கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூர்மதி 2004

Page 1
წ
蹟
 
 


Page 2


Page 3
கல் Gī தமிழ்மொழிக் க
20(
LDGoi
 

மைச்சின்
ல்விச் சஞ்சிகை
)4

Page 4


Page 5
பதிப்பாசிரியர் திரு
உதவி ஆசிரியர் திரு
ஆலோசகர்கள் : கெ
துெ in Jg
(ો5ા
திரு
(BLD
மே)
நிதி விவகாரம் திரு ' (பி)
திரு
(ćѣ6
திரு
(856
உதவி அலுவலர்கள் திரு
திரு (த
திரு (ġbt
திரு (த1
முன் அட்டை வடிவமைப்பு திரு
அச்சுப் பதிப்பு அ

விபரம்
ந. என். நடராஜா ழ்மொழிப் பிரிவுப் பணிப்பாளர்
ந. எஸ். சிவநிர்த்தானந்தா - நவிக் கல்விப் பணிப்பாளர், தமிழ் மொழிப் பிரிவு
ளரவ மங்கள சமரவீர றைமுக விமானப் போக்குவரத்து அமைச்சரும் திக் கல்வி அமைச்சரும்
வத்திய கலாநிதி. தாரா டி மெல் யலாளர், கல்வி அமைச்சு
ந. எம். ஜி. ரி. நவரட்ன லதிகச் செயலாளர், கல்வி அமைச்சு
டுவை திரு. எஸ். தில்லைநடராஜா லதிகச் செயல்ாளர், கல்வி அமைச்சு
ந. எஸ். எச். ஏ. அபயநாயக்க தம கணக்காளர்)
ந. டி. எம். திஸாநாயக்க ணக்காளர் - நிதி)
ந. எச். ஜி. ஏ. சமன்திலக ணக்காளர் - கொடுப்பனவு)
ந. இ. எ. தேவதாஸன் |லிகிதர்)
ந. கே. ஜிவகுமார் ட்டெழுத்தாளர்)
ந. ஏ. கமர்தீன் ட்டெழுத்தாளர்)
நமதி. ரெஸ்லின் குருகே ட்டெழுத்தாளர்)
ந. திருமதி சு. கிருஷ்ணமூர்த்தி ரிெப்ஸ்’ பிரிண்டேஸ் பிரைவேட் லிமிட்டெட்)
ரசாங்க அச்சுத் திணைக்களம், ாழும்பு - 08

Page 6


Page 7
ஆசிச் செய்தி
அதிமேதகு ஜனாதிபதி திருமதி சந்த கல்வி அமைச்சர்
ஆசிச் செய்தி
கெளரவ மங்கள சமரவீர பிரதிக் கல்வி அமைச்சர்
ஆசிச் செய்தி
வைத்திய கலாநிதி - தாரா டி மெ6
ஆசிச் செய்தி
திரு. எம். ஜி. ரி. நவரட்ன - மேலதி
ஆசிச் செய்தி
திரு. எஸ். தில்லைநடராஜா, மேலதி
பதிப்பாசிரியர் உரை
திரு. என். நடராஜா - தமிழ் மொழி
தமிழ்மொழி வழி கல்வி கற்கும் மாணவர்கள். பேராசிரியர் கா. சிவத்தம்பி
கிறிஸ்தவ தமிழ் இலக்கிய வரலாறு
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
விபுலானந்தர் முதல் வித்தியானந்தன் வரை
கலாநிதி எஸ். சிவலிங்கராஜா
கடலாடு காதை ஒரு வாழ்வியல் திருப்புமுனை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
புறநாநூற்றில் புலவர்களும் புரவலர்களும்
கலாநிதி கி. விசாகரூபன்
யாவருக்கும் கல்வி
திரு. முத்து சிவஞானம்
இராகங்களும் உணர்வுகளும்
மீரா. வில்லவராயர்
சித்தர் பாடல்கள் ஒரு நோக்கு திரு. ந. சிதம்பரநாதன்

ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
), செயலாளர், கல்வி அமைச்சு
கச் செயலாளர், கல்வி அமைச்சு
நிகச் செயலாளர், கல்வி அமைச்சு
பிரிவுப் பணிப்பாளர், கல்வி அமைச்சு
பக்கம்
ii
iii
iv
Vi
14
22
28
35
40
44
48

Page 8
எண்பதுகளில் ஈழத்து நாவல்கள்
கலாநிதி செ. யோகராஜா
கடிதம் எழுதும் கலை
திரு. குமாரசாமி சோமசுந்தரம்
ஊழியர்களை ஊக்கப்படுத்தல்
திரு. க. தேவராஜா
மூன்றாம் உலகின் கைத்தொழில் மயமாக்கிம்
திரு. ஆர். சிறீகாந்தன்
சமப்பாட்டுப் புள்ளிப் பகுப்பாய்வும் அதன் பிரே
திருமதி ஆர். யோகராஜா
வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் இலக்கியங்கள் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
முயற்சியாண்மைக் கலாசாரம்
திரு. வி. ஈஸ்வரன்
ஈழத்தில் அறிவியல் இலக்கிய வளர்ச்சி
கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிர
சைவத்திருமுறைகள் பக்தி இலக்கியங்களுட்
திரு. கனகசபாபதி நாகேஸ்வரன்
ஈழத்தில் ஆரம்பகாலத் தமிழ் நாவல்களில் . செல்வி புண்ணியேஸ்வரி நாகலிங்க
ஈழத்து சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியு வல்வை ந. அனந்தராஜ்
கலை! அது காலத்தின் கண்ணாடி !!
சிற்பக் கலாநிதி செ. சிவப்பிரகாசம்
மனிதன் உலகம்
கவிஞர் ஏ. இக்பால்
வேம்பு மரம்
திரு. கனகசபை தேவகடாட்சம்
ஆய்வுச் செயன்முறையில் நூலக ஆய்வின்
ஜனாய் ப. மு. நவாஸ்தீன்
'உடைந்த இராமர் சிலைக்குள் உற்பத்தியா
திரு. நடராஜா கணேசலிங்கம்

பக்கம்
55
62
65
74
யாகங்களும்
80
93
98
மணியம் O2
பெறும் முக்கியத்துவம்
110
ம் 123
b -ஒரு மதிப்பீடு
128
136
139
140
பயன்பாடுகள்
144
ன தெய்வீகம்’
148

Page 9
யாவரும் கற்றலிலும் கற்பித்தலிலும் பாடசாை
திரு. ச. ஜேசுநேசன்
என் தமிழே, என்ன சொல்லி உனைப்பாட. திரு. சி. சிவநித்தானந்தா
ராமன் எத்தனை ராமனடி
திருமதி ஜி. தெய்வேந்திரராசா
தெளிவு
திக்குவல்லை கமால்
ஆசிரியர்களின் கற்பிக்கும் சுதந்திரம்
திரு. சி. சரவணபவானந்தன்
மலையகம் என்ற பின்புலத்தில் கைலாசபதி எ திரு. லெனின் மதிவானம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் .
“ஜின்னாஹ்”
கோவலன் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
திருமதி. செல்வராணி வேதநாயகம்
'ഖി'
LOGoč (5T s6OT
மட்டக்களப்புக் கிராமியக் கவிகள்
திரு. எஸ். கிருஸ்ணபிள்ளை
அருமையான படைப்பு அழகின் சிரிப்பு
தமிழோவியன்
கற்றலின் ஆயத்த நிலை
திரு. கு. சதாசிவமூர்த்தி
கூர்மதியே எங்கள் கூர்மதியே
திரு. க. யோகானந்தன்
ஈழத்து தேவாரத் திருப்பதிகங்கள்.
திரு. நடேசபிள்ளை ஞானவேல்
கரையில்லாக் கடல்
முனையூரான்
கிழக்கினில் தோன்றிய முத்தமிழ் வித்தகர்
கவிஞர் “தமிழருவி” செ. சிவானந்த

பக்கம்
ல நூலகங்கள்
151
54
157
160
163
169
0 8 v 177
179
184
189
195
198
2O2
203
210
தேவன் 21

Page 10
அபிவிருத்திப் பொருளியல்
திரு. மாணிக்கம் லோகசிங்கம்
தமிழ் இலக்கியமும் சித்தர்களும்
திரு. என். ஆர். மகேந்திரன்
நல்லாசிரியத் தொழில் s
திரு. எஸ். சபாரெத்தினம்
பல்லவர்கால பக்தி நெறி
திருமதி. சுலோசனா சகாதேவன்
இப்சன் காட்டும் நோறா
திருமதி வனிதா சுரேஸ்
வகுப்பறைகளில் பன்முக வாசிப்பு
திரு. பெ. பேரின்பராஜா
தமிழில் ஐந்திலக்கண மரபு
திரு. க. குணசேகரம்
பழமைக்கும் புதுமைக்கும் பாலமமைத்த .
திருமதி கி. சண்முகநாதன்
கல்விச் செல்வம்
வாசுகி குணரத்தினம்
பரத நாட்டியத்தில் இசையின் பங்கு
செல்வி குணரத்தினம் பாரதி
வளராய் உயிரே!
திரு. இரா. கிருஷ்ணபிள்ளை
கனவுகளே கனவுகளே .
திரு. ஆ. அரசரெத்தினம்
மட்டக்களப்பில் பாடும் மீன்கள் .
செல்வன். நிலக்ஷன் மாணிக்கவா?
விஞ்ஞானத்தின் விந்தைகள்
செல்வி. சுபாங்கி விமலநாதன்
குறுந்தொகையில் தோழி
செல்வி. தனபாலன் சிவரூபி
சூழல் மாசடைதல் −
செல்வி. எம். எப். எப். அர்பா
விற்றமின் “g" வாழ்வின் ஒளி
செல்வி. த. உஷா

பக்கம்
213
217
22
223
227
230
233
w 237
245
246
251
252
சகள் 256
261
264
268
271
vi

Page 11
இந்து மதமும் இதிகாசங்களும்
செல்வன். ந. குருசாந்
மடாலயங்களும் ஆதீனங்களும் ஆற்றிய பணி
செல்வி. ம. குந்தவி
ஹைக்கூ
செல்வி, ந. ஹம்சினி
உறவுப்பாலம் .
செல்வி. பி. கே. மேகலா
அவலத்தின் கொடுரம்
செல்வி. வேலாயுதபிள்ளை சுபிதா
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் །
செல்வி. சஜிக்ஷா விநாயகமூர்த்தி
நட்பின் பிரிவின் நாளன்று
செல்வி. எம். எஸ். கவிவா
ஏ. எம். ஏ. அஸிஸ்
எம். எப். எப். றில்வானா
வாழ்வை வளமாக்கித்தர தகுந்த பல திறன்கை
- எம். எம். எம். பயாஸ் அஹமத்
புலப்பெயர்வும் தமிழனும் - சீ. காஞ்சனா
கிரிக்கெட்
செல்வன். சந்தோஷ் தமிழினியன் ே
அறிவியல் வளர்ச்சி
திரு. ஆர். சிவசங்கள்
2 ம் உலகப் போரில் ஜப்பானும் அமெரிக்காவ
– eg9. (p. JIT
சிலவேள்ை இப்படி நடக்கலாம்?.
- இரா. யோகேஸ்வரன்
அந்த நாளினிலே.
- ஜெ. எம். ஹிஜாஸ்
கவிக்கோ - அப்துல் ரஹற்மான்
- ஏ. எம். முர்ஷிடா
நன்றி நவிலல்

பக்கம்
276
கள்
277
280
281
283
284
287
288
ளைக் கற்பிக்கும்.
291
293
ஜசுநேசன் 295
298
|ம்
301
305
306
307
309
/ii

Page 12
ITEXT INevZNNNZKiel UW
W
 

ರಾಷ್ಟ
EX
NŽlŽ|"|
:|||N/fla||Ula
iii

Page 13
“ MES
fr(
ރ *
HER EXCELLENCY CHAN KUMAR
I am happy to send my message of bless Tamil Education Magazine published by t Education
"Koormathy" is very useful to student common communication since it contail literature, information literacy, new educ moral values, the multiphase of educatio needs. These articles and informations ha ranging from Students to professors.
This "Koormathy" and its contempo Language Unit are the esteemed magazin
I expect the new education reforms w challenges that would arise in Socio-econ century in Our mother land and abroad.
I hope the attempts of "Koormathy" \ education reforms.
CHANDR P SO
 
 

SAGE
D
NDRIKA BANDARANAIKE ATUNGE.
ing to the second issue of "Koormathy" the the Tamil Language unit of the Ministry of
S, teachers, educators and the School and ns articles and other useful information on ational techniques, Cultural, religious and n and the ways of access to them and their |ve been written by various talented people
rary "Nuwana" published by the Sinhala es of the Ministry of Education.
ill build up a new Sri Lanka to face future
omic cultural and political fields in the 21st
would help to reach the goals of the new
IKA BANDARANAIKE KuMARATuNGE. RESIDENT OF THE DEMOCRATIC CILALIST REDUBLIC OF SRI LANKA
O HON. MINISTER OF EDUCATION. ك
iX

Page 14


Page 15
A MESSA THE HON. DEPuTY MI
I am very happy to issue this messag the magazine "Koormathy" published b Education.
This Magazine includes contribution. involved in the field of education. The c of great benefit to children. The aim of r achieved if adequate measures would be to the children.
The magazine designed with the natu "New Education Reforms' should conti talents of the Children.
My best wishes to the Tamil Language of the National Tamil Vizha' and publis SUCCeSS.
Mangala Samaraweera, M.P
Minister of Ports & Aviation, Information & Media & Deputy Minister of Education.
 

GE FROM . WISTEROF EDUCATION
e on the Occasion of the second issue of y the Tamil Language unit of Ministry of
s from all learned people interested and ontents in the magazine will definitely be eleasing a magazine Of this nature can be adopted, SO that they become acceSSOry
re to help a better understanding of the nue to enrich and enhance the creative
unit of the Ministry that their functions hing of the magazine should be a grand

Page 16


Page 17
FR
THE SECRETARY, MIN
I have pleSure in blessing the Second is: magaznie published by Tamil Language
The contents of this magazine are ver and Rnowledge. I belives this magazin definitely. Especially students in junior higher level.
New-technology and activities are spre today. It is remarkable to note that "Kool giving facts naturally, easily and fruitful
I congradulate the Director of Tami Editor of "Koormathy" and the Co-ec promoting education.
Dr. Tara De Mel Secretary, Ministry of Education "ISurupaya" Battaramulla.
 
 

OM
ISTRY OF EDucATION
sue of "Koormathy" the Tamil Educational
unit of Ministry of Education.
y useful to all Connected with education e will uplift the standards of education and senior grades will be benefited to a
ad in each and every corner of education mathy" tried to face the above challenge
ly.
( Language unit who is being the Chief litors for their valuable attempt toward

Page 18


Page 19
THE ADDITION,
I am indeed happy to present this r publication of "Koormathy" by the Tam those who are inovolved in the educatic
Also, I am very happy and satisfied Director has worked very hard to bring f takes much pain to bring the second iss
It is remarkable to find this magazin children in various districts.
I wish that this magazine should help Students Standard.
I eagerly expect the children should 1 approach in implementing the facts whi
I appreciate the efforts of the director, the magazine effectively.
M.G.T. Nawaratne, Additional Secretary, Education Quality Development Ministry of Education, 'Isurupaya" Battaramulla.
3-CM 4658
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DM
AL SECRETARY
nessage to this magazine. This annual hil Language unit is very beneficial for on field.
that on my advice Mr. Nadarajah, the orth this magazine in the beginning and 1e tOO.
e gives an utmost guidance to School
in the field of modern upliftment of the
earn more of the facts in technological
ch are published through this magazine.
and all officers who helped to published

Page 20


Page 21
ஆசிச்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு வெ வெளிவருகின்றது. மாணவர்களது பல்வகைத் ( கூர்மதி வளர்ந்து வரும் ஒரு மதியே. இம்முறை கொண்டமைந்த இச்சஞ்சிகை மிகப் பெரும் ப
கற்போர், கற்றறிந்தோர் யாவரும் பங்கு கொள்( கற்கைநெறி கற்போர் மத்தியிலும் பொதுமக்கள் L கல்வி நெறியில் உழைக்கும் எல்லோரையும் கருவியாகவும் இது அமைந்துள்ளது.
“கூர்மதியின்’ நன்மையை எல்லோரும் அ
உடுவை எஸ். தில்லைநடராஜா, மேலதிகச் செயலாளர், கல்வி அமைச்சு
“இசுருபாய’, பத்தரமுல்லை.
 
 

guso T6Tffair
செய்தி
1ளியிடும் ‘கூர்மதி” இரண்டாவது மலராக தேவைகளை உளங் கொண்டு வெளியிடப்படும் ) பெரிய அளவில்ே பல்வகை ஆக்கங்களையும் லனை எமக்குத் தரவல்லது.
ளும் “கூர்மதி” களமானது மாணவர் மத்தியிலும்
மத்தியிலும் பெரு வரவேற்பைக் கொண்டுள்ளது. நிலை நின்று மென்மேலும் ஊக்கப்படுத்தும்
டைய எனது வாழ்த்துக்கள்
ii

Page 22


Page 23
பதிப்பாசிரியரிடப்
“கூர்மதி” வருடாந்த தமிழ்க் கல்விச் சஞ்: கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு, மி வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது.
சென்ற வருட வெளியீட்டினை விட, இ நிறைவுடைய சஞ்சிகையாக கூர்மதியை வெ
பாடசாலை மாணவர்களது ஆக்கங்கள்முத படைப்புக்களை இயன்றவரை தந்துள்ளே எதிர்கொள்ளும் சவால்களையும், எதிர்ப்புக் கூர்மதி அமைந்தால், அதுவே இதன் வெற்
எமது இப்பணியினைச் சிறப்புறச் செய்ய 2 அமைச்சருமான திருமதி. சந்திரிகா பண்டா கல்வி அமைச்சர் கெளரவ மங்கள சமரவீர ஆலோசனைகளைத் தந்து வழிப்படுத்திய கல் தாரா டி மெல் அவர்களுக்கும், எனது உளங் வெளியீட்டுக்கு முன்னின்றுழைத்த மேலதிக அவர்களுக்கும், எமக்கு அறிவுரை வழங்கி : எஸ். தில்லைநடராஜா அவர்களுக்கும் என
நூலாக்கத்திற்கு உதவி புரிந்த அனைத் அக்கறையுடன் எமக்களித்த அனைவருக்கு
என். நடராஜா தமிழ் மொழிப் பிரிவுப் பணிப்பாளர், கல்வி அமைச்சு
“இசுருபாய’,
பத்தரமுல்லை.
 

b இருந்து.
சிகையின் இரண்டாவது வெளியீடு இதுவாகும். கவும் உயர் நிலையில் இச்சஞ்சிகையினை
இவ்வாண்டு அடக்கத்திலும், ஆக்கத்திலும் 1ளியிட முயன்றுள்ளோம்.
ல், பல்கலைக்கழகப் பேராசான்களிறாகப் பலரது ாாம். மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் களையும் வெற்றிகொள்ளக் கூடியவகையிலே றியாகும்.
ஊக்குவித்த அதிமேதகு ஜனாதிபதியும் கல்வி ரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கும், பிரதிக் அவர்களுக்கும், அவ்வப்போது தேவையான )வி அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி கனிந்த நன்றிகள். இச் சஞ்சிகையின் தொடக்க ச்ெ செயலாளர் திரு. எம். ஜி. ரி. நவரத்ன உதவிகள் புரிந்த மேலதிகச் செயலாளர் திரு. து மனமார்ந்த நன்றிகள்.
து உள்ளங்களுக்கும், தமது ஆக்கங்களை ம் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

Page 24


Page 25
தமிழ்மொழி வழி கல்வி ச
சாராப் பாடங்களைப் பயில
இன்றைய உயர்வகுப்பு மாணவர்களின் தமிழ் அ பெரும்பாலும் வாக்கியங்களைக் கூட சரிவர எழுதத் ( எழுதும் வாக்கியங்களை அர்த்தப்படுத்துவதிற் சிரம உயர்நிலை மாணவர்களின் சிங்களமொழி பற்றிய மொ மாதிரியான குற்றச்சாட்டு (அதாவது சிங்களத்தைச் இயல்பாகியுள்ளது.
தமிழ்/சிங்களம் வழியே ஏறத்தாழ உயர்கல்வி கூறப்படுவதை மிகுந்த கவனத்துடன் நோக்குதல்
தமிழ்/சிங்கள மொழிவழிப் பயிலும் மாணவர்கள் பாடங்களை மாத்திரம் தமது பாடங்களாகக் ெ மேலே தொடங்குகின்றது. க.பொ.த சாதாரண தர நி முதல் மொழி, இலக்கியம் சாராய் பாடங்களை சற் ஆனால் அந்த நிலையில் தரங்கள் 6,7,8,9,10,11 சாராய் பாடங்களைப் படிக்கும் அதே வேளை பாடத்தையும் கற்கின்றனர். தரம் 6 இலிருந்து ஆசிரியரைப் பயன்படுத்தும் முறைமை இப்பொழு தமது சிறப்புப் பாடமாகக் கொள்ளாத ஆசிரியர்கள் படிக்கும் முறை தரம் 6 இலிருந்தே தொடங்கில தமிழ்மொழி இலக்கியத்தையும் அம்மாணவர்கள் இந்த இரு பாடநிலைகளுக்குமிடையே ஊடாட் 11 - 16 ஆகும். இப்பொழுதுள்ள கல்வி முறைை (Arts) சாரா மாணவர்கள் தங்கள் பாடங்களை ெ என்பது ஒரு முக்கியமான உண்மையாகும்.
மேற்கூறிய உண்மையை மனதிற் பதித்துக் கொல தொட்ர்பினை இவ்விடத்திற் குறித்துக்கொள்வது
மொழியென்பது கருத்துக்களை எடுத்துக் கூறுவ, எடுத்துக் கூறப்படுவதுண்டு. அது உண்மையே உண்மையாதெனில் மனிதர்கள் மொழிகொண்டே சி

ற்கும் மாணவர்கள் தமிழ்மொழி இலக்கியம் வதற்குப் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை மொழித் தேர்ச்சியும், அறிவும்.
இதற்கான கற்பித்தல் முறைமை பற்றிய ஒரு குறிப்பு
பேராசிரியர் கா. சிவத்தம்பி
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதுவது, இக் கட்டுரையின் விடயப் பொருளின் சில அம்சங்கள் பற்றி உரையாடி உதவிய பேராசிரியர் எஸ். சுசிந்திரராஜா அவர் களுக்கும், வகுப்பறை அநுபவ அறிவுபற்றிப் பல விடயங் களைக்கூறி உதவிய கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி சிரேஸ்ட தமிழாசிரியை செல்வி மாகிறித்தா வேதநாயகம் அவர்களுக்கும், நெறி பயின்றபின் கல்வியியல் அம்சங்கள் பற்றிக் கூறிய தேசிய கல்வி நிறுவகப் பணிப்பாளர் திரு. உ. நவரத்தினம் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
றிவு பற்றிய பொதுக்குறிப்புரைகளிலொன்று அவர்கள் தெரியாதவர்கள் என்பதாகும். அதாவது இம்மாணவர்கள் D காணப்படுகின்றது என்பதே இந்தக் குற்றச்சாட்டாகும். ழிப்பயிர்வுத் தேர்ச்சி பற்றிக் கூறப்படும் பொழுதும் இதே சரியாக எழுதத் தெரியாதவர்கள் எனக்) கூறப்படுவது
கற்பிக்கப்படும் இந்நாட்டில் இக்குறைபாடு பற்றிக் b வேண்டும்.
தமிழ்/சிங்களம் ஆகிய மொழி, இலக்கியம் சாராய் காள்ளும் முறைமை க.பொ.த சாதாரண நிலைக்கு ைெலயை எடுத்துக்கொண்டால் குறிப்பாக ஆறாந்தரம் று ஆழமாகக் கற்கும் முறையைத் தொடங்குகின்றனர். வரை அவர்கள் தமிழ்/சிங்கள மொழி இலக்கியஞ் பில் தமிழ்/சிங்கள மொழி, இலக்கியம் ஆகிய 3
ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு தனித்தனி து வழக்கிலுள்ளது. அதாவது தமிழ் மொழியைத் மூலமாக மொழி இலக்கியஞ் சாராய் பாடங்களைப் விடுகிறது. ஆயினும் தரம் 6 இலிருந்து 11 வரை
பயில்வதால் மாணவர்களின் அறிகை நிலையில் ம் தென்படும். இது நடைபெறுகின்ற வயதெல்லை )யில் சராசரியாக 16 வயதிற்கு மேலே கலைத்துறை ாழிப்பாட ஊடாட்டம் எதுவுமின்றியே பயில்கின்றனர்
ாடு மொழிப் பயில்வுக்கும் அறிகை விருத்திக்குமுள்ள அவசியமாகின்றது.
தற்கான ஓர் ஊடகம் (சாதனம்) என்பதே பெரும்பாலும் ஆனால் அதற்கும் மேலே முக்கியத்துவமுள்ள திக்கின்றார்கள் என்பதாகும். அறிவுப் பாண்டித்தியம்

Page 26
மிக உயர்வாக உள்ள நிலையிலேயே குறியீடுகள் (உயர் கணிதம்) அத்தகைய நிலைக்கு வரும் வை இந்நிலையில் மொழி இல்லாமற் சிந்தனை இ6
மொழி நிலைச் சிந்திப்பு என்பது இரண்டு வி சுட்டும் பொருள்/அர்த்தம் இவை பருப்பொருள் அல்லது அருவமான எண்ணக்கருக்களாகவும் அறிவு, தகவற் சேகரிப்புக்களினால் வருவது.
மற்றையது இது மிகமுக்கியமானது. சொற்களி அர்த்தமாகும்
செளமியனின் குடை செளமியனுக்குக் குடை
இவ் உதாரணத்தில் மொழியின் அமைப்பு முக்கி பற்றிய ஒரு வினாவாகும்போது அது பற்றிய சிந்தி இதனைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு மா6 விளங்கியிருத்தல் வேண்டும். கோளங்களின் என்பதற்குமிடையிற் பெருத்த கருத்து வேறுபாடு
மேற்கூறிய இரண்டு மொழித் தேர்ச்சிகளுமில்லாது ஏற்படாது.
திட்டவட்டமாகக் கூறினால் வாக்கியங்களி: வாக்கியங்களை விளங்க முடியாதென்பது முக்கிய பயில்பவரும் தான் அந்தப் பாடத்தை எந்த மொழி பற்றிய பரிச்சயம் மூலம் தான் அந்த அறிகையை தெளிவாகின்றது. இதில் இன்னுமொரு உள்நிை அர்த்தப்பாடும் பற்றியுள்ள அறிவினால் அவர் தன் மு விளங்கிக் கொள்ளுதல் என்பது ஒரு அம்சம் இன் பிரச்சினையாக உள்ளனவற்றை அல்லது தான் கை எடுத்துக் கூறுவதற்கும் இந்த மொழியமைப்புத் நுண்ணியதாகக் கூறலாம். அதாவது தான் புலப்படுத்தத்தக்க வகையிலே மொழியமைப்புக்
மழை பெய்கிறது மழை பெய்து கொண மழை பெய்து கொணி
இவ் உதாரணம் மிகச் சாதாரண நிலையில் நா கூறுகிறது.
இந்த மொழியறிவு இல்லாமல் எந்தப் பாடத் இந்த அடித்தள அமைப்புப் பற்றிய அறிகைத் தேை மொழியாகக் அல்லது மூன்றாம் மொழியாகக் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற். சொல்வதற்கோ அல்லது ஆங்கிலத்திற் பொதும் வேண்டிய அம்மொழியின் அடிப்படை அமைவு (அடிப்படை ஆங்கிலம்) என்று கொள்ளப்படுகிறது

மூலம் சிந்திக்கும் முறையும் திறனும் கிட்டுகின்றன. ர நியமமான மொழி கொண்டே நாம் சிந்திக்கிறோம்.
)6O)6).
டயங்களை உள்ளடக்கியது ஒன்று வார்த்தைகள் களாகவுமிருக்கலாம். (கண்ணாடி, அணுஉலை) இருக்கலாம் (கோபம், நொதுமல்) இவற்றுக்கான
ன் கட்டமைப்பால் உணர்த்தப் பெறும் பொருள்/
யமான வேறுபாட்டினை உணர்த்துகின்றது. இவை பபில் இந்த அமைப்பு முறைமை முக்கியமாகின்றது. னவர்கள் இந்த அமைப்பு முறைமையினை நன்கு சூடு என்பதற்கும், கோளங்களுக்கான சூடு உண்டு.
மொழிவழி அறிகையோ மொழிநிலைச் சிந்தனையோ,
ன் அர்த்தப்பாடுகளைத் தெரிந்து கொள்ளாமல் உண்மையாகின்றது. இதனால் எந்தப்பாடத்தைப் மூலம் பயில்கின்றாரோ அந்த மொழியின் அமைப்புப் அதன் வழியாக அறிவைப் பெற முடியும் என்பது )ல முக்கியத்துவமுண்டு. மொழியமைப்பும் அதன் >ன்னேயுள்ள ஒரு பாடத்தை அல்லது பாடப்பகுதியை னொன்று தான் அறிந்தனவற்றை குறிப்பாகத் தனக்குப் ண்டறிந்தனவற்றை மற்றவர்கள் புரிந்து கொள்ளுமாறு
தேர்ச்சி முக்கியமாகும். இதனை மேலும் சற்று எடுத்துக் கூறவிரும்பும் கருத்து நுண்மையைப் கையாளுவதற்கான அறிவும் ஆற்றலும் வேண்டும்.
டிருக்கிறது டேயிருந்தது
ம் காணும் ஒரு விடயத்தின் நெளிவு சுழிவுகளைக்
தையும் விளங்கிக் கொள்ள முடியாது. மொழியின் வயையும் அறிகை முறைமையையும் நாம் இரண்டாம் கற்றுக் கொள்ளும் ஆங்கில மொழி கற்கை நெறி
கும் போது ஆங்கிலம் மூலம் ஒன்றை எடுத்துச் படையாகக் கூறப்படுவதை விளங்கிக்கொள்வதற்கு முறைமை பற்றிய அறிவே அங்கு Basic English து. அதாவது அந்த அடிப்படை அமைவுகள் பற்றிய
2

Page 27
விளக்கமும் அவை பற்றிய தாடனமும் இருந்தால் அ அந்த அடிப்படை ஆங்கில அறிவு தளம் போன்ற
க.பொ.த சாதாரண நிலைக்கு மேல் தமிழ்மொழி கற்க விரும்பும் மாணவரொருவர் தனக்கு தமிழில் பாடங்களை விளங்கிக் கொள்வதற்கும் அத்துட தெரியப்படுத்திக் கொள்வதற்கும் வேண்டிய அட எவ்வெவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும் 6
இந்த வினாவை மீண்டும் ஒருதடவை எடுத் கொள்வதற்கும் அல்லது அத்துடன் அதனைத் மதிப்பிடுவதற்கும், அப்படி விளங்கியதை இன்னொ வேண்டிய குறைந்த பட்ச அடிப்படை மொழியமைட் தடையுமின்றி தமிழிலக்கணம் பற்றிய வினாவுக்கு
இலக்கண அறிவின் தேவைப்பாடு பற்றிய இந் கொள்வதற்கு இதே விடயத்தை இன்னொரு வை
தமிழ்மொழியில் அர்த்தம் எவ்வாறு தோற்றுவிக்க இவ்வாறு நோக்கும் போது தமிழ் மொழி கூறப்படுகின்றனவற்றுக்கு நாம் வருகின்றோம்.
இன்னொரு மொழியோடு ஒப்பு நோக்கும் போது த எவ்வாறிருக்கும் என்பதே உண்மையில் எம்முன்னு
ஒவ்வொரு மொழியும் அதனுடைய இயல்பு முை கொள்ளும், உதாரணமாக ஆங்கிலத்தில்
He C26 She came It came
என்று அந்த came எனும் பயனிலைச் சொல்லி தமிழிலோ
அவன் வந்தா அவள் வந்தா அது வந்தது
எனவே முடித்தல் வேண்டும். அப்படி இல்லா
மொழிகளின் தனித்துவ இயல்புகளை விளங்கிக் மழை பெய்தது” என்ற தொடரை ஆங்கிலத்திற் கூற வேண்டும். இவ்வாக்கியத்தில் It என்பதன் கூறிவிடமுடியாது. தமிழில் மழை பெய்தது என்று எனப்படும் பிரயோகங்களை ஆங்கில மொழி அத்தியாவசியமாக அமைந்துள்ளன.
இதே போன்று தமிழில் அர்த்தப்பாடு எவ்வாறு வேண்டும்.

றிகை வரம்பைக் கூட நாம் அகட்டிக் கொள்ளலாம்.
.لb
வழியாகத் தனது பாடங்களை (தமிழ் சாராதவை) ) கற்பிக்கப்படுகின்ற அந்தப் பாடத்தை அல்லது ன் தான் அதனை விளங்கியுள்ளேன் என்பதை உப்படைத் தமிழ்த் தேர்ச்சிநிலை யாது? அது ானும் வினா அடுத்துத் தோன்றுவது இயல்பே.
ந்துக் கூறுவோம். தமிழில் ஒன்றை விளங்கிக் 3தான் விளங்கிக் கொண்டதாக தன்னுள் தான் ருவருக்கு எடுத்துச் சொல்வதற்கும் தெரிந்திருக்க பறிவு யாது? இந்த விடயம் நம்மை எவ்வித தங்கு இட்டுச் செல்கின்றது.
த நிலையை மேலும் சற்று ஆழமாக விளங்கிக் கயாகவும் எடுத்துக் கூறலாம். அது பின்வருமாறு
bljLGd56örpg)? (How is meaning created in Tamil) யின் அடிப்படை அம்சங்களென எடுத்துக்
மிழில் அர்த்த உருவாக்கத்துக்கான மொழியமைப்பு
லுள்ள பிரச்சினையாகும்.
றைமைக்கேற்ப இந்த அர்த்தப்பாட்டை ஏற்படுத்திக்
ல் வேறுபாடு காட்டாமல் முடிக்கலாம். ஆனால்
ான்
ாள்
மல் முடித்தால் அந்த அர்த்தப்பாடு ஏற்படாது.
கொள்வது மிகமிக அவசியம் உதாரணம். ‘நேற்றிரவு 3n (Dub (3LJTg, "It rained yesterday night” 6T6óT(3D னெ வழக்கம்போல “அது மழை பெய்தது” என்று மாத்திரமே கூறல் வேண்டும். அதுபோல், is, are
மூலம் அர்த்தப்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு
ஏற்படுத்தப்படுகின்றது? என்பதை அறிய முனைதல்

Page 28
தமிழுக்கான இலக்கணத்தை எடுத்துக் கூறுவ
1. எழுத்து நிலைப்பட்டது.
இங்கே எழுத்து என்பது இரண்டு கருத்துக்கை இது மாறுவதில்லை. மற்றயது எழுத்துக்கான எழு எழுத்தின் உயிர் நிலையென்பது அதன் ஒலி ஒலியமைப்பில் அடிப்படை மாற்றம் ஏற்படுவதில்6
2. சொல் நிலைப்பட்டது
இந்தச் சொல்நிலையில் தான் கருத்துக் கு தனியொலியாகவோ அல்லது கூட்டொலியாகவே
6 TT (BuT வார் போர் வாகனம் GBLJT
இவ்விடத்தில் தனியே சொல் என்று சொல் வேண்டும். உண்மையில் தனியொரு சொல்லின சொல் என்ற நிலைக்கு வருவதற்கு முன்னர் கிளத் தொடங்குவது நல்லது. ஏனெனில் கிளத்தல் எனு கொண்டு அதற்கான மரபொலியை அல்லது மரெ நாம் கருத்தினைத் தீர்மானிப்போம். உதாரணமாக வரலாம். கருத்தினை மனத்தில் வைத்துக்கொண் கிளத்தப்படுவதை கிளவி என்போம் இலக்கிய நி: கூறுவர். கூறுவது கூற்று. அதே போல கிளத் அர்த்தம் தோன்றும் இதனாலேயே தொல்காப்பியம் ஆரம்பிக்கின்றது. ஆசிரியர்கள் இந்த உண்மைை
அடுத்த வினா தமிழிற் பொருள் தோன்றக் கிளத் நோக்கத் தொடங்கும் போதும் தமிழ் மற்றைய பிரதான பண்பு யாது? என்று அறிந்து கொள்ளல்
திராவிட மொழியெனும் வகையில் தமிழின் தொல்காப்பியம் கிளவியாக்கத்தில் முதற் சூத்திரட
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அ.'றினை என்மனார் அவர் அல பிறவே ஆயிரு திணையின் இசைக்கு மனசொல்(
இதுவே சொற்களுக்கு அடிப்படையாகும். இ இடம் என்பன வரும் பால் பற்றிய எண்ணக்கருை நுணுக்கத்தை அறிந்து கொள்ளல் வேண்டும்.
ஆடுஉ அறிசொல், மகடுஉ அறிசொல் பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி அம் முப்பாற் சொல் உயர்திணையவ்வே
ஆண்பால், பெண்பால் என்று சொல்லாமல் ஆ அறிந்து கொள்ளும் சொல் என்பதன் நுணுக்கத் மாணவி என சொல்லின் இறுதி வடிவம் மூலம்

தற்கு முதலில் இரண்டு படி நிலைகளுள்ளன.
ாயுடையது. ஒன்று எழுத்தின் ஒலி (ஒலி வடிவம்) துவடிவம் (வரி வடிவம்) இது மாறுதலுக்குட்பட்டது. J6OLDij(3UUJIT(5th). (phonology phonetics) Sibgs லெ. ‘அ’ வின் ஒலி என்றுமே “அ” தான்.
றிப்பு/பொருட்குறிப்பு ஏற்படும். இச்சொற்கள் ஒரு ா அமையலாம்.
606
வதிலுள்ள சிரமத்தை அவதானித்துக் கொள்ளல் ால் ஒரு கருத்தினை ஏற்படுத்திவிட முடியாது. தல் (Uttering, Utterance) என்ற நிலையிலிருந்து றும் செயற்பாடு ஏதோ ஒரு நோக்கத்தினை மனதிற் பாலிகளைக் கூறுவதாகும். சந்தர்ப்பம் கொண்டே 'வார்’ என்பது பெயராகவும் வரலாம் வினையாகவும் ாடு கூறமுடிவதை கிளத்தல் எனலாம். இவ்வாறு லையில் கிளவி என்பதற்கு கூற்று என்று பொருள் தப்படுவது கிளவி, இந்தக் கிளவி நிலையிலேயே ) சொல்லதிகாரம் கிளவியாக்கம் எனும் இயலுடன் >ய நன்கு உள்வாங்கிக் கொள்ளல் வேண்டும்.
ந்தலுக்கான அடிப்படை அமைப்பு யாது? இவ்வாறு மொழிகளோடு ஒப்பு நோக்கப்படும்போதும் இதன்
வேண்டும்.
மிகப்பிரதான அம்சம் அதன் திணை வகுப்பாகும். )ாக இதனையே சொல்லும்
லே
தத் திணையின் அடிப்படையிலேயே பால், எண், வ தொல்காப்பியச் சூத்திரம் விளக்கும் முறையின்
1ணன்று அறிந்து கொள்ளும் சொல், பெண்ணென்று 0த விளங்கிக் கொள்ளல் வேண்டும். மாணவன் )ாத்திரம் காட்டாமல் பிடி, களிறு என தனித்தனிச்

Page 29
சொற்களாகவும் வரும். இதில் மேலும் ஒரு நு பெண் பால் வித்தியாசம் அழுத்தமாகக் காட்டப்
ஆண்கள் வந்தனர் பெண்கள் வந்தனர்
எனும் போது ஆண்பாலோ, பெண்பாலோ பொது பெறும். இவ்வாறு கொள்வதற்கான காரணங்கை கண்டு கொள்ளல் வேண்டும். அதேபோல அ தொல்காப்பியம் கூறும் முறைமை நுணுக்கமானது
ஒன்று அறிசொல்லே, பல அறிசொல் என் ஆயிருபாற் சொல் அட்றிணையவ்வே
அறிணைக்கு ஆண், பெண் பால் சொல்லும் (இதுபற்றிய சமூக நிலை விளக்கத்துக்கு இலக்க
அ.’றிணையில் ஒன்றன், பலவின் என்ற சொற் ஒன்றாக (single) நிற்கும் அது என்றும், பலவாக
இடம், தன்மை, முன்னிலை படர்க்கை என வழு உண்டு. எனவே தமிழிற் சொல்லுருவாக்கத்தி வழியாகவே வருகிறது
அடுத்து முக்கியம் பெறுவது இந்த சொல்ல மாற்றங்களுக்கியைய எடுத்துக் கூறுவதாகும். நடைமுறை யாது? என்பதனை அறிந்து கொள்ள
விதுரன் அடித்தான் விதுரனை அடித்தான் வந்தவன் கண்டான் வந்தவனைக் கண்டான் சேயோன் கொடுத்தான் சேயோனுக்கு கொடுத்தான தரங்கிணி எழுதினாள் தரங்கிணியால் எழுதப்பட்ட மாதங்கி வருகிறாள் மாதங்கி இங்கே வா
மேல்வந்த உதாரணங்களைப் பார்க்கும்போது குறித்த சொல்லின் இறுதியிலேயே அர்த்த வேறு இது ஒரு முக்கிய விடயம். இந்தப் பொருள் ம முன்னரே வந்துவிடும். உதாரணம் The book இருக்கிறது.)
தம்பிக்கு மாம்பழம் கொடுத்தேன்
I gave mango to your brother
இவ்வாறு சொல்லின் பொருளில் மாற்றத்தை என்பர். இது ஒரு முக்கிய கட்டம். எந்தச் சொல்

றுக்கம் உண்டு. தமிழில் ஒருமையிலேயே ஆண், பெறும்.
வாக பன்மை நிலையில் “அர்”என்ற வடிவத்தையே ளத் தமிழ்ச் சமூகத்தின் கண்ணோட்டத்திலிருந்தே 'றிணையில் ஒருமை, பன்மையைக் கூறுவதற்கும் J.
O
மரபு இல்லையென்பது இதனால் பெறப்படுகிறது ணமும் சமுக உறவுகளும் என்ற நூலைப் பார்க்கவும்)
களைப் பயன்படுத்துவதற்குக் காரணம் எண்ணில்
நிற்கும் அவற்றின் என்றுமே கருத்துப்படும்.
நம். இவ்வழக்கு ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் ன் (கிளத்தலின்) அடிப்படையான அம்சம் திணை
Uமைப்பின் அல்லது கிளத்த விரும்பும் கருத்து அதாவது அர்த்தத்தை மாற்றுவதற்கான தமிழ் 15 Tg5lb (How is meaning changed in Tamil)
நாம் உரையாடும் பொழுதோ, எழுதும் பொழுதோ படுத்தலுக்கான சுட்டியை வைத்துக் கொள்கிறோம். ாற்றுச் சுட்டி சில மொழிகளில் அந்தச் சொல்லுக்கு is on the table, (9.b5L L1553bb (3LD6O)5 (3LD6)
ஏற்படுத்தும் முறைமையை வேற்றுமைப்படுத்தல் லில் பொருள் மாற்றத்துக்கான சுட்டியை எத்தகைய
5

Page 30
சொல்லோடு இணைத்துக் கொள்கிறோம் என்பது குறிக்கும் சொல்லுடனேயே அந்தப் பொருளின் மா
சேயோனை வந்தவனை
இந்தக் கட்டத்துக்கு வந்ததும் எத்தனை வ: மொழிகளை எடுத்துக் கொண்டால் சொற்கள் பொ என இருவகைப்படுவதை அவதானிக்கலாம். தமி வினையென்பது ஒன்றினைச் செய்தல் (doing) எ சொல் ஒரு கருமத்தை அல்லது காரியத்தைச் செய் வினைஞர்)
எந்தப் பாடத்தைக் கற்கும் பொழுதும் மாணவ செயல் பற்றிய அந்தப் பொருள் அல்லது செயலி தேவையேற்படும். (உதாரணம் உப்புத் தண்ணீர், பொருளின் அல்லது செயலின் தன்மையைப் பற்றிக் என்பர். இப்பயன்பாடு பற்றிய தெளிவான பயன் வேண்டும்.
பெயர், வினை என்பனவே அடிப்படை முக்கியத் நடைமுறை நிலையில் இடை, உரி என்ற சொல் இவற்றுக்கென தனியே பொருள் இல்லை. அவற்றுக்கிடையே வருவனவாக அமையும். அர் சொற்களேயாகும். இந்தச் சுட்டிகளை உருபு (1
உரி என்பதும் பொருள் செயலைக் குறிக்காமல்
சாலச் சிறந்தது. நனி சிறந்தது.
இடைச் சொற்களின் தன்மையைப் புரிந்துகொ சொல்லுக்கு தரப்படும் கருத்தினை நோக்குதல் ே அல்லது துணிக்கை என்பது பொருள். அது இ6 விளக்கும்போது தனக்கென ஒரு பொருளில்லாம அப்பொருளை அழுத்தியோ குறைத்தோ கூறுவது
உரி என்பது மேலே கூறப்பட்ட சொற்பொருளின் (சால, நனி, தவ) அந்த அளவில் இதுவும் par கொள்ளலாமா என்பது பற்றி இலக்கணகாரரிடை
இதுவரை கூறியவற்றால் தமிழில் அர்த்தம் தோ தெரியவந்துள்ளது. M
ஒன்று திணை - ஏற்கனவே கூறியவாறு பால்,
மற்றயது பொருள் மாற்றுச் சுட்டிகள் - இது குறித்தல் என்பன முக்கியமாகின்றன. இவை பெ
எனவே அடுத்து நாம் பெயர், வினை பற்றி அப்போதுதான் நாம் விரும்பியபடி கிளத்தலைச்

இப்போது முக்கியமாகின்றது. ஒரு பொருளைக் ற்றுச் சுட்டியைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
கைச் சொற்களுள்ளன என்ற கேள்வி எழுகிறது. ருள் குறிக்கும் சொற்கள், செயல் குறிக்கும் சொற்கள் ழில் இவை பெயர், வினை என்று குறிப்பிடப்பெறும். ன்பதாகும். சங்க இலக்கியங்களில் வினை எனும் வதைக் குறிக்கிறது (doing activity) (வினைவலர்
ர்கள் பேசும் பொருள் பற்றிய அல்லது நடக்கும் ன் சில நிலைகள், இயல்புகள் பற்றி கூறவேண்டிய
வெந்து வீழ்ந்தது போன்றவை) இப்படி பெயர்ப் கூறுவனவற்றை பெயரடை அல்லது வினையடை பாட்டு முறைமை மாணவருக்குத் தெரிந்திருத்தல்
துவமுடையனவாகும் தமிழில், அதாவது தமிழின் வகைகளையும் சேர்த்துக் கொள்ளும் மரபு உண்டு. பெயரோடு அல்லது வினையோடு அல்லது ந்த வகையில் பொருள்மாற்றச் சுட்டிகளும் இடைச் form) 6T66TLs.
அவற்றின் தர நிலையைக் குறிப்பதாகும்.
ள்வதற்கு ஆங்கிலத்தில் வரும் particle எனும் வண்டும். particle என்பது ஒரு பொருளின் துகள் லக்கணத்தில் எவ்வாறு தொழிற்படுகின்றதென்பதை ல் ஒரு சொல்லுக்கு முன்னரோ பின்னரோ வந்து 1. அந்தவகையில் இடைச் சொல் என்று கூறுவர்.
அழுத்தத்தைக் காட்டுவதற்குப் பயன்படுவதாகும் ticle தான். உரிச் சொல்லை ஒரு தனிப்பிரிவாகக் யே கருத்து வேறுபாடுண்டு.
ன்றுவதற்கும் இரண்டு அடிப்படைகளுண்டு என்பது
எண், இடம் இதற்குள் அடங்கும்.
பற்றிப் பேசுகின்றபோது பொருள் குறித்தல் செயல் யர்வினை என்பனவாகும்.
ய தெளிவுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
செய்யலாம்.

Page 31
இது அத்துணைச் சுலபமல்ல.
அவன் வந்தான். W அவன் (அப்பொழுது) நல்லவன்
மூன்றாவது உதாரணத்தில் நல்லவன் எனும் ெ சொல்லே. நல்லவனாக இருக்கும் செயலைக் குறி கேள்வி. முன்னராக இருந்தால் இறந்த காலம் மயக்கத்தைத் தீர்ப்பதற்கு ஆக இருத்தல் என்ற இதனைக் குறிப்பாற் காலங் காட்டுவதென்பர்)
இந்தக் கட்டத்தில் காலம்’ (Time - Tence ஆராயப்பட்டுள்ளது. நிகழ்காலம், இறந்தகாலம், என்பது பற்றிய விரிவான விளக்கம் தமிழிலக்கணத் வரும் உருபுகள் (particles) இங்கு முக்கியமாகின்
வருகிறான் - கிறு வருகின்றான் - கின்று வராநின்றனர் - ஆநின்று
இவ்விடத்தில் தமிழின் சொற் கட்டமைப்புப் பற்றி பெரும்பாலும் ஒட்டு நிலையாகவே இருக்கும்.
வருகிறான் - வரு(வா) + கிறு ' ஆன் மனைவி - மனை + (வ்) இ பார்த்துக்கொண்டிருக்கிறான் - பார்+(த்)து இல்லாள் -இல் + ஆள்
நன்னூலில் வரும் பதவியல் எனும் பகுதியில் திராவிட மொழியெனும் வகையில் ஒர் ஒட்டு மொ இணைந்தே வரும்.
இதுவரை கூறிய்வற்றால் தமிழில் ஒரு கருத்தை மேற்கூறிய திணை அதனைச் சார்ந்து வருட காலமுணர்த்தல் ஆகியன அடிப்படையான அபை
உண்மையில் இந்தக் கிளத்தல்’ நிலைக்கு வரு முறைமை பற்றி விளங்கிக் கொள்வதற்கு தமிழி குறிப்பிடுதல் வேண்டும்.
அதாவது தமிழில் தொடர்ந்து கிளத்தலை (t குறிக்கும் ஒலி அலகின் இறுதி ஓசையும், அத6 முதல்வரும் ஓசையும் இணைந்து வரும். மேலே இது நிகழும்.
அர்த்த உருவாக்கத்தில் இவ்விடயம் முக்கிய ஓசைகளின் ஒட்டு நிலைத் தன்மை தமிழில் அர் ஒட்டுகையின் அடிப்படையில் அர்த்தங்கள் தீர்மா

சால் பெயர் அல்ல. அது உண்மையில் வினைச் ப்பதாகும். ஆனால் அது எப்பொழுது என்பதுதான் , இப்பொழுதாக இருந்தால் நிகழ்காலம் (இந்த பொருள்பட சொல்லுருவாக்கத்தைச் செய்யலாம்.
) முக்கியமாகின்றது. தமிழில் இது விரிவாக எதிர்காலம் என்பன எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன திலுண்டு. வினைச் சொற்களில் இடைநிலைகளாக
ாறன.
ப தெளிவு இருத்தல் வேண்டும். தமிழில் சொற்கள்
பார்த்து + கொண்டு + இரு + கிறு + ஆன்
இம்முறைமை விளக்கப் பெற்றுள்ளது. தமிழானது ழியாக இருப்பதால் வருகின்ற கூறுகள் எல்லாம்
விளங்கிக் கொள்வதற்கோ எடுத்துக் கொள்வதற்கோ பவை, பொருள்மாற்று முறைமை, சொல்வகை, மப்பியல் (Structural) அம்சங்களாகும்.
ருவதற்கு முன்னர் தமிழில் அர்த்தங்கள் தோன்றும் ன் ஒலிப்பு அமைதி மிகமுக்கியமானதென்பதனை
ttering) செய்கின்றபொழுது ஓர் அர்தத்தினைக் னைத் தொடர்ந்து வரும் அர்த்த ஒலி அலகின் fniðIJ GỌLGğbĝ56óTGOLD (agglutination) &bTIJGOOTLDT ab
இடத்தைப் பெறுகின்ற ஒன்றாகும். மேற்கூறிய ாத்த வேறுபாடுகளை ஏற்படுத்தும். அந்த ஓசை ானிக்கப்படும்.
7

Page 32
தந்த சங்கிலி தந்தச் சங்கிலி
இந்த இரண்டு தொடர்களிலுமுள்ள கருத்து அவசியமில்லை. தந்த என்ற சொல்லில் வரும் ! முதல் ஒசையான ‘ச்‘ வையும் சேர்த்துக்கூறுகின் கூறுகின்றோமோ என்பதைக் கொண்டு கருத்து உதாரணமுண்டு. (இதனை எனது மாணவர் ரவி
அந்த உதாணம்:
'அவன் கத்தி கொண்டு வ “அவன் கத்திக் கொண்டு
ஓசை இணைவின் அர்த்த வேறுபாடு மிகத் உதாரணங்களைக் கூறலாம்
பல்பசை பற்பசை
முதலாவது தொடர், பல்லுப் பசையாக இருக் பல்லுக்கான பசை என்ற கருத்தையும் தருகி தோற்றுவிக்கப்படுவது பற்றிய ஓர் அச்சாணி அம்ச
உண்மையில் இது எழுத்துக்கள் (letters) - விடயமாகும்.
இலக்கண நூல்கள் இதனை ‘புணரியல்’ என ( புணர் என்னும் சொல்லின் கருத்தினை விளங்கிக் விடும். புணர்தல் என்பது தனித்தனியாக இருந்த இ பல் + பசை என்ற இரண்டும் “பற்பசை’ ஆகும் தோற்றுவிக்கின்றது.
இவ்விடயம் மிகவும் நிதானமாக கையாளப்படுத் “அசை’யெழுத்து முறையாக (Syllaic) இருப்ப எழுதப்படல் வேண்டும். இல்லாள் என்னும் சொ “இல்லாள்” என்றே எழுத வேண்டும். இங்கு உ வேறுபாடுகளை ஏற்படுத்திப் பேசவேண்டிய நிலை6 இதற்கான நல்ல உதாரணம் கீழே தரப்படுகிறது.
அவன் பஸ்ஸிலிருந்து அவன் பஸ்ஸில் இருந்
அவன் கண்டியிலிருந்: அவன் கண்டியில் இரு
மேற்கூறிய உதாரணங்களில் கருத்து வேறுபாடு
ஆனால் அதே வேளையில் நமது பாரம்பரிய எழுது என்று கூறப்படத்தக்க சொற் புணர்ச்சி வடிவங்கள்

வேறுபாட்டை இங்கு விரித்துக் கூறவேண்டிய இறுதி ஒசையான ‘அ’வையும் சங்கிலியில் வரும். றோமோ அல்லது தனித்தனியே ஓர் இடைவிட்டு வேறுபடுகிறது. இதற்கான மிக்க வலுவான ஓர் மூலம் அறிந்து கொண்டேன்)
ந்தான்’ வந்தான்’
துலக்கமாகத் தெரிகிறது. இது போன்று பல
கிறது என்ற கருத்தையும் இரண்டாவது தொடர் றது. இந்த விடயம், தமிழில் அர்த்தங்கள் மாகும்.
(அவை ஒலிக்கப்படும் முறை) எழுத்து பற்றிய
விபரிக்கும். சொற்களின் ‘புணர்ச்சி” என்று கூறும். கொண்டால் இவ்விடயம் மிகச்சுலபமாக புரிந்து ரண்டு பொருள்கள் ஒன்றாக இணைதல் என்பதாகும். >போது அந்த இணைவு ஒரு புதிய கருத்தினை
தல் வேண்டும். ஏனெனில் தமிழின் எழுதுமுறை தால் சொற்கள் உச்சரிக்கப்படும் முறையிலேயே ால்லை இல் ஆள்’ என்று எழுதிவிட முடியாது, ச்சரிப்பு ஒலி முக்கியமாகும். இவ்விடயம் கருத்து வரும்போது பல கருத்து இயக்கங்கள் ஏற்படலாம்.
இறங்கினான். ந்து இறங்கினான்.
து வந்தான். ந்து வந்தான்.
தோன்றுவதை அவதானித்தல் வேண்டும்.
து முறைமையில் இன்றைய நிலையில் சிக்கலானவை ர் உள்ளன.
8

Page 33
தொழிற்றுறை தொழில் துறை
கல்வியியற்றுறை கல்வியியல் துறை
இரண்டாவது உதாரணத்தில் கல்வியல் என்பை பொருத்தமாக இருக்காது என்பது நமக்குத் தெரி
எனவே, இதற்கு காரணம் என்னவெனில் நவீன உ பழக்கப்படாத ஒலிமுறைகளுக்கு இப்பொழுது பழக்க என்பதை இப்பொழுது, மரபுப்படி மீடிறன் என்று சொல் “கண்டியிலிருந்து’ வருவதற்கும் “கண்டியில் இரு உண்டு.
எனவே தமிழில் அர்த்தங்கள் தோற்றுவிக்கப்படு மாணவர் அறிந்திருத்தல் அவசியம்.
இதுவரை கூறியவற்றால் தமிழ்மொழியில் அ மாணவருக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகி
(அ) எழுத்து நிலையில் ஓசைகளின் புணர்வு ( (ஆ) கிளத்தல்/சொல்நிலையில்
(1) திணையும் அதனுடன் வருபவையும் (2) பொருளை வேறுபடுத்தும் சுட்டிகள் ( (3) சொல்வகை - பொருள் குறித்தவை/ (4) செயல் குறிக்கும் வினைச்சொல் பற் இதனை இன்னொரு வகையிலும் கூ தமிழின் மேற்கூறிய மொழி அமைவு வெற்றிகரமாக நிறை வேற்ற முடியாது
(V
இந்த அறிவினை நமது தமிழ் பயிற்றல் முறை என்பதனை நோக்குதல் வேண்டும்.
இப்பொழுது வழக்கிலுள்ள தமிழ் நூற்றொடரி குறைபாடுகளை எடுத்துக் கூறுவதற்கான ஓர் இ பவில்லை. எனினும் தரம் 8 வரையுள்ள தட இயைபின்மைகளை எடுத்துக்காட்டுவதவசியமாகி கூறப்படவேண்டுவது இலக்கணம் கற்பித்தல் என் யாவற்றையும் உண்மையான மொழி இலட்சண என்பதாகும். தரம் 5 வரை விசேட அழுத்தம் ெ கருத்துச் சொற்கள் எனும் எண்ணக்கரு சொற்கள் தமிழிலக்கண கட்டமைவு பற்றிய உணர்கைக்கு மேலும் ஒத்தகருத்து எனக் கூறப்படுவனவற்றினூடே உணராது போகுமளவிற்கு கற்பித்தலும் கூடாது. ஒத்தசொற்களென்பர். உண்மையில் இத்தகைய
ҫ

மேலும் பிரித்து கல்வி + இயல் எனக்கொள்வது |ம்.
லகில் தமிழர்கள், 17, 18 ஆம் நூற்றாண்டுகளிலே பட்டுள்ளோம் என்பதேயாகும். இதனால் மீள்திறன் 1ல வேண்டியதில்லை. ஆனால் அதே வேளையில் து” வருவதற்கும் இன்று கூட கருத்து வேறுபாடு
b முறைமையில் சொற்களின் ஒசையிணைவு பற்றி
V
ர்த்த உருவாக்கத்திற்கு பின்வரும் விடயங்கள் *றனவென்பது தெளிவாகின்றது. அவையாவன:
சேர்க்கை)
(திணை, பால், எண், இடம்) வேற்றுமை)
செயல் குறித்தவை றியது முக்கியமாகக் காலம் காட்டுதல் ஆகும். றலாம். தமிழில் அர்த்தம் ஏற்படுத்தப்படுவதற்கு களை அறிந்து கொள்ளாமல் அந்த நோக்கினை
"I)
5.பொ.த (சாத) நிலையினுள்ளே புகட்டுகின்றதா?
ல் வரும் இலக்கணப் பகுதிகளிலே காணப்படும் டமாக இக்கட்டுரையை நாம் பயன்படுத்த விரும் Sழிலக்கணம் பயிற்றுவதிலே காணப்படும் சில *றது. இது தொடர்பாக முதலாவதாக எடுத்துக் ) எடுகோளின் அடிப்படையிலே கற்பிக்கப்படுவன இலக்கண) அம்சங்களாகக் கொள்ள முடியாது 5ாடுக்கப்பெறும் ஒத்தகருத்துச் சொற்கள், எதிர்க் ஞ்சிய விரிவாக்கத்துக்கு உதவுகின்ற அளவுக்கு பரிதும் உதவாதென்பதனைக் கூறல் வேண்டும். காணப்படும் அழுத்த வேறுபாடுகளை மாணவர்கள்
உதாரணம் நதி, ஓடை, அருவி, ஆறு என்பன கற்பித்தலின் மூலம் சொற் பொருளின் நெளிவு

Page 34
சுழிவாக்கத்தை மாணவருக்கு உணர்த்தாமல் விட்டு தொடர்புடைய சொற்களை ஒத்தகருத்தின என்று
அடுத்து தரம் 5ல் நடத்தப்பெறும் புலமைப் வினாத்தாள் அவ்வயது மாணவர்களின் அறிகைநிை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
தமிழ் நூற்றொடரைப் பார்க்கும் போது மாணவர்க பற்றி சிந்தித்துள்ளமை புலனாகின்றது. ஆனால் விளக்கங்களில் அதிலும் ஒரு படிப்படியான செலுத்தப்பட்டுள்ளதா என்பதை நோக்குதல் வேை மொழிவகுப்பாசிரியர் ஒருவர் இக்கட்டுரையாசிரிய கூறுதல் பொருத்தமானது.
‘தொடக்க நிலையில் மாணவர்களுக்கு பாடவி அவர்களின் கைகளைப் பிடித்து அவர்களை அ
கைகளைப் பிடித்துக் கூட்டிச் செல்லும் தன்ை இந்தப் பாடநூற்றொடரிற் காணப்படும் மிகப்பெரிய கு பொறுத்தவரையில் பரம்பரை பரம்பரையாக வரு அமைவுகளை விளக்குவதாகும். இதற்கான நல்: இலக்கியமும் தரம் 7 நூலில் புணர்ச்சி விளக்கப்
சொற்புணர்ச்சி
இயல்புப் புணர்ச்சி
இரு சொற்கள் ஒன்றுடனொன்று சேர்ந்து நிற்ற நிற்கும் போது, முன்நிற்கும் சொல் நிலைமொழி ( என்றும் சொல்லப்படும்.
எனவே நிலைமொழி இறுதியும் வருமொழி முத எனப்படும்.
சொற்புணர்ச்சி இருவகைப்படும்.
o இயல்புப் புணர்ச்சி 9 விகாரப் புணர்ச்சி
இதில் வரும் சொற்பிரயோகங்களைப் பா விளங்கக்கூடியனவா? என்ற கேள்வி கேட்கப்பட எனும் சொற்களில் வரும் மொழி எனும் சொல் கருத்திலேயே வருகின்றது அல்லாது மொழ விமர்சனங்களைக் கூறுவது சுலபம், எழுதுவ கூறுவது என்னவென்றால் சரியான முறையில் ம என்பதேயாகும்.
உண்மையில் இலக்கணம் பற்றி தொல்காப்ட் பொதிந்தவை. துரதிஸ்டவசமாக நமது கற்பி அறியும் திறனை இழந்துவிட்டோம். என்னைக் ே

விடுவோமோ என்ற பயம் ஏற்படுகின்றது. கருத்துத் கூறுவது பற்றி ஆழமாகச் சிந்தித்தல் வேண்டும்.
பரீட்சைக்கென கட்டமைக்கப்பெறும் தமிழ்மொழி லக்கு பெரிதும் அய்பாற்பட்டது என்ற விமர்சனத்தை
ன் வகுப்பு, வயது நிலைக்கேற்ற பாட அமைப்புக்கள் அதேயளவிற்கு வாக்கியங்களின் கட்டமைவு பற்றிய பளர்ச்சி இருக்க வேண்டுமென்பதிலே கவனஞ் டும். இவ்விடத்தில் பிறநாடொன்றில் ஆரம்பநிலை ருக்கு கூறிய ஒரு கருத்தினை இங்கு எடுத்துக்
யத்தைக் காட்டுவதல்ல முக்கியம். உண்மையில் வற்றினூடாக கூட்டிச் செல்லல் வேண்டும்.’
மை நிச்சயமாக நமது பாடநூற்றொடரில் இல்லை. றைபாடு யாதெனில், குறிப்பாக இலக்கணப் பகுதியைப் D ஒரு வாய்ப்பாட்டு முறைமையிலேயே இலக்கண Uதோர் உதாரணமாக அமைகின்றது தமிழ்மொழியும் பட்டுள்ள முறைமையாகும்.
ல் புணர்ச்சி எனப்படும். இரண்டு சொற்கள் சேர்ந்து என்றும் அதனோடு வந்துசேரும் சொல் வருமொழி
லும் பொருள் பொருத்தமுறச் சேர்வது சொற்புணர்ச்சி
ர்க்கும் போது இவை 12 வயதுப் பிள்ளைக்கு வில்லையென்றே தெரிகிறது. நிலைமொழி, வருமொழி உண்மையில் மொழியப்படுவன (Pronounced) என்ற (Language) என்ற கருத்திலல்ல. இத்தகைய து சிரமம் என்பது தெரிந்த ஒன்றே. இங்கு நான் ணவர்களுக்கு விளங்கப்படுத்தப்படாமல் போகின்றது
பர் நன்னூலார் கையாண்டுள்ள சொற்கள் பொருள் தல் முறைமை காரணமாக அவற்றின் நுண்மையை ட்டால் இலக்கணங் கற்பித்தலில் நாம் தொல்காப்பியம்
10

Page 35
நன்னூல் ஆகிய நூல்களில் குறிப்பாக தொல்காப்பிய இயல் வைப்பு முறையினையும் இயல்களினுள்ளே கொண்டோமென்றால் தமிழில் இலக்கணம் (இல
மரபில் முதலில் எழுதப்படும் மொழியின் ஒழுங்கமை6 Grammer எனும் சொல் எழுதுவதைக் குறிக்கும்
நாம் இதுவரை பேசிய விடயத்தில் இரண்டு அ
1. அர்த்தங்களைக் கொள்வதற்கான/கூறுவதற் 2. இதனை வயது நிலைக்கேற்ப விளக்கல்
இவற்றிலுள்ள மிகமுக்கியமான அம்சம் என்னெ அர்த்தவாக்க விளக்கத்திறன் மாணவர்களுக்கு இ வருவதற்கு முன்னரே தங்கள் சமூக/வாழ்வியல் தே மாணவர்கள் வருகிறார்கள். ஏற்கனவே கூறியபடி ஏற்கனவேயுள்ள மொழித்திறனை மீளக்கண்டறிந்து பயன்படுத்தும் ஒரு மொழிக்கட்டமைவின் அர்த் மாணவருக்கு ஏற்படவேண்டிய ஏற்படும் உள்ளச் ச் நிமிடத்திலும் புலனாக வேண்டும்.
米米米米米米
水米米米米米米米米米米米冰米米米
米米米米米米米米米米米
பிராமணனையும் ச சமமாகக் கருதுவது உதாரணம் பிராமணை அவனுடைய காயத்திலு: எப்படி அவனைப் பரி முயலுவானோ, அவ்வாறே கடித்த பொழுது அவனு தொண்டு செய்வான்.
வறியார்க்கு ஈவதே R மறுமைப் பயனைத் தரவு கிடக்கும் தாழ்ந்த வகு ஊன்றுகோல் போன் இக்காலத்தில் நாம் ெ
தானமாகும்.
4-CM 4658

ம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகியனவற்றின் சூத்திரங்களின் ஒழுங்கமைதி முறையையும் புரிந்து ட்சணம் features) நன்கு தெரியும். (மேல்நாட்டு வு பற்றியே - Grammatical இலக்கணம் ஏற்பட்டது. Grammatical இல் இருந்து வந்தது)
ம்சங்கள் மிகமுக்கியமானவை,
கான மொழிக் கட்டமைப்பை விளங்கிக்கொள்ளல்
வனில் இம்மொழி தாய்மொழி என்பதால் இந்த யல்பாகவே வரும். உண்மையில் பாடசாலைக்கு வைகளுக்கான மொழிக்கட்டமைப்பு அறிவுடனேயே இலக்கண வகுப்பு என்பது மாணவர் தம்மிடத்து கொள்வதாகும் (Rediscoverg) தான் இயல்பாகப் தங்களை தான் புரிந்து கொள்ளும்போது அந்த சிலிர்ப்பு, மகிழ்ச்சி இலக்கண வகுப்பின் ஒவ்வொரு
米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米米
帐米米米米米米米米冰冰冰冰
ண்டாளனையும் ஒரே எவ்வித மென்பதற்கு னப் பாம்பு கடித்தால் ள்ள விஷத்தையுறுஞ்சி யத்துடன் காப்பாற்ற ற சண்டாளனைப் பாம்பு ணுக்கு ஞானியானவன்
Fகை. அதுவே இம்மை பல்லது. நெருக்குண்டு தப்புச் சசோதரருக்கு ாறு உதவிபுரிவதே சய்வதற்குரிய ஒப்பற்ற
الص

Page 36
1. முன்னுரை
தமிழ் மொழியைக் கற்பதனாலும், அக்கல்வியினா புனைவதாலும் தம்முடைய சமயக்கொள்கைகளை சமணரும் பெளத்தரும் உணர்ந்து செயற்பட்டனர் மறைபோதகர்களும் (மிஸனரி மாரும்) மேலை அவர்களுட் சிலர் தமிழிலே நல்ல பாண்டித்திய தந்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பியல்புகள் ப மறைபோதகர்களும் மேலைத்தேய நிர்வாக அதிக சீனிவேங்கடசாமி அவர்கள் எழுதிய கிறிஸ்தவரு பேராசிரியர் S.D. சற்குணர் 19 ஆம் நூற்றாண்டின் பி பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்துத் தமிழிலக்கியங்களின் சிறப்பியல்புகள் பற்றியும் அ6
தமிழ் மொழியினுடைய சிறப்புக்களை அம்மொழி நெடுங்கணக்கிலும் சில மாற்றங்களைச் செய்தனர் அடிகள் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியிட்டு எழு நெடுங்கணக்கினை வரிவடிவிலே வழங்கும்பே ஓகாரத்திற்கும் வேறுபாடு இல்லாமலே எழுதப் எழுதப்பட்டன. சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி குறில ஆனால்,பெஸ்கி அடிகள் எகரத்திற்கும் ஒகரத்திற்கு அமைத்துத் தந்தார்.
சொற்களுக்கிடையே இடைவெளியின்றி தொடுத் காண்கிறோம். அச்சியந்திரத்தினுடைய வரு சொற்களுக்கிடையே இடைவெளியிட்டு எழுதும் இதற்கும் காரணமாய் அமைந்தனர். அச்சுக்கை ஸ்திரநிலையைக் கொடுத்தது. கிறிஸ்தவ தமிழ அமைந்தது அச்சுயந்திரம்.
2. அச்சுயந்திரப் புரட்சி
16 ஆம் நூற்றாண்டுத் தமிழக வரலாறு அரசி அமைந்தது. இக்கால கட்டத்திலேதான் சமயப் வந்து சேர்ந்தனர். ஆரம்பகால மறைபோதகர் என்னும் மேலைத்தேய அதிகாரி புதிய இந்தியா
“அவர்கள் இந்திய மக்கள் மீது அளவுகடந்த ப நடந்துகொண்டனர். மக்களுடைய ஆன்மா எல்லோருக்கும் தேவையான எல்லாவிதப் பணி

றிஸ்தவத் தமிழ் இலக்கிய வளர்ச்சி
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
தமிழ்த்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
லே பெற்ற அறிவின் மூலம் அம்மொழியிலே நூல்கள் இலகுவாக மக்களிடையே பரப்ப முடியும் என்பதைச் இதுபோலவே தமிழ் நாட்டுக்குவந்த கிறிஸ்தவ த்தேய நிர்வாகிகளும் உணர்ந்து செயற்பட்டனர். ம் பெற்று தமிழ் இலக்கிய நூல்களையும் ஆக்கித் லவற்றையும் பல்வேறு சந்தர்ப்பங்களிலே கிறிஸ்தவ ாரிகளும் அறிஞர்களும் எடுத்துக்கூறினர். மயிலை மும் தமிழும் என்னும் நூலுக்கு முகவுரை எழுதிய ற்பாதியிலே மறைபோதகர்கள் சிலராலே தமிழ்மொழி 5 தந்துள்ளார். தமிழ் மொழி பற்றி மாத்திரமன்றி வர்களிற் பலர் வியந்து கூறியுள்ளனர்.
பேசுவோரே உணரவைத்தது மாத்திரமன்றி, தமிழ்
யேசுசபையைச் சேர்ந்த பெஸ்கி (வீரமாமுனிவர்) முதும் வழக்கத்தினை ஆரம்பித்து வைத்தார். தமிழ் ாது எகரத்திற்கும் ஏகாரத்திற்கும் ஒகரத்திற்கும் பட்டு வந்தது. எ, ஒ ஆகிய வரிவடிவங்களில் )ாகவும் நெடிலாகவும் அவை கொள்ளப்பட்டன. தம் கால் கொடுத்து இன்றைய ஏஓ வரிவடிவங்களை
தெழுதும் மரபினை ஒலைகளிலும் சாசனங்களிலும் நகையாலும் ஆங்கில மொழியின் பாதிப்பாலும்
மரபு தோன்றியது. கிறிஸ்தவ மறைபோதகர்களே )ல தமிழ் எழுத்துக்களுக்கு (வரிவடிவங்களுக்கு) நிலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான கருவியாக
யல் நிலையிலே பெரும் குழப்பம் உள்ள காலமாக பணி செய்வதற்காக கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டுக்கு களைப் பற்றி ஹென்றி கார்ட்டன் (Henry Carton) என்னும் தமது நூலிலே பின்வருமாறு கூறினார்.
ரிவும் பாசமும் உடையவராய் அம்மக்களுக்கேற்றவாறு நன்மையைக் கருதிப் பணியாற்றியதோடமையாது களையும் புரியலாயினர். துன்பங்களைத் தாங்கும்
12

Page 37
மனோபாவம் தேவைக்கு உயிரையும் கொடுக்கும் காணப்பட்டனர்”.
இத்தகைய துறவிகள் கிறிஸ்தவ மதத்தைத் த கல்வியை வளர்ப்பதன் மூலமாக கிறிஸ்தவமத போ என்பதனை உணர்ந்த மறைபோதகர்களும் மேலை ஆரம்பித்தனர். இக்கல்விக்கு அடிப்படையாக அ
அச்சுயந்திரங் காரணமாக இங்கிலாந்து போன் விளைவாக எப்படிக் கலைகளும் தத்துவமும் ப பரவினவோ, அதுபோலத் தமிழகத்திலும் அச்சுய பொதுமக்களிடமும் அவை பரவத் தொடங்கின. கோட்பாடுகளை எளிதிலே விளக்கும் பல வெளியீடு தமிழிலே எழுந்த பண்டைய இலக்கியங்களெ அச்சுயந்திரத்தினுடைய வரவாலும் சிவை. தாமோத அரிய உழைப்பாலும் செல்லரித்துப் போகக்கூடிய
யேசு சபையினரே தமிழகத்தில் முதல் அச்சுச் ஜோ.ஆ. கொன்சால்வெஸ் (Joao Gọnsalves) அச்சுக்கூடத்தை நிறுவினார். 1578ல் எண்டிறிக் என LDgO)6) J6ò L2 ở IT? GLgb(BJT (Manual de Sao Pedro) கொண்ட கிரிசித்தியானி வணக்கம் (Doctrina அச்சாகியது. எண்டிறிக் எண்டிறிக்கெஸ் அடிகளி என்னும் நூல் (660 பக்கங்களைக் கொண்டது) 1
18ஆம் நூற்றாண்டில் புரட்டஸ்தாந்து மறைபே முன்னேறியது. தரங்கம்பாடியிலே அவர்களால் அை தமிழ் எழுத்துக்கள் வந்தன. பின்னர் இவ்வெழுத் அமைக்கப்பட்டது.
3. தமிழியல் வளர்ச்சிக்குக் கிறிஸ்தவர்கள் என
அச்சுவாகனமேறிய நூல்களும் மாத இதழ்களு செய்யப்பட்டன. நூல்கள் இயற்றுவதும் அவற்றை இருக்கவில்லை. நூல் ஒலையிலேயே எழுதப்பட் கஷ்டம். அத்துடன் மிகக்குறைந்த அளவிலேயே அதனால் மிகக் குறைந்த தொகையினரே நூல் கிறிஸ்தவ மறைபோதகர்கள் நூல்களை அச்சிட்( நூற்பெருக்கத்துக்கும் வாசிப்புப் பழக்கத்துக்கும் அ ஆகியனவற்றை அறிமுகஞ் செய்ததின் மூலமாக 6 வழிசமைக்கப்பட்டது. இதனால் கவிதை, சிறுக:ை
தமிழ்மொழியின் சொற்களஞ்சியத்தை நன்கு அ மனப்பாடஞ் செய்து கொள்ளவேண்டிய அவசியமிரு பிரதிகள் சிலவே கற்பவர்களுக்குக் கிடைத்தன பிரதியொன்றினை உடனடியாகப் பெறுவதும் ககூyட பிரதியைப் பார்த்து அவற்றிலுள்ள செய்யுட்களை நேரங்களில் மீட்கவேண்டியதாயிருந்தது. கிறிஸ்த அகராதிகள், சொல்லகராதிகள், பேரகராதிகள் ஆகி பெருந்தொகையாக வெளியிடப்பட்டதால், கடின ெ இலகுவிலே தெரிந்து கொள்ளவும் உதவியாயிருந்

உயரிலட்சியமும் பற்றுங்கொண்ட தியாகிகளும்
ழவி நாட்டிலே பரப்புவதற்கு முயற்சிகள் செய்தனர். தனைகளை மக்கள் இலகுவாக விளங்கிக்கொள்வர் த்தேய அதிகாரிகளும் பாடசாலைகள் பலவற்றை ச்சுயந்திரம் அமைந்து நற்பணியாற்றியது.
) தேசங்களில் நூற்பெருக்கம் ஏற்பட்டது. அதன் தகுருமாரிடம் மாத்திரமன்றிப் பொதுமக்களிடமும் பந்திரத்தின் வரவால், மடங்களில் மாத்திரமன்றிப் பலவகைபபட்ட நூல்களையும் கிறிஸ்தவமதக் களையும் அச்சிடுவதற்கு அச்சுக்கூடங்கள் உதவின ல்லாம் ஒலைகளிலேயே எழுதப்பட்டிருந்த ரம்பிள்ளை. உ.வே. சாமிநாதையர் போன்றோருடைய அவ்விலக்கியங்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டன.
கூடத்தை நிறுவினர். யேசு சபையைச் சேர்ந்த என்பவரே 1577ல் அம்பலக் காட்டில் முதல் ன்டிறிக்கெஸ் (Henrique Henriquez) என்பவராலும் என்பவராலும் எழுதப்பட்ட பதினாறு பக்கங்களைக் Christiana) என்னும் நூல் அம்பலக்காட்டில் i 6 TQLpgiJ SÐņu JITÜ 6J6IOTOJ (Flos Sanctorum) 587ல் புன்னைக்காயலில் அச்சாகியது.
ாதகர்களின் வருகையுடன் அச்சுவேலை மேலும் மைக்கப்பட்ட அச்சுக்கூடத்துக்கு ஜெர்மனியிலிருந்து துக்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையும் அங்கு
iன செய்தார்கள்?
ம் கிறிஸ்தவ மறைபோதகர்களாலேயே அறிமுகஞ் ) வாசிப்பதும் முன்னர் மிக இலகுவான விடயமாக -டது. ஒலையிலே புள்ளிகள் இட்டு எழுதுவதும்
பிரதிகள் ஓலைச்சுவடிகளில்ே அமைக்கப்பட்டன. bளைப் படிக்கும் வாய்ப்புடையவர்களாயிருந்தனர். S வழங்க முற்பட்டதுடன் இக்கஷ்டம் நீங்கியது. து வழிவகுத்தது. மாத இதழ்கள், பருவ இதழ்கள் ழுத்தாளர்களுடைய ஆக்கங்கள் வெளிவருவதற்கு ந, கட்டுரை முதலாய இலக்கியங்கள் வளரலாயின.
றிந்து கொள்வதற்கு, முன்னர் தமிழ் நிகண்டுகளை ந்தது. ஒலைச் சுவடிகளிலே எழுதப்பட்ட நிகண்டுப் நினைத்த மாத்திரத்திலே ஒருவர் நிகண்டுப் மாயிருந்தது. இதனால், ஒருவரிடமுள்ள நிகண்டுப் மனப்பாடஞ் செய்துவைத்து, பின்னர் வேண்டிய வ மறைபோதகர்கள் தயாரித்து அறிமுகப்படுத்திய பன இக்கஷ்டத்தை நீக்கின. இவை அச்சிடப்பட்டுப் சாற்களுக்குப் பொருள் அறியவும் ஒத்த சொற்களை தன.
3

Page 38
தமிழ் மொழியினுடைய சிறப்பினையும் தமிழர் பணி பாரம்பரியத்தின் பழமையினையும் உலகுக்குத் தெளிவ (Bishop Robert Caldwell 1814—1891) S-2b6 uJ. ab வேதாகம சங்கத்தை வந்தடைந்தார். 1877ல் நியமிக்கப்பட்டார். 1891ல் பழனிமலையிலே தேகவி திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் மொழியியல் முதலாய திராவிட மொழிகளை அறிமுகஞ் செய் இலக்கியப் பாரம்பரியத்தையுடைய தமிழ்மொழிச் பிறமொழிகளுடன் ஒப்பிட்டுக் காட்டினார். திராவிட ெ தற்போது நடைபெற்றுக் கொண்டுவரும் தமிழ் - யப் முன்வைத்தவர் யப்பானியப் பேராசியரான சுசுமு ஓே ஒப்பீட்டாய்வுக்கு முன்னோடியாகக் கால்டு மொழிகளிடையேயும் காணப்படும் ஒலி ஒற்றுமைய எடுத்தாண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
தமிழிலே இலக்கியமல்லாத பிற விடயங்களைய நீண்ட வாக்கியங்களாலமைந்த நூல்களை ஒை காரியமாகும். இதனால் சுருக்கமான முறையிலே உதவியது. அத்துடன் பிரதிகளின் தொகை கு வடிவம் இலகுவானது. அச்சுயந்திரப் பெருக்கம் செல்வாக்குப் பெற்றது. ஐரோப்பியரும் அவ காரணத்தினாலே எல்லாவற்றையுமே உரைநடைய மறைபோதகர்களே விஞ்ஞானம் முதலாய விட வெளியிட்டார்கள்.
தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை மே பண்பாட்டினை அத்தேசங்களுக்கு அறிமுகம் ெ மேலைத்தேய அதிகாரி திருக்குறளை ஆங்கில அவர்கள் திருவாசகத்தை மொழிபெயர்த்தார். தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டது போல ஐரோப்பிய இலக்கிய கவிதை, சிறுகதை, நாவல் போன்றனவன்றி, திரு இதிகாசக் கதைகளும் தமிழ் நாட்டுக்கு அறிமுக 20ஆம் நூற்றாண்டுத் தமிழிலக்கிய வளர்ச்சியிலே
தமிழிலே உரைநடை பண்டைக்காலந் தொட உரைநடையாலான இலக்கிய நூல்கள் முன்னர் அகப்படவில்லை. ஆனால் ஐரோப்பியர் வருகை தமிழிலே உரைநடையாலான இலக்கியங்கள் ( நாவலிலக்கியம், சிறுகதையிலக்கியம் என்று தனித் அவை யாவும் உரைநடை இலக்கியங்களே.
மேலைத்தேய ஆட்சி காரணமாகவும், கிறிஸ்த6 புதிய விளக்கம் பெறலாயின. வைதிக சமயங்களு கிறிஸ்தவர்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்ட வழங்கப்படுகின்றது. இதுபோலவே 'விசுவாசம்’, சில சொற்களைப் புதுப்பொருள் கொள்ளச் செய்
4. கிறிஸ்தவ தமிழ் இலக்கியத் தோற்றத்துக்க
தமிழகத்துக்கு வந்த கிறிஸ்தவ மறைபோத அவ்விலக்கியங்களுள் திருமறைநூற் போதனைகளு

பாட்டின் தொன்மையினையும், தமிழர் இலக்கியப் க எடுத்துக் கூறியவர் பிக்ஷப் ரொபர்ட் கால்டுவெல் ால்டுவெல் அவர்கள் 1841ல் தமிழ் நாட்டிலுள்ள
அவர் திருநெல்வேலி மாவட்டத்து ஆயராக யாகமடைந்தார். 1856ல் அவர் எழுதி வெளியிட்ட உலகுக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் துவைத்தது. திராவிட மொழிகளுள் மிக நீண்ட சொற்களையும் இலக்கணத்தையும் உலகிலுள்ள மாழியியல் ஆய்வுக்கு அவருடைய நூல் வழிகாட்டி. பானிய உறவு பற்றிய ஆய்வுக்கான கோட்பாட்டினை 50TIT (Susumu Ohno) s-946).J&b6T T6) Jf. 96) lib6ODLuj வல் அவர்கள் தன்னுடைய நூலிலே இரு பும் பொருள் ஒற்றுமையுமுடைய சில சொற்களை
ம் செய்யுளிலே எழுதும் மரபே நடைபெற்று வந்தது. லயில் எழுத்தாணியாலே எழுதுவது சிரமமான ) நூலொன்றை ஆக்குவதற்குச் செய்யுள் வடிவம் றைவாகையால், மனனஞ் செய்வதற்கும் செய்யுள் வாய்ந்த மேலை நாட்டிலே உரைநடை மிகுந்த ருடன் அச்சுயந்திரமும் தமிழ்நாட்டிற்கு வந்த பில் எழுதும் வழக்கம் பெருகலாயிற்று. கிறிஸ்தவ டயங்கள் பற்றித் தமிழிலே முதன்முதல் எழுதி
லைத்தேய மொழிகளுக்குப் பெயர்த்துத் தமிழ்ப் சய்து வைத்தனர். எல்லிஸ் (Elis) என்னும் த்துக்கு மொழிபெயர்த்தார். டாக்டர் ஜி.யு. போப் இலக்கியங்களும் மொழியும் மேலைத்தேயங்களுக்கு பமும் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கிலக் மறைநூற் (பைபிள்) கதைகளும், கிரேக்க லத்தீன் மாயின. இவ்வறிமுகத்தின் தாக்கத்தினை 19ஆம்
கண்டு கொள்ளலாம்.
க்கமே இருந்து வந்துள்ளது. ஆனால், தனியே இருந்ததற்கு நமக்குத் தற்போது ஆதாரம் எதுவும் bகுப் பின்னர் அச்சுயந்திரத்தின் உதவி காரணமாகத் தோற்றம் பெற்றன. நாவல், சிறுகதை போன்றன தனி இலக்கிய வகைகளுள் அடங்குவனவாயினும்,
மதப்பரம்பல் காரணமாகவும் சில தமிழ்ச் சொற்கள் டன் தொடர்புடைய "வேதக்காரர்’ என்னும் சொல் ட்டது. இன்றும் இச்சொல் இப்பொருளிலேயே "ஆண்டவன்’, ‘இரட்சகர்', "அஞ்ஞானிகள்’ போன்ற
560TU.
“ன பின்னணி
கர்கள் தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றனர். நக்கு இணையான சில கருத்துக்களை இனங்கண்டு

Page 39
கொண்டனர். இத்தகைய கருத்துக்களைத் துை இலகுவாக அவர்களாலே செய்ய முடிந்தது. தி அவற்றை இலக்கியங்கள் மூலமாகக்கூறுவது நல்: தமிழிலே கிறிஸ்தவமதப் பொருளையும் தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. அன்னைய போன்றவற்றை உதாரணங்களாகக் காட்டலாம்.
கல்வியினைத் தாராளமாக மக்களிடையே பரப் பரப்பலாம் என்பதை மறைபோதகர்கள் உணர்ந்து வந்து சேர்ந்தவுடன் திண்ணைய் பள்ளியிலே தன்னு பள்ளிக் கல்வியின் போதாமையை உணர்ந்து கிறி: பாடசாலையும் தேவாலயமும் ஒன்றாயமைய வேண்டு உழைத்தனர். அவரவருடைய தாய்மொழிக் கல்வி னுடைய போதனைகளைக் கூறினாலேயே மக்கள் ( உணர்ந்தனர். எனவே திருமறை நூலைத் தமிழி பாடசாலைகள் தொடங்க, அவற்றுக்கு வேண்டிய
அச்சுயந்திரத்தின் உதவியினால் பல வெளியீடு கிறிஸ்தவத் தமிழிலக்கியத்தை வளர்க்கவும் உத சக்தி மறுமலர்ச்சிக்கு வழிகாட்டியதை புரட்டஸ்தாந் பணியாற்றினர்.
5. ஆரம்பகாலத் தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியம்
ஆரம்பகாலத் தமிழ்க் கிறிஸ்தவ இலக்கிய நோக்கவேண்டும். முதல் பிரிவிலே உரோமன் க இலக்கிய முயற்சிகளும், இரண்டாவது பிரிவிலே புர இலக்கிய முயற்சிகளும் அடங்குகின்றன. முதலி6ே இலக்கிய முயற்சிகளை நோக்கலாம்.
புனித சவேரியார் 1542ஆம் ஆண்டு மே மாத அவர் வந்தவுடனேயே தமிழ் நாட்டு யேசு சடை மறைபோதகள்கள் தமிழை நன்றாகப் பேசவும் எழுத இலக்கியத்தின் ஆரம்ப கள்த்தாக்கள் அவர்க அச்சுக்கூடமே யேசு சபையினாலேயே தொடங்கப்பட் அடிப்படைக் காரணியாயிற்று.
சவேரியாரும் அவரைச் சார்ந்தவர்களும் போதை சிறந்த மொழிபெயர்ப்பை அவர்களாலே செய்யமு லத்தீன் மூலத்திலேயே தமிழில் கையாண்டனர். (Holy Spirit) போன்ற சொற்களை உதாரணங் தத்துவபோதக சுவாமிகளுடைய தமிழ்த்தொண்டு L2 Gbsì65 (Robert de Nobili) 6T6óTLu5Tbo. bus கற்ற நொபிலி வேதங்களையும் உபநிடதங்களையு தமிழ்த் தொண்டு ஆற்றியுள்ளார். அவர் பின் கண்ணாடி, இயேசுநாதர் சரித்திரம், கடவுள் நி காண்டம், ஆத்தும நிர்ணயம் புனர்ஜென்ம ஆட்சேப நித்திய வித்தியாசம், பிரபஞ்ச விரோத வித்த ஆறுமுகநாவலரைக் குறிப்பிடுவதே வழக்கம். ஆர எழுதிய காரணத்தினால் தத்துவ போதக சுவா!

ணயாகக் கொண்டு கிறிஸ்தவமத போதனைகளை மறை நூற் கதைகளை நேரடியாகக் கூறுவதிலும் ) பயனளிக்கும் எனக்கண்டு கொண்டனர். இதனால், நாட்டிலே தோன்றிய வடிவத்தையும் கொண்ட ழங்கல அந்தாதி, திருக்காவலூர்க் கலம்பகம்
புவதன் மூலமாக கிறிஸ்தவ மதத்தினையும் நன்கு கொண்டனர். சீகன்பால்கு ஐயர் தரங்கம்பாடியிலே டைய தமிழ்க் கல்வியை ஆரம்பித்தார். திண்ணைய் ஸ்தவ மறைபோதகர்கள் செயற்படத் தொடங்கினர். மெனப் புரட்டஸ்தாந்து மறைபோதகர்கள் உணர்ந்து யை வளர்த்து அத்தாய்மொழி மூலமாக கிறிஸ்துவி இலகுவிலே விளங்கிக் கொள்வர் என்பதை அவர்கள் லே பெயர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. நூல்களை ஆக்கும் முயற்சியும் தொடங்கியது.
கள் கிறிஸ்தவ போதனைகளை மேற்கொள்ளவும், வின. ஐரோப்பாவிலே வெளியீட்டுச் சாதனத்தின் து மறைபோதகர்கள் ஆரம்பத்திலிருந்தே உணர்ந்து
முயற்சிகளை இருபெரும் பிரிவுகளாகப் பிரித்தே த்தோலிக்க மறைபோதகர்களுடன் தொடர்புடைய ட்டஸ்தாந்து மறைபோதகர்களுடன் தொடர்புடைய ஸ் உரோமன் கத்தோலிக்க மறைபோதகர்களுடைய
ம் ஆறாம் திகதி கோவாவுக்கு வந்து சேர்ந்தார். |யும் உதயமாயிற்று. இச்சபையைச் சேர்ந்த பல வும் கற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் கிறிஸ்தவ ளேயெனினும் அமையும். இந்தியாவின் முதல் டது. இந்திய இலக்கிய வளர்ச்சிக்கு அச்சுக்கூடம்
னகளைத் தமிழிலே மொழிபெயர்க்க முயற்சித்தனர். டியாமற் போயிற்று. சில சொற்களை அவற்றின் கொன்பெசுஷியோ (Confession). இஸ்பிரிதுசாந்து களாகக் காட்டலாம். யேசு சபையைச் சேர்ந்த அளப்பரியது. இவருடைய இயற்பெயர் ரொபர்ட் ழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் ) கற்று 50 ஆண்டுகள் தமிழ் நாட்டிலே வாழ்ந்து ாவரும் நூல்களை எழுதியுள்ளார். தத்துவக் நணயம், சத்திய வேதலசஷணம், ஞானோபதேச b, நித்திய ஜீவன் சல்லாபம், ஞானதீபிகை அநித்திய நியாசம். தமிழ் உரைநடையின் தந்தையென )பகாலத்தில் பெருந்தொகையான வசன நூல்களை விகளையும் உரைநடையின் தந்தையெனக் கூறும்
5

Page 40
வழக்குண்டு. அவருடைய உரைநடையின் ட பின்வருவனவற்றைக் குறிப்பிடுவர்
கற்றவர்களுக்கென எழுதப்பட்டமையால் பேச்சு வழக்குச் சொற்றொடர்களின் பிரயே பெருந்தொகையான வடசொற்களைப் பிரே நீண்ட வாக்கியங்களைக் கொண்டமைதல் அக்காலச் சாசனத் தமிழ் நடையை நிகர் தர்க்க நடையாயமைதல்.
ஞானோபதேச காண்டம் என்னும் அவருடைய பகுதிகளிலே மேற்குறிப்பிட்ட நடைப்பண்புகளை இ
“நானாவிதங்களான மச்சவினங்கள் நான் கொன நதிகளுடைய மட்டோடு பரம்பியோடுகிற பிரவாகங்க வேடிக்கையோடே பொருந்தியிருக்கிற பலபல கர்த்தரானவர் தாமே யுண்டாக்கின அப்படிப்பட்ட சிப் ஸ்பரிசத்துக்கு மிருதுவானவைகளுமாய் கனிந்த கப்புக்கவர்களுள்ள விருகூரங்களுடைய சாலைக
“இப்படிப்பட்ட காரணகாரிய வகைதவிர விசாரிக்குமிடத்திற் காரணத்திலேயிருக்கிற சுபா காரியத்திலே இராமற் காரணத்திலேயிரு காரியத்திலேயிருக்கும்.”
தத்துவபோதக சுவாமிகளுக்குப் பின்னர் தமிழ் வீரமாமுனிவர் எனப்பெயர் பூண்ட கொன்ஸ்ரான்ரிய என்பவராகும். பெஸ்கி அடிகள் 1710ல் இந்திய இலக்கிய வரலாற்றில் இவருக்குச் சிறப்பான இ மேலைத்தேய நிர்வாக அதிகாரிகளும் தமிழ் மொ வழங்கியமை இவரது தலையாய தமிழ்த்தொண் லத்தீன் தமிழ் அகராதி, போர்த்துக்கேய-தமிழ் அ அவர்,
வேத விளக்கம், வேதியர் ஒழுக்கப் ஞானம் உணர்த்தல், திருச்சபைக் கதை, பரமார்த்த குரு கதை, லூத
என்னும் நூல்களை உரைநடையிலே எழுதின பரமார்த்த குரு கதை மூலம் அறிமுகஞ் செய்த
"அப்புறம் போகையில் வழுக்கு நி லீரமாகக் கொள்ளத் தளர்ந்த நன போகிற நொண்டிக்காற் குதிரை தி விழுந்ததாம். அந்தண்டையிலிரு குழியிற் குருவுந்தலை கீழுங்கா மேலுமாக விழுந்து கோவென்றல
பொதுமக்களுக்காக எழுதப்பட்ட இக்கதையிே விரவிவரப் பேச்சோசையுடனமைந்த ஒரு நடை

ண்புகளென வி. செல்வநாயகம் (1957 78-82)
பழைய உரைநடையின் சாயல்.
ாகம். யாகிப்பதால் மணிப்பிரவாள நடையை ஒத்தமைதல்.
).
த்ததாயிருத்தல்.
நூலிலிருந்து தரப்படும் பின்வரும் இரு உரைப் இலகுவிலே இனங்கண்டு கொள்ளலாம்.
லையினுமோடித் திரிந்து விளையாட, அப்படிப்பட்ட ளினாலே அந்த ஸ்தலமானது மிகவும் மதுரமானதாய விருகூyங்களாலே அலங்கரிக்கப்பட்டதுமாயிருந்து, வகார வனத்திலே கண்ணுக்குப் பிரியமானவைகளுமாய் பழங்களுடைய பாரத்தினாலே கவிழ்ந்திருக்கிறது
6.............
வேறொரு காரணகாரிய வகையுண்டு. அதை வமுஞ் சுபாவத்துக்கடுத்த எல்லா நன்மைகளுங் )க் கிற நன்மைகளுக்குள்ளே யாதா மொன்று
}த்தொண்டு செய்த உரோமன் கத்தோலிக்க குரு J6i (3LT66 GL16i5 (Constantius Joseph Beschi) யேசு சபையிலே சேர்ந்தார். தமிழ்க் கிறிஸ்தவ -மொன்றுண்டு. பிற கிறிஸ்தவ மறைபோதகள்களும், ழியைக் கற்பதற்குரிய கருவி நூல்களைத் தயாரித்து டாகும். 1791இல் எழுதிய தொன்னூல் விளக்கம், கராதி. சதுரகராதி ஆகியன இக்கருவி நூல்களாகும்.
), பேதக மறுத்தல் கணிதம், வாமன் ரினத்தியல்பு
ார். தமிழுக்கு ஒரு புதிய உரைநடை வகையினை TI.
லத்தி
டயாய்ப் வறி
ந்த
றி.”
ல பேச்சு வழக்குச் சொற்களுஞ் சொற்றொடர்களும் அமையப் பெறலாயிற்று. இத்தகைய நடைவகை
16

Page 41
தமிழில் முன்னொரு காலத்திலும் இருந்ததில்ை உரைநடையின் தந்தை” என வீரமாமுனிவர் அ6
தமிழ் உரைநடை நூல்கள் மாத்திரமன்றி, செய்ய தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். அவர், அன்னை தேவாரம், திருக்காவலூர்க் கலம்பகம், தேம்பாவ
பெஸ்கியினுடைய தமிழ்மொழி அறிவினையும், குறளினை லத்தீனுக்கு மொழிபெயர்த்தமையி போக்கினையும், உரைநடைப் பாங்கினையும் நவீன
16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளிலே தென்னிந்தி ஈழத்திலும் பல விளைவுகளை ஏற்படுத்தின. ஈ நூல் அர்ச். யாகப்பர் அம்மானை எனக்கூறுவர். அழைப்பர். இந்நூல் 1647இல் பேதுருப் புலவரா இயற்றப்பட்ட ஞானப்பள்ளு 1642இல் இயற்றப்பட அப்படியெனில் ஈழத்தின் முதல் கிறிஸ்தவ செய்யு: என்றே கொள்ளவேண்டும். ஆனால், பூலோசிங் திருச்செல்வர் காவியம் ஞானப்பள்ளுக்கு முன்ன குறிப்பிடப்பட்டுள்ளது.
பெஸ்கியினுடைய காலத்தைச் சேர்ந்தவரான கெ கோவாவைச் சேர்ந்தவர். ஈழத்திலே பல ஆண் காலத்திலே, அவர், தேவ அருள் வேத புராணம், வியாகுலப் பிரசங்கம், ஞான உணர்ச்சி, சுகிர்தத எழுதினார்.
தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியங்களுடன் தொடர்புை ஐயர் (Ziegenbag) முக்கியமாகக் குறிப்பிடப் தாபிக்கப்பட்டு நூறு வருடங்களுக்குப் பின்னரே ஆண்டு யூலை 9ஆம் திகதி அவர் தரங்க திண்ணைப்பள்ளிக்கூடம் ஒன்றிற் சேர்ந்து தமிழ் மொழியிலே ஓரளவு தேர்ச்சி பெற்றுப் பிரசங்கங்க பொதுமக்களைப் படிக்கும் படி வைப்பதே அவ இறையியல் சார்ந்த கருத்துக்களைத் தெளிவுறப் தேடலானார். கிறிஸ்தவ கீதங்களைத் தமிழிலே ஈடுபட்டவர் இவரேயாவர். 1713இல் பிரசுரமான கி 48 பாடல்கள் இடம்பெறலாயின. தரங்கம்பாடியிலே சீகன்பால்கு ஐயர் லத்தீன் மொழியிலே தமிழ் இ தமிழிலே மொழிபெயர்த்தும் தொண்டாற்றினார். பின்பற்றி நீண்ட வாக்கியங்களை எழுதும் முறை அக் ஐயர் அந்நடையினைப் பின்பற்றினார். அந்நடை கண்டித்துள்ளார். அவருடைய நடைக்குப் பின்வ
“இதற்கிடையிலே அவதானெ இந்தப் பிறைய பொதுவாகவும், பிரதானமாகத் தமிடபடுத்தவபபட் அதுகளுனக்குச் சீவியத்துக்கான சீவியததினொரு
புள்ளியிடாமலும் ஏகார ஓகாரங்களுக்குப் பதில சாசன எழுத்து நடையிலே காணப்பட்ட பண்புகள்

0. அதனைத் தொடக்கி வைத்தபடியால் “தமிழ் ழக்கப்பட்டார்.
ள் நூல்கள் பலவற்றினையும் இயற்றி வீரமாமுனிவர் அழுங்கல் அந்தாதி, அடைக்கல மாலை, கலிப்பா, னி ஆகிய செய்யுளிலக்கியங்களை இயற்றியுள்ளார்.
அவருடைய இலக்கண, அகராதிப் பணியினையும், னையும், அவருடைய தனித்துவமான செய்யுட்
தமிழியலாளர் எல்லோரும் போற்றுகின்றனர்.
யாவில் யேசுசபையினர் செய்த தமிழ்த்தொண்டு pத்திலே இயற்றப்பட்ட மிகப்பழைய கத்தோலிக்க இதனை சந்தியோகுமையோர் அம்மானை என்றும் ல இயற்றப்பட்டது. போர்த்துக்கேயர் காலத்திலே டிருக்கலாமென சுவாமி ஞானப்பிரகாசர் கருதுவர். இலக்கியமும் நாடக இலக்கியமும் ஞானப்பள்ளு கமுதலியார் ஆகிய அருளப்ப நாவலர் இயற்றிய g5TCB 6.55g)6) T6ó F.X.C. bLDT3 (T6).JT6b (1984)
T6ôld T6ù Q6)16ñ) UTgórÎuJTÎT (Fr. Jacome Gonsalvez) டுகளாக மதப்பணி புரிந்தவர். ஈழத்தில் வாழ்ந்த சத்திய வேதாகம சஞ்சேபம், சுவிசேஷ விரித்துரை, ர்ப்பணம் என்னும் தமிழ் கத்தோலிக்க நூல்களை
டய புரட்டஸ்தாந்து மறைபோதகள்களுள் சீகன்பால்கு பட வேண்டியவராவர். மதுரையிலே யேசு சபை சீகன்பால்கு ஐயர் வந்து சேர்ந்தார். 1706ஆம் ம்பாடியில் வந்திறங்கினார். வந்தவுடனேயே கற்கத் தொடங்கினார். எட்டு மாதங்களில் தமிழ் ள் ஆற்றலானார். கிறிஸ்தவ வேதாகம நூலைப் ருடைய முக்கிய நோக்கமாயிருந்தது. கிறிஸ்தவ புலப்படுத்தப் பொருத்தமான தமிழ்ப் பதங்களைத் மொழி பெயர்க்கும் முயற்சியில் முதன் முதலாக ஸ்தவ கீத நூலில் இவரால் மொழிபெயர்க்கப்பட்ட அச்சுயந்திரசாலையொன்றினை நிறுவிப் பணியாற்றிய |லக்கணத்தை எழுதியதுடன் திருமறை நூலைத் பேச்சு வழக்கிலிருந்த இலக்கண அமைதியைப் காலச்சாசன வழக்கிலே காணப்பட்டது. சீகன்பால்கு வழுக்கள் நிறைந்ததொன்று என வீரமாமுனிவர் ரும் பகுதி உதாரணமாகக் கொடுக்கப்படுகின்றது.
சங்களையும், தமது நித்திய சுவிசெஷத்தையும் - புதிய ஏற்பாட்டின இந்தப் பொத்தகங்களையும், வாசினையாகவும். 9
க எகர ஒகாரங்களையே எழுதுதலும் அக்காலச் ாகும்.
t

Page 42
î65 uiugólfuJ6ňo (Philipp Fzbricius) 6T6óT ஒன்றினை ஆக்கி வெளியிட்டார். 1744இல் அ{ வெளியாயிற்று. திருமறை நூலை மொழி பெயர் 1796இல் பழைய ஏற்பாடும் 1977இல் புதிய ஏற்ப
6. கிறிஸ்தவ மறைபோதக அச்சகங்களும் வெ:
1698ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் நாட்டிலே கழகங்களும் உருவாகத் தொடங்கின. துண்டும் வெளியிடுதலும் அவற்றின் மூலம் கிறிஸ்த நோக்கங்களாயிருந்தன. அவற்றின் வெளியீட்டு பிரசுரங்களும், 379 நூல்களும், 15 பருவ இதழ்களு 1985 : 35).
இருபதாம் நூற்றாண்டில் இவை இன்னும் வெளியீட்டுக் கழகங்களும் மூன்று விடயங்களைெ
1. திருமறைநூலை மொழிபெயர்த்து வெளியி 2. பிரமத கண்டனத்துக்கு வேண்டிய தகவற் 3. பாடப் புத்தகங்கள், பருவ இதழ்கள் முத
7. திருமறை நூல் மொழிபெயர்ப்பும் வெளியீடும்
இந்தியாவிலுள்ள 98 மொழிகளிலே திருமழை பெயர்ப்பு வரலாறு தமிழ் மொழியுடனேயே தொ விடயமே ஒரு நீண்ட வரலாற்றை உடையது. முயற்சி 1688இல் ஆரம்பமாகியது. டச்சு அரசு 565 (3LJT69 u6s) (Philip Baldaes) 6T66FU6) is ஏற்பாடு 1759இல் வெளியாகியது. ஆனால் அம்ே கூறப்பட்டது. 1711இல் சீகன் பால்கு ஐயர் புதிய பெயர்ப்பு 1714இல் தரங்கம்பாடியிலே வெளியிடப்பட் (Golden Version) 6T6Lift. flippi (Surdo6) 916) if ஒரு திருமறைநூல் மொழி பெயர்ப்பை வெளியிட்ட (Union Version) எனப்பட்டது. அத்தியட்சகள் தமிழ் வேதாகமத்தின் வரிலாறு என்னும் நூல் தி வரலாற்றினையுங் கூறிச் செல்கின்றது.
8. வீரமாமுனிவருக்குப் பின் தமிழ் இலக்கியம்
வீரமாமுனிவருக்குப் பின் பல தமிழ் நாட தொண்டாற்றியுள்ளனர். அவர்களுள் கவிதைத் கிருஷ்ணபிள்ளையினையும் விதந்து குறிப்பிடலா கவிஞராகத் தமிழறிஞர்களாலே கணிக்கப்ப கிருஷ்ணபிள்ளை வைணவராகப் பிறந்து முப்பது தழுவியவர். தமிழ் இலக்கியங்களை நன்கு ச ஈடுபாடுடையவர்.
கிறிஸ்தவ சமயச் சார்பான தமிழ்க் காவியம் புலவராகிய ஜோன் பன்யன் என்பவருடைய கை தழுவி இரட்சணிய யாத்திரிகம் என்னும் நூலை

|வர் (1742 - 1791) தமிழ் - ஆங்கில அகராதி பர் பாடித் தொகுத்த தமிழ்க் கிறிஸ்தவ கீத நூல் பதில் அவரும் ஈடுபடலானார். இதன் பலனாக டும் தமிழிலே வெளிவரலாயின.
ரியீட்டுக் கழகங்களும்
பெருந்தொகையான அச்சகங்களும் வெளியீட்டுக் பிரசுரங்கள், நூல்கள், இதழ்கள் ஆகியனவற்றை வ மதத்தைப் பரப்பலும் இவற்றின் பிரதான முயற்சி பற்றிய மதிப்பீட்டின்படி 1870ல் 826 துண்டுப் ம் வெளியிடப்பட்டுள்ளன (தகவல் D. Rajarigam,
பெருமடங்காயின. மறைபோதக அச்சகங்களும் பாட்டி முக்கிய கவனஞ் செலுத்தின. அவையாவன:
டுதல்.
தேட்டத்தினைப் பெருக்குதல். லியனவற்றை வெளியிடல்.
ற நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இம்மொழி டங்கியது. தமிழில் திருமறையை மொழிபெயர்த்த
திருமறையை தமிழிலே மொழிபெயர்க்கும் முதல் சாங்கம் திருமறையை மொழிபெயர்க்கும் பணியினை ரிடம் ஒப்படைத்தது. அவர் மொழிபெயர்த்த புதிய மொழிபெயர்ப்புப் பெருமளவிலே பொருத்தமற்றதெனக் ஏற்பாட்டினை மொழிபெயர்க்கலானார். அம்மொழி டது. இம்மொழி பெயர்ப்பினை “பொன் மொழிபெயர்ப்பு” கள் ஆறுமுக நாவலருடைய துணையுடன் 1850இல் டார். இம்மொழி பெயர்ப்பு “ஐக்கிய மொழிபெயர்ப்பு’ சபாபதி குலேந்திரன் அவர்கள் எழுதிய கிறிஸ்தவ நமறைநூல் மொழிபெயர்ப்புத் தொடர்பான சுவையான
ட்டுக் கிறிஸ்தவர்கள் இலக்கிய வளர்ச்சிக்குத் துறையிலே மாயூரம் வேதநாயகம்பிள்ளையினையும் D. இவ்விருவருள்ளும் கிருஷ்ணபிள்ளையே சிறந்த நிகிறார். பாளையங் கோட்டையைச் சோர்ந்த வருடங்களுக்குப் பின்னர் கிறிஸ்தவ சமயத்தைத் ற்ற அவர் கம்பனுடைய இராமாயணத்திலே நல்ல
ஒன்றினை இயற்றுவதிலே ஈடுபட்டார். ஆங்கிலப் 5 UTLSO)6)5 (John Bunyan's Pilgrims Progress) எழுதினார். பெருங்காப்பிய முறையிலே ஏறக்குறைய
18

Page 43
நாலாயிரம் செய்யுட்களைக் கொண்ட இந்நூல் கிறிஸ்தவத் தமிழ்ப் பேரிலக்கியமாகும். கம்பனுை இயற்றியுள்ளார். 1894ல் வெளியிடப்பட்ட இந்நூ செய்யுள் நடை பெரும்பாலும் கம்பராமாயணச் செய் இயன்ற மாத்திரம், அமைக்கப்பட்டது.” என்கின்
“உலகம் யாவும் புரந்தருளுன்ன அலகில் ஜோதி யருட்கட லாரண திலகு மெய்த்திரியேகர் பதத்துை குலவி யென்னெஞ் சிடங்குடி கெ
என அமைகின்றது. கம்பனுடைய “உலகம் யா சேக்கிழார் பெருமானுடைய “உலகெலா முணர்ந் மேற்படி பாடல் எமக்கு நினைவுறுத்துகின்றது. க அமைந்ததனாலே இவரைக் “கிறிஸ்தவக் கம்பன்
சைவ நாயன்மார்கள் பாடிய தேவாரம் வைண ஆகியனவற்றைப் பின்பற்றிக் கிறிஸ்தவ பக்திப் பா இயற்றிய இரட்சணிய மனோகரம் என்னும் நூல் பாடலைப் படிப்பவர்கள் அது அய்பருடைய திரு
“அருள்பழுத்த திருமுக மண்டல அளிநிறைந்த கமல லோ தெருள்பழுத்த ஜீவமொழி கனிவ ஜென்மவிடாய் தணித்தரு மருள்பழுத்த மனத்தேனைத் தெ வான்கதிக்கு வழிதிறந்த இருள்பழுத்த நரகடைத்த எம்பிர என்றுகொலோ கண்குளி
தமிழ் நாட்டுக் கிறிஸ்தவரான மாயூரம் வேதநாய அவரைத் தமிழ் நாவல் இலக்கியத் துறையுடே வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் எழுதப்பட்ட புதினம் என அறிஞர் கூறுவர். மேன் அறிவுபூட்டற் பண்பும் சுவைபயக்கும் பண்பும் சேர்ந்த முதலியார் சரித்திரத்தை வேதநாயகம்பிள்ளை எ ஈழநாட்டைச் சேர்ந்த தமிழ்க் கிறிஸ்தவராகிய ஆர் வேண்டியவர். இவர் எழுதிய நன்னெறிக் கதா : வரலாற்றிலே சிறப்பான இடத்தைப் பெறுகின்ற இலக்கியத்தின் ஆரம்ப நிலையை இந்நூலிலே 1981:85)
9. பின்னுரை
கிறிஸ்தவ தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி இ. தமிழ் இலக்கிய வளர்ச்சி என்று தனியான வி அறிஞர்கள் கட்டுரைகளும் நூல்களும் எழு அவற்றையெல்லாம் எடுத்தாள முடியாது. மாணவர்களுக்காக ஒரு துணைநூற்பட்டியல் இ

வீரமாமுனிவரின் தேம்பாவணிக்குப் பின்னர் எழுந்த டைய செய்யுட் போக்கினைப் பின்பற்றி காவியத்தை லுக்கு முகவுரை எழுதிய ஆசிரியர்: “இந்நூலின் யுள் நடையையும், அதன் போக்கையும் அனுசரித்தே றார். ஆதிபருவத்தின் முதல் பாடல்.
த
)6OOT ாண்டவே”
வையும் தாமுளவாக்கலும்” என்னுஞ் செய்யுளையும் தோதற்கரியவன்” என்னுங் காப்புச் செய்யுளையும் ம்பனுடைய நடையும் தொனியும் கைவந்த புலவராக
’ என அழைக்கலாயினர்.
வ ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்வியபிரபந்தம் சுரங்களையும் கிருஸ்ணபிள்ளை இயற்றினார். இவர் மிலே இப்பாடல்கள் அமைந்துள்ளன. பின்வரும் த்தாண்டக்த்தைப் பின்பற்றியமைவதை உணர்வர்.
த்தினானை ாசனத் தெம்மானை
IT UT606 நள் சீர்பாதத்தானை ருட்டினானை வலத்தினானை
TITഞങ്ങI ரக் காணு நாளே”
கம்பிள்ளை சில கவிதை நூல்களை எழுதியபோதிலும் னேயே சிறப்பாகத் தொடர்புறுத்தி-நோக்கவேண்டும். சரித்திரம் என்னும் நாவல் தமிழிலே முதன் முதலாக )லத்தேய நாவல் இலக்கிய வடிவத்தினைத் தழுவி நனவாகத் தமிழ்க்காவிய மரபினைப் பின்பற்றிப் பிரதாப ழுதினார். தமிழ் உரைநடை இலக்கியம் தொடர்பாக னல்ட் சதாசிவம் பிள்ளையும் சிறப்பாகக் குறிப்பிடப்பட Fங்கிரகம் (1869) நவீன தமிழ் உரைநடை இலக்கிய து எனக்கூறும் க. கைலாசபதி, தமிழ்ச் சிறுகதை காணமுடியும் எனக்குறிப்பிடுவர் (K. Kailasapathy
ன்னும் விபரமாக எழுதமுடியும். ஈழத்துக் கிறிஸ்தவ 'வான ஆய்வு மேற்கொள்ளவும் வாய்ப்புண்டு. பல தியுள்ளனர். மிகச்சுருக்கமான இப்பிரசுரத்திலே விரிவான தகவல்களை அறிய ஆவலுடைய றுதியிலே கொடுக்கப்பட்டுள்ளது.
19

Page 44
துணைநூற் பட்டியல்
குலேந்திரன், சபாபதி, கிறிஸ்தவ தமிழ் வேதா பெங்களுர், 1967.
சண்முகதாஸ், அ. “அச்சு இயந்திரப் புரட்சி” யாழ்ப்பாண வளாகம், இலங்கைப் பல்கலைக்கழ
சிவத்தம்பி, கா., “ஈழத்திற் கத்தோலிக்க தமிழ சிந்தனையும் பணியும், யாழ்ப்பாணம், 1981, பக்.
சுய்பிரமணிய ஐயர், ஏ, வி, தற்காலத் தமிழ் இலக் என்னும் பகுதி, பக். 69 - 73.
செல்வநாயகம், வி, தமிழ் உரைநடை வரலாறு,
சேதுப்பிள்ளை, ரா. பி. கிறிஸ்தவத் தமிழ்த் தொ
நடராசா, வித்துவான் FX.C., “திருச்செல்வர் கா 1984, மட்டக்களப்பு.
வணக்கம், பதிப்பாசிரியர் சங், ச. இராசமாணிக்க
வித்தியானந்தன், சு, “கிறிஸ்தவரும் ஈழத்திலே த சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை. 1
தமிழும், கழக வெளியீடு, சென்னை 1936.
Clayton, A.C. Report on Protestant Tamil Ch Devadoss., David., Life of Poet H. A. Krishna
Kailasapathy, K., “Arnold Sathasivampillai an cellany, Centenary Publication, Jaffna 1981, pp
Peiris, Rt. Rev. Edmund.. “Tamil Catholic Liter II: 3 & 4, 1953.
Poologasingham, P., "The Contributions of Cey teenth Century,' Proceedings of the Fourth Studies, Jaffna, 1980, pp 293 — 316.
Rajamanickam, S., The First Oriental Schola St. Xavier's College, Thirunelveli, 1972.
Rajaligam, D,. The History of Tamil Christial Bangalore 1958.
Srinivasan, Thomas, “Beschi, the Tamil Scholal
Tamil Christian Literature Conference, Rep
` ሥ" كه .

மத்தின் வரலாறு, இந்திய வேதாகமச் சங்கம்,
Friend - 2இ கத்தோலிக்க மாணவர் மன்றம், ம், 1976, பக். 10-13.
லக்கியப் பாரம்பரியம்” சுவாமி ஞானப்பிரகாசர் 1 - 25.
கியம், ஜூபிடர்பிரஸ், சென்னை, “கிருஷ்ணபிள்ளை’
சாரதா விலாஸ் பிரஸ், கும்பகோணம், 1957.
ண்டர், சென்னை, 1946.
வியம்’, தொண்டன், தை, மாசி, பங்குனி, வைகாசி,
ம், தமிழ் இலக்கியக் கழகம், தூத்துக்குடி, 1963.
மிழ் வளர்ச்சியும்”, இளங்கதிர், மலர் 15, தமிழ்ச் 962-63. வேங்கடசாமி, மயிலை சீனி, கிறிஸ்தவமும்
ristian Literature. Madras, 1917. billai Madras, 1952.
l the Tamil Renaissance", Jaffna College Mis
81 - 87.
ature, in Ceylon. “Tamil Culture, Vol
onese to the Development of Tamil in the NineInternational Conference/Seminar in Tamil
, De Nobili Research Institute,
Literature, The Tamilanad Christian Council,
and Poet', Tamil Culture, Vol III: 3 & 4, 1954.
rt and Findings, Pasumalai, 1956.
).

Page 45
Thani Nayagam, Fr X.S Tamil Manuscripts ir 3&4,1954,
Vithiananthan, S, "Pioneer work in Tamil of C. ternational Conference/Seminar in Tamil S
பொருள் மி. கல்வியறிவு உடைய இரகசியத்தை அற வாழ்க்கை செம்ை வருவிக்கு மென்பது உதாரணமாகப் பெரும் ஒருவர் பல துறைகளி தம் மனைவியே சத்தியற்றவரென்று விடியல் முதல் மா6 மனைவியோடு சீறிச்சு யின் அவருக்கு மன உண்டா காது. கூலிப்பிழைப்புச்செய்து சந்தோஷமாக வ செம்மை இச்செல்வந் பன்மடங்கதிகமானதே உண்டு. அகமகிழ்வு உ செல்லம் படைத்தி ஒத்துவாழும் மார்க் அருள் முதலிய ந பெறாதாராய் பேராை தீக்குணங்கள் பற்றிய சுகமிழந்து வருந்துகி
N

European Libraries', Tamil Culture, Vol. III:
eylon Christians", Proceedings of the First In udies, Kuala Lumpur 1966.
கப் படைத் தாரேனும் ாரேனும் வாழ்க்கையின் யாதிருப்பரேல் அவர் மயற்றுத் துன்பத்தை l வெளிப் படை. பொருள்_படைத்த சீமான் ரிலும் வல்லவராயிருந்தும் பாடு ஒத் துவாழும் வைத்துக் கொள்வோம். லெப் பொழுது வரையும் சினந்து கொண்டிருப்பாரா ஆறுதல் உண்டாகுமோ? அண்டை வீட்டிற் து கொண்டு மனைவியோடு ாழும் வறியவனுடைய தருடைய செம்மையினும் த. அவனுக்கு ஆறுதல் உண்டு. வேறு சிலர் பெருஞ் ருந்தும் சுற்றத்தாரோடு கத்தையறியாமல் ஈகை, ற்குணங்கள் அடையப் )ச, பொறாமை என்னும் லைப்ப மனஅறுதலற்றுச் றார்கள்.
الص=

Page 46
விபுலா
1924 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் திகதி ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி இவ்வு: ஆண்டுகள் கடந்து விட்டன. யாழ்ப்பாணப் பல்லை நினைந்து இவ்விழாவினை ஒழுங்கு செய்துள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் செய்த பணியினை இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
1968 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமி நாட்டு தமிழறிஞரும் ஆராய்ச்சியாளருமான கமில்
“இலங்கைப் பல்கலைக்கழகத்திலு
கழகத்திலும்தான் அறிவியல் ரீதியா ஆய்வுகள் நடைபெறுகின்ற” என்று
அறிஞள் கமில்சுவலபில்லின் கூற்றுக்குரிய ஊர் இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கமாகின்றது.
இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரி 1922 அ பிரான்ஸிஸ் கிங்ஸ்பெரி (அழகுசுந்தரதேசிகர்) த இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் முத6 என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற பதிப்பாசிரி புதல்வராகிய கிங்ஸ்பெரி ஆங்கிலத்திலும் தமிழிலு போதனாசிரியராகத் திகழ்ந்த கிங்ஸ்பெரி நல்ல பல பல தனிப்பாடல்களைப் பாடிய கிங்ஸ்பெரியின் ( கதை, பாண்டவர் கதை முதலியன குறிப்பிட அக்காலத்திலே, பாடசாலைகளில் பாடநூல்களாக பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் முயற்சியால் பற்றிய விடயங்கள் பலவுள.
இலங்கைப் பல்கலைக்கழகம் 1942 ஏப்பி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்த்துறைப் பேராசிரியராகச் சுவாமி விபுல அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் த விபுலானந்தரையே சர்ரும்.
மரபுவழித் தமிழ்க் கல்வியை வரன் முறையாகப் கல்வியையும் நன்கு கற்றவர். மதுரைத் தமிழ்ப் பண் இவரின் ஆளுமை விருத்திக்கு இவர் பெற்ற க மனப்பான்மையும் சிறியன சிந்தியாத செய்கையுடனு திகழ்ந்தார் எனலாம். அண்ணாமலைப் பல்கள் “கஞ்சாக்கவிஞன்” எனக் கூறிக் கவனிக்கப்படா சேர்த்துக் கொண்டவர். பாரதியின் கவித்திற6

னந்தர் முதல் வித்தியானந்தன் வரை
கலாநிதி எஸ். சிவலிங்கராஜா சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பிறந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் 1989 ஆம் Dக வாழ்வை நீத்தார். அவள் மறைந்து நான்கு க்கழகத் தமிழ்த்துறையும், தமிழ் மன்றமும் அவரை ாது. தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கு ஈழத்துப் இளைய தலைமுறையினருக்குச் சுட்டிக் காட்டுவதே
ழாராய்ச்சி மகாநாட்டிலே செக்கோசெலாவாக்கிய ) சுவலபில் :
ம் கேரளப்பல்கலைக் ன தமிழிலக்கிய குறிப்பிட்டார்.
]றுக்கால்களையும் ஓட்டங்களையும் குறிப்பிடுவதே
ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1926 ஆம் ஆண்டு மிழ் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இவரே ல் முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் விரிவுரையாளர் யராக விளங்கிய சி. வை. தாமோதரம்பிள்ளையின் லும் நல்ல புதுமையாளனாகத் திகழ்ந்தவர். சிறந்த நாடகங்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். குறிப்பிடத்தக்க நூல்களாக சந்திரகாசம், இராமன் க்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை ல் பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வெளியாகிய தேசிகர் நினைவுமலரிலே இவரைப்
ல் 28 இல் நிறுவப்பட்டு யூலை மாதத்திலே 943 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத் ானந்தர் நியமிக்கப்பட்டார். 1941 ஆம் ஆண்டு ழ்ப் பேராசிரியராக நியமிக்கப்படட பெருமை சுவாமி
பயின்ற விபுலானந்தள் நிறுவன வழி வந்த ஆங்கிலக் உதராகவும், விஞ்ஞானப் பட்டதாாரியாகவும் விளங்கிய ஸ்விப் பின்னணியே காரணமாயிற்று எனலாம். பரந்த ம் திகழ்ந்த இவர் பலதுறைகளில் முன்னோடியாகத் )லக்கழகத்திலே இவள் பணியாற்றிய காலத்தில் Sருந்த பாரதியின் பாடல்களைப் பாடத்திட்டத்திலே னையும் சிந்தனையோட்டத்தையும் தமிழகத்திற்கு
22

Page 47
அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். பலதுறைக எனலாம்.
மிகச் சிறந்த ஆய்வாளனாக இவர் விளங்கின
தமிழிலும் எழுதினார். பழந்தமிழ் மக்களிடையே 6
எழுதிய யாழ் நூல் இன்றும் காலத்தால் அழியா விளங்குகின்றது.
ஆய்வு நெறிமுறைகளின் அடிப்படை பிறழாது அ ஆக்க இலக்கிய கர்த்தாவாகவும் திகழ்ந்தார். சிற யாப்பறிபுலவனாகத் திகழ்ந்த இவரின் கவிதைகள் L என இவரின் கவிதைகள் பல தொகுக்கப்பட்டு தனிப்பாடல்கள், தோத்திரங்கள், நான்மணிமாலை கவிதைகளை இவர் எழுதியுள்ளார். கவியரங்குகளி தமக்குள்ள ஈடுபட்டினை வெளிப்படுத்தினார். அச் பற்றிய செய்திகள் ஈழகேசரிப் பத்திரிகையிலே பதி
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மெ நோக்கத்தை நிறைவேற்றும் வகையில்ே இவர் பல அறிஞர்களின் கருத்துக்களைச் சிந்தாமல் சிதற இவர் மொழிபெயர்த்த கவிதைகள் சாகாவரம் பெற் தமிழ்மொழிக்குக் கொண்டு வந்த அழகை வினவி மொழிபெயர்ப்பு ஆற்றலைக் கண்டு கொள்ள மதர்
ஒய்யியல் இலக்கியத்துறையிலேயும் அதிக ஆர்வு உடையவராகவும் திகழ்ந்தார். மொழி பற்றிச் சுவாமி பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்கு இவர் எழுதிய மக்களிடையே வழங்கும் பேச்சு மொழியை இலக்கிய குறிப்பிடத்தக்கது. ‘சாமிக்கு ஊரு பாலைக்காடா' சிந்தனைகளைக் கண்டு கொள்ளலாம்.
சுவாமிகள் சிறந்த விரிவுரையாளராகவும் விளங்கி க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு. வித்தியானந்த
அழகாகவும், ஆழமாகவும் பேசக்கூடிய நல்ல சிறப்புரைகள், தலைமையுரை என இவர் பேசிய வெளியாகியுள்ளன.
அறிவுலகச் செயற்பாடுகளோடு சமய, சமூகப் பணி சமூக வேறுபாடுகளைக் கடந்து மானுடம் தழு விபுலானந்தரின் ஊற்றுக்களும் ஓட்டங்களுமே வளர்ச்சிக்கும் அதன் செல்நெறிக்கும் காரணமாயி
விபுலானந்தரின் பின் அவரது மாணவனான க. பதவியேற்றார். 1904 ஆம் ஆண்டு பருத்தித்துை இவர் பிறந்தார். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் வரன் முறையாகத் தமிழையும், வடமொழியையும் ஹாட்லிக் கல்லூரியிலும், வேலாயுதம் ஆங்கில

ளிலும் இவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார்
ார். பல ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் பழங்கிய யாழ் வகைகளை ஆய்வு செய்து இவர் த, அழிக்கமுடியாத மிகச் சிறந்த ஆய்வு நூலாக
ஆய்வு முயற்சிகளிலீடுபட்ட சுவாமிகள் மிகச் சிறந்த பாகக் கவித்துறையிலே ஆர்வத்துடன் ஈடுபட்டார். Sகவும் சிறப்புடையவை. விபுலானந்தக் கவிமலர்கள் ள்ளன. இன்னும் தொகுக்கப்படாதவையும் உள. , மும்மணிக்கோவை முதலான பல அருமையான ல் பங்கேற்றும், தலைமை தாங்கியும் கவித்துறையில் காலத்திலே இவர் பங்கு கொண்ட கவியரங்குகள் வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ாழியில் பெயர்த்தல் வேண்டும். என்ற பாரதியின் மொழிபெயர்ப்புக்களையும் செய்துள்ளார். மேலைப்புல ாமல் அழகிய தமிழிலே யாப்பு நெறிக்கு உட்பட ]றவை. குறிப்பாக, சேக்ஸ்பியரின் யூலியசீசரை இவர் பாத விமர்சகள்களே இல்லையெனலாம். இவரின் வக சூளாமணியொன்றே போதுமானது.
பத்துடன் ஈடுபட்ட சுவாமிகள், மொழியியல் சிந்தனை கள் கொண்டிருந்த கருத்தினைக் கண்டு கொள்ளப் கடிதங்கள் உதவுகின்றன. அக்கடிதங்களிலே தமிழ் ப ஆவணப்படுத்தும்படி அவர் கேட்டுக் கொண்டமை முதலான கட்டுரைகளிலும் இவரது மொழி பற்றிய
ணார் என்பதை இவரது மாணாக்கர்களான பேராசிரியர் தன் முதலியோர் குறிப்பிட்டுள்ளனர்.
மேடைப் பேச்சாளராகவும் இவர் விளங்கியுள்ளார். பேச்சின் சாரம்சங்கள் அக்காலப் பத்திரிகைகளிலே
Eகளிலும் சுவாமிகள் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். விய மாமனிதனாகத் திகழ்ந்த பேராசிரியர் சுவாமி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ற்று எனலாம்.
கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ்ப் பேராசிரியராகப் றயைச் சேர்ந்த தும்பளை என்னும் கிராமத்திலே மாணவரான முத்துக் குமாரசுவாமிக் குருக்களிடம் கற்றவர். ஆங்கிலக் கல்வியை பருத்தித்துறை வித்தியாசாலையிலும் பெற்றவர்.
23

Page 48
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், பாளி முதலான இவர் இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டத வித்துவானாகவும் இலண்டன் பல்கலைக்கழகக்
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் ஆளுை பரம்பரையிடம் சுவறியதைப் பின்னர் குறிப்பிடுவோ களங்களாக, மொழி, கலை, இலக்கியம், சாசன முதலிய துறைகள் அமைந்தன.
“முதன் முதலாக இலங்கைப் பல்கை இலக்கியத் திறனாய்வு அறிமுகப்படு குறிப்பிடத்தக்கது. தென் இந்தியப் ப இதன்பின்னர்தான் இலக்கியத் திறன தொடங்கின. இத்தகைய வளர்ச்சிக் க. கணபதிப்பிள்ளை ஆற்றிய தொன்
என்று பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் மகள்
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைய விரிவுரையாளர்களாக நியமித்து வரன் முறையான பெருமை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளைக்கே உ
ஈழத்து எழுத்தாளர்களின் மரபுவழி இல பாடவிதானத்துள்ளே சேர்த்து, ஈழத்து இலக்கிய 6 என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆளுமைமிக்க ஆய்வாளனாகத் திகழ்ந்ததோ இவர் திகழ்ந்தார். “ஈழத்துக் குழு இறையனார்’ பல கவிதைகள் எழுதியுள்ளார். அவற்றுட் சி “காதலியாற்றுப்படை’ முதலானவை பேராசிரியர்
கவிதைத் துறையோடு பல நாடகங்களையும் துறைக்குப் புத்தூக்கமும் புதிய வேகமும் கொடு துணிந்து கூறலாம். இவரது நானாடகம், இருநா காலத்திலே பரபரப்பாகப் பேசப்பட்டமையும் குறிப்
இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்ச் ச அச்சங்கத்தின் வெளியீடான இளங்கதிரின் வருகை வந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையிலே ஊற்றெடு புலமை மரபாக ஓடிக் கொண்டிருக்கின்றது எனலி
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையைத் தொடர்ந்து பதவியேற்றார்.
1907 ஆம் ஆண்டு ஜனவரியிலே பிறந்த பேராசிரி விரிவுரையாளராகப் பதவியேற்றார். சுவாமி விபுலா உடனிருந்து பணியாற்றியவர்.

மொழிகளிலே நல்ல புலமையுடையவராக விளங்கிய ாரியாகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கலாநிதியாகவும் விளங்கினார்.
மகளில் ஒன்றோ பலவோ அவரது மாணாக்கள் ம். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் ஆய்வுக் ம், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், விமர்சனம்
லைக்கழகத்திலேயே }த்தப்பட்டது என்பது ல்கலைக்கழகங்கள் ாய்வைக் கற்பிக்கத் குத் தமிழ்ப் பேராசிரியர் ண்டு அளப்பரியது”
ன் செ. கனகநாயகம் குறிப்பிடுவர்.
பிலே பண்டிதர்கள், வித்துவான்களைப் பகுதிநேர தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குத் துணையாக இருந்த ரியது.
க்கியங்களையும் ஆக்க இலக்கியங்களையும் பளர்ச்சிக்கும் உதவியவர் பேராசியர் கணபதிப்பிள்ளை
டு மிகச் சிறந்த ஆக்க இலக்கிய கள்த்தாவாகவும் என்ற புனைப் பெயரில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் லவே நூலுருப் பெற்றுள்ளன. “தூதும் மலரே” ன் கவிதா ஆளுமையைக் காட்டி நிற்பவை.
நாவல்களையும் இவர் எழுதியுள்ளார். தமிழ்நாடகத் த்த முன்னவர் பேராசியர் கணபதிப்பிள்ளை என்று டகம், சங்கிலியன், துரோகிகள் முதலானவை இவர் பிடத்தக்கது.
ங்கம் நிறுவுவதற்கு உந்து சக்தியாக இருந்ததோடு க்கும் காரணமாக இருந்தவன். இன்றுவரை இளங்கதிர்
நித்த புலமைமரபே இன்றுவரை ஈழத்துத் தமிழியற் )Tb.
பேராசிரியர் வி. செல்வநாயகம் தமிழ்ப் பேராசிரியராகப்
யர் செல்வநாயகம் 1942 இல் பல்கலைக்கழகத்திலே னந்தர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோருடன்

Page 49
இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வித்துவசி இலக்கணங்களை ஐயந்திரிபறக் கற்றவர். மரபுவழி அமையப் பெற்ற இவர் நவீன சிந்தனை கொண்ட இவரது மாணவர்கள் கூறுவர்.
சிறந்த ஆய்வாளனாகத் திகழ்ந்த பேராசிரியர் தனிநூலாக வெளிவரவில்லையென்பதும் குறிப்பிடத்
சேர்த்த நூல்களாக இவரது தமிழ் இலக்கிய குறிப்பிடலாம். இவரது தமிழ் இலக்கிய வரலாற்று வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் பின்பற் ஆய்வாளர்களும் இவரைப் பின்பற்றியமை விதந்து
இவரது தமிழ் உரைநடைவரலாறும் மிகச் சிற தோற்றம் வளர்ச்சி, போக்கு முதலானவற்றை வரன் சிறந்த ஆய்வாக இந்நூல் அமைந்துள்ளமை குறி
பேராசிரியர் வி. செல்வநாயகம் பற்றிப் பேராசிரி
“பிற்காலத்தில் இலக்கியத் திறனாய் சிறப்புற்ற பேராசிரியர்கள் க. கைலா போன்றவர்களுக்கும் வேறு பல பெ மாணவர்களுக்கும் கற்பித்தும் அது சிந்திக்காத காலத்திலே சிந்தித்தும் பேராசிரியர் வி. செல்வநாயகம்’
பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் ஆளுமை பி பகுதி தெளிவுபடுத்துகின்றது.
பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் பின்னர் தமிழ் இவர் 1924 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆந் பல்கலைக்கழகத்திலே கலைமாணி, முதுகலை பல்கலைக்கழகத்திலே கலாநிதிப் பட்டம் பெற்றவ
விபுலானந்தர், க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநா விளங்கிய வித்தியானந்தன் பன்முக ஆளுமை மிக் இலக்கணங்களில் ஆழமான புலமைமிக்க இவர் நின்று உழைத்தார். சிறந்த விரிவுரையாளராகத் தி மாத்திரமின்றி வாழ்வுக்கும் வழிகாட்டியாக அமைந் ஊக்கப்படுத்த வேண்டிய இடங்களிலே ஊக்கப்படு
தமிழ் இலக்கிய வரலாறு, ஈழத்து இலக்கிய போக்கும், இலக்கணச் சிந்தனைகள், நாட்டார் வழ ஆய்வேடுகளிலும், சஞ்சிகைகளிலும், பத்திரிகைக கட்டுரைகள் எனும் பெயரில் இவரது கட்டுரைகள் போது சில கட்டுரைகளைத் தொகுத்து வித்திய குறிப்பிடத்தக்கது.
இவரது தமிழர் சால்பு என்னும் ஆய்வு நூல் பழ முதன் முயற்சிகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்

இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே ராமணி கணேசையரிடம் தொல்காப்பியம் முதலான 5 கல்வியும், நிறுவன வழிவரும் கல்வியும் ஒருங்கே சிறந்த தமிழ் விரிவுரையாளராகத் திகழ்ந்தார் என்று
செல்வநாயகத்தின் ஆய்வுக்கட்டுரைகள் இன்னும் தக்கது. பேராசிரியர் செல்வநாயகத்திற்குப் பெருமை வரலாற்றையும், தமிழ் உரைநடை வரலாற்றையும் காலப்பகுப்பு முறைமையையே பின்வந்த இலக்கிய னர் எனலாம். தமிழகத்து இலக்கிய வரலாற்று
குறிப்பிட வேண்டியது.
ந்தவோர் ஆய்வு நூலாகும். தமிழ் உரைநடையின் முறையாகவும் தர்க்கரீதியாகவும் எடுத்துக் காட்டும் ப்பிடத்தக்கது.
பர் அ. சண்முகதாஸ் பின்வருமாறு குறிப்பிடுவர்.
வாளர்கள் எனச்
சபதி, கா. சிவத்தம்பி
ருந்தொகையான
பற்றி எவரும்
ஆய்வு மேற்கொண்டவர்
ன்வந்த தலைமுறையிடம் தவறியதை மேற்காட்டிய
LI (3LJIJIT ċffu u JITċb ċji. வித்தியானந்தன் பதவியேற்றார். திகதி தெல்லிப்பளையிலே பிறந்தவர். இலங்கைப் மாணிப் பட்டங்களைப் பெற்ற இவர் இலண்டன் ifT.
யகம் முதலான சிறந்த பேராசியரிகளின் மாணவனாக 5 பேராசிரியராக விளங்கினார். பழந்தமிழ் இலக்கிய வீன இலக்கியங்களின் வளர்ச்சிக்கும் பின்னணியாக கழ்ந்த இவர் பலருக்கு ஆய்வுக்கு வழிகாட்டியாக தார். கண்டிக்க வேண்டிய இடத்திலே கண்டித்தும், த்தியும் மாணாக்கரின் நன்மதிப்பைப் பெற்றவர்.
வரலாறு, பழந்தமிழ் இலக்கியங்களின் நோக்கும் க்காற்றியல் முதலான துறைகளிலே அவ்வப்போது ரிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழியற் சில தொகுக்கப்பட்டுள்ளன. இவரின் மணிவிழாவின் ானந்தம் எனும் பெயரிலே வெளியிட்டுள்ளமையும்
தமிழ் இலக்கிய ஆய்வு முயற்சிகளிலே நடைபெற்ற }து. பேராசிரியர் சு. வித்தியானந்தன் நாட்டார்
5

Page 50
வழக்காற்றியலுக்கு ஆற்றிய பணி மிகவும் முக்கிய உள்ளிட்ட நாட்டுப் புறவியலில் இவருக்கு ஈடுபாடு செல்வாக்கும் காரணமாகலாம். பேராசிரியர் சு. வ இன்று பேசப்படுவது ஈழத்துத் தமிழ் நாட்டுக் கூத் ஈழத்துத் தமிழ் மக்களுக்குத் தேசியக் கூத்து வடி இவரையே சாரும்.
நாட்டுக் கூத்துக்களை நகரத்தாரும் பார்த்து பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டே மே மாணாக்கர் பரம்பரையே இன்று ஈழத் து வளர்த்தெடுப்பவர்களாகத் திகழ்கின்றனர்.
ஈழத்தின் பல பாகங்களிலும் வழங்கிய நாட்டுக் வெளியிட்டார். அலங்கார ரூபன் நாடகம், எண்டிற ஞான செளந்தரி நாடகம் முதலியன இவராலே இஸ்லாமிய இலக்கியங்களிலும் இவர் அதிக ஈ( பேணுவதிலும் முன்னின்றுழைத்தார். பேராசிரியர் வேலுப்பிள்ளை குறிப்பிடும் கருத்து இந்த இடத்தி
“சமய அடிப்படையிலே கிறிஸ்தவர் என்றும் பிரிவினை பேசப்படுவது உ ஒன்று என்றும் சைவப்பண்பாடே தமி கூறப்படுவதுண்டு. பேராசிரியர் வித் கண்டித்துள்ளார்.”
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையின் மத குணவியல்புகளையும் அவரது ஆக்கங்களையும்
பிரம்மறுநீ தி. சதாசிவ ஐயர். வெள்ளவத்தை மு முதலானோர் அவ்வப்போது ஈழத்து நாட்டார் பாட மக்களிடையே வாய்மொழியாக வழங்கிக் கால பாடல்களைத் தொகுத்து அச்சுவாகனம் ஏற்ற வே6 செயற்பட்டார். மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் தொகுத்துச் செம்மையான பதிப்புக்களாக வெளியிட வழக்காறுகளைத் தொகுத்து வெளியிட வே6 கொண்டிருந்தார் எனவும் அறிய முடிகின்றது.
சிறந்த விரிவுரையாளராக மாத்திரமின்றி ந வித்தியானந்தன் திகழ்ந்தார். எனது முதுகலைமான என்னையும் எனது ஆய்வையும் நெறிப்படுத்திய சுதந்திரத்திற்கு அவர் கொடுக்கும் மதிப்பைக் கண்( வித்தி எனக் குறிப்பிட்டது எத்துணை பொருத்தமான பழகியவர்களும் நன்கு புரிந்து கொள்வர்.
பேராசிரியர் வித்தியானந்தன் சிறந்த நிர்வா தலைவராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்த ஈழத்துக் கல்வியுலகம் என்றும் மறக்கமுடியா மாத்திரமின்றி பெளதீகவளத்திலும் யாழ்ப்பாணய் இவரைச் சாரும். நாட்டுச் சூழல் அடிக்கடி மாறி பல்கலைக்கழகப் பணியினைத் தொட்டுத் துலக்

)ானது. நாட்டார் பாடல்கள், நாட்டுக் கூத்துக்கள், ஏற்படுவதற்குப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் ரித்தியானந்தனின் பணிகளிலே முதன்மையானதாக துக்களுக்கு இவர் அளித்த புதுவாழ்வேயெனலாம். வம் ஒன்றுண்டு என்பதை நிலைநிறுத்திய பெருமை
இரசிக்கக்கூடிய வகையிலே செம்மை செய்து டையேற்றிப் பெருஞ்சாதனை படைத்தார். இவரது க் கூத்து மரபினைப் பேணிப் பாதுகாத்து
கூத்துப் பிரதிகளைத் தேடி ஆராய்ந்து பதிப்பித்து க்கு எம்பரதோர் நாடகம், மூவிராசாக்கள் நாடகம், பதிப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ டுபாடுகாட்டித் தமிழ் மக்களின் ஒருமைப்பாட்டைப் சு. வித்தியானந்தனைப் பற்றிப் பேராசிரியர் ஆ. நிலே நினைவு கூரத்தக்கது.
கள் என்றும் சைவர்கள் ண்டு. தமிழும் சைவமும் ழ்ப்பண்பாடு என்றும் தியானந்தன் இப்போக்கைக்
ரிப்பீடு மிகச் சரியானது என்பதனை அவரது
அறிந்தோர் அறிவர்.
. இராமலிங்கம், குலசபாநாதன் கு. ஓ. ஊ. நடராசா ல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். நாட்டுப்புற Oவெள்ளத்தினால் அள்ளுண்டு போகும் நாட்டுப் ண்டும் என்ற அவாவுடன் பேராசிரியர் வித்தியானந்தன் மன்னார் நாட்டுப் பாடல்கள் முதலானவற்றைத் ட்டார். சாதாரண மக்களிடையே வழங்கும் நாட்டுப்புற ண்டுமென்ற எண்ணமுடையவராகச் செயற்பட்டுக்
ல்ல ஆய்வு வழிகாட்டியாகவும் பேராசிரியர் சு. ரி ஆய்வுக்கு அவர் ஆய்வு வழிகாட்டியாக இருந்து மையை இன்று எண்ணிப்பார்க்கின்றேன். கருத்துச் S வியந்தேன். பேராசிரியர் அ. சண்முகதாஸ் மாமனிதர் ாது என்பதனை அவரது மாணாக்கள்களும் அவருடன்
கியாகவும் திகழ்ந்தார். யாழ்ப்பாண வளாகத்தின் ன் துணைவேந்தராகவும் அவர் ஆற்றிய பணிகளை து. ஆய்வுத்தளத்திலும், கற்பித்தல் வளத்திலும் பல்கலைக்கழகத்தினை வளர்த்தெடுத்த பெருமை க் கொண்டிருந்த போதும் சளைக்காது யாழ்ப்பாணப் கிய பெருமகனாவார்.
26

Page 51
பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் பல்கலைக்க அரசியல் நிறுவனங்களுடனும் தொடர்புபட்டுப் ப திகழ்ந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் பலவகை தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளைத் தை தலைமையில் 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் தமிழாராய்ச்சி மகாநாடு வரலாற்றுப் புகழ்மிக் திருப்புமுனையாக அமைந்த இம்மகாநாட்டில் படிக் இவரே இருந்து வெளியிட்டுள்ளார்.
மானுடம் தழுவிய மாமனிதனாகத் திகழ்ந்த பேரா வரலாற்றில் மாத்திரமன்றி, அரசியல் வரலாற்றிலும் பு காட்டிக் கொண்டே இருக்கின்றது.
நிறைவாக
பேராசிரியர் விபுலானந்தர் முதல் பேராசிரியர் வி ஆற்றிய் பணிகளின் முனைப்பாக, இன்று அவர்களின் கைலாசபதி, பேராசிரியர் ஆ. சதாசிவம் இவள் வேலுப்பிள்ளை, சி. தில்லைநாதன், பொ. பூலோ முதலானோர் பல்துறைப் புலமைப் பாரம்பரியம் மிக்கள் வந்தவர்களாக விளங்குகின்றனர். இவர்களிடம் பல் முற்குறிப்பிட்ட பேராசிரியர்களின் ஆளுமையின் ஒவ் ஆறாத தொடர்ச்சியுடன் தொடரவேண்டும் என்பை
米米米米米米米米米冰状
米米米米米米米米米米米米米米米米米米米米米米米米>
水冰冰米米米米水水来米米水米米米米米
5-CM 4658 .

ழகப் பணிகளுக்கு அய்பால் சமய, சமூக, பண்பாட்டு னியாற்ற வேண்டும் என்ற கருத்துடையவராகத் பான சமூகப் பணிகளையும் செய்துள்ளார். உலகத் லவராக விளங்கிய பேராசிரியர் சு. வித்தியானந்தன் தில் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் கது. இலங்கையின் அரசியல் வரலாற்றிலே ப்ெபட்ட ஆய்வுக்கட்டுரைகளின் பதிப்பாசிரியராகவும்
சிரியர் சு. வித்தியானந்தன் ஈழத்தமிழரின் தமிழியல் றக்கக் கூடியவரல்லர் என்பதைக் காலம் நமக்குக்
த்தியானந்தன் வரை ஈழத்தமிழியல் வரலாற்றுக்கு தடத்திலே கால்பதித்து நடந்த அமரர் பேராசிரியர் களோடு இன்றும் உலகளாவிய ரீதியிலே ஆ. கசிங்கம், அ. சண்முகதாஸ், எம். ஏ. நுஹ்மான் பர்களாக, அய்புலமை மரபின் வாழையடிவாழையாக பரிமாணப்புலமை வளம் பொதிந்திருந்த போதிலும், வொரு துறைக்கும் காட்டி நிற்கின்றன. இந்த மரபு தயே தமிழியல் ஆய்வுலகம் விரும்பி நிற்கின்றது.
K米米米米米米米米米
k米米米米米米米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米冰米

Page 52
கடலாடுக
தமிழ் மொழியில் தோன்றிய காப்பியங்களில் சில புதுமைக்கவிஞன் “நெஞ்சை அள்ளும் சிலப்பதி என்று அதன் பெருமையைப் பாடியுள்ளான். தமி நாடு பற்றியதாய் மூவேந்தர்க்கும் உரியதாக விள நாட்டுத் தலைநகரங்களையும் மூன்று காண்டங்க நாடகம் என்னும் முத்தமிழும் பயின்று வருெ அமைப்புடையது. தமிழ்நாட்டு நிலத்து மக்கள் வழக்கங்கள், பலவகையான சமயத்திறங்கள், அய மன்னர் வரலாறு, தமிழ் மொழியின் ஆற்ற ஆவணப்படுத்தியுள்ளது. தமிழ் இலக்கியத் துறை காவியத் தலைவியாகவுள்ளாள். துறவிய்ான விடயங்களைக் கூறியுள்ளார்.
“அரசியல் பிழைத்தோர்க் உரைசால் பத்தினிக்கு 2 ஊழ்வினை உருத்து வந் சூழ்வினைச் சிலம்பு கார சிலப்பதிகாரம் என்னும் ( நாட்டுதும் யாமோர் பாட்
எனச் சிலப்பதிகாரப் பதிகத்திலுள்ள அடிகள் அ சிலப்பதிகாரம் நாடகக் காப்பியமாக அமைந்து அமைந்துள்ளன. பல பிரதிகளை ஒப்புநோக்கி சி உவே சாமிநாதையர் பதிப்பித்தார். இளங்கோவி தமது பதிப்பிலே குறிப்பிட்டுள்ளார்.
“அரசர் நீதியிற் சிறிது பிழைப்பினும் நின்று கொல்லுமென்பதும் கற்புை தேவரும் முனிவருந்துதித்தல் இய முறையே செய்தோனை நாடிவந்து
കൃിധ இம்மூன்றினையும் இவ்வுலகத்தார்க்கு செய்யப்பட்டது. மேற்கூறிய மூன்று பகுதியைய சிலப்பதிகாரம் என்னும் பெயர் பெற்றது. இன் இயலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய் நாடகக் காப்பியமென்றும் உரைப்பாட்டும் இசை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் பெ உரையும் முகவுரை)
முப்பது காதைகளாக அமைக்கப்பட்ட சிலப்ப என்னும் மூவரது வாழ்வியல் பற்றிக் கூறுகிறது.

ாதை - ஒரு வாழ்வியல் திருப்புமுனை
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
Uப்பதிகாரம் சிறப்பானது. இருபதாம் நூற்றாண்டின் காரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ ழின் முதற்பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். மூன்று ங்குவது, புகார், மதுரை, வஞ்சி என்னும் மூன்று ளின் பெயராகவும் கொண்டுள்ளது. இயல், இசை, வது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வாழ்வியலை எடுத்துரைப்பது. மக்களின் பழக்க பல்நாட்டுத் தொடர்புகள், தமிழக ஆட்சிமுறைகள், ல் போன்ற பல செய்திகளைத் தொகுத் து யில் புதுமையாக ஒரு குடும்பப்பெண்ணான கண்ணகி இளங்கோவடிகள் நூலின் குறிக்கோளாக மூன்று
5கு அறங்கூற்றாவதும் உயர்ந்தோர் ஏத்தலும் து ஊட்டும் என்பதுTஉம் ணமாகச்
பெயரால் டுடைச் செய்யுள் என”
தனை விளக்கியுள்ளன. இளங்கோவின் இலக்கினைச் நிறைவு செய்துள்ளது. பலகாட்சிகளாக கதைகள் லப்பதிகாரத்தை நூல்வடிவிலே 1892 ஆம் ஆண்டு ன் இலக்கையும் நோக்கையும் அவர் பின்வருமாறு
அவரை அறக்கடவுள் கூற்றாய் டய மகளிரை மக்களேயன்றித் ல்பென்பதும் இருவினையும் செய்த
தம்பயனை நுகர்விக்குமென்பதும்”
தத் தெரிவித்தற்பொருட்டே இளங்கோவடிகளால் பும் சிலம்பு காரணமாகத் தெரிவித்தலின் இந்நூல் னும் இந்நூல் முத்தமிழும் விரவப் பெற்றதாதலின் பயுளென்றும் நாடகவுறுப்புக்களை உடைத்தாதலின் ப்பாட்டும் இடையிடையே விரவப் பெற்றதாதலின் யர்பெறும் (சிலப்பதிகாரமூலமும் அடியார்க்கு நல்லார்
திகாரம் கூறும் கதை கண்ணகி, கோவலன், மாதவி முதலாவது காதை மங்கல வாழ்த்துப்பாடலென
28

Page 53
கோவலனும் கண்ணகியும் திருமணம் செய்து குடும்பய்பின்னணியும் குணநலன்களும் அக்காதைய 12 வயதுடைய கண்ணகியும் திருமணம் செய்து மன மனையறம்படுத்த காதை காட்டுகிறது. கணவனு நிலையை இளங்கோவடிகள் காட்சிப்படுத்திக் கா பாராட்டிக் கோவலன் பேசுகிறான்.
“மாசறுபொன்னே வலம் காசறுவரையே கரும்பே அரும் பெறற்பாவாய் ஆ பெருங்குடி வணிகன் பெ மலையிடைப் பிறவா மன அலையிடைப் பிறவா அ யாழிடைப் பிறவா இசை தாழிருங்கூந்தல் தையலி
கோவலன் புகழ்ச்சி. கண்ணகிபால் அவன் ( இளங்கோவடிகள் கோவலன் கண்ணகியிடம் பேசி கணவன் புகழும் வகையில் மனையறம் செய்த கன பேணி இயல்பான வாழ்வு நடத்துகிறாள். குடும்ப வ வரையறைசெய்யப்பட்டுள்ளதை சிலப்பதிகாரத்திே வரையறைக்குட்பட்ட வாழ்வு கண்ணகி வாழ்ந்தா
“ வார் ஒலி கூந்தல் பேரிய மறப்பரும் கேண்மையே விருந்து புறந்தருஉம் ெ வேறுபடு திருவின் வீறு ெ உரிமைச் சுற்றமொடு ஒ( யாண்டு சில கழிந்தன. காண்டகு சிறப்பில் கண்
இந்நிலையில் கோவலன் கண்ணகியோடு நடத்தி என்றே கொள்ளலாம். ஆனால் அடுத்து அணி வாழ்ந்த குடும்ப வாழ்வியல் தடம்புரள்வதைக் க ஆடல், பாடல், அழகு மூன்றும் குறைவற நிை மன்னன் முன்னிலையில் நடைபெறுகிறது. தன ஆயிரத்தெண்கழஞ்சு பொன்மாலையும் பெற்ற மாத கோவலனும் போயிருந்தான். புகழ்பெற்ற வணிக ஆடல், பாடல் கலைகளில் விருப்புற்றவன் என்ற நி சென்றிருந்தான். ஆனால் அவன் தன் மனைவி இத்தகைய கலை நிகழ்ச்சிக்குக் குடும்பய் பெண்க போலும்.
அரங்கேற்றம் கோவலன் எண்ணத்தில் ஒரு கு நிறைவுற்ற பின்பும் வீடு செல்லாமல் நகரத்திலே ஆழப்புதைக்கும் மாதவியின் அழகும் ஆடலும் அரசன் மாதவிக்குப் பரிசாகக் கொடுத்த “மான என்ற கூனியின் குரல் கோவலன் எண்ணத்தை வழிப்படுத்தியது. கோவலன் உரிய பொன்னைக் ெ

கொண்டமையைக் கூறுகிறது. அவர்களின் ால் அறியப்படுகின்றன. 16 வயதுடைய கோவலனும் னயறம் செய்த மாட்சியை அடுத்து அமைக்கப்பட்ட Iம் மனைவியுமாக இருவரும் மகிழ்வோடு வாழ்ந்த ட்டியுள்ளார். மனைவியின் அழகையும் குணத்தையும்
புரிமுத்தே
தேனே
ருயிர் மருந்தே
(btDLuD85661I
வியே என்கோ
மிழ்தே என்கோ
யே என்கோ ) நின்னை” (சிலம்பு: ம.அ.ப.காதை)
கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. யவற்றை “உலவாக்கட்டுரை” என்று குறிப்பிடுகிறார். எணகி கேண்மையோடு அறம் செய்து விருந்தினரைப் ாழ்வியல் கண்ணகியின் மூலம் இளங்கோவடிகளால் லே காணமுடிகிறது. சில ஆண்டுகள் இத்தகைய் ள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
பல் கிழத்தி ாடு அறப்பரிசாரமும் பரும் தண்வாழ்க்கையும்
பறக்கான
ரு தனி புணர்க்க இற்பெரும் கிழமையில் ணகி தனக்கென’ (ம.அ.ப.காதை)
ய இல்வாழ்வு அவனுக்கு நிறைவானதாக இருந்தது மைந்துள்ள அரங்கேற்றுகாதை வரையறை செய்து காட்டுகிறது. கணிகையர் குலத்துப் பிறந்த மாதவி றந்தவள். அவள் ஆடல் அரங்கேற்றம் நாட்டு து ஆடல் திறமையால் தலைக்கோல் பட்டமும் நவி பலராலும் புகழப்பட்டாள். அரங்கேற்றத்திற்குக் க் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற சிறப்பினாலும் லையிலும் கோவலன் மாதவியின் அரங்கேற்றத்துக்குச் யான கண்ணகியை அழைத்துச் செல்லவில்லை. ள் இணைந்து செல்லும் வழக்கம் இருக்கவில்லைப்
ழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நிகழ்ச்சி திரிந்து கொண்டிருந்தான். கண்ணகியின் நினைவை அவனைத் தடுமாற வைத்தன. அந்த வேளையில் லயை வாங்குவோர்க்கு மாதவி உரிமையாவாள்’ நெறிப்படுத்தியது. அவன் வைத்திருந்த செல்வம் ாடுத்துக் கூனியிடம் மாலையை வாங்கி அவளோடு
29

Page 54
மாதவி மனைக்குச் செல்கிறான். அவன் நினைவு புலமைத்திறன் அதனை அழகாய் எடுத்துரைக்கிற
“ LIDITLD6of Gob(65560ö LDT கோவலன் வாங்கிக் கூனி மணமனை புக்கு மாதவி அணைவுறு வைகலின் அ விடுதல் அறியா விருப்பின வடுநீங்கு சிறப்பில் தன் ம
கண்ணகியோடு மனைஅறம் செய்த கோவலன் ம மனம் திரிபடைகிறான். மாதவியை அவன் பரத்தை
உரிமையோடு புதிய வாழ்வியலைத் தொடங்குகிற பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து ஏனைய உற்றார் உறவினரும் சாட்சியாய் நின்றன போது, தான் ஏற்கனவே கண்ணகியின் கணவன் என் குற்றமற்ற வீட்டையும் மனைவி கண்ணகியையும் ! வயப்பட்டு நின்றான். கணிகையான அவள் ஆட6 புதிய வாழ்வில் புகுந்து கொண்டான்.
இந்தப்புதிய வாழ்வு கோவலனுக்கும் மாதவிச் ஊரெடுத்த காதை என இளங்கோவடிகள் தொடு அடைந்த மாற்றம் உணர்த்தப்பட்டுள்ளது. ஆ அந்திமாலைச் சிறப்புச் செய்காதை குடும்ப வா எடுத்துரைக்கும் நிலையில் அமைந்துள்ளது. கை மாலைக்காலம். ஆனால் பிரிந்த காதலியர்க் இணைந்தமையால் மகிழ்வாய் இருக்கிறாள் மகிழ்வூட்டுகிறாள். கண்ணகியோ கோவலனைப் பி நெற்றியில் திலகம் இடாமல் கண்ணுக்கு மைதீட்ட சிரிப்பின்றி இருக்கிறாள். குடும்பவாழ்வில் கோல கோவலன் மாதவியுடன் குடும்பம் நடத்தும் செய்தி ஒன்றும் செய்யமுடியாத நிலை. கையறு நெ இணைக்கப்பட்ட குடும்பம் கணிகைமாதவியால் பி நிலையில் கோவலன் ‘மணிமேகலை’ என்னும் தந்தை நிலையில் வாழ்வு நடத்துகிறான்.
இந்திரவிழவு ஊரெடுத்தகாதையில் இக்குடும் சுட்டிக்காட்டுகிறார். பரத்தமை ஒழுக்கம் பூண்ட போது மனைவியர் ஊடல் தீர்க்க விருந்தினரை இந்த வழக்கமே கோவலன் திரும்பி வருவான் எ பரத்தையர் தொடர்புடைய கணவரையும் மனைஅ வாழ்வியல் கோவலனும் அறிந்த ஒன்றே என்பதை காதையில் உணர்த்துகிறார்.
“வடமீன் கற்பின் மனையு மாதர்வாள் முகத்து மணி
விருந்தின் தீர்ந்திலதாயின் மருந்து தரும் கொல் இம் கையற்று நடுங்கும் நல்ல

வில் புதிய தடம் பதிந்தது. இளங்கோவடிகளின்
Odl.
தவி மாலை
தன்னொடு
தன்னோடு
|யர்ந்தனன் மயங்கி
ான் ஆயினான்
னைஅகம் மறந்தென்’ (அ.காதை)
மலர் நெடுங்கண்ணுடைய மாதவியைக் கண்டவுடன் த மணமுறைமைக்கேற்ப மணம் செய்கிறான். அந்த ான். கண்ணகியை அவன் மணந்த போது மாமுது ஏற்றான். அத்திருமணத்திற்கு இருமுதுகுரவரும் ரர். ஆனால் மாதவிக்கு அவன் மாலை சூட்டிய ண்பதை முற்றாக நினைவிலிருந்து அகற்றி விட்டான். மறந்துவிட்டான். மாதவி என்னும் புதிய அழகின் மிலும் பாடலிலும் மயங்கி விடுதலறியா விருப்புடன்
க்கும் மட்டற்ற மகிழ்வைத்தந்தது. இந்திரவிழவு }த்து அமைத்த காதையில் கோவலன் வாழ்வில் னால் இந்திரவிழவு ஊரெடுத்த காதைக்கு முன்பு ழ்வியலில் இன்பம் சேர்க்கும் மாலைய்பொழுதை னவரைப் பிரிந்த மகளிர் அவரொடு சேர்ந்து மகிழும் குத் துன்பம் தருவது. மாதவி கோவலனோடு
கோவலனைப் புலவியாலும் கலவியாலும் ரிந்து இருந்தமையால் காலிற் சிலம்பு அணியாமல் ாமல் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமல் முகத்தில் வலன் பிரிவு கண்ணகிக்கு பெரும் துன்பம் தந்தது. யை கண்ணகி அறிந்திருந்தாள். ஆனால் அவளால் ஞ்சத்தோடு கலங்கியிருந்தாள். பெற்றோரால் ரிந்தது. அதிலும் கண்ணகிக்கு எதுவுமே தெரியாத பெண் குழந்தையையும் மாதவியால் பெற்றெடுத்து
ப வாழ்வியல் நடைமுறையை இளங்கோவடிகள் - கணவர் தமது மனைக்குத் திரும்பிச் செல்லும்
அழைத்துச் செல்லும் வழக்கம் இருந்துள்ளது. ான்ற நம்பிக்கையைக் கண்ணகிக்கு ஊட்டியிருந்தது. றம் காக்கும் கற்புடைய மனைவியர் ஏற்று வாழ்ந்த 3 இளங்கோ மறைமுகமாக இந்திரவிழவு ஊரெடுத்த
றை மகளிர் த்தோட்டுக் குவளைப்
போது புறங்கொடுத்து போகிய செங்கடை ன் யாவதும் மாநில வரைப்பென பினை நடுநாள்’ (இ.வி.ஊ.ஈ.காதை)
30

Page 55
குடும்பப் பெண்கள் கணவர்மாரது பரத்தமை ஒ அதனைத் தீர்க்க விருந்தினரை அழைத்துச் செ அச்சமயம் கோபம் தீராவிட்டால் பின்னர் கோப உள்ளதோ? என்றும் வருந்தும் கணவரையும் கண்ணகியையும் மாதவியையும் ஒருங்கே காட்சிட்
“கண்ணகி கருங்கணும் உண்ணிறை கரந்து அக எண்ணுமுறை இடத்தினு விண்ணவர் கோமான் வி
இங்கு கண்ணகியின் கருங்கண்கள் பிரிவினால் நீ நீருகுத்தன. அத்தோடு கண்ணகிக்கு இடது கண் கோபத்தால் கண்ணகியின் கண்கள் நிறம் மாறவில் மாதவியின் கண்கள் செந்நிறமானதையும் சுட்டிக்கா இணைத்துள்ளார். பெண்களுக்கு இடது கண் து தீமைக்கு அறிகுறி. கோவலன் வாழ்வியலில் ஒரு அறிவித்து விடுகிறார்.
அதனைக் கடலாடு காதை என ஒரு காதை காதல் வாழ்க்கையில் ஊடல் என்னும் உணர்வு இருக்கவேண்டும். கண்ணகி கோவலனுடன் ஊடல் ஆனால் மாதவி கோவலனோடு ஊடியுள்ளாள். கொள்வதை எடுத்துக் காட்டியுள்ளார். ே கடலாடுகாதையில் தான் அமைந்திருந்தது. இ சிறப்புச் செய்காதையிலே
“நிலவுப்பயன் கொள்ளும் கலவியும் புலவியும் காத6 ஆர்வ நெஞ்சமொடு கோ கோலங்கொண்ட மாதவி.
என அவர் கூறுவது கோவலனுக்கு மாதவியே வழி செய்கிறது. ஏற்கனவே மணமுடித்திருந்த ( மாதவியிடம் அடங்கிக் கிடந்தான். மாதவியுடன் போகநிலையான வாழ்வு. அதிலும் ஏற்கனவே த தன் மனைவியை மறந்து வாழ்ந்தான். கோவல எண்ணம் இருந்தது. அதனால் குலமகள் போல எனினும் மாதவி ஒரு குலமகளாக வாழ்க்கை நட அழகையும் எல்லோரும் புகழவேண்டும் என்று மீண்டும் நடனமாடுகின்றாள்.
கடலாடு காதையின் அமைவிடம் கோவலன் வ பாங்கில் அமைந்துள்ளது. இமயமலை வடசே காண்பதற்காக தன் காதலியுடன் புகாருக்கு வருகி காட்டியபடி வருகிறான். மாதவியின் ஆடல் இந்திர கூறி மாதவியின் முற்பிறப்புக் கதையையும் உணர்
"நாரதன் வீணை நயந்ெ தோரிய மடந்தை வாரம்

ழக்கத்தால் கோபமுறும்போது கட்ைக்கண் சிவப்பர். bலும் போது மனைவியர் கோபம் தீரும். ஆனால் தைத் தீர்க்க வேறு மருந்து இந்த மாநிலத்தில் இனம் காட்டுகிறார் இளங்கோ. இக்காதையில் படுத்திக் காட்டுகிறார்.
ாதவி செங்கணும் து ஒளித்து நீருகுத்தன ) வலத்தினும் துடித்தன }வுநாள் அகத்தென” (இ.வி.ஊ.எ.காதை)
நகுத்தன. மாதவியின் செங்கண்கள் இன்பமிகுதியால் துடிக்கின்றது. மாதவிக்கு வலது கண் துடிக்கின்றது. லை என்பதைச் சுட்டும் இளங்கோ காமமிகுதியால் -டுகிறார். அத்துடன் மரபான ஒரு நம்பிக்கையையும் டிப்பது நன்மைக்கு அறிகுறி. வலது கண் துடிப்பது திருப்பம் ஏற்பட இருப்பதை முன் கூட்டியே இங்கு
யை அமைத்து மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
இன்றியமையாதது. ஆனால் அது அளவோடு ) கொண்டதாகச் செய்தி சிலப்பதிகாரத்தில் இல்லை. இளங்கோ கடலாடு காதையில் கோவலன் ஊடல் காவலன் ஊடல் கொள்வதற்கு உரிய சூழல் ளங்கோ மாதவியின் ஊடற்பண்பை அந்திமாலைச்
) நெடுநிலா முற்றத்துக் லர்க்கு அளித்தாங்கு வலர்க்கு எதிரிக்
ஒy
e o a (அ.மா.சி.செ.காதை)
)ல் இருந்த விடுதலியலாத பெரு விருப்பை உணர கோவலன் தனது பரத்தமை யொழுக்கநிலையிலே அவன் நடத்திய வாழ்வு குடும்பவாழ்வு அல்ல. ருமணமான கோவலன் மாதவியின் இல்லத்திலே னுக்கு மாதவி தனக்கு மட்டுமே உரியவள் என்ற மாதவி குழந்தையைப் பெற்றபோது மனமகிழ்ந்தான். த்தவிரும்பவில்லை. தனது கலைப்பயிற்சியையும் விரும்பினாள். அந்த விருப்பத்தை நிறைவேற்ற
ாழ்வில் ஒரு மாற்றம் நிகழ இருப்பதை உணர்த்தும் டிக்கண் வாழும் வித்தியாதரன் இந்திரவிழாவைக் ான். பல்வேறு இடங்களையெல்லாம் அவளுக்குக் விழாவில் இடம்பெற இருப்பதையும் தன் காதலிக்குக் துகிறான்.
தரி பாடலும் UsTL-g)b
l

Page 56
ஆயிரம் கண்ணோன் ெ நாடகம் உருப்பசி நல்க மங்கலம் இழப்ப வீணை தங்குக இவளெனச் சாட மங்கை மாதவி வழிமுத அங்கர வல்குல் ஆடலு
முற்பிறவியிலே மாதவியின் முன்னோர் ஆகிய பு இந்திரன் மகன் சயந்தன் மேல் காமநோக்குடன் ஆ எனவே காமவழிச் சென்றமையால் கலை தூய்மை கவனம் குலையும் போது அனர்த்தம் விளையும் விளக்கியுள்ளார்.
இந்திர விழாவிலே மாதவி மீண்டும் நடனம் ஆடுச இளங்கோ காட்சிப்படுத்தியுள்ளார். மாதவியின் ஆ தனக்கு உரிமையான மாதவி பிறரை மகிழ்விக்க நடனக்கோலம் கோவலன் மனதில் ஊடல் உணர் அதனால் நடனம் முடிந்த பின்னர் கோவலன் முகச் அதனை இளங்கோ
“கூடலும் ஊடலும் கோ பாடமை சேக்கைப் பள்:
ள்ன காட்சிப்படுத்தியுள்ளார். கோவலன் மாத வகித்துள்ளது. குடும்ப வாழ்வில் கணவன் ம6ை கொள்ளாமல் ஊடல் என்பது காமம் சார்ந்தது என் வாழ்ந்த காலத்தில் கோவலன் இத்தகைய குறிப்பிடவில்லை. கோவலன் முகக்குறிப்பையுணர்ந் தான் ஆடியதைக் கோவலன் விரும்பவில்லைெ கடல் விளையாட்டுக்காக அழைக்கின்றாள். ே கடல் விளையாட்டு உதவும் என நம்புகிறாள். இ அவ்வாறு செல்லுகின்ற போது பல்வேறு காட்சி
இடைவீதிகளிலே காணும் காட்சிகள் வணிகன
“கோடிபல அடுக்கிய மாடமலி மறுகிற் பீடிை மலரணி விளக்கத்து ப அவர் கொடி அறுகும் மங்கலத் தாசியர் தம் இருபுடைமருங்கினும்
கடைத் தெருவிலே காணும் காட்சிகள் ( நினைவுபடுத்துகின்றன. புலம் பெயர்ந்து கலர் கூலங்களைக் கொடிகளெடுத்து விற்பனை செய்கி வேதனை அடைகின்றது. தனது மனைவாழ்வும் கடற்கரையிலே விளக்குகள் அருகே விற்கப்படும் தான் வணிகம் செய்து வாழ்வு நடத்திய காலம்

ஈவியகம் நிறைய
ாளாகி
மண்மிசைத்
ம் பெற்றற
ல் தோன்றிய
ம் காண்குதும்0 (க.ஆ.காதிை)
ாதவி இந்திரன் சபையிலே நடனமாடிய உருப்பசி டியமையால் சாபம் பெற்று மண்ணிலே தோன்றியவள். யற்றுப் பிறழ்ச்சியடையும் நிலையுருவாகிற்று. ஆடல் ) என்பதை இப்பழைய கதை மூலம் இளங்கோ
றோள். அவள் ஆடிய 11 வகையான ஆடல்களையும் டல் கோவலன் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆடுவது வெறுப்புணர்வைத் தருகிறது. மாதவியின் வைத் தூண்டியது. மாதவி அதனை உணர்ந்தாள். |குறை கண்டு அதனைத் தீர்க்க முயற்சி செய்கிறாள்.
வலற்கு அளித்து ளியுள் இருந்தோள்” (க.ஆ.காதை)
வியுடன் வாழ்ந்த வாழ்வில் ஊடல் பெரும் பங்கை னவியர் இடையே ஏற்படும் பிணக்கை ஊடல் என்று பதை இளங்கோ உணர்த்தியுள்ளார். கண்ணகியோடு ப ஊடல் உணர்வுடன் இருந்ததாக இளங்கோ து செயற்படும் ஆற்றல் மாதவியிடமிருந்தது. எனவே யன்பதை உணர்ந்த மாதவி அவனை மகிழ்வுறுத்த காவலன் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் நீங்க ருவரும் கடல்விளையாட்டுக் காணச் செல்கின்றனர். களைக் காணுகின்றனர். ான கேர்வலனின் மனதை அசைக்கின்றன.
தொழுநிதிக்குப்பை
கத் தெருவின் )ணிவிளக்கு எடுத்தாங்கு நெல்லும் வீசி
கலன் ஒலிப்ப திரிவளர் பெயரும்” (க.ஆ.காதை)
கோவலன் செய்யத் தவறிய ஒரு கடமையினை வகளிலே வந்த பிறநாட்டு வணிகள் ധ്രtങ്ങ ன்ற பாங்கினையும் காணும்போது கோவலன் உள்ளம் வணிகத்தொழிலும் நினைவுக்கு மீண்டு வருகின்றன. பண்டங்கள் பலவற்றையும் பார்க்கும் கோவலனுக்கு மீட்டுருவாகிறது. நெய்தல் நிலப்பரப்பின் வளமான
32

Page 57
பொருட்களையும் பண்டங்களையும் விற்கின்ற வ உள்ளத்திலும் தெரிகிறது.
கடல் விளையாட்டுக் காண வருகின்றவர்களுக் தந்தன. அரசிளங்குமரரும் உரிமைச் சுற்றமும் ப பாடுகள மகளிரும் எனப் பலர் கூடிவருகின்ற6 உள்ளத்திலும் உறைந்து கிடந்த பழைய வா அவனுடைய குடும்ப வாழ்வின் கோணலை அது வாழ்வியலைத் தான் நீண்ட காலமாகத் துறந்து
மாதவியின் அணிகலன் புனைந்த அழகும் அ கணவனையன்றிப் பிறரையும் ஆடல் பாடல் மூலம் இப்போது தெளிவாகத் தெரிகிறது. கோவலன் ஊ மாதவியோடு நடத்தும் குடும்பவாழ்வு பண்பானது மூலம் பிறரை மகிழ்விக்கும் மாதவி குணநலன் தீ அவன் மனமாற்றம் முகத்தில் வந்து படிந்து நி அவள் தன்னுடைய கலைப் பயிற்சி மூலம் தொழி எண்ணிய எண்ணத்தை அவள் உணரவில்லை. ஆனால் இப்போது அவனுடைய உள்ளத்திே காமநிலையில் அவனை மகிழ்விப்பதே தன்னுடைய உள்ளத்தில் தன் கலைத்திறனை எல்லோரும் அதனால் இந்திரவிழாவிலே மீண்டும் ஆடினாள் ட மகிழ்ந்தது. கோவலனுடன் இருந்த நிலையை அவள் முகம் காட்டிற்று. இங்கு கோவலனுட என்பதை இளங்கோ உணர்த்தியுள்ளார்.
மாதவியின் அழகு பலரும் கண்டு மகிழும் அ பாடல் கலை களைத் தொடர்வது குடும்ப வாழ்வி
ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல்தான் பொரு இளங்கோ கடலாடுகாதையில் அதற்கான செயர் நினைவு கோவலன் உள்ளத்தில் இருந்து மறைய நினைவு கோவலன் உள்ளத்திலே தோன்றவும் கோவலன் மனமாற்றம் கடலாடு காதையில் மறைமு மனையறத்தில் நாட்டமில்லை என்பதும் விளக்க பொருட் பலத்தால் இணைந்தாலும் வாழ்வியலில் குடும்ப வாழ்வு சிதையும் என்றும் முடிவு செய்யப்
குடும்ப வாழ்க்கையில் மகப்பேறு மிகமுக்கியமா6 குழந்தை விளங்கும். ஆனால் கோவலனின் இரண்ட கூடப் பிரிவு ஏற்படுகிறது. கற்புநிலையில் கண்ணக மாதவியை விட்டு விலகச் செய்தது. “விடுதல் விடுகிறது. உடல் வாழ்க்கையை விட உள்ளத்து தெளிவாக விளங்குகிறது. மனையறம் செய்து வா காத்து நிற்பதைக் கோவலன் நன்கு உணர்கிறான் கலைக் கண் காணவில்லை. காமவழியிலே அவ அதனால் கடற்கரையிலே புன்னை மரநீழலில் எண்ணினாள். கானல்வரி என்னும் காதையின் தொ கோவலனிட்ம் கொடுக்கிறாள். பாடலில் அவள் அறிந்த கலைவழி. ஆனால் கண்ணகியின் கரி

விகள் கூட்டம் செய்யும் குலத்தொழில் கோவலன்
த அங்குள்ள காட்சிகள் மலைப்பையும் மகிழ்வையும் தகுமாரரும் பல்வேறு ஆயமும் ஆடுகள மகளிரும் ர். அதனால் ஏற்பட்ட ஆரவாரம் கோவலன் ழ்வியல் நினைவலைகளைத் தட்டியெழுப்பியது. நினைப்பூட்டியது. கண்ணகியோடு நடத்திய வணிக இருந்ததும் உள்ளத்தை நெருடலாயிற்று.
பூடலும் ஆரவாரமும் அவனுக்கு வெறுப்பூட்டின. மகிழ்விக்க வேண்டுமென்ற அவளுடைய குலப்பயிற்சி டல் கோபமாக மாற்றம் அடையத் தொடங்குகிறது. அன்று. குழந்தைக்குத் தாயான பின்பும் ஆடல் மையானது என்ற முடிவுக்கு கோவலன் வருகிறான். ன்றது. அதனை மாதவி உணர்ந்து கொண்டாள். ல்நிலை ஒன்றையும் உணர்ந்தவள் எனக் கோவலன்
இத்தனை காலமும் கோவலன் ஊடியதில்லை. ல தோன்றிய சினத்தை மாதவி காணவில்லை. கடமை என மாதவி நினைத்திருந்தாள். அவள் காணவேண்டும் என்ற பேரவா நிறைந்திருந்தது. |லருடைய பாராட்டுக் கிடைத்தது. அவள் உள்ளம் விட மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அதனை ன் மாதவி நடத்தும் வாழ்க்கை மனை அறமன்று
ழகாக விளங்கியது. திருமணத்தின் பின் ஆடல் பில் குழப்பத்தை ஏற்படுத்தும்; ஒருத்திக்கு ஒருவன், நத்தமானது என்ற எடுகோள் ஒன்றை வலியுறுத்திய ]பாட்டினை தொடக்கி வைக்கிறார். கண்ணகியின் பக் காரணமாக இருந்த கலையே மீண்டும் அவள் காரணமாயிற்று என இளங்கோ விளக்கியுள்ளார். கமாகச் சுட்டப்படுகிறது. அதே போன்று மாதவிக்கும் ப்படுகிறது. கணிகையர் குலமும் வணிக குலமும் முரண்பாடு தோன்றும். அதனால் அத்தகையதொரு படுகிறது.
து. கணவன் மனைவியரின் இணைப்புப் பாலமாக ாவது குடும்பவாழ்க்கையில் மணிமேகலை இருந்தும் யின் காத்திருப்பு கோவலன் உள்ளத்தைத் தொட்டு
அறியா விருப்பு’ என்னும் காமத்தளை கழன்று வாழ்க்கையே நிறைவானது என்பது கோவலனுக்குத் ழ்வு நடத்தும் கண்ணகியின் கற்புநிலை தன்னையும்
கோவலனின் உள்ளத்துத் தெளிவை மாதவியின் ா ஊடலைத் தீர்க்க முடியும் என மாதவி நம்பினாள். ாழ் பாடி கோவலனை மீண்டும் தன்பால் ஈர்க்க டக்கமாக வசந்தமாலையிடம் மாதவியாழைப்பெற்றுக்
உள்ளத்தை அறிய முற்பட்டாள். அது அவள் த்திருப்பு என்னும் பண்பாட்டு வழியே கோவலன்
3

Page 58
தேர்ந்த வழி என்பதை மாதவி அறியவில்லை.
அன்பும் பண்பும் தேவை என்பதை அவள் உண உணர்ந்து பாடுகின்றான். கானல் வரியாக அது செல்வதை மாதவி அப்போது உணர்கிறாள். அத காமவாழ்வு முடிந்தது. கோவலன் மாதவி வாழ்
米米米米米米米米米:
米米米米米米米米米米米米米米米米米米米米米米米:
米米冰冰米米米米米米米米米米米冰冰
சிரத் தையுை செயல் களைச் பெரியாரெனப்படுவார் என்னும் முனை நிலைத் திருக்கும் தோல் வியினால் இன்பதுன்பங்கள் உள் விடமாட்டா. செய்யும் என்னும் உண்மையுை அவன் அம்புயாம் பணிசெய்து கிடப்ப( யாகமங்களுக்கு மறு முயற்சிகளிற்றலைய துன்பங்களால் அை நிறைந்த உள்ளத்த விழைந்த நற் கரு நிறைவேற்றுவார் . தோல்வியினால் அ ஆன்மசக்தி அதிகரி
N

அழகும் இளமையும் மனையறத்திற்குப் போதாது, ரவில்லை. கோவலன் கடற்கரையிலே அதை கண்ணகியின் நினைவலைகளிலே அவன்புரண்டு னால் எதிர்வரி பாடுகிறாள். கலையால் இணைந்த பில் ஒரு திருப்புமுனை தென்பட்டது.
米米米来米米米米米米
:米米米米水米米米米米冰冰米米米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米水
HN
டயார் செயற் கருஞ் செய் வார் . இவரே
யான் செய்கின்றேன் ாப்பு உள்ளத்தில்
வரையும் வெற்றி எய்தற் பாலனவாகிய ாளத்தை அலைக்காமல் பணியெல்லாம் இறைபணி னர்ச்சியினால், எய்பவன் என்றறிந்து என்கடன் தே யென்று அருமறை தலையாகாத உத்தம ரிட்டு நிற்போர் இன்ப லவுறமாட்டார். சிரத்தை ராகிய இவர், தாம் மங்களைச் செய்து
இவர் க்கு வெற்றி லைவுறாத உள்ளத்தில் 5கின்றது.

