கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்வர்ண மஹோற்சவம் 50 வது ஆண்டு பொன்விழா 1951-2001

Page 1
(SFIDE
கொழும்பு ஜெயந்திநகள் ஜிந்
 

ܡܥܠܬܥܠܥܠܡ
துப்பிட்டி றி சிவசுப்பிரமணிய கோவில் 01 மார்கழி

Page 2


Page 3

திருஞானசம்பந்த கான சபா கொழும்பு ஜெயந்திநகள் ஜிந்துப்பிட்டி றி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 1951 - 2001 மார்கழி

Page 4

மனிதனை உயர்த்துவது மன மன்று; பதவியன்று: குலமன்று; பருமனன்று; உயரமன்று; அறிவு ஒன்றுதான் மனிதனை உயர்த்தும் "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்கிறார்
திருவள்ளுவர்.
நூலின் அளவுதான் நுணர்ணறிவின் அளவு ஆகும். நல்ல நூல்களைக் கற்குந் தோறும் அறிவு நுணகி நலம் எய்தும். இறைவன் கற்ற வர் விழுங்கும் கற்பகக் கனி கல்லா மனத்துடன் நில்லாத் தன்மையன்.
உலகிலே மக்கள் செய்யும் பிழைக் கெல்லாம் தலையாய பிழை அறிவு நூல்களைக் கல்லாமையேயாகும். பிழைகள் இன்ன இன்ன என்று நமக்கு உபதேசிக்க வந்தபட்டினத்து அடிகளார் தலையாய பிழை கல்லாப்பிழை என்றார்.
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையுங் கசிந்துரு கி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தை சொல்லாப் பிழையுந் துதியாப் பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.
இந்த பாமாலை விருந்தை ஏனோரும் உண்டு உவகையுறுவார்கள். எந்தை கந்தவேள்
Se2.
VVV MANO

Page 5
இந்து மதத்திற்கு புதிய பிரச்சாரங்கள் தேவையில்லை என இந்து மதஅறிஞர் ஒருவர் சொல்லியிருந்தார். அந்த அளவிற்கு இந்துமதம் உலகம் முழுவதிலுமே வேரூன்றியிருக்கின்றது. அது மட்டுமன்றி பிரச்சாரம் எதுவும் இல்லாது வளர்ந்த மதமும் இந்துமதம் தான். ஆலமரம் போல் தழைத்து குலுங்கிநிற்கும் இந்துமதம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு கட்டத்தையும் அளந்து கொடுக்கின்றது. காரணம் இந்துமத வழிபாடு இயற்கை வழிபாட்டிலிருந்து தோன்றியது ஒருவரின் வாழ்க்கைக் கான
வழிகாட்டியாக இருப்பதும் இந்து மதம்தான்.
ஆழமான கருத்துக்கள் நிறைந்த பல்வேறு தத் துவங்களைக் கூறும் ஆயிரக்கணக்கான நூல்கள் இந்துமதத்தில் இருக்கின்றன. இந்து மத நூல்கள் மனிதனின் மூன்று விதமான உலகத்தொடர்பு சாதனங்களாக மனம், புத்தி, அறிவு ஆகியவற்றின் தேவையை பூர்த்தி செய்யும் N வகையில் எழுதப்பட்டுள்ளன. இந்து மதத்தைப் CoR பரப்புவதற்காகவோ அல்லது இந்து மத்தின் M பிரச்சாரத்துக் காகவோ அவை எழுதப் பட்டவையல்ல. இந்து மதநூல்களின் நோக்கம் மனிதன் இவ்வுலகில் முழுமையான வாழ்வு வாழ்ந்து தானும் மேன்மையடைந்து உலகத்தாரும் மேன் மையடைந்து வாழ ஒரு வாழ்க்கை முறையை வகுத்துத் தருவதுதான்.
 

அறிவுக்கு ஏன், எதனால், எப்படி, எவ்விதம் , எதற்காக என்ற கேள்விகளுக்கு விளக்கங்கள் தேவை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்து மதநூல்கள் வேதாந்தம், உபநிஷத், ஸ்மிருதிகள் முதலியனவாகும். இவை அறிவின் ஞானத்தை வளர்க்கின்றன என அறிஞர்கள் சொல்லுகிறார்கள். இந்துமதம் சம்மந்தமாக வெளியான ஏனைய நூல்கள் கூட இவற்றை அடியொற்றித்தான் வெளிவந்திருக்கின்றன.
தமிழில் கிடைக்கக்கூடிய இந்து மதத்தைப் பற்றிய பெரும்பாலான நூல்கள் அடிப்படை விபரங்கள் தெரியாதவர்கள் சுலபமாகத்தெரிந்து கொள்ளும் வகையில் இல்லை. இந்தக் குறை பாடு நீண ட காலமாகவே அறிஞர் கள் பலரால் முன்வைக்கப்படுகின்றது. முக்கியமாக புராணங்கள் பாடல்கள் தோத்திரங்கள் போன்ற வற்றை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது உணர்மைதான். வகையில் இந்துமதத்தின் அடிப்படை மற்றும் தத்துவங்களைத் தெரிந்துகொள்ளக்கூடியதாக தமிழில் அதிகளவு புத்தகங்களை வெளியிட வேணர் டிய தேவையள்ளது. முக்கியமாக இலங்கையில் இந்த தேவை பலராலும் உணர ப்பட்டிருக்கின்றது.
(、!
”لمبی چیخ88
. . . Na
©2ನೆ$
Ssss 88፩፬፻፳፻፭ጰ!*፨8
S. 湿 器
s
s

Page 6
:Ssހު
纥然
岛
S芬
s
W
So
A
இந்த வகையில் இன்று தமது பொன் விழா வைக் கொண டாடும் தரிரு ஞான சம்பந்தகான சபா இந்த நூலை வெளியிட்டு வைப்பது மிகவும் பொருத்தமானதாகவே உள்ளது. வயதான காலத்தில்தான் இந்துமதத் தத்துவங்கள் புரியும் என்பது தவறான ஒரு கருத்தாகும். சிறுவர்களாக இருக்கும்போதே இவற்றைக் கற்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். இதனை பாடசாலைகள் மட்டும் செய்யும் என நாம் காத்துக் கொணி டிருக்க முடியாது. இன்று பொன விழாவைக் கொணர் டாடும் இந்த நிறுவனத்தைப் போன்ற அமைப்புக்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபாடுகாட்டுவது வர வேற் கதி த க் கதா கும் . இது போன ற நிறுவனங்கள்தான் இவ்வாறான சேவைகளை
திறம்படச் செய்யக்கூடியவையாகவும் இருக்கின்றன.
இந்து மதக் கோட்பாடுகளை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்வதில் இந்நிறுவனம் மேற்கொண்டுவரும் பணிகள் நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதல்ல. இந்தப்பணி மேலும் தொடர வேண்டும். இது போன ற பல நூல் களை இந் நிறுவனம் வெளியிடவேண்டும். இந்து மதக் கருத்துக்கள் மக்களை இலகுவாகச் சென்றடைவதற்கும் எழிமையான முறையில் இந்தத்தத்துவங்களை மக்கள்புரிந்து கொள்ளவும் இந்தப்பணி தொடர வேண்டுமென வாழ்த்து கின்றோம்.
சாப்கிறமிக்ஸ் பிறைவட் லிமிட்ரெட் நிறுவத்தினர்
O
తsఆaషపాలి
4 MAN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மதுரை ஆதீனம்
ஆசிர்வாதம்
தங்களது 03.02.2001 நாளிட்ட மடல் கண்டு கொழும்பு நகரில் பூரீ வள்ளி தேவசேனா சமேத பூரீ சிவ சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் ஞானசம்பந்த கான சபா இறைபணியில் கடந்த 50 ஆண்டு காலமாக ஈடுபட்டும் ஈடுபடுத்தியும் ஆன்மீகப் பணிகள் செய்து வருவதை அறிந்து மகிழ்ந்தோம்.
திருஞானசம்பந்த கான சபா பொன் விழா சிறப்புற நடந்தேறிடவும் அச்சமயம் வெளியிட இருக்கும் சிறப்பு மலர் ஆன்மீகக் கருத்துக்கள் கொண்டதாக அமைந்திடவும் திருஞான சம்பந்த கான சபா உறுப்பினர்கள் மற்றும் இலங்கை வாழ்தமிழ்மக்கள் அனைவரும் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்றிடவும் திருவருள் பாலிக்குமாறு எமது நிரந்தர தாய், தந்தையாகிய சிவபெருமானை பிரார்த்தித்து ஆசிர்வதிக்கின்றோம்.
எல்லோருக்கும் ஆசிர்வாதம்

Page 7
隸 நல்லை திருஞானசம்பந்தர்
ஆதீனம் ÅR
அன்புசார் பெருந்தகையீர்
பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்
சிவபூமி என்னும் இலங்கை மணித்திருநாட்டில் நலைநகர் கொழும்பில் பெருமையும் சிறப்புமுடைய
ஐம்பது வருடங்களாக ஒவ்வொருவராலும் தவறாது திருமுறைப் பாடல்களை பஜனை
மூலமாக செய்து மக்களின் ஆன்மீக ஈடேற்ற
த்திற்கு வழிவமைத்தமை சபையின் பெரும்
சிறப்பாகும். கொழும்பு வாழ் சைவத் தமிழ்
மக்களின் தெய்வீக உணர்வை வெளிக் கொணரும்
நோக்கமாக அமைக்கப்பட்ட இச்சபை அதன் A நெறியில் நின்று பணிகளை ஆற்றுவது மனதிற்கு நிறைவைத் தருகின்றது. சைவ சமயத்தின் சிறப்புடைய நூல்களில் திருமுறைகள் ஆணி வேராகத் திகழ்கின்றன. இத் திருமுறைப் பாடல்களில் முதல் மூன்று திருமுறைகளைத்
SLதந்த திருஞான சம்பந்தர் பெயரில் இச்சபா
seas952
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமைக்கப்பட்டு திருமுறைகளை மக்கள் மத்தியில் பரவச் செய்வது நீண்டகாலப் பணியாகும். இப்பணியில் மகுடம் வைத்தாற்போல் அமைவது மார் கழிமாத திருவெம்பாவை. அதிகாலை வேளையில் இந்த பஜனை நிறைவான இடத்தைப் பிடித்துள்ளது. இப் பஜனையில் ஆதீன குரு முதல்வர்களும் துறவுக்குமுன் கலந்து சிறப் பித்தமை குறிப்பிடத்தக்கது. பஜனை கொழும்பு மக்களின் மனதில் என்றும் நிதர்சனமாக
நிற்பதற்கு ஐம்பதாவதாணர்டு பொன் விழா
வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மலரில் வரும் கட்டுரைகள் செய்திகள் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இப்பணிக்கு அர்ப்பணித்து சேவையாற்றும் அனைத்து தொண்டர்களையும் இறைவன் ஆசிர் வதிப் பாராக. தொடர்ந்து இப்பணி சிறப்புற நடைபெற இறைவனை வேண்டுகின்றோம்.
என்றும் வேண்டும் இன்ப அன்பு 2 வது குரு மஹா சந்நிதானம்
பரீலபுரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தபரமாசார்ய ஸ்வாமிகள்.
ーの歪
ar 4. mai ~ NN
ന
Aà

Page 8
கொழும்ப மாநகரில் அருள் ஒளி வீசிக்கொண்டிருக்கும் சிறப்புப்பெற்ற ஆலயங்களில் ஜிந்துப்பிட்டி முருகன் கோயிலும் ஒன்றாகும். அறங்காவலர் உயர் திரு வி.ரி.வி தெய்வநாயகம் பிள்ளை அவர்களின் பக்தி மேம்பாட்டினாலும் வழிபடுவோரினர் சைவ சமய பற்று மிகுதி யினாலும் முருகப்பெருமானின் அளப்பரிய கருணைத் திறனாலும் இவ்வாலயம் பல்லாண்டு காலமாக பக்தர்கள் மனதில் பெரிய இடம் பெற்றுள்ளது. இறையன்பு வழிபாடும் பெருகி வளரும் போது தான் நாடும் சமுதாயமும் நலம் பெற்று ஓங்கும். இந்த உண்மையை கொழும்பு வாழ் மக்கள் இன்று உணர்த்தியுள்ளார்கள். நேர ந்தவறாத பூஜையும் காலந்தவறாத உற்சவமும் வேண்டிய போது ஏற்படுத்தப்படும் விழாக்களும் இவப் வாலயத்திற்கு அணி செய் கினி றன. கூட்டுப்பிரார்த்தனை ஒலி கும்பிடுவோரை முருகன் பால் ஈர்த்து விடுகிறது. இதனை பல ஆண்டுகளுக்கு முன்பு அடியேன் கண்டும் கேட்டும் சொற்பொழிவு ஆற்றியும் அனுபவித்த துண்டு. அந்த நிலை இன்றும் உயர்வு பெற்றுக் கொண்டே போகிறது.
\က္ကို
கொழும்பு ஜிந்துப்பிட்டி முருகன் கோயில் பஜனை மடப் பொன்விழா
V
&:
V S.
 

“முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்."
என்ற பாடல் எமது சிந்தைக்கு செவிக்கும் இனிக்கிறது. கலியுகத்தில் கணிகண்ட தெய்வமாக விளங்குகின்ற பெருமானினர் திருவடியைப் பற்றியவர்களுக்கு இவ்வுலகில் அல்லலும் இல்லை அவலமுமில்லை. இனி றைக்கு எமது இளம் சந்ததியினர் இதனை நன்கு உணர வேண்டும். ஐம்புல உணர்வுக்கு மேலாக மனிதனுக்குக் காணப் படுவது மன உணர்வாகும். மனிதன் என்ற பெயரை நிலை நாட்டுவது இதுவே. "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்வோம்" என்று பாடிய பாரதியின் பாட்டு சிந்திப்பதற்குரியது. அதாவது பாடசாலைகள் வெறும் புத்தக அறிவை மாத்திரம் புகட்டாது ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் தெய்வ நம்பிக்கை யையும் வளர்க்க முற்பட வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். எனவே பக்தியும் தூய அறிவும் பண் பாட்டுப்பிடிப்பும் கொண்ட ஒரு சமுதாயம் அமைய வேண்டுமானால் கோயில் களையே தஞ்சமாகக் கொள்ள வேண்டும்.
"தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள் தன்தொன்றின்பம் தருவீடது தருவாயே"
என்பது அருணகிரிநாதரினர் வேண்டு கோளாகும் . நாமும் இந்த வேணி டுகோளை ஜிந்துப்பிட்டி முருகன் ஆலய கான சபா பொன் விழாவில் சமர்ப்பித்து அமைதியும் ஆனந்தமும் அடைவோமாக.
கலாநிதி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி. பூறி துர்க்காதேவி தேவஸ்தானம்.
മീ

Page 9
GA
% 2) Bhagawad Geeta Bhagavatam, Ramayanam
Countries like India Sri Lanka are rich
in temples, religious and cultural activities One may wonder why so much of such activities abound only in some part of the world. Even if we take the earth's natural resources, they are not evenly distributed. For instance, oil is found in concentrated quantities, in the Middle East countries. There, there is an additional need for mining engineers, techni
clans etc. To mine the oil in a usable form.
So too spiritual treasures are found in abun- ع
dance in very few parts of the world, espe- 魏 cially South Asia including India and Sri A Lanka. Some of the world's greatest spiri
tual treasures are the Vedas, Upanishads,
etc. Naturally there is an additional need
 

here, for centers and religious activities that prepare the minds of men and women to discover these treasures, extract and present them in a manner useful to mankind, The
many temples, ashrams, bhajan mandalis,
cultural and religious groups are all means
to achieve this.
I congratulate Thirugnana Sambandha Gana Sabha for its active fifty years of service to hindu spiritual culture. 2001 also happens to be the Gold Jubilee year of the Chinmaya Movement. Hence both the organizations have served mankind in different ways but consistently over five decades. I offer my prayers to the lord and Pujya Gurudev Swami Chinmayanandaji to bless you work and enable you to continue
of With Prem & OM,
沈 国 ༦༦ Swami Tejomayananda.
Head of Chinmaya Mission Worldwide
this noble service

Page 10
sey, يعتزليخوخزن #2ಿ
இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!
கொழும்பு மாநகர் ஜெயந்திநகர்
ஜிந்துப்பிட்டியில் அமைந்துள்ள பூரீ சிவசுப்பிர
மணிய சுவாமி ஆலயத்தின் திருஞான சம்பந்த
ப) கான சபா பஜனை மண்டலியின் பொன்விழா
W ஆன டு கொன டாட்டங்கள் குறித் து
இ) கேள்வியுற்று மகிழ்ச்சியடைகிறோம்.
S பணி இசைத்தல், பஜனைகள் கீர்த்த
S னைகள் இவற்றை எல்லாம் இறைவன் பால்
O) மன தினை நிறுத் துவதற்கு அருமையான
影 சாதனங்கள். மனம் இறைவனை நாடித் துதிக்கையில் மலங்கள் எல்லாம் நீங்கி அமைதி பெறுகிறது. ஆனந்தம் அடைகிறது.
} அமைதியான மனத்திலே அன்பு சுரக்கிறது. அன்பு சேவையாக வெளிப்படுகையில் மட்டுமே நிறைவடைகிறது, நிறைவான மனமே இறைவன் குடியிருக்கும் கோயில். ஆகவே அடியவர்களிடம் எல்லாம் ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வரும் திருஞானசம்பந்தர் கான சபா மென் மேலும் வளர்ந்து இலங்கை வாழ் மக்களின் வாழ் வினை வளமாக்க எல்லாம் வல்ல பிள்ளையாரப்பன் அருள் புரிவாராக. இந்தசபா சமயத் தொன்ைடோடு மட்டும் நில்லாது கல்வி, கலாசார சமுகத்தொண்டும் செய்து சிறப்புற வாழ்த்துகிறோம்.
பிரமச்சாரி ரமண சைதன்யா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத் විඳීම (චූෂ්ණු ශ්‍රිනී. છે...',
t يكفي --- திரிே 媛 MᏱ"
鳶
எல்லாம் வலப் ல இறைவனை பக்தி செலுத்துவதற்கு எத்தனையோ வகைகளை நமக்கு
பெரியவர்கள் காட்டி இருக்கின்றனர். இறைவனை " நினைத்தல், அவனைப்பற்றிக் கேட்டல், அவன் I/ நாமத்தைச் சொல்லல் என்னும் மூன்றும் நாம் செய்யக்கூடியவை. இவற்றையே ஸ்மரணம், சிர \{ வணம், கீர்த்தனம் என்று வல்லுநர்கள் கூறுகின்ற N னர். இம்மூன்று வகையில் மிக எளிதாக நாம் &浏 செப் பக் கூடியது இறை வன நாம தி  ைத சி 2) சொல்லவும் அவன் புகழ்பாடுதலும்தான்.
இம்மூன்று வித கீர்த்தனைகளைக் கடந்த 50 ஆண்டுகளாக தொய்வில்லாமலும் சிறிதும் சோர்வடையாமலும் வையகத்துள் வாழ்வாங்கு $ வாழும் நெறியை ஒதிவரும் இலங்கைத் தலைநகர்}} கொழும்பு ஜிந்துப்பிட்டி (ஜெயந்திநகர்) அமையப்(S பெற்றுள்ள மேன்மையான பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருத்தலத்தில் அமையப் பெற்றுள்ள \
மேனிமையான திருஞானசம்பந்த கான சபா மெய்யன்பர்களுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு 狄 வருமென வாழ்த்தி அங்கையர் கணினம்மை ஆலவாய் சொக்கர் மலர்தாள் இறைஞ்சுகிறேன்.
சி. சங்கரநாராயணன்பிள்ளை.
பூரீ நாகப்பிள்ளையார் கோயில்,
தேவஸ்தானம்,

