கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்புமலர் 2003

Page 1
வீடமைப்பு, பெருந்
அமைச்சின் மத்திய மாகா6
ܒܫܒܬT ܦܥܬ sܒE_estr
ORLD BINDU confeRENCE souvenir
,,NھیN ܪ ܐ, ܢ¬
క్ట్మోక్కిక్టో 1 ܐܚܝܢܝܓ ̄ ܕ
○>
تينية ينجحة
جميتيتي
 

தோட்ட உட்கட்டமைப்பு அனுசரணையுடன் ணக் கல்வி, இந்துக் ார அமைச்சு

Page 2


Page 3
மத்திய இந்து மாநாட்
2.
LD6)ft கலாநிதி துை
வீடமைப்பு, பெருந்தோட்ட
8 அனுசர
மத்திய மாகாணக்
அமைச்சு
 

| Il DIT TE BI. T620), T
டுச் சிறப்புமலர்
OO3
ஆசிரியர் Dr. DG6OTITabrar
உட்கட்டமைப்பு அமைச்சின் ணையுடன் கல்வி, இந்துக்கலாசார

Page 4
வேண்ருவி
ஜதி லுறுதி வே வரிக்கினிலே யினி நின்ைவு நல்லது நெருங்கின பொரு கனவு மெய்ப்பட ( கைவ்சமாவது வின் தன்மு மின்பமும் தானியிலே பெருை
கண் திறந்திடவே6 காரியத்திலுறுதி ே பெண் விடுதலை
பெரிய கடவுள் க மண் பயனுறவேண வானகமிங்கு தென உண்மை நின்றிட ஓம் ஓம் ஓம் ஓம்.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

60
ண்டும்
மை வேண்டும் வேண்டும் ள் கைப்பட வேண்டும் வேண்டும் ரைவில் வேண்டும் வேண்டும் DOLD (86u6OõTG6Lib
ண்டும்
வண்டும்
வேண்டும்
ாக்கவேண்டும்
ர்டும்
ர்பட வேண்டும்
வேண்டும்
-மகாகவி பாரதியார்
ހ............

Page 5
சுவாமி ஆ
c 26)
வாழதது
இந்து சமய அலுவல்கள் அ உலக இந்து மாநாட்டின் நிறைவு
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
அவர்களது அனுசரணையில் மதி
ஏற்பாட்டின் கீழ் நுவரெலியா நச விழா சிறப்புடன் அமைய வாழ்த்து
இன்று நவீன விஞ்ஞானம் மன பலமடங்கு உயர்த்தியுள்ளது உ கவலைகளை முற்றிலும் போக்கி, ட அளிக்கும் வல்லமையோ அல்ல! என்பதும் உண்மையே. விஞ்ஞானி சமயத்தின் மூலமே இவ்வுலகம் ெ அருளும் ஒருங்கே அமைந்த நிை சமயத்திற்கு மட்டுமே உண்டு அத்த வாழையடி வாழையெனத் தொட பெருமை இந்து சமயத்திற்கு மட் உள்ளார்ந்த ஆன்மீக சக்தியைக்
ஆனால், இன்று வசதி படைத் நாட்டு நாகரிக மோக வலையில் சமயத்தை ஆணவத்துடன் பின் போதாதென்று எமது பாமர மக்களு நிலையில் இந்துசமய எதிர்ப்புப் பிர உள்ளனர். இத்தகைய காலச் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புப் இரண்டாவது உலக இந்து மாநாடு ஐயமில்லை.
இரண்டாவது இந்து மாநா செய்ய முனைந்திருக்கும் விழா ஏ நிறைந்த நல்வாழ்த்துக்களைத் திெ
சுவாமி ஆத்மகனானந்தா இராமகிருஷ்ண மிஷன்
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

தீமகனானந்தா ர்களது ச் செய்தி
மைச்சு ஏற்பாடு செய்துள்ள இரண்டாம் விழா, எதிர்வரும் மே 6ம் தேதியன்று கெளரவ ஆறுமுகம் தொண்டமான் ந்திய மாகாண கல்வி அமைச்சின் கரில் நடைபெற இருப்பதாக அறிந்து வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
ரிதனது பெளதீக வாழ்க்கைத் தரத்தைப் ண்மையாயினும், மனிதனது மனக் மனநிறைவையும் மன அமைதியையும் து உபாயமோ அதனிடம் இல்லை. எம் அளிக்க இயலாத அமைதியை பற்று வருகிறது. அன்பும் அமைதியும் றைமாந்தர்களைப் படைத்த பெருமை கைய அருளாளர்களைக் கணக்கின்றி டர்ந்து படைத்துக் கொண்டிருக்கும் ட்டுமே உண்டு. இது இச்சமயத்தின் காட்டுவதாக உள்ளது.
நத இந்துக்களில் பெரும்பானோர்மேலை
வீழ்ந்ததன் காரணத்தினால், தமது பற்றத் தவறி வருகின்றனர். இது ம் போதிய சமய வழிகாட்டல் இல்லாத சாரங்களினால் குழம்பிய நிலையில் சூழலில், எமது மக்களின் சமய ) நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
மிகவும் வரவேற்கத்தக்கது என்பதில்
ட்டின் நிறைவு விழாவின் சிறப்பாகச் ற்பாட்டுக் குழுவினருக்கு எமது மனம் நரிவித்துக் கொள்கிறோம்.
ii

Page 6
இலங்கைச் சனா வாழதது
இரண்டாவது உலக இந்து மலருக்கு வாழ்த்துச் செய்தியை அ அடைகிறேன்.
புராதன காலத்திலிருந்து பெ ஒருமித்துச் செயற்பட்டு வந்துள்ளை யான பன்முகக் கலாசாரத்தை வள அதனது தனித்துவப் பாரம்பரியங்களு இலக்கியம், கலை, மற்றும் சமய அனு ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையின் புராதன மன் அரசவையில் பிராமண புரொகிதர் உருவாக்கதிலும், கலாசார, அரசி பெளத்தம், இந்துமதம் ஆகியவற்றின் தெளிவான பார்வையை அவர்கள் ( பரியச் சொத்துக்கள் பற்றி நாம் ெ எஸ். டுபிள்யூ.ஆர்.டி பண்டார நாயக் குழு, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக சமர்ப்பித்த தனது அறிக்கையில் இ படவேண்டும் எனத் தெரிவித்துள்ள கட்டத்தில் தொடர்ந்து வந்த அரசுக அம்சம் ஏற்கப்பட்டு, நடைமுறைப்ப(
இரண்டாவது உலக இந் அம்சங்களுக்குப் புத்துயிரூட்டி வளர் நான் உணர்கிறேன். இந்துமதக் கே பேணுவதையும் மனிதவுரிமைகளை கொண்டுள்ளன என நான் கருதுகின
இம்மாநாட்டின் நடவடிக்கை வளர்த்தெடுப்பதோடு, இலங்கையில் ஒற்றுமையைப் பேணும் என்பது எனது
சந்திரிக்கா பண்டாரநாயக்க கு
சனாதிபதி
மத்திய மாகான இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

திபதி அவர்களின் di GeFuig5
மாநாட்டில் வெளியிட்டுள்ள சிறப்பு அனுப்புவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி
|ளத்தமும் இந்துமதமும் நெருக்கமாக மயால் இலங்கையில் ஓர் உண்மை ார்த்தெடுக்க முடிந்தது. இந்துமதமும் ம் இலங்கையின் சமூகச் கட்டுமானம், |ட்டானங்கள் மீது ஆழமான தாக்கத்தை
னர்களிற் பெரும்பாலோனோர் தமது களைக் கொண்டிருந்தனர். சமுதாய பல் நிறுவனங்களின் வளர்ச்சியிலும்
மதிப்பார்ந்த இயல்புகள் தொடர்பாகத் கொண்டிருந்தனர். எங்களது இப்பாரம் பருமிதம் அடையவேண்டும். பிரதமர் கவினால் நியமிக்கப்பட்ட புத்தசாசனக் 5ளுக்கு முன்னர் அரசாங்கத்திற்குச் Nந்து மதமும் அரசினால் ஆதரிக்கப் து. சுதந்திரத்திற்கும் பிந்திய கால 5ளால் அத்தகவுரையின் உள்ளார்ந்த டுத்தப்பட்டது.
து மாநாடு இந்துமத அடிப்படை
ர்க்கும் நோக்குடன் கூடுகின்றது என
ாட்பாடுகள் பரஸ்பரப் புரிந்துணர்வைப் வளர்த்தெடுப்பதையும் நோக்கமாகக் ர்றேன்.
ககள் அத்தகைய சிறப்பம்சங்களை எல்லா இனங்களிடையேயும் மத, இன அக்கறையுடனான நம்பிக்கையாகும்.
ம்ாரதுங்க
iii

Page 7
இலங்கைப் பிரத வாழ்த்துச்
இலங்கையில் நடைபெறும் தொடர்பாக வெளியிடப்படும் சிறப்ட வழங்குவதில் நான் மகிழ்வடைகிே
நீண்ட காலமாகப் பெளத்தி கலாசாரத்தை வளர்த்தெடுப்பதில் ஏதிர்காலத்திலும் இந்நாட்டின் டெ சிறந்த பங்களிப்பை வழங்கமுடியும்
எமது அரசு நாட்டில் இ வளர்ப்பதில் அயராது பாடுபட்டு நல்லுறவைப் பேணுவதில் மதங்க முடியும். இத்தகைய ஒற்றுமையுண மாகாணத்தில் இடம்பெறும் உல சிறப்பு விழாவும் கவனம் செலுத்து
மாநாட்டின் நோக்கங்களும்
இன மத ஒற்றுமை இந்நாட்டில் த
ரணில் விக்ரமசிங்கா பிரதம மந்திரி
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்புமணி 20T

மர் அவர்களின்
செய்தி
இரண்டாவது உலக மாநாடு மலருக்கு வாழ்த்துச் செய்தியை றன்.
தமும், இந்துமதமும் இந்நாட்டின் பெரும்பங்கு ஆற்றி வந்துள்ளன. ருமையைப் பேணுவதில் அவை ) என்பது எனது நம்பிக்கையாகும்.
னங்களுக்கிடையே நல்லுறவை S உழைக்கின்றது. இத்தகைய ளும் பெரும் பங்களிப்பை நல்க ார்வை வளர்த்தெடுப்பதில் மத்திய க இந்து மாநாட்டு தொடர்பான Iம் என எதிர்ப்பார்க்கிறேன்.
, முயற்சிகளும் வெற்றி பெறவும், ழைக்கவும் எனது வாழ்த்துக்களி.!
W

Page 8
அமைச்சர் தி. மகே வாழதது
இரண்டு தசாப்தங்களுக்குப் மாநாடு ஒன்றினை வருகிற மே நடத்துவதற்கு எமது அமைச்சுத் தி 5ஆம் திகதி வரை வரலாற்றில் கொழும்பிலும், பிராந்திய ரீதியா வெகுவிமரிசையாகக் கொண்டாடப களினதும் இந்து மக்களினதும் ஒத்து செய்துகொண்டிருந்தவேளை, மலைந போன்றே சிறப்பாக 2ஆவது உலக வேண்டும் என்ற கோரிக்கையி உட்கட்டமைப்பு அமைச்சர் மாண்புப அவர்கள் விடுத்தார்.
அமைச்சர் தொண்டமான் அவ மகிழ்ச்சியைக் கொடுத்தது.வடகிழக கடைப்பிடித்தொழுகும் மக்கள் செறிந் விளங்கும் நுவரெலியாவில் இம்மாந மாதம் 6ஆம் திகதி நடாத்துவதெ முன்னோடியாக 3ஆம் திகதி மாத்தை 4ஆம் திகதி கண்டி இந்துக்கலா பதுளையிலும், மாநாட்டுக் கரு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. தலைமையில் மத்திய மாகாண இராதாகிருஷ்ணன் எல்லா ஏற்ப கொண்டுள்ளார்கள், மிகக் கோலாகல நான் பூரிப்படைகிறேன். மலையகத்தி இந்தியக் கலைஞர்களும், அறி மலையகத்தில் பாடசாலை மாணவர்க ஆயிரக்கணக்கில் அணிதிரள்வா விழாக்கோலம் கொள்கின்றது.
ஆதியும் அந்தமும் இல்லா மலையகம் எங்கும் தழைத்தோங்குவ ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் மலையகம் வரலாறு படைக்க என்
தி. மகேஸ்வரன், பா. உ இந்து சமய விவகார அலுவல்கள் அ
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

ஸ்வரன் அவர்களின் ச் செய்தி
பின்னர் உலகளாவிய ரீதியில் இந்து மாதம் முதல் வாரம் இலங்கையில் ர்மானித்து. மே 2ஆம் திகதி முதல்
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு க வடகிழக்கிலும் மலையகத்திலும் டுகிறது. பல்வேறு இந்து நிறுவனங் ழைப்புடன் வேண்டிய ஒழுங்குகளைச் ாட்டில் இவ்விழாவினைத் தலை நகரைப் இந்து மகாநாட்டின் ஓரங்கமாக நடத்த னை வீடமைப்பு, பெருந் தோட்ட மிகு ஆறுமுகம் தொண்டமான், பா.உ
ர்களின் கோரிக்கை எமக்கு எதிர்பாராத க்கைப் போன்று இந்து சமயத்தைக் து வாழும் மலையகத்தின் கோபுரமாக ாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சிகளை மே னத் தீர்மானிக்கப் பட்டது. அதற்கு 1ள பூரீ முத்துமாரி அம்மன் கோயிலிலும் ாசார மண்டபத்திலும் 5ஆம் திகதி த்தரங்குகளும், சிறப்புக் கலாசார அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் ாக் கல்வி அமைச்சர் திரு. வி. ாடுகளையும் வெகுசிறப்பாக மேற் )மாக இம்மாநாடு நடைபெறுவது கண்டு Iல் நடைபெறும் மாநாட்டில் புகழ்ப்பூத்த ஞர்களும் கலந்து கொள்வார்கள், ளும் பெருந்தோட்டத் தொழிலாளிகளும் ர்கள். மலையகம் எங்கும் பெரு
இறைவனைப் போற்றும் இந்துமதம் தற்கு உறுதுணையாகவுள்ள மாநாட்டு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய வாழ்த்துக்கள்.
|மைச்சர்

Page 9
அமைச்சர் ஆறுமு அவர்
வாழ்த்து
இந்துமதத் தொன்மைகள் மோலோங்கி வருகின்ற இந்த வேளை அதன் விழுமியச் சிறப்புக்களையுட இரண்டாவது உலக இந்து மாநாடு, பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
‘மேன்மைகொள் சைவநிதி வாக்குக்கமைய, இந்த அரும்பணி வீடமைப்பு, பெருந்தோட்ட உட்கட் குறிப்பாக மலையத்தில் இம் மாநாட் எமக்கு வழங்கிய சந்தர்ப்பமும் பெ
நாடளாவியரீதியில் வாழும் இணைக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட6ே இந்த அவசியத்தை உணர்ந்து இ இந்து சமயத்தின் எதிர்காலச் சிறப் என்பதில் உள்ளம் மகிழ்வதோடு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொ
ஆறுமுகன் தொண்டமான் பா. 3 வீடமைப்பு, பெருந்தோட்ட உட்கட்டை தலைவர், பொதுச் செயலாளர் இ.தெ
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

கம் தொண்டமான் களின் d6ll
அருகிவருவதோடு மத மாற்றங்கள் யில், இந்துமதப் பாரம்பரியங்களையும் ம் முன்னெடுக்கும் நோக்கத்தோடு, இலங்கையில் நடைபெறுவதையிட்டு
விளங்குக உலகமெல்லாம்” என்ற யைச் சிறப்பாகச் செய்து முடிக்க டமைப்பு அமைச்சு பங்கேற்பதுவும், டின் இறுதிநாள் நிகழ்ச்சிகளை நடத்த ருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்துக்கள் இந்த மாநாட்டின் மூலம்
வண்டியது காலத்தின் தேவையாகும்.
ப்பாரிய பணி மேற்கொள்ளப்பட்டது.
பிற்கு வித்திட்ட சிறந்த பணியாகும். இம் மாநாடு வெற்றி பெற என்
ாள்கிறேன்.
2-.
மப்பு அமைச்சர்
T. EST.

Page 10
அமைச்சர் வே. இராத வாழ்த்து
சைவம், வைணவம் சாக்தம், ஆகிய ஆறு பிரிவுகளையும் உள் பழமைவாய்ந்த மதமாகக் காணப்படு காணப்படுவதும் கண்கூடு. எனவே தொன்மை, ஆழம் என்பவற்றைப் பி உலக இந்து மாநாடு இம்முறை நடத்துவதையிட்டும், இறுதிநாள் வை. யாவில் வெகு விமரிசையாக எமது அதற்கு ஆசிச்செய்தி எழுதுவதையி
இவ் இரண்டாம் உலக இந் களின் ஊர்வலமும், இந்து நிறுவனங் புத்தக வெளியீடுகள், மற்றும் இந் பரியங்களைப் பிரதிபலிக்கும் இந்திய உள்நாட்டுக் கலைஞர்களின் இசை, ந உள்ளமை இம்மாநாட்டின் சிறப்பம் மகுடம் சூட்டும் வகையில் இந்துமத தலைமுறையினருக்கு அறிவுறுத் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகுப்
உலகலாவிய இந்துக்களை நடைபெறும் இம்மாநாடு சிறப்புடன் நி கிடைப்பதாக, இம்மாநாடு சிறப்புற உ எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் 'இந்துவாக வாழ்வோம்
வே. இராதாகிருஷ்ணன் அமைச்சர்
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

கிருஷ்ணன் அவர்களது ச் செய்தி
காணாபத்தியம், செளரம், கெளமாரம் ளடக்கிய இந்து மதமானது மிகவும் வதுடன், எல்லா நாடுகளிலும் பரவிக் 1, பெருமைவாய்ந்த இந்துமதத்தின் ரதிபலிக்கும் வகையில் இரண்டாவது இலங்கையில் கொழுமபு மாநகரில் பவம் 06.05.2003 ஆம் திகதி நுவரெலி அமைச்சால் நடத்தப்படுவதையிட்டும், ட்டும் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
து மாநாட்டில் பாடசாலை மாணவர் களின் ஊர்திகளும் இடம்பெறுவதுடன், துக்களின் கலை கலாசாரப் பாரம் க் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், நடன, நாட்டிய நிகழ்ச்சிகளும் இடம்பெற சமாகும். இவை எல்லா வற்றிற்கும்
தத்துவம், மரபு என்பவற்றை இளைய தும் வகையில் கருத்தரங்குகளும்
2.
மதத்தால் ஒன்று சேர்க்கும் வகையில் றைவேற எல்லாம் வல்ல இறைவனருள் ழைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும்
தெரிவித்துக் கொள்கிறேன். இந்து தர்மம் காப்போம்”
vi

Page 11
செயலாளர் விஜித
அவர் வாழ்த்து
இரண்டாவது உலக இந்து அலுவல்கள் அமைச்சுடன் இனை நகரில் நடத்த ஏற்பாடு செய்துள்ள வழங்குவதில் நான் மிகவும் மகிழ்
இந்து மதமும் பெளத்த தொடர்புகளைக் கொண்டுள்ளன. கருணை, காருண்யம், புரிந்து போதிக்கின்றன. இதனை உணர்ந் கொடுத்துப் புரிந்துணர்வுடனும் மற் நடப்போமாயின் நாட்டின் ஒற்றுமை பாரிய பங்களிப்பை நல்கியவர்கள
எனவே, இதுபோன்ற சந்தர் சிந்தனைகளைத் தூண்டி நலன் பெற இவ்விழா எல்லா வகையிலும் வெ
விஜித பண்டார ஏக்கநாயக்க செயலாளர் மத்திய மாகாணக் கல்வி, கைத்ெ
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

பண்டார ஏக்கநாயக்க ர்களின் துச் செய்தி
து மாநாட்டை முன்னிட்டுக் கலாசார ணந்து, எமது அமைச்சு நுவரெலியா இவ்விழாவுக்கு வாழ்த்துச் செய்தியை ச்சி அடைகிறேன்.
மதமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய
அவை உலக மக்களுக்கு அன்பு, ணர்வு போன்ற நற்குணங்களைப் து நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் றவர்களின் நம்பிக்கைகளை மதித்தும் D, சாந்தி, சமாதானம், சுபீட்சத்துக்குப் Tr(6hTib.
ப்பத்தில் மலையக மக்களதும் சமயச்
றக் கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பற்றிபெற வாழ்த்துகின்றேன்.
தாழில் அமைச்சு
vii

Page 12
Prajapita Brahma | Wish Wia W MESS
Congratulations, warmest ofg Respected Conveners ofthe 2nd World emony, to the Honorable Speakers and th this Conference a great success.
In the world today, there is nota: and love is notheard. This is the delicate for Peace is heard more and more within being because Peace in our true original justmirage-something weknow yetinot jungle offamily, responsibility and the hi
Spirituality is the key to finding sibility to the self, family and the world. ness and love involvesadiscovery of the the inner spiritual energy is revived and p but also can successfully use our peacef
The 2nd World Hindu Conferen for Peace” has in fact awakened the pe has reminded people of the many experience God's peace, love and onene the barriers that divideus and our visio)
It is my purest wish that eac relationship with God. It is also my pur profound peace within and amongstyou which there is a place for everyone and is where the heartis. Letyour heartbev
On Godly service,
BKHridaya Mohini Joint Chief of Brahma Kumaris
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Kumaris shvvariya Widyalaya SAGE
eetings and highest good wishes to the Hindu Conference Conclusion Cere Distinguished Guests, who have made
single nation, where the prayerfor peace era of violence and pain. Thus the Call the deep inner recessesofevery human nature. But in reality, Peace has become tangible. People have become lostinthe tech world.
theartofbalanceinfulfillingtheresponReturning to our original state ofhappibasichuman and spiritual values. When lurified, we not only empower ourselves ulvibrations to help the world.
ce, with the Theme “Dharma and Quest pple ofthe worldofGod's attributes. It places of worship, have created an ss. With this awareness we overcome all nofaunified world is empowered.
h and everyone of you experience a e wish that you create an atmosphere of rselves. A compassionate heart is one in that is what is called a true home. Home with God and let it belong to everyone.

Page 13
மலரும் இந்த
இந்துக்கள் கோடிக்கணக்கி போதிலும், இலங்கையே உலக இந்: இலங்கையைச் “சிவபூமி” என மு பல்வேறு பிரச்சினைகளுக்கு ம தழைத்தோங்கும் நாடாக இலங்ை இந்து மாநாட்டின் தொடர்நிகழ் ஆய்வரங்குகளும், கலை நிகழ்ச் பெறுகின்றன.
மத்திய மாகாண நிகழ்வுக வீடமைப்பு, பெருந்தோட்ட உட்கட்ட மத்திய மாகாணக் கல்வி, இந்து அமைகிறது.
இச்சிறப்பு மலர் “ஒருமுறை அமையாது, என்றென்றும் பயன்படக் திகழவேண்டும் என்பது எனது விரு இயன்ற முறையில் அவ்வாறே இம்ப இம்மலரில் இடம்பெற்றுள்ள ஆக்கம் சமுதாயம், இலக்கியம், கலை முத6 நெருக்கமான தொடர்புகளை ஆ அமைந்துள்ளது. மூன்று கட்டுரைக கவிஞர்களின் பாடல்களோடு தொடர் ஒரு கட்டுரை திருமந்திரத்தில் அம்சங்களோடு, நடைமுறை வாழ் திருவாதிரை பற்றிய ஒரு கட்டுை தனித்துவத்தை நோக்குகிறது. இந்து பற்றி இரு கட்டுரைகள் பேசுகின்றன. தொடர்புபட்டதாக ஒரு கட்டுரை இலங்கையோடு தொடர்பானவையா மலையகத்தோடு சம்பந்தப்பட்ட6ை பெறுகின்றது. கட்டுரைகளை எழு சேர்ந்த பேராசிரியர். இன்னொருவ மலரின் இறுதியில் மத்திய மாகாண தரப்படுகின்றது. இம்மலரின் அட்டை தொடர்பாக வெளிவந்த சில நூல்க அலங்கரிக்கின்றன.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

மலரைப் பற்றி.
ல் இந்தியாவில் வாழ்ந்துவருகின்ற துமாநாடுகள் இரண்டைக் கண்டுள்ளது. )ன்னோர் மொழிந்தனர். அதற்கேற்ப, த்தியிலும் தமிழும், இந்துமதமும் க திகழ்கிறது. இரண்டாவது உலக வுகளாக மத்திய மாகாணத்திலும் சிகளும், மலர் வெளியீடும் இடம்
களின் ஓரங்கமான இச்சிறப்பு மலர், மைப்பு அமைச்சின் அனுசரணையுடன் க் கலாசார அமைச்சு வெளியீடாக
பார்த்தாலே போதும்” என்ற முறையில் கூடிய பெறுமதி வாய்ந்த ஆவணமாகத் நப்பம். குறுகிய கால அவகாசத்தில், Dலரைக் தயாரிக்க முனைந்துள்ளேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் மியவற்றோடு இந்துமதம் கொண்டுள்ள பூராய்வதாகவும், விளக்குவதாகவும் ள் பக்தியுணர்வுடன் பாடிய பல்வேறு ர்பு கொண்டவையாக விளங்குகின்றன.
கூறப்படும் யோகம் தொடர்பான }வைத் தொடர்புபடுத்த முனைகிறது. ர பல்வேறு கோணங்களில் அதன் துமதத்தோடு தொடர்பான மந்திரங்கள்
பல்லவர் காலக் கலை வரலாற்றோடு
விளங்குகிறது. ஐந்து கட்டுரைகள் க அமைந்துள்ளன. அவற்றுள் நான்கு வ. ஒரு கவிதையும் மலரில் இடம் தியோருள் ஒருவர், தமிழ் நாட்டைச் ர் சிங்கப்பூரைச் சேர்ந்த கல்விமான். இந்துக்கோயில்கள் பற்றிய விபரமும் யை, மத்திய மாகாணத்தில் இந்துமதம் ள், சஞ்சிகைகளின் அட்டைப்படங்கள்

Page 14
உலக இந்துமாநாட்டையொட்டி நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி வழங்கி, முழு ஆதரவையும் அளிக்கும் வீடை அமைச்சர் மாண்புமிகு ஆறுமுகம் அனைவரதும் நன்றிகள் உரித்தாகுக.
இச் சிறப்பு மலரைத் தயாரிக்கு ஒப்படைத்தபோது, இப்பாரிய வேலைை வியப்பு எனக்கு ஏற்பட்டது. ஆயினும், ப6 நான் நிறைவேற்றத் துணிந்தேன். ( செயல்திறனும் கொண்ட மாண்புமிகு அவர்கள், மலர் தயாரிப்பில் பூரண சுத நல்கிய இந்துக் கலாசார அலுவல்க வி. சாந்தகுமார், மற்றும் அமைச்சைச் எனது மனமார்ந்த நன்றிக்கு உரியவர்
எப்போதும் ஒரு மலர், அதனு பெறுமதியும் பொலிவும் பெறுகிறது. அ குறுகிய கால அவகாசத்தில் தமது அனைவருக்கும் நான் மனம் திறந்து பல்வேறு வகைகளிலும் மலர் தயாரிட் எனது மாணவர்களாகிய திரு. இரா. திரித்துவக்கல்லூரி), செல்வி இரா. திரித்துவக்கல்லூரி), திரு. பரா. ரத மாணவன்) ஆகியோருக்கு என் மன திறம்படக் கணினி அச்சுச் செய்துதவி ந. கமலினி ஆகியோருக்கும் எனது சிறந்த முறையில் அச்சுப்பதிவு அச்சகத்தினர்க்கும், அதன் அதிபர் திரு. நன்றிகள். இவர்களோடு, மத்திய மாக ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்று, பங்குபற்றிய குழு உறுப்பினர்களுக்கு
மலர் மணம் வீசவேண்டும் எ போகும் இனிய வாசக நெஞ்சங்களு
தெரிவித்துக் கொள்கிறேன்.
も
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

, மத்திய மாகாணத்தில் நிகழும் அவை சிறப்பாக நடப்பதற்குத் தமது மப்பு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு
தொண்டமான் அவர்களுக்கு எம்
ம் பொறுப்பினை அமைச்சு என்னிடம் யை எவ்வாறு செய்து முடிப்பது என்ற லரின் ஒத்துழைப்புடன் இப்பொறுப்பினை இவ்வகையில் பரந்த மனப்பாங்கும்
அமைச்சர் வே.இராதா கிருஷ்ணன் ந்திரத்தை எனக்களித்து, ஒத்துழைப்பு ள் அமைச்சின் இணைப்பாளர் திரு. சேர்ந்த அலுவலர்கள் அனைவரும் கள்.
|ள் இடம்பெறும் ஆக்கங்களாலேயே வ்வகையில், இம்மலர் சிறப்புற மிகக் ஆக்கங்களை வழங்கி உதவிய து நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். பில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிவலிங்கம் (பிரிவுத்தலைவர். கண்டி சர்மிளாதேவி (ஆசிரியை -கண்டி நீஸ் (பேராதனைப் பல்கலைக்கழக ம் நிறைந்த நன்றிகள். இம்மலரைத் ப செல்விகள் ஜெகநாதன் தமயந்தி, நன்றிகள் உரித்தாகுக. மலரைச் செய்துதவிய கிராபிக் லான்ட் விக்கினேஸ்வரனுக்கும் இதயபூர்வமான காண இந்து மாநாட்டுக் கருத்தரங்கு மலர்பற்றிய கலந்துரையாடல்களிற் ம் நான் நன்றி கூறவேண்டும்.
ன எதிர்பார்க்கிறேன். மலரை நுகரப் க்கும் என் நன்றியை மகிழ்ச்சியுடன்
கலாநிதி துரை மனோகரன்
மலர் ஆசிரியர்

Page 15
வாழ்த்துச் செய்திகள் மலரும் இந்த மலரைப் பற்றி. பட்டினத்தடிகள் அருளிச்செய்த திருப்பாட
பேராசிரியர் க. அருணாசலம் கலைமகளும் கவிஞர்களும்
கலாநிதி துரை. மனோகரன் திருமூலரின் திருமந்திரம்
பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் யோகம் அழைக்கிறது
நவம் வெள்ளைச்சாமி பி.ஏ. திருவாதிரைச் சிறப்பு
டாக்டர் சுப. திண்ணப்பன் சைவசமய வழிபாட்டில் மந்திரங்கள்
ரீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா பீ. தெய்வீக மந்திரமாகிய ரீ காயத்ரி ம
பிரசாந்தினி மாயாவதாரன் பல்லவர் காலக் கலை வரலாற்றில் மு படிமங்களது முக்கியத்துவம்
ஜெயமலர் தியாகலிங்கம் எம்.பில். மலையகத்தில் இந்துசமய இலக்கிய 6 ஒரு நோக்கு
இரா. சிவலிங்கம் பீ.ஏ. (சிறப்பு) மலையகத்தின் சமூக அசைவியக்கமும் இந்துப் பெண்களும்
இரா. சர்மிளாதேவி பீ.ஏ. (சிறப்பு) மலையகத்தில் இந்துசமயம் எதிர்நோக் பிரச்சினைகளும் தீர்வு ஆலோசனைகளு
ச. விஜேசந்திரன் எம். எஸ்ஸி. மலையகத்தில் இந்துசமயக் கல்வி
முத்து சம்பந்தர் முற்போக்கு எண்ணங்கள் முகிழ வேண்
கே.வெள்ளைச்சாமி (குறிஞ்சி நாடன்) மத்திய மாகாண இந்து ஆலயங்கள்

ருறை
ல்கள்
ஏ. (சிறப்பு) ந்திரம்
வளர்ச்சி
$கும் ரூம்
i
11
16
25
31
41
45
48
51
56
61
66
72
76
78

Page 16
ളുട് கங்கள் < ஆக்கியோரே பெ

அனைத்துக்கும் ாறுப்பாளர் ஆவர்

Page 17
பட்டினத்தழகள் அருள்
பேராசிரியர்
தமிழ்ச் சைவ உலகிற் பக்திப் பனுவல்கள் எனப்போற்றப்படும் மூவர் தேவாரங்களும் மணிவாசகரின் திரு வாசகமும் உன்னத இடத்தை வகிக்கின் றன. அவை எழுந்த காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்ச் சைவர்கள் மத்தியிற் பெருவழக்குப் பெற்று விளங்குகின்றன. பக்திப் பனுவல்களுக்கு அடுத்த நிலையிற் பெரியபுராணம், கந்தபுராணம் முதலிய புராணங்களும் திருவிசைப்பா, திருப் பல்லாண்டு முதலியனவும் பட்டினத்தடிகள், அருணகிரிநாதர், தாயுமானவர் முதலி யோரது திருப்பாடல்களும் முக்கியத் துவம் பெற்று விளங்குகின்றன.
காரைக்காலம்மையார், அப்பர் சுவாமிகள், சம்பந்தர் முதலியோரால் ஆரம்பிக்கப்பட்ட பக்திப் பாடல் மரபு பல்வேறு நெளிவு கழிவுகளையும் மாற்றங் களையும் பெற்றுப் பதினெட்டாம் , பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரை நீடித்து நிலைபெறலாயிற்று. இருபதாம் நுாற்றாண்டிலும் கூடப் பாரதியாரின் கணிசமான பக்திப் பாடல்கள் உட்பட ‘நவீன பக்திப் பாடல்கள் பல தோன்றி யுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
பழைய பக்திப் பாடல் மரபில் இறுதியாகத் தோன்றியவர்கள் தாயுமா னவர், இராமலிங்கர் முதலியோர் என லாம். இடைக்காலத்தில் எழுந்த பக்திப் பாடல்களுள் பட்டினத்தார் பாடல்களும் அருணகிரிநாதர் பாடல்களும் குறிப்பிடத் தக்க இடத்தைப் பெறுகின்றன. உலக வாழ்விற் பெருந்துன்பங்களுக்கும் சோத னைகளுக்கும் வேதனைகளுக்கும் சீரழிவு களுக்கும் உள்ளானவர்கள் பலருக்கு இவர்களது திருப்பாடல்கள் அருமருந்தாக விளங்குகின்றன. மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு њао

பிச்செய்த திருப்பாடல்கள்
85.9
ருணாசலம்
தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ச்சைவ வரலாற்றிலும் பட்டினத்துப் பிள்ளையார், பட்டினத்தடிகள், பட்டினத் தார் ஆகிய பெயர்களும் அவர்கள் வாழ்ந்த காலம் பற்றிய செய்திகளும் அவர்களது வரலாறும் பெரும் கருத்துக் குழப்பங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி, இன்றுவரை தெளிவான முடிவு கள் எவற்றையும் பெறாத நிலை காணப் படுகின்றது என்பது மனங்கொள்ளத் தக்கது.
பேராசிரியர் வி.செல்வநாயகம் தமது தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நுாலில் பட்டினத்துப் பிள்ளையார் சோழப் பேரரசர் காலத்தவரெனவும் பத்திரகிரியார் காலத்திலிருந்த பட்டினத்தடிகள் பட்டி னத்துப்பிள்ளையின் வேறாவார் எனவும் குறிப்பிட்டுள்ளார். சி.பாலசுப்பிரமணியன் தமது தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் பட்டினத்தடிகள் காவிரிப் பூம்பட்டி னத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந் தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறே அறிஞர் பலரும் பலவித கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பதினாறாம் நூற்றாண் டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் அருண கிரிநாதருக்கும் பட்டினத்தடிகளுக்குமிடை யில் உறவுநிலை கற்பிக்கும் கருத்துக் களும் சிலவுள. பட்டினத்தடிகளுக்கு ஒரு விலைமாதுவின் வயிற்றில் பிறந்தவரே. அதாவது பட்டினத்தடிகளின் மகனே. அருணகிரிநாதர் எனவும் சிலராற் கூறப் படுகிறது.
2003

Page 18
தமிழகத்தின் புகழ்பூத்த பழைய நகரங்களுள் காவிரிப்பூம்பட்டினமே பட்டினம் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பெற்றமை மனங்கொள்ளத் தக்கது. காவிரிப்பூம்பட்டினத்திற் பெரும் செல்வாக்கும் செல்வமும் பெற்றவராகப் பட்டினத்தார் வாழ்ந்திருக்கலாம். அதன் காரணமாகப் பட்டினத்துப் பிள்ளையார், பட்டினத்துச் செட்டியார், பட்டினத்தார் (துறவு பூண்டபின்) பட்டினத்தடிகள் முதலிய காரணப் பெயர்களைப் பெற்றி ருக்கலாம். பட்டினத்தாரின் இயற்பெயர் சுவேதாரண்யர் அல்லது (சுவேதாரண்யம் என்பது ஒரு திருத்தலத்தின் பெயராகும்) சுவேதாரண்ய குப்தர் எனக் குறிப்பிடப் படுகிறது. இவர் திருவெண்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவராகையால் திருவெண் காடர் எனவும் அழைக்கப்படுகிறார்.
பன்னிரு திருமுறைகளுள் ஒன்றா கிய பதினோராம் திருமுறையில், பட்டினத் துப் பிள்ளையார் அருளிச் செய்தனவாகக் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடை மருதுார் மும்மணிக் கோவை, திரு ஏகம்பமுடை யார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருப.து ஆகியன இடம் பெற்றுள்ளன. பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல்கள் திருப்பாடற்றிரட்டும் உடற்கூற்று வண்ண மும், பட்டினத்தடிகள் அருளிச் செய்த திருப்பாடற்றிரட்டு, அருட்புலம்பலும் பத்திர கிரியார் அருளிச் செய்த மெய்ஞானப் புலம்பலும் முதலிய தலைப்புக்களில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. சில நூல் களில் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பட்டினத்துப்பிள்ளையாரின் பாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சில நுால்களில் உள்ளடக்கப்படவில்லை. 1967ஆம் ஆண்டு கழக வெளியீடாக வெளிவந்துள்ள பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடல்கள்’ (இரண்டு பாகங்கள்) என்னும் நூலிலும் பதினோராம் திரு முறையில் இடம் பெற்றுள்ள திருப்
2

பாடல்களுடன் வேறுபாடல்கள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை கவனத்திற் குரியது.
இவைபற்றியெல்லாம் இச்சிறு கட்டுரையில் ஆராய்வதற்கிடமில்லை. பட்டினத்தடிகள் அருளிச் செய்த திருப் பாடற்றிரட்டு’ என்னும் நூலை அடிப் படையாகக் கொண்டு பட்டினத்தடிகளது திருப்பாடல்களின் முக்கிய பண்புகள் சில இங்கு நோக்கப்படும்.
பட்டினத்துப்பிள்ளையார் வேளாண் குலத்தவரெனவும் பட்டினத்தடிகள் வணிக குலத்தவரெனவும் சிலர் கூறினும், இவ்விருவரது வரலாறும் பல நூல்களில் விரிவான முறையில் ஒரே மாதிரியாகவே கூறப்பட்டுள்ளது. சிவபெருமானது ஆணைப்படி குபேரனே பட்டினத்தடிகளாக அவதரித்தார் எனவும் சிறுவயதிலிருந்தே இறைபக்தி மிக்கவராகவும், புனிதராகவும் வாழ்ந்து வந்தார் எனவும் இறையருள் கிடைத்துப் பக்குவமடைந்ததும் துறவு பூண்டு திருப்பாடல்களை அருளினார் எனவும் பலவாறாகக் கூறப்படுகின்றது. ஆயின், அவரது பாடல்கள் முழுவதையும் கூர்ந்து கவனிக்கும்பொழுது, அவற்றில் இடம்பெறும் கருத்துக்கள் பல அவரைப் பற்றிக் கூறப்படும் வரலாற்றுடன் அதிகம் முரண்படுவதைக் காணலாம். இதே போன்று பட்டினத்தடிகளை அருணகிரி நாதருடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் கதைகள் சில நம்பமுடியாதவையாகவும் நகைப்புக்கிடமானவையாகவும் காணப் படுகின்றன.
நவயுகக் கவிஞன் பாரதியார் இதுபற்றிக் கூறியுள்ள கருத்துக்கள் சில வருமாறு: ". நமது வெண்காட்டுப் புலவர் பெருமானது உண்மைநிலை உணராது அவர்மாட்டுப் பொய்ப்பக்தி செலுத்துவோர் சிலர் இளமையில் காம தூதராக வாழ்ந்தனரென்பதை மறுத்துப் рѣguш шопавтохт вѣ8ы црпрвпtсь5 5pйч шpeої 2oоз

Page 19
பேசுவர். .இனி, “பெண்ணாகி வந்த.”
s 6
“சீறும் வினையது.”, “நாறும் குருதி.” என்ற தொடக்கங்களையுடைய பாக்களில் தம்மைத் தாமே சினமிகுதியாற் கண்டனை செய்து கொள்ளும் வெறுத்தற்குரிய செய்யுட்களை நுமக்கெடுத்துக்கூற, எமது நா கூசுகின்றது. இவையெல்லாமிருக்க அவர் இளமைப் பிராயத்தில் ஏகபத்தினி விரதராக இல்லறம் பிறழாது நடத்தின ரென்று மூடபக்தியாற் கூறுவோர் பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரன்றி வேறாகார். அன்றியும் இளமையில் வரம்பின் மிஞ்சிய காமதூதராக இருந் தமைதான் பட்டினத்தடிகள் பிற்காலத்து வரம்பு கடந்த துறவி ஆவதற்கு முக்கிய காரணமென்பதைப் பூர்வ பசவிகள் மறந்து விடுகின்றனர்.”
காலம் காலமாகத் தமிழ் இலக் கிய கர்த்தர்கள் பெண் உடலின் அழகை உச்சி முதல் உள்ளங்கால் வரை வருணித்துச் சிருங்காரச்சுவை கொட்டப் புகழ்ந்துள்ளனர். மாறாகச் சங்கமருவிய காலத்தெழுந்த நாலடியார் முதலிய அறநூல்களும் மணிமேகலைக் காப்பிய மும் பிறவும் பொதுவாக உடலை இழித்தும் குறிப்பாக பெண் உடலை மிக மோசமாக இழித்தும் நிலையாமையை வற்புறுத்தியும் பிரசாரம் செய்தன. இவை பெருமளவிற்குச் சமணசமயக் கொள்கை களின் பிரதிபலிப்பாக இருக்கலாம். ஆயின், பட்டினத்தார் வாழ்ந்த காலம் சமண சமயம் பெருமளவிற்குச் செல்வாக் கிழந்து ஒடுங்கிக்கொண்டிருந்த கால மாகும். மேலும், பட்டினத்தடிகள் உலக நிலையாமை, உடல் இழிவு, குறிப்பாகப் பெண் உடலினை இழித்தல் முதலியன பற்றிக் கூறுமிடத்து, விலை மாதரிடம் பெற்றுக்கொண்ட தமது சொந்த அனுபவம் போலத் தம்மை முன்னிறுத்தியும் தமது கூற்றாகவுமே கூறிச்செல்லுதல் கவனிக்கத் தக்கது.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ச் சைவ வரலாற்றிலும் வேறு எந்த ஓர் இலக்கியகர்த்தாவும் இறையடியாரும் வற்புறுத்தாத அளவிற்குப் பட்டினத்தடிகள் உலக நிலையாமையை வற்புறுத்தியும் பொதுவாக உடலை, குறிப்பாகப் பெண் னின் உடலை இழிவுபடுத்தியும் பெண் னின் உடலை அங்கம் அங்கமாக உச்சி முதல் உள்ளங்கால் வரை கீறிப் பிளந்து தீவிர இரசாயனப் பரிசோதனைக்குட் படுத்தியும் பெண்களின் குணாதிசயங் களைச் சந்தேகித்தும் இழித்தும் வெறுத் தும் வெகுண்டும் பாடியுள்ளமை நுணுக்க மாக அவதானிக்கவேண்டியதொன்றாகும்.
அப்பர் சுவாமிகள், மாணிக்க வாசகர் முதலியோர் ஐம்புல இச்சைகளை வெறுத்தும் பெண்ணாசையால் ஏற்படும் தீமைகளையிட்டு அஞ்சியும் பாடியுள்ள னரேயொழியப் பெண்களை இழித்துப் பாடியுள்ளதாகத் தெரியவில்லை. ஆயின், பட்டினத்தடிகளோ வெறிகொண்டவராக, கச்சித்திருவகலில், “.சிவபதங்குறுகாத வமே மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும் மானிடர்க்கெல்லாம் யானெடுத் துரைப்பேன்.” எனத் தொடங் கிச் சுமார் அறுபத்தைந்து அடிகளில் ஈவு இரக்கமின்றிப் பெண் உடலை உச்சி முதல் உள்ளங்கால்வரை அங்கம் அங்க மாகக் கீறிப் பிளந்து, எலும்பு, தசை, குடல், எச்சில், மலம், சலம், வழும்பு, சீழ், வியர்வை, சீ . ஊத்தை, வெரிப்பு, சளி, தண்ணிர்ப்பிளை, பித்தம், குறும்பி, ஈர், பேன், சிக்கின்மயிர், தோல் என உடம்பிலுள்ள அசுத்தங்களையெல்லாம் வெளிப்படுத்திக் காட்டுகின்றார்.
மேற்கணி டவற்றுடனமையாது, தொடர்ந்து திருவேகம்பமாலை, திருத் தில்லை, திருக்காளத்தி, பொது அருட் புலம்பல், நெஞ்சோடு புலம்பல் முதலிய தலைப்புகளிலமைந்துள்ள பாடல்கள்
r 2003