Page 59
புறநா
தமிழ் இலக்கிய வரலாற்றின் மிகத் தொன்ை கொள்ளப்படுகின்றன. இவை தொகை நூல்கள் கொள்ளப்பட்டு “எட்டுத் தொகை” “பத்துப் பாட்டு’ எட்டுத் தொகையில் எட்டாவது நூலாக 'புறநானு காலம் கி.பி. நூறிலிருந்து கி.பி. இருநூற்றைம்ப அறிஞர்களின் கருத்தாகும்.
இன்றிலிருந்து வரலாற்றுத் தூரம் மிக அதிக கட்டுப்படுத்தி வாழாமல் இயற்கைக்குள் கட்டுப்பட்டு உறவுகளின் அடிப்படையில் நிலவிய கவிதை மர
1. ஆண், பெண் பாலுறவினடிப்படையாகத் தே
2. ஆண்களின் அதிகாரம், ஆசை முதலானவ
இரண்டாவது வகை மரபில் போர், வள்ளற்றன் அனைத்து விடயங்களும் பேசப்பட்டன. இந்த இர பாடல்கள் பார்க்கப்படுகின்றன.
நவீன தமிழ் இலக்கியத்திற்கு முற்பட்ட பழந்தம பிரச்சினை காரணமாகப் புறநாநூற்றுப் பாடல்கை மொழி இழந்துபோனது துரதிஸ்ட வசமானது. கிை இருந்து பல பாடல்கள் முழுமையற்றுக் கிடக்கின்
“இலக்கியம்” என்பது சமூக சிந்தனைக்குத் பாடல்களைக் கொண்டு பார்க்கின்றபோது புறநானு 'மகட்பாற்காஞ்சி” வரை பல்வேறு சமூகவியற் கார6 ஐந்நூறுக்கும் மேற்பட்ட புலவர்கள் வாழ்ந்த இச்ச (புரவலனுக்கும்) நாவன்மை மிக்க புலவனுக்கு வகையிலும் காணப்பட்டிருந்ததைப் புறநானூற்றுப்
புறநானூற்றில் இந்தப் புலவர் - மன்னர் உறவு மு இவ்வுறவுமுறை பற்றிய ஆய்வுகளிலெல்லாம் இ நிலையே பெரிதும் காணப்படுகின்றது. சமுதாய தொடர்பு நிலைகளைப் பற்றிய தெளிவு ஏற்பட்ட பி நிலைகளையும் இவற்றிற்கும் இலக்கியத்திற்கும்

நூற்றில் புலவர்களும் புரவலர்களும்
கலாநிதி கி விசாகரூபன் di3762.3L 62ifhysOTILT67Ti, தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
மயான இலக்கியங்களாகச் சங்க இலக்கியங்கள் , பாட்டு நூல்கள் என இரண்டு தொகுதிகளாகக் என்றும் அழைக்கப்படுகின்றன. தொகை நூல்களான
று” கொள்ளப்படுகிறது. இந்நூற் றொகுதியினுடைய் து வரையிலானது என்பதே பெரும்பான்மையான
முள்ளதான சங்க காலச் சமூகம் இயற்கையைக்
வாழ்ந்தது. இத்தகைய இயற்கை நெறிக்காலத்தில் பை இரண்டாகப் பார்க்க முடிகிறது.
ான்றும் (அகத்திணை) கவிதை LOJų.
பற்றால் தோன்றும் (புறத்திணை) கவிதை மரபு.
மை; ஆட்சிச் சிறப்பு:முதலிய அகத்திணை சாராத ண்டாவது கவிதை மரபின் அடியாகவே புறநாநூற்றுப்
Sழ் இலக்கிய மரபிற் காணப்பட்ட பாடக் கையளிப்புப் ளப் பற்றிய அச்சொட்டான தகவல்களைத் தமிழ் டெக்கின்ற பாடல்களிலும் முந்நூறாவது பாடல்களில் *றன.
தகுந்த கருவியாக அமைவதனால் கிடைக்கின்ற ாற்றுச் சமூகத்தில் “மாடுபிடிச் சண்டை” யிலிருந்து Eகளாலும் போரூக்கம் மிகுந்து காணப்பட்டிருக்கிறது. மூக அமைப்பிலே போர் வன்மை மிக்க அரசனுக்கும் மிடையிலே இன்றியமையாத ஊடாட்டங்கள் பல
பாடல்கள் புலப்படுத்தி நிற்கின்றன.
மறை பற்றிய பல்வேறு சிந்தனைகள் காணப்பட்டாலும் இவ்வுறவைப் பற்றிப் புனிதப்படுத்தி “விதந்தோதும்’ த்திற்கும் இலக்கியத்திற்குமுள்ள இன்றியமையாத பின்னருங்கூட, சமூக அடிப்படைகளையும் யதார்த்த உள்ள பிணைப்பையும் முனைப்புறுத்தத் தவறுவது
35

Page 60
இத்தகைய ஆய்வுகளில் நிறைவினை ஏற்படுத்தா துயரங்களையும் நோக்காமல், சம்பந்தப்படாமல் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களும் குறிப்பிடு என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். பாடும் என்பதனைச் சூழ்நிலையோடு ஒட்டி நோக்கவேண் சமனற்ற வளர்ச்சிப் போக்குடையதும் இயற்ை வாழ்க்கையில் குலக்குழுத் தலைவர்கள் குறுநில இருந்திருக்கிறது. போரின் மூலமும் திறை மூலமு வைத்திருந்தனர். புலவர்கள் வறுமையோடு இருந்த இப்புலவர்களே புரவலர்களாகவும் இருந்திருக்கின்ற இளவேட்டனார், மதுரைப் பெருங்கொல்லனார் மு செல்வந்தர்களாகவும் வாழ்ந்திருக்கவேண்டும் என புலவர்கள் ‘புலமையையே’ தொழிலாகக் கொண் கிடைக்கும் வழிகள். அதிகமான புலவர்களுக்கே இருந்ததாகத் தெரிய வில்லை. சமூக மேலாதிக்கப் குழுமமே கலையை ஆற்றியதால்தான் இச்சமூகத் எம்மால் பெற்றக்கொள்ள முடியவில்லை. இந்த மற்றும் ஆற்றுப்படை நூல்கள் முதலானவை விரிவு
". முதிர்வினஸ்
பசந்த மேனியொ மருங்கில்கொண்
“ஆடுநனிமறந்த ஆம்பிபூப்பத் தேம் பாஅல் இன்மையி
என வரும் இப்பாடலடிகளின்படி "மூப்படைர் மெல்லுதலால் உலர்ந்த மார்புடன், மிக வருந்தி தின்று அழுக்கடைந்து கிழிந்த துணியுடன் விளங்கு அடுத்த பாடலில் அடுப்பிலே காளான் பூத்துவிட்டது
பால் காணாது அழஅதன் முகத்தைப் பார்த்துக்
கூறப்படுகின்றது. இவ்வாறாக 196, 210, 226, 275, பரிசில்கடா நிலைத்துறை, இயன்மொழித்துறை, 6 இவ்வறுமையின் சோகத்தைக் காண முடிகின்றது.
வறுமையிலிருந்த புலவன் தன் தேவையை நீ புகழ்ந்து பாடினான். மன்னன் அதில் மகிழ்ந்து புலவனானவன் ஆளும் வர்க்கத்தின் “புகழ் ஏந்தி’ கொண்டிருந்த புரவலனது நிர்வாகத் தேவையும், L படலாயின.
“யானே பெறுக அ அவனே பெறுக எ
என்ற நிலையிலேயே பெரும்பாலான உறவு முன
3

1. பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும, துன்ப இலக்கியங்கள் ஆக்குவதன் ஒவ்வாமைக்ளைப் வார். எனவே புலவன் கூறும் பொருள் என்ன புலவனும், பாடப்படும் வள்ளலும் எத்தகையோர் டும்.
கக்குக் கட்டுப்பட்டதுமான புறநானூற்றுச் சமூக )ன்னர்கள் முதலானோர் வாழ்க்கை உயர்வாகவே ஏராளமான பொற்குவைகளை இவர்கள் குவித்து ார்கள் என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. னர். கூலாவணிகன் சாத்தனார்; அறுவைவணிகள் தலிய அக்காலப், புலவர்களின் பெயர்கள் சிலர் எண்ணவைக்கிறது. ஆனால் பெரும் பாலான உருந்தனர். (புறம் 14). அதிக உபரி வருமானம் விறலியர் முதலான ஏனைய கலைஞர்களுக்கோ பெறாத பொருளாதார வலிமையற்ற இக்கலைஞர் துக் கலை மரபு பற்றிய நேரடியான தகவல்களை க் குழுமத்தின் வறுமை நிலையைப் புறநானூறு ாகச் சித்திரித்து நிற்கின்றன.
T uUITuqub
டு படர் அடவருந்தி
ட பல்குறுமாக்கள்’
(புறம் 159:5-7)
கோடு உயர் அடுப்பின் )புபசி உழவாப்
ன் தோலொடு திரங்கி”
(புறம் 164:1-3)
த என் தாயும்; பிள்ளைகள் பிசைந்து உண்ண க் கீரையின் இளந்தளிரை உப்பின்றி அவித்துத் ) என் இல்லாள் விரும்ப இங்கு வந்தேன் எனவும், து; பசியால் வருந்திய குழந்தை சுவைக்குந்தோறும் கண்ணீர் நிரம்ப நிற்பாள் என் மனைவி எனவும் 237, 373 முதலான பல பாடல்களில் பரிசுத்துறை, கெயறு நிலைத்துறை முதலான பல துறைகளில்
றைவு செய்வதற்காக தன்னைப் புகழ்ந்தவனைப்
புலவனை ஆதரித்தான். இந்நிலையிலேயே யாகவும் தொழிற்பட்டான். புதிதாக உருவாகிக் லவனது வாழ்வியற் தேவயும் இணைந்து நிறைவு
வன்தாள் நிழல் வாழ்க்கை ன்நாஇசை நுவறல். 99
(புறம் 379 : 1-2) ற ஏற்பட்டிருக்கின்றது.

Page 61
“போர்’ என்றதும் இன்றும் விதந்து கூறு நிலைமைகளையும்; அழிவுகளையும் சமூக ஏற்பு இப்புலவர்களது பாடல்கள் பல காணப்படுகின் இப்புலவர்கள் கொண்டிருந்தனர். மன்னனுக் அச்சமூகத்தில் வீரனே “சான்றோன்” எனவும் கற்பிக்கப்பட்டது. இந்த வீரசுவர்க்கத்தைக் குறிக் ஈடுபாடு கொள்ள வைப்பனவாயும், அங்கீகரிப்பன
“உயர்ந்தோர் உ மேலோர் உலக உயர்நிலை உ6 அரும்பெறல் உ தொய்யா உல வார உலகம் பெரும்பெயர் உ தேவர் உலகம்
என்ற இந்த மேனிலை உலகம் போரில் ஈடுபட்ட புறநானூற்றில் 241, 272 ஆம் பாடல்கள் போரை 6 புலவர் - மன்னர் தொடர்பு வலுப்பெற்றிருக்கின்ற
புல்வர் - மன்னர் உறவில் நட்பின் முதிர்ச்சி 6 அரச சபையிலே அமைச்சர்களாகச் செயற்பட்டு நம்பிக்கு பிசிராந்தையார் அறிவு கூறியதும் (புறம் இங்கு வகை மாதிரியாக எடுத்துக்காட்டக்கூடிய
உள்நோக்கம் கருதித் தொடங்கிய நட்பு கால உறவு நிலைகளையும் ஏற்படுத்தி யிருந்தமையை அதியமான் நெடுமானஞ்சி-ஒளவையார், குமணன் வென்ற பாண்டியன்-மாங்குடி மருதனார் முதலா அறிந்து கொள்ள முடிகிறது. புலவனைத் தன் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் சாவை எத பிசிராந்தையார் என்ற புலவருக்கும் தன்னருகே பிசிராந்தையார் வரமாட்டார் எனக்கூறியவர்க6ை இவர்களின் நட்பின் ஆத்மார்த்தத்தைப் புலப்படு
“பிசிரோன் என்பளன்உய செல்வக்காலை நிற்பினு அல்லற்காலை நில்லன்
(
“பிசிரோன்” என்பவன் உள்ளனன். என்னு யின் அவன். செல்வம் உள்ளபோது அவன் வராமல் நேரப் போகின்ற இந்நிலையில் இங்கு வராது வியற்கப்பாலது.
தம்மைப் பாதுகாத்த மன்னர் போரிலேயே இறந்த நிற்கும் புறநானூற்றின் கையறு நிலைப் பாடல்கள் தம் மீதி வாழ்க்கையில், ஆற்றாமைகளை நினைர்

) புறநானூற்றுச் சமூகத்தில் நடைபெற்ற போர் டைமையுடையதாகக் கொள்ளும்படி வேண்டுவதாக ாறன. அவ்வாறு வேண்டக்கூடிய தகுதியையும் காகப் போரில் இறப்பது சிறந்த செயலெனவும், கூறப்பட்டுள்ளது. வீரமரணத்திற்கு வீரசுவர்க்கம் கப் புலவன் கையாண்ட சொற்கள் போர்ச் செயலில் வாயும் அமைபவை.
லகம் கம்
ᏁᏍᎴᏏlb
உலகம் கம்
லகம்
ஒருவனுக்கே சாத்தியப்படும் என்கிறது புறநானூறு. ாற்புடைமையாக்குவன. இந்த நிலைப்பாடு கருதியும் து எனலாம்.
ஏற்பட்ட நிலையிலேயே புலவ்ர்கள் பலர் மன்னனது ள்ளனர் எனக் கருதலாம். பாண்டியன் அறிவுடை 184) கோவூர்க்கிழார் தூது செல்வதும் (புறம் 45)
60.
ஞ் செல்லச் செல்ல உணர்வு பூர்வமான நெருங்கிய ப பாரி-கபிலர் கோப்பெருஞ் சோழன்-பொத்தியார், - பெருஞ்சித்திரனார், தலையாலனங் கானத்துச்செரு னவர் களுக்கிடையிலான உறவு நிலைகள் மூலம் னுயிர்க்குச் சமனாக எண்ணிய புரவலனும் உண்டு. நிர்நோக்கி வடக்கிருந்த காலத்தில் தன் நண்பரான
இடம் ஒதுக்குமாறு ஏனைய சான்றோர்க்கு கூற, ா நோக்கி கோப்பெருஞ்சோழன் பாடியதான பாடல் த்துகின்றது.
பிர் ஒம்புநனே
பம்
மன்னே.
pub 215: 7-9)
99.
ரெத் தன்னுயிராக எண்ணிப்பேனும் கலந்த நட்பினன் நின்றிருக்கலாம். ஆனால் என் உயிர்க்கு இன்னாமை அவன் நிற்கமாட்டான் என்ற திடசிந்தனை இங்கு
போது அவர்களை இழந்த சோகத்தை வெளிப்படுத்தி மிகவும் உருக்கமானவை. புரவலனை இழந்த பின் துருகுவதும் (புறம் 236); மன்னர் இறந்து பட்டதால்
37

Page 62
செய்தி பொய்த்துவிடக் கூடாதே என்று நப்பாசை வேட்டைப் பொருட்களை யெல்லாம் எமக்களித்துவி தானே கொள்வானே, அவன் இன்று இல்லைே இழப்பால் எல்லோருமே நல்லணி துறந்து நிற்கும் பூத்தாய்? எனப் பிதற்றிப் புலம்புவதுமான (புறம் பாடுவதும் பரிசில் பெறுவதுமான கடமை இவர்களுக்கிடையிலான உண்மையான நட்பினை
புறநானூற்றுப் புலவர் - மன்னர் உறவில் நட்புரிை சாட்சியப்படுத்தி நிற்பினும் சில சமயங்களில் நிலவியிருந்ததை புற நானுற்றின் சில செய்யுட்கள் ட பாடல்கள் சொற்பமாகவே காணப்படுகின்றன. இன்னொருவரிடத்தில் வெறுப்போடும் இருந்திரு பரிசில் நீடித்த போதும் எனப் பல சந்தர்ப்பங்களி
முறையற்ற விதத்திலே பரிசில் வழங்க முன்வந்த வெறுத்திருக்கின்றார்.
‘காணாது ஈர்த்த இப்பொருட்தயானோர் வாணி ஆயினும் இனிது அவர் துணை அளவு அறிந்து ந
(புறம் 208 6 - 9)
இவ்வாறு தம்மை மதித்து அன்புடன் நிராகரித்திருக்கின்றான். மூவேந்தரே எனினும் தம்6 (புறம் 205) என்கிறான் பிறிதொரு புலவன்.
பரிசில் வழங்காது காலந்தாழ்த்துதல் பரிசில் நீ தெரிகின்றது. இருப்போரை மெலிவித்தும், பரிசில் நொந்து சென்றுள்ளனர். (புறம் 196) இங்கு இல்ல சென்றாலும் வழி கிடைக்காமல் போய்விடாது என் 206). ஒருவனால் ஆதரிக்கப்படாதபோது ‘பெரிே குறைத்திருப்பதான இந்தச் சந்தர்ப்பங்கள் (p56)T6 விரிசல்கள் நிலவி இருக்கின்றன.
இவ்வாறு நாம் நோக்குகின்றபோது வறுமை
பிரச்சினையாக இருந்தமையால் பொருளாதார உயிர்களைப் பாதுகாப்பதே தலையாய கடப்பாடு அமைப்பிலே, மன்னனிடமிருந்து பொருட் செல்வ இருந்தது. மன்னன் இத்தேவையை நிறைவு பரிமாணங்கள் ஏற்பட்டிருந்தமையைப் புறநானூற்று இயல்பாகவே ஏற்பட்டிருக்கலாம் போலத் தோன் ஆழ்ந்த நட்பையும் சாதாரண நட்பையும்; மு. படிநிலைகளைக் காணமுடிகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இவ் உறவுகள் அதாவது நல்லுறவு நிலவிய சந்தர்ப்பங்களில் மன் பிரச்சாரக் கருவியாய், தூதுவனாய், குடும்ப உ கொண்டிருக்கின்றனர். மாறாக வெறுத்தொதுக்கு

கொள்வதும் (புறம் 234); எலும்பும் தசையுமுடைய ட்டு, அம்பும் வேலும் கொண்டு போர்க்களமெல்லாம் ய என்று அவலமுறுவதும் (புறம் 235) மன்னன் இவ்வேளையிலே முல்லைப் பூவே நீ மட்டும் ஏன் 242), புறநானூற்றின் பல பாடல்கள் வெறுமனே யுணர்வினை மட்டும் சுட்டி நிற்கவில்லை. யும் உணர்த்தி நிற்கிறதெனலாம்.
ம நிலவியதை மேலே காட்டியவாறு பல பாடல்கள் இவர்களிடையே விரிசல்களும், முரண்புாடுகளும் |லப்படுத்தி நிற்கின்றன. ஒப்பீட்டு ரீதியில் இத்தகைய புரவலர்களில் சிலர் சிலரிடத்தில் அன்போடும் க்கின்றனர். புலவனை மன்னன் மதிக்காதபோதும் ஸ் இவ்விரிசல்கள் தெரிகின்றன.
அதியமான் நெடுமானஞ்சியைப் பெருஞ்சித்திரனார்
கப் பரிசிலன் அல்லேன் பேணித்தினை அனைத்து ல்கினர் விடினே’
உபசரிக்கப்படாதபோது பரிசிலைப் புலவன் மை மதியாது கொடுக்கும் பரிசிலை யாம் வேண்டோம்
டித்தல் முதலான சந்தர்ப்பங்களிலும் இம்முரண்பாடு வழங்காமலும் இருந்தபோது புலவரிற் சிலர் மனம் Uாவிட்டாலும் பரந்து விரிந்த இவ் உலகிலே எங்கு ற துன்புறு மனத்தோடு சென்றிருக்கின்றனர். (புறம் த உலகம்’ பேணுநள் பலரே” என மனச்சுமையைக் ன பல சந்தர்ப்பங்களில் புலவர் - மன்னர்களிடையே
என்பது பெரும்பான்மைப் புலவர்களுக்கு பெரும் பலத்தோடு உலகிலே தோன்றி நிலைபெற்றிருந்த, என்ற கோட்பாடு நிலவிய (புறம் 210) இச்சமூக பங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டிய ஒரு தேவை படுத்தும் தன்மை காரணமாக பல்வேறு உறவுப் றுப் பாடல்கள் புலப்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பும் றுகிறது. இந்நிலையில் இவ்விரு பாலாரிடையேயும் கமன் பார்க்கும் நிலைமைகளையும் எனப் பல
ரில் பாரியதொரு அசமந்தப் போக்குத் தென்படுகிறது. ானனுக்குப் புலவர் உயிர் நண்பனாய், அமைச்சனாய், உறவினராய் எனப் பல பரிமாணங்களில் தொடர்பு நம் விரிசல் நிறைந்த சந்தர்ப்பங்களில் இகழ்ச்சி
38

Page 63
பாடுவானாய் நச்சரிப்புச் செய்பவனாய், தாள்பணிந் தன்னைத்தானே நொந்து கொள்பவனாய் என இ
எனவே புறநானூற்றில் புலவர் மன்னர் உறவு எ அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதைத் தெள பொதுவாக உறவுமுறைபற்றி எல்லோராலும் வித உண்மையான அர்த்தத்தைப் புரியவைக்கிறது என
அடிக்குறிப்புக்கள்
1. கைலாசபதி, க, சமூகவியலும் இலக்கிய 2. வேலுப்பிள்ளை, ஆ, தமிழ் இலக்கியத்தி 3. மேற்படி ப 29 4. கைலாசபதி, க. பண்டைத்தமிழர் வாழ்வ
米米米米米米米米米
米米>k米冰米米米米米米米米水米米米米米米米冰 米米米米米米米米来来米米米米米状
உலகம் இருள நிகர்த்தது, மானிடர ஆங்குவழிச் செல்லுகி ஒப்பாவோம். மெய்யறிவு ஞானமில்லாதவன் வ செல்லுகின்ற மூடை வேண்டாதனவற்றுக்கெ ஞானவான் உண்மையுை தினால் கரும நிகழ்ச் உள்ளவாறு உணர்ந்து மில்லை, அஞ்சவரு திடசித்தத்தோடு வாழ் தொலைப்பான்.
(நிகள்த்தது - ஒத்
N

து இரய்பவனாய், கோபம் கொண்டு வெறுப்பவனாய்,
னொரு பரிமாணத்தையும் காட்டி நிற்கின்றனர்
ன்பது சமூக பொருளாதார வாழ்வியற் தேவையை வாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்த அடிப்படை நது கற்பிக்கும் அர்த்தத்தை மறுதலித்து உறவின் T6)TO.
மும், 1979, சென்னை, ப. 26 ல்ெ காலமும் கருத்தும், 1969, சென்னை, ப 25.
ம் வழிபாடும் 1966, சென்னை, ப. 56
米米米米米米米米米米
米米米米米米米米米米米米米冰米米米米米米米米冰
:冰冰冰米米米米米米米米米米米米米
டர்ந்த கானகத்தை ாகிய நாமெல்லாம் ன்ெற பிரயாணிகளுக்கு | தீபத்தை நிகள்த்தது. விளக்கில்லாது வழிச் }னப் போல அஞ்ச கல்லாம் அஞ்சுவான். ர்வாகிய ஒளிவிளக்கத் சிகளின் காரணங்களை “அஞ்சுவயாதொன்று வதுமில்லை’ என்று க்கையாகிய வழியைத்
தது)
الص=

Page 64
கல்வி என்பது அபிவிருத்திக்கான திறவுே வாழ்க்கைக்கான அடிப்படை என்பதுடன் அது அ உரிமை என்பது ஐக்கிய நாடுகள் அடிப்படை மனி
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அ பாகுபாடும் அற்றவகையில் யாவரும் கல்வி பெறு
இலங்கை யாவருக்கும் கல்வியை உறுதி கொண்டுள்ளது. சுதந்திரம் பெறுவதற்கு முன்6ை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற வேணவாவுட கன்னங்கரா அவர்களின் முனைப்புக்கள் மூலமா அரிவரியில் இருந்து சர்வகலாசாலை வரை இல நிகழ்வொன்றாகும். தீட்சண்யம் மிக்க நாட்டுப்புற ம தீட்டப்பெற்ற திட்டமாகத் தீவு முழுவதும் 54 ம கல்விக்கான புலமைப் பரிசில்களும் வழங்கப்ட இலவசமதிய உணவு, இலவசப் பாடநூல் 6 மாணவர்களுக்கான பஸ்பிரயாண மானியம் என்பன கல்வி அமைச்சு அவ்வப்போது அறிமுகப்படுத்தி
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள க 14 வயதினரான பிள்ளைகளின் பாடசாலைப் பங்குப
அட்டவணை 1
பாடசாலைப் பங்குபற்றல் வீதம்
(பால் ரீதியாக) - 1963, 1981, 1991, 2001
ஆண்டு 1963 1981
ஆண் 76.7 83.7
பெண் 72.0 83.6
மொத்தம் 74.4 83.7
மூலம்: குடிசனப் புள்ளிவிபர அறிக்கைகள் - பாடசாலைக் குடித்தொகை மதிப்பீடு - 1991

யாவருக்கும் கல்வி
முத்து சிவஞானம் யாவருக்கும் கல்வி தேசிய இணைப்பாளரும் ஆலோசகரும், கல்வி அமைச்சு,
"இசுருபாய”
பத்தரமுல்லை.
கால், அமைதியும் ஆக்கத்திறனும் அமைந்த னைவருக்கும் சமத்துவமாய்க் கிட்டவேண்டிய ஓர் த உரிமைகள் உறுப்புரையில் பொறிக்கப்பட்டுள்ளது.
அரசியல் யாப்பில் 27வது உறுப்புரையிலும் எவ்வித |வதற்கான உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது.
ப்படுத்துவதில் ஒரு நீண்டகால வரலாற்றைக் 7ய காலப்பகுதியில் இருந்தே யாவருக்கும் கல்வி டன் இலங்கையில் இலவசக் கல்வியின் பிதாமகன் க பல செயற்றிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 0வசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமை மைல்கல் ாணவர்களின் கல்வி மேட்டிமைக்குக் கைகொடுக்கத் த்திய கல்லூரிகள் நிறுவப்பட்டு மாணவர்களுக்குக் Iட்டன. இதைத் தொடர்ந்து சுயமொழிக்கல்வி, விநியோகம் (1981), இலவசச் சீருடை (1989) T யாவருக்கும் கல்வியை உறுதிப்படுத்துவதற்காகக் இன்றும் அமுலில் உள்ள சில திட்டங்களாகும்.
ட்டாயக் கல்விப் பிரமாணங்களுக்குரிய 5 தொடக்கம் ற்றுதல் வீதம் பின்வருமாறு அதிகரித்து வந்துள்ளது.
1991 2001
88.3
87.4
87.9
1963, 1981, 2001

Page 65
ஏனைய தெற்காசியநாடுகளுடன் ஒப்பிடும்போ இலங்கை (மாலைதீவு நீங்கலாக) ஒப்பீட்டு உய நிலை என்னும் யுனிசெய் அறிக்கையின்படி இது
அட்டவணை 2
மாணவர் L
ஆரம்பக் கல்வி இந்தியா 71% இலங்கை 97% பாகிஸ்தான் 65% நேபாளம் 72%
பூட்டான் 53% பங்காளதேஷ் 77% மாலைதீவு 99%
மேற்சொன்ன யுனிசெய் அறிக்கையின்படி இன்று பிள்ளைகளுள் 121 மில்லியன் பிள்ளைகள் பாடசா6 சிறுமிகளாவர்.
அடிப்படைக்கல்வி, தொடருறு கல்வி, வாழ்நாள் யாவருக்கும் கல்வி என்பது இன்று உலகளாவிய திட்டத்தில் ‘சர்வசன ஆரம்பக் கல்வி வலியுறு: நகரில் நடைபெற்ற யாவருக்கும் கல்விக்கான மு தேவைகளை நிறைவு செய்தல் யாவருக்கும் கல் இந்தப் பிரகடனம் ஆறு பேற்றிலக்குகளை (goa பின்னர் 2000ஆம் ஆண்டில் செனிகல் நாட்டில் 1990இல் மேற்கொள்ளப்பட்ட யாவருக்கும் கல்: (Vision) மீளவலியுறுத்தியதுடன் யாவருக்கும் கல்வி தெளிவாகக் குறிப்பிட்டது. இப்பிரகடனத்தின் ச பிரசைக்கும் கல்விச் சாதனையை எட்டச் செய்த
கல்வித் திட்டமிடுவோர், நடைமுறைப்படுத்துவே கொள்வதற்கு உதவும் வகையில் இப்பேற்றில விதந்துரைக்கப்பட்ட உத்திகளையும் சுருக்கமாகத்
முதலாவது பேற்றிலக்கு முன்பிள்ளைப்பரா மேம்படுத்துதலை வேண்டி நிற்கின்றது. இது கெடு பிரதிகூலமான சூழ்நிலைகளில் உள்ள பிள்ளைகள்ம் கொண்டுள்ளது.
9 பிறப்பிலிருந்து ஐந்து வயது வரைய
உசார்ானவர்களாகவும் பாதுகாப்பு கூடியவர்களாகவும் ஆகுவதற்குகந்த ச பேணி வளர்த்தலையே முன்பிள்ளைப் ப
O GöbT5†Jüo, GLjTGTäG5, GöbbÜD 6T6öIL16) DDL உந்தக்கூடியதான பிள்ளைகளின் தேை பல்பரிமாண அணுகுமுறை சுட்டி நிற்கின்

து யாவருக்கும் கல்வியை உறுதிப்படுத்துவதில் ரநிலையில் உள்ளது. 2004இல் உலகச் சிறுவர் ன்வருமாறு உள்ளது.
ங்குபற்றல் வீதம்
இடைநிலைக் கல்வி
48%
72%
24%
50%
46%
55%
உலகில் ஆரம்பக்கல்வி வயதெல்லையில் உள்ள லை செல்லாதுள்ளனர். இவர்களுள் 65 மில்லியன்
கல்வி ஆகிய கோட்பாடுகளுடன் பின்னிப்பிணைந்து கவனத்தை ஈர்த்துள்ளது. 1960இல், கராச்சித் த்தப்பட்டது. 1990இல் தாய்லாந்தின் ஜொம்ரியன் )தலாவது உலக மாநாடு 'அடிப்படைக் கல்வித் >விக்கான உலகப் பிரகடனத்தை மேற்கொண்டது ls)க் கொண்டிருந்தது. ஒரு தசாய்தக் கழிவின் டகார் (Dakar) நகரில் உலகக் கல்வி மாநாடு விக்கான உலகப் பிரகடனத்தின் தூரதரிசனத்தை க்கான ஆறு பேற்றிலக்குகளை காலவரையறையுடன் ராம்சம் ஒவ்வொரு சமூகத்திலுமுள்ள ஒவ்வொரு ல் ஆகும்.
ார் ஒரு செயற்பாட்டுச் சட்டகத்தை உருவாக்கிக் க்குகள் ஆறினையும் அவற்றை அடைவதற்கு
தெளிவுபடுத்தல் பொருத்தமுடையதாகும்.
பப் பராமரிப்பையும் கல்வியையும் விரிவாக்கி நியான தாக்கங்களுக்கு இலகுவில் ஆட்படக்கூடிய து பல்பரிமாணய் பாங்கில் விசேட கவனக் குவிப்பைக்
ன பிள்ளைகள் ஆரோக்கியமானவர்களாகவும், னர்வு உள்ளவர்களாகவும் கசடறக் கற்கக் ாப்பும் கவனிப்பும் உள்ள சூழலில் பிள்ளைகளைப் ாய பராமரிப்பும் கல்வியும் கருதுகின்றது.
ன் மதியாற்றலையும் உள -சமூக அபிவிருத்தியையும் வகள் யாவற்றிலும் அவதானம் செலுத்துதலையே Dġibll
1.

Page 66
இரண்டாவது இலக்குப்பேறு 2015ஆம் ஆண்ட6 ஆரம்பக் கல்வியில் இணைந்து அதனைய் பூர்த்தி ெ மிகுந்ததாக இருக்க வேண்டுமென்பதுடன் சிறுமிக சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள் என்போர் எதிர்பார்க்கப்படுகிறது.
சகல இளம்வயதினரும் வளர்ந்தோர்களும்
என்பனவற்றை சமத்துவமான முறையில் எய்துவதற்
முன்னிறுத்துகின்றது. ஒவ்வொரு இளம்வயதின செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படுதல் வேண்டும்.
பயனுள்ள அறிவு பொருத்தமான விழுமியங்கள், மனப்பாங் வேலை செய்தலுக்கான இயல்தகவு சமூகத்தில் முழுமையாகப் பங்குபற்றுதல் தங்களுடைய சொந்த வாழ்க்கையை த
தொடர்ந்து கற்றல்
நான்காவது இலக்குப்பேறு வளர்ந்தோர் எழுத்த கல்வி தொடருறு கல்வி என்பன சமத்துவமான செலுத்துகிறது. வளர்ந்தோர் கல்வியும் தொட செய்யப்பட்டு தேசிய கல்வியின் பிரதான போச் ஒன்றிணைக்கப்படுதல் வேண்டும். வாழ்நாள் கல் ஆரோக்கியமான பிரஜைத்தன்மை, மேம்பட்ட வாழ் வழிவகுக்கும் வளர்ந்தோர் எழுத்தறிவுத் திட்டங்க
2005ஆம் ஆண்டளவில் ஆரம்பக் கல்வியிலும் முழுக்கல்வித்துறையிலும் பால் சமமின்மையை நீ எதிர்பார்க்கின்றது. இதனை அடைவதற்குப் பின்ல
9 பாதுகாப்பானதும் பால்பற்றி உணர்வு பூ
9 மனப்பாங்கு, விழுமியங்கள், நடத்தை எ
9 பால்பற்றிய அக்கறைக்குரிய விடயங்கள்
போக்கில் உள்வாங்கப்படுதல்
ஆறாவது இலக்குப்பேறு கல்விக் குணநலனில் தன்மையை உறுதிசெய்யும் வகையில் மேம்படுத்த திறன்கள் என்பவற்றில் கணிப்புக்குரியதும் அளவு சாதிக்கப்பட்டு, கற்பவர்களின் வாழ்க்கையை உயிர்மையமாகும். மாணவர்கள் எவற்றைக் கற்று வரையறுத்து அவற்றை நன்கு கற்கச்செய்து அவர் கணிப்பீடு செய்தல் வேண்டும்.
இந்த முக்கியமான இலக்குப் பேற்றினை அை
9 ஆரோக்கியமும் நல்லபோஷாக்கும் உ 9 நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் 9 செயல் துடிப்புள்ள கற்றல் உத்திகள்

வில் சகல பிள்ளைகளும் இலவசமான கட்டாய ய்வதை வலியுறுத்துகின்றது. இக்கல்வி குணநலன் ா, கஷ்டமான சூழ்நிலையில் உள்ள பிள்ளைகள், து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும்
பொருத்தமான கற்றல் வாழ்க்கைத் திறன்கள் த வழி ஏற்படுத்துவதை மூன்றாவது இலக்குப்பேறு நம் வளர்ந்தோரும் பின்வருவனவற்றை விருத்தி
]கள், திறன்கள்
ாமே பொறுப்புடன் நடாத்துதல்
Sவு விருத்தி, சகல வளர்ந்தோருக்கும் அடிப்படைக் முறையில் கிட்டச் செய்தல் என்பவற்றில் கவனம் ருறு கல்வியும் பல்துறைசார்ந்ததாக விரிவாக்கம் குடனும் வறுமைத் தணிப்பு உபாயங்களுடனும் வி, தொடர்ந்து பேணத்தக்க சீவனோபாயம், நல்ல )க்கைத்தரம், பால் சம தன்மை என்பவற்றை எய்த 5ள் செயற்படுத்தப்பட வேண்டும்.
இடைநிலைக் கல்வியிலும் 2015ஆம் ஆண்டளவில் க்குதல் வேண்டும் என ஐந்தாவது இலக்குப்பேறு பரும் நிலைமைகள் உருவாக்கப்படுதல் வேண்டும்.
ரவமானதுமான கற்றல் சூழ்நிலை ன்பனவற்றில் ஏற்புடைய மாற்றம் கல்வித்துறை பூராவும் ஊடுபாவும் வண்ணம் பிரதான
ா ஒவ்வொரு அம்சத்தையும் அவற்றின் உன்னதத் விழைகின்றது. எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்க்கைத் டத்தக்கதுமான கற்றல் விளைவுகள் சகலராலும் வளம்படுத்தும் குணநலன் தன்மையே கல்வியின் நிபுணத்துவம் பெறவேண்டும் என்பதைத் தெளிவாக ளின் முன்னேற்றத்தை சரியாகவும் தொடர்ச்சியாகவும்
வதற்குப் பின்வருவன இன்றியமையாதனவாம்.
ர்ள ஊக்குதல் பெற்ற மாணவர்கள்
42

Page 67
போதுமான வசதிகளும் கற்றல் சாதனங் பொருத்தமான கலைத்திட்டம் உகந்த கற்றல் சூழல் மாணவர்களுடைய கற்றல் விளைவுகளில்
கணிப்பீடுகள் காட்டும் அம்சங்களை திட்டங்கள்
 ேபங்குபற்றல் தன்மையுடைய கல்வி ஆ6 உள்ளூர் சமுகத்தினதும் கலாசாரத்தின
இலங்கைக் கல்வி அமைச்சு யாவருக்கும் கe மேற்கொண்டதுடன் யாவருக்கும் கல்விக்கான தயாரித்தது. யாவருக்கும் கல்வி இலக்குப் பேறு இதனோடு தொடர்புபட்ட நிகழ்ச்சித் திட்டங்கை வெளிநாட்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறைப்படுத்துதல் வேண்டும். இதன்மூலம் சரியான நெறியில் கிட்டுதல் பற்றிய கூரிய க வழியேற்படும்.
இந்த அணுகுமுறையைச் சாத்தியப்படுத்தும் வ கண்காணிப்புப் பிரிவு ஒன்றை யுனிசெய் அனுசரணைய கல்விக்கான தேசிய நெறிப்படுத்தும் குழுவொன்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களோடு தொடர்புடைய அ முக்கிய தன்னார்வ நிறுவனங்களினதும் பிரதிநிதிச
யாவருக்கும் கல்வி இலக்குப்பேறுகளை அடை நடைமுறைப்படுத்தவும், கண்காணிக்கவும், மீளாய்வு எதிர்பார்க்கப்படுகின்றது.
米米米米
米米水冰冰米米米米米米米米米>
米米米米米米米米:
சமநிலையோடு றுங்கால் எடுத்த கரு தொடர்ந்து செய்தல் கற்றுகுழியும் என்றபடி ( னாலே செயற்கரியவற் தற்கு ஐயமில்லை.
6-CM 4658

வ்களும்
ன் சரியான கணிப்பீடும் பொருத்தமான பின்னூட்டலும்
அடிப்படையாகக் கொண்ட கற்றல் செயற்பாட்டுத்
ருகையும் முகாமையும்
தும் ஈடுபாட்டைக் கெளரவித்தல்
ல்வி பற்றிய ஒரு மதிப்பீட்டை 2000ஆம் ஆண்டில் மூன்றாண்டுத் திட்டமொன்றையும் (2002 - 2004) களை அடைவதற்கு கல்வி அமைச்சு மட்டுமன்றி )ள நடைமுறைப்படுத்தும் ஏனைய அமைச்சுக்கள், , மாகாண சபைகள் என்பன இவ்விலக்குப் பேறுகளை முறையில் நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைத்து அரிய வளங்களின் சீரிய பயன்பாடும் இலக்குகளை ண்காணிப்பும் வீரியமான ஒருங்கிசைவும் வசப்பட
கையில் கல்வி அமைச்சு யாவருக்கும் கல்விக்கான புடன் ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் யாவருக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் யாவருக்கும் மைச்சுக்களினதும், வெளிநாட்டு நிறுவனங்களினதும், 5ள் அங்கம் வகிக்கின்றனர்.
-வதற்கு ஏற்புடைய திட்டங்களை வடிவமைக்கவும், செய்யவும் இந்த ஏற்பாடுகள் உறுதுண்ை புரியுமென
米米米米米米米
K米米米米米米米米米米米米米米米米米
K冰米米米米米米米米米冰
கூடிநின்று கருமமியற் மத்தை இடைவிடாது வேண்டும். எறும்பூரக் இடைவிடாத முயற்சியி றைச் செய்யலாமென்ப
43

Page 68
இசையென்றால் மனதை இசையவைப்பது என் உயிரினங்களையும் தன்பால் கவர்ந்து இழுப்பது இ வாழ்க்கை முடிவில் ஒப்பாரி வரை தம் வாழ்க்கை கலந்தது இசை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாட ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்தவல்லன.
கள்நாடக இசையில் தனி அழகு வாய்ந்த அம்சம் கணக்கிட முடியாது. ஒவ்வொரு இராகத்திற்கும் செய்யும் போது அதன் சாயலைக் கொண்டு அது எ6 உரித்தான விடயமாகும். ஒவ்வொரு இராகத்திற்கு செய்யும் போது இராகத்தின் பாதாதிகேசம் வரை
மனிதனுடைய உணர்வுகளை இராகங்களின் { போது ஒவ்வொரு ஸ்வரங்களும் உணர்வை வெளிப் ரிஷபத்தை அழுத்திப் பிடிக்கும் போதும் கானடா இராகத்தில் தைவத்தை மீண்டும் மீண்டும் பா( அதேசமயம் அடாணா இராகத்திலேயே தைவதத்ை ரஸம் வெளிப்படுத்தப்படுகிறது.
தமிழ் இலக்கியங்களில் இரஸம் அல்லது உ6 ஆரம்பத்தில் 8 இரஸங்களே குறிப்பிடப்பட்டிருந்த வீரம், அற்புதம், பீபத்ஸம், பயானகம் என்பவாகும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பரதர் தன் நூல உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டது எனக் குறிப் ஆராயப்பட்டுள்ளது. ஆயினும் பிற்காலத்தில் சா
பண்டைய காலத்தில் இவ் ஒன்பது இரஸங்க பண்டைய இசை நூல்களில் சய்த ஸ்வரங்களு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அற்புதம், வீரம்
ரெளத்திரம், ஹாஸ்யம் rw சாந்தம்
சிருங்காரம்
பீபத்ஸ்யம்
r கருணை
பயானகம்

இராகங்களும் உணர்வுகளும்
மீரா வில்லவராயர் பிரதம செயற்றிட்ட அதிகாரி தேசிய கல்வி நிறுவகம்,
ԼՈ5Մd5LԶ.
ாறு பொருள். இறைவனின் பிரதிபிம்பங்களான சகல சை. வாழ்வின் ஆரம்பத்தில் தாலாட்டில் தொடங்கி யின் ஒவ்வொரு நிலையிலும் நம்முடன் இரண்டறக் டப்படும் இசை அல்லது பாடல்களில் இராகங்கள்
இராகங்களாகும். இராகங்களின் எண்ணிக்கையைக் ஒவ்வொரு சாயல் உண்டு. இராக ஆலாபனை ன்ன இராகம் என்று கண்டுபிடிப்பது இசைக்கலைக்கே ம் ஒவ்வொரு தேவதை உண்டு. இராக ஆலாபனை வர்ணிப்பது போல் ஆலாபனை செய்ய வேண்டும்.
மூலம் வெளிப்படுத்தலாம். இராகங்களைப் பாடும் படுத்தவல்லன. உதாரணமாக, ஸஹானா இராகத்தில் இராகத்தில் ‘ரிபகா’ என்ற பிரயோகமும் அடாணா நிம்போதும் கருணாரஸம் வெளிப்படுத்தப்படுகிறது. தை நிஷாதத்துடன் சேர்த்துப் பாடும் போது ரெளத்திர
1ணர்விற்கு சுவை என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. நன. சிருங்காரம, ஹாஸ்யம், ரெளத்திரம், கருணை, ). நீண்ட நாட்களாக சாந்திரஸம் ஒரு இரஸமாக ாகிய பரத சாஸ்திரத்தில் சாந்த இரஸம் எல்லா பிடுகிறார். இந்நூலில் ரஸக்கோட்பாடு விரிவாக ந்தரஸமும் சேர்க்கப்பட்டு நவரஸங்களாயின.
ளும் 22 சுருதிகளும் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளன. ம் பின்வரும் உணர்வுகளை வெளிப்படுத்தவல்லன
44

Page 69
அவ்வாறே நிறங்களும் வெவ்வேறு உணர்வுகை
கடும் நீலம் - சிருங்காரம் வெள்ளை --- ஹாஸ்யம், சாந்தம் சாம்பல் - கருணை
சிவப்பு - ரெளத்திரம் கறுப்பு - பயாளகம்
நீலம் - பீபத்ஸ்யம் மஞ்சள் - அற்புதம்
இராகங்கள் வெளிப்படுத்தம் உணர்வுகளின் அடி பாட வேண்டும் என்று முறைப்படுத்தியவள் சாரங்க
1.
8.
விடியற்காலையில் பாட உகந்த இராக கலகட, வலசி, தேசாவரி, இவ்விராகங் இராகங்களென்றும் பிரபாத் இராகங்களெ சய்தபிரபாத் இராகங்களென்று அழைப்பு
காலையில் அல்லது ஸர்யோதத்திற்கு கேதாரம், தன்யாஸி.
முற்பகலில் பாடவேண்டிய இராகங்கள்
மத்தியானத்தில் பாடவேண்டிய இராக பிருந்தாவன ஸாரங்கா, புஷ்பலதிக
பிற்பகலில் பாடவேண்டிய இராகங்கள்
மாலையில் பாடவேண்டிய இராகங்கள்
அஸ்தமன நேரத்தில் பாடவேண்டிய இ
இரவில் பாடவேண்டிய இராகங்கள் -
கானகாலத்திற்கேற்ப இராகங்களை வகுக்கும் மு
பின்பற்றப்படுகிறது.
பிரகாரம் (3.
1. மு.ப. 6 - மு.ப. 9 உஷத்கால 2. Մ).L. 9 - ԱՔ.Ա. 12 பிரபாத் (மு 3. பிய, 12 - பி. 3 பூர்வாங்க ( 4. பிய, 3 - பிப. 6 பூர்வஸந்தி 5. பி.ப. 6 - பிய, 9 ஸந்தியாகா 6. இரவு 6 - இரவு 12 பூர்வாராத்த 7. இரவு 12 - மு.ப. 3 அய்ரராத்தி 8. (p.J. 3 - (p.U. 6 பிரஹ்மவே6
ஹிந்துஸ்தானி இசையில் சுத்த மத்திமத்தை மத்திமத்தை எடுத்துக் கொள்ளும் இராகங்கள்

ளப் பிரதிபலிக்கின்றன எனக் கூறப்படுகின்றது.
ய்படையில் இன்ன இராகங்கள் இன்ன நேரத்தில் கதேவர்.
வ்கள் - பூபாளம், ரேவகுப்தி, மலயமாருதம், பெளனி, களை பூர்வஸர்யோதய இராகங்களென்றும் உதய
ன்றும் அழைப்பதுண்டு. இவ்வேழு இராகங்களையும் jT.
தப் பின் LITL வேண்டிய இராகங்கள் - பிலஹாரி,
- அஸாவேரி, ஸாவேரி, தேவமனோஹரி,
5ங்கள் - றுநீ இராகம், மணிரங்கு, மத்தியமாவதி,
முகாரி, ᎶᏞléᏏ60ᎧL_
- கல்யாணி, வஸந்தா
இராகங்கள் - நாட்டைக் குறிஞ்சி, பூர்விகல்யாணி,
கேதாரகெளளை, நீலாம்பரி.
றை, பாடும் முறை இன்றும் ஹிந்துஸ்தானி இசையில்
நரம் இராகங்கள்
ம் (காலை) கல்யாண், பிலாவல் ற்பகல்) பைரவி, தோடி, ஆஸாவரி பிற்பகல்) காபி, தோடி ப (முன்மாலை) பூர்வி, மார்வா லம் (பின்மாலை) கல்யாணி, பி லாவல் கிரி (முன்இரவு) கமாஜ், காபி ரி (பின்இரவு) ஆஸாவேரி
0ள (விடியற்காலை) பூர்வி, மார்வா, பைரவி
எடுத்துக்கொள்ளும் இராகங்கள் பகலிலும் தீவ்ர இரவிலும் பாட உகந்தது எனக் கொள்ளப்படுகிறது.
45

Page 70
ஹிந்துஸ்தானி இசையில் நேரத்திற்கேற்ப மட்டுமல் fகங்கள் பருவகாலங்களுக்கேற்பவும் வகுக்கப்ட
பருவகாலம் இராகம்
1. (885T6OL பைரவ் 2. LOT fl மேக் 3. இலையுதிர் பஞ்சம 4. முன்பனி நாட்டை நாராயண 5. கூதிர் ரீ 6. வசந்தம் வசந்த
ஹிந்துஸ்தானி இசையில், பஹார், வஸந்த் இராக மழைக்காலத்திலும் பாடுவதற்கேற்றதாகக் கூறப்படு பி. 16 ஆம் நூ) இராகங்களின் உணர்வை வெளிப் வரையறுக்கப்பட்டன. நாரதரது சங்கீத மகரந்தம் ராகா, ராகினி என்று வகைப்படுத்தப்பட்டன. ராகா போன்ற உணர்வகள் வெளிப்படுத்தப்படும். உ-ம் நட்நாராயணி, ராகினி பெண் இராகமாகும். 'அன்பு, து உ-ம் வஸந்தா, மாளவறி ஆஸாவேரி போன்றன. ஏ (ஆண் இராகங்களும்) ஒவ்வொரு ராகாக்களு வகுக்கப்பட்டுள்ளன. இவற்றைவிட புத்திர இராகங்க இவ் ராகா, ராகினி வகுப்புமுறை விஞ்ஞான பூர்வப
கள்நாடக இசையில் தோடி, மோகனம் போ6 ஸ்வரங்களாகும். அத்தகைய இராகங்கள் மூன்றி சாஹித்தியங்களின் பொருளுக்கேற்ற வகையில் இர பொறுப்பாகும். பாடல்களின் பொருளுக்கேற்ப இ மாறிவிடும். கருணை அல்லது சோக உணர்வை புன்னாகவராளி, நாதநாமக்கிரியை போன்ற இரா அப்பாடல் எவ்வுணர்வை வெளிப்படுத்துகின்றது உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களை துரிதகா6 பாடல்கள் செளக்காலத்திலும் பாடப்படுவது இய கூட என்ன உணர்வை வெளிப்படுத்தவல்லன 6
சில இராகங்களின் மூலமாக பல அற்புத நிகழ் முத்துஸ்வாமி தீஷிதர் அமிருதவர்ஷிணி இராகத் பாடி மழையை வருவித்ததாகவும் அக்பரின் சமஸ்தா பாடி அரசவையில் உள்ள விளக்குகளைத் தீப் ப
நவரஸங்களை வெளிப்படுத்தும் இராகங்கை உணர்வுகளை வெளிப்படுத்தவல்லன. ஹிந்தோள தரவல்லது. கல்யாணி களிப்புடன் கூடிய கம்பீரத் காம்போதி வீரரஸத்திற்கு விளைநிலமாக விளங் தூண்டுவது நாட்டை. ஆகையினாலேயே ஆ வாசிக்கப்படுகிறது. பிரிவாற்றாமையையும் ஏக்க இனிமையை வெளிக்கொணர்வது சஹானா. மேகத் திரண்ட மேகத்தை மழையாகப் பொழிய வைப்பது அ புன்னாகவராளி. உறக்கத்திற்கு நம்மை இழுத்துச்

Uாது இராகங்கள் வெளிப்படுத்தும் உணர்விற்கேற்ப ட்டுள்ளன.
ங்கள் வசந்த காலத்திலும் மல்ஹார் இராகங்கள் கிறது. இடைக்காலத்தில் (கி.பி. 12 அம் நூ - கி. படுத்தக்கூடிய வகையில் ராக்மேலா ஒவியங்கள் என்ற நூலிலேயே முதன் முதலாக இராகங்கள் ஆண் இராகமாகும். கோபம், வீரம், ஆச்சரியம் நீ, பைரவ், தீபக், ஹிந்தோளம், மேக், வஸந்த், ன்பம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவல்லது. றிந்துஸ்தானி இசையில் 6 அடிப்படை ராகாக்களும் ம் 6 ராகினிகளுமாக மொத்தம் 36 ராகினிகள் ளும், குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயினும் பிற்காலத்தில் >ற்றது எனக் கூறப்படுகிறது.
ன்ற இராகங்களில் எல்லா ஸ்வரங்களும் ஜீவ ற்கு மேற்பட்ட உணர்வை வெளிப்படுத்தவல்லன. ாகங்களைத் தேர்ந்தெடுத்தல் வாக்கேயகார்களின் ராகங்களைத் தேர்ந்தெடுக்காவிடின் அர்த்தமே வெளிப்படுத்தும் ஸாஹித்தியங்களுக்கு முகாரி, கங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பாடலின் காலம் என்பதைப் பொறுத்தே அமைகின்றது. கோப, வீர ஸ்த்திலும் சாந்த சோக, உணர்வை வெளிப்படுத்தும் ல்பு. பண்டைய இசை நூல்களில் சில தாளங்கள் ானக் கூறப்பட்டுள்ளது.
]வுகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது. தில் ஆனந்தாமிருதவர்ஷிணி என்னும் கீரதியைப் னத்தை அலங்கரித்த தான் சேன் தீபக் இராகத்தைப் ற்ற வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ளத் தவிர பின்வரும் இராகங்களும் பல்வேறு D உல்லாசத்தையும் கரைகடந்த உற்சாகத்தையும் தைத் தருவது. உருக்கமே உருவாக அமைந்தது வது அடாணா, மோகனம், தெய்வீக உணர்வைத் லயங்களில் மல்லாரி நாட்டை இராகத்தில் தையும் வெளிப்படுத்துவது முகாரி. தன்மையின் தை திரளவைக்கும் தன்மை வாய்ந்தது மேகரஞ்சனி Hம்ருதவர்ஷிணி பாம்பை படமெடுத்து ஆடவைப்பது
செல்வது நீலாம்பரி

Page 71
மனநலவிருத்திக்கு இசை ஆற்றும் பங்கை நோக் நல்ல உணவினால் ஆரோக்கியம் ஏற்படுவதைப் ே சில இராகங்கள் நோய் தீர்க்கும் தன்மையும் கேட்டால் உணவு ஜீரணமாகும். மனக்கலக்கத்தின் கிடைக்கும். விடியற்காலையில் பூபாளமும் மலயம
அஸ்ரவேரி இராகம் தலைவலியைப் போக்க செய்யும். பைரவி ஷயரோகத்தை நீக்கும். ஹிந்ே பித்தக் கொதிப்பைப் போக்கும். ஆனந்தபைரவி மருத்துவத்திற்கு சான்றுகள் நாயன்மார்கள் பா ‘மந்திரமாவது நீறு’ என்னும் பதிகத்தைப் பாடி சூலை நோய் தீர்க்க அப்பரே ‘கூற்றாயினவாறு’ எ6 இசையின் மூலம் மதங்கொண்ட யானையை அட குறிப்பிடப்ப்ட்டுள்ளது.
மேலும் இசையின் மூலம் மனவளர்ச்சி குன்றியவ போது ஐம்புலனறிவு விரிவடைகிறது. முழு ஆளு ஆற்றலும் விரிவடைகின்றது. முதியோர் இல்லா புத்துணர்ச்சியையும் மன அமைதியையும் ஏற்படுத்
நெற்பயிர்கள் மற்றும் தானியங்கள் இசைகேட்டு விவசாயப் பண்ணை நடத்தும் “ஜார்ஜ் ஸ்மித்’ எ இந்தியாவில் இராக ஆராய்ச்சி நிலையம் த:ை வைத்தியநாதன் தலைமையில் இராகங்களும் அ ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றது.
எமது இசை இறைத்தன்மை வாய்ந்தது. கருதப்படுகின்றன. இராகதேவதைகளின் ஸ்வ இசைஞனதும் கடமையாகும்.
米米米米壮
水水米米米米米米米米米米水水米
米米米米米米米米米
| நல்லவர்கள் மற்றவர்
மட்டுமே வாழ்கிறார் 8 நன்மைக்காக அறிஞன் செய்துவிட வேண்டும்.
உனக்கு நான் நன்மை என்னுடைய நன்மைை இதைத்தவிர வேறு ஒரு
N

நம்போது இசையை ஒரு மருந்தாகக் கொள்ளலாம். ால நல்ல சங்கீதத்தினால் ஆரோக்கியம் ஏற்படும். பாய்ந்தவை. பகல் உணவு முடித்து நீ இராகம்
போது 'சாமா இராகம் கேட்டால் மன அமைதி ாருதமும் கேட்டால் உற்சாகம் தானாகப் பிறக்கும்.
வல்லது. கரகரப்பிரியா இராகம் பசியை மறக்கச் நாளம் வாதகம நோய்களை சீராக்கும். ஸாரங்கா
இரத்தக் கொதிப்பை போக்கவல்லது. இசை டிய அருட்பாக்களிலேயே காணலாம். சம்பந்தர் பாண்டியனின் வெப்புநோயைத் தீர்த்தார். அப்பரின் ானும் பதிகத்தைப் பாடினார். சங்க இலக்கங்களிலும் கியமையும் வழிப்பறி கள்வர்களை மயக்கியமையும்
ர்களையும் மேம்படுத்தலாம். ஒருவர் இசை கற்கும் ருமையும் வளர்கிறது. கற்பனாசக்தியும் சிந்திக்கும் வகளில் இசைநிகழ்ச்சிகள் மூலம் அவள்களுக்கு தலாம்.
செழித்து வளரும் என்பதை அமெரிக்க நாட்டில் ன்பவர் தம் ஆராய்ச்சி மூலம் நிரூபித்திருக்கிறார். ல சிறந்த வயலின் வித்துவானாகிய குன்னக்குடி அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் பற்றி பல
இராகங்கள் ஒவ்வொன்றும் தேவதைகளாகக் ரூபம் மாறாமல் பாடல் இசைப்பது மாணவரதும்
!冰米冰冰冰冰
k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k k米米米米米米米米米米
5ளுடைய நன்மைக் காகவே
5ள். மற்றவர்களுடைய தன்னைத்தானே தியாகம்
செய்வதன் மூலமாகத் தான் ய நான் பெற முடியும். வழியுமில்லை.
சுவாமி விவேகானந்தர் -

Page 72
1.
சித்தர்கள் யார்?
LDனித உடம்பிலே தெய்வ பக்திகொண்டு, அ மக்களிடையே வானவர்களாகவும், மனித ெ வருகிற மகான்களே சித்தர்கள் ஆவர்.
திருமூலர் கூறுகிறார்
" யோக சமாதியின் உள்ளே அகலி GBuLJITEB GFLDTgusố 2-6ïGB6MT od 6TTE யோக சமாதியின் உள்ளே உள8 யோக சமாதி உகந்தவர் சித்தரே
யோக சமாதியை உகந்தவர் யாரோ அவே மனித உடம்பிலே தெய்வ சக்தியைக் கலந் நெறியாகும்.
எமக்குக் கிடைத்த மனித உடம்பும், நாம் வ சாதனங்களாகும். இதனாலன்றோ, திருமூல
“ உடம்பினை முன்னம் இழுக்கென உடம்பினுக்குள்ளே உறுபொரு உடம்புளே உத்தமன் கோயில்ெ உடம்பினை யானிருந்(து) ஒம்புக்
என்று பாடினார்?
தமிழ்ச் சித்தள் பரம்பரை திருமூலருடன் தொட அகப்பேய்ச் சித்தர், இடைக்காட்டுச் சித்தள் சித்தர், பீர் முகம்மது, வாலைசாமி எனப் செல்லப்பா சுவாமிகள், கடையிற் சுவாமிகள் சுவாமிகள், யோகஸ் சுவாமிகள் எனப் பலை
சித்தர்கள் என்ற சொல்லுக்குச் சித்தி கைசு முழுமை, திறல், விறல், வெற்றி எனப் பல உள்ளன. மந்திர சித்தி, தந்திர சித்தி, இ செப்படி வித்தை முதலிய பலவற்றைக் ச
சித்தர்களாகக் கருதி வேஷம் போடுவதுண்

சித்தர் பாடல்கள் : ஒரு நோக்கு
திரு.ந. சிதம்பரநாதன் முன்ன7ள் பிரதம செயற்றிட்ட அதிகாரி தேசிய கல்வி நிறுவகம்,
LO6/Tabl/O.
Hருட் சக்தியை வளர்த்து, ஆன்ம பரிணாமத்திலே தய்வங்களாகவும், உலவி அருள் வாழ்வு வாழ்ந்து
டம் 26s ஈக்தி
ர சித்தர் என்று வரையறை செய்கிறார் திருமூலர். து கூடுகிற தவயோகமே சித்தர்களின் வாழ்க்கை
ாழும் மனித வாழ்வும் தெய்வப்பேற்றுக்கான ஒப்பற்ற
f
ாறு இருந்தேன் ஸ் கண்டேன் காண் டான்என்(று)
ன் றேனே ”
ங்குகிறது. சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், கடுவெளிச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் Iல சித்தர்களைக் குறிப்பிடலாம். இலங்கையிலும் , பெரியானைக்குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டி க் குறிப்பிடலாம்.
டினவர்கள் என்பது பொருள். சித்தி எனில் பயிற்சி
பொருள் கூறலாம். சித்திகளிற் பல வகைகள் யந்திர சித்தி, ஜால வித்தை, கண்கட்டு வித்தை, -றலாம். இச்சித்திகளில் வல்லவர்கள் தம்மைச் டு. அத்தகையோர் சித்தர்கள் அல்லர். மெய்கண்ட
48

Page 73
சாத்திரங்கள் குறிப்பிடும் அட்டமா சித்திகளான : ஈசத்துவம், வசித்துவம் என்னும் எட்டுச் தவவலிமையினால் கைவரப் பெறும். இச்சித்தி
சித்தர்கள் சாதாரண மக்களைப் போன்றவர்க பாதிப்பதில்லை. உலகில் இருக்கும் போே வாழும் ஆற்றல் உள்ளவர்கள். அதனால், செய்ய வல்லவர்கள். சிந்தையை அடக்க தெளிவாக எடுத்துக் கூறுகிறார்:
வேறொருவர் உலகத்து விண்ணவரை சந்ததமும் L9 (b{bdb.6l)TLD சரீரத்தி சலமேல் கனல்மேல் தன்னிகளில் சிந்தையை disbLDT
திறம்
என்று கூறியதோடு அ
சினமிறக்கக்
சித்தியெலாம் மனமிறக்கக் 6) T(3uj661
என்றும் தாயுமானார் எச்சரிக்கை செய்துள்ளா
அன்பைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும், பாடு காட்டுவது மிகமிக அரிது. ‘அன்பின் உணர்ந்தவர்களான சித்தர்களுக்கே அது உர்
கரை புரண்டோடும் ஆறுகளாக நம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்தோடும் ஆற்றுவெள்ளம் அதி காணுகிற சித்தர்களை விட, காணாத சித்தள்கள்
சுருங்கக் கூறின், சிவகதியில் நின்று, சித்தத்ை போக்கு’ என்று வாழ்பவர்களே சித்தர்கள் ஆ
2. சித்தர் பாடல்களின் இயல்புகள்
(அ) எளிமையும் ஆழமும்
சித்தள் பாடல்களின் இயல்புகளுள் ஒன்று மொழிநடை ஆகும். பெரும்பாலான சித்
49

அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராய்தி, பிராகாமியம், சித்திகளும் இறையன்பில் மீதுாரப் பெற்றுத் களில் வல்லவர்களே சித்தர்கள் எனப்படுகின்றனர்.
ர் அல்லர். உலக பந்தபாசங்கள் சித்தர்களைப் த சூக்கும உடலோடு பரம்பொருளுடன் ஒன்றி ாதாரண மக்கள் செய்யமுடியாத காரியங்களைச் வல்லவர்கள் சித்தர்கள் என்பதைத் தாயுமானார்
காணாமல் உலாவலாம் ஏவல்கொள்ளலாம் இளமையோ மற்றொரு னும்புகலாம் நடக்கலாம் இருக்கலாம். சித்திபெறலாம் அடக்கியே இருக்கின்ற அரிது’
அமையாது,
கற்றாலும் பெற்றாலும் கல்லார்க்கு LINJIT LI JG3LD”
வதும் எளிது. ஆனால் அன்பு வழியில் வாழ்ந்து வழியது உயர்நிலை’ என்ற பேருண்மையை யது.
த் தெரிந்தோடும் வெள்ளத்தை விட, கண்ணுக்குத் கமானது. அதைப்போல நாம் ஏட்டிலும் பாட்டிலும் பலர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.
தச் சிவன்பால் வைத்து, ‘சித்தம் போக்கு சிவன் வார்கள்.
அப்பாடல்களிற் கையாளப்பட்ட எளிமையான தர் பாடல்கள் மிகமிக எளிய சொற்களால்

Page 74
அண்மந்துள்ளன. அகராதி பார்த்துப் புரிந்துெ பொருளை உடனே புரிந்துகொள்ளக்கூ அமைந்துள்ளது. ஆனால், அந்தச் சொற்க முடியாத அத்துணை ஆழம் மிக்கது.
உள்ளத்திலே தெளிவு இருக்குமானால், அந் சொற்களிலும் பிரதிபலிக்கப்படுவது இயல்பா போலன்றி, உள்ளத்தின் தெளிவை உணர்த்த கையாளுஞ் சொற்களும் தெளிவானவையாகெ சித்தர்கள் அய்பாடல்களிலே கூறும் கருத்து
சிவவாக்கியர் என்ற சித்தர் பாடிய ஒரு பாட
“ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதி நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழ வாடிவாடி வாடிவாடி வாடிநின்ற கோடிகோடி கோடிகோடி எண்ணி
இந்தப் பாடலின் அமைப்பைப் பார்த்தால், ட ஆனால், அப்பாடல் உணர்த்தும் பொருளே
இந்த உடம்பினுக்குள்ளே ஒளிவடிவில் மெய் காணவேண்டும் என்ற நாட்டம் மனித மனத்தி கலந்துநின்ற சிற்றான்மாவானது, பரமாத்மாவ ஒன்று, தான் இணைந்திருந்த ஒன்றை நாடுவ பிரிந்து போய், மீண்டும் இணைந்து கொள் மெய்ப்பொருள் நாட்டம் ஆகும். பிரிந்து செ மெய்பொருளாகிய சோதி, பிரிந்த பின்பு அந்த என்னும் இருளானது உயிரை மறைத்துவி( காணுவதற்காக நாடி நாடி இயங்குகிறது. கே. இதனை மிக எளிய சொற்களிலே இப்பாட6
இவ்வாறாக, எளிமையான சொற்கள் வாயில பாடல்களின் இயல்புகளுள் ஒன்றாகும்.
(ஆ) பொருளுக்குள் பொருள்
சித்தர் பாடல்களிலே உள்ள சொற்களி குடிகொண்டிருக்கிறது. இந்தப் பாடல்கள் இருக்கும் அச்சொற்கள் உணர்த்துகின்ற 2 திருமூலர் தந்த திருமந்திரப் பாடல் இத்தை
6 6
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐ மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் தி மேய்ப்பாரும் உண்டாய் வெறியும்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் ெ
இப்பாடலின் வெளிப்படைப் பொருள் :
அந்தணன் ஒருவனுடைய வீட்டிலே பால் கறக் ஐந்தும் மேய்ப்பதற்கு ஒருவரும் இல்லாத க
5C

5ாள்ள வேண்டிய அவசியும் இன்றிச் சொற்களின் உய வகையிலே சித்திர்களின் மொழிநடை
ருே
ர் தாங்கி நிற்கின்ற பொருளோ அளந்து பார்க்க
தத் தெளிவானது பாடல்களிலே கையாளப்படும் னது. புலமையை உணர்த்துகின்ற பாடல்களைப் த்ெ தெளிந்த நிலையிலே கூறுகின்ற சித்தர்கள் பும் எளிமையானவையாகவும் உள்ளன. ஆனால், க்களோ ஆழமானவையாகும்.
ல் வருமாறு:
60u
ந்ெதுபோய் மாந்தர்கள் லாத கோடியே’
ரியாத சொல் என்று ஒரு சொல்கூட இல்லை.
எத்துணை ஆழமானது!
ப்பொருள் கலந்து நிற்கிறது. இந்தச் சோதியைக் ல் இயல்பாகவே தோன்றுகிறது. பரமாத்மாவோடு பிலிருந்து பிரிந்து தனியே வந்தது. பிரிந்து வந்த து இயல்பானது அல்லவா? இணைந்த இரண்டு, ர்வதற்காகத் தவிக்கின்ற தவிப்புத்தான் இந்த ன்ற உயிருக்குள்ளே உட்கலந்து நிற்கிறது அந்த ந மெய்ப்பொருளைக் காணமுடியாதபடி அறியாமை நிகிறது. உயிரானது அந்த மெய்ப் பொருளைக் டி கோடி யுகமாக இந்த இயக்கம்,காணப்படுகிறது. மிலே சிவவாக்கியர் எடுத்துரைத்துள்ளார்.
ாக ஆழமான கருத்துக்களைக் கூறுவது சித்தர்
ன் அமைப்பிலே விநோதமான ஓர் இயல்பு சொல்லுகின்ற சொற்களின் பொருள் ஒன்றாக உருவகத்தின் பொருள் மற்றொன்றாக இருக்கும். 6ய உருவகத்திற்குச் சிறந்த சான்றாக அமைகிறது:
ந்துண்டு திரிவன அடங்கினால்
கிற பசுமாடுகள் ஐந்து இருக்கின்றன. இப்பசுக்கள் ாரணத்தால், கட்டாக்காலிகளாய், வெறிகொண்டு

Page 75
திரிகின்றன. மாட்டுத் தொழுவத்தில் அடை பசுக்களை அடக்கினால் தானே, அவை கன்
இப்பாடலின் உருவகப் பொருள் :-
ஐம்புலன்கள் இயங்குகின்ற இந்த மனித உ உருவகப்படுத்திக் கூறுகிறார் திருமூலராகிய என்ற பொருளும் உண்டு; பார்ப்பவன், நோக் உண்டு. நடக்கின்ற செயல்களையெல்லாம், உ கண்டுகொண்டிருக்கிறது. எனவே உயிரைப்
பார்ப்பான் வீடாகிய (உயிர் வாழ்கின்ற வீடாகிய தன்மை பெற்ற ஐம்புலன்களாகிய ஐந்து பசுக்க அவை உலக இச்சையிலே சிக்கி, வெறி ெ இந்தப் பசுக்களை மேய்ப்பதற்குரிய ஆயனா ஏற்பட்டு, இந்தப் பசுக்களின் வெறியும் அ ஆரம்பித்துவிடும்.
இவ்வாறு, சொற்கள் உணர்த்தும் பொருள் ஒ பொருள் இன்னொன்றாகவும் இருப்பது சித்த
(இ) அலைவீச்சு
கடலானது பொங்கிப் பெருகி அலைவீசி ஆ புரள்வதுமாக எப்படி ஒரே அலைவீச்சு நிரம்பிய உள்ளே கனல்கின்ற ஆன்மிக ஒளியின் வெளி
இதோ நல்லதோர் எடுத்துக்காட்டு :
“ தீர்த்தமாட வேணுமென்று தேடு தீர்த்தமாடல் எவ்விடம் தெளிந் தீர்த்தமாக உம்முளே தெளிந்து தீர்த்தமாக உள்ளதும் சிவாய அ
தீர்த்தம் ஆடத் துடிப்போர்க்கு தீர்த்தம் எது விளித்து, வேகத்தோடு தொடங்கி, வேகமாக அந்த வேகம் பாடலின் கருத்தில் மட்டுமல்ல மிடுக்கிலும், பாடலில் அமையுந் துள்ளலோ6
சித்தர் பாடல்கள் பலவற்றிலே, கருத்தோட் இவ்வாறானதொரு வேகம் - அலைவீச்சு - மிக்க இயல்பாகும்.
சித்தர் பாடல்களின் முக்கியமான சிறப்புகள்
(அ) பேரின்பப் பேருண்மை
மனித யாக்கையில் வாழ்கின்ற மாக்க
அவர்களை அமர நிலைக்கு உயர்த்த பாடல்கள் எழுந்துள்ளன. சித்தர் ஒரு

படாமல் அங்கும் இங்குந் திரிகின்றன. அடங்காய் றை ஈன்று, பாலையுந் தந்து பலன் அளிக்கும்!
உடம்பை, ஐந்து பசுக்கள் வாழும் தொழுவமாக சித்தர், பார்ப்பான் என்ற சொல்லுக்கு அந்தணன் குபவன் காண்பவன் என்ற இன்னொரு பொருளும் டம்புக்குள்ளே இருந்துகொண்டு உயிர் சாட்சியாகக் பார்ப்பான் என்று சொல்வது சித்தர்களின் மரபு.
1) இந்த உடம்புக்குள்ளே, பாலைச் சொரியக்கூடிய ள் (சுவை, ஒளி,ஊறு, േ. நாற்றம்) வாழ்கின்றன. காண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றன. கிய ஞானம் ஏற்படவில்லை. அவ்வாறு, ஞானம் டங்கினால், பேரின்பம் என்னும் பால் சொரிய
ன்றாகவும், அச்சொற்களின் உருவகம் உணர்த்தும் ர் பாடல்களில் ஆகும்.
ஆடுவதும், உள்ளே மீள்வதும், பின் பொங்குவதும் தாக உள்ளதோ, அப்படியே சித்தள் பாடல்களுக்கும் ரிப்பாடு இருக்கும். s &
கின்ற தீனர்காள், துநீர் இயம்புவீர்? 3ர் இருந்தபின்
அஞ்செழுத்துமே”
என்பதை நான்கு வரிகளுக்குள்ளே வேகத்தோடு வினவி, வேகமாகவே விடையுந் தரப்பட்டுள்ளது. ாமல், அதன் நடையிலும், கையாளப்பட்ட சொல்லின் சையிலும் காணப்படுகிறது.
டம், செய்யுள் நடை, மொழி நடை என்பவற்றிலே அமைந்திருப்பது அய்பாடல்களுக்கே உரிய சிறப்பு
ளை மனிதப் பண்புள்ள மக்களாக மாற்றி, பின்னர் வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் சித்தர் ருவர் பாடுகிறார்:
51

Page 76
(ஆ)
6
மனிதரிலே மரமுண்டு, விலங் மனிதரிலே மனிதருண்டு, வா
மக்கள் சமுதாயத்திலே உளளவர்களைக்
வாழ்கிறார்கள்; சிலர் விலங்குகளைப் போல வேறு சிலர் மனிதப் பண்புள்ள மனிதர்கள வடிவம் எடுத்த வானவராய் வாழ்கிறார்க மனிதர்களாகவும், உள்ளத்தால் அஃறிணை இந்த நிலையில், மனிதப் பண்பை மேலோ ஊட்டுவதற்கும் சித்தர் பாடல்கள் பெரிதும்
சித்தர்கள் தாம் பெற்ற இன்பத்தை ஏனை பாடல்களைப் பாடியுள்ளார்கள். மனிதனை அடிப்படையான சில மனப் பயிற்சிகள் இ சமுதாயத்திற்கு வழங்கி, பேரின்பப் பெருவ பாடல்கள் வழிகாட்டுகின்றன. அதனா திருமூலரும்,
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகப்
என்று பாடினார்!
இவ்வாறாக, பேரின்பப் பேருண்மையை ( வழிகாட்டும் சித்தர் பாடல்களைப் படிப் பிறந்தோரின் இன்றியமையாக் கடன்களன்ே
எந்தக் காலத்துக்கும் பொருந்துகிற உயிே
சித்தர் பாடல்கள் என்றென்றும் செலாவணி : எந்தக் காலத்துக்கும் பொருந்துகிற உயிரோ கொண்டிருத்தல் அப்பாடல்களின் சிறப்புப்
எடுத்துக்காட்டாக இதோ ஒரு திருமந்தி
“சூரிய காந்தமும் சூழ்ப சூரிய காந்தமோ சூழ்ட சூரியன் சந்நிதி யிற்சுடு சூரியன் தோற்றமுன் அ
சூரியகாந்தம் என்று இங்கே குறிக்கப்பெறு ஒரு பொருளைப் பெரிதுபடுத்திக் காட்டு: இச்சூரியகாந்தக் கல்லும் பஞ்சும் ஒன்றாக பஞ்சை நோக்கி வெயிலின் கதிர்கள் அச்சூரி அக்கல்லைச் சூரியனுக்கு எதிரே பிடித்தே
இந்த விஞ்ஞான உண்மையைச் சான்று ச இப்பாடல் மூலம் திருமூலர் விளக்குகிறார் பாவ மூட்டைகள் உள்ளன. இந்த உடம்ே எத்தனை ஆண்டுகளாயினும், இந்த உ முடியவில்லை. சூரியகாந்தக் கல்லு
52

குண்டு, பறவையுண்டு னவரும் மனிதராய் வருவதுண்டு”
கூர்ந்து கவனித்தால், சிலர் மரங்கள் போல் >வும், பறவைகளைப் போலவும் வாழ்கிறார்கள்; ாய் வாழ்கிறார்கள்; இன்னுஞ் சிலரோ மனித ள். இன்றைய உலகத்திலே, தோற்றத்திலே ப் பொருள்களாகவும் வாழ்பவர்களே ஏராளம். ங்கச் செய்வதற்கும், ஆன்மிகச் சிந்தனையை
ഉ_bഖുഖങ്ങI.
யோரும் பெறுவதற்குத் தூண்டும் வகையிலே மனிதனாக்குவதற்கோ, புனிதனாக்குவதற்கோ இன்றியமையாதவை. அப்பயிற்சிகளை மனித பாழ்வை அனைவரும் வாழ்வதற்குச் சித்தர் லன்றோ தலைமைச் சித்தாராக விளங்கும்
மனித சமுதாயம் பெற்றுக்கொள்ளப் பெரிதும் பதும் அவற்றின்வழி நடப்பதும் மானிடராய்ப் றா?.
ராட்டம்
ஆகக்கூடிய தன்மை கொண்டு விளங்குகின்றன. ாட்டம் மிக்க கருத்துக்களைச் சித்தர் பாடல்கள்
பண்பாக உள்ளது.
fi I LITL6b:
ஞ்சும் போலவாம் ஞ்சைச் சுட்டிடா
மாறுபோல்
Hற்ற மலங்களே.”
வது ‘வில்லை’ என்ற பூதக்கண்ணாடியாகும். வதற்கு இச்சூரியகாந்தக் கல் பயன்படுகிறது. இருப்பதால், பஞ்சு தீப்பிடிப்பதில்லை. ஆனால், யகாந்தக் கல்லின் வழியாகக் குவிந்து பாயுமாறு ாமென்றால், பஞ்சிலே தீப்பற்றிக் கொள்கிறது.
ாட்டி, ஒரு பெரிய மெய்ஞ்ஞான உண்மையை எமது மனித உடம்புக்குள்ளே மலங்களாகிய பர்டு அவை இருந்து இணைந்து வாழ்கின்றன. டம்பினால் அம்மலங்களை எரித்து ஒழிக்க ம் பஞ்சும் சேர்ந்திருப்பதுபோல் அவை

Page 77
(இ)
(+)
இணைந்திருக்கின்றன. ஆனால், நமது என்னும் சூரியனுடைய முன்னிலையிற் பிடி மலபந்தத்தை எரிக்கவல்லன.
பெரிய மெய்ஞ்ஞானக் கருத்து இப்பாட நூற்றாண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப் அமைந்துள்ளது. இவ்வாறான உயிரோட்ட எக்காலத்துக்கும் ஏற்றதாக, பழமைக்குப் உள்ள பாங்காக தனிப்பண்பாகக் கருதப்படு பெருஞ் சிறப்பாகும்.
நாட்டுப்புறப் பாங்கு
யாப்பமைதியிலும், சொல் ஆட்சியிலும், மெ பாடல்கள் செம்மை இலக்கியமாகத் தி ஏராளமானவை நாட்டுடப் பாடல்கள் வடிவத் பாமர மொழியிலே பேசுகிறது இன்னொரு
“ மாங்காய்ப் பாலுண்டு மலைமேலிருப் பார் தேங்காய்ப்பால் ஏது தேங்காய்ப்பால் ஏது
ஐம்புலன்கள் ஞான ஒருமையிலே சேர்ந்து என்பது சித்தர் மரபு ஆகும். இந்த உடப் வகைப்படுத்திக் கூறியுள்ள சித்தர்கள் கூறியுள்ளார்கள். ஆன்ம ஆனந்த அனுபவ வடிவம் மாவடுவைப் போன்றதாகும். ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் கை உச்சியிலே மாங்காய் வடிவத்திலுள்ள சுரப்ட் உலகவேட்கைகளையும் மீறிய பேருணவாக உண்டு, மலைமுகடாகிய தலை உச்சியிே நிலைத்து நிற்கும் ஞானிகளுக்கு உலக இ மக்களுக்கு விருப்பமான உலக இச்சை குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தத்துவத்தை நா இந்த சித்தர் பாடல்.
நுண்மான் நுழைபுலம் கொண்ட அறிஞர் பெ பாமர மக்களும் விரும்பிக் கேட்கும் வடிவ பாமரர்களும் பயன்பெறுவதற்குக் கிடைத்த
வாடகை வீடு
சித்தர்கள் உடலைப் பற்றிய ஆராய்ச் பாடல்களிலிருந்து அறியமுடிகிறது. இந்த மூன்று என்றும், அந்த மூன்று நாடிகளிலே வருகின்றன என்றும் சித்தர்கள் கண்டார்க மூன்று நாடிகளும் அழைக்கப்பெறுகின்றன. ஆராய்ந்து கூறியதோடு, இந்த உடம்புக்கு நடைபெறுகின்றன என்பதையும் சித்தர்
53

உள்ளமாகிய பூதக்கண்ணாடியை, இறைவன் த்தோம் என்றால், திருவருள் என்ற கதிர்கள்
லின் மூலம் திருமூலரால் எத்தனையோ பட்டது. அது இன்றுகூட ஏற்புடையதாக பண்பு சித்தர் பாடல்களிலே அமைந்திருப்பது பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும் நிகிறது. இப்பண்பு சித்தர் பாடல்களுக்குரிய
ாழியின் வழக்காற்றிலும் எத்தனையோ சித்தர் கழ்கின்ற போதிலும், சித்தர் பாடல்களில் நதிலும் அமைந்துள்ளன. நாட்டுப்புறப் பாங்கில் சித்தர் பாடல்:
க்குத் |க்கடி - குதம்பாய் க்கடி 99
சுரக்கின்ற ஞானப் பாலை மாங்காய்ப் பால் ம்பிலுள்ள அறிவுக்கு ஆதாரமான சுரப்பிகளை
இவற்றின் வடிவத்தையும் வருணித்துக் பத்திலே, ஞானப் பாலைச் சுரக்கின்ற சுரப்பியின்
சித்தர்களுடைய யோகப் பயிற்சியினால் வந்த ஒரு ஞானிக்கு மலைமுகடாகிய தலை யிலிருந்து ஞானப்பால் சுரக்கிறது. பசியையும் இந்த ஞானப்பால் கிடைக்கிறது. ஞானப்பாலை ல சிந்தனை கூடி இறைவன் மீது நாட்டம் இச்சைகள் தேவைப்படுவதில்லை. சாதாரண கள் இப்பாடலிலே தேங்காய்ப்பால் எனக் ட்டுப்புறத்து மக்களின் மொழியிலே கூறுகிறது
ருமக்கள் மட்டுமன்றி, கல்வி அறிவு இல்லாத த்திலும் சித்தர் பாடல்கள் அமைந்துள்ளமை
ஒரு வாய்ப்பே எனலாம்.
சியிலும் ஈடுபட்டுள்ளமையை அவர்களின் உடம்பை இயக்குகிற அடிப்படையான நாடிகள் ஒன்றின் இயக்கம் மிகும்போது, நோய்நொடிகள் ள். வாதம், பித்தம், சிலேத்பனம் என அந்த
உடலிலுள்ள இந்த மூன்று நாடிகளைப் பற்றி ர்ளே தொண்ணுற்றாறு இரசாயனச் செயல்கள் பாடல்கள் எடுத்துக்கூறுகின்றன. இந்தத்

Page 78
தொகுப்பு
உடம்பு
தொண்ணுற்றாறு இரசாயனச் செயல்கை கூறினார்கள். இந்தத் தொண்ணுற்றாறு செயல் குறைய குறைய உடலிலே அடையும் போது இந்தத் தொண்ணு இறுதியிலே இந்தத் தத்துவங்கள் ய பிரிந்து விடுகிறது.
திருமூலர் இந்தத் தொண்ணுற்றாறு தத் அழகாகக் கூறுகிறார். ஒரு பெரிய குடியிருக்கிறார்கள் அடுத்த மாடியிலே மாடியிலோ முப்பத்தாறு பேர் குடியிரு குடித்தனம் எப்படி நடக்கிறது என்பை
“முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும் செய்ப ளுடைக் கோயிலுள் வாழ்வ
முப்பது, முப்பது, முப்பத்தாறு என்ற மதில்களையுடைய இந்த உடம்பாகிய குடியிருக்கிறார்கள் ; இந்த மாளிகையி குடியிருப்பவர்கள் உடனே வீட்டைக்
“ செய்ப மதிளுடை கோயில் சிதைந்த ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்கே
குடியிருப்பவனுக்கு வசதிகளைச் ெ குடியிருப்பவன் தொடர்ந்து வசிப்பான்.
தத்துவங்களும் உடம்பு கெட்டு நொ ஓடிவிடாமல் தொடர்ந்து வசிக்கக்கூடி
வேண்டும் என்பதைச் சித்தள்கள் எடு
சித்தவைத்திய முறை தோன்றி வளர்ந்
என்னும் பருப்பொருளையும், உள்ள
அதிநுண்பொருளையும் அறிவியலோடு இணைத் எல்லா நாட்டுக்கும் பொருந்துகிற முறையிலே அ யாப்பின் அமைதியிலும், மொழியின் ஆட்சியிலும், ப் வரம்புக்குள் இயங்குகிற செய்யுள்கள், இலக்கண நாட்டுப்புறப் பாடல்கள் என்று வகையிலும் தொகைய பயின்று, அவற்றின் வழிநின்று உய்வோமாக!
- * : *k-k-k- 米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米>
5

ளத் தொண்ணுற்றாறு தத்துவங்கள் என்று சித்தள்கள் b மூன்று நிலைகளிலே அமைந்துள்ளன. இவற்றின் நாய் கூடிவிடுகின்றது. ஒரு நோயாளி மரணம் ற்றாறு தத்துவங்களிற் பல செயற்படுவதில்லை. வும் நின்றுவிடும் போது, உயிர் உடலை விட்டுப்
துவங்களைப் பற்றி அவருக்கே உரிய கவிப்பாங்கிலே மாடிக் கட்டிடம். கீழ்த்தளத்திலே முப்பது பேர் மேலும் முப்பது பேர் குடியிருக்கிறார்கள். மூன்றாவது க்கிறார்கள். இந்த உடம்பு என்ற மாளிகையிலே தத் திருமூலர் கூறுவதைக் கேட்போம்.
ர்கள்”
கணக்கிலே, நன்றாகச் செப்பஞ் செய்யப்பட்ட மாளிகையிலே தொண்ணுற்றாறு பேர் வாடகைக்குக் ல் ஏதாவது விரிசல் அல்லது பிளவு ஏற்படுமானால், காலிசெய்துவிடுவார்கள் என்கிறார் திருமூலர்.
சய்து கொடுத்தால் மட்டுமே அந்த வீட்டிலே அதுபோல வாடகைக்கு வசிக்கும் தொண்ணுற்றாறு ந்து போனால் ஓடியே போய்விடும். அவ்வாறு ப முறையிலே, இந்த உடம்பைப் பேணிப் பாதுகாக்க த்துச்சொல்லியிருக்கிறார்கள். இதிலிருந்துதான் திது.
b என்னும் நுண்பொருளையும், உயிர் என்னும் து நோக்கி ஆராய்ந்து, எல்லாக் காலத்துக்கும், மைந்துள்ள பாடல்கள் சித்தள் பாடல்கள் ஆகும். க்கள், பாவினங்கள், இசைப்பாடல்கள், இலக்கண வரம்பை மீறி மக்களின் இசைப்பாங்கில் அமைந்த லும் விரிந்து பரந்து விளங்கும் : பாடல்களைப்
米米米米米米米米米米 <米米米米米米来来来来米米米米米米米米米米 冰米米米米米米米米米米米冰米米

Page 79
1. காலச்சூழல்:
எண்பதுகள், முன்னைய காலப் பகுதிகளைவிட என நவீன கலை இலக்கியத்துறைகள் அனைத்திலு
எண்பதுகளிலே ஏற்பட்ட அரசியல், சமூக மாற்ற பிரதேசங்களையும் சார்ந்த - எல்லா மட்டங்கை பொதுவான சமூக அனுபவங்களுக்குட்பட்டனர் வளர்ச்சிக்கான அடிப்படை அம்சங்களுள் ஒன்றெ
மேற்குறித்தவாறான அரசியல், சமூக மாற்றங் சமூகங்களுக்கிடையிலான) இனப்பிரச்சினை’ என் அதுவரை காலமும் வகுப்புவாதமாகக் கருதப்பட்( நிலைக்கு பரிணாமங் கண்டது. ஒரு புறம் அது தனி இயக்கங்களின் ஆயுதப் போராட்டம் என்பனவாக உச்சமாகவும் விரிவு கண்டது. இத்தகைய சூழ்நி விளைவாக ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து ஐரோப்பா, க சென்று வாழத் தொடங்கினர்.
தவிர, ஈழத்தமிழ்ப் பெண்கள் மத்தியில் உயர்கல்வ பெண்கள் பிரச்சினைகளில் கரிசனை காட்டத்தொடங்
விழிப்புணர்ச்சியும் இக்காலப் பகுதியிலிருந்து பென
மேற்குறித்த அரசியல், சமூக மாற்றங்களின் பின் நாவலின் செல்நெறிகள் எவ்வாறமைகின்றன என்று
2. எண்பதுகளிலிருந்து ஈழத் தமிழ் நாவல்க
2.1 தேசிய இனப்பிரச்சினை:
இக்காலப் பகுதியின் முக்கியமான செல்நெறிய விளைவுகளும் வெவ்வேறு விதங்களிலே இக்காலப்
இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
2.1.1 இராணுவ ஒடுக்குமுறைகள்:
இவ்விதத்தில் சித்திரவதைகள், படுகொலைகள் “நியாயப்படுத்தப்பட்ட கொலை.”

எண்பதுகளில் ஈழத்து நாவல்கள்
கலாநிதி செ.யோகராசா
மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்
, ஈழத்துக் கவிதை, சிறுகதை, நாடகம், ஓவியம் 2ம் மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தின் தொடக்கமாகும்.
வகள் காரணமாக, முதன்முதலாக ஈழத்தின் எல்லாய்
ளயும் சார்ந்த - தமிழ்பேசும் மக்கள் அனைவரும் இத்தகைய பரந்துபட்ட அனுபவம் நாவல்
ன்பது அனைவருமறிந்ததே.
கள் எவை? (சிங்களவர், தமிழர் ஆகிய இரு Tபது குறிப்பாக எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து டுவந்த நிலைமாறி, ‘தேசிய இனப்பிரச்சினை’ என்ற நாட்டுக் கோரிக்கை, அதற்கான தமிழீழ விடுதலை கவும் மறுபுறம் அரச இராணுவ ஒடுக்குமுறையின் லையில் 1983 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தின் னடா, அவுஸ்திரேலியா, தமிழ்நாடு ஆகியவற்றிற்குச்
அதிகரித்தமையும் தமிழீழ விடுதலை இயக்கங்கள் கியமையும் பெண்கள் மத்தியிலேற்பட்ட உலகளாவிய ன்நிலைவாதச் சிந்தனைகள் பரவ வழிவகுத்தன.
ாபுலத்திலே எண்பதுகளுக்குப் பிற்பட்ட ஈழத்தமிழ் து காண்பது பொருத்தமானது.
ளின் முக்கிய செல்நெறிகள்:
Tổuu தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையும் அதன் பகுதி நாவல்களில் இடம்பெற்றுள்ளன. வசதிக்காக,
என்பன சித்திரிக்கப்படுதல் எ-டு: செ.யோகநாதனின்

Page 80
2.12 பரஸ்பர இராணுவ - இயக்க செயற்பாடுகளி
எ-டு: தாமரைச் செல்வியின் தாகம்’, பொ. ‘தெ பிரதேச மக்களின் வாழ்வையும், யாழ்ப்பாணப் பிரே
2.13 அகதி நிலைமையும் இடப் பெயர்வுகளும்:
எ-டு: தெணியானின் “சிதைவுகள்’, செ.யோகநா “மரணங்கள் மலிந்த பூமி”.
2.1.4 இயக்கங்களின் போராட்டங்கள்:
எ-டு: துரையின் ‘சுயம்வரம், மலரவனின் 'பே சுயம்வரத்தின் ஒரு பகுதியும் போருலாவின் முழுப்பகு பற்றி விவரிக்கின்றன. புதிய உலகம் இயக்கமொ6
2.15 அண்மைக்கால (யாழ்ப்பாண) மக்களின் வா
குறிப்பாக, நீண்டகாலத்தின் பின் இராணுவத் சித்திரிக்கப்படுதல், எ-டு: செங்கை ஆழியானி
216 முற்பட்ட் ஈழத் தமிழரது வாழ்வு:
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளின் உந்தல் காரணமா எ-டு: செ. யோகநாதனின் ‘நேற்றிருந்தோம் “ஒருவெண்மணற்கிராமம் காத்துக்கொண்டிருக்கிற சொல்வது என்ற விதத்திலே அதன் முதற்பகுத தமிழரின் வாழ்க்கையை விவரிப்பது முதல்நாவல் பிரதேசம் சார்ந்த ஆலங்கேணி மக்களது வாழ்க்ை
22. புகலிட நாவல்கள்:
புகலிடக் கவிதைகள், சிறுகதைகள் என்பவற்றுட நாவல்கள் எண்ணிக்கை ரீதியில் குறைவாகும். (க ஆழ்ந்தகன்ற அனுபவத்தை விழைத்து நிற்பதும் புகலிட அனுபவங்கள் அத்தகைய வாய்ப்பினை மி அதிக நாவல்கள் வெளிவராமைக்கான காரணமாகி செல்நெறிகளை ஓரளவு இனங்காண முடிகின்றது
22.1 ஈழத் தமிழரது பிரச்சினைகள்:
நுணுகி நோக்கும்போது இவற்றினைப் பின்
2.2.1.1 இராணுவ ஒடுக்குமுறைகள்/இயக்கங்கே
ஆதவன் எழுதிய (முற்றுப் பெறாத தொ காலப்பகுதியில் பொதுவாக ஈழச்சூழலில் இடம் துரை ஏழுதிய ‘சுயம்வரம்’ 1987ல் வடமராட்சிப் முதலியன பற்றிப் பேசுவதையும் இங்கு எடுத்துக் ஈழத்திலிருந்து எழுதப்படுவதைவிட புகலிட நாடுக
é

ரின் மத்தியிலான அன்றாட வாழ்வு:
ாடுவானம் துரத்தில்’, முறையே இவை கிளிநொச்சி தச மக்களின் வாழ்வையும் விவரிக்கின்றன.
ாதனின் "துன்பக்கேணியில்", செங்கை ஆழியானின்
ாருலா, கோவிந்தனின் ‘புதிய உலகம்’ இவற்றில், குதியும் இயக்கமொன்றின் போராட்டச் செயற்பாடுகள் ன்றின் செயற்பாடுகள் பற்றி விமர்சிப்பது.
ாழ்வு:
தினாட்சிக்குட்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை öI “GBLUT (BIJ AŠ (BLJIT”
க, முன்னைய வாழ்க்கை நிலை பற்றிச் சித்திரித்தல். அந்த வீட்டினிலே”, வ.அ. இராசரத்தினத்தின் து”. இவற்றில், தமிழரது நீண்டகால வரலாற்றைச் தியாக, குறிப்பாக சென்ற நூற்றாண்டு யாழ்ப்பாணத் ). ஏறத்தாழ, முப்பதுகளிலான திருகோணமலைப் கையை விவரிப்பது அடுத்த நாவல்.
ன் ஒப்பிடும்போது புகலிடத்திலிருந்து வெளிவரும் விதை, சிறுகதை என்பவற்றைவிட நாவல் வடிவம் அத்தகைய நிலை ஏற்பட அதிக காலமெடுப்பதும் கெ அண்மைக் காலமாகவே தருவதும் இதற்கான ன்றன. ஆயினும், இப்புகலிட நாவல்களில் பின்வரும்
l.
வருமாறு வகைப்படுத்தலாம்.
ளின் போராட்டங்கள்:
டர் கதையாகிய) "மண்மணம்” குறிப்பிட்டதொரு பெற்ற இவ்விடயங்கள் பற்றிச் சித்திரிப்பதனையும், பகுதியில் நடைபெற்ற ஒய்றேசன், முதற் கடற்சமர் காட்டாகக் குறிப்பிடலாம். இத்தியாதி விடயங்கள் ளிலிருந்து எழுதப்படும் போது கூடுதலான எழுத்துச்
56

Page 81
சுதந்திரம் இருப்பதையும் விமர்சன ரீதியில் சில6 குறிப்பிடுவது பொருத்தமானது. இவ்வாறான பை
22.12 சாதிப் பிரச்சினை/சீதனப் பிரச்சினை:
முறையே பார்த்திபன் எழுதிய “வித்தியாசப்படு என்பன இவ்விதத்தில் நினைவு கூரப்பட வேண் வாழும் தமிழர் மத்தியில் இவை நிலவி வருவது சக்தியளிக்கின்றன என்பது கவனத்திற்குரியது.
22.2 புகலிடத் தமிழரது வாழ்க்கை:
ஜேர்மனியில் அகதி முகாமொன்றில் வாழும் சித்திரிக்கும் பார்த்திபன் எழுதிய (முற்றுப் பெறாத ெ பின்னணியில் அண்மைக் காலத்தில் பொ. கருண இவ்வித செல்நெறிக்குச் சில எடுத்துக் காட்டு குடும்பங்கள் பற்றி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (எ-டு: உலகமெல்லாம் வியாபாரிகள், தேம்ஸ் நதிச் வட்டத்தினுள் சுழல, (தியாகலிங்கம் எழுதிய) " “எயிட்ஸ்” நோய்க்குள்ளாகிவிட்ட தமிழ் இளைஞ
223 புகலிட நாட்டினது வாழ்க்கை:
ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய முதன்மைப்படுத்தி தமிழ் எழுத்தாளர் எழுதிய தெரியவில்லை. (அத்தகு சிறுகதைகள் சில வெளி சிலவற்றில் (எ-டு: தேம்ஸ் நதிக்கரையில், அழி அவற்றின் ஒரு பகுதியாக இணைந்து இடம்பெற் வாழ்வு இடம்பெறும் ‘சுயம்வரம்” குறிப்பிடத்தக்க பேசப்பட்டுள்ளன.
தவிர, தமிழ்நாட்டு மக்களது வாழ்க்கையை வி வெளியாகியுள்ளன. ஜெயலலிதா காலத்துத் த (செ.கணேசலிங்கனின்) “ஒரு அரசியலின் b60) 'அடைப்புகள்’, சூழல் மாசடைதல் பற்றி எழுந்துள் குறிப்பிடத்தக்கன.
23 பெண்நிலை வாதம்:
மேற்கூறியவாறு வகைப்படுத்திப் பார்ப்பது F பொருத்தக்கூடியது. ஏனெனில், இத்தகைய நோக் சாதாரண குடும்ப வாழ்விலே பெண்ணுக்கு ஏற்ப தவிர (கோகிலா மகேந்திரனின் "தூவாணம் கவன பெண்நிலை வாதச் சிந்தனை கொண்ட பாத்திரங்கள் (எ-டு: உலகமெல்லாம் வியாபாரிகள்) இடம் டெ
ஆயினும், பெண்நிலைவாத நோக்குடன் ஆண் டு: செ. யோகநாதனின் தனியாக ஒருத்தி, செ. சந்தையில் ஒரு பெண்”) கவனத்திற்குரியன.

பற்றைக் கூற வாய்ப்பிருப்பதையும் இவ்விடத்தில் டப்புகளில் அது வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது,
ம் வித்தியாசங்கள்”, “ஆண்கள் விற்பனைக்கு” டியன. புகலிட நாட்டு அனுபவங்களே (அங்கு காரணமாக) இவை எழுவதற்கு மறைமுக உந்து
தமிழ் இளைஞர்களின் நாளாந்த வாழ்க்கையைச் தாடர்கதையாகிய) “கனவை மிதித்தவன்”, அத்தகு ாகரமூர்த்தி எழுதிய “வானம் வசப்படும்’ என்பன }களாம். இலண்டன் வாழ் தமிழ் இளைஞர்கள், எழுதிவரும் நாவல்களும் விதந்துரைகற்பாலனவே. கரையில்) இத்தகைய நாவல்கள் யாவும் குறிப்பிட்ட அழிவின் அழைப்பு’ வித்தியாசமான பின்னணியில் ன் ஒருவனது மன உணர்வுகளைச் சித்திரிக்கின்றது
இடங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வை நாவல்கள் எதுவும் இதுவரை வெளிவந்ததாகத் யாகியுள்ளன). ஆயினும் முற்குறிப்பிட்ட நாவல்கள் வின் அழைப்பு) புகலிட நாட்டு மக்களது வாழ்வு ]றுள்ளது. இவற்றுள், டேனிஷ் குடும்பமொன்றின் து. மேலைத் தேயத்தவரது நற்பண்புகள் இங்கு
தந்து பேசும் ஈழத்து எழுத்தாளரது நாவல்கள் சில தமிழ்நாட்டு அரசியல் நிலை பற்றிச் சித்திரிக்கும் த’, சிவகாசி சிறுவர் உழைப்புப் பற்றிப் பேசும் ள “நரகமும் சொர்க்கமும்” முதலியன இவ்விதத்தில்
ஈழத்துக் கவிதைகளுக்கும், சிறுகதைகளுக்குமே தடைய நாவலாசிரியைகள் ஈழத்தில் மிகக் குறைவே. நிம் பிரச்சினைகள் பற்றிப்பேசும் ஒரு நாவலினைத் ம்”) விதந்துரைக்க வேறெதுவுமில்லை. ஆயினும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சில நாவல்களில் ற்றுள்ளன.
நாவலாசிரியர்கள் எழுதியுள்ள சில நாவல்கள் (எ- கணேசலிங்கனின் “வன்முறைவடுக்கள்”, “கலகச்

Page 82
3. ஏனைய செல்நெறிகள்:
3.1 சாதிப் பிரச்சினை:
முன்னர் (எழுபதுகள்) போன்று இக்காலப் ட வெளிவந்துள்ளன. அடிநிலை மக்களது ஏறத்தாழ அண்மைக்காலம் வரையிலான அவர்களது வாழ்க்ை (பஞ்சமர், அடிமைகள், கானல், தண்ணி, கோவிந் வெளியாகின. முற்காலகட்ட குறிப்பாக, செ.கணேச பார்வ்ை இவற்றிலே வெளிப்படவில்லையிெ அனுபவங்களினதும் ஆழமான தேடல்களினதும்
தவிர, பிராமணச் சாதியினர் பற்றிய இரு நாவல் தமிழ்நாடு போன்று ஈழத்திலே பிராமணர் அதிக உயர்ந்தவர்களுமல்லர். இத்தகையவர்களது வ "பொற்சிறையில் வாடும் புனிதர்கள்', ஈழத்துச் சோமு வெளிப்படுத்துகின்றன.
மேலும், உயர்வர்க்கத்தினரில் ஒருசாராராகிய வாழ்நிலையையும், அவர்ளது வீழ்ச்சியையும் “மரக்கொக்கு” நாவலும் இக்காலப் படைப்புகளுt
3.2 சீதனப் பிரச்சினை
இப்பிரச்சினையும் சாதிப்பிரச்சினை போன்று ஈழத் முன்னர் போன்றே இக்காலப் பகுதியிலும் இப்பிரச் குறைவு. ஓரிரு நாவல்களே வெளிவந்துள்ளன. எழுதிய “ஆண்கள் விற்பனைக்கு’ இவ்விதத்தில்
33 தொழிலாளர் வாழ்க்கை:
முன்னர் போன்று இக்காலப்பகுதியிலும் இத்தை மலையக தொழிலாளர் பற்றி வெளிவந்துள்ள நாவல் சோமு எழுதிய “எல்லை தாண்டா அகதிகள்’ என் தோண்டும் மக்கள் வாழ்க்கை பற்றியும் தி. ஞானசேச வாழ்க்கை பற்றியும் செ.யோகநாதனின் “மீண்டும் பற்றியும் சித்திரிப்பன.
கடந்த சில வருடங்களாக, ஈழத்தில் இயங் (முஸ்லிம்) தொழிலாளர் பற்றியும் அவர்களது முற்படுகின்றது என்ற விதத்திலே திக்வெல்லை க படைப்பாகின்றது.
3.4 பிரதேச நாவல்கள்:
தமிழ் நாட்டுடன் ஒப்பிடும்போது ஈழத்துத் த குறைவானதே. அத்துடன் இவர்கள் வாழும் பிரே குறுகியனவாயுமுள்ளன. ஆயினும், இத்தகைய பி ஒருமைப்பாடு நிலவினும் நுணுகி நோக்கும்போது ( ரீதியிலான வளர்ச்சி நிலையும்) காணப்படுகின்றன

குதியிலும் சாதிப் பிரச்சினை பற்றிய நாவல்கள்
நூற்றாண்டுக்கால சாதி ரீதியான ஒடுக்கு முறையும் கப் போராட்டமும் பற்றிய டானியலின் பல நாவல்கள் தன், பஞ்ச கோணங்கள்) இக்காலப் பகுதியிலேயே லிங்கனின்) நாவல்கள் போன்று தெளிவான வர்க்கப் னினும் இவை நாவலாசிரியரது நேரடியான பதிவுகள் என்பது முக்கியமானது.
களின் வரவு இக்காலப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. எண்ணிக்கையினருமல்லர் பொருளாதார ரீதியில் ாழ்வுப் போராட்டங்களையே (தெணியான் எழுதிய) ) எழுதிய ‘விடிவெள்ளி வந்தது’ ஆகிய படைப்புகள்
மணியகாரர், உடையார் ஆகியோரின் இன்றைய முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட (தெணியானின்) ள் குறிப்பிடத்தக்கதே.
தமிழ்ச் சூழலில் முக்கிய இடம் பெற்றுள்ள தெனினும் சினை ஈழத்து எழுத்தாளரை ஈர்த்துக் கொண்டது புகலிடச் சூழலிலிருந்து வெளியான ந. பார்த்திபன்
முக்கியமானது.
கெய நாவல்கள் வெளிவந்துள்ளன. இவ்விதத்தில் )களுள் சில குறிப்பிடத்தக்கன. குறிப்பாக, மாத்தளைச்
ாற நாவல் களுகங்கைப் பிரதேசத்தில் மாணிக்கக்கல் 5ரின் “லயத்துச் சிறைகள்', தோட்டத் தொழிலாளரின் வந்த சோளகம்” மீனவத் தொழிலாளர் வாழ்க்கை
கி வரும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிற்சங்கப் போராட்டம் பற்றியும் சித்திரிக்க மாலின் ‘ஒளி பரவுகின்றது’ கவனிக்கப்பட வேண்டிய
மிழ் பேசும் மக்கள் தொகையும் வாழ்விடப் பரப்பும் தசங்கள் அருகருகே உள்ளனவாகவும் பரப்பளவிலே தேசங்களிடையே வாழ்வோரிடம் பண்பாட்டு ரீதியில் வேறுபாடுகளும் தனித்துவப் பண்புகளும் (அசமத்துவ . இப்பின்னணியில் ஈழத்திலே பிரதேச நாவல்களின்
58

Page 83
வரவு தவிர்க்க இயலாததே. முன்னைய காலகட்ட இப்போது வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிட ஈழத்திலே இன்றுவரை வெளிவந்துள்ள பிரதேச நாவ இவ்விதத்தில் குறிப்பிடற்பாலன.
3.4.1 யாழ்ப்பாணம்/நயினாதீவு:
இவ்விதத்திலே தேவகாந்தன் எழுதிய "கனவுச் வாழ்க்கை நிலைமைகளை ஓரளவு தத்ரூபமாக ெ
3.42 யாழ்ப்பாணம்/வடமராட்சி:
முன்னர் குறிப்பிட்ட துரை எழுதிய ‘சுயம்வரம் எண்பதுகளின் பிற்பகுதியில் இப்பிரதேச மக்களது
343 அம்பாறை/அக்கரைப்பற்று:
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் g56)6O)6)u JT சித்திரிப்பது.
344 வடமேல் மாகாணம்/நீர்கொழும்பு;
நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுதிய ‘ஒரு உதய வாழ்க்கையின் சிற்சில அம்சங்களை அழகாக விெ
34.5 திருகோணமலை/ஆலங்கேணி:
இராசரத்தினம் எழுதிய ‘ஒரு வெண்ம6 .!29ک[{6 நாவல் இப்பிரதேச மக்களின் வாழ்க்கை நிலைை
3.4.6 தென்னிலங்கை/திக்வெல்லை:
முன்னரும் திக்வெல்லைப் பிரதேச முஸ்லீம் ம திக்வெல்லை கமால் 'ஒளி பரவுகிறது’ நாவலில் பிறி
34.7 மட்டக்களப்பு/ஒட்டமாவடி:
வை. அகமத் எழுதிய ‘கிராமத்துப் பெண்’ இ
மேலோட்டமாகச் சித்திரித்திருப்பினும் சுவைபடச்
3.4.8 LD60)6)u 35lb:
இவ்விதத்தில் 'மாத்தளை சோமு’ வின் பலபடைப் உலகம்’ மலையகத்தில் அரசுசார்பற்ற நிறுவனங்கள் தலை தூக்கும் போராட்ட நிலைமைகளையும் அழ
3.5 முஸ்லிம் மக்களது வாழ்க்கை:
தமிழ்நாடு போலன்றி, ஈழத்திலே முஸ்லீம் மக்கள கருதுகின்ற நிலையுள்ளது. இதனால் ஈழத்தமிழ் தனி இடத்தைப் பெற்றுள்ளது. இவ்விதத்தில் மு பெண்’ முதலானவற்றோடு ஜூனைதா ஷெரிப் எழுத கவனத்திற்குரியது.
7–CM 4658

ம் போன்று அதிக அளவிலான பிரதேச நாவல்கள் த்தக்க நாவல்கள் வெளிவந்துள்ளன. (ஆயினும், பல்களின் தொகை குறைவானதுதான்). பின்வருவன
சிறை’ நயினாதீவு மக்களின் குறிப்பிட்ட காலப்பகுதி வளிப்படுத்த முற்படுகின்றது.
)’ நாவலின் நடுப்பகுதி போராட்டம் ஆரம்பித்த வாழ்க்கையை நுணுக்கமாகப் படம் பிடிக்கின்றது.
ற்றங்கரை” நாவல் கிராம மக்களின் வாழ்வினைச்
த்தின் அஸ்தமனம் நீர்கொழும்புப் பிரதேச மக்களது பளிக்கொணர முற்படுகின்றது.
ணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது’ என்ற மகளைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுகின்றது.
க்களின் வாழ்க்கைய்ை எழுத்திலே பதிவு செய்த தொரு கோணத்தில் அதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்பிரதேச முஸ்லீம் மக்களது வாழ்க்கையினை சொல்கின்றது.
புகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றின் நான்காவது செய்யும் சுரண்டல்களையும், 'ஆயுதங்கள் இங்கு ழகாக வெளிப்படுத்துகின்றன.
(தமிழ் மொழி பேசினும்) தம்மைத்தனி இனமாகக் இலக்கியத்திலே முஸ்லீம் இலக்கியம் என்பது ற்கூறப்பட்ட “ஒளிபரவுகிறது”, “ஒரு கிராமத்துப் நிய நாவல்களுட் சிலவும் (எ-டு: சாணைக்கூறை)

Page 84
3.6 வித்தியாசமான படைப்புகள்:
வித்தியாசமான களங்கள், பிரச்சினைகள் கொண் செங்கை ஆழியான் எழுதிய "ஓ அந்த அழகிய என்பதுடன்) தொடர்புடையது முற்குறிப்பிட்ட ‘ெ கொண்டாலும் சூழலியலுக்கு முதன்மை கொடுப்பு மக்கள் பற்றியது.
இதுவரை கூறப்பட்டவை தொடர்பாக இரு வி பற்றிய சில முக்கியமான படைப்புகளே எடுத்து பொழுதுபோக்கு அம்சங்கள் மிகுந்த நாவல்கள் குறைந்தளவே வெளிவருகினன்றன.) இங்கு ராமேஸ்வரனின் பல படைப்புகள்), என்பது மற்ெ
மேற்கூறப்பட்டுள்ளவாறான ஈழத்துத் தமிழ் நா6 பார்க்கும் போது தமிழ் நாட்டுடன் ஒப்பிடுகை வேண்டியனவாகின்றன. தேசிய இனப் பிரச்சினைய பொதுவான தமிழ்நாவல் செல்நெறிகளுடன் ஈ கொள்கின்றன என்பதிலே தவறில்லை.
மேலும், முன்னைய காலகட்டச் செல்நெறிகளி சாதிப் பிரச்சினை பற்றிய டானியலின் நாவல் ஈழத்திலிருந்து ஆரம்பிக்க வைத்துள்ளமையும் (
4. இக்காலப்பகுதி நாவல்களின் படைப்பாக்க
இனி மேற்கூறப்பட்ட ஈழத்து நாவல்களின் பை போது அது முக்கியமாக இரு தடங்களில் அை
41 விவரண ரீதியிலான பதிவு:
இக்காலப் பகுதிக்குரிய பெரும்பாலான நாவல்க கூற்றினை எடுத்தாள்வது பொருத்தமானது. அ
“இத்தகைய மாபெரும் மக்கள் வெளியேற்றத் நோக்கிலேயே இந்நாவலை எழுத முயன்றேன் சம்பவங்களை மட்டுமே மாதிரியாகக் கொண்டு காட்ட முனைந்தேன்.”
இத்தகைய விவரணப்பதிவிலான நாவல்களில்
அ. நாவல் நிகழ்ச்சிகள்/சம்பவங்களின் ( ஆ. இயல்பான பாத்திர உருவாக்கமும் இ. கதையம்சம் முக்கியம் பெறுதல்.
4.2 கருத்து/கருத்தியல் விளக்கம்:
மேற்குறிப்பிட்ட பண்பிலான நாவல்களில் பின்
அ. பாத்திரங்கள் எலும்புக் கூடுகளாக ஆ. பிரச்சாரம் முதன்மை பெறுதல்.

ட நாவல்கள் என்ற விதத்திலே சில குறிப்பிடத்தக்கன. ரொமம்’ (சூழலியல் காடழித்தல் பற்றிச் சித்திரிப்பது சார்க்கமும் நரகமும்’ தமிழ் நாட்டினைக் களமாகக் து, செ. யோகநாதன் எழுதிய "கிட்டி’ காட்டு வாழ்
டயங்கள் கவனத்திற்குரியன. முக்கியமான போக்குகள் துக் காட்டாகக் கூறப்பட்டுள்ளன என்பது ஒன்று. இவை, தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது ஈழத்தில் கவனத்திற் கொள்ளப்படவில்லை, (எ-டு: சோ. றான்று.
வல்களின் சமகாலச் செல்நெறிகள் பற்றித் தொகுத்துப் யில் இருபுதிய செல்நெறிகள் விதத்துரைக்கப்பட ம் புகலிட அனுபவங்களுமே அவை. இவ்விதத்தில், ழத்துத் தமிழ் நாவல் செல்நெறிகள் சங்கமித்துக்
ன் தொடர்ச்சியாக இக்காலப்பகுதியிலே எழுந்துள்ள கள் தமிழில் தலித் நாவல்களின் தோற்றத்தினை குறிப்பிடத்தக்கது.
(p60),D60)LD:
டப்பாக்க முறைமை பற்றிக் கூர்ந்து அவதானிக்கும் )மந்து வந்துள்ளமை புலப்படுகின்றது.
ள் இப் பண்பினவே. இதுபற்றி நாவலாசிரியரொருவரின் து பின்வருமாறு:
தைச் சுட்டிக்காட்டி நாவல் வடிவில் பதிவு செய்யும் ,மேலே கூறப்பட்ட நிகழ்வுகள், சூழ்நிலை ۔۔۔۔۔۔۔۔ آ ஒரு சில பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மூலம் சுட்டிக்
) பின்வரும் பண்புகள் இடம்பெற்றுள்ளன.
தொகுப்பாதல். உரையாடலும் இடம்பெறுதல்.
வரும் பண்புகள் இடம் பெற்றுள்ளன:
அமைத்தல்.
60

Page 85
இ.
ஒரே பாணியில் அமைதல். செயற்கைப் பாங்குடன் அமைதல்.
உ. நாவல் நிகழ்ச்சிகள், சம்பவங்களின் ெ
Զ6II
கதையம்சம் முக்கியம் பெறுதல் அல்
இவ்விருவகைப் படைப்பாக்க முறைமை கொண் c)H6O)6) UT6) J60.
உலக நோக்கோ வாழ்க்கை பற்றிய பாத்திரங்களின் அக உணர்வுகள் 6ெ மொழிநடை வளம் பெறாமை. படைப்பாக்க முறைமையிலும் கலைய எடுத்தாளப்படும் பிரச்சினைகள் பன்மு அணுகப்படாமை.
5. மதிப்பீடு:
5.1.1
5.2
5.3
5.4
5.5
எண்பதுகளிலே, புதிய செல்நெறிகளு குறிப்ப்ட்டது போன்று (கவிதை, சிறுகை வெளிவரவில்லை.
எனினும், புதிய செல்நெறிகளாக இன நாவல்களும் புகலிட நாவல்களும் பொ துறையின் பங்களிப்பாகின்றன.
எண்பதுகளில், முன்னைய செல்நெறிகள் பற்றிய (டானியலின்) நாவல்கள் த அமைகின்றன. இவ்விதத்திலே அை துறையின் பங்களிப்பாகின்றன.
புதிய செல்நெறிகள் என்ற விதத்தில் உள்ளடக்கம் சார்ந்ததே தவிர படைப்ட
எண்பதுகளின் தமிழக நாவல் செல்ெ உள்ளடக்க ரீதியிலே ஓரளவு ஒப்பிட தேக்கநிலையையே எட்டியுள்ளன. இ நிற்கின்றன.
米米米米米冰米米米米
冰冰冰冰冰米米米冰米米米米米冰冰冰冰冰米
水米米米米冰米米米米冰米米米米
61

தாகுப்பாதல். ஸ்து முக்கியம் பெறாமை.
ட நாவல்கள் சிலவிதங்களில் ஒன்றுபடுகின்றன.
தரிசனமோ இடம்பெறாமை. J6f ILILIT60)LD.
ழகிலும் கவனஞ் செலுத்தாமை. )கத் தன்மையுடன் இடம் பெறாம்ை ஆழமாக
க்கு எடுத்துக் காட்டான நாவல்கள், முன்னர் தை ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது) பெருமளவு
ங்காணப்பட்ட தேசிய இனப் பிரச்சினை பற்றிய துவான தமிழ் நாவல் வளர்ச்சிக்கு ஈழத்து நாவல்
ரின் தொடர்ச்சியாக அமையும் சாதிப் பிரச்சினை மிழில் தலித் நாவல்களின் முன்னோடிகளாக வ தமிழ் நாவல் வளர்ச்சிக்கு ஈழத்து நாவல்
கவனிக்கப்பட்ட நாவல்களின் முக்கியத்துவம் ாக்க முறைமை சார்ந்ததன்று.
நறிகளுடன் ஒப்பிடும்போது ஈழத்து நாவல்கள் க்கூடியனவே தவிர, படைப்பாக்க முறையிலே தற்கான காரணங்கள் விரிவான ஆய்வை நாடி
米米米米米米米冰冰
k冰冰米米米米米米米米米米冰米米水冰米
k米米冰米米米米米米米米冰冰

Page 86
5Tகிதம், கடிதம், தபால் என்னும் சொற்கள் ஒ( எமக்கு மிகவும் பிரியமானவையும் பரிச்சயமானவையு காத்திருப்பவர்களையும், தபால்காரனின் சைக்கிள் ட அதனை ஆலயமணி ஓசையின் தித்திப்பாக ஏற்று, ஓ பிரித்து, ஆர்வத்தோடு படிப்பவர் களையும் காண் அது தாங்கிவரும் செய்தி, அதனைப் பெறுமானமுள்ள நேரில் நின்று பேசுவது போன்ற பிரமையும் அ உணர்வுபூர்வமாக உண்டாகின்றது. கடிதத்தின் பண் போது, கடிதம் என்பது எழுதப்பட்டு, வாசிக்கப் இருக்கும். பேச்சு, வாசிப்பு, எழுத்து என்ற மூன்று ெ கடிதக் கலையில், கடிதம் ஒரு சிறந்த தொடர்ப
இன்று பெரும்பாலும் கடிதங்களைப் பெற்று, வ கடிதங்களை எழுதுவதிலும், பதில் போடுவதிலும் க உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது ஆரா
முதலாவது காரணம், கடிதமெழுதுவதில் ஒருவ பழக்கம் என்பவற்றைக் கூறலாம். வேலைப் பழு காட்டி, மன்னிப்புக் கோரி ஒருவாறு சமாளித்துக் ெ போது, ஆரம்பத்திலேயே “நான் நீண்ட காலமாகக் பழு, நேர அவகாசமின்மை, (36) O LJ60 சோலிகள் பொதுவாகத் தொடங்குவதிலிருந்தே இதனை s தவறுகளுக்கு வேறு காரணங்களைத் தேடிப்பிடிப்
அடுத்து, மொழியைச் சரிவரப் பயன்படுத்து உணர்வுகளை உள்ளபடியும், உணர்ந்தபடியும், சுை வடிக்கும் திறன், எழுதுவது பிறர் வாசிப்பதற்காகவே நேர்மை என்பவற்றில் பின்னடைவு பெற்றிருத்தல், ஆகும்.
ஒரு கடிதத்திலிருந்து, அதனை எழுதியவன அறியாமையும்; பண்பும் பாமரத்தன்மையும்; ந
பல்வேறு அம்சங்களைக் கடிதங்கள் துல்லியமாக என்றும் முடங்கல் என்றும், ஒலை, மடல் என்
(

கடிதம் எழுதும் கலை
குமாரசாமி சோமசுந்தரம் முன்னாள் பணிப்பாளர், தமிழ்த்துறை, தேசிய கல்வி நிறுவகம்,
LOCBs/CBLO.
ரே கருத்தைத்தான் தெரிவிக்கின்றன. இச்சொற்கள் ம் ஆகும். காலையில் கடிதங்களை எதிர்பார்த்துக் மணி ஒலி, எத்துணைகரண கொடூரமாக இருப்பினும், டோடிச் சென்று கடிதங்களைப் பெற்று, அவசரமாகப் ாகின்றோம். கடிதம் வெறுமனே கடதாசியன்று , ள கடதாசி ஆக்குகின்றது. கடிதத்தை எழுதினவரே அதேவேளை ஒரு திருப்தியும் வாசிப்பவருக்கு ண்பும் பயனும் இதுவே. இந்த வகையிலே பார்க்கும் படுகின்ற, பேச்சு என்று கூறுவது பொருத்தமாக மாழித்திறன்களும் முழுமையாக இடம் பெறுகின்றது. ாடல் கலைச் சாதனம்.
ாசிப்பதில், காட்டுகின்ற ஆர்வமும் அங்கலாய்ப்பும் ாட்டப்படாத நிலையினை அவதானிக்கக் கூடியதாக யப்பட வேண்டியது.
பருக்கு ஏற்படுகின்ற பஞ்சி’, சோர்வு; பின்போடும் ழ, நேரமின்மை போன்ற போலிக் காரணங்களைக் காள்பவர்களையும் காண்கிறோம். கடிதம் எழுதும் கடிதம் எழுதாததையிட்டு மன்னிக்கவும். வேலைப் ர் தான் காரணம். ” என்னும் பீடிகையுடன் உணர்ந்து கொள்ளலாம். தன்னைத் தவிர்த்துத், பதில் கடிதம் எழுதுபவர்களும் சமர்த்தர்கள்தான்.
ம் ஆற்றல், தமது கருத்துக்கள், எண்ணங்கள், வயாகவும், தெளிவாகவும் ஒழுங்குபடுத்தி எழுத்தில்
என்பதனைப் புரிந்து கொள்ளும் தன்ம்ை உள்ளத்து உதம் எழுதப் பலர் பின்னிற்பதன் மற்றைய காரணங்கள்
ரத் தெரிந்து கொள்ளலாம். அவரின் அறிவும் ட்பும் பகைமையும்; காதலும் வெறுப்பும் போன்ற 5 வெளிப்படுத்துகின்றன. கடிதத்திற்குத் திருமுகம் றும் பழந்தமிழர் பெயர் சூட்டினர். எழுதியவரின்
52

Page 87
முகத்தைப் பெறுநர் கடிதத்தில் தரிசிக்கின்றார். அ அகத்தை முகத்தில் பார்ப்பது போன்றதே, எழுத அவரின் கடிதத்தில் வாசகர் காண்பது ஆகும். த துணியமாட்டார்.
கடிதம் எழுதும் முறை மிகப் பழைய காலத்தி வேறு தொலைத் தொடர்புச் சாதனங்கள் இல்லாத என்று அழைக்கப்பட்ட கடிதங்களே தொலைவில் 6 கொள்ளவும், காதல் பரிவர்த்தனை நிகழ்த்தவும், 6 நிறுத்தவும் கூடப் பயன்படுத்தப்பட்டன.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் நம் நெஞ் மடந்தை தன்னை விட்டுப் பிரிந்து சென்ற கோவ6 உள்ளடக்கம் நயத்தக்க நாகரிகம் நிறைந்ததாகக் க அடி வீழ்ந்தேன்’ என்று அக்கடிதம் தொடங்கு கடிதத்தை அப்படியே தன் தந்தைக்கும் தாய்ச் தந்தையருக்கும் அனுப்பிவைக்கக்கூடிய பண்பும் விளங்கியமை இங்கு நோக்கற்பாலது. இக்காலத்
தூதுப் பிரபந்தங்கள், ஒருவகையில் கடித பிற்காலத்தில் புலவர்கள், சீட்டுக் கவிகளைப் பு கடிதங்களாகவே விளங்கின. பொதுவாக இவை இலக்கியங்களாகப் பேணப்பட்டும் வருகின்றன. “இ என்னும் தோரணையில் இவை அமைந்துள்ளன.
உரைநடையில் எழுதத் தொடங்கிய பின்னர்,
பரிவர்த்தனை செய்யப்பட்டன. அச்சியந்திர வெளிப்படுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றான குருமார்களுக்கும் பகிரங்கமாக நிருபங்கள் மூல நூற்றாண்டில், கடிதம் ஓர் இலக்கிய வடிவமான நிை கடித அமைப்பினை இலக்கிய வடிவமாக்கியதில் தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என்ற நூல்கள் ச இலங்கையிலும் 'நந்தி’ என்னும் புனை பெயர் கொ வளர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
மேனாட்டில் புகழ் பெற்ற கடித இலக்கியங்க இந்தியா போன்ற கீழ்நாடுகளிலும் கடித இலக்கி LD56 Sibg5JT6)ä.ö 6Tupg5u, ”Letters from a fat கடிதங்கள்’ என்ற கடித அமைப்பிலான ஆங்கி வரலாற்றையே கடித மூலம் தன் மகளுக்குக் கற்பி அதனாலேயே கடித மூலம் தமது கடமையை நிை கடிதமூலம் நடைபெறுவதை நாம் அறிவோம். { கம்பியில்லாத் தந்தி, ரெலெக்ஸ், தொலைமடல், மி வந்துவிட்டன. இவற்றால் கடிதங்களின் முக்க கடிதத்திற்கு நிகர் கடிதம் தான் என்பதை மறுச் உள்ளது. பல பெரியார்கள், தலைவர்கள், கல்வி இலக்கியங்களாகப் பேணப்பட்டு வருகின்றமையை
இக்காலத்தில், கடிதங்கள் நடைமுறைத் தேை பிறரோடு பலவிதத்திலும் தொடர்பு கொள்ள வே

ந்த முகம் காட்டுவது அவரின் அகத்தையேயாகும். யவரின் உள்ளக்கிடக்கையை, உணர்வை, பண்பை ]மை வெளிப்படுத்த விரும்பாதவர் கடிதம் எழுதவும்
b இருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
அன்றைய காலகட்டங்களில் முடங்கல், திருமுகம் உள்ளவர்களுடன் தொடர்பாடவும், செய்திப் பரிமாற்றம் ான் அரசர்களுக்கிடையே போர் தொடுக்கவும் போர்
சைக் கிள்ளும் ஒரு நிகழ்வு - அதுதான் மாதவி Uனுக்கு அனுப்பிய முடங்கல். அந்தக் கடிதத்தின் ாணப்பட்டமை அதன் சிறப்பு. “அடிகள் முன்னேயான் கிறது. அக்கடிதத்தை வாசித்து விட்டு, அதே கும் அனுப்பி வைக்கின்றான், கோவலன். தாய்
பொருத்தப்பாடும் கொண்டு மாதவியின் முடங்கல் தில் இது சாத்தியப்படுமா, என்பது வியப்பிற்குரியது!
அமைப்பிலேயே இருப்பதை அவதானிக்கலாம். ரவலர்களுக்கு எழுதினர். இச்சீட்டுக் கவிகளும் யாவும் செய்யுள்களாக எழுதப்பட்டுள்ளன. இவை இன்னார், இன்னாருக்கு எழுதுவது இன்னது செய்தி”
நிருபங்கள் என்ற பெயரில் கடிதத் தொடர்புகள் ம் வந்த பின்னர் அச்சிட்டுப் பகிரங்கமாகவும் ன்டில், பூரீலழரீ ஆறுமுகநாவலருக்கும், கிறிஸ்தவக் ம் வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்றன. இந்த )லயையும் காண்கின்றோம். டாக்டர்.மு. வரதராசனார் முன்னோடி எனலாம். அவர் எழுதிய அன்னைக்கு, கடித இலக்கியத்திற்கு நல்ல எடுத்துக் காட்டுகள். ண்ட டாக்டர் சிவஞானசுந்தரம் கடித இலக்கியத்தை
ள் தோன்றியுள்ளன. மேனாட்டார் வருகையால் ப வளர்ச்சி ஓங்கியது. ஜவஹர்லால் நேரு தமது her to his daughter'- "gibb605 LD56 big 6T(p5u ல நூல் உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. உலக த்தவர் நேரு. அப்பொழுது நேரு சிறையிலிருந்தார். றைவேற்றினார். தற்பொழுது அஞ்சல் வழிக் கல்வி, இன்று தொலைத் தொடர்பாடலுக்கு, தொலைபேசி, ானஞ்சல் முதலிய நவீன் தொடர்பாடல் சாதனங்கள் யத்துவம் குறைக்கப்பட்டும் விட்டது. எனினும் க முடியாது. கடிதம் ஓர் இலக்கிய வடிவமாக மான்கள் ஆகியோர் பிறருக்கு எழுதிய கடிதங்கள்
நாம் அறிவோம்.
வகளை ஒட்டியே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. 0ண்டிய தேவை இன்று பெருகியுள்ளது. எல்லாச்
3

Page 88
சந்தர்ப்பங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை நேரில் செய்யும் நிலைமையில் இன்று நாம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் உள்ளது.
கடிதங்களை முறையாகவும், தெளிவாகவும் எழு ஆட்சி என்னும் போது செந்தமிழ்ப் புலமையைே கருதவில்லை. சாதாரண நடைமுறைத் தமிழ், கூடியதுமான தமிழ் கடிதம் எழுதுவதற்குப் போ
கடிதங்களை நட்பு முறைக் கடிதங்கள் எனவும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எழுதும் கடிதங் கடிதங்கள் காதலர் எழுதும் கடிதங்கள்; என்ப நன்றியறிவிப்புக் கடிதங்கள், அனுதாபக் கடிதங்க என்பனவற்றையும் இதனுட் சேர்த்துக் கொள்ளல கடிதங்களுக்கு எழுதப்படும் மறுமொழிக் கடித கிடைத்தமை பற்றியும், பதிலாகவும் கடிதங்கள் கூ ஆகும். இன்று, இதனை அனுசரிப்பது அருக போக்கு மட்டும் போதாது வரத்தும் தேவை. அத
தொழின்முறைக் கடிதங்களின் வகையினுள் ெ தகவல் கேட்கும் கடிதங்கள், வியாபார முறையில கடிதங்கள், வானொலி நிகழ்ச்சிகள் தொடர்பான தெளிவு, நிறைவு, செம்மை, நயத்தக்க நாகரிகம் கடிதங்களில் இருக்க வேண்டுமென்பது பொதுவி அளவிற்கு நியமமான வடிவிலோ, மொழி நடை தொடர்பு அல்லவா? அன்பு, கட்டுப்பாட்டிற்கு முடிப்பு, முகவரி என்னும் ஐந்து உறுப்புக்கள் அ
கடிதம் வரைதல் இன்று தனிக்கலையாக வளர் பருவத்திலிருந்தே பயின்று, பயிற்சி செய்ய மாண6 வாழ்க்கையில் மனிதத் தேவை ஒன்றினைப் பூர்த் வேண்டியதாகின்றது.
米米冰米米冰米米
冰米米米米米米米米米米米米米米冰冰米米米壮
米冰冰来米米米米米米米米冰米米
பல நன்மைகளு போரிடத்துச் சில கு சந்திரனிடத்தும் கல யுணர்ந்து அவற்ை வேண்டும்.
 
 
 
 
 

சென்று சந்தித்து உரையாடித் தேவைகளைப் பூர்த்தி ஆகையால், கடிதங்களின் முக்கியத்துவம் பெரிதாக
துவதற்கு மொழி ஆட்சி இன்றியமையாதது. மொழி பா, பண்டிதத் தமிழ் வித்தகத்தையோ இங்கு நான் எளிமையானதும் இலகுவில் விளங்கிக் கொள்ளக்
துமானது.
தொழின்முறைக் கடிதங்கள் எனவும் வகுக்கின்றனர். கள்; உறவினர் மற்றொரு உறவினருக்கு எழுதும் ன நட்பு முறைக் கடிதங்களுள் அடங்கும். முற்றும் ள், அழைப்புக் கடிதங்கள், வாழ்த்துக் கடிதங்கள் ாம். சமூக உறவாடலில் இடம் பெறும் இத்தகைய வகளும் இவ்வகையினுள் அடங்கும். கடிதங்கள் உய விரைவில் எழுதுவது ஒரு நாகரிகமான கடப்பாடு வருகின்றது. கடிதங்களைப் பொறுத்த மட்டில் னால்தான் கடிதப் போக்குவரத்து என்றனர் போலும்.
பிண்ணப்பக் கடிதங்கள், முறைப்பாட்டுக் கடிதங்கள், ான கடிதங்கள், செய்தித்தாள் ஆசிரியருக்கு எழுதும் கடிதங்கள், என்பனவற்றை அடக்கலாம். சுருக்கம், என்னும் ஐந்து இலட்சணங்களும் தொழின் முறைக் தி. ஆனால் உறவு, நட்புமுறைக் கடிதங்கள், அந்த யிலோ இருக்க வேண்டியதில்லை. அது அன்புத் அப்பாற்பட்டது. எனினும் தலைப்பு, விளிப்பு, செய்தி, மையக் கடிதம் எழுதுவது சிறப்பாகும்.
ச்சி பெற்று விளங்குகிறது. இக்கலையை, பாடசாலைப் வர்களுக்கு வாய்ப்புக்கள் நல்க வேண்டும். அன்றாட நி செய்வதால் கடிதத்தின் முக்கியத்துவம் உணரப்பட
k米米米米米米米冰米米米
米米米水米米冰冰米米冰米米冰米米米米水冰米米冰>
k冰冰水冰米水冰米米米米米冰米米米冰米
க்கு உறைவிடமாயிருப் Oறபாடுகள் காணப்படின் ாங்கம் உண்டென்பதை றத் துற்றாது போற்ற
64

Page 89
1.0 அறிமுகம்
LDனிதவள முகாமைத்துவத்தின் மிகப் பிரதா ஊக்கப்படுத்தல் என்பதாகும். எந்தவொரு நிறுவ எதிர்பார்த்த விளைவையோ அன்றி அதனை வி ஊக்கப்படுத்தும் செயற்பாடு அவசியமாகின்றது. உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுவதற்கும் அதிகரிக்கப்படுவதற்கும் ஊழியர்களது ஊக்கப்படு விளைவினைப் பின்வரும் வரைபடம் காட்டுகின்றது
Rewards & recc
Grater productivity
Grater qu quantity C
மேற்காட்டிய வரைபடத்தின்படி ஊழியர்களுக்கான ஊக்கப்படுத்தலுக்கும் தொழிற்திருப்திக்கும் வகைெ அளவிலும் அதிகரிப்பு ஏற்படும். இது இறுதியில் உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஊழியர்களுக்கான 6ெ செய்யும். எனவே, சுற்றுவட்டத்தில் ஊழியர் ஊக் வகைசெய்யும். எனவேதான், எல்லா நிறுவனங்க உற்பத்தித்திறன் அதிகரிப்பையும் உச்ச இலாபத்ை
எந்தவொரு நிறுவனத்திலும் ஊழியர்களை நெறிபட சாத்தியமாகின்றது. ஊழியர்களை நெறிப்படுத்து
6

ஊழியர்களை ஊக்கப்படுத்தல்
Motivation of employees
திரு க. தேவராஜ7,
தலைவர்,
வணிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ன கருமமாகக் காணப்படுவது ஊழியர்களை னத்திலும் பணியாற்றுகின்ற ஊழியர்களிடமிருந்து . கூடுதலான விளைவையோ பெற்றுக்கொள்ள
மனிதவள முகாமைத்துவத்தில் ஊழியர்களது அதன் ஊடாக நிறுவனங்களின் வெளியீடு த்தல் வேண்டப்படுகின்றது. ஊக்கப்படுத்தலின் l.
gnition
Grater motivation & job satisfaction
lity & f work
வெகுமதிகளும் அங்கீகாரமும் உயர்வான ஊழியர் சய்யும். இதன் ஊடாக வேலையின் தரத்திலும் டயர் உற்பத்தித் திறனுக்கு வகைசெய்யும். இந்த குமதிகளையும் அங்கீகாரத்தையும் அதிகரிக்கச் கப்படுத்தலானது உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கு நம் ஊக்கப்படுத்தலின் மீது அக்கறை செலுத்தி யும் பெற்றுக்கொள்ள முற்படுகின்றன.
டுத்துவதன் மூலமே அதன் இலக்கை அடைவது தில் தலைமைத்துவம், தொடர்பாடல் என்பன

Page 90
எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனவோ அ கொண்டிருக்கின்றது. ஊழியர்களின் வினைத்திறன் காரணியாக ஊக்கப்படுத்தலே காணப்படுகின்றது.
P = A
என்ற சமன்பாடு நிரூபிக்கப்படுகின்றது. இ ஊக்கப்படுத்தலையும் குறிக்கும். இதன்படி ஆ பிரயோகித்தால் மட்டுமே செயற்றிறன் அதிகரிப் ஆற்றலில்லாத ஊழியர் மீது ஊக்கப்படுத்தலை ஊக்கப்படுத்தலைப் பிரயோகிக்காதிருப்பதும் செய
2.0 ஊக்கப்படுத்துதலின் தேவை
எந்தவொரு நிறுவனத்தின் முகாமையாளரும் தன் வேண்டும். ஊழியர்களுக்கு ஊக்கப்படுத்தல் தேை முகாமையாளர் உணர்ந்துகொள்ள முடியும். அதா
* ஊழியர் வேலையில் அக்கறையின்றிக் கான * வேலையில் சலிப்புத் தன்மையைக் கொண் * வேலையில் அடிக்கடி தவறுகள் ஏற்பட்டு * நேரத்தினை பெருமளவுக்கு விரயம் செய்த6 * நிறுவனத்தின் வளங்களைச் சிக்கனமின்றிப் * ஊழியர்களது வரவீனம் பெருமளவில் கான * ஊழியர்களது புரள்வு அதிகளவில் காணப் * நிறுவனத்தின் நோக்கத்தை அடைவதில் * நிறுவனத்தின் வெளியீட்டில் வீழ்ச்சி காண 있 நிறுவனத்தில் அர்ப்பணிப்பு குறைவாக இரு
என்கின்ற சந்தர்ப்பங்களில் ஊழியர்கள் ஊக்
3.0 ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள்
நிறுவனங்கள் ஊழியர்களைத் தூண்டுவதற் ஊக்குவிப்புகளையும் வழங்குவது இயல்பாகும். ஊக்குவிப்புக்கள் எனக் கொள்ளப்படும். இது ெ என்பதனாலேயே பணமாக அல்லாத ஊக்குவிப்புக்க அடிப்படையில் சாதாரண நிறுவனங்களால் பி பின்பற்றப்படுகின்றன.
1. ஊழியர்களது விருப்பத்தை அதிகரிக்கக்கூ 2. வேலையை சரிவர ஆற்றுவதற்கு வசதியா 3. ஊழியர்களது . அக்கறையை அதிகரிக்கு
அறிமுகப்படுத்தல்
4. அதிகாரத்தைக் குவித்து வைத்திருக்காது
கையளிப்பை ஏற்படுத்தல்
5. வேலையில் தோன்றக்கூடிய சலிப்புத் த
வேலையை அறிமுகப்படுத்துதல். 6. நிதிசார்ந்த ஊக்குவிப்புக்களை வழங்குதல்

Hவ்வளவு முக்கியத்துவத்தை ஊக்கப்படுத்தல் வாய்ந்த செயற்பாட்டை நிர்ணயிப்பதில் முக்கிய இதன் காரணமாகவே.
XM
தில் P செயற்றிறனையும், A ஆற்றலையும் M }ற்றல் உள்ள ஊழியர் மீது ஊக்கப்படுத்தலை பு ஏற்படுவதனை உறுதிப்படுத்தலாம். மாறாக பிரயோகிப்பதும், ஆற்றல் உள்ள ஊழியர் மீது ற்றிறன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
ாது ஊழியர்களை ஊக்கப்படுத்துபவராக இருத்தல் வப்படுகின்றது என்பதை பின்வரும் சந்தர்பங்களில் 6) liġibbli,
ணப்படுதல்.
டிருத்தல்
வருதல
ல்
பாவித்தல்
னப்படுதல்
படுதல். அக்கறையின்றிக் காணப்படுதல் ப்படுதல் }த்தல்.
குவிக்கப்படுதல் வேண்டும்.
கு நிதிசார்ந்த ஊக்குவிப்புக்களையும் நிதிசாரா
பணமாக வழங்கப்படுவதெல்லாம் நிதி ரீதியான தாடர்ச்சியாக ஊழியர்களை ஊக்குவிக்கமாட்டாது ள் வழங்க நிறுவனங்கள் முன்வருகின்றன. இவற்றின் ன்வருவன ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளாக
டியவாறு பொருத்தமான வேலையை வழங்குதல் க தேவைப்படும் பயிற்சியை வழங்குதல் ம் வகையில் ஜனநாயகத் தீர்மானமெடுத்தலை’
கீழ்மட்டத்தவருக்கும் உதவும் வகையில் அதிகாரக்
ன்மையை நிவர்த்திக்கும் வகையில் சுழற்சிமுறை

Page 91
நிதிசாராத ஊக்குவிப்புக்களை வழங்க நட6 8. வேலை சம்பந்தமான அபிப்பிராயங்களை 6
back) என்பதனை நடைமுறைப்படுத்துதல் 9. நிறுவனத்தின் வேலையில் முன்னேறுவதற்க 10. ஊழியர்களிடையே பக்கச்சார்பினைத் தவிர் 11. ஊழியர்களது வேலையை அங்கீகரிப்பதுட6
வழங்குதல். 12. முரண்பாடுகளை உத்தம அளவில் வைத்த 13. ஊழியர்களுக்கு சிறந்த மேற்பார்வை வழங் 14. குழு அடிப்படையில் வேலை செய்வதற்கு
இவற்றைப் பயன்படுத்துவதன் ஊடாக ஊழிய இவற்றைப் பயன்படுத்துவதனால் தொழிற்திருப்தி mance) விரைவாக அதிகரித்துச் செல்வதனைக்
4.0 ஊக்கப்படுத்தலுக்கான கோட்பாடுகள் (T
நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டவையே ஊக்கப்படுத்தல் கே இருக்கும் தேவைகளையும் அவற்றுக் கா உருவாக்கப்பட்டவையாகும். ஊழியர்களுக்கா கின்றனவோ அதற்கேற்றவகையில் தூண்டுதல் பின்வருவன முக்கியம்பெறும்.
4.1 மாஸ்லோவின் தேவை பற்றிய படிமுறைக்
(Maslow's Needs hierarchy theory)
அமெரிக்க சமூகவியலாளரான ஏப்ரகாம் மா முன்வைக்கப்பட்ட ஊக்கப்படுத்தல் கோட்பாே தேவைகளைக் கொண்டுள்ள ஒரு பிராணி ( ஊக்கப்படுத்தலுக்கு அடிப்படைகளில் அமைந்துள்: ஒரு தேவை தோன்றி திருப்தியை நாடிநிற்கும் ெ நடவடிக்கையே ஊக்கப்படுத்தலாக அமையமுடி என்றுமே தேவைகளைக் கொண்டிருக்கும் என்றும் தோன்றி திருப்தியை நாடிநிற்கும் என்பதனால் அறிமுகப்படுத்தப்பட்டது.
56IGOIGuj, (356O)6)
கெளரவத் தேவை
ğ epöbğ5 — G3556006)
UIgblabilt 145 (356O)6)
LGSufi) (356O)6)
 

வடிக்கை எடுத்தல் T(65g) bén Oh (86).j6O)6)ij (hairso). IL2 (work feed
கான வாய்ப்புக்களை அதிகரித்தல் த்து நடுநிலைக் கொள்கையை கொண்டுவருதல். ன் அவர்களுக்கு புகழ்ச்சியையும் வெகுமதிகளையும்
நிருப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் குதல்
வழிசெய்தல்.
ர்களை சாதாரணமாக ஊக்கப்படுத்த முடிகின்றது. ஏற்படுவதுடன் ஊழியர்கள் செயற்றிறன் (perforகாணமுடியும்.
heories of motivation)
ளை எவ்வாறு ஊக்கப்படுத்தலாம் என்பதற்காக ாட்பாடுகளாகும். இக்கோட்பாடுகள் ஊழியர்களுக்கு ன திருப்திகளையும் மையமாகக் கொண்டு ன தேவைகள் எந்தளவுக்கு திருப்திப்படுத்தப்படு அமைய முடியுமென்பது கருத்தாகும். இவற்றுள்
க் கோட்பாடு
ஸ்லோ என்பவரால் ஐம்பதுகளின் நடுப்பகுதியில் - இதுவாகும். இவர் மனிதவர்க்கம் என்றுமே என்றும் அவர்கள் கொண்டிருக்கும் தேவையே ளது என்பதுமான கருத்தை வெளியிட்டார். இதன்படி பாழுது அதனை நிறைவு செய்வதற்கு எடுக்கப்படும் யும் எனக் கூறப்பட்டது. இதன்படி மனிதவர்க்கம் ஒரு தேவை பூர்த்தியானதுடன் இன்னொரு தேவை b தேவை பற்றிய பின்வரும் வரிசை அவரால்
Self-actualization need
Esteem need w
Social need
Safety need
Physical need

Page 92
பிரமிட்ஸ் வடிவத்திலான மேற்காட்டிய படத்தி அவை தேவைப்படுவோரது எண்ணிக்கையும் காட்ட
உடலியற் தேவை :
மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படையிலா6 பெறுவதற்கான தேவை இதுவாகும். ஒருவ அடிப்படையாகக் கொண்டு இத்தேவை பூர்த்தியா
பாதுகாப்புத் தேவை :
உடலியற் தேவை பூர்த்தியானவுடன் தோன்றச் உயிருக்குப் பாதுகாப்பு, உடமைகளுக்கு பாதுக பாதுகாப்புக்களை ஊழியர் வேண்டி நிற்பதனால் ே
சமூகத் தேவை :
பாதுகாப்புத் தேவை பூர்த்தியானவுடன் தோன்றுகி ஏனையோர் மீது அன்பு செலுத்துதல், உறவுகளை
கெளரவத் தேவை :
சமூகத் தேவை பூர்த்தியானவுடன் தோன்றச் அங்கீகாரத்தையும் உள்ளடக்கும் தேவையாகும், அந்தஸ்து, அங்கீகாரம், சமூக மதிப்பு ஆகியவற்ை
தன்னலத்தேவை :
மனித வர்க்கத்துக்கு தோன்றக்கூடிய கடைசித் சம்பந்தப்பட்ட தேவையெனக் கொள்ளப்படும். அரசி பெற விரும்பும் உயர்மட்ட பதவிகள் என்பவற்ை வர்க்கத்துக்கு ஒரு தேவையும் தோன்றமாட்டா இத்தேவைகளைக் கொண்டிருப்பர் என்றும் கூறப்
இக்கோட்பாட்டின் தேவைக்கும் திருப்திக்கும் இ அதன் அவசியத்தை வலியுறுத்தினாலும் இக்கோ
1. தேவை மேற்கூறிய வரிசையில்தான் தோ: 2. மக்களது வயதுக்கும் தேவைக்கும் தொட 3. கெளரவத் தேவை, தன்னலத் தேவை ஆ 4. நிறுவனத்திற்குள் மட்டும் இத்தேவைகள்
இவற்றின் அடிப்படையில் பின்னர் வேறு கோ
4.2 கேஸ்பேக்கின் இருகாரணிக் கோட்பாடு (H
மாஸ்லோவின் கோட்பாட்டில் தேவைகள் வ
அடிப்படையில் இருகாரணிக் கொள்கை அறி நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில்
6

ல் மனிதவர்க்கத்துக்கு இருக்கும் தேவைகளும் பட்டுள்ளது. இவற்றைப் பின்வருமாறு விளக்கலாம்.
உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றையும் ருக்குக் கிடைக்கும் சம்பளக் கொடுப்பனவை க்கப்பட முடியும்.
கூடிய இத்தேவையில் தொழிலுக்குப் பாதுகாப்பு ாப்பு என்பன தோன்றும். இது பல்வேறுபட்ட தான்றுகின்றது.
ன்ற இத்தேவை சமூகத்துடன் இணைந்து வாழுதல், ப் பேணுதல் ஆகியவற்றை அடக்கும். ܢ
கூடிய சொந்த அந்தஸ்தினையும் ஏனையோர் தன்னம்பிக்கை, பலம், சுதந்திரத்தன்மை, புகழ், றை அடக்கும். தேவையாகும்.
தேவை இதுவாகும். ஒருவரது சுயநலத்துடன் பலில் ஒருவர் பெறமுற்படும் பதவிகள், நிறுவனத்தில் ற இது அடக்குவதுடன் இதன் பின்னர் மனித து எனவும், மிகக் குறைந்த எண்ணிக்கையினரே - لاغ-ا-ال.
டையிலான உறவைக் குறிப்பிட்டு ஊக்கப்படுத்தலில் ட்பாட்டில் பின்வரும் குறைபாடுகள் உண்டு.
*றும் என்ற கட்டுப்பாடில்லை. Tபு இருப்பது கவனத்தில் கொள்ளப்படவில்லை. கியவற்றை வேறுபடுத்துவது கடினமாகும். பூர்த்தியாக்கப்பட முடியும் எனக் கூறமுடியாது.
பாடுகள் அறிமுகமாகின.
rzberg's Two factor theory)
சையாகத் தோன்றமுடியாது என்ற காரணத்தின் )கப்படுத்தப்பட்டது. நிறுவனங்களில் வேலை ஊழியர்கள் அதிருப்தியினை (dissatistaction)

Page 93
அனுபவித்து வருவர். அதனை நிவர்த்திக்க பூர்த்திசெய்யப்பட வேண்டும். இத்தேவை பூர்த்தியா (satistaction) வரவழைப்பதற்கு ஊக்கப்படுத்தும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென சே தூண்ட அவர்களுடைய அதிருப்தி களையப்பட வரும் ஊழியர்களைத் திருப்தி நிலைக்கு கூட்டிச் (
சுகாதாரக் காரணி ஊக்குவிப்பு
கம்பனிக் கொள்கை அந்தஸ்து கம்பனி நிர்வாகம் 5Tgഞങ്ങ് ஊழியர் மேற்பார்வை அங்கீகாரம் வேலை நிபந்தனைகள் முன்னேற்றத் சம்பளக் கொடுப்பனவு புகழ்ச்சி தொழிற் பாதுகாப்பு வெகுமதி
மேலதிக நலன்கள்
சுகாதாரக் காரணிகளைப் பூர்த்திசெய்து அதிருப்த ஊழியர்களை மீண்டும் திருப்தி நிலைக்கு கெ பூர்த்தியாக்கப்பட வேண்டும் என்றும் இது நடவடிக்கையென்றும் கூறப்பட்டது. ۔
4.3 டக்ளஸ் மக்கிறகரின் கோட்பாடு (Douglas McGregor's Theory)
டக்ளஸ் மைக்கிறகள் என்பவரால் அறிமுகப்படுத் கோட்பாடு இதுவாகும். நிறுவனங்களில் பணியாற்று (35T LITG X (Theory X) (335 UTG Y (Theory Y முன்வைக்கப்பட்டன.
கோட்பாடு X ஊழியர்களின் மேல் நம்பிக்கைை
* ஊழியர்கள் வேலை செய்வதற்கு விரு வழங்கப்படும் பொறுப்புக்களைத் தட்டி இலக்குகளை அடைவதில் அக்கறை கடுமையான மேற்பார்வை தேவைப்படு பயத்தினால் மட்டுமே வேலை செய்ய
என்பதன் அடிப்படையில் கடும்போக்கான தூண் தண்டனைகளும் அபராதங்களுமே வேலையை பெ கூறப்பட்டது. இது தடி அணுகல் (stick appr
கோட்பாடு Y ஊழியர்கள் மேல் நம்பிக்கை கொன
ஊழியர்கள் வேலை செய்வதற்கு விரு தொழிலினுடாகவே திருப்தியைக் கா பொறுப்புக்களை ஏற்பதற்கு ஆயத்தம இலக்கை நிறைவேற்றும் விருப்பமுள்6 இயல்பாகவே நிறுவனத்தின் வளர்ச்சி

Jido Igb. I ji BIT JG005 (Hygiene factors) (356O)6) ானவுடன் அதிருப்தி நீக்கப்படும். பின்னர் திருப்தியை BT j60ci (motivation factors) 99 ||U6OLuhaust 60T 5ஸ்பேக் குறிப்பிட்டார். இதன்படி, ஊழியர்களைத் வேண்டும். இதனூடாக் நடுநிலைக்கு (Neutral) செல்வது என்பது இக்கோட்பாட்டின் சாராம்சமாகும்.
க் காரணி
திற்கான வழி
தியை இல்லாமல் செய்து நடுநிலைக்கு கொண்டுவந்த ாண்டுசெல்ல ஊக்குவிப்புக் காரணித் தேவைகள் வே ஊழியர்களைத் துTண்ட பொருத்தமான
தப்பட்ட ஊழியர் நடத்தையை மையமாகக் கொண்ட றும் ஊழியர்களின் நடத்தையை மையமாகக் கொண்டு ) என இருவகையான ஊக்கப்படுத்தல் கோட்பாடுகள்
)ய ஏற்படுத்தாத ஒன்றாகும். இதன்படி,
ய்பமில்லாதவர்கள் க் கழிப்பர் யற்றவர்கள் iம்.
முன்வருவர்.
ாடுதலே ஊழியர்களிடம் வேலைபெற உதவும் என்றும் ற்றுக்கொள்ளச் சரியான வழியென்றும் Xகோட்பாட்டில் Dach) எனக் கொள்ளப்படும்.
ன்ட நவீன காலத்துக்குரிய கோட்பாடாகும். இதன்படி,
ப்பமுடையவர்கள்.
ண்பர்.
ாக இருப்பர்.
ாவர்கள் யில் அக்கறை காட்டுவர்.
69

Page 94
என்பதன் அடிப்படையில் தட்டிக்கொடுத்து வேண் நல்ல முறையில் அணுகப்பட வேண்டும் என்றும் (Carrot approach) 6|60öb Q35T6í6) T.
4.4 FLDS606) is (35TurtG (Equity theory)
1993ம் ஆண்டில் அமெரிக்காவில் வாழ்ந் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருவர் ஏனையவர்களுட கொண்டிருக்கிறார் என்றும் அவருக்கு எத்தகைய ( கோட்பாடு ஆகும். இங்கு ஊழியர் நிறுவனத்திற்க செய்யப்படும். அதற்காக நிறுவனம் அவருக்கு வ உள்ளீட்டையும் வெளியீட்டையும் சமப்படுத்துவது
ஊழியர்கள் சம்பந்தமாக பலவற்றை உள்ளீடுக
கல்வித்தரம் அனுபவம் g5D6OLD முயற்சி புத்திக்கூர்மை
என்பன உள்ளீடுகளாகக் கருதப்படும். இ6ை ஊழியர்களது வெளியீடுகளோ ஊழியருக்கு வழ குறிப்பாக.
அடிப்படைச் சம்பளம்
ULg (b6ft
உபகரணங்கள்
பிற நலன்கள்
மேல் அந்தஸ்து
திருப்திகரமான மேற்பார்வை நல்ல வேலைச்சூழல்
வெகுமதிகளும் அங்கீகாரமும்
போன்றவை எல்லாம் வெளியீடுகளாக அமையு சமப்படுத்துவதன் ஊடாகவே ஊழியர்களைத் தூ எனவே, ஊழியர்களைத் தூண்டுவதற்கு உள்ளி வேண்டுமெனக் கொள்ளலாம்.
45 டேவிட் மைக்கலண்டின் சாதனை படைக்குப் (David Mcclelland's Achievement theory)
தூண்டுதல் சம்பந்தமான ஒரு செய்முறைக் கே மைக்கல் என்போரால் அறிமுகப்படுத்தப்பட்டத நிறைவுசெய்வதன் ஊடாக ஊழியர்கள் உருவாக்க அவை முறையே,
* சாதனை புரிவதற்கான (3b6O6) — net * 6)g)6)éb85T60T (356O)6) - need for pov * இணைவதற்கான தேவை - need fo

லெவாங்கும் இயல்பு வளர்க்கப்படுவதற்கு ஊழியர்கள் கூறப்படுகின்றது. இதனை நல்லமுறை அணுகல்
த ஸ்ரேசி அடெம் என்பவரால் இக்கோட்பாடு -ன் ஒப்பிடப்படும் பொழுது எத்தகைய உள்ளீடுகளை வெளியீடுகள் உள்ளன என்றும் இருப்பதே சமநிலைக் ாக அளிப்பதெல்லாம் அவர் சம்பந்தமான உள்ளீடு ழங்குவது வெளியீடு எனக் கொள்ளப்படும். இங்கு என்பதே சமநிலைக் கோட்பாட்டின் பண்பாகும்.
ளாகக் கொள்ளமுடியும். அதாவது,
வ ஊழியரால் அளிக்கப்படுபவை ஆகும். மாறாக ங்கப்படும் நலன்களின் அடிப்படையில் கொள்ளும்.
D. இத்தகைய உள்ளீடுகளையும் வெளியீடுகளையும் ண்டலாம் என சமநிலைக் கோட்பாடு கூறுகின்றது. டுகளுக்குச் சமனாக வெளியீடுகள் வழங்கப்பட
) கோட்பாடு
TUTCL 93.16) Tölb. David McClelland (L6) ாகும். இருப்பும் 3 உயர்மட்டத் தேவைகளை கப்படுவதனால் என்றே கருத்தில் கொண்டிருந்தார்.
'd for achievement
VEC
affiliation
70

Page 95
என அமைந்திருக்கும். இந்த 3 தேவைகை ஊக்குவிக்கப்படுவார்கள் என்பது மைக்லெண்டின்
சாதனை புரிவதற்கான தேவை மாஸ்லோ என்ட கெளரவத் தேவை ஆகிய இரண்டையும் உள்ளடக் என்பது இத்தேவையில் கொண்டிருக்கும் விருப்பம
* உயர்ந்தளவிலான ஆபத்துக்களை எதிர் * பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பொறுப் * செயற்பாடுகளை மீளாய்வு செய்தல்
* சாதகமான இலக்குகள் கொண்டிருத்தல்
போன்றவை சாதனை புரிவதற்கான தேவையாக ( மிக்க கொள்கையாளர்கள் சாதனை புரிவதற்கான தே பரிகாரங்களும் ஒருவருக்கு கிடைப்பதனைக் காண
வலுவுக்கான தேவை என்பது ஒருவர் அதிகார தேவையாகும். இதன்படி, மாஸ்லோவின் தன்ன அடக்கும், நிறுவனங்களிலே பணியாற்றும் ஒருவ ஏனையோரை செல்வாக்குச் செலுத்த விரும்புதல் தேவை எனக் கொள்ளப்படும். இந்த வலுவி நடவடிக்கைகளிலேயே அவர்கள் விரும்பிய மாற்ற
இணைந்து கொள்வதற்கான தேவை என்பது குறிப்பாக வரும். இது சமூகத்தவருடன் இணைர் சமூகத்தவருடன் உறவாடுவது ஆகிய தேவைகள் தேவையாயின் நிறைவுசெய்வதும் ஊழியர்களைத் து இதுவும் ஒரு அங்கமாக கொள்ளப்படுகிறது. மக் கொண்டுள்ள உறவுகளை பின்வரும் வரைபடம் க
LDT6f)(36)|T கே
தன்னலத் தேவை
கெளரவத் தேவை
சமூகத் தேவை
பாதுகாப்புத் தேவை
உடலியற் தேவை

ளயும் நிறைவுசெய்து விடுவதனால் ஊழியர்கள் கருத்தாகும்.
|வரால் அறிமுகப்படுத்தப்பட்ட தன்னலத் தேவை குவதாகும். உயர்ந்த சாதனைகள் புரியவேண்டும் )ாகும். குறிப்பாக,
கொள்ளல்
புக்களை ஏற்றல்
கொள்ளப்படும். நிறுவனங்களில் இருக்கும் ஆர்வம் வைகளைக் கொண்டிருப்பர். இதனூடே புகழ்ச்சியும் ாலாம்.
த்தைப் பெற்றுக்கொள்வது சம்பந்தமாக இருக்கும் லத் தேவையும் கெளரவத் தேவையும் இதனை வர், ஏனையோரைக் கட்டுப்படுத்த விரும்புதல், ஆகிய இரண்டையும் கொண்டிருப்பது வலுவுக்கான னைக் கொண்டிருப்பதன் ஊடாக ஏனையோரின் ]ங்கள் கொண்டுவர முடியும்.
மாஸ்லோவினால் கூறப்பட்ட சமூகத் தேவையே நதுள்ளது. சமூகத்தின் மீது அன்பு செலுத்துவது மக்களுக்கு இருப்பது குறிப்பிடப்படும். இணைத் 1ண்டும் என்ற காரணத்தால் சாதனைபுரியும் தேவை. களால் அறிமுகப்படுத்திய தூண்டுதல் கோட்பாடு ாட்டுகின்றது.
ஸ்பேக்கின்
சாதனை 雷 புரிவதற்கான 巨 ക്രേങ്ങഖ
h− வலுவுக்கான S. Ge) gങ്ങഖ
·통 爵 இணைவதற்கான
gങ്ങഖ

Page 96
மேற்கூறிய வரைபடத்தின்படி மாஸ்லோவின் தேவைகளுக்குள் அடக்கப்பட்டுள்ளன. அதேவே தேவைகள் மட்டுமே சாதனைபுரிவதற்கு ே காட்டப்பட்டுள்ளது. தன்னலத் தேவை, கெளர சாதனை புரிவதற்கான தேவை என மைக்கலால்
4.6 விக்ரர் வறுமின் எதிர்பார்க்கைக் கோட்பாடு
(Victor Vroom's Expectancy theory)
VictorVroom என்பவரால் அறிமுகப்படுத்தப்பட் எல்லோரும் நிலையானதொரு ஊக்குவித்தல் 1 தூண்டுவிக்க அவர்களது எதிர்பார்க்கைகள் ப நிறுவனத்தின் நோக்கத்தை அடைவதன் ஊடாக எ நம்புகின்றார்களோ அதுவே அவர்களைத் தூண் கருதினார். எனவே தான் ஊழியர்களுக்கான எதிட அந்தளவிற்கு ஊழியர்கள் தூண்டுவிக்கப்படுவ இக்கோட்பாட்டிலே 3 தத்துவங்கள் நிரூபிக்கப்பட
1. முயற்சி - செயற்றிறன் - எதிர்பார்க்கை
(Effort-performance - expectation)
எந்த முகாமையாளன் விரும்புகின்ற செயற்றிறன் பூர்த்திசெய்யும் என ஒரு ஊழியன் கருதத் தொடங் தொழிற்படத் தொடங்கும். ஒருவரது முயற்சி விரு என்பது இக்கோட்பாடாகும். இதுவே ஊழியரைத் உதாரணமாக ஒரேவிதமான தரம் கொண்ட 2 பதவ என்பது அப்புதிய பதவிகளில் எதற்கு முன்னே எதிர்பார்க்கையை பொறுத்ததாகும். இதன்படி, மு என்ற எதிர்பார்க்கை ஒரு ஊழியரைத் துண்டும்
2. செயற்றிறன் - வெகுமதி - எதிர்பார்க்கை (Performance - outcome - expectation)
ஊழியர் ஒருவர் முகாமையாளர் விரும்பியவர் அவருக்கு கிடைக்கக்கூடிய வெகுமதி என்ன எ இரண்டாவது கோட்பாடாகும். கூடிய செயற்றிற கிடைக்கும் என்ற எதிர்பார்க்கை இருந்தால் ம வறுமின் கருத்தாகும். இதன்படி, ஊழியர்களுக்க உட்பட்டுவரும் என்ற நம்பிக்கையே ஊழியர்களு
3. வெகுமதி - திருப்தி - எதிர்பார்க்கை
(Outcome - satisfaction - expectation)
ஊழியர் ഉന്ദ്രഖ് தனக்கு கிடைத்த வெகுமதிய எந்தளவுக்கு திருப்திப்படுத்த உதவும் என தூண்டுவிக்கப்படுவதற்கு அடிப்படையில் அமைக் கிடைக்குமாயின் அது அவர்களுக்கு இருக்கும் பe உதவும் என்ற ஊழியர்களின் எதிர்பார்க்கை அ எப்பொழுதுமே தேவைகள் திருப்திப்படுத்தப்ப ஊழியர்களை துண்டுகின்ற பிரதான எதிர்பார்க்கை (

5 தேவைகளும் கோல்பேக்கின் 2 வகையான ளை மாஸ்லோவின் 5 வகையான தேவைகளில் 3 பாதும் என்றவகையில் கொள்ளப்படுவதைக் வத் தேவை, சமூகத் தேவை ஆகிய மூன்றுமே
கூறப்பட்டுள்ளது.
ட ஒரு செய்முறைக் கோட்பாடு இதுவாகும். மக்கள் மட்டத்தில் உள்ளனர் என்றும் ஆதலால் அவர் யன்படுத்த வேண்டும் என்றும் வறும் நம்பினார். வ்வாறு தமது நோக்கம் நிறைவேறும் என ஊழியர்கள் டுவதற்குப் போதுமான எதிர்பார்க்கை என வறும் ார்க்கை எந்தளவிற்கு ஒரு நிறுவனம் அதிகரிக்குமோ Tர்கள் என்பதே எதிர்பார்க்கை கோட்பாடாகும். ட்டுள்ளன.
அளவையும் தரத்தையும் எனது முயற்சி எந்தளவுக்கு குகின்றாரோ அப்பொழுது எதிர்பார்க்கை கோட்பாடு ம்புகின்ற செயற்றிறனின் எதிர்பார்கை:ல் அடையும் தூண்டுவிக்கும் முக்கிய காரணியாகக் கொள்ளப்படும். பியுயர்வுகளில் எதனை ஒரு ஊழியர் தேர்ந்தெடுப்பர் றுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற pன்னேறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என விக்டர் வறும் கூறுகின்றார்.
ாறு உயர்ந்த செயற்றிறன் கொண்டிருக்கும் போது ான்ற எதிர்பார்க்கை ஊழியரைத் தூண்டும் என்பது னைக் கொண்டிருக்கும் பொழுது கூடிய வெகுமதி ட்டுமே ஊழியர் தூண்டுவிக்கப்படுவார்கள் என்பது ான பலாபலன்கள் செயற்றிறன் அதிகரிப்பின் பொழுது க்கான தூண்டுதல் கருவியாக அமைந்துவிடும்.
ன் அதிகரிப்பானது தனக்கு இருக்கும் தேவைகள் *ற எதிர் பார்க்கையை கொண்டிருக்க அவர் ன்ெறது. ஊழியர்கள் எதிர்பார்த்தவாறு வெகுமதிகள் ல்வேறு தேவைகளைத் திருப்திப்படுத்த எந்தளவுக்கு அவர்களைத் தூண்டும் காரணியாக அமைகின்றது. டுவது எந்தளவுக்கு நிறைவேற்றப்படும் என்பதே என வறும் கருதுகின்றார். எனவேதான் மொத்தத்தில்
72

Page 97
முயற்சி அதிகரிக்கும் போது செயற்றிறனை கூட்டும் உயர்த்தும் என்பதும், வெகுமதிகள் உயர்வடை6 ஊழியர்கள் கொண்டிருக்கும் எதிர்பார்க்கை இறுதி அமைந்துவிடும் என்பதே வறுமின் கருத்தாகும்.
முயற்சி - செயற்றிறன் Gഖപ്ര
5.0 முடிவுரை
ஊழியர்களை ஊக்கப்படுத்துவது என்பது இ மாறிவிட்டது. தலைமைத்துவம், தொடர்பாடல் போல் ஊக்கப்படுத்தலும் பின்பற்றப்பட்டாலே ஊழிய சேவையும் கிடைக்கும். இதுவே இறுதியில் : நிறுவனங்களின் இலாப உழைப்பையும் உச்ச பெற்றுக்கொள்ளவும் தன்னிச்சையான ஒத்துழைப் என்பதனால் ஊழியர்களை ஊக்கப்படுத்தல் என் நிலைத்திருப்பதற்கும் வகைசெய்யும் எனக் கூறமு
உசாத்துணை நூல்கள்:
Decenzo David, A, "Human Resource M
Maslow, A, "Motivation and Personalit
Herzberg, F., “Work and the Nature of McGregor, D., "The Human Side of En Mcclelland, D.C., “The Achieving Soci
米米来米
米米米米米米米米米米米米米米壮
米米米米米米米米米
கல்வி 6 6. புத்தகங்களைப் படிப்ப; அது பலவிதமான வர் அதுவும் இல்லை. மூலம் மன உறுதிய வெளிப்படும் தன்பை உட்பட்டு, பயன்தரும் ( அந்தப் பயிற்சிதான் க

என்றும், செயற்றிறன் உயர்வடையாத வெகுமதியை பது ஊழியர் திருப்திகளை பெற்றுத்தரும் என்றும் பில் அவர்களைத் தூண்டுவிக்க முக்கிய காரணியாக
இதனைப் பின்வரும் வரைபடம் காட்டுகின்றது.
மதி திருய்தி தூண்டுதல்
க்காலத்தில் பிரதான நெறிப்படுத்தும் காரணியாக
என்கின்ற ஏனைய நெறிப்படுத்தல் கருமத்தைப் ர்களிடமிருந்து ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் கூடிய உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கு வகைசெய்வதுடன் ப்படுத்தும். ஊழியர்கள் தொழிற்திருப்தியைப் |பை வழங்கவும் ஊக்கப்படுத்தலே வகைசெய்யும் பது நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் )12ULs).
anagement", New York: World publishing, 1998. y” New York: Harper & Row, 1954. Man”, New York : World publishing, 1966. terprise", New York: McGraw Hill, 1960. ety”, New York: Van Nostrand Reinhold, 1961.
米米米米米米米
;米米米米米米米米米米米米米米米米米
:米米米米米米米米米米米
ത്ത
*பது என்ன? அது நா? இல்லை. அல்லது ]றைக் குறித்த அறிவா? எத்தகைய பயிற்சியின் ன் வேகமும், அதன் )யும் கட்டுப்பாட்டிற்கு வகையில் அமைகிறதோ ல்வியாகும்.