Page 11
Ats
○○介 & ܓ 尊
R
N
SS
So
N
ଖୁଁ
ஜிந்துப்பிட்டி திருஞான சம்பந்த கான சபா
எமது ஜிந்துப்பிட்டி முருகன் கிருபை செய்வாராக
உலகின் பல்வேறு மொழிகளைப்பேசி வாழ்ந்து வரும் மக்களை செம்மை நெறிப்படுத்தி வாழச் செய்வனவே சமயங்கள்.
அச் சமயங்கள் பலவாகவும் அவை
காட்டும் கடவுளர் பலவாகவும் இருக்கலாம். நமது சமயம் சரிவனை முதல் வனாகக் கொண்டது. அப்பெருமானே தென்னாட்டில் சிவன் என்றும் மற்ற நாடுகளில் இறைவன் என்றும் அழைக்கப் பெறுகின்றான். இறை பக்தியை வலுப்படுத்தவும் குழந்தைகளின் உள்ளங்களை நெறிப்படுத்தவும் அனுகூலமான சூழ்நிலையை உண்டு பண்ணுவதும் பண்ணுடன் இசைந்த தோத்திரங்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இறைபக்தி கொண்ட பெரியோர்கள் சைவ சமய குழந்தைகளுக்கு திருமறைகளையும் தோத்திரப்பாடல்களையும் பண்ணுடன் பயில் விக்கத் தகுந்தவசதி இல்லையேயென கவலை கொண்டிருந்த 1949-1950 காலப்பகுதியில் கொழும்பு ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிர மணிய சுவாமி கோயிலை செவ்வனே பரிபாலன
 

சபையின் சார்பில் அன்றைய தலைவராகிய தொழிலதிபர் திரு.சோமசுந்தரம் பிள்ளை அவர்களாலும் கொழும்பில் பலதுறைகளிலும் ஈடுபட்டிருந்தவர்களுமாகிய சில பண்புடைய பெரியோர்கள் துணையுடன் ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப் பிரமணிய கோயிலை மையமாகக் கொண்டு ஒரு கூட்டுப்பிரார்த் தனைக் குழுவை உருவாக்கத் திட்டமிட்டனர் . அதனி படி ஏற்கனவே பயிற்சியுடைய சில அன்பர்களைக் கொண்டு சிறியோர் பெரியோர் யாவரையும் ஊக்குவித்து ஆலயத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை வேளையில் சண்முக விலாஸ் மண்டபத்தில் கூட்டுப்பி ரார்த்தனை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அத்துடன் மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் பஜனையானது அதிகாலை 5.30 மணிக்கு ஆலயத்திலிருந்து தொடங்கி பெரிய வர் கள் சரிறிய வர் களின ஆர்வமான பங்கேற்புடனும் ஆலயபரிபாலன சபையின் ஆதர வுடனும் அன்று முதல் இன்று வரை தவறாமல் வீதிவல பஜனையும் நடைபெறுகின்றது.
யாழ்ப்பாணம் நல்லை திரு ஞான சம்பந்தர் ஆதீன முதல்வர் தவத்திரு சுவாமி நாத தம்பிரான் (குருமணி) பரமாச்சாரிய சுவாமிகள் தென்னிந்திய திருப்பனந்தாள் மடத்தைச் சேர்ந்த ஒதுவார் ஆகியோர் துணை கொண்டு பண்ணுடன் இசைபாடப் பயிற்சி பங்கேற்கும் பெரியோர்கள், சிறியோர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Page 12
கிருபானந்த வாரியார் சுவாமிகள் நமது ஆலயத்திற்கு வருகை தந்த போது கூட்டுப்பிர ார்த்தனை குழுவினதும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் பஜனைக் குழுவினதும் ஆர்வத்தைக் கண்டு பாராட்டியதுடன் பஜனை நடைபெறும் மடாலையத்திற்கு திருஞான சம்பந்த கான சபா என்ற நாமத்தையும் சூட்டி ஆசீவதித்தார்கள்.
அதனி படியே அடுத் த மார் கழி மாதபஜனைக்கு இப்பெயர் தாங்கும் ஊர்வலத்திரை சீலை எழுதி குழுவிற்கு இப்பெயரை முத்திரை
பதிதார்கள். ஆரம்பக் கூட்டுப்பிரார்த்தனைக்கு 30.05.I999 ஞாயிற்றுக்கிழமை பொன் விழா சிறப்பாக நடைபெற்றது என்பதையும் அறியத்தரு கின்றோம். அன்று முதல் இன்று வரை இக்குழுவின் பணி புடனும் ஆர்வத்துடனும் பணியாற்றுபவர்கள் பலர். அவர்கள் அனைவரை யும் மனதாரப் பாராட்டுவதுடன் இவ்வாண்டு 50 ஆணி டு நரி ைற வ விழாவாக பொன் விழாவாகவும் நடைபெறும் சமயம் வெளியிடும் மலரும் சிறப்புற்றோங்கவும் இச்சபை மென்மேலும் பெருகி வளர்ந்து நற்தொண்டு ஆற்றி வரவும் எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத பூரீ சிவசுப்பிரமணிய சுவாமியை வணங்கி வேண்டிக் கொள்கிறோம்.
2ನೋZ
KATRANS
 

ஆறணி சடை எம் அற்புதக்கூத்தா
அம்பொன் செய் அம்பலத் தரசே
ஏறணி கொடி எம் ஈசனே உணர்னைத்
தொணர்டனே ர்ைஇசையுமாறிசையே.
இக்குழுவின் ஆரம்ப காலத்தில் மிக ஊக்கமுடன் செயலாற்றியவர்களின் நினைவு கூறத்தக்கவர்கள்.
அமரர் . சோமசுந்தரம்பிள்ளை.
(தம்பிரான் சுவாமிகள்)
அமரர் . கணபதியாபிள்ளை
(சுந்தரம் லிமிட்டெட்)
அமரர் . அண்ணாமலை.
அமரர் முத்துக்குமார சுவாமியா பிள்ளை
அமரர் . அனவரதவிநாயகம்பிள்ளை.
அமரர் . எம். பூg ரெங்கநாபிள்ளை .
(கல்யாணி கார்ப்பரேசன்)
அமரர் . ஆர். எம். ரெங்கநாதபிள்ளை. (5ஆம் நம்பர்)
அமரர் பழனிவேலாயுதம்பிள்ளை.
அமரர் திரு. வள்ளிநாயகம்பிள்ளை (உழுந்து
சகோதரம்)
அமரர் சண்முகசுந்தரம்பிள்ளை.
(சண்முகச்சாமி திருசெந்தூர்)
அமரர் . எல்.கே.எம். முத்தையாபிள்ளை.
அமரர் . பி. கே. குப்புசாமிபிள்ளை (எஸ்.
ஏ. பிரதர்ஸ்) லெட்சுமணபிள்ளை. (குலசை) சுப்பிரமணியபிள்ளை. (வல்லநாடு) இல்லங்குடியாபிள்ளை. (வி.ரி.வி. தர்ம பெருமாள் பிள்ளை. எஸ். சங்கரநாராயணன்பிள்ளை. (எஸ்.பி. சாமி அன் கோ)

Page 13
இன்று தெக்ஷனத்தார் மகமை பரிபாலன சபையால் நியமிக்கப் பெற்று மிகச் சிறப்பாக சு ட் டுப் பயிரார் தி தன ன யை யம் மார் கழரி மாதபஜனையையும் இந்த சிறப்பு 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவான பொன்விழாவையும் நடத்தும் முக்கியஸ்தர்கள் வருமாறு.
உயர் திரு. பி.வி. இராமன் (கலாபூஷணம்) உயர் திரு. வி. சுந்தரேசன். உயர் திரு. எம். பூரீகணேசன்,
உயர் திரு. எஸ். உலகநாதன். உயர் திரு. ஏ. செந்து ர்வாசன். உயர் திரு. எஸ். செல்வவிநாயகம். உயர் திரு. வி. சிவகுருநாதன்.
உயர் திரு. வி. பத்மநாதன். உயர் திரு. எம். அறம் வளர்த்தசுந்தரம், உயர் திரு. ஆர். சண்முகம், உயர் திரு. எம். முத்துசாமி, உயர் திரு. எஸ். சிங்காரவேல்,
திரு. பி. கிட்னசாமி,
திரு. யு. எஸ். செல்வம், திரு. என். சதாசிவம், திரு. கே. பழனிவேலாயுதம்.
ஐம்பது ஆண்ைடு நிறைவு விழாவாக பொன்
விழா வெகு சிறப்பாக நடைபெற எங்கள் ஜிந்துப்பிட்டி முருகனை பிரார்த்தனை செய்கிறோம்.
பூg சிவசுப்ரமண்ய சுவாமி கோவில். இங்ங்னம் இல 28 ஜிந்துப்பிட்டி தெரு தெசுiனத்தார்.
 

திருஞான சம்பந்த கான சபாவின் MAK தொடக்க கால ஆரம்ப கர்த்தாக்களுள் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில் பெருமை இ அடைகின் றேனர். தற்போது 80 வயதை
S அடைந்துவிட்ட எனக்கு ஆரம்ப காலங்களில்
CIS பஜனையில் கலந்து கொண்டு பாடல்கள் பாடியது 7. இன்றும் என் நினைவில் இருக்கினர் றது. சபா
பொன்விழா கொணர் டாடுவதையிட்டு மிகவும் s பெருமையடைகின்றேன். %) C a) SATS
KM) எனும் அடிகளை மனதில் கொண்டு எல்லோரும்
பாடிப்பணிந்து உய்வோமாக!
Cỳ: PÖ) இங்ங்னம்,
॥ எ.எஸ். லெட்சுமணபிள்ளை.
குலசேகரப்பட்டினம்
德 திருநெல்வேலி. G
తsఆడెనడా
" வேண்டுவார் வேண்டுவன ஈவான் இறைவன்"

Page 14
V
பொன்விழாக் காணும் திருஞான சம்பந்தகான சபா
கொழும்பு ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிர மணிய சுவாமி கோயிலில் 1951ஆம் ஆண்டில்
திருஞான சம்பந்த கான சபா ஸ்தாபிக்கப்பட்டது. மதுரை ஆதீனகர்த்தர் நேரில் வந்து ஆசி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. திரு. கே. வி. கணபதியாபிள்ளை கொழும்பு குறுடவை வீதியில் 1947ஆம் ஆண்டு தொடங்கி மார் கழிமாதம்
திருவெம்பாவை திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி,
பஞ்சபுராணம் என்பவைகளை பஜனையாக
நடத்தி வந்துள்ளார். அதன் தொடர்பாகவே ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் திருஞான சம்பந்த கான சபா ஆர
ம்பம்ாகியது என்று கூறப்படுகின்றது. திரு. கே.வி. கணபதியாபிள்ளை நடத்திவந்ததிருஞானசம்பந்த கான சபாவில் திரு. வி. அண்ணாமலை திரு.
YS) பூரீரங்கநாதன், திரு.முத்துக்குமாரசாமி, திரு. (S, லெட்சுமணபிள்ளை, திரு. சங்கரநாராயணன்,
திரு. ஆர்.எம். இரங்கநாதபிள்ளை திரு. வீரப்பன்
திரு. இல்லங்குடியாபிள்ளை, திரு. எம்.சுப்பிர
மணியபிள்ளை ஆகியோர் இடம்பெற்று சிறப்பாக நடத்தி வந்துள்ளனர்.
S
ܤܓܝܵܣܵܦ݂2@3ܢ̈ܐܲܠܦ̈ܐ
Y.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்பொழுது திரு. பி.வி. இராமன் தலைமையில் சிறந்த தொண்டர்கள் மார்கழி மாதபஜனையை கொழும்பு நகர வீதிகளில் சிற ப்பாக நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சிறுமிகளும் பஜனையில் கலந்து
செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தரு ஞான சம்பந்த கா ன சபா தொணி டர்கள் பல நலன் விரும்பிகளுடன் தொடர்பு கொண்டு நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு பாடசாலைச் சீருடை நூல்கள் எழுத்து உபகரணங்கள் என்பவைகளை வழங்கி வருவதைக் காணர்கிறோம். ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகிகளான தெக்ஷணத் தாரு டன் இணைந்து திருஞான சம்பந்த கான சபாவினர் பொண்விழாவைக் கொணர் டாட ஆயத் தம் செய்து வருவது மகிழ்ச் சிக்குரியது. இவர்களின் பணிமேலும் சிறப்புற இறைவனை வேண்டுகிறேன்.
எஸ்.பி. சாமி. தலைவர். வடகொழும்பு இந்து பரிபாலன சங்கம்.
(āసె4
- AMANA

Page 15
“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் ளெல்லாந் தலை”
என்ற வள்ளுவர் வாக்கிற்கு அமைய எல்லாச் செல்வங்களிலும் கேள்விச் செல்வம்ே
முதன்மையானது. இதனை நாம் மாதங்களில் எல்லாம் சிறந்த மார் கழி மாதத்தில் அந்த அதிகாலைப்பொழுதிலே திருப்பள்ளி யெழுச்சி திருவெம்பாவை, திருப்பாவை, நால்வர் அருளிய தேவாரப் பாடல்களைக் கேட் பதனர் மூலம் அனுபவித்து உணர முடியும். அந்த அனுபவ த்தின் அருமையை வார்த்தையில் வடித்துவிட முடியாது அந்தக் காலை வேளையில் கோயிலின் மணி ஓசையும் பூஜையும் பஜனைப் பாடல்களின் இனிமையான ஒலியும் என்னை மிகவும் மனம் நெகிழச் செய்துவிடும். வேறு எந்தச் சிந்தனையும் இல்லாது மனம் அதிகாலையிலேயே ஒன்றிவிடும். இரண்டு மணி நேரம் எப்படிப்போனது என்றே தெரியாது.
நான் சிறு வயது முதல் இந்தபஜனையில் கலந்து கொண்டு வருகின்றேன். ஆரம்ப காலத்தில் சமயப்பற்றுள்ள எம்முன்னோர்களின் ஊக்கத்தினாலும் உழைப்பினாலும் ஆரம்பிக்கப்பட்டு முறையாக வழிநடத்தப்பட்டு வளர்க்கப்பட்ட திருஞான சம்பந்த கான சபா பொன்விழா கொண்டாடுவதையிட்டு
N
 

பெருமிதமும் பெரு மகிழ்வும் அடைகின்றேன். மேலும் இந்த பஜனையைக் கொணி டு நடார்த்த முன்னின்று ஊக்கத்துடன் ஒத்துழைக்கும் “சபாத்தொணர்டர்கள்" எனக்குக் கிடைத்த கொடையாகும். தனித்தனியாக ஒவ்வொருவரை ப் பற்றியும் கூறினால் இது மிக நீண்ட கட்டுரை யாகி விடும். எல்லோருக்குமே நான் நன்றி கூறக் கடமைப் பட்டிருக் கினி றேனர் . அதிலும் எல்லாவிதத்திலும் எனக்குத் தோளோடு தோள் நின்று சிறப்பாக ஒத்துழைப்பு நல்கும் சபாத் தொணி டர் களுள் ஒரு வரான திரு . அ. செந்தூர் வாசன் பாராட்டப்பட வேணி டிய ஒருவர். அத்தோடு எனது தம்பி திரு சி. செல்வவிநாயகமும் ஊக்கமுடன் கடமையாற்றும் ஒரு தொணர் டர் விழா ஏற்பாட்டிற்கான நிதிசேகரிப்பில் எனக்கு முன்நின்று உதவியவர். அவரும் என் வழியிலே தொடர்ந்தும் வருவதால் நான் என் கடமைகளை இலகுவாய்ச் செய்ய உதவியாய் இருக்கிறது. கலாபூஷணம் பி.வி. இராமன் பஜனையை சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றார். மேலும் இந்த மார்கழி பஜனையில் 150 தொடக்கம் 200 பிள்ளைகள் கலந்து கொள்கிறார்கள் . அந்த அதிகாலையில் பனியையும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினசரி வருகைதரும் குழந்தைகளின் ஆர்வத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. நாமும் சிறார்களை ஊக்கப்படுத்துவதற்காக பல நலன வரிரு ம் பரிகளினி துணை கொணி டு பள்ளிச்சீருடை, பாடசாலை உபகரணங்கள்

Page 16
மேலும் விழாவை ஏற்பாடு செய்ய அனுமதியளித்ததோடு முதன்முதல் நிதிவழங்கி ஆரம்பித்து வைத்த கொழும்பு ஜிந்துப்பிட்டி பூரீ சசிவ சுப் பரிர மணிய சுவாமி கோயரிலல அறங்காவலர்கள் தலைவர் திருமிகு, ஏ.எஸ்.எஸ். சோமசுந்தரபிள்ளை தர்மகர்த்தா திருமிகு. வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை, உபதலைவர் திருமிகு. என். மாணிக்கம்பிள்ளை, கெளரவ செயலாளர் திருமிகு ஜி.எஸ்.விஸ்வநாதபிள்ளை, பொருளாளர் திருமிகு கே. செளந்தரராஜன், திருமிகு ஆர். விர பாகு, தரிரு மிகு ஜெ. செந் தரில் பெருமாள்பிள்ளை, திருமிகு எம். சுந்தரம்பிள்ளை, திருமிகு மணிவிஸ்வநாதன்பிள்ளை, திருமிகு ஜெ.
தேவபிரான் பிள்ளை ஆகிய அனைவருக்கும் எனது நனர் றியை தெரிவிக்கக் கடமைப்
பட்டிருக்கின்றேன்.
அத்தோடு மேலும் குறுகிய கால ஏற்பாட்டில் இந்தியாவிலிருந்து டாக்டர் லட்சுமி ராஜரெட்ணம் அவர்களை வருவிக்க ஏற்பாடுகள் செய்து உதவிய தர்மகர்த்தா தேசபந்து திருமிகு வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை அவர்களுக்கும் அவரது புதல்வன் திருமிகு. தெ. ஈஸ்வரன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முக்கியமாக மலரை ச் சறப் பரித் து அச்சிட்டுத் தந்த "சாப் கிர பிக்ஸ் " அச்சக உரிமையாளர் திருமிகு. க. கருணாநந்தன்
 

学。公○ss 貂
அவர்கட்கும் மேலும் விழா சிறப்புற அமைய ஒத்துழைப்பு நல்கிய பெரியோர்கள், நண்பர்கள்
நலன் விரும்பிகள் அனைவருக்கும் எனது
மன மார் ந் தநன றியை தொ) வரித் துக் கொள்வதோடு, இறுதி நேரத்தில் பல நல்ல ஆலோசனைகளை வழங்கிய அண்ணன் திருமிகு.
எச்.எச். விக்கிரமசிங்க அவர்களுக்கும் எனது
நன்றி. மேலும் சபாவில் அங்கத்தவர்களாகி
வளர்ந்து வரும் இளைஞர் தலைமுறையினரும்
மிகஆர்வமாக தொண்டாற்றுவதைக் காணும்
போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிற
து. எல்லாம் வல்ல எங்கள் ஜிந்துப்பிட்டி முருகன்
துணைபுரியப்பிரார்த்திக்கின்றேன்.
ஜிந்துப்பிட் டி பூரீ சிவசுப் பிரமணிய அருளால் இந்த சபா மணிவிழா பவளவிழா
நூற்றாண்டுவிழாக்களும் காண வேண்டுமென்று
வாழ்த்திப் பணிகின்றேன்.
இறைபணியில், சி. உலகநாதன்.
SNA 149 மலிபன் வீதி, கொழும்பு - 11.
శ్కీ * is 3.

