந்தமும் இல்லை என்பதை உணர்த்தவே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடியின்றியும், கீழே பாதம் அடங்காமலும் காட்டுகிறார் என விளங்குகிறார் காஞ்சி காமகோடி.
பூமி லிங்கமயமானது. லிங்கம் இல்லாத இடமே இல்லை. கங்கை முதலிய தீர்த்தங்கள் எல்லாம் லிங்கம்தான். உலகம் யாவும் லிங்கத்துக்குள்ளே அடக்கம். எமக்காகவே - எமக்கு அருள் புரிவ தற்காக, துயரைத் துடைப்பதற்காக சிவன் லிங்கரூபமாக விளங்கு கிறார். லிங்கார்ச்சனை செய்தால் சகல பலன்களும் கைகூடும்.
இதுமட்டுமல்ல, தேவர்களாலும் முனிவர்களாலும் அர்ச்சிக்கப் பட்டவர் லிங்க மூர்த்தி. கருணையைச் செய்பவர் லிங்கமூர்த்தி. இராவணனுடைய கர்வத்தை நாசம் செய்தவரும் லிங்கமூர்த்தி ! புத்தியை விருத்தி செய்ய காரணமானவர் லிங்கமூர்த்தி. எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணம் லிங்கமூர்த்திதான். எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்வது கூட லிங்க மூர்த்தியே! என விளக்குகிறார் ஆதிசங்கரர்
எனவே, லிங்க வடிவினனான சிவனை - சிவ உருவத்தில் மனதால் எண்ணி- மனமுருகப் பிரார்த்தனை செய்து வழிபட்டால் எல்லாப் பலன்களையும் பெறலாம்
ால் வெளியீட்டு விழா
* பாடத்தைக் கற்கும் மாணவர்களின் நன்மை கருதி, தொகுத்து மாமன்றம் வெளியிட்டிருக்கும் மேற்படி று (17 03, 2007) மாலை 4.00 மணிக்கு பம்பலப்பிட்டி
1. - விய வருடம் தை - பங்குணி)

Page 35
மங்கையர் ஒளி
(Dனிதனுடைய நாளாந்தக் கடமைகளில் வழிபாடு இன்றி யமையாதது. தனக்கு முன்னே வாழ்ந்தவர்களுடைய வாழ்வியலின் வழிச் செல்வதே வழிபாடாகும். அன்னையும் பிதாவும் எமது முன்னறி தெய்வங்கள். ஆலயம் தொழுவது சாலவும் நன்றென உணர்ந்தவர்கள். எனவே எமது மூதாதையர் காட்டிய செல்நெறி நாமும் கடைப்பிடிக்க வேண்டியது முறைமை. ஆனால் நாம் வாழும் காலமும் சூழலும் இம்முறைமை பற்றிய ஐய்ங்களையும் முரண்பாடு களையும் தோன்றச் செய்துள்ளன. அவற்றைக் கண்டு தெளிவு படுத்திக் காலத்தோடு இணைந்து வருகின்ற வழிபாட்டு நெறியை எல்லோரும் கடைப்பிடிக்க உதவவேண்டியது கற்றோரது தலை யாய பணியாகும். அப்பணியைச் செய்வதற்கு வழிபாடு பற்றிய முன்னோர்களது பட்டறிவின் பயனாகப் பதிவு செய்யப்பட்டுள்ள பாடல்கள் நன்குதவும். எனக்கு மேலே என்னை வழிநடத்தும் ஒரு பேரருள் இருப்பதை உணர்ந்தவர் பலர். தமது உணர்வைப் பாடலாக்கிச் சென்ற அவருடைய பட்டறிவு எம்மையும் வழிநடத்தும்.
வழிபாடு செய்யப்படும் வேளைக்கேற்பச் சமயம் எனப்பட்டது. செயற்பாட்டின் தீவிரத்திற்கேற்ப மதம் எனப்பட்டது. அடிப்படை யான வழிபாடு' என்ற நிலை தன்னளவில் செய்யப்பட்டபோது அதன் பயனும் சுயநலமாயிற்று. ஆனால் பலர் இணைந்து கூட்டு நிலையில் கூட்டுவழிபாடாக நடந்தபோது பலருக்கும் பயன்தரும் வாழ்க்கையின் செல்நெறியாயிற்று. அதன் விளக்கத்தைத் தெளிவு படுத்தும் முயற்சிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. ஒரு குறிப்பிட்ட நாளை அல்லது நாள்களை, அல்லது ஒரு திங்களை அம்முயற்சிக்கென ஒதுக்கியும் நம் முன்னோர் நமக்கு வழிகாட்டி யுள்ளனர். சிறப்பாகப் புராண, இதிகாசம் என்றும் தேவாரம், திவ்விய பிரபந்தமென்றும் அருட்பாடல்களென்றும் அவை இன்று எமக்குக் கிடைத்துள்ளன. அவற்றுள்ளே குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் இன்று மீண்டும் எடுத்துரைக்கப்பட வேண்டியவை. எமது உள்ளத்திலே ஒளியேற்றும் சுடராக அவை பேணப்பட வேண்டும். காலக் கடப்பிலும் சூழல் மாற்றத்தாலும் நமது உடலின் தோற்றம் மாற்றம் பெறலாம். ஆனால் உள்ளத்து உணர்வுகள் மாறக் கூடாது. உள்ளத்து உணர்வுகள் தடம்புரளாமலிருக்க வழிபாடுதான் என்றும் துணைநிற்கும், அதனால் வழிபாடு பற்றிய தெளிவான எண்ணத் தைப் பலரோடும் பகிர்ந்து கொள்வது நல்லது. நாம் அறிந்ததை உணர்ந்ததைப் பரவசப்பட்டு நின்றதை உள்ளத்திலே நிறுத்தி நினைந்து உவப்பதை எழுத்தில் வடிப்பதால் எமது அடுத்த தலை முறைகளுக்கு ஒரு பதிவுத் தளத்தை உருவாக்கலாம். அது இன்றைய இணையத்தளம் போல உலகை வலம் வந்து கொண்டிருக்கும்.
அந்த வகையில் கச்சியப்ப சுவாமிகள் எழுதிய ‘சிவராத்திரி புராணம் என்ற நூல் கண்ணில் பட்டபோது அது சொல்லும் செய்தி தகவல்களாக நிலைபெற்று சிவராத்திரி விழாவாகச் செயற் படுவதைட் பற்றி மீளவும் எண்ணிப் பார்க்க நேர்ந்தது. வழி பாட்டினால் நாட்டில் வளமும் வசியும் பெருகும். நோயும் பிணியும்
இந்து ஒளி -- 3.
 