Page 98
மூன்றா
அறிமுகம்:
முதலாம் உலகின் ச்ெல் வந்த நாடுகளுட6 அனுபவித்துவரும் பலவிதமான வசதிகளை மூன் கூறலாம். இவ்விதமாக முதலாம் உலகம் அணு முதன்மை நிலைகளை “இழத்தல்’ என்ப ஏற்படுத்திக்கொள்ளும் நாடுகளின் கூட்டாக கொள்ளலாம். பெரும்பான்மையான மூன்றாம் உ6 கோட்டிற்குக் கீழ் வாழ்வதைக் காணலாம். அய அமைவிடத்தை உள்ளடக்கியிருக்கும் முன்றா கட்டியெழுப்புவதற்காக அல்லது ஓரளவிற்காவது பல்நிலைக் கடன் வழங்கும் அமைப்புக்கள் தனிட் நிற்கும் நிலை எமது நாடு உட்பட பல மூன்றாம் உ கடந்த சில தசாய்தங்களாக பல்வேறுபட்ட புதிய இந்நாடுகளில் பல தமது அபிவிருத்தியின் பொரு பொருளாதாரத்திற்கிடையே காணப்படும் சமமற்ற உலக நாடுகள் பல தரப்பட்ட இடர்களை எ பொருளாதார உபாய உத்திகளினால் சிறைப்பிடி எனலாம்.
மூன்றாம் உலக கைத்தொழில் மயமாக்கத்தின் இ
மூன்றாம் உலகின் சில நாடுகளில் கைத்தொழில் சில மாற்றங்கள் கடந்த சில தசாப்தங்களாக முடியாததொன்றாகும். புதிய கைத்தொழில்மய நா( ஹொங்கொங், சிங்கப்பூர் போன்ற கிழக்கு, தென்கிழ லத்தீன் அமெரிக்க நாடுகளும் கைத்தொழில் காலங்களில் ஏற்படுத்தி வருகின்றன. அதேபோ எண்ணெய் வளப் பொருளாதாரத்தை அடுத்து பல் செல்வந்த நாடுகள் என்பனவற்றின் அனுசரணையு சர்வதேச பொருளாதாரத்தில் புதியதொரு மைல் நான்கு ஐந்து தசாய்தங்களாக மூன்றாம் உலகின் வளர்ச்சியில் பல்தேசிய நிறுவனங்களின் பங்களிப்ட எனலாம். மிகவும் கிட்டிய கால மதிப்பீடு ஒன் முழுவதிலும் குறிப்பாக வளர்முக நாடுகளில் 30 மீ சற்று அதிகரித்ததொரு அளவில் மறைமுகமாக அறியக் கிடக்கின்றது. மிகப்பெரிய எண்ணெய்க் என்பனவற்றினால் வழிகாட்டப்படுகின்ற நூற்றிற்குப்

ம் உலகின் கைத்தொழில்மயமாக்கம்
ஆர்.சிறீகாந்தன் சிரேஷ்ட விரிவுரையாளர், புவியியற்றுறை, கொழும்புப் பல்கலைக்கழகம்,
ன் ஒப்பிடுமிடத்து சார்புரீதியாக அந்நாடுகள் றாம் உலகநாடுகள் கொண்டிருக்கவில்லை என்றே றுபவிக்கின்ற பல்வேறுபட்ட பொருளாதார, சமூக தன் மூலம் பொதுவானதொரு நிலையினை மூன்றாம் உலகு என்பதனை வரையறைசெய்து Dக நாடுகளின் கணிசமான தொகையினர் வறுமைக் னவலயத்திற்குள் குறிப்பிடத்தக்க அளவில் தமது ம் உலக நாடுகள் தமது பொருளாதாரத்தைக் தக்க வைத்துக் கொள்வதற்காக சர்வதேச வங்கிகள் பட்ட அரசாங்கங்கள் என்பனவற்றில் மண்டியிட்டு உலக நாடுகளின் நிதர்சனமானதொரு தரிசனமாகும். அணுகுமுறைகள், உபாய உத்திகள் என்பனவற்றை ட்டு கையாண்டு வருகின்ற பொழுதிலும் சர்வதேச பரிவர்த்தனை காரணமாக இன்னும் பல மூன்றாம் திர்நோக்குவதுடன் வளர்ச்சியடைந்த நாடுகளின் க்கப்பட்டதொருநிலையிலேயே காணப்படுகின்றன
இன்றைய நிலை:
எனப்படும் பொருளாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க இடம்பெற்று வருகின்றன என்பது மறுக்கப்பட டுகள் என்ற போர்வையில் தென்கொரியா, தாய்வான், bகாகிய நாடுகளும் பிறேசில், ஆர்ஜென்ரீனா போன்ற துறையில் ஒரு புதிய பரிமாணத்தை அண்மைக் ல் மத்தியகிழக்கு உலகில் 1970களில் உருவாகிய தேசிய நிறுவனங்கள் பொருளாதார வளம் கொண்ட டன் கட்டியெழுப்பப்படுகின்ற கைத்தொழிற்றுறையும் கல்லாக உருவாகி வருகின்றது எனலாம். கடந்த பெரும்பான்மையான நாடுகளின் கைத்தொழில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றது றின் படி இந்த பல்தேசிய நிறுவனங்கள் உலகம் ல்லியன் மக்களுக்கு நேரடியாகவும் அதனை விட வும் வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளன என கம்பனிகள் மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் ) மேற்பட்ட பல்தேசிய நிறுவனங்கள் 1990ல் உலக
'4

Page 99
பரும்படியாக்கத் தொழிலில் ஏறக்குறைய அரைவா கீழ் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இடம்பெறும் கைத்தொழில் முயற்சிகளுக்கு அப்பால் தசாய்தங்களில் இடம்பெற்று வரும் துரித கைத்தொழ வழமையான விவசாய நாடுகளாக விளங்கும் இந்நாடு துறையின் பங்களிப்பு விரைவாக உயர்ந்து வரும் டே பேரளவுத்திட்ட கைத்தொழில்களுக்கு அப்பால்
பொருள் உற்பத்திகள், மின்சாரப் பொருள் உற்பத்திக உற்பத்திகளில் இந்நாடுகள் அண்மைக்கால உற்பத்திகளுக்கான இடம் ஒன்றினைப் படிப்படியா
கைத்தொழில் மயமாக்கத்தினை தூண்டிய பின்ன
மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக 1950களில் ஒன்றாக கைத்தொழில் மயமாக்கம் என்பதனை அ பொருளாதார வளர்ச்சியின் உயர்மட்டத்தை அடை வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், மக்களி வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து சுதந்திரம் பெற்றத கைத்தொழில் மயமாக்கம் மிகவும் இன்றியமையாத
மூன்றாம் உலக நாடுகள் பலவற்றின் பொருள அவற்றின் ஏற்றுமதியிலுமே கடந்த பல தசாய்தங்கள ஆட்சியின் கீழ் அந்நிய நாட்டவர்கள் தமது வருமான முதனிலைப் பொருட்கள் பலவற்றினை அறிமுகப்ப தமது நாடுகளுக்கு ஈட்டிக் கொடுத்தனர். எனினு அடுத்து குடித்தொகையில் திள் வெடிப்பு ஒன்று இலங்கை, பிறேசில் ஆர்சென்ரீனா, மெக்சிக்கோ நாடுகளின் 1950களுக்கு பிற்பட்ட குடித்தொகை வ இந்த உண்மையை நன்கு விளங்கிக்கொள்ள முடி இந்நாடுகளில் பன்மடங்கு அதிகரித்துக் காணப்பட் கொண்ட விவசாயத்துறையால் இந்த அதிகரித் முடியவில்லை. இதன் விளைவாக இந்நாடுகள் கீழுழைப்பு நிலையின் அதிகரித்ததொரு போக்கும் 1970களில் மேலே குறிப்பிட்டவாறானதொரு ெ இந்நிலைமை இக்காலப்பகுதியில் பல வளர் அறிமுகத்தினால் மேலும் தீவிரமடைந்தது என: செயற்பட்டுவந்த விவசாயத்துறையில் பசுமைப்புரட் பாவனை கிராமப்புறங்களில் கணிசமானவர்களை 6ே செய்வதற்கு வழிவகுத்தது. இவ்விதமாக உருப்பெர் ஒன்றிற்கான உடனடி மாற்றுபாயம் ஒன்றாகவே என்ற உத்தியைக் கையாளத் தொடங்கின. ே கைத்தொழில்கள் மூலம் தமக்குத் தேவையான இ உள்நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியும் தொடங்கியிருந்தது.
கைத்தொழில் மயமாக்கத்தின் தோற்றுவாய்:
மூன்றாம் உலக நாடுகள் அபிவிருத்தியடைந்த ந என வரையறை செய்யப்படுகின்றபோதிலும், அவ் என்பதனை கடந்த மூன்று நான்கு தசாய்தங்களில் இ மயமாக்கம் உறுதிப்படுத்தி வருகின்றது. மேலும் இ
8– CM 4658

சிக்கு மேற்பட்ட அளவினை தமது கட்டுப்பாட்டின் இத்தகைய பல்தேசிய நிறுவனங்களின் மூலம் ) இந்தியா, சீனா போன்ற சிலநாடுகளில் அண்மைய Sல் அபிவிருத்தி குறிப்பிடத்தக்கதொன்றாக உள்ளது. }களின் மொத்தத் தேசிய உற்பத்தியில் கைத்தொழில் ாக்கினைக் கொண்டு காணப்படுகின்றது. பாரம்பரிய நவீனரக ஆடைக் கைத்தொழில்கள் மின்னியல் மோட்டார் வாகன உற்பத்தி போன்ற பல்வேறுபட்ட ங்களில் ஈடுபட்டு உலகசந்தையிலும் தமது க கைப்பற்றி வருகின்றன.
ணி:
பிருந்து தமது அபிவிருத்திக்கான உபாயங்களில் அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றன. வதற்கும், பொருளாதாரத்தை திசை திருப்புவதற்கும், ன் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கும், தற்கான அடையாளம் ஒன்றினை உருவாக்குவதற்கும் து என்பது இந்நாடுகளினால் நன்கு உணரப்பட்டது.
ாதாரம் முதனிலைப் பொருட்களின் உற்பத்தியிலும் ாக தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. காலனித்துவ 0 பெருக்கத்தினை கருத்திற் கொண்டு இந்நாடுகளில் டுத்தி அதன் மூலம் கணிசமான வருமானத்தினை ம் இந்நாடுகள் பலவற்றில் சுதந்திர காலத்தினை
ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியா, , சீனா, மலேசியா, இந்தோனேசியா போன்ற பல ளர்ச்சிப் போக்கினை கருத்திற் கொள்ளும் பொழுது யும். இதன் விளைவாக தொழிற்படையின் அளவு ட்து. முதனிலைப் பொருட்களை அடிப்படையாகக் த தொழிற்படையை தன் பால் ஈர்த்துக்கொள்ள பலவற்றில் அதிகரித்த வேலையின்மை நிலையும், காணப்பட்டது. பல வளர்முக நாடுகளில் 1960கள், பாருளாதாரப் பாங்கே காணப்பட்டது எனலாம். முகநாடுகளை வந்தடைந்த பசுமைப்புரட்சியின் லாம். தொழிலாளர்களை மையமாகக் கொண்டு சியிைைன அடுத்து இடம்பெறத்தொடங்கிய இயந்திர வலையற்றவர்கள் என்ற கூட்டத்திற்குள் இடம்பெறச் றிருந்த மிகவும் மோசமான பொருளாதாரப் பிரச்சினை பல வளர்முக நாடுகள் கைத்தொழில் மயமாக்கம் மேலும் ஆரம்பிக்கப்படும் பல விவசாயம் சார்ந்த ரசாயன வளமாக்கிகள் இயந்திரங்கள் என்பனவற்றை என்றதொரு நம்பிக்கையும் இந்நாடுகளில் தளிர்விடத்
ாடுகளினால் முதனிலைப் பொருள் உற்பத்தியாளர்கள் விதமானதொரு எண்ண உருவாக்கம் தவறானது இந்த நாடுகளில் இடம்பெற்றுவருகின்ற கைத்தொழில் இந்நாடுகளின் கைத்தொழில்கள் மிகவும் அண்மைக்
75

Page 100
காலங்களில் ஆரம்பிக்கப்பட்டவை என்ற கூற்றும் ( உண்மையில் இந்நாடுகளின் கைத்தொழில்கள் அ சார்பு ரீதியில் அண்மைக்கால கைத்தொழில்கள ஆர்ஜென்ரீனா போன்ற நாடுகளில் 19ம் நூற்றாண்டின் ஒரு சில பாரிய கைத்தொழில்களும், நடுத்தர அள இங்கு குறிப்பிடத்தக்கது.
பல மூன்றாம் உலக நாடுகள் பாரம்பரியமாக ஒரு விளங்கினர் என்பது வரலாற்றுரீதியான உன கைப்பணிப்பொருட்கள் பல பழைய உலகில் மிகவும் தயாரிப்பு சட்டி பானை செய்தல், துணி நெசவு, ஆை இந்நாடுகள் பல கொண்டிருந்தன. எனினும் 19ம் பூ புரட்சியும் 16ஆம் நூற்றாண்டிலிருந்து பெரும்ட அன்னியர்களின் ஆட்சியும், பின்வந்த காலப்பு ஐரோப்பாவிலிருந்து இடம்பெற்ற கைத்தொழிற் பெ பாரம்பரிய கைத்தொழிற்துறையை கணிசமாகப் பா 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் தெற்கு, தென்கிழக் பருத்தி உற்பத்திப் பொருட்களுக்கான ஆதிக்கத்தின் உற்பத்தித் தொழில் கணிசமான அளவில் பாதித்
அடுத்து மூன்றாம் உலகு எங்கினும் உள்ளுள் கைத்தொழில் மயமாக்கத்திற்கான அடிப்படை ஒன பெரும்பாலும் கட்டடப் பொருட்கள், நெசவுப் என்பனவற்றைப் பொறுத்து பெரிதும் காணப் பொருட்களிலிருந்து உணவுப் பொருட்கள் பதனிடம் போக்குவரத்தின் உருவாக்கம் போன்றவை பல வளர் பல உருவாக்குவதற்கும் மிகவும் எளிமையான பொ வழிசமைத்தன. ஆனால் இத்தகைய கைத்தொழ சமமற்றதொரு நிலையிலேயே காணப்பட்டது. இத்தொழில்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத் பின்னடைந்ததொரு நிலையிலேயே காணப்பட்ட ஆர்ஜென்ரீனா, இந்தியா போன்ற ஒரு சில வளர் ஆரம்பித்திருந்த போதிலும் பெரும்பான்மையான உற்பத்தியிலேயே கூடிய கவனத்தினை செலுத்தின கைத்தொழில்களாக உள்ளூர் மூலப் பொருட் கலைத்திறன் கொண்ட கைத்தொழில்கள், உணவு பொருள் கைத்தொழில்கள் என்பன காணப்பட்டன
பெரும்பான்மையான மூன்றாம் உலக நாடுக நடுப்பகுதியில் இந்நாடுகளின் கைத்தொழில் ஆரோக்கியமான பொருளாதாரம் ஒன்றினை க பின்பற்றப்பட்டது போன்று பாரக் கைத்தொழில்கை கீழ் பல வளர்முகநாடுகளில் பாரக் கைத்தெ இந்தியா, சீனா, பிறேசில் போன்ற ஒரு சில நாடு எதிர்பார்த்த வெற்றியினை வழங்கவில்லை
20ம் நூற்றாண்டின் நடுக்கூறிலிருந்து இடம்பெறு
பெரும்பான்மையான வளர்முகநாடுகள் தமது தேவையான பரும்படியாக்கப் பொருட்களை நீண்

முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றல்ல. Hபிவிருத்தி யடைந்த நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து ாக இருக்கின்ற பொழுதிலும் இந்தியா, பிறேசில், இறுதிப்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வுக் கைத்தொழில்களும் விருத்தியடைந்திருந்தமை
ਰੰ6u கைத்தொழில் உற்பத்திகளில் விற்பன்னர்களாக ண்மை. சீனா, இந்தியா போன்ற நாடுகளின் ) பிரசித்தம் பெற்றிருந்தன. உலோகப் பொருட்களின் - தயாரிப்பு போன்ற துறைகளில் பல விற்பன்னர்களை நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில் ான்மையான வளர்முக நாடுகளில் இடம்பெற்ற பகுதிகளில் அவர்களின் குடியேற்ற நாடுகளில் ாருட்களின் இறக்குமதியும் பல வளர்முக நாடுகளின் திக்கும் காரணிகளாக அமைந்தன. உதாரணமாக 5கு, கிழக்காசிய நாடுகளில் இந்தியா கொண்டிருந்த னை இலங்கையரின் இயந்திரமயமாக்கப்பட்ட ஆடை தமையை குறிப்பிடலாம்.
மூலப்பொருட்களும் உள்ளூர் சந்தைகளும் நவீன ன்று உருவாகுவதற்கு உதவின எனலாம்; இந்நிலை பொருட்கள், ஆடைகள், உணவுப் பொருட்கள் பட்டது. இதனைவிட விவசாய உற்பத்திப் Jபடும் தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டமை; புகையிரத Tமுக நாடுகளில் திருத்த வேலை வேலைத்தளங்கள் றியியல் சார்ந்த வேலைத்தளங்கள் உருவாவதற்கும் ல்ெகளின் இடம் சார்ந்த பரம்பல் மூன்றாம் உலகில் குறிப்பாக லத்தின் அமெரிக்கா, ஆசிய நாடுகள் தைக் காட்டிநிற்க ஆபிரிக்க நாடுகள் மிகவும் டன எனலாம். இக்கால கட்டத்தில் பிறேசில், முக நாடுகள் ஒரு சில பாரக் கைத்தொழில்களை மூன்றாம் உலகநாடுகள் நுகள்வுப் பொருள்களின் . எனவே மூன்றாம் உலக நாடுகளின் ஆரம்பநிலைக் கள் சந்தைகள் என்பனவற்றுடன் தொடர்புபட்ட ப் பொருள் பதப்படுத்தற் கைத்தொழில்கள், நுகள்வுப்
T.
ள் சுதந்திரத்தினை எய்திய 20ம் நூற்றாண்டின்
கொள்கைகளில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. ட்டியெழுப்புவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் ள நிறுவிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் ாழில்கள் சில ஆரம்பிக்கப்பட்டன. எனினும் களைத் தவிர ஏனைய பல நாடுகளில் அம்முயற்சி
ம் கைத்தொழில் துறை வளர்ச்சி:
முதனிலைப் பொருட்களுக்கு பதிலாக தமக்கு ட காலமாக இறக்குமதி செய்துவந்தன. எனினும்
76

Page 101
1950களை தொடர்ந்து வந்த காலப் பகுதியில் பதிலீட்டுக் கொள்கை என்பதன் கீழ் தாம் இற பொருட்களை இந்நாடுகள் உள் நாடுகளிலேயே இறக்குமதிப் பதிலீடு என்ற செயல்முறையின் கீழ் வகைத் தயாரிப்பு, புகையிலையுடன் தொடர் ஆடைத்தயாரிப்பு போன்ற இலகு கைத்தொழில்கள் இக்கைத்தொழில்களுக்கான தொழில்நுட்பத் வேளையில் சார்பு ரீதியில் பொறியியல் சார்ந்த கைத்தொழில்களாகவும் காணப்பட்டன. கு இக்கைத்தொழில்களுக்கான உள்ளுர் சந்தை ஒ காணப்பட்டமை அக்கைத்தொழில்கள் பல அடிப்படைக்காரணமாக அமைந்தது.
எனினும் 20ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்த மாற்றங்கள், திறந்த பொருளாதாரக் ெ உற்பத்திகளில் தனியார் துறை பங்களிப்பு அதிகரித் ஏற்பட்டுவருகின்ற மாற்றங்கள் போன்ற இன்னோ என்பது அதன் முக்கியத்துவத்தினை படிப்படிய உள்ளூரில் பல புதிய கைத்தொழில் உற்பத்திப் ( வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்ப வேண்டியதொரு நிலையும் ஏற்பட்டுள்ளது என6 வளர்முக நாடுகளின் உள்ளூர் உற்பத்தியினையும் நாட்டின் உள்ளுர் உற்பத்திகள் பல 1970களின் இறு கொள்கையின் கீழ் பாதிக்கப்பட்டமை இதற்கு சிற நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகு நுகள்வுப் பொருட்களுக்கான உலக சந்தையைக் தொழிற்பட்டு வருகின்றன எனலாம். தென்கொரியா, மயநாடுகளும் கிழக்காசியாவின் சீனாவும் லத் ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளும், ஐக்கிய அெ வடஐரோப்பிய, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தெற் நிலைநிறுத்துவதற்கு முன்னின்று உழைத்து வரும்
புதிய கைத்தொழில் மயநாடுகள்:
வளர்முகநாடுகளில் பரும்படியாக்க வளர்ச்சி ே காணப்படுகின்றது. உகண்டா, சாட், ருவாண்டா போன்ற லத்தின் அமெரிக்க நாடுகள் கம்புச்சியா, கைத்தொழில் வளர்ச்சி வேகம் மிகவும் பின்னடைந் போன்ற நாடுகளின் கைத்தொழில் வளர்ச்சி வே நிலையில் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது சராசரி கைத்தொழில் வளர்ச்சி வேகம் 6% . குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சி வேகத்தில் க புதிய கைத்தொழில் மய நாடுகள் காணப்படுகின்
1970களின் ஆரம்ப காலப்பகுதியில் உலகவ கைத்தொழில் மயநாடுகள் எனய் பெயரிடப்பட்ட நா கைத்தொழில் துறையில் ஒரு விரைவுபட்ட வளர் பொருட்களின் உலக ஏற்றுமதியில் குறிப்பிடத்தக் காணப்பட்டன. ஆர்ஜென்ரீனா, பிறேசில், மெச்சிக்கே ஆகிய நாடுகள் முதலாம் நிலை புதிய கைத்தொ

இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இறக்குமதிப் 5குமதி செய்து கொண்டிருந்த பல கைத்தொழில் உற்பத்தி செய்ய முற்பட்டமை அந்த மாற்றமாகும். ல வளர்முகநாடுகள் ஆரம்பத்தில் உணவு, குடியான டைய பொருட்களின் தயாரிப்பு, துணி நெசவு, பலவற்றில் தமது கவனத்தைச் செலுத்த முற்பட்டன. தவைகள் எளிமையானவையாக இருந்த அதே திறமைகளை குறைந்த அளவில் வேண்டி நின்ற ஏறந்தமட்ட முதலீடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட ன்று பல நாடுகளிலும் உறுதியானதொரு நிலையில் வெற்றிகரமாக கொண்டு நடாத்தப்படுவதற்கான
நிகழ்ந்த உலகமயமாக்கம் வர்த்தக ஒழுங்குகளில் ாள்கைகளை பல நாடுகள் ஏற்றுக் கொண்டமை, துச் செல்கின்றமை, மக்களின் நுகள்வுப் போக்குகளில் ன்ன காரணங்களினால் இந்த இறக்குமதிப் பதிலீடு ாக இழந்து வருகின்றது. பல வளர்முகநாடுகள் பாருட்களை உற்பத்தி செய்துவருகின்ற போதிலும் டும் பொருட்கள் பலவற்றுடன் போட்டி போட 0ாம். தாராள இறக்குமதிக் கொள்கை ஒரு சில பாதித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எமது புதியில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் ந்த உதாரணமாக உள்ளது. எனவே பல வளர்முக தியில் தம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பல கைப்பற்றுவதனை பிரதான இலக்காகக் கொண்டு தைவான், ஹொங்கொங் ஆகிய நவீன கைத்த்ொழில் தின் அமெரிக்க உலகில் பிறேசில் மெச்சிக்கோ, மெரிக்கா, கனடா போன்ற அமெரிக்கநாடுகளிலும் S), தென்கிழக்காசிய நாடுகளிலும் தமது சந்தைகளை ) நாடுகளில் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.
வகம் என்பது நாடுகளிடையே மிகவும் வேறுபட்டுக் போன்ற ஆபிரிக்க நாடுகள் பொலிவியா, ஈக்வ்டோர் லாவோன் போன்ற ஆசிய நாடுகள் என்பனவற்றின் து காணப்பட, பிறேசில், மெச்சிக்கேர், சீனா, இந்தியா கம் கடந்த சில தசாய்தங்களில் மிகவும் உன்னத
1960களிலிருந்து வளர்முக நாடுகளின் வருடாந்த 10% திற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பது னிசமான பங்களிப்பினை வழங்கிவரும் நாடுகளாக 60.
கி உட்பட பல சர்வதேச நிறுவனங்கள் நவீன Nகளை அடையாளம் காணமுற்பட்டன. இந்நாடுகள் சி வேகத்தைக் காட்டி நின்றதுடன் கைத்தொழில்
ஓர் இடத்தையும் பிடித்துக்கொண்ட நாடுகளாகக் ா, ஹொங்கொங், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்வான் Nல் மயநாடுகளாகக் காணப்பட சில்லி, ஹெயிற்றி,
ך

Page 102
பெரு, உருகுவே, இந்தோனேசுஷியா, மலேகூதியா, பி ரியூனிசியா ஆகிய நாடுகள் இரண்டாம் நிலை நவீன ை 1990களில் இந்நாடுகள் யாவற்றிலும் தென்கொரிய கைத்தொழில் வளர்ச்சி வேகமாக 16.6சதவீதத்தில் மலேசியா, இந்தோனேசுஷியா, தாய்லாந்து, ரியூனி இடைப்பட்ட ஒரு அளவில் வருடச் சராசரி கை கடந்த தசாப்தத்தின் இறுதிப்பகுதியில் இந்தோனே அந்நாடுகளின் பொதுவானதொரு மந்த பொருளாதார வேகத்தில் சற்று பின்னடைவு கண்டுள்ளன. உண் 1950களுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் மிகவும் ! செய்கின்றபோதிலும் அவற்றின் கைத்தொழில் வளர்ச் உள்நாட்டு நுகள்வு காரணமாக ஏற்றுமதியில் கைத்ெ இருப்பதனால் அவை புதிய கைத் தொழில் L உள்ளடக்கப்படவில்லை. ஆனால் இன்றைய உலக பொழுது ஓரிரு தசாய்தங்களில் இந்நாடுகள் முதன்ை கூறுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.
வளர்முகநாடுகளின் கைத்தொழில் துறையில் பல்
மூன்றாம் உலகநாடுகள் பலவற்றில் குடியேற்ற இடம்பெற்றுவருகின்ற பொழுதிலும் அந்நாடுகள் கூட்டுத்தாபனங்கள் என்ற வடிவில் அவற்றின் பிரமாண்டமான கைத்தொழில் நிறுவனங்கள் தமது த அல்லது ஐரோப்பிய நாடுகளில் கொண்டிரு கூட்டுத்தாபனங்களின் தலைமைக் காரியாலயங்க பொருட்கள், மருந்துவகைகள் மின்னியல் பொருட் மற்றும் குளிர்பானப் பொருள் தயாரிப்புக்கள், உடைத்த தயாரிப்புக்களை பல்தேசியக் கூட்டுத்தாபன கூட்டுத்தாபனங்களின் வருடாந்த பொருள் விற்ப உற்பத்தியை விட பல சந்தர்ப்பங்களில் உயர்வாகச் குறிப்பிடப்பட்ட பல்வகைத் தயாரிப்புக்களில் ஊழியச் இலத்திரனியல் பொருட்களின் தயாரிப்பில் பல வளர்
பல்தேசிய கூட்டுத்தாபனங்கள் மூலம் வளர்முக பெற்றுக் கொண்டன. இக்கூட்டுத்தாபனங்கள் மூ தொழில்நுட்பம், தொழில்நுட்ப அறிவு என்பனவர் முறைமைக்குள் உட்படுத்தப்படுவதற்கு முதன்மைப் ெ பொறியியல் இரசாயனங்கள் போன்ற முதலீட்டு, ெ பலநன்மைகளை இந்நாடுகள் பெற்றுக் கொண்டுள் வழங்கப்பட்ட பொழுதிலும் பலருக்குக் குறிப்பாகப் டெ ஏற்படுத்திக் கொடுத்த ஊடகங்களாக இப் பல்தேசிய இத்தகைய வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் ஹெ மெச்சிக்கோ, பிறேசில் ஆகிய நாடுகளில் மிகவும்
மறுபக்கத்தில் பல்தேசிய நிறுவனங்கள் பல 6 எடுத்துக்காட்டத்தக்கது. இவற்றின் முதலீட்டுச் ஒரு சிலருக்கு மட்டுமே வேலைவாய்ப்பின்ை வழங் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. மூன் சுரண்டலைச் செய்துவிடுகின்றன எனவும் எடுத்துக் சிலவற்றில் அவை முதன்மை நிலையைப் டெ
ع

லிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, மொறக்கோ, ]கத்தொழில் மயநாடுகளில் உள்ளடக்கப்படுகின்றன. ா மிகவும் முதன்மை நிலையில் வருடச்சராசரி னை காட்டிநின்றது. இதனை அடுத்து பிறேசில், சியா ஆகிய நாடுகள் 10 - 13 சதவீதத்திற்கும் த்தொழில் வளர்ச்சி வேகத்தினை காட்டிநின்றன. சியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் நிலையின் அடிப்படையில் கைத்தொழில் வளர்ச்சி மையில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உயர்ந்த அளவு கைத்தொழில் வெளியீட்டினை சி வேகம் பின்தங்கியதொரு நிலையில் இருப்பதுடன் தாழில் பொருட்களின் பங்களிப்பு வீதம் குறைவாக Dயநாடுகள் என்ற பட்டியலில் இதுவரையில் கைத்தொழில் வர்த்தகத்தை கருத்தில் கொள்ளும் மநிலை ஒன்றினை எட்டிப்பிடிக்கக் கூடிய சாத்தியக்
தேசிய கூட்டுத்தாபனங்களின் பங்களிப்பு:
ஆட்சிக்காலப்பகுதியிலிருந்து அந்நிய முதலீடுகள்
பலவற்றின் சுதந்திரத்தின் பின்னர் பல்தேசிய
முதலீடுகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த நலைமையகத்தை ஒன்றில் ஐக்கிய அமெரிக்காவில் }க்கின்றன. யப்பானிலும் பல பல் தேசியக் ள் இயங்கிவருகின்றன. வாகனங்கள் இரசாயனப் கள், மின்சாரப் பொருட்கள், உணவுப் பொருட்கள் நயாரிப்புக்கள் போன்ற பல்வகைப்பட்ட கைத்தொழில் ங்கள் மேற்கொண்டுவருகின்றன. பல் தேசிய னை பல வளர்முகநாடுகளின் மொத்தத் தேசிய b காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலே செறிவு கொண்டதும் உயர் பெறுமானம் மிக்கதுமான முக நாடுகள் முன்னணியில் நிற்பது குறிப்பிடத்தக்கது.
நாடுகள் பல வேறுபட்ட வடிவிலான நன்மைகளைப் Dன்றாம் உலகநாடுகளுக்கு தேவையான முதலீடு, ]றை வழங்கி இந்நாடுகளும் உலகபொருளாதார பாறுப்பாளிகளாக விளங்கின. மோட்டார்வாகனங்கள் தாழிநுட்ப செறிவு மிக்க கைத்தொழில்கள் மூலம் ளன. மேலும் சார்புரீதியாக குறைந்தளவு ஊழியம் பண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புக்களை நிறுவனங்கள் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ]ாங்ஹொங், சிங்கப்பூர், தாய்வான், பிலிப்பைன்ஸ், உயர்ந்த நிலையில் காணப்பட்டன.
விமர்சனங்களுக்கு இலக்காகி இருப்பதும் இங்கு செறிவு தொழில்நுட்பம் காரணமாக சார்புரீதியில் கக்கூடிய நிறுவனங்களாக இவை காணப்படுகின்றன றாம் உலகநாடுகளில் அவை மலிவான தொழிற் காட்டப்படுகின்றது. மேலும் உள்ளூர் உற்பத்திகள் றுவதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர் பலர்
78

Page 103
பாதிக்கப்படுவதற்கும் அவை வழிவகுக்கின்றன.
கூட்டுத்தாபனங்கள் தாம் பெற்றுக் கொள்ளும் ஏனையவற்றையும் செலுத்தாமல் தவிர்த்துக் கொள் தலையிடுகின்றன என்ற குற்றச்சாட்டும் பொதுவா
(plg660)J:
பல மூன்றாம் உலக நாடுகள் இன்று வை சிக்கவைப்பதற்கு வீசிய வலையிலிருந்து முழுை துறையில் தமது நாடுகளில் விற்பனைசெய்யக்கூடிய மலிவான முறையில் சுரண்டிச் சென்ற அந்த மீளமுடியாததொரு நிலையிலேயே காணப்படுகின் சுதந்திரத்தை அடுத்து இந்நாடுகள் எதிர்நோக்கிய துறையில் முன்னேற்றகரமான காலடியினைப் பதிப்பத கைத்தொழில் ஒன்றின் உருவாக்கத்திற்கு அ6 காணப்படுகின்றமை, கைத்தொழில்துறை வளர்ச்சிச் மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியுடன் காணப்படுகின் என்பனவற்றிற்கு பெரிதும் வெளிநாட்டவர்களில் மந்தம் காரணமாக உள்நாட்டுச் சந்தைகள் அளவி பொருட்களுடன் போட்டி போட முடியாத அளவி குறைந்து காணப்படுகின்றமை, யப்பான் போன்ற ஹொங், தென்கொரியா போன்ற புதிய கைத்தொழில் பொருட்களை வழங்கக் கூடியதாக இருக்கின்ற பல வளர்முகநாடுகளின் கைத்தொழில்கள் இ6 காணப்படுகின்றன எனலாம். எனினும் கடந்தத சேவைத்துறை பங்களிப்பின் உயர்வும், கைத்தொழ தசாய்தங்களில் வளர்முகநாடுகளின் கைத்தொழிற் எனலாம்
米米米采米米来米
米米米米冰米米冰冰米米米冰冰冰米冰米米米
冰冰冰米米冰米米米米米米米壮
விலங்கினத்தின் பின்னர்
பொருளாய் மனிதன் அை அடங்கியுள்ள ஆற்றலும்
கில்லை. ஆகவே மனி ஆற்றலுடையவன். (யுகம் -
சீடனிடத்துக்குருவும், மனைவியிடத்துக் கணவனு ஒருவரிடத்து இன்னொருவி யிருத்தல் வேண்டும்.
NE இதுவே முத

அத்துடன் சில சந்தர்ப்பங்களில் இந்த பல்தேசிய இலாபங்களுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் கின்றன என்ற குற்றச்சாட்டும், உள்நாட்டு அரசியலில் க தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
யில் குடியேற்ற ஆட்சியாளர்கள் அந்நாடுகளை )யாக மீட்சிபெறவில்லை. குறிப்பாக கைத்தொழில் பொருட்களுக்கான மூலவளங்களை ஐரோப்பியர்கள் தாக்கத்திலிருந்து பல நாடுகள் இன்னமும் iறன எனலாம். இத்தகையதொரு பின்னணியில் பல பொருளாதார இடர்கள் அவை கைத்தொழில் நற்கு பெரிதும் தடைகளாக அமைந்துள்ளன எனலாம். பசியமான மூலதனம் மிகவும் பற்றாக்குறையாகக் கு பக்கபலமாக விளங்கும் உட்கட்டமைப்பு வசதிகள் றமை, தொழில்நுட்ப ஆலோசனைகள் அறிவு, திறன் நங்கியிருக்க வேண்டியதொரு நிலை பொருளாதார ல் சிறியவையாகக் காணப்படுகின்றமை, வெளிநாட்டுப் ற்கு பல உள்ளூர் கைத்தொழிற் பொருட்களின் தரம் வளர்ச்சியடைந்த நாடுகளும் தயாய்வான் ஹொங் மயநாடுகளும் உலகசந்தையில் மலிவான விலையில் நிலைமை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் ன்றுவரையில் பெரும் பின்னடைவு நிலையிலேயே சாய்தத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் நிகழ்ந்த Nற்துறைப் பங்களிப்பின் பின்னடைவும் அடுத்த சில துறை வளர்ச்சிக்கு பச்சைக் கொடிகாட்டி நிற்கின்றது
米米米米米米冰冰米 。 k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k
冰冰水冰米米米米米米米冰冰冰米
சிருஷ்டிகர்த்தாவின் சிறந்த மகிறான். இறைவ னிடத்து யுகமும் மறு சிருஷ்களுக் தன் கடவுளளவு சிறந்த
விவேகம்)
குருவினிடத்துச் சீடனும் ), கணவனிடத்து மனைவியும் ரும் நம்பிக்கையுடையோரா கடவுளிடத்து நம்பிக்கை
ற் சாதாரனமாகும்.
79

Page 104
சமப்பாட்டுப் புள்ளிப் பகு (Break-e
1. 9,5up35lb : (Introduction)
நிறுவன செயற்பாட்டின் பிரதான அளவீடாக பல்வேறு காரணிகளின் தாக்கங்களையும் தீர்மானமெடுத்தலுக்கும் மிக அவசியமான ஒரு விலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்ே உபயோகிக்கப்படுகின்ற நுட்பமே சமப்பாட்டுப் ஆரம்பப் புள்ளியாக இப்பகுப்பாய்வு காணப்படு ஆகக் குறைந்த விற்பனைத் தொகையையும் நி விற்பனைதொகையில் அடையப்பட முடியும் 6 முழுநோக்கமும் ஆகக்கூடிய இலாபத்தைத் தர முகாமைக்கு உதவுவதாகும். எனவே, நவீன மு இலாபத்திற்கான நிலையான கிரயம், மாறும் கி எதிர்வு கூறவும், குறுங்காலத் தீர்மானங்கள இப்பகுப்பாய்வு உதவுகிறதெனலாம். பொது ஆகக்குறைந்த விற்பனை மட்டம் எவ்வளவு இலாபத்தை உழைக்க என்ன விற்பனை மட்ட கிரயம், தொகை என்பவற்றிலான மாற்றங்கள் கலவை மாறும்போது இலாபம் எவ்வாறு பா சமப்பாட்டுப்புள்ளி என்னவாக இருக்கும் என் காணப்படுகின்றது.
2. சமப்பாட்டுப்புள்ளி பகுப்பாய்வு/கிரய - தொகை u(5 LTuj6 (Break-even analysis/Cost-Volul
சமப்பாட்டுப் புள்ளிப் பகுப்பாய்வு என்புது பல்ே இலாபம் என்பவற்றிற்கிடையேயான தொடர்ை வருமானங்களும், கிரயங்களும் சமனாக இருக் இவ்வாறு சமனாக இருக்கின்ற புள்ளியே சமப்ப என்பது மொத்த வருமானமும், மொத்தவிரயமுட இங்கு இலாபமோ அல்லது நட்டமோ இ வரையறுக்கப்பட்டு இலாபநட்டமற்ற புள்ளிப் பகு இலாபநட்டமற்ற புள்ளியை மட்டும் வெளிப்படுத்து
8(

நப்பாய்வும், அதன் பிரயோகங்களும்
ven analysis and its applications)
திருமதிஆர். யோகராஜ7 சிரேஷ்ட விரிவுரையாளர், வணிகமுகாமைத்துவ பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
இலாபம் காணப்படுகின்றது. இலாபம் மீதான பகுப்பாய்வு செய்வது நிதித்திட்டமிடலுக்கும், ந படிமுறையாகும். விற்பனைத்தொகை, கிரயம், கற்ப இலாப நடத்தையை ஆய்வு செய்ய புள்ளிப் பகுப்பாய்வாகும். இலாபத்திட்டமிடலின் கிென்றது. இது நட்டத்தைத் தவிர்க்கக்கூடிய றுவனத்தின் இலாப நோக்கு நிறுவனத்தின் எந்த ான்பதையும் தீர்மானிக்க உதவுகிறது. இதனது க்கூடிய கிரய, தொகை சேர்மானத்தை அறிவதற்கு காமை தொடர்ச்சியான அடிப்படையில் அவற்றின் ரயம், தொகை, விற்பனை விலை என்பவை பற்றி fல் இவற்றின் வெளிப்பாடுகளை மதிப்பிடவும் வாக, இப்பகுப்பாய்வு நட்டத்தை தவிர்ப்பதற்கு இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இலக்கு ம் இருக்க வேண்டும், இலாபம் மீதான விலை,
என்னவாக இருக்க வேண்டும். விற்பனைக் திக்கப்படும். இத்தகைய மாற்றங்களின் போது பது போன்ற வினாக்களுக்கு விடையளிப்பதாகக்
5 - இலாபப் பகுப்பாய்வு/இலாபநட்டமற்ற புள்ளிப் me-Profit analysis) (CVPanalysis)
வறு செயற்பாட்டு மட்டங்களில் கிரயம், தொகை, ப ஆய்வுசெய்கின்ற ஒரு பகுப்பாய்வாகும். இது கின்ற விற்பனை மட்டத்தை சுட்டிக்காட்டுகின்றது. ாட்டுப் புள்ளி எனப்படுகின்றது. சமப்பாட்டுப்புள்ளி ம் சமனாக இருக்கின்ற விற்பனைத்தொகையாகும். }ருக்காது. இது இலாபநட்டமற்ற புள்ளியாக தப்பாய்வு எனப்படுகின்றது. இப்பகுப்பாய்வு தனியே துவதில்லை. பல்வேறு செயற்பாட்டு மட்டங்களிலும்
)

Page 105
செலவு, தொகை, இலாபம் என்பவற்றை வெ பகுப்பாய்வு எனவும் கூறப்படுகின்றது. இப்பகு
1. எல்லாக் கிரயங்களும் நிலையான, மாறு 2. நிலையான கிரயம் மாறாது மாறும் கிரயம் ( 3. செயற்பாட்டு வீச்சிற்குள் கிரயங்களும் ெ
எனக் கொள்ளப்படுகின்றது. 4. கிரயத்தையும் வருமானத்தையும் பாதிக்கி தொழில்நுட்பம், உற்பத்தி முறைகள், விை 6. குறிப்பாக வரைபட ரீதியாக இப்பகுப்பாய் அல்லது நிலையான உற்பத்திக் கலவை 7. இருப்புமட்ட மாற்றங்கள் எதுவுமில்லை அ
பெறுமதியிடப்படுகிறது.
3. நிலையான கிரயத்தையும், மாறும் கிரயத்தைய
சமப்பாட்டுப் புள்ளிப் பகுப்பாய்வின் மிகப்பிரதான கிரயம் என வேறுபடுத்துவதாகும். நிலையா6 கிரயம் தொகை மாற்றத்திற்கேற்ப நேர விகித மாறுதட கிரயம் நிலையானதாக இருக்கும். நிலையான கிரயம், மாறும் கிரயம் இரண்ை எல்லாக்கிரயமும் மாறும் கிரயமாக இருந்த விற்பனைத்தொகையில் ஏற்படும். இங்கு மாறிச் செல்லும். மறுபுறம் எல்லாக்கி சமப்பாட்டுப்புள்ளியானது வருமானங்கள் நிலைய அதன் பின்னர் இலாபம் விற்பனை வருமானத்
4. சமப்பாட்டுப்புள்ளியைத் தீர்மானித்தல்:
சமப்பாட் டுப்புள்ளியை சூத் திரரீதியான அணுகுமுறைமூலமும் கண்டுகொள்ளலாம். சூத் அலகுகள் ரீதியாகவும், விற்பனைத்தொகையின் செயற்பாட்டின் விகிதாசார ரீதியாகவும் கணிப்பி
5. சமப்பாட்டுப் புள்ளிக் கணிப்பீட்டிற்கான சூத்திர
அலகிற்கான பங்களிப்பு அலகிற்கான வி
மொத்தப் பங்களிப்பு அலகிற்கான LIË
மொத்த பங்களிப்பு R மொத்த b6O)6)LL அ) இலாபநட்டமற்ற புள்ளி (அலகுகளில்) :
ஆ) இலாபநட்டமற்ற புள்ளி = நிலையான (விற்பனைப் பெறுமதியில்) அலகொன்றிற்

படுத்துவதால் செலவு - தொகை, - இலாபப் பாய்விற்கான எடுகோள்கள் பின்வருமாறு.
கிரயங்களாகப் பகுக்கப்பட முடியும். சயற்பாட்டு மட்ட விகிதாசாரத்திற்கேற்ப மாற்றமுறும் ருமானங்களும் ஏகபரிமாணத் தொடர்புடையவை
1ற ஒரேயொரு காரணி தொகை மாத்திரமேயாகும். னத்திறன் என்பன மாற்றமடையாதிருக்கும். பு ஒரு பொருளுடன் மாத்திரமே தொடர்புடையது புடன் தொடர்புடையது எனக் கொள்ளப்படும். ல்லது இருப்புக்கள் எல்லைக் கிரயத்தில் மட்டுமே
ம் வேறுபடுத்தல்
ா அம்சம் கிரயங்களை நிலையான கிரயம், மாறும் ா கிரயம் நிலையானதாக இருக்கும்போது மாறும் ாசாரத்தில் மாறிச்செல்லும். இங்கு அலகிற்கான சமப்பாட்டுப்புள்ளியை அறிவதற்கு ஒரு நிறுவனம் டயும் கொண்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் ால், இலாபநட்டமற்ற நிலைமையானது பூச்சிய இலாபமானது விற்பனை விகிதாசாரத்திற்கேற்ப ரயமும் நிலையான கிரயமாக இருந்தால், ான கிரயத்திற்கு சமனாக இருக்குமிடத்தில் ஏற்படும். திற்கு சமனாக இருக்கும்.
அணுகுமுறை மூலமும் வரைபட ரீதியான திரரீதியான அணுகுமுறையில் சமப்பாட்டுப்புள்ளியை பெறுமதியை (ரூபா) அடிப்படையிலும் பாதீட்டு டலாம்.
ங்கள்:
)பனைவிலை - அலகிற்கான மாறும் கிரயம்
களிப்பு X விற்கப்பட்ட மொத்த அலகுகள்
ன கிரயம் + இலாபம்
நிலையான கிரயம் அலகொன்றிற்கான பங்களிப்பு
கிரயம் X அலகொன்றிற்கான விற்பனைவிலை 5ான பங்களிப்பு

Page 106
இ) பங்களிப்பு விற்பனை வீதம் - அலசெ S916)GöbfT.
ஈ) எதிர்பார்க்கப்படும் இலாபத்தில் விற்பை - நிலையான கிரய
உ) எதிர்பார்க்கப்படும் வரிக்குப் பின்னரான
= நிலையான கிரயம் + (எதிர்பார்க்கட்
1 அலகொன்றிற்கான பங்களிப்பு
ஊ) எதிர்பார்க்கப்பட்ட இலாபத்தில் விற்பை
- (நிலையான கிரயம் + எதிர்பார்க்கப்ட அலகொன்றிற்கான பங்களி
இச்சூத்திரங்கள் அனைத்தும் தனியொரு உற்பத் கலவையுடன் தொடர்புடையவையாகும். பல்பொ புள்ளி பின்வருமாறு கணிப்பிடப்பட முடியும்.
இலாபநட்டமற்ற புள்ளி = நிலையான கிரய (விற்பனைப் பெறுமதியில்) Jhibé
உதாரணம் 1
ஒரு உற்பத்தி நிறுவனம் தனியொரு பொரு6ை விற்பனை செய்கின்றது. பின்வரும் தகவல்கள் < பிரித்தெடுக்கப்பட்டதாகும்.
விற்பனை (10,000 அலகுகள்) மாறும் கிரயம் நேர் மூலப்பொருள் நேர் கூலி தொழிற்சாலை மேந்தலை சந்தைப்படுத்தல் செலவுகள் நிர்வாகச் செலவுகள் பங்களிப்பு
நிலையான கிரயம் தொழிற்சாலை மேந்தலை சந்தைப்படுத்தல் செலவுகள் நிர்வாகச் செலவுகள் தேறிய இலாபம்
சமப்பாட்டுப்புள்ளி தொடர்பான கணிப்பீடுகள்

ான்றிற்கான பங்களிப்பு X 100 ன்றிற்கான விற்பனை விலை
ன மட்டம் (அலகுகளில், ம் + எதிர்பார்க்கப்பட்ட கிரயம் கான்றிற்கான பங்களிப்பு
இலாபத்தில் விற்பனை மட்டம் (அலகுகளில்) படும் இலாபம்) - வரிவீதம்
}ன மட்டம் (விற்பனைப் பெறுமதியில்)
Iட்ட இலாபம்) x அலகொன்றிற்கான விலை
JL.
தி தொடர்பானவை அல்லது மாறுபடாத உற்பத்திக்
ருள் உற்பத்தி நிறுவனமொன்றின் இலாபநட்டமற்ற
ம் X விற்பனைப் பெறுமதி ரிப்பு
ள உற்பத்தி செய்து அலகொன்று ரூபா 100 வீதம் அதன் புத்தகங்களிலிருந்து நிதிப்பகுப்பாய்வாளரால்
ரூபா ebUT
10,00,000
300,000
300,000 80,000
70,000 . . . 50,000 800,000 200,000
50,000
30,000
20,000 100,000
100,000
அனைத்தையும் மேற்கொள்க.
82

Page 107
(அ) பங்களிப்பு - விற்பனை விலை - எல்லை
100 - 80 = ebUT 20
பங்களிப்பு விற்பனை விகிதம்/இலாப அளவ
ஆ) சமப்பாட்டு புள்ளி (அலகுகளில்)
இ) சமப்பாட்டு புள்ளி (விற்பனைப் பெறுமதியில்
ஈ) சமப்பாட்டுப்புள்ளி வீதாசாரம்
இந்நிறுவனம் ரூபா 200,000 மேலதிகமாக 36OTU
உ) எதிர்பார்க்கப்படும் இலாபத்தில் விற்பனை
ஊ) எதிர்பார்க்கப்பட்ட இலாபத்தில் விற்பனை
வரிவீதம் 50% மாயின் எதிர்பர்க்கப்பட்ட

க் கிரயம்
விகிதம்
R
பங்களிப்பு X 100 அல்லது விற்பனை
= 1 ー மாறும் கிரயம் X 100 விற்பனை
20 X 100 அல்லது 1 - 80 X 100
100
= 2.0%
= நிலையான கிரயம்
அலகொன்றிற்கான பங்களிப்பு
100,000 = 5,000 அலகுகள்
100-80
})
5,000 X 100 = ரூபா 500,000 அல்லது
R
நிலையான கிரயம் பங்களிப்பு வீதம்
100.000 = dbLIT 500,000
0.20
மொத்த நிலையான கிரயம் மொத்த பங்களிப்பு
100,000 x 100 = 50% 200,000
ம் உழைக்க விரும்பின் சமப்பாட்டுப்புள்ளி:
மட்டம் (அலகுகளில்)
= நிலையான கிரயம் + எதிர்பார்க்கப்பட்ட கிரயம் அலகொன்றிகான பங்களிப்பு
= 100,000 + 200,000 = 15,000 அலகுகள்
20
ப் பெறுமதி= 15,000 X 100 = ரூபா 15,00,000
இலாபத்தில் சமப்பாட்டுப்புள்ளி:
33

Page 108
எ) வரிக்குப் பின்னரான எதிர்பார்க்கப்பட்ட இ - நிலையான கிரயம் + (எதிர்பார்
1
அலகொன்றிற்கான பங்கள்
200,000 100,000 - ;אש -- 25,000
20
இந்நிறுவனம் தற்போதிருக்கும் இயந்திரத்தை நவ இதன்பொருட்டு ரூபா 25,000 மேலதிக நிலைய நேர்கூலிக்கிரயம் ஒவ்வொன்றிலும் ரூபா 25,000 ே இப்பிரேரணை கையேற்கப்படின் இலாப அளவு 6 என்பவற்றைக் கணிப்பிடுக.
நிலையான கிரயம் =
மாறும் கிரயம் நேர் கூலி
நேர் மூலப்பொருள் ஏனைய மாறும் ெ
ஏ) இலாப அளவு விகிதம் 1 – LOTs
ܐܡ̈ܝܗ-ܗ வி
- 1 - 75
10,
ஏ) சமப்பாட்டுப்புள்ளி = 56O)6)UJI) 96)TU c
= . 125,000
0.25
ஐ) இலாபம் (விற்பை 10.00
250,0
ரூபா 12
6. urglas|TL 616)6O)6) (The margin of safety
பாதீட்டுக் காலத்தில் பாதுகாப்பு எல்லையா இலாபநட்டமற்ற நிலைமைக்கு தேவைப்படுகி அளவிடப்படுகிறது. இது பாதீடு செய்யப்ப புள்ளியிலான அலகுகளுக்குமிடையிலான (

Uாபத்தில் அலகுகளின் எண்ணிக்கை 5கப்படும் இலாபம்) – am –
tJL.
லகுகள்
ன மயமாக்கும் பிரேரணையைக் கொண்டு வருகிறது. ான கிரயம் ஏற்படுமெனவும், நேர் மூலப்பொருள், சமிக்கப்பட முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிகிதம், சமப்பாட்டுப்புள்ளி, நிறுவனத்தின் இலாபம்
ரூபா 125,000
ரூபா 275,000
ரூபா 275,000
Ꮰ6u6ᎧjeᏏ6iᎢ ரூபா 200,000
750,000
நும் கிரயம்
றபனை
0,000 - 1 = 0.75 - 0.25 அல்லது 25%
00,000
ன கிரயம்
அளவு விகிதம்
= ebUT. 500,000
0 X இலாப அளவு விகிதம்) - நிலையான கிரயம் 000 Χ 0,25 - e bι Π. 125.000 D0 - 125.000
,000
து பாதீடு செய்யப்பட்ட விற்பனைத் தொகையை ாற விற்பனைத் தொகையுடன் ஒப்பிடுவதன் மூலம் ட விற்பனை அலகுகளிற்கும், இலாபநட்டமற்ற வறுபாடாகும். சில நேரங்களில் இது பாதீடு

Page 109
செய்யப்பட்ட விற்பனைத் தொகையின் விகிதாக பாதீடு செய்யப்பட்ட விற்பனை வருமா6 வருமானத்திற்குமிடையிலான வேறுபாடாகவும் விகிதாசாரமாகவும் வெளிப்படுத்தப்படலாம்.
பாதுகாப்பு எல்லை = பாதீட்டு விற்பனை - க
பாதுகாப்பு எல்லை விகிதாசாரம் = பாதீட்டு வி
மேற் கூறப்பட்ட உதாரணத்திற்கமைய
அ) பாதுகாப்பு எல்லை = 10,000 - 5,000
ஆ) பாதுகாப்பு எல்லை வீதம் = 5,000 X 100
10,000
இ) பாதுகாப்பு எல்லையானது, பாதீட்டு வி ஆகக்குறைந்த இலாப நிலைமையை அடை 50% இனால் குறையலாம் என முகாமைக் நட்டத்தை உழைக்க முன் விற்பனை எந்த பாதுகாப்பு எல்லை கூடுதலாக அது நிறுவன எல்லை நிறுவனத்தின் உற்பத்திப் பொருள முக்கியத்துவமுடையதொன்றாகும். குறை விகிதத்திற்கு வழிவகுக்கலாம். பாதுகாப்பு இருக்கும்போது முகாமை விற்பனைத் தெ கூட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆ( முன்னேற்றக்கூடிய வகையில் மாறும் கிரயத்
7. வரைபட ரீதியான அணுகுமுறை
சமப்பாட்டுப் புள்ளியானது வரைபட ரீதியாகவ எல்லைக்குள் விற்பனைத் தொகையின் பல்வே சுட்டிக்காட்டுகின்ற ஒரு வரைபடமே இலாபந இது கிடையச் சில் தொகை/வெளியீட்டு
வருமானத்தையும் கிரயப் பெறுமதியையும் காட்
விற்பனைக் கோடும் மொத்தக் கிரயக் கோடும் இவ் இலாபநட்டமற்ற புள்ளியை விற்பனை அல முடிகின்றது. மேலும், எதிர்பார்க்கப்படுகின்ற இலாபநட்டமற்ற புள்ளி அலகிற்கும் இடையி புலப்படுத்தும்.
மேற்கூறப்பட்ட உதாரணத்திற்கமைய சமப்பாட்டு
புள்ளியைக் கணிப்பிடுவதுடன், ஒரு இலாபந புள்ளியையும் பாதுகாப்பு எல்லையையும் வரை
8:

ாரமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது. மேலும், னத்திற்கும், இலாப நட்டமற்ற விற்பனை பாதீடு செய்யப்பட்ட விற்பனை வருமானத்தின்
மப்பாட்டு புள்ளியிலான விற்பனை
பிற்பனை - சமப்பாட்டு புள்ளி விற்பனை
பாதீட்டு விற்பனை
= 5,000 அலகுகள்
) = 50% அல்லது 05
ற்பனை இலாபநட்டமற்ற புள்ளியை அல்லது வதற்கு பாதீடானது 5,000 அலகுகளால் அல்லது Ö சுட்டிக் காட்டுகின்றது. அதாவது நிறுவனம் 5 அளவு குறையலாம் என சுட்டிக்காட்டுகிறது. த்திற்கு பாதுகாப்பானதாகும். உயர்வான பாதுகாப்பு ரிற்கான கேள்வி குறைந்து செல்லும்போது மிக ந்த பாதுகாப்பு எல்லை குறைவான பங்களிப்பு பு எல்லையும், பங்களிப்பு விகிதமும் குறைவாக நாகையைப் பாதிக்காத வகையில் விலையைக் லோசிக்கலாம். அல்லது உற்பத்திச் செய்முறையை நதைக் குறைக்கலாம்.
பும் தீர்மானிக்கப்பட முடியும். “ஒரு குறிப்பிட்ட பறு மட்டங்கிளில் இலாபத்தையும் நட்டத்தையும் ட்டமற்ற வரைபடம் என வரையறுக்கப்படுகிறது. அலகினையும் நிலைக்குத்தச் சில் விற்பனை டக்கூடிய வகையில் தயாரிக்கப்படுகிறது.
சந்திக்கும் புள்ளி இலாபநட்டமற்ற புள்ளியாகும். குகளிலும் விற்பனைப் பெறுமதியிலும் அவதானிக்க பாதீடு செய்யப்பட்ட) விற்பனை அலகுகளிற்கும். |லான தூரம் பாதுகாப்பின் இறுதி எல்லையைப்
புள்ளி அட்டவணையைத் தயாரித்து சமப்பாட்டுப் ட்டமற்ற வரைபடத்தை வரைந்து சமப்பாட்டுப் படத்தில் காட்டுக.
5

Page 110
சமப்பாட்டுப்புள்ளி அட்டவணை
வெளியீடு விற்பனை மாறு (அலகுகளில்) வருமானம் கிரய (ரூபா) (ரூப
O O
2000 200,000 160. 4000 400,000 320. 5000 500,000 400, 6000 600,000 480, 8000 800,000 640.
10,000 1,000,000 800,
மேற்காட்டப்பட்ட அட்டவணையில் இலாபமே
புள்ளி தீர்மானிக்கப்படுகிறது.
5,000 அலகுகள்
வருமான நிலைமையில் சமப்பாட்டுப்புள்ளி காணப்
புலப்படுத்தலாம்.
bLITI 000
1000 Gaj 6)6), ՋlմbւԸ16)IIք
900
500
100
சமப்பாட்டுப்பு
Λ
இலாபநட்டமற்ற
L
A

O நிலையான மொத்தக் 96)TU D கிரயம் கிரயம் நட்டம் ) (ibШТ) (ரூபா) (ரூபா)
O 100,000 100,000 (100,000) )00 100,000 260,000 (60,000) )00 100,000 420,000 (20,000) O00 100,000 5 00,000 O )00 100,000 580,000 20,000 000 100,000 740,000 60,000 000 100,000 900,000 100,000
ா நட்டமோ அற்ற பூச்சியநிலையில் சமப்பாட்டுப் வெளியீட்டு மட்டத்தில் ரூபா 500,000 விற்பனை படுகின்றது. இதனைப் பின்வரும் வரைபடம் மூலம்
ள்ளி வரைபடம்
ألكسس – LjČETIL ༽ எல்லை
10
不
விற்பனை
ases. --anon anoloeswr Y不
பாதீடு செய்யப்பட்ட இலாபம்
மொத்தக் கிரயம்
பாதீடு செய்யப்பட்ட மாறும் கிரயம்
நிலையான கிரயம் جدا
பாதீடு செய்யப்பட்ட நிலையான கிரயம்
D
விற்பனை (000 அலகுகளில்)

Page 111
சமப்பாட்டுப்புள்ளியானது மொத்தக் கிரயம் மொ வரைபடத்தில் இது வருமானமும் கிரயமும் மட்டத்தில் காணப்படுகிறது பாதுகாப்பு எல் செயற்பாட்டு மட்டத்திற்கும் இலாபநட்டமற்ற
5,000) = 5,000 அலகுகளால் வெளிப்படுத்தப்ப
8. Lublab6ńlŮL 6u6ODJLILLb (Contribution break
நிலையான கிரயக் கோட்டை முதலில் வரைவ வரைவதன் மூலம் இவ்வரைபடம் வரையப்
ஏற்படுகின்ற இலாபத்திலான தாக்கத்தை வரையறுக்கப்படுகின்றது. மேற்காட்டப்பட்ட உத
பங்களிப்பு
வருமானம் A ரூபா 000
1000
இலாபநட்டமற்ற புள்ளி
500
100
fിഞ്ഞൺ
T60T
கிரயம்
 

த்த வருமானத்தை சந்திக்கும் புள்ளியில் இருக்கும் ரூபா 500,000 இல் 5,000 அலகுகள் வெளியீட்டு லையானது வரைபடத்தில் பாதீடு செய்யப்பட்ட புள்ளிக்குமிடையிலான வேறுபாட்டால் (10,000 - டுகின்றது.
even chart)
தற்குப் பதிலாக மாறும் கிரயக் கோட்டை முதலில் படுகின்றது. இது “விற்பனை மாற்றங்களினால்
வெளிப்படுத்துகின்ற ஒரு வரைபடம்” என ாரணத்திற்கமைய இது பின்வருமாறு வரையப்படும்.
6))6OUULib
விற்பனை வருமானம்
X இலாபம்
மொத்தக்
T~பு கிரயம்
} பங்களிப்பு
நிலையான் கிரயம்
ޑ’ ހ
பாதுகாப்பு மாறும் கிரயம் எல்லை
h
D
0. விற்பனை
(000 அலகுகள்)

Page 112
பங்களிப்பு வரைபடம் மூலம் உற்பத்தியின் பலி அறியமுடியும் விற்பனை வருமானக் கோட்டிற்கு வடிவத்தில் பங்களிப்பு சுட்டிக்காட்டப்படுகின்றது. கிரயத்திற்கு சமனாக உள்ளது. இலாபநட்ட நிலையில் பங்களிப்பு நிலையான செலவை ஈடுசெய் தரும் வகையில் உயர்வாக உள்ளது. இலாப
செலவை ஈடுசெய்ய முடியாத தொகையானது
36)Tu 96T6 6.60) Julb (Profit Volume ch
இலாப அளவு வரைபடமானது இலாபநட்டம விற்பனைத் தொகை, இலாபம் என்பவற்றிற்கிை இறுதி எல்லையையும் இலகுவாக வெளிப்படுத் இலாபத் தாக்கத்தை வெளிப்படுத்துகின்ற வன கிடையச்சு முன்னைய வரைபடங்களிற்கு வை நிலைக்குத்தச்சு இலாபத்தை வெளிப்படுத்து வெளிப்படுத்தும். ஒரு இலாபக் கோடானது பூ வரையப்படுகின்றது. இது நிலையான கிரயத் வெட்டும் புள்ளியே இலாபநட்டமற்ற புள்ளியாகும் வெளிப்படுத்தும். மேற்காட்டப்பட்ட உதாரண பின்வருமாறு இருக்கும்.
இலாப அலி இலாபநட்டம் h
ரூபா 000
100
இலாபம்
O
நட்டம் 5
சமப்பாட்டுப்
100
நிலையான
கிரயம்
இலாபமானது விற்பனைவிலை, தொகை, மாறு அல்லது குறைவு மூலம் பாதிக்கப்படலாம். இந் மூலமே புலப்படுத்தலாம்.
88

)வேறு மட்டங்களிலும் பங்களிப்பை தெளிவாக ம் மாறுக் கிரயக் கோட்டிற்கும் இடையே “V” இலாபநட்டமற்ற புள்ளியில் பங்களிப்பு நிலையான ற்ற புள்ளிக்கு மேலாக வெளியீடு காணப்படும் 1வது மட்டுமன்றி அதற்கு மேலாக இலாபத்தையும் நட்டமற்ற புள்ளிக்கு கீழே பங்களிப்பு நிலையான ட்டமாகக் காணப்படுகின்றது.
art/PIV/chart)
ற்ற வரைபடத்திலிருந்து வேறுபட்டது. இது டயேயான தொடர்பையும் அல்லது பாதுகாப்பின் துகின்றது. இதுவும் “விற்பனை மாற்றத்திலான ரபடம்” என வரையறுக்கப்படுகின்றது. இங்கு ரயப்பட்டது போன்றே வரையப்படும். ஆனால் ம். இது மூலப்புள்ளிக்குக் கீழே நட்டத்தை ச்சிய செயற்பாட்டு மட்டத்தில் நட்டத்திலிருந்து நிற்கு சமனாக இருக்கும். இங்கு கிடையச்சை கிடையச்சிற்கு மேற்பட்ட புள்ளியாவும் இலாபத்தை 0ாத்திற்கமைய இலாப அளவு வரைபடமானது
ாவு வரைபடம்:
பாதீட்டு இலாபம்
பாதீடு ノ (ો,+ાં Iા Iાં
D
s 10 (000) ഫ്രക്രെ புள்ளி ノ விற்பனை
ம் கிரயம், நிலையான கிரயம் என்பவற்றின் அதிகரிப்பு த இலாப மாற்றங்களை இலாப அளவு வரைபடம்

Page 113
10. பல்பொருள் உற்பத்தி நிறுவனமொன்றின் இ
பல்பொருள் உற்பத்தி நிறுவனமொன்றிற்கு இல விற்பனைக் கலவைகளின் சராசரிப் பங்களிப்பு இது வெளிக்காட்டப்படும். ஒவ்வொரு பொ அவற்றின் இலாபக்கோடு வரையப்படல விகிதத்தையுடைய உற்பத்திபொருள்களிலிரு அவற்றை இணைத்தல் வேண்டும். இது இறுதிப் புள்ளியையும் இணைத்து ஒரு நேர்ே கிடையச்சை வெட்டுகின்றதோ அதுவே சமப்ப மூலம் புலப்படுத்தலாம்.
உதாரணம் 2:
பின்வரும் தகவல்களை பல்பொருள் உற்பத்
(ölO.
உற்பத்திப் விற்பனைப் s பொருள் பெறுமதி d
P 400,000 36 Q 300,000 R 150,000 ҫ S 150,000 - 1: மொத்தம் 1,000,000 6(
நிறுவனத்தின் நிலையான கிரயம் நிறுவனத்தின் மொத்த இலாபம்
தேவைப்படுவது:
பல்பொருள் உற்பத்தி நிறுவனத்திற்கான இ. புள்ளியைத் தீர்மானிக்க.
இலாப அளவு வரைபடத்திற்கான அட்டவ
இலாப அளவு உற்பத்திப் விற் விகிதம் பொருள் (ଗl
80% S 15( 60% S--R 30 50% S+R+Q 60(
10% S+R+Q+P 1,00.

òTLu SÐI6T6I 6J60DJUILLb:
ப அளவு வரைபடம் வரையப்பட முடியும். தரப்பட்ட தனியொரு பங்களிப்பிற்கு சமன் எனுமடிப்படையில் நட்களதும் இலாப அளவு விகித அடிப்படையில் ாம். வரைபடத்தில் அதிக இலாப அளவு ந்து அவற்றிற்கான இலாப புள்ளிகளை குறித்து முறிகோடாக இருக்கும். பின்பு முதற்புள்ளியையும், காடு வரையப்படும். இந்நேர்கோடு எவ்விடத்தில் ட்டுப் புள்ளியாகும். இதனைப் பின்வரும் உதாரணம்
நி நிறுவனமொன்றுடன் தொடர்புடைய தகவல்களா
ாறும் பங்களிப்பு இலாப அளவு கிரயம் விகிதம்
չ0,000 40,000 10% 50,00 150,000 50% )0,000 90,000 60% 0,000 120,000 80% )0,000 400,000 0%
200,000
200,000
லாப அளவு வரைபடத்தை வரைந்து சமப்பாட்டுப்
O)6OOT
பனைப் பங்களிப்பு இலாபம்/நட்டம் றுமதி
),000 1,260,000 (80,000)
),000 210,000 10,000
),000 360,000 160,000
),000 400,000 200,000

Page 114
இலாபம் 000 A
R
O
s S 5
bLL LO
5.
200
நிறுவனத்தின் இலாப அளவு விகிதம் =
நிறுவனத்தின் இலாபநட்டமற்ற புள்ளி = 2.
படத்தில் நேர்கோடு கிடையச்சை வெட்டும்பு
11. சமப்பாட்டுப்பகுப்பாய்வின் உபயோகங்கள்
1) கணக்கியல் தரவுகளை இலகுவாகவ நிதிக்கூற்றுக்கள், அறிக்கைகளில் சமப்பாட்டுப்பகுப்பாய்வு வரைபடம் மூ அதிகாரிகளுக்கும், ஏனையோருக்கும் ii) சமப்பாட்டுப்புள்ளிப்பகுப்பாய்வு இலாபச் அதிகரிப்பிற்கான காரணங்களையும் சுட் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பே சமப்பாட்டுப்பகுப்பாய்வு ஒரு கண்டுபிடி ii) இப்பகுப்பாய்வில் சமப்பாட்டுப்புள்ளி, இ
இலாப அளவு வரைபு, சமப்பாட்டுப் மீதான மாறும் காரணிகளின் தாக்கமும்

-b
DO 100 ബിbLങ്ങിങ്ങ് (000
மப்பாட்டுப்புள்ளி
400,000 - 40% - 10,00,000
00,000 = ரூபா 500,000
0.4 .
ர்ளி சமப்பாட்டுப் புள்ளியாகும்.
ம், தெளிவாகவும் விமர்சனம் செய்ய உதவுகிறது. அளிக்கப்படுகின்ற கணக்கியல் தரவுகளை விட Uம் அளிக்கப்படும் தரவுகள் வியாபார நிறைவேற்று இலகுவில் விளங்கக்கூடியதாக உள்ளது
குறைவிற்கான காரணங்களையும், சமப்பாட்டுப்புள்ளி டிக்காட்டுவதுடன் இவற்றுக்கு என்ன நடவடிக்கை தையும் முகாமைக்கு வெளிப்படுத்தும். எனவே, ப்பு சாதனமாக தொழிற்படுகிறது எனலாம்.
லாப அளவு விகிதம் என்பன கணிப்பிடப்படுவதுடன், |ள்ளி வரைபு என்பனவும் தயாரிக்கப்பட்டு, இலாபம் பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிக்கையிடப்படுகின்றது.
90

Page 115
எனவே, முகாமையால் தயாரிக்கப் இலாபத்திட்டங்கள் விலையிடல் தீர் முழுத்தகவல்களும் மிகப்பிரதானமானத
iv) இலாப அடிப்படையில் ஒரு நடவடிக்
கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். த நிறுவனம் ஆபத்தை எதிர்நோக்கலாம். ஆபத்து வெளிப்பாடுகளை கருத்திற் தொழிற்படுகிறது.
12. காசு ரீதியான சமப்பாட்டுப்புள்ளி (Cash B
நிதித் திட்டமிடலில் காசோட்டம் மிகப்பிரதா: அடிப்படையில் அறியப்பட வேண்டியது மிக அ கிரயங்களிலும் இருந்து காசல்லா விடயங்க பகுப்பாய்வை பணரீதியில் மேற்கொள்வது நிலையான கிரயத்தில் உள்ளடக்கப்படும் மேற்தரப்பட்ட உதாரணத்தில் தேய்மானம் ரூட ரூபா 80,000 ஆகும். ஆகவே, பணரீதியான
சமப்பாட்டுப்புள்ளி = நிலையான கிரயம்
பங்களிப்பு
9ے 4,000 -- 80,000 ست
20
ஏனையவை மாறாத நிலையில் ஒரு நிறுவனம் தன விடயங்களைக் கொண்டிருப்பின் இதனது சமப்பாட
13. சமப்பாட்டுப் புள்ளி வரைபடத்திற்கான வரை
1.
9-CM 4658
இவ்வரைபடங்கள் யாவும் ஒரு குறிப்ட் பிரதிபலிக்கின்றது. உதாரணமாக, 70% இவ்வீச்சுக்கு அப்பால் செலவு, தொ சரியாக இருக்கா எனினும், வரைட பொருத்தமற்றதாகிறது. நிலையான கிரயமானது வெவ்வேறு ஒரு படிமுறை நிலையான கிரயமே அ மாறும் கிரயமும் விற்பனையும் ஏகபf ஏனெனில், கழிவுகள் மேலதிக நேர கட்டளைகள் என்பன மாறும் கிரய நேர்கோட்டிலும் பார்க்க வளைகோட இவ்வரைபடம் குறுங்காலத்துடன் ெ நீண்டகால நிதி திட்டமிடல் நோக்கிற் உற்பத்தியும் விற்பனையும் எப்போதும் நிச்சயமற்ற தன்மையானது நிலைய பாதிக்கின்றது.
இலாபநட்டமற்ற பகுப்பாய்வு ஒரு த6 ஒரு விற்பனைக் கலவைக்கே ெ வரையறுக்கின்றது.
9

பட்ட எதிர்வுகூறல்கள், ஏனைய பாதீடுகள், )ானங்கள் என்பவற்றின் உபயோகங்களிற்கு இவ் ாகும். -
கையை மேற்கொள்ள விரும்பும்போது ஆபத்தும் னியே இலாபம் மட்டும் கருத்தில் கொள்ளப்படின் மப்பாட்டுப் பகுப்பாய்வு பல்வேறு செயற்பாடுகளிலும், கொள்கின்ற ஒரு உபயோகமான முறையாகத்
eak— even point)
னமானதாகும். எனவே, சமப்பாட்டுப்புள்ளியும் காசு அவசியமாகும். இதன்பொருட்டு வருமானங்களிலும், SO)6T (non-cash items) Biblf, 6596, 3 LDULT.' (6t இலகுவானதாகும். அநேகமான சந்தர்ப்பங்களில் நாசல்லா செலவினம் தேய்மானமாக இருக்கும். ா 20,000 என எடுப்பின் மொத்த நிலையான கிரயம் சமப்பாட்டுப்புள்ளி பின்வருமாறிருக்கும்.
4லகுகள்
ாது நிலையான கிரயத்தினுள் பெருமளவு காசல்லாத ட்டுப்புள்ளி குறைவாக இருக்கும்.
யறைகள்
பிட்ட வீச்சையுடைய செயற்பாட்டு மட்டங்களையே b - 120% வரையான சராசரி உற்பத்திப் பொருளின் கை, இலாபம் என்பவற்றிற்கிடையேயான தொடர்பு டமானது பூச்சிய நிலையிலிருந்து ஆரம்பிப்பது
செயற்பாட்டு மட்டங்களில் மாறமுடியும். எனவே, Hவற்றைப் பிரதிபலிக்க உகந்ததாகும். மாணத் தொடர்புடையவை எனக் கூறமுடியாது. வேலைக் கொடுப்பனவுகள், விசேட விநியோகக் பத்தையும் விற்பனை வருமானக் கோட்டையும் கவும் பிரதிபலிக்கும். தாடர்புடையதாக வெளிப்படுத்தப்படுகிறது. இது கு பொருத்தமற்றது.
சமனாக இருக்க மாட்டாது.
ான கிரய மதிப்பீடு மாறும் கிரய மதிப்பீட்டைப்
ரியொரு உற்பத்திப் பொருள் அல்லது குறிப்பிட்ட பாருத்தமானதென்பது இதன் உபயோகத்தை

Page 116
14. முடிவுரை:
குறுங்காலத் தீர்மானமெடுத்தல் கருமமான மேற்கொள்ளப்படுகின்றது. இத்தகைய இலாப அமைவது இச்சமப்பாட்டுப்புள்ளிப்பகுப்பாய்வு எ மிக முக்கியத்துவம் வாய்ந்தது இப்பகுப்பாய் இங்கு இப்பகுப்பாய்வு தொடர்பான முக்கிய அ உதாரணங்கள் மூலமும் புலப்படுத்தப்படுகின்ற
米米米米米米米米>
米米米米米米米米水米米米米米米米米米米米》 *:::::::::::::::::k:k:k:kk:
References:
ii.
iii.
iV.
Lucey, T, Costing, Fouth edition, EI Horngren Charles, T. Datar Srikant, M
gerial Emphasis, eleventh edition, 2003. Pandey, I., M., Management Accoun Vikas Publishing House Pvt Ltd, 20 Sastry, K, S, Nand Dhameja., The pri
Publishing, 1995. Lucey, T., Management Accounting
புகழ
முட்டாள்களின் குழந்தை, பணக்க பொருள், அரசியல்வா கவிஞர்களுக்கு ஞாபகச்சின்னம்; ெ வளர்ந்தால் மனிதன் வாழும் தெளிவ பெற்றுவிட்டால் புகழ்
N

து முகாமையினால் பங்களிப்பினடிப்படையிலேயே கரத் தீர்மானமெடுத்தல் நோக்கிற்கு உறுதுணையாக னில் மிகையாகாது. எல்லைக்கிரயவியல் நுட்பத்தில் வேயாகும். கட்டுரையின் சுருக்கத்தன்மை கருதி ம்சங்கள் யாவும் மிக சுருக்கமாகவும், எளிமையான Dg
k来米米米米米米米米
k米米米米米米米米米米米米米米米米米米米米米
k冰冰米米米米米米米冰冰冰冰冰
BS edition, 1999. M, Foster George., Cost Accounting - A ManaPrentice hall of India Private Lt., New Delhi,
ting - A Planning and Control Approach, 03. actise of Management Accounting, Wheeler
, Fourth edition, New York Road, London, 200.
HN
சமாதி அறிவாளிகளின் ாரர்களுக்கு வியாபாரப் ாதிகளுக்கு இரும்புத்திரை,
பரிசு, வீரர்களுக்கு தளிவும் புகழும் சேர்ந்து செத்த பின்னும் புகழ் வில் லாதவன் புகழ் ) முதலில் சாகும்.
1
92

Page 117
வாழ்
Lழந்தமிழ் இலக்கியங்கள் மக்கள் வாழ்விை அகவாழ்வு மற்றயது புறவாழ்வு. அகவாழ்வென் சார்பாக வாழும் வாழ்க்கை. புறவாழ்வென்பது தலைவரும் பிறரும் சார்பாக வாழும் வாழ்க்கை. ஒ அவ்வுலக வாழ்வுமில்லை. சார்பறிந்து ஒழுகவே
அகவாழ்வும் புறவாழ்வும் அறம், பொருள், இ பெறுதற்குரிய ஒழுக்க நெறிகளாகும். இந்நான்ன என்றே நூல்கள் கூறுகின்றன. இந்த ஒழுக்க நெ வாழ்விலும் தேசிய வாழ்விலும் மலர்ச்சி பெற்று இலக்கியங்கள் கூறுகின்றன.
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், நற்றவ வ “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கின்றது புற என்கின்றார் வள்ளுவப் பெருந்தகையார்.
மக்கள் வாழ்வினை அகவாழ்வு, புறவாழ்வு வாழ்க்கை நெறிக்கும் அறமே ஆதாரமென்றும் அக இவை அன்பினால் ஆக்கமடையுமென்றும் அழ.
“மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’ என்பது கம்பராமாயணம் “அன்பென்று கொட்டு முழங்கு கின்றது பாரதிபாடல்,
அகவாழ்விலும், புறவாழ்விலும் நாம் செய்கின்ற அ இன்பங்களும் அறநெறி கடவாதிருக்க வேண்டும் இன்பத்தின் கண் அறமும் இணைபிரியாது அமை
அன்றியும், அறத்தின்கண் இன்பமும் பொருள இணைபிரியாது உடன் நிகழ வேண்டும் என்பதும் என்னும் மூன்று பயன்களையும் அகவாழ்விலும் கண்ட அனுபவங்களே இலக்கியங்களாக ந புறவாழ்விலும் நாம் அடையும் பயன் இன்பமே கலப்பதையும் நாம் விலக்க ஒண்ணாது. அனுபல இலக்கியங்கள் மக்கள் மத்தியிலே சிறந்த சே இன்பமாக்கிக் கொள்ளும் சிறந்த சேவையைச் ெ கொள்ளும் சிறந்த நெறிகளை நேராகவும் கதா இலக்கியங்கள். இதனால் அகவாழ்வும் புறவா சம்பவங்களை இலக்கியங்களிலே நாம் காண்கின்
"இடுக்கண் வருங்கால் நகுக” என்கின்றது த விளக்குப்போல - நடுக்கமொன்றானுமின்றி நகுக என்கின்றார் திருத்தக்க தேவர். “பெயக்கண்டும் ந( என்கின்றார் வள்ளுவனார். “முந்தை நின்று நட்ே

வாங்கு வாழ வழிகாட்டும் இலக்கியம்
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
0 இருபகுதியாக வகுத்துக் கூறுகின்றன. ஒன்று து ஒரு தலைவன் இல்லின் கண் மனைவி மக்கள் ஒரு தலைவன் தன்னாட்டு மக்களும் பிறநாட்டுத் ரு சார்புமின்றி ஒருவனுக்கு இவ்வுலக வாழ்வுமில்லை 1ண்டுமெனத் திருக்குறள் கூறுகின்றது.
}ன்பம், வீடு என்னும் நான்கு பயனையும் ஒருவன் கயும் மூன்றுள் அடக்கி அறம், பொருள், இன்பம் றிகள் இரண்டும் ஒருவனது இல்வாழ்விலும் சமூக |ச் சர்வதேசிய வாழ்வில் நிறைவுற வேண்டுமென
ானின் நனி சிறந்தனவே” என்கின்றார் பாரதியார். ]நானூறு. “யாதானும் ஊராம் யாதானும் நாடாம்’
எனப் பகுத்தமைத்த தமிழிலக்கியங்கள் இவ்விரு த்தூய்மையே எல்லா அறங்களுக்கும் தாயறமென்றும் காகக் கூறுகின்றன.
என்பது திருக்குறள். “அன்பின் நின்றன அறங்கள்’ முரசே அதில் ஆக்கமுண்டாமென்று கொட்டு” என
அறங்களும் தேடுகின்ற பொருள்களும் அனுபவிக்கின்ற 1. அறத்தின் கண் அறமும் பொருளின்கண் அறமும் ந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
ன் கண் இன்பமும் இன்பத்தின் கண் இன்பமும் நியதியாகும். இவ்வாறு அறம், பொருள், இன்பம் புறவாழ்விலும் மக்கள் அடையும்போது அவர்கள் 0க்குக் கிடைத்திருக்கின்றன. அகவாழ்விலும் யாயினும், துன்ப அனுபவங்கள் இடையே வந்து பித்தே தீர வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்திலேதான் வையைச் செய்கின்றன. துன்ப அனுபவங்களை சய்கின்றன. துன்ப அனுபவங்களை இன்பமாக்கிக் பாத்திரங்கள் வாயிலாகவும் திறந்து வைக்கின்றன ழ்வும் துன்பம் நீங்கி இன்பமயமாக மாறுகின்ற பல றோம்.
ருக்குறள் “இடுக்கண் வந்துற்றகாலை எரிகின்ற அந்த நகை துன்பத்தை அரிக்கின்ற ஆயுதமாகும்’ ந்கூண்டமைவர் - நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ டார் கொடுப்பின் - நஞ்சும் உண்பர் நனிநாகரிகள்’
)3

Page 118
என்கின்றது நற்றிண்ை “நச்சை வாயிலே கொண அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என நிமி
“ஆழிசூழ் உலக மெல்லாம் பரதனேயாள நீ தவம்மேற் கொண்டு-பூழிவெம் கானம் நண்ணி - ஏ கூறிய எதிர் பாராத துன்ப மொழிகளின் மத்திய செந்தாமரையினை வென்றதம்மா’ எனத் துன்பத்தை சுடுமோ பெருங் காடு? - பத்தும் நாலும் பகல் அ சீதா பிராட்டியார். இன்பத்தில் இறுமாப்பற்றது வ
அகவாழ்வும் புறவாழ்வும் நிறைவுபெற வேண்டு சக்தியை நம்புங்கள் மனித சத்தியாலேதான் நாடு
நிலமே நீ நாடாயிருந்தாலென்ன? காட மேடாயிருந்தாலென்ன? அதில் ஒரு சிறப்புமில்6 நல்லவர்களாய் இருக்கின்றார்களோ அவ்வாறே நீய புறநானூறு. “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்ெ நல்லோர்கள் எங்கே பிறந்தாலும் அவர்களை உய பிறந்தாலும் என்?’ ‘அறிவார் யார் நல்லான் பிறக் அக்குடிக்கற்றோரை மேல்வருகென்பர்’ என்னும் இ நல்ல இடமிருந்ததைக் குறிப்பிடுகின்றன.
நல்லோர்கள் பலர் ஒரு நாட்டில் இருந் அறிவாற்றல்களைக் கூட்டாகப் பயன் செய்வ குறிப்பிடுவதையும் நாம் மறத்தலாகாது. இதனை பிறந்த மணியும் பொன்னும் - அலையிடைப் பி பிறந்தனவாயினும், அழகிய இரத்தினா பரணங்கை அழகு தருகின்றன அவைகள் இது போல எச் கூட்டாகத் தங்கள் அறிவினை நாட்டுக்குப் பயன் நிறைவுற்று நாடு செழிக்குமல்லவா? இலக்கியம்
நமது முன்னோர் மனித சக்தியை நன்கு பயன் ெ விருத்தி செய்யும் வழியில் அதைத் தொழிற்ப( கூறுகின்றன. இருவரின் அன்பு கலந்த மன அதனைச் “செம்புலப் பெயல்நீர்” போலிருக்கிறது நீர் பாய்ந்தால், நிலமும் நீரும் ஒன்றாகக் கலந்து ெ ஒன்றாய்விட்டது என்று கூறிய புலவர் பெருமான் செய்த சீரிய வாழ்வினைச் சித்திரித்துக் காட்டிய அ தென்தமிழ் நாட்டிலும் நிலத்தையும் நீரையும் இை பெருங் கீர்த்தி பெற்றுத் திகழ்கின்றார்கள். நிலத்ை உயிரையும் இணைத்து வைத்தோர். “உண்டி கெ கூறுகின்றது. இந்த வரிசையிலே காவிரிக்குக் கt பராக்கிரமபாகு, குளக்கோட்டன் முதலிய மன்னர்க
இயற்கைவளஞ் சிறந்த நாடுகளிலே வேலைய இல்லை என்று சொல்லிக் கொண்டு சோம்பேறிகள் சிரிக்கிறாள் எனத் திருக்குறள் கூறுகின்றது. “இலெ நல்லாள் நகும்”.

ர்ந்து நண்பரூட்டு போழ்தினும் - அச்சமில்லை ர்ந்து நின்று பாடுகிறார் பாரதியார்.
போய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கரும் ழிரண்டு ஆண்டில் வா” எனக் கைகேயி அன்னை பிலே, இராமபிரானின் முகம், “அப்பொழுதலர்ந்த இன்பமாக்கி விடுகின்றார் கம்பர். “நின் பிரிவினுஞ் அல்லவோ” எனத் துன்பத்தில் வீரம் பேசுகின்றார் ாழ்வு துன்பத்தில் துளங்காமலிருப்பது வாழ்வு.
மா? நாடு சுபிட்சமாக வாழ வேண்டுமா? மனித
நலம் பெறுமென்கிறது இலக்கியம்.
Tயிருந்தாலென்ன? பள்ளமாயிருந்தாலென்ன? லை. உன்னிடத்து வாழ்கின்ற மக்கள் எவ்வாறு ம் நலம் பெற்று வாழ்வாயாக என வாழ்த்துகின்றது வழி நல்லை வாழிய நிலனே' என்பது செய்யுள் . ர்வாக மதிப்பவன் தமிழன். “நல்லோர்கள் எங்கே குங்குடி”, “எக்குடிப் பிறப்பினும், யாவரேயாயினும், இலக்கியங்கள் சமூக சமரசத்துக்குத் தமிழகத்தில்
தாலும் அந்நாட்டின் நல்வாழ்வு அவர்களின் திலேதான் தங்கியிருக்கிறதென இலக்கியங்கள் மறத்தலினும் பார்க்கக் கேடில்லை. மலையிடைப் றந்த முத்தும் பவளமும் வெவ்வேறு இடங்களிற் ளை அணிவிக்கும்போது ஓரிடத்தில் சென்று கூடி குடிப் பிறப்பினும், யாவரேயாயினும், நல்லோர்கள் செய்தால், நாட்டின் அகவாழ்வும், புற வாழ்வும் காட்டும் நெறியில் நாடு மலர்ச்சியடைக.
Iசய்திருப்பதையும், நாட்டின் இயற்கை வளத்தினை
டுத்தியிருப்பதையும் இலக்கியங்கள் தெளிவாகக்
ஒருமைப் பாட்டினை வருணிக்க வந்த புலவர் என உவமிக்கின்றார். பண்பட்ட நிலத்தில் இனிய
விடுதல் போல இவள்களின் அன்பு கலந்த நெஞ்சம்
அந்நாட்டு மக்கள் நிலத்தையும் நீரையும் பயன்
Hருமை நம்மால் உணரத்தக்கது. நமது நாட்டிலும், )ணத்து வைத்த அரசர்கள் பலர் இலக்கியத்தில்
தயும் நீரையும் இணைத்து வைத்தோர் உலகையும்
ாடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எனப் புறநானூறு
ரைகட்டிய கரிகாற் பெருவளத்தான், பகீரதன், மகா
ள் குறிப்பிடத்த்க்கவர்கள்.
பில்லை வரும்படியில்லை அது இல்லை இது Tாகத் திரிவோரைக் கண்டால் பூமாதேவி இகழ்ந்து மன்று அசைஇ இருப்பாரைக் காணின், நிலமென்னும்

Page 119
நமது நாட்டில் நல்ல நிலமிருக்கிறது. இனிய
நீரையும் இணைத்து வைக்கும் திட்டங்களை நிை பயன்செய்து வாழ்ந்தவர்களின் சந்ததி இன்று உை திரும்பிப் பார்ப்போம் ஈழநாடு பிறநாடுகளுக்கு செய்தியைப் புதுச் செய்தியாக்குவோம். காடு ெ வசித்திடுவோம். பாடுபடுத்தும் சோற்றுப் பஞ்: துர்ந்த பலகுளங்கள் திருத்திடுவோம் பாய்ந்து போகம் விளைத்திடுவோம் - இலங்கை முழுவி பசிதணிப்போம் இலங்கு தங்கக் குவியல் கெ காண்போம். இந்த நோக்குடன் இலக்கியங்க பாடத்துக்காகவும் படிப்போம். நமது இலக்கிய வேண்டும்.
எத்தொழிலைச் செய்தாலும், ஏதவஸ்த்தைப் மறக்கவில்லை. அதுதான் அகவாழ்வுக்கும் புறவ வறுமையினும் சரி செல்வத்தினும் சரி அவர் வாழ்வதற்கு அவர்கள் காட்டிய வழிவழியே செல் குபேர நாடுகள் பலவும் அபிவிருத்தியடைந்துவரு வாழ்வதாகக் காணவில்லை. காரணம் அக வெறும்பொருள் படைப்பதிலேயே அவைகள் நாட
பழைய இலக்கியங்களிலே திருந்திய கமத்ே அங்கெல்லாம் அகவாழ்வுடன் அவைகள் இ6ை களை பிடுங்குதல், எருவிடல், நீர் பாய்ச்சுதல் வந்துள்ளன. இந்தப் புறத்தொழில்கள் யாவும் உதாரணத்தாற் காண்போம். ‘இன்சொல் விலை வாய்மை எரு அட்டி, அன்புநீர் பாய்ச்சி, அறக் என்பது செய்யுள்.
இன்சொல்லாகிய விளைநிலம். இனிய உண்டாகின்றன. 'பல்லக் கேறுவதும் வாயால் ஈகை அதாவது கொடை என்கின்ற விதை நெ6 ஈகையை விதை நெல்லாக உருவகஞ் செய்தார். வாயால் என்றதனால் வன்சொற்களைக் களைக அன்பாகிய நீர் அறமாகிய கதிர் வாழ்க்கைய எல்லாம் பொருந்த இயைபான உருவக அணியா6 புறவாழ்வு பயன்தராது என்னும் உண்மையினை :
இன்னுமொரு நிகழ்ச்சி இங்கே நினைவுக்கு பண்பட்ட ஒரு வயலிலே பச்சைப் பசேலென்ற வேலையாட்கள் களைபிடுங்க வயலில் இறங்கி வெறியிலே களைகளை வெறிக்க வெறிக்கப் பார்க் காலும் வருகுதில்லை. மதுமயக்கம் அதிகமாய் வீண் சம்பளம். மள்ளர்களுக்கு ஏதோ நடந்துவ களைகளை மள்ளர் பார்த்த பார்வை இன்னு இத்தனைக்கும் காரணமென்ன? காரணத்தைக் &
“பண்கள் வாய் மிழற்றும் இன்சொற் கடைசியர் களையலாற் களையிலாமை உண்கள்வார் கடை நீலம், செங்காந்தள், செவ்வாம்பல், செந்தாமரை (

தீர்ப்பெருக்குகள் உள்ளன. அரசாங்கம் நிலத்தையும் )வேற்றிக் கொண்டிருக்கிறது. நிலத்தையும் நீரையும் ாவுக்குக் கையேந்தி நிற்பதேன்? நமது வயல்களைத் உணவு ஏற்றுமதி செய்த பழைய பட்டினப்பாலைச் கடுத்து நாடு புதுக்கிடுவோம். காணியிற் குடியேறி மெல்லாம் பறந்ததென்றே வெற்றி பாடிடுவோம் - வரும் நதிநீர் மறித்திடுவோம் பாங்காய் நெல் இரு தற்கும் உணவளிப்போம் ஏற்றி அயல் நாட்டவர் ண்டு வருவோம் எங்கள் பழைய நிலை இன்று ளைப் படிப்போம். பரீட்சைக்காகப் படிப்பதுடன் படிப்பு நமக்கு அனுபவ சாதனமாக மாற்றமடைய
பட்டாலும் நமது முன்னோர் ஒன்றை மாத்திரம் ாழ்வுக்குமுள்ள இணைபிரியாத தொடர்பு. இதனால், கள் செம்மை வாழ்வு வாழ்ந்து மன அமைதியுடன் லவேண்டும். உலகிலே பெருஞ் செல்வம் படைத்த நம் நாடுகளிற் பலவும் இன்று மன அமைதி பெற்று வாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் தொடர்பு காணாமல் ட்டங் கொண்டிருப்பதுதான்.
தொழில் பற்றிய செய்திகள் அதிகம் வருகின்றன. 1ணந்தே வருவதை நாம் காணலாம், நாற்று நடுதல்,
முதலிய முறைகள் பெருவழக்காக நடைபெற்று அகத்தொழில்களோடு இணைந்து நிகழ்வதை ஓர் ாநிலனா, ஈதலே வித்தாக, வன்சொற் களைகட்டு, கதிர் ஈனவோர் - பைங்கூழ் சிறுகாலைச் செய்”
சொல்லிலிருந்துதான் எல்லா நல்வினைகளும் பல்லுடைபடுவதும் வாயால்’ என்பது பழமொழி. ல் கொடுத்து வைத்தவன் என்பார்கள். இதனால் வன்சொற்களாகிய களைகள். பல்லுடைபடுவதும் ளாக உருவகஞ் செய்தார். வாய்மையாகிய எரு. ாகிய நெற் பயிர் ஆயுள் ஆகிய காலம். இவை ) நடக்கின்ற இச்செய்யுள் அகவாழ்வு சிறக்காதாயின் ஆணித்தரமாகக் கூறுகின்றது.
வருகின்றது. அகமும் புறமும் இணைந்த காட்சி. பருவப் பயின்கள், களைபிடுங்கும் காலம், வயல் விட்டார்கள். இவர்களுக்கு நல்ல தண்ணி, கள்ளு கிறார்கள், மள்ளர்களுக்குக் கையும் வருகுதில்லை விட்டது. களை பிடுங்காமல் கம்மா நிற்கிறார்கள். ட்டது. அப்படி என்ன நடந்தது? ஒன்றுமில்லை. மொரு தரம் கள்ளுப் போட்டது போலாயிற்று. ம்பர் சொல்லுகிறார் கேளுங்கள்.
பரந்து நீண்ட-கண் கை வாய் முகம் காலொக்கும் வாய் மள்ளர் களைகலாது உலோபிநிற்பார்.” கரு )தலிய பூக்கள் மள்ளர்களுக்குக் கள்ளு வெறியிலே
)5

Page 120
மருத நிலப் பெண்களின் கண், கை, வாய், காட்சியளிக்கின்றன. களைகளைப் பிடுங்குவது காத கொய்வது போல் மள்ளர்களுக்கு வருத்தம் தரு கம்பர், “பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ (அறிவு குறைந்த மள்ளர்கள் கள்ளுக்கும் காமத்து உலகின்மேல் வைத்து அறிவு குறைந்த மக்கள் கடைத்தேற முடியாமல் கெட்டுப் போகின்றார் எச்சரிக்கின்றார்.) இச் செய்யுளிலே திருந்திய கமச் கெடுக்கின்ற அறியாமை, கள், காமம் என்பவற்ை மொழி கூறுகின்றார் கம்பர்.
ஒருவன் தனது அகவாழ்வில் மன நிறைவு Lெ கோடி சீமானாயினும் அகவாழ்வில் நிறைவு Lெ துன்பமாகவே முடியும். இதனை இலக்கியக் கை
ஒருநாள் சாயந்தரம் சிறு மழைத் தூறலுக் வேட்டைக்கும் புறப்பட்டான். காட்டினுள்ளே ஒ கண்ணெடுத்துப் பார்க்கிறான் காது கொடுத்துக் ே ஒரு மதயானை. விடுகிறான் அம்பை. மதயானை புற்றினுள்ளே அத்துமீறிக் குடியேறிய நாக பாம்பொ பாம்புக்கும் அம்பு விடுகிறான். பாம்பும் இறக்கிற
இந்த அவதியில் அங்கே வருகிறது நரியொன் பிறர் தோட்டத்தை அபகரித்து உயிர் வாழும் பி நரியுமாகி விடுகின்றனர். எலிப் புத்தியும், நரிப் ட நன்றாகச் சாடியிருக்கிறாள்கள். அது கிடக்கட்டு
பேராசை கொண்டநரி வட்டமிட்டுப் பார்க்கிறது. இனிய உணவு கிடைத்திருக்கிறது. இதோ என வேடன் ஒரு வாரத்துக்கு பாம்பு ஒரு நாளுக் இடப்பக்கமாகச் சுற்றி வருகிறது நரி,
வேடனின் பக்கத்தில் நாணேற்றியபடியே கிடந்த வில் நுனியிற் கட்டியிருந்த தோல் துண்டைக் தின்போம்” என்று வில் நுனியைக் கடித்ததும் நா6 கொடுத்து வையாத நரி அனுவிக்கக் கிடையாமல் கொண்டு நரி விருத்தம் என ஓர் இலக்கியம் செய் உலகத்தில் எத்தனையோ பேர் தமக்கென்று ந அதிகாரம், நிலையான வருமானம் எல்லாம் இரு பொருளுக்கு ஆசைப்பட்டு எல்லா அனுபவங்களை
என நரி விருத்தம் கூறுகின்றது.
திருத்த
தெரிவுறக் கேட்ட திரு பரிவும் இடுக்கனும் ப தெய்வந் தெளிமின் தெ பொய்யுரை யஞ்சுமின் ஊன்ஊண் துறமின் உt தானஞ் செய்ம்மின் த6

முகம், கால் முதலிய அவையவங்களாகவே தலியரின் கண், கை, வாய், முகம், கால் உறுப்புகளைக் கிறது. தயங்கி நிற்கின்றார்கள். இதைக் கண்ட சிறியோர் பெற்றால்’ என்று பாட்டை முடிக்கின்றார். க்கும் அடிமையாகி விட்டார்கள். இந்நிகழ்ச்சியை
பெண்கள் மீது கொண்ட காமத்தில் அமிழ்ந்திக் கள் என்று மள்ளர்கள் மூலமாக வாலிபர்களை செய்கையாகிய புறவாழ்வினையும், அகவாழ்வினைக் றையும் இணைத்து உவமை நயம் தோன்ற உறுதி
பற்றால்தான் புறவாழ்வு அவனுக்கு இன்பமளிக்கும். றாதவனுக்கு இன்பமில்லை அவனது அனுபவம் ன்கொண்டு நோக்குவோம்.
கூட. மழைதூறி விட்டபின்பு வேடனொருவன் ரு புற்று அதன் பக்கத்தே நின்றுகொண்டு வேடன் கட்கிறான். வேடனை நோக்கி வேகமாக வருகிறது வீழ்ந்துபட்டது. இதற்கிடையில் கறையானெடுத்த ன்று வெளியே வந்து வேடனின் காலைக் கடித்தது. து. விகூpந் தலைக்கேறி வேடனும் சாகிறான்.
ாறு. காட்டில் நரி வீட்டில் எலி, நரியும் எலியும் ராணிகள். உலகிலே மனிதருள்ளும் பலர் எலியும் புத்தியுமுள்ள மனிதர்களை இலக்கிய கள்த்தாக்கள் ம் வந்த நரியைப் பார்ப்போம்.
‘இனி எனக்குக் காலம் நல்லது. இருக்குமிடத்திலே து உணவுப் பட்டியல். யானை ஆறு மாதத்துக்கு கு உணவாகும்’ என்று சொல்லிக் கொண்டே
5 வில்லைக் கண்டது. பேராசை விட்ட பாடில்லை.
கண்டு “இதை விடக் கூடாது. முன்பு இதைத் 0ணறுந்து வில் நிமிர்ந்து நரியின் குடலைப் பீறிவிட்டது. b இறந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியைக் கருவாகக் பது உலகுக்கு நல்லதோர் உபதேசஞ் செய்கின்றார். ல்ல அனுபவங்களிருக்க, உயர்ந்த பட்டம், பதவி, க்க, நரி தோல் துண்டை விரும்பியது போல அற்ப ாயும் இழந்து தமது உயிரையும் இழந்து விடுகிறார்கள்
கு நல்லீர்
த்தகு நல்லிர், Tங்குற நீங்குமின் நளிந்தோர்ப் பேணுமின் புறஞ்சொற் போற்றுமின் பிர்க்கொலை நீங்குமின் வம்பல தாங்குமின்
96

Page 121
செய்ந்நன்றி கொல்லன்மி பொய்க்கரி போகன்மின் ( அறவோர் அவைக்களம் பிறவோர் அவைக்களம் பிறர்மனை அஞ்சுமின் பி. அறமனை காமின் அல்ல கள்ளுங் களவும் காமமு வெள்ளைக் கோட்டியும் இளமையும் செல்வமும் உளநாள் வரையாது ஒல் செல்லுந் தேயத்துக் குறு மல்லன்மா ஞாலத்து வ
米冰米米米壮
米冰米米米米米米米米米米冰冰冰水
米米米米米冰米米米米
f
தீயது செய்யாத குறியாத் கவலையறி பொய்யுணராத அறிவுத் உயிர்த் துTய் மை ே ஈரமுடைமை, உயிர்களிட கஷ்டத்தால் வாடாத த நல் லறிவாளரால் குறித்துணரப்படுகிற பு இறைவனையன்றி அ சூழவிருப்பார்க்கு வழி வேண்டும் . அந்த த கூழ் னா மூர்த்தியின் வீற்றிருக்கும் பெருவாழ்வி (தழைவுள்ளம் - வள6
Nm
97

ன் தீநட்பு இகழ்மின் பாருண்மொழி நீங்கன்மின் அகலா தணுகுமின் பிழைத்துப் பெயர்மின் பழயுயிர் ஒம்புமின் வை கடிமின்
பொய்யும் விரைவினில் ஒழிமின் பாக்கையும் நிலையா லுவ தொழியாது துணை தேடுமின் ழ்வீர் ஈங்கென
- இளங்கோவடிகள்
நன்றி. பெ.விஜயரத்தினம் தமிழ்ச்சங்க தலைவர்,
கொழும்பு.
米米米米米
将水冰米米米米米米米米冰冰米米米
米米米米米米米米米米
உடற்றுாய்மை, தீங்கு யாத மனத் துய்மை, தூய்மை, பக்தி நீங்காத வண்டும். தன்மை, த்தே இரக்கமுடைமை, ழைவுள்ளம் வேண்டும். நல்லனென்று கழொளி, மெய்யறிவு, றியாத அறிவொளி, 5ாட்டும் தெய்வ ஒளி த் தவமுதல் வன் தாள் நிழலிலே , சிவவாழ்வு வேண்டும். மை பொருந்திய மனம்)
الص=

Page 122
வெற்றிகரமான தொழில் முயற்சியொன்றின் வள கலாசாரமும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இ முயற்சியாளன் போட்டியாளர்களுடன் போட்டியி( செயற்பாட்டிலும் பாரிய மாற்றத்தினைத் தொழ தொழிலாளர்களினால் உருவாக்கப்பட்டு ஏற்றுக்ெ சட்டங்கள் ஆகியவற்றினை மாற்றுவதற்கு 6 முக்கியமானதாகும். உற்பத்தித்திறன், தரம், விரைவு (Customer orientation) (SUT6óTD6) lib6OD 6).j65upli மாற்றத்துக்கான வலுவான தேவை காணப்படுகின்
ஒரு விருத்தியாளராக, முயற்சியாளன் ஒருவ தொழிலாளர்களுக்கு வேண்டப்படும் அறிவு, திற விருத்தி செய்வதற்கான வகிபங்கினை மேற்கொள் பொருத்தமான வேலைகளினை ஒதுக்குவதுட ஊக்கப்படுத்தல், நுட்பத்தினைப் பின்பற்றுதல், மனி ஏற்படுத்த வேண்டியுள்ளது.
ஊக்குவிப்பாளராக, ஒரு முயற்சியாளனின் வகிபங் வெளிப்படையான பேச்சு, நம்பகத்தன்மை, உள்ளக ஆகியன மூலமாக தொழில் முயற்சிக்கும் தொழ தன்மையினை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையினை திசையில் கொண்டு செல்வதற்குரிய நடத்தைசார்
பொருளாதார, சமூக, உளவியல் ரீதியான கார6 முயற்சியாண்மை மீது தாக்கத்தினையும் செல் முயற்சியாண்மைக் கலாச்சாரமானது சமூ உருவாக்கப்படுகின்றது. ஒரு தலைவராக, வெர் முயற்சியாளன் செயற்பட வேண்டும்.
முயற்சியாண்மைக்கான சூழல்
முயற்சியாளர்கள் தன்னியல்பாகவே தோன்றுவ
உற்பத்திக் காரணிகளினைப் பெறுவதைப் போன்று மு உருவாக்குவதற்கு பின்வரும் காரணிகள் பங்களிட்

முயற்சியாண்மைக் கலாசாரம்
Entrepreneurial Culture
வி ஈஸ்வரன் B.com(Hons)MAAT(SL), MBA(SRi J) சிரேஷ்ட விரிவுரையாளர்,
வணிகபீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்,
ாச்சிக்கு பிரதான பங்கு வகிப்பதில் முயற்சியாண்மைக் யைபூக்கமான (Catalytic) முகவராக செயற்படும் நிவதற்காக நிறுவன முறைமைக் கட்டமைப்பிலும் Iலாளர் மனத்தில் ஏற்படுத்த வேண்டியுள்ளது. காள்ளப்பட்ட பிரதான விழுமியங்கள், நம்பிக்கைகள், ாது பிரதானமாகக் காணப்படுகின்றது என்பது பு, புதிதுபுனைதல் வாடிக்கையாளர் தொடர்பிணைவு ந்துவதற்கு நிறுவனத்தின் அடிப்படைக் கலாச்சார IDġjl.
பன் நிறுவனச் செயற்திறனை மேம்படுத்துவதற்கு ன்கள், சாதகமான நடத்தைகள் போன்றவற்றினை ள வேண்டியுள்ளது. தனிப்பட்டவர்களுக்கு மிகவும் ன் தேவை அடிப்படைப் பயிற்சி வழங்குதல், தவலுவினை உருவாக்குதல் ஆகியவை மூலமாக
கானது, உயர் அதிகாரப்பகிர்வும் தனி அடையாளமும், வெளியக சமவுரிமையும் உடலுழைப்பும், குழுவேலை Fலாளர்களுக்கும் இடையிலான பரஸ்பர நம்பகத் உருவாக்க வேண்டும். இது உண்மையில் சரியான
மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
Eகளுக்கு அப்பால், கலாச்சாரத்தாலும் காரணிகள் வாக்கினையும் ஏற்படுத்துகின்றன. தொழில் கத்திலுள்ள அனைத்து கலாச் சாரத்திலும் றிகரமான சரியான பாதையில் திசைகாட்டுபவராக
தில்லை எனச் சிலர் வாதிடுகின்றனர். ஏனைய யற்சியாளனைப் பெறமுடியாது. முயற்சியாளர்களினை புச் செய்கின்றன.
}8 .

Page 123
சமூகப் பொருளாதாரச் சூழல் குடும்பப் பின்னணி கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு மட் நிதிஸ்திரத்தன்மை அரசியல் ஸ்திரத்தன்மையும் அரசாங்க ஆதரவுச் சேவைகளின் கிடைப்பனவுத்த சாதனை படைக்கும் ஊக்கப்படுத்தல் ஆளுமையும் தனிப்பட்ட திறனும்
கலசாரத்துக்கான வரைவிலக்கணம்
கலாசாரம் என்பதற்கு பலர் வரைவிலக்கணம் ெ “சமூகத்தில் ஒரு அங்கத்தவராக இருக்கும் ம கலை, படிப்பினைகள் (Morals), சட்டம், வழக்கம் உள்ளடக்கிய அனைத்தினதும் பல்கூட்டுத் தொகு என்பவர் கலாசாரம் என்பதற்கு மிகவும் எளிமையா வழி” என வரையறுத்துள்ளார்.
கலாசாரம் என்ற எண்ணக்கருவானது மனித சமூ பயன்படுத்தப்படுகின்றது. ஒரு குழுவினால் பசு நடத்தைகளினால் உருவாக்கப்படும் கலாசாரமானது மூலமாக ஒரு பரம்பரையிலிருந்து இன்னொரு மற்றும் ஏனைய குறியீட்டுச் சாதனங்கள் கலாசார கலாசாரமானது பருப்பொருள் மற்றும் பருப்பொருள் பருப்பொருள் சார்ந்த கலாசாரம் (Materia உருவாக்கப்படுகின்ற பொருட்களையும் (வாகனங்கள் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்களையும் கொண்டிரு rial Culture) மொழி, சீர்மைகள், நம்பிக்கைகள் உள்ளடக்கியிருக்கும்.
முயற்சியாண்மைக் கலாசாரம்
கலாசாரமானது மோட்டார் வாகனங்கள், உடை உருவாக்கப்பட்ட கட்புல பொருட்களையும் சட்ட எண்ணக்கருக்களையும் கொண்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாசாரமானது விழு உள்ளடக்கியிருக்கும்.
முயற்சியாண்மைக் கலாசாரமானது தூரநோக்கு, பொருளாதார விருத்திக்கு தூண்டுதலாக இருப்பத் முயற்சியொன்றினை ஒழுங்குபடுத்தி, முகாமைவகித்
முயற்சியாண்மை கலாசாரமும் நிர்வாக கலாசா
நிர்வாக கலாசாரம் என்பது ஏற்கனவேயுள்ள போன்றவற்றின் மீது கவனம் செலுத்தும் முழு நி முயற்சியாண்மை கலாசாரம் என்பது வாய்ப்புக்க இலட்சியங்களினால் தூண்டப்படுவதும் அவருடை குறிக்கின்றது. பொதுவாக நிறுவனங்கள் முயற் கொண்டுள்ளனர். ஆகவே ஒரு சிறந்த முயற்சியா6 உள்ளீர்த்துக் கொள்பவனாகக் காணப்படுதல் விே

க் கொள்கையும் நன்மை
&BTG) 5566T60ft. Edward Burnett Tylor 6T6óTU6) if )னிதனால் முயன்று பெற்ற அறிவு, நம்பிக்கைகள், மற்றும் ஏனைய வல்லமைகளும் பழக்கங்களையும் நதி’ என வரையறுத்துள்ளனர். Clyde Kluckhohn ன வரைவிலக்கணமாக 'மக்களின் முழு வாழ்க்கை
கங்களினை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவதற்கு கிரப்படும் வழக்கங்கள், சீர்மைகள் மற்றும் பழக்க து பெளதிக பரம்பரையாக அல்லது கற்றல் செய்முறை பரம்பரைக்கு மாற்றீடு செய்யப்படுகின்றது. மொழி மாற்றீட்டுக்கு பிரதான முகவராக செயற்படுகின்றன. சாராத கலாசாரம் இரண்டினையும் கொண்டிருக்கும். l Culture) சூழலில் காணப்படும் மனிதனால் ர், தொலைபேசி, தொலைக்காட்சிப்பெட்டி) மனிதனால் க்கும். பருப்பொருள் சாராத ᏧᏏ6ᎠᎢᏧfᎢ7th (Nonmateர், விழுமியங்கள், இசை போன்ற காரணிகளை
கள், தளபாடங்கள், கட்டிடங்கள் போன்ற மனிதனால் ங்கள், படிப்பினைகள், அறிவு போன்ற கட்புலனாகா இவற்றுக்கு மேலாக, குறித்த சமூகத்தினால் மியங்கள், பண்புகள், திறன்கள் என்பவற்றை
விழுமியங்கள், சட்டங்கள், பண்புக்கூறுகள் ஆகியன நனைக் கருதுகின்றன. ஒரு முயற்சியாளன் தொழில் து ஆபத்தினை ஏற்கும் நபராக விபரிக்கப்படுகின்றார்.
ரமும்
வாய்ப்புக்கள், நிறுவனக் கட்டமைப்பு, கட்டுப்பாடு றுவன கலாசாரமாகக் காணப்படுகின்றது. ஆனால் ான புலனுணர்வு, தூரநோக்கு, சமூக விழுமியங்கள், டய காலத்தில் ஏதாவது ஒன்றினைச் செய்வதனையும் றசியாண்மை மற்றும் நிர்வாகக் கலாசாரத்தினைக் ார் நிறுவன வெற்றிக்கு நிர்வாகக் கலாசாரத்தினையும் பண்டும். M
99

Page 124
முயற்சியாளர்களுக்குரிய பண்புகள்
முயற்சியாளன் என்பவன் எய்பொழுதுமே மாற்றத் ஒரு முயற்சியாளனுக்குரிய பண்புகள் அவனுடைய ச வெற்றிக்கு பங்களிப்பு செய்யும் விடயங்களைக் குறி தொழில்நுட்ப வல்லமை, முன்னெடுக்கும் ஆற்ற தலைமைவகிக்கும் பண்பு, தன்னம்பிக்கை, வலு. ஆகியவற்றினைக் கொண்ட நபராக இருத்தல் அவச பண்புகளினைப் பின்வரும் உரு விளக்குகின்றது.
C
 

தினை வேண்டி நிற்பவனாகக் காணப்படுகின்றான். தனைசார் ஊக்கப்படுத்தல் விளைவுக்காக நிறுவன கும். ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளன் ல், நல்ல தீர்மானம் எடுத்தல், புத்திக்கூர்மை,
சாதகமான நடத்தை, ஆக்கத்திறன், நேர்மை யம். வெற்றிகரமான தொழில் முயற்சியாளனுக்குரிய
நிர்வாகவல்லமை
நிறுவனத்திறன்கள்
புத்திக்கூர்மை
ஆக்கத்திறன்
புதிது புனைதல்
தெளிவானநோக்கு
தொழில் இரகசியம்
ஆழ்ந்த அறிவு
உணர்ச்சிவசப்படாமை
பொதுசனத் தொடர்பு
சிறந்த தொடர்பாடல்
தொழில்நுட்ப அறிவு

Page 125
முயற்சியாண்மை
புதிது புனைதலினை அடிப்படையாகக் கெ இனம்கண்டு நடுத்தரத் தொழிற்துணிவினை ஏற்பத
திரட்டி முகாமை செய்வதனைக் குறிக்கின்றது. பின்வரும் உருக்கள் விபரிக்கின்றன.
முயற்சியாளன் முயற்சிய
நபர் செயற்பாட்டுச்
முயற்சியாண்மைக்கான பண்புகள்
சவால் ஏற்ற
தீர்மானம் எடுத்தல் A
ஆபத்தினைஎதிர் கொள்ளல்
புதிது புனைதல்
முயற்சி
References:
(1) Khanka, S.S. Entrepreneurial Develop
2003,
(2) Vasant Desai, Dynamic of Entreprene Publishing House, Mumbai, 1997.
 
 

ாண்ட முயற்சியாண்மையானது வாய்ப்புக்களினை ன் மூலம் முயற்சிக்குத் தேவைப்படும் வளங்களினைத் முயற்சியாண்மையினையும் அதன் பண்புகளினையும்
T66OLD தொழில் முயற்சி
செயன்முறை புறப்பொருள்
- - -
ல் - ஒருங்கிணைத்தல்
திறன்வாய்ந்த
முகாமைத்துவம்
தொழிலினை வெற்றிகரமாக மாற்றுதல்
JT66OLD
ment, S.Chand and Company Ltd., New Dehli,
urial Development and Management, Himalayan
101

Page 126
இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்கும்போது தட மேல்நாட்டவருடைய வருகையின் பின்னரே ஏற்ப வானியல் பற்றிய அறிவு அனுபவ வாயிலாக இரு மேலைநாட்டவரின் வருகையினால் அறிவியல் கருத்துக்களைப் பயிற்றும் மொழியாக ஆங்கிலே பிரித்தானியரது ஆட்சியின் கீழ் ஆங்கில மொழி தமிழ் தனது முக்கியத்துவத்தை இழந்தது. க வேண்டுமென 1833இல் கோல்புறுக் குழுவினர் விதர் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பு ெ இதனால் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் ஆங்கிலம் மூலம் பயிற்றுவித்தனர். ஆரம்பத்தில் மொழியாக இருந்து வந்ததை வரலாறு காட்டுகின்ற அறிவியலில் பல மாறுதல்களும் வளர்ச்சியும் ஏற் பல்கலைக்கழக உயர்கல்வி தமிழில் பயிற்றப்படத் நூல்களின் தேவையும் கலைச் சொல்லாக்கத்தி இலக்கிய வரலாறு காட்டும்.
ஈழத்தில் அறிவியல் எவ்வாறு வளர்ச்சியடைந்து
அறிவு, இயல் என்னும் சொற்கள் சேர்ந்து அறிவு அறிவியல் என்பது இயற்கையில் உள்ள பொருட் அறிவாகவே தொடக்கத்தில் கருதப்பட்டது.
“அறிவியல் என்பதற்கு பகுத்தறிவினாலும், ! உண்மைகளைக் காணும் கல்வி விஞ்ஞானம்’ எ
கணிதவியல், பெளதிகவியல், இரசாயனவிய பயில்நெறிகளை உள்ளடக்கிய கல்வி அறிவியல் ( அறிவியல் என்ற சொல்லின் பொருள் விரிவடைந் தொடர்பான பயில்நெறிகளும் அறிவியல் என்ற depth 6656bn 60lb (Social Science) 9 Jö 91.56 ence) எனப் பெயர் பெற்றுள்ளன. இக்கற்கை நெறிக தொழில்நுட்பம், ஆராய்ச்சி என்பன வலுவடைர் வலுப்பெற்றுள்ளது. ஆய்வை அடிப்படையாகக் பதம் சுட்டுகின்றது. (மொழியியல், மானிடவியல்,
காலப்போக்கில் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கும் க உரிய பயனைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற உை வெளிப்பாடுகளே அறிவியல் தமிழாக்க முயற்சிகள்

ழத்தில் அறிவியல் இலக்கிய வளர்ச்சி
கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் தமிழ்த்துறை யாழ். பல்கலைக்கழகம்
ழகத்திலோ, ஈழத்திலோ அறிவியல் என்ற பயில்நெறி ட்டது. ஆனால் விஞ்ஞானம், கணிதம், சோதிடம், ந்து வந்துள்ளதை இலக்கியங்கள் காட்டுகின்றன. தொடர்புகள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் அறிவியற் ம விளங்கியது. இலங்கையிலும் இந்தியாவிலும் அரசகரும மொழியானபோது சுதேச மொழியான ல்வி மொழியும் ஆங்கில மொழியாகவே இருக்க துரை செய்தனர். 1945ஆம் ஆண்டில் இலங்கையில் பரும்பாலும் மிசனரிமாருக்கு வழங்கப்பட்டிருந்தன. மேலும் அதிகரித்தது. அறிவியற் கருத்துக்களை ஆங்கில மொழிதான் தமிழர்களுடைய அறிவியல் து. தமிழ்மொழி மூலம் கற்கும் வாய்ப்பு நேரிட்டபோது பட்டன. ஈழத்தில் 1960ஆம் ஆண்டு தொடக்கம் தொடங்கியது. இதனால் நிறைய மொழிபெயர்ப்பு ன் பயன்பாடும் விரிவடைந்து சென்றதை ஈழத்து
துள்ளது என்பதை நோக்குவோம்.
பியல் என்னும் கலைச்சொல் உருவாகியது. இங்கு களைப் பற்றிய உண்மைகளை கண்டறிதல் பற்றிய
சோதனையினாலும் இயற்கையில் அடங்கியுள்ள சு பெருஞ்சொல்லகராதி விளக்கம் தருகிறது.
ல், உயிரியல், பொறியியல், மருத்துவம் என்ற விஞ்ஞானம்) எனக் கருதப்பட்டது. காலப்போக்கில் துள்ளதைக் காணலாம். சமூகம், அரசியல் என்பன சொல்லுடன் சேர்த்து சமூக அறிவியல் அல்லது யல் அல்லது அரச விஞ்ஞானம் (Political Sciரும் அறிவியல் நெறி சார்ந்தனவாக கொள்ளப்பட்டன. ததனால் அவற்றைப் பிரித்து நோக்கும் தன்மை கொண்ட கற்கைநெறிகளையும் அறிவியல் என்ற உளவியல், சமூகவியல், அரசறிவியல்)
ஸ்வியானது தாய்மொழியில் வழங்கப்படும் போதுதான் மை உணரப்படலாயிற்று. இத்தகைய சிந்தனை
தமிழில் தோற்றம் பெறக் காரணமாயின.
2

Page 127
1849ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து பாலக தமிழ்க் கணித இயல்புகள் 179 பக்கங்களில் வில் நூல் இயற்கணிதம் எனத் தமிழாக்கம் செய்து ெ இதே ஆண்டில் வெளிவந்தது. இதுவும் Algeb
ஆங்கில மருத்துவ நூல்களை முதன் முதலி சாமுவேல் கீறீன் ஆவார். கல்லின் கற்றரின் A மொழி பெயர்த்துத் தமிழில் அங்காதி பாதம், சுகர 1852இல் வெளியிடப்பட்ட இந்நூலே தமிழில் நூலாகும். அதே ஆண்டில் வெலிஸ் என்பவர் எ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.
1967ஆம் ஆண்டில் துருதர் இயற்றிய (The S பெயர்த்து “இரணவைத்தியம்’ என்ற பெயரில் 187 அனுபவத்தில் கண்ட வைத்திய முறைகளை குறிப்பிடத்தக்கது. இது விளக்க மொழிபெயர்ப்பு
பெண் நோயை விவரிக்கும் மருத்துவ வைத்தியம் biT656 GLOTL5GUULLJT B (Human Anatomy) 6 Pracytice of medicine) LD50).363. 3, 5 JGOOT) 255 கீறீன் அவர்களின் முயற்சியால் ஈழத்தை “அறில் பாரிய பங்களிப்பு செய்துள்ளார்.
கீlன் வெளியிட்ட மொழிபெயர்ப்புக்களில் தமி டுள்ளதைக் காணலாம்.
கலைச் சொற்கள்
கலைச் சொல்லாக்க முயற்சிகளுக்கு முதலில் கீறீன் ஆவார். அவர் மொழிபெயர்த்த மருத்துவ முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. 1875ஆம் ஆண்டு கீறீன் அவர்களின் கலைச் சொல்லாக்க முயற்சி ெ கீறீன் அவர்கள் டபிள்யூ சாப்மன், எஸ்.சுவாமி தொகுதிகளை வெளியிட்டு வைத்தார்.
1. Material medical and pharmacy. 2. Midwifery 3. Diseases of Woman and childrew. 4. Medical Juris Prudence.
என்ற நான்கு தொகுதிகளும் கீறீன் அவர்களின் விதிமுறைகள் சிலவற்றை முன்வைத்துள்ளமை ே
1. Prefer a term sanctioned by both an E
Dictionary.
2. Should no appropriate term be tound ad
teristics of the object to be named.
Compound a word by Writing roots, or
4. Where there are several words of wider
object
3.

Eதம் என்ற நூல் வெளியானது. அதில் ஆங்கில ாக்கப்பட்டுள்ளன. 1855இல் Algebra பற்றிய ஒரு வளிவந்தது. வீசுகணிதம் என்ற இன்னொரு நூல் "a வைப் பற்றித்தான் இருப்பதைக் காணலாம்.
ல் தமிழில் மொழிபெயர்த்தவர் ஈழத்தைச் சேர்ந்த natomy, Physiology and Hygiene 6T6öp (b. 1606) ணவாதம், உடற்பாலனம் என கீறீன் வெளியிட்டார். முதன் முதல் வெளிவந்த மேல்நாட்டு மருத்துவ ழுதிய chemistry என்ற நூலை கீlன் “கெமிஸ்தா”
cience and Art of Surgery) 6T66TD bl656O)6OT GLDT.g. 2ஆம் ஆண்டு வெளியிட்டார். கீறீன் தமது சொந்த யும் இந்நூலிலே சேர்த்து வெளியிட்டுள்ளமை வகையைச் சேர்ந்தது எனலாம்.
) டி. டபிள்யூ சாப்பன் எழுதிய மனுகூடி அங்காதிபாதம் 6óTD (bigh 6O)6) 15:5uJTJJo (The Principles and ய நூல்களையும் மொழி பெயர்த்து வெளியிட்டார். வியல் தமிழின் தாயகம்’ என்று சொல்லுமளவிற்கு
ழ், வடமொழி, ஆங்கிலச் சொற்கள் கையாளப்பட்
அடியெடுத்துக் கொடுத்தவர் சாமுவேல் பிஸ்க் நூல்களில் அவர் கையாண்ட அருஞ்சொல்லாக்க \ அருஞ்சொல்லகராதி ஒன்றையும் வெளியிட்டார். பரலாற்றுச் சிறப்புடையதாகும். 1875ஆம் ஆண்டில் நாதன் ஆகியோருடன் சேர்ந்து கலைச் சொல்
முயற்சியால் வெளிவந்த கீறீன்; கலைச் சொல்லாக்க நாக்கத்தக்கது.
nglish and Sanskrit and a Sanskrit and English
opt some word expressive of one or more charac
a root and a particle. hough similar meaning restrict one to specify the
O3

Page 128
5. If there be for any member of the English c
Sanskrit.
அதன் தமிழாக்கம் பின்வருமாறு அமைகின்றது.
1. ஆங்கிலம் - வடமொழி அகராதியிலும், ெ காணப்படும் சொல்லை எடுத்துக் கொள்ள 2. சரியான சொல் கிடைக்காதவிடத்து குறி பண்புகளைக் குறிக்கும் சொல்லை தேர்ந்ெ 3. வேர்ச்சொல்லைத் தனியாகவோ முன்னெட் 4. பரந்த பொருட்களை ஆனால் ஏறக்குறைய
இருப்பின் ஒரு குறிப்பிட்ட சொல்லைத் ே 5. ஆங்கிலக் கூட்டுச் சொல்லின் ஒரு பகுதிை அதை வடமொழிச்சொல்லுடன் சேர்த்துக்
கீறீன் அவர்களுடைய கலைச் சொல்லாச்
கலைச் சொல்லாக்கம் பற்றி ஈழநாட்டவரான சுவ முப்பதுகளிலேயே சிந்தித்துள்ளார். 1936ஆம் ஆ சென்னை மாகாணத் தமிழர் சங்க மண்டபத்தில் வெளியிட்டார்.
1. மிகவுயர்ந்த நுண்ணிய கருத்துக்களைத்
சொற்களைப் பொருள் பற்றுக்கோடாக புதுச் சொல்லாக்கத்திற்குப் பேருதவிபுரி
இலக்கண நூலார் ஆராய்ந்தமைந்த விதிகளு முறையாகும். உயிருள்ள மொழியானது பிறமொழித் பெருக்கிக்கொள்ளுதல் வேண்டும்.
அடிகளார் தெரிவித்த கருத்துக்கள் தொடக்க ஈடுபட்டவர்களாலே பெரிதும் பின்பற்றப்பட்டன.
1955ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ‘த கலைச் சொல்லாக்கத்திற்கு ஆக்கபூர்வமான முயற்சி திணைக்களம், அரச கரும மொழித் திணைக்களம் பல செயற்பாடுகளைத் திட்டமிட்டு செயற்படுத்தி
ങ്ങിഴ്കഥ, இரசாயனவியல் தொகுதி 1, தொகுதி ) தொகுதி I, II பயிர்ச்செய்கையியல், அளவையியல் இரசாயன எந்திரவியல் முதலிய பல பாடங்களுக் நிறுவனங்களின் முயற்சியினாலும் உருவாக்கப்பட்ட
அரச கரும மொழி அலுவலகத்திலிருந்து தமிழ் கலாநிதி பொன்னையா, திரு.பொ.சங்கரப்பிள்ை எஸ்.தனிநாயகம் அடிகள், திரு. கு. நேசையா ஆ பேராசிரியர் கா. குலரத்தினமும் இணைந்து பல்வேறு ஈடுபட்டனர். பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரிய சொற்களின் பொருண்மைகளைத் தமிழுக்கு அறி
1.

ompound a good Tamil word combine it with the
வடமொழி - ஆங்கில அகராதியிலும் பொதுவாகக் ா வேண்டும்.
பிட வேண்டிய பொருளின் ஒன்று அல்லது பல தடுக்க வேண்டும். ட்டு - பின்னெட்டுடன் சேர்த்தோ வழங்கலாம். பண்பு ஒத்த பொருட்களைக் குறிக்கும் பல சொற்கள் தர்ந்தெடுக்க வேண்டும். Oயக் குறிக்கும் ஒரு நல்ல தமிழ்ச் சொல் இருப்பின்
கூட்டுச்சொல்லாக உருவாக்கலாம். 5க கொள்கை இதில் வெளிப்படுகின்றது.
ாமி விபுலானந்தள் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் பூண்டு செய்டெம்பர் மாதம் கல்லூரி மண்டபத்தில் கலைச்சொல்லாக்கம் பற்றிய தம் கருத்துக்களை
தூய தமிழிலே எழுதுதல் வேண்டும். வகைப்படுத்தி வழங்க முயன்ற நிகண்டு நூல்கள் வன.
நக்கு ஈவாக சொற்களை ஆக்கிக் கொள்ளுதல் தொடர்புகொண்டு தனக்குரிய சொற்களஞ்சியத்தைப்
காலத்தில் ஈழத்தில் கலைச் சொல்லாக்கத்தில்
ன்மொழி அலுவலகம்” என ஒன்றை அமைத்துக் சிகளை மேற்கொண்டது. மேலும் கல்வி வெளியீட்டுத் ) என்பனவும் கலைச்சொல்லாக்க நடவடிக்கையில்
OT.
(1, பெளதீகவிஞ்ஞானம் தொகுதி I, II விலங்கியல் ), மின்னெந்திரவியல், மோட்டார் பொறிநுட்பவியல், கும் உரிய கலைச் சொற்றொகுதிகள் இவ்விரண்டு
60T.
) அறிஞர் திரு.அ. வி. மயில்வாகனம் தலைமையில் )ள, திரு.கோ. வன்னியசிங்கம், அருட்கலாநிதி பூகியோருடன் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையும், அறிவியல் துறைகளின் கலைச்சொல்லாக்கத்திலே ர் கா. சிவத்தம்பி ஆகிய இருவரும் பல ஆங்கிலச் முகம் செய்துள்ளனர். 1992 முதல் பேராசிரியர்
04

Page 129
க. குணரத்தினம் தலைமையில் யாழ்ப்பாணய் L சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டது. பேராசிரிய கலாநிதி க. கந்தசாமி, கவிஞள் இ. முருகையன் ஆக் சொற்கள்’ என்னும் தலைப்பில் கலைச்சொல்லா
கலைச்சொல்லாக்க முயற்சி பற்றி கா.இந்தி விஞ்ஞானத்துறையிலே குறைந்த அளவிற்கு மனப்பான்மையுடையோராய்த் தூய தமிழ்ச் சொற் கலைச் சொற்களை ஆக்க முயற்சிக்கின்றமை முற் குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் க தன்மையுடையதாக அமைய வேண்டும் எனவும் அ அளவு நீக்கிய தமிழ் மொழியாக அமைய வேண்(
“Scientific Tamil Pioneer' Dr. Samuel fis 1998இல் எழுதி வெளியிட்டார். அதில் மருத்துவத் தமிழ், மருத்துவ நூல்கள் தமிழில் ஆக்கல், கன மொழிபெயர்ப்பு, தமிழின் நவீனம் என்ற தலைப் கொண்டிருந்த கருத்துக்களையும் நூலாக அம்பி
டாக்டர். ஏ. சந்திரசேகரம் மாரடைப்பை தடுப்பத 2000இல் எழுதி வெளியிட்டார். இந்நூல் மாரடை விளங்கக்கூடியது. இந் நூலில் அத்தகைய ஒரு பற்றிய விரிவான குறிப்புகள் எளிய தமிழ் நடை தரப்பட்டுள்ள்து. தமிழ் மொழியில் ஆங்கில நூல் ஆய்வுகளைத் தொகுத்து இவ் ஆசிரியர் வழங்கியுள் வெளியிடலாம் என்பதை நிரூபிக்கும் முன்மாதிரிய
பாடசாலை மாணவர்களுக்கான கைநூல்கள் இரசாயனவியல், உயிரியல், விஞ்ஞானமும் தெ வெளியிடப்படுகின்றன. புதிய கல்விச் சீர்திருத்த நிக இலக்காகக் கொண்டு மாணவர்கள் இலகுவாகவும் இந்நூல்கள் எழுதப்படுகின்றன.
1977ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலை இலக்கியத்தையும் இணைக்கும் முயற்சியாக ஒரு க தொடர் கட்டுரையினை பேராசிரியர் அ. சண்முகத என்ற பொருளில் பதிப்பித்துள்ளமை இங்கு குறிப்பு என்ற பொருளில் பேராசிரியர் சோ. கிருஸ்ணராசா என்ற பொருளில் பேராசிரியர் க. கைலாசபதியும் ஆ பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும் ஆக்க இ6 எம்.ஏ. நுஃமான் அவர்களும் ஆக்க இலக்கியமும் 6 மெளனகுரு அவர்களும் ஆக்க இலக்கியமும் அபூ ஆக்க இலக்கியமும் அரசியலும் என்ற பொருளில் பண்பாட்டியலும் என்ற பொருளில் சி. மெளனகுருவு என். கே. ரகுநாதனும் எழுதிய கட்டுரைகள் இ துறையினுள் மானிடவியல் சமூகவியல் அழகியல் நோக்கப்பட்டுள்ளதை இங்கு அவதானிக்க முடிக்

ல்கலைக்கழகத்தில் ஒரு குழு கணனிக்கலைச் T அ. சண்முகதாஸ், பேராசிரியர் சு. சுசீந்திரராஜா, யோர் இக்குழுவில் இருந்தனர். “கணனி விஞ்ஞானச் க்கம் வெளியிடப்பட்டது.
ரபாலா குறிப்பிடும்போது, பெருமளவிற்கும் தூய ம் சொல்லாக்க அறிஞர்கள் சிலர் குறுகிய களை மட்டுமே ஏற்று அவற்றின் அடிப்படையில் றிலும் விரும்பத்தக்கதன்று என்று கூறியமை இங்கு
லைச் சொல்லாக்கமும் பயன்பாடும் ஒருமித்த ஆங்கிலம் வடமொழி என்ற தலையீடுகளை முடிந்த டும் எனவும் குறிப்பிடுவார்.
k green-என்ற ஆங்கில நூலை அம்பிகைபாகள் தமிழ், மருத்துவப் பாடசாலை, விஞ்ஞான இலக்கிய லைச் சொற்கள், கலைச்சொற்களின் தரப்படுத்தல், புக்களில் கீறீன் ஆற்றிய சேவை பற்றியும் கீறீன் 0கபாகர் வெளியிட்டுள்ளார்.
ற்கான வழிமுறைகளும் மருத்துவமும் என்ற நூலை ப்பு ஏற்பட்ட ஒருவருக்கு சிறந்ததொரு கைநூலாக வருக்கான உணவு, அன்றாட வாழ்க்கை முறைகள் யில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் களுக்கு இணையாக சர்வதேச தராதரத்தில் நவீன ாளமை மருத்துவ ஆய்வுகளை தமிழிலும் தெளிவாக ாகவும் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழிலே வெளியிடப்படுகின்றன. பெளதிகவியல், 5ாழிநுட்பமும் என்ற நூல்கள் தமிழ் மொழியில் ழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய கல்விக் குறிக்கோளை தெளிவாகவும் விளங்கிக்கொள்ளக்கூடிய விதத்தில்
)க்கழகத் தமிழ்த் துறையினர் அறிவியலையும் ருத்தரங்குத் தொடரினை நடாத்தினர். கருத்தரங்குத் ாஸ் அவர்கள் “ஆக்க இலக்கியமும் அறிவியலும்” டத்தக்கது. ஆக்க இலக்கியமும் மானிடவியலும்
அவர்களும், ஆக்க இலக்கியமும் சமூகவியலும் பூக்க இலக்கியமும் மொழியியலும் என்ற பொருளில் 0க்கியமும் நடையியலும் என்ற பொருளில் பேராசிரியர் வரலாறும் என்ற பொருளில் பேராசிரியர் சித்திரலேகா ழகியலும் என்ற பொருளில் என். சண்முகரத்தினமும் மு. நித்தியானந்தனும் ஆக்க இலக்கயமும் நாட்டுப் ம் ஆக்க இலக்கியமும் பாலியலும் என்ற பொருளில் இத்தொகுப்பில் அமைகின்றன. அறிவியல் என்ற அரசியல் உளவியல் மொழியியல் என்ற துறைகள் கின்றது.
05

Page 130
பேராசிரியர் வைத்திய கலாநிதி தயா சோமசுந்த மூலமும் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளா சென்றடைய வேண்டுமென்பதில் தீவிர அக்கறை கெ அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும் என்ற வெளியிட்டுள்ளார். ஈழத்தில் உளமருத்துவம் ச இலகுவான தமிழில் எல்லாரும் விளங்கும் வை சமுதாயத்தில் உளநலம் என்ற நூலை பேராசிரி சிவயோகன் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதி பொதுமக்களுக்கும் பயன்படக்கூடிய நூல். தமிழ் ெ என்பதை இவை நிரூபித்துக் காட்டுகின்றன. பேர சிவயோகன் ஆகிய இருவரும் பல அறிஞர்க நூலை 2001ஆம் ஆண்டில் வெளியிட்டனர். அ செ. சிவஞானசுந்தரம், வைத்திய கலாநிதி ந. சி கலாநிதி ஆர். அரியரட்ணம், வன பிதா சூ. கலாநிதி என். சண்முகலிங்கன், வைத்திய கலாநிதி பேராசிரியர் தயாசோமசுந்தரம் ஆகியோரின் கட்டு
சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜ ஈழத்துச் சித்தமருத்துவம் என்ற நூலையும், சித் உளநெருக்கீடுகளும் மனநலனும் (1998) ஈழத்துச் (2000) என பல நூல்களை எழுதி வெளியிட்டுள் எழுதப்பட்டுள்ளது.
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் ‘விஞ்ஞா ஒரு கட்டுரை எழுதியுள்ளமை இங்கு குறிப்பிடத்த பயிலப்பட்டு வந்தது என்பதையும் விஞ்ஞானத் காலப்போக்கில் விஞ்ஞானத்திற்கான தமிழ்நடை
கலாநிதி நா. சுப்பிரமணிம் அவர்கள் ‘அறிவிய எல்லைகள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எ( பற்றியும் அறிவியலின் வளர்ச்சி பற்றியும் குறிப்பிட்டு
இக்கட்டுரை ஆசிரியரால் ‘அறிவியல் தமிழ் - ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அறிவியலை முறையாக ஆய்வு ரீதியாகக் கற்ற தெரிந்தால் அவற்றினுடாக அறிவியல் கருத்தின் எங்கும் எதிலும் அறிவியல் என்று சொல்லும் காலம மாணவர்களும் பொதுமக்களும் விளங்கிக்கொள்ளு வடிவில் அமைக்க வேண்டும். விஞ்ஞான அறிவி உடையவர்களால் தான் விஞ்ஞானக் கதைகை எழுத்தாளர்கள் மிகச் சிலரே காணப்படுகின்றனர். ந இடம்பெறுவதைக் காணலாம்.
முற்காலக் கவிஞர்கள் பாடாத வானவில், மின்ன அமுக்கம், டைனமோ கிறாமபோன், வெப்பமானி, மீ இ. சிவானந்தன் கண்டறியாதது என்ற கவிை என்னும் நூல் எழுதப்பட்டதன் நோக்கத்தைப் பின்
“வீட்டிலே வேலையின்றி 6 பாட்டிலே கிடக்கும் நூ6ை
1.