Page 17
திருஞான சம்பந்த கான சபா 2 (B6)I(T'60T வரலாறு
சிவசுப்பிரமணி சுவாமி கோயிலில் அமைந்துள்ள திருஞான சம்பந்த கான சபா தனது ஐம்பதுவருட பொன்விழாவை இவ்வருடம் கொண்டாடுகின்றது என்றால் அது சாட்சாத் முருகப்பெருமானின் திருவருளே அல்லாமல் வேறொன்றுமில்லை. கடந்த 50 வருடங்களாக எத்தனையோ சோதனைக் கட்டங்களைக் கடந்து சாதனை புரிவதென்றால் அதற்கு தெய்வ ஆசிதான் காரணம். ஆம்! கடந்த 50 வருடங்களாக எதுவித தடங்கலுமின்றி கொழும் பில் தொடர்ந்து நடைபெறும் \ஒரே ஒரு மார்கழி மாத பஜனை இதுஒன்றாகத்தான் இருக்க முடியும். ஏனைய பஜனைகள் திருவெம்பாவை 10 நாட்கள் மட்டுமே நடைபெறுகின்றன. ஆனால், திருஞான சம்பந்த கான சபாவினர் பஜனை மார்கழி மாதம் தொடர்ந்து 31 நாட்களும் நடைபெறுகின்றது என்றால் அது ஆச்சரியமான விடயம் அல்லாது வேறென்ன.
1947 இல் கொழும்பு கடைத்தெருவில் தரகர்களாகப் (புரோக்கர்களாக) பணியாற்றிய வர் களுக் கென சோன கத் தெரு வரில் கிட்டங் கியொனி று இருந்தது. (கிட்டங் கி எனப்படுவது ஆண்களுக்கு என நடத்தப்படும் உணவகமாகும் ) அங் கிருந்து
 

முத்தையாபிள்ளை சம்பந்த கான சபாவினை ஆரம்பித்தார். அவர் இந்தியா சென்றிருந்தபோது G அங்கு மார்கழி மாதபஜனைகள் நடைபெறுவதைப் O பார்த்துவிட்டு அதை ஏன் நாம் கொழும்பிலும் நடத்தக் கூடாது என்ற முனைப் பில் தான் புன்னைவனம்பிள்ளை பாக்கியநாதன் போன்ற வேறுபல தரகர்களைத் திரட்டிக் கொணர்டு பஜனையை ஆரம்பித்தார்.
அப்போதெல்லாம் பஜனை கொழும்பு
& சோனகத்தெருவில் ஆரம்பித்து ஜிந்துப்பிட்டி S கோயிலை வந்தடைந்து மீண்டும் சோனகத் C தெருவையே வந்தடையும். பின்நாட்களில் அது 杨 அவர்களுக்குக் கஷ்டமாகப் பட்டது. ஏனெனில், பஜனை சோனகத்தெருவிலிருந்து ஜிந்துப்பிட்டி S. வந்து பின் மீண்டும் சோனகத்தெரு விற்குப்
அவர் களது தொழில் களுக்குச் செல்வது
கஷ்டமாகப் போய்விட்டது. எனவே 1949-1950ஆம்
சபையிலிருந்த திரு. சுந்தரம்பிள்ளை அவர்களிடம் போய் பஜனை இறுதிப்பூஜை செய்வதற்கென கோயிலில் இடம் ஒன்றைக் கேட்டார்கள். அவரும் மனமுகந்து ஓரிடமொன்றை பெற்றுக்கொடுத்தார். இந்தவிதையே நாளடைவில் திருஞான சம்பந்த S கான சபா விருட்சமாக உருவாகுவதற்குக் கார @ ணமாக அமைந்தது.
N |^Ss(GaSO4S

Page 18
இப்படி ஆரம்பிக்கப்பட்ட திருஞான சம்பந்த கான சபா ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றக்காரணமானோர் பலர். அவர்கள் அனைவரையும் சொல்லப்போனால் இந்தப் பக்கங்கள் காணாது . எனினும் என் ஞாபகத்திற்கு வருபவர்களைப் பற்றி சொல்லமுயற்சிக்கின்றேன். இதற்காக நான் பெயர் குறிப்பிடத் தவறிய இந்தபஜனைக் குழுவிற்கு பங்காற்றிய ஏனைய பெரியோர் என்னைத் தயவு கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன். பெயர் விடுபட்டமைக்கு எமது ஞாபகமறதியே காரணம்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் திரு. சுந்தரம்பிள்ளை அவர்கள் திருஞான சம்பந்த கான சபா உருவாகுவதற்குக் காரண கர்த்தாவானார். அதுமட்டுமன்றி அவரது தம்பி திரு. கணபதியாப்பிள்ளையை வலியுறுத்தி திருஞான சம்பந்த கான சபாவில் ஈடுபடச் செய்தார். 1954இல் திரு. சுந்தரம்பிள்ளை இந்தியா சென்றிருந்தாலும் அவரது பணியை தம்பியார் கைவிடவில்லை. தெக்ஷணத்தார் சபையின் பொக்கிசத் தாராக இருந்த திரு. பூரீரெங்க நாதன்பிள்ளை திருஞான சம்பந்தகான சபாவின் ஆரம்ப கால வாழி க் கையில் பெரும்
பங்காற்றியவர்.
திருஞான சம்பந்த கான சபாவின் நீடித்தவளர்ச்சிக்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் இருந்து
•ል፧
g
 

நாயகம் பிள்ளை எனப் படும் சகோதரன் அவர்களே தற்போது பஜனை மண்டபத்தில் உள்ள நடராஜர் படத்தினை பிரேம் செய்து இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வந்தார். அவர் சேவையை பறைசாற்றும் வண ன ம் இன றும் s9 6ôD G6) I காட் சரி அளித்துக்கொண்டிருக்கின்றன.
ஆரம்ப கால திருஞான சம்பந்த கான சபா வரிற்கு பத் துயிர் அளித் தவர் களில் திருவாளர்கள் வெ. அண்ணாமலை ஆர். எம். ரெங்கநாதன்பிள்ளை தற்போது இந்தியாவில் கோயில் தொண்டு செய்து கொண்டிருக்கும்
லெட்சுமணண்பிள்ளை இளையான் குடிப்பிள்ளை,
சங்கரன்பிள்ளை என்று அடுக்கிக் கொண்டே
போகலாம்.
திருவாளர்கள் மணிபாகதவர் (பின்நாளில் பூரீல பூரீ சுவாமிநாத த் தம் டரி ராணி என று அழைக்கப்பட்டவர்) ஹரிஹரன் வீரகேசரி முன்நாள் ஆசிரியர்கள் போன்றவர்கள் கலந்து சிறப்பித்த திருஞான சம்பந்தகான சபா பஜனை பரிணி நாட்களில் திரு. வெ.அணி ணாமலை
அவர்களால் பெரிதும் வளர் க் கப்பட்டது.
影

Page 19
40-45 வருடம் திருஞான சம்பந்த கான சபா வோடு ஐக்கியமாகிவிட்டவர். அவருக்கு வலது கரமாக விளங்கிய திரு சுந்தரேசன் இன்றும் பஜனைகளில் கலந்து கொண்டு பாடிவருவது சிறப்பம்சம். சிறிய வயது முதலே திருஞான சம்பந்த கான சபாவிற்கு உழைத்தவர் வி. சுந்தரேசன். தற்போது திரு பி.வி. இராமன் தலைமையில் பஜனையை நடத்திவரும் அனைத்து பக்தர்களுக்கும் நன்றிகூறி ஆண்டவன் அவர்களுக்கு திருஞான சம்பந்த கான சபாவில் பங்குபற்ற கொடுத்த வாய்ப்பினை நன்கு பயனர் படுத் தி அவன் அரு ள் பெற் று உய்யவேண்டுமென வேண்டுகிறேன்.
"மேன்மைகொள் சைவரீதி
விளங்குக உலகமெல்லாம்."
சுப. வீரப்பன்.
Q
မွို
சிறியேனர் தொணி டன இசை கற்க ஆரம்பித்து 2002ஆம் ஆண்டுடன் 50 வருடங்கள் நடந்தேறிவிட்டன. தேவார பக்தி இசைக்கு எனது மூத்த தமையனார் திருமிகு வெ. பரமேஸ்வரன் அவர்களின் ஊக்குவிப்பினால்தான் இன்றளவும் இத்துறையில் இறைவனின் ஆசியால் அதுவும் முருகனின் திருவருளால் நிலைத்து நிற்க முடிகின்றது. இன்று போல் என்றும் இசைவளர முருகன் அருள்பாலிப்பானாக.
பிரம்மபூரீ பி.வி. இராமன்.
 

தேனும் பாலும் தீங்கனிச் சாறும் சேர்ந்து நுகர்வது போல செவிக்கும் , சிந்தைக்கும் இனிப்பது தேவார , திருவாசகத் திருப்புகழ் திருப்பதிகங்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையை வள்ளுவர் வழுத்தினார். "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்” என்று அருளினார் சம்பந்தர். மெய்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை விதைத் து செய்மையுள் நின்று சிவகதி பெறும் செவ்விய
வாழ்வை அப்பர் அருளினார்.
இவருக்கெல்லாம் தோன்னாத் துணை யாயிருந்து காக்கும் சிவபெருமான் அடியார் உள்ளத்திற் கோயில் கொண்டு அருள்புரியும் அற்புதத்தைப் பாடி அன்பு கூடிக் காட்டிய அனுபூதிச் செல்வர் நால்வர். சரியை, கிரியை, யோகம் , ஞானம் ஆகிய நான்கு சிவயோக மார்க்கங்களையும் (சாதனங்களையும்) பயின்று பாடிக்காட்டிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆயதிருத்தொண்டர் தேவார திரு வாசகங்களையே அருட் பாடல்களாகக் கொண்டாடுகிறோம்.
பொலிக பொலிக பொலிகவே
புண்ணியத் தமிழிசை பொலிக பொலிக சைவம்
பூவுலகமெங்குமே பொலிக நால்வர் அருளிய
பொதுமறைகள் எங்குமே பொலிக தொண்டர்கள் உள்ளத்தே
பூத்தசெந்தமிழ் மொழி இறைபணியில் திருஞான சம்பந்த
கான சபா தொணர்டனர்
kovi

Page 20
திருஞான சம்பந்த கான சபா
வல்ல முருகனவன் வாழ்வு மலர்ந்திடவே எல்லையிலா இன்பம் அளித்திடவே விளங்கும் போற்றிப் பெருந்தவத்தோர் போதமிகு மெய் நெறியார் ஏற்றி என்றும் பாட இயைந்து காற்றில் மலரும் திருப்பாவை கானத் திருவமுது
புலரும் பொழுதெல்லாம்
புகழ் சூழ - வளரும் வாழ்த்துக்களெல்லாம் - வளநகரில்
கான சபா நாமங்கள் பாட நவின்று.
 

அகில இலங்கை
இந்துமாமன்றத் தலைவரின் ஆசிச்செய்தி
மனிதனைப் புனிதனாக்கச் செய்வது கோயில் கள் . கோயிலுக் குச் சென று வழிபடுவோர்களின் உள்ளத்தையே இறைவன் கோயிலாகக் கொண்டு எழுந்தருளுகின்றான். பூமாலை யடன் சேர்த்து பாமாலையையும் சூட்டிச் செய்யும் வழிபாடு இறைவனை வசப் படுத்தும் தன்மை வாய்ந்தது.
அந்த வகையில் திரு முறை மற்றும் பஜனைப் பாடல் கள் பாடி இறைவனை வேண்டுதல் செய்வதன் மூலம் சிறப்பானதொரு நிலையைப் பெறலாம். அத்தகைய ஒரு இறை ப் பணியில் சிறப்பாகச் செயற்பட்டு வரும் திருஞான சம்பந்த கான சபாவின் சேவை சிற ப்பாகப் போற்றத்தக்கது.
கொழும்ப ஜெயந்தி நகரில் உள்ள
ஜிந்துப் பிட் டி பதியில் கோயில் கொணர்டு
எழுந்தருளி இருக்கும் பூரீ வள்ளி தெய்வானை சமேத பூரீ சிவசுப்பிர மணிய சுவாமி ஆலயத்தில் தனது பணியைச் செய்து வரும் திருஞான

Page 21
சம்பந்த கான சபா 50 ஆண்டுகளை நிறைவு செய்வதன் மூலம் பொன்விழா காணுவதை யொட்டி அகில இலங்கை இந்துமா மன்றத்தின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.
இசை மூலம் இறைவனைத் துதிக்கும் வகையிலான பக்திப்பணியில் மக்களை ஈடுபடுத்தி வரும் திருஞானசம்பந்த கான சபாவின் அரும் பணரி மேலும் சறப் பாக வளர வேண்டுமென அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத பூரீ நடராஜப் பெருமானின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன்.
வி. கயில7சடபிள்ளை.
l
P
t
S
 

விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன் அரை ஞானும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும், இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்ததுரிமெய்ஞ் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே ! முப்பழம் நுகரும் மூடிக வாகன ! இப்பொழு தென்னை யாட்கொள் வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதல் ஐந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தணிற் புகுந்து, குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம்இது பொருள்என வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக், கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசமம் புகட்டிஎன் செவியில் தெவிட்டாதஞானத் தெளிவையுங் காட்டி, ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்(து) இரு வினை தன்னை அறுத் திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே, ஒன்பது வாயில் ஒரு மந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்கிசை நிலையும்
IO
15
2O
25
3O
35

Page 22
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே, இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக், கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி, மூன்றுமணி டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக், குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட்ட உரைத்து, மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச், சண்முக தூலமுஞ் சதுர்முகச் சூக்கமும் எண்முக மாக இனிதெனக் கருளிப், புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக், கருத்தினிற் கபால வாயில் காட்டி, இருத்தி முத்தி இனிதெனக் கருளி, என்னை அறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே, வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்ததை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டிற் கொன்றிட மென்ன அருள் தரும் ஆனந்தத் தழுத்தி, எண்செவியில் எல்லை இல்லா ஆனந் தமதளித்(து) அல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச், சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி, அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க், கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி, வேடமும் நீறும் விளங்க நிறுத்திக், கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி, அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக ! விநாயக ! விரைகழல் சரணே
விநாயகர் அகவல் முற்றிற்று
40
45
50
55
60
65
70

திருஞான சம்பந்த மூர்த்திநாயனார் முதலாம் திருமுறை
பண் :- நட்டபாடை ராகம் :- கம்பீரநாட்டை தலம் :- திருக்கேதீச்சரம் தாளம் :- ரூபகம்/ ஆதி
தோடுடைய செவி யன்விடையேறியோர் தூவெண் மதிசூடி காடுடைய சுட லைப்பொடியூசியென் னுள்ளங் கவர்கள்வன் ஏடுடையமல ராண்முனைநாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடைய பிர மாபுர மேவிய பெம்மானிவனன்றே.
அரு நெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய பெரு நெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை ஒரு நெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன் உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல்எளி தாமே.
Lu ssir :- 5L LLum GoL ராகம் :- கம்பீரநாட்டை தலம் :- திருவண்ணாமலை தாளம் :- ரூபகம்
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திரு மாமணி திகழ மண்ணார்ந்தண் அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
பண் :- நட்டபாடை ராகம் :- கம்பீரநாட்டை தலம் :- திருநெயத்தாளம் தாளம் :- ரூபகம்
மையாடிய கண்டன்மலை மகள் பாகம துடையான் கையாடிய கேடில் கரி யுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தான மெ னிரே.
பண் - தக்கராகம் ராகம் :- காம்போதி
தலம் :- திருக்கோலக்கா தாளம் :- ரூபகம்
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ
1.

