கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மயூரமங்கலம் 2000

Page 1
N Ús I5, girai
四
Gary
 


Page 2
= је у- 9ჯმპჯ24 罗
ՅԱՅԱրճիշ: Եթե Հիկ
է:PՀ R
@GL.
 
 


Page 3

ܨ" جھیل
N
C. >سب 蓉 憩
ܬ ܨܲܝܓܵܒ݁ܛܶ
委。
±

Page 4


Page 5
Այնս
:I:
 

Dal 2000
- ್

Page 6
திருவாக்கும் செய்கரு பெருவாக்கும் பீடும் ெ ஆதலால் வானோரும் காதலாற் கூப்புவர்தம்
G.
எடுத்த காரியம் யாவி எங்கு நோக்கினும் விடுத்த வாய்மொழிச் வேண்டினேனுக் தடுத்து நிற்பது தெய் சாகு மானுட மாடி படுத்து மாய்ப்பள் அ பாரில் வெற்றி எ
 

மம் கைகூட்டும் செஞ்சொற் }பருக்கும் - உருவாக்கும் ஆனை முகத்தானைக்
I ᏍᏈ0èᎦ.
வற்றி
னுெம் வெற்றி ம் வெற்றிமற் றாங்கே கெங்கணும் வெற்றி கருளினள் காளி வத மேனும்
பினும் அஃதைப் ருட்பெருங் காளி னக்குறு மாறே.

Page 7
iiÈ
 
 

R

Page 8


Page 9
颈
ܨFTH
壹籃
தாயேயாகி வளர்
உலக உயிர்கள்ை உய்வி அன்னை ஆதி பராசக்தி அவ் அன்னையின் அருட்க 'பசுவாசிப ன்ேறாக்க ஓரி "பதியாகிய இறைவனிடம் ஆணவ வயப்பட்டு அறிவி: 'u (TU-T87' 605ulüp Uğı மாயையுள் அழுதது மரிசகர் "சிற்சத்தி'யாய் நின்று சீர் பின், தன் தாய்க் கருனையினா 'அருட் சத்தியாகி அள்ளி
வங்கிய ஆன்மாவைத்து မ္ဘိန္ခ်ိန္တီး ஏற்றமுறச் ச்ெ அகிலாண்ட கோடி பிரமா அய் அன்னையோம். சக்தி இன்றேல், ஆன்மாக்களுக்கு முக்தியில்லை. "ப்ேதித்து நம்மை வளர்த்ெ அன்னையின் இவ் அருட்தி வான் கலந்து வாசகரின், ஊனுருக்கும் வாசகம் பேசு ஓம் சக்தி என்று ஒருதரம் தாம் கொண்ட எண்ணமெ தானே நிறைவேறும், அன்னை திருவருட்காய் அ
불
சிவம் வேறு சக்தி வேறல்ல ஐயனே அன்னை, அன்னையே ஐயன். சுடரிற் பொதிந்த வெம்மை ஒன்றே இரண்டாய், இரண்டே ஒன்றாய், இயல்புறக் கலந்து ஏற்றம் ஒன்றாய் நினைவார்க்கு : இரண்டாய் நினைவார்க்கு "நம்தம்மை ஆளுடையாள் எங்கோமான்' என் வாசகர் இந்நிலையை வை சிவத்துள் பொதிந்து, இச்சை, கிரியை, ஞானம் மூவடிவாய் விளங்கும் அணி தன் மாறுபட்ட கலப்பால், தத்துவம் கடந்த பரசிவத்ை சுத்தமாயைக்குள் உட்படு: நாதம், விந்து, சதாசிவம்,
 
 
 

ப்பவள்,
ருணையே, சேர்க்கின்றது. ஐந்து,
$$ଽ} fନୀ ,
ர்றி,
செய்து,
ல்,
அனைத்து, Tபசிவத்துடன், ய்பவள், நீண்டநாயகியான,
}தடுத்த பெய்வளை"என,
ரத்தை,
ம்,
உரைத்தார்க்கும்,
வாம்,
டிபணிவோம்.
யும் ஒளியுமென,
தரும் அவ்விருவடிவம், ஒன்றேயாம்.
இரண்டேயாம். தன்னில் பிரிவில்வா
ரவு செய்வார்.
ft edit
வன்திரன்,
தி, த்தி,
ஈஸ்வரம், சுத்தவித்தை என,

Page 10
ஐந்து சிவ தத் இறங்கிவரச் அசுத்த மாயை தனு கரண பு5 ஆன்மாககை உய்யச் செய் இங்ங்ணமாய் அன்னை செய 6vai é603 ésஅவ் அருட்தெ உயிர்களின் பல தொழிலு U6 69-6(D, பல பெயரும், கொண்டு நிற ஒன்றான அ6 புராணங்கள் க்ருணைமிகு அருட்திறத்தா குணமும் குறி தாயாய வண நம் இந்து மதி பெருகிய அத் பிற்காலத்தில் சன்மாாகக த சாக்தம் என
சைவம், வை சாக்தம் எனு தமிழ் நாட்டி எனினும் சக் தமிழகமெங்கு சக்திக்கான பெருமையுற். சிவபூமியான "சண் மதம் என்றும் கூர் oż?? 60) 6T #?'ಘಿ' சக்தி வழிபா நம நாடடி தொன்று .ெ நம் நாடடிலி நயினை நா பன்றித் தை சுதுமலை பு தெல்லிப்பை சீரணி நாக புளியங்கூட திருமலைக் வண்ணை ெ அன்னையில் மிகப்பிரசித் இவை தவி அன்னை வ நம் நாட்டி கிராமந் தே விரிந்து கிட அன்னையில் இலங்கைத்
 

துவங்களாக,
சய்து, யால் ஆன வன போகங்கட்கு உட்பட்டு நிற்கும்
கிறாள்.
உயிர்களை உய்விக்க, ப்யும் அருட்தொழிலின் அற்புதங்கள், ந்து வானளாவி விரியும். ாழில் செய்யும் அன்னை, உய்வுக்காய், (D,
ற்கின்றாள். ன்ன்ையின் பலவான விருத்திகளை,
விரித்தோதும்,
இவ்வன்னையின், ல் ஈர்க்கப்பட்டு, யுமில்லா அப்பரம்பொருளை, rங்கும் தன்மை, நத்தில் விரிவுற்றது.
ಶೈಕ್ಸ್ಟೈಣ್ಣಣ
நாபனம் செய்த சங்கரரால், த் தனித்து இனங் காட்டப்பட்டது.
ணவம் போல்,
ம் இப்பிரிவு, லேTதனித்துத் தாபிக்கப்படவில்லை. தி வழிபாடு, தம் விரிந்தே காணப்பட்டது. தனிக்கோயில்கள் பல, று விளங்கின.
நமது இலங்கைத் திருநாட்டில், பற்றிய பிரிவுணர்வு
மையுறவில்லை.
U6), ங்காட்டமுயன்ற ஒரு சிலரிடம் மாத்திரம் யே இவ்வாதம் எழுந்து தணிந்தது.
தும்,
தாட்டு விளங்கி வருகின்றது.
உள்ள,
கபூசணி அம்பாள்,
லச்சி அம்பாள் வனேஸ்வரி அம்பாள், ழைத் துர்க்கை அம்பாள்
ம்பாள்
ல் மகாமாரி அம்பாள்,
காளியம்பாள் வீரமாகாளியம்பாள் முதலிய ர் அருளாலயங்கள் தம் வாய்ந்தவை.
ரவும்,
ழிபாடு
R
fit
துே. ன் வழிபாட்டுத் தலங்கள் வரிசையில்,
தல்ைநகரமான கொழும்பில்,

Page 11
கடந்த பதினைந்து மிகப் பிரசித்தம் அ.ை ஆயிரமாய் அன்பர்க ፵፮፻ ழரீ ಕ್ಲಿ; அருள في نهاه ಕ್ಲಿಲ್ಡಿ A.
அரச மரத்தடியில்,
லவடிவில் சூக்குமம பெருங் கோ பருமையுற்று நிற்கி பன்னிரண்டு ஆண்டு அன்னையின் அறங் சக்தி உபாசகர் திருமி இவ்வாலய வளர்ச்சி விரிந்த அப்பணிகளின் 鄒豹族 இல் நடை இக் கும்பாபிஷேகத் சக்தி பற்றிய சகல வ விரிவானதோர் மலர் அன்னையின் அருள அறங்காவலரின் மன அவர் உத்தரவால், அவ்வரிய பணியாற்று நம் கம்பன் கழகத்திட அது நம் முன்னைத் த அன்னையின் அருட்த இவ் அரிய மலர் அை கழகத்தால் அமைக்க மலர்க்குழு அரும்பாடு பராசக்தி சாதனை ெ அதன் விளைவாய், “மயூர மங்கலம்" இல் பயன் கொள்ள வேை
大 大大 இம்மலர், பாகங்கள் நான்காய் ஆன்றோர் தம் ஆசிக முதற்பாகமாகவும், மயூரபதி அன்னையில் இரண்டாம் பாகமாக சாக்தம் எனும் தலைட் மூன்றாம் பாகமாகவு பாரதத்திலும், நம் தா விரவிக் கிடக்கும், அன்னையின் ஆலய விபரத் தொகுப்பு, நானகாம பாகமாகவு நயமுறத் தொகுக்கப் இம்ே ခိ႔ဒွိ2 6 96.96 அவறறை ಫ್ಲಿಕ್ಕಿ இத் தொகுப்பிற்கு அனபா பலரும் ஆதர ஆலயங்கள் பற்றிய 6 கட்டுரைகள் தந்தோ நூல்களில் உள்ள ெ
லோசனை தந்தோ ရွှိုက္ကို தொகை பல
வர் தவிர, ப்பு நோக்கி உதவிய காழும்புத் தமிழ்ச்சங்
 

பூண்டுகளாக,
-ந்து
ளை ஈாதது, காளி அம்பாள் ஆலயம்
lé9.
ாய் அமர்ந்த இவ் அன்னை,
பில் கொண்டு,
ன்றாள்.
களின் முன்,
ாவலராய் ஈர்க்கப்பட்ட,
கு பொன். வல்லிபுரம் அவர்கள்,
*காய் ஆற்றிய அரும்பணிகள் விரிந்தன.
ஒர் அங்கமாய்
பெற்ற கும்பாபிஷேகமும் அமைந்தது.
தையொட்டி,
விடயங்களையும் உள்ளடக்கி,
வெளியிடும் எண்ணம்,
ጥ6i}
தில் உதிக்க,
ரம் அரும் பேறு, ம் ஒப்படைக்கப்பட்டது. 56)UU(U60T. நிறம் அனைத்தையும் உள்ளடக்கி, C0bLU,
ப்பட்ட,
பட்டது.
)சய்தனள்.
ன்று உங்கள் கைகளில், ண்டிப் பணிகிறோம்.
ப் பகுதிப் படுத்தப்பட்டுள்ளது.
ன் மாண்புகள்,
வும்,
பில் சக்தி பற்றிய முழு விபரங்களும், CD,
ய்த் திருநாட்டிலும்
ங்களைப்பற்றிய
dib,
பட்டுள்ளன.
ள் உட்பிரிவுகளும் உண்டு. ர காண்க.
வு செய்தனர்.
விபரங்கள் தந்தோர்,
s', சய்திகளைச் சுட்டித் துணைசெய்தோர், ர் என,
வாய் விரியும்.
ول க தமிழவேள் கந்தசாமி ஐயா அவர்கள்,

Page 12
O
( ళ(A
எழுததாளா அனு. வை. ந. அன்பர் வை. அனவரத வி செல்வி சுபா ராஜரட்ணம்
லயக் கட்டுரைகளைத் சவ்வனே திருத்தித் தந்த, செல்வன் சி. யாஹரன் அ பல வேலைகளுக்கு மத்திய நம் வேண்டுதலை உடன் அட்டைப்படத்தை அழகுற தமிழ் நாட்டில் நாம் பெரு நம் நாட்டுஓவியர் திரு. ப தமிழகத்திலிருந்து இந்நூறு நமககு முழு ஒததுழைபபுத egy 60T ( ) (1 6. (0(1(16660öF(b) 9)
ஆச்சகப் பணியை,
தொழிலாய் அன்றிக்கலை
ன்றும் பொறுமையோடு ಟ್ವಿ2 წწoწჭგ 6), யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தி அதிபர் பொ. விமலேந்திர ஊழியர்கட்கும், குறிப்பாக, செல்வி இ. சுதர் நாம் கடமைப்பாடு உடை அன்னை அருள் அவ்வனை
சக்தி பற்றிய 'சாக்தத் த்ெ முழுமை பெறுவதற்க்ாய்,
பல நூல்களில் இருந்தும்
செய்திகள் திரட்டப்பட்ட6 அந்நூல்களின் உரிமைய எம் நன்றி என்றும் உரித்த பெற்ற நூல்களின்_வரிசை இந்நூலின்பின், இணைக் எம் விரிவான தேடுதலுக்கு முழுச் சுதந்திரத்துடன் நமமை இயங்க 激誉 s அறங்காவலர் திருமிகு i; எம் தனித்த ಬ್ಡಿ56ಗೆ.
“உங்கையிற்பிள்ளை உ6 எனும் உணர்வுந்த,
"அம்பிகையைச் சரண் புகு எனும் நம்பிக்கையோடு, “தேவியைச் சரண் புகுந் அவள் ஆட்டுவிக்க நாம் : அரிய இப்பணி Εή கோவில்கட்டிக் கும்பாபிே எங்கள் நெஞ்சில்.
துணை நின்ற மானுடர்க் அருவமாய் நின்று ஆட்டு6 கண்கள் நீர்சொரிய, கை "தாயேயாகி வளர்த்தனை
மலர்க்குழு : வித்துவான் வசந்தா வை ச. ஆ. பாலேந்திரன் B.A "கம்பவாரிதி இ. ஜெய க. இரகுபரன் பூரீ. பிரசாந்தன்
 

கராஜன் அவர்கள், நாயகமூர்த்தி அவர்கள்,
அவர்கள் என்போர்க்கும், தேவைக்கேற்ப
வர்கட்கும்,
பிலும்,
. . . , ששל
அமைததுத தநத, LLSL SLLL S S LSL S S S LS SSLS SLSS ஒமப்படும் வகையில் புகழ் பூத்தும் நிற்கும், த்மவாசன் அவர்கட்கும்,
பணியில்
தநத
SJ (165(-65C0,
(UTü
பேணி ரும் OMT, ன் அவர்கட்கும்,
சினி, திருமதி. அருந்ததி மயூரந்தன் ஆகியோருக்கும் (δαυσώ.
ாவர்க்கும் ஆகுக.
sாகுப்பு
õ፫.
ாளர்கட்கு,
3ாகும்.
கப்பட்டுள்ளது.
தம், கற்பனைக்கும் இடம் தந்து,
多。. ான். வல்லிபுரம் அவர்கட்கு,
ாக்கே அடைக்கலம்"
தந்தால் அதிக வரம் பெறலாம்”
தோம்".
ஆடினோம்.
2து. ஷகம் செய்த திருப்தி
தநன்றியுரைக்கலாம். பித்த அவ்வன்னைக்கு.? கூப்பி நிற்கிறோம்.
போற்றி.”
- மலர்க்குழுவினர் -
த்தியநாதன்
ாஜ்

Page 13
அரசமர நிழலில் அற்புதக் மயூரபதியிலே பன்னிரு அ கும்பாபிஷேக விளக்கம்
மயூரபதி மாண்பும் அறங்க மயூரபதி ஆலயத்தின் ஆத் ஆலயத்தின் கல்விப் பணி தெய்விகக் கலைக் கூடமு சக்தி பீடங்களுக்கு நிகரா மயூரபதி அருள் வளர் பூனி
FITë A్స
சாக்தம்
-ஆ.இந்துசமயத்தில் சக்தி வழி
சக்தி
சக்தி ரூப விருத்தி *சக்தியின் வடிவங்கள்
சக்தி பீடங்கள் சக்தியின் நாமங்களும் அ அபிதான சிந்தாமணி தரு சைவசித்தாந்தத்தில் சக்தி சகுண்டலினி சக்தி
பூனி சக்கரம் ஈழத்து ஈஸ்வரங்களில் இ தேவி உபாசனை வரலாறு சிவனின் நவதாண்டவங்களு அன்னை அழித்த அசுரர்க பத்தாக வரும் பராசக்தி -
 
 

O1 - 10
11 - 54
காளி 11 ஆண்டுகள் 16 27
காவலர் அருட்பணியும் 33 த்மீகப் பணிகள் 35 கள் 37 ம் தியான மண்டபமும் 39 ன தலம் 51 பத்திரகாளிதேவி திருவூஞ்சற்பதிகம் 53
55-326
55
62
69 - 190
69
74
76
ருள் பாலிக்கும் பதிகளும் 81 ம் சக்தி பற்றிய செய்திகள் 83
87
89
そ 91 றைவியின் வடிவங்கள் 96 102 நக்குரிய கோலங்களும் தேவி வடிவங்களும் 103 6T 113
தசவித்யா 115

Page 14
Y o f பூனி வித்யையில் மாத்ருகா அ I R உமைக்கு உகந்த ஊர்திகள்
தேவதேவியர் ( சப்த மாதர் (Y 〉。 காளி வழிபாடு ལ་ཡང་རང་ཀྱི་སྤྱི་༤༦ལན་ காளி தத்துவம்
f f /துர்க்கை
யூனி துர்க்கா பூஜை y இலக்குமி ※ *அஷ்ட லக்ஷ்மி
} } } கனகதாராஸ்தவம்
திருவிளக்குப் பூசை { சரஸ்வதி
சக்தி வி
சக்தி அடி
சக்தி தேன
அபிராமிப்பட்டர் பாடல்கள் குமரகுருபர சுவாமிகள் பாட கம்பன் கவிகள் பாரதியார் பாடல்கள் சக்தி ஸ்லோகங்கள் லலிதாம்பிகை நவரத்தின ம
சக்தி ஆ
சேக்தி மந்திரம்
தாய்த்தெய்வ வழிபாட்டின் மகாமாரியம்மன் அருள் வர சம்பந்தர் காட்டும் சக்தியின் குமரகுருபரர் பாடிய அம்ை பெரியபுராணத்தில் காமாட் சிவசக்தி −
ஈழ நாட்டுச்
 
 
 
 
 

க்ஷரங்கள்
ல்கள்
T66)
ஆய்வுகள
தொன்மை
லாறு
பேரழகு
ம வழிபாடு சி காதலித்த கம்பர் பூசை
சக்தி தலங்கள்
126
135
140
142
144
148 153 57
169
173
75
177
183
191 - 198
199 - 222
223 - 296
223
240
264
268
292
295
297-326
297
300
303
310
315
32O
323
327-551
327-408
409-551

Page 15

|-
-
-----------|-:--:-------------------------- :--------....... :-) -----o-:|-!!!!! |--------- ---- saesae!!!!!
-

Page 16


Page 17
്ള | ஜகத்குருபரீசங்கர
கொழும்பு நகர் மயூரபதி அன்பர்களுக்கு அருள் பாவிக்கும் ஜூரணோத்தாரண மகா கும்ட நடைபெறுவதையும் அதையெ ஸ்தாபித்தருளியுள்ள ஷண்மதங் பெருமையுடன் அது தொடர்பா மலரொன்று வெளியிடப் பட வி மகிழ்கிறோம்.
*ன்னை பராசக்தியின் அனைத்தும் நிர்விக்னமாக சக்தியுபாஸ்னையில் பகிருக் விளங்கவும் ஆசீர்வதிக்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

a S. S;as NNT2S
■ Sগ্রন্থ ー以○。Sتج 少、
கோடி பீடாதிபதி IôFETIfiu EÚBLILólieľ
ப் பகுதியில் கோயில் கொண்டு
பரீ பத்ரகாளியம்மனின் ஆலய ாபிஷேகம் வரும் 9-11 இல் ாட்டி பரீ பகவத் பாதாள் களுள் ஒன்றாகிய சாக்தத்தின் ன பலப்பல விவரங்களடங்கிய ரிருப்பதையும் அறிந்து அகம் மிக
இன்னருளால் கார்யங்கள்
நிறைவேறவும் U தம் ஐணக்கம் ஊட்டுவதாக
நாராயன ஸ்ம்ருதி

Page 18
na niini
ീ8ീ பரீஜகத்குருசங்க
மயூரபதி பூநீபத்ரகாளி சார்பாக பூரீமதி வசந்தா 6ை கடிதம் பரீடரீஜகத் குரு பாதகமலங்களில் தங்கள் நமஸ்
தாங்கள் .ெ 11. 2000 து நடத்துவது தெரிந்து பூரீ மகா அவ்விசேஷம் நன்றாக நடைெ வெளியிடும் மலர் நன்றாக ெ பங்கு பெறும் ஆஸ்திக அன்ப சகல செளபாக்யங்களுடனும் ஆசீர்வதித்து அருளிய ஆசீர் மெளலீஸ்வரர் பிரசாதமும் அ
SS LL L S S L S LLLSS LS SS SS SS SS SS SS S S L S S S S S S S S S S S SL S S LSLS S AA SS SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S L L LS LL LSSLSL S L S SL S SL S L S L S L S L S L S L S SLLLL LLLLLLLLSLL S LLSL L L L L L L L S L S LSLS L L SLL L
ரீசாரதாப்டம் JITĖFEfiTMLu üīGJITLEGG
அம்மன் தேவஸ்தானம் மலர்க்குழு பத்தியநாதன் அவர்கள் எழுதிய சங்கராசார்ய மகாஸ்வாமிகள் ஸ்காரத்துடன் சமர்பிக்கப்பட்டது. தங்கள் கோவில் கும்பாபிஷேகம் ஸ்வாமிகள் சந்தோவிழித்தார்கள். பறவும் அதனை ஒட்டி, தாங்கள் வளிவரவும் இவ் விசேஷங்களில் ர்கள் அனைவரும் சுேடிமமாகவும்
வாழ்ந்து வரவும் பூரீஸ்வாமிகள் மந்திராகடிதை பரீ சாரதா சந்த்ர னுப்பி இருக்கிறது.

Page 19
LSLLLSLSLLLLLSLLLLLSLL LLLL LLLL LL LL SLS LL SSLS L SLL L SLL L LLSL LLLLL LLLL SLLLSL SLS
திருப்பனந்தாள்க திருவளர்திரு காசிவாசி முத்துக்கு
கொழும்பு, மயூரபதி தேவஸ்தானத்தில் og_#56őã நிகழவிருப்பதும், விழாமலர் அறிந்து மகிழ்ச்சி.
மையல் மானுடமாய் மிய திருவருள் சிந்தனையும், ஆலய வி திருவாக்குகளை ஒதுதலும், சி பல்வகையிலும் உதவுகின்றன. தாரணியில் செய்யும் அவயே பொற்பாதம் பெறுவது எப்படி குருதேவர்களின் வழிநின்று அன்பர்களின் + ID (Ա: வியப்பிற்குரியது.
மிகச் சிறப்பான முறை நிகழ்ந்திடவம், விழா மலர் எழுத்தோவியங்களுடன் மலர்ந் கருத்துக்களை வழங்கும் கருவூர் சேடிகளைச் சிந்தித்து வாழ்த்து
சிவ
Yaş
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யிலைமாமுனிவர் Iഖി, ശ്രീI് ഖിബ്
பரீபத்திரகாளி அம்மன் அன்று குடமுழுக்குப் பெருவிழா ஒன்று வெளியிடப்பெறுவதும்
/ங்கும் உயிர்கள் உய்திபெறத் பழிபாடும், சமயச் சான்றோர்தம் றப்பு வழிபாட்டுத் தரிசனமும் தவமோ சிறிதும் அறியவில்லை,
ா அளவில்லை,
அதனால்
? என்று இரங்கி மொழிந்த
பொற்பாதம் வழிபடும் மொழிப்பற்றும் ஈடுபாடும்
பில் குடமுழுக்குப் பெருவிழா செந்தமிழ்ச் செல்வர்களின்
து அன்பர்களுக்குப் பலவகைத் பமாக மலரவும் செந்திற்கந்தன்
திறோம்.
AA L L L L L L L L L L L L L L L L L S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S L L

Page 20
திருவாவடுதுறை ஆதீ iഖണ് ഖി
கொழும்பு மாநகர் அருள்ம் திருக்கோயில் திருக்குட நன் உள்ளதும் விழாத் தொடர்ப பெறுவதும் அறிய மகிழ்ச்சி.
பார்வதிப் பிராட்டியே க தீமைகளை நீக்கி அருள்பாவிக் வேண்டும் திருப்பணிகளைப் ெ அருட்பொலிவு கொள்வது டே
விழா சிறப்புற நடைபெற பெருமைகளை விளக்கும் நல்லவண்ணம் மலர்ந்து இ. ஆன்மார்த்த மூர்த்தி அருள்தரு திருவடி மலர்களைச் சிந்திக்கி
 
 
 
 
 
 
 

Eாகுருமகாசந்நிதானம் IfLIEmil IJstiftfiel
விகு மயூரபதி பத்திரகாளி அம்மன் ர்னராட்டு விழா நடைபெறு ாக மலர் ஒன்று வெளியிடப்
ாளியாகத் திருமேனி பெற்றாள். தம் அன்னையின் திருக்கோயில் பற்றுத் திருக்குட நன்னீராட்டு
ாற்றற்குரியது.
ரவும், மலர், அம்மையின் அருட் சிறந்த படைப்புகளுடன் ன்பம் பெருக்கவும் அருள் நம் ஞானம நடராசப் பெருமான்
han hoh og huset

Page 21
LLLLL
SLSLS S S S S S S S S S S S L S S S S S
தங்கள் மடல் கண்டு பூநீபத்திரகாளி அம்மன் திருக்ே என்று அழைக்கப்பெறுகின்ற 09, 11 2000 ஆம் நாளன்று விழாமலர் அம்மனின் அருட்சக் வெளிவந்திடவும், தேவஸ்தா பெருமக்களும் எல்லா நலன் மகிழ்ச்சியேர்டும், நிம்மதியோ பாலிக்குமாறு எல்லாம் வல்ல ப; ஆசீர்வதிக்கின்றோம். எல்லே
மதுரை ീഗ് ത്രത്തി
Bg LIIIf
ஆசீர்வாதம் !
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதீனம் ாதமுற்ஞானசம்பந்த MLLIdibuTLEfi61
மகிழ்ந்தோம். மயூரபதி காயிலின் மகாகும்பாபிஷேகம் பெருஞ்சாந்திப் பெருவிழா மிகச் சிறப்புற நடந்தேறிடம்ெ, தியின் பெருமையைத் தாங்கி ET நிர்வாகிகளும், Uğı ağ5ü களோடும், வளங்களோடும், ம்ெ வாழ்ந்திடவம் திருவருள் ரகாளியம்மனைப் பிரார்த்தித்து ர்க்கும் ஆசீர்வாதம்!

Page 22
பரீலறிசோமசுந்தரதேசிகளுாை
அம்பிகை அடியார்களே !
கொழும்பு நகரில் மயூராபதி அருளாட்சி புரியும் பத்திரகாளி = நடைபெறுவது மனமகிழ்ச்சியை அருள் நிலையும் நிறைந்து வேண்டுவார் வேண்டுவதைக் எழுந்தருளி இருக்கின்றாள். அருட்கண் பார்வையினால் இர மனப் பக்குவத்திற்கமைய பல6 அவை மலத்தை நீக்கி அ மானிடராகப்பிறந்த எங்களுக் இவ்வாழ்க்கையை வளப் படுத்து உள்ளது. அம்பிகையின் மகா கண்டு மனதார அனுபவிப்பே துன்பத்தையே சுமந்து கொt அம்பிகையின் அருள் பெற்று : இக் கும்பாபிஷேகத்தை நடா ஆலயத்தை தர்மத்தின் வழிநின்று -gefiðJÚ JÚ DO மூலமாக 53ug: தம்பாபிஷேகத்தைத் தரிசிக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

وا
U vi
ഥഉ]] [[ിgi Tசம்பந்தபரமாச்சாரியஸ்வாமிகள்
எனும் தலத்தில் எழுந்தருளியிருந்து அம்பாளுக்கு மஹா கும்பாபிஷேகம் த் தருகின்றது. இயற்கை அழகும் விளங்கும் மயூராபதி அம்பிகை கொடுக்கின்றவளாக இத்தலத்தில் அண்ட சராசரங்களையும் தன் ட்சிக்கும் அம்பிகை அடியவருடைய படி வங்களைக் கொள்கின்றாள். ருள் உணர்வைத் தருகின்றன. கு அம்பிகையினுடைய அருள் பதற்கு ஊன்றுகோலாக ஆதாரமாக கும்பாபிஷேகத்தைக் கண்ணாரக் த பிறவியினுடைய பயனாகும். ண்டிருக்கும் மக்கள் அனைவரும் துன்பம் நீக்க பிரார்த்திக்கின்றோம். ந்திவைக்கும் சிவாசாரியர்களுக்கும் நடாத்தும் தர்மகர்த்தாவுக்கும் இவ் Fயாற்றுகின்ற சபையினருக்கும் ம் அடியார்களுக்கும் மயூராபதி
பதாக, டும் இன்ப அன்பு"

Page 23
-|| || -|| ||
CI
L L L L SL SL L LL SLSL SSLSLSSSL SSL SSL SSLLLLLL ACCC
2Emperits இலங்கையைச் சிவபூமி எ 2747). பாடல் பெற்ற சிவ திருக்கோணமலை ஆகிய இரண் இலங்கையிலுள்ள கதிர்காமம் 6 கோயில் அருணகிரிநாதரால் திருப் காலம் முதலே தமிழையும் சைவ தமிழகத்துக்குச் சற்றும் குறைந்த புலம்பெயர்ந்து உலகளாவப் உலகெங்கும் தமிழையும் சைவத்ை இலங்கையின் பல பகுதிகள் விளங்குகின்றன. அவற்றுள் கொ விளங்கும் மயூரபதி பூரீ பத்திரகாளி திருப்பணி செய்யப்பெற்றுக் கும் நிகழவிருப்பதையும் அதனையெ அனைத்தையும் இயன்றவரையில் இருப்பதையும் ಹೆಣ್ಣಿಣ್ಯ மகிழ்கிறே மயூரபதி பத்திரகாளி மேலும் சீரோடும் சிறப்போ விளங்கவும் . அதன் நிர்வாகத்தி நலன்களும் வளங்களும் பெற்g கும்பாபிஷேக மலர் நன்கு மல பரப்பவும் எமது வழிபடு கடவுை வாழ்த்துகிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSLLL SLLLLLLLL LLLL SSqSSLLLLSSSLLLLSSSLLLSLLLLS L LLLL LLLLLLLLSL SLLSL SL SL SLSL SLL SLLLLLLSLLLLLSLLLLL LSLLLLLL
"ண்கிறார் திருமூலர் (திருமந்திரம் ஸ்தலங்களில் திருக்கேதீச்சரம், "டும் இலங்கையில் உள்ளவை, Tன்னும் புகழ் பெற்ற முருகன் புகழ் பாடப்பெற்றது. பண்டைக் த்தையும் வளர்ப்பதில் இலங்கை, தன்று. இன்றைய நிலையில் பரவியிருக்கும் ஈழத்தமிழர்கள் தயும் பரப்பி வருகிறார்கள். சிலும் பல கோயில்கள் சிறப்பாக ழம்பு மாநகரில் மிகவும் புகழுடன் ரியம்மன் தேவஸ்தானம் கோயில் பாபிஷேகம் 09-11-2000 த்தில் ாட்டிச் சக்தியின் அம்சங்கள் தொகுத்து மலர் ஒன்று வெளியிட  ̈ (ሰ}
பம்மன் தேவஸ்தானம் மேலும் டும் பேரோடும் புகழோடும் னரும் வழிபடுவோரும் எல்லா து ஓங்கவும் அது வெளியிடும் ர்ந்து நாடெங்கும் இறைமணம் ாயும், குருநாதரையும் நினைந்து
LL LLLLSL LLLLS LLLLSLLLSLLSS LSLSLLLSLLLLLSLLLLLSLLLLLL SL S LS SL L LSLS LLSLLLLLSLS LSLSLS S S SSS S L SS

Page 24
aaa.
L S SLLSLS LS SLLSLS LSLSLS LLLSS S
கொழும்புஇராமகிரு
്ഖി (,
"ஜய நாராயணி கொழும்பு மாநகரின் '? மயூராபதி பூநீ பத்திரகாளி அம்மன் 醬 '? 9.11.2000 தினத் சிறப்பாக நடந்தேறியது என அ நடைபெற்று வரும் மண்டலாபிஷேச மலர் ஒன்று வெளியிடப்பட உள் வாழ்த்துச் செய்தியை வழங்குவதில்
மனித உறவிலே, தாய் - நெருக்கமானதுமாகும். தாயினி உணருகிறது. எனவே, வாழ்க்கை அதனைச் சிறிதும் பாதிப்பது கிை தாயாகக் கண்டுவிட்டால், அவளிட அந்தப் பூரண பாதுகாப்பிலே வா கடந்து விடலாம். சக்தி உபாச ராமகிருஷ்ணர் போன்ற தெய்வீக உண்மையைத் தெளிவாக எடுத்துக் கொழும்பு மயூராபதி அம்ம6 பாதுகாப்பையும், அருளையும் வ ஆமாஜம் பக்தர்களின் கூட்டெ மத, இன பேதங்கள் ஒன்றும் கி குழந்தைகள். சாந்தியும், ஒற்றுகை மலர்ந்து நிற்கின்றன.
இத்தருணத்தில், இக்கோ திரு. பொன்.வல்லிபுரம் மற்றும் அவ நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
لايستEE"| ٹthسمائے سمجھتے
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLSSSLS SSiLSS LLS LLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSSLLLLS S LLS S LLLLLLS L LLLS LLS LS LSLS LS LSSS S
S S S S S S S SL L S L LSSLSLSSLSLSSLSLS
്തിലെg് ഇത്ഖ
IIII
நமோஸ்து தே" த்தி பெற்ற கோயிலாக விளங்கும் |ITTE தவஸ்தானத்தின் மகாகும்பாபிஷேகப் தன்று, அன்னையின் அருளால் மிகச் அறிகிறோம். அதைத் தொடர்ந்து ஜையின் நிறைவுநாளன்று சி ாதென அறிந்து, அம்மலருக்கு இந்த் பெரு மகிழ்ச்சியடைகிறோம். சேய் உறவு மிகவும் புனிதமானதும், டம் குழந்தை பூரண பாதுகாப்பை பின் அப்ர்யங்களோ, இன்னல்களோ டயாது. இவ்வாறே, இறைவனைத் த்திலே அன்பை வளர்த்துக் 3:3 ழ்க்கையின் இன்னல்களை எளிதிற் கர்களான அபிராமிப் பட்டர், பூநீ புருஷர்களது வாழ்க்கை, மேற்கூறிய
காட்டுகிறது.
எண்ணற்ற மக்களுக்கு இத்தகைய ரி வழங்குகிறாள் என்பதற்கு அங்கு 'ம சாட்சி. அந்தக் கூட்டத்திலே சாதி, டையாது. அனைவருமே அவளது யும், சமாதானமும் அங்கு இயல்பாக
யிலைத் திறம்பட நிர்வகித்துவரும் ரது குழுவினர்க்கு எங்கள் மனமார்ந்த கொள்கிறோம்.
li li li hi h iih hu

Page 25
Lി]ിലെLത്ര, ിഖ
ിഖ് സ്ഥി, ബി
சிசி: தனிச் சரத்தசக்திகே சர்வ ஒ: சீரின் நீர்த்தினின் தேதி தாரிஜக் து: சிதBrச் சிங்ஆஃப் ஐசிஐதர்ேத்தகரீச் சதவி
மயூரபதியில், அரசும் ே பன்னெடுங்காலமாக அருட்சக்தியா சிஷ்ட பரிபாலகியாக விளங்கும் பூரீ ஐப்பசி மாதம் 24 ஆம் திகதி (09:1120 திதியும் ரேவதி நட்சத்திரமும் சித்தா பொருந்திய நன்னாளில் ஜூர்னோ விழாவாகிய மகா கும்பாபிஷேகப் ெ முப்பத்து முக்கோடி தேவர்களின் கிரியா தந்திர சாரத்துடனும் திரு மங்களேத்துடனும் திருவருட் சக்தி நல்குவதாய் இனிதே நிறைவுற்றது.
ஆலய தர்மகர்த்தா மற்றும் துெ பொருள்களை வாரி வழங்கிக் குறி பிரார்த்தனையுடனும் பக்தப் கோஷத்துடனும் கும்பாபிஷேகப் ெ இனிதே நிறைவு பெற்றது பெரும் வ மகா கும்பாபிஷேகப் பெருவி அனைத்துப் பெருமக்களும் துன்பம் வண்னம் அன்னையின் திருமல் கும்பாபிஷேக நிகழ்ச்சியினால் அமைந்துள்ள அரும்பெரும் விஷய உலகம் தழைத்து ஓங்க வேண்டும் எ
২° অট': **
TN S آئی
LLLLLL LL LLL LLL LLLLLLLLSLLLLLLLL LL LLLLLL
 
 

LLLLL
ச்சாரிய சக்கரவர்த்தி வநாதக்குருக்கள்
3rர் சீர்? ஆரிஜித்சிரீர்
உதசசத்தீன் தேனீர் ஆகிந்த'ே என் ஈக்விரீச் பத்ர தீrத் தரிசிர:ே வம்பும் இணைந்த மரநிழலில் க கருணை நிறைந்து துஷ்ட நிக்கிரக காளி அம்பாளுக்கு விக்கிரம வருஷம் 0ெ) குருவாரமும் சுக்கிவதிரயோதசித் மிர்தயோகமும் சுக்கிரஹோரையும் த்தாரண அக்ஷ்டபந்தன மகா சாந்தி பருவிழா இறைவி கருணையுடனும் அருட்பிரவாகத்துடனும் வேதாகம முறை, கீத, தவில் வாத்திய சங்க பின் திருவருட்டுனையை எமக்கு
ாண்டர்கள், திருப்பணிக்குப் பொன், பித்த பெருமக்கள் முதலியோரின் பெருமக்களின் அரோ ஆறரா பருவிழா பக்தி பூர்வமாக அமைந்து ரப்பிரசாதமாகும். ழாக் காட்சியுடன் இலங்கை வாழ் நீங்கி அமைதியான வாழ்வு பெறும் *ப் பாதங்களை வழுத்தி, இந்தக் மவரும் "மயூரமங்கலம் மலரில் ங்களை வாசித்து உண்ர்ந்து சைவ ன்று பிரார்த்தனை செய்கிறோம்.

Page 26
LLLLLL LLLL L LLLLL LL LLLLL L L L L L L L L L L S L S L S S LS S L SLL SLSSSLL LSSMSLLLLL LSL S L SLL LSL A.
HTTE
தேவஸ்தாEாபிரதமகு ിഖ്2.gu]I அகிலம் முழுவதையும் ப அருள் செய்யும் அன்னை ஆதிபர உய்ய மகாகாளியாய்க் கொழு நம் இனஞ் செய்த தவத்தால் = தந்துநிற்கிறாள். அவள் அருள் பெருகுவதும், அடியார் தொ பெருகுவதுமாக அன்றாடம் அ அடியார் கூட்டமும் பெருகும் அருட்கடாட்சத்தால் விக்கிரம திகதி ஜூர்னோத்தாரன அஷ்ட அற்புதமாய் நடந்தேறியது. அவ் மண்டலாபிஷேகப் பூர்த்தியை அத்தனை செய்திகளையும் உ5 ஆக்கப்பட்டிருக்கும் "மயூர வெளிவருவதும், அன்னையின் பக்தர்கள் அன்னையின் அருட் மகிழ்வார்கள் என்பது தி அருட்திறத்தால் அனைத்தும் நிற்கிறேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

, ബIഥിളി 5வக்குருக்கள்
டைத்தும் காத்தும் அழித்தும் ாசக்தி நம் நாடும் நம் இனமும் ம்பு மயூராபதியில் எழுந்தருளி அனைவர்க்கும் அருள் அள்ளித் ர் பெருக, அடியார் தொகை கை பெருக அவள் அருள் என்னையின் அருட்கொடையும் சூழ் நிலையில் அன்னை வருடம் ஐப்பசி மாதம் 24ஆம் உபந்தன கும்பாபிஷேக விழா விழாவைத் தொடர்ந்து நடந்த யொட்டி அன்னை பற்றிய ர்ளடக்கி அறிஞர் குழுவினால் மங்கலம்' எனும் மாமவர் அருளே. இவ்வற்புத நூலைப் பிரசாதமாய்ப் பெற்று அகம் 'ETET, அன்னையின் மங்களமுறப் பிரார்த்தித்து
SS LS LS LS LS LS SS LLS SLLS QUONNTE

Page 27


Page 28


Page 29
மயூர மங்கலம்
ஏறக்குறைய ஆயிரத்து எ தொண்னுாறுக்குமிடைப்பட்ட காலத் என்றழைக்கப்படும் பகுதியில் நெ நிறுவனத்தார் செய்தனர். எத்தனை புதிய அனுபவம் ஆதலால் அ தொழிலாளர்களைத் தென்னிந்திய L வருவித்தனர். அந்த மக்கள் வாழ்வத கொடுக்கப்பட்டன. இங்ங்ணம் குடி விரும்பினர். அவ்விருப்பத்தால் அக் மண்டபம் வழிபாட்டுக்காக ஒதுக்கி திருமாலின் அவதாரமாகிய பூரீ வரத முன் இரு அரசமரங்களுக்கிடையே நிறுத்திக் காளியம்பாளாக வழிபடத்
ஆரம்ப காலத்தில் இருந்து ந திருவருளாலும், நம்பிவழிபடும் அடிய அரச மரம் போல் மேலும் மேலும் உய ஆதிமூலமான நாராயணனு காளியும் அமர்ந்திருக்க அற்புதமா குளிர்க்கஞ்சி வைபவம் சிறப்பா கனியமுதங்களையும் அன்னைக்கு பேதி போன்ற நோய்களிலிருந்து இவ்வாலயத்தின் அடிப்படை நோக் நடைபெற்று வரலாயிற்று.
இக்காலகட்டத்தில் நெசவு கணிசமான அளவு சேர்க்கப்பட்ட தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட வேண்டிய நிலை உருவாயிற்று. இ இரட்டைமாடித் தொடர் வீடுகள் அ
 
 

ரச மரநிழலில் ற்புதக் காளி
ண்ணுாற்று எண்பதிற்கும், ஆயிரத்து எண்ணுற்றுத் த்தில் இன்று கொழும்பு வெள்ளவத்தையில் மயூராபதி சவாலை ஒன்று உருவாகியது. அதனைத் தனிப்பட்ட பொருள் வளம் இருந்தாலும் அத்தொழில் இலங்கைக்குப் ந்நெசவாலையைத் திறம்படச் செய்வதற்காகத் மாநிலங்களான தமிழகம், கேரளம் ஆகியவற்றில் இருந்து ற்காகக் குடியிருப்பு வீடுகள் (தொடர் வீடுகள்) அமைத்துக் யேறிய மக்கள் தமது பூர்வீக வழிபாட்டைத் தொடர குடியிருப்புகளுக்கு இடையில் தொடர் வீடுகளில் ஒரு க் கொடுக்கப்பட்டது. அங்குதான் காத்தற் கடவுளாகிய ராஜப் பெருமாள் ஆலயம் ஆரம்பமாயிற்று. ஆலயத்தின் ஒரு வேப்பமரம் நின்றது. இம் மரத்தில் ஒரு சூலத்தை தொடங்கினர். ம்பிக்கையுடன் பூசிக்கப்பட்டு வந்த இவ்வாலயம் தெய்வத் ார்களது நிறைந்த பக்தியாலும் அன்னை கொலுவிருக்கும் ர்ந்து வளர்ந்தது. ம், அவர் தங்கை எனக் கருதப்படும் ஆதி சக்தியான க வளர்ந்த இவ்வாலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை க நடந்து வந்தது. குளிர்ந்த உணவமுதினையும், நிவேதித்து கோரமான அவளைச் சாந்தப்படுத்தி, அம்மை, அடியார்களைக் காக்கும்படி வேண்டுதல் செய்வது கமாய் இருந்தது. இந்நிகழ்வு ஆவணி மாதந் தோறும்
பாலையில் உள்ளூர்ப் பெரும்பான்மை இன மக்கள் ார்கள். இதனால் ஆரம்பகாலத்தில் கடல் கடந்து இந்தியத் தொழிலாளர்கள் வந்த வழியே தாயகம் திரும்ப இதனால் பழைய குடியிருப்புகள் உடைக்கப்பட்டு புதிய மைக்கப்பட்டன. மாடி வீட்டில் ஒதுக்கப்பட்ட ஒரு சிறு

Page 30
அறைக்கு பூரீவரதராஜப் பெருமாள் ஆலயம் மாற்றப்பட்டது. இவ்வறையில் தொடர்ந்து ஆலயம் இயங்கும்போது திரு. ஏகாம்பரம் கங்காணி அவர்கள் தலைமை தாங்கி வழிநடத்தினார்கள். இதற்குப்பின்னர் திரு.இரத்தினவேலு முதலியார் தலைமையில் பரிபாலனம் தொடர்ந்தது. இவ்விருவர் காலத்துக்குப் பின்னர் வந்த திரு. சிவப்பிரகாசம் பேராயிரம் உடையார் தலைமை தாங்கிய பரிபாலன சபைக் காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இவ்வாலயத்தில் நிகழ்ந்தன.
இளைஞர்கள் பரிபாலன சபையில் இடம் பெறத் தொடங்கினர். இளைஞர்களது வருகை சமயப் பணிக்கும் வளர்ச்சிக்கும்மிகத்துணைபுரிந்தது. இந்தமறுமலர்ச்சிக்குப் பின்னர் சிவராத்திரிவிழாவெகுவிமரிசையாகபூரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நிகழலாயிற்று
இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியம் ஆலய நிர்வாகத்திற்குத் தலைமை தாங்கி முன்னவர் பணிகளில் எந்த விதமான குறையுமின்றிச் சிறப்புடன் தொண்டாற்றினார். சிவராத்திரி விழா இவர் காலத்தில் மேலும் சிறந்து விளங்கிற்று.
சிவராத்திரி விழாக்கள் மூலம் ஆலயத்தினைப் பரிபாலிக்க வந்த சபைக்கு ஈ.பி. சுப்பிரமணியம் என்பவர் புதிய தலைவராக வந்து புதிய திருப்பத்தை உண்டாக்கினார்.
1977ல் வரதராஜப் பெருமாள் ஆலய முன் மண்டபம் அரசாங்கத்தின் ஆதரவுடன் அமைந்ததற்கு இவரது முயற்சி பெரிதும் துணைநின்றது. இந்த மண்டப அமைவுக்குப்பிறகு சிவராத்திரி மேலும் சிறப்படைந்தது. இக்கால கட்டத்திலேதான் பெரியதொரு மாற்றம் நிகழ்ந்தது எனலாம்.
பழைய இடத்தில் அரச, வேப்பமரங்கள் நின்றன. 1980ல் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், புதிய வீடுகள் கட்டப்பட்டபோது வழிபாட்டுக்குரிய இடமாக அவ்வரசமரத்தடியில் ஒரு சிறு இடம் ஒதுக்கப்பட்டு 4 x 3 x 5 1/2 அடி பிரமாணத்தில் ஒரு மாடம் கட்டப்பட்டது. அந்த மாடத்தில் எதிர்பாராத விதமாக, காளி அன்னையின் சூலம் இருந்த இடத்தில் வேறொரு மதத் தெய்வத்தை அமைக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அன்னை இரவோடிரவாக அரச மரத்தடியில் தரிசனம் தந்தாள். முதல் அமர்ந்த அவளைப் பின்னர் எவராலும் மாற்ற முடியவில்லை. சூலத்தில் சூக்குமவடிவில் நின்றவள் சிலைவடிவாகி அருள்தர அமர்ந்தாள்.
pg

பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பாளுக்கு கும்பாபிஷேகமும் தொடந்து 48 நாட்கள் மண்டலா பிஷேகமும் நடைபெற்றன. பூர்த்திதினமான சங்காபிஷேகத்தன்று அன்னை சர்வாலங்கார பூஜிதையாய் வெளிவீதி உலா வந்தாள். வேம்படி வித்தகியாக இருந்து வேண்டுவார்க்கு வேண்டுவன வழங்கிய பத்திரகாளி 83ம் ஆண்டு நாட்டிலேற்பட்ட அசம்பாவிதத்திலும் அணுவும் பங்கம் இன்றி மிளிர்ந்தாள். கலவரத்தின் பின்னர் ஸ்தம்பித நிலையில் இருந்த ஆலயத்தைத் தவறான பாதையிற் சிலர் செலுத்த முயன்றனர். காளியின் அருளால் மீண்டும் அடியவர்கள் ஒன்று திரண்டு பரிபாலன சபை அமைத்துச் செயலாற்றத் தொடங்கினர். மீண்டும் தூயபணி தொடங்கிற்று. எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் ஆலய உரிமையையும் உடைமைகளையும் மீட்டுப் பரிபாலன தத்துவத்தையும் பெற்று மரத்தடிக் கோவிலை மணி மண்டபக் கோயிலாகக் கட்டியெழுப்பத்திருப்பணிச்சபை ஒன்றும் உருவாக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் அன்னை எங்கு நோக்கித் தரிசனம் தந்தாளோ அதே முறையிலேயே நவீன ஆலயம் உருவாக்கப்பட்டது. இவ்வேளையில் மரத்தொடரின் கீழ் இயங்கி வந்த வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இருந்த பிள்ளையார், லிங்கம், வேலாயுதம் முதலிய பரிவார மூர்த்திகளும் இப்புதிய ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டன. 1987.03.22 ம் நாள் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பூரீ பத்திரகாளி, பிள்ளையார், சிவன், நாகதம்பிரான், புராதன அம்பாள், நவக்கிரகம் ஆகிய மூர்த்தங்களுக்கான ஆலயங்கள் அமைக்கப்பட்டன. அந்தச் சிறிய இடத்திலே எல்லாச் சந்நிதானங்களையும் ஆகமமுறைப்படி அமைப்பது மிகவும் சிரமமாய் இருந்தது. மற்றைய ஆலயங்கள் தூர இருந்தபடியால் எல்லாத் தெய்வங்களையும் இவ்வாலயத்தில் வைத்து வழிபட அடியார்கள் முடிவுசெய்தார்கள். ஆகமப்பிரமாணத்தை விட அடியாரின் விருப்பமே மேலானது என நினைத்து அரச மரத்தைச் சுற்றிச் சந்நிதானங்கள் அமைக்கப் பட்டன. அராலியூரைச் சேர்ந்தவரும் வந்தாறுமூலையில் வசித்தவருமான திரு. எஸ். மகேஸ்வரன் ஸ்தபதியார் தலைமையில் ஆலயத் திருப்பணிகள் ஆரம்பமாயின.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 31
தென்கிழக்கு நோக்கிய மூல மூர்த்தமாக பூரீ பத்திரகாளி அம்பாள் கொலுவிருந்தாள். அம்பாள் சந்நிதானத்தின் பின்புறமாக நின்ற புராதன அரசமரத்தைச் சுற்றி வட்டமான பீடம் கட்டப்பட்டது. அரசமரத்தினை உள்ளடக்கிச் சதுரமாக அவ்வாலயம் அமைந்தது. அன்னையின் வலமாகப் பிள்ளையாரும், இடமாக முருகனும் அமர்ந்தனர். பிள்ளையாருக்கு முன்பாக சுதையால் ஆன மூல பத்திரகாளியும் சந்நிதானமும் அமைந்தது. தலவிருட்சத்தை வலம்வரத் தொடங்கினால் புராதன அம்மன், அனந்தசயனத் திருமால், நாகதம்பிரான், சிவபெருமான், நவக்கிரகம், வைரவர் ஆகியோர் காட்சி தருவர். இவ்வாறு அமைந்த ஆலயத்திற்கு அப்போது விமானம் இல்லை. திருப்பணிகள் நடந்துக் கொண்டிருந்த போது மிகமிக நெருக்கடியான பொருளாதாரச் சூழ்நிலை ஏற்பட்டது. இன்று ஆலயத்தை அற்புதமாய் வழி நடத்தும் சிவதர்மச் சிந்தனையாளர், அரும்பணிச் செல்வர் திரு. பொ. வல்லிபுரம் அவர்கள் அக்காலகட்டத்திலேயே அன்னையின் அருளால் தலைமைப் பொறுப்பேற்று இத்திருப்பணிகளிற் கைகொடுத்து உதவ முன்வந்தார்.
அவரின் துணையால் திருப்பணிவேலைகள் இனிதே நிறைவுற்றன. மாமல்லபுரத்தில் உருவான அன்னை பத்திரகாளி, முருகன், நாகதம்பிரான் ஆகிய தெய்வவடிவச் சிலைகள் தமிழகத்திலிருந்து கொணரப்பட்டன. அப்போது இந்து கலாசார அமைச்சராய் இருந்த திரு. செ. இராசதுரை அவர்கள் இப்பணியிற் பெருந்துணை புரிந்தார். அதுபோல அப்போதைய உதவிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அநுரா பஸ்தியான் அவர்களும் இவ்வாலய வளர்ச்சியில் பெரும்பங்காற்றினார்கள். கட்டுமானத்தில் திரு. எஸ். மகேஸ்வரன் ஸ்தபதியோடு, திரு. வி. இராசையா, திரு. தேவன் ஆகியோரும் இணைந்து செயலாற்றினர். ஒட்டுமொத்தமாக அன்னையின் ஆலயம் முழுமைபெற்று எழுந்தது.
பிரபவ ஆண்டு கார்த்திகைத் திங்கள் 9ம் நாள் (1987.11.25) பூர்வபட்சப்பஞ்சமி திதியும் உத்தராட நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபமூகூர்த்தத்தில் அன்னையின் கும்பாபிஷேக விழா பிரம்மழரீ சாமி. விஸ்வநாத குருக்கள் தலைமையில் சிறப்புற நடை பெற்றது.
மயூர மங்கலம்

அதன்பின் அன்னையின் அருளாலும், ஆலய அறங்காவலர் திரு.வல்லிபுரம் அவர்களின் முயற்சியாலும் ஆலயத்தின் கீர்த்தியும், நேர்த்தியும் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாய் வளர்ச்சியுற்றது. இந்துக்களுக்கே சொந்தமான அன்னை காளியின் ஆலயத்திற்கு ஏனைய மதத்தவரும், இனத்தவரும் கூட்டங்கூட்டமாய் வரத்தொடங்கினர். அன்னையின் அருட்பார்வை ஜாதி, இன, மத பேதங்களைக் கடந்து அனைத்து மக்களையும் தன்பால் ஈர்த்தது. இந்துக்கள் அன்றி ஆலயத்திற்கு வருகைபுரிந்த ஏனையோரும் பொருளாலும் செயலாலும் பலவிதத்திலும் ஆலய வளர்ச்சிக்குத் துணைபுரிந்தனர்.
திரு. வல்லிபுரம் அவர்கள் தலைமை ஏற்ற பின்பு 1988ல் இவ்வாலயத்தில் ஆடிப் பூரத்திருவிழாவை ஒட்டி 20 நாட்கள் இலட்சார்ச்சனையும் முடிவு நாளான ஆடிப் பூரத்தினத்தன்று மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தி லிருந்து பாற்குடபவனியாக ஆரம்பித்து அடியார்களாற் சுமந்து வரப்படும் பாற்குடங்களால் அன்னைக்கு அபிஷேகம் செய்யும் முறைமையும் தொடக்கப்பட்டது. அன்று 125 பேருடன் தொடங்கிய இப்பாற்குட பவனியில் இன்று 2200 பேர் கலந்து கொள்கின்றனர். ஆடிப் பூரத்திற்கு அடுத்தநாள் அன்னை ஊர்வலமாய் வந்தாள். ஆரம்பத்தில் மயூராபிளேஸ் மட்டும் நடந்த இவ்வூர்வலம் 1991ம் ஆண்டு தொடக்கம் ஹவ்லொக் றோட், டிக்மன் றோட், காலி றோட் வழியாக ஆலயத்தை அடையும் வழக்கம் உருவாயிற்று.
95ம் ஆண்டு மாசிமகப் பூசையின்போது அறங்காவலர் மனதில் அன்னையை தேரேற்றிக்கான வேண்டும் எனும் விருப்பம் உண்டாக அவ்விருப்பம் பக்தர்களுக்கு அன்றைய பூஜையில் அறிவிக்கப்பட்டது. அவ்விருப்பம் தெரிவிக்கப்பட்டதும் அன்றைய விழா உபயகாரரும் வள்ளலுமான திரு. பூரீகாந்தா அவர்கள் 16 லட்சம் ரூபா செலவில் அம்பாளுக்கான தேரினைச் செய்யும் முழுப்பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டார். அவரைப்போலவே திருவாளர் கேசுநாதன் எனும் அன்பரும் விநாயகர் தேருக்கான முழுச்செலவினையும் பெறுப்பேற்றார். முருகனுக்கான தேர் பொதுமக்கள் உபயமாக 36 இலட்சம் ரூபா செலவில் தொண்ணுாற்றி ரண்டே நாட்களில் உருவாக்கப்பட்டது.
CEO

Page 32
95ம் ஆண்டு அறங்காவலர் மனதில் உதித்த தேர் இழுக்கும் நல்எண்ணம் 96இலேயே செயலானது. 96ம் ஆண்டு ஆடிப்பூரத்தின் அடுத்தநாள் மூன்று தேர்களும் வலம் வந்தன. தேரினைத் தொடர்ந்து அடுத்த நாள் இந்துசமுத்திரத்தில் தீர்த்தத் திருவிழா நடாத்தப்பட்டு புதிய கதிரேசன் மண்டபத்தில் அன்னைக்கு பூசைகள் நடத்தப்பட்டன. 1997ல் மூன்று இந்திர விமானங்களில் ஏறி அம்பாள், பிள்ளையார், முருகன் ஆகிய தெய்வங்கள் உலாவந்து தீர்த்தமாடியது ஓர் புதுமை.
1988ல் இருந்து செவ்வாய் தோறும் இராகுகாலப்பூசையும் 1989ல் இருந்து பெளர்ணமி தோறும் 108 பெண்கள் செய்யும் திருவிளக்குப் பூசையும் இன்றுவரை தொடர்ந்து நடைபெறுகின்றன. 1995ல் 20 நாள் இலட்சார்ச்சனையுடன் கெளரி விரதப்பூஜை ஆரம்பிக்கப்பட்டு 21வது நாள் காப்பு வழங்குதல் இங்கு வழக்கமாயிற்று. இன்று 2100 பேர்வரை இவ்விரதத்தை அனுஷ்டித்துக் காப்புப் பெறுகின்றனர். இவைதவிர வரலட்சுமி விரதம், நவராத்திரி விரதம், கந்தசஷ்டி விரதம் என்பவையும் இங்கு விசேடமாய் நடத்தப்படுகின்றன.
1994ல் அறங்காவலரின் முயற்சியால் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவர்கள் இந்து 56) TFT ly மண்டபமொன்றினை அமைக்க ஆலயத்திற்கு20 பேர்ச் நிலத்தினை வழங்கினார். இந்நிலத்தில் அப்போதைய கொழும்பு மாநகர மேயர் செ. கணேசலிங்கம் அடிக்கல் நாட்ட 1995ல் கடைத் தொடருடன் கூடிய அடித்தளம் கட்டி முடிக்கப்பட்டது. பின் 1996ல் ராமசாமி வீரபாகு எனும் பெருவள்ளல் தன் சொந்தச் செலவில் 40 லட்சம் ரூபாவரை செலவழித்து தன் தாயாரின்
ஞபகார்த்தமாக 1ம் மாடியில் சுப்பம்மாள் கல்யாண மண்டபத்தினை அமைத்து அதற்குரிய அனைத்துப் பொருட்களையும் வழங்கிப் பேருதவி புரிந்தார். கொழும்பிலேயே முதன் முதலாக மயூராபதி ஆலயத்தில் 88ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலை 1997ல் 2ம் மாடி அமைக்கப்பட அம்மண்டபத்தில்
 

சின்னராஜா என்பவரது உபயமாக அழகிய மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கப்பட்டது. 1998ல் கன்னியா குமரியிலிருந்து காசிவரை உள்ள அம்பாள் வடிவங்களும், அது தவிர்ந்த பல சிற்பங்களும் கூடிய மிக அழகிய சிற்ப மண்டபம் ஒன்று 3ம் மாடியில் அமைக்கப்பட்டது. இவ்வழகிய சிற்பமண்டபத்தைத் தென்னகப் பிரபல நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து 1999ல் முடிவானதும் நிறைவானதுமான 4ஆவது மாடி அமைக்கப்பட்டு அது அடியார்களுக்குரிய தியான மண்டபமாய் ஒதுக்கப்பட்டது.
இக்கலாசார மண்டபத்தில் பல கலை, இலக்கிய, பக்தி விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. நம் நாட்டைச் சார்ந்த கலைஞர்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தைச் சார்ந்த பல கலைஞர்களும் இந்நிகழ்ச்சியிற் கலந்து கொண்டு வருகின்றனர்.
1999ல் அறங்காவலரும் அடியார்களும் மனம் கொண்டு மீண்டும் திருப்பணிகளுக்காக ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. ஆலயம் முழுவதும் இடிக்கப்பட்டு 1 1/2 க் கோடி ரூபா செலவில் புதிய விமானத்துடன் கூடிய ஆலயம் அமைக்கப்பட்டது. இத்திருப்பணிகளின் போது ஏற்கனவே இருந்த கெளரி அம்பாள் விக்கிரகத்துடன் சந்திரசேகர பஞ்சலோக விக்கிரகம் செய்து இணைக்கப்பட்டது. அதனோடு இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பானுலிங்கத்துக்குத் தனிச் சந்நிதி அமைக்கப்பட்டது. அதுபோலவே சண்டேஸ்வரி உற்சவமூர்த்தியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும், ஐந்தடி உயரமான ஆஞ்சநேயரும், புதிய துர்க்கையும், பளிங்குக் கற்களால் ஆன சுற்றுமதிலும்,அம்பாளுக்கான வெள்ளிக்குடையும் அமைக்கப்பட்டு 2000.1.09 அன்று சாமி. விஸ்வநாதக் குருக்கள் தலைமையில் மிகப்பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இந்த 48 நாட்களும் கல்யாண மண்டபத்தில் பல நிகழ்ச்சிகளுடன் கூடிய பக்திவிழா அற்புதமாய் நடைபெற்றது.
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 33
, , , , , , , , , , , , , , , , | |
 

ッ"ッ。
**********』*』

Page 34
A.
இன்றைக்கு ஒரு தசாப்த கொழும்பு மாநகரில் மயூரா இடம் (Wella watte Spinning & Weavili செய்வதற்காகத் தமிழ்நாடு, கே வரவழைக்கப்பட்டு குடிமனைகள் வழிபாட்டுக்காக ஒர் அறை ஒது பெயரிடப்பட்டு வழிபாடு பூசைகள் வரையில் மண்டபத்திலே நடைபெ மரத்தடிக்கு மாற்றப்பட்டது. இரு அ
கண்ட் அடியார்கள் ஓர் சூலத்ை
தொடங்கினர். ஒர் தகரக்கொட்டிலு காலம் செல்ல 1985 ஆண்டில் ஆ எண்ணம் ஒரு சிலரின் மனதில் மண்டபமும் எழுப்பப்பட்டது. இக்கா சிவராத்திரி, நவராத்திரி, திருெ நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இப்படியாக வளர்ந்து வரு அடியேன் அம்பாளின் அழைப் கும்பாபிஷேகத்துக்கு நாள் நிய மூர்த்திகள் மகா பலிபுரத்திலிருந் குருக்களுமில்லை என்று வேத6ை கெளரவ செல்லையா இராசதுை தருவிக்கப்பட்டன. அடியேனுடைய விநாயகமூர்த்தி ஆலயப் பிரத அநுசரணையுடன் பிரதிஸ்டா சிரே கும்பாபிஷேகம் செய்வதற்கு முன் நட்சத்திரத்திலே 25, 11 1987 ட நடைபெற்று 48 நாட்கள் மண்ட
log,
 
 

பூரபதியிலே ரிரு ஆண்டுகள்
அறங்காவலர் பொன். வல்லிபுரம்
த்திற்கு முந்திய காலம். இலங்கையின் தலைநகராம் என்ற இடத்தில் ஆங்கிலேய ஆட்சியில் ஓர் நெசவாலை ng Mills) உருவானது. இத்தொழிற்சாலையில் வேலை ரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் அமைக்கப்பட்டு அமர்த்தப்பட்டார்கள். அவர்களின் |க்கப்பட்டு வரதராஜப் பெருமாள் ஆலயம்' என்று நடைபெற்றுக்கொண்டிருந்தன. 1977 தொடக்கம் 1980 ற்றுக் கொண்டிருந்த வழிபாடு அருகில் இருந்த அரச அரச மரங்களுக்கிடையில் ஒர் வேப்பமரமும் இருந்ததை தை நிறுத்தி, அன்னை காளி அம்மனாக வழிபடத் ம் அமைக்கப்பட்டு அன்னையை வழிபட்டு வந்தனர். சில அந்த இடத்திலே ஆலயம் அமைக்கவேண்டும் என்ற உதிக்க, ஓர் சபை உருவாக்கப்பட்டு சுற்று மதிலும், லங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூசையும், வம்பாவை காலங்களில் விஷேச ஆராதனைகளும்
ம் காலத்தில் தான் 1987ஆம் ஆண்டு ஆனிமாதம் |பை ஏற்று ஆலயத்தைப் பார்க்கச் சென்றேன். மிக்கப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால் து வந்து சேரவில்லை. கும்பாபிஷேகம் செய்வதற்கு னப் பட்டார்கள். முன்னாள் இந்து கலாசார அமைச்சர் ர அவர்களின் உதவியினால் விக்கிரகங்கள் எல்லாம் ப அழைப்பை ஏற்று கப்பித்தாவத்தை பாலசெல்வ மகுரு சிவழீ சண்முகரத்தின சர்மா அவர்களின் ான்மணி சாமி விஸ்வநாதக் குருக்கள் ஐயா அவர்கள்
வந்தார்கள். கார்த்திகை மாதம் பூர்வபட்ச உத்தராட தன்கிழமை மிகவும் கோலாகலமாக கும்பாபிஷேகம் லாபிஷேகமும் நடைபெற்றது. ஆலயம் வளருவதைப்
பதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 35
பொறுக்க முடியாத ஒரு சிலரினால் பலவிதமான இடைஞ்சல்கள் உண்டாக்கப்பட்டன. ஆலயத்தைச் சுற்றிப் பொதுவீதி இருந்தது. அதனால் சுற்று மதில் கட்டமுடியவில்லை. வாகனங்கள் போய் வருவதினால் அடியார்கள் நின்று கும்பிடவே முடியவில்லை. 1988ஆம் ஆண்டு வருடாபிஷேகத்துக்கு முன்பதாக எப்படியாகிலும் அந்த நிலத்தை எடுக்கவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மேன்மை தங்கிய பிரேமதாசா அவர்களை அணுகினேன். அதற்கு அன்று உதவியவர் மதுரையைச் சேர்ந்து திரு. ரஷிந்திர சாஸ்திரி அவர்கள். Aih நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அந்த நிலம் ஆலயத்துக்குக் கிடைத்தது. அந்த வழியால் போக் வரத்தை நிறுத்தும்படி ஜனாதிபதியால் இட்ட இதிர்வுக்கு மாறாக நீதிஸ்தலத்தில் வழக்குப் போட்டார்கள். போக்குவரத்தைத் தடைசெய்யும் கல்லுகளை எல்லாம் உடைக்கும்படி உத்தரவிடப்பட்டது. நாம் உயர் நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்தோம். அதில் நீதிக்கு வெற்றி கிடைத்தது. அந்த நேரம் எங்களுக்கு எந்த விதமான பணமும் பெற்றுக் கொள்ளாமல் இரவு பகலாக எங்களுக்காக நீதிஸ்தலத்தில் வாதாடிய வழக்கறிஞர்கள் திரு. சிவானந்தன், திரு. மகேந்திரன், திரு. திருமதி தவராசா ஆகியோரை மறக்க முடியாது. அதற்காக ஒத்துழைத்த திரு. மகாலிங்கம், திரு. லோகநாதன் ஆகியோரையும் மறக்கமுடியாது. பின்பு ஆலயத்தின் மேற்குச் சுவர் கட்டுவதற்கு மறுப்புத் தெரிவித்து மாநகர சபையிடம் முறைப்பட்டார்கள். அதையும் அம்பாளின் அருட்கடாட்சத்தினால் வென்றோம்.
இப்படியே ஆலயம் நடைபெறும் வேளையில் 06.07.88இல் அம்பாளின் உற்சவமூர்த்தி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அக்கால கட்டத்தில் பூரீ சிவபாலயோகி சுவாமிகளும் ஆலயத்துக்கு விஜயம் செய்து ஆசீர்வதித்தார்கள். 1988ஆம் ஆண்டில் சிறார்களுக்காக அறநெறிப்பாடசாலையும் பஜனை வகுப்பும், தையல் வகுப்பும், நடனப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டன. 1988இல் இருந்து இன்று வரை ஆடிப்பூர இலட்சார்ச்சனையும், பெளர்ணமித் திருவிழாவும் தங்குதடையின்றி நடைபெற்றுக்
மயூர மங்கலம்

கொண்டே வருகின்றது. இலங்கையிலே முதன்முதலாக பாற்காவடி, பாற்குடப்பவனி என்பதை ஆரம்பித்து வைத்ததே இந்த ஆலயம்தான் என்பது உலகறிந்த உண்மை. முன்னாள் இந்துக் கலாசார அமைச்சர் செல்லையா இராசதுரை அவர்களினால் ஆரம்பிக்கப் பட்டது.
ஆலயத்துக்கு முன்னாள் உள்ள நிலத்தில் 20 பேச் காணியைத் தந்து இந்துக் தலாசாரக் கட்டிடம் கட்டுவதற்கு உதவும்படி மறைந்த அமைச்சர் மூலமாக ஜனாதிபதி பிரேமதாசா இவர்களிடம் விண்ணப்பித்தோம். 12. 08, 91இல் ஆடிப்பூர பாற்காவடியை ஆரம்பித்து வைக்க வந்த ஜனாதிபதியிடம் விளக்கி கூறினேன். 1992இல் எங்கள் ஆலய்த்துக்கு 20பேச் காணியும், இஸ்லாம் சகோதரர்களுக்கு 20பேச் காணியும், கிறிஸ்தவ சகோதரர்களுக்கு 20பேச் காணியும் புத்த மதத்தவர்களுக்கு 30பேச் காணியும் வழங்கப்பட்டது.
11. 06, 92இல் இந்துக் கலாசார கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 08. 06. 89இல் உற்சவமூர்த்திகளான விநாயகப்பெருமான், சுப்பிரமணிய சுவாமி,பூரீரங்கநாதசுவாமி ஆகியோரின் நூதனப் பிரதிஸ்டா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
11. 12. 92இல் சிம்மவாஹினியின் நூதன பிரதிஸ்டாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 1993இல் மாசி மகத்திலன்று என் மனதில் தோன்றியது, அம்பாளுக்கும், விநாயகருக்கும் முருகப் பெருமானுக்குமாக 3 சித்திரத் தேர்கள் அமைக்க வேண்டும் என்ற எண்ணம். 92 நாட்களில் தேர்கள் உருவாக்கப்பட்டு, 22.07.93இல் வெள்ளோட்டம் விடப்பட்டு ஆடிப்பூரத்துக்கு அடுத்த நாள் முதன்முதலாக மும்மூர்த்திகளுக்கும் கொழும்பு மாநகரின் வீதியிலே வடம் பிடித்து இழுத்த தேர்ப் பவனியை அடியார்கள் கண்டுகளித்தார்கள்.
இந்துக் கலாசார கட்டிடம் வளர்ந்து வந்து 7 மாதத்தில் கீழ் மாடியை பூர்த்தி செய்து 19. 02, 93இல் அமைச்சர் கெளரவ தொண்டமான் அவர்களினால் கடைத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. 27.01.194இல் திரு. இராமசாமி வீரபாகு அவர்களினால் கட்டிக்கொடுக்கப்பட்ட முதல் மாடியில் உள்ள ‘சுப்பம்மாள் கல்யாண மண்டபம்' அமைச்சர்
כדוG

Page 36
தொண்டமான் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 2ஆம் மாடி உருவாக்கப்பட்டு 1995இல் இந்து சமய அறநெறிப்பாடசாலைக்கு அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் 3ஆம் மாடியும் 4ஆம் மாடியும் இந்துக் கலாசாரத் தெய்வீக மண்டபமாகவும், தியான மண்டபமாகவும் உருவாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. இரண்டு வருடத்திலே கலைக்கூடமும், தியான மண்டபமும் தமிழ்நாடு காரைக்குடி K.S. ரவிச்சந்திரன் குழுவினரால் நிர்மாணிக்கப்பட்டு 7.197இல் செவாலியர் கலாநிதி சிவாஜி கணேசன் அவர்களினால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
1997ஆம் ஆண்டில் பூரீ சக்கர மஹாமேரு யந்திரம் ஆலயத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்துக் கலாசார் கட்டிடத்துக்கு முன்பாக திரு. மனோசின்னராசா அவர்களினால் அன்பளிக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரம் 03. 10. 95இல் திறந்து வைக்கப்பட்டது. 95ஆம் ஆண்டிலே வன்னிக்கு அகதிகளுக்காக 3லொறியில் உணவு உடைகள் தேவஸ்தானத்தினால் அனுப்பி வைக்கப்பட்டன.
1999ஆம் ஆண்டுடன் 12 ஆண்டுகள் கழிந்துவிட்டது. இந்த நிலையிலேதான் அம்பாளுடைய ஆலயத்தைப் பாலஸ்தாபனம் பண்ணி, புனருத்தாரண வேலைகளை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது. 1987ஆம் ஆண்டு முதன்முதலாக கும்பாபிஷேகம் நடந்து இன்றைக்கு ஆலவிருட்சமாக வளர்ந்திருக்கும் தேவஸ்தானத்தை பாலஸ்தாபனம் பண்ணுவதற்கு 26. 01. 2000 புதன்கிழமை மகர லக்கினத்தில் பிரம்மழநீ சாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்கள் நாள் நியமித்து, அதன்படியே பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. தென்னாட்டில் தலை சிறந்த சிற்பிகள் திரு. ரவிச்சந்திரன் குழுவினரால் வேலைகள் நடைபெற்று 09.11.2000ஆம் திகதியில் மஹா கும்பாபிஷேகமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 12 வருடகாலமாக மூலமூர்த்தியாகிய முருகப்

பெருமானுக்கு வள்ளி தெய்வானை இல்லாமல் இருந்ததையும் நவக்கிரகமூர்த்திகளுக்கு வாகனங்கள் இல்லாமல் இருந்ததையும் இப்பொழுது பூர்த்தி செய்திருக்கிறோம். ஆதிபராசக்தியாக இருந்த அம்பாளையும் கைலாசநாதப் பெருமானாக இருந்த ஆதி சிவனையும் 'ஆதி சிவன் ஆதிசக்தி' என்று ஒரு மண்டபத்தில் பிரதிஷ்டை பண்ணியுள்ளோம். காஞ்சிபுரத்திலிருந்து சுயம்புலிங்க 6uιρ6)Jth, ஆவுடையாரோடு நர்மதா நதியிலிருந்து எடுத்த சிவனும் நந்தியும் பிரதிஸ்டை பண்ணப்பட்டுள்ளது. மஹாகாளி அம்மன் இருந்த இடத்திலே பூரீ துர்க்கை அம்மனை பிரதிஸ்டை பண்ணி, அரசமர அடியிலே கிழக்கு நோக்கியபடி மஹாகாளி அம்மனை உருவாக்கியுள்ளோம். புதிதாகப் பக்த ஆஞ்சநேயப் பெருமானையும், சண்டேஸ்வர மூர்த்தியையும் பிரதிஷ்டை பண்ணியுள்ளோம். கோபுரத்திலே உள்ள கலசங்கள் அத்தனையும் மூலஸ்தானத்துக்குள்ளே உள்ள குடையும் சுத்த வெள்ளியினால் செய்யப்பட்டடுள்ளன. அரச மரத்தைச் சுற்றிப் பித்தளைக் கவசங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இனிச் செய்ய வேண்டிய வேலைகளாவன : 1. வசந்த மண்டபம் வில்லு மண்டபமாக உருவாக்க
வேண்டும். 2. முன் மண்டபத்தை 3 அடி உயர்த்த வேண்டும். 3. ஆலயத்துக்கு முன்னால் உள்ள 9 கடைகளையும் அரசாங்க அநுசரணையுடன் எடுத்து மஹா மண்டபம் கட்டி பளிங்குக் கற்களினால் நிலம் அமைத்து வாசலிலே 41 அடி உயர கோபுரம் அமைக்க வேண்டும். 4. கெளரி அம்மன் சந்திரசேகரப்பெருமானுக்கு ஒர் சித்திரத்தேரும், சண்டேஸ்வரமூர்த்திக்கு ஒர் சித்திரத்தேரும் உருவாக்கிப் பஞ்சரதமாக வீதிவலம் வரச் செய்ய வேண்டும். 5. சிவாசாரியார்களுக்கும், ஊழியர்களுக்கும்
குடியிருக்க வீடு அமைத்துக் கொடுக்கவேண்டும்.
பூரத்தியூரீ பத்திரன்னி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 37
{-, () Gā
s.西 [(胡 ()
{표
()--
()3
{ā
s
{而 ()젊 Ú
[
[..
!
%
흑||
|?
V
***체-세레세빼.........–...) -.-.-.-).
 