ம் அவர்கள் ஆங்கிலமொழி மூலமும் தமிழ்மொழி ா. வைத்திய சேவை முழுதாக பொதுமக்களிடம் ண்டவர். மனவடு நெடுக்கீட்டின் உளவிளைவுகளும் நூலை தமிழ் மொழியில் எழுதி 1993இல் ர்ந்த தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே. கயில் எழுதப்பட்ட நூல் இது. மேலும் தமிழ் யர் தயா சோமசுந்தரமும் வைத்திய கலாநிதி சா. வெளியிட்டுள்ளனர். ஆராய்ச்சியாளர்களுக்கும் )ாழி மூலம் அறிவியல் செய்திகளை வெளியிடலாம் ாசிரியர் தயா சோமசுந்தரம் வைத்தியகலாநிதி சா. ரின் கட்டுரைகளைத் தொகுத்து முதுமை என்ற நநூலில் கட்டுரை எழுதியவர்களாக பேராசிரியர் வராஜா, பேராசிரியர் கா. சிவத்தம்பி, வைத்திய டேமியன், வைத்திய கலாநிதி சா. சிவயோகன், செ. சு. நச்சினார்க்கினியன், திரு. ஆர். அமரசிங்கம், ரைகள் இத் தொகுப்பில் இடம்பெறுகின்றன.
ா (2000ஆம் ஆண்டு) இருபதாம் நூற்றாண்டில் தமருத்துவ மூலதத்துவம் 2002ஆம் ஆண்டிலும் சித்தமருத்துவ நூல்கள் (1993) கட்டுவைத்தியம் ளார். சித்த வைத்திய முறை தமிழ் மொழியில்
னத்துக்கான தமிழ் உரைநடை” என்ற தலைப்பில் க்கது. விஞ்ஞானத்திற்கான தமிழ் நடை எவ்வாறு தமிழ் எழுதுவதில் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் தானாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ல் தமிழ் - தமிழ் மொழிப்பயில் நிலையில் புதிய ழுதியுள்ளார். அறிவியல் என்றால் என்ன என்பது \66ff.
ண்பும் பயனும்’ என்னும் பொருளில் கலாநிதிப்பட்ட
வர்களுக்கு கவி இயற்ற அல்லது கதை எழுதத் னை வெளிப்படுத்த முயலலாம். இன்று உலகம் க மாறிவிட்டது. அறிவியல் செய்திகளை இலகுவாக ரும் வகையில் அதனைக் கதைவடிவில், கலை பும் கலைரசனையும் கலைத்தேர்ச்சியும் ஒருங்கே ள எழுதமுடியும். அத்தகைய தேர்ச்சி பெற்ற வீன தமிழ் இலக்கியத்திலும் அறிவியல் செய்திகள்
ற்கடத்தி, ஒலிபரப்பி, ஈர்ப்பு மையம், ஒலி இயக்கம், ன்கலன் என்பவற்றை கவிப்பொருளாகக் கொண்டு த நூலை ஆக்கியிருக்கின்றார். கண்டறியாதது வருமாறு கவிஞள் கூறுகிறார்.
பிறாந்தையில் தூங்கும் தாய் தன் )ப் படித்திடல்கூடும் அன்றே
6

Page 131
ஏட்டிலே இங்கிலிசில் இது வீட்டிலே பரவல் கூடும் வி
விஞ்ஞானத்தை பாமர மக்களுக்கு பரவச் செய் புலப்படுத்துகின்றது. சிவானந்தன் டைனமோ என்ற என்ற இருபாத்திரங்கள் உரையாடும் முறையில் என்பதையும் அது எவ்வாறு மின்குமிழை ஒளிர தமிழ்ப் பேச்சோசையால் அமைந்த கவிதையூட
நந்தி மருத்துவத் துறையோடு ஆக்க இலக்கிய கூறுகளையும் சமூகத்துடன் இணைத்துக் க நந்தியினுடைய கதைகளில் மனிதநேயம் அ நூலைப்போல’ என்ற சிறுகதையிலே தயிலம்மா தயிலம்மாவின் தாய் என்ற பாத்திரங்களின் ஊடாக மருத்துவ சிகிச்சை முறையின் முக்கியத்துவத்தை
நந்தியின் “மலைக்கொழுந்து’ நாவல் முக்கி மனஉணர்வுகள் உளவியல் ரீதியான அணுகுமுை என்பன அவரது நாவலில் காட்டப்படுகின்றன.
"இளம்பிள்ளைவாதம்’ என்னும் போலியோ நே போலியோ கால்களிலோ, கைகளிலோ பாரிசவாதத்
அவ்வளவு தானே என்று முணுமுணுத்தான் ம6ை ஆமாம், போலிக் கடிதங்கள் இதயத்தில் அல்
ஒரு இலக்கியவாதி சமூகத்தைப் பார்க்கும் முை பார்க்கும் பார்வையும் வேறுபட்டன. ஆனால் நந் பார்வை ஒரு ஆராய்ச்சியாளன் பார்க்கும் பார்வையா நாவல் மலையகத்து தொழிலாளர்களின் போராட்ட நாவல் பல்வேறு தளங்களில் ஆய்வாளர்களால் 1 மானிடவியலும், நாவலிலக்கியமும் உளவியலும், ந சமூகவியலும் என்ற பொருளில் நந்தியின் நாவல்
கோகிலா மகேந்திரன் எழுபதுகளிலிருந்தே எழு ஆசிரியர் அதேவேளை சீர்மியக்காரருமாவாார். ே கதைகளினூடாக ஏதோவொரு செய்தி சமூகத்திற்கு இலகுவில் தெளிவுபடுத்தும் நோக்கில் விஞ்ஞா விஞ்ஞான உண்மைகளைக் கதை வடிவில் எழுத விஞ்ஞான உண்மைகளைக் கதைமூலம் சொல்லலி படைப்பாளிகளுக்கு இந்நூல் முன்னுதாரணமாக இந்நூலை ஒரு முன்னோடி முயற்சி என்றே ெ உண்மைகளை விளக்கும் வகையில் விஞ்ஞானக் க சில கதைகளாகவும் சில நாடகங்களாகவும் இந்நூ இலவச பற்சிகிச்சை, கூட்டுறவு, புதிய வீடு, உரே இந்நூலில் படைக்கப்பட்டுள்ளன. மேலும் வ விளங்கிக்கொள்வதில் உண்டு. வான் வெளியில் கதைகளை ஆசிரியர் நாடக வடிவில் உரையாடல் கதையை நகள்த்திச் செல்கின்றார். கடினமான செய்; வகையில் கதையை எடுத்துச் செல்கின்றார். வெ. அறிவியல் செய்தியைத் தருவனவாகவும், சிந்திக்
10-CM 4658

வரை இருந்த சேதி ளைந்திடும் நன்மையின்று”
வேண்டும் என்ற கவிஞனின் நோக்கத்தை இங்கு தலைப்பில் அமைந்த கவிதை. கந்தையா, வடிவேலு அமைந்துள்ளது. டைனமோ என்றால் என்ன 0வக்கிறது என்பதையும் இலகுவான இலங்கைத் கப் புலப்படுத்துகிறார்.
ய் பணியையும் செய்வர். மருத்துவத்தின் பல்வேறு ட்டும் படைப்பாளியாக நந்தி விளங்குகின்றார். உப்படையாக அமைகின்றதையும் நோக்கலாம். வின் வறுமையினையும் அவளது பச்சிளங்குழந்தை அவர்களின் மனஉணர்வுகளையும் சமூகத்தினையும் யும் இக்கதையின் மூலம் எடுத்துக்காட்டுகின்றார்.
பமான ஒரு படைப்பு முயற்சி, சமூக அவலம் றகள் மருத்துவம் சம்பந்தமான ஆலோசனைகள்
ாயைப் பற்றி அறிக்கைகள் ஒட்டப்பட்டன. முற்றிய தை உண்டாக்குகின்றதாம். போலியோவின் வேலை லயப்பன். ஆனால் கடிதங்களில் போலியோ. லவா பாரிசவாதத்தை உண்டுபண்ணுகின்றன.
றக்கும் ஒரு மருத்துவ நிபுணன் இலக்கியத்தைப் தியின் எழுத்துக்களில் ஒரு மருத்துவ நிபுணனின் கவே அது படுகின்றது. நந்தியின் மலைக்கொழுந்து டத்தை சித்திரிக்க வந்த நாவல். ஆனால் அந்த பார்க்கப்பட வேண்டியன. நாவல் இலக்கியமும் - ாவலிலக்கியமும் மருத்துவமும், நாவலிலக்கியமும் 5ள் நோக்கப்பட வேண்டியன.
த்துலகில் தடம்பதித்தவர். இவர் ஒரு விஞ்ஞான காகிலா மகேந்திரன் சிறப்பான கதாசிரியர். அவரது ச் சொல்லப்படுகின்றது. விஞ்ஞான உண்மைகளை னக் கதைகள் என்ற நூலை வெளியிட்டுள்ளார். ப்பட்ட முதல் நூல் இது என்று சொல்லலாம். ாம். என்பதை இதனூடாக நிறுவியுள்ளார். ஏனைய அமைகின்றது. ஈழத்தைப் பொறுத்ததவரையில் காள்ளவேண்டும். மாணவர்களுக்கு விஞ்ஞான தெகளைத் தந்திருக்கிறார். விஞ்ஞான உண்மைகள் லில் இடம்பெறுகின்றன. நாட்டைக் காத்த குழிவாடி, கா, கீனல் நீர் என்று கதைகள் சிறுகதைகளாக ந்ததுமின், விவேகம், விவாதிப்பதில் இல்லை பறவைகள் பலவிதம், வளரும் பயிருக்கு என்ற முறையில் நாடக தயாரிப்பாளர் என்ற முறையில் களை வாசகர்கள் இலகுவாக விளங்கிக்கொள்ளும் றும் செய்திகளாக மட்டுமல்லாமல் அவற்றினூடாக
வைப்பனவாகவும் அமைகின்றன.
7

Page 132
எழுத்தாளரான சாந்தன் குறுகிய வடிவத்தில் பல விழுமியங்களை கதைகளின் உள்ளடக்கமாகத் த வாயிலாகவும் உரையாடல் மூலமாகவும், ம முன்வைப்பவர். நேரடியாக விஞ்ஞானக் கதைகள் ஒரு விஞ்ஞானியின் கலைப்பார்வை என்றோ ஒரு இரு கோடுகள், அஸ்பெஸ்ரஸ், இசைவர்க்கம், தலைப்புகள் விஞ்ஞானப் பார்வையை எமக்கு 5
அ. முத்துலிங்கம் அவர்களும் ஒரு விஞ்ஞான மனிதர்களையும் நடந்த சம்பவங்களையும் கரு கிராம மக்களின் வாழ்வும் பிரச்சினைகளை நேரடிய பின்புலத்தில் விஞ்ஞானப் பார்வை இழையோடு விலங்கினங்களின் பராமரிப்பு மனிதனுக்கும் கணனி செல்வதைக் காணலாம்.
சஞ்சிகை பத்திரிகையில் அறிவியல்
அறிவியல் இதழ்கள் ஆழ்ந்த அறிவுடையே வெளிவருகின்றன. மருத்துவ இதழ்கள், சித்தமருத் துறைகளை உள்ளடக்கிய இதழ்கள் இலங் வெளிவருகின்றன. அறிவுக்களஞ்சியம் என்ற இத மாணவர் சமூகத்திற்கு வழிகாட்டும் நூலாக வி செய்திகளும் அறிவியல் சார்ந்தனவே.
1972ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள என்ற மாத இதழ் வெளியிடப்படுகின்றது. பாடச வன்மையையும் ஊக்கி வளர்த்தற் பொருட்டு டெ நிறுவனம் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க
ஈழத்தில் விஞ்ஞானமுரசு என்ற சஞ்சிகை இ வெளிவருகின்றது. இது குறிப்பிட்ட மட்டத் தேவைகளையும், ஆர்வங்களையும் பூர்த்தி செ தரத்தையும் வாழும் வகையையும் வளமாக்க நுட்பத்தினதும் பயன்பற்றிப் பொதுமக்கள் அறிர் விளங்குகின்றது.
“சுகமஞ்சரி” ஆய்வு இதழ் சமுதாய மருத்துவ வெளிவருகின்றது. இந்நூல் ஆராய்ச்சி மாணவர் வெளிவருகின்றது. எளிய தமிழில் செய்திகள் செ சொல்ல முடியும் என்பதை இது நிரூபிக்கின்றது.
பத்திரிகைகளும் அறிவியல் செய்திகளை ஒவ்வொருநாளும் எங்கே? என்ன? நடக்கின்றது எ செய்திகளில் இருந்து உலகச் செய்திகள்வரை ப வளர்ப்பதில் ஈழத்தில் உதயதாரகை, வீரகேசரி பத்திரிகைகள் அக்கறை கொண்டுள்ளன.
தகவல் தொடர்புச் சாதனங்களும் அறிவியல் வகிக்கின்றன. மக்கள் தகவல் தொடர்புச் சாத பெற்று விளங்குகின்றது. வானொலி ஒலிபரப்பில் ெ சென்று சேர்கின்றன. விளம்பரம் கல்வி, மருத்துவ

செய்திகளைத் தந்துள்ளார். மனித வாழ்க்கையின் ருபவர். பாத்திரங்கள் வாயிலாகவும் நிகழ்வுகளின் 0றமுகமாகவும், நேரடியாகவும் கருத்துக்களை என்றுகூற முடியாவிட்டாலும் இந்தச் சிறுகதைகளை sலைஞனின் விஞ்ஞானப் பார்வை என்றோ கூறலாம். நிழல், உயிர்ப்பு, பொறிவடிகால், பூகோளம் போன்ற ாட்டுகின்றன.
ப் பட்டதாரி தனது சிறுகதைகளில் தான் சந்தித்த வாகக்கொண்டு கதையை நடத்திச் செல்கின்றார். ாக யதார்த்தத்துடன் பேசுபவர். இவரது கதைகளின் வதை நாம் காணமுடியும். சுற்றுச் சூழல் அறிவு, ரிக்கும் இடையேயுள்ள தொடர்பினையும் தொட்டுச்
ாருக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் ந்துவ இதழ்கள், அரசறிவியல், சமூகவியல் முதலான கையில் துறைசார்ந்த நிறுவனங்களின் ஊடாக ழ், ஈழத்தில் மாதாந்த வெளியீடாக வெளிவருகின்றது. ளங்குகின்றது. இவ்விதழில் வெளியான அனைத்துச்
ா யாழ்ப்பாணத்தில் ஊற்று நிறுவனத்தால் “ஊற்று” ாலை மாணவரின் சிந்தனை ஆற்றலையும் எழுத்து ாது அறிவுப் போட்டியை வருடாவருடம் ஊற்று مليات
லங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்க வெளியீடாக தினருக்கு மட்டுமன்றி எல்லாத்தர மக்களினது ய்யும் முகமாக எழுதப்பட்டுள்ளது. வாழ்க்கைத் அவசியமான நவீன விஞ்ஞானத்தினதும் தொழில் து கொள்வதற்கு உதவும் சஞ்சிகையாக இது
த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடாக ாகளுக்கும் பொதுமக்களுக்குமான ஒரு கையேடாக ால்லப்படுகின்றன. அறிவியல் செய்திகளை தமிழில்
வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ன்பதைப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. உள்ளுர்ச் த்திரிகைகள் வெளியிடுகின்றன. அறிவியல் தமிழை தினக்குரல், தினகரன், ஈழநாடு, உதயன் போன்ற
} செய்திகளை வளர்த்துவருவதில் பெரும் பங்கு னங்களில் வானொலி சிறப்பானதோர் இடத்தைப் Fய்திகள் ஒரே நேரத்தில் பலவகைப்பட்ட மக்களிடம் ம், குடும்பநலம், வேளாண்மை, வானிலை ஆராய்ச்சி
08

Page 133
தொடர்பான நிகழ்ச்சிகளின் ஊடாக இலங்கை வ பொதுமக்கள் தொடர்புச் சாதனங்களில் தொலைக் செய்திகள், குடும்பநலம், வைத்திய ஆலோசனை, முதலான அறிவியல் செய்திகளை "இலங்கை ரூட எவ்எம் என்பன வெளியிட்டு வருகின்றன. தொை கேட்டும் அறியமுடிகின்றது.
ஆரம்பத்தில் கணனியின் மொழியாக ஆங்கில தமிழ்மொழியும் கணனியுடன் உரையாடத் தொடங்கி கணனி வழியாக மாணவர்களை கவர்ந்திழுக்கும் வை பல்கலைக்கழகங்கள் பொது நிறுவனங்களில் கை
கம்பியூட்டர் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பான ஒரு புதிய சகாப்தத்திற்கு இட்டுச் சென்றுள்ளது மானுடவியல், கணிதவியல் எனப்பல்வேறு கற்கை Wet) தகவல் களஞ்சியத்தில் பெறக்கூடியதாக உ என்ற ஈழத்துப் பத்திரிகைகளும் இன்ரநெற்றின் உ
அறிவியல் இலக்கியம் காரண காரியத் தொடர் என்ற வினாக்களை உண்டாக்குவதாயும் அதற்கா கருத்தைத் தெளிவாக செய்பமாக இயலுமளவு சிக்க பொருள் மயக்கம் உள்ள சொற்சேர்மானங்களைத்
மேல்நாட்டவருடைய வருகையின் பின்னரே அ முயற்சியால் ஈழம் அறிவியலின் தாயகம் என்று ஈழத்து இலக்கிய வரலாற்றில் அறிவியல் இல என்பது தெளிவாகின்றது.
அடிக்குறிப்பு
பெருஞ்சொல்லகராதி தொகுதி ஒன்று ப கீறீன் மெமிஸ்தம் (மொ.பெ) ப. 542 விபுலானந்தர் “கலைச்சொல்லாக்கம்’ இ இந்திரபாலா “கலைச்சொற்கள்’ சிந்த6ை 1967. r அ. சண்முகதாஸ் ‘இருபதாம் நூற்றாண்டு 6. See Ambihaipahar. R.Scientific Tamil
cations Colombo. 1998. 7. கா. சிவத்தம்பி ‘விஞ்ஞானத்துக்கான த
வெளியீடு, சென்னை. 8. சுப்பிரமணியம் நா. அறிவியல் தமிழ் - ' “எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவுப் ே 9. செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் 'அறிவிய
2001. M 10. சிவானந்தன் கண்டறியாதது ப. 8. 1969. 11. நந்தி நூலைப்போல ஒருகூடைக் கெ சிறுகதைகள் தொகுதி II, சென்னை.
5.
米米米米米米壮 米米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米米

ானொலி அறிவியல் விழிப்பினை ஊட்டிவருகின்றது. 5ாட்சி முக்கியமான இடத்தை வகிக்கின்றது. அரசுச் அறிவியல் செய்திகள், கல்வி ஒலிபரப்பு, வேளாண்மை பவாஹினி, சக்தி எவ்.எம். யாழ். எவ். எம், சூரியன் லக்காட்சியின் மூலம் கண்ணால் பார்த்தும் காதால்
)மே கையாளப்பட்டு வந்தது. ஆனால் இன்று புள்ளது. அறிவுத்துறையினை வளர்க்கும் சாதனமான கையில் கற்பித்தல் நடைபெறுகின்றன. பாடசாலைகள் ானி வழிக்கற்பித்தல் நடைபெறுகின்றன.
I இன்ரநெற் தகவல் பரிவர்த்தனை உலகத்தினை மொழி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், அறிவியல், நெறிகள் தொடர்பான விடயங்களை (World wide உள்ளது. வீரகேசரி, தினக்குரல், தினகரன், உதயன் ஊடாக வெளிவருகின்றன.
பு மூலம் பரிசோதனை மூலம் என்ன? ஏன்? எப்படி? ன தீர்வினைச் சொல்வதாகவும் அமையும் கூறவந்த லில்லாமல் கூறுவது விரும்பத்தக்கது. அறிவியலில்
தவிர்த்தல் வேண்டும்.
Hறிவியல் வளர்ச்சியடைந்தது. கீறீன் அவர்களின் சொல்லுமளவிற்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டது. க்கிய வளர்ச்சிக்கு தனியான இடம் இருக்கின்றது
500
இலக்கியக் கட்டுரைகள் ப. 154, 1993, ன சமூக விஞ்ஞான காலாாண்டுச் சஞ்சிகை இதழ்
Sக்கான தமிழ் மொழி” கலப்பை இதழ் 1987 Pioneer (Dr. Samuel fish Green) Dhuhlasi Publi
மிழ் நடை விமர்சனச் சிந்தனைகள் 2001 மக்கள்
தமிழ் மொழிப் பயில் நிலையில் புதிய எல்லைகள் பருரை 1997. பல் தமிழ் பண்பும் பயனும்” கலாநிதிப்பட்ட ஆய்வேடு
ாழுந்து ப. 206 1994 இந்நூற்றாண்டின் ஈழத்துச்
米米米米米米米米
米水米米冰米米米冰冰冰米米米冰冰冰冰冰冰
+ * * * * * * * * *kk ***
09

Page 134
சைவத்திருமுறைகள் "பக்தி
சோழப்பெருமன்னராட்சியில் வைவசமயம் உன் முதலாம் இராஜராஜன் முயற்சிகளின் பயனாக கிடைத்திருக்கின்றன. அவற்றை அவனே திருமு6 பாடப்படுவது. அவற்றிற்குப் பண் அமைப்பித்த ெ
தென்னகத்துக் கட்டடக்கலையின் சிகரமாக சிவபாதசேகரனால் ஈடும் எடுப்புமற்ற வகையில் ர படைப்பாகும். சைவசமய தத்துவங்களையும் 6 முழுமையாகப் பிரதிபலிக்கும் பான்மையில் இ வரையப்பட்டுள்ள சிலாசாசனங்களும் விளங்குகின் ஒதுவார்களையும், வழிபாட்டில் உபசாரமாக ஆ நியமித்தார்கள். இவற்றிற்கென மானியங்களும் வ
சோழர் காலத்தில் திருவிசைப்பா, திருப்பல்லாண் திருமாளிகைத்தேவர், பட்டினத்தார் ஆகியோரது செறிந்தனவாக இருந்தன. 12ஆம் நூற்றாண்டி பெரியபுராணம் சைவசமயத்தின் வரலாற்றையும் தத் நெறியோடும் இணைத்துக் கூறும் தனிச்சிறப்புடை
இராஜராஜன் தில்லைக்குச் சென்று அரும்பாடு நம்பியாண்டார் நம்பி மூலம் அவற்றைத் திருமுை கோயில்களில் அவற்றை முறையாகப் பக்கவாத்தி நியமித்தான். இங்ங்ணம் சைவத்துக்கு ஆற்றிய ே
நாம் தேவாரம் பாடுமுன்னரும் பாடிய பின்பும் "தி காரணம் சைவமக்களுக்குத் திருச்சிற்றம்பலம், அத என்பதாகும். இங்குதான் தேவாரங்கள் இராஜ “திருச்சிற்றம்பலம்’ எனும் போது மூர்த்தி, ஸ்த மன்னன் எல்லோரையும் நினைவுகூருகிறோம். எம நாம் சைவத்திற்குச் செய்யும் பெருந்தொண்டாகும். சைவத்தை நிலைநாட்டும் சக்தியாக விளங்கும்.
சோழப்பெருமன்னன் இராஜராஜன் தம்மிடம் வ தேவாரங்களிற் சிலவற்றை ஒதக்கேட்டு மனமுரு ஆத்மிகஉணர்வு ஆகியவற்றால் கவரப்பட்டதால்

இலக்கியங்களுட் பெறும் முக்கியத்துவம்” - தமிழ் இலக்கிய வரலாற்று நோக்கு
சைவசித்தாந்த பண்டிதர், அருள்மொழிச்செல்வம், வாகிசகலாநிதி, đ56ØTá53FL JITLg57— sb/rGat56mỦ6nuUJ6ði, B.A(Hons). M.A, முதுநிலை விரிவுரையாளர், சபரகமுவ பல்கலைக்கழகம்,
6) /fl1/ áB6ó66D7(L//.
னத வளர்ச்சி பெற்றது. அருண்மொழிவர்மனாகிய வே தேவார திருவாசகங்கள் இன்று எமக்குக் 0றகளாகத் தொகுப்பித்தான். தேவாரம் பண்ணோடு பருமையும் அவனுக்குரியது.
விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் $ள்மாணிக்கப்பட்டது. கலைவனப்பில் அது நிகரற்ற வழிபாட்டு மரபுகளையும் ஆலய ஏற்பாடுகளையும் இதன் கட்டட சிற்ப அமைப்புக்களும் அதிலே ாறன. ஆலயங்களிலே திருமுறைகளை ஒதுவதற்கு டல், பாடல் புரிவதற்கு நாட்டியப் பெண்களையும் பழங்கப்பட்டுள்ளன.
ாடு ஆகியன தோன்றின. சேந்தனார், கருவூர்த்தேவர், பாடல்கள் பக்திச்சுவையும் தத்துவச்சிந்தனைகளும் டிலே அநபாயன் காலத்திலே சேக்கிழார் பாடிய துவங்களையும் மக்கள் வாழ்க்கையோடும் இயற்கை டய நூலாகும்.
பெட்டு, கிடையில் கிடந்த தேவாரங்களைப் பெற்று றகளாக முறையாகத் தொகுப்பித்தான். அத்தோடு யங்கள் சகிதம் பண்ணுடன் பாட, ஒதுவார்களையும் தாண்டு அளப்பரியது.
ருச்சிற்றம்பலம்’ என்று சொல்லுகிறோம். இதற்குக் ாவது தில்லைச் சிதம்பரமே முதன்மையான கோயில் ராஜனால் மீட்டெடுக்கப்பட்டன. ஆகவே நாம் லம், தேவாரம் பாடிய அருளாளர்கள், இராஜராஜ து உள்ளத்தில் எழும் நன்றிப்பெருக்கே, பக்தியுணர்வே
எல்லோரதும் உள்ளத்திலும் எழும் இவ்வுணர்ச்சி
ரும் ஓதுவார் மூலம் மூர்த்திகள் மூவர் அருளிய கி நின்றான். பாடல்களின் இனிமை, சொற்செறிவு, தேவாரப்பாடல்கள் முழுவதையும் பெற எண்ணினான்.
10

Page 135
அம்முயற்சி பலிக்காததையிட்டு மனம் வருந்தினான் அந்தணச் சிறுவன் மூலமாகத் தேவார ஏடுக இராஜராஜன் அறிந்தான். இவ்வரலாற்றினை உம புராணம் பின்வருமாறு கூறும்.
“வார்ந்தருட்கணணிர் செ வண்டமிழ்கள் இருந்த இ கூர்ந்த இருட்கன்டர் புறக் பாங்கர்க்கோல மலர்க்ை
அரசன் நம்பியாண்டார் நம்பியுடன் தில்லைக் தேவார ஏடுகளைத் தருமாறு வேண்டினான். ஆன வந்தாலன்றிக் கதவு திறக்காது எனக் கூறினர். சிந்தித்தான்.
“அரசனும் மெய்த்தகுசீர் அம்பலவர்க்கு விளம்பு தமிழ்மூவர் தம்மை உய்த்து அன உலாவ வருவித்து உம்பர்நாயகன் தன் ே உள்ளே சித்தமெலாம் உருக்கு தமிழிருக அவர் சேர்ந்ததெனச் செப்பிநின்றான்.”
இதன் பொருள்,
நீ நடராஜருக்கு விழா எடுப்பித்து மூவர் திருே வீதிவலஞ் செய்வித்து அந்தணர்களைத் திருப்தி
இவ்வாறு அரசன் மதியூகத்துடன் அச்செயலை மூலம் அறியமுடிகிறது. பின்னர் கோயில் அர்ச்சகர் கொண்டது. அப்போது அறையினுள் அரசன் கே கறையானாற் சேதமடைந்திருந்தன.
“பொய்யுடையோர் அறிவு பொற்பதுபோல் போதமி நொய்ய சிறு வன்மீக மூட நொடிப்பளவிற் சிந்தை ெ
என்பது திருமுறைகண்ட புராணம்.
ஏடுகளைத் தைலமிட்டுத் துப்புரவாக்கிய போது கவலையடைந்தான். அப்போது “இக்காலத்து அசரீரி வாக்குக் கேட்டது. அரசன் கவலை நீங்கி நம்பியாண்டார் நம்பியும் அரசன் வேண்டியதற்கு (
திருஞானசம்பந்தர் அருளிச் செய்த 384 திரு திருநாவுக்கரசர் பாடிய 313 பதிகங்களை அடுத்த அருளியதை ஏழாம் திருமுறையாகவும், திருவாச திருப்பல்லாண்டுப் பாடல்களை ஒன்பதாம் திருமு திருமுறையாகவும், பின்னர் இறைவனால் அருளிச்ெ நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய நாயனார், பட்டினத்தடிகள் ஆகியோர் பாடல்கை

. திருநாரையூரிலுள்ள நம்பியாண்டார் நம்பி என்னும் தில்லையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை பதிசிவாசாரியார் அருளிச்செய்த திருமுறைகண்ட
rரிய நம்பி கேட்ப
-b மன்றுளாடும்
கடையின் ககள் அடையாளமாகச் சார்ந்தன.”
தச் சென்று அங்குள்ள தில்லை மூவாயிரவரைத் ால் அவர்களோ தேவாரம் அருளிச்செய்த மூவரும் பின் ஒருவாறு தேறி என்ன செய்யலாம் எனச்
உற்ற செல்வ விழா எடுத்து ரிவீதியின் கோயில் வளமாக்கி, ககை சேரச் சேர்த்தி
மனியையும் உருவாக்கி விழாவில் அம்மூவரையும் யடையச் செய்தான்.
ச் செய்தான் என்பதைத் திருமுறை கண்ட புராணம் கள் காட்டியவாறு நோக்க, அறை தானாகத்திறந்து ண்டது அவனை அதிர்ச்சியுற வைத்தது. ஏடுகள்
தனைப் புலன்கள் மூடும் கும் பாடல் தன்னை க் கண்டு நாந்தான் வேந்தன்.”
பல ஏடுகள் அழிந்திருப்பதைக் கண்ட மன்னன் குகந்தவை அழியாமல் இருக்கின்றன” என ஓர் அடியார்களுக்குத் தான தருமங்கள் செய்வித்தான். இணங்க ஏடுகளை வகைப்படுத்தினார்.
பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், மூன்று திருமுறைகளாகவும், சந்தரமூர்த்திநாயனார் த்தை எட்டாம் திருமுறையாகவும், திருவிசைப்பா றையாகவும், திருமூலரின் திருமந்திரத்தை 10ஆந் ய்யப்பட்ட திருமுகப் பாசுரம் முதலாக நம்பியாண்டார் வற்றையுங் கபிலதேவர், நக்கீரர், சேரமான் பெருமாள் ளயுஞ் சேர்த்துப் பதினொரு திருமுறைகளாகவும்

Page 136
வகுத்தார். நம்பியாண்டார் நம்பி. இவ்வாறாகப் பதி
முதல் ஏழு திருமுறைகளான தேவாரங்களுக்குப் நம்பியாண்டார் நம்பி திருவெருக்கத்தம்புலியூரில் {
“நல்லிசை யாழ்ப் வல்லியொருத்திக
என அசரீரி வாக்குக் கேட்டது.
மன்னன் அப்பெண்ணை அழைப்பித்து வேண்ட வழிகேட்டு யாவரும் மகிழ்ந்தார்கள்” தில்லைய அங்கிருந்தோர் அனைவரும் கேட்கும்படியாக அ வகுத்துக் கொடுத்தாள். என அறிகின்றோம்.
“சொன்ன நட்ட பாடைக்கு தொகை
இன்னிசையால் தகுந்தக்கராகத்திற் பன்னு பழந்தக்கராகமும் பண்ணின் உன்னரிய தக்கேசிக்கு ஓரிரண்டு வ
இங்ங்ணம் மற்றைய பண்களுக்கும் கட்டளைகள்
இராஜராஜன் தேவார ஏடுகளை மீட்டதுடன் நீ வகுப்பித்தும் பண்ணடைவு செய்வித்தும் தேவாரங்கள் தேவாரப் பண்கள் பாடப்படவேண்டும் என்றும் கட 49 ஒதுவார்களையும் இரு மத்தளம் வாசிப்போை நிலங்களும், வசிக்க வீடுகளும், பசுமாடுகளும் ஈர்
தேவாரங்களைச் சாரங்கி, கொக்கரி போன்ற ப ஊக்கம் சோழநாட்டிலுள்ள கோயில்கள் எங்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த் திருமேனிகளைச் செப்பினால் ஆக்கி அவர்களு முன்மாதிரியைப் பிற சைவாலயங்களும் பின்பற்றின் அக்காலப் பண்களையும் இக்காலத்து இராகங்க
பகலிற்பா( பண்
1
s
புறநீர்மை
காந்தாரம், பியந்தைக் காந்தாரம் கெளசுஷிகம்
இந்தளம், திருக்குறுந்தொகை
தக்கேசி
நட்டராகம், சாதாரி
bll UT6OL
பழம்பஞ்சுரம்
காந்தாரபஞ்சமம்
1.
O.
பஞ்சமம்

lனாரு திருமுறைகளாக வகுக்கப்பட்ட பாடல்களில் பண் அமைத்தல் பற்றிய கேள்வி எழுந்தபோது இறைவனை வேண்டி நின்றார்.
பாணர் நன்மரபின் வழிவந்த
கிசைகள் வாய்ப்பளித்தோம்.”
அவளும் “சுருதி வழிப்பண் தழுவும் நல்லிசையின் ம்பலத்திலே அந்தணர்கள் மன்னன் நம்பி மற்றும் பபெண் தில்லைக் கூத்தன் திருவருளால் “பண்’
எட்டுக்கட்டளையாம் கு ஏழு கட்டளையாம் மூன்றுளதாம் ருவித்தார்.”
வகுக்கப்பட்டன.
ன்ெறுவிடவில்லை. அவற்றைத் திருமுறைகளாக 0ளக் காத்துள்ளான். சைவக்கோயில்கள் எங்கனும் ட்டளை பிறப்பித்தான். தஞ்சைப்பெரிய கோயிலில்
>ரயும் நியமித்தான். அவர்களுக்கு நெல்விளையும் தான் எனச் சாசனங்கள் கூறுகின்றன.
க்கவாத்தியங்களுடன் பாடச்செய்தான். இவனது ம் பரவியது. மேலும் சைவசமய குரவர்களான தி நாயனார், மாணிக்கவாசகள் ஆகியோருடைய நக்குக் குருபூசைகளும் நடத்தினாரெனவும் இம் ா எனவும் அறியமுடிகின்றது. இச் சந்தர்ப்பத்தில் ளையும் கவனத்தில் கொள்வோம்.
}ம் பண்கள்
இராகம்
- பூபாளம்
— b6J(B][fi
- பைரவி
— LOTU JITLDT6T6) JGGB6T 60D6T
- காம்போதி - பந்துவராளி - கம்பீரநாட்டை - சங்கராபரணம்
- கேதாரகெளளை - ஆகிரி

Page 137
இரவிற்
தக்கராகம், பழந்தக்கராகம்
சீகாமரம் கொல்லி, கொல்லிக்கெளவாணம், திருே வியாழக்குறிஞ்சி
மேகராகக்குறிஞ்சி
குறிஞ்சி அந்தாளிக்குறிஞ்சி
பொது (பகலிலும் இரவி
1. செவ்வழி
. செந்துருத்தி 3. திருத்தாண்டகம் (குறிஞ்சி)
திருமுறைகள் நிலையாய செல்வத்தை எளிதாக கூடிய சிவபரம்பொருளே “திரு’ ஆகும். அதாவ வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்தும் நூலே ஒதுவார்கள். இவர்கள் திருமுறைகண்ட புரான கற்று, பன்னிரண்டு திருமுறைகளையும் பண் நியதி காதலாகிக் கசிந்து கண்ணிர்மல்கி ஒதுகின்றவர்க
“இன்னிசையால் பாடவல்லார் இருநிலத்தில் ஈ தமிழ் வல்லார் அடிபேணுதல் தவமே” என்றும் திருமுறையினை ஒதும் பாக்கியம் பெற்றவர்கள் சிற
சைவர்கள் முதலிலே சிவதீட்ஷை பெற்றிரு இருக்கின்றதென்பதை அனைவரும் உணருதல் சீராக்கிக்கொள்ள முடிவதுடன் ஒரு நல்ல பரம்பணி ஒதுபவர்கள் தூய்மையராயிருத்தல் வேண்டும். உணரக்கூடியதாக இருக்கும் அதற்குக் கெளரவம் நாம் உள்ளும் புறமும் தூய்மை உடையவராய் இரு முதற்கண் சிவதீட்ஷை பெற்றிருத்தல் வேண்டும். கூறிக்கொள்ள அருகதையற்றவர்கள் தீட்ஷை
திருமுறைகளை இறைவனே அருளினார் என்ற ர வேண்டும். நம்பிக்கை இல்லாது போலித்தனப ஒன்றிய மனத்துடன் பொருள் உணர்ந்து பா உளநெகிழ்வையும், மனோரம்மியத்தையும் கொடுக்
பாடல்களிலே பொதிந்துள்ள பக்திப்பெருக்கை கூடியதாக, மற்றவர் மனதை உருக்கிக் காட்டக்கூ இங்கு ஒருவர் தனது வித்துவத்தைக் காட்ட எ என்ற குறிக்கோளுடன் பாடுதல் வேண்டும்.
பன்னிரு திருமுறைகளையும் குருமூலமாகப் பயில் பாடுதல் குருபக்தியையும் பணிவையும் ஒருவரிடத்

ாடும் பண்கள்
- காம்போதி - சுத்தசாவேரி (ஆரபி) - நாதநாமக்கிரியா
ரிசை - நவரோஸ்
- G56ITIJTö622 Jub - நீலாம்பரி - அரிகாம்போதி
- STOT
ப்பண்கள் 3 லும் பாடக்கூடியவை)
- யதுகுலகாம்போதி - மத்தியமாவதி
- அரிகாம்போதி
அடைவதற்கு வழிகாட்டும் நூல்கள். அருளோடு து பெறத்தக்க செல்வம். மனக் கோணலை நீக்கி இத்திருமுறைகள். இவற்றைப் பாடிவந்தவர்கள் 7ம் கூறும் கட்டளை பேதங்களையும் ஐயந்திரிபுறக் யோடு மரபு தவறாமல் பண்ணியல்பாகப் பக்தியுடன் ள் பண்ணிசை வல்லார்கள்.
சன் என்னும் இயல்பினரார்’ என்றும், ‘சம்பந்தனது திருஞானசம்பந்தர் அருளியுள்ளார். இதிலிருந்து ந்த “குரு’ எனக் கொள்ளக்கூடியவர்கள் எனலாம்.
நக்கவேண்டும். திருமுறைகளை ஒதும் தகுதி வேண்டும். அப்போதுதான் அவர்கள் தம்மைச் ரையையும் ஏற்படுத்திக் கொள்வர். திருமுறைகளை அப்போதுதான் திருமுறைகளின் புனிதத்தன்மையை கொடுக்க முடியும். எக்காரியத்தைச் செய்யும்போதும் த்தல் வேண்டும். நாம் சைவன் என்று சொல்வதற்கு அல்லாதவர்கள் தம்மைச் சைவசமயிகள் என்று ஒரு சத்தியம் போன்றது.
ம்பிக்கை கொண்டவராகச் சைவசமயிகள் இருத்தல் ாக நடத்தல் திருமுறைகளை அவமதிப்பதாகும். டுதல் தனக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும் கவல்லது.
த் தாமும் உணர்ந்து மெய்ப்பாடு வெளிக்கிளம்பக் உயதாகப் பாடும் திறனை வளர்த்திருத்தல் வேண்டும். ன்று இல்லாமல் மற்றவர் பின் தொடர வேண்டும்
ாறு அவரது அங்கீகாரம் பெற்று அவரது ஆசியுடன் தில் பரிணமிக்க வைக்கிறது.
13

Page 138
திருமுறைகள் ஒதும் முறை
திருமுறைகளை வரிசைக்கிரமமாக ஒதல் வே குற்றமாம். இன்று திருமுறைகளையும் பஞ்சதே பஞ்சதோத்திரம் என்பது தேவாரம், திருவாசகப் என்பனவாம். இவற்றைப் பாடிய பின்னர் திருப்பு பாடப்படுகின்றன. தேவாரம் பாடும்போது முதலி (சம்பந்தர்), அடுத்து 4ஆம், 5ஆம், 6ஆம் (திருநா6 பாடல் வேண்டும். முறை மாறிப் பாடுவது தவற
திருமுறைகளைப் பாடும்போது குற்றங்கள் நீக்கி எழுத்துப்பிழை, சொற்பிழை, பொருட்பிழை, நாசி வாய் கோணுதல், அழுமுகங்காட்டல், கண்க மிடறுவீங்குதல் முதலியனவாகும்.
திருமுறைகளைப் பண்ணோடு பாடும் சிறப்பைப் ப
“நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவி சொல்கேட்டுவந்தவர் தம்மை வாதியாவினை, ம
“பண்ணியல் பாடவல்லார்கள் என்னு “பண்களார் தரப்பாடுவார் பழியிலர் “பண்ணாருந் தமிழ் வல்லார் பரலே
இவை பண்பாடுதலின் திவ்யமான பலனைக் கு வேண்டும்.
பக்தி இலக்கியங்களான சைவத்திருமுறைகள் சிவனைப் பாடுகின்றன. இறைவனைப் பாடுவது எ பொருளன்று இறை அனுபவத்தைப் பாடுவது எ
தெய்வ அனுபவமுள்ளவர்கள் ஞானியர். திரு
“திருமுறை இலக்கியங்கள் திரோத அருள்நாத ஒலியும், மற்றைக் கை பாடிய பாட்டுக்கள் மாயாநாத ஒலி சிறிதும் தம்முள் ஒவ்வா மாணிக்க போல்வன அவை என விளக்குவா
என்று குறிப்பிடுகிறார்.
பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்து நடத்திய சிவனருளால் ஞானப்பால் உண்டு “ஞானசம்பந்தர் ஊட்டுமாறு வேண்ட தேவியோ “சிவஞானத்து இ பெற்று விடுகிறது. ஞானசம்பந்தள் பெற்றது எத்த
“சிவனடியே சிந்திக்கும் திருப்பெரு பவமதனையறமாற்றும் பாங்கினில் உவமையிலாக் கலைஞானம் உன தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்த

ண்டும் என்பது விதி. ஒன்றையாவது தவிர்ப்பது ாத்திரம் பஞ்சபுராணம் என்று சுருக்கிவிட்டார்கள். ), திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் 5ழ் மற்றும் அடியார்கள் திருப்பாடல்கள் கோயிலிற் லில் 1ஆம், 2ஆம், 3ஆம் திருமுறைகளிலிருந்தும் புக்கரசர்) பின்னர் 7ஆம் (சுந்தரரது) திருமுறையுமாகப் ாகக் கணிக்கப்படுகிறது குற்றமாகும்.
யே பாடுதல் வேண்டும். குற்றங்களாவன பண்குற்றம், யால் பாடுதல், வாயைக் குகைபோலத் திறத்தல், ள் ஆடுதல், தலைநடுங்குதல், புருவமேறுதல்,
ற்றி திருஞானசம்பந்தர் பல இடங்களில் கூறியுள்ளார்.
ற்றிய தமிழ் மாலை ஆதரித்திசை கற்றுவல்லார், றுமைக்கு மிம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே.”
றும் பழியொடு பாவமிலரே.” , புகழாமே.” ாகத்திருப்பாரே.’
றிக்கின்றன. இவற்றைச் சைவர்கள் உணர்ந்திருக்க
மக்களைப் பாடாது பரம்பொருளான, இறைவனான ன்னும்போது திருக்கோயில்களைப் பாடுவது என்பது ன்பதுதான் பொருள்.
முறைகளை விளக்கும் சபாபதி நாவலர்,
ானம் நீங்கிய லப்புலவர்கள் புமாதலின் மும் செங்கல்லும்
s
வர் என்று கருதப்படும் ஆளுடைய பிள்ளையார் ’ என்று கூறப்பெற்றவர். சிவன்தேவியை ஞானப்பால் Nன்னமுதம் அருள” பிள்ளையோ தெளிந்த ஞானம் கையது என்பதனை.
கு சிவஞானம்
ஓங்கிய ஞானம் ார்வறிய மெய்ஞ்ஞானம் ார் அந்நிலையில்.’
14

Page 139
என்று சேக்கிழார் பாடுவார். தேவியால் திரு ஆளுடைய பிள்ளையார் தலைநின்ற நெறியே L சென்று தொழுது இறைவனை ஏத்திப் பாடியவர். என்று பாடுகிறார்.
“ஊனமிலராகி உயர்நற்றவை மெய் ஞானம் மிக நின்றுதொழ நாளும் அ “முன்னைவினை போய வகையினா மன்னவிருபோது மருவித்தொழுது ே
அடியார்கள் ஞானம் மிக, அதன் விளைவாக முனிவரும் தொழுகின்றனர். இங்கு தொழுதல் இ இவ்வாறு கூறும் போதும், ஞானியரும் முனிவரும் திளைப்பதையே பாடுகிறாராதல் வேண்டும்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர், என்னும் மூவரையு உலகிலுண்டு. இம்மூவரும் பாடியன தேவாரம் எ6 வரலாற்றினை ஞானசம்பந்தரே பின்வருமாறு தமது
“போதையார் பொற்கிண்ணதடிசில்
தாதையார் முனிவுறத் தானெனை ( காதையார் குழையினன்கழுமலவ பேதையாளவளொடும் பெருந்தசை
எனப் பாடுவார். குழந்தையாகவிருந்தபோதே சேக்கிழார் சுவாமிகள் பாடிய, சம்பந்தர் வரலாற்றிலு அத்தெய்வ தரிசனத்தால் கவரப்பட்டு அத்தரிசன இவ்வனுபவத்தைப் பாடுவதே.
“தோடுடைய செவியன்விடையேறிே காடுடையசுடலைப் பொடிபூசி என்னு ஏடுடைய மலரான் முனைநாட் பணி பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானி
இத்தேவாரத்தை தோடியைந்த கதைமரபும் மி உமையோடும் விடையேறி ஞானப்பாலூட்டிய முழுகிக்குளித்துவிட்டுக் கரையேறிக் குழந்தையின் என்று வினவிய வினாவுக்குப் பதில் கூறுவது ே ஞானவட்டத்தில் நின்று பாடுகிறார்.
சம்பந்தர் கண்ட தரிசனம் எத்தகையது? செவி வெண்ணிறு. இவற்றோடு விடை தரிசனம் தருகி என்னுள்ளம் கவர்கள்வன்’ எனத் திருநீற்றுப்பூச்சி சம்பந்தர். சங்கார காரணாக இறைவனைத் தரிசிக்கு பெற்றுவிடுகிறார் என்றுதான் கூறவேண்டும்” என்
“திருக் கோவில் களில் பலவற்றிலும் இ திருக்கோவில்களிலிருக்கும் திருமேனி தன்னைச் ச் உய்யத் திருவிளையாடல்கள் பலவற்றையும் புரி அருட்செயல்களும்; அருட்டிருமேனியும் சம்

முலைப்பால் ஊட்டப்பெற்று ஞானசம்பந்தம் பெற்ற பக்திநெறி. சம்பந்தர் திருக்கோவில்கள் தோறும் இறைவனைத் தொழுதுய்வதற்கு ஞானம் வேண்டும்
கற்றவை உணர்ந்த அடியார் ருள்செய்யவல நாதனிடமாம்.” ல் முழுதுணர்ந்து முயல்கின்ற முனிவர் சரும் வயல் வைகாவிலே.”
நின்றுதொழுகின்றனர். முழுதுணர்ந்து முயல்கின்ற இறைவன் திருமுன்னர் ஒடுங்கி நிற்றலே. மேலும் பக்தி நெறியிலே நின்று திருக்கோவில் வழிபாட்டில்
ம், “மூவர் முதலிகள்” என்னும் வழக்குச் சைவ ன்று வழங்கப்படுகின்றன. ஞானப்பால் ஊட்டப்பெற்ற து தேவாரத்திற் பாடியள்ளார்.
பொல்லாதெனத் பாண்டவன் ளநகர்ப் 5 யிருந்ததே.”
5 சம்பந்தருக்குத் தெய்வ தரிசனம் கிடைக்கிறது. லும் இவ்வுண்மை தெளிவாக உணர்த்தப்படுகின்றது. ாத்தில் தம்மை இழக்கிறார். தேவார முதற்பாடலே
யோர் தூவெண்மதிசூடி னுள்ளம் கவர்கள்வன் ந்தேத்த வருள்செய்த வனன்றே.”
க்க பிரசித்தி பெற்றதொன்றாகும். தோணிபுரத்தீசன் தும், பின்னர் சிவபாதவிருதையார் குளத்திலே வாயில் எச்சிலைக் கண்டு, “யார் இது செய்தது’ பான்று அமைந்த பாட்டு இது. சிவசொரூபத்தை
யில் தோடு, தலையில் வெண்மதி, உடம்பெல்லாம் றான் இறைவன். “காடுடைய சுடலைப் பொடி பூசி ல், சுடுகாட்டுச் சாம்பற் பூச்சில் தம்மை இழக்கிறார் தம் ஞானப் பக்குவத்தைக் குழந்தைப் பருவத்திலேயே ாபர் டாக்டர் ப. அருணாசலம்.
இத் தத்துவ வடிவங்களையே தரிசிக்கிறார் . சிவன் எனவே கண்டுதொழுகிறார். சிவனை, உயிர்கள் பும் அருளாளனாகக் கண்டு தொழுகிறார். அவன் பந்தரைக் கவர்கின்றன. குழந்தை சம்பந்தர்
115

Page 140
அத்திருக்கோவில்களில் தம்மை மறக்கிறார். பக் சூழவிருந்த இயற்கைக் காட்சிகளில் அருட்டிருமே இவற்றில் தோய்ந்து பெற்ற அனுபவ வெளிப்பாே கூறுவதென்றால் இயற்கைக் காட்சிகளில் அருட்செயல்களிலும் அருட்டிருமேனியிலும் கொண்ட சிவன் எனக் கண்டுதெளிந்த ஞான அனுபவம் விளங்கும் அழகுக் கவிதைகளை, காதற் கவிதை எனல் வேண்டும்.”
இயற்கை இறைவன் படைப்புப் ெ கவிஞர்களுக்கு இயற்கை, இறைவன் காட்சிப் பொருள் எனல் வேண்டும். இயக்கமற்ற சடப்பொருளாகவே தோ தன் தோற்றப் பொலிவாக பல்வேறு நிக தன்பால் ஈர்த்துநிற்கும் அழகுப் மனிதனுக்குப் பல அறவுணர்வுகை அறநிலையமாக வளர்ந்து, இறுதியாக ! திருக்கோவிலாகவே தெய்வக் கவி மலர்ச்சியடைகிறது. இயற்கை இை விளங்குகிறது.
அகத்துறைக் காட்சிகள் பலவற்றையும் சம்பந்தர் ஆற்றாமை மிக்க தலைவி தன்தலைவனுக்குத் தூ பின்பற்றப்படுகிறது.
“வண்டரங்கப் புனற்கமல மதுமாந்தி ஒண்டரங்க இசைபாடும் அளியரசே துண்டர் அங்கப் பூண்மார்பர் திருத்ே பண்டரங்கற் கென்னிலைமை பரிந்ெ
அலைகள் வீசுகின்ற நீர்நிலையொன்று கமல மலர் பெண்வண்டோடு சேர்ந்து இசைபாடுகின்றது ஒரு (சிவனுக்கு)த் தன்நிலையை எடுத்துக்கூறத் அவ்வரசவண்டினை விளித்துத் தன் தலைவனைப் ட தலையிலே பிறைமதியமணிந்தவன். மார்பில் உடம்பெல்லாம் சுடலைப்பொடி பூசியவனாகவிருப்ப நீ ஒரு முறை அவனிடம் செல்லமாட்டாயா?” என
தான் விரும்பும் காதலனை அடையமாட்டாத கேட்டுக்கொண்டிருக்க ஆசைப்படுகிறது.
“சிறையாரும் மடக்கிளியே இங்ே முறையாலே உணத்தருவன் மெ துறையாருங் கடற்றோணி புரத்தீ பிறையாளன் திருநாமம் எனக்கெ
என்னும் தேவாரத்தில் தன் தலைவன் நாமத்தை அவன் பெயரையேயன்றி அவனை அடையும் நெறி
1.

நிக் காதல் மேலிடுகின்றது. திருக்கோவில்களில் னி, அவன் ஒளி பரவி நிற்கும் இயற்கைக் காட்சிகள் ட சம்பந்தர் பாடல்கள். பிறிதொரு வகையாகக்
தோய்ந்தெழுந்த அழகனுபவம், இறைவன் - காதலனுபவம், இறைவன் திருக்கோவில்களையே ஆகிய இம்மூன்று அனுபவங்களையுங் கொண்டு களை, ஞானப் பாடல்களைச் சம்பந்தர் பாடினார்
பாருளென்பர். தெய்வக் அழகினைத்தாங்கி நிற்கும்
தொடக்க நிலையில் ன்றுகின்றது. இயற்கை, ழ்ச்சிகளாலும் மக்களைத் பொருளாகத் தோன்றி, )ளயும் எடுத்துக் கூறும் இறையொளி தாங்கி நிற்கும் ஞர் தம்திருவுள்ளத்தில் றவனின் திருவுடலாகவே
பாடல்கள் புலப்படுத்தி நிற்கின்றன. நலனிழந்து துவிடும் அகத்துறை மரபும் சம்பந்தர் பாடல்களில்
ப் பெடையினொடும் ஒளிமதியத் தாணி புரத்துறையும் தாருகாற் பகராயே.”
ாகள் பூத்து விளங்குகிறது. அம்மலர்த்தேனையுண்டு கோத்தும்பி. இவ்வரசவண்டே தன் தலைவனுக்கு தக்கது எனக் கருதுகிறாள் தலைவி. கருதி ற்றிக் கூறுகிறாள். “என் தலைவன் ஊர் தோணிபுரம். எலும்புமாலை அணிந்தவன். பண்டரங்கனாக, வன் அவன். பேரருளாளன். என்மீது அன்புகொண்டு
வேண்டுகிறாள் தலைவி.
நிலையில் அவன் பெயரையாவது பேச அல்லது
கவா தேனொடு பால் ாய்பவளத்தொடு தரளம் சன் துளங்குமிளம் ாருகாற் பேசாயே.”
க் கேட்க விரும்பிக் கிளியிடம் கூறப் பணிக்கிறாள். ைெயயும் அறிய அவள் உள்ளம் விரும்புகின்றது.
16

Page 141
“சேற்றெழுந்த மலர்க்கமலச் ( விற்றிருந்த அன்னங்காள் விை தோற்றுவித்த திருத்தோணி புர கூற்றுதைத்த திருவடியே கூடு
தூதுவிடுதற்கு எவ்வாறு கோத்தும்பியைத் தேர்ந் நெறியைக் கூறுதற்கும் அரச அன்னத்தையே தேர்
“இறைவன் ஒருவனே ஆடவன் உயிர்கள் எல் அடையத் துடிக்கும் பக்தி நெறியின் ஒரு பகுதியாகச் மொழி உலகியல் பற்றியதாகலாம். அம்மொழியி அடியவர்கள் அனுபவித்த “சிவபோகத்தை விளக் க் கொண்டே விளங்குவர். அடியவர்கள் பல விளக்கமுயல்வதும் கருதத்தக்கது. “இறைவனை போதெல்லாம் உகந்துகந்துரைப்பேனே' என்பதற் வெளிப்பாடு உலகியல் வெம்மையமின் வெளிப்பா
சம்பந்தர், திருக்கோவிலைச் சிவனாகத் ெ உரையைாடுகிறார். தமக்கு வேண்டியதை இறை6
“இடரினும் தளரினும் எனதுறு ே தொடரினும் உனகழல் தொழுே கடல்தனில் அமுதொடு கலந்த மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமையாளுமாறிவதொ அதுவோ உனதின்னருள் ஆவடு
எனப் பாடித் தந்தையார் வேள்விக்குப் பொன் ெ
“வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏசல் இல்
“இறைவராயினிர் மறைகொள் கறைகொள் காசினை முறை
இங்கு நாம் கருதவேண்டுவது, சம்பந்தர் இறை அவர் வாழ்க்கை முழுவதும் பிரிப்பின்றி நிற்கிறான்
“சம்பந்தர் கவிதைகள் சில ஏகபாதம் என்னும் கவிகளாக உள்ளன. “ஏ இறைவன் திருப்பெயரையேனும் மீ ஒருணர்ச்சி பயில்வோர் உள்ளத்தில் ருக்கையும் சித்திர கவியாயினும் ஆசி கருத்தோட்டம் தடைப்படாமலிரு பயில்வோர்க்கு எத்தகைய அனுபt நிலையிலுள்ளது என்கிறார்’ டாக்டர்
“யாமா மாநீயாமாமாயா ழிகாமா a51T60OTT BITLDT absTġ uuTLDT LDTuuTẾr
1

செஞ்ஞாலி கதிர் வீச ன்னோடு மண்மறைகள் ாத்தீசன் துளங்காத DMT ainsĎGBJ.”
தெடுத்தாரோ அதைப்போன்று அவனை அடையும் ந்தெடுகிறார்.
லாம் பெண்களே” என்ற எண்ணத்தில் அவனை s-காதல் உணர்வு சிறக்கலாயிற்று. இங்கு பேசப்படும் ல் நிறைந்து நிற்கும் உணர்வு இறவாத உணர்வு. கவேண்டின் உலகியல் இன்பத்தைத் துணையாக” ரும் தெய்வ போகத்தை உவமை வாயிலாகவே எண்ண என் உள்ளம் குறிரும் உள்ளங் குறிர்ந்த கேற்ப சம்பந்தர் பாடல்கள் தெய்விகத் தன்மையின் டன்று எனலாம்.
தாழுவதோடு, தாம் தரிசித்த இறைவனோடு வனிடம் வேண்டிப் பெறுகிறார்.
நாய் தெழுவேன் நஞ்சை
ான்றெமக்கில்லையே நிதுறை அரனே.”
பறுகிறார்.
லையே.”
மிழலையீர் மை நல்குமே.”
வனோடு கொண்ட உயிர்த் தொடர்பே, இறைவன்
), யமகம், திருவெழுகூற்றிருக்கை கபாதம்” என்னும் கவிதையில் ண்டும் மீண்டும் சொல்வதால் பிறக்கலாம். திருவெழுகூற்றி ரியப்பாவாக அமைந்திருப்பதால், க்கலாம். ஆயின் “யமகம்’ வத்தையும் விளைக்கமாட்டாத
ப. அருணாசலம்.
36 60TTBT : LDTuT.”
17

Page 142
என்பது “யமகம்.” இசைத்தமிழ்க் கவிஞராக பாடிட் பயில்வோர் கவிதை இன்பம் வாயிலாக இ “யமகம்” தோத்திரமென்ற வகையில் பாடும்பே பண்ணொன்ற இசை வளத்தினால் “யமகமும்’ கொள்வதற்கு உதவுவனவாகும்.
“பல்லவர் காலத்தில் பாண்டியன நின்றசீர் நெடுமாறனும் பல்லவன் சமண சமயத்தைத் தழுவுகின்ற6 நாடாகக்கூடிய சூழ்நிலை உருவி அப்பரும் சம்பந்தரும் தோன்றிச் சைவத்தைப் பரப்புகின்றனர்.”
தமிழிலக்கிய வரலாற்றாசிரியரான பிறிதொரு ஈ அய்பர், சம்பந்தரது அவதாரத்தைப் பின்வருமாறு
“கி.பி. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சட பாண்டிய அரசன் நின்ற சீர் நெடு மாறனையும் த தொடங்கிற்று. அந்நாளில் 'சைவநெறிதான் பெற் திருஞானசம்பந்தரும் அவதரித்து அம்மன்னரி சைவத்தை வளர்த்தனர். சைவசமயத்திற் மனங்கொண்டவராகி இளமையிலேயே சைவ சம மேற்கொண்டு வாழ்ந்தனர். பல ஆண்டுகள் ( சைவத்தைத் தழுவினர். அதைக்கண்ட சமணத்து) அவற்றிற்கெல்லாம் ஆளாகியும் கலங்காத நெஞ்ச் சிவபெருமானுக்குப் பாமாலையணிந்தும் உழவாரப் செய்தும் சைவத்தை வளர்த்தனர். இவ்வாறு செய்துவருங் காலத்தில், சீர்காழி என்னும் திருப் விளையாடும் பருவத்திலேயே பண்கனிந்த பா அவர்களிருவரும் சைவ சமயத்திற்கு அளவிடற்
பேராசிரியர், கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை ச1 தமிழர் சமய வரலாறு (1985) நூலில் கூறுவது
“சம்பந்தர் பாடல்கள் ஒவ்வொ6 இரண்டு வரிகள் இயற்கை இரண்டு வரிகள் இறைவை அமைகின்றன. அவ்வபை இய்ற் கையழகிலும் இறை வகையான ஈடுபாடிருந்ததை மரபாக வரும் விளக்கம். ஒவ்வொன்றிலும் எட்டாம் பா பற்றிய குறிப்பு வருகிறது. گ ஒவ்வொரு பதிகத்திலும் ( திருமாலும்,பிரமனும் சிவனின் காண முடியாமற் போனத கதைகளைப் பற்றிய குறிட பிள்ளையார் பத்தாம் பாடலில் இழித்துக் கூறப்படுவர். முத்தின

வாழ்ந்த சம்பந்தர் ஓசைநயம்மிக்க பாடல்களைப் றை உணர்வைப் பெறத் தூண்டியவர். இதிலிருந்து ாது பக்தியை மிகுவிக்குமென்பதே கருதத்தக்கது. ம்பந்தரது முத்தமிழ்ச் சமத்கரத்தினை விளங்கிக்
நெல்வேலி வென்ற மகேந்திரவர்மனும் ார். தமிழ்நாடே சமண ாகியது. அப்பொழுது Fமணத்தின் வீறடக்கிச்
ழநாட்டுப் பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள்
சுட்டுகிறார்.
)ணசமயம் பல்லவ அரசன் மகேந்திரவர்மனையும் ன்வசமாக்கித் தமிழ்நாட்டில் ஆதிக்கஞ் செலுத்தத் ற புண்ணியக்கண் இரண்டெனத்’ திருநாவுக்கரசரும் நவரையும் சைவராக்கிச் சமணத்தின் வீறடக்கிச் பிறந்த திருநாவுக்கரசர் இறைவனையடைய யத்தை விட்டுச் சமணனாகித் துறவொழுக்கத்தை சென்றது. சமணசமயத்தை விட்டு மீண்டும் அவர் ]விகள் அவருக்குப் பல இன்னல்களை இழைத்தனர். னராய்ச் சைவசமயத்தை இறுகத் தழுவிக்கொண்டு படைகொண்டு வாணாளெல்லாம் ஆலயத்திருப்பணி வயோதிபராய்த் திருநாவுக்கரசர் திருத்தொண்டு பதியில் திருஞானசம்பந்தர் அவதரித்துப் பாலனாய் டல்கள் பல பாடி இறைவனை ஏத்தலாயினர். கரிய தொண்டுகள் செய்துள்ளனர்.”
ம்பந்தர், பாடல்களைப் பற்றிப் பின்வருமாறு தமது மனங்கொள்ளத்தக்கது.
iறிலும், பெரும்பாலும் வருணனையாகவும் னப் பற்றியதாகவும் ப்பு, சம்பந்தருக்கு வனருளிலும் ஒரே 5 காட்டுகிறதென்பது . சம்பந்தர் பதிகம் ட்டில் இராவணனைப் பூளுடையபிள்ளையார் ன்பதாம் பாட்டில், அடிமுடியைத் தேடியுங் க வரும் புராணக் பைத் தருவர். , சமண - பெளத்தர் ாக்கவிகள் பலவற்றில்
8

Page 143
“நற்றமிழ் ஞானசம்பந்தன்’ ‘ மாலை’ என்றெல்லாம் தமி சேர்த்துக்கூறும் பண்பு கான நெறியும், தமிழ் நாட்டிற்கே கலந்தே சம்பந்தரின் சைவம் ே சமணருக்கெதிரான சைவரி எழுச்சியாக ஆக்கிச் சுல முயன்றிருக்கிறாரென்று மிருக்கிறது.”
இனி, திருநாவுக்கரசு நாயனாரது தோவாரங்கை அய்பர் சுவாமிகளின் வாழ்க்கை சமணத்துடனும் பிணைந்திருந்தது. சைவராகப் பிறந்து வளர்ந்த சேர்ந்து பின்பு சைவராக மாறிச் சைவ சமய ம பங்கு வகித்துச் சிவலோகம் சேர்ந்தார் எனப் ( சமணத்திற் சேர்ந்த அய்பர் அங்கு தருமசேனர் ஆ வந்த சூலை நோயைச் சமணரால் தீர்க்க முடியா தீர்க்க முடிந்ததும், தமிழர் சமய வரலாற்றில் அமைந்துவிட்டன. சமணமும் தருமசேனர் என் அந்த அழிவிலே, சைவமும் திருநாவுக்கரசர் என் சமணர் அய்பருக்குச் செய்த இடுக்கண்களை
கலாநிதி, வேலுப்பிள்ளை,
“வலிமை மிக்க எதிரிகள் அட் துன்புறுத்தினர். திருநீறும் ஐ எதிர்த்து நின்றனர். அட் நடந்துகொண்டார். துன்பங்கள் சகித்தார். சிவன் நினைவில் மச தொடர்ந்து இழைத்து வந்தது அப்பர் வாழ்வில் வளர்ச்சிப் மக்களும் மன்னனும் , த பெருமையுடையவராக அப்பரு சிறியோராகச் சமணரும் மாறி
அப்பர் பெருானின் பக்திவைராக்கியம், உள்ள துலக்கம்பெறும்.
"நாமார்க்குங் குடியல்ே நரகத்திலிடாப்படோம் ந ஏமாப்போம் பிணியற்யே இன்பமே எந்நாளுந் துன் தாமார்க்குங் குடியல்லா சங்கரன் நற்சங்கவெண் கோமாற்கே நாமென்றும் கொய்மலர்ச் சேவடியிை
என்றும், “அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ் அய்பரின் வைராக்கிய பக்தி நிலையினைக் காண

Fம்பந்தன் செய்த தமிழ் ழுடன் தன்னை ஒன்று ாப்படுகிறது. வைதிக யுரிய ஆதிச்சமயமும் தான்றியதால், சம்பந்தர் யக்கத்தைத் தமிழின uLDIT85 G61 gö (Ólu fL L> கருதுவதற்கு இட
)ளப் பற்றி நோக்கலாம். சைவத்துடனும் பின்னிப் அப்பர் சமண சமயத்திற் றுமலர்ச்சியில் முக்கிய பெரிய புராணம் கூறும். னார். தருமசேனருக்கு மற் போனதும் சைவராற் gi 5obilL 6OLDULDTab ற பெயரும் அழிந்தன. ாற பெயரும் தோன்றின. விபரிக்கும் பேராசிரியர்,
பரை மிக மோசமாகத் ந்தெழுத்தும் அப்பரும் பர் பரம சாதுவாக ர் யாவற்றையும் ஏற்றார் கிழ்ந்திருந்தார் எதிரிகள் ன்பங்கள் ஒவ்வொன்றும் பகுதிகளாயின. தமிழ் லைவணங்கத் தக்க ம், கேலிசெய்யக்கூடிய க்கொண்டிருந்தனர்.”
த்து உறுதி என்பன அவரது திருமுறைகள் மூலம்
லாம் நமனையஞ்சோம் டலையில்லோம்
TLD பணிநொமல்லோம் ாபமில்லை. த் தன்மையான குழையோர் காதிற்
மீளாயாளாய்க் னயே குறுகினோமே.”
சவருவதுமில்லை” எனவும் வரும் திருமுறைகளில் Uாம். பிற தேவார ஆசிரியர்களுக்கில்லாத கவிதை
119

Page 144
வீறு அப்பர் பாடல்களில் உண்டு. அப்பர் பாட6 போது,
“குனித்த புருவமும் கொவ்வைச் பனித்த சடையும் பவளம்போல் ( இனித்தமுடைய எடுத்தபொற்பா மனித்தப்பிறவியும் வேண்டுவதே
“அஞ்சாமைமிக்க ஒரு சத்தியக்கிரகியாக அட்
அப்பரின் உணர்ச்சிமிக்க சிறந்த கவிதை அக; திருத்தாண்டகமாகும்.
இனி சுந்தரமூர்த்தி நாயனாரது திருமுறை வளத்
“நல்லியல் ஞான சம்பந்தனும் நாவினுக்கரச பாடும் சுந்தரர் அவ்விரண்டு தேவார ஆசிரியர் போல் ஆலயத்திலே அரசனைத் தரிசித்துப்பெற் பாடாதே எந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள், எ: நின்று தோழமை நெறியுடன் வாழ்ந்தவர். சுந்தரர்
இனி, மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்
எட்டாந் திருமுறையாகிய திருவாசக 5 D5 திருக்கரத்தால் எழுதினார் றொன்றுண்டு. இத்திரு வாசகம் 51 3 655 பாடல்களையும் கொண்டது : அனுபவமே திருவாசகத்தின் “உயி
என்கிறார் டாக்டர் ப. அருணாசலம். பெரும் அருளாளாாக மாணிக்கவாசக சுவாமிகளை அ
“மாணிக்கவாசகர் தம்மைத் த கொண்டே திருவாசகம் முழுவை என்று கூடக் கொள்ளலாம். . கொள்ளாவிட்டாலும், திருவாசகத்து நாயகன் - நாயகி பாவம் விளக்கி; மாணிக்கவாசக சுவாமிகள் L திருவெம்பாவை, திருவம்மானை சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத திருச்சாழல், திருப்பூவல்லி, தி திருத்தோணோக்கம், திருப்பொன்னு பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம் எ பகுதிகள் மாணிக்கவாசக சுவாமி நாயகி பாவத்திலே இறைவனைட் தம்மை நாயகியாக மகளிர்ப் டெ உரையாடல் முதலிய பல்வேறு பாவனை செய்து பாடியனவாகு துறைகளிலே இவ்வாறு கற்பனை தமிழ்ப்புலவர் வேறு ஒருவருமிலர்.

ஸ்கள் அனுபவத் துடிப்புமிக்கவை, சிவனைப் பாடும்
செவ்வாயிற் குமிழ்சிரிப்பும் மேனியிற் பால் வெண்ணிறும் தமுங் காணப்பெற்றால் இந்தமாநிலத்தே.”
பர் சுவாமிகளை அறிஞர் விவரிப்பர்.
த்துறையிலமைந்துள்ள “முன்னமவனுடைய’ என்ற
தினை நோக்கலாம்.
ரும் சொல்லியவே சொல்லி ஏத்துகப்பான்’ என்று
ாகளும் சென்ற நெறியே சென்று அவ்விருவரையும்
ற அனுபவங்களைப் பாடியவர். பொய்மையாளரைப்
ன்று பாடி உய்ய அறிவுறுத்தினார் சுந்தரர். யோகநெறி
என்பர்.
த திருவாசகத்தின் சிறப்புகளை நோக்குவோம்.
த்தை இறைவனே என்னும் வரலா உட்பிரிவுகளையும், திருப்பெருந்துறை
ர் நிலை’
ம்பாலும் நாயக - நாயகி பாவப்பாடல்களைப் பாடிய றிஞர்கள் விமர்சிப்பர்.
தலைவியாகக் தயும் பாடினார் அதை ஏற்றுக் துள்ள ஒரு பகுதி த் தோன்றுமாறு பாடியுள்ளார். எ, திருப்பொற் ந்தெள்ளேணம், ருவந்தியார், ரசல், அன்னைப் ன்ற திருவாசகப் கள் நாயகன் - பாடுவதற்குத் பாழுதுபோக்கு, கோணங்களில் ம். இத்தனை செய்து பாடிய
120

Page 145
திருவாசகத்தில் பக்திச் சுவையொன்றே சிறப்பு சி. பாலசுப்பிரமணியம்.
பத்தாந் திருமுறையாகிய திருமூல தத்துவ நூலாயும் விளங்குகின்றது. த ஆகமக்கூறுகளாகிய சரியை, கிரி ஞானம் என்னுங் கருத்தினைத் திருப விரிவாகக் கூறியுள்ளது. “அன இரண்டென்பர் அறிவிலார்’ எனக் கு திருமூலர் யாப்பு ஒரே வகையான சீர்மிக்கு வரச் சிறுபான்மை முச்சீரு கொண்ட அடி நான்கினைப் பெர் ஒவ்வொரு அடியிலும் பன்னிரண பதினோரெழுத்தும் வரும். இயற்சீர் ( வெண்சீர் வெண்டளையும் அவர்பr தளைகளாம்.
பன்னிருதிருமுறைகளுள் வரலாற்றுப் பாங்கான அனுபவத்தையுரைப்பதுமான கதை தழுவிய திருத்தொண்டர் புராணமெனப்படும் பெரிய புராணம நாயனாராவார்.
தொகுத்துநோக்கும்போது, பன்னிரு திருமுறை என்றென்றும் வாழ்விலே இன்பத்தை அனுபவிப்பதற் சைவசமயத்தவர்களது அன்றாட நடைமுறை வா நேர்ந்துள்ள துன்ப வாழ்வு நீங்கி மறையவும், இ செய்யவல்லன திருமுறைகள் ஆகும். எனவே வேண்டும் என்ற உறுதி எடுத்து வாழ்வினை மன
அடிக்குறிப்புகள்.
1. குமாரசாமி, சி, தேவாரந் தந்த இராஜரா 2. மேலது, முன்னுரை, 3. சபாபதி நாவலர். திராவிடப்பிரகாசிகை, 4. பெரிய புராணம், திருஞானசம்பந்தமூர்த்தி 5. சம்பந்தர் தேவாரம், செய், 3561. 6. மேலது, செய், 3562, 7. மேலது, செய், 3053. 8. மேலது, செய், 01. 9. டாக்டர், ப. அருணாசலம், பக்தி இலக் 10. மேலது, பக். 217-218. 11. மேலது, பக். 218. 12. சம்பந்தர் தேவாரம், செய். 645. 13. மேலது, செய், 654 14. மேலது, செய், 650. 15. மேலது, செய், ய2834. 16. மேலது, செய், 992. 17. மேலது, செய் 993. 18. டாக்டர், ப. அருணாசலம், மு. கு. நூல், 19. மேலது, ப.229.

ாய் விளங்குகின்றது.’ என்று குறிக்கிறார் டாக்டர்
ர் திருமந்திரம் ருமந்திரத்தில் யை, யோகம், ந்திரம் மிகவும் பும் சிவமும் றிப்பிடுகின்றது. து. ஈரசைச் ம் வர நாற்சீர் ]று நடக்கும். ன்டெழுத்தும், வண்டளையும் ட்டில் வரும்
தும் அடியார்களது வாழ்க்கையினூடே இறையின்ப பக்திக்காவியம் பக்திச்சுவை நனிசொட்டப் பாடிய கும். பெரிய புராணத்தின் காவியநாயகள் சுந்தரமூர்த்தி
]களென வழங்கும் தோத்திரநூல்கள் அனைத்தும் குப் பேருதவிபுரியும் தெய்விகத் தமிழ்மந்திரங்களாகும். ழ்வில் திருமுறைகள் இடம்பெறுவது அவசியமாகும். இடுக்கண்கள் யாவும் பொடிப்பொடியாய்ப் போகவும்
ஒவ்வொருநாளும் திருமுறையின்பத்தில் திளைக்க ண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக.
ஜன் (1997), கொழும்பு, அணிந்துரை. ப.6.
இலக்கிய மரபியல், ப.172.
நாயனார் புராணம், செய். 70.
கியம், பாரிபுத்தகப் பண்ணை, சென்னை, 1983, ப. 117.
Ll. 228.
121

Page 146
20.
2.
22
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
சம்பந்தர் தேவாரம், சய்ெ, 4057. வேலுப்பிள்ளை, “சைவமறுமலர்ச்சியும் சப் பாரிபுத்தகப்பண்ணை, சென்னை, 1985, க. செல்வநாயகம், வி. தமிழ் இலக்கிய வரல டாக்டர், ஆ. வேலுப்பிள்ளை, மு. கு. நூ, மேலது, ப. 102. திருநாவுக்கரசுநாயனார் தேவாரம், செய், டாக்டர், ப. அருணாசலம், மு. கு. நூ. க. மேது ப. 256. டாக்டர், ஆ. வேலுப்பிள்ளை, மு. கு. நூ. அகில உலக இந்து மாநாட்டுச் சிறப் இலக்கியவளம்', ப. 212.
மேலது. ப. 212.
冰冰米米米米>
米米水冰冰米米米米米米米米水冰冰冰米米水状

பந்தர் சமயப் பிரசாரமும்’, தமிழர் சமய வரலாறு, 80. )ாறு குமரன் பதிப்பகம், கொழும்பு 1996, u&ய2-83.
பக், 84-86 M
4941.
238.
LJ. 120 – 121. . பபு மலர். கொழும்பு, 1982, “திருமுறைகளில்
k米米米米米米米米
K米米水米米米米米米米米米冰冰冰米冰米米米米米
冰冰冰冰米米米米米米米冰米冰冰
122

Page 147
ஈழத்தில் ஆரம்பக
fழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆரம் என்பது பற்றிய அறிவு இன்று மிகவும் வேண்டப்படும் ஒன்றான நாவல் வளர்ச்சி ஈழத்தில் எவ்வாறு ஆ நாவல்களின் முக்கிய பண்பும், அப்பண்புகளை இக்கட்டுரையின் நோக்கமாகும்.
17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ச8 புரட்சியின் விளைவால் பாரம்பரிய சமூக அமைப்பு தோன்றின. எனவே இவற்றைப் பலப்படுத் பெறவேண்டியதாயிற்று. வசனவடிவத்திற் கt வாழ்க்கையோடு ஒட்டிய கதைப்பொருளுடன் மோதல்களுடன் சித்தரிப்பதாக அமைவது நா6 மேலைநாடுகளில் வளர்ச்சி பெற்றுவந்த இந்நாவல்
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்ை ஏற்பட்ட மாற்றங்கள், முதலாளித்துவ சமூக அை ஆங்கிலக் கல்வி, மேல் நாட்டுப் பரிச்சயம் முத ஏற்படுத்தின. நாவல், சிறுகதை முதலிய நவீன இல தமிழ் நாட்டில் மாயூரம் வேதநாயகம்பிள்ளை பி.ஆர் ஈடுபட்டனர். இக்காலப் பகுதியிலேயே ஈழத்திலும்
தமிழகத்தில் நாவல் என்னும் பெருங்கதையை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈழத்தில் நில ஆங்கிலக் கல்வியின் விளைவால் உருவாகிய நடு தோன்ற வழிவகுத்தது. கிறிஸ்தவ சமயப் பிரசுர முய தொண்டாற்றியவரும் இத்தகைய முயற்சிகளில் ஈடு தழுவியும் தமிழாக்கியும் வசனவடிவம் தந்தனர். Soiety) வெளியிட்ட காவலப்பன் கதை, சி இன்னாசித்தம்பியின் ஊகேன் பாலந்தை கதை இன்னாசித்தம்பி கிறிஸ்தவ சமயத்தவர்; சமய ஈ இலங்கையில் சந்தர்ப்பவசத்தால் வனத்தில் L சகோதரர்களில் ஒருவரான ஊசேன் ஒரு கரடிய மக்களைத் தொல்லைப்படுத்துவதும், பாலந்தை தன் சகோதரனையே மடக்கி வெல்வதுவும், பி.
11-CM 4658

ாலத் தமிழ் நாவல்களின் பண்புகளும் அவற்றை நிர்ணயித்த காரணிகளும்
புன்னியேஸ்வரி நாகலிங்கம் பிரதம செயற்றிட்ட அதிகாரி தேசியகல்வி நிறுவகம்,
ԼՕd5ՄablԶ.
பகால வளர்ச்சிப் போக்குகள் எவ்வாறு இருந்தன ஒன்றாகும். இவ்வகையில் இலக்கிய வடிவங்களில் ரம்பித்து வளர்ந்து வந்ததென்பதையும், ஆரம்பகால நிர்ணயித்த காரணிகளையும் எடுத்துக் கூறுவதே
முகத்தில் பெருமாற்றங்கள் நிகழ்ந்தன. கைத்தொழிற் நிலைகுலைய புதிய சமூக பொருளாதார உறவுகள் ந்தும் வகையில் நாவல் வடிவமும் மாற்றம் ணிசமான அளவு நீளமுடையதாக, நடைமுறை
மாந்தரது இயல்பான குணங்களை, உணர்ச்சி வல் என்ற கருத்து மேலோங்கிற்று. இவ்வாறு b வடிவம் 19 ஆம் நூற்றாண்டில் தமிழில் புகுந்தது.
க இந்தியாவில் நிலவுடைமை சமூக அமைப்பில் மைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய லியவை தமிழிலக்கியத்தில் பாரிய மாற்றங்களை )க்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுள் ஒன்றாகும். ராஜமய்யர் ஆகியோர் இந்த இலக்கிய முயற்சியில் நாவல் இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எழுதியோர் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்களே. விய சமயப்பற்றும் போட்டியும் நிறைந்த சூழ்நிலை, த்ெதரவ்ர்க்க சமுதாயம், அச்சுவர்ண வசதி நாவல் ற்சியில் ஈடுபட்டோரும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குத் ட்டனர். இவர், தாம் கற்ற மேனாட்டுக் கதைகளைத் பாழ்ப்பாணம் ரிலிஜஸ் சொசைட்டியினர் (Religious த்திலெப்பையின் அஸன்பேயுடைய சரித்திரம் என்பன இக்காலப்பகுதியில் எழுதப்பட்டவை. டுபாடுடையவர். இவரது கதையும் நிகழ்விடமும் றந்து பெற்றோரைப் பிரிந்து தனித்துப்போன இரு ால் வளர்க்கப்பட்டு பயங்கரக் காட்டு மனிதனாகி வற்று அரசமாளிகையில் வளர்ந்து தனகள்த்தனாகி ானர் பல சம்பவங்களைத் தொடர்ந்து இவர்கள்
23

Page 148
மணஞ்செய்வதும், இறுதியில் ஊசேன் அறியாமல் வருந்தி தவமிருந்து மரித்தலும் எனக் கதை முடிகிற Gd5(T606 (6 6T(plb55. (Orson and Valetine) 6T6örg வைத்து எழுந்தது. ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் அதற்குமுன்பே ஈழத்தின் முதல் நாவல் தமிழிலேயே அடுத்து வெளியான நாவல் மோகனாங்கி திருகோண சம்பந்தமுடையது. இந்நாவலில் பாதிக்குப்பாதி ( இடையூறாக அமைந்துவிடுகிறது.
இக்காலப்பகுதியில் எழுந்த தமிழ்நாவல்கள் : சிந்தனையாளர்கள் தாம் அறிந்தவற்றையும் உணர் கதைவடிவில் தந்தனர். ஈழத்துத் தொடக்ககா6 மரைக்கார் அராபியக் கதைகளில் ஈடுபாடுடைய தய எழுதிய அறிமுகவுரையில் “இலங்கை முஸ்லிம் அராபியா போன்ற நாடுகளே வழிகோலின. இந்ந பெருமளவு இடம்பெற்றதில் வியப்பில்லை’ எனக் பயன்படுத்தப்பட்டு வந்த நாட்டுக்கூத்து, bT-8 தொடர்ச்சியாகவே நாவலிலக்கியம் ஈழத்தில் தோன் ஆரம்ப நாவல்களின் போக்கை எடுத்துக்காட்டு செல்வாக்கிலிருந்து விடுபடாத ஒரு நிலைமாறி பாலந்தை அஸன்பே என்பன வீரசாகசக் கதைய விளங்குகின்றது. அடுத்து எழுந்த மோகனாங்கியும் P களமாகக் கொண்டுள்ளதால் ஈழத்துத் தமிழ் ந ஆயினும் த்மிழ் நாவலின் முக்கிய பிரிவொன்றுக்கு பெருமை ஈழத்துத் தமிழ் நாவலாராய்ச்சியில் ஈடுட தமிழ்நாட்டைக் களமாகக் கொண்டாலும் ஈழ குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல் வரலாறு எனக் கொண்டாலும் அவற்றில் முறைகளையும் நிலைக்களனாகக் கொண்ட படைப் ஈழத்தவர் என்பதும் அவை ஈழத்தில் பதிப்பிக்க தொடர்பெனலாம்.
ஈழத்தைக் களமாகக் கொண்டு தமிழ் நாவல் பகுதியிலிருந்தே தோற்றம் பெற்றதெனலாம். ஈழ கதையைக் குறிப்பிடலாம். திரு சின்னப்பிள்ளை எழு சேர்ந்த மல்லாகம் என்ற கிராமத்தில் பிறந்த வீரசிங் சூழ்ச்சியால் ஊரை விட்டு வெளியேறி கால்நை மெனிக்பண்டா என்ற சிங்கள வீரனுடன் போரிட்டு - இருந்த தமிழ்ப்பெண் இலட்சுமியை காதலிக்கின்றா வென்று பின் இலட்சுமியை மணந்து வாழ்க்கை தலைவன், தலைவி என காவியப் பண்புடைய பாத் அறிவைப் பாத்திரத்தில் ஏற்றியுள்ளமை கதைப் போ குடாநாட்டைச் சேர்ந்த படித்த நடுத்தர வர்க்கத்தி நீங்கி வாழ்ந்த சூழலை நாவலிற் காணலாம். இக்க உரையாடலைத் தவிர ஏனைய பகுதிகள் இலக் ஈழத்து மக்களின் சாதாரண கிராமப்புற வாழ் சின்னப்பிள்ளை சமூக நடப்பியலோடு பொருந்த படைத்துள்ளார். கதை நிகழும் இடம் ஈழம் என் களம் முக்கியத்துவம் பெறவில்லை என்பது குறிப்பி

தன் தந்தையைக் கொல்வதும், உண்மையறிந்து து. இக்கதை பிறமொழி நூலொன்றை ஆதாரமாகக் றும் போர்த்துக்கேய நெடுங்கதையை ஆதாரமாக சரித்திரத்தை முதல் நாவல் என நாம் நினைத்தால் வெளியானது என்று சொல்லிப் பெருமைப்படலாம். னமலை சரவணமுத்துப்பிள்ளை எழுதியது. சரித்திர கவிதைகள் இடம்பெறுவது நாவல் உருவத்திற்கு
கல்விகற்ற நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த சமூகச் ாந்தவற்றையும் மக்களுக்குப் பயன்படும் வகையில் R) நாவலாசிரியர்களுள் ஒருவரான சித்திலெப்பை Sழறிஞர். இவரது அஸன்பே கதைக்கு கமாலுத்தீன் சமய கலாசார இயக்கங்களுக்கு எகிப்து துருக்கி ாடுகள் இலங்கை முஸ்லீம்களின் சிந்தனைகளில் கூறுவதும், “கிறிஸ்தவ மதப்பிரசார முயற்சிகட்குப் 5ம் ஆகியன நூல்வடிவு பெறத் தொடங்கியதன் ாறியதென’ சில்லையூர் செல்வராசன் குறிப்பிடுவதும் Sகிறது. ஆரம்பகால நாவல்கள் காவியமரபின் காலப் பிரசவம் ஆக அமைந்தது. ஊகேன் ாகவும் திகைப்பூட்டும் சம்பவங்களைக் கொண்டும் ஈழத்தவரால் எழுதப்பட்டதாயினும் தமிழ் நாட்டையே ாவல் என வரையறை செய்ய முடியாது என்பர். த முன்னோடியாக விளங்கியவர் என்ற நியாயமான படுபவர்களால் நினைவுகூரத்தக்கது. மோகனாங்கி த்துப் பேச்சு வழக்குகள் இடம்பெற்றுள்ளமை பிற்பகுதியில் தொடங்குகின்றது. ஈழத்துத் தமிழ் ஈழத்து மண்ணையும் ஈழத்து மக்களது வாழ்க்கை புக்கள் எவையும் எழவில்லை என்பதும், எழுதியோர் ய்பட்டன என்பதுமே ஈழத்தோடு அவற்றுக்குள்ள
எழுதும் மரபு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பய் 2த்து இரண்டாவது தமிழ் நாவலென வீரசிங்கன் ழுதிய வீரசிங்கன் கதை யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் கன் என்ற வாலிபன் தனது அண்ணனின் மனைவியின் Oடயாக அநுராதபுரம்வரை செல்கிறான். அந்த அவனை நட்பாக்கிக் கொள்கிறான். அங்கு குடியேறி ன். அவளை அடைய முயன்ற தீயோர் கூட்டத்தை யில் முன்னேறி இன்பமாக வாழ்கிறான். கதைத் திரங்கள் அமைந்துள்ளன. ஆசிரியர் தமது கல்வி க்கிற்குப் புறம்பாக அமைந்துவிடுகிறது. யாழ்ப்பாணக் னர், அரசபணி, வர்த்தகம் பொருட்டு குடாநாட்டை தையில் மாடசாமி என்ற துணைப் பாத்திரமொன்றின் கணச் செறிவுடைய செந்தமிழில் காணப்படுகிறது. க்கையையும் பழக்கவழக்கங்களையும் எழுதும் ாத வீரசாகசப்பண்பு வாய்ந்ததாக இந்நாவலைப் பதைத் தவிர கதைப் பொருளில் ஈழத்துச் சமூக டத்தக்கது. சின்னப்பிள்ளை உதிரபாசம் விஜயசிவம்
24

Page 149
ஆகிய நாவல்களையும் எழுதினார். முதன்முதல் நாவலை விரும்பிப் படிக்கும் இலக்கிய உருவமாக் பாத்திரங்களின் குணவிகாரத்தை விட செந்தமிழ்நை புகழ்பெற்ற தமிழ் அறிஞருஞ் சிறந்த பதிப்பாசிரியரு சின்னப்பிள்ளை “வீரசாகசம்’, ‘காதல்’ என்பவ கூறும் கதையே நாவல் என்று கருதினார். இே கலாமதி சரவணமுத்துவால் எழுதப்பட்டது. அ ஆகிய நாவல்கள் எழுந்தன. தம்பிமுத்துப்பிள்ை என்பனவும் இக்காலப் பகுதிக்குரியன. 1915 வ கற்பனைக் கதைகளே முதன்மைபெறுகின்றன. இ கூறுவது பொருத்தமானது.
1915 க்குப் பின்னர் சமூகநிலைமைகளைக்
காண்ப்படுகிறது. பாத்திர உருவாக்கம், பாத்திர 3 கவனம் செலுத்தாவிடினும். சமூகநிலைமைக் சிறிதளவையாவது தமது நாவலில் பிரதிபலித்துள்ள சமூக உணர்வுடன் நாவல் எழுதப்பட்டது. ஆங்கி பியிர்ச்செய்கை, வர்த்தகம், ஆங்கிலக் கல்வி, அ நிலைமை தோன்றியதே இதற்குக் காரணம் எனல மதமாற்ற முயற்சிகளுமெனலாம். இப்புதிய நிலைை கள்த்தாக்களின் சிந்தையைக் கிளறும் விகூடியங்கள தாழ்வு, சீர்கேடுகள் ஆகியவற்றுக்குப் பரிகாரம் சு இவர்கள் எழுதிய நாவல்களிற்கு மங்களநாயகி தம் தம்பிமுத்துப்பிள்ளையின் “சுந்தரன் செய்த தந்திரம் நேசமலர்”, “கோபால நேசரத்தினம்’, ‘துரைரத்த ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றில் அக்கால யாழ்ப்பாணச் சமூகத்தில் நீ நிலவும் ஏற்றத்தாழ்வுகள், உயர்சாதியினரிடையே க தீமைகள், மதுபானப் பழக்கத்தாலேற்படும் கே( நல்லாசாரங்களைக் கைக்கொள்வதன் மூலம் எழுதப்பட்டது. கல்வியறிவு, கடவுள் நம்பிக்கை குறைபாடுகளிலிருந்து நீங்கும் என இவர்கள் எண்ண சீவியம் நடாத்த மக்களுக்கு வழிகாட்டும் முயற்சி பரிபாலன சபையினர் வெளியிட்ட இந்துசாதனம் வைத்து நடாத்தும் வித் தியா சாலைகள திருஞானசம்பந்தபிள்ளையின் “கோபால நேசரத்தி 1915-1930 க்குமிடைப்பட்ட நாவல்கள் சமூக நிலை பிரதிபலிப்பனவாக அமைந்தன.
நொறுங்குண்ட இருதயம் கணவனது கொடுமைக நடுத்தரவர்க்க குடும்பப் பெண்ணின் அவலவாழ்6ை நலிந்த நிலையில், கிறிஸ்தவ பாதிரியாரொருவரின் இந்நாளில்தான் முதன் முதலில் ஈழத்து நடுத்த காண்கிறோம். யாழ்ப்பாணய் பேச்சு வழக்கில் நிலவிய கூடிய சொல்லாட்சியும் நடப்பியல்புகளை வலுவு
சுந்தரன் செய்த தந்திரம் யாழ்ப்பாண பிரதேசத் கண்டிக்கின்றது. ஏமாற்றும் தந்திரமும் நீண்ட நாட்

அதிக நாவல்கள் எழுதியவர் என்ற முறையிலும் த்ெ தந்தவரும் இவரேயாவர். இவரது நாவல்களில் - மேலோங்கி நிற்கும். காரணம் இவரது தமையனார் ான சிவை தாமோதரம்பிள்ளையின் தாக்கமெனலாம். றைப் புனைந்து நற்போதனைகளை உள்ளடக்கிக் த காலப்பகுதியில் மட்டக்களப்பு முதல் நாவலாக டுத்து இரத்தினசிங்கன் கதை சந்திரகாசன் கதை ா எழுதிய “அழகவல்லி சுந்தரம் செய்த தந்திரம்’ ரை நீண்டதும் வசனருபத்தில் அமைந்தனவுமான }வற்றை நாவல் என்பதை விட ரோமான்ஸ் எனக்
கருத்திற்கொள்ளும் போக்கு நாவல் உலகில் உரையாடல் ஆகியவற்றில் கதைப்பின்னலில் அதிக ள் சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங்களில் னர். வெறும் கதைகூறும் போக்கிலிருந்து விடுபட்டு லேயர் இலங்கையில் ஏற்படுத்திய பெருந்தோட்டப் து சார்ந்த பதவிகள் என்பவற்றால் நாட்டில் புதிய ாம். அத்துடன் கிறிஸ்தவ மிசனரிமாரின் தீவிரமான மயில் காணப்பட்ட மனித ஒழுகலாறுகள் இலக்கிய ாக அமைந்தன. மக்களிடையே காணப்படும் ஏற்றத் உறும் நோக்குடன் அறிவியல் சமய அடிப்படையில் பையாவின் “நொறுங்குண்ட இதயம்'தேம்பாமலர்” ’ ம.வே திருஞானசம்பந்தபிள்ளையின் “காசிநாதன் தினம் நேசமணி”, இடைக் காடரின் "நீலகண்டன்’
லெவிய சீர்கேடுகள், சாதிகாரணமாக மக்களிடையே ாணப்படும் ஊழல்கள், சீதனவழக்கத்தினால் ஏற்படும் டு என்பன பிரதான பாடுபொருளாயின. மக்கள் இவற்றைக் களைந்துவிடலாம் என்ற கருத்தாக தர்மவிருப்பு ஆகியவை ஏற்பட முழுச்சமூகமுமே னர். அத்துடன் கிறிஸ்தவ சமயநெறியில் சன்மார்க்க யாகவும் எழுதப்பட்டது. இதேசமயம் சைவசமய பத்திரிகை சைவச் சிறுமியரை அன்னிய மதத்தினர் ல் கல் விகற் க விடக் கூடாதென ம.வே னம்’ என்னும் நாவல் எடுத்துக்கூறும். இவ்வாறு மைகள் சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங்களைப்
ளுக்கானது. இதயம் நொறுங்குண்ட கண்மணியென்ற பச் சித்தரிப்பது; அன்பில்லாத கணவனினால் உளம்
இதமான போதனைகளால் அமைதியடைகிறாள்.
வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள கதை மாந்தரைக்
தராதர ஈழத்துத் தமிழ் நடையும் மண்வாசனையுடன்
ட்டுகின்றன.
தில் காணப்பட்ட ஊழல்களை நகைச்சுவையுடன் ளுக்குப் பலிக்காது என்ற பொருளில் அமைந்துள்ள
5

Page 150
இச்சிறு நாவலிற் பழமொழிகள் உள்ளன. இவ ருக்கிடையில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிப பேச்சுவழக்குடன் எழுந்த இந்நாவலில் அக்கா6 முடிகின்றது. இந்நாவல்களில் இடம்பெற்றுள்ள {
இதற்குப்பின் கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்கில் கனிகள்’ என்ற தலைப்பில் சத்தியவேத பாதுகாவ முதற்பாகம் புனிதசிவி என்னும் தலைப்புடன் நூலாக தமிழுடன் ஆங்காங்கு யாழ் பேச்சுவழக்கும் இடம்ெ படியுமாறு முதன்முதலாக யாழ் பிரதேச மொழிவழக் என்ற பெருமை இந்நாவலின் சிறப்பியல்பாகும். "சாம்பசிவம் ஞானாமிர்தம்” அல்லது "நன்னெறிச் சேதுப்பிள்ளையின் முகவுரையுடன் வெளிவந்த இ அடுத்து சு.இராசம்மாளின் ‘காணாமற்போன பெ என்ன என்ற ஆவலைத் துண்டும் வகையிலமைந்த பத்திரிகை ஆசிரியராயும், இந்துக்கல்லூரி ஆசிரியரா பலவிதம்’ என்ற தலைப்பில் எழுதிய கதைகள் நேசமலர்”, “கோபால நேசரத்தினம்","துரைத்தின பொதுப்பிரச்சனையாக இருந்தகாலத்தில் அை திருஞானசம்பந்த பிள்ளையேயாவர். தம்மளவில் காணப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர் துணையாகக் கொள்வதை மூன்று நாவல்களிலும் க ஒத்த பண்பினராகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். பெண்க ஆடம்பர போக்கான பெண்களை வாழ்க்கைத்து அடக்கமுடைய பெண்களே நன்மனைவியராவர் எ உத்திகளைக் கையாண்டு பிற்கால நாவலாசிரியருக் ஏற்படுத்திக் கொடுத்தார். நகைச்சுவையை லாவ குத்தலுமாகப் பல விவரணங்களைக் கொண்டதாக கலையுருவம் கெடாதவாறு நாவலை ஓர் சீர்தி இந்நாவல்களில் உறுதியோடு தொனிக்கிறது. 19 ஈழத்துத் தமிழ் நாவலில் சமூகப் பிரச்சனைகள் புதிய வலுவைப் பெறத் தொடங்கியமையும் குறிப்பிட துப்பறியும் நாவல் வெளியானது. ஏ.சி இராசையா ஈழகேசரியில் தொடர் கதைகளாக எழுதினார். இ6 ஐயா நாவல்களையும் விஞ்சும் வகையில் அமை
1930 களில் மர்ம நாவல்களில் வீரசாகச செய கொள்ளை ஆகியவை தாராளமாக இடம்பெறுப் கருத்து வலியுறுத்தப்படும். மக்கள் செய்யும் நல்வி சென்று இறுதியில் அதன் பயனை அனுபவிக்கச் ஒவ்வொருவரையும் மக்களின் ஈடேற்றத்திற்காக உன் தவறி நடப்போரை இரக்கமின்றித் தண்டிக்கிறது வாழ்க்கையையொட்டிய பிரச்சனைகளையும், சt நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டவை. எழு நாவலை வாகனமாகக் கொண்டனரன்றி உருவ ரீத பண்புகொண்ட நாவல்களும், குடும்ப உறவுகளை தமிழ் நாவல் இலக்கியத்தின் பொருளிலோ, வடி எனினும் வாசகள் தொகையை அதிகரித்தது. உறுதியாக காலூன்ற வழிவகுத்தன எனலாம்.

ர் எழுதிய “அழகவல்லி”, மழவர் குடும்பத்தின Rப்பனவாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணய் பிரதேச )கட்ட சமூக உணர்வோட்டங்களை உய்த்துணர வருணனைகள் தரமானவை.
ஞானச்சகோதரன் ஜோன்மேரி என்பவர் “அருந்தவக் ல் பத்திரிகையில் தொடராக எழுதிவந்த கதையின் வெளிவந்தது. இலக்கண சுத்தமான யாழ்ப்பாணத் பறுகிறது. ஈழத்தமிழ் இலக்கியம் என்னும் முத்திரை கினை முதன் முதல் நாவலில் ஓரளவு புகுத்தியவர் இது வெளிவந்தபோது அநாகலிங்கம் எழுதிய 5 களஞ்சியம்’ என்ற நாவல் வெளிவந்தது. ரா.பி இந்நாவல் வரைதற் சித்திரத்துடன் வெளிவந்தது. ண்மணி’ என்னும் நாவல் வெளிவந்தது. முடிவு மர்மநாவலில் ஒன்றாக விளங்குகிறது. இந்துதைனம் கவுமிருந்த மவே திருஞானசம்பந்தபிள்ளை “உலகம் நாவலாக உருப்பெற்றன. அவை “காசிநாதன் ம் நேசமணி’ என்பன கிறிஸ்தவமத மாற்ற முயற்சிகள் தக் கதைப்பொருளாக தேர்ந்தெடுத்த முதல்வர் அதற்குத் தீர்வுகாண முயன்றுள்ளனர். சமூகத்திற் வு காண்பதற்குப் பெண்குலத்தின் நற்பண்புகளை ாணலாம். மூன்று நாவல்களின் கதைத்ததலைவியர் ளை முன்வைத்துச் சீர்திருத்தம் பேச முன்வந்துளார். துணையாக தேர்ந்தெடுக்கக்கூடா தென்பதையும், ன்பதையும் உணர்த்துகிறார். இதுவரை கையாளாத காக அழுத்தமும் அர்த்தமும் பொதிந்த திருப்பத்தை கமாகப் புகுத்தியும், இடமறிந்து கேலியும் கிண்டலும் நாவலுக்கு ஒரு அர்த்த புகூyடியையும் அளிக்கிறது. நிருத்த நோக்கத்திற்குப் பயன்படுத்தலாமென்பது 30-40 க்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் இடம்பெற ஆரம்பித்தமையும் நாவல் இலக்கியம் த்தக்கவை. இக்காலப்பிரிவில் ஈழத்தில் முதலாவது பவளகாந்தன், அருணோதயம் ஆகிய நாவல்களை வை ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி நதன.
லும் மர்ம நிகழ்ச்சிகளும் நிறைந்திருக்கும். கொலை ). எனினும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற னை, தீவினைப் பயன்கள் அவர்களைத் தொடர்ந்து செய்கிறது என்ற உண்மையை தெளிவுபடுத்துகிறது. ழைத்துவரும்படி தூண்டுவதுடன் நல்லொழுக்கத்தில் து. இக்காலப்பகுதி நாவல்கள் ஈழத்து மக்கள் Dயப் பிரசாரம், சம்பவச் சுவை ஆகியவற்றையும் தியோர் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த தியாகப் பரிசோதனைகளில் இறங்கவில்லை. மர்மப் ய் பொருளாகக் கொண்ட நாவல்களும் ஈழத்துத் விலோ பாரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை. இதனால் நாவல்கள் எமது இலக்கிய உலகில்
26

Page 151
உசாத்துணை நூல்கள்
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி - நாவல்கலை - கநா. சுப்பிரமணியம் ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் நான்காவது தமிழாராய்ச்சி மகாநாட் இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் த
ஈழத்து இலக்கிய வளர்ச்சி - கன் நாவலும் வாழ்க்கையும் - LT (
米米米米米米米米米米
米米米米
H
பிழைகளில்
மனிதர் 6 செய்கின்றனர். ( பொய் என்று ப6 எல்லாம் தலை அறிவு நூல்கை
எனவேதா சிறப்புடை பெ என்றபடி, கல்லி பிழையை முதல்
- தி
ܡܠ

சில்லையூர் செல்வராசன்
- கநா சுப்பிரமணியம் டு மலர் கட்டுரை - நா. சுப்பிரமணியஐயர் மிழ் இலக்கியம் - சி. மெளனகுரு
மெள. சித்திரலேகா எம்.ஏ.நுஹ்மான் ாக செந்திநாதன் கடர் கார்த்திகேசு சிவத்தம்பிஸ்
米米米米米米米米米冰米 -k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k
米米米冰冰米米米米米米冰冰冰冰米
பெரிய பிழை
ாத்தனையோ பிழைகளைச் கொலை, புலை, களவு, சூது, ல வகைப் பிழைகள் இவற்றில் Oயாய பிழை கற்க வேண்டிய ளக் கல்லாமையாகும்.
ன் பட்டினத்துச் சுவாமிகள் ாருளை முந்துறக் கிளத்தல் )ாய் பிழையும் என்று கற்காத )ாவதாகப் பாடுகிறார்.
ருமுக வாரியார் சுவாமிகள் -
, الصـ
127

Page 152
ஈழத்துச் சிறுகதையின் தே
சிறுகதை - படைப்புச் சக்தியின் முழு ஆற்றலை மான இப்படைப்பு நுட்பமான வேலைப்பாட்டையும், உன்னதமான ஒரு கலை வடிவமாகும்.
சிறுகதை இலக்கியம் ஐரோப்பியர் வருகையு ஈழத்தமிழர்களின் பண்பாடு, சமூக, பொருளாதார, அ ஈழத்திற்கே உரித்தான தனித்துவமான பண்டை வளர்ந்துள்ளது. -
ஈழத்தின் சிறுகதை வளர்ச்சியின் மூலவர்களாக ஆகியோர் கருதப்படுகின்றனர். ஆரம்ப காலத்தில் ஐதீக, வரலாறு சார்ந்தனவாகவும், பிற்காலத்தில் இ சிறு கதைகளாகவும் படைக்கப்பட்டன.
ஈழத்தில் சிறுகதை வளர்ச்சியின் மூலவர்களாக தமிழ்ச் சிறுகதையின் தோற்றமானது ஆர்ன ஆரம்பமாகியுள்ளது எனலாம்.
1841 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவரும் " பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கரொ ஜே.ஆர்.ஆர்னல்ட் சதாசிவம் பிள்ளையும் வின கூறக்கூடிய அளவுக்கு ஆர்னல்ட் சதாசிவம்பிள் அவரது சிறுகதைத் தொகுப்பான நன்னெறிக் முன்னோடியாக விளங்குகின்றது.
அவரது சிறுகதைத் தொகுப்பிற்குப் பின்னர் 18 வர்ணம் பிள்ளையின் கதாசிந்தாமணி என்ற சிறுகை அதனைத் தொடர்ந்து தம்பி முத்துப் பிள்ளையி ஐதுருஸ் லெப்பை மரைக்கார் என்பவரின் “ஹை இவையே ஈழத்தின் முதலாவது சிறுகதைத் தொகு 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இரு சிறுகதை உலகம் பெற்றிருக்கின்றது.
ஆனால் அந்தக் காலப்பகுதியைத் தொடர்ந்து ஈழத்துச் சிறுகதைப் போக்கானது புதுவடிவம் உத்வேகத்துடன் பல புதிய சிந்தனையுள்ள சிறுகை பின்வரும் காரணிகள் விளங்கின.

ாற்றமும், வளர்ச்சியும் - ஒரு மதிப்பீடு
வல்வை ந. அனந்தராஜ் ம7காணக்கல்வித் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை,
) வெளிப்படுத்தக் கூடியதும் சிறிய வடிவமுடையது கலைத்துவத்தையும், சொல்லாட்சியையும் கொண்ட
டன் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது ரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் மெருகூட்டப்பட்டு க் கொண்ட ஒரு மக்கள் இலக்கியமாக இன்று
சம்பந்தர், இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம் ல் இவர்களால் படைக்கப்பட்ட சிறுகதைகள் புராண, இலங்கையைக் களமாகக் கொண்ட சமூக சார்புடைய
இவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இலங்கையில் ல்ட் சதாசிவம் பிள்ளையின் கதைகளுடனேயே
உதயதாரகை” என்ற ஈழத்தின் முதலாவது தமிழ்ப் ல்ட் விஸ்வநாதபிள்ளையும், பின்னர் 1860 களில் கிெனர். ஈழத்தின் சிறுகதையுலகின் தந்தை எனக் ளை 1860 களில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். கதாசங்கிரகம் ஈழத்துச் சிறுகதைகளுக்கெல்லாம்
75 இல் வெளிவந்த பண்டிதர் சந்தியாகோ சந்திர தத் தொகுப்பில் ஏழு சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன. ன் “ஊர்க்கதைகள்” என்ற சிறுகதைத் தொகுதியும், றதர்சா சரித்திரம்’ என்ற தொகுதியும் வெளியானது. திகளாகும். எனவே ஈழத்தின் சிறுகதை வரலாறானது ந்து ஆரம்பித்துள்ளது என்ற பெருமையை ஈழத்துச்
து நீண்ட இடைவெளியின் பின் 1930 களின் பின்பே பெறத் தொடங்கியது. இக்காலப்பகுதியிலேயே மிக தகள் படைக்கப்பட்டன. இதற்குத் தூண்டுகோலாகப்
128

Page 153
1. ஆங்கிலச் சிறுகதைகளின் தாக்கமும், ஆங் 2. தென்னிந்திய் சஞ்சிகைகளான நவசக்தி, க6ை வருகையும், அவற்றின் சிறுகதைகளின் தாக் 3. யாழ்ப்பாணத்தில் தோன்றிய ஈழகேசரியின் பன (ஈழகேசரி 1930.06.22 ஆம் திகதி வெளிவர
4. படித்த மத்தியதர வர்க்கத்தினரின் இலக்கி
5. இலங்கையின் சுதந்திரப் போராட்டத்திற்கா
அரசியல் வாழ்வு முறையும்.
இவற்றின் காரணங்களினால் நல்ல சிறு கதை வெளியிடக் கூடிய களமும் தோற்றம் பெற்றன.
அரச அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந் மரியமதலேனா என்ற சிறுகதை கலைமகளில் பிரசு சிறுகதைகளை எழுதத் தொடங்கினர். அவைக நடேசய்யரின் “ஒரு ராமசாமி சேர்வையின் சரித்தி சோ.நடராஜனின் மாலினி, 1936 இல் ஆனந்தல் “தோட்டத்து மீனாட்சி”, 1936 இல் ஈழகேசரியில் போன்ற சிறுகதைகளைக் கூறலாம். இததைத் பாணன் போன்றோரின் சிறுகதைகள் வெளிவரத் ெ
1938 இல் சம்பந்தனின் முதலாவது சிறுகை ஈழகேசரியில் பாணனின் அவிந்த மலர், ஆனந்தனின் இவர்களும் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தடப்
1939 இல் சிவைத்திலிங்கம் “ஏன் சிரித்தாய் மூலம் அறிமுகமானார். அதே காலப்பகுதியிலே( சிறுகதை ஈழகேசரியில் பிரசுரமானது.
இவ்வாறு ஈழத்தின் சிறுகதைப் போக்கினை ஆ பேர்களான இவர்களே ஈழத்துச் சிறுகதை உலகி பெற்றிருந்தனர் என்றால் மிகையாகாது.
இவர்களைத் தொடர்ந்து அ.செ.முருகானந்த6 நாவற்குழியூர் நடராஜன், இராஜ அரியரெத்தினம், க.சி சபாரெத்தினம், கு.பெரியதம்பி ஆகியோர் சிறுகதை
இவ்வாறு இலங்கையின் சிறுகதைப் போக்கு அ போக்கினை சுருக்கம் கருதி விரிவாக்காது பின்வ
1. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் -
2. சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலம் ---
3. தமிழ் தேசிய எழுச்சிக் காலம் -
சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம்
பிரித்தானியரின் ஆட்சிக் காலம் இலங்கையில் சிறுகதைகள் பின்வரும் கருப்பொருளை அடிப்பை

நிலக் கல்விப் போதனையும்
)மகள், சுதந்திரச் சங்கு, கிராம ஊழியன் என்பவற்றின் கமும்.
ரீயும், சிறுகதைகளுக்கு வழங்கிய படைப்புத் தளமும். த் தொடங்கியது)
பய் பிரவேசம்.
ன முனைப்பும் சுதேசிகளின் சமூகப் பொருளாதார
bளைப் படைக்கக் கூடியவர்களும் சிறுகதைகளை
த இலங்கையர்கோனினால் 1930 இல் எழுதப்பட்ட மானதைத் தொடர்ந்து பல ஈழத்து எழுத்தாளர்கள் ளில் குறிப்பிடக் கூடியவையாக 1931 இல் கோ. ாம்’ 1934 இல் ஈழகேசரியில் வெளியான நவாலியூர் விகடனில் எழுதப்பட்ட போ. சிவபாதசுந்தரத்தின் வெளியான “அன்னையின் கட்டளையும் அதுதான்’ தொடர்ந்து 1938 இல் கதிசம்பந்தன், ஆனந்தன், தாடங்கின.
தையான தாராபாய் கலைமகளில் வெளியானது. ா ஹரிஜனங்களின் கண்ணீர் ஆகிய சிறுகதைகளுடன் ம் பதித்தனர்.
’, என்ற சிறுகதையை கலைமகளில் எழுதியதன் யே பவன் என்பவரின் தியாகி என்ற முதலாவது
ரம்பித்து வைத்த எழுத்தாளர்களில் முதல் பத்துப் ன் முன்னோடிகள் என அழைக்கப்படும் தகுதியைய்
51, சிவிவேலுப்பிள்ளை, சோதியாகராஜன், வரதர், வகுருநாதன், சொக்கன், சு.இராஜநாயகன், தாழையடி களைப் படைத்தளித்தனர்.
ஆரம்பிக்கப்பட்டாலும் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிப் ரும் காலகட்டங்களாக வகுத்து நோக்கலாம்.
1930 - 1948 1949 - 1082 1983 க்குப் பின்
வேரூன்றிய இக்காலகட்டத்தில் தோற்றம் பெற்ற டயாகக் கொண்டவையாக இருந்தன.
29

Page 154
1. சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள்:
இக்காலத்தில் தமிழகத்தில் ஈ.வெ.ரா.பெரியாரின் இருந்ததால் அவரது பகுத்தறிவுக் கோட்பாடுகளா எதிர்ப்பு, விதவைத் திருமணம், சமூக ஏற்றத்தாழ்வு, புராண இதிகாசங்களுக்கு எதிரான கருத்துக்க அவைசார்ந்த சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள்
இதே காலப்பகுதியிலேயே சிலரால் சாத்வீகக் க என்பவற்றால் கவரப்பட்ட ஆக்கங்களும் படை சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையே கருப்பெ
2. இந்தியப் பத்திரிகைகளின் தாக்கத்தின் படைக்கப்பட்டமை.
3. இலங்கையின் சுதந்திரத்திற்கான கோரிக்ை
இக்காலப் பகுதியிலேயே ஈழத்தின் சிறுகதை ஆக்கங்களைப் படைத்தனர். இவர்களது அ கலைமகள், ஆனந்தவிகடன், போன்றவையும், ஈழ களம் அமைத்துக் கொடுத்தன.
1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி அன்பாயிரு” என்ற மகுட வாசகத்தைக் கொண்டு ( ஆக்கப்பட்ட இப்பத்திரிகை பழம்பெரும் இலக்கிய புதிய ஆக்கத்தினையும், சிந்தனையையும் வளர்த் வெளிவந்த 1930 - 1958 காலப்பகுதிக்குள் 5 எழுதியிருந்தனர். இக்காலப்பகுதியில் பல எழு
அவர்களது படைப்புகளில் தென்னிந்தியச் சாய
சமூக சீர்திருத்தக் கருத்துக்களான சாதி எதிர் காதல் உணர்வுகள் என்பவற்றைக் கருப்பொருள
ஈழகேசரி ஒரு காலகட்டத்தில் வகித்த இடத் இலக்கிய ஆர்வம் கொண்ட ஒருசில எழுத்தாளர் சங்கம் என்ற பெயரிலான எழுத்தாளர் சங்கம் ஈழத் வழங்கியிருந்தது. இச்சங்கத்தை தி.ச.வரத ஈழத்துறைவன், இரசிகமணி கனகசெந்திந உருவாக்கியிருந்தனர். இவர்களால் ஆரம்பத் ஒன்று வெளியிடப்பட்டது. பின்னர் இது 1946 இ6 மாதசஞ்சிகையாக வெளியிடப்பட்ட மறுமலர்ச்சியி ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர். 1948 மார்ச் ம 24 இதழ்கள் வெளிவந்தன.
மறுமலர்ச்சி சஞ்சிகை மிகக் குறைந்த இதழ் பகுதி சிறுகதை மறுமலர்ச்சிக் காலம் என்றே காலம் என்று சொல்வது போல், ஈழத்தில் மறு முன்னணி எழுத்தாளர்களை மறுமலர்ச்சி உருவா 52 சிறுகதைகள் வெளியிடப்பட்டன. இவை சிறு கொண்டு படைக்கப்பட்டதாக இருந்ததால், பல இருந்தன.

பகுத்தறிவு இயக்கம் முனைப்புப் பெற்றிருந்த காலமாக ான மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவியல், பார்ப்பனிய அட்க்கு முறைக்கு எதிரான கருத்துக்கள், நாத்திகம்; 5ள் என்பவற்றினால் கவரப்பட்ட எழுத்தாளர்கள்
கொண்ட சிறுகதைகளைப் படைத்தனர்.
ருத்துக்களான சாதி ஒழிப்பு, அகிம்சை, மதசமத்துவம் க்கப்பட்டன. இதனால் பெரும்பாலான கதைகள் ாருளாகக் கொண்டிருந்தன.
விளைவாக தென்னிந்தியச் 3 TuJGÚNGò கதைகள்
களும், சுதேசிய உணர்வும் கொண்ட கதைகள்.
முன்னோடிகளாக இங்கு குறிப்பிட்டவர்கள் தமது ஆக்கங்களுக்குத் தென்னிந்தியப் பத்திரிகைகளான கேசரி, மறுமலர்ச்சி ஆகிய ஈழத்து பத்திரிகைகளும்
ஆரம்பமான ஈழகேசரி பத்திரிகை “எவ்வுயிர்க்கும் வெளியாகியது. குரும்பசிட்டி நா. பொன்னையாவினால் பய் பாரம்பரியங்களைப் பேணிவந்த அதே வேளையில் 5தெடுப்பதில் பெரும் பங்காற்றியிருந்தது. ஈழகேசரி 14 சிறுகதைகளை 158 சிறுகதை எழுத்தாளர்கள் த்தாளர்களை ஈழகேசரி உருவாக்கியிருந்தது.
பலைக் கொண்ட ஜனரஞ்சகத் தன்மை இருந்தாலும், ாப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தொழில் மகத்துவம், ாகக் கொண்ட சிறுகதைகள் படைக்கப்பட்டன.
தைப் போன்று, 1943 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் களினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் துச் சிறுகதை வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பை ராஜன் அ.செ.முருகானந்தன், க.காமதியாபரணம், ாதன், அ.ந.கந்தசாமி ஆகியோர் இணைந்து தில் மறுமலர்ச்சி என்ற கையெழுத்துப் பத்திரிகை ல் மாதஇதழாக அச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டது. ன் ஆரம்ப ஆசிரியர்களாக அ.செ.மு. திச.வரதராஜன் தத்தில் இருந்து 1948 ஒக்ரோபர் வரை மொத்தமாக
களோடு நின்று விட்டாலும் அது வெளிவந்த காலப் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மணிக்கொடிக் றுமலர்ச்சிக் காலம் என்று கூறும் அளவுக்குப் பல க்கியருந்தது. இக்காலப்பகுதியில் 24 இதழ்களிலும் கதைக்குரிய இலக்கணங்களையும். வடிவமைப்பையும் தரப்பட்ட வாசகர்களைக் கவர்ந்திழுத்தவையாகவும்
130

Page 155
இலங்கையின் சுதந்திரத்திற்கு முற்பட்ட சமூக சீ இக்காலப் பகுதியில் ஈழகேசரி, மறுமலர்ச்சி மர் கட்டமைப்பையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்க கருவாகக் கொண்ட பல சிறுகதைகள் வெளிவந்தன எதிரான சிறுகதைகளும் வெளிவரத் தொடங்கின
இக்காலப்பகுதியில் சயாலசுப்பிரமணியத்தின் “ சாதிக் கொடுமைக்கு எதிராக மேற்றர வர்க்கத்தி
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலம்:-
இக்காலப்பகுதி 1949 தொடக்கம் 1980 வரையா இக்காலத்திலேயே பின்வரும் கோட்பாடுகளை உை நிகழ்ந்தது.
1. பாரம்பரியத்தையும், மரபுகளைம் பேணுகி 2. மாக்சிய, கம்யூனிச சித்தாந்தங்களினால் 3. மாக்சியக் கருத்துக்களுக்கு முரணானவர் 4. ஜனரஞ்சகச் சார்புடையவர்கள்.
இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்ற சிறுகை கொண்டவையாக இருந்தன.
1. காந்தியம், பெரியாரியலுடன் மாக்சியக்
தொழிலாளர் உரிமை, சமத்துவம், என்ப6 2. சமூக அடக்குமுறை, சாதிக் கொடுமைகளு 3. சமூக ஏற்றத்தாழ்வு, வறுமையின் கொடுை கருவாகக் கொண்ட சிறுகதைகள். யதார்த்தமும், மண்வாசனையும் கொண்ட 5. இலங்கை அரசின் இனப்பாரபட்சத்திற்கு
அமைந்த சிறுகதைகள். 6. இலங்கையின் கல்வி முறையில் ஏற்பட் கல்வித் திட்டம் அமுலாக்கப்பட்டதால் த நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் படைப்பாற்றல் வெளிப்படுத்தப்பட்டது. 7. இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் ெ இலக்கியங்களைப் படைப்பதற்குத் தூண் 8. சுதந்திரன் பத்திரிகையின் தோற்றமும், இ
போன்ற சஞ்சிகைகளும் தோற்றம் பெற்று கொடுத்தன.
ஈழத்தின் தமிழ் சிறுகதை வளர்ச்சியில் சு மறுமலர்ச்சியும் எவ்வாறு முக்கிய பங்களிப்பு ெ காலப்பகுதியில் வெளியாகத் தொடங்கிய சுதந்தி வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்தது. சபாரத்தினம் போன்றவர்கள் நல்ல தரமான சிறு
யாழ்ப்பாணத்தில் இருந்து சஞ்சிகைகளும், L 1971 காலப்பகுதியில் மலர் என்ற தரமான இலக்கி மட்டக்களப்பில் இருந்து வெளியானது. அது சிறுகதைகளைப் படைப்பதற்கான ஒரு களமாக

ரதிருத்தக் காலம் எனக்கூறப்படும் காலகட்டமாகிய றும் தென்னிந்தியப் பத்திரிகைகளினூடாக சிறந்த ளையும், புராண இதிகாச அரச வரலாறுகளையும் ா. இக்காலப்பகுதியிலேயே சமூக அடக்கு முறைக்கு
செல்வி’ என்ற சிறுகதை யாழ்ப்பாணத்தில் நிலவிய னரைச் சாடி எழுதப்பட்டதாகும்.
ன 3 தசாப்தங்களைக் கொண்ட நீண்ட காலமாகும். டயவர்களின் பிரவேசம் படைப்பிலக்கியத்துறையினுள்
ன்றனர். கவரப்பட்டவர்கள். கள்.
தகள் பின்வரும் கருப்பொருட்களைக் களமாகக்
கருத்துக்களை உள்வாங்கிய சிறுகதைகள் இதில் ண முக்கிய இடம் பெற்றன.
ருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட சிறுகதை. ம, சீதனக் கொடுமை, பெண்ணடிமை முதலியவற்றைக்
சிறுகதைகள். எதிரான கருத்துக்களைக் கொண்ட கருப்பொருளில்
ட மாற்றம். இக்காலப்பகுதியிலேயே சுயமொழிக் நாய் மொழியில் கல்வி கற்றவர்கள் பல்கலைக்கழகம் தமிழிலக்கியத்திற்கு புத்தெழுச்சி ஏற்படும் வகையில்
பகையிலான விமர்சனத்துறையின் வளர்ச்சி புதிய டுகோலாக இருந்தது.
}தையடுத்து, கலைச்செல்வி, மல்லிகை, சிரித்திரன், சிறுகதை வளர்ச்சிக்காக நல்ல களத்தை ஏற்படுத்திக்
தந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் ஈழகேசரியும், சய்ததோ அதே போன்று சுதந்திரத்திற்குப் பிற்பட்ட ரன் பத்திரிகை ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதை கே.எஸ்.சிவகுமாரன், நந்தினி சேவியர்; தாழையடி கதைகளை எழுதியிருந்தனர்.
த்திரிகைகளும் வெளிவரத் தொடங்கியபின் 1970 - யச் சஞ்சிகை அன்புமணியை ஆசிரியராகக் கொண்டு ஒரு சில இதழ்களுடன் நின்று போனாலும், நல்ல பும் இருந்தது.
131

Page 156
சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் தோற்ற பங்காற்றிய தினகரன், வீரகேசரி ஆகிய தேசியப் தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டத்து ‘ஈழநாடு” தினசரிப் பத்திரிகை ஈழத்தில் சி குறிப்பிடத்தக்கது.
ஈழநாடு வாரம் ஒரு சிறுகதையை வெளியிட்டு கொடுத்தது. 1995 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பான யாழ்ப்பாண இடப்பெயர்வின் பொழுது கூட் இலக்கியப்பணியையும் மேற்கொண்டு வந்தது. பெயரில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்து
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் மலையகத்தில் இருந்து வெளியான “செய்தி’ பத்திரிகையின் ப சிறுகதைத் துறையில் பெரும் வளர்ச்சி காணப்பட
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்குக் களம் அமைத் “விவேகி” தரமான சிறுகதைகளைப் பிரசுரித்தது. காரணமாக 35 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து 'மல்லிகை’ ஈழத்துச் சிறுகதைத் துறையில் பெ பல புதிய எழுத்தாளர்கள் சிறுகதைகளை அறிமுகமான்வர்களில் திக்குவல்லைகமால், மு. ஜவகர்கூpா ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இ “சிரித்திரன்’, செ. கணேசலிங்கனின் “குமரன்’, அ செம்பியன் செல்வனின் “அமிர்தகங்கை” ஆகியன
“சுதந்திரன்’ பத்திரிகை 1947 ஆம் ஆண்டு ஜூன் கொண்டு வெளிவரத் தொடங்கியது. தமிழ்த்தேசி பத்திரிகை சுதந்திரனாகும். இது முற்றுமுழுக்க இருந்த போதிலும், தமிழ் இலக்கியத்தைப் பொறுத் 1948 ஆம் ஆண்டில் இருந்து சுதந்திரன் சிறுகை
கட்சி பேதமற்ற வகையில் எல்லாத் தரப்பி தமிழ்த் தேசியவாதக் கருத்துக்களையும், மா! எழுத்தாளர்களை சுதந்திரன் உருவாக்கியுள்ளது. சுதந்திரனில் வெளிவரத் தொடங்கின.
பிரேம்ஜி ஞானசுந்தரம், சில்லையூர் செல்வராஜன் சுதந்திரனில் பிரசுரமாகியது. அவர்களைத் தொடர் செ.கணேசலிங்கன், ஈழத்துச்சோமு, எஸ்.பொ, 6 தளையசிங்கம், நாவேந்தன், சிற்பி, வரதர், ஏ.வி.பி. சுதந்திரனில் வெளியாகின.
1960க்குப் பின் சுதந்திரனில் தமிழ்த்தேசியம் கொடுக்கத் தொடங்கியதால் சிறுகதைகளுக்கு இக்காலப்பகுதியில் ஈழத்தில் ஏற்பட்டுவந்த அரசி பத்திரிகையாக்கியது.
“கலைச்செல்வி’ மாத இதழ் சிற்பி சரவணபவன வெளிவந்தது. கலைச்செல்வி தமிழ்ப்பண்பாடு, மெர்

பெற்று ஈழத்தில் சிறுகதை வளர்ச்சியில் பெரும் பத்திரிகைகளை விட 1961 இல் யாழ்ப்பாணத்தில் -ன் அமரர் கே.சிதங்கராஜாவினால் ஆரம்பிக்கப்பட்ட கதை வளர்ச்சியில் பெரும்பங்காற்றியிருந்தமை
பல புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் த்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாடு 1997 ஆம் ஆண்டு வரை செய்திப்பணியுடன் இப்பத்திரிகை தற்பொழுது, “நமது ஈழநாடு’ என்ற கொண்டிருக்கின்றது.
9(b காத்திரமான பங்களிப்பைச் செய்ததில் கண்டியில் Eயும் குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியிலும் .لڑنg-ا۔
துக் கொடுத்தவகையில் 1966-1970 வரை வெளியான 964 இல் டொமினிக் ஜீவாவின் தனிமனித உழைப்புக் ச சஞ்சிகை உலகில் முத்திரையைப் பதித்துவரும் ரும் பங்காற்றி வருகின்றது. மல்லிகையினுடாகப் எழுதிவந்தனர். மல்லிகைப் பந்தலினுடாக பகூர், சு.சக்திவடிவேல், சி.சுதந்திரராஜா, அன்பு இதைவிட ஏ.எம்.செல்வராசனின் “அஞ்சலி’, சுந்தரின் யேசுராசனின் “கலை’, சுதந்திரன் சுடர் சஞ்சிகை, வை தரமான சிறுகதைகளை வெளியிட்டன.
மாதம் 1 ஆம் திகதி கோநடேசய்யரை ஆசிரியராகக் யவாதத்தின் எழுச்சிக்குரலாக ஒலித்த முதலாவது தமிழ்த்தேசிய அரசியல் சார்புப் பத்திரிகையாக தவரையில் தேசியப்பத்திரிகையாகவே செயற்பட்டது. )தகளை வெளியிட ஆரம்பித்தது. -
0ரது சிறுகதைகளையும், சுதந்திரன் பிரசுரித்தது. கசியவாதக் கருத்துக்களையும் உடைய பல 1950 களின் பின்னரே ஆக்க பூர்வமான சிறுகதைகள்
அந.கந்தசாமி ஆகியோரின் ஆரம்பச் சிறுகதைகள் ந்து, என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா, அகத்தியர், 1. அ, இராசரத்தினம், புதுமை லோலன், எஸ். கோமஸ் எனப்பல படைப்பாளிகளின் ஆக்கங்கள்
தொடர்பான இலக்கிய முயற்சிகளுக்கு முதன்மை கொடுத்த முக்கியத்துவம் குறைந்து வந்தது. ல் மாற்றங்கள் சுதந்திரனை முழுமையான அரசியல்
ன ஆசிரியராகக் கொண்டு இலக்கியச் சஞ்சிகையாக S, கலை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்
32

Page 157
வகையில் தரமான சிறுகதைகளுக்குக் களம் அை கதாசிரியர்களாக விளங்கும் செங்கை ஆழியான், செ. செல்வன், திஞானசேகரன், தெணியான்,துவைத்தி கலைச் செல்விப் பண்ணையில் இருந்து உருவா
1950-1960 கால கட்டத்தில் வெளியான தரம பெரும் பங்காற்றியதில் கலைச்செல்விக்கு முக்கிய
இதே போன்று 1960-1961 காலப்பகுதியில் வர நல்ல சிறுகதைகளுக்குக் களம் அமைத்துக் கேடானியல், உதயணன், வரதர், செங்கை ஆ எழுதினார்கள்.
இச் சஞ்சிகைகளுடன் அமரர் எஸ். டி. சிவநாயக தினபதியில் தினமொரு சிறுகதையைப் பிரசுரித்து பிரவேசித்தமை இக்காலப்பகுதியிலேயே. சாதியம், தமிழ்த்தேசியம் போன்றவை தொடர்பான பல உ இவை அன்றைய கால சமூக, பண்பாட்டு, அரசிய இன்றும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இக் வெளியிடப்பட்டு ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு
தமிழ்த்தேசிய எழுச்சிக்காலம்
1980க்குப் பிற்பட்ட காலம் ஈழத்துச் சிறுகதை பரிமாணத்தையுமே மாற்றியமைத்து புதிய ஒரு இ
1972ஆம் ஆண்டின் தமிழ் மாணவர்களைப் பாதிச் தரப்படுத்தல், 1974ஆம் ஆண்டின் தமிழாராய்ச்சி இடம்பெற்ற தமிழினப்படுகொலைகள், 1982ஆம் வெலிக்கடைச்சிறைக் கைதிகள் படுகொலை அ காணாத பாரிய தமிழின அழிப்பு என்பன தt ஏற்படுத்தியதுடன் தமிழீழத் தாயகக் கோட்பாட்டு ஈழத்தின் அரசியல் வரலாற்றில் தமிழருக்கான உரிமையையும் கோரி ஆயுதமேந்திய இளைஞர்ச 1980 - 2002 காலப்பகுதியில் தோற்றம் பெற்ற சிறு கூடியதாக உள்ளது.
அரச பயங்கரவாதத்திற்கு எதிரான கரு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அ அகதிமுகாமில் மக்களின் வாழ்க்கை எறிகணை, விமானத்தாக்குதல்களையு கதைகள். 5. ஆயுதப் போராட்டத்தையும், அதன் விை m நியாயப்படுத்தும் வகையிலுமான பல
6. பெண்மையின் அவலங்களும், அநீதிக்கு
கொண்ட சிறுகதைகள். 7. புலம்பெயர்ந்த மக்களின் துயரங்கள், L இழப்புக்கள், போரினால் அங்கவீ6 போன்றவற்றைக் கருவாகக் கொண்ட வெற்றிகளும் நுட்பங்களும் அவை தொடர்பான கருக்கள் கொண்ட கதை

மத்துக் கொடுத்தது. இன்று ஈழத்தின் முன்னணிக் யோகநாதன், யாழ்நங்கை, பெனடிக்பாலன், செம்பியன் லிங்கம், செ.கதிர்காமநாதன் (வரதர்) போன்றவர்கள் னவர்களே.
ான ஈழத்துச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பமான பங்கு உண்டு.
தரினால் வெளியிடப்பட்ட “புதினம்’ வார இதழ் கொடுத்தது. புதினத்தில், கனக செந்தில்நாதன், ழியான், ஆகியோர் காத்திரமான சிறுகதைகளை
ம் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வந்தமையால் பல புதியவர்கள் இத்துறையினுள் ஆலயப்பிரவேசம், மண்வாசனை, சீதனக் கொடுமை, டணர்ச்சிபூர்வமான சிறுகதைகள் படைக்கப்பட்டன. ல் நிலைமைகளின் போக்கு பற்றிய ஒரு பிரக்ஞையை காலப்பகுதியிலேயே பல சிறுகதைத் தொகுப்புகள்
வளம் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சியில் மட்டுமல்ல இலக்கியப் போக்கின் |லக்கியச் செல்நெறியை ஏற்படுத்தியது.
5கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட உயர்கல்வியிலான படுகொலைகள், 1977ஆம் ஆண்டில் கொழும்பில் ஆண்டின் யாழ்நூலக எரிப்பு, 1983ஆம் ஆண்டின் தைத் தொடர்ந்து 1983இல் இடம் பெற்ற வரலாறு மிழ் மக்களிடையே தமிழ்த் தேசிய உணர்வினை வேட்கையையும் உருவாக்கியது. அதன் விளைவாக ா பாரம்பரிய ஆள்புலத்தையும், இறைமையையும் 5ளின் போராட்டம் வலுப்பெற்று இந்தப்பின்னணியில் றுகதைகளில் பின்வரும் பண்புகளை அவதானிக்கக்
ருத்துக்கள் கொண்ட சிறுகதைகள். அவலங்களை வெளிக்காட்டும் தன்மை. பற்றிய கருப்பொருள். ம், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களையும், கொண்ட
)ளவாக இளைஞர்கள் இயக்கங்களில் இணைவதை கதைகள் தோற்றம் பெற்றன.
எதிரான சவால்களுக்கு முகம் கொடுக்கும் போக்கும்
பாலியல் வன்முறைகள், காணாமல் போனவர்களின் னமுற்றோர் துயரங்களும், உறுதித் தன்மையும் டவை தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் ஈழத்தமிழர்களில் ஏற்படுத்திய உணர்வலைகளும்
56T.
33

Page 158
8. முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வு ஏற்ட 9. உழைப்புத்தேடி மத்திய கிழக்குக்கு கருப்பொருட்களை மையமாகக் கொண் எழுச்சிக்காலமான 1980 களில் பின்னர்
இவற்றுக்குக் களம் ஏற்படுத்திக் கொடுத்த பிரதேசப் பத்திரிகை (தற்போது வெளிவருவதில்6ை கொழும்பில் இருந்து வெளிவரும் தினமுரசு, சரிநி வெளிவருவதில்லை) வீரகேசரி, தினக்குரல், சுட
இவற்றை விட வெளிச்சம் சஞ்சிகை நவீன சிறுகதைகளை பிரசுரித்து ஈழத்தமிழர்களின் போரா தமிழ்த்தேசியம், விடுதலைப்போராட்டம் தொடர்பான தாமரைச் செல்வி, கருணாகரன், இணுவையூர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.வெளிச்சம் வன்னியில் இருந்து வெளிவரும் கலை இலக்க தரம்மிக்க சஞ்சிகையாக வெளிவருவது குறிப்பிட
வெளிச்சத்தில் இடம்பெறும் சிறுகதைகள் பல களநிலை அனுபவத்துடன் யதார்த்தமாக சித்தரிக் இச்சிறுகதைகளை எதிர்காலத்தில் ஆய்வுக்கு பேச வேண்டிய தேவை உள்ளது.
தமிழ்த்தேசியம், தமிழ் பாரம்பரிய நிலப்பாதுகாப்பு, தொடர்பான சிறுகதைகள், இன்று ஈழத்தில் முக்கி எழுத்துப்போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்களி பிரதியாக்கங்களைக் கொண்டும் அறிந்து கொள்ள
அந்தவகையில் காலத்தின் தேவையை அறிந் பல இளம் எழுத்தாளர்கள், போராளி எழுத்தாளர் கோகிலா மகேந்திரன், ஏ.ஆர்.டேவிட், வல்வைந இணுவையூர் சிதம்பர திருச்செந்தில்நாதன், மு. தாமரைச்செல்வி, ஆதிலெட்சுமி, சிவகுமார், ! கிருஸ்ணசிங்கம் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
இவர்களில் பலரின் சிறுகதைகள் தொகுப்புக சிறுகதைகள் பத்திரிகை, சஞ்சிகைகளுடன் மட்டும் வரலாற்றினுள் ஆவணப்படுத்தப்படாமலேயே பே
ஐரோப்பியர்களின் கலை வடிவமாக 1930களில் வளர்ச்சிப்போக்கானது இன்று தமிழ்த்தேசியத்ை போராட்டத்தையும், நியாயப்படுத்தும் அளவுக்கு சர் பின்வருவன துணை நிற்கின்றன என்றால் மிகைய
01. ஈழத்தின் அரசியல் பொருளாதார நிை 02. போரும், இடப்பெயர்வுகளும், ஏற்படுத் 03. ஈழத்தில் அதிகளவில் வெளிவந்து (
பாடசாலைகளின் சஞ்சிகைகளும், மா6 04. ஈழத்தில் வளர்ந்து வரும் பிரசுர முயற்

டுத்திய தாக்கங்களும் அவற்றின் அவலங்களும்
ச் செல்பவர்களின் அவலங்கள் இவ்வாறான பல நூற்றுக் கணக்கான சிறுகதை “ தமிழ்த்தேசிய தோற்றம் பெற்றன.
பகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ). மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் தினக்கதிர் கர் (தற்போது நின்றுவிட்டது) ஆதவன் (தற்போது
ஒளி என்பன முக்கிய பங்காற்றி வருகின்றன.
இலக்கியத்துடன், போராட்ட வடிவம் சார்ந்த
ட்ட வரலாறுகளை ஆவணப்படுத்தியும் வருகின்றது. சிறுகதைகளை எழுதிவருவோர்களுள் ஆதிலட்சுமி, சிதம்பர திருச்செந்திநாதன், முல்லை கோணேஸ் சஞ்சிகை, கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ய சஞ்சிகையாக இருந்தபோதும், அது இன்றும் த்தக்கது.
போராளிகளால் எழுதப்படுபவையாக இருப்பதும் கப்படுவதுடன் உணர்வுபூர்வமாகவும் விளங்குகின்றன. உட்படுத்தப்படும்போது தனித்துறையாக வைத்து
விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்கள் யத்துவம் அடைந்துவ்ருவதை தமிழ் மொழித்திறன் ரின் எழுத்தாக்கங்களைக் கொண்டும் நாடகப் லாம்.
து மக்கள் இலக்கியம் படைத்து வருபவர்களுள் கள் ஆகியோருடன் தெணியான், செங்கையாழியான், அனந்தராஜ், முல்லைக் கோணேஸ், கருணாகரன், ராதாகிருஸ்ணன், மு.பசுவீர், திக்குவல்லைகமால், 5. தணிகாசலம், கனகசபை தேவகடாட்சம், ந.
ளாக வெளிவந்த போதும் பெரும்பாலனவர்களின் நின்றுபோய் விட்டதால் அவை இலங்கை சிறுகதை ய்விடும் அபாயத்தையும் எதிர்நோக்குகின்றன.
ஈழத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுகதைகளின் தயும், தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் வதேச தரத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளமைக்கு ாகாது.
D.
ய கள நிலை காண்டிருக்கும் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும், எவர்களின் கையெழுத்துச் சஞ்சிகைகளும் சிகளும், வாசிப்புத் திறன் விருத்தியும்.
14

Page 159
05. புலம்பெயர்ந்த நாடுகளின் தமிழ் அை
மற்றும் இலக்கியப்போட்டிகள். 06. பாடசாலை நூலக அபிவிருத்தி முயற்ச்
இவ்வகையில் ஊட்டி வளர்க்கப்பட்ட ஈழத்துப்ப அவற்றில் கூறப்படும் தீர்வுகளும் சர்வதேசத்தி திருப்புவதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்த
இவ்வாறு பல்வேறு காலகட்டங்களிலும் வளர்ச்சி தனித்துவமானதாகவும், அடையாளப் படுத்தப்பட்டத அனுபவங்களின் பிரதிபலிப்பே காரணமாகும்.
இன்று ஈழத்து தமிழ்சிறுகதை முயற்சியானது இ உணர்வு பூர்வமாகவும் யதார்த்தமாகவும், தீர்வுக் தமிழ்ப்பிரயோகம் மிக்க சிறுகதைக்கான இலக்க ஈழத்தவர்கள் என்ற வகையில் நாம் ஒவ்வொருவ
அந்த வகையில் ஈழத்துச் சிறுகதை முயற்சியான என்றே கொள்ள வேண்டும்.
。米米米米米米米米米米米
米米米米米米米米米米来米米来米米米米米米米米米米米>
米米米米米米米米米水水水冰冰米米>
ஒருவன் தன்னிட கல்வி செல்வம். பொருட்டும் தன் கு ஓரளவே செலவிடல உலக நன்மைக்காகே என்னுடையதை எல் கவே செலவிட்டால்,
N

>ப்புகள் வருடாவருடம் நடாத்திவரும் சிறுகதை
கள்.
டைப்பாளிகளின் சிறுகதைகளின் கருப்பொருட்களும் ன் கவனத்தை ஈழத் தமிழர்களின் விடயத்தில் ருக்கலாம்.
பெற்ற ஈழத்துச் சிறுகதையின் வளர்ச்சிப்போக்கானது ாகவும் விளங்குவதற்கு எழுத்தாளர்களின் களநிலை
ந்தியச் சிறுகதைகளைவிடத் தரம் வாய்ந்ததாகவும், 5ான ஒரு வழிகாட்டியாகவும் உள்ளதுடன் தூய ண வரம்பை கொண்டவையாகவும் இருப்பதற்கு ரும் பெருமைப்பட வேண்டும்.
து அடுத்த உயர்படி நிலைக்குத் தயாராகிவிட்டது
米米米米米米米米冰冰米
k米米米米米米米米米米米米米米米米米水米米米米米米米
k冰冰米水米米米米米米米米米冰冰米
ம் உள்ள அறிவு, முயற்சி, ஆகியவற்றைத் தன் நிம்பத்தின் பொருட்டும் )ாம். மீதமுள்ளவற்றை வ செலவிட வேண்டும். லாம். என் பொருட்டா நான் திருடன் ஆவேன்.
الص=

Page 160
இன்றைய உலகமானது விஞ்ஞான உலகிலிரு போடுகின்றது. ஆயிரம் மைல்களுக்கப்பால் உ கையடக்கத் தொலைபேசியின் கட்டமைப்புக்கு: ஆணைக்குக் காத்துக் கிடக்கின்றது. இன்ரநெ மயத்திற்கு நுனிவிரலின் செயற்பாடே மூலகாரணம் கட்டுப்பாட்டுக்குள் அடங்கவில்லை. ஏன்? வரை -ஓவியக்கலையை, பலப்பல கோணங்களி உலகெங்கும் பல்லாண்டு காலமாக பறைசாற்றி
அந்த அறிவு, அந்த உள்ளுணர்வுதான் ஆதிகாலத்திலிருந்து ஆதிவாசிகளின் அடிம6 கலையாகவும் பரிணமித்து ஐயாயிரம் ஆண்டுகளிற் சுவர்களிலும் கிறுக்கிய உருவங்கள் இன்று உரு உலகிலேயே பரந்து விரிந்து அழகுக்கலை என்று ஆட்கொண்டு விளங்குகின்றது என்றால் அது மீ
ஓவியக்கலை என்றால் என்ன? என்ற ஒரு ே விடை பகள்வர். ஆனால் ஒருவன் தனது உள்ள கண்ட பயங்கர காட்சிகளையும் மொழி பேசத்தெரி மலைக்குகைகளிலும் குகைச் சுவர்களிலும் குறியீ( அதைக் கண்டு களிக்கவும் ரசிக்கவும் உணரவும் கலவையினால் வரைந்து ஆரம்பித்து வைத்த அத்திவாரமாக அமைந்தது என்று கலை ஆராய் அந்த ஓவியக் குழந்தை பலரது கைகளிலே தவழ் அரவணைப்பிலே குகை ஓவியங்களாக, பாரம்பரி ஓவியங்களாக “கியுபிசிம்’ என்ற கேத்திர கணித முது பெரும் கலைஞானமாக, கலைகளின் ெ வருகின்றாள் என்றால் அது மிகையாகாது.
நுண் கலைகள் என்று சொல்லப்போனால் இணைபிரியாத சகோதரிகளாக விளங்குகின்றன. குழந்தைகளை மட்டுமல்ல கல்விமான்கள், கொண்டேயிருக்கின்றது. நான் ஓர் ஓய்வு பெற்ற கலைஞன் என்ற முறையிலும் இந்த மக்களின் அ விரும்பி வரவேற்கின்றேன்.

லை! அது காலத்தின் கண்ணாடி !!
சிற்பக் கலாநிதி செ. சிவப்பிரகாசம் ஓய்வு பெற்ற சித்திராசிரியர், யாழ். மத்திய கல்லூரி யாழ்ப்பாணம்.
ந்து முன்னேறி கணினிமய உலகமாக மாறி வீறுநடை உள்ள நாடுகளெல்லாம் சுருங்கி அரை நொடியில் ள், நுனிவிரலின் அழுத்தத்திற்கு அடங்கி ஒடுங்கி ற் என்றும் ஈமெயில் என்றும் இன்னோரன்ன நவீன ) ஆகும். ஆனால் ஓவியக்கலை அப்படியானதொரு நுனிவிரலின் ஆதிக்கமும் அன்று தொட்டு இன்று ல் ஆக்கங்களை உருவாக்கி அதன் வெற்றியை வருவதை மக்கள் நன்கு அறிவார்கள்.
மனிதனின் மொழியோ, பாஷை யோ தெரியாத னத்தில் உருவாகிய உள்ளுணர்வே ஒவியமாகவும் கு முன்பாக குறியீடா வும் ரேகையாகவும் குகைகளிலும் )மாறி நிறம்மாறி ஒரு மாபெரும் கலை விருட்சமாக ம் நுண்கலை என்றும் உன்னதஸ்தானத்தில் மக்களை ைெகயாகாது.
கள்வியை எழுப்பினால், பலரும் பலப் பல விதமாக ாத்து உணர்வுகளையும் மனவெழுச்சிகளையும், தான் பாத காலத்திலே, ஆதிவாசியொருவன் தான் வாழ்ந்த கெளாக சிறு சிறு கோடுகளினால் கிறுக்கி, மற்றவர்கள் செய்ய கரிக்கட்டி, எலும்புக் கொழுப்பு ஆகியவற்றின் ானே, அந்த விழாத்தான் அன்று ஓவியக்கலைக்கு ச்சி வல்லுனர்கள் கூறுகின்றார்கள். அன்று பிரசவித்த ந்து வளர்ந்து ஒடித்திரிந்து உருமாறி நவ நாகரிகத்தின் ய ஒவியங்களாக, மறுமலர்ச்சி ஓவியங்களாக, நவீன கனபரிமாண ஒவியங்களாக யௌவனப் பருவம் மாறி பாக்கிஷமாக ஓவிய மங்கையாக உலகிலே பவனி
ஓவியக்கலை, சங்கீதம், நடனம் இம் மூன்றும் நுண்கலையின் ஓர் உறுப்பான ஓவியக்கலை இன்றைய பெரியோர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துக் சித்திராசிரியர் என்ற முறையிலும் கைதேர்ந்த சிற்பக் ஆர்வத்தையும் பெரியோர்களின் ஆவலையும் பெரிதும்
36

Page 161
கலையில் “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வை சிற்பக் கலையையும் எனது இரு கண்களா தலைமுறையினருக்கும் இளம் சந்ததியினருக்கும் பயில்கின்ற மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காகவு அர்ப்பணித்து இந்தப் பாரம்பரிய கலைகளை அ நடாத்தி அயராது உழைத்து வருகின்றமைக்கு இ
இலங்கையின் அனுபவம் மிக்க ஓர் ஓவிய, சிற்ட நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. இன்ை சிற்பக்கலையையும் விரும்பிப் படிக்கும் மாண6 பயன்படக்கூடிய விதத்தில் ஓர் நூலானது இன்று ஒரு ஆதங்கம் என் மனத்தை வாட்டி வந்துள்ள வைப்பேனென்று முயற்சியெடுத்துள்ளேன். அத் தகவல்களும் சேகரித்துக் கொண்டிருக்கின்றேன். கல்லூரி மாணவனாகவும் யாழ் மத்திய கல்லூ நுண்கலைத் துறையில் சித்திரமும் வடிவமைப்பு கடமையாற்றிய நான் கலை பயிலும் மாணவர்க அர்ப்பணித்துள்ளேன். இனி.
நுண் கலைகளுக்கெல்லாம் அன்னையாக கலைகளில் ஓங்கி நிற்பது ஓவியக்கலையும் சிற்பக் பண்டைய பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பது த கடமையாகும். ஓவியக்கலை எனது வாழ் உணர்வளிக்கின்றது. என் உயிரிற்கு திருப்திக்காக ெ மேம்படுத்தவும் மக்களினை ஓவியக் கலையில் ர கந்தாசாமி கோவில் போன்ற பிரசித்தி பெற்ற ட வளர்க்க அரிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஒவ் உள்ளத்து உணர்வுகளை, உயரிய எண்ணங்களை : வருகை தரும் பக்தர்களின் மனதிலே ஓவியக்கல் பார்வையில் மனமுருகி அந்த ஓவியங்களின் வீற்றிருப்பவர்களை காணக்கூடியதாக இருக்கின்றது
சிறந்த ஓவியனே சிறந்த சிற்பியாக விளங்கமு ஓவியக் கலையில் பலவிதமான தொழில் நு வெளிக்கொணர்ந்து மக்கள் அதனைக் கண்டு, ! செய்வதே ஓவியத்தின் பரம இரகசியம். அவ் நு
உருவ வேறுபாடு மனவெழுச்சி (பாவம்) உருவ ஒற்றுைைம (சாதிருச்சயம்) வர்ணக்கலவை (பகட்டுத் தோற்றம்) - 6 தூரதரிசனம் (அண்மை - சேய்மை) தளம் (மேடுபள்ளங்களையும், தொழில் நுட் ஆகியன ஒவியக் கலையில் ஓவியன் கை நுட்பங்களை மதிநுட்பத்தோடு அனுசரித்து தன்மை பெறும்.
இன்றைய காலகட்டத்தில் ஓவியக்கலை எங் ஓர் ஒப்பற்ற கலையாகும். ஏனெனில் இன்றைய ம படிக்க பல்கலைக்கழகங்கள் வழிவகுத்துள்ளன.
1

யகம்” என்ற பெரு நோக்குடன் ஓவியக்கலையையும் க போற்றிப் பாதுகாத்து இனிவரும் இளைய எனது ஆத்ம திருப்திக்காகவும் அக்கலையைப் எனது வாழ்நாள் முழுவதையும் சமூகப் பணியாக }ழிய விடாது காப்பாற்ற இலவச வகுப்புக்களை இக்கலைத்தாயின் உயிர்ப் பிச்சையே காரணமாகும்.
ஆசிரியர் என்ற முறையில் எனக்கு ஓர் மனக்குறை றய மாணவ சமுதாயத்துக்கு, ஓவியக்கலையையும் வர்களுக்கு வழி காட்டியாக எந்த விதத்திலும் வரை தமிழில் வெளியிடப்படவில்லையே என்கிற து. ஆனால், அந்தக் குறையை விரைவில் தீர்த்து தோடு கலை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், கிட்டத்தட்ட 55 வருட காலமாக நுண்கலைக் சித்திர ஆசிரியனாகவும் யாழ் பல்கலைக்கழக ம் என்ற பிரிவிற்கு வருகை விரிவுரையாளனாகவும் ளுக்காகவும் தமிழ்ச் சமூகத்திற்காகவும் என்னை
விளங்குபவள் சித்திரக்கலை என்றே கூறலாம். கலையுமே என்றால் அது மிகையாகாது. தமிழரின் மிழ் மக்களினதும் தமிழ்ச் சமூகத்தினதும் மாபெரும் க்கைக்கு உணவளிக்கின்றது. என் மனதிற்கு தய்வ தலங்களை நாடினேன். தெய்வீகக் கலையை சனையை ஏற்படுத்தவும் யாழ்ப்பாணத்தில் நல்லூர் Iல தெய்வ ஆலயங்களில் தெய்வீகக் கலையை 1வொரு தெய்வ ஆலயங்களிலும் எனது தெய்வீக உருவமாக்கி, வண்ணக் கோலங்களால் ஓவியமாக்கி, லையின் பெருமையை உணர்த்தி, அந்த தெய்வீகப் அடியிலே உட்கார்ந்து தியானித்துப் பரவசமாக து. என்னே! இதுவன்றோ ஓவியக்கலையின் மகிமை!!
டியுமென்பது காலத்தால் நான் கண்ட முடிவாகும். ட்பங்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை bளித்து, ரசித்து, மனம் நெகிழ்ந்து பரவசமடையச் ட்பங்களாவன,
)ாவண்ய யோஜனம்
பத்தையும் தோற்றுவிக்க வர்ணங்களைக் கலத்தல் டப்பிடிக்கவேண்டிய முக்கிய அம்சங்களாகும் இந்த ஓவியங்கள் வரைந்தால் அந்த ஓவியம் தெய்வீகத்
5ள் வாழ்வியலின் ஓர் அங்கமாக அமைந்துவிட்ட ாணவ சமுதாயம் ஓவியக் கலையில் பட்டப்படிப்புப் ஓவியக் கலையில் உள்ளழகு, வெளியழகு இவற்றின்
37

Page 162
வேறுபாடே ஓவியத்தின் சிறப்பாகும். റ്റൂഖിധ சிறப்பம்சமாகும். உயிரோவியக் கலை ஓர் உன்ன உயிரோவியம் வரையும் போது அவரின் உருவத் அமைப்பு ஆகியன ஒருங்கே அமைந்தால்தான் சரியாக எல்லாம் அமைந்தால் தான் உயிரோவி
சிற்பக்கலையில் ஈடுபடுவோர் களி, கல், மன ஏதேனும் ஒன்றில் பரிபூரண அறிவு பெற்றிருக்க வே வேறுபடும். ஆனால் கலை நுட்பங்கள் யாவும் சி தொன்றுதொட்டு பரம்பரையாக வரும் மரபுவழிக் வரப்பெற்ற கலை சிற்பக்கலை.
ஓவியக் கலையையும் சிற்பக் கலையையும் பே கலைகளின் பொக்கிஷ இடமாக விளங்குகின்றது. அஜந்தா, எல்லோரா, சாஞ்சி, சித்தன்னவாச விளங்குகின்றது. அதேபோல் இந்தியாவிலிருந்து சமயக் கலாசாரங்களுடன் ஓவியக் கலையும் தேவநம்பியதீசன் காலத்தில் பரவிய பெளத்த சம தழுவியது மட்டுமல்லாது, ஓவியக் கலையையும் அநுராதபுரம், சிகிரியா மலைக்குன்று, ஈசுரமுனிய தேவாலயம், கல் விகாரை வட்டதாகே, லத சின்னங்களோடு சுவர் ஓவியங்களும் தம்புள்ள கு விளங்குகின்றன.
“சித்திரமும் வளர்க கலை “கலைபன
米米米米米米米状
米冰冰米米米米米米米米米米米米米米米状
冰冰米米米米米米米米冰米状
பிறருடைய குண பேசுவதில் காலத் தன்காலத்தை வீணி ஏனெனில் அப்படிச் அவனையாவது Fá சிந்திக்கப்படாமல் பி பிரயோசனமுமில்லா காலமாகும்.
Nm

கலையில் உயிரோவியம் ஒரு இன்றியமையாத த கலையாகவே மக்கள் மதிக்கின்றார்கள். காரணம் தோற்றம், ஆளுமை, வர்ண ஒற்றுமை, அங்கங்களின் அவருடைய பிரதிமை சரியாக அமையும். அப்படி யத்தில் வெற்றிகாணலாம்.
ன், மரம், செம்பு, உலோகம் ஆகிய ஊடகங்களில் ண்டும். ஊடகங்களின் தன்மையினால் செய்முறைகள் றபிகள் அனைவருக்கும் பொதுவானதே. சிற்பக்கலை கலையாகும். மரபுவழியாக கற்பிக்கப்பட்டு பயின்று
ாற்றி வளர்த்தது அதன் தாய் நாடாகிய இந்தியாவே இச்சிற்பக் கலையின் உறைவிடங்களான மாமல்லபுரம், ல் ஆகியவையே இன்றும் காட்சியாதாரங்களாக மகிந்தனின் வருகையால் இலங்கையிலும் பெளத்த சிற்பக் கலையும் இங்கு பரவத் தொடங்கியது. யத்தினால் இலங்கை மக்களும் பெளத்த சமயத்தை சிற்பக் கலையையும் இலங்கையின் பல பாகங்களான T பொலன்நறுவை, தம்புள்ள, மிகிந்தலை, எம்பக்கே நாமண்டபம் ஆகிய இடங்களில் பெளத்த சமய கை ஓவியங்களும் இன்றுவரை அழியாக் கலையாக
) கைப்பழக்கம்’ ) வளர்க கலை!! னி இறை பணி”
8米米米米米米米米冰冰
k米米米米米米米米米米米米米米米米米米米米米
k米水米米米米米米米米米水冰冰冰
தோஷங்களைப் பற்றிப்
தைச் செலவிடுபவன் லே கழிப்பவனாகிறான். செலவிடப்பட்ட காலம் வரனையாவது பற்றிச் றரைப் பற்றி யாதொரு ாமல் சிந்திக்கப்பட்ட
الص
138

Page 163
குரியன் உதித்தது உதித்ததுதான் சந்திரன் வர இட மளிக்கவில்லை வானிருள் சூழ்ந்திடச் சூரியனின் வல்லமை ஒளியெங்கும் நீங்கவில்லை யாரினி இயற்கையை மாற்றிடுவார் யாருமே பொறுப்பில்லை யென்பதுண்மை நாமினி இதற்கொரு முடிவெடுக்கும் நாட்டமே கொண்டிட யியலவில்லை!
அற்பமாய் ஓரிரு நாட்களிலே ஆண்டிடும் வல்லமை நிலைபெறுமா உட்பொருள் உணர்வுகள் அற்றதெல்லாம் உடனடி நிலைத்திடா துருப்படிகள் இப்படி இயல்புகள் இருப்பதினை ஏற்றிடாக் காரியம் செய்வதற்கு எப்படி எண்ணங்கள் தோன்றியதோ இடரதில் ஒருமை காணவில்லை!
கண்ணுக்கு எட்டாத தொலைவினிலே காண்பதைக் கற்பனை மனதினிலே எண்ணி யொருநிலைக் காக்குவதை எப்படி ஏற்றிடச் செய்திடலாம்! அண்மையில் உள்ளதை அறிந்திடவே ஆட்டமே கொண்ட இம்மனித குலம் தன்னுணர்வில் செய்யும் காரியங்கள் தகைமை யுடையதா யாக்கிடுமா?
அண்டசரா சரம் யாவையுமே அற்பமென எண்ணும் அறிவினுக்கு கண்ணொளி காதொலி மட்டுமுள்ள கற்கைகள் எதிலுமே பயன்களில்லை எல்லை யகற்றி இடம் விலக்கி இயற்கை யியல்புகள் தான்பொறுக்கி வல்லமை பெற்றிடா மனிதகுலம் வறுமையால் எங்கிலும் தத்தளிக்கும்!
12-CM 4658

மனிதன் உலகம்
39
- கவிஞர் ஏ. இக்பால்
வண்ணநிலவே நீ வந்ததெப்போ வல்லமைச் சூரியன் மறைந்ததெப்போ எண்ணத்தி லாழ்ந்தோ ருறங்கிவிட்ட ஏற்ற இயற்கை பெற்றதெய்போ கண்ணும் கருத்தும் கதிகலங்கிக் கற்பனை யாவும் சீரழிந்து எண்ணு மளவுக்கு மனிதனில்லை எப்போது சித்தம் கலங்கியது?
அறிவுடை யோருக்கே இவ்வுலகின் அற்புதம் யாவையும் அறிந்திடலாம் தெளிவுடையோரே தெளிந்து நிற்பர் தெளிவுடைப் பொருட்கள் கண்ணில்படும் அறிவு திறன்வெளி யாவையுமே அகத்துள் நிறைத்த நிறைமனிதன் ஒருவ னாவது இருப்பதினால் உலகை உருப்படச் செய்திடலாம்!
மனிதனை மையமாய்க் கொண்டுலகை மதித்திடல் முக்கியம் என்பதல்ல மனிதனை விட்டதில் அடங்குவதை மதிப்பிட மனிதனுக் காயுளில்லை மனிதனுக் குரிமையே யற்றவைகள் மனிதனே தனக்கெனக் கொள்வதினால் மனிதனே மடமை நீங்கவில்லை மனிதன்யார் உலகெது புரிகிறதா?

Page 164
படலை திறந்து விடப்படுகிறது. மெதுவாக பாடசாலை வளவிற்குள் திரும்பிய அ வாகனத்தை விட்டு இறங்கும் கவிராஜன் குழுவி வந்து கொண்டிருந்தார். யுத்தம் சப்பித்துப்பிய தமிழ் பகுதிகளின் கல்விச் நியமிக்கப்பட்டவர்கள். போரியலிலும், கல்வியிலும் சமமான பாண்டித்துவ
இப்பாடசாலையின் வளர்ச்சிக்கான தனது அர்ப்ப அவர்களைத் தனது அலுவலகத்திற்கு அழைத் கவிராஜன் உள்ளம் நகைத்துக் கொண்டது. மேற்கொண்டு எதையுமே காதில் போட மனமிரு பாடசாலையைச் சுற்றிச் சுழன்று நோக்கிய வண் கடந்த கால நினைவுகள் அவன் இதயத்தை பி அவன் கற்ற பாடசாலை இது. அவன் சுற்றித் திரிந்து, விளையாடி மகிழ்ந்து, த எத்தனை சுமைகளைச் சுமக்க வைத்த பாடசாை அவனது பள்ளி வாழ்வு தொலைந்து பல வருட அவனின் அடையாளம் முற்றாகவே மாறிவிட்டது அவனது அன்றைய வகுப்பாசிரியர், இன்று அவனை அடையாளம் கண்டுகொள்ள மு
கால நகர்த்தலை உள்ளுர எண்ணி வியந்து கெ அலுவலகத்தை அண்மித்துக் கொண்டிருந்தனர் அவனையறியாது அவனது கால்கள் நகர மறுத் அகல விரிந்த அவனது விழிகள் அந்த வேம்பு 'தேடுவாரற்றுக் கிடந்தாலும் தானாகவே வளர்ந் மகிழ்ச்சிப்பட்டுக் கொண்டான்.
அம்மரத்தின் உச்சங் கொப்பிலே தன்னந்தனியா
கொண்டிருந்தது.
தனது பால வயதிலே சகல சோகங்களையும் இ மரத்தின் கீழ் நின்று விம்மி, விம்மி அழுது கொ6 சற்று வேகமாக வீசிய கச்சான் காற்றிற்கு தலை நானென்ன மனிதனா மறந்து போவதற்கு!’ என் அவனுக்கு!
இப்போது, அதிபர் அலுவலகத்தினுள் குழுவினர் பாடசாலை நிர்வாகம், கல்வி மேம்பாடு, மாணவ கலந்துரையாடப்பட்டது.

வேம்பு மரம்
கனகசபை தேவகடாட்சம் திருமலை,
ந்த வாகனம் ஒரமாக தரித்து நின்றது. னரை காத்து நின்ற அதிபர் வரவேற்று அழைத்து
சிதைவுகளை சீர்ப்படுத்தவென
பம் பெற்றவர்கள் அவர்கள்.
பணிப்பு பற்றி பட்டியலிட்டுக் கூறிய படியே து வந்து கொண்டிருந்தார் அதிபர்.
க்கவில்லை அவனுக்கு! ணமே அவன் நடந்து கொண்டிருந்தான். றாண்டிக் கொண்டிருந்தன.
டம்பதித்த பூமி இது. 2Ꭷ6u. ங்களாகி விட்டது.
l.
pடியாது அழைத்து செல்லும் அதிபர்.
ாண்டான் கவிராஜன்.
து நின்றன.
மரத்தைச் சுற்றிக் கொண்டது. து பெரிய மரமாகி விட்டதே! தனக்குள்ளே
b ஒரு காகம் தனை மறந்து கரைந்து
இதயத்தில் போட்டு புதைத்துவிட்டு அந்த வேம்பு ண்டதை மீட்டிப் பார்த்தான்.
யசைத்து ஆடியது வேம்பு. ) சேதியைக் கூறி தலையாட்டுவது போலிருந்தது
வந்து அமர்ந்து கொண்டனர். ர்கள் நிலை, போன்றவை உச்சமாய்
140

Page 165
ஆனால் கவிராஜனுக்கு இதில் எதிலுமே நாட்ட ஒரு போதுமே அவன் இப்படி நடந்து கொண்ட மனம் குழம்பியதுமில்லை. அவன் கடந்து வந்த புதர்களிலே அவனது எண்ணங்கள் மொய்த்து நீ மனம் நிதானமிழந்து அங்காலாய்த்துக் கொண்டி கலந்துரையாடலில் இடை நடுவே எழுந்து கெ தொடர்ந்து காரியம் நடக்குமாறு கைகளால் குழு வெளியேறினான்.
மனம் தொடர்ந்து குழம்பிக் கொண்டேயிருந்தது. மீண்டும் அதே வேம்பு மரம் கச்சான் காற்றுக்குத் குழப்பத்திற்கு ஒத்தடம் தருகிறேன் வா’ என அ மனத்தின் கட்டளையை நோக்காது கால்கள் 6ே தன்னந்தனியான அந்தக் காகம், இன்னும் கரை
‘கவிராஜன்’ அது அமைப்பினால் இட்ட நாமம். பெற்றவர்கள் இட்ட பெயர் அழகுதுரை. இவன் பிறக்கும் போது தந்தையை விழுங்கியே அதனால் வறுமையே வாழ்வானது. பள்ளமும் திட்டியும் அந்தத் தாயின் பாதையில் எந்த சலனத்திற்கும் அவள் இடம் கொடாது, ச மகன் அழகுதுரையையும் வளர்த்தாள்.
‘அழகு படிப்பிலே கெட்டி. மகனை எப்படியாவது உயர்நிலைக்கு கொண்டுெ அடி நாதமாக இருந்தது. இரவு பகல் பாராது உழைக்க வேண்டியதாயிற்று வெள்ளாப்பிலே வைத்திய சாலையில் அழகு இ அவசர அவசரமாக வந்து பாடசாலைக்கு ஓடுவ மிகுதி நேரங்களில் தாயார் கடைகளுக்கு இடிய பாடசாலை விட்டு அழகு வந்தவுடன் அங்காடி மாலையிலே மீண்டும் வைத்தியசாலையில் இடி இரவில் குப்பி விளக்கில் கல்வி. அன்றாட தேவைகள் யாவும் அரைகுறை. இதுவே அவர்களது வாழ்க்கை. இந்த வாழ்வில்தான் எத்தனை, இடர்களை சந் எத்தனை வேதனைகளை சுமந்திருப்பான். அத்தனையும் தாங்கி பாடசாலைக்குச் செல்வா6 அங்கு தான் வேதனைகள் அதிகரிக்கும் இடமா
“டேய்! இடியப்பம்! உனக்கேனடா படிப்பு? யாெ கொப்பியோ, சப்பாத்தோ வாங்கமாட்டாய்! உன் இதயத்தைக் கிழிக்கும் இந்த வார்த்தைகளை ( அதாவது அன்றைய வகுப்பாசிரியரை அவன் நி
‘இடியட்பம்’ என்ற நாமம் சூட்டி அவனது ஏழ்ை தான். ‘அழகுதுரை’ என்ற பெயர் போய் இடியப்பம்’ 6 பிரபல்யமடைந்திருந்தது. ‘இடியப்பம்’ என அழைக்கும் போது அவன் இ ஏழ்மை, அவனை கையாலாகாதவனாக ஆக்கிய

மிருக்கவில்லை.
துமில்லை. 5 இளம்பருவ பாதையை சூழ்ந்திருந்த முட் ன்ெறன.
ருந்தது.
60060. )வினருக்கு சைகை காட்டியவாறு மெதுவாக
560)6luJTL9 ugl. 9ழைப்பது போல் அவனுக்குத் தோன்றியது. வம்பு மரத்தின் கீழ் போய் நின்றன. ந்து கொண்டேயிருந்தது.
பிறந்தான்.
குறுக்கே கிடந்து தடுத்தன. bட்டுப்பாட்டிோடும், கண்ணியத்தோடும் தன்னையும்,
வர வேண்டும் என்ற இலட்சியமே அந்த தாயின்
ll. டியப்பம் விற்பான்.
) TGöT. ப்பம் வழங்குவாள்.
வியாபாரியாகி விடுவான். யப்ப வியாபாரம்.
தித்திருப்பான்.
ö. க இருந்தது.
பாரத்தோட கிடக்கலாந்தானே! னால இந்தப் பள்ளிக் கூடத்திர மானம் போகுது ஒரு துளி நேயமுமின்றி பாய்ச்சும் இந்த அதிபர், னைவிலிருந்து எவ்வாறு விரட்ட முடியும்?
மையை பரிகசிக்கும் ஆரம்ப ஆளே அந்த ஆசிரியர்
ான்ற பெயரே பாடசாலை பூராகவும்
தயத்தில் இடியாக விழும். பிருந்தது.
141

Page 166
இவைகளுக்கும் அப்பால், கல்வியில் உயர்வை முழுமையாக நிறைந்திருந்தது. இந்த உந்தல் அவனை வகுப்பில் முதல் மாண ஆசிரியரால் அதை ஜீரணிக்க முடியவில்லை எ இன்றுவரை இருக்கிறது.
அவனோடு பாலவகுப்பிலே படித்துக் கொண்டிரு கல்வித் திணைக்கள உயர் அதிகாரியின் மகன். வகுப்பிலே கல்வியிலும், கல்வி சார்ந்த புற செய விஞ்ச எவராலும் முடியவில்லை. இதற்காக எம்மாத்திரம் தடைகளை அவன் எ உயர் அதிகாரியின் சலுகைகளுக்கு வாலாட்ட இருந்தது. இவற்றின் வெளிப்பாடே அழகுதுரையின் கல்வி இத்தனையும் தாண்டி அவன் தேசியத்தை நேச திறமைகளை வெளிக்கொணரும் இடத்தைத் ே சட்டிக்குள் ஒட இருந்த குதிரை, இப்போது எt மேம்பாட்டிற்காய் வியாபித்து ஓடத் தொடங்கி ( அந்த ஏழைத் தாயின் இலட்சியக் கனவு நனவு
விட்டு, விட்டு வீசுகின்ற கச்சான் காற்றிற்கு ஏற் துருப்பிடித்திருந்த எண்ணக் குமுறல்களையெல் கவிராஜன். உள்ளங்கால்களிலிருந்து உச்சந் தலைவரை ஏ வைத்துக்கொண்டிருந்தது. அவன் எண்ணங்களில் சடுதியான புதிய உதய 'ஏழ்மையினால் எந்த ஒரு மாணவனும் எமது எவராலும் ஏழை மாணவனின் உடல், உளம் ப இந்த உயர் தன்னலமற்ற தலைமைத்துவ காலி
கா. لbم. - ه ....... ا öfl----------- நீண்ட இடைவேை மரக் காகம். புதிய எண்ணங்களை ஆமோதித்து வாழ்த்தி 6 காகத்தின் பரிபாகூைடி புதிய தென்புடன் அதிபரின் அலுவலகம் நோக்
கலந்துரையாடல் முடிவுற்றுக் கொண்டிருந்தது வணக்கம் கூறி அனைவரும் அதிபரிடமிருந்து சடுதியாக திரும்பிய கவிராஜன் அதிபரை நோ “உங்களிடம் படிச்ச மோகன்ராஜ் இப்ப எங்கே ஏதோ ஒரு அதிர்ச்சியினால் அதிபர் தாக்கப்ப
அவன். அவன். இப்போ வெளிநாட்டி “அவனது தகப்பன் தொடர்ந்தும் திணைக்கள அதிபருக்கு இரண்டாவது அதிர்ச்சி!
இப்போது அவருக்கு புரிய ஆரம்பிக்கிறது. பெற்றுவிட்டார். ஏன் தம்பி! அவங்கள உங்க
6
பவ்வியமாக கேட்டவாறு அதிபர் அவன் முக கவிராஜன் முகம் வியர்த்துக் கொண்டு வந்தது கண்கள், பழுக்கக் காய்ச்சிய இரும்பையும் 6ெ

டய வேண்டும் என்ற உந்தல் தான் அவனில்
வனாக்கியது. ன்பது தான் அவனுக்கு ஆறாத காயமாக
ந்தவன்தான் மோகன்ராஜ்.
ற்பாடுகளிலும், விளையாட்டிலும் அழகுதுரையை
நிர்நோக்க வேண்டியிருந்தது. வேண்டிய கடமைப்பாடு ஆசிரியருக்கு நிறையவே
உயர்வில் அவருக்கிருந்த அஜீரணம். சித்தான்.
தர்ந்தான். Dமினம் வாழும் சொந்த மணணில், கல்வி விட்டது.
ாகி வருகிறது.
ப தலையாட்டி நின்றது வேம்பு மரம். லாம் வேம்பு மரத்தடியிலே கொட்டித் தீர்த்தான்
தோ ஒரு உணர்வு சில்லிட
ம். பிரதேசத்தில் கல்வியின்றி வாழக்கூடாது.
ாதிக்கப்படலாகாது! )த்தினுள் வெற்றி கண்டாக வேண்டும்!’
ளைக்குப் பின் மீண்டும் கரைந்தது அந்த வேம்பு
பலுவுட்டுவது போல் அவனுக்கு இருந்தது அந்தக்
கி நடக்கலானான் அழகுதுரை என்ற கவிராஜன்.
விடைபெற்றுக் கொண்டிருந்தனர். 5கி நமட்டுச் சிரிப்புடன் கேட்டான்,
(3?' ட்டதை அவர் முகம் காட்டி நின்றது.
ல்’ தொடர்ந்தான் கவிராஜன். த்தில்தான் இருக்கிறாரோ’
இல்ல. இல்ல. இப்போ ஒய்வு ருக்கு தெரியுமோ?”
தை நோக்கினார்.
ன்று கொண்டிருந்தது.
142

Page 167
அதிபரின் முகத்தை நோக்காது வேறு திை “என்னை நல்லாத் தெரியும் அவங்களுக்கு சுகம் கேட்டதாக சொல்லுங்கோ’
அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது தவித்து
மறுமொழிக்கு காத்திராமல் நடந்து கொண் மீண்டும் அந்த வேம்பு மரத்தில் பார்வை ட கச்சான் காற்று ஓய்ந்திருந்தது.
ஆனால, நல்ல சேதியைக் கூறிக் கொண்டிருந்த அ அந்த வேம்பு மரக் கொப்பில் இல்லை.
米米米米米米
米米米米水冰米米米米米°冰米米米冰冰米米米1
-k-k-k-k-k-k-k-k-k:
ஆசையை பொருளை நாடி யிற் சிக்கிய ம இயல்பாயிற்று. நிலையற்ற கல் மேற் செல்லு வெறுத்து ஐக அம் பிகை : அழுதபிள்ளை சற்றேனும் ஐய
ܩܠ

சயைப் பார்த்தவாறே கூறினான்.
நான்தான் ‘இடியப்பம்’.
க் கொண்டிருந்தார் அதிபர்.
டிருந்தான் கவிராஜன். டர்கிறது.
ந்தக் காகம் மட்டும்.
K米米米米米冰冰冰米米米冰冰冰冰冰
k米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米冰米米米米水冰水米米米米米
யுடைய உள்ளம் ஆசைப்பட்ட 2யொடுமாதலால், ஆசைவலை )ானிடர் அன்னையை மறப்பது
விளையாட்டுப் பொருள்போன்ற வி, செல்வம் என்னும் இவற்றின் Iம் உள்ளமானது, இவற்றை ன் மாதாவை நோக்குமாகில், உடனே பிரசன் னமா வாள். பால் குடிக்கும். இதற்குச் மில்லை.
محـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
143

Page 168
ஆய்வுச் செயன்முை
இன்று நாம் ஒரு விஞ்ஞானபூர்வமான யுகத் அலசி ஆராய்ந்து தர்க்கரீதியாக நோக்கும் சமுதாய அறிவியல் துறைகளில் “ஆய்வு' ஒரு முக்கிய விட எந்த ஒரு பிரச்சினைக்கும் ஆய்வுகளின் மூலமாக வருகின்றது. ஆய்வில் ஈடுபடும் ஒருவர் தனி கொண்டு தன் பணியை வெற்றிகரமாக அமைத்திட தரவுகள் எந்த அளவுக்கு முக்கியம் பெறுகி குறிப்பிடத்தக்கதாகும். வெளிக்களத்தில் பெறும் ஆய்வின் அடிப்படை எனலாம்.
‘ஆய்வு' என்பதற்குப் பல்வேறுபட்ட வரைவிலச் நோக்கின் “வாழ்வியற் களஞ்சியம்’ என்ற அகராதி தேர்ந்து தெளிதல், ஊகத்தினை மெய்ப்பிக்க உதவி மேலும் வழிகோலுதல்’ என வரையறுக்கின்றது. ஒரு விடயத்தின் ஆழமான, தெளிவான சிந்த6ை பிரச்சினைக்கான தீர்வு எனவும் வரையறுக்கலாம் அடிப்படையிலான விதிகளைக் கைக்கொண்டு ந தக்கதோர் அணுகுமுறையை, தக்கதொரு வழிகாட் அதுவோர் சிறந்த ஆய்வாகக் கொள்ளப்படும்.
ஆய்வானது தன் இலக்கினை அடைவதற்கு ஈடுபடும். அத்தகைய தரவுகளின் நம்பகத்தன்ை ஆய்வின் இலக்கு நன்றாகவோ அல்லது பிழை அடிப்படையில் அடங்கும் இரண்டாம் நிலைத்த பங்கு அல்லது நூலக ஆய்வு உள்ளடக்கப்படும் பயன்படுத்தப்பட முடியும் என்பதையே கருத்திற்
இங்கு நூலக ஆய்வு என்பது ஆய்வின் ஆழம பயன்படுத்தி ஆய்வினை மேற்கொள்ள முன்வருத கொண்டாலும் அதில் நூலகத்தின் பங்கு இல்லாம6 எய்த, சேகரிக்கும் தரவுகளில் தங்கியிருக்கும். இ மற்றும் நிறவனங்களின் ஆய்வறிக்கைகள், வெளி நிலைத் தரவுகளும் முக்கியம் பெறும். இவ்விரண்ட பிரசுரிக்கப்படாதவைகளாகவோ இருக்கலாம். தரவுகளையும் உள்ளடக்கலாம். இவற்றை ஒ இந்தவகையில் ஆய்வில் நூலகத்தின் பயன்பாடு
நூல்கள், பருவகாலச் சஞ்சிகைகள், கையெழு நாடாக்கள், நாளிதழ்கள் ஒன்றாகத் தொகுத்து இடமே நூலகம் எனப்படும். நூலகங்கள் பொது

றயில் நூலக ஆய்வின் பயன்பாடுகள்
பமு. நவாஸ்தீன் B.A(Hons)Cey MSC (Malaysia) தேசிய கல்வி நிறுவகம் - இலங்கை
தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதனையும் எழுச்சி ஏற்பட்டு வருகின்றது. இக்காலகட்டத்தில் பமாக வேகமாக வளர்ச்சி பெறுவதனைக் காணலாம். தீர்வுகாண முற்படுவது ஒரு சம்பிரதாயமாக மாறி யே வெளிக்களத்தில் பெறும் தரவுகளை மட்டும் முடியாது. ஆய்வின் இலக்கை எய்த, வெளிக்களத் ன்றதோ அதே போன்று நூலகத்தின் பங்கும் தகவல்கள், நூலகத் தரவுகள் ஆகிய இரண்டுமே
5கணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஆய்வு என்பதனை “பார்த்தல், உற்றுக் கவனித்தல், புதல், உண்மையைக் கண்டறிதல், மனித அறிவுக்கு பொதுவாக ஆய்வு என்பதனை, எடுத்துக்கொண்ட ண என்று கூறலாம். அல்லது எடுத்துக்கொண்ட ). இவ்வாறான ஆய்வு ஒன்றானது பல்வேறுவித ல்லதொரு தத்துவத்தை, நல்லதொரு தகவலை, டலை, தக்கதொரு பரிகாரத்தை வழங்க முடியுமாயின்
ப் பலவிதமான தரவு சேகரிப்பு நடவடிக்கைகளில் ம, சரிநிகர்த்தன்மை என்பனவற்றின் அடிப்படையில் யாகவோ அமையலாம். அத்தகைய தரவுகளின் தரவு சேகரிப்பின் அடிப்படையிலேயே நூலகத்தின் 1. நூலக ஆய்வொன்றுக்கு நூலகத்தை எங்ஙனம் கொள்கிறது.
ான தெளிவினைப் பெற ஆய்வாளர் நூலகத்தினைப் லைக் குறிக்கும். எந்த ஓர் ஆய்வினை எடுத்துக் மிருப்பதில்லை. ஓர் ஆய்வானது, தனது இலக்கினை த்தகைய தரவுகளில் நூல்கள், சஞ்சிகைகள், அரச ரியீடுகள், ஆண்டறிக்கைகள் எனப்பல இரண்டாம் Tாம் நிலைத் தரவுகள் பிரசுரிக்கப்பட்டவைகளாகவோ, இவற்றுள் இலத்திரனியல் சாதனங்கள் மூலமான ருங்கே கொண்டு காணப்படுவது நூலகம் ஆகும்.
நோக்கத்தக்கதாகும்.
}த்துப் பிரதிகள், சுவடிகள், நிழற்படம், ஒலி - ஒளி மக்கள் பயன்பெறும் வகையில் வைக்கப்பட்டுள்ள துவாக, பொது நூலகங்கள், கல்விசார் நூலகங்கள்,
144

Page 169
சிறப்பு நூலகங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. வழிகளில் பயனுடையது.
ஆய்வொன்றில் எடுக்கப்பட்டுள்ள விடயத்தை எடுத்துக் கூறுவதற்கும் ஆய்வில் வெற்றி பெறுவ தேவையான விபரங்களை எங்கிருந்து எவ்வாறு அத்துடன், ஆய்வாளன் தான் எடுத்துக் கொ விடயங்களை விளங்கிக்கொள்ள வரலாற்றுப் பின் பெரிதும் உதவுகின்றது. இதிலிருந்தே ஆய்வொ
ஆய்வொன்றிற்காக, நூலகத்தினை நாடும் ஒரு அறிக்கைகள், திரட்டுகள் எனப் பல தரவு மூலகங் பல்லாயிரக் கணக்கான தரவு மூலங்களிலிருந்து என்ற பிரச்சினையை எதிர்நோக்க வேண்டிவரும். வழிகாட்டல்களையும் நன்கு அறிந்து கொள்ளல் ே நூற்பட்டியல் (Catalogue) ஆகும்.
நூற்பட்டியல்கள் சிறிய நூலகங்களில் புத்தக 6 பொதுநூலகங்களில் அட்டை நூற்பட்டியல் (Car நூற் பட்டியல்களை நூற்பட்டி என்று அழைப்பர்.
அ. அகராதி நூற்பட்டி அல்லது அகரவரிசை 35. 55,55616OLD blipUp (Divided Catalog 3). Löi IL|6).IT bIDLJL L2 (Classified Catalog
என்றவாறு பாகுபடுத்தப்படும். இவற்றுள் பகுப்பு
அ. அகரவரிசைப்படுத்தப்பட்ட முறை ஆ. பகுப்பு வாரி நூற்பட்டி/முறைப்பகுப்பு நூற்ப
என்றவாறு மேலும் உப பிரிவுகளாகப் பாகுபடுத்தி எளிதில் கிடைக்கும் வண்ணம், ஆசிரியர், தை அமைக்கப்பட்டிருக்கும். இவை ஒரு நூலகத்தில் சிரமங்களை எதிர்நோக்காது இலகுவில் பெற்றுக்ெ
இவ்வேளையில் தான் ஆய்வாளன் தன் ஆt கண்டு கொள்வான் என்பதில் ஐயமில்லை. வெளி வரலாற்றுக் காரணிகள், விடயம் பற்றிய தெளிவா அளித்துவிடும். இந்தவகையில் ஆய்வாளன் விபரங்களைத் தகுந்த முறையில் ஆய்விற்கு உத ஆய்வு ஒன்றில் முற்படும் போது, தன் ஆய்வுக்க மட்டுப்படுத்திக் கொள்வோரும் உண்டு. இத்தேன் அவற்றுள் சில :
அ. ஆய்வாளன் தனக்குத் தேவையான தரவு
பெறமுடியும் எனக் கருதினால்,
ஆ. ஆய்விற்கான காலம் குறுகியதாக இருப்
இ. ஆய்விற்கான முதனிலைத்தரவுகள் பெறு: (உதாரணம்: உள்நாட்டுப் போர், கலவரம்

இத்தகைய நூலகங்கள், ஆய்வாளருக்குப் பல்வேறு
நன்கு விளங்கிக்கொண்டு, அதனைத் தெளிவாக தற்கும் எனச் செறயற்படும் ஆய்வாளன் தனக்குத் பெற்றுக்கொள்ளல் வேண்டும் எனத் தீர்மானிப்பான். ன்ட கருப்பொருள் தொடர்பான பல அடிப்படை எணிகள், தன்மை எனப் பலவற்றை அறிய நூலகம் 1றிற்கான நூலக ஆய்வு தொடங்குகிறது எனலாம்.
வள், அங்கு பலதரப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள், 5ள் இருப்பதனைக் கண்டு கொள்வார். அவ்வாறான
எவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் இதற்காக நூல் நிலையத்திலிருக்கும் பலவிதமான வண்டும். இதில் முதன்மையாக அறிய வேண்டியது
படிவங்களிலும், பெரிய குறிப்பாக, கல்விசார் மற்றும் 1Catalogue), ஆகவும் காணப்படும். இவ்வட்டை
இந்நூற்பட்டிகள் -
bibull 9. (Dictionary Catalogue) ue) ue)
புவாரி நூற்பட்டிகள்,
ہوا۔"
நோக்கப்படும். இத்தகைய நூற்பட்டிகள், நூல்கள் லப்பு, குறியீட்டெண்கள் என்ற அடிப்படையிலும் நூல்களையும், பிற தேவையானவற்றையும் பெறுவதில் 5ாள்ள அல்லது அடையாளம் காண உதவுகின்றது.
விற்கு நூலகத்தின் பங்கின் முக்கியத்துவத்தைக் க்களத்தில் திரட்டமுடியாத, வரலாற்றுப் பதிவுகள், ன அறிவு என்பனவற்றை ஆய்வாளனுக்கு நூலகம் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் தேவையான வும் வகையில் பாதுகாத்தல் வேண்டும். மேலும் “ன அனைத்துத் தேவைகளையும் நூலகத்திற்குள் வ பல நிலைகளில் ஏற்படலாம். உதாரணத்திற்கு
கள், விபரங்களை நூலகத்தில் முழுமையாகப்
ன் பதில் தடங்கல்கள் ஏற்படின்,
5

Page 170
மேலும் ஆய்வாளன் தன் ஆய்விற்காக நூலக நூலகத்தின் பங்கானது பெரிதும் அவ்வாய்விற்கான ஆய்வினை மேற்கொண்டு தொடர உதவி நிற்கு ஆய்வினை அணுக வேண்டிய புலமையினையும் ஆய்வொன்றில் நூலகத்தின் பங்கு மகத்தானது எ6 இருக்கின்றது.
அண்மைக் காலங்களில் நன்கு வளர்ச்சி பெற்று Technology) பல நூலகங்கள் பயன்படுத்தத் தெ வடிவங்களிலிருந்த நூற்பட்டியல்கள் கணினிமU தேடுவதிலும், பெறுவதிலும் உள்ள நேர விரயம், ! நூற்பட்டியலில் உள்ளது போன்றே, நூல்கள், தகவல்களும் ஆசிரியர் பெயரடிப்படையிலும் பாடல் எனப் பல வகைகளிலும் வகைப்படுத்தப்பட்டுத் தீ மட்டுமன்றி, நூலகங்கள் தமது தரவுக் களத்தை நூலகங்களுக்கிடையிலான வலையமைப்பினின்றும் பயக்கக்கூடியதாக உள்ளது.
தேவைப்படும் நூல்கள், ஆய்வுகள், சஞ்சிகை முடிவதுடன், நூலகத்திற்குச் செல்லாமலே இவற்ை குறித்த நூலகத்தில் ஒருவர் பெற விரும்புகின்ற வலையமைப்பில் அங்கம் வகிக்கும் வேறு நூலகங்க தேடல் மேற்கொண்டு நூலுக்கான வேண்டுதலை பல நாடுகளிலும் உள்ள நூலகங்கள் இவ்வளப்ப
மேலும் இணையத்தளமும் நூலகம் போன்ற இணையத்தளத்தில் ஏராளமான கட்டுரைகள், ெ இணையச் சஞ்சிகைகள், சஞ்சிகைகள் எனப்பல க இணையத்தில் இத்தகைய கல்விசார் விடயங்கை சேவைத் தரவுகளை வழங்கும் பிரிவுகள் (web ஒருவருக்கு மாத்திரமன்றி, சகலருக்குமே பயன் தருகின்ற மூலங்களை கிடைக்கச் செய்வதில் ஆய்வாளர் இதன்மூலம் பெறும் பயன்கள் ஏராளம் செய்யப்பட்ட ஆய்வுகள் பற்றியும் முறையியல்கள் முடிவதுடன் மேலதிக இலக்கிய அறிவினையும் ஆய்வென்பது முன்னெப்போதுமில்லாத வகையி: மிகையாகாது.
மேலும், ஆய்வொன்றில் நூலகத்தின் பங்கு அ தன்மைகள் தோன்றும். அவற்றுள் சாதகத் தன்
1. வெளிக்களம் சென்று ஆய்வுக்கான தரவுச கூடிய தரவுகளை நூலகத்தில் பெறலாப்
2. நூலகத்தில் கிடைக்கும் பலதரப்பட்ட த
3. நூலகத்தில் இருக்கும் நூல்களிலுள்ள ே அதன் அனுபவங்களைக் கொண்டு தன.
4. வெளிக்களத் தரவு சேகரிப்பிற்குச் செல்
ஆய்வு பயன்தரும்.
எனப் பலவற்றைச் சாதகத் தன்மைகளாக வா

3தில் ஆரம்ப ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, ஆரம்பப் பணிகளை நன்கு தெளிவான அறிவுடன் ). ஆய்வினைப் பற்றிய தெளிவான அறிவையும் நூலக ஆய்வானது ஆய்வாளனுக்கு அளிப்பதில் ன்பதனை இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாக
விட்ட தகவல் தொழில்நுட்பத்தைப் (Information ாடங்கியுள்ளன. இதன் பயனாக, புத்தக அட்டை பமாகி வருகின்றன. ஆய்வாளன் நூல்களைத் சிரமம் ஆகியவற்றை இது குறைத்து வருகின்றது. ஆய்வுகள், கட்டுரைகள் போன்ற சகல நூலகத் பிடய அடிப்படையிலும் நூல் எண் அடிப்படையிலும் நகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அது i (Data Base) Q6O)600Tugb56T 66O)6ùuJ6OLDi Ligato, ) இணைத்து வைக்கின்றன. இது மேலும் நன்மை
கள் போன்ற சகலவற்றையும் கணநேரத்தில் பெற றத் தேடி தமக்கு ஒதுக்கிக் கொள்ளவும் முடிகின்றது. நூல்கள் இல்லாது விடின், நூலகம் கொண்டுள்ள களுக்கு இணையத்தினூடாகவே சென்று இலக்கியத் யும் முன் வைக்கக்கூடியதாக உள்ளது. உலகின் ரிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
சேவையினையே ஆற்றி வருகின்றது. இன்று விமர்சனக் கட்டுரைகள், ஆய்வுகள், அறிக்கைகள், ல்விசார் விடயங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ள வழங்குவதற்கெனவே பல ஏராளமான இணையச் Server) காணப்படுகின்றன. இவை ஆய்வாளர் படக்கூடியவகையில் நொடிப்பொழுதில் அறிவைத் காத்திரமான பங்களிப்பைச் செய்து வருகின்றன. ). தான் மேற்கொள்ளும் ஆய்வு குறித்து ஏற்கனவே பற்றியும் பரந்துபட்ட அளவில் அறிந்து கொள்ள பெறுகிறான் என்பதில் ஐயமில்லை. இதனால் ல் நன்கு இலகுபடுத்தப்பட்டுள்ளது எனக் கூறின்
மையும் விதத்தினைப் பொறுத்து பல சாதக பாதக மைகள் சிலவற்றை நோக்கினால்
ளைப் பெறுவதை விட செயலாற்றல் மிக்கமுறையில்
)・ * ரவுகளை ஒப்பிட்டு ஆராய முடியும். வறுபட்ட ஆய்வு முறைகளை நன்கு அவதானித்து, து ஆய்வினை வெற்றிகரமாக அமைக்க முடியும். ல முடியாத சூழ்நிலைகள் ஏற்படும்போது நூலக
சைப்படுத்திக் கொண்டே போகலாம்.
46

Page 171
ஆய்வொன்றில் மிகையாக நூலகத்தின் பங்கு கா பாதக நிலைகளும் தோன்றும். அவற்றினுள் சில
1.
நூல் நிலையத்தில் பெறப்படும் தரவுகள் மு அமைவதில்லை. நூலக ஆய்வின் மூலம் பெறப்பட்ட தர தெளிவு பெறுவது என்ற பிரச்சினை ஏற்ப வெளிக்களத்திற்குச் சென்று மேற்கொள்ள மட்டுப்படுத்தப்படும். நூலகத்தின் மூலம் ஆய்வினை முழுை தன்னுடைய கல்வியில், தனது செயற்பா நூலக ஆய்வில் பெறப்படும் தரவுகள் கொண்டிருப்பதால், ஆய்வின் முடிவுகள்’ச இதனால், ஆய்வின் நோக்கு தோல்விய
எனப் பல பிரதிகூலங்களையும் வரிசைப்படுத் இரண்டாம் நிலைத்தரவுகள் பெரிதும் காணப்படுகி ஒழுங்கற்ற, சரிநிகர்த்தன்மையற்ற தரவுகள் பய பிழையானதாகவே அமையும்.
எது எவ்வாறு இருப்பினும், ஆய்வின் போது நு ஒரு ஆய்விற்கான அடித்தளத்தை நூலக ஆt இணைந்தவகையில் நூலகப் பயன்பாடு மேற்கொ தரும் என்பதில் ஐயமில்லை.
米米米米米米>
冰米米米米米米米米米米米米米米米米
米米冰冰冰米米米米米米米
நீரில் வாழும் நண் தூண்டிலில் வீழ்ந்து ஆசையால் சதா தூண்டிலில் வீழ்ந்து உணவா சையால் நோய்வாய்ப்படாதே.
 