Page 20
பலவற்றிலும் பெண்களைக் குறிப்பாக விலைமாதரை நிந்தித்தும் அவரது குண இயல்புகளைப் பழித்தும் அவர்களுடனான உறவினைக் கண்டித்தும் கூறுவதுடன், தாம் அவர்களால் பெருந்துன்பங்களுக் குள்ளாகி வாணாளை வீணாக்கி விட்டதா கவும் இறைவனை மறந்து காமமாகிய இருட் குகையுள் நீண்டகாலம் அகப்பட்டுக் கொண்டதாகவும் இறையருளின் காரண மாகவே தாம் அதிலிருந்து மீண்டதாகவும் இறைவனிடம் அவர் முறையிடும் பாங்கும் கழிந்ததற்கு இரங்கி ஏங்கிப் புலம்பும் வகையும் அவர்மீதும் இரக்கத்தையும் அனுதாபத்தையும் ஏற்படுத்துவதாக உள் 66.
மேற்கண்ட கருத்துக்களை விளக் கும் அவரது பாடல்களைக் கூர்ந்து கவனிக்குமிடத்துப் பட்டினத்தடிகள் துறவு பூண்பதற்கு முன்னதாக (சில சமயம் திருமணத்திற்கும் முன்னதாக) இளமைப் பருவத்தில் விலைமாதரை நாடி அளவு கடந்து போகம் துய்க்க முயன்றதையும் விலைமாதராற் பொருட்செல்வத்தையும் இழந்து அவர்கள்மீது கொண்ட மித மிஞ்சிய மோகத்தால் அவர்களிடம் குற்றேவல் செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டதையும் கணிசமான பாடல்களில் விரிவாகக் கூறிச்செல்கிறார்.
பட்டினத் தடிகளின் இளமை வாழ்க்கையும் அவரது வாரிசு எனச் சிலராற் கருதப்படும் அருணகிரிநாதரின் இளமை வாழ்க்கையும் இவ்வகையில் ஒப்புநோக்கத்தக்கது. ‘நெஞ்சோடு புலம்பல்' என்னும் பாடற் பகுதியில்,
“மண்காட்டிப் பொன்காட்டி மாயவிருள்
காட்டிச் செங்காட்டி லாடுகின்ற தேசிகனைப்
போற்றாமல் கண்காட்டும் வேசியர்தங் கண்வலையிற்
சிக்கிமிக அங்காடி நாய்போ லமைந்தனையே
நெஞ்சமே” எனப் புலம்புகின்றார்.
4

இதேபோனிறு அருணகிரி நாதரும், “அருக்கு மங்கையர் மெல்லடி வருடி அவர்தம் கருத்தறிந்த பின்” எனத் தொடங்கி, விலை மாதரிடம் தாம் பெற்ற அனுபவங்களையும் பட்ட அவலங்களை யும் இளமையில் மீளா நரகக் குழியில் அகப்பட்டுத் தவித்ததையும் முருகப் பெருமான் அருளால் அதிலிருந்து கடைத் தேறியதையும் நெஞ்சை உருக்கும் வகை யில் விரிவாகக் கூறியுள்ளார். பட்டினத் தடிகள் துறவுபூண்ட பின்பும் மனச்சலனங் களுக்குள்ளாகியிருக்கக்கூடும் என்பதைச் சில பாடல்கள் உணர்த்துகின்றன. எடுத் துக்காட்டாக,
“சிற்றம் பலமுஞ் சிவனு மருகிருக்க வெற்றம் பலந்தேடி விட்டோமே - நித்தம் பிறந்திடத்தைத் தேடுதே பேதைமடநெஞ்சங் கறந்திடத்தை நாடுதே கண்”
எனவும்,
*தோடவிழும் பூங்கோதைத் தோகையுனை யிப்போது தேடினவர் போய்விட்டார் தேறியிரு-நாடிநீ என்னை நினைத்தா லிடுப்பி லுதைப்பேன் நான் உன்னை நினைத்தா லுதை”
எனவும் வரும் பாடல்கள் இவ்வகையிற் சிந்திக்கத்தக்கவை.
பெண்களின் உடலையும் குணவியல்பு களையும் அதிகளவில் இழித்துப் பாடியது போலவே, பொதுவாக மனித உடலையும் இழித்துப் பாடுகின்றார். பட்டினத்தார் மட்டுமன்றி, அப்பர் சுவாமிகள், மாணிக்க வாசகர் முதலியோரும் மனித உடலை இழித்தே பாடியுள்ளமை மனங்கொள்ளத் தக்கது. கோயிற்றிருவகவலில், “உலகப் பொய் வாழ்க்கையையுடலையோம்பற்க.” எனத்தொடங்கி, மனித உடலிலுள்ள ஒன்பது துவாரங்களும் ஒன்றுக்கொன்று рѣgu цртапехт бѣрѣeы шpпрьтесь5 доüч преой 2oоз

Page 21
போட்டியாகப் பீளை, குறும்பி, சளி, எச்சில், நீர், அசுத்தக்காற்று, மலம், சலம், கெட்டவாயு முதலிய அருவருக்கத்தக்க அசுத்தங்களையெல்லாம் வெளியேற்று கின்றன. உடம்பானது புற்புதக்குரம்பை, துச்சில் ஒதுக்கிடம், இருவினைப் பெட்டகம், காற்றடைத்தபை, சலமலப்பேழை, ஐவர் கலகமிட்டலைக்கும் கானகம், பீற்றத் துண்டம், நாற்றப்பாண்டம், சோற்றுத் துருத்தி, ஆசைக்கயிற்றிலாடும் பம்பரம், சிறுபுழுக் குரம் பை முதலியனவாக விளங்குகின்றது என உடலின் இழிவையும் அதன் நிலையற்ற தன்மையையும் விபரித்துள்ளார்.
அத்தகைய உடலை உயர்வாக மதித்து ஓம்பி வளர்த்ததையும், அதன் பயனற்ற தன்மையையும் இறைவனை மறந்து இழிந்த உடல் இச்சைகளில் மூழ்கியிருந்ததையும் எண்ணிக் கழி விரக்கத்துடன் இறைவனிடம் முறையிடும் பாங்கு மணிவாசகரது பாடல்களை நினை வபூட்டுவதாகக் காணப்படுகின்றது.
“ஊற்றைச் சரீரத்தை யாபாசக்
கொட்டிலை யூன்பொதிந்த பீற்றற் றுருத்தியைச் சோறிடுந்
தோற்பையை பேசரிய காற்றிற் பொதிந்த நிலையற்ற
பாண்டத்தைக் காதல் செய்தே ஏற்றுத் திரிந்துவிட் டேனிறை
வாகச்சி யேகம்பனே’ எனவும்,
‘எரியெனக் கென்னும் புழுவோ வெனக்கெனு மிந்த மண்ணுஞ் சரியெனக் கென்னும் பருந்தோ வெனக்கெனுந் தான்புசிக்க நரியெனக் கென்னும்புன் னாயெனக்
கென்னுமிந் நாறுடலைப் பிரிய முடன்வளர்த் தேனித
னாலென்ன பேறெனக்கே”
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

எனவும் வரும் பாடல்கள் இவ்வகையில் ஊன்றி நோக்கத்தக்கவை.
உலக நிலையாமை பற்றிய கருத்துக்களும் அவரது பாடல்களில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளமை யைக் காணலாம். இந்துமதத்துக்கோ, தமிழ் இலக்கிய உலகுக்கோ நிலை யாமை பற்றிய கருத்துக்கள் புதியன வல்ல. சங்கச் செய்யுட்களிலிருந்து இன்றைய திரைப்படப் பாடல்கள் வரை நிலையாமைக் கருத்துகள் ஊடுருவி நிற்பதை அவதானிக்கலாம். வாழ்வின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாக நிலை யாமை விளங்குகிறது. வாழ்க்கை பற்றிய திடநம்பிகையை ஓங்கி ஒலித்த நவயுகக் கவிஞன் பாரதியையும் நிலையாமை பற்றிய கருத்துக்கள் ஆட்டிப்படைத் துள்ளமையை அவரது ஆக்கங்களின் பல இடங்களிலும் அவதானிக்கலாம். உலக வாழ்க்கையானது பெரும் கனவாகும். அக்கனவிலே உண்டு உறங்கி இடர் செய்து செத்துப்போகும் கலகமானிடப் பூச்சிகளின் வாழ்க்கையானது கனவிலும் கனவாகும் எனத் தமது சுயசரிதையிற் குறிப்பிட்டுள்ளார்.
பட்டினத்தார் நிலையாமை பற்றிய கருத்துகளை அதிகம் வற்புறுத்தியுள்ளா ரேனும், அவற்றை வெளிப்படுத்தும் பாங்கு அறநூல்களிலிருந்து வேறுபட்டுக் காணப் படுகின்றது. அவரது பாடல்களில் நிலை யாமைக் கருத்துகள் அறப்போதனை' அடிப்படையில் அமையவில்லை. அதிக மான கருத்துக்கள் அவரது சொந்த அனுபவங்களில் இருந்து முகிழ்த் தவையாகவே காணப்படுகின்றன.
நீரிற் குமிழியாகவும் நீர்மேல் எழுத்தாகவும் விளங்கும் வாழ்வின் அநித்தியத்தை உணராதும் இறைபதத் தின் மேன்மையைச் சிந்திக்காமலும் பஞ்சப் புலன்களின் வஞ்சனைக்கடிமையாகி
2003
5

Page 22
வாழ்க்கையை வீணாக்கியதையிட்டு ஏக்கத்துடனும் கழிவிரக்கத்துடனும் ஆற்றாமையுடனும் கலக்கத்துடனும் அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் படிப்பவர் நெஞ்சைப் பாதிக்கவல்லன. “உண்டதே யுண்டு முடுத்த தேயுடுத்து மடுத்தடுத் துரைத்தேயுரைத்தும் கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும் கழிந்தன கடவுணா ளெல்லாம்.” என ஏங்கும் அவர், தம்மை இத்தகைய இடர்களிலிருந்து உய்திபெற அருளுமாறு இறைவனிடம் இரக்கின்றார்.
மணிவாசகரும் அப்பர் சுவாமி களும் தமது பாடல்களின் பல இடங் களில் தம்மையும் தமது உடலையும் இழித்தும் பழித்தும் நிந்தித்தும் கழிவிரக்கம் கொண்டும் கூறிச்செல்வது போலவே பட்டினத்தாரும் பல சந்தர்ப்பங்களில் தம்மை இழித்தும் பழித்தும் நிந்தித்தும் பாடியுள்ளார். தமது இளமைக்காலத்தை வீணாக்கியமைக்காகக் கழிவிரக்கம் கொண்டு புலம்புவதும் இறைவனையடை வதற்கு ஏற்ற தகுதியைத் தான் பெற்றி ருக்கவில்லையே என ஏங்குவதும் உள்ளத்தை உருக்கும் தகையன.
சாதாரண மக்களிடம் காண முடியாத மாபெரும் பலத்தையும் பெரும் பலவீனங்களையும் பெரியோர்களிடமும் அறிஞர்களிடமும் பலதுறைச் சாதனை யாளர்களிடமும் நாம் ஒருங்கே காண லாம். பட்டினத்தாரின் பாடல்களைக் கூர்ந்து நோக்குமிடத்து, இவ்வுண்மை தெற்றெனப் புலப்படும். பெண் விவகாரம் தொடர்பாக அவரிடம் காணப்பட்ட மாபெரும் பலவீனம் ஒருபுறம்; சிவனைச் சிந்தையுள் வைத்த பக்தியாகிய மாபெரும் பலம் மறுபுறம். இவ்விரண்டுக்குமிடை யிலான துவந்த யுத்தமாக அவரது அதிகமான பாடல்கள் விளங்குகின்றன. இவற்றுக்கப்பாற்பட்டவையாகவும் சில பாடல்கள் காணப்படுகின்றன. ஐம்புல ஆசைகளினால் ஏற்பட்ட பலவீனமும்
6

சிவன் தாளினைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்மீக பலமும் அவருடன் தட்டுமறித்து விளையாடும் பாங்கினைச் சில பாடல்களின் முதல் இரண்டடியும் ஒரு பகுதியாகவும் இறுதி இரண்டடியும் இன்னொரு பகுதியாகவும் வெளிப்படுத்துதல் சிந்திக்கத்தக்கது.
விலைமகளிரை இழித் துமி பழித்தும் நிந்தித்தும் கூறியுள்ள பட்டினத் தார் நன்மங்கையரைத் தாயப்போற் கருதவும் தவறவில்லை.
* பேய்போற் றிரிந்து பிணம்போற் கிடந்திட்ட
பிச்சையெல்லாம் நாய்போ லருந்தி நரிபோ லுழன்றுநன்
மங்கையரைத் தாய்போற் கருதித் தமர்போ லனைவர்க்குந்
தாழ்மைசொல்லிச் சேய்போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந்
தெளிந்தவரே” என்னும் பாடல் அவரது பரிபக்குவ நிலை யைப் புலப்படுத்துகின்றது.
தவறு செய்தல் மனித இயல்பு. ஆயின், செய்த தவறினை ஒப்புக் கொண்டு அதற்குப் பிராயச்சித்தம் தேட முயல்பவன் உத்தமன். தவறினை ஒப்புக்கொள்பவன் மத்திமன். தவறினை மறுப்பவனும் மூடிமறைக்க முயல்பவனும் அதமன்கீழ்மகன். இம்மூவகை மனிதரையும் உலகில் நாம் காணலாம். ஏபிரகாம் லிங்கன் முதல் மகாத்மாகாந்தி வரை பெரியோர்கள் பலர் முதலாம் வகையி னராக விளங்குகின்றனர். சைவசமய உலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும் அப்பர் சுவாமிகள், மாணிக்கவாசகர், யுகப்பெருங்கவிஞன் பாரதி, கவியரசர் கண்ணதாசன் எனப் பலரைக் காண முடிகின்றது.
உன் குறைகளை ஒப்புக் கொண்டு கடவுளுக்கு முன் அழு. δεδεμα цртавітект бѣрѣeы மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 23
அவனை அடையலாம் என்பர். மாணிக்க வாசகரும் அழுதால் உன்னைப் பெற லாமே என்பர். மணிவாசகப் பெருந்தகை பிரமச்சரிய வாழ்க்கையை மேற் கொண்டிருந்தபோதும், பெண்ணாசை யால் உள்ளத்தளவில் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டமையை எவ்வித ஒளிவு மறைவுமின்றிப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இதேபோன்று அப்பர் சுவாமிகள் முதல் மகாத்மாகாந்தி, கவியரசர் கண்ணதாசன் முதலியோர் வரை அவர்கள் தமது பலவீனங்களையும் தவறுகளையும் ஒளிவுமறைவின்றிக் கூறியுள்ளமை சிந்தித்தற்குரியது.
பாரதியார் தமது சுயசரிதை, சின்னச்சங்கரன் கதை, மாலை, தராசு, கதம்பம் முதலிய பகுதிகளில் எவ்வித ஒளிவுமறைவுமின்றித் தாம் செய்த தவறுகளையும் தமது பலவீனங்களையும் குறைபாடுகளையும் எட்டையபுரத்துச் சிருங்காரரஸம் நிறைந்த சமஸ்தானத்துச் சகதோசத்தால் ஏற்பட்ட காமவிகாரம் மனத்தளவில் ஏற்படுத்திய தாக்கங் ’களையும் ‘சாற்றுவதும் காமக் கலை, சாதிப்பதும் போற்றுவதும் காமனடிப்போது” என்ற பரிதாபநிலையிலிருந்து மீண்டதை யும் வெளிப்படுத்தியுள்ளார். பட்டினத்தாரிட மும் மேற்படி பண்புகளைக் காணமுடிகின்
DS.
தமது இளமைக் காலத்தில் அறிந்தோ அறியாமலோ தாம் செய்த தவறுகளையும் பலவீனங்களையும் ஒன்று விடாமல் ஒளிவு மறைவின்றி இறைவனிடம் எடுத்துக்கூறும் பாங்கும் தவறுகளை யெல்லாம் பொறுத்துத் தம்மை உய்யச் செய்ய வேண்டுமென இரந்து கேட்கும் முறையும் உள்ளத்தை உருகச்செய்ய வல்லவை. இத்தகைய பகுதிகள் பல அப்பர் சுவாமிகளதும் மணிவாசகரதும் பாடல்களை ஞாபக மூட்டுவனவாகக் காணப்படுகின்றன.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

“கொன்றே னனேக முயிரையெல்
லாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே னதன்றியுந் தீங்குசெய்
தேனது தீர்கவென்றே
நின்றேநின் சந்நிதிக் கேயத
னாற் குற்றநி பொறுப்பாய்
என்றே யுனைநம்பி னேனிறை வாகச்சி யேகம்பனே”
எனவும்,
“கல்லாப் பிழையுங் கருதாப் பிழையுங்
கசிந்துருகி நில்லாப் பிழையு நினையாப் பிழையுநின்
னைஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையுந் துதியாப் பிழையுந்
தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்
வாய்கச்சி யேகம்பனே” எனவும்,
“பொல்லா தவனெறி நில்லாத தவனைம்
புலன்கடமை வெல்லா தவன்கல்வி கல்லாத வன்மெய்
யடியவர்பாற் செல்லா தவனுண்மை சொல்லா தவனின்
திருவடிகளன்
பில்லா தவன்மண்ணி லேன்பிறந்
தேன்கச்சி யேகம்பனே”
எனவும் வரும் பாடல்கள் வகைமாதிரிக் கெடுத்துக்காட்டாகக் கொள்ளத் தக்கவை.
வாளால் மகவரிந்துட்டவோ மாது சொனி ன சூளால் இளமையைத் துறக்கவோ இறைவனுக்குத் தொண்டு செய்து கண்ணிடந்து அப்பவோ வல்ல வனல்லன் எனவும், கையொன்றினைச் செய்யும்போது, கண் ஒன்றினை நாடுகின் றது; மனம் ஒன்றினை எண்ணுகிறது; நாவானது பொய் பேசுகின்றது; உடம்பு ஒன்றினைச் சாருகின்றது; காது ஒன்றி னைக் கேட்கின்றது எனவும் தமது
2003
7

Page 24
இயலாமையையும் புலனடக்கமின்மை யையும் பல சந்தர்ப்பங்களில் விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது பாடல்களிற் சமயக் கொள்கைப் பிரசாரத்தைக் காண்டலரிது. தமது பலவீனங்களையும் குறைபாடு களையும் கடந்து இறையருளைப் பெற அவர் மேற்கொண்ட பிரயத்தனங்களும் பெற்றுக்கொண்ட அனுபவங்களுமே அவரது பாடல்களில் மேலோங்கிக் காணப் படுகின்றன. தமது பிரயத்தனங்களையும் அனுபவங்களையும் விபரித்துச் செல்லும் சந்தர்ப்பங்களிலும் தமது நெஞ்சினை நோக்கி உபதேசம் செய்யும் கட்டங்க ளிலும் இறைவனை நோக்கி அழுது புலம்பும் சமயங்களிலும் சைவசித்தாந்தக் கருத்துகள் பற்றிய விளக்கமும் அதிக அளவிற்கு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
பட்டினத்தார் பாடல்களுள் தனிச் சிறப்புமிக்கனவாகவும் பாமரர் முதல் படித்தவர்கள் வரை மக்கள் மத்தியிற் செல்வாக்குடன் விளங்குபவையாகவும் “தாயாருக்குத் தகனகிரியை செய்கை யிற் பாடிய பாடல்கள்,” “உடற்கூற்று வண்ணம்” ஆகியன விளங்குகின்றன. தாய் அன்புக்கு நிகர் உலகில் வேறெதுவு மில்லை என்பர். முற்றத் துறந்த துறவி யொருவர் தமது தாய்மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பையும் பாசத்தையும் தாயின் அருமை பெருமையையும் வெளிப்படுத்து வனவாகத் தாயாருக்குத் தகன கிரியை செய்கையிற் பாடிய பாடல்கள் விளங்கு கின்றன.
முந்நூறு நாட்கள் வயிற்றிலே சுமந்து நொந்து பெற்றுப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தெடுத்த தமது தாயின் அருமை பெருமைகளையும் தாய் தம் மீது கொண்டிருந்த அன்பின் ஆழத்தை யும் படிப்பவர் கண்களில் நீர்மல்கும்

வகையிலும் நெஞ்சினை உருக்குமாறும் வெளிப்படுத்தியுள்ளார். செய்யவிரு கைப் புறத்திலேந்திக் கனகமுலை தந்த தாயை எப்பிறப்பினில் இனிக் காண்பேன். “உருசி யுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவிய பூமானே’ எனவும், “மெள்ள முகமேல் முகம் வைத்து முத்தாடி யென்றன் மகனே' எனவும் அழைத்த வாய்க்கு அரிசியையோ நானிடுவேன் என்றெல் லாம் அழுது புலம்புவதாக அமைந்துள்ள பகுதிகளும் “வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ..” எனக் குமுறி அழுவதாக அமைந்துள்ள பகுதிகளும் இவ்வகையில் நோக்கத்தக்கவை. தமிழ்ச் சைவர்களின் மத்தியில் குறிப்பாக கிராமப் புறங்களில் இடம்பெறும் தகனக் கிரியைகளில் குறிப்பாகத் தாய்மாருக்குச் செய்யப்படும் கிரியைகளில் இன்றும் இப்பாடல்கள் மிகவும் உருக்கத்தோடு பாடப்படுதல் குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியப் பரப் பில் இத்தகைய பாடல்களைக் காண்பது அரிது.
இதேபோன்று, தமிழ்ச் சைவர்கள் மத்தியில் இன்றும் மிகுதியான செல்வாக் குடன் விளங்குபவை “உடற் கூற்று வண்ணம்’ என்னும் தலைப்பிலமைந் துள்ள பாடற் பகுதிகளேயாகும். ஒசை நயமும் தாளலயமும் கருத்தாழமும் மிக்க இப்பாடல்கள் படிப்போர் நெஞ்சை நெகிழச் செய்வன. ஓர் உயிர் தாயின் கருவறை யில் கருவாகி உருவாகி வளர்ந்து இம்மண்ணிற் பிறத்தல், பிறந்த பின் குழந்தைப் பராயத்தில் செய்யும் செயல் கள், இளம் பராயத்துச் செயற்பாடுகள், இளமை நீங்கி நரைதிரை ஏற்பட்டு மூப்பெய்தல், கொடிய நோய்களுக்காளா கித் துன்புறுதல், கோலூன்றி மந்தியெனும் படி குந்தி நடத்தல், பிறர் நகைப்புக் கிடமாதல், மரணத்தைத் தழுவுதல், இறுதியிற் சுடுகாட்டிற் சாம்பராதல் முதலியனவரை வரன்முறையாக இப் பகுதியிற் கூறப்பட்டுள்ள திறன் சிறப்பாகக்
рѣғu цртатот бъѣeы попрвпЕсь3 3'müч преої 2003

Page 25
குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தமிழ்ச்சைவ இலக்கியப்பரப்பில் இத்தகைய பாடல் களை வேறு யாரும் பாடியுள்ளதாகத் தெரியவில்லை.
பரம ஏழைகள் முதல் பெருஞ் செல்வர்கள் வரை, அவர்கள் இறந்தபின் இடம்பெறும் பிரேத ஊர்வலத்தின்போது சோகம் ததும்பும் வகையில் இப்பாடல்கள் பாடப்படுவதை இன்றும் காண்க்கூடியதாக உள்ளது. பிரேத ஊர்வலம் ஆரம்பிக்கும் போது “ஒரு மடமாது மொருவனுமாகி." எனத் தொடங்கி, பிரேதம் சுடலையை அடையும்போது, “கடுகி நடந்து சுடலைய டைந்து. விறகிடமூடி யழல் கொடுபோட வெந்து விழுந்து முறிந்து நிணங்களுருகி யெலும்பு கருகியடங்கி. நம்புமடியேனை யினியாளுமே” என முடியும்போது, அவற் றைக் கேட்கும் எவரது மனமும் உருகவே செய்யும்.
தேவார முதலிகள், மணிவாசகர் முதலியோர் பற்றிய குறிப்புகள் பட்டினத் தாரின் பாடல்களில் இடம்பெற்றுள்ளன வேனும், நாயன்மார் நால்வருள்ளும் மணிவாசகரது மிகுதியான செல்வாக் கினைப் பட்டினத்தாரின் பாடல்களிற் காணலாம். பாடல்களின் அமைப்புமுறை, கருத்துகளை வெளியிடும் பாங்கு, தமது தவறுகளையும் பலவீனங்களையும் வாய் விட்டுப் புலம்பி இறைவனிடம் முறையிடும் தன்மை, இறைவனையடைய மேற் கொண்ட பிரயத்தனங்கள் முதலியவற்றில் நெருங்கிய ஒற்றுமைகள் பல காணப் படுகின்றன. மணிவாசகரைப் போன்றே பட்டினத்தாரும் கோயிற்றிருவகவல், கச்சித் திருவகவல், அருட்புலம்பல், நெஞ்சொடு புலம்பல் முதலிய தலைப்புகளிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
அருணகிரிநாதர் பாடல்கள் சந்தச் சிறப்புமிக்கவை எனப் புகழப்படுகின்றன. பட்டினத்தாரது பாடல்கள் பலவற்றிலும் முத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு прой

இத்தகைய சந்தச் சிறப்பினை அதிகம் காணமுடிகின்றது. அவரது “உடற்கூற்று வண்ணம், 'பின்முடுகு வெண்பா' முதலிய தலைப்புக்களிலமைந்துள்ள பாடல்களும் பிற்பகுதிகளும் இவ்வகையிற் குறிப்பிடத் தக்கவை. “...எனதற நினைவற இரு வினை மலமற வரவொடு செலமற மருளற இருளற இரவொடு பகலற இகபர மற ஒரு.” எனவும், “கால்கைக்குக் கொட்டையிட்டு மெத்தையிட்டுக் குத்திடு மெத்தப் பட்டவுடல் கட்டையிட்டுச் சுட்டு விடக் கண்டு” எனவும், ‘.வன்கழுக்கள் தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட்டிப்பிட்டுக் கத்திக்குத் தித்தின்னக் கண்டு” எனவும், "சொர்ப்பனம் போல் விக்கிற்பற் கிட்டக் கண் மெத்தப் பஞ்சிட்டப்பைக் கக்கிச் செத் துக்கொட்டக் கண்டு” எனவும் வரும் பகுதி கள் இவ்வகையில் நோக்கத்தக்கவை.
பட்டினத்தாரின் பாடல்கள் தொடர் பாகக் குறிப்பிடக்கூடிய இன்னொரு முக்கிய அம்சம் அவரது பாடல்களில் இடம்பெறும் புதிய சொற்பிரயோகங்கள், பேச்சு வழக்குச் சொற்கள் முதலி
யனவாகும். பட்டினத்தார் காலத்திலோ,
அதற்கு முன்னரோ இலக்கியங்களில் இடம்பெறாதனவும் அதிகம் பயின்று வராதனவுமான நூற்றுக்கணக்கான சொற் களும் சொற்றொடர்களும் அவரது பாடல்களில் இடம்பெறுதல் மொழியியல் ரீதியான ஆராய்ச்சிக்குரியதாகும். வேண்டிய இடங்களில் மிகப் பொருத்த மான புதிய உவமைகள் பலவற்றையும் அவர் தமது பாடல்களிற் கையாண் டுள்ளார். சித்தர்களுள் பட்டினத்தாரையும் ஒருவராகச் சிலர் கருதுவர். சித்துக்கள் சிலவற்றைச் செய்ததாக அவரது வாழ்க்கை வரலாற்றிற் குறிப்பிடப்படுகின்
’றது.
சித்தர் பாடல்களுடன் இவரது பாடல்கள் பல ஒற்றுமைப்படுவதும் அவதானிக்கத்தக்கது.
2003

Page 26
பட்டினத்தார் பாடல்களின் சிறப்பிற் குச் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் பெண்களையும் பெண் உடலையும் இழித்தும் பழித்தும் நிந்தித்தும் பாடிய பாடல்கள் விளங்கினும், அத்தகைய பாடல்களைத் தவிர்த்து நோக்குமிடத்து,
கோயிலாவ தேதடா கு கோயிலும் குளங்களும் கோயிலும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இ:
செங்கலும் கருங்கலும்
செம்பிலும் தராவிலும் உம்பதம் அறிந்துநீர் உ அம்பலம் நிறைந்த நா
பூசைபூசை என்றுநீர் பூ பூசையுள்ள தன்னிலே
ஆதிபூசை கொண்டதோ ஏதுபூசை கொண்டதோ
இருக்குநூறு வேதமும்
பெருக்கநீறு பூசினும் பி உருக்கிநெஞ்சை உள்க சுருக்கமற்ற சோதியைத்
10

அவரது பாடல்கள் உள்ளத்தைப் பிணிப் பனவாகவும் ஆத்மீக ஈடேற்றத்தை வற் புறுத்துவனவாகவும் வாழ்க்கையில் அல்ல லுற்றோருக்கு அருமருந்தாகவும் இறை வனை அடைய வழிகாட்டுபவையாகவும் விளங்குவது தெற்றெனப் புலப்படும்.
நன்றி. இந்து தருமம்
(1994/95)
ளங்களாவ தேதடா
கும்பிடும் குலாமரே
குளங்களும் மனத்துளே
ல்லை யில்லை யில்லையே.
சிவந்த சாதிலிங்கமும் சிவன் இருப்பன் என்கிறீர் உம்மைநீர் அறிந்தபின் தர் ஆடல் பாடலாகுமே.
சைசெய்யும் பேதைகாள் பூசைகொண்ட தெவ்விடம்?
அநாதிபூசை கொண்டதோ இன்னதென் றியம்புமே.
எழுத்தையுற ஓதினும் தற்றினும் பிரான்இரான் லந்திங் குண்மைகூற வல்லிரேல் தொடர்ந்துகூடல் ஆகுமே.
-சித்தர் பாடல்கள்.
шрѣш шотзпехот вѣ8ы шопрвпtсь5 3püч шpeoй 2003

Page 27
கலைமகளும்
கலாநிதி துை
காலந்தோறும் கவிஞர்களைக் கவர்ந்த ஒரு தெய்வமாகக் கலைமகள் விளங்குகிறாள். கல்விக்கும் கலை களுக்குமுரிய தெய்வமாக விளங்குபவள் அவள். கலைமகள், வாணி, நாமகள், சரஸ்வதி, பாரதி முதலான பல பெயர் களில் இத்தெய்வம் குறிப்பிடப்படுகின் றது. சோழர் காலம் முதல் கலைமகள் தமிழ் இலக்கியத்தில் முக்கியத்துவம் பெற்று வருவதைக் காணமுடிகின்றது. பழந்தமிழ்க் கவிஞர்கள் முதல் நவீன கவிஞர்கள் வரை பலர் இத்தெய்வத்தை வாழ்த்தியும் வணங்கியும் போற்றியும் வந்துள்ளனர். நூல்களின் கடவுள் வாழ்த் திலும் தனிப்பாடல்களிலும் தனி நூல் களிலும் கலைமகளின் பெருமையும் புகழும் அருளும் கூறப்படுகின்றன.
சோழர் காலத்தில் தோன்றி, இன்றும் தனது சிறப்பிடத்தை இழக்காது, கற்றோர் மத்தியிற் புகழ் பெற்று விளங் கும் நூல்களில் ஒன்றான தண்டியலங் காரம் கலைமகள் வாழ்த்துடன் நூலைத் தொடங்குகின்றது:
“சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி
சிந்தைவைத் தியம்புவல் செய்யுட்
கணியே.”
சொற்களுக்கு உரிமையுடையவளாகிய மென்மையான இயல்பைக் கொண்ட கலைமகளின் இரு திருவடிகளையும் மனத்திற் கொண்டு, செய்யுள்களுக் கான அணிகள் பற்றித் தாம் குறிப்பிடு வதாக நூலாசிரியர் இக்கடவுள் வாழ்த் தில் தெரிவிக்கின்றார்.
மகாகவி கம்பராற் பாடப்பட்ட தாகக் கூறப்படும் சரஸ்வதி அந்தாதி, மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

கவிஞர்களும்
DJ.
மனோகரன்
கலைமகள் பற்றி முதன்முதல் எழுந்த தனிநூலாக விளங்குகிறது எனலாம். காப்புச் செய்யுளைத் தவிர்த்து, முப்பது பாடல்களைக் கொண்ட சரஸ்வதி அந்தாதியிலுள்ள பாடல்கள் சொற்சுவை, பொருட்சுவை, பக்திச்சுவை மிக்கவை. கலைமகளின் தோற்றப் பொலிவு, அவளது கருணை, அவளது அருளாற் பெறத்தக்க நன்மைகள் முதலியவை கவிஞராற் பாடப்பட்டுள்ளன.
சரஸ்வதி அந்தாதியின் காப்புச் செய்யுள் மிகப் பிரபல்யம் பெற்றது; பலரையும் கவரத்தக்கது.
“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்அம்மை - துாய உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தின்
உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்.”
இந்நூலிலுள்ள பல பாடல்கள் படித்துச் சுவைக்கவும் பக்திச் சுவையைப் பெருக் கவும் வல்லன. அவற்றுள் பதச்சோறாகச் சில பாடல்கள் பின்வருமாறு:
“படிக நிறமும் பவழச் செவ்வாயும் கடிகமழ்பூந் தாமரைபோல் கையும்.
துடிஇடையும் அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி.’
“மயிலே மடப்பிடியே கொடியே இளமான்
பிணையே குயிலே பசுங்கிளியே அன்னமே
மனக்கூரிருட்கு ஓர் வெயிலே நிலவெழு மேனியின்னே இனி
வேறுதவம் பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே.”
2003
11

Page 28
“சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள்
எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்கலாம் உறப் போதிக்கலாம்
சொன்னதே துணிந்து
சாதிக்கலாம் மிகப் போதிக்கலாம்
முக்திதான் எய்தலாம்
ஆதிக் கலாமயில் வல்லி பொற்றாளை
அடைந்தவரே.”
“இலங்குந் திருமுகம் மெய்யில் புளகம்
எழும்கண்ணிர் மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும்
மனம்மிகவே துலங்கும் முறுவல் செயக்களி கூரும்சுழல்
புனல்போல் கலங்கும் பொழுது தெளிஅம்
சொல்மானைக் கருதினார்க்கே.”
கம்பரது பெயரால் வழங்கப்படும் சரஸ்வதி அந்தாதியை அவரே பாடினார் என்று கொள்வதற்குச் சான்றுகள் இல்லை. கம்பராமாயணத்தின் நடைக் கும் சரஸ்வதி அந்தாதியின் நடைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. ஆயி னும், சரஸ்வதி அந்தாதியும் தன்னளவிற் சிறப்பும் புகழும் பெற்று விளங்கும் ஒரு நூலாக அமைந்துள்ளது.
பக்தியுகத்தின் இரண்டாவது காலகட்டத்தைச் சேர்ந்தவரும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான குமரகுருபரர் பாடிய பல்வேறு நூல் ‘களுள் ஒன்றாகச் சகலகலாவல் லி மாலை விளங்குகிறது. இந்நூலிலுள்ள பத்துப் பாடல்களும் கலைமகள்மீது குமரகுருபரர் கொண்டிருந்த பக்தியுணர் வைச் சிறப்பாகப் புலப்படுத்துகின்றன. இப்பாடல்களிற் காணப்படும் பொருட் சுவையும் பக்திச்சுவையும் எவரையும் பிணிக்கவல்லன. கலைமகளின் பெருமை அவளது அருளாற்றல், அவளது அரு ளைப் பெறமுனையும் தவிப்பு, அவளது அருள் கிடைத்தால் பெறக்கூடிய பெரும் பேறுகள் முதலியவை சகலகலாவல்லி
12

மாலையில் கலைத்துவச் சிறப்போடு கூறப்படுகின்றன. இந்நூலில் வரும் சில பாடல்கள் இங்கு தரப்படுகின்றன:
“நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க
யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கணதனக்
குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல
கலாவல்லியே.”
“துாக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட
நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல
கலாவல்லியே.”
“பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற்
பனுவலும்யான்
எண்ணும் , பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங்
காலுமன்பர் கண்ணுங் கருத்து நிறைந்தாய்
சகலகலாவல்லியே.”
“பாட்டும் பொருளும் பொருளாற பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங்
கொண்டுதொண்டர் திட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந்
தெளிக்கும் வண்ணங் காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல
கலாவல் லியே.”
“சொல்விற் பனமு மவதான முங்கவி
சொல்லவல்ல
நல் வித் தையுந் தந் தடிமைகொள்
வாய்நளி னாசனஞ்சேர்
шрфšu цртавтост бѣѣғы шpпрвпtсь3 3ойч шpeoй 2oоз

Page 29
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை
யாமைநல்குங்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல
கலாவல்லியே.”
“மணி கணிட வெணி குடைக் கழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய
வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும
விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ சகல
கலாவல்லியே.”
குமரகுருபரரை என்றும் நினைவில் வைத்திருக்கச்செய்யும் அவரது படைப்பு களுள் ஒன்றாகச் சகலகலாவல் லி மாலை விளங்குகின்றது.
இருபதாம் நூற்றாண்டின் இணை யற்ற தமிழ்க் கவிஞரும், நவீன கவிதை யின் பிதாமகருமான சுப்பிரமணியபாரதி, அரசியலையும், ஆன்மீகத்தையும், சமூகத்தையும் இணைத்துப் பாடிய ஒரு மகாகவி. சக்தி உபாசகரான அவர், பல்வேறு இந்துமதத் தெய்வங்களையும், அல்லாஹம், இயேசுகிறிஸ்துநாதர் ஆகி யோரையும் பாடியுள்ளார். இந்து மதத் தெய்வங்களுள் ஒன்றான கலை மகளை யும் அவர் மனம் விரும்பிப் பாடியுள்ளார்.
கலைமகள், வாணி, நாமகள், சரஸ்வதி முதலான பல்வேறு பெயர் களில் அருள் பாலிக்கும் அத்தெயப் வத்தைப் பலவாறாகப் பாரதி பாடியுள் ளார். சரஸ்வதி ஸ்தோத்திரம், சரஸ்வதி தேவியின் புகழ், நவராத்திரிப் பாட்டு, மூன்று காதல் ஆகியவற்றிற் பாடியி ருப்பது மாத்திரமன்றி, தமது பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தின் கடவுள் வாழ்த்துப் பகுதிகளிலும் கலைமகளைப் பற்றிப் பாரதி பாடியுள்ளார்.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

கலைமகளைப் பாடும் பாரதி, புதிய முறையிலே அத்தெய்வத்தைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவளின் தோற்றப்பொலிவு, அவள் வீற்றிருக்கும் இடங்கள், அவளது கருணையைப் பெறுவதற்கு அருகதையுடையவர்கள், அவளுக்குரிய பொருத்தமான வழிபாடு முதலானவற்றை முற்றிலும் புதிய பாணியில் பாரதி கூறிச்செல்கிறார்.
கலைத்தெய்வமான வாணியின் தோற்றத்தை வித்தியாசமான முறையில் கற்பனை செய்து பாடியுள்ளார், பாரதி. அவள் வேதங்களைத் தனது திருவிழி களாகக் கொண்டவள். அவற்றுக்கான உரைகளைத் தனது கண்களின் கருமை நிறமாக உடையவள். குளிர்ச்சியான கதிர்களை வீசும் சந்திரனே அவளது நெற்றி. வாதம், தருக்கம் என்பவை களைச் செவிகளாகக் கொண்டவள், அவள். அவற்றில் துணிவு என்னும் மூக்கினை உடையவள். நலம் பொங்கும் பல நூல்களை வாயாகக் கொண்டவள். கற்பனையை இதழ்களாகக் கொண்ட வள். சொற்களின் நயத்தை அறிபவர் கள், இசை தோய்ந்த பாடல்களைத் தொகுப்பதன் சுவையை உணர்ந்தவர் கள், விற்பனர்களான தமிழ்ப் புலவர்கள் போன்றோரின் நாக்குகளைத் தனது பாதங்களாகக் கொண்டவள்.
கலைமகள் விருப்பத்துடன் உறையும் இருப்பிடங்களாகப் பலவற்றை பாரதி தமது பாடல்களிற் குறிப்பிடு கின்றார். அவள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள். வீணை செய்யும் ஒலியில் இருப்பாள். பாவலர்களின் உள்ளத்தில் வதிவாள். வேதத்தில் உள்நின்று ஒளிர்வாள். கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்தின் உட்பொருளாக விளங்குவாள். மாதர் களின் தீங்குரல் பாட்டில் இருப்பாள். குழந்தைகள் பேசும் மழலையில்
2003 13

Page 30
உள்ளாள். கீதம் பாடும் குயிலின் குரலையும், கிளியின் நாவையும் தன் இருப்பிடங்களாகக் கொண்டவள். குற்றங் குறைகள் அற்ற முறையில் அமைந்த சித் தரம் , கோபுரம் , கோயில முதலியவற்றின் அழகிலே உறைபவள்.
“வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள் வீணை செய்யும் ஒலியி லிருப்பாள் கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஒதும் வேதத்தி னுண்ணின்றொளிர்வாள் கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.
(வெள்ளைத்)
மாதர் தீங்குரற் பாட்டி லிருப்பாள்
மக்கள் பேசும் மழலையி லுள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியினாவை யிருப்பிடங் கொண்டாள் கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈத னைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.
(வெள்ளைத்)
வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழு மாந்தர் குலதெய்வ மாவாள் வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர் தச்சர் மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர் வீர மன்னர்பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.
(வெள்ளைத்)
இவ்வாறு, கலைவாணி உறையும் இடங்களைப் புதிய முறையிற் கூறுகி றார், கவிஞர்.
நாமகள் எத்தகையோரினி தெய்வமாக விளங்குகிறாள் என்பதையும் மகாகவி பாரதி சுட்டிக்காட்டுகின்றார். வஞ்சமற்ற தொழில் புரிந்து, உண்டு
14

வாழும் மாந்தர்களின் குலதெய்வமாக அவள் விளங்குவாள். கொல்லர், சிற்பிகள், தச்சர், வணிகர், வீரமன்னர், வேதியர் அனைவரும் தஞ்சமென்று வணங்கும் தெய்வமாக இருப்பாள். வாழ் வில் உயரவேண்டும் என்ற கருத்துடை யோரின் உயிரினுக்கு உயிராக விளங்கு வாள். எச்செயலையும் செய்துமுடிப்போம் எனச் செயற்படுபவர்களின் செம்மை யான போக்கை விரும்பி உதவும் தெய்வ மாக விளங்குபவள். கைவருந்தி உழைப் போரின் தெய்வமாக விளங்குபவள். கவிஞர்களின் தெய்வமாக இருப்பவள். இவ்வகையிலும் பாரதி வித்தியாசமான தமது கருத்தோட்டத்தை முன்வைக்கி றார.
சரஸ்வதியின் அருள் கிடைப்பின் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும், பாரதி அழகாகக் குறிப்பிடுகின்றார். அறி வும், தெளிவும், கற்பனையும், கலை யுணர்வும் கொண்டவர்களாக அவளது அருளைப் பெற்றோர் விளங்குவர். பின் வரும் பாடலடிகள் இதனை உணர்த்து கின்றது.
“தெளிவுறவே யறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தி லாநந்தக்
கனவுபல காட்டல் கண்ணிர்த் துளிவரஉள் ளுருக்குதல் இங்
கிவையெல்லாம் நீயருளுந் தொழில்களன்றோ?”
கல்வியினதும், கலைகளினதும் தெய்வமான கலைமகளை வெறுமனே சாத்திர சம்பிரதாயமாக வழிபடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதைப் பாரதி வற்புறுத்திக் கூறியுள்ளார். மந்தி ரத்தை முணுமுணுத்து, ஏடுகளை வரிசையாக அடுக்கிவைத்து, அவற்றின் மீது சந்தனத்தைப் பூசி, மலர்களை வைப்பவர்களின் சம்பிரதாயபூர்வமான
фguш цртавпехи бѣeы цртдвтčсь5 3'müч шpeoй 2003

Page 31
பூசனை, கலைமகளுக்குரிய வழிபாடு அல்ல என்று பாரதி கூறியுள்ளார். பதி லாக அவளுக்குரிய வழிபாடு எத்தகைய தாக அமையவேண்டும் என்பதைத் தமது பாடல் ஒன்றில் அவர் தெளிவுபடுத்து கின்றார்:
“வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன வுர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியி லாததொ ரூரைத் தீயினுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.”
வீட்டிலும், வெளியிலும் கல்வியையும், கலைகளையும் வளர்ப்பதே கலைம களுக்குச் செய்யத்தகுந்த வழிபாடாகும் என்பது பாரதியின் உறுதியான கருத்து.
பாரதி தமது மூன்று காதல் என்ற கவிதையில் சரஸ்வதி, இலட்சுமி, காளி ஆகிய மூவரையும் காதலிகளாகப் பாவனை செய்து பாடியுள்ளார். சரஸ்வதி காதல் என்ற பகுதியில், சரஸ்வதியின் மீது தாம் கொண்ட பக்தியுணர்வைக் காதலுணர்வாக உருவகித்துக் கூறுகின் றார். அப்பகுதியிலிருந்து இரு பாடல் களை இங்கு நோக்கலாம்:
“பிள்ளைப் பிராயத்திலே - அவள் பெண்மையைக் கண்டு மயங்கிவிட்
டேனங்குப் பள்ளிப் படிபப்பினிலே - மதி பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் - அவள் வீணையுங் கையும் விரிந்த முகமலர் விள்ளும் பொருளமுதும் - கண்டு வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா.” “சித்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத் தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு பித்துப் பிடித்ததுபோல் - பகற் பேச்சு மிரவிற் கனவு மவளிடை வைத்த நினைவையல்லால்-பிற
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல.