HLHLHLHLHHLLLLHLHLeLeSLLLLL

Page 38


Page 39


Page 40
மயூராபதி அறங்காவலர்க முத்துசாமி முருகையா '
"பெ சிறந்தனவே பிராயத்திவி தந்தையர்கள் வளர்ந்து சிறு
gSEIL DEHEFILIUL அன்னதான பணம் சேர்த் கூடிச் செய்து மனதிலே உ இடையில் ஒ
கட்டி அன6 ஊற்றுவதும் நடத்துவது! திருவெம்பாவைப்பூசை செய்வதுமாக இருந்தோம். 1987 திரு. பெருமாள் சுப்பிரமணியமும் அருமைத்தம்பி தி 7 அங்கத்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பரிபா
கட்டும் பணியில் ஈடுபட்டது. அங்கத்தவர்கள் அனைவ பனம் சேர்ப்பது மிகவும் கடுமையாக இருந்தது. பூ திரு. சர்மா அவர்கள் முன்வந்து கொஞ்சப்பனம் சேர்த் என்று இந்து சமய அமைச்சிற் போய்ப் பதிந்து பத்திர 1987ஆவணி மாதம் இரு இளைஞர்களின் ஆலோசனை ஆலோசித்தோம். அன்னார் எடுத்த முயற்சியினால் மிக ஆலயம் மேற்கூரை போட்டளவில் நின்றுவிட்டது. அ கொண்டு ஐயா வல்லிபுரம் அவர்களிடம் எல்லாப் பெ நாட்டுக்கும் ஒருவன்தான் தலைவன். அதன்படி பளிட பொறுப்பு நிர்வாகப் பொறுப்பு கலாசாரப் பொறுப்பு நித் ஏற்று 1988ஆம் ஆண்டளவிலிருந்து கவனித்து வ அனேகமானோருக்கு ஊழியம் செய்வதற்கும் இடம் பொறுப்புணர்ச்சியும் மேலோங்க ஐயாவின் ஆலோச:ை இன்று ஆலயமும், கலாசார, தியான மண்டப மாமனார் திரு. சுப்பிரமணியம் அவர்களின் தொண்டை நின்று உழைத்த பெருமகன்.
குறுகிய மனப்பான்மையும், சுயநலமும், போட் வளர்ச்சியடையும். இது நான் அனுபவத்தில் கண்ட உ
வாழ்க தமிழ்
மயூரபதி மு:
 

H ЗbбOJJ(UpДD യൂ
H H ளின் தொண்டும் செயலாளர், முகாமையாளர்)
ற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி என்பது சான்றோர் வாக்கு. அதற்கமைய சிறு ருந்தே தொண்டு மனப்பான்மையோடு தாய் ரினால் வளர்க்கப்பட்டேன். மயூரா பிளேசிலே பிறந்து பிள்ளைகளாக இருந்த காலத்திலே பெரியோர்களினால் டரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்கு நிதிசேர்ப்பது, த்துக்கு அரிசி சாமான்கள் சேர்ப்பது, சித்திரைக்கஞ்சிக்கு துக் கொடுப்பது போன்ற செயல்களை நண்பர்களோடு து வரும்பொழுது, 1985ஆம் ஆண்டு பெரியோர்களின் தித்த எண்ணப்படி அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்கும் ர் சூலத்தை வைத்து வணங்கிய காலத்தில் நாம் ஒன்று னை பத்திரகாளி அம்பாளுக்கு சித்திரைக்கஞ்சி , மஹாசிவராத்திரி தினத்திலே இசை நிகழ்ச்சிகளை ம், திருவெம்பாவை காலத்தில் பஜனை செய்து இல் அரசமர அடியிலே ஓர் சிறு ஆலயம் அமைப்பதற்காக ரு. கிருஷ்ணனும் ஓர் சபையை உருவாக்கினார்கள். ாலனசபை பின்பு 21அங்கத்தவர்களாக உருமாறி ஆலயம் ருமே வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் என்பதனால் அந்த நேரத்தில் பூசைகளைச் செய்து கொண்டிருந்த தார்கள். அத்தோடு ஆலயமும் அவர்களுக்கே சொந்தம் மும் பெற்றுக்கொண்டார்கள். இதை அறிந்த பின்தான் ாயின் பேரில் ஐயா திரு. வல்லிபுரம் அவர்களைச் சந்தித்து ண்டும் ஆலயம் பரிபாலன சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. ப்பொழுது நாம் ஒன்று கூடி ஆலய வளர்ச்சியை மனதிற் ாறுப்புகளையும் ஒப்படைத்தோம். ஒரு விட்டுக்கும் ஒரு ாலன சபையோர் அனைவரது ஒத்துழைப்போடும் நிதிப் திய நைவேத்தியப் பொறுப்பு அனைத்தையும் அவர்களே ருகின்றார்கள். பரிபாலன சபையில் உள்ளவர்களால், அளிக்கப்பட்டது. அதனால் கடமை உணர்ச்சியோடு எப்படியே நாம் நடந்து வருகின்றோம். மும் வளர்ந்து வரும் பொழுதில் மறைந்த தலைவர் எனது யும் மறக்க முடியாது. அவர், ஐயாவுக்கு வலது கரம்போல்
டி பொறாமையும் இல்லாதொழிந்தால் எந்த ஸ்தாபனமும்
S GS
ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக் மலர் - 2000
வளர்க ஆத்மீகம்

Page 41
திரகாளி
அனனை பத
ரி அம்பாள
எழுந்தருள்
 
 

ருட் கோலங்கள்
பின் அ
ங்கள்
கோலங்
ரின் எழிற்

Page 42
* டிதவளதானப
 

புதுப்பொலிவு

Page 43


Page 44
கும்பாபிஷேகக்
 
 


Page 45
அனாதிமலமுத்த சித்துரு அனாதிமல பெத்தர்களாகிய ஆ ஆலயத்தில் நிறுவப்படும் விநாயக அபிகூேடிகித்தலே கும்பாபிஷேகமா
'கும்பாபிஷேகம் என்ப சொல்லுவார்கள். இது பிரதிஷ்
அவையாவன,
1. ஆவர்த்தம், 2. அனாவர்
ஆவர்த்தம் : புதிதான ஓர் இ பூஜித்துப் புதிதாகக் கோயில் கட் மூலஸ்தானத்தில் இருக்கும் மூர்த்
அனாவர்த்தம் : வெகுகாலத்
சீர்குலைந்தும் இருந்து, முன்போல் செய்தலாம்.
புனராவர்த்தம் : கர்ப்பக்கிரக பழுது ஏற்பட்டாலும், அட்டபந்த விக்கிரகங்களில் பழுது நிகழ்ந்த ஆலயத்தைப் புதுப்பித்து மூலஸ்தா
அந்தரிதம் : ஆலயத்தில் சோ காரணமாக மூர்த்தியின் பிரத்தி ஏற்பட்டால் அவைகளைத் திருத்தி நாள், நட்ஷத்திரம் பார்க்க வேண்டி
இனி கும்பாபிஷேகத்தின் நோக்கலாம்.
 
 

பிஷேக விளக்கம்
நவாகிய பரம் பொருள் கற்பனை கடந்த சோதியாகினும், ன்மாக்கள் வணங்கிப் போக மோக்ஷங்களை அடைய ரை திருவுருவில் கருணையே உருவாகும் படி பிராத்தித்து ம்.
து குட முழுக்கு. “குடநன்னீராட்டு விழா” என்றும் டை என்றும் கூறப்படும். இது நான்கு வகைப்படும்.
த்தம், 3. புனராவர்த்தம், 4. அந்தரீதம்
இடத்தில் விநாயகரை வைத்துப் பாலப்பிரதிஷ்டை செய்து .டி, பாலாலய மூர்த்தியைக் கும்பத்தில் எடுத்து, பின்னர் தியில் சேர்த்து அபிஷேகம் செய்வதாம்.
ந்துக்கு முன் கோயில் கட்டி, பூஜையில்லாமல் அழிய விட்டும், அவைகளைத் திருத்தி ஆலயம் கற்பித்துக்கும்பாபிஷேகம்
ம், விமானம்,பிரகாரம், கோபுரம், பலிபீடம் முதலியவைகளிற் னத்தில் பழுது உண்டானாலும், விமானத்தில் உள்ள ாலும், வர்ணம் அழிந்து இருந்தாலும், பாலாலயம் செய்து ானத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தலாம்.
ரன், சண்டாளன், நாய் முதலியன உட்சென்று தீண்டியதன் யங்கம், உபாங்கம் போன்றவைகளில் ஏதாவது பழுது உடனே செய்வதாகும். இதில் அந்தரீதப் பிரதிஷ்டைக்கு டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கிய பகுதிகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும்

Page 46
அனுஞ்ஞை இறைவணக்கம் செய்து சர்வசாதகரிடத்திலும், விநாயகர் இடத்திலும் நாள் குறித்த காலத்தில் இந்த மகத்துவமான கும்பாபிஷேகத்தை செய்ய உத்தரவு தர வேண்டும் என்று வணங்கி உத்தரவு கேட்பதாம்.
தனபூஜை புண்ணிய வசத்தால் கிடைத்த திரவியத்தை பூஜை செய்தலாகும்.
திரவிய விபாகம் : பூஜை செய்த திரவியத்தை ஒருபாகம் ஆலயக் கட்டடவேலைக்கும், இரண்டாவது பாகம் நித்திய பூஜை, மாசாந்த விசேட நட்சத்திர பூஜை, உற்சவம், ஆபரணாதி கட்கும் இராமாதி வாங்கவும், மூன்றாவது பாகத்தை பதினொருபாகம் செய்யவும் வேண்டும்.
ஆசாரியவர்ணம் : பிரதான ஆசாரியரையும், சர்வசாதகரையும் வணங்கி இத்திரவியத்தைக் கொண்டு மகாகும்பாபிஷேகம் செய்து இறையருளைப் பெற்றுத்தர வேண்டும் என்று எசமான் குருவை வழிபடுதலாகும்.
கணபதி பூஜை எவ்வகையினராயினும் முதலில் விநாயகரை வழிபாடு செய்தல் வேண்டும், செய்யாவிடில் அவர்களின் காரியத்தை, இடையூறு செய்! என்று இறைவன் கட்டளை என்பது என்னரேயாயினும் என்ற திருவிளையாடற் புராணத்தில் விளங்குகின்றது. ஆகவே, இங்கு தொடங்கிய மகாகும்பாபிஷேகம் இடையூறு இன்றி நிறைவேற விநாயகப் பெருமானுக்குப் பூஜை, அபிஷேகம், ஹோமம் செய்து முதலில் பிரதான சிவாசாரியர் வழிபடுதல்.
கிராமசாந்தி :
சர்வலோக இதம் புண்ணியம் வட்சியே கந்து சடானன் கிராம நூதன காலேது ஷேத்திரவா மந்திரேவிவா பிரதிஷ்டோத்துவ காலேச பூஜாம் கருத்துவாவிசேஷவதா" என்று காரணாகமம் கூறுகிறது. இவ்வாறு சகல லோக சுகத்துக்கும், புதிதான பட்டினம், கிராமங்களில் உள்ள அசுர, ராட்சத, பிசாச, பிரமராட்சதர்களைத் திருப்தி செய்து சந்தோசப்படுத்தி, கிராம அதி தேவதையான வைரவரைப் பூஜித்தலாம்.
І0

பிரவேசபலி : நாம் பிரவேசம் செய்து மகா கும்பாபிஷேகம் செய்யும் இடத்தில் உள்ள எட்டுத் திக்குகளிலும் வசிக்கின்ற இயக்கர், இராட்சதர், பிசாசர், பிரம இராட்சதர், பூதர், காளி, சரளி, வைரவர் முதலிய தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை முறையே "கடல், மலை, வனம், நதி, மயானம் முதலிய இடங்களிற் சென்று சுகமாய் வீற்றிருங்கள். இது இறைவன் கட்டளை"எனக் கூறித் திருப்தி செய்தலாம். இது மகா கும்பாபிஷேகம், திருவிழா, புதுவீடு குடிபுகல் போன்ற காரியங்களிற் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
திசாஹோமம் : நான்கு திக்குகளில் முறையே பாசு பதாஸ்தம், அஹோராஸ்திரம், பிரத்தி யங்கிராஸ்திரம், சிவாஸ் திரம் முதலியவர்களைப் பூசித்துக் காவல் செய்யும்படி கட்டளை இடுதலாம்.
இரட்சோக்கிரஹோமம் : அசுர, ராட்சதர்களின் தொல்லை நீங்குவதற்காக மூன்றுமேடைகள் அமைத்து, நடுவில் கும்பம் வைத்து, அதில் இரட்சோக்கிர தேவதையை வடவாமுகாக்கினிக்குச் சமமாகப் பாவித்துப்பூசை செய்து, அதன் தென்புறத்தில் வெள்ளை வஸ்திரம் இட்டு, தேங்காய் ஒன்று வைத்து, வடக்குப் பக்கத்திற் சிவப்பு வஸ்திரம் வைத்து, அதன் மேல் வாள் ஒன்று வைத்து, தேங்காயில் சிவனையும் வாளில் கட்கேசுவரனையும், வாளைச்சுற்றி அசிதாங்கபைரவர், குருபைரவர், சண்ட பைரவர் முதலிய எண்மரையும் பூசித்து, அவர்களுக்கு உள்ள திரவியங்களாலும் சமித்தாலும் ஹோமம் செய்து, சம்யோசித்துக் கும்பஜலத்தை ஆலயத்தைச் சுற்றித் தெளித்தலாம்.
ஆயுஸ் கர்மம் : குருமார் செய்துகொள்ளும் தசவித ஸ்நானமாம்.
நவக்கிரகம் : கும்பாபிஷேகத்தால் உலகத்துக்கு அதிக மழையாலும், மழையின்மையாலும், விரோதிகளாலும், துஷ்டர்களாலும் வரும் துன்பம் நீங்கவும், எல்லாப் பிராணிகளின் பயம், நோய், பிணி நீங்கவும் சூரியன் முதலிய நவக்கிரகங்களைப் பூசித்து வணங்கி ஹோமம் செய்தலாம்.
வாஸ்து சாந்தி பூமியானது அசத்தாக, ஜடசம்பந்தம் உள்ளதனால் அதை நீக்கிச் சத்தாக உண்டாவதற்குச்
பூரபதி பூணூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 47
செய்வது. அசுத்த சொரூபமான பூமியை பாலாக்கினியால் தகித்துப் பின்பூமிக்கு அதிபதியான பிரமாவின் மூச்சுக்காற்றினாற்சோதிருபமாக்கிச் சுத்தம் செய்வதாம். நீற்றுப்பூசனிக்காயைப் பூமியின் வடிவமாகத்தியானித்து, அதன் விதைகளை அண்டங்களாக நினைத்து, எல்லாவற்றையும் ஹோமம் செய்து, பின் பூமிக்கு அதிபதியான பிரமாவின் கட்டளையினாற் பரிசுத்தமானதாகப் பாவித்தல் வாஸ்து சாந்தியாம். இச்சாந்தியினை கும்பாபிஷேகம், பாலஸ்தாபனம், யாக மண்டப கல்பனம், கோபுரம், தடாகம், வீடு, உற்சவம் போன்ற இடங்களில் அவசியம் செய்ய வேண்டும்.
கோபூஜை பசுமாடு, கன்று கட்டுதலாகும்.
விற்பிரபோசனம் வேதம் அறிந்த பிராமணர் “பிருதுவி முதல் சுத்ததத்துவம் வரையுள்ள எல்லாத் தத்துவங்களையும் சுத்தமாக்குகின்றேன். ஹோமம் செய்கின்றேன். இது நன்கு சுத்தி அடையட்டும்” என்று சிதாக்கினியில் ஹோமம் செய்கின்ற பாவனையில் போசனம் செய்வித்தலால் அந்த இடம் சுத்தியாகும்.
மிருத்சங்கிரஇனம்: கிராமத்துக்குச் சாந்தியையும் தேச நன்மையடைவையும் நினைத்து, பூமாதேவியைப் பிரார்த்தித்து, இந்தப் பூமி கண்டங்களாகப் பிரிந்து இருப்பதால் ஒவ்வொரு கண்டத்திற்கும் பூசை செய்து, பிரார்த்தித்து, ஞானயாகம் செய்ய முளையிடுவதற்காக மண்வெட்டியைச் சிவாஸ்திரமாகப் பூசித்து, பூமிதேவியின் வயிற்றில் மூன்று அல்லது ஐந்து முறை மண்ணை எடுத்தலாம். எடுத்த தோஷம் நீங்க அந்த இடத்திற்கு வேறு மண் போட்டுச் சப்தவாரிதி கும்பத்தால் அபிஷேகம் செய்தலாம்.
அங்குரார்ப்பணம் : முளையிடுதல்; இந்தப் பூமியானது முன்னர் அமிர்தத்தால் நனைந்து சுத்தமானது. ஆகையால் உலகச் சேமத்தின் பொருட்டு நெல் முதலிய நவதானியங்களைப் பாலில் ஊறவிட்டு 'ஒசதி சூக்தம் செபித்துச் சந்திரனை வணங்கி முளையிடுதலாம். ቌ”
ரஷாபந்தனம் காப்புக்கட்டுதல்; குழந்தையின் வருத்தம் தீர மாதா மருந்துண்ணுதல் போல, உலக ஷேமத்திற்காக ஆசாரியர் எடுத்த காரியம் செவ்வனே நிறைவேற இடையூறுகள் தடுக்கா வண்ணம்

இறைவியின் கர்ப்பநாடியில் நின்றும் உண்டானதாக நாகராசனைப்பூசித்துக் கையில் கங்கணம் கட்டுதலாம்.
இரத்தினநியாசம், நைநோன்மினனம், தானியாதிவாசம், சயனாரோகணம், கிராமப்பிரதட்சணம்: இவைகள் புதிதான மூர்த்திகளுக்குப் பஞ்சபூத சம்பந்தமான தத்துவங்கள் ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும் கிரியைகளாம். அன்றியும் இறைவன் இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங்காற்றுமாகி” என்ற தேவாரத்தில் இருந்து இறைவடிவத்தை உண்டுபண்ணும் குறிப்பை உணர்த்துவதும் ஆகும்.
IIITF/76/7 தானியாதி ஸ்தாபனம்: யாகசாலையிற் சப்ததாதுக்கள் மயமான சப்த தானியங்களைப் பரப்புதல்.
சூரியகாந்தி சங்கிரகணம் : ஞானாக்கினிக்கு சூரிய காந்தத்தில் இருந்து அக்கினியை எடுத்தல்.
ருத்விக் சாதகாதிவரணம் பிரதான குண்டத்தைத் தவிர ஏனைய குண்டங்களுக்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் ஏற்ற குருமாரையும் சாதகர்களையும் உபசாதகர்களையும் நியமித்தல்.
பிரசன்ன அபிஷேக பூஜை எங்கும் நிறைந்த மூர்த்தியைப் பூஜிப்பதற்காகத் தமக்கு நேர்முகப்படுத்தல்.
கடஸ்தாபனம் குடத்தைச் சுத்தமாக்கிச் சப்ததாதுக்களும் ஜீவனும் உண்டாக்குவதற்காகக் கும்பத்தின் அடியில் ஆன்மதத்துவத்தையும் பிரமாவையும், கும்ப நடுவில் வித்தியா தத்துவத்தையும், விஷ்ணுவையும், கும்ப நுனியிற் சிவதத்துவத்தையும், ருத்திரனையும், கும்பத்தில் நவசக்திகளையும், மூவிளை நூலிற் சரஸ்வதி, இலக்குமி, ரெளத்திரி ஆகியோரையும், கும்பத்திற்குப் பிடிக்கப்படும் தூபத்தில் அக்கினி சக்தியையும், தீர்த்தத்திற் கங்கை முதலிய புண்ணிய நதிகளையும், மத்தியில் வருணனையும், நவரத்தினங்களில் வாமை முதலிய நவ சக்திகளையும், தங்கத் தாமரைப் பூவிற் சதாசிவத்தையும், வாசனைத் திரவியங்களிற் சப்தமாதுருக்களையும் பூசித்துக் குடத்தில் இட்டு மாவிலையைச் சடையாகவும், தேங்காயைச் சிரசாகவும், கூர்ச்சத்தை முடியாகவும்,

Page 48
வஸ்திரத்தைத் தோலாகவும், ஜெஞ்ஞோபவிதத்தைப் பஞ்சப்பிரம மந்திரமாகவும் பூசிப்பதாற் கும்பமானது சர்வதேவதா சொரூபமாகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன.
கலாகர்சனம் கலைகளை இருத்த்லாம்; சடத்துவன்னியாசமும் கும்பத்திற்குச் செய்ய வேண்டும். சடத்து வானது பரமேஸ்வரர் இருக்கும் ஸ்தானத்தை அடைதலுக்கு உரிய வழியாகும். இதில் சர்வ வியாபகராக உள்ள பரமேஸ்வரர் இந்த ஆறு அத்துவாக்களிற் கலந்தும் இருக்கிறார். பரமேஸ்வரர் சக்தி சொரூபர்; அதீதர்; சக்திக்கும் சக்தனுக்கும் பேதமின்மை ஆதலால் அங்காங்கிபாபம் என்றும் கூறப்படுகிறது. ஆகவே சக்தியின் இடத்தில் இருந்து கலையும் கலையில் இருந்து தத்துவமும், தத்துவத்தில் இருந்து புவனமும், புவனத்தில் இருந்து வர்ணமும், வர்ணத்தில் இருந்து பதமும், பதத்தில் இருந்து மந்திரமும் உண்டாயின. கலையில் தத்துவம் அடங்கி யுள்ளதாதலின் தத்துவம் முதல் மந்திரம் இறுதியாக ஒன்றில் ஒன்று அடங்கி இருந்து திரும்பவந்ததாதலின் இந்தக் கடத்துவாக்களைச் செய்ய வேண்டும் என்பதாம். அன்றியும் கலா நியாசத்தால் சர்வஞ்ஞசக்தியும், தத்துவ நியாசத்தால் நித்திய திருப்தியத்துவமும், புவன நியாசத்தால் அநாதி போதத்துவமும், வர்ணநியாசத்தால் சுவதந்திரத்துவமும், பதநியாசத்தால் அலுப்த சக்தித்துவமும், மந்திர நியாசத்தால் அநத்த சக்தியத்துவமும் சித்திக் கின்றமையால் அவசியம் செய்ய வேண்டும்.
யாகசாலைப்பூஜை யாகசாலை கலாமயமாக விளங்குகிறது. நிவிர்த்தி முதலிய நான்கு கலைகளும் நான்கு பக்க நிலைகளாகவும், இதற்கு நான்கு கலசமும், இவைகளுக்கு இருபுறங்களிலும் நந்தி முதலிய எண்மர் வாயில் காப்பாளராகவும், கிழக்கு முதல் அட்ட திக்குகளில் கீழ், மேல், ஆகிய பத்துத் திசைகளில், இந்திரன் முதல் விஷ்ணு ஈறாக தசலோக பாலகர்களும் அக்கினிக்கு வடக்கில் சிவ சூரியனும், நிருதிக்குக் கிழக்கில் யாகபலனைத் தரும் வாஸ்து பிரமனும், வாயுவுக்குத் தெற்கில் உத்தமப்பாக மண்டப ரூபமாகிய மகா லட்சுமியும், வாயுவின் வலது புறத்தில் யாகத்தில் ஏற்படும் விக்கினங்களை நீக்கும் விநாயகரும், ஈசானத்துக்கு மேற்கில் எதையும் உத்தரவு கேட்டுச் செய்ய சதாசிவம் முதல் சப்த குரு மூர்த்திகளையும் பூசிப்பதற்கு, 27 கலசங்கள் வைத்து ஞானவாள்
10լ

ஏந்தியபடியாகேஸ்வரன், யாகேஸ்வரியையும் கலசத்தில் அமைத்து, நவகுண்டங்களோடு விளங்குகின்றமையால் யாக சாலை கலாமயமாகும்.
நவகுண்டம் : சிவபெருமானுக்குச் சொருபம், தடத்தம் என இரு வடிவங்கள் உள்ளன. சொரூபத்திருமேனி சுயப்பிரகாசத் திருமேனியாகும். அது உலகத்தைக் கடந்தவடிவம். தடத்தவடிவம் என்பது உலகத்தோடு கலந்த வடிவமாம். இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு காற்று, நீள்விசும்பு, நிலா, பகலோன், இயமானன் என்னும் எண்வகைப் பொருளிலும் கலந்தது. இதனால் இறைவனை எண்வகை உருவில் வைத்து வணங்கவேண்டும் என்பது பெற்றாம்.
நிலம் : பிருதுவியாகும். இது சதுரமான வடிவம்; அதைக் குறிப்பது கிழக்குத் திக்கில் அமைந்த நாற்கோண வடிவமான குண்டமாம். Sii அப்பு. இதன் வடிவம் பாதிச் சந்திரனான பிறைவடிவம்: அது தெற்கில் உள்ள பிறை வடிவமான குண்டமாம். நெருப்பு : தேயு, இதன் வடிவு முக்கோணம். இது தென் மேற்கு மூலையில் உள்ள முக்கோண வடிவம். வாயு : இது அறுகோணவடிவம். இது வட மேற்கு
மூலையில் அமைந்திருக்கிறது. ஆகாயம் இது வட்டவடிவினது: மேற்குத் திக்கில்
உள்ள குண்டத்தில் அமைந்திருக்கிறது. சூரியன்: இது தாமரைப்பூ வடிவம்: இது வடக்குத்
திக்கில் அமைந்திருக்கிறது. சந்திரன் இது எண்கோணவடிவினது: இது
வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. இயமானன் என்னும் ஆன்மா மாயா தத்துவத்தைக் குறித்து, அரசிலை வடிவாய்தென்கிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது.
இவை எட்டுத்திக்கிலும் அமைய ஈசானத்திற்கும் கிழக்கிற்கும் மத்தியில் வட்டவடிவமான பிரதான குண்டத்தில் சுயம்பிரகாச மூர்த்தியாய் அமைந்துள்ளதுதான் இறை வடிவம். இறைவன் மேலே குறித்த எட்டு வடிவமாகிய உலகத்தில் கலந்து இருக்கிறான். ஆகவே அவரை இந்த எட்டு வகையான குண்டத்தில் வைத்துப் பூஜித்து ஓமம் செய்து வணங்குகின்றோம். இது எப்படியெனில், நமது அருவமான உயிரை உருவமான உடம்பில் வைத்து அனுமானித்துக் காண்பது போல இறைவனை வழிபாடு
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 49
செய்தலே நவ குண்டங்களின் அமைப்பாம். இன்னும் ஈசானம் முதல் சத்தியோசாதம் இறுதியாக உடைய பஞ்சப்பிரம மந்திரங்களும் மூலமந்திரமும் சிவபெருமானுடைய எல்லாம் அறியும் தன்மை, வரம்பில் இன்பம் உடைமை, இயல்பாகவே பாசங்களில் நீங்கிய தன்மை, தன்வயத்ததாகும் தன்மை, பேரறிவுடைமை, பேர் அருளுடைமை அளவிலாற்றல் உடைமை, தூய உடம்பினனாதல் முதலிய எண் குணங்களும் பிரதான குண்டத்தில் இறைவனுக்குப்போல் அமைந்து விளங்கும். மேலும் பிரதான வேதிகையில் அமைந்தாசனம் முதல் உள்ள ஆசனங்கள் மேல் சர்வ தேவதா சொரூபமான இறைவனை வைத்து வணங்கும் இடமும் சிறந்த uTSFIT60soGuujith.
பதவின்யாசம் மூலஸ்தானத்து இறைவனை ஸ்தாபிக்க ஏற்படுத்தும் இடத்தைக் குறித்தல். இதை "ஆசார்யசில்பின சார்த்தம், பிரவி சேத்கர்ப கேககம்” என்ற காரணாகம விதிப்படி, ஆசாரியரும் சிற்ப சாஸ்திரியும் சேர்ந்து சிவன், அம்மாள், விநாயகர் முதலிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்வதற்குரிய இடத்தை வகுத்தலாம்.
ஸ்தூபிஸ்தாபனம் : அதிஸ்டானம் முதல் (பட்டிகை) ஸ்தூபிவரி யந்தமும் முறையே ஆறு அத்துவாக்களும் அமைய தூல லிங்கமாக அமைந்த பத்மத்தின் மேல் ஸ்தூபியை வைத்தலாம்.
தீபஸ்தாபனம் இறைவன் சோதிவடிவினன் அவனைச் சோதி வடிவாக வணங்குவதற்காக வைக்கப்படுவது தீபஸ்தாபனமாம். "இல்லக விளக்கது 9056ir Gla. Otiugl.................................... நல்லகவிளக்கது நமச்சிவாயவே” என்னும் தேவாரம் இங்கு நினைவு கூரத்தக்கது.
இரத்தினஸ்தாபனம் : நவரத்தினம், நவலோகம் முதலிய வஸ்துக்களை, ஆரோக்கிய, வீரிய, பிரபா சக்திமயமான் திரவியங்களைப் பீடத்தின் மேல் இட்டு, இந்திராதி லோக பாலகர்களைப் பூஜித்துப் பத்மாசனம் வரை பூசித்தல் இரத்தினஸ்தாபனம் ஆகும்.
இயந்திரஸ்தாபனம்: கோடுகளும், கோணங்களும் இறைவனின் மூல பிராசாத மந்திரங்களும் எழுதிப் பூசிக்கப்பட்ட யந்திரத்தை உரிய இடத்தில் வைத்தலாம்.

இது இறைவனுக்கு அருள் சக்தியை ஊட்டுவதாம்.
பிம்பஸ்தாபனம் : மூர்த்திகளை முறைப்படி வைத்தலாம்.
அஷ்டபந்தனம் : இறைவனின் அம்சமாகிய அஷ்ட மூர்த்திகளின் அருள் பெற்று, அணிமாதி அஷ்ட சித்திகளும் சித்தியடைந்த நிலையில் ஞானகிரியா சக்தியாகும். சங்கநிதி, பதுமநிதி, இரண்டும் தோன்றி பரம்பொருளின் ஆணையால் சாம்பிராட்சிய லட்சுமியும், அதில் இருந்து பயன்தரும் வகையில் தனலட்சுமி, தான்ய லட்சுமி, வித்தியா லட்சுமி, கீர்த்தி லட்சுமி, செளபாக்கிய லட்சுமி,வீர லட்சுமி, ஜெயலட்சுமி, சந்தானலட்சுமி,ஈறாக அஷ்ட லட்சுமிகளும் உருக் கொண்டு உயிர்களை உய்விக்கும் வண்ணம் உள்ள கதிகளைத்தருவது அஷ்டபந்தன சமர்ப்பணமாம்.
சொர்ணபந்தனம் தங்கத்தால் செய்வது
தைலாப்பியங்கம் விநாயகருக்கு தைலத்தினால் (எண்ணெய்) ஆசாரியாரும், சிற்ப சாஸ்திரியாரும், அன்பர்களும் சாத்துதல். அன்பர்கள் தங்களிடத்தில் உள்ள ஆணவமல சம்பந்தத்தாலும், திரிகரணங்களாலும் ஏற்படும் குற்றம் நீங்கிகத்தி அடைதற்பொருட்டு, எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான நல்எண்ணெய்யை சுவர்ணத்தினால் தொட்டு இறைவனின் சிரசு, கண்கள், மூக்கு, செவி, தொப்புள், பாதம் முதலிய எல்லா அங்கங்களும் குளிரும்படி நிறையச் சாத்துவதாம்.
பிம்ப சுத்தி தீட்சாயினர்கள் முதலானோரால் பரிசிக்கப்பட்ட தோஷநீக்கத்திற்காகவும், உஷ்ண சாந்திக்காவும், பிம்பத்திற்குச் சுத்தம் உண்டாவதற்கு உதகம், கந்தம், புஷ்யம், பத்திரம்,காசாயம், மிருத்தி, பீஜம், பல்லவம், இரத்தினம், லோகம், தாது, அஸ்திரம், ஒசதி, கவ்வியம், குசம், சிருங்கம் முதலிய 16 வகையான திரவியங்கள் நிரம்பிய கலசங்களைப் பூசித்து, ஓமம் செய்து பின்னர் மூர்த்திக்கு முறைப்படி பஞ்சாமிர்தாதி முதலியவைகளால் அபிஷேகம் செய்து அலங்கரித்துப் பூசித்தலாம்.
பிரம்பிரஷாபந்தனம் : கும்பாபிஷேக நிமித்தம் மூர்த்திகளுக்குக் காப்புக் கட்டுதலாம். பூர்வசந்தானம் மூர்த்திக்குப்பக்கத்தில் ஆசாரியர்,
C3D

Page 50
சாதகர் உட்கார்ந்து ஆதார சக்தி முதல் பஞ்சமாவரணம் வரை பூசித்து, கலை முதல் மந்திரம் இறுதியாகச் சங்கோபாங்கமாக அவயவ பேதங்களாய் பிம்பத்திற்கு தர்ப்பை நுனியால் நியாசம் செய்தலாம்.
விசேட திரவிய ஹோமம் : இறைவனை அக்கினி வடிவிற் பூசித்தலாம். சகலவிதமான ஹோமத் திரவியங்களையும் இறை மயமாக்கி அதற்குரிய மந்திரங்களோடு பஞ்சப்பிரம மந்திரமும் வியர்கிருதியும் சேர்த்துச் சொல்லி அக்கினியில் ஹோமம் செய்தலாம்.
ஸ்பரிசாகுதி : யாகத்தில் உள்ள மூர்த்தி, மூர்த்தீஸ்வரன், மந்திரம் ஆகியவைகளைப் பூஜித்து ஹோமம் செய்த முறைப்படி மூல மூர்த்தியிடம் சென்று அந்தந்த ஸ்தானங்களில் முறையே தொடர்புபடுத்தலாம்.
ஸ்ரோத்திர வந்தனம் ஆசாரியர் மூர்த்திபர்கள் செய்த தொடர்புகளிற் கூடுதல், குறைவு ஏற்பட்டால் அவைகளைக் கருணையினாற் பூர்த்தியாக்கி அருள் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தலாம்.
ஆசாரிய பூஜை குருமாருக்கும், சர்வ சாதர்களுக்கும் உடை, உத்தரீயம், உஷ்ணிசம், உருத்திராகூடிம், மோதிரம், விபூதிப்பை முதலிய உபசாரங்கள் கொடுத்து மகிழ்வித்தலாம்.
அக்கினி சம்யோஜனம் பிரதானகுண்டத்தில் பூஜை செய்து எடுத்த அக்கினி மூர்த்தி முதலானவைகளைப் பிரதான ஆசாரியர் மூலம் குண்டத்திற் சேர்த்தலாம்.
பூரணாகுதி : ஒமத்தைப்பூர்த்திசெய்வதற்காகச் செய்யப்படும் கிரியை.
தீபாராதனை சோடசோபசார விசேட பூசையாம்.
வேத கோசம் : வடமொழி வேதம் முதலியன ஒதல், தமிழ் வேதம்.
ஸ்தூபிகும்பாபிஷேகம் விமானங்களில் உள்ள ஸ்தூபிக்கு அபிஷேகம் செய்தல்.
C32d மயூ

மகாகும்பாபிஷேகம் அர்ச்சகர், ஸ்தானிகர் ஒருவரை நந்தி கணத் தலைவராகப் பூஜை செய்து, அவருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து அலங்கரித்து, அவரது சிரசின் மீது பிரதான குடத்தை வைத்து, சர்வ சாதகர், பிரதான குரு, மூர்த்தியர்கள் முதலியோர் கும்பத்தை தொட்டுக் கொண்டு, எஜமான்கள், பக்த ஜனங்கள் சூழ்ந்து புஷ்பாஞ்சலி, வேதம், தேவாரம், தோத்திரம், சங்கு, மங்கள வாத்தியம்,பேரி,மணிமுதலிய வாத்திய கோசங்களுடன் பஜனை செய்து பக்தியுடன் மெதுவாக வீதிவலம் வந்து, மூலாலயம் சென்று, ஆசனத்தின் மீது கும்பங்களை வைத்து, கும்பத்திற்கும் மூர்த்திக்கும் நாடிசந்தானம் செய்து தொடர்பேற்படுத்தி, உரிய முகூர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, மூலமந்திரம் உச்சரித்துப் பதமந்திரத்துடன் பக்தர்கள் ஹரஹர என்ற சத்தம் முழங்க, வேத சிவகாமம், தேவார,
புராண திருமுறைகளைப் பக்தர்கள் ஒத, சகலவாத்திய கோசங்களும் ஒலிக்க, மகாகும்பாபிஷேகத்தைச் செய்து எஜமானர்களும் சகல ஜீவராசிகளும் உய்தி அடையப் பிரார்த்தித்துச் செய்வதே மகாகும்பாபிஷேகமாகும். வர்த்தனி கும்பத்தை ஆவுடையாருக்கும் வித்தி யேஸ்வரக் குடும்பங்களை ஆவுடையாரைச் சுற்றிலும் அபிஷேகித்து, மகாநைவேத்திய உபசாரம் செய்து, அகண்ட தீபம் வைத்துப் பிரார்த்தித்த பின்னர் தேவர்களின் பூசைக்காக மூன்றே முக்கால் நாழிகைக்கு கதவை சாத்தி வைக்கவும்.
தசதர்சனம் : கதவைத்திறந்து பசு, ஆசாரியர், வேதபாரகர், கண்ணாடி, பூரணகும்பம், தீபம், கன்னிகை, சன்னியாசி, சுமங்கலி, எஜமான், பக்தசனம் முதலியோரைச் சகலவாத்திய உபசாரங்களுடன் தனித்தனியே தரிசிக்கச் செய்தல்.
பிராயச்சித்த ஆகுதி : இது யாகத்தில் செய்வது.
ஆசார்ய உற்சவம் : குருவழிபாடு.
எஜமானுக்குப் பலப்பிராப்தி எஜமானுக்கு கும்பாபிஷேகப் பலனை ஒப்புவித்தல்.
இன்னும் இதைப்பற்றிய விரிவுகள் அநேகம் உண்டு. அவையெல்லாம் விளிம்பிற் பெருகும்.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 51
f
半
ாபூரமங்கலம்
சதுர்புஜாம் த்ரிநேத்திராஞ்ச தம்ஸ்ட்ராகராளவதனாம் வி கபாலம் ட்மரும்த்ருதாம் கிங் காலத்தைவென்றுநிற்பது சமயம் என்பது முன்னோர்களதுப் காண்பதற்கு உதவியவை ஆல வளர்ச்சிபெற்றது. மக்களின் சமயவ பிரார்த்தனைக்குரியன ஆலயங்கள் வேண்டாம். அக்காலத்தில் தோ தன்னம்பிக்கை என்பவற்றின் மேலி அந்த வழியில் சைவத்தை உணர் ஆங்காங்கே ஆலயங்களை நிறுவி அதில் நிலைகண்ட பத்திப்பிரவாக சமயாதீதக் கொள்கைகளும், ஆலய இலங்கையிலும் பல தொன்மையான அமைந்தும் உள்ளன. இவையாவு அன்னையைப் போற்றும் தொன்ை தென்னாட்டில், இராமேஸ்வரம் ட திருக்கடவூரில் அபிராமி அம்பாள், காசியில் விசாலாகூரி அம்பாள், ச நெல்லையில் நெல்லை நாயகி அம்ப கல்கத்தாவில் மஹாகாளி அம்
அம்பாள், மணற்காடு மாரிஅம்பாள் சுழிபுரத்தில் வழக்கம்பரை முத்துமா பத்திரகாளி அம்பாள், சண்டிலிப்பாய் அம்பாள், தெல்லிப்பழையில் துர் திருக்கேதீஸ்வரத்தில் கெளரி அம். அம்பாள், முன்னேஸ்வரத்தில் வாணேஸ்வரத்தில் ஸ்வர்ணாம்பி என்று பெரும்புகழ்பெற்ற ஆலயங்
 
 
 

பூரபதி மாண்பும் 9றங்களவலர்
ருட் பணியும்
க்கரவர்த்தி சிவபூரீ சாமி. விஸ்வநாதக் குருக்கள்
காளகண்டிஞ்சகர்னிகாம் பாக்கிராசர்மாம்பராம் விருதாம் கேடகம் குலகஸ்தஞ்ச கிணிமாலாயாயுக்தாம் பஜெத் காளிம் வரப்பிரதாம். க்காலத்தால்வரையறுக்கமுடியாததொன்மைவாய்ந்தது.இந்து ம் ஆய்வாளர்களதும் கருத்தாகும். இந்து சமயம் வளர்ச்சி யங்களே. ஆலயங்கள் மூலமாகவே இந்து நாகரிகம் ாழ்விலேஎன்றும்மாறாதபேரின்பத்தைத்தருவதுடன் மக்களின் என்பது கருத்தாகும். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க ன்றிய பெரியார்களது மத அனுஷ்டானம், சமய அறிவு, பக்தி, ட்டின் வரப்பிரசாதமாக ஆக்கப்பட்டனவே இந்து ஆலயங்கள். ந்த பெரியார்கள், நாயன்மார்கள், இருஷிகள் போன்றவர்கள் வைத்துசைவமதம் வளர்ச்சிபெறஉறுதுணைசெய்துவந்தனர். மும், சமய உணர்வும் இன்று எம்முன் பரிணமித்து சமயமும், பங்களும் நிறைவுடன் விளங்குகின்றன. தென்இந்தியாவிலும் தேவி ஆலயங்கள் அருட்சக்தி நிறைந்தும்,தான்தோன்றியாக ம் சரித்திரப் பெருமை வாய்ந்தவை. அகில புவனமாதாவென மயான பண்புடையன எனலாம். அன்னையின் ஆலயங்கள் பர்வதவர்த்தனி அம்பாள், மதுரையில் மீனாகூழி அம்பாள், சிதம்பரத்தில் சிவகாமி அம்பாள், தில்லைக் காளி அம்பாள், மயபுரத்தில் மஹாமாரி அம்பாள், காஞ்சி காமாகூஜி அம்பாள், ாள்,கன்னியாகுமரி அம்பாள், மாங்காட்டில் காமாகூஜி அம்பாள், பாள், இலங்கையில், நயினையில் நாகபூசணி அம்பாள், ாள்,வாலாம்பிகை அம்பாள்,காரைநகரில் சிவகாமிபிரகதாம்பிகா பாலாவோடை முத்துமாரியம்பாள், ராஜராஜேஸ்வரி அம்பாள், யம்பாள்,நவாலிகளையோடைகண்ணகி அம்பாள்,சங்கரத்தை ய் சீரணி நாகபூசணி அம்பாள், நகுலேஸ்வரத்தில் நகுலேஸ்வரி க்காதேவி அம்பாள், யாழ்நகரில் வாலாம்பிகா அம்பாள், ாள், திருகோணமலையில் மாதுமை அம்பாள், பூரீ பத்திரகாளி வடிவாம்பிகை அம்பாள், தலைநகரில் பொன்னம்பல கா அம்பாள், கப்பித்தாவத்தையில் கருணாகடாகூரி அம்பாள் கள் வரிசையில் கொழும்புமயூரபதி அருள்மிகுழரீபத்திரகாளி

Page 52
அம்பாள் தேவஸ்தானமும் இன்று சைவ மதத்திற்கு பெரும் புண்ணிய கீர்த்தி மிக்க ஆலயமாக அமைந்து விளங்குகின்றது.
இவை யாவைக்கும் பரிபாலகர், சைவப்பெரியார், சைவமும் சமயவழிபாடும் சமுக சாதனைகளும் நிறைந்த வல்வெட்டித்துறை நகரில் உதித்த திரு.பொன்.வல்லிபுரம் அவர்களே காரணர். அவர் மக்களிற் பரிவு கொண்டு, அவர்களுக்குத் தெளிவான வார்த்தைகளால் சக்தி பெருமைகள் கூறி அவர்களைச் சமயத் தொண்டுகளில் ஈடுபடவைத்து, சகோதரத்துவம் வளர்த்து மேற்படி ஆலயத்தையும், சுற்றாடலையும் நன்கு பேணி வருகிறார். அவர் அப்போதைய பரிபாலன சபையினருடன் இணைந்து இந்த இடத்தில் 1987 ஆம் ஆண்டில் தெய்வீக அருளுடன் அம்பாளுக்கு வசிப்பிடமாக அமைந்த அரசமரச் சாரலில் ஆலயம் அமைத்து, தென்னாட்டில் இருந்த கைவண்ணம் நிறைந்த சிற்பக்கலைஞர்களுடன் தொடர்பு கொண்டு செதுக்கிய பூரீ பத்திரகாளி அம்பாளின் சிலையை வரவழைத்து, 1987 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் உத்தராட நட்சத்திரம் பொருந்திய தினத்தில் பணவசதிக் குறைவான நிலையிலும் ஆலயம் அமைத்து, மஹா கும்பாபிஷேகம் நடத்தச் சிவாசாரியாரைத் தெரிந்தெடுக்கும் பணியை மேற்கொண்டு, மருதானை கப்பித்தாவத்தை பூரீபால செல்வவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் ‘வேதாகமசூடாமணி பிரம்மறி பா. சண்முகரத்தினக் குருக்களுடன் கலந்து கொண்டு, சிங்கப்பூரிலிருந்து வந்த எம்மை அழைத்து மேற்படி கோவிலின் நூதன மஹா கும்பாபிஷேகத்தை மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தார். இதனால், அன்னையின் சேவையில் உறுதி கொண்டு 45 தினமும் காலைமாலை இருவேளையும் எமது கரங்களினால் மண்டலாபிஷேகத்தை நடாத்தி வைக்க முடிந்தது.
அன்று முதல் ஆலயம் இராமபிரானின் வளர்ச்சியைப்போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகவளர்ச்சிபெற்றுவந்துள்ளது. இதைஅம்பாளின் அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும். அடியார்களது பிராத்தனைகளின் பலனாக வெளிநாட்டுப் பயணங்கள், கன்னிப்பெண்களது உயர்வாழ்வு, குடும்பப்பெண்களுக்குச் சந்தான செளபாக்கியங்கள், யாவும் வாழை மரத்தில் பழுத்து உதிர்ந்த கனி போல நாளடைவில் மக்களுக்குப் பிரதிபலித்து வந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாகஉள்ளது. இதன் அமைவாக ஆடிப்பூர லட்சார்ச்சனை, தேர் உற்சவம் மறுநாள் இந்துசமுத்திரத்தில்தீர்த்தஉற்சவம்,ஊஞ்சல்நவராத்திரிவிழா, பூரணைத்தீபழஜை என்பனவற்றிற்கு அடியார்கள் அருள்வேண்டி அலைமோதுவதைக் காணலாம்
அதுமட்டுமல்லாதுசமயத்தை வளர்க்கும்பணிகளான அறநெறிப்பாடசாலை,பண்ணிசைவகுப்புசமய சம்பந்தமான
fog

சொற்பொழிவுகள் என்பனவும் ஆலய அறங்காவலர் உதவியோடு சிறப்புற நடத்தப்படுகின்றன. அருங் கலைமண்டபம், தியானமண்டபம் என்பனவும் சுப்பம்மாள் கல்யாண மண்டபமும் திரு. பொன். வல்லிபுரம் அவர்களது முயற்சியினாலும், சில பெரியோர்களது வள்ளன்மையினாலும் கட்டப் பெற்றுள்ளன.
மற்ற ஆலயங்களில் உள்ள அறங்காவ லர்களைப்போல இல்லாது அன்னையின் தொண்டனாகத் தன்னை அர்ப்பணித்த நிலையில் வழிபடும் பக்தர்களின் வேண்டுகோள், பிரார்த்தனைகளை உள்ளன்புடன் ஏற்றுப் பரிவுடன் அவர்களின் நிலையறிந்து “வேண்டுவார் வேண்டுவதை ஈவான்கண்டாய்"என்றபாடலுக்கமைய"என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்றுதன்னை அர்ப்பணித்து ஆற்றும் தொண்டின் பெருமையை, பக்தப்பெருமக்களின் உள்ளத்தின் நிறைவுகள் மூலம் காணக் கூடியதாகவுள்ளது.
அதுமட்டுமல்லாது ஆலயக் கிரியைகளை யெல்லாம் சிவாச்சாரியார்களுடன் அளவளாவிக் கலந்து சிறப்புடன் நடாத்திவைக்கும் ஆற்றலையும் காணக்கூடியதாகவுள்ளது. அத்துடன்மற்ற ஆலயங்களைப்போலஇங்குகடமையாற்றும் குருமாரும் சிறப்பாக அம்பாளின் கடமையைச் செய்வதில் உணர்வுஉள்ளம்படைத்தவர்களாக அமைந்திருப்பதும்பெரும் திருப்தியை மக்களுக்கு ஏற்படுத்துகின்றது. இது ஆலயத்துக்கும் நிர்வாகத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும்.
12 ஆண்டுகள் நிறைவு கண்ட பின் ஆலயத்தைத் திருத்தி அமைக்க அன்னையின் உத்தரவை வேண்டிக்கொண்டு, கடந்த தை மாதம் 12ஆம் திகதி (26-01-2000) அன்று பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. மூலஸ்தானத்தைக் கொஞ்சம் பெரிதாக அமைத்து, அழகிய விமானம் அமைத்து, தலைசிறந்த தென்இந்திய சிற்பக் கலைஞர்களை வரவழைத்து, விநாயகர், ஆதிசிவன் அம்பாள், நாகதம்பிரான்,மஹாலிங்கம்,நந்தி, பூரீரங்கநாதர் (அனந்த சயனம்), அதிசக்திவாய்ந்த ஆஞ்சநேயர், மஹாகாளி அம்பாள், முருகன், நவக்கிரகம், பைரவர், சண்டேஸ்வரி ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு ஆலயம் அமைத்து, மண்டபம் சிறப்பாக அமைத்து, மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா அன்னை காளிஅம்பாளின் அருட்கட்டளையை ஏற்று ஐப்பசி மாதம் 24 ம் திகதி (09-11-2000) அன்று மிகவும் சிறப்பாக பக்தி பூர்வமாக இனிது நிறைவுபெற்றது. தன்னலங்கருதாத சமய சமூகத் தொண்டர் திரு.பொன்.வல்லிபுரம் அவர்கள் சிறப்பு மிக்க தருமகுணசீலராக அமர்ந்து இப்புண்ணிய கைங்கர்யத்தை நடத்தி முடித்ததை அம்பாளின் அருட்கருணை என்றுதான் சொல்ல வேண்டும்.
"லோகா சமஸ்தா சுகினோ பவந்து”
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 53
மயூர மங்கலம்
பூgரீ சாஸ்தா பீட
இந்துமா சமுத்திரத்தின் நீர்வளமும், நிலவளமும், மலைவ சிவ பக்தனான இராவணேஸ்வ திருகோணேஸ்வரம் நகுலேஸ்வ ஈஸ்வரங்களைத்தன்னகத்தே போற்றப்பட்டதும், நல்லூர்க்கந் கண்ணகை, தெல்லிப்பளை து பத்ரகாளி, கொண்டாஞ்சனை ( இலங்கைத் திருநாடாம் ஈழமணி தலைநகரில் பன்னெடுங்காலப அடியார்களின் இறைவழிபாட்டுச்
இவற்றுள் ஒரு மாமாங் நூறாண்டுகள் செய்யவேண்டிய ஆலயத்துக்கு மட்டுமே உரியது எ
கொழும்பு மாநகரில் ஆண்டுகளுக்கு முன் அரசமர பாலித்த அன்னை இன்று உல வீற்றிருக்கின்றாள் என்றால் அத அருளைப் பெற்ற தர்மகர்த்தா மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வ பற்றி எடுத்துக் கூறி இதன் பெ நிறைவேற்றவேண்டும் எனக் என்சிரமேற் கொண்டு என் கட பூர்வமாக ஆலயப்பொறுப்பை அன்னையின் நிறைவோடு பல சிவாசார்யார்களில் ஒருவரா? பிரதமகுரு சிவாகமபூஷணம் நாடிச்சென்று இவ்வாலயத்தி
 
 
 

பதி ஆலயத்தின் த்மீக பணிகள்
ாதிபதி பூரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாசாரியார்.JP
நன்முத்து எனப்பெயர் பெற்றது இலங்கைத் திருநாடு. ாமும், வனவளமும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும், ன் ஆண்டநாடு இலங்கைத்திருநாடு. திருகேதீஸ்வரம், ரம், முன்னேஸ்வரம், தான்தோன்றீஸ்வரம் எனும் ஐந்து கொண்டதும், சிவபூமி’ எனத் திருமூலரால் வியந்து தன், மாவைக்கந்தன், சந்நிதிகளையும், வற்றாப்பளைக் ர்க்காதேவி, மாத்தளை முத்துமாரி, திருகோணமலை முத்துமாரி ஆகிய சக்தி பீடங்களைக் கொண்டதுமான த்திரு நாட்டின் சிகரமெனப்போற்றப்படும் கொழும்புத் ாக விநாயகர், முருகன், சிவன், சக்தி ஆலயங்கள் க்கு ஏற்றதாக அமைந்திருக்கின்றன. கம்' எனப் போற்றப்படும் பன்னிரன்டு ஆண்டுகளில் பணிகளை நிறைவேற்றிய பெருமை மயூரபதி அம்பாள் ன்றால் அது மிகை யாகாது. மயூரா பிளேஸ்' என்னும் பகுதியில் பன்னிரண்டு த்தின் கீழ் தகரக்கொட்டிலினுள் வீற்றிருந்து அருள் கெல்லாம் பரந்திருக்கும் இந்துக்களின் உள்ளங்களில் ற்கு மூலகர்தாவாக அமைந்தவர் அம்பிகையின் பூரண பொன் - வல்லிபுரம் ஐயா என்றால் அனைவரும் பொன் வல்லிபுரம் அவர்கட்கு இந்த ஆலயத்தைப் றுப்பை ஏற்றுப் புனர் நிர்மாணம் செய்யும் பணியிணை கேட்ட பொழுது தாயின் கட்டளை அதுவானால் ா பணி செய்துகிடப்பதே' என்ற வாக்கிற்கிணங்க மனப் ற்றுத்தன் உள்ளத்தில் தன் சிந்தனையில் - செயலில் ரிகளை ஆரம்பிக்க இலங்கைத்திருநாட்டின் மூத்த கப்பித்தாவத்தை பால செல்வவிநாயகர் ஆலய பிரம்மழநீ பா. ஷண்முகரத்தினசர்மா அவர்களை ன் பாலஸ்தாபனத்தைச் செய்ய வேண்டுமென்று

Page 54
கேட்டபொழுது “தங்களின் இப்பணி போற்றுதற்குரியது, அம்பாளின் துணை உங்களுக்கு உண்டு” என்று ஆசிகூறி இதற்குப் பொருத்தமானவர் இலங்கையின் சிறந்த சிவாசாரி யார்களில் ஒருவரான பிரதிஷ்டாசிரோமணி நவாலியூர் சுவாமி விஸ்வநாதக் குருக்கள்தான் என்று கூறி அவர்தலைமையில் 1988ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நிறைவேறியது. அன்று இவர்களால் விதைக்கப்பட்ட விதை இன்று பெரிய விருகூடிமாக வளர்ந்து செழித்து உலகெலாம் பரந்து வாழும் இந்துக்களுக்கு அருள் பாலிக்கும் உலக மாதாவாக மயூரபதி பத்ரகாளி அம்பாள் மந்ரகல்பித ஸ்வர்ண கசிதரத்ன ஸிம்ஹாஸனத்தில் ஆட்சி புரிகின்றாள்.
உலகில் பிரசித்திபெற்ற சக்தி பீடங்களான மதுரைமீனாட்சி, காசிவிசாலாட்கூழி, காஞ்சி காமாட்சி திருவேற்காடு கருமாரி, சமயபுரம்மாரி, திருக்கடவூர் அபிராமி என்ற வரிசையில் மயூரபதி பத்திரகாளி அம்பாளும் பேசப்படுவது இலங்கைத் திருநாட்டுக்குப் பெருமை தருவதாகும்.
ஆலயம் என்பது ஆன்மா லயப்படும் இடம். வெறும் பூஜை வழிபாட்டோடு நின்று விடாமல் சமூக, சமய, கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கின்ற புனித ஸ்தலமாக விளங்குவது மயூரபதி ஆலயத்தின் பணிகள். மங்கள மங்கையரின் மனக்குறைதீர அன்னை அருள் வேண்டி பிரதி செவ்வாய்க்கிழமை தோறும். ராகுகாலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றி இராகுகாலதுர்க்கா பூஜையையும், மாதந்தோறும் பெளர்ணமி தினத்தில் கன்னிப்பெண்களும் சுமங்கலிப் பெண்களும் தமது வாழ்வு நிலைபெறவும், மாங்கல்யம் நிலைக்கவும், அக இருள் அகலவும் திருவிளக்கு பூஜை யையும் சிறப்புற நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வருடம் தோறும் 'ஆடிப்பூரம் பெருவிழாவை முன்னிட்டு அன்னை பராசக்தி வடிவான பத்திரகாளி அம்பாளுக்கு பாற்குடபவனியும் பஞ்சரத பவனியும் சிறப்புற நடைபெற்று வருகின்றன.
இலங்கைத் திருநாட்டில் பிரசித்திபெற்ற எத்தனையோ ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால் எந்த வொரு ஆலய தர்மகர்த்தாவுக்கும் எழாத நல்ல சிந்தனை மயூரபதி அம்பாள் ஆலய தர்மகர்த்தா அருட்செல்வர்
шо!

பொன். வல்லிபுரம் அவர்களின் உள்ளத்தில் எழுந்து இன்றுமழரபதியில்'மாபெரும் கலைக்கோயில், கலாசார மண்டபம், அறநெறிப்பாடசாலை என குறுகிய கால எல்லைக்குள் நிறைவேற்றிய பெருமை மயூராபதிக்கு மட்டுமே உண்டு.
அன்னை uty mafé, Sussir வடிவங்கள் அனைத்தையும் கலைக்கோயிலினுட் காணலாம். இதற்கு மேல் தியான மண்டபம். மனிதன் ஐம்புலன்களையும் ஒருவழிப் படுத்தி இறைவனைக் காண உதவுவது
தியானம். அந்த தியான மண்டபத்தினுள் நுழைந்ததுமே
ど? ޗޯޗާދަ
எம்மையும் அறியாத ஒரு தெய்வீக சக்தி எம்மைஈர்ப்பதை நாம் உணரமுடிகின்றது.
மயூரபதி அம்பாள் ஆலய ஆத்மீகப் பணிகளை தனித்தனியே குறிப்பிட்டு எழுதுவதானால் இந்த மலரே போதாது.
எனவே சமயப்பணி, சமூகப்பணி, கலைப்பணி, கல்விப்பணி, என எவ்வாறான நல்லபணிகள் இருக்கின்றனவோ அத்தனை பணிகளையும் சிறப்பாக நடாத்திவரும் சிறந்த ஆலயமாகத் திகழும் மயூராபதி அம்பாள் ஆலயமும் அதன் தர்மகர்த்தாவும் என்பது இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் இந்துப் பெருமக்கள் அறிந்த உண்மை.
சமயப்பணி, சமூகப்பணிகளையும் சிறப்பாக நடாத்தி கலைப்பணியையும், இலங்கைக் கலைஞர்களை மட்டுமல்ல (இந்தியா) தமிழகத்திலிருந்தும் பலதுறைக் கலைஞர்களை அழைத்து கெளரவித்துவரும் சிறப்பு மயூரபதிக்கு உண்டு.
மேலும் சபரிமலையாத்திரை செல்லும் ஐயப்ப சுவாமிமார்கள் எத்தனைபேராக இருந்தாலும், அத்தனை சுவாமிகளையும் அழைத்து ஆலயத்தில் பஜனை நடாத்தி அன்னதானம் வழங்கி சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களும் அன்னை பராசக்தியின் பரிபூரண அருளைப் பெறும் பாக்கியம் பெற்றவர்களாக அன்னையின் துணையோடு புனிதயாத்திரை செல்லுகின்றனர்.
இவ்வாறு ஆன்மீகப் பணிபுரியும் மயூராபதி அம்பாளின் அருளும் கருணையும் பொருந்திய தர்மகர்த்தா பொன். வல்லிபுரம் அவர்களின் சமய சமூக ஆன்மீக பணிகளை அகில உலகங்களிலும் வாழும் இந்துப்பெருமக்கள் பாராட்டி பெருமிதம் அடைகிறார்கள்.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 55
A
C }
s
ne mogao
இலங்கைத் திருநாட்டின் திகழும் மயூராபதியில், அரசமரழு கொண்டு கோலோச்சி அருளாட் ஆலயத்தில் காலம் தவறாது, ஆக ஆறுகாலப் பூசைகள், அபிஷேகங் தெய்வீக சிறப்புக்கள் இன்று உல தன்னைத் தேடியும், நாடியும், நிை அருள் கரந்து தன்திருக்கரத்தால்
இப்பேர்ப்பட்ட தெய்வீகப் சிவநெறியையும் செந்தமிழையும் பாட்டை அவமதிக்கின்ற அறிய மெய்யடியார்களதும், மற்றும் சமய நாட்களில் மக்களின் ஆன்மீக செய்வித்து மக்களை வையத்து வருங்காலச் சந்ததியினரை அடியார்க்கெளியனாகிய இறைவ வகையிலும், 1987ஆம் ஆண்டு ந பெரும் சமயபாடசாலை ஒன்றினை
இச்சமயப் பாடசாலை இப்பாடசாலையில் அனுபவமும் போதிக்கப்படுகின்றது. நல்வழி கலாசார விழுமியங்களையும் பே வயலின், மிருதங்கம், ஆடற்கலை, கலைகள் முறைப்படி பயில்விக்கப்ப பெருமக்களுக்கு உழைப்பிற்கேற் படுகின்றார்கள்.
 