MeM eMeMeMeMeMeM eMeOMMeOMMeMeOMeMeMMM eM eO eOM eOMT
ல் நட்டம் பயின்றாடும்
LIGGOT
லாநிதிமனோன்மணி சண்முகதாஸ்
அருகும். துன்பமும் துயரும் விலகும். இடுக்கணும் இன்னலும் ஒய்ந்து போகும். மக்கள் வாழ்க்கையில் வரும் இடரினும் தளரினும் மீள்வதற்கு இலக்கியப் பதிவுகளும் உதவும் என்ற அசையாத நம்பிக்கை ஒன்று நிலைத்திருந்தது. அந்தப் பதிவுகளில் சிவராத்திரி புராணம் இன்று எம் உள்ளத்தில் ஒரு நிலையான வழிபாட்டு மரபை உணர்த்தி நிற்கிறது.
சிவராத்திரி' என்பது சிவனுக்கெனத்தனியாக ஒரு நாளை ஒதுக்கி வழிபாடு செய்தலாகும். நம்முன்னோர் வீடு பேறு அளிக்கும் விரதங்களில் மாசி மாதத்திலே வருகின்ற மகா சிவராத்திரியை சிறப்பானதெனக் கருதிச் செயற்படுத்தினர். அன்றைய இரவு செய்யும் வழிபாடு கோடி பாவங்களையும் போக்கி விடும். அதனால் சிவனின் புகழைப் பேசும் நாளாகவும் சிவராத்திரி விளங்குகிறது. புராணத்தில் சிவனே இவ்விரதத்தின் மேன்மையைத் திருமாலுக்கு விளக்கியுள்ளார். இதைவிட வேதநிதியின் கதையும் வேடன் கதையும் சிவராத்திரியின் பயனை விளக்குகின்றன. வேத நிதி ஒரு ஆலயத்தில் விளக்கு அணையாமல் எரியச் செய்தான். ஆலயங்களில் விளக்கேற்றுதலால் ஞானம் உண்டாகும். அது ஒரு புண்ணியம். எனவே சிவராத்திரி நாளில் சிவாலயங்களில் விளக்கு ஏற்றுவோர் இம்மையிலும் மறுமையிலும் இறைவனால் இன்பம் பெறுவர் என்ற நம்பிக்கை இன்றுவரை நிலைத்துள்ளது.
குடும்பத்தவருக்கு உணவளிக்கவென வேட்டை மேற் சென்ற வேடன் பகல் பொழுது முழுவதும் முயற்சி பயனின்றிக் கழிய இரவுப் பொழுதையும் அடர்ந்த கொடிய விலங்குகள் வாழும் காட்டிலேயே கழிக்க நேர்ந்தது. அன்றிரவு ஏதாவது விலங்கை வேட்டையாடலாம் என்ற எண்ணத்துடன் விழித்திருந்து முயற்சி செய்தான். அங்கு வந்த மான்களைக் கொல்ல அவன் அம்பு தொடுத்து போது அம்முயற்சி நிறைவேறவில்லை. குறி தவறி அவன் உடல் அசைவால் வில்வ இலைகள் மரத்தினடியில் வீற்றி ருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. அந்தச் செயற்பாடு அவன் உணர்ந்து செய்யாத வழிபாடு. ஆனால் குடும்பத்தவர் பசியைக் களைய வேண்டுமென்ற பரந்த உள்ளத்தோடு செய்த பொது வழிபாடு. அதுவே இன்றுவரை நான்கு சாம வழிபாடாக வில்வ இலைகளைச் சொரிந்து நிற்பது வழிபாடாகியுள்ளது. இறைவன் நாமத்தை அறியாதவர் அவன் திருமேனியில் சாத்தப்பெறும் மலர்களால் அவன் கோலப்புனைவு கண்டு பரவசமடைகின்றனர். சிவனின் நாமங்களில் அவன் சூடும் மலர்கள் இணைந்து நிற்கின்றன. பூவார் சடை, கொன்றை மாலை புரளும் அகலம், மருவார் கொன்றை மதிசூடி, கடியார் கொன்றையான், கொய்யணி மலர்க்கொன்றை சூடிய ஐயன் எனச் சிலவற்றைக் காட்டலாம்.
வழிபாட்டிற்குரிய நேரம் எது என்பதும் இன்றைய அவசர வாழ்வியலில் ஐயத்துக்கிடமாகிவிட்டது. ஒரு நாளின் தொடக் கத்தை வழிபாட்டுடன் தொடங்கும் முறைமையிருந்ததை திருநாவுக் கரசரும் ஆண்டாளும் மணிவாசகரும் தமது பாடல்களால் விளக்கி யுள்ளனர். 81 ஆண்டுகள் வாழ்ந்த அப்பரென அழைக்கப்பட்ட
விய வருடம் தை - பங்குணி)

Page 36
நாவுக்கரசர் வாழ்க்கையில் வழிபாட்டின் செல்நெறி பற்றிய ஐயம் ஏற்பட்டதால் பிறசமயம் சார்ந்தார். தமது முன்னோரது சிவவழிபாட்டால் துன்பங்கள் அகன்று இன்பமாய் வாழமுடியாது என்று நினைந்து சமணசமயத்தை ஏற்றார். ஆனால் அச்சமயம் தழுவியபோது அவருக்கேற்பட்ட சூலை நோயைச் சமணர்களால் மாற்றமுடியவில்லை. எனவே மீண்டும் தமது முன்னோருடைய வழிபாட்டு நெறியில் இணைந்து கொண்டார். நிலையான வழிபாட்டு நடைமுறை எது என்பதை உணர்ந்த அவர் நெஞ்சத்தை அழைத்துக் கூறும் செய்தி எல்லோருக்கும் ஏற்றாகும்.
"நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையினாற் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சய போற்றி போற்றி யென்றும் அலைபுனல் சேர் செஞ்சடை யெம் ஆதியென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.”
எமது வாழ்க்கையில் நிலைபெற வேண்டுமாயின் எமக்கொரு வழிபாட்டுப் பயிற்சியே இன்றியமையாதது. கோயிலில் அத்தகைய பயிற்சியைத் தொடர்ந்து செய்ய முடியும். தனியாளாக இன்றிக் கூட்டாக இணைந்து செய்யும் வாய்ப்பு உண்டு. விடிகாலை வேளை பில் எழுந்து கோயிலுக்குச் சென்று சூழலைத் தூய்மை செய்யும் பணியை முதன்மைச் செயற்பாடாகச் செய்வது அப்பர் உள்ளத்தை நிறைவித்தது. மனித வாழ்வின் துன்பச் சுமையைக் குறைக்கும் அருமருந்தாக அமைந்தது. தன் நெஞ்சை வழிப்படுத்தி நல்வாழ்க்கை வாழமுடிந்தது. மணிவாசகரும் ஆண்டாளும் கூட இவ்விடிகாலை வழிபாட்டைப் பற்றி முறையே திருவெம்பாவை, திருப்பாவை என்னும் பதிகங்களில் தகவல்கள் தெரிவித்துள்ளனர். கூட்டுவழி பாட்டில் பெண்கள் இணைய ஆண்டாள் முன்னோடியாகச் செயற் பட்டாள். வீட்டுப் பணிகளுக்கும் குடும்பச் செயற்பாடுகளுக்கும் இடையூறு நேராவண்ணம் ஆண்டாள் இளம் பெண்களை வழி நடத்தியதை திருப்பாவைப் பாடல்கள் மூலமாக இன்று அறிய முடிகின்றது.
ஆண்டாளின் வழிகாட்டல் மணிவாசகரையும் ஈர்த்தது. பெண்களின் கூட்டுவழிபாடு பின்னைய தலைமுறையை வழி நடத்தும் என்ற உறுதிப்பாடு மணிவாசகர் உள்ளத்திலும் இருந்ததை திருவெம்பாவைப் பாடல்கள் நன்கு உணர்த்துகின்றன. இத்தகைய விடிகாலை வழிபாட்டு நடைமுறை இன்றைய அவசர வாழ்வியலில் செயற்படுத்த முடியாத பயிற்சியாகக் கருதப் படுகிறது. இயற்கையோடு இணையாத வாழ்வியலும் தொழில் நிலையும் கல்விச் செயற்பாடுகளும் இதனுடன் முரண்பட்டு நிற்பதால் பல ஐயங்களும் தோன்றியுள்ளன. இன்றைய நாளாந்தக் கடமைகளில் விடிகாலையில் வழிபாடு செய்யக் கோவிலுக்குப் போவது கடினமாகவுள்ளது. இந்நிலையில் நாளாந்தக் கடமை களைச் செய்வரே வழிபாட்டிற்கு நிகரான செயற்பாடு என்ற நிலைப்பாடும் தோன்றிவிட்டது.
எனவே முன்னோரின் முயற்சிகள் இன்றைய எம்முடைய தொழில்நுட்ப வாழ்வியலுக்குப் பொருத்தமற்றவை என எண்ணிப் பார்க்கும் காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். காலந்தான் எம்மை வழிநடத்துகிறது, காலத்தோடு நாம் சேர்ந்து செல்லவேண்டும் என்ற எண்ணங்களையும் எம்முன்னோர் கொண்டிருந்ததைச் 'சிவராத்திரி வழிபாட்டு நடைமுறை மிகத் தெளிவாகவே விளக்கி நிற்கிறது. ஒரு நாளின் இரு பகுதிகளை இரவு, பகல் எனப் பகுத்துத் தொழிற்பட்ட இயல்பான வாழ்வியல் எல்லோருக்கும்
இந்து ஒளி