வாஞ்சை யுண்டோ? வய தங்ங்ண மேயிரு
பத்திரண் டாமளவும் - வெள்ளைப் பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா.”
பாரதி பரம்பரையில் வந்த கவிஞர்களுள் ஒருவராகிய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையும் கலை மகளைத் துதித்துப் பாடியுள்ளார். பாரதிக்குப் பின் கலைமகளைப் புதிய முறையிற் பாடிய ஒரு கவிஞராக அவர் விளங்குகின்றார். அவர் பாடிய,
“நாடிப் புலங்கள் உழுவார் கரமும்
நயவுரைகள் தேடிக் கொழிக்குங் கவிவாணர் நாவும்
செழுங்கருணை ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும்
உவந்துநடம் ஆடிக் களிக்கும் மயிலே உன்பாதம்
அடைக்கலமே.”
என்ற கவிதை கலைமகள் விரும்பி உறையும் இடங்களாக உழவர்களின் கரங்களையும் கவிவாணர் நாவையும் அறிவாளர் நெஞ்சையும் குறிப்பிடுகிறது. பாரதியின் “வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்” என்று தொடங்கும் பாடலோடு இப்பாடலும் ஒப்பிட்டு மகிழத் தக்கது.
இவ்வாறு பல நூற்றாணர்டு களாகக் கவிஞர்களின் மனத்தை நெகிழித்தி, அறிவைக் கவர்ந்து வந்துள்ள ஒரு தெய்வமாகக் கலைமகள் விளங்குகிறாள். கல்வி, கலைகள், அறிவு முதலியவற்றின் ஒரு குறியீடா கவும் கலைமகள் கவிஞர்கள் மத்தியிற் செல் வாக்குச் செலுத்துகின்றாள் எனலாம் . கலைமகளை நவீன கவிஞர்கள் மக்களுக்கு எட்டாத துாரத் தில் வைத்துப் போற்றவில்லை. நல்ல உள்ளங்களிலும், நல்ல செயல்களிலும் அவளின் இருப்பை உணரலாம் என்பது அவர்களது கருத்து. கலைமகளைப் பற்றிக் கவிஞர்கள் பாடியவை அனைத் தும் எமது கருத்தைக் கவரத்தக்கவை.
år 2003
5

Page 32
திருமூலரின்
பேராசிரியர் அர
திருமூலர் பிரான் அருளிச் செய்தவை மூவாயிரம் பாடல்கள் என்ற வழக்கு தற்பொழுது வழக்கில் உள்ளது. ஆனால், அச்சிட்டு வெளிவந்துள்ள நூல்களில் 3047 பாடல்கள் உள்ளன. சில பாடல்கள் இரண்டுமுறை வருவதால் பதிப்பிற்குப் பதிப்பு பாடல்களின் எண்ணிக்கை வேறுபடுகின்றது. திரு மந்திரம் 1000 என்ற நூலும் வைத்தியம் தொடர்பாக வெளிவந்துள்ளது. திருமூலர் 300 மந்திரப் பாடல்களை அருளியதாகக் குறிப்பு காணப்படுகிறது. அவை எவை என்பது பற்றி அறியமுடியவில்லை. ஆனால் அனைத்தும் ஒரே பொருளைக் குறிப்பன என்பது திண்ணம்.
“மூலம் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலம் உரைசெய்த முன்னூறு மந்திரம் மூலம் உரைசெய்த முப்பது உபதேசம் மூலம் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே”
(3046)
என்னும் திருமந்திரப்பாடல் திருமூலர்பிரான் அருளியதா அல்லது வேறொருவர் அருளியதா என்பதை அறியமுடிய வில்லை. இறுதியாகத் திருமூலர் தம் குருபிரானுக்கு வணக்கம் கூறி வாழ்த் துரைக்கின்றார்.
"வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ்ஞானத்தவன்தான் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே”
(3047)
எனத் தம்முடைய குருவின் திருவடி, பதம், தாள், பாதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு
16

திருமந்திரம்
ங்க.இராமலிங்கம்
வாழ்த்தி, வணங்குகின்றார். திருவடி. தாள், பாதம், நற்றாள், மலரடி, அடி எனக் குறிக்கப்பெறுபவை அனைத்தும் அறிவு வடிவாக விளங்கும் குருபரனைக் குறிக்கப் பயன்படுத்தப்பெற்ற சொற்கள்; ஒரு பொருளைக் குறிக்க வந்த பல சொற்கள். சிவமே குருவடிவாக வந்து ஞானத்தை அருளுவதால் இவ்வாழ்த்து சிவத்திற்கும் கூறப்பட்டதாகக் கொள்ளுதல் பொருந்தும். ஒன்பது தந்திரங்களில், இருநூற்று முப்பத்திரண்டு அதிகாரங்களில் 3047 பாடல்களைக் கொண்டு இந்நூல் திகழ் கிறது. சைவத் திருமுறையில் பத்தாம் திருமுறையாக இந்நூல் சேர்க்கப் பெற்றுள்ளது.
திருமந்திரம் ஓர் அனுபவ நூல். முயற்சியோடு கூடிய பயிற்சியால் பெறும் அனுபவ அறிவாலி உணரக் கூடிய நூலாகத் திருமந்திரம் திகழ்கிறது. திருமந்திரத்தில் உள்ள மூவாயிரத்து நாற்பத்தேழு பாடல்களும் திருமூலரின் அனுபவ வெளிப்பாடாகும். இந்நூலை ஒவ்வொருவரும் அவரவர் அனுபவத்திற் கேற்ப அறிந்துகொண்டு வருகின்றனர். இந்நூலைப் பக்திநூல் என்றும், சாத்திர நூல் என்றும், வேதாந்த நூல் என்றும், தாந்திரிகநூல் என்றும், ஞானநூல் என்றும் அவரவர் உணர்திறனுக்கேற்ப உரைத்து வருகின்றனர்.
இதனைத் தனித்தமிழ் ஆகமம் என்றும் கூறுவர். அறிஞர்கள் பலர் திரு மந்திரத்தை வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலாகவும் உணர்ந்து உரைத் து இருக்கின்றார்கள். ஞானநூலாகவும் சித்தாந்த நூலாகவும் உணர்ந்து போற்றினால் பயன் பெறலாம். црфgu цртатаәт вѣeы шопрьтtсь5 зрач преої 2003

Page 33
மந்திரம் என்பதற்கு நினைப்ப வரைக் காப்பது என்பது பொருள். திரு மந்திரப் பொருளை ஒருவர் நினைவில் ஒட்ட வைத்துக்கொண்டால், அவரை வாழ்நாள் முழுமையும் காக்கவல்லது திருமந்திரம். திருமந்திரத்தில் உபதேசம் எனும் தலைப்பில் தரப்பெற்றுள்ள முப்பது பாடல்களின் விளக்கமாகவே ஏனைய மூவாயிரம் பாடல்களும் அமைந்துள்ளன. உபதேசப் பகுதியிலுள்ள பாடல்களை ஒருவர் ஊன்றிப் படித்து உணர்ந்து தெளிந்தாலி, அவரே மந்திரமாகி விடுவார். இதனை,
“யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே”
(திரும.85)
என உரைத்திருப்பது உணரத்தக்கது. உடலுக்குள் உணர்வாக உள்ள இம்மந்தி ரத்தை ஒருவர் இடையறாது பற்றிக் கொண்டால் வான்பற்றி நின்ற மறை பொருளான சிவம் வந்து அவரிடம் பொருந்திவிடும் என்பது கருத்து.
“நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலமென்று சேர்ந்து கொண்டேனே.”
(திரும.2770)
புருவ மத்தியில் காணப்படும் இடைவெளி தான் தில்லைத் திருச்சிற்றம்பலமாகும். அங்குதான் பரம்பொருளாகிய சிவம் சோதிவடிவாக ஒளிர்கின்றது.
இப்படி ஒளிவிடுகிற மந்திரம் ஓங்காரத்திற்குள்ளே ஒடுங்கியுள்ளது. அந்த ஓங்காரத்திலிருந்துதான் அண்டம், பிண்டம் ஆகிய அனைத்தும் கருவாகி,
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

உருவாகி, பயிராகி, வளர்ந்து, வாழ்ந்து மறைகின்றன. இதனை,
“ஒமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி
ஒமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு ஒமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஒமெனும் ஓங்காரத் துள்ளே ஒனமுத்தி”
(திரும. 2676)
‘ஓங்காரத் துள்ளே யுதித்தஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம் ஓங்காரத் தீதத் துயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே”
(திரும. 2577) எனத் திருமூலர் நுட்பமாக உணர்த்துவது உணரத் தக்கது. இந்த ஓங்காரப் பொருளை உணர்ந்து, உயிரினி ஆற்றலைத் தெளிந்து முத்தி பெறுவது எவ்வாறு? அஞ்ஞானம் எனும் திமிரத்தால் நம்முடைய கண்கள் குருடாய் இருக் கின்றன. அகக்கண்களை மறைத்திருக் கும் அஞ்ஞானமென்னும் அறியாமைத் திரைகளை மெய்ஞ்ஞான குருபரனின் அருளினால் தான் அகற்றமுடியும், அகற்றி, உன் அறிவாகிய உயிரைப் பார் எனக் காட்டமுடியும். குருபிரான் தயவின்றி அகங்காரம் அடங்காதே!
“அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடங்காண் பரானந்தத் தேயென்னை இட்டு நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன் படந்தான் செய்துள்ளுட் படிந்திருந் தானே" (திரும.2741)
எனத் தம் அனுபவத்தினை உரைத்து அருளியிருக்கிறார். ஐம்பொறிகள் வழியாக அடங்காமல் ஆடிக் கொண்டிருந்த மனத்தை அடக்கி, அறிவாகிய திருவடி என்னுள் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து (இடம் காண்), அதனால் பரானந்தமாகிய பேரின்பத்தில் என்னைத் திளைக்கச் செய்து, ஞான நடனத்தைப்
2003
17

Page 34
புரியும் கூத்தனாகிய என் குருபிரான் அசை வற்ற நிலையில் இருந்து (குண்டலி அதனில் கூடிய அசபை- ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் 41ஒளவையார் தாம் அருளிய ஞானக் குறளிலும் அஜபா நலமெல்லாம் அருளி எனக் கூறியிருப்பதை ஊன்றி உணர்க) சித்திரம் போல் என்னை நிட்டையில் இருக்கச் செய்தான் என்னும் செய்தியை இப்பாடலில் திருமூலர்பிரான் கூறியருளியி ருக்கிறார்கள். குருவருளால் தன்னை யறிந்த சீவன் தானே அதுவாக இருப்பதை உள்ளத்தால் உணர்கிறது.
இதனை, “தலையடி யாவ தறியார் காயத்தில் தலையடி யுச்சியி லுள்ளது மூலந் தலையடி யான அறிவை அறிந்தோர் தலையடி யாகவே தானிருந் தாரே”
(திரும.2426)
என்கிறார் திருமூலர்பிரான். தலையா கவும் , காலாகவும், புனலாகவும் அமைந்து, அருளறமாகவும், அருளாக வும் அறிவாகவும் செயல்பட்டு, அருள் ஞானப் பெருவெளியாக ஒளிவிடும் தெய் வத்தை உணர்ந்துகொண்டவர் பிறவிப் பிணிகளிலிருந்து விடுபடுவர். பழவினை களாகிய வல்வினைகளை அறுத்து ஒழிப்பர். அத்தகைய பெருநிலை பெற்ற 6(3y,
“நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நானுடன் போவது திண்ணம் பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன் தவம்வருஞ் சிந்தைக்குத் தானெதி ராரே”
(திரும.2698)
எனக் கூறமுடியும். இப்பாட்டில் நமன் எனும் எமன் அஞ்ஞானமாகிய அறியா மையே. அறியாமையே இருள். அறிவுப் பேரொளியே சிவம். சிவமாகிய குருபிரான் பெருந்தயவுப் பெருங் கருணையால்
18

எனக்கு அளித்த ஞானவாள் என்னிடம் இருக்கிறது. அதன் துணையோடு என்னு டைய பிறப்பிற்குக் காரணமாக அமைந்த வலிமை பொருந்திய பழைய வினைகளை அறுத்துவிட்டேன். எனவே, இனி அறிவே வடிவாகிய பெருவெளியில் நானும் கலந்து ஒன்றாகி விடுவேன் எனக் கூறுகிறார்.
உள்ளமாகிய கோயிலிலி உறையும் இறைவனைக் காண வேண்டுமே! எப்படிக் காண்பது?
"உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே
தகளியாக மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந்
திரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து
நோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காண
6 orrup” (திருநாவுக்கரசர். தேவாரம்)
என்பதற்கேற்ப ஞானத்தியில் உணர்வு உருகும்போது உயிர் ஒளிவிடும். நந்தியின் மேல் வீற்றிருக்கும் சிவத்தைக் காணலாம். இந்த உண்மையை உணர்ந்தவர் உய்தி பெறுவர். உய்தி பெற்றவர் அறிவாகத் திகழும் சிவத்தைத் தன் சீவனில் (உயிரில்) காண்பர்.
“உய்யவல் லார்கட்கு உயிர் சிவ ஞானமே உய்யவல் லார்கட்கு உயிர் சிவ தெய்வமே உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் உய்யவல் லார்அறிவ உள்ளறி வாமே”
(திரும.2822)
என்னும் மந்திரம் உரைப்பதை உணர வல்லவர் உய்தி பெற்றவர் எனலாம். பிறப்பு இறப்பாகிய துன்பத்தினின்று உய்ய வல்லவர் மெய்க்குருபரனைத் தேடிய லைந்து இறுதியில் கண்டு அவர் திருவடி பிடித்து உய்திபெறுவர். அவ்வாறு மெய்க் குருபரனின் திருவருள் கண்ணோக்கம் рѣguш цртавпехи вѣѣeы цртрвтčсьä 3pйч шpeoй 2oоз

Page 35
பெற்றவருக்கு அவரது உயிரே அறிவாக வும், அந்த அறிவே பிரணவமாகவும், அந்தப் பிரணவமே சிவதெய்வமாகவும், அந்தத் தெய்வமே சிவஞானமாகவும் திகழ் வதை உணர்வர். உணர்வுடையார் மட்டுமே உயிரின் உண்மை நிலையினை உணர்வர். உணர்ந்து உய்திபெறுவர். இவர்களே உய்யவல்லவர்.
இவ்வாறு அறிவாகிய சிவத்தைத் தம்முள்ளே கண்டவர்களே சித்தர்.
“சித்தர் சிவத்தைக் கண்டவர்”
(திரும.2526)
“சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்”
(திரும.125)
எனச் சித்தர் நிலைபற்றித் தெளிவாக உரைக்கிறார் திருமூலர். உயிர்கள் ஏன் பிறக்கின்றன என்பதையும் அவற்றின் நிலைபற்றியும் மிகத் தெளிவாக உரைக் கிறார்.
“பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசநில் லாவே ”
(திரும.115)
எனும் முப்பொருள் உண்மையே சைவ சித்தாந்தத்தின் அடிப்படை. பசு பாசத்தினை விட்டுப் பதியிடம் சென்று சரணடைதல் வேண்டும். சேர்ந்த பிறகு பதியே குருவுருவாய் வந்து உணர்த்தி விடும். “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்துஎனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில்
உணர்த்திவிட்டு அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே” (சிவஞான போதம்-8 ஆம் சூத்திரம்)
என்பதற்கேற்பக் குருவும், சீடனும்
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

அந்நியம் இல்லாத நிலையினைப் பெற வேண்டும். பெற்றால் குருவருளைச் சீடன் பெற்றுப் பிறவிப் பிணியினை அறுக்க (Մ)ւգալb.
“கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு)
அங்கமுதற் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்” (பரஞ்சோதி முனிவர்-திருவிளையாடல் புராணம். காப்புச் செய்யுள்)
என்பதற்கிணங்கப் பிறவிப் பிணிகளை அறுத்து வெற்றி பெறலாம். அவ்வுயிர்கள் எப்படிக் குருவருளால் ஈடேறுகின்றன என்பதையும் திருமூலர் நுட்பமாக உணர்த்துகிறார்.
“விண்ணின் றிழிந்து வினைக்கீடாய்
மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல்
முன்வைத்து உண்ணின் றுருக்கியோ ரொப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே ”
(திரும.113)
என உயிர்கள் விடுதலை பெறும் நுட்பத்தை உபதேசப் பகுதியில் உணர்த்தி யுள்ளார். திருமந்திர நூலின் முதல் தந்தி ரத்தில் உபதேசம் என்னும் முதல் அதி காரத்தில் முதலாவதாக அமைந்த அற்புத மான பாட்டு இது. குரு, சீடனுக்குக் கூறும் வாசகம் உபதேசம் என்பர். தற்காலத்தில் உபதேசம் தீட்சை என்றால் ஏதோ ஒரு மந்திரத்தைக் கூறுதல் என்ற நிலை இருக்கிறது. உப என்றால் பிறிதொன்று என்று பொருள். உபதேசம் என்றால் உன் ஊன் உடம்பிற்குள்ளே இருக்கும் இருதய கமலத்திற்கு அழைத்துச் சென்று அங்கு
2003
19

Page 36
அருளாக ஒளிரும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் கண்ணாரக் காட்டிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் தாள் ஆகிய கால் தம் தலையைக் காத்துக்கொண்டிருப்பது தெரியும். அது தெரிந்தவர்களின் உள்ளம் உருகத் தொடங்கும். உள்ளம் உருக ஊன் உடம்பும் உருகும். அப்பொழுதுதான் கண்ணுதல் கடவுளைக் காணமுடியும். அப்பொழுது பேச்சில்லை, மூச்சும் இல்லை. கண்டவர் விண்டிலர் என்பது இதுதான்.
கண்ணாரக் காண்பவரும் காட்டிக் கொடுத்தவரும் மூக்காடாது (மூச்சோடா தவம்) நாவாடாது ஒருமையில் நின்று சிவத்தைத் தரிசிக்கும் அதிஅற்புத நிலை இதுவே. உபநயனம் என்பதும் இதுவே. மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணைத் திறக்கும் அதியற்புதப் பெரு நிலை. இச்செய்திகளையெல்லாம் இப்பாட் டில் பொதிந்து வைத்துள்ளார், திரு மூலர்பிரான்.
உயிர்கள் அவா எனினும் பற்றிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காக நிலையாமைக் கருத்துகளை மிகவும் சுவைபடக் கூறியுள்ளார்.
“அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே”
(திரும.148)
“ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச்
சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே”
(திரும.145)
எனக்கூறி நிலையாமையை உணர்த்து கின்றார்.
20

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை அவர் தெளிவுறுத்து கிறார். நடமாடும் கோயிலாக இருக்கும் உயிர்களுக்குச் செய்யும் தொண்டே படமாடும் கோயிலில் இருக்கும் மகேசனுக்குச் செய்யும் தொண்டாகும்.
இதனை,
“படமாடக் கோயில் பகவற்கொன் றியில் நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றியில் படமாடக் கோயில் பகவற்க தாமே”
(திரும.185)
என எளிமையாகக் கூறித் தொண்டு செய்வதற்குத் தூண்டுகிறார். தொண்டு செய்வதற்கான எளிய வழியையும் பின்வருமாறு புலப்படுத்துகிறார்:
"யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு
கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே”
(திரும.252)
எனத் தொண்டே தொழுகையாகும் நுட்பத்தைப் புலப்படுத்தியுள்ளார்.
நிலையாமையை உணர்ந்து மக்கள் தொண்டு செய்து உய்திபெற வேண்டுமானால், உண்மையை (சத்) உணரவேண்டும். என்றுமுள்ள உண்மை ய்ை உணர அறிவை (சித்) அறிய வேண் டும். அறிந்தர்ல் ஆனந்தம் (சத், சித், ஆனந்தம்- சச்சிதானந்தம்) அடையலாம். அறிவை அறிவிக்கக் குருபிரான் வேண் டும். குருவும், சிவனும் வேறு வேறு அல்லர். இருவரும் ஒருவரே (ஒன்றே).
шрфguш цртапот бъѣeы црпрвпtсь5 5püч преої 2003

Page 37
இதனை,
“குருவே, சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறிக் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே"
(திரும.1581)
என்கிறார், திருமூலர்பிரான். இவ்வாறு குருவருளைப் பெற்றவர் குருவாகவே மாறிவிடுவர். என்னையும், நின்னையும் ஒருருவாக்கி (அருட்பெருஞ் ஜோதி அகவல்) என்கிறார், வடலூர் வள்ளற் பிரான். நானும் கடவுளும் ஒன்றாகி விட்டோம் என்கிறார், திருமூலர்."
“ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன் அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும்
வேண்டேன் செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே'
(திரும.2958)
என உறுதிபடத் திருமூலர் பிரான் உரைப்பது உணரத்தக்கதாகும். குளவி கொட்டிக் கொட்டிப் புழுவினைக் குளவி யாக மாற்றுதல் போல் குருபிரான் தன் திருவாய் அமிழ்தத்தினை உமிழ்ந்து உமிழ்ந்து சீடனைத் தானேயாக உரு மாற்றுகிறார். ஒரு நிலையில் குருவும், சீடனும் ஒன்றாகி விடுவார்கள். குருவரு ளால் நிகழும் உருமாற்றம் இது.
இவ்வாறு குருவருளைப் பெற்று உண்மையை உணர்ந்து தெளிந்தவரால் மட்டுமே சிவமாகிட இயலும்.
“சீவ னெனச்சிவ னென்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை யறிகிலர் சீவ னார்சிவ னாரை யறிந்தபின் சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே”
(திரும.2017)
црфяш црпатахт аѣвы шpпрвтесь3 5pйч шpeo

என நுட்பமாகச் சீவன் (உயிர்) சிவமாக உருமாறும் தந்திரத்தை மந்திரமாகச் செப்பியுள்ளார். உயிர் தன்னை அறியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? மயக்கம் தான். உண்மையைக் காணாக் கண்ண ராய் ஆணவமலம் எனும் இருட்டறையில் கிடந்து உயிர்கள் உழல்கின்றன.
“பொன்னை மறைத்து பொன்னணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தது தன்கர ணங்களாம் தன்னின் மறைந்தது தன்கர ணங்களே”
(திரும.2289)
“மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தை மறைத்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்”
(திரும.2290)
இவ்வாறு உயிர்கள் தம்மையறியாமல் தாமே கெட்டு உழல்கின்றன. தன்னை யறிந்துவிட்டால் விடுதலைதான். எப்படித் தன்னை அறிவது?
தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சையவிழ்ப் பார்கள் பின்னை வினையைப் பிடித்துப்பிசை வார்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலே”
(திரும.2611)
என்கிறார், திருமூலர்பிரான். சென்னியி லிருக்கும் சிவத்தை நடுக்கண் புருவப் பூட்டுத் திறந்து காட்டுவதற்குக் குருபிரான் தேவை. அவரவர் விதிவழி அடைய நின்றனர். அவ்வளவே,
தம் உயிராகிய சீவனைச் சிவமாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர் களால் மட்டுமே பின்வருமாறு கூறமுடியும்:
2003 21

Page 38
* ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நானாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே’
(திரும.2104)
என்னும் திருமந்திரப் பாடல் நினைந்து நினைந்து உருகுவதற்குரியது. உள்ள மாகிய சித்தத்தில் நின்று நின்று நினைக்க வேண்டும். அதுவும் நன்றே நினைக்க வேண்டும். எதற்காக? (நீர் நினைந்து உய்ம்மினே) உய்வதற்காக. எதிலிருந்து உய்வதற்காக? எமனிடமிருந்து உய்வதற் காக (நமனில்லை). அதாவது நினைந்து போற்ற வேண்டும். உள்ளத்தில் சித்தாக அறிவாக இருந்து எல்லாவற்றையும் நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கும் அந்தப் பரம்பொருளை, பெரும் பொருளை (பேரொளிப் பிழம்பை - பெரு வெளியைஅறிவை நேர் கூராக்கி ஒரே நினைவில் ஆணியாய் - ஆப்பாய், அறைந்து நிறுத்திக் காண வேண்டும் என்பதே இத்திருமந்திரத்தின் நுண்பொருள்.
இவ்வாறு, அறிவாகிய பெரும் பொருளை அறிவதற்குக் குருபரனின் அருளாகிய மெய்யறிவின் துணை வேண் டும். உலகியலில் படித்துப் பெறும் அறி வினை (ஏட்டறிவு படிப்பறிவு) ஞானியர் அறிவாக ஏற்றுக்கொள்வதில்லை.
"அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை அழகிய வாறே”
(திரும.2637)
என்பதிலிருந்து உணர்மையறிவின் இயல்பை உணர்த்தியுள்ளார். உயிர்கள் அறிவு வடிவம் (அறிவு சொரூபம்) என்பதை மறந்து அவை மயங்கியிருப் பதை உணர்த்துகிறார். குருபிரான் விடுபட்டுத் தாமே அந்த அறிவின் வடிவம்
22

(அறிவு சொரூபம்) என்பதை உணர (Մlգալb.
“அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின் றணமறை யிறுகள் தாமே ”
(திரும.2358)
என்பதை உணர்ந்து உணர்ந்து ஊற்றெ ழும் கண்ணிர். அதனால் நனைந்து நனைந்து உய்தி பெறுதல்வேண்டும். இதுவே திருமந்திரப்பயன்.
‘தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை தன்னை யறியாமல் தானே கெடுகின்றான் தன்னை யறியும் அறிவை அறிந்தபின் தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் தானே”
(திரும.2355)
என்கிறார், திருமூலர்பிரான். சூட்சுமமும், இரகசியமும் இது தான். தானேதான் அது. அதுவேதான் நாம்.
தன்னை அறிந்தவன் தனக் குள்ளே இருக்கும் தலைவனையும் அறிவான். தமக்குள்ளே ஒளிந்து ஒளிரும் கண்ணாரமுதத்தைக் கண்டவர்களின் ஐம்புலன்களும் வெறிபிடித்து அலையுமா? அலையாதே தலைவனை அறிந்தால் வெறிபிடித்த ஐம்புலமாடுகள் வெறி அடங்கி அமைதியுறும். அதன் பிறகு ஐம் புலன்களும் மனத்திலே ஒன்றி விடும். தெளிந்த மனம் கண்ணாடிபோல உள்ளத் தில் உறைந்திருப்பவனைக் காட்டிவிடும். அதன் பிறகு, ஐம்புலனும் செயல் பட்டாலும் அது ஞானநெறியாகவே இருக் கும். இதனை, “பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும்
அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே”
(திரும.2883)
என்கிறார், திருமூலர்.
шрѣ5ш шопатеки вѣ8ы шpпрвтtсь5 3püч шpeої 2oоз

Page 39
இந்த நிலையை அடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? நிலை யாமையை உணரவேண்டும். நிலை யாமையே நிலையாக உள்ள இவ்வுல கத்தின் இயல்பை உணர்ந்து உணர்ந்து தெளிதல் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் மரணபயம் வரவேண்டும்.
இறப்பதற்கு இன்னும் ஏழு நாள்களே உள்ள நிலையில் பரீட்சித்து மகாராசாவுக்கு வந்ததே அந்த மரண பயம், வரவேண்டும். அதன் விளை வாகவே சுகப்பிரம்மரிஷியின் திருவாய் மொழியாக ரீமத் பாகவதம் வெளிப் பட்டது. நீலமணிக் கண்ணனின், கண்ண பிரானின் மணியான வாழ்க்கைச் செய்தி கள் தாம் பாகவதம்.
மரணபயம் கொண்டு குரு பிரானை அண்டி அவர் அருளைப் பெற்றுத் திருவடி பிடித்துச் செவிச்செல்வமாகத் திருவமுது உண்டால் திருமந்திரம் உள்ளத்துள்ளே ஒளிவிடக் காணலாம். உற்று உற்றுப் பார்க்க மந்திரம் ஒளிவிடும். நீங்கள் அதைப் பார்க்கப் பார்க்க அது உங்களைப் பார்க்க ஆரம்பிக்கும். அதற்குப்பிறகு,
“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல”
(குறள்-1100)
என்னும் நிலையேற்படும். அதற்குப் பிறகு பார்ப்பவரும் மணியான மந்திரமும் ஒன்றி விடுவர். இதுவே அத்வைதம், அகம் பிரம்மாஸ்மி, தத்துவம் அசி.
இவ்வாறு அரிய பெரிய செய்தி களைத் தனக்குள்ள்ே பொதிந்து வைத்தி ருக்கும் ஞானக் கருவூலமாகத் திகழ்வது திருமந்திரம்.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

சிவ சிவ எனக் கூறினால் இதுவரை செய்த தீவினைகள் மாளும். சிவ சிவ எனக் கூறிக் கொண்டே இருந்தால் தேவராகி இறுதியில் சிவகதி யினைப் பெறலாம் என்கிறார், திருமூலர். மிகப்பெரிய நிலைக்குச் செல்ல மிகமிக எளிய அதேநேரத்தில் மிகமிக நுட்பமான வழியினைக் கூறியருளியிருக்கிறார், திருமூலர்பிரான்.
“சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே
ኍ” (திரும.2716) எண்பது திருமூலரின் முடிந்த முடிபு.
அன்பு, சிவம் என்பவை இரண்டு பொருள் அல்ல. அன்பு தான் சிவம். சிவம்தான் அன்பு. இந்தப் பேருண்மையை உணர்ந்தவரே ஞானியர். அவர்களே கடவுள் நிலைபெற்றவர்கள்.
‘அன்பும் சிவமும் இரண்டுஎன்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”
(270)
என்கிறார், திருமூலர்பிரான். அறிவுதான் கடவுள். சுத்த அறிவே சிவம் எனப் பல இடங்களில் விளக்கம் அளித்துவிட்டு, இறுதியில் அன்பே சிவம் எனக் கூறுவது முரண்போலத் தோன்றலாம். இரண்டும் ஒன்றே. நாணயத்தின் இருபக்கம் போல. செயலற்ற நிலையில் பெருவெளியாய் இருக்கும் சிவத்தின் இருப்புநிலைக்கு அறிவு என்று பெயர். சிவம் செயல் நிலைக்கு வரும்போது சக்தி எனும் பெயர் பெறுகிறது. இயக்கமாக மாறும் சக்தியின் இயல்பு அன்பு அம்மா அன்பின் வடிவம.
2003
23

Page 40
அப்பா அறிவின் வடிவம். இருவரும் ஒருவரே சிவசக்தி .அம் மையப்பர். உமையொரு பாகர் அனைவரும் ஒருவரே. இன்னும் சற்றுத் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் உலகிற்கு இரு கண்களாய் இருப்பது சிவசக்தி (இடப்
தானே தனக்குப் பகைவனு தானே தனக்கு மறுமையு தானே தான் செய்த விை தானே தனக்குத் தலைவ
உள்ளம் பெருங்கோயி லு வள்ளற் பிரானார்க்கு வாt தெள்ளத் தெளிவார்க்குச்
கள்ளப் புலனைந்தும் கா6
உடம்பார் அழியில் உயிர திடம்படு மெய் ஞானஞ் ( உடம்பை வளர்க்கும் உட உடம்பை வளர்த்தேன் உ
தெளிவு குருவின் திருமே தெளிவு குருவின் திருநா தெளிவு குருவின் திருவா தெளிவு குரு உரு சிந்தி

பக்கமாக இருப்பது அறிவாகிய சிவம். வலப்பக்கம் இருப்பது அன்பாகிய சக்தி) இருவரையும் இணைத்துப் பார்ப்பது சித்தர் நெறி. இணையாமல் இருப்பது மானுட நெறி. உணர்வுடையார் உணர்க. உய்தி பெறுவதே திருமூலர் நெறி.
லும் நண்பனும் ம் இம்மையும் னப்பயன் துய்ப்பானும் னும் ஆமே.
ானுடம் பாலயம்
ப்கோ புரவாசல்
சீவன் சிவலிங்கம்
ாா மணிவிளக்கே.
ார் அழிவர் BaFJ62 LDTLLTír ITu LDgög56g5 உயிர்வளர்த் தேனே.
னி காண்டல்
Dம் செப்பல்
ர்த்தை கேட்டல்
த்தல் தானே.
திருமூலர் திருமந்திரம்
لـ
прф85ш шотзтот Вѣeы црпрвтЕсь5 3püч шpeої 2oоз

Page 41
யோகம் அ நவம் வெள்6
சதுர்யுகத்தின் இறுதியுகமான கலி யுகம் இன்று கணினி யுகமாக மாற்றம் பெற்றுள்ளது. கணினியைக் கற்றுத்தேர் வதில் இன்றைய இளந்தலைமுறையினர் வெகுமும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர். கணினிப் பயிற்சிகளில் அவர்கள் பேரார் வம் காட்டுகின்றனர். பெற்றோர்களும் பிள்ளைகளை இத்துறையில் ஊக்குவித்து வருகின்றனர். கணினிதான் வாழ்வின் மூலாதாரம் என்ற நம்பிக்கை வளர்ந்துள்ள தால், பெருந்தொகைப் பணத்தையும், மிகுந்த நேரத்தையும் இளந்தலை முறைகள் இத்துறைக்குச் செலவிடுகின் றனர். அறிவியல் வளர்ச்சிப்படியில் கணினி நிலை மிக உயர்ந்தபடியில் இருப்பது உண்மையே. கணினியில் ஏற்பட்ட மிகை நாட்டமானது ஆன்மீகச் சிந்தனைக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது. இந்தக் கணினி யுகத்தில் ஆன்மீகச் சிந்தனையில் ஈடுபட, ஆன்மீக நூல்களைப் புரட்டிப் பார்க்க இளந்தலைமுறையினர்க்கு நேரமி ருப்பதுமில்லை; எண்ணமிருப்பதும் இல்லை. இந்நிலை தொடராமலிருப் பதற்கு ஆன்மீகச் சான்றோர்கள், ஆசிரியர் கள், பெற்றோர்கள் இளந்தலை முறை யினர்க்கு ஆன்மீக வழிகாட்டிகளாக இருப்பது மிகவும் அவசியமாகின்றது.
உலகியல் வாழ்க்கையில் உயர் நிலையை அடைய அறிவியல், பொருளி யல், அரசியல் சவால்கட்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு இளந் தலைமுறையினர் தள்ளப்படுகின்றனர். வாழ்வியல் போராட்டங்களுக்கு ஈடு கொடுக்கவேண்டிய இவர்கள் மனப் போராட்டங்களில் சிக்கி நெறிகெட்டு அல்லலுற்று அவதியுற்றுச் சோர்வடைந்து விடுகின்றார்கள். இனிய காலமான
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல.

அழைக்கிறது
ளைச்சாமி பீ.ஏ.
இளமைக் காலத்தை வளமற்ற வரண்ட நாட்களாகக் கடத்திவிட்டுக் கண்கலங் காதிருக்க இவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு சமயம் சார் நிறுவனங்களதும், சமயப் பெரியார்களதும் கடமையாகும்.
யோகமும் ஆன்மீக உணர்வும்
வளரும் இளந் தலைமுறையி னர்க்கு முறையான மெய்ஞான உணர்வு களை ஊட்டவேண்டும். தெளிவுபெறும் வகையில் ஆத்மஞானம் புகட்ட வேண்டும். அகவிழிப்புணர்வு பெற்று ஆன்ம சக்தியில் நம்பிக்கையை வளர்க்க வழிகாட்ட வேண்டும். அறிவியலின் துரித மாற்றங் களால் புறவாழ்வில் பல விருத்திகள் கிட்டி வருகின்றன. நமது ஈடுபாடும் புறவாழ்வின் மேம்பாட்டிலும் அதற்கான முயற்சியிலுமே அமைந்துவிடுகின்றது. உயிர்வாழ்க் கைக்கு உறுதுணையாக இவை மட்டும் அமைந்து விடுவதில்லை என்பதை உணரும்பொழுது, தள்ளாமை தழுவிக் கொள்கின்றது. நோயும் நொடியுமாக உடலும் நொந்துளைந்துவிடுகின்றபோது, சுடலை ஞானம் பிறக்கின்றது. உடல் தளர்வும் மனத்தளர்வும் உறாதவகையில் திடங்கொண்ட தேகமும் மனமும் எப்போ தும் நிலைக்க ஆன்மீகப் பேராளர்கள் வழிகாட்டியுள்ளனர். இளமை தொட்டு எம்முள்ளிருக்கும் தெய்வீகக் குணங் களால் எம்மை நிரப்பிக் கொள்வது அத்தியாவசியமாகும்.
உயிரும் உடலும் ஒன்றி ணைந்தே மனித வாழ்க்கையாகும். உடல் வாழ்க்கைக்கு அறிவியல் துணை என்றால் உயிர் வாழ்க்கைக்கு ஆன்மீகம் துணை என்பது இளமை முதல் உணர்த்தப்படல்
2003 25

Page 42
வேண்டும். வழிநடத்தப்படல் வேண்டும். தத்துவப் பேராசிரியர் க.நாராயணன், ‘ஆன்மீகம் இல்லாத அறிவியல் வாழ்வு இருட்டு வாழ்வு; அறிவியல் இல்லாத ஆன்மீக வாழ்வு நொண்டி வாழ்வு' என்கிறார். ஆதலால், ஆன்மீக நெறியிலும் இளந்தலைமுறையினர் வழிநடத்தப்பட வேண்டியது அவசியம் என்பது உணரப் படுகின்றது.
‘அர்ச்சுனா, தபஸ்விகளைக் காட்டிலும் ஞானிகளைக் காட்டிலும், நித்திய, நைமித்திக, காமிய கர்மங் களைச் செய்பவர்களைக் காட்டிலும் இமய நியமாதிகளுடன் கூடிய யோகாசனங்கள் செய்யக் கூடிய யோகியே உத்த மோத்தமன். ஆகவே நீயும் இயமாதி களைக் கைக்கொண்டு மனத்தைவென்று யோகியாவாயாக’ என்பது கிருஷ்ண பகவானால் அருச்சுனனுக்கு உபதேசிக்கப் பட்டதென ஸ்வாமி ஷண்முகானந்தா தமது யோகாசனமும் வாழ்க்கைத் தத்துவமும் என்ற நுாலில் விளக்கு கின்றார். நமது முன்னோர் அருளிய நுாலில் முடங்கிக் கிடக்கும் யோகப் பயிற்சிகளை வளரும் சந்ததிகட்கு வழங்குவதன் மூலம் அவர்களிடம் ஆன்ம பலத்தை வளர்த்துவிடலாம். இந்துசமயக் கலாசார அமைச்சு, இராம கிருஷ்ண மிஷன், சின்மயா மிஷன் போன்ற சமய நிறுவனங்களே இத்துறையைச் செயற் படுத்தக் கூடியவைகளாகும்.
யோகி திருமூலர்
“வித்தகச் சித்தர்கணம்” என்று தாயுமானசுவாமிகளால் போற்றப்படும் சித்தர்களது நெறி சிவநெறியாகும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழி காட்டிய சித்தர்கள், மனித மேம்பாட்டுக்கு உழைத்தவர்களாவர். அன்பே சிவமெனக் கொண்டு வாழந்த திருமூலர் காட்டிய நெறி உயர்வான வாழிக் கைக்கு
26

வழிகாட்டியுள்ளது. திருமந்திரமாகிய ஆகமத்தைச் செப்பும் திருமூலநாயனார் தாம் இறைவனைப் பற்றி நின்று அடைந்த தான பேரின்பத்தை இவ்வுலகமே அடைய வேண்டும் என்ற பேரவாவுடையராகி, மூவாயிரம் பாடல்களை மொழிந்துள்ளார். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வை யகம்” என்ற அவரது மனிதநேயத்திற்கு எதனையும் இணையாகக் கூறமுடியாது. சித்தர்கள் முக்காலமும் உணர்ந்த தீர்க்க தரிசிகளாவர். யோக சித்திகள் கைவரப் பெற்றவர்களுமாவர். உடலையும் , உலகையும் தமது ஆன்மீகப் பயணத் திற்குக் கருவிகளாகக் கையாண்ட பேராளர்கள். யோகநெறியிலும் ஞான நெறியிலும் நின்று அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்களாவர்.
திருமூலநாயனாரின் திருமந்தி ரத்தில் யோக நெறிக்கும் அதன் சாதனைகட்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. யோகத்தால் திருமூலர் துய்த்த இன்பத்தை உலகுக் கும் வழங்கியுள்ளார். திருமூலரைச் சுந்தர மூர்த்தி நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் சுவாமிகள் மூவரும் புகழ்ந்து பாடியுள்ளனர். சுந்தரர்க்கு முன் வாழ்ந் திருந்த திருமூலர் யோகத்தின் பயன்களை அன்றே நமக்குக் காட்டியுள்ளார். இன்று மேல்நாட்டவர்கள் யோகசாதனையின் நுட்பங்கள் நுணுக்கங்களைக் காண ஆர்வம் கொண்டுள்ள அளவிற்கு நமது இந்து சமுதாயம் இதில் ஆர்வம் காட்ட வில்லை. பத்தாம் திருமுறையாக இடம் பெற்றுள்ள திருமந்திரத்தைப் பற்றிச் சித்தாந்தப் புலவர் ந.சிவப்பிரகாச தேசிகர் கூறும் கருத்து இதுவாகும்: ‘'அறம், பொருள், இன்பம், வீடுபேறு, தவம், யோகம், ஞானம், சித்தி, புத்தி, முத்தி, கோள்கள், நாள்கள், சரம், மந்திரம், தந்திரம், யந்திரம், சக்கரம், மணி, மருத்துவம், முதலாகிய பலவகை கலை ஞானங்கட்கெல்லாம். கருவூலமாய் விளங்குவது.”
ந்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 43
நாளாந்த வாழ்வில் சாதாரண மக்களால் பேசப்படும் மந்திரம், யந்திரம், சக்கரம் (தாயத்து), மணிகள் (நவமணி), மருந்துகள் பற்றிய அறிவு திருமந்திரத்தில் எத்தனையோ வருடங்களுக்கு முன் அழகிய தமிழில் சொல்லப்பட்டுள்ளது. ஞானவர்களது கருத்துக்குரிய ஆதாரங் களும், சோதிடர் தம் கணிப்புக்குரிய ஆதாரங்களும் திருமந்திரத்தில் என்றோ கூறப்பட்டுள்ளன. சிதறிய மனத்தையும் சீர்கெட்ட உடலையும் சிறப்பாக்கும் வழி வகைகளை எடுத்துக்கூறி மானிட வாழ் வின் மேன்மைக்கு வழிகாட்டும் திரு மந்திரத்தை இளந்தலைமுறைகள் அறியச் செய்ய வேண்டும்.
“அஞ்சும் அடக்கடக்கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கின் அசேதனமாமென்றிட்ட அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே"
(2033)
என்ற மந்திரத்தில் இந்திரியங்களை அடக்கும்படி வற்புறுத்துவதால் பய னில்லை; அடக்குவதாலும் பயனில்லை. இந்திரியங்களோடு கூடியிருந்தே பயன் பெற வேண்டும். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இந்திரியங்களை அடக்காமல், அதனை எவ்வாறு இயங்கச் செய்வது என்ற உபாயத்தை அறிவது அவசியம் என்ற திருமூலரது தத்துவத்தை அலைபாயும் மனங்களுக்கு எடுத்து ரைத்தல் அவசியம் என்பது நம்மால் உணரப்படுதல் வேண்டும். இம்மேலான மந்திர நூலைப்பற்றி இளஞ்சந்திகள் அறியவழி செய்ய வேண்டும்.
ஆன்மீகப் புரட்சி
உலகம் இன்று புரட்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தத் தகாத தவிப்புக்களை எல்லாம் சாந்தப் படுத்தும் புரட்சியே ஆன்மீகப் புரட்சி யாகும். நவீன கணினிகளாலும் செய்ய
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