 

ஆலயத்தின்
விப் பணிகள்
ச் செம்மல் கந்தையா பாலசுப்பிரமணியம் J. P.
ா தலைநகராம் கொழும்பு மாநகரின்கண் அணிகலமாய்த் ம் - வேப்பமரமும் இணைந்த தெய்வீக நிழலில் கோவில் சிபுரியும் வீரசிம்ம நாயகியாகிய பூரீ பத்திரகாளி அம்பாள் மவிதிமுறைக்கிணங்க அந்தணப்பெருமக்கள் நடாத்திவரும் கள், ஆராதனைகள் மகோற்றசவங்கள் மற்றின்னோரன்ன களாகிய வகையில் பேசப்படுகின்றன - போற்றப்படுகின்றன. னந்தும் வழிபடும் ஆயிரமாயிரம் அம்பாள் அடியார்களுக்கு,
வாரி வாரி வழங்குகின்றாள் அம்மையவள். பணிகளுடன் அம்பாளின் திருவருள் நின்று விடவில்லை. பேணிவளர்த்து தளைத்தோங்கச்செய்யவும், ஆலயவழி பாமையை அறவே அகற்றி, இப் பூவுலகில் அவதரித்த ப் பெரியார்களதும் விழாக்களையும் கொண்டாடி, அத்திரு நேயத்துக்கேதுவாகிய அரியசமயப் பிரசங்கங்களையும் துள் வாழ்வாங்கு வாழவைக்கும் வாஞ்சையோடும், எம் தாம் கற்ற கல்வியின் பலனை அடைய வேண்டி ன் கமலச் சேவடிகளை வழிபடச் சிந்தையைத் தூண்டும் டந்தேறிய மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஒர் அரும் ா அறங்காவலர் மூலம் ஆரம்பித்து வைத்தாள். இன்று அறநெறிப் பாடசாலையாக மிளிருகின்றது. ம் ஆற்றலும் மிக்க ஆசிரியப் பெருமக்களால் சமயம் புகட்டப்படுகின்றது. இந்து சமயத்தின் கலைகளையும் னி வளர்க்கும் வகையில் பஜனை, பண்ணிசை, வீணை, தையற்கலை போன்ற மாணவ மணிகளுக்குப் பயன்தரும் டுகின்றன. இப்பணியில் ஊக்கமுடன் உழைக்கும் ஆசிரியப் ற ஊதியமும் வழங்கப்பட்டு அவர்கள் ஊக்கப்படுத்தப்
○

Page 56
சமயக்கல்விமட்டுமல்லாது இவ் ஆலயச் சூழலில் வதியும் 7ஆம், 8ஆம் ஆண்டு கல்விகற்கும் மாணவமணிகளுக்கு பிரதி பெளர்ணமி தினங்களிலும் ஆலய மணிமண்டபத்தில் ஆங்கிலம் - கணிதம் போன்ற பயன்தரும் பாடங்களும் இலவசமாக தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு போதிக்கப்பட்டு வருகின்றது. இப்பணியால் பன்நூற்றுக்கணக்கான வசதி வாய்ப்பு அற்ற மாணவமணிகள் பயன்பெற்று வருகின்றர்கள்.
1987ஆம் ஆண்டு 11 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்சமயப் பாடசாலை இன்று 480 மாணவமணிகளைக் கொண்டதால் 17 ஊதியம் பெறும் ஆசிரியர்களுடன் அன்னை அருள்பெற்றுத் திகழ்கின்றது. பிற, கல்விச் சேவைகள், பணிகள் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பெமதியான பளிங்குக் கற்கள் பாடசாலை உபகரணங்கள் அம்பாள் ஆலயத்தால் அன்பளிப்புச் செய்யப்படுள்ளன.
 

மலைநாட்டில் உள்ள சைவச்சிறார்களின் சமய கல்வி வளர்சியை ஊக்கிவிக்கும் முகமாக பல் வேறு மலைநாட்டுச் சமய ஸ்தாபனங்களுக்கு அம்பாள் ஆலயத்தினால் பாடசாலை உபகரணங்கள், தட்டெழுத்து இயந்திரங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பயன் தரும் பொருள்கள் அன்பளிப்புச் செய்பட்டுள்ளன.
திருமலை அன்பு இல்லத்தின் அரவணைப்புடன் பேணி வளர்க்கும் நூற்றுக் கணக்கான இறைவனின் குழந்தைகட்டு இயன்ற உடுதுணிகள் ஆடைகள் மற்றின்னோரன்ன இயன்ற உதவிகளையும் அம்பாள் ஆலயம் உதவியுள்ளது.
எழுத்தினாலும் - நாவினாலும் எடுத்தியம்ப முடியாத பல்வேறு நற்காரியங்களையும் நற்பணிகளையும் கல்விப்பணிகளையும் தளர்வின்றிப் போற்றுபவர் போற்றட்டும் - தூற்றுபவர் தூற்றட்டும் தொடரும் எம் தூயபணிகள் என்ற பெருவாஞ்சையோடு பணிபல ஆற்றிவரும் அம்பாள் ஆலய அறங்காவலர் திரு. பொன். வல்லிபுரம் அவர்களின் தூய திருத்தொண்டு பொன் எழுத்துக்களாற் பொதிக்கப்படும் என்பது மிகையன்று.
பூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 57
※
மயூர மங்கலம்
‘வாகீச
ஆன்மீ கம், கலை, இலச் இவற்றிற்குத் தமது நேரத்ை அர்ப்பணிப்போர் 'தர்மசீலர்கள் தவப்பயனாகவே சில அபூர்வ சிவபுண்ணியச் செல்வர்கள் ந நிலையிலே இறையருளை மாந் திருவருளே உற்றதுணை என ஈரநெஞ்சினர். இவர்கள் இை
இன்புறுநிலை எய்தியவர்கள், அ சைவ சமயத்தின் இறை உண்
கருதப்படுகின்றனர்.
கோயில் கட்டப்பட்டிருந்த பெருஞானம், பரிபூரண ஞானம் 6 ஏன் கோயிலுக்குச் செல்கிறோ எல்லோரையும் போகவிட்டுவி தேர்வடத்தை தொட்டு இழுக்க செல்கிறோம், மேளக்கச்சேரி, சு கதாப்பிரசங்கம், பண்ணிசை, பார்க்கலாம் என்றும் பெரும் கூறிக்கொண்டு வாழும் நிலைை சார்ந்த, குறிக்கோளற்ற, சுயற வழிபாட்டு உணர்வே தலையெடு காணும் மக்கள் மனோ நிலைய துன்புறுவோராலையே உண்டை பிணிகளும், துயர்களும், நோய்க திடசிந்தனை-சரியான நெறியி எனினும் இவற்றிற்கும் மேலாகவ
 
 

தெய்விகக் லைக்கூடமும் ான மண்டபமும்
கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன், எம். ஏ.
கியம், பண்பாடு, மொழி, சமூகம், கல்வி, கோயில் என்னும் தையும், பொருளையும், சேவையையும், உடலையும் ா’ என்று பிறரால் அழைக்கப்படுவர். பூர்வபுண்ணியத் மானவர்கள் இந்நிலவுலகிலே அவதரிப்பர். இத்தகு மது இந்து சமயத்தில் உளர். அவர்களுள் 'அடியவர்' தியோர் பக்தர்கள். திருவருளாணைக்கு அடிபணிந்து, ன வாழ்ந்தோர் மெய்யடியார்கள். பொய்யடிமையற்ற றவனைத் தேடித்தேடி, பாடிப்பாடி, நாடிநாடித் துதித்து ன்புறு சிந்தையராகிநின்ற நீறுபூசிய நெற்றியினர், இன்றும் மையை உலகுக்கு உணர்த்தும் உத்தம சீலர்களாகக்
ாலும் அக் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும் என்ற ால்லோருக்கும் வாய்த்து விடுவதொன்றல்ல. இன்றும் சிலர் ாம்? என்பதற்கு கருதுவது யாதெனின், கோயிலுக்குள் ட்டார்கள், எல்லோரும் தேரை இழுக்கலாம், நமக்கும் ஒரு நல்ல அருமையான சந்தர்ப்பம், கலைகளை ரசிக்கச் கூத்து, பாட்டுக் கச்சேரி, வேட்டைத்திருவிழா, வில்லிசை,
நண்பர், நண்பிகளைச் சந்திக்கலாம். பெண்ணைப் பாலும் தெய்வ நல ஈடுபாடில்லாத காரணங்களைக் யத்தான் காணுகின்றோம். வெறும் வெற்று உலகியலைச் 5ல மேம்பாடு மிக்க நோக்கமே முன்னிற்கும் புறநிலை டுத்துள்ள மிகப்பரிதாபகரமான நிலைமையே இன்று நாம் ாய் உள்ளது. கடவுள் வழிபாடும், சமயமும் கஷ்டமுற்றுத் மயான முறையில் அனுஷ்டிக்கப்படும். இயலாமைகளும், 3ளும், மிடியும், தீரா இடும்பையும்தான் தெய்வ சிந்தனை - னை நல்குவனவோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. ம் மிக உயர் சிந்தனையிற் சிலர் தமது வாழ்நாளில் பயன்’

Page 58
கருதியும் "பேறு கருதியும் கைக்கொண்டு வாழுகின்றனர். அம் மகோந்நத சிந்தனைதான் 'இறையுண்மை’ எனும் நம்பிக்கை. அதாவது, கடவுள் தான் மேலான பொருள்' என்று நினைக்கும் நல்ல, தெளிவான, உறுதியான, முடிவான சிந்தனை.
இத்தகு நேர்மை வழிபட்ட, உண்மை வழிபட்ட வாழ்வியலுக்குச் சிலரை இட்டுச்சென்றது எது என்று வினாவினால் அதற்கான விடை “கருவுற்ற நாள் முதலாக” பிறப்பிலிருந்து இன்று வரை தமது குலதெய்வமான அம்பிகையை வழிபட்ட பலன்’ என்று தான் கூறத்தோன்றுகின்றது. தெய்வங்கட்குக் கோயில் எழுப்பும் பக்குவம் பணம் இருந்தால் மட்டும் கைகூடி விடுவதல்ல. மாறாக பாக்கியம் இருத்தல் வேண்டும். இக்கருத்தினை அரண்செய்யும் வகையிலே இன்று எம்மத்தியிலே வல்வை பூரீ முத்துமாரியம்மனின் புழுதி மணலிலே அழைந்து, கீச்சுச் கீச்சுத் தம்பலம் விளையாடிய பாலன் அம்மன் அடிமையெனக் கசிந்துருகும் 'சிவபணிமாமணி' பொன். வல்லிபுரம், ஜே.பி. அவர்கள் விளங்குகிறார்கள். தரும பரிபாலன சபையினரது அரும் பெரும் சேவையினையும் பொது மக்களது நம்பிக்கையையும் தமது குடும்பத்தினரது ஒத்துழைப்பினையும் எல்லாம் ஒருங்கு சேரப் பெற்றுச் சைவாலயத் திருப்பணிகளையே தமது குறிக்கோளாகக் கொண்டு வெள்ளவத்தை மயூரபதி பூரீபத்திரகாளியம்மன் தேவஸ்தான lost கும்பாபிஷேகத்தை மிக விமரிசையாக 09, 11. 2000 அன்று நிகழ்த்துவித்தார். இவ்விடத்திலே வடமராட்சியிலே வல்லிபுரம் எனும் சக்கரத்தாழ்வார் தேவஸ்தானத்தோடும் இணைத்தும் பொருத்தியும் சிந்தித்துக்கொள்ளல் தக்கது என்பதனையும் நினைப்பது இப்பெருமகனாரின் வெற்றிச் சாதனைகளுக்கு மகுடம் அமைப்பதாகும். இவர் பணி “எப்பவோ முடிந்ததாகும்’ உயர் திரு. வல்லிபுரம் அவர்களது பணிகளுக்குக் காரணம் அன்னாரது சந்ததியினரின் “நல்வினைப் பயன்’ என எண்ணிக்கொள்வதில் தவறு இருக்க முடியாது. “அவனருளாளலே அவன் தாள் வணங்கி” என்னும் மணி வார்த்தையில் தத்துவார்த்த ஆழம், மகத்துவம், முக்கியத்துவம் கூர்ந்துணர்ந்து தெளிய வேண்டும்.
tpg

கொழும்பிலே வெள்ளவத்தையிலுள்ள “சர்வமத சந்நிதி” எனத் திகழ்வது மயூரபதி பூரீ பத்திரகாளி அம்மன் ஆலயமாகும். பூரீ வீரபத்திரப் பெருமானது பத்தினியே பத்திரகாளியம்மன். நயினையம் பதியிலே சிவவணக்கத் தலமாகத் திகழ்வது பூரீ வீரபத்திர பெருமான் திருக்கோவில். இங்கு கொழும்பு வெள்ளவத்தை மயூரபதியிலே, அரசு, வேம்பு விருட்சங்களின் இணைப்பே நயினாதீவு நாகபூஷணி அம்பிகையின் ‘சிவசக்தி ஐக்கிய சொரூபக் கலைவடிவை மெய்ப்பித்துக் குறியீடாக வெளிப்பட அமைத்துள்ளமை அநுபூதிச் செல்வர்களாலே எண்ணி நீள நினைந்து இன்புறத்தக்கது.
பரிபூரணமான சக்தியின் வெளிப்பாடும் அவளினருட்காட்சமும் எப்போதும் எண்ணியெண்ணிப் புளகாங்கிதம் எய்தத்தக்கனவாம். இந்த வகையிலே மயூரபதி ஆலயத்தோடிணைந்து இலங்கும் தெய்வீக நலம் திகழும் கலைக்கூடமும், பேதமைநல்கும் மனநிலையைத் தரும் தியான மண்டபமும் அறநெறிப் பாடசாலை குறித்த எழில் நலங்கள் நமது இக்கட்டுரைச் சிந்தனைக் குரியனவாகின்றன. மூன்று மாடிகளைக் கொண்ட அழகிய கலைக்கூடம் முதலாம் மாடியிலே கலையரங்கம், கல்யாண மண்டபம், மூன்றாம் மாடியிலே சூழவர நிர்மாணிக்கப்பட்டுள்ள தியான மண்டபம் கொழும்பிலே வெள்ளவத்தையிலே இவை அமைந்துள்ள இட அமைப்பும் ஆச்சரியத்துடன் நோக்கற்பாலன. தெய்வத்தின் கருணை, அருட் கடாட்சம் என்பன அவை கற்ற இடத்திலும், அவை வேண்டியோர்க்குமே வந்தமைவன என்கிற சைவசித்தாந்தக் கருத்தும் இவ்விடத்திலே கூர்ந்து நோக்கத்தக்கது. இவற்றுக்கான காரணம் வலுமிக்க தேவை இவ்வாலய சூழலில் உண்டு. மனித மனத்தைத் தகுதிப்படுத்தும் கலையுணர்வும் பக்தியுணர்வும் மன அமைதியும், இழந்த, ஓயாத உடலுழைப்பு, நகர வாழ்க்கை, நெருக்கடி, நேரமின்மை, அவலம் என்பவற்றிற்கு மத்தியில் உழலும் அரசாங்க ஊழியர்கள், தனியார் அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள், முதலாளிகள், உல்லாசப் பிரயாணிகள் என்போரது பண்பாடு, கலாசாரம் மற்றும் மதரீதியான அபிலாசைகளை, விருப்பங்களை
பூரபதி பூg பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 59
கொழும்புக்குள்ளேயே பூர்த்தி செய்யத்தக்க வகையிலே தெய்வீகக் கலைக்கூடமும், தியான மண்டபமும் அமைந்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாகும். எங்கெல்லாமோ அலையும் மனித மனத்தை ஒருமுகப்படுத்துவதென்பது ஆன்மீகத்தின் மிக இன்றியமையாத பெரும் பணியாகும். இத்தேவைக் கென அமைக்கப்பட்டதே இச்சாதனங்கள், அமைப்புக்கள், குளிர்ச்சியையும் மனநிம்மதியினையும் தரும் அருட்பேறுகள். மயூரபதி இரண்டாம் மாடியும் மூன்றாம் மாடியும் கொழும்பிலுள்ள நாலாம் மாடியோடு ஒப்பிட்டால் தமிழர்களுக்கு மனச்சாந்தி தரும் இடங்களாகும். அருளமுதம் திகழும் முதலாம் மாடியில் திருமணம், மூன்றாம் மாடியில் தியானம், இரண்டாம் மாடியில் தெய்வீகக் கலைக்கூடம் இவற்றினைக் களிப்போர், அனுபவிப்போர் இவற்றை, “நாலாம் மாடி’ செல்ல நேர்ந்தால் அங்கும் இவை எதிரொலிக்கும் என்பதுதான் மயூரபதியின் முக்கியத்துவம். பெருநலன், பெரும் பயன், கந்தபுராணம் படித்து விளங்கிக் கொள்ள முடியாதவர்கட்கு கருத்துக் கவரும் நிலையமாகவும், நடைமுறை நிம்மதியைத் தரும் களிப்பிடமாகவும் இவை இயங்குகின்றன. மயூரபதி மூன்றாம் மாடிக்குச் சேர்வோருக்கு கொழும்பிலுள்ள நாலாம் மாடிப்பயம் நீங்கும். இதுதான் ஆலயத்தின் பெருந் தொண்டு. சிலர் மாடிகள் கட்டி கோடிகள் சேர்ப்பர். ஆனால் திரு. வல்லிபுரம் அவர்கள் மாடிகள் கட்டி பிறர் துயர் தீர்த்தவர்.
மயூரபதிபத்திரகாளியம்மன் ஆலயத் தெய்வீகக் கலைக்கூடமானது தமிழர், இந்து சிற்ப முறைகளுடனும், இந்து விக்கிரக கலை வனப்புடனும் வர்ணங்கள் கொண்டு மனோரம்மியமான முறையிலே அமைக்கப்பட்டுள்ளது.
தெய்வீகக் கலைக்கூடத்தில் காளி, கற்பகவல்லி, வல்வெட்டித்துறை முத்துமாரி, நயினை பூரீ நாகபூஷணி (கைலாயக்காட்சி), பள்ளிகொண்ட பரந்தாமன், குளத்தருகே கோபியர் கூட்டத்துடன் ராதா கிருஷ்ணன், நீண்ட கண்ணாடிக் காட்சியாக காணத்தக்க முறையிலே அமைக்கப்பட்டுள்ள எருமையாகிய மகிடன் (மகிஷாசுரன்) தலைமீது
திருவடியை ஊன்றி நின்ற கோலத்துடன் கேடயம்,
மயூர மங்கலம்

வாளேந்திய பத்திரகாளி திருவுருவம் தெய்வீகச் சிற்பகலைக் கூடத்தில் கலைப்பேரெழில் கொஞ்சும் சக்தி மூர்த்தமாகும். இவற்றினைக் காணக் கண் ஆயிரம் வேண்டும். உயிர் துடிப்புள்ள சிற்ப எழில் ததும்பும் கலைஞனின் - சிற்பியின் கை வண்ணம் கொஞ்சும் 566) வடிவங்களாக இவை கலைக்காட்சியின்பத்தைத் தருகின்றன. இவற்றிலுள்ள ‘சூக்குமமான உண்மை, உள்ளத்தாக்கம் என்னவென்றால், தருமகர்த்தா பொன். வல்லிபுரம் அவர்களின் எண்ணக் கருத்தில் - மனப்பதிவில் உதித்தவையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்ற செய்தியாகும். கருத்தாகக் கூறின் “தெய்வ அருள் உள்ளம்” என்பது தெய்வீகத் திருநிலைகளைக் கண்டு தரிசித்துப் பிறருக்கும் தரிசிக்கக் காட்டியுள்ளதென்பதன் பிரதிபலிப்புக்களே இவையாகும். அருள்வழி வாழ்வின் மகோந்நதம்தான் இத்தெய்வீகக் கலைக்கூட்டம் எனலாம். கவிதை வரிகளிலாயின், “சுந்தரமாமொரு மண்டபம் செய்தார்", “சுந்தரமிக்கதோர் கோயிலும் செய்தார்’ என்றே எழுதலாம் போல்தோன்றுகின்றது. மேலும் கவி கொப்புளித்தால்,
"அந்தரத் தேவர் தொழுதிறைஞ்சிடச் சுந்தரமாம் ஒரு மண்டபம் செய்தார்”
என்று பாடுவதும் பொருந்துவதாகும். தேவர்கள், தேவாதி தேவர்கள் என்று வந்து தொழுநிறைஞ்சும் கலை வனப்பும், கவின்பெறு வனப்பும் கொண்ட தாய் இலங்குகிறது இத் தெய்வீகக் கலைக்கூடம். இக்கலைக் கூடத்தைத் திறந்து வைத்து அதன் கலைமணம் உலகெங்கும் பரவச்செய்து உபகரித்தவர் நடிகர் திலகம், கலைக்குரிசில் சிவாஜிகணேசன் ஆவார். சமய நம்பிக்கையும் இரக்க உணர்வும் அன்புச் சிந்தையும் கொடுமை, கெடுதி பிறர்க்குச் செய்யும் எண்ணங்களிலிருந்தும் வக்கிர உணர்வுகளிலிருந்தும் விடுபடும் தன்மையும் இக்கலைக்கூடத்தினைத் தரிசித்துத் தியான மண்டபத்தில் அமர்ந்து சென்றால் தானாகவே கல்மனத்தைவிட்டுக் கழன்று ஓடிவிடும். அரை நிமஷ நேரத்தில் மனித மனங்களிலுள்ள வன்மைக்குணங்களை - அசுரக் குணங்களை
வேரொடு அறுத்தெறியும் மனோரம்மியத் தன்மை

Page 60
கொண்டமைவது மயூரபதி தெய்வீகக் கலைக்கூடம் - தியான மண்டபம் ஆகும்.
பலனின் பத்தினூடாக காட்சிப்படுத்திக் கருத்திருத்திச் சிந்திக்கும் ‘உரு' வழிபாடே சைவசமயத்தின் அடிப்படையாகும். அதற்குமப்பால் “மனத்தினை ஒடுக்கி’ மனமடங்கி தியானத்தின் வழிநின்று வழிபடவும், நினைக்கவும் இடந்தந்து நிற்பது மயூரபதி பூரீ பத்திரகாளி அம்மன் தியான மண்டபம். ஐம்புலன் மூலம், பஞ்சபூதங்கள் மூலம் வழிபடுவதே ஆலயம் ஆகும். சத்தம், ஒலி, ஆரவாரம், ஆடல், பாடல், ஒடல், தேடல், நாடல் ஆகியனவெல்லாம் சமகாலத்திலே ஆலயத்தில் நிகழும். அதே வேளை Vaccum எனும் ஆகாச வெளி உணர்வுதான் தியானம். ஒடுக்கமும் நிம்மதியும் அமைதியும் தியானத்தின் இலட்சணங்கள். எனவே தியானம் என்பது வெறுமை; இலவம் பஞ்சுபோல எங்கும் பறந்து செல்லும் வானூர்தி நிலை. மனமடங்கி நிற்பதென்பது பெரும் சிரமமானதொன்று. பற்றறுத்த நிலைதான் தியானம். பிரபஞ்ச சம்பந்தங்களை நினைக்காது வானவெளிச் சஞ்சாரத்தை நல்குவதுதான் தியானம். தியானம் கீழே பார்க்காது. மாறாக மேலே பார்த்துக் குண்டலினி சக்தியையெழுப்பி இன்புறு சோதியைக் காண்பது.
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்மன் தியான மண்டபம் மகான்களும், ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், நாயன்மார்களும், பூரீ ஆண்டாள், மீராபாய், மகாத்மாகாந்தியடிகள் என்று நாலாபுறமும்
ஆநுபூதிச் செல்வர்களது திருவுருவங்கள்
"தொண்டர்தம் பெருை
 

அமைந்ததொரு இதமான சூழலில் (மூன்றாம் மடியில்) அமைக்கப்பட்டுள்ளது. “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை” என்று திருத்தாண்டகம் அருளினார் திருநாவுக்கரசு நாயனார். ஒருமுகத் தியானிப்புக்கேற்ற வசதியை இம்மண்டபம் கொண்டுள்ளது. இவற்றினைப் பயன்படுத்த வேண்டிய தகைமைகளையும், மனப்பக்குவத்தையும், ஞான முதிர்வையும் நம்மிற்பலர் பெற்றாக வேண்டிய அவசியமுள்ளது. வீட்டுக்குள்ளேயே 48 மணித்தியாலம் திரைப்படம் பார்க்கும் சாதி - தமிழ்ச் சாதி. பணம் சேர்க்கும் அவாவும், பேயாவேசமும், கிலேசமும் கொண்டு நிற்கும் - எம்மினம் - (தமிழ்ச் சாதி) என்றோவோர் நாள் நாலாம்மாடித் துயர் நீங்கி மூன்றாம் மாடித்தியான மண்டபத்துக்கு வந்துசேரத்தான் போகிறது.
இழியொருளைத் தேடும் மனித மனம் ‘உயர்பொருளை - இறைவன் திருவழகைஅருட்பிரவாகத்தை - எண்ணத்தைச் சிந்திக்கும் மனப்பரிபக்குவம் பெறும் நாள் எந்நாளோ என்பதே இத்தொண்டனின் ஏக்கம். நிலை பெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீ வா’ என்று அழைப்பதல்லால் வேறு வழிதான் உண்டோ! அம்பிகையே நல்லுணர்வைத் தந்தருள வேண்டும். நல்லெண்ணத்துடன், உயர்ந்த குறிக்கோளுடன், பெரும் மனத்துடன் நிறுவப்பட்டுள்ள தெய்வீகக் கலைக்கூடமும் தியான மண்டபமும் நமது இந்துப் பண்பாட்டின், இந்துக்கலை மரபின் பொக்கிஷங்கள் எனக் கூறுதல் பொருந்தும். பயனடைவது நமது கடன். சிவபுண்ணியம் செய்வதற்கும் சிவனருள் வேண்டும்.
ம சொல்லவும் பெரிதே'
பூரபதி யூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 61
அருள்பாலிக்கும் அ
 

سميټېள்
15
த்தங்
tԼք
LLI
քֆհմ

Page 62
" =
ஆலயத் தேர்க
 

ர்த் பனித் டக்கம்

Page 63
சமுத்தி
நாட்டி மண்டப
 

து நிற்கும் மாட்சி
உயர்ந்
ம்
மண்டப

Page 64

111 ஈக் குழு

Page 65
கட்டிடத் திறப்பு :
 

விழாக் காட்சிகள்

Page 66
வோர்
ணி புரி
ஆலயம் சார்ந்து அறப்ப
 

ல்வோ
? | –

Page 67
அம்பிகை சந்நிதியில் அ
 

ரசியற் பிரமுகர்

Page 68

斤
லைஞர் குழாத்தின

Page 69
(A
冬
}
மயூர மங்கலம்
சக்தி
f
pas
வேதாகம 6d
பூத்தவளாயும், புவனம் மூத்தவளாயும், முகுந்தனுக்கு சமுத்திரத்தின் முத்து எனப்போ பிரணவரூப பதியாம் மயூரபதி பத்திரகாளியாகக் திருக்கோலங் செய்தி.
சக்தி தத்துவம் நம் இந்து தன் கருணையினால் மலங்களினி அன்னை பராசக்தி. அவ்வருங்கா பலப் பல. இம்மையையும், மறுை நாயகியாம் அகிலாண்டேஸ்வ லட்சுமியாகவும், வீரத்துக்குத் து ஆன்மாக்களை உய்விக்கும் ெ கொள்கிறாள். இங்ங்ணமாய் அன் அருள் வடிவங்களுள் அதர்மத்ை மறக்கருணை வடிவமாய் விளங்கு கலியுகம் என்னும் காரண வளர்ச்சி அளவற்று விரியும் இந் அதனால் சுயநலமும், வெறுப்பும், அழிவும் சாந்தியின்மையும் உலக அறங்காக்கும் அன்னையாம் அக பெற்று மக்களைக் காக்க மனம் ெ அதனால், இன்று உலகெ துன்பத்தில் உழலும் மக்கள் அன் பற்றோடு தேடி ஓடுகின்றனர். த ஆலயங்களிற் பக்தர் கூட்டம் ஆர்ப்பளித்து வரும் அன்பர் அ6ை
 
 

S பீடங்களுக்கு கெரான தலம்
தக சக்தி உபாசகர் சிவபூg உதய ராகவக் குருக்கள்
பதினான்கையும் காத்தவளாயும், கறைக்கண்டனுக்கு இளையவளாயும் விளங்கும் அன்னை பராபரை, இந்து ற்றப்படும் இலங்கைத் தீவின் தலைநகராம் கொழும்பில் எனும் திவ்யஸ்தலத்தில் மங்களங்களை அருளும் கொண்டு அருள்பாலித்து நிற்பது அனைவரும் அறிந்த
து மதத்தின் ஆணிவேராய் அமைவது. ஆன்மாக்களைத் ன்றும் தூய்மை செய்து, சிவத்திடம் சேர்த்து உய்விப்பவள் ாரியத்தைச் செய்வதற்காய் அவள் கொள்ளும் கோலங்கள் மையையும், அருளி வீட்டின்பத்தை நல்கி நிற்பவள் நம் ரி. கல்விக்குச் சரஸ்வதியாகவும், செல்வத்திற்கு Iர்க்கையாகவும் நின்று நிலைத்திருக்கும் நம் அன்னை பொருட்டு ஒவ்வோர் செயலுக்கும் ஒவ்வோர் வடிவு ானை கொள்ளும் வடிவங்கள் ஆயிரமாய் விரியும். அவ் த அழித்து தர்மத்தைக் காக்கவென அவள் கொள்ளும் நவது மகா காளி ரூபமாகும். ாத்தால் இன்றைய உலகம் அதர்மமயப்படுகிறது. அறிவு த புதுயுகத்தில் அன்பு வளர்ச்சி தேய்வுற்று வருகிறது. தீமைகளும், நாத்திகமும் மனிதர் மனதிற்குடிபுக, போரும் கின் இயல்பாயிற்று. மறம் ஓங்கும் இக்காலகட்டத்தில் கிலாண்டேஸ்வரி இன்று அகிலமெல்லாம் சாந்நித்தியம் கொள்கிறாள். கல்லாம் சக்தி வழிபாடு தளைத்தோங்கி வருகின்றது. ானையாய் நின்று அருள் செய்யும் தாய் வடிவினையே ாய் நம்மைக் காப்பாள் எனும் நெஞ்சுறுதியால் அம்மன் கடலெனப் பெருகுகிறது. அங்ங்ணம் அலைகடலாய் னவர்க்கும் தன் அளப்பெரும் கருணையினால் அமைதி

Page 70
நல்கி அருளாட்சி செய்து ஆதரித்து வருகிறாள் எம் குலமுழுதாளும் அன்னை மயூரபதி பத்திரகாளி அம்பாள்.
பத்து ஆண்டுகளின் முன் ஒன்றுக்கும் பற்றாத அடியேனை ஆட்கொண்டு முப்போதும் தன் திருமேனி தீண்டும் பாக்கியம் தந்த அந்தப் பராபரையின் பாதப்போதினை எம் உள்ளம் பதித்து உருகுகிறேன். ஆயிரம் ஆயிரம் அன்பர்கள் அன்றாடம் அன்னை திருமுன்கூடி அருள்பெறும் அற்புதத்தைக் காணும் பாக்கியத்தை அளித்தனள் அந்த அவ்யாஜ கருணா ரூபிணி.
எம் குலம் காத்த மாவிட்டபுரம் வீணியவரை பூரீ ராஜராஜேஸ்வரிஅன்னைக்கு என் முந்தையோர் செய்த பூஜாபலனோ, அல்லது அன்னை வடிவாம்பிகையை அனுதினமும் துதித்துத் துதித்து அவள் பூரண அருளைப்பெற்று சக்தி வடிவாய்த் திகழ்ந்த அமரர் பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்களின் குருகுலத்தில் ஏழாண்டுகளாகப் பயிற்சி பெற்றுப்பெற்ற ஆசியின் விளைவோ, அல்லது எமக்கு வித்தியாரம்பம் செய்து வைத்த குரு சிவபூீ மகாதேவக் குருக்களதும் எனக்கு ஆசார்ய அபிஷேகம் செய்த எம் தமையனார் மறைவண்ணர் மணிவண்ணக் குருக்களினதும் மனம் குளிர்ந்த வாழ்த்தோ, அன்றி எம் முன்னை வினைப்பயனோ, அன்னை தொண்டாற்றும் இவ் அரும்பேறு இப்பிறவியில் எமக்குக் கிட்டியது.
இவ் அரும் பாக்கியம் எமக்குக்கிட்ட அருள் செய்தவர், தர்மகர்த்தா எனும் பெயருக்கு இலக்கணமாய், அன்னை பத்திரகாளியின்
"லோகா சமஸ்த
 

தொண்டினைத் தவிர வேறு எண்ணமே இல்லாதவராய் கனவிலும், நனவிலும் தாயின் தொண்டினையே கருதி, தன்வாழ்வு முழுவதையும் அன்னையின் தொண்டுக்கு அர்ப்பணித்து நிற்கும் சக்தி உபாசகர் நம் மதிப்பிற்குரிய ஆலய அறங்காவலர் பொன். வல்லிபுரம் அவர்கள்.
“தெய்வம் மனுஷ்ய ரூபேன” என்பதற்கேற்ப எம் வாழ்வின் உயர்ச்சிகள் அனைத்திற்கும் அத்திவாரம் இட்டு ஆதரவு தந்த அப்பெரியாரை நன்றியோடு நினைக்கிறேன்.
இன்று ஆலயத்தின் தலைமை அந்தணராக எமையேற்று அருள் செய்திருக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் கருணையையும், அறங்காவலரின் ஆதரவையும், அடியார்களின் அன்பையும் நினைக்கும் பொழுது “நாயேனையுமிங்கொரு பொருளாக நயந்து, நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்” என்ற பட்டர்பெருமானின் அருள் வாக்குத்தான் நினைவில் எழுகின்றது.
அறுபத்து நான்கு சக்தி பீடங்களுக்கு இணையாக விளங்கும் மயூரபதி காளிதேவி அற்புத ஆற்றல் கொண்டு விளங்குகின்றாள். அன்னையைத் துதித்தவர்க்குத் தொல்லை போகும். நெஞ்சில் பதித்தவர்க்கு முக்திப் பேறு கிட்டும்.
பெரும் பொருட் செலவிலே அன்னையின் ஆலயம் கவினுற அமைக்கப்பட்டு ஆகம நெறிக்கமைய சிறந்த முறையில் பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள இவ்வேளையில் அன்னையின் திருவருள் மேலும் பெருகி அன்பர்கள் அனைவரையும் காக்கும் என்பது திண்ணம்.
rசுகிர்னோ பவந்து”
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 71
A
Y
()
s
மயூரமங்கலம்
பாலாதி வேலாயு
பாலா யும் நூலாய் !
சீராரும் ஏராரும் (UJTř (o
நாராயண் UITAJIITi L u
ஆரா அ
முன்னவ தன்னிக இன்னே மின்னே பொன்ே அன்னை
கவிகைக அவிகை குவிகை செவிகன்
அவைகள் உவகை
சேனாள நீனாள் வீணாள் நீணாள் uoTGOOTTř ஏனார் தி
 
 
 

மயூரபதி அருள்வளர் பத்திரகாளி தேவி ருவூஞ்சற்பதிகம்
பண்டிதர் ச. சுப்பிரமணியம், ஆவரங்கால்
காப்பு - வினாயகர் துதி நல்கப் பகர்ந்தாள் கொளமுத் தமிழ் பகிர்ந்தாய் தன்முன்னம்மால்வேழமாக விரைந்துவந்தாய் ாபத்ர காளிபொன் னுாஞ்சல் பகர்பதிகம் நுவல நுண்தருள் மாரி நுனித்தருளே.
ஊஞ்சல்
ஈழத் திருமணிகால் முத்துவடம் இந்திரநீலம்பலகை ஏற்பாம் பருகன்பு அணையாப் பிறங்கூஞ்சல் ணன்தங்காய் நம்பனார் பங்காளி பந்தீர்க்கும் பத்திரைமா காளியே மர்ந்தூஞ்சல் ஆடி அருளிரே.
ன் பின்னவன் மூவர் முனிவரரும் ர் இல்லவனும் சகல சுரர்தாமும் ாரும் ஏனையரும் ஏத்தி இசைபாட ாட மிக்குமிளிர் மேனி விளங்கிழையாய் னாடு வாணி புகழ்பாடி ஆட்டுஞ்சல் பத்திரகாளி ஆடி யருளிரே.
ஈசி கவரி உடுகணம் கைக்கொள்ள பில் ஆலத்தி அரம்பையர் ஏந்த யொடு விண்மண் குடியார் குழைந்தாட ண் குளிர்செய் கீதநடம் சேர்வாக ண் அகம்களிப்ப ஆனந்த வல்லியே தரும்உஊஞ்சல் ஆடி அருளிரே.
வானவரும் தானவரும் செல்ல அவர்நோன்பை நேர்வித்த சேயோரை
படாது விரைந்தளித்த மெல்லியலே நிரந்தரமாய் நின்றுபரிபாலனஞ்செய் மயூரபதி மாதரசீமாகாளி நிருவூஞ்சல் ஏற்றாடி அருளிரே.

Page 72
10.
1.
மாயன் மயூரன் மருவுபதி மத்தியதாம் பாய பெரும்பாலை பாலனஞ்செய் பாலையென தாயின் தயையால் சகமுழுதும் தாங்குறவால் சேயின் மழலைமொழி செஞ்செவிக்கொண் டாடீரே வாயன்பு வண்ண மயூரபதி மாகாளி ஆயன்பில் நாமமைத்த ஊஞ்சலமர்ந் தாடிரே.
அண்டமாம் சிற்றிலமைத் தாருயிர் தம்மையெலாம் பிண்டமாம் சிற்றுTஞ்சல் பேணிவைத் தெஞ்ஞான்றும் கொண்டமா பேரருளால் கோதகற்றி வீடருள்வாய் கொண்டாடித் தக்கன் குறிமகமும் தன்முகமும் திண்டாடத் தாம்தகராம் வண்ணமருள் தேவீ பண்டமாய் நாம்படைத்த ஊஞ்சல்பரிந்தாடீரே.
கொன்றவனாய் நன்றி குலங்கெட வாழ்தக்கன்
அன்றவனை அண்ணினார் ஆரும் அலைவாக சென்றவனாம் வீரனொடு சேர்வீர பத்திரையே மன்றவனோ டாடியருள் மாகாளி அம்மே குன்றவனாம் சேய்குதலை கொள்கோ மளையாகி நின்றவளே நீரூஞ்சல் ஆடியருள் வீரே. தென்னன்பூ வேம்புதெளி ஞானமலர் அரசும் பின்னமில் சத்திசிவப் பேறாகி நீழல் மன்ன மயூரபதி மாக்கோயில் வாழ்முதலே பன்னவலார் பாவின் பரிசளிக்கும் பாவனியே சொன்னவணம் ஏத்தேற்கும் சுந்தரியே காளி பொன்னவண ஊஞ்சல் புரிந்தேறி ஆடீரே.
பன்மொழியார் பன்மதத்தார் மாநகர் மக்களெலாம் பன்மொழியாற் பாடிப் பரவவருள் பைங்கிளியே இன்மொழியாற் கூங்குயிலே ஏரார் நடைஅனமே நின்மொழியே பல்கலையாம் நீடாணை நிற்பவளே தென்மொழியாய்த் தித்திக்கும் தேனேநம்பத்திரையே என்மொழிகொண் டேராரும் ஊஞ்சலிருந்தாடீரே. பொன்வல்லி சொல்வல்லி தோற்றும் மலைவல்லி என் வல்லி எல்லாரும் ஏத்தவரும் வல்லியுன் சொல்வல்லம் அல்லம் சொல்லப் பெருநீளம் கல்வல்ல நெஞ்சம் கனிந்துகவி பாடநீ நல்வல்ல பம்நல்காய் காளியே நாடுய்யப் பல்வல் லபத்தாய் பரிந்துTஞ்சல் ஆடீரே. சென்னி மதியாட திகழ்தோடு மாறாட மன்னு மணிமாலை மலர்மாலை யோடாட பின்னுகுழல் ஆட பெருந்தோள் வளையாட தன்னில் வளர்கருணை தான்தழைத்தே யாட உன்னி உலகலையா தாடிரே பத்திரையே இன்னமுதே ஏரூஞ்சல் ஆடி யருளிரே.
மங்கள வாழ்த்து மாரியும் பொழிக, வற்றா நீர்நிலை சுரக்க, மண்மேல் ஏரியல் விளைவும் ஏனை இயல்தொழில் சிறக்க, என்றும் சீரிய சிறப்புப் பூசை, தெய்விகம், சீலம் ஓங்க, பாரியல் சீவர், பத்தர், பத்திரை பதியும் வாழ்க

எச்சரிக்கை
1. முன்னேவரு கணநாயக முதல்வா - எச்சரிக்கை
முன்னானவை முன்னேயுளமுதலே - எச்சரிக்கை தன்னாயகன் குழையத்தழும் தாயே - எச்சரிக்கை தாயாயவள் தழையீதவச் சேயே - எச்சரிக்கை
2. தங்கைக்குரித்தீந்தேகுமுன்வைகுந்தா- எச்சரிக்கை சம்புசத்தி அரியோடிடம் வைகுந்தாய்-எச்சரிக்கை மங்கைக்குல மணிமாணிக்க வல்லி - எச்சரிக்கை
வளரும்மரகதவண்ணமாம் வல்லீ - எச்சரிக்கை 3. எண்ணான்கறம்வளர்த்தாண்டருள்ளந்தாய்-எச்சரிக்கை எண்ணார்புரம் எரிவிற்கரம் தந்தாய்-எச்சரிக்கை பண்ணார்மொழி பகரஞ்சுக வாணி - எச்சரிக்கை
பாசாங்குசம் மலர்விற்பயில் பாணி - எச்சரிக்கை
பராக்கு 1. ஆனைமுகம் ஆறுமுகம் உள்ளீர் - பராக்கு
அன்புமுகத் தம்மையிடத் துள்ளீர் - பராக்கு சேனைமுகத் தைம்படைகொள் சீரீர் - பராக்கு
தேவிபர சித்துருவ ஏரீர் - பராக்கு
2. சத்திநவ பேதமுற வந்தீர் - பராக்கு
சாரவுயர் தந்திரநூல் தந்தீர் - பராக்கு முத்திதர முந்தருளாய் முனைவீர் - பராக்கு
மூவரையும் முன்னுதவும் அணையிர் - பராக்கு
3. சித்திகளை நல்குசிவ சத்தீ - பராக்கு
சேர்தளைவேர் சேதிசிற் சத்தீ - பராக்கு பத்திரையே பாவனியே காளி - பராக்கு
பயபத்தி பண்பருளிக் காலே - பராக்கு
மங்களம்
1. வேழமதுர் வீரியர்க்கு மங்களம் - வெற்பு
மேவுமுமா பாரிசர்க்கு மங்களம் வேழமழை வேயருக்கு மங்களம் - அவர்
வேண்டு தங்கைத் தாயருக்கு மங்களம்
2. ஞாலமுயிர் நீயுடையாய் மங்களம் - நன்றே
நாலுமுறு நன்னடைதா மங்களம் சாலவெலாம் தந்தருள்வீர் மங்களம் - நம்மேல்
சாலுநிழற் றாள்தருவீர் மங்களம்
3. தாடலைசேர் சாம்பவிக்கு மங்களம் - அம்மை
தண்மயூர மாம்பதிக்கு மங்களம் பாடலைநேர் பத்திரைக்கு மங்களம் - போற்றும்
பத்தர்கண வர்த்தனர்க்கு மங்களம் மங்களம் ஜெய ஜெயமங்களம் சமரசம் தழைய வாழிய சகமெலாம் சுபம் அஸ்து நித்தியம்.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 73


Page 74


Page 75
மயூரமங்கலம்
ஸ்த்குரு ஆதிசங்கரர் அவரவர் மனநிலைக்கு ஏற்ப உய சாக்தம், சைவம், கெளமாரம், ஸெ மதத்தின் ஆறு அங்கங்கள் அஸ்திவாரமிட்டார்கள். எனினும் நிலையைத் தன் மனதிற் கொ அநுசரித்துக் காட்டினார்கள்.
ஒன்றுமறியா சாதாரண ப எவரும் தாய்மை என்ற சொல்லி குணங்களை அறியாமலிருக்க ( சுழலும் ஒரு மதத்தை ஏற்படுத்தி, உயர் வாழ்வு வாழ பூரீ சங்கரர் காணாபத்யம், கெளமாரம், சைவ மார்க்கங்களை அடிப்படையாகக் முறைகள் அநுஷ்டானத்துக்கு வ எதையும் அநுசரித்துப் போகக்கூ அறிந்து கொள்ளமுடியாத தா! வழிபடுவோரிடம் தயை, தாக்ஷண் காண்கிறோம். அவர்கள் திருஷ்டி உரிமையும் எம் உள்ளத்தில் நிறை உலகம் இயங்கத் தேவை இல்லையேல் ஒன்றுமே இயங்க பரம்பொருள் - அதுதான் உலகப் “இச்சா மாத்ரம் ப்ரபோ, ச் ஆகிய சக்தியின் இச்சையாலேே அது இயங்கி வருகிறது. அவள் மாறி அவளோடு இரண்டறக் க ஆதிசங்கரரின் 'அத்வைத சித்த
 
 

சாக்தம்
ஷண்மத ஸ்தாபனம் செய்து, அதன் மூலம் உலக மாந்தர் பர் நிலைக்கேகி உய்ய வழிகாட்டினார்கள். காணாபத்யம், 2ளரம், வைஷ்ணவம் எனப்படும் ஆறு மதங்களையும் ஹிந்து ாாக வகுத்து, மாந்தரின் ஆன்மீக வளர்ச்சிக்கு , தாய்மை எனும், உயர்ந்ததும் அதே சமயம் எளியதுமான ண்டு, சாக்தம் என்ற பிரிவைத் தன் இஷ்ட மதமாகவும்
மனிதன் முதல், உபாஸ்கர்கள், யோகிகள், தபஸ்விகள் வரை ல் விளங்கும் தயை, தாக்ஷண்யம், கருணை, உரிமை முதலிய முடியாது. தாயையும் தாய்மைக் குணங்களையுமே சுற்றிச் அம்மதத்தை அநுசரிக்கும் பக்தர்கள் தாயின் அரவணைப்பில் அருளியுள்ளார்கள். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பம், ஸெளரம், வைஷ்ணவம் ஆகிய மதங்களோ, அதிதீவிர கொண்டு முன்னேற்றத்துக்கு வழி காட்டுபவை. அம்மத ளைந்து கொடுக்கக் கூடியவையல்ல. ஆனால் சாக்தமோ டிய மதம். தாயை அறிந்து கொள்ள இயலாத சேயும், சேயை பும் இருக்கமுடியாதல்லவா? ஆதலால் தான் சக்தி'யை ாயம், தாய்மைக்குணம் ஆகியவை மேலோங்கி இருப்பதைக் யில் பட்டதும் தாயிடம் நெருங்கும்போது ஏற்படும் தைரியமும், றந்து விடுகிறது. பயான சக்தியை விளக்கும் விஞ்ஞானமே சாக்தம். சக்தி ாது என்பதை எல்லோருமே அறிவர். அச் சக்திதான்
- நிலையாக நின்று வாழ உதவும் பரப்பிரம்மம். ருஷ்டி” என ஆன்றோர் வாக்கியம் கூறுகிறது. பரப்பிரம்மம் யே இப்பிரபஞ்சம் தோன்றலாயிற்று. அவள் இச்சையிலேயே T இச்சையிலேயே பிரளய காலத்தில் மாயைப் பிரபஞ்சமாக லந்து விடுகிறது. இதுவே வேதம் கூறும் தத்துவம். பூநீ ாந்தம் இக்கருத்தையே ஸ்தாபிக்கிறது.
Cso

Page 76
‘சாக்தத்தின் வழிநின்று சக்தியைப் பற்றி அறிய முயல்வோர் சாக்தர்கள் எனப்படுவர்.
நமது பாரததேசத்தில் ஆதி சங்கரர் அவதரித்து, இந்து மதத்துக்கு தோன்றிய எதிர்ப்புக்களை அகற்றி உபநிஷத் பாஷ்யங்களை அருளி 'அத்வைதத்தை பிரசாரம் செய்து நிலைநிறுத்திய பின்னர் பல நூற்றாண்டுகளுக்கு- அதாவது இராமனுஜர், மத்வர், வல்லவர் போன்ற மதாசாரியர்கள் தோன்றும் வரை அத்வைதமும், சாக்தமுமே இந்துக்களிடம் பூர்ணமாக இருந்து வந்திருக்க வேண்டும். நேபாளம் முதல் கன்னியாகுமரி வரையில் தேசமெங்கிலும் சாக்தர்கள் பரவலாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவரவருடைய பிரதேச ஆசாரத்திற்கேற்ப சாக்தத்தை அநுஷ்டித்து வந்திருக்கிறார்கள். இருந்தாலும் சக்தி வழிபாட்டு முறையில் இரண்டு வகையே பிரதானமாக இருந்து வருகின்றன.
முதலாவது-அந்தர்முக - அகவழிபாடு இரண்டாவது-பகிர்முக - புற வழிபாடு.
அந்தர்முக - வழிபாடு:-
பூர்வ புண்ணியத்தால் சற்குருவின் கிருபைக்குப் பாத்திரமாகி அன்னை சக்தியின் அருளை நாடும் அந்தர்முக உபாஷகன், காலக்கிரமத்தில் ஞானம் பெறுகிறான். இந்த நிலையில் ஞானம் வளரவளர உடல் வேறு, ஆத்மா வேறு எனக் கண்டு, தீவிர யோக விசாரணையால் ‘நான்’ எனும் ஆணவம் அடங்கி நானா’கிய பரப்பிரம்மமான சக்தியோடு ஒன்று படுகிறான்.
சாக்தர்களால் வழிபாட்டுக்கு முக்கியமாகக் கருதப்படும் ஆதாரமானழரீ சக்ர - மகாமேரு'எனப்படும் யந்திரத்தையே தன் உடலில் உருவகப் படுத்திக் காண்கிறான் இந்த ஞானி. அப்படிக் கண்டு, உடலின் ஒவ்வொரு உறுப்பையும் சக்தியின் அம்சம் திகழும்' கோயிலாகக் கொண்டு பரம்பொருளான சக்திக்கு ஆத்ம பூஜை செய்கிறான். கடைசியில் சக்தியோடு இரண்டறக் கலந்து விடுகிறான். காண்பதெல்லாம்ப்ரதட்சம் என்ற அஞ்ஞானம் அவனை விட்டு அகலுகிறது, மாயப்பிரபஞ்சத்தின் தன்மை புலனாகிறது.
C56)

அந்தர்முக சக்தி உபாசகர்களிடம் பலனை எதிர்நோக்கிச் செய்யும் முறைகள் காணப்பட மாட்டா. இவர்கள் வழிபாடெல்லாம் நிஷ்காமியமே. வெளித் தோற்றத்தால் இவர்களைக் கண்டு கொள்வது என்பது அத்தனை சுலபமல்ல.
இவ்வித உபாசகர்கள் நடப்பதெல்லாம் பிரதஷிணம், பேசுவதெல்லாம் மந்திர ஜெபம், படுப்பது எல்லாம் நமஸ்காரம், கைகால் அசைவுகள் அனைத்தும் முத்திரைகள், முயற்சியின்றிச் செய்யும் செயல்கள் எல்லாம் பூஜை முறைகள். இதைச் பூரீ சங்கரர் செளந்தர்யலஹரி 27ஆவது ஸ்லோகத்தில் விளக்கியுள்ளார்.
ஜபோஜல்ப சில்பம்
ஸகலமயிமுத்ரா விரசனா கதி பிராதகூரிண்ய -
க்ரமணம் - அசனாத்யாஹாதிவிதி Lütfrazeordrum' &#ö6%2F;"
ஸகம் அகிலம் - ஆத்மார்ப்பணத்ருசா ஸ்பர்யா - பர்யாயஸ்-தவ
பவது யன்மே விலளிதம் அந்தர்முக உபாசகன் ப்ரணாயாம முறைகளின் மூலம், (இடா-பிங்களா என்ற இரு சுவாச நாடிகளுக்கு நடுவிலுள்ள) சுஷும்னா வழியாகப் பிராணவாயுவை மூலாதாரத்திற் செலுத்தி, அங்கு அமைதியில் யோக நித்திரை செய்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை விழிப்பூட்டி மேலே செலுத்தி யோகமுறையில் ஆறு ஸ்தானங்களையும் மூன்று க்ரந்தி' (முடிச்சு) களையும் கடந்து 'ஷகஸ்ர தள பத்மத்தில் நிஷ்டையில் இருக்கும் 'சதாசிவ த்துடன் சேர்கிறான். அந்தச் சேர்க்கையினால் சிவம் மறைந்து சக்தி மட்டும் ஜ்வாலிக்கக் காண்கிறான்.
(மூலாதாரம் தேகத்தினுள் மிகவும் முக்கிய மானதோர் சக்கரமாகும். இது இல்லாவிட்டால் தேகம் மேலே எழும்பியோ அல்லது கீழே புதைந்தோ போய் விடும்.)
அந்தர்முக உபாசகர்களுக்கு ‘ஷோடசாக்ஷரீ’ மந்திர ஜெபமே பிரதானம். மேலே சொன்ன முறையில், அடங்கி ஜெப ஆவர்த்தியைத் தீவிரமாக்கும்போது குண்டலினிசக்தி பிரவாகமாக மேலோங்கி எழும்புகிறது. இவர்கள் சித்தி பெறுகிறார்கள்.
பூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேகமலர் - 2000

Page 77
'பஹிர்முக - (பூஞரீ சக்கர) வழிபாடு:-
‘சாக்தர்கள்’ எனப்படுவோர் சாதாரண மனிதர்களைவிட ஞானத்தில் நிச்சயமாக ஒருபடி மேம்பட்டவர்களாகவே இருப்பர். ஏனெனில் இவர்கள் சக்தியை நோக்கும் விதமே அலாதி. விக்ரஹ ஆராதனையில் இவர்கள் தீவிரவாதிகளாக இருக்க மாட்டார்கள். சக்தி தத்துவத்திற்கே ஆதாரமான பூரீ சக்ரம்' எனும் மஹா யந்திரத்திலேயே அவர்கள் சகலமும் கண்டுவிடுகின்றனர். அந்தச் சக்ரத்தில் உள்ள கோணங்களை உருவகப்படுத்தி சக்தியைப் பெண் உருவத்தில் அறிகின்றனர். இதற்குப் பல்வேறு தியான சுலோகங்களே அவர்களுக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன. இப்படிச் சாக்தர்களை உயர் நிலைக்கு உயர்த்தும் யந்திரமாகிய பூரீ சக்ரத்தின் மற்றொரு உருவமே ‘மேரு' எனப் பெயர்பெறும்.
பூரீ சக்ரம் என்பது தேவியின் இராஜதானியாகிய பூரீ நகரில் சுத்த சக்தியாக வீற்றிருக்கும் நிலையின் தரைப்படம் எனக் கொள்ளலாம்.
‘மேரு' என்பதை வகுத்த வழியில் அடுக்கி அமைக்கப்படும், கீழிருந்து மேல் நோக்கிச் சென்று முடிவில் உச்சியின் மத்திய பாகத்தில் சக்தி வீற்றிருக்கும் நிலையை விளக்கும் கட்டிடம் எனக் கொள்ளலாம்.
இரண்டிற்கும் உருவத்திலேதான் வித்தியாசமே ஒழிய, வழிபாட்டு முறைகள் மற்ற விஷயங்கள் எல்லாம் ஒன்றே. இதன் இரண்டு உருவங்களிலும் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் காணப்படும். பிந்து மண்டலமாகத் திகழும் சக்தி மண்டலம் இக்கணக்கில் சேரவில்லை.
மேருவின் உச்சியில் முக்கோணத்தின் மத்தியில் புள்ளிபோன்று இருப்பது பிந்து. இதில் வீற்றிருக்கும் நாற்பத்துமூன்றாவது முக்கோணமே ஷஹஸ்ர தளம். சிறிது கீழே அதைச் சுற்றி எட்டு முக்கோணங்கள், அவற்றுக்குச் சிறிது கீழே இருவரிசைகளாக, வரிசைக்குப் பத்து முக்கோணங்கள். அவற்றைச் சுற்றி சிறிது கீழே எட்டுத்தளங்கள் - தாமரை இதழ் போன்றவை. அவற்றின் கீழ் சுற்றிலும் பதினாறு தாமரை இதழ்கள். பிறகு'த்ரிரேகா எனப்படும் மூன்றுவட்டமான வளையங்கள். இவை எல்லாவற்றையும் சுற்றி மூன்று வரிசைகளால் ஆகிய நான்குவாயில்கள் கொண்ட பூபுரம் என்ற சதுர வடிவான சுவர்கள். இதுவே மேருபூரீ சக்கரத்தின் அமைப்பாகும். இதில் பிந்துஸ்தானத்தில்
மயூரமங்கலம்

இருந்து, கீழ்நோக்கிக் காணப்படும் ஐந்து முக்கோணங்களும் சக்திபரம். மேல்நோக்கிச் செல்லும் நான்கு கோணங்களும், சிவபரம். மேருவில் சக்தி பரமான பாகத்தையே வைத்துச் சாக்தர்கள் பூஜிப்பர்.
இந்த ஒன்பது முக்கோணங்களையும் ஒன்பது யோனிகள் என்பர். இதன் மத்தியிலேதான் பத்தாவது யோனியான பிந்துஸ்தானம் உள்ளது.
மேருவின் வெளிப்பிராகாரங்கள் இருபத்தைந்து. பல உலோகங்களினாலும் நவரத்தினங்களினாலும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய தத்துவங்களாலும் அமைந்தவை. இவற்றில், சியாமளா, வராகி, விஷ்ணு, ஈசானன், சந்திரன்,சூரியன், மன்மதன் போன்ற சகல தேவாதி தேவர்களும் இடம் பெற்ற பிந்துஸ்தானத்தில் மகா திரிபுரசுந்தரியாகவும், ராஜேஸ்வரியாகவும், சிவ-சக்தி ஐக்கிய ரூபிணியாகவும் அமர்ந்துள்ள பரப்பிரும்ம சொரூபமான அன்னை பராசக்தியை வழிபடுவர்.
ழநீமேரு நவாவரணம்- ஆவரணங்களின் பெயர் 1. த்ரைலோக்ய மோஹனம் (சதுர வடிவம்) 2. பதினாறுதள ஸர்வாசாபரிபூரகம். . எட்டுத்தள சர்வ சம்கூேடிாபணம்.
பதினான்கு கோணம் ஸர்வ ஸௌபாக்யம். . வெளிப்பத்துக் கோணம் ஸர்வார்த்த ஸாதகம் . உள்பத்துக் கோணம் ஸர்வரகூடிாகரம். . எட்டுத்திக்குக் கோணம் ஸர்வரோகரம்.
முக்கோணம் ஸர்வ சித்திப்ரதம்.
. பிந்து வடிவான ஸர்வானந்த மயம்.
இந்த ஒன்பது ஆபரணங்களுக்கு ஒன்பது தேவதைகள் உள்ளனர்.
அவ்விதமே நான்கு வாயில்களிலும் கந்தாகர்ஷிணி, ரஸாகர்ஷிணி, ரூபாகர்ஷிணி, ஸ்பர்சாகர்ஷிணி என்ற நான்கு த்வார தேவதைகள். இவர்கள் முக்கியமானவர்கள்.
இவ்வாறு மகாதிரிபுர சுந்தரியான இராஜேஸ்வரி ழரீசக்ரத்தின் மத்தியில் கொலு வீற்றிருப்பதாக வர்ணிக்கப்படுகிறது. சக்தி தந்திரங்கள்
இவை அறுபத்து நான்கு ஆகும். இவைகளெல்லாம் அநுசரிப்பவர்க்கு உபாசனைக்கேற்ற
C57)

Page 78
பலனைக் கொடுக்கும். எனினும், அவை எல்லையாகிய சக்தி சாம்ராஜ்யத்தை அடையத் தடைகளாகவே உள்ளன என்பது அறிந்தோர் கருத்து.
இந்த சாஸ்த்திரத்தைப் பிரகடனம் செய்த பூரீ பகவத்பாதாள், இவ்வழிபாட்டுக்கு தமது . அநுஷ்டானத்தில் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. மந்திர மார்க்கத்தையே அவர்கள் பெரிதும் ஆச்ரயித்
துள்ளார்கள். தந்திர மார்க்கத்தில் காம்யம் முக்கால்,
நிஷ்காம்யம் கால் என்பது அநுபவத்தில் அறிந்த உண்மையாகும். அதன் பல பிரிவுகளை நோக்கும்போது இவ்வுண்மை தெள்ளத் தெரியும். 1. மஹா மாயா சம்பரம் - இல்லாத பொருளை
இருப்பதுபோல் காட்டும். 2. பைரவ தந்ரம் - அணிமா, மஹிமா முதலிய எட்டு
சித்திகளுக்குக் காரணமாகும். (அ) அணிமா- ஜனங்கள் மத்தியிலிருந்தும்
அவர்கள் கண்களுக்குப் புலப்படாமை. (ஆ) மஹிமா- சர்வ தேசத்திலும் ஒரே காலத்திற்
காணப்படல். (இ) லகிமா-சரீரத்தை பஞ்சைவிட லேசாகச் செய்து
கொள்ளல். (ஈ) ஹரிமா- சரீரத்தை உலகத்திலுள்ள எந்த
வஸ்துவைக் காட்டிலும் கனமாகக் காட்டுதல். (உ) ப்ராப்தி - நினைத்த மாத்திரத்தில் எவ்வித வாகனங்களின் உதவியின்றி எங்கு வேண்டுமானாலும் செல்லல். (ஊ) ப்ராகாம்யம்-இஷ்டப்படி சகல போகங்களையும்
அநுபவித்தல். (எ) வசித்வம்:- சர்வ லோகங்களையும் தன்
வசமாக்கிக் கொள்ளல். (ஏ) ஈசித்வம்:- சகல பிராணிகளையும் தன்
ஆக்ஞைக்குக் கட்டுப்படச்செய்தல். 3. பஹாரூபாஷ்டகம்:- 4. யாமளாதந்தரம்- மந்த்ர மார்க்க விரோதமானவை. 5. சந்த்ர ஞானம்:- ஷோடச வித்யா தேவதைகளை
செயலறச் செய்வது. 6. மஹாஸம்மோஹனம்:- விழித்துக் கொண்டே யிருக்கையில் நித்திராவஸ்தையை உண்டு பண்ணுதல். 7. வாமஜுஷ்ட மஹாதேவ தந்ரம்:- (துராசாரம்
நிறைந்துள்ளது) 8. வாதுலம்.
fo

9. வாதுலோத்ரம் தேவதாகர்ஷண வழிகள்.
10. காமிகம்
1. ஹ்ருத்பேதனம்:- மூலாதாரத்திலிருந்து சகஸ்ர தளத்தை அடையச் சுலபமான முறை சொல்லப்பட்டுள்ளது.
12. தந்த்ரபேதம்.
13. குஹ்யம்- மற்வர்கள் செய்யும் தந்தர முறைகளைப் போதிப்பவை. குஹ்யதந்திரத்தால் வைதிகர்கள் கற்ற வித்தையைமறந்து தடுமாறச் செய்தல்.
14. கலாபாதம்:- இதில் காமம் ப்ரதானமாகச்
சொல்லப்பட்டுள்ளது.
15. குண்டிகாமதம்-ஆகாசமார்க்க ஷஞ்சார வழிகளைச்
சொல்வது.
16. மதோந்தர மதம்17. ரஸவாதம்:- தாமிரம், இரும்பு முதலியவற்றைத்
தங்கமாக்குதல். 18. வீணா - (சம்போக யகூழினி) பிறர் பெட்டியிலுள்ள
பணம் உபாசகர்கள் கைக்கு வருதல்.
இதுபோல் மொத்தம் அறுபத்து நான்கு தந்திரங்கள் உள்ளன. இவைகளெல்லாம் சித்திக்க வேண்டுமெனில், சாத்வீகமற்ற பல முறைகளையும் மது, மாமிசம் முதலியவைகளையும் உபயோகப்படுத்த வேண்டி வருகிறது. இந்தத் தந்திரங்களில் அடங்கியுள்ள சகல ஸித்திகளும், சக்தியை மந்திர மார்க்கத்தில் ஆராத்தித்து பூரீசக்ர - மேரு பூஜை செய்பவர்களை ஒருவித ப்ரயாசையுமின்றி வந்து அடைகின்றன.
சக்தியின் அம்சங்கள்
குரு முகமாக உபதேசம்பெற்றுச் சக்தியை பஹிர்முகமாக வழிபடுவோர் கீழே குறிப்பிட்டுள்ள தேவியின் ஐந்து முக்கிய அம்சங்களின் மூலமாக அடைகின்றனர்.
பூனரிராஜேஸ்வரி;-
சக்தி என்றும் 'சிவம் என்றும் கூறப்படுகிறது. சக்தி எனும் சப்தத்திலே செயல்' எனும் சொல் மறைந்து நிற்கிறது. சக்தி' எனும்போது சலனம் (Movement) புலப்படுகிறது. 'சிவம் என்பது ஜடம். அது நிர்மலமானது. தானே இயங்க முடியாதது, ஆனால் சிவம் சக்தியின் துணைகொண்டு இயங்கினாலேயே ச்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய மூன்றின் கண் அடங்கிய உலகமே இயங்க முடியும்.
பூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 79
ஸ்வரூபமற்றதே சக்தி'எனும் பரம்பொருள். இருந்தபோதிலும் சாதாரண நிலையிலுள்ள மானிடர்கள் இதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது திகைப்பதாலேயே, அந்த சுத்த சக்தி தன்னையே உருவகப்படுத்திக் கொண்ட எல்லாவற்றிலும் மிளிர்கிறது. இந்த அடிப்படையிலேதான் விக்ரக ஆராதனை ஏற்பட்டுள்ளது.
தேவியாகிற சக்தியை வழிபடும் முறையில் மிகமுக்கியமாக இடம்பெற்று விளங்குபவள் பராம்பிகை எனப்படுபவள். இவளே ஜெகன் மாதா, இவளே பரப்பிரம்ம ஸ்வரூபம், இந்த ஸ்வரூபத்தை ப்ரும்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய சக்தியின் அம்சங்களாலும் அறியமுடியவில்லை.
இந்த அவசரத்தில் தேவி மிக்க கருணையுடன் எளியோர்க்கு அருளவே சாக்தர்களின் (கற்பனை) கண்களில் இராஜேஸ்வரி' எனப் பெயர்பூண்டு, சிவசக்தி ஐக்கிய ரூபிணியாய் விளங்குகிறாள். இந்த ஸ்வரூபத்தைத்தான் அதிபாக்கியசாலிகள் ஷோட சாக்ஷரீ மஹா மந்ரத்தின் மூலம் அறிவிக்கின்றனர். இதன் ஸ்லோகம் பின்வருமாறு.
பாலார்க்காயுத எந்நிபாம்-த்ரிநயனாம்
ரக்தாம்பரோல்லாஸினிம் நானாலங்க்ருத ராஜமான வயுஷாம்
பாலோட் ராட் சேகராம்! ஹஸ்தைர்இசுராதனு ச்ருணிம் சுமசரம்
பாசம்முதாபிப்ரதீம் பூரீ சக்ரஸ்தித ஸந்தரீம்
த்ரிஜகதாம் ஆதாரபூதாம் ஸ்மரேத் ஸௌந்தர்ய லஹரியில் பூரீ சங்கரர் அம்பிகையை வர்ணித்து, இவளே பராசக்தியென்று விளக்குகிறார். க்வனத்காஞ்சீதாமா கரிகலப- கும்ப-ஸ்தன-நதா ப்ரிக்ஷணாமத்தேய பரிணத சரச்சந்த்ர -வதனா தனுர்-பானான் பாசம் ஸ்ருனிம் அயிததானாகரதலை புரஸ்தா தாஸ்தாம்நபுரமதிது- ஆஹோ-புருஷரிகா
(ஸெளந்தர்ய லஹரி 7) ராஜராஜேச்வரியானவள் சகல பரிவாரங்களும் புடைசூழ, அவளின் அம்சமேயர்கிய ப்ரும்மா, விஷ்ணு, ருத்ரன், ஈச்வரன் ஆகியோர் அவள் பாதத்தருகே சிரமேற் கைகூப்பி நிற்க, மற்றத் தேவமுனி கணங்களுடன் நவரத்ன மயமான ஸிம்மாஸனத்தில் ‘ஸதாசிவத்துடன் சுத்த சக்தியாய்த் திகழ்கிறாள். இதுவே தேவீ உபாஸகர்கள் பூஜிக்கும் பூரீசக்ரத்தின் மத்தியிலுள்ள
மயூரமங்கலம்

பிந்து வாகும். சிவனும் சக்தியும் ஐக்கியப்பட்ட உருவமெனினும் சக்தியிலே சிவம் கலந்து மறைந்து பராசக்தியே தோன்றுகிறாள்.
ஸர்வாபரண பூஷிதையாகவும், ஸர்வ மங்கள ஸ்வரூபிணியாகவும்,தேஜோ மயமாக ஜ்வலிக்கும் அன்னை - ஒரு கையில் பஞ்ச புஷ்ப பாணம் - ஒரு கையில் கரும்பு வில்- ஒரு கையில் பாசம் - ஒரு கையில் அங்குசம் ஏந்தித் திருக்கோலம் கொண்டிருக்கிறாள்.
ஞானம் வளர்ந்த நிலையில் உள்ள உபாஸகன், சக்தியை உருவகப்படுத்திப் பார்க்கத் துணிவதில்லை. அவளை ஒரு தத்துவமாகவே அவன் உணருகிறான். இதைத்தான் பூரீ சங்கரர் ஸௌந்தர்யலஹரி 97 ஆவது ஸ்லோகத்தில் ப்ரகாசப்படுத்துகின்றார்கள். ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள் ஸமமாக இருக்கும் ஸத்-சித்-ஆனந்தமான நிலையில் மாயையே உபாதியாக அடைந்த ப்ரும்மமே தேவியானதால் இதற்கும் மேம்பட்ட நான்காவது தத்வமாகத்தான் சக்தியை ஒத்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் சக்தி வழிபாட்டை மேற்கொண்டுள்ளவர்கள் அன்னையை பாலை, புவனேச்வரீ, லலிதா, துர்க்கை, ராஜராஜேஸ்வரீ என்று வர்ணனைக்கு உட்படுத்திப் பூஜிக்கிறார்கள்.
66)
ஸாத்விகத்தையும் இனிமையையும் கொண்டு, கடல் ஏழ்சூழ் உலகின்றும் கன்னியென அன்னை பாலை விளங்குகிறாள். பத்து வயது நிறையாப்பருவம், அவளே ஸித்தருக்கெல்லாம் தாய். முக்யமாக அந்தர்முக உபாஸகர்கள் இவளை உபாஸித்தே ஸித்தர்களாய்த் திகழ்கின்றனர். ‘அதிகருணாம்ருதஸாகரீ'அழகுத் தெய்வம் அறிவுக்கடல்.
அருணகிரணஜாலை
ரஞ்ஜிதா லாவகாசா வித்ருத ஜபவனகா
புஸ்தகாபிதி ஹஸ்தா இதரகர வராட்யா
புல்ல கல்ஹாரஸம்ஸ்தா நிவஸ்து ஹ்ருதி பாலா
நித்யகல்யாண சீலா புவனேச்வரி
ப்ரபஞ்ச மயமாய் விளங்கும் பராசக்தி. இவளின் வாஸம் ஹ்ருதயகமலத்தின் மத்தியில் ரத்னமய ஸிம்ஹாஸனத்தில், சாந்தஸ்வரூபிணி, வீரரமணியமான அங்கமுடையவள். குமரிப்பருவம், புது

Page 80
யெளவனம் உடையவள். இவளை உபாஸிப்பவர் மிக
விரைவில் த்ரிபுவன ஆதிக்கம் பெறுகின்றனர்.
Lmamiig66762/3TLI LIroof Lšumõ பிதாம்பரீம் கனகபூஷணபூஷிதாங்கீம் ஆஷோடசாக்ஷர கலாவ்ருத பத்மவாஸாம் ஏகாசுடிரீம் திரிபுவனாதிபதிம் நமாமி
லலிதா
அறிவு, அன்பு, ஐச்வரியம், அருள் ஆகியவை நிறைந்த உபாஸகன் இவளின் அருளால் பராம்பிகையின் ஸாம்ராஜ்யமடைய மற்றோர் படி ஏறுகிறான்.
ஸகுங்கும விலேபநாம்
அளிகசும்பி கஸ்தூரிகாம் ஸமந்த ஹலிதேசுடினாம்
6mvaFraFITLu LumaFm fillégáFTuió அசேஷஜன மோஹினிம்
அருணாமால்ய பூஷாம்பராம் ஜபாகுஸாம பாஸராம்
ஜபவிதெள ஸ்மரேத் அம்பிகாம் இவளின் அழகை வர்ணிக்கப் பல ச்லோகங்கள் உள்ளன. லலிதம் எனும் அழகின் அவதாரமே இவள்.
இவளின் பராயம் முப்பது வயது. ஒளி வீசும் நீண்டகால வாழ்வு வேண்டுவோர் இவளை நாடி நலமடைகின்றனர்.
துர்க்கை :
இதுவரை ஸாத்விகமே உருவாக வர்ணிக்கப்பட்ட அன்னை, மானிட இனத்தின் அஹங்காரத்தை யொடுக்கவும், அஸரத் தன்மையை வேருடன் களையவும், ரெளத்ர ஸ்வரூபிணியாகத் திகழ்கிறாள். ஒன்பது வடிவத்தைப் பெற்றவள் இவள்.
பர்வத ராஜபுத்ரி. . ப்ரம்ஹசாரிணி. . சந்த்ரகண்டா. . சுடஷ்மாண்டா.
.
2
3
4.
5. ஸ்கந்தமாதா. 6. காத்யாயனி.
7. காலராத்ரீ.
8. மஹாகெளரீ
9. ஸித்திப்ரதா. சகல துக்க, பயங்களையும் அகற்றுபவள்.