பொதுவானது. உலகமக்கள் அனைவரும் இதை ஏற்றுள்ளனர். இயற்கைக் கோள்களின் செயற்பாட்டால் இரவையும் பகலையும் கண்டு தமது செயற்பாடுகளையும் அதற்கியையத் திட்டமிட்டனர். இயற்கையின் பேராற்றலைக் கண்டு பணிந்து வாழ்ந்தனர். வழிபாட்டில் இயற்கைச் சக்திகளையும் இணைத்தனர். பருவமாற்றங்களை வழிபாட்டுக்குரிய காலத்தின் கணிப்பாகக் கொண்டு செயற்பட்டனர். பகலையும் இரவையும் இறைவன் தோற்றமாகக் காணும் வழிபாட்டுமரபு ஒன்றிருந்ததைத் திருஞான சம்பந்தரின் பாடலொன்று இன்றும் விளக்கி நிற்கின்றது.
“இரவொடு பகலதாம் எம்மானுன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன் குரவிரிநறுங்கொன்றை கொண்டனிந்த அரவிரிசடை முடி யாண்டகையே அன்னமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கை மன்னை
இனமார்தரு தோள் அடர்த்திருந்தனை புகலியுளே’ இப்பாடலில் சம்பந்தர் தன்னை வழியடியேன்” எனக் குறிப்பிடு கிறார். தனக்கு முன்னரே வாழ்ந்த தலைமுறைகளின் வழிபாட்டு நெறியிலேயே தானும் செயற்படுவதைத் தெளிவாக உணர்த்தி யுள்ளார். இரவும் பகலும் இறைவனை வழிபாடு செய்யும் ஒரு பண்பட்ட வாழ்வியல் அவர் காலத்தில் இருந்தது. அவர் வாழ்ந்த சூழல் வழிபாடு பற்றிய தெளிவான கருத்தைச் சிறு வயதிலேயே அவரது உள்ளத்தில் உருவாக்கியிருந்தது. அதனால் வழிபாட்டின் பயன்பற்றி அழகுதமிழிலும் இசைத் தமிழிலும் பல தேவாரப் பாடல் களைப் பாடமுடிந்தது. மூன்று வயதிலிருந்து பதினாறு வயதுவரை வழிபாடு செய்து நல்லபேறைப் பெற்ற சம்பந்தர் இன்றைய சிறாரின் வழிபாட்டுப்பயிற்சிக்கு உகந்த ஆசிரியர் என்றால் மிகை யாகாது. “பரவுதல் ஒழிகிலேன்” என்ற அவருடைய கூற்று தொடர்ந்து செய்த வழிபாட்டைப் பற்றி விளக்குகிறது. வழிபாட்டு நடைமுறைகளில் சில முறைமைகள் இருந்ததையும் அது உணர்த்துகிறது. இறைவனுக்குரிய தோற்றம் கண்டும் வழிபடல் ஒரு முறை. இன்னொன்று இறைவனுடைய அருட்செயல்கள் பற்றி முன்னோரிடம் பெற்ற தகவல்களை எண்ணி வியந்து வழிபாடு செய்வது. தம் பெற்றோரிடம் பெற்ற வழிபாட்டுப் பயிற்சியின் மூலமும் இறைவன் பற்றி தகவல்கள் அவருக்குக் கிடைத்தன. அதைவிடத் திருக்கோயில் வழிபாடு அவருக்கு இன்னொரு சிறந்த பயிற்சிக் கூடமாக விளங்கியது. கோயிலின் கோபுரத்தை வணங்குவதே ஒரு வழிபாடு. தூரத்தில் நின்றும் இறைவனை மனதிலே நினைவு படுத்த வானுயர்ந்த கோயிற் கோபுரங்கள் வழிகாட்டின. வெறும் கட்டடமாக அன்றி இறைவன் வீற்றிருந்து எம்மை வழிப்படுத்தும் பண்பாட்டுநிலையத்தின் திசைகாட்டியாகக் கோபுரம் விளங்குகிறது. இரவிலும் இறைவன் உறையும் இடத்தைக் காண்பதற்கு உதவுகிறது. இரவு வேளையில் இறைவழிபாடு செய்வதற்கு எல்லோருக்கும் வழிகாட்டுவதே சிவராத்திரியாகும். முழு இரவும் விழித்திருந்து வழிபாடு செய்ய ஒராண்டில் ஒரு நாள் ஒதுக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். அந்நாளில் செய்யும் வழிபாட்டில் உள்ளம் ஒருமித்து நிற்கும். பகல் வேளையில் ஏனைய கடமைகளின் நடுவே உள்ளத்தை அலையவிடாது ஒரு நிலைப்படுத்துவது பலருக்கும் கடினமானது. தொழில் நிலையும் அதற்கான சீருடைகளும் கருவிக் கையாட்சியும் கோயிலுள் சென்று வழிபாடு செய்வதற்குத் தடை யாகக் கூட அமையலாம். அத்தகைய சிக்கல் நிறைந்த வேளை களில் வழிபாடு தேவையற்றது என்ற எண்ணம் கூட ஏற்படலாம். வழிபாட்டுச் செயற்பாடுகள் கருத்தற்றவையாகக் கூடத் தென் படலாம். இந்த வாழ்வியல் பயன்பெற மாற்றியமைக்கப்படவேண்டியது என்பதை அன்றே எம்முன்னோர் நன்குணர்ந்து செயற்பட்டதை இன்றைய சிவராத்திரி வழிபாடு சான்று காட்டி நிற்கிறது.
s விய வருடம் தை - பங்குணி)

Page 37
இறைவன் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்' எனச் சிவபுராணம் பாடிய மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். தில்லையிலே கூத்தாடும் சிவன் நடனம் நள்ளிருளில் நடைபெறுகிறது. அந்தத் திருநடனத் தோற்றத்தை எல்லாக் கோவில்களிலும் காணும் வகையில் சித்திரங்களும் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அழகிய நடனக் காட்சியைக் கண்டு மகிழ இரவில் வழிபாடு செய்வதற்குக் கோவிலுக்குப் போவதையும் சம்பந்தர் பாடல் பண்ணமைந்த தமிழில் பக்குவமாய்ப் பதிவு செய்துள்ளது.
“இரவிடை ஒள்ளெரியாடினாலும் இமையோர் தொழச்
செருவிடை முப்புரந்தீ எரித்த சிவலோகனும் பொருவிடை ஒன்று உகந்தேறினாலும் புகலிநகர் அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகனன்றே.” இறைவனுடைய தோற்றத்தில் நடனமாடும் தோற்றமே மிக அழகான தோற்றமாகும். இரவில் கையில் ஒளிரும் எரியேந்தி ஆடும் அற்புதநடனம் அனைவரையுமே கவரக்கூடியது. விண்ண வர்கள் இறைவனைத் தொழும் காட்சியை இன்னொரு சொற் சித்திரமாகச் சம்பந்தர் பாடியுள்ளார். முப்புரங்களையும் தீயால் எரித்த அந்தப் போர்க்காட்சி இன்னொரு சொற்சித்திரமாக வடிக்கப்பட்டுள்ளது. வெள்ளையேற்றில் விரும்பி ஏறிவரும் சிவனின் தோற்றத்தையும் அடுத்துக் காட்டுகிறார். எல்லாவற் றிற்கும் மேலாக பாம்பணிந்து அருகே உமையாளொடு வீற்றி ருக்கும் அழகுக்கோலத்தைச் சம்பந்தர் வரைந்து காட்டியிருப்பது சிறப்பானது. இறைவனை அம்மையப்பனாக உணர்ந்து வழிபாடு செய்த சம்பந்தர் உள்ளத்தில் இருவரும் இணைந்திருக்கும் காட்சியே பதிந்து கிடக்கிறது. அவருடைய மூன்று வயதிலே பெற்ற அநுபவம் இளமை நிலையிலும் இன்பம் தந்தது. புகலியூர் கோவில் அழகினையும் இறைவனுடைய திருவருள் நிலைகளையும் பாடலில் பாடிய சம்பந்தர் ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவு செய்துள்ளார். இன்று சிவராத்திரி நாளிலே கோவிலுக்கு வழிபாடு செய்யச் செல்லும் சிறுவர்களும் இளைஞர்களும் சம்பந்தரின் வழிபாட்டு நெறியை உணரவேண்டும். கோயில்களில் உள்ள சிற்பங்களும் சித்திரங்களும் நம் முன்னோரின் கற்கை நெறிகள் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே சிவராத்திரி வழிபாடு பலருடைய பயன்பாட்டிற்குமாக கோவில்களில் நடைபெறும் செயற்பாடு என்பதை நாம் நன்கு ணர்ந்து செயற்பட வேண்டியுள்ளது. அதற்கெனக் காலங்காலமாக இருந்த செயற்பாடுகளைத் தெளிவாக விளங்கிச் செயற்பட வேண்டியுள்ளது. கோவிலில் இரவு முழுவதும் தங்கியிருந்து வழிபாடு செய்யும் நாள் என்பதால் அதற்குரிய வகையில் வழி பாட்டு நடைமுறைகள் முன்னோரால் வகுக்கப்பட்டுள்ளன. ஒரிரவை நான்கு பகுதியாகப் பகுத்து வழிபாடு செய்தனர். கச்சியப்பரின் சிவராத்திரி புராணம் அவ்வழிபாட்டு நடை முறைகளை வருமாறு விளக்கியுள்ளது.
“நான்கு சாமங்களிலும் தன்மனத்திலுள்ள வேண்டுதல் களையும் சோத்து அத்தியாதிப் பிரயோகமாகிய சங்கற்பம் செய்து ஸ்தாபித லிங்கத்தையும் பார்த்திவலிங்கத்தையும் பக்தியோடு பூசிக்க வேண்டும்பால் தயிர் நெய் தேன், சக்கரை முதலியவற்றால் அவற்றிற்குரிய மந்திரங்களைக் கூறிஅபிஷேகம் செய்ய வேண்டும் பின்பு உலர்ந்த துணியால் சிவலிங்க மூர்த்தியை உபசாரமாக ஒற்றி சுகந்த பரிமளசந்தனம் சாற்றிமுதல் சாமத்தில் அரிசிஅட்சதையும் இரண்டாவது சாமத்தில்றன்வஅட்சதையும்மூன்றாவது சாமத்தில் கோதுமை அட்சதையும் நான்காம் சாமத்தில் அரிசி உழுந்து பயிறு, தினை அல்லது ஏழு விதமான அட்சதையையும் சமர்ப்பிக்க வேண்டும் மலர்கள் முதல் சாமத்தில் சதபத்திரம் காவீரம் முதலி யனவும், இரண்டாம் சாமத்தில் தாமரை மலரும் வில்வமும்,
(இந்து ஒளி