Page 23
நலங்கொள் காழி ஞான சம்பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.
பண் :- பழந்தக்கராகம் ராகம் :- ஆரபி தலம் :- திருக்கோளிலி தாளம் :- ரூபகம்
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம் கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறம்அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.
பன் - பழந்தக்கராகம் ராகம் :- சுத்தசாவேரி தலம் :- திருத்தோணிபுரம் (சீர்காழி) தாளம் :- திச்ரதிரிபுடை
சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவன் மொய் பவளத் தொடுதரளந் துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்கும்இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொரு காற் பேசாயே.
பண் :- தக்கேசி ராகம் :- காம்போதி தலம் :- திருவண்ணாமலை தாளம் :- ஆதி/ திச்ரதிரிபடை
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார் துாமாமழைநின்ற திரவெருவித்தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
மஞ்சைப் போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானாய் நஞ்சைக் கண்டத் தடக்கும் அதுவும் நன்மைப் பொருள் போலும் வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணம் அதுஏறி அஞ்சொற்கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே.
2

பன் :- தக்கேசி ராகம் :- காம்போதி தலம் :- திருப்பழனம் தாளம் :- ஆதி வேதமோதி வெண்ணுால்பூண்டு வெள்ளை யெரு தேறிப் பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.
பண் :- குறிஞ்சி ராகம் :-ஹரிகாம்போதி தலம் :- திருச்சிராப்பள்ளி தாளம் :- திச்ர திரிபடை நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளை றென்றுடையானை உமையொருபாகம் உடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறன்ன்னுள்ளங் குளிரும்மே.
பன் :- குறிஞ்சி ராகம் :- ஹரிகாம்போதி தலம் :- சிதம்பரம் தாளம் :- திச்ர திரிபடை கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே,
பன் :- குறிஞ்சி ராகம் :- ஹரிகாம்போதி தலம் :- திருவிழிமிழலை தாளம் :- ஆதி வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. l
இறைவ ராயினிர் மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே 2
செய்ய மேனியீர் மெமய்கொள் மிழலையீர் பைகொள் அரவினிர் உய்ய நல்குமே. 3.
நீறு பூசினீர் ஏற தேறினீர் கூறு மிழலையீர் பேறும் அருளுமே. 4
3

Page 24
காமன் வேவவோர் தூாமக் கண்ணினிர் நாமம் மிழலையீர் சேமம் நல்குமே. 5
பிணிகொள் சடையினிர் மணிகொள் மிடறினிர் அணிகொள் மிழலையீர் பணிகொண் டருளுமே. 6
மங்கை பங்கினிர் துங்க மிழலையீர் கங்கை முடியினிர் சங்கை தவிர்மினே. 7
அரக்கண் நெரிதர இரக்க மெய்தினிர் பரக்கும்மிளையீர் கரக்கை தவிர்மினே 8
அயனும் மாலுமாய் முயலும் முடியினிர் இயலும் மிழலையீர் பயனும் அருளுமே. 9
பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே. O
காழி மாநகர் வாழி சம்பந்தன் வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே. II
திருவெழுகூ ற்றிருக்கை
பண் - வியாழக் குறிஞ்சி ராகம் :- செளராஷ்டிரம் தலம் :- திருப்பிரமபுரம் தாளம் :- ஆதி
ஒருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை 5
ஓரால் நீழல் ஒணிகழல் இரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை
இருநதி அரவமோ டொருமதி சூடினை
ஒரு தா ளிரயின் மூவிலைச் சூலம் IO
4

நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத் திருக்கோட் டொரு கரி யீடழித் துரித்தனை ஒரு தனு இரு கால் வளைய வாங்கி முப்புரக் தோடு நானிலம் அஞ்சக்
கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம் முக்குணம் இரு வளி யொருங்கிய வானோர் ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோர்
டிருப்பிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து.
நான் மறை யோதி ஐவகை வேள்வி அமைந்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு லான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த தோணிபுரத் துறைந்தனை தொலையா இரு நிதி வாய்ந்தபூந்தராய் ஏய்ந்தனை.
வரபுரம் என்றுணர் சிரபுரத் துறைந்தனை ஒரு மலை யெடுத்த இரு திறல் அரக்கன் விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப் பணிபொடு நின்றனை சண்பை யமர்ந்தனை
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும் மறைமுதல் நான்கும்.
மூன்று காலமுந் தோன்ற நின்றனை இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் மறுவிலா மறையோர் கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்
5
15
2O
25
3O
35
40
48

Page 25
அனைய தன்மையை ஆதலின் நின்னை நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே.
பன் :- வியாழக் குறிஞ்சி ராகம் :- செளராஷ்டிரம் தலம் :- திருத்தாளச்சதி தாளம் :- ஆதி
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற வும்பரப்
பாலேசேர்வாயேனேர்கான் பயில்கண முநிவர்களுஞ் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னெடுஞ்
சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கனால்
தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவன திடங் கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.
பன் :- மேகராக குறிஞ்சி ராகம் :- நீலாம்பரி தலம் :- திருஜயாறு தாளம் :- திச்ரதிரிபடை
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட்
டைம்மே லுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான்
அமருங் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர
மழையென றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந்
திருவை யாறே.
பண் :- யாழ்மூரி ராகம் :- அடாணா தலம் :- திருத்தருமபுரம் தாளம் :- ரூபகம்
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் பூதஇ னப்படைநின் றிசை பாடவும் ஆடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர் வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறை வண்டறை
யெழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
6

கோளறு திருப்பதிகம்
பண் :- பியந்தைக்காந்தாரம் ராகம் :- நவரோஜ் தலம் :- பொது தாளம் :- ஆதி/ திச்ரதிரிபுடை
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறுநல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. l.
என்பொடு கொம்பொடாமை யிவை மார் பிலங்க
எரு தேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றோ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 2.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதுார்தி செயமாதுபூமி
திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 3.
மதிநுதல் மங்கையோடு வடபாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 4.
7

Page 26
நஞ்சணி கண்டன் எந்தைமடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொண்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உரு மிடியும் மின்னும்
மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ர வர்க்கு மிகவே. 5.
வாள்வரி யதளதாடை வரிகோ வனத்தர்
மடவாள் தனோடும் உடனாய் நாண் மலர் வன்னிகொண்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 6.
செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 7
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய் வாணி மதி வன்னிகொண்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 8.
8

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேரு நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 9
கொத்தலர் குழலியொடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் புத்தரோ டமணைவா தில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. IO.
தேன்மர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துண்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய் ஆன்சொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே. ll.
பண் :- நட்டராகம் ராகம் :- பந்துவராளி தலம் :- திருவலஞ்சுழி தாளம் :- ஆதி
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.
9

Page 27
இரண்டாம் திருமுறை
பண் :- இந்தளம் ராகம் :- மாயாமாளவகெளளை தலம் :- திருமருகல் தாளம் :- ரூபகம்
சடையா யெனுமால் சரண் நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள் உண் மெலிவே.
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.
பன் :- சீகாமரம் ராகம் :- நாதநாமக்ரியா தலம் :- திருச்சாய்க்காடு தாளம் :- திஸ்ர திரிபுடை
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார் சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
பன் :- சீகாமரம் ராகம் :- நாதநாமக்ரியா தலம் :- திருவெண் தாளம் :- திஸ்ர திரிபுடை
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
பன் :- சீகாமரம் ராகம் :- நாதநாமக்ரியா தலம் :- திருப்புள்ளிருக்சேஞரே தாளம் :- ரூபகம்
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடிஎம் பெருமானார் உறையுமிடம் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
O

தத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் ாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் பாதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம் எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
பன் :- காந்தாரம் ராகம் :- நாவரோஜ் தலம் :- திருவாலவாய் தாளம் :- ரூபகம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆல வாயான் திருநீறே.
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புண்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திரு ஆல வாயான் திருநீறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
1.
l.

Page 28
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண்ணிறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆல வாயான் திருநீறே.
6.
எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திரு நீறே.
7
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆலவா யான் திரு நீறே. 8.
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு. மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான் திரு நீறே. 9.
குண்டிகைக் கையர் களோடு சாக்கியர் கூட்டமுங்கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருதஇனியது நீறு எண் டிசைப் பட்ட பொருளார் ஏந்துந் தகையது நீறு அண்டத்த வர் பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே 10.
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான் திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரண் ஞானசம் பந்தன் தேற்றித் தென்னனுட லுற்ற தீற்று தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 11.
12

திருக்கேதீச்சரம்
பண் :- நட்டராகம் ராகம் :- பந்துவராளி தலம் :- திருக்கேதீச்சரம் தாளம் :- ஆதி
விருது குன்றமா மேருவில் நாணர
வாவனல் எரிஅம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
றுறைபதி யெந்நாளும் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
பொழிலனி மாதோட்டம் கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
கடுவினை யடையாவே. l
பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகைத் தருநட்டம் ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
சுண்டிருள் கண்டத்தர் ஈட மாவது இருங்கடற் கரையினில்
எழில் திகழ் மாதோட்டம் கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக்
கெடுமிடர் வினைதானே. 2.
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்பார்க்கச் சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக் குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
உயர்தரு மாதோட்டத் தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்
கருவினை யடையாவே. 3.
பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
விரிதரு கரத்தேந்தும் வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்டத் தடிக ளா தரித் திருந்தகே தீச்சரம்
பரிந்தசிந் தையராகி முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே. 4
13

Page 29
நல்ல ராற்றவும் ஞானநன் குடையர் தம்
மடைந்தவர்க் கருளிய வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
மலிகடல் மாதோட்டத் தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
இராப்பகல் நினைந்தேத்தி அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும்
அன்பராம் அடியாரே.
பேழை வார்சடைப் பெருந்திரு மருள்தனைப்
பொருந்தவைத் தொரு பாகம்
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய
பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே
தீச்சரம் பிரியாரே.
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
லுலகினில் உயர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக்
காதலித் துறைகோயில்
வண்டு பணிசெயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே
தீச்சர மதுதானே.
தென்னி லங்கையர் குலபதி மலைநவிந்
தெடுத்தவன் முடிதிணிதோள் தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
தலைவனார் கடல்வாயப் பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
பொருந்திய மாதோட்டத் துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே
தீச்சரத் துள்ளாரே.
14

Աoւ! ளானுமப் பொரு கடல் வண்ணனும்
புவியிடந் தெழுந்தோடி மேவி நாடிநின் அடியினை காணர்கிலா
வித்தக மென்னாகும் மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித் தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத்
திருந்தஎம் பெருமானே. 9.
புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
புறனுரைச் சமணி ஆதர் எத்த ராகிநின் றுணர்பவ ரியம்பிய
ஏழைமை கேளேன்மின் மத்த யானையை மறுகிட உரிசெய்து
போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சரம் அடைமின்னே. IO.
மாடெ லாமண முரசெனக் கடலின
தொலிகவர் மாதோட்டத் தாடலேறுடை அண்ணல்கே தீச்சரத்
தடிகளை யண்காழி நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தண்சொல்
நவின்றெழு பாமாலைப் பாட லாயின பாடுமின் பத்தர்கள்
பரகதி பெறலாமே. II.
பண் :- வெவ்விழி ராகம் :- யதுகுலகாம்போதி தலம் :- திருக்கேதாரம் தாளம் :- திச்ரதிரிபடை
தொண்டரஞ்சு களிறும் மடக்கிச் சுரும்பார்மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால் வண்டுபாட மயிலால மானகன்று துள்ளவரிக் கொண்டைபாய்ச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.
15

Page 30
பண் :- காந்தார பஞ்சமம் ராகம் :- கேதாரகெளளை தலம் :- திருவாவடுதுறை தாளம் :- ஆதி/ ஆதிவிளம்பம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமாறு றிவதொண்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
6

மூன்றாம் திருமுறை பஞ்சாச்சரத் திருப்பதிகம்
பண் :- காந்தார பஞ்சமம் ராகம் :- கேதாரகெளளை தலம் :- பொது தாளம் :- ஆதி
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்த கூற் றஞ்சவு தைத்தன அஞ்செ முத்துமே.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நகரம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்தனை அஞ்செ முத்துமே.
பன் :- கொல்லி ராகம் :- நவரோஜ் தலம் :- திருக்கழுமலம் தாளம் :- மிச்ரசாப்பு
மண்ணின்நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின் நல்ல கதிக்கி யாதுமோர் குறைவிலைக் கண்ணில் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
போதையார் பொற்கிண்ணத் திடிசில்பொல் லாதெனத் தாதையார் முனிவுறத் தான் எனை யாண்டவன் காதையார் குழையினண் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.
கருந்தடந் தேன் மல்கு கழுமல வளநகர்ப் பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ் விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல்"காள்வரே
17

Page 31
பண் :- கொல்லி ராகம் :- நவரோஜ் தலம் :- திருவாலவாய் தாளம் :- ரூபகம்
மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாயொரு பாலன் நீங்கிவன் என்றுநீ பரிவெய்திடேல் ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர் ஈனர்கட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
நமச்சிவாயத் திருப்பதிகம்
பண் :- கெளசிகம் ராகம் :- பைரவி தலம் :- பொது தாளம் :- ஆதி/ ஆதிவிளம்பம்
காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. I
நம்பு வார வர் நாவி னவிற்றினால் வம்பு நாணி மலர் வார்மது வொப்பது செம்பொ னார் தில கம்முல குக்கெலாம் நம்பன் நாமம் நமச்சி வாயவே. 2
நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்கன் நாமம் நமச்சி வாயவே. 3
இயமன் துாதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தான் நினை வார்க்கினி யான்நெற்றி நயனன் நாமம் நமச்சி வாயவே. 4
கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே. 5
18

மந்த ரம்மன் பாவங்கள் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே. 6
நரக மேழ்புக நாடின ராயினும் உரை செய் வாயினர் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடு மென்பரால் வரதன் நாமம் நமச்சி வாயவே. 7
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சி வாயவே. 8.
போதன் போதன கண்ணனும் அண்ணல் தன் பாதந் தான்முடி நேடிய பண்பராய் யாதுங் காணிபரி தாகி அலந்தவர் ஒதும் நாமம் நமச்சி வாயவே. 9
கஞ்சி மண்டையர் கையிலுணி கையர்கள் வெஞ்சொல் மிணடர் விரவில் ரென்பரால் விஞ்சை யண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. O
நந்தி நாமம் நமச்சிவாய வெனும் சந்தை யால் தமிழ் ஞானசம் பந்தன் சொல் சிந்தை யால் மகிழந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே. l
பன் :- கொல்லி ராகம் :- பைரவி தலம் :- திருவாலவாய் தாளம் :- ரூபகம்
வீடலால வாயிலாய் விழுமியார்க ணரின் கழல் பாடலால வாயிலாய் பரவநின்ற பணி பனே காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்ளையே.
9

Page 32
குற்றம்நீ குணங்கள் நீ கூடல் ஆல வாயிலாய் சுற்றம்நீ பிரானும்நீ தொடர்நதிலங்கு சோதிநீ கற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்ப மென்றிவை முற்றும்நீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.
பண் - கெளசிகம் ராகம் :- பைரவி தலம் :- பொது தாளம் :- ஆதி
வாழ்க அந்தணர் வானவர் ஆணினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரண் நாமமே
தும்க வையக முந்துயர் தீர்கவே.
நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல் பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ரு லகாளவும் வல்ல ரன்றே.
Luser :- Lu S5F LDio ராகம் :- ஆஹிரி தலம் :- திருவெண்டுறை தாளம் :- ரூபகம்
ஆதியன் ஆதிரையன் னனல் ஆடிய ஆரழகன் பாதியோர் மாதினொடும் பயிலும்பர மாபரமன் போதிய லும்முடிமேற் புனலோடர வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும் பும்மிடல் வெண்டுறையே.
பண் :- சாதாரி ராகம் :- பந்தவராளி தலம் :- திருச்சிறுகுடி தாளம் :- ஆதி
திடமலி மதிலனி சிறுகுடி மேவிய படமலி அரவுடை யீரே படமலி அரவுடை யீருமைப் பணிபவர் அடைவதும் அமரு ல கதுவே.
2O

பன் :- சாதாரி ராகம் :- பந்துவராளி தலம் :- திருச்சிறுகுடி தாளம் :- ஆதி தேனமர் பொழிலனி சிறுகுடி மேவிய மானமர் கரமுடை யீரே மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய ஞானசம் பந்தன் தமிழே.
பன் :- சாதாரி ராகம் :- பந்துவராளி தலம் :- திருநெல்வேலி தாளம் :- ஆதி
மருந்தவை மந்திரம் மறுமைநன் நெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்நெஞ்சமே
பொருந்துதணி புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூ செந்திசெம் பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர் தாமே.
பண் - பழம்பஞ்சுரம் ராகம் :- சங்கராபரணம் தலம் :- திருக்கழுமலம் தாளம் :- ஆதி
உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருன மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே
கனல்விழி காய்வது காமனையே அற்ற மறைப்பது முன்பணியே
அமரர்கள் செய்வது முன்பணியே பெற்று முகந்தது கந்தனையே
பிரம புரத்தை யுகந்தனையே.
பண் :- பழம்பஞ்சுரம் ராகம் :- பந்துவராளி தலம் :- திருக்கச்சியேகம்பம் தாளம் :- ஆதி
பாயு மால்விடை மேலொரு பாகனே
பாவை தன்னுரு மேலெரு பாகனே தூய வானவர் வேதத் துவனியே
சோதி மாலெரி வேதத் துவனியே ஆயுநன் பொருள் நுண்பொரு ளாதியே
ஆல நீழல் அரும்பொரு ளாதியே காய லின்மதன் பட்டது கம்பமே
கண்ணு தற்பர மற்கிடங் கம்பமே.
2.