மாதர்மே மதுகைடபக்னி
மஹிஸ்ப்ராணாய ஹாரோத்யமே ஹேலா நிர்மித தூம்ர லோசனவதே
ஹே சண்டமுண்டார்த்தினி நி: சேஷfக்ருத ரக்தபிஜதனுஜே நித்யேநிசும்பாபஹே சும்பத்வம்ஸினிஸம்ஹாராசு துரிதம் துர்க்கே நமஸ்தேம்பிகே! இவள், கலியில் ஏற்படும் பயங்களையும், முன் ஜன்மம், இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்தபாபங்களையும் நொடியிற் பொடியாக்கி, பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வலுப்படுத்தி நன்மையளிக்கும் தெய்வம். இவளது இதர அம்சங்களான மஹா காளி, சண்டீ, மஹாலசுஷ்மீ, மஹா சரஸ்வதி, மஹிஷா ஸுரமர்த்தனி ஆகியவை தேவி பாகவதத்தில் மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளன.
மஹாலக்ஷமியாய், வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்தும், மஹாஸரஸ்வதியாய் மக்களின் அறிவைப் பெருக்கியும் மஹிஷாஸரே மர்த்தினியாய் காமம், க்ரோதம், லோபம், மதம்,மாத்சர்யம் ஆகிய தீய குணங்களைப் பொசுக்கியும் உலக மாந்தரை ரகூழித்து வருகிறாள், சக்தியின் ஒரம்சமாகிய பூரீ துர்க்கை.
சக்தி பீடங்கள்
சக்தி பீடங்கள் ஐம்பத்து ஒன்றாகும். அவைகளில் சில:- வாரணாசி, நேபாளம், கைலாஸம், கேதாரம், ஓங்காரம்,ஹரித்வார், உஜ்ஜயினி, ஹஸ்தினாபுரம், கான்யகுப்ஜம், காஞ்சி என்பவையாகும். மந்த்ர சாஸ்த்திரத்தின் ஐம்பத்தோருஅக்ஷரங்களுமே ஐம்பத்தோரு சக்தி பீடங்களாக விளங்குவதால் தேவீ மந்த்ர ஸ்வரூபிணியாகவே விளங்குகிறாள்.
நமது உடலில் மூலாதாரத்தில் - காமகிரி பீடம், அனாஹதத்தில் பூர்ணகிரி பீடம், விசுத்தியில் ஜாலந்தரபீடம், ஆஞ்ஞையில் ஒட்யாணபீடம் என்பன முக்கியமானவை. இவைகளில் தேவியே பரா, பச்யந்தீ, மத்யமா, வைகரி என்ற பெயர்களில் விளங்குகிறாள்.
சக்தி பீடங்கள் அறுபத்துநான்கு என்றும், நூற்றி எட்டு என்றும் கூறுவாரும் உளர். தேவி பாகவதத்தில் வியாசர் குறிப்பிடும் நூற்றி எட்டு பீடங்களின் பெயர்களும் தரப்பட்டுள்ளன.
மயூரபதிபூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் -2000

Page 81
சக்தி அடியார்கள்
ஆதிசங்கரர்,ழரீபாஸ்கராயர்,ழரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், குமரகுருபரர், அபிராமிப்பட்டர், தாயுமானவர், முத்துத் தாண்டவர், முத்துஸ்வாமி தீகூழிதர், மூககவி, குரு நமசிவாயர், நமசிவாயர், இராமலிங்கர், காளமேகம், காளிதாசன், கம்பன் முதலியோர்.
சக்தி விரதங்கள்
கேதாரகெளரீ விரதம், நவராத்திரி விரதம், வரலசுஷ்மி விரதம், கருட பஞ்சமி விரதம், சாவித்திரீ விரதம், சாவித்திரீ கெளரீவிரதம், மங்கள கெளரீவிரதம், ஸ்வர்ண கெளரீ விரதம், காரடை நோன்பு (காமாட்சி நோன்பு), யமுனா விரதம், ரிஷி பஞ்சமி விரதம், லக்ஷமி குபேர விரதம், உமாசுக்கிர வார விரதம், ரோகிணி விரதம் முதலியன.
மயூரமங்கலம்
 

சாக்தத்தின் மகிமை
பதி-பத்ணி’ என இருப்ரும்மதத்துவங்களுக்கு சாக்தத்தில் இடமில்லை. ‘சிவமாகிய நிர்மலம் சக்தியாகிய சலனத்தால் இயங்கி, ஆடியோடி, கடைசியில்,"சக்தியுடனேயே கலந்து விடுவதால் பதிபத்ணி பாவம்- தொனிக்கவில்லை. மகாதேவியான சித்சக்தியின்இச்சையால் ஏற்பட்டதே பிரும்மாண்டம். எவ்வித ஆதாரத்தையும் நாடாமல் இயங்குவதே சித்சக்தி இந்தத் தத்துவத்தை சிறப்பிப்பதே சாக்தம்.
எங்கெல்லாம் அழகு, பெருமை, வீரியம், அறிவு, ஆனந்தம் விளங்குகிறதோ அங்கெல்லாம் சக்தியின்
அம்சம் ப்ரதிபலிக்கிறது என அநுமானிக்கலாம்.
மந்திரத்தில் மந்திர சக்தி அவளே குருவிடத்தில் குரு சக்தி அவளே!ப்ரம்மசக்தி, விஷ்ணுசக்தி, ருத்ரசக்தி எல்லாம் அவளேதான்.
C6D

Page 82
{C濠伞
°C芯_艾、
ိုပြိီး &kشرچہ&تڑپا
C02d
ഴ്ച శ్లో 鬱 5L
NSVSXKNAK مسیر لا ؟ Fళ్ళి జ్ఞ 8F D 字煞》
*
ЖXX
ó. ಫ್ಲಿ.
சிவன் அறிவின் ஆதாரம் உலகத் தோற்றத்திற்கு அடிப்படைய விளங்குகின்றாள். சாக்த தத்து பெண்ணாகக் கொள்வது சாக்த ெ சக்தியின் வியாபகத்தை எங்கு தெய்வத்திற்கெல்லாம் தெய்வம். ச என்று சாக்தர்கள் கருதுகிறார்கள். சக்தியின் திருவிளையாடலை ஆற்றலுக்குரியவன் இறைவன் என் வழங்கப்படுகிறது. சக்தியின் பிரபா சக்தியை உடையவன் சிவன் எ வழிபடுகிறவர்கள் சக்தி மான்க “சக்தியின்றிச் சிவம் அசையவும் மு குறிப்பிடுகிறார்.
சிந்துவெளியில் சக்தி வழி
இந்தியாவிலே சிந்து வெ தாய்த் தெய்வ வழிபாடு நிலவி ஆணிவேராகத் திகழ்வது சிந்து வேறெந்த நாட்டிலும், தாய்த் ெ நிற்கவில்லை என்பது சேர் ஜோன் இங்கு கிடைக்கப் பெற்ற தேவியி காணப்பட்டன. அமைதியான மு இந்து மதத்தில் வழிபடப்படு தெய்வங்களோடும், அச்சமூட்டும் காளி, நீலி ஆகிய தெய்வங்களே வாழ்விற்குத் தேவையான எல்ல
 
 

ந்து சமயத்தில் க்தி வழிபாடு
வத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம்
என்றால் சக்தி அதன் இயக்கமாக அமைகிறாள். சிவன் ாக அமையும்போது சக்தி அதனை இயக்கும் தத்துவமாய் வத்தில் தாய் முதலிடம் பெறுகின்றாள். சக்தியைப் நறி. சாக்தர் உலகத்தை மேலாகக் கொண்டு அதனோடு நம் எல்லாவற்றிலும் காண்கின்றனர். சக்திதான் க்தியில்லாமல் சிவதத்துவம் ஒன்றையும் இயக்க மாட்டாது இவர்கள் சக்தியைத் தனித்தெய்வமாக வழிபடுகிறார்கள். அணு முதல் அண்டம் வரை பரக்கக் காணலாம். றால் அந்த ஆற்றலின் இயக்கத்துக்குச் சக்தி என்ற பெயர் வத்தை உயர்த்திப் பேசுபவர்கள் சக்தியைச் சிவம் என்றும், ன்றும் அவன் சக்திதரன் என்றும் கூறுவர். சக்தியை ளாவார்கள் என்பது சாக்தர்களின் நம்பிக்கையாகும். டியாது” எனச் செளந்தர்ய லஹரியில் சங்கராச்சாரியாரும்
பாடு :
ளி நாகரிகத்திற்கு முற்பட்ட கிராமிய நாகரிகங்களிலே பதற்கான சான்றுகள் உண்டு. இந்துப் பண்பாட்டின் வெளி நாகரிகமாகும். இந்துக்களிடம் நிலவியது போல தய்வ வழிபாடு பழமையாகவும், ஆழமாகவும் நிலைத்து மார்ஷல் போன்ற அறிஞர் பெருமக்களின் கருத்தாகும். ன் உருவங்கள் கோரவடிவமாகவும், சாந்தவடிவமாகவும் கத் தோற்றம் உடைய பெண் உருவங்களை இன்றைய கின்ற கெளரி, கல்யாணி வடிவாம்பிகை ஆகிய வடிவத்தில் காணப்படும் பெண் உருவங்களைத் துர்க்கை, டும் ஒப்பிட்டு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மனிதனின் ாவற்றையும் வழங்கிய தரையைத் தாயாக உருவகித்து
பூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 83
வணங்கிய ஆரம்ப நிலையை சிந்துவெளியில் காணமுடிகிறது. இன்று கிராமங்கள் தோறும் வழிபடப்படுகின்ற கிராம தேவதைகள் எல்லாம் தரைப் பெண் வணக்கத்தின் வழிவந்தவையே என அறிஞர்கள் கருதுகிறார்கள். மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்திரையின் மத்தியில் தலைவிரி கோலமாகக் காட்சி தரும் பெண் தெய்வம் சித்திரிக்கப்பட்டுள்ளது. இம் முத்திரையின் மேல் இருக்கும் உருவம் துர்க்கை எனவும், இவ் ஏழு பெண் உருவங்களும் சப்தமாதிருக்கள் (ஏழு கன்னிகையர்) எனவும் அறிஞர்களால் விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. உலகத் தோற்றத்தின் நாயகியாகச் சக்தி சித்திரிக்கப்பட்டுள்ளதைச் சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினை ஒன்று விளக்குகிறது. ஒரு பெண்ணின் வயிற்றில் கொடி போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் கிளைகளில் ஆறுகள் மலைகள் என்பவற்றை உருவகித்துத் தரப்பட்ட உருவம் உலகத்தின் சிருஷ்டிகர்த்தா சக்தி தெய்வம் என்பதை விளக்கி நிற்கிறது.
வேதங்களில் அம்பிகை வழிபாடு :-
வைதிக முறையில் அம்பிகையை வழிபடும் வழிபாட்டு முறையை தட்சணாச்சாரம் என அழைப்பர். இந்த முறையில் வழிபடுவதை 'ரீ வித்யா உபாசனை’ எனவும் அழைப்பர். இவ்வழிபாட்டு முறையிலே காயத்திரி மந்திரம் முக்கியமான இடம் பெறும். வேதங்கள் கூறிய வழியிலே சக்தியை வழிபடுகிறவர்களுக்கு இந்திரப்பதவி கூடக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இருக்கு வேதத்தில் உஷை, இராத்திரி, அதிதி, பிருதுவி முதலிய பெண் தெய்வங்கள் வழிபடப்பட்டன. இவர்களில் உஷை தனிப்பெரும் பெண் தெய்வமாக வேதங்களில் சித்திரிக்கப்படுகிறாள். இவளை வழிபடுகிறவர்களுக்குச் செல்வம், குழந்தைகள், பாதுகாப்பு, நீண்ட வாழ்வு, புகழ், பெருமை என்பவற்றையெல்லாம் உஷை வழங்குவாள் என இருக்கு வேதம் குறிப்பிடுகிறது. துர்க்கை,இலக்குமி, சரஸ்வதி ஆகிய மூவரும் ஒன்றிணைந்து பேருருவமாகத் தாங்கி நிற்கும் சண்டிகை என்பாளை அக்கினியில் வழிபடுவது சண்டியாகம் எனப்படும். வேத வேத்யா, வேதஜனனி, யக் ஒபியா, யக் ஒரூபா, திரயீ எனப் பல பெயர்களில் வேதங்களில் அம்பிகை அழைக்கப் படுகிறாள். ஒடுகின்ற நதிகளைச் சரஸ்வதியாக
மயூரமங்கலம்

வேதகால ரிஷிகள் உருவகித்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார்கள். தேவி சூக்தம், துர்க்கா சூக்தம் ஆகியவற்றில் சக்தி வழிபாடு கூறப்பட்டுள்ளது. ‘வாஜசனேயி சம்ஹிதையில் அம்பிகா என்றும், தைத்திரீய ஆரண்யகம் முண்டக உபநிஷதம் என்பவற்றில் துர்க்கா, கார்த்தியாயினி, கன்னியாகுமரி எனவும், அம்பாள் அழைக்கப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. கேன உபநிஷதம் சக்தியை முழுமுதற் தெய்வமாகக் குறிப்பிடுகிறது. “அம்பாள் அழகு மிக்க உமாவாக பரப்பிரம்மம் பற்றிய ஞானத்தை இந்திரன் முதலிய தேவர்களுக்கு அறிவுறுத்தும் மேலான பரப்பிரம்மமாக காணப்படுகிறாள்” எனக் கூறுகிறது.
ஆகம வழிபாடும் கிராமிய வழிபாடும் :-
தாய்த்தெய்வ வழிபாடு உயரிய மட்டத்தில் ஆகம விதிமுறைகளுக்கேற்ப நடைபெறுகிறது. இவ் வழிபாட்டில் பூரீ சக்கர பூசை முதலிடம் பெறுகிறது. அம்பிகையை நவசக்திகளாகப் பாவனை பண்ணி நடைபெறும் நவசக்தி அர்ச்சனை சக்தி வழிபாட்டில் மிகவும் சிறப்பான அம்சமாகும். சாக்த ஆகம முறைப்படி அம்பிகையை வழிபடும் அடியவர்கள் அநுசரிக்க வேண்டிய ஆறு கடமைகளாகப் பின்வருவன கூறப்பட்டுள்ளன.
1. நாடோறும் நீராடல்
சந்தியாவந்தனம்
ஹோமம்
ஜபம்
தேவி ஆராதனை
சக்தி பூசை என்பன அவையாகும். ஆகம விதி முறைகளை அநுசரியாது கிராமிய மட்டத்தில் நாட்டார் வழிபாடாகவும் அம்பிகையை வழிபடும் மரபும் உள்ளது. நாட்டார் வழிபாட்டில் காளி, மாரி, அம்மன், நீலி போன்றன செல்வாக்குள்ள தெய்வங்கள் ஆகும். இவை நோய் நொடிகளில் இருந்து மக்களைக் காக்கும் தெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றன. கிராமிய வழிபாட்டில் வழிபடுவோனுக்கும் இறைவனுக்கும் இடையில் தரகர்கள் இல்லை. வழிபடுவோன் தானே நேரடியாக பொங்கி மடை பரவி உணர்வுபூர்வமாக இறைவனை வழிபடுகிறான். வழிபடும் அடியவர்களில் சக்தி தெய்வம் வெளிப்பட்டு நிற்கும் என்ற நம்பிக்கை கிராமிய வழிபாட்டில் மக்களிடம்

Page 84
காணப்படுகிறது. இவ்வாறு அம்பிகை வெளிப்பட்டு நிற்கும் அடியார்கள் கூறும் வாக்குகளை மக்கள் அருள் வாக்குகளாகவே ஏற்றுக் கொள்கின்றனர்.
வாமாசார வழிபாட்டு நெறி பெரும்பாலும் 6. இந்தியாவிலே நிலவி வருகிறது. இவ் வழிபாட்டில் வைதிக நெறிக்குப் புறம்பான பல அம்சங்கள் இடம் பெறுகின்றன. இதிலே பஞ்சமகாரங்கள் எனக் குறிப்பிடப்படும் ஐவகை இன்பங்களைத் துய்த்தல் அவசியம் எனக் கருதப்படுகிறது.
1. மத்ஸ்யம் (மீன்) 2. மத்யம் (மது) 3. LOTÓlafio 4. முத்திரை
(கைவிரல்கள் மூலங் காட்டும் இரகசிய மொழி) 5. மைதுனம் (பெண் உறவு) என்பனவாகும்.
இந்த வழிபாட்டுமுறையினால் ஒழுக்கக் கேடுகள் பல தோற்றம் பெற்றன. இத்தகைய பஞ்சமகாநெறி நாளடைவில் தவிர்க்கப்பட்டு மதுவுக்குப் பதிலாக இளநீரும் மாமிசத்துக்கு பதிலாக இஞ்சியும் கொள்ளப்படுகின்றன. சக்தியின் அருளை வேண்டி பஞ்சமகா நெறியைப் பின்பற்றும் சாக்தர்கள் மதுபானமாகிய கள்ளை அருந்துகிறார்கள். இதனால் இவர்கள் வேண்டிப் பெற்ற அருள் சக்தியும் முற்றாக அழிந்து விடும். ஆக்கபூர்வமான அருள் தருகின்ற சிவஞானத்தை உள்ளத்துள்ளே உணர்ந்தால் பேரானந்தத்தைப் பெறுவீர்கள் என்பதனை பின்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகிறது.
"சக்தியை வேண்டிச் சமயத்தோர்கள் உண்பர் சக்தி அழிந்தது தம்மை மறந்ததால் சக்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச் சக்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே'
இதிகாச புராணங்களில் சக்தி வழிபாடு :-
இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதத்தில் துர்க்கையைத் துதிக்கும் தோத்திரங்கள் பல வருகின்றன. புராணங்களின் எழுச்சியே சக்தி வழிபாட்டை நாட்டில் நிலை நிறுத்தியது. சக்தியின் அருட் செயல்களை அடிப்படையாகக் கொண்ட உருவமும் நாமமும் கொடுத்துச் சக்தி வழிபடப்பட்டாள். சக்தியைப் பற்றிக் கூற வந்த சாக்த புராணங்களில் அவளது வயதுகளையும் தொழிற் பாடுகளையும் வகைப்படுத்தி
C64D

பெயர்கள் இடப்பட்டுள்ளன. சிறுபிள்ளைப் பருவத்தை சாந்திகா எனவும், ஏழுவயதுப் பருவத்தை சண்டிகா எனவும், எட்டு வயதுப் பருவத்தை சாம்பவி எனவும், பத்துவயதுப் பருவத்தை கெளரி எனவும் அழைக்கப்பட்டதைக் காணக்கூடியதாக உள்ளது. மார்க்கண்டேய புராணத்தில் தேவியின் மகத்துவம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. "எல்லா உயிர்களிலும் சக்தி வடிவமாகத் திகழும் தேவிக்கு வணக்கம். மங்களமாக உள்ள யாவற்றிலும் மங்களமாக விளங்குபவளே! எல்லா நன்மைகளையும் வழங்குபவளே! எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளே! அன்பர்கள் அடைக்கலம் புகுவதற்கு உரியவளே! மூன்று திருக்கண்களை உடையவளே! கெளரிதேவியே தேவரீருக்கு வணக்கம்” என மார்க்கண்டேய புராணம்
அம்பிகையின் அருட் பிரபாவத்தை எடுத்து விளக்குகிறது. பிற்காலத்தில் புராணங்களில் ஆண் தெய்வ வணக்க முறையோடு சக்தி வணக்கம் இணைத்துக் கூறப்பட்டது. பிரமன் மனைவியைப் பிராமி எனவும், விஷ்ணுவின் மனைவியை வைஷ்ணவி எனவும், குமரன் மனைவியை கெளமாரி எனவும், இந்திரன் மனைவியை இந்திராணி எனவும், பரமேஸ்வரரின் மனைவியை பரமேஸ்வரி எனவும், யமனின் மனைவியை சாமுண்டி எனவும் பல்வேறு வடிவங்களில் உருவகப்படுத்தியுள்ளார்கள். சக்தியின் பல்வேறு வடிவங்களைச் சங்கரர் மூன்றாக வகுத்தார். உலக இயக்கத்துக்கும் தொழிற்பாட்டிற்கும் நாயகியாக துர்க்கையையும், உலகின் தொழிற்பாட்டின் மூலா தாரமான செல்வத்திற்கு நாயகியாக இலட்சுமி யையும், உலகியல் வாழ்க்கையின் ஈடேற் றத்துக்கு உரியவளாக அறிவு விருத்திக்கு நாயகியாக சரஸ்வதியையும் சங்கரர் குறிப்பிடுகிறார்.
தமிழகத்தில் சக்தி வழிபாடு :-
சங்க இலக்கியத்திலும் மணிமேகலை, சிலப்பதிகாரத்திலும் தாய்த் தெய்வத்தைப் பற்றிய குறிப்புகள் நிறையக் காணப்படுகின்றன. பழந்தமிழரின் தாய்த் தெய்வமாக கொற்றவை வழிபடப்பட்டாள். எல்லா உயிர்களுக்கும் அன்னையாகத் திகழும் தாய்த் தெய்வத்தை மோடி என்று தமிழில் அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன. தமிழ்வேதமாகத் திகழ்கின்ற தேவாரத்தில் போகமார் மோடி’, ‘கடற்கோடியின் மோடி’
மயூரபதிபூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானகும்பாபிஷேக மலர் -2000

Page 85
எனக் காளியை அழைத்ததை காணக்கூடியதாக உள்ளது. சங்க இலக்கியத்தில் தாய்த் தெய்வத்தை காட்டில் உறைபவளாகவே கூறப்பட்டுள்ளது. காட்டில் வாழும் தாய்த் தெய்வத்தைப் பற்றி மணிமேகலை, கலித்தொகை முதலிய பிற்கால நூல்களும் கூறியுள்ளன. மணிமேகலையில் சக்தி தெய்வம் ‘காடமர் செல்வி எனவும் கலித்தொகையில் அந்தத் தாய்த் தெய்வமே பெருங்காட்டுக் கொற்றி எனவும் அழைக்கப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. திருமுருகாற்றுப்படையில் “வெற்றி வேற் கொற்றவை சிறுவ” என்று முருகன் விளிக்கப்படுகிறான். சோழர் காலத்தில் சக்தி கோயில்கள் திருமுற்றம் என அழைக்கப்பட்டன. தமிழர்களின் தெய்வமாகிய கொற்றவை, துர்க்கையுடன் பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டு வணங்கப்பட்டாள். சக்தி தெய்வம் பண்டைய தமிழர்களால் பழையோள். முதியோள் என்றெல்லாம் அழைக்கப்பட்டாள். நாயன்மார்கள் இவளை முதுகோதை என்றும் அழைக்கிறார்கள்.
சோழ அரசர்கள் அம்பிகையை நிதம்ப சூதனி என்ற பெயரில் வழிபட்டார்கள். இவள் அரசர்களுக்கு வீரத்தையும், வெற்றியையும், அரசபதவியையும் தருபவள் என்றும் கருதினர். பாண்டியர்கள் மீனாட்சியைப் பாண்டிய அரசைத் தோற்றுவித்த தலைவி என்றும் வழிபட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலய ஓவியம் ஒன்றில் அங்கயற் கண்ணியான மீனாட்சியை வணங்கி செங்கோலைத் தேவியிடமிருந்து திருமலை நாயக்கர் பெற்றதாகக் காட்டப்பட்டுள்ளது. மீன் தனது கண் பார்வையினால் நீரில் கிடக்கும் தன் சினைகளைப் பொரிக்க வைத்து வெளிப்படச் செய்து பாதுகாப்பது போல தனது அருள் நிறைந்த கண்பார்வையினால் அங்கயற்கண்ணி உலகில் உள்ள உயிர்களைப் பாதுகாக்கின்றாள்.
ஈழத்தில் சக்தி வழிபாடு :-
இலங்கையில் வாழ்ந்த பூர்வீக மக்களின் வழிபாடாகிய நாக, யக்ஷ வழிபாட்டிற் பெண் தெய்வங்களாக நாகினி, யக்ஷி ஆகியவை வணங்கப்பட்டன என்பதை வரலாறுகளில் இருந்து அறிய முடிகிறது. நம் நாட்டில் கிடைத்த சுடுமண் பெண்தெய்வ உருவங்களும், லிங்க வழிபாடு பற்றிய சான்றுகளும் தாய்த்தெய்வம் சக்தியாகவும் அருஉருவநிலையில் லிங்க வழிபாட்டுடன் சேர்ந்தும் வழிபடப்பட்டதை எடுத்துக்
மயூரமங்கலம்

காட்டுகின்றன. ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் துர்க்கை பற்றிய குறிப்புக்கள் உண்டு. இதே காலத்தைச் சேர்ந்த லட்சுமி உருவம் பொறித்த நாணயங்களும் காணப்படுகின்றன. கி. பி. 2ஆம் நூற்றாண்டில் வீர வழிபாட்டின் ஒரம்சமாகிய கண்ணகி வழிபாடு ஈழத்திற் புகுந்து இங்கு நிலவிய சக்தி வழிபாட்டுடன் தன்னை இணைத்துக் கொண்டது. சேரன் செங்குட்டுவனின் அழைப்பின் பேரில் பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குக் கோயில் அமைக்கப்பட்ட விழாவிலே கலந்து கொண்ட இலங்கை வேந்தனாகிய கஜபாகு மன்னன் ஈழத்தில் பத்தினித் தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்து வைத்தான். சக்தி பீடங்கள் அறுபத்து நான்கினுள் ஒன்றாகப் போற்றப்படுவது நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயமாகும். யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்த நாகர்கோயிலில் சிவ வழிபாட்டுடன் நாக வழிபாடு இணைந்திருப்பது போல நயினாதீவில் சக்தி வழிபாட்டுடன் நாக வழிபாடு இணைந்துள்ளது. நாகதீபம் என்று அழைக்கப்படும் நயினாதீவில் ஒரு சர்ப்பம் நெடுநாள் வசித்து, தவம் செய்து அம்பிகையின் அருளால் தனது சாபத்தை நீக்கிக் கொண்டது. சாபம் நீக்கப் பெற்ற நாகபாம்பைத் தமது திருமேனியில் அணிந்து சாபநிவிர்த்தி செய்தருளினமையாற்றான் இங்கு எழுந்தருளியுள்ள அம்பிகை நாகபூஷணி என்ற பெயரைப் பெற்றாள் எனக் கூறப்படுகிறது.
நாக வழிபாடு :-
சூரிய வழிபாடும் நாகவழிபாடும் உலக மக்கள் பலராலும் பல காலங்களில் வழிபடப்பட்டு வந்தவை ஆகும். எகிப்திய நாகரிகம், பபிலோனிய நாகரிகம், இந்திய நாகரிகம் ஆகிய அனைத்து நாகரிகங்களிலும் சூரிய வழிபாடும், பாம்பு வழிபாடும் சிறப்பிடம் பெற்று இருந்தன. நாக வழிபாடு உடையவர்களாயும், நாகத்தைத் தனது கொடியாகக் கொண்டவராயும் நாகர்கள் வாழ்ந்து வந்தார்கள். தென்இந்தியாவின் மலையாளப்பிரதேசத்தில் நாக வழிபாடு சிறப்பிடம் பெற்றிருந்தது. மிகத் தொன்மையான காலம் தொட்டே நாகவழிபாடுஇங்குஇடம் பெற்றுவருகிறது. இங்குள்ள நம்பூதிரிப்பிராமணர் வீட்டுத் தோட்டங்களில் நாகதலங்கள் பல அமைந்துள்ளன. மக்கட்பேறு இல்லாதவர்கள் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டால்புத்திரச்செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ் நாட்டில் இன்றும் நிலவி வருகிறது. மகப்பேறு
C65C

Page 86
வேண்டியோ, கருச்சிதைவையும், குறைப்பிரசவத்தையும் தவிர்த்தல் கருதியோ பெண்கள் நாகப் புற்றில் பாலூற்றிப் பழங்கள் மலர்கள் வைத்து வழிபடுவர். தமிழ் நாட்டின் கன்யாகுமரி மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நாகராஜர் ஆலயம் காணப்படுகிறது. தமிழகத்தின் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாகத் தோன்றினாள் என்பது தலபுராணச் செய்தி ஆகும். இன்றும் கருமாரி அம்மன் ஐந்துதலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்தே காட்சிதருகிறாள். பாம்புகளைத் துதிக்கும் தோத்திரங்கள் மைத்திராயணி சம்கிதையிலே காணப்படுகின்றன. இந்தியாவிலும், இலங்கையிலும், ஜாவாவிலும், பர்மாவிலும், ஜப்பானிலும், சீனாவிலும் பெளத்த தலங்களின் வாயில்களில் நாக உருவங்கள் காவல் செய்கின்றன.
அம்பிகையின் திருவருள் பெற்ற அருளாளர்கள் :-
தயைப் பிரகாஜினியாக இருக்கும் அம்பிகையின் திருவருளைப் பெற்றதினால், ஆடுமாடு மேய்க்கும் இடையனாக இருந்தவன் மகாகவி காளிதாசனாக மாறினான். காளிதாச மகாகவி தனது இரகு வம்சத்தில் சொல்லும் பொருளும் போல பிரிக்க (փկ աո Ցl இணைந்து விளங்கும் 6) அன்னையாகவும் அப்பனாகவும் மிளிரும் பார்வதி பரமேஸ்வரனைப் பிரார்த்தித்தே தனது நூலைத் தொடங்குகிறார். உலகம் போற்றும் உத்தம புருஷராகவும் சிறந்த சக்தி உபாசகராகவும் திகழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் அம்பிகையின் அருளைப்பெற்ற அருளாளர் ஆவார். மேற்கு வங்காள மாநிலத்துத் தட்சினேஸ்வரத்துக் காளி அம்பாளின் திருவருளை இராமகிருஷ்ண பரமஹம்சர் முழுமையாகப் பெற்றிருந்தார். மகாராஷ்டிர வாசியாகிய பாஷ்கராயர் சாக்த மதத்தைப் பரப்பிய மகான்களில் முதலிடம் பெறுகிறார். இவர் சோழநாட்டு மன்னர்களின் குருவாகவும் இருந்தார். புரட்சிக் கவி பாரதியாரும் சக்தி உபாசகராகவே காணப்பட்டார்.
 
 

அம்பாளின் அருட்பிரபாவங்களை பக்திச் சுவை சொட்டச் சொட்டக் கூறும் சிறப்புமிக்க தமிழ்ப் பிரபந்தங்களாக கம்பன் அருளிய சரஸ்வதி அந்தாதியும், குமர குருபரர் அருளிய மீனாட்சி பிள்ளைத் தமிழும், அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதியும் காணப்படுகின்றன. மதுரையிலே மீனாட்சியாகவும், காஞ்சியிலே காமாட்சியாகவும், காசியிலே விசாலாட்சியாகவும், கேரளத்திலே பகவதியாகவும், சிருங்கேரியிலே சாரதா ஆகவும், மைசூரிலே சாமுண்டி எனவும், அசாமிலே கர்மாக்யா எனவும், மகாராஷ்டிரத்திலே பவானி என்றும் அம்பாள் வழிபடப்படுகிறாள். மூவுலகிலும் சிறந்த பேரழகியாக லலிதா மகா திரிபுரசுந்தரி என அம்பாள் அடியவர்கள் அனைவராலும் போற்றப்படுகிறாள். அம்பிகையை நாள்தோறும் தியானிப்பவர்கள் தியானிக்கப்படும் பொருளாகவே மாறி விடுவார்கள் என்பதனை “த்யானத் யாத்துரு தேய ரூபா” என லலிதா சகஸ்ர நாமமும் குறிப்பிடுகிறது.
சிவனும் சக்தியும் சேர்ந்த சமயக் கோட்பாட்டுத் தத்துவம் தலையெடுத்ததும் சக்தி வழிபாடு தனி வழிபாடாக நின்று நிலைக்க முடியவில்லை. ஆரம்பத்தில் தனியாக முக்கியத்துவம் பெற்ற தாய்மைத் தத்துவம் காலகதியில் ஆண்மைத்தத்துவத்துடன் கலந்துவிட்டது. சிவனும் சக்தியும் ஒன்றாக இணைந்ததை சிவனின் கல்யாண சுந்தர மூர்த்தமும், இவை இரண்டும் ஒன்றாகியதை அர்த்தநாரீஸ்வர மூர்த்தமும், இவை குடும்பம் ஆகியதை சோமாஸ்கந்த மூர்த்தமும் எடுத்து இயம்புகின்றன. ஏனைய மதப் பிரிவுகளாகிய காணாபத்தியம், கெளமாரம் என்ற இரண்டிற்கும் முதல்வர்களான கணபதி, முருகன் என்பவர்களின் தாயாகவும் விஷ்ணுவினுடைய சகோதரியாகவும் சக்தி புராணங்களில் சித்திரிக்கப்படுகிறாள். பாரத நாட்டில் சாக்தம் என்ற தனி மதப் பிரிவு வழக்கொழிந்து பிறமதங்களோடு இணைந்து காணப்பட்டாலும் சக்தி இன்றும் சிறப்புடன் அனைத்து இந்து சமய மக்களாலும் வழிபடப்பட்டு வருகிறாள்.
பூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர்-2000

Page 87
rum
أنهشنا
鞑
land
lála
dنجهنما
ma
mam
 
 
 
 

# Į] [ {
|} |·}
{
温鹫温
{] || [] {] {į į} |~] {! { 斗石)
○)

Page 88


Page 89
:
_
: : : : ( )
!--그-디니그日-日니그디디디디디디TT디TTTT디國日日圓口■■■■
→ ·
 
 
 
 
 

----------회-T-T-T-----------------T----------------------------------------------
--→-
kmが
L L L L L LS S LSLSLL LS L L S L L S L S LSLLLSL L L L L LL LS L L L L L L L L L L L L L L L L L SLLL SLSS
-
T
N

Page 90


Page 91
O
EFE
பிரகிருதி தேவி
ப்ர' என்றால் எழுச்சி எ6 எனவே'ப்ரகிருதி' என்றால் சிருஷ் என்பது சத்வ குணத்தையும், ! குணத்தையும் குறிப்பன. முக்கு சக்திகளாக ஐந்து சக்திகள் உள் கூறுவர். மேலும் ப்ர என்பதற்கு பொருளும் உண்டு. அதனால் இ6
இவ்வாறு ஐந்து விதப்பிர சித்சக்தி (அறிவாற்றல்) ஆகும். எ வடிவமாகவும், இடது பாகம் பெண் அக்னியில் உஷ்ணம் இரண்டற அழிவில்லாததாகவும் விளங்கு மெய்யறிவால் கண்டு எல்லாம் பி
இவ்விதமான மூலப் பிரகி அவற்றினை துர்க்காதேவி, லட்சு அழைப்பர்.
துர்க்கா தேவி
பிரார்த்தனை செய்யுட் தோன்றினாள். இவள் சிவப்பி மாயையாகவும், முழுப்பிரம்ம சொ மனுக்கள் முதலியவர்களாகவ நிறைந்திருப்பவள். புகழ், உயர்வு துக்கம், பீடை முதலியவற்ை பலஹினர்களையும் காப் பாற்று தேவதை. சகல சக்திகளின் வடிவ தருபவள்.
 

திeநபவிருத்தி
எறு அர்த்தம் 'க்ருதி என்றால் சிருஷ்டி என்று அர்த்தம். டியால் மன எழுச்சியுடையவர் என்று அர்த்தம். மேலும் ப்ர' கிரு' என்பது ராஜஸ குணத்தையும், 'தி' என்பது தாமச ணத்தின் தன்னகமான சக்தியோடு சிருஷ்டிப்பதில் முதற் rளன. இவர்களையே ஐந்து விதமான பிரகிருதிகளெனக் ஆதி என்ற பொருளும், கிருதி' என்பதற்கு சிருஷ்டி என்ற வர்கள் சிருஷ்டிக்கு ஆதியானவர்கள் என்றும் அர்த்தமாகும். கிருதியான சக்தி பரமாத்வான பிரமத்தோடு கலந்திருக்கும் னவே சிருஷ்டிக் காலத்தில் இந்தச் சக்தி வலதுபாகம் ஆண் எ எனவும் இரண்டு உருவங்களாகத் தோற்றமளித்தாலும், க் கலந்திருப்பது போல, அந்தச் சக்தி நித்தியமாகவும், ம் ஒரே பிரம்ம சொரூபம்தான் என்பதை யோகியர்கள் ாம்ம மயம் என்று சொல்வார்கள்.
ருதியின் ஏவலினால் ஐந்து விதச் சக்திகள் உண்டாயின. மி தேவி, சரஸ்வதிதேவி, சாவித்திரி தேவி, ராதா தேவி என
ஐந்து சக்திகள்
ம் பக்தர்களுக்கு அருள் செய்பவளாகத் துர்க்காதேவி ரியை. கணேசர் பிறப்பதற்கு அன்னையானவள். விஷ்ணு ரூ பிணியாகவும், பிரம்மா முதலான தேவர்கள் மகரிஷிகள் |ம் விளங்குபவள். இவள் எல்லாப் பொருள்களிலும் , மங்களம், சுகம், மோட்சம் முதலியவற்றை வழங்குபவள். ற ஒழிப்பவள், தன்னைச் சரணடைந்தவர்களையும், பவள். தேஜோமயமானவள். தேஜஸிற்கு நிலைக்களமான ம், சக்திகளுக்கெல்லாம் மகேஸ்வரி. சித்தபகவதி சித்தியைத்

Page 92
லக்ஷமி தேவி
சுத்த தத்துவத்தின் வடிவாகவும், சகல செல்வபாக்கியங்களின் உருவாகவும், அவற்றுக்கு அதிட்டான தேவதையாகவும், லக்ஷமிதேவி விளங்குகின்றாள். இவள் மனோகரி அமைதி, அழகு ஒளி, சாந்தி முதலியவற்றின் வடிவம். நற்குணமயமான சுசிலை. சர்வமங்கள சொரூபிணி. காமம். லோபம், மோகம், மோட்சம், மதம், அகங்காரம் ஆகியவற்றை வர்ஜிப்பவள். இந்திரிய நிக்கிரகையாகவும் பக்தர்களிடம் பிரியமுடையவளாகவும் இருப்பாள். இவள் விஷ்ணுவின் பிரேமைக்குரியவள். அவரது பிராணனுக்கு இணையானவள். திருமாலிடம் இனிமையாக உரையாடுபவள். சகல பல வடிவினி. ஜீவனோபாய உருவினி. இவள் வைகுண்டத்தில் விஷ்ணுவின் பத்தினியான லசுஷ்மியாகவும், சுவர்க்கத்தில் சுவர்க்க லசுஷ்மியாகவும், ராஜ்யங்களில் ராஜ்ய லக்ஷ்மியாகவும், ராஜாக்களிடம் ராஜலக்ஷ்மியாகவும், இல்லறவாசிகளின் கிரகங்களில் கிருக லக்ஷ்மியாகவும், எல்லாப் பிராணிகளிடத்தில் ஷோப லசுஷ்மியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரிதி லக்ஷ்மியாகவும், கூடித்திரியர்களிடம் கீர்த்தி லக்ஷ்மியாகவும், வைசியர் களிடம் வர்த்தக லசுஷ்மியாகவும், பாவிகளிடம் கலக்ஷமியாகவும், வேதாந்திகளிடம் தயா லக்ஷ்மியாகவும் பல்வேறு பெயர்களோடு விளங்குகின்றாள்.
ஸ்ரஸ்வதி தேவி -
எல்லோரும் வணங்கிப் போற்றும் மூன்றாவது தேவியான ஸரஸ்வதி வாக்கு, புத்தி, வித்தை, ஞானம் (சொல், அறிவுணர்வு,கல்வி, மெய்யறிவு) என்பனவற்றின் நிலைக்களமாகவும், சகல வித்தைகளின் வடிவமாகவும், சரஸ்வதிதேவி விளங்குகிறாள். அதனால் இவள் தன்னை வழிபடுகிறவர்களின் புத்தி வடிவமாகவும், அவர்கள் பாடும் கவிதையின் கவியுருவாகவும், அக்கவியில் யுக்தி வடிவமாகவும், அந்த யுக்தியின் நுண்பொருளின் வடிவமாகவும், அந்த நுண்பொருளை மறவாதிருக்கச் செய்யும் சிந்தனை வடிவமாகவும், அந்தச் சிந்தனையின் ஆதாரமான பலவிதச் சித்தாந்த பேதங்களின் வடிவாகவும், அச்சித்தாந்த பேதங்களின் உட்பொருள் விசாரணைகள் விளக்கக் கூடிய விசாரணை வடிவமாகவும், அந்த விசாரணையில் தூக்கிக்காட்டும் வாக்கிய போதனையின் வடிவமாகவும், அந்த வாக்கியபேதங்களால் எல்லாச் சந்தேகங்களையும் நீக்கக்கூடிய நாசகாரணியாகவும், அதனால் தெளிவுறும்

விசாரகாரணியாகவும், அந்த விசாரம் இதுதான் என்று எடுத்தியம்பும் கிரந்த காரணியாகவும், அந்தக் கிரந்தங்களை அறிவிக்கும் ஆற்றல் வடிவமாகவும், விளங்குகின்றாள். மேலும் எல்லாவிதமான சங்கீதங்களின் வடிவமாகவும், அவ்வின்னிசைகளுக்கு ஏற்றதாள பேத காரண வடிவமாகவும், அவற்றுக்கு ஏற்ற பொருளறிவு வடிவமாகவும்; அப்பொருளறிவுக்கு உகந்த வடிவமாகவும், கவிதை வடிவமாகவும், அவற்றால் மகிழ்ச்சி பெறு பிரபஞ்ச வடிவமாகவும் சரஸ்வதி தேவியே இலங்குகிறாள்.
சாவித்திரி தேவி -
பிராமணர் முதலான நான்கு குலங்கள், வேதாந்தங்கள், சந்தஸ், சத்தியாவந்தன மந்திரம்,தந்திர சாஸ்திரங்கள் இவற்றிற்கு எல்லாம் தாயாக விளங்குபவள் சாவித்திரி தேவி. அவள் பிராமணகுல வடிவினளாகவும், ஜப வடிவாகவும், தவ உருவமாயும், அவற்றால் விளையும் பிரும்ம தேஜஸின் வடிவாகவும், அதனால் உண்டாகும் தூய திருவுருவமாகவும், நமஸ்கார ஸ்வருபிணியாகவும், காயத்திரீ வடிவாகவும், அவற்றை அனுஷ்டிக்கும் அந்தணப் பிரியையாகவும், தீர்த்தத்தின் வடிவமாகவும், அந்தத் தீர்த்தத்தைத் தொட்டதுமே தூய்மைப் படுத்த விரும்புபவளாகவும், சுத்த ஸ்படிகம் போல் ஒளிரும் நிர்மலமான சுத்த தத்துவ ஸ்வரூபிணியாகவும், அதனால் ஏற்படும் பரமானந்த வடிவமாகவும், அந்த வழியில் அநாதியாய் உள்ளவளாகவும், பரப்பிரம்ம வடிவமாகவும், அதை அடையும் பிரம்ம ஞானிகளின் பிரும்ம தேஜோ மயமாகவும், அந்தச் சக்திக்கு அதிட்டான தேவதையாகவும் விளங்குகின்றாள். அவளது பாததுTளியால் உலகமெல்லாம் தூய்மை அடைகின்றன.
ராதா தேவி
ஐவகைப் பிராணன்களுக்கும் ஆதி தேவியாக விளங்குபவள் ராதா தேவியாவாள். அவள் பஞ்சப் பிராணன்களின் வடிவமாகவும், பிராணனை விட மிகவும் பிரீதிப் பொருளாகவும், எல்லா தேவிகளிடமுள்ள அழகுருவாகவும், எல்லா இடத்திலும் உள்ள சம்பத்தாகவும், எல்லா உடல்களிலும் இடப் பக்கச் ஸ்வரூபமாகவும், குணத்தினாலும் தேஜஸினாலும் நிறைந்துள்ள பெருமை உருவமாகவும், பராபரங்களுக்குச் சாராம்சமாகவும், அவற்றுக்கு ஆதிமூலமாகவும்,
யூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 93
அநாதியாயும், பூஜைக்கு உகந்தவளாகவும், அனைவராலும் பூஜிக்கப் படுபவளாகவும், ராஸக்கிரீடைக்கு அதி தேவதையாயும், பரமாத்மாவின் ராஸ்க்கிரீடை மண்டபத்தில் இருப்பவளாகவும், ராஸக்கிரீடையால் அலங்காரமான வளாகவும், ராஸக்கிரீடைக்கே இறைவியாகவும், T இரகசியமானவளாகவும், ராஜ மாளிகையிலும் கோகுலத்திலும் வசிப்பவளாகவும், கோபிகாஸ்திரீயின் வேடம்பூண்டவளாகவும், அளவற்ற ஆனந்தமயமாகவும், நிர்குணையாகவும், நிராகரையாகவும், 1 Τ6) புண்ணியமற்றவளாகவும், அமைதி, அகங்காரமின்மை, அவாவின்மை பக்தர்களுக்கு அருள் புரிதல் முதலியன வாய்ந்தவளாகவும், வேத வழிகளால் தியானித்து அறியக் கூடியவளாகவும், தேவர்கள், முனிவர்கள் முதலியவர்களால் ஞான நோக்கில் பார்க்கப் படுபவளாகவும் திகழ்கின்றாள். நெருப்பால் சுத்தமான ஆடையை அணிந்துகொண்டு, பலவித அலங்காரங்கள் புனைந்து கொண்டு; கோடிச் சந்திரன் ஒருங்கே உதயமானது போல அவளது திருமேனி ஒளிவீசும். சகல காந்தியோடும் அவள் தேகம் நேர்த்தியாக விளங்கும். கிருஷ்ண பரமாத்மாவிடம் இவள் மிகவும் பற்றுதலும் பக்தியும் கொண்டவள். எல்லா சம்பத்துக்களையும் வழங்குபவள். வராக அவதார வடிவாக இருக்கும் மகா தேவியின் திருவடித்தாமரை சம்பந்தப்பட்ட சிறப்பால் பூமாதேவியைத் தூய்மைப்படுத்துபவளாகப் பிர காசிக்கின்றாள். புதுமையான மோகத்தில் ஒளி வீசும் மின்னலைப்போல் பரமாத்மாவின் மார்பில் பெண் ரத்தினமாகத் திகழ்கின்றாள். ஆதியில் பிரமா, தம் ஆத்ம சக்தியின் பொருட்டு அறுபதினாயிரம் ஆண்டுகள் அருந்தவம் புரிந்தும், கனவிலும் காணமுடியாத அருமையான திருவடிவத் தாமரைகள் உள்ளவள். பிறகு அந்தப்பிரமா, பூமியில் அருந்தவம் புரியவே அதனால் இரக்கங் கொண்டு, பிருந்தாவனந் தோறும் தன்னைக் காணும்படி செய்தவள் இந்த ராதாதேவியாவாள்.
சக்தியின் அம்ச் ரூபங்கள்
கங்கா தேவி
உலகங்களையெல்லாம் தூய்மை செய்யவல்ல கங்காதேவிபிரகிருதிதேவியின் பிரதான அம்சமாவாள். அந்தக்கங்காதேவி விஷ்ணுவின்தேக அம்சத்திலிருந்து நீர் வடிவமாகப் பிறந்தவள். பாவிகளின் பாவம் எனப்படும்
மயூரமங்கலம்

பாழுங் காட்டைச் சுட்டெரிக்கும் அக்கினியைப் போல் திகழ்பவள். தூய்மை நதிகளிலெல்லாம் அதி உன்னதமானவள். ஸ்நானபானங்களால் ஆனந்தமாக ஸ்பரிசிக்க உகந்தவள். மோட்சம் வழங்குகின்றவள். கோலோகத்திற்கு ஆனந்தமாகக் ஏறக் கூடிய படிக்கட்டைப் போன்றவள். பரமேஸ்வரனின் விரிசடையான மேருவில் முத்துப்போல் ஒளி வீசுபவள். பாரத தேசத்தில் தவம் செய்பவர்களுக்குத் தவத்தின் சித்தியை வழங்குபவள்.
துளசிதேவி ;-
பிரகிருதி தேவியின் பிரதான அம்சங்களில் ஒன்றானவள். சுத்த தத்துவ சொரூபிணியாகவும், அகங்காரமற்றவளாகவும், பதிவிரதையாகவும், நாராயணருக்குப் பிரியையாகவும் விளங்குபவள். தவம், சங்கல்பம், பூஜை முதலானவற்றை விளைவிப்பவள். தரிசனத்தாலும், ஸ்பரிசத்தினாலும் தென்திசையில் முக்தியைக் கொடுப்பவள்.
மானஸா தேவி
காசிபமுனிவரின் மனதில் தோன்றியதாலும், சர்வேஸ்வரனை மனதால் தியானிப்பதாலும் இவள் இப் பெயர் பெற்றாள். இவள் சித்த யோனியால் மூன்று யுகம் தவம் செய்தவள். தவத்தால் கட்டை போல் இருந்த இவளைப் பரமாத்மா அழைத்ததைக் கொண்டு ‘விசுவபூஜிதாஜகத் கெளரி என்ற பெயர் பெற்றாள். இவள் சிவப்பிரியையாகையால் சைவை என்றும், விஷ்ணுப்பிரியையாகையால் வைஷ்ணவி என்றும், நாகசர்ப்பங்களைக் காத்ததால் நாகேஸ்வரி என்றும், நாகபதினி' என்றும், விஷத்தைப் போக்கும் சக்தி கொண்டதால் 'விவிகரி' என்றும், ஈஸ்வரரிடம் சித்த யோகத்தை அடைந்ததால் சித்த யோகினி என்றும் வழங்கப்படுகின்றாள். இவளை வழிபடுவோருக்கு சர்ப்பங்களால் பயம் ஏற்படாது.
சஷ்டி தேவி
பிரகிருதி தேவியின் ஆறாவது அம்சத்தில் பிறந்ததால் சஷ்டி தேவியெனப் பெயர் பெற்றாள். இவள் குழந்தைகளுக்கு அதிஷ்டான தேவதை. பாலகர்களுக்கு நீடித்த ஆயுளைத் தருபவள். பக்தர்களுக்குப் புத்திரப் பேற்றைத் தருபவள். இவள் தான் முருகனுக்குச் சக்தியாக விளங்கும் தேவசேனை
என்பவளாம்.

Page 94
மங்களசண்டிகை -
அதிக சாமர்த்தியமும் கோபமும் உள்ளவளாகவும், கலியான காரியங்களில் மங்களம் தருபவளாகவும் இருப்பவள் இவள். ஏழு தீவுகளுக்கு அரசனாக இருந்த மநுவம்சத்தில் தோன்றியமங்களன் என்பவன் இவளைப் பூஜித்து இஷ்ட லாபம் பெற்றதால் மங்கள சண்டிகை என வழங்கப்பட்டாள். மூர்த்தி பேதத்தால் துர்க்கா தேவியாகவும், மூலப் பிரகிருதியாகவும் இவள் விளங்குகின்றாள். திரிபுரசங்காரத்தின் போது விஷ்ணு முதலான சகல தேவர்களும் போற்றக் காட்சி கொடுத்தவள். செவ்வாய்க்கிழமை இவளுக்கு உரிய
நாள.
காளிகா தேவி
சகல பிரபஞ்சங்களையும் ஒரே கணத்தில் அழிக்கக்கூடிய பிரகிருதியான துர்க்கையின் முகத்திலிருந்து பகுதியம்சமாக, சும்பநிசும்பர்களின் பெரும் போராட்டத்தின்போதுதோன்றியவள். தேஜஸினாலும், குணத்தினாலும் துர்க்கா தேவிக்கு சமதையானவள். மிகவும் வலிமை மிக்கவள். சகல சித்திகளும் கொடுப்பவள். கிருஷ்ணரிடம் பக்தி கொண்டவள். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கினையும் விரும்புபவர்களால் ஆராதிக்கப்படுபவள்.
பூமாதேவி
பிரகிருதி தேவியின் பிரதான அம்சங்களாற் பிறந்தவள். பிரமன், தேவர்கள்,முனிவர்கள், மனிதர்கள் ஆகியோரால் துதிக்கப்படுபவள். எல்லாவற்றிற்கும் அடிப்படையானவள். சமுத்திரங்களுக்கு ஆதாரமானவள். அனைவருக்கும் ஜீவனோபாய ரூபிணியாகவும், சகல சம்பத்தையும் தந்தருள்பவளாகவும் விளங்குபவள்.
சக்தியின் கலா ரூபங்கள்
ஸ்வாஹாதேவி என்பவள் அக்கினியின் மனைவி; அந்த தேவி இல்லாவிடில் ஒமஞ்செய்யும் அவிசை தேவர்கள் பெறுவதற்கு வலிமையிராது.
தனாதேவி, தீக்ஷாதேவி என இரண்டு தேவிகள் உண்டு. அவர்கள் யக்ஞபத்தினிகள். இவர்கள் பூஜிக்கப்படாவிட்டால் உலகில் எல்லாச் செயல்களும் வீணாகும்.
כ-72 C

சுவதாதேவி என்பவள் தர்ப்பண காலத்தில் உச்சரிக்கப்படுபவள். பிதுர்க்களின் பத்தினியாவாள். இவளைப் பூஜிக்காவிடில் பிதுர்களின் பூஜை வீணாகும். சுவஸ்திதேவி என்பவள் வாயுவின் பத்தினியாக இருக்கிறாள். தானம் வாங்கும்போதும், கொடுக்கும் போதும் இந்த தேவி போற்றித் துதிக்கப்படுகிறாள்.
புஷ்டி என்பவள் கணேசரின் பத்தினியாகத் திகழ்கிறாள். இவள் இல்லாவிடில் எல்லோரும் பலஹினமடைந்து நலிந்து விடுவார்கள்.
துஷ்டிதேவி என்பவள் ஆதிசேடனின் பத்தினியாக விளங்குகிறாள். இவள் இல்லாவிட்டால் யாரும் ஆனந்தமடையார்.
சம்பத்துதேவி என்பவள் ஈசானபத்தினியாக இருக்கிறாள். இவள் இல்லாவிட்டால் யாவரும் வறுமை அடைவர்.
திருதேவி என்பவள் கபிலரின் பத்தினியாகத் திகழ்கிறாள். இவள் இல்லாவிட்டால் தைரியமும் இல்லாமற் ப்ோய்விடும்.
சதிதேவி என்பவள் சத்திய பத்தினியாகத் திகழ்கிறாள். இவள் இல்லாவிட்டால் உறவினர்களும் இருக்க மாட்டார்கள்.
தயாதேவி, பதிவிரதாதேவி என்பவர்கள் மோகபத்தினிகள். இவர்கள் இல்லாவிட்டால் யாரும் ஒரு பயனும் அடைய முடியாது.
பிரதிஷ்டை என்பவள் புண்ணிய பத்தினி. இவளை வழிபடாத மனிதர்கள் நடைப்பிணங்களுக்கு ஒப்பாவார்கள்.
சம்சித்திதேவி, கீர்த்திதேவி என்பவர்கள் சுகர்மத்துக்குப் பத்தினிகள். புண்ணிய சீலர்களால் இத்தேவிகள் போற்றித் துதிக்கப்படாவிட்டால் உலகமெங்கும் புகழ் நசித்துப் போய்விடும்.
திரியை எனும் தேவி உத்தியோகபத்தினியாக இருக்கிறாள். இவள் இல்லாவிட்டால் உலகம் சோம்பலுற்றுவிடும்.
மித்தியாதேவிஎன்பவள் அதர்மபத்தினியாக இருக்கிறாள். இவள் துஷ்டர்களால் போற்றப்படுகிறாள். இவள் இல்லாவிட்டால் உலகம் பாழ்வெளியாகிவிடும். இவள் கிருதயுகத்தில் உருவற்றவளாகவும், திரேதாயுகத்தில் நுண்ணுருவினளாகவும், துவாபரயுகத்தில் பூரண உருவமுடையவளாகவும்,
பூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 95
இருப்பாள். தன் வலிமையினால் எங்கும் வியாபித்துத் தன் சகோதரனான கபடனோடு வீடுகள் தோறும் சஞ்சரித்துக் கொண்டிருப்பாள்.
சாந்தியும் லஜ்ஜையும் சுசீல பத்தினிகளாக இருக்கிறார்கள். இவர்கள் யாவராலும் ஆதரிக்கப் படுகின்றனர். இவர்கள் இல்லாவிடில் உலகம் பித்துப்பிடித்ததுபோல் மாறிவிடும். இனித் தியான பத்தினிகளாக புத்தியும் மேதையும் திருதியும் விளங்குகிறார்கள். இவர்கள் இல்லாவிடில் உலகம் அறிவிழந்து சித்தப்பிரமை பிடித்தது போலாகிவிடும்.
காந்தி என்பவள் தரும பத்தினியாக விளங்குகிறாள்; இவள் இல்லையென்றால் பிரபஞ்ச வடிவமான பரமாத்மாவுக்கு ஆதாரமிருக்காது.
சோப ஒளியுருவமான லஷ்மி என்பவள் மதிபத்தினி. இவள் பெண் உருவமாகவும் உடலுருவமாகவும் தானியம் முதலானவற்றின் உருவமாகவும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறாள்.
காலாக்கினிதேவியும் சித்தியோகினியான நித்திராதேவியும் ருத்திர பத்தினிகளாக இருக்கிறார்கள். இவர்கள் உலகமுழுவதும் வியாபித்திருக்கிறார்கள்.
சந்தி, இரவு, பகல் என்ற மூன்று தேவிகள் காலத்துக்குப் பத்தினிகளாக இருக்கிறார்கள். இவர்கள் இல்லாவிடில் நான்முகப் பிருமாவினாலும் காலத்தைக் கணிக்க முடியாது.
பசியும் தாகமும் லோக பத்தினிகளாக இருந்து அனைவரிடமும் வியாபித்துக் கவலைப்படச் செய்து கெளரவித்துப் போற்றப் படுவார்கள்.
பிரபையும் (வெளிச்சமும்) தாதையும் (தகிப்பும்) தேஜஸின் பத்தினிகள். இவர்கள் இல்லையென்றால் பிருமாவுங்கூட சிருஷ்டிக்குத் திறமையற்று விடுவார்.
கால கன்னி என்ற மிருதயுதேவியும், ஜரையும் ஜுரத்திற்குப் பத்தினிகளாக இருக்கிறார்கள். இவர்கள் இல்லையென்றால் பிரும்மதேவனால் சிருஷ்டிக்கப்பட்ட உலகங்கள் நெருக்கடியில் சிக்கி அழிந்துவிடும்
மயூரமங்கலம்
 

நித்திரா புத்திரிகளான தந்தரையும் (சோம்பலும்) ப்ரீதியும் சுகத்தின் பத்தினிகளாக உலக முழுவதும் வியாபித்துள்ளார்கள்.
சிரத்தையும், Uăglub வைராக்கியத்திற்குப் பத்தினிகளாக இருந்து ஜீவன் முக்தரிடம் நிறைந்திருப் பார்கள்.
தேவமாதாவான அதிதி, பசுக்களுக்கெல்லாம் தாயான காமதேனு, அசுர மாதாவான திதி, கர்த்துரு, வினதை, தநு என்பவர்களும் மற்றும் சந்திரனின் பத்தினியான ரோகிணி, சூரியனின் பத்தினியான ஸம்க்ஞா, மநுவின் பத்தினியான சதரூயை, இந்திரனின் பத்தினியான சசி, குருபிரகஸ்பதியின் பத்தினியான தாரை, வசிஷ்டரின் பத்தினியான அருந்ததி, கெளதமரின் பத்தினியான அகலிகை, அத்திரி முனிவரின் பத்தினியான அநகயை, கர்த்தம பிரஜாபதியின் பத்தினியான தேவஹ"தி, தக்ஷனின் பத்தினியான பிரசூதி, பிதுர்களின் மானசீகப் புத்திரியான மேனகை, அகத்தியரின் பத்தினியான லோபா முத்திரை, குபேரனின் பத்தினியான குந்தி, வருணனின் பத்தினியான பிரசித்தி வாயுவின் பத்தினியான விந்தியாதேவி, மற்றும் தமயந்தி, யசோதை, தேவகி, காந்தாரி, திரெளபதி, செளப்பியா, சத்தியவதி. விருஷபவனுக்குப் புதல்வியாகவும் ராதைக்குத் தாயாகவும் விளங்கும் குலோத்வஹா, மந்தோதரி, கெளசல்யா, சுபத்திரை, கவுரவி, ரேவதி, சத்தியபாமை காளிந்திலஷ்மணை, ஜாம்பவதி, அக்னி ஜிதி, மித் ரவிந்தை,ருக்மணி, சீதை, காளி, பரிமளகந்தி, உஷா அவளுடைய தோழியான சித்திரலேகை, பிரபாவதி, பானுமதி, மாயவதி, ரேணுகை, பலராமனின் தாயான ரோகிணி, கிருஷ்ணருக்குச் சகோதரியான ஏகதந்தை, மற்றும் துர்க்கை முதலான தேவிகளும் பிரகிருதியின் கலையாக இருக்கிறார்கள்.

Page 96
פG74
ц /6дрЛТ
நாதம் என்பதன் வடி
எந்தவிதமான பகுத்தறிவிற்கு
புலனாகாமல் ஜோதிமயமாக விள
பஸ்யந்தி
இதய வானத்தில் ‘த விளங்குபவள். வழிபடுவோருக் தோன்றுவாள்.
toéաս0f7
"கலை" - என்பதன் வடி ஸ்வரங்களாகவும், ககாரம் விளங்குபவள். அக்னி ஜுவாலை தெரியவள்.
வைகரி
‘வைகரீ’ என்பதன் விளக்கமுறச்செய்து, ஒளிமயம தோற்றமளிப்பவள். அத்தேவியி இந்தச் சக்தி தேவியே சகல 2 திகழ்வதால், அவளை மனிதர்க (փգպն.
சுரபி
இவள் கிருஷ்ண பரமாத் வடிவானவள்.
 
 

யின் வடிவங்கள்
வினளாக விளங்குபவள். மூலாதாரச் சக்கரத்தில் ம், ஞான விசாரங்களுக்கும், புத்தியுக்திகளுக்கும் ங்குபவள்.
ருவ்ருத்’ என்ற ஓங்கார வடிவமான பிரணவமாக கு மட்டும் நிலையற்ற மின்னல் போல் ஒருகண நேரம்
வமானவள். ‘விசுத்தி சக்கரத்தில் அகாரம் முதலிய முதலிய ஸ்பர்சங்களாகவும், தூய வர்ணமயமாகவும்
யைப் போல் வழிபடுவோருக்குத் தெளிவாகத் தோன்றித்
வடிவினள். வாக்கு ரூபமாக ஒவ்வொன்றையும் ாக விளங்குபவள். சப்தரூபமாக வழிபடுவோருக்குத் டம் மூன்று வகையான அவஸ்த்தை நிலைகள் உண்டு. உலகங்களையும் விளங்க வைக்கும் சப்த வடிவமாகத் ர் அந்த நிலையிலேயே வாக்கினால் விளக்கிச் சொல்ல
மாவால் பிருந்தாவனத்தில் உருவாக்கப்பட்டவள். பசு
யூரபதி பூgபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானகும்பாபிஷேக மலர் - 2000

Page 97
ராதிகாதேவி
மூலப்பிரகிருதி தேவி பிராணன், புத்தி என்பனவற்றுக்கு அதிட்டான தேவியாய் விளங்குபவள். இவள் வயப்பட்டே உலகம் இயங்குகின்றது. இத்தேவியின் அருள் இன்றி முத்தி நிலை சித்திக்காது.
வசுதா தேவி
பூமி தேவியான இவள் விஷ்ணு பகவான் கட்டளைப்படி வராக வடிவில் தாவர சங்கமங்களுடன் கூடிய உரகங்கள் அனைத்தையும் விளையாட்டாகத் தாங்குபவள்.
மாயா தேவி
இவள் முத்தொழில்களும் செய்யும் ஆற்றல்
வாய்ந்தவள். காலம், கர்மம், சுபாவம் முதலியவைகளால்
எங்கும் வியாபித்து சுக துக்கங்களை உண்டாக்குபவள்.
வாராஹி தேவி
பரமேஸ்வரியின் சேனாநாயகியாக விளங்குபவள், இத்தேவி வரஹா முகத்தினளாய் எட்டுப் புஜங்களுடன் கருங்குவளை மலரின் நிறங்கொண்ட திருமேனியளாய் திருக்கரங்களில் உலக்கை, கலப்பை, கத்தி, கேடயம், சக்கரம், சங்கம் முதலியன கொண்டும் அபய முத்திரை காட்டியும் விளங்குகின்றாள். வலது பாதத்தை மடித்தும், இடது பாகத்தைத் தொங்கவிட்டும் காணப்படுகிறாள். விஷிக்கரன் எனும் அரக்கனை அழித்தவள்.
 

பூனி மகா ப்ரத்யங்கிரா தேவி
நரசிம்ம அவதாரம் கொண்ட திருமாலின் உக்ரத்தை அடக்க சரபேசுவரர் ரூபம் எடுத்த சிவபெருமானின் நெற்றிக் கண் வழியாகத் தோன்றியவள். இரண்ட நீலப்பட்டாடை தரித்தவளாய் மலை போன்ற பருத்த சரீரமும், ஆயிரம் சிங்கமும், குகை போன்ற திறந்த வாயும், கோடிக்கணக்கான தெற்றுப் பற்களும், இரண்டாயிரம் கைகளும் பலவிதமான ஆயுதங்களும்
கொண்டவள்.
சாமுனடி
அன்னை சன்டமுண்டர்களைக் கொல்ல
எடுத்த வடிவம்.
இரக்த நந்தி
விப்ரசித்திக் குமரரைக் கொல்ல அன்னை எடுத்த வடிவம்.
பீமை
தண்டி எனும் அசுரனைக் கொல்ல அன்னை
எடுத்த வடிவம்.
மூகாம்பிகை
மூகாசுரனை வதைக்க அன்னை எடுத்த வடிவம்.