மூன்றாம் சாமத்தில் அறுகும் ஆத்தியும், நான்காம் சாமத்தில் நறுமணம் கமழும்மலர்களால் சிவநாமங்களால் அல்லது குருதந்த மந்திரத்தால் அர்ச்சிக்க வேண்டும் நிவேதனம் முதல் சாமத்தில் சுத்தா அன்னம் கறி வகைகள் பலகாரங்களும், இரண்டாம் சாமத்தில் பரமா அன்னம் லட்டு முதலியனவை பலகாரமும் மூன்றாம் சாமத்தில் மாவாற் செய்த நெய் சேர்த்த பலகாரவகையும் பாயாசமும் நான்காம் சாமத்தில் கோதுமை சர்க்கரை நெய் சேர்த்துச் செய்த மதுரமான பலகாரங்களையும் பழங்களையும் சேர்க்க வேண்டும். முதல் சாமத்தில் வில்வம் பழத்தையும் இரண்டாம் சாமத்தில் பலாப் பழத்தையும் மூன்றாம் சாமத்தில் மாதுளம் பழத்தையும் நான்காம் சாமத்தில் பலவகையான பழங்களை சமர்ப்பித்து தாம்பூல தட்சனைகளோடு சாமங்கள் நான்கிலும் பிராமணர்களுக்குப் போசனம் முதலியன செய்விக்க வேண்டும்”(தகவல்: புலவர் பூரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி)
மேற்கூறப்பட்ட வகையில் கோயில்களிலே சிவராத்திரி வழி பாடு இன்றும் நடைபெறுகிறது. இளந்தலைமுறையினரும் இந்நடைமுறைகளில் பங்கேற்கும்போது முன்னோரது வழிபாட்டின் முறைமையில் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. ஒர் இரவு முழுவதும் இறைவனைய்ே நினைந்து சில கிரியைகளைச் செய்ய வேண்டும் என்ற ஒரு வரையறையை முன்னோர் வகுத்திருந்தனர். இரவின் இருள்களையக் கோயில்களிலே விளக்கேற்றல் எல்லோராலும் செய் யப்பட்டது. நள்ளிரவில் நடனம் செய்யும் இறைவன் கோலத்தைக் காண ஒளிகாலும் விளக்குகள் ஏற்றப்பட்டன. இறைவனுக்கு மடை யிடும் பொருட்களிலும் காலத்தின் விளைபொருள்களுக்கு ஏற்ப மாற்றங்கள் தோன்றின. முழு இரவும் விழித்திருக்க இசை,நடனம், உரை போன்ற நிகழ்ச்சிகளும் புகுத்தப்பட்டன. இவை வாழும் சூழலுக்கு ஏற்ப வந்து இணைந்தவையே. ஆனால் அவற்றில் வரம்பு மீறல்கள் தோன்றியபோதுதான் சிவராத்திரி வழிபாடு பற்றிய விமர் சனக் கருத்துகளும் தோன்றின. வீட்டில் இருந்து சிவராத்திரியன்று விழித்திருந்து வழிபடலாம் என்ற கருத்து இன்று பலமடைந்து வருகிறது. ஆனால் இவ்வழிபாட்டின் அடிப்படையான கருத்து அது வன்று. கூட்டுவழிபாட்டு நடைமுறை யொன்று எம்மவரிடையே நிலைபெற்று இருந்ததையே சிவராத்திரி வழிபாடு உணர்த்தும் உண்மையான கருத்தாகும். வழிபாடு பற்றிய தெளிவு பெற்ற திருநாவுக்கரசர் அதனைத் தான்பாடிய திருத்தாண்டகத்தில் மிக நயமாகக் காட்டியுள்ளார்.
“இரவும் பகலுமாய் நின்றார் தாமே
எப்போதும் என்நெஞ்சத்துள்ளார்தாமே அரவமரையில் அசைத்தார் தாமே
அனலாடி அங்கை மறித்தார்தாமே குரவங்கமழும் குற்றாலர் தாமே
கோலங்கண் மேன்மேலுகப்பார்தாமே பரவுமடியார்க்குப் பாங்கர் தாமே
பழனநகரெம் பிரானார் தாமே.” பரவும் அடியார்களுக்கு பாங்கன்’ என்ற தொடர் கூட்டுவழி பாட்டின் பயனை நன்கு உணர்த்தி நிற்கின்றது. தன்னைப் போல பிறரையும் எண்ணி வாழும் மனப்பக்குவம் கூட்டு வழிபாட்டினால் ஏற்படும். எல்லோரும் இணைந்து வழிபாடு செய்யும் நிலையிலும் சிவராத்திரி வழிபாடு சிறப்புப் பெற்றுள்ளது. ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் நினைவாக இருக்கும் இறைவன் கோயிலில் திருவுருவாகக் காட்சி அளிப்பான். அக்காட்சியைக் காண்பவர் தத்தம் மனப்பக்குவி நிலைக்கேற்ப அதனைக் கண்டு மகிழ்வர். சிவனின் திருநடனத்தைக் கண்டு பரவசம் அடையாதவர் பக்தி உணர்வற்றவரே.நாவுக்கரசரின் பாடல் சிவனின் திருக்கோலத்தை அகக்கண்ணில் படிய வைக்கின்றிது. வழிபாட்டால் உள்ளத்தில்
4. விய வருடம் தை - பங்குனி)