முடியாத இம்மாபெருங் காரியத்தைத்
திருமூலநாயனாரின் திருமந்திர நூல் மூலம் செய்யக்கூடியதாக உள்ளது.
இதயங்களின் உள்ளுணர்வு களைத் தட்டியெழுப்பி, அகப்புரட்சியினை ஏற்படுத்தி, ஆத்ம ஜெயத்தை, ஆன்மீக ஆளுமையை உருவாக்கும் மாபெரும் சக்தி திருமந்திரத்திற்கு உண்டு. அகக் கண்கொண்டு உடலுக்குள்ளே இருக்கும் ஒளியைக் காணுகின்ற பேரறிவை மந்திரங்கள் புகட்டுகின்றன. தன்னுள்ளே இறைவனைக் கண்டு இன்புற்ற திருமூலர், உயிரையும், உடலையும் வளர்த்து ஓம்ப வழிபல கூறுகின்றார்.
“உடலில் உத்தமன் உறைகின் றான்’ என்ற வாசகம் படிப்போரிடம் ஆன்மீகப் புரட்சியை எழுப்பும் சக்தி கொண்டதாக உள்ளது. இந்த ஆன்மீக தாகம் உள்ளவர்கள், அவர்காட்டும் அட்டாங்க யோகநெறியை அறிந்திருந் தால், இந்திரிய ஒழுக்கத்தையும், ஆன்ம ஒழுக்கத்தையும் பேணி, மனவலிமையைப் பெருக்கிச் சாதனைகள் பலவற்றையும் அடையலாம் என்பது அனுபவசாலிகளது கருத்தாகும் . இயமம் , நியமம் , பிராணாயாமம் முதலிய எளிய யோகா சனப் பயிற்சிகளையாவது அறநெறிப் பாடசாலை யூடாக வளரும் சந்ததிகட்கு அறிய, பயிற்சிபெற வாய்ப்பளிக்க வேண்டியது சமயம் சார்ந்தோரின் கடப் UITLITEölið.
திருமந்திரம் கூறும் அட்டாங்க யோகம்
“இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரஞ் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே” (552) மேற்கூறிய மந்திரத்தில் யோக உறுப்புக்கள் எட்டினதும் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. யோகப்பயிற்சிகள்
2003 27

Page 44
உடலையும், மனத்தையும் அடிப்படை யாகக் கொண்டே அமைந்துள்ளன. தற் காலத்தில் உடலை மட்டும் கருத்திற் கொண்டு செய்யப்படுபவை வெறும் உடற் பயிற்சிகளே. அவை யோகாசனமாகா.
இயமம், நியமம், ஆதனம் (ஆசனம்)
இயமம் என்றால் செய்தல் என்று பொருள்படும். மனம், வாக்கு, காயத்தால் செய்யக்கூடிய செயல்கள், செய்யக்கூடாத செயல்கள் பற்றிக் கூறுவது இயமம். யோகப் பயிற்சியாளர்கள் கட்டாயமாக இவ்விதியைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
*கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன் நல்லான் அடக்கமுடையான் நடுச் செய்ய வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லா னியமத்திடை நின்றானே” (554)
மேற்கூறிய மந்திரத்தில் யோகநெறியில் நிற்கும் ஒருவன் நீக்கவேண்டிய குற்றங் கள் கூறப்பட்டுள்ளன. யோகசாதகனைப் பக்குவப்படுத்த இத்தகைய கட்டுப்பாடு அவசியம்.
நியமம் என்பது ஏற்பாடு என்ற கருத்துடையது. இங்கும் பத்து நியமங்கள் கூறப்பட்டுள்ளன.
“தூய்மை அருளுண் சுருக்கம் பொறை
செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை காமம் களவு கொலையெனக் காண்பவை நேமீ யிரைந்து நியமத் தனாமே.” (556)
காட்டாறுபோல் பொங்கும் உணர்வுக ளைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு இந்நெறிகளைக் கடைப்பிடித்தல் அவசி ալb.
மூன்றாவதாக யோகநிலைக் கேற்ப அமருதல் அல்லது நிற்றலாகிய நிலையைக் குறிக்கும் ‘ஆசன' நிலை
28

யாகும். பத்மாசனம் முதல் சுகாசனம் ஈறாக நூற்றுக்கு மேற்பட்ட ஆசன நிலை கள் உண்டெனப்படுகின்றது. திருமந்தி ரத்தில் எட்டு ஆசனங்களே முக்கியமாகக் கூறப்பட்டுள்ளன.
யோகப்பயிற்சிக்கு ஏற்ப உடலை இருத்திக் கொள்வதில் சுகாசனம் முதலில் கூறப்பட்டுள்ளது. உடலுக்கு அசெளகரி யம் ஏற்படாத வகையில் அவரவர் உடல் நிலைக்கேற்பச் சுகாசனத்தை அமைத்துக் கொள்ளலாம். பத்மாசனம் யோகசாதகர் அனைவருக்கும் மிகவும் உகந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆசனங்களில் அமரும் வகைகள் ஆறு மந்திரங்களில் கூறப்பட்டுள்ளன.
Lily (T600TTurf LDLib
அட்டாங்க யோகத்தில் மிக முக்கி யமாக அமைவது, மனதை ஒருமுகப் படுத்த வழிசமைக்கும் பிராணாயாம மாகும். இப்பயிற்சியால் உடலுக்குப் புதிய சக்தி ஏற்படுகின்றது. மூச்சுப்பயிற்சியான இதன் மூலம் நீண்டகாலம் வாழும் சூக்கு மத்தைச் சித்தர்கள் மேற்கொண்டிருக் கிறார்கள். மூச்சுக்களை ஒழுங்குபடுத்தும் இப்பயிற்சியே யோகாசனத்தின் தலையாய அம்சமாகும். மூச்சினை உள்வாங்குதல், கட்டுப்படுத்துதல், வெளிவிடுதல் என்பவற் றில் மேற்கொள்ளும் பயிற்சியால் கொதிப் பும் கொந்தளிப்பும் அடங்கி மனமும் அமைதி அடைவதாக யோகசாதனை யாளர்கள் விளக்குகின்றனர்.
“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில் ஊறுதல் முப்பத்திரண்டதி ரேசகமம் மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே" (568) மேற்கூறிய மந்திரத்தால் பிராணாயாமப் பயிற்சியின் செய்முறை விளக்கப் பட்டுள்ளது. காற்றை உள்ளிழுத்தல்
рѣғи цртэтахт адѣвы цртрьтесь5 5püч цpeoй 2003

Page 45
பூரகம் என்றும், இழுத்த காற்றை உள்ளே நிறுத்துதல் கும்பகம் என்றும், வெளிவிடும் காற்று ரேசகம் என்றும் குறிப்பிடப் படுகின்றது. இடப்பக்க நாசித் துவாரம், வலப் பக்க நாசித் துவாரம் மூலம் பிராணாயாமப் பயிற்சி செய்தலை விளக்குகின்றது.
முறையான பயிற்சியால் சாத கரின் உடம்பு பளிங்குபோல் தூயதாகும். முதுமையிலும் இளமைத் தன்மை உண்டாகும். உடம்பு பாரமற்றதாக மென்மையடையும் என்றும் காலனைக் கடக்கலாம் என்றும் மந்திரங்கள் விளக்கு கின்றன.
“பிராணன் என்று சொல்லக்கூடிய உயிருக்கு மூலாதாரமாகத் திகழ்கின்ற பிராணவாயு எனப்படும் உயிர்க்காற்றை நமது உடலுக்குள் கட்டுப்படுத்தி அதன் பயன் முழுவதையும் சரியானபடி பயன் 'படுத்திக்கொள்ளும் ஒரு சாதனைக்குப்
பெயர்தான் பிராணாயாமம.”
இவ்வாறாக விளக்கமளிப்பவர் சுவாமி ஷண்முகானந்தா அவர்கள். உடலும் மனமும் ஆரோக்கியம் பெற பிராணாயாமப் பயிற்சிகளை வளரும் பிள்ளைகட்கு வழங்குவது அவசிய LDIT(5b.
பிரத்தியாகாரம், தாரணை, தியானம்,
சமாதி
முதல் மூன்றும் யோகாசனத்தின்
தீவிர நிலைகளாகும்.
‘' உணர்வு உன்னல் உள் நோக்கல் பிரத்தியாகாரப் பெருமைய தாகும்” (585) என்ற மந்திரத்திற்கு உரை விளக்கஞ் செய்யும் திருக்குறள்வேள் ஜி. வரதராஜன், "உணர்வு மயமான ஒளியை நினைத்து உருகி, மனத்தை ஒருமைப்படுத்தும் பிரத்தியாகாரப் பெரு மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு њао.

மையாமி' எனி கிறார். புறத்தே அலைபாயும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதல் புலன் ஒடுக்கம் என்பதாகும்.
தாரணை என்பதற்கு இவர் தரும் விளக்கம், "தாரணையாவது தரிக்கச் செய்தல்” என்பதாகும். உள்ளே நிறுத்திய மனத்தை நிலைபெறச்செய்தல் என்ப தாகும்.
தாரணையின் முதிர்வில் பெறப் படுவது தியானம். “தியானம் என்பது இடைவிடாது நினைத்திருத்தல” “உள் நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால் கண்ணாடி போலக் கலந்து நின்றானே' (603).
கண்ணாடியில் உருவத்தைக் காண்பது போல, உள்ளத்தில் கலந்தி ருக்கும் இறைவனை ஒளி பொருந்தும்படி பார்க்கும் வல்லமையைத் தியானம் தருகின்றது.
மேற்கூறிய யோகப்படிமுறை களை முறையாகச் செய்துவரும் சாதகர் சமாதி நிலையை அடைய முடியும் என்பது சாதகர்களின் அனுபவக் கூற்றாகும். இது ஒரு பக்குவப்பட்ட ஆன்மாவின் நிலை யாகும்.
யோகம் அழைக்கிறது
மெய்ஞ்ஞானிகளால் தோற்று விக்கப்பட்ட யோகசாதனைகளை நவீன விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நவீன யோகப் பயிற்சிகள் ஒரு தொழில் முறையாகப் பேணப்பட்டு, உடலுக்கு மட்டுமே கொடுக்கின்ற உடற்பயிற்சிகளாகி விட்டன. யோகிகள் உடலையும் , உள்ளத்தையும், ஆன்மாவையும் இணைத் துச் செய்த யோகசாதனைகள் அட்டமா சித்திகளை அடையவும் வழிகாட்டி உள்ளன.
' 2003
29

Page 46
உடல் வலுவும், மனவலுவும், ஆன்மபலமும் பெற்ற ஓர் இந்து சமுதா யத்தை உருவாக்க நமது முன்னோர் கள்ால் நமக்குக் கையளிக்கப்பட்டுள்ள யோகாசனங்களை வளரும் சந்ததிகள் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். சமயபாடத்தின் ஊடாக யோகாசன அறிவைப் புகட்டவேண்டும். அறநெறிப் பாடசாலைகளிலி இலகுவான யோகாசனப் பயிற்சிகளை அறிமுகப்
எண்ணிய முடிதல் நல்லவே யெ திண்ணிய நெஞ்ச
தெளிந்தநல் பண்ணிய பாவ ெ பரிதிமுன் பை நண்ணிய நின்மு
நசித்திடல் ே
ー
30

படுத்த வேண்டும். யோகப் பயிற்சிப் பாசறைகளை நடத்த வேண்டும். வளரும் சந்ததிகளின் கவனத்தை யோகத்தின் பக்கமாகவும் திசைதிருப்ப வேண்டும். உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளலாக அமைந்து, ஒழுக்கம் நிறைந்த வாழ்வுக்கு யோகப் பயிற்சிகள் நிச்சயமாக இட்டுச் செல்லும். சாதனைகள் புரிய யோகம் வழிகாட்டும். உலக சாதனைகளை நிலைநாட்ட யோகம் அழைக்கின்றது.
வேண்டும் 1ண்ணல் வேண்டும் ம் வேண்டும் லறிவு வேண்டும் மல்லாம் ரியே போல
னிங்கு வண்டு மன்னாய்.
-மகாகவி பாரதியார்
шф*u шопавтот бБѣвы шpпрвтr-съ5 3püч преой 2oоз

Page 47
திருவாதினி
டாக்டர் சுப.
சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொணர்டு வழிபடும் செந்நெறியே சைவசமய நன்னெறி யாகும். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகக் கருதப் பெறுவது திருவாதிரை நட்சத்திரமாகும். சிவபெரு மானுக்குரிய குணங்களை எட்டாகக் கூறும் திருக்குறள், “எண்குணத்தான்" என்னும் கடவுள் வாழ்த்துக் குறள் (9) தொடர்க்குப் பொருள் கூறும் பரிமேலழகர், தன்வயத்தனாதல், தூய உடம்பின னாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பமுடைமை என இவ்வாறு சைவ சமயத் துட் கூறப்பட்டது என்று உரைப்பர். சிவபெருமானின் வடிவை, நிலம், நீர் தீ, காற்று, விசும்பு, ஞாயிறு, திங்கள், ஆனமா என எட்டுவகையாக - அட்ட மூர்த்தங்களாகத் திருமுறைகள் கூறும். சிவபெருமானின் வீரச் சாதனை புரிந்த தலங்களும் எட்டு (கண்டியூர், கோவலூர், அதிகை, பறியலூர், விற்குடி வழுவூர் குறுக்கை, கடவுர்). எனவே, சிவபெரு மானுக்கு உகந்த நட்சத்திரமாகிய திருவாதிரையின் சிறப்பை மொழியியல், அறிவியல், சோதிட இயல், இலக்கியம், சமுதாய இயல், சமயம், பண்பாடு, தத்துவம் என்னும் எட்டுவகை நோக்கில் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
மேலும், உலகியலில் ஒரு பொருளை அல்லது கட்டிடத்தைக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு. வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு,
மத்திய மாகான இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

ரைச் சிறப்பு
திண்ணப்பன்
தென்மேற்கு ஆகிய எட்டுத் திசைகளி' லிருந்து நோக்கினால் அது தெளிவாகத் தெரியும். அதுபோலத் திருவாதிரையின் சிறப்பும் மேற்கண்ட எட்டுவகை நோக்கில் காணும்போது தெளிவுறும் என்பதில் ஐயமில்லை.
மொழியியல் நோக்கில்
திருவாதிரை என்னும் சொல்லின் அமைப்பு, பிறப்பு, பொருள் பற்றி விளக்கு வது மொழியியல் நோக்கு எனப்படும். திருவாதிரை என்னும் தொடர் திரு என்னும் அடைமொழியும் ஆதிரை என்னும் தலைச் சொல்லும் இணைந்த ஒன்றாகும். ஆதிரை என்னும் சொல் ஆருத்ரா என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. ஆதிரை என்பது தமிழ்ச் சொல் என்று கருதுவாரும் உளர். திரு என்னும் அடைமொழிக்கு அழகு, தெய்வத்தன்மை, செல்வம் எனப் பல பொருள் உண்டு. ஆதிரை என்பது சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக இருப்பதால் திரு என்னும் அடைமொழி பெற்றுள்ளது எனக் கருதலாம். இருபத் தேழு நட்சத்திரங்களில் திரு என்னும் அடைமொழியுடன் திகழ்வன இரண்டு: ஒன்று திருவாதிரை; மற்றொன்று திருவோணம். இவற்றுள் முன்னையது சிவனுக்கும் பின்னையது திருமாலுக்கும் உகந்தவை. திரு என்னும் சொல்லும் ஆதிரை என்னும் சொல்லும் சேரும்போது, இரண்டுக்கும் இடையியே வ் என்னும் உடம்படுமெய் எழுத்து தோன்றியுள்ளது. இறைவனையும் உயிர்களையும் உடன் படுத்துகின்ற, இணைக்கின்ற மெயப்
2003
31

Page 48
எழுத்து இது. மெயப்ப்பொருளாகிய இறையை இது குறிக்கின்றது. அவனரு ளாலே அவன் தான் வணங்குவது தானே இயல்பு. இங்கு ஆதிரை என்பது பெயர்ச் சொல். இதனடியாக ஆதிரை நாச்சியார், ஆதிரைக் களி என்னும் தொடர்களும் அமையும். திருவாதிரை எனினும் சொல் லுக்கு (1) 27 நட்சத்திரங்களில் 6ஆவது நட்சத்திரம் (2) ஒரு விழா (3) நகரத்தார் மரபில் கொண்டாடப்பெறும் ஒரு சடங்கு என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி பொருள் கூறும்.
அறிவியல் நோக்கில்
அறிவியலில் நட்சத்திரங்கள், கோள்கள் பற்றி ஆராயும் பிரிவு வானவி யலாகும். இதனடிப்படையில் திருவாதிரை பற்றிய செய்திகளைத் தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் துணை கொண்டு பின்வரு மாறு தொகுத்துக் கூறலாம். திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பெயர் Betelgeuse. இது வானில் உச்ச ஒளியுள்ள ஒரையன் (Orion) என்னும் நட்சத்திர மண்டலத்தி லுள்ள பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்று; மஞ்சட் சிவப்பு நிறம் உன்டயது. இதனுடனுள்ள மற்ற நட்சத்திரங்கள் வெண்ணிறம் உடையவை. எனவே, எளி தில் கண்ணுக்குப் புலப்படும். பார்ப்பதற்கு இது சில சமயம் செவ்வாய்க் கிரகம் போலத் தோன்றும். இது சூரியனைப் போல 1200 மடங்கு ஒளி உடையது, சூரியனிடமிருந்து 325 ஒளி ஆண்டுத் தொலைவிலுள்ளது. இது செகண்டுக்கு 15 மைல் வீதம் சூரியனிடமிருந்து விலகிச் செல்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் சோடியம், மக்னீசியம், இரும்பு இருப்பதாக இதன் நிறமாலை (Spectrum) காட்டுகிறது. இதனை இந்திய வானவியலார் பிரஜாபதி என்று கூறுவர்.
32

சோதிட நோக்கில்
சோதிட நோக்கில் திருவாதிரை யின் பண்புகளைக் காணலாம். 27 நட்சத்தி ரங்களில் 6ஆவது நட்சத்திரமான திரு வாதிரை மிதுன ராசிக்குரியது. இதற்குரிய பெயர்ச் சிறப்பெழுத்துகள் கு, க, ங், ச என்பன. திருவாதிரையில் ஜனித்தோர்கள்
“திறமாய்ப் பொய்யைப் பேசிடினும்
மருவொன்றில்லா வாசகமாய் மதிப்பார் உலகோர்; திடகாத்திர
உருவாய் விளங்கிடுவோர்; வறுமை உற்றே தரித்திரம் எய்திடினும்
பெருமையாள னைப்போலப் பேசிச் சமர்த்தராய்த் திரிகுவரே”
என்று சோதிட அரிச்சுவடி என்னும் நூல் திருவாதிரையில் பிறந்தோர்க்குரிய இயல்பு களைக் கூறும். கீர்த்தி, பொய்பேசுதல், மனோதைரியம், கோபக்குணம், இடம்பம், சரீரபலம், சிநேக பட்சம், பிடிவாதம் முதலிய குணங்கள் இந்நட்சத்திரத்தில் பிறந்தோர்க்குண்டு என்பர்.
பஞ்சாங்கங்களில் தீதுறு நட்சத் திரங்களில் ஒன்றாகத் திருவாதிரை கருதப்பெறுகிறது. ‘ஆதிரை பரணி கார்த்திகை ஆயிலியம் முப்பூரம் கேட்டை தீதுறு விசாகம். சித்திரை மகம் ஈராறில், மாதனம் கொண்டார் தாரார்; வழிநடை போனார் மீளார், பாயினில் படுத்தார் தேறார்; பாம்பினில் வாய்த்தேரை தானே" என்று பஞ்சாங்கங்களில் உள்ள பாடல் இதனைக் கூறும். மேலும், திருஞான சம்பந்தப் பெருமான் பாடிய கோளறு பதிகத்தில் 'என்பொடு கொம்பொடாமை” என்று தொடங்கும் இரண்டாவது பாடலில் குறிப்பிடப் பெறும் தீதுறு நட்சத்திரங்களில் ஒன்று திருவாதிரை என்பதும் கருதத் தக்கது.
u pтавтект இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 49
திருவாதிரை பற்றிய கதை ஒன்று அபிதான சிந்தாமணி என்னும் நூலில் உள்ளது. அது வருமாறு: பிரமன் சரசுவதியைப் படைத்துத் தான் புணரச் செல்லுகையில், சரசுவதிமான் உருக் கொண்டு ஓடினாள். பிரமனும் அவ்வுருக் கொண்டு தொடர்ந்தனன். தேவர் வேண்டு கோளால் சிவமூர்த்தி வேடுருக் கொண்டு ஆண்மானை எய்ய, அதனின்றும் ஒரு சோதி தோன்றி ஆதிரை நாளாயிற்று. இக்கதையை ஒத்த ஒரு கதை கிரேக்கப் புராணத்திலும் இருப்பதாகக் கலைக் களஞ்சியம் கூறுகிறது. ஒரையன் (Orion) என்பவன் அழகும் ஆற்றலும் நிரம்பிய ஒரு வேடன். கடல் தேவனான போசைட னின் மகன். ஈனோப்பின் என்னும் அரசனு டைய மகள் மிரப்பி என்பவளை மணஞ் செய்ய விரும்பி, அவளைத் தூக்கிக் கொண்டு போக முயன்றான். அதனால், ஒரையணை அரசன் மதுவருந்துமாறு செய்து கண்களைக் குத்திக் குருடாக் கினான். ஒரையன் தேவர் கம்மியனான ஹிப்பெஸ்ட்டஸ் உதவியால் ஞாயிற்றை நோக்கிக் கண்களைப் பெற்றான். அதன் பின் அவன் வேட்டையாடி வரும்போது, அப்பாலோ என்னும் தேவனுடைய தங்கை ஆர்ட்டிமிஸ் என்பவள் ஒரையன் மீது காதல் கொண்டாள். இதனை அவள் அண்ணன் அறியான். ஒரையன் மீது அவன் அழுக்காறு கொண்டு கொல்ல முயன்றான். ஒரு நாள் காட்டு வழியில் தங்கையுடன் செல்லும்போது, ஒரையன் குளத்தில் குளிப்பதைக் கண்டு, தன் தங்கையை அவன் மீது அம்பெய்து கொல்லப் பணித்தான். தன் காதலன் என்பதை அறியாது அவளும் அவ்வாறு செய்து கொன்று விட்டாள். பிறகு அறிந்து பெருந்துயருற்றாள். காதலனை அவள் நாயுடன் வானத்தில் ஒரு நட்சத்திர மண்டலமாகச் செய்தாள். இதுதான் அக்கதை. மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

இலக்கிய நோக்கில்
திருவாதிரை பற்றித் தமிழ் இலக்கியங்களில் வரும் செய்திகளைத் தொகுத்துக் காணி பதே இலக்கிய நோக்காகும். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாகப் பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் திருவாதிரை பற்றிய குறிப்பு வருகிறது. பரிபாடலில் 8ஆவது செய்யுளில் முருகப் பெருமான் உறை யும் திருப்பரங்குன்றம் பற்றிப் பேசும்போது “ஆதிரை முதல்வன்’ என்னும் ஒரு தொடர் வருகின்றது. இது திருவாதிரை நட்சத்திரத்திற்குகந்த தலைவனாகிய சிவபெருமானைக் குறிக்கும். பரிபாடலில் 11 ஆவது செய்யுளில் பாவை நோன்பு பற்றிய குறிப்பு வருகின்றது. இதற்கு அப்போது அம்பா ஆடல் என்று பெயர் ‘வெம்பா தாக வியனில வரைப்பு” (இவ்வுலகம் வெம்மை நீங்குக) என்று வழிபடும் இந்த விழா தொடங்கப் பெற்றதைச் சுட்டும்போது, ‘மாயிருந் திங்கள் மறு நிறை ஆதிரை வரிநூல் அந்தணர் விழவு தொடங்கு” என்னும் அடிகள் வருகின்றன. மார்கழி மாதத்தில் ஆதிரை நாளன்று இவ்விழா தொடங்கி யது என்பது இதன் வழி நாம் அறியும் கருத்து. கலித்தொகை என்பது சங்க இலக்கியங்களில் ஒன்று. அதன் பகுதி யாகிய நெய்தற்கலியில் “அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த” என்னும் தொடர்(கலி150-20) வருகின்றது. திருவாதிரைக் காலத்துச் சிவபெருமான் அணிகளை அணிந்திருப்பது போல அமைந்த ஒரு செண்பக மரம் பற்றிய குறிப்புப் பற்றியது இந்தத் தொடர். இங்கும் ஆதிரையான் என்பது சிவபெருமானைச் சுட்டி நிற்பதை அறியலாம்.
மூவேந்தர்களைப் பற்றி வெண்பா யாப்பில்பாடும் இலக்கியம் முத்தொள்ளா யிரம். இதன் கடவுள் வாழ்த்து வருமாறு:
2003 33

Page 50
“மன்னிய நாள்மீன் மதிகனலி
என்றிவற்றின் முன்னம் படைத்த முதல்வனைப் -
பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று)
அயருமால் ஊர்திரை நீர்வேலி உலகு.”
நாள், நட்சத்திரம், சந்திரன், சூரியன் முதலியவற்றைப் படைத்தவன் முதல்வனாகிய சிவபெருமான்தான். அவனை உலகம் ஆதிரையான், ஆதிரை நட்சத்திரத்துக்குகந்தவன் என்ற கூறி மயங்குகிறதே ஏன் என்று இப்பாடல் கேட்கிறது. 27 நட்சத்திரங்களையுமே படைத்தவன் சிவபெருமான் தானே.அப்படி இருக்க அவனுக்குத் திருவாதிரை நட்சத்தி ரத்தை மட்டும் உரியதாக - உகந்ததாக ஆக்குவது ஏன்? இதனை எண்ணிப் பார்க்க வேண்டும். குணம் குறி கடந்தவன் சிவபெருமான்; ஒரு நாமம் ஒருருவம் இல்லாதவன்; பிறவான் இறவானாகிய பெரியான். இது சிவபெருமானின் சொரூப நிலை. இவன் ஆன்மாக்களாகிய உயிர் களை உய்விக்கும் பொருட்டுப் படைத் தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலையும் செய்ய உருவம் கொண்ட நாள் திரு ஆதிரை என்று கருதப்பெறுகிறது என்றும் இந்த நாளில் சிவன் கோயில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடத்துவர் என்றும் கலைக் களஞ்சியம் கூறும். நடராசப் பெருமானின் திருவுருவம் ஐந்தொழில் தத்துவத்தைக் காட்டுவது என்பதை அனைவரும் அறிவர்.
“தோற்றம் துடியதனில்; தோயும் திதி
அமைப்பில்; சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்; -
ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம்
அம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு”
34

என்று சாத்திர நூல் கூறும். எனவே, நடராசப் பெருமானின் திருவுருவத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகத் திருவா திரை கருதப்பெறுவது பொருத்தம்தானே? மேலும், தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கிய சிவபெருமான், முதன் முதல் உமை அம்மையார் காண நாட்டியம் ஆடினான். அம்முனிவர்கள் ஏவிய பாம்பு முதலிய பொருளைக் கை யில் கொண்டு அவன் ஆடிய நடனம் திருவாதிரை நாளன்று நிகழ்ந்ததாகவும் கூறுவர். சிதம்பரத்தில் பதஞ்சலி வியாக்ர பாதருக்காக நடனக் காட்சி காட்டிய நாள் தைப்பூச நன்னாள் என்பதையும் அறிய (86bu60მi06ub.
மணிமேகலை என்னும் காப்பியத் தில் ஆதிரை பற்றிய குறிப்பு ஒன்றுள்ளது. இது சைவசமயச் சார்பு பற்றியதன்று. மணிமேகலையில் 16வது காதை ஆதிரை பிச்சையிட்ட காதை என்பதாகும். ஆதிரை என்பது நகரத்தார் மரபைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர். ஆதிரை என்பவள் பூம்புகார் நகரத்துச் சாதுவன் என்னும் நகரத்தார் வணிகன் மனைவி. தீய பழக்கம் காரணமாகப் பொருளிழந்த சாது வன் கடல் கடந்து பொருள் தேடச் சென்ற இடத்தில் கலம் கவிழப் பெற்று நாக நாடு சென்று அங்கு அவர்களுக்கு அறிவுரை நல்கினான். அவன் நகர் திரும் பாததால், அவன் இறந்ததாகக் கருதி ஆதிரை தீப்புகுந்தாள். அவளைத் தீ சுடாமையால், கணவன் வரவைப் பற்றி அசரீரி சொல்லக் கேட்டுப் பின் கணவன் வரக்கண்டு கூடி வாழ்ந்தாள். மணி மேகலை அமுதசுரபியைப் பெற்றவுடன், அதில் யாரிடம் முதலில் பிச்சை ஏற்பது என்று எண்ணும்போது, அவள் தோழி காயசண்டிகை என்பவள் சிறந்த பத்தினிப் பெண்ணாகத் திகழும் ஆதிரை நல்லாளி டம் முதலில் பிச்சை வாங்குவது சிறந்தது என்று சொன்னாள். அதற்கேற்ப மணி மேகலை ஆதிரையிடம் வந்து முதற் фgш цртӕтест Gѣgы цртвпѓ.сь5 фоüч преої 2oоз

Page 51
பிச்சை பெற்றாள். ஆதிரை “பாரகமடங் கலும் பசிப்பிணி அறுக’ என்று கூறிப் பிச்சையிட்டாள். பிறகு தான் அமுதசுரபி யில் அன்னம் எடுக்க எடுக்கக் குறையாத தாயிற்று. மணிமேகலையும் மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்து உயிர்கொடுத்தோள் ஆயி னாள். இந்த ஆதிரையை நினைத்தே நகரத்தார் மரபினர் கன்னிப் பெண் களுக்குத் திருவாதிரை என்னும் சடங்குவிழாக் கொண்டாடுகின்றனர். மார்கழித் திருவாதிரை நாளன்று கன்னிப் பெண்கள் கூட்டம் கூட்டமாக அண்டை வீடுகளுக்குச் சென்று கைகளில் வெள்ளிச் சட்டியுடன் சென்று மங்கல மகளிடம் “ஆடி ஆடி வாரோம் அவரைக்காயப் போடுங்கள்; பாடிப்பாடி வாரோம் பாடவரங்காயப் போடுங்கள், கூடிக்கூடி வாரோம் கூட்டுக் காய் போடுங்கள’ என்று பாடிக் கூட்டுக் காய்கறிகள் வாங்கி வந்து வீட்டில் கூட்டாஞ்சோறு சமைத்து ஆதிரை யாளைக் கும்பிடுவார்கள். மணிமே கலைக்குப் பிச்சையிட்ட தம்மரபுப் பெரு மாட்டியை இவ்வாறு இவர்கள் வழிபாடு செய்கிறார்கள். இந்தச் சடங்கு நடத்திய பெண்களே முழு மனிதர்களாகக் கருதப் பெறுவர். ஒரோவழி அவர்கள் இறந்தால் எரியூட்டுவர். இந்தச் சடங்குக்கு முன் இறந்தால் அவர்கள் புதைக்கப் பெறுவர்.
திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்புவதற்காகப் பாடிய பதிகத்தில் சைவசமயத் தொடர்பான பல விழாக்களைக் குறிப்பிட்டு, அவற்றைக் ‘காணாதே போதியோ பூம்பாவாய்?” எனக் கூறுகிறார். அங்கே “கபாலீச்சுரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்” என்று ஒரு பாடலின் ஈற்றடி அமைந்துள்ளது. சைவ சமய விழாக்களில் ஒன்றாக ஆதிரை நாள் விழா ஞானசம்பந்தர் காலத்தில் இருந் ததை நாம் உணர முடிகின்றது.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

திருநாவுக்கரசர் தேவாரத்தில் 4ஆம் திருமுறையில் திருவாதிரைத் திருப்பதிகம் என்று ஒரு பதிகமும் (10 பாடல்கள்) உள்ளது. அதற்குரிய பண் குறிஞ்சி. திருவாரூரில் கொண்டாடப்பட்ட திருவாதிரைத் திருவிழாவின் சிறப்பினை விரிவாக இப்பதிகம் விளக்குகிறது. இப்பதி கத்தின் ஒவ்வொரு பாடலும் “ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்’ என்னும் ஈற்றடி கொண்டது.
“நணியார் சேயார் நல்லார் தீயார்
நாடோறும் பிணிதான் தீரும் என்று பிறங்கிக்
கிடப்பாரும் மணியே பொன்னே மைந்தா மணாளா
என்பார்க்கு அணியான் ஆரூர் ஆதிரை நாளால்
அதுவண்ைணம்” என்பது அந்தப் பதிகப் பாடல்களில் ஒன்று.
திருவாசகத்தில் திருவெம் பாவை யில் “மார்கழி நீராடேல் ஓர் எம் பாவாய்’ என்று வருவதையும், திருவெமி பாவை திருவாதிரைத் திருநாளுடன் தொடர்புடைய ஒன்று என்பதையும் அனைவரும் அறிவர்.
சேக்கிழாரின் பெரிய புராணத்தில் திருநாவுக்கரசர் புராணம் (1505) திருஞானசம்பந்தர் புராணம் (2398) ஆகிய புராணங்களில் திருவாதிரைத் திருநாள் பற்றிய குறிப்பு வருகின்றது. திருப்புக லூரில் திருஞானசம்பந்தரைத் திருநாவுக் கரசர் திருவாரூரிலிருந்து வந்து சந்திக் கிறார். அப்போது சம்பந்தர் திருவாரூர்ச் சிறப்புப் பற்றி வினவ, அதற்குத் திருநாவுக் கரசர் முன்னே குறிப்பிட்ட திருவாதிரைப் பதிகம் பாடி ஆதிரை நாள் சிறப்பைக் குறிப்பிட்டார் எனச் சேக்கிழார் கூறுகிறார்.
2003 35

Page 52
“மேவு திருவாதிரை நாள் வீதி விடங்கப்
பெருமான் பவனி தன்னில் தேவர்கள் முனிவர்கள் முன்சேவிக்கும்
அடியார்களுடன் சேவித்து மூவுலகும் களிகூர வரும் பெருமை
முறைமையெலாம் கண்டு போற்றி நாவினுக்குத் தனியரசர் நயக்கும் நாள்”
“சித்தம் நிலாவும் தென்திரு ஆரூர்
நகராளும மைத்தழை கண்டர் ஆதிரைநாளின்
மகிழ்செல்வம் இத்தகைமைத்து என்று என்மொழிகேன்”
(1505)
என்று “திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்’ (2398).
இந்தப் பாடல்களில் சேக்கிழார் திருவாதிரை நாளில் திருவாரூரில் செய்யப்படும் வழிபாடுதான் உண்மை யான செல்வம் என்று போற்றுகிறார். “செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்” என்றும் “அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்’ என்றும் கேள்வியையும் அருளையும் திருவள்ளுவர் குறிப்பிடுகின் றார். பக்திக் காலத்தில் ‘செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே” என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். வழிபாடுதான் சிறந்த செல்வமாகக் கருதப்பெற்றது. ‘மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன், மதி சூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல், கண்ணினால் அவர் நல் விழாக் காணுதல்.” எனவே, திருவாதிரை நாள் வழிபாடு சிறந்த செல்வமாக, மானிடப் பிறவியின் மாண்புறு பயனாகக் கருதப்பட்ட நிலையை இங்கே காணு கிறோம்.
திருவாதிரை நாளை ஒட்டிச் சைவ சமயச் செந்நெறிக்கு இரண்டு நூல்கள் கிடைத்துள்ளன. ஒன்று
36

திருப்பலி லாணி டு; மற்றொன்று கொடிக்கவி. முன்னையது தோத்திரம்; பின்னையது சாத்திரம். திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார். இவர் சிதம்பரத்தில் விறகு வெட்டி விற்று வரும் லாபத்தில் நாள்தோறும் சிவனடியார்க்கு உணவிட்டுப் பின் உண்ணும் நெறியினர். ஒரு நாள் இரவு நடராசப் பெருமானே சிவனடி யாராக இவரிடம் சென்று களியுண்டு (கூழுண்டு) அந்தக் களியை மறுநாள் தம் திருமேனியில் காட்டிச் சேந்தனார் பெருமையை உலகுக்கு வெளிப்படுத் தினார். இந்த அற்புதம் அவரால் நிகழ்ந்ததோ என்று ஐயம் கொண்ட வர்க்கு ஐயம் நீங்கத் திருவாதிரை நாளன்று ஓடும் தம் திருத்தேரை அழுந்தச் செய்து சேந்தனார் திருப் பல்லாண்டு பாடத் திரும்பத் தேரை ஓடச் செய்தார் நடேசப் பெருமான். மன்னுயிர் அனைத்தையும் வாழ்த்தும் மாண்புடைய திருப்பல்லாண்டு - இறைவனை வாழ்த்தும் திருப்பல்லாண்டு எழுந்த நாள் திரு வாதிரை நன்னாளே ஆகும். திருப் பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகம். எனினும், பஞ்சபுராணத்தில் ஒன்றாக வைத்துப் பாடப்பெறும் சிறப்புடை யது. திருவாதிரை நாளில் திருவாதிரைக் களி வைப்பதற்குரிய காரணமும் இப்போது விளங்கும்.
'அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை அவிழ்ந்த மனத்தால் அவிழ்ந்த - சடை வேந்தனார்க்கு இன்னமுத மாயிற்றே
மெய்யன்பில் சேந்தனார் செய்த செயல்'
(53)
என்று திருக்களிற்றுப்படியார் சேந்தனார் பெருமையைச் செப்புகிறது. கொடிக்கவி என்பது சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஒன்று; அளவாலி மிகச் சிறியது. கட்டளைக் கலித்துறை ஒரு பாடலும் 3
த்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 53
வெண்பாக்களும் கொண்ட ஒரு சிறிய நூல். இதனை இயற்றியவர் உமாபதி சிவாசாரியார். கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தில்லைத் தீட்சிதர்களில் ஒருவர். இவர் மறைஞான சம்பந்தர் என்னும் வேளாளரைத் தம் குருவாகக் கொண்ட காரணத்தால் தில்லைத் தீட்சிதர்கள் இவரை ஒதுக்கி வைத்துவிட்டனர். இது பொறாது நடராசப் பெருமான் திருவாதிரைத் திருநாளில் கொடியேறாது தடைப்படுத்தித் தீட்சிதர்களிடம் அசரீரிவாயிலாக உமாபதி சிவாசாரியாரை அழைத்து வந்து கொடிக் கவி பாடுமாறு பணித்தனன். அதன்படி, உமாபதியார் வந்து கொடிக்கவி பாடிய தும், கொடியேறி விழா நடந்தது. எனவே, கொடிக்கவி என்னும் சாத்திர நூல் தோன் றுவதற்குத் திருவாதிரை நாள் காரணமாய் இருந்திருக்கிறது. கொடிக்கவியில் உள்ள ஒரு பாடல் வருமாறு:
“அஞ்சுஎழுத்தும் எட்டுஎழுத்தும்
ஆறுஎழுத்தும் நால்எழுத்தும் பிஞ்சு எழுத்தும் மேலைப்
பெருவெழுத்தும்- நெஞ்சழுத்திப் பேசும் எழுத்துடனே பேசா
எழுத்தினையும் கூசாமல் காட்டக்கொடி.”
சமயநோக்கில்
“மாதங்களில் நான் மார்கழி’ என்பது கீதை வாக்கு. மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாளை ஒட்டிப் பத்து நாட்கள் திருவெம்பாவை கோயில்களில் ஒதப்படுகின்றன. ஓதுவார்கள் இந்தப் பத்து நாட்களும் ஏனைய திருமுறைப் பாடல் களுக்குத் திருக்காப்பிட்டு வைத்து விட்டுத் திருவெம்பாவை மட்டுமே ஒதுவர். திருவெம்பாவை என்பது பரிபாடலில் கூறப்பட்ட அம்பா ஆடலுடன் தொடர் புடையது. மார்கழியில் கன்னிப் பெண்கள் பாவை ஒன்று செய்து நாள்தோறும் மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல

காலையில் எழுந்து சென்று குளித்துவிட்டு நோன்பு நோற்று வழிபடுவர். இந்த நோன்பின் நோக்கம் இரண்டும்; ஒன்று நாடு செழிக்க நல்ல மழை பெய்ய வேண்டுதல்: இனி னொனிறு வீடு செழிக்க நல்ல கணவன் வாய்க்க வேண்டுதல் (சிவனடியார்கள் தாம் கணவ னாக வர வேண்டுதல்).
பரிபாடலில் தைந்நீராடல் என்ற ஒன்று சுட்டப்பட்டுள்ளது. அதன் வளர்ச்சியே மார்கழி நீராடல் என்று கூறுவர். கன்னிப்பெண்கள் காலையில் எழுந்து ஒருவரை ஒருவர் எழுப்பிச் சென்று பொய்கையில் சிவன் பெருமை பாடி நீராடுதலை இது சுட்டும். “மார்கழி நீராடேல் ஓர் எம் பாவாய்” என்று திரு வெம்பாவையில் இது பேசப்படுகின்றது.
திருவாதிரை சிவபெருமானுக் குகந்த விரதங்களில் ஒன்று. மார்கழித் திருவாதிரை நாள் தொடங்கி, அடுத்த மார்கழித் திருவாதிரை வரை இருக்க வேண்டிய ஒன்று. உபதேச காண்டத்தில் இதுபற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது:
“செவ்வழிச் சின்மயச் சிதம்பரத் தலத்து
இவ்வழி இந்த நோன்பியற்றுவாரவர் வெவ்வழித் தன்மைய வினையின்நீங்கி மற்று உய்வழி அருங்கதி ஒடுங்குவார்களே.”
இவ்விரதம் இருந்து முருகன், வியாக்ர பாதர், விஜயன் சிறப்புற்றதாகக் கூறுவர்.
திருவாதிரை அன்று தரிசனம் தரப் பெறும். தரிசனம் என்றால் திருவருட் காட்சி. நடராசப் பெருமான் தன் நடனக் காட்சியை முதலில் உமையம்மை யாருக்குக் காட்டினார். பிறகு முப்பத்து முக்கோடி தேவர்கள் பசுமாட்டில் உறை வதாக நம்புவதால் தான் தரிசனத்தன்று
ir 2003
37

Page 54
முதலில் பசு மாட்டிற்குக் காட்சி கொடுக்கப்படுகின்றது. பிறகு பதஞ்சலி, வியாக்ரபாதர் வேண்டுகோளுக்காகத் தில்லையில் மண்ணுலகில் சிதம்பரத்தில் நடனக் காட்சி காட்டினார். பிறகு, மாணிக்கவாசகப் பெருமானுக்கு அம்பல வாணர் காட்சியைக் காட்டினார். அவர் ஆன்மாக்களாகிய நமக்குக் காட்சி அளிக்குமாறு நடராசப் பெருமானை உமையம்மை யாருடன் அழைத்து வந்து காட்சி கொடுக்கச் செய்கிறார். இதனால் தான், திருவாதிரைத் தரிசனம் என்று இவ்விழா அழைக்கப்படுகின்றது. நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை அபிடேகம் நடக்கும். திருவாதிரை நாள் அபிடேக நாட்களில் ஒன்று.
சமுதாய நோக்கில்
நகரத்தார் மரபினரால் கன்னிப் பெண்களுக்குச் செய்யப்படும் திருவா திரைச் சடங்கு இப்போது இரண்டு நாட்கள் மார்கழித் திருவாதிரை அன்றும், மறுநாள் அன்றும் நடத்தப்படுகின்றது. முதல் நாள் அன்று மணிமேகலையில் கூறப்படும் ஆதிரை நல்லாளை வழிபாடு செய்து கொண்டாடப்படும். கன்னிப் பெண்கள் வீடு வீடாகச் சென்று மங்கல மகளிரிடம் காய்கறி வாங்கி வந்து கூட்டாகச் சோறு சமைத்து ஆதிரை யானைக் கும்பிட்டு வழிபடுவர். அடுத்த நாள் நடராசப் பெருமான் தரிசனக் காட்சி யின்போது, கன்னிப் பெண்கள் மணப் பெண்கள் போல அணி செய்யப் பெற்று ஊர்வலமாக வருவர். இது திருவெம் பாவை நோன்புடன் தொடர்புடைய ஒன்று. கன்னிப் பெண்களுக்குச் செய்து வந்த இச்சடங்குகள் இப்போது அருகியே காணப்படுகின்றன.
சேந்தனார்க்கு நடராசப் பெருமானி திருவாதிரை நாளிலி
38

களியுணி டு அருள் செய்தது, திருப்பல்லாண்டு பாடச் செய்து தேரோடச் செய்தது ஆகிய நிகழ்ச்சிகள் சைவ சமயத்தில் இல்லாரும் உள்ளாரும் கீழ் நிலையிலுள்ளாரும் மேல் நிலையி லுள்ளாரும் திருவருளைப் பெறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்பதை உணர்த்துகின்றன.
“சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும்கொண்டு என்
செய்வீர் பாத்திரம் சிவனென்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே”
(திருநாவுக்கரசர் தேவாரம்)
என்பது திருமுறைவாக்கு. சைவத்தில் கடையனுக்கும் கடைத்தேற்றம் உண்டு என்பதை இந்நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.
உமாபதி சிவாசாரியார் வாழ்வில் நடந்த கொடிக்கவி நிகழ்ச்சி குருவாகக் கொள்வதற்குக் குலத்தாழ்ச்சி உயர்ச்சி கருதுதல் பாவம் என்னும் கோட்பாட்டை வலியுறுத்துகிறது. குருவாகக் கொள்ளத் தகுதி அறிவும் அருளும் ஒழுக்கமும் பெற்ற தகுதி தான் பார்க்க வேண்டுமே ஒழியப் பிறப்பு வேறுபாடு கருதக்கூடாது. அப்பூதி அடிகளாகிய அந்தணர் திருநாவுக் கரசராகிய வேளாளரைக் குருவாகக் கொண்டு வழிபட்டதைப் பெரிய புராணம் காட்டவில்லையா, என்ன?
தத்துவ நோக்கில்
தத்துவ நோக்கில் திருவாதிரை என்னும் தொடரைப் பார்ப்போம். இத் தொடரில் திரு ஆ திரை என்னும் மூன்று சொற்கள் இருப்பதைக் காணமுடிகிறது. திரு என்பது சிவத்தை -இறைவனைக் - குறிக்கும். ‘திருவே என் செல்வமே” என்னும் திருநாவுக்கரசர் தேவாரத் தொடரை நோக்குக. திரு என்பது bфgu цртавmeот вѣeы црпувтtсь3 3Foüч цреої 2oоз