Page 98
t S. ဒိုင္ႏိုင္တိဖို့ šš
ふ */^\sށ
ိုရှီဝှိုဝှိုင္ငံတ္တိ O اترتیبs,ހށު
ప్లే *స్టీక్ష
శ్రీ
*
メ
8F
委。
1s
※
--
۔ه•
فيلم
沙
0.
சிவபெருமானை மதிக்கா தாகூடிாயணி, அங்கு தானும் த பொறுக்காமல் அந்த யாககுண் கேள்வியுற்ற சிவபெருமான் அடங் தனது தேவியின் இறந்த உடலை ஆவேசமாக ஆடினான். உலகமே முதல் அனைவரும் நடு நடுங்கில் சுழன்றன. பூமி நடுங்கியது. இ சக்கராயுதத்தை ஏவிப் பராசக்தியி பாரத நாட்டின் பல்வேறு பாகங் பீடங்களாகத் திகழ்கின்றன.
சக்தி பீடங்கள் ஐம்பத்தொ என்றும் கூறுவர். பீடநிர்மயா 6 குறிப்பிடுகின்றது.
தட்சன் மகளாய் அன்6ை சிவனை தூஷித்ததால் அக்னியி தேவியின் திருமேனியைத் தோல் விஷ்ணு வேண்ட சித்கலாரூபமா தனிப் பீடமாக இருக்கச் செய்த தானும் அமர்ந்து அருள் செ பெயர்களையும், தேவியின் ெ பாவங்களில் இருந்து விடு தேவிபாகவதத்தில் வியாசர் கூ
சிவபெருமான் தேவியின் சி பொருட்டு அதனை வேண்டி திரும சிந்தாமணி.
மயூ
 

க்தி பீடங்கள்
ல் தக்கன் செய்த யாகத்திற்குச் சென்ற பராசக்தியாகிய னது நாயகனும் அவமதிக்கப் பட்டதையறிந்து மனம் டத்திலேயே விழுந்து உயிர் துறந்தாள். இதனைக் காச் சினத்துடன் அங்கு வந்து கோபக் கனலாக மாறித் எடுத்துச் சிரசின் மேலே வைத்துச் சுழன்று சுழன்று அஞ்சியது. அழிவு நெருங்கி விட்டதோ என்று பிரம்மா னர். கடல் பொங்கியது. கோள்கள் நிலைதடுமாறிச் தனைப் பார்த்த காத்தற் கடவுளாகிய திருமால், தனது ன் உடலைத் துண்டுகளாக்கித் தெறித்து வீழச் செய்தார். களில் உடற்பாகங்கள் விழுந்தன. அவையே சக்தி
ான்று என்றும், அறுபத்து நான்கு என்றும், நூற்றெட்டு ான்ற நூல் ஐம்பத்தொரு சக்தி பீடங்களைச் சிறப்பாகக்
ா அவதரித்து, சதிதேவி எனப் பெயர் பெற்று, தந்தை ல் பாய அக்கினிக்குள் சித்கலாரூபமாக இருந்த சதி ரில் தூக்கிக் கொண்டு உலகமெலாம் திரிந்த சிவன், ன அன்னையின் கலைகளை அகிலமெங்கும் தனித் ார். அங்ங்ணம் அமைந்த நூற்றெட்டுப் பீடங்களிலும் ய்தார். இந் நூற்றெட்டுச் சக்தி பீடங்களின் பயர்களையும் கேட்கவோ நினைக்கவோ செய்பவர் பட்டுத் தேவியின் திருவடி அடைவர் எனத்
யுள்ளார்.
ற்கலாரூபத்தைத் தாங்கி நிற்கையில் உலக ஜீவனத்தின் லே சக்தி பீடங்களாக ஸ்தாபித்தார் என்கிறது அபிதான
ரபதி யூஜீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 99
தேவியின் ஐம்பத்ெ
1. காஞ்சிபுரம்
2. மதுரை
4. திருக்குற்றாலம் 5. திருவாரூர்
6. கன்னியாகுமரி
7. அம்பத்தூர்
8. கோகர்ணம்
9.பூனி சைலம்
10.ւլք
11. சிருங்கேரி
12. கோலாப்பூர்
13. அரசூர்
மயூரமங்கலம்
: இது பூநீ
சென்னைக்
சக்கரபீடம். தேவியின் எலும்புகள் இங்கு வீழ்ந்ததாகக் கூறுவர்.
: இது மந்த்ரிணி பீடம். 3. திருஆனைக்கா :
: இது பராசக்தி பீடம்.
: இது கமலை பீடம் - காமகலா
இது வராகி பீடம்.
பீடம் என்றும் கூறுவர்.
: இது தேவியின் பிருஷ்டபாகம்
விழுந்த இடம்.
கருகிலுள்ள வைணவி ஆலயம், சக்திபீட வரிசையில் ஐம் பத்தோரூர் என்பதே அம்பத்தூர் என மருவியதாகக் கூறுவர்.
வலது காது விழுந்த இடம்.
U JTG JTO கூேடித்திரம். தேவியின் திருநாமம் பத்ரகர்ணிகை.
: இடது காது விழுந்த இடம்.
சிறந்த சிவத்தலம். அம்பிகையின் திருநாமம் பிரமராம்பாள். மாதவி பீடம்.
நாபி விழுந்த இடம். உத்கலம்
எனப் படும் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. பைரவயிடம். தேவியின் திரு நாமம் விமலை.
மைசூர் மாநிலத்தில் உள்ளது.
தேவி சாரதையாகத் திகழ்கின்றாள்.
கண்கள் விழுந்த இடம்.
அன்னை மகா இலக்குமியாக
விளங்குகின்றாள். தனம் விழுந்த இடம். ஆபூமலைக்கு அருகில்
உள்ளது. இங்கு சிலாவடிவில் இல்லாமல் அம்பிகை யந்திர வடிவில் அம்பிகா என்ற தி ரு ந |ா ம த் து ட ன் விளங்குகின்றாள்.

)தாரு சக்தி பீடங்கள்
14. ஜலந்தரா
15. துவாராவாட்
16. Ligurg-T
17. பராகத்
18. சிம்லா
19. மானசரோவர்
20. காஷ்மீரம்
21. நேபாளம்
22. ஜூவாலாமுகி 23. சுகந்தா
24. வாரணாசி(காசி):
25.நைமிசாரண்யம் :
26. குருக்ஷேத்திரம்: 27. பிரயாகை
28. உஜ்ஜயினி
தனம்
குஜராத்
இக்குன்றின்
தேவியின்
: இது ஒரு தடாகம்.
: இங்கு
இடம். திருநாமம்
விழுந்த தேவியின்
திரிபுரமாலினி.
மாநிலத்தில்
உள்ளது.
திருவயிறு விழுந்த இடம்.
இதனை சோமநாதத் தலம் என்றும் கூறுவர்.
அமைப்பே காளிகா யந்திர உருவில் உள்ளது.
திருநாமம் சியாமளா. இதுவே திரிந்து சிம்லா வாயிற்று.
தலை விழுந்த இடம். இமயத்தில் உள்ளது. அம்பிகை தாட்சாயணி. குமுதா பீடம்,
கழுத்து விழுந்த இடம்.
அம்பிகையின் திருநாமம்
Tos).
முழங்கால் விழுந்த இடம்.
இங்குள்ள 969மாத்ருகைகளின் ஆலயம் புகழ்மிக்கது.
: நாக்கு விழுந்த இடம்.
மூக்கு விழுந்த இடம். இமய
மலைச் சரிவில் உள்ள தலம். காதுக் குண்டலம் விழுந்த இடம். இது மணிகர்ணிகை பீடம். தேவியின் திருநாமம் விசாலாகூஜி. அம்பிகை இலிங்க தாரிணி யாகத் திகழ்கின்றாள். முழங்கை விழுந்த இடம்.
கைவிரல்கள் விழுந்த இடம்.
லலிதா பீடம்.
தேவி மங்கள ச ண் டி  ைக ய ர க விளங்குகின்றாள். மகாகவி காளி தாசனுக்கு அருள்
நல்கியவள்.
כדC7

Page 100
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
C78 C
பிருந்தாவனம் கூந்தல் விழுந்த இடம். இராதா
அத்தினாபுரம்
கன்னியாகுப்ஜம் :
புஷ்கரம்
கேதாரம் பத்ரை
சாளக்ராமம் மலயாசலம்
தேவிகா தடம் :
பீடம்.
இங்கு அம்பிகையின் திருநாமம் ஜெயந்தி. ஜயந்தி பீடம்.
ଗ ଞ ୩t if lf l th) . அம்பிகையின் திருநாமம் கெளரி.
அன்னையின் திருநாமம்
புருஹுதை. புருஹதா பீடம்.
: சன்மார்க்க தாயினி பீடம்.
பத்ரேஸ்வரி பீடம். உருத்திர கோடி
மஹாதேவி பீடம். தேவியின்
உருத்ராணி பீடம்.
திருநாமம் கல்யாணி, ரம்பா பீடம்.
நந்தினி பீடம்.
தேவியின் அறுபத்து
மாத்ரு புரம் கொல்லாபுரம் துளஜாபுரம் இங்குளை ழரீ காசி ரக்த தந்த்ரிகை ரக்த தந்த்ரிகை
FITshuff
மதுரை நேபாளம் பூரீ நகரம் நிலபர்வதம்
பூரீ சந்திரகலை
. பூரீ காஞ்சி
வைத்ய நாதம்
656
வேதாரண்யம் வேதாரண்யம்
மஹாசலம்
ரேணுகா பீடம் லக்ஷமி பீடம் சப்தச்ருங்க பீடம் ஜவாலாமுகி பீடம் அன்னபூர்ணா பீடம் விந்த்யாசல பீடம் துர்கா பீடம் ČIJIT förf Llo மீனாட்கூழி பீடம் ரகூடிய காளி பீடம் சாம்பு நகேச்வரி பீடம் நீலாம்பரி பீடம்
கெளசிகீ பீடம்
காமாகூழி பீடம் ஜ்வாலா பீடம் நீலசரஸ்வதி பீடம் ஏகாம்பர பீடம் சுந்தரீ பீடம்
யோகேஸ்வர பீடம்

39.
40.
41.
42.
43.
44.
45.
46
50.
51.
சஹஸ்திராகூடிம்:
வராக சைலம்
இரண்யாக்ஷம்
திரிகூடபர்வதம்:
சஃயபர்வதம்
வைத்தியநாதம்:
மகாகாளம்
வேதமுகம் ஹேமசுகூடம்
உத்பலாகூஜி பீடம்.
ஜயா பீடம் மகோத்பலா பீடம்.
உருத்திர சுந்தரீ பீடம்.
ஏகவீரா பீடம்.
ஆரோக்யா பீடம்.
மஹேஸ்வரி பீடம். . விந்தியபர்வதம்: 47.
48.
49.
நிதம்பை பீடம்.
காயத்ரீபீடம், மன்மதா பீடம்.
அமர கண்டம் : சண்டிகா பீடம்.
கல்கத்தா
காமரூபம்
கால் விரல்கள் விழுந்த இடம்.
அன்னை காளிகா தேவியாக அருள் பாலிக்கின்றாள்.
உபஸ்தம் விழுந்த இடம்,
இத்தலம் அஸ்ஸாமில்
உள்ளது. காமாக்யா என்பது அம்பிகையின் திருநாமம்.
நான்கு சக்தி பீடங்கள்
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
ஹிதய பர்வதம் மணித்வீபம் மணித்வீபம் அமரேசம் ப்ரபாஸம் புகூடிகரம் நைமிமீசம் புகூடிகாராக்ஷம் ஆக்ஷாடம் பாரபூதி கண்ட முண்டம் நாமுலம்
பூரீகிரி பஞ்ச நகம் ஹரிச் சந்திரம் ஆமரதகேஸ்வரம் மஹாகாளாஸ்தி மத்யாபீதம்
so
மாதேவீ பீடம் புவனேஸ்வரி பீடம் திரிபுரபைரவி பீடம் சண்டிகா பீடம் புகூடிகரேக்ஷணி பீடம் காயத்ரீ பீடம் தேவி பீடம் புருகாதா பீடம் ரதி பீடம்
பூதி பீடம் தண்டினி பீடம் நாகுலேஸ்வரி பீடம் சாராதா பீடம் திரிசூல பீடம் சந்திரா பீடம் ஸிசுஷ்மபீடம் சாங்கீரீ பீடம்
சர்வாணிபீடம்
மங்கள பீடம்
யூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 101
39.
40.
4.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51,
மயூரமங்கலம்
கேதாரம் - மார்க்கதாயினி பீடம் GOUGlth - பைரவி பீடம் குருக்ஷேத்ரம் - தர்ணுப்பிரியை பீடம் விபினாகுலம் - ஸ்வாயம் பலி பீடம் கணகளம் - உக்ரபீடம் விமகேஸ்வரம் - விஸ்வேஸ பீடம் ஹடாஹாசம் - மதாந்தக பீடம்
Loth — 15uoı5Lüb
வஸ்த்ரம்பதம் - பவானிபீடம் அவமுக்தம் - விசாலாகூழிபீடம் அர்த்த கோடிகம் - ருத்ராணிபீடம் அவழுக்தம் - வராஹிபீடம் மஹாலயம் - மஹாபாகாபீடம்
தேவியின் நூற்ெ
1. காசி க்ஷேத்திரத்தில் விசாலாகூரி 2. நைமிசாரண்யத்தில் லிங்கதாரணி 3. பிரயாகையில் லலிதை 4. கந்தமாதனத்தில் காமுகி 5. மானசசரஸில் குமுதா 6. அதன் தென்திசையில் விசுவகாமா பகவதி 7. அதன் வடதிசையில் விஸ்வகாமப்பூரணி 8. கோமந்தகத்தில் கோமதி 9. மந்தரத்தில் காமசாரிணி 10. சயித்திராதத்தில் மதோத்கடை 1. அஸ்தினாபுரத்தில் ஜயந்தி 12. கன்யாகுப்ஜத்தில் கெளரி 13. மலையாசலத்தில் ரம்பை 14. ஏகாம்பர பீடத்தில் கீர்த்திமதி 15. விஸ்வத்தில் விஸ்வேஸ்வரி 16. புஷ்பகரத்தில் புருஹறிதை 17. கேதார பீடத்தில் சன்மார்க்கதாயினி 18. இமயமலையின் பின்புறத்தில் மந்தா தேவி 19. கோகர்ணத்தில் பத்திரகர்ணிகா தேவி 20. பவானியில் ஸ்தானேஸ்வரி 21. வில்வ பத்திரிகையில் பில்வகை 22. பூரீசைலத்தில் மாதவி 23. பத்திரையில் பத்திரேஸ்வரி

52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
கோகர்ணம் - பத்ரகாளிபீடம் பத்ரகர்ணிகம் - பத்ராபீடம் ஸ்தானும் - ஸ்தாண்வீசாபீடம் ஸ்வர்ணாகூடிம் - உத்பலாகூழிபீடம் கமலாலயம் - கமலாபீடம்
சகமண்டலம் - ப்ரசண்டயீடம்
மகேடெம் - மகுடேஸ்வரிபீடம் குரண்டலம் - த்ரிசந்திரகாபீடம் மண்டலேசம் - சரண்டகாபீடம் ஸ்தூல கேஸ்வரம் - ஸ்தூல பீடம் சங்க கர்ணம் - தீவனி பீடம் கரவஞ்சம் - காளி பீடம் ஞானிகள் இதயம் - பரமேஸ்வரி பீடம்
]றட்டு சக்தி பீடங்கள்
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40,
41.
42.
43.
44.
45.
46.
வராக மலையில் ஜயை கமலாலயத்தில் கமலை ருத்ரகோடியில் ருத்திராணி காலஞ்சரத்தில் காளி சாளக்கிராமத்தில் மகாதேவி சிவலிங்கத்தில் ஜலப்பிரபை மகாலிங்கத்தில் கயிலை மாகோட்டத்தில் மகுடேஸ்வரி LorTuUTLyfusilló (egutomofo சந்தானத்தில் லலிதாம்பிகை கயையில் மங்களாம்பிகை
புருஷோத்தமத்தில் விமலை சகஸ்ராக்ஷத்தில் உத்பலாட்சி இரண்யாக்ஷத்தில் மகோத்பலை விபசாவில் அமோகாக்ஷரி புண்டரவர்த்தனத்தில் பாடலி சுபாரு சுவத்தில் நாராயணி திரிகூட பர்வதத்தில் ருத்திர சுந்தரி விபுலத்தில் விபுலாதேவி மலையாசலத்தில் கல்யாணி சஹ்ய பர்வதத்தில் ஏகவீனர் அரிச்சந்திரத்தில் சந்திரிகாதேவி ராமதீர்த்தத்தில் ரமணா

Page 102
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55.
56. 57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
7售
72.
73.
74.
75.
76.
77.
யமுனா தீர்த்தத்தில் மிருகாவதி கோடிக்கரையில் கோடவி மாதவவனத்தில் சுகந்தாதேவி கோதாவரியில் திரிசந்தி கங்காதுவாரத்தில் ரதப்பிரியை சிவகுண்டத்தில் சுபானந்தை தேவிகாதடத்தில் நந்தினி துவாரகையில் ருக்மிணி பிருந்தாவனத்தில் ராதை
மதுரையில் தேவகி
பாதாளத்தில் பரமேஸ்வரி சித்திரகூடத்தில் சீதாதேவி விந்தியத்தில் விந்தியாவாசினி கரவீரத்தில் மகாலசுஷ்மி வைத்தியநாதத்தில் ஆரோக்யை விநாயகத்தலத்தில் உமாதேவி மகாகளத்தில் மகேஸ்வரி உஷ்ண தீர்த்தத்தில் அபயாம்பிகை விந்தியமலையில் நிதம்பை மாண்டவியத்தில் மாண்டவி மகேஸ்வரபுரத்தில் ஸ்வாஹாதேவி சகலண்டலத்தில் பிரசண்டை அமரகண்டத்தில் சண்டிகாதேவி சோமேஸ்வரத்தில் வராரோகை
பிரபாசத்தில் புஷ்கராவதி
மகாலயத்தில் மகாபாகை சரசுவதிநதித் தலத்தில் தேவமாதை பயோஷணியத்தில் பிங்களேஸ்வரி கிருத செளக்யத்தில் சிம்மாகை கார்த்திகையில் ஆதிசங்கரி உற்பலாவர்தத்தில் லோலாதேவி
es C80) Apg
 

78.
79.
80.
8.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
9.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
邯00。
101
O2.
103。
104.
105.
106.
107.
08.
சோணசங்கமத்தில் சுபத்திரா சித்தவதனத்தில் லகழ்மி பரதாசிரமத்தில் அனங்கை ஜாலந்தரத்தில் விஸ்வமுகி கிஷ்கிந்தமலையில் தாராதேவி தேவதாரு வனத்தில் யுஷ்டிர்மேதை காஷ்மீரத்தில் பீமாதேவி ஹிமாத்திரியில் துஷ்டிவிஸ்வேஸ்வரி கபால மோசனத்தில் கத்தி காயாரோகணத்தில் மாதாதேவி சங்கோத்தரத்தில் தாரா பிண்டாரக ஆலயத்தில் திருதி சந்திரபாகா நதியில் கலாதேவி அச்சோதயத்தில் சிவதாரணி வேணியாற்றில் அமுதாதேவி பதரியில் உரசி உத்தரகிரியில் ஒளஷதை குசத்வீபத்தில் குசோதகாதேவி ஏமகூடத்தில் மன்மதை குமுதத்தில் சத்தியத்வாதினி அஸ்வத்தில் வந்தினி குபோலயத்தில் நிதிதேவி தேவமுகத்தில் காயத்திரி தேவி பிருமாமுகத்தில் சரஸ்வதி சிவ சந்நிதியில் பார்வதிதேவி தேவலோகத்தில் இந்திராணி சூரிய பிம்பத்தில் பிரபாதேவி சப்த மாதர்களில் வைஷ்ணவி பதிவிரதைகளில் அருந்ததி அழகான மங்கையரில் திலோத்தமை சகலதேகிகளின் சித்தத்தில் சக்தியிரம்மகலை
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 103
K
a-చxV
-Kایمر،
)
s
மயூரமங்கலம்
கண்ணகை அம்மன்
அக்கரைப்பற்று, அ ஆனைக்கோட்டை, ஊரெ கன்னன்குடா, கரைச்சி, கல் குடத்தனை, கொக்கட்டிச்ே தம்பன்கடவை, தம்பிலுவில், புங்குடுதீவு, புதுக்குடியிருப் மண்டைதீவு, மயிலிட்டி, ம முகமாலை, முனைக்கா (
வாழைச்சேனை, வீமன்காம
முத்துமாரி அம்பாள்
அச்சுவேலி, அல்வாய், உடையார்கட்டு, கசாத்துறை கிளிவெட்டி, கீரிமலை, குஞ்சு கோட்டைக்கல்லாறு, சமயபு தும்பளை, தொல்புரம், நா திருநெல்வேலி, பருத்திச் புதுக்குடியிருப்பு, புவாக்பி முகத்துவாரம், முல்லைத்தீ6 வாழைச்சேனை, வேதாரணி
பத்திரகாளி
மயூரபதி, அச்சுவேலி கல்முனை, சுழிபுரம், சங்கர
 
 
 

சக்தியின் நாமங்களும் நள்பாலிக்கும்
பதிகளும்
ச்செழு, அமிர்தகழி, அல்வாய், ஆரையம்பதி, ழ, எருவில், எழுதுமட்டுவாழ், ஓமந்தை, கச்சாய், முனை, சத்துருக் கொண்டான், கற்குடா, காரைதீவு, சாலை, கோப்பாய், கோணவளை, செட்டிபாளையம், நாகர்கோவில், நாவற்குழி, பளை, பன்றித்தலைச்சி, பு. போரதீவு, மகிழடித்தீவு, மந்திகை, மண்டுவில், ாதனை, மிருசுவில், முகத்துவாரம், முல்லைத்தீவு, டு, வந்தாறுமூலை, வண்ணை, வற்றாப்பழை,
ம், வீரமுனை.
அளவெட்டி, அமிர்தகழி, அனலைதீவு, இருபாலை, உடப்பு,
கட்டுவன், கதிரவெளி, காரைநகர், காங்கேசன்துறை, $குளம், குரும்பசிட்டி, கொத்துக்குளம், கொழும்புத்துறை, ரம், சுட்டிபுரம், சாம்பல்தீவு, சித்தாண்டி, சூராவத்தை, வலப்பிட்டி, நாவற்குடா, நானாட்டான், நெடுந்தீவு, சேனை, பளை, பாகற்காய் குளம், புங்குடுதீவு, டி, மந்துவில், மயிலிட்டி, மண்டைதீவு, மாத்தளை, |, வட்டுக்கோட்டை, வண்ணை, வல்லை, வஹரக்கா,
வேலணை, கோப்பாய், கொட்டாஞ்சேனை, கம்பளை.
, இருபாலை, திருநெல்வேலி, திருமலை, தும்பளை,
தை, மட்டக்களப்பு, வண்ணார்பண்ணை, இணுவில்.

Page 104
அபிராமி அம்மன் அதிகை நாயகி அல்லியம் பூங்கோதை
ஆதிமுத்துமாரி இராஜராஜேஸ்வரி
ஒப்பிலா நாயகி ஒப்பிலா முலையம்மை கடனாட்சி
கருமாரி கருந்தார்க்குழலி கனகாம்பிகை காமாட்சி
காளிகா பரமேஸ்வரி காளிகாதேவி
காளியம்மாள்
கெளரியம்மை சண்டிகா பரமேஸ்வரி சல்லியம்மை சிங்காபுரியம்மை சிவகாமியம்மன்
சிவகாமசுந்தரி சிவசக்தி சிவமுத்துமாரி சீதளாம்பிகை சுவர்ணாம்பிகை சொக்கநாயகி
திருநிலைநாயகி திரெளபதை அம்பாள்
துர்க்காதேவி
தேவரையாளி அம்பாள்
நகுலாம்பிகை நாகம்மை
பிராண்டா பதி
வீரட்டானம்
திருவாரூர்
புளியங்குளம் அனலைதீவு, குருக்கடி, பலாலி, சிறுப்பிட்டி,
 ெத ல் லி ப் ப  ைழ , நாய ன் மார் கட்டு , புங்குடுதீவு, மந்துவில், மாவிட்டபுரம், நெடுங்குளம்
ஆவடுதுறை
LOLL8556TTLIL நீர்கொழும்பு திருவேற்காடு திருப்புகலூர்
இரணைமடு கச்சியேகம்பம், நீர்வேலி, வண்ணை.
புங்குடுதீவு களபூமி, கன்னாதிட்டி, புங்கை, மல்லாகம். கொக்குவில், சங்கானை, மாதனை, மானிப்பாய், வண்ணை திருக்கேதீச்சரம் பருத்தித்துறை
சாம்பல்தீவு
மட்டக்களப்பு இணுவில், கோண்டாவில், சிதம்பரம், திருமலை. திருநெல்வேலி
அச்சுவேலி
பழுகாமம்
வவுனிக்குளம்
சுன்னாகம்
திருப்புன்கூர்
பிரமபுரம் பழுகாமம், பாண்டிருப்பு, மட்டக்குளி, உடப்பு அளவெட்டி,புதுக்குடியிருப்பு திருமலை, தெல்லிப்பழை, நுனாவில், வன்கூவர் அல்வாய், ஏழாலை நகுலேஸ்வரம் கற்சிலைமடு, சீரணி

நாகபூஷணி
நாச்சியம்மன் பத்தினித்தெய்யோ பத்தினியம்மை
பண்மொழியம்மை பராசக்தி பருவதவர்த்தனி -
பாலசுந்தரி பார்வதியம்மை புவனேசுவரி
பெண்ணினல்லாள் மகாமாரியம்மா
மகாமுத்துமாரி மாதுமையம்மாள் மகாகாளி மனோன்மணி
மிந்திரன் அம்பாள் மீனாட்சி அம்மை
முதலியம்மன் வடிவாம்பிகை வாலாம்பிகை
வாலையம்மை வராவரி அம்பாள் விசாலாட்சி
வீரபராசக்தி -- வீரமாகாளி
வெண்ணிற்றுமையம்மை
அராலி , காரைநகர், கோண்டாவில், சரவணை, நயினாதீவு, பரந்தன், புங்கன்குளம் கிளான், நவாலி கதிர்காமம் ஈரளக்குளம், களுவன் கேணி, சம்புக் கழி, திருமலை. பாண்டிக்கொடுமுடி
பூநகரி ஆவரங்கால், இராமேச்சரம், உரும்பிராய், ஊரெழு, புலோலி
பாச்சிலாச்சிராமம் திருக்கயிலாயம் அச்சுவேலி, இடைக்காடு, கிளிவெட்டிகீரிமலைசுதுமலை மணற்காடுநாவற்குழி கழுக்குன்றம் புளியங்கூடல், தொல்புரம், மட்டக்களப்பு வரிசைப்புலம்
திருகோணமலை ஹல்ஸ்டோப் (கொழும்பு) நந்தா வில், நல்லூர், நாரந்தனை
துனனாலை அளவெட்டி, உடுவில், ஊரைதீவு, சங்கத்தானை, சரவணை, புங்குடுதீவு, திருவாலவாய்.
புலோலி
முன்னேஸ்வரம் வண்ணார்பண்ணை,வல்வை திருநெல்வேலி கொக்குவில் காசியம்பதி, திருமலை வண்ணார் பண்ணை இணுவில், கெருடாவில், சரசாலை, புங்குடுதீவு, வண்ணார் பண்ணை, கொழும்பு நல்லூர்ப்பெருமணம்.
ஏழா  ைல,
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 105
மயூரமங்கலம் \
3.
இவள் சிவத்தோடு பின் காரியோன் முகியானபோது தமது ஆதிசக்தியின் ஆயிரத்தொரு ஆயிரத்தொரு கூறாக ஞாநாச கிரியாசக்தியையும் தோற்றுவிப் வளர்த்தும் மலபரிபாகத்தில் சிவ செய்வதால் உலகமாதா எனப்ப( இவள் தன்னிடத்துக் குமா புத்திரர் இல்லாது நீங்கச் சாபம் அ குமரக்கடவுளின் திருவவ சிலம்பிலிருந்து நவமணிகள் சிதற ஆ அப்பெண்களைச் சிவபெருமான் ( பிராட்டி கண்டு கோபித்து அவர் இச்சாபங் கேட்டு உடல் புழுங்க, பெண்களும் பிராட்டியின் ஏவல் பு இவள் சிவமூர்த்தியுடன் சர பாலூட்டினள். அப்பால் பெருகிச் மீனுருக்கொண்டிருந்த பராசரரிஷி சிவமூர்த்தியின் இரண்டு ச தேவர் முதலியவர்க்கு உலகமிருண் நீங்கச் சிவபூஜை செய்தவள்.
தம்மிடம் துர்க்கையைத் செய்வித்தவர்.
தாமிருக்கும் வனத்தில் கா பெண்ணாக எனச் சபித்தவள். இத வாணரனும் பெண்ணானார்கள்.
ஒரு கற்பத்தில் தோழியருட என்கின்ற அசுரர் சிவகணத்தவ கையிலிருந்த பந்தால் அவர்களை அதுவே கந்துகேசம் எனும் பெய
 
 

ான சிந்தாமணி ம் சக்தியற்றிய
செய்திகள்
னமாய் இருப்பதாற் பராசக்தி எனப்படுகிறாள். இவள் Fக்தியில் ஆயிரத்தொரு கூறாக ஆதிசக்தியையும், அந்த கூறாக இச்சாசக்தியையும், அவ்விச்சாசக்தியின் க்தியையும், அந்தஞாநசக்தியில் ஆயிரத்தொருகூறாக பாள். இச்சக்தி அளவிடப்படாத ஆன்மாக்களை ஈன்றும் மூர்த்தியின் திருவடியாகிய பேரின்பத்தை அடையச் டுவள். இவளது தோழியர் அநிந்திதை, கமலினி என்போர். "ரக்கடவுள் அவதரிப்பதைத் தடை செய்த தேவர்களுக்குப் புளித்தவள். தாரத்தில் தீப்பொறி கண்டு பயந்த பிராட்டியின் காற் அதனைப்பிராட்டிநோக்க அவை ஒன்பதும் பெண்களாயின. நோக்க அவர்கள் கருக்கொண்டனர். அப் பெண்களைப் கள் கரு உயிர்க்காதிருக்கச் சபித்தனள். அப்பெண்கள் அப்புழுக்கத்தில் லட்சம் வீரர் உதித்தனர். பின் ஒன்பது ரிந்து அவள் அருளால் நவ வீரர்களைப் பெற்றனள். வணப் பொய்கைக்குச் சென்று குமாரக்கடவுளை எடுத்துப் சரவணப் பொய்கையில் பாய அம்மடுவில் சாபத்தால் புத்திரர் சாபம் நீங்கினர். ண்களையும் இவள் விளையாட்டாக மூடிய காரணத்தால் டு நித்திய கருமம், தேவதா பூஜை குறைந்தது. அப்பாவம்
தோற்றுவித்துத் துர்க்கனென்னும் அரக்கனைக் கொலை
தருவர் முதலியோர் வருதல்பற்றி இவ்வனம் அடைபவர் னால் இளன் என்னும் அரசனும், இருகூடிவிரசன் என்னும்
ன் இவள் பந்தாட அவ்விடத்திற்கு விகுளன், உற்பலன் ர் போல் வரக்கண்டு சிவமூர்த்தியின் கட்டளைப்படி மோதிக்கொன்றவள். அப்பந்து ஒரு சிவலிங்கமாயிற்று. ருடன் காசியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Page 106
துராசாரன் என்னுமசுரனைக் கொலை செய்ய ஐந்து திருமுகங்களுடனும் பத்துத் திருக்கரங்களுடனும் வக்ரதுண்டரைப் படைத்தவள்.
சண்ட சாமுண்டர், இரத்த பீசன் முதலியவரைத் தம்தேகத்தில் காளியை உண்டாக்கிக் கொல்வித்தவள். ஒருமுறை சிவகணங்களும் சிவபெருமானும் வேறென உணர்ந்து சிவகணங்களுக்கு அமுதுபடைக்கத் தொடங்கி ஒருவனுக்கு அமுதளிக்க, அவன் பசியால் எல்லாவற்றையும் உண்ணக் கண்டு வியப்படைந்தவள்.
பண்டாசுரனைப் படைத்துத் தேவர் வேண்டலால் கொலை புரிவித்தவள்.
புலிமுகனுக்கும் மகிடனுக்கும் அஞ்சிய பிரம விஷ்ணுக்கள் பொருட்டு அவ்வசுரனைக் கொலை புரிந்தவள்.
இறைவன் முக்கண்களால் கருநிறமடைந்து சிவபூஜை செய்து அந்நிறம் நீங்கினவள்.
விக்கிரமாசுரன் தலையறுத்து அத்தலையை ஆசனமாகக் கொண்டவள்.
ஒரு கற்பத்தில் விளையாட்டாக நீலியெனச் சிவபெருமான் அழைக்கச் சகியாது அவ்வுடல்விட்டுக் கெளரியாகத் தவஞ்செய்து வெண்ணிறம் அடைந்தவள். அவள் விட்ட உடல் கெளசிகி தேவியாயிற்று. அக்கெளசிகிதேவி சும்ப, நிசும்பரைக் கொன்றனள்.
சிவபெருமான் புகழ்ந்ததால் இவளுக்குப் பெருமிதமுண்டாயிற்று. அப்பெருமிதம் அடங்கச் சிவபெருமான் தமது சத்தியை ஒடுக்கினர். அதனால் உலகம் ஒடுங்கியது. மீண்டும் முனிவர்கள் வேண்டத் தமது சத்தியை விரித்தனர். இதனால் சத்திக்குப் பாபம் விளைய அது நீங்க வல்லயை சக்தியாய்த் திருஅவதாரம் செய்தனள்,
பிருங்கிமுனிவர் தம்மை வணங்காததால் தம்மையும் சிவனுக்குச் சமமாக வணங்க வேண்டுமென்று கேதாரத்தில் விரதம் புரிந்து அவ்வரம் பெற்றவர். இதுவே கேதாரகெளரிவிரதம்.
சிவபெருமான் ஞான உபதேசம் செய்கையில் பாராமுகமாகக் கேட்டதால் சிவபெருமான் இவளை வலையர்மகளாகச் சபித்தனர். அச்சாப விளைவால் பூமியில் பாண்டி நாட்டில் தண்டுறைப்பாக்கமென்னும் ஊரில் புன்னையடியில் குழந்தையுருவாய் இருந்தனள். இவரைப் பரதன் ஒருவன் வளர்த்தனன். பிராட்டியைத் திருமணங் கொள்ள திருவுள்ளத்துள் எண்ணிய சிவபெருமான் சாபத்தால் அந்நாட்டின் கடலில் நந்திதேவரைச் சுறாவாக இருக்கக் கட்டளையிட்டனர். அவ்வாறே நந்திதேவர் அக்கடலில் சுறாவாக இருந்து

கடலோடிகளைத் துன்பம் செய்திருக்கையில் வலைஞர்க்கு அரசன், எவன் இச்சுறாவைப் பிடித்து எங்கள் துன்பத்தை நீக்குகிறானோ அவன் என் குமாரிக்கு நாயகனாம் என எண்ணியிருந்தனன். இக்குறிப்புணர்ந்த சிவபெருமான் வலைஞராய்ச் சென்று வலைவீசி நந்திதேவராகிய சுறாவைப் பிடித்துப் பிராட்டியைத் திருமணம் செய்தருளினர்.
இவள் பஞ்ச பூதங்களில் ஈசானி, பூரணி, வாமை, சேஷ்டை, ரவுத்ரிமுதலியவர்களாயிருப்பவள்.
வீரகனைக் கல்லாகச் சபித்தவள். அடிதானவனைச் சபிக்க இவளுக்கு வந்தகோபம் சிங்க உருவத்துடன் இவள் பக்கத்தில் தங்கியது.
கிருதயுகத்தில் புட்பகாசை என்னும் திருநாமத்துடன் சிவபூசை செய்து சிவனைப் பிரியாவரம் பெற்றவள்.
மூகாசுரன் முதலிய அசுரரை வதைத்தவள். ஒரு கற்பத்தில் தன் திரு விரலால் கங்கையைப் பிறப்பித்தவள். அக்கங்கை உலகத்திற் பிரவகித்தது அறிந்து சிவபெருமான் அவளைத் தமது சடையிலனிந்தனர்.
கங்கை இரேணுவின் மகளாகும்படி சபித்தவள். வைவச்சுத மன்வந்தரத்தில் 28 யுகத்தில் நந்தன் என்னும் இடையன் வீட்டில் மாயாதேவியாக வந்து அவதரித்தவள்.
விப்ரசித்ரியின் குமாரர் முதலிய அரக்கரை வதைக்க ரக்த தந்திஎன்ற பெயரோடு அவதரித்தவள். ஒரு கற்பத்தில் மழையிலாது உலகமும் ரிஷிகளும் வருந்தினர். அந்த ரிஷிகளுக்குக் கருணை செய்யச் சதாஷி என்னும் திருநாமம் பெற்றிருந்தனள். இவள் திருமேனியில் அப்போது அநேக சாகாமூலங்கள் ரிஷிகளைக் காத்தற் பொருட்டு உண்டாயின. ஆதலால் இவருக்கும் சாகும்பரிஎனத் திருநாமம் உண்டாயிற்று. தண்டியென்னும் அசுரனைச் சங்கரிக்கப் பீமை என்னும் சத்தியாகத் திருவவதாரம் செய்தனள்.
சண்டனென்னும் அசுரனைச் சங்கரித்ததால் சண்டிகை என்னும் திருநாமம் பெற்றவள்.
மரத்தை நோக்கிச் சந்திரவதியை நிருமித்தவள். சத்திய விரதன் என்கிறவன் பன்றியின் ஒசைகேட்டு ‘ஹ9’ என்று அதட்ட அது பீஜமந்தரம் ஆதலால் அவனுக்கு அருள் செய்தவள்.
சுதர்சனன் என்னும் அரசனுக்கு இழந்த அரசை தருவித்துக் கொடுத்துச் சகல இஷ்டசித்திகளையும் அளித்தவள்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 107
சுசீலன் என்கின்ற வணிகனுக்கு வறுமை நீக்கி அருள்புரிந்தவள்.
சகேது என்னும் அசுரனுக்கு அருள் புரிந்தவள். நிசும்பனைக் தேவர், பொருட்டுக் கொன்றவள். தூம்பரனைக் காளியைக் கொண்டு பஸ்மமாக்கியவள்.
சண்டமுண்டர்களைக் காளியினால் கொல்வித்து அவளுக்குச் சாமுண்டையென்று பெயரிட்டவள்.
ரத்தபீஜனைச் சங்கரிக்கையில் அவன் உடலினின்றும் விழும் உதிரத்தில் பல அசுரர் தோன்றியமை கண்டு காளியினால் அவன் உடலின் உதிரத்துளி பூமியில் விழாதபடி உண்ணச் செய்து அவனைக் கொன்றவள்.
சும்பனைக் காளியினாற் கொல்வித்தவள். இவள், சர்வசங்கார காலத்தில் பஞ்ச சக்திகளையும்,பிரேதங்களாகக் கொண்டு அவர்களாகிய தெப்பத்தில் எழுந்தருளியிருப்பவள். இதனாற் பஞ்சப்பிரேத பராசக்தி எனப்படுவள்.
இவள் கிருதயுகத்தில் சுரதனால் பூசிக் கப்பட்டனள். திரேதாயுகத்தில் இராமனால் இராவண வதத்தில் பூசிக்கப்பட்டவள். தைத்தியரை வதைக்கத் தக்ஷன் குமரியாயினள். பின் இமயன் குமரியாயினள்.
துர்க்கன் எனும் தைத்தியனைக் கொன்றதனாலும், மகாவிக்கினத்தையும், பவ பந்தத்தினையும், கர்மத்தினையும், சோகத்தினையும், துக்க, நரக, யம தண்டத்தினையும், ஜன்ம, பய ரோகங்களையும் போக்குபவள் ஆதலால் துர்க்கை எனப் பெயர் பெற்றவள்.
கீர்த்தியாலும், குணத்தாலும், ரூபத்தாலும், தேஜஸாலும், நாராயணனை ஒத்தவள் ஆதலால் நாராயணி எனப் பெயர் பெற்றவள்.
சர்வசித்தியைத் தருபவள் ஆதலால் ஈசானி எனப் பெயர் பெற்றவள்.
அநந்தகல்யாண குணமுடையவள் ஆதலால் சிவை எனப் பெயர் பெற்றவள்.
சற்புத்தி அதிஷ்டான தேவதையாதலினால் சதி எனப் பெயர் பெற்றவள். Wr
பகவானைப் போல் நித்யமானவள்.ஆதலாலும் , சித்யாதிகளைத் தருபவள் ஆதலாலும் பகவதி எனப் பெயர் பெற்றவள்.
அழியாத தன்மை கொண்டவளாதலால் நித்யை எனப்பெயர் பெற்றவள்.
மயூரமங்கலம்

எல்லாம் அழிய இவள் தனித்து இருப்ப வளாதலால் சத்யை எனப் பெயர் பெற்றவள்.
எல்லா சராசரங்களையும் மோட்சத்தையும், பிறப்பு இறப்பு முதலியவைகளையும் செய்பவள் ஆதலால் சர்வானிஎனப் பெயர் பெற்றவள்.
மோட்சத்தையும், களிப்பினையும், சம்பத் தினையும், கல்யாணத்தையும் தருபவள் ஆதலால் சர்வமங்கலை எனப் பெயர் பெற்றவள்.
உலகத்தை ஈன்ற தாய் எனும் பொருளில் உலகத்தவரால் பூசிக்கப்பெற்றவள் ஆதலால் அம்பை எனப் பெயர் பெற்றவள்.
விஷ்ணு ரூபிணியாகையால் வைஷ்ணவி எனப் பெயர் பெற்றவள்.
பொன்னிறத்தை உடையவள் என்பதாலும், பரபிரம்ம ரூபமுடையாள், நிர்மலமானவள் எனப் பொருள் பெறுவதாலும், குருவாகிய சிவமூர்த்தியின் தேவி யாதலாலும் கெளரிஎனப் பெயர்பெற்றவள்.
பர்வ சப்தம் உற்சவபேதத்தினையும், தி சப்தம் திதி பேதத்தினையும், கல்பத்தினையும் தெரிவிக்கும் ஆதலால் இவற்றிற்கு அதிதேவதை ஆனவள். அதனாலும் பர்வதன் புத்ரியானதாலும், பர்வதங்களுக் கதிதேவதையானதாலும் பார்வதி எனப் பெயர் பெறுபவள்.
சர்வத்ர சர்வ காலங்களிலும் வித்யாமானை யாதலால் சநாதனிஎனப் பெயர் பூண்டவள்.
தேவர்கள் தனக்குச் செய்த கிரீடா பங்கத்தின் பொருட்டு அவர்களை வீரிய நாசமடையச் சபித்துப் பின் கருணை செய்ததால் சக்தி எனப் பெயர் பெற்றனள்.
இவளது சொரூபம் ஞானம். இச்சக்தியை உபசாரத்தால் பெண்பாலாகக் கூறுவர். சிவசக்திக்கும் சக்திக்கும் பேதமில்லை. பசுக்களாகிய ஆன்மாக்களிடம் வைத்த கருணையால் ஐந்தொழில் செய்விக்க வியாபிக்கையில் ஐவகைப்பட்டுப் பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தி எனப் பல வகைப்படுவள்.
இவள் இமவான் வேண்ட கேதாரம் செல்கையில் தன் அம்சத்தால் மனோன்மணியைச் சிருட்டித்தனள்.
ஒரு கற்பத்தில் தேவர்கள் அசுரர்களை வென்று கர்வித்திருக்கையில் அவர்களதுகர்வத்தை அடக்கயகூஷி உருவாக இச் சக்தி தோன்றினள். தேவர்கள் அந்த யகூஷியிடம் அக்கினியை அனுப்ப சக்தி ஒரு துரும்பை அக்னியின் எதிரில் இட்டு இதனைக் கொளுத்து என அக்னிவலி அற்றுத்திரும்பினன். பின் தேவர்கள் வாயுவை

Page 108
அனுப்ப அவனும் வலி அற்றுத் திரும்பினன். பிறகு இந்திரனும் வலியற்றனன். அதன்பின் தேவிமறைய அசரீரியால் கர்வபங்கத்தை அடக்கத் தோன்றியவள்.
தட்சயாகத்தின் பொருட்டுத் தான் செல்லாமல் தன்னைப் போல் உருக்கொண்ட வேறொருத்தியை ஒருத்தியை உருவாக்கி தட்சயாகத்திற்கு அனுப்பியவள். சக்தி, சிற்சக்தி, பராசக்தி, இச்சாசக்தி, ஞானாசக்தி, கிரியாசக்தி என காரியத்தால் வெவ்வேறு பெயர் பெறுவள்.
இவள் சசினி, அங்கதை, இஷ்டை, மரீசிசுவாலினி அவ்யக்தை, சாந்தை, வித்யை பிரதிஷ்டை, நிவர்த்தி, தமக, மோகை, கூடியை, நிஷ்டை, மிருத்யு, மாயை, பயை, ஜரை, ஜரசு, ரக்ஷை, ரத்யை, பால்யை, காம்யை, சம்யமன்யை, க்ரியை, புத்யை, கார்யை, தாத்ரி, ப்ராமான்யை, மோகினி, பவை, சித்தி, வ்ருத்தி, த்வித்யை, லக்ஷ்மி, மேதா, காந்தி, ஸ்வதை, த்ருத்யை எனவுங் கூறப்படுவள்.
பிரதிவி உருவத்தால் வாமை எனவும், ஜலரூபத்தால் சேஷ்டை எனவும், அக்கினி ரூபத்தால் ரெளத்ரி எனவும், வாயுரூபத்தால் காளி எனவும், சந்திரளூபத்தால் கலவிகரிணி எனவும், சூரியரூபத்தால் பலப்பிரமதனி எனவும், ஆன்மரூபத்தால் சர்வபூததமனி எனவும், சிவரூபத்தால் மனோன்மணிஎனவும் பெயர் கொண்டு நிற்பவள்.
தட்ஷாயினி - பிரம்மனின் மானசபுத்திரனான தக்கன் சக்தியை மகளாகவும் சிவனை மருமகனாகவும் பெறுவதற்கு தவம் செய்து வரம் பெற அதன் காரணமாய் தாட்ஷாயினி எனும் பெயரோடு தக்கனின் மகளாகி சிவனைத் திருமணம் செய்தவள். ஒரு நாள் மகளைக் காண கயிலைக்குச் சென்ற தக்கன் பூதகணங்கள் தடுத்ததால் கோபித்து சிவனை அவமதிக்க மற்றைய தேவர்களை முன்னிறுத்தி சிவனை அழைக்காது யாகம் தொடங்கினான். தந்தை அழைக்காதபோதும் யாகம் வந்த தட்ஷாயினி தந்தையால் அவமதிக்கப்பட்டு இவ்விடம் சுடுகாடாகுக எனச் சபித்து பின் சிவனை அடைந்து தக்கனின் யாகமழிக்க வேண்டினள். அவ்வேண்டுகோளின்படி சிவன் வீரபத்திரரை உருவாக்க சக்தி மாகாளியை உருவாக்கி யாகத்தை அழிக்க அனுப்பினர். வீரபத்திரரால் தலையறுக்கப்பட்ட தக்கன் பின் பிரமனின் வேண்டுகோளின்படி சிவனால் ஆட்டுத்தலையுடன் உயிர் பெற்றான்.

பார்வதி - தட்சனிடம் அவதரித்ததால் ஏற்பட்ட தாட்ஷாயினி எனும் பெயர் நீங்க தவம் செய்த மலையரசன் இமவான் மகளாய் பார்வதி எனும் பெயருடன் அவதரித்து அவனிடம் வளர்ந்து சிவனை மணப்பதற்காகத் தவம் இருந்தவள். இவள் பொருட்டு பர்வத ராஜன் பெற்ற சுயம்பரத்தில் சகல தேசத்து அரசர்களும் பார்க்க சிவபெருமான் குழந்தையுருக் கொண்டு இவள் மடிமீது இருந்தனர். உண்மையறியாது பார்வதியை அடைய யுத்தம் தொடங்கிய தேவர்கள் அனைவரும் செயலற்றுப் போய் பின் சிவனை வணங்கி அனுக்கிரகம் பெற்றனர்.
தடாதகை - மலையத்துவச பாண்டியன் புத்திரர் வேண்டித் தவமியற்றினன். தவப்பயனால் இந்திரன் தோன்றி யாகம் செய்யும்படி சொல்ல அந்த யாகத்தில் பார்வதி பிராட்டியார் மூன்று முலையுடைய குழந்தையாக அவதரித்தனள். மகளின் உறுப்பு மிகுதியைப் பற்றி அரசன் கவலைப்பட இக் குழந்தை தன் கணவனைக் காண்கையில் ஒரு முலை மறையுமென அசரீரி கூறிற்று. தடாதகை பிராட்டியார் சகல கலைகளும் கற்று தந்தையால் முடிசூட்டப்பட்டு செங்கோல் செலுத்தி உலகெல்லாம் வென்று பின் கைலாயத்திற்கும் ஸயத்தம் செய்யச் சென்று அங்கு நந்திதேவரையும் சிவ கணங்களையும் புறமுதுகிடச் செய்து பின் சிவனுடன் யுத்தம் செய்யமுனைய சிவனைக் கண்டதும் அசரீரிப்படி ஒர் முலை மறைந்தது. அது கண்டு நாணி தடாதகைப்பிராட்டியார் சோமசுந்தரராக எழுந்தருளிய சிவனை மணந்து குண்டோதரனுக்கு அன்னமிட்டு நாணி, உக்கிரகுமார பாண்டியனைப் பெற்று பின் இறைவனுடன் திருக்கோயிலில் எழுந்தருளியவள்.
சக்திதத்துவம் - சூக்கும லய அவத்தையி லிருந்து முதல்வனது பிரியாசக்தி வெளிப்பட்டு பொதுமையிற் சங்கற்பித்த வழி சுத்ததமாயை காரியப்படுவதாய் நின்ற இரண்டாம் விருத்தி சக்தி என்று சொல்லப்படும். சிவனால் அதிட்டிக்கப்படும் தத்துவம். இதனை தூல லய தத்துவம், தூல நிக்கல தத்துவம், விந்து தத்துவம் எனவும் கூறுவர்.
அமோகை - இது சிவசூரியனிடம் அமரும் சிவசக்தியாம்.
தண்டினி - மணித்தீபத்தில் சக்கராலயத்தின் கீழ்த்திசையில் உள்ள கிருகத்தில் உள்ள சக்திகளில் ஒருத்தி.
யூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 109
மயூரமங்கலம்
உலக இயக்கம் அனைத் “சக்தியிருந்தால் செய் இல்லையே ஒன்று தமிழில் உண்டு.
சிவம் சும்மா இருப்பது. சித்தாந்தம் சிவசக்தி பற்றிச் சிற
தொழில் வேறுபாட்டினா ஞானாசத்தி, கிரியாசத்தி என்ற பராசத்தி அருளைச் செய்யும். ஆரணி, ரோதயித்திரி, ஜநநீ தொழில்களையுஞ் செய்விக்கும் செய்தும் அமர்கின்ற சக்திகளை கிரியாசத்தியென்றும் சொல்லப்ப
இவைகளேயன்றி ஈசான நிவிர்த்தி முதற் சந்தீய தீதையிற
சிவபெருமானை அவரது உமாபதி சிவாச்சாரியார். சைவ போற்றப்படும் எட்டு நூல்களைத் திருவருட்பயன் முக்கியமான ஒல்
தன்னிலைமை மன்னுயிர்க பின்னமிலான் எங்கள் பிரா என்று உமாபதி சிவாச்சா அடையச் செய்யும், சக்தியோடு ! சிவாச்சாரியார்.
 
 

(5. IF(\l ாந்தத்தில் சக்தி
திற்கும் சக்தியே காரணம் என்பதை விளக்கும் வகையில் பல் சிவனே என்று சும்மா இரு” என்று சொல்லும் பழமொழி
சிவத்தையும் இயக்குவது சக்தியே என்பர் சிலர். சைவ ப்பாகப் பேசுகிறது.
லே சிவசக்திக்குப் பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ) தொடக்கத்தனவாகப் பல பெயர்களுண்டு. இவற்றுட் ஆதிசத்தி ஆன்மாக்களின் மலம் பக்குவப்படுவதற்காக
என்னும் சக்திகளைக் கொண்டு ஏனைய நான்கு இவ்வைந்து தொழில்களையும் நியமித்தும், அறிந்தும், T முறையே இச்சாசத்தியென்றும், ஞானாசத்தியென்றும், டும்.
ாம் முதற் சத்தியோசாதம் ஈறாகிய பஞ்ச சத்திகளாயும், ாகிய பஞ்ச சத்திகளாயும், பிறவாயும் சிவசக்தி வரும்.
து அடியார்கள் சேர்வதற்குச் சக்திதான் துணை என்பர் சித்தாந்த நூல்கள் பதினான்கில் சித்தாந்த அட்டகம் என்று தந்தவர் உமாபதி சிவாச்சாரியார். அந்த எட்டு நூல்களிலே ாறு திருவருட் பயனிலே அவர்.
ள் சாரத் தருஞ்சக்தி
历” ரியார் கூறுகிறார். தன்னிலைமையை நிலையான உயிர்கள் பிரிவில்லாதவன் எங்கள் சிவபெருமான் என்கிறார் உமாபதி

Page 110
எனவே சக்திதான் உயிர்களைச் சிவத்தோடு சேரச் செய்கிறது என்பது சிந்தாந்தக் கொள்கை. உலகியலில் தாய்தான் பிள்ளைக்குத் தந்தையைக் காட்டுபவள். தாய்தான் தந்தையின் பெருமையைப் பிள்ளைகளுக்குச் சொல்பவள். தாய்தான் தந்தையோடு பிள்ளைகளைச் சேரச் செய்பவள். அதனால் இது ஆன்மீகத்திற்கும் பொருந்துகிறது.
பிள்ளைகள் செய்கின்ற எந்த வகையான குற்றங்களையும் மன்னித்துப் பிள்ளைகளுக்கு அன்புகாட்டி உணவு ஊட்டி, அரவணைப்பவள் தாய். தாயன்பிலும் மேலான அன்பு இவ்வுலகில் இல்லை. அதுபோல் எல்லா ஜீவராசிகளுக்கும் தாயாகி விளங்கும் சக்தியே உயிர்களுக்குப், பாவங்களிலிருந்து மன்னிப்பளித்து இறைவனைச் சேரத் துணை யானவளாகின்றாள்.
 

நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளையும் ஒருசேர மதித்து அந்த வினைகள் தன்னைப் பற்றாத வண்ணம் பற்றற்ற நிலையில் கடமை நோக்கோடு “நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்ற நிலையில் “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே” என்ற உணர்வோடு நான், எனது என்ற நிலையைக் கடந்த காரியங்களைச் செய்பவர்களை விட்டு மலம் நீங்கும்.
அதாவது இருவினை ஒப்பு ஏற்பட்டு விட்டால் மலம் ஆன்மாவைவிட்டு நீங்கும். இது மலபரிபாகம் எனப்படும். இப்படிமலம் நீங்கிய பின் திருவருட் சக்தி ஆன்மாவிலே பதியும். இதுவே சக்தி நிபாதம் என்பர் சித்தாந்திகள். எனவே திருவருட் சக்தி பதிதல்தான் ஆன்மாக்களின் சிவத்தோடு சேர்வதற்குரிய கடைசி நிலை.
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 111
மயூரமங்கலம்
உருத்தரித்த நா கருத்தினால் இ விருத்தரும் பால அருட்டரித்த நா
“குண்டலினி அம்மா! ம ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி.
நீயே பிராணனாகவும், வித் இருந்து இந்த உடலுள் உறைகிறா
ஸமஷம்னா நாடியைத் திற சென்று உன் பதியுடன் இணை கொண்டுவிடு".
எப்படி ஜீவாத்மா பரமாத்மா குண்டலினி சக்தி இருக்கிறாள். சக்திகளின் சமஷ்டிரூபிணியானதி குண்டலினி சக்தி நம்முடைய ச இருக்கிறாள். இதனாலேயே அம்பி
எப்படிச் சக்தியில்லாவிட் குண்டலினி இல்லாவிட்டால் நம்ம
பராசக்தியின் அம்சமான ( சகஸ்ரதள பத்மத்திற்கு அழைத்து உண்டு பண்ணுவதுதான் சமயமத தத்பரா” என்ற நாமம் ஏற்பட்டிருக்
அப்படி சமாரஸ்யம் ஏற்படுத் வந்தடையும் சுபாவமுள்ளவளா சகஸ்ராராத்திலேயே நீடித்து நிலை ஸித்திப்பதாகும். இதுவே ஜிவன் (
குண்டலினியை வாழும் பா குடியிருப்பதாகவும், அது மனிதர்க
 
 

ாடலினி சக்தி
டியில் ஒடுங்குகின்ற வாயுவைக் ருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல் ராவர் மேனியும் சிவந்திடும் தர் பாதம் அம்மை பாதம் உண்மையே
- சிவ வாக்கியர்
னிதனுள் ஜீவசக்தியாக இருப்பவளே! நீயே ஆதிசக்தி,
யுத்(மின்) சக்தியாகவும், இன்னும் பலவித சக்திகளாகவும் iii.
க்க வைத்து ஆறு ஆதாரங்களையும் தாண்டி சகஸ்ராரம் யும்போது என்னையும் உன்னுடன் ஐக்கியப்படுத்திக்
- குண்டலினிதியானம்
அம்சமோ அப்படியே பராசக்தியின் அம்சமாக நம் சரீரத்தில்
பிரும்மாண்டத்தில் நடக்கும் சகல காரியங்களுக்கும் ரிபுரசுந்தரி எப்படிக் காரணமாக இருக்கிறாளோ, அப்படியே ரீர சம்பந்தமான சகல காரியங்களுக்கும் காரணமாக
கைக்கு மஹா குண்டலினி என்று ஒரு பெயர். டால் சிவனே எதுவும் செய்ய முடியாதோ அதுபோலக் ால் எதுவும் செய்ய முடியாது. குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு சக்ர பேதனம் செய்து வந்து, அங்குள்ள பரமசிவனிடம் சேர்த்து ஸாமரஸ்யம்
சித்தாந்தமாகும். இதனால் அம்பிகைக்குச் “சமயாசார கிறது. தியபோதிலும் குண்டலினிசக்தி மறுபடியும் மூலாதாரத்தை கையால் நம் அப்யாஸாதி பலத்தால் அச்சக்தியைச் க்கச் செய்ய வேண்டும். இது பாவனா அப்யாசத்தினால் முக்த நிலை. ம்பு என்று சொல்வார்கள். அந்தப் பாம்பு சில வீடுகளில் ண்களுக்குப்படாது என்றும் உபாசகர்களின் கண்களுக்கு

Page 112
மட்டும் படும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மனித உடலில் ஒரு வாழும் பாம்பு இருக்கிறது. இதுவே குண்டலினி.
இது அக்னி ஸ்வரூபமான சக்தி, மாயா சக்திக்கு இருப்பிடமானது. இச்சக்தி ஏகாக்ரகப்பட்டு மேலே எழும்போது அது படம் எடுத்தாடும். பாம்பை ஒத்ததாக இருக்கும். விரிந்த தலையே வியாபக சக்தி. அதன் வாய் ஏகாக்ரக முகம்.
இந்தக் குண்டலினி சக்தியினால்தான் இந்த உடல் செயற்படுகிறது. இந்த உடலை இயங்க வைப்பது மூலாதாரத்திலுள்ள பிராணன். ஆகவே உடம்பின் நாதன். குண்டலினி சக்தியே உயிருக்கு நாயகி. ஆகவே குண்டலினி சக்தியைப் பிராணனுக்கு நாயகி எனலாம்.
இக்குண்டலினி மூலாதாரத்தில் சர்ப்பம் போன்ற மூன்றரை வளைய ரூபத்தில் தூங்கிக் கொண்டிருப்ப தாகவும், யோகாப்யாசத்தால் எழுப்பப்பட்டு ஸுஷம்னா மார்க்கமாகக் கிளம்பி, ஆறு சக்கரங்களையும் மூன்று கிரந்திகளையும் கடந்து மேலே சகஸ்ராரம் என்ற இடத்திற்குப் போய் அந்தப் பத்மத்தின் மத்ய பாகமாகிய சந்திரமண்டலத்திலுள்ள அமிருதத்தைப் பெருகச் செய்து, திரும்பவும் அதே வழியாக வந்து முன்பு போல, மூலாதாரத்தில் அடங்கும் என்று யோக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
மனிதன் இன்று பல விதங்களில் முன்னேற்ற மடைந்திருக்கின்றான் என்கிறார்கள். ஆதியில் அவனிடமிருந்த காட்டுமிராண்டித்தனம் மாறியிருக்கிறது என்பது உண்மையே. என்னதான் மாபெரும் சாதனைகளை மனிதன் செய்து வந்தபோதிலும் அவன் அறிவுஒரு வரம்புக்குட்பட்டது. படைப்பின் குறிக்கோளை அந்த அறிவால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால்
 

அக்குறிக்கோள் என்ன என்பதை அவன் தன் அக நோக்கால் ஊகிக்க முடியும்.
படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் பிறப்பு, வாழ்வு, முடிவு என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. படைக்கப்பட்ட எல்லாமே இந்த சுழியிலிருந்து தப்பிக்க முடியாது. எவ்வளவோ முன்னேறியுள்ள மனிதனுக்கு ஒரு சுபாவம் இருக்கிறது. அந்தச் சுபாவம் அவனை அமைதியான வாழ்வு வாழ விடுவதில்லை.
அனாதி காலம் முதற்கொண்டே மனிதன் காமக்குரோதம் முதலியவைகளுக்கு ஆட்பட்டு வந்திருக்கிறான். அப்படியிருந்தும் தான்எப்போதும் சுகமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறான். மனிதன் இன்று நாகரிக வாழ்க்கை வாழ விரும்புகிறானேயொழிய மற்றவர்களை அடக்கிக் குறுக்கு வழியில் எப்படியாவது பணக்காரனாக ஆவது, என்ன செய்தாலும் மந்திரி பதவியைப் பிடிப்பது போன்ற செயலில் ஈடுபடும் பழைய காட்டு மிராண்டிச் சுபாவத்தைத்தான் கொண்டிருக்கிறான்.
மனிதன் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விட முடியாதா? இதைப்பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தினால் மனிதன் மனிதனாக மட்டுமின்றித் தேவனாகவும் ஆக முடியும் என்று நம்மகான்கள் அனுபவித்து அறிந்து அறிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள்?" எண்ணற்ற ஜீவாத்மாக்களும் ஒரு பரமாத்மாவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஜிவாத்மாக்கள் எல்லாம் பரமாத்மாவின் அங்கங்களே. பரமாத்மாவை விட்டு விலகும் ஜீவாத்மா அமைதியற்றுப் போகிறது. தன் உறைவிடமான பரமாத்மாவை மீண்டும் அடையும்போதுதான் ஜீவாத்மா தன் இயல்பான சாந்தியை அடையும்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 113
}
மயூரமங்கலம்
1A.த்ரைலோக்ய மோஹன சக்ரம் 13. த்ரைலோக்ய மோஹன சக்ரம் 1c.த்ரைலோக்ய மோஹன சக்ரம் 2. ஸர்வாசா பரிபூரக சக்ரம் 3. ஸர்வஸம்கேடிாபன சக்ரம் 4. ஸர்வஸெளபாக்ய தாயகசக்ரம் 5. ஸர் வார்த்தலாதக சக்ரம் 6. ஸர்வரகடிாகர சக்ரம் 7. ஸர்வரோக ஹர சக்ரம் 8. ஸர்வ ஸித்திப்ரத சக்ரம் 9. ஸர்வானந்தமய சக்ரம் (பிந்து மட் இச்சக்கரங்கள் அனைத்தும் அடங்கி பூனி
இச்சக்கரங்களின் தேவதைகள் விப 1Aத்ரைலே
ご) 6 L
O
2-)
 
 
 
 

சக்கரம்
ரம் வருமாறு: ாக்ய மோஹன சக்ர தேவிகள்
(முதல் ரேகை)
7
1. அனிமா ஸித்தி. 2. லகிமா ஸித்தி. 3. மஹிமா ஸித்தி,
4. ஈசித்வ ஸித்தி. 5. வசித்வ ஸித்தி. 6. ப்ராகாம்யஸித்தி. 7. புத்தி ஸித்தி. 8. இச்சா ஸித்தி, 9. ப்ராப்தி ஸித்தி 9 8 10. ஸர்வ காம ஸித்தி.