Page 33
முற்ற லாமை யணிந்த முதல்வரே
மூரியாமை யணிந்த முதல்வரே பற்றி வாளர வாட்டும் பரிசரே
பாலு நெய்யுகந் தாட்டும் பரிசரே வற்ற லோடு கலம்பலி தேர்வதே
வானி னோடு கலம்பலி தேர்வதே கற்றி லாமணங் கம்ப மிருப்பதே
காஞ்சி மாநகர்க் கம்ப மிருப்பதே.
பண் - புறநீர்மை ராகம் :- பூபாளம் தலம் :- திருவாலவாய் தாளம் :- ஆதி மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மாணி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த
ஆலவா யாவது மிதுவே.
திருக்கோணமலை திருப்பதிகம்
பன் :- புறநீர்மை ராகம் :- பூபானம் தலம் :- திருக்கோணமலை தாளம் :- ஆதி
நிரைகழ லரவஞ் சிலப்பொலி யலம்பு
நிமலர்நீ றணிதிரு மேனி வரை கெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக் குரை கட லோத நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே.
22

கடிதென வந்த கரிதனை யுரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர் பிடியென நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநுத லவளொடும் உடனாய்க் கொடிதெனக் கதறுங் குரை கடல் துழிந்து கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங்
கோணமா மலையமர்ந் தாரே.
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார் கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக
மாகமுன் கலந்தவர் மதில்மேல் தனித்த்பே ருருவ விழித்தமல் நாகந் தாங்கிய மேரு வெஞ் சிலையாக் குனித்ததோர் வில்லார் குரைகடல் துழந்த கோணமா மலையமர்ந் தாரே.
பழித்திங்கள் கங்கை சடையிடை வைத்துப்
பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன் தேவி வேண்டமுண் கொடுத்த
விமலனார் கமலமார் பாதர் தெழித்துமுன் அரற்றுஞ் செழுங்கடல் தரளஞ்
செம்பொனும் இப்பியுஞ் சுமந்து கொழித்துவன் திரைகள் கரையிடைச் சேர்க்குங்
கோணமா மலையமர்ந் தாரே.
தாயினும் நல்ல தலைவரென றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காணிபல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் ஆழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
23

Page 34
பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி
தன்னுயிர் மேல்வருங் கூற்றைத் திரிந்திடா வண்ணம் உதைத் தவற் கருளுஞ்
செம்மையார் நம்மையா ஞடையார் விரிந்துயர் மெளவல் மாதவி புன்னை
வேங்கைவண் செருத்தி செண்பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமா மலையமர்ந் தாரே.
எடுத்தவன் தருக்கை யிழித்தவர் விரலால்
ஏத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பும்
இறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்தோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர் கோண மா மலையமர்ந் தாரே.
அருவரா தொரு கை வெண்டலை யேந்தி
யகந்தொறும் பலியுடன் புக்க பெரு வரா யுறையும் நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன் இருவரும் அறியா வண்ணம் ஓர் எரியாய்
உயர்ந்தவர் பெயர்ந்நன் மாற்கும் குருவராய் நின்றார் குரை குழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே.
நின்றுணுஞ் சமணும் இருந்துணுந் தேரும்
நெறியலா தனபுறங் கூற வென்றுநஞ் சுண்ணும் பரிசினர் ஒரு பால் மெல்லிய லொடும் உட னாகித் துன்றுமொணி பெளவ மவ்வலுஞ் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொணி கானல் வாசம்வந் துலவுங்
கோணமா மலையமர்ந் தாரே
24

குற்றமி லாதார் குரை கடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன் உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் சுற்றமு மாகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே. 10
அருவரா தொரு கை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ண மொள் ளெரியா
யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே. II
பண் - புறநீர்மை ராகம் - பூபாளம் தலம் :- திருக்கோணமலை தாளம் :- ஆதி
கல்லூார்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூார்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில் சொல்லுார்ப் பெருமணம் சூடல ரே தொண்டர்
நல்லூார்ப் பெருமண மேயநம் பானே.
25

Page 35
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் 4ம்,5ம்,6ம் திருமுறைகள்
பண் :- கொல்லி ராகம் :- நவரோஜ் தலம் :- திருஆதிகைவீரட்டானம் தாளம் :- ஆதி
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேயிரவும் பகலும்
பிரியாது வணங்குவ னெப் பொழுதும் தோற்றாதென் வயிற்றி னகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேன தி கைக்கெடில
வீரட்டா னத்துரை அம்மானே.
நெஞ்சம் உமக் கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர் அஞ்சேலுமென் னிர் அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்நாவில் மறந்தறியேன் உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தே அடி யேன் அதிகைக் கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
26

நமச்சிவாயத் திருப்பதிகம்
பண் :- காந்தாரபஞ்சமம் ராகம் :- கேதாரகெளளை தலம் :- பொது தாளம் :- ஆதி
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுனை யாவது நமச்சி வாயவே.
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரண் அஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்டமி ல்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பினை திருந்தடி பொருந்தக் கைதொழ காப்பினை தழுவிய நமச்சி வாயப்பத்(து) ஏத்தவல் லார் தமக் கிடுக்க ணCல்லையே.
தனித்திருக்குறுந்தொகை
பண் :- கொல்லி ராகம் :- மாயாமாளவகெளளை தலம் :- தனித்திருக் குறுந்தொகை தாளம் :- ஆதி மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் முசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தைஇணையடி நீழலே. விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்கும்ே
27

Page 36
பன் :- காந்தாரம் ராகம் :- நவரோஜ் தலம் :- திருவையாறு தாளம் :- ரூபகம்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதோடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதண் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர் திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
திருஅங்கமாலை
பண் :- சாதாரி ராகம் :- பந்துவராளி தலம் :- பொது தாளம் :- ரூபகம்
தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக் கணிந்து தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையே நீ வணங்காய். I
கணி காள் காணி மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னை எண்டோள் வீசிநின்றாடும் பிரான் றன்னைக் கணி காள் காண்மின்களோ, 2
செவிகாள் கேணி மின்களோ சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப் பிரான்திறம் எம்போதுஞ் செவிகாள் கேணி மின்களோ. 3
மூக்கே நீ முரலாய்
முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முகராலாய். 4 வாயே வாழ்த்து கண்டாய்
மதயானை யுரியோர்த்துப்
பேய் வாழ் காட்டகத் தாடும்பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய். 5
28

நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்.
கைகாள் கூப்பித்தொழிர் கடி மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழிர்.
ஆக்கை யாற்பயனென் அரன் கோயில் வலம்வந்து பூக்கை யால் அட்டிக் போற்றி யென்னாத இவ் ஆக்கை யாற்பயனென்.
கால்க ளாற்பயனென் கறைக் கண்ட ைைறகோயில் கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்க ளாற்பயனென்
உற்றா ராருளரோ உயிர் கொண்ட போம்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக் குற்றார் ஆருளரோ,
இறுமாந் திருப்பன்கொலோ ஈசன் பல்கணத் தெண்ணப் பட்டுச் சிறுமா னேந்திதன் சேவடிக்கீழ்ச் சென்றங் கிறுமாந் திருப்பண் கொலோ
தேடிக் கண்டு கொண்டேன் திரு மாலொடு நான்முகனும் தேடித்தே டொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்ட்ேன்
29
IO
II

Page 37
திருநேரிசை தலம் - திருவெற்றியூர் ராகம் :- நவரோஜ் ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக் காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன் பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூ ருடைய கோவே.
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா(து) உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடைய கோவே.
திருக்குறுந்தொகை தலம் :- சிதம்பரம் ராகம் - நவரோஜ் பனைக்கை மும்மதவேழம் உரித்தவன் நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைக் தினைத்தனைப்பொழு தும்மறந் துய்வனோ. தீர்த்த னைச் சிவ னைச்சிவ லோகனை மூர்த்தி யைமுதலாய ஒருவனைப் பார்த்தனுக்கருள் செய்தசிற் றம்பலக் கூத்தனைக்கொடி யேன்மறந் துய்வனோ.
ஆதி புராணத் திருக்குறுந்தொகை தலம் :- சிதம்பரம் ராகம் - நவரோஜ் வேத நாயகன் வேதியர் நாயகன் மாதின் நாயகன் மாதவர் நாயகன் ஆதி நாயகன் ஆதிரை நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
தனித் திருநேரிசை தலம் :- சிதம்பரம் ராகம் :- நவரோஜ் காயமே கோயில் ஆகக் கடிமணம் அடிமை யாக வாய்மையே தூய்மை ஆக மன மணி இலிங்கம் ஆக நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றிவிக் காட்டி னோமே
3O

சித்தத்தொகை தலம் :- சிதம்பரம் ராகம் : நவரோஜ்
நமச்சி வாயஎண் பாருள ரேல் அவர் தமச்ச நீங்கத் தவநெறி சார் தலால் அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும் இமைத்து நிற்பது சால அரியபுேவுயு.
மனத்துள் வைத்த திருப்பதிகம் பண் :- காந்தாரம் ராகம் - நவரோஜ் தலம் :- திருக்கச்சியேகம்பம் தாளம் - கண்டசாப்பு
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அர வாடச் சடைத்தாழ அங்கையினில் அனலேந்தி இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
திருக்குறுந்தொகை ராகம் :- ஆரபி தலம் :- சிதம்பரம் தாளம் :- ஆதி
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
அல்லல் எண்செயும் அருவினை எண்செயும் தொல்லி வல்லினைத் தொந்தந்தான் என்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோ ர டிமைபூண் டேனுக்கே. திருக்குறுந்தொகை ராகம் - பைரவி தலம் - திருவேட்களம் தாளம் - ஆதி நன்று நாடொறும் நம்வினை போயறும் என்றும் இன்பந் தழைக்க இருக்கலாம் சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தோழுமினே.
31

Page 38
திருநேரிசை பணி :- கொல்லி ராகம் :- நவரோஜ் தலம் :- சிதம்பரம் தாளம் :- கண்டசாபு
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டாம் முத்தனே முதல்வா தில்லை அம்பலத்தாடு கின்ற அத்தாவுன் ஆடல் காணி பாண் அடியனேன் வந்த வாறே.
தலம் - திருப்பாதிரிப்புலியூர் ராகம் - நவரோஜ்
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூர் அரனே.
திருவிருத்தம் தலம் :- திருப்பாதிரிப்புலியூர்
புழுவாய்ப் பிறக்கினும் புணர்னியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே தொழவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செய்சடை மேல்வைத்த தீவண்ணனே.
திருவிருத்தம் தலம் - திருக்கச்சியேகம்பம்
கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு உருகிற்றென் உள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன் திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா ஒரு பற்றி லாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே.
திருவிருத்தம் தலம் :- சிதம்பரம்
குனிந்த புருவமுங் கொவ் வைச் செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டு வதேஇந்த மாநிலத்தே.
32

திருநேரிசை
தலம் : திருப்பாதிரிப்பலியூர் ராகம் : நவரோஜ்
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றான் இமையவர்க் கண்பன் திருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே
திருத்தாண்டகம் தலம் : பொது ராகம் : ஹரிகாம்போதி சுத்தாங்கம்
அப்பன்நீ அம்மை நீ ஐய ம்ைநீ
அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ஞம்நீ
ஒருகுலமுஞ் சுற்றமும் ஒரூ ரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறுார்ந்த செல்வன் நீயே.
தலம் : திருவாரூர் ராகம் : ஹரிகாம்போதி
நிலை பெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதியென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
33

Page 39
தலம் : திருவையாறு ராகம் : ஹரிகாம்போதி
ஒசையொலி யெலாமானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாதசெம்பொற் சோதீ.
எல்லா வுலகமு மானாய் நீயே
யேகம்பம் மேவி யிருந்தாய் நீயே நல்லாரை நம்மை யறிவாய் நீயே
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைகளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே செல்வாய் செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாதசெம்பொற் சோதீ.
திருத்தாண்டகம்/ பொது ராகம் : ஹரிகாம்போதி
திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொரு கால் பேசா ரா கில் ஒரு காலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணாராகில் அருநோய்கள் கெடவெண்ணி றணியி ராகில்
அளியற்றார் பிற்ந்தவா றேதோ எண்ணிற் பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்துஞ் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.
குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும்
பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோலமாய நலம்பொல்லேன் நான் பொல்லேன் ஞானி
யல்லேன் நல்லாரோ டிசைந்திலேன் நடுவேநின்ற விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன்
அல்லேன் வெறுப்பனவும் மிகப்பெரிதும்பேச வல்லேன் இலம்பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன்
எண்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.
34

சங்கதி பதுமறிதி இரண்டுந் தந்து தரணியொடு
வானாளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங் கங்கைவார் சடைக்காரந்தார்க் கண்ப ரா கில்
அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளரே.
தலம் : திருவாலவாய் ராகம் : ஹரிகாம்போதி
வாயானை மனத்தானை மனத்துள்நின்ற
கருத்தானைக் கருத்திறந்து முடிப்பான் தன்னைத் தூயானைத் துரவெள்ளையேற்றாண் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க்கென்றும் சேயானைத் தென்கூடல் திருவாலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே.
தலம் : திருவானைக்கா ராகம் : ஹரிகாம்போதி
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைத் காவுடைய செல்வா என்றண்
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் எண்செய்கேனே.
35

Page 40
தலம் : புள்ளிருக்கும்வேளுள் ராகம் : ஹரிகாம்போதி
பேராயிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திணி சிலைகைக் கொண்ட போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
தலம் : திருப்புகலூர் ராகம் : ஹரிகாம்போதி
எண்ணுகேன் எண்சொல்லி எண்ணுகேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணினண் அல்லால் கணினிலேண் மற்றோர் களைகணி இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
36

சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்
ஏழாம் திருமுறை
பண் - இந்தளம் ராகம் : மாயாமாளவகெளளை தலம் :- திருவெண்ணெய் நல்லூர் தாளம் : ரூபகம்
பித்தாபிறை குடிபெரு மானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெணிணைத் தென் பால் வெணி ணெய் நல்லூரருட்டுறையுள் அத்தா உனக் காளாயினி அல்லேன் எனல் ஆமே.
நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார் பெனர் னைத் தென் பால் வெணி னெய் நல்லூர் அருட்டுறையுள் ஆயா உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லுரர் ஆனாய் உனக் காளாய் இனி அல்லேன் எனல் ஆமே.
காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர் புகழ் எய்தித் திகழ் பன்மாமணி உந்திச் சீரூர் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டுறையு ளாரூரன் எம்பெருமாற்காள் அல்லேன் எனல் ஆமே.
பன் :- நட்டராகம் ராகம் - பந்துவராளி தலம் - திருமழபாடி தாளம் :- ரூபகம்
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.
37

Page 41
பண் ; நட்டராகம் ராகம் : பந்துவராளி தலம் : திருக்கோளிலி தாளம் : ரூபகம்
நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன் வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்ற்ேண் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.
வண்டம ருங்குழலாள் உமை நங்கையோர் பங்குடையாய் விண்டவர் தம்புரமுன் றெரி செய்தஎம் வேதியனே தெண் திரை நீர்வயல்சூழ் திருக் கோளிலி எம்பெருமான் அண்டம தாயவனே அவை அட்டித் தரப்பணியே.
பண் நட்டராகம் ராகம் : பத்துவராளி தலம் : திருக்குருகாய்வூர் வெள்ளடை தாளம் : ரூபகம்
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஒடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே காடுநின் இடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய் மணர்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
பண் : கொல்லி ராகம் : நவரோஜ் தலம் : திருப்புகலூர் தாளம் : ரூபகம்
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
சார்வி னுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர் காள் இம்மை யே தரும் சோறுங் கூறையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
38

திருத்தொண்டர் தொகை
:-கொல்லிக் கெளவாணம் ராகம் - நவரோஜ் தலம் - திருப்புகலூர் தாளம் :- கண்ட சாப்பு
தில்லைவாழ் அந்தணர்தம் மடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றண் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ்குண்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமெண் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே
கெளவாணம்
பண் - கொல்லி ராகம் :- நவரோஜ் தலம் :- திருநாளகக்காரோணம் தாளம் - ஆதி
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் தரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொரு நா விரிரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் கத்துாரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே
39

Page 42
பண் - பழம்பஞ்சுரம் ராகம் :- சங்கராபரணம் தலம் :- திருப்பாண்டிக்கொடுமுடி தாளம் : ரூபகம்/மிஸ்ரசாப்பு
மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழ தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாஉனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே
இட்ட ம்ைமடி ஏத்து வார் இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்ட நாள் கெட்ட நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர் புனற் காவிரி வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாணி டிக் கொடுமுடி நட்ட வா உனை நான்ம றக்கினும்
சொல்லும் நாதமச்சி வாயவே
கோணி யபிறை சூடி யைக்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்தனைப்பிறப் பில்லியைப் பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை நாண னைத்தொண்டன் ஊரன் சொல்இவை
சொல்ல வார்க்கில்லைத் துன்பமே
பண் - பழம்பஞ்சுரம் ராகம் - சங்கராபரணம் தலம் - திருக்கடாவூர் மயானம் தாளம் - ஆதி மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே
40

பன் :- பழம்பஞ்சுரம் ராகம் :- சங்கராபரணம் தலம் :- ஊர்த்தொகை தாளம் - ஆதி
கர்ட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய் சிோட்டூர்க் கொழுந்தே அழுந்து ரரசே கொழுநற் கொல்லேறே பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டுரானே மாட்டூர் அறவா மறவா துன்னைப்பட பாடப் பாணியாயே
பண் - தக்கேசி ராகம் :- காம்போதி தலம் :- திருப்புள்கூர் தாளம் - ஆதி அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வினாய்க் குன்றன் வணிமைகனி டடியேன் எந்தை நீஎனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யான் என விலக்கும் சிந்தை யால்வந்துன் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில் திருப் புன்கூர் உளானே. பண் :- தக்கேசி ராகம் :- காம்போதி தலம் :- திருவாவடுதுறை தாளம் :- ஆதி வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே ஏன மாவெயி றாமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னே திரு ஆவடு துறையுள் ஆனை யேயெனை அஞ்சல்என் றருளாய் ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே. பண் : தக்கேசி ராகம் : காம்போதி தலம் : திருக்கச்சி ஏகம்பம் தாளம் : ஆதி ஆலந்தான் உகந் தமுதுசெய் தானை ஆதி யை அமரர் தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண் அடி யேன்பெற்ற வாறே.
41

Page 43
பண் ; நட்டபாடை ராகம் : கம்பீரநாட்டை தலம் : திருக்கேதீச்சரம் தாளம் : ரூபகம்
நத்தார்படை ஞானம்பசு ஏறிந்நின் கவிழ்வாய் மத்தம்மத யானை உரி போர்த்த மழுவாளன் பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல் செத்தார்எலு பணிவான்திருக் கேதீச்சரத் தானே
சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளும் கடமார்களியானை உரி அணிந்தகறைக் கண்டன் படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் திடமா உறை கின்றான் திருக் கேதீச்சரத் தானே
அங்கம்மொழி அன்னார வர் அமரர் தொழு தேத்த வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் பங்ககஞ் செய்த பிறைசூடினண் பாலாவியின் கரைமேல் தெரியும்மறை வல்லான் திருக் கேதீச்சரத் தானே
கரிய கறைக் கண்டனல்ல கண் மேல் ஒரு கண்ணான் வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருள் பரிய திரை ஏறியாவரு பாலாவியின் கரை மேல் தெரியும்மறை வல்லான் திருக் கேதீச்சரத்தானே
அங்கத்துறு நோய்கள்ளடி யார்மேல் ஒழித் தருளி வங்கம்மலி கின்ற கடல் மாதோட்டநன் னகரில் பங்கஞ்செய்தமடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே
வெய்யவினை யாய் அடி யார்மேல் ஒழித் தருளி வையம்மலி கின்ற கடல் மாதோட்டநன் னகரில் பையேர் இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்யசடை முடியாண்திருக் கேதீச்சரத் தானே
ஊனத்துறு நோய்கள்ளடி யார்மேல் ஒழித் தருளி வாளத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரில் பானத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனெத்தெயி றணிந்தான் திருக் கேதீச்சரத் தானே
42

ட்டுண்டுவன் டாலும்பொழில் மாதோட்டநன் னகரில் பட்டவ்வரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல்
: காகவிவரை தன்மேல் அர வார்த்து
சிட்டன் நமை ஆள்வான்திருக் கேதீச்சரத்தானே
மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரில் பாவம்வினை அறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல் தேவண்ணெனை ஆள்வான்திருக் கேதீச்சரத் தானே
கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள் சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை மறையார்புகழ் ஊரன்னடித் தொண்டன்னுரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே. பண் : புறநீர்மை ராகம் : பூபாளம் தலம் : திருக்கூடலையாற்றுார் தாளம் : ஆதி வடிவுடை மழுரந்தி மதகரி உரிபோர்த்துப் பொடிஅணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் கொடி அணி நெடுமாடக் கூடலை யாற்றுாரில் அடிகள்இவ் வழிபோந்தஅதிசயம் அறியேனே.
பண் : செந்துருத்தி ராகம் : மத்யமாவதி தலம் : திருவாரூர் தாளம் : ஆதி
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. பண் ; பஞ்சமம் ராகம் : ஆஹிரி தலம் : திருநொடித்தான்மலை தாளம் : ரூபகம்
தானெனை முன் படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயி னேனைப் பொருட்படுத்து வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் தான்மலை உத்தமனே
нэ