Page 55
திருவருளையும் குறிக்கும். ‘கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்” என்னும் பெரியபுராணத் தொடரையும் பார்க்க. ஆ என்பது பசு. ஆன்மாக்களாகிய உயிர் களைக் குறிக்கும். திரை என்பது தடைதளை. அதாவது ஆன்மா இறைவனை அடையவிடாது இடையில் இருக்கும் பாசம. எனவே, திரு ஆ திரை என்பது, பதி, பசு, பாசம் என்னும் சைவசித்தாந்தக் கோட்பாடு வலியுறுத்தும் முப்பொருள் உண்மையையும் உணர்த்துகிறது. நம் ஆலயங்களில் சிவலிங்கம், நந்தி, பலிபீடம் (பதி, பசு, பாசம்) இருக்கும் வரிசை முறையும் திரு ஆ திரை என்னும் சொற்களின் வரிசை முறையை உணர்த்து கிறது. எனவே, திருவாதிரை என்பது நம்கோயில் தத்துவத்தின் உயிர்நாடியை யும் சுட்டுவதாகவுள்ளது.
திருவெம்பாவையில் பாவை நோன்பு நோற்கும் பெண்களில் ஒருவர் எழுந்து, மற்றொருவருடன் சேர்ந்து, ஒருவர், இருவர், மூவர் கூட்டமாக ஒவ்வொருவர் இல்லத்திற்கும் சென்று, அங்கு துயின்று கொண்டிருக்கும் தம் தோழிமாரை எழுப்பிச் சென்று நீராடு வதைப் பார்க்கிறோம். அதாவது, பக்குவம் பெற்ற ஆன்மா பக்குவம் பெறாத ஆன் மாக்களைத் தட்டி எழுப்பி, கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காது விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப் பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துருகுமாறு தூண்டுவதாகக் கொள்ள வேண்டும். இறுதியில் எல்லோ ரும் நீராடுவதை இறைவனின் திருவருட் பொய்கையில் திளைப்பதாகக் கருத வேண்டும்.
திருவெம்பாவையின் தத்துவம் சத்தியை வியந்தது ஆகும். சக்தி என்பது திருவருளையே குறிக்கும். பொய்கை திருவருட் சக்தியைக் குறிக்கும். மழை என்பதும் திருவருளையே சுட்டும். இறுதிப் மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

பாடலில் எட்டுப் போற்றிகள் இடம் பெற்றுள்ளன. முதல் இரண்டு, இறை வனின் தோற்றம், ஒடுக்கம் ஆகியவற்றை வாழ்த்துகின்றன. அடுத்த ஐந்து போற்றிகளும் இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் போற்று கின்றன. எட்டாவது மார்கழி நீராடல் வழி பாட்டுக்கு வழிவகுத்த மார்கழி நீராடலைப் போற்றுகிறது. இறைவன் தொழிற்பட இயங்கும் நிலைதானே சக்தியுடன் கூடிய நிலை? எனவே, இந்த நிலையை வியக் கும் போது, போற்றும் போது சக்தியை வியந்ததாகின்றது.
திருவெம்பாவைக்கு உரை எழுதிய பேராசிரியர்கள் சிலர் மனோன்மணி முதலிய நவசக்திகளை எழுப்பி வழிபடுவதாகவும் திருவெம்பாவையின் முதற்பகுதிக்கு விளக் கம் தருவர்.
பண்பாட்டு நோக்கில்
திருவாதிரையை ஒட்டித் தோன் றிய திருவெம்பாவைத் திருவிழா தமிழகத்தைத் தாண்டிக் கடல் கடந்து தாய்லாந்து நாட்டுக்குச் சென்று கொண் டாடப்பெறும் நிலையைத்தான் பண்பாட்டு நோக்கு என்று கூறுகிறோம். தாய்லாந் தில் திருவெம்பாவை திருப்பாவைத் திருவிழா பற்றி மலாயாப் பேராசிரியர் ச. சிங்காரவேலு அவர்கள் ஆய்வுகள் செய்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். தாய்லாந்தில் கொண்டாடப்படும் திருவெம் பாவை திருப்பாவைத் திருவிழா அந்நாட்டு மொழியில் “லோஜின்ஜா” என்று அழைக்கப்பட்டது. இதற்குப் பொருள் ஊஞ்சலை வலித்தல் என்ப தாகும். இது ஊஞ்சல் திருவிழா, தை மாதத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. உயரமான ஊஞ்சலில் ஆடுபவர்கள், அருகே மூங்கில் கழியில் கட்டப்பட்ட பொற் கிழியைப் பல்லால் கடித்துப்
2003
39

Page 56
பெறுவர். ஊஞ்சல் ஆடும் இடத்தின் அருகே சிவன், விஷ்ணு, கணேசர் கோயில் கள் உள்ளன. ஊஞ்சலி ஆடும்போது சங்கம் ஒலிக்கப்பெறும். கோயில் சடங்குகளின்போது திருவெம் பாவை, திருப்பாவைப் பாடல்கள் அரச அந்தணரால் ஒதப்பெறும். இவ்விழாவின் நோக்கம் சிவன் நிலவுலகிற்கு வருகை தந்து வரம் அளிப்பதாகும். இதனைத் தாய்லாந்து அரசரே அவ்விழாவிற்கு வருகை தந்து சிவனாகக் காட்சி அளிப் பதன் மூலம் உணர்த்தினர். அவ்வாறு அரசர் சிவனாக வீற்றிருக்கும் போது பாவைப் பாடல்கள் ஒதப்பெற்றன. மக்கள் மண்டியிட்டு வணங்கினர். அரசர்கள் அவர் களுக்குப் பரிசுகள் அளித்தனர். இப் பரிசளிப்பு சிவன் வரந்தருதற்கு நேராகும். ஊஞ்சல் விழாவிற்குப் பின் மழைத் திருவிழா நடக்கும்.அப்போது ஊஞ்சல் ஆடியவர்கள் மாட்டுக் கொம்பினைக் கையில் ஏந்தித் தண்ணிர்த் தொட்டியைச் சுற்றி நடனமாடிக் கொண்டு, கொம்பில் நீரை நிரப்பிவாரி இறைப்பர். இந்த ஊஞ்ச லாட்டமும் மழை நடனமும் திருவெம் பாவை திருப்பாவை தொடர்புடையன. ஊஞ்சல் கிழக்கு மேற்காக ஆடுவது ஆதிரையனான சிவபெருமானையும் குறிக்கும். நீர்த்தொட்டியில் நீராடுவது திருவெம்பாவையில் இடம் பெறும் குடைந்து குடைந்து நீராடுதலை உணர்த் தும். இல்லங்கள் தோறும் எழுந்தருளு தல் என்னும் திருவெம்பாவைப் கருத்து அரசனி சிவனாக வருதலுடன் ஒத்துள்ளது; அரசனினி இறைத் தன்மையை உணர்த்து கிறது (சிங்கார வேலு, ச). இந்த ஆய்வுக் கருத்துகள் திருவெம்பாவை தென்கிழக்கு நாடுகளில்
40

பெற்ற செல்வாக்கை -பண் பாட்டுச் செல் வாக் கை- நமக்கு நன்கு உணர்த்துகின்றன.
(pg. 660) J
எண் குணத்தானாகவும் எண் வடிவினனாகவும் இலங்கும் இறை வனாகிய சிவபெருமானுக்குகந்த நட்சத்தி ரமாகிய திருவாதிரையை மொழியியல், அறிவியல், சோதிட இயல், இலக்கியம், சமயம், சமுதாயம், தத்துவம், பண்பாடு ஆகிய எண் கோணங்களில் நோக்கி ஆராயும் இக்கட்டுரை வழி, திருவாதிரை யின் பெருமையை அறிந்து ஆதிரையா னாகிய சிவனை மனத்தால் நினைத்து, வாயால் துதித்து, மெய்யால் வழிபட்டு முன்னேறுவோமாக.
துணை நூல்கள்
திருக்குறள் சென்னைக் பல்கலைக்கழகப் பேரகராதி தமிழ்க் கலைக்களஞ்சியம் சோதிட அரிச்சுவடி அபிதான சிந்தாமணி
பரிபாடல்
கலித்தொகை
முத்தொள்ளாயிரம் . திருஞானசம்பந்தர் தேவாரம் 10. பெரியபுராணம்
11. திருக்களிற்றுப்படியார் 12. உபதேச காண்டம் 13. சிங்காரவேலு,ச.தாய்லாந்தில் திருவெம்
பாவை திருப்பாவைத் திருவிழா
рф*u цртаъпехт бѣeы цртвпЕсь5 3püч шpeoй 2oоз

Page 57
சைவசமய வழிபா றிபதி சர்மா கிருஷ்ணா
ஓசை ஒலி எல்லாம் ஆனவன் இறைவன் என இறையை ஒலியுடன் இணைத்து அருளாளர்கள் கூறியுள்ளனர். இறைவன் ஒளி வடிவினன். ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் சோதியாக அவனை மணிவாசகர் கூறுகிறார். வேத இருவழிகள் தம் அகக்கண்ணினால் கண்ட உண்மைகளையே, ஒளிப்பொருளிலிருந்து ஒலிவடிவமாக வேத இலக்கியமாக வெளிப் படுத்தினர்.
உலகின்கண் காணப்படும் சிறப் பான மதம் ஒவ்வொன்றும் தத்தமது மதத்தின் கருத்துக்களைக் கொண்ட மூல இலக்கியங்களினை மூலமொழிகளிலேயே பின்பற்றிவருகின்றன. புத்தமதம், இஸ்லாம் மதம், கிறிஸ்தவமதம் என்பன முறையே பாளி, அரபு, லத்தீன் மொழிகளைத் தமது சமய மொழியாகக் கொண்டுள்ளன. சமயத்தைப் போதிப்பதற்கும் வளர்த் தெடுப்பதற்கும் பிரதேச மொழிகளைக் கையாண்டுள்ளபோதிலும், தமது சமய மொழியாக மூலமொழிகளையே பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்து சமயத்தின் புனித இலக்கி யங்களான வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை; இறைவனின் உயிர், மூச்சு, சுவாசம் எனச் சிறப்பிக்கப்படுபவை; உலகின் தொன்மையான இலக்கியங் களில் ஒன்றாகவும் இந்து சமயத்தின் கருவூலமாகவும் திகழ்கின்றவை; இறைவ னால் ஆக்கப்பட்டதாகக் கருதப்படும் வடமொழியில் விளங்குபவை.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

ாட்டில் மந்திரங்கள் னந்த சர்மா பீ.ஏ. (சிறப்பு)
மனத்தைத் தூய்மையாக்கி, சரீரத்தை வசப்படுத்தவல்ல ஒசைகளை ஏற்படுத்தும் முறையில் சமஸ்கிருத மொழியும், எழுத்துக்களும், மந்திரங்க ளும் ஆக்கப்பட்டுள்ளன. இவ்எழுத்துக் களுக்குரிய உச்சரிப்பும் மந்திரங்களில் காணப்படும் ஒலி அமைப்பும் மந்திர மொழி யாக விளங்குகின்ற தன்மையைப் புலப்படுத்துகின்றன. மதங்களுக்குரிய மொழிகளும் பொதுவாக ஓர் ஒலி அமைப் பினைக் கொண்டு விளங்குவதைக் காணலாம்.
வேதம் என்ற சொல் சங்கப் பாடல்களிலே பலசொற்களால் புலவர் களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறை, வாய்மொழி, எழுதாக்கற்பு, கேள்வி,
முதுமொழி, முதுநூல், அருமறை, நான் மறை, நால் வேதம் எனப் பலவாறு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
“அந்தணர் அருமறை,” “அந்த ணாளர் நான்மறை” எனப்பரிபாடலும், புறமும் வேதங்களை விளித்துக் கூறுகின் றன. “ஓதல் அந்தணர் வேதம்பாட,” ‘சிறந்த வேதம் விளங்கப்பாடி” என மதுரைக்காஞ்சியிலும், ‘நான்மறை முதல்வர்,” “மறைக்காப்பாளர்” எனப் பரி பாடலும், புறமும் வேதம் ஒதுபவர்களைக் கூறுவதனையும் காணலாம். மேலும், வேதம் ஒதும் முறை பற்றியும், வேதம் ஒதுதலின்போது ஒலி அசைவுடன் ஒதப் பட்டு வந்தமையையும், இவ்இசையமைப் பினை மலர்களில் தேனுண்ணும் வண்டின் ரீங்கார அமைப்பினை உவமையாகத் “தாது உண் தும்பி போது முரன்றாங்கு ஒதல் அந்தணர் வேதம் பாட” என மதுரைக்காஞ்சியில் கூறப்படுகின்றது.
r 2003 41

Page 58
கீதையிலும் பகவான் அசஷரா னாம் அகாரோஸ்மி த்வநவ ஸாமாஸி கஸ் யச’ என எழுத்துக்களுடனும், இலக்கணத்துடனும் தொடர்புடையன வாகக் கூறுகிறார். ‘அகார சர்வ வர்ணாக்ரயப்ரகாசப் பரமசிவ:’ எனச் சிவபுராணமும் “பாஷாரூபிணி,” “வர்ண ரூபிண்யை ககார ரூபா,” “ஏகார ரூபா" எனப் பலவிதமாகப் பிரம்மாண்ட புராணத் தில் அம்பிகையையும், “ஓம் இதி அசஷரம் சர்வம்” என எங்கும் வியாபித் துள்ள இறையை எழுத்துக்களுடனும் இவ்வாறு தொடர்புபடுத்திக் கூறப் பட்டுள்ளமையைக் காணலாம். “அகரம் முதலில் எழுத்தாகி நின்றாய்’ எனச் சுந்தரரும், “எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி எழுஞ் சுடராய்’ என அப்பரும் போற்றியுள்ளனர்.
வடமொழி எழுத்துக்கள் பற்றி வேதாங்கங்களும், பிராதி சாக்கியம் முதலியனவும், இலக்கண நூல்களும் கூறியுள்ளன. இவை பிறக்குமிடம், ஒலி நரம்புகளின் தன்மை, ஒலிக்கும் தன்மை, ஒலிக்கும்போது வெளிப்படுத்தப்படும் காற்றின் அளவு, ஒலிக்கும்போது காற்று வெளியேறும்வழி என்பன பற்றித் தெளி வாகக் கூறப்பட்டுள்ளது.
இலக்கண நூலான பாணினி யத்திலும் அசஷரசமாம் நியாயம் என்கின்ற பகுதியிலும், இதற்கு விளக்க நூலாக வந்த பதஞ்சலி மஹாபாடியம், சித்தாந்த கெளமுதி, லகுசித்தாந்த கெளமுதி போன்ற பின்வந்த இலக்கண நூல்கள் எல்லாவற்றிலும் வடமொழி எழுத்துக்கள் பற்றிய விபரங்கள் நன்கு கூறப்பட்டுள்ளன.
சிவாகமங்கள் பலவிதமான கலைகள் பற்றிக் கூறுகின்றனவாயினும்,
42

கிரியை என்னும் கலையையே மைய மாகக் கொண்டு சிறப்புறுகின்றது. ஆகமங்களில் மந்திர பேதப்படலம், வர்ண பேதப்படலம் என்பவற்றிலும் எழுத்துக்கள் பற்றிய விபரங்கள் பலவாறு கூறப்பட்டுள் ளன. காமிகாகமம் -மந்திர அவதாரப் படலத்தில் பரணிடமிருந்து தோன்றுகின்ற நாதத்தினால் பிந்துவும், அதிலிருந்து உயிரெழுத்து குறில், நெடில் என்ற வகையில் தோன்றுவதாகவும், ஆதாரமான உயிர் எழுத்துக்கள் பதினாறும் பிராண வாயுவுடன் சம்பந்தப்பட்டு ஏற்படும் மாறு பாடுகளினால் சப்தம் உண்டாகின்ற தாகவும் கூறப்படுகின்றது. பரம் -அபரம் முதலான சாஸ்திரங்களும் எழுத்துக் களினாலேயே ஏற்படுவது. வாக்கின் ரூபம் வாசகம் எனவும், அதன் இலக்கணம் வாச்யம் எனவும் கூறி, மந்திரங்களையும் அவற்றின் உச்சரிப்பு, பயன் என்பன வற்றையும் எடுத்துக்கூறுகின்றது.
மேலும், வாதுளாகமத்தின் இரண் டாவது படலத்தில் எழுபத்துமூன்று பாடல் களில் எழுத்துக்களின் தன்மை பற்றி விரி வாகக் கூறப்பட்டுள்ளது. வர்ண பேதப் படலம் எனப் பெயரிடப்பட்ட இப்பகுதியில் வடமொழி எழுத்துக்கள், அவற்றின் அதி தேவதைகள் என்பன கூறப்படுகின்றன. ‘அ’ கரம் முதல் ‘சஷ கரம் வரை ஐம்பத்தொரு எழுத்துக்கள் இருப்பதாக வும், அவைகளை ஆண், பெண், மற்றும் இரண்டும் கலந்த எழுத்துக்கள் என வகைப்படுத்தி, அவற்றிற்குரிய பெயரை யும், வடிவத்தையும், தத்துவத்தையும், அவற்றிற்குரிய அதிதேவதைகளையும் விளக்கமாகக் கூறித் தெய்வீக மொழி என்னும் சிறப்பிற்கு ஏற்ப மந்திரபூர்வமாகக் கொள்ளப்படும் சிறப்பினை விளக்கு கின்றது. அசஷரங்கள் மந்திரபூர்வமாகக் கொள்ளப்பட்டு, அவை பீஜாசஷரங்களாக அமைகின்றன.
фguш шотӕпект Gѣaы црпвтtсь5 3püч шpeої 2oоз

Page 59
ஒவ்வொரு தனி எழுத்திற்கும், அவற்றின் உச்சரிப்பு, தன்மைகள் போன்ற வற்றைக் கொண்டு, அவைகளின் பயன் களும் விரிவாக இங்கு கூறப்பட்டுள்ளது.
மந்திரங்கள் நினைப்பவனைக் காப்பாற்றுபவை எனப் பொருள்படும் (மந்- நினைத்தல், த்ரா காப்பாற்றுதல்).
“மனனம் விஸ்வ விஞ்ஞானம் த்ராணம்
சம்சார பந்தனாத் யத: கரோதி சம்சித்தள மந்ர இதி உச்யதே
புதை:
ஒதுபவர்களுக்கு மேலான ஞானத்தைக் கொடுத்து அவர்களைப் பிறப்புச் சுழற்சியி லிருந்து காப்பாற்றுபவை மந்திரங்கள் எனப் பிங்கல தந்திரம் கூறுகின்றது.
மேலும், சாக்த தந்திர நூல் களிலும் இவ்விதமே எழுத்துக்கள், அவற் றின் ரூபம், பயன்கள் என்பன கூறப் பட்டுள்ளன.
சிவனுக்கும் , உமைக் குமி இடையே உரையாடல் வடிவமாக அமைந்த தந்ராபிதானம் என்னும் நூலில், மந்திரங்களின் பொருட்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் எழுத்திற் கும் உரிய வகையில் ஒவ்வொரு தெய்வத்தின் இணைந்ததன்மை இங்கு கூறப்படுகின்றது. பூதடாமரதந்திரம், ருத்ரயாமள தந்திரம் எனும் தந்திரங் களிலும் பீஜாபிதாம், பீஜநாமங்கள் வர்ணநிகணிடு எனும் பகுதிகளில் எழுத்துக்கள் பற்றித் தெளிவாக விளக்கப் படுகின்றது.
உருவங்களுக்கு ஏற்ற தியானப் பாடல்கள் போல, இங்கு எழுத்துக் களுக்கு வடிவம் கூறப்படுவது நோக்கத்
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

தக்கதாகும். மேலும் எழுத்துக்களுக்கு தத்துவார்த்தம் கற்பிக்கப்பட்டு, பஞ்ச பூதங் களோடு அவற்றின் தன்மை இணைத்துக் கூறப்படுவதும் நோக்கத்தக்கதாகும்.
மேலும், யூரீவராஹமிஹிராசாரி யாற் செய்யப்பட்ட சகுனபல நிர்ணயம் என்னும் ஜோதிஷசாஸ்திர நூலிலும் அசஷஸரகோசாத்தியாயம் என்னும் பகுதி யில் அசஷரங்களுக்குரிய கிரஹணங் கள், அசஷரகோசாத்தியாயம், அவற்றின் அதிபதிகள், இராசி, திரேஷ் காணம், நவாம்சம், இவற்றின் மூலம் உரிய அசஷரங்களை அறியும் வகைகள் என்பன பற்றியும் கூறப்பட்டுள்ளதையும் நோக் கலாம். சம்ஸ்காரங்களில் நாமகரணம் எனும் (பெயரிடுதல்) சடங்கு மூலம் நட்சத்திரம், மற்றும் விடயங்களைக் கருத் தில் கொண்டு நாமகரணம் செய்வதும் குறிப்பிடத்தக்கதாகும். மந்திரங்களை எப்படி ஓதுதல் வேண்டும் எனவும், அவற்றை ஒதுவதற்கு உரிய தகுதி களையும் வேதங்கள் கூறுகின்றன. இதிஹாஸ், புராணங்களிலும் சொல் மற்றும் கருத்து என்பன பிறழ்வதனால் ஏற்படும் தீமைகளை, இந்திரனைக் கொல்லக் கூடிய மகனை விரும்பித் தவமி யற்றி இந்திரனால் கொல்லக் கூடிய மகனை வரமாகப் பெற்ற நிலையும் தேவர்கள் இல்லாமையை வரமாகப் பெற விரும்பிய கும்பகர்ணன் சொற்பிறழ்வினால் நித்திரையை வரமாகப்பெற்ற சம்பவமும் எடுத்துக் காட்டுகின்றன. இறைவன் சொல்லும் பொருளுமாக இணைந்தவன். இச்சிறப்பினைக் காளிதாசனும், அபிராமி பட்டரும் சிறப்பாகக் கூறியுள்ளனர். “வாக் அர்த்தா இவ சம்பிருக்தன” எனக் காளி தாசரும், “சொல்லும் பொருளும் என நடமாடி’ என அபிராமிபட்டரும் கூறியுள் ளமை நோக்கத்தக்கது. சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்பவர்
2003
43

Page 60
சிவபுரம் செல்வர் என மணிவாசகரும் சொற் பொருளை உணர்ந்து ஒதுதலின் சிறப்பினை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
‘வேத நெறி தழைத்து ஓங்க,” ‘ஆரியத்தொடு செந்தமிழறிகிலார் மந்தி போல் திரிவர்’ எனச் சம்பந்தரும், “வடமொழியும் செந்தமிழும் ஆயினான் காண்’ என அப்பரும் கூறியுள்ளமை நோக்கத்தக்கதாகும். இவ்விதமாக மந்திர மொழி எனச் சிறப்பாகக் கூறப்படுகின்ற வடமொழியில் மந்திரங்களை உரிய முறைப்படி ஓதுவதனால் ஏற்படும் சிறப்பும், மந்திரங்களை உச்சரிக்கும்போது ஒலி அசைவு, ஸ்வரம், மற்றும் சொல் மாறு பாட்டினால் கருத்தும், அதனாலேற்படும் பலன்களும் விபரீதமாக அமையும்
வெள்ளைநிற வேறெந்த வள்ள லடியிை வாய்த்த ம வெள்ளைநிறப்
வேறெந்த உள்ளக் கம உத்தமனா

தன்மையும் பலவாறு இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.
ஆகவே, உரிய முறைப்படி மந்திரங்களை அவற்றிற்கேற்ற ஒலி, உச்சரிப்பு என்பவற்றைப் பேணி ஒதுவ துடன், தெய்வத் தமிழ்மறைகளையும் பொருள் விளங்கி உரியவாறு முறைப்படி ஒதுவதன் மூலம், இறையருள் பெருகி, உலகில் தர்மம் செழித்து நிலைபெற்று, அசையும், அசையாப் பொருட்களும் சமநிலை பெற்று, உலக மக்கள் அனை வரும் அன்பு, ஜீவகாருண்யம், அமைதி என்னும் சிறப்பான தன்மைகளுடன் வாழ்வாங்கு வாழ்வார்கள். இதுவே சமய இலக்கியங்கள் நமக்குப் போதிக்கும் உண்மையாகும்.
மல்லிகையோ, LDITLD6)(6JT, ணக்கு லரெதுவோ? பூவுமல்ல, மலருமல்ல, OLD9. ர் வேண்டுவது.
рѣғu цртэпохії இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 61
தெய்வீக மந்திரமாகி பிரசாந்தினி
குரிய பகவானுக்கு உரிய மந்திரம் காயத்ரி’ எனும் பெயர் பெறுகிறது. வேதத்திலுள்ள மந்திரங்கள் எல்லாவற்றிலும் மிகப்பவித்திரமானது காயத்ரி. காயத்ரி மந்திரங்கள் பல இருக்கின்றன. தேவி காயத்ரி, ருத்ர காயத்ரி, விஷ்ணு காயத்ரி என்பவற்றை உதாரணமாகக் கூறலாம். அவற்றுள் முதன்மை பெறுவது சூரிய காயத்ரி. சூரிய காயத்ரி இவ்விதம் அமைந்துள்ளது:
“ஓம் பூர்புவஸ்ஸாவ:
தத் ஸவிதுர்வ ரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந: பர்சோதயாத்!”
(இதன் பொருள். யா:யார்ந: நம்முடைய, திய: அறிவை; பர்சோதயாத்: தூண்டு கிறாரோ: தத்; அந்த; தேவஸ்ய: சுடருடைய: ஸவிது: கடவுளின் வரேண்யம்; மேலான; பர்க: ஒளியை, தீமஹி : தியானிப்போமாக)
* யார் நம் அறிவைத் தூண்டு கிறாரோ அந்தச் சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக’ என்று கூறிக் கொள்வதே காயத்ரி மந்திரம் (சூரிய நாராயணன் என்ற கட்டுரையிலிருந்து).
காயத்ரி வேதமாதா. காயத்ரியே அனைத்து மந்திரங்கட்கும் மேலான தாய். சுதுர்வேதங்களதும் தாயப் காயத்ரி என்பதாலேயே அவள் வேதமாதா என வர்ணிக்கப்படுகிறாள். காயத்ரி மந்திரங் களை விடச் சக்தி வாய்ந்த மந்திரம் எங்குமே இல்லை எனக் கூறப்படுகிறது. காயத்ரியைப் பற்றிப் பல மொழிகளிலும்
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு upooلم

uLI
LD
பூரீ காயத்ரி மந்திரம்
Tuurfolgs|TU6
அதிக நூல்கள் காணப்படுகின்றன. காயத்ரி தேவியானவள் ஐந்து முகங்க ளையும், பத்துக் கரங்களையும் உடைய வளாக வர்ணிக்கப்படுகின்றாள். காயத்ரி மந்திரத்தை நாள்தோறும் ஜெபிப்பதால், மனிதன் கதிரவனைப் போன்று பிரகாசிக் கும் ஒளிமுதலாகின்றான். காயத்ரி சூரிய சக்தி ஆவாள். சூரிய சக்தி மட்டுமன்றி, பிராண சக்தியும் அவளே ஆகின்றாள். பஞ்சமா பாவங்களும் கூடக் காயத்ரி மந்திரத்தின் உபாசனையால் தவிடு பொடியாகின்றன. இத்தகைய ஆற்றல் மிக்க அற்புதங்களையும் இரகசியங் களையும் பலாபலன்களையும் மாபெரும் ரிஷிகளும் அவர்களைச் சேர்ந்தோருமே அறிவாரன்றி பாமர மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளுமே காயத்ரி மந்திரத்தின் அதிதேவதைகளாகக் கருதப்படுகின்றனர்.
இந்துசமயத்தவர் மட்டுமன்றி, சில வேற்றுச் சமயத்தாரும் மந்திரங்களில் தலை சிறந்தது, வல்லது, சாதனை உபாசனை முறைகளால் இலகுவில் கடின சக்தியை நளினமாக்கிச் செயற்பட வைப்பது காயத்ரி மந்திரம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். காயத்ரி என்பதன் பொருளைப் பல எழுத்தாளர் கள் பலகோணங்களில் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக வெளியிட்டிருந்தாலும் கூட அதன் உண்மையான பொருளை உணர்த் துவதாக அவை அமையவில்லை எனக் காயத்ரி சித்தர் சுவாமி முருகேசு அவர்கள் கூறுகிறார்கள். மேலும், காயத்ரி எனும் வார்த்தைக்கு அவர்கள் கொடுத்த பொருளாவது "எவர் தன்னைக் கணம் பண்ணுகிறாரோ, அவரை இரட்சிப்பது"
2003
4S

Page 62
என்பதாகும். சக்தி சொரூபமான பிரம்ம காயத்ரி மந்திரம் இருபத்து நான்கு அட்சரங்களைக் கொண்டு விளங்குகிறது. வால்மீகி முனிவர், காயத்ரி மந்திரத்தி லுள்ள இருபத்து நான்கு எழுத்துக்களில், ஒவ்வொரு எழுத்திற்கும் ஆயிரம் சுலோக மாக இருபத்து நான்காயிரம் சுலோகங் களைக் கொண்டு தமது இராமாயணத்தை இயற்றியிருக்கிறார். ‘காயத்ரியானது அறிவை காம ஆசையிலிருந்து இராமனின ஆசையில் செலுத்த வல்லதாகும். காயத்ரியினால் சுத்தமான அறிவைப் பெற்றவரே இராமனைக் கண்டு அருள் பெற்றுயப்ய முடியும்’ எனச் சுவாமி இராமதீர்த்தர் கூறியுள்ளார். ஒவ்வொரு மந்திர சாதனைக்கும் தனித்தனியாகக் கையாளும் நெறிமுறைகளுள்ளன. அவற் றின்படி செய்யத் தவறும் பட்சத்தில், நன்மைக்குப் பதிலாகத் தீமையே ஏற்படும். எனினும், காயத்ரி சாதனை எந்த நேரத்தி லும் எவ்விதத் தீமையையும் விளை விக்காது. காயத்ரி சஹஸ்ரநாம ஸ்தோத் திரத்தின் தியான சுலோகம் காயத்ரி மாதாவின் தோற்றத்தைக் கீழ்க் கண்ட வாறு வர்ணிக்கிறது:
“ரக்தச்வேத-ஹிரண்ய-நீல-தவளைர் யுக்தாம், த்ரிநேத்ரோஜ்வலாம் ரக்தாம், ரக்த நவஸ்ரஜ மணிகணைர் யுக்தாம் குமாரீமிமாம் காயத்ரீம், கமலாஸனாம்,கரதல வ்யானத்த குண்டாம்புஜாம் பத்மாசஷிஞ்ச வரஸ்ரஜஞ்ச தததிம் ஹம்ஸாதிருடாம் பஜே.”
(இதன் பொருள்: சிவப்பு, முத்துநிறம், மஞ்சள், நீலம், வெண்மை ஆகிய நிறங்களைக் கொண்டு முக்கண்களோடு கூடிய பிரகாசிக்கும் முகங்களைப் படைத்தவளும், சிவப்பான புதிய மாலை அணிந்தவளும் இரத்தினங்களால் அலங் கரிக்கப் பெற்றவளும், கைகளில் கமண்டலமும், தாமரையும், சிறந்த
46

ஜபமாலையும் தரிப்பவளும், தாமரை போன்ற கண்களுடையவளும், அன்ன வாகனத்தில் கமலாசனத்தில் வீற்றிருப்ப வளும், குமாரியுமாகிய காயத்ரி தேவி யைத் தியானம் செய்கிறேன்)
காயத்ரி தேவியின் உருவமானது (அன்னம் அல்லது தாமரை மேல் ஆரோ கணித்திருப்பது போன்ற வடிவம்) அகிலத் தையே குறித்து நிற்கிறது.
காயத்ரியானது, மூன்று வேதங் களான ரிக், யசூர், சாமம் ஆகியவற்றி லிருந்து தோற்றுவிக்கப்பட்டதாகும்.
காயத்ரி மந்திரமானது மூன்று காலமும் ஜெபிக்கப்படவேண்டியதாகும். “உச்சாடனம்” செய்வது என்பது, அன்புட னும், நேர்மையுடனும், பக்தியுடனும் ஒரு மந்திரத்தை ஒழுங்காக முறைப்படி உச்சரிப்பதென்பதாகும்.
காயத்ரி மந்திரத்தையும் தகுந்த வாறு முறைப்படி உச்சாடனம் செய்து வந்தாலே, அதன் உட்சக்தியை ஒருவ னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். மந்திரங்களின் தாயாகிய காயத்ரியே, மற்றைய எல்லா மந்திரங் களுக்கும் சக்தியை அளிக்கிறாள். காயத்ரி எனும் மாபெரும் சக்திக்கே ஒருவனது உள்ளத்தில் எழும் ஆசை களைக் கட்டுப்படுத்தும் மாபெரும் ஆற்றல் உள்ளது. யக்ஞோபவிதம், பிரம்ம சூத்திரம் என்றும் அழைக்கப்படும் காயத்ரி, குருமந்திரம் என்றும் அழைக்கப்படுகின் றது. யக்ஞோபவித விழா (உபநயனம்) காயத்ரி மந்திரத்துடன் தான் தொடங்கு கிறது. ஒரு பிராமணனுக்குப் பூணுால் அணிவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் காயத்ரியை அறிந்தி ருப்பது. யக்ஞோபவிதத்தில் (பூணுாலில்) மூன்று இழைகளுள்ளன. காயத்ரியில் மூன்று நிலைகள் உள்ளன.(1)முதல் рфguш шопавreот 6ѣ8ы попдвтtсь3 5püч преої 2oоз

Page 63
நிலை: “தத் சவிதுர் வரேனியம்” (2) இரண்டாம் நிலை: “பர்கோ தேவஸ்ய தீ மஹி.” (3) “தியோ யோநஹற் ப்ரசோத யாத்.” இந்த மூன்று அங்கங்களையும் பூணுரலின் மூன்று இழைகள் குறிக்கின் றன.
காயத்ரி மந்திரமானது ஒருவ னைச் சக்தியுடையவனாக்குவதுடன், உயர்ந்த அறிவு கொண்ட முழுமையான வனாகவும் ஆக்குகிறது. சக்கரச் சுழற்சி யாய் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிறப்பி லிருந்தும், இறப்பிலிருந்தும் விடுபட ஒரே வழிமுறை, காயத்ரி மந்திர ஜெபமே யாகும். வேறுமந்திரங்களால் செய்ய முடியாத அற்புதக் காரியங்களை ஆற்றக் கூடிய சக்திவாய்ந்த காயத்ரி மந்திர மானது, ஒருவனைப் பாவங்களினின்றும் நீக்கிப் பரிசுத்தமானவனாக்குகிறது. காயத்ரி மந்திரம் அனைத்து வேதங்க ளதும் சாரத்தைக் கூறுவது போன்ற தாகும். காயத்ரி ஜெபத்தால் சுவர்க்க சுகம், மோட்சம் என்பவற்றுடன், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளும், புருஷார்த்தங்களும் கிடைக் கும் எனக் காயத்ரி மந்திரம் மொழிகிறது.
சக்தி சொரூபமான காயத்ரி மந்திரத்தைப் பாராயணம் செய்தே அக்காலத்தில் சப்தரிஷிகள் தேவர் களையே மிஞ்சும் சக்தி படைத்துத் திகழ்ந் தனர். “காயத்ரி மந்திரத்தின் ஜெபம் நோயாளிகளைக் குணப்படுத்தவும், ஆன்மாவை முன்னேறச் செய்யவும் பயன் படுகிறது. திடசித்தமாகச் செய்யப்படும் காயத்ரி ஜெபம் ஆபத்துகளிலிருந்து காப் பாற்றும் திறமை பெற்றது” என மகாத்மா காந்தியும் கூறியிருக்கிறார். காயத்ரியின் பெருமையால் தான் மகாபாரதமும், இராமாயணமும் தோன்றியதாகக் கூறப் படுகிறது. காயத்ரி தேவி காலங்களின்
шрѣзЛш цртӕтехт айѣвы цртрвтr:сь3 5Fрüч шpeoй

வடிவாகவும் விளங்குகிறாள். காலை, மாலை, உச்சி ஆகிய காலங்களின் வடிவாகவும் விளங்குகிறாள். காலை, மாலை, உச்சி ஆகிய மூன்று காலங் களில் அவள் மூன்று வடிவில் பிரகாசிக் கிறாள் என ஒரு யோகி குறிப்பிடுகிறார். ஆயிரம் முறை ஜெபித்தால் பிரளயம், அக்னி, மஹாமாரி முதலிய உபாதை களில் இருந்து காப்பாள். இலட்சம் முறை ஜெபித்தால் மாபெரும் பாவங்கள் விலகிப் போகும். கோடி முறை ஜெபித்தால் விரும்பியதெல்லாம் பெறலாம் எனக் காயத்ரி புரஸ் சரணம் கூறுகிறது. காயத்ரியைப் பொதுவாகப் பிராமணர்களே ஜெபிக்கலாம். ஏனையோர் ஜெபித்தால் பாவம் வந்து சூழும் என்ற தவறான அபிப்பிராயத்தையும், வதந்திகளையும் மறுத்து, அனைவருக்கும் காயத்ரி மந்திரத்தை உபதேசித்த பெருமைக் குரியவர் சுவாமி ரீ இராமானுஜரே ஆவார். சக்தி நிறைந்த சிறிய மந்திரம் காயத்ரி என முறி இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியிருக்கிறார். யாக்ஞ வல்கியர் என்பவர், கங்கைக்குச் சமனான தீர்த்தமில்லை, கேசவனுக்குச் சமனான தேவரில்லை, காயத்ரி ஜெபத்துக்கு மேலான ஜெபம் இருந்ததுமில்லை, இனிமேலும் இருக்காது எனக் காயத்ரி மகிமையைக் கூறி மகிழ்கிறார்.
இவ்வாறு, நம் பெரியோர்களின் கூறிறுகளிலிருந்து காயத்ரியின் மகிமையை நம்மால் அறியக்கூடியதாய் உள்ளது. காயத்ரி மந்திரம் ஜெபிப்ப வர்களது மனம் தீய சக்திகளை நாடாது எப்போதும் உயர்ந்த ஒழுக்க சிந்தனை களைக் கொண்டிருக்கும். ஆகவே, அனைவரையும் விழித்தெழச் செய்யும் உன்னத சக்தி படைத்த காயத்ரி மந்திரத்தை உச்சாடனம் செய்து, தேவியின் அருளைப் பெற்றுய்வோமாக!
2003 47

Page 64
பல்லவர் காலக் முருகப் பழமங்கள அம்பிகை ஆனந்த
பக்தி இயக்கக் காலம் எனச் சிறப்பிக்கப்படும் பல்லவர் காலப் பகுதியில் சமய அமைப்பிற் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழ் நாட்டில் கிறிஸ்து சகாப்தத்திலே வட இந்தியச் செல்வாக்கு மிகுதியான அளவிலே ஏற்படத் தொடங்கி யது. பெளத்தம், சமணம், வைதீகம் ஆகிய நெறிகளும், சைவம், வைணவம் முதலான வழிபாட்டு முறைகளும் , இதிகாசம், புராணம், காவியம் முதலான இலக்கியங்களும் பெருஞ்செல்வாக்குப் பெற்றன. கல்வி நிலையங்கள் மூலமாகப் புராணங்கள் போன்றவற்றிலுள்ள கதைகள் தமிழ்மொழி வழக்கில் இடம்பெறலாயின. இவ்வழக்கு பல்லவர் காலத்திற் பெரு வளர்ச்சி பெற்றது.
பல்லவர் காலத்திலே சைவமும் வைஷ்ணவமும் மிகுந்த செல்வாக்குப் பெற்றதன் காரணமாகப் பழந்தமிழர் போற்றி வந்த முருக வழிபாடு சைவ சமயத்துட் கலப்புற்றது. தமிழ் நாட்டில் முருக வணக்கம் பற்றிக் குறிப்பிடும் அறிஞர், வரலாற்றில் ஒரு பெரிய கால இடைவெளியைச் சுட்டிக் காட்டுவர். பல்லவர் காலத்தொடக்கத்தில் இருந்து கந்தபுராணம் எழுந்த காலமாகக் கணிக்கப்படும் சோழப் பெருமன்னரது இறுதிக்காலம் வரை முருகனைப் பற்றிய பிரஸ்தாபம் தமிழ் நாட்டில் மிகவும் அருகியே காணப்படுகின்றது என்பர். குறிப்பிட்ட கால இடைவெளியில் எழுந்த தமிழ் இலக்கியங்களிலே சிவபெருமான் அல்லது திருமால் முழுச்சிறப்பையும் பெறுகின்றமை உண்மையே. முருகனைப் பற்றி மிகச்சில குறிப்புகளே அக்கால இலக்கியங்களில் உள்ளன. எனினும்,
48

கலை வரலாற்றில் து முக்கியத்துவம் குமார் பீ.ஏ.(சிறப்பு)
இக்காலப்பகுதிக்குள் முருகவழிபாடு மிகுந்த செல்வாக்கோடு இருந்துள்ளது என்பதற்கான சாசனச் சான்றுகளும் எமக்குக் கிடைக்கின்றன.
பல்லவர் காலத்தில் இருந்து முருக ஸ்தலங்கள் பற்றிப் போதிய இலக்கியச் சான்றுகள் கிடைக்கப்பெற வில்லை. எனினும், சோமனாகிய சிவனும், கந்தனாகிய முருகனும் இணைந்து தோன்றும் சோமாஸ்கந்த வடிவத்தைப் பல்லவர் காலச் சிவன் கோயில்கள் பலவற்றிற் காண்கின்றோம். பல்லவர் காலத்தில் தமிழ் நாட்டில் எழுந்த சிவன் கோயில்களுக்குத் தலையாய சிறப்பைக் கொடுப்பனவாக இச்சோமாஸ் கந்த வடிவங்கள் காணப்படுகின்றன. இராச சிம்மன் காலத்திற்கு (கி.பி.730765) முன்னர் கட்டப்பெற்ற பல்லவர் கோயில்களிற் சோமாஸ்கந்த வடிவம் அதிகம் காணப் பெறவில்லை. ஆனால், இராசசிம்மன் காலத்திற் கட்டப்பெற்ற கோயில்களில் சோமாஸ்கந்த வடிவங்கள் பல செதுக்கப் பட்டுள்ளன.
சோமாஸ் கந்த வடிவங்கள் தொண்டை மண்டலத்தில் உள்ள பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிவன் கோயில் களிலேயே அதிகம் காணப்படுகின்றன. தொண்டை மண்டலம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே சோமாஸ்கந்த வடிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
காஞ்சி கைலாசநாதர் கோயி லைச் சுற்றியுள்ள மணி டபங்கள் சிலவற்றில் ஒவியங்கள் சில வரையப் பெற்றுள்ளன. அவற்றுட் சோமாஸ்கந்த рфgu цршавтехт ёѣзы шpпрьтсь3 5püч преої 2oоз

Page 65
ஓவியம் மிகுந்த சிறப்புடையதாகும். அந்த ஓவியத்தில் சிவனும் உமையும் அமர்ந்திருக்க, முருகன் குழந்தை யுருவில் அவர்கள் அருகிற் காட்சியளிக் கின்றான். சிவனுக்குப் பக்கத்திற் பூத கணங்கள் நிற்கின்றன. உமைக்குப்பின் புறத்தில் அழகிய பணிமகள் நிற்கின்றாள். சிவனுக்கும் உமைக்கும் நடுவில் முருகன் தலையில் அழகிய சிறுமகுடம் அணிந்து தாயின் தொடையில் அமர்ந்தவண்ணம் தன் தந்தையை நிமிர்ந்து நோக்கு கின்றான். இந்த ஒவியத்தையே பின்னர் பல்லவ மன்னர்கள் சிற்ப வடிவில் அதே கோயிலிலும், மாமல்லபுரத்துக் கடற் கரைக் கோயிலிலும், பனைமலைக் கோயிலிலும், தருமராசர் தேரிலும் படைத்தனர்.
மாமல்லபுரத்து மகிஷாசுரமர்த் தனி குடைவரைக் கோயிலின் பின்புறச் சுவரின் நடுவிலும் சோமாஸ்கந்தர் உருவம் சுவரோவியமாகச் செதுக்கப் பட்டுள்ளது. இந்த ஒவியத்தில் உள்ள குழந்தைக் கந்தன் பார்வதியுடைய வலத்தொடையில் அமர்ந்து, மடிமீது தலைசாய்த்து, இருகைகளையும் சற்று மேல் தூக்கி மடித்துக் கால்களை நீட்டி விளையாடுவது போலக் காட்சியளிக் கின்றான்.
தருமராசர் தேரின் கருவறையின் பின்புறச் சுவரில் சோமாஸ்கந்தரின் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப் பட்டுள்ளது. பொதுவாக இந்துக் கோயில் களின் கருவறையில் மூலவரைத் தவிர வேறு எத்தகைய சோடனைகளும் சிற்பக் காட்சிகளும் காணப்படுவதில்லை. இந்த மரபை மீறித் தருமராசர் தேரின் கருவறை யில் சோமாஸ் கந்தரின் புடைப்புச் சிற்பவணி செதுக்கப்பட்டுள்ளது. இதில் முருகன் குழந்தையாக, பார்வதியின் வலத் தொடையில் அமர்ந்துள்ளான். காஞ்சி கைலாசநாதர் கோயிற் கருவறை மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல!