Page 114
மயூரபதி
 

பூ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தம்பாபிஷேக மலர்-2000

Page 115
1Bத்ரைலோக்ய மோஹன
(glyaibórz 3.
~~~
1c. த்ரைலோக்ய மோஹன
(மூன்றாவது ரே
ஸர்வ ஸம்க்ஷோபிணி. ஸர்வ வித்ராவிணி. ஸர்வாகர்ஷிணி . ஸர்வ வசங்கரீ.
,
2
3
4.
5. ஸர்வோன்மாதினி. 6. ஸர்வ மஹாங்குசா. 7. ஸர்வ கேசரி. 8. ஸர்வ பீஜ. 9. ஸர்வ யோனி, 10. ஸர்வ த்ரிகண்டா.
2. ஸர்வாசா பரிபூரக சக்ர
மயூரமங்கலம்
 
 

ஈக்ர தேவிகள் அஷ்ட மாதாக்கள்) வது ரேகை)
1. ப்ராஹ்மி. 2. மாஹேச்வரீ. 3. கெளமாரீ. 4. வைஷ்ணவீ. 5. வாராஹி. 6. மாஹேந்த்ரீ. 7. சாமுண்டா.
8
. மஹாலக்ஷமீ.
ஈக்ர தேவிகள் (ப்ரகட யோகினிகள்) கை முத்ரா சக்திகள்)
ர தேவிகள் (குப்த யோகினிகள்)
1. காமாகர்ஷிணி. 9. சித்தா கர்ஷிணி 2. புத்யாகர்ஷிணி. 10. தைர்யா கர்ஷிணி. 3. அஹங்காராகர்ஷிணி. 11. ஸ்ம்ருத்யாகர்ஷிணி. 4. சப்தா கர்ஷிணி. 12. நாமாகர்ஷிணி 5. ஸ்பர்சாகர்ஷிணி. 13. பீஜாகர்ஷிணி. 6. ரூபா கர்ஷிணி. 14. ஆத்மாகர்ஷிணி. 7. ரஸாகர்ஷிணி 15. அம்ருதா கர்ஷிணி. 3. கந்தா கர்ஷிணி. 16. சரீராகர்ஷிணி.

Page 116
3. ஸர்வஸம்கேடிாபன சக்ர (
4. ஸர்வ ஸெளபாக்ய தாயகசக்
1. ஸர்வ ஸம்கூேடிாபிணி ஸர்வ வித்ராவினி ஸர்வாகர்ஷிணி ஸர்வாஹ்லாதினி . ஸர்வஸம்மோஹினி
ஸர்வஸ்தம்பிணி ஸர்வஜ்ரும்பிணி ஸர்வவசங்கரீ ஸர்வ ராஞ்ஜினி 10. ஸர்வோன்மாதினி 1 ஸர்வார்த்த ஸாதினி 12. ஸர்வஸம் பத்திபூரணி 13. ஸர்வமந்த்ரமயி 14. ஸர்வத் வந்த்வசுஷயங்கரீ
5. ஸர்வார்த்த ஸாதக சக்ர ே
 
 

தேவிகள் (குப்ததர யோகினிகள்)
1. அனங்ககுஸமா. 2. அணங்க மேகலா. 3. அனங்கமதநா. 4 அனங்க மதநாதுரா. 5. அனங்கரேகா, 6. அனங்கவேகிணி. 7. அனங்காங்குசா. 8. அனங்கமாலினி.
ர சக்திகள் (ஸம்ப்ரதாய யோகினிகள்
தவிகள் (குலோத்தீர்ண யோகினிகள்
1. ஸர்வஸித்தி ப்ரதா
. ஸர்வ ஸம்பத் ப்ரதா
ஸர்வ ப்ரியங்கரீ . ஸர்வ மங்கள காரிணி
. ஸர்வ காம ப்ரதா
ஸர்வ துக்க விமோசினி ஸர்வ ம்ருத்யு ப்ரசமனி . ஸர்வ விக்ன நிவாரணி
ஸர்வாங்க ஸந்தரீ 10. ஸர்வ ஸௌபாக்ய தாயினி
மயூரபதி பூgபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 117
6. ஸர்வ ரகடிாகர சக்ர (
7. ஸர்வரோக ஹர சக்ர வாக்
1. வளிணி
2. காமேச்வரி 3. மோதினி 4. விமலா
5. அருணா 6. ஜயினி 7. ஸர்வேச்வf
8. கௌலினி
8. ஸர்வஸி
ஸ் 2. gr 3.
3
O
1. (up
ا۔ -- --
9. ஸர்வானந்தமய மஹோட்யாண பீடத்தில் ஸகஸபரிவாரங்களுடன் காமர மஹாத்ரிபுரஸந்தரி (ராஜராஜேச்வரியாக) விளங்குகிறா
மயூரமங்கலம்
 
 
 

தேவிகள் (நிகர்ப்ப யோகினிகள்)
1. ஸர்வக்ஞா 2. ஸர்வ சக்தி 3. ஸர்வைச் வர்ய ப்ரதா
. ஸர்வ ஞானமயி . ஸர்வ வியாதி விநாசினி . ஸர்வாதார ஸ்வரூபா
ஸர்வ பாப ஹரா . ஸர்வானந்தமயி . ஸர்வ ரக்ஷாஸ்வரூபிணி 10. ஸர்வேப்ஸித பலப்ரதா
தேவதைகள் (ரஹஸ்ய யோகினிகள்)
த்திப்ரத சக்ரம்
க்கோணம் மட்டும்: ப்ரஹ்மாத்மசக்தியாய் வாக்பீஜா வரூபிணியாய் காமகிரி பீடத்தில் மகா சரஸ்வதீ தேவி. லந்த்ர பீடத்தில் விஷ்ணவாத்ம சக்தியாய் மஹா வஜ்ரேச்வரீ. iணகிரி பீடத்தில் ருத்ராத்ம சக்தியாய் மஹாபகமாலினி.
சக்ரம் (பிந்து மட்டும்) ாஜபீஜவரூபிணியாய் காமேச்வரியானவள் ஸகலரும்புடைசூழ ள்.

Page 118
முன்னே
அன்னை பராசக்தி வடிவ முன்னேஸ்வரமாகும். ஈழத்துச் முன்னேஸ்வரம். அவற்றில் ஒன்று இறைவியாகிய வடிவழகியும் ஐக் ஒன்றாக விளங்கும் இவ்வாலய இடப்புறத்தே அமர்ந்திருக்கிறாள்.
அம்பாள் வரலாறு
இவ்வாலயத்துக்குச் சில போது ஒரு சிறுவன் அழகான கண்டான். ஆனால் மீனவனை மீனவன் மறுநாள் பற்றைக்குள் ப பிடிப்பதில் வெற்றிகண்டான். சிறு மீனவனிடம் சிக்கி சிறுமியோ மாறினாள். இச்செய்தி மன்னனு வேண்டுமென்ற நோக்குடன் மாய செய்வித்து மீனவனை அடையா நிறைவேற்ற முடியாமல் தவித்து அ நீ அடையாளம் காட்டும் போது எ அதுவே நீ மன்னனுக்கு அடை மறைந்தாள். இதை நினைவில் ை அடையாளம் காட்டுவதற்கு அம்பி மன்னன் சகல ராஜோபசார வழிபடலானான். இம்மாயவிச் செய்யப்பட்டு வருகின்றது.
 
 

ஈழத்து ஸ்வரங்களில் இறைவியின் வடிவங்கள்
ஸ்வரம் வடிவாம்பாள் 5. ஆனந்தகுமார சர்மா
பழகி என்னும் பெயரோடு கோயில் கொண்டுறையும் தலம் சிவாலயங்களில் தனிப்பெரும் பெருமைகள் உடையது கருவறையில் இறைவனாகிய முன்னை நாதப் பெருமானும், கிய ரூபமாகக் காட்சி தருவதாகும். 64 சக்தி பீடங்களில் த்தில் எழுந்தருளி யிருக்கும் அம்பாள் இறைவனுக்கு
இத்தன்மையால் போகசக்தி எனப்படுகிறாள்.
மைல்கள் தொலைவில் ஒரு மீனவன் மீன்பிடிக்கச் சென்ற சிறுமியொருத்தியுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் க் கண்ட இருவரும் மறைந்து விட்டனர். இதைக் கண்ட றைந்திருந்து பிடிக்க முயன்றும் அச்சிறுமியை மாத்திரமே வனோ தண்ணிரில் குதித்து மாயமாய் மறைந்து விட்டான். அதிசயிக்கத்தக்கவாறு தங்கமயமான விக்கிரகமாக |க்கும் ஊர் மக்களுக்கும் எட்டியது. உண்மையை அறிய மாக மாறிய விக்கிரகத்தைப் போல் பல விக்கிரகங்களைச் ளம் காட்டும்படி பணித்தான். மன்னனது கட்டளையை புயர்ந்து கிடந்த மீனவனது கனவில் அம்பிகை காட்சி தந்து ந்த விக்கிரகத்தின் வலது கால் அசைந்து கொடுக்கிறதோ பாளம் காட்டக் கூடிய சரியான விக்கிரகம் என்று கூறி வத்து இலகுவாக மன்னனிடம் அடையாளம் காட்டியதோடு, கை கனவில் தோன்றியதையும் சொன்னான். அதிசயித்த வ்களுடன் இம்முன்னேஸ்வரப் பழம்பதியில் வைத்து கிரகமே இன்றும் கர்ப்பக்கிரகத்தில் வைத்துப் பூஜை
Lo6aori – 2000

Page 119

*

Page 120
ரரும் செ
கேதீஸ்வ
L_
 


Page 121
அம்பாள்திருவடிவம்
இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள வடிவாம்பாளுடைய விக்கிரகம் சிற்ப சாஸ்த்திர முறைப்படி அமைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது. சுமார் ஒரடி உயரமாக விளங்கும் இத்தாமர விக்கிரகம் திரியங்க வடிவுடையது. (திரிபங்கமாவது பல அசைவுகளைக் கொண்ட விக்கிரகத்தைக் குறிப்பிடும் சிற்பச் சொற்றொடர்) இவ்விக்கிரகத்தின் வலதுகை கடஹஸ்தமாகவும், இடது கை லம்பஹஸ்தமாகவும் காணப்படுகின்றது. பத்மாசனத்தின் மீது நின்ற உருவமாகக் காணப்படும். இவ்விக்கிரகத்தின் தலையில் ஜடாமுடியையும், கிரீடம் போன்றதொரு அமைப்பையும், காதுகளில் குண்டலங்களையும் காணலாம். கழுத்தில் சில ஆபரணங்களும், கைகளில் கங்கணங்களும் உள்ளன.
இவ்வடிவழகி விக்கிரகத்தின் முன்பாக வைக்கப்பட்டிருப்பது பூரீ சக்கர யந்திரமாகும். இது கீழிருந்து மேலாக படிப்படியாக ஒன்றன் மேல் ஒன்றாய் சாக்த தந்திரப் பிரமாணப்படி அமைக்கப்பட்டுள்ளது.
அம்பாள் உற்சவங்கள்
முன்னேஸ்வரம் சிவத்தலமாக விளங்குகிற போதும் வடிவழகியை முன்நிறுத்தியே பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. பொதுவாகச் சிவத்தலங்களில் மூலவரான சிவனுக்கு உற்சவம் நடைபெறுமாற்போல சிவனுடைய அம்பிகைக்கும் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் முன்னேஸ்வரத்தில் நடைபெறும்
திருக்கேதீஸ்வரம்
புலவர். ஏ. தி
மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் பெருமைகள் முறையாயமைந்த திருத்தலம் திருக்கேதீச்சரத் திருத்தலமாகும். இந்தப் பேருண்மைதனை உலகில் வாழ் சைவப்பெருமக்களினதும் பேரடியார்களினதும் உள்ளம் எல்லாங்களிகூர வைத்துள்ளமை புலனாம்.“சென்னிமதி புனைமாட மாதோட்டத்தில் திருக்கேதீச்சரத்தண்ணல்" எனவும், “சென்னியர் மாதோட்டத்துத் திருக் கேதீச்சரத்தானை துர நின்று தொழு தெழுந்தாரெனவும்” பெரியபுராணத்துச் சேக்கிழார் சுவாமிகள் செப்பும் பாங்கும் திருத்தலப் பெருமைதனை விளம்புகின்றது.
மயூரமங்கலம்

இருமகோற்சவங்களும் (மாசியில் ஒன்று ஆவணியில் ஒன்று) சிவனுக்குரியதாக இருந்த போதும், இவற்றில் அம்பிகையே நாயகியாக விளங்குகின்றாள். இதற்கு உதாரணமாக ஆவணிமகோற்சவத்தில் தேர்த்திருவிழா அன்று வடிவழகியே தனித்து தேரில் ஆரோகணித்து வருவதைக் குறிப்பிடலாம்.
ஒவ்வொரு பெளர்ணமித் தினத்திலும் வடிவாம்பாளுக்குழநீசக்கர பூஜைசிறப்புற நடாத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கையில் பூரீ சக்கரபூஜை சிறப்புற நடைபெறும் மிக முக்கிய தலமாக முன்னேஸ்வரம் கருதப்படுகிறது.
இத்தலத்தில் இரண்டு நவராத்திரி விழாக்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. ஒன்று புரட்டாதி மாதத்தில் வருவது. இதுவே பொதுவாக எல்லோராலும் கொண்டாடப்படுவது. இது சரத் காலத்தில் வருவதால் சாரதா நவராத்திரி எனப்படும். மற்றையது வசந்த காலத்தில் வருவது. அதனால் வசந்த நவராத்திரி எனப்படும். இது பங்குனி மாத அமாவாசையை அடுத்த சுக்கிலப்பட்ச பிரதமை முதல் இராமநவமிஈறான நாட்கள் நடைபெறுகின்றது. இக்காலத்தில் வடிவழகியையே சண்டிகாதேவியாகப் பாவித்து நடாத்தப்படும் சண்டிஹோமம் மிகப் பிரபலமானது.
அம்பாள் பற்றிய நூல்கள்
வடிவாம்பிகா பஞ்சரத்தினம், வடிவழகிப் பதிகம்,
வடிவாம்பிகா அந்தாதி, வடிவாம்பிகை ஊஞ்சல்,
வடிவாம்பிகா பிள்ளைத் தமிழ்.
கெளரி அம்பாள் ருநாவுக்கரசு
இத்துணை ஈடுமெடுப்புமிலா இறைவன் திருக்கேதீச்சரத்தானென்பதும், அவன் பாகமதமர்ந்த நாயகி கெளரியென்பதும் போதரும்.
இதனை உணர்த்தும் பாங்கினை அருளடியார் சுந்தரமூர்த்தியார்தம் திருப்பதிகத்தால் படவேரிடை மடவாள், பங்கஞ்செய்த மடவாள். பானத்துறுமொழியாள், பட்டவரி நுதலாள் எனப்பறைசாற்றுவதும், திருமிகுதிருஞானசம்பந்தர் “பெருந்திருமகளெனவும், மாழையங்கயற்கண்ணியெனவும் ஏத்திக் கூறுவதும் இன்பம்பயப்பதொன்றாம். எல்லையில் புகழ் எந்தை கேதீச்சரத்தானுடன் இணைந்த பெருமாட்டி அருள்மாட்சி

Page 122
நிறைந்தவள் என்பதும் அனுபவவாயிலாக உணர்ந்தோர் உணர்வர்.
உமாதேவியாரே இத்திருத்தலநாதரின் இடபாலமைந்து கெளரியம்மையென்ற பெயர் பெற்றதும், இதனால் திருக்கேதீச்சரநாதர் கெளரிநாதரென அழைக்கப்பெற்றமையும் திருக்கேதீச்சர வரலாறு கூறுமுண்மை.
ஆறுகாலப்பூசைகள் முட்டின்றி நிகழும் இத்திருத்தலத்தில் பூசைவேளையில் அற்புதமான காட்சி தருவது இராகுகேது என்றழைக்கப்படும் கருநாகம் செந்நாகமென்பவையாகும். பூசை நிகழுங்காலத்தில் இவ்விரு நாகங்களும் கெளரியம்பாளின் வாசற்படி மேற் போதிகையினிடுக்கில் தமது தலைகளைத் தொங்க
திருக்கோணேஸ்வரம்
பண்டிதர் இ
ஈழநாட்டில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற திவ்விய ஷேத்திரங்கள் இரண்டு. அவற்றுளொன்று தெட்சணகைலாயம் எனப்படும் வரலாற்றுப் பெருமைமிக்க திருக்கோணேஸ்வரம்.
இத்தலத்தில் மாதுமை அம்பாள் சமேதராக எழுந்தருளியிருக்கும் கோணேசப் பெருமானுக்கு மகோற்சவம் வருடாவருடம் நடைபெற்று வருவது போல, கோணேசப் பெருமானுடைய தாதான்மிய சக்தியாகிய மாதுமையம்பாளுக்கு ஆடிப்பூரத்தைத் தீர்த்த தினமாகக் கொண்டபத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது.
ஆகமசாத்திர முறைப்படி அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் மூலவருக்கு நேரேயுள்ள தம்பமண்டபத்தில் கொடித்தம்பத்தில் கொடியேற்றி மகோற்சவம் நடைபெறுவதுபோல, மாதுமை அம்பாளுடைய திருச்சந்நிதிக்கு நேரே அமைந்திருக்கும் அம்பாளின் கோபுர வாசலுக்கு முன் வெளிவீதியில் தற்காலிகமாகக் கொடித்தம்பம் நிறுவப் பெற்று பரணி நட்சத்திரத்தன்று மாதுமை அம்பாளுக்குக் கொடியேற்றி அலங்கார உற்சவம் ஆரம்பமாகும்.
உள்வீதியில் அம்பாளின் சந்நிதியின் முன் உள்ள பலிபீடத்தின் நந்தி தேவருக்குப் பக்கத்தில், ஆகம சாஸ்திர சம்பந்தமான கிரியைகள் யாவும் நடைபெற்று கொடியேற்றப்படும்.

விட்டவாறு நடைபெறும் அத்தனை அலங்காரம் பூசைகளையும் அவதானிக்கும். இவை, மூலவர் பூசை வேளையிலும், நர்த்தன நடராசர் பூசை வேளைகளிலும் அந்தந்தக் கோயில் போதிகைகளில் தொங்கியவாறு கூர்ந்து கவனித்த வண்ணமிருந்தமையும், அவ்வேளைகளில் மயில்கள் மேல் தளத்தில் நின்று தோகை விரித்தானந்த நடனமாடுவதும், கண் கொள்ள அற்புதக் காட்சியாகும். வேண்டுவார்க்கு வேண்டும் வரமளிக்கும் கெளரியம்பாளிற்கு ஆடிப்பூரவிழாவும், கேதாரகெளரிவிழாவும் கேதீச்சரத்தில் மிகமிகச்சிறப்பாக நடைபெறுவதும், பல்நூறு மங்கையர்களும், ஆடவர்களும் கெளரியம்பாளை நினைந்தழுது அவளருளைப் பெறுவதும், கடைத்தேறுவதுங் கண்கூடு.
ஒரு நாமமும் ஒருருவம் இல்லாத சிவனுக்குப் பல நாமமும், பல திருவுருவமும் இருப்பது போல, தன்னிற் பிரிவில்லாத தாதான்மிய சக்தியாகிய ஆதிபராசக்திக்கு பல நாமங்களையும் பல திரு உருவங்களையும் சாஸ்த்திரங்களும், தோத்திரங்களும் கூறுகின்றன.
திருக்கோணேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும் மாதுமையம்பாள் மனோன்மணி என்னும் திருநாமத்தோடு தேவசபையில் எழுந்தருளி யிருக்கின்றாள். சதுர்ப்புஜங்களோடு நின்ற பாவனையிலுள்ள மனோன்மணியின் வலது திருக்கரத்தில் ஜெபமாலையும் இடது கரத்தில் விரிந்த பத்மமும் அபய வரதத் திருக்கரங்களும் உண்டு. ஜடாமுடியுமுடைய மனோன்மணி தேவிக்குத்தான் கொடியேற்றி அலங்கார உற்சவம் பத்து நாட்களுக்கு நடைபெற்று வருகின்றது.
தினமும் அம்பிகைக்கு அபிஷேகம் பூசைகள் நடைபெற்றபின் மனோன்மணி தேவிக்கு கொடிஸ்தம்பபூசை நடைபெற்று, அம்பாள் நவசக்திப் பூசைகளை ஏற்று வீதியுலாவந்து அடியார்களுக்கு அருள்புரிகின்றாள்.
கொடியேறி நடைபெறும் அலங்காரத் திருவிழாவின் பத்தாவது நாளாகிய ஆடிப்பூரத்தன்று அம்பாள் பாவநாசத் தீர்த்தத்தில் பஞ்சகிருத்தியங்களில் ஒன்றான அருளைப்புரிந்து அடியார்களை இரட்சித்து வருகிறாள். தீர்த்தத்தன்று கொடியிறக்கப்பட்டு அலங்கார உற்சவம் இனிது நிறைவேறுகின்றது.
மயூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 123
நகுலேஸ்வரம்
ஈழநாட்டுக்கு வருகை புரிந்த விஜய மன்னன் ஆட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு திசைக்கொரு கோயில் நிறுவினான் என்பது வரலாறு. அவ்வாறு அவனால் வடக்குத் திசையில் அமைக்கப்பட்ட கோயில்களாக திருத்தம்பலேஸ்வரன், திருத்தம்பலேஸ்வரி கோயில் களையே யாழ்ப்பாண வைபவமாலை நூல் குறிப்பிடுகிறது.
சாபத்தால் கீரிமுகம் பெற்ற ஜமதக்கினி முனிவர் இங்கு வழிபட்டதால் அவரது கீரி முகம் நீங்கியதெனக் கர்ண பரம்பரைக் கதைகள் சுடறுகின்றன. இதனால் திருத்தம்பலேஸ்வரம் பிற்காலத்தில் நகுலேஸ்வரம் என (நகுலம் - கீரி) வழங்கப்படலாயிற்று.
மயூர் மங்கலம்
 

நகுலாம்பாள்
ஆதலால் திருத்தம்பலேஸ்வரி நகுலாம்பாள் எனவும், நகுலேஸ்வரி எனவும், நகுலாம்பிகை எனவும் வழங்கப்படலானாள்.
இவ்வாலயத்தின் தெற்கில் ஊறுகின்ற சுத்த நீரும், வடக்கிலுள்ள உப்பு நீரும் கலந்து சிவரூபமும் சக்தி ரூபமும் போன்று இருக்கின்ற இயல்பால்"கங்கா சமுத்திர சங்கமம்' என்றும், "கண்ட தீர்த்தம்' என்றும் அழைக்கப்படும் பிரசித்தமான தீர்த்தத்தைக் கொண்டுள்ள சிறப்பைக் காணலாம்.
இவ்வாலய தேவி மகோற்சவம் சித்திரா பூரணையை நிறைவாகக் கொண்டு பன்னிரு நாட்கள் நடைபெறும்,

Page 124
நீ விஷ்ணுதான் ஹயக் முதல் ஸ்கந்தத்தில் விவரிக்கப்ப போன்ற கடினமான காரியங்கை களைப்பு ஏற்பட்டு, உறக்கம் வ அகற்றாமல் வில்லின் ஒருகோடி நித்திரையில் ஆழ்ந்து விட்டார். எழுப்பப் பயந்தும் பிரம்மா முதலா6 இனத்தைச் சேர்ந்தவைகள் தே கோரியதற்கு இணங்க தேவர்களு தலை வைத்து இருந்த தனுசி (வில் தேவர்கள் எதிர்பார்க்காத அளவி பண்ணும் சத்தத்துடன் வில் நிய போய்விட்டது.
அதனைக் கண்ட தே பிரார்த்தித்தார்கள். அம்பாள் அ6 வந்து சேர்த்து வைக்கச் சொன்ன குதிரை முகத்துடன் விஷ்ணு தி அவர் இருந்தபடியால் ஹயக்ரீ அச்வானனர், ஹய முகர் என்ற சொல்லப்பட்ட விருத்தாந்தம்.
பூரீ தேவியே தன்னுடைய முறைகளையும் பூரீ விஷ்ணுவ அகஸ்தியருக்குத் தேவியின் உப
 
 

வி உபாசனை
Gaus JGOs TpJ
fவர் என்பவர். இவருடைய வரலாறு தேவீ பாகவதத்தில் டுகிறது. அதில் பூரீவிஷ்ணு வானவர் யக்ஞ ஸம்ரக்ஷணம் ள வெகு காலம் ஒய்வின்றி கண் விழித்து செய்ததினால் ரவே சார்ங்கம் என்ற தன்னுடைய வில்லின் நாணை டியில் தன் தலையை வைத்துக் கொண்டு வெகுகாலம் மற்ற காரியங்களை முடிக்க முடியாமலும் பூரீ விஷ்ணுவை ன தேவர்கள் கலங்கி இருந்த சமயம் வம்ரி என்ற கரையான் வர்களிடம் தங்களுக்கு ஹவிர்பாகம் வேண்டும் என்று நம் அவைகள் கோரிய அவிர் பாகத்தை அளித்து விஷ்ணு ஸ்) நாண் கயிற்றை துண்டிக்கும்படி செய்தார்கள். அப்போது ல் தனுசுவின் (வில்லின்) நாண் அறுந்து பயத்தை உண்டு மிர்ந்ததால் பூரீ விஷ்ணுவின் தலை அறுபட்டு காணாமற்
வர்கள் நடுக்கமுற்று செய்வதறியாமல் தேவியைப் வர்களிடம் தோன்றி ஒரு குதிரையின் தலையைக் கொண்டு னதினால், தேவர்களும் அப்படியே செய்தார்கள். அதனால் ரும்பவும் உயிர் பெற்றெழுந்தார். குதிரையின் முகத்துடன் வர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு ஹயக்ரீவர், வேறு பெயர்களும் ஏற்பட்டது என்பது தேவீ பாகவதத்தில்
எல்லா ரஹஸ்யங்களையும், உபாஸனையைப் பற்றிய வழி
ான ஹயக்ரீவருக்கு உபதேசம் செய்தார். ஹயக்ரீவர் ாஸனையை உபதேசித்தார் என்பது வரலாறு.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 125
மயூரமங்கலம்
நவராத்திரியில் சிவவழிப தாண்டவக் கோலங்கள் நாம் அறி போது, தாண்டவத்துக்கேற்ற ே நிகழ்ந்தன. ஆண்கள் ஆடுவது கூத்தபிரானே அணுவுள் அணுவ உலகத்தை இயக்கி வருகிறான். ஆடினான் என்பர். ஒவ்வொரு ந தனித்தனியானவை.
அத்தகைய நடனத் திரு இறைவன் வரைந்த கோலங்கை தருகிறோம்.
1. ஆனந்தத் தாண்டவம் :
இடது காலைத் தூக்கி வ6 போதே, இடதுகால் சுண்டுவிரலா ரிஷி மண்டலக் கோலம். இந்தக் சைலபுத்ரி.
நவராத்திரியின் முதல் நr வணங்க வேண்டும். இரண்டு வ பூசித்தால் ஆஸ்துமா, நீரிழிவு பே நலங்கிட்டு, புத்தாடை அணிவித்து எம்பெருமாட்டியாகப் பூஜிப்பது பா
2. சந்தியாதாண்டவம் :
சந்தியா வேளையில் இை தாள வாத்தியங்களுக்கு ஒலி ெ விரலால் வரைந்த கோலம் இது. ச ஆவிர்ப்பவித்தாள். மூன்று வயது கடன்படாத வாழ்வு கிட்டுப் ஏற்ற பலன் கிடைக்கும்.
 
 
 

சிவனரின் ண்டவங்களுக்குரிய ங்ைகளும் தேவி படிவங்களும்
ாடும் அம்பிகை ஆராதனையும் சிறந்தவை. சிவன் ஆடிய ந்தவை. அவற்றுள் சிலவற்றை எம்பெருமான் ஆடிக்களித்த காலங்களும், எம்பெருமாட்டியின் திரு அவதாரங்களும் தாண்டவம், பெண்கள் ஆடுவது லாஸ்யம். தில்லையம்பலக் பாகவும், அண்டத்துக்குள் அண்ட மாகவும் நின்று ஆடி, இறைவன் முப்பதாயிரம் கோடி நாட்டியங்களுக்கு மேலாக ாட்டியத்துக்கும் அங்க அசைவும், பாவமும் முத்திரைகளும்
க்கோலங்களில் ஒன்பது தாண்டவங்களையும், அப்போது ளயும், ஆவிர்பவித்த அம்பிகை உருவங்களையும் இங்கே
பக்காலை ஊன்றி ஆடும்நிலை. இந்தத் தாண்டவம் ஆடும் ல் தரையில் கோலத்தை வரைந்தார். கோலத்தின் பெயர் கோலத்திலிருந்து ஆவிர்பவித்த அம்பிகையின் திருநாமம்
ாள், மஞ்சள் கலந்த அரிசிமாவினால் இந்தக் கோலமிட்டு யதுப் பெண் குழந்தையை, இந்த அம்பிகையாக எண்ணிப் ான்ற நோய்கள் குணமாகும். (பூசித்தல் என்றால், காலில் , வளையல், சீப்பு, கண்ணாடி ஆகியவை அளித்து, சாட்சாத் ல் பாயசம் நைவேத்தியம் செய்து அளிப்பது முதலியவை)
றவன் ஆடிய திருநடனம். இந்தத் தாண்டவத்தின் மூலம் காடுத்தார். தாண்டவ நிலையில் இடக்கால், இரண்டாம் சப்த ஒலிக்கோலம். இதிலிருந்து கூஷ்மாண்டா என்ற தேவி ப்பெண் குழந்தையைப் பூஜிக்க வேண்டும்.
; மனம் அமைதியுற்று விளங்கும், அஸ்திரப் பயிற்சிகளுக்கு

Page 126
3. திரிபுரதாண்டவம் :
திரிபுர சங்கார காலத்தில் ஆடிய திருக்கோலம். வலக்கால் கட்டை விரலால் அஷ்ட வசுக்கோலம் வரைந்தார். குங்கும வண்ணத்தில் பிரம்மசாரிணி என்ற தேவி தோன்றினாள். குங்குமம் கலந்த அரிசிமாவுக் கோலமிட்டு, நான்கு வயதுக் குழந்தையைப் பூஜிக்க வேண்டும். வாயுத் தொல்லைகள், சந்திராஷ்டமக் காலத் தொல்லைகள் நீங்கும். தில்லையெம்பெருமானைச் சோமசுந்தரப்பெருமானாக எண்ணிவணங்க வேண்டும்.
4. ஊர்த்துவதாண்டவம் :
இடக்காலும் வலக்காலும் நேர்க்கோட்டில் அமைந்த தாண்டவ நிலை. அம்பிகை அப்படி ஆட முடியாமல் வெட்கித் தலை குனிந்த நிலை. திருவாலங்காட்டுநடனத்தில் காளி தோற்றத்தாண்டவம்.
வலக்கால் ஐந்து விரல்களால் வரைந்த திருக்கோலத்தின் பெயர் பிரணவ ஒலிக் கோலம். இந்தக் கோலத்திலிருந்து தோன்றிய தேவி சந்திர காந்தா. வெள்ளை நிறத்திருமேனி, ஐந்து வயதுப் பெண் குழந்தையைப் பூஜிக்க வேண்டும். நவராத்திரி சமயத்தில் இப்படிப் பூஜை செய்தால், தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நடைபெறும்.
5. புஜங்க தாண்டவம் :
பாற்கடல் கடந்த சமயம், நஞ்சை உண்டபோது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எதிரில் ஆடிய தாண்டவம் இது. சீறிப்படம் எடுத்து ஆடும் அரவத்தைப் போன்ற நடனநிலை. அப்போது கைகளாலும் சடையாலும் வரைந்த கோலம் புஜங்க தாண்டவக் கோலம். அந்தக் கோலத்தில் ஆவிர்பவித்த தேவி ஸ்கந்த மாதா. இந்தத் தேவியின் தரிசனம் பெற்ற, தேவர்கள் சாப விமோசனம் பெற்றனராம். எம்பெருமாட்டி நீல நிறத் திருமேனியில் ஒளிர்பவள். வலக்கையில் சஞ்சீவி இலைக் கொத்தைத் தாங்கிய கோலம்.
அரிசிமாவுக் கோலம் வரைந்து, ஆறுவயதுக் குமரியை அலங்கரித்துப் பூஜித்தால், உணவுக் கலப்படத்தால் உண்டாகும் நோய்கள் விலகும்; நஞ்சும் நமனாக அமையாது.
6. முனிதாண்டவம் :
பதஞ்சலி முனிவர், தம் கால்களால் மத்தளம் வாசிக்க - அவருக்காக இறைவன் ஆடிய திருநடனம் இது. அப்போதுஇறைவன் திருநயன ஒளி வரைந்த

கோலம் முனிதாண்டவக் கோலம். அந்தக் கோலத்திலிருந்து பால் வெள்ளை நிறத் திருமேனியாய் அம்பிகை கார்த்தியாயினி தோன்றினாள். குமரியம்மன் போன்ற நின்ற திருக்கோலம், சதங்கை கொஞ்சும் எழில் உருவம். ஏழு வயதுக் குமரிப்பெண்ணை, கார்த்தி யாயினியாக அலங்கரித்துப் பூஜித்தால் நேத்திர ரோகங்கள் குணமாகும். கண்ணொளி சிறக்கும்.
7. பூதத் தாண்டவம் :
கஜாசுரனைச் சம்ஹரித்த நிலையில் ஆடிய தாண்டவம் இது. பிரம்மா நட்டுவாங்கம் செய்ய, வாலை உத்தமி தேவி மத்தளம் வாசிக்க, நந்தி தேவர் கோலவாத்தியம் முழங்க, கணபதி ஜால்ராபோட, முருகன் பூச்சொரிய இறைவன் ஆடியதாண்டவம் இது. இறைவன் அதிர்ந்து ஆடிய நடனத்தினால் விளைந்தது பூதத் தாண்டவக் கோலம். இதிலிருந்து ஆவிர்பவித்த அம்பிகை காலராத்ரீ. கருநிறத் திருமேனி,
அரிசிமாவில் கோலமிட்டு, எட்டு வயதுப் பெண்ணை அலங்கரித்துப் பூசித்தால் இளமை மாறாத இன்ப வாழ்வு அமையும்.
8. சுதாதாண்டவம் :
தண்ட காரண்ய முனிவர்களின் வேண்டு கோளுக்காக இறைவன் ஆடிய தாண்டவம் இது. வரைந்த கோலம் சுதா தாண்டவக் கோலம். இந்தத் தாண்டவக் கோலத்திலிருந்து தோன்றிய பிராட்டி மகா கெளரி பச்சைநிறத்திருமேனியள். அரிசிமாவில் இந்தக் கோலத்தை வரைந்து, எட்டு வயதுப் பெண்ணை அம்பிகையாக, எழிலுருவினளாக அலங்கரித்து வணங்கினால் வியாபார விருத்திஏற்படும்; விபத்துக்கள் உண்டாகா எண்ணங்கள் செயல் உருவம் பெறும்.
9. சிருங்காரத் தாண்டவம் :
நவரசங்களையும் எடுத்துக் காட்டும் எழில் தாண்டவத் திருக்கோலம் இது. இந்தத் தாண்டவத்தில் வரைந்த கோலம் சிருங்காரத் தாண்டவக் கோலம். ஆவிர்பவித்த அம்பிகை ஸித்திதாத்ரீ, சிவந்த திருமேனிப்பாங்கு, கரும்பும் அபயஹஸ்தமும் அண்டியவர்களுக்கு வாழ்வில் இனிமையையும் தைரியத்தையும் அளிக்க வல்லவை. அரிசிமாவில் கோலமிட்டு, பத்து வயதுக் குமரிப் பெண்ணை, அம்பிகையாக உருவகித்து வழிபட்டால் எண்ணங்கள் ஈடேறும். கலைகளில் மேதையாகலாம்; வாக்குகள் பலிதமாகும்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 127

== ரிஷ்மெண்ட்லுக்கோஆம்
'சைவபுத்
இ.ஆனந்த தாண்டவம்
Tရကြီး கோலவிழித் தேவியர்களும்

Page 128
சப்த ஒலிக் தோலும்
GIFTELT
 


Page 129

வசுக் கோலும்
J # 對
闇
LFTür. FT - திரிபுர தா
ம்

Page 130


Page 131

புஜங்கதாண்டவக்கோலம் || "நிதித்திரிநா "புஜங்கதாண்டவம்

Page 132
2
*
 

நண்டவக் கோவம்

Page 133


Page 134


Page 135
Log/6045/. If
விஷ்ணு பகவானின் கா: என்ற அசுரர்கள் தோன்றினர். அ6 மரணம் வர வேண்டுமென்று ப துன்புறுத்திய அவ்விருவரையும் அ வாயினாலேயே மரணத்தைக் கேட்
மகிஷாசுரன்
எருமைத் தலை கொண்ட ஆண்மகனாலும் மரணம் வரக் துணையால் தேவர்களை அ சண்டிகாதேவியாகி சக்கராயுதத்த
சும்பநிசும்பர்
சகோதரர்களான கம்பநி வரவேண்டுமென்று வரம் பெற்று பத்திரக்காளி, காலாராத்திரி எனு அவர்களைக் கொன்றனள்.
சண்டமுண்டர்கள்
சும்ப நிசும்பர்களின் படை
அவர்களின் இரு கழுத்துக்களைய
அன்னைக்கு சாமுண்டி எனும் ெ
ரத்தபீஜன்
சும்பநிசும்பர்களின் பை
தரையில் விழும் ஒவ்வொரு இரத்
வரம் பெற்றவன். நவசக்திகளின்
 
 
 

ானை அழித்த அசுரர்கள்
துகளில் உள்ள மலத்திலிருந்து பலசாலிகளான மதுகைடபர் வ்விருவரும் கடுந்தவம் புரிந்து தாம் விரும்பும்போது மட்டுமே ராசக்தியிடம் வரங் கேட்டுப் பெற்றனர். தேவர்களைத் புன்னை ஜகன்மோகினி வேடங்கொண்டு மயக்கி அவர்கள் கச் செய்து, விஷ்ணுவைக் கொண்டு வதஞ் செய்வித்தாள்.
அசுரனான மகிவின் என்பான் பிரம்ம தேவனிடம் எந்த கூடாது என வரம் வேண்டிப் பெற்றான். அவ்வரத்தின் வன் வருத்த, தேவர்களிடம் ஆயுதங்கள் பெற்று நால் மகஷனை அசுரன் கொன்றனன்.
சும்ப அசுரர்கள் பிரமனிடம் பெண்ணால் தான் மரணம் தேவர்களை வருத்தினர். தேவர்கள் வருந்தி வேண்டதேவி றும் பெயர்களால் குறிக்கப்படும் மகாகோரூபம் கொண்டு
த்தளபதிகள் அன்னையோடு போரிடச் செல்ல, அன்னை ம் வெட்டி இரத்தம் குடித்தாள். இவர்களைக் கொன்றதால் பயர் வந்தது.
-த்தளபதியான இவன் தன்னுடைய தேகத்தில் இருந்து ததுளியிலும் தன்னைப் போன்று வீரர்களை உருவாக்கும் துணையோடு அன்னை அவனோடு போர் புரிய காளிதேவி

Page 136
அவன் உடலிலிருந்து விழுந்த இரத்தம் அனைத்தையும் நிலத்தில் விழாதபடி குடிக்க தேவி தன் உடை வாளினால் அவனை வெட்டிக் கொன்றாள்.
விருத்திராசுரன்
இந்திரனின் பகைவனான துவஷ்டாவால் ஹோமாக்னியிலிருந்து வருவிக்கப்பட்டவன்.
இந்திரனைத் தோற்கச் செய்து தேவர்களை வருத்தியவன். தவஞ் செய்து பிரமனிடம் வரம் பெற்றவன். இந்திரனை வாயுள் போட்டு அதைத்தவன். தேவர்கள் வருந்தி வேண்ட பராசக்தி நுரைவடிவாகி இந்திரனின் வச்சிராயுதத்தில் நின்று விருத்திரனை வதைக்கக் செய்தாள்.
துர்முகாசுரன்
இவன் கடுந்தவத்தால் பிரமதேவனிடம் வரம் பெற்று வேதங்களைத் தன் வயமாக்க,வேதங்களின்றி யாகங்கள் நின்றதால் உலகம் வரண்டது. தேவர்கள் அவ் அசுரனுக்கு அஞ்சி குகைக்குள் ஒளித்தனர். அவர்கள் வருந்தி வேண்ட அன்னை அனைவருக்கும் தேவையான அனைத்தையும் தன் உருவிலிருந்து ஈந்தாள். அவன் தோற்றத்தால் உலகில் மகிழ்ச்சி ஒலி தோன்றத் தேவிக்கு" சாகம்பரி ’ எனும் பெயர் உண்டாயிற்று. பின் அவ்வசுரனை அம்புகளால் அன்னை கொல்ல, அவன் ஒலிவடிவாகி அன்னையுடன் கலந்தான்.
விகுளன் - உற்பளன்
ஒரு கற்பத்தில் தோழியருடன் அன்னை பந்தாட அவ்விடத்திற்கு இவ்விரு அசுரர்களும் சிவகணத்தவர் போல் வரக் கண்டு சிவமூர்த்தியின் கட்டளைப்படி அவ்விருவரையும் அன்னை ஒரு பந்தால் மோதிக் கொன்றாள். அப்பந்து ஒரு சிவலிங்கமாயிற்று. அச்சிவலிங்கம் காசியில் கந்துகேசம் எனும் பெயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
துராசாரன்
இவ்வசுரனை ஐந்து திருமுகங்களும், பதுத் திருக்கரங்களும் கொண்ட வக்கிர துண்டரைப் படைத்துத் திருக்கரங்களும் கொண்ட வக்கிர துண்டரைப் படைத்து அனனை கொல்வித்தாள்.
CD

L 1603.7L/Taffair
இவ்வனைத் தானே படைத்து பின் தேவர்கள் வேண்டத்தானே அழித்து அன்னை அருள் செய்தவள்.
புலிமுகன்
இவனுக்கு அஞ்சிப்பிரமன் விஷ்ஸக்கள் வேண்ட அன்னை இவனைக் கொன்றனள்.
விக்கிரமாசுரன்
இவன் தலையை அறுத்து அன்னை தனக்கு
ஆசனமாக்கிக் கொண்டாள்.
முகாசுரன்
அன்னையால் வதைக்கப்பட்ட அசுரர்களில்
இவனும் ஒருவன்.
விப்ரசித்திக் குமரர்
இவர்களை இரக்த நன்தி என்ற பெயரோடு அவதரித்து அன்னை கொன்றனள். தண்டி
இவனை பீமை' எனும் சக்தியாகிய அன்னை அழித்தனள்.
தும்பரன்
காளி வடிவமாகி அன்னை இவனை பஸ்பமாக்கினாள்.
துர்க்கன்
இவனை அன்னை துர்க்கை வடிவெடுத்து அழித்தனள்.
விஷ"க்ரன்
மூவுலகங்களையும் ஆளும் லலிதா பரமேஸ்வரியின் சேனா நாயகியாய் விளங்குபவள் பூரீ மகா வாராகி. நால்வகைப் படைகளுக்கு அதிபதி இத்தேவி. வராஹா முகத்தினளாய் எட்டுப் புஜங்களுடனும் கருணை பொங்கும் கண்களுடனும், கருங்குவளைமலரின் நிறம் கொண்ட திருமேனியள். ,
பண்டாசுரனை வதம் செய்யலலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படைகளுடன் பெரும் போர் செய்தபோது, விஷாக்ரன் என்னும் அசுரனை வாராஹி தேவி வதம் செய்தாள் என்று லலிதோபாக்யனம் கூறுகிறது.
யூரபதி நூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 137
மயூரமங்கலம்
அண்ட சராசரம் அனைத் வாழ்வை நடத்தி வைக்கும் மகாச பலப்பல லிலாவிநோதங்கள் புரிவத கொடுப்பதற்காக உபாசனக் கிரமங் இவையே தந்திர சாஸ்திரங்கள் எ மகாவித்யா என்ற பெயரில் சிற காளி, தாரா, திரிபுர சுந்தரி பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா இருந்தே விஷ்ணுவின் தசாவதாரம் 1. கமலாத்மிகா :
சித்திரத்தைக் காணும்போ அழகும் ஆனந்தமும் வெளிப்படை குறிக்கும் கூrரசாகரத்தில் தோன் எனும் சந்திரனின் சோதரியாம் இ கமலமாக மதிக்கப்படுபவள். கடலி சுந்தரம், தூய்மை, மங்கலம் அனை மற்ற இரு கரகமலங்களால் அபய 6 பொன்னியை நான்கு யானைக வெளிக்காட்டுகின்றன.
பொருள் வறுமை மட்டுமின் உட்கலந்தவள் கமலாத்மிகா.
நீரிடை வாழும் இந்த நிமை எழுச்சி தந்தவள்.
2. திரிபுரசுந்தரி:
பொதுவாக பூரீவித்யா என் இராஜராஜேஸ்வரி என்றும், காமாட் திரிபுர சுந்தரி என்றால் மூவுலகிலு ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்ப சக்தி அல்லது அன்புச் சக்தியான
 
 

த்தாக வரும் ராசக்தி - தச்வித்யா
துமாகி, அவற்றிலுள்ள உயிர்க்குலம் யாவுமாகி, பிரபஞ்ச க்தியை அநுபூதிமான்கள் பலப்பல தெய்வ வடிவங்களில் ாகக் கண்டிருக்கிறார்கள். பிறருக்கும் அவற்றைக் காட்டிக் களை சவிஸ்தாரமாக வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். னப்படும். அவற்றில் பராசக்தியின் பத்து வடிவங்கள், தச பித்துப் பேசப்படுகின்றன. , புவனேஸ்வரி, திரிபுரபைரவி, சின்னமஸ்தா, தூமாவதி,
என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ள இப்பத்துச் சக்திகளில் iங்களும் தோன்றின என்பர்.
தே இவள் மஹாலக்ஷமி என்று விளங்கும். பரம்பொருளின் யாவதையே கமலாத்மிகா” என்கிறோம். ஜீவசாரத்தைக் ரியவள். அமுதத்துடன் பிறந்த அமுத மனத்தாள். இந்து இந்திரை இவளே. வாழ்வுக் கடலில் முளைத்த இன்பக் டை கமலத்தே இடம் கொண்டாள். மென்மை, செழிப்பு ந்துக்கும் உருவான இரு கமலங்களைக் கையிலும் தரித்து, பரதம் காட்டும் வரதன் பத்தினி இவளே. இப்பொன்னிறப் 1ள் எப்போதும் நீராட்டி இவளது உள் குளுமையை
றி, அறிவு வறுமையையும் நீக்குவதில் சரஸ்வதி அம்சமும்
லயே மீனமாக வந்த பரந்தாமனின் முதல் அவதாரத்துக்கு
றாலே இவளைத்தான் எண்ணுகிறோம். லலிதை என்றும், சி என்றும், காமகோடி என்றும், போற்றப்படுபவள் இவளே. ம் அழகி என்பது வெளிப்பொருள். உட்பொருள் வேறு. ாவே முப்புரங்கள்.மகா காரணமாகிய பிரம்மத்தின் அழகுச் இவளே இம்முப்புரங்களின் உள் அழகாக இலங்குகிறாள்.

Page 138
இவளை உள்ளார்ந்த அழகுத் தத்துவமாகவே கருதி, வெளி அழகுக்கெனவே கமலாத்மிகாவை தனிச்
சக்தியாகக் கொண்டிருக்கிறோம். இவள் உள்ளிருந்து நம் ஆசைகளையும், துவேசங்களையும் களைந்து, நமது ஐம்புலன்களையும் மனத்தையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டால் தான் வெளி அழகுகளை நாம் தூய்மையாக அனுபவித்து நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு அடையாளமாகவே, ஆசையை அடக்கப்பாசமும், துவேசத்தை அடக்க அங்குசமும், ஐம்புலன்களைக் கவர ஐந்து மலர்ப்பாணங்களும், மனதை இழுக்கக் கரும்பு வில்லும் தரிக்கிறாள் திரிபுர சுந்தரி.
இவளையே பரப்பிரம்ம சக்தியாகக் கொள்கையில் இவள் பரம புனிதமான பூரீ சக்கரத்தின் மத்தியில் சகல சக்திகளும் பற்பல வெளிச் சுற்றுக்களில் தன்னைச் சேவிக்கும்படியாக விளங்குகிறாள். இப்போது தசமஹா வித்யைகளில் வேறு இருவரான மாதங்கியும் பகளாமுகியும் முறையே அவளுக்கு மந்திரிணியும் சேனாநாயகியும் ஆகிறார்கள். தாரா என்கிற மகாவித்யா தேவியே அமுதக் கடலைத் தாண்டி இவளது இருக்கைக்கு நாவாய் செலுத்துபவள் ஆகிறாள். இவளே ஐந்தொழில் புரிபவள் என்பதால் பிரம்மனும், விஷ்ணுவும், ருத்திரனும், மாயைக்கு அதிபனாம் மகேஸ்வரனும் இவளது மஞ்சத்தின் நாலு கால்களாக, மாயையை நீக்கும் சதாசிவனே இவள் அமரும் பீடமாகிறாள்.
காமமாகிய மன்மதன் எரிந்தவுடன், அச்சாம்பலில் இருந்து காமத்தின் விளைவே குரோதம்' என்று காட்டுவதற்காக உற்பவித்தான் பண்டாசுரன், அவனை வதைத்தவள் இவள். மாதுளை நிறத்தவள் ஆன இவள் செவ்வாடையும், செவ்வாபரணமும் பூண்டு, இதய செம்மையும் உருவாக, பிரமத்தின் எண்ணமற்ற சாந்த வெள்ளையில் தோன்றிய முதல் எண்ணமாகிய தன்னுணர்வு என்ற சிவப்பாகத் திகழுகிறாள். கலியுக முடிவில் கருமை கனக்கும்போது மனச்செம்மையை மீண்டும் உண்டாக்க அவதரிக்கும் கல்கி இவளது அருள் விலாசமே ஆவார்.
3. Long, bus): W
காஞ்சி காமாட்சியை அரசியெனில் அவளது மந்திரிணியாகவுள்ளவளே மாதங்கி, ஆனால் இவளே பூரண மகாசக்தியாக சக்கரவர்த்தினியாக, மதுரையில் மீனாட்சியாகப் பிரகாசிக்கிறாள். மரகத ஜோதியாகப் பிரகாசிக்கிறாள். பசுமையின் உருவான இவளே மனத்தின் பசுமை வளப்பத்திற் பிறக்கும் சங்கீதம்

முதலான கலைகளுக்கு அதிதேவதையாவாள். இவள் கரத்தில் பிடித்துள்ள வீணையும், பச்சைக் கிளியுமே இதைச் சொல்லி விடுமே! ஒரு நிலையில் மந்திரிணி என்றாலும் இப்போது இவள் ராணி என்பதால்த்தான் இராஜ மாதங்கி, இராஜ சியாமளா எனப்படுகிறாள். சண்டாளரான மதங்கர் மாதவம் புரிந்து மதங்க முனிவரானார். அவரது தவத்துக்கு அருள் கூர்ந்து மகளாகப் பிறந்தவளே மாதங்கி. சண்டாளி இவள் உயர்வினும், உயிரினும், உயர்வானவள் என்பதற்கே 'உத் - சிஷ்ட என்ற அடைமொழியையும் கொண்டாள்.
மிகவும் கோமளமான இவளுடன் கீரிப்பிள்ளை காணப்படுவது பொருத்தமில்லாமல் இருக்கலாம். ஆனால் தத்துவம் எதைத்தான் பொருத்தாது? 'குலம் என்கிற குண்டலினிச் சக்தி பாம்பாகக் கூறப்படுகிறது. நம் பிராண ஆதாரமான இந்த சக்தி நமக்குள் விழிப்புப் பெறாமல் உறங்குவது போல் இருப்பதாலேயே நாம் ஆற்றல் குறைந்தவர்களாக, அஞ்ஞானிகளாக இருக்கிறோம். இச்சக்தியை யோகசக்தி, சாதனத்தால் தட்டியெழுப்ப வேண்டும். குலம் என்பது பாம்பு என்றால் நகுலம் என்பது பாம்புக்கு விரோதியான கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டால் சோம்பிக்கிடக்கிற பாம்பு உத்வேகம் கொண்டு கிளம்பத்தானே செய்யும்? இவளிடம் கீரி காணப்படுவதன் மர்மம் அதுதான்.
வாக் தேவியான இவளே ‘மோன புத்தர்' எனப்படும் அவதாரத்தின் உட்சக்தி என்பதும் முரணாகத் தோன்றலாம். ஆனால் பொதுமக்களைக் குறித்த மட்டில் மூடி வைக்கப்பட்டேயிருந்த தத்துவங்களை சகல ஜனங்களுக்காகவும் புத்தர்தான் வெளிக்கொண்டு வந்தார் என்பதால், அவரே வாக்தெய்வத்தின் வடிவாகக் கூறப்படுகிறாரோ?
4. தாரா :
பத்துவிதமான வித்யா தேவதைகளில் ஒருத்தியான தாராவிலேயே ஐந்து விதங்கள் உண்டு. - நீல சரஸ்வதி, உக்கிர தாரா, சுக்ல தாரா, நீலதாரா, சித்திரதாரா என்று இங்கே சித்திரத்தில் ஐவரின் அம்சங்களும் நயமுறக் கலந்துள்ளன.
தாரணம் என்றால் கடத்துவிப்பது, தாண்டுவிப்பது என்று பொருள் . சம்சார யாத்திரையை நடத்தி வைப்பவள் தாரா. சம்சார சாகரத்தைத் தாண்டுவிப்பவள் தாரா. பெளதீக உலகிலும் உள்நாட்டு யாத்திரைகளையும் கடற் பிரயாணங்களையும் முடித்துத் தரும் காவற் றெய்வம் இவளே. எனவே நாற்சந்தி
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 139
கூடுமிடத்திலும், கடற்கரையிலும் இவளைக் குறிப்பாக வழிபடுவதுண்டு.
பிரணவம் தாரக மந்திரம் எனப்படும். அந்த ஓங்காரமே தாராவின் மந்திரம் என்பதிலிருந்து இவளது மகிமையை உணரலாம்.
தாரக மந்திரமாகக் கருதப்படும் மற்றுமொரு மணிமொழி இராமநாமம் அல்லவா? அதற்கேற்ப, பூநீ ராமபிரான் தாராவின் சக்தியில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. வணயாத்திரை, கடல் யாத்திரை எல்லாமும் விசேஷமாகச் செய்தவர் அவரல்லவா?
உணர்வுகள் நசிக்கிற பேருணர்வு வடிவினள் என்பதை உணர்த்தவே இவள் ஒரு காலால் சவத்தை மிதித்துக் கொண்டிருக்கிறாள். வாழ்க்கை முடிச்சை வெட்டுவதற்காக கத்தரிக்கோலும், அகங்கார நீக்கத்தைக் காட்ட மண்டையோடும் வைத்துள்ள இவளது இன்னொரு கரத்தில் ஞான வாளும், இந்தப் பயங்கரங்களுக்கு ஈடுசெய்வதுபோல் எஞ்சிய கையில் ஆன்ம மலர்ச்சியைக் காட்டும் குளிர் நீலத் தாமரையும் தரித்திருக்கிறாள். மூவுலக அறியாமையும், கபாலத்தில் வாங்கிக் கொண்டு ஒரு நொடியில் அழித்துவிடுவாளாம்! நாகங்கள் சூழ்ந்த இவளது திருமுடிச் சடைமீது சாட்சாத் சிவபெருமானையே தாங்கியிருக்கிறாள். புத்தர் பெருமானைத் தாங்குகிறாள் என்றும் சொல்வதுண்டு. தாரா வழிபாடே புத்த மதத்திலிருந்துதான் ஹிந்து தந்திரத்துக்கு வந்ததென்பதும் உண்டு. பிற நாடுகளிலும், கடல்கடந்த நாடுகளிலும் பெளத்தம் பரவியது இவளது உபாசனை வலிமையால்தான் என்பர். இவளுடைய வழிபாட்டுக்கு சீனாசாரம்' என்றே ஒரு பெயர் உண்டு. மாரனைக்கண்டும் கலங்காத புத்தர் ஆலகாலத்தை உண்டும் கலங்காத சிவபெருமான் இருவருக்கும் அக்ஷோப்யர் என்ற பெயருண்டு. அஷோப்பியரின் சக்தியாகவே இவள் கருதப்படுகிறாள். சிவனை நஞ்சுண்ணத் தூண்டி நெஞ்சுரம் தந்தது இவளே எனறும ஒரு தநதரம கூறும.
பெண்களே இவளது உபாசனைக்கான தீட்சை தர உரிமை பெற்றிருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் பிறந்து மூன்று நாட்களுக்கு முன்னதாக அதன் வாயில் தேனைக் கொண்டு எழுது குச்சியால் நீல சரஸ்வதி மந்திரத்தை எழுதிய தாய்மார் பலர் காஷ்மீரத்தில் முற் காலத்தில் இருந்தனர். அங்கு பாண்டித்தியம் மிக அதிகமாக விளங்கி, காஷ்மீரி பண்டிட் என்றே ஒரு வகுப்புச் சிறப்புடன் திகழ்ந்ததற்கு இதுவே ஒரு காரணம் என்றே கருதப்படுகிறது.
மயூரமங்கலம்

5. காளி:
காலம் என்கிற விந்தைத் தத்துவத்தின் தெய்வ வடிவமே காளி. காலம் என்றால் கருநிறம் என்றும் ஆகும். இவள் கருநிறத்தள் காலத்தில் எதுவுமே மாறிக் கொண்டிருக்கிறது. அதாவது ஒவ்வொன்றின் உருவமும் செத்துக் கொண்டேயிருக்கிறது. புத்துருவம் பிறக்கிறது. எனவே சாவுக்கு உருவமாக இருக்கிறாள் காளி. அவள் அப்படிச் சாகடித்தால்தான் புத்துருவங்கள் தோன்றும். உலகையே மகாமயாணமாக்கி, மயான உருத்திரனார் மீதே நின்றாடுகிறாள் காளி. கோரமும் இறைவன் செயல் என்று தெளிந்து அழகைப் போலவே கோரத்தையும் ஏற்கும் பொருட்டு பயங்கரத்தை உருவகித்து காட்டுகிறாள் காளியன்னை. கூரிய நகங்களும், கொடூர, ஏளன நகையும், தொங்கும் நாவும் படைத்த இவள் ஒன்று நிர்வாணமாயிருப்பாள் அல்லது சவங்களைப்பின்னிய ஆடை அல்லது முண்டமாலை, கபாலத் தலையணி இவற்றை அணிந்திருப்பாள். கரத்தில் கத்தியும், கத்தியால் வெட்டிய தலையும் பிடித்திருப்பாள். ஆயினும் மற்ற இருகரங்கள் அபயமும் வரதமுமாக இருக்கக் காண்கிறோம்.
மனிதர் புரியும் போர், கிளர்ச்சி இவையும், இயற்கையில் பூகம்பம், எரிமலை, சூறாவளி, வெள்ளம், தொற்றுநோய் முதலியனவும் இவளது அனுக்கிரகங்களே. இவற்றை அனுக்கிரகமாக ஏற்கும் பக்குவம் இல்லாதவர் பொருட்டுத் தாராவாகி இவ் உற்பாதங்களைக் களைவாள்!
காலதத்துவமாம் இவளே திராண சக்தியாக, குண்டலினியாக தேகந்தோறும் உறைகிறாள்.
காளியைப் போலவே கோரக் கோலம் தாங்கி இவளது பயங்கரச் செயல்களையே சிறிய அளவில் கைக்கொண்டு வீராசாரப்படி வழிபடுகிற சாதகருக்கு விரைவில் இன்ப, துன்பங்கள்,அழகு, கோரங்கள், அன்பு துவேஷங்கள் சமமாகத் தெரியும். அவர்கள் இவ்விரட்டைகட்கு மேம்பட்ட பிரம்மாநுவத்தை எய்துவர். அழகும் அன்புமே உருவான கண்ணன் தான் தசாவதாரங்களில் இவளது சக்தியைப் பெற்றவன் என்றால் விந்தையாக இருக்கும். ஆனால் விளையாடி விளையாடி நம்மைக் கவரும் அம்மாயாவி காளியின் தொழிலான சங்காரத்தைச் செய்யவே வந்தவனென்பது சற்றுக் கூர்ந்து கவனித்தால் வெளியாகும். பல அரக்கரைக் கொன்ற பின் கெளரவ பாண்டவர்களும், பிறகு தனது யதுவம்சமும், அழிந்து போகும்படி செய்தவனன்றோ அவன்? அவன் அவதாரமெடுத்ததே

Page 140
பூமாதேவி பூபாரம் குறைக்குமாறு பிரார்த்தித்ததை முன்னிட்டுத்தான் காலோஸ்மி என்கிறான் கீதையில். காளி என்றால் கறுப்பி என்பது போல கிருஷ்ணன் என்றால் கறுப்பன் என்றுதான் அர்த்தம்.
6. பகளாமுகி:
காளி ஒரேயடியாக அழிக்கிறாள். பகளாமுகியோ செயல் முன்னிலும் திறம்பட நடைபெறும் பொருட்டுச் செயலைத் தடைப்படுத்துபவள். பிறகு விட்டுவிடுகிறாள். மூச்சை இறுக்கிப்பிடிப்பது தடைபோடத்தான். ஆனால் இம்மாதிரி சிறிதுபோது செய்த பிறகு விட்டால் அதுவே உயிர் வளர்க்கும் பிராணாயாமம் ஆகிறதல்லவா? இப்படிப் பிடித்து வைப்பதை ஸ்தம்பனம்' என்பர். பகளாமுகி குறிப்பாக வாக் ஸ்தம்பனக்காரி. அதாவது பேச்சைத் தடுத்து நிறுத்துபவள். அதன்மூலம் அவர்களைச் சிந்திக்கச் செய்பவள். இவள் தனது இடது கையால் ஒருவனின் நாவைப்பிடித்திழுப்பதாகவும், வலது கையால் கதை தாங்கி அவனது சிந்தனையை அடித்து வீழ்த்தத் தயாராக இருப்பதாகவும் சித்தரிக்கப்படுகிறாள். ‘வல்கா’ என்றால் லகான்’ எதிராளியின் வாயில் (முகத்தில்) லகான்போட்டுத் திணறடிக்கும் வல்கா முகியே வகலாமுகியானதாகச் சொல்வார் உண்டு. வடமொழியின் வவும்பவும் ஒன்றுக்கொன்றுமாறும்.
எத்தொழிலையுமே ஸ்தம்பிக்கச் செய்பவள் இவள்தான். தண்டநாதா என்கிற சேனா நாயகியாக இருந்து, ராணி லலிதை போர் புரியும்போது எதிரி சேனையை செயலிழக்கச் செய்தவள். லலிதையே காஞ்சி காமாட்சி, அவளது அமைச்சரான மாதங்கியே மதுரை மீனாட்சி என்பது போல், படைத்தலைவியான இவளே ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி.
இவளது நிறம், ஆடை, ஆபரணம், ஹாரம் யாவும் மஞ்சள். பொன்னைப்போல் ஒளியை வெளிவிட்டுப் பளிச்சிடாமல், தனக்குள்ளே அமுக்கி வைத்துக் கொள்வது மஞ்சள் நிறம். சிற்றறிவின் நிறம் மஞ்சளே என்றும் இதுவே செம்மையான உள்ளறிவு பொங்கி வருவதைத் தடுப்பது என்றும் கூறுவதை இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும். இவளை உபாசிப்பவனும் மஞ்சள் ஆடை உடுத்தி, மஞ்சள் கிழங்குகளான ஜெப மாலையை உருட்டி இவளது மந்திரத்தை ஜபிக்க வேண்டும். அவனுக்கு வாதங்களில் வெற்றி கிடைப்பது மட்டுமின்றி,ஜலஸ்தம்யனம்,அக்னிஸ்தம்பனம் ஆகியன செய்து நீருக்குள்ளும், நெருப்புக்குள்ளும் நீண்ட நேரம் நிலைகுலையாமல் வாழும் சித்தி கைகூடும்.

ஓரிடத்திலுள்ள மேகத்தை அங்கேயே ஸ்தம்பனம் செய்து இறுக்குவித்து மழையாக பொழியும்படி செய்கிற ஆற்றல் உண்டாகும். தன் அங்கங்களை தனக்குள்ளே குறுக்கி ஸ்தம்பனம் செய்துகொள்கிற ஜந்து ஆமைதானே? ஆம், பகளாமுகியே கூர்மாவதாரத்தின் உட்சக்தியாவாள்.
7 புவனேஸ்வரி:
காலமாக விரிந்தவள் காளி, இடமாக விரிந்தவள் புவனேஸ்வரி. காலவெள்ளத்தில் புவன வெளிகளைப் பூக்கச் செய்தவள் இவள். உடனே புவனங்களை நிரப்பப் பசு, பட்சி, மிருகம், பாம்பு ஆண்,பெண் என்று அனைத்து ஜீவராசிகளும் தோன்றி விட்டன. அவர்களுக்கு உருவங்களும் பெயர்களும் வந்தது இவளால்தான். அவர்களை ஆளும் புவனேஸ்வரியாக இவள் ஆனாள். இவளையே பிரகிருதி அல்லது இயற்கை எனலாம். இயற்கையென்று பலவாக விரிந்திருப்பதைப் பார்த்தால்தானே அதன் மூலமான பிரம்மம் மறைவு பட்டிருக்கிறது? ஆகவே இவள் மாயை ஆயினும் பிரார்த்தித்தால் இவளே மாயையை நீக்கி மெய்ஞ்ஞானத்தை நல்குவாள். தேவி பிரணவம் எனப்படும்'ஹ்ரீம்காரத்தை மந்திரமாகக் கொண்டவள், இம் மகா மகா சக்தி.
காளி மூலாதார குண்டலினியெனில் இவளே இதயாகாசத்தில் திகழும் ஞானவெளி. ஆயினும் அன்பருக்கெனச் செக்கச் சிவந்த அன்னையாக வந்தவள். புவனம் முழுவதையும் நாசி முனையிலே தூக்கி நிலை நிறுத்தி வராஹ அவதாரம் புவனேஸ்வரியின் ஆவிர்ப்பாவமேயாகும்.
8. சின்னமஸ்தா :
காளியின் பயங்கரத்தையும் அற்பமாக்கும் ஒரு கோரம் உண்டெனில் அதுசின்னமஸ்தாவேயாகும். காளி காலருபத்தில் ஒரு நியதிக்கு அடங்கியே வெளி உருவை அழிக்கும் பிரான சக்தி. இவளோ எதற்கும் அடங்காமல் தத்சுஷ்ணமேவெளிஉருவை அழித்து உள் அநுபவத்தைத் தரும் மின்சக்தியாம் வித்யுத்சக்தி (Electrical Energy). நம் பூர்வீக ரிஷிகளுக்கு மின்சாரம் எவ்வளவு நன்றாகத் தெரியும் என்பது இவளைப் பற்றி அறிந்தால் வெள்ளிடை மலையாகிறது. இந்திரன் ததீசி முனிவரின் முதுகெலும்பில் இருந்து செய்த வஜ்ராயுதத்தால் மேகங்களை அடிக்க மின்னல் உண்டாவதாக கதை அன்றோ? அந்த நெருப்புச் சக்தியான 'வஜ்ரவைரோசனி யே சின்னமஸ்தா. மனிதனின் முதுகெலும்பில்தான்
மயூரபதி யூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானகும்பாபிஷேக மலர் - 2000

Page 141
மின்சார சுமை ஒடுகிறது. ததிசீ போன்ற முனிவரின் விஷயத்தில் அதிஜீவனின் அற்ப சக்தியாகவில்லாமல் ஜீவாதாரப் பராசக்தியாகவே உள்ளது. புருவ மத்தியில் இடை, பிங்கலை, சுஷும்னை எனும்மூன்று நாடிகளும் கூடுமிடத்தில் இதன் மின்வெட்டை மகா யோகியர் உணருகின்றனர். இந்த மின்னல் சிர உச்சியில் முட்டினால் அங்கிருந்து அமுதப் பிரவாகமே சகல நாடிகளிலும் சொரியும். இந்திரிய அதிதேவதை இந்திரன். அவன் இந்த வஜ்ர விரோசனையால் மேகத்தை முட்ட அங்கிருந்து அமுத நீர்மழையாகச் சுரக்கிறது. இந்திரிய நிக்கிரகத்தின் வடிவம் இவள் என்பதாலேயே ரதிமதன ஜோடியரை மிதித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு கையில் வெட்டப்பட்ட ஒரு தலை. யாருடைய தலை? சாட்சாத் இவளுடையதேதான். அதனால்தான் இவளுக்குச்சின்ன மஸ்தா என்கிற பெயர் (சின்ன - துண்டித்த, மஸ்தா - தலையினள்). இந்திரியங்கள் போனால் போதாது, அகங்கார மனம் தொலைய வேண்டுமென்று காட்டத்தன் தலையையே கொய்து கொண்டிருக்கும் தியாக சொரூபியாக்கும். இவள் வெட்டிய கழுத்திலிருந்துமுன்பு சொன்ன மூன்று நாடிகளினின்று மூன்று குருதி ஊற்றுக்கள் பீச்சிடுகின்றன. வாருணி, டாகினி என்ற இவளது சேடியர் இருவர் இடை, பிங்கலையில் இருந்து வரும் குருதியைப் பருகுகின்றனர். இவளது வெட்டுண்ட தலையே மத்ய நாடியாம் சுஷிம்நயின் சக்தியைப் பருகுகிறது. இடி, மின்னல் என்ற அடையாளங்களைக் காட்டி ஒலி, ஒளி என்ற இருசக்திகளைப்பிரமத்திலிருந்து பேதப்படுத்தி வெளிக்கொணர்ந்த மகாசக்தி ஒவ்வொரு ஜீவனிலும் இந்த ஒலி, ஒளிகளோடு ஞானமாகவும் புகுகிறாள். இம்மூன்று நாடிகள் மூலமாக அதையே இந்த மூவரின் இரத்த பானம் சித்திக்கிறது. மீண்டும் மூலத்தில் தோய வேண்டுமாயின் ஜிவமுடிச்சை வெட்டவேண்டும். அதனால்தான் இவள் ஒரு கரத்தில் கத்திரிக்கோல் வைத்திருக்கிறாள். ஆக இவளது உருவம் கொடுமையாய் இருப்பினும் செயலோ மிக மதுரமாக இருக்கிறது. அபய வரகஸ்தங்களையும் இவளும் காட்டுகிறாளே!
பரசுராமர் தமது அன்னை ரேணுகாதேவியின் தலையை வெட்ட நேர்ந்தது அன்றோ? அப்படி வெட்டுண்ட சிரம்தானே இப்போது மாரியம்மனாக வழிபடப்படுகின்றது? சின்னமஸ்தாவின் சின்ன பின்னமான மஸ்தகமே ரேணுகை என்றும், தலையை வெட்டிக் கொண்ட இவளே பரசுராம அவதாரத்தின் மூல சக்தி என்றும் கருதப்படுகிறது. பரசு ராமர் ஆறாவது
மயூரமங்கம்ை

அவதாரம். இவளும் ஆறாவது மகாவித்யை ஆவாள். பஞ்ச இந்திரியங்கள்,மனம் ஒன்று-ஆக இந்த ஆறினை அடக்கும் இவள் ‘ஷஷ்டீதேவி' என்றே சிறப்பிக்கப் படுகிறாள்.
9. துரமாவதி:
சின்னமஸ்தாவிடம் எத்தனைக்கெத்தனை வேகம் பொங்குகிறதோ அத்தனைக்கத்தனை சாம்பி சோம்பிக் கிடப்பவள் ஒருத்தி உண்டெனில், அவளே தூமாவதி. ஒன்று அழிவதற்கும் மற்றொன்று உண்டாவதற்கும் இடையில் செயலற்றதோர் இடைவெளி உண்டல்லவா? அதுவே இவள். இது உண்மையில் பாழிடம்தானா? ஒன்றின் நிறைவும் அதில்தான், இன்னொன்றின் வித்தும் அதில்தான். அதையெப் படிச்சூனியம் எனலாம்? எனவேதான் இவளை இருட்சக்தி என்னாது புகைச் சக்தி' என்பர் (தூமம் - புகை) புகை, இருள் போலத்தான் இருக்கிறது. ஆனால் ஒளிமய அக்னி இன்றி இது இல்லையே மஹா விஷ்ணுவின் யோகநித்திரை இவளேயாவாள்.
இதனால்தான் எதனையுமே சிதைத்து, தப்பர்த்தம் கற்பித்துக் காட்டுகிற ஏமாற்று சக்திக்கும் தூமாவதி அதிதேவதையாகக் கூறப்படுகிறாள். இது ஆக்க சக்தியல்லவே! இதனால்தான் இவள் வெளிறிப் போனவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். இவள் தளர்ந்தவளாக, அங்கங்கள் தொங்கித் தளர்ந்து, பல்லிழந்து, சீவாத முடியும், அழுக்கு உடையுமாகக் காட்சி தருகிறாள். போதாததற்கு காக்கை கொடி வேறு
ஆனால் இதென்ன இவளுடைய ஒரு கையில் முறம்? அதுதவிட்டைப்புடைத்து அரிசியை மட்டும் தேக்க வைக்கும் உத்தமமான உபகரணம் அல்லவா? அதேபோல் இவளது மற்ற கரமும் வரம் நல்கும் உத்தம பாகத்தில் அல்லவா உள்ளது? ஆம்,அசங்கியமாகத் தோன்றும் தூமாவதிதான்நம்சிந்தனை என்கிறதவிட்டைப்புடைத்து, உண்மை நாமான ஆத்ம அரிசி மட்டுமே நிற்கிற தூக்க நிலையை நமக்கு என்றென்றும் அளித்துக்களைப்பாற்றும் கருணைத் தாய். ஆனால் இந்நிலையில் நாம் ஆத்மனை உணராமல் பாழ் மாதிரிக் கிடக்கிறோம். அதனால் இவளும் பாழ் நெற்றியாக இருக்கிறாள். தச மகா வித்யாக்களுள் இவள் ஒருத்தியே விதவை. ஆத்மா என்கிற புருஷன் - பரமபுருஷன் - பெரும் ஆள் - பெருமாள் உறங்கிக் கொண்டே இருக்கும்போது இவள் புருஷனற்றவள் போலத்தானே இருந்தாக வேண்டும்.