 
 
 
 

ணப்படும்போது சாதகத் தன்மைகள் ப்ோன்றே, பல )வற்றை வரிசைப்படுத்துவோமாயின் -
தனிலைத் தரவுகள் போன்று நம்பிக்கையானவையாக
வுகளில் ஐயப்பாடு ஏற்பட்டால், யாரிடம் கேட்டுத் டும்.
ாக்கூடிய சொந்த முயற்சிகள், நூலக ஆய்வினால்
மயாக மேற்கொள்ளும் பலருக்கு ஒப்பீட்டுரீதியில் ட்டில் ஒரு திருப்தியற்ற நிலை உருவாகும்.
பெரும்பாலும் இரண்டாம் நிலைத்தரவுகளைக் உறியது கூறல்” தன்மையைக் கொண்டிருக்கக்கூடும். டையலாம்.
திக் கொண்டு செல்லலாம். ஒரு நூலக ஆய்வில் ன்றன. அவை எளிதில் கிடைக்கின்றன என்பதற்காக ன்படுத்தப்பட்ட ஆய்வின் தீர்வுகள் பெரும்பாலும்
ாலகத்தின் பங்கினை யாரும் ஒதுக்கிவிட முடியாது. ய்வு கொண்டிருக்கின்றது. வெளிக்கள ஆய்வுடன் ள்ளப்படும்போது அவ்வாய்வு நல்லதொரு தீர்வைத்
k米米米米米米米米
米米冰冰冰米米米米米米米米冰米米米冰米
米米米米米米来来米米米米米米
ாடு, தவளை முதலியவை
இறப்பதில்லை. உணவு உழலும் மீன் மட்டும் இறக்கின்றது. ஆதலால் அதிகம் உண்டு
147

Page 172
“உடைந்த இராமர் சி
ஒருவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் வாழும் த அதன் ஆயுள் தீர்மானிக்கப்படுகின்றது. பலரது சிலரது கருத்துக்கள் ஆயுளோடு மடிந்து விடுகி வரை நீடிக்கின்றன. மிகச் சிலரது கருத்துக்களே
உலக லெளகீகங்களுள் மூழ்கி, இன்பத்திை துறவுவாழ்வை தெரிவு செய்வதற்கு ஒரு மனோபக்கு பிரசன்னம் வேண்டும்! இவ்வகைத் துறவிகள் மனித செய்து பிரகாசிக்கும் மனிதர்களுள் மாணிக்கங்களா மாணிக்கங்களில் சுவாமி விவேகானந்தர் சிறப்பான பின்னரும், இன்றும் அவரைப்பற்றிய நினைவுகளோடு இன்றும் வாழுவது போலாகும்.
காலத்தின் கோலத்தால் புராதன பண்பு பழுது வேர்விட்டுக் கொண்டிருந்த காலமது! மீண்டு நிறுத்துவதற்காக வடகல்கத்தாவில் 1863ல் ஜன6 விவேகானந்தர் ஜனனித்தார். மிகச் செல்வச் செழ இருந்தபோது வெறித்தனமான பிடிவாதமும், அட இதய சுரங்களுள் தாராளமனப்பாங்கும், தரமான கு அப்போது பெற்றோரால் நாடி பிடித்தறிய முடியவி
ஒருநாள் நரேன் வாசலில் விளையாடிக் கொண்டி ஓடிச் சென்று தன் இடையில் கட்டியிருந்த ஒ இவ்வகை தயாளம் எந்த இலட்சாதிபதி வீட்டி ஆண்டிகள் யாராவது கண்ணில் தென்பட்டால் விடுவார்கள்.
வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண் காட்டினர். அன்னையின் மடியில் தொடங்கிய பாடல்களே முதற் பாடங்களாயின. இவை ந எலும்புகளையும் ஊடுருவி இதயத்தை கரையச் அபாரமான பக்தி பெருக்கெடுத்தது. சீதா பிராட்ட போற்றி வந்த இராம உபாசனைக்கு ஒரு நாள் ஆப குறித்து யாரோ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந் இத்தனை தப்பா? அப்படியானால் ‘இராமரே சிந்தை படர்ந்தது. தப்பு செய்த இராமர் எப்படி க அவ்வளவு தான். வீடு வந்தான். தன்னிடத்தே
l

லைக்குள் உற்பத்தியான தெய்வீகம்’
நடராஜா கணேசலிங்கம்
அதிபர், நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி
நீர்கொழும்பு.
ன்மையுடையன. கருத்தின் தன்மையைப் பொறுத்து கருத்துக்கள் சொல்லோடு போய் விடுகின்றன.
iறன. ஒரு சிலரது கருத்துக்கள் அடுத்த சந்ததி
என்றும் வாழ்கின்றன.
ளப்பில் வாழத்துடிக்கும் மனித சாகரீகத்துக்குள் ]வம் வேண்டும்! மன உறுதி வேண்டும்! தெய்வீகப் நேயத்திற்காக, இறைபணிக்காகத் தம்மை அர்ப்பணம் கத் திகழும் உத்தமர்கள் மிகச் சிலரே. இவ்வகை வர். அவரது பணி ஓய்ந்து ஒரு நூற்றாண்டு கடந்த , அவரது கருத்துக்களோடு ஒன்றியிருப்பது என்பது
துற்று, மேனாட்டுக் கலாசாரம் இந்திய மண்ணில் }ம் வேதாந்தத்தை இந்திய மண்ணில் நிலை வரி பன்னிரண்டில் நரேந்திர நாத தத்தராக சுவாமி ழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த அவர் குழந்தையாக ங்காத குறும்புத்தனமும் நிறைந்திருந்தார். நரேனின் ணமும், தெய்வீகத் தன்மையும் இழையோடிருந்ததை
ങ്ങബ.
ருந்தார். அங்கு யாசகத்திற்கு வந்த சந்நியாசியிடம் ரே வஸ்திரத்தை அவிழ்த்து அளித்து விட்டார். லும் செல்லுபடியாகாததல்லவா? அன்று முதல் போதும் குழந்தையை ஒரு அறைக்குள் முடக்கி
- பெற்றோர் அவனுக்கு எழுத்தறிவிப்பதில் ஆர்வம் ஆரம்பக் கல்வியின்போது இராமாயண, மகாபாரத ரேனின் தசைகளையும், இரத்த நாளங்களையும், செய்தது. இராமனின் புனிதக் கதைகளைக் கேட்டு மீது பெருமதிப்பு ஏற்பட்டது. நரேன் பேரன்புடன் ந்து வந்தது. இல்லற வாழ்க்கையால் இன்னல்கள் த நரேன் கல்யாணம் செய்து, குடித்தனம் செய்வது தப்பல்லவா செய்திருக்கிறார்’ என்று சிறுவனின் வுளாக இருப்பார்? என்ற எண்ணம் சுவடுவிட்டது. இருந்த சீதா, இராமர் பொம்மையை தூக்கி வீசி
8

Page 173
விட்டான். பொம்மை சுக்குநூறாகியது. சுக்கு நூற தான். ‘உனக்கு இராமன் கல்யாணம் பண்ணிக் ெ உனக்கு வருத்தம்’ என்று கூறி, பிரம்மச்சாரியான தேற்றினாள் தாய் புவனேஸ்வரி. அன்றுதான் சன்
சிறுவன் அறிவில் வளர்ந்தான். புத்தி கூர்ை இளமைக்குரித்தான அனைத்துத் துறைகளிலும் அநேக விவாத அரங்குகளில் அவன் தடம்பதித்த விஸ்வநாதனின் மகனல்லவா என்று போற்றப் பிரம்மச்சாரியத்தை இலட்சியமாக வரைந்து கொ கிறிஸ்தவ கல்லூரியில் பயின்ற அவர் சங்கீதம் சமஸ்கிருதம், ஹிந்தி போன்ற சகோதர மொழிகளிலு சென்று உயர்கல்வி பெற்றான். ஆங்கிலம் சரளம
இராமபக்தி, அறிவுக்கூர்மை இளமைத்துடிப்ட இருக்கின்றாரா இல்லையா கண்டவர் உண்டா? நரேந்திரன் ஞானத்தைத் தேடி பகவான் இராம இமயமலைச்சாரல் என்று ஜெபம், தபம், யாத்தி ஞானத்தில் முதிர்ந்து அவனிடத்தில் பக்தி வெ கூட்டம் அவரை தொடர்ந்த வண்ணம் இருக் விவேகானந்தராக பக்தர்கள் அடையாளம் கண் பிரசங்கங்களை கேட்பதிலும் அவரை தரிசிப்பதிலு மன்னர்கள் கூட அவருடன் பேச ஆர்வம் காட பொருளை மையமாகக் கொண்ட அறிவு பூர்வம இத்தனைக்கும் அவர் எதுவித மாயாஜால வித்ை சில அற்புதங்களைத் தனது ஸ்பரிசத்தினாலே செ அதை அவனவன் தேடிக் கண்டு கொள்கின்றபோது இன்றைக்கு 100 வருடங்களுக்கும் யதார்த்தமான
“கேத்தி மகாராஜா தன்னைக் காண வரு அரண்மனைக்குக் கிளம்பி விட்டார். மகாராஜா அறிமுகப் படலமும் குசலவினவலும் முடிந்த பி வினவினார் மன்னர். தன்னை அழுத்தி வைக் தன்னை விளங்கிக் கொள்வதும் விரித்துக் கொ என்ன? என்றார்.
சில கருத்துக்கள் நம் நரம்பு மண்டலத்திலேே படித்த அல்லது கேட்ட தார்ப்பரியம் அவரின் உ உயிர் நிலையான உரிமைப் பொருளாகும்போது கேத்ரி மன்னர் சட்டம் என்பது என்ன என வினவ உள்ளேயே இருப்பது தான். வெளியிலிருந்து செ செயற்படும் ஒரு நியதி. புலன்களின் நுகர்ச்சிகளின என்று கூறிய சுவாமிஜி சங்கியர்களின் பகுப்புக் பொருந்தியிருக்கிறது என்பதை விளக்கினார்.
1893 காலப்பகுதியில் அமெரிக்க ஐரோப்பிய 1893ல் அமெரிக்காவில் சர்வமத மகாநாட்டுக்க திரண்டிருந்த அந்த மண்டபத்தில் குறுகிய நே இந்து மதத்தைப் பற்றி, ஒரு சமுத்திரத்தைப் L சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். இதயம் படபட

கியது பொம்மை மட்டுமல்ல. அவனது இதயமும் காண்டதால் தானே பிடிக்கவில்லை. அது தானே கைலாசநாதனின் பதுமை ஒன்றைக் கொடுத்து னியாசத்துக்கு வித்திடப்பட்டது.
ம, மதிநுட்பம், விளையாட்டு, பேச்சுத்திறன் எனறு உயர்ந்து விளங்கினான். கல்லூரி வாழ்க்கையில் ான். உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவிருந்த தந்தை பட்டான். செல்வத்தில் திளைந்த நரேனோ ண்டு நகர்ந்து கொண்டிருந்தான். உயர் கல்வியை
தத்துவ சாஸ்திரம் என்பவற்றோடு ஆங்கிலம், ம் தேர்ச்சி பெறத் தொடங்கினான். பின் இங்கிலாந்து 1துை.
| இவைகளுள் ஏற்பட்ட இதயப்போரில் கடவுள் என்றெல்லாம் எண்ணி எண்ணி களைத்துப்போன கிருகூரணரை வந்தடைந்தான். காசி, அயோத்தி ரைகள், உபதேசங்கள், தியானங்கள் தொடர்ந்தன ள்ளம் கரை புரண்டது. எப்போதும் ஒரு பக்தர் கும். இதுவரை நரேனாக இருந்தவர் சுவாமிஜி ாடனர். ஜாதி, மத பேதமின்றி மக்கள் அவரது லும் ஆர்வம் காட்டினர். படித்தவர், பாமரர் ஏன் ட்டினர். அவருடைய பிரசங்கங்களில் உண்மைப் ான கருத்துக்கள் மத வேறுபாடின்றி தொனித்தன. தகள் எதையும் செய்து காட்டவில்லை. ஆயினும் ய்தார். சக்தி என்பது அவனவனுள் இருக்கின்றது. து ஞானியாகி விடுகின்றான் என்பது அவரது கருத்து. வையாக இருக்கின்றன என்பதில் ஐயமில்லை.
வதாக அறிந்த சுவாமி விவேனானந்தர் தாமே சகல மரியாதைகளுடனும் அவரை வரவேற்றார். றகு “சுவாமிஜி வாழ்க்கை என்பது என்ன?’ என்று க முயலும் சூழ்நிலைகளின் கீழுள்ள ஒரு ஜீவன் ள்வதுமே வாழ்க்கை என்றார்’. கல்வி ன்னபது
ப ஊன்றிப் போவதுதான் கல்வி. அதாவது ஒருவர் ணர்ச்சியாகி அவருடைய உணர்வின் உண்மையான அது கல்வியாகிறது என்றார். பிறிதொரு தினத்தில் iனார். “சட்டமென்பது முழுக்க முழுக்க ஒருவனின் ய்யப்படுவதல்ல அதுஅறிவும், அனுபவமும் சேர்ந்து ால் உள்ளமே பகுதிச் சட்டங்களாக உருவாகின்றது. களை விபரித்து அது எப்படி விஞ்ஞானத்துக்குப்
ாடுகளுக்கு அவர் விஜயத்தினை மேற்கொண்டார். ாக அவர் சென்றிருந்தார். சுமார் ஏழாயிரம் பேர் ரத்தில் யுக யுகாந்தரங்களாக விளங்கி வந்துள்ள ற்றி எப்படி விளக்குவது என்பதில் சொல்லொனா க்க அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்று
49

Page 174
விழித்தபோது நூறு நொடிவரை கரகோசம் வா6 செந்தணலை ஆடையாகப் பூண்டதுபோன்ற காச குளிர்ச்சியோடு வார்த்தைகள் உதிர்ந்தன. அந்தச் ஒன்றிவிட்டன. பத்திரிகைகள் தலையங்கமிட்டன. சுவாமி விவேகானந்தரிடம் குடிகொண்டுள்ள தெt பற்றிய ஆய்வாளர்களால் ஆங்காங்கே கூட்டங்க தொண்ணுறு நாட்கள் வரை தினமும் குறைந்தது கிட்டியது. கிறிஸ்தவ மத பிரசாரங்களில் ஈடுபட்( பிரசாரங்கள் நுழைந்து கொண்டிருந்தது. சுமார்
மதம் பற்றி அவர் கொடுத்த விளக்கம் யதா மதத்தின் தொடக்கம். கடவுளிடம் பயப்படுவது வீழ்ந்த பின் தனது கர்மத்துக்கேற்ப வேறு உட தாழ்வுகளுக்கு இந்தத் தன்மையே விடையளிக்கிறது வினையின் பயனை அனுபவித்துத்தான் ஆக ே அடங்கியுள்ளன. அதாவது வேதாந்ததத்தின் மூ அத்வைதம் இவற்றுள் அடங்கியுள்ளன. ஒன அவசியமானதாகும். இந்த முதல் நிலையாகி பொருந்தியதே. கிறிஸ்தவ மதம் ஸ்ெமிடிக் ( அத்வைதத்தை யோக சாஸ்த்திர நோக்கத்தின் 2 வேதாந்தம் தான். வேறு வேறு தேசங்களின் மாறு சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப அது மாறுபட்டு உருவ
அமெரிக்காவில் இரண்டு வருடங்களுக்கு மேல நாடுகளுக்கும் அவ்வப்போது சென்று சொற்டெ செய்வதிலும் சமய தர்க்கங்கள் புரிவதிலும் மும்மு கருத்துக்களுக்கும் சொந்த வாழ்வுகளுக்கும் ஆதா ந்ேரந்தது.
பாரத தேசம் முழுவதும் புகழ் பெற்றும் இந்திய புகழடைந்த பின்னும் வேறெந்த சாதுக்களும் கண் பின்னும் சுவாமிகள் தனது எளிமையை கைவிடா
சுவாமிகளுடைய கருத்துக்களுக்கும் வாழ்க் கண்டதில்லை. எவற்றையெல்லாம் உபதேசம் ெ வாழ்ந்து காட்டினார். விஞ்ஞானத்துக்கும் மெ விஞ்ஞானத்தில் ஒன்றைக் கண்டு பிடித்தவர் அ பொய்யாகிவிடும். மெஞ்ஞானம் அப்படியன்று < உழைத்து, தியாகித்து அனுபவித்து மாத்திரம் கண் முடியாது. அதுவே வேதாந்தம். அதையே தற்
“ தெளிவாகத் தெரிந்த தெரியாமல் போனாே
அன்றும் இன்றும் வேதாந்தம் வேதாந்தமாகே அதைத் தேடுகிறவன் கண்டடைகின்றான்.
米米米米米>
米米米米米米米米米米冰冰冰米米
米米米米米冰冰米米:

னைப் பிழந்தது. ஞானாக்கினி வீசும் திருமுகமும் ாயக் கோலமுமாக நின்ற அவரிடமிருந்து பனியின் கணமே கூடியிருந்தோரின் உள்ளங்கள் அவரிடம் எங்கும் பரபரப்பு கீழைத்தேய புராதன மதம் பற்றியும் பவிகத் தன்மை பற்றியும் புகழ்ந்து தள்ளின. மதம் 5ள் அடுத்தடுத்து ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் | ஒரு நிகழ்வில் தன்னும் உரையாற்றும் பாக்கியம் }க் கொண்டிருந்த அமெரிக்க மண்ணில் இந்து மத இரண்டு வருடங்கள் வரை அது நீடித்தது.
ரத்தமானவை கடவுளிடம் பயப்படுவது என்பதே என்பதே மதத்தின் முடிவு. உயிரானது ஓர் உடல் லை அடைகிறது. பிறப்பில் நாம் காணும் ஏற்றத் து என்றோ ஒரு நாள் ஆனால் நிச்சயமாக நம்முடைய வண்டும். எல்லாச் சமயங்களும் வேதாந்தத்தில் ன்று நிலைகளாகிய துவைதம், விசிகூyடாத்வைதம், *று மற்றதன் பின் வருகிறது. ஒவ்வொன்றுமே ப துவைதம் ஐரோப்பிய மக்களின் பிரிவுகளுக்குப் இனங்களுக்குப் பொருந்தியதே முகம்மதிய மதம். உருவில் பொருந்தியதே புத்தமதம். மதம் என்றால் றுபட்ட தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் இதர பங்கள் பெறுகிறது.
)ாக சமயப்பணி புரிந்த சுவாமிகள் ஐரோப்பிய, ஆசிய ாழிவுகள் நிகழ்த்துவதிலும் தியான வழிபாடுகள் >ரமாக இருந்தார். சென்ற இடமெல்லாம் அவரது ாவு இருந்தாலும் எதிர்ப்புகளையும் அவர் சந்திக்கவே
நாட்டின் அக்காலத்துச் சதுச் சக்கரவர்த்தி என்று டிராத வகையில் தேசத்தின் தொழுகையைப் பெற்ற திருந்தார்.
கைக்கும் பாரிய வேறுபாடுகளை நூலாசிரியர்கள் சய்தாரோ அவற்றையெல்லாம் நிஜ வாழ்க்கையிலும் ஞ்ஞானத்துக்கும் உள்ள வேறுபாடு யாதெனில் தை நிரூபித்தாக வேண்டும். இல்லாவிடில் அது அதை நிரூபிக்க முடியாது. அவனவன் ஆய்ந்து, டுணர முடியும். அதற்கு ஆதாரங்களைக் காண்பிக்க கால கவிஞன் இவ்வாறு புனைகின்றான்.
TGs) சித்தாந்தம் - அது ல வேதாந்தம்’.
வ இருக்கின்றது. அது விளங்க முடியாத ஒன்று.
<米水水米米米米米
米冰冰冰米米米米水冰冰冰米米米米米米
:冰米米米米米米米水冰米米
50

Page 175
யாவரும் கற்றலிலும் க
யுனெஸ்கோவின் பாடச
இன்றைய சமுதாயத்தில் வெற்றிநடை டே வழிவகைகளையும் பாடசாலை நூலகம் வழங்குகி சார்ந்ததாக மாறிக் கொண்டுவருகிறது.
பொறுப்புணர்ச்சியுள்ள மக்களாக வாழ்வதற்கு மா6 நூலகமானது வாழ்நாட்கல்வித் திறன்களையும் கற்ப
பாடசாலை நூலகத்தின் பணி
பாடசாலை நூலகம் கற்றலுக்கான சேவைகள், நு யுனெஸ்கோ’ வின் பொது நூலக அறிக்கை நெறிமுறைகளுக்கேற்ப பரந்துபட்ட நூலக மற்றும் த சமூகத்தின் சகல உறுப்பினர்களையும் தர்க்க ரீதிய ஊடகங்களிலும் வரும் தகவல்களைப் பயனுறு முை
நூலகப் பணியாளர் நூல்களையும் வேறு தகவல் கற்பனைக் கதைகள் முதல் ஆவணங்கள் வ6 நூலகத்துக்குள்ளேயோ வெளியிலோ எடுத்துச் ெ பயனுடையவையாகவும் பாடநூல்கள், கற்றல் க தாகவும் இருக்க வேண்டும்.
நூலகங்களும் ஆசிரியர்களும் ஒருமித்துச் செய திறன், கற்றல், பிரச்சினை தீர்த்தல், தகவலறித உயர்வான தேர்ச்சியைப் பெற்றுக்கொள்கிறார்கள்
வயது, இனம், பால், சமயம், நாட்டினம், ெ பாகுபாடுகளின்றி பாடசாலைச் சமூகத்தின் அை நூலகச் சேவைகள் வழங்கப்படல் வேண்டும்.
பாடசலைகளின் பிரதான நூலக சேவையையும் க சேவைகளும் கருவிகளும் வழங்கப்படல் வேண்டு
ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள், சு, வெளிப்படுத்துகைக்கமைய சேவைகள் மற்றும் ெ வேண்டும். இவை எந்தவொருவிதமான சித்தாந்த வர்த்தக நோக்கத்திலான அழுத்தம் கொண்ட6ை
1

ற்பித்தலிலும் பாடசாலை நூலகங்கள்
3. Gaya (354 oi, LL.B.SLEAS உதவிப்பணிப்பாளர், கல்வி அமைச்சு
ாலை நூலக அறிக்கை
ாடுவதற்கு அடிப்படையான தகவல்களையும் ன்றது. இன்றைய சமூகம் தகவல் மற்றும் அறிவு
ணவர்களுக்கு வழி சமைக்கும் வண்ணம் பாடசாலை னைத் திறன்களையும் அவர்களுக்கு வழங்குகின்றது.
1ல்கள் மற்றும் வளங்களை வழங்குகின்றது. இவை
(UNESCO PUBLIC LIBRARY MANIFESTO) uhgir கவல் வலைப் பின்னலின் துணையுடன், பாடசாலைச் பான சிந்தனையாளர்களாகவும் பலவடிவங்களிலும் றயில் பயன்படுத்துபவர்களாகவும் உருவாக்குகின்றன.
வளங்களையும் பயன்படுத்த உதவுகின்றனர். இவை 0ர, அச்சு ஊடகம் முதல் மின்னூடகம் வரை, ஈன்று பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இவை ருவிகள் மற்றும் முறைமைகளை வளப்படுத்துவ
ற்படும் போது, மாணவர்கள் எழுத்தறிவு, வாசிப்புத் ல் மற்றும்தொடர்பாடல் திறன்கள் என்பனவற்றில் என்பது ஆய்வுகள் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
மாழி, தொழில்சார் அல்லது சமூக நிலைமை னத்துப் பிரிவினருக்கும் சமத்துவமாக பாடசாலை
ருவிகளையும் பெறமுடியாதுள்ளவர்களுக்கு சிறப்பான iம்.
தந்திரங்கள் என்பன பற்றிய அனைத்துலக நாகுப்புகளைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் இருக்க ம், அரசியல் அல்லது சமயக் கொள்கை அல்லது
பயாக இருத்தலாகாது.
51

Page 176
சட்டமாக்கலுக்கும் வலைப்பின்னலுக்கும் நிதிய6
எழுத்தறிவு, கல்வி, தகவலளித்தல் மற்றும் பொரு ஒவ்வொரு நெடும்பருவ தினமுறைக்கும் பாடசாலை உள்ளுர், மாநில, தேசிய அதிகார நிறுவனங்கள் L கருவிகள், தொழில் நுட்பங்கள், மற்றும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவற்றின் சேவை
பாடசாலை நூலகமானது, உள்ளுர், மாநில, தேச பங்குபற்ற வேண்டும் அது பொது நூலகம் போன்ற வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது பாடக மதிக்கப்படுவதோடு பேணப்படவும் வேண்டும்.
பாடசாலை நூலகத்தின் இலக்குகள்
பாடசாலை நூலகமானது கல்விச் செயற்பாடுகளு கற்பித்தல், கற்றல் மற்றும் பண்பாடு முதலியவற்றிை சேவைக்கும், கீழ்க்குறிப்பிடப்பட்டவை இன்றியை
* பாடசாலையின் நோக்கம், கலைத்திட் இலக்குகளுக்கு உதவுவதும் வளப்படு
* சிறார்களை வாசித்து இன்புறுதல், கர் முழுதும் நூலகங்களைப் படுத்துவ நிலைகொள்ளச் செய்தலும்
* ஆக்கல் முயற்சிகளில் பட்டறிவை டெ வளம்பெறவும் களிப்புறவும் வாய்ப்புகை
* 6T6ง6ลงT மாணவரும் ஒழுங்குமுறை, அை கொள்ளாது தகவல்களைக் கணித்து பாடசாலை நூலகம் உதவுதல். "
«Х• சமூகத்துக்குள் நுண்ணறிவு பூர்வமான
* கற்போர், தமது மாறுபட்ட கருத்து வெளிக்காட்டக்கூடிய வாய்ப்புகளை அ வளங்களையும் வாய்ப்புகளையும் பெற
* பண்பாட்டு மற்றும் சமூக விழிப்புன
செயற்பாடுகளை அறிமுகப்படுத்தல்.
* பாடசாலையின் குறிக்கோளை அடை
பெற்றோருடன் ஒன்றுபட்டுழைத்தல்.
* மக்களாட்சியில் பங்கெடுக்கவும், உ ஆவதற்கும் மிக அவசியமான கருத் வாய்ப்புகளை வெளிப்படுத்தல்.
* வாசித்தலையும் வளங்களையும் மேம்
கொள்கைகளையும் பணிகளையும் மேம்படுத்துவ கொள்வதன் வாயிலாகவும் பொருத்தமான தகவல் பெற்றுக் கொடுப்பதன் மூலமும் கற்றல் வசதிகளை பயன்படுத்துவதன் ஊடாகவும் பாடசாலை நூல

ரித்தல்
)ளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சி என்பவற்றுக்காக ) நூலகம் மிகவும் இன்றியமையாத துணையாகின்றது. பாடசாலை அதிபர்களுக்கு பயிற்றப்பட்ட பணியாளர், நிலையாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிவசதிகள் கள் இலவசமானதாக இருக்க வேண்டும்.
சிய நூலகம் மற்றும் தகவல் வலைப்பின்னலமைப்பில் வேறு வித நூலகங்களோடு சேவைகளை அல்லது Fாலை நூலகத்தின் தனித்தன்மை, குறிக்கோள்கள்
ருக்கு உள்ளக மையமாகும். எழுத்தறிவு, தகவலறிவு, >ன வளர்க்கவும், பாடசாலை நூலகத்தின் தலையாய DLOUITT6O)6).
டம் என்பவற்றில் வெளிக்காட்டப்பட்டுள்ள கல்வி த்துதலும்.
]றல், பழக்க வழக்கங்களிலும் தங்களின் வாழ்நாள் திலும் மேம்பாடடையச் செய்தலும் அவற்றை
பறவும், அறிவுக்காகவும், தெளிவுக்காகவும், கற்பனை 1ள வழங்குதல்.
Dமப்பு அல்லது ஊடகம் போன்றவற்றினைக் கருத்தில் ப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளவும் திறன்பெறவும்
தொடர்பு முறைகளை வழங்குதல்
க்களையும் பட்டறிவுகளையும், சிந்தனைகளையும் ளிக்கும் உள்ளூர், மாநில, தேசிய மற்றும் உலகளாவிய க்கூடியவாறு உதவுதல்.
னர்வையும் நுண்ணறிவையும் பெற ஊக்குவிக்கும்
யவேண்டி மாணவர், ஆசிரியர், நிர்வாகிகள் மற்றும்
ண்மையும் பொறுப்புணர்ச்சியுமுடைய குடிமகனாக து அறிவார்ந்த சுதந்திரம் மற்றும் தகவல் அறியும்
படுத்தல்
பதன் ஊடாகவும் வளங்களைத் தெரிவுசெய்து பெற்றுக் வளங்களையும் பெளதிக மற்றும் அறிவுசார் முறையில்
அளிப்பதன் பேரிலும் பயிற்சி பெற்ற ஆளணியினரைப்
கங்கள் மேற்கூறியவற்றை நிறைவு செய்கின்றன.
152

Page 177
ஆளணி
பாடசாலை நூலகள்/ஆசிரிய நூலகள் தொழில் அ பாடசாலை நூலகத்தில் திட்டங்களைத் தீட்டி (Upć கூடுமானவரை போதுமான ஆளணியினரின் உதவ சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களோடும் சே நூலகங்களோடும் தொடர்பு கொண்டிருப்பார்.
நிதிநிலைமை மற்றும் நாட்டின் சட்டவரைவு பாடசாலையின் கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் பல்வேறு வகைப்படும். குறித்துரைக்கப்பட்ட சூழ்நி மேம்படுத்தி வினைத் திறனுடையதாகச் செய்ய வேண் முகாமைத்துவம் மற்றும் கற்பித்தல் என்ற உயிர்நாடி வேண்டும்.
பெருகிக்கொண்டுவரும் வலைப்பின்னல் சுற்றுச் கு கையாளல் திறன்களைத் திட்டமிடுவதிலும் அவற்ை தகுதிபெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆகவே தகைமைகளையும் தொடர்ந்து வளப்படுத்திக் கொ
இயக்கமும் முகாமைத்துவமும்
பாடசாலை நூலகங்கள் பயனுறுமுறையில் இயங்கு உறுதிசெய்து கொள்வதற்கும்,
* பாடசாலை நூலகச் சேவை பற்றிய கொள்ை இலக்கு, முன்னுரிமைகள் மற்றும் பணிகளை
* பாடசாலை நூலகமானது தொழில்சார் உய
வேண்டும்.
* அதன் சேவைகள் பாடசாலைச் சமூகத்தின் இருக்க வேண்டும். அது உள்ளூர் சமூகத்
* ஆசிரியர்கள், பாடசாலையின் உயர் முகாடை தகவலறிவியலாளர்கள் மற்றும் சமூகத்தின் கு வேண்டும்.
அறிக்கையைச் செயற்படுத்தல்
கல்விக்குப் பொறுப்பான அமைச்சுக்களின் ஊடாக நடைமுறைப்படுத்தும் விதிமுறைகள், கொள்கை தூண்டப்படுகின்றன. நூலகருக்கும் ஆசிரியருக்கு இவ்வறிக்கையைய் பரவச் செய்தல் இன்றியமையாதது
冰冰米米米米米冰冰冰冰
米米米米米米米米冰米米米米米冰冰米米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米状
15

Iடிப்படையில் தகைமை பெற்றவள் ஆவார். இவர் 5ாமைத்துவம் செய்வதற்குப் பொறுப்பானவராவார். யை இவர் பெற்றுக் கொள்வார். பாடசாலைச் ர்ந்து பணியாற்றுவதோடு பொது மற்றும் வேறு
க்குட்பட்ட நிலையில் நிதிக் குறிக்கோள்கள்,
முறைகளுக்கேற்ப பாடசாலை நூலகரின் பங்கு லையில் பாடசாலை நூலகங்கள் நூலகப்பணியை ண்டுமாயின், அதற்காக வளங்கள், நூலகம், தகவல் களான பொதுத்துறைகளில் கவனம் செலுத்துதல்
ழலில் பாடசாலை நூல்கள் பல்தரப்பட்ட தகவல் றை ஆசிரியருக்கும் மாணவருக்கும் கற்பிப்பதிலும் அவர்கள், தங்களின் தொழில்சார் பயிற்சிகளையும், ண்டுவரல் வேண்டும்.
வதற்கும், வகை கூறத்தக்கதுமாக காணப்படுவதை
கயானது பாடசாலைக் கலைத்திட்டம் தொடர்பான வரையறுத்து வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பர் தரத்திற்கமைய அமைக்கப்பட்டு பேணப்படல்
எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக நதின் சூழ்நிலைக்கேற்ப இயங்க வேண்டும்.
Dயாளர், நிர்வாகிகள், பெற்றோர், வேறு நூலகள்கள், குழுக்களுடனான ஒத்துழைப்பு ஊக்குவிக்கப்படுதல்
அரசாங்கங்கள் இவ்வறிக்கையின் நெறிமுறைகளை 5கள் மற்றும் திட்டங்களை மேம்படுத்தும்படி மான ஆரம்ப மற்றும் தொடர் பயிற்சிகளுக்காக 1. இது திட்டங்களில் உள்ளடக்கப்படல் வேண்டும்.
长米米米米米米米米米
米水冰米米米米米米米米米米米米水

Page 178
என்தமி
சிவனாரும் உமையவளும் தென்ப அனுப்பிவைத்த அகத்தியனாம் குறு
அமிழ்தின் இனியதமிழ், அகத்தியன தமிழர்மொழி யானதமிழ், சங்கமிருர்
புலவரெலாம் போற்றுதமிழ், புகழ்பா பறம்புமலைப் பாரிமன்னன், முல்லை
அன்னை தந்தை தந்ததமிழ், ஆசி என்தமிழே, என்தமிழே என்னசொல்
ஐம்பெருங் காப்பியங்கள், அழகுதரு
அப்பனுக்குப் பாடம்சொன்ன, முருக
ஊமைதனை வாய்திறந்து, பேசவை ஓம்என்ற பிரணவத்தை, விநாயகன
இயல் இசையாய் நாடகமாய், எங்கு ஏழெழுத்தால் இசைத்தமிழாய், பா
கம்பனவன் காவியமாய், இராமாய6 காளமேகம் யார்மீதும், வுசைமாரி
இரட்டையர்கள் கலம்பகத்தை, எ இளங்கோவும் சிலம்பதனை, ஈந்த(
மாதவியும் கோவலனும், கானல்வ மாதவியாள் தனியளாகி, மணிமேக
மூவடியால் உலகளந்த, வாமனவ ஈரடியால் வள்ளுவனும், திருக்குற
சங்கவையும் அங்கவையும் தாவித பங்குக்குமூன்று பனம்பழங்கள், பாட

ழே! என்ன சொல்லி உனைப்பாட.
திரு. எஸ். சிவநிர்த்தானந்தா MPhil உதவிக் கல்விப் பணிப்பாளர், தமிழ்மொழிப் பிரிவு,
கல்வி அமைச்சு,
இசுருபாய',
பத்தரமுல்லை.
நதி தனைநிமிர்த்த முனிவன் அடிவாழ்க
ார் தந்ததமிழ், தாண்டதமிழ்
ட உகந்ததமிழ் )க்குத்தேர் கொடுத்ததமிழ்
ரியர் சொன்னதமிழ் bலி உனைப்பாட
நம் எங்கள்தமிழ் னவன் தந்ததமிழ்
க்க உதவுதமிழ் ாய் கொண்டதமிழ்
1ம் நிறைந்ததமிழ் டல்பல கொண்டதமிழ்
Iணம் தந்ததமிழ் பொழிந்ததமிழ்
ம்மவர்க்கு ஈந்ததமிழ் தங்கள் தமிழ்மொழியே
ரி பாடுந்தமிழ் லை வளர்த்ததமிழ்
ன் செயல்போல ளைத் தந்ததமிழ்
ரித்திடவே லினால் தந்ததமிழ்
4

Page 179
3- CM 4658
வெண்பாவிற் புகழேந்தியென்ப மெல்லியலார் கடைதிறக்க, ச
என்தமிழே, முத்தமிழே, இனித உன்இனிமை மொழியினையான்
ஒளவையவள் ஆத்திசூடி,- ( அழகுதமிழ் முருகனினால், அ
பாரிமன்னன் அவ்வையிடம், ப மயிலுக்குப் போர்வைதந்த, பே
குற்றாலக் குறவஞ்சி, கும்மிகெ குமரிகள் பந்தாடல்கண்டு, மந்
பாணனவன் பாணியுடன், பாட்டி பத்துய்ப்ாட்டு எட்டுத்தொகை
நக்கீரன் சிவன்பாட்டில், குற்றர் நக்கீரா எனவிழித்து, நெற்றிக்க
அபிராமி அம்புலியை, மன்னனு அபிராமி பட்டனென, சுப்பிரமண
ஆடுவேனோ, பாடுவேனோ அ கூடுவனோ குற்றாலக் குறவஞ்
திருமுருகாற்றுப் படைநூலை, சிவனாரும் மாமனாக வழக்குள்
நாலுகோடிப் பாடல்களை, அ6 நாலடியார், நல்வழிபோல், பல
காதலுக்கு மதிப்பளித்து கவிப காதலர்கள் காந்தள்வமணம், ெ
மணிவாசகள் நம்மவர்க்கு திருe
மாதுகோதை ஆண்டாளும், தி
அப்பருடன் சுந்தரரும் அழகுக்
தேவாரப் பாடல்களை, திகட்ட
ஆட்டன்அத்தி பாடுதமிழ், ஆ ஆட்டன் அத்திமாருதியும், கா
நரை முடிக்கு மதிப்பளித்து கரி இன்றுவரை நரை முடிதாள், த
சிறுகதையாய், நாவல்களாய் சிறப்பாற்றல் மிகக்காட்டும், இ

ன், நளவெண்பா தந்ததமிழ் பங்கொண்டார் பரணிபாடுதமிழ்
ான செந்தமிழே − , என்னசொல்லிப் பாடுவனோ
கான்றைவேந்தன் பாடுதமிழ் வ்வைமதி மயங்குதமிழ்
ணம்பறித்து மறித்ததமிழ் கமன்னன் வளர்த்ததமிழ்
ாட்டிப் பாடுந்தமிழ் திபழப் பந்தாடுதமிழ்
சைத்து ஆடுந்தமிழ் பாடல்களும் உள்ளதமிழ்
வகள் கண்டதமிழ் ண் காட்டுதமிழ்
க்கு காட்டுதமிழ் ரியை அழைத்ததமிழ்
ழகுதமிழே உன்மயக்கில் }சி பாடுவனோ
நக்கீரன் தந்ததமிழ் ரைக்க, வந்ததமிழ்
வ்வையவள் பாடுந்தமிழ் நூல்க்ள் தந்ததமிழ்
ாடும் நல்லதமிழ் சய்யுமுறை தந்ததமிழ்
வாசகம் தந்ததமிழ் ருப்பாவை தந்ததமிழ்
று சம்பந்தரும் ாமல் பாடுதமிழ்
திமந்தி அலைந்ததமிழ் தல் களம் கண்டதமிழ்
காலன் வழக்குரைத்ததமிழ் ர்ப்பளிக்க உதவுதமிழ்
விதைகளாய் உருவெடுத்து ககாலம் உலவுதமிழ்
155

Page 180
நாட்டாரின் பாடல்களாய், நாம் நல்லநல்ல புதுக்கவிதை, இக்க
பாரதியின் பாடல்கேட்டு, கிழவன் பாய்பாவின் பாடல்களில், கருவூ வியாசனவன் பாரததத்தை, பார அழகழகாய் குயில்பாட்டும், அங்
பாப்பாவைத் தாலாட்ட, பாய்பாவ அம்புலிக்கும் ஒருபாட்டாய், அட்
ஆதியிலே ஈசனவன், தந்ததிந்த வாழ்த்துகின்றேன், வணங்குகின்(
இயல்இசையாய் நாடகமாய் எ6 என்இனிய தமிழ்மொழியே நன்றி
米米米米米米米壮
冰冰冰冰冰冰冰米米米米米米米米冰冰冰冰米壮
来来来来来来来米米米米米米
ത്ത
‘ஐயம்’ என்னும் அருந் தமிழ்ப் புலவரு பொழுது அதனையி பேய்க்குரிய சுபாவம் இவ் வண்ணம் செய உள் ளத்திலே ே கணப்பொழுதிலே அ ஐக்கியப் படுவதில ஆராய்ச்சியுமில் ை ஐயமெனும் பேயினா இவன் ஐயப்படாதெ

படித்து மகிழும்தமிழ் ாலம் உலவுதமிழ்
ாதுள்ளி எழும்புதமிழ் லம் நிறைந்த தமிழ் திதான் பாடுதமிழ் வகங்கே தோன்றுதமிழ்
புக்கு சோறுட்ட bமாமார் பாடுதமிழ்
தமிழ்மொழியை றேன் வளர்ந்திடுவாய் என்றென்றும்
ன்றென்றும் வளம்பெறவே சொல்லிப் பாடுகின்றேன்.
:冰米米米米米米米水冰冰
;米米米米米米米米米米米米米米米米米米米米米米米米
冰冰米米米米米米米米米米米米米冰冰
ܓܩ=
) ‘பேய்’ எனக் கூறினார் நளொருவர். நன்மைவரும் டைநின்று விலக்குவது . ஐயம் என்னும் பேயும் ப்கின்றது. விவேகியின் 3தான்றுகின்ற ஐயம் கன்று விடும். அவனுடன் > லை. அவனிடத் து ல. அற்ப விவேகியே ற் துன்புறுத்தப்படுகிறான். தான்று மில்லை.
الص=
156

Page 181
Ol)
02)
03)
ரீகோசலைராமன் கோசலையாம் கெளசல்யையின் மணிவயிற் என்று கொண்டாடுகிறார்கள்.
தசரதராமன் தசரத மன்னனுக்கு திருமகனாகப் பிறந்த இ
ழரீசந்தான ராமன் சூரியவம்சத்தில் மானுடகுழந்தையாக அ
போற்றுகின்றனர்.
05)
06)
07)
08)
09)
யக்ஞராமன் விசுவாமித்திர முனிவரும் மற்றும் பல முனிவர் விளைவித்த அரக்கர்களை சம்ஹாரம் செய் திருநாமம் பெற்றார்
ரீபவித்ர ராமன் இந்திரனால் களங்கம் ஏற்பட்டு, கணவனி பூரீராமனின் திருப்பாதம்பட்டு பவித்ரமானால் ழரீராமன் பவித்ரராமன் ஆனார்.
பூரீகோதாண்ட ராமன் சிவதனுசு எனும் கோதாண்டத்தை வளைத் காணும்படி செய்த பூரீராமன் பூரீகோதாண்ட
ழரீகல்யாண ராமன் சிவதனுசு எனும் வில்லை வளைத்து பூரீகல்யாணராமனாகக் காட்சி அளித்தார்.
ழரீஜானகிராமன் ஜனகன் மகள் சீதைக்கு ஜானகி என்றும் : ஜானகிராமன் என்று பூவுலகமே போற்றிப் பு
உதாரகுணராமன் தந்தை தசரதனின் சொல்காக்க, மனைவி பூரீராமன்! இவ்வாறு பெருந்தன்மையின் இல என்று உலகோரால் புகழும் பெற்றார்.

ராமன் எத்தனை ராமனடி!
திருமதிஜி தெய்வேந்திரராச7 தமிழ்மொழிப் பிரிவு, கல்வி அமைச்சு,
"இசுருபாய’ பத்தரமுல்லை.
நில் அவதரித்ததால், பூரீராமனை கோசலைராமன்
இராமனை தசரதராமன் என்று ஏற்றித் தொழுதனர்.
அவதரித்த ரீராமனை பூரீசந்தானராமன் என்று
களும் சேர்ந்து நடத்திய வேள்விகளுக்கு இடையூறு து யக்ஞத்தை காத்த பூரீராமன் யக்ஞராமன் என்று
ன் சாபத்தினால் கல்லாக மாறிவிட்ட அகல்யை ர். பாவப்ப்ட்ட முனிபத்தினியை புனிதவதியாக்கிய
து தமது வீரபிரதாபத்தை பதினான்கு லோகங்களும் ாமன் என்று கொண்டாடப்பட்டார்.
சீதையாம் மென்சிலையை மணந்த பூரீராமன்
P(b பெயருண்டு. ஜானகியை மணந்த பூரீராமனை கழ்ந்தது.
யோடும் லகூழ்மணனோடும் கானகம் புறப்பட்டார் க்கணமாய் விளங்கிய பூரீராமன் பூரீஉதாரகுணராமன்

Page 182
10)
11)
12)
13)
14)
15)
16)
17)
18)
செளசல்ய ராமன் நம்மையெல்லாம் பிறவி எனும் பெருங்கடலை மறுகரை சேர்த்தான் குகன். குகனையும் தமது குன்று போலானான். அந்த ஒப்பற்ற அரும் போற்றி புகழ்ந்தது இந்த பூவுலகம்!
பிராதருவத்ஸலராமன் கானகம் வந்த தம்பி பரதனின் வேண்டுகோள பாசத்தின் உயர்ந்த வைபவத்தால் பூரீராமன், கெளரவிக்கப்பட்டார்.
ழரீபராக்கிரம ராமன்
பஞ்சவடி பர்னகசாலையில் எழுந்தருளியிரு துகூடிணன், திரிசரன் போன்ற அரக்கள்களைய அழித்தான். பூரீராமனின் இந்த பராக்கிரமத்தை
சீதாராமன்
இராவணன் வஞ்சனையால் சீதையைக் கவர் தாங்கொண்ணாத் துயருற்றான். சீதையை எ ஏங்கிய ராமனை சீதாராமன் என்று தோத்திர
பூரீஆனந்தராமன் மதங்க முனிவரின் ஆசிரமத்தில் ராமனின் வரு சபரியை ராமர் அனுக்கிரஹித்து பிறவாய் பெருவ சுகாநந்த வாழ்வினை சபரிக்கு அருளிய பூ ஆராதிக்கப்பட்டான்.
மோக்ஷபலபிரதராமன் பூரீராமன் சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்குறுதி
மார்பில் பாய்ந்த அம்பில் பொறித்துள்ள 'ராம”
உச்சரித்து பூரீராமனின் பேரருளை பெற்றான். நலம் சேர்க்கும் பூரீராமன் மோக்கூyபலபிரதரா
தாரக நாமராமன் ஜடாயுவின் அண்ணன் சம்பாதி ராமநாம மகிமை மீண்டும் பெற்றான். சீதை இருக்கும் இடத் நாமத்தால் எல்லோரும் உய்யும் மார்க்கத்தை பூரீராமனுக்கு ஏற்பட்டது.
பூர்ராமன் சீதையைத் தேடி இலங்கை வந்த அனும சீதையின் திருமுகத்தில் பூரீராமனின் தெய்வீக சீதையை நிலம் கடந்து சேவித்தார் அனுமன் என்று கொண்டாடி குதூகலிக்கின்றார்.
பூர்துக்கநாசகராமன் அசோகவனத்தில் சோகபதுமையாக துக்கத்தி கண்டு பூரீராமன் சொல்லி அனுப்பிய நல் சமர்ப்பித்தான்.கணையாழி கண்ட சீதை கணவ துக்கத்தை மறந்தாள். அவளது துக்கம் தீர்த் துதிபாடியது.
158

க் கடக்க அருள் செய்த பூரீராமனை, கங்கையின் சகோதரனாக ஏற்றுக்கொண்ட பூரீராமன் குணத்தின் குணத்தால் அவனை செளசல்யராமன் என்று
ரின்படி பாதுகை அளித்த பூரீராமனின் தணியாத பூரீபிராதருவத்ஸலராமன் என்று எல்லோராலும்
]ந்த பூரீராமன் தம்மை எதிர்த்து வந்த கரன், ம் அவனது அசுரப் படைகளையும் அடியோடு புகழ்ந்து பூரீபராக்கிரமராமன் என்று கொண்டாடினர்.
ாந்து சென்றான் பூரீராமன். சீதையைப் பிரிந்து ண்ணி எண்ணி ஆவி அணையால் சீதை என்று ம் செய்தனர்.
நகைக்காக பல்லாண்டு காலமாக தவம் இருந்த வாழ்வை அளித்து ஆட்கொண்டார். எல்லையற்ற ராமன் ஆனந்தராமன் என்று அடியவர்களால்
க்கு ஏற்ப, வாலியைக் கொன்றார். வாலி தனது
எனும் நாமத்தை மனத்தால் நினைந்து, வாக்கால் அடியார்களின் அன்பிற்கு தமது நாமத்தால்
மன் எனும் திருநாமம் பூண்டார்.
)யால், ராவணனால் தான் இழந்த இறக்கைகளை Oத வானர வீரர்களுக்குத் தெரிவித்தார். பூரீராம பெறுவதால் பூரீதாரக நாமராமன் என்ற திருநாமம்
ன் அசோகவனத்தில் சீதையைக் காண்கிறான். தோற்றத்தைக் கண்டான். கற்புடைய செல்வி 1. சீதைக்கு ஏற்ற ராமனை அனுமன் “ழரீராமர்”
ல் துவண்டு கிடந்தாள் சீதை. அனுமன் சீதையைக் ல செய்திகளை சொல்லி கணையாழியையும் னையே கண்டதாக மனத்தில் களிப்பு கொண்டாள். த பூரீராமனை பூரீதுக்கநாசகராமன் என்று தரணியே

Page 183
19).
20)
21)
22)
23)
பூரீரகுராமன்
“கண்டேன் சீதையை!’ என்று சொல்லியல் கொடுத்தனுப்பிய சூடாமணியை பூரீராமனி சொன்னான். அனுமனைக் கட்டி அணைத்து அன்பின் சின்னமாக பக்தர்களைக் கடாகூதிக்கு
ழரீசரணாகதரசஷகன் பூரீராமரை எதிர்த்து போரிட முடிவு பூண்ட ராெ தடுத்து நிறுத்த எண்ணினான். பூரீராமனின் சொன்னான். ஞானபோதனைகளைச் செய் மன்றாடினான். அத்தனையும் விழலுக்கு இ
இராவணன், விபீகூடிணனை வெறுத்தான். *ராமபிரானின் திருவடிக் கமலங்களைச் சர தமது திருவடிகளை பற்றிக் கொண்ட விட் பிறந்தவன் என்றும் பாராமல் தனது சே சரணாகதரக்ஷகன் என்று கொண்டிாடினார்.
ழரீசேதுராமன்
பூரீராமபிரான், வானர வீரர்களின் உதவியோடு அப்பாலத்தைக் கடந்து இலங்காபுரியை அ கண்ட பூரீராமனை பூரீசேதுராமன் என்று அை
ழரீகருணாகரராமன் பூரீராம ராவணயுத்தத்தில் பூரீராம பாணத்தா படைக்கலம் இழந்தான். தேரிழந்தான். வெண் முன்னால் நிராயுதபாணியாக நின்றான். இராவ நாளை வா’ என்று சொல்லி பகைவனுக்கும் என போற்றினர்.
பூரீஜயராமன்
பூரீராமன் ராவணனை வென்று சீதையை சிை முடித்து அயோத்தியின் அரியணை ஏறினா இராமனின் பட்டாபிகூேpக வைபவம் ஆரம்ப
அனுமன் பூரீராமபிரானின் திருவடி தாங்கின வெண்கொற்ற குடைபிடித்தான். இலக்குமணனு அவதாரமான சீதாபிராட்டியார் அருகில் எ திருமகனுக்கு மணிமுடி சூட்டினார். பூரீராமன் ழரீஜயராமன் என்று அனைவரும் கொண்டா
米米米米米米米米>
米米冰冰米米米米米米冰米米米水冰米米>
水冰米米米米米米冰冰米米
15

ாறு தென்திசையினின்றும் வந்த அனுமன், சீதை ம் கொடுத்து சீதை சொல்லிய செய்திகளைச் மகிழ்ந்தான் பூரீராமன்! அன்பால் மெய்யுருகினான். ம் பூரீராமன், பூரீரகுராமன் என்று திருநாமம் பெற்றான்.
ணனை அவன் தம்பியருள் ஒருவனான விபீகூடிணன் அருமை பெருமைகளை அண்ணனுக்கு எடுத்துச் நான். சீதையை பூரீராமனிடம் ஒப்படைக்குமாறு றைத்த நீரானது.
ாட்டை விட்டு போகுமாறு கட்டளை இட்டான், ணம் என்று பற்றிக் கொண்டான். சரணம் என்று கூடிணனை, பூரீராமன் தமது விரோதியின் உடன் காதரனாக ஏற்றுக் கொண்டான். பூரீராமனை
சேது சமுத்திரத்தைக் கடக்க பாலம் அமைத்தார். 1டைந்தார்; இராமன் சேது சமுத்திர அணை னெவரும் போற்றினர்.
ல் ராவணன் போர்க்களத்தில் படை இழந்தான். ன்கொற்றக் குடை இழந்தான். இராவணன் பூரீராமர் ணனின் பரிதாபநிலை கண்ட பூரீராமன் “இன்றுபோய் அருள் பாலித்த இராமனை பூரீகருணாகரராமன்
ற மீட்டான். பதினான்கு ஆண்டுகள், வனவாசம் ன். நல்ல சுபயோக சுபமுகூர்த்த வேளையில் 0ானது.
ான். அங்கதன் உடைவாள் ஏந்தினான் பரதன் பம், சத்ருகனும் வெண்சாமரம் வீசினர். திருமகளின் ழுந்தருளினார். வசிக்ஷடமாமுனிவர் சக்ரவர்த்தி அறவழி நின்று அரசாட்சி புரிந்தான். பூரீராமனை
மகிழ்ந்தனர்.
米米米米米米米
水米冰米米冰米米米米米米米米米米米
米米米米米米米米米米

Page 184
ஒன்றரை மணிநேர மந்தகதிப் பயணமும் நெரி அலுப்பு, மீடியம் சைஸ் குளுகுளு கோலா இறங்க
கெளண்டர் பக்கமாக வந்து பின்பக்கமாக பே போனான். இதயம் வேக வேகமாக அடிக்கத் தொட கைப்பையெல்லாம் தேடியாயிற்று.
இறக்கிவிட்டு பஸ்சென்று பதினைந்து நிமிடத்து என்னதான் பிரயோசனம்! பொக்கற் அடித் இருக்கப்போகிறான்.
நல்லகாலம் டிக்கட்டுக்குக் கொடுத்த நூறு 8 இருந்தது. கடைக் கணக்கை முடித்துவிட்டு :ெ
அவனுக்கு இது புது அனுபவம். இருந்தும் இ என்ற கவலை விட்டபாடில்லை. மாதாந்தம் ஏழாயிரத்தைநூறை ஒரேயடியாக பறிகொடுப்பதெ
கொஞ்சம் அமைதியும் ஆறுதலும் அவனுக்குத் மினாரா அவனுக்கு அழைப்பு விடுத்தது.
6)|Sib செய்துகொண்டபோது கொஞ்சம் இதம எழுந்தபோது மனம் சற்றே லேசானது போல. கொடுத்து அமர்ந்து கொண்டான்.
பாதையைத் தாண்டி வெகுதுரத்திற்கு வயல்வெ நெளிந்து நகள்ந்து கொண்டிருந்தது. பறவைகள்
ஏழாயிரத்தி ஐநூறு
வீட்டுக்கு இன்னொரு சிவிலிங் பேன் நீண்ட சுமையைக் குறைக்க, அவ்வப்போது பிரஷர் குக்க
இன்னும் சின்னச் சின்ன தேவைகள் ஏராளம்.
ஒரே தங்கைக்கு வீட்டை நவீன சாதனங்களாலு ஆசை. மேற்சொன்ன இரண்டும் அதற்குள்தான் இவற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்ததும் அவ6 தெறித்துவிழும் நன்றிப் பூக்களையும் அவன் இ6

சிறுகதை : தெளிவு
திக்குவல்லை கமால்
104, அத்துளுகம, Li6Ojit (TT651O.
லும் வியர்வை நெடிக் குமட்டலும் தந்த பயங்கர யதும் எங்கு பறந்ததோ தெரியவில்லை.
ாஸைத் தடவியபோது அவன் திடுக்கிட்டுத்தான் ங்கிற்று. அவசர அவசரமாக முன்பின் பொக்கற்றுகள்,
துக்கு மேலாகிவிட்டது, இனி அதனைப் பிடித்து தவன் தேடிவரும் வரை அமர்ந்துகொண்டா
நபாவில் மீதி எழுபது ரூபாய் சேட் பொக்கற்றில் வளியிறங்கினான்.
ருபத்தைந்து வயதுக்குமேல் இப்படியாகி விட்டதே ) ஆறாயிரத்திற்குக் குறைய சம்பளமெடுப்பவன், ன்றால் இலேசுப்பட்ட காரியமா?
) தேவைப்பட்டது. அதனை வழங்க பள்ளிவாசல்
க இருந்தது அவனுக்கு. அஸர் தொழுதுவிட்டு பள்ளிவாசல் வெளிச்சாலையில் சுவருக்கு முதுகைக்
ரி விரிந்து தெரிந்தது. இடையே நீரோடை வளைந்து
கூச்சலிட்டு குதூகலித்துச் சிறகடித்தன.
ாட்களாகத் தேவையாகவிருந்தது. உம்மா தனது க்காக அவனிடம் விண்ணப்பித்துக் கொண்டிருந்தாள்.
ம் அழகுப் பொருள்களாலும் நிரப்பிவிடக் கொள்ளை
அடக்கம்.
அடையும் ஆனந்தத்தையும் அவள் முகத்திலிருந்து று பல தடவை கற்பனை பண்ணிப் பார்த்துவிட்டான்
160

Page 185
பிரக்ஷர் குக்கள் வீடுபோய்ச் சேர்ந்திருந்தால் உம் பாடசாலைக்கு தம்பி, தங்கையரும் அலுவலகத் சமையலறையில் உம்மா படும் துன்பம் சொ கிடைக்குமென்றுதான் எண்ணியிருந்தான். அதுவ
“எனத்தியன் மகன் பெரிய யோசினயாயிக்கி”
முன்பின் அறிமுகமில்லாதபோதும் இப்படித் யோயிருக்கிறேனா என்று அவன் தன்னையே கே
“ஒண்டுமில்லாட்டி இப்பிடி யோசி
(b. நீங்க எங்கீந்தன வந்த?”
“நான் கிட்டத்தான் டவுனுக்கு வ
é é.
’b۰۰۰۰۰۰۰۰۰۰ ஒரு சாமனேம் காணல்லேன்لك
,
ம். அஞ்சி மணிப் பொறகு
‘இந்த மனிசன் உடமாட்டார் போலிக்கி என்று நினைத்தான் அவன்.
“சின்னோரு பிரச்சின”
“மெய்யா மொகத்தப் பாத்தொடன வெளங்கியே
அனுபவ ஞானத் தோற்றத்துடன் அவர் காண நெற்றியில் தழும்பேறியிருந்தது. வெண்மை மிகைத்
“பஸ்ஸில் ஏன்ட சல்லிய பொகட் அடிச்சிட்டா
அவர் சிரித்தார்.
வியந்து விசாரிக்க வேண்டிய கட்டத்தில் இப்படி கிளர்ந்தது.
"அப்படியெண்டா அது ஒங்கட சல்லியல்ல’ இப்படி அவர் சொல்ல அவன் பேச்சு மூச்சற்று
“அப்பிடியெண்டா அது ஒங்கட சல்லியல்ல. “அப்பிடியெண்டா அது ஒங்கட.” “அப்பிடியெண்டா அது .
அந்தக் குரல் இடைவிடாது அதிர்ந்து அதிர் குடையத் தொடங்கியது.
பிரதேச செயலகத்தில் கிளரிகல் வேலை கிடை உற்சாகத்தோடுதான் வேலையைப் பொறுப்பெடுத்
அவனது அடுத்த கதிரையில் வேலை பார்த்த அவன் பத்து வருடத்துக்கு மேற்பட்ட அனுபவச
ஒரு நாள் பொன்னிறமாய்ப் பளபளக்கும் நாலை
l

மாவின் பிரகூஹ் எவ்வளவோ குறைந்திருக்கும்தான். துக்கு அவனும் வெளிக்கிடும் காலைப் பொழுதில் ல்லி மாளாது. அதற்கொரு விடிவு இன்று ம் காலவரையறையின்றி பின்தள்ளப்பட்டுவிட்டதே.
தெளிவாகக் கேட்குமளவுக்கு நான் குழம்பிப் -டுக்கொண்டான்.
க்கியா.
த ரெணுமூணு சாமன் வாங்க”
எங்கள எடுக்கவன்’
a
60
ப்பட்டார். ஓதிப்படித்த மனிதன் போல் தெரிந்தது. த அடர்ந்த தாடி வயது அறுபதுக்கு மேலிருக்கும்.
99.
ன்
ச் சிரிக்கிறாரேயென்று அவனுக்கு மெல்லிய கோபம்
நின்றான். அவரும் மெல்ல இறங்கி நீடந்தார்.
poor
ந்து. எதிரொலித்து எதிரொலித்து அவனைக்
ந்து கிட்டத்தட்ட ஒருவருடம் தானாகிறது. மிகுந்த தான்.
டிக்கிரி பண்டாவோடு மிகவும் நெருங்கிவிட்டான். லி.
ந்து கைக்கடிகாரங்களைக் காட்டினான் அவன்
51

Page 186
“எனக்கித விக்கேலும்”. என்று ஒரேயடியா
ஐந்து மணிக்கூடுகளை விற்றுத் தீர்க்க இரண்டு லாபம். முழுமையாக பணத்தைக் கொண்டுவந்து
நண்பர்கள் மத்தியில் ஆரம்பித்த சிறுவியாபார
படிப்படியாக அவன் காரியாலயக் கடமைகளை மறுக்கத்தான் செய்தான்.
வேலைக்குப் புதியவனானபோதும் கடமையைப் மேலதிகாரியைச் சென்றடைந்தது. பலதடவை அ
“டிக்கிரி பண்டா” கெடுத்துப் போட்டான்’
அலுவலகத்தில் எல்லோரும் வாய்விட்டுச் ெ
காலையில் காரியாலயம் சென்றால் சிறிது நோ இரண்டு மூன்று மணிநேரம் வியாபார நோக்கத்தே
காலப் போக்கில் திருத்த முடியாதவர்கள் என்
மணிக்கூடு, கையடக்க ரேடியோ, கல்குலேட் ஒடர்களுக்கும் சாமான் விநியோகிக்கும் நிலைக்கு
உத்தியோகத்தை விட்டு விட்டு வியாபாரம் செய்த
அரசனை நம்பி !ത്രജ്ഞങ്ങ விடாதேயென்று சி
இன்று இருவருக்கும் சுத்தலாபம் பதினையா விட்டான் அம்மாடா ஒரு மாதச் சம்பளம் கூட
நேரம் மிகவேகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்த
மீண்டும்.
“அப்படியெண்டா அது ஒங்கட சல்லியல்ல. ‘அவர் கூறிச் சென்றது உண்மைதான்’ அது அவனது மனச்சாட்சியின் குரல் அந்தப்
காரியாலய வேலைக்காக அவனுக்கு சம்பளம் கிடைப்பது எப்படி இலாபமாக இருக்க முடியும்
காரியாலய வேலை. அல்லது வியாபார வகையில் பிரத்தியேக உழைப்பு. இதில் எது
சடக்கென்று எழுந்து நின்று கிப்லாவைப் பார்
“யா அல்லாஹ். நான் இழந்தது என்ட செய்வன். ஒவ்வொரு சதமும் ஹலாலான ெ
9.
LITe96b6)T. -
பள்ளிவாசலிலிருந்து வெளியிறங்கும் போது 6

த் துள்ளினான்.
நாட்கள் கூட எடுக்கவில்லை. தலா (bľTDi ரூபா ஒப்படைத்துவிட்டான்.
படிப்படியாக உள்ளூர் மட்டத்தில் வியாபித்தது.
மறக்காவிட்டாலும் அதற்குரிய முக்கியத்துவத்தை
பொறுப்பாகச் செய்யாததையிட்டு முறைப்பாடுகள் ழைத்து புத்திமதி, எச்சரிக்கை என்று தொடர்ந்தது
Fால்ல ஆரம்பித்தார்கள்.
ம் வேலை செய்வான். உணவு இடைவேளையில் ாடு நகரத்தில் ஒடியாடித் திரிவார்கள்.
ற பட்டியலில் அவனையும் சேர்த்து விட்டார்கள்.
L-it.irmm. என்று திணிசுகள் பெருகிவிட்டன. பெரிய
வந்து விட்டார்கள்.
நாலென்ன? என்றுகூட ஒரு கட்டத்தில் யோசித்தான்.
ல நண்பர்கள் ஆலோசனை கூறினார்.
பிரம் ரூபா. அந்த மகிழ்ச்சியில் தன்னை மறந்து அவ்வளவு வராது.
ملوك (
P889vwo+0
பெரிய மனிதன் கூறிச்சென்ற வார்த்தைகள்.
கிடைக்கிறதே. அந்த நேரத்தில் வேறு உழைத்துக்
D. அல்லது கடமை நேரத்தைப் பாதிக்காத அவனது மண்டையோடு குழம்பாய்க் கொதித்தது.
ந்துக் கையேந்தினான்.
சல்லியல்ல. நான் இனி ஏன்ட தொழில சரியாச் மாறக்கி வந்து சேரட்டும். என்ன மன்னிச்சிடு
ங்கும் இருட்டியிருந்தது. அவனது மனதைத் தவிர.
l62

Page 187
ஆசிரிய
முன்னுரை
இக்கட்டுரை சர்வதேசக் கல்வியகத்தின் (ED பிறேசிலில் நடைபெற்ற 4வது உலக மகா
ஆசிரியர்களின் கற்கும். கற்பிக்கும் சுதந்திரம் ஆக்கப்பட்டதாகும். கட்டுரையின் பல கருத்துக்கல் கல்வியகம் உலகெங்கிலும் பரந்துள்ள கல்வியிய கல்வி நிறுவனமாகும். இலங்கைத் தமிழர் ஆசி ஆசிரிய சங்கமாகும். 26 மில்லியன் கல்விப் பணிய 300 இற்கு மேற்பட்ட ஆசிரியத் தொழிற் சங்கங் ஆகும்.
இக்கட்டுரை ஒக்டோபர் 5 உலக பணியை பாராட்டவும். மேலும் வலுவு
கற்பிக்கும் உரிமையும் கற்கும் உரிமையும்
“சுதந்திரமான சிந்தனையும் கருத்துச் சுதந்திரமு கற்கும் சுதந்திரத்தை மறுப்பது ஜனநாயகத்திற் நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“ஆசிரியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுட் பேணப்படுதல் வேண்டும்.’ என சர்வதேச தொழி தொடர்பான பரிந்துரையின் எட்டாவது பிரிவில் (
அ) வரைவிலக்கணம்
மேலும் தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ள மான அடைவதற்கு ஒரு தகைமையுள்ள ஆசிரியர் தன சுதந்திரமே கற்பித்தல் சுதந்திரமாகும். ஆசிரியர் தனது எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் பொது

பர்களின் கற்கும் கற்பிக்கும் சுதந்திரம்
சி. சரவணபவானந்தன் நிருவாகச் செயலாளர், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்,
UCATION INTERNATIONAL) 2004 SOaouisi) நாட்டில் ஆய்வுக்கான தலைப்புகளிலொன்றான )’ என்னும் முன்மொழிவு ஆவணத்தைத் தழுவி ள் கல்வியாளர்களின் கோட்பாடுகளாகும். சர்வதேசக் லாளர்கள், ஆசிரியர் தொழிற் சங்கங்களின் உலக ரியர் சங்கம் இதில் பட்டய அங்கத்துவம் கொண்ட ாளர்களை உறுப்பினர்களாக கொண்ட 159 நாடுகளின் களின் உலக அமைப்பு ‘சர்வதேசக் கல்வியகம்’
ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களின் பூட்டும் நோக்குடனும் வெளியிடப்படுகிறது.
ம் சகல சுதந்திரத்திற்கும் மூலாதாரமாகவிருப்பதால் கு எதிரான குற்றமாகும்’ என ஜோன்டூயி தனது
ம் பொழுது ஆசிரியத் தொழிலின் கல்விச் சுதந்திரமும் லாளர் தாபன யுனெஸ்கோவின் ஆசிரியர் அந்தஸ்து தறிப்பிடப்பட்டுள்ளது.
ணவர்களுக்கான குறிப்பிட்ட கல்வி இலக்குகளை து அறிவு, திறன் என்பவற்றை பயன்படுத்தி கற்பிக்கும்
ஒருவர் தன்னைச் சார்ந்துள்ள மாணவர்களினதும், துக் கல்வியின் எல்லா விடயங்களின் தீர்மானம்
163

Page 188
மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேை அல்லது ஆசிரியத் தொழிற் சங்கத்தினூடாகே சம்பந்தப்பட வேண்டும்.
மாணவனின் சகல கற்றல் விடயங்களிலும் ஆ வேண்டும். இது வகுப்பறைகள் கற்பித்தலாக6ே செயற்பாடுகளாகவோ இருக்கலாம். இது மாணவ கணிப்பீடுகள் என்பனவற்றை உள்ளடக்கியது.
ஒரு அரசு சனநாயகத்து தன்மையுடையதா இருந்தாலும் ஆசிரியர் ஒருவருக்கு கற்பித்தல் சுத இந்த சுதந்திரத்தை முன்னேற்றுவதற்கும் பாதுகாட் வேண்டியது அவசியமானதாகும்.
ஆ) ஆசிரியரின் சுதந்திரமான கற்பித்தலுக்கு இ
நிலவும் வாய்ப்புகள் மூலம் தொழில்ை
நியாயமான சம்பளம்
பாதுகாப்பான, திறந்த சூழ்நிலையில் சக ஆசிரியர்களுடன் இணைந்து பணி
வினைத்திறனுடனான கற்பித்தலையு வளங்களை இலகுவில் பெறக் கூடிய
> ஆசிரிய தொழிற்சங்க நடவடிக்கைகள்
மொத்தத்தில் ஆசிரியர் ஒருவருக்கு தன தலைமைத்துவத்துக்கான உரிமை இருக்க வேண்
இவ்வாறான தலைமைத்துவத்தின் மூலம் கற் ஈடுபட வழிசமைக்க வேண்டும். சில சந்தர்ப்பங்கள் வகுப்பறையில் இருக்க முடியாது போவதுமுண்டு சூழ்நிலையிலும் கற்கும் உரிமை உண்டு. விசேட விடுபடவேண்டிய சந்தர்ப்பங்களைக் கூறலாம். அ பெற்றோர் மற்றும் பாடசாலைச் சீருடை இல்லாை மாற்றீடான முறைக் கல்விக்கு இவர்கள் தள்ளப்ட
“கல்வி முறைமையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட என்பவற்றை பெறுவதற்கான சுதந்திரமே” ஒரு ம சூழல் மூலம் பெரியவன் ஆவதற்கான சுதந்திரமு
மாணவரின் உரிமையென்பது கல்வி மூலம் பெற தேவைகள், சமய நம்பிக்கைகள் மற்றும் பிறயதார்த் வேண்டும். உதாரணமாக:- உலகிலுள்ள பெண் 1 மறுக்கப்படுகின்றன. இதனை ஏற்றுக்கொள்ள மு
ஒருமாணவன் கற்றல் சுதந்திரத்தை கொண்டிரு உரிமையுடையவன். அங்கே பாடசாலை முறைை தடைகள் ஏற்படலாம்.

ண்டும். இதில் தான் பணியாற்றும் புலத்தினூடாகவோ, வா நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ
பூசிரியர் ஒருவர் ஈடுபாடு கொண்டவராக இருக்க வா, குழு முயற்சியாகவோ அல்லது பாடசாலைச் ர் கணிப்பீடு, மாணவர் பின்னூட்டலுக்கான பல்தரக்
கவோ அல்லது வேறு வகையிலானதாகவோ ந்திரம் அவசியமானதாகும். ஆசிரியரின் மாணவனின் பதற்கும் ஆசிரியத் தொழிற்சங்கம் ஏதுவாகவிருக்க
இருக்க வேண்டியவை.
)மயை மேம்படுத்தக் கூடியதாகவிருத்தல்.
கற்பித்தல் பணியில் ஈடுபடக் கூடியதாகவிருத்தல். யாற்றல்.
ம் ஆய்வுகளையும் மேற்கொள்ளக் கூடியதான தாகவிருத்தல்.
ரில் ஈடுபடக் கூடியதாகவிருத்தல்.
து நிறுவனத்தில் சிறந்த கல்விப் பாங்குள்ள ன்டும்.
பித்தல் சார்பற்ற பணிகளை குறைத்து கற்பித்தலில் ரில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு .ெ மாணவர்களுக்கு இயல்பிற்கு புறம்பான கற்றல் மாக முறைசார்ந்த பாடசாலைச் சூழ்நிலையிருந்து வ்வாறான சந்தர்ப்பங்களாக வறுமை, கல்வியறிவற்ற ம போன்றவற்றைக் குறிப்பிடலாம். இக்காரணத்தால் படுகிறார்கள்.
அடைவுமட்டத்தை எய்துவதற்குரிய அறிவு, திறன் ாணவனின் கற்றல் சுதந்திரமாகும். அதுவே கற்றல் )ம்கூட எனக் கொள்ளலாம்.
க்கூடியவற்றை அவரின் பால்நிலை, வயது, விசேட தங்கள் என்பனவற்றிற்கு அப்பாற்பட்டதாக இருக்க பிள்ளைகள் கல்வி மூலம் பெறவேண்டிய நன்மைகள் Լջեւ III Ֆl.
ப்பது மட்டுமல்ல தரமான கல்வியைப் பெறுவதற்கும் மக்கு வெளியேயும் தரமான கல்வியை பெறுவதற்கு
64

Page 189
கட்டமைப்பினுள் காணப்படும் சில விடயங்க அமைந்துவிடுகின்றன. அவையாவன ஒதுக்கப்படு நிதிப்பயன்பாடும் கல்வியை பெறமுடியாமையும், வ ஆசிரியர் போதாமை, வசதிகள் உபகரணங்கள் பற்ற பிறவளங்கள் என்பன ஆகும். பலதரப்பட்ட புற ஆற்றலை பாதிக்கிறது. இவற்றில் சமூகச் சூழல் வசதியின்மை, உடல் உளத் தாக்கம், குழந்தைத் தன்மை என்பனவும் அடங்கும்.
கல்வி கற்பிக்கும் சுதந்திரம் எந்த சர்வதே சட்டவாக்கத்தாலோ மட்டுப்படுத்தப்படவில்லை. தரமுள்ள கல்வியைப் பெறும் உரிமை உண்டு.
பிள்ளை உரிமைப் பிரகடனம்
சகல குழந்தைக்ளும் ஆகக்குறைந்தது ஆரம்ப பெறும் உரிமை உடையவர்களாவர். சமூகத்த பொறுப்புள்ள, சுயசிந்தனையுள்ள தனது ஆற்றல் உறுதிசெய்யக்கூடிய, அவரின் பொதுவாழ்விற்குரிய கூடியதாகவிருக்க வேண்டும்.
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக நல்ல ஆக முடியாத நிலை இன்று ஒரு தேசியப் பிரச்சனைய அமைந்து விடுகிறது.
கற்றல் கற்பித்தலை விருத்தி செய்வதற்கு பொரு
1) ஆய்வு அறிக்கைகளில் மாணவர் எவ்வாறு
பாடசாலைகளை நடாத்துதல்.
2) பாடசாலைகளுக்கு தேவையான நிதிை நிதியைப் பெற்று கல்வித் தேவையைப் ெ
3) மாணவர்களை அறியாதிருப்பதையும், தன கற்றல் சமூகங்களின் ஆக்கத்திறனை ஊக் பாடசாலைகளுக்கு மீள் ஒதுக்கீடு செய்
4) மேற்பார்வையாளர்கள், அதிபர்கள், ஆசிரி தெரிவு செய்தல், தயார்ப்படுத்தல், அத்தெ பாடசாலையின் திறமையையும், தோற்றப்பr சங்கங்களுடன் இணைந்து 21ஆம் நூற்
கவனத்திற்கொள்ள வேண்டிய பின் நிபந்தனை
01. நோக்கம் : ஓர் உறுதியான அரச
சமத்துவம் என்பனவற் ஓர் உறுதியான அரச

ள் தரமான கல்வியைப் பெறுவதற்கு தடையாக ) நிதிப்பற்றாக்குறை, கல்வி முறைமையில் ஒதுக்கிடும் நப்பறை அளவு, பாடசாலை அளவு, தகைமையுள்ள ாக்குறை, சுகாதார வசதிகள் போதாமை, பாடநூல்கள் ந்தாக்கங்கள் பாடசாலைக்குள் மாணவரின் கற்கும் கடுமையான வறுமை, போசாக்கின்மை, குடியிருப்பு தொழில், அகதி வாழ்வு, இடம்பெயர்வு, சமமற்ற
பிரகடனத்தாலோ, பரிந்துரையாலோ, அல்லது பிள்ளைகளின் உரிமையினூடாக இதனைப் பார்த்தால்
நிலைக்கல்வியை கட்டாயமாகவும் இலவசமாகவும் திற்கு பயனுள்ள ஒரு பிரசையாவதற்குரிய சமூகப் களைச் சம வாய்ப்பின் மூலம் விருத்தி செய்வதை பாங்கினை வெளிப்படுத்தக்கூடிய கல்வியை வழங்கக்
சிரியர்கள் கூடப் பாடசாலைகளில் நிலைத்து நிற்க ாகவுள்ளது. தரமான கற்பித்தலுக்கு இது தீங்காக
நத்தமான வழிமுறைகள் சில:-
று கற்கின்றனர் என்று கூறப்படும் முறைகளின் பிரகாரம்
பப் போதியளவு ஒதுக்குவதன் மூலம்’ போதியளவு பறக்கூடியதாகவிருக்க வேண்டும்.
ரிமைப்படுத்துவதையும் நீக்குதல், குறைந்தளவிலான குவித்தல், பாரியளவிலான குறைந்த வெளிப்பாடுடைய தல்.
ர்கள், வேறு பாடசாலை தலைவர்கள், ஆகியோரைத் ாழிலில் நிலைத்திருத்தல், கெளரவித்தல், அவர்கள் ட்டையும், வெளிக்கொணர்வர். அதன்மூலம் ஆசிரியர் ாண்டின் எதிர்பார்ப்புகளை கண்டடைய முடியும்.
Б6ії:-
பாடசாலை முறைமை மூலமாக சிறந்த தன்மை,
றை ஒருவர் மிக உயர்ந்த நிலையில் பெறக்கூடியதான
பாட “லை முறைமை தேவைப்படுகிறது.
165

Page 190
02. ஆளுகை : முன்னேற்றங்களைக் கt LITLdT606očБ6 -3) Jeh_
03. முரண்பாடற்றதன்மை பெறுபேறுகளை தரக்கூ - ஒரு சிறு எண்ணிக்ை
அவசியமாகும்.
04. சான்று : மாணவனின் கற்றல் ஏ சான்றுகளின் அடிப் அத்திட்டத்தை நடைமு
05. ஆசிரியர்களுக்கு உதவுதல் அரசு வெ ஆசிரியர்க வேண்டிய
06. பின்னூட்டலும் நடைமுறைப்படுத்தலும்: த ഖി
ஒ( (UD
ஆசிரியர் அந்தஸ்து தொடர்பான சர்வதேச தொழி
ஆசிரியர் தன் ஆசிரியத் தொழில்மையில் தனது வினைத்திறனுடனான கற்றலை முன்னேற்றக் கூடிய பெறக்கூடியதாகவிருக்க வேண்டும்.
ஆ. கற்றல் கற்பித்தலுக்கான நிபந்தனைகள்
கல்வி கற்பிப்பதற்கும் கற்பதற்குமான உரிை பொருளாதார அம்சங்கள் பூரணப்படுத்தப்படும் கூடியதாகவிருக்குமென்பதை வரையறுக்க முடிய நிறுத்துவதன் மூலம் கல்வி கிடைத்துவிடுமென்று
ஒரு தகைமையுள்ள ஆசிரியர் மூலம் மாண6 இது நிகழும் விடயமாகும் என்பதை கவனத் ஆசிரியத்தினூடாக அறிவு வாழ் திறன்கள் போன்ற6 ஆசிரியரினால் மாத்திரம் மாணவனிடம் புதைந்துள் மூலமே சமூகத்தின் பால் சாதகமான இடைத்தாக் மாணவன் புகமுடியும். சிலவகையான நிபந்தனை
நிபந்தனைகள் பிள்ளை
பெளதீகச் சூழல் பொருத்தமான கற்றலுக்கு கரணங்களுடனான சூழல் பறைச் சூழல் பாடசாலைச் சூழல் பாடநூல்களுடன் ஏனைய UT LỞ T6OD6Dở ởb6ODLULE கள் உணவு போக்குவரத்

ன்காணிப்பதற்கும், பரந்த வழிகளை அமைப்பதற்கும் ன் இணைந்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.
உய நோக்குடைய, இறுக்கமான கல்விமுறைமையை கயைக்கொண்ட நீண்ட, திட்டங்கள் அரசிற்கு
துக்கள் முன்னேற்றுவதற்கு உதவும் என்ற ஆய்வு டையில் கொள்கையை உருவாக்குவதோடு )றைப்படுத்துவது பற்றியும் கூறுதல் வேண்டும்.
றுமனே கொள்கைகளை வகுப்பதோடு நிறுத்தாது ளோடும், அதிபர்களோடும் ஒன்றிணைந்துகொள்ள தேவை உள்ளது.
டைகளை இனம் காண்பதற்கும் அவற்றிலிருந்து டுபடுவதற்கும் உதவுவதன் மூலம் இடையிடையே ழங்கான பின்னூட்டல் மேற்கொள்வதன் மூலம் ன்னேற்றங்களை அரசு மேற்பார்வை செய்ய வேண்டும்.
லாளர் யூனெஸ்கோவின் பரிந்துரை வழிகாட்டிகள்:-
முழுமையான கவனத்தை செலுத்துவதற்கு வசதியாக சேவை நிபந்தனைகளை ஆசிரியர்கள் கட்டாயமாக
மயானது சாதகமான பெளதீக உளவியற் சமூக போதுதான் உண்மையான கல்வி கிடைக்கக் ம். வகுப்பறைக்குள் ஒருவரை மாணவர் முன்பாக
எண்ண முடியாது.
பன் வினைத்திறனுடன் கற்கும் நிகழ்வினூடாகவே திற்கொள்ள வேண்டும். இதனை தொழில்மை பற்றை மாணவர்கள் பெற்றுக்கொள்ள, தகைமையுள்ள ள திறன்களை வெளிக்கொண்டு வரமுடியும். அதன் கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மனிதத்துவத்திற்குள் களுடாக இதை சாராம்சமாகக் கீழே காட்டலாம்.
ஆசிரியர்
ரிய உப பொருத்தமான கற்றலுக்குரிய உபகர வகுப் | ணங்களுடனான சூழல் வகுப்பறைச்
சூழல் வன்முறையற்ற சமாதான நிலவுகை வகுப்பறையில் பொருத்த வளங்கள் | மான மாணவர் தொகை, பாடசாலைச் பாதணி சூழல் கற்பித்தல் உபகரணங்கள் து வசதி உணவு, போக்குவரத்து வசதி
56

Page 191
நிபந்தனைகள்
பிள்ளை
உளம் சார்ந்த
தனது ஆற்றல்களை பூரண விருத்தி செய்ய விரும்பும் மாணவரையும் மதித்து நட பிள்ளையின் உரிமை மொ பால்வேறுபாடு, வலதுகுை போன்ற இன்னோரன்னவற் புறம்பாக ஒவ்வொரு பிள்6 தனித்துவத்தை மதித்து மனித உரிமை
சமூகப் பொருளா தார நிலை
முழுமையான கல்வி கால எய்த முடியும் என்ற நம்பி மனத்துவேசமின்றிக் கற்ற
தொழில் முறை வறுமை,
லாமை, எயிட்ஸ்/எச்ஐவி.
07. போதிய நெகிழ்விற்குரிய நிதி வழங்கல் :
மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளை நடைமுறையில் இதை வேறு முறையில் கூறுவதானால் அரசு கற்ப போற்றுகிறது என்று பொருள் கொள்ளலாம்.
இ. கற்பித்தல் சுத்ந்திரத்தையும் கற்றல் சுதந்திரத்
ஆசிரியர்களுக்கு கற்பிப்பதற்கான முழுப்பாதுகாப்பு மாணவனுக்கு கற்கும் சுதந்திரமும் உத்தரவாதப் அடிப்படையுமாகும். இது ஆசிரியரின் புலமை, த்ெ விடயமாகும். ஆனால் இன்றுள்ள போக்குகள் அச்சுறுத்தலாகவிருக்கின்றன. (நெல்சன் ஸ்டான்
அச்சுறுத்தலாக அமைபவை சில:-
> கல்விக்கான நிதி வளம் போதாமை > கல்வி சார்பில் தீர்மானம் மேற்கொள்ளு இருப்பதோடு இது அரசியல் தீர்மான
கல்வியை தனியார் மயப்படுத்தல் கலைத்திட்டம் அரசினாலும் பாடசாை பாடசாலைக்குப் போதலை ஆசிரியர்க கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பொது அடிப்படைவாதச் சமயக் குழுக்கள்; விடயத்தை அல்லது முறையை வகுப்ப கருத்துச் சுதந்திரத்துக்கு தடை போடு

ஆசிரியர்
OTOT 5 ஆசிரியரின் தொழில் மையை யும் ஒவ்வொரு ஆசிரியர் தொழிலைப் புலமைத் -த்தல் இது தொழிலாகவும் மதித்தல் ஆசிரியர் றி, இனம், தொழில் உரிமைகள் தொழில் நடு றந்த நிலை நிலைமை, மொழி, இனம், பால் றிற்குப் வேறுபாடு, வலது குறைந்த நிலை തണuിങ്ങ് போன்ற இன்னோரன்னவற்றிற்குப் நடத்தல் புறம்பாக ஒவ்வொரு ஆசிரியர்களின தும் தனித்துவத்தை மதித்து நடத்தல் மனித உரிமை
த்தை முழுமையான கற்பித்தல் காலத்தை க்கையுடன் எய்த முடியுமென்ற தைரியத்தை ல் குழந்தை கொண்டிருத்தல், குழந்தை தொழில் வீடில் முறை வறுமை, வீடில் லாமை,
எயிட்ஸ்/எச்ஐவி.
இவ்வொதுக்கீடுகளை பாடசாலைகள் தமது டந்தகால செலவு இருக்கை அல்லது நிகழ்காலத் தவைக்கு போதுமான அளவில் உண்மைச் சலவுகளை ஈடுசெய்யக்கூடியதாக நிதி ஒதுக்கீடு சய்தல் வேண்டும். அதனைப் பாவிப்பதற்கு கீழ்மட்ட லையில் மேலும் நெகிழ்வுத் தன்மை இருக்க வண்டும்.
பிடுவதன் மூலம் பொருத்தமான ஜனநாயகம் நிலவும். பதற்கான சுதந்திரத்தையும் கற்கும் சுதந்திரத்தையும்
தையும் பாதுகாத்தல்
தேவையானதும் உரித்தானதுமாகும். அதேவேளை படுத்தப்பட வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் நாழிற் திறமை என்பனவற்றை கருத்தில் கொள்ளும் ஆசிரியரின் கற்றல் கற்பித்தல் சுதந்திரத்திற்கு Iลปี 2001)
ரும் கொள்கைகள் ஆசிரியர்களுக்கு எட்டாததாக வ்கள் மூலம் பிரதியீடு செய்யப்படுகிறது.
ல சபைகளினாலும் நடத்தப்படுகிறது. ளை அரசும் ஊடகத்துறையும் கண்டித்தல்.
மக்களின் நியாயமற்ற எதிர்பார்ப்புகள் தேசப்பற்றுக் குழுக்கள் என்பன குறிப்பிட்ட சில றைகளில் பின்பற்ற வேண்டுமென்று வலியுறுத்துவது. 16) lġbl.
67

Page 192
ஆசிரியர்கள் இயல்பாகவே மேலே குறிப்பிட்ட கற்பித்தல் சுதந்திரம் கேள்விக் குறியாகிறது. ஆபத்துக்குள்ளாகிறது. இதனால் ஆசிரியர்கள் த நிகழ்கால அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, அ ஆசிரியத் தொழிற்சங்கங்கள் முக்கியமான இட முன்மொழிவுகள், ஆசிரியர் விருத்தியும் பயிற்சியும் உறுதிசெய்யும் பொருட்டு அரசுடனும், வேலை( பேசுதலுக்கு வழிவகுக்கும்.
சகல மட்டங்களிலும் தீர்மானம் மேற்கொள்ளு வைக்கும் கைங்கரியத்திற்கு ஆசிரியர் சங்கங்கள்
முடிவுரை
ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர்க்கு ஆய்வு செயற்பாட்டில் புதிய முறைகளை சோதிப்பதும், ஜனநாயகத்திலான அல்லது வேறுவகையான தர எண்ணங்களை தடைசெய்வதன் மூலமோ தடுப் கற்பித்தல் நிலைகள் மூலம் அறிவைத் தேட வேண் சுதந்திரத்தை கொண்டிருக்கும் அதே வேளை உரியவர்கள் ஆவார். இவ் உரிமையை மாணவர் அவசியம். இவ்வருட உலக ஆசிரியர் தினத்தின் 'தரமான கல்விக்கு தகைமையுள்ள ஆசிரியர்’ தொனிப்பொருளாக சர்வதேச கல்வியகம். யுன்ெ கல்விமுறையில் தகைமையுள்ள ஆசிரியர்களை ( வைத்திருத்தலும் மிக அவசியமான தேவையாக
米米米米米米米
米米米米米米米米米米米米水冰米米米米米
冰冰米米米米米米米米米冰冰
மனக்காட்டுப்பாட பாடும் ஏற்படும். கட்டுப்பாடினால் மனழு வரும். நினைத்ததெல் மனத்துக்கும் கட் போய்விடுகிறது. மன கட்டுப்பாடும் ஒன்றுக்
U6O6).
\ a

அச்சுறுத்தலிற்கு ஆளாகுவதால் அவ்விடயங்களில்
மறுபுறத்தில் மாணவனின் கற்றல் சுதந்திரமும் மது உரிமைகளுக்காக விழிப்புணர்வுடனிருப்பதில்லை. ஆசிரியர் - மாணவர்களின் உரிமைகளைக் காக்க த்தை வகிப்பர். இது ஆய்வுகள், ஆசிரியர்கள் ) என்பன ஊடாக ஆசிரியர் - மாணவர் கற்றலை கொள்வோருடனும் பேச்சிற்குச் செல்லுதல், பேரம்
தலில் ஆசிரியர்களை புதிய கருத்தாடலுக்கு ஈடுபட
உதவுகின்றன.
வுக்கான எண்ணங்கள் அவசியம். கற்றல், கற்பித்தல் முன்னேற்றுவதும் இதற்கு அவசியமாகிறது. இது ப்பிற்கும் பொருந்தும். ஆசிரியர்களின் மாணவர்களின் பதன் மூலமோ நிறுத்த முடியாது. சிறந்த கற்றல், ாடியது அவசியமாகும். ஆசிரியர்கள் கற்பித்தலுக்கான மாணவர்கள் தமக்குரிய கற்கும் சுதந்திரத்திற்கும் முழுமையாகப் பெறுவதற்கு தகைமையுள்ள ஆசிரியர் தொனிப்பொருளும் அதையே எமக்கு உணர்த்துகிறது. என்பதே இம்முறை ഉ-ബ് ஆசிரியர் தினத்தின் ஸ்கோ என்பன பிரகடனப்படுத்தியுள்ளன. அத்தோடு சேவைக்கு உள்ளெடுத்தலும் சேவையில் தொடர்ந்து ഖണ്ണg.
米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米米米米米米
将来来来来来米米米米
ட்டினால் வாய்க்கட்டுப் அதுபோல் , வாய்க் pம் ஒரு கட்டுப்பாட்டுக்கு bலாம் பேசி விடுவதால் டுப்பாடு இல் லாமல் க்கட்டுப்பாடும் பேச்சுக் கொன்று தொடர்புடை
الص=
168

Page 193
LDலையக இலக்கியம் எனும் தொகுதி ஈழத்து இ வருகின்றது. இலக்கியத்தின் ஜனநாயக பண்பு உணரப்பட்டு வெளிக்கொணரப்படுகின்றது 6T606).T தமக்கென தனித்துவமான அம்சங்களையும், ஓ விளங்குகின்றது. “மலையகம் என்ற பின்புலத்தில் இரு முக்கிய விடயங்களை தன்னுள் அடக்கி நிர்
1. O6O)6).J85 இலக்கியத்திற்கான சமூகப்
2. மலையக இலக்கியத்தில் கைலாசபதி
மலையக இலக்கியத்திற்கான சமூகப் பின்புலத்தி இணைத்து நோக்குவதன் மூலம் ஏற்படும் எதிர் கலை இலக்கியம் பற்றிய ஆர்வமுள்ள எழு அத்தியாவசியமானதாகும்.
மலையக இலக்கியம் பற்றிய கைலாசபதியின் ரே
மலையக கலை இலக்கியம் குறித்து ஆரா பார்வையை மதிப்பிடுவதற்கும் மலையகம் பற்றிய
இது தொடர்பில் கலாநிதி துரைமனோகரன்
“மலையகம் என்பது இன்று வெறும் புவியி தன்னளவில், தனித்துவமான மக்கள் வாழ்நிலைக செய்கையையும், அதன்பக்க விளைவான சிறு மு: நிற்கின்றது” எனவும்.
கவிஞர் எம்.முத்துவேல் தமது ஆய்வில்
”மலையக சமூகவமைப்புக் கலப்பேயில்லாத ஸ்தாபிதமானது. மலையகத்தின் அடிப்படை சொத்துடைமை ஏதும் இல்லாத கூலித்தொழில சொற்ப கூலிக்காக உடலுழைப்பை விற்கும் தொ

மலையகம் என்ற பின்புலத்தில்
கைலாசபதி என்ற மனிதர்
லெனின் மதிவானம் M.A. Tra(Hinduism) PGDE, PGDEM, SLEAS, உதவி ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கல்வியமைச்சு
|லக்கியத்தின் மிக முக்கியமான கூறாக போற்றப்பட்டு வளர, வளர இதன் முக்கியத்துவம் சிறப்பாகவே ம். அவ்வகையில் இவ்விலக்கிய தொகுதியானது இனத்துவ அடையாளத்தையும் கொண்டதாக b கைலாசபதி என்ற மனிதர்’ எனும் இத்தலைப்பு ற்கின்றது.
பின்புலம்.
யின் பங்களிப்பு
ைெனயும், அதற்கு கைலாசபதியின் பங்களிப்பினையும்
பார்ப்புகள், தாக்கங்கள் பற்றி அறிந்து கொள்வது pத்தாளர், வாசகர், விமர்சகர் ஆகியோருக்கு
நாக்கு:-
ாய்வதற்கும், அவை தொடர்பான கைலாசபதியின்
தெளிவுணர்வு அவசியமானதொன்றாகின்றது.
யல் அர்த்தத்தை மாத்திரம் கற்பிப்பதாக அன்றி, ளையும், அதற்கு ஆதாரமான பெருந்தோட்டி பயிர்ச் தலாளித்துவத்தையும், சுரண்டலையும் புலப்படுத்தி
முதலாளித்துவ அமைப்பாகவே தோற்றம் பெற்று மக்கள் (அடிநிலை மக்கள்) இழப்பதற்கெனச் ாளர்களேயாவர். முதலாளித்துவம் தோற்றுவித்த ாழிலாளி வர்க்கமாகவே இப்பிரதேசத்திற் குடியேறி
69

Page 194
வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு மூலதனக்க வர்க்கத்தினருக்கும் இடையில் நிலவுகின்ற உற்பத் அடிப்படையாகும். இது ஒரு முரண்பாடுடைய முரண்பாடேயாகும். வரலாற்றை பரிணாமத்தை அ போராட்டமானது இப்பகை முரண்பாட்டின் அடியா வரையறை செய்துள்ளனர்.
மலையக சமூகவமைப்பில் நிலவும் ஒரு கூட்டு தம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ளும் போது அ உணர்வுகளும் இக்கூட்டு அமைப்பினை பிரதி அமைப்பானது சோகத்தை இசைத்தாலும் அவை அமையும் என்பது சமூக நியதியாகும்.
அவ்வகையில் ஆயிரக்கணக்கான தொழி சமூகத்திலிருந்து ஜீவிதம் பெறுகின்ற கலை இல வெளிக்கொணர்வதாக அமையும். பேராசிரியர் கைல் இலக்கியத்தை நோக்கியுள்ளார். என்பதை 'தே ‘மலைநாட்டு மக்கள் பாடல்கள்’ (மலையக நா எழுதிய முன்னுரைகள் எடுத்துக் காட்டுகின்றன.
மலையக மக்கள் குறித்தும், மலையக இல கொண்டவராக காணப்பட்டார். ஓர் உதாரணத்தி முன்னுரையில் இடம்பெற்ற பந்தியொன்றினை குறித்துக்காட்ட வேண்டியது அவசியமானதொன்
“மலையக உழைக்கும் மக்களின் வாழ்க்கையிலி அந்த வாழ்க்கை அவலம் நிறைந்ததாகவும், பலவ உட்பட்டதாகவும், சோகமே நித்தியமாகவும், நி உண்மையாகும். அத்தகைய வாழ்க்கையை சிறித6 இழையோடுவது எதிர்பார்க்கக் கூடியதே. மனிதத்துவத்தையும், ஆங்காங்கு காட்டுகின்றார்.
பேராசிரியர் கைலாசபதி தான் வாழ்ந்த க முடுக்கிலும் இடம்பெற்ற இலக்கிய நிகழ்வுகள் அக்கறை கொண்டவராகவும் காணப்பட்டார். “மலைநாட்டை பொறுத்த வரையில் முப்பதுகளின் மத்தியில் உழைத்து வந்த சில தொழிற்சங் அறியப்பட்டிருந்தன. குறிப்பாக எப்.ஜி.நடேசய்யர் இருந்தார். பின்னர் பாரதி சஞ்சிகையை நடாத் கே.கணேசுஷ் மலையகத்தை வாழிடமாக கொண்
என - மலையைக மண்ணில் பாரதி வேர்கெ ஆம் ஆண்டு பாரதி விழாவிற்காக இலங்கை வர் இடம்பெற்ற பாரதி விழாவில் கலந்து கொண்ட மேற்குறிப்பிட்ட தமது கட்டுரையில் குறிப்பிடுகி பேராசிரியர் கொண்டிருந்த நுண்ணயத்துடன் கூடி
தேசிய இலக்கிய செல்நெறியில் மலையக இ
இலங்கையில் வாழ்ந்து வருகின்ற மலையகத் முயற்சிகள் 1930க்கு பின்னரே தொடங்குகின்றது

ாரருக்கும் உழைப்பை விற்பவர்களான பாட்டாளி தியுறவே மலையக சமூகத்து மனிதவுடாட்டத்தின் உறவு. அதுவும் நேச முரண்பாடாக அன்றி பகை 1டையச் செய்வதன் மூலாதார அம்சமான வர்க்கப் க பிறப்பதேயாம்.” எனவும் மிகப் பொருத்தமாகவே
அமைப்பானது உழைப்புடன் அல்லது உற்பத்தியுடன் தன் விளைபொருளாக பீறிடும் கலை இலக்கிய பலிப்பதாகவே அமைந்து காணப்படும். கூட்டு கூட சமூக அசைவியக்கத்தை முன்னெடுப்பதாகவே
லாளர்களை பெரும்பான்மையாக கொண்டதோர் ககிய உற்பத்திகளும் பாட்டாளிவர்க்க உணர்வையே Uாசபதி அவர்கள் இந்நிலைப்பாட்டிலிருந்த மலையக ாட்டக் காட்டினிலே’ (சிறுகதை தொகுப்பு - 1980) ட்டார் பாடல் தொகுப்பு 1983) ஆகிய நூல்களுக்கு
)க்கியம் குறித்தும். கைலாசபதி ஆழ்ந்த அக்கறை 0காக "தோட்டக் காட்டினிலே’ சிறுகதை தொகுப்பின்
வாசகர்களின் நலன் கருதி இங்கொரு முறை றாகின்றது.
ருந்தே பெரும்பாலான கதைகள் முகிழ்ந்திருக்கின்றன. பிதமான சுரண்டல்களுக்கும், அடக்கு முறைகளுக்கும் ரெந்தரமாகவும் இருந்து வந்திருப்பது உலகறிந்த ாவேனும் சிந்திக்க முற்படும் கதைகளில் துன்பச்சுவை
துன்பத்திற்கு மத்தியிலும் வாழத் துடிக்கும் கள் கதையாசிரியர்கள்”
ாலகட்டத்தில் மலையகத்தின் ஒவ்வொரு மூலை குறித்து தேடலை மேற்கொண்டவராகவும், ஆழ்ந்த ‘இலங்கை கண்ட பாரதி' என்ற கட்டுரையில். பிற்பகுதியிலும், நாற்பதுகளிலும் தோட்டத் தொழிலாளர் கவாதிகளின் மூலம் பாரதி பாடல்கள் ஓரளவு பாரதி பாடல்களில் நிரம்பிய ஈடுபாடு கொண்டவராக திய கே.கணேசுஷ், கே.ராமநாதன் ஆகிய இருவரில் டவர் என்பதும் மனங்கொள்ளத்தக்கது.” ாண்டு கிளை பரப்பியதை குறிப்பிடும் பேராசிரியர் 1956 திருந்த எழுத்தாளர் சிதம்பர ரகுநாதன், பதுளையில் மை பற்றியும், அவரது உரையின் கனதி குறித்தும் ன்றார். மலையக கலை இலக்கியம் தொடர்பில் ப பார்வைக்கு இவை தக்க எடுத்துக் காட்டுகளாகும்.
லக்கியம் பற்றிய கைலாசபதியின் மதிப்பீடு:-
தமிழரைப் பொறுத்த மட்டில், இவர்களது இலக்கிய குறிப்பாக 1954க்கு பின்னரே மலையக தமிழரது
170

Page 195
இலக்கிய உற்பத்திகள், சிந்தனைகள் ஈழத்து ே இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உலகளாவிய ரீதியில் இடதுசாரி இயக்கங்கள் உழைக்கும் மக்களை நோக்கிச் சென்றது. இ தேசிய இலக்கியம், இயக்கம் என்பன தோ முன்னெடுக்கப்பட்டன. “தேசியம்’ என்ற பதத்த போது குறுகிய வாதமாக தென்படலாம். ஆன இனங்களினதும், தேசிய சிறுபான்மை இனங்களில் குறிப்பாக இக்குரல் அமைந்து காணப்படுவதனை உ என்ற சிந்தனை முற்போக்கு, மாக்ஸிய தளங்களிலிரு அமைந்து காணப்பட்டது.
இக்காலப் போக்கில் எழுந்த ‘தேசியம்’ பற்றிய பாவிக்கும் கபடத்தனங்களிலிருந்து விடுபட்டு, அ நிலைப்பாட்டினை அது கொண்டிருந்தது.
கார்ல் மாக்ஸ் தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்ை குறிப்பிடுகின்றார். “மிகப்பல தேசிய இலக்கியங்க உலக இலக்கியம் உதயமாகின்றது.’ பேராசிரியர் தேசிய இலக்கிய கோட்பாட்டை முன்வைத்தார்.
பேராசிரியரின் பார்வ்ை!
“குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் சமூகவமைட் சீர்திருத்தவோ முயற்சிகள் நடைபெறலாம். இங்கு வெறுமனே ஒரு நாட்டை பிரதிபலிப்பது தேசிய கூறும் பொழுது இலக்கியம் படைப்பவர்களின் எடை போடுகின்றது. சுருங்க கூறின் தேசிய இலச் (மரகதம் - 1961)
இவ்வாறான தேசிய இலக்கிய கோட்பாட்டி6ை என அவ்வப் பிரதேசம் சார்ந்த மண்வாசனை மிக் தேசம் தழுவியதோர் அவரது நிதானித்த பார்6ை
ஈழத்தில் தோற்றம் பெற்று வளர்ந்து வந்த ே மலையகத்திலும், மண்வாசனை மிக்க இலக்கிய : பேராசிரியர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“இலங்கையிலே கடந்த மூன்று தசாய்தங்கள் பெற்றமையும், அவ்வுணர்வின் விளைவாகவும், ெ அவ்வப்பகுதி மண்வாசனை கமழும் ஆற்றல் மிக்க உடன் நிகழ்ச்சியாக மொழி நடை, இலக்கிய உ ஏற்பட்டு வந்துள்ளதும் இப்போது இலக்கிய வரல கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புகளில் மலைநாட்டை மையமாக கொண்டு எழுதப்பட்டி
தேசிய இலக்கிய போக்கின் பரிணமிப்பில், மலை மையமாகக் கொண்ட ஆக்கங்கள் இயக்க ரீதியா அதன் வளர்ச்சிப் போக்கினை இனங்கண்டதுடன் ஆக்கமும், ஊக்கமும் அளித்த பேராசிரியரின் பங்
14-CM 4658

நசிய இலக்கியத்துடன் இணைகின்றது என்பதை யுள்ளனர். 1960களில் இலங்கையில் மாத்திரமன்று, வளர்ச்சியடைந்திருந்ததுடன், அவை பரந்துபட்ட தப் பிரக்ஞையின், உணர்வின் வெளிப்பாடாகவே ற்றம் பெற்றுத் தத்துவார்த்த போராட்டங்கள் னை மேலோட்டமாக அர்த்தப்படுத்திப் பார்க்கும் ால் சற்று ஆழ்ந்து நோக்கினால் தான் தேசிய ாதும், சமூக உருவாக்கத்தையும், வளர்ச்சியையும் ணர முடியும். இக்கால கட்டங்களில் ‘தேசியவாதம் ந்து நோக்கப்பட்டமையே அதன் பலமான அம்சமாக
சிந்தனையானது மனிதகுல விடுதலைக்கு எதிராகப் அதனை சர்வதேச கண்ணோட்டத்துடன் நோக்கும்
கையில் பாட்டாளிவர்க்க இலக்கியம் பற்றி இவ்வாறு ளிலிருந்தும், பிரதேச இலக்கியங்களிலிருந்தும் ஓர் கைலாசபதி அவர்களும் இச்சிந்தனை நிலைநின்றே
1பை அப்படியே பாதுக்காக்கவோ, மாற்றியமைக்கவோ, தேசிய இலக்கியம் தோன்ற இடமுண்டு. ஏனெனில் இலக்கியமாகாது. தேசிய இலக்கியம் என்று நாம் இலட்சியம், நோக்கம் முதலியவற்றையும் சேர்த்தே 5கியம் என்பது ஒருவித போராட்ட இலக்கியமாகும்.’
ண வரித்து நின்ற பேராசிரியர் வடகிழக்கு, மலையகம், க இலக்கிய உற்பத்திகள் தோன்ற துணை புரிந்தார். பயே இதற்கான அடிப்படையாகும்.
தசிய இலக்கிய கொள்கையின் உடன் விளைவாக உற்பத்திகள் தோற்றம் பெற்றன. இவ்வம்சம் குறித்து
ாக தேசிய இலக்கிய கோட்பாடு, இயக்க வடிவம் வளிப்பாடாகவும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆக்கங்கள் உருவாகி வந்துள்ளமையும். இவற்றின் றபத்திகள் முதலியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி றாகி விட்டது. பிரதேச வாழ்க்கையைப் பொருளாய்க் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு களமாக உள்ள ருப்பனவற்றிற்கு தனியிடமுண்டு’ (1980)
யக மண்வாசனையையும் சமகால பிரச்சனைகளையும் ன போராட்டங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய இலக்கிய உற்பத்திகள் தோற்றம்பெற கு முக்கியமானதொன்றாகும்.
171

Page 196
மலையக இலக்கியவாதிகளுடன், கைலாசபதி
பேராசிரியருக்கு இளமைக்காலம் தொடக்கமே 1953ஆம் ஆண்டு பதுளையில் இருந்த தனது க (இரு பக்கங்களுக்கு மேற்பட்டது) சான்றாக அமை குறிப்பிடுகின்றார்.
“சொந்த விவகாரங்கள் எதுவுமில்லை. படித்த ரசனைகள், பல புத்தகங்களைப் பற்றிய அறிமுகக் சொல்வார். நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துவ குறைப்புத்தகத்தை படிக்க ஓடி விடுவாராம். ச இந்தப்புத்தகம் வாங்க வேண்டும், படித்தபின் அ பிற்கால இலக்கிய ஆதர்சனங்களுக்கு அடிகே சிதில்லைநாதன் - 1992) அவ்வகையில் மலைய உறவாகவே அமைந்து காணப்படுகின்றது.
மலையக இலக்கிய முன்னோடிகளான சி.வி.வே படைப்புகளுக்கு பத்திரிகைத் துறையில் களம் விமர்சனங்களையும் முன்வைத்து நெறிப்படுத்திய ஒன்றாகும். பேராசிரியர் இவ்விரு படைப்பாளிகளைய கண்டார்.
சிவிக்கும் பேராசிரியருக்குமான உறவு மிக ெ வேறிரு விதங்களில் ஓர் அரிய சேர்வையாக கான மேற்கத்திய வீச்சுக்களின் சேர்வை. மற்றது யதார் (தங்கதேவன் - 1979) இவ்வகையில் சி.வியின் இனங்கண்டுள்ளார்.
1982 ஆம் ஆண்டு நடைபெற்ற பேராசிரியரின் காலத்திற்கு சொந்தமானவர்’ என்ற தலைப்பில் உ இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தார்.
“அரசியல் அனாதைகளாக புழுங்கிக் கொண்டிரு கைலாஸ். எங்கள் பெருமகன் அவர்.”
சி.வி. அவர்கள் தன்னால் எழுத முடியும் எ6 தூண்டிய முறையை பேராசிரியரின் அஞ்சலி உ இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கதொன்றாகும். குறித்து பாராட்டியதுடன் சிறப்பானதொரு முன்னுரை மலையக நாட்டாரியல் துறை ஆய்வுக்கான முன்(
சி.வி அவர்களைப் போலவே பேராசிரியர் மிக மலையக எழுத்தாளர் கே.கணேசுஷ் ஆவார்.
தினகரனுக்கு பொறுப்பாக இருந்த காலத்தில் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், பல அ அத்தகைய கலந்துரையாடல்களில் பங்குபற்றியவர் பிரேம்ஜி, சில்லையூர் செல்வராசன், இமுருகையன் கொள்வார். குறுகிய பிரதேச உணர்வுகளை கட சார்ந்த புத்திஜீவிகளின் ஆலோசனைகளையும், கருத் பத்திரிகை துறைசார்ந்த பணிகளையும் பட்டை தீட் சூழ்நிலைகளுக்கு ஏற்றவகையிலும் பிரயோகித்தார்
1

கொண்டிருந்த உறவு:-
மலையகத்துடன் தொடர்பு இருந்ததென்பதற்கு
ல்லூரி நண்பரான சிங்காரத்திற்கு எழுதிய கடிதம்
கின்றது. இது பற்றி என்.கே.ரகுநாதன் பின்வருமாறு
இலக்கிய புத்தகங்களிலிருந்து குறிப்புகள், விசேட குறிப்புகள் ஆங்கில நூல்கள் உட்பட சிங்காரம் பிட்டு, விரைவில் முடித்துக் கொண்டு எதாவதொரு டிதங்களிலும் அந்தப் புத்தகம் கிடைத்துள்ளது, தையிட்டு எழுதுகின்றேன் - இப்படியெல்லாம் லினார் போலத் தெரிகின்றது. (மேற்கோள் க நண்பருடன் கொண்டிருந்த உறவும், ஒரு சமூக
லுப்பிள்ளை, என்.எஸ்.எம்.ராமையா முதலானோரின் அமைத்து கொடுத்ததுடன் அவை தொடர்பான மை பேராசிரியரின் முக்கியமான பங்களிப்புகளில் ம், முற்போக்கு இலக்கியத்தின் நேச சக்திகளாகவே
நருக்கமானதாகும். “வேலுப்பிள்ளை அவர்களை கின்றார் பேராசிரியர் கைலாசபதி, ஒன்று சுதேசிய ாத்தத்தினதும், இலட்சியவாதத்தினதும் சேர்வை.
ஆளுமையை மிகச் சிறப்பாகவே கைலாசபதி
அஞ்சலிக் கூட்டத்தில் “கலாநிதி கைலாசபதி உரையாற்றிய சி.வியின் உணர்வுகளில் கைலாசபதி
த எங்களை உள்ளங்கனிந்து அன்புடன் நேசித்தவர்
ன்ற நம்பிக்கையை தன்னுள் வளர்த்து, எழுதவும் ரையில் குறிப்பிட்டமை (ந.இரவீந்திரன் - 1992) மேலும் சி.வியின் நாட்டார் பாடல்கள் சேகரிப்புக் யையும், சமூகவியல் அடிப்படையில் எழுதியுள்ளமை னோடி முயற்சியாக அமைந்துள்ளது.
நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பிறிதொரு
பேராசிரியர் எழுத்தாளர்களை அடிக்கடி சந்தித்து, ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டுள்ளார். 5ளான இளங்கீரன், கா.சிவத்தம்பி, சிதில்லைநாதன், போன்றோருடன் கே.கணேசுஷ் அவர்களும் கலந்து ந்து நின்ற பேராசிரியர் ஈழத்தில் சகல பிரதேசம் துக்களையும் உள்வாங்கித் தமது சித்தாந்தத்தையும், ஹக் கொண்டதுடன், அதனை மாறிவருகின்ற சமூக

Page 197
தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக கடமையா தொழிற்சங்க போராட்டங்கள், மலையக அரசியல்வ உண்மையின் பக்கம் நின்று கரிசனையுடன் பிரசுரி பற்றினை எடுத்துக் காட்டுகின்றது.
மலையக கலை இலக்கிய செயற்பாடுகளை கலை இலக்கிய பேரவைக்கும், அதன் செயல திரு.அந்தனி ஜீவாவை ஆர்வமூட்டி கலை இலக் கரிசனை கொண்டவராக காணப்பட்டார். “கை மலையகத்தில் இடம்பெறும் இலக்கிய நிகழ்வுக குறித்தும் ஆர்வத்துடன் வினவி, பல ஆலோசை குறிப்பிடுகின்றார். (தகவல்) அத்துடன் மலையக க சிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் பேராசிரிய கொண்ட மலையக மாணவர்களை இனங்கண்டு ஆர்வம் கொண்டவ்ராக காணப்பட்டார். அவ்வை புவியற்துறை மாணவரான சிவ.இராஜேந்திரன் மு துறையில் ஈடுபடுத்தி வழிகாட்டியும் உள்ளார். அவற்றின் வெளிப்பாடும்’ (பிரசுரிக்கப்படவில்லை) கல்விச் சிந்தனைகள்’ (பாரதி பன்முக ஆய்வு நூலி கட்டுரையும் பேராசிரியரால் நெறிப்படுத்தப்பட்டை
இவ்வாறு மலையக புத்திஜீவிகளை உருவாக்கு அமைந்து காணப்படுகின்றது.
மலையக இலக்கியத்தில் கைலாசபதிய
மலையக இலக்கியத்தில் பேராசிரியரின் இடம்பெற்றுள்ளது. அவரது இலக்கிய கோ இடம்பெற்றுள்ளது.
1. முற்போக்கு சிந்தனை நிலை நின்
2. மார்க்ஸிய சிந்தனை நிலை நில
இவ்விடத்தில் முற்போக்குவாதம்’ ‘மார்க் அவசியமானதாகின்றது.
“முற்போக்குவாதம் பற்றிய ஆய்வு அது ஒரு நிலை நிறுத்துகின்றது. மார்க்ஸியத்தை விபரிக்கு நடவடிக்கைக்கான வழிகாட்டி, அன்றேல் அ மார்க்ஸியத்தை திரிகரண சுத்தியாக ஏற்றுக்கொ கொண்டு உலகை மாற்றி மனித சமுதாயத்தின் மு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளுதல் இயல் எண்ணத்துய்வு நிலை அத்தகைய நேரடி மார்க்ஸியவாதிகள் முற்போக்குவாதிகளே. ஆனால் உலக மாற்றத்துக்கான அரசியல் மாற்றத்தினை ( மூலம் இயக்க ரீதியாக தொழிற்படுவதில்லை. மு. ஒருவரை அதனை பூரணமாக நடைமுறைப்படு ஆனால் முற்போக்குவாத நிலை அந்த நிலையி

]றிய காலகட்டத்தில் மலையக வேலை நிறுத்தங்கள், ாதிகள் பற்றிய கேலி சித்திரங்கள் என்பனவற்றினையும், த்தமை மலையகத்தின் பால் அவர் கொண்டிருந்த
முற்போக்குணர்வுடன் முன்னெடுப்பதில் மலையக ளரான அந்தனி ஜீவாவிற்கும் முக்கிய இடமுண்டு. கிய செயற்பாடுகளில் ஈடுபடச் செய்வதில் பேராசிரியர் Uாசபதி அவர்கள் தன்னை காணும் போதெல்லாம் ள் குறித்தும், சஞ்சிகைகள் வெளியீட்டு முயற்சிகள் னகளையும் வழங்கிச் செல்வார் என அந்தனி ஜீவா லை இலக்கிய பேரவையின் நிகழ்வுகளிலும் கலந்தும்
பராகக் கடமையாற்றிய காலத்தில் சமூக உணர்வு அவர்களை ஆர்வமூட்டி வளர்ப்பதிலும், பேராசிரியர் கயில் வரலாற்றுத்துறை மாணவரான வ.செல்வராஜா, தலானோரை சந்தித்து உரையாடியதுடன் ஆய்வுத் ‘மலையக போராட்டங்களும், பத்திரிகை துறையில் என்ற வ.செல்வராஜாவின் கட்டுரையும், 'பாரதியாரின் ல் தொகுக்கப்பட்டுள்ளது) என்ற சிவ இராஜேந்திரனின் வயாகும்.
குவதிலும், பேராசிரியரின் பங்கு முக்கியமானதொன்றாக
பின் தாக்கம்:-
தாக்கம் ஏதோ ஒரு வகையிலும், அளவிலும், ட்பாட்டின் தாக்கம் பின்வரும் இரு நிலைகளில்
று கைலாசபதியின் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள்.
ாறு கைலாசபதியின் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள்.
லியம்’ சிந்தனை தொழிற்பாடுகள் பற்றிய தெளிவு
சிந்தனை தெளிவு நிலை (மாத்திரமே) என்பதனை ம் அறிஞர்கள் அதனை (மார்க்ஸியத்தை) அரசியல் சியல் நடவக்கைக்கான ஆற்றுப் படை என்பர். ள்ளும் போது, அவ்வாதத்தினை அடிப்படையாகக் ற்போக்குப் பாதையினை உறுதிப்படுத்தும் அரசியல் பாகின்றது. ஆனால் முற்போக்குவாதம் பற்றிய டவடிக்கை நிலையினை சுட்டி நிற்பதில்லை. முற்போக்குவாதிகளோ மார்க்ஸியவாதம் வற்புறுத்தும் நரடி இயக்க முறைகள் மூலம் நிலை நிறுத்துவதன் போக்குவாதம் பற்றிய எண்ணத்துய்ப்பும் செயற்பாடும் 3தும் அரசியல் நடவடிக்கையாளராக மாற்றலாம். னைக் குறிக்காது. (கா.சிவத்தம்பி)
73

Page 198
முதலாவது பிரிவினர் மலையக இலக்கியத்தில் ஆய்வுகளையும் வெளிக்கொணர்வதில் முக்கியத்து சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீ தமது முற்போக்கு பார்வைக்கு சாதகமான வகைய அவரது கருத்துக்களை மேற்கோளாக காட்ட அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.
மலையக சமூகம் குறித்த தீட்சண்ணியம் மிக்கது கொண்டிராமை காரணமாக இச்சமூக அமைப்பில் பற்றியும், சமூக அரசியல் கலாசாரம் குறித்தும் விஞ் இவ்வணியினரின் பலவீனமான அம்சமாகும்.
இரண்டாவது பிரிவினர் மார்க்ஸிய சித்த படைப்பாளிகளாக, விமர்சகள்களாக விளங்குகின்ற லெனின் கூறியதை இவர்கள் ஏற்றுக் கொள்கின்ற
வரலாற்றுத்துறை பொருள் முதல்வாதம் என்ற வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு அமைப்பு முறை எப்படி வளர்கின்றது என்பதை வளர்ச்சி பெற்றுக்கொண்டேயிருக்கும். பரம்பொரு பிரதிபலிக்கின்றது. அதேபோலத்தான் மனிதனி தத்துவவியல், மதம், அரசியல் முதலானவை கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் ெ அரசியல் ஏற்பாடுகள் என்பவையெல்லாம் பொரு கட்டுமானமேயாகும்.
இவ்வாறானதோர் நிைைலப்பாட்டினை ஏ
உட்பட்டவர்கள் மார்க்ஸியத்திலிருந்தும், கைலாச் கொண்ட இப்பிரிவினர் அதனை மாறிவருகின்ற ம பி.மரியதாஸ், எம்.முத்துவேல், எல்.சாந்திகுமார் சிவ.இராஜேந்திரன், வ.செல்வராஜா போன்றே தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் மலையக இ ஜேசற்குருநாதன்,இராகலை பன்னி, ஜெட்ரொட்ஸ்கி இவர்களிடையே சிற்சில நுண்ணிய தத்துவார்த்த ( கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டு அதன் வ உடையவர்களாக காணப்படுகின்றனர்.
இவ்விடத்தில் ஒரு செய்தி கூற வேண் தொண்ணுறுகளின் நடுப்பகுதிவரை மலையகப் ப பணிகளில் ஈடுபாடு செலுத்தி வந்த திருந.இரவீர் இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார். இரவீந்திர பற்றியும், கைலாசபதி பற்றியும் பொதுவுடமைக் இலக்கிய கர்த்தாக்கள் கைலாசபதியை தரிசிக்க ஒளியில் வைத்து நோக்கவும் வழிகாட்டியவர் அ
மலையக இலக்கியம் பிரமாண்டமானே கொண்டுள்ளமையினால் கைலாசபதியின் கருத்து ஜீவிகளின் சிந்தனைகளில் செல்வாக்கு செலுத்தி நிராகரித்த அல்லது அதற்கு எதிரான குரல் 1 நிகழ்ச்சியல்ல.

) முற்போக்குணர்வுடன் ஆக்க இலக்கியங்களையும், வம் மிக்கவர்களாக காணப்படுகின்றனர். இப்பிரிவில் வா, சு.முரளிதரன் முதலானோரைக் குறிப்பிடலாம். பில் கைலாசபதியினை உள்வாங்கியிருப்பதனையும்,
முனைவதனையும் இவர்களின் எழுத்துக்களில்
ம், யதார்த்த பூர்வமான தத்துவார்த்த பார்வையினை ) நிலவிய உற்பத்தி முறைகள் உற்பத்தி உறவுகள் தஞான பூர்வமான தெளிவற்றோரால் காணப்பட்டமை
ாந்தத்தை அடிநாதமாக கொண்டு இலக்கியப் னர். மார்க்ஸியத்ததின் உள்ளடக்க கூறுகள் பற்றி றார்கள் என்பதில் ஐயமில்லை.
தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்தி சக்திகளின் முறையிலிருந்து இதைவிட உயர்தரமான சமுதாய அது காட்டுகின்றது. இயற்கை என்பது அதாவது ள் என்பது மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து ன் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு பாருளாதார அமைப்பு முறையை பிரதிபலிக்கின்றது. )ளாதார அஸ்திவாரத்தின் மீது நிறுவப்பட்ட மேல்
ாற்றுக் கொண்டு பேராசிரியரின் செல்வாக்குக்கு சபதியிலிருந்தும் இத்தகைய பார்வையினை பெற்றுக் லையக சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்தனர்,
(இன்று தடம் மாறிவிட்டார்) எல்.ஜோதிகுமார், )ாருடன் இதன் அடுத்த கட்ட பரிணாமத்தை இலக்கியத்தில் பிரவேசித்த லெனின் மதிவானம், கி முதலானோரிடத்திலும் காணக்கூடியதாக உள்ளது. வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் பொதுவுடமைக் ழி பேராசிரியரை ஏற்றுக் கொண்டதில் ஒற்றுமை
ாடியுள்ளது. எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து குதிகளில் சமூக மாற்றதிற்கான கலை இலக்கிய *திரன் ஆற்றல் மிக்க விமர்சகராகவும், புனை கதை ன் மலையகத்தில் தங்கியிருந்தவரை மார்க்ஸியம் கண்ணோட்டத்தில் நிறைய பேசினார். மலையக வும், அதன் வழி இலக்கியங்களை மார்க்ஸியத்தின்
6T.
தார் பாட்டாளி வர்க்கத்தை தமது தளமாக துக்கள் வேகமாகவும், ஆழமாகவும் மலையக புத்தி புள்ளது. கைலாசபதியின் இலக்கிய கோட்பாட்டை மலையகத்தில் தோன்றாமல் இருப்பது தற்செயல்
74

Page 199
கைலாசபதி பற்றிய மலையக எழுத்தாளர்களின்
கைலாசபதி தொடர்பான மலையக எழுத்தாள தேவை கருதி இங்கொருமுறை குறித்துக் காட்ட
* கலாநிதி கைலாசபதி காலத்திற்கு சொந்தமான (அஞ்சலியுரை - 1982) சி.வி.வேலுப்பிள்ளை
* பழைய அலைகளும், புதிய சமர்களும்
எல்.ஜோதிகுமார் (தீர்த்தக்கரை-1980 ஜூன்)
* இலக்கியத்தில் சமூகக் கட்டுப்பாடுகள் குறித் எஸ்.இராஜேந்திரன் (பன்முக ஆய்வில் கைலா
* கலாநிதி கைலாசபதியின் கல்விச் சிந்தனைகள்
ஏ.எஸ்.சந்திரபோஸ்(மேகுநூ.1992)
k மலையகமும் கைலாசபதியும்
சு.முரளிதரன் (மேகுநூ)
* இலக்கிய வரலாற்றுத் துறையும் கைலாசபதியு
ஜெ.சற்குருநாதன் (மேகுநூ)
கைலாசபதி பற்றிய இக்கட்டுரையாசிரியரின் ஆ
* கைலாசபதியின் அழகியல் நோக்கு (12 வது
பேரவை - 1994 கொழும்பு)
* இலக்கியத்தில் உள்ளடக்கத்தை நிராகரித்தவ
(வீரகேசரி - 11.12.1994)
* பேராசிரியர் கைலாசபதியின் கலை இலக்கிய
(வீரகேசரி - 17.06.1995)
* மஹாகவி குறித்து கைலாசபதியின் மதிப்பீடு
(மூன்றாவது மனிதன் - 03/1996)
* பேராசிரியர் கைலாசபதி பற்றிய ஆய்வுகளும், !
இவை தவிர சாரல் நாடன், அந்தனிஜீவா, பற்றிய வெவ்வேறு ஆய்வு முயற்சிகளின் போது பங்களிப்பினை சுட்டிக் காட்டியுள்ளனர். பொதுவாக போன்று கைலாசபதியை இரு நிலைகளிலிரு முனைவதையும் காணலாம். ر
மக்கள் இலக்கிய வரலாற்றினை ஆழ்ந்து ே செய்வதிலும், பேணிப் பாதுகாப்பதிலும் முனை தளங்களிலிருந்தும் தாக்கப்பட்டு வந்துள்ளதை < தவிர்க்க முடியாத வகையில் அவ்வாறான தாக்குத அவர் மீது வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டுக
1.

கட்டுரைகள், உரைகள்:-
ர்களின் முக்கியமான சில ஆக்கங்களை ஆய்வுத் வேண்டியது அவசியமானதொன்றாகும்.
வர்
து பேராசிரியர் கைலாசபதியின் கருத்துக்கள். சபதி ஆய்வுநூல் -1992)
பூய்வு முயற்சிகள்
நினைவுதின உரை - தேசிய கலை இலக்கிய
ர்களுக்கு எதிராக.
பணிகள்
வக்கிரங்களும் (தாமரை - 99/மார்ச்)
தெளிவத்தை ஜோசப் முதலியோரும் ഥങ്ങബuക് Iம் மலையக இலக்கியத்திற்கு கைலாசபதியின் இவ்வாய்வு முயற்சிகள் யாவும் முன்னர் குறிப்பிட்டது து (முற்போக்கு/மார்க்ஸியம்) புரிந்து கொள்ள
நாக்குகின்ற போது அவ்விலக்கியத்தை உற்பத்தி bது நிற்பவர்கள் பல வட்டாரங்களிலிருந்தும், }வதானிக்கலாம். அவ்வகையில் கைலாசபதியும் 0களுக்கு உட்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
T.

Page 200
1. நவீன இலக்கியங்களில் அழகியல் கு
2. தமது குழு மனப்பாங்கால் மஹாகவிை
இவரது “முற்போக்கு இலக்கியமும் அழகிய எதின் முகாமினரால் கடுமையான தாக்குதலுக்கு உட கொச்சைப்படுத்தும் வகையில் அயேசுராசா எ திரு.எல்.ஜோதிகுமார் தீர்த்தக் கரையில் எ முன்னெடுக்கப்படாமல் முடங்கியமை ஓர் துரதிகூyட எழுதத் தொடங்கிய லெனின் மதிவானத்தின் சை மறுத்து சமூகவியல் அடிப்படையில் எழுதப்பட்ட
(pig660)
மலையக இலக்கியத்தில் கைலாசபதி பல்வே இலக்கியக் கொள்கையின் செல்வாக்கினை மை இலக்கிய படைப்புகளிலும் காணக்கூடியதாக உள் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு ெ இதனை மனங்கொண்டு தொடர்ந்து ஆக்கபூர்வம கடமையாகும். கைலாசபதி வெறுமனே ஒரு நாt மலையக இலக்கிய கள்த்தாக்கள் விளங்கிக்கெ தனித்தன்மை வாய்ந்ததாய் இருக்க முடியும், இ
米米米米米米米冰
米米米米米米米米米米米米米米米米米米冰
冰冰冰冰米米米米米米米米冰冰
நம் உள்ளே தே உணர்வுகள் அல்ல தீயசக்தியாகி நமக்கு தடுக்கவும் நமக்குத் தி 6)JÍTUJ LIL | 3D 61 6T ĝ5]. € எண்ணங்களிலிருந்து காத்துக் கொள்ள வே
ܩܠ

றித்து அக்கறை செலுத்த தவறிவிட்டார்.
ய மறைத்து விட்டார்.
பல் பிரச்சனைகளும்’ (சமர் 1977) என்ற கட்டுரை ட்பட்டது. அலையில் கைலாசபதியின் கூற்றுக்களை ழுதியிருந்தார். இதற்கான சிறந்ததொரு பதிலை ழுதியிருந்தார். இந்த விவாதம் தொடர்ந்து -மான நிகழ்வாகும். தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் லாசபதி பற்றி ஆய்வுகளும் இக்குற்றச்சாட்டுகளை
வையாகும்.
1று விதங்களில் தாக்கம் செலுத்தியுள்ளார். இவரது லயகத்தில் தோன்றிய ஆய்வு முயற்சிகளில், ஆக்க 1ளது. ஒரு வகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும், வவ்வேறு வழிகளில் கைலாசபதி உதவியிருக்கின்றார். )ான முயற்சிகளை மேற்கொள்வது நமது தலையாய மம் மட்டுமல்ல. அவர் ஓர் இயக்க சக்தி அதனை ாள்ளும் விதமும், தமதாக்கிக் கொள்ளும் வகையும் ருக்க வேண்டும்.
;米米米米米米米米米米
;米米米米米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米
ான்றும் எதிர்மறையான து எண்ணங்கள் ஒரு
வரும் நன்மைகளைத் மைகளை ஏற்படுத்தவும் எனவே எதிர்மறையான து ஒருவன் தன்னைக் பண்டும்.
الص=
176

Page 201
யாமறிந்த மொழி
Uாமறிந்த மொழிகளிலே தமிழ்மொ
66 தேமதுரத் தமிழ்தந்த தமிழ்ப்புலவன்
LT ஆமெமது நற்றமிழ்போல் அழகுமொ
29{ தேமதுரத் தமிழெங்கள் தாய்மொழிய தெ
நாவினிக்கும். நவின்றிடுங்கால் நற்றமி
6 தாவிவரும் ஒசைநயஞ் செவியினிக்க செ பூவிரியும் தத்துவங்கள் பூத்தவுயர் பன மெ யாவுமுள தானமொழி எனத்தமிழை ஓ ஏற
நூற்றாண்டு பலகடந்து நிலைத்துவள நெ போற்றும்பல காவியங்கள் பெருமைெ
• g மாற்றங்கள் கோத்துவழி மாறாதே மா
D6 வேற்றவரும் கற்றாய்ந்தே வாழ்வுபெற விரு
கம்பனொடு வள்ளுவனும் இளங்கோ:
F56 தம்பங்காய்த் தாய்மொழிக்குத் தலை தந் தும்பிகொண்ட செந்நறையுந் தேமதுர தே அம்புவிக்குப் படைத்தளித்த அற்புதம
இந்துமதப் புலவோர்கள் கிறிஸ்த்தவர் GLI சிந்தையள்ளுந் தமிழ்செய்து சிறப்புற் தனி விந்தைபல மதம்வளரத் தமிழ்த்தொன் தா புத்தியுள்ள மானிடர்க்குப் புவிமறுமை பெ
17

Iகளிலே தமிழ்மொழிபோல்.
“ஜின்னாஹர்”
ேெபால் இனிதில்லை . றே சொன்னான் பாரதிதன் ட்டில் அந்நாள் N ஆதிமொழி கிலத்தில்லை ாம் எனவுலகு ரியச் சொல்வோம்.
ழின் நலமுரைப்பின் ர்த்தை தோறும் F செய்யுமெழிற் ால்லால் நெஞ்சப் டப்புகளால் ாழிக்கென் றெண்ணும் திடுங்கால் கா ருண்டோ?
ர் மொழிமுதுமை ருங்காச் செல்வம் சாலும் பாங்கியற்றப் |மைக் காம்நல் ண்புற்று ன்னில் ஊன்றி
வாகுசெய்யும் நம்பா ருண்டா?
பும் கவிகோக்கக் ப்பால் எம்மோர் சிறந்த காப்பியங்கள் தே வென்றார் த் தெள்ளமுதுந் ாற்கும் பாங்காய் ம் அவையனைத்தும் யாருண்டோ?
கள் முஸ்லிம்கள் ாத்தம் சார்ந்தோர் ார் செகம்போற்றத் மயே தந்தார் ாடு செய்ததொடு றும் ஓங்கி
பேறடையும் ழியா கிற்றே!

Page 202
ஆழ்கடல்சூழ்நிலமனைத்தும் அழ
வாழ்வுபெற்ற தெங்கணுமே வாழ்கி
ஏழ்மையில்லை தமிழுக்கு என்றெ6
தோள்தருவதாற்றமிழும் தரணியுள்
ck kick
米米米米米米米米米水水米米状
米米米米米米米》
யோகமென்பது காட்டகத்து வாழும் உரியதென் றெண்ணு மக்களனைவரும் ே போர்க்களத்து நின்ற கண்ணபிரான், ஏ! அ எனப் பணித் தரு உரையின்படி வினை அது தனத்திட்பத் யோகநெறி நின்று பU கருவியாகக் கொண் பொருட்களிடையே செவ்வினாராய்ந்து, தெரிந்து கொண்டினத் புது எழுத தாக்க நெறியாகும்.
ܩܠ

குதமிழ் ஓசையின்று ஆட்சி செய்யும் lன்ற பேர்களினால் வரமாம் அ.து ன்றும் புதுப்புதிதாய் இலக்கியங்கள் ர்ள வரைவாழும் தொடருஞ் சீரே
米米米米米米米米
k米米米米米米米米米米米米米米米水冰米
k米米米米米米米米米米米米
ܓܩ
l இல் லந் துறந்து அறவோருக்கு மாத்திரம் றுவது தவறாகும். யாக நெறி நிற்றற்குரியர், ) வில் வீரனை நோக்கி ருச்சுனா, நீ யோகியாயிரு ளினார் . கண்ணனது ாத்திட்பமே யோகமாவது, தினால் வந்ததெய்வது பிற்சி பெற்ற மனத்தினைக் டு பொருட்டமையினையும் யுள்ள தொடர்பினையும் மனத்தினெண்ணி மாசறத் ந்திற் சேர்த்தியுணர்த்த’லே ங் களையமைத் தற்குரிய
الص=
178

Page 203
கோவலன் வ
“அரசியல் பிழைத்தோர்க்கு
உரைசால் பத்தினிக்கு உய ஊழ்வினை உருத்து வந்து
ன்ெபது சிலப்பதிகாரப் பெருங்காப்பியத்தின் ப சிலப்பதிகாரத் தோற்றத்திற்கு அடிநாதமாக வ வலியுறுத்தப்படுவது அரசியல் நெறியில் தவறாகச் அமையும் என்பது. அடுத்து அவர் கூறும் ஆணி உயர்ந்தோர் போற்றுவர் என்பது. இறுதியாக ஆ6 ஊழ்வினை அதனைச் செய்தவரைய் பிற்பிறவியில் வ என்பது.
இம் மூன்று கருத்துக்களுள் இறுதியாக வலி காரணமா? என ஆராய்வதே இக் கட்டுரையின் (
சிலப்பதிகாரக் காவியக் கதையை இளங்ே நிகழ்வுகளுக்குக் காரணம் ஊழ்வினையே எனக் க பிரிதல், பாண்டியன் நெடுஞ்செழியன் கோவல6ை கணவனை இழத்தல் ஆகிய சம்பவங்கள் ஊழ் வளர்த்துச் செல்கிறார். கோவலனுடைய வீழ்ச்சி காரணம் என இலக்கியத் திறனாய்வாளர் சிலர் மறுப்புத் தெரிவித்து கோவலனின் தடுமாறும் மனட் முன்வைத்துள்ளனர். இவ்விரு தரப்பினருடையவும்
சிலம்பிலே பல இடங்களில் இளங்கோ அ பயனே காரணம் என வலியுறுத்தியுள்ளார். மு: வரியிலேயே. கானல் வரியில் ஊழ்வினை பற்றிச் முடியும்வரை அவ்வப்போது ஊழ்வினையின் விை
கோவலன் மாதவி மீது மயக்கமுற்றுக் கண்ன ஆயினும் மாதவியின் நடத்தையில் சந்தேகம் கொன என உறுதியாகச் சொல்கிறார் இளங்கோ அடிக
“யாழ் இசைமேல் வைத்து
உருத்தது ஆதலின் உவவுற்ற திங்கள் முகத்
என்பது அவரின் கூற்று.

ழ்ச்சிக்கு வித்திட்டது ஊழ்வினையா? அவன் உள்ளத் தடுமாற்றமா?
செல்வராணி வேதநாயகம், B.A. Diploma in Education அதிபர் தரம் 1
அறம் கூற்று ஆவதுஉம் ர்ந்தோர் ஏற்றலும் து ஊட்டும் என்பதும்’
திகம். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ அடிகள் லியுறுத்துவது மூன்று அம்சங்களை. முதலில்
செயற்படுவோருக்கு அறக் கடவுளே கூற்றுவனாக த்தரமான கருத்து புகழ் பூத்த பத்தினிப் பெண்ணை னால், உறுதியாகக் கூறப்படும் கருத்து முன் செய்த ந்து அதற்குரிய விளைவை அவருக்குக் கொடுக்கும்
யுறுத்தப்படும் ஊழ்வினை, கோவலன் வீழ்ச்சிக்குக் நோக்கம்.
கா அடிகள் முன்னெடுத்துச் செல்லும்போது சில ாட்டிச் செல்கிறார். கோவலன் மாதவியை விட்டுப் ன வாளால் வெட்டி வீழ்த்தச் செய்தல், கண்ணகி வினையின் விளைவாகவே எனக் கூறிக் கதையை க்கு அவனுடைய உறுதியற்ற தடுமாறும் உள்ளமே
வாதாடி உள்ளனர். ஆயினும், அக் கூற்றுக்கு பண்புக்குக் காரணம் ஊழ்வினையே என்ற கருத்தை ) கருத்துக்களை நாம் செவ்வனே ஆராய வேண்டும்.
டிகள் கோவலன் வீழ்ச்சிக்கு அவன் ஊழ்வினைய் தன் முதலில் ஊழ்வினை பற்றி உரைப்பது கானல் கூறத் தொடங்கிய இளங்கோ அடிகள் காப்பியம் ளவு பற்றிக் கூறிச் செல்கிறார்.
ாகியை மறந்து அவளுடன் இணைந்து இருந்தான். ன்டான் கோவலன். இதற்குக் காரணம் ஊழ்வினையே
.
த் தம் ஊழ்வினை வந்து
தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனால்”
179

Page 204
அவர் மாதவி கோவலன் பிரிவுக்குக் கோவ6 ஆதலினால் , அவன் உள்ளத் தடுமாற்ற உணர்த்துகிறார். அதனால் கோவலன் வீழ் அன்றி உள்ளத் தடுமாற்றம் அன்று.
அடுத்து ஒரு சம்பவம் கோவலன் திடீரென செல்லத் தீர்மானிக்கிறான். அவன் கண்ண உகந்தததா என எண்ணிப் பார்க்கவில்லை.
எண்ணித் துணிக கருமம் எண்ணுவம் என்பது இழு
என்பது வள்ளுவர் காட்டும் வாழ்நெறி ஆனா
“வினை கடை கூட்ட வில சுனை அடல் கால் சியா
என ஊழ்வினைப் பயனாலேயே அவன் சிந் செயலைச் செய்தான் என இளங்கோ அடிகள் க முற்பிறவிப் பயனே என்பதை இளங்கோ அடிக கூறுகிறார்.
“முன் செய்த தீவினை வந்து இவன் உள்ளத் கருத்து. இதன் ஊடாக கோவலன் செயல்கள் அவை ஊழ்வினைப்படியே நிகழ்ந்தன என உண
அடுத்து இன்னொரு நிகழ்வு. பாண்டியன் ( பிறழாமல் ஆட்சி புரிந்தவன் மறந்தும் தவறு இ இழைக்கிறான்.
“ஊழ்வினை கடைசி உள் என்கிறார் இளங்கோ அடிகள்.
கண்ணகியின் காற்சிலம்புடன் பொற்கொல்லன் பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய
அரசன் அவ்வேளை பாண்டிமாதேவியுடன் ஊட6 ஆராயவில்லை. அவனை ஊழ்வினை வந்து உ கொண்டு வருமாறு ஆணையிட்டான்.
“ வினை விளைகாலம் ஆ
வேம்பன் தேரானாகி காவலன் தேவி காற்சில கள்வன் கையதுவாகிற் சிலம்பு கொணர்க”
என இளங்கோ அடிகள் கூறுகிறார். பாண் தங்கியிருந்த இடத்தை அடைந்தனர். அப்போது

ன் மனத் தடுமாற்றத்தைக் காரணமாகக் கூறவில்லை. ற்குக் காரணம் ஊழ்வினையே என உறுதியாக சிக்கு அடிப்படையாக அமைந்தது ஊழ்விழைனயே
5ண்ணகியை அழைத்துக் கொண்டு மதுரை நோக்கிச் )ய அழைத்துக் கொண்டு மதுரைக்குச் செல்வது
நுணிந்த பின்
5
, ஆராய்ந்து பாராமல் மதுரை நோக்கிப் புறப்படுகிறான்.
) கொண்டான் கங்குல
s
முன
நிக்கும் ஆற்றலை இழந்து மதுரைக்குப் புறப்படும்
Tட்டுகிறார். அவன் செயல்கள் அனைத்தும் அவன் ள் நாடு காண் காதையில் மேலும் இறுக்கமாகக்
தைச் செலுத்தலால் என்பது சிலப்பதிகார ஆசிரியர் அனைத்தும் அவன் விருப்பப்படி நிகழவில்லை. ர்த்துகிறார்.
நெடுஞ்செழியன் செங்கோல் வேந்தன். நெறிமுறை
ழைக்காத காவலன். இத்தகைய மன்னன் தவறு
ாம் துரப்பு
பாண்டிய அரசன்முன் வந்து நிற்கிறான். அவன் ள்ளனைப் பிடித்து விட்டேன் என்றான்.
ல் இருந்தான். அரசன் சிந்தித்துப் பார்க்கவில்லை. த்தியதாலே அக் கள்வனைக் கொன்று சிலம்பைக்
மின் யாவதும் சிவன் அவர்
கன்றிய
ான்றச்
ன் ஆணையிட்டவுடன் காவலர்கள் கோவலன் வினை சூழ்ந்த நிலையில் இருந்தான் கோவலன்.

Page 205
* கருந் தொழில் கொல்லி ஏவல் உள்ளத்து எண்ணி கோவலன் தன்னைக் கு
கோவலனை நெருங்கிய காவலர்கள் அவ சிலப்பதிகாரத்தின் அதியுச்சக் கட்டம். கோவல
கோவலன் கொலையுண்டு வீழ்ந்து விட்டா
போகிறாள். துடிதுடிக்கிறாள் அவள் அழுது புலt எழும் வார்த்தைகள் என்ன?
“காவலன் செங்கோல் வ கோவலன் பண்டை ஊழ்
அவளின் புலம்பல் ஊடாகவும் கூட இளங்கோ கொலைக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் ஊழ்வினை
உலகில் உள்ளோர் பழிக்கும்படி மன்னனைத் தவறிழைக்கச் செய்யும்படி கோவலனை வெட்டுண்டு மடியச் செய்தது தரு தீவினைதான் என்று நாட்டிலே சொல்ல மாட்டார்களா எனக் கண்ணகி புலம்பி
“ பார்மிகு பழிதூற்றப்பான ஈர்வது ஓர் வினை காண் என்றும்
“மன்பதை பழிதூற்ற மன்னி
என்றும் கண்ணகி புலம்புவதாகச் சித்தரிக்கிறார்.
கட்டுரைக் கதையில் மதுராபதித் தெய்வம் தவறு செய்தான். ஊழ்வினையாலேயே கோவல
அதனால், மேற்கூறிய சான்றுகளை அடிெ காரணமென உறுதியாக உரைக்கலாம்.
ஆயினும், இன்று இலக்கியத் திறனாய்வா கருத்தை ஏற்க முடியாது என வாதாடுகின்றனர். அவர் ஊழிவினையை வலியுறுத்துவதற்காகச் ச ஊழ்வினையே காரணமெனக் காட்ட முனைந்துெ உள்ளத் தடுமாற்றமே காரணமெனக் காட்டுவர்.
அவர்கள் முன்வைக்கின்ற காரணங்களையு கண்ணகியையும் கோவலனையும் அறிமுகம் செய்ச் அழகையும் பற்றி விதந்து பேசும் இளங்கோ அடி ஆனால் அவள் அழகையும் புகழையுமே போற்று வழிவகுக்கப் போகிறது என்பதை மறைமுகமாக

னும் ரிலது முடித்தும் எனக் றுகினர்’
னை வெட்டி வீழ்த்தினர். கோவலனின் வீழ்ச்சியே னின் வீழ்ச்சியை இளங்கோ அடிகள் கூறுகிறார்.
1. செய்தி அறிகிறாள் கண்ணகி. பதைபதைத்துப் }பி ஊரைச் சுற்றி வருகிறாள். அவள் புலம்பலின்போது
ளைகிய வீழ்ந்தனல் வினை உருத்து’
அடிகள் புலப்படுத்த விரும்புவது என்ன? கோவலன் என்பது மேலும் வலியுறுத்திக் கூறப்படுகிறது.
அழுகிறாள். இளங்கோ
ண்டியன் தவறிழைப்ப ஆ! இது என உரையாயோ’
எவர் தவறிழைப்ப"
கண்ணகியிடம் “ஊழ்வினையால் தான் பாண்டியன் }ன் கொலையுண்டான்’ எனக் கூறுகிறது.
பாற்றிக் கோவலனின் வீழ்ச்சிக்கு ஊழ்வினை தான்
ளர் பலரும் இக் காலக் கண்ணோட்டத்தில் இக் அவர்கள் இளங்கோ அடிகள் சமணராகையாலும், iலம்பை உருவாக்கியதாலும் கோவலன் வீழ்ச்சிக்கு 1ளார் ஆயினும் கோவலனின் வீழ்ச்சிக்கு அவனின்
) நாம் ஆராய்வோம். மங்கல வாத்திய ஆசிரியர் றார். கண்ணகியின் கற்பையும், குணப் பெருமையையும், கள் கோவலனின் சால்பு பற்றி எதுவும் கூறவில்லை. கிறார். அவளுடைய பண்புகளே அவன் அழிவுக்கு எடுத்துக் காட்டுகிறார்.
181

Page 206
“ மண் தேய்த்த புகழினால்
பண் தேய்த்த மொழியினா கண் ஏத்தும் செவ்வேள் எ கொண்டேத்தும் கிழமைய
மனையறம் கடுத்த காதையியல் கோவலன் கt போற்றுகிறான்.
* மாசறு பொன்னே! வலம்ட காசறு விரையே கரும்டே அரும் பெறல் பாவாய் ஆ எனய் பலவாறு பாராட்டிக் கண்ணகியுடன் இன்பத்
அவர்களின் இல்வாழ்க்கை இனிது நிகழும் என்ன? கோவலன் நிலையான மனம் கொண்டவன் இயல்பினன். அவன் எதிர்பார்த்த இன்பத்தை அ அதனால் பொது மகளான மாதவியின் மாலையை { கோவலனின் தடுமாறும் உள்ளமே அவனைக் கண்
கண்ணகியிடம் காணமுடியாத கலைப் பண்பு நாட்டியத் திறன், கலை ஆர்வம், இசையாற்றல் விருப்புக்கு ஆட்படுத்தியது. அதனால் அவனின்
கோவலனின் வீழ்ச்சியின் முதற்படி அவன் கண் அதனால் அவன் வீழ்ச்சியும் அவன் மனத் தடும
கோவலனின் நிலையற்ற மனம் கண்ணகியை மு சென்றது தவறு என உணரவில்லை. மாதவியிடம் தெளிந்த உள்ளம் அவனிடம் இருக்கவில்லை. ச அவன் சிந்தித்துப் பார்த்தானா? அவன் உறுதியான தஞ்சமெனக் கிடந்திருப்பானா?
ஆனால் அவன் மாதவியிடம் கொண்ட உறவு ஆகையால் கண்ணகியை நினைத்து மாதவியை அங்கும் இங்கும் அலை மோதியது. அவன் நிை மாதவியின் மலர்ந்த வாழ்வுக்கும் குழி தோண்டுகி கொண்டிருக்கும் கோவலன் உவக்கும்படி தன்6ை இந் நிலையில் இருவரும் கடல் விளையாட்டை வரியிலேயே கோவலனின் தடுமாறும் உள்ளம் பாடல்கள் பாடிய பின் கோவலன் மாதவியை வி காரணம் எனக் கற்பிக்கிறார். ஆசிரியர் இளங்கோ கோவலனின் தடுமாறும் உள்ளமே என்பது வெள்
கானல் வரிப் பாடலின் போது என்ன நிகழ்ந்தது கோவலன் கையில், ஊடற் கோலத்தில் இருந் பாடினான். இப் பாடல் பாடும்போது கோவல6 பாடுவதாக மாதவியின் மனதில் பட்டது. எனவே பாடினாள் மாதவி. இவ்விடத்தில் தான் கோவ செயற்பட்டது. மாதவியின் பாடலில் வேறு உட்ெ தொடர்ந்தது. கானல் வரியின் முடிவில் கோவ6

மதிமுகம் மடவார்தம் ார் ஆயத்துப் பாராட்டி ன்று இசைபோகிக் காதலால்
*_う?
T6
ண்ணகியுடன் கூடி வாழ்ந்து அவனின் பண்புகளைப்
ரி முத்தே! ! தேனே! ருயிர் மருந்தே!’ தில் துய்க்கிறான்.
என்பது எமது எதிர்பார்ப்பு. ஆனால் நிகழ்ந்தது அல்லன், நிலை தடுமாறுபவன். இன்பம் துய்க்கும் அவனுக்குக் கண்ணகியால் வழங்க முடியவில்லை. வாங்குகிறான். அவளுடன் இன்பத்தில் மூழ்குகிறான். ணகியிடமிருந்து பிரித்தது, மாதவியுடன் இணைத்தது.
கள் பலவற்றை மாதவியிடம் கண்டான். அவளின் ), அவனை அவளிடமிருந்து விடுவிக்க முடியாத ா நிலையற்ற மனம் அவளிடம் பறிபோயிற்று.
ணகியைக் கைவிட்டு மாதவியின் மனையை நாடியது. ாற்றம் காரணமாகவே தோன்றுகிறது.
2ற்றுமுழுக்க மறக்கச் செய்தது. அவன் மாதவியிடம் ) தன் செல்வம் முழுவதையும் இழந்தான். திடமனம் 5ண்ணகியும், அவருடைய பெற்றோரும் படும் துயரை உள்ளம் உடையவனாக இருந்திருந்தால் மாதவியே
நீடித்ததா? அவன் தடுமாறும் உள்ளம் கொண்டவன். வெறுத்துக் கானல்வரி பாடினான். அவனது மனம் லயற்ற மனம் அவன் வாழ்வுக்கு மட்டுமா? ஆனால், றது. இந்திர விழாவில் மாதவி தன் மீது வெறுப்புக் ன அலங்காரம் செய்கிறாள், அவனை அடைகிறாள். க் காண்பதற்காக கானலை அடைந்தனர். கானல் எங்களுக்கு நன்கு புலப்படுகிறது. கானல் வரிப் பிட்டுப் பிரிகிறான். இப் பிரிவுக்கு ஊழ்வினையைக்
அடிகள். ஆனால், இவர்கள் பிரிவுக்கு அடிப்படை 1ளிடை மலை.
7 மாதவி தானாகவே யாழை எடுத்தாள், கொடுத்தாள் நான் கோவலன். அவன் அகல் பொருட் பாடல் * கண்ணகியை அல்லது வேறு ஒரு பெண்ணைய் கோவலனின் ஊடலைத் தீர்க்க எதிர்வரிப் பாடல் லனின் தடுமாறும் உள்ளம் அவனுக்கு எதிராகவே பாருள் கொண்டு அவனும் பாடினான். இவ்வாதம் 0ன் மாதவி மீது கோபம் கொண்டான்.
182

Page 207
மாதவியை விட்டுப் பிரிந்து சென்றான். பிரிந்தவ இங்கும் அலைந்து திரிந்தான். அவனின் தடுமா தெரிகிறது.
மாதவி கோவலனிடம் சேர்ப்பிக்குமாறு ஒலை அதனை அவள் கடை வீதியில் திரிந்த கோ6 திடநெஞ்சமாக இருந்திருந்தால் மாதவியிடம் விட்டுப் பிரிந்தவுடன் கண்ணகியை நோக்கிச் சென் செய்யாமல் அங்கும் இங்கும் அலைந்து திரியும் காட்டுகிறது.
ஈற்றில் அவன் கண்ணகியிடம் செல்கிறான். அ
* சலம் புணர் கொள்கைச் குலம் தருவார் பொருள்
இலம்பாடு நானுந் தரும் என்கிறான். அவன் மனம் மீண்டும் அலை மோ
அவன் அவள் உடல் நலம்பற்றிக் கேட்கவி உண்மையில் கோவலன் உறுதியான உள்ளத்துடன் இன்பமடையச் செய்திருப்பான். அவன் உள்ள விசாரிக்கவில்லை.
அவன் கண்ணகியின் சிலம்பை விற்று வாணிபம் பாராமல் திடீர் முடிவெடுத்துக் கண்ணகியையும் உ இளங்கோ அடிகள் முன்வினைதான் காரணமெ கோவலனின் தடுமாற்ற உள்ளமே காரணம்.
கவுந்தி அடிகள் மாதவியுடன் கண்ணகியை { தெரிந்ததாலேயே.
கோவலன் சரியாக ஆராயாமல் தடுமாறும் 2 பொற்கொல்லனிடம் காற்சிலம்பைக் கொடுத்துத்
இக் கட்டுரையின் முற்பக்கத்தில் கோவலன் ஊழ்வினை தான் காரணம் எனக் கண்டோம். ஆய சிலப்பதிகாரத்தை ஆராய்ந்தால் கோவலனின் நி6ை என்ற முடிவுக்கு நாம் வருவோம்.
இளங்கோ அடிகள் ஊழ்வினையின் முக்கியத் அடிப்படை ஊழ்வினையே எனக் குறிப்பிட்டுள்ளார் புறம் வைத்துவிட்டுச் சிலப்பதிகாரத்தை நோக்கி அவன் உள்ளத் தடுமாற்றமே எனப் புலப்படும்.
米米米米米米米米米
冰冰冰米米米米米米米米米米米米米米米米水冰

ன் நேராகக் கண்ணகியிடம் போகவில்லை. அங்கும் றும் உள்ளம் எங்களுக்குத் தெள்ளத் தெளிவாகத்
) ஒன்றை படர்ந்த மாலை ஊடாக அனுப்பினாள். வலனிடம் கொடுத்தாள். உண்மையில் கோவலன் நிலையாக இருந்திருப்பான். அல்லது மாதவியை றிருப்பான். ஆனால் இவ்விரு செயற்பாடுகளையும் செய்கை அவன் தடுமாறும் உள்ளத்தை எடுத்துக்
அவன் கண்ணகியையப் பார்த்து என்ன சொல்கிறான்.
சாதியோடு - ஆடி குன்றம் தொலைந்த ) எனக்கு”.
துகிறது.
ல்லை. தன் செல்வ இழப்புப் பற்றியே பேசுகிறான். இருந்திருந்தால் துன்பத்தில் துவண்ட கண்ணகியை ாம் தடுமாறியதால் அவளின் உடல் நலம் பற்றி
} செய்து பொருளீட்ட முயன்றான். அவன் சிந்தித்துப் உடன் அழைத்துச் செல்கிறான். அவன் செயல்கட்கு னக் காட்ட முயல்கிறார். ஆனால், உண்மையில்
ஒப்படைப்பது நிலை தடுமாறும் கோவலன் இயல்பு
உள்ளத்துடன் இருப்பதாலேயே இறுதியில் கள்ளப்
தான் கொலையுள்ளவும் காரணமானான்.
வழக்கிற்கு இளங்கோ கூறும் கூற்றுக்களின்படி பினும், ஊழ்வினையை ஏற்றுக் கொள்ளாத நிலையில் Iல தடுமாறும் உள்ளமே அவன் வீழ்ச்சிக்கு வித்திட்டது
துவத்தை உணர்த்துவதற்காகப் பல சம்பவங்களின் ர. ஆனால், ஊழ்வினை பற்றிய கருத்துக்களை ஒரு னால் கோவலன் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம்
米米米米米米米米米米米
;米米米米米米米米米米米米米米米米米米米米米米米
:k:k:k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k
183

Page 208
திடீரெனக் கண்களை விழித்துக் கொண்ட கை இன்னமும் இருட்டறையில் கொழுத்தி வைத்திருர் கொண்டிருப்பதால் திரி எரியும் மெல்லிய நெடியுட6 கெளவிக் கொண்டிருந்தது. அந்த இருளையும் தனக்கே உரிய எதனையோ தேடிக் கொண்டி கொண்டிருக்கிறது போலும்! அந்த இயற்கையே சூறையாடி விட்டிருந்தாலும் கூட. அந்த இய சக்தியும் அவளிடம் இருக்கவில்லை. அது இச்
மூலையில் இன்னமும் அழுகையின் முனகல் சத்தியனின் முனகல் தான்! என்பதை நேரடியா கணப்பொழுதுகள் தன்னையுமறியாது தேடிக்கொன பொருமத் தொடங்கியது.
மறுபக்கமாகத் திரும்பிய அவளது விழிகளினின்று நட்ட நடுநிசியான அவ்வேளையில் ‘ஓ’ வென்று இரண்டு நாட்களுக்கு முன்பு அவளது நெஞ்சி( இறக்கவோ வழியின்றி. நொந்து. நொந்து நில்ையினையும், தனக்குள் போட்டுப் புழுங்கினா வட்டமிட்டுப் பறக்கும் பறவைகளாக வாழவேண் அவள் உள்ளம் வினாடிக்கு வினாடி எத்தனை கேள் அவற்றுக்கான விடையையும் அவளே தேடியலைய உரியதாகி விட்டது.
'அம்மா பெரியண்ணாவை மறந்து என்னால் நி நிரம்பாத அவள் பிதற்றினாள். ராசன் அன்றுதா பக்கத்தில் அவனுக்கேயுரிய அந்தக் கதிரையில் ெ கொண்டிருப்பது ராஜனே அவளை அணைத்து ை
நித்தியா. ‘கண்ணம்மாவால் யாரைத் தே கொள்கிறாள்.
'அ.ம். மா. ஆ. ஆ. ஆறுவயசாகிய ஆ இருக்கும் போதே பொறுப்பையெல்லாம் தன் தா சொல்லி அனுப்பியவனை தேடுவாரற்ற நிலையி நித்திரை செய்ய முடியாதவாறு எழுப்பி விடுகின்ற

'விதி'
- மண்டூர் மீன7 -
எணம்மாவால் எதனையும் நம்பவே முடியவில்லை. த குப்பி விளக்கு எண்ணெய் இல்லாமல் அவிந்து ன் அவ்வறையை மெல்ல. மெல்ல இருள் மீண்டும் ஊடுருவிய அவள் கண்கள் நாலா பக்கங்களிலும் ருந்தன. இயற்கையே எல்லாம் செய்வித்துக் அவள் வாழ்வைப் பல வேளைகளில் விளையாடி, ற்கையினின்றும் தன்னை விடுவித்துக் கொள்ளும் சையின் செயலாகவே இருக்கலாம்.
நிற்கவில்லை. அது ராஜனுக்கு அடுத்துவந்த கவே உணர்ந்து கொண்ட கண்ணம்மா, ஒரு சில ன்ட ஓய்வின் பலமெல்லாம் ஒன்று கூடி, உள்ளம்
ம் கண்ணி பெருக்கெடுத்தோடத் தொடங்கியதோடு கத்தித் தன் உள்ளப் பொருமலைத் தீர்க்கவோ, லே ஏற்றப்பட்ட பெரும்பாறாங்கல்லை நிலத்தில் கணத்திற்குக் கணம் இறந்து, பிறக்க வேண்டிய ள். ஒன்றுமறியாது உலகத்தையே சுற்றிச் சுற்றி டிய அந்தக் குழந்தைகளுக்குமா. இந்தக் கதி? விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தாலும். வேண்டிய பொறுப்பும். இன்று அவளுக்கேதான்
த்திரை கொள்ள முடியல்லயே. எட்டு வயது ன் உடுத்துக்களட்டி தான் படிக்கும் மேசைக்குப் நாங்கவிட்ட சாரம் நித்தியாவை இறுக்கி போர்த்துக் வத்திருப்பது போன்றிருந்தது.
ற்றமுடியும்? அவள் நித்தியாவை அணைத்துக்
னந்தன் தன்தாயின் வயிற்றில் ஆறுமாத வளர்ச்சியில் பின் தலையில் கட்டவைத்து தந்தைக்கு டாட்டா
ல் நுளம்புக் கடியும். அழுகைப் பொருமல்களும்
0.
34

Page 209
‘சத்தியா. தம்பியைத் தூக்கித். தா. கண் விட்டு. தமக்கென்று ஒன்றுமே சொல்லாது புத்தகங்களும், ஒழுங்காகப் போடப்பட்ட அந்த மே6 போன்று வைக்கப்பட்ட முருகன் படமும் சுவரின் மே பார்த்துப் பொருமிய வண்ணமிருந்த சத்தியன் அ கடைசித் தம்பியைத் தூக்கி அம்மாவிடம் நீட்ட
‘சத்தியன். என்ன செய்வதப்பா. நாம்தான். அண்ணன் ஓடிவிட்டான். நீ. இன்னமுமா படுக்கைச் இருந்தாலும் தாய்மையின் சாயல் அங்கே இளை படுக்க முடியும்? என்னைக் கட்டிய் பிடித்துக் இப்போ. ஒ’ சத்தியனால் அழுகையை அட அழிக்கவோ முடியவில்லை.
ஐயோ. மகனே. நீதான் குடும்ப விளக்கு. பிரகாசிக்குமென்று தானே நான் மனக்கோட்டை இப்படியும். ஒரு பேரிடி. கண்ணம்மாவின் வாய்ப்பு ‘அண்ணா. நீ போன பிறகு எனக்கு இங்கு என் எனக்குத் தெரியும். உன்னோடு வந்து சேர வழி.
“சத்தியா. என்ன சொல்கிறாய். நீ. நீ’ கை
"அம்மா. நீங்க சும்மாயிருங்கள். அண்ணை தெரியாமல் எங்கும் விடாமல் படிப்பும் வீடுமாக அவன் ஆத்திரமும் ஆவேசமுமாகக் கேட்டான்.
“ஓமப்பா. விதி என்னை விட்டு வைக்கவில்ை நடந்த அவலம் திரை மறைவாகு முன்பு. புத காவியமாக அவள் கதை மாற இருப்பது போன்ே
“அண்ணன் போயிட்டார்! எனக்கும் அவருக்கு ே
"மகனே. நீயுமா. என்னை ஏமாற்றப் போகி இதற்காகவா? ஏழு வருடங்களுக்கு முன்பு எதிர் என்னிடம் ஒப்புவித்த மாதிரி நடுவழியில் கையை ( என்று உங்கள் இருவரையும் நினைத்தேனே. 6 ஆண்டவன்’ அவள் குரல் தழுதழுக்க. ஏதோ. விட்டால், ஆறுதலாக இருக்கும் போல் தென்பட்
'மரமும். நிழலுமென்று நீங்கள் எதையும் எண் நிலையானது. வேறு.” அவன் முழுமையான வி
“வாழ்க்கையென்றால் எல்லாத் தாய்மாரும் பற்றியெண்ணி இந்த வாழ்க்கையை வாழாமலா வ ஏன்வளர்க்க வேண்டும்?”
மகனை எப்படியும் தன் வழிக்கு அழைத்து வ
“அம்மா. அண்ணன் தான் சொல்லுவார். அம்
படிக்கவைத்து அவர்களை நல்ல வழியில் வழி அப்புறம் தான். தேசப் பணியோ. விடுதலையோ.

ணம்மா அழுகைக் குரலில் சொன்னதும். தம்மை ஒடிப் போய்விட்ட அண்ணனின் அடுக்கிவைத்த
செயும் கதிரையும், அந்த மேசையையே அலங்களிப்பது
லே தொங்க விடப்பட்டிருப்பதை இமை வெட்டாமல்
ம்மாவின் அன்புக் கட்டளையை ஏற்பவனாகத் தன்
முனைந்தான்.
பாவிகள். எம்மைத் துடிக்க வைத்துவிட்டு உன் குப் போகல்ல? எத்தனை சுமைகள் அவளுக்கென்று யோடத் தவறவில்லை. ‘எப்படியம்மா. என்னால் கொண்டு அண்ணன்தானே. படுப்பார். இப்போ. 5கவோ, அந்த உறவுகளையும், நினைவுகளையும்
உன்ர ஒளியில்தான் இந்தச் சின்னஞ்சிறிசுகள்
கட்டி உன்னை வளர்த்து உருவாக்கினேன். Uம்பலோடு மனக்குமைவும் வெளிவரத் தொடங்கியது. ன வேலையிருக்கு. நான் உயிரோடு இருக்கிறேன். ’ சத்தியன் தைரியம் வந்தவனாகக் கூறினான்.
ண்ணம்மா தடுமாறினாள்.
னயும் இப்படித்தான் சொல்லிச் சொல்லி ஒன்றும் வைச்சிருந்தீங்க. இப்போ. என்ன நடந்தது?
லதான். ஆனால் நீ. நீ” நிய அத்தியாயமாக அதுவே உருவெடுக்க. சோக றே. அவளுக்குத் தென்பட்டது.
ள்ந்த கதிதான்.’ சத்தியன் அழுகுரலாகக் கூறினான்.
)ாய்.? இரவு பகலாக மாடாக உழைத்தேனே. பாராத வகையில் உன் அப்பா உங்களையெல்லாம் விரித்தாரே. அன்றிலிருந்து என்னுடைய நிழல்கள். ன் எண்ணத்தில் மண்ணைய் போட்டு விட்டான். இருப்பவற்றையெல்லாம் வெளியே கொட்டி அழுது டது அவளுக்கு.
னாதீங்கம்மா. மரணம் ஒன்றுதான் எமக்கு இப்போ. க்தியில் தோய்ந்திருந்தான்.
இப்படித்தான் நினைப்பார்களப்பா. மரணத்தைப் ட்டு விடுகிறார்கள்? இப்படிப்பட்ட எண்ணங்களை
எண்ணினாள் கண்ணம்மா -
0ாவிற்கு ஆறுதல் கொடுப்பதும் தம்பி, தங்கையைப்
நடாத்துவதும் தான் எம்முடைய பணி. அதற்கு என எல்லாம் தான் சொல்லிவிட்டு. எதிர்பாராத
35

Page 210
9
வகையில்.” அவனுக்கு அண்ணனின் வழி ந பதிந்திருந்தன -
“அம்.மா. தண்ணி. வேணும்.!’ நித்தியா சிணு கண்ணம்மா. தொடர்ந்து விம்மிக் கொண்டே எ(
“நான் எடுத்து வருகிறேனம்மா.” சத்தியன் கூ
‘அண்ணன் தண்ணி கொண்டு வரட்டும் மகள். கண்ணம்மா -
அவளது எண்ண அலைகள் எப்பொழுதும் ( என்மீது எத்தனை கரிசனை? சமூகத்தில் எத்த6 மூலம் தம் பக்கச் சார்புக்கு அழைத்தும். தன் குடும் நடந்த கதி.? கலியுகத்தில் உண்மைக்கும் நேர்மைச் சொல்லிச் சென்றது உண்மைதான் என்பதை வா வாயில் திறக்கப்படுகின்றது!
சொத்துக்கள் தான் சுகபோகம் கொடுப்பதெ சுகபோகிகளாக்கும் பண்பு சரவணனிடமும் கண்ணம் அழகான வாழ்க்கை வாழ்ந்த திருப்தி அவ்ர்களுக் வேண்டும்! அழகு அவனுக்குப் பிடிக்காது. போய் வருகிறேன் எனக்கூற. வீட்டிற்குத் தே6 கண்ணம்மா அடுக்கிக் கொண்டே செல்ல, சரி. சரி. பிணம் தான் மாலையில் வீடு வந்தது. தெருவில் நட ரவைகள் சரவணன் உயிரையும் கெளவிக் கொண்ட வரப்பட்டு அவளுடைய இதயச் சுமை இறங்கும் வ6 அப்பொழுதெல்லாம் அவளது உறவினர்கள் பலர் பகிர்ந்து கொண்டு அவளைத்தேற்றி ஆறுதல் 6 வறுமையில் வாழ்பவர்களாயினும் ஆறுதல் வ காலத்திற்கிடையிலேயே எத்தனை மாற்றங்கள்.
வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடு, மாடு, நாய், பூ விட்டது. இந்து தர்மத்தில் மரணக் கிரியைக்கு சடங்குகளும் “தெருப்புழுதியை வெறிநாய்கள் எர் என்ன கொடுமையான காலமும். வாழ்க்கையுட வட்டமிட்டு அலுத்துக் கொண்டதும் சத்தியன் த
"நித்தியா. இந்தாம்மா. தண்ணீர்.” அதற்குள் நித்
“தங்கச்சி. இந்தாம்மா. குடி.’ பரிவோடு அவ
“எத்தனை துன்பம். துயரங்களோடு இருந்தா இல்லாத. அளவிற்கு நாம் கொடிய பாவச் சில தொடங்கினாள் - இராணுவத்தினரால் புலியெ செல்வதற்குக் கூட. தயக்கம் காட்டும் சமூகம்த
'ம். என்ன செய்வது.? யாரும். வந்தாலும்
சத்தியன் மெதுவாகத் தாயின் காதில் மட்டும்

டத்தல்கள் ஒவ்வொன்றும் பசுமரத்தானிபோல்
|ங்கினாள் -’ ழந்துசெல்ல முற்படுகின்றாள்
நிக் கொண்டே அடுக்களைப் பக்கம் செல்கிறான்.
.’ நித்தியாவின் தலையை தடவிக் கொடுக்கிறாள்
pட்டி மோதிக் கொண்டேயிருந்தன. காலனுக்கு னையோ இனவாதப் பிரிவினர்கள் பயமுறுத்தல்கள் பமும். தனது வேலையுமென. வாழ்ந்த சரவணனுக்கு கும் தட்டுப்பாடிருக்கும் என்று முன்வந்த மகான்கள் ழ்க்கை நடைமுறைகள் சான்று பகரும். அனுபவ
ன்றால் அது இல்லாமலேயே வாழ்பவர்களைச் )மாவிடமும் இருந்ததனால். அன்றாட வாழ்விலும் கிருந்தது. காலன் அழகற்றவனாய்த்தான் இருக்க காலையில், நிறைவான சிரிப்போடு மனையாளிடம் வையான பாவனைப் பொருட்களை வரிசையாகக் வாங்கி வருகிறேன் எனக் கூறிச் சென்ற சரவணனின் டந்த பயங்கரக் குண்டு வெடிப்பில் இராணுவத்தினரின் தும். அவனது உடல் அவள் வீட்டிற்குக் கொண்டு ரைக்கும் அவனுடலில் விழுந்து விழுந்து அழுததும். யாழ்ப்பாணத்தினின்றும் வந்து தன் கவலையைப் வழங்கியதும், பலநாட்கள் உடனிருந்து அவர்கள் ழங்கிச் சென்றமையும். இன்று அந்தக் குறுகிய
னை போன்றே மனிதன் நிலையும் மாற்றமடைந்து வழங்கப்படும் தத்துவக் கோட்பாடுகளும், தள்மச் ]றித் தீர்த்து விடுதல்” போலாயிற்று இன்று!. சே. 0.? அவள் எண்ணங்கள் ஒரு தடவை சுழன்று ண்ணி குவளையுடன் உள்ளே வந்தான்.
தியா உறங்கி விட்டாள் - உலுப்பினாள் கண்ணம்மா -
ளைத் தூக்கியெடுத்து பருக வைத்தான் சத்தியன்.
லும். தண்ணீர் எடுத்துக் கொடுக்கக்கூட யாருமே எனங்களாயிட்டோமே.” அவள் மீண்டும் புலம்பத் னப் புடம்போட்டு விட்டால் சவத்தைத் தூக்கிச் ான் இது!
வந்திடுவாங்க”
படும்படி கூறினான்
86

Page 211
“என் வயிறெல்லாம் பற்றி எரியுதுடா ராஜா - உன்ன நான் போட்ட கோட்டை தாண்டாத செல்வம்டா டியூசனுக்கு போக மறுத்த உன்னைத் துரத்தி அனுப்
அவள் ஒவ்வொன்றாக ஊதித் தள்ளினாள்.
9.
“அம்மா. தண்ணி குடியுங்கோ.
தாய் படும் பாட்டைச் சத்தியனால் சகிக்க முடி சொன்னான். அவளும் அவள் பெற்றெடுத்த குழந்ே யாருமேயில்லை - பகலில் பக்கத்து வீட்டவர்கள் சில கூறிவிட்டுப் போய்விடுவார்கள். இரவில் த ராசனின் உடல் அந்த வீட்டிற்கே கொண்டு வர தென்படவில்லையோ. இந்த மரபுகளையெல்லாம் எ6 நேரம் இருக்கவில்லை.
“சத்தியன் தங்கச்சியையும் உன்னோடு படுக்க ை உடலெல்லாம் வலியெடுப்பது போன்று முனகிக் கெ
“தங்கச்சி. வாம்மா. அண்ணாச்சியோடு படுக்க தன் பாயை விரித்தான்
'91 fLDT. நீங்களும் படுத்துக் கொள்ளுங்க. தமையனை எண்ணும்போது வீரவெறியுணர்வுமே அ
“ஓம் ராசா. நான் மட்டும் அந்தப் படச்சவன் கன ஒருபாவமும் அறியாத என் செல்வத்தை விட்டு. 6 அவளால் ஒன்றைத்தான் நினைக்க முடிந்தது.
“ஏனம்மா நீங்க கடவுளைப் பேசுகிறீர்கள். எந்: கட்டியவங்களைத்தான் திட்டுங்களேன்.”அவன்
6.
ம். என் தலைவிதி. நான் எல்லாம் அனுபவிச் சத்தியன் தங்கையை அணைத்தபடி படுத்திருந்தா
கண்ணம்மா. தன்சின்ன மகனைப் பக்கத்தில் கிட குறைந்திருந்தது. மீண்டும் அதற்குள் நிறைய எண்ணி விழிகள் மூடப்பட்டு அவனையும் அறியாது சிக்குண்டிருந்தான்
ஆனால். அவன்.
கண்ணம்மாவின் மனத்திரையின் முன்னால் நிழல்பட
கண்ணம்மாவிற்கு அன்று அதிகாலை ஏழுமணியில
காலையிலேயே சமையல் வேலைகளை முடித்து விட்டு. தன் கடமைக்குச் செல்லும் தினசரி இt
வழக்கமான இந்த வாழ்க்கையின் நடுவே வேண் பதினாலு வயசு நிரம்பிய சத்தியனும் செய்வதற்குத்
* 18
15-CM 4658

ன எண்ணாமல் என்னாலா இருக்க முடியல்லயே. ராஜா நீ- நான்தான் உனக்கு காலனாக மாறி பினேன்ே. என்னால் பொறுக்க முடியல்லப்பா.
பவில்லை- தேறுதல் படுத்த முற்பட்டவனாகச் தைகளைத் தவிரவும். அந்த வீட்டில் வேறு யாரும் வந்து ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் ங்குவதற்கு எல்லோருக்குமே பயம். அல்லது ப்படாமையினால். அது செத்தவீடு போன்று ண்ணிப் பார்க்கவோ, அலசி ஆராயவோ அவளுக்கு
வையப்பா.” அவள் உள்ளத்திற்கு மட்டுமல்ல. காண்டே சொன்னாள்.
לין
லாம்.!” அவன் அவளை அணைத்துக் கொண்டே
sas’ தாயை நினைக்கும் போது பச்சாத்தாபமும், வனுக்கு மாறி மாறியேற்பட்டுக் கொண்டிருந்தன -
ன்னுக்கு. புலப்படுவதேயில்லையோ தெரியல்ல. விட்டு. என்னை எடுத்திருக்கலாமே. மாறி மாறி
தப் பாவமும் செய்யாத அண்ணனைத் தீர்த்துக் மறுகணமே ஆத்திரத்தோடு சொன்னான்”
bகிறேன்.” அவள் தன்பாட்டில் கூறிக்கொள்ள
த்திவிட்டு குப்பி விளக்கைப் பார்த்தாள் எண்ணெய் ணையை நிரப்பி விட்டு அமரும் போது சத்தியனின் நித்திரா தேவியின் அணைப்புக்குள் அவன்
டமாகச் சில காட்சிகள் விழுந்து கொண்டிருந்தன
ருெந்து பிற்பகல் இரண்டு மணிவரைக்கும் டியூட்டி
நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி
பந்திரமாகவே அவள் வாழ்வு ஓடுவது வழக்கம்
டிய உதவிகளை பதினாறு வயசு நிரம்பிய ராசனும்
தவறியதே இல்லை -
7
y

Page 212
கண்ணம்மாவின் வாழ்க்கைச் சுற்றுவட்டாரத்தி தன் குழந்தைகளைப் பாதித்து விடக்கூடாதென் நிறைந்த தனது பாதுகாப்பு வலையத்தினுள்ளேதா இமைகாப்பது போல் வளர்த்து வந்தாள். அவள் புரிந்திருக்க நியாயமில்லை.
"ராஜா. இன்னமுமா. நீ ரியூசனுக்குப் பே கொண்டே வைத்தியசர்லையை விட்டு வீட்டிற்கு
9
“இன்று நான் டியூசனுக்குப் போகல்லம்மா.
"9th. 9th. உங்களுக்கெல்லாம். தெரிஞ்சாத்தானே. ஒழுங்காகப் படிக்க வேணும் தானே. எல்லாத்தையுமே கட்டிப்போட்டு.”
“ஏனம்மா. இப்போ வந்ததும். வராததுமா ச மாட்டாங்க. கர்த்தால் அனுட்டிக்கிறாங்க. அவன் உண்மைைையச் சொல்லிக் கேட்டான்
“மற்றவங்க போகாட்டால். நீயுமா போகக்சு சோதனை நடக்கப் போவுது.
மற்றவங்களா. சொல்லித் தரப்போவினம்.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL00LLLLLLLLLLL0LLLLL0 அவன் ஒன்றும் பேசவில்லை
“இன்னமுமா நீ புறப்படவில்லை. ’ க
கால்சட்டையைப் போட்டுச் சறத்தை கழட்டித் அவனது நாற் காலியில் விரித்துவிட்டு, சேட்டை அவன்.
"அம்மா. நான். போய் வருகிறேன்.” 6 செவிப்பறைக்குத் தட்டியது.
அவன் போய் அரைமணியும் ഷ്ട്രക്രഖിൺങ്ങബ. சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் -
“டுமீல். டுமீல்.”
இரண்டு சத்தங்கள் வெகு தொலைவில் இரு ஒரு பகுதியை அழிக்கத்தான் வந்திருக்கும் என சில நிமிடங்களில். இராசன் தன் டியூசன் சுடப்பட்டு அவனுடல் கோரமான நிலையில் இரா கிட்டியதும் கண்ணம்மாவின் கண்கள் இருண்டு
米米米米米米冰冰
米米水米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米米米水米米

ல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எந்த நிகழ்ச்சியும் பதற்காக ஒழுங்கும், கட்டுப்பாடும், குடும்பப் பண்பும் ன் அந்த இரண்டு வயசு வந்தவர்களையும் கண்ணை . ஆனால். வாழ்க்கையின் விதி. அவளுக்குப்
கல்ல. “ கண்ணம்மா அதட்டலாகவே கேட்டுக்
வந்ததும் வராததுமாகக் கேட்டாள் -
ராஜா ஆதலாகச் சொன்னான்.
பணம் எங்கிருந்து. எப்படி வருகுது எனத் என்ற எண்ணம் வரும். என்ர தலையில் உங்கப்பா அவள் ஆத்திரத்தோடு முடிக்கவில்லை
த்துறிங்க? இன்றைக்கு யாருமே டியூசனுக்கு போக நான் மட்டும் போய். என்னம்மா செய்யிற.?”
உடாது. இன்னமும் இரண்டு மாசத்தில் உனக்குச்
Roha?” அவள் பேயாட்டமாகப் பேசினாள்.
)
ண்ணம்மா அதட்டினாள் - தன் படிக்கும் மேசையின் அருகே போடப்பட்டிருக்கும் மாட்டிக் கொண்டே புத்தகங்களோடு வெளியேறிய
ானக்கூறிக்கொண்டு செல்வது மட்டும் தான் அவளது
ande) அவள் அப்போதான் குளித்து விட்டு வந்து
ந்து வந்தாலும் கூட அது அவளது வாழ்க்கையின்
எண்ணியிருக்கவில்லை- - ா பாடசாலையில் வைத்தே மேல் மாடியினின்றும் ணுவத்தினரால் கொண்டு செல்லப்படுவதாகச் செய்தி பிரண்டன அதுதான் அவளது விதிபோலும்!
水水米米米米米米米米
K米冰米米米米米米米米米米米米米米米米米外
k米米米米米米米米米米米米米米米米米
88 -

Page 213
5வி என்பது கவிதையைக் குறிக்கும். ஆனால் எனக் குறிப்பிடுவது மட்டக்களப்புக் கிராமிய வா இசைப் பாக்களாகும்.
பிள்ளைப் பருவத்தையடுத்து வருவது கட்டிளை உள்ளமும் திடீரென விருத்தியடையும். ஆணிலு பாலியல் உணர்வுகள் துளிர்விடும், காதல் அரும்பு கவிகள் இப்பருவத்தினர்க்கே பெரிதும் உவப்பானை இல்லை, உலகமே இல்லை, உயிர்களே இல்லை Nஎங்கே? அதனாலேதான் காதலும் வீரமும் சங் படைக்கப்பட்டன. இத்தகைய இன்றியமையா!ை வந்த வள்ளுவனும், பக்தி வளர்க்கவந்த நாயன் பக்திப் பாடல்களைப் பாடினர். தம்மை நாயகிக காதல் கொண்ட அற்புத அனுபவங்களை நெஞ்சுரு கவித்துவத்தைக் காண வேண்டுமானால் காமத் இருந்தே தன்னைத் தலைவியாக்கிய ஆண்டாளின் உணர்ந்து திளைக்கலாம். அதுபோல கிராமிய காணவேண்டுமானால், கிராமியக் கவிகளில் ஈடு செயற்கையற்ற இயற்கையான காதல் உறவை கள்ளம் கபடமற்ற காதல் உணர்வுகளைக் கெ புதுக்கவிதையாளர்கள் சிலாகிக்கும் குறியீடும், படி கையாண்ட உள்ளுறை யுவமத்தையும் இக்கவிகள
இவ்வாறான காதற் கவிகளைக் கிராமியச் சூழ கன்னியரும் தானா?
கட்டிளைஞரிடையே இயல்பாகவே பருவ வே களவொழுக்கம், உடன்போக்கு, கடிமணம் என்பன செம்புலப் பெயர் நீர்போல் இரண்டறக் கலப்பதும் கொப்பளிப்பால் துடி துடிப்பதும் உண்மைதான். தமது உணர்ச்சிகளை கவிகளில் வடித்தார்கள் வடித்தார்கள்.
காதலன்-காதலியின் மன எழுச்சிகளைத் தா இயல்ப்ாகவே கவித்துவமும் வாய்ந்தவர்கள். அவ. இருக்கலாம். அவர்களே கிராமியக் கவிகள் எ உண்மை. அவ்வாறு படைக்கப்பட்டவைதான் ம மண்வாசனை கமழும் காதல் உணர்ச்சிக் கருவூல
1.