யில் உள்ள லிங்கத்துக்குப் பின்புறமுள்ள வடக்கு நோக்கியுள்ள சுவரிலும் மிகப்பெரிய சோமாஸ்கந்தரின் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள சிறு கோயிலின் பின்புறச் சுவரில் சோமாஸ்கந்தர் சிற்பவணிகள் காணப்படுகின்றன. காஞ்சி கைலாசநாதர் கோயிற் கருவறையின் கிழக்கு, மேற்கு, வடக்குப் பக்கத் தேவகோஷ்டங்களிலும் (cells) சோமாஸ்கந்தர் வடிவங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. காஞ்சியிலுள்ள முக்தேஸ்வரர் கோயிலிலும், மதங்கேஸ் வரர் கோயிலிலும், ஐராவதேஸ்வரர் கோயிலிலும் சோமாஸ்கந்தர் வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப் பட்டுள்ளன.
பல்லவர் காலத்தின் பிற்பகுதியில் முருகனுக்குரிய தனியுருவச் சிலைகள் படைக்கப்பட்டன. இவ்வுருவச் சிலைகளில் முருகனது திருக்கரங்களில் உருத்திராட்ச மாலையும் கமண்டலமும் காட்சியளிக் கின்றன. உருவச் சிலைகளில் முருகனைப் படைக்கும் இம் மரபே பின்னர் சோழர் காலத்தின் முற்பகுதியில் பெருஞ் செல்வாக்குப் பெறுகின்றது."
காஞ்சி கைலாசநாதர் கோயிலிற் பஞ்சலோகத்தாற் செய்யப்பெற்ற சோமாஸ் கந்த சிலையொன்றுள்ளது. இது விழாக் காலங்களிற் பயன்படுத்தப்பட்டதாக இருத் தல் வேண்டும். இது தவிரக் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் பஞ்சலோகத் தாற் செய்யப்பெற்ற முருகனது வார்ப்புச் சிலையொன்றும் உள்ளது. முருகனுக் கருகில் வள்ளியும் தெய்வானையும் நிற்கின்றனர். இவ் வார்ப்புச்சிலை சோழர் காலத்துக்குரியதாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
ir 2003
49

Page 66
ஏனெனில், முருகனை வள்ளி தெய்வ யானை சமேதராகப் படைக்கும் வழக்கம் சோழர்காலப் பிற்பகுதியில் தோன்றிய தாகும்.
எனவே, இப்படிமங்கள் அனைத் தும் முருக வணக்கமானது பல்லவ மன்னர் மத்தியிற் பெற்றிருந்த செல்வாக் கினை எடுத்தியம்புவனவாக அமைந் துள்ளன. அழகும், இளமையும், வீரமும் பொருந்திய முருகனது தோற்றப் பொலிவு மன்னர்களைக் கவர்ந்தமை இயல்பானதே. விஜய நகர நாயக்கர் காலப்பகுதியில் முருகக் கடவுளுக்கெனத் தனியான கோயிலி கள் பலவும் சிறப்பான விழாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
r
வாடிய பயிரைக் கண்ட வாடினேன் பசிய வீடுதோ றிரந்தும் பசிய வெற்றரைக் கை நீடிய பிணியால் வருந்
நேர்உறக் கண் ஈடின்மா னிகளாய் ஏை இளைத்தவர் த
ܢܠ
50

அடிக்குறிப்புகள்
1. வேலுப்பிள்ளை, ஆ.(1985) தமிழர் சமய வரலாறு, சென்னை: பாரி புத்தகப் பண்ணை. ப.166.
2. தங்கவேலு, கோ. (1976) இந்தியக் கலை வரலாறு. சென்னை: தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம். ப.40.
3. Francoise L'Hernault (1978)L'Iconographic De Subrahmanya Au Tamilnad (English Abstract) Pondichery: InstitutFrancais D'Indologie, p.266,
4, Ibidp, 267.
5. Alexander Rea(1995)PallavaArchitecture, New Delhi:
Asian Educational Services, p.38,
6. Ibid. p.38.
போ தெல்லாம் பினால் இளைத்தே றா தயர்ந்த ண்டுளம் பதைத்தேன் துகின் றோர்என் டுளம் துடித்தேன் ழக ளாய்நெஞ்சு மைக்கண்டே இளைத்தேன். -இராமலிங்கவள்ளலார்
шрфgu цртавтот вѣ8ы шpпрвпtсь5 3püч шpeoй 2oоз

Page 67
இலங்கையில் இந்து ச
ஒரு கணி ஜெயமலர் தியா
ஆதி மனிதனுடைய வாழ்க்கை யில், இயற்கையின் தோற்றத்திலும் சக்தியிலும் அவன் கண்ட விநோதங்கள், அவனுடைய உள்ளத்தில் ஏற்படுத்திய பயத்திலும், பயத்துடன் கலந்த மதிப்பிலும் ஆரம்பமாகி வளர்ந்து, இயற்கை வழி பாட்டு வழக்கின் காலத்தோடொட்டிய வளர்ச்சியே சமய நெறியாக இன்று நிறுவன உருப்பெற்றதெனலாம். தனக்கு அப்பாற்பட்டதாக மனிதன் கண்ட அந்தப் பரம் பொருளை உணரத் தலைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட வழிபாட்டு முறையே இன்று இறை வழிபாடாகவும், சமய நெறி யாகவும் மக்கள் வாழ்க்கையிற் பரிணமித் துள்ளது.
இலங்கையிலும் மக்களின் ஒழுக்கத்தையும், சமூகவிருத்தியையும் நிர்ணயிக்கும் காரணியாகச் சமயம் விளங்குகின்றது. இந்த வகையில் வரலாற்று நோக்கில் பார்க்கும்போது, இலங்கைக்குப் பெளத்தமதம் வருவதற்கு முன்பு வழக்கிலிருந்த மரபு இந்து மரபென் பதை அக் காலத்திற்குரிய மூலா தாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. பிராமண மரபு என அன்று வழங்கிய அம்மரபு, சிங்கள மன்னர்களது ஆட்சி யிலே தென்னிலங்கையில் விசேடமாக அரசியலோடு ஒட்டி நடைமுறையில் இருந் தது. அவ்வடிப்படையில் யாழ்ப்பாணப் பகுதியிலும் இந்து மரபு வழக்குகளும், செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்க வேண்டுமென ஊகிக்க முடியும்.
இந்தியாவில் இருந்து வந்த பிராமணக் கல்விமரபு, அடிப்படையில் கொண்டிருந்த தத்துவமும், செயற் மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல

மயம் -ஐரோப்பியர்காலம் (ணோட்டம் ாகலிங்கம் எம்பில்.
பாடுகளும் எமது சைவக்கல்வி மரபின் மூலகங்களாக அமைந்தன என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகும் (பிராமண மரபின் காலத்துக்கூடான வளர்ச்சி சார்ந்த மாற்றம் யாழ்ப்பாணப் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகச் சைவக்கல்வி மரபாக உருப்பெற்றதெனக் கூறுவது நியாய மானதேயாகும்). இலங்கையில் தனிப்பட்ட இந்துப் பண்பாட்டுப் பாரம்பரியம் 9ஆம், 10ஆம் நூற்றாண்டுகளில் தென்இந்தியா வில் இருந்து இலங்கையின் வடபகுதியில் பெருந்தொகையான மக்கள் வந்து குடியேறத் தொடங்கிய காலத்திற் தோன்றி யது. இராஜராஜசோழன் இலங்கைமீது படையெடுத்து வந்து பொலநறுவையைத் தலைநகரமாக்கித் தனிஅரசு ஒன்றை நிலைநாட்டிய காலம் தொடங்கி, இந்துப் பண்பாடானது வளர்ந்து உச்சநிலையை அடைந்ததெனலாம். பின்னர், யாழ்ப் பாணத் தமிழ் அரசை ஆரியச் சக்கர வர்த்திகள் ஆண்ட காலத்தில் தமிழ்க் கல்வி, சைவப்பண்பு என்பன ஏறத்தாழ நானுறு ஆண்டுகளாகப் பேணப்பட்டு வந்தன.
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப் பியரான போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முன்பு, யாழ்ப்பாண இராச்சி யத்தில் மடங்களிலும், கோயில்களிலும் கல்வி கற்பிக்கப்பட்டது. புராணபடனம் கிரமமாக நடைபெற்றது. பல்வகைச் சாத்தி ரங்களும் ஆராயப்பட்டன. கல்விச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
போர்த்துக்கேயரின் வருகை யைத்தொடர்ந்து (1505-1658) இலங்கை யின் வரலாற்றில் புதியதொரு மாற்றம்
ir 2003
5

Page 68
ஏற்படத்தொடங்கியது. வியாபார நோக் கத்துடன் கீழைத் தேசங்களுக்கு வரத் தொடங்கிய ஐரோப்பியர் இலங்கையிலும் தமது செல்வாக்கைக் காட்டத்தவற வில்லை. அன்று இலங்கையில் காணப் பட்ட அரசியல் சூழ்நிலை, வியாபாரத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பையளித்தது. அந்த வகையிற் படிப்படியாகத் தமது நோக்கங் களைப் பரப்பத் தலைப்பட்டார்கள். மதம் பரப்புதலே (கிறிஸ்தவம்) அவர்களின் குறிக்கோளாக இருந்தது. அவர்கள் மதத்தைப் பரப்புவதற்குக் கல்வியைத் துணையாகக் கொண்டார்கள். கல்விப் பொறுப்பைக் குருமாரிடம் கையளித் 'தார்கள். அந்த வகையில் நான்கு சமயக் குழுக்கள் அரச ஆதரவோடு இலங் கைக்கு வந்து சமயத்தைப் பரப்புவதற்குக் கல்வியைத் துணையாகக் கொண்டன.
இச்சமயக் குழுவினர் தொடக்கத் தில் முதியோருக்கும், காலப்போக்கில் சிறுபிள்ளைகளுக்கும் சமயக் கல்வியை ஊட்டினர். இச்செயற்பாடானது, நீண்ட கால இந்துசமயச் சூழலில் வாழ்ந்த பெற்றோர், பிள்ளைகள் மனத்தில் பெரும் குழப்பமான நிலையை ஏற்படுத்தியது. போர்த்துக்கேயர் மக்களின் தாயப் மொழியைப் போதனா மொழியாகக் கொண்டு தமது சமயக் கல்வியைப் போதித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவர்கள் இந்துக் கோயில்களை இடித்து, அதே இடங்களில் கிறிஸ்தவ தேவால யங்களையும் அமைத்தார்கள. இதனால், சைவர்கள் வெளிப்படையாகக் கோயில் களுக்குச் சென்று வழிபாடு செய்யவோ, கிரியைகளை நடத்தவோ முடியாத நிலையும் இருந்தது. வெளிப்படையாகச் சமயத்தைப் போற்றவோ, சமய அனுட்டா னங்களை மேற்கொள்ளவோ முடியாத பலாத்காரமான முறையும் கூடக் காணப் .لقـاتـالا
52

இவ்வாறாகச் சைவத்திற்கு ஏற் பட்ட அவலநிலையானது போர்த்துக் கேயரைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர் காலத்திலும் (1658-1796) நீடித்தது. இவர்களும் போர்த்துக்கேயரைப்போன்று கல்வியைச் சமயமாற்றத்திற்கொரு கருவி யாகக் கொண்டனர். இவர்கள் கல்வியை அரச அதிகாரிகளின் பொறுப்பாக்கிய துடன், மக்களை (சுதேசிகளை) தமது மதமான புரட்டஸ்தாந்து மதத்திற்கு மாற்றக் கல்வியைக் கட்டாயமாக்கி னார்கள். இவர்கள் சுதேச மதவழி பாடுகளைத் தடைசெய்ததோடு, இந்துக் கள் அதிகமாக வாழ்ந்த யாழ்ப்பாணத்தில் இந்து ஆலயங்கள் கட்டவும் தடை விதித்தனர். இச்சமயக் கட்டுப்பாட்டுக்குள் இந்து சமய ஆசிரியர்கள் இளைஞர் களுக்கு இந்து சமய நூல்களில் இருந்து பாடம் போதித்தனர். தனிப்பட்ட வகையில் தங்கள் இந்து சமயத்தைப் பேணிக்காத்த துடன், தங்கள் சொந்தக் காணிகளுக் குள் வைரவ சூலங்களை வைத்து இரகசியமாக வணங்கினர். இக்காலத்தில் ஆலயங்களில் படித்துப் பயன்சொல்லத் தக்க சைவசமய புராணக் கதைகள் செய்யுள் நூல்களாக வெளியிடப்பட்டன. அத்துடன், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யுமுகமாகச் சமயக்கிரியைகளை விளக்கிக் கூறும் நூல்களையும் புலவர் பெருமக்கள் பாடிப்போற்றினர். போர்த்துக் கேயரைப் போன்ற பலாத்காரப் போக்கு இவர்களிடம் காணப்படாமையினால், எமது சமயமானது மறைமுகமாக வளர்ந் தமையை இக்காலச் செயற்பாடுகளில் இருந்து அறியமுடிகின்றது. ஒரு சில ஆலயங்களின் கட்டிட வேலைகள் கூட இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஒல்லாந்தரைத் தொடர்ந்து ஆங்கி லேயர் (1796-1947) கீழைத்தேசங்களில் தமது செல்வாக்கைப் பலப்படுத்துவதற் காக மேற் கொணிட முயற்சிகள் அவர்களது நிலையை ஸ்திரப்படுத்து цртавтот вѣeы மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 69
வதற்கு உதவின. இக்காலப்பகுதியில் அடுத்தடுத்துப் பல தேசாதிபதிகள் இலங்கைக்கு வந்தனர். இவர்கள் ஒவ்வொருவருடைய காலத்திலும் இந்து சமயத்தின் நிலை சிறிது வேறுபட்டதாகவே காணப்பட்டது. அதாவது ஆரம்பத்தில் பாடசாலைகளில் கிறிஸ்தவம் முக்கிய இடத்தைப் பெற்றாலும், சமயத்துறையில் காட்டப்பட்ட சமரச மனப்பான்மையினால், இந்து சமயக் கல்வி மறைமுகமாகச் சிறப்படையத் தொடங்கியது. ஆயினும், இக்காலங்களில் பல கிறிஸ்தவ சபை களின் வருகையால் இந்து சமயக் கல்வி யின் நிலையில் தாக்கம் ஏற்பட்டது. இக்காலத்தில் இந்துப் பாரம்பரியம் அரச கணிப்பைப் பெறவில்லை என்பதோடு, இந்துப் பாடசாலைகள் விலக்கப்பட்டவை யாகவும் இருந்தன. ஆனால், இந்து சமயம் போதிக்கும் திண்ணைப்பள்ளிகள், கோயில்கள், மடங்கள் என்பன முன்பு போல் இருந்தன. குருகுலக் கல்வி முறையில் புகழ்வாய்ந்த சில புலவர் களும், அறிஞர்களும் தமது இல்லங் களில் இந்துப் பாரம்பரியக் கல்வியைப் போதித்தனர். ஆயினும், பொதுக் கல்வித் தேவைகளுக்குக் கிறிஸ்தவ சபைகள் நடத்திய பாடசாலைகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இதற்கென அங்கு செல்வோர் சமயம் மாறவேண்டியிருந் தாலும், மனமாரக் கிறிஸ்தவராக இருக்கவில்லை.
இவ்வாறாக விளங்கிய இந்து சமயத்தின் இழிநிலையானது, அன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சமூக மேல் மட்டத்தினரிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவர்கள் இரண்டு வகைப் பணிகளை நிறைவேற்றவேண்டியவர் களாக இருந்தார்கள். ஒன்று கிறிஸ்தவ மதப் பிரசாரத்தைத் தடுத்து நிறுத்துவது. மற்றையது சைவசமயக் கருத்துக் களையும், அதன் மேம்பாட்டினையும் மக்கள் மத்தியில் நிலைநாட்டுவது.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு шао.

இவ்வேளையில் யாழ்ப்பாணத் தில் சைவசமயச் சூழலில் பிள்ளை களுக்குச் கல்வி கற்பிக்கப்படவேண்டு மென்ற இயக்கமும் 1842ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. இதில் உயர் குடிப்பிறப் பாளர்கள் ஒன்று சேர்ந்து, கிறிஸ்தவ பரம்பலைத் தடுத்துச் சைவசமயக் கல்வியைப் பரப்புவதற்கென ஒரு பாட சாலையை நிறுவினர்.
காலப்போக்கில் பிரித்தானியரது சமயவிடயத்திலான நடுநிலைக் கொள்கை யினால் இந்துக்களுக்கு எழுத்துரிமை, பேச்சுரிமை, வணக்கஉரிமை என்பன கிடைக்கப்பெற்றன. இதனால், வசன நடை கைவந்தவர்களும், இலக்கியம் புனையும் செந்தமிழ்ப் புலவர்களும் இலக்கியங் களைப் படைத்தனர். இத்தகைய புலமை பெற்றவர்கள் மட்டக்களப்பிலும் இக் காலத்தில் தோன்றினர். மேலும், சைவ சமய அறிவையும், சமய அனுட்டான அறிவையும் சைவசித்தாந்த வேதாந்த அறிவினையும் சைவரிடம் பரப்பப் பல வசனநடை இலக்கியங்கள் தோன்றின. இவ்வாறு வசனநடை இலக்கியங்களை ஆக்கியவர்களுள் முன்னோடியாக விளங் கியவர், முரீலரீ ஆறுமுக நாவலர் அவர்களாவர் (1822-1879).
இவர் வாழ்ந்த கட்டம், யாழ்ப் பாணத்துச் சைவமக்களிடையே முதிய வர்கள் கிறிஸ்தவ பாதிரிமாரின் செயற் பாட்டில் முனைப்பற்றிருந்த காலம். இளஞ் சந்ததியினர் கிறிஸ்தவ செல்வாக்கிற்கு உட்பட்டுத் தம்மையும், தம் பாரம் பரியத்தையும் எதிர்கொள்ளவேண்டியி ருந்தது. சைவசமயத்தில் நம்பிக்கையின் பலத்தை உறுதிப்படுத்தல், பாதை மாறிய இளந்தலைமுறையினரைத் திருத்தித் திருப்பிக்கொண்டுவருதல் என்பன அவற் றில் முதன்மையானவை. இவற்றிற்கு நாவலர் கண்ட மருந்து சீர்திருத்தப் புத்துயிர் ஊட்டப்பட்ட சைவசமயப்
*3
2003

Page 70
பிரசாரமும், சைவசமயச் சூழலிற் சைவசமய மரபிலான கல்வி வளர்ச்சி யுமாகும். அதற்காக நாவலர் அவர்கள் 1848ஆம் ஆண்டில் தமது வீட்டுச் சூழலில் இருந்த பிள்ளைகளுக்குக் காலை, மாலை வீட்டில் வகுப்புக்கள் நடத்தினார். சைவ சமயத்தினைப் பாமர மக்களிடையே பரப்பச்செய்யும் நோக்குடன் 1847 ஆம் ஆண்டு வண்ணார்பண்ணைச் சிவன் கோவிலில் தமது முதற் பிரசங்கத்தை மேற்கொண்டார். பின்னர், தமது மாணவ ரின் தந்தையான ஆறுமுகம் செட்டியாரின் அன்பளிப்பான காணியில் 1848ஆம் ஆணி டு சைவப் பிரகாச வித்தியா சாலையை நிறுவி, மக்கள் வழங்கிய உதவியின் மூலமாக நடத்தினார்.
அத்துடன் 1849ஆம் ஆண்டு அச்சுக்கூடம் நிறுவி, சைவம், தமிழ்மொழி தொடர்பான இலக்கண, இலக்கிய நூல்களையும், பாடநூல்களையும், சைவப் பிரசாரப் பிரசுரங்களையும் வெளியிட்டுக் கல்வி வாய்ப்பினைப் பரவலாக்கினார். மேலும், பள்ளிக்கூடங்களை நிறுவும் பணி யினை மேற்கொள்ளப் பலரையும் வேண்டி னார். அத்துடன், தாம் தாபித்த பாடசாலை களில் சமயம் கட்டாயமாகக் கற்பிக்கப் படுதலை உறுதிப்படுத்தினார். அவரால் வெளியிடப்பட்ட சைவசமய நூல்கள் சைவப் பாரம்பரியத்தையும், இலட்சி யங்களையும் நிறுவி நிலைநாட்ட வழிகோலின. மேலும், பொதுமக்களி டையே சமய விளக்கத்தைப் பிரபல்யப் படுத்துவதற்கும் பலவழிகளில் செயற்
JÜLTĩ.
இவ்வாறாக நாவலர் அவர்களின் பாணிகளைப் பின்பற்றி சேர் பொன். இராமநாதன் அவர்களும் கல்விப்பணி, சமயப்பணி, தேசப்பணி என்பவற்றை விரிவுறச் செய்தார். அவர் சட்ட நிரூபண சபையின் உறுப்பினராக இருந்தபோது அனைவருக்கும் கல்வி ஊட்டப்பட
54

வேண்டுமெனவும், அரசே கல்விப் பொறுப்பை ஏற்கவேணி டுமெனவும் கேட்டுக்கொண்டார். அத்துடன், சைவப் பிள்ளைகளின் கல்விக்கென யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ஆண்களுக்கெனப் பரமேஸ்வராக் கல்லூரியையும் மருதனார் மடத்தில் பெண்களுக்கென இராமநாதன் கல்லூரியையும் நிறுவினர். இவரால் நிறுவப்பட்ட இராமநாதன் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சைவமங்கையர் சபை, மற்றும் சைவ வித்தியா விருத்திச்சங்கம் என்பவற்றின் மூலமும் மேற்படி பணி களைப் பரவலாக்க முயன்றமை கல்விப் பயன் எல்லோருக்கும் கிடைக்கவேண்டு மென்பதற்கேயாகும்.
மேலும், பத்தொன்பதாம் நூற் றாண்டின் இறுதிப்பகுதியில் ஸ்தாபிக்கப் பட்ட சைவபரிபாலன சபை, மற்றும் விவேகானந்த சபை, இராமகிருஷ்ண சங்கம் என்பனவும் இந்து சமயத்தின் வளர்ச்சிக்கெனப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இராமகிருஷ்ண சங்கத்தினூடாகச் சுவாமி விபுலானந்தர் அவர்களது பணிகளும் இந்து சமயத்தின் புத்துயிர்ப்புக்கு வழிவகுத்தன எனலாம்.
இவ்வாறாகப் பிரித்தானியர் ஆட்சி யின் பிற்பகுதியில் அதாவது பத்தொன் பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து எமது சமயத்தின் வளர்ச்சிப்போக்கானது சிறப்படைந்துவரும் நிலையை எய்திக் கொண்டிருந்தது. இதற்குச் சார்பாகத் தமது சொந்தச் சமயத்தைப் பின்பற்று வதற்கு வாய்ப்பாக அரசினால் மனச் சான்று வாசகங்கள் வெளியிடப்பட்டமை யும் குறிப்பிடத்தக்கது.
தொகுத்துநோக்குமிடத்து, சிவபூமி எனத் திருமூலரால் வர்ணிக்கப்பட்டும், யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் எனப் புகழப்பட்டும் வந்த இலங்கையில், ஐரோப்பியர் வருகை
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 71
யினாலும், அதனால் ஏற்பட்ட மாற்றங் களினாலும் ஏறக்குறைய நானுாறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் சமய மானது மறந்தும், மறைந்தும் இலை மறைகாயாக விளங்கி, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் படிப்படியாக மறு மலர்ச்சி அடைவதற்கு இறைவனின் கருணையே காரணமெனக் கொள்ள வேண்டும். அதாவது, பள்ளிக்கூட மட்டத் தில் சமயபாடத்துறை சார்ந்த கல்விச் செயற்பாடு என்பன ஒருபுறமும், சமய நிறுவனங்களினதும், தன்னலங்கருதாச் சமயப் பெரியார்களினதும் மகத்தான பணிகள் என்பன இன்னொருபுறமுமாக எமது சமயப் பாரம்பரியத்திற்கு முட்டுக் கொடுத்துள்ளன என்பது மறுக்கமுடியாத தொன்றாகும்.
ஒரு மனிதனின் ஆளுமையில் நான்கில் மூன்று பங்கு, அவனது சொந்தச் சமயத்தாலேயே உருவாக்கப்படுகின்றது என்ற சேர் பொன். இராமநாதன் அவர்
「一
சரீரசுகத்திற்கு ஏதுவாகிய அ சுகத்திற்கு ஏதுவாகிய ஞானத்தை எல்லாத் தானங்களிலும் வித்தி அன்னவஸ்திரம் கொடுத்தால் அை பயன்படுவதும் சிறிய பொழுது மாத் விளக்கிலே பல விளக்கும் அப் பல பற்பல விளக்குகளாக எண்ணில்லாத போல, ஒருவருக்குக் கல்வி கற்பி அப்பலருள்ளும் ஒவ்வொருவரிடத்திே கற்றுக் கொள்ளுவதற்கு ஏதுவாகும். மற்றைய பிறப்புக்களிலும் சென்று சமமாகிய தர்மம் யாதொன்றுமில்லை களுக்குக் கருணையோடு கற்பியாத
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல)

களின் கூற்றினை எடுத்துக்காட்டும் வகை யில், எமது சமயத்தின் வளர்ச்சியும், அதனுடான மக்களின் ஆன்மீக விருத்தி யும் பின்னிப்பிணைந்துள்ளமையை இன்று உணரக் கூடியதாகவுள்ளது.
உசாத்துணை நூல்கள்
1. சதாசிவம்,ஆ. (1966) ஈழத்துத்
தமிழ்க் கவிதைக் களஞ்சியம், கொழும்பு சாகித்திய மண்டலம்.
2. சோமசேகரம், எஸ்.யூ.(1969) ‘கல்வி யில் இந்துமரபு.’ இலங்கையில் கல்வி நூற்றாண்டு மலர்(பகுதி-III),
கொழும்பு: இலங்கைக் கல்வி
கலாசார அலுவல்கள் அமைச்சின்
வெளியீடு.
3. Don Peter, V.L.A. (1978) Education in Sri Lanka under the Portuguese,
Colombo.
|ன்னவஸ்திரம் முதலியவற்றையும் ஆன்ம பும் கொடுப்பது வித்தையே ஆதலின், யா தானமே சிறந்தது. ஒருவருக்கு )வ அவருக்கு மாத்திரமே பயன்படும். திரமே. ஒரு விளக்கேற்றுதல், ஒவ்வொரு விளக்கினுள்ளும் ஒவ்வொரு விளக்கிலே விளக்குகள் ஏற்றப்படுவதற்கு ஏதுவாதல் த்தல், அவ்வொருவரிடத்திலே பலரும், ல பற்பலருமாக எண்ணில்லாதவர் கல்வி அவர் கற்ற கல்வியோ அப்பிறப்பினின்று உதவும் ஆதலில் வித்தியாதானத்திற்கு 0. தான் கற்ற கல்வியை நன் மாணவர் தவர் காட்டிலே நச்சு மரமாவார்.
-ஆறுமுகநாவலர் -
r 20o3
55

Page 72
மலையகத்தில் இந்துக
ஒரு ே இரா. சிவலிங்க
மலையகத்தின் பல்வேறு துறை களும் ஆராய்ந்து எழுதப்பட்டபோதும், சமய இலக்கிய வளர்ச்சி பற்றியறிவதற்கு வாய்ப்பாக எத்தகைய ஆய்வுகளும் இது வரை வெளிவரவில்லை. ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை நோக்கும் போது, நாவல், சிறுகதை போன்ற துறை களில் மலையகம் கணிசமான முன்னேற் றம் கண்டுள்ளது என்றே கூறவேண்டும். மலையகத் தொழிலாளர்களின் வர்க்க ரீதியான போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள் என்பவற்றைக் கருப் பொருளாகக் கொண்ட இலக்கியங்களாக இவை திகழ்கின்றன. மாறாக, ஈழத்தின் ஏனைய பிரதேசங்களில் தோற்றம் பெற்ற ஆரம்பகால இலக்கியங்கள் சமயச்சார் பானவையாகத் தோற்றம்பெற்றுள்ளன. ஆரம்பகால நாவல்களிற்கூட இத்தகைய பண்பினை அவதானிக்கலாம்.
ஈழத்தில் சமயச்சார்பான இலக்கி யங்களின் தோற்றம் மாதோட்ட நாகரிகத் தோடு தொடங்குகின்றது. நாயன்மாரது பாடல்களில் திருக்கேதீஸ்வரம், கோணே ஸ்வரம் போன்றன பாடப்பட்டுள்ளன. இவைதவிர, பல்வேறு தலங்களையும் விதந்து கூறும் புராணங்கள் தோற்றம் பெற்றன. தட்சிண கைலாசபுராணம் திருக் கரைசைப் புராணம், திருக்கோணேஸ்வர புராணம், நகுலகிரிப் புராணம், கதிர்காமப் புராணம், சிதம்பரசபாநாதப் புராணம், புலியூர்ப்புராணம் எனப் புராண இலக்கி யங்கள் எழுந்தன. கதிரைமலைப்பள்ளு, திருச்செல்வர் காவியம், கண்ணகி வழக்குரை போன்ற இலக்கியங்களும் சமயம் சார்பானவையாகவே எழுந்தன.
56

மய இலக்கிய வளர்ச்சி
நாக்கு ம் பீ.ஏ. (சிறப்பு)
சமூகச்சீர்கேடுகளைக் கண்டிப் பதற்குக் கூடக் கோட்டுப் புராணம், தாலப் புராணம், கனகிபுராணம் போன்றவற்றைப் படைத்தனர். இத்தகைய வளர்ச்சிகள் மலையகத்திற்கு வெளியிலேயே நிகழ்ந் தன. இதற்கான காரணங்கள் ஆய்வுக் குரியன.
தமிழிலே சமய இலக்கியங்கள் தோற்றம்பெறுவதற்கும், அவை வளர்ச்சி நிலை எய்துவதற்கும், காலத்திற்குக் காலம் ஏற்பட்ட கருத்துப் போராட்டங்கள் காரணமாக அமைந்தன. ஈழத்திலும் அத்தகைய தத்துவப் போர்கள் இடம் பெற்றன. வைதீக நெறி தந்த நெருக் கடிகளும், கிறிஸ்தவம் தந்த நெருக் கடியும் சைவ அறிஞர்களைத் தத்துவப் போருக்குத் தயார்ப்படுத்தின. ஆறுமுக நாவலர், காசிவாசி செந்திநாதையர், யாழ்ப்பாணம் சபாபதிநாவலர் போன்றோர் கிறிஸ்தவர்களோடு தத்துவச் சண்டையில் இறங்கினர். யாழ்ப்பாணத்தில் வெளிவந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் ‘சத்திய வேதபாதுகாவலன்' என்ற இதழும், ஞான சித்தி, ‘இந்துசாதனம்’ ஆகிய இரு சைவ இதழ்களும் மோதிக்கொண்டன. சைவப் பிரகாச வித்தியாசாலைகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. சைவசமயம் சார்ந்த பழந்தமிழ் நூல்கள் பதிப்பிக்கப் பட்டன. புராணபடன உரைகள் ஆலயங் களில் நிகழ்த்தப்பட்டன. வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள், சித்தாந் தங்கள் போன்ற தத்துவ விசாரணைகள் உருக்கொள்ளத்தொடங்கின. வடக்கிலும் கிழக்கிலும் குருகுலக்கல்வியின் விளை வாக ஆறுமுகநாவலர் பரம்பரை, மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 73
விபுலாநந்தர் பரம்பரையென குருசிஷ்ய முறையொன்று பேணிப் பாதுகாக்கப் பட்டது. இத்தகைய நிலைமைகள் மலைய கத்தில் நடைபெறவில்லை. இந்நிலையில் மலையக மக்களது சமயக் கல்விப்பாரம் பரியமொன்றினை இனங்காண்பது மிகவும் இலகுவான காரியமன்று.
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி யில் தமிழ்நாட்டிலிருந்து அழைத்து வரப் பட்ட மக்களுக்கு, தமிழ்நாட்டில் சமயம் சார்ந்த பலமான தத்துவப்பாரம்பரிய மொன்று இருக்கவில்லை. சமூக பண் பாட்டு அடிப்படையில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களில் பெரும்பகுதியினரே இலங்கை மண்ணில் கால்பதித்தனர். அவர்களது வழிபாட்டுச் சுதந்திரம் தாய் மண்ணில் பறிபோனநிலையிலேயே மலையகப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டுக் குடியேற்றப்பட்டனர். தோட்டத் தொழிலாளர்களான இவர்கள், தோட்டத் திற்கு வெளியே செல்வது, ஆலயவழி பாட்டில் ஒன்றுகூடுவது, வழிபாடு இயற்று வது, விழா இயற்றுவது, சடங்குகளை நிறைவேற்றுவது என்பன தோட்ட முதலாளிகளது தோட்டக்கட்டமைப்பைக் குலைத்துவிடுவதோடு, வேலைநேரம், உழைப்பு, இலாபம் என்பவற்றைப் பாதிக்கச்செய்துவிடுமென அஞ்சினர். எனவே, இத்தகைய சுதந்திரங்களை மறுத் தனர். இந்நிலையில் தாம் வேலைசெய்யும் இடங்களில் தமது குலதெய்வங்களையே வழிபட்டனர். “பெயர்அறியப்படாத மக்கள் கூட்டத்தைக் காலந்தோறும் நாகரிகச் சமுதாயங்கள் நம்மகத்தே கொண்டுள்ளன. எண்ணிக் கையில் அதிகமான இக்கூட்டமானது மனிதர்களாக விளங்க நேரமின்றிச் சுமைதாங்கும் மிருகங்களாக காட்சி யளிக்கின்றது.சமூகத்தின் வளங்களிலி ருந்து தமது பங்காகக் குறைந்த அளவி லான உணவு, உடை, கல்வி ஆகிய வற்றைப் பெற்ற ஏனையோருக்கு
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல!

ஊழியம் செய்துவருகிறது. மிகவும் கடுமையாக உழைத்து உழன்றாலும் அவர்கட்குக் கிடைப்பதென்னவோஏளன மும் அவமதிப்புந்தான். விளக்குத் தண் டைப் போன்று நாகரிக விளக்கை தன் தலையிற் சுமந்து கொண்டு இக்கூட்டம் இருக்கிறது. விளக்கிலிருந்து கசிகின்ற எண்ணெயானது விளக்கைச் சுமப்பவர் மீது கசிந்துகொண்டிருக்கும் மேநிலை மக்கள் விளக்கின் ஒளியைப் பெறுகின் றனர்” என்ற கூற்று மலையக மக்களுக்கும் பொருந்தும்.
மலையகத்தின் முதற் சமய இலக்கியமாக விளங்குவது, கண்டியில் களஞ்சியப் பொறுப்பாளராகத் தொழில் புரிந்த க. நடராசாபிள்ளை என்பவர் எழுதிய கற்பின் மகத்துவம் எனும் வசன நூலாகும். இந்நூல் 1917இல் வெளி வந்துள்ளது. இந்நூலின் இறுதியில் அல் வாயைச் சேர்ந்த நொத்தாரிசு இ.ஆறு முகம்பிள்ளையின்,
'பொறி புமிகுந்த விநிதப் பூதலத்தோர்
நன கறியக்
கறி புநரிலை வகுத்துக காட்டின*னறி புதமாய்
பேசு கணபதியா பிள்ளைக் கோர் தென ன
முதா நேசநL ராசபிள்ளை நேர்'
என்ற வெண்பா மூலம் ஆசிரியர் பற்றி யறிய முடிகின்றது.
“தற்கால சீர்திருத்தத்தாலுமெங்கள் மெளட்டிகத்தாலு மெள்வாறு சோத னையை உண்டாக்கிக்கொள்கிறோ மென்று கவனிப்போம். சோதனை நேரிடா வண்ணமும் நேரிடினதனை லேசில் மேற்கொள்ளும் பொருட்டும் கடவுளாலேற்படுத்தப்பட்ட நியாயம் பிரமாணங்களைத் தவிர நாங்களொவ் வொருவருமெந் நிலையிலிருந்தாலும் கைக்கொள்ளவேண்டிய மனுவென்பவ ரால் ஸ்தாபிக்கப்பட்ட கட்டளைச்
2003
57

Page 74
சட்டங்களுமுள. தற்கால நடவடிக்கை என்னும் நாமம் வைத்தெழுத வெண்ணி யிருக்கும் நிபந்தனையில் இவைகளைப் பற்றி விபரித்துக் கூறுவாம்” எனும் ஆசிரியர் கூற்றிலிருந்து தற்கால நடவடிக்கை’ என மற்றுமொரு நூலை யும் இவர் எழுதியிருக்கலாம் என்று இந்நூல் மூலம் அறியமுடிகிறது.
மலையகச் சமய இலக்கிய வளாச்சியில் தேசபக்தன் கோ.நடேசையர் எழுதிய கதிர்காமம் (1946) என்ற நூல் குறிப்பிடத்தக்கதாகும். கதிர்காமத்தைப் பற்றிய சரித்திர ஆராய்ச்சி, புராண வரலாறு, வாய்மொழி வரலாறு என்பன உள்ளடங்க நடேசையர் மக்களின் அறிவு வளர்ச்சியினை மேம்படுத்தவும், வாசிப் பறிவைத் தூண்டவும் ஏற்றவிதத்தில் இந் நூலை எழுதியுள்ளார் எனலாம்.
மலையகப் பாரம்பரியக் கலைகள் (1992) எனும் நூலினை மாத்தளை வடிவேலன் எழுதியுள்ளார். மலையக மக்களின் பண்பாடு பற்றி வெளிவந்த முத னுாலாக இது விளங்குகின்றது. இந்நூல் பற்றிக் கூறும் போது பேராசிரியர் சோ. சந்திரசேகரன்,
‘இன்றையை நவீன வாழ்க்கை முறை யினுடைய பல்வேறு பரிமாணங்களுக்கு மத்தியிலும் சூழ உள்ள பிற பண்பாட்டம் சங்களின் பிரதிகூலமான தாக்கங்களின் விளைவாக இன்று மலையகத்தின் பாரம் பரியக் கலைகள் மறைந்துவிடக்கூடிய அல்லது மக்களால் மறந்து போகக் கூடிய ஒரு நிலைமை இருப்பதாக பல ரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந் நிலையில் இக்கதைகள் பற்றிய இந்நூல் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல்முயற்சியெனலாம். காமன்கூத்து, கரகம், கும்மி, கோலாட்டம் போன்ற இன்னோரன்ன கலைகளை நுணுகி ஆராய்கின்றார்கள். இந்நூலை முன்
58

மாதிரியாகக் கொண்டு இத்துறையில் தமது நூலில் ஆர்வலர்கள் மேலும் ஆய்வுகளைச் செய்து இக்கலைகளின் தத்துவம், வரலாறு போன்ற பல்வேறு அம்சங்களை வெளிக்கொணர்ந்து தமிழ் கூறு நல்லுலகம் பெருமையடையுமாறு செய்ய வேண்டும்.” எனக்குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்களின் இந்துப் பண் பாட்டினை வரன்முறையான ஆய்வுக்குட் படுத்தி எழுதப்பட்ட முதலாவது நூல் மலையகமக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்குமுறைகளும் (1993) என்பதாகும். இந்நூலினைக் கலாநிதி ந.வேல்முருகு எழுதியுள்ளார். மலையகத்தின் முழுப்பிர தேசமும் ஆய்வுக்குற்படுத்தப்பட்டதோடு, மலையக மக்கள் வாழும் பதினொரு மாவட்டங்களும் ஆய்வுக்குள்ளாகிய இந்நூலில் மலையக மக்களது பண்பாட்டு அசைவியக்கத்தினை, அவர்களது பண் பாட்டுத்தளத்தில் சமூகவிஞ்ஞான அடிப் படையில் நோக்கியுள்ளார். மலையக மக்களது சடங்கு முறைகள், சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு என்பன ஆராயப்படுவதோடு, தோட்ட நகர்ப்புறக் கோயில்களின் கட்டமைப்பும் காட்டப் படுகின்றது. காமன் பண்டிகை, அருச்சுனன் தபசு போன்றவற்றின் கரணப் பயில்வு களும் விளக்கப்படுகின்றன. எத்தகைய மிகைப்படுத்தலுமின்றி, எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அனைவரையும் வாசகராகச் கொள்ளும் திறன் வாய்ந்த தாகும்.
கூட்டுறவு ஒத்துழைப்புக்கான நோர்வீஜிய நிறுவனம் (நொறாட்) வழங் கிய நிதிக்கொடையினைக் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரா சிரியர் கா. சிவத்தம்பி, பேராதனைப் பல கலைக் கழகப் பேராசிரியர் சின்னத்தம்பி ஆகியோரின் வழிகாட்டலில் மலையக இனக் குழு பற்றிய ஆயப்
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 75
வொன்று நடத்தப்பட்டது. இவ்வாய்வு நூல் உதயம் நிறுவனத்தால், இலங்கை மலையகத் தமிழரினி பணி பாடும் கருத்துநிலையும் பண்பாட்டுப் பின்புலம் (1993) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவ்வாய்வில் பி.சோதிமலர், எஸ். விஜயசந்திரன், து. சோபனாதேவி, ஏ. இராமகிருஷ்ணன், க.ப.சிவம், கலாநிதி ந. வேல்முருகு ஆகியோர் ஈடுபட்டனர். இந்நூல் பற்றிக் கூறும் பேராசிரியர் கா.சிவத்தம்பி,
“இங்கு தரப்படும் பண்பாட்டு விவரணத் தொகுப்பு, பண்பாடு தொழிற்படும் சமூகத்தைப் பற்றியும், அதன் அமைப்புப் பற்றியும், இந்தச்சமூக அமைப்புக்கும் பண்பாட்டுக்குமுள்ள உறவுபற்றியும் அறி வதற்கான உந்துதலைத் தருகின்றது. அத்துடன், சமூக, பொருளாதார உறை நிலையிலிருந்து இவர்கள் விடுவிக்கப் பட்ட, படுகின்ற நிலையில், பண்பாடு அந்த மாற்றங்களால் எவ்வெவ் வகை யிற் பாதிக்கப்படுகின்றது என்பதை அறிவதும், அந்த மாற்றங்களுக்குப் பண்பாடு எந்தளவுக்கு உதவுகின்றது என்பதையும் அறிவதற்கான தேடலையும் இவ்வாய்வு தொடக்கி வைக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளமை மனங்கொள்ளத் தக்கதாகும்.
மத்திய மாகாண அமைச்சு சாகித்திய விழாச் சிறப்புமலரான கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் (2002) என்ற நூலை வெளி யிட்டுள்ளது. இந்நூல் மலையக மக்களின் இந்துப்பண்பாடு பற்றியறியவுதவும் மற் றொரு ஆவணமாகும். இந்நூலில் இரா. சடகோபன், இரா.சர்மிளாதேவி ஆகியோர் எழுதிய ஆய்வுகள் மலையக மக்களின் சமய வரலாற்றினை அறிய உதவுகின்றன. இரா. சர்மிளாதேவியின் “இந்துமதம் வரலாறும் வளர்ச்சியும் கண்டி மாவட்டம் ஒரு நோக்கு” என்ற கட்டுரை விதந்துரைக்கத்தக்கதாகும். நூலின் பதிப் பாசிரியராக அந்தனிஜீவா விளங்குகிறார். மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