Page 38
உவகைதோன்றும். உறுநோய், சிறுபிணி யாவும் தீரும் என்ற நம்பிக்கை நாவுக்கரசருக்கிருந்தது. தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அநுபவம் வழிபாட்டு நெறியை நாடவைத்தது. இறைவன் நினைவில் மட்டுமன்றிக் கோயில் திருத்தொண்டின்மூலமும் வழிபாட்டை நீண்ட காலம் தொடரமுடிந்தது.
ஒருநாளில் பகலும் இரவும் என இருபகுதிகள் இருப்பினும் இறைவனை வழிபட ஏற்றது சிவராத்திரியே. சம்பந்தரும் அப்பரும் வயதில் வேறுபட்டவர்கள். இளமையும் முதுமையுமாய் இருந்த வர்கள். எனினும் பக்திநெறியில் ஒன்றாய் இணைந்து பணி செய்த வர்கள். இறைஉணர்வினால் இணைந்தவர்கள். சிவனின் நாமம் பாடி வாழ்ந்தவர்கள், 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரச் சொல்லால் சிவன் புகழ் பரப்பியவர்கள். வழிபாட்டிற்குரிய மந்திரமாக ஐந்தெழுத்தை எல்லோரும் சொல்லிப் பயன்பெறலாம். அதற்குரிய ஒரு இரவாகவும் சிவராத்திரி அமைகிறது. அந்தநாள் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகும். அன்று தள்ளிரவு வரை மட்டும் விழித்திருந்து வழிபாடு செய்தாலே பாவங்கள் யாவும் தீருமென்பர். எனவே நாம் வழிபாடு செய்வதற்கு நேரம் இல்லையே என வருந்த வேண்டியதில்லை. ஒராண்டில் ஒரிரவில் விழித்திருந்து வழிபாடு செய்வதன் மூலம் எம் மனக் குறையைத் தீர்த்துக் கொள்ளலாம். அதற்கான வழிபாட்டு நடை முறைகளைப் பற்றி அறிய வேண்டும். முன்னைய இலக்கியப் பதிவுகளை இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவகையில் தெளிவான கருத்துக்களாக வெளியிட வேண்டும்.
இன்று எமக்குக் கிடைத்திருக்கும் நூலான சிவராத்திரி புராணம் பற்றிப் பலரும் அறிய வேண்டும். புராணம் செய்யுள் வடிவிலே இயற்றப்பட்டதால் அதற்கு உரை விளக்கம் தேவைப் பட்டது. எனவே இலங்கை அச்சுவேலியில் காசியிலிருந்து வந்து வசித்த வரத ராச பண்டிதரால் இயற்றப்பட்ட சிவராத்திரி புராணத்திற்கு உடுப் பிட்டியைச் சேர்ந்த ம. குமாரசூரிய பிள்ளை யால் ஓர் உரை எழுதப் பட்டுள்ளது. வாய்மொழிக் கல்வி மரபி லிருந்து எழுத்து மொழிக் கல்வி நடைமுறையானபோது செய்யுள் மரபிலிருந்து உரைநடை மரபும் தோன்றியது. அதனால் உரை நூல்களை எழுதிப் பணிபுரிந்த நமது ஈழத்தறிஞர்கள் வழிபாட்டு மரபு மறையாமல் பாதுகாத்துள்ளனர் எனலாம். சிவராத்திரி புராணத்திற்கு உரையெழுதிய ம. குமாரசூரியபிள்ளை நூலாசிரி யரைத் தன் முகவுரையில் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்காபுரியிலே செந்தமிழ் நாவலர் செறிந்து குழிஇய யாழ்ப்பாணத்து அச்சுவேலியில் இற்றைக்கு ஏறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன் பூரி காசியம்பதியிலிருந்து வந்து வசித்தவரும்பாரத்துவாசகோத்திர அரங்கநாத அந்தணாளர்க்குத் தவக்குழவியாயுற் பவித்தவரும் சுன்னாகவாசியும் வரகவியும் பிள்ளையார்கதை, ஏகாதசி புராணம் முதலிய நூல்களைப் பாடியவருமாகிய வரதராச பண்டிதர் சிவராத்திரி விரதத்தின் பெருமையை யாவருமறிந்துய்யும் பொருட்டு தில்லைவனத் தறிஞர் சிலர் கட்டளையிட்டபடி வடநூல்களிலுள்ள சிவராத்திரிமான்மியங்களைத்திரட்டி ஒரு புராணமாகப்பாடினார்.” அவரது நூல் வழிபாட்டு நடைமுறைகளை ஆவணப்படுத்திய துடன் மட்டுமன்றிப் பொருட்சுவையும் சொற்கவையும் கொண்ட தால் புலவரை மகிழ்வித்த நூலெனவும் சிறப்புப் பெற்றது. அக் காலத்திலேயே நூற்சிறப்புப் பாயிரம் பாடிய ஈழத்துப் புலவர்களும் மயில்வாகனப் புலவரது பதிவு வருமாறு அமைந்துள்ளது.
"பரத ராசனுய ரசல ராசன்மகள் பங்கனன்புதரு பண்புசேர்
விரத ராசசிவநிசியினரீள்சரித மிகவிளங்கிட விளம்பினான்
இந்து ஒளி

கரத ராசனைய மொழியரங்கனருள் கருணை மாரிநிகர்
பருனிதன் வரத ராசன் மறை வாணராசன்மிகு மதுர வாசுகவிராசனே.” இப்பாடலில் வரும் 'சிவநிசியினிள் சரிதம்' என்ற தொடர் சிவராத்திரியைக் குறித்து நிற்கிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
சின்னத்தம்பிப் புலவரின் பதிவு வருமாறு அமைந்துள்ளது.
A.
* மைத்தவிடப் பணிப்பணியான் வராசனமுஞ் சராசனமு
மலையாக் கொண்ட சித்தனுயர் சிவநிசிமான் மியமதனை செந்தமிழாற் றெரித்தல்
செய்தா னத்தகைய பாரத்து வாசகோத்திரனரங்க ளருளு மைந்தன் சத்தபுரிகளிற்காசிநகர்வரத பண்டிதன்முத் தமிழ்வல் லோனே.” இப்பாடலில் வரும் 'சிவநிசி மான்மியம்' என்ற தொடர் கவனிக்கத்தக்கது.
இந்நூலுக்கு உரைச்சிறப்புப் பாயிரமாக இணைக்கப்பட்ட பாடல்களில் வரும் தொடர்கள் எமக்கு காலத்திற்கேற்றவகையில் இவ்வழிபாட்டின் பெயர்கள் வழங்கப்பட்டதை உணர்த்துகின்றன. ‘உலகம் போற்றிடு நற்சிவராத்திரி,சிவநிசி வரலாறு','சிவனிரவின் பெருமை, பரமனிசிபுராணம்', 'சிவநிசியின் மேன்மை, சிவநிசி புராணம் எனப் பல பெயர்களால் 'சிவராத்திரி புராணம் என்னும் வழங்கப்பட்டுள்ளதை 1913 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சிவ ராத்திரி புராணம்' என்னும் நூல் மூலம் அறியக்கிடக்கின்றது. இந்நூலில் அமைந்துள்ள 'சிவராத்திரி மான்மியச் சருக்கம் சிவ ராத்திரி விரதம் பற்றியப்ல தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளது. சிவன் இரவாகிய விரதம் காலக்கணிப்பு நிலையில் உத்தமத்திலுத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என நால்வகைப்படும். அபிஷேகம் செய்யவேண்டிய முறைமை பற்றியும் அர்ச்சனை விதிகள் பற்றியும் இந்நூல் விளக்கமாகக் கூறுகிறது. முதலில் அபிஷேகமுறைமை வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
முதற்சாமம் - பஞ்சகெளவியம்
(பசுவின் பால், தயிர், நெய், கோசலம், கோமயம்) இரண்டாம் சாமம் - பஞ்சாமிர்தம்
(தேன், சர்க்கரை, தயிர், பால், நெய்) மூன்றாம் சாமம் - தேன் நான்காம் சாமம் - கருப்பஞ்சாறு
சாத்தும் பொருள் மலர்கள் நிவேதனம் முதற்சமம் - சந்தனம் -வில்வம்-தாமரை பருப்பு அன்னம் இரண்டாம் சாமம் -அதில் -தாமரை-துளசி LTLTe’ün மூன்றாம் சாமம் - கர்ப்பூரம் - சண்பகம்-வில்வம் எள் அன்னம்
நான்காம் சாமம் -குங்குமம் - நந்தியாவர்த்தம்-நீலோற்பம் சுத்தஅன்னம் பஞ்ச வில்வங்களான வில்வம், நொச்சி, மாவிலங்கை, முட் கிளுவை, விளா என்பவற்றையும் சாத்துவது நன்று. வேதம் ஒதி வழிபடமுடியாதவர் பரமனுக்குரிய ஐந்தெழுத்தை உச்சரித்து அன்புடன் பூசை செய்யலாம். இருபத்துநான்கு ஆண்டுகள் சிவராத்திரி விரதமிருப்பதும் முன்னைய தலைமுறையினரது முறைமையாயுள்ளது.
தற்காலத்திலே கோவில்களிலே நடைபெறும் வழிபாட்டு நடை முறைகளுக்கான விளக்கத்தைத் தேடுவோருக்குச் சிவராத்திரி புராணம் ஒரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. ஈழத்திலே சிவவழிபாடு பேணப்பட்டு வந்தமைக்கும் இந்நூல் சான்றாக வுள்ளது. மேலும் சிவராத்திரியன்று சிவலிங்கத்தை வழிபடும் மரபும் காணப்படுகிறது. சிவனுடைய அருவ நிலையை ஊனக் கண் களால் எளிதில் காணமுடியாது. ஆனால் பல்வேறு அங்கங்களைக்
விய வருடம் தை - பங்குணி)