Page 142
10. திரிபுர பைரவி:
திரிபுர சுந்தரி அன்பின் வடிவம். பைரவம் என்றால் அச்சம் ஊட்டுதல், இவள் திரிபுர பைரவி. ஆனால் கோரச் செயல் செய்து அச்சமூட்டவில்லை. தங்களது மகிமை காரணமாகவே சிலர் தம்மை நாம் அணுகவொட்டாமல் அச்சுறுத்தவில்லையா? அப்படித் தபோ சக்தியாலேயே நமக்கு பைரவியானாள்.
தவம் என்றாலே எரிப்பது என்று பொருள். சிந்தனை ஒருமுகப்படுவதன் தீவிர நிலையே தவம். அது அக்னி மாதிரியானது. ‘அக்னி வர்ணாம், தபஸா ஜ்வலந்தீம்' என்று வேதம் போற்றும் துர்க்கை இவளுட் கலந்து நிற்கிறாள்.
தவத்தில் ஒன்றையே எண்ணுவதால் மற்றவற்றை விட்டுத்தானேயாகவேண்டும்? இவளது தவம் எதற்கு? உலகை விடுவதற்கு மற்றவர்கள் தவம்
62O
 

புரிவர் என்றால் இவளோ உலகை உண்டாக்க வேண்டும் என்பதற்கே தவம் புரிகிறாள். இவளது உபாசனா மார்க்கமும் பூரீவித்யா என்றே பேசப்படுகிறது. மூலாதாரத்தில் இவள் தபோக்கினியாக காந்தினாலும், சிரத்தில் சகஸ்ரார உச்சிக்கு ஆரோகணித்து சுந்தரியாகும்போது அமுத மழை வர்ஷிக்கிறாள். ஜடமில்லை இவள். இவள் ஞானமாதா எனக் காட்டவே ஜபமாலையும் ஞானமுத்திரையும் தாங்கி நிற்கிறாள். அபயம் தந்து, வரமுத்திரையும் காட்டுகிறாள். நெற்றியில் ஞானக் கண்ணோடும், இதழ்களில் இன்னகையோடும் காணப்படுகிறாள். ஞானாமுதம் பாய்ச்சுவேன் எனக் காட்டவே அமுதத்தைப் பிறப்பிக்கும் மதியைத் தலையில் சூடியிருக்கிறாள்.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 143
மயூர மங்கலம்
 

JoĒĶspífijos1)o9jossaggio

Page 144
LJI LJI
 
 

தி பூஜி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தம்பாபிஷேக் La Siluri = ? ( lbf)

Page 145
மயூரமங்கலம்
 


Page 146
மயூரபதி
 

ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேகமர் - 2000

Page 147
மயூர மங்கலம்
 


Page 148
நீ வித்யையில் ஐம்பத்ே எழுத்துக்கள் வடிவில் யாவும் லலி தேவி வேறல்ல. இதற்கு மாத்ருகா , கொண்டு நம் உடம்பில் மாத்ருகா நீ ஆராதனையில் உயர்ந்த வழி தேவியினுடையவை. அக்ஷரங்க மாத்ருகா அக்ஷரங்களையே பாலை ஜபம் செய்யும் மணிகளுக்கு ஒப்பி ஜபிப்பதுண்டு.
மாத்ருகா நியாஸம் செய்வ தேவியாகவே ஆகிவிடுதலே. மாத் மாத்ருகா அக்ஷரம் அமையப்பெற்ற இந்த அசுரங்கள் தேவியினுள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அசு தேவிகள் ஐம்பத்தொரு ருபத்தில் :
பூg 'அ'கார தேவி
tրը:
 
 
 
 

janäGUDUudi)
மாத்ருகா ஒகடிரங்கள்
தொரு அக்ஷரங்களான 'அ' முதல் கூடி வரையிலுள்ள தா தேவி இருக்கிறாள். அக்ஷரங்கள் வேறல்ல, லலிதா அக்ஷரங்கள் என்று பெயர். இந்த மாத்ருகா அக்ஷரங்களைக் யாஸம் செய்வது (நியாஸம் என்றால் தொடுதல்) ரீவித்யா பாடாகக் கருதப்படுகிறது. எல்லா அக்ஷரங்களும் ள் வடிவிலும் சப்தங்கள் வடிவிலும் தேவி இருக்கிறாள். யாக அணிந்திருக்கிறாள் தேவி. மாத்ருகா அக்ஷரங்களை, ட்டு அக்ஷரமாலையாகப் பாவித்து பூரீவித்யா உபாசகர்கள்
தன் நோக்கம் உடம்பை அப்படியே தேவியாகப் பாவித்து, ருகா அக்ஷரங்கள் இல்லாமல், நவாவரன பூஜையேயில்லை. தொல் சம்ஸ்க்ருதம் மாத்ருபாஷையெனப் போற்றப்படுகிறது. டையவை. ஆகையால் மாத்ருகா அக்ஷரங்கள் என ஓரங்களுக்கும்"அகார தேவி ஆகார தேவி, என மாத்ருகா தரிசனம் தருகின்றனர்.
క్లేస్త్రీ
=
இே
團
பூபதி ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ரும்பாபிஷேக பலர் - 2000

Page 149
மயூரமங்காமம்
 

--
பூரீ லுகார தேவி

Page 150

ார தேவி பூg "ஐகார தேவி
மயூரபதி பூ பந்திரகாளி அப்பாள் தேவஸ்தானதும்பாபிஷேக மார் =2007

Page 151
(அ) பூணு விசர்க தேவி
பூணூரி ககார தேவி 3
மயூரமங்கம்ப்
 
 

S. S.
37 தேவி1 பூரீ'க'கார தேவி2

Page 152
பூரீ'சகார தேவி1
 
 

ఫ్రెడీ-క్ల్లో
== § *
யூரபதி ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக Lր են i - FILIII

Page 153
பூரீ டகார தேவி 2
பூg னகார தேவி
மயூர பங்களும்
 
 

T FT TE பூஞரீ'த'கார தேவி ?

Page 154
வி1
பூரீ'ப'கார தே
II
 
 

பூரீ 'ந'கார தேவி
பரபதி யூஜி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆம்பாபிைேக மார் - 2000

Page 155
ଜୀ 4
பூரீ'ப'கார தே
ELTHF i
 
 


Page 156
இ @リ○ 注三姿エ三
பூ'சகார தேவி 4
 
 
 
 
 
 

பூg "சு+'கார தேவி
- மயூரபதி பரீ பத்திரகாளி அப்பாள் தேவஸ்தான ஆம்பா fără unui - 2001

Page 157
விடை
邙) 國神學的一義的聲學的
■韃唱
في " التي " آسمان
"T"=ے قلي "F
- ܨܒܒ -- ܒ -- ܒܒܝܬܐ ܒܪ
■
சிவாலயத் திருவிழாக்களில்
சண்டிகேஸ்வரர் என ஐந்து மூர்த்த மூர்த்திகள் அல்லது ஐந்திருமேனிகள்
இறைவன் ரிஷப வாகனக் கா அப்போது சோமாஸ்கந்தர் ரிஷய வா
தனி ரிஷபத்தில் எழுந்தருளுவாள்.
----*** :****** *學的 !!!
sỹ“シ
மயூர பங்களிபம்
 
 
 
 
 
 
 

மக்கு உகந்த இவர்திகள்
ந்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்
பூர்தி ரிஷப வாகனம்)
கணபதி, சோமாஸ்கந்தர், தனி அம்பாள், முருகன், 1ங்கள் உலாவில் இடம் பெறும். இவற்றையே பஞ்ச ா என்பர்.
ாட்சியே சிவாலயத் திருவிழாக்களில் முதன்மையானது. கனத்தில் வரும்பொழுது தனியம்பாள் தனக்கே உரிய

Page 158
அறுசுவை உண்டியை அனைவருக்கும் அளித்து விட்டு ஆலகால நஞ்சை உண்டவன் இறைவன். மாளிகைகளை மக்களுக்குக் கொடுத்துவிட்டு அவன் மயானத்தில் வசிப்பவன். அதாவது தன்னலமற்ற தியாகராஜனாக அவன் விளங்குகின்றான். அவன் எவ்வழியோ அம்பிகையும் அவ்வழிதான்!
காளை மாடு வயலில் ஓயாது உழைத்து உதவுகிறது. விளைந்த உணவுப் பொருள்களைப் பொதியாகச் சுமந்து வந்து சேர்க்கிறது.
அதன் உழைப்பால் உற்பத்தியான தானியங்களின் உட்பகுதியான அரிசியையும், பருப்புக்களையும் நமக்கு அளித்து விடுகிறது. நாம் விரும்பாத உமி, தோல், வைக்கோல் முதலிய பகுதிகளையே தனக்கு உணவாக உண்டு மகிழ்கிறது. “உழைத்த எமக்கே உணவுப் பொருள் அனைத்தும்" என்று காளைகள் போராடத் தொடங்கினால் மனிதன் பட்டினியால் வாட வேண்டியதுதான்!
உழைப்பும் தியாக உள்ளமுமே இறைவனின் விருப்பம் இதனை உணர்த்தவே சிவனும் சக்தியும் விடையூர்தியை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் ரிஷப வாகனம் தரும தேவதையின் வடிவமே என்பர். அனைத்தும் அழிந்துபடும் பேரூழிக் காலத்தில், தருமம், தான் அழியாது நிலைத்திருக்க விரும்பி அழியாத சிவசக்திகளின் ஊர்தியாகி - காளையாகி வருகிறது.
2. சிங்க வாகனம்
அம்பிக்கைக்கே உரிய சிறப்பு ஊர்தி சிங்கமே. 'சிங்கத்திலேறிச் சிரித் தெவையும் காத் தி டு வாள்' бт ҫšт Ё п п ії LITTÉLLUIT iii.
தனது கர்ஜனை A. LISI so II (3 gu G3 LI அனைத்தையும் அடக் கி யாளும் திறமை சிங்கத்தின் தனித் தன்மைை
யாகும். கம்பீரமும் 三与キ言 A யாரும் எளிதில் JERER அண்ட முடியாது
 
 

என்ற நிலையும் உடையது. அதே நேரத்தில் தருமம் தவறாதது சிங்கம், தன்னை எதிர்க்காத விலங்குகளை அடிக்காது. பசியில்லா வேளையில் வேட்டையாடாது.
அம்பிகையும் தனது மேலாண்மை மற்றும் தருமம் தவறாத இயல்பு ஆகியவற்றை உணர்த்த சிங்க வாகனத்தில் பவனி வருகிறாள்.
சிங்க முகாசுரன் சூரபதுமனின் தம்பியாவான். முருகன் சூரனைத் தனக்கு மயில் வாகனமாக மாற்றிக் கொண்டான் அல்லவா? அதே போல் அவன் தம்பி சிங்கனையும் சிம்ம வாகனமாக்கித் தன் தாய்க்கு அளித்து விட்டான். இன்றும் நல்ல பிள்ளைகள் தனது தாய்க்கென தனிக் கார் வாங்கிக் கொடுப்பது போலத்தான்!
அம்பிகை அமரும் அரியணையும் பூரீமத் சிம்மாசனம்' என்று சகஸ்ரநாமத்தில் சிறப்புடன் குறிப்பிடப்படுள்ளது. பரத நாட்டியத்தில் சிம்ம வாகினி என்ற ஒரு ஆட்டம் உண்டு. குறிப்பிட்ட ஜதிகளுடன் தாளக் கட்டுடன் ஆடினால் அரங்கில், ஆடும் பகுதியில், கீழே வைக்கப்பட்டிருக்கும் வண்ணப்பொடி தூவிய காகிதம் அல்லது துணியில் சிம்மம் வரையப்பட்டு விடும். இது வியத்தகு அற்புத ஆட்டம்
பெரும்பாலும் காளியம்மன் முதலான ஆற்றல் மிகு தெய்வங் களுக்கே சிம்ம வாகனம் சிறப்பு ஊர்தியாக விளங்குகிறது.
3. நாக வாகனம்
நாகம் (பாம்பு) விநாயகருக்கு உதா பந்தனம் என்னும் அரைஞாண் கயிறாகவும், சிவனுக்கு நாகபரனமாகவும், திருமாலுக்குப் பள்ளியாகவும், முருகனின் மயிற்கால் பந்தனமாகவும் விளங்குகிறது. அம்பிகைக்குச் சிறுவிரல் மோதிரமாக விளங்கும் நாகமே சிறப்பு நாட்களில் வாகனமாகிறது.
மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டவனி சக்தி சுருண்டு படுத்திருக்கும் பாம்பு போல் தோன்றும் இந்திய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு, கற்றுத் தேர்ந்து, பல நூல்களையும் இயற்றிய ஆங்கிலேய அறிஞர் சர் ஜான் உட்ராஃப் குண்டலினி சக்தியைப் 'சர்பண்டைன் பவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
குண்டலி சக்தியாக இருந்து மனிதனின் உறங்கும் ஆற்றல்களை மேல் நிலைக்கு உயர்த்திடும் அம்பிகைக்கு அந்தப் பாம்பே ஊர்தியாகிறது.
மயூரபத்து பந்திரகாளி அம்பாள் தேவஸ்தாளரும்பாபிஷேக் மதிபர்-2000

Page 159
|T് ബTE:Th ஐந்து தலைகளுடன் குடையெடுப்பதுபோல் அமைந்திருக்கும். வாற் பகுதி சுருட்டிக் கொண்டு அடிப்பீடம் போல் காட்சிதரும்,
அம்பிகைக்கும், சிவனுக்கும் ஊர்தியாகும் பொழுது நாகவாகனம் என்றும், திருமாலுக்கு வாகனமாகும் பொழுது 'சேஷவாகனம்' எனவும் பெயர்பெறும்,
சி. அன்னப் பறவை
மயூர மங்கலம்
 
 

அன்னப் பறவை நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் இயல்புடையது. அதுபோல் சான்றோர்கள் பொய்யான உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப் பொருளாகிய கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள். மேலும் சில மந்திரங்களை "ஹம்சம் என்று குறிப்பிடுவர். ஹம்சம் என்றால் அன்னப் பறவை என்று பொருள்.
அம்மந்திரங்களின் உட்பொருளாய் விளங்குபவள் அம்பிகை. அவளை உணர்ந்து உயர்ந்தச் சான்றோர்களை ப்ரமஹம்சர்கள் என்று கூறுவர். அச்சான்றோர்களின் மனத்தில் இருப்பவள் என்பதை உணர்த்தவும் அம்பிகை ஹம்ச வாகனத்தில் வருகிறாள். மேலும், தற்கால விமானங்கள் போல் தரையில் ஒடிய பின்னரே அன்னப் பறவையும் மேலே பறக்கத் தொடங்கும் இயல்புடையது. மண்ணில் இல்லறத்தில் சிறப்புற வாழ்ந்து மேல் நிலைக்கு உயரும் வாழ்க்கை நெறியை உணர்த்தவும் அவள் அன்னத்தைச் சிறப்பு வாகனமாகக் கொண்டுள்ளாள்.
5. யானை வாகனம் தேவி, பண்டன் என்ற அசுரனுடன் போர் தொடுக்கப் புறப்பட்டாள். அப்போது தனது அங்குசத்திலிருந்து ஒரு சக்தியைத் தோற்றுவித்தாள். குரோதம் மற்றும் ஞானத்தின் வடிவான

Page 160
அங்குசத்திலிருந்து தோன்றிய அச்சக்தியை'ஸம்பத்கரி என்று அழைத்தனர். இவளே அன்னையின் யானைப் படையின் தலைவியானாள். 'ரனகோலஹலம்' என்ற யானையே இவட்கு வாகனமாயிற்று.
உரன் என்னும் தோட்ரான் ஓர்ஐந்தும் காப்பன்
விரன் என்னும் வைப்பிற்கு ஒர் பிரித்து
என்ற திருக்குறள் "மனஉறுதி என்ற அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளையும் அடக்கும் சான்றோர் முக்திக்கு வித்தாகின்றனர்" என்று உரைக்கின்றது.
இதே கருத்தை வலியுறுத்துவதுதான் அம்பிகையின் யானை வாகனம், அதாவது அம்பிகை வழிபாடு உயர்ந்த புலனடக்கத்தைத் தரும் என்பதே கருத்து.
மற்றும் மயில்போல் யானையும் தனது வடிவத்தால் முகப்புத் தோற்றத்தால் ஒம் என்ற பிரணவத்தை நினைவுபடுத்துகிறது. தானே ஓங்காரத்தின் உட்பொருள் என்பதை அன்னை யானை ஊர்தியால் உணர்த்துகிறாள்.
மி குதிரை வாகனம்
அம்பிகை தனது பாச ஆயுதத்திலிருந்து தோற்றுவித்த சக்தி பரி ஊர்வாள்' எனப் பொருள்படும் அச்வாரூடா தேவியாவாள். எவராலும் வெல்ல முடியாத அபராஜிதம்' என்ற குதிரை அச்வாரூடாவின் வாகனமாயிற்று. இவள் அம்பிகையின் குதிரைப் படையின் தலைவி. கோடிக்கணக்கான குதிரைகள் இவளது ஆளுகைக்கு உட்பட்டவை.
எண்ணற்ற ஆசைகளே குதிரைப் படையாகும்.
அவற்றை நன்னெறிப்படுத்தும் மனமே அச்வாரூடா என்ற குதிரைப்படைத் தலைவி.
 

இயந்திரங்களின் ஆற்றலை அளக்கத் தற்காலத்தில் குதிரைச் சக்தியே அலகாக உள்ளது.
ஆற்றல்களுக்கெல்லாம் அதிகாரணியாக விளங்குபவள் என்பதையும் நன்னெறிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றி அருள்வாள் என்பதையும் உணர்த்த அச்வ வாகனம் அல்லது குதிரை வாகனத்தைக் கொண்டிருக்கிறாள் தேவி.
7. காமதேனு வாகனம்
அழகிய பெண்ணின் முகமும் பசுவின் உடலும் பறவையின் இறக்கைகளும் கொண்ட காமதேனுவின் உடலில் அனைத்துத் தேவ சக்திகளும் இடங் கொண்டுள்ளன என்பது ஐதீகம். சத்வ குளம் என்ற மென்மையான நல்லியல்புகளைக் கொண்டது பக. நாட்டச் சத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியது பசுவின் பால் என்பது அறிவியல் கருத்து.
காமதேனு விரும்பிய அனைத்தையும் அளிக்கும் ஆற்றலுடையது என்பர். ஆகவேதான், இன்றும் பல
பொருள் அங்காடிகளுக்குக் காமதேனு என்று பெயர் சூட்டுகின்றனர்.
அனைத்துத் தேவர்களையும் தனது மேலாண்மையால் கட்டுப்படுத்துபவள் தேவி. அடியார்களின் விருப்பங்களையும் அவள் விரைவில் நிறைவேற்றி வைக்கிறாள். இக்கருத்தை வலியுறுத்தவே அம்பிகைக்குச் சிறப்பு ஊர்தியாக இது அமைகிறது.
யூரபதி பூg பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான dier III uit Giph Lai sui - 2000

Page 161
8. கந்தருவி வாகனம்
----- ==
브 보브
EIடி
மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்கள் கந்தர்வர்கள் கவலையற்று இசைபாடித் திரிவதே இவர்களின் வேலை,
இசை வடிவாய் நின்ற நாயகி என்று அபிராமிப் பட்டரால் போற்றப்படும் அம்பிகைக்குக் கந்தர்வப் பெண் வாகனமாக விளங்குகிறாள். மனித முகமும் இறக்கைகளும் உள்ள வடிவத்துடன் கந்தருவி விளங்குவாள்.
நுண்கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கே உரிய தனி உலகத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருப்பார்கள். அதைக் குறிப்பால் உணர்த்துவது தான் கந்தர்வர்களின் சிறகுகள்.
சிவன் கோவில் திருவிழாக்களில் இறை வனுக்கும் கந்தருவ வாகனம் உண்டு. அன்றே அம்பிகைக்குக் கந்தருவி வாகனம்.
நுண்கலைகளில் தனக்குள்ள ஈடுபாடு முதலியவற்றை விளக்கவும் அவற்றை அடியார்களுக்கு அருள்பவள் என்பதை உணர்த்தவும் அம்பிகை கந்தருவி வாகனத்தில் வருகிறாள்.
மயூர பங்கம்
 
 
 

9 மான் வாகனம்
அம்பிகையின் மான் ஊர்தி வடமொழி நூல்களில் குறிப்பிடப்படவில்லை. அப்படியே தேவி சம்பந்தமான தமிழ் நூல்களிலும் இடம் பெறவில்லை,
ஆனால், இளங்கோவடிகளின் FläiuJÙ பதிகாரத்தில் அன்னை மான்மேல் வருவாள் என்ற குறிப்பு உள்ளது.
சிலப்பதிகாரத்தில் வேட்டுவரி என்ற பகுதியில் பல்வேறு திருநாமங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றே பாய்கலைப் பாவை என்பதாகும்.
துள்ளிப் பாயும் கலைமானைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவள் என்பது இதன் பொருள்.
மனித மனம் ஓரிடம் நில்லாது அலைபாயும் இயல்புடையது. அதனை இறைவன் தனது ஆளுகையில் வைத்துள்ளான். சிவபெருமானின் இடக்கரத்தில் இடம் பெறும் மான் இதனையே உணர்த்துகிறது.
அதே வகையில், துள்ளிப்பாயும் இயல்புடைய மனத்தின் மீது ஏறி அதனை நெறிப்படுத்துபவள் அம்பிகை. மனத்தின் மீது அவளுக்கே மேலாண்மை உண்டு. எனவே, அவள் பாய்கலைப் பாவையாகி வருகிறாள்.
இவை தவிர கிளி, பூதம், யாளி போன்ற வாகனங்களும் உண்டு,

Page 162
கடவுளரின் சக்தியர்:
ിഖങ്ങr a- 60)LO
மகாவிஷ்ணு - இலட்சுமி Siyunsif - சரஸ்வதி பிள்ளையார் - சித்தி, புத்தி, வ முருகன் - வள்ளி, தெய்வய
வீரபத்திரர் - காளி
அட்டதிக்குப் பாலகரின்
இந்திரன் - இந்திராணி அக்னி - சுவாஹாதேவி
யமன் - Fibo) நிருதி - தீர்க்காதேவி
அட்டமாத்ருகைகள்:
அந்தகாசுரவதத்தின் மூர்த்திகளிடமிருந்து உண்டானவி காமம் - யோகீஸ் குரோதம் - மாகேள் மதம் - SylbLori லோபம் - வைஷ்ே
 

தவ தேவியர்
வெங்கடசலாபதி ஐயப்பன் 60Uy Gri
ல்லயை கிருஷ்ணன்
T66
சக்தியர்:
வருணன்
6.JTu குபேரன் FamiTsit
அலமேலு அம்பாள் பூரணை, புட்கலை இரத்தசாமுண்டி ருக்குமணி, சாம்வதி, காளிந்தி, மித்ரவித்தை, சத்தியவதி, பத்திரை, நப்பின்னை, சத்தியபாமா
சேஷ்டை அஞ்சனை சித்ரரேகை காளி
பொருட்டு சிவபிரான் முகத்திலுண்டான அஷ்ட
ர்கள்.
uவரி மோகம்
0வரி மாச்சர்யம்
னி பிசுநம்
GT6 அகுயை
- கெளமாரி
- இந்திராணி - யமதண்டி - வராகி
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 163
நவக்கிரக
புதன் -
மயூரமங்களும்
 
 

5 சக்தியர்:
藏)《)
sae .穆) 排sae *翻曬
--. " ****
செல்வாப் =
வெள்ளி
சுகீர்த்தி

Page 164
பிராமி
பிரம்மனின் சக்தி. இவர் கரங்களையும் கொண்டு காணப் முந்திரையிலிருக்கும். மற்றைய இரு இடது கரங்களில் ஒன்று அபய என்பனவற்றினை ஏந்தியவாறு கா நுால்கள் பிராமியை நான்கு கரர் உட்கார்ந்திருப்பார்.வாகனமாகவும் உடுத்தி, ஆபரணங்களை அணிந்தி
மகேசுவரி
சிவனின் சக்தி. வெள்ளை முகத்திலும் மூன்று கண்களையும் ெ புராணம் என்பனவற்றிற் கூறப்பட் காணப்படுமெனவும் அவற்றுள் 6 முத்திரையிலிருக்க ஏனையவற்றில் இடது பக்கத்திலுள்ள கரங்களில்ெ மணி, நாகம், அங்குசம் என் விஷ்ணுதர்மோத்திர புராணத்தில் { அம்சுமத்பேதாகமம், பூர்வ காரணா இவரது தலையில் ஜடா மகுடம் ச எருதினை வாகனமாகவும் கொடிய
கெளமாரி
முருகனின் சக்தி. இவர் ஆ என யூரீ தத்துவநிதி கூறுகின்ற முத்திரைகளிலிருக்க மற்றைய கர தாமரை, சேவல், பரசு என்பனவற்றி காரணாகமம் என்பனவற்றில் அம்சுமத்பேதாகமத்தின்படி இவ முத்திரையிலிருக்கும். மற்றையன
 
 

Fப்த மாதர்
மஞ்சள் நிறமானவர். நான்கு முகங்களையும் ஆறு படுவார். வலது பக்க மூன்று கரங்களில் ஒன்று வரத கரங்களிலும் அட்சமாலை சிகுவா என்பன காணப்படும். முத்திரையிலிருக்க மற்றையன புத்தகம், கமண்டலம் 1ணப்படும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் வ்களுடனும் விபரிக்கின்றன. இவர் செந்தாமரை மீது கொடியாகவும் அன்னம் காணப்படும். மஞ்சள் ஆடை ருெப்பார். தலையில் கரண்ட மகுடம் காணப்படும்.
நிறமானவர். இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் காண்டிருப்பார் எனழரீதத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர டுள்ளது. பூநீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய வாள், வஜ்ரம்,திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், 0ான்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. இவருக்கு ஆறு கரங்களும், ரூபமண்டனம், மச்சபுராணம், கமம் என்பனவற்றில் நான்கு கரங்களும் கூறப்பட்டுள்ளது. ாணப்படும். அதில் பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். ாகவும் கொண்டிருப்பார்.
றுமுகங்களையும் பன்னிரு கரங்களையும் கொண்டிருப்பார் து. பன்னிரு கரங்களில் இரு கரங்கள் வரத அபய வ்கள் வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, னை ஏந்தியிருக்கும். அம்சுமத்பேதாகமம் ரூப மண்டனம்
இவருக்கு நான்கு கரங்கள் கூறப்பட்டுள்ளது. ரது நான்கு கரங்களுள் இரு கரங்கள் அபய வரத வேல், சேவல் என்பனவற்றினை ஏந்தியிருக்கும். இவர்
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 165
பதின்மூன்று கண்களைக் கொண்டிருப்பார் எனவும் இவ்வாகமம் கூறுகின்றது. கெளமாரி மயிலினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவர்.
வைஷ்ணவி
விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம் என்னும் நுால்கள் வைஷ்ணவியை நான்கு கரங்களுடன் விபரிக்கின்றன. வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
வராகி
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் முகத்தை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும், மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வராகியினைப் பற்றி பூரீதத்துவநிதி விபரிக்கின்றது. தண்டநாதவராகி, சுவப்னவராகி, சுத்தவராகி, என்னும் மேலும் மூன்று வகையான வராகியின் உருவ அமைப்பு பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது. தண்டநாதவராகி பொன்னிறமானவர் பன்றியின் முகத்தினை ஒத்த முகம் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம், என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும். சுவப்னவராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம் பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய வரத முத்திரையிலிருக்கும். சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகம் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன
கரங்களிற் காணப்படும்.
ாபூரமங்கலம்

இந்திராணி
இந்திரனின் சக்தி; பொன்னிறமானவர்; ஆறு கரங்களைக் கொண்டிருப்பார் என பூரீ தத்துவநிதி கூறுகின்றது. வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும், மற்றையனவற்றில் அட்சமாலை, வஜ்ரம் என்பன காணப்படும். இடது பக்க கரங்களிலொன்று 9 iul முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன தாமரை, பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறும் காணப்படும். அம்சுமத்பேதாகமம் பூர்ணகாரணாகமம் எனனும் நூல்களில் இவருக்கு நான்கு கரங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்க மற்றைய இரு கரங்கள் வேல், வஜ்ரம் என்பனவற்றினை ஏந்தியிருக்கும். தேவி புராணத்தில் அங்குசம், வஜ்ரம் என்பனவற்றினை ஏந்திய இரு கரங்களுடன் கூறப்பட்டுள்ளது. இந்திராணிக்கு பூரீ தத்துவநிதியில் ஆயிரம் கண்களும், அம்சுமத்பேதாகமத்தில் மூன்று கண்களும், பூர்வகாரணாகமத்தில் இரு கண்களும், கூறப்படுகின்றது. ரூபமண்டனம் என்னும் நூல் இவரை பல கண்களுடன் காட்டவேண்டும் எனக் கூறுகின்றது. இவரது தலையில் கிரீடம் காணப்படும். பல ஆபரணங்களை அணிந்திருப்பார். இந்திராணி சௌமிய இயல்பினைக் கொண்டவர். இவரது வாகனமாகவும் கொடியாகவும் யானை இடம் பெற்றிருக்கும்.
சாமுண்டி
கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார். இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படும். வலது கரங்களில் உலக்கை, சக்கரம், சாமரை, அங்குசம், வாள், இடது கரங்களில் கேடயம், பாசம், வில், தண்டம், கோடரி என்பன காணப்படும் என சாமுண்டியின் உருவ அமைப்பினைப்பற்றியூரீதத்துவநிதி விபரிக்கின்றது. விஷ்ணு தர்மோத்திர புராணத்தில் சாமுண்டி செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. தேவி மகாத்மியம் இவர் இரு கரங்களைக் கொண்டிருப்பார் எனவும் அவை வாள், பாசம் என்பன ஏந்தியிருக்கும் எனவும் விபரிக்கின்றது. இவர் நான்கு கரங்களையும், மூன்று கண்களையும் கொண்டவர் எனவும் தடித்த மேல் நோக்கிய கேசம் காணப்படுமெனவும் செந்நிறத்தினைக் கொண்டிருப்பார் எனவும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.

Page 166
f
காளி மகாசக்தியின் பல்ே வழிபாட்டிலேயே மிகப் பழமையான தாய்த் தெய்வ வழிபாடு இருந்தமை தேவி வழிபாடு இருந்தது. மகாபாரத தேவிகளுள் காளித் தெய்வத்தின் 6
காளியின் தோற்ற வரலாற் சும்பன், நிசும்பன் என்ற அசுர உட தவமியற்றி, பெண்களைத் தவிர வே பெற்றனர். நான்முகன் தந்த வரத் தேவர்களுடன் போராடி அவர்க அசுரர்களும் இவர்களுடன் இணை சக்தி உடையவன். இவனுடைய உ அசுர வீரர்களைத் தோற்றுவிக்கு வீரனாய் இவன் கருதப்பட்டான். இவ அதிகமானது. கதிரவனும் நிலவும் ச துன்பமுற்ற தேவர்கள் தங்கள் ( நினைந்துத் தவமியற்றுவதே வழி இமய மலைச் சாரலையடைந்து ப கடுந்தவம் இயற்ற, தேவி தோன் தொல்லைகளை விளக்கி, தங்களை
தேவர்களின் நிலை கண் உடலினின்றும் ஒரு சக்தியைத் தோன்றியதால் கெளசிகையென் விளங்கியதால் பத்திரகாளி என்று இருந்ததால்காளராத்திரி என்றும்
கம்பனின் ஆட்சிக்குட்பட்ட இவற்றைத் தன் காவலர்கள் வாயி தூதனுப்பினான். தன்னைப்போரில் அதை ஏற்றுப்படையனுப்பச் சும்பனி
og,
 
 

Tளி வழிபாடு
வேறு தோற்றங்களில் ஒன்று. தேவி வழிபாடு தெய்வ து. சிந்துவெளி நாகரிக நகரமான மொகஞ்சதாரோவில் க்கான எச்சங்கள் கிடைத்துள்ளன. வேத காலத்திலும் ம் புராணங்களும் சக்திவழிபாட்டைப்பற்றிக் கூறுகின்றன. வழிபாடு இந்தியாவில் புகழ் பெற்று விளங்குகிறது. ]றைப் புராணங்கள் பல்வேறு விதமாகக் கூறுகின்றன. ன்பிறப்புகள் நான்முகனை நோக்கிப் பல்லாயிரமாண்டு றுயாராலும் தங்களுக்கு இறப்புநேரக்கூடாது என்ற வரம் ந்தால் நெஞ்சுரமேறி அரசாட்சி அமைத்தனர். இவர்கள் ளையும் வென்றனர். இரத்தபீசன், தாம்பரன் போன்ற ந்துகொண்டனர். இவர்களுள் இரத்த பீசன் அதிசயமான டலில் இருந்து சொட்டும் ஒவ்வொரு துளி இரத்தமும் பல ம் வல்லமை கொண்டி ருந்ததால் அழிக்க முடியாதபெரு பன் துணையும் கிடைக்கவேசும்ப நிகம்பர்களின் தொல்லை டட இவர்கள் ஆணை வழிநடக்க நேரிட்டது. பலவாறாய்த் தருவான பிரகசுபதியிடம் முறையிட, அவர் தேவியை யென்று அவர்களிடம் கூறினார். தேவர்கள் அனைவரும் மகாதேவியை நினைந்துருகி மந்திர உச்சரிப்புகளுடன் றிக் குறை கேட்டாள். தேவர்கள் சும்ப நிசும்பர்களின் ாக் காப்பாற்ற வேண்டினர். டு இரங்கிய தேவி. சும்ப நிசும்பர்களை அழிக்கத் தன் தோற்றுவித்தாள். பராசக்தியின் உடலில் இருந்து றும், கருமை நிறத்தோடு பார்க்க அஞ்சும் கோலத்தில் பம், அசுரர்களுக்கு அளவற்ற அச்சத்தைத் தருபவளாய் பெயர் பெற்றாள். காடொன்றில் தங்கியிருந்த காளியின் குரலினிமை, அழகு லாகக் கேள்வியுற்ற கம்பன் காளியை மணக்க விரும்பித் வென்றால் மணப்பதாகக் காளி மறுமொழியிறுக்க,சும்பன் ன் படைத் தலைவர்கள் ஒவ்வொருவராய்ப்போருக்கு வந்து
பூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 167


Page 168


Page 169
தோற்றனர். இரத்தபீசனின் இரத்தம் கீழே சொட்டு முன்னே காளி உறிஞ்சிக் குடித்தமையால் புது அசுரர்கள் தோன்றுவது இயலாது போனதுடன், இரத்தபீசனும் விழுந்து மாண்டான். சண்டன், முண்டன் என்ற இரு பாடத் தலைவர்களின் தலைகளையும் அறுத்து அவர்தம் குருதியைக் குடித்தமையால் காளி, சாமுண்டி என்னும் பெயர் பெற்றாள். பின்னர், நிசும்பனும், கம்பனும் போர்க்களம் புகுந்து காளியால் தாக்குண்டு மடிந்து போனார்கள் என்று பூரீதேவி பாகவதம் என்னும் நூல் agp5).
இப்படித் தோன்றிய காளி தன் சினக்குறிப்பு அடங்காமல் ஆலங்காட்டில் தங்கியிருந்ததாகவும், காளியின் சினம் தீர்க்க வேண்டித் தேவர்களின் வேண்டுகோளேற்றுச் சிவபெருமான் ஆலங்காடு வந்து களியுடன் ஆடற்போட்டியொன்று மேற்கொண்டதாகவும், அதில் ஆட்ட வேகத்தில் வலச் செவியிலிருந்து நழுவி விழுந்த காதணியை ஆட்டத்தை நிறுத்தாமலேயே வாக்காலால் தூக்கி இறைவன் தன் செவியில் அணிந்து கொண்டதாகவும், வலக்காலை வானோக்கி உயர்த்தி ஆடற்குறிப்புக் காட்டமுடியாத காளி தோல்வியுற்று, வெட்கிச் சினம் தவிர்த்தாகவும் மற்றொரு புராணம் கறுகிறது. இந்தத் தாண்டவக் கோலத்தை ஊர்த்துவ தாண்டவம் என்றும் சண்ட தாண்டவம் என்றும் புராங்கள் கூறும்.
தாருகாசுரனுடன் முருகப்பெருமான் போர்செய்யும் பொது முருகனின் படைக்கலங்கள் அசுரர்களைத் தாக்க, காமம்பட்ட இடத்தினின்று குருதி ஒழுக, கீழே சிந்திய குருதித்துளிகளிலிருந்து பல அசுரர்கள் முளைக்க, முருகப் பெருமான் செய்வதறியாது தன் தாய் உமையன்னையை நினைத்துவணங்கினார். உடன் அன்னைதன் அம்சமான கரிய நிறங்கொண்ட காளியைத் தோன்றச் செய்து போர்க்களம் அனுப்பினாள். சிவந்து நீண்டு தொங்கிய நாக்குடனும் அனல்பறக்கும் சிவந்த கண்களுடனும், கூரிய பற்களுடனும் தலைவிரி கோலமாய், செவ்வாடையுடுத்தி எட்டுத் திருக்கைகளிலும் படைக்கலங்கள் கொண்டு போர்க்கணம் புகுந்த காளிதேவி அசுரர்களுடன் போரிட்பாள். அடிபட்டவர் உடலிலிருந்து குருதி சிந்தும் முன்பாகவே, காளிதேவி விரைந்து அவ்விதம் கொட்டும் குருதியை ஒவ்வொரு அசுரனின் உடம்பிலிருந்தும் முற்றிலுமாய்க் குடித்துவிடவே அசுரப்படை பெருக வழியின்றி மடிந்து அழிந்தது. இது காளியின் தோற்றம் குறித்து மற்றொரு புராணம் காட்டும் கதை.
மயூரமங்கலம்

காளிபற்றிய புராணக் கதைகள் பல. அவற்றுள் இன்னுமொரு கதை பின்வருமாறு தாருகாசூரனால் துன்பமடைந்த தேவர், பெண்களின் உருவங்கொண்டு சிவபெருமானை அடைந்து தமது குறை கூறி வழிபட்டனர். பெண்ணாலன்றி வேறு எவராலும் இறவாத தாருகாசுரனை வெல்லச் சிவமூர்த்தி சக்திக்குக் கட்டளையிட்டார். அந்நேரத்தில் தேவியின் ஒரு கலை சிவமூர்த்தியின் விஷக்கறை படிந்து கனற் கண்ணிற் பிறந்து வெளிப்பட்டது. அவ்வுரு காளமாகிய விஷக்கறை படிந்து வந்ததால் காளி எனப் பெயரடைந்தது.
இவ்வகையாகத் தோன்றிய காளி தனது கோபாக்கினியால் தாருகனை நீறாக்கினாள். இவளிடம் பிறந்த கோபத்தீ குழந்தை உருக்கொண்டழுதது. இதனை நோக்கிய காளி குழந்தைக்குப் பாலுட்டினாள். சிவமூர்த்தி குழந்தையையும் பாலையும் தம்மிலொடுக்கினார். ஒடுக்கிய சிவமூர்த்தியிடமிருந்து எட்டுருக்கொண்டு வைரவமூர்த்தி தோன்றினார். காளி கரு நிறம் கொண்ட கோபம் பொருந்திய உக்கிர வடிவம். வைரவரும் கருநிறம் கொண்டவடிவினரே.
தில்லை மான்மியக் கதையில் தில்லையிலிருந்த காளி மிகவும் கொடுஞ் செயல்களைச் செய்ததாகவும் சிவபெருமான் காளியுடன் நடனமாடி அவளைவென்று எல்லையைக் காக்கும் தெய்வமாக்கியதாகவும் அத்தெய்வம் ஒரு தீர்த்தத்தில் மூழ்கிக் கோரவடிவம் நீங்கிச் சாந்த வடிவம் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
கந்த புராணத்தில் பத்திர காளியின் உற்பத்தி பற்றிய கதை ஒன்றுண்டு. சிவபெருமானை மதிக்காமல், சிவத்துரோகமாக தக்கன் யாகம் செய்த போது தக்கனின் மகளான தாட்சாயிணி போபம் கொண்டார். தக்கனின் மகளாகிய இவர், தனது கணவனான சிவபெருமானையாகத்துக்கு அழைக்க வேண்டும் என்று தந்தையிடம் சென்று வேண்டினாள். தக்கனோ அதற்குச் செவிசாய்க்காமல் சிவபெரு மானைக் கேவலமாக ஏசினான். அதனால் அவனது யாகம் அழிந்து போகும்படி சாuமிட்டுவிட்டு சிவபெருமானிடம் திரும்பிவந்தாள்.
சிவபெருமான் கோபங்கொண்டு சிந்தித்தார். அவரது சிந்தையிலிருந்து அகோர வீரபத்திரர் அவதரித்தார். அப்போது அம்பிகை தன் கோபக்கனலில் இருந்து பத்திரகாளியைப் படைத்தாள். வீரபத்திரரும் பத்திரகாளியும் சென்று தக்கனின் யாகத்தை அழித்தனர். பத்திரர் காளி இணைந்து பத்திரகாளி எள்றும் பெயர் தோன்றியிருக்கலாம்.

Page 170
எருமைத் தோற்றங்கொண்ட மகிடாசுரன் என்னும் கொடிய அசுரன் செய்த சொல்லொணாக் கொடுமைகளைத் தாங்க மாட்டாதவர்களாகி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் மிகவும் கோபம் கொண்டார். அக்கோபம் பெண்ணுருவாகியது. சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரமதேவன், இந்திரன், இயமன், வருணன் முதலானவர்களின் சக்திகள் ஒன்று திரண்டு அப் பெண்ணுருவை அடைந்தது. அத்தோடு அக்கடவுளர்களின் ஆயுதங்களுக்கு நிகரான சக்திபடைத்த ஆயுதங்களும் அப்பெண்ணுருவின் கைகளில் சென்று சேர்ந்தது.
அவ்வுருவே கருநிறம் பொருந்திய அகோர உக்கிர வடிவம் கொண்ட காளியாகும். காளி சிம்ம வாகனத்தில் ஏறிச் சென்று மகிடாசுரனை வதைத்துக் கொன்றாள் என்பது மார்க்கண்டேய புராணத்துக் காளி பற்றிய வரலாறு.
மகிசாசுரமர்த்தினி எனக் கூறப்படும் காளியைச் சிலப்பதிகாரம் கொற்றவை என்றும், ஆடல் கண்டருளிய அணங்கு என்றும் கூறுகிறது. இந்நூலில் கோவலனும் கண்ணகியும் மதுரை செல்லும் வழியில் வேட்டுவர் ஊரிலிருந்த கொற்றவை கோயிலில் தங்கினர் என்றும் அத்தருணத்தில் ஆவேசம் கொண்ட சாலினி கண்ணகியைத் தெய்வமாகக் கொண்டாடப் போவதை முன் கூட்டியே தெரிவித்தாள் என்றும் கூறப்பட்டுள்ளது. வழக்குரை காதையில் இளங்கோவடிகள் கொற்றவை வேறு, காளி வேறு என்று குறிப்பிட்டுள்ளார். துர்க்கை கண்ணகியாகப் பிறந்தாள் என்று சிலப்பதிகார உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பிற்காலத்தில் கண்ணகியைக் காளியின் வடிவமாகவே கருதினர்.
கோவலன் கதை என்னும் அம்மானைப் பாடலில் கண்ணகி இறுதியாகத் திருவொற்றியூருக்கு வந்து வட்ட புரியம்மன் என்ற பெயருடன் வழிபடப்பட்டாள் என்று கூறப்பட்டுள்ளது. இன்றளவும் திருவொற்றியூர் சிவன் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனைக் கண்ணகித் தெய்வமாகவே கருதி விழா எடுக்கின்றனர்.
காளி வழிபாடு தமிழகத்தில் மிக ஆழமாக வேர் கொண்ட வழிபாட்டு முறையாகும். சங்க காலத்தில் பாலை நிலத்தின் தெய்வமாக மக்கள் காளியை வழிபட்டனர். காடுகிழாள், காடு கிழவோள், காடுகாள் என்று சங்க கால மக்கள் காளியைக் குறிப்பிட்டனர். வெற்றி அல்லது கொற்றத்தைத் தருபவள் கொற்றவை அல்லது கொற்றி எனக் கூறப்படுகிறாள். கொற்றவை
GoD

கோட்டவி என்று சிதைந்து வடமொழியில் காளி என்ற பொருளைத் தருகிறது. கொற்றவை முருகனுடைய தாய் என்றும் கூறப்படுகிறாள். இடைக் காலத் தமிழ்ப்புலவர் மகிசாசூரமர்த்தினியின் உருவ அமைப்பைப் பற்றிப் பாடியுள்ளார். இமயக் கிழவி என்றும் கடும்போர் கடந்த குமரி என்றும் காளியை இவர் குறிப்பிட்டுள்ளார். தட்சயாக அழிவின்போது இறைவியின் சினத்தீயிலிருந்து பிறந்து யாகத்தை அழித்து வென்றதாகக் கந்தபுராணம் கூறும்.
காளிக்கு நவராத்திரி விழா என்னும் விழாவை மக்கள் கொண்டாடுவர். முற்காலத்தில் தமிழக மன்னர்களும், குறுநில மன்னர்களும் இத்தெய்வத்தை வழிபட்டனர். சோழ அரசர் விசயாலயன் தஞ்சையில் நிசும்ப சூதனியான காளிக்குத் தனிக் கோயிலெழுப்பிச் சோழர் குலத்தெய்வமாய்க் காளியைக் கொண்டாடியவன். காளியின் முகத்தில் சினக்குறிப்புக் காட்டப்படும். கடைவாய்ப்புறம் கோரைப் பற்கள் இருக்கும். தலை சுடர்முடி அமைப்பில் காணப்படும். பெரும்பாலும் மகிழ்விருக்கைக் கோலத்தில் காட்டப்படும். அன்னையின் திருக்கைகளில் கேடயம், தலையோடு கூடிய முத்தலை ஈட்டி, கத்தி, உடுக்கை, தொங்கும் மனித தலை, பாசம், மணி, இருபுற முத்தலை, ஈட்டி (வஜரம்), அங்குசம் போன்ற படைக்கலங்களுள் சிலவோ பலவோ கைகளின் எண்ணிக்கைக்கேற்ப அமையும். சில திருமேனிகள் சங்கும் சக்கரமும் கொண்டமைவதும் உண்டு. காளியின் ஊர்தி சிங்கம்; கொடி அலகை, படை சூலம்,
ஊர்த் தெய்வங்களுள் ஒன்றாகவும் காளி கருதப்படுகின்றாள். காளியாத்தாள் என்று கூறப்படும் இவள் தில்லைக் காளி, காஞ்சிபுரம் - மகாபலிபுரம் கருக்கிழமர்ந்தாள் என்ற கொற்றவை, திருவாரூர் இராசதுர்க்கை, திருவொற்றியூர்த் துர்க்கை, கோவை கோனமாகாளி என்ற கோணியம்மன், பாரியூர் அம்மன் என்னும் குண்டத்துக் காளி, பெரிய பாளையத்து அம்மன், கீரனூர்ச் செல்வி, திருச்செங்கோட்டுக்காளி, காரைக்குடிக் கொப்புடையம்மன், நாட்டரசன் கோட்டைக் கண்ணாத்தாள், திருநெல்வேலி மாவட்டக் குரங்கணியம்மன், தஞ்சை உக்கிர மாகாளியம்மன், திருச்சி உச்சயினி மாகாளியம்மன் முதலான தேவதைகள் தமிழ் நாட்டின் புகழ் வாய்ந்த காளித் தெய்வங்களாகும். மாரியம்மன், மாரிஆய்
மயூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானகும்பாபிஷேக மலர் - 2000

Page 171
என்றும் தமிழர்கள் காளியை வழிபடுகின்றனர். காளியின் போர்க்கோல உருவம் துர்க்கையென்றும் சாந்தமான உருவம் பவானி(பார்வதி) என்றும் கூறப்படுகின்றது.
காளிக்கு உயிர் பலியிடும் வழக்கம் இந்தியாவில் நிலவுகின்றது. சிலப்பதிகாரத்திலே கொற்றவைக்குப் பலியிடும் வழக்கம் இருந்தமை கூறப்பட்டுள்ளது. கலிங்கத்துப் பரணியில் வீரர்கள் வரம் வேண்டித், தங்களின் தலையைத் தவிர பிற உறுப்புக்களை அரிந்து குருதிக் காணிக்கை இத்தெய்வத்திற்கு அளித்தமையும் கூறப்பட்டுள்ளது. ஆடு, சேவல் முதலியன பலியாக இடப்படும். நரபலியிடும் வழக்கம் நவகண்டம் என்று அழைக்கப்படுகின்றது. தஞ்சைக்கு அருகில் உள்ள புள்ளமங்கை என்னும் ஊரிலுள்ள முற்காலச் சோழர் காலத்திய கோயிலில் காளிக்கு நவகண்டம் கொடுக்கும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தெய்வத்திற்கு நரபலி இடும் வழக்கமும் முன்பு இருந்தது. சில ஊர்களில் தீ மிதி விழாவும் காளி விழாவின் பொழுது நடத்தப்படும். காளி, எல்லைகளைக் காக்கும் கடவுளாகக் கருதப்பட்டதால் எல்லையம்மன், எல்லைப் பிடாரி என்றும் கூறப்படுகிறாள். வங்காளப் பகுதியில் காளி வழிப்ாடு சிறந்து விளங்குகிறது.
மயூரமங்கலம்
 

வடஇந்தியாவில் விக்கிரமாதித்தனின் தலை நகரமாக விளங்கிய உச்சயினியில் இருந்து காளித் தெய்வம், உச்சயினி மாகாளி எனக் கூறப்பட்டது. மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலியும், திரெளபதியம்மன் என்ற பெயரால் காளி வடிவம் தரித்துக் கொண்டாள். சமதக்கினி முனிவரின் மனைவியும் பரசுராமனின் தாயுமான இரேணுகை, இரேணுகா தேவி அம்மன் என்னும் பெயரிலுள்ள காளி அறந்தாங்கி, பட்டுக்கோட்டைப் பகுதிகளில் உள்ள வணிகர்களுக்குக் குல தெய்வமாகக் கருதப்படுகின்றாள். திருவாரூரில் இவ்வம்மனை எல்லையம்மனாக வழிபடுகின்றார்கள். சேரன் செங்குட்டுவன் காலத்தில் இருந்து பத்தினித் தெய்வ வழிபாடும் பிற்காலத்தில் காளி வழிபாட்டுடன் கலந்து விட்டது.
கேரளப் பகுதியில் காளியைப் பகவதியாக வணங்குகின்றார்கள். கொடிய பேய், பிசாசு போன்றவைகளை இக்காளி விரட்டும் சக்திவாய்ந்ததாக எண்ணுகின்றனர்.
கரு நிற முடையவளான காளி தீமைகளையும், தீயவர்களையும் அழிப்பதிலே அதிதீவிரமானவளாக இருப்பதைப் போலவே, தன்னை வழிபடுகின்ற அடியார்களுக்கு அருள்பாலிப்பதிலும் மிகவும் தீவிரமானவள்.

Page 172
ஆதிபராசக்தியின் ஓர் ஆ அழிக்கும் வீரசக்தியே காளியாவ இந்து மதத்தின் சக்திவழிபாடு 'ச இவ்வுலகையும் இறைவனையும் இ தெய்வவழிபாடு காளியையே குறி தட்சயாகம் நடைபெற்றுச் துவம்சம் செய்த போது தாட்சா ஒமகுண்டத்தில் குதித்துத் தன்ை சிதறி பூவுலகில் வீழ்ந்தது. அதி எனப்பெயர் பெற்றது. அதுவே தற் காளி தேவியின் வழிபாடு வங்கா விளங்குகிறது.
அன்னை காளிதேவி அர பேராற்றலை அருளும் ஞான ச பித்தனைக் காளி தன் அருட்கடா வழிபடுவோருக்கு இகபரசுகம் த தெய்வம் என் அன்னை காளி” "தீமைகளை எதிர்க்கும் மனத்து சுவாமி விவேகானந்தர். காளி 6 வல்லது என்கிறார் - பாரதியார்
காளிதாசன் அன்னையை ஆயி ஆனந்தவல் மாயா ஸ்வரூபிஸ் ஞானா ஞானஸ்வ யோகி யோகாசஸ் அன்னை காளியே சகல தீயவர்க்கு பயங்கரியாய், சங்கரிய தச்சர், சிற்பாசாரி, ஆசாரி என தெய்வமாய் காளியையே போற்றி
 
 

ாளிதத்துவம்
'சிவஞானபானு', 'கலைமாமணி” ாம்பசிவ சோமாஸ்கந்த சிவாச்சார்யார்
பும்சமே காளி. தர்மத்தை நிலை நிறுத்தி அதர்மங்களை ாள். என்றும் அழிவில்லா நித்தியகன்னிகையும் இவளே. ாக்தம் என அழைக்கப்படும். சக்தி என்ற ஒரு பொருள் யங்க வைக்கிறது. சங்க காலத்திலும் காடுகிழாள்' என்ற க்கிறது.
சிவபிரான் வீரபத்திரரைத் தோற்றுவித்து யாகத்தைத் பணி தக்கனுக்கு மகளாகப் பிறந்த அவமானம் போக்க ன ஆகுதியாக்கினாள். அப்போது 51 துண்டுகளாக உடல் லே, அம்பிகையின் பெண்பாகம் வீழ்ந்த இடமே காமரூபம் போது அசாம்மாநிலம் என விளங்குகிறது. அதனால்தான் ளம், அசாம் போன்ற கிழக்கு மாநிலங்களில் சிறப்படைந்து
க்க சக்திகளை அழிக்கும் அன்னை மட்டுமல்ல. அறிவின் க்தியாகவும் விளங்குகிறாள். அறிவிலியாகத் திரிந்த க்ஷத்தால் மகாகவி காளிதாசனாக ஆக்கினாள். தன்னை ருபவள் காளி. "தாயினும்சாலப் பரிந்து காக்கும் பெண் என ராமகிருஷ்ண பரமஹம்சர் போற்றுகிறார். மேலும், Eவையும், வீரத்தையும் தருபவள் காளிமாதா” என்கிறார் ானும் சக்தியின் ஆற்றலே நமது விடுதலைக்கு வழிகாட்ட
ப் பாடுகிறார்.
லி அம்ருதகரதலிஆதிசக்திபராயி டிக மணிமயிமாமதாங்கிஷடாங்கி நபிநளினபரிமளிநாத ஓங்காரரூபி தா புவன வசிகரி சௌந்தரி ஜம் நமஸ்தே" வற்றையும் தரும் கலியுகத் தெய்வம் என வர்ணிக்கிறார். ாய் இருப்பவள் அன்னை காளி. பொற்கொல்லர், கொல்லர், பஞ்ச கம்மாளர்கள் தமது கலைக்கு மூல தெய்வமாய் குல வழிபாடு செய்கிறார்கள்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 173
வேதங்களும், உபநிடதங்களும் காளியைப் புகழ்கின்றன. "காளிகாபுர உபநிஷத்” என்னும் உபநிஷத் அதர்வண வேதத்தில் செளபாக்கிய காண்டத்தில் சிறப்புடன் விளங்குகிறது. மேலும் இருக்குவேதத்தில் “காளிசூக்தம்” என்னும் பகுதி காளியின் மகிமையை எடுத்தியம்புகிறது.
மேலும் “சிலம்பு சுழலும் புலம்பும் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை” என சிலப்பதிகாரம் புகழ்வதும் அன்னை காளியைத்தான்.
காளி கருமை நிறத்தாள். தமோகுண ரூபிணி. இவளிடம் ரஜோகுண, சத்வகுண சக்திகள்யாவும் லயமடைந்துவிடும். எனவே காளி என்றும் நித்யையானவள். “காளி வித்தைக்குச் சமமான வித்தை கிடையாது. அன்னை காளிதேவி உபாசனையால் ஏற்படும் பலனுக்கு ஈடு கிடையாது. காளி மந்திரத்தால் ஏற்படும் ஞானத்திற்குச் சமமான ஞானம் கிடையாது. காளி அன்னையைக் குறித்து செய்யப்படும் தவத்திற்கு இணையான தவமே இல்லை.” இவ்வாறு காளிதந்திரம் கூறுகின்றது. காளி எனும் சொல் க-ஆ-ல-ஈ என பிரியும். க - என்பது பிரம்மம், ஆ - என்பது ஆனந்தம், ல - என்பது விஸ்வாத்மா (உயிரெலாம் நிறைந்தவள்), ஈ - என்பது சூக்ஷமம் எனப் பொருள்படும். அதாவது எங்கும் சூசுஷ்மமாய் நிறைந்த ஆனந்தமய பிரம்மஸ்வரூபிணியே காளி எனப் பெயர் பெறுகிறாள் எனக் “காளி கல்பத்ருமம்’ எனும் வட மொழி நூல் புகழுகிறது.
“காளியின் மந்திரங்கள் எல்லாயுகங்களிலும் சித்தியளிக்கும் சிறந்த வித்தைகளாகும். அதுவும் குறிப்பாக கலியுகத்தில் விஷேட பலனை அளிக்கும். அனைத்து உயிர்களுக்கும் இதமளிக்கக் கூடிய போகம், மோக்ஷம் ஆகிய இவற்றின் சித்திக்கு காளிமந்திரங்கள் காரணமாய் இருக்கிறது. கலியுகத்தில் காளியே தெய்வம். அவளே ஜீவர்களுக்கு சித்தியும் முத்தியும் தருவாள்' எனப் பிச்சிலாதந்திரம்' என்னும் விதிநூல் விபரித்துக் கூறுகிறது.
சிவனும், காளியும்
சிவபெருமான் முக்கண் உடையவர். சந்திரனைத் தரித்திருப்பவர். நடமிடுபவர். காளியம்மையும் அவ்வாறே என மகாநிர்வாண தந்திரத்தில், “மேகாங்கீ சசிதரீகா திரிநயனா ரக்தாம்பராம் நிருத்தியம்” எனத் தொடங்கி - "ஆத்யாம் பஜே காளிகாம்!” எனத் தியானம் கூறுகிறது. இதன் பொருள்:- "மேகநிறமுடையவளாய்,

சந்திரனைத் தரித்தவளாய் சிவந்த ஆடை அணிகலனுடன் நடனமிடும் ஆதிசக்தியான காளியை வழிபடுகின்றேன்.”
எனவே சிவனைப்போல் முக்கண்உடைய நடனமிடும்பிறையணிந்த பிராட்டி காளியன்னை என்பது புலனாகும். மேலும், (தீச்சடை) சிவந்தசடை,திரிசூலம்,உடுக்கு, கபாலமாலை சிவனுக்கும் காளிக்கும் உரியனவாகும். மேலும் சாக்த தந்திரத்திலே -
"ஸ்மஸாசினம் தக்ஷனாஸ்தானம் ஸ்மாசானம்
ச சதாசிவ சர்வரூபமகாகால ஹ்ருதயாம் போஜ வாஸினி” பொருள் - சக்தியில்லாத போது சிவன் ஸ்மசான நிலையாகிறார். சர்வரூப நிலையில் (சக்தியற்ற) இருக்கும் மகாகாளரான ஈஸ்வரனின் இதயத்தில் காளி வசிக்கிறாள். மேலும் - மகாகாள சங்கிதை' யில் 'சூன்யே பிரம்மாண்ட கோளேது. பஞ்சாசத் சூன்ய மண்டலே, பஞ்சசூன்ய ஸ்திதா தாரா. சர்வானந்தே காளிகாஸ்ம்ருதா!” “உலகம் பிரளயகாலத்தில் அழிந்து சூன்யமாக இருக்கின்றபோது காளிமட்டும் அழியாது சச்சிதானந்த ரூபியாய் இருப்பாள்” எனக் கூறுகிறது. மேலும் - 'பத்ராய ஜகதாம் தேவி, யானியானி சனாதனி’ பத்திர என்பது மங்களம். அதாவது ஒவ்வொரு பிறப்புக்களிலும் தோற்றங்களிலும் அழியாத சனாதனியாய் உலகத்திற்கு மங்களத்தைத் தரும் தேவி என்பதால் 'பத்ரகாளி’ எனப் பெயர் பெறுகிறாள்.
çe
மேலும் - “சூதசங்கிதையில்”, “ஏவா ஸா ஸாகூடினி சக்தி - சங்கரஸ்யாபிசங்கரீ’ பரம் பொருளுக்கு இவளே சாட்சியானவள் - சங்க்ரனுக்கு நன்மை தரும் சங்கரியும் இவளே”எனக் கூறுகிறது. மகாகவி காளிதாசர் காளியைக்கண்டு அருள்பெற்ற கவி “சிருஷ்டி ஆத்யேவ தாதுஸ்திரீ" அதாவது “உலக சிருஷ்டியின் பழைமையான மூலப்பொருள் பெண்” எனக் கூறுகிறார். இதே கருத்தை மார்க்கண்டேய புராணம் சிறப்பாகக் கூறுகிறது.
அதாவது,

Page 174
“சிவஸ்ய ஸ்திரீரூபம் காளி”(சிவபெருமானுடைய பெண்வடிவமே காளிரூபம்.) எனக் கூறப்பட்டதைப் பார்க்கலாம்.
சிவபெருமானுடன் நடனமிட்ட காளி சிவபெருமானின் அற்புத நடனங்களைக் கண்டு
இறைவனோடு தாமும் இணைந்து ஆடவேண்டும் என விரும்பிய காளி தன்னோடு போட்டியிட்டு ஆடவரும்படி அழைக்க, தில்லைச் சிதம்பரத்திலே தேர்போன்ற அமைப்புடன் 56 தூண்களைக் கொண்ட 5 சபைகளில் ஒன்றான நிருத்த சபையிலே சிவபெருமானும், காளியம்மையும் ஆடினார்கள். பாணாசுரன் தனது 8 கைகளினால் பஞ்சமுகவாத்யம் வாசிக்க 108 திரு நடனங்களை ஆடினார் சிவபெருமான். அதிலே ஊர்த்துவ தாண்டவத்தைக் காளி ஆடமுடியாது தலைகுனிந்து நின்றாள். ஏனெனில் ஒருகால் நிலத்திலும், மறுகால் ஆகாயத்திலும் நிற்க ஊர்த்துவ நடனம் காளியினால் ஆடமுடியாததல்ல. ஆடக்கூடாது என்பதால் ஆடவில்லை. எனவே சிவபெருமான், நீ தோற்றாய்! ஆலய எல்லையில் நீயிருந்து அருள்புரிவாய் என்றார். “எல்லைக்காளி” என்றும், “தில்லைக்காளி” யென்றும் போற்றப்பட்டு வருகிறாள்.
 

கயிலாய மலையிலே முன்பு முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் பூரீ லலிதா பரமேஸ்வரி காளி தேவியை வேண்டி தனக்கும் சக்தி அருளும் படி வேண்ட காளியும் தோன்றி காளிசகஸ்ர நாமத்தை பாராயணம் செய்தால் சக்தியுண்டாகும் எனச் சொல்ல அதன்படியே ழரீ லலிதா பரமேஸ்வரி காளிசகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்து பூரண சக்தி பெற்றாள் என்றும், தட்சிண காளிகா சகஸ்ரநாமத்தின் முன்னால்வரும் அவதாரிகையில் கூறப்பட்டுள்ளது.
காளிமாதாவின் உருவம்
கருமை நிறம் உள்ளம் குழந்தையின் பால் மனம் வாள் துஷ்டர்க்கு அழிவுதரும் சக்தி.
நல்லவரின் வினையறுக்கும் சக்தி சிவந்தநா ஆன்றோர்களுக்கு ஞானமருளும் பீடம் திரிசூலம் மும்மூர்த்திக்கும் தாய் என உணர்த்தல் உடுக்கு பிரளய காலத்தில் புதிய சிருஷ்டிக்காய்
நடமிடும் ஒசை லயம்.
அன்னை காளியே மகாசக்தி - இவளே பகவதி,
60)uT65, நீலி, மகாசண்டி, சங்கரி 660 அழைக்கப்படுகிறாள்.
"லோகாசமஸ்தா சுகினோ பவந்து”
யூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 175

துர்க்கை

Page 176


Page 177
o
மயூரமங்கலம்
பிரபஞ்சவுற்பத்திக்குக்கார அருவமாகவும், அருவுருவமாகவும், தாயான ஸ்வரூபத்தில் வழிபடுதல்த நூல் கூறுகின்றது. அதிசீக்கிரம மஹரிஷிகளும் கண்டறிந்தனர். படுத்தியுள்ளாள் என்பதை - உலை அழிக்கும் உருத்திரனையும் இவ மறையும்படி செய்து மீண்டும் அவர்
அவர்கள் மூலமாகவே இயற்று
இதனாற்றான் அம்பிகை துர்க்கைய
துர்க்காம்பிகையை - இலக் தெய்வங்களது தத்துவார்த்தமாக ! அவையாவும் அதற்குச் துணைநிற்கு இறைவன்பால் வழிப்படுத்தி நிை துணைநிற்கின்றது. இந்தத் திரு எனப்படுகின்றது. இதில் ஆதிபரா நிற்க சக்தியும் அதற்குள் சங்கமிக் நின்றான் ஈசன் அத்திறம் அவளு சூக்குமசக்திகள் வியாபித்து இயங் வேண்டுமாற்போல் - அவை இ வேண்டப்படுகிறது. இவற்றிற்கு எண்பத்துநான்கு யோனி பேதங்களு
மனிதன் தன்செயல்கள் மூ பாவங்களைச் சம்பாதிக்கிறான். அ தீதும் பிறர் தர வாரா" என்ற வன நிலையான மோட்சத்தைப் பெறவே நன்குணர்ந்த ஆறுமுகநாவலர்கூட கிடைத்துள்ளது கடவுளை வை என்றவுண்மையை எமக்குக் கூறியு
 
 

துர்க்கை
ணமான இறைவன் அனேகமூர்த்தங்களின், உருவமாகவும், விளங்கிய போதிலும் அவையனைத்தையும் ஒன்றாக்கித் ான் பெரும்பயனைத்தருமென பிரபஞ்சவுற்பத்தி எனும் ான நற்பேறுகளைத் தரக்கூடியதாகவும் அமையுமென பரப்பிரம்மத்தையே பராசக்தி அன்பினால் கட்டுப் கப் படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ்ணுவையும், பர்கட்கு மேலாகவிருக்கும் ஈஸ்வரனையும் தனக்குள் களை வெளிப்படுத்தி அவர்களது தத்து வார்த்தங்களை விக்கிறாள் என பிரம்ம இருடிகள் கண்டறிந்தனர். ாகிறாள். அவர் “துர்காம்பிகா எனப்படுகிறார்" குமி, சரஸ்வதி, பார்வதி, லலிதா என்றெல்லாமாயிருக்கும் உபாசிப்பதற்குச் சகல யோக்கியங்களும் உண்டென்றும், குமெனவும் வித்யாரண்யர் விளக்கியுள்ளார். ஆன்மாவை லயான பேரின்பத்தை அநுபவிக்கத் திருவருள்தான் வருட் சத்திதான் சித் சக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி சக்திதான் துர்க்கையாகும். இறைவன் நலந்தருபேதமாய் கும். இதனைத்தான் சிவஞான சித்தியார் “எத்திறம் நம் நிற்பாள்” என்றார். உலகிலே எத்தனையோ குகின்றன. சகல ஜீவன்களும் ஜிவிக்க உடலும் உயிரும் ருப்பினும் - அதற்கும் பிராணசக்தியும் ஜிவசக்தியும் ஆதாரமாக விளங்குவது ஆதி பராசக்தியாம். நள் ஆறாவது அறிவு என்ற பகுத்தறிவைப் பெற்றிருக்கும். லமாகவே நல்வினை தீவினைகளைச் செய்து புண்ணிய தன்பிரகாரமே அவனது வாழ்வும் அமைகிறது. “நன்றும் கயில் பிறரால் எவருக்கும் நன்மை தீமை உண்டாகாது. மனிதனுக்கு அறிவை இறைவன் வழங்கியுள்ளார். இதனை தமது இரண்டாம்பால பாடத்தில் “இந்தச் சரீரம் நமக்குக் எங்கி முத்தி இன்பம் பெறும் பொருட்டேயாம்” ள்ளார். அறிவு படைத்த மனிதன் அவ்வறிவின் சார்பில்

Page 178