அருச்சுனன் தபசு என்ற நூல் இசை நாடகமாக இராமச்சந்திர கவி ராயரால் இயற்றப்பட்டது. இந்நாடகம் 1903 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. தமிழ கத்தில் வழங்கிவந்த இந்நாடகம் பல்வேறு மாற்றங்களோடு மலையகத்தில் ஆடப்பட்டுவருகிறது. மலையகத் திற்குள்ளேயே பல மாற்றங்களோடு பல்வேறு பிரதேசங்களில் வாய்மொழி மரபாகப் பாடப்பட்டும் ஆடப்பட்டு வரும் இக்கூத்தினை ஆராய்ந்து, அம்பிகை வேலி முருகு பதிப் பித்துள்ளார். இம்முயற்சியும் மலையக இந்துசமய இலக்கிய வளர்ச்சியில் மற்றொரு பங்களிப்பாகும். இத்தகைய இலக்கிய முயற்சிகள் தவிர, மலைய கத்தின் தொன்மைமிக்க ஆலயங்கள் சிலவற்றின் மீது பாடப்பட்ட ஊஞ்சல், பதிகம், அந்தாதி என்பனவும் கிடைக் கப் பெற்றுள்ளன. மஸ்கெலிய பூரீ சண்முக நாத சுவாமிகள் மீது தமிழ்மணி பானா தங்கம் திருப்பொன்னுஞ்சல் (1993) பாடி யுள்ளார். 'கண்மணி கனியாட- கவியும் ஆட
கைகூப்பும் அடியார்கள் கனவும் ஆட பண்ணாட காவடியும் பாட்டும் ஆட பாசத்தின் வழிதோன்றும் பயனும் ஆட விண்ணாம விளையாட வீரம் ஆட வித்தாரம் தெருவோடு வித்தையாட தண்ணாரும் மஸ்கெலியா பதியில் மேவும் தமிழாளும் குருநாதன் ஆடீர் ஊஞ்சல்”
என்வரும் பாடல்கள் படித்து மகிழத்தக்க வையாகும். மாத்தளை முத்துமாரியம்மன் மீது முருகேசபிள்ளை (1922) என்பவர் பதிகம், ஊஞ்சற் பாடல்கள் என்பவற்றைப் பாடியதாக அறியக் கிடக் கின்றது. க.சொக்கநாதன், வி.கந்தவனம், ஈழவாணன் ஆகியோர் சேர்ந்து மாத்தளை முத்து மாரியம்மன் மீது மாத்தளை முரீ முத்து மாரியம்மன் குறவஞ்சி (1963) பாடி யுள்ளனர்.
மலையக இந்துசமய இலக்கிய வளர்ச்சி பற்றி ஆராய்வோர் ஆத்மஜோதி நா. முத்தையாவின் பங்களிப்புப் பற்றிக் குறிப்பிடுவது தவிர்க்க முடியாததாகும். நாவலப்பிட்டியைக் களமாகக் கொண்டு செயற்பட்ட நா. முத்தையா அவர்கள்,
2003 59

Page 76
"ஆத்ம ஜோதி மாதாந்த இதழை வெளி யிட்டார். இவரது ஆத்மஜோதி சஞ்சிகை 1973இல் வெள்ளி விழா மலராக வெளி வந்தது. இவர் தமது சஞ்சிகையில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து திரு முறைக்காட்சி (1960) என்னும் நூலாக வெளியிட்டார். இவர் வாழ்ந்த நாவலப் பிட் டிக்கு அருகே குமினி ஸ் பரி தோட்டத்தில் வாழ்ந்த நவநாதச்சித்தர், கற்றன் குயில் வத்தையில் வாழ்ந்த நாகநாத சித் தர், மாதி தளை மந்தண்டாவளையில் நூற்றாண்டுக்கு முன் சமாதியடைந்த பரமகுரு சுவாமிகள் போன்றோரைப் பற்றிய தகவல் கள் அடங்கிய நூலை ஈழத்துச் சித்தர்கள் (1980) என்னும் பெயரில் எழுதி வெளி யிட்டார். மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவாக மதுபானம் விளைவிக்கும் மகாநாசம் (1969), சுத்தானந்தபாரதியின் மணிவிழா வெளியீடாக ஞானமாலை (1957) என்பவற்றை வெளியிட்டதோடு, அருணாசல தேசிகரின் சைவ இலக்கிய கதாமஞ்சரி (1964) என்ற நூலையும் பதிப்பித்தார். இவரது சமய இலக்கியப் பணி தனித்து விரிவாக ஆராயப்பட வேண்டிய தாகும். கட்டுரையின் விரிவஞ்சி அது தவிர்க்கப் படுகின்றது.
மலையக இந்து சமய இலக்கிய வளர்ச்சியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்தோர் ஆற்றிய பணி களும் சிறப்பித்துக் கூறப்பட வேண்டி யவையாகும். பேராதனைப் பல்கலைக் கழக இந்துமாணவர் சங்க வெளியீடான ‘இந்து தருமம்' சஞ்சிகை மலையகச் சமயவளர்ச்சியில் பெரும் பங்காற்றி யுள்ளது. இச்சஞ்சிகையில் பேராசிரியர் களான க. கணபதிப்பிள்ளை, வி.செல்வ நாயகம், சு.வித்தியானந்தன், ஆ. வேலுப் பிள்ளை, சி.தில்லைநாதன், சி.பத்ம நாதன், கலாநிதி வேல்முருகு, கலாநிதி துரை மனோகரன், பேராசிரியர் இரா.வை. கன கரத் தினம் , பேராசிரியர் க. அருணாசலம் எனப் பலர் கட்டுரைகள்
60

எழுதியுள்ளனர். இவற்றுள் கணிச மானவை மலையக மக்களது சமய பண்பாட்டு அம்சங்களை ஆராய்வனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், கொட்டகலைக்கு அருகாமையில் அமைந்துள்ள யதன் சைற் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மாணவர்கள் வருடந்தோறும் “ஓம்சக்தி சஞ்சிகை யொன்றினை வெளியிட்டு வருகின்றனர். கண்டித் திரித்துவக் கல்லூரி இந்து மாமன்றம் வருடந்தோறும் சக்தி' என்ற சஞ்சிகையை வெளியிடுகின்றது. இதைத் தவிர, மாத்தளை முத்துமாரியம்மன் கோயில், கட்டுக்கலை விநாயகர் ஆல யம், மஸ்கெலியா ரீ சண்முகநாதர் ஆலயம் போன்றவற்றில் வெளிவந்த குடமுழுக்கு விழா மலர்கள் தரமான ஆக்கங்களைத் தாங்கி வந்துள்ளன.
எனவே, தொகுத்து நோக்கும் போது, மலையகத்தில் வந்து குடியேறி யோர் தம் பாரம்பரியத் தெய்வ வழிபாடு, கலைகலாசார இசை, நடன மரபுகள் என்பவற்றைத் தம்முடனே கொண்டு வந்தனர்.மலையகக் கலாசார அம்சங்கள் தென்னிந்தியக் கலாசார அம்சங்களின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன. மலையகத்தில் குடியேறியோரில விவசாயத் தொழிலாளர் உட்பட விளிம்பு நிலை மக்களே அதிகமானோர். எனவே, இவர்களது கலை இலக்கியங்கள் வர்க்கம் சார்ந்தவை. இவ்வகையில், இங்கு நிலை பெற்றவையும் கிராமியப் பாரம் பரியத்தைச் சார்ந்தமரபுகளே. தென்னிந்திய சமூக அமைப்பினர் அடித்தள மக்களாகவும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களாகவும் இருக்கும் அம்மக்களிடம் எழுந்து எழுந்து ஆர்ப்பரிக்கும் ஓசையும் விழுந்து விழுந்து படிக்கத் தூண்டும் இயல்பும் மிக்க இதிகாச புராணங்களையோ, உலா, பிள்ளைத் தமிழ் , பரணி போன்ற வற்றையோ எதிர்பார்க்க முடியவில்லை.
5фguш црпӕтәхт бѣјѣёы цртдѣтtсь3 5püч преої 2oоз

Page 77
மலையகத்தின் சமூ இந்துய் ெ இரா. சர்மிளாே
இலங்கைத் தமிழ் வழக்கில் இன்று ‘மலையகம்’ என்னும் தொடர் மலைப் பிரதேசங்களிலுள்ள பெருந் தோட்டங்ககளிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்தியவம்சா வழித் தமிழரைக் குறிப்பதாகும். மலை யகப் பகுதிகளைச் சாராத பகுதிகளி லுள்ள பெருந்தோட்டங்களில் - அதாவது மேல், தென்மாகாணங்களைச் சார்ந்த றப்பர் தோட்டங்களில் வாழ்பவர்களையும் தொழில் நிமித்தம் மலைசார் பகுதிகளி லிருந்து சென்று வடக்கு, கிழக்கு மற்றும் பிற பிரதேசங்களிலும் வாழ்பவர்களையும் கூட ‘மலையகத் தமிழர்’ என்று சுட்டும் மரபே வழக்கிலுள்ளது.
இன்று மலையகத் தமிழிச் சமூகத்தினுள்ளே சமூக பண்பாட்டு விடயங்களில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்கள் தமது லயன் வாழ்க்கை' முறையி லிருந்து விடுபட்டு, மேனிலை நோக்கிய ஒரு சமூக அசைவியக்கத்துக்காகத் தொழிற்படத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, தங்களது, இன, மத, மொழி உணர்வு பற்றியும் பணி பாட்டுத் தனித்துவம் பற்றியும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். தோட்டத்தின் சமூக, பொருளாதாரத்திற்கு அப்பாலுள்ள சமூக, பொருளாதார வட்டங்களுக்குச் செல்லவிழைகின்றனர். இந்தத் தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கங்களை, அந்த அசைவியக் கங்களினி முக்கியத் துவத்தை, அதன் தன்மைகளை எண்ணிக் கொள்ள முனையும் போது, அதனி வரலாற்று அடிப்படைகளையும் அதன் உருவாக்க அம்சங்களையும் மறந்து விடுதல் கூடாது. அவ்வகையில், மலை
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல

pக அசைவியக்கமும் பண்களும் தவி பீ.ஏ.(சிறப்பு)
யகத்தின் சமூக அசைவியக்கம் குறித்துச் சிந்திக்கையில், ஒடுக்கப்படுவோரில் ஒடுக் கப்படுவோராகக் கருதப்படும் மலையக இந்துப் பெண்கள் குறித்தும், சமூக அசைவியக்கத்தின்போது, மத வழிபாட்டு முறைகளில் அவர்கள் அடையும் மேனிலை குறித்தும் சிந்திப்பது தேவை யானதாகும்.
‘' இதயமற்ற உலகத்தின் இதயமே சமயம்’ எனும் கார்ல் மார்க்ஸ் கூற்று மலையக இந்துப் பெண்களுக்குப் பெரிதும் பொருந்தும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் பெருந் தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென் னிந்தியாவிலிருந்து கூலிகள் கொண்டு வரப்பட்டபோது, பெண் தொழிலாளர் களைக் கொண்டுவருவதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. ஆண்களைப் போலவே பெண்களும் அடிநிலையிலுள்ள தொழில் களையே ஆற்ற வேண்டி யிருந்தது. பெண்களுக்கும் முற்றிலும் வெளிக் கள வேலைகளே வழங்கப ’பட்டன. ஆயினும், கூலியைப் பொறுத்த வரை ஆண்களை விடப் பெண்களுக்குக் குறைவாகவே வழங்கப்பட்டது.
பெருந்தோட்டங்களை அமைப் பதில் ஆண்களுக்குச் சமமாக உழைத்த மலையக இந்துப்பெண்கள் காடுகளை அழிக்கும்போது ஏற்படும் விபத்துக்கள், கொடிய மிருகங்கள், விஷஜந்துக்களால் ஏற்படும் விபத்துக்கள், லயத்துச் சிறை வாழ்க்கைக்குத் துணை, மழை, குளிர், வெள்ளம், வரட்சி முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு, சுகாதாரவசதிகள் புகாத தமது வாழ்க்கையில், வைசூரி, அம்மை
2003
61

Page 78
முதலிய நோய்களிலிருந்து பாதுகாப்பு முதலியவற்றின் நிமித்தம் மதவழிபாடு களில் ஈடுபடலாயினர். நம்பிக்கையே அவர்களது வாழ்க்கையின் அத்திபார மானது. அம்மை நோய் ஏற்படும்போது, அதிலிருந்து மீள்வதற்காக மலையகத் தோரால் மாரியம்மன் மீது பாடப்படும் மாரியம்மன் தாலாட்டின் மூலம் இதனை நன்கு உணரமுடியும்.
“பாலனுக்கு வந்த பார எரிச்சல்களில் காலெரிவு கையெரிவு கட்டழகி காருமம்மா மண்டைக் குடைசலோடு மாரடைப்பு
தலைநோவு வாதபித்தம் சீதசுரம் வனப்பிணியைக்
காருமம்மா இடுப்புக் குடைச்சலைத் தான் ஈஸ்வரியே
காருமம்மா பித்த வலியதனை கட்டழகி வாங்குமம்மா கழுத்து வலியதனை கட்டழகி
வாங்குமம்மா” பச்சிலையால் தான் தடவ பாரமுத்தை
இறக்கிவிடும்”
இதன் மூலம் உடற்பிணியை நீக்கும் தெய்வமாக மாரியம்மன் வழிபடப்படு வதை அறியமுடியும்.
இலங்கைக்கு மாரியம் மணி வந்தவிதம் பற்றி மலையகத்தோரிடையே ஒரு கதை வழங்குகின்றது. தோட்டத்தில் வேலை செய்வதற்காகக் கூலிகளைக் பிடித்துவரும் பொருட்டு ராக்கங்காணி என்பவன் இந்தியா சென்றானென்றும், சென்றவன் கொண்டு சென்ற பணத்தை யெல்லாம் செலவு செய்துவிட்டு விழித்த வேளையில், அவனெதிரே நிர்க்கதியான ஒரு பெண்ணாக மாரியம்மன் தோன்றினா ளென்றும் கங்காணி அவளை அழைத்து வந்து தோட்டத்தில் வேலைக்குப் பதிந்த போது, அவள் வேலைக்குப் போகத் தவறியது கண்டு சினம் கொண்ட கங் காணி கம் பொனி றை எடுத்து
62

அவளுக்கு அடித்தானென்றும் அவ்வாறு அடித்த கங்காணிக்கு அம்மை நோய் கண்டதென்றும் அவள் குஞ்சுப்புரி நவ நாதர் கோயிலிலே தெய்வமாகி விட்டா லென்றும் கூறப்படுகின்றது. இக்கதை குறித்துச்சிந்திக்கும்போது, மலையக இந்துப் பெண்கள் கங்காணிமார் மூலம் அனுபவித்த கொடுமைகளையும் அதிலி ருந்து மீட்சிபெறும் பொருட்டு அவர்கள் மாரியம் மனைப் பற்றுக் கோடாகக் கொண்டதையும் அறியலாம்.
உடற்பிணியை நீக்குவதற்காக மட்டுமன்றி, உளப்பிணியையும் அறி யாமையையும் நீக்கும் பொருட்டும் அவர்கள் மாரியம்மனை வழிபட்டனர்.
“பிணிகளுக்கு மாற்றுண்டு எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி பேதைமைக்கு மாறில்லை. எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி!”
பாரதியின் இவ்வரிகள் பிணிகளுக்கு மட்டுமன்றி, பேதைமைக்கும் மாரியம்மன் மருந்தாக அமைகின்றாள் என்பதை உணர்த்துகின்றன. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகக் கொண்டுவரப்பட்ட இந்துப்பெண்கள், சர்வலோக மாதாவாக விளங்கும் மாரியம்மனைப் பற்றுக் கோடாகக் கொண்டதுடன், கதிர்காமக் கந்தன், பிள்ளையார், சிவன் முதலிய பெரும் தெய்வங்களையும் தமது வழித்துணையாய் கொண்டனர். உதாரண
DfT85,
“காணிக்கை கொண்டு செல்வமே கண்டி கதிருமலை போனோமையா வழியா வழிநடந்து செல்வமே வரத்துக்கே போனோமையா”
என்றும்,
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 79
“காணிக்கை கொண்டு
கதிர்காமம் போகையிலே மாணிக்கப் பிச்சையென்று மடிப்பிச்சை தந்தாரே” என்றும் பாடப்பட்டுள்ள நாட்டார் பாடல் கள், அப்பெண்கள் கதிர்காமத்து முருகனையும் வழிபட்டதைக் காட்டுகின்
D35.
‘சங்கு முழங்குதையா. சிவ சங்கரனார் கோயிலிலே எங்கும் முழங்குதையா-ஈஸ்வரனார் கோயிலிலே”
இதுபோன்ற பாடல்கள் மலையகத்து இந்துக்கள் மத்தியிலே சிவவழிபாடு நிலவியதையும் புலப்படுத்துகின்றது.
பெருந்தோட்ட மக்கள் ஆரம்ப காலம் தொட்டே குலதெய்வம் என்னும் பெயரில் தங்கள் குடும்பத்தெய்வங் களையும் வழிபட்டனர். பரம்பரை பரம் பரையாக வழிபடும். குலதெய்வமானது, தம்மை எதிரிகளிடமிருந்தும் பேய், பிசாசு, பில்லி, சூனியம் முதலியவற்றில் இருந்தும் பாதுகாப்பதாக அவர்கள் நம்புகின்றனர். தமது குலதெய்வத்தின் மீது தீவிர பற்று கொண்ட அவர்கள், அத்தெய்வத்தின் பெயரை வெளியிலே கூறவிரும்பார். காரணம், எதிரிகள் மந்திர சக்தியின் மூலம் தமது ‘குலதெய்வத்தைக்” கட்டுப் படுத்தி விடுவார்கள் என்றும் அதனால் குலதெய்வம் சக்தி இழந்துவிடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். குலமட்ட வழிபாடுகளிலும் குடும்பமட்ட வழிபாடு களிலும் மலையக இந்துப் பெண்கள் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். குலதெய்வ வழிபாட்டைப் பொறுத்த வரையில் குலதெய்வம் பற்றியும் அதன் வழிபாட்டு முறைப்ற்றியும் குடும்பத்தி லுள்ள பெரியோரே அறிந்திருப்பர். அவர்களே வழிபாடியற்றுவர். ஆண் பெண் பேதமின்றி மூத்தவரே வழிபாடியற்று
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல

வதையும் காணலாம். ஏனைய பிரதேச இந்துப்பெண்களோடு ஒப்பிடுமிடத்து, மலையக இந்துப் பெண்கள் குலதெய்வ வழிப்பாட்டு முறைகளில் ஆணுக்கு நிகரான அந்தஸ் தைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. குடும்ப தெய்வங் களுக்குப் படைக்கப்படும் உணவுகள், அக் குடும்பத்தைச் சாராத ஏனை யோருக்குக் கொடுக்கப்படமாட்டாது.
குலதெய்வ வழிபாட்டோடு, சிறு தெய்வ வழிபாடுகளிலும் மலையகப் பெண்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் நொண்டி அப்பாச்சி, ஐயனார், சங்கிலி கறுப்பன், மாடசாமி, மதுரைவிரன், வாள்ராசு முதலிய காவல் தெய்வங் களையும் அத்துடன் பத்தினியம்மன், காளி, ஏழுகன்னியர், முனியாண்டி, ரோதைமுனி, செண்டாக்கட்டி, கவ்வாத்து சாமி, மலைச்சாமி, மின்னடையன், வைரவர், வணத்துச் சின்னப்பன், இடும்பன், முதலிய தெய்வங்களையும் வழிபடுகின்றனர். இவற்றுள் ரோதைமுனி, கவ்வாத்துச்சாமி, மலைசாமி முதலிய தெய்வங்கள் தொழில் நிமித்தம் வழிபடப் படும் தெய்வங்களாகும். ரோதைமுனி, தொழிற்சாலையில் நடுவே தொழிலா ளர்கள் வேலை செய்யும்போது இயந்தி ரங்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதன் பொருட்டு தொழிற் சாலையில் வேலை செய்யும் கூலிகளால் வழிபடபடுகின்றது. கவ்வாத்துச்சாமி, கவ்வாத்து வெட்டப்படும் காலங்களில் ஆயுதங்களால் குறிப்பாக கவ்வாத்துக் கத்தியினால் ஏற்படும் ஆபத்துக்களி லிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டும் கவ்வாத்து வெட்டியபின் தேயிலைச் செடி செழித்து வளர்ந்து, தமக்குத் தொழில் வாய்ப்பை நல்க வேண்டும் என்றும் வேண்டி வழிபடப் படுகின்றது. மலைச்சாமி, கொழுந்து மலைகளில் ஏற்படும் ஆபத்தில் இருந்து தம்மைக் காப்பதற்காகவும் நிறையக் கொழுந்து பறிக்கவேண்டியும் வழிபடு
2003
prgy

Page 80
கின்றனர். மலையகப் பெணிகள் வெளிக்கள வேலைகளில் ஈடுபடுவதால் அவர்களும் இவ் வழிபாடுகளில ஈடுபடுவதுடன், வழிபாடும் இயற்றுகின் றனர்.
மலையக இந்துமக்கள் சிறு தெய்வ வழிபாட்டின்போது, சிலைகள் அமைக்காது, அவற்றைக் குறிக்கும் முகமாக் கல், வேல் சூலம் முதலிய வற்றைச் செண்பகமரம், சவுக்குமரம், ஆலமரம், அரசமரம், பலாமரம், வேம்பு, அத்தி, கித்துள் முதலியவற்றின் கீழ் வைத்து வழிபடுகின்றனர். சில சிறுதெய்வ வழிபாடுகளில் பெண்களும் கலந்து கொள் கின்றனர்.
பாம்புக்குப் பால் வார்க்கும் வழக்கமும் மலையக இந்துப்பெண் களிடையே பிரசித்தமானது. சிந்து வெளி காலம் தொட்டே இவ்வழிபாடு மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. பாம்பைத் தெய்வமாகப்போற்றும் அவர்கள், அது தமக்கு நன்மையளிப்பதாகவும் கருதுகின் றனர்.
மலையக மக்களிடையே இறந்த வர்களை வழிபடும் வழக்கமும் உண்டு. தமது உறவினர்கள் இறந்த பின் தெய்வ மாக இருந்து தம்மையும் வீட்டையும் பாதுகாக்கின்றனர் என அவர்கள் நம்புகின்றனர். ஆண், பெண் பேதமின்றி இறந்த உறவினர்களை வழிபடுகின்றனர். பண்டிகைகளின்போதும் விரதங்களின் போதும் இறந்தவர்கள் முதன்மைப்படுத்தப் படுகின்றனர். மாரியம்மனைத் தெய்வ மாகப்போற்றும் மலையக இந்துக்கள், மனிதர்களையும் தெய்வமாகப் போற்றுகின்றனர். குறிப்பாக மலையக இந்துப்பெண் அவளது மறைவுக்குப் பின் தெய்வமாக போற்றும் நிலைக்கு உயர்த்தப்படுகின்றாள்.
64

மலையத்தில் ஆண், பெண் வேறு பாடின்றி குறிப் பார்த்தலிலும், குறி சொல் வதிலும் கூடிய கவனம் செலுத்துகின்ற னர். பில்லி, சூனியம் முதலியவற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள் வதற்கும், நோய்களில் இருந்து பாது காப்புப் பெறுவதற்கும், முக்காலம் குறித்து அறிவதற்கும் இவர்கள் குறிபார்க்கின் றனர். குறிசொல்பவர் தெய்வாம்சம் பொருந்தியவராகவே கருதப்படுவர். ஆண்களைப்போலவே மலையக இந்துப் பெண்களும் பயபக்தியுடன் உடுக்கை அடித்து, தமி முடைய இவர் ட தெய வத் தையோ, இறந்தவரினி ஆவியையோ அழைத்துக் குறி சொல்கின்றனர்.
திருவிழாவின்போதும், காமன் கூத்தின் நிறைவு நாளன்றும் ‘மாவிளக்கு எடுத்தல் முற்றிலும் பெண்களுக்குரிய ஒரு சமய நிகழ்வாகவே கருதப்படுகின்றது. இதைத்தவிரக் கோலட்டம், கும்மி, தீமித் தல், தீச்சட்டி எடுத்தல், கரகம், காவடி முதலியவற்றிலும் பெண்கள் ஆண் களுக்கு நிகராகப் பங்கு கொள்கின்றனர். மலையகத்தோரால் கொண்டாடப்படும் காமன் பண்டிகையிலும் கூட மதனை விட ரதியே முதன்மைப்படுகிறாள் என்பதும் கவனிக்கத்தக்கது.
மலையகமானது அணி மைக் காலமாக மெதுமெதுவாக மேனிலை நோக்கிய சமூக அசைவியக்கத்துக்காகப் பாடுபடுகின்றது. அவ்வசைவியக்கத்தின் மையங்களாகப் பெண்கள் திகழ்கின்றனர். மலையகப் பெண்கள் இன்று கல்வியிலே அதிக அக்கறை காட்டிவருகின்றனர். சிலர் பல்கலைக்கழகம்வரை சென்று கல்வி யைத் தொடர்கின்றனர். கொழுந்து பறித்த லில் இருந்த ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகின்றது. ஓரளவு கல்வி கற்ற பெண்கள் நகர்புறங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளுக்கு வேலைக் மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 81
குச் செல்கின்றனர் (அங்கு அவர்களாது நிலை தனியான ஆய்விற்குரியது). சிலர் ஆசிரியைகளாகத் தொழில் புரிகின்றனர். வேறு சிலர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று உழைக்கின்றனர். சிலர் உள் நாட்டிலேயே வீட்டு வேலைகளுக்காக நகர்ப்புறங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். வேறு சிலர் இதர வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டப்புறப் பெண்கள் மேனிலையை நோக்கிய அசைவுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தோட்டங்களை அண்டிய கிராமப்புறங் களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடம் பெயர்கின்றனர். இத்தகைய மேனிலையை நோக்கிய அசைவியக்கமானது, அவர் களது வாழ்வியல் அமிசங்களில் குறிப்பாக வழிபாட்டு முறைகளில் மாற்றத்தை ஏற் படுத்துகின்றது.
இதுவரைக்கும் மாரியம்மன் வழி பாட்டில் ஈடுபட்டு வந்த மலையக இந்துக் பெண்களில் ஒரு சாரார் அவ்வழிபாட்டு முறையை மேலும் வலுப்பெறச்செய்ய, இன்னுமொரு சாரார் அத்துடன் பெருந் தெய்வ வழிபாட்டு முறைகளைக் கைக் கொள்கின்றனர். இராமன் வழிபாடு இன்று விஷ்ணு விழிபாடாக மாறிவருவதை அவ தானிக்கலாம். அதேபோல் சிவவழிபாடு, பிள்ளையார்வழிபாடு, முருகவழிபாடு, சக்தி வழிபாடு என்பனவும் அவர் களிடையே சிறப்புப்பெற்று வருகின்றது. இந்து மதத்தைத்தவிர பெளத்த மதமும் அவர்களிடையே செல்வாக்குப் பெறுகின் றனது. புத்தரைப் 'பெருமாள் சாமி என அவர்கள் வழிபடுகின்றனர். கிறிஸ்தவ மதச் செல்வாக்கும் மலையக இந்துக் களிடையே குறிப்பாகப் பெண்களிடையே புகுந்து பல சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு посой

மலையக இந்துப்பெண்கள் நகர மயமாதலின் விளைவு, அவர்கள் தாங்கள் பெற்றுக் கொணி ட அனுபவத்திற்கு ஏற்பப் பூசைகளையும் விழாக்களையும் நடத்த முற்படுகின்றனர். ஏனைய இந்து சமூகத்தினரைப் போலப் பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாடும் அவர்கள், விரதங்களையும் அனுஷ்டிக்கின்றனர். வெளியுலகத்தின் தொடர்பால் மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட முயல்கின்றனர். மலையக மக்களிடையே குறிபார்த்தல் முதலான விடயங்கள் இன்று நெகிழ்ச்சித்தன்மை அடைந்துள்ளமையும் அவதானிக்கத்தக்கது.
சமயச்சடங்கு முறைகளிலும் பூசைமுறைகளிலும்கூட மேனிலை நோக் கிய ஒரு நகர்வினைக் காணமுடியும். குறிப்பாகப் பூசாரியின் பண்புகள் படிப் படியாக மாற்றம் அடைந்து வருவதையும் பெருந்தோட்ட இந்து வழிபாட்டு முறையில் ஏற்பட்டுவரும் சமஸ்கிருத நெறிமுறையினையும் அவதானித்தல் வேண்டும். மலையக இந்துப்பெண்களும் தம்முடைய வழிபாட்டு முறைகளில் இம்முறைகளைப் பின்பற்ற முயல்வதை யும் அவதானிக்கலாம்.
தொகுத்து நோக்கின், மலை யகச் சமூகத்தின் அசைவியக்கமானது மலையக இந்துப் பெண்களின் வழிபாடு களிலும் வழிபாட்டு முறைகளிலும் மேனிலை நோக்கிய ஓர் அசைவியக்கத் துக்கு இட்டுச்செல்கிறது அதேவேளை, இவ்வசைவியக்கம் ஏற்படுத்தும் விளைவு கள் குறித்தும் ஆழமாகவும் அகலமாக வும் சிந்திக்க வேண்டியது இன்றைய தேவையாகிறது.
2003

Page 82
மலையகத்தில் இந்து பிரச்சினைகளும் தீர் ச. விஜேசந்தி
அறிமுகம்
மனிதகுல வரலாற்றின் பாரம் பரியத்தை எடுத்துக்கூறும் சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பு இந்து மதத்தின் தொன்மைக்குச் சான்றுபகரும். வேதம், ஆகமம் , சாஸ்திரங்கள், புராண இதிகாசங்கள் யாவும் இந்து மதத்தின் முதன்மைக்கு ஆதாரங்களாகும். இந்து மதம் இறைவழிபாட்டைப் போதிக்கும் ஒரு சமயம் மட்டுமல்ல, அது ஒரு பண்பாடும், மாபெரும் மக்கட்குழுவின் வாழ்க்கை முறையும் மனிதகுல நாகரிக மேம்பாட்டின் கருவூலமுமாகும். இந்து மத ஆசார அனுஷ்டானங்கள் மனித வாழ்வியல் முறையினை வழிநடத்துவனவாகும். ஆசாரங்கள் அகத்துாய்மைக்கும் புறத் தூய்மைக்கும் வழிகாட்டுகின்றன.
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற முதுமொழிக்கிணங்கச் சமயச் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி சமூகப்பணிகளுக்கும் இந்துமதம் முக்கியத் துவமளிக்கின்றது. 'திருத் தொண்டே தெய்வத்தை அடையும் மார்க்கம்’ என்பதற்கிணங்க, சமய வழிபாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. “ஏழைகளின் சிரிப்பினிலே இறைவனைக் காணலாம்” என்ற பெரியோர்களின் வாக்கினைப் பொய்ப்பிக்காத வகையில் இந்துமதம் சமூகப்பணிக்கும் முக்கிய இடம் அளிக்கின் றது. இதன் மூலம் இந்துமத வளர்ச்சி, அதன் மேம்பாடு என்பன சமயப்பணியில் மாத்திரமன்றி, சமூகப்பணிகளின் செயற் பாடுகளிலும் தங்கியுள்ளது என்ற உண்மை புலனாகின்றது.
66

சமயம் எதிர்நோக்கும் வு ஆலோசனைகளும் ான் எம். எஸ்ஸி.
இத்தகைய உன்னத தன் மையும் பெருமையும் மிகு இந்துமதம் வேரூன்றி வளம் பெற்றுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்நாட்டில் பெளத்த மதத்திற்கு அடுத்தபடியாக இந்துக்களே அதிகம் வாழ்கின்றனர். இலங்கையில் பல பாகங்களில் இந்துக்கள் வாழ்கின்ற போதிலும். வட-கிழக்குப் பிரதேசத்திலும், மலையகப் பிரதேசங்களிலும் வாழும் தமிழர்களில் அதிகமானோர் இந்துக் களாவர். வட-கிழக்குப் பிரதேசங்களில் வாழும் இந்துக்கள் நீண்ட கால இந்து மதப் பாரம்பரியங்களையும் கலாசாரப் பின்னணியினையும் கொண்டுள்ளனர். மலையகப் பிரதேசங்களில் வாழும் இந்துக்கள் 19ம் நூற்றாண்டில், இலங்கை யில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டதைத் தொடர்ந்து தென்னிந்தியக் கிராமங்களில் இருந்து தொழில் நிமித்தம் இலங்கையின் மலையகப் பிரதேசங் களுக்கு இடம் பெயர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் இந்துக்களாக வுள்ளனர். இவர்கள் கல்வி மற்றும் சமய அறிவுகளில் பின்தங்கிய தோட்டத் தொழிலாளர்களாக நூற்றுண்டுக்கு மேலாக வாழி நீது வந்துள்ளனர். தென்னிந்தியக் கிராமங்களில் காணப்பட்ட கிராமிய தெய்வ வழிபாட்டு முறைகளுடன் ஒன்றித்திருந்த இவர்கள், தாங்கள் வாழும் மலையகப் பகுதிகளில் அத்தகைய வழிபாட்டு முறைகளை அதிகளவில் பின்பற்றினர். அத்தோடு, இந்துமத சாத்திர அனுஷ்டானங்களுக்கிணங்கப் பெருந் தெய்வ வழிப்பாட்டு அம்சங்களிலும் ஈடுபடுகின்றனர். மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 83
மலையக மாவட்டங்களான நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் களுத் துறை ஆகிய இடங்களில் இந்துக்கள் செறிந்து வாழ்கின்றனர். இவர்களிற் சிறு தொகையினர் நகர்ப்புறங்களில் வாழ்வ தோடு, அதிகளவில் பெருந்தெய்வ வழி பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். மலையகத்தில் வாழும் இந்துக்களில் பெரும்பகுதியினர் தோட்டத் தொழிலாளர் களாவர். இவர்களிடையே இந்து சமயம் தொடர்பான சமய அறிவு, வேதங்கள், சாஸ்திரங்கள் வழிபாட்டு முறைகள் பற்றிய அறிவு குறைவாகவுள்ளது. சமயம் தொடர்பாகவும் வழிபாட்டு முறைகள் பற்றியும் போதுமானதும் முறையானது மான விளக்கங்களைப் பெற்றிராததால், இந்து சமயத்திற்குப் புறம்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர். வேறு மதங்களின் செல்வாக்கிற்குட்படுவதோடு, அத்தகைய மதங்களின் வாழ்க்கை முறை களைத் தாமும் கடைப்பிடிக்கின்றனர். வீடு களிலும் கோவில்களிலும் வேறுமதங்களின் வழிபாட்டு முறைகள் ஆதிக்கஞ் செலுத்து கின்றன.
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இந்து சமய வழிபாட்டு முறைகள், அனுஷ்டானங்கள் என்பன பற்றிய முழுமையான விளக்கமும் போதிய அறிவும் அற்றவர்கள் மத ஸ்தாபனங் களிலும் கோவில்களிலும் பொறுப்புள்ள பதவிகளை வகிப்பதைக் காண்கின்றோம். இவர்கள் இந்து சமய வளர்ச்சிக்கும் அதன் பாரம்பரியங்களைக் கட்டிப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வதற்கும் வேண்டிய தகுதியைப் போதியளவு கொண்டிராத வர்களாக உள்ளனர். இத்தகையவர்கள் வெறுமனே பதவிக்காகத் தொழிற்படுவர் களாவர். இத்தகையவர்கள் கோவில் கிரியைகளை வழிநடத்த முடியாதவர் களாகவும், இந்துக்களைச் சமய ரீதியாக
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல)

வழிநடத்தும் தலைமைத்துவம் அற்றவர் களாகவும் உள்ளனர். தாம் தலைமை வகிக்கும் நிறுவனங்களைப் பிழையாக வழிநடத்துபவர்களாக உள்ளனர். மேலும், இவர்கள் இந்துக்களிடையே சாதிவெறி யைத் தூண்டி, ஒரு சாராரின், குறிப் பாகத் தாம் சார்ந்த சாதியினரின் ஒத்துழைப்போடு பதவியைப் பாதுகாத்துக் கொள்வதோடு, ஊழல் மோசடிகளுக்கும் காரண கர்த்தாக்களாகவுள்ளனர். இதன் காரணமாக இந்துக்கள் சமயஸ்தாபனங் களிலும் கோவில் நிர்வாகத் தலைமை களிலும் நம்பிக்கையற்றவர்களாகவும் அத்தகைய சமய அமைப்புகளின் செயற் பாடுகளிலிருந்து விலகி வாழ்பவர்களா கவும் காணப்படுகின்றனர். இது இந்துக் களின் ஒன்றிணைந்த செயற்பாட்டிற்கும் சமய வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக மலையகப் பகுதிகளில் அமைந்து விடுகின்றது. இத்தகைய சவால்களால் பொது இடமாகவும் சமூகச் சொத்தாகவும் இருக்க வேண்டிய இந்து ஆலயங்களும் சமய ஸ்தாபனங்களும் தனிமனித ஆளுமைக்குட்பட்டவையாகவும், தனிநபர் அல்லது குழுவினரது சொத்தாகவும் விளங்குகின் றன.
மலையகத் தோட்டப் பகுதிகளில் ஸ்தாபிக்கப்படும் கோவில்களில் பெரும் பாலானவை ஆகமமுறைப்படி அமைக்கப் படாதவைகளாகும். கோவில் அமைப்பு, விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்தல் போன்றன முறைப்படி செயற்படுத்தப்படுவ தில்லை. இத்தகைய தவறுகள் ஏற்பட அடிப் படைக் காரணம் இந்துக் கோவில்கள் அமைக்கப்படும்போது,அவை ஆகம முறைப்படி ஸ்தாபிக்கப்படுகின்றவா என் பதை அறியவும், அவ்வாறில்லாத விடத்து அவற்றை முறைப்படி ஸ்தாபிக்க வழி காட்டக்கூடியதுமான பொது ஸ்தாபனம் அல்லது இந்துமத பீடம் இல் லா மையாகும் . பொதுவான ஒழுங்குவிதிகள் ஏற்படுத்தப்படாமையும் ஒரு பிரச்சினையே ஆகும்.
2003 67

Page 84
மலையகத்தின் பிரதான நகர் களில் பெருந்தெய்வ வழிபாட்டு முறை யைச் சார்ந்த பெரும் கோவில்கள் அமைந்துள்ளன. இவ்வாலயங்களில் நடைபெறும் சமயச் செயற்பாடுகளை அவதானிக்குமிடத்து, அவை திருப்பணி மற்றும் அறப் பணி ஆற்றுவதைக் காட்டிலும் வியாபார நிலையங்களாகச் செயற்படுகின்றன. உயர் விலை செலுத்து பவர்களின் செல்வாக்கு நிறைந்த இடங் களாக அவை காணப்படுகின்றன. பெரு மளவு நிதியைச் செலுத்தக்கூடியவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அவை ஆட்படுகின்றன. கோவில் மன அமைதி யைத் தரும் இடமாகவும் துயரங்களி லிருந்து விடுபட இறைவனை நாடுப வர்களது ஆத்ம சாந்திக்குரிய இடமாகவும் இருப்பதைவிட, செல்வந்தர்கள் தமது செல்வநிலையை வெளிப்படுத்தும் இடமாக அமைந்துள்ளது. ஏழைகளதும் இறைவழி பாட்டில் ஆழ்ந்துள்ளவர்களதும் வழிபாட் டுத்தேவைகள் புறந்தள்ளப்படுகின்றன. இந்து ஆலயங்களில் இறைவனும் கோவில் உடைமைகளும் பொது மக்க ளது தேவைக்கருதி இருக்கவேண்டுமே தவிர, அவை தனிமனிதர்களது அல்லது செல்வந்தர்களது ஆளுமைக்குட்பட்டவை யாக இருக்கக்கூடாது.
மலையகமெங்கும் இந்து சமயம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளுள் தீவிர மதமாற்றமும் ஒன்றாகும். மலை யகம் சார்ந்த இந்துக்கள் நாளுக்கு நாள் அதிகளவில் கிறிஸ்தவர்களாகவும் இஸ் லா மரியர்களாகவும் மதம் மாறுகின்றனர். சிங்களக் கிராமப் புறங்களை அண்டிய பகுதிகளில் பலர் சிங்களவர்களாக மாறுவத னைக் தொடர்ந்து, நாளடைவில் பெளத்தர் களாக வாழத்தலைப்படுகின்றனர். கண்டி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை போன்ற பிரதேசங்களில் இஸ்லாமியர்களாகப் பெருமளவில் மத
68

மாற்றம் செய்யப்படுகின்றனர். பதுளை, நுவரெலியா போன்ற பிரதேசங்களில் அதி களவில் கிறிஸ்தவர்களாக மாறுகின்றனர், கண்டி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை போன்ற பிரதேசங்களில் வாழும் தமிழ் மாணவர்கள் பெருமளவில் இஸ்லாமியப் பாடசாலைகளில் கல்வி கற்பதும் இஸ்லாமிய முறைப்படி பாடசாலை களில் சமய நிகழ்வுகளில் ஈடுபடுவதும் நாளடைவில் அம்மதம் சார்ந்து ஒழுகத் தலைப்பட அடிப்படைக் காரணமாகும். மேலும், கிறிஸ்தவ அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கிடையே Iհl6Ù 6ւ լճ வறுமை நிலையைச் சாதகமாக்கி, அவர்கள் ஏழ்மையில் இருந்து விடுபடச் சிறு நிதி உதவிகளை அளிப்பதாக வாக்குறுதிகளை வழங்கியும் இச் சமூகத்தினரிடையே நிலவுமி சாதித் துவ வேறுபாடுகளைப் பயன்படுத்தியும் மதமாற்ற நட வடிக்கைகளைத் தீவிரப்படுத்துகின்றனர். கிறிஸ்தவர்களாக அல்லது இஸ்லாமி யர்களாக மதம்மாறியவர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, இந்துமத வழி பாட்டு முறைகளை இகழ்ந்துரைப் பதையும், இந்துமதத் தெய்வங்களைப் பொது இடங்களில் குறிப்பாக இந்துக் களின் முன்னிலையில் இழிவுபடுத்து வதையும் காணலாம். இந்து ஆலயங் களில் காணப்படும் உயர் சாதியினரின் புறக்கணிப்புகள், இந்து அமைப்புகளும் ஆலய நிர்வாகங்களும் இந்து ஏழை களின் விடயங்களில் பாராமுகமாகச் செயற்படல், இந்துமதம் பற்றிய முழுமை யான விளக்கங்களை இந்துக்கள் கொண்டிராமை, ஆலயங்களில் காணப் படும் தனி மனிதச் செல்வாக்குகள் போன்ற இன்னோரன்ன காரணங்கள் மத மாற்றத்தைத் தூண்டும் காரணிகளாக விளங்குகின்றன.
рф8ш шопатекот бѣ8ы црпрвтtсь3 фрüч цpeoй 2oоз

Page 85
இளம்பராயத்தினர் மத்தியில் இந்துசமயம் பற்றிய போதனைகளை முறையாக மேற்கொள்வதும் இந்து வாழ்க்கை முறைக்கேற்ப அவர்கள் வாழ வழிகாட்டுவதும் பாடசாலைகளும் ஏனைய சமயக்கல்வி ஸ்தாபனங்களும் ஆற்ற வேணி டிய பணிகளாகும் . மலையகப் பாடசாலைகளில் இந்து சமயத்தை முறைப்படி போதிக்கவும் அதன் தாற் பரியத்தை எடுத்தியம்பவும் கூடிய பயிற்சி மிகு ஆசிரியர்கள் பற றாக குறையாக வுள ளனர் . இருப்பவர்களும் சமயக் கலி வி தொடர்பான பயிற்சி பெற்றிருப்பதில்லை. பல கல்வி நிலையங்களில் வேற்று மதத்தினர் இந்து சமயத்தைப் போதிப்பதை யும் காண முடிகின்றது. இதன் காரணமாகக் கலி வி நிலையங்களுக் கூடாக இந்து மாணவர்களுக்குப் போதிய சமய அறிவை ஊட்டமுடியாதிருக்கின்றது. மலையகத்தின் பல பகுதிகளிலும் அறநெறிப்பாடசாலைகள் செயற்பட்ட போதிலும், போதிய பயிற்சியும் சமய அறிவும் மிக்கவர்களின் தட்டுப்பாட்டினால், அறநெறிப்பாடசாலைகளும் தமது நோக் கத்தைத் திறம்பட ஆற்ற முடியாதுள்ளது. இதன் விளைவாக, ஒழுக்கச் சீர்கேடு களாலும் தீயபழக்க வழக்கங்களாலும் மலையகச் சமூகம் சிதைக்கப்படுகின்றது.
இந்துக்களின் ‘உயிரினும் மேலாக ஒம்பப்படும் ஒழுக்கம்” என்ற பண்பாட்டின் அடித்தளம் தகர்க்கப 'படுகின்றது. ஆன்மீக அறிவிலும் அறநெறி அறிவிலும் இனி றைய சமூகம் வரட்சியாகக் காணப் படுகின்றது.
மலையகத்தில் இந்து சமயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணங்களாவன, இளம் பராயம் முதல் இந்துக்களுக்குப் போதிய சமுதாய அறிவு ஊட்டப்படாமை, ஏழ்மை
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு пао.