Page 39
கொண்ட உருவநிலை எளிதில் விளங்கக்கூடியது. அருவமும் உருவமும் இணைந்த அருவுருவாகிய நிலையே இலிங்கம். கருவறையிலே மூலமூர்த்தியாக விளங்கும் இலிங்க நிலையானது பல்வேறு மூர்த்தி பேதங்களின் மூல அடிப்படையாகும். அதனால் இலிங்கத்தை வழிபாடு செய்வது சிறந்ததெனக் கருதப்படுகிறது. கந்தபுராணம் இலிங்கோற்பவ மூர்த்தி ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய நேரமே சிவராத்திரி’ எனக் காட்டுகிறது. மாசி மாதத்தில் கிருஷ்ண சதுர்த்தசி திதியின் அர்த்த ராத்திரியே இலிங்கோற்ப காலம் என்பர். நள்ளிரவில் இறைவன் நடனமாடும்
ஆன்மீக எழுச்சிக் கருத்தரங்கு யூரீலழரீஆறுமுகநாவலர் நினைவுதினத்தையொட்டி, விவேகானந்த சபை அகில இலங்கை இந்துமாமன்றத்துடன் இணைந்துஆன்மீக எழுச்சிக் கருத்தரங்கொன்றைகடந்தடிசெம்பர் மாதம்16ம்,17ம் திகதிகளில் கொழும்பு விவேகானந்த சபைமண்டபத்தில் நடத்தியிருந்தது.
“நாவலர் காட்டிய வழியில் வாழ்வோமாக”என்றதொனிப்பொருளில் நடத்தப்பட்ட மேற்படி இருநாள் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வின் (16122006 சனிக்கிழமைகாலை)முதலாவது அமர்வுக்குமாமன்றத்தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை தலைமை வகித்தார். இளைப்பாறியஉயர்நீதிமன்ற நீதியரசர் திரு. சி. வி. விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சிவபூீ எஸ். ஐயப்பதாசக் குருக்கள் அவர்களது ஆசியுரையும் விவேகானந்த சபைதலைவர் திரு.ஏ.ஆர்.சுரேந்திரன் அவர்களது ஆரம்ப உரையும், அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு. சி. வி. விக்னேஸ்வரன், பேராசிரியர் சி.பத்மநாதன், திரு.தமிழ்மணி அகளங்கன் ஆகியோரது சிறப்புரைகளும் இடம்பெற்றன.
மாமன்றக் காலாண்டிதழான “இந்து ஒளி'யின் நாவலர் நினைவுதின சிறப்பிதழும் அன்றைய காலை அமர்வின்போதுவெளியிட்டுவைக்கப்பட்டது. விவேகானந்த சபை பொதுச் செயலாளர் திரு. க. இராஜபுவனிஸ்வரன் அவர்களது நிறைவுரையுடன் காலை அமர்வுநிறைவெய்தியது.
மதியபோசனத்தைத் தொடர்ந்து, முதல்நாள் நிகழ்வின் இரண்டாவது அமர்வு, பிற்பகல் 200மணியளவில் மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் தலைமையில் ஆரம்பமானது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதிசாந்திநாவுக்கரசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிரதம விருந்தினரது உரையுடன், ஆசிரியர்களுக்கிடையிலான கலந் துரையாடல்,கிழக்குப்பல்கலைக்கழகவிரிவுரையாளர் சிவபூரீம.பாலகைலாச நாதசர்மா, சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் வாகீச கலாநிதி க.நாகேஸ்வரன் ஆகியோரது சிறப்புரைகளும் இடம்பெற்றன.
இரண்டாம் நாள் நிகழ்வு17.12.2006 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் விவேகானந்த சபைதலைவர் திரு.ஏ.ஆர். சுரேந்திரன் தலை மையில் ஆரம்பமானது. திரு. தே.ம. சுவாமிநாதன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். ரீலழரீ ஆறுமுகநாவலரின் உருவச் சிலைக்கு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மலர் மாலை அணிவித்து கெளரவம் செய்த நிகழ்வுடன் திரு. தமிழ்மணி அகளங்கன், அருள் மொழியரசி வசந்தா வைத்தியநாதன் ஆகியோரது சிறப்புரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் போது, இலங்கையில் இந்து சமயம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட வருக்கான அமரர் செல்வம் கல்யாணசுந்தரம் அறக்கட்டளையின் அதிஉயர் விருதுபேராசிரியர்சிபத்மநாதன் அவர்களுக்குவழங்கிகெளரவிக்கப்பட்டது. சிவஞானச் செல்வர் க.இராஜபுவனிஸ்வரன் அவர்களது நிறைவுரை யுடனும் தேவாரத்துடனும் இரண்டாம் நாள் நிகழ்வு நண்பகலில் இனிதே நிறைவுபெற்றது. e
மேற்படி இருநாள் கருத்தரங்கு நிகழ்விகளுக்கான ஏற்பாட்டு உதவிகளை சனாதன தர்ம யுவவிழிப்புணர்ச்சிக் கழகம் வழங்கியிருந்தது.
(இந்து ஒளி