செய்யும் புண்ணியங்களையும், பாபங்களையும் அதற்குண்டான பேறுகளில் தங்கி நிற்க ஆதிபரா சக்தியின் துணை தடையின்றி இலகுவில் கிடைக்கும். புண்ணியங்களை ஏற்றும் பாவங்களைத் துடைத்தும் எவரும் இன்புற்றுவாழவேண்டுமாயின் துர்க்கா வழிபாடு ஆராதனைகள், உற்ஸவதரிசனங்கள் துணைதரும். துர்க்காம்பிகையானவள் மிருகங்களைப் போல் வாழ் பவர்கட்குப் பயங்கரமானவள். கொடியவர்களை கொன்றேதிர்ப்பாள். டம்பத்திற்காகச் செய்யும் யக்ளுங்களையும் நாசஞ் செய்வாள். (தக்கயாகம்) தன்னைச் சரணடைந்த அடியவர்கட்கு அபயமளித்தே தீருவாள். யுகங்கள் தோன்றும் வளர்ந்துவந்த பாவங்கள் துர்க்கை வழிபாடு ஆராதனைகளால், அம்பாளின் கருணையால் நொடிப்பொழுதில் அழிந்து போய்விடும். இதனாலேயே சர்வல்லமை கொண்ட பராசக்தியை ‘துர்க்கை” என சப்தரிஷிகள் வழிபட்டனர். அதனை தேவிமகாத்மியம் இவ்வாறு கூறுகிறது.
'துர்க்கெ ஸ்மிருதா உறரளி- பிதி
மசேஷ ஜந்தோ: ஸ்வஸ்தைஹி ஸ்ம்ருதா மதிமதிவ
சுபாம்ததாளி தாரித்திரிய துக்க பயஹாரிணி
காத்வதன்யா ஸர்வே உபகாரகரனான ஸ்தார்திர்
சித்தா” துர்க்கையை வழிபடுவதால் நிர்க்குணமும், ஸத்துவ குணமும் கருமமும், பக்தியும், யோகம், ஞானமும் எல்லாச் சித்திகளையும் பெறமுடியும். இத்தேவியை ஆராதனை செய்த காளிதாஸர், முககவி, வித்யாரண்யர், திருமூலர் என்போரும் பூரணத்துவங் கொண்ட திருவருளைப் பெற்றும்ந்தனர்.
திருமூலர் துர்க்கையை ஆராதித்தும் வழிபட்டும் அதனால் பெற்ற பேற்றைக் கூறுகையில்.
“நேரிழை யாவள் நிரதிசயானந்தப் பேரூடையா ளென் பிறப்பறுத் தாண்டவன் சீருடையாள் சிவனா வடுதண்டுறை சீருடையாள் பதஞ்சேர்ந் திருந்தேனே" எனக் கூறி மகிழ்ந்தார்.
சிவனும் சக்தியும் இரண்டறக்கலந்தேவிரு க்கிறது. அர்த்தநாரீஸ்வரம். அதுதான் சிவசக்தி என்று சங்கராச்சாரிய சுவாமிகள் தனது ஸௌந்தர்யலஹரியின் முதல் ஸ்தோத்திரத்தில் முதற் சொல்லாக அமைத்துப் பரவசப்பட்டார். சிவசக்திதான் துர்க்கையெண்காசிபர்,

வசிட்டர், பிருகு முதலான ரிஷிமகான்களும், ரிஷிபத்தினிகளும் கண்டறிந்தனர். துர்வாச முனிவர் சிவசக்திதான் துர்க்கையென விழித்து யசுர் வேதத்திற்குள் துர்க்கா சூக்தத்தைப் பிரபல்யமடையச் செய்தார். அதனை
"தாமக்கிவர்ணாம்தபஸா
ஜூவலந்திம் வைரோஜனிம் கர்ப்பலேஷா
ஜுஷ்டாம்
துர்காம்தேவீம் சரணமஹம் ப்ரபத்யே’
ஸ்தா ஸிதரஸேநமஹ (துர்க்காஸாக்தம்) என “மின்னொளி பொருந்தி சிவதத்துவங்களிற்கருகில் அமைந்து பிரகாசிக்கும் பேரொளிபொருந்தி, சிவத்துடன் கலந்துநின்று, ஜிவான்மாக்களுக்கு கர்ம பலனை அளிப்பதற்காகச் சிவனைச் சேவித்து, மனம் வாக்கு காயம் ஆதியாம் திரிகரணசுத்தியுடன் உள்ளத்துள் ஆராதிக்கப்படுபவளும், சுயப் பிரகாசம் கொண்டு ரகூழிக்க முன்வரும் அன்னை துர்க்கையைத் தஞ்சமென அடைகின்றேன். சகல ஆன்மாக்களிற்கும் போக போக்கியங்களை அளித்துப் பிறவிக் கடலைத் தாண்டுவிப்பவளே; அவ்வாறு நானும் தாண்டுவதற்காக வணங்குகிறேன்” என்பதாகும். பூவுலகில்பிறப்பதற்குத் தவஞ்செய்த பலன்களின் பேறாகவே அது முற்பிறவியிலிருந்து அமைகின்றது. முத்தியடைவதே மனிதப்பிறவியின் நோக்கமுமாகும். இப்பிறப்பில் உரியவாறு நாம் செயற்படாவிடின்; மீண்டும் நரக வாழ்வுக்குள் அழுந்தி மகா துன்பங்களை அனுபவிக்க நேரிடும். முத்தியடைதற்கு இருமார்க்கங்கள் உண்டு. அவை “நிவிர்த்தி” மார்க்கமென்றும், “ப்ரவிருதி” மார்க்கமென்றும் இருக்கிறது. “நிவிர்த்தி”மார்க்கத்தில்
ஆத்மா, அனாத்மா, விகாரம், வைராக்கியம் என்பன
முக்கியமாகிறது. பிரம்மமும் ஆத்மாவும் வேறல்ல என்ற வேதாந்த கருத்துகளுக்கமைய, மனதினுள் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்தி நிலை நிறுத்தி அத்வைத நிலையை அடைதலேயாம்.பிரவிருத்தி மார்க்கத்தில் ஒருவர் எந்த வம்சத்தில் எந்த ஆச்சிரம வர்ணத்தில் தோன்றினாரோ அந்த வர்ணாச்சிரம தர்மங்களுக்குரிய ஆச்சாரங்களில் சார்ந்துநின்று தர்மங்களை அனுசரித்துத் தனதிஷ்ட தெய்வத்தை உபாசித்து, மன ஒருமைப்பாட்டுடன் ஆராதனைகள் செய்தல் வேண்டும். அப்போது அவ்விஷ்டதெய்வ அனுக்கிரகத்தால் கிரம முக்தி அடைகிறான். முன்னையது மகாசிரமம்.
மயூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 179
பின்னையது வெகு சுலபம். மனிதர்கள் தாம் விரும்பும் இஷ்ட தெய்வங்களைத் தாமே நியமித்து அதன் வழி வழிபாடு ஆராதனைகள் செய்வர். சாக்த மதத்தினர் சக்திவழிபாடுகளில் துர்க்கையை ஏற்பர். எத்தனையோ மஹரிஷிகள் துர்க்கை உபாசனைகளை ஏற்றதுண்டு. ஈஸ்வரனுக்கு பஞ்சாச்கரமும், முருகனுக்கு ஷடாக்ஷரமும், நாராயணனுக்கு அஸ்டாக்ஷரமும் இவ்வாறாகப் பற்பல தெய்வங்களுக்குமூலமாக சக்திமந்திரங்கள் இருப்பினும் இவற்றிற்கெல்லாம் மேலான சக்தி ஆதாரமொன்றுண்டு என வேதகாலத்து யோகிகள் கண்டுள்ளனர். அதுதான் மாத்துருகைகளின் அதி தேவதையான ஆத்யாசக்தி “தகூழின காளிகை” யாம். எனவே மாத்துருகைகளின் மூலமாக வழிபடின் அது அனைத்து தெய்வங்களையும் வழிபாடுசெய்வதற்கும் உரிமையாகிறது. அவையெல்லாம் இதற்குள் ஊடுருவி நிற்கிறது. அச்சக்திகளைத் தன்னகத்தே கொண்டிருப்பது தான் துர்க்கையாகும். ஜமதக்கினி முனிவர் பரத்வஜர், விஸ்வாமித்திரர் என்போரெல்லாம் இதையனுசரித்து துர்க்கையைதுர்க்காம்பிகா எனப் போற்றித் துதித்தனர். உபாசனைகளில் வழிபாடு செய்யும் வகையில் ஆண் தெய்வங்களையும் மனிதர்கள் தேர்ந்தெடுப்பர். அத்தெய்வங்களுக்கும் சக்திகள் உண்டு. இருப்பினும் சக்திகளைத் தனியே வழிபடாது அவற்றின் நாயகர்களைத்தான் குறிப்பிட்டு உபாசனைகள் அமைகின்றன. தனியனே சக்தியைத் தாயுருவில் உபாசிக்கும் போது அங்கு மாயை நீக்கம்பெறுகிறது. மாயையாகிய சக்தி அனுமதித்தாலொழிய அதைத்தாண்டிப் பரம்பொருளை அடையமுடியவே முடியாதென வித்யாரண்யர் முதலானோர் அறியத் தந்துள்ளனர். பூசை ஆராதனைகளில் சக்தியை முன்வைத்தே நாயகர்கள் அழைக்கப்படுகின்றனர். (உதாரணமாக பார்வதி பரமேஸ்வரன்,மகாவல்லி கஜவல்லி ஸமேதசுப்பிரமணியன்). உபநிடதங்களில் ப்ரம்மம் பிரகாசமாகவும் விமர்சனமாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் மாறிக்கொண்டிருப்பது சக்தியே. இந்த இருவேறு நிலைகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டிருப்பதையே பரப்பிரம்மம் என்பர். பிரம்மசக்தி ” யெனவும் கூறப்படும். இதுவேதான் துர்க்கையாகும்.
மயூரமங்கலம்

பஞ்சபூதங்களும்,ஞானேந்திரியங்களும், கர்மேந்திரியங்களும்,பிராணங்களும், மனம் புத்தி சித்தம் அகங்காரங்களும் ஆத்மாவை மறைத்திருக்கும் இருபத்திநாலு தத்துவங்களும் சக்திகளேயாம். இச்சக்திகளை உள்ளடக்கி உபாசனைகள் செய்வதற்கே அம்பாள் துர்க்கை “பரப்பிரம்மபத்ணி” “பரப்பிரம்மஸ்வ ரூபிணி’ என்றும் தாயாக நின்று பரம் பொருளை உணரவும் அடைவதற்கும் துணை செய்கிறது. இந்தச் சக்தி உபாசனைகளைத்தான் “தஸமகாவித்யா” என்பர். இதில் ஆதியாகிய துர்க்கை (பராசக்தி) வித்யை தகூழின காளிகை ஆகிறது. ஏனையவை முறையே தாரா, சுந்தரி (லலிதா) புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகலாமுகி, மாதங்கி, கமலாவிலாசம் மூலம் இவை உணரப்படுகிறது.
தக்க யாகத்தில் கலந்து கொள்ள விரும்பி அங்கு அம்மை செல்வதற்குச் சிவன் அனுமதி மறுத்தார். பார்வதி சினங்கொண்டு மகாகாளி வேடந் தாங்கினார். இத்தோற்றத்தின் கோரத்தைக் கண்டசிவன் பயந்தோடினார். அப்போது எட்டுத்திசைகள், பூமி, ஆகாசம் என்ற பத்துத் திக்குகளிலும் பத்து விதமான ரூபங்களையெடுத்துக் காட்சி கொடுத்தார். அம்மை இவையனைத்தும் ஒன்று சேர்ந்த மூர்த்தமே “துர்க்கை” யாகும். சாந்தமடைந்த அம்பிகை சிவனிடம் தமது சத்திகளைப் பற்றிக் கூறுகையில், பக்தர்களுக்கு அருள்புரியவும், சரணடைந்தோரை உயர்விக்கவும், சாதனைகள் மூலம் என்னை உபாசனை செய்வோருக்கு அவர்களது இஷ்டசித்திகளை வழங்கவும், உற்சவங்கள் ஆராதனைகள், அர்ச்சனைகள் புரிவோருக்கு திருவருட்கடாட்சம் கிடைக்கவும் இவற்றிற்காகவே இத்தோற்றமெடுத்தேன் எனக்கூறி மறைந்தருளினார். சியாமாரகஸ்யம் இப்பத்து தோற்றங்களையே தசகமஹா வித்தை எனக் கூறுகிறது. முருகப் பெருமான் திருவவதாரத்திற்குச் சிவபிரான் இந்தத் தசமாவித்தையாக உருக்கொண்ட துர்க்கையையும் நினைந்தபோது பஞ்ச முகத்தோடு அதோர் முகத்து தீ அப்போது தோன்றியதாகப் பேசப்படுகிறது. அதனாற்றான் துர்க்கை முருகப்பெருமானின் தாய் எனவும் கூறப்படுகிறது. மஹிஷாசுர, வியாக்கிரா சுரவதத்தில் முருகனை 'மகனே' என்றழைப்பதும், முருகன் அம்மா’ என அழைப்பதும் கவனிக்க தக்கது.
GSSD

Page 180
இறைவன் ஆணாகவும் பெண்ணாகவும் மாறும் இயல்புடையவர். எனவே தான் பூசைகளில் ஆண்தெய்வங்களுக்குரியவற்றை மந்திரங்கள் என்றும், பெண்தெய்வங்களுக்குரியவற்றை (வித்யா) என்று அழைப்பர்.
அம்பாள் வழிபாட்டால் பிரம்ம விஷ்ணு உருத்திரர் என்போரை வழிபட்ட பலனுண்டு. நவராத்திரி காலங்களில் துர்க்காதேவியை முதலில் பூசை செய்து பின் அவளையே மகாலக்ஷமியாகவும், சரஸ்வதியாகவும் பாவித்துப் பூசைகள் நடாத்தப்படுகின்றன. இவ்வாறு இருக்கும் பூசை முறைகள் பிரம்மா யோக நித்திராதேவியை உபாசித்த போது அவ்வம்மையாரால் அறிவிக்கப்பட்டன. தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கும் போது அதர்மத்தையழித்து தர்மத்தைக் காக்கும் நல்லவர்கள் மறைந்து வாழத் தீயவர்கள் மேலோங்கி தீமைகள் செய்யுங்காலை தீயோரை அழித்து சக்தியான துர்க்கை தோற்றங்கொண்டாளென ஸ்மிருதிகளும் அறியத் தருகின்றன. அதிலொன்று
“ஏகைவை சக்தி பரமேஸ்வரஸ்ய பிரயோக ஜநார்த்தாய சதுர்விதாபூத் போகே பவானி புருஷேச விஸ்ணுர்குரோதேசகாளிஸமரேசதுர்க்கா" எனவுண்டு.
 

பூசை எதிலுமே எங்குமே முதலிடம் பெறுகின்றது. அது இல்லையேல் யாவும் நிஷ்பலன்தான். கிரியாபூசைகளில் “சக்தி ஆதிசக்தி பர்யந்தம் அர்ச்சயித்வா” என்றுளது. இதைச் சார்ந்தே “சக்தி மண்டலாதிபதயே ப்ரகிருத்யைநமஹர” எனப்பஞ்சாஸன பூஜைகளாற்றி அதற்குமேற்தான் மூர்த்திகள் தியானிக்கப்படுகின்றன. எனவே சக்தி பூஜைகளும் பிரதான பங்கை எதிலும் கொண்டுள்ளனவாதலால் அதன் மூலமாக சிவத்தை அணுகலாமென்பது தெளிவு.
மகா பாரதப்போர் ஆரம்பமாகும் வேளையில் கிருஷ்ணபகவான் அருச்சுனனை அழைத்து, “அருச்சுனா, உனது விருப்பம் நிறைவு கொள்வதாகுக. தர்மயுத்தம் வெற்றியடைய எனது உபாசனா மூர்த்தியான ஆதிபராசக்தி மகாசக்தியான “துர்க்காம்பிகாவை’ வழிபட்டுத், துதித்து, அவளது கிருபா கடாக்ஷத்திற்கு ஆளாகுவாயாக’ எனக் கட்டளையிட்டார். அவ்வாறே அருச்சுனன் காண்டீபத்தையே துர்க்கையாகப் பூசித்துப் பாவனைசெய்துவழிபட்டதனால் காண்டீபத்திலேயே துர்க்கை எழுந்தருளினாளாம்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 181
Y s
È V
. . . . f Σ.ܢ؟
క్షత్తిళ్లప to
மயூரமங்கலம்
錢
வாரங்களில் எல்லாம் சிறந் ஆன செவ்வாய்க் கிரகத்திற்கு உ மங்களங்களுக்கும் இருப்பிடமானது காரியங்களுக்கு இந்த வாரம் பலன் மங்கள சண்டிகை பூஜை, ம பூஜை போன்றவைகளும், இன்னும் பூஜைகளுக்கும் இந்த நாள் ஏற்றதா விவாகமாகவேண்டிய கன்ன பூஜைகள் பற்றிப் பல நூல்கள் பேசுகி எழுந்து, சூரியன் கிழக்கு மண்ட சிறப்புடையன என்று மந்திர சாஸ்த்த நேரத்தில் திருவிளக்கேற்றி வழிபா( போக்கும் துணையாகவும் விளங்கு மங்கள வார இராகு காலத் சன்னதியில் செய்யவேண்டிய பூ சொல்லுவார்கள் .
எல்லாக் காரியங்களும் மங் மங்களமாக முடிவதற்குப் பிரார்த்த விரும்பப்படும் மங்களம் மங்கள வா தானும் மங்களமாக விளா விரும்பும் காரியங்களை மங்களப்ப வாரம் மங்கள வாரம் என்று சொ ஆக வேண்டும் என்று நமக்கு உ தங்களால் அக்காரியம் முடியாது 6 அந்தக் காரியத்தை நமக்கு முடித் இருக்கின்றன.
ஆனால், மங்கள வாரமே முடிக்கிறது. எல்லா மங்களங்களுக்
 

துர்க்கா பூஜை
தது மங்கள வாரம். மங்களவாரம் என்ற சொல் மங்களன் ய நாள் என்பதைக் கூறுகிறது. மங்கள வாரம் எல்லா து. மற்ற வாரங்களில் செய்து பலன் தராத எவ்வளவோ
தரும் நஞ்சை நிலமாக விளங்குகின்றது. வ்கள கிரக பூஜை, மங்களாம்பிகை பூஜை, மங்கள துர்க்கா மனச்சாந்திக்கும் நீண்ட துயர்கள் போவதற்கும் உரிய ாகும். ரிப் பெண்கள் இந்த மங்கள வாரத்தில் செய்யவேண்டிய கின்றன. மங்கள வாரத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரே லத்தில் எழும் பொழுது செய்யவேண்டிய பூஜைகள் நிர நூல்கள் பேசுகின்றன. இந்த மங்கள வாரத்தில் மாலை டு செய்வது மனச்சாந்திக்கு மருந்தாகவும், துயரங்களைப் கின்றது. தில் எல்லா நலன்களையும் வாரி வழங்கும் பூரீ துர்க்கா சனைகள் பற்றித் தந்திர வல்லுநர்கள் வெகுவாகச்
களமாக முடிய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். னைகள், பூசைகள் எல்லாம் செய்கிறோம். எல்லோராலும் ாத்தின் உள்ளே இருந்துதான் வெளி வருகின்றது.
கி, மற்ற வாரங்களையும் மங்களப்படுத்தி, அவரவர் த்ெதி, மங்கள வடிவாகவே விளங்குவதினால்தான் இந்த லப்படுகின்றது. உலகியலில் நமக்கு ஏதாவது காரியம் தவி செய்கிறவர்களை நாடிப்போகிறோம். அவர்கள் ன்றால் எங்களை மற்றவர்களிடம் அழைத்துச் சென்று துக் கொடுப்பார்கள். இதைப் போலவே பல வாரங்கள்
அப்படியில்லாமல் எல்லாக் காரியங்களையும் தானே நம் அதுவே உறைவிடமாகவும் இருக்கின்றது.

Page 182
இப்படியெல்லாம் உயர்ந்ததான இந்த மங்கள வாரம், காமதேனுவைப்போல விரும்பியதெல்லாம் உடனே வழங்குவதாகவும், கற்பக தருவைப் போலக் கேட்டதைக் கேட்டபடியே கொடுப்பதாகவும், சிந்தாமணியைப் போல நினைத்ததை நினைத்த உடனேயே வழங்குவதாகவும் விளங்குகின்றது. இந்த உண்மைகள் மங்கள வாரத்தை நன்கு புரிந்து கொண்டவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
மங்கள வாரத்தில் மங்கள கிரக பூஜையை அதிகாலையில் செய்யவேண்டும். மஞ்சள் புஷ்பங்களால் பூஜிப்பது சிறப்பு. மங்கள கிரகத்தை தீபத்தில் தியானிக்கலாம்.
ஹ்ரிம் - லம் - ஹரிம் தரணிகரப்பஸ்ம்பூதம் வித்தயு காந்தி ஸ்மப்ரபம் குமாரம் சக்தி ஹஸ்தம்தம் மங்களம் ப்ரணமாம்யஹம் ஹ்ரிம்-லம் - ஹ்ரீம்
என்ற ஸ்லோகத்தால் தியானிக்கலாம். 108 அல்லது 54, 18இவைகளில் ஏற்ற ஒரு எண்ணிக்கையில் மங்கள கிரக காயத்ரியை ஜெபம் செய்து பூஜிக்க வேண்டும். மஞ்சள் வாழைப்பழம், துவரம்பருப்புப்பொங்கல் இவைகள் சிறந்த நைவேத்தியங்கள். வாழைப்பூவையும், துவரம்பருப்பையும் இந்த கிரகத்தின் ப்ரீதிக்காகத் தானம் செய்யலாம்.
இவ்விதம் மங்கள வாரத்தில் மங்கள கிரகத்தைப் பூஜை செய்து வந்தால் செவ்வாய்க்கிரகம் நல்லருள் பொழியும். மங்கள சண்டிகாபூஜைமங்கள வார பூஜையில் ஒன்று.
எல்லா நன்மைகளையும் அடைவதற்காகவும், மங்களங்களைப் பெறுவதற்காகவும் மங்கள சண்டிகையைப் பூஜித்தால், பூஜிப்பவனுக்கும் அவன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெரிய நன்மைகள் கிடைக்கும். மங்கள சண்டிகைக்கு மஞ்சள் அரளிப் பூவினால் அர்ச்சிப்பது சிறப்பு எலுமிச்சம்பழச் சாதம் சிறந்த நைவேத்தியங்களில் ஒன்று.
மங்கள வாரத்தில் கெளரி பூசை, கன்னிகைகளால் மிக மிக விரும்பிச் செய்யப்பட வேண்டியவைகளுள் ஒன்று. கெளரியைப் பூஜிக்கும் கன்னிப் பெண்களுக்கு விவாகத் தடங்கல்கள் போகும். கெளரிபூஜையைக் காலை 8 மணிக்குள் செய்வதுதான் நல்லது.
தரையைச் சுத்தப்படுத்திக் கோலம், செம்மண் முதலியவைகள் இட்டு அதன்மீது குத்து விளக்கை அழகுபடுத்தி, பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
G58)

ஜம் - க்லீம் - ஸெள ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே சரண்யேத்ரயம்பிகே தேவிநாராயணிநமோஸ்துதே ஸெளம் - க்லீம்-ஜம் என்ற மந்திர ஸ்லோகத்தைக் கூறி ஆவாகன உபசாரங்கள் செய்யலாம். இந்த ஸ்தோத்திரத்திலேயே அர்ச்சனை செய்வதும் உண்டு. கெளரி பூஜையைச் செய்து தான் ருக்மணி தேவி கிருஷ்ணனைக் கணவனாக அடைந்தாள்; இது புராணம். இன்னும் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. இந்த கெளரியைக் காத்யாயணி என்று சொல்லுவோம். அவளே துர்க்கை அவளே அண்ட சராசரங்கள் அனைத்தையும் காத்து நிற்பவள். ருக்மணி தேவி காத்யாயனி விரதத்தைக் கடைப்பிடித்த பொழுது கீழ்க்கண்ட ஸ்தோத்திரத்தைக் கூறி வழிபட்டாள்.
க்லீம் - க்லீம் காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்யதீஸ்வரி நந்த கோபாஸ்தம் தேவி பதிம்மே குருதே நம
க்லீம் - க்லீம் இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி நமஸ்கரித்து தீபத்தின் திருவடியில் புஷ்பங்களைப் போட வேண்டும். இப்படியே 18, 54,108 முறைகள் அவரவர் உடல் நலப்படி செய்யலாம்.
தீபத்தைப் பிரதட்சணமாக வந்து, நமஸ்காரம் செய்வது சிறப்பிலும் சிறப்பு. தீபத்தின் பாதத்தில் இடுவதற்கு ஏற்ற மலர் தங்க அரளி, மஞ்சள் கொழுக்கட்டைப் பூ, பாரிஜாத புஷ்பம்.
சிறப்புடைய இந்தத் தேவிக்கு ஏற்ற நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல், மஞ்சள் வர்ண வெண்பொங்கல், தேன், கதலி, பலா, மாம்பழம்.
மங்கள வாரத்தில் துர்க்கா தேவியைப் பூஜிப்பவர்கள் துக்கங்களிலிருந்து விடுபடுகிறார்கள். கலியுகத்தில் கை மேற்பலன் தருவதற்கு துர்க்கா தேவி மூலதெய்வமாக விளங்குகிறாள். ‘துர்க்கை என்ற பெயர் வந்ததற்குக் காரணம் என்னவென்றால் அவள் துக்கத்திலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுகின்றாள் என்பதால்தான்” என்று மகாபாரதம் பேசுகின்றது. தர்மபுத்திரர் தன்னுடைய தவறுக்காக துர்க்கா தேவியைப் பூஜைசெய்தார். எல்லாக் காலங்களையும் உணர்ந்தவரான கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனைப் பார்த்துச் சொன்னார்; “ஏ
மயூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 183
அர்ஜூனா, துர்க்கா தேவியை ஸ்தோத்திரம் செய்; அவள் ஒருத்தியால்தான் எதிரிகளை வென்று நீ ஜெயத்தை அடைய முடியும்.”
இதன்படியே அர்ஜுனனும் துர்க்கா தேவியை ஸ்தோத்திரம் செய்து அந்த அன்னையின் பேரருளால் வெற்றியைப் பெற்றான்.
பூரீகிருஷ்ண பரமாத்மா பாதாளத்திற்குச் சென்று வெகுநாளாகத் திரும்பவில்லை. வசுதேவர், தேவகி முதலியவர்களுக்கு மனக்கலக்கம். கிருஷ்ணனை நினைந்து உருகிக் கொண்டிருந்தார்கள். வெகு நாளாகியும் வராத கண்ணன் திரும்பி வருவதற்கு அவர்கள் துர்க்கா தேவியைத் தியானித்து பூஜை செய்து ஸ்தோத்தரித்தார்கள்.
பூரீ கிருஷ்ணனும் கல்யாணக் கோலத்துடன் வசு தேவர், தேவகி முன்னர் விரைவில் வந்து சேர்ந்தார்.
துர்க்கா தேவியை உபாசிக்கும் பக்தர்களுக்குழநீ துர்க்கா சப்தசதி என்றழரீதேவி மகாத்மியம் ஒரு சிறந்த வரப் பிரசாதம். இந்த மந்திர நூலில் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற மூலதேவிகள் பேசப்படுகின்றனர். துர்க்கா தேவியைப் பற்றிப் பல ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. சமீபகாலத்தில் பூரீமான் அப்பய்ய தீட்சிதர் அருளிய துர்க்கா சந்திர கலா ஸ்துதி” எல்லோர்க்கும் உதவக் கூடியது.
தமிழில் நவராத்திரிக் கவசம், துக்க நிவாரண அஷ்டகம், ராகு கால துர்க்கா அஷ்டகம், துர்க்கா ரோக நிவாரண அஷ்டகம் ஏற்றன.
எல்லா உலகங்களுக்கும் தாயாக விளங்குபவள் துர்க்கா தேவி. ஆனால் அவளோ கன்னி. கன்யாம் குமாரிணிம் என்று சாம வேதம் பாடுகிறது. துர்க்கா தேவியைப் போற்றிப் புகழாத தேவர்கள் இல்லை. அம்பிகையின் சரீர கோஸங்கள் எல்லாம் சமஷ்டி தேவஸ்வரூபமாக விளங்குவதைத் தேவி மகாத்மியம் எடுத்துக்காட்டும்.
காலங்களுக்குள் காலமாகவும், புண்ணியங் களுக்குள் புண்ணியமாகவும், 'மங்களங்களுக்குள் மங்களமாகவும் கூேடிமங்களுக்குள் கூேடிமமாகவும், நன்மைகளுக்குள் நன்மையாகவும், துர்க்கா தேவி விளங்குகிறாள். தீமைகளை எதிர்க்கும் தீயாகவும், குற்றங்களைத் தட்டிக்கேட்கும் குரலாகவும், கயமையைக் கடிதில் உடைக்கும் தடியாகவும் துர்க்கா தேவியே விளங்குகிறாள்.
மயூர மங்கலம்

துர்க்கா என்று சொல்பவர்கள் கூடச் சுகத்தை அடைந்து விடுகிறார்கள். துன்பங்களிலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். அவள் காலங்களைக் கடந்தவள். அவளை எதுவும் பாதிக்க முடியாது. அவளுடைய கருணைக்கு எல்லையும் கிடையாது.
எல்லாப் பெருமைகளும் நிறைந்த பூரீ துர்க்கா பரமேஸ்வரியைப் பூசிப்பதற்கு ஏற்ற நாட்கள் பல இருப்பினும் வாரங்களில் அவளுக்கு உகந்ததாக விளங்குவது மங்களவாரமொன்றே. மங்கள வாரத்தில் துர்க்கா தேவியை மூன்று காலங்களிலும் பூசை செய்யலாம்.
தீபத்திலோ, கடத்திலோ, சித்திரத்திலோ, இயந்திரத்திலோ, ஹ்ருதயத்திலோ, பூஜிக்க வேண்டும். வேதோக்த பூஜை அல்லது தந்திர பூஜை சிறப்பு. இருந்தாலும் அவரவர்கள் சக்திக்கு ஏற்றபடி செய்யும் பூஜையை அம்பிகை பெரு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வாள்.
செவ்வாய்கிழமை அதிகாலையிலும், சாயங்காலத்திலும், ராத்திரியிலும் துர்க்கா தேவியைப் பூஜிக்கலாம். ஆசாரத்துடனும், அனுஷ்டானத்துடனும் சக்திக்கேற்றபடி பூஜிக்க வேண்டும்.
தீபழஜை செய்பவர்கள் பசுஞ்சாணியிட்டு சுத்தப்படுத்திய பூஜை அறையைப் பயன்படுத்த வேண்டும். நடுவில் கோலமிட்டு, செம்மண் இட்டு அதன் மீது அரிசி அல்லது நெல்லைப் பரப்பித் தீபத்தை நடுவில் வைத்து ஏற்ற வேண்டும். தீபத்தில் தேவியை ஆவாகனம் செய்து முறைப்படி பூஜை செய்தல் வேண்டும். துர்க்கா ஸப்த ஸ்லோகிஸ்லோகத்தால் ஸ்தோத்திரம் செய்யலாம்.
ஹ்ரிம் -தும் -ம் ஸ்ர்வ ஸ்வரூபே ஸர்வேசே சர்வ சக்தி ஸமன்விதே பயேப்ய ஸ்த்ராஹி நோ தேவிதுர்க்கா தேவி
நமோஸ்துதே ம் - தும் - ஹரிம் என்ற மந்திரத்தைச் சொல்லிப் புஷ்பாஞ்சாலி செய்து நமஸ்கரிக்கலாம்
தும் - ஹ்ரீம் - ஸெள துர்க்கே ஸ்மிருதே ஹரஸிபீதிம் அசேஷஜந்தோ: ஸ்வஸ்தை ஸ்மிருதா மதிம்தீவஹரபாம்தகாஸி தாரித்ரியதுக்க பயஹாரிணி காத்வதன்யா ஸர்வோய காரகரணாய ஸ்தார்த்த சித்தா :
ஸெளம் - ஹ்ரிம் - தும்

Page 184
என்ற மந்திரத்தைச் சொல்லித் தீபத்தைப்பிரதட்சணமாக வந்து நமஸ்கரிக்க வேண்டும். இவ்விதம் தனது சக்திக் கேற்றபடி வலம் வருபவர்கள் நலம் பெறுகிறார்கள். துக்கங்கள் போவதற்கும், சுகங்கள் வருவதற்கும் துர்க்கா தேவியை இவ்விதம் சந்தியா காலங்களில் பூஜை செய்தால் கைமேல் கனிபோல் பலன் கிடைக்கும்.
மேன்மை பொருந்திய துர்க்கா தேவியை மூன்று உலகங்களுமே பூஜிக்கின்றன. நவக்கிரகங்களில் மிக வலிமை பொருந்திய ராகு பகவான் துர்க்காவைப் பூஜிக்கிறார். துர்க்கா தேவியை இவர் பூஜை செய்து அதனால் மகிழ்ச்சியான முகத்துடன் சந்தோஷம் நிறைந்த மனத்துடன் விளங்குகின்றார்.
இதனால்தான் மங்களவார ராகு காலத்தில் துர்க்காவைப் பூஜை செய்ய வேண்டுமென்று சித்தர்கள் சொல்லுகிறார்கள்.
சக்தியில் நல்ல சக்தி, தீயசக்தி என்று பேதம் இல்லை. எப்படிப் பயன்படுத்தப்படுகின்றதோ, அதைப் பொறுத்தே சக்தியானது, நல்ல சக்தியாகவோ, தீய சக்தியாகவோ பரிணமிக்கிறது. ஆகவேதான், ஒவ்வொரு நாளுக்குரிய கிரகத்தை ராகு பிடிக்கும் நேரமான ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால் அந்த பூஜைக்கு மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையை விட அதிக அளவு செயல் வேகம் இருக்கும்.
மங்கள வார காலத்தில் துர்க்கா தேவியைப் பல காரியங்களுக்காக பூஜை செய்யலாம். காரியங்கள் வெகுவாக இருந்தாலும் ஒரு சில இங்கே கூறப்படுகின்றன. ராகு கிரக ப்ரீதி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, விவாக ப்ராப்தி, அரிஷ்ட நிவாரணம், சத்ருபீதி நாஸனம், ஜெயசக்திப்ரதம் இவைகள் ஒரு சிலவே.
ராகு காலத்தில் துர்க்கா தேவியை திருகோயில்களில் வழிபடுவது உத்தமத்தில் உத்தமம்.
எந்தச் சிவன் கோயிலிலும், துர்க்கைக்கு சந்நிதி இல்லாமல் இருப்பதில்லை. சிவலிங்கம் குடி கொண்டிருக்கும் கருவறையின் சுற்றுச் சுவர்களில், இடப்புறத்து வெளிச்சுவரில் துர்க்கையை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ஆகம விதிகளில் ஒன்று. இப்படி சிவாலயங்களில் சந்நிதி கொண்டிருக்கும் துர்க்கைக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது விசேஷ நற்பலன்களைக் கொடுக்கும்.
இயலாதவர்கள் வீட்டிலும் வழிபடலாம். அழுகாத, நசுங்காத, குத்துப்படாத, சொட்டை இல்லாத, காயாக இராத, நல்ல மஞ்சள் நிறத்துடன் கூடிய எலுமிச்சம்

பழத்தைப் பிழிந்த சாற்றை துர்க்கா தேவி சன்னதியில் அசுத்தப்படும்படி ஊற்றக் கூடாது. அந்தச் சாற்றைப் பயன்படுத்தலாம். தீபம் அளவாக எரியும்படி வைக்கவேண்டும். தீபத்திற்கு எள் எண்ணெயைப் பயன்படுத்தலாம். விளக்கேற்றப் பயன்படுத்திய எலுமிச்சம் பழத்தின் சாற்றை நாட்டுச் சர்க்கரை இட்டுப் பானகமாகக் கலந்து அதில் தேன் சற்று அதிகமாக விட்டு நன்றாகக் கலக்கி அம்பிகைக்கு நிவேதித்து அடியார்களுக்கு வழங்கித் தானும் பருகலாம்.
ராகுகால துர்க்கா பூஜையில் துர்க்கா தேவிக்கு தயிர் சாதம், வடை, பாயசம், எலும்மிச்சம்பழச் சாதம் இவைகள் சிறப்புடைய நைவேத்தியங்கள்.
வசதிக்கேற்றபடி நைவேத்தியம் செய்தால் போதும். பெருமைக்காக எதையும் செய்யவேண்டியதும் இல்லை.
ராகுகாலத்தில் துர்க்கதேவி சன்னதியில் சுவாசினியை நமஸ்கரிக்கின்றவர்கள். கூேடிமத்திலும் மேலான கூேடிமத்தை அடைகிறார்கள். அங்கு சுவாசினிகளுக்குத் தாம்பூலம் தட்சினை வழங்குகின்றவர்கள். துர்க்கா தேவியின் சன்னதியில் கன்னிப் பெண்களுக்குக் கால்களில் நலங்கிட்டு, கைகளில் வளையிட்டு, பூச்சூட்டி, புத்தாடை வழங்கி அவர்களைப் பூஜிப்பவர்கள் மற்றவர்களால் பூஜிக்கத் தகுந்த வாழ்க்கையை அடைவார்கள்.
ராகு காலத்தில் துர்க்கா தேவியை மன, மொழி, மெய்களால் துதிப்பவர்கள் உயர்ந்தவர்கள். தங்களுடைய குற்றங்களை மன்னிக்க வேண்டுமென்று பிரார்த்திப்பவர்கள் புண்ணியவான்கள். திருக் கோவிலுக்கோ அல்லது தங்கள் வீடுகளுக்கோ சென்று பூஜிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள் இந்த வழியைப் பின்பற்றலாம்; அதாவது அந்த ராகுகாலத்தில் துர்க்காதேவியை நினைத்து ஒரு கணம் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஸ்தோத்திரம் செய்தால் போதுமானது.தங்களுடைய பணிகளுக்கு இடையிலேயும் துர்க்கா தேவியை மிகச் சுலபமான வழியில் இவ்விதம் துதித்து நன்மைகளை அடையலாம்.
சங்க இலக்கியங்கள் முதல் புராணங்கள் வரை துர்க்கா தேவியின் பூஜையைப் பற்றிப் பலபடக் கூறுகின்றன. மங்கள வாரத்தில், துர்க்கா தேவியைப் பூஜிப்பவர்களும் மங்கள வார ராகு காலத்தில் துர்க்கா தேவியைப் பூஜிப்பவர்களும் சந்தோஷமான பாதையில் வெகுவேகமாக நடைபோடுகின்றார்கள்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 185
மயூரமங்கலம்
 


Page 186

மயூரபதி யூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 187
மயூர மங்கலம்
 

Ļ9@gÐ JoyIỆrtogi (oï
ĻoogÐ LoņIỆrnã3 @i

Page 188

Ļ9@gƆ ŋooŋIỆ --Tlogo uglossovs (ĢĪi
Ļ9@gƆ ŋooŋIỆ199f@ @ī
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 189
மயூரமங்கலம்
 


Page 190


Page 191


Page 192


Page 193
மயூரமங்கலம்
|
)
லக்ஷ்மி என்றால் கருை வடிவினளாக இருக்கும் இவள் ெ ஐஸ்வர்யங்களுக்கும் அதிதேவை இடதுகையில் வில்வம் பழமும், வ6 யானைகள் பொற்கலசங்களில் அபிஷேகம் செய்ய இருப்பவள். ருக்மணியாகவும், வேதவதியாகவு தனலக்ஷமி, தான்யலசுஷ்மி, கஜ வித்யாலசுஷ்மி, மகாலக்ஷமி முத நாராயணனது வாமயாகத்தில் தே
பெயரடைந்தவள்.
இவள் தனது யோகத்தால் அரசர்களிடத்து ராஜலக்ஷ்மியா சுரபிலக்ஷமியாகவும், எல்லாப் பு வான்களிடம் பிரீதிலக்ஷமியாகவும் வர்த்தக லசுஷ்மியாகவும், ட கஜாலக்ஷமியாகவும், பாதாளத்தில் சரீர சமுத்திர கன்னிகையா சந்திரிகையாகவும், மற்ற மங்களட்
ஆதி சக்தியாகிய சித்தசச் சக்தி கொண்ட வெண்ணிற ஐ உலகியலுக்கு ஆதியான ஆதில முகங்கொண்டு அஷ்டமங்களங்க கமல இதழினைத் தொட்டு இருக்
இவளை மஹாவிஷ்ணு செவ்வாய்க் கிழமைகளிலும், மனுவருஷமுடிவிலும், தைமாதச் ச தேவி பகவதம் கூறும்.
 
 
 

இலக்குமி
ணயோடு பார்ப்பவள் என்று அர்த்தம். சுத்த தத்துவ சல்வத்திற்கு அதிபதியாகக் கருதப்படுகிறாள். இவள் சர்வ த. காத்தல் தெய்வமான மகாவிஷ்ணுவின் சக்தியானவள். பக்கையில் தாமரையும் கொண்டு தங்கநிறத்தோடு இரண்டு கங்காஜலம் கொண்டு இருபுறங்களிலும் துதிக்கையால் இராமவதாரத்தில் சீதையாகவும், கிருஷ்ணாவதாரத்தில் ம், சூடிக்கொடுத்தவளாகவும் அவதரித்தவள். இந்த லக்ஷமி லக்ஷ்மி, தைரியலக்ஷ்மி, சந்தானலக்ஷமி, விஜயலக்ஷ்மி, நலிய பெயர்களோடு அட்டலக்டிமியாய் விளங்குபவள். ான்றித்தானே இருகூறாய்ராதை என்றும், லக்ஷ்மி என்றும்
பல உரு அடைந்து சொர்க்கத்தில் சொர்க்க லக்ஷ்மியாகவும் கவும், இல்லங்களில் கிருகலசுஷ்மியாகவும், பசுக்களில் பிராணி களிடத்திலும் சோபலசுஷ்மியாகவும், புண்ணிய , சத்திரியர்களிடம் கீர்த்திலக்ஷமியாகவும், வைசியர்களிடம் ாவிகளிடம் கலலசுஷ்மியாகவும், வேதாந்திகளிடம் நாகலக்ஷமியாகவும், யக்ஞதேவியாகிய தஷினை யாகவும், கவும், சூரியனிடத்தில் காந்தியாகவும், சந்திரனிடம் பொருட்களிலெல்லாம் மங்களருபிணியாகவும் இருப்பாள். தியின் ஆதி ரூபமான ஆதிலக்ஷமி72ஆயிரம் கோடி சூரிய ஜுவாலையோடு உலகியலில் ஊடுருவல் செய்கிறாள். ஷ்மி இரண்டு கரத்தோடு கமலபீடத்தில் தெற்கு நோக்கி ளும் கொண்டு ஆட்சி செலுத்துகிறாள். அவள் பாதங்கள் கும்.
பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாதி மாதங்களிலும், பிரம்ம தேவர் புரட்டாதி மாத சுக்கிலாட்டமியிலும், ங்கராந்தியிலும், மாசிமாதச் சங்கராந்தியிலும் பூசித்ததாய்த்
Coo

Page 194
பிருகுரிசிக்கு கியாதியிடத்தும், அமுதம் எடுத்தபோது, திருப்பாற்கடலிடத்தும் தோன்றியவள் இவள். ஜேஸ்டா தேவியுடன் உடன் பிறந்தவள். வைரவருக்குக் கபாலம் கைவிட்டுநீங்கப்பிச்சையிட்டவள்.
இவள், சாபத்தால் கோட்டானானதாகவும், அவள் இட்ட முட்டைகளில் குதிரைகள் பிறந்ததாகவும் கதையுண்டு. ஒருமுறை விஷ்ணுவிடம் இவள் இருக்கையில் வாலகில்லியர் வந்தனர். அவர்களது 6)I 606) மதியாமல் இவள் நகைத்ததால் விஷ்ணுமூர்த்தியால் குலக்கேடியாக ஆகும்படி சாபமேற்றதாகத் திருப்பூவணபுராணம் கூறும். வராக கற்பத்தில் நக்னசித்தின் குமாரியாய்ப் பிறந்து விஷ்ணுவை மணந்தாள்.
இரவிவர்மனுக்கு அமுதபதி வயிற்றில் தாரை, வீரை என்பவளின் தங்கையாய் பிறந்து, இராகுலனுடைய மனைவியாகிக் கணவனுடன் உடன்கட்டை ஏறித் தாதுச்சக்கரன் எனும் முனிவனுக்கு உணவளித்த புண்ணியத்தால் மணிமேகலையாக வந்து இவள் பெளத்த தர்மம் கேட்டதாய் மணிமேகலை கூறும்.
லக்ஷமிதேவி பாற்கடலில் தோன்றிய வரலாறு
தேவர் உலகின் அரசனான இந்திரன் ஒரு சமயம் செருக்கின்காரணமாய் துர்வாச மகரிஷி தனக்களித்த விஷ்ணுப் பிரசாதமான பாரிஜாத மலரை அலட்சியம் செய்து ஐராவதம் எனும் தன் யானையிடம் அளிக்க அது அப்பூவைத் தன் காலால் நசித்துத் தேய்த்தது. கோபம் கொண்ட துர்வாச முனிவர் “செல்வத் திருமகள் ஆன லக்ஷ்மிதேவி உன்னைவிட்டு நீங்குவாளாக” எனச் சபித்தார். தரித்திரமுற்ற இந்திரன் குலகுருவாகிய பிரகஸ்பதியின் ஆலோசனையால் விஷ்ணு பகவானைத் தரிசித்து அவர் வாக்குப்படி பாற்கடலைக் கடைந்த போது அப்பாற்கடலினின்றும் மகாலசுஷ்மி தோன்றினாள்.' அப்போது அப்பாற்கடலில் இருந்து உச்சிரவசு என்ற குதிரையும், ஐராவதம் எனும் யானையும் உடன் தோன்றின. அவ்வாறு தோன்றிய மகாலக்ஷமியைத் தொழுது இந்திரன் மீண்டும் செல்வம் பெற்றான். இது
பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ள கதை.

பிருகு முனிவரின் புதல்வியாய் லக்ஷமி அவதரித்த வரலாறு
பிரம்மாவின் புத்திரனான பிருகு முனிவர் ஒரு சமயம் பிரம்மா, சிவன், விஷ்ணு எனப்படும் மும்மூர்த்திகளில் சிறந்தவர் யார் என்ற விவாதம் எழுந்தபோது, அதன் முடிவுகாணமும்மூர்த்திகள் வாழும் இடங்களுக்குச் சென்றார். பிரம்மனின் சத்திய லோகத்திலும், சிவனின் கயிலாயத்திலும் அவருக்கு அவமரியாதை நேரக் கோபத்துடன் வைகுந்தம் சென்ற முனிவர் அங்கும் விஷ்ணு பகவான் தன்னைக் கவனியாது இருப்பது கண்டு கோபமுற்று விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். விஷ்ணு பகவான் கோபங் கொள்ளாமல் அன்போடு உபசரிக்க, அவரின் அன்பு உள்ளம் உணர்ந்து இவரே சத்வகுண இறை எனத் தீர்ப்பளித்தார். மகாவிஷ்ணுவின் நெஞ்சில் முனிவர் உதைத்தது கண்டுகோபமுற்றமகாலசுஷ்மிதவம் செய்யப் பூவுலகம் அடைந்தாள். வருந்திய முனிவர் லக்ஷ்மியின் இருப்பிடமான திருமாலின் மார்பில் உதைத்ததற்குப் பதிலாக அவள் தனக்கு மகளாகப் பிறந்து தன் மார்பில் எட்டி உதைத்து விளையாட வேண்டும் எனத் தவம் இயற்றிலக்ஷமிதேவியிடம் வரம்பெற்று அவளை மகளாய் அடைந்தார். பார்கவி என்னும் பெயரில் அவர் மகளாய்ச் சிறிது காலம் இருந்தபின் மீண்டும் திருமாலின் மார்பை லசுஷ்மி அடைந்தனள். இது பிரமாண்ட புராணத்தில் உள்ள வரலாறு.
அக்கினியில் இருந்து லக்ஷமி தோன்றிய வரலாறு
முன்னொரு காலத்தில் தன் நாட்டை தர்மத்தோடு ஆண்டுவந்த பத்மாஷன் என்ற அரசன் லசுஷ்மியைத் தன் மகளாக அடையவேண்டும் என விரும்பி அவளை நோக்கிக் கடுந்தவம் செய்தனன். தவத்தின் பயனாய்த் தோன்றிய லசுஷ்மி அவன் விருப்பம் நிறைவேற மகாலசுஷ்மியை நோக்கித் தவம் செய்யுமாறு கூற, அவ்வாறே அவன் செய்த தவத்தால் விஷ்ணு பகவான் தோன்றி லசுஷ்மியை மகளாய்ப் பெற வரமருளினர். விஷ்ணு பகவான் தனக்களித்த மாதுளம் கனியுடன் அரண்மனை அடையமுன் அம்மாதுளம் கனி பெரிதாய் வளர்ந்தது. அம்மாதுளம் கனியைப் பிளக்க ஒரு பக்கத்தில் முத்துக்களும் மறு பக்கத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கக் கண்டு மகிழ்ந்தான்.
யூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் -2000

Page 195
அக்குழந்தையைப் பத்மை எனப் பெயரிட்டுத் தன் அன்பு மகளாய் வளர்த்து பருவமெய்தியதும் சுயம்வரம் நடத்த முனைந்தனன். சுயம்வரத்திற்கு வந்த மன்னர்களை நோக்கி வானத்தில் காணப்படும் நீல நிறத்தை தன் மேனியில் பூசுபவர்களுக்கே தன் மகள் மாலையிடுவாள் என்று அறிவிக்கக் கோபம் கொண்டு வந்த மன்னர்கள் அவனுடன் போர் தொடுத்தனர். அப்போரில் அரக்கர்களால் பத்மாஷன் மாண்டான். தந்தை மாண்டதும் அரக்கருக்கு அஞ்சியாககுண்ட நெருப்பில் பத்மை இறங்கினாள். யாக குண்ட நெருப்பால் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை. யாக குண்டத்திலிருந்து வெளி வந்த பத்மை போரில் இறந்தவர்களுக்காக வருந்தித் தவம் செய்யத் தொடங்கினள். இங்ங்ணம் அவள் தவம் செய்த போது இராவணன் அவளைக் காமுற, அவனிடமிருந்து தப்புவதற்காக மீண்டும் அக்னி குண்டத்தில் இறங்கினள். இராவணன் தீயைக் கிளறிப் பார்த்தபோது ஐந்து இரத்தினங்கள் கிடைத்தன. அவ்விரத்தினங்களை ஒர் பேழையில் வைத்து தன் பூஜையறையில் வைக்கச் சிலநாட்களின் பின் ஓர் பெண்குழந்தை அப்பெட்டியில் இருந்து தோன்றிற்று. அக்குழந்தையால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்து பெட்டியோடு அக்குழந்தையை வெகு தொலைவிலுள்ள மிதிலா நகரிற் புதைக்க அக்குழந்தையே ஜனக ராஜாவிற்கு மகளாய்க் கிடைத்து ஜானகியாய் வளர்ந்து இராவணன் அழிவுக்கு காரணமாகினாளாம். இது ஆனந்த ராமாயணத்தில் உள்ள வரலாறு.
ngUi unikaodio
 

குதிரையாய் ஆன மகாலக்ஷமி
ஒரு முறை சூரியனின் மகனான ரேவந்தன் என்பான் உச்சிரவசு என்ற குதிரைமீது ஏறிக் கொண்டு வைகுண்டம் சென்றான். தன்னோடு பாற்கடலிற் பிறந்த அக்குதிரையின் அழகை மகா லக்ஷமி இரசிக்கத் தொடங்கினாள். அப்போது திருமால் கேட்ட கேள்விகள் அவள் காதில் விழாததால் கோபங் கொண்ட திருமால் அவளைப் பெண் குதிரை ஆகும்படியும் இனிமேல் நீ எல்லாவிடத்தும் ரமிக்கும் தன்மை அடையப் போவதால் ரமை என்றும், எல்லாவிடத்திலும் சஞ்சரிக்கப் போவதால் சஞ்சலை என்றும் பெயர் பெறுவாய் எனவும் சபித்துவிட, அச்சாபத்தின் படி அன்னை லக்ஷமி பூலோகத்தில் ஓர் காட்டில் பெண் குதிரையாய் வடிவம் எடுத்துச் சிவனை நோக்கித் தவம் செய்ய, சிவபெருமான் நாராயணனே ஓர் ஆண் குதிரையாய் ஆகி உன்னுடன் கூட, அதன் பயனாய் ஏகவீரன் எனும் உலகப் பெயர்பெறும் புத்திரனைப் பெற்று, சக்தியை வழிபட்டு மீண்டும் மகாவிஷ்ணுவை அடைவாய் என வரமளிக்க, அவ்வண்ணமே மீண்டும் அன்னை வைகுண்டம் அடைந்தனள். இது தேவிபகவதம் கூறும் வரலாறு.
மானாய் ஆன மகாலக்ஷமி ஒரு கற்பத்தில் கண்ணுவ முனிவ சாபத்தால் மானின் வடிவடைந்து வனத்தில் அலைந்து கணவனைத் தேடுகையில், அவ்வனத்தில் தவம் புரிந்த திருமாலைக் கண்டு மனங்களித்துக் கருவுற்று ஒருபெண்ணைப் பெற்று, பின் வேடரைக் கண்டு மறைந்தனளாம். இது திருவோத்தூர் புராணம் கூறும் வரலாறு.

Page 196
騷
T
 


Page 197
f t ...,
மங்கலங்களுக்கெல்லா பூர்ணகும்பம், கண்ணாடி, சாமர ஆகியவைகளடங்கிய அபூர்வ மங்
ஆதிலக்ஷமியின் பொற்பாத எட்டுச் சின்னங்கள் தன் பாதத்தி லட்சுமிகளிலும் முதல் லட்சுமியா வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சன் அனைத்து மங்களங்களும் வந்து
அனைத்து உயிரினங்களுட மற்றும் அனைத்து உணவுப் ெ உயிர்களின் பசியைப் போக்குபவ அவளே.
அறுசுவைக்கும் நாயகி எ தருகிறாள். வலது கரங்களில் அப வரத ஹஸ்தம் தாங்கியவள், யா வீற்றிருக்கிறாள். படியளந்து ச அமுதமாவாள். அமுதமானவ அன்னமானவளைத் தொழுது வழி
எட்டுத்திருக்கரங்களுடன் இடது கரங்களில் வரத ஹஸ்தம், ச வீற்றிருக்கும் பூநீதைரியலட்சுமி மனோதிடத்தையும், தைரியத்ை பக்கபலமாக நின்று பாதுகாப்பாள்
 
 

அஷ்டலக்டிமி
பூஞரீஆதி லக்ஷ்மி
ம் அதிபதியான ஆதிலக்ஷமி தன் பாதங்களுக்குக் கீழ் ாம், துஜம், பூரீஷபம், பேரிகை, திருவிளக்கு, ஸ்வஸ்திக் கள அம்சங்களுடன் காட்சி தருகிறாள். நங்கள் பற்றியோருக்குச் சர்வ மங்களமே என உணர்த்தும் தின் கீழ் அமைத்துக்காட்டி திருச்சேவை சாதிக்கம் எட்டு ன ஆதிலக்ஷமியை அனைத்து நாட்களிலும் குறிப்பாக னை செய்தும், அபிஷேகம் செய்தும் வழிபடுவோருக்கு சேரும்.
பூனி தான்ய லசுஷ்மி
ம், உயிர்வாழஜீவாதாரமான தான்யங்கள், காய்கள், கனிகள் பாருட்களையும் அளிப்பவள் பூரீதான்ய லட்சுமி. மனித ள். உடலுக்குள் பசியை உருவாக்கி உண்ண வைப்பவளும்
னப்படும் தான்ய லட்சுமி ஆறு திருக்கரங்களுடன் அருள் பஹஸ்தம், தான்யம், அம்பு, இடது கரங்களில் வில், கரும்பு ானையைப் பீடமாக கொண்டு மேற்குத் திசை பார்த்து ாக்கும் பரம் பொருளுக்கு அவளே கரம், காமதேனு ளை, அருளான வளை, அன்னை யானவளை, பட்டால் பல தலைமுறைகளுக்குப் பசிபிணி, நெருங்காது.
பூணீதைர்ய லக்ஷமி
வலது கரங்களில் அபயஹஸ்தம், குலம், அம்பு, சக்கரம், பாலம், வில், சங்கம் இவற்றை ஏந்திய எட்டுக் கரங்களுடன் தன்னை வந்தடைந்தவர்களுக்கு எல்லாவிதமான தயும் அருளுவதுடன் அவர்களின் வாழ்வில் வளமாக,
பூரபதி பூீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிே -C73d

Page 198
பூனிகஜலக்ஷமி இவளின் மறுபெயர் பூநீராஜலட்சுமி. இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தி அபிஷேகம் செய்வது போன்று எழுந்தருளியிருப்பதைக் காணலாம். நீருண்ட மேகங்கள் நிலமகள் மீது மழை பொழிவதை பூரீகஜலட்சுமியின்
தோற்றம் குறித்து நிற்பதாகக் கூறுபவர். பொன், புகழ்
இவற்றுடன் கூடிய பெருமை தரும் வாழ்வைத் தருபவள் பூரீகஜலட்சுமியே. அனைத்துச் செல்வங்களுக்கும் ஆதாரமான மழையைப் பொழியச் செய்து பூமியை வளத்தோடும். செழிப்போடும் ஆக்குபவன் கஜலட்சுமியே.
பூணீசந்தான லக்ஷமி
எல்லாவிதச் செல்வத்தைவிட சிறந்தது என கூறப்படும் மக்கட் செல்வத்தைத் தருபவள் பூரீசந்தான லட்சுமி.
ஜடையையும், கிரீடத்தையும் தரித்தவளும், வரத, அபய ஹஸ்தங்கள் கொண்டவளும், குழந்தையைக் கையில் ஏந்தியும், ஆபரணங்களை அணிந்து, கன்னிகா பீடத்தில் அமர்ந்து கருணை நிரம்பியவளாக வீற்றிருக்கும் கோலத்தில் அருள்தரும் பூரீசந்தான லட்சுமியை வணங்கினால் குழந்தைப் பேறு கிட்டும். பிள்ளைப் பாக்கியமே பித்ருகளைக் கடைத்தேற்றும் என்பது இந்துக்களின் கோட்பாடு ஆகும். ஆண்டு பலவாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் தொடர்ந்து பூநீசந்தானலக்ஷமியை பூஜித்து வந்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது திண்ணம்.
பூரீவிஜய லக்ஷமி தூய எண்ணத்தில் நிறைந்து வெற்றி அருள்பவள் பூரீவிஜய லக்ஷ்மி. மும்மூர்த்திகளின் தெய்வீகச் செயல்களில் அவர்களில் முத்தொழில்களில் மூவுலகமாந்தர்களின் முயற்சிகளில் முக்காலமும் வெற்றி தந்துமுழுமை கண்டு நிற்பவள் பூரீவிஜயலக்ஷமி எட்டாத கனவுகளை எட்ட வைக்கும் வெற்றி நாயகியான
 
 

பூரீவிஜயலக்ஷமி எட்டுக் கரங்களுடன் அம்சவாகனத்தில்
வீற்றிருக்கிறாள்.
இத்தேவியை பூஜித்தால் சகல நன்மைகளும்
எடுத்த காரிய வெற்றியும் உண்டாகும்.
பூனிவித்யா லக்ஷமி
கலைமகளையும், அலைமகளையும் இணைத்து வீற்றிருப்பவள் பூரீவித்யாலசுஷ்மி. இவள் கல்வியையும் அதன் வழியே செல்வமும் அளிப்பவள். மிகவும் மென்மையான உருவத்துடன் சங்க, பத்ம அபய, வரத, ஹஸ்தங்களுடன் அஸ்வபீடத்தில் அமர்ந்து இருக்கக்கூடியவளும், நாதசொரூபமான பகவானின் சக்தி உருவானவளும் பூரீவித்யா லசுஷ்மியே எனப் போற்றப்படுகிறாள்.
இத்தேவியின் திருவருளால் தான் நான்கு வேதங்களும், சாஸ்திரங்களும், அறுபத்தி நான்கு கலைகளும் இப்புண்ய பாரதத் திருநாட்டில் செழித்தோங்கி வளர்ந்து வருகின்றது.
பூனி தன லட்சுமி
“சங்க, பத்ம நிதிகளை வைத்திருக்கும் தேவி” என்று பூரீதனலக்ஷமியைப் போற்றுகின்றது பூரீப்ரஸந்த ஸம்ஹிதை. தங்க நிறமுடையவள். சகலவித செளகாரியங்களை அருள்பவள். பத்மாசனத்தில் வீற்றிருப்பவள். சக்கரம், அம்பு, வெற்றிலை, சங்கு, வில், அமிருத கலசம் இவற்றுடன் அருள் தருபவள். சீனிவாசப் பெருமாளுக்கு குபேரன் கடன் அளிக்க முடிந்தது என்றால் அதற்கு பூரீதனலக்ஷமியின் திருவருளே காரணம். பூரீதனலட்சுமியை வெள்ளிக் கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை, திருமஞ்சனம் ஆகியவற்றால் பூஜித்து அர்ச்சித்தால், எல்லாவிதச் செல்வங்களும் பொன், பொருய் யாவும் தாமே வந்தடையும் என்பது திண்ணம்.
பூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 199
மயூரமங்கலம்
:
பொருளில்லார்க்கு இல் வாசலை விட்டு விட்டு ஆத்ம நடத்துவதானால் பணம் வேண் நடத்துபவர்கள் இருப்பதனாலே த தேடி வாழ்க்கை நடத்தும் கிருஹ கிருஹஸ்தர்கள் இல்லாவிட்டால், ஞானம், பக்தி இவற்றிலேயே ஈடு இல்லாதது அர்த்தம் அனர்த்தம் 'பஜகோவிந்தத்தில் “பணப்ே கர்மத்தினால் நீ சம்பாதிக்கிற ெ உயர்த்திக் கொள்” என்றார்.
II.
af
செல்வத்துக்கு அதிதேவி பிரார்த்தித்தால் நமக்குத் தர்ம செய்வாள். ஞான, வைராக்கிய தம்முடைய பரம காருண்யத்தால் அவர்கள் மஹாலக்ஷமியை எப்படி மாதிரி, கனகதாரா ஸ்தவம் அனுக்கிரகத்திருக்கிறார்.
இந்தக் கனகதாரா ஸ்த சந்நியாசம் வாங்கிக் கொள்வதற் பிரம்மசாரியாகக் குருகுலவாசம் ெ துவாதசியன்று பரம தரித்திரன் அனுக்கிரகம் பண்ணவே போன பிராமணனாகிய வீட்டுக்காரன் பார்த்த மாத்திரத்தில், அடடா, எ போட்டால் சகல புண்ணியமும்
 
 

கதாரா ஸ்தவம்
காஞ்சி காமகோடி பரமாசாரிய ஸ்வாமிகள்
பவுலகம் இல்லை" என்றார் திருவள்ளுவர். எல்லோரும் வீடு விசாரத்தில் ஈடுபட முடியாது. உலக வாழ்க்கையை டித்தான் இருக்கிறது. இப்படிச் சம்பாதித்துக் குடும்பம் ான் வேறு சிலர் ஆத்ம விசாரம் செய்ய முடிகிறது. பொருள் ஸ்தர்கள் ஆத்ம விசாரத்தில் அவர்களை ரகூழிக்கிறார்கள். பொருளைப் பற்றி நிர்விசாரமாக சந்நியாசிகள் என்று சிலர் பட்டிருக்க முடியாது. "பொருள் (பணம்) என்பது பொருள் ’ என்று சொன்ன அதே ஆதி சங்கராசாரியாள், அதே பராசை பிடித்து அலையாதே! ஆனால் உனக்கு உரிய பொருளைக் கொண்டு நியாயமாக வாழ்ந்து உன்னையே
லபஸே நிஜ கர்மோபாத்தம் த்தம் தேன விநோதய சித்தம்
பதையாக இருக்கப் பட்டவள் மஹாலக்ஷமி. அவளைப் நியாயமாக வேண்டிய சம்பத்தைத் தந்து அணுக்கிரகம் க் கிரந்தங்களை நிறையச் செய்த பூரீ சங்கராச்சாரியாள் விவகாரதசையிலுள்ள லோகஜனங்களை உத்தேசித்து ப் பிரார்த்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிற என்ற லசுஷ்மீ பரமான ஸ்தோத்திரத்தை நமக்கு
வம் உண்டானதற்கு ஒரு கதை உண்டு. ஆசாரியார் கு முற்பட்ட கதை அது. அவர் பால தசையில் காலடியில் செய்து வீடு வீடாகப் போய்பிகூைடி வாங்கி வந்த சமயம், ஒரு ஒருவன் வீட்டுக்குப் பிகூைடிக்காகப் போனார். அவனுக்கு ார் போலிருக்கிறது இவர் போன போது உஞ்சவிருத்திப் பீட்டில் இல்லை. பத்தினி மட்டும் இருந்தாள். இவரைப் படிப்பட்ட தேஜஸ்வியான பிரம்மச்சாரி இவருக்குப்பிகூைடி
உண்டாகும். என்று நினைத்தான். ஆனால் பிகூைடி
C75)

Page 200
போடத்தான் வீட்டில் ஒரு மணி அரிசிகூட இல்லை. தேடித் தேடிப்பார்த்ததில் ஒரு புரையில் அழுகல் நெல்லிக் காய் ஒன்று அகப்பட்டது. துவாதசிப் பாரணைக்காக அவள் புருஷன்'சேமித்துவைத்திருந்த நெல்லிபோயும் போயும் இதையா அந்தத் தெய்வக் குழந்தைக்குப் போடுவது' என்று ரொம்பவும் மனஸு குமுறி வேதனைப்பட்டாள். ஆனால், “பவதிபிக்ஷாம் தேஹி” என்று கேட்டு விட்ட பிரம்மச்சாரியை வெறுமே திருப்பி அனுப்பக் கூடாது என்பதால் வாசலுக்குப் போனாள். அங்கே மஹா தேஜஸ்வியாக நிற்கிற பால சங்கரரைப் பார்த்துச் சொல்லி முடியாத வெட்கத்தோடும், அழுகையோடும் திரும்ப உள்ளே வந்தாள். வந்த பிறகு, ஐயோ இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா?’ என்று நினைத்து வாசலுக்குப் போனாள். இப்படி வாசலுக்கும் உள்ளுக்குமாகத் தவித்துத் தவித்து நடமாடிவிட்டுக் கடைசியில் 'அழுகலோ மட்டமோ? நம்மிடம் இருப்பதைத்தானே நாம் கொடுக்க முடியும் என்று ஒரு மாதிரிமனஸைத் தேற்றிக் கொண்டு அந்த அழுகல் நெல்லிக் கனியை ஆசாரியாளுக்குப் போட்டாள்.
பொருளில் தரித்திரமாக இருந்தாலும், அவளுடைய மனஸ எத்தனை பெரியது என்பதையும், அவளுக்கு தன்னிடம் எத்தனை அன்பு பொங்குகிறது என்பதையும் ஆசாரியாள் கண்டு கொண்டார். அவர் மனஸ" அவளுக்காக உருகிற்று. உடனே தான் அவளுக்காக மஹாலக்ஷமியைப் பிரார்த்தித்து, கனகதாரா ஸ்தவம் பாடினார்.
ஆசாரியாள் மஹாலசுஷ்மியைத் துதிக்கிற போது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. "இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்குத் தண்டனைதான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை” என்ற அசரீரி
உடனே ஆசாரியாள், “இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதை விடக் கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்டியமான நெல்லிக்கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும் தியாகமும் எத்தனை புண்ணியமானவை சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிகூைடி போட்ட பலன், எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே" என்றார். “அம்மா, மஹாலக்ஷ்மி இவளுக்கு
G70

இருக்கிற மாதிரி உனக்கும் அன்பு நிறைய இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அனுக்கிரகம்பண்ணம்மா” என்று லக்ஷ்மியைப் பிரார்த்தித்தார்.
லக்ஷ்மியிடம் அவர் ஏழைப்பிராமண ஸ்தீரிக்காக முறையிட்டதற்கு கனகதார ஸ்தவத்திலேயே உட்சான்று இருக்கிறது. 'தத்யாத் தயானுபவனோ’ என்கிற சுலோகத்தில் இது வெளியாகிறது. “சாதகப் பட்சி மழைத்துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வ பாவம் மழையே இல்லாத கோடை மாதிரி, இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம் தான். ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாகூடி மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா” என்கிறார், இந்தச் சுலோகத்தில்.
இப்படி அவர் ஸ்தோத்திரத்தைப் பாடி முடித்ததும், மஹாலக்ஷமிக்கு மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப்பெண் அன்போடு போட்ட ஒர் அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீட்டு வேலி வரையில் தங்க நெல்லிக்கனிகளைப் பொழிந்து விட்டாள்.
இதனால் தான் அந்த ஸ்தோத்திரக்கு கனகதாராஸ்தவம்’ என்கிற பேரே உண்டாயிற்று. கனகதாரா' என்றால் பொன்மழை என்று அர்த்தம். ஸ்தவம் என்றாலும் 'ஸ்துதி என்றாலும் ஒன்றேதான்.
ஆசாரியாள் எல்லாம் ஒன்றே என்று சொன்னவர். முடிவில் ஜீவனுக்கும் ஈசுவரனுக்குமே பேதமில்லை என்றவர். அதனால் அவருக்குத் தெய்வங்களிடையே பேத புத்தியே கிடையாது. எல்லாத் தெய்வங்களும் ஒரே பராசக்தியின் ரூபங்கள் தாம் என்று அவர் எப்போதும் வலியுறுத்துவர். அம்மாதிரி ஒரு சுலோகம் இந்த ஸ்தோத்திரத்திலும் இருக்கிறது. கீர்தேவதேததி' என்று ஆரம்பிக்கும். “கருடக் கொடியோனான மஹாவிஷ்ணுவின் பத்தினி என்று சொல்லப்படுகிற நீயேதான் வாக்குதேவியான ஸரஸ்வதியாகவும், தாவர வளத்தைத் தருகிற சாகம்பரியாகவும், சந்திர மெளலிஸ்வரனின் பத்தினியான பார்வதியாகவும் இருக்கிறாய். மூன்று ஸ்லோகங்களுக்கும் குருவாக ஒரு பரமாத்மா இருக்கிறது. அதன் சக்தியே நீ. இருவருமாய்ச் சேர்ந்து உலக சிருஷ்டி, பரிபாலனம், சம்ஹாரம் என்கிற விளையாட்டை விளையாடிக் கொண்டி ருக்கிறீர்கள்” என்கிறார்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 201
Y
s
(
)
மயூரமங்கலம்
விளக்கு என்பது நம் வா “ஜோதியே சுடரே! சூழொளி விள நமது சமய வழிபாட்டின் 1 வாழ்வில் ஒளியை ஏற்றி, துன்ப இ அம்பிகை காளி தன் சடை கையில் ஜோதியைத் தாங்கி நடன “ஆதியும் அந்தமும் இல்ல “ஒளிவளர் விளக்கே” எ6 “தூண்டு சுடராய ஜோதி "திருவையாறு அகலாத ெ “விளக்கினை ஏற்றி வெளி மாறும்" என திருமூலரும்,
“அருள் ஒளி விளங