Page 44
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம் ம்ே திருமுறை) ஆனந்தாதீதம்
பண் :- முல்லைப்பண் / சுத்தாங்கம்
விச்ச தின்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும்
புலைய னேனை உன் கோயில் வர்யிலிற் பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக்
குரிய னாக்கினாய் தாம்வ ளர்த்தோர் நச்சு மாமர மாயினுங்கெலார்
நானும் அங்ங்னே உடைய நாதனே
திருச்சாழல்
பன் - முல்லைப்பன் / சுத்தாங்கம்
பூசுவதும் வெண்ணிறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும் கானேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
கோயிற்றிருப்பதிகம்
பண் :- முல்லைப்பண் / சுத்தாங்கம்
மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே,
44

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யானிதற் கிலனொர் கைம் மாறு முன்பமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடை சிவபுரத் தரைசே,
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர் போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நீஎன் உடலிடங் கொண்டாய் இனியுன்னை என்னிரக் கேனே.
தந்ததுண் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர் கொலோ சதுரர் அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன்று என்பால் சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன்ஒர்ன்கம் மாறே.
செத்தில்லாப்பத்து பண் - முல்லைப்பண் / சுத்தாங்கம்
புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டியாய் அண்ட வாணரும் பிறரும் மற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் பதைதயேன் மனமிக உருகேன்
பரிகி லேண்பரி யாவுடல் தன்னைச் செற்றிலேன் இன்னும் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை: மேவிழrசிவனே.
45

Page 45
மாயனே மறி கடல்விட முண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே நாயி னேன் உன் நினையவும் மாட்டேன்
நமச்சி வாயனன் றுண்னடி பணியாப் பேய னாகிலும் பெரு நெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ சேய னாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
புணர்ச்சிப்பத்து பண் :- முல்லைப்பண் / சுத்தாங்கம் அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர் கோனும் சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும்பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறையின் அமுதை அமு தின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல் லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும்
கண்ணால் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம் முப்பாய் முவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட பார்ப்பா னேஎம் பரமா என்று
பாடிப் பாடிப் பணிந்துபாதப் பூப்போ தணைவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
வாழாபபதது
பணி: முல்லைப் பணி /சுத்தாங்கம் பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ யருளிலை யானால் வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகனன் றருள்புரி யாயே.
46

அடுடபதது
பண் :- முல்லைப்பண் / சுத்தாங்கம்
சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் ணிற்றாய்
பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்தமே விய சீர் ஆதியோ அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
நிருத்ததனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே உன்னை ஒலமிட் டலறி
உலகெலாம் தேடியும் காணேன் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசிர் அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு யாளே.
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
மேவலர் புரங்கள்மூன் றெரித்த கையனே காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச் செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசிர் ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே.
கண்டப்பத்து பன்முல்லைப்பண் / சுத்தாங்கம்
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டெண் பிறப்பறுத்தஇணையிலியை அனைத்துலகந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே.
47

Page 46
அச்சப்பத்து பண் முல்லைப்பன்/ சுத்தாங்கம்
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ
டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணிய னான்தன் தொழும்பரோ
டழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி
பரவி வெண்ணிறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே.
திருப்பாண்டிப் பதிகம்
பண்: முல்லைப்பன் / சுத்தாங்கம்
காலமுணி டாகவே காதல்செய்
துய்ம்மின் கருதரிய ஞாலமுண் டானொடு நான்முகன்
வானவர் நண்ணரிய ஆலமுணி டான் எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு மூலபணி டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே.
பிடித்தபத்து பண்: முல்லைப்பண் / சுத்தாங்கம் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஅ ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
48

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
புன்புலால் யாக்கை புரை புரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
9 OL-95Lillagigil பண்: முல்லைப்பண்/ சுத்தாந்தம்
மைய லாய் இந்த மண்ணிடை வாழ்வெனும்
ஆழியுள் அகப்பட்டுத் தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான்
தலைதடு மாறாமே பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன்
பொன்னடி யிணைகாட்டி மெய்ய னாய்வெளி காட்டிமுண் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே.
சென்னிப்பத்து பண்: முல்லைப்பண் / சுத்தாங்கம் முத்தனை முதற்சோதியை முக்கணி அப்பனை முதல்வித்தினைச் சித்தனைச் சிவலோகனைத்திரு நாமம் பாடித் திரிதரும் பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணிமினோ சித்த மார் தருஞ் சேவடிக்கண் நம்சென்னி மன்னித் திகழுமே.
49

Page 47
திருப்படையாடசி தளம்: ஆதி
கண்க ளிரண்டும் அவன் கழல் கண்டு
களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு
கடைப்படும் ஆகாதே மணிகளில் வந்து பிறந்திடு மாறு
மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும்
வணங்குதும் ஆகாதே.
பணிகளி கூர்தரு பாடலொ டாடல்
பயின்றிடு மாகாதே பாண்டிநன் னாடுடை யான்பாடை யாட்சிகள்
பாடுது மாகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து
வெளிப்படும் மாகாதே மீன்வலை வீசிய கானவுன் வந்த வெளிப்படு மாயிடிலே,
ஆனந்தமாலை
என்னால் அறியாப் பதம் தந்தாய் யான
அதறியா தேகெட்டேன் உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய்
அடிமைக் காரென்பேன் பன்னாள் உண்னைப் பணிந்தேத்தும் பழைய
அடிய ரொடுங்கூடா தென்னா யகமே பிற்பட்டிங் கிருந்தேன்
நோய்க்கு விருந்தாயே.
அச்சோப்பதிகம் பண் ஆதி தாளம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்த னெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
5O

சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சி நீங்கா தான் தாள்வாழ்க கோகழி யாண்ட குரு மனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க பிறப்பறுக்கும் பிஞஞகன்றன் பெய்கால்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றண் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன் கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்கவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
ஈச னடிபோற்றி எந்தைய டி போற்றி நேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி தேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி
ஆராத இன்பம் அருளு மலைபோற்றி சிவனவன் எண் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுது மோய உரைப்பன் யான்
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
IO
15
2O
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேண் புகழுமா றென்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்ப் கணங்களாய் வல்லரசு ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
51
25
3O

Page 48
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேண் உய்யனண் உள்ளத்துள் ஓங்கார மாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தையுள் தேனுாறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
35
40
45
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட முடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு முடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்அன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலனந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
52
55
60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அயவில்லாப் பெம்மானே ஒராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கண்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎண் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
53
65
7 O
8O
85
9 O
95

Page 49
திருப்பள்ளி எழுச்சி
போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது பூங்கழந் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை யாய் எனை உடையாய்!
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே!
அருணன் இந் திரண் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்ந்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர! மற் றண்ணல் அங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பொருந் துறையுறை சிவபெரு மானே! அருள்நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகட லே! பள்ளி எழுந்தருளாயே!
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவ! நற் செறிகழற் றாளினை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! யாவரும் அறிவரி யாய்! எமக் கெளியாய்!
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாளே!
இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒரு பால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒரு பால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒரு பால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொணி (டு) இன்னருள் புரியும் எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே!
54

பூதங்கள் தோறும்நின் றாய் எனில் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா;
சிந்தனைக் கும்அரி யாய்! எங்கணி முன்வந் (து) ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பளிள எழுந்தருளாயே!
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கணினியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார் அணங் கிண்மண வாளா ! செப்புறு கமலங்கள் மலரும்தணி வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே!
அது பழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்! இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும் மதுவளர் பொழில் திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்! திருப் பெருந்தறை மன்னா! எதுஎமைப் பணிகொளும் ஆறு) அது கேட்போம் எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே!
முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்? பத்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடியில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரை திரு மேனியும் காட்டித்
திருப் பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்
ஆரமு தே! பள்ளி எழுந்தருளாயே!
55

Page 50
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளே! உன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வணி திருப் பெருந்துறை யாய்வழி அடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தே! கரும் பே விரும் படியார் எண்ணகத் தாய் உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே! 9
புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய்! திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! IO
திருவெம்பாவை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கன் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டிங்ங்ண் எதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே!
ஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்! l
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்!
சீசீ!! இவையும் சிலவோ? விளையாடி
ஏசு மிடம்ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கண்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்? 2
56

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்குடையீர்! புத்தடியோம் புண்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை?
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்! 3
ஒண்ணித் திலநகையாய் இன்னும் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ? எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்! 4
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைாயட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஒலம் இடினும் உணராய் உணராய்காணி
எலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்! 5
மானே நீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவண் என்றலும் நானாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ?
வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலை அளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்படி வந்தோர்க்குன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்! 6
57

Page 51
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உண்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னாவென் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை எண் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ! வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்! 7
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
எழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழும்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழி ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்
அழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலேர் எம்பாவாய்! 8
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே! உன்னைப் பிரானாகப் பெற்றஉண்சீரடியோம்
உன் அடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்! 9
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழம் தொண்டருளன் V
கோதில் குலத்தரன்றன் கோயில் பினாப்பிள்ளைகான்
ஏதவனுார்? ஏதவன்பேர்? ஆருற்றார்? ஆரயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்? O
58

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்எண்னக்
கையால் குடைந்து குடைந்துண் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழந்தோம்காணி ஆரழல்போல்
செய்யாவெண் நீறாடி செல்வா சிறுமருங்கல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்! 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தனிவி வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்! 12
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மருவில்புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலார் எம்பாவாய்! 13
காதார் குழை ஆடப் பைம்பூண் கலன் ஆடக்
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல் ஆடிச் சிற்றம் பலம்பாடி,
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்! 14
59

Page 52
ஒரொரு கால் எம்பெருமான் என்றென்றேநம் பெருமான்
சீரொரு கால் வாயோவாள் சித்தம் களிகூர நீரொரு கால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால்வந்தனையாள் விண்ணோரைத்தான்பணியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆம்ஆறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்! 15
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னைத் திகழ்தெம்மை ஆளுடையான் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலப்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நம்தம்மை ஆளுடையான்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்! I6
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நம்நம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கணி அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்துஆடேலோர் எம்பாவாய்! 17
அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தெகைவீ றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர் வந்து கார்பரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆனாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்! 18
6O

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கென்று றுரைப்போம்கேள்
எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கணி மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்! 19
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்! 20
திருவிசைப்பா ராகம் : ஆனந்த பைரவி
ஒளிவளர் விளக்கே! உலப்பிலா வொன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றனஞ் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு) உள்ளம்
குளிர எண் கண்குளிர்ந் தனவே.
6

Page 53
பாடலங் காரப் பரிசில்காசு) அருளிப் பழுத்தசெந் தமிழ்மலர் சூடி நீலங் காரத்து) எம்பெரு மக்கள்
நெஞ்சினுள் நிறைந்துநின் றானை வேடலங் காரக் கோலத்தின்அமுதைத்
திருவீழி மிழலையூ ராளும் கேடிலங் சீர்த்திக் கனகசுற் பகத்தைக்
கெழுமுதற்கு) எவ்விடத் தேனே,
திருப்பல்லாண்டு
இராகம்: ஆனந்பைரவி நீலாப்பரி மன்னுக தில்லை! வளர்கநம்
பக்தர்கள் வஞ்சகர் போய் அகல பொன்னின்செய்! மண்டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உணமகோன்
அடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
ஆரார் வந்தார்? அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யனனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்
குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல் புகழ் பாடியும்
ஆடியும் பல்லர் விண்டு கூறுதுமே,
பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்று) அருள்
செய்தவண் மன்னிய தில்லைதன்னுள் ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்
லானுசுேப் பல்லாண்டு கூறுதுமே.
S

சூழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்குங் குழாம்பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்று விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழ.அடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சொல்லார்ை டசுரு திப்பொள்
சோதித்த துய்மனத் தொண்டருள்ளீர்! சில்லாண் டிற்சிதை புஞ்சில
தேவர் சிறுநெறி சேராமே வில்லான்டகன் சுத்திரள்
மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டென்னும் பதங்கடந்
தானுக்கே பல்லானர்டு கூறுதுமே.
திருமந்திரம் 10 ம் திருமுறை
ஐந்து கரத்தனை யானை முகத்தினை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
சிவசிவ எண் சிலர் தீவினையாளர் சிவசிவ எண்றிடத் தீவினைமாளுஞ் சிவசிவ எண்றிடத் தேவருமாவர் சிவசிவ எண்ணச் சிவசுதிதானே.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே.
S3

Page 54
உன்னை ஒழிய ஒரு வரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்-பன்னிரு கைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ்வே.
திருவாக்கும் செய்கருமம் கைக்கூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர் தம் கை.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கர தணி விப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம் 12 ம் திருமுறை
உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் நிலாவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவளவயற்பு கலித்திரு ஞானசம்பந்தர் பாதமலர்தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
சென்றகாலத்தின் பழுதிலாத் திறமும்
இனி எதிர்காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தருளப் பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருளுடையேம் நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற்றொளியினில்
விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார்.
64

நன்மை பெருகருள் நெறியே
வந்தணைந்து நல்லூரில் மன்னுதிருத் தொண்டனார் வணங்கி
மகிழ்ந்தெழும் பொழுதில் உன்னுடைய நினைப்பதனை
முடிக்கின்றோம் என்றவர் தஞ் சென்னிமிசைப் பாதமலர்
சூட்டினாண் சிவபெருமான்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின்
வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்துபாடி அறவா! நீ ஆடும்போதுன் அடியின்
கீழ் இருக்க என்றார்.
வாழதது
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரண்நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை யரசுசெய்க குறைவிலாது யிர்கள்வாழ்க நான்மறை யறங்கள்ஓங்க நற்றவம் வேள்விமல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்:
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடியா ரெல்லாம்.
65

Page 55
அபிராமி அந்தாதி
தனம்தரும் கல்விதரும் ஒருநாளுந் தளர்வுஅறியா மனம்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலால் அபிராமி கடைக்கண்களே.
பூரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமிர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்தகண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான் நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
வையத்து வாழ்வீர் காள்! நாமும்நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளிரோ, பாற்கடலுள் பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டேழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
ஓங்கி யுலகளந்தத உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைப்பற்றி வாங்க குடம்நிறைக்குங் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
66

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழி யுள்புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து
பாழியந்தோளுடைப் பற்பநா பண்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயபெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை துரயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.
புள்ளும் சிலம்பினகாணி புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
கீசுகீ சென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர், மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவெலோ ரெம்பாவாய்.
67

Page 56
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாணி மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோது குலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவா வென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். 8
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கொரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கணிவளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயண் மாதவன் வைகுந்த னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். 9
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்றல் அனந்த லுடையாய் அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். 10
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்ற செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் போற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! நீ
ஏற்றுக்கு உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
68

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற் கடைபற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தா னெழுந்திராய் ஈதெண்ன பேருக்கம்! vm
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். 12
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைக ளெல்லோரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளும் சிலம்பினகாணி போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குறிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்? நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். 13
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெம்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணா தாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய், 14
எல்லே! இளங்கிளியோ! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். 15
69

Page 57
நாயகனாய் நின்ற நந்நகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம்! துயிலெழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேயநிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். 16
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய் அம்பரமூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் சுழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். 17
உந்து மதகளிற்றன் ஓடாததோள்வலியன்
நந்த தோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்!
வந்து எங்கும் கோழி அழைத்தனகாணி மாதவிப்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தா மரைக்கையால் சீரார்வளை யொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 18
குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நம்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காணி எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய். 19
7Ο

முப்பது மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
ஊக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். 2O
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கணி ஆற்றாதுவந்து உன்னடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்தேலோ ரெம்பாவாய். 21
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின்பள்ளிக்கட்டிற் கீழே சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனு மெழுந்தாற்போல் அங்கணிரண்டும் கொண்டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாப மிழிந்தேலோ ரெம்பாவாய். 22
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்க அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழுங்கிப் புறப்பட்டு போதருமாபோலே நீயூவைப் பூவண்ணா உன்
கோயில்நின்று இங்ங்னேபோந்தருளி கோப்புடைய சீரியசிங் காசனத் திருந்துயாம்வந்த
காரிய மாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். 23
71

Page 58
அன்றிவ் வுலகமளந்தா யடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகட முதைத்தாய் புகழபோற்றி
கன்றுகுனிலா வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில்வேல் போற்றி என்றென்றுண் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்று யாம்வந்தோ மிரங்கேலோ ரெம்பாவாய். 24
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனா யொளித்து வளர தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தரு தியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும்தீர்ந்து மகிழந்தேலோ ரெம்பாவாய். 25
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாணி டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையா யருளேலோ ரெம்பாவாய். 26
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனையே பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போ மதன் பின்னே பாற்சோறு முடநெய்பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். 27
72

கற்வைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவிபெருந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னைப் உறவேலநமக்கு இங்கொழிக்க வொழியாது
அறியாத பிள்ளைகளோ மண்பினால் உன்றன்னைச் சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய். 28
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவலெங்களை கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வா னன்றுகாணி கோவிந்தா
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். 29
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பா ரீரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். 3O
திருமால் குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார்படு துயரா யினவெல்லாம் நிலந்தரும் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநில மளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்றதாயினும் ஆயினசெய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
73

Page 59
திருவருட்பா
முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம் சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே மன்னவனே சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே தற்பரனே நின்தாள் சரன்.
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்
வேதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத்தெய்வம் இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம் தெரு ட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன்
அணைப்பள்தாய் அடித்தால் பிடித்தொரு தந்தைஅணைப்பன் இங் கெனக்குப் பேசிய
தந்தையும் தாயும் பொடித்திருமேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால்
என்னை அடித்ததுபோதும் அணைத்திடல் வேண்டும் அம்மை
அப்பாஇனி ஆற்றேன்
ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும் உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும் பெருமைபெறு நினதுடிகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க வேண்டும் பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
74

மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும்உன்னை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முத் தெய்வமணியே.
முருகக்கடவுள் துதி
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகமொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணாசலம மர்ந்தபெரு மாளே.
75

Page 60
பூரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த
திருப்புகழ்
தலம் : பொது ராகம் : கம்பீரநாட்டை / ஹம்சத்வனி
தாளம் : ஆதி / கண்டசாப்பு
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடுமடியவர் புத்தியி லுறைபவர்
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி அக்குற மகளுடனச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
தலம் : பொது ராகம் : ஹிந்தோளம் / ஆனந்தபைரவி தாளம் : ஆதி
உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
ஒணி கடலிற் றேனமுதத் துணர்வூறி இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே தம்பிதனக் காகவனத் தனைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் g5 afGuit Gaor அன்பர் தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே
76