தோற்றத்தை மணிவாசகர் பாடினார். சிவராத்திரி புராணம் லிங்கவழிபாட்டு நிலையை நன்கு விளக்கிச் சிவராத்திரி வழிபாடு பற்றிய தகவல்களையும் தருகின்றது. அவற்றைப் பற்றிய தெளிவை அனைவரும் பெறவேண்டுமானால் கோவில்களில் 'சிவராத்திரி வழிபாடு ஆண்டு தோறும் கூட்டுநிலையில் நடைபெறவேண்டும்.
வாழி மாதவர் வாழி மறுநெறி வாழி மாநிலம் வாழிநல் வானினம் வாழி நான் மறை வாழி மழைமுகில் வாழி வைதிக சைவ வழக்கமே
விரத நாட்களும் விசேட தினங்களும் (மார்ச்-மே 2007)
Lontió
01 வியாழன் - பிரதோஷ விரதம் 02 வெள்ளி - நடேசர் அபிஷேகம் 03 சனி - பூரணை விரதம்,மாசிமகம் 07 புதன் - சங்கடஹர சதுர்த்திவிரதம் 15 வியாழன் - ஏகாதசிவிரதம் 16 வெள்ளி - பிரதோஷ விரதம் 18 ஞாயிறு - அமாவாசை விரதம் 19 திங்கள் - முதலாம்பங்குனித்திங்கள் 22 வியாழன் - சக்தி கணபதிசதுர்த்திவிரதம் 23 வெள்ளி - கார்த்திகை விரதம் 24 சனி - சஷ்டி விரதம்
26 திங்கள் - இரண்டாம்பங்குனித் திங்கள் 27 செவ்வாய் - பூநீராமநவமி 29 வியாழன் - ஏகாதசிவிரதம்
31 சனி - சனிப்பிரதோஷ விரதம் ஏப்ரல்
01 ஞாயிறு - பங்குனி உத்தரம் 02 திங்கள் - பூரணை விரதம்,மூன்றாம்பங்குனிதிங்கள் 06 வெள்ளி - சங்கடஹர சதுர்த்திவிரதம் 09 திங்கள் - நான்காம்பங்குனித்திங்கள் 13 வெள்ளி - ஏகாதசிவிரதம்
14 呼阿f - சித்திரைப் புதுவருடப்பிறப்பு 15 ஞாயிறு - பிரதோஷ விரதம் 17 செவ்வாய் - அமாவாசை விரதம் 19 வியாழன் - கார்த்திகை விரதம் ?୯ , ରନ୍ଧୁ!!! - சதுWத்திலிwதல் 22 ஞாயிறு - சஷ்டி விரதம்
28 சனி - ஏகாதசிவிரதம்
29 ஞாயிறு - பிரதோஷ விரதம்
மே
01 செவ்வாய் - சித்திரைச்சித்திரை 02 புதன் - பூரணை விரதம், சித்திரகுப்த விரதம் 06 ஞாயிறு - சங்கடஹர சதுர்த்திவிரதம் 09 புதன் - நடேசர் அபிஷேகம் 11 வெள்ளி - திருநாவுக்கரசர் குருபூசை 13 ஞாயிறு - ஏகாதசிவிரதம்
14 திங்கள் - பிரதோஷ விரதம்
16 புதன் - அமாவாசை விரதம், கார்த்திகை விரதம் 20 ஞாயிறு - சதுர்த்திவிரதம்
22 செவ் - சஷ்டி விரதம்
27 ஞாயிறு - ஏகாதசிவிரதம்
30 புதன் - வைகாசிவிசாகம் 31 வியாழன் - பூரணை விரதம்
விய வருடம் தை - பங்குனி)

Page 40
Who WS ViVekar
°ల
Indians in general are fond of calling Vivekananda a patriotsaint. What is usually implied is that Swamiji combined in himself the fiery national spirit of a patriot and the spirituality of a saint.
Though Swamiji himself was never directly involved in the Indian struggle for political independence, his books provided tremendous inspiration to the freedom fighters. His utterances about India kindled a fierce national spirit into the youths.
Swamiji repeated again and again in his lectures that religion was the central theme of Indian life. The vitality of India lay in her inexhaustible religious and spiritual reserves. It is this that Swamiji wanted to reawaken.
This is not to say that Swamiji was indifferent to the struggle for freedom, which was the pressing need of the hour. But he knew that a growing plant derives its nourishment from its roots. He therefore applied himself to the task of watering the roots - the vitality of the nation which was spirituality.
If Indiaawoke to the realisation of unity, to the call of integrity, sacrifice, strength and selflessness, political freedom was sure to come. This is what Swamiji accomplished by his electrifying message to the Indians.
His object was to produce “men’ in the true sense of the term so that they would not only achieve freedom for the country but would also be able to preserve it. That is why Swamiji emphasised "man - making religion and “man - making education.
If we study the lives of the leaders of the Indian freedom struggle, we find that most of them drew their inspiration from Swamiji's fiery message and cultivated in themselves many noble virtues and qualities.
It is these that gave them strength and courage to lead the people to freedom. Swamiji’s patriotism therefore was of a special type.
So also was his sainthood. Swamiji's sainthood had transcended the barriers of caste, religion and race. He had "touched the feet of God and was at home in any situation of life He was a child of God, pure and simple, and people could not but love him Swamiji’s patriotism and sainthood were both special and this must be kept in mind, while designating him as a 'patriot-saint.
Prophet with a mission
"I have a message to the West', he said “as Buddha had a message to the East. What could Swamiji have meant by this? In Buddha's case we see that his message originated in the East, took firm roots here and then spread over the other ports of globe.
On the other hand, in Swamiji's case the condition was reversed, India discovered Vivekananda only after the
(இந்து ஒளி
 

* SWami landa?
stupendous, maddening ovation hereceived in America atthe World's Parliament of Religions in 1893. Prior to that he had only been an unknown, wandering friar, travelling from place to place, constantly changing his name, not knowing from where the next meal would come.
True, he had influenced a few scholars, devotees and kings of the places he visited. But that did not influence the nation as a whole. To the majority he ramained an unknown Sadhu sometimes viewed with suspicion because of his knowledge of English and Western philosophy, thing unheard of in those days among the monastic communities of India.
It was from the American soil that the bombshell came and India awoke to find one of her own illustrious children calling out to her from the distant shores. It was the west that recognised Vivekananda first. As someone remarked, “American's greatest gift to India is Swami Vivekananda'.
Most Swamiji's lectures, writings and letters that have come downto us as his complete works were delivered on the Western soil. It was from there that they found their way to India and other parts of the world. “One blow given here is equivalent to a hundred given in India, he wrote in a letter.
Swamiji was once reprimanded by SriRamakrishna when he expressed a desire to remain always immersed in Samadhi. I thought you would be like a mighty banyan tree, under whose shade millions of weary souls would find peace and shelter, Sri Ramakrishna said him and gave him the assurance: “You will attain a state even higher than Samadhi'.
Towards the end of his life, Sri Ramakrishna would remain closeted with Narendra for hours together, instructing him about his misson in life. What exactly was the nature of his misson it would be too presumptuous to define. Whether he had separate messages for the East and the West is also a debatable point. What we are certain, however, is that as world-teacher, he gave to every one what he lacked and made him 'whole, He saw the good points of both the hemispheres; he also saw their weaknesses. He firmly believed that a healthy exchange of ideals between the two would eliminate the weakness and bring them together into one world-community.
He himself acted as a bridge between the East and the west and he knew that whoever grasped his message and built his life upon it would himself become another bridge to join these apparently divided worlds.
A lover of the masses
“May i be born again and again and suffer thousands of miseries so that I may worship the only God that exists, the only God I believe in, the sum total of all souls-and, above all, my God the wicked, my God the poor of all races, of all species, is the special object of my worship' said Swamiji
விய வருடம் தை - பங்குணி)

Page 41
This was the worship he loved host, the worship of the 'living God’, when he met his brother monks, Swamis Brahmananda and Turiyananda, just a few days before he sailed for America, he said to them with great feeling
“I travelled all over India. But,alas, it was agony to me, my brother, to see the terrible poverty of the masses, and I could not restrain my tears. It is now my firm conviction that to preach religion to them without trying to remove their poverty and suffering is futile. It is for this reason-to find means for the salvation of the poor of India-that I am going to America'.
He turned to Turiyananda and said with profound sorrow and intense emotion, “Haribhai, I am Still unable to understand anything of your so-called religion. But my heart has expanded very much, and I have learnt to feel. believeme, I feel intesely indeed. His catapulating success in America made him weep over his victory when he remembered the hungry millions of his countrymen.
This was Vivekananda, the lover of the poor, the suffering, the neglected. From America he wrote to Swami Akhandananda, another brother monk: You have read matr-devo bhava, pitrdevo bhava, "Look upon your mother as God, look upon your father as God'-but I say, daridra-devo bhava, murkha-devo bhava, “The poor, the illiterate, the ignorant, the afflicted-let those be your God” Know that service to these alone is the highest religion.
The poor, the lonely, the outcast, were nearer to his heart than others. At the Rameswaram Siva Temple, Swamiji told the assembled gathering. This is the gist fall worship-to be pure and to do good to others. He who sees Siva in the poor, in the weak, and in the diseased, really worships Siva: and if he sees Siva only in the image, his worship is but preliminary.
A Divine Being
Then there is this other aspectof his which is in a sense, the core of all the other aspects - the divinity of Swamaji. Sri Ramakrishna had seen in a vision Narendra as one of the seven Rishis meditating in the highest realm of spiritual existence.
As a child he had beckoned the Rishi to accompany him to the earth. The Rishis had nodded assent. No sooner had Sri Ramakrishna seen Narendra then he recognised him to be the Rishi he had seen in his vision.
Special prayers were offered to Sri Vireswara Siva at Kashi by his mother Bhubaneswari devi for a son. The prayers were answered and the babe was named Vireswar. He came to be called Narendranath When he visited Dakshineswar for the first time Sri Ramakrishna took him to the northern porch of his room and began to shed tears as he said to Narendra:
“Ah, you came so late. How could you be so unkind as to keep me waiting so long. Then he stood before Narendra with
எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் மனம்தான். ! இருக்கும். மனதையும் வார்த்தைகளையும் ஒன்றுபடச் செய்வே புறமும் ஒன்றுபடாதபோதுதான் எல்லாத் தொந்தரவுகளும் அ
இந்து ஒளி s