மட்டக்களப்புக் கிராமியக் கவிகள்
எஸ். கிருஸ்ணபிள்ளை B.A Dip in Ed, SLEAS விரிவுரையாளர், "திமிலைத் துமிலன்' திமிலைதீவு,
மட்டக்களப்பு.
இங்கே நாம் மட்டக்களப்புக் கிராமியக் கவிகள் சனைக்கு மட்டுமேயுரிய, தனித்துவமிக்க கிராமிய
மய்பருவமாகும். அந்தப் பருவத்திலேதான் உடலும் ம் பெண்ணிலும் என்றுமில்லாத புதுமை பூக்கும், ம். பாலியல் மணங்கமழும் மட்டக்களப்புக் கிராமியக் வை. காதல்-காமம் இல்லையென்றால் உலகியல் ). இவை இல்லையென்றால் பக்தி எங்கே, முக்தி க காலத்தில் போற்றப்பட்டன. இலக்கியங்கள் D காதலுக்கு இருப்பதாலேதான் அறம் போதிக்க மார்களும் ஆழ்வார்களும் அகத்திணை சார்ந்த ளாக்கிக் கொண்டு இறைவனாகிய தலைவனிடம் க எடுத்துரைத்தனர். வள்ளுவனின் உண்மையான துப் பாலினுள் நுழைய வேண்டும். பெண்ணாக பாசுரங்களுள் புகுந்தால் காதலின் வல்லபங்களை பப் பாவலனின் உண்மையான கவித்துவத்தைக் படவேண்டும். கிராமியத்து. மண்வாசனையோடு, அங்கேதான் கண்டு இன்புறலாம். உண்மையான ப்பளிக்கும் கிராமியக் கவிகள் அற்புதமானவை. மமும், வீச்சும் மாத்திரமல்ல, சங்ககாலப் பாவலர் லே இயற்கையாகக் காணலாம்.
லில் பாடுபவர்கள் யார்? கட்டிளங் காளையரும்
ட்கைக்கான உணர்வுகள் பூத்து, காதல் அரும்பி, ா நிகழ்வது உண்மைதான். இளம் உள்ளங்கள் , பிரிவு நேர்ந்தால், தாங்கவொண்ணா உணர்ச்சிக் ஆனால் அந்தக் கட்டிளங்கன்னியும் காளையும் என்பது யதார்த்தமல்ல. அப்படியானால் யார்
மும் பெற்ற ஒருசில புத்தி ஜீவிகள், நுண்மதியும் Tகள் கட்டிளைஞராகவோ, முதிர்ந்தவர்களாகவோ 1ற அற்புத வடிவங்களைப் படைத்தனர் என்பதே டக்களப்புக் கிராமியக் கவிகள். அவை கிராமிய ங்கள்.
9

Page 214
எருதுகளை வண்டியிற் பூட்டிக் கொண்டு, வண்டியோட்டியா? வேளாண்மை வட்டையிலே, க காவற்காரனா? சாயும் பொழுதிலே கதிரறுத்து மு வரிசையாக நடந்துவரும் விவசாயியா? சலசல காளையா, கன்னியா? சோளஞ் சேனையிலே கி ஒருவனா? மந்தைகள் மேய்த்து வழி நெடுகப் பா கவிகளைப் பிரசவிக்கலாம். இவ்வாறான இன் கிராமங்களில் இன்னும் உலா வருகின்றன.
கிராமியக் கவிகள் பெரும்பாலும், தலைவியோ, பாடப்படுகின்றன. குறிப்பிட்ட பாத்திரமாகத் பிரசவிக்கப்படுகின்றன. அவற்றைப் படைக்கும் ஆ புத்தி ஜீவியாகவேயிருப்பார் என்பதை நினைவிற் கவிகளையும் அணுகப் போகிறோம்.
வளம் கொஞ்சும் கிராமியச் சூழலில், மறைவான பலவற்றையும் அவசர அவசரமாக ஆசை தீரப் ( எப்போது சந்திப்பது?’ என்று ஆவலோடு வின வருகிறது?
“சந்தன மர்த்தை L சந்திக்க வேணு பூவலடிக்கு மச்சான்
பொழுதுபட வந்
“பூவலடிக்கா? பூவலடிக்கு அவள் மாத்திரம கவனிக்கிறாள் அவள். கவி பிறக்கிறது.
“கடப்படியில் வந்து காளை கனைக் எங்கிருந்த போது எழும்பிவர மாட்
அவனுக்குப் புரிந்து விடுகிறது. பிரியாமல் பிரி
அன்று நிலாக்காய வேண்டிய இரவு மழை பொடென்று மழைகூடத் தூறுகிறது. ஆனாலும் வீட்டுக் கதவடிக்கே துணிந்து வந்துவிட்டான். இனியும் தாங்க முடியாது. மெல்லத் தனக்குள்ே
“பொடுபொடென்ற பூங்கார மானநி கருமிருட்டு மாை கதவுதிற கண்
எப்படித்தான் அவளுக்கு இது கேட்டதோ! அ கதவு சத்தமில்லாமல் சாத்தப்படுகிறது. இருவரு செல்கின்றனர். ஆசையோடு ஆர்த்தழுவுகின்றன இரண்டுள்ளங்கள் ஆசை வெறிதீர மயங்கித் திை அவன் தந்த இன்பத்தால் அவளும் மயங்கிக் ச

இராப்பொழுதில், வரிசையாகப் பயணம் போகும் ாவற் பரணிலே நித்திரை விழித்துக் காவல் காக்கும் டித்து, தென்றல் சுகம் நுகள்ந்து, வயல் வரம்பிலே க்கும் நீரோடையிலே குளித்துக் களித்து நிமிரும் ளியும் குரங்கும் துரத்த, கவண் வீசும் ஒருத்தியா, டிவரும் அவனா, அவளா? எவரும் இந்தக் காதற் பம்தரும் கவிகள் மட்டக்களப்பு வயற்புறங்களில் -
தலைவனோ பாடுவதாகக் கற்பனை செய்யப்பட்டே தன்னைப் பாவனை செய்து கொண்டே, அவை ணோ, பெண்ணோ மொழிவளமுள்ள, மீத்திறனுடைய
கொண்டே இத்தகைய காதற் கவிகளையும், பிற
ஓர் இடத்தில் அவனும் அவளும் சந்திக்கின்றனர். பேசுகின்றனர். இறுதியில், “அன்பே, இனி உன்னை வுகிறான் அவன். அவளிடமிருந்து என்ன பதில்
Déffrts மெண்டால்
திடுங்கோ’
வருவாள்?’ யோசிக்கிறான் அவன். அதைக்
து நிண்டு குமெண்டால் ம் நாகு டாதோ?”
5து செல்கிறான்.
மேகங்கள் நிலவை மறைத்திருக்கின்றன. பொடு ) அவன் புறப்பட்டு அவளைக் காண வருகிறான். ண்ேட நேரம் நின்றும் கதவு திறபடுவதாக இல்லை. ள பாடுகிறான்.
மழைத்துாற்றல்
6)
லவெள்ளி D606(3u'
வள் மெல்லென வந்து கதவு திறக்கிறாள். மீண்டும் ) ஒசைப் படாமல் பக்கத்திலுள்ள ஆற்று மணலுக்குச் ர். நேரம் போவதே தெரியாமல் இளமை துள்ளும் ளக்கின்றன. அவள் தந்த இன்பத்தால் அவனும், றெங்கிப் போகின்றனர். அவளை என்ன சொல்லிப்
90

Page 215
பாராட்டுவது? அவனுக்குப் புரியவில்லை. இந்த இ அதனையே இந்தக் கிராமியக் காதலனும் புரிகிறான். ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோ, அன்றே தோன்றிய பொதுவாகிவிடுகிறது. அவனுக்கு அவள் ஒரு பேரி களிகொண்ட நெஞ்சம் கவித்தேன் கொட்டுகிறது.
'வாழைப் பழமேஎ வலதுகையில் ச ஏலம் கிராம்பேயுை என்ன சொல்லிச்
“தங்கக் கிளியே எ தாய்மாமன் ஈன் மையிட்ட கண்ணே மறந்திருக்கக் கூ
‘குஞ்சு முகமும் உ கூர்விழுந்த மூக் நெற்றி இளம்பிறை நித்திரையில் தே
“காலிவிளை பாக்கு களுதாவளை ெ ஏலம் கிராம்புக்கும் ஏற்றதுகா உன் 6
அவள் என்ன, அவனிலும் சளைத்தவளா? இன் விளையாட்டு, அவன் தந்த இன்பத்தின் பிரதிபலிப்
"நித்திரைக் கண்ண நினைவிலயும் ே தங்க முகமுமுன்ட தகதகத்த பல்ல!
“ வட்ட முகமுமுன் வடிவிலுயர் மூக் கட்டு உடலும் மச் கருத்தழியச் செ
“தங்கத்தகடோ? 6 தகதகத்த பொன் வெள்ளித் தகடோ விலை மதிக்கக்
எத்தனை இரகசியமாகத்தான் அவர்கள் சந்தித் அவன் வந்து போவது பற்றி ஊரெல்லாம், கிசு கிசு என்கின்றனர். அவர்களின் களவொழுக்கம் ஊர்வ எப்படி எப்படியோ பேசுகிறார்கள். அதில் என்ன எப்படிக் கிழம்பும்? எவனோ ஒருத்தன் பாடுகிறா6
1.

டத்திலே சங்ககாலக் காதலன் என்ன செய்தானோ, மானுடம் என்று தோன்றியதோ, என்று மொழியென்று நலம்புனைந்துரைத்தல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ன்பப் பெட்டகம். அது வார்த்தைகளில் அடங்குமா?
ši
க்கரையே )60
கூப்பிடட்டும்?”
கண்டே (யுன்னை
டுதில்லே’
ன்ட கழகும் யும் - என்ட ாணுதுகா’
நக்கும் வத்திலைக்கும்
ாழில்வாய்”
பத் தமிழிலே அவளும் விளையாடுகிறாள்.
LT 2
ரிலையும் தானுவது
pகும்
5ழகும்
ான் - என்ட ப்யுதுகா!’
ன்ட
தகடோ?
உன்னை கூடுதில்லே!’
அந்த
தாலும் அது வெளியே தெரியாமல் போய்விடுமா? நடக்கிறது. இதை இலக்கியத்தில் அலர்எழல்’ ாய்க்கு ஒரு பிடி அவல் ஆகிறது. யார் யாரோ, உண்மையா இல்லை? நெருப்பில்லாமல் புகை
I.

Page 216
“ வில்லுக்கு வந்த விடியளவும் புல் கல்லில் முதுகுர
காடேறிப் போகு
மற்றொருவன் இந்த ஊர்வம்புக்கு உரம் சேர்க்
* வெள்ளைக் கி
வீசுகொம்பன்
பள்ளத்து வெள்
பால்பறக்கத்
இந்த மறைமொழிகளை என்னவென்பது? உள்ளு அந்த இளைஞன் வில்லுக்கு வந்த கொம்பன், ெ பள்ளத்து வெள்ளாமை அங்கு நிகழ்வது புல்லரு இவ்வாறு பொறுப்பற்ற பொறாமை நெஞ்சங்களால் அந்தத் தலைவியிடமே நேராகக் கேட்டு விடுகி
“திடுதிடெண்டு திட்டியெல்ல மதுரையப்டி நாt வந்த கள்ளன
அவள் என்ன பதில் பகள்வாள்? தலைகுனிகிற
இத்தனை ஆன பிறகும் தாய் தகப்பன் சும்ம அவளால் வெளியே போக முடியவில்லை. இத் வருகிறான். அந்த இரவு முழுக்க அவள் திறபடவேயில்லை. விடிந்து விடுகிறது. இன்னு கொதிக்கும் வேதனையோடு எழுந்து நிற்கிறான்.
‘விடியா விடியு விடிந்துபொரு காத்திருந்து ே கதவு நிலை
மானசீகமாக அவளை முன்னிறுத்தி, அவன் த மறைகிறான்.
வீட்டில் அவனுக்கு நிம்மதி பிறக்குமா? திரும் அன்றொரு நாள், ஆறோடி வரண்ட தடத்திலே கொண்டிருந்தாள்? அப்போது அவன் தனக்குள்
“பூவலைக் கிண் புதுக் குடத்தை ஆரம் விழுந்த கி அள்ளுதுகா ந
அந்த நாள் எந்தநாள்? அது மீண்டும் வரும நாள் அவள் தன் ஆயத்தாரோடு எங்கோ புறட் முன்னே நின்று கேட்டானே. அவள் பதிலேதும் விட்டாளா? ஒரு பார்வை பார்த்து அவனைச் சி மிதக்கிறது.

கொம்பன் )லருந்தி ஞ்சிக் நதுகா!’
கிறான்.
டொநாம்பன்
தாமரையன் T6TITLDu I தின்னுதுகா!”
]றை உவமமா? படிமமா? குறியீடா? எப்படியாயினும் lவள்ளைக் கிடா நாம்பன் அவள் புல்லும் கல்லும் நந்துதல், முதுகுராஞ்சுதல், பால்பறக்கத் தின்னுதல். ) அலர்’ எழுகிறது. யாரோ ஒரு வாயாடிப் பெண்,
DT6T. S.
மழைபேயத் ாம் தண்ணிநிக்க ப்குலைக்க ன் ஆர்பொடிச்சு?”
)ாள்.
ா இருப்பார்களா? கட்டுக்காவல் அதிகரிக்கிறது. த்தனைக்கு மத்தியிலும் அவன் அவளைச் சந்திக்க
வீட்டுக் கதவோரம் காத்திருக்கிறான். கதவு ம் காத்திருக்க முடியுமா? பெரு மூச்சோடு, நெஞ்சு
மட்டும்
ழ தேறுமட்டும் பாறேனெண்டு - உன்ட சாட்சிசொல்லும்”
ன் மன உளைச்சலை வெளிப்படுத்திவிட்டு நடந்து
அபித்திரும்ப அவள் நினைவிலேயே தத்தளிக்கிறான். U அவளைக் கண்டானே. அவள் என்ன செய்து ளே இசைத்த கவி நினைவில் வருகிறது.
سلاgا 5 மேலவச்சி
ல்லதண்ணி’
ா? அந்த நினைவே அவனை வதைக்கிறது. ஒரு பட்டுச் சென்றாளே, அப்போது அவன் துணிவோடு பகராமல் கொடுப்புக்குள்ளே சிரித்தாளே. அத்தோடு றைப் பிடித்து நடந்தாளே அது மீண்டும் நினைவில்
192

Page 217
* மான்போல் ந
மயில்போல் தேன்போல் குடி சின்னவண்ட
இங்கே இவன் அவளைச் சின்னவண்டாக எண் கட்டுக்காவலுக்கிடையில் இவன் நினைவாகவே களிகொண்ட தினங்களை எண்ணியெண்ணிக் குலை பின், அவளைப் பிரிந்து அந்த இரவிலே அவன் டே என்று அவள் இயற்கையை இரந்த இரப்பு இன்
" கடலே இரையா காற்றே நீ விசா நிலவே எறியாதே நீலவண்டர் போ
எத்தனை இதமாக அமைந்துவிடுகிறது. இந்தக் வைத்துக் கொண்டு, அவனும் அவளும் 'ஆர்' இணையற்ற காதல் உணர்வு, எத்தனை ஆழமாக
அந்தத் தனிமையான இருட்டறையிலே அவ அனைத்துக் கொண்ட பசிய நினைவுகள் மீட்கப்படு வருடுகின்றன. அன்று எத்தனை பாக்கியம் பெற்றுக் வாடுகின்றன.
* கச்சான் அடிக்க
கயல்மீன் குதிபா
மச்சானுக் கென்ே வளர்த்தேன் குரு
இந்தக் கவி இதயத்துள்ளே எழுந்து குமிழி படு
“ ஊனிடை சங்கூது உத்தமர்க் கென் உன்னித்தெழுந்த தடமுலைகள்.
என்ற ஆண்டாளின் காதல் அனுபவ வரிகளை
எங்கோ இருந்து ஏங்கும் அவள்குரல் அவனுக்
அவன் உள்ளத்தால் உணர்கிறான். அவளது ஏக்
* சுற்றிவர வேலி
சுழலவர முள்6ே
எங்கும் ஒரேவேலி
எங்கால நான்வ
அவனது குரலை அவள் மானசீகமாக உணர்ந்
“காவல் அரனோ கள்ளனுக்கு மு வேலி அரனோ ம வேணுமென்டக

>டநடந்து றகொதுக்கி கிளம்பி - என்ட
போவதெங்கே?
னித் துடிக்கையில், அங்கே அவள் எத்தனையோ சிறையிருக்கிறாள். அவனோடு கலந்த நாட்களை, கிறாள். அன்றொருநாள் அந்த இன்பத் திளைய்பிற்குப் ானபின். அவன் பத்திரமாகப் போய்ச் சேரவேண்டுமே
நினை~ வருகிறது.
கிராமத்துப் பாவலனின் உவமை! இந்த வண்டினை விகுதி சேர்த்து, “வண்டார்” எனக் குழைவதிலே,
நம்மையும் பாதித்து விடுகிறது!
|ள் கண்ணீரில் கரைகிறாள். அவன் அவளை கின்றன. அவளையறியாமலே கரங்கள் மார்புகளை குழைந்தவை அவை இன்று? அவன் இல்லாமல்
TԱ }
D நம்பைமுலை”
இதனோடு வைத்து ஒப்பு நோக்கி நயக்க முடியும்.
க் கேட்டதோ இல்லையோ அவளது அழைப்பை கத்துக்கு அவனது குரல் பதில் தருகிறது.
லி
ட்டும்?”
ாளா? அவள் கேட்கிறாள்
Défaster ாளரனோ சான் iளனுக்கு?”
3

Page 218
அவர்கள் உடலால் பிரிந்தும் உள்ளத்தால் ஒ கார்காலமும் நெருங்குகின்றது. அந்த மழைக்கால வெளிப்படுத்துகிறான். ;
* கன்னிக் கிரான்கு கடுமழைக்கு அ மின்னி மின்னிப் பூ விளக்கெடுக்கு
கார்காலம் மலர்ந்தால் வாய்க்காலில் தண்ணி ஒருத்தியின் மனம் கவர்ந்த கள்வன் நின்றிருந்தால் பச்சைக் கொடி காட்டாததுதான் அவன் அங்கு நிர் ஆபத்தென அவள் உணர்ந்தாள். குடத்தைத் து
* வாய்க்காலில் ே வண்டுவிழும் து பூவலுக்கு வாங்க புதியதண்ணி ந
அவள் குரல்கேட்டு அவன் நிமிருமுன்னே அ போகிறாள்? இந்த மழைக்காலத்தில் பூவல் தே முற்பட்டபோதுதான் அவனுக்கு அர்த்தம் புரிந்த அவனுக்கேதான். வாய்க்கால் அருவருத்தது. அவனது உள்ளம் கடுகதியில் பாய்ந்தது. இந்த குறியீடா, உள்ளுறை உவமமா? அல்லது இறைச்
இவ்வாறான மட்டக்களப்புக் கிராமியக் கவிகை நாம் நின்று விடுகிறோம். அவைபற்றி யாருமே பே தமது படைப்புக்களுக்கு இக்கவிகளைப் பயன்ட நாவலாசிரியன் தனது நாவலொன்றில், அத்திய கிராமியக் கவிகளை எடுத்தாண்டுள்ளான். அது மழைமுகில் அல்ல.’ புரட்டிப் பாருங்கள்.
இவ்வாறான கிராமியக் கவிகளைச் சிலர் தொ கவிகள் மட்டக்களப்புக் கிராமங்களில் இன்னு தேடித் தொகுத்துப் பதிவுசெய்து வைக்கவேண் அந்த நாவலின் முதல் அத்தியாயத்தில் இடம்ெ
* கடலுக் கலங்க கப்பலும் பாய்ப ஊருக் கலங்கா உயர்ந்த நல்ல
米米米米米米米米
:k:k:k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-
米米米米米米米米米米米米米冰水

ன்றியும் மயங்கும் நிலையில் நாட்கள் நகள்கின்றன. அனுபவத்தை ஒரு கிராமியப் பாவலன் யதார்த்தமாக
குருவி
DDTLD6) ச்சால் ம் கார்காலம்’
கரைபுரண்டோடும். அந்த வாய்க்கால் ஓரமாக 1. அவனது களவொழுக்கக் கோரிக்கைக்கு அவள் கக் காரணமா? இனியும் சிவத்தக் கொடி காட்டுவது தூக்கி இடுப்பிலே வைத்தபடி நடந்தாள்.
பாறதண்ணி பம்பிவிழும்
LD&F8FT6 ான்தருவேன்’
வள் நடந்து போய்விட்டாள். “எங்கே, பூவலுக்கா ாண்டுவார்கள்?’ இந்த வினாக்களுக்கு விடைகான து. அந்தப் பூவலும் புத்தம் புதுத் தண்ணியும் இனி அந்தப் பூவலை நோக்கி அவனை முந்திக்கொண்டு தக் கிராமியக் கவியிலே விரவிக் கிடப்பது படிமமா, சிப் பொருளா? நீங்களே கண்டு கொள்ள வேண்டும்.
ளச் சந்தர்ப்பம் நேரும்போது கேட்டுச் சுவைப்பதோடு லும் சிந்திப்பதில்லை. தமிழ் எழுத்தாளர் எவருமே படுத்த முற்படுவதுமில்லை. ஆனால் ஒரேயொரு ாயங்கள் தோறும் பொருத்தமறிந்து மட்டக்களப்புக் து எந்த நாவல்? நீங்கள் நினைப்பது சரி. “மஞ்சு நீ
குத்து வெளியிட்டுள்ளனர் மேலும் பெரும்பாலான ம் வாய்மொழியிலேயே வாழ்கின்றன. அவற்றைத் டியது தமிழ்ப் புத்திஜீவிகளின் கடமை யல்லவா? பெற்ற கவி இதுதான்.
ாரம் Dரமும்
PLib ) ஆலமரம்.”
米米米米米米米米米米米
<米米米米米米米米米米米米米米米米米米米米米来米
米米米米米米米米米米米米冰冰冰冰冰冰
194

Page 219
அருை
ஆனந்த வெள்ளத்தில் கற்போரை ஆழ்த்தி இய கவிதைகளாகும். தமிழர்கள் பன்முகத் துறையில் காட்டுவதை இலக்கியவாதிகள் நன்கறிவர். இந்த கவிஞர் பாரதிதாசன். இவரின் கவிதைகளில் கணக்கானவர்களை வீறுகொண்டெழ வைத்தது.
பாவேந்தர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர், l கவிதைகள் எப்போதும் சமுதாயக் கண்ணோட்ட
இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட இை தன்னைச் சார்ந்த சமுதாயத்தின் வாழ்வியல் பன துல்லியமாகத் தொகுத்து உரைக்கின்றார் கவிஞர் என்னும் ஆக்கமும் இதற்கு சான்றாக மிளிரும் இ
பாரதிதாசன் பாடாத பொருளே இல்லை என்று கு நல்ல கற்பனை வளமும், நுட்பமான கருத்தே பாடல்களாகும். இவரின் கவிதைகளில் மின் புதுமையானவையாகும். இதனைத் தெளிவாக அறி “பாண்டியன் பரிசு”, “தமிழிச்சியின் கத்தி”, “கடல்ே புரட்டினாலே உண்மை வெளிச்சமாகும்; உயர்வு (
இவற்றினூடே முழுக்க முழுக்க இயற்கைப் பொ பாடல்களைக் கொண்டதே “அழகின் சிரிப்பு” எ6
இதில் முதலாக அமைந்த “அழகு’ என்னும் கt
“காலையிளம் பரிதியிலே அவை கடற் பரப்பில், ஒளிப்புனல் சோலையிலே, மலர்களிலே, தள தொட்ட இடம் எலாம் கை மாலையிலே மேற்றிசையில் இல மாணிக்கச் சுடரிலவள் இ சாலையிலே கிளை தோறும் கிள தனில் அந்த “அழகெ” ை
- என்றபடி சுவையாக மலர்கின்றது. புரட்சிக்க எழில் படைப்புகள் அய்பெருமகளை எழிலோவிய

மயான படைப்பு ‘அழகின் சிரிப்பு”
கலாபூஷணம் -தமிழ்மணி- கவிமணி -தமிழோவியன் -
ற்கையின் எழிலில் மிதக்க வைப்பதே பாரதிதாசனின் ) இயற்கையின் அற்புதங்களில் எப்போதும் ஈடுபாடு இருபதாம் நூற்றாண்டில் தலைசிறந்து விளங்கியவர் ) பளிச்சிடும் புரட்சிகரமான போக்கு பல்லாயிரக்
படிப்போரை ஈர்த்து பயன்பெறச் செய்தது.
ரட்சிக்கவிஞர் என்றும் போற்றப்பட்டவராவர். இவரின் ம் கொண்டவை.
)ணயற்ற காவியம் இவரின் குடும்ப விளக்காகும். ன்புகளை, குடும்ப விளக்கில் தெட்டத் தெளிவாகத் ா. இன்னும் இவரின் காவியமான “இருண்ட வீடு” இயல்புடையதாகும்.
நறிப்பிடும் வண்ணம் இவரின் பாக்கள் பரிமளிக்கின்றன. ாட்டமும் மிளிரும் கவிதைகளே பாரதிதாசனின் னும் உவமைகள், உருவகங்கள், அத்தனையும் ந்து கொள்ள வேண்டுமாயின், “எதிர்பாராத முத்தம்”, மற் குமிழி”, “புரட்சிக் கவி’ முதலிய காவியங்களைப் தெளிவாகும்.
ருள்களை நுணுக்கமாக ஆய்ந்து, அழகுறப் பாடிய *றதோர் அற்புதமான ஆக்கமாகும்.
விதை
ளக் கண்டேன்! மில் கண்டேன்! அந்தச் ரிர்கள் தம்மில், ன்னில் தட்டுப் பட்டாள்! குகின்ற ருந்தாள்! ஆலஞ் ரியின் கூட்டம் ாபாள் கவிதை தந்தாள்.”
\ ゴ விஞருக்கு கவிதைக்குப் பொருளாக, இயற்கையின் ம் தீட்ட வைக்கின்றன.
95

Page 220
கவிஞரின் கண்ணோட்டத்தில் பட்டவை அனை வாயிலாகவே கேளுங்கள்.
“சிறு குழந்தை விழியினிலே ஒளி திருவிளக்கில் சிரிக்கின்ற நறுமலரைத் தொடுப்பாளின் விர6 நாடகத்தைச் செய்கின்றா புறத்தினிலே கலப்பையுடன் உழ புதுநடையில் பூரித்தாள் 6 நிறத்தினிலே என்விழியை நிறுத்த நெஞ்சத்தில் குடியேறி ம
என்று அழகின் சிரிப்பினை ரசித்து,
“அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கன
“பசையுள்ள பொருளிலெலாம் பt பழமையினால் சாகாத இ நசையோடு நோக்கடா எங்கும் உ நல்லழகு வசப்பட்டால் து
என்று “நல்லழகு வசமாகுங்கள். என்றுே ஆர்ப்பரிக்கின்றார் கவிஞர்.
தனது வாழ்வின் ஆரம்பத்தை பள்ளி ஆசான் பொருள்களை பற்றியும், பல்வேறு கோணங்களில் ே நூலாகும்.
கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாம சிற்றுர், பட்டணம் என்னும் தலைப்புகளில் இயற்ை விளையாட வைக்கின்றார். மனித சமுதாயத்தின் கவிஞர் காணும் கண்ணோட்டத்தினை பத்துப் பாட
“ புரட்சிக்கப் பால்அமைதி
பொலியுமாம். அதுபோல், ஒர கரையினில் அலைகள் மோதி கலகங்கள் விளைக்கும் ஆன அருகுள்ள அலைகட் கப்பால் கடலிடை அமைதி அன்றோ! பெருநீரை வான்மு கக்கும் வான் நிறம் பெருநீர் வாங்கும்
இயற்கைப் படைப்புகளை எல்லாம் மானுடத்த பார்த்து, நாம் பரவசமடையும் இயல்பிலே இப்பாட
இதோ மாலை வேளையில் வானப் பரப்பில் வி பாவேந்தர் பாடும் அழகைப் பாருங்கள்.

தும் அழகின் சிரிப்பாக விளங்குவதை பாரதிதாசன்
பாய் நின்றாள் ாள் நாரெடுத்து bவளைவில் ள் அடடே செந்தோள் வன் செல்லும் பிளைந்த நன்செய் னொள் என் கிழ்ச்சி செய்தாள்
டேன்.” - என்றும்
சையவள் காண்! ளையவள் காண்! உள்ளாள்! ன்ப மில்லை.”
ம துன்பமில்லை!’ என்று அழகின் சிரிப்பிலே
ாகவே தொடங்கிய புரட்சிக் கவிஞர், பல்வேறு நாக்கிப் பாடியுள்ள அழகே, அழகின் சிரிப்பு என்னும்
ரை, ஞாயிறு, வான், ஆல், புறாக்கள், கிளி, இருள் )கயை நம்மோடு பேச வைக்கின்றார். விந்தையாக சால்புகளை ஒப்பிட்டுக் காட்டுகின்றார். கடலை ல்களில் பாங்காகப் பாடியுள்ளமையைக் கேளுங்கள்.
יי ן
ன் பண்பாட்டோடு, பாடிக் காட்டும் பான்மையைப் ல் அமைந்துள்ளது.
ண் மீன்கள் பல்லாயிரமாகக் கொப்பளித்துள்ளதை,

Page 221
“மண் மீதில் உழைப்பா ரெல்ல வறியராம்! உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர்செல் வராம், இதைத் கண் மீதில் பகலி லெல்லாம் கண்டுகண் டந்திக் குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி!”
இப்படி, விரிந்த வானத்தில் நிறைந்து காணப்படு இறுதி மட்டும் வறுமையால் பீடிக்கப்பட்ட மக்கள் பால் கொண்ட இரக்கத்தால் ஏற்பட்ட சீற்றமே
தென்றலைப் பற்றிக் கவிஞர் நமது நெஞ்சத்
“அண்டங்கள் கோடி கோடி,
அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடுகின்ற காற்றே! திண் குன்றைத் தூள்தூளாக செய்யினும் செய்வாய் நீ ஓர் நுண்துளி அனிச்சம் பூவம் நோகாது நுழைந்தும் செல்வா
& G
SLL 0 LL L GLLL LLL LLLGL LLGL LGLGLL LLLL c L0L LLL LSL LLLLL ES LLLS LL 0 LL LSL 0L பெண்கள் விலக்காத உடையை நீபோய் விலக்கினும் விலக்கார் உன்ை
என்ற தென்றலின் குறும்பை எடுத்துரைக்கின் நன்றாகவே வருணித்துக் காட்டும் விதம் அருை
இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள இறுதித் தை பற்றியதாகும். பத்துக் கவிதைகளில் புரட்சிக் கலி அதில் காணப்படும் நுட்பங்களை தெளிவுபடுத் இருப்பாரா என்பது கேள்விக்கிடமானதே.
தமிழ் கவிஞரின் உயிர் மூச்சு அதற்குச் சா இனிமை பற்றிய பாடல்களும் சிறப்பான எடுத்து
“இருளினை வறுமை நோயை இடறுவேன் என்னுடல்மேல் உருள்கின்ற பகைக்குறை நா ஒருவனே உதிர்ப்பேன் நீயோ
கருமான்செய்படையின் வீடு! நான் அங்கோர் மறவன்! கன் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூச்செண்டு நானோர் தும்பி’
இப்படியான சிறப்புகளை எல்லாம் ெ அருமையாக வடித்துள்ளார் - பாவேந்தர்.
* அழகின் சிரிப்பு” என்ற தலைப்பே மிக போற்றும் பாங்கானது.

ம்ெ விண்மீன்கள் அனைத்தும் உழைத்து, உழைத்து, ரின் ஏழ்மையை எடுத்துக் காட்டுகின்றன. அவர்கள் இக்கொப்பளிப்பு.
தைக் கவரும்படி பாடுகின்றார்
Tuu! ”
ילו
5
றார். தென்றலை அதன் நுட்பமான செயற்பாட்டை, OLDLJTCB 6ft 6iTg).
)லப்பான பதினாறாவது அதிகாரம் - தமிழ் என்பதைப் விஞர் தமிழைப் பற்றி தனது தமிழ்ப் பற்றை தெளிவாக தி பாடியிருப்பது போல், வேறெந்த கவிஞரும் பாடி
ன்றாக அவரது தமிழியக்கப் பாடல்களும், தமிழின் க் காட்டாகும்.
|சம்மையாக செறிய வைத்து, “அழகின் சிப்பில்”
5வும் புதுமையானது. பொருள் பொதிந்தது. பலரும்
197

Page 222
5ற்றல் என்பது உயிர்களிடத்தில் காணப்படும் எனினும் ஆறறிவு படைத்த மனித குலமே இத்திறன என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அறிவு ஏற்படுவதற்கு, நற்பழக்கங்கள் உருவாவதற்கு, ஏ கற்றலே அடிப்படையாகும். எனவே நீண்டகால என வரையறுத்துக் கூறலாம். அதாவது ஒருவரது கற்றல். ஆனால் இன்று எமது சமூகத்தில் ஒருவரி தொடர்புபடல் அரிதாகவே காணப்படுகிறது.
உதாரணமாக சமச்சீர் உணவு பற்றிக் கற்பிக்குப் கிழங்கு கறியினை மட்டும் தமது பிள்ளை விரு அவ்வுணவினை வழங்குவதனைக் காணமுடிகிறது மக்டுகல், மாஸ்லோ, புறையிட் போன்ற உளவிய தமது பிள்ளைகளைக் கற்றலில் ஈடுபடுத்தும்போது அனைத்தையும் புறக்கணித்துவிட்டு அடுத்த மாண6 வேண்டும் என்ற முனைப்புடன் பிள்ளைகளுக்குக் செயல்படுகின்றனர்.
மேற்கூறப்பட்டுள்ள நிலைமைகளுக்கு அடிப்பை வாழ்வுக்காக என்ற நிலை மாறி கற்றல் பட்ட பெற்றமையேயாகும். அதனால் கற்றலின் உண்ை போகிறது.
கற்றலில் உரிய ஆயத்த நிலைக்கு வரமுன்டே இன்று 2-3 வயது சிறுவர்களிலிருந்து பட்டக்கல் கற்றல் நிகழாது. படிகள் தாண்டப்பட்டு பட்டங்க
கற்றல் என்பது நீண்டகால நிலையான நடத்ை பெறப்படுவதாக கருதப்படும் பட்டங்களுக்கும் அடிப்படையில் பல பதவிகளும், சம்பள உt நிலைத் திருக்கிறது. ஆனால் பட்டங்கல் பட்டங்களுக்குரியவர்களா? என்பது பல சந்தர்ப்பங்க தொடர்ந்தால் சமூக நலனுக்கு கேடாகவே அை
1

கற்றலின் ஆயத்த நிலை
கு. சதாசிவமூர்த்தி
அதிபர் பல7வி ஆசிரியர் கலாசாலை B.A. Diploma In Education.M.Ed.
ஒரு திறன் எனப் பொதுவாகக் கொள்ளப்படுகிறது. னப் பெருமளவில் விருத்தி செய்து பயன்பெறுகின்றது பெறுவதற்கு, மொழி வளர்ச்சிக்கு, நன் மனப்பாங்குகள் ன் மனித நடத்தை நன்கு அமைவதற்கு எல்லாம்
நிலையான நடத்தையை ஏற்படுத்துவது கற்றல் து நிலையான நடத்தைக்குக் காரணமாக அமைவது ன் அறிவும் (பத்திர தராதரமும்) அவரது நடத்தையும்
) ஆசிரியர் ஒருவர், அரிசி உணவுடன் உருளைக் நம்பிச் சாப்பிடுகிறது என்று கூறித் தொடர்ந்தும் து. பிள்ளைகளின் ஊக்கல்கள், தேவைகள் பற்றி லாளர் கூறியவற்றையெல்லாம் கற்ற ஆசிரியர்கள் பிள்ளைகளின் ஊக்கல்கள், தேவைகள், உயர்வுகள் வர்களை விடத் தமது பிள்ளைகள் கூடிய புள்ளிபெற கல்விச் சுமையை ஏற்றுவதிலேயே கரிசனையாகச்
டக் காரணம் யாது? என நோக்குவோமாயின் கற்றல், ங்களைப் பெறுவதற்காக என்ற நிலை தோற்றம் மப் பயனைக் கற்றவரோ சமூகமோ பெறமுடியாமல்
கல்வித் திணிப்பை ஏற்படுத்தக்கூடிய் சூழ்நிலை வி வரை காணப்படுகிறது. இதனால் முழுமையான ள் பெறப்படுகின்றன.
தயைத் தோற்றுவிப்பது என்பதற்கும் கற்றல் மூலம் தொடர்பு இல்லாமல் போகிறது. பட்டங்களின் ர்வுகளும் வழங்கப்படும் நடைமுறை இன்றும் ளை உடையவர்கள் எல்லோரும் அவ்வப் ளில் கேள்விக் குறியாகவே உள்ளது. இந்நிலைமை Dயும் என்பதில் ஐயமில்லை.
)8

Page 223
மிகவும் வேகமாக முன்னேறிவரும் நவீன உலகிற் ஒவ்வொருவரும் தம் பணியைச் செவ்வனே செய்ய உயர் இலட்சியம் என்ற நிலைமாறி தத்தமது பத சமூகத்துக்குப் பயன்பாடுடையதுமான உச்சப் பணி எதற்கும் அடிப்படைஅறிவு அவசியமானதாகும். அறிவை மேம்படுத்திக் கொள்வது ஒவ்வொருவரின வாசிகசாலைக்குரிய நூல்கள் பத்திரமாக இருப்பெடுக்கப்படுகிறது. அந்நூல்களை வாசிப்ப;
நவீன உலகில் கணனி முக்கிய பங்கு வகிக்கின் போன்று கணனி அறிவும் மிக முக்கியமானது என் வழங்கப்பட்டுள்ளன. கணனி கிடைத்த பல பாட வைத்துள்ளன. கணனியினைப் பயன்படுத்தும் அறிவ அய் பாடசாலையில் கணனி இருப்பதனால் என்ன ப உணர்ந்து செயற்பட வேண்டிய காலம் இது.
கற்றலில் ஆயத்த நிலைக்கு அடிப்படைக் காரண எனப் பல உளவியலாளர்கள் கூறியுள்ளனர். முதிர் பியாஜெ அவர்கள் தமது ஆய்வினூடாக முதிர்ச் வலியுறுத்தியுள்ளார். அனைச் சுருக்கமாக நோக்கு
ஆரம்பத்தில் தெறிவினைச் செயற்பாட்டை மட் வயதில் (புலனியக்கப்பருவம்) புலக்காட்சி மூலம் போதிலும் அவை பெரிதாக மனத்திலிருத்தப்படுவத முற்பட்ட பருவத்தின் முற்பகுதி (2 - 4 1/2 வ எனவும் குறிப்பிட்டுள்ளார். எண்ணக்கருவுக்கு மு விடயங்களைக் கற்கும் ஆற்றல் இருப்பதில்லை எ எனவும் குறிப்பிட்டுள்ளார். எண்ணக்கருவுக்கு (
பயன்படுத்துவர். ஆனால் அச் சொல்லின் அர்த்தம்
உதாரணமாக ஓர் ஆசிரியையின் மூன்று வயதுப் ப ‘அம்மா ஸ்கூல் (பாடசாலை)க்குப் போய்விட்டா' பற்றிய எதுவித அறிவோ, விளக்கமோ பிள்ளையி பாவனை செய்து விளையாடுவதன் மூலமும் செ ஆனால் இக் காலப்பகுதியில் முன்பள்ளிகளில் பிள்ை ரீதியாகக் கற்பிக்கும் அறிவுத் திணிப்பு அக் குழந்தை
அடுத்து தூல சிந்தனைக்கு முற்பட்ட (பிற்பகுதி எனப்படுகிறது. இப்பருவத்தில் பிள்ளைகள் ஒரு அதன் அனைத்துப் பண்புகளையும் அவதானிக்க ம உதாரணமாக சிறிய கிண்ணத்தில் நிறைவாக இரு போது, பெரிய கிண்ணத்திலும் நிரம்பாத காரணத் கருதுவர். இவ்வயதினருக்குக் கற்பிக்கும் போது பயனுடையதாகும்.
இதனையடுத்து வரும் தூலசிந்தனைப் பருவ அவதானிக்கும் போது அதன் பல பண்புகளையும் (2 திறனைக் கொண்டிருப்பர். ஆனால் குறியீட்டு ரீ பயனளிப்பது குறைவாகவே இருக்கும். உதாரணம முயன்று விபரிப்பதைவிட தரைத்தோற்ற மாதிரி ஒ விளங்கிக் கொள்வர். எனவே பொருளைப் பா பருவத்தினருக்குக் கூடிய பயனைத் தருவதாகக்
19

கேற்ப முடியுமானவரை சமூக முன்னேற்றத்துக்காக வேண்டும். பட்டமும், பதவிகளும் பெறுவது தான் விநிலையில் தம்மால் மேற்கொள்ள்க் கூடியதும் யினை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். எனவே, தாம் மேற்கொள்ளும் பதவிக்கேற்பதமது தும் சமூகக் கடமையாகும். பல பாடசாலைகளில், ப் பூட்டி வைக்கப்பட்டு வருட மொருமுறை தற்குச் சந்தர்ப்பமளிக்கப்படுவதில்லை.
Dġol- எதிர்காலச் சமுதாயத்திற்கு மொழி அறிவு ற காரணத்தினால் பாடசாலைகளுக்கு கணனிகள் சாலைகள் அவற்றைப் பாதுகாப்பதற்காகப் பூட்டி | மாணவர்களுக்குக் கிடைக்க வழி செய்யாதபோது, பன்? இதனை ஒவ்வொரு அதிபரும், ஆசிரியர்களும்
மாக அமைவன முதிர்ச்சியும் முன்னறிவும், ஆர்வமும் ச்சி என்பது ஒருவரது கால வயதினைக் குறிக்கும். சிக்கும், அறிவு வளர்ச்சிக்குமுள்ள தொடர்பினை நவோம்.
டும் கொண்டுள்ள குழந்தையானது முதலாவது ) பெறப்படும் தரவுகளைக் கொண்டு செயற்பட்ட ல்ெலை எனவும் அடுத்துவரும் தூல சிந்தனைக்கு பயதுவரை) எண்ணக்கருவுக்கு முற்பட்ட பருவம் ற்பட்ட பருவம் வரை அவர்களுக்கு அறிவுசார் னவும், ஆதலால் பாடசாலை புகாநிலைப் பருவம் முற்பட்ட பருவத்தினர் குறியீட்டுச் சொற்களைப் (அந்த எண்ணக்கரு) அவர்களிடம் இருப்பதில்லை. பிள்ளைகளிடம் அம்மா எங்கே? என்று கேட்டால் என்று பதில் கூறக்கூடும். ஆனால் பாடசாலை டம் இல்லாது இருக்கலாம். இப்பருவத்தினர் யல் மூலமும் ஓரளவு விருத்தியில் ஈடுபடலாம். )ளகளைப் பெரியவர்கள் போல நினைத்து குறியீட்டு நகளின் எதிர்காலத்தில் பாதிப்பையே ஏற்படுத்தும்.
) 4 % - 7 வயதுவரை உள் உணர்வுப் பருவம் பொருளை அவதானிக்கும் போது முழுமையாக ாட்டார்கள். ஒரு பண்பினை மட்டும் அவதானிப்பர். க்கும் திரவத்தைப் பெரிய கிண்ணத்தில் ஊற்றும் தால் திரவத்தின் அளவு குறைந்து விட்டதாகக் செயல்சார் அனுபவங்களினூடாகவே கற்பிப்பது
த்தில் (7 - 11 வயதுவரை) ஒரு பொருளை --ம் நீளம், பருமன், கனவளவு) ஒப்பிட்டு நோக்கும் தியாகப் பலவாறு விளக்க முயன்றாலும் அவை ாக இலங்கையின் தரைத்தோற்றம் பற்றி பலவாறு ன்றின் உதவியுடன் கற்பிக்கும் போது இலகுவில் ர்த்தோ, செயலில் ஈடுபட்டோ கற்பதுவே இப் கூறப்படுகிறது.
9

Page 224
அடுத்த பருவமாகிய நியம சிந்தனைப் பருவத்த தர்க்கித்தல், தீர்வுகாணல் போன்ற செயல்களினு வளர்ச்சியடைவத்ாக பியாஜே குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையிலேயே அமெரிக்காவின் ஆரம் புறுனரும் கற்றலை செயல்நிலை, கருத்து நிலை போது செயல் நிலைக்கு முக்கியமளிக்கப்பட வேண்(
மேலே கூறப்பட்ட விடயங்கள் எமது பாடச நன்கு கவனிக்கப்படாது நெட்டுரு முறையில் பாடங் கல்வித் தரம் குன்றுவதற்கான ஓர் அடிப்படையா
அடுத்து மிக முக்கியமான ஒரு விடயம் கற்றலி பாடசாலைகளில் பிள்ளைகள் கற்கும் போது விசே அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுவது மிக பாதிப்புடையோர், மீத்திறன் மாணவர். மெல்லக் உதவி வழங்கப்படாமையால் ஆரம்ப வகுப்புகளில் அவ் வகுப்பில் கற்றலுக்கான முன்னறிவித்தலின் அற்றவர்கள் என எண்ணுகின்றனர். அதற்கு கல்வி சரிவராது என சான்றிதழ்’ வழங்குபவர்க மன வேதனையுடன் அவதானிக்க முடிகிறது.
மாணவர்கள் கெட்டித்தனமானவர்கள் அல்ல மந்தமானவர்கள் எனச் சிபார்சு செய்வது ஆசிரிய தொகுதி மாணவர்களோ உரிய வகுப்பு மட்டத் காணப்படுமிடத்து அவர்களை இனங்கண்டு உ பெறாமைக்கான காரணத்தை இனங்கண்டு உரிய பணியாகும்.
உதாரணம்ாக ஒரு பிள்ளை பாடத்தில் பின்னடை இருக்கலாம். அதைப் பெற்றோரே அறியாது இ செய்ய ஆசிரியர் உதவுவதன் மூலம் பிள்ளையின் அமையும்.
பாடசாலை மட்டக் கணிப்பீடு ஆசிரியர் தன் கணிப்பீடு செய்யும் முறை தெரியாது, அதை வேை அக் கணிப்பீட்டினை வெறும் புள்ளி வழங்கும் வழிப்படுத்துவதற்கான தகவல்கள் பெற்றுக் கொ6 தம் பணி மூலம் வித்தியாதானத்திற்கான சந் வேண்டியவர்கள் வேதனம் பெறுவதற்கான தொழ
சில பாடசாலைகளில் கல்வித்தரம் ஒப்பீட்டளவ ஒரு வகுப்பில் கற்க வேண்டிய விடயத்தைக் கற்க அவ்வாறான சந்தர்ப்பத்தில் மாணவர் குறிப்பிட்ட L போது அதைப் பொருட்படுத்தாது வகுப்பில் உள்ள கற்கக்கூடிய ஆயத்த நிலையில் உள்ளனர் எ மாணவர்களின் தனியாள் வேறுபாடு, அவர்களது கற்பிப்பது ஒவ்வொரு ஆசிரியரினதும் கடமையா

திலேயே (11,12 வயதுக்கு மேல்) ஞாபகம், சிந்தனை, ாடாகக் குறியீட்டுக்) கற்றலில் ஈடுபடும் ஆற்றல்
பக் கல்வி முறைபற்றிய ஆய்வில் ஈடுபட்ட ஜெரோம் ), குறியீட்டு நிலை என வகுத்து ஆரம்ப கற்றலின் டும் என வலியுறுத்தியுள்ளதையும் நோக்கற்பாலதாகும்.
ாலைகளில் குறிப்பாக ஆரம்பப் பாடசாலைகளில் களைக் கற்கத் துண்டும் முறை எமது மாணவர்களின் க அமைகிறது.
ன்ெ நிலைக்கு ஆழத்தளமானது முன்னறிவு. ஆரம்ப ட உதவி தேவைப்படும் பிள்ளைகளை இனங்கண்டு மிக அரிதாகவே உள்ளது. அதனால் உடல், உள கற்போர் போன்ற அனைத்துப் பிரிவினருக்கும் உரிய பின்னடையும் மாணவர்கள் வகுப்பேற்றப்படும் போது றித் தவிக்கின்றனர். தாம் கல்வி கற்கும் ஆற்றல் மேலாக அவ்வாறு அவதியுறும் பிள்ளைகளுக்குக் களாக மட்டும் பல ஆசிரியர்கள் செயற்படுவதனை
Uது இவர்களுக்கு ஒன்றும் தெரியாது இவர்கள் ரின் கடமையல்ல. ஒரு மாணவரோ அல்லது ஒரு ந்திற்குரிய அறிவினைக் கிரகிக்கும் ஆற்றலின்றிக் தவ வேண்டும். குறிப்பாக முன்னறிவு சரியாகப் தீர்வினை மேற்கொள்ள வேண்டியது ஆசிரியரின்
வாக இருப்பதற்குக் கண்பார்வை குறைவு காரணமாக இருக்கவும் கூடும். அதனை இனங்கண்டு ஆவன கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர் பெரும் பங்காற்றியதாக
பணியைச் சிறப்புறச் செய்வதற்கு உதவக் கூடியது. லப் பழு எனக் கருதுவது தவறாகும். ஆசிரியர்கள் பணியாகக் கருதுவதை விடுத்து மாணவர்களை ள்ளும் பணியாகக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தர்ப்பம் கிடைத்துள்ளதாகக் கருதிச் செயற்பட நிலாக மட்டும் கருதலாகாது.
பில் குறைவாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது. > முடியாத சந்தர்ப்பத்திலும் வகுப்பேற்றம் நிகழ்கிறது. பாடத்தைக் கற்பதற்குரிய ஆயத்த நிலை இல்லாத அனைத்து மாணவர்களும் குறிப்பிட்ட பாடத்தினைக் ன்ற கருதுகோளுடன் கற்பிப்பதில் அர்த்தமில்லை. து முன்னறிவு என்பனவற்றைக் கருத்திற் கொண்டு
ÖLD.
2OO

Page 225
ஒரு கல்லூரியில் 8ஆந் தரத்தில் பரப்பளவு கற்பி ஆசிரியர் கொடுத்த கணக்கினைச் செய்தனர். ஏை அம்மாணவர்கட்குப் பரப்பளவுக் கணக்கினைக் போலாகும்.
பெருக்கும் ஆற்றல் எனும் முன்னறிவு இல்லா செய்ய முடியும்? இவ்வாறே சொற்களைப் பிழைய பிள்ளைகளுக்குப் பெரும் எடுப்பில் இலக்கியங்க பயன்? முன்னறிவு பெறச் செய்வது எமது கடை பாடவேளை நேரத்தில் கூறிவிடுவதுதான் எமது ஒப்பானதாகும்.
உரிய முதிர்ச்சி, முன்னறிவு என்பது இல்லாத மேலும் பாதிக்கும். கற்றலில் ஆர்வத்தைத் து பொருத்தமான கட்புல சாதனங்கள் பன்படுத்துதல் முக்கியத்துவத்தை உணர வைத்தல் போன்ற ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட ஊக்குவிக்கலாம்
ஆயத்த நிலைக்கான முதிர்ச்சி, முன்னறிவு, கற் தனியார் கல்வி நிலையங்களுக்கும் அலைந்து நேர அவர்தம் பெற்றோருக்கும் ஆலோசனை கூறி வ ஏற்றுச் செயல்பட வேண்டும். எங்கோ ஓரிடத்தி வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் கூடிய முயற்சிெ அறிவினையும் பெறுவதற்கு ஆவன செய்ய வே6 கொண்டுள்ள முன்னறிவு, விருப்பு, மாணவர் என்பனவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு ஈடுபடுவார்களாயின் கல்வித் தரம் மேம்படும் என்
米米米米米米米米米米
米米冰米米米米冰米米米米米米米米米米米米米米米米状
冰冰冰米冰冰米米米冰冰冰冰冰冰米米米状
ത്ത
எல்லா நற்குணங் ஆதாரம். எல்லா நம்பிக்கை உறைவிடம் ஓம் என்னும் மொழி பிற தன்னம்பிக்கையின் மந் நின்று விதித்தவற்றைச் இம்மந்திரத்திற்கு உண்
N

க்கப்பட்டது. மதிப்பீட்டின் போது இரு மாணவர்களே னயோருக்கு சாதாரண வாய்ப்பாடே தெரியாதிருந்தது. கற்பிக்க முனைவது புறக்குடத்தில் நீர் ஊற்றுவது
ந பிள்ளை எவ்வாறு நெடும் பிரித்தல் கணக்கினைச் பின்றி ஓரளவிற்காவது எழுதும் ஆற்றல் இல்லாத ளையோ இலக்கணத்தையோ கற்பிப்பதால் என்ன மயல்ல. குறிப்பிட்ட வகுப்புப் பாடத்தை மட்டும் கடமை என நினைப்பது ‘கூலிக்கு மாரடித்தலுக்கு’
பாது கற்றலில் வெறுப்பு ஏற்படும். இது கற்றலை ாண்டக்கூடிய வகையில் தெளிவாகக் கற்பித்தல், அன்பாக மாணவர்களை வழிநடாத்துதல், கற்றலின் செயற்பாடுகள் மூலம் ஆசிரியர் மாணவர்களை
.
றலில் ஆர்வம் என்பன இல்லாது பாடசாலைக்கும் த்தையும் பணத்தையும் வீணடிக்கும் மாணவர்களுக்கும் ழிகாட்டும் பொறுப்பினை ஆசிரியர்கள் அனைவரும் ல் தவறு ஏற்பட்டால் அதைத் தொடர்ந்து வரும் யடுத்து, முன்பு மாணவன் பெற்றிருக்க வேண்டிய ண்டும். மாணவர்களின் வயது முதிர்ச்சி அவர்கள் களிடையே காணப்படும் தனியாள் வேறுபாடு ஆசிரியர்கள் ஏற்ற முறையில் கற்பித்தலில் பதில் ஐயமில்லை.
米米水米米米米米米米米冰
:米米冰米米米米米米米米米米米米米冰冰冰米水米米米米米
:冰米冰米米米冰米冰米米米冰米米米米米米米
5ளுக்கும் நம்பிக்கையே நற்செய்கைகளுக்கும் , நம்பிக்கையிலிருந்தே ]க்கின்றது. ஓம் என்பது நிரம். ‘செய்வோம்’ என செய்விக்கும் ஆற்றல் (6.
HY
O1

Page 226
கூர்மதியே எங்கள் அறிவுக் கூர்மதியே இதழ்கள் இரண்டாய் பிறந்துவிட் கனவு போலிருக்கின்றது உன்வர நீ பிறந்தபோது ஆயுள் குறைவென்று கணக்கு வைத்தார்கள்; அறிவிடம் தேடி நீயோ பயணித்துத் திரிகின்றாய் அமைச்சு நிலையில் இலங்கையில் பிறந்த முதல்ப் பிர நினைக்கும் போது பிரமித்துப் பே அட்ட திக்குகளும் உன்னடியின்க் தமிழ்மகன் உன்னை அழகாக்கினான் தரணியில் நீயோ பவனிவர இயல் - இசை கூட்டி நீயோ கைவீசி நடக்க வேண்டும்; கல்வி-வாசல் தோறும் நீ வரும்( மணமாலை சூட்டி உன்னை வரே விடியலுக்காய் பூபாளம் பாடி வரு பெருமிதமாய் நிமிர்ந்து நிற்போம் கல்விப் புலத்தில் வாழும் வரை நெஞ்சம் வாழ்த்தி வணங்கி நிற்கு
。米米米米米米米米状
米米米米米米米米米米米米米米米米米米米米水
米米米米米米※米米米米米米米米状
மனநீர்மை மூன்ற ஆதலினாலே உண்டு யென்பன தம்முள்ளே ஒ உண்மை. உண்மையே செம்மையே அழகு.
செம்மையே உண்மை.
 
 
 
 
 
 
 
 

வர்மதியே எங்கள் கூர்மதியே!.
திரு. க. யோகானந்தன் அதிபர், தி%சாம்பல்தீவு தமிழ் ம. வி
L-TULT?
சவம் நீதானே! னோம்
ழ்
போது வேற்போம்;
ம்போது
|lip !
:米米米米米米冰米米米
米米米米米米米米米米米米米米米米米米米米米米米
米米米来米米米米米米米米米米米米米
ாயினும் மனம் ஒன்றே. மை, அழகு, செம்மை ப்புடையவாயின. அழகே அழகு. அழகே செம்மை, உண்மையே செம்மை,
202

Page 227
ஈழத்
தென் இந்தியாவில் ஏழாம் எட்டாம் நூற்ற தேவாரங்களில் அவை துதிக்கப்படும் திருத்த6 முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் { வரும் இத்தேவாரத் திருப்பதிகங்கள் இறை உணர் ஊட்டுவதில் முதன்மை பெற்றே அமைகின்றன.
தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்த நா சுந்தரர் ஆகியோர் பாடிய திருப்பதிகங்களி திருப்பதிகங்களாக 797 திருப்பதிகங்களே காணப்படு தக்கமுறையில் பேணப்படாமையினாலும் அழியத்
அந்த வகையில் ஈழத்தின் பண்டைய திருக்கேதீஸ்வரத்தின் மீதும் திருக்கோணேஸ்வ தேவாரத் திருப்பதிகங்களாக அமைகின்றன.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படு யாத்திரையை முடித்துக் கொண்டு இறுதியில் பெருமானை தரிசித்த பின்னர் ஈழத்தின் மீது எ திருக்கோணேஸ்வரத் தலத்தையும் தனது ஞானக் பதிகங்கள் பாடியதாக சேக்கிழாரது பெரிய புராண
“அந்நகரில் அமர்ந்தங் ஆழிபுடை சூழ்ந் மன்னுதிருக் கோணம6 மழவிடையார் த சென்னிமதி புனைமாட திருக்கேதீச்சரத்
என்ற பாடல் அதுவாகும். இதேபோன்று எட்ட தனது தென்நாட்டுத் திருத்தல யாத்திரையை மு மாதோட்டத்தில் எழுந்தருளி இருக்கின்ற திரு
மன்னுமிராமேச்சரத்து
பன்னுதமிழ்த் தொடை
சென்னியர்மா தோட்ட
சொன்மலர்மா லைகள்
என்ற பெரியபுராணப் பாடல் மூலம் அறிய முடி
16-CM 4658

து தேவாரத் திருப்பதிகங்கள் காட்டும் இயற்கை அழகும் இறை மகத்துவமும்
நடேசபிள்ளை ஞானவேல் B.A, Dip in Teach, Dip in Edu பூசிரியர் கொ/விபுலானந்த தமிழ் மகாவித்தியாலயம்
ண்டுகளில் வாழ்ந்த சைவ நாயன்மார்கள் பாடிய oங்களின் சிறப்பும், அவற்றின் இயற்கைச் சிறப்பும் இன்றும் சைவத் தமிழ் மக்கள் மத்தியில் போற்றப்பட்டு வையும் இலக்கிய ரசனையையும் அவர்கள் மத்தியில்
யன்மார்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
ல் இன்று நமக்கு கிடைக்கக்கூடிய தேவாரத்
கின்றன. ஏனையவை கால வெள்ளோட்டத்தினாலும் தொடங்கின.
சிறப்புக்கள் பொருந்திய திருத்தலங்களாகிய ரத்தின் மீதும் பாடப்பட்ட தேவாரங்களே ஈழத்துத்
ம் திருஞானசம்பந்தர் தனது தென்னாட்டுத் திருத்தல இராமேஸ்வரம் வந்தபோது, அங்கு இராமேஸ்வரப் ழுந்தருளி உள்ள திருக்கேதீஸ்வரத் தலத்தையும், கண்களால் தரிசித்து அவ்வாலயங்கள் மீது தேவாரப் னக் கூற்றின் மூலம் அறியமுடிகின்றது. அதாவது
கண் இனிது மேவி தொலிக்கும் ஈழந்தன்னில் லை மகிந்து செங்கண் மைப்போற்றி வணங்கிப் பாடிச் மாதோட்டத்தில் தண்ணல் செய்ய பாத.
ாம் நூற்றாண்டில் சம்பந்தரின் பின் வாழ்ந்த சுந்தரரும் டித்து இராமேஸ்வரத்தை வழிபட்டபின் அங்கிருந்து 5கேதீஸ்வரத்தின் மீதும் பாடல்கள் பாடியதாக
மாமணியை முன்வணங்கிப் சாத்திப் பயில்கின்றார் பாம்பணிந்த த்துத் திருக்கேதீச்சரஞ் சார்ந்த
சாத்தித் தூரத்தே தொழுதெழுந்தார்
கின்றது.
203

Page 228
எனவே சம்பந்தர் கேதீஸ்வரத்தின் மீதும், கே. சுந்தரர் கேதீஸ்வரத்தின் மீது பாடிய ஒரு பதிகமு ஈழத்துத் தேவாரத் திருமுறைகளாக அமைகின்ற
திருநாவுக்கரசரது திருவிழிமிழலைப் பதிகத்தி திருநாட்டுத் தொகையில் வரும் தேவாரம் ஒன்றிலும் அதே போன்று சுந்தரரது ஊர்த்தொகைப் பதிக கோணேஸ்வரத்தின் சிறப்பும் குறிப்பிடப்பட்டுள்ள கருதப்படவில்லை.
எனவே ஈழத்துத் தேவாரப் பதிகங்களாகிய முi அவற்றின் வாயிலாக எங்ஙனம் இயற்கைச் சிறப்பும் இ நோக்கலாம்.
மாதோட்டம் - துறைமுகப் பட்டினம்
திருக்கேதீஸ்வர ஆலயம் அமைந்துள்ள மாந்தை அழைக்கப்பட்டது. இது ஓர் துறைமுகப்பட்டின துறைமுகப் பட்டினங்களில் இதுவும் ஒன்றாகக் க போன்ற சிங்கள இலக்கியங்கள் வாயிலாகவும், "E பாடுயர் நன்னர்’ என்ற அகநாநூற்று செய்யுள் சூழ்மாந்தை” என்ற முத்தொள்ளாயிர அடிகள் 6 நாயன்மார்கள் பாடிய தேவாரங்களிலும் மாதோட்ட
சுந்தரரது மூன்றாவது தேவாரத்தில் வரும் “.
அடியின் மூலமும், ஆறாவது தேவாரத்தில் வரும் வரும் “வானத்துறு மலியுங்கடல்” என்ற அடிகை கப்பல்கள் மிகுதியாக நங்கூரம் இட்டு இருப்பதுப் துறைமுகமும் வானம் நெருங்கி வந்து அமையும் பெற்று இருந்ததை அறிய முடிகின்றது.
இதனைப் போன்று திருஞானசம்பந்தரது பதிக “இருங்கடல் கரையில்” என்ற அடியும் நான்காவ ஐந்தாவது தேவாரத்தில் வரும் “மலிகடன் மாே துறைமுகத்தின் பெருமைகள் புலனாகுவதை அவ
அடுத்து இருவரதும் பதிகங்கள் வாயிலாக மாதே பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதை நோக்க முடிகி “பொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்தி பத்தாவது தேவாரத்தில் “கறையார் கடல் சூழ்ந்த புலனாகின்றது. அதன் பிரகாரம், மாதோட்டத் து உப்பும் விழைகின்ற உப்பளங்களும் மலிந்து காண இங்கு பல்நாட்டு வாணிபம் மேற்கொள்ளப்பட்டது
இதனை நிறுவும் முகமாகவே சென்ற நூற்றாண்டி மேற்கொள்ளப்பட்டபோது மணிகள், உலோகத்து: என்பன கிடைத்துள்ளன. இவை உரோம், பார சார்ந்தவையாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ணேஸ்வரத்தின் மீதும் பாடிய இரு பதிகங்களும், ம், இவற்றில் காணப்படும் முப்பது தேவாரங்களே T.
ல் உள்ள ஏழாவது தேவாரத்திலும், சுந்தரரது திருக்கேதீஸ்வரத்தின் சிறப்புக்கள் கூறப்பட்டுள்ளன. த்தில் இடம்பெறும் நான்காவது தேவாரத்தில் து. ஆயினும் அவை ஈழத்துப் பதிகங்களாகக்
பது தேவாரங்களை அடிப்படையாகக் கொண்டே இறை சிறப்பும் அமைகின்றன என்பதை கீழ்வருமாமறு
, முன்னர் மாதோட்டம், மாதித்த என்ற பெயர்களால் மாகும். ஈழத்தின் ஆரம்ப காலங்களில் புகழ்பூத்த ாணப்பட்டதை மகாவம்சம், சூளவம்சம், தீபவம்சம் ன்னகர் மாந்தை ஒன்னார் பணிதிறை கொணர்ந்த
அடிவாயிலாகவும் “புன்னாலை புனற்றெங்கு வாயிலாகவும் அறியமுடிகின்றது. அந்த வகையில் -த்துறை முகத்தின் சிறப்புக்கள் கூறப்பட்டுள்ளன.
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்டம்” என்ற ‘‘வையம் மலிகின்ற கடல்”, ஏழாவது பாடலில் ள அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது, ), இந்த உலகத்தவரால் சிறப்பாகப் போற்றப்படும் கடல் என்றவாறான சிறப்புக்களை மாதோட்டம்
த்தில் இடம்பெறும் இரண்டாவது தேவாரத்தில் து தேவாரத்தில் வரும் “மறிகடன் மாதோட்டம்’ தாட்டம்” என்ற அடிகள் வாயிலாக மாதோட்டத் தானிக்க முடிகின்றது.
ாட்டத் துறைமுகத்தில் மலிந்திருந்த செல்வங்கள் ன்றது. சம்பந்தரது எட்டாவது தேவாரத்தில் பமாதோட்டம்” என்ற அடியின் மூலமும், சுந்தரரது கழி மாதோட்ட நன்னகர்’ என்ற அடிகள் மூலமும் 1றைமுகத்தில் பொன்னும், மாணிக்கமும், முத்தும், ப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் என்பது புலப்படுத்துகின்றது.
ல் மாந்தையில் தொல்பொருள் அகழ்வாராய்வுகள் ன்டங்கள், பீங்கான் ஓடுகள், பலவிதமான சாடிகள் சீகம், சீனா, அரேபியா பேர்ன்ற பிரதேசங்களைச்

Page 229
கோணமா மலைத் துறைமுகம்
உலகின் தலைசிறந்த இயற்கைத் துறைமுகம் ஏழாம் நூற்றாண்டிலும் சிறப்பெய்தி இருந்ததை திஞ அறிய முடிகின்றது.
“..கரைகெழு சந்துங் அளப்பருங் கனம குறைகடல் ஒதம் நித்தி:
`.................... கொடிதெனக்க கொள்ளமு னித்தி குடிதனை நெருங்கிப் ெ
í, 6
v a கொழித்துமுன் செம்பொனு மிப்பி கொழித்துவன் திரைகள்
6 &
0 e o O p 0 துன்றுமொண் ெ
தாழ்ந்துறு திரைப குன்றுமொண் கானல் வ
என்ற 1, 2, 4, 10 ஆகிய தேவார அடிகளை அடி பிரகாரம் மிகவும் கொடிதாக அலைகள் எழுந்து செம்பொன், முத்துச் சிற்பிகள் என்பவற்றை அவ்வ: கூறப்பட்டுள்ளது. மேலும் கரைகளிலே வாசனை நெருக்கமான குடியிருப்புக்களும் காணப்பட்டதாக தேவாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
மாந்தையின் இயற்கை வனப்பு
திருக்கேதீஸ்வர ஆலயம் இன்று போன்று ஏழா வனப்புகளோடு கூடிய தலமாக அமைந்ததை மூலம் நோக்க முடிகின்றது.
சம்பந்தரது திருக்கேதீஸ்வரப் பதிகம் காட்டும் !
c
é 6
) es e o 9 es கடிகமழ் பொழிலனி மாதோட்டம். a s v வாழையம் பொழின் மந்திகள் கள o 9 8 as w 4 si e s.வண்டு பண்செயுமாமலர்ப் பொழ
v u e o O s மாவும் பூகமும் கதலியு நெருங்கு
é, 6
Ć ć,
é 6
என்ற 1, 6, 7, 9 ஆகிய் மேற்படி தேவார அ நன்நகரிலே மிக்க வாசனை பொருந்திய மலர் காணப்பட்டனவென்றும், அவற்றோடு வாழைமரச் ே அவற்றுள் குரங்குகள் தாவி மகிழ்ந்து கூத்தாடு இயற்கை வனப்பு மிகுந்த சோலைகளில் தேன் 6 கூறத்தக்க பாடல்களைப் போன்று ரீங்காரம் செய்கின்
2

களில் ஒன்றாகிய திருகோணமலைத் துறைமுகம் னசம்பந்தரது கோணமாமலைப் பதிகத்தின் வாயிலாக
காரகிற் பிளவும் ணி வரன்றிக் >ங் கொழிக்கும்.
தறுங் குரைகடல் சூழ்ந்து லஞ சுமநது பருக்கமாய்த் தோன்றும். s
னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் யுஞ் சுமந்து
கரையிடைச் சேர்க்கும்.
99
பளவல் மெளவலுஞ் சூழ்ந்து ல மோதிக்
ாசம்வந் துலவும். 99.
உப்படையாகக் கொண்டு நோக்குகின்றபோது, அதன் வந்து வீசுகின்றதாகவும் அவ்வாறு வீசுகின்றபோது லைகள் கரையிலே கொண்டு வந்து குவிப்பதாகவும் பொருந்திய சந்தன மரங்களும், அகில் மரங்களும் ஞானசம்பந்தர் ஞானக்கண் கொண்டு பாடிய மேற்படி
ம், எட்டாம் நூற்றாண்டுகளிலும் சிறந்த இயற்கை சம்பந்தரதும், சுந்தரரதும் கேதீஸ்வரப் பதிகங்கள்
இயற்கை வனப்பை நோக்குகையில்
ப்புற மருவிய மாதோட்டம். lன்மஞ்ஞை நடமிடு மாதோட்டம். 92 மாதோட்ட நன்நகர். 99
22
களை கூர்ந்து அவதானிக்கும்போது மாதோட்ட 5ள் நிரம்பப் பெற்ற பூஞ்சோலைகள் மிகுதியாக Tலைகளும் மிகுதியாகக் காணப்படுகின்றனவென்றும், பதாகவும் கூறப்படுகின்றது. மேலும் அத்தகைய டுக்க வந்த வண்டுகள் இனிமையாக பண் எனக் றன. அந்த ரீங்கார ஒலியைக் கேட்டு சோலைகளில்
5

Page 230
உள்ள பெரிய மலர்கள் எல்லாம் மலருகின்றன. மயில்கள் எல்லாம் தமது நீண்ட தோகைகளை வி பூமரங்கள் மாத்திரமன்றி கமுக மரமும், பழமரங்கள குறிப்பிடுகின்றார்.
அடுத்து சுந்தரரது திருக்கேதீஸ்வரப் பதிகம் கா
சம்பந்தரைப் போலவே சோலைகளில் வண்டுகள் படுத்திக் கூறுகின்றார். அதாவது,
“... வரிய சிறை வண்டியாழ் ெ
as மட்டுண்டுவண் டாடும்பொ
8 சிறையார் பொழில் வண்
என்றவாறான 4, 8, 10 ஆகிய தேவார அடிகள்
அந்த வகையில் மாதோட்டத்தில் அமைந்துள் இருந்து மீட்டப்படுகின்ற இனிமையான இசையைப் அத்தோடு சோலைகளில் மிகுதியாகக் காணப்படு தளர்ந்து ஆடுவதாகவும் சுந்தரர் கூறுகின்றார். இ சிறந்து காணப்பட்டது என்பதை மறைமுகமாகப் புலi வனப்பு
திருக்கேதீஸ்வரப் பதிகத்தில் காணப்பட்டதைப் வனப்பு காணப்படுவதை நன்கு நோக்க முடிகி கோணேஸ்வரம், காவும், பொழிலும் சூழ்ந்த பகுத மட்டுமன்றி நிழல்தரு மரச்சோலைகளும், பூம்பொ
"........ விரிந்துயர் மெள6
வேங்கைவண் செருந்தி குருத்தொடு முல்லை ெ கோணமாமலையமர்ந்
என்ற சம்பந்தரது ஏழாவது தேவார அடிக6ை வேங்கை, வண்செருந்தி, செண்பகம் ஆகிய மரங்கள் அவற்றோடு முல்லைக் கொடி படர்வதாகவும் குறிப் இடம்பெறும் விலங்குகள் பற்றிய இயற்கை வர்ண வரையும் கோணேஸ்வர ஆலயச் சூழலில் மா அவதானிக்கத்தக்கதே.
தீர்த்தச் சிறப்பு
கேதீஸ்வரத்தின் புனித தீர்த்தமாகக் காணப்படும் போன்று சமமாகப் போற்றப்பட்டு வந்ததை வரலா அநுராதபுரக் கல்வெட்டு ஒன்றிலே “ஜெதவனராமத் பசுக்களை வதைசெய்யும் பாவத்திற்கு ஒப்பாவார் கதிர்காமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன் பதிகங்களில் கேதீஸ்வரப் பெருமான் எழுந்தருளி விபரிக்கப்பட்டுள்ளன என்பதை நோக்குகையில் ஏழ இத்தீர்த்தம் பற்றிப் பத்தாவது தேவாரத்தில் ம லாவியின் கரையில். ’ என்பது அதுவாகும்.

அவ்வாறு மலர்கள் மலர்வதைக் கண்டு அழகிய ரித்து ஆடுகின்றன. அத்தோடு அச்சோலைகளில் ான மாவும், கதலியும் செழித்துக் காணப்படுவதாகக்
ட்டும் இயற்கை வனப்பை நோக்கும் போது இவரும் ரீங்காரம் செய்கின்ற இசை மரபையே முதன்மைப்
சய்யும் மாதோட்ட நன்னகர். ழில் மாதோட்ட நன்னகர். டி யாழ் செயுங் கேதீச்சரத்தானை.
s
மூலம் நோக்க முடிகின்றது.
ாள சோலைகளுக்கு வருகின்ற வண்டுகள் யாழில் போல இவை ரீங்காரம் செய்வதாகக் குறிப்பிடுகின்றார். ம் தேன்களை உண்டமையால் அவை தமது நிலை இதன் மூலம் மாந்தையில் எந்தளவு தூரம் நீர்வளம் படுத்துகின்றார். திருக்கோணேஸ்வரத்தின் இயற்கை
போன்று கோணேஸ்வரப் பதிகத்திலும் இயற்கை ன்றது. அந்த வகையில் சம்பந்தரது பதிகத்தில் தியாக விளங்கியது. அங்கு கனிமரச் சோலைகள் ழில்களும் காணப்பட்டன.
வல் மாதவி புன்னை செண்பகத்தின் காடிவிடும் பொழில்சூழ் தாரே.’
ள நோக்குகின்றபோது மெளவல், மாதவி, புன்னை, பெரிதாகப் பரந்து கிளைவிட்டு காணப்படுவதாகவும் பிடுகின்றார். ஆயினும் ஏனோ கேதீஸ்வரப் பதிகத்தில் ணை இங்கு குறிப்பிடப்படவில்லை ஆயினும் இன்று ன்களும், மயில்களும், மந்திகளும் காணப்படுவது
பாலாவித் தீர்த்தத்தின் சிறப்பு ஆலயச் சிறப்பினைப் ற்றுக் காலந்தொட்டு அறியமுடிகின்றது. அதாவது துக்கு தீங்கு செய்பவர்கள் மகாதொடியிலே (பாலாவி) கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இதே போன்றே, றும் கூறுகின்றது. அந்தவகையில் நமது கேதீஸ்வரய் உள்ள பாலாவித் தீர்த்தத்தின் சிறப்புக்கள் எங்ஙனம் pாம் நூற்றாண்டில் பாடப்பட்ட சம்பந்தரது பதிகத்தில் ாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. ". LD6örgOUT
2O6

Page 231
மாறாக எட்டாம் நூற்றாண்டில் எழுந்த சுந்தர என்ற புனிதத் தீர்த்தப் பெயர் இடம்பெற்று இருப்
“.பத்தாகிய தொண்டர்தொழு 6 செத்தார் எலும் பணிவான்திருக் கேதீச்
என்ற முதலாவது தேவார அடிமூலம் இறை6 அன்டர்கள் ஒன்றுகூடி மன ஒருமைப்பாடோடு குறிப்பிடுகின்றார்.
மேலும் பாலாவியின் கரையிலேதான் கேதீஸ் சுந்தரர் குறிப்பிடுகின்றார். அதாவது
`............... படவேரிடை மடவாளொடு பாலா
திடமா உறைகின்றான்திருக் கேதீச்சரத்
என்ற இரண்டாவது தேவாரஅடி இதனைப் 니
இன்று நாம் கேதீஸ்வரத்தில் பாலாவி என் காணமுடிகின்றது. ஆனால் எட்டாம் நூற்றாண் இது அமைந்ததாக சுந்தரர் தனது நான்காவது தே கரைமேல். ” எனக் குறிப்பிட்டுள்ளதை நோ
கங்கை, யமுனை முதலான நதிகள் எங்கனம் L அவ்வாறே பாலாவித் தீர்த்தமும் அன்று பாவ சுந்தரரது மேல்வரும் ஒன்பதாவது தேவார அடி
`................. பாவம் வினை அறுப்பார் பயில் தேவன் எனை ஆள்வான் திருக்கேதீச்
சம்பந்தரது கேதீஸ்வரப் பதிகம் போன்று ே தீர்த்தமாகக் கருதப்படும் பாமநாச தீர்த்த “.கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த. “சுனை” என அவள் கூறுவது இப்புனித தீர்த்தம அன்று மலையில் இருந்து பாய்ந்த பாமநா8 கோணேஸ்வரத்தில் காணப்படுவது அவதானிக்
இறை சிறப்பு
அடுத்து இறைசிறப்பை நோக்குகையில் ( கூறப்பட்டுள்ளன என அவதானிக்கும் போது ச
"......... கேழல் வெண்ம
கேதீச்சரம் பிரிய
".......... தேவி தன்னொ திருந்தவெம் டெ
என்றவாறு கூறி இருப்பதன் மூலம் இங்கு அழகிய மார்பிலே பன்றியின் பற்களை மாலையா

து பதிகத்தில் ஒன்பது தேவாரங்களில் “பாலாவியின்’ தை நோக்க முடிகின்றது. அந்த வகையில் சுந்தரரது
வியின் கரைமேல் ரத்தானே’
ன் மீது பக்தி கொண்டு அவன் பிணி தொடரும் மெய தாழும் தீர்த்தக் கரையாக பாலாவி அமைவதாகக்
வரப் பெருமான் நிலையாக உறைகின்றார் எனவும்
பியின் கரைமேல் தானே’
Uப்படுத்துகின்றது.
) அலைகள் அமைதியாக வீசும் சிறுகுளத்தையே டில் பாரிய அலைகள் வீசி எழும் புனித தீர்த்தமாக வாரத்தில் “..பாரியதிரை எறியவருபாலாவியின் க்க முடிகின்றது.
பாவம் தீர்க்கும் புனித நதிகளாகக் காணப்பட்டனவோ வினை அறுக்கும் பாலாவியாகக் காணப்பட்டதை மூலம் நன்கு அவதானிக்க முடிகின்றது.
பாலாவியின் கரைமேல் சரத்தானே’
காணேஸ்வரப் பதிகத்திலும் கோணேஸ்வர புனித
1னை பற்றிக் குறிப்பிடப்படவிடல்லை. ஆயினும்
என்ற ஐந்தாவது தேவார அடியை நோக்குகையில்
க இருக்குமோ எனக் கருத முடிகின்றது. ஆயினும் சுனையே இன்று ஒடுங்கி பாமநாசக் கிணறாக முடிகின்றது.
தலில் கேதீஸ்வரப் பெருமான் பற்றி எங்ங்னம் பந்தர் தனது கேதீஸ்வரப் பதிகத்திலே
ப் பணிந்தநீண் மார்பர்
O2
5ர
ந் திருந்து கேதீச்சரத் LDIT(360'
ழந்தருளி உள்ள கேதீஸ்வரப் பெருமான் தனது அணிந்துளார் என்றும் “தன்னிலமை மன்னுயிர்கள்
7

Page 232
சாரத்தரும் சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்’ எ இணைந்தே திருவருள் புரியும் பண்பு வாய்ந்தவர
அடுத்து சுந்தரரது கேதீஸ்வரப்பதிகத்தில் காணட் நோக்குகையில் இவ் இறைவன் தனது சிவந்த க நாடுவோரை அன்பால் அடக்கி அருள் மழை ெ
மேலும் இறந்த அடியவர்கள் முத்திப் பேறு ெ பொருந்தியவர் எனக் குறிப்பிடுகின்றார்.
"........ செங்கண்ணர வ:
se, so o O. • o o சிட்டன் நமை ஆ6
s பத்தாகிய தொன
செத்தார் எலும் ப
66
G
என்ற தேவார அடிகள் இதற்கு சிறந்த எடுத்து
கோணேஸ்வரய் பதிகத்தில் காணப்படுகின்ற (8. எவ்வாறு கூறுகின்றார் என்பதை எடுத்து நோக்கு
"........ குனித்தோர் வில்
கோணமாமலைu
"........ கொடத்தவர் விரு கோணமாமலை
என்ற மேற்படி தேவார அடிகளின் மூலம் இங் வளைந்த வில்லை உடையவர் என்றும் இறை உள்ளத்திலே நினைத்து தொழும் அளவு பெரும் !
அம்பிகையின் சிறப்பு
இரு தலங்களிலும் எழுந்தருளி உள்ள அ கேதீஸ்வரத்தில் எழுந்தருளி உள்ள கெளரி அ காணமுடியவில்லை ஆயினும் மாறாக சுந்தரரது சிறப்புக்கள் கூறப்பட்டு இருப்பதை நோக்க முடிச்
சுந்தரர் அம்பிகையின் இடையின் அழகினை வ வேரினைப் போன்றது இவரது இடை என இரு ே
ንን ፌ ፌ
மடவாளொடு. os e s so or பையேரிடைமடவா
இதே போன்று இனிமையான பானங்களை அருந் இனிமையான மொழிகளைப் பேசுபவர் இவ் நுதலாளொடு.” என்ற அடிகளின் மூலம் இவர் எனக் குறிப்பிடுகின்றார்.
அடுத்துக் கோணேஸ்வரத்தில் எழுந்தருளி உ சம்பந்தர் கெளரி அம்பாளது சிறப்பினைக் கூறாத குறிப்பிடாமை நமது தவக்குறையே.
2

னத் திருவருட்பயன் கூறுவது போன்று தேவியோடு ாகவும் இவர் சிறப்பிக்கப்படுகின்றார்.
படும் கேதீஸ்வரப் பெருமானின் இறை சிறப்புக்களை ண்களால் அருள்புரிவார் என்றும் ஞான ஒளியோடு ாழிபவராகவும் காணப்படுகின்றார்.
பற்று வந்து இவரைப் பணிந்து போற்றும் சிறப்பும்
சைத்தான் திருக்கேதீச் சரத்தானே’ ர்வான் திருக்கேதீச்சரத்தானே’ ன்டர்தொழு பாலாவியின் கரைமேல் ணிவான்திருக் கேதீச்சரத்தானே’
துக் காட்டாகும்.
5ாணேஸ்வரப் பெருமானின் சிறப்புக்களை சம்பந்தள் ம் போது
லார் குரைகடல் சூழ்ந்த பமர்ந்தாரே”
நம்பும் பெரும்புகழாளர் பமர்ந்தாரே”
கு எழுந்தருளி உள்ள கோணேஸ்வரப் பெருமான் வனால் நற்பேறு பெற்றவர்கள் என்றென்றும் தம் புகழை உடையவர் இவர் எனவும் குறிப்பிடுகின்றார்.
ம்பிகையின் சிறப்பினை எடுத்து நோக்கும்போது அம்பாளது சிறப்புக்களை சம்பந்தரது பதிகத்தில் கேதீஸ்வரப் பதிகத்தில் மிகுதியாகத் தேவியின் கின்றது.
ர்ணிக்கும்போது படர்ந்து செல்கின்ற மென்மையான தவார அடிகளில்க் குறிப்பிடுகின்றார். “படவேரிடை ளொடு. 'என்ற தேவார அடிகள் அவையாகும்.
தும்போது எவ்வாறு இனிமை பயக்குமோ அவ்வாறே
இறைவி என்கிறார். அத்தோடு "...பட்டவரி வில்லைப் போன்ற அழகிய நெற்றியை உடையவர்
iள மாதுமை அம்பாளது சிறப்பை நோக்கும் போது து போலவே மாதுமை அம்பாளது சிறப்புக்களையும்
08

Page 233
வழிபடும் அடியவரது பயன்கள்
இவ் இரு திருத்தலங்களையும் வழிபடுவோர் போது, திருஞான சம்பந்தரது கேதீஸ்வரய் பதிகத் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஏனைய பதிகங்களில்
6.
up கருத நின்றகே தி கடுவினை யடை
“...கேடிலாதகேதீச் கெடுமிடர் வினை
அண்ணனண்ணு அருவினை அடை
o w முடிகள் சாய்ந்தடி மொய்த்தெழும் வி
"....... அல்ல லாசறுத் தர
மன்பராம்டியாரே
`.............. தொண்டர் நாடெ கேதீச்சர மதுதாே
என்ற அடிகளை அடிப்படையாகக் கொண்டு தொழுகின்ற அடியவர்களைப் பீடித்து இருக்கின்ற கொடிய வினைப் பிறவிகள் அவரை ஒருபோதும் பெருமானை வழிபடுபவரே அவரது துன்பங்கள் நீங்கி பெறுவார்கள் என்றும், நாள்தோறும் அடியவர்கள் ( பெறும் பலன் பெறுவார்கள் என்றும் சம்பந்தர் உறுதி
எனவே முடிவாக ஈழத்துச் சைவத்தமிழ் மக்கள ஆலயங்களின் சிறப்புப் பற்றிக் கூறுவதுமான எ! கூடியவகையில் இதுவரை எழவில்லை, ஆயினும் நூல்களில் ஒன்றாக இவ் ஈழத்து தேவாரத் திரு கூறப்பட்ட இயற்கைச் சிறப்புக்கள் மாத்திரமன்றி மரபுகள், அணிமரபுகள் என்பன பற்றியும் விரிவாக நோ மையமாகக் கொண்டு மேலும் பல விரிவான ஆ மறைந்து கிடக்கும் தமது ஈழத்துச் சைவத் தமிழ் L மேலும் வெளிக்கொணர முடியும்.
米米米米米特
米米米米米米米米米米米米米米米冰
米米水米米米水米米米

அடையும் நற்பலன்கள் பற்றி அடுத்து நோக்கும் நில் மாத்திரமே வழிபடுவோர் அடையும் பயன்கள் அவை பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
ஈசரங் கைதொழக் [T(86)u’’
ரந் தொழுதெழக் 5IT0860া’
கேதீச்சர மடைபவர்க்கு யாவே’
பேணவல்லார் தம்மேல் னைபோமே”
னடி யிணைதொழு
ாறுந் துதிசெய அருள்செய் Ol'
நோக்குகின்றபோது கேதீஸ்வரப் பெருமானைத் ) கொடிய வினைகள் விரைவில் நீங்கும் என்றும், அடையாவென்றும், இரவு பகலாக கேதீஸ்வரய் சிறந்த அடியவர்களாகக் கணிக்கப்பெறும் பாக்கியம் வழிபட்டால் அவனது அருட்கடாட்சம் கிடைக்கப் யாகக் கூறி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
து வரலாறு பற்றிக் கூறுவதும், அவர்தம் பண்டைய த ஒரு நூலும் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளக் ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருசில ப்பதிகங்கள் அமைகின்றன. ஆதலால் முன்னே அவற்றின் கண்காணப்படும் இசைம்ரபுகள், யாப்பு க்கலாம். ஆதலால் இவ் ஈழத்துத் திருமுறைகளை பவுகள் நடாத்தப்பட வேண்டும். அப்போதுதான் ாரம்பரியங்களின் உண்மைத் தரிசனங்களை மேலும்
米米米米米
;米米水冰米冰米米米冰米米米米米
;米米米米米米米米米

Page 234
LITலகப் பருவம் தாய்ப்பாலினால் வளர்கிறது. மாணவப் பருவம் கல்விப் பாலினால் உயர்கிறது.
தாயின் பாச பணிவிடைகளால் பரவசமடைந்து பள்ளி சென்ற காலம் புல்வெளிகளின் பனித்துளியீரமாய் ஒவ்வொரு மனங்களிலும்.
கல்வியே.
நேற்றுக்களில் பள்ளி மாணாக்கராய் இன்றுகளில் கலாசாலை மாணவர்களாய் நாளைகளில் பல்துறைத் தலைவர்களாய் உலகைக் காண வைக்கிறது.
அன்று
கண் முன்னே கற்கள் மோதி தோன்றியது தீ இன்று கல்வியறிவினாலேயேதானே கண்கள் காணாமலே தோன்றுகிற தீ - பல முறைகளில்.
米米米米
冰米米冰冰米米米米米米米米米米米冰米米
sk k-k-k-k-k-k-k-k-k-k-k

கரையில்லாக் கடல்
முனையூரான் (எம்.எம்.ஏ. ஸ்மட் - கல்வி அமைச்சு)
விஞ்ஞான சமுத்திரத்தில் இணையம் என்றும் மின் அஞ்சல் என்றும் கண்டுபிடித்து உள்ளங்கை மவுஸ்' க்குள் உலகை காட்சி தரவைத்த வித்தக அறிஞர்களை உண்டாக்கி வைத்ததும் கல்வியே!
வாழ்க்கைப் பரீட்சையில் கரைகண்டு
சந்தோஷ வானில் சிறகடித்துப் பறப்பவர்களெல்லாம் கல்வியைக் காதலித்து வெற்றி கண்டவர்கள்தான்.
வாழ்நாள் முழுவதுமே நீந்திய போதிலும் கூட கரையைக் காண முடியா மகா கரையில்லாக் கடல் - அது கல்விக் கடல் ஒன்றே!
米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米
<米米米米米米米米米米米米米米米米水水
210

Page 235
RFழத்திலே புகழ் வளர்த் இலங்கிடும் காை ஞாலத்திலே உயிர் நிை
நலமுறு உழவர் காலத்திலே விழும் மை கவினுறச் செய்யுப் சீலத்திலே உயர் விபுல சுவாமிகள் வந்து
பேரினிலே மயில் வாகன பெற்றோர்கள் அ6 வேரினிலே பழுப் புற்றதே விவேகத்தில் உய ஊரினிலே சிறந் தோங்கி ஒளிர்தமிழ்ச் சங்க போரினிலே எதிர் நின்ற பண்டித ராகி மிள
சங்கத்திலே அவர் பண் தன்மனம் மிகவும் வங்கத்திலே புகழ் வாt மாமுனி அவர்கள் அங்கத்திலே காவி அ அகிலத்தின் சுக தங்கத்திலே ஒளிர் விட
தரமிகு பெயரை
வாதத்திலே பெரும் வ வடமொழிக் கை போதத்திலே சிறப் புற்ற
பண்புறக் கல்வி வேதத்திலே உளம் தே விருப்புடன் எம நாதத்திலே உயர் “யா
நலமுறத் தந்து

கினில் தோன்றிய முத்தமிழ் வித்தகர்
கவிஞர். "தமிழருவி” செ.சிவானந்ததேவன் B.A., Dip-in-Ed.
திடும் கிழக்கினில் ர நகரில் - இந்த லபெற உழுதிடும் Dரபில் - கார் ழயென முத்தமிழ் ) வகையில் - வளர் ானந்த ரென்னுமெம்
பிறந்தார்.
ர் என்றுதம் 0ழத்து மகிழ - அடி நார் பலாவென பர்ந்து விளங்கி - எழில் ய மதுரையில் b மதனில் - கல்விப் வர் வென்றுநற்
ரிர்ந்தார்.
டித ரானபின்
அடக்கி - மிளிர்
பந்த சிவானந்த
அருளால் - வளர் 0ணிந்தவர் அன்பினால் வ்கள் துறந்து - புடத் லானந்த ரென்னுமோர் அடைந்தார்.
ல்லவர்; ஆங்கிலம் லகள் பயின்று - இறை தோர் ஞானியாய் பயிற்றி - இந்து ர்ந்திட்ட உண்மையை கும் உணர்த்தி - இசை p'என்னும் நூலினை சிறந்தார்.
211

Page 236
இசையினிலே அரும் சா இறையருள் பெற்ற திசையினிலே பலர் ஏற்றி திறன்மிகு விஞ்ஞா மிசையினிலே ஒளிர் விஞ் மிளிர்ந்துநல் நூல் நசையினிலே கவி கட்டு: நமக்கெலாம் தந்து
உண்மையிலே அருள் ஞ உத்தம சீல அடிக திண்மையிலே மதி நுண்ணி தெளிவுடன் சேவை தன்மையிலே உயர் சிவா தாங்கிய கல்வி நி: நன்மையிலே பெரும் நன்
நம்மனக் கோயில்
-k-k-k-k-k-k-k:
,米米米米米米米米米米米米米米米米米水米米:
米米米米米米米米米米米米米米米
புத்தகசாலையிலுள் புத்தகங்களை வாசித்து சுமந்த கழுதைபோல { அலைகிற கற்றறி மூடரு கிட் டிய நான்கு ஐந் நன்றாகப்படித்து அவற்றி மறுமைப்பயனையடைக உளர். கற்று வல்ல மூடர் சிறந்தவரென்பது வெளி
ܡܠ
21

னை புரிந்தவர் பயனால் - எண்
புகழ்ந்திட ாம் பயின்று - பார் ஞான மானியாய் ள் இயற்றி - வளர் ர யாத்தவர் மகிழ்ந்தார்.
ானத்தைப் பெற்றநம் ள் - உடற் மயிலே மிகத்
புரிந்து - மனத் ந்ைதா நாமத்தைத் D6DUILD — bbgb 0மயைச் செய்தவர் உறைந்தார்.
米米米米米冰米
k米米水米水米米米米米冰米米米米冰冰冰米
ܓ=
ள நூற்றுக்கணக்கான
முடித்துங் குங்குமஞ் ஒரு பயனும் பெறாது முளர். தமது கைக்குக்
து புத் தகங்களை ன் வழி நின்று இம்மை கிற புத்திமான்களும் னுங் கல்லா அறிஞரே U60).

Page 237
அபிவிருத்திப் பொருளியல் என்பது அபிவிரு பொருளாதாரங்களை முன்னேற்ற முடியும் என்பது பொருளாதார வளர்ச்சி என்ற எண்ணக்கருவுக்கு சம சேவைகளை உற்பத்தி செய்து பொருளாதார ெ மக்கள் அதன் நன்மையை அனுபவிக்காதிரு பங்கிடப்படாதிருக்கலாம். இதனால் ஏழ்மை நிலை குறையாதிருக்கலாம். எனவே அபிவிருத்தி எ6 எவ்வாறாயினும் பொருளாதார வளர்ச்சியானது அ சாத்தியப்படுத்துவதாகவும் அமைகின்றது.
அபிவிருத்தியின் அளவீடுகள்
நாடுகளை, பல்வேறு வழிகளில் வகைப்படுத்த மூன்றாக வகைப்படுத்தியுள்ளது. அவையாவன வருகின்ற நாடுகள், மாறுநிலைப்பொருளாதார ந நாடுகளும் இவ்வகைப்படுத்தலைப் பயன்படுத்து வகைப்படுத்தியுள்ளன. உயர் வருமானம் பெறும் குறைந்த வருமானம்பெறும் நாடுகள் என்பனவாகும். மானிட அபிவிருத்தியுடைய நாடுகள், மத்திய மான அபிவிருத்தியுடைய நாடுகள் எனவும் உலக ந அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலி வேறுபடுத்தியிருக்கின்றது. மேற்கூறப்பட்ட வகைப் அடிப்படையாகக் கொண்டவையாகும். எவ்வா அடிப்படையிலான வகைப்படுத்தலானது மனித அபி கொண்டதாகும். மனித அபிவிருத்திக் குறிகாட் தேவைகளைப் பூர்த்தியாக்கும்பொழுது அபிவிருத்தி கல்வி, எல்லோருக்கும் சுகாதாரம், வேலைவா போதியளவு ஓய்வு நேரம் போன்றனவாகும்.
மனித அபிவிருத்திச் சுட்டெண்
பொருளாதார நலன்பற்றிய விரிவான அளவீட் இது 1990 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளினால் குறிகாட்டிகளினடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும்.
2

அபிவிருத்திப் பொருளியல் DEVELOPMENT ECONOMICS
திரு. மாணிக்கம் லோகசிங்கம் B.B.A(Hons) Dip in. Ed, Dip.in. Pub. ADM, புனித அந்தோனிய7ர் ஆண்கள் ம.வி கொழும்பு - 13
த்தியடைந்து வருகின்ற நாடுகள் எவ்வாறு தமது |டன் சம்பந்தப்பட்டதாகும். அபிவிருத்தி என்பது மான கருத்தல்ல. ஒரு நாடு அதிகளவு பொருட்கள் பளர்ச்சியை அடையலாம். ஆனால் பெருமளவு க்கலாம். ஏனெனில் வருமானங்கள் சமமாகப் குறையாதிருக்கலாம். தொழிலின்மைப் பிரச்சினைகள் பதையும் தொட்டுச் செல்ல முடியாதிருக்கலாம். பிவிருத்திக்கு முக்கியமானதொன்றாகவும் அதனை
முடியும். சர்வதேச நாணய நிதியம் நாடுகளை
கைத்தொழில் நாடுகள், அபிவிருத்தி அடைந்து ாடுகள் என்பனவாகும். உலகவங்கியும், ஐக்கிய வதுடன் நாடுகளை மேலதிகமாகப் பின்வருமாறும் ) நாடுகள், நடுத்தர வருமானம் பெறும் நாடுகள்,
ஐக்கிய நாடுகளானது மேலும் நாடுகளை உயர்ந்த ரிட அபிவிருத்தியுடைய நாடுகள், குறைந்த மானிட ாடுகளை வகைப்படுத்தியுள்ளது. இது மேலும் ருந்து குறைந்த விருத்தியுடைய நாடுகளை படுத்தல்களில் பல, தலைக்குரிய வருமானங்களை )ாயினும் ஐக்கிய நாடுகளின் மனித அபிவிருத்தி 6sk bå55 gil GL.60öl6O600) ((H.D.I.) -912iI 16OLu JTébåb டியின்படி நாடுகள் குறிப்பிட்ட சில அடிப்படைத் படைகின்றது. இத்தேவைகளாவன எல்லோருக்கும் ப்ப்பு, போதியளவு உணவு வழங்கப்படுதல், வீடு,
டை நாடிநிற்பதாக இக்குறிகாட்டி அமைகின்றது. அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சுட்டெண் மூன்று கொள்வனவுச்சக்தி அடிப்படையிலான நாணயமாற்று
3

Page 238
விகிதப்படி அளவீடு செய்யப்பட்ட மொத்த உள்ந செல்வோரின் சராசரி வயதும், ஆயுள் எதிர்பார்ப்புக் ஒரு நாட்டில் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய 6 தமது ஆற்றலையும் நேரத்தையும் பொருட்கள் தங்கியுள்ளது.
1997 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுக மனிதவறுமைச் சுட்டெண்ணே (H.P.I.) இதுவாகும் வீதமான மக்கள் குறித்தளவு குறைந்த பட்ச அடிப்படையாகக் கொண்டு இச்சுட்டெண் அபை வயதுக்குட்பட்டோரின் இறப்புக்கள், வயதுவந்ே போசாக்கின்மை, பாதுகாப்பான குடிநீர் ெ கவனத்திலெடுக்கின்றது. -
எவ்வாறாயினும் அபிவிருத்தி அளவீடுகளில் கு காணப்படுகின்றன. உதாரணமாக அபிவிருத்தி கைத்தொழில் மய நாடுகளும் (சிங்கப்பூர், தாய்வ அதேபோல் ஏழைநாடுகளான பங்களதேஷ், எரி: கைத்தொழில் நாடுகளுக்கும், அபிவிருத்தியடை தரத்தில் பெருமளவு வேறுபாடுகள் காணப்ப வடஅரைக்கோளத்திலும், பெருமளவு அபிவிரு கோளத்திலும் காணப்படுகின்றன. இந்த இடைவெ
குறைவிருத்தி நாடுகளின் சில பொதுவான
1. பிறப்பு வீதம் உயர்வாகவுள்ளது. ஒப்பீட்டல் எதிர்பார்ப்புக் காலம் குறைவாகவும், தங்கி
2. விவசாயத்தில் அதிக கவனம் செலுத்துத விவசாயத்துறையில் ஈடுபடுகின்றது. எனி காரணங்கள் மூலதனப் பயன்பாடு குறைவா
3. மோசமான இயற்கை வளப்பேறு, பெரும6 வலயத்தில் உள்ளன. கால நிலையும் வில்
4. கீழுழைப்பு நிலை குறித்த அளவு நிலத்தில் உழைப்பின் எல்லை விளைவு திறன் பூச்சி
5. மனித முதலை விருத்தி செய்வதில் குை தொழில்நுட்பத் திறன் குறைவாக இருப்பு உள்ளது.
6. சமூக சமய கலாசார அமைப்பு. மக்கே
அபிவிருத்திக்குத் தடை ஏற்படுகின்றது.
7. கைத்தொழில், சமூக உட்கட்டுமானங்கள் ( தொடர்பாடல், வலு, நீர் வழங்கல், கல்வி இதற்கான கட்டுமானங்கள் குறைவாகும்.

ாட்டு உற்பத்தி, வளர்ந்தோர் கல்வியும் பாடசாலை ாலமுமாகும். இக்கருத்து மனித அபிவிருத்தியானது பளங்களில் தங்கியுள்ளது என்பதையும், அவர்கள் சேவைகளின் உற்பத்தியில் பயன்படுத்துவதிலும்
ள் புதிய அளவீடொன்றை வெளியிட்டுள்ளது. ). நாட்டின் மொத்த சனத்தொகையில் குறிப்பிட்ட தரத்தையேனும் அடையவில்லை என்பதை ]கின்றது. சுகாதார வசதி இல்லாத மக்கள், 40 தாரிடையே கல்வியறிவின்மை, சிறுவர்களிடையே பறுவோர் வீதம் என்பவற்றை இச் சுட்டெண்
றிப்பிட்ட வகைப்படுத்தலுக்குள்ளேயே வேறுபாடுகள் யடைந்து வருகின்ற நாடுகளுக்குள்ளேயே புதிய ான், ஹொங்கொங், தென்கொரியா) அடங்குகின்றன. ந்திரியா, மாலி என்பனவையும் உள்ளடங்குகின்றது. ந்து வருகின்ற நாடுகளுக்குமிடையே வாழ்க்கைத் டுகின்றது. பெருமளவு கைத்தொழில்நாடுகள் }த்தியடைந்து வருகின்ற நாடுகள் தென்னரைக் |ளியே வடக்கும் தெற்கும் பிரிவாகப் பேசப்படுகின்றது.
ா பண்புகள்
ாவில் இறப்பு வீதமும் உயர்வாகவுள்ளது. ஆயுள் பிருப்போர் வீதம் உயர்வாகவும் உள்ளது.
5ல். 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியப்படை னும் உற்பத்தித்திறன் குறைவு. இதற்கும் பிரதான
க இருப்பதும் மறைமுக வேலையின்மையுமாகும்.
ாவு குறைவிருத்தி நாடுகள் வெப்ப, இடைவெய்ய வசாய நடவடிக்கைகளுக்குப் பாதகமாவே உள்ளன.
) குடும்ப ரீதியான வேலைகள் இடம் பெறுகின்றது. யமாகவுள்ளது.
றந்த மட்ட முதலீடு. தொழிலாளர்களின் கல்வி, தால் அவர்களின் பெளதிக உற்பத்தி குறைவாக
ர் இம் முறைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால்
குறைவாகவுள்ளது. துரிதமான அபிவிருத்தி என்பது , பயிற்சி போன்றவற்றில் தங்கியுள்ளது. ஆனால்
4.

Page 239
அபிவிருத்திக்கான நிபந்தனைகள்
நிலைத்திருக்கும் பொருளாதார வளர்ச்சியின் { வேண்டுமானால் உற்பத்திக் காரணிகளின் அளவும்
1. மனிதவளங்கள் கல்வி, பயிற்சி, ஆரோக்கிய
ԱքLջ պն).
2. மூலவளம்: மூலதன ஆழமாக்கல் நடவடிக் மூலமும் தலைக்குரிய உற்பத்தியை அதிக
3. இயற்கை வளம் வளமான நிலம், சிறப்ப எரிபொருள் நன்மைகள் இயற்கையாக இரு இவற்றைக் கொண்டிருக்கவில்லை. உதா
4. புதியன கண்டு பிடிப்பு: புதிய உற்பத்தி முை சிறந்த தொடர்பாடல், நவீன முகாமைத்துவம்
குறைவிருத்திப் பொறி
குறைவிருத்தியில் அபிவிருத்தி ஏற்பட்டுக் கொ6 நாடுகள் அபிவிருத்திக்கு அத்தியாவசியமான நிட வறுமையின் நச்சு வட்டத்துக்குள் அகப்பட்டுள் அவசியமாகும். சேமிப்புக்கள் இருந்தாலே முதலீடு வருமான அதிகரிப்பு அவசியமாகும். வருமான அத அவசியமாகும். இதற்கு முதலீடு அவசியமாகும். மாற்று வழியாக அரசாங்கம் வரிகளை அதிகமாக்க ஒடுங்கியதாக இருப்பதால் இது கடினமாகும். அர அதிகரிக்கலாம். ஆனால் இந்நடவடிக்கை பணவீக் சீர்குலைக்கும்.
அபிவிருத்திக்கான தந்திரோபாயங்கள்
குறைவிருத்தி நாடுகளின் அபிவிருத்திக்கு பய பெறுகின்றது. அவற்றுள் கருத்திற் கொள்ளக் கூ
1. முதல் நிலை உற்பத்திகளை அதிகரித்
உயர்த்துதல்.
2. இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி உள்
கைத்தொழில்களை வளர்த்தல்.
3. ஏற்றுமதிகளை ஊக்குவித்தல். இதற்க
அதிகரித்தல்.
4. உல்லாசப் பயணக் கைத்தொழில்களை ே
துறையாகும்.
5. வெளிநாட்டுக் கடன்களைப பெற்று முதலி
2

முலம் தலைக்குரிய வருமானத்தை அதிகரிக்க , தரமும் அதிகரிக்கப்பட வேண்டும்.
ம் போன்றவற்றால் மனிதவளம் அபிவிருத்தியடைய
கைகளின் மூலமும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ரிக்கமுடியும்.
ான காலநிலை, சிறப்பான கனிய வள நிரம்பல், த்தல் நன்று. எனினும் சில கைத்தொழில் நாடுகள் ரணம்: இஸ்ரேல்.
றகள், முன்னேற்றகரமான தொழில் நுட்ப முறைகள், கண்டு பிடிக்கப்படுவது அபிவிருத்திக்கு ஏதுவாகும்.
ர்வதே இந் நிலைமையாகும். சில குறைவிருத்தி பந்தனைகளைக் கொண்டிருக்காமையால் அவை ளன. உற்பத்தித் திறனை அதிகரிக்க முதலீடு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்க வேண்டுமானால் நிகரிப்பு வேண்டுமாயின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு இருநிலைமையே ஒரு பொறியாகும். இதற்கு முடியும். பல குறைவிருத்தி நாடுகளில் வரித்தளம் சாங்கம் பணநிரம்பலை அதிகரித்து முதலீடுகளை க ஆபத்துக்களை ஏற்படுத்திப் பொருளாதாரத்தைச்
பனுறுதி மிக்க வழிகள் பற்றிய விவாதம் இடம் டியவை வருமாறு:
நல். குறிப்பாக அவற்றின் உற்பத்தித் திறனை
ளுர் உற்பத்திகளை அதிகரித்து உள்நாட்டுக்
ாக ஏற்றுமதி மேம்பாட்டுக் கைத்தொழில்களை
மம்படுத்துதல். இது விரைவாக வளர்ச்சியடையும்
டுகளை அதிகரித்தல்.
15

Page 240
6. வெளிநாட்டு உதவிகளில் தங்கியிருத்தல் முதலீடுகள், கல்வி, பயிற்சி போன்றவற்றை
உசாவியவை:
1. STANLAKES INTRODUCTORY ECO
S.J. GRANT. .
2. ECONOMICS IN CONTEXT
SUSAN GRANT AND CHRIS VIDLER
3. AN INTRODUCTION TO POSSITIVE)
RICHAD G. LIPSEY, KALEC CHRYS
4. ECONOMICS FOR BUSINESS
STEVE ADAMS, PAUL PERITION 5. பொருளியல் 2 - நடைமுறைகள்
S.H.M. bou66l).
冰米米米米>
ckck k>k:k:K>k cKck k
பரமார்த்திக ஞானம் அடக் கியாளும் அற் இவ்வாற்றலைப் பெற :ே நிறைந்த உள் ளத் தி நிகழ்ச்சிகளை உற்று முறையறிந்து பரிே பொருள்களிடையேயுள தொடர்புகளையறிந்து வ6 கொள்ளுதல் வேண்டும்.
21

இவற்றினைப் பெற்று உட்கட்டமைப்புக்கள், முன்னேற்றுதல்.
NOMICS
ECONOMICS AL
<米米米米米
冰冰冰冰冰米米米冰米米冰冰冰冰冰
米米米米米米米米米冰
—
இயற்கைச் சக்திகளை றலையளிக்கிறது. வண்டுமாயின் ஊக்கம் னோடு, இயற்கை நோக்கியவதானித்து சாதனை செய்து, | ள காரணகாரியத்
கைப்படுத்தியமைத்துக்
HY

Page 241
இலக்கியம் என்பது சகல துறைகளையும் உ இயம் என்பது ஒலி அதாவது குறிப்பிட்ட நோக்
இந்த வகையில் இலக்கியம் சாராத எதுவுே நான்கு’ என தமிழ் இலக்கியத்தில் பேசப்பட்டுள் இலக்கியம் சார்ந்த ஏடுகளாகவே உள்ளன.
மனிதன் ஆரம்ப நாட்களில், தான் பட்டறிவால் ஏட்டிலும் எழுதி வைத்தான். அவை இலக்கியமாக புலவர்கள், அதில் ஒரு சில சித்தர்களுக்கும் பங் நான்காவது சங்கமும் இருந்தது. இன்று சர்வதேச ஆராயப்படுகின்றன.
தமிழ் இலக்கியங்களில் உள்ள பாடல்கள் மூலம் அவர்களுடைய பாடல்கள் சக்தி வாய்ந்தனவாக புலவர்களின் கல்வியறிவுக்கு மதிப்புக் கொடுத்தன புலவர்களிற் சிலர் அட்டாவதானம், சதாவதானம் வாழ்ந்தனர்.
இன்றைய புத்தாயிரம் (மிலேனியம்) ஆண்டில் இனம் என்ற எண்ணம் நம்மை விட்டுப் போனத தமிழன் சாதித்த சாதனைகள் என்றும் போற்றப்பட விளங்குவது தமிழ் இலக்கியங்களாகும்.
வெள்ளைக்காரன் இலை, குழை கட்டி காடுகளி காற்சட்டை உடுத்து வாழ்ந்தான் என்பதைக் கூட மொழிகின்றன என்றால் தமிழனின் பெருமைதான் எ தமிழன் பின்தள்ளப்பட மூலகாரணம். ஆகவே ! வேண்டும்.
இத்தகைய தமிழ் இலக்கியங்கள் பற்றி எவ்வ முக்கிய சிறப்புக்களை மட்டும் சுருக்கமாக எடுத்து அங்கமாக விளங்குகின்றன.
சித்தர்கள் என்றால் சித்திபெற்றவர்கள் அட்டமாசித்திகளும் கைவரப் பெற்றவர்கள் ஒரே கவனம் செலுத்துபவர்கள். அவையாவன :-

தமிழ் இலக்கியமும் சித்தர்களும்
சிருவர்டி - மகேந்திரன் என்.ஆர் 37 ஒளவையார் வீதி ക്രിb്കേffങ്ങി/ഥങ്ങബൈ),
ள்ளடக்கிய ஒன்றாகும். இலக்கு என்பது நோக்கு, கை சொல்வதாகும்.
ம இல்லை எனலாம், “ஆயகலைகள் அறுபத்தி ளது. இவை அனைத்தும் எண், எழுத்து வடிவில்
கண்டவற்றை, களிமண் தட்டுக்களிலும் பின் ஒலை 5 மிளிர்ந்தன. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் குண்டு. முச்சங்கம் இருந்ததாகவே பலர் அறிவர்; ரீரியாக மாநாடு கூட்டப்பட்டு தமிழ் இலக்கியங்கள்
) புலவர்கள் சாதித்த சாதனைகள் பல. அந்தளவிற்கு
இருந்தன. இதனால் அக்கால மன்னர்கள் கூட 1. இன்று இந்நிலை அரிதாகவே உள்ளன. இந்தப் போன்றவற்றை தன்னகத்தே கொண்டு அடக்கமாக
கூட ஆங்கிலம் என்றால் ஏதோ உயர்ந்த மொழி, ாக இல்லை. அப்படியிருக்கும் பொழுது தமிழால் வேண்டியவையாகும். இதற்கு சிறந்த உதாரணமாக
ல் வாழ்ந்த காலத்தில் தமிழன் மெய்ப்பை என்கின்ற நம்மிற் பலர் அறியார். இதை சங்க இலக்கியங்கள் ான ஆனால் ஒற்றுமை என்ற ஒன்று இல்லாமையே இலக்கியத்தின் மூலம் இதை வளர்த்துக் கொள்ள
வோ பேசலாம், எழுதலாம். ஆனால் அவற்றின் ப் பார்த்தால் சித்தர்கள் இலக்கியமும் இதில் ஒரு
அறிவுகொண்டு இயங்குபவர்கள். இவர்கள் காலத்தில் வேறு வேறாக எட்டுக் காரியங்களில்

Page 242
அணிமா :- அணுவைக் காட்டிலும் மிகவும்
மகிமா :- மலையினும் பெரிய உருப்பெற்று
லகிமா :- உடம்பைக் கனமாக இல்லாம சேற்றிலும் அழுத்தாமல் காற்றுப்
பிராத்தி :- நான் எதை விரும்பினாலும் எ6
வல்லமை.
பிராகாமியம் :- தன் நினைப்பின் வல்லமையால்
ஈசத்துவம் :- எல்லாரும் தன்னை வணங்கும்
வசித்துவம் - உலகம் முழுவதையும் தன்வசம்
கரிமா :- ஐம்புலன்கள் நுகரும் இன்ப அவைகளுடன் சம்பந்தப்படாம
சித்தர்களின் பாடல்கள் சிந்தனையைத் தூண் நோக்கும் கொண்டவை. ஆயுள்வேதம் சித்த மருத் தமிழையும், தமிழ் நாட்டையும் உலகம் என்றும் மற சுதேச வைத்தியம் என்பதெல்லாம் இந்த சித்த
சித்தர்களின் பாடல்களை ஆய்வு செய்து பல தமிழில் உள்ள பதினெண்மரும் எவ்வளவோ ப நல்லமுறையில் எப்பவோ பயன்படுத்தியிருந்தால் த
சித்தள் என்போர் யார்? கடவுளைக் காண சித்தத்தில் தெளிந்தவர் சித்தர். இவர்கள் தம் சித்திகள் பெற்று அமர நிலையடைந்தவர்கள். இ வருகின்றனர். எனினும் எமது தமிழிலக்கிய மரபுப் என்றும் இரு மரபுண்டு.
முதல் மரபுப்படி நந்திதேவரை முதற் குருவ பதினெண்மரும் அவரது சீடர்களும் நவநாதமர! ஒன்பதின்மர். இவர்கள் மூலமே சித்தர் மரபு தொடர்ந்து வருகிறது. மனிதருக்கு 4448 நோய் மருந்துகளையும் சொல்லியுள்ளனர்.
இவை தவிர வானியல்பு, சோதிடம், யோக மனிதர்களுக்கு சித்தர்களால் அளிக்கப்பட்ட அற
தமிழிலே எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடி அது சித்த வைத்தியக் கலையேயாகும். சித்த சித்த வைத்தியம் என்று பெயர்.
சித்தர்களுக்கு வானமார்க்கமாகச் செல்லும் ச ஞானமும் உண்டு. புராணம் படித்தவர்கள். ம திறமை படைத்தவர்கள் இன்று பட்டம் பதவி, வாழும் உலகில் சித்தர்கள் தங்கள் நலனைக் பணிகள் மிகமிக சிறந்தவை.

சிறிய உருவிலே உலவும் ஆற்றல்.
நிற்கும் ஆற்றல்
ல் இலேசாகச் செய்து கொள்ளுதலும், நீரிலும், போல விரைந்து செல்லும் வல்லமையைப் பெறுவது
)த நினைத்தாலும் நினைத்தவைகளை அடையும்
ஆற்றலால் எல்லாவற்றையும் படைக்கும் சக்தி படியான தெய்வத் தன்மையை ജ്ഞLഖക്ര.
படுத்தி நடத்தும் ஆற்றலை அடைந்திருப்பது
துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ல் இருப்பது.
டக் கூடியவை. பகுத்தறிவு வாதமும் விஞ்ஞான துவத்தில் இருந்துதான் தோன்றியது. இதிலிருந்து க்கலாகாது. தமிழ் வைத்தியம், நாட்டு வைத்தியம், வைத்தியத்தைத்தான்.
புதுப்புது கண்டு பிடிப்புக்களை உருவாக்க முடியும். டிப்புக்களை விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை மிழன் என்றோ உலகில் கொடி கட்டிய் பறந்திருப்பான்.
முயல்வோர் பக்தர். கடவுளைத் தம்முன் கண்டு முன் இருக்கும் சித்தத்தையுணர்ந்து அரும்பெரும் வர்கள் இன்றும் எம்மிடையே தெரியாமல் வாழ்ந்து படி பதினெண் சித்தர்கள் என்றும் நவநாத சித்தர்கள்
ாகக் கொண்டு திருமூலர், அகத்தியர் முதலான ல் அநாதிநாதர் முதல் வகுனிநாதர் ஈறாகவுள்ள உருவாகி இன்றுவரை இலங்கை இந்தியாவிலே கள் வரம் என பகிர்ந்து போயினர். அவற்றிற்குரிய
ம், தியானம், உளவியல், தர்க்கம் ஆகியவையும் வியலாகும்.
ய இலக்கியம் - கலை ஒன்று இருக்கிறதென்றால் களால் கண்டறிந்து கையாண்ட வைத்திய முறை
க்தியும் உண்டு. முக்காலங்களைப் பற்றியும் அறியும் ட்டமான உலோகங்களை உயர்ந்த பொன்னாக்கும் பேர், புகழ் ஆகியவற்றிற்காக அடிபடும் மனிதர்கள் கவனியாது மனிதகுலத்தின் உயர்வுக்காக செய்த
218

Page 243
பண்டைக் காலத்தில் இருந்த சித்தர்கள் பதி6ெ பட்டினத்தார், பத்ரகிரியார், திருவள்ளுவர், கடுவெளிச்சித்தர், அழுகுணிச் சித்தர், குதம்பைச் இராமதேவர், கொங்கணர், உரோமரிஷி, சுப்பிர சூரியானந்தர், இராமலிங்க வள்ளலார் ஆகியே தொகுப்பில் காணப்படுகின்றன.
ஈழத்திலும் ஒரு சித்தள் பரம்பரை இருந்து வந்து யோகர் சுவாமிகள், குழந்தைவேற் சுவாமிகள், சித் கருவுரார், மலையகத்தில் கிங்ஸ்பேரியில் நவநா லிங்கமாக வெளிப்படுகிற அதிசயம் இப்படி சித் சித்தர்கள் அனைவரும் உயிருக்கு முடிவேயில் வருவித்துக் கொண்டவர்கள். மரணமில்லாய் ெ
போகள் ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். த நூல்கள் கூறுகின்றன. இதே போன்றே ஏனைய சி ஒழுங்கான வாழ்க்கை முறைகளை எடுத்தியம்புப்
உலகில் முதன் முத்லாக கண் சத்திர சிச கண்ணப்பநாயனார். புலன்களைக் கடந்த நிை ஆஞ்சநேயர் போன்றோர்.
சித்தர் இலக்கியம் தமிழில் தனி இலக்கியம் எதையும் எடுத்தெறியும் தன்மையும், யோகத்தின் ( பாமர மக்களின் நிலையில் இருந்து கூறியவர்கள் உறைவிடத்தின் அவசியம் பேசப்படுகின்றது.
இராமதேவர் என்ற தமிழ் சித்தரே யாக்கோபு பாடல்களை பாடியுள்ளார். அவற்றில் வைத்திய
போகா குரு காலாக்கியநாதர் அவள் சிஷ்ய6 எழுதியவர் காலாக்கியநாதர் பெருந்தொகை, மணி மகிமையை அறியலாம் இவற்றைவிட “நெஞ்சறி 6 சித்தர் வழங்கியுள்ளார். அகத்தியர் "ரத்தினச் சுரு
பாரதியார் தாமும் ஒரு சித்தர்தான் என்பதை
“ எனக்கு முன்னே
பலர் இருந்தார் அ யானும் வந்தேன் சித்தன் இந்த நா மனத்தினில் நின் எழுதுகின்றாள் மனோன் மணியெ மாசக்தி வையத்(
அவருடைய பாடல்கள் பல வேத உபநிட அமைந்திருக்கின்றன. சித்தள்கள் மெய்ஞ்ஞான அறி பற்றியும் அறிவுறுத்தினார்கள். அதற்காகவே மரு மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
17– CM 4658

ண்மர் என்கிறார்கள் போகள், புலிப்பாணி, சிவவாக்கியர் ாம்பாட்டிச் சித்தர், இடைக்காடர், அகப்பேயர், த்தர், அகத்தியர், திருமூலர், நந்தீஸ்வரர், கருவுரர், ணியர், வான்மீகள், சட்டை முனி, காகவு சுண்டர், பாடல்கள் “சித்தர்கள் ஞானக் கோவை’ என்ற
ள்ளது. கடையிற் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள், நானைக்குட்டி சுவாமிகள், திருக்கோணேஸ்வரத்தில் சித்தள் சமாதியடைந்த இடம் இன்று புற்றெடுத்து ர் மேதைகளை என்ன என்பது.
லாத நிலையினை அடைந்து தாமே முடிவை நாடி ருவாழ்வு வாழ்ந்த சித்தர் பரம்பரை.
ருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் ந்தள்களும் வாழ்ந்திருப்பார்கள் இதற்கு மூலகாரணம்
இயற்கை வைத்தியமான சித்த முறையே.
ச்சை செய்த நிபுணர் என்ற பெருமைக்குரியவள் Uயில் இன்றும் வாழ்கின்றார்கள் மார்க்கண்டேயர்,
சூழ்நிலை சிந்தனைகள் எல்லையற்ற நோக்கும் பெருமையையும் எடுத்துக் கூறும் தொழிலகங்களின் ர் “தாவாரம் இல்லை தேவாரம் ஏதுக்கடி’ என்று
என்று இஸ்லாத்தை தழுவியுள்ளார். இவர் பல மும் உண்டு.
* புலிப்பாணர், “போகர் எழுநூறு” என்ற நூலை மேகலை போன்ற சங்க இலக்கியங்களில் சித்தள்கள் பிளக்கம்” என்ற சித்தர் இலக்கியமும் கணபதிதாசர்
க்கம்’ என்ற நூல் எழுதியுள்ளார்.
ருெபித்திருக்கிறார். இதோ அவர் பாடல்
சித்தர் ப்பா
(b. டில் தனை
ன்
தவி’
த மந்திரங்களின் உன்னதத் தமிழாக்கமாக வைப் புகட்டியதோடு கூடவே இவ்வுலக வாழ்வைப் துவம், ஜோதிடம், யோகம் அனைத்தைப் பற்றியும்

Page 244
சித்தர்கள் மனதை உறுதிப்படுத்தும் பல மந்திர நு கணித சாஸ்திரம், வானசாஸ்திரம் முதலியவற்றிலு
இவர்களின் மூளையின் ஆற்றலை பாடல்கள்
“மாங்காய்ப் பாலு மலை மேலிருப் ( தேங்காய்பால் ஏ தேங்காய்ப் பால்
குதம்பாய் என விழித்துப் பாடியதால் குதம்பாய்
உலக ஆசாபாசங்களைக் கடந்து இறைநிலை எதுவும் சேராது என்பதை பாடல் விளக்குகிறது.
மனத்தில் நல்ல எண்ணங்கள் குடிகொண் வெளிப்பகட்டுக்கு கடவுளுக்கு பூசை செய்வதி சிவவாக்கியர் பாடல் உணர்த்துகின்றது. புரட்சிக
“ கோயிலாவ தேத குளங்களாவதே கோயிலும் குளங் கும்பிடும் குலாம( கோயிலும் மனத்து குளங்களும் மன
எல்லாம் மாற்றத்தின் விளைவுகளேயன்றி விே கண்ணோட்டத்திற்கும் பொருந்தும். “நட்டகல்லு பே இவரே.
மனிதனின் அடிப்படைத் தேவை உணவு, உ6 கொடுத்து வந்தவர்கள் சித்தர்கள் அவர்களுடைய
சித்தள்கள் இன, மத, சாதி, நாடு, மொழி, நிறபேத பதினெண் சித்தர்களைப் பற்றித்தான் நாம் அறி சித்தர்கள் உண்டு. ரொயிஸ் என்ற சீனச் சித்தர் புத்தா என்ற புத்தமத சித்தர்கள், யூதமத சித்தர் பற்றி முழுமையான ஆய்வு செய்ய முடியும்.
தமிழ் இலக்கியத்தின் மூலம் முதலில் தமிழில் மேற்கொண்டு அறுபத்திமூவர் பெருமை பேசும் “ெ வெளியிட பல்கலைக் கழ்க மட்டத்தில் உள்ளவ
தமிழ் இலக்கிய மட்டத்தில் இவ்வளவு காலம பெரிதாக எதுவும் இல்லை. வருங்கால மனித கு சித்தர்களின் வாழ்க்கை முறை ஒரு படிப்பினையா
米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米

ல்களைத் தந்திருக்கிறார்கள் புவியியல், தாவரவியல், ம் பலநூல்களை நமக்குத் தந்திருக்கிறார்கள்.
மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
ண்டு
போர்க்கு துக்கடி குதம்பாய் ஏதுக்கடி’
சித்தர் என அழைக்கப்படுகின்றார்.
பில் மனதை வைத்து விட்டால் உலக துன்பங்கள்
டு இருந்தால் எல்லாம் நல்லாக நடக்கும். ல் எவ்வித பலனுமில்லை என்பதை பின்வரும் ரமான கருத்தை பார்க்கலாம்.
TT
5LT களும்
2rr 1
ரே! துள்ளே த்துள்ளே”
பறொன்றுமில்லை என்கிறார். இது விஞ்ஞானக் சுமோ. நாதன் உள்ளிருக்கையில்” என்று பாடியவரும்
டை, உறையுள் இம் மூன்றுக்கும் முக்கியத்துவம் பாடல்கள் மூலம் இந்த உண்மையை அறியலாம்.
5மற்றவர்கள் எல்லா இன மதத்திலும் உள்ளார்கள். வோம் இவர்களை விட சூபி என்ற இஸ்லாமிய Tகள், பிஸ்ரிக் என்ற கிறிஷ்தவ சித்தர்கள் மற்றும் ாகள், சீக்கியமத சித்தர்கள் இப்படி சித்தர்களைப்
ல் உள்ள சித்தர்கள் பற்றி முழுமையான ஆய்வை பெரிய புராணம்’ போன்ற “சித்த புராணம் “ ஒன்றை ர்கள் முன்வர வேண்டும்.
ாக சித்தர்கள் பற்றிய முழுமையான ஆய்வு நூல்கள் லம் சகல மட்டத்திலும் உயர் நிலை அடைவதற்கு fக அமையட்டும்.
米米米米米米米米水冰冰
米米米米米米米米米米冰水米米米米米米米米
水冰米冰米米米米米米水冰冰冰水
20

Page 245
உள்ளத்தின் பாங்குகளை உய்த் V உறுதிபெறு நெறியு5 கொள்கையிலும், தன்மையிலும், ! குவலயத்தில் நெறிபி தெள்ளிய நல் அறிவுதனைத் தேர் திகழும் வகை கற்பித் உள்ளவொரு தொழில் உன
உயர்வான தொழில்
மண் மீதோர் விதையூன்றி வளம்பே வனப்புறு நற்பயன் நல்கும் நுண்ணறிவுத் திறனாய்ந்து நோய்மு நுணுக்கமுற கண்டறிந்து ப திண்ணமுற அமையும் வகையில் சி
தெளிவுறுநல் மனவுறுதித் கண்ணனைய சேவையினால் கால
கண்ணிய நல்லாசிரியத் ெ
நயமான மனவெழுச்சி நாட்டங்கள் நடத்தைக் கோலம் பலவும் பயனான தத்துவங்கள் வாழ்வினிே பருவங்கள் பலவற்றுள்ளா அயர்வதனை நீக்கி நல்ல ஆர்வமு அழகுணர்சீர் கற்பனையா செயல் புரிந்து நல்லறிஞோர் சீராக சேவைபல செய்குவதே சீர
22

நல்லாசிரியத் தொழில்
திரு.எஸ்.சபாரெத்தினம் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம்
தறிந்து மாணவரை >டநற் சமுதாய உறுப்பினராய் குணத்தினிலும் சிறந்து அவர் றழாப் பண்புடையோராய் வாழ தளித்து நல்லோராய்த் து திறமைபெற ஆக்குதற்காய் ர்மை நேர்மை வழிபேணும் என்பர் ஆசிரியத் தொழிலாமே.
ணிப் பெற்றெடுத்த பயிர்போல மாணவரின் மதலாம் குறைகளையும் னத்தினிலே நூலறிவு ந்தைக்கு உணவூட்டி நிறன் நிலைக்கும் செயல்காட்டி த்தை மாற்று தொழில் 5ாழிலாகக் காண்குதுமே.
கவர்ச்சியுடன் மாணவர்பால் உய்த்துணர்ந்து ) பயிலும் வகை
பகுத்தறிந்து போதித்து )ச் செய்துயர்ந்த
ஆகும் வழிக்குட்படுத்தி மதிக்கும் வகை
சிரியத் தொழிலாம்

Page 246
நெறி பிறழ்ந்து நல்வாழ்வின் நீதி நிலை குலைந்து சீர்கெ அறிவினராகாது மாணவருக் கறி அகிலத்து நல்லோராய் சிறு மதியராகி வரும் சமுதாயச் தீநெறிகளைச் சிதைத்து பெறுமரிய பேராற்றல் பேணியவ பெருமையுடைத் தொழி
கண்ணிய நல்நடத்தையுயர் கனி கலை சார்ந்த தெளிவே பண்பார்ந்த ஒழுக்கநெறி பரிவுன பாங்கான நாவன்மை ப எண்ணத்து நல்லுறுதி இயல்பான
ஏற்றமிகு உளவியலின் தண்ணளி நற்குணமுடைய தக தரணியில் நல்லாசிரிய
米米米米米米米米:
米米米米冰米米米米米米米米米水冰冰冰米米;
米米米米米米米米米米米米米米米壮
அறிவைப் பெறி வாழ வந்த துன்ப எப்பொருளினும் மி விழைந்து தேடுதல்
(விழைந்து -
 
 
 
 
 

யினைத் தாம்மறந்து ட்டு நெஞ்சம் மிகமாறி வுபூட்டி அவர் ஆகுமாறு பயிற்றுவதும் சீரழிக்கும் து செய்தொழிலுக் காளாக்கி ர்க் கூட்டும்
லன்றோ ஆசிரியத் தொழில்
வுசெறி இனிய மொழி ாடே கட்டுரைசேர் வன்மையுடன் டமை நற்தோற்றம் யிலிதமாமுயர் நட்பு
நகைச்சுவைசால் உயர்ஞானம் பல எய்தி வாளர் செய்தொழிலே த் தொழிலாகச் சாற்றுவரே.
K米米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米冰冰冰米米米米
:米米米米米米米米米米米米米米米水水米米
ன்ெ அறியாமையும் அதன் மும் உடனகலவவாதலின் க்க அறிவுப் பொருளை
வேண்டும்.
ஆசைப்பட்டு)
222

Page 247
பல்லவர் காலம் என்பது தமிழ் இலக்கிய அமைகின்றது. இக்காலப்பகுதியில் பல்லவ மன்: இவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் சம6 சமண பெளத்தர்களுக்கு எதிராக சைவ எ மேற்கொள்ளப்படலாயிற்று. ஒவ்வோர் சமயமும் கருத்துக்களை எதிர்த்து பிரசாரத்தை மேற்கொன இச்சமயப் பிரசாரத்தின் விளைவாக பக்தி பிரதா6 சூழ்நிைைலயில் தோற்றம் பெற்ற இலக்கியங்க அமைந்தன.
சைவ வைஷ்ணவ மதத்தினைப் பரப்புவதற்கு நாயன்மார்களால் பாடப்பட்ட தேவார திருவாசகங் பக்தி இலக்கியங்களாக மிளிர்கின்றன. இவர்கள் பாடல்களாகப் பாடினார்கள். இங்கு இறை அனு பெறுவதைக் காணலாம்.
பல்லவ மன்னர்களான மகேந்திரவர்மன் கற்கோ கோவில்களையும் அமைத்தான். நரசிம்மவர்மன் வித்திய சிம்மபல்லேஸ்வரம், இராஜசிம்ம பல்6ே மன்னர்களே இந்து சமயத்தை ஆதரித்து உதவி
'அரசன் எவ்வழி குடிக
என்ற முதுமொழிக்கிணங்க மக்களும் மன்னர்க சார்ந்து பின்பற்றலாயினர். இதனால் பல்லவர் க
பல்லவர் கால பக்தி இலக்கியங்களில்
அவதானிக்கலாம். உலகியல் ரீதியாக வெவ்ே மனிதன் இறைவனிடத்து அன்பு வைக்கும் பே வெளியிடுகின்றான். சம்பந்தர் இறைவனைத் தந்ை அப்பர் இறைவனை ஆண்டானாகவும் தம்மை இறைவனைத் தோழனாகவும் மாணிக்கவாசக கொண்டார்கள். இவ்வகையில் இவர்களுை வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஞானக்குழந்தை சம்பந்தரது பதிகங்கள் இ நிரம்பியதாகவும் குதூகல உணர்வு கூடியதாகவு இறைவனைப் பற்றியும் மீதிப்பகுதி திருத்தலத்தின் இ

பல்லவர்கால பக்தி நெறி
திருமதி சுலோசன7 சகாதேவன் 2,éfifhol/, இரத்மலானை இந்துக் கல்லூரி
வரலாற்றில் தனித்துவம் மிக்க ஒரு காலமாக ரர்களின் ஆட்சி தமிழகத்தில் இடம் பெற்றிருந்தது. ன சமயமே உயர்நிலை பெற்றிருந்தது. இதனால் வைணவர்களின் சமயப் பிரசாரம் கூடுதலாக தத்தமது சமயக் கருத்துக்களைக் கூறி புறமதக் எடதை பல்லவர் காலத்தில் கவனிக்க முடிகின்றது. 1 இடத்தைப் பெறலாயிற்று. இத்தகைய சமுதாய ளூள் பெரும்பாலானவை பக்தி இலக்கியங்களாக
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் முதலிய பகளும் ஆழ்வார்களினால் பாடப்பட்ட பாசுரங்களும் தமது பக்தி அனுபவங்களை உணர்ச்சிச் செறிவோடு பவத்தோடு மெய் உணர்வைப் பாடும் மரபு தோற்றம்
வில்களையும் மலைக்கோவில்களையும் குடவரைக் ா மாமல்லபுரத்தை அமைத்தான். இராஜசிம்மன் Uஸ்வரம் ஆகியவற்றைக் கட்டினான். இவ்வாறு யதால்
ளும் அவ்வழி”
ளது போக்கினைத் தழுவி வைதீக சமயங்களைச் ாலத்தில் பக்தி கரைபுரண்டு ஓடியது.
பல்வேறு பக்தி பாவங்கள் காணப்படுவதனை வறு நிலைகளில் அன்பு வைத்துப் பழக்கப்பட்ட தும் வெவ்வேறு நிலைகளில் தனது அன்பினை தயாக பாவனை செய்து தம்பாடல்களைப் பாடினார்.
அடியவனாகவும் பாவனை செய்தார். சுந்தரர் ர் இறைவனை குருவாகவும் பாவனை செய்து டய பாடல்கள் அவரவர்க்குரிய பாவனைகளை
பற்கைச் சூழலை வர்ணிப்பதாகவும் கவிச்சுவை காணப்பட்டன. இவரது பாடலில் பெரும் பகுதி யற்கை வர்ணனையாகவும் அமைதலைக் காணலாம்.
23

Page 248
“ புலனைந்தும் பொறி அறிவழிந்திட்டு, ஐம்ே அலமந்த போதாக அ அருள் செய்வான் அப வலம் வந்த மடவார்க முழவதிர மழையென் சிலமந்தி, அலமந்து ப முகில் பார்க்கும் திரு
என்ற பாடலைக் காட்டலாம். இவ்வாறு காத6 அப்பரும் “சிறையார் பொழில் வஞ்சியார் செய் சோலை தெள்ளும் பெருந்துறையான்’ என்று ம6
தலைவன்-தலைவியருக்கிடையே உள்ள அ6 பொருட் துறைகள் யாவும் பல்லவர் காலத்தில் இ வெளிப்படுத்தக் கையாளப்பட்டுள்ளன. அத பர்ணமிக்கின்றது. தலைவன் - தலைவி உ சேர்ந்து இன்பம் அனுபவித்தல், தலைவனது அ6 காலத்து இலக்கியங்களில் சிறப்பாக குறிப்பிடத்த
அகத்துறைப் பாடலுக்கு தோற்றுவாய் செய்த கொண்ட தலைவி அவனோடு உள்ளம் ஒன்றியி
“முன்னம் அவனுடைய ர என ஆரம்பித்து “தலைப்பட்டாள் நங்கை தலை
என்ற பாடல் மூலம் வெளிப்படுத்தியிருப்பதனை
மெய்தீண்டு இன்பம் பொங்கித் ததும்புகின்றது. இ
“மைத்துனன் நம்பி ம
கைத்தலம் பற்றக் க
என்றும் சில வேளைகளில் வரம்பை மீறிய விரச
ஆண்டாளின்
“கற்பூரம் நாறுமோ க திருப்பவளச் செவ்வா மருப்பொசிந்த மாதவி
விருப்புற்றுக் கேட்கிே
என்ற பாடல் மூலம் அறியக்கிடக்கின்றது.
பெரியாழ்வார் இறைவனை குழந்தையாக நிை
“நோக்கி யசோதை
நாக்கு வழித்து நீரா வாக்கும் நயனமும் மூக்கும் இருந்தவா மொய் குழலீர் வந்து

கலங்கி, நெறிமயங்கி மலுந்தி, ஞசேல் என்று ரும் கோயில், Si bLLDTL,
றஞ்சி,
ரமேறி
வையாறே”
* மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்’ என பும் கேதீச்சரம்” எனச் சுந்தரரும் “தெங்கு திரள் Eவாசகரும் இயற்கையை வர்ணித்துள்ளார்கள்.
ாபை வெளிப்படுத்துவதற்கென வகுக்கப்பட்ட அகப் றைவன் பால் அடியார்கள் கொண்டுள்ள அன்பினை ாவது உலகியற்காதல் தெய்வீகக் காதலாகப் ணர்ச்சி ஆற்றாமை, வசமிழத்தல், தலைவனோடு ன்புக்கு ஏங்கி இரங்குதல் ஆகிய பண்புகள் பல்லவர் தக்க அம்சங்களாம்.
அப்பர் சுவாமிகள், இறைவனிடம் பெருங்காதல் ருக்கும் தன்மையினை
5|TLDLb (335i LT6ir' )வன் தாளே”
ாக் காணலாம். பதிகங்களை விட பாசுரங்களிலேயே இதனை ஆண்டாளின் பாடல்கள் மூலம் காணலாம்.
துசூதனன் வந்து என் னாக் கண்டேன் தோழி நான்” தாப உணர்வு மேலிட்டு நிற்கும் பாடலையும்
மலப்பூ நாறுமோ ய்தான் தித்தித்திருக்குமோ பன்தன் வாய்ச்சுவையும்
நாற்றமும் றன் சொல்லாழி
வெண்சங்கே’
னந்து தனது பாசுரங்களைப் பாடியுள்ளார்.
நுணுக்கிய மஞ்சளால் டும் இந்நம்பிக்கு )IFTuqLD (yypQDj6)I9Q)]LD 5ாணிரே
காணிரே”
224

Page 249
என்று பிறந்த குழந்தைக் கண்ணனின் பேரழகைக் அமைகின்றது.
பல்லவர் காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வா புராண இதிகாச கருத்துக்களையும் கதைகளை அருட்திறனும் பதிகங்களிலும், பாசுரங்களிலும் எ
“குனித்த புருவமும் கெ என்ற பதிகமும் தொண்டரடிப் பொடியாழ்வாரின்
* பச்சைமா மலைபோ
கமலச் செங்கண்’ என்ற பாசுரமும் திருக்கோலக் காட்சியினை எ
இக்காலத்தில் பதிக வடிவத்தை கையாண்ட போன்ற புதிய வடிவங்களும் இலக்கியங்களில் காணப்பட்டதை அவதானிக்கலாம். சம்பந்தரது சிறப்புக்கள் பற்றியும் எட்டாவது பாடல் இராவணி அடிமுடி தேடிய வரலாற்றையும் பத்தாவது பாடலி பாடல் தன்னைப் பற்றியும் பாடுவதாக அமைந்திரு
பல்லவர் காலம் சிற்றிலக்கியங்களின் தோற்றத் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. மற்றும் இக்கா6 மோனை கொண்ட உரைநடைப்பண்பிற்கு இறையனா “உலா” என்ற இலக்கியம் தோற்றம் பெற்றது. பெருமான் பாடிய “திருக்கைலாய ஞான உலா’ ஆ பெற்றது. ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழு அடுத்த பாடலின் முதலில் வரும்படி அமைத்
வண்ணத்தந்தாதி, திருவந்தாதி இதில் குறிப்பிடக்
தாழிசை, துளை, விருத்தம் போன்ற பாவி இப்பாவினங்கள் ஒவ்வொன்றும் பலதிறப்பட்ட ஒன புதியவை.
இக்காலத்தில் வடமொழிப் புலவர்களை பல்ல இக்காலத்தில் பெருமளவு செல்வாக்குப் பெற்றி எழுதப்படும் மணிப்பிரவாள நடையும் தோற்றம் டெ இலக்கியங்களான புராணம், கயசிந்தாமணி மணிப்
வாழ்வின் ஒவ்வோர் அம்சமும் இறைவனது நிய காலத்தில் வலுவடைகிறது. இதனால் எல்லாவி ஏங்கும் பான்மை பக்தி இலக்கியங்களிற்கூடாக வெ அருளை நாடியோடும் மெய்யடியார்களது இயல் நால்வகை மார்க்கங்களான தாசமார்க்கம், சற்புத்திர வாழ்வில் காணப்பட்டன.
தமது வாழ்வில் உள்ளொளி பெருக்கி இறைவு கொண்டு வாழும் வாழ்க்கை நெறியை பல்லவர்
2

காண அனைவரையும் அழைப்பது சிறப்பு மிக்கதாக
களும் உணர்ச்சி பேதங்களை வெளிப்படுத்துவதற்கு யும் கையாண்டார்கள். திருக்கோலக் காட்சியும் டுத்தாளப்படுகின்றன. அப்பர் சுவாமிகளது
வ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும்”
ல் மேனி பவளவாய்
டுத்தியம்புகின்றன.
து மட்டுமன்றி தாண்டகம், திருவெழுக் கூற்றிகை கையாளப்பட்டன. பதிகங்களில் அமைப்பு முறை பதிகங்களில் முதல் ஏழு பாடல்கள் இறைவனது என் பற்றியும் ஒன்பதாவது பாடல் பிரமா விசுஷ்ணு ) சமண பொளத்தர்களைப் பற்றியும் பதினோராவது }த்தலைக் காணலாம்.
திற்கும் களம் அமைத்த மணிவாசகரது கோவை Uத்தில் உரைநடை நூல்களும் எழுந்தன. எதுகை ர் களவியலுரை நல் உதாரணம். இக்காலத்திலேயே
இவ்வகையில் முதலில் தோன்றியது சேரமான் பூகும். இக்காலப் பகுதியில்தான் அந்தாதி தோற்றம் த்து, அசை, சொல், சீர் அடி யாதாயினும் ஒன்று ந்துப் பாடுவதுதான் அந்தாதி ஆகும். பொன் 5n L2 u 601.
1ங்கள் பெருவழக்காகக் கையாளப்பட்டுள்ளன. சை விகர்ப்பங்கள் கொண்டவை. இவை தமிழிற்குப்
வ மன்னர்கள் ஆதரித்தமையால் அம்மொழியானது நந்தது. தமிழ் மொழியும் வடமொழியும் கலந்து ற்றது. இக்காலத்தில் எழுந்த சமய சார்பில்லாத பிரவாள நடையில் எழுந்தவையே.
திப்படியே நடக்கின்றது என்ற கொள்கை பல்லவர் தமான துன்பங்களுக்கும் திருவருளை நினைத்து fப்படுகிறது. அநுபூதி நிலையில் இரங்கி இறைவன் னை பல்லவர்கால இலக்கியங்கள் கூறுகின்றன. 0ார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் நாயன்மார்களது
னது வழி நடத்தலையே முதன்மையானது எனக் ாலம் தோற்றுவிக்கிறது. இதனை சுந்தரர்
5

Page 250
“பொய்மையாளரை L
புகலூர் பாடுமின் புல6 என்பதன் மூலம் அருமையாக விளக்கியுள்ளா
இக்கால இலக்கியத்தில் குறிப்பிட்டு சொல்ல ஒன்று உளது. அப்பரம் பொருளை சென்றடைவத நோக்கமாக அமைந்தது. திருமுறைகளும் அமைக்கப்பட்டன. இத்தகைய சிறப்புக்கள் அை கிபி 7ம் 8ம் 9ம் நூற்றாண்டைக் கொண்டு அமை
::: 28:2:3ද 2ද 3ද 8ද 3:
米米米米米米米米米米米米米米米米米米米米状
米米米米米米米米米米米米冰;
குற்றங்களையே பொழுதுபோக்குகிறவன் குற்றத் தை மிகுதிப் முதல் வனாகிறான். பிடிப்பவர்களுள் மிகச் போக்க முயல்பவர் 8 நன்மையை மாத்திரம் எப்போதுமே உலகத்ை கொண்டுதாணிருக்கிறா
N

பாடாதே எந்தை வீர்காண்”
.
த்தக்க அம்சமாக மிளிர்வது மேலான பரம்பொருள் ற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்வதே முக்கிய
ஆழ்வார் பாசுரங்களும் இம்மரபையே தழுவி )னத்தையும் தன்னகத்தே கொண்ட பல்லவர் காலம் ந்தது.
:k-k-k-k-k-k-k-k-k-k
K米米米米米米米米米米米米米米米米米米米米米冰
米米米米米冰米米米米米米米米米米
கண்டும் பேசியும் ாதான் உலகத்திலேயே படுத்துகிறவர்களுள் குற்றத்தைக் கண்டு
சிலர் தாம் அதனைப் களாயிருக் கிறார்கள்.
தேடிக் காண்பவர்கள் )த நன்மை மயமாக்கிக் ர்கள்.
الص
226

Page 251
19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி பாதித்தது. அதன் காரணமாக 19ஆம் நூற்றான இலக்கிய உலகையும் பாதித்தது. சிறுகதைக்கு நாடகத்திற்கு முன்னோடியாக வருகிறார் நோர்வே வாத நாடகத்தைத் தோற்றுவித்தவராக உள்ளா பாறாங்கல் எவ்வாறு அழகிய சிற்பமாக மாறுமோ கண்ணாடியாக தனது நாடகங்களைப் படைத்துள்ள பிரச்சினைகளைப் பற்றியவை தான். காட்டு வாத்து பொம்மை வீடு யாவராலும் போற்றப்படும் நாடகம மனிதர்கள், அவர்களுடைய பிரச்சினைகள் உலக இவ்வாறான தன்மைகளை கிரேக்க நாடகத் துணைப்பாத்திர உரையாடல் மூலம் வெளிப்படு வெளிப்படுத்துகின்றார்.
இப்சனது பொம்மை வீடானது மூன்று அங்க அறையிலே இடம் பெறுகிறது. சில மாற்றங்கள் பெறும் பொருட்கள் எல்லாம் கதை பேசுவனவாக
நோறா நத்தார் தினத்தை முன்னிட்டு கடைக்குச் திறந்து பணிப்பெண்ணிடம் நத்தார் மரத்தை ‘மை நத்தாருக்குரிய வேலைகளில் ஈடுபடுகிறாள். கt படிப்படியாக உயர்ந்து இப்போது முகாமையாளரா உள்ளனர். இவர்களுடைய குடும்பமும் இப்போது நோறாவின் சிறுவயதுத் தோழி கிறிஸ்டினா தன் நிை நோறாவும் கணவனிடம் கிறிஸ்டினா பற்றிக் கூறி அ ராங் நோறா மீது விருப்பமுடையவர். எனினும் ே அறிவிப்பதாகக் கூறிச் செல்கிறார். குரொக்ஸ்டட உருவாகிறது. நோறா கணவன் வருத்தமுற்றிருந் பத்திரத்தை கொடுத்து குரொக்ஸ்டட்டிடமிருந் குரொக்ஸ்டட்டுக்கு இப்போது வேலை இல்லை கூறி வேலை பெற்றுத் தரும்படி நோறாவிடம் கூ தெரியப்படுத்துவதாகக் கூறிச் செல்கிறான். விரும்பமாட்டானென்பது தெரியும். அதனால் உண் கலந்து கொண்ட பின் ஹெல்மர் கடிதங்களை வா கடிதம் கண்டு இருவரும் மனம் வருந்துகின்றன திட்டுகிறான். நோறா தன் நிலையை எடுத்து மனமுடைகிறாள். இந்நிலையில் குரொக்ஸ்டட்டி வீட்டுப் பத்திரம் திருப்பி அனுப்பப்படுகிறது. அத
كے

இப்சன் காட்டும் நோறா
திருமதி வனிதா-சுரேஸ் 2, affiliff.(B.A-Hons, Dip.in. Edu) மட்-களுதாவளை ம.வி
ஐரோப்பிய சமுதாயத்தின் சிந்தனையை வெகுவாகப் ண்டின் பிற்பகுதியில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அது மாய்சாவும் நாவலுக்கு ஹார்டி ஜோலாவும் போன்று bாட்டு நாடக ஆசிரியர் ஹென்றிக் இப்சன். யதார்த்த ர். கை தேர்ந்த சிற்பி ஒருவனின் கையில் பட்ட அவ்வாறு சமுதாய எண்ணங்களை வெளிக்காட்டும் ாார். இப்சனுடைய எல்லா நாடகங்களும் சமுதாயப் து, சமுதாயத் தூண்கள், பொம்மை வீடு என்பவற்றுள் ாகும். இவரது நாடக மாந்தர்கள் உலகப் பொது த்துக்குரியவை. மனித மன நிலை மாறக்கூடியது. தனிப்பாத்திர உரையாடல், சமஸ்கிருத நாடகத் த்தாது குறியீடுகள் ஊடாகத் தனது நாடகத்தில்
ங்களைக் கொண்டது. நோறாவின் வீட்டின் ஒரு மட்டுமே நடைபெறுகின்றன. மேடையில் இடம் b உள்ளன.
சென்று பொருள்கள் வாங்கிக் கொண்டு கதவைத் றத்து வை' என்பதுடன் நாடகம் ஆரம்பமாகிறது. ணவன் ஹெல்மர் வங்கியொன்றில் வேலை செய்து க வேலை பார்ப்பவன். அவர்களுக்கு பிள்ளைகள் சமுதாய அந்தஸ்து பெற்றுள்ளது. இந்நிலையில் லயைக் கூறி வேலை பெற்றுத் தரும்படி கூறுகிறாள். வளுக்கு வேலை பெற்றுக் கொடுக்கிறாள். டொக்டர் நாறா விரும்பாதவள். அவர் தன் இறுதி முடிவை ட் வருகிறான். இப்போதுதான் இக்கட்டான நிலை த வேளை தன் கணவனுக்குத் தெரியாமல் வீட்டுப் து பணம் பெற்று கணவனைச் சுகப்படுத்தினாள்.
அவன் ஹெல்மரிடம் தன்னிலை பற்றி எடுத்துக் றுகிறான். இல்லையேல் ஹெல்மருக்கு கடன் பற்றி கணவன் குரொக்ஸ்டட்டை வேலையில் சேர்க்க மையைச் சொல்ல விரும்புகிறாள். நடன விருந்தில் சிக்கிறான். டொக்டரின் இறுதி முடிவை அறிவிக்கும் ர். அடுத்த கடிதம் வாசித்து விட்டு நோறாவை க் கூறியும் ஹெல்மர் கேட்டபாடில்லை. நோறா டமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வருகிறது. அதில் னைக் கண்டு நோறாவிடம் மன்னிப்புக் கேட்கிறான்.
27

Page 252
தன் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காத வீட்டி விட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறாள். இது
இப்சனுடைய உத்திகளில் முக்கியமானது அ உள்ளப் போராட்டமாகும். அதனை குறியீட்டுச் சி இந்நாடகத்தைப் பார்ப்போம்.
நாடக ஆரம்பத்திலே நத்தார் மரம் முன் வைச் தொடர்புடையது. அது நமக்கு இன்பம் துன்ப இன்பம் துன்ப்ம் உள்ளதை ஆசிரியர் ஆரம்பத்திே ‘மறைத்து வை’ என்கிறாள். இதிலிருந்து சுபாவமுடையவள் என்பதை வெளிப்படுத்துகின்றா அனுப்புகிறாள். அவள் சிறுகச் சிறுகப் பணம் சேர் அவள் தந்தையைப் போல ஊதாரி என ஹெல்மர் பிரியம் நோறாவுக்கு. ஆனால் ஹெல்மருக்கு பிடிய் என நினைப்பவர். நோறா சாய்பிட்டு பற்களில் என்று வினவவில்லை என்பதுடன் சாப்பிடவில்லை கேட்டு ஹெல்மரும் நான் சும்மா கேலி செய்தேன் வாழ்க்கை உள்ளார்ந்த தன்மையைக் காணவில் நண்பியான கிறிஸ்டினாவிற்கு நிலையான கதிை இருவருடைய வாழ்க்கையையும் ஆசிரியர் கு உரையாடல்களிலும் கிறிஸ்டினா தன் கடந்த க பொய்யுரைக்கிறாள். இதிலிருந்தும் அவள் உண்: நண்பி தன்னிடம் வேலை பெற்றுத் தரும்படி கூறி ஹெல்மரின் மனத்தை மாற்றமடைய வைக்கிறாள். என்பது தெரிகிறது. ஹெல்மர் வந்து யாரும் வ சற்று நேரத்தின் பின் குரொக்ஸ்டட் வந்ததாகக் குரொக்ஸ்டட்டிற்காக வாதாடுகிறாள். பயனற்றுப் ே உரைப்பதிலிருந்து நண்பிகளிடம் உண்மை கூறுவார் நோறாவிடம் வேலை பெற்றுத் தரும்படி அல்ல; மிரட்டுகிறான். இது சமூகப் பண்பு. கிறிஸடினாவ பற்றி உரையாடி தாம் இருவரும் சேருகின்ற ஒருமி இருப்பதில்லை. மாறக் கூடியவர்கள் என்பதைக் திருப்பி அனுப்புவதிலிருந்தும் அவன் குணம் 6 ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை எடுத்துக் ச பிரிகின்றனர் பிரிந்தவர் மனம் விட்டு உரையாடுவ: வேளை சேர்ந்திருந்தும் மனம் விட்டு உரையாடாத மூலம் காட்டுகின்றார். நடனத்திற்கான உடை அதாவது இதுவரை வாழ்ந்த வாழ்க்கையிலிருர் என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றார். ந ஹெல்மரின் முகம் மாறிவிட்டது, அணில் குஞ்சு கொறிக்கும் பாவை என வருணிக்கப்பட்ட நோ பொய்யள், குற்றவாளி, கேடுகெட்ட பெண், என் இனிமேல் பராமரிக்கக்கூடாது என்றெல்லாம் ே ஹெல்மர் கேட்டபாடில்லை. குரொக்ஸ்டட்டிட விட்டு ‘நான் காய்பாற்றப்பட்டு விட்டேன்’ என தன் வாழ்க்கையையே பார்ப்பவன் என்பது தெட் அந்தஸ்து இல்லாத அந்த வீட்டில் தன் உணர்ச் தன் கணவன் என்று நம்பி வாழ மறுக்கிறாள். வளர்ச்சியில் தனக்கும் சமபங்கு உண்டு என்பதை u

) தனக்கு வேலை இல்லை என கதவை அடைத்து வ இய்சன் காட்டும் “பொம்மை வீடு'.
வர் கையாளும் கலை நுணுக்கம். பாத்திரங்களின் ன்னங்கள் ஊடாக விளக்குகின்றார். அந்த வகையில்
கப்படுகிறது. இம் மரம் யேசுவின் இறப்பு, பிறப்புடன் நதை சுட்டுகிறது. ஆகவே இவளது வாழ்விலும் ல கூறுகின்றார். அது மட்டுமன்றி நத்தார் மரத்தை அவள் இன்ப் துன்பங்களை மறைத்து வைக்கும் ள். பொதி தூக்கிக்கு இரட்டிப்பாக பணம் கொடுத்து ய்பவள். அப்படியிருந்தும் பணம் கொடுப்பதிலிருந்து குறிப்பிடுகிறார். மக்றுான்ஸ் சாப்பிடுவதில் அலாதிப் iல்லை. ஏனெனில் நோறாவின் பற்கள் பழுதாகிவிடும் சாயம் படிந்திருந்த போது ஹெல்மர் சாப்பிட்டதா ) எனச் சத்தியமும் செய்கிறாள். அவள் கூறியதைக் என விலகிச் செல்கிறார். இதிலிருந்து அவர்களின் bலை. மேலெழுந்த தன்மையே காணப்படுகிறது. ரயும் தனக்கு ஆடு கதிரையும் போடுவதிலிருந்து றிப்பால் உணர்த்திச் செல்கின்றார். அவர்களது ால வாழ்க்கை உண்மைக் கதை கூற நோறாவோ மையை விரைவில் உரைக்க விரும்பாதவள். தனது பதற்கமைய கணவனிடம் பொய்யெல்லாம் உரைத்து இதிலிருந்தும் அவள் பொய் உரைப்பதில் கெட்டிக்காரி ந்ததா என வினவ யாரும் வரவில்லை என்கிறாள். கூறுகிறாள். தன் கணவன் குணம் தெரிந்திருந்தும் போகிறது. தன் நண்பியிடம் இப்போழுது உண்மையை கள் என்பதை ஆசிரியர் சுட்டுகின்றார். குரொக்ஸ்டட் து கடன் பெற்றதை ஹெல்மருக்கு கூறப்போவதாக |ம் குரொக்ஸ்டட்டும் தமது கடந்த கால வாழ்க்கை நத முடிவுக்கு வருகின்றனர். எல்லாரும் பிடிவாதமாக காட்டுவதுடன் நோறாவிற்கு கடன் பெற்ற பத்திரத்தை ாடுத்தியம்பப்படுகிறது. சமுதாயத்தில் எல்லாரும் ாட்ட இரு கதை முன்வைக்கப்படுகிறது. சேர்ந்தவர் நன் மூலம் பிரிந்தவர் சேரலாம் என்பது சுட்டப்படும் தன் மூலம் பிரியலாம் என்பதையும் நோறா ஹெல்மர் அணிகிறாள். அவ்வுடை அலங்காரமான உடை. து வேறுபட்ட வாழ்க்கையைத் தெரிவு செய்கிறாள் டனமாடிய பின்னர் கடிதங்கள் வாசிக்கப்பட்டதும் பாடற் பறவை, மயக்கு கவர்ச்சி நங்கை, இனிப்புக் ாவிற்கு கண்டபடி திட்டுகிறார். பாசாங்குக் காரி, சந்தோசத்தை கெடுத்து விட்டவள், பிள்ளைகளை சுகிறான். கணவனுக்கு நிலையை எடுத்தியம்பியும் Sருந்து வந்த இரண்டாவது கடிதத்தை வாசித்து நாறா அப்போ நான் நீயும் தான்’ என்பதிலிருந்து டத் தெளிவாகத் தெரிகிறது. நோறா 'தனக்கு என சிகளுக்குச் சிறு மதிப்பும் கொடுக்காத ஆடவனைத்
தானும் ஒரு மனிதப் பிறவி தான் குடும்பத்தின் றுத்து விட்ட அந்தக் குடும்பம் தான் இல்லாமலேயே
28

Page 253
இயங்க முடியும். உண்ணும் உணவிற்கும் உடுக்கு இல்லை என்றால் தானே சம்பாதித்து வாழ முட வெளியேறுகிறாள். இதற்கு மேலும் தன் முடிவில் கூறி மேசையின் எதிரெதிரே உட்காருகின்றனர்.
மனம் விட்டு உரையாடியது இல்லை. தான் தீ தவறிழைக்கப் பட்டேன், இருவரும் பொ! விளையாட்டறையாகவே இருந்தது என்றும் ஹெ கற்றுத் தரவில்லை என்றும் கூறி தான் தனித்து விட்டுப் பிரிகிறேன் எனச் சொல்லி கதவைச் சாத்
இப்சன் காட்டும் முடிவை ஐரோப்பா எதிர்பா எடுப்பவள் இல்லை. கதவின் சத்தம் ஐரோப்பா அக்காலத்துக்குப் பொருந்தாவிடினும் இக்கால ( ‘என்னைப் பொறுத்த வரையில் இந்தப் பிரச்சினை தென்படுகிறது. பெண் உரிமை பற்றிய பிரச்சினை காணப்பட வேண்டுமென்பது விரும்பத்தக்கது எ நோக்கம் அதுவல்ல. மனித இனத்தை விபரிப்ட
冰米米米米米米米米米>
sk-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-
******k >}< *k >}< *k >k:>k :}:>ki>}<>k:k:>k ***
முடிந்துவிட்டது முற்றுப்புள்ளி இட்டு புள்ளியில் இருந்துத ஆரம்பிக்கின்றது.
நெருங்கி இருந்த ஆபத்து, விலகி இரு வந்தாலும் ஆபத்து.
 