岛 ಕ್ಲb திருஅண்ணாமலை ராகம் : ஹம்சத்வனி தாளம் : திஸ்ரதிரிபுடை / மிச்சர சாப்பு
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமு வர்க்கத் தமரரு
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியி
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பகூடித்தொடு ரகழித் தருள்வது
தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல
77
/ சண்முகப்பிரியா
எனவோதும்
மடிபேணப்
லிரவாகப்
மொரு நாளே
கழுதாடத்
எனவோதக்
முதுகூகை
பெருமாளே

Page 61
தலம் : திருப்பரங்குன்றம் ராகம் : பிலகரி / மாண்ட் தாளம் : ஆதி
சந்தம் பந்தத் தொடராலே சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தனென் றென்றுற் றுனைநாளும் கண்டுகொணி டன்புற் றிடுவேனோ தந்தியின் கோம்பைப் புணர்வோனே சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே
தலம் : திருச்செந்தூர் ராகம் : கல்யாணி / ரேவதி தாளம் : ஆதி
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்தமசைய முதுகே வளையஇதழ் தொங்க வொரு கை தடிமேல் வரமகளிர் நகையாடி தொண்டு கிழவனிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்கு குருடு படவே செவிடுபடு செவியாகி
வந்தபிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்தருடைமை கடனே தெனமுடுக துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதேமயிலின்மிசை வரவேணும்
எந்தைவருக ரகுநா யகவருக
மைந்தவருக மகனே யினிவருக எண்கணி வருக எனதா ருயிர்வருக அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுணிக வருக மலர்கு டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல வருமாயன்
78

சிந்தைமகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர் சிறை சிந்தஅசுரர் கிளைவே ரொடுமடிய அடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதேமருவிவளர் பெருமாளே
தலம் : திருச்செந்தூர் ராகம் : முகாரி / ஆனந்தபைரவி தாளம் : மிச்சரசாப்பு / வீச்சுத்தட்டாக
நிலையாய் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல மருள்வாயே
கொலைகாட் டவுனர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற முதுகுதம் குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித வடிவாகும் அரனார்க் கதிதபொருள்காட் டதிப
அடியார்க்கெளிய பெருமாளே
தலம் : திருச்செந்தூர் ராகம் : குறிஞ்சி தாளம் : ஆதி
முத்து தமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி யுழலாதேக
79

Page 62
முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் துரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான செஞ்செனகு சேகு தாளத் தோடு
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்கஅநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது
அந்தமணி மறை வேள்வி காவற்கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார அண்டருப கார சேவற் கார
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம்வெகு வான ரூபக் கார
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேலைஸ் கார செஞ்சொலடி யார்கள் வாரக் கார செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார செந்தினகர் வாழும் மாண்மைக்கார
தலம் : திருவாவினன்குடி / பழனி தாளம் : ஆதி
நாத விந்துக லாதீ நமோநத
வேதமந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம பூரா நமோ நம
சேத தண்டவி நோதா நமோ நம
கீதகிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம
8O
முனைமீதே
நடமாடுஞ்
வருவாயே
முடிமேலே
எழிலான
எதிரான
பெருமாளே.
ராகம் : குறிஞ்சி
வெகுகோடி
பரகுரர்
கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
ஈதலும்பல கோலால பூஜையும்
ஒதலுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாதபாகாசேைைவயு மறவாத ஏழ்தலம் புகழ் காவேரி யால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலுரரா
ஆதரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதோறி மாகயி லையிலே கி
ஆதிய யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
தலம் : திருவாவினன்குடி / பழனி ராகம் : சக்ரவாகம் தாளம் : சதுஸ்ரதிரிபடை
அபகார நிந்தைபட் டுழலாதே அறியாதவஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநானி னைந்தருட் பெறுவேனோ இபமாமு கண் தனக் கிளையோனே இமவான்ம டந்தையுத் தமிபாலா ஜெபமாலை தந்தசற் குரு நாதா திருவாவி னன்குடிப் பெருமாளே.
8.

Page 63
தலம் : திருவாவினன்குடி ராகம் : சிந்துபைரவி
தாளம் : கண்டசாப்பு
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர் செய் குரு நாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தததின
செயலேவி ரும்பியுளம் நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விரு தாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது புரிவாயே
நவநீதி முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் பெருமாளே.
தலம் : திருவாவினன்குடி ராகம் : கௌரிமனோகரி தாளம் : ஆதி
உலகபசு பாச தொந்த மதுவான உறவு கிளை தாயர் தந்தை மனைபாலர் மலசலசு வாச சஞ்ச லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற னருள் தாராய் சலமறுகு பூளை தும்பை யனிசேயே சரவணப வாமு குந்தன் மருகோனே பலகலைசி வாக மங்கள் பயில்வவோனே பழநிமலை வாழ வந்த பெருமாளே
82

தலம் : திருவாவினன்குடி/ பழனி ராகம் : அடாணா / மாண்ட் தாளம் : ஆதி
வசனமிக வேற்றி மறவாதே மனதுதுய ராற்றி லுழலாதே இசைபயில்ச டாக்ஷ ரமதாலே இகபரசெள பாக்ய மருள்வாயே பசுபதிசி வாக்ய முணர்வோனே பழநிமலை வீற்ற ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி மிகவாழ அமரர்சிறை மீட்ட பெருமாளே
தலம் : திருவாவினன்குடி ராகம் : கரகரப்பிரியா/ ரஞ்சனி தாளம் : ஆதி
வரதா மணிநீ யெனவோரில் வருகா தெதுதா னதில்வாரா திரதா திகளால் நவலோக மிடவே கரியா மிதிலேது சரதா மறையோ தயன்மாலும் சகலா கமநுா லறியாத பரதேவதையாள் தருலேயே பழனா புரிவாழ் பெருமாளே
தலம் : சுவாமிமலை ராகம் : அடாணா தாளம் : ஆதி
எந்தத் திகையினு மலையினு முவரியி
னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
னம்பொற் கழலிணை களில் மரு மலர் கொடு என்சித் தமுமன முருகிநல் சுருதியின் முறையோடே
சந்தித் தரஹர சிவசிவ ரசணென
கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்கப் புளசிதமெழஇரு விழிபுனல் குதிபாய்ச்
83

Page 64
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
னந்தத் திரு நட மிடுசர ணழகுற சந்தச் சபை தனி லெனதுள முருகவும் வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுருடு டமடம துங்கத் திசைமலை யுவரியு மறுகச Guff?G3 Luff?
துன்றச் சிலமணி கலகல கலினென
சிந்தச் சுரர் மல ரயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையரு ளிளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருகநல் கந்தப் பொழில் திகழ் குரு மலை மருவிய பெருமாளே.
தலம் : சுவாமிமலை ராகம் : கரகரப்பிரியா/மோகனம் தாளம் : ஆதி சரணகம லால யத்தைஅரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தி யானம் வைக்க அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமின்யமிடி யால்ம யக்க முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே
தருணமிதையாமி குத்தகனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க பெரு வாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாதபத்ம மதுநிதமு மேது திக்க
அரிய தமிழ் தான விரித்த மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே.
84

தலம் : சுவாமிமலை தாளம் : ஆதி நிறைமதி முகமெனு
நெறிவிழி கணையெனு உறவுகொள் மடவர்க
உன திரு வடியினி மறைபயிலரிதிரு
மருவல ரசுரர்கள் குறமகள் தனை மனை குருமலை மருவிய
தலம் : சுவாமிமலை தாளம் : ஆதி
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய
பாகு கனிமொழ மாது குறமகள்
பாதம் வருடிய
காது மொரு விழி காக முறஅருள்
மாய னரிதிரு
கால னெனையணு, காம லுனதிரு
காலில் வழிபட
ஆதி யயனொடு தேவர் சுரரூல
காளும் வகையுறு
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வர வரு
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலை தனி
சூர ஒடலற வாரி சுவறிட
வேலை விடவல
85
ராகம் : ஹம்சாநந்தி
JTesto
மொளியாலே நிகராலே ளுறவாமோ யருள்வாயே மருகோனே குலகாலா மருள்வோனே பெருமாளே
: நவரோஜ் / தோடி
குமரேசா
DGOSTG T GTI
மருகோனே
அருள்வாயே
சிறைமீளா
மிளையோனே
லுறைவோனே
பெருலுமாளே.

Page 65
தலம் : ரீசைலம் ராகம் : இராகமாளிகை / தேஷ்
தாளம் : ஆதி
ஒருபது மிருபது மறுபது முடனறு
முணர்வுற இருபத
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
வெளியொடு வொளிபெற
முளநாடி
விரவாததே
தெருவினில் மரமென எவரொடு முரை செய்து
திரிதொழி லவமது திருமகள் மருவிய திரள்பு யஅறுமுக
தெரிசனை பெறஅருள்
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை
பரு கிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி
பெருமலை யுரு விட அடியவ ருரு கிட
பிணிகெட அருள்தரு
பிடியொடு களிறுகள் நடையிட கலை திரள்
பிணையமர் திருமலை
தலம் : விராலிமலை ராகம் தாளம் : கண்ட ஜம்பை/ ஆதி
பத்தியால் யானுனைப்
பற்றியே மாதிருப் முத்தனா மாறெனைப்
முத்தியே சேர்வதற் உத்தமா தானசற்
ஒப்பிலா மாமணிக் வித்தகா ஞானசத்
வெற்றிவே லாயுதப்
86
புரியாதே
புரிவாயே
பணியாரம்
யிளையோன்ே
குமரேசா
பெருமாளே.
: நவரோஜ் / தேஷ்
பலகாலும் புகழ்பாடி பெரு வாழ்வின் கருள்வாயே குணர்நேயா
grfløn frg st
திநிபா தா பெருமாளே.

தலம் : கதிர்காமம் ராகம் : ஆபேரி / கமாஸ்
தாளம் : ஆதி
திருமக ளுலாவு மிரு புய முராரி
திருமருக நாமப் பெருமாள் காணி ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள் காணர்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் பெருமாள் காணர் மணிதரளம் வீசி யணியருவு சூழ
மருவுகதிர் காமப் பெருமாள் காணி
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருதவீரப் பெருமாள் காணி அரவு பிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள் காணி
இரு வினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள் காணி இலகுசிலை வேடர் கொடியினதி பார
இரு தனவி னோதப் பெருமாளே.
தலம் : கதிர்காமம் ராகம் : நட்டைக் குறிஞ்சி தாளம் : ஆதி
எதிரி லாத பத்தி தனைமேவி
இனிய தானி னைப்பை யிரு போதும் இதய வாரி திக்கு ளுறவாகி
எனது ளேசி றக்க அருள்வாயே கதிர் காம வெற்பி லுறைவோனே
கனக மேரு வொத்தடயவீரா மதுர வாணி யுற்ற கழலோனே
வழுதி கூனி மிர்த்த பெருமாளே.
87

Page 66
தலம் குன்றுதோறாடல் ராகம் : தேஷ் தாளம் : ஆதி
அதிருங் கழல்ப ரிைந்து னடியேனுன் அபயம் புகுவ தென்று நிலைகான இதயத் தனிலி குந்து க்ருபையாகி இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே எதிரங் கொரு வ ரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கி g2Si32 fou for Gill Jr பதியெங் கிலுமி ருந்து விளையாடிப் பலகுன் றிலும மர்ந்த பெருமாளே.
தலம் : குன்றுதோறாடல் ராகம் : இராகமாலிகை தாளம் : ஆதி
அகரமுமாகி பதிபனு மாகி பதிகமு மாகி அகமாகி
அயனென வாசி அரியென வாகி அரனென வாகி
அவர் மேலாப்
இகரமு дүг : பெனவகளு IoT fi II 7730 fa 3 » l rc II, I r IT fl
வருவோனே இருநில மீதி வெளியனும் வாழ எனதுமு னோடி
வர வேணும் மகபதி யாகி மருவும்ஸ் லாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வன முறை வே ட பினருளிய பூஜை மகிழ்கதிர் கா)
முடையோனே செசுகளை சேகு தகுதிமி தோதி நிமியென ஆடு மயிலோனே திருமவி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு
பெருமாளே.
88:

+i
浸)写)JIỆî li osassosooloog 這a*兩%邑圈f%呂白兔唱這I圈劑m%f遍mm :T་མཁfrp ཁྱོཐཨཆgf
so ( 1 ( *_ | =
LicogĒĢĒærgjiG IGÐrts HII–IGÌ iiri e iconico GÊqŤrıntı o scorigēYGòæs

Page 67
1955 - 1958 ஆம் ஆண்டு பஜனையை வழிநடத்திய பெரியவர்கள்
 


Page 68
04.01.2002 தென்னிந்தியாவிலிருந்து ஆன்மீக சொற்பொழிவிற்கு வருகைதந்த டாக்டர் லட்சுமி ராஜரட்ணம் அவர்களுக்கு சபா மாணவி சுஹோமசுதா பொன்னாடை அணிவித்தல்,
 


Page 69
06.12.1988 இல் இந்து கலாச்சார அமைச்சில் பட்டம் வழங்கப்பட்ட வைபவம்
இடமிருந்து விம்
பிளி. இராமன், அ.முத்துக்குமாரசுவாமிபிள்ளை, சி. சங்கரநாராயணன்பிள்ளை, வெ. அண்ணாமலை, வி. சோமசுந்தரம்பிள்ளை.
 
 
 

'Issosoofiàn) · Issogourts1.gs395 milog)sos quisqĪGI Ļcogąjąàys hiņsī£ısırogoqogs (noćniji soos sofosfogsfirstī£ i(figsigsins qo& zoozo Torso

Page 70
:nn:
 

1976 - 1977 ஆம் ஆண்டு பஜனையை வழிநடாத்திய பெரியவர்கள்

Page 71

sfidon usilo Jonnossoso qojisiqof qsoprşılırı9ņợc, Qıpsoţ qae tooz, torņi

Page 72
============= ==』『———급 = --------5Tz』 『』----------國는昌門 비堂司馬國 國미 - ■ ■ ■■■■ ■ 「昌國昌國서羅昌門를u! --ALŲ: LILLI LI?.*** Dɔ ɔ, l-IAȚI연山:54|||||55-1드# LIIII 居西區 1브性的T
•■■■■ ■ fabiae suecủ: so-. 5'ı TÊæsir, §. Điopis QT, o GooisTripsit, sistö.ąjisựjög sử.
Ti TTYLSLS KLTTTL TS KTyTTS S LLLTTS LS LTTTLLLLL LSLLLL
 

Isso súcss(fÐoscosoɛ nniuscostē logsiirī£ Iosuæ qșqfriquaeபைடுேஒே

Page 73
க்கம். அக இருள் போக்கும்.
இறை அருள் நோ
聶
堊彗琵乖
.11 1
திருஞான சம்பந்த கான சபா
 

尋
"
iրիTIT, I" | | זו, חוז, זהו הז, הזיהו ודודחן וח היו פזוהדיה
I, III || IF IT,
ה. ל
1 Ο 56 TO =

Page 74
15.12.2001 அன்று கணபதி ஹோமத்துடன் பொண்விழா ஆரம்பமானது.
.
تمام و یا "" ماههای نیز
05.01.2002 இல் 50 வது ஆண்டு பொண்விழாவின் நிகழ்வின் போது நகர சங்கீர்த்தன ஊர்தியில் நால்வர்கள் எழுந்தருளியது.
 
 

தலம் : காஞ்சிபுரம் தாளம் 1 ஆதி
நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ் களங்க நத்தொடு முழங்க னத்தொடு முழங்கு நத்திரை வழங்கு
இச்சையுனர் வின்றி பிச்சையென வந்த இச்சிறுமி தொந்து
எத்தனை, நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையி லஞ்ச
பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை பச்சைமலை யெங்கு பத்தியுடனின்று பத்திசெயு மண்பர் பத்திர மணிந்த
கச்சிவர் துருப்பை கச்சவர் விரும்பு கச்சியி லமர்ந்த சுற்பக வனங்கொள் சுற்பக விகம்பர்
கைத்தளை களைந்த
தலம் : திருவானைக்கா தாளம் 4 ஆதி
நாடித் தேடித்
தானத் தாசித் மாடக் கூடற்
வாழவைச் சேரத் பாடற் காதற்
பானஸ்த் தேனொத் ஆடற் றோசைக்
ஆ  ைஇன கி க " வரி நர்
89
ராகம் சிந்துபைரவி
மதியாலும்
கடலாலும்
மெவியாதே
ைென வேம்ை
ჭ#32;})
முறைவோனே
சுழலோனே
கதிர்வேலா
பெருமாளே.
ராகம் : பாகேஸ்வரி
தொழுவார்பால் திரிவேனோ பதிஞான தருவாயே புரிவோனே தருள்வோனே கினியோனே
பெரு ளே

Page 75
தலம் :- சிதம்பரம் தாளம் :- ஆதி
எழுகடல் மணமலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி
இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக
கழுதொடு நரியு மொரிபுவி மறலி
கமலனு மிகவு
கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள்
விழுதிக ழழகி மரகதவடிவி
விமலிமு னருளு
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசை பெற மயிலில்
எழுகடன் குமுற அவுணர்க ளுயிரை
யிரை கொழும் அயிலை இமையவர் முனிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு
தலம் :-வைதீசுவரன் கோயில் தாளம் : ஆதி உரத்துறை போகத்
உனைச்சிறி தோதத்
மரத்துறை போலுற்
மலத்திருள் மூடிக் பரத்துறை சீலத்
பணித்தடி வாழ்வுற் வரத்துறை நீதர்க் வயித்திய நாதப்
90
ராகம் :- கரகரப்பிரியா
அவதாரம்
(Upl 9-utuff 35/
மயர்வானார்
தருவாயே
முருகோனே
வருவோனே
யுடையோனே
பெருமாளே
ராகம் :- சண்முகப்பிரியா
தனியான
தெரியாது
றடியேனும்
கெடலாமோ
தவர்வாழ்வே றருள்வோனே
கொரு சேயே பெருமாளே

தலம் :- சிதம்பரம் தாளம் :- ஆதி
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுன வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழுறி
வாய்பாறி நிற்குமெனை வாராய் மனக்கவலை தீராய் எனத்தொழுது
வாரே னென்கெதிர்முன் சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
தோழா கடப்பமல ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
மேராள் குறத்திதிரு ஈசா தனிப்புலியூர் வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ்
தலம் :- ஆவிநாசி தாளம் - ஆதி / ரூபகம்
ராகம் :- ஹேமவதி
வினையாயின்
தருள்பேசி
யருள்கூர
வரவேணும்
யருள்பாலா
ரணிவோனே
LD66 TGT
பெருமாளே.
ராகம் :- ஆபோகி
இறவா மற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெரு வாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனே சொற் குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.
தலம் :- பொது ராகம் :- ஹம்சத்தினி தாளம் :- ஆதி துள்ளுமதவேள்கைக் கணையாலே தொல்லைநெடு நீலக் கடலாலே மெள்ளவரு சோலை குயிலாலே மெய்யுருகு மானைத் தழுவாயே தெள்ளுதமிழ்த் பாடத் தெளிவோனே செய்யகும ரேசத் திறலோனே வள்ளல்தொழ ஞானக் கழலோனே வள்ளிமண வாளப் பெருமாளே
91

Page 76
தலம் :-பொது ராகம் :-ப்ருந்தாவனசாரங்கா
தாளம் :- ஆதி
நீலங்கொள் மேகத்தின்
நீவந்தவாழ்வைக்கணி மால்கொண்ட பேதைக்குன் மார்தங்கு தாரைத்தந் வேல்கொண்டு வேலைப்பணி
வீரங்கொள் சூரர்க்குங் நாலந்தவேதத்தின்
நானென்று மார்தட்டும்
தலம் :- பொது தாளம் :- ஆதி
இசைந்தஏறுங் கரியுரி போர்வையும்
இலங்கு நூலும் புலியதளாடையு அசைந்ததோடுஞ் சிரமணி மாலையு
அணிந்தஈசன் பரிவுடன் மேவிய உசந்தசூரன் கிளையுடன் வேரற
உகந்தபாசங் கயிறொடு தூதுவர் அசந்தபோதென் துயர்கெட மாமயில்
அமைந்த வேலும் புயமிசை மேவிய
தலம் - திருச்செந்தூர் தாளம் - கண்டதிரிபடை
இயலிசையிலுசிதவஞ்சிக்
இரவு பகல் மனது சிந்தித் உயர்கருணை புரியுமின்பக்
உனையெனதுள் அறியுமன்பைத் Lduja) தகர்கலிடையரன்தத்
வனசகுற மகளைவந்தித் கயிலை மலையனைய செந்திற்
கரிமுகவன் இளைய கந்தப்
92
மயில் மீதே டனதனாலே மணநாறும் தருள்வாயே டெறிவோனே
குலகாலா பெருளோனே பெருமாளே
ராகம் :- ஆரபி
எழில்நீறும் மழுமானும் முடிமீதே
குருநாதா முனிவோனே நலியாதே வரவேணும் பெருமாளே
ராகம் :- ஹராசேனி
கயர்வாகி
துழலாதே கடல்மூழ்கி தருவாயே தினைகாவல்
தனைவோனே பதிவாழ்வே பெருமாளே.