folded hands and addressed him: “Lord, 1 know that you are the ancient sage, Nara, the Incarnation of Narayana, born on earth to remove the miseries of mankind.
Through his words and actions not only did SriRamakrishana make Narendra aware of his divine origin, but he also proclaimed the identity of Narendra and himself. And yet, in spite of everything about him proclaiming his divinity, Swamiji was so intensely human.
It was so easy to mistake him to be just like any of us. But even his humanness” was an aspect of his divinity - an aspect that makes him so much more accessible, so much nearer and closer to our hearts.
We have seen just four of the prominent roles in which Swamiji appears before us. There are many more, some not so prominent perhaps, but men and women have been nevertheless inspired by these different roles as well. There is, for instance, Vivekananda the writer.
There are volumes in Bengali discussing Swamiji’s contribution to the Bengali language. Vivekananda the ‘orator by divine right, Vivekananda the singer, Vivekananda the socialist, Vivekananda the poet, Vivekananda the mystic, Vivekananda the philosopher.... the list unending.
Not all interpretations of his life, personality and teachings are acceptable to all. But the fact remains: Vivekananda is a phenomenon that strikes infinite notes in different hearts. Our question, however, remain unanswered: Who was Swami Vivekamanda?
An attemtped answer
There is however a way in which an answer to our question may be attempted, and that is in the words of Swamiji himself. Who was Swamiji in his own eyes; This is what he says: “I am a voice without a form This would have remained an enigmatic statement if we had not before us. The luminous personality of Swamiji himself.
Coming from after through all eternity is the Voice of the Supreme Reality, none but the mystics and sages hear it. But through inscrutable laws of the spiritual world this Voice periodically becomes embodied as sound audible to mortal hearing, through apparently accesible channels. Swami Vivekananda was one such mighty channel through which the Voice spoke to you, me and all others.
To know then who Swami Vivekananda was, we will have to hear the Voice Straight, without the intervening medium of our faulty hearing system. We are divine by nature-pure, free and eternal. We do not require any apparatus to hear the Voice of God. The more we assert our true nature, the sooner will fall away from us all false hearing-aids, and the Voice will come to us crystal clear - the Voice of God, a Voice without a form - and then we can justly say, 'Yes, I know who Vivekananda was’.
Courtesy The Vedanta Kesari
மனம் கோணலாக இருக்குமானால் எல்லாம் எதிரிடையாகவே தென்டது மிகவும் உயர்ந்த ஆன்மிக சாதனையாகும். உள்ளும் அமைதியின்மையும் ஏற்படுகின்றன.
(சுவாமி துரியானந்தர்)
s - விய வருடம் தை - பங்குணி)

Page 42
பேராசிரியர் சி. பத் Hindu Temples of Sri La
==TL 、
、
மாமன்றத்தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை தலைமையுை அருகே இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமிஜி ஆத்மகன் சிவபூரீ எஸ்.சிற்சபேசக் குருக்கள்,திரு.ஜே.எம்.சுவாமிநாதன்
விக்னேஸ்வரன் அவர்கள்.
நூலாசிரியர் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் பொ
போர்த்திக் கெளரவிக்கப்படுகிறார். நூலாசிரியர் உரையாற்றுகிறார்.
விழாவுக்கு வரு
இந்து ஒளி
 
 
 

நிமநாதன் எழுதிய nka - நூல் வெளியீட்டு விழா
ாநிகழ்த்துகிறார் நூலின் முதற்பிரதியைநூலாசிரியரிடமிருந்து
எானந்தா மகாஜ், இநமசிவாயம்பெற்றுக்கொள்கிறார். ா, நீதியாசர் சி.வி. திரு.இ
##{3}IIIfg III_ நீதியாசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள்
உரையாற்றுகிறார்.
கை தந்திருந்தோர்.
ឍ விய வருடம் கதை - பங்குணி)

Page 43
LÉ.
யாழ் குடாநாட்டு மக்களு
மாமன்றம் யாழ் குடாநாட்டு மக்களுக்காக பெரும மூலம் அனுப்பிவைத்திருந்தது. அவற்றைப் பெற்றுக் ெ செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள் அ
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பால்மா விநியோகம்
செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் தாயகம் சிறுவர்
திருநெல்வேலி கருணாலயம் சிறுவர் இல்லத்தின் முகாமையாளரிடம் பால்மாவை வழங்குகிறார்.
வழங்க
தன் லட்சியத்திற்கு உதவும் மனப்பான்மையைத் தேடிக்
நாம் வாழ்ந்துவரும் உலகத்தை அழிவிலிருந்து காப்பு பாதுகாக்கும் எண்ணங்களை நினைத்து வரவேண்டும்
இந்து ஒளி
 
 
 
 
 
 
 

க்கு பாலுணவு விநியோகம்
2ாவு பால்மா பெட்டிகளை கடந்த வருட இறுதியில் கப்பல் கொண்ட மாமன்றத்தின் முகாமைப் பேரவை உறுப்பினர் வற்றைப் பங்கீடு செய்து வழங்கியிருந்தார்.
பால்மாவைப்பெற்றுக்கொண்ட"சிவபூமி" பாடசாலை மாணவர்களுடன், ஆசிரியர்கள்
இல்லத்திற்கு பால்மா சந்நிதி ஆச்சிரம நிர்வாகி ப்படுகிறது. திரு.மோகனதாஸ் சுவாமி அவர்களிடம்
பால்மா வழங்கப்படுகிறது.
கொள்பவனுக்குத்தான் சந்தோஷமான வாழ்க்கை அமையும்
(நீராமகிருஷ்ணவிஜயம்)
பாற்ற நாம் அனைவரும் அமைதியைப் போற்றி அதைப்
(நீராமகிருஷ்ண விஜயம்)
o விய வருடம் தை - பங்குனி

Page 44
இரத்மலானை மாணவர் வி (30.12.
1) மாமன்ற பிரதித் தலைவர் திரு. மா. தவே மு.சச்சிதானந்தன் அவர்களுக்கு மாம அன்பளிப்பாக வழங்குகிறார்.
2) மாமன்ற துணைத் தலைவர் திரு. சின்னத் நந்திக் கொடிகளை அன்பளிப்பாக வழங்கு
3) பிரதிக் கல்வி அமைச்சர் கெளரவ மு. ச ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்புச் செ
4) விழாவுக்கு வருகை தந்தவர்களுள் ஒரு ப
மாமன்றத்தின் மகா சிவராத்திரி !
1] tDՓII சிவராத்திரி பூசை வழிபாடு
2) லேக்ஹவுஸ் இந்து மன்றத்தினரின் பஜை
 
 
 

டுதி நூலகத் திறப்பு விழா 2006]
பாகராஜா, பிரதிக் கல்வி அமைச்சர் கெளரவ ன்ற வெளியீடுகளின் ஒரு தொகுதியை
துரை தனபாலா பிரதிக் கல்வி அமைச்சருக்கு குகிறார்.
*சிதானந்தன் மாணவர் விடுதி நூலகத்திற்கு ய்கிறார்.
குதியினர்.
சை வழிபாடு (76.02.2007)
a
الجله چ
னப் பாடல் நிகழ்ச்சி.

Page 45
மாமன்றத்தில் மகா சிவராத்த்
--- இ :
மாமன்றத்தின் யாழ் பிராந்திய அலுவலகம்
 
 

linia Arts (pvey Led Tale baan