 

ம் உடைக்கும்தான் மனைவி தனக்கு ஒரு கணவன் டியும் என்ற தன் நம்பிக்கையுடன் வீட்டை விட்டு ) மாற்றமின்றி கணவனுடன் கதைக்க இருப்பதாகக் எட்டு ஆண்டுகள் திருமண வாழ்வில் இருவரும் நந்தையாலும் பின்னர் கணவனாலும் பயங்கரமாகத் ம்மைகளாக வைத்திருந்தனர். வீடு வெறும் ல்மர் தனக்கு உண்மையான மனைவியாக இருக்க க் கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் உங்களை நதி விட்டுச் செல்கின்றாள்.
ர்க்கவில்லை. அக்காலப் பெண் இந்த முடிவை எங்கணும் ஒலித்தது என்பர். இந்த முடிவானது பெண்விடுதலை பற்றிப் பேசுகிறது. எனினும் இப்சன் ா மனித இனத்துக்குப் பொதுவான பிரச்சினையாகத் களை ஏனைய பிரச்சினைகளோடு சேர்த்துத் தீர்வு ான நான் நினைக்கிறேன். ஆனால் முழுமையான தே எனது நோக்கம்’ என்கிறார் ஆசிரியர்.
k冰冰冰米米米米米米米冰米
k米米米米米米米米米米米米米米米米米米米冰米米米米米米
k米米米米米米米米米米米米米米米米米米米米
ത്ത
என்பதற்காக வாழ்வுக்கு விடாதீர்கள். முற்றுப் ான் அழகாக கோலம்
) நண்பன் விலகினாலும் நந்த விரோதி நெருங்கி
229

Page 254
ஒரு பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செய கொள்வது வாசிப்பேயாகும். வாசிப்பதால் மனிதன் ஆவான்’ என்பன போன்ற சான்றோர் வாசகங்க காட்டுகின்றன. ஆரம்பக் கல்வி வகுப்புக்களை வாசிப்புக்கான அடிப்படைத் தேர்ச்சியாக அறியப்படு எழுத்துருவாக்கம் என்பன ஆரம்பப் பிரிவு மாண
கல்வி உளவியலாளர் பிஜாஜே மனித வளர்ச்சி திறன் அபிவிருத்தியைச் சுட்டிக் காட்டிச் சென் மொழியொன்றைச் சுயமாகவே வெளியிடும் மழை மாணவர்களின் தூர சிந்தனைப் பருவத்திற்கமைt நிலை. இதனைத் தொடர்ந்தே நியம சிந்த6ை மாணவனுக்கு ஏற்படுத்தும் போது அதற்கேற்ற எனச் சிந்திப்பது கல்வியூட்டுபவர்கள் யாவரினது
ஆரம்ப வகுப்பறைகளைப் பொறுத்தவரை எழுத் எழுத்துக்களை உச்சரித்தல், தனி எழுத்துக்கை கூடிய பாடல் என வாசிப்புக்கான ஆயத்த முய
குறிப்பிட்ட பாடசாலையொன்றில் தரம் 7 வகுப்பி போது பின்வரும் விபரங்கள் பெறப்பட்டன.
1. எழுத்துக் கூட்டி வாசித்தவர்கள்
வேகமாக அவசரமாக வாசித்து சொற்க6ை எழுத்துக்களைச் சரியாகச் சொல்லி குறிப்ட் குறில் எழுத்துக்களை நெடில் உச்சரிப்பாக சரியான உச்சரிப்புடன் மெதுவாக வாசித்த6
எழுத்துக் கூட்டாது மெதுவாக வாசித்தவ
மேற்படி மாணவ நிலையில் வாசிப்பினை அவத செயலொழுங்கில் (proces)குறைபாடுகள் இருப்பது எழுத்துக்களை இனங்காணக் கூடியவராகவே வேகத்தைக் கூட்டுவதே ஆசிரியரின் கடமையாகி தரத்தில் கிராமப்புறப் பாடசாலைகளில் இத்தை

வகுப்பறைகளில் பன்முக வாசிப்பு
திரு.பெ. பேரின்பராஜ7 ஆசிரிய ஆலோசகள், வலயக்கல்வி அலுவலகம், பட்டிருப்பு, களுவாஞ்சிக்குடி.
பற்பாட்டில் கூடுதலான செல்வாக்கினைப் பெற்றுக் ா பூரணமடைகின்றான். “கண்டதும் கற்கப் பண்டிதன் 5ள் வாசிப்பதன் மகத்துவத்தை எமக்கு எடுத்துக் ப் பொறுத்தவரை எழுத்துக்களை இனங்காணுதல் }கின்றது. எழுத்துக்களை நோக்கல் கோடுகளினூடே வர்களிடையே முக்கியத்துவம் பெறுகின்றன.
சிப் பருவத்தின் அனைத்து நிலைகளிலும் வாசிப்புத் றுள்ளார். ஆரம்பத்தில் புலனியக்கப் பருவத்தில் லையை நோக்க முடிகிறது. இதனைத் தொடர்ந்து ப படங்கள் மூலமாக மொழியை அறிமுகம் செய்யும் ன வடிவம் ஏற்படுகின்றது. வாசிப்புத் தேர்ச்சியை முதிர்வு நிலை மாணவனிடம் தோன்றி விட்டதா? ம் கடமையாகும்.
ந்துக்களைக் கீறுதல், எழுத்துக்களை இனங்காணல், ளப் படம் பார்த்து இணைத்தல், எழுத்துக்களுடன் ற்சிகள் முன்வைக்கப்படுகின்றன.
ல் மாணவர்களின் பாடநூல் வாசிப்பினை அவதானித்த
02 (BLIT
ா மாறாக உச்சரித்தவர்கள் 02 (BLT ட்ட சொல்லை தவறாக வாசித்தவர்கள் 12 பேர்
வாசித்தவர்கள் 02 (BLiT
வர்கள் 10 (BLT
ர்கள் 12 (BLIT
மொத்த மாணவர் தொகை 40 பேர்
ானிக்கும் போது மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் அவதானிக்கப்படுகின்றது. கூடுதலான மாணவர்கள் உள்ளனர். அவ்வாறாயின் வாசிப்பிற்கான உச்சரிப்பு றது. கனிஷ்ட, இடைநிலை வகுப்புக்களின் வாசிப்புத் கய நிலையே அவதானிக்கப்படுகின்றது.
230

Page 255
மேற்கூறப்பட்ட வாசிப்பு முறைகள் கிரகித்தலுட வாசிப்பிற்கான முறை, வேகம், வாசிப்புப் பயிற்சி எ அதிகரித்துக் காட்ட முடியும். வாசிப்பு பயிற்சிக்க உதவுகின்றன. ஆனால் பாடநூல்களைப் பொறுத்
* மேலோட்டமான வாசிப்பு * கிரகித்தல் வாசிப்பு * நுண் ஆய்வு வாசிப்பு
எனப் பல்வகை அணுகு முறைகள் பின்பற்றப்ப என்பது, பத்திரிகை, சஞ்சிகை வாசிப்புகளுடன் தெ மட்டும் தேடிப் பெற்றுக் கொள்வதற்கான வாசிப்ப
கிரகித்தல் வாசிப்பு மிகப் பிரதானம்ானது. இ மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களு இலவசப் பாடநூல்கள் பல கோடி ரூபா ெ இப்பாடநூல்களை எவ்வளவு வீதமான மாணவர்க அல்லது கருத்துன்றிய வாசிப்புப் பயிற்சிகள் இவ்வேளையில் தோன்றும் வினாக்களாகும்.
கருத்தூன்றிய வாசிப்பிற்கான வகுப்பறைப் பயி இனம் காணப்பட்டுள்ளன. மாணவர்கள் தமது பாட பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.
கற்பித்தல் முறைகளில் சிறியதில் இருந்து பெர் அறியாததை நோக்கல், எளிமையில் இருந்து கடி வாசிப்புப் படிமுறைகள் பின்பற்றப்படல் அவசியமா
படங்களோடு கூடிய கூற்றுக்களை வாசி படங்களையும் சொற்களையும் வாசித்தல் இரண்டு எழுத்து, மூன்று எழுத்து, நான்கு சிறிய சொற்றொடர்களை வாசித்தல் சாதாரண சொற்றொடர்களை வாசித்தல் தனி எழுத்துக்களை அட்டைகளில் எழு தனி எழுத்துக்களைப் படத்துடன் இணை வாசிப்பதற்கான நேரத்திட்டமொன்றைப் பி நூலக வாசிப்பு முறை ஒன்றை ஏற்படுத்து வாசிப்பதற்கு முன்பு வாசிப்பதால் அடைய
இவை கிரகித்தல் வாசிப்புக்கு அல்லது கருத்
வாசிப்பின் விளைவு மாணவர்கள் தமது சொல் தமது மொழித் தொடர்பாடலிலே சிறந்த சொற்பயன் சொற்றொகுதி மாணவரிடையே பெருக்கமடை அடித்தளமாகின்றது.
வகுப்பறைகளைப் பொறுத்தவரை வாசிப்புப் L கவனத்தில் கொள்ளாது, பாடநூல்களுக்கு மேற்பட்ட சிறந்ததாகும். அப்பொழுதே வாசிப்புப் பற்றிய கொள்வார்கள். வகுப்பறைகளில் பாடநூல்களோடு
ممبر 4

ன் கூடிய வாசிப்பு முறைகள் எனக் கருத முடியாது. ன்பவற்றின் அடைவுகளையே மேற்கூறியவற்றினால் க கதைகள் படங்களோடு கூடிய விபரண நூல்கள் g5 6)6OJuhoi (Textbook)
டுவதனைக் காண்கின்றோம். மேலோட்ட வாசிப்பு ாடர்பானது. அத்துடன் குறித்த சில தகவல்களை ாகவும் அமைந்து விடுகின்றது.
இடைநிலைப் பிரிவு மாணவர்களுக்கும், உயர்பிரிவு ரக்கும் மிக அத்தியாவசியமானது. இதற்காகவே சலவில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ள் கருத்தூன்றிய வாசிப்புக்கு உட்படுத்துகின்றார்கள்
மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றதா? என்பது
ற்சிகள் தற்காலத்தில் மிக அவசியமானவையாக நூல்கள், பயிற்சி நூல்களை வாசிப்பதற்கு இப்பயிற்சி
ரியதை நோக்கிச் செல்லுதல், அறிந்ததில் இருந்து >னத்தை நோக்கிச் செல்லுதல் என்பவற்றிற்கமைய கும். -
த்தல்
ந எழுத்துக்கள் என திட்டமிட்டு வாசித்தல்
துதல்
ாததல
ன்பற்றுதல்
த்ல். ம் நோக்கமொன்றை உருவாக்குதல்
தூன்றி வாசிப்பதற்கான எளிமையான மார்க்கமாகும்.
லாட்சியை வளர்த்துக் கொள்வார்கள். அதாவது பாட்டை ஏற்படுத்துவார்கள் என்பதாகும். இதனால் யும். இப்பெருக்கத்துக்கு வாசிப்பே பிரதான
யிற்சியை வழங்கும்போது பாடநூல்களை மட்டும் பதிவுகளையும், வெளியீடுகளையும் பயன்படுத்துதல் தேர்ச்சியை மாணவர்கள் விரைவாக அடைந்து
விளம்பரங்கள், அறிவித்தல்கள், அழைப்பிதழ்கள்,
31

Page 256
கடிதங்கள், தகவல் துணுக்குகள், பொருட்களைச் தலைப்புகள், பத்திரிகை நறுக்குகள், சஞ்சிகைக வாசிப்பின் பயிற்சியைக் கூட்டுவதுடன், மொழிய வாசிப்பதற்கான கற்பித்தல் துணையாகவும் அை பெருநன்மை பயக்கும். இத்தகைய சூழலுக்குப் பின் (ՄԼջ պib.
பன்முகப்பட்ட வாசிப்புப் பயிற்சியொன்றினை ஏற்ப உயர்மட்டமான வாசிப்புத் தரத்தை உண்டுபண்ணி பாடநூலினை வாசிக்கும் மாணவன், பத்திரிகை கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. ஆகவே பன்மு செய்தித் தலைப்புக்களையும் தொடர்ந்து சில பயனுடையதாகும். க.பொ.த (சாத), க.பொ.த (உ/ பல்வேறு விளம்பரங்களை மாணவரிடையே திணிக்க தொழில் நுட்ப கற்கை நெறிக்கான இலவச அ வழங்கப்படுகின்றன. இத்தகைய அறிவித்தல்கை வாசிக்கின்றார்கள். அத்தகைய விளம்பரங்களை பாடநூல், கட்டுரைகளை வாசிப்பது சிரமமாகவே அ கற்றலுக்கு பிரதான அடித்தளமாகின்றது எனக் கு
பன்முக வாசிப்பினுடாகவே வாசிப்பின் உயர்நிலை மட்டம் என்பது கிரகித்தலுடன் கூடிய வாசி படிநிலைகளுடன் கூடியதாகும். வாசிக்கப்படும் உள்ளார்ந்த நோக்கத்தினை புரிவதற்கும் கிரகித்த
வாசிக்கையில் கிரகித்தல் வாசிக்கும் போது சிந்தித்தல் வாசிக்கும் போது குறிப்பெடுத்தல் படைப்பாளியின் நோக்கத்தினை முற்றா படைப்பாளியின் கருத்தைத் தாம் வெளி
எனப் படிநிலைப்பட்டதாக அமையும்.
இத்தகைய முயற்சியானது வாசிப்பின் உயர்தர பாடநூல்களின் நோக்கங்களையும் நிறைவு செய்ய கற்றலிற்கும், தொடர்பாடல் திறன் விருத்திக்கும் !
米米米米冰冰米米米
米米米米米米米米米米米米米米米米米米米米米状
米米米米米米米米米米米米米米状

சுற்றியுள்ள உறைகள், சுவரொட்டிகள், பத்திரிகைத் ர் முதலானவற்றை வாசிக்க செய்வதனூடாகவே ாற்றலையும் வளர்த்துக் கொள்ளலாம். இவை மயும். வகுப்பறை வாசிப்பிற்கு இச்செயற்பாடுகள் பே பாடநூல் வாசிப்புச் சூழலை சிறப்பாக ஏற்படுத்த
நித்துவதன் மூலமாகவே இடைநிலை வகுப்புகளில் முடியும். கனிஷ்ட இடைநிலை வகுப்புகளில்
நறுக்குகளை வாசிப்பதற்கு இடர்ப்படுவதனைக் க வாசிப்பின் அடிப்படையாக முதலில் பத்திரிகைச்
நறுக்குகளையும் வாசிக்க வைப்பது பெரிதும் த) பரீட்சைகள் முடிவுறும் காலத்தில் நிறுவனங்கள் நின்றன. உலகமயமாக்கலுடன் தொடர்பான தகவல் அறிவித்தலும் விளம்பரங்களுமே மாணவர்களுக்கு ள முழுமையாக தெளிவாக எத்தனை மாணவர்கள்
வாசிக்காமல் தகவல் தொழில்நுட்பம் சார்பான அமையும். எனவே வெளிக்கள வாசிப்பு வகுப்பறைக் றிப்பிடலாம்.
) மட்டத்தைப் பேண முடியும். வாசிப்பின் உயர்நிலை ப்பாகும். கிரகித்தலுடன் கூடிய வாசிப்பு பல விடயப் பொருளை அறிவதற்கும் படைப்பாளியின் ல் வாசிப்பு அவசியமாகின்றது. அவ்வேளையிலே
க விளங்குதல் ரியிடல்
த்தைப் பேணுவதோடு இடைநிலை, உயர்நிலைப் பக்கூடியதாகவும் அமைகின்றது. தேர்ச்சிமையக் இவ்வாசிப்பு முறை பெரிதும் உதவும் எனலாம்.
妆米米米米米米米米米
米米米米米冰米米米米冰米米米米米米米米米米米
:*k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k-k

Page 257
உலகிலே வழங்குகின்ற ஆயிரக்கணக்கான ( இனிமையும் வாய்ந்ததோடு வளர்ச்சியடைந்த, வலி பேச்சு வழக்கு ஆகிய இரு வழக்கிலும் செம்ை பேணிக்காக்க காலம் தோறும் பல இலக்கண நூல் நிலைத்துள்ளன எனக் கூறமுடியாது. எமக்குக் பழைமை வாய்ந்த நூலாகத் திகழ்வது தொல்காப் இந்நூலின் தோற்றத்துக்கு முன்பு பல இலக்கியர் எனக்கருத இடமுண்டு. இந்நூலின் தோற்றகா6 எனக் கூறப்படுகின்றது. இதன் பின்பு சில நூற்றா விளக்கம், நேமிநாதம், சாமிநாதம் என்பவற்றோடு அவற்றுள் குறிப்பிடத்தக்க நூல்களே ஐந்திலக்க எனும் போது எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், ஆகிய ஐந்துமாகும். இவ்வைந்திலக்கண்த்தையு பல நூல்கள் இதில் சிலவற்றுக்கே இலக்கணம் அவை தமிழிலக்கண நூல்களில் இடம்பெற்றவா ஆராய்தல் பொருத்தமானதாகும்.
தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கணவிள ஐந்திலக்கண நூல்கள் எனக் கொள்ளப்படுகின்ற கூறுதல் மரபன்று. எனினும் பிற்பட்ட கால அறிஞள் செய்யுளியல் என்பன இடம்பெற்றுள்ளமையால் கிடைக்கின்ற தமிழ் இலக்கண நூல்களுள் பழைமையான நூலாக விளங்குவது வீரசோழியம். அகப்பொருள் புறப்பொருள் என இலக்கணம் கூறி கூறும் போது அகப்பொருள், புறப்பொருள், பா ஐந்திலக்கண நூல் எனக் கூறப்பட்டாலும் அது ( எனும் நூலும் ஐந்திலக்கண நூல். எனினும் இதில் நன்னூலும் ஐந்திலக்கண நூல் என்பர். தண்ட கூறும் நூல் ஐந்திலக்கணமும் கூறி புலமை இல வைத்து ஒவ்வொரு இலக்கணம் பற்றியும் சுருக்
왕
2.
உலகிலுள்ள எந்த மொழியை எடுத்து நோக் பேச்சு வழக்கைக் காட்டிலும் உயிர்நாடியாகத் திக விளக்கியுள்ளன. எனினும் எழுத்து மொழியின் மொழி என்பதில் ஐயமில்லை. தமிழ் இலச் எழுத்துக்களின் பிறப்பு, அமைப்பு, வகை, பயன்ட

தமிழில் ஐந்திலக்கண மரபு
திரு.க. குணசேகரம், ஆசிரிய ஆலோசகர், வலயக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு.
மாழிகளுள் தமிழ் மொழி பழைமையும், இளமையும் ார்ச்சி அடைகின்ற மொழியுமாகும். எழுத்து வழக்கு, மயுற்று விளங்கும் இம்மொழியின் தனித்துவத்தைப் கள் தோற்றம் பெற்றன. ஆனால் அவை அனைத்தும் கிடைத்துள்ள தமிழ் இலக்கண நூல்களுள் மிகப் பியம். இந்நூலிலுள்ள சூத்திரங்கள் சிலவற்றிலிருந்து வகள், இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் Dம்கூட திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை ண்டுகள் கடந்து வீரசோழியம், நன்னூல், இலக்கண இன்னும் பல நூல்களைக் கூறமுடியும். எனினும் bணமும் கூறுவனவாக உள்ளன. ஐந்திலக்கணம் பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் ம் தனித்தனியாக சில நூல்கள் எடுத்துக் கூறினும் கூறியுள்ளன. எனவே ஐந்திலக்கண மரபு பற்றியும் ற்றையும், தற்காலத்தில் அதன் நிலைப்பாட்டையும்
க்கம், தொன்னூல் விளக்கம், சாமிநாதம் என்பன ன. தொல்காப்பியத்தை ஐந்திலக்கண நூல் எனக் பலர் தொல்காப்பிய பொருளதிகாரத்தில் உவமவியல், ந்திலக்கண நூல் எனவே கூறியுள்ளனர். எமக்கு }ந்திலக்கணங்களையும் தனித்தனியே கூறியுள்ள இது பொருள் இலக்கணத்தை இரண்டு பிரிவாக்கி புள்ளது. இலக்கண விளக்கம் பொருள் இலக்கணம் ட்டியல் எனப் பிரித்துக் கூறியுள்ளது, சாமிநாதம் Dழுமையும் வெளிவரவில்லை. தமிழ்நெறி விளக்கம் அகப்பொருள் இலக்கணம் மட்டுமே கிடைத்துள்ளது. ாணி முனிவர் இயற்றிய அறுவகை இலக்கணமும் க்கணமும் கூறியுள்ளது. இவற்றை அடிப்படையாக மாக விளங்கிக் கொள்வோம்.
கினும் எழுத்து வழக்கு அல்லது எழுத்து மொழி ]கின்றது. இதுபற்றி அதிகமான இலக்கண நூல்கள் தாற்றத்துக்கு அடிப்படையாக விளங்குவது பேச்சு கண நூல்கள் எழுத்துக்களைக் கூறும் போது டு, எனப் பலவாறாக விளக்கியுள்ளன. குறிப்பாக
33

Page 258
அவற்றின் வகை கூறும் போது முதல் எழுத் வினாவெழுத்துக்கள், முதல்நிலை எழுத்து, இறு எனப் பாகுபடுத்திக் கூறியுள்ள போதும் இவை வேறுபாடுகள் காணப்படுவதனை அவதானிக்க முடி தொகையும் மூன்று எனத் தொல்காப்பியம் கூற, ந வரி முன்னுற்றி அறுபத்தொன்பது என்றும் கூறியுள் வளருகின்ற மொழி என்பதோடு காலத்தின் சூழ்நி சில எழுத்துக்கள் வழக்கில் இடம்பெறுவதுமா விளங்கிக் கொள்ள வேண்டும் எனின் காலம் தே நோக்க வேண்டும்.
மொழியில் எழுத்துக்கு அடுத்தபடியாக சொல்ல "ஓர் எழுத்தாலாயினும் ஒன்றுக்கு மேற்பட்ட பல தருவதாகும் உ-ம் ஆ(பசு) ஓரெழுத்துச் சொல். சாதனங்களில் மொழியில் முக்கிய அம்சமாகத் திக விளக்கிக் கூறியுள்ளன. அவ்வகையில் வீரகே ஆராய்ந்துள்ளதோடு 17ம் நூற்றாண்டில் எழுந்த சொல்லிலக்கணம் பற்றியே விளக்கியுள்ளன. இவை வகை, அவற்றின் பயன்பாடு அவை கையாளப்ப வகைப்படுத்தி விளக்கியுள்ளன. சொற்கள் கூட பேச்சு, எழுத்து ஆகிய இருவழக்கிலும் அன் இருவழக்கிலும் சொற்பிரயோகம் வேறுபடுவதனை வழக்கிழப்பதைனையும், இடத்துக்கு ஏற்ப பயன்படுத்தப்படுவதனையும் காண முடிகின்றது. பிற ஈடுகொடுக்க வேண்டியுள்ளதால் தமிழ் இலக்கண
பொருள் இலக்கணம் எனும் போது முக்கியம் நூல் தோன்றிய காலம் முதல் அது தனியாக வளர எழுந்த இலக்கணநூலே இறையனார்களவியல் 6 “நம்பியகப் பொருள்” தோன்றியது. இதற்கு மு: பொருள் அமைந்த பாடல்களும் துறைகளை வி கோவையிலும் இவ்வமைப்பு காணப்படுகின்றது. தோன்றியது. பொருள் இலக்கணம் பற்றி ஆரம்பத் இலக்கண விளக்கம், முத்துவீரியம், வீரசோழிய களவியற் காரிகை என்பனவும் அகப்பொருள் இ போது புறப் பொருள் பற்றித் தோன்றிய நூல் என பன்னிருபடலமும் புறப்பொருள் இலக்கணம் கூறு தோன்றாமைக்குக் காரணம் தெரியவில்லை. காத அறிஞர்களிடையே தோன்றியிருக்கலாம் போலும்.
ஐந்து இலக்கணத்தில் அடுத்ததாக வைத்து எ யாப்பு என்கின்ற ஒரு மரபு வழக்கில் இருந்திரு இட்டுச் செல்வதற்கு யாப்பு இலக்கணம் முக்கி விரிவுடையதாக விளங்குவதால் அவர் காலத்திே வேண்டும் எனக் கருத இடமுண்டு. தொல்க புலவர் எனக் கூறுவது இதற்குச் சான்று. யாப்பிலக்கணம் செய்ததாக அறிய முடிகின்றது யாப்பருங்கலக் காரிகையும் தோன்றின. பாவிற் நூல்கள் தோன்றின. அவ்வகையில் மாறன் ப பரிமளம், திருவலங்கற்றிரட்டு என்பன குறிப்பிடத்

துக்கள், சார்பெழுத்துக்கள், சுட்டெழுத்துக்கள், திநிலை எழுத்து, இடைநிலை மெய்ம் மயக்கம் பற்றிய கருத்துக்களில் இலக்கண நூலாரிடையே கின்றது. உதாரணமாக சார்பெழுத்துக்களின் வகையும் ன்னூல் சார்பெழுத்தின் வகை பத்து எனவும் அதன் iளது. இதற்குக் காரணம் தமிழ்மொழி வாழுகின்ற நிலைக்கு ஏற்ப சில எழுத்துக்கள் வழக்கிழப்பதும், தம். எனவே எழுத்திலக்கணத்தைத் தெளிவாக Tறும் அதன் வரலாற்றை பல சான்றுகள் கொண்டு
விலக்கணம் முக்கியம் பெறுகின்றது. சொல் என்றால் t) எழுத்துக்களாலாயினும் ஆக்கப்பட்டு பொருள் ஆடு ஈரெழுத்துச் சொல். கருத்துத் தொடர்புச் ழ்வது சொல். இதுபற்றியும் பல இலக்கணநூல்கள் Fாழியம், நன்னூல், நேமிநாதம், என்பன விரிவாக பிரயோக விவேகம் இலக்கணக் கொத்து என்பன சொல் பற்றிக் கூறுகையில், சொற்பிறப்பு, சொற்களின் டும் போது பொருள் புலப்பாடு எனப் பலவாறாக கால ஓட்டத்தில் சில மாற்றங்களைப் பெறுகின்றன. று தொட்டு இன்று வரை பயிலப்பட்டு வரினும் நோக்க முடியும். அது மட்டுமன்றி சில சொற்கள் (பிரதேசத்துக்கு ஏற்ப) வேறு பொருளில் மொழிக் கலப்பு காரணமாக பிறமொழிச் சொற்களுக்கு மரபு மீறப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.
பெறுவது அகப்பொருள் இலக்கணமே. களவியல் த் தொடங்கியது. பொருளதிகாரம் கிடைக்காததால் என அந்நூல் கூறுகின்றது. கி.பி.17ம் நூற்றாண்டில் ன்பு தோற்றம் பெற்ற திருக்கோவையாரிலும் அகப் ளக்கும் பொருள்களும் காணப்படுகின்றன. பழனிக் 16ஆம் நூற்றாண்டில் “மாறன் அகப்பொருள்” தில் தொல்காப்பியம் கூறினாலும் அதைத் தொடந்து ம், தொன்னூல் விளக்கம், தமிழ் நெறி விளக்கம், லக்கணம் கூறியுள்ளன. புறப்பொருளை நோக்கும் “புறப்பொருள் வெண்பாமாலை” கூறப்படுகின்றது. |கின்றது. வேறு புறப்பொருள் இலக்கண நூல்கள் லும் ஆன்மீகமும் போதும் என்ற நிலை தமிழ்மொழி
ண்ணப்படுவது யாப்பிலக்கணம். ஆரம்ப காலங்களில் க்கலாம். இலக்கியங்களை ஒரு வரையறைக்குள் யமானதொன்று. தொல்காப்பிய செய்யுளியல் மிக லயே பலர் யாப்புப் பற்றித் தனியாக ஆராய்ந்திருக்க ாப்பியர் தனது நூலில் பல இடங்களில் ‘யாப்பறி தொல்காப்பியரோடு பயின்ற காக்கை பாடினியார்
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கலமும், கன்றி பாவகைகளுக்கு விளக்கம் அளிக்கச் சில ாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, பல்சந்தப் நக்கன. விருத்தப்பாவியல் என்ற நூல் வசனத்தில்
34

Page 259
விருத்தத்தை வடமொழி மரபு பற்றி ஆராயத் தெ நூலொன்றினைத் தண்டபாணி சுவாமிகள் “வண்ண கிபி 19இல் இயற்றப்பட்டதாகும். செய்யுள் இல நோக்கியும் இலக்கிய வழக்கில் இருந்து பேச்சு யாப்பு இலக்கணத்துக்கான முக்கியத்துவம் குறை எனலாம்.
அணி என்பது அலங்காரம் எனப் பொருள்படு சொல்லணி, பொருளணி என இருவகைப்படும் கொடுப்பதற்கும், ஓசைச் சிறப்பை ஏற்படுத்துவதற் அணிகள் பயன்பட்டன. செய்யுள் இலக்கியத்திலி வளர்ந்த காலத்திலும், பின்பும் உரைநடை இலக்கி அவதானிக்க முடிகின்றது. அணி பற்றி ஐந்திலக்க இயற்றிய தண்டியலங்காரம் இவ்விலக்கணம் பற் காப்பிய நூல்களும் பிற இலக்கிய மரபுகளும் தோன் முன்பு அணியியல் என்னும் பெயரில் நூல் ஒன் உவமைக்கு முதலிடம் கொடுத்தார். வீரசோழியமு அவற்றுக்கிடையே வேறுபாடுகளும் உண்டு. இலச் மாறனலங்காரம் 64 அணிகளைக் கூறியுள்ளது. முத் சந்திராபோகமும் அதன் உரையான குவலயானந்த விளக்கமும் அணி இலக்கணத்தை விளக்கி நிற்ப
ஐந்திலக்கணம் கூறும் மரபு தமிழிலே நீண்ட அதனாலேயே தொன்னூல் விளக்கம் என்ற குறிப்பிட்டுள்ளார் எனலாம். பிறநாட்டில் இருந் அறிஞரான அவருக்கு தமிழ் கற்பித்த சுட்பிரமணிய தீ வேண்டும். இவ்வாறு இலக்கணம் கற்பதும் எ என்னும் வழக்கம் அவர் காலம் வரை ஐந்திலக்கணமும் கூறாத இலக்கணக்காரர் கூட இலக்கணம் இலக்கியத்தை நயப்பதற்கு அனு ஐந்திலக்கண மரபு தோன்றுவதற்குக் காரணமா மேலைத்தேய இலக்கண காரரிடமும் காணப்பட்ட அதன் சிறப்புப்பாயிரத்தில் (“அரும்பொருள் ஐந்ை வேறு ஆதாரங்கள் இல்லை. நன்னூல் கான அவ்வுரையிலே “இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரமா தெரியவில்லை” என்று ஓர் அடிக்குறிப்புக் கொ இலக்கணச் சுருக்கத்தில் பொருள், யாப்பு, அணிய இலக்கண நூல் அமைப்புப் பற்றி கூறியுள்ள அ தொடர் மொழியதிகாரம் என மூன்றதிகாரங் மனங்கொளத்தக்கது.
ஆறுமுகநாவலர் தவிர உரைநடையில் இலக்கள் பின்பற்றியுள்ளமையை அறிய முடிகின்றது. “இ6 பெருமாளையர் ஐந்திலக்கணத்தையும் எடுத்துக் மட்டுமன்றி சாமிநாதமும் ஐந்திலக்கணங்களையும் அதிகாரமும் மூன்று மூன்று பகுதிகளாகப் பகுக்கப்ப தனித்தனியே கூறுகின்ற நூலாகும். தொல்காப்பி சொல், பொருள் என முப்பிரிவாலும் ஐந்திலக்க தொல்காப்பியம் என்றும் கூறுவர்.
18-CM 4658

5ாடங்கியது. வண்ணங்களின் இலக்கணம் கூறும் த்தியல்பு” என்னும் பெயருடன் செய்தார். இந்நூல் )க்கியத்தில் இருந்து உரைநடை இலக்கியத்தை வழக்கை நாடியும் இலக்கியம் செல்கின்ற போது வடைந்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது
ம். தமிழ் மொழியைப் பொறுத்தவரை இவ்வணி செய்யுள் வழக்கிலே செய்யுளுக்கு அழகைக் கும், அதன் மூலம் இலக்கியத்தை இரசிப்பதற்கும் ருந்து உரை நடை இலக்கியம் நோக்கி இலக்கியம் யத்திலும் அணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளமையை ண நூல்கள் கூறியுள்ளன. மேலும் தண்டியாசிரியர் றி விளக்கிக் கூறியுள்ளது. இந்நூலைப் பின்பற்றி றியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நூலுக்கு று இருந்தது என்பர். தொல்காப்பியர் இயலில் ம் தண்டியலங்காரமும் 35 அணிகள் பற்றிக் கூறினும் 5கண விளக்கம் தண்டியலங்காரத்தைப் பின்பற்றியது. துவீரியம் 58 அணிகளைக் கூறியுள்ளது. வடமொழிச் மும் 100 அணிகள் பற்றிக் கூறியுள்ளன. தொன்னூல் து குறிப்பிடத்தக்கது.
வரலாற்றைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. நூலிலே ஐந்திலக்கணத்தையும் வீரமாமுனிவர் து தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் கற்றுத் தமிழ் பக் கவிராயர் ஐந்திலக்கண மரபிலேயே கற்பித்திருக்க ழதுவதும் தான் முறையானதும் முழுமையானதும் தமிழ் அறிஞரிடையே நிலவியிருக்க வேண்டும். ஐந்திலக்கணமே சிறப்புமிக்கது எனக் கூறியுள்ளனர். நுசரணையாக அமைவது என்னும் கோட்பாடே க அமைந்திருந்தது என்பர். இத்தகைய மரபு டது. நன்னூல் ஐந்திலக்கணம் கூறும் நூல் என தையும் யாவருமுணர.”) கூறப்பட்டாலும், அற்கான ண்டிகை உரையைப் பதிப்பித்த ஆறுமுகநாவலர் க விளங்கும் இப்பாடல் யார் இயற்றியது என்று டுத்துள்ளார். அது மட்டுமன்றி அவர் எழுதிய பிலக்கணம் பற்றி யாதுமே கூறவில்லை. ஆனால் அவர் “அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், களாக வகுக்கப்படும்’ என்று கூறியுள்ளமை
ணச் சுருக்கம் எழுதிய சிலர் ஐந்திலக்கண மரபினைப் லக்கணச் சுருக்க வினாவிடை’ எழுதிய விசாகப் கூறியுள்ளமை நோக்கத்தக்கது. வீரசோழியம் தனித் தனியே கூறுவதோடு இதில் ஒவ்வொரு ட்டுள்ளன. முத்து வீரியமும் ஐந்திலக்கணத்தையும் பத்தைப் போன்று இலக்கண விளக்கமும் எழுத்து, ணம் கூறுகின்றது. இதனால் இதனைக் குட்டித்
35

Page 260
இவ்வாறாக தமிழ் மொழியில் ஐந்திலக்கண மரபு அவற்றின் முக்கியத்துவமும், முக்கியத்துவம் இன் ஒவ்வொரு இலக்கணமும் தனித்தனி ஆய்வுக்கு உ இம்மரபு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எது எ ஓரளவேனும் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. தற்காலத்தில் எழுத்து, அதிகம் காணப்பட்ட போதிலும் பொருள், யாப்பு காலத்தின் தேவையை ஒட்டிக் குறைவாகவே கா
உசாத்துணை நூல்கள்
1. இலக்கண வரலாறு — (BLIJFTóffuufT (83 TLD ||
2. இலக்கண வரலாறு - புலவர் இரா இள 3. தமிழ்மொழி இலக்கண இயல்புகள் - பேர
米米米米、
米米米冰米米米米米米米米米米米
米米米米米来来来米
கெட்ட எண்ணங் நல்ல எண்ணங்கை
பகைவனது பகைை தோழனது அன்பை நிை நீக்க விளக்கைக் கொண்
இரத்தவோட்டமில் அழுகிப்போய் பலர்க்கு சன்மார்க்கநெறி நில் துன்பஞ் செய்கின்றான்.
N

பு காணப்பட்ட போதிலும் காலத்தின் தேவைக்கேற்ப மையும் தெரிகின்றது. பொதுவாக நோக்கும் போது ரியவை. இக்கட்டுரையில் மிக மிகச் சுருக்கமாகவே வ்வாறெனினும் தமிழ்மொழி அறிவை முறையாக ) எனின் ஐந்திலக்கணமும் தெரிந்திருக்க வேண்டும் சொல் பற்றிய கற்கையும் ஆய்வு முயற்சிகளும் , அணி பற்றிய இலக்கண ஆய்வு முயற்சிகள் ணப்படுகின்றன எனலாம்.
இளவரசு எழுதியது. ங்குமரன் எழுதியது. ாசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ் எழுதியது.
长米米米米米米
米米米米米米米来米米米米米米米米米
米米米米米米米米米米米
ത്ത
களைப் போக்குவதற்கு ள எண்ணுவது வழி. மயை மறப்பதற்குத் 0ணப்பது வழி. இருளை ண்டு வருவதுதானே வழி?
ஸ்லாத உடல் பிணமாய்
ம் தீங்கு தருவதுபோலச் லாதவனும் பிறர்க்குத்
HY
36

Page 261
பழை
“பாட்டுக் கொரு புலவன் ப பாட்டுக்கு இவனென்பன் u
எனப் பண்டிதமணி கணபதிப் பிள்ளை ஏ.பெரியதம்பிப்பிள்ளையவர்களின் கவின்தகள் அ வாழ்வின் திடீர்த் திருப்பங்களாலும், தொடர்பு கொ: இலக்கியப் பரீட்சயத்தாலும், பாரதி போன்றவர்க சமூக அரசியற் பிரச்சனைகளாலும் உருவாச் பலதரப்பட்டவை. அவற்றில் பல்வேறு கருத்து மதித்தாரோ அதுபோலவே புதுமைக் கருத்துக்களி கவிதைகள் மூலம் அறியலாம். பழந்தமிழ் இ6 ஆங்காங்கு வெளிப்பட்டு நிற்கின்றன. பழந்தமிழ் ஒரு தனிச் சிறப்பைத் தந்துள்ளது. பழைமை வ சிகரமாகிய பகவத் கீதையை யாத்துக் கொடுத் கூட முற்பட்ட இலக்கியங்களைப் பின்பற்றியுள்ள
மட்டக்களப்பு தமிழகத்திலே குறிஞ்சி, முல்லை, L அவர் பாடியுள்ள
“ திருவளர் தாமரைத் தென உருவஒண் சிறாஅர் மலர செழுநீர்ப் பறவைத் தொகு கொழுமடற் தெங்கிற் குய
என்னும் பாடல் சங்கவிலக்கியச் செய்யுட்களை கொண்டுள்ளதைக் காணலாம். இப்பாடலடிகள் “தட்டை” என்னும் கருவியை ஓசைப்படுத்த, நிலத்திலிருந்தும், நெய்தல் நிலத்திலிருந்தும் ஒரு புறநானூற்றிலே வருகின்ற
“ புனவர் தட்டை புடைப்பி 6 இறங்குகதிரலமரு கழனி பிறவிரு நீர்ச் சேர்பினும் பு
என்ற செய்யுளை ஒத்தமைவதைக் காணலா

மைக்கும் புதுமைக்கும் பாலமமைத்த
கவிஞன் ஏ.பெரியதம்பிப்பிள்ளை
திருமதிகிசண்முகநாதன் B.A.(dipins)Dip.in. Edu. ஆசிரியை, மகாஜனாக் கல்லூரி
மட்டக்களப்பு
ாரதி என்றாரொருவர் ான்.”
யவர்களால் பாராட்டப் பட்ட புலவர் மணி 4னைத்தும் அவரது வாழ்க்கை அனுபவத்தாலும், ண்ட பெரியவர்களது நட்பின் விளைவாலும், பழந்தமிழ் ளின் புதுமைக் கருத்துக்களாலும், வாழ்ந்த காலச் கப்பட்டவையாகும். அவர் பாடிய பாடல்கள் க்கள் சிதறிக் கிடக்கின்றன. பழைமையை எவ்வாறு லும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்ததை அவரது 0க்கியப் பற்றும், பயிற்சியும் அவரது கவிதைகளில் இலக்கியச் செல்வாக்கு அவரது கவிதைகளுக்கு ாய்ந்த யாப்பு வடிவமான வெண்பாவிலே சிந்தனைச் த புலவர்மணியவர்கள் சொல்லிலும் பொருளிலுங் TT.
0ருதம், நெய்தல் ஆகிய நானிலங்களும் மயங்குவதாக
ர்ணிர்ப் பொயிரைவாய் ாய்த் துழக்கலின் நதி ஆர்த்தெழுந்தே லொடு பயிலும்”
யொத்த சொல்லாட்சி நயமும், செட்டான உருவமும்
கிளிகளைத் துரத்துவதற்காக பயிருக்குரியவர்கள் அவ்வோசையினால் வெருண்ட பறவைகள் மருத தங்கே பறந்து செல்கின்றன என்னும் பொருள் தரும்
Fuj6)g
quid ர்ளொருங்கெழுமே.
s
37

Page 262
புறநானூற்றுப் பாடல்களில் அரசனை வாழ்த்து கொண்டு சேர்க்கும் மண்ணிலும் பல நூற்றாண்டுக இத்தகைய வாழ்த்தினைப் புலவர்மணியவர்களு போதெல்லாம் கையாளுகின்றார்.
“மட்டக்களப்பு நீள் வளவ நெல்லிலும் பொலிக நல்
எனப் புலவர்மணி வாழ்த்தும் பாடலடிகள், சங் வளத்தையும் சுட்டுவதாக அமைந்துள்ளன.
1949இல் பசுமைப் புரட்சிக்காக நீர்வளம் அத்திட்டத்திலே ஈடுபாடு கொண்டு “வாழி கல்லே சில பாடல்களைப் பாடினார். அப்பாடல்கள் பழந் பாடல்களை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன
“பாடும் புகழ்சேர் இனியர பாங்கே வாழி கல்லோய
என்ற அப்பாடலடிகள்
“மங்கை மாதர் பெருங்கற் றறிந்தேன் வாழி காவேரி.
எனவரும் சிலப்பதிகாரப் பாடலடிகளை ஒத்து
யாழ்ப்பாணம் நாவலர் சைவப்பிரகாச வித்திய போடப்பட்ட பொன்னாகத் திகழ்ந்த புலவர்மணி, நா விளங்கினார். நாவலர் பெருமானின் திருவுருவச் அவர் பாடிய நாவலர் வாழ்த் துப் பாடல நோக்கத்தக்கவையாகவே அமைந்துள்ளன.
“செந்தமிழின் திருவுருவோ பெருவாழ்வோ சமயப் பே கற்றனென வந்த சைவத்
என்று நாவலரை சூரனை அழித்த கந்தனாக UTL9 uu UTL6b
“கற்பகத்தின் பூங்கொம்பே பொற்புடைய புண்ணியத் விற்குவளை பவளமலர் ப அற்புதமோ சிவனருளோ
எனப் பரவையாரின் அழகை வியந்து சுந்தரர் அமைப்பைக் கொண்டிருப்பதைக் காணலா புலவர்மணிக்கிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்து
மட்டுநகள் தந்த மாமணி சுவாமி விபுலாநந்தர் மதத்தில் சேர்ந்திருந்த பெரியதம்பியைத் தடுத்த

D பாடல்களில் பொதுவாகப் புலவர்கள் “கடலானது ள் வாழ்வாயாம்” என வாழ்த்துவதைக் காணலாம். }ம்; தம் கவிதைகளில் சான்றோரை வாழ்த்தும்
யற் காய்ந்த யாண்டு பலவே”
கவிலக்கிய மண்ணை, நெல்லாக்கி மட்டக்களப்பின்
பெறக் கல்லோயாத் திட்டம் ஆரம்பமாகியது. ாயா நவீனர்’ என்ற தலைப்பிலே புலவர்மணியவர்கள் தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தின் கானல்வரிப்
து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
ாசாலைக் காவியப் பாடசாலையில் படித்துப் புடம் வலர் மீது ஆழ்ந்த ஈடுபாடும் பற்றுங் கொண்டவராக சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது ல்களும் பழந் தமிழ் இலக்கியத் தோடு ஒப்பு
சிவநெறியின் ாரில் தளபதியோ.99
5வும், சைவம் காத்த தளபதியாகவும் உருவகித்துப்
ா காமன்தன் பெருவாழ்வோ தின் புண்ணியமோ புயல் சுமந்து )திபூத்த விரைக்கொடியோ
לל
அறியேன்.
அதிசயிப்பதாகப் பாடப்பட்ட பெரியபுராணப் LITL656T ம். இது பழந்தமிழ்ப் பக்தியிலக்கியங்களில் கின்றது.
புலவர்மணிக்கு ஏழாண்டு மூத்தவர். கத்தோலிக்க ாட்கொண்டு மீண்டும் சைவத்துக்குத் திருப்பியவர்.
238

Page 263
விபுலாநந்தரைத் தமது வ்ழிகாட்டியாகவும் குருவா வந்தார். தமது குருவாகிய விபுலாநந்தர் நெருப்பு மனமுருகி இறைவனிடம் வேண்டி பாடிய பாட “விபுலாநந்த மீட்சிப்பத்து” என்னும் அக்கவிதைச அடியொற்றிப் பாடப்பட்டுள்ளதைப் பாடல்களைப்
“சீரேறும் தமிழறிவார்க்க தெருட்டும் புதுமைக் கபி பாரேறும் புகழாளன் மீள் பன்மொழி விபுலாநந்தன்
எனவரும் மீட்சிப் பத்துப் பாடலடிகள்
“அன்பன் அமுது அளித்து ஆனந்தன் வான் வந்த ே நல் பொன்மணிச் சுவடு ஒ நல் பரிமேல் வருவானை கொம்பின் மிழற்றும் குயி கோகழிநாதனைக் கூவ
என இறைவனை வாழ்த்தி மாணிக்கவாசகர் பாடலடிகளுடன் பொருந்தி வருவதைக் காணலாட்
கிழக்கிலங்கைக்குச் சிறப்புச் சேர்க்கும் இடங்களி வெந்நீரூற்றுகள் விஞ்ஞான ரீதியாகவும், சமய ரீதிய ஒரு பெண்ணாக உருவகித்து, அப்பெண்ணுடன் உ அமைந்த சில பாடல்களைப் புலவர்மணியவர்கள் அப்பாடல்களும் திருவாசகப் பாடல் அமைப்பைக்
“சாதி பேதம் பாராதே
சமமா யெவரும் உனைத் ஏதுக் கலங்கா திருப்ப ெ இயம்பாய் கன்னியாய்த் ஏதுக் கலங்கா திருப்பதிங் எல்லாவுயிரும் சமமென்ே ஒதும் படைப்பின் ஒருமை உணர்த்தும் முண்மை நி
எனவரும் கன்னியாய்த்திரு பாடல்கள் திருவாக
“பூசுவதும் வெண்ணிறு Ա6 பேசுவதும் திருவாயால் ப
பூசுவதும் பேசுவதும் பூண் ஈசனவன் எவ்வுயிர்க்கும்.
என்ற கேள்வியும் விடையுமாக அமைந்த தி காணலாம்.
மட்டக்களப்புச் செங்கலடிப் பிரதேசத்தின் அ6 தலம். வனப்பு மிக்க இயற்கையழகுடன் விநாயகர்
23

கவும் கொண்டு, பிற்காலத்திலே புலவர்மணி ஒழுகி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட போது, அவருக்காக ல்கள் மீட்சிப்பத்தாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ள் பல்லவர்கால இலக்கியமான திருவாசகத்தை டிக்குந்தோறும் அறிந்து கொள்ளலாம்.
ங்கில நூற்சுவையினிதுரட்டித் லன் கலியுக தெய்வ அகத்தியனாம் கெனக் கூவாய் பைங்குயிலே வாழ்கெனக் கூவாய் பைங்குயிலே”
ஊறும் தவன் }த்த
95.
(86lo
o
TUL
குயிலிடம் வேண்டுகோள் விடுக்கும் திருவாசகப் О.
லொன்று திருகோணமலை. அங்குள்ள கன்னியாய்
ாகவும் புகழ்பெற்றவை. கன்னியாய் வெந்நீரூற்றை
உரையாடுந் தன்மையில் கேள்வியும் விடையுமாக
"கன்னியாய்த்திரு” என்ற தலைப்பில் பாடியுள்ளார்.
கொண்டுள்ளன.
} 5(Լք6\l
நன்னே
திருவே
கே
D
நிலை லை கண்டீர்.
99
கத்தில் வரும் கேள்வியும் விடையுமாக அமைந்த
*பதுவும் பொங்கரவம் றைபோலுங் காணேடி பதுவும் கொண்டென்னை இயல்பானான் சாழலோ”
ருச்சாழல் பாடலமைப்பைக் கொண்டிருப்பதைக்
மையில் அமைந்துள்ளது காளிகாமடு என்னும் பீற்றிருக்கும் இத்தலம், பழம் பெருமை வாய்ந்தது.

Page 264
பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்களும் மகிழ மரங்களும் சூழ இயற்கை நீர்நிலையொன் மடுத் திருத்தலத்தைப் பற்றிப் புலவர்மணியவர் நினைவூட்டுகின்றன.
“இனத்துடனே மந்திகளு தினப்பூசை கண்டு குரு வனப்பமையும் ஆல்வே
என காளிகாமடுவின் இயற்கையழகைச் சுட்டும் அழகைக் காட்டும்
“ வலம் வந்த மடவார்கள்
மழையென் றஞ்சி சிலமந்தி யலமந்து மர திருவையாறே.
என்ற பாடலடிகளுடன் ஒப்புநோக்கத் தக்கத தினப்பூசை கண்டு பிரசாதம் உண்டு அழகிய மரங் வாத்தியத்தின் ஓசையை இடியோசையென நிை பார்க்கின்றன. இரு பாடல்களிலும் இயற்கையழ
மீன்பாட, அரிவையர் மிடற்றொலியால் குரவை மட்டுநகள் பற்றிப் புலவர் மணியவர்கள் பல பாட கவிதைகளிலே வற்றாத வளமாகவே பேசப்படுகி
“:மான்பாயும் வனத்திலே 1 மதர்களிறின் முதுகில் ம ஊன்பாயும் உதிரத்தில் : உயிரனைய மட்டு நன்ன
6T6örg L6)6) fro60ci LJTL9 uu UTL6)
‘மானாடும் துறைகளிலே பு மந்தியினம் மரக்கொம்பில்
என்று குற்றாலக் குறவஞ்சியிலே குறத்திமலை பொருந்தக் கூடியதாக வந்துள்ளதைக் காணலா புலவர்மணிக்கிருந்த ஈடுபாட்டையே இது காட்டு
தமிழ் இலக்கிய வரலாற்றிலே நாயக்கள் &5T6 காலம். இக்காலப் புலவர்களின் சொத்தாகிய புலவர்மணியவர்கள் தமது கவிதைகளிலே கைய
“ கோயில் நிலங்கொடு
வாயிலிடும் வண்ணக்கு விழாதோ சுற்றம் மிடிய தாழாதோ தெய்வமிரு
என்னும் பாடல் வண்ணக்குமாரின் ஊழலுச் கோயில் நிருவாக சபை உறுப்பினர்களை “வண்

2, நீண்டுயர்ந்து செழித்த ஆல், வேம்பு, மா, அரசு, றையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் காளிகா கள் பாடிய பாடல்கள், சம்பந்தரின் பாடல்களை
ம் ஏறியிருந்தின்பமுடன் ப்பிரசாதம் உண்டுலவும் பம்பு மாவரசு மகிள்மருதம்.
99
பாடல்கள், சம்பந்தரின் திருவையாறு திருத்தலத்தின்
ர் நடமாட முழவதிர
மேறி முகில் பார்க்கும்
ாக அமைந்துள்ளன. காளிகா மடுவிலே மந்திகள் களிலே வீற்றிருக்கின்றன. திருவையாற்றிலே முழவு னைத்து உயர மரங்களிலே ஏறி மந்திகள் முகில் கு பக்தியுடன் இணைத்து நோக்கப்படுகின்றது.
பயிட, பாலோடு தேனாறு பாய்ந்தோடும் நன்னாடாம் ல்கள் பாடியுள்ளார். மட்டுநகரின் வளம் அவரது ன்றது.
மகவு கொண்டு ந்திபாயும் மக்கள் தமிழும் பாயும் ா டென் தாய்நாடே”
Dயிலினங்களாடும்
மகிழ்ந்து விளையாடும்.
y
நாட்டு வளம் கூறுவதாக அமையும் பாடலடிகளுடன் ாம். குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கியங்களில் கிென்றது.
லம், பல வகையான இலக்கிய வடிவங்கள் எழுந்த வசைக் கவிகளையும், சிலேடைகளையுங் கூடப் பாளத் தவறவில்லை.
ந்து குத்தகையை வாங்கித்தம் குமார் தலைமேல் - போயிடிதான்
பும் பிணியுமுற்றுத் ந்தால்.”
குச் சாபமிடும் வசைக் கவியாக அமைந்துள்ளது. ணக்கள்” என்று அழைப்பது மட்டக்களப்பு மரபாகும்.
240

Page 265
புலவர்மணியவர்களின் தந்தையும் ஒரு வண் குத்தகைக்குக் கொடுத்து அப்பணத்தை தம் வாயில என விரும்பும் புலவர்மணியின் நேர்மையும் இப்பா
அக்காலத்திலே யாழ்ப்பாணத்தில் தமிழ்ெ அம்மகாநாட்டுக்குத் தலைமை தாங்க வரும்படி L கையிலே பணமில்லாத புலவர்மணி, தமது ஓய்வூத கேட்டார். அதிகாரியோ மறுத்து விட்டார். இச்ச கிடைத்து விட்டது.
* சட்டமுடன் மனிதத் தன் சிட்டர் பதவிதனைச் சே எருமையவனுக்கெவரு அருமை யறியானவன்'
என அதிகாரியைக் கயவன், எருமை என் அனைவருக்கும் அறிவு புகட்டும் கவியாகவும் அை வசைப்பாடல் அமைப்பையும் கொண்டுள்ளது.
விவசாயத்துறை அதிகாரியாகவும், புலவர்ட ஏ.எம்.ஏ.அசீஸ் அவர்களாகும். அசீஸ் அவர்களி உள்ளத்தைப் பறிகொடுத்த புலவர்மணி, நெல்லை சிறந்த சிலேடை வெண்பா ஒன்றையும் தந்துள்ளா
“ புலத்துயர்ந்து வண்மை நிலத்ததிகாரஞ் செய்து நல்ல களம் பொலிந்து நெல்லும் அசீஸ் துரைக்
புலத்துயர்தல், புகழ்க்கதிர் வீசுதல், அதிகாரம் தொழில்களால் நெல்லையும், அசீசையும் ஒன்று வல்லதாகும்.
புலவர்மணியவர்களின் பகவத்கீதை வெண்பா பரக்கக் காணலாம். சைவசித்தாந்த சாத்திரங்கள், ! திருக்குறள் போன்ற இலக்கியங்களின் செல்வாக்கு, பாடலுக்குத் தனிச்சிறப்பைத் தருகின்றது.
“ஒன்றேயாய் வெவ்வேறு நின்றதெல்லாம் தாங்கி துடைப்பது மாயெல்லா படைப்பது மாயுள்ள தது
என்று நன்றாய், பலவாய் விளங்கும் பரம்பொரு
"அவனேதானே ஆகிய அ ஏகனாகி இறைபணி நிற் பலமாயை தன்னோடு வி
என்னும் சூத்திரப்பொருளைக் கொண்டு விளங்குெ ஞானயோகத்திலே அவர் பாடிய
2

னக்கர். இருந்த போதும் கோயில் நிலத்தைக் டும் வண்ணக்கள்மார் தலையில் இடி விழ வேண்டும் டலில் காட்டப்படுகின்றது.
மாழி சார்ந்த மகாநாடு ஒன்று நடைபெற்றது. லவர்மணியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. யத்தை ஒரு நாள் முந்தித் தரும்படி அதிகாரியிடம் ம்பவத்தால் நமக்கு ஒரு அருமையான வசைக்கவி
மை யறியாக் கயவன் ாந்தாலென் - முட்டும்
மொன்றே பெரியோர்
று வசை பாடிய பாடல், மனிதத் தன்மையற்ற மந்துள்ளது. அதோடு நாயக்கள் காலப் புலவர்களின்
Dணியின் நெருங்கிய நண்பராகவும் விளங்கியவர் ன் நற்பண்பிலும் அவரது செயற்பாடுகளிலும் தமது யும் அதை விளைவிக்க வந்த அசீசையும் ஒப்பிட்டு Fr.
ப் புகழ்க் கதிர்கள் வீசி
நின்று-பலத்தினிறை நாடு புரத்தலால் க்கு நேர்”
} செய்தல், களம் பொலிதல், நாடு புரத்தல் ஆகிய படுத்திப் பாடிய இச்சிலேடை நயம் மகிழ்வூட்ட
க்களிலும் பழந்தமிழ் இலக்கியச் செல்வாக்கைப் நிருவாசகம், தாயுமானவர் பாடல்கள், கந்தப்புராணம், பகவத்கீதை வெண்பாவிலே ஆங்காங்கே அமைந்து
டற்கண் பலவே போல் நிறுத்தியே - என்றும் ம் துடைத்தே பின்மீளப்
99
LITT.
|ள் பற்றிய வெண்பா, சிவஞானபோதத்திலே வரும்
ந்நெறி
ல்வினையின்றே”
தைக் காணலாம். இதைப் போலவே பகவத்கீதை
41

Page 266
“அறியாமை யாமிருளில் குறியாமே தர்மமெனக் ெ எல்லாம் தலைகீழ் எதிர்ம பொல்லாத தாமத புத்தி”
கந்தபுராணத்தில் வருகின்ற
“அவனியிலறமெல்லாம் பலவினை யறமென்றே
எனவரும் பாடலடிகளின் பொருளைக் கொண்
தாயுமானவரின் பாடல்களிலும் புலவர்மணிய கீதை வெண்பாக்களிலே பலவிடங்களில்
“வேறுபடுஞ் சமயமெல்ல விளங்கு பரம்பொருளே மாறுபடுங் கருத்தில்லை
என்ற தாயுமானவரின் பாடலை அடியொற்றிய முற்பட்ட இலக்கியங்களின் செல்வாக்கு அவரின் வழங்கியது போலவே, நவயுகத்துக்குரிய புதுமைக் துணை புரிந்துள்ளன.
புலவர்மணியவர்கள் வாழ்ந்த காலம் மதத்தே காலம். அக்காலத்திலேயே அவர் சமூக சீர்த விளங்கினார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் க காலத்தில் இந்து வாலிப சங்கத்தின் அங்கத்தவர விளங்கியவர் தாழ்த்தப்பட்ட குலமொன்றில் பிறந்த கொண்டதை இந்து வாலிப சங்கத்தினர் அனைவரு கைவிடவேயில்லை. அந்த நட்பினூடாகவே சா அவரிடமிருந்து வெளிப்பட்டன எனலாம்.
“ஒழுக்கத் துயர் குலமாய் இழுக்கத் திழிகுலமா ெ நாற்குலத்தை யெல்லா மேற்குலத்தனானான் வி
என்று ஆறுமுகம் இறந்த போது புலவர்ம6 பெரியவர்களைக் கொதித்தெழச் செய்ததால் அ ஆனால் இதற்கெல்லாம் பயப்படாத புலவர்மனி கருத்துக்களை சேர்த்துக் கொண்டார். நவயு ஈடுபாடும் அச்சமின்றிக் கவிதையெழுத அவரு மொழிப்பற்று, சுதந்திரம், தேசியம், தீண்டாமை, இன பாரதியை அடியொற்றியே அவர் பாடியுள்ளார். அ இராஜதுரோகமாகக் கருதப்பட்ட காலத்திலேே

ஆழ்ந்த தர்மம் தன்னை காண்டு - நெறிமாறி ாறாகக் காணுமே
என்னும் வெண்பா
அடிதலை தடுமாறிப் பற்பலருஞ் செய்ய.95
டிருப்பதைக் காணலாம்.
வர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பகவத்
ாம் புகுந்து பார்க்கின்
நின் விளையாட்டல்லால்
D. . . . . . . . . . . . . . . .
பல பாடல்கள் காணப்படுகின்றன. இத்தகையப் கவிதைகளுக்குத் தனித்துவத்தையும் சிறப்பையும் கருத்துக்களும் அவரது கவிதைகளை மெருகூட்டத்
ாடு மதமும் குலத்தோடு குலமும் மோதிக்கொண்ட Sருத்தக் கருத்துக்களில் நாட்டங் கொண்டவராக ல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக அவர் கடமையாற்றிய ாகச் செயற்பட்டார். அப்போது அவருக்கு நண்பராக 6 ஆறுமுகம் என்பவராகும். ஆறுமுகத்துடன் நட்புக் ம் எதிர்த்த போதும் அந்நட்பைய் புலவர்மணியவர்கள் தி, சமயம் பற்றிய பல சீர்த்திருத்தக் கருத்துக்கள்
) ஓங்கு புகழுண்டாம் Dன்றே-விழும்பத்து ம் நுணுகியறிந்தாறுமுகன் ரைந்து.”
ரி பாடிய பாடல், இந்து வாலிப சங்க மேற்குலப் வரைச் சங்கத்திலிருந்தே விலக்கி விட்டார்கள். ரி தனது கவிதைகளில் மேலும் பல சீர்திருத்தக் க் கவிஞன் பாரதி மீது அவர் கொண்ட பற்றும், கு கைகொடுத்தன. சமுதாய சீர்திருத்தத்தோடு, வொற்றுமை போன்ற பல்வேறுபட்ட கருத்துக்களைப் பூங்கில ஆட்சிக்கு எதிராகப் பேசுவதும் எழுதுவதும் ப (1938ல்) ஈழகேசரி ஆண்டு மலரில்
242

Page 267
“இலங்கை மணித் திருநா இனிய உணர்ச்சி பெற்றா
என்ற பாடலைத் துணிவுடன் எழுதித் தேச கவிஞனாக அவர் காணப்படுகின்றார். பாரதியின்
“வாழ்க தமிழ்மொழி
என்னும் பாடலின் மெட்டினை அடியொற்றி, g
“ வாழ்க இலங்கை ம வாழிய வாழியவே
வாழ்க சுதந்திரம் வ மணிக்கொடி வாழிய
என்ற சுதந்திர கீதத்தைப் பாடியுள்ளார். மட்டு வாழ்கின்றார்கள். ஒருவருக்கொருவர் உதவி வாழு இருக்கவில்லை. இவ்வொற்றுமை குறித்துப் புல
“இதயத்தின் ஈ.ரிதழ் ே ஒரு வயிற்றுப் பாலகர்
என்னும் பாடல் பாரதி
“இந்திரன் வச்சிரம் ஓர் எங்கள் துருக்கர் இள
எனவரும் பாடலடிகளை ஞாபகப்படுத்துகின் மணி கொண்ட ஈடுபாட்டையே இது காட்டுகின்றது யுகம் ஒன்றைப் படைக்கத் துடித்த பாரதிபோலவே,
“பாட்டிலே பொய்க் கதைக பழைய மூடப் பழக் வீட்டிலே சாதிபேதம் விரும் வெளியுளோர்க்குச் ஈட்டிலே பிறர் தம்பொருளிட் ஏழை மக்களின் நல நாட்டிலே பயிர் கொடுமைச நன்கு தோன்றும் சு
என்ற பாடல் சமூகத்தின் வேடதாரிகளை இன புலவர்மணி பாடிய பாடல்களில் ஒன்றாகும். சீர்தி கவிதைகளில் மேலோங்கி நிற்கின்றது.
“ தீப்போற் கொதித்தெழுந்
தியாகம் பல புரிந்து மீட்போமென்றாணையிட் வீரத் தமிழர்களே காப்போம் எழுந்திடுவீர் - காப்போம் எழுந்திடுவீர்”

டெங்கள் நாடே - இந்த ல் இன்பவிடே.”
ய இனவொற்றுமையை வலியுறுத்திய புதுமைக்
வாழிய வாழியவே”
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது
Eத் திருநாடு
ாழிய அன்னை (36'
நகரிலே தமிழரும் முஸ்லிமும் இணைந்து நெருங்கி }ம் அவர்களிடம் இனமத பேதங்கள் அக்காலத்தில் வர்மணி பாடிய
பால இங்கு தமிழ் முஸ்லீம்
போலுள்ளோம்”
யின்
ர் பால் - அதில் ம்பிறை ஓர் பால்”
றன. பாரதியின் புதுமைக் கருத்துக்களில் புலவர் . சமூகச் சீர்கேடுகளை வேரோடு களைந்து புதிய புலவர்மணியும் சீர்திருத்தங்கள் செய்யத் துடித்தார்.
f பாராட்டுதால் கங்கள் போற்றுதல் புதல் சமபுத்தி போதித்தல் -டுதல் ன்பர்கள் யாமெனல் 3ள் நீங்கிட தந்திரன் வாழ்கவே.”
ங்காட்டிச் “சுதந்திரன் வாழ்த்து’ என்ற தலைப்பில்
ருத்தக் கருத்துக்களோடு மொழிப் பற்றும் அவரது
(6
நம் தாய்மொழியைக்
43

Page 268
எனத் தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காக்க, L பாரதியை விட ஒரு படி மொழிப்பற்றில் மேலே ே பற்று, ஏனைய மொழிகளுக்கோ இனங்களுக்கோ அது ஒற்றுமை மிகுந்த சமுதாயம் ஒன்றை கட்டி மந்திரம் உச்சரிப்போம்” என்று தலைப்பில் அ போன்றவற்றையே அவர் சாடுகின்றார்.
“பிரிவினைப் பேயைக் கொ பேராசைப் பகையை வெல்
- என்று தொடங்கும் பாட
“ஆதிக்க வெறிபிடித் த6ை சாதித் திமிர் கொண்டெை பாதித் தநீதிசெய்தார்ப் பரி சேதித்தே படித்தலைகள் (
எனவரும் அடிகள் சமூக அநீதிகளைக் களை காணப்படுகின்றன. அவரது எக்கவிதையை எடுத்தா புதுமைக் கருத்துக்களையும் பரவலாகக் காணலா
எளிமை, இனிமை, கருத்துச் செறிவு மிக்க ஏ.பெரியதம்பிப்பிள்ளையவர்கள் பழைமைக்கும் புது மொழிப்பற்று, இனவொற்றுமை, சாதியொழிப்பு, போன் பொருந்தக் கூடியன. மதம், மொழி, இனம் எனப் சமுதாயமொன்றை உருவாக்க அவர் காலமெல்லா ஈழநாட்டு மக்களின் மனதிலே ஒரு தாக்கத்தை ஏற்ப புதுமையும் கலந்த இக்கவிஞனின் இலக்கியங்களு இடமுண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது.
米米米米米米米壮
米米米米冰米米米米米米米米米米米米米米米状
米米米米米米米米米米米米米米壮
இவ்வுலகில் அை ஒன்றே. அது சத்தியமு கொண்டு, பொய்யரிடமுt வெறுப்பின்றி அன்புடன்
 
 
 
 

க்களை ஆவேசம் பொங்க அழைக்கும் புலவர்மணி, ாய் விடுகின்றார். தாய்மொழியில் அவர்கொண்ட நீங்கு விளைவிப்பதாக அமையவில்லை. மாறாக பழுப்பும் உணர்வாகவே அமைந்தது. “ஒற்றுமை மைந்த பாடல்களில் சாதித்திமிர் அதிகாரவெறி
)லுவோம் - நாட்டில் லுவோம் .
லிலே
)க்குதே யொருதலை மத் தடுக்குதே யொருதலை க்குதே யொருதலை சமமுற வுலகம் வாரீர்”
ய விரும்பும் புலவர்மணியின் எண்ணச் சிதறலாகக் லும் அதிலே பழந்தமிழ் இலக்கியச் செழுமையையும் ம்.
பல பாடல்களை எமக்குத் தந்த புலவர்மணி மைக்கும் பாலமாக விளங்குகின்றார். நாட்டுப்பற்று, றவை பற்றிய அவரது பாடல்கள் எக்காலத்துக்கும் பிரிந்து கிடந்த ஈழமக்களை ஒன்றுபடுத்தி ஐக்கிய ம் பாடுபட்டார். அவரது இலக்கியப் பங்களிப்புகள் டுத்தினவென்று நிச்சயமாகக் கூறலாம். பழைமையும் ருக்கு ஈழத்து இலக்கியப் பரப்பிலே ஒரு முக்கிய
米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米冰冰米
米米米米米米米米米米米米米米
டயக்கூடிய மேன்மை ம் நடுவு நிலைமையும் ) அநீதி செய்பவரிடமும் நடந்து கொள்வதே.

Page 269
நானிலம் புகழ் சே நாமகள் தாய் பாவளம் தனைச் சே பாடலில் கரு
குருவின்றிக் கற்ற க குவலயம் ஆ திருவின்றி வாழ்ந்த செல்வத்துக்
சிந்திய வர்ணம் சே சித்திரம் வை சிதறிய பாடம் கோர் சாத்திரம் செ
காலங்கள் விரைந்: கல்வியோ க சீலங்கள் நிறைந்த தரணியில் த
வாதங்கள் செய்து
பாலங்கள் ே பேதங்கள் மறந்து 6 வேதத்தைக்
米米米米米米:
米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米冰

கல்விச் செல்வம்
வாசுகி - குணரத்தினம்
ர்க்கும் - எங்கள்
வாழியவே ர்த்து - எங்கள் வூட்டுகவே!
ல்வி - எங்கும் ண்டதுண்டோ போதும் - கல்வி கு ஈடு உண்டோ!
ர்த்து - அழகு ரந்ததுண்டோ ாத்து - நல்ல
ய்வதுண்டோ!
து செல்லும் - கற்ற ரையை மிஞ்சும் வாழ்வை - கல்வி ந்து நிற்கும்!
வெல்ல - கல்வி பாட்டுச் செல்லும் வாழும் - புது காட்டிச் செல்லும்!
k米米米米米米米米
米冰米米米米米米米米米米米米米冰冰米
米米米米米米米米米米米水
245

Page 270
இந்திய சாஸ்திரீய மரபிலே தோன்றி வளர்ந்த தமிழர்களுடைய பண்பாட்டுடன் இணைந்து வளர்
பரதநாட்டியம் பண், இரதம் (சுவை), தாளம், 6 பாவம், இராகம், தாளம் எனும் முக் கலைகளை சான்றோர். எவ்வாறு யார் கூறினும் இசை, தாளம் என்பதும், இசையும், தாளமுமே அதன் இன்றிய6
தேவர்கள் பிரம்மாவிடம் சென்று நான்கு வேதங் வேதமாக நாட்டிய வேதத்தினை ஆக்கித் தருமாறு வேதத்திலிருந்து - நாட்டியத்தினையும், யசுர்வே, இயல்புகளையும் அறம், பொருள், இன்பம், வீடு பய
சிவபிரான் ஆண்களுக்குரிய தாண்டவத்தை உண்டாக்கினர். பின்னர் இந்நடனத்தைப் பரத பாணனுடைய மகள் உஷைக்கு லாஸ்யத்தைக் இடையப் பெண்களுக்குப் போதித்தாள். இப்படிய வரப்பட்டது என வரலாறுகள் கூறுகின்றன.
வரலாறுகள் தோன்றும் முன் அதாவது உலகி முகக்குறி, கைக்குறிகளாலும் , உறுப்புக்களா வெளிப்படுத்தினான். அந்த வெளிப்பாடாகப் ப வளர்ந்து, அபிநயங்கள் நிறைந்த பரதக் கலையாக ஆடலும், பாடலும் இணைந்து, பிணைந்து வளர்ந் நடனக்கலையை இன்னும் மெருகூட்டின. செ இசைக்கேற்ப ஆட்டங்களும் இயற்கையாக உன
சங்ககாலத்திற்குப் பின்னால் கி.பி. 2ம் நூற்றா சிலப்பதிகாரத்தைக் கூறுவர். மாதவி பரம்பை ஒன்று வேத்தியல் (ஆடல்கள்), மற்றையது பெ சாதாரண மக்களிடம் கிராமிய இசையாக நின்று அது உயர் இசையாக வளர்ந்துவிட்டமையைச் பேணுகின்ற ஒரு குழாம் உருவானமையும், அதை இ சங்கீதம் நுணுக்கமாக வளர வழி வகுத்தன. பரதநாட்டியம் தோன்றியிருக்க முடியும் என்ற சே

பரதநாட்டியத்தில் இசையின் பங்கு
செல்வி குணரத்தினம் பாரதி
சில நடனங்களுள் பரத நாட்டியமும் ஒன்று. இது ந்து வரும் ஒரு கலையாகக் கணிப்பிடப்படுகின்றது.
ானும் முக்கூறுகளை உள்ளடக்கியது என்றும், அது உணர்த்தும் என்றும் வெவ்வேறு வகையில் கூறுவர் , மெய்ப்பாடு ஆகிய மூன்றும் விரவியது பரதநாட்டியம் மையாத கூறுகளாகும்.
களைப் போலன்றி யாவற்றிற்கும் பொதுவான ஐந்தாம் வேண்டிக் கொண்டதற்கிணங்க, பிரம்மாவும் இருக்கு தத்திலிருந்து - நவரஸத்தினையும் எடுத்து இதிகாச க்கவல்ல நாட்டிய வேதத்தினையும் உருவாக்கினார்.
யும், பார்வதி பெண்களுக்குரிய லாஸ்யத்தையும் முனிவருக்குக் கற்பித்தனர். ஆனால் பார்வதி, கற்றுக் கொடுத்தாள். உசுைஷ துவாரகையிலுள்ள ாக நடனக் கலையானது பூலோகத்திற்குக் கொண்டு
ன் மொழி தோன்றும் முன்னமே ஆதிகால மனிதன் லும், தன் உணர்வுகளையும், கருத்துக்களையும் Tவங்களே தனிக்கலையாகப் பிற்கால கட்டத்தில் ப் பரிணமித்தது. எனவே தொல்பழங் காலந்தொட்டு து வந்துள்ளது. பின்மொழியும் , இசையும் சேர்ந்தே ால்லிற்கேற்ப கைக்குறிகளும், கண் அசைவுகளும், TLTug01.
ண்டில் அல்லது 5ம் நூற்றாண்டில் எழுந்தததாகச் இரண்டு விதமான ஆடல்களை ஆடுகின்றனர். துவியல் (மயக்கும் கூத்து). நடனமும் இசையும் விட, பணமும் செல்வாக்கும் மிக்க உயர்ந்தோரிடம்
குறிக்கின்றது. தொழில் முறையாக இசையைப் ரசிக்க அறிவுமிக்க இரசிகர் அவை உருவான்மையும், இத்தகையதொரு சிறப்பான பாரம்பரியத்திலே தான் ாட்பாடு எழுகின்றது.
46

Page 271
எனவே இக்காலத்திலிருந்தும் இதற்குப் பிற்ட எவ்வாறு பங்கு கொண்டது என்பது பற்றிக் கால
பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பல இை “இசைச்சங்கமம்’ என்றும் சொல்லலாம். இத அரங்கேற்றத்தை எடுத்துக் கொள்ளலாம். யாழு கூடி இசைத்தன. இதற்குப் பின்வரும் சிலப்பதி
“யாழும் குழலும் சீரும் மிட தாழ்குரல் தண்ணுமை ஆ இயைந்த பாடல் இசையுட
இந்த இசையில் மிடற்றிசை, நரம்புக் கருவி தோற்கருவியிசை ஆகிய 5 வகை இசையும் இடை தாளமுறை, ஆகியவற்றிற்கு ஏற்ப "செவ்விய பணி கூறுகின்றது.
இடைக்காலமான சோழர் காலத்தில் இராஜர நாட்டியத்தில் இசையின் பங்களிப்பைய் பின்வரு மண்டபங்கள் அமைக்கப்பட்டு அங்கு 400 பெண் ஈடுபடுத்தினான். இம் மகளிர் நிகழ்த்திய ஆ பேராசான், நட்டுவ ஆசான் என்றழைக்கப்பட்ட என்றழைக்கப்படும் காற்றுக் கருவியிசையாளரையு மத்தளவிசையாளரையும் பணியிலிருத்தி, ஆடற்க மன்னன் வழிக்கோலினான் என்றும் அறிகின்றோட்
பிற்காலத்தில் பழங்காலம் முதல் ஆடலையும், வழிவழி காத்து வந்த பரம்பரையில் சிறப்பிடம் அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவான ஆவர். இதன் பின்னர் பரதநாட்டியத்தில் ஒ( அவை பின்வருமாறு அமைகின்றன.
மேளப் பிராய்தி தோடய மங்களம் துதிப்பாடல் அலாரிப்பு மல்லாரி புஸ்பாஞ்சலி கவுத்துவம் ஜதீஸ்வரம்
இவற்றில் சில உருப்படி வகைகள் மறைந்தும் கையாள்வதையும் நாம் காணலாம்.
மேற்கூறிய இவ்வுருப்படிகளின் வழியாக இை
மேளப் பிராய்தி என்பது பரதநாட்டிய அரங் இசைவகையாகும். சங்கீதகலாரத்னா மைசூர் வே சில ஜதிகளைக் கையிலுள்ள தாளத்தைத் அதைத்தொடர்ந்து மிருதங்க வித்வான் நட்டுவ6

பட்ட காலப்பகுதிகளிலும், பரதநாட்டியத்தில் இசை ப்பாகுபாடு செய்து நோக்குதல் வேண்டும்.
சயாளர்களின் திறமைகள் ஒருங்கிணையும் ஓர் ற்கு உதாரணமாகச் சிலப்பதிகார மாதவியின் நடன ம் குழலும், தாளமும், தண்ணுமையும் - பாடலோடு காரப் பாடல் சான்றாகின்றது.
றும் டலொடு - இவற்றின் டன் படுத்து’
யிசை, காற்றுக் கருவியிசை, கஞ்சக் கருவியிசை, பந்தன. இவை Iவகை ஆடலுக்குரிய பாடல்வகை, ண்ணிசையில்’ இசைத்தனர் என்றும் சிலப்பதிகாரம்
ாஜ சோழன் காலக் கல்வெட்டு (984-1014) ஒன்று, நமாறு கூறுகின்றது. தஞ்சைப் பெருங்கோயிலில் களைக் குடியமர்த்தி இசை, நடனம் ஆகியவற்றில் டல்களுக்குத் துணை செய்யும் முகமாக நட்டுவப்
நட்டுவ நெறியாளர்களையும், “வாத்திய மராயர்’ ம், கொட்டி மத்தளம் வாசிப்பவர் என்றழைக்கப்பெற்ற bலையும், ஆடலிசை முறையையும் மரபுவழிக்காக்க
D.
அதனொடு தொடர்புடைய ஆடல், இசை மரபினையும் பெற்றவர்கள் தஞ்சை நாட்டியச் சகோதரர்கள் என ந்தம், வடிவேலு ஆகிய நால்வர் 19ம் நூற்றாண்டு ரு ஒழுங்கில் சில உருப்படிகள் ஆடப்படுகின்றன.
* ஜப்தம்
பதவர்ணம் ماله பதம் கீர்த்தனை ஜாவளி தில்லானா விருத்தம் குறத்திப் பாடல்
火
சில உருப்படி வ்கைகளைப் புதியதாகவும் தற்போது
சயின் பங்கினை நோக்குவோம்.
க நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இடம்பெறும் ஓர் பங்கலக்சர்மா பின்வருமாறு கூறுகின்றார். நட்டுவனார்
தட்டியவாறு 2,3 நிமிடங்களுக்கு இசைப்பரர். னாரின் ஜதிக் கோவைகளோடு இணைந்து வாசிப்பர்.
247

Page 272
தொடர்ந்து 23 நிமிடங்கள் இருவரும் சேர்ந்து வ இம் மேளப்பிராய்தி நாட்டிய அரங்குகளில் அருகி
ஆடல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நாட்டியம் ஒருவகைப் பாடல் தோடய மங்களம் எனப்படுகின் கண்டஸாபு தாளத்திலும் அமைந்திருக்கும்.
மல்லாரி - நாட்டிய நிகழ்ச்சியில் அலாரிப்பு இது கோயில்களில் பெரியமேளம் வாசிக்கும் ஓர் ஆகியவை சேர்ந்திருக்கும். கம்பீரநாட்டை இர தாளநடைகளுக்கமைய வேறுபட்டிருக்கும்.
நாட்டிய அமைப்பிலும் இசையமைப்பிலும் அல அடவுகளும், இசையில் அதற்கான சொற்கட்டுக்க கம்பீரநாட்டை இராகத்திலும், திஸ்ரம், சதுஸ்ரம், க காணப்படுகின்றன. அருணகிரிநாதரின் திருப்புகழ் இசையாகப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்க
ததீம்தக ததிம்தக ததிம்தக ததிம்தக
தனாதன தனாதன தனாதன தனாதன
நிராமிய புராதன பராபர வராம்ருத -
புஸ்பாஞ்சலி நாட்டிய நிகழ்ச்சியின் தொடக்கத்தி கூடிய ஆடலாகும். இவ்வுருப்படிக்கான இசை போன்ற சொற்கட்டுக்களைப் பாடகர் இசைகூட் துதியாக 4 வரிப் பாடலொன்று தாளக் கட்டுப்பாடில் தாளத்துடன் பாடுவர். நாட்டை, ஹம்சத்வனி ஆகி காணப்படும்.
கவுத்துவம் பொதுவாக ஒரேயமைப்பில் இருச் இறுதியில் சொற்கட்டுமாகக் காணப்படும். கவுத் இடமிருப்பதில்லை. கணஇராகங்களிளலும் ( மங்களகரமான இராகங்களிலும், ஆதி, சதுஸ்ரகே
ஐதிக்கூர்வைகளாலும், ஸ்வரக்கோவைகளாலும் வகைக்குரியது. பெரும்பாலும் கமாஸ், கல்யாணி, பூர்விகல்யாணி, வசந்தா ஆகிய இராகங்களிலும், இவ்வுருப்படி விறுவிறுப்பாக அமைகின்றது. இரா
சொற்கட்டும், பாட்டும் சேர்ந்த ஓர் இசைவை ஏற்ற உருப்படி. பாடலுக்கு முன்னும், பின்னும் ெ திரிபுட, துருவ எனப் பல்வேறு தாளங்களிலும், க சில ஸப்தங்கள் இராகமாலிகையாகவும் பாடப்படு
பதவர்ணம் ஆடலுக்கென்றே அமைந்த உ சொற்கட்டுக்கோவை இடம்பெறும். பல்லவி, சொற்கட்டுக் கோவைகள் அமையும். பின்னர் இவ்வுருப்படி ஸ்வரமும், பாடலுமாக அமை நாட்டைக்குறிஞ்சி, நீரஞ்சனி, போன்ற வேறு பல இவ்வுருப்படி அமைந்துள்ளது.

ாசித்தபின் ஒரு முத்தர்ய்ப்பு வைத்து முடிப்பார்கள். யே காணப்படுகின்றது.
ஆடுபவரும், பக்க இசையாளரும் சேர்ந்து பாடும் 1றது. இது பெரும்பாலும் நாட்டை இராகத்திலும்,
இடம்பெறுவதற்கு முன் ஆடப்பெற்று வருகின்றது. இசையாகும். நாதஸ்வரம், ஒத்து, தவில், தாளம் ாகத்திலும், சதுஸ்ரம் கண்டம், மிஸ்ரம் முதலான
ாரிப்பு தனித்தன்மை வாய்ந்தது. நாட்டியத்தில் - ளும் இந்த உருப்படியில் முதன்மையாக உள்ளன. ண்டம், மிஸ்ரம், சங்கீரணம் ஆகிய பஞ்சநடைகளில் pப் பாடல்கள் அலாரிப்பு நடனத்திற்குப் பின்னணி ாட்டாக
ஐதி
சநதம
UTL6).
1ல் ஆடப்படுகின்றது. இது நிருத்தமும், அபிநயமும் தனிப்பட்டது. “தக்கு தோங்கா - திக்கு தோங்கா’ டிப் பாடுவர். அதனைத் தொடர்ந்து இறைவன் bலாது சுத்தாங்கமாகப் பாடியபின், பண்ணாங்கமாகத் ய இராகங்களிலும், ஆதி தாளத்திலும் இவ்வுருப்படி
கும் முதலில் சொற்கட்டும் தொடர்ந்து பாடலும், துவங்களில் இசைவிரிவாக்கத்திற்கு (சங்கதிகள்) நாட்டை, ஆரபி, இராகம், கெளளை, வராளி) ம் ஆகிய உரிய தாளங்களிலும் அமைந்திருக்கும்.
) ஜதிஸ்வரம் அமைகின்றது. இவ்வுருப்படி திருத்த ஸாவேரி, தோடி, அடாணா, சரஸ்வதி, ஹம்சானந்தி, ரூபகம், ஆதி, மிஸ்ரஸாபு போன்ற தாளங்களிலும் கமாளிகையில் அமைந்த ஜதீஸ்வரங்களும் உண்டு.
5 ஸப்தமாகும். திருத்தத்திற்கும், அபிநயத்திற்கும் சாற்கட்டுக்கள் இடம்பெறும். ஆதி, ரூபக,ஜம்பை, ாம்போதி இராகத்திலும் இவ் உருப்படி அமையும். Iம்.
ருப்படியாகும். பல்லவியில் ஓரடி பாடியபின் அனுபல்லவியின் ஒவ்வோர் பாடல்வரி முடிவிலும் முக்தாயி ஸ்வரத்தின் ஸ்வரங்களும் பாடப்படும். பும். திருத்தமும், அபிநயமும் செய்யப்படும். ) இராகங்களிலும், ரூபகம், ஆதி, தாளங்களிலும்

Page 273
இசையுருப்படிகளில் ஒன்றான பதம், நாட்டிய அமைகின்றது. இதற்கு நுட்பசுவை கொண்ட ரச் புன்னகவராளி, தன்யாஸி, மத்யமாவதி, ஆஹிர் கேதாரகெளளை, ஸஹானா, சுருட்டி, மோகனம், யது தேவகாந்தாரி, பேகட, அடாணா, பிலஹரி, வரா: ஆதி, அட, திரிபுட ஆகிய தாளங்களிலும் அமை
நாட்டிய நிகழ்ச்சியில் பக்திச் சுவைக்குக் சொற்கட்டுக்களையும், பல்வேறு இராகங்களை காணப்படுகின்றன. பாடலில் ஒரு பகுதி முடுகின் சிட்டைஸ்வரம் எனும் இசையணி கொண்ட கீர்த்த: போன்ற சகல இராகங்களிலும், ஆதி ரூபக, ஸாபு
நாட்டிய நிகழ்ச்சிகளில் இறுதிப் பகுதிகளில் விழ இராகமும், தாளமும் மிக்க கவர்ச்சியாகத் தில்ல சங்கராபரணம், கேதாரகெளளை போன்ற பழமைய பெரும்பாலும் ஹிந்துஸ்தானி இசைக் கலப்புடைய க பூரணசந்திரிகா, திலங், பரசு, சிவரஞ்சனி, தேகூழ், பெடி ஆதி, ரூபகம், மிஸ்ரஸாபு, கண்டஸாபு ஆகிய தா
பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் இசைக்கருவிகளும் தாளவாத்தியம் நட்டுவனாரின் நட்டுவாங்கத் பக்கப்பாட்டுக்காரர், கருவியிசையாளர்கள் ஆகியோ எனும் வாத்தியம் மல்லாரிக்குப் பயன்படுத்தப்படுகி பக்கபலமாக அமைகின்றது.
பொதுவாக நாட்டிய நிகழ்ச்சிகளில் ஒன்பது வித பக்கஇசை வாத்தியக்காரர்களும் (வயலின், புல் இராகங்களைக் கையாள்தல் வேண்டும். எடுத்து மாஞ்சியும், ஹாஸ்யத்திற்கு - காம்போஜி, காபி, ம பைரவி, பெஹாக் இராகங்களும், பயானகத்திற்கு மோஹனம், பிலஹரி, கேதாரகெளளையும், ரெளத்ரத்த - நாட்டை, வராளி இராகங்களும் சாந்தத்திற்கு பயன்படுத்துவர்.
மேலும் பரதநாட்டியத்தில் சஞ்சாரி பாவங்களும் கொடுக்கப்படும். இந்நேரத்தில், மிருதங்கம், வயலி பாத்திரத் தன்மைக்கேற்பவும் இசை வாத்தியங்கள் பாத்திரத்திற்குப் - புல்லாங்குழல் பயன்படுத்துத நெறிப்படுத்தும்போது தபலா, கிளரினெட், ஒர்கன், ட்ர பயன்படுத்துவதும் நாம் அறிந்ததே.
எனவே நாட்டியம் இல்லாமல் இசை தனித்து நடனத்தைத் தனித்து நோக்க முடியாது. நாட்டிய புலமை பெற்றிருத்தல் வேண்டும். நடனத்தி அமைந்திருப்பதனால், நடனத்திற்கு எவ்வாவகையிலு
米米米米米米米米米>
冰冰冰冰冰米米米米米米米米米米米冰冰冰米:
米米米米米米米冰米米米冰冰米米
2.

த்தில் அபிநயத்திற்கு முதன்மைதரும் ஒன்றாக தி இராகங்களே உகந்தவை ஆகின்றன. தோடி, , பைரவி, ஆனந்தபைரவி, முகாரி, காம்போதி, குலகாம்போஜி, சங்கராபரணம், நவரோஜ், நீலாம்பரி, ரி, கல்யாணி, போன்ற இராகங்களையும், ரூபகம், ந்திருக்கும்.
கீர்த்தனையை அபிநயம் செய்வது வழக்கம். ங் கொண்ட இராகமாலிகைக் கீர்த்தனைகளும் சையில் (மத்திமகாலம்) அமைந்த கீர்த்தனைகள் னைகளும் காணப்படும். ஆரபி, கல்யாணி, நாட்டை , திரிபுட தாளங்களிலும் அமைந்திருக்கும்.
நுவிறுப்பாக அமையும் உருப்படி தில்லானா ஆகும். ானாவில் காணப்படும். ஆனந்தபைரவி, பூபாளம், ான இராகங்களில் தில்லானாக்கள் இருப்பினும் ானடா, காபி, ஸாரங்கா, மதுவந்தி, யமுனா கல்யாணி, ஹாக், வசந்தா, ஹம்சானந்தி ஆகிய இராகங்களிலும் ளங்களிலும் இடம் பெறும்.
) முக்கிய பங்கு வகிக்கின்றது. மிருதங்கம் எனும் 3திற்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும், ருக்கும் மிக முக்கியமாகக் காணப்படுகிறது. தவில் ன்றது. வயலின் வாத்தியக்கருவி, பாடுபவருக்குப்
மான ரஸங்களும் வரும். அதற்கேற்ப பாடுபவரும், லாங்குழல், வீணை) அந்த ரஸபாவத்திற்கேற்ப க்காட்டாக, கருணை ரஸத்திற்கு உசேனி, பைரவி, த்தியமாவதியும், அற்புதத்திற்கு - ஹரிஹாம்போஜி, நாதநாமக்கிரியை, புன்னகவராளியும் வீரத்திற்கு - நிற்கு - அடாணா, ஆரபி, மோஹனமும், பீபத்சத்திற்கு
- சாமா, சிந்துபைரவி போன்ற இராகங்களையும்
5கு இசைக்கருவிகளை வாசிப்பதற்குச் சந்தர்ப்பம் லின் போன்ற இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும். பயன்படுத்தப்படும். உதாரணமாகக் கிருஸ்ணன் ல், புதிய வடிவங்களாக நாட்டிய நிகழ்ச்சிகளை 0ஸ் போன்ற மேற்கத்தைய இசைவாத்தியங்களையும்
இசைக்கப்படலாம். ஆனால் இசையில்லாமல் க் கலைஞனும் இசைக் கலையில் சிறிதளவேனும் தில் பலவிதமான பார்வைகளுக்கேற்ப இசை ம் இசையின் பங்கு முக்கியமாகக் கருதப்படுகின்றது.
米米米米米水米米米
米米米米米米米米米米米米米米米米米米米米
k冰冰米米米米米米米米米冰冰米
9

Page 274
உசாத்துணை நூல்கள்
1. டாக்டர் - ஞானாகுலேந்திரன் - பரத இை 2. பஞ்சாபகேச அய்யர் - கர்னாடக சங்கீத
சென்னை. − 3. மெளனகுரு . சி. கலை இலக்கியக் கட்
கொழும்பு. w 4. விபுலானந்த இசை நடனக் கல்லூரி "சுரு
உடல்வலியையும் கொள்வோமாயின், வந்தெய்தும். தீரபுரு விசாரணை உரியதெ கீதையிலே கூறி மறவாதிருப்போமாக. ெ காரணம் . அச் சம் உதிக்கின்றது. அறிவெ நீங்கும். அச்சம் நீங்கே

சைமரபு - 1994 - அமுத அச்சகம் - மதுரை. சாஸ்திரம் - 1986 - பொன்னொளி அச்சகம்
டுரைகள் - 1997 - குமரன் புத்தக இல்லம்
தி” இதழ் - 1991, 1998, 1999.
மனவலியையும் பெருக்கி
ஆன் மலாபம் தானே ஷனுக்கே ஆத்மஞான நனக் கண்ணபகவான் ய உறுதிமொழியை வலியின்மைக்கு அச்சமே
அறியாமையினின்று ாளி பரவுமாயின் அச்சம் வ வலிமை வந்தெய்தும்.
50

Page 275
பொதிய மலையில் பொ புலவர் தொல்காய் துதிக்கும் மன்னர் துணைய
துடிப்பாய்ச் சங்க நதியெனத் தமிழகம் நடை
நாவலர், பாவலர் பதியென முருகனை மனதி பதமாய்ச் சங்கப் ப
அள்ளும் அறநெறி அமை; அன்புடன் பணிவுை உள்ளம் நிறைந்திட உயர்த்
உணர்வும் ஓங்கிட வெள்ளம், வெப்பம் வீழ்த்தி வீறுண்டு வித்தகம் கொள்ளக் குறையாது கொ குறைவிலாச் செல்
தேனினும் இனிய தெய்வத் திரித்து விபுலன் து ஆனின் பாலை அமிழ்த்தி
அமுதமா யெங்கும் கோனாய்த் தமிழ்த்தினம் கு குலவி வருவாய் த வானின் பரவிய வண்ணத்
வசந்தம் பாடினோ
米米米米米米米米 *:::::::k:k:k-k-k-k-k-k-k-k-k-k-k-k
米米米冰米米米米米米米壮
19-CM 4658

வளராய் உயிரே!
ØBDITIT. áőtt562ż6ØOIL Îb776OD677 (B.A) காரைதீவு
லியப் பிறந்து பியன் மனையில் புகுந்து பினை விளைந்து மடியிலே தவழ்ந்து யும் பயின்று நாதமாய் உறைந்து லே பணிந்து லகையில் பதிந்தனை
த்தார் வள்ளுவர் ர சூடினார் ஒளவை ந்தினார் கம்பள் உதவினார் இளங்கோ தினர் சமயகுரவர்
விதைத்தார் காளமேகம் டுத்தார் கூத்தர் வம் குவித்தார் பாரதி.
திருமகளே துதித்த முத்தமிழே 1 j ğfi6O)6) j(8u
நுழைந்தவளியே நவலயம் மேவி நாயகம் தரவி தமிழே ம் வளராய் உயிரே!
米米米米米米来米
米米米米米米米米米米米米水冰水米米米
<水冰米米米米米米米米米

Page 276
É பகற் கனவு கான்கிறாய். உன் கனவு இச்சொற்றொடர்கள் தமிழர்களின் பேச்சில் அடி இளைஞர்கள், முதியோர்கள் மட்டுமன்றி சின்னஞ் கண்டு அழுவதையும் சிரிப்பதையும் காண்கிறோம். கனவுக்கு காரணம் கூறுவதுண்டு. இளம் வயதில் வேண்டும், பணம், புகழ் வேண்டும், செல்வாக்கு, ஆ வாழ்க்கைத் துணை அமைய வேண்டும், சாதன காண்பதுண்டு. பகற் கனவு பலிக்காது என்று கூறு தோன்றுகிறது. கனவுகள் தோன்றுவதற்கு உளவி ஆன்மீகவாதிகள் எதிர்கால வாழ்வில் தீர்க்க தர் பண்பட்ட முறையில் பல்லாண்டுகள் வாழ்ந்த தமி ஆதாரமாகக் கொண்டு 'கனவு நூல்’ என்று ஒரு நு பலன் என்று ஓர் பகுதி பிரசுரிக்கப்படுகிறது. கனவிே எதிர்காலத்தில் நல்ல காரியங்கள் அல்லது கெட் தமிழ் இலக்கியங்களிலும் திரைப்படம், தொலைச் இடம் பெற்றுள்ளதைக் காண்கின்றோம்.
‘போகாதே போகாதே என் கணவா பொல்ல பெண்ணொருத்தி மாடு பிடி சண்டை அல்லது விர வாழும் மத யானையொன்று வந்து நாதா நம் வி என்கிறாள், விராடன் மனைவி சுதர்க்கனை. வெடியரசனுடைய மனைவி நீலகேசி;
‘மாலை பாம்பாகவும் கண்டேே மயிர் விரித்து அழக் கண்டே6ே சேலை எரியவும் கண்டேனே-எ சேனை அழியவும் கண்டேனே - என்று தன் கனவைச் சொல்லுகின்றாள்.
சுன்னாகம் வரதபண்டிதர் எழுதிய 'பிள்ளையா அரசன் கனவு கண்டதாகக் கூறப்பட்டுள்ளது. அ விரதம் நோற்பதற்கு, காப்புக் கட்டிய பின் விரதம் கொடியின் மீது எறிகிறாள். இதனால் கோபம் தோன்றி அவளை வெளியே துரத்தி விடுமாறு சு துரத்தி விடுகிறான். வசுபூதி என்னும் காந்தரூப அழகிய அரச குமரனைக் கண்டாள். தோழியாகிய அவன் நாகலோகத்து நாகராஜன் மகன் இரத்தின பலாத்காரமாக இவளைத் தூக்கிச் செல்கையில் இ திருமணம் செய்தான்.
25

கனவுகளே கனவுகளே.
திரு. ஆ. அரசரெத்தினம்
களுதாவளை களுவாஞ்சிக்குடி.
பலிக்காது. என் கனவு நிறைவேறி விட்டது. 2க்கடி சொல்லப்படுவதைக் கேட்க முடிகிறது. சிறு குழந்தைகளும் நித்திரையின் போது கனவு நரி வெருட்டுகிறது’ - என்று சிறு குழந்தைகளின் படிக்க வேண்டும், பட்டம் பெற வேண்டும், பதவி ஆட்சி, அதிகாரம் என்பன பெற வேண்டும், நல்ல னைகள் புரிய வேண்டும் என்று கனவுகள் பல to போது இரவுக் கனவு பலிக்கும் என்ற எண்ணம் யலாளர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர். சன நிகழ்வுகளாக கனவுகளைக் கருதுகின்றனர். ழர்கள் தமது வாழ்க்கையில் கண்ட கனவுகளை 1லை ஆக்கியுள்ளனர். பஞ்சாங்கத்திலும் கனவின் ல காண்கின்ற காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு ட காரியங்கள் நிகழும் என அனுமானிக்கின்றனர். 5காட்சி என்பவற்றிலும் கனவு பற்றிய காட்சிகள்
ாத சொர்ப்பனம் கண்டேனையா” - என்கின்றாள் Tட பருவம் என்னும் நாட்டுக் கூத்திலே ‘காட்டில் ட்டின் எதிரே கையை நீட்டி அழுததே மன்னா'
ன-நானும்
D
s
ா’ கதை என்ற நூலிலும் விக்கிரமாதித்தன் என்ற ரசனின் மனைவி இலக்கணசுந்தரி விநாயகள் சட்டி முடியும் முன் அக்காப்பைக் கழற்றி கொவ்வைக் கொண்ட விநாயகர் விக்கிரமாதித்தனின் கனவில் டறியதைக் கனவு கண்டு, அவ்வாறே அவளைத் ன் மகளான இரத்தினாவலி என்பவள் கனவிலே சந்திரலேகை சித்திரித்துக் காட்டிய சித்திரத்தால் சூடன் என அறிந்தாள். சுவா என்னும் அரக்கன் இரத்தினகுடன் அரக்கனைக் கொன்று இவளைத்

Page 277
வாணாசூரன் மகளாகிய உசுைஷ என்பவள் கன6 தோழியாகிய சித்திரலேகை என்பவள் வரைந்து மகனும் கண்ணனின் பேரனுமாகிய அநிருத்திரன் என் அநிருத்திரனை நித்திரையாக இருக்கும் போது க கதை உண்டு. வாரணம் சூழ வரிசங்கம் நின்றுத ந சுடர்க்கொடி கோதை எனும் ஆண்டாள் கனவு கண் கூறுகின்றன.
சிறையிருந்த சீதைக்கு துணையிருந்த திரிசை சீதையிடம் கூறுகிறாள்.
"துயிலிலை ஆதலினால் க அயில் விழி ஒரு கனவு அ பயில்வன பழுது இல பரிவி வெயிலினும் மெய்யன வி: பிடி மதம் பிறந்தன பிறங்கு இடி என முழங்குதால் இர தடி உடை முகில் குலமI வெடி பட அதிருமால் உதி
மன்னவன் தேவி அம்மயன் மடந்தை தன் பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன துன்னரும் சுடர் சுடச் சுறுக் கொண்டு ஏறிற்றால் இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே -’
இவ்வாறு கனவுகள் தொடர்கையில் தேனிலே சிலப்பதிகாரமதை இயற்றிய இளங்கோவடிகள்,
“அரைசியல் பிழைத்தோருக் உரைசால் பத்தினிக்கு உய ஊழ்வினை உருத்து வந்து சூழ் வினை சிலம்பு காரண சிலப்பதிகாரமெனும் பெயர நாட்டுதும் யாமோர் பாட்டுை
கண்ணகை, கோவலன், மாதவி, பாண்டியன், ரெ சேரன் செங்குட்டுவன் என்போரை முக்கிய கத தொடர்கிறது. சிலம்பிலே கண்ணகையும் கனவு க இளங்கோவடிகள் பின்வருமாறு கூறுகின்றர்.
கடுக்கு என் நெஞ்சம் கனவி பிடித்தனன் போயோர் பெரு பட்ட பதியிற் படாததொரு இட்டனரூரார் இடுதேளிட் கோவலற்குற்றதோர் தீங் காவலன் முன்னர் யான் கட்
பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி கண் இளங்கோவடிகள் பின்வருமாறு விளக்கமாக விய
مه

விலே அழகிய இளைஞனொருவனைக் காண்கிறாள். காட்டிய ஓவியத்தின் மூலம் அவன் பிரத்யும்நன் ன்பதை அறிகிறாள். அதிமாயாவியான சித்திரலேகை ட்டிலோடு தூக்கி வந்து உசுைஷயிடம் சேர்த்ததாக ாராயணன் தன்னை கைப்பிடித்ததாக சூடிக்கொடுத்த டாள். இவை கனவினால் நடந்த திருமணங்களைக்
ட தனது உறக்கத்தில் கண்ட கனவை இவ்வாறு
னவு தோன்றல் மைய நோக்கினேன் ன் ஆண்டன ளம்பக் கேட்டியால் பேரியும் ாட்டல் இன்றியே ன்ெறிதாவில் வான் திரும் மீன் எலாம்
ஊறிய செந்தமிழின் சுவை தேரும்
கு அறங் கூற்றாவதும் பர்ந்தோர் ஏத்தலும் ஊட்டும் என்பதுாம் DITE5
ால் டைச் செய்யுள்’-என்றார்.
நடுஞ்செழியன், கோப்பெருந்தேவி, பொற்கொல்லன், ாபாத்திரங்களாகக் கொண்டு சிலப்பதிகார கதை ண்டாள். அதை கனாத்திறம் உரைத்த காதையில்
னால் என் கை ம்பதியுட் பட்டேம்
வார்த்தை
டென்றன் மேல் கென்றது கேட்டு டுரைத்தேன் - என்கிறார்.
ட கனவை வழக்குரை காதை என்ற பகுதியில் ரிக்கிறார்.
53

Page 278
"ஆங்குக் குடையொடு ே கடைமணியன் குரல் கான
"செங்கோலும் வெண்குை செறிநிலத்து மறித் நங்கோன்றன் கொற்றவா மணிநடுங்க நடுங் இரவு வில்லிடும் பகன்மீன இரு நான்கு திசை வருவதோர் துன்பமுண்டு
தான் கண்ட கெட்ட கனவை அத்தானிடம் அவ்வேளையில் "காய்கதிர்ச் செல்வனே என் கன வாசலுக்கு வருகிறாள் கண்ணகை. ‘வாயிலோயே 6 இறை முறை பிழைத்தோன் வாயிலோயே" -என்று மன்னா செப்புவதுடையேன்” என்று சீறிச் சினந்து கள்வன் அல்லன் என்பதை வாதாடி வழக்குரைத்து சொற்கேட்ட யானே கள்வன் என் ஆவி கெடுக மீது வீழ்ந்த பாண்டிமாதேவியும் உயிர் நீத்து உடன் சேர நாடு சென்று விண்ணவர்க்கு விருந்தாயினாள் சேரன் செங்குட்டுவன் கற்புத் தெய்வம் கண்ணை
விழாக் காணச் சென்ற கடல் சூழ் இலங்கை ச வழிபாட்டை இலங்கைக்கு கொண்டு வந்தான். சி விபரித்த கனவு விபரீதக் கனவு கனவுநூலை அ என்னும் சோதிட நூலின் ஒரு சிறு பகுதியாகும் சரசோதிமாலை முக்கியமானதும் முதன்மையானது நூலாகவும் திகழ்கின்ற இந்த நூல் ஈழத் தமிழர்கள் தம்பதெனிய என்னும் சிங்களப் பிரதேச மன்னன் அரச அவையில் அரங்கேற்றிய காரணம் ஆய்வுக் பலன்கள் கூறப்படுகின்றன.
கரும்பின் கட்டி தேங்கா விரும்புமாங்கனி வெண் அளரும் பூவெழுத்தான குரும்பை தான் பெறிற்
வெல்லம், தேங்காய், எலுமிச்சம்பழம், மாம்பழம் குரும்பை என்பவற்றை தான் பெறுவதாக கனவு
'மரமுரிந்து விழக் கயிற்ற
மன்னருக்கே கே மிருகமது நலியமன்னர் ப விழைந்தருந்த ே வருவருக்குமழுக்காடை அழகுறு கேசங்க உருவுயரொட்டகமேறி வி உறுமரணஞ் சில
மரம் முரிந்து விழவும், கயிற்றினால் ஊரைச் முதலிய மிருகம் வருந்தக் கண்டால் அரசர் பயம
كه

கால் வீழ நின்று நடுங்குங் ன்பென்கானெல்லா’-என்று தொடங்கி
Lub ந்து வீழ்தரு
யின்
குமுள்ள
* விழு Fயும் அதிர்ந்திடும்
சொல்வதற்கு அத்தாணி மண்டபம் வருகிறாள். எவன் கள்வனோ' - என்று கேட்டபடி அரண்மனை வாயிலோயே அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து வாயிற் காவலனை அதட்டிய கண்ணகை "தேரா மன்னனிடம் வழக்காடச் சென்றாள். தன் கணவன் து தன் சிலம்புடைத்து நிரூபித்தாள். பொற்கொல்லன் என்று பாண்டியன் உயிர் நீத்தான். அவன் உடல் கட்டையேறினாள். மதுரையை எரித்த கண்ணகை 1. கனகன் விஜயன் தலையிலே கல்லேற்றி வந்த கக்கு கோவில் கட்டி விழாவெடுத்தான்.
5ஜபாகு வேந்தன் பத்தினிச் சிலையோடு கண்ணகை லம்பு கூறும் செய்திகள் இவை. இளங்கோவடிகள் டியொற்றியது. இக்கனவு நூல் ‘சரசோதி மாலை’ ). ஈழத்தில் தோன்றிய தமிழ் நூல் வரிசையில் மான நூலாகின்றது. சோதிட நூலாகவும் இலக்கிய ரின் வரலாற்றின் ஆய்வு நூலாகவும் அமைகின்றது. சரசோதி மாலை என்னும் சோதிட நூலை தனது குரியது. இந்த நூலில் சுபாசுபய் படலத்தில் கனவு
ய்முருகின் சனி
ணெய் மஞ்சட்டி
விநிறைகுடங் கூறுங் குழவியே’-இப்பாடலின் படி
), வெண்ணெய், மஞ்சள், பூ எழுத்தாணி நிறைகுடம், கண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
ாலூரைச் சூழ
ாகும் பன்றியாதி யமாமெச்சில் மனியினெய் தன்னைப் பூச புடுக்கச் சென்னி ளையக்கழுதை மேதி ழக் காணி நாளென்றுரைக்கலாமே.
சூழவும் கண்டால் அரசர்க்குக் கேடாகும். பன்றி ாம். எச்சிலுண்ணவும், மேனியில் எண்ணெய் பூசவும்,
54

Page 279
அழுக்காடையுடுக்கவும், மயிர் களையவும், கழுை கண்டாற் சில நாளில் மரணமுண்டாகும் என்பது
ஆனால் கவிஞன் என்ற நிலையில் இளங்கே அவர் கனவு நிறைவேறி விட்டதா? முடிமன்ன தலைவர்கள் அறம் தவறாது தீர விசாரியாத படிய தெய்வமாக வழிபடுகின்றனர். காரணமின்றி நடைபெ காட்டும் இளங்கோவடிகள் அரசியல் தலைவர்கள் தெய்வமாக வணங்க வேண்டும், கெட்ட செயல்கை கட்டிய கணவனை தன்னிடம் கவர்ந்திழுக்கும் கவர் ஊதாரிச் செலவு செய்யக் கூடாது, நீதிக்காக ெ வம்பினை விலை கொடுத்து வாங்கக் கூடாது 6 இளங்கோவடிகளின் கனவு பகற் கனவா? சேர, தமிழரின் பண்பாடு, கலை, கலாசாரம், பாரம்பரியம், பல்வேறு தொழில்கள், மதங்கள், இனங்கள், மொழி எதிர்காலச் சந்ததி அறிந்து பயன்பெற வேண்டுமெ பேரிலக்கியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் சினி கனவுகளை தொடக்கி வைத்த சிலப்பதிகாரக் கன
"சொல்லுதல் யார்க்கும் எ சொல்லிய வண்ணம் செய
செய்வதை விட சொல்லுவது இலகுவானதென்ற நல்லவற்றை எண்ணுவதற்கும் சொல்லுவதற்கும் எண்ணினார் அதனைச் சொன்னார். அது நிறை காலமெல்லாம் தொடருமா?
米米米米米米米米米米米》 米米米米米米米米米米米米米水米米米米米米米米米
·米米米米米米米米米米米米米米米米米米
நமக்குப் பேரழகே பெரும் பதவியோ இ6 நம் பாக்கியம், ஏனெ கொண்டு மற்றவர்களை நாம் தொல்லைப்பட6ே
25
 
 
 
 
 

5, எருமை, ஒட்டகம் என்பவைகளிலேறி விழவும் னவின் பலன்.
வடிகள் கண்ட கனவு பகற கனவா? அல்லது ாயினும் குடிமக்கள் தலைவராயினும் அரசியல் ல் அரசனையே அறம் கொன்றது. கண்ணகையை ற காரியங்களுக்கு ஊழ்வினை உருத்து வந்ததாகக் அறவழி நடக்க வேண்டும், கற்புள்ள பெண்டிரைத் ள செய்யக்கூடாது என்று கனவு கண்டனர். தாலி சசி மனைவிக்கு இருத்தல் வேண்டும், உழைப்பின்றி 1ண்களும் வாதாட வேண்டும், வாய்த்திறன் பேசி ன்பவற்றை எதிர்கால சந்ததிக்கு உணர்த்துகின்ற சோழ, பாண்டிய நாட்டிலே வாழ்ந்த பண்டைத் சம்பிரதாயம், வணிகம், அரசியல், கட்டிடக்கலை, கள், மன்றங்கள், சபைகள் என்பன பற்றியெல்லாம் *ற கனவு நிறைவேறி விட்டதா? தனக்கு பிற்பட்ட ாவிலும் தொலைக்காட்சிகளிலும் தொடருகின்ற வுகள் காலமெல்லாம் தொடருமா?
ளிய அரியவாம் ல் - என்பது குறள்.
ால் அதைவிட எண்ணுவது இலகுவானதல்லவா? இன்று பஞ்சம் ஏற்பட்டு விட்டது. இளங்கோ வேறி விட்டதா? முன்னேற்றகரமான கனவுகள்
;水米米米米米米米米米
k米米米米米米米米米米米米米米米米米米米米米
k米米米米米米米米米米米米米米米米
, பெருஞ் செல்வமோ, லை என்றால், அது ன்றால், அவற்றைக் க் கஷ்டப்படுத்தவோ, ா வேண்டுவதில்லை.

Page 280
பா(
மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகள் அழகான மேடை எட்டுத்திசையும் கலையின் 61 (36)(36)T.
விபுலானந்தன் பிறந்த நிலம இது வீணைக்கொடி போட் ஊரூராய் கூத்தாடும் ஊரம் இந்த ஊரினிலே கலைச் ெ
ஓடிவரும் கோயில் தேரிலே வண்ண ஓவியங்கள் ஆடும் பாடிப்பாடி கதிர் அறுப்பார் நல்ல பைந்தமிழும் வந்து
அம்மானை வசந்தம் கேக் நீங்க அழகான மகுடி பாக் தேன் மதுரத் தாலாட்டில் எங்கள் தேவியரின் வாய்ப்
இப்பாடல், மட்டுநகள் வாவி, இன்னிசைக்கும் இன அழகையும், அழகுடன் புனைந்துள்ள கலையையும் பண்புகளையும் உணர்ச்சிக் கவியாக வடித்து தேை
இப்பாடலை யார்த்தவர் இம்மண் பெற்றெடுத்த
இங்கு பாடுவது மீன்களா அல்லது வேறேதும்
2

மட்டக்களப்பில் பாடும் மீன்கள் (Singing Fish in Batticaloa)
5வது மீன்களா அல்லது.2
“ஓர் ஆய்வு”
செல்வன். நிலக்ஷன் மாணிக்கவாசகர் க.பொ.த (உத) கணிதப் பிரிவு 2005, மட்/புனித மிக்கேல் தேசிய பாடசாலை, மட்டக்களப்பு.
யம்மா - இங்கு வாடையம்மா
opp 90 OPPO
DDLDT ட குலமம்மா
) OT சல்வம் நூறம்மா
ஆ. ஆ. (மீன்)
) வீதியிலே கவிகளிலே விழும் செவிகளிலே
)மீன்( ۔۔۔۔۔۔۔cb............. b
b6b6O)6)uJIT
b6i)6O)6)u IT உறங்கல்லையா பேச்சில் மயங்கல்லையா
ஆ. ஆ. (மீன்)
ரீய கீதத்தையும், அங்கு கண்கள் காணும் இயற்கை அதை அள்ளிக் கொஞ்சி விளையாடும் கலாசாரப் ாகத் தரும் ஓர் இனிய பாடல்.
ஓர் உலகறிந்த தமிழ் கவிப் புலவன்.
நீர்நிலை வாழ் உயிரினங்களா?
6

Page 281
இம்மாறுபட்ட கருத்திற்கு மத்தியில்தான் இவ்வ சுவைக்கின்றனர்.
வைகாசி ஆனிமாத நிறைமதி நாட்களிலே நீரு வேளையிலே, உருக்கிய வெள்ளியை வார்த்தாற் இவ்வின்னிசையினால் நிறைந்திருக்கும். இவ்வின இடம் புளியந்தீவுக்கும் கல்லடிக்கும் இடைப்பட் குறுக்காக அமைந்திருப்பதுதான் Lady Manning இவ்வேரியின் அடியிற் கல்லடிப்பாலத்தைச், சார்ந்து என அழைப்பர். இவ்பாறையையண்டிய பகுதியில் இதமாக ரசிக்கின்றன.
பெளர்ணமி நாளில் இளவேனிற்காலத்தில், பட நேரான தடியொன்றை ஊன்றி அத்தடியுடன் படை தடியுடன் காதை அணைத்ததும் மனோரம்மியம மனமோ இன்பம் கொள்கின்றது.
உலகப் பேரதிசயங்களுள் ஒன்றான இவ்வின்னி அமெரிக்காவில் கடற்கரையிலும் மாத்திரமே கேட்
எண்ணற்ற உள்நாட்டு மக்களும் வெளிநாட்டு ரசித்து மகிழ்ந்தார்களே தவிர கை விரல் கொண்டு ஆய்வு செய்ய விருப்பம் கொண்டனர்.
இவர்களில் பெருமைக்குரியவர்கள் மட்டக்கள துறவிகளாகப் பணிசெய்த அமெரிக்க நாட்டைச் ே லாங் (Rev.F.J.WLange) அவர்களும் மோறன்
இவ்வடிகளார் இருவரும் கல்லடிப் பாலத்தின் மின்சார ஒலிப் பெருக்கியை உள் இறக்கி பாடும் ! மங்காத புகழொழியை வெளிக்கொணர்ந்து எட்டு
இவ்விசைப்பதிவிற்கு, அமெரிக்க நாட்டு சங்கீத I del Marmol) என்பவர் குறியீடு கொடுத்தார்.
இவர்களுக்குப் பின்னர் இவ்விசை ஆய்வில் ே சேர்ந்த செல்வி சீ.எப்.கோடன் கம்மிங்ஸ் (Scotlar (Lord Holden), 6ily T665 d556 (Mr. Stanly Gre வரும் மேனாட்டைச் சேர்ந்த இசை ஆய்வாளர்க
Scottand Miss C.F.Gordon Cummings 6T6öTu நூலில்தான், பாடும் மீன்களின் ஓசையை, வேறு வேற விட்டு விட்டு தெளிவான ஓசையை உண்டுபண்ண
Lord Holden 96ft 66ft 35T6óT 6T(p5u, "g குறிப்பிடுகையில், அவற்றின் இசையை நீரின்கீழ் ( வயலினின் G நரம்பின் மெல்லிய ஓசையை ஒத்த
966),036Ou bij6G6 tilb Mr. Stanley Gr 6) löi L 660600 (Jews Harp) e96ö6og5 9(b Ouijg கூறினார்.

ழகான வாவியில் மீட்கப்படும் இன்னிசையை மக்கள்
) வானும் களங்கமற்று நிறை அமைதியாகவிருக்கும் போல் விளங்கும் மட்டக்களப்பு வாவியின் நீர்ப்பரப்பு சக் கச்சேரியை கேட்டு ரசிப்பதற்கு மிகவும் உகந்த - கடல் நீரேரிப் பிரதேசமாகும். இப்பிரதேசத்தின் Bridge என அழைக்கப்படும் கல்லடிப்பாலமாகும். பரந்து வளர்ந்திருக்கும் கற்பாறையை யானைக்கல்’ ) இருந்துதான் இவ்வினிய இசையை நம்காதுகள்
கில் சென்று ஆழமான இப்பகுதியில், நீருள், நீண்ட 6 (தோணி) இணைத்து நீருக்கு மேல் நீண்டிருக்கும் ான இன்னிசையை நம் காதுகள் சுவைக்கின்றன.
சையானது இலங்கையில் மட்டக்களப்பு வாவியிலும் கப்படுகின்றது.
உல்லாசப் பயணிகளும் இவ்வதிசய இசையை எண்ணக்கூடிய ஒரு சிலர் மாத்திரமே இவ்விசையை
ப்பு புனித மிக்கல் கல்லூரியில் அன்று ஜேசு சபை சர்ந்த வணக்கத்திற்குரிய பிதாக்களான ஜே.டபிள்யூ (Rev. Fr.Moran) -96. FrötebLDIT6) Fr.
நடுப்பாகத்திலிருந்து, நீருக்குள் எட்டடி ஆழத்திற்கு மீனின் இன்னிசையை - மட்டக்களப்பு தமிழகத்தின்
நிமிட நேரம் இசைத் தட்டில் பதிவு செய்தனர்.
ஆசிரியையான திருமதி ஐடெல் மா மொல் (Mrs
நரடிப்பங்கு கொண்டவர்களில், ஸ்கொத்திலாந்தைச் d Miss C.F.Gordon Cummings), (36). DIT6bL6öT ly n) என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வனை ள்.
of "Two Happy years in Ceylon' 6T6örp 560g ான மெல்லிய குரலில் கேட்டதாகவும், ஒவ்வொன்றும் ரியதாகவும் தனது நூலில் எழுதியுள்ளார்.
இலங்கை” என்ற நூலில், பாடும் மீன்கள் பற்றி தளிவாகக் கேட்கலாம் என்றும் இவ்விசையானது, து எனவும் குறிப்பிடுகின்றார்.
en என்பவர், பாடும் மீன்களின் இசையானது யூத (Cels) மீட்கும் இசைக்கு ஒத்ததாக இருப்பதாகக்
57

Page 282
இவர்களின் ஆய்வின் முடிவுக்குள், பாடுவது கருத்துக்களும் கூர்மையடையாமல் இருக்கவில்
கல்லடிப்பால கடல் நீரேரிப் பிரதேசத்தில் மீன்பிடி இதற்கு ஒத்ததாகவே காணப்பட்டது. இவர்களிற் ச் சிப்பிகளென்றும் ஏனையவர்களில் ஒரு சிலர் பாடு சிலர், சிப்பிகளினுள் நீர் சொட்டுவதால் இவ்விசை சிறு பூச்சிகளின் சத்தங்களின் எதிரொலி என்றும்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், இத்தீவின் கு செய்த சேர் ஜேம்ஸ் எமர்சன் ரெனன்ற் (Sir Jar பற்றிய தனது, ஞாபகார்த்த கட்டுரையில், நீரின் அ1 ஊரியிலிருந்து தோன்றுவதாகவே கூறுகின்றார். அ தோன்றும் ஒரு மெல்லிய சத்தத்திற்கோ அல்ல விரலால் தேய்க்கும் போது உண்டாகும் மெல்லிய
இவரின் இக்கருத்தை இன்னுமொரு ஆய்வாள Tennent இன் காலத்திற்கு முற்பட்டவர். இந்திய George ஆகும். இவரின்கருத்து சுமார் நூறு வ ஆய்வறிக்கைக்கூடாக இங்கு பாடுவது மீன்கள்
2,60TT6), 96) foil 9 5560), b6Ou Mr. Georg நியாயப்படுத்தி மறுதலிக்கின்றார். நீரோட்டத்தின இச்சத்தங்கள் உண்டாகின்றன என்பதே இவரின்
Sir Jemes Emerson Tennent g56T bij6O)6) 1848 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மேற்ே வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, நேரடிய ஆய்வுக்குட்பட்ட வாவியில் மீளவும் தொழிலில் தொடர்பான அவர்களின் வாய் மூல அனுபe அறிக்கைகளுக்கூடாக Tennent இன் கருத்து 1
ஊரிகளில் பலவகை காணப்பட்டபோதிலும், இவ் ஊரிகள்’ என தமிழ்ப் பெயரால் மீனவ மக்கள் அ
ஆய்வாளர்களின் வாத பிரதிவாதங்களுக்கு, நீே பாறைகளும், கால்வாய்களும், நீர் உயிரினம் வா இடத்துக்கிடம் காணப்படும் வேறுபட்ட மண்வை
இவ்வாய்வாளர் அனைவரினதும் ஆய்வுக்குட் ஒல்லாந்தர் கோட்டைக்கு (மட்டக்களப்பு கச்ே JT6Noģ56D5 (Lady Manning Bridge) -9.60öIL2 uứb Ur, இவ்வதிசய ஓசை நிகழும் மையப் பிரதேசமாகும்
சுவாமி விபுலானந்தர் ஓர் இசைப் பிரியர். இ6 ரசித்தவரும் இவரே. இவ்விசையை ஆய்ந்து இடத்தைப் பெறுகின்றார். இவ்வாய்வுதான் அடிக

| மீன்களாக காணப்படினும், இதற்கு முரணான
606).
த்தலை முழுத்தொழிலாகக் கொண்டோரின் கருத்து லர், இசைப்பது மீன்களல்ல; பல்வேறு வகைப்பட்ட வது நீளமான மீன்களென்றும் அவர்களில் இன்னும் தோன்றுகிறதென்றும், வேறு சிலரோ கடற்கரையின் கூறுகின்றார்கள்.
நடியேற்ற காரியதரிசியாக ஒரு காலத்தில் கடமை mes Emerson Tennent) 6T66TU6)i 36pril6056Out டியில் தோன்றி மேலெழும் இவ்விசையை ஒருவகை த்துடன், இவ்வோசையை, ஒரு இசை நரம்பிலிருந்து }து ஒரு வைன் கோப்பையின் விளிம்பை ஈரமான
சத்தத்திற்கோ சமன் என வர்ணிக்கின்றார்.
ர் மழுங்கடிக்கின்றார். இவர், ஆய்வாளர் Emerson பா, அலஹாபாத்தைச் சேர்ந்த இவரின் பெயர் Dr. ருடங்களுக்கு முற்பட்டதாகும். தனது ஆழமான தான் என்பதை உறுதி செய்கின்றார்.
e M. Fowler எனும் ஆய்வாளர் தன் ஆய்வை ால் நகர்த்தப்படும் சிப்பிகளின் சலசலப்பினாலேயே
ஆய்வுக் கருத்தாகும்.
மட்டக்களப்பு கடல் நீரேரிப் (வாவி) பிரதேசத்தில், கொண்டார். இவர் தனது ஆய்விற்கு இரண்டு ாக தானே ஆய்வில் ஈடுபட்டமை அடுத்தது தன் ஈடுபடும் மீனவ மக்களைச் சந்தித்து, இவ்விசை வ அறிக்கையை பெற்றமையாகும். இவ்விரு பாடுவது மீன்களல்ல ஊரிகளே.
வின்னிசைகளை எழுப்புகின்ற ஊரிகளை, "அழுகின்ற அழைப்பதும் அறியப்பட்டது.
ரரியின் அடித்தளத்தில் வளர்ந்து பரந்து காணப்படும் ழ்வதற்கு அவை கொண்டிருக்கும் அமைப்புகளும் ககளும் அனுகூலமாக அமைகின்றன.
பட்ட முக்கியமான நீரேரிப்பிரதேசம், மட்டக்களப்பு சரி) கிழக்கிலும் வடக்கிலும் அத்துடன் கல்லடிப் ந்து காணப்படும் நீரேரியாகும் (வாவி). இப்பகுதிதான்
வ்வின்னிசையை எண்ணற்ற பல தடவைகள் கேட்டு அறியும் அவா கொண்டவர்களின் இவர் ஓர் சிறந்த ாாரின் யாழ்நூலின் தோற்றத்திற்கான அடித்தளமாகும்.
258

Page 283
பாடுவது மீன்களல்ல ஒருவகை ஊரி-Singin{ இவ்வாய்வறிக்கையை வித்தகள் விபுலானந்தள் அவ வடித்துள்ளார்.
“நீல வானிலே நிலவு வீசவே மாலை வேளையே மலைவு தீ சால நாடியே சலதி நீருளே பாலை பாடியே பலரொ டாடுே நிலவு வீசவே மலைவு தீருவோ சலதிநீருளே பலரொ டாடுவே நிசரி காகமாமபத நீநிசா 5 flas LDITLDUIT Lg5É5FTgff"
தன் ஆய்வைத் தொடர்ந்து அடிகளார் தன் மீன்களானது நீருள் குதித்து ஆடுதலை நாம் கா6 நாம் என்றும் எங்கும் காணமுடியாது எனக்கூறு மேனாட்டாரின் ஆய்வுக்கருத்துக்களை முற்றாக ஏ புனைகின்றான் எனக் கூறும் அடிகளார் மேனாட்டு பாடுவது மீன்களல்ல சங்கினத்தைச் சேர்ந்த ஒருவ
இலங்கையில் ஏனையோரும் மற்றும் வெளி அழைத்தாலும், மட்டக்களப்பின் மக்கள் இதை, ' அடிகளார் இசைக்கும் ஊரியின் வடிவத்தையும் அ
இவ்வூரிகள் பாறைகளில் படிந்து கிடக்கின்ற6 காலமாகிய பெரும்பாலும் வைகாசி ஆனி மாதங் ஓசையிடுவதை ரசிக்கலாம் என்றும் தன் ஆய்வை அனுபவசாலிகளையும் நியாயத்தின் தூண்களாக
இவ்வோசையை ஏற்படுத்தும் உயிரினங்கள் நீரின ஆய்விற்கு உட்புகாமலேயே கூறும், மீன்கள்தா அடிகளார் இவ்வோசை ஊரிகளினாலேயே உருவா இல்லையென்றும் அவை தனிச் சுரங்களாகே விபுலானந்தர் அச்சுரவொலியை கீழ் வருமாறு க
நீநி 3 T3 一。莆
jটভীি - · 35186 o OT
LOTO தா tsLib m ÉÉ MX 5F FTGH 饰 5T 85 LOTILO L LL - தாத - 5
பதநீ ww. d55F ausso- 简
அனேகமாக அச்சுரவொலிகள் கேட்கப்படும் ( அதிசயப்படத் தக்கதென்றும் கூறுகின்றார். 6 சுரங்களையும் கோத்து இன்னிசைப் பாடலாக்கி

:Fish தான் என்பதே இவரது ஆய்வின் முடிவாகும். ர்கள் தனது யாழ்நூலில் கவிதை வடிவில் இவ்வாறு
ருவோம்
வாம் TLíb
ITLib
அறிக்கையை இவ்வாறு தருகின்றார். அதாவது ணலாம். ஆனால் அவை மகிழ்ச்சியால் பாடுதலை றும் அடிகளார் மீன்கள் தான் பாடுகின்றன என்ற ற்க மறுக்கின்றார். கலைஞன் காணாததை கவிஞன் ஆய்வாளர்களை கவிஞர்களாகவே பார்க்கின்றார். வகை ஊரிகளே (நீரரமகளிர்) என்கின்றார் அடிகளார்.
நாட்டாரும் இதனை பாடும் மீன் இசை என்று ஊரிபாடுதல்” என்றே சொல்லுகின்றனர் எனக்கூறும் ளவையும் பருமனையும் அச்சோட்டாகத் தருகின்றார்.
ணவென்றும் வானும் நீரும் களக்கமற்று இருக்கும் களில் பூரண நிலா நாட்களில் நீரினடியில் இவை வெளியிடும் அடிகளார் இப்பகுதியில் மீன் பிடிக்கும் நிறுத்துகின்றார்.
டியில் வாழ்வதால், மேனாட்டு ஆய்வாளர், ஆழமான ன் பாடுகின்றன எனும் கருத்தை ஏற்க மறுக்கும் க்கப்படுகிற தென்றும் ஆனால் இவ்வோசை பாட்டாக வ கேட்கப்படுகின்றனவென்றும் கூறும் வித்தகள் ாட்டுகின்றார்.
- நீல - வாணி - லே
- நிலவு - வீச - வே
Ww OT6O6) ഖങ്ങബ് - யே - மலைவு - தீரு - வோம்
போது ஒரு சுரம் மறு சுரத்துடன் படாது இருப்பது ாடுத்தும், படுத்தும், நலிந்தும் கேட்கப்படும் ஏழு காட்டியுள்ளார்.
259

Page 284
மட்டக்களப்பு தமிழகத்தின் வான்புகழை மேலெ ஊரியின் (நீரரமகளிர்) இன்னிசை எனக் கூறி அ கற்பனைத் திறனும் மதிநுட்பமும் வியந்து பெருை
இவ்வாவியில் மீனவ தொழில் புரியும் இப்பகுதி ஆய்வாளர்களும் வித்தகள் சுவாமி விபுலானந்த ரசித்தும் ஆய்வு செய்துள்ள போதும் பாடுவது மீன் நீர்வாழ் உயிரினங்களா.? போன்ற வினாக் வெளிப்படையான உண்மையாகும்.
இவ்வாய்வுக்கான துணை நூல்கள்:
(i) "Singing - Sands, Shells or Fish? It
"Times of Ceylon Annuel – 1967" என்ற கட்டுரையிலிருந்தும்
(i) மட்டக்களப்பு/வித்துவான் பண்டித
விசீ. கந்தையா B.O.L அவர்கள் எழு 'நீரரமகளிரும் யாழ் நூலாசிரியரும்” என்ற கட்டுரையிலிருந்தும் - 1969
(ii) வித்தகர் சுவாமி விபுலானந்தரின்
“யாழ்நூலின்’ சில பகுதிகளிலிருந்தும்
米米米米
米米米米米米米米米米米米米米:
米米米米米米米米:
அஞ்ஞான பேதவுணர்ச்சியி னானே காண்பான். ஞான நீ பெரியோனோவெனில் முதிர்ச்சியினாலே பிர மறந்து, தன்னையும் நிற்பான். '
ܩܠ

ந்து உலகுக்கு சொல்லும், பாடும் மீனின் ஓசையினை வ்விசைக்கு தெய்வப் பண்பு சேர்த்த அடிகளாரின் ம கொள்ளும் ஒரு விடயமாகும்.
மக்களும் இம்மண்ணுக்கு வருகை தந்த மேனாட்டு ரும் இவ்வுலக அதிசய இன்னிசையை கேட்டும் fb6TT---------? ஊரிகளா.? அல்லது வேறேதும் ள் இன்றும் வினாக் குறியீட்டுடன் இருப்பது ஒரு
's a Mystery”
திய
米米米米米米米
k米水米米水米米米米米米米米米米米米
k米米米米米米米米米米米
ത്സ
நிலையிலிருப் போன் U பொருளைப் பலவாகக் லையிற் செல்லா நின்ற உள்ளத்தூறிய அன்பின் பஞ்சம் அனைத்தினையும் தலைவனையுங் கண்டு
لمـــــــــــــــــــــــــــــــــــــــــــ

Page 285
அவனி தன்னில் வந்துதித்துள்ள ஆயிரமாயிரம் L இருக்கின்றான். ஏனைய ஜீவராசிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிச் சிறப்பிக்கின்றது. சிந்திக்கும் இவை எனப் பிரித்து அறியும் பகுத்தறிவு அவனுடன் சக்திமிக்க இயற்கையுடன் மோதவும், இயற்கை கொண்டுவரவும் உறுதுணையானது. மனிதனுடைய கொண்டு அவன் கொண்ட வல்லமையே விஞ்ஞா
விஞ்ஞானம் மிகவும் தொன்மை வாய்க்கப் பெற்ற முதன் முதல் கண்டறிந்த ஆதி மனிதனே முத விஞ்ஞானம் என்பது பல நூறாயிரம் ஆண்டுகட்கு ஆகும். 18ம் மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் விஞ்ஞ மற்றும் 21ம் நூற்றாண்டும் அசுர வேகம் கொண்டு அ திகழ்கின்றது. நுண்ணிய அணுமுதல் நூதனமான ( இன்று அணுவின் கருத் தொடக்கம், விண்ணின் மாற்றங்களாகும்.
இன்று உலகில் வாழும் மக்களது வாழ்வு அத்தியாவசியமாகத் திகழ்ந்து, பிரித்தறிய முடிய கைத்தொழிற் புரட்சியின் பின்னரே விஞ்ஞானம் அ பிணையப்பட்டது எனலாம். மனிதனது தினசரி வாழ் விஞ்ஞானத்தின் விந்தை ஆகும். உணவினைத் அலுவலகம் வரையும் வாழ்வை இலகுவாயும், ஒள தலைப்பட்டுள்ளது. இதற்குக் குறிப்பாக மின் வg
விஞ்ஞானத்தில் மின்வலுக் கண்டுபிடிப்பானது சாதாரண போக்கிலே வளர்ந்து கொண்டிருந்த விஞ் இந்த மின்வலுக் கண்டுபிடிப்பு அதிமுக்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்ட பிற்பாடே கண்டுபிடிக்கப்பட் ஆற்றுவதற்கும், விந்தைகள் நிகழ்வதற்கும் மின்வ
விஞ்ஞான விந்தைகளில் இன்றைய நவீனத் ெ இடம் வகிக்கின்றது. ஆரம்ப காலங்களில் ம தகவல் சொல்லப் புறாத்தூது’ அனுப்பினர் என நிலைக்குத் தள்ளப்பட்டு மறையப் பெற்றுள்ளது. தெ மக்களது தொடர்பாடலினை இலகுவாக்கின. மேலு செய்திப் பரிமாற்றம், நடமாடும் தொலைபேசிகள்
آصي . ك

விஞ்ஞானத்தின் விந்தைகள்
சுபாங்கி விமலநாதன் தரம் 13 - கலைப்பிரிவு, இந்து மகளிர் கல்லூரி பம்பலப்பிட்டி.
டைப்புக்களுள் ஆறறிவு கொண்டவன் மனிதனாகவே மனிதனது சிந்தனை ஆற்றலானது அவனை பிராணியான மனிதனுடன் தக்கன இவை, தகாதன ா கூடவே பிறந்தது. இவ்வாற்றலானது அவனிலும் யினைக் கட்டுப்படுத்தி அவனது ஏவலின் கீழ் ப பகுத்தறிவு, சிந்தனை, ஆராய்ச்சி ஆகியவற்றைக் னம் தோன்றக் காலானது.
து. இவ்வுலகுதனிலே நெருப்பின் உபயோகத்தினை லாவது விஞ்ஞானி எனக் கூறுவர். ஆதலால் முற்பட்டது எனக் கூறுவது முற்றுமுழு உண்மை நானம் நல்லதொரு வளர்வினைக் கண்ணுற்று, 20ம் தி உச்சய் பரிமாணத்தைக் கொண்ட தோற்றப்பாடாகத் விண்ணியல் வரை விஞ்ஞானம் கால் பதித்துள்ளது. கருத்துளை வரையிலும் விஞ்ஞான வளர்ச்சியின்
தன்னில், விஞ்ஞானம் நாளாந்த விடயங்களில் ாத ஒரு நிலையில் பரிணமிக்கின்றது. குறிப்பாகக் திகளவு மக்களது இயல்பியல் வாழ்வில் பின்னிப் வினை பல வசதிகள் கொண்டதாக மாற்றியமைத்தது தயாரிக்கும் சமையலறை முதல் ஊதியம் வாங்கும் ரிமயமானதாயும் கொண்டு செல்ல விஞ்ஞானமானது லுவினைக் கண்டு பிடித்ததைக் கொள்ளலாம்.
ஒரு மாபெரும் திருப்பு முனையாக விளங்குகின்றது. ஞானம் அசுர வேகத்தில் முன்னேற்றம் அடைவதற்கு வகிக்கின்றது. இலகுக் கருவிகள் பல மின்சாரம் டன. இன்று விஞ்ஞானம் வியத்தகு பணிகள் லு படிக்கல்லாக உள்ளது.
தாழில்நுட்பத்துவ தொடர்பாடல் குறிப்பிடக்கூடிய க்கள் அயற் பிரதேசங்களில் இருப்பவர்களுக்குத் வரலாறு கூறுகின்றது. இன்று அந்த நிலை கனவு ாலைபேசி, தந்தி முதலியனவற்றின் கண்டுபிடிப்புக்கள் லும், இன்று இந்த இலகுவாக்கலினையும் இலத்திரன் என்பன மேலும் இலகுபடுத்துகின்றன.
61

Page 286
அறிவினைப் பெருக்க மக்கள் நூலகங்களை இணையத்துடன் இணைகிறார்கள். சகல துறைசார்ந்தவற்றையும், உலக நடப்புக்களை விஞ்ஞானம் இயங்கியல் ரீதியில் இருப்பதற்கு ம கணனி முக்கியம் கொள்கின்றது. விஞ்ஞான முன் வளர்ச்சி முன்னேற்றத்தின் மைல்கல்லாக கண சாசனம் இன்று உலகினையே ஆட்டுவிக்கின்றது. துறைகளிலும் பங்களிப்பு செலுத்துகின்றது. இ என்பனவும் கணனிக்குள் அடக்கம்.
போக்குவரத்துத் துறையில் விஞ்ஞானத்தின் ! நிலப்பரப்பினை கால்நடையாயும், நீர்ப்பரப்பினை மோட்டார் வாகனங்களிலும், நீண்ட தூரத்திை வான்வெளியில் விமானங்களிலும், கட்டிடத் தள விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் விந்தை எனக் கூறி இன்று புவியிலிருந்து சந்திரனுக்கும், வேற்றுக் கிரக நிலாச்சோறு உண்டகாலம் மறைந்து நிலாவிலும் பலத்த வளர்ச்சி கண்டுள்ளது. வருடந்தோறு விண்ணுக்கு ஏவப்பட்டும், விண்ணில் சஞ்சரி துணைக்கோள்களையும், ஆய்வு கோள்களையு உத்திகளின் சிறப்பான வெற்றியாகும். செய்மதிகள் அனைத்துத் தொடர்பாடல்களையும், புவியில் 6 இயற்கை அனர்த்தங்களையும் புவிக்கு விண்ணி தொழிற்படுகின்றன. விண்ணிலே விந்தைகள் வின் புரிகின்றது. எண்ணற்ற வகைதன்னில் நீள் ஊ செயற்படுவது விஞ்ஞானத்தின் மற்றொரு அம்சம
மனித வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ள விஞ் தவறவில்லை. இன்றைய விஞ்ஞானத்தின் அபார விளங்குகின்றது. இன்று மனிதர்களை வருத்தும் பயக்கின்றது. விஞ்ஞானம் இன்று பல பிணிகை இன்று வைத்தியத் துறையில் பல தொழில் பிடிக்கப்பட்டுள்ளன. இரவல் இதயம், இரவல் பதில் உறுப்புக்களைப் பொருத்தி சத்திர சிகிச் இயந்திரம் ஒன்றின் செயலிழந்த பாகங்களை ம அங்கங்களையும் மாற்றக்கூடிய வல்லமை பெறுகி விஞ்ஞானத்தின் மற்றொரு விந்தையாகக் காணப்பு ஒரு உடற் கலத்திலிருந்து அங்கியை ஆக்குப் ஜூன்களை மாற்றம் செய்யப்பட்ட விலங்குகளின் உ மூலம் பொருத்தும் நவீன முறைகள் குளோனிங்கி
இவ்வாறு விஞ்ஞானம் தனது வளர்ச்சிப் படி: விஞ்ஞான வளர்ச்சியினால் மிகவும் இலகு கண் தொழில்நுட்பம் மனித முன்னேற்றத்திற்கு உதவுகி வளர்ந்து கொண்டும், வளரவும் போகின்றது. ஆர விதிகள் பிழையெனச் சுட்டிக்காட்டப்பட்டு, புகுத்தப்படுகின்றமை இடம்பெறுதலினை நாம் அ வளர்ச்சிப் பாதையினை நோக்கிச் செல்லத் தை ஒன்றினை நீக்கிவிட்டு புதிய விதிகள் அமைக்கப்படு
புதுப்பிக்கப்பட்ட அறிவாய் வளர்கின்றது. ம6

நாடிப்போன காலம் மாற்றமுற்று இன்று மக்கள் வித அறிவியல் உண்மைகளையும், பலவித ம் இணையத்தினூடாக அறியப் பெறுகிறார்கள். ன்சாரம் கொண்டுள்ள முக்கியத்துவத்தை அடுத்து னேற்றத்தில் 20ம் நூற்றாண்டின் பிற்பட்ட அதிதுரித ரி அங்கம் கொள்கிறது. கணனி என்ற உயிரற்ற விஞ்ஞானத்தின்,சிறப்புற்ற கணனி இன்று அனைத்துத் லத்திரன் செய்திப் பரிமாற்றம் மற்றும் இணையம்
ங்கு முக்கியம் பெறுகின்றது. ஆரம்ப காலங்களில் நீந்தியும் சென்ற மனிதர்கள் இன்று நிலப்பரப்பில் ] புகைவண்டியிலும், நீர்ப்பரப்பில் கப்பல்களிலும், வகளுக்குச் செல்லவும், வரவும் மின்னுயர்த்திகளும் ன் அது மிகையாகாது. இவை மட்டுமன்றி மனிதன் ங்களுக்கும் செல்ல விஞ்ஞானம் வழிவகுத்துள்ளது. கால் பதித்தாகிவிட்டது. இன்று விண்வெளி ஆய்வு ) எண்ணற்ற விண்கலங்களும், ராக்கெட்டுக்களும் த்த வண்ணமாயும் திகழ்கின்றன. விண்ணிலே ) அனுப்புவது மாபெரும் விஞ்ஞான நுட்பவியல் விண்ணிலே வலம் வருகின்றன. புவியில் நிகழும் ரற்படும் வானிலை, காலநிலை மாறுதல்களையும், லிருந்து அறியத் தந்த வண்ணமாக செய்மதிகள் ளைவிக்கும் விஞ்ஞானம் நீரினுள்ளேயும் சாகசங்கள் ர்திகளான கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் ாய் அமைகின்றது.
ஒருானம் மருத்துவத் துறையிலும் விந்தைகள் புரியத் வளர்ச்சிக்கு வைத்தியத்துறை தக்கதொரு சான்றாய் உடற்பிணிகளைப் போக்க விஞ்ஞானம் உறுதுணை ளக் கட்டுப்படுத்தி உள்ளது. விஞ்ஞானம் மூலம் நுட்பங்கள் புகுத்தப்பட்டு உபகரணங்கள் கண்டு சிறுநீர்ப்பை என்று செயலிழந்த உறுப்புக்களிற்குப் சை செய்யுமளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. ற்றுவது போல விஞ்ஞானம் இன்று மனித உடல் து. மேலும் தற்போது குளோனிங் முறை என்பதுவும் டுகிறது. சாதாரண உடல்ரீதியான சேர்க்கை இன்றி முறையே குளோனிங் முறை ஆகும். தக்கபடி றுப்புக்கள் மனிதர்களுக்கு மாற்றுச் சத்திர சிகிச்சை ன் மகத்தான வளர்ச்சி என்றே கூறலாம்.
ளில் ஏறிச் செல்கின்றது. மனித வாழ்வு என்பது டுள்ளது. விஞ்ஞானத்தின் பயனாக வளர்ந்துள்ள ன்றது. பற்பல விஞ்ஞானிகளால் வளர்க்கப்பட்டும், Oப காலங்கள் தொட்டே விஞ்ஞானத்தில் ஒரு சில நீக்கப்பட்டு, புதிய விதிகள் அவ்விடத்திலே வதானிக்கலாம். இவ்விடத்தில் தான் விஞ்ஞானம் ப்படுகின்றது. ஏனெனில் பிழையென அறியப்பட்ட 0கயில் விஞ்ஞான அறிவும் பிழைகள் களையப்பட்ட, தனது தக்கன இவை, தகாதன இவை எனப்
52

Page 287
பிரித்தறியக்கூடிய பகுத்தறிவினாலேயே வி தகாதனவற்றையும் தக்கனவாக மாற்றும் இடத்தி
விஞ்ஞானம் பலவாறு இன்று வளர்ந்து விட் பாதகமான காரியங்களும் உள. தொழிற் வானுர்திகளிலிருந்தும் வெளிவிடப்படும் புகையும் புவியில் இன்று வெப்பம் அதிகரிக்கப்பட்டு துருவம் ஏற்பட்டுள்ளது. வளியில் காபனீரொட்சைட்டு வ பச்சைவீட்டு விளைவும், அழிக்கப்படத் தெரிய விஞ்ஞானத்தில் எதிர் நோக்கப்படும் பாதக விளைவு கண்டு பிடிப்புக்கள் உலகினையே ஆட்டிப் பை செல்கின்றன. அணுக்கழிவுகள் கடலில் கலக்கட் அச்சுறுத்தல் ஆகின்றது. விஞ்ஞான விந்தையான மக்கள் வாழ்வில் மேலும் அமைதியின்மையினை
ஆயினும் விஞ்ஞானம் என்பது ஆக்கத் தெ அழிவுப் பாதைக்குச் செல்லத் தலைப்படுவது எதிரும், சமமுமான மறுதாக்கம் இருக்கும்’ எ6 விஞ்ஞானம் ஆக்கபூர்வமான பாதையினை ே ஏற்படுகின்றன. விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட பே உள்ளன. ۔۔۔۔
米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米米米来米
米米米水米米水米米米米冰米米米
மனித சக்தி உள்ளது. வெளியில் ஏதாயினுமோர் உய வேண்டும். வாழ்க்ை
செல்ல வேண்டும்.
 
 
 
 
 
 
 

ஞானம் தோற்றமுற்றதெனக் கூறினும், இன்று ல் விஞ்ஞானத்தின் வளர்ச்சி தெளிவாகின்றது.
வேளையிலும் விஞ்ஞானம் காரணமாக ஏற்பட்ட சாலைகளிலிருந்தும், வாகனங்களிலிருந்தும், ), கழிவுகளும் இன்று சூழலை மாசுபடுத்துகின்றன. பிரதேசங்களில் பனிப்பாறைகள் உருகும் அபாயமும் யுவின் அதிகரிப்பும், ஓசோன் படையின் ஓட்டையும், ாத பொலித்தீனின் முடிவற்ற பாவனையும் இன்று புகளாகின்றன. மேலும் விஞ்ஞானத்தின் அணுவாயுதக் டக்கும் பயங்கரமானதொரு நிலைக்குக் கொண்டு படுவதனால் கடல்வாழ் உயிரினங்களது வாழ்விற்கு ா குளோனிங் முறையினால் உருவாகும் உயிரினங்கள்
ஏற்படுத்துகின்றது.
ாழிற்பாடாகத் திகழ்கின்றதே அன்றி ஒரு போதும் இல்லை. இருந்த போதிலும் “எந்த விசைக்கும் ன நியூட்டனின் மூன்றாவது விதி கூறுவது போல் நாக்கி வளர்ந்தாலும் பாதகமான விளைவுகளும் ாதிலும் அது சாதிக்க வேண்டியவை இன்னும் பல
:米米米米米米米米米米
米米米米米米水米米米冰米米米米米米米米米米米米米
;米冰冰米米米米米米米米米米冰米米米
அவன் மனதிலேதான் ஒன்றுமில்லை. மனத்தில் பர்ந்த நோக்கமிருக்க க அதை நிறைவேற்றிச்
63

Page 288
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோல் இயல், இசை, நாடகம் ஆகியவற்றை உயிர் மூச்சா கடைச்சங்கம் என்பவை தமிழ் வளர்த்த காலம் ஆ குறுந்தொகையும் ஒன்றாகும். அக் குறுந்தொகைய அறிவும் ஆற்றலும் நிறைந்தவளாய் சித்திரிக்கப்படு
பொதுவாக அகப் பொருட் பாடல்களில் வரு அறிவும், திறனும் பெற்றவளாக விளங்கினாள். உறுதுணையாய் விளங்கியது. தலைவியின் காதல் நல்லறம் விளங்க வேண்டும் எனும் பேரார்வ்ம் தே தோழி பொறுப்பு உணர்ந்து தன் கடமையைச் செய்வ தக்க முறையில் அறிவுரை கூறுவாள். சோர்வுற்ற இடித்துரைத்தும் அவர்களைத் திருத்துவாள். க உள்ளத்தைப் பண்படுத்தும் கடமை உடையவள் கடத்தியபோது தலைவி கவலையுற்றாள். அந்நிலை மற்றொருபால் தலைவியின் உள்ளச் சோர்வைப் சோர்வுற்ற போதிலும் சில ஆழ்ந்த நம்பிக்கைகள் அ குறித்த பேச்சு எழும்போது உள்ளச் சோர்வு நீங்கிவி பண்புகள் பற்றி ஐயுற்றவள் போல் பேச அவை தை இதனால் தலைவியின் சோகம் இருந்த இடம் ெ
இவ்வாறு மதிநுட்பம் விளைந்த தற்தோழியாய்
மேலும் தலைவன் தலைவியை திருமணம் செய் சோர்வைய் போக்கி கடமையில் முனையுமாறு தோழி வகையில் இரு உவமைகளைக் கூறி அதாவது பல மற்றொரு வகைப் பலாமரம் வேர்களில் காய்கள் L மரத்திற்கு இடையூறு இல்லை. இந்த இரு வ6 கொண்டு வந்த தோழி கோட்டப் பலாவைப்போல் என்று உணர்த்தினாள். வேர்ப் பலாவைய்போல் எத் தாங்கிக் கொண்டு கவலையின்றி வாழும் வாழ்வு திருமணம் செய்ய தயாராகும்படி கூறுகிறாள். மே கொண்ட காதல் பெரிதாக உள்ளது” என்று தலை
* வேரால் வேலிவோக் சாரல் நாட செல்வின
யார..தறிந்திசினோே சிறுகோட்டுப் பெரும் உயிர் தவச் சிறிது, க
என இனிதே எடுத்துரைக்கும் குறுந்தொகை இ
2

குறுந்தொகையில் தோழி
தனபாலன் சிவரூபி
2006 bങ്ങബ யா/ வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை.
ன்றிய மூத்த தமிழ் முகிழ்ந்துவிட்ட செல்வங்களாகிய கக் கொண்டு எழுந்த முதற்சங்கம், இடைச்சங்கம், பூகிய சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகைளில் பில் காணப்படும் பாத்திரங்களில் ஒன்றான தோழி கிறாள்.
ம் தோழி அநுபவம் மிக்கவள். அனுபவத்தால் அவளுடைய நல்உறவு தலைவி வாழ்க்கைக்கு ) ஏமாற்றம் இன்றி வெற்றி பெற்று இல்லறம் எனும் நாழியிடம் வெகுவாகக் காணப்பட்டது. அதனால் ாள். தலைவிக்கும் தலைவனுக்கும் அவ்வப்போது போது ஊக்கம் ஊட்டியும் கடமையை மறந்தபோது ாதல் வளரும் தொடக்க நிலையியல் தலைவியின் தோழி. திருமணம் செய்யாமல் தலைவன் நாள் யில் ஒருபால் தலைவருக்கு கடமை உணர்ச்சியூட்டி போக்கி வந்தாள் தோழி. உள்ளத்தே எவ்வளவு அசைக்க ஒண்ணாதனவாக விளங்கும். அவற்றைக் டும். இவ் உண்மையை உணர்ந்த தோழி தலைவன் லவியின் உள்ளத்தில் கிளர்ச்சியை விளைவித்தது. தரியாது அகன்றது.
சித்திரிக்கப்படுகிறாள்.
பய ஆர்வம் இன்றி சோர்ந்து விளங்கினால் அவன்
அறிவுரை கூறினாள். அவன் உள்ளம் கொள்ளும்
0ாமரம் ஒன்று காய்கள் சுமக்க முடியாமல் வருந்தும்
பல காய்த்துப் பழுப்பது இப் பழங்கள் பெருகினால் கை பலாமரங்களையும் அவனுடைய சிந்தைக்குக் முறிந்து போவதற்கு இடம்தரும் வாழ்வு வேண்டா
துணை இடர்வரினும் பொருட்படுத்தாமல் எளிதில் வேண்டும் என்பதனை தானே உணருமாறு செய்து
லும் இவள் “உயிர் மிகச் சிறிது எனினும் தலைவி
ஸ்வனுக்கு அறிவுறுத்தினாள். இதனை
கோட் பலவின்
யை ஆகுமதி
ரே, சாரல் பழம் தூங்கியாங்கியவள் காமமோ பெரிதே.”
இங்கே ஈண்டு நோக்கத் தக்கது.
64

Page 289
இங்கு . தலைவன் உள்ளம் புண்படாத வை வகையிலும், கடமையுணர்ச்சி கொள்ளும் வகையி போற்றத் தக்கதேயாகும்.
மேலும் தலைவன் தலைவியை திருமணம் செt அவன் வந்த வழி இடர் மிகுந்தமலைவழி. இதனா இதனை அறிந்த தோழி அவன் இரவில் வருவ அதனால் யாம் வருந்துகின்றோம்” என்றாள். போதாது. அதனால் போதிய பயன் விளையாது 6 ஒரு பெண் குரங்கின் துயர வாழ்க்கையை அவன் உ குறுந்தொகையில்.
* கருங்கண் தாக்கலைப் ெ கைம்மை உய்யாக் காமர் கல்லாவன் பறழ் கிளை மு ஓங்குவரை அடுக்கத்துப் சாரல் நாட நாடுவாள் வாரல் வாழியோ வருந்து
என எடுத்துக் கூறப்படுகிறது. இங்கு தே புலப்படுத்துகிறது.
மேலும் தலைவியின் உடல் மெலிவுக்குக் காரண கேட்க அதற்கு அவள் முருகனால் வந்த நோய் என்பதை அறிந்த தோழி கட்டுவிச்சி பாடியபோது
“அகவன் மகளே பாடுக இன்னும் பாடுக பாட்ே கன்னேடுங் குன்றம் பா
அதாவது அவர் குன்றம் என்ற வெளிப்படைட் பொருளுடனும் அமைத்து உண்மையைப் புலப்படு
திருமண ஏற்பாட்டுக்கு ஆக பிரிந்த தலைவ எழுச்சியுற வைக்க தலைவியைப் பழித்துக் கூறு
இதனைக் குறுந்தொகைய் பாடல் பின்வருமாறு
* கொல்கவின் தொலைந் அல்லல் நெஞ்சமொடு பசலை ஆகி விளிவது ெ விலங்கு திரை உடைத இலங்கு எயிறு தோன்ற
மேலும் தலைவியின் மெலிவுக்கு காரணம் முரு அப்போது தலைவி தெய்வத்தை வணங்க வே தலைவிக்கு உள்ளது காதல் நோய் என்பதை “பூசாரியே பல்வேறு உருவுடைய சோறுகளோடு சின்
2

கயிலும், வாழ்வின் அரிய உண்மைகளை உணரும் லும் அறிவுரை கூறும் தோழியின் பேச்சுத் திறன்
பது கொள்ளாமல் இரவில் வரத் தொடங்கினான். ல் தலைவி மனதில் துன்பமே மிகுதியாக இருந்தது. பதைத் தடுக்க "நீ நள்ளிரவில் வரல் வேண்டா நேர் அறிவுரையாக இவ்வளவு கூறுதல் மட்டும் ான எண்ணம் கொண்ட தோழி கணவனை இழந்த ள்ளத்தில் படியுமாறு எடுத்துரைத்தாள். இதனைக்
பரும் பிறிதுற்றெனக்
மந்தி
)தல் சேர்த்தி
பாய்ந்து உயிர் செருக்கும்
buurt (SLD'
ாழியின் அறிவு ஆற்றல் வெள்ளிடைமலையாய்
ம் யாதோ என்று தாய் கட்டுவிச்சியை அழைத்துக் எனக்கூறி பூசைக்கு ஏற்பாடு செய்யச் சொல்வாள்
அவளோடு தானும் பின்வருமாறு பாடுகிறாள்.
பாட்டே - அவர் ாடிய பாட்டே”
பொருளுடனும், காதலன் குன்றம் என்ற குறிப்புப் த்தியமை தோழியின் அறிவுத் திறனன்றோ!
ன் இன்னும் வராமையாற் துயருற்ற தலைவியை கிறாள்.
கூறுகிறது.
த தோள் நலம் சா அய் அல்கலும் துஞ்சாது கால்லோ ரும் துறைவனொடு நக்கதன் பயனே’
sனால் வந்த நோய் என முருக பூசை நிகழ்த்தினர். ண்டிய நெருக்கடி நிலையில் தோழி குறுக்கிட்டு குறிப்பால் உணர்த்தியமை தோழியின் சிறப்பாகும். ன ஆட்டையும் கொன்று இவளுடைய நெற்றியையும்
55

Page 290
தடவி நீ வணங்கிப் பலிகொடுப்பாயானால் இவ6ை அணிந்த மார்பு இந்த பலியை உண்ணுமோ” என்
“விண்தோய் மாமை ஒண்தார அகலமு என்று குறுந்தொகை செய்யுள் மூலம் உணரல
இவ்வாறு குறிப்பால் புலப்படுத்துதல் அல்ல நேர் விடையளித்தலும் உண்டு. இவ்வாறான வாழ்வைக் காக்க வேண்டியுள்ளது. அதற்கு அ கலந்த அறிவாற்றலைத் தோழியிடம் நாம் காண
மேலும் தலைவிக்குத் திருமண ஏற்பாடு நை இவ்வாறு கூறுகிறாள்.
“இன்று யாண்யடையனே அறிவு தாழ்க் கொள்ளும் எம் இவ் வருகுவை நீ எ6 பொம்மல் நதி நீவியோே
இங்கு தோழி தலைவிக்கு கூறுவது போல திருமணத்தைத் தடுக்கிறாள். இது தோழிய நிற்கின்றது.எண்ணத்தளவில் உள்ள இந்தக் க வளையல்கள் செறியுமாறு உள்ளன என்று குறிப்ட
இல்லறம் மேற்கொண்ட தலைவன் தலைவி உணர்ச்சி உடையவன். ஆதலின் இசைக்க6ை கவர்ந்து நெருங்கிப் பழகினான். இப்பழக்கம் பாணன் நட்பால் பரத்தையின் உறவு வாய்த்தது. அனுப்பி தலைவியின் வெறுப்பைப் போக்க மு தலைவனுடைய இனிய பண்புகளைப் பாராட்டி உடன்படுவாள் போல் தலையசைத்து “ஆம் தலை இந்த அனிமையும் அன்பும் வாழ்க்கையில் விள காண்கின்றோம்” என்று எள்ளிநகையாடினாள், பா ஒருங்கே கடிந்துரைத்த தோழியின் திறன் போற்ற
ஊர்கதருவியின் அன்பான வாழ்க்கையை எடுத் வெற்றி தலைவனுக்கு அமையவில்லை என்று குருவி கருப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு முட் வெண்ணிறப் பூவைக் கொழுவிக் கொண்டு வந்து இல்வாழ்க்கை,” என்றாள்.
இதனை
“ யாரினும் இனியன் பேர உள்ளிர்க்குரிதித்துள் சூல் முதிர் பேடைக்கு தேம்பொதிக் கொண்ட நாறுவெண்பூக் கொழு யாணர் ஊரன் காணன்
என்ற பாடல் மூலம் தெளிவுற அறியலாம்.