நிலையில் வாழும் இந்துக்கள் சமூக, பொருளாதாரத் தாழ்வு நிலையிலிருந்து விடுபட, வாழ்க்கை மேம்பட இந்து அமைப்புகள் பங்காற்றாமை, இந்துக்க ளிடம் நிலவும் ஒற்றுமையின்மை, சமய அமைப்புக்கள் ஆலயங்கள் என்பவற்றில் உயர்சாதியினரதும் செல்வந்தர்களதும் செல்வாக்குமிகுதியாயிருத்தல், பிறமதத்த வர்களின் திட்டமிட்ட மதமாற்ற நட வடிக்கைகளைத் தடுக்கும் வகையிலான திட்டங்கள், செயற்பாடுகள் இந்துக்களிடம் காணப்படாமை, கல்வி நிலையங்கள் அறநெறிப்பாடசாலைகள் என்பவற்றில் சமயம் போதிப்பவர்களிடம் போதிய, சமய அறிவு இல்லாமை முறையான பயிற்சி யின்மை, கோவில்களிலும் சமய அமைப்பு களிலும் நிலவும் தொழிற்சங்க, மற்றும் அரசியல் போட்டிகள், இந்துக் கலாசார அமைச்சின் சமய வளர்ச்சிச் செயற் பாடுகள் மலையகப் பிரதேசங்களுக்கும் போதியளவு விரிவுபடுத்தப்படாமை, இந்து சமயச் செயற்பாடுகள் இந்துக்கள் எல்லா ரின் அதிகாரத்திற்குள்ளும் கட்டுப்பாட்டிற் குள்ளும் காணப்படல் என்பனவாகும்.
தீர்வு ஆலோசனைகள்
இந்துமதக் கருத்துகளும் அனுஷ் டானங்களும் தனியே ஒரு சமயக் கொள்கையல்ல, அவை ஒரு வாழ்க்கை முறை. எனவே, அவை தொடர்பான பூரண அறிவை இளம்பராயத்தினருக்கு வழங்க வழிசெய்வதோடு, அவற்றை மலையக மக்களின் வாழ்க்கை மேம் பாட்டுச் செயற்பாடுகளுடன் ஒன்றிணைத் தல் வேண்டும். சிறுவயது முதல் இந்து சமய வாழ்க்கை முறையை ஏற்று ஒழுகச் செய்கின்ற வகையிலும் இளவயது உள்ளுணர்வுடன் இவைகளை ஒன்றி ணைக்கும் வகையிலான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் (86u60ół08ub.
fi 2003
69

Page 86
இந்துக்கள் தமது வாழ்க்கை முறையைச் சமயத்தோடு ஒன்றித்து வாழ வழி செய்யக்கூடிய பொதுவான நூல் ஒன்றை அடையாளங்கண்டு, சிறுவயது முதல் அந்நூலின் உள்ளடக்கத்தைத் தமது வாழ்க்கைக்கான வழிகாட்டியாக மக்களை ஏற்கச் செய்தல் வேண்டும். அதன் சமய உள்ளடக்கம், வாழ்க்கை முறை, கருத்துக்கள் என்பவற்றை ஒவ்வொரு இந்துவும் முறைப்படி ஒதிக் கற்க வழியமைத்தல் வேண்டும். இந்து சமயக்கருத்துக்களை எளிமைப்படுத்தி, பாமர மக்களும் கற்றுப் புரிந்துகொள்ளும் படி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.
அறநெறிப் பாடசாலைகளிலும் கல்வி நிலையங்களிலும் போதிய சமய அறிவும், சமய அனுஷ்டானங்களில் திறமானப் பயிற்சியும், சமய ஒழுக்கக் பண்புகளும் நிறைந்தவர்களைக்கொண்டு சமயக்கல்வியைப் போதிக்க வேண்டும். மலையக ஆலயங்கள் தோறும் அறநெறிப் பாடசாலைகளை விரிவு படுத்துவதுடன் முறையாக அவற்றை முகாமைத்துவம் செய்யவும், நிர்வகிக் கவும் ஏற்பாடுகள் தேவை. பெருந் தோட்டப்பகுதிகளில் வாழும் சிறுவர்க ளிடமிருந்தே அறவிழுமியங்களையும் நற்பண்புகளையும் வளர்த் தெடுப்பதை இவ்வமைப்புகள் உறுதி செய்தல் வேண்டும். குறுகிய வேறுபாடு களையும் சாதி அடிப்படையிலான பகைமையையும் முழுமையாகக் களைய அறநெறிப் பாடசாலைகள் பங்காற்ற வேண்டும்.
மதமாற்ற நடவடிக்கைகளிலி ருந்து இந்துக்களைப் பாதுகாக்கத் தேசிய மட்டத்திலான செயற்திட்டங்களை உரு வாக்கி, அவற்றைக் கீழ்மட்டம் வரை கொண்டு செல்லல் வேண்டும். மலையகப் பகுதியிலுள்ள இந்து அமைப்புகள், இந்துக் கோவில்கள், சமயத்தொண்டர்
70

ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் வேற்று மதத்தவர்களது மதப்பிரசாரங்களைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.
இந்து ஆலயங்கள், சமயத் தாபனங்கள் என்பன தமது வருமானத்தில் ஒரு பகுதியை இந்து ஏழைகளின் வாழ்க்கை விருத்திக்கும் ஏழ்மை நிலையிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்கவும் செல விடுதல் வேண்டும். சமயப் பொது நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, இவ்வமைப்புக்களின் பங்களிப்புடன் இச் செயற்திட்டத்தை முன்னெடுக்கவும் (Լplգալb.
மலையகத்தில் இந்துமத பீடம் ஒன்றை ஸ்தாபித்து, அனைத்து ஆலயங் களும் அவற்றின் சமயச் செயற்பாடுகளும் அப்பீடத்தின் வழிநடத்தலின் கீழ்க் கொண்டு வரப்படல் வேண்டும். அதே போல், இந்துமத ஸ்தாபனங்களின் செயற் பாடுகளை ஒருங்கிணைத்தல் வேண்டும். தனிப்பட்ட நபர்களின் வியாபார நிலை யங்கள் என்ற நிலையிலிருந்து கோவில் கள் மாற்றப்பட்ட, அவை இந்துக்களின் பொது வழிபாட்டு மையங்களாகவும் சமூகச் சொத்துக்களாகவும் அமையுமாறு இருப்பிடம்வழிவகைகளை மேற்கொள்ளல் வேண்டும். மலையகமெங்கும் ஸ்தாபிக் கப்படும் இந்துக் கோவில்கள் ஆகம முறைப்படி ஸ்தாபிக்கப்படுவதையும், பின் அவை ஆகம முறைக்கேற்ப வழிபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் உறுதிசெய்தல் வேண்டும். இதற்காகக் கோவில் நிர்வாக சபையினர், பூசகர்கள், சமயத் தொண்டர்களுக்கு முறையாகப் பயிற்சியளிக்கப்படல் வேண்டும். கோவில் ஸ்தாபிக்கப்படும் முன், அவற்றின் திட்டங் களுக்கு அனுமதி வழங்கும் ஒருமுறை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 87
இந்துசமயப் பண்பாட்டின் கருவூ லங்களதும், ஆன்மீகச் சிறப்பினதும் விலை மதிக்க முடியாத செல்வத்தை மலையகச் சமூகம் அறிந்து கொள்வதற்கும் , அதன் மூலம் அவர்களது உள்ளார்ந்த சக்தி களை ஒன்று திரட்டி மேலோங்கச் செய்வதற்கும், ஒன்றுதிரண்ட அச்சக்தியை இந்துக்களின் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புச் செய்யும் ஆற்றலையும் மனோ வலிமையையும் வளர்த்தெடுக்க அமைப்புரீதியான செயற்பாடுகளை மலையகமெங்கும் முன்னெடுத்தல் வேணி டும் . இன்றைய நிலையில் மனங்களின் ஐக்கியப்பாடு, கூட்டுறவு வாழ்க்கை, நல் வாழ்க்கைநெறி என்பன மலையக இளம் பராயத்தினர் மத்தியில் வளர்த்தெடுக்கப் படல் வேண்டும்.
இவற்றோடு, இன்னொரு விடயத் திலும் இந்துக்கள் முக்கிய அக்கறை செலுத்தவேண்டும். இந்துக் கடவுளரை வியாபாரப் பொருட்களிலோ, விளம் பரங்களிலோ பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவேணி டும் . இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவோ ருக்கு எதிராக இந்து சமுதாயம் தனது எதிர்ப்பை வெளிப் படுத்தவேண்டும்.
|- இமயமலைக் குகையி தோற்றினால் நான் உடனே அவ் ஆனால், அவரை மனித சமூகத்ை என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

இறுதியாக அழுத்தமாகக் குறிப் பிடப்படவேண்டியது யாதெனில், மலைய கத்தில் வாழும் இந்துக்கள், ஏழைகள், அறியாமைமிக்கவர்கள், கல்விச் செல்வத் திலும் பொருட் செல்வத்திலும் பின் தங்கியவர்கள் இருநூறு வருடங்களுக்கு மேலாக நசுக்கப்பட்ட அடிமைகளாக வாழ்பவர்கள், சிதைக்கப்பட்ட சமூக அமைப்பின் கீழ் வாழ்ந்து பழக்கப் பட்டவர்கள் இன்றைய இளந்தலை முறையினர் பல எதிர்பார்ப்புகளுடன் அத் தகைய ஒரு சூழ்நிலையிலிருந்து விடுபட அபிலாசைகள் கொண்டுள்ளனர். எனவே, இவ் இந்துக்களின் நலனுக்காகப் பாடுபடும் முயற்சியை நாம் மேலும் விரிவாக்க வேண்டும். நாள்தோறும் அல்லலுறும், ஏனைய மதத்தவரின் ஆளுமைக்குட்படும் இலட்சக்கணக்கான இந்துக்களின் நல் வாழ்வை மீட்கும் பொறுப்பு நம் அனை வருக்கும் உண்டு என்பதை மறந்து விடலாகாது. எனவே, இச் சமூகம் எழுச்சிபெற, இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபட, சமயத் தொண்டு மட்டுமல்ல, சமூகத் தொண் டும் அவசியமானதாகும்.
“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதை மனத்திற் கொண்டு செயற்படுவோமாக.
g)
காணலாம் என்று எனக்குத்
விடத்தை நோக்கிப் புறப்படுவேன். த விட்டு வெளியே காணமுடியாது
-மகாத்மா காந்தி
2003
71

Page 88
மலையகத்தில் இ
முத்து
இன்று தொண்ணுறு கோடி இந்துக்கள் உலகம் முழுவதும் பரந்து வாழுகின்றார்கள். இதனுள் தமிழ் பேசும் இந்துக்கள் ஏழு கோடியினரும் அடங்கு கின்றார்கள். இலங்கையின் பெரும்பாலான தமிழ்மக்கள் இந்துக்களாகவே விளக்கு கின்றனர்.
மலையகத்தைப் பொறுத்தவரை யில் இங்குள்ள இந்து ஆலயங்களுள் பெரும்பாலானவை ஆகம விதிமுறை களுக்கு அமைய நிர்மாணிக்கப்பட வில்லை. இதுபோலவே ஆலயப் பூசகர் களும் போதிய மந்திர உச்சாடன சமய அறிவினைக் கொண்டவர்களாக இல்லை அவர்களிடம் காணப்படும் ஆன்மீக அறிவும் போதுமானதாக இல்லை. காமன் கூத்து, ஆடி அமாவாசை, மார்கழி பஜனை போன்ற தெய்வ வழிபாட்டுச் சடங்குள் தற்போது ஒய்வு நேரப்பொழுது போக்குக் கலைகளாக மலையகப் பகுதி களில் நடைபெறுவதை நாம் அவதானிக் dé6or (3pm Lib.
பெரும்பாலான மலையக இந்து ஆலயங்கள் இந்து சமய வளர்ச்சிக்காக எதுவும் செய்வதில்லை. வருடா வருடம் தேர்த்திருவிழாவிற்கும் மட்டும் திறக்கப் படுகின்றன. தேர்த்திரு விழாக்காலங் களில் மக்களிடம் பணம் சேர்த்து கேளிக்கை, களியாட்டம் நடத்துவதே இந்து சமயச் சடங்காகக் கருதப் படுகின்றது. ஊரிலுள்ள பெரியவர்கள் எனிறு கூறப் படுவோர், 5LD@l செல்வாக்கை மக்களுக்கு முன் எடுத்துக் காட்ட ஆலயங்கள் பயன்படுத்தப்படுகின் றன.
ஆலயங்களில் சமயச் சடங்குகள், சமயக்கல்வி, சமயச் சொற்பொழிவுகள் என்பன நடத்தப்படுவதே இல்லை.
72

இந்துசமயக் கல்வி
சம்பந்தர்
இந்து ஆலயங்கள் இந்து சமய அறிவைப் பெருக்குவதற்கும் இந்து சமயத் தத்துவங்களை மக்களுக்கு எடுத்துரைக் கவும் பயன்படுத்தப்பட வேண்டும். கத்தி யின்றி ரத்தமின்றி சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் ஓர் உன்னத சக்தியே சமய மாகும். வாழ்விற்கு வரம்புகட்டி சிதறிப் போகும் எண்ணங்களைப் பயன்தரும் வழிகளில் சமைப்பதே சமயக்கல்வியா (95LD.
“எல்லா உயிர்களும் தெய்வ ஒளி பொருந்தியனவாகவே பிறக்கின்றன. அறிவுச் சுடரினால் பிரகாசிக் கச்செய்யப் படும் பொழுது அவை தெய்வீக மாகின் றன.”
இது சுவாமி இராமகிருஷ்ண பரஹம்ஸரின்
அருள்வாக்காகும்.
மனிதனுக்குள் ஏற்கனவே புதைந் திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப் படுத்துவது தான் கல்வி என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல் பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்விளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”
இது மகாகவி பாரதியின் வாக்கு.
மலையக்தின் அறநெறிப் பாட சாலைகள் பலவும் பெயரளவிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. அப்பிரதேசத்தில் ஓரளவு படித்த இளைஞர் யுவதிகளைக் கொண்டு முறைசார் கல்வி முறையே அங்கு நடத்தப்படுகின்றன.
шьфgш шопатеж aБѣeы шопрвтčсь3 3рач шpeої 2oоз

Page 89
இது தவிர்க்கப்படவேண்டும். அற நெறிப்பாடசாலைகளில் பண்ணிசைப் பயிற்சி, சமய ஆசாரங்கள், ஒழுக்க நெறி கள், பண்பு ரீதியிலான முறைமைகள் ஆகியனவே பயிற்சியளிக்கப்பட வேண்டும்.
குருநாகல், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இந்து ஆலயங்களோ, இந்துப் பாடசாலைகளோ பெருவாரியாக இல்லை. அங்கு வாழும் இந்துக்கள் புத்தர் சிலை களையே தமது வீடுகளில் வைத்து வழி படுகின்றனர். பாடசாலைப் பிள்ளைகள் சிங்களப் பாடசாலைகளிலேயே கல்விகற் கின்றனர். அவர்கள் இந்துப் பெளத்தர் களாக வாழுகின்றனர். பெளத்த கலா சாரத்தையே பெரும்பாலும் மேற்கொண் டுள்ளனர். இப்பகுதிகளில் இந்து ஆலயங்கள், இந்துப் பாடசாலைகள் நிருமாணிக் கப்படவேண்டும்.
மலையகத்தின் சில பெரிய இந்துப் பாடசாலைகள் பின்தங்கிய, வசதி குறைந்த இந்து மாணவர்களுக்கு அனுமதி மறுக்கின்றன. இதனால், அனுமதி மறுக்கப்பட்ட இந்து மாணவர் கள் தமது கல்வியைத் தொடருவதற்காக அருகிலுள்ள சிங்கள, முஸ்லிம் பாட சாலைகளில் தஞ்சம் கோருகின்றனர். காலப்போக்கில் அவர்கள் இந்து சமயக் கல்வியைப் பெறும் வாய்ப்பை இழந்து, நெறிபிறழ்ந்து, மதம் மாறுகின்றனர். ஆகவே, இந்துப்பாடசாலைகள் வசதி குறைந்த, பின்தங்கிய குடும்பத்தில் வாழும் மாணவர் அனுமதி தொடர்பாகக் கருணை காட்டவேண்டும்.
இன்று நமது நாட்டில் குறிப்பாக மலையகப் பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கச் சீர்கேடுகள் வெகுவாக வளர்ந்து வருவதை நாம் அவதானிக்கின்றோம்.
ஆசிரியர், மாணவர் முரண் பாடுகள், அதிபர் ஆசிரியர் முரண் பாடுகள் யாவும் சேர்ந்து, இன்று மலையகக் கல்வித்துறையைச் சீரழிக் கின்றன. மாணவர்கள் கொலைஞர்களாக மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல.

2003
மாறிக் கொடுரச் செயல்களில் ஈடுபடுவதை நாம் தினம் தினமும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காணுகின்றோம்.
நீதி மன்றங்கள் கூட மாணவர் மீது கருணை காட்டுவதைத் தவிர்த்து வருகின்றன. இவ்வாறு மாணவர் நெறிபிறழ் நடத்தைக்கான காரணத்தை நாம் ஆராய்ந்தபோது, பல உண்மைகள் வெளியாகின.
1.பாடசாலைகளில் தற்போது ஒழுக்க நெறிக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.
2.சமயக்கல்விக்கு அவ்வளவாக முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.
பாடசாலைகளில் விளையாட்டுப் பயிற்சியளிக்கும் ஆசிரியர், மாணவர்கள் போட்டிகளில் வெற்றியீட்ட வேண்டும் என்பதையே தமது இலக்காகக் கொண்டு மாணவர்களைப் பயிற்றுவிக்கின்றார். விளையாட்டின் அடிப்படை நோக்கங் களாவன ஒழுக்கம் , கட்டுப்பாடு விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை ஆசிரியர்கள் போதிக்க மறந்து விடுகின் றனர். அத்தோடு, ஆசிரியர்களும் பெரும் பாலும் மாணவர்களுக்கு முன் மாதிரியாக நடப்பதுமில்லை. இது போலவே, இந்து சமயம் கற்பிக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்து சமயம் பற்றிய பாட அறிவு குறைந்தவர்களாகவே காணப்படு கின்றனர்.
இந்துசமய பாடத்தை எவரும் கற்பிக்கலாம் எனும் மனோநிலையி லேயே பாடசாலை நிருவாகங்களும் செயற்பட்டு வருவதை நாம் பல பாட சாலைகளில் நேரடியாகவே காணும் வாய்ப்பைப் பெற்றோம். இன்று பெரும் பாலும் பாடசாலை களில் பாடசூசியில் வேறுபாடங்கள் வழங்க முடியாதவர் களுக்கும், ஓய்வு வேளைகள் அதிகமாக இருந்து, இட மாற்றம் செய்யப்பட
73

Page 90
வேண்டியவர்களைப் பாடசாலைகளில் தங்கவைத்துக் கொள்வதற்காகவும், வேறுபாடங்கள் கற்பிக் கதி தகுதியற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக் குப் பாடவேளைகளை நிரப்புவதற் காகவும் இந்து சமயபாடம் வழங்கப் பட்டிருப்பதைப் பெரும்பாலான பாடசாலை களில் நாம் அவதானித்தோம். இவ்வா றாக, ஆசிரியர்கள் பக்தியோடும் பண்ணோடும், பண்போடும், இராக பாவ, தாளத்துடனும், தேவார, திருவாசகங் களை மாணவர்களுக்குப் புகட்டு 6rries6TIT2.
தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா, திருப்பல் லாண்டு, திருப் புராணம் எனும் பஞ்சதோத்திரங்கள் பண்ணோடும், பக்தியோடும், இசையோ டும் இனிமையாகப் பாடப்படவேண்டி யவை, தேவாரம் என்பது தேவனுக்குச் செலுத்தும் பாமாலையாகும். இது ஆரோகண, அவரோகணமாக ஏற்ற இறக்கத்துடன் ஸ,ரி,க,ம,ப,த,நி எனும் ஸ்வர பாவத்துடன் அமைய வேண்டும்.
இலங்கையர்கோன் இராவணன் சிவனுக்குப் பிரியமான சாமகானத்தைத் தனது வீணை இசையால் மீட்டி இறை வனிடம் சாகாவரம் பெற்றான் என நமது சமய இதிகாசங்கள் கூறுகின்றன.
தேவாரம், திருவாசகம் பாடு வதற்கு நாம் சங்கீதம் கற்றிருக்க வேண்டி யதில்லை. நமது தாய்மார்கள் படித்தத் தாலாட்டில் நாம் லயித்துத் தூங்க வில் லையா? மன அமைதி பெற வில்லையா? தமிழ்மொழி இசையோடு கலந்த மொழியாகும். தமிழ்மொழியை உயிரோட்டத்துடனும் அழகுணர்ச்சி யுடனும் நாம் உச்சரிக்கும்போது அங்கே அழகிய இசைத்தமிழ் உருவாகின்றது.
தேவாரம், திருவாசகங்களை நாம் இசையோடும் பக்தியோடும் மாணவர் களுக்குச் சொலி லிக் கொடுக்கின்றபோது, மாணவர் மனத்தில்
74

பக்தி பெருக்கெடுக்கும், அமைதி மேலோங்கும், அன்பு ஊற்றெடுக்கும், பண்பு தளைத்தோங்கும், பாசவுணர்வு மேலோங்கும், வாழ்வில் சாந்தி நிலவும், உலகே அன்பு மயமாகும்.
அன்பு ஆசிரியர்களே, இனி மேலாவது நாம் தேவாரத்திருவாசகங் களை மாணவர்களுக்கு இசையோடு பாடச் சொல் லிக் கொடுப் போம் . வெள்ளிக்கிழமைகள் தோறும் நாம் பாடசாலைகளில் சமயப் பிரார்த் தனைகள், பஞ்சபுராணங்கள் பாடுவதுடன், ஐந்து நிமிட நேரமாவது மாணவர்களைத் தியான வழிபாடுகளில் ஈடுபடச்செயப் வோம். தியான வழிபாட்டின் மூலம் மாணவனின் சிந்தனை விருத்தி, ஞாபக சக்திவிருத்தி, மன அமைதி என்பன வளர்ச்சி பெறுவதுடன், மன அழுத்தம், இரத்தசுத்தி என்பனவும் பேணப்படுகின் றன.
இந்துசமயம் போதிக் குமி ஆசிரியர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு, சிறந்த தகைமை, அன்பு, இரக்கம், பண்பு, தியாக சிந் தை, சமய ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும்.
இந்து சமயம் என்பது தமிழ் மொழி, சங்கீதம் நடனம், போன்ற பாடங்களுடன் பின்னிப் பிணைந்த பாடமாகும். அப்பர் சுவாமிகள் சூலை நோயால் வருந்திய போது இறைவனை நோக்கி நெஞ்சுருகப்பாடினார்.
“சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசைப்பாடல் மறந்தறியேன்”
என்று பாடினார்.
தமிழுமி , இசையும் , இந்த சமயமும் என்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன. என்பதை மேற் படி பதிகத்தின் மூலம் எமக்கு அவர் விளக்கியுள்ளார்.
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 91
ஆகவே, இநீ து 3FLDulf கற்பிக்கும் ஆசிரியர்கள், தமிழ், சங்கீதம் நடனம் கற்பிக்கும் ஆசிரியர்களின் துணையைத் தமது கற்பித்தலுக்குப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்து சமய நெறிமுறை முறை யாகவும் ஒழுங்காகவும் போதிக்கப்படாத காரணத்தினாலேயே, சில இந்து சமயிகள் மதமாற்றத்தில் நாட்டம் கொள்கின்றனர். அப்பர் சுவாமிகள் சைவ சமயத்தை விட்டுச் சமண சமயத்தில் போய்ச் சேர்ந்து சமணத் துறவியாகச் சில காலம் வாழ்ந்தார். அப்போது அவர் சூலைநோய் கண்டு வெகுவாக வருந்திய போது, அவரது சகோதரி திலகவதியார் இறைவனின் துணை கொண்டு அப்பரின் சூலைநோயைப் போக்கினார். பின்னர், அப்பர் சுவாமிகள் மீண்டும் சைவத் துறவியாக மாறினார். அவரிடம் “நீங்கள் ஏன் சமண சமயத்தில் சேர்ந்தீர்கள்,?” என்று கேட்டபோது, அவர்“இந்து சமயத் தலைவர்கள் எனக் குச் சரியான வழியைக் காட்டவில்லை, போதிக்க வில் லை. அதனால் தானி எனது அறிவீனத்தால் நான் மதம் மாறினேன்’ என்று கூறினார், ஆகவே, எமது இந்து மக்களைப் பாதுகாக்க நாம் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் . ஒழுக்க சீலர்களாக வாழும் தகுதி பெற்றோர் களை மாத்திரம் நாம் அறநெறிப் பாடசாலைகளில பணியாற்றத் தெரிவுசெய்ய வேண்டும்.
அறநெறிப்பாடசாலைகளில் பணி யாற்றும் இளைஞர், யுவதிகளுக்கு இந்து அமைப்புகளும், இந்துக் கலாசார அமைச்சும் இணைந்து பயிற்சிகள், ஊக் குவிப்புகள் வழங்க வேண்டும். இந்து ஆலயங்களில் மாதம் ஒரு முறையாவது கூட்டுப்பிரார்த்தனை, இந்து ஒன்று கூடல் ஆகியன நடைபெற வேண்டும். சமயப் பெரியார்களை அழைத்து, வளர்ந்தோருக் கான சமய அறிவுரைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் வளர்ந்த வர்களால் தமது குழந்தைகளுக்குச் சமய வழிமுறைகளைக் காட்டமுடியும். மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

மலையக ஆலயப்பூசகர்களுக் கான பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்கு கள் நடத்தி, பூசகர்களின் ஆன்மீக அறிவு விருத்தியை வளரச் செய்யவேண்டும். அப்போது, அவர்கள் பக்தர்களை நேரிய வழியில் வழிநடத்த முடியும். கோயில் வழிபாடுகள், திரு விழாக்களின் போது, தனிப் பட்ட வகளின் செல் வாக்கு, அரசியல் கலப்பு, சாதி வேறுபாடுகள் ஆகியவற்றிற்கு இடம் கொடுத்தல் தவிர்க்கப்பட வேண்டும்.
இந்து சமய பாடம் பாடசாலை களில் கட்டாய பாடமாக ஆக்கப்பட வேண்டும். பாடசாலைகளில் இந்து சமயம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பண்ணி சைப் பயிற்சி, தியானப் பயிற்சி என்பன நடாத்தப்பட வேண்டும். விசேட சமயப் போதனைகள் நடாத்தி, ஆசிரியர்களது இந்து சமய அறிவை விருத்தி செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்குப் பதவி உயர் கள் வழங்கப்படும்போது, அவர்களது சமய, ஒழுக்க சமூக சேவைகளும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். விசேட பயிற்சி பெற்ற இந்து சமய ஆசிரியர் தொகையை அதிகரிக்க வேண்டும். கல்வியியற் கல்லூரிகளில் வருடா வருடம் கூடுதலான இந்து சமய ஆசிரியபயிலுநர்களைச் சேர்த்துக்கொள்ள ஆவனசெய்யவேண்டும்.
தற்போது நமது பாடசாலை களில் நடைமுறைப்படுத்தப்படும் இந்து சமயப்பாடத்திட்டம் பரிபூரணமானதாக அமையவில்லை. அது பரீட் சையை மையமாகவே வைத்து ஆக்கப்பட்டுள் ளது. ஆகவே, சமயப் பெரியார் கொண்ட குழுவினரால் பயன்மிகுபாடத் திட்ட மொன்றை இந்து சமயபாடத்துக்கு ஆக்கி, முறைப்படுத்த வேண்டும்.
காலத்துக்குக் காலம் இந்து மகான்கள் ஒன்றுகூடி, ஆராய்ச்சி மாநாடுகள் நடாத்தி, நவீன கருத்துகளை எமது இந்து சமயத்தில் புகுத்தவேண்டும். இந்து அநாதை இல்லங்கள், இந்து சமூக சேவை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும்.
r 2003
75

Page 92
முற்போக்கு
முகிழ ே கே.வெளி (குறிஞ்
இந்துமகா நாடொன்6 இந்துகலா சாரன பந்தமிகு நற்செய்தி
பரவசத்தால் நாெ இந்துமகா சமுத்திரத் இந்துமதம் இவ்வ விந்தியம்போல் உய விதந்துரைக்க வ
இறையருளின் திருவ இச்சமயப் பேருவ மறைபொருளம் நான வேதமுடன் ஆக நிறைவான உபநிசத நிறைமாந்தர் ரிவ முறையாக நமக்களி முழங்கவரும் ம8
பன்னாட்டு அறிஞர்ம
பற்பலவாம் பணி பண்புநிறை ஆன்மீகத் பரிதியெனச் சை மன்னவராம் சைவநற் மாமுனிவர் திருமூ பொன்னுரல்கள் பொ புகழுடையார் டெ
76

எண்ணங்கள் வண்ரும் ர்ளைச்சாமி சி நாடன்)
றை இந்த நாட்டின் மச்சு எடுத்த தென்ற பரவக் கேட்டுப் மல்லாம் மகிழ்ந்து போனோம் த்தில் எழுந்த தெங்கள் புலகின் நாட்டிலெல்லாம் ர்ந்திருக்கும் மாட்சி தன்னை பந்தமகா நாடே வாழ்க!
ருளால் தோற்றம்பெற்ற ன்மை யாவும் இங்கே *மறையின் தத்துவத்தை மமும் எடுத்து ரைக்கும்
உண்மையோடு திமுனிவர் யோகியர்கள் த்த சொத்தை யெல்லாம் 5ாநாடே வாழ்க! வாழ்க!
தத் தலைவரோடு செய்யும் ஆதி னத்து த் துறவ ரெல்லாம் வவொளி பரவச் செய்த
குரவர்க ளோடு முலர் வியாசர் தந்த ருளெல்லாம் மணக்கப்பேசும் ாற்பாதம் போற்றி! போற்றி!
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 93
சாதியென்ற நச்சரவை நீக் சமத்துவத்தைக் காண் நீதியில்லாச் சமயமிது என நிதம்மாறும் மக்களிை வீதிகளில் பெருகிவரும் ே வியாபாரச் சந்தைகள விதவிதமாய் ரேட்டுகளும்
வெந்துமணம் நோபவர்
ஆலயங்கள் அறச்சாலை
அமுதிட்டுப் பசியினை சீலமுடன் வாழ்வதற்கு வே விளக்கத்தை எடுத்தே ஞாலத்தில் பூசகர்கள் ஞா நற்கருணை உடைய ஈழத்தில் எழுந்துள்ள கோ
ஏற்றமுற இன்பணிகள்
இந்துமத ஸ்தாபனத்தின் 1 இலவசமாய்க் கிடைக் இந்துமண மக்களுக்குத் த இலவசமாய் முடித்திடு நொந்துள்ளம் வாடுகின்ற
நூலறிவும் காப்பகமும் நந்தமிழின் நுண்கலைகள் நயமாக வகுப்புகளும்
முற்போக்கு எண்ணங்கள்
மூதறிஞர் இளையோர்க நற்போக்கில் இந்துமதம் வ நலனோம்பி நற்பணிகள் பற்றுள்ள இந்துக்கள் நாங்
பரவசத்தில் கூத்தாடி தற்காலச் சமுதாயம் ஏற்று தன்மையிலே மாற்றங்க
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல!

கி மக்கள் பதற்கு வழியும் சொல்வீர்! று சொல்லி னத் தடுத்தல் வேண்டும் காயில் எல்லாம் ய் மாறு தென்பார் உயர்வ தாலே கள் பெருகு தென்பார்.
யாதல் வேண்டும் பும் போக்க வேண்டும் தம் கூறும் ாதும் முறையும் வேண்டும் னம் பெற்று ாராய்த் திகழ வேண்டும் வில் எல்லாம்
இயற்றல் வேண்டும்.
D600L Listle56 கவழி இருக்க வேண்டும் திரும ணத்தை தல் தரும மன்றோ? அநாதை கட்கு
வழங்க லாமே செழிப்ப தற்கும் நடத்தலாமே.
முகிழ வேண்டும் sள் இனிது சேர்ந்து ழியும் காட்ட T செய்வீர் இன்றே க ளென்று வியக்கு மாறு க் கொள்ளும் ள் நிகழ வேண்டும்.
2003

Page 94
மத்திய மாகாண
நுவரெலிய
ஆலயத்தின் பெயர்கள்
முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன்
கோயில் கோயில் தேவாலயம் தேவாலயம் கோயில் கோயில்
கோயில் ஆலயம் ஆலயம் தேவாலயம்
கோயில் கோயில் தேவாலயம்
சன்முகநாதா சுவாமி தேவாலய மதுரைவிரன் கோயில் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் இராமர் கோயில்
கதிர்வேலாயுத சுவாமி கோயில்
முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன்
ஆலயம் ஆலயம் ஆலயம் கோயில்
விநாயகர் ஆலயம் மீனாட்சி அம்மன் கோயில்
காட்டுமாரியம்மன்
தேவாலயம்
பத்திரகாளியம்மன் ஆலயம்
சிவசுப்பிரமணியர் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன்
கோயில் ஆலயம் ஆலயம் ஆலயம்
78

இந்து ஆலயங்கள்
IT DIT6...I'll Lib
அமைவிடம்
பொகவந்தலாவை கடுகந்தலாவ பொகவந்தலாவை டிக்கோயா கந்தப்பொல கடுகித்துல்ல டிக்கோயா கட்டுமனை ஹேவாஹெட்ட நாகசேனை வட்டகொடதோட்டம்(மேற்பிரிவு) கொட்டகலை நோட்டன் பிரிஜ் Lb மஸ்கெலியா
ஆள்கரநோயா சாமிமலை பத்தன சாமிமலை தலவாக்கலை
5Tg)gust லிண்டுல
60 (666)ITurt ஹேவாஹெட்ட பூண்டுலோயா பத்தன பத்தன gs)LL60T கெடபொல வலப்பன
60 (666)fruurt πυξίδεια Test இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 95
விநாயகர் கோயில் முத்துமாரியம்மன் சித்திவிநாயகர் ஆலயம் சிவசுப்பிரமணியர் சுவாமி தேவ முத்துமாரியம்மன் ஆலயம் அகில உலக நாயகிகாளியம்ப கதிர்வேலாயுதசுவாமி கோயில் சிவசுப்பிரமணியர் கோயில் முத்துமாரியம்மன் கோயில் வடக்கு மடகும்பர முத்துமாரியம்ம
ரீ முத்துமாரியம்மன் கோயில் ழரீ இராஜராஜேஸ்வரி தேவாலயம் பூரீ முத்துமாரியம்மன் கோயில்
ரீ கதிர்வேலாயுத கோயில் ரீ விஷ்ணு ஆலயம் மரத்தடி பிள்ளையார் கோயில் முத்துமாரியம்மன் கோயில் ஆஞ்சநேய சுவாமி கோயில் சிவசுப்பிரமணியர் கோயில் முத்துமாரியம்மன் கோயில் முத்துமாரியம்மன் ஆலயம் முத்துமாரியம்மன் ஆலயம் பத்தினிஅம்பாள் ஆலயம் ரீ முருகன் கோயில் ழரீ விநாயகர் கோயில் பூரீ பத்திரகாளியம்பாள் கோயில் யூரீ கருமாரியம்மன் கோயில் ரீ ஆஞ்சநேயர் தேவாலயம் கருமாரியம்மன் கோயில்
முத்துமாரியம்மன் கோயில் ஐய்யப்பசுவாமி கோயில் முத்துமாரியம்மன் கோயில் முத்துமாரியம்மன் கோயில் கதிரேசன் ஆலயம் திருமுருகன் கோயில் சிவசுப்பிரமணியர் ஆலயம் இராமர் ஆலயம்
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல

T6buILb
rள் கோயில்
ன் கோயில்
ஹப்புகளில்தலாவ டிக்கோயா வட்டகொட வட்டகொட தலவாக்கல தலாவாக்கல ஹல்கரநோயா வட்டவல கெடயுலா வட்டகொட நுவரெலியா தலவாக்கல அக்கரபத்தன ஹால்கரநோயா ஹோவாஹெட்ட லிண்டுல மஸ்கெலிய (985(385. Turt டிக்கோயா றம்பொட spubGLumTL
L-ULI35LD பூண்டுலோயா பூண்டுலோயா கொட்டகல லிண்டுல
ராகல அக்கரபத்தன மஸ்கெலிய ஹேவாஹெட்ட தாமரைவள்ளித் தோட்டம் சாமிமலை ஹட்டன் நுவரெலியா கந்தபொல தலவாக்கல
LULI5LD
i 2003

Page 96
பூரீ முத்துமாரியம்மன் ஆலயம் றி முத்துமாரியம்மன் கோயில் ரீ முருகன் தேவாலயம் யூரீ சித்திவிநாயகர் ஆலயம் ரீ சித்திவிநாயகர் ஆலயம் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மாரியம்மன் மதுரைவிரன் ஆலயம் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ரீ ஆஞ்சநேயர் ஆலயம் நல்லசெல்லி அம்மன் ஆலயம் ரீ ஆஞ்சநேயர் தேவாலயம் மகாவிஷ்ணு கோயில் தண்டாயுதபாணி ரீ முத்துமாரிய முத்துமாரியம்மன் கோயில் கதிர்வேலாயுதர்சுவாமி தேவாலய முத்துமாரியம்மன் கோயில் காமாட்சி அம்மன் ஆலயம் சித்திவிநாயகர் ஆலயம் முத்துமாரியம்மன் ஆலயம் காளியம்மன் கோயில் பூரீ லங்காதீஸ்வரர் கோயில் சீதையம்மன் கோயில் ஹிர் மாணிக்கப்பிள்ளையார் கோயில் பூர் முனிஸ்வரன் கோயில்
கண்டி ப
ரீ முத்துமாரியம்பாள் ஆலயம் யூரீ முத்துமாரியம்மன் கோயில் பூரீ இராமர் கோயில் ரீ முத்துமாரியம்பாள் தேவாலயம் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ரீ பத்தினி அம்மன் கோயில் அம்மன் ஆலயம் யூரீ முத்துமாரியம்மன் ஆலயம் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம்
80

ம்மன் கோயில்
Dாவட்டம்
ஹங்குராங்கத உடபுசல்லாவ ஹபுகளில்தலாவ தலவாக்கல மஸ்கெலிய லபுக்கல தலவாக்கல நோவூட்
உடஹந்தான புப்புரளல்ஸ் கண்டி நாவலப்பிட்டி LDG6356) குருதெனிய மெதமாறுவர தெல்தோட்டை கலஹா
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 97
காளியம்மன் ஆலயம் பூரீ பத்திரகாளியம்மன் தேவாலயம் ரீ தண்டாயுதபாணி தேவாலயம் ரீ முத்துமாரியம்மன் கோயில் முறி கதிரேசன்சுவாமி கோயில் சிவன் கோயில் ரீ முத்துமாரியம்மன் கோயில் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பூரீ செல்வவிநாயகர் ஆலயம் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் முத்துமாரியம்மன் ஆலயம் முத்துமாரியம்மன் கோயில் காட்டுமாரியம்மன் தேவாலயம் முத்துமாரியம்மன் கோயில் தேவி கருமாரியம்மன் கோயில் கதிரேசன் ஆலயம் இராமர் தேவாலயம் முத்துமாரியம்மன் ஆலயம் கதிர்வேலாயுத முறி முருகன் கோ ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பரீ முத்துமாரியம்மன் கோயில் ரீ ஆஞ்சநேயர் ஆலயம் ரீ முத்துமாரியம்மன் தேவாலயம் ரீ கிருஷ்ணர் ஆலயம் ரீ கதிரேசன் கோயில் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பூரீ விஷ்ணுகோவில் கதிரேச பெருமாள் கோயில் முருகன் கோயில் பூரீ காயத்ரி அம்மன் கோயில் ழரீ முத்துமாரியம்மன் கோயில் பூரி செல்வவிநாயகர் கோயில் யூரீ கண்கண்ட பிள்ளையார் கோயில முறி முத்துமாரியம்மன் கோயில் விஷ்ணு ஆலயம் ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மல

கலஹா செல்வகந்த கிராமம் அம்பிட்டிய மடுல்கல உடஸ்பத்துவ அம்பிட்டிய பன்வில ரஜவெல
கண்டி
கண்டி குண்டசால தெல்தெனிய நில்லம்ப மஹியாவ ஹிந்தகல நில்லம்ப குண்டசாலை ரங்கல தவலந்தன்ன புப்புரஸ்ஸ அம்பலமானை கம்பளை
கலஹா
ரங்கல கெங்கால கண்டி கெங்கால தவலந்தன்ன ரஜவெல உடஹந்தான நாவலபிட்டி பாரதெக்க கெங்கல மடுல்கல தொலஸ்பாகை தொலஸ்பாகை மவுஸ்ஸாகலவத்த
2003
81

Page 98
ரீ கதிரேசன் தேவாலயம் யூரீ முத்துமாரியம்மன் ஆலயம் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம் பூரீ முத்துமாரியம்மன் கோயில் யூரீ முத்துமாரியம்மன் கோயில்
கதிரேசன் கோயில் இராமர் தேவாலயம் பால முனியப்பர் கோயில் கதிரேசன் ஆலயம் குமரன் ஆலயம் அருள்மிகுறி முத்துமாரியம்மன் தே6 ரீ முத்துமாரியம்மன் கோயில் அருள்மிகு சக்தி முருகன் ஆலயம் ரீ செல்வ விநாயகர் ஆலயம் ழரீ முத்துமாரியம்மன் கோயில் றி பத்திரகாளியம்மன் கோயில் ரீ கற்பக விநாயகர் கோயில் யூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் யூரீ சித்திவிநாயகர் ஆலயம் முத்துமாரியம்மன் ஆலயம் முத்துமாரியம்மன் கோயில் பூரீ செல்வ விநாயகர் கோயில் ரீ செல்வ விநாயகர் கோயில்
ரீ கண்கண்ட விநாயகர் கோயில்
குறிஞ்சிக்குமரன் கோயில் ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் ரீ கதிரேசன் கோயில்
மாத்தவை
பூரீ முத்துமாரியம்மன் கோயில் அருள்மிகு ரீ முத்துமாரியம்மன் ே பூரீ முத்துமாரியம்மன் கோயில் ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
82

usT6)ulb
ா மாவட்டம்
காயில்
ரங்கல மாவத்துர வெல்லம்பொட அலவத்துகொட வத்தேகம வத்தேகம் புசல்லாவ நாவலப்பிட்டி திகன நில்லம்ப உன்னஸ்கிரிய விலகம ரஜவெல LDG6)56) மெனிக்டிவல ஹந்தான நாவலப்பிட்டி கெட்டபுலா ரங்கல தெல்தோட்டை
வ்ஹின்ன
வீசுந்தரமலை புசல்லாவ பன்வில
50 பேராதனை நாவலபிட்டி
தொலஸ்பாக
மாத்தளை களுதாவல அளுவிகார உக்குவல
மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் 2003

Page 99
ரீ செல்வவிநாயகர் ஆலயம் றி கனதெவியோ கோயில் ரீ பத்தினி கோயில் கதிரேசன் கோயில்
பத்தினி கோயில் பத்தினி கோயில் கதிரேசன் கோயில் பத்தினி கோயில் காமன் கோயில் முத்துமாரியம்மன் கோயில் முத்துமாரியம்மன் கோயில் முத்துமாரியம்மன் கோயில் செல்வவிநாயகர் கோயில் நாகபூசணி அம்மன் தேவஸ்தான முருகன் கோயில் பாலசுப்பிரமணியன் கோயில் முத்துமாரியம்மன் கோயில் யூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் முறி முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மாணிக்கமுருகன் கோயில் ரீ முருகன் கோயில் ரீ காளியம்மன் ஆலயம் முரீ முத்துவிநாயகர் கோயில் ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் அருள்மிகு ரீ முத்துமாரியம்மன் கே முனீஸ்வரர் ஆலயம் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ரீ முத்துமாரியம்மன் ஆலயம் இராமர் கோயில் முறி முத்துமாரியம்மன் ஆலயம் ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம் ஜெகதாம்பிகை ஆலயம் ஹி முருகன் ஆலயம் ரீ முத்துமாரியம்மன் கோயில் ரீ ஆனந்த பிள்ளையார் ஆலயம் முறி சித்திவிநாயகர் கோயில் றி சிவசுப்பிரமணியர் கோயில் மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்

Tuis)
2003
ரத்தொட்ட கபரகலடிவிசன் ஹபுகளில்பிட்டிய கதரன்தன்ன டிவிசன் ஹகரன்ந்த நிக்கல்ஒயா ஹினுகலவத்த கந்தேதுவர கம்மடுவ கம்மடுவ ரத்தொட்ட கலேவல உக்குவல முவந்தெனிய கந்தேதுவர மாததளை கவட்டிப்பொல எல்கடுவ கம்மடுவ மாத்தளை பிட்டிக்கந்த தோட்டம் கம்மடுவ மாத்தளை கம்மடுவ ஹபுகளில்பிட்டிய களுதாவல
மெட்டியாக
பிட்டகந்த உக்குவல மகாராஜாதோட்டம் மல்வான
களுதாவல ரத்தொட்ட செலகமதோட்டம் துணுக்கவத்த மாததளை உக்குவல

Page 100
மத்திய மாகாண இந்
ஆஞ் (ரம்பெ
 
 

ந்துக் கோயில்கள் சில
ண்டி கட்டுக்கலை ரீ செல்வவிநாயகர் ஆலயத்தின் பழைய தோற்றமும் புதிய தோற்றமும்
சநேயர் சிலை
ாட ஆஞ்சநேயர்
கோயில்)

Page 101
این اظهای arg""" நிர்یم
 
 

சீதையம்மன் ஆலயம் நுவரெலியா
மாத்தளை
முத்துமாரியம்மன் கோயில்
ஆவெளி முத்துமாரியம்மன்
கோயில்

Page 102


Page 103


Page 104
Printed at Graphic land,
 

Kandy. Tel/Fax : 074-474691