தலம் :- சுவாமிமலை ராகம் - யமன் தாளம் :- ஆதி
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புகழுரைக்குஞ் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்கு
தளத்துட னடக்குங் கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.
தலம் :- பொது ராகம் :- பீம்ப்ளாஸ்
தாளம் :- திஸ்ரஏகம்
அதலசேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள DG0). I மதுர வாணி தானாட மலரில் வேததனாராட
மருவு வானு ளோராட மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும் கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால் நீடு
கருதலார்கள் மாசேனை பொடியாகக்
93

Page 77
கதறு காலி போய் மீள விஜய னேறு தேர்மீது
கனக வேதகோடுதி அலைமோதும் உததி மீதி லோசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே தலம் :- பழமுதிர்சோலை ராகம் :- மனோலயம் தாளம் :- ஆதி
வாதினை யடர்ந்தவேல் விழியர் தங்கள்
மாயம தொழிந்து தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதமணிந்து Lu GoofGuu G36Ar ஆதியொடு மந்தமாகிய நலங்கள்
ஆறுமுக மென்று கொண்ட ஆனதனி மாந்த்ர ரூபநிலை
தாடுமயி லென்ப தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானில மலைந்து திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்று பெருமாளே
தலம் :- பொது ராகம் :- மோகனம் தாளம் :- ஆதி
பக்கரைவி சித்ரமணி பொற்கலனை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரகூடிதரு
சிற்றடிடியு முற்றியப னிரு தோளும் செய்ப்பதியும் வைத்துயலர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
94

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை
யிளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை
தனிமூலம்
மிக்க அடி சிற்கடலை பசுஷ்ணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனு
மருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய
தலம் :- விராலிமலை தாளம் :- ஆதி
மாலாசை கோப மோயதெ நாளு
மாயா விகார
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு
நாலான வேதநூலாக மாதி நானோதி லேனு
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச
பாலா கலார ஆமோதலேப
பாடீர வாக பாதாள பூதி யாதார மீன
பானிய மேலை
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர்
95
பெருமாளே.
Unreso - sisturro
வழியேசெல்
மினிநீயே
மிலைவீணே
மருள்வாயே
அணி மீதே
வயலுாரா
பதிசேயே
பெருமாளே.

Page 78
தலம் :- திருத்தணிகை தாளம் :- முச்ரசாப்தா
நிலையாதசமுத்திர மான
சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமான தெனப்பல பேசி
நெடுநாளு முழைப்புள தாகி
பெரியோர்க ளிடக்கர வாகி நிளைவால்நி னடித்தொழில் பேணி
தலையான வுடற்பிணி யூறி
பவநோயி னலைப்பல வேகி சலமான பயித்திய மாகி
தவியாமல் பிற்பபையு நாடி
யதுவேரை யறுத்துனை யோதி தலமீதில் பிழைத்திட வேநி
கலியான சுபுத்திர னாக
குறமாது தனக்குவி நோத கவினாரு புயத்திலு லாவி
களிகூரு முனைத்துணை தேடு
மடியேனை சுகப்பட வேவை
கடனாகு மிதுக்கன மாகு
பலகாலு முனைத்தொழு வோர்கள்
மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ
பதியான திருத்தணி மேவு
சிவலோக ம்ெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத
96
ராகம் :- முகாரி
யதனுாடே
துதியாமல்
தடுமாறித்
னருள்தாராய்
விளையாடிக்
முருகோனே
அருள்வேளே
பெருமாளே.

தலம் :- பழநி தாளம் :- திஸ்ரநடை / ஆதி
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும்
தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய
கமல விமல மரக தமனி
கனக மருவு சருதஅருளி யெனது தனிமை
கழிய அறிவு
குமர சமர முருக பரம
குலவு பழநி
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி
அமர ரிடரு மவுன ருடலு மழிய அமர்செய்
அறமு நிறம மயில மயிலு
மழகு முடைய
தலம் :- வள்ளியூர் தாளம் :- ஆதி
அல்லில் நேருமி
அல்ல தாகிய கல்லி னேர அ
கையு நானுமு சொல்லி நேர்படு
தொய்ய வூர்கெட வல்ல மாரிரு
வள்ளி யூருறை
97
ராகம் :- கல்யாணி
அயலாகத்
எறியாதே
மிரு பாதங்
தரவேணும்
மலையோனே
DGGG
தருள்வோனே
பெருமளே
ராகம் :- சாருமதி
னதுதானும் உடல் மாயை வழிதோறுங் லையலாமோ முதுகுரர் விடும்வேலா
புறமாக பெருமாளே

Page 79
தலம் :- திருவண்ணாமலை தாளம் :- ஆதி
அமுதமுறுசொ லாகிய தோகையர்
ராகம் :- சிந்துபைரவி
பொருளு ளாரையெ னானையு னாணையெ
னருகு வீடிது தானதில் வாரு மெ அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
னுரை கூறும்
அவர்கள் மாயைப டாமல் கெடாமல்நி னருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேஸ்வரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி கொடிய சூலிசு டாரணி யாமளி
குறளு ரூபமு ராரி சகோதரி
யுலக தாரி உதாரி பராபரி
குருப ராரிவி காரி நமோகரி
சமர நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரணி
சலில மாரிசி வாயம னோகரி
சவுரிவீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
சகல வேதமு மாயின தாயுமை
திழித மாடுசு ராரிநி சாசரர்
முடிக டோறுக டாவியி டேயொரு சிலப சாசுகு னாலிநி னாமுண
திருவு லாவுசொ ணேசர ணாமலை
முகிலு வாவுவி மானந வோநிலை சிகர மீதுகு லாவியு லாவிய
98
மகமாயி
அபிராமி
பரையோகி
யருள்பாலா
விடும்வேலா
பெருமாளே.

கந்தரநுபூதி
ժունւկ
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவோம்.
நூல் ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா வருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியானை சகோதரனே
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீ யலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே.
வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடம் தானோ பொருளா வதுசணி முகனே.
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனும் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழசூ ருரமுங் கிரியுந் தொளைபட்டுருவத் தொடுவே வலனே.
மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே.
99

Page 80
திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்தமரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தனியா வதிமோக தயா பரனே.
கெடுவாய் மனனே கதிகேள் கரவா இடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் கடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே.
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டுசல் படும் பரிசென் றொழிவேன் தட்டு டறவேல் சயிலத் தெறியும் நிட்டூர நிராகுல நிர்ப் பயனே.
கார்மா மிசைகா லண்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தர்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே
கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.
செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவாண்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.
OO
O
II
12

முருகன் தனிவேல் முனிநங் குருவென் அருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் றொளியன் றெனநின் றதுவே.
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய் மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம் ஐவாய் வழி செல்லு மவாவினையே.
முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் பொரு புங் கவரும் புவியும் பரவுங் குரு புங்கவ எண்குண பஞ்சரனே.
பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோரா வினையே ஒழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந் தரேனே.
யாமோதிய கல்வியு மெம் மறிவுந் தாமே பெற வேலவர் தந்ததனாற் பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர் நாமே னடவீர் நடவீ ரினியே.
உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா வநகா வபயா வமரா பதிகா வலகுர பயங் கரனே.
வடவுந் தனமும் மனமுங் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியந் தமிலா அயில்வே லரசே மிடியென்றொரு பாவி வெளிப் படினே
O
丑ö
14
5
16
17
18
19

Page 81
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன் உரிதா வுபதேச முணர்த் தியவா விரிதாரன விக்ரம வேளிமையோர் புரிதா ரக நாக புரந்தரனே.
கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள் வனசந் தர என் றிசைவாய் வரதா முருகா மயில்வா கனனே விரதா கரகுர விபாட னனே.
காளைக் குமரேச னெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைக் குழல் வள்ளி பதம்பணியும் வேளைச் சுரபூபதி மேரு வையே.
அடியைக் குறியா தறியா மையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூ தரனே.
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும் போர்வேல புரந்தர பூப தியே.
மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றிய சேவகனே.
ஆதார மிலே னருளைப் பெறவே நீதா னொரு சற்று நினைந்திலையே வேதாகம ஞான வினோ தமனோ தீதா சுரலோக சிகா மணியே
O2
2O
21
22
28
24
25
26

மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயி லேறிய வானவனே.
ஆனா அமுதேஅயில்வே லரசே ஞானா கரனே நவிலத் தகுமோ யானாகிய வென்னை விழுங்கி வெறுந் தானாய் நிலைநின் றதுதற் பரமே.
இல்லே யெனுமா யையி லிட்டனை நீ பொல்லே னறியாமை பொறுத் திலையே மல்லே புரி பன்னிரு வாகுவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.
செல்வா னுருவிற் றிகழ்வே லவனன் றொவிவா ததென வுணர்வித் ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வா யென என்னை விதித்தனையே தாழ்வா னவைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே.
கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலை கூறிடு வாகையனே.
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென்று விடப் பெறுவேன் மந்தா கினிதந்தவரோ தயனே கந்தா முருகா கருணா கரனே.
O3
27
28
29
3O
31
32
33

Page 82
சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காம லெனக்கு வரந் தருவாய் சங்க்ராம சிகா வலசணர் முகனே கங்கா நதி பால க்ருபாகரனே.
விதிகாணு முடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய் மதிவா னுதல்வள் விரியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே.
நாதா குமரா நமவென் றரனார் ஒதா யெனவோ தியதெப் பொருள்தான் வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே.
கிரிவாய் விடுவிக் ரம வேளிமையோர் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியோடு மகந் தையையே.
ஆதாளியை யொன் றறியே னையளத் தீதாளியை யாண் டதுசெப் புமதோ கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.
மாவேழி சனனங் கெடமா கையவிடா மூவேடணை யென்று முடிந் திடுமோ கோவே குறமின் கொடிதோள் புணருந் தேவே சிவ சங்கர தேசிகனே.
வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ சுனையோ டருவித் துறையோடு பசுந் தினையோ டிதனோடு திரிந் தவனே.
104
34
3:5
36
37
3&
39
40

சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கண்னே யோகா சிவஞா னொபதேசிகனே.
குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த் திடலுஞ் செறிவற் றுலகோ டுரை சிந் தையுமற் றறிவற் றறியா மையு மற்றதுவே.
தூகா மணியுந் துகிலும் புனைவாள் தேசா முருகா நினதன் பருளால் ஆகா நிகளந் துகளா யினைபின் பேசா அநுபூதி பிறந்த துவே.
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுச் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே.
கரவா கியகல்வி யுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளி குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சியோக தயா பரனே.
எந்தாயுமெனக் கருள்தந் தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையாள் மைந்தா குமரா மறைநா யகனே.
ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப் பேறா வடியேன் பெறுமா றுளதோ சீறா வருசூர் சிதைவித் திமையோர் கூறா வுலகங் குளிர்வித் தவனே.
105
41
42
43
44
45
46
47

Page 83
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற் பறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய வெறிவென்றவ ரோடுறும் வேலவனே
தன்னந் ததனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் கனையும் க்ருபசூைழ் சுடரே
மதிகெட்டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத் திர ஞான சுகா திபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே
உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மரலாய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவா யருள்வாய் குகனே
வாழதது
திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகர சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர விண்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி ஏவலும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள் மரலடி போற்றி யன்னான் சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி
மல்குக தேவ வேள்வி வழங்குக சுரந்து வானம் பல்குக வளங்கலெங்கும் பரவுக அறங்கள் இன்பம் நல்குக உயிர்கட்கெல்லாம் நான் மறைச் சைவம் ஓங்கிப் புல்குக உலகமெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க !
O6
48
49
50
51

இம்மலர் செயலுருப் பெறுவதற்கு உதவிய
புரவலர்களின் வர்த்தக நிறுவனங்கள்
தெக்ஷணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சங்கம் லிமிட்டெட்
S.S.MOTORS
VTV. DEIVANAYAGAM PILLAI&CO.
RAJA STORES
K.P KALIYAPPA PILLAI& SON’S LTD
THE COLOMBO GROCERIES GANESHAN&COMPANY
RAJANLIVERPOOL NAVIGATION(PVT) LTD
SRI VANI VILAS HOTEL WOODLAND'S COMPANY GNANAM IMPORTS (PVT) LTD S.DEVANANDAN DEVITRADING CO T. NADESAN & FAMILY SANAGA TRADERS RAJ INTERNATIONAL SRI THIRUPPATHY PVT LTD S.R.AGENCEY
T. M. AVUDALAPPA PILLAI NEW NIRMALA TRADERS RAMCCO TRADERS V. MANICKAM 8. BRO ARASAN UNITED TRTERS LUXURY TRADING CO SIVASAKTHY STORES İSMAİLİYA
DURGAOIL STORES GANESH TEXTILES (PVT) LTD
136, PancikaWatta Rod Co-10 37, 5th Cross St, Co-l 54, 4th Cross St, Co-ll 263, Sea St, CO-11 52, 4th Cross St, Co-l 164, 4th Cross St, Co-ll 320 1/3 Galle Road Co-3 256, Messenger St, Co-12 192, 4th Cross St, Co-ll 79 5 th Cross St Col - 1 li
6O 4th Cross St Co - 1
72 4th Cross St, Co ll
23/20 Sea St, Co -ll 130 4th Cross St, Co -11
177/5 Sea St, Col - l l
80, 4th Cross St, Co - ll 4th Cross St, Co -ll 34, 4th Crosst Co -ll.
72A 4th Cross St Co
1784 th Cross St Co -11 Keyzeer St Co -ll 153 4th Cross St, Co -ll 225 Central Road Co - ll 81 83 Main St CO -

Page 84
RANJANASTORES RAM BROS
DURO PIPE IND LTD
LOGANATHAN
AMICO ENTERPRISE
KAJALUXME TRADE CENTRE
M.T.R SON’S
KSELLADURAI & CO
SANMUGA AG
RAMSETHU & CO
GEORGE & COMPANY (PVT) LTD
S.P.S AGENCY
NAGINDA TRADERS
SHREEVIISNU ASSICCILATES
RUPA TRADING PVT LTD
SUNTRADERS
TRAD LANKA
NEWELYS
GAMINE TRADE CENTRE
WECLIGAMA STORIES
NAVEEN STORSS
K. MUTHALAH
KAVICO TRADERS
NATHAN & BRO'S
SIVASHANMUGARAJAH & CO
GAYATHIRI IMPEX
NEW LUXME TRADE CENTRE
MENAN TRADING CO
MALAWANS SAKTHI ENTERPRISES L. SOMASUNDARAM
127 Main Street Co -11 140 Main St Co - 11 200 Main St Co - 11 307 George De Silva Mw Co-13 190 St, Joseph St Co - 14
31 4th Cross St CO - ll
27 4th Cross St Co -11
4O 4th Cross St Co -
39 4th Cross St CO - 1
45 4th Cross St CO - 65 4th Cross St Co -ll
76 4th CrOSS St CO 11
l3 4th Cross St Co -ll
17 4th Cross St CO -ll
4th Cross St Co
4th Cross St CO - ll
735th CrOSS St CO -11
14 5th Cross St Co -ll
141 4th Cross St CO - 11
l4l Maliban St Co -ll
4th Cross St Co -11
149 Maliban St. Co -ll
64/83 Sangamitha Co — 13 189 Key St Co -ll
1974th Crosst St CO -
45 4th Cross St CO-ll
151/1 Maliban St Co - ll
144 Maliban St CO -
82 4th Cross St CO - ll
4th Cross St Co - 1
14l D4 New Chettiy St, Co. -ll

ஸ்வர்ண மஹோற்சவத்தின் இம்மலரை நூல் வடிவமாக்க பெரிதும் துணைபுரிந்த ஆலய நிர்வாகத்தைச் சார்ந்த பெரியோர்கள் ஆசிச்செய்திகளை அனுப்பி எங்களை அன்புடனும் உரிய கருத்துக்களைக் கூறி ஊக்கம்தந்த பீடாதிபதிகள், குருமஹா சந்நிதானங்கள், அருட்துறவிகள், கவிதை, கட்டுரை வரைந்த அறிஞர்கள், அம்மலரை மலரச்செய்த புரவலர் பெருமக்கள், அச்சக உரிமையாளர், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தி, இறைவனின் திருப்பாதங்களுக்கு இம்மலரை சமர்ப்பணம் செய்கிறோம்.
இறைபணியில் திருஞான சம்பந்த கான சபா தொண்டர்கள்

Page 85


Page 86