ா துன்புறச் செய்த மலை நாட்டு தலைவன் மாலை ாறு கேட்டாள். இதனை
லச் சிலம்பன் ம் உண்ணுமோ பலியே?’ ாம்.
ாமல் செவிலி நேர் கேட்டலும் தோழி அவளுக்கு நெருக்கடியான வேளைகளில் உண்மை சொல்லி ஞ்சாமை வேண்டும். அத்தகை அஞ்சாமையுடன் லாம்.
டபெற்றபோது அதனை தடுக்க வழி தலைவியிடம்
னா தோழி - நாடன் ம் அளவைச் செறிதொடி னப்
??-بحیہ {
56.
தலைவியின் காதலை பெற்றோருக்கு உணர்த்தித் வின் மதி நுட்பத்தை வெளிப்படையாய் விளக்கி ாதலின் மகிழ்ச்சியாலேயே கைகள் மெலியாமல் ால் இகழ்ந்தாள்.
யுடன் அன்பாக வாழ்ந்து வந்தான். அவன் கலை ல வல்ல பாணன் ஒருவன் அவன் உள்ளத்தைக் எவ்வாறோ சிறு தீமைக்குக் காரணம் ஆயிற்று. தவறை உணர்ந்து திருந்திய தலைவன் பாணனை யன்றான். தலைவியும் தோழியும் இருந்தபோது எடுத்துரைத்தான். இதனைக் கேட்ட தோழி 0வன் எல்லோரிலும் இனியவன், பேரன்பு உடையவை ங்கக் கண்டிலேம் பாணன் வாயால்தான் விளங்கக் 1ணன் குற்றத்தையும் தலைவன் தவறையும் இவ்வாறு )த் தக்கதேயாகும்.
நதுக் காட்டி அத்தகைய அன்பு வாழ்க்கை நடத்தும் உணர்த்தினாள். “துள்ளும் நடை உடைய ஆண் டை இடும் கூடு கட்டுவதற்காக இனிய கரும்பின் கடமையைச் செய்கின்றது. அதுவன்றோ அன்பான
ன் பின்னே ளுடைச் சேவல் ஈனில் இழைஇயர் தீங்கிழைக்கரும்பின்
வாயே’.
266

Page 291
திருமண ஏற்பாட்டுக்காகப் பிரிந்து செல்லும் தோழி கூறிய சொற்கள் போற்றத் தக்கவை. மே அழைத்துச் சென்று அவள் துன்பத்ப்ை போக் காட்டுகிறது. அதாவது தலைவிக்கு ஆக தன் காணலாம்.
மேலும் தலைவன் தலைவியைப் பிரிந்து பரத் வீட்டிற்குத் திரும்பினான். அதற்கு முன், தலைவிய சிலரிடம் சொல்லியனுப்பினான். அவன் சார்ப இடிந்துரைக்கிறாள்.
“காலையில் எழுந்து தேரை ஆயத்தம் செய்து மிக விளக்கமான தோற்றத்தோடு இருக்கிறான் கலங்குகிறாள். இதற்கு காரணம் இவள் பிறந்த ( துன்பம் தருவதாக உள்ளது” என்றாள்.
൫ങ്ങിങ്ങ്
A.
A.
காலை எழுந்து கடுந்ே வாலினடி மகளிர்த் தழி மல்லல் ஊரன் எல்லின மறுவரும் சிறுவன் தாே தேறுவது அம்மா இத்தி
என எடுத்துரைக்கிறது. குறுந்தொகை.
இங்கே தோழி குடியைப் பழிப்பது போல தலை இவ்வாறு கூறும் மதி நுட்பம் வாய்ந்த தோழி கு
பரத்தையை நாடித் தலைவன் வாழும் வாழ் கடமை தவறாமல் வாழும் வாழ்வையும் எடுத்து கூறினாள். “உலகத்தில் சிலர் காதலரை உற்று காதலை வளர்த்து இன்புறும் அளவினது உணர் நடைவண்டி போன்றது இந்தக் காதல்’ என்றாள்
அறிவற்ற குருவி தன் துணை துன்பமுறாமல் கூடு கட்டும்போது முட்டை இடுவதற்கு உரிய மெல்லிய பூவைக் கொத்திக் கொண்டு வருவ எடுத்துரைப்பதன் வாயிலாகத் தலைவனுடைய அவள் தனித்துத் துன்புறுமாறு செய்த தீமை தே எடுத்துரைத்த தோழியின் பேச்சு திறன் பாராட்டு
இவ்வாறாகக் குறுந்தொகையில் தோழி வாய்ந்தவளாக விளங்குகிறாள். தோழி தலைவிக் உண்மையான நற் தோழியாய் விளங்குகிறாள். இ சித்திரிக்கப்படுகிறாள்.
米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米来米
20-CM 4658

தலைவன் நெஞ்சில் கடமையுணர்ச்சி குறையாதபடி லும் தலைவி வருந்தும் போது அவளை வெளியே க எண்ணுதலும் அவள் பரந்த மனதை எடுத்து னையே அர்ப்ணிக்கும் தோழியை குறுந்தொகையில்
தையின் வீட்டில் சில நாள் தங்கியிருந்து பிறகு தன் ன் மனம் வெறுத்து ஊடல் கொள்ளாதிருப்பதற்காகச் க வந்தவர்களைத் தோழி நயமான சொற்களால்
பரத்தையரைத் தழுவுவதற்காகச் சென்ற தலைவன் என்று அவனுடைய மனைவியாகிய இவள் மனம் குடியின் பண்பே. இவ்வாறு உயர் குடியில் பிறத்தல்
தர்ப் பண்ணி இய சென்ற ான் பெரிது என
tu. திணைப் பிறத்தல்லே.”
0வனுடைய தீய நடத்தையைக் கடிந்து கூறுகிறாள். றுந்தொகையில் வலம் வருகிறாள்.
வை நயமுறக் கடிந்துரைத்த தோழி, தலைவி தன் உரைத்து, அவன் உணர்ந்து உருகும் வகையில்
இன்புறுகிறார்கள் தலைவியின் நிலமை உள்ளத்தே ந்து இன்புறாமல் இழுத்து இன்புறும் சிறுவர்களின் T.
வாழ்வதற்காக முயற்சி செய்வதும் அதற்கு உரிய இடம் மெத்தென்று அமைவதற்காகக் கரும்பின் தும் வியத்தற்குரிய செயல்களாகும். இவற்றை மாறான ஒழுக்கம் - துணைவியைப் புறக்கணித்து ாழியால் கடிந்துரைக்கப்பட்டது. இவ்வாறு நயமுற க்கு உரியதாகும்.
அனுபவமும், அறிவும், ஆற்றலும், மதிநுட்பமும் கு ஆகத் தன்னையே முற்று முழுதாக அர்ப்பணிக்கும் இவ்வாறு குறுந்தொகையில் தோழி நல்குணவதியாய்
米米米米米米米米米
:米米米米米米米米米冰米米米米米水冰冰冰冰
米米米米米米米米米米冰冰米
267

Page 292
இன்றைய உலகமானது இன்டர்நெட் யுக தொழில்நுட்பவியலில் மிகவும் முன்னேற்றமடைந்து எதிர்நோக்குகின்றது. அதில் முக்கியமான பிரச்சி மனிதனது எல்லாவித தேவைகளுக்கும் சூழலே உருவாக்கி நம்மை வாழ வைக்கும் சூழலைப் நிலம், நீர், வளி, ஒலி ஆகிய வழிகளால் மாச முறையின் மூலமும் சூழலானது மாசடைகின்றது.
நிலமானது விரிந்து பரந்து காணப்படுவதாகும். அந்நிலமானது இயற்கையாக எவ்வாறு இரு நிலையானதாக இருக்கும். இயற்கைக்கு மாற்றமா அந்நிலமானது பாரிய ஆபத்துக்குள்ளாகிவிடும்.
நிலமானது எவ்வாறு மாசடைகின்றது என்பை கணிக்கப்படுவது நிலமாகும். விவசாயிகள் நிலத்தில் அவர்கள் நிலத்தில் பயிரிடும் போது களைகள் அகற்றுவதற்காக கிருமிநாசினிகள், களைகொல்லிக வீசுகின்றனர்.
இதன் மூலம் கிருமிகள் அழிந்து போகும். ஆ நச்சுப் பொருட்களை விவசாய செடிகளுக்கு இ அந்நச்சுப் பொருளானது நிலத்தின் அமைப்ை பொருட்களைத் தூவுவதன் மூலம் நிலமானது பய6 கூட அழிந்துவிடுகின்றது. இதனால் நிலத்தின்
நிலமானது அணுக்கதிர் வீச்சுக்களாலும் பாதி மகா யுத்தத்தின்போது ஹிரோசிமா மீது வீசப்பட் அந்த வழங்கள் அழிந்துவிடுவதனால் நிலத்தின் 1 1986 சேர்னோபில் அணு உலைக்கசிவால் மக்கள் ( அழிவுக்குள்ளாகியது. குண்டு வீச்சின் போது சென்றடைவதனால் சூழல் மாசடைகின்றது. சமநிலையற்றுப் போகின்றது. இதனால் இயற்ை
Y 4

சூழல் மாசடைதல்
எம்.எவ்.எவ். அரபா க.பொ.த. (உத) (2005) கொ/அல்கிதாயா ம.வி கொழும்பு - 10
மாகக் காணப்படுகின்றது. இவ்வுலகமானது காணப்படுகின்றது. உலகம் பாரிய பிரச்சினைகளை னையாக, சூழல் மாசடைதலே காணப்படுகின்றது. இருப்பிடம் ஆகும். எனவே எமது வாழ்க்கையை பற்றி நம்மில் பலர் சிந்திப்பதில்லை. சூழலானது டைகின்றது. மற்றும் தற்போதைய தொழில்நுட்ப
அந்நிலத்திலேயே மக்களாகிய நாம் வாழ்கின்றோம். க்கின்றதோ அவ்வாறு இருந்தால்தான் அது ன ஏதாவது ஒரு செயற்பாட்டினை மேற்கொண்டால்
தப் பார்த்தோமானால், விவசாயிகளின் சொத்தாக b விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். , கிருமிகள் என்பவைகள் இருந்தால் அதனை ள் என்பவற்றை விவசாயம் மேற்கொள்ளும் நிலத்தில்
னால் நிலமோ இதில் அதிகம் பாதிப்படைகின்றது. டும் போது அது நிலத்திலே விழும். இதனால் பக் குலைத்து விடுகின்றது. இவ்வாறு நச்சுப் ாற்றுப் போய்விடும். நிலத்திலுள்ள சிறிய நுண்ணுயிர் பலம் குறைந்து விடுகின்றது.
படைகின்றது. இது எவ்வாறென்றால் 2ம் உலக - அணுகுண்டினால் வளங்கள் அழிந்து விட்டன. லம் குறைந்து நிலம் பலனற்று போகின்றது. மற்றும் பரிதும் பாதிக்கப்பட்டனர். அத்தோடு தாவரங்களும் ம் நச்சுத் தன்மையான பொருட்கள் நிலத்தைச் சூழல் மாசடைவதனால் இயற்கையின் நிலை
அனர்த்தம் கூட ஏற்படவாய்ப்புண்டு.
58

Page 293
களைக் கொல்லிகளாலும், போர்க்கருவிகளாலு யுத்தத்தின் போது போர்க்கருவிகளை உபயோகித் பூமியில் கலக்கின்றன. இதன் மூலம் நிலம் மாசை இடத்தில் போடாமல் ஹெலிகொப்டரின் மூலம் து போன்றவைகள் அழிந்து போகின்றது. இந்த கிருமி ஏற்படுவதோடு சூழல் மாசடைகின்றது.
நிலத்தில் உக்கிப்போகின்ற பொருட்களும் உள்ள உள்ளது. உக்கிப்போகாத பொருட்களாக பொலி மண்ணில் உக்கிபோகாது. இதனால் சூழல் ம அதிகரித்து வருகின்றது. பொலித்தீனில் உணவு மான் போன்ற உயிரினங்கள் சாப்பிடுகின்றது. இதன இதனால்தான் பொலித்தீன் பாவனையை குறைக்குப பின் எரித்தாலும் புதைத்தாலும் உக்காது. மீள் சு எரிக்கும் போதும் ஒரு வாடை வெளியாகும். அத
வைத்தியசாலையின் கழிவுகளை வெளியேற்றாப ஒரே இடத்தில் தேங்கிக் கிடப்பதாலும் சூழல் ம வீதியில் எரிவதனால் அதில் நீர்நிரம்பி நுளம்பு உ டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும். இதனால் ம
இயற்கை வளங்களாக கருதப்படுகின்றவற்றுள் ச வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்காக எரிக்கின்ற6 செல்கின்றன. மனிதன் மரங்களின் மூலம் நிறைய உணவுக்கு, மருந்துக்கு, ஆடைகளுக்கு என பயன்படுத்தப்படுகின்றது. இதை அழிப்பதன் மூல அத்தோடு சூழலும் மாசுபடுகின்றது. காடழிப்பு எ
அடுத்ததாக நீரின்மூலம் சூழல் எவ்வாறு மா செயற்பாட்டின் போது அதில் உள்ள அமிலங்கள் மாசடைகின்றது. மேலும் தொழிற்சாலைகளிலிரு நிலைகளை பெரிதும் பாதிப்படையச் செய்கின்றது. தொற்று நோய்களால் அல்லல்படுகின்றனர். தைபோ இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின் வருகின்றது.
சனய்பெருக்கத்தினால் மக்களுடைய பாவனை வீட்டிலுள்ள கழிவுப் பொருட்களை கால்வாய்வ அசுத்தமாகவே காணப்படும். துணிகளை உர் பொருட்களாக சாயங்களே அதிகம் வெளியேறும். சூடான நீரை நீர் நிலைகளில் பாய்ச்சுவதனா மாசுபடுவதனால் நீரிலுள்ள உயிரினங்களான மீன், அனைத்தும் அழிந்து போகின்றது. இது பெரி செயற்பாடுகளின் மூலம் மீன் இனமே அழிந்து டே
சூழலானது வளியினால் எவ்வாறு மாசுபடு மாசடைவதனால் சூழல் பாதிக்கப்பட்டு மனித வ போக்குவரத்து என்பன வளிமாசுறக் காரணம வெளியேறுகின்றது. இப்புகையானது காற்றோடு அதேபோல் வாகனங்களிலிருந்து புகை வெளியே
2

ம் நிலம் பெரிதும் பாதிப்படைகின்றது. வியட்னாம் ந போது அதில் வெளியாகின்ற நச்சுப் பொருட்கள் டகின்றது. சில நபர்கள் கிருமிநாசினிகளை உரிய நூவுகின்றனர். இதன் மூலம் பூச்சிகள், பறவைகள் நாசினிகளை தெளிப்பதனால் நிறைய அபாயங்கள்
ாது. அதே சமயம் உக்கிப் போகாத பொருட்களும் Sத்தீன் காணப்படுகின்றது. இப்பொலித்தீனானது சடைகின்றது. தற்போது பொலித்தீன் பாவனை ப் பொருட்களை வைத்து வீசுவதனால் அதனை ால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்பட இடமுண்டு. ாறு கூறப்படுகின்றது. பொலித்தீனை பாவனைக்குப் ழற்சிக்கு உட்படுத்தவும் முடியாது. பொலித்தீனை ன் மூலம் சூழல் மாசடைகின்றது.
Dல் வைப்பதாலும், குப்பை கூழங்களை அகற்றாது ாசடைகின்றது. சிரட்டைகளை, தகரப்பேணிகளை ருவாகின்றது. இந்த நுளம்பின் மூலம் மலேரியா, னிதன் இறக்கவும் வாய்ப்புண்டு.
5ாடும் ஒன்றாகும். இக்காட்டை தொழிற்சாலைகள், னர். இதனை எரிப்பதன் மூலம் காடுகள் அழிந்து நன்மையடைகின்றான். தளபாடம் செய்வதற்கு, இன்னும் பல தேவைகளுக்கும் இம்மரமானது ம் மனிதனது தேவைகள் பூர்த்தியாகாமல் போகும். ன்பது இயற்கைக்கு முரணான ஒரு செயற்பாடாகும்.
சடைகின்றது என்பதைப் பார்ப்போம். இரசாயன ர் நீரில் கலக்கப்படுகின்றது. இதனால் நீரானது நந்தும் வெளியேறுகின்ற கழிவுப் பொருட்கள் நீர் இதனால் மாசுற்ற குடிநீர் மூலம் மக்கள் பல்வேறு யிட்டு, வாந்திபேதி, மஞ்சட்காமாலை, நரம்புச்சிலந்தி, *றன. இவை மனித மரணங்களுக்கு வழிசமைத்து
பும் பெருகிவிட்டது. இதனால் மக்கள் தங்களது ழியே செலுத்துகின்றனர். இதனால் அவ்விடம் ]பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளில் கழிவுப்
அதனை நீர் நிலைகளிலே விடுகின்றனர். மற்றும் லும் நீரானது மாசுபடுகின்றது. இவ்வாறு நீர் நீர்த்தாவரம் மற்றும் ஏனைய நீர்வாழ் உயிரினங்கள் தும் நஷ்டமாகவே அமைகின்றது. இவ்வாறான ாய்விட வாய்ப்புண்டு.
கின்றது என்பதனைப் பார்த்தோமானால் வளி ாழ்வுக்கு இடர் ஏற்படுகின்றது. தொழிற்பெருக்கம், ாகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து புகை | காற்றாக கலப்பதனால் வளி மாசடைகின்றது. றுகின்றது. இவ்வாறாக வெளியேறுகின்ற புகையும்
59

Page 294
ஈயத்துணிக்கைகள் என்பனவும் வளிமண்டலத்தி அணு ஆய்வு உற்பத்தியின் போதும் வளி மாசை சுவாசிப்பதனால் சுவாசப்பை நோய், தொண்டை பாதிப்பு போன்ற நோய்கள் வளி மாசடைவின் மூ
இறுதியாக ஒலியின் மூலம் சூழல் எவ்வ தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகின்ற ஒலிய மட்டுமல்லாது வாகனங்களிலிருந்து வருகின்ற ஒல திடீரென்று ஒலிக்கு அதிர்வடைபவரின் இதயமா6 அவருக்கு இதய வலி ஏற்படக்கூடும். மீயொலி வி சூழல் மாசடைந்து சமநிலை பாதிப்பு ஏற்படுகின்
சூழலானது பல வழிகளில் மாசடைகின்றது. இ சுகம் தரும்”, “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல் சுத்தமாக வைத்திருப்பதற்கு சில வழிவகைகளா உண்டாக்குவது இயலாத செயல். ஆலையிலிரு தூசிகளையும் மரங்களின் இலைகள் தடுக்கின் செய்கின்றது. மேலும் அவை வெளியேற்றும் நீரா
இலங்கையில் சூழல் பாதுகாப்பு அதிகர்ரசபை தடுக்கச் சட்டங்களை அமுல்படுத்தியுள்ளது தொழிற்சாலைகளை அமைப்பதால் மக்கள் ஓரிட தடுக்க முடியும். ரக்ஷயாவில் எவுக்யோனில் அணு போபால் நகர யூனியன் கார்ப்பனைட் தொழிற்ச பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். சரிய அரசாங்கம் மூடவேண்டும். தெருவில் ஒடும் பத்திரத்தை இரத்துச் செய்ய வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் சூழை
米米米米米米米米 ܗ
米米米米米米米米米米米米米米米米米米米米
冰米米米米米米米米水米米水水
அன்பிற்குப் பிற சிறப்பிடமுமான ஈசன அவதார தினத்தை ந நம் மனமும் அப்பெரிய ஆனந்தத்தையும் அை
 
 
 
 
 
 

b கலக்கின்றன. இதனால் வளி மாசடைகின்றது. டகின்றது. இவ்வாறாக மாசடைந்த வளியை நாம்
நோய், புற்று நோய், இதய நோய், கண்பார்வை லம் ஏற்படுகின்றது.
ாறு மாசடைகின்றது என்பதனைப் பார்ப்போம். ானது மிகவும் அதிர்வடையச் செய்கின்றது. அது யும் அதே போன்றே இரைச்சலுடன் வெளியாகின்றது. அது ஒரு நிமிடம் நின்றே இயங்கும். இதன் மூலம் மானங்கள் எழுப்பும் மிகையொலி, மின்னணுக்களாலும் D35.
இதைத் தடுத்தால்தான் நாடு வளம் பெறும். “சுத்தம் வம்” என்பன முதுமொழிகளாகும். எனவே சூழலை க புகை எழும்பாத ஆலைகளையும் ஊர்திகளையும் ந்தும் சாலைகளிலிருந்தும் எழும்பும் புகைகளையும் றன. காற்றில் அவை நேராகக் கலக்காதவாறு வியும் காற்று மண்டலத்தைத் தூய்மை செய்கின்றன.
சூழல் மாசடைவதால் ஏற்படும் தீயவிளைவுகளைத் து. நாட்டின் பல பாகங்களிலும் பரவலாகத் டத்தில் செறிவதை ஐதாக்கி சூழல் மாசடைவதை உலையில் ஏற்பட்ட அனர்த்தத்தாலும் இந்தியாவின் ாலையில் கக்கிய நச்சு வாயுவின் விளைவாகவும் ான நடைமுறைகளைப் பேணாத தொழிற்சாலைகளை பாவனைக்கு உதவாத வாகனங்களின் அனுமதிப்
ல் மாசுபடாமல் பாதுகாக்கலாம்.
米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米来来米米米米米
米米米米米米米米米米米水冰水米米
ப்பிடமும் அறிவிற்குச் ரிடம் சென்றவருடைய ாம் கொண்டாடுவதால், ாருடைய ஞானத்தையும் DLuu (puug)IöDg.
270

Page 295
சீனத்து வெண்களியினால் ஆக்கப்பட்ட சுத்த இரண்டு; கொதி நீராவியில் அவிக்கப்பட்ட % கி கரட், போஞ்சி, கோவா போன்ற மரக்கறிகள்; ஒரு உணவு!
நான் ஒரு நாள் கேட்டே விட்டேன். “ஏன் அi செல்வாக்கு சற்று அதிகமாக இருந்த காரணி அமைந்திருந்தது.
“கரட் கண்ணுக்கு நல்லது” அவர் பதில். நான் காலமது. அதன் பின் பாடசாலைப் படிப்பிற் பல L கல்வி விரிந்து விற்றழின்கள் பற்றி பூரணமான அந்தப் பதில் இப்போதும் என் காதுகளில் ரீங்கா
எமது வாழ்வில் கண்பார்வை எவ்வளவு பிரதான தூரம் உதவி செய்கின்றது என்பதனையும் அ தேகாரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமானது என் விரித்துரைக்க விளைகின்றேன்.
விற்றமின்கள் எனப்படுபவை விலங்குகளின் அ ஆரோக்கியமாக வாழ மிகச் சிறிய அளவில் மட்டு இவை எமக்கு மாப்பொருள், கொழுப்பு போன்று போன்று “உடல் வளர்ச்சிக்கு உதவுதலையோ’ பு
மேலும் இவை எமது உடலிலே தயாரிக்கப்ப உண்ணும் உணவில் கட்டாயமாக சேர்த்துக் கொள் புறநடை போல் விற்றமின் D ஐக் கூறலாம். எமது விற்றமின் D தயாரிக்கப்படுமாயினும் சூரிய ஒளி ( எமது தோல் தயாரிப்பதைக் கட்டுப்படுத்துகின்றது வளரும் சிறுவர்களுக்கு, அவர்களின் தேவையின் ஒ D பூர்த்தி செய்கின்றது.
1913ஆம் ஆண்டு விற்றமின் Aகண்டுபிடிக்கப்பட்ட என அறியப்பட்டது. 1947இல் விற்றமின் A செய இன் இரசாயனப் பெயர் பற்றிக் குறிப்பிடும் போது எல்லாம் அமீன்கள் (Amine) என்ற தவறான கருத்
1912eobb e?560ö(6) Casimir Funk 61g0)ûD 6î656bT தவிடு நீக்கப்படாத அரிசியில் உண்டென்றும் அது சேதனவுறுப்புச் சேர்வை) என்றும் கண்டு பிடித்த
2

விற்றமின் ‘ஏ’ வாழ்வின் ஒளி
செல்வித, உவு2ா யா/புத்தூர் + சோமாஸ்கந்த கல்லூரி
ான உணவுண்ணும் தட்டு; அதில் பாண் துண்டுகள் லோகிறாமிற்கு சற்று குறைவாக இருக்கக் கூடிய ஒரமாக மாமைட். இவை தான் அப்பப்பாவின் இரவு
பய்பா இவ்வளவு கரட்?". மரக்கறிகளில் கரட்டின் ாத்தினால் எனது கேள்வியும் இப்படித் தான்
மூன்றாம் ஆண்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்த டிகளையும் தாண்டி சுகாதாரம், விஞ்ஞானம் என்று அறிவை நான் பெற்றுவிட்டபோதும் அப்பப்பாவின் ரம் இட்டுக்கொண்டே தான் உள்ளது.
மானது என்பதையும் அதற்கு விற்றமின் Aஎவ்வளவு தற்கும் மேலாக விற்றமின் A இன் பயன்பாடு ாபது பற்றியும் நான் கற்ற, கேள்விப்பட்ட செய்திகளை
னுசேப இயக்கங்கள் சீராக நடைபெற்று அவை மே தேவைப்படும் சேதனவுறுப்புச் சேர்வைகளாகும். சக்தி அளிக்கும்’ தொழிலையோ அல்லது புரதம் வதில்லை.
- முடியாதவையாக இருப்பதனால் இவை நாம் ளப்பட வேண்டியவையாக உள்ளன. இதற்கொரு தோலில் சூரிய ஒளி படும்போது எமது தோலால் றைந்த மழைக் காலங்களில் இந்த விற்றமினை
மேலும் விற்றமின் D ஏராளமாகத் தேவைப்படும் ந பகுதியையே தோலால் தயாரிக்கப்படும் விற்றமின்
து. 1933இல் இது Retinalஎனப்படும் அற்ககோல் கை முறையில் தயாரிக்கப்பட்டது. விற்றமின் A
ஆரம்ப காலங்களில் விற்றமின்கள் (vitamin) து நிலவியது பற்றியும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
‘பெரிபெரி” நோயைத் தடுக்கக் கூடிய பதார்த்தம் ஒரு அமீன் ( நைதரசனைக் கொண்டுள்ள ஒரு 1. எனவே அவர் Vital amine என்ற கருத்து

Page 296
வரத்தக்கதாக Vitamin என்று பெயரிட்டார். பி
SC 99
என்று அறியப்பட்ட பின்னர் “e” என்ற எழுத்தைச்
6bplfi A2 விலங்கு உணவுகளில் இருந்து
(உ-ம்): விலங்குகளின் ஈரல்
மீன்கள் மீன் ஈரல் எண்ணெய் பால் உணவுகள்
இவற்றுள் ஈரலில் பெருமளவு விற்றமின் A கெ
விலங்குகளின் ஈரலில் விற்றமின் Aஐ பெருமளவு A உள்ளெடுக்கும் நிலை பற்றியும் குறிப்பிட வேண்
சாதாரணமாக ஒருவருக்கு 1.0 mgஅளவு விற்ற வாழ்பவர்களும் அங்கு ஆராய்ச்சிக்காக செல்பவ துருவக் கரடியின் (Polar bear) ஈரலை தேவைச் அவர்களது உடலில் 150 mgக்கு மேற்பட்ட அள சில மாதங்களிற்கு தொடர்ந்து நீடிக்குமானால் வி நஞ்சடைதல் நிலை தோன்றுகின்றது. இந்த நஞ் கரையும் இயல்பே முக்கிய காரணமாகவுள்ளது. (6 கரைகின்ற இயல்புடையவை) விற்றமின் B,C எ6 தேவைக்கு அதிகமாக இவை உள்ளெடுக்கும் சந்த இழக்கப்பட்டுவிடும். ஆனால் விற்றமின் A,விற்றமி சிறுநீருடன் கழிவாக வெளியேற்றப்படுவதில்லை. அ0தாவது பெருமளவில் ஈரலில் உள்ள பொழுப்பு Vit 'A' சேர்த்து வைக்கப்படும்.
விற்றமின் A மிகையாக உடலிற் சேர்வதனால் ஏ
* வயிற்றுக் குமட்டல் * தலைமயின் இழப்பு * உலர்வான செதில் போன்ற நிலையிலா * ஈரல் பெரிதாதல் * தெளிவற்ற பார்வை.
விற்றமின் A ஐ தாவர உணவுகளில் இருந்து மரக்கறிகளில் உள்ள கரட்டீன் எனப்படும் நிற விற்றமின் A ஆக மாற்றப்பட்டு சேமித்து வைக் தாவர உணவுப் பொருட்கள் பின்வருமாறு:-
பூசணி
கரட் வத்தாளை தோடம்பழம்
இவற்றின் நிறம் பொதுவாக மஞ்சள், நிறமாக

ன்னர் எல்லா விற்றமின்களும் அமீன்கள் அல்ல
குறைத்து Vitamin என்று பெயரிடப்பட்டது.
மட்டுமே நேரடியாகப் பெற முடியும்.
ாழுப்பிற் கரைந்த நிலையில் காணப்படுகின்றது.
பிற்கு செறிந்துள்ள நிலையினால் மிகையாக விற்றமின் டியது அவசியமானதாகும்.
மின் A போதுமானது. ஆனால் ஆக்டிக் வட்டத்தில் ர்களும் விற்றமின் A ஐ மிகையாகக் கொண்டுள்ள 5கு அதிகமாக உண்கின்றனர். இதனால் தினமும் வில் விற்றமின் A சேர்கின்றது. இவ்வாறான நிலை ற்றமின் A உடலில் மிதமிஞ்சி சேர்ந்து விடுவதனால் ந்சடைதல் நிலைக்கு விற்றமின் A இன் கொழுப்பிற் விற்றமின் D, E, Kஎன்பவையும் இவ்வாறு கொழுப்பிற் ன்பவை நீரில் கரையும் இயல்புடையவையாதலால் தர்ப்பம் ஏற்படும் போது சிறுநீருடன் சேர்ந்து கழிவாக ன் Dஎன்பவை (நீரில் கரையமாட்டாதவையாதலால்)
எனவே இவை மிகையாக உடலிற் சேருகின்றன. பிலும், சிறிதளவு ஏனைய கொழுப்பு இழையங்களிலும்
ற்படும் நஞ்சடைதலிற்கான அறிகுறிகள் பின்வருமாறு.
ன தோல்
நேரடியாகப் பெற முடியாதாயினும் பச்சை, மஞ்சள் பொருள் எமது உடலில் வைத்து 0ஈரலில் 0, கப்படும். கரட்டின் பெருமளவில் காணப்படும் சில
இருக்கும்.
272

Page 297
சில விலங்குணவுகளிலும் கரட்டீன் உண்டு. அ
பட்டர் முட்டை மஞ்சட் கரு இறால்
பொதுவாக கரட்டீன் உள்ள விலங்குணவுகளு
இதுவரை மூன்று வகையான கரட்டீன்கள் அ கரட்டின் இவை மூன்றிலும் b-கரட்டீன் மிகவும் கரட்டில் உள்ளது b-கரட்டீன் ஆகையால் தான் அதிகமாக உண்ணும் படி வைத்தியர்கள் சிபார்சு
கரட்டினைக் கொண்ட உணவுகளை மேலதிக ஏற்படுவதாயினும் செயற்கை மஞ்சட் காமாலை அடையும் தன்மை காணப்படும். காரணம் குருதித் நிறம்) பெருமளவிற் காணப்படுவதே ஆகும். இத்
விற்றமின் A, கரட்டீன் என்பவற்றை மிகையாக அடுத்து விற்றமின் A,கரட்டீன் என்பவற்றை அளவு கருத்தில் எடுத்துக் கொள்வோம்.
(b (ST6)556b 6.jpg|DLssor A92 'antiinfective என்றே அழைத்தனர். காரணம் தோலையும் சீத மேலணி இழையங்களையும் தொற்றுக்களில் இரு பற்றி அக் காலத்தில் நன்றாக அறியப்பட்டிருந்த
மேலும் விற்றமின் Aஎலும்புகளினதும் பற்களின அத்துடன் கண்ணில் விழித்திரையில் உள்ள ே மட்டுமே ஒளிக்குத் தூண்டல் அடையக் கூடிய பார்வைக்கு உதவும் தொழிலைப் புரிகின்றது.
இங்கே தான் “கரட் கண்ணுக்கு நல்லது” எ6 ஒளி என்ற கருத்தும் ஒத்துப் போகும் நிலை தே
விற்றமின் Aநாம் உள்ளெடுக்கும் உணவுகளில் ஒளி உள்ள சமயங்களில் பார்வைக் குறைபாடு மேலும் கண்ணீர் சுரப்பிகள் செயலிழந்து போவத காணப்படும் கண்மடலின் உட்புற மேற்பரப்பும் வி திறக்கும் போது மசகிடல் இல்லாமையால் அசெலி முற்றாகக் குருடாகும் நிலை ஏற்படும்.
பொதுவாக பால் உணவுகள் குறைவாகக் கிை குறைபாட்டால் கஷ்டப்படுகின்றனர். இந்தோனே பகுதிகளில் உள்ள சிறுவர்கள் விற்றமின் Aதட்டு உள்ளாகின்றனர். உலக நாடுகளில் வருடா பாதிக்கப்படுகின்றனர். என்றும் இவர்களில் கிட்ட இழக்கின்றனர் என்றும் உயிரியல் வல்லுனர்கள்

வையாவனப்
b மஞ்சள் நிறமாகவே இருப்பதைக் காணலாம்.
றியப்பட்டுள்ளன. a - கரட்டீன், b-3.Jül. Göt, gஇலகுவாக விற்றமின் A ஆக மாற்றப்படக் கூடியது. விற்றமின் Aகுறைபாடு உள்ளவர்களிற்கு, கரட்டை செய்கின்றார்கள்.
மாக உட்கொள்ளும் போது நஞ்சடைதல் நிலை (Artificial Jaundice) 6T6OTILJO6ŭb G3g5T6ö up6bégo6i திரவவிழையத்தில் கரட்டீன் நிறப்பொருள் (மஞ்சள்
தகைய நிலைக்கு Carotenemia என்று பெயர்.
5 உட்கொண்டால் ஏற்படக் கூடிய விளைவுகளை பாக உட்கொண்டால் ஏற்படக் கூடிய நன்மைகளைக்
Vitamin” (தொற்றுக்களிலிருந்து காக்கும் விற்றமின்) ச் சுரப்பி மேலணிகளையும் உடலில் உள்ள வேறு ]ந்து காப்பதற்கு விற்றமின் A உதவி செய்கின்றமை தால்!
தும் உற்பத்தி, வளர்ச்சி என்பவற்றிற்கு உதவுகின்றது. கால்கள் (Rod) விற்றமின் A இன் முன்னிலையில் வையாக இருப்பதனால் நேரடியாக விற்றமின் A
iற அப்பய்பாவின் கருத்தும் விற்றமின் A வாழ்வின் ான்றுகின்றது.
தேவையான அளவு இல்லாமற் போனால் மங்கிய ஏற்படும். இதற்கு "மாலைக் கண்” என்று பெயர் ன் காரணமாக கண் பந்தின் முன்பாகத்தை மூடிக் றிவெண்படலமும் உலர்வடைந்து கண்ணை மூடித் கரியத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் இறுதியாக
டக்கும் நாடுகளில் வளரும் சிறுவர்கள் விற்றமின் சியா, பங்காளதேஷ், இந்தியா, ஆபிரிக்காவின் சில பாடு காரணமாகக் கண் குறைபாட்டு நோய்களிற்கு வருடம் 500,000 சிறுவர்கள் கண் நோய்களினால் த்தட்ட அரைப் பங்கினர் முற்றாக கண்பார்வையை கண்டறிந்துள்ளனர்.
73

Page 298
விழித்திரையை எடுத்துக் கொண்டால் இதில் கோ
கோல்கள் ஒளிக்குத் துண்டலடைகின்றன. அதாவது
கோல்கள். எனவே தான் இரவில் இரை தேடித் தி கோல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
() --Lo): ്യങ്ങിങ്ങ്
புலி
இவ் விலங்குகள் இரவிலும் தெளிவாகப் பார்க்க செறிவில் கோல்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதே காட்சிப் பெட்டியில் நாமும் பார்ப்போமே, அதே நிறத் எமக்கு கோல்கள் உதவுகின்றன.
கூம்புகள் பகலில் பார்வையை நம்பி இருக்கு வர்ணனைகளைப் பிரித்தறியவும் உதவுகின்றன. அத பெறுவதற்காக கூம்புகள் உதவுகின்றன. மங்கிய இதனால் இரவில் உருவத் தெளிவையும் நிறவேறு போகின்றது. வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு அ நிமித்தம் அவை கூம்புகளிற் படும்போது வெவ்வே இக் கணத்தாக்கங்கள் பார்வை நரம்பின் மூலம் ( இனங்கண்டு கொள்கிறது.
கோல்கள் செயற்படுவதற்கு விற்றமின் A அவசிய Retiol எனப்படும் அற்ககோல். இந்த விற்றமின் A இந்த Retinol (நிறத்தைக் காவும் பகுதி) புரதமாகி Sual purple) கொடுக்கின்றது. பார்வை ஊதா சிவ ஊதாவிற்கு Rhodopsin என்று பெயர். அப்படியா புரதம். அது விற்றமின் A இன் ஒட்சியேற்றத்தால் ( உதவும். பார்வை ஊதா கிடைக்கின்றது. இந்தப் போது பிரிகையடைந்து Opsin என்ற புரதப் பகுதி வெளிறல் நிலையை அடையும். பின்னர் இருளில் உம் மீண்டும் இணைந்து சிவப்பு - ஊதா நிறமான
பார்வை ஊதா ஒரு போதும் முடிந்து போய்வி நேரத்தில் மீளவும் உருவாவதன் காரணத்தினால் பார்வை ஊதா அழிவதற்கும், மீள உருவாவதற்கு
விற்றமின் A போதியளவு கிடைக்காத சமயத் உருவாக முடியாமல் போகும் என்பது தெரிகின்றது பார்க்க முடியாமற் போகும். இதையே நாம் ‘மாை A தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் (சிறப்பா ஏற்படும். இந்த நிலையில் கண்கள் ஒளிக்கு து சுரப்பிகள் பாதிக்கப்படுவதனால் கண்ணீர் உற்பத்தி நி மீது உராய்வின்றிச் சென்று வருவதற்கு (அதாவ உதவுகின்றது. கண்ணிர் உற்பத்தி நிறுத்தப்பட்டது கண்ணின் மேற்பரப்பில் காணப்படும் சீதம் சுரக்கு இதனால் கிருமிகள் உட்புகும் அபாயம் ஏற்படுகின் ஏனைய கட்டமைப்புக்களும் பாதிக்கப்பட்டு இறு: ஏற்படுகின்றது.

ல்களும் கூம்புகளும் காணப்படுகின்றன. இவற்றில் மங்கிய ஒளியிலும் தெளிவாகப் பார்க்க உதவுபவை ரியும் விலங்குகளின் விழித்திரையில் கூடுதலாகக்
முடிவதற்கு அவற்றின் விழித்திரையில் கூடுதலான காரணம் ஆகும். கறுப்பு, வெள்ளை தொலைக் தில் மங்கிய ஒளியில் பொருட்களைப் பார்ப்பதற்கு,
ம் மனிதன் போன்ற விலங்குகளில் வாசிப்பதற்கும் ாவது உருவத் தெளிவையும், நிற வேறுபாட்டையும் ஒளியில் கூம்புகள் தூண்டப்படுவது கிடையாது. பாட்டையும் எம்மால் சிறப்பாக செய்ய முடியாமற் 4லை நீளங்களைக் கொண்டவையாய் இருப்பதன் று வகைக் கணத்தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. முளைக்குக் கடத்தப்பட மூளை இந்த நிறங்களை
பமாக இருக்கின்றது. விற்றமின் A இல் இருப்பது ஒட்சியேற்றப்படும் போதுRetinol கிடைக்கின்றது. ய opsin உடன் சேர்ந்து பார்வை ஊதாவை (Viபபு - ஊதா நிறத்தைக் கொண்டிருக்கும். பார்வை னால் பார்வை ஊதாவின் ஒரு பாகம் opsin என்ற பெறப்பட்ட retinal உடன் சேர்வதனால் பார்வைக்கு பார்வை ஊதா கோல்களிற் காணப்பட்டு ஒளிபடும் யாகவும் retinal எனப்படும் பகுதியாகவும் பிரிந்து சற்று நேரம் இருக்கும் போது Opsin உம் retinal பார்வை ஊதாவைக் கொடுக்கும்.
டாது. ஒளி பட்டதும் அது அழிந்தாலும் சற்று தொடர்ந்து எம்மால் பார்க்க முடிகிறது. அதாவது ம் இடையே ஒரு சமனிலை ஏற்படுகின்றது.
தில் கோல்களில் காணப்படும் “பார்வை ஊதா’ து. இதனால் மங்கலான வெளிச்சத்தில் எம்மால் லக் கண்” நோய் என்கின்றோம். இந்த விற்றமின் B (öpb6O556ípë) Xerophthalmia 616óp (é56Op |ண்டலடையக்கூடிய நிலை இருந்தும் கண்ணிர்ச் றுத்தப்படுகின்றது. கண்மடல் விழிவெண்படலத்தின் பது கண்ணை மூடித் திறக்கும் போது) கண்ணிர் ம் உராய்வின் காரணமாக கண்மடல் வீங்குவதுடன் ம் பகுதியில் ஓட்டை விழுந்து சேதப்படுகின்றது. றது. கிருமிகளினால் விழிவெண்படலமும் கண்ணின் தியாக முற்றாகக் கண் தெரியாமற் போகும் நிலை
74

Page 299
Xerophthalmia நிலையில் இருக்கும் போது வ சமநிலையான உணவை உண்ணக் கொடுப்பதன் மேலும் தாமதித்தால் கண்பார்வை முற்றாக இழக்
எனவே “விற்றமின் A வாழ்வின் ஒளியே” என்ப கட்டாயம் இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொ
米米米米米米洲
米米冰米米米米米米米米米米米米米米冰米水
米米米米米米米米米米米
முன்துயின்று முன் வழக்கமாகும். அதிக றெழுப வனுக்கு நோய செல்வமும், மாசற்ற சொல்வார்கள். மனத் கொள்ள வேண்டும். உடலை உபயோகிக்க
ܩܠ

பிற்றமின் Aஐயும் உயர்ந்த புரதத்தையும் கொண்டு மூலம் நோயாளி சுகப்பட வாய்ப்புண்டு. ஆனால் கப்படும் நிலையே ஏற்படும்.
தை உணர்ந்து, அது நாளாந்தம் எமது உணவில் ள்வோமாக!
<米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米米水米米
米米米米米米米米米米米米
ത്ത
எழுவது, அவசியமான காலையில் துயிலினின் ற்ற வாழ்வும், குறைவற்ற மதியும் ஏற்படுமெனச் தில் நல்ல எண்ணங்கள் நல்ல காரியங்கட்கே ப்ெ பழக வேண்டும்.
اصط=

Page 300
இந்து மதம் எப்போது தோன்றியது என்பது பழைமையான மதம் என்பது அனைவராலும் ஒ காலத்திலேயே அதாவது 5000 ஆண்டுச வழிபட்டிருக்கிறார்கள். சிவன், திரிசூலம், பெண் இருக்கின்றார்கள். அத்துடன் பல்வேறு மிருக வழிபட்டிருக்கிறார்கள். இவற்றுடன் ஆரியர்கள் (சூரியன்), பிரித்வி (பூமாதேவி), வருணன் (மழை), ம ஆகியவற்றையும் தெய்வங்களாக்கினர். பூலோகத்து மோட்சம், நரகம் ஆகியவற்றையும் அறிமுகம் செ
இதன்பின் இந்து மதத்தில் பல மாற்றங்க திரிமூர்த்திகளை (சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியே கடவுள் அவதாரங்களாக கூறப்பட்ட ராமர், கிருவி வணங்கப்படுகின்ற முறை பின்னர் வந்தது. மேலும் வைணவர்கள் என்ற பிரிவினராக காணப்பட்டனர். ை வழிபட்டனர்.
இந்து மதத்தில் வானசாஸ்திரம், அரசியல், இருக்கின்றன. உதாரணமாக கிரகங்கள் பற்றி முன்பே அறிந்துள்ளனர் என்பதை நவக்கிரக வ முன்கூட்டியே கணித்துச் சொன்னதன் மூலம், வான நிரூபித்திருக்கின்றனர். பூமியின் ஆயுள் காலத்தை ந கிருத யுகம் 1728,000 ஆண்டுகள்,திரேதா யுகம் 129 கலியுகம் 4,32,000 ஆண்டுகள் என்று நான்கு யுகங் யுகங்களும் முடிந்து விட்டதாகவும் இப்போது கிருத யுகத்தில் அரிச்சந்திரன் வாழ்ந்ததாகப் புராண பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்திருக்
இவ்விரு இதிகாசங்களும் மனித வாழ்க்கைய அரசிறைமை, தர்மம், நீதி, நேர்மை, வீரம், தியாகம் உயரிய நிலையிலே படம் பிடித்துக் காட்டுகின் மக்களுடன் நேரடியாகவே தொடர்புடையவர்களா எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவதார மகிமையை புராணங்களும் இந்துசமய வரலாற்றையும் சமய தத் சேர்த்து விளக்குகின்றன. இந்துமதத்தின் இயல் இதிகாசங்களிலே பூரணமாக அமைந்து வந்துள்ள அதர்மம் அழிந்துவிடும் என்பதும் இங்கு நிலை)
எப்படி இருப்பினும் இராமாயணமும், மகாபார ஒப்பற்ற காவியங்களாகத் திகழ்கின்றன.

இந்து மதமும் இதிகாசங்களும்
நகுருசாந் உ/த(கலைப்பிரிவு) இரத்மலானை இந்துக் கல்லூரி
உறுதியாக தெரியவில்லை. ஆயினும், உலகின் புக்கொள்ளப்பட்ட உண்மை ஆகும். சிந்துவெளி ளுக்கு முன்பே இந்துக் கடவுளை மக்கள் தெய்வம் ஆகிய சிலை வடிவங்களை வணங்கி நீங்கள், பாம்புகள், மரங்கள், சூரியன் ஆகியவற்றை இயற்கைச் சக்திகளான தயுஸ் (வானம்), அக்கினி ாருதி (புயல்), வாயு (காற்று), இந்திரன் (இடிமின்னல்) துடன் தேவலோகம், இந்திரலோகம், பாதாளலோகம், ய்தனர்.
ள் ஏற்பட்டன. மற்ற கடவுள்களுக்கு மேலாக ாரை) வணங்கும் வழக்கம் வந்தது. இதிகாசங்களில் ர்ணர் முதலியோர்களும் கடவுளர்களாக மக்களால் ) இந்து மதத்தின் வளர்ச்சி காரணமாக சைவர்கள் சைவர்கள் சிவனையும், வைணவர்கள் விஷ்ணுவையும்
விஞ்ஞானம், தத்துவம், முதலியவை உள்ளடங்கி நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ழிபாடு சுட்டிக் காட்டுகிறது. கிரகணங்கள் பற்றி ா சாஸ்திரத்திலும் அவர்கள் வல்லவர்கள் என்பதை ான்கு பிரிவுகளாக நமது முன்னோர்கள் பிரித்துள்ளனர். 6,000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் மூன்று கலியுகம் நடந்து வருவதாகவும் கூறுகின்றார்கள். னங்கள் கூறுகின்றன. மகாபாரதமும் இராமாயணமும் கலாம் என்பது ஆய்வாளர்களுடைய கருத்தாகும்.
ன் சகல தன்மைகளையும் வெளிப்படுத்துகின்றன.
, கற்பு, நன்றி உணர்வு, பக்தி, பணிவு முதலியவற்றை
றன. இந்துமதக் கடவுளர்கள் இதிகாசங்களிலே க் இருந்தனர். மக்களின் உயரிய பக்தி நிலை இங்கு
பும் இவை வெளிப்படுத்துகின்றன. இதிகாசங்களுடன்
துவங்களையும் மக்களின் இயற்கை வாழ்க்கையோடு
புகளான அறம், பொருள், இன்பம், வீடு முதலியன
மை குறிப்பிடத்தக்கது. தர்மமே வெல்லும் என்பதும்
றுத்தப்பட்டுள்ளது.
மும் இந்து சமயத்தின் தொன்மையை விளக்கும்
76

Page 301
LDLIT6vouu Éu3E
தொன்றுதொட்டு நிலவிவந்த எம் இந்துச முடியாது. வீழ்ச்சிகளை அன்றி எழுச்சிகளை மட் படிகளாய் அமைந்தவை பல உள. ஆனாலும் < ஆதீனங்களையும் சாரும் என்பதில் ஐயமேதுமில் ஆதீனங்களும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிற் இவை தமிழகத்தில் சோழ, பாண்டிய அரச தோன்றியவையாகும். விஜயநகர நாயக்க மன்னர் பல சீர் வரிசைகளையும் மானியங்களையும் வழ
வேதாந்த மரபில் இவ் ஆதீனங்கள் அமைக் தத்துவங்களைப் பேணி வந்தன. துறவறம் பூ பரம்பரையினரோடு தொடர்புடையவையாகவும் இ இம் மடங்களில் பேணப்பட்டு ஆலயங்களில் ஒ நூல்களையும் வெளியிட்டதோடு பல பாடசாை வித்தகர்கள் இங்கிருந்து புராணங்கள், இதிகாச
மடாலயங்களும் ஆதீனங்களும் சைவத்தைப் வளர்த்தெடுப்பதிலும் பெரும் பங்காற்றின. திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரவாதீனம், திரு என்பவற்றைக் குறிப்பிடலாம். இச்சைவ மடங் தமிழிலக்கியங்களைக் காப்பதிலும், பரப்புவதிலும் மு கற்றுத் தேர்ந்து புலமைபெற்ற பல புலவர்கள் தொண்டு புரிந்தனர்.
சைவம் வளர்க்கத் தோன்றிய ஆதீனங்களில் மு. விளங்குவது திருவாவடுதுறை ஆதீனமே என் பதினாறாம் நூற்றாண்டிலே தோற்றம் பெற்றது. முனிவர் என்போர் இவ் ஆதீனத்தை வளட் இவ்மடத்திலே புலவராய் விளங்கிய நமச்சிவ இருப.துக்கும், உமாபதி சிவாச்சாரியாரின் வின கருத்தினை மக்களிடையே பரப்பினார். ஈசான பகுதிகள் கொண்ட “இலக்கணக் கொத்து’ என்

ளும் ஆதீனங்களும் ஆற்றிய பணிகள்
மகுந்தவி தரம் - 13 (கலைப் பிரிவு) கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
மய வளர்ச்சியை அளவிட்டறிந்துவிட இலகுவாய் ட்டுமே கண்டுவந்த இந்து சமயத்தின் வளர்ச்சிக்கான அத்திவாரமாய் அமைந்த சிறப்பு, மடாலயங்களையும், bலை. இத்தகைய சிறப்புப் பெற்ற மடாலயங்களும், குப் பிற்பட்ட காலங்களில் தோற்றம் பெற்றவையாகும். வம்சங்கள் அதிகாரம் இழந்து நின்ற காலத்திலே களும், மராட்டிய மன்னர்களும் இவ் ஆதீனங்களுக்கு ங்கி உள்ளார்கள்.
கப்பட்டு தத்துவ பிரசாரங்களின் மூலம் சைவசமய பூண்ட சந்நியாசிகள் வாழும் மடங்களாயும் சந்தான வை விளங்கின என்பது மரபு. தேவார திருவாசகங்கள் தப்பட்டன. இவை, சமய நூல்களையும் இலக்கிய லைகள், கல்லூரிகள் போன்றவற்றையும் நடாத்தின. ங்கள் போன்றவற்றை உருவாக்கினர்.
பேணிக் கொள்வதிலும், கலாசாரத்தை முன்நிறுத்தி புகழ்பெற்று சைவப் பணிசெய்த ஆதீனங்களாக ப்பரந்தாள் ஆதீனம், மதுரை மடம், வீரசைவ மடங்கள் கள் சமயத்துறையில் பெரும்பணியாற்றிய போதிலும் Dனைந்திருந்தன. தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் இத்தகைய மடாலயங்களில் இருந்தே இலக்கியத்
தன்மை வாய்ந்ததாயும், தனித்தன்மை பொருந்தியதாயும் பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இவ்வாதீனம் கியி அம்பலவாண தேசிகள், ஈசான தேசிகள், சிவஞான படுத்தி மெருகூட்டியவர்களாய் அமைகின்றனர். ாய தேசிகள் அருள்நந்தி சிவாச்சாரியாரின் இருபா வெண்பாவிற்கும் உரை எழுதிச் சைவ சித்தாந்தக் தேசிகள் வேற்றுமை, வினை, ஒழிவு என்னும் மூன்று னும் நூலைச் செய்தார்.
277

Page 302
திருவாவடுதுறை ஆதீனத்திலே வாழ்ந்து ப பெருமையை சிவஞான முனிவர் பெறுகிறார். அ கற்பனை வளம்மிகுந்த அமுதாம்பிகை பிள்ளை கலசையந்தாதி, காஞ்சிப் புராணம் ஆகிய பல நு எழுதியதன் மூலமும் “தொல்காப்பியச் சூத்திர உருவாக்கியதன் மூலமும் இவ்வுலக சைவத் தம தக்கவைத்துக் கொண்டார்.
தமிழகச் வைச ஆதீனங்களில் திருக்கைலாய வருவது தருமபுரவாதீனம் ஆகும். தஞ்சை ம தென்கரையில் இவ்வாதீனம் அமைந்துள்ளது. தெ மரபில் தோன்றிய பற்குருஞான சம்பந்தர் என்ற அ பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வாதீனம் தமிழ் பல்வேறு துறைகளிற்கும் ஆற்றிய பணிகள் சொல்லி "சொக்கநாத வெண்பா”, “முத்தி நிச்சயம்” முதல பெருமையைப் பெற்றார். மற்றும் தருமபுரவாதீன் நிச்சயம் பேருலா, ஞானவராண விளக்கப் பேருை சுருக்கம், படிக்காசுப் புலவர் இயற்றிய புள்ளிருக்கும் நூல்களும் இவ்வாதீனத்தில் தோற்றம் பெற்றவை
தருமபுரவாதீனம் தஞ்சை, திருச்சிராப்பள்ளி ம சிறப்பாக பரிபாலித்து வருகின்றது. இருபதாம் நூற் இவ்வாதீனம் சிறந்த முறையில் அச்சிட்டு இலவச இதுவரை 800 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தி சைவ சித்தாந்த உரைநூல்கள் போன்றன ஆதீன சார்பில் நாற்பத்திரண்டு ஆண்டுகளாக “கான சம்ட
தமிழ்க்கல்வி வளர்ச்சி நோக்கில் ஆதீனச் சார்ட நடைபெற்று வருகின்றது. தருமபுரவாதீனம் 18 மொ கொண்ட நூலகம் ஒன்றைப் பராமரித்து வருகின்றது. பட்டங்கள் வழங்கி அவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஊ விளங்கித் தமிழ் வளர்த்து வருகின்றனர். இவ் முகமாக ஓர் பாடசாலையும் நடாத்தப்படுகிறது. நிறுவித் தமிழும், சைவமும் தழைத்தினிதோங்க வருகின்றது,
அடுத்ததாக மடாலயங்களில் மகிமை வாய்ந்; இம்மடம் கிபி 1926இல் காசிவாசி தில்லைநாய அண்மையில் உள்ள திருப்பனந்தாளில் அமைக் என்னும் பெயர் பெற்றது. குமரகுருபரரை அவர் தருமபுர மடத்தின் “தருமபுரத்தின் சிஷ்ய மடம்” எ கல்லூரி ஒன்றினையும், பூரீவைகுண்டத்தில் ஒரு ச ஆதீன முதல்வர்கள் நிறுவியுள்ளனர். தேவாரப் ஆதீனத்தோர் ஏற்படுத்தி உள்ளனர். திருக்கோ சலவைக் கல்லில் பொறித்து சைவமும் அது சார் செய்தனர்.
“குமரகுருபரன்’ என்னும் திங்கள் இதழ் இம்ம திருவாசகம், பெரிய புராணம், திருக்குறள் உரை அடக்க விலைமதிப்பாக இவர்கள் வெளியிட்டுள்ள
2

) எண்ணற்ற பயன்தரு நூல்களைப் படைப்பித்த வர் முல்லை வாயிலந்தாதி, முதுமொழி வெண்பா, ந் தமிழ், உருக்கமான பாடல்களைக் கொண்ட ல்களை ஆக்கினார். மற்றும் நன்நூலுக்கு உரை
விருத்தி” என்ற சிறப்பு மிக்க ஆய்வு நூலை ழ் வரலாற்றில் தன் பெயரையும் சிவஞான முனிவர்
திருமரபில் மெய்கண்ட சந்தானத்தில் விளங்கி வட்டம் மயிலாடுதுறையைச் சார்ந்து, காவிரியின் பாண்டி நாட்டு பூரீவில்லிபுத்தூரில் சைவ வேளாளர் ருளாளரால் கிபி பதினாறாம் நூற்றாண்டின் இடைப் மொழி, இலக்கியம், இலக்கணம், சமயம் போன்ற விற்கரியன. பற்குருஞான சம்பந்தர் “சிவபோகசாரம்” ன பல சிறந்த எட்டு அருள் நூல்களை இயற்றிய ாத்தைச் சேர்ந்த பூரீவெள்ளியம்பலவாணர் முத்தி ர, ழரீ சம்பந்த சரணாலயர் வடித்த கந்தபுராணச் வேளுர்க் கலம்பகம் போன்ற பல சைவச்சார்புடைய பாகும்.
ாவட்டங்களில் திகழும் 27 திருக்கோயில்களைச் றாண்டின் தொடக்கம் முதல் பல அரிய நூல்களை மாகவும் அடக்கவிலையிலும் வழங்கி வருகின்றது. ருக்குறள் உரைவளம் திருமுறை உரைப்பதிப்புக்கள், ம் வெளியிட்ட நூல்களுள் சிலவாகும். ஆதீனச் ந்தம்” எனும் திங்கள் இதழும் வெளியிடப்பட்டது.
புடையனவாய் 1946முதல் தமிழ்க் கல்லூரி ஒன்றும் ழிகளில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட நூல்களைக் தமிழகத்து நல்லறிஞர்கள் பலருக்கும் ஆதீனங்கள் க்கமூட்டி வருகின்றது. பலர் ஆதீனப் புலவர்களாக ஆதீனத்தின் மூலமாக தேவாரம் பயிற்றுவிக்கும் இவ்வாறு சென்னையில் சமயப் பிரசாரநிலையம் நற்பணிகள் பலவற்றையும் இவ் ஆதீனம் ஆற்றி
ததாக அமைவது திருப்பனந்தாள் மடம் ஆகும். க சுவாமிகளால் நிறுவப்பட்டது. ஆடுதுறைக்கு ய்பட்டதால் இம் மடம் “திருப்பனந்தாள் மடம்” வாழ்ந்த காலத்திலே ஆதரித்தவர், அப்போதைய ன்றும் வழங்குவர். திருப்பனந்தாளில் தமிழ்ப்புலவர் லைக்கல்லூரியினையும் ஓர் உயர் பள்ளியினையும்
பாடசாலைகளும், மருத்துவ மனைகளும் இவ் பில்களில் தேவாரத் திருப்பதிகப் பாடல்களையும் ந்த கலைகளும் வளரத் தம்மாலான பணிகளைச்
டத்தின் வாயிலாக வெளிவருகின்றது. தேவாரம், கொத்து முதலிய சிறந்த எண்ணற்ற நூல்களை மை ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சில காலங்களிற்கு

Page 303
முன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் திரு திருமுறை வரலாறு', திருநீ. கந்தசாமிப்பிள்ளை அ இரு அரிய நூல்களும் இக்காசி மடத்தின் பொருள் பாராட்டிற்குரிய செய்தியாகும்.
அடுத்ததாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக் ஞான சம்பந்தர் வந்து தங்கிய மடம் என்பர். பழையது. இப்போதுள்ள பூரீலழரீ சோமசுந்தர ஞா6 சந்நிதானம் ஆவார். இம்மடம் “திருஞானசம்பர் சார்ந்து விட்டவர்களை மீண்டும் சிவதீட்சை தந்து இம்மடம் செய்து வருகின்றது. சுவாமிகளே இ ஆங்காங்கு அருள்நெறிக் கழகங்களை நிறுவிச் சை
இவ்வாறு மாண்புடைய சிறப்புக்களைப் பெற்று, L ஆதீனங்களும் வளர்த்தெடுத்த எம் மொழியை, 6
。米米米米状
米米米米米米米米米冰米米米米米
米米※米※米米米米
நமக்குக் கிடைத் வணக்கத்திலும் உலக நமது வாழ்க்கைை செய்வதோடு இன்று கிடைக்காவிடினும் ை வேண்டும்.
 
 

க வெள்ளைவாரணர் அவர்கள் எழுதிய “பன்னிரு வர்கள் எழுதி வெளிவந்த “திருவாசகம்’ என்னும் ாதரவினால் வெளிவந்தவையே என்பது சிறப்புடன்
த அண்மையில் இருக்கும் இம்மதுரை மடத்தினை இதுவே இன்றுள்ள சைவ மடங்களில் மிகமிகப் சம்பந்த பரம்ாச்சாரிய சுவாமிகள் 295ஆம் குருமகா தள் திருமடம்” என்று கூறப்படும். பிறசமயத்தில்
சைவசமயத்திற் சேர்த்துக் கொள்ளும் பணியினை த்தகைய அரிய நூல்கள் இயற்ற வல்லவர்கள். பம் வளரத் தமிழ் தழைக்கப் பாடுபட்டு வருகின்றனர்.
கத்தான த்ொண்டாற்றி வருகின்ற மடாலயங்களும் ம்மதத்தை வளப்படுத்தி வாழ்வோம்.
米来米米米米
帐米米米米米米米米米米米米米米米水
米米米米米米米米米米米
த காலத்தைக் கடவுள்
த் தொண்டிலும் கழித்து யப் பயனுள்ளதாகச் று ஆத்தும தரிசனம் தைரியத்துடன் இருக்க

Page 304
(8шDѣ மை கொண்
வானம் எழுதிய புதுக்கவிதை - ம6
முழுக்க நிரம்பியிரு ஏழையின் வயிறு பசியால்!
புயலில் படத் அதனால் என்ன? அதோ தூரத்தில்
சரித்திரம் படைக்கு தன் உதிரத்தை இ (3U60IIT
சிதைந்த உடல் த சலித்த மனங்கள் கால தாமதத்தை
அருவி நீர் பாறைய மோதி மோதி சிதறியது பாறை
கை நழுவியது எனக்கு கண்ணாடி மீனுக்கு எல்லாம்
நாளைக்கென்று மி என்னிடம் எதுவுடே நம்பிக்கையைத் த
விடிவது உனக்கு வயதாவதற்கு மட் நீ வாழ்வதற்காகவ
வாழ நினைத்தால் வாழ வேண்டும் அ எல்லோரும் இன்(
28

ஹைக்கூ
நஹம்சினி உ/த(வர்த்தகப் பிரிவு), இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
ODỌ
க்கின்றது
நிலம்!
மாம் ழந்து
ண்டவாளத்தில் கணக்குப் போட்டது
பில்
த் தொட்டி
ச்சம் வைக்க
மயில்லை விர!
டுமல்ல ம்தான்!
வாழலாம் *வரென னொருவரை.
3O

Page 305
“விட்டு விலகிடும் போதும் கட்டியல்
ன்ெபதற்கிணங்க இன்றைய 21ஆம் நூற்றாண்டி நேசத்தை மோசமாக்கி, பணத்திற்கு பாசத்தை மு பிள்ளைக்குமிடையிலான உறவு என்பதை விட உய பார்த்தால்,
இன்றைய காலகட்டத்தில் பெற்றோருக்கும் பின் ஏணியாக அதாவது தேவை முடிந்ததும் ஏணிை காணப்பட்டாலும் பலருக்கு, 75% ஆனோருக்கு பெற் பாலமாக காணப்படுகிறது என்றால் அது மிகையுமி பெற்றோர் தங்கள் சுயகெளரவத்திற்காக பிள்ளைக6ை அதேபட்சத்தில், பிள்ளைகளின் ஆசாபாசங்கள், ! நிறைவேற்றத் தவறிவிடுகின்றனர் என்பதை விட மற பக்கத்தில் தன் எண்ணங்களை எச்சமாக்கி பிள்ளை அசைவையும் நுணுக்கமாக அவதானித்து பிள்ளை வழியமைத்து, உச்சியைத் தொட்டதும் அவர்களை அணிவிக்கும் பெற்ற மனங்களும் இக்காலத்தில் இ
முதலில், பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று விருப்பங்களை நிறைவேற்றுபவர்களே பெற்றவர்களா நனவை கனவாக்கி, கனவை நனவாக்கும் வரையி சுதியாகும் ஒரு வீணையின் தந்திபோல காணப்பு பிள்ளையிருக்க, தந்தியாக பெற்றோர் இருந்து சுதிே வீணை சிறப்பாக மீட்டப்பட்டது என்றே கூறுவர். அ நாம் உயர, வெற்றி மாலை சூட, உறவு எனும் ( தம்மையே அர்ப்பணிக்கிறார்கள். எனவே பிள்ளைகளுக்குமிடையிலான உறவு அறுந்துவிடு பாலமாயுள்ளது. இது இன்று மட்டுமல்ல பெற்றவ6 வரும் இனிமையான இசை போன்ற உறவாகும்.
எனவேதான் உறவுகள் உறங்கினாலும் உலகபே கூட மாறினாலும் பெற்றோர் பிள்ளை உறவு மாறாது 6) J60).
ஏனெனில் இது ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்ை தொடர்படவேண்டும் தொடரும் இது பொய்யான ெ எங்கள் மெய் மரவேர்களாக பெற்றோர்கள் இருப்ப
28

உறவுப்பாலம்.
செல்விபிகே. மேகலா, பூண்டுலோயா தமவி (460iiG66)ITILIT.
)ணக்கத் துடிப்பதே பெற்றார் பாசம்”
ல் விஞ்ஞானத்தை மிஞ்சி, பாசத்தை வேகமாக்கி, மதலாயிடும் இக்காலப்பகுதியில் பெற்றோருக்கும் ருக்கு உணவின் தொடர்பு என்று ஒத்து நோக்கிப்
ர்ளைகளுக்குமிடையிலான தொடர்பு, உறவு ஒரு யயே பாரமாய்க் கருதி இடமாற்றுவது போன்று றோர், பிள்ளைகளுக்கிடையிலான உறவு பாசமெனும் ல்லை. இக்கருத்திற்கு பகையுமில்லை. ஒரு சில ா அடமானம் வைத்து தம் இச்சைப்படி ஆளாக்கும் விருப்பு வெறுப்புக்கள், எதிர்பார்ப்பு, ஏக்கங்களை ]ந்து விடுகின்றனர் என்பதே பொருத்தமாகும். மறு களின் ஆசைகளை துச்சமென்றெண்ணி, ஒவ்வொரு மகிழ்வை, அவன் விருப்பின் உச்சியைத் தொட உச்சி முகர்ந்து ஆனந்தக் கண்ணிரை மாலையாக இல்லாமலில்லை.
பவனே பெற்றவனின் பிள்ளையாவான். பிள்ளையின் வர். இவ்விரு சாராருக்குமிடையிலான உறவானது லும் இவர்களுக்கிடையிலான தொடர்பு சுகமான டுவதே பெற்றோர், பிள்ளை உறவு, வீணையாக சர்த்து பாடியபின் தந்தியை யாரும் கூறுவதில்லை. துதான் இருவருக்குமிடையிலான உறவு. ஏனெனில் சேலையை பாசமென்னும் நூல் கொண்டு நெய்து இன்றைய காலத்தில் பெற்றோருக்கும், ) தந்தியாகவன்றி இணைந்து முனை சேர்க்கும் ா என்று பிள்ளையைக் கண்டானோ அன்றிலிருந்து
தளம்பினாலும் உண்மை மறைந்தாலும் உள்ளம் இரண்டிலொன்று மண்ணோடு மண்ணாய் உறங்கும்
த, உடலில், கலந்துவிட்ட பந்த உறவு, இவ்வுறவு மய்யுமல்ல. மெய்யான பொய்யுமல்ல பிள்ளைகள் நனாலேயே நுனியில் நாங்கள் பூத்து மணம் பரப்பி

Page 306
காய்த்து கனியாகிறோம். நாங்கள் வெளியில் ெ பெற்றோர் எனும் வேர்களே காரணம். ஆனா சந்தேகக் கண்கொண்டு பிள்ளைகள் எங்கை வைக்காததுமேதான் கரை சேர்க்கும் துடுப்பே கை படகு மட்டுமல்ல பயணிப்பவரும்தான். எனவே பெர் தயவாய் வேண்டும் ஒரு தயவு மனு.
* சந்தேக தண்ெ உங்கள் பார்ை எரிக்கப்படுவது சுவாசிக்கும் மூ நாளை இந்த ந
அது அவ்வாறிருக்க பிள்ளைகளாகிய நாம் பெற் நாம் நடத்தையில் மாற்றம் கொண்டு வருவதால் சந்தேகப்புயலை எம்மில் வீசுகிறார்கள். மனக்கடல் கொள்ளாதல்லவா? இது ஒரு சிலரின் தவறுதான். நாங்கள் உறங்க விடுவதுமில்லை. எங்கள் இ ஒரமாய் இல்லை. கடலாய் தான் இருக்கிறதே கடலலையாய் தினம் தினம் எம்மை தீண்டி ஞாட கரையே மோதாத காலம் வரினும் எங்களிருவ சிக்கலாய், சிறப்பாய், அழகாய், அன்பாய் பின்னிய இவையனைத்தையும் மறுக்கத்தான் முடியுமா? என பெற்றோர் பிள்ளைகள் எங்களிருவருக்கான உறவு வைப்போம் பிள்ளை மனம் எனும் நாம் இதனால்
,米米米米米米米米
米米米米米水米米米米米米米米米米冰冰冰米米
水米米冰米水米米米米米米米米米米
பரோபகாரத்தின் கப்படும் பொருள், அ விடில், பலவேளை ஞானத்துடன் சேர் நோக்கத்துடன் செய் பிரகாசிக்கின்றன.
N

தரிய மண்ணில் மறைந்து நிலை நிறுத்தியிருக்கும் ல் ஒரு சில பெற்றோர் விடும் தவறு யாதெனில் ள பார்ப்பதுவும், பெற்ற மனங்களே நம்பிக்கை ரசேர்ப்பதில் நம்பிக்கையில்லாதிருந்தால் மூழ்குவது ]ற பந்தங்களே எங்களுக்கு சுவாசம் தந்த காற்றுகளே
காண்டு பார்க்காதீர் வகளால்
எங்கள் மனங்களும் ச்சும் மட்டுமல்ல ாட்டின் வெற்றியும் தான்”
ற உயிரே வேதனைப்படும்படி நடத்தை தவறலாகாது தான் அவர்களும் எங்களை சமூகத்தோடிணைந்து கொந்தளிக்காதிருந்தால் சந்தேக சூறாவளி மையம் மற்றப்படி எங்கள் உறவுகள் உறங்கப்போவதுமில்லை ருவர் உறவு பலமாகத்தான் இருக்கின்றதே தவிர தவிர கரையாயில்லை. கரையாய் நாமிருந்தாலும் |கப்படுத்தும் உறவாகவே காணப்படுகிறது. அலை பருக்கிடையேயான உறவு வலை அறுக்கப்படாது வலையாயிற்றே அதை அறுக்கமுடியுமா? இல்லை வே அன்று மட்டுமல்ல இன்றும் என்றும் என்றென்றும் பது. உறங்காத உணர்வாகவே இருக்கும் இருக்க
அகமகிழும் அவனியிலே பெற்றவர் மனம்.
:米米米米米米米米米”
米米米米米米米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米冰冰米米米米米米
பொருட்டுக் கொடுக் அறிவுடன் அளிக்கப்படா தீமை விளைவிக்கும். ந்த பொழுதே நல்ல யப்படுங் காரியங்களும்
HY
282

Page 307
அன்றைய பொழுது விடிந்தது. எல்லோர் மு எல்லோரும் கிளிநொச்சியில் இருந்து யுத்தம் கார6 சிறு கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். அந்தக் குடும்பம். சண்முகம் கிளிநொச்சியில் வாழ்ந்த ே கமலம் தன் வீட்டுப் பணியையே செய்து வருபவ6 பொழுது அதே கிராமத்தில் உள்ள கிளிநொச்சி படித்துக்கொண்டு இருந்தவன். இரண்டாவது ம படித்துக்கொண்டிருந்தவன். கடைக் குட்டி படித்துக்கொண்டிருந்தவள். அவர்களது வாழ்க்ை யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்த காலம். ஆரம்பமாகியது, அங்கிருந்த மக்கள் அனைவரு சண்முகத்தின் குடும்பமும் உடுத்த உடையுடன் உயிர் மக்கள் ஓடிக்கொண்டிருந்த திசையை நோக்கி ஒடி கிராமத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் ஒரு ப காலப்பகுதியில் ஒரு நாள் மாலைப் பொழுது “: எல்லோரும் தாங்கள் வெட்டிவைத்திநந்த L13 பேரிரைச்சலுடன் வந்த அவ்விமானம் அதே பாட அங்கே ஐயோ அம்மா என்ற அவலக்குரல்கள் உடையது. எல்லோரும் ஓடிச்சென்று தங்கள் த அவன் குடும்பமும் தங்கள் மூத்தமகனை காணவில் வேளை அங்கே இரத்த வெள்ளத்தில் மூத்த ம துடிக்கின்றனர். அவர்கள் அழுதவுடன் என்ன, இல்லை. அவன் இனி மறுபிறப்பில்தான் வருவ அந்தியேட்டியும் முடிந்து விட்டது. ஆனால் அ எடுத்து விட்டது. காலமோ நகள்ந்து கொண்டி சிலசனங்கள் தங்கள் வீடுகளைச் சென்று பார்த் வருகிறார்கள் தானே. என்னை மட்டுமா மிதிெ சண்முகமும் வீடு பார்க்கச் செல்கிறார். அங்கே இவர் தன் வீடு சென்று வாசல் படியில் ஏறும் வே ஐயோ அம்மா என்ற அலறல், அதன் பின் மய இவ்வவலச் செய்தியைக் கேட்டு கதறித் துடித்து இரண்டு அவலங்கள் நடந்து முடிந்து விட்டன. எவ்வாறு சந்தோசமாக வாழமுடியும். அவர்கள் குடு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து வறுமையைச் சகிக்க முடியாத போதும் தன் தாயி: அயராது உழைத்துத்தன் குடும்பத்தை பொறுப்பு அருண்.
sk k-k-k-k-k-k
米米米米米米米米米米米米米冰米米米水
米米米冰米米米米米米米米壮
2 2- CM 4658

அவலத்தின் கொடுரம்
செல்வி வேலாயுதபிள்ளை சுபிதா, கிளி/கலவெட்டித்திடல், நாகேஸ்வரா வித்தியாலயம்
)கங்களிலும் இனம் புரியாத சோகம். யாதெனில், 1ணமாக ஏதிலிகளாக ஓடிவந்து சுதந்திரபுரம் என்னும் குடும்பங்களில் ஒரு குடும்பம்தான் சண்முகத்தின் பாழுது விவசாயம் செய்தவன். அவன் மனைவி ர். மூத்த மகன் குமார் கிளிநொச்சியில் இருக்கும் மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரம் bன் அருண் அதே பாடசாலையில் ஒன்பதாம் தரம் மகளான மாலா அப்பொழுதுதான் தரம் ஏழு கெ சுமுகமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அக்காலப் பகுதியில் கிளிநொச்சியிலும் யுத்தம் நம் திக்குத் திசை தெரியாது திணறி ஓடினார்கள். தப்பினால் போதும் என்ற நிலையில் பெரும்பாலான னர். அவர்கள் ஓடிச்சென்று சுதந்திர புரம் என்னும் ாடசாலையில் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருந்த கிபிர்” ரக விமானம் இரைந்து சத்தம் கேட்கிறது. பங்கு குழிகளுக்குள் ஓடுகின்றனர். அவ்வேளை உசாலையில் குண்டை தள்ளிவிட்டு செல்கின்றது. கேட்கின்றன. அதில் ஒரு குரல்தான் குமாரின் ங்கள் உறவுகளைத் தேடுகின்றனர். சண்முகமும் லையே என்று நினைத்தவாறு தேடிக்கொண்டிருந்த கன் குமார் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டு கதறித் இறந்தவன் மீண்டும் உயிருடன் வரப்போகிறானா? ான் குமாரின் ஈமைக்கிரியைகள் எல்லாம் முடிந்து வன் இழப்பு அவள்கள் குடும்பத்தையே உலுக்கி ருக்கின்றது. யுத்தம் ஓரளவு குறைந்துவிட்டது. து வருகின்றனர். எல்லோரும் சென்று திரும்பி வடி பலிகொள்ளப் போகிறது என்ற எண்ணத்தில் இவரை உயிர் பலி எடுக்க காத்திருந்தது போல 1ளை பெரும் சத்தத்துடன் மிதிவெடி வெடிக்கிறது. ான அமைதி மறுநாள் அவரின் குடும்பத்தினர் அழுகின்றனர். இவர்கள் வாழ்வில் தொடர்ந்து இவர்கள் வாழ்வில் இண்டு கொடூரங்களின் பின்பும் ம்பமோ வறுமையில் துடிக்கிறது. மாலா இப்பொழுது க.பொ.த உயர்தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். னதும், அருமைத் தங்கையினதும் நல்வாழ்விற்காக டனும் பொறுமையுடனும் வழிநடத்தி வருகிறான்
k米米米米米米米
K米米米水水米米米米米米米米米米水米米
米米米米米米米米水水水水米
33

Page 308
Gab/7,
இன்று நாம் இருபத்தோராம் நூற்றாண்டில் வ அவசர கதியும் எம் வாழ்வாகிப் போய்விட்டன. ப தண்மதியில் குதித்து விட்டோம். தலை நிமிர்ந்: இலக்கியம், மொழியறிவு எதிலும் வெற்றிக் கெ தொடக்கமும் முடிவும் இல்லாது அநாதியாய் தன்னுணர்வில்லாத சிற்றுயிர்கள் முதல் தன்னை உ உயிர்கள் கணந்தோறும் உயிர்க்கின்றன. மடிகின் செயல்பாடுகளில் இருந்து வேறுபட்டும் பல்வேறு விஞ்ஞானம் எனலாம். இன்று மனித வாழ்வோடு நிலையாகவே இன்றைய தொழினுட்ப வளர்ச்சி ப
விரிந்து பரந்துள்ள இந்த உலகை மானுடன் அட காரணமாகும். இன்று விஞ்ஞான வளர்ச்சி காரண நெருப்பிற் கலந்த சூடு போல மனித வாழ்வோடு சடுதியாக வந்ததொரு சாதனை அன்று. அன்றை பேதமற்று வாழ்ந்தான். காலப்போக்கில் சிந்தனை செயலார்வங்களும் சிந்தனைத் திருப்பங்களும் சே தீயும், சுழலும் சக்கரங்களும் பிறந்தன. மனித குே கையாட்சியும் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும் உத மனிதன் அதிலிருந்து வேகமாய் விலக ஆரமபித் அறிவு மனிதனை பல்வேறு கோணங்களில் சிந்திக்க இன்றைய தொழில்நுட்பங்கள் உருப்பெற்றுள்ளன. விரிந்து பரந்து கிடக்கின்றது எனக் கொண்டா6 பாலங்களாகவே தொழில்நுட்ப வளர்ச்சி காணப்ப
புல்லும் பூடும் புழுவும் மரமும் பரிணமித்த ப இயற்கைச் சக்திகளை விஞ்ஞானத்தின் துணை இவ் ஆட்சியில் மனிதனுக்கு சூட்டப்பட்ட கிரீடம சார் எல்லா துறைகளிலுமே தொழில்நுட்ப விஞ்ஞானத்திலிருந்து பரிணமித்த தொழில்நுட் எவ்வளவோ குறைத்துவிட்டது. இதற்கு உதார்6 நாடுகளையும் அவற்றில் வாழும் மக்களைய வரைவிலக்கணப்படுத்தப்பட்ட உலகமயமாக்கமான தேசிய எல்லைகளையும் சுருக்கியும் முற்றாக இ

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
சஜிக்கூற7 விநாயகமூர்த்தி தரம் II நல்லாயன் அரசினர் தமிழ் மகளிர் வித்தியாலயம்.
ாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இயந்திர யுகமும் )ண்ணின் மைந்தர் நாம் விண்வெளியில் பயணித்துத் து நின்று கொண்டோம். பொறியியல், மருத்துவம், ாடி நாட்டியபடி மானுடம் பயணம் செய்கின்றது. அகன்று விரிந்திருக்கின்ற இப்பிரபஞ்சத்திலே உணரத் துடிக்கின்ற மனிதன் வரையாக கணக்கில்லா ாறன. எனினும் மனிதன் இவ்வாறான இயல்பான வெற்றிப் படிகளைத் தாண்டுவதற்கும் அடித்தளமே ஒன்றறக் கலந்துவிட்ட விஞ்ஞானத்தின் அதியுயர் Sளிர்கின்றது.
டக்கியாளும் அளவிற்கு தழைத்ததற்கு விஞ்ஞானமே Iமாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியானது பிணைந்துள்ளது. இவ்விஞ்ஞான வளர்ச்சியானது ப நாட்களின் ஆதி மனிதன் விலங்கொடு விலங்காய் வடிவில் விஞ்ஞானச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. *ர ஏற்றிவைத்த அகல் பிரகாசிக்கத் தொடங்கியது. ஸ்த்துக்கே உரித்தான மொழிப் பயன்பாடும் கருவிக் வின. விலங்கு நடத்தையில் வாழ்ந்து கொண்டிருந்த தான். விஞ்ஞானத்தின் துணையால் ஏற்பட்ட புது வைத்தது. இச்சிந்தனைகளின் செயல்வடிவாகவே விஞ்ஞானமானது. வானத்துக்கும் பூமிக்குமிடையே ல் மனிதனையும் விஞ்ஞானத்தையும் இணைக்கும் டுகின்றது.
ாதையில் தோன்றிய மனிதன் தன்னை சூழவுள்ள கொண்டே ஆள்கின்றான் என்றால் மிகையாகாது. ாக தொழினுட்பம் விளங்குகின்றது. இன்று மனிதன் ம் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திவிட்டது. பமானது இன்று மனிதனின் வேலைச் சுமையை னமாக உலகமயமாக்கலைக் குறிப்பிடலாம். உலக |ம் ஒருங்கிணைக்கும் ஒரு செயன்முறை என து தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக காலத்தையும், ஸ்லாமல் செய்தும் வருகின்றது.
84

Page 309
ஆரம்பத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி காரணம இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக கையடக்கத் தொலைபேசி, தொலைநகல் போன்ற ஆதிக்கம் காரணமாக மலிவானவையாகவும், 3 ஆட்புலத்தை உள்ளடக்கக் கூடியதாகவும் உரு தகவல் பரிமாற்றமானது வியப்பூட்டும் வகையில் து மூலையிலிருக்கும் ஒருவர், உலகின் அடுத்த பகுதி கொள்கின்றார் என்றால் அதற்கு இந்த தொழில்நு இன்று உலக மக்களிடையே இருளில் உள்ள க பெரியோர் வரை அனைவரையும் தன் வலைக்குள் 6 விளங்குகின்றது. தொழில்நுட்பமானது தனது அத் கணனிகள் கூறப்படுகின்றன. விஞ்ஞானத்தின் கண் தொழில்நுட்பம் காரணமாக மேலும் சிறப்பாக்கப்ட ஏற்படுத்தி வருகின்றது. இப்புரட்சி காரணமாக இi சாத்தியப்படும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறே தொடர்பாடல் சாதனங்கள் மட்டுமன்றி காரணமாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகி தொடர்பு சாதனங்கள் மக்களின் அறிவு வளர்ச்சிக்குப் தொழில்நுட்ப வளர்ச்சியானது அவற்றின் தேவைை உலகில் மிகப் பிரபலம் பெற்ற வெகுசனத் தொடர்பு செவிப்புலன் இரண்டிற்கும் விருந்தாளிக்கும் இன்ற விஞ்ஞானத்தின் ஊக்கமும் தொழின்னுட்பத்தின் வலி இடம்பெறும் எந்தவொரு நிகழ்ச்சியையும் உடனுக் பெரிய அதிசயம்.
அடுத்ததாக மருத்துவத் துறையில் ஏற்பட்டுள் ஆரம்ப காலத்தில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த கற்றுக்கொள்வதற்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக:ே இறப்பே அறியா - பூமியாக மாற்றுவதில் விங்ஞானத் மரணம் வாழ்வின் முடிவாக இருந்த காலம் மாறி உலகம் வளர்ச்சியடைந்துள்ளது. தொற்று நோய் தொலைத்தனர் பலர். ஆனால் இன்று நிலைமை முறைகள் மூலம் மனித சமூகத்திலேயே மாற்றத்தை கதிரியக்க பரிசோதனைகள் மற்றும் உறுப்பு மாற் பாரியதொரு புரட்சியை உருவாக்கியுள்ளன.
இன்று மருத்துவ உலகிலே அனைவராலும் அதி முறை கருதப்படுகிறது. இயற்கையையே த ஏற்படுத்தியுள்ளது. இம்முறை காரணமாக இன்று ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதனான உருவாக்குமளவு முன்னேறியுள்ளான் என்றால் அ அது மட்டுமன்றி மரபணு சிகிச்சை’ எனும் பெயரில் மனிதனின் பாரம்பரிய இயல்புகளையே மாற்றும உச்சகட்டமாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மத்தியில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் (
மருத்துவத் துறையில் மட்டுமன்றி விவசாயத் தமது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளன. கனவித கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது விவசாயத் துறை
2

ாக கண்டுபிடிக்கப்பட்ட தொடர்பாடல் சாதனங்கள்
மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன. இணையம், பல்வேறு தொடர்பாடல் சாதனங்கள் தொழில்நுட்ப உயர் வேகத்திறன் கொண்டவையாகவும் பரந்த வாகியுள்ளன. இவை காரணமாக மக்களிடையே துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் ஏதோவொரு யில் இருக்கும் ஒருவருடன் உறவை ஏற்படுத்திக் ட்பமே காரணமாகும். “கணனி' என்னும் சொல் ருமை போல ஊடுருவி விட்டது. சிறுவர் முதல் வைத்திருக்கும் ஒருவித மாயாஜாலமாகவே கணனி நனை வரங்களையும் வழங்கிய இடமாகவே இன்று டுபிடிப்புகளுள் மிக உன்னத நிலையிலுள்ள கணனி ட்டு மனித சமுதாயத்தில் மாபெரும் புரட்சியை பூகோளத்தையே கிராமமாக சுருக்கும் இம்முயற்சி
வெகுசன தொடர்பு சாதனங்களும் தொழில்நுட்பம் ன்றன. தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதர ) இன்ப நுகள்ச்சிக்கும் அவசியமாகிவிட்ட நிலையில் ய மேலும் அதிகப்படுத்தியுள்ளது எனலாம். “இன்று சாதனமாக திகழ்கின்ற தொலைக்காட்சி கட்புலன், யமையாத சாதனமாக விளங்குகின்றது. இதற்கு ார்ச்சியுமே காரணமாகும். உலகின் எந்த பாகத்தில் குடன் திரையில் பார்க்கின்றோமென்பது எவ்வளவு
ள புரட்சிகளை குறிப்பிடுவது சாலப் பொருந்தும். 5 மனிதர்கள் நாகரிகமுற்று நல்ல பண்பாடுகளைக் ள துணை செய்தது என்றால் இன்று இப்பூமியை தினதும் தொழில்நுட்பத்தினதும் பங்கு அளப்பரியது. ‘சாவிற்கே சாவு மணி’ அடிப்பது போல் மருத்துவ என்றால் ‘தெய்வச் சீற்றம்’ என்று நம்பி வாழ்வை யோ மாறிவிட்டது. பல்வேறு விதமான மருத்துவ ஏற்படுத்த முனைந்துள்ளது. மருத்துவ சமுதாயம். று சத்திர சிகிச்சை என்பன மனித சமூகத்தில்
சயித்து பேசப்படும் முக்கிய விடயமாக குளோனிங்’ ன் வசமாக்கி மனிதருள் புது உத்வேகத்தை லதரப்பட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ள போதும் வன் தன்னை ஒத்த இன்னொரு மனிதனையே து மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். தற்போது அறிமுகமாகியுள்ள சிகிச்சை முறையானது ாவிற்கு ஆற்றல் மிக்கது. தொழில்நுட்பத்தின் இச்சிகிச்சை முறையானது. எதிர்கால சந்ததியினர் ான்பதில் ஐயமில்லை.
துறையிலும் கூட விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இயந்திரங்களும் பல்வேறு விதமான கருவிகளும் யின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. பாரம்பரிய
5

Page 310
நிகழ்வுகளாக கருதப்பட்ட உழுதல், விதைத்த செயற்பாடுகளுமே இயந்திரமயமாகிவிட்டன. தொழ விதையினங்கள் மற்றும் அதிக விளைச்சலை த சந்தையில் உள்ளமையானது விவசாயிகளுக்கு சி மட்டுமன்றி கைத்தொழில் துறையில்கூட இன்று நன்மைதரு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை ம மென்மேலும் வளர்ச்சியடைய உதவுமென்பதில் ஐ
நாணயத்திற்கு இரு பக்கங்கள் போலவே விஞ காரணமாக பல தீமைகளும் ஏற்பட்டுக் கொண்டுதா6 அணுஆயுதமானது இன்று தொழில்நுட்ப வளர்ச்சு அணுக் குண்டுகள் கணப்பொழுதில் உலகையே அ வளர்ச்சிப் படிகள் காரணமாக அணு ஆயுதப் பரி முறைமூலமாக பாவிக்கப்படுகின்றது. இன்று உலக ஈடுபடுவதற்கு அணு ஆயுதப் பயன்பாடே மூலகாரன நீருக்கடியில் நடாத்தப்படுவதன் விளைவாக நீர் அது உணவுச் சங்கிலி வழியாக மீண்டும் மனித6 நேர்கின்றது.
அணு ஆயுதமானது வெளிப்புற மனித சமுதாயத் கண்டுபிடிப்பானது சத்தமின்றி மனித இனத்தை அ தற்போது மனித சமுதாயத்தை மூக்கின் மீது விரலை மேலோட்டமாக பார்க்கையில் சாதனை என்று கூ காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த மனித கலாசா சக்திக்கு மேலாக தன்னை நினைத்து மனிதன்
குலத்துக்கான அழிவுப்பாதை வெகுதொலைவில் இ அமைந்துள்ளது. ஏற்கனவே அணு ஆயுதங்களி செயற்பாடானது சின்ன குழந்தையானது தனது ை கொள்வது போன்றுள்ளமை வேடிக்கையானதாகுப்
அளவோடு எரிந்தால் அது விளக்கு. அளவு மீறி தொழில்நுட்பமும் மனிதன் அடக்கியாளும் நிலை மாறி இவை மனிதனை கட்டுப்படுத்தும் நிலை நாளைய உலகின் முடிசூடா மன்னர்களாகிய துணைகொண்டு புதுயுகம் படைப்போம். இந்த பூ
米米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米米米米米米米>
米米米米米米米米米米米米米米米米》
2

ல் மற்றும் களைபிடுங்குதல் போன்ற அனைத்து Nல்நுட்பம் காரணமாக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட 5ரக்கூடிய விதையினங்கள் என்பனவும் தற்போது றந்த பயனளிப்பதாகவுள்ளது. விவசாயத்துறையில்
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பலவிதமான னித சமுதாயத்தின் வேலைப் பளுவை குறைப்பதோடு யமில்லை.
ந்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சி ன் உள்ளன. விஞ்ஞானத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சி காரணமாக உலகையே அச்சுறுத்தி வருகின்றது. ழித்து விடக்கூடியன. தொழில்நுட்பத்தின் பல்வேறு வனை முறையும் பல்வேறு விதமான புதுமையான ன்ெ பல வல்லரசு நாடுகள் யுத்த நடவடிக்கைகளில் ணமாகும். இதுமட்டுமன்றி கதிரியக்க பரிசோதனைகள் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதோடு ஈற்றில் னையே அடைவதால் மனித சமுதாயமே பாதிப்புற
தை பாதிக்கின்றது என்றால் இன்னொரு விஞ்ஞான அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்கின்றது. அதுதான் U வைக்க வைத்திருக்கும் குளோனிங்' முறையாகும். றப்பட்டாலும் இம்முறை காரணமாக ஆண்டாண்டு ரம் அழிவுறும் என்பதில் ஐயமில்லை. கடவுளின் செய்கின்ற மடமைத்தனமான செயலானது மனித இல்லை என்பதை அறிவிப்பதற்கான முதற்படியாகவே ன் மூலம் அழிவை நெருங்கிய மனிதனின் இந்தச் ககளாலே மீண்டும் மீண்டும் தன் கண்களை குத்திக்
D.
னால் அது நெருபுபு. அது போலவே விஞ்ஞானமும் யிலிருப்பின் அது மனிதனுக்கு உயர்வு. இந்நிலை தோன்றின் அது மனிதனுக்கு தாழ்வு. ஆகவே நாம் விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வுலகையே அமைதிப் பூங்காவாக மாற்றிடுவோம்.
米米水米米米米米米米米米
k米米米来水水冰米米米米米米水米米水米米米米米米米
K冰冰冰冰冰冰米米米米米米米米米冰水
86

Page 311
22-CM 4658
சுகமான பல நினைவுகள். சுமைகளாகத் தெரியும் பசுமைக் கனவுகள்.
பகல் கனவாய் ஆகுப் பள்ளியறை எண்ணம்.
பட்டரை நெருப்பாய் பாசப்பிணைப்புகள்.
பாகற்காயாய் கசக்கும் இரகசியங்களுக்கு அன்று. விடுதலை கிடைக்கும் இரக்கங்கள் அன்று.
இரத்த நாளங்களில் கற்பனையின் வாசல்கள் அ அகல திறக்கப்பட்டிரு சிரிப்பு ரோஜாக்கள் அன்று.
கசக்கி எறியப்படும். பிரிவினை எண்ணி அன்று
ரோஜா அழுது ଗ86|Tର0
இன்பங்கள் அன்று, இருக் இடமின்றியே போய்வி துன்பங்கள் கூட அன்று. இன்ப முயற்சியில் ஈடு கண்ணி துளிகள் அன்று. கடலோடு சேரும் நட்பு பிரியும் நாளையெண்ெ கண்களும் இதயமும் இரத்தத்தைக் கசியும்.
冰米来水米米状
米米米米水水米水米米米米米米米米冰米状
米米冰水泳米米米米米米米米
2.

நட்பின் பிரிவின் நாளன்று.
எம்.எஸ். கவிவா aQLT2. (a /25) (2005) கொ/அல்கிதாயா மவி கொழும்பு - 10
Isaaaaaaaaa2
k米来来米米米 k米米米米来来来米米米来求来来米冲**
冰米米冰米米米米冰冰米米水
37

Page 312
தமிழுக்குத் தொண்டாற்றிய இஸ்லாமியப் பெரி ஒருவராவார். அறிஞர் அய்துல் அஸிஸ் அவர்க 1911 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திக
தமிழ்வேந்தர் ஆறுமுகநாவலர் வாழ்ந்த வண் தனது சின்னப் பெரியப்பா சுரு. அசனாலெப்பை அறிஞள் அஸிஸ் அவர்கள் கற்ற பாடசாலைகளின் விபுலானந்தரின் உறவு, மலையகம் தந்த இஸ் செய்த தமிழ்ப் பணி பற்றிய அறிவு, கிழக்கிலங்கை ஸாஹிராக் கல்லூரியில் அவர் பெற்றுக் கொண்ட ந போன்ற பல காரணிகள் அளிஸை நாடறிந்த தமி
சாகித்திய மண்ட்லப் பரிசு பெறுமளவுக்கு அ பிரக்கியாதி பெற்றிருந்தார். அவர் ஆற்றிய செனட எழுதிய கட்டுரைகளில், நூல்களில் அவர் தமிழுக்கு வெளிப்பட்டுத் தோன்றுகின்றது. தமிழ்மொழி அர பிறந்து வளர்ந்தார். அறிஞள் அளிஸ் அவர்கள் புலவர் அறபுத் தமிழ் வளர்த்ததும் இந்த மண் தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையின் காரணப அவ்வாறு உயர்ந்ததில் இந்த வண்ணார்பண்ணை
மூன்றாம் வகுப்பு சித்தியடையும் வரை அரசாங் அஸிஸ் கல்வி கற்றார். யாழ்ப்பாணம் கலிபா மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவாக விளங்கு அரசாங்க முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை. 1 தனது மதக் கல்வியையும் ஆரம்பக் கல்வியையு தமிழில் தான் இங்கு நடைபெற்றன. 1921 ெ வண்ணார்பண்ணையில் அமைந்துள்ள இராமகிருவு தனது ஆரம்பக் கல்வியை தொடர்ந்தார். இவ்ரு கல்வி கற்றனர்.
அறிஞர் அளிஸ் அவர்கள் இஸ்லாமிய கலா மிஷன் தமிழ்ப் பாடசாலைக்குச் சென்றார். ஐந் ஒன்றை தானே முன்நின்று அமைத்தார். அதன் மூ தமிழ் வார்த்தையையும் வளர்த்தார். அவர் படி நிலவிய நல்லதொரு சூழல் அவரின் தமிழுணர் நினைவுகளை எண்ணிப்பார்த்தார். அஸிஸ்.

எ. எம். எ. அஸிஸ்
எம்.எவ்.எவ், றில்வான7 க.பொ.த. (உ/த) (2005) Gab/7/365a525/TLIT LO.6i
கொழும்பு -10
பார்களுள் அறிஞர் எ. எம். எ. அஸிஸ் அவர்களும் ள் சூழலினால் உருவாக்கப்பட்ட ஒரு தமிழறிஞர். தி பிறந்தார்.
1ணார்பண்ணைச் சூழலில் பிறந்து வளர்ந்த அவர் புலவரின் அரவணைப்பில் தமிழாக்கம் பெற்றார். b நிலவிய தமிழ்ச் சூழல் கிழக்கீந்த தமிழ் முனிவர் லாமிய கொழுந்து முகம்மத் காசிம் சித்திலெப்பை மக்களின் வாழ்வு, அவர்களுடனான தனது உறவு, ல்லதொரு களம், அவருக்கிருந்த சமூக அந்தஸ்து ழறிஞர் ஆக்கின.
ஸிஸ் அவர்கள் தமிழுலகிலும், தமிழ்ப் பணியிலும் ட்சபை உரைகளில், நிகழ்த்திய சொற்பொழிவுகளில், ஆற்றிய அளப்பரிய தொண்டில் அவரின் தமிழுணர்வு சோச்சும் யாழ்ப்பாணத்தின் முஸ்லிம் வட்டாரத்தில் நாவலர் தமிழ்ப்பணி செய்ததும் அசனாலெய்பைய் 1ணில் தான். அவர் தமிழின் மீது கொண்ட பற்று )ாக அளிஸ் பிற்காலத்தில் தமிழறிஞராக உயர்வார். ச் சூழலுக்கு கணிசமான பங்குண்டு என்றார்.
5 முஸ்லிம் தமிழ்க் கலவன் பாடசாலையில் அறிஞர்
அய்துல் காதர் வீதியில் அமைந்துள்ள கதீஜா ம் அன்றைய அல்லாப்பிச்சைப் பள்ளிதான். இந்த 918ஆம் ஆண்டு இப்பாடசாலையில் சேர்ந்த இவர் ம் அங்கு கற்றார். கற்றலும் கற்பித்தலும் முற்றிலும் பப்ரவரி 2ஆம் திகதி தனது 10ஆவது வயதில் ண மிஷன் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் சேர்ந்து டன் சேர்ந்து மூன்று முஸ்லிம் மாணவர்கள் அங்கு
ச்சாரத்தைப் பிரதிபலிப்பவராகவே இராமகிருஷ்ண நாம் ஆண்டில் படிக்கும் போதே மாணவர் மன்றம் லம் தனதும் சக மாணவர்களதும் பேச்சாற்றலையும் த்துக் கொண்டிருந்தபோது இவ்வித்தியாலயத்தில் வை வளர்த்தது. இக்காலத்தில் தனது இளமை
88

Page 313
இடைநிலைக் கல்வியை கற்பதற்காக 1922இல் சேர்ந்தார். அன்றைய நிலையில் இந்து மாணவர்கள் விளங்கியது. அஸிஸ் அவர்களின் தமிழுணர்வையு மாணவராகச் சேர்த்துக் கொண்டது. அஸிஸ் அவ முஸ்லிம் மாணவன். 1930இல் பல்கலைக்க கற்றுக்கொண்டிருந்த அஸிஸின் தமிழ் ஆர்வத்ே பங்களிப்புச் செய்துள்ளது. இந்துசமய பாடத்தில்
திருவாளர்கள் கி.பி. சுந்தரசர்மா, ஏ.கே பொன் ஆரம்ப ஆசிரியருட் சிலர். இவர்களின் ஊக்கமும், 6 ஏற்படவும், தமிழுக்குத் தொண்டாற்றவும் அவரைத் அசனாலொப்பைப் புலவரின் ஏற்றிவைத்த தமி பதிந்திருந்தன. தமிழில் ஆய்வுக் கட்டுரைகள், ! அரபு, ஆங்கிலம், தமிழார்வமும் மொழி வல்லுந( சின்னப்பெரியப்பாவின் அன்பான நினைவிற்கு இந்நூ
ஆங்கிலப் பட்டதாரியான அறிஞர் அளிஸ் அ6 வகித்த அளிஸ் அவர்கள் சிவில் சேவை அதிகா அமர்ந்திருந்த அளிஸ் தமிழே பேசினார், தமிழிலே பேசியோரையும், எழுதியோரையும் தட்டிக் கொடுத் மன்றங்களிலே, மாநாடுகளிலே கலந்து கொண்டுள்ள “தமிழனாய்ய் பிறந்தவனுக்கு தமிழ்தான் மூச்சு, தமிழில்; எழுதுவது தமிழில்; தமிழில் பேசுவோம்; வாழமுடியும்” என்ற கருத்தை அர்த்தமுள்ளதாக்க
அஸிஸ் அவர்கள் தனது எழுத்துக்களில், தமிை எவர்தாம் கருத்துக்களையும் தேவைக்கேற்ப உதாக உவமானம், உவமேயங்களைப் பயன்படுத்தி தனது மீது அவருக்கிருந்த மோகத்தினால் அம்மொழியி அவருக்கு இருந்த ஞானத்தால் அதன் மீது மேரிக அவரின் தமிழ் மொழி மோகமும் ஞானமும் சொற்பொழிவுகளில் பளிச்சிட்டு தெரிந்தன. சாகித்த போர்த்திக் கெளரவிக்கப்படார். இஸ்லாமிய தமிழ
தமிழ் மொழி மீது அபார காதல் கொண்டிருந்த 1954இல் தென்னாபிரிக்காவுக்கு அஸிஸ் சென்றபோ மோகத்தையும், அம்மொழி பேசுவோர் மீது அளிள எடுத்துக் காட்டுகின்றன. இருபதாம் நூற்றாண்டி தமிழ் கட்டுரை ஆசிரியராகத் திகழ்ந்தார். பல படித்தவர். முதல் பாமரர் ஈறாக எல்லோரும் வி அமைந்தன. கருத்துச் செறிவு, வரலாற்றுப் பார்ை தொடர்புபடுத்தி நோக்கும் தன்மை என்பன அவர
பழகிப்போன பாணியில் எல்லோருக்கும் விளங்க எழுந்தன. தமிழுக்கு அளித்த கட்டுரைகளில் 19 மொழி பெயர்ப்புக் கட்டுரைகளையும் தமிழுக்கு தந் நூலை வெளியிட்டுள்ளார். முதலாவது உலக சென்றிருந்தார். மலேசியா பிரயாணம் என்னும் நூை இதனை வெளியிடுவதற்கு காரணகர்த்தாவாக சிவகுருநாதன் அவர்களாவார்.

6ஆம் வகுப்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மட்டும்தான் கற்கும் பாடசாலையாக அப்பாடசாலை ) அவர்களின் திறமைகளையும் மதித்து அவிரையும் கள் தான் இந்தக் கல்லூரியில் சேர்ந்த முதலாவது ழக அனுமதியினைப் பெறும்வரைக்கும் இங்கு தை வளர்ப்பதில் இக்கல்லூரியும் குறிப்பிடத்தக்க
விசேட சித்தியினைப் பெற்றார்.
ம்ைபலம், கே. நவரத்தினம் பேர்ன்றோர் அளிஸின் ழிநடத்துகையும் அளிஸ் அவர்களுக்கு தமிழுணர்வு தூண்டியது. அஸிஸின் சின்னப் பெரியப்பா சு.மு ழணர்வும் ஆய்வார்வமும், பசுமரத்தாணிப்போல் ஆய்வு ஆர்வம், சிலையெழுத்தாகப் பதித்துவரும் நம் தமிழை வளர்த்து போன்ற நூல்களை தனது ால்களை சமர்ப்பணம் செய்தார்.
பர்கள் சமூக சேவை அதிகாரியாக உயர்பதவிகள் யாகவும் வகித்த அஸிஸ் சமூக உயர் மட்டத்தில் எழுதினார், தமிழிலே சிந்தித்தார். அம்மொழியைப் ந்து ஊக்குவித்தார். ஆதரித்தார். தமிழாராய்ச்சி ாார். ஆய்வுக் கருத்துக்களை அள்ளிச் சொரிந்தார். அவன் உயிர்ப்பிப்பது தமிழ்; அவன் நினைப்பது இனத்தவர் இடையேதான் எளிதாக மூச்சு விட்டு கினார்.
ழ வளர்ப்பதில் புலவர் பெருமக்களின் பாக்களையும் ரித்தார். இலக்கியங்களில் விரிவாக்கினார். உ+மாக தமிழ் எழுத்துச் சோபையூட்டினார். தமிழ் மொழி ல் ஞானம் ஏற்பட்டது. அல்லது அம்மொழியில் ம் ஏற்பட்டதே என்பதை அறிவது சுவாரஸ்யமானது. இலக்கிய ஈடுபாடும் அவரின் எழுத்துக்கள் ய மண்ட்பம் பரிசு பெற்ற ப்ேரீறிஞர்க பொன்னாடை றிஞராக விளங்கினார்.
அஸிஸ் அதன் வளர்ச்சியால் மையல் கொண்டார். து அங்கு நடைபெற்ற சம்பவங்கள் அஸிஸ் தமிழின் b கொண்டிருந்த அன்பையும் அந்தச் சம்பவங்கள் ன் 5ஆம் 6ஆம் தசாப்தங்களில் அஸிஸ் பிரபல கட்டுரைகளை தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். ரும்பிப் படிக்கக்கூடியதாகஜ் வசீது கட்டுரைகள் வ உள்ளதை உள்ளவாறே கூறும் பண்பு, எதையும் து கட்டுரைகளில் சிறப்பாக காணப்படுகின்றன.
ககூடிய அமைப்பில் இலகு நடையில் கட்டுரைகள் 0 - 1960 வரை இராசதுரை பெரிதும் உதவினார். துள்ளார். "மிஸ்ஹின் லசியம்’ என்கின்ற கலாசார 5 தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா ல 1966 மே மாதம் 11ஆம் திகதி வெளியிட்டுள்ளார். இருந்தவர். தினகரன் ஆசிரியரான திரு இ.

Page 314
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம், 6 இயற்றியுள்ளார். இவ்வாறு அளிஸ் அவர்கள் தமிழறிஞரின் அரவணைப்பில் வாழ்ந்தார். அவ அவரெழுதிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளு தமிழுடன் இணைத்துப் பார்க்கும் பண்பு, கருத்துச் தன்மை, பழந்தமிழ்ப் பாக்களை உவமையாக உத உதாரண பண்புகாளாகும். அவரின் தமிழ், ஆங் இப்பண்புகளால் உயர்வு பெற்றன.
அவரின் ஆத்மார்த்தத்தை தமிழ் மீது அவர் கெ இருண்ட கண்டமான தென்னாபிரிக்கா கண்டத்தி மட்டற்ற மகிழ்ச்சியை காணமுடிந்தது. இலங் தமிழுக்காகத் தனது தொண்டாற்றி உள்ளார். இ6 வாழ்வைவிட்டு பிரியும் வரை தமிழுடன் இருந்து
ஆகவே அறிஞர் அளிஸ் அவர்கள் தமிழறிஞ இலக்கிய வரலாற்றுக்காக இஸ்லாமிய இலக்கி அற்புதத் தமிழ் மேம்பாட்டுக்காகக் குரல் கொடுத் படைக்க வேண்டும் என்பதில் அவர் விடாய்பி கல்விமான்களை, கவிஞர்களை அதன்பால் ஊச் எ.எம்.எ அளிஸ் அவர்களின் தமிழ் தொண்டினை
米水米米米米米来米壮
率冲事*米水冰米米米米米米米米米米水米妆
来米率来来冰米冰米来米米来来米
பாவம் செய்தானெ துவேஷிக்கக்கூடாது. கூடாது. எளிய வாழ் அல்லது சிக்கனமா ஒழுகுவதற்கு மிக இல
 
 
 
 
 
 

ன்பனவற்றையும் ஆற்றுப்படை இலக்கியங்களையும் தமிழுடன் இணைந்திருந்தார். தொண்டாற்றினார். ரின் தமிழ் மொழி மோகத்தையும், ஞானத்தையும் நம் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. எதையும் களைப் புலவரின் பாக்களுடன் ஒப்பிட்டு நோக்கும் ாகரிக்கும் பாங்கு என்பன அஸிஸிடம் காணப்பட்ட கிலம் போன்ற எழுத்துக்களும் சொற்பொழிவுகளும்
ாண்டிருந்த உள்ளார்ந்த அன்பைக் காண முடிந்தது. ல் தமிழ் உச்சரிக்கப்பட்டபுோது அவர் அடைந்த கையில் மாத்திரம் அல்லாமல் வெளிநாடுகளில் வ்வாறு தான் பிறந்தது முதல் 1973 இல் இவ்வுலக தமிழுக்கு அளப்பரிய தொண்டாற்றியுள்ளார்.
ர், முஸ்லிம் அறிஞர் ஆவார். தமிழுக்காக, தமிழ் ய வரலாற்றுக்காக இவைகளின் வளர்ச்சிக்காக, நவர் ஆவார். கலாச்சார பின்னணியில் இலக்கியம் டியாக இருந்தார். முஸ்லிம் எழுத்தாளர்களை, கியும் வழிநடத்தியும் வந்தார். எனவே அறிஞர்
நாமும் போற்றுவோம்.
:米水来来来米米米来米
:米米水米米米水米米米米米米米米米米米米米
:米米米米米米米米米米米米水米米
ன்று ஒருவனையும் நாம்
இழிவாகவும் நடத்தக் வென்பது, வறுமையான ன வாழ்வென்பதன்று. குவான வாழ்வாகும்.

Page 315
வாழ்வை வளமாக்கி வாழ்கை
“கல்விக்காகப் பிள்ளையல்ல பிள்ளைக்கா உருவாக்குவதே கல்வியாகும்” என்றார் காந்தி !
தொடர்பையும், அதன்மூலம் “கல்வி” என்பதெது, அ
பிள்ளைக்காகவே கல்வி எனும் கூற்றிலிருந்து தேவைகளுக்கும் கல்வியே - முறைசார்ந்த அ6 செய்ய வேண்டும் என்பது தெளிவாகின்றது. பிள்:ை அத்தனை விடயங்களையும் புதிய அனுபவமாக ஒரு விடயமாகும். எனவே பிள்ளையின் எதிர்கால பிள்ளைக்கான கல்விக் கொள்கை திட்டமிடப்பட எனவே சமூகத்தில் ஊடாடுவதற்குப் பொருளாத தேவையாகின்றது. எனவே வெறுமனே அறிவு எனு காகிதச் சான்றிதழை மட்டும் நிறைவு செய்வதன் நிறைவு செய்ய முடியாது. இவ்வாறான காகித பொருளாதாரத் தேவைகள் நிறைவேற்றப்படாதவி திறன்கள் அற்ற ஒரு பிரஜையாக உருவாக வேண்ட என்ற ஸ்தானத்தை விட்டு மாறிவிடவும் வாய்ப்பாக பாரிய சமூக இடத்திற்கு பிள்ளை இட்டுச் செல் அறிவு சார்ந்த கல்வியை மட்டும் வழங்குவதன் மூ கூடிய கல்வியின் அவசியம் உணரப்பட்டு கல்விச் சி இன்னும் இலங்கை போன்ற நாடுகளின் கணக்கெடு பாடசாலைக் கல்வியை இடைநிறுத்துவது அதி: அபிவிருத்தியடைந்து வரும் இலங்கைப் பெற்றே காரணியாகக் காணப்படுகின்றது.
ஜீவனோபாயத்திற்காகவும் கல்விச் செலவீடு பிள்ளைகளை விலக்கிக் கொள்ளப் பெற்றோரும், பரு முன்னிற்கின்றனர். இச்சந்தர்ப்பத்தினைக் கருத்தி அரசாங்கமும், கல்விக் கொள்கை வகுப்போரும் முன்னோடிய் பயிற்சிப் பாடவிதானத்தினை அறிமுக
இம்முயற்சியில் தற்கால மாணவர்கள் பயன்பெறுவ 7, 8, 9ஆம் ஆண்டுகளில் பால் அடிப்படையில் அத்திறன்களைக் கற்பிப்பதற்காக கல்வியமைச்சே ஏற்று, கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகு அதற்கான ஆலோசகர்களையும் உருவாக்கி மிக
2.

த்ெதர தகுந்த பல திறன்களைக் கற்பிக்கும் த்திறன் எனும் பாடமும் அதன் அவசியமும்
எம்.எம்.எம் பயாஸ் அஹமத் தரம் 12B கலைப் பிரிவு, க/மதினாத் தேசிய பாடசாலை, மடவளை பஸார்.
கவே கல்வி’ என்றார் டூயி, "நற்பிரஜையை இந்த இரு அறிவார்ந்த சிந்தனைகளுக்கும் உள்ள தன் பாதிப்பு என்ன என்பதனையும் நாம் கவனிப்போம்.
பிள்ளையின், அறிவு - உள விருத்திக்கான சகல ல்லது முறை சாராத வழிகாட்டலே பங்களிப்புச் ளயானது தன்னைச் சூழ்ந்து தனக்குக் கிடைக்கின்ற கல்வியாகக் கொள்கிறதென்பது மறுக்க முடியாத வாழ்வுக்கு வழிகாட்டுவதை மையமாகக் கொண்டே வேண்டும். பிள்ளையென்பது ஒரு சமூகப் பிரஜை. ாரம் எனும் பலம் அதற்கும் கட்டாயமான ஒரு ம் ஒரு விடயத்தை மட்டும் விருத்தி செய்வதனாலோ ாலோ அவனது பொருளாதாரத் தேவைகளை ச் சான்றிதழைப் பூர்த்தி செய்வதனால் அதனது டத்து அப்பிள்ளை வேலையற்ற, வேலை செய்யத் டி ஏற்பட்டால் அப்பிள்ளை நெறிபிறழவும், நற்பிரஜை கின்றது பொறாமை, வஞ்சகம், இயலாமை போன்ற )லப்படுகின்றது. இந்நிலைமை திறனற்ற வெறும் முலம் ஏற்படுகின்றது. எனவேதான் திறன்களோடு ந்தனையாளர்கள் அதைப்பற்றி வலியுறுத்துகின்றனர். ப்பின்படி இடைநிலைக் கல்வியின் பின் மாணவர்கள் கம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ாரின் பொருளாதாரப் பிரச்சினையே ஒரு முக்கிய
நிகளைச் சமாளிக்க முடியாமை காரணமாகவும் வகால மனவெழுச்சித் தாக்கத்தினால் பிள்ளைகளும் ற் கொண்டு (இலவசக் கல்வியை வழங்குகின்ற) , வாழ்க்கைத்திறன் எனும் தொழில் முன்னிலை
ம் செய்தனர்.
பது படிப்படியாக மங்கிப்போய்விட்டது. ஆரம்பத்தில் பொருத்தப்பாடான பல திறன்கள் கற்பிக்கப்பட்டன. மாணவர்களுக்கான உபகரணச் செலவீட்டினையும் >ப்புகளையும் கருத்தரங்குகளையும் ஒழுங்குசெய்து
பொறுப்புடன் பணியாற்றியது.
91

Page 316
இதன் மூலம் மாணவர்களின் வெளிக்காட்டப்பட திறன்கள் துலங்கச் செய்யப்பட்டமை, அவர்க பார்வையிட்ட அனைவருக்கும் துல்லியமாக புலப் கொடை வரப்பிரசாதம் என துணிந்து கூறலாம்.
மாணவரின் சொந்த வாழ்க்கைத் தேவைக்கா கல்வியாக இவ்வாழ்க்கைத்திறன் எனும் பாட உருவாக்குவதே கல்வியாகும், எனும் கூற்று ெ தற்கால நவீன மாற்றங்களுக்கு அவசியமான திறன் பாடம் இன்றைய மாணவர்களை பெரிதும் எட்ட விருப்பத்துக்குரிய பாடமாகவாவது கற்பிக்கப் படு திறன்களை ஆராய்ந்து வளர்க்கும் இந்நெறியை ஆகவே வாழ்வை வளமாக்கித்தர தகுந்த பல பாடத்தின் அவசியத்தை உணர்ந்து செயற்படல்
米米米米米米米米米:
米米米米米米米米米米米米米米米米米米米米
kkkkkkkkkkkkkk
அறமும் பொ சிறப்பாகவுரிய என்பது மக்களும், தேவரும், ந மரனுமாகிய அனைத் அமைந்த தென்ட ஆதலினாலே, இவ் செய்தற்கும் உரியவெ6

ாத திறமைகள் வெளிக்கொணரப்பட்டு அவர்களின் ளால் செய்யப்படுகின்ற ஆக்கப் பொருட்களைப் பட்டிருக்கும். இது அம்மாணவர்கள் பெற்ற கல்விக்
ன அல்லது பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு ம் அமைவதால் காந்தி கூறிய நற்பிரஜையை )ய்ப்பிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. எனினும், ாகளை ஊக்குவிக்கும் இவ்வாழ்க்கைத்திறன் எனும் வில்லை. சிற்சில பாடசாலைகளில் இப்பாடநெறி கின்றமை, மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். என்றாலும் கட்டாயப் பாடமாக்கல் காலத்தின் அவசியமாகும். திறன்களைக் கற்பிக்கும் வாழ்க்கைத்திறன் எனும் எம்மனைவரினதும் கடமையாகும்.
k米米米米米米米米米米
米米米冰冰米米米米米米米米水米米米米米米米
米米米米米米米米米米米米米米米
ருளும் மக்கட் கே தும், இன்பமோவெனில் ரகரும், மாவும், புள்ளும், துயிர்க்கும் பொதுவாக து தெளிவாகிறது. வுயிரனைத்தும் அன்பு O அறிதல் வேண்டும்.
الص
92

Page 317
கவியிலக்கணம் கற்றவள் அல்லேன், யான் யாப்பமைதி அறிந்தவளுமல்லேன், புவியினில் நிகழும் புதினங்கள் கண்டு, படைக்கின்ற இப்பூவும் கவியன்னை காலடிக்கே!
சுந்தரத் தமிழ் கொண்டு சுகமான கவியெழுதி சந்தம் விரவி வர இசை, படிமம் கையாண்டு சிந்தெழுதும் கலை சிறிதேனும் அறியாத இந்த நூற்றாண்டின் இளங்கவிஞன் யான். தந்திடும் இக்கவியும் புதுக்கவியே என்பதால் வந்தனங்கள் செய்கின்றேன் வார்த்தைகளால் பல்கோடி!
‘புலப்பெயர்வும் தமிழனும் புரியவில்லை தலைப்பெனக்கு என்ன இது புதிரென்று, நோக்குகின்றீர்; என்நிலை விளக்குகின்றேன் நீர்கேளும்!
‘புலம்பெயர்ந்த தமிழினத்தின்’ புதையுண்ட பெருமைதனை, சிதைந்துபோன சிறப்புக்களை அழித்துவிட்ட அடையாளங்களை தொலைத்துவிட்ட முகவரியை
தூக்கியெறிந்த தனித்துவத்தை இன்னும் எதையென்று, நான் கூற? உள்ளதென்று நீர் கூறும்!

புலப்பெயர்வும், தமிழனும்
áf. áb(16þð60III
க.பொத(உ/த) 13 கலைப்பிரிவு, நீர்/விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி
யுத்தத்தின் அவலத்தால் உறவுகளைப் பிரிந்து உணர்வுகளை மறந்து உள்ளம் வெம்பி கண்கள் கலங்க, இறகிழந்த பறவையாய் தனிமையில் தவிக்கும்; அந்த தமிழனின் நிலை கூறவா?
ஆண்டாண்டு காலமாய் ஆடிப்பாடி திரிந்து விளையாடி ஆனந்தம் அடைந்திட்ட தாய் மண்ணை விட்டு, மாற்றாந்தாய் உணர்வோடு மகிழ்ச்சியில்லா மனதோடு வேற்று நாட்டில் வெறுமையுடன் வாழ்கின்ற எம்மவர் நிலைதன்னை என்னவென்று கூறுவது?
தாயின் அரவணைப்பு தந்தையின் அறிவுரை சகோதரர் நேசம் சகாக்களின் பாசம் இத்தனையும் கைவிட்டு அந்நியன் தேசந்தனில்
அரவணைக்க யாருமின்றி அநாதையாய் வாழ்கின்ற அவலநிலை தன்னை எவ்வாறு நான் கூற்?
ஏசி அறை தன்னில் எட்டடி பரப்பிற்குள் தாங்காத குளிரோடு துவள்கின்ற உடலோடும்
நீர்கொழும்பு.

Page 318
ஊசலாடும் உயிர்தன்னை உருக்குலைக்கும் உணர்வுகளால் உறக்கம் சிறிதுமின்றி இமைமூட விருப்புமின்றி இரவைச் சபித்தபடி இருளில் ஒளிதேடும் இதயத்தின் புலம்பல்தனை என்னவென்று நான் கூற?
கொட்டும் பணியென்றும் கோடை வெயிலென்றும் காலநிலை மாறினாலும் மாற்றமில்லா வாழ்க்கையது! ஓய்வில்லா உழைப்பினால் சோர்ந்து போகும் உடல்தன்னை தேற்றவழி தெரியாது திண்டாடும் தமிழன் நிலை உணர்ந்தாலே அன்றி, உரைப்பதற்கோ ஒன்றுமில்லை!
மின்மினி வெளிச்சத்தை விடியலெனக் கருதி தன்னிலை மறந்து தமிழ்நிலை துறந்து வெள்ளையராய் தாம்வாழ வேடமிடும் எம்மவர்கள், இழிநிலை உரைப்பதற்கோ எந்நாவும் நாணிவிடும்!
'அம்மா’ வெனும் அழகுத்தமிழ் அநாகரிகமானதென்று; "மம்மி யென மொழிபேசும் மழலைத் தமிழர் - தந்தையை ‘டாடி’ என விழிப்பதிலோ வியப்பில்லை; என்பதால்
米米米米水米壮
米米米米米米米米米米米米米米米米冰冰
米米米米米米米米米米米冰

விதியே உனை நினைப்பதன்றி வேறு செய்ய என்னவுண்டு?
பண்பான இசையிருக்க, பழமைமிகு பரதமிருக்க, 'பொய்’ பாடல் என்று கூறி ஒப்பாரி வைப்பதற்கும்; மேலைத்தேய நடனமென்று பேயாட்டம் ஆடுதற்கும்; வேலை மினக்கெட்டு, வேளை ஒதுக்கும் எம்தமிழர் கலை வளர்க்கும் நிலைதன்னை கண்டிடுவீர் நீவிரும்!
அழிந்து வரும் மொழிகளுள்ளே தமிழ்மொழியும் அடங்கிற்று இனியும் இந்நிலை தொடரின் என்னாகும் எம்மொழிதான்? சான்ற மொழிகளுள்ளே குரியத்திற்கு நிகரென வாழ்ந்திட்ட மொழியின்று கவனிப்பார் யாருமற்று வீழ்ந்திடும் நிலைதன்னை பொறுத்திடுமா உம் நெஞ்சு?
புலம்பெயர் தமிழர்கள்! உம்மைத்தான் கூறுகின்றோம்; புலம்பவில்லை இது - எங்கள் உள்ளக்குமுறல்தான் புரிந்து கொண்டு, நடந்திட்டால் - புனர்வாழ்வு பெற்றிடும் எம் தமிழினமும் தமிழ் மொழியும் என்று நீர் உணர்ந்திடுவீர், இவ்வுண்மை; தமிழினம் உய்திடவே!
米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米来米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米冰冰米米米米
294

Page 319
MCC 35p35lb
முழு உலகத்திலும் கிரிக்கெட் விளையாடும் அ தயார்செய்யப்பட்ட விதிமுறைகள் ஆகும். பிற் டெஸ்ட் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட பின் பின்பற்றப்பட்டது. கிரிக்கெட் விளையாடும் பன் கவுண்டி போட்டிகளுக்காக MCC அல்லது ICC அந்நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக விதிமுை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையா முற்றுமுழுதாக MCC மற்றும் ICC விதிமுறைக6ை
MCC மெரில்போன் கிரிக்கெட் கழகம் - 6
Merilbourne Cricket Club
ICC சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் International Cricket Council
BCCSL இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் Board of Cricket for control in Sri
கிரிக்கெட்
வரலாறு
கிரிக்கெட் விளையாட்டை முதன் முதலில் இங்க வீசி மரக்கட்டையால் அடித்து விளையாடும்போ கதவு Gate ஐ விக்கட்டாக பயன்படுத்தினர். கே குறுக்குக் கம்பும் வைக்கப்பட்டிருந்தது. அ6 அக்காலத்தில் முழு கேற்றையுமே விக்கட்டாக பய விக்கட்டின் அளவுகள் மாறுபட்டனவாக இருந்து 1780இல் முதன் முதலில் பாவனைக்குட்படுத்தப் 22 யார் என 1706 முதலே ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற கல் ஆகும்.
17ஆம் நூற்றாண்டில் பாவிக்கப்பட்ட பந்தின் 6
எடைக்கான விதிமுறை 1774இலும் சுற்றளவிற்கான வடிவம் தற்காலத்தின் ஹொக்கி மட்டையின் வட
23-CM 4658

கிரிக்கெட்
சந்தோகூழ் தமிழினியன் ஜேசுநேசன், தரம் 100,
றோயல் கல்லூரி,
கொழும்பு.
னைத்து நாடுகளும் பின்பற்றுவது MCC கழகத்தால் காலத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் ICC அவ்விதிமுறைகளில் சிறிய திருத்தங்களை செய்து ாட்டு கிரிக்கெட் சபைகள் தம் நாட்டில் நடக்கும் விதிகளை கடைப்பிடிக்கின்றன. சில வேளைகளில் 0களில் பல திருத்தங்களை மேற்கொள்ளுகின்றன. னது BCCSL தனது கவுண்டி போட்டிகளுக்காக ாயே கடைப்பிடிக்கிறது.
0ண்டன்
F F6OU
Lanka
விளையாட்டு
லாந்தின் கிராமங்களில் உள்ள சிறுவர்கள் பந்தினால் து ஆரம்பமானது. அவர்கள் வீடுகளின் எல்லைக் ற்றில் இரு தூண்களும் அவற்றிற்கு இடையே ஒரு தையே அவர்கள் பேல் ஆக பயன்படுத்தினர். ன்படுத்தினர். பிற்காலத்தில் துண்டுப் பிரசுரங்களில் வந்தன. மூன்று பொல்லுகளைக் கொண்ட விக்கட் ட்டது. இரு விக்கட்களுக்கிடையேயான தூரம் பண்டைய சிறுவர்கள் பந்தாக பாவித்தது கொலாகர்
டை 5 முதல் 6 அவுன்ஸ் வரை ஆகும். பந்தின் விதிகள் 1838இலும் கொண்டுவரப்பட்டன. துடுப்பின் வத்திற்கு சமனானதாயிருந்தது. எனினும் ஹொக்கி
95

Page 320
மட்டையைவிட நீளமானதாகவும், பாரமானதாகவும் வடிவத்தை கொண்டு வந்தவர்கள் ஹம்பின்டன் &
11 வீரர்களால் மட்டுப்படுத்தப்பட்ட விளையாட்டு சசெக்ஸ் பிராந்தியத்தில் 50 Guenyபந்தயத்தில் 6 சென்ட், சரே பிராந்திய அணிகளுக்கிடையிலான இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையில் நை கிரிக்கெட் விதிமுறைகளில் சில ஹம்ப்கூெடியார் ட் உருவாக்கப்பட்டன. பின்னர் ஹம்பின்டன் கழகத்தில் MCC 1787இல் ஆரம்பிக்கப்பட்டது. இது லே ஆரம்பிக்கப்பட்டது. இம்மைதானத்திற்கு லோட் தந்தையாகிய தோமஸ் லோட்ஸ் என்பவராவார். லோட்ஸ் மைதானம் கருதப்படுகின்றது. MCC கழ ஒரு சஞ்சிகையாக வெளியிட்டது. 1969இல் ஆரம்பமானது. அதுவரை அப்பதவியில் இருந்த N கிரிக்கெட் சபைக்கு அரசு ஆதரவு வழங்கியதோ அரசு முதலுதவி வழங்கவில்லை. அத்துடன் கட்டுப்பாட்டு சபையை அமைக்க உத்தரவிட்ட சங்கம் உருவாக்கப்பட்டது. இதில் பிராந்திய ம இங்கிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை என்
இங்கிலாந்து முடியரசு உலகம் முழுதும் பரவி இடங்களிலெல்லாம் கிரிக்கெட் விளையாட்டை வி இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா இங்கிலாந்து முடியரசின் கிரிக்கெட் சங்கம் என
முக்கிய நிகழ்வுகள்
19ஆம் நூற்றாண்டின் முதற் பாதிவரை கையில் [b6ODLQL uppgi. Underarm bowling. sp&bT6Noġbg இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் 1835இல் MC பந்து வீச முடியும் என்ற விதிமுறையைக் கொண்( வேகமாக பந்து வீச ஆரம்பித்தார்கள். ஆசை வீசுதல் தென்பட்டது. இதன் உச்சக் கட்டம் அணிக்குமிடையான போட்டியில் ஒரு பந்து வீச் வீசியதால் முறையற்ற பந்தென்று சமிக்ஞை காட்ட 1864ஆம் ஆண்டு MCC கழகத்தால் தோளிற் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றும் MCC 24(1) இடமுண்டு. எனினும் ICCயில் டெஸ்ட் போட்டி முடியும். இது அவுஸ்திரேலியாவின் அணித் வீசியபோது முறையற்ற பந்தென சமிக்ஞை காட்டட் உட்பட பல டெஸ்ட் விளையாடும் நாடுகள் தே பந்தெனத் தீர்மானித்து விதிமுறைகளை கொண்டு விதிமுறைகளைப் பொறுத்தமட்டில் பல கருத்து குறிப்பிடத்தக்கவொரு கவலைக்குரிய விடயம் ஆகு வீரர்கள் கூடிய ஓட்டங்களைப் பெற்றதால் LB 1774இல் LBW முறை கொண்டுவரப்பட்டாலும் மறைத்தால் மட்டுமே LBWமுறையின் கீழ் துடுப்ப 20ஆம் நூற்றாண்டில் ஆட்டம் வேகமாகவும்: வீச்சாளர்களுக்கு உபயோகமான விதிமுறை ெ

) இருந்தது. பிற்காலத்தில் தற்போதைய துடுப்பின் கிரிக்கட் கழக வீரர்களாவர்.
1697ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. இப்போட்டி பிளையாடப்பட்டது. 1 Gueny = 10.50/= 1709இல் போட்டி டாப்டோர்டில் நடைபெற்றது. இதுவே டபெற்ற முதலாவது போட்டியாகும். 1744இல் ராந்தியத்தின் ஹம்பின்டன் கிரிக்கெட் கழகத்தால் இடத்தை மெரில்போன் கிரிக்கட் கழகம் பிடித்தது. ாட்ஸ் மைதானத்தை அடிப்படையாகக் கொண்டு -ஸ் எனும் பெயர் வரக் காரணமானவர் அதன் இன்றுவரை கிரிக்கெட் உலகின் ஆதிமைதானமாக ]கம் தம் அனைத்து கிரிக்கெட் விதி முறைகளையும் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை MCCஅப்பதவியில் இருந்து நீங்கியது. இங்கிலாந்து டு இச்சபைக்கு கீழ் நடைபெறாத புோட்டிகளுக்கு MCC க்கு ஏனைய கழகங்களைப் போல் ஒரு து. இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் ற்றும் டெஸ்ட் கிரிக்கட் கழகங்கள், MCC மற்றும் பன அங்கத்துவம் பெற்றன.
பிய நிலையில் அவர்கள் மைதானங்கள் இருந்த ரிவுபடுத்தினர். பிரித்தானியா முடியரசின் கிரிக்கெட் ஆகிய நாடுகளில் விரிவுபடுத்தப்பட்டது. 1965இல் பெயர் பெற்றது.
ன் கீழ்ப்புறத்தால் தோளிற்குக் கீழால் பந்து வீச்சு ல் கையை சுற்றி தோளிற்கு கீழால் பந்து வீசினர். CC கழகம் தோளிற்குச் சமாந்தரமாக கையை சுற்றி நிவந்தது. ஆகையால் பந்து வீச்சாளர்கள் அதிக 6யால் தோளிற்கு மேலாக கையை சுழற்றி பந்து
1862இல் ஆங்கில அணியொன்றிற்கும், கிரேக்க சாளர் தோளிற்கு மேலாக கையை சுழற்றி பந்து பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இதன் நிமித்தம் }கு மேலாக கையை சுற்றி பந்து வீசும் முறை விதிமுறையின் கீழ் தோளிற்குக் கீழாக பந்துவீச களின் விதிமுறைப்படி தோளிற்குக் கீழாக பந்து வீச நலைவர் கிரெக்செடல் தோளிற்குக் கீழாக பந்து பட்டதிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இலங்கை ாளிற்குக் கீழாக பந்து வீசும் முறையை முறையற்ற வந்துள்ளனர். எனினும் பந்தை எறிதல் தொடர்பான
வேறுபாடுகள் தற்போதும் ஏற்படுகின்றது என்பது ம். 20ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் துடுப்பாட்ட Wமுறையில் பல மாற்றங்கள் கொண்வரப்பட்டன.
துடுப்பாட்ட வீரர் வேண்டுமென்றே விக்கட்டை ாட்ட வீரர் ஆட்டமிழந்தவராக தீர்மானிக்கப்பட்டார். உற்சாகமாகவும் பிரபலம் அடைந்ததால் பந்து ாண்டுவரப்பட்டது. 1902இல் பந்து வீசும் கோடு
|96

Page 321
நீளமாக்கப்பட்டது. 1907இல் ஒவ்வொரு 200 ஓ வரப்பட்டது. 1918, 1919இல் 8 பந்துகளைக் கொண்ட 1937இல் ஒபஸ்டம்பிற்கு வெளியே பவுன்ஸ் ஆகும் ட விக்கட்டுகளின் உயரம், அகலம் போன்றன தீர்மா
1947இல் விக்கட்டின் அளவு தற்போதை நிர்ணயிக்கப்பட்டது.
1980இல் ஒரு நாளில் வீசப்படவேண்டிய ஒலி போட்டிகளுக்காக நிள்ணயிக்கப்பட்டன.
விதிமுறைகளின் வரலாறு
1787 முதல் MCC ஆரம்பமானது. அக்கால MCC க்கு மட்டுமே இருந்தது. முதலாவது சந்திப்பு ஒன்று நடைபெற்றது. 1755இல் இது பல சென்ட், ஹம்கூடியர், சரே, சசெக்ஸ், மிடில் செக்ஸ் 1786 மார்ச்சிலும், 1788/5/30 ஆம் திகதியும் இவ் கொண்டுவரப்பட்ட விதிமுறைகள் 1835/5/19 வை நடைமுறைப்படுத்தப்பட்டது.
1884/4/21இல் நடந்த சந்திப்பில் மீண்டும் பல 1939 - 1945 வரையான 2ஆம் உலகப் போரால் 19 1972 வரை நீடித்தது. இவ். விதிமுறைக் கோலை MCCக்கு அனுமதி வழங்கியது. 1980இல் இரண்ட நிறுவப்பட்டன. MCC விதிமுறைகளை திருத்த 2 அவசியம்.
1991/11/1 இல் ICC வீரர்களின் ஒழுக்க விதி நாடுகள் அனைத்தும் ICCயின் அங்கத்தவர்கள் ICC யிற்கு மட்டுமே உண்டு. ICC யில் அதிர்ப் ஆகிய நாடுகளுக்கு உண்டு. பல நாடுகள் கவுண்டி செய்து பின்பற்றுகின்றன. இலங்கையும் MC பயன்படுத்துகிறது.
米米米米米米>
米米水米米米米米米米米米米米米米米米米米》
米米米米米率米米米米米米米米

ஓட்டங்களுக்குப் பந்தை மாற்றும் முறை கொண்டு ஓவர்களை வீச அவுஸ்திரேலியர்கள் ஆரம்பித்தனர். ந்திற்கு LBWமுறை கொண்டுவரப்பட்டது. 1931இல் னிக்கப்பட்டது.
ப விக்கட்டின் அளவிற்கு சமமாக அளவாக
பர்களின் எண்ணிக்கை டெஸ்ட் மற்றும் பிராந்திய
oப்பகுதியில் விதிமுறைகளை தயாரிக்கும் உரிமை விதிமுறையை தயாரிக்க ஆட்லர் மைதானத்தில் கழகங்களால் விமர்சிக்கப்பட்டது. 1774/225இல் மற்றும் ஏனைய கழகங்கள் மாற்றங்களைச் செய்தன. விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. 1788/5/30இல் ர நீடித்தது. 1884 வரை சிறு மாற்றங்களுடன்
மாற்றங்கள் செய்யப்பட்டு 1939 வரை நீடித்தது. 947/5/7இல் மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டமை வ 1974இல் புதிய விதிமுறைக்ளை தயாரிக்க ICC, டாம் பதிப்பில் இருந்து 12 வருடங்கள் விதிமுறைகள்
2/3 அங்கத்தவர்களின் பெரும்பான்மையைப் பெறல்
களை தயாரித்தது. இன்று டெஸ்ட் விளாயாடும் ஆகும். டெஸ்ட் விதிமுறைகளை நிறுவும் உரிமை பு Veto அதிகாரம் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா
போட்டிகளுக்கு MCC, ICCவிதிகளை திருத்தங்கள் 2C, ICC விதிகளை உள்ளக போட்டிகளுக்காக
k米米米米米米米米米》
k米米米米米米米米米冰米米米米米来来来率来率牢来
:米冰米米米米米米米米米米米米米
297

Page 322
* மீனைக் கண்டான் கப்ப பட்சி கண்டான் விமானம் சந்திரனைத் தொட்டான்
ன்ெற அளவிலே இன்றைய இருபத்தியே தொனியுயர்த்துவதிலிருந்து அண்டசராசரங்கள் அத் அறிந்து கொள்ளலாம். தேவலோக ஆடவர், ம இன்றைய சமகால மானிடர்கள் நுகர்ந்து கொண்டி நாகரீகமறியாது நயந்து வாழ்ந்த ஆதிகால மனி காட்டும் உதாரண புருகூர்களாக திகழ்ந்து கொன கூறவேண்டும். இன்றைய தொழினுட்ப உலகம் வி கொண்ட மனிதன் இன்று வேற்று கிரகங்களில் கு
ஆதி மனிதனானவன் கல்லையும் கல்லையும் உ ரீதியாகக் கண்டுணர்ந்து கொண்டானோ, அன்று மு தொடங்கியது. விஞ்ஞானம், சமயோசித ஆற்றல் தனிமனிதனானவன் தானும் முன்னேறுவதுடனில்: பாடுபட்டான். முழுநிர்வாண சரீரத்துடன், ஆண் காலப்போக்கில் மாற்றம் கண்டான். இலை, கு காத்தான். மச்ச, மாமிசங்களைப் பச்சையாக உ உணவுகளை அவித்துச் சாப்பிடப் பழகிக்கொண்டா கூடிய முயற்சியினால் ஈட்டிய தாவர போசனங்க போன்றவற்றிலிட்டு பாகுபடுத்தவும் கற்றுக்கொண் வைத்து குளிர்சாதன வசதியை அக்காலத்திலேயே மனிதன்.
“ மாவிலையும் பனைய வரிசையாக இடுப்பிே மானிறைச்சி, மரையி மாட்டிறைச்சி, ஊனுள் தென்னங்கள்ளும், ப தாகம் தீர அருந்தியே நிலாக்கால வெயிலி: நிலாப் போல ஆடுவே
என தாகம் தீரக்கள் அருந்தி களிப்பாட்டம் காலத்தின் கோலங்கள் மாற்றத்திற்குட்படவே ச
2

அறிவியல் வளர்ச்சி
ஆர். சிவசங்கர் க.பொ.த (உ/த) - 13 கலைப்பிரிவு, விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நீர்கொழும்பு.
ல் செய்தான் படைத்தான் சாதனை புரிந்தான்.”
ாராம் நூற்றாண்டிலிருக்கும் மனிதகுலமானது நதனையிலும் அறிவியல் வளர்ச்சியின் தாக்கத்தினை களி நுகரத்தக்க அத்தனை சுகபோகங்களையும் ருக்கிறார்களென்பதில் துளியளவேனும் ஐயமில்லை. தன் இன்று நாகரீகத்திற்கென தன்னை உதாரணம் ன்டிருப்பது அறிவியற் துறையின் அனுகூலமென்றே யாபித்து விட்டது. அகிலத்தை அடைக்கலமாகக் டியேறத் தயாராகி விட்டான்.
ரசி தீயைய் பெறலாம் என்பதனை எப்போது அனுபவ தலே விஞ்ஞான வளர்ச்சி அசுரவேகத்தில் வளரத் b என்பவற்றால் தன்னை வளப்படுத்திக் கொண்ட லாமல், சமூகத்தையும் முன்னேறச் செய்வதற்காக பெண் என்ற பேதமை பார்க்காது திரிந்த மனிதன் ழை, தழை, மரப்பட்டை போன்றவற்றால் மானம் ண்டு வந்த அவன் நெருப்பின் வலிமை கொண்டு ன். வேட்டையாடி பெற்ற மாமிசமும், வேதனையுடன் ளும் பழுதடைவதைக் கண்டு, அவற்றை ‘தேன்’ டான். பனிக்கட்டிகளின் இடையில் உணவுகளை எளிமையான முறைகளில் பெற்று வந்தான் அன்றைய
லையும்
லற்றி
றைச்சி ன்போம். னையின் நீரும்
ம் நாம் ாம்.
ஆடி, புன்னகைப் பூரிப்போடு பூத்துக் குலுங்கினான். ாலக்கணிப்பினைக் கூட சரியாக கணிக்க முடியாத
8

Page 323
மனிதன் கோலமாற்றங்களுக்குட்பட்டு பரிணாமம் வசீகரிப்புக்களும் மனிதனை என்னதான் செய்தி காணவில்லை. மாறாக எதிர்கால சந்ததி மாற்றியமைத்துக் கொண்டான்.
இவ்வாறானதொரு பாரிய பரிணாமத்தினூடு அறிவியலின் வியக்கத்தக்க பரிணாமத்தின் வாயி கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. கற்குகைகt கூடகோபுரங்களிலும் சீவியம் செய்கிறானெனில் அங்கீகாரமென்றுதான் கூறவேண்டும். இந்நில
“ பஞ்ச பூதக் கலைகள் மெத்தவளருது மேற்ே மேன்மைக் கலைகள் சென்றிடுவீர் எட்டுத்தி:
செல்வங்கள் யாவும் ெ
என்று முழங்கிய கூற்றானது மெய்ப்பித்து விட்ட விரிவாக்கல் வாயிலாக ஒரு செயலை நிர்மா அறிவியற்றுறை மூலம் எமக்குக் கிடைத்த அ அதனடிப்படையில் நிறை கூறிக் குறைகளைக' ஏற்பட்ட அனுகூலங்களை கூறுதல் பொருத்தம
கருவறை விட்டுவந்து கல்லறையடையக் கா துறையானது பெரும் பணிநல்கிறது. உணவு, ! தேவைகளில் கூட இத்துறை பணிபுரிகிறது. அறுவ கூடகோபுரங்களும் எதனால் நிதர்சனமாக்கப்பட்ட அறிவியல் வளர்ச்சி எமக்களித்த பயன்களென்பது ஐம்பூதங்களையும் அடக்கி அகோரங்களைத் தவி அளிக்கின்றது.
அது மட்டுமா? வானியல், புவியியல், சமய தொழினுட்பவியல் என்ற எல்லாத்துறைகளினூடு பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டு வருகிறது. அதிலு தமிழ்வளர்த்து, அகிலமெங்கிலும் தமிழ்மணம் கமழ பரவும் வகை செய்தல் வேண்டும்’ எனும் குறளே
'வானியல் அறிவினைப் பொறுத்தவரையில் எத்த பல்லாயிரம் மைல்கள் கடந்து நிற்கும் ஆகாயத் வசதியால் தெளிவாகக் கண்டுணர இயலுகின்றது. * செய்திகள் சேகரித்தலும், துப்பறியும் சாதனங்களாக உள்ளடக்கக் கூடியவலுவும் அறிவியல் வளர்ச்சி வாழ்வுதானே குறைவற்ற செல்வம். ஆனாலும் ஆ நோய் ஏற்படும் வேளை தக்க மருந்து வசதியி கணிக்க முடியாத அவல நிலையில் தானே வா நோய் வருமுன்னமே நோய்த்தடுப்பு வசதிகளுை இவையாவும் அறிவியல் ஈந்த ஈகையேயாகும்.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் இ6 அரிது. ஒன்றும் ஒன்றும் எத்தனையென்று :
M ك

பூண்டான். காலத்தின் கோலங்களும், வசந்தங்களின் டினும் அவன் தன் உயர்வுப் பாதையினின்று வீழ்ச்சி ளின் வெற்றிக்காக தன்னைத்தானே சுவடுகளாக
பிரகாசிப்பதே “அறிவியல்’ எனும் சிறப்பம்சமாகும். )ாகத்தான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டே ல் வாழ்ந்தவன் இன்று மாடமாளிகைகளிலும், அது அறிவியலுக்கு சர்வதேச ரீதியிலும் கிடைத்த லயில் பாரதியின்
ன் நுட்பம்
5 அந்த நமிழினில் இல்லை
கும் காணர்ந்திங்கு சேர்ப்பீர்”
தென்றுதான் கூறவேண்டும். அறிவியற் துறையின் Eக்கவும் முடியும்; நிர்மூலப்படுத்தவும் முடியும். னுகூலங்கள் பல. பிரதிகூலங்களோ சில. என்ற வாசகத்திற்கிணங்க அறிவியல் வளர்ச்சியால் கும்.
த்திருக்கும் சில்லறை மனிதனுக்கு இவ்வறிவியற் உடை, உறையுள் என்ற மனிதனின் அடிப்படைத் பகை உண்டிச் சுவைகளும், பந்த்தி நூலாடைகளும், தென சித்தத்திற் குள்ளாக்கியறியும் போது அவை து கண்கூடு. தீ, வான், நீர், நிலம், காற்று போன்ற ர்த்து அனுகூலங்களை மட்டுமே அறிவியலானது
வியல், கலையியல், அழகியல், மருத்துவவியல், மே இவ்வறிவியலானது கைகோர்த்து இரட்டைப் ம் ‘அறிவியல்' துறையானது தமிழோடு இணைந்து செய்கிறது. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் ங்கும் வண்ணம் பணியாற்றுகிறது.
னை சாகசங்களையோ சாதனைகளாக்கியிருக்கிறது.
தோற்றங்களைக்கூட அறிவில் ஈந்த உபகரண அது மட்டுமல்லாது புவியிலிருந்தே செய்மதிகளினூடு ய "ரேடார்’ கள் மூலம் வானியலினையே முழுதாக பின் பயனாலேயே கிடைக்கப் பெற்றது. நோயற்ற கால நிலையிலே தாம் அனுபவித்தது என்ன? லாமை, நோய்க்கான காரணகாரியத்தை கூட pந்து வந்தது. ஆனால் இன்றைய நிலையிலே டு. தகுந்த வசதிகள் தந்த பராமரிப்பு உண்டு.
று எந்தவொரு மனையும் கணனியின்றி காண்பது bகற்பட்டு சிதறித் தவித்த மனிதனுக்கு சகல

Page 324
ஒத்தாசைகளையும் ஒறுப்புடன் அளிக்கும் ஒப்பற்ற இச்சாதனம் அறிவியல் துறையில் அதியுச்ச சாத
* சோதனைத் தூறல்களா சித்தத்தின் நெகிழ்வினா அறிவியலின் ஆதிக்கத்த
என்று ஒவ்வொரு மனிதனும் மார்தட்டிப் அனுகூலங்களை அறிவியற்துறைவளர்ச்சி அ கூலங்களையும் நினைவுகோரத்தான் வேண்டும். அ இன்றைய காலத்திலும் முற்றுப்பெற முடியாதுள்ள
மருத்துவத்துறையைப் பொறுத்தவரை இன்றை கூட அவற்றுட் சில நமது பாரம்பரியப் பண்பாடு உதாரணமாக மருத்துவ உலகிலேற்பட்ட கருக்கை பரிசோதனைக் குழாய் குழந்தைகள் போன்றன ந ஏற்பட்ட கலாச்சார சீரழிவை
"பொப்கோன் உண்டு ெ வந்த மாணவி! - டொக் நாளை பத்தாம் ஆண்டு
என்ற புதுக்கவிதையானது செய்புகிறது. மேலு இயற்கையின் மாற்றங்கள், சமநிலைத்தன்மைகள் இன்று பருவமழைகள் கூட பருவத்திற்கு கிை வளர்ச்சியடைந்ததின் விளைவால் பருவ மங்கை
மேலும் இன்றைய உலகிற்கே அச்சுறுத்தலா அறிவியற்றுறையளித்த மாபெரும் பிரதி கூலம ஏற்பட்டுள்ளது. அறிவியற் துறையளித்த மேலு உலகும் யுத்த அரக்கனுக்குப் பலியாகிக் கெ ஈடேறவேண்டுமெனில் ஒரு விடயம் பாதிக்கப்பட்டுத் ஏனையது தோற்கத்தான் செய்யும். ஆக < எண்ணிடமுடியாத சேவைகள் இழந்ததை மறை
* அறிவியற் துறையத ஆயுதம் செய்து உத் முத்தியும் பெறலாம் அறிவியற் துறைமூல ஆக்கிரமிப்பதால் உயிரையும் மாய்க்க அறிவியற் துறையில் அறிவியற் துறையில் எமது கைகளில் - அ எமது கைகளில்”
米米米米米米米米:
米米米米米米来来米米米冰冰米水米米米米水米米米米:
米米米冰米米米米米米米米米米米冰

அரும்பெரும் சாதனமாக கணனியானது திகழ்கிறது. னை. இந்நிலையில்
ல் சிதறடிக்கப்படவில்லை ல் பித்தாகிப் போகவில்லை தில் சாதனையல்லவா? படைத்தோம்’
பெருமைப்படுவதில் வியப்பில்லை. இத்தனை 4ளித்திடினும்கூட அதனிடையே நிகழும் பிரதி அறிவியலின் வளர்ச்சியால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் ملفزاً
ய அறிவியற் துறையானது வளர்ச்சி கண்டிருப்பினும் களை நிலைகுலைய செய்து விடுகிறது. இதற்கு லப்பு, வாடகைத்தாய் முறை,குளோனிங் குழந்தைகள், ல்ல எடுத்துக்காட்டுகளாகும். கருக்கலைப்பினால்
காண்டே டர் கருவை கலைத்து விடுங்கள். சோதனை.99
ம் தொழினுட்பவியல் வளர்ச்சி காணும் அதே நேரம் என்பன மாறுபடுகின்றன. அதன் விளைவால் தான் டப்பதில்லை. அறிவியற்துறை அசுர வேகத்தில் 5 பருவம் கடந்து பருவமடைகிறாள்.
ாக அமையும் புறவூதாக் கதிர்களின் தாக்கமானது ாகும். இதனால் சர்வதேச ரீதியிலும் ஆதங்கம் மொரு அம்சமான அணுவாயுதங்கள் மூலம் அகில ாண்டுதான் வருகின்றன. எனவே ஒரு நன்மை தானாக வேண்டும். ஒன்று வெற்றி பெறவேண்டுமாகில் அறிவியல் வளர்ச்சியானது மனித குலத்தினுக்கு க்கவோ அன்றி மறுக்கவோ முடியாது.
ால் தியும் சித்தியும்
Diö
கலாம்
நிதர்சனம் காண்பதும் நிழலாய் வாழ்வதும்
<米米米米米来米米米米米
<米米米米来米米米米米来米米米米米米米米米米米米米米米米 米米*米来来来米米米米水水来米米米米米
300

Page 325
2ம் உலக
உலகப் போர்களில் 2ம் உலகப் போர்தான் ஏனென்றால் 2ம் உலகப் போரில் ஏற்பட்ட அ அமெரிக்காவினதும், ஜப்பானினதும் போர் நடவடி ஏனெனில் ஒரு மாபெரும் வல்லரசின் துறைமுகத் ஜப்பானில் இரண்டு அணுகுண்டுகளை போட்டத ஜப்பான், அமெரிக்க போரினை நோக்குவோமானா
ஜப்பான் அமெரிக்காவைத் தாக்க தயாரானது. "பேள்’ துறைமுகத்தை தாக்கியது. ஜப்பானியட் ஏமாற்றிவிட்டு "பேள்’ துறைமுகத்தினுள் நுழைந்து தொடங்கின. ஜப்பானிய விமானங்களின் உக்கிரத் எந்தவித எதிர்ப்பு நடவடிக்கையையும் செய்யமு பொறி கலங்கிய நிலையில் காணப்பட்டனர். 6 அவர்கள் மிகத்திறமையாக இத்தாக்குதலை திட்
கப்பல்கள் எல்லாம் வெடித்துச் சிதறின. டெ நிமிட இடைவெளியினுள் அனேமாக எல்லாம் நா நடத்துவதை அறிந்த “US மில்ட்ரி எயாகிராய் உசார்ப்படுத்தப்பட்டு இந்த இலக்குத் தவறாத தாக் அனுப்பட்டது. துறைமுகத்தை அடைந்த பே எல்லாம் நாசமாகி விட்டன. “சிப்” பரிசோனா முர் “எயார்கிராப்ட் கரீர்” என்று சொல்வார்கள். இ தரப்பிலும் இருந்தது. ஜப்பான் முன்கூட்டியே இதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் போ
அதாவது இதனை சதுரங்கம் போன்று நெகிமோ எடுத்த எல்லாவித நடவடிக்கையும் தோல்வியைத் நெவேடா முதலிய கப்பல்களும், வெஸ்ட்வேஜே தவிர்ந்த 3 சண்டைக் கப்பல்களும், தாக்கி சிதறடிக்கப்பட்டன. அமெரிக்க ஏவுகணை தாக்கியபோதும் ஜப்பானிய விமானிகள் சளைக்கவி அந்தக் கப்பல்களில் மோதிக் கப்பலை அழித் சொல்லும்போது:- இங்கு யாகம் ஒன்று நடத்திய காணப்பட்டது. மேல் துறைமுகம் பற்றி எரிந்துெ இறந்து கிடந்தார்கள். ஒரு போர்க்களம் பார்ப்ப இதனைக் கண்டு இப்போது 70 - 80 வயதுகள் கூருகிறார்கள்.
இந்தத் தாக்குதல் ஜப்பான் தரப்பில் பெரு படுதோல்வியடைவதற்கு வித்திட்டது. 120 நிமிட

st போரில் ஜப்பானும் அமெரிக்காவும்
அ.மு. ராபி
10-A, தி/கிண்ணியா மத்திய கல்லூரி
மிகவும் முக்கியமான போராகக் கருதப்படுகிறது. ழிவு மிகவும் பாரதூரமானது எனலாம். இதிலும் bகைகள் மிகவும் பயங்கரமானவை எனக் கூறலாம். நதை தாக்கியது ஜப்பான். இதுபோல அமெரிக்கா ன் மூலம் ஜப்பானை அடிபணியச் செய்தது. இந்த
6) -
இதன் முதல் கட்டமாக ஜப்பான் அமெரிக்காவின் போர்விமானங்கள் எல்லா ரேடார் யுனிட்டையும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தாக்குதல் நடத்தத் தாக்குதலினால் அமெரிக்கக் கடற்படையினரால் டியவில்லை. இதனால் அமெரிக்கப் படையினர் ஏனெனில் ஜப்பானியப் பிரதமர் “நெகியுமோட்டோ” டமிட்டிருந்தார்.
ற்றோலியக் களஞ்சியம் தீப்பிடித்து எரிந்தது. 30 சமாகிவிட்டன. "பேள்” துறை முகத்தில் தாக்குதல் ட்-1’ போர்ட் அயலன்டில் இருந்து உடனடியாக குதலை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ாது, ஹங்கில் தரித்து நின்ற விமானங்கள் முதல் ]றுமுழுதாகத் தகர்ந்துபோனது. அதாவது இதனை இது ஜப்பான் தரப்பிலும் இருந்தது. அமெரிக்கா
ஒரு திட்டத்தை வைத்திருந்ததால் அமெரிக்கா யிற்று.
அவர்கள் அமுல்படுத்தினர். இதனால் அமெரிக்கா தழுவியது. சிய்மொகொலஹோமாவும், கலிபோனியா, னியா முதலிய இன்னும் பல கப்பல்களும், இது அழிக்கும் கப்பல் முதலியனவும் ஜப்பானினால் நாங்கிய படையணி ஜப்பானிய விமானங்களைத் ல்லை. தங்களுடைய விமானங்களை கொண்டுபோய் தார்கள். இத்தாக்குதலை நேரில் கண்டவர்கள் து போன்று இருந்ததாகவும், அங்கு புகைமூட்டமும் காண்டிருந்தது. ஒரு தொகை இராணுவ வீரர்கள் தற்கு மிகப் பயங்கரத்துடன் காட்சியளித்தது என்று ல் வாழுபவர்கள் ஒருவித சோகத்துடன் நினைவு
வெற்றியாக அமைந்தாலும் பின்னால் ஜப்பான் இடை வெளியினுள் 180 விமானங்கள் அமெரிக்கா
O1

Page 326
தரப்பில் தகர்ந்து போனது. 2300 அமெரிக்கப் ப காயமடைந்தனர். 18 கப்பல்கள், நீள்மூழ்கிக் கப் 100க்கு குறைவான துருப்பினரும். 29 விமானங்க இழந்தது.
“நடைபெற்று முடிந்த பேள் துறைமுகத் தாக் இன்னும் பழிவாங்கத்தக்கது என்றும்’ ஜேர்மன் சர் இந்த உரை நாசிச வாதத்தை பிரதிபலிப்பனவாக இந்த உரையும், இன்னும் சில விடயங்களும் சேர்த் எனலாம். இந்தத் தாக்குதல் நடைபெற்ற மறுத் ஜப்பானுக்கு எதிராக யுத்தம் பிரகடனம் செய்தது செனட் சபையில் ஜப்பானுக்கு எதிராக போர்ப் பிர பூர்வமாக வெளியிட்டு உரையாற்றினார். இந்த உை மிகப் பெரிய உள்நோக்கத்துடன் தாக்குதலுக்கு உள் இருந்து என்றுமே அகலாது என்றும் உரை நிக
அமெரிக்கா போரில் குதித்த பின் ஆயுதங்கள், ய உற்பத்தி செய்து தனது இராணுவத்திற்கும், நேசப்ப ஜேர்மனியும், ஜப்பானும் நன்றாக வாங்கிக் கட்டத் ே பொறுப்பாக இருந்த “சுப்பீரியர் வேக்கவுன்ஸ்” எனு தழுவலாம் எனச் சற்றுப் புரிந்து கொண்டது எனி தொடர்பான மரபையோ, வலுவையோ கொண்டி உயிரியல் ரீதியில் தோற்கடிக்க எண்ணியது. இ இது மிகக் குரூரத்தனமான பிரிவு என்றுதான் மன்ஜ்ஜுதியாவின் காபின் நகருக்கு வெளியே பி “சீரோஇசில்” என்பவரின் தலைமையில் செயற்ப எனும் எண்ணக் கருவை விரிவுபடுத்துவதாகும். உடலில் பாய்ந்த குண்டை எப்படி அகற்றுவது கூறியிருந்தார். மேலும் சிறைக் கைதிகளுக்கு உலர் உலைகளில் மனிதரை வாட்டினார்கள். பரிசோதித்தார்கள். இப்படியான குரூரத்தனமான என்பதை டாக்டர். இசியே குறிப்பெடுத்தார். இ பிரசர்ச்சேம்ப முதலிய சதிகள் அங்கு இருந்தன.
எப்போதும் அலகு 731 சித்திரவதை முகாமில் 731 பிரிவின் குடிநீரில் நஞ்சூட்டியதால் 12000
கைதிகளுக்கு முன் பக்டீரியா குண்டுகள் வெடிக்க யுத்தம் தோல்வியை நோக்கிச் சென்றது. அ தகள்த்துவிட்டு அதன் உரிமையாளர்கள் ஜப்பானு
மேலும் யுத்தத்தை நீடிக்க பென்டகனும் விரு லிட்டில் போய் எனும் பெயருடைய அணுகுண்ை மேலும் 100000 பேர் காயமுற்றார்கள். எனினும் இந்த இருப்பதாக சுப்பீரியர் வேக்கவுன்ஸ் நம்பியது. இந்த 6ம் திகதியில் இருந்து 48 மணிநேரத்திற்கு வானொலிகளின் அலைவரிசைகளில் குறுக்கிட்டு போகவே ஜப்பானுக்கு எதிராக பென்டகன் மிகட் பென்டகன் இராணுவத்தலைமையகம் கோகுரா எ துணை இலக்காகவும் தெரிவு செய்தது. இ தொழிற்சாலைகள் இருந்தமை குறிப்பிடத்தக்க

டையினர் உடல் சிதறிப் பலியானார்கள். 1500 பேர் ல்கள் என்பன தகர்க்கப்பட்டது. ஜப்பான் தரப்பில் ள், 5 “மிட்கப்” ரக ஏவுகணைகள் என்பன ஜப்பான்
குதல் வரவேற்கத் தக்கது என்றும் அமெரிக்கா வாதிகாரி "அடோல் ஹிட்லர்” உரை நிகழ்த்தினார். இருந்தது. இதனால் அமெரிக்கா போரில் குதித்தது. துத்தான் அமெரிக்காவுக்கு போர் வெறியை ஊட்டியது தினமே 1941.12.08ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ்
அமெரிக்க ஜனாதிபதி “பிராங்லின் ரூஸ்வெல்ட்” 5டனத்தையும், போர்க்கால மரபினையும் உத்தியோக ரயில்:- அமெரிக்கா திடீரென்றும், நன்றாக திட்டமிட்ட ளானதென்றும், இது அமெரிக்க மக்களின் மனங்களில் ழ்த்தினார்.
த்தத் தளபாடங்கள் என்பவற்றை கோடிக் கணக்கில் Oடகளுக்கும் அள்ளி, அள்ளி கொட்டியது. இதனால் தொடங்கியது. ஜப்பானின் யுத்த நடவடிக்கைகளுக்கு ம் ஜப்பானிய யுத்த உயர்சபை ஜப்பான் தோல்வியைத் * இந்த சபைக்கு சமாதானத்தையோ, சரணடைதல் ருக்கவில்லை. எனவே ஜப்பான் அமெரிக்காவை தற்காக அலகு 731 எனும் பிரிவை உருவாக்கியது. சொல்லலாம். அலகு 731 பிரிவு வட சீனாவின் ங்பொங்’ எனும் இடத்தில் 6 சதுர கிமீ பரப்பில் ட்டது. இவர்களது நோக்கம் இராணுவ உயிரியல் இதில் பணிபுரிந்த “யூஆசா” என்பவர் குறிப்பிட்டார். து என்பதற்காக தான் பலகைதிகளை சுட்டதாக பிளேக்கிருமியை உருவாக்கினார்கள். உயிருடன் அதிதாழ் வெப்பநிலையில் கைதிகளை அமிழ்த்தி
செயல்களின் போது மனிதன் என்ன பாடுபடுகிறான் இவ்வாறான சோதனைக்காக ஹொட்சைன் ரூம்ஸ்,
300க்கு குறையாத கைதிகள் இருந்தார்கள் அலகு சீனவாசிகள் இறந்தார்கள். திறந்த வெளிகளில் வைக்கப்பட்டது. ஒரு நிலையில் ஜப்பான் தரப்பில் லகு 731 சித்திரவதை முகாமை வெடிவைத்துத் க்கு தப்பி ஓடினார்கள்.
ம்பவில்லை. எனவே 1945.09.06 ஹீரோசிமா மீது ட வீசியது. இதனால் 100000 பேர் மாண்டார்கள். ஒரேயொரு குண்டு மாத்திரம்தான் அமெரிக்காவிடம் இதனால் ஜப்பான் தரப்பில் யுத்தம் தொடர்ந்தது. ள் யுத்தத்தை நிறுத்தி ஜப்பான் மொழியில் ஜப்பான் அமெரிக்கா அறிவித்துக் கொண்டிந்ததும் பயனற்றுப் பெரிய அணுகுண்டுத் தாக்குதலுக்குத் தயாரானது. றும் நகரத்தை பிரதான இலக்காகவும், நாகசாஹியை வ்விரு நகர்களிலும் ஜப்பானின் பிரதான யுத்தத் து. நாகசாஹியில்தான் பேள் துறைமுகத்தைத்
02

Page 327
தாக்குவதற்கு பங்கேற்ற விமானங்கள் தயாரிக்கப்பட் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள “டினியன்” அயல6 எனும் எனலாவியரக விமானங்கள் புறப்பட்டு 3400 பறக்கத் தொடங்கியது. ஒரு விமானத்தில் விமானி வீரர்களும் 10000 பவுன்ஸ் எடையுள்ள அணுகுண்
இரண்டாவது விமானத்தில் அணுகுண்டைத் தய வைக்கும் போது வெடிப்பின் விளைவை அளவிடும் நேரத்தில் ஜப்பானின் கோகுரோ நகரத்தின் மேலாக குண்டை வீசுகின்ற குத்துயரத்திலும் தாழ்ந்து விட்ட6 குண்டு வீசத் தயாரான போதுதான் அமெரிக்காவுக்கு உள்ளாகி எரிந்து கொண்டிருந்த தொழிற்சாலை இலக்கை கண்டுபிடிப்பதற்காக விமானம் வட்டL நோக்கி சுட ஆரம்பித்து விட்டார்கள் கோகு தோல்வியடைந்தது.
விமானங்கள் துணை இலக்கான நாகசாஹிை மீதும் 70% மேகம் கூடியிருந்தது. என்ன இருந்த கூடாததென்றும் வெறுமனே கண்களால் இலக்ை கட்டளை இருந்தது. ஆனால் 70% சதவீத மே! என்பதால் ஒரு கட்டளை அதிகாரியின் உத் கண்டுபிடிக்கப்பட்டு அதன்மீது குண்டு கழற்றப்ப இருந்த பருத்த மனிதன் எனும் பெயருடைய அ வெடித்துவிடாது இருக்க உள்ளே ஒரு தொழில்நுட் என்று சொல்வார்கள். இந்த தொழில்நுட்பம் குை 52 செக்கன் பயணித்து தரையில் இருந்து 500 யார் நின்று போய்விட சரியாக 11 மணி 2 நிமிடம் அளவி அந்தரத்தில் நெருப்புக் கோளமாக மாறியது. விம ஊடாக பார்க்க முடியாத அளவு பிரகாசமாக இருந் சென்றுவிட்டது. அதனால் அந்த பிரதேசத்தில் ஒ இன்னும் இன்னும் விரிவடைந்து நாகசாஹியை தொன்னை ஒரேயடியாக வெடிக்க வைத்தது ( வெளியிடப்பட்டது.
போதாக்குறைக்கு அணுகுண்டின் சிறப்பியல்பான இடத்தைச் சூழ 3000 அடி ஆரையுள்ள வட்டப் பிர கற்களும் உருகி குமிழிவிட்டு கொப்பளித்தன. இந்த சில நொடிகளில் 75000 மக்கள் ஏன் சாகிறோம் கணக்கானவர்கள் காயமுற்றார்கள்.
நாகசாஹி மீது குண்டு வீசப்பட்ட அதே கணத்த ஒன்றிற்குள் நீண்ட உருளை வடிவான பொருளெ கண்டெடுத்தவர்கள் ஆய்வுச்சாலை யொன்றில் ஒட் அளவிடும் கருவியும் ஒரு கடிதமும் இருந்தது. “சாகினி” என்பவருக்கு 3 அமெரிக்க விஞ்ஞானிகள் இவ்வழிவுக்கு வருந்துகின்றோம். உங்கள் செல்வ செய்யுங்கள். இது தவிர வேறு எந்த நடவடி குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் புரபோசர் சாகினியிடம் ஒப்பை “சீரோ சீகோவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈற்றில்

ட்டன. 1945.08.09ஆம் திகதி காலை 256 அளவில் ன்ட் எனும் தீவுக் கூட்டங்களில் இருந்து 2B-29 மைல்களுக்கு அப்பால் உள்ள ஜப்பானை நோக்கி “மேஜர் ஜெனரல் சால்ஸ்வேனியும்” சில இராணுவ டும் இருந்தது.
ாரித்த சில விஞ்ஞானிகளும், அணுகுண்டை வெடிக்க ம் கருவியும் இருந்தன. 2B-29 விமானங்கள் 7 மணி வந்துவிட்டது. அணுகுண்டைத் தாங்கிய விமானம் ண. அணுகுண்டின் சில இணைப்புக்கள் அகற்றப்பட்டு உதைத்தது. சில நாட்களுக்கு முன் தாக்குதலுக்கு ஒன்றிலிருந்து வெளியேறிய கரும்புகை மறைத்தது மிடத் தொடங்கிய போது கீழிருந்து விமானத்தை ரா மீதான தாக்குதல் திட்டம் இப்படித்தான்
ய நோக்கி பறக்கத் தொடங்கின நாகசாஹி நகள் நாலும் ராடர்சிஸ்டம் உதவியுடன் குண்டு வீசப்படக் க பாத்துத்தான் குண்டு வீசப்பட வேண்டும் என்றும் கத்துக்குள்ளால் இலக்கை கண்டுபிடிப்பது கடினம் தரவுக்கிணங்க ரேடாரின் துணையுடன் இலக்கு ட்டுவிட்டது. மிகப்பெரிய வெள்ளரிப் பழம் போல ந்தக் குண்டு கழற்றப்பட்டு குறித்த இடத்திற்குமுன் பம் இருந்தது. இதற்கு “எலக்ட்ரோ பிளாஸ்ட்டெட்” ன்டு கழற்றப்பட்டவுடன் செயற்படத் தொடங்கியது. ஸ் தொலைவில் இருந்தபோது அந்த தொழிநுட்பம் வில் காலை அணுகுண்டு செயற்படத் தொடங்கியது. னிகள் அணிந்திருந்த “இன்பாரன்ட் கொக்குல்ஸ்” ததாம் வெப்பநிலை 100 மில்லியன் சென்ரிகிரேட்டுக்கு ஒட்சிசன்வாயு இல்லாமல் போக நெருப்புக் கோளம்
மூடிக்காண்டது. “TNT” வெடிமருந்தை 20000 போன்ற கர்ண கொடூரமான ஒளியுடன் வெப்பமும்
கதிர்வீச்சும் இத்துடன் சேர்ந்து கொண்டது. வெடித்த தேசம் கருப்பு நிறமாக தோன்றியது. உலோகங்களும், நப் பிரதேசத்திற்குள் எந்த உயிரினமும் எஞ்சவில்லை என்று கூடத்தெரியாமல் இறந்தார்கள். இலட்சக்
தில் மற்றைய 2B-29 விமானத்திலிருந்து வயல்வெளி ான்று பரசூட் மூலம் இறக்கப்பட்டது. இதனைக் படைத்தார்கள். அதனுள் அணுகுண்டின் வெடிப்பை கடிதத்தை டோக்கியோ பல்கலைக் கழக புரபோசர் எழுதியிருந்தனர்:- விஞ்ஞானிகள் என்ற வகையில் ாக்கை பயன்படுத்தி உங்கள் மக்களை சரணடையச் க்கையும் இன்னும் அழிவுகளை துண்டும் என்று
டக்கப்படவில்லை. மாறாக ஜப்பான் சக்கரவர்த்தி ) சக்கரவர்த்தி மரபுகளை மீறிக் கொண்டு ஜப்பான்
O3

Page 328
சரணடையும் என அறிவித்தார். யுத்த உயர் ச எனினும் இறுதிவரை சக்கரவர்த்தி இந்த முடிவை.ம தளபதிகளும் பாரம்பரிய “கரகறி’ முறைப்படி வயிற் வேறு சில அதிகாரிகள் சதிப் புரட்சி ஒன்றை நட 1945, ஓகஸ்ட்டின் பிற்பகுதிகளில் சரணடைந்தார்கள் தொடர்கிறது.
米米米米状
米米米米米米米米米米米米米米水
米米米米米米米米米
வாழும்நாள் சில நலனுறக் கழிப்பதே அ வாக்குக் காயங்கள சிந்தித்துத் துதித்து வ உண்மைச் சுருதி உ நலனுக்கும் இருப்பி அவனை நினைக் வந்தெய்துகின்றன. ர இதயம் நிறைந்திருப்பி மொழிகளே பிறக் செய்கைகளையே எண்ணங்களைத் தூய்
ܩܠ

பையின் பெரும்பகுதி இந்த முடிவை எதிர்த்தது. ாற்றவே இல்லை. ஜெனரல் அனாமியும், இராணுவத் றைக் கிழித்து தற்கொலை செய்து கொண்டார்கள். ாத்தி தோல்வி கண்டார்கள். ஈற்றில் ஜப்பானியர் . ஆனால் அணுகுண்டின் கோர விளைவு இன்னும்
<米米米米米米
米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米水
ܓܩ=
)வேயாயின் அவற்றை றிவின் பாலதாகும். மனம் ரினால் இறைவனைச் ணங்குதல் வேண்டுமென உரைக்கின்றது. எல்லா டம் இறைவனாதலின் க எல்லா நலனும் நல்லெண்ணங்களினால் ன் வாக்கிலிருந்து நல்ல கும். உடல் நல்ல செய்யும். ஆதலால் மை செய்ய வேண்டும்.
الص=

Page 329
உலக வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களும் சுருங்கிக் கொண்டிருக்கின்றது
கர்ப்பம் தரிப்பதைவிட குளோனிங் கோட்பாட்டிற்கே முன்னுரிமை.
இனி.
குழந்தைகளை சந்தைப்படுத்தும் குழந்தை உற்பத்திக் கம்பனிகள்
இருநூறு வருடங்கள் உயிர்வாழ் ஊகங்கள் தேடப்படும்
செயற்கை தாவர அழகே சூழலுக்கு
தாவர உற்பத்தி குறையும்
ஒட்சிசன் குறைந்து உயிர்க் கொல்லும்
காசுக்கு
கடைகளில் கடைசி விலையில் ஒட்சிசன் விற்கப்படும்

சிலவேளை இப்படி நடக்கலாம்?.
05
இரா. யோகேஸ்வரன்
(2ம் வருட கணிதம்) மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி
ரோபோக்கள் வாக்குரிமை கேட்கும் இயந்திர ஆட்சி நடக்கும்
கணணியோடு மட்டுமே பேச்சுக் கொடுப்பான் மனிதன்
மனிதத்துவம் மனிதநேயம் என்பன மயானம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்
நிலம் குறையும் பாதி பூமியை கடல் தின்னும்
வேற்றுக் கிரகத்தில் குடியுரிமை கோரப்படும் அங்கேயும் எல்லைப் பிரச்சினைவரும் துப்பாக்கிகள் மோதிக்கொள்ளும்
மனிதர்கள் சாவார்கள்
இதனால் சிலவேளை இப்படி நடக்கலாம் மனித நாகரீகம்
மறுபடியும் மாண்டு போகலாம்?.

Page 330
அந்த நாளின்லே யாழினிலே யாவரு யார்செய்த போர் 6 திடீர் வெடிகள் எ திணற வைத்தன.
உறங்கும் உயிரும் உலக அழிவு என உலக்கைகளாக்குப் அழிவுகளால் மக்க அகதியாயினர் அந்த நாளினிலே.
米米米冰米米米米
米米米米米米米米米米米米米米米米米米米
米米米米米米米米米米米米米冰

அந்த நாளினிலே.
ஜெஎம் ஹிஜாஸ், தரம் - 09A
அக்/பொத்துவில் மத்திய கல்லூரி
ம் உறங்க, ான்று தெரியவில்லை D6OLD
), அந்த வெடிகள், 5ள்,
k米米米米米米米
K米米米米米米米米米米米米米米米米米米
k米米米米米米米水米米米米米
பொத்துவில்

Page 331
கவிக்கோ அய்துல் ரஹ்மான் அவர்கள் மது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். தொடர்ந்து உயர் கல்லூரியில் பெற்றார். இவரது தந்தை ஓர் எழு பெற்றவர். அப்துல் ரஹ்மான் அவர்களின் பாட்ட இலக்கிய அறிவு பெற உதவியது. இவருக்கு இ இதுவே இவரது குடும்பய் பின்னணி
தமிழ் புதுக்கவிதையின் சிறப்பிற்கும் வளத்திற் இவரையே சாரும். அது மட்டுமன்றி இவர் புக வாய்ந்த இவர், மொழி பெயர்ப்புத் துறையிலும் அரிய இவ்வாறு பல துறைகளிலும் சிறப்புற்று விளங்க துறையாக கவிதைத்துறையே விளங்குகின்றது.
கவிஞர் மொளலானா றுபி, கவிஞர் தாஹ படைப்புக்களால் கவரப்பட்டு, இவை அவர் மன கவிமேதைகளின் படைப்புக்களால் தாக்கப்பட்ட தொடங்கி விட்டார். மிகச் சிறு வயதிலேயே மொழிபெயர்ப்புக்களை வாசிக்க வாசிக்க அல்தர் இவரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இ போது கூடுதலாக சூபித்துவக் கருத்துக்களில் கவிதைத் துறையில் காலடி எடுத்து வைக்க சூழலும் இவர் கவிதைத்துறையில் ஈடுபட வழில்
அசிங்கங்கள், அக்கிரமங்கள், அவலங்களை நே அல்ல0 என்ற கோழைப் பொய்யில் ஒளிந்து செ தொகுப்புகளில் குறிப்பிட்டுள்ளார். இதுவே இ6 அப்துல் ரஹ்மான் அவர்கள் கவிதைகளை எழு போதே கவிதைகளை எழுதியுள்ளார். கலவரங்க பூத்த கவிதைகளும் உண்டு. இவர் புதுக்கவில் கவிதை, நாடகம், சொற்பொழிவு என்று பல வை
அஞ்சா நெஞ்சத்துடன் கருத்துக்களைத் துணிவு தொகுப்புக்கள் பல அதிர்வுகளை ஏற்படுத்தின. அ கவிதைகளாக பால் வீதி’, ‘நேயர் விருப்பம்’ இதழில் அறுபத்து மூன்று வாரங்கள் வெளிவ கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

கவிக்கோ - அப்துல் ரஹற்மான்
ஏ.எம். முர்கூதிடா க.பொ.த (உத) 2005, கொ/அல் கிதாயா மவி கொழும்பு - 10
1ரையில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே தனது
கல்வியை மதுரையில் உள்ள தியாகராசர் கலைக் ழத்தாளர். உருது பாரசீகம் என்பவற்றுள் புலமை னார் ஒரு கவிஞர். இவரது தந்தை தாய் வழியும் ரண்டு தம்பிகள், ஒரு தங்கை, இரண்டு பிள்ளைகள்.
கும் மெருகூட்டி தமிழை வளப்படுத்திய பெருமை ழ் பெற்ற தமிழ்ப் பேராசிரியர். பல்துறைப் புலமை பணிகளை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிய இவருக்கு ‘கவிக்கோ’ என மகுடம் சூட்டிய
ர், கலில் இம்ரான் போன்ற கவி மேதைகளின் ாதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு பல
இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே எழுதத் அல்தர் ஆனை ஓதி முடித்தார். அல்தர் ஆன் ஆனின் இலக்கிய அறிவியல் ஆன்மீக நோக்கங்கள் தன் காரணமாகவே அவர் கவிதைகளை எழுதும் தனது கவிதைகளைப் படைத்தார். இதுவே இவர் காரணமாக அமைந்தது. மேலும் இவர் வாழ்ந்த குத்தது எனலாம்.
ாக்கி நீண்ட என் சுட்டு விரல், 'யாரையும் குறிப்பிடுவன ாள்ள நான் விரும்பவில்லை என தனது கவிதைத் பரது நோக்கமாகும். இந்த வகையில் கவிக்கோ தும்போது, கலவரங்கள், பிரச்சினைகள் நடைபெறும் ள் அடங்கிய தருணங்களில் அமைதியில் மெல்லப் த, வசனக் கவிதை, யாப்புக் கவிதை, உருவகக் கயான வடிவங்களைக் கையாண்டுள்ளார்.
ாகச் சொல்லும் இயல்புடையவர். இவரது கவிதைத் வ்வாறு மக்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்திய என்பவற்றை குறிப்பிடலாம். மேலும் ‘முத்தாரம்’ த படைப்புக்களைத் திரட்டி ‘சுட்டுவிரல்’ என்ற
07

Page 332
தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களுள்
உரைநடையாளராகவும் திகழ்கிறார் என்பதற்கு என்ற கவிதை தொகுப்பு சான்றாக அமைகிறது. இ அமைந்த இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கு அறிவுக்கருவூலமாகவும் கவிதையை வெறுப்போர் திகழ்கிறது. “ஜூனியர் விகட னில் வெளிவந்த கட்டுரைகளை இந்நூலில் தொகுத்து வழங்கியு வரவேற்பை ஏற்படுத்தியது.
மேலும் கவிக்கோ என்ற பட்டம் குடியார்க்கும் என் பட்டமாகும். டாக்டர் பட்டத்திற்காக இவரால் உ நூல் மூலம் தமிழ் புதுக்கவிதையின் வளர்ச்சிக் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழ் கவிதை திகழ்வது ஹைக்கூ கவிதையாகும். ஹை அறிமுகப்படுத்தியவர் இவரே. யப்பானியக் அறிமுகப்படுத்தி, இன்றுவரை தமிழ் ஹைக்கூ க என்ற பெருமையையும் தமதாக்கிக் கொண்டார்.
இவ்வாறு கவிக்கோ அய்துல் ரஹ்மான் அவர் துறை போன்ற பலதுறைகளிலும் தமிழுக்கு தனது ரஹ்மான அவர்கள் ‘கவிதை எனது இரத்தத்திலு கூறியதில் இருந்து, இவர் கவிதை துறைக்கு கவித்துறையில் இவர் கொண்ட ஈடுபாடும் தெளி தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய பணிகள் காலத்ை
米米米米米米米状
米米米米米米米来来米米米米米米米米”
米米米米米米米米米米米米性
மனிதன் முத விசுவாசமுடையோனா நான் ஆதரவற்ற ஓர் அப்பரம் பொருளே என்பதையும் உணர்த
N
 

ஒருவராகிய அப்துல் ரஹ்மான் தலை சிறந்த இவரின் ‘உன் கண்ணால் துங்கிக் கொள்கிறேன்’ வரது பன்மொழி இலக்கியப் புலமையின் விளைவாக
இனிய விருந்தாகவும் ஆய்வு மாணவர்களுக்கு மனதையும் கனிய வைக்கும் உணர்ச்சி ஓவியமாகவும்
கட்டுரைகளில் இந்தியக் கவிதைகளைப் பற்றிய ள்ளார். இத்தொகுப்பு மக்கள் மத்தியில் பெரும்
ற இடத்தில் இலக்கிய உள்ளங்களால் வழங்கப்பட்ட வந்தளிக்கப்பட்ட புதுக்கவிதை உத்திகள்’ எனும் கும் லாவண்யத்திற்கும் மெருகூட்டியவர் என்பது உலகிற்கு ஆற்றிய பணிகளுள் முக்கிய பணியாக 0க்கூ கவிதையை தமிழில் முதன் முதலில் கவிதையான ஹைக்கூ கவிதைகளை தமிழில் விதையினை உயர்துடிப்புடன் வாழ வழி செய்தவர்.
கள் கவிதை துறைக்கு மட்டுமன்றி மொழிபெயர்ப்புத் சேவையினை வழங்கியுள்ளார். கவிஞர் அய்துல் ம், உணர்விலும் எப்போதும் வாழக்கூடியது' என்று த ஆற்றிய சேவைகள் அளப்பரியது என்பதுவும் வாக அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு இவர் தவென்று நிற்கும் என்பது திண்ணம்.
长米米米米米米米米米
米米冰冰米米米米水米米米米米米米冰米米米
帐米米米米水来水水水米冰米水米
ன் முதல் கடவுள் க இருத்தல் வேண்டும். அனாதை என்பதையும், அவனுக்கு வழிகாட்டி b வேண்டும்.
308

Page 333
நன்றி
கிடந்த வருடத்திலிருந்து முதன் முறையா வெளியிடப்பட்ட தமிழ்ச் சஞ்சிகையான "கூர்மதி”
பெருமகிழ்ச்சியடைகின்றோம். இவ்வேளையிலே ! அனைவருக்கும் நன்றி நவில வேண்டியது எமது
வழமைபோல் இம்முறையும் இக்கல்விச் சஞ்சிை வழங்கிய அதிமேதகு மேன்மை தங்கிய ஜனாத பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கட்கும், பிரதி அவர்கட்கும் எங்கள் உளம் கனிந்த நன்றி உரித்
இந்நூலாக்கத்திற்கு சகல வழிகளிலும் ஆலோச வைத்திய கலாநிதி தாரா டி மெல் அவர்களுக்கு அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
இச்சஞ்சிகையாக்கத்திற்குத் தேவையான ஆே மேலதிகச் செயலாளர் திரு.எஸ். தில்லைநடராஜா இச்சஞ்சிகையின் பதிப்பாசிரியருமான திரு.என். ந
தங்கள் சிரமங்களைப் பாராது ஆக்கங்களை பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ உரித்தாகுக.
ஆக்கங்களை ஒப்புநோக்கியும் ஒழுங்கமைப்ட தெய்வேந்திரராசா (தமிழ் மொழிப் பிரிவு) திரு வடக்குகிழக்கு மாகாண கல்வி அமைச்சு) அவ (எழுதுவினைஞர்) அவர்களுக்கும் கணனி எழுத்த திரு. ஏ. கமர்டீன் அவர்களுக்கும் எமது நன்றிக
மேலும் இச்சஞ்சிகையின் வெளியீட்டிற்காக அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் : மகிழ்ச்சியடைகின்றோம்.
சி. சிவநிர்த்தானந்தா உதவிக் கல்விப் பணிப்பாளர், தமிழ் மொழிப் பிரிவு, கல்வியமைச்சு,
"இசுருபாய’
பத்தரமுல்லை.

நவிலல்
க கல்வியமைச்சின் தமிழ் மொழிப் பிரிவினால் இம்முறையும் வெகுசிறப்பாக வெளிவருவதனையிட்டு இச்சஞ்சிகையின் ஆக்கத்திற்கு அருந்துணை புரிந்த
முதற் பணியாகும்.
கயைத் தமிழ் மொழியிலே வெளியிடுவதற்கு அனுமதி திபதியும் கல்வியமைச்சருமான திருமதி. சந்திரிகா நிக் கல்வி அமைச்சர் கெளரவ மங்கள சமரவீர
தாகுக.
னைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய செயலாளர் ம், மேலதிகச் செயலாளர் திரு. எம். ஜி. ரி. நவரத்ன
லாசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய அவர்களுக்கும், தமிழ்மொழிப் பிரிவுப் பணிப்பாளரும், டராஜா அவர்களுக்கும் எமது நன்றி உரித்தாகுக.
த் தந்துதவிய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ர்கள், அன்பர்கள் ஆகியோருக்கும் எங்களது நன்றி
|ச் செய்தும் ஒத்துழைப்பு வழங்கிய திருமதி ஜி. . பெ. இராசையா (உதவிக் கல்விப் பணிப்பாளர் Tகளுக்கும் எமது நன்றிகள் ஆர். இ. தேவதாஸன் மைத்து உதவிய திரு. க. ஜீவகுமார், தட்டெழுத்தாளர் ள் உரித்தாகுக.
ஆக்கமும் ஊக்கமும் தந்து ஒத்துழைப்பு நல்கிய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில்
309

Page 334


Page 335


Page 336

EFE,
H
GEG: եեի
կի
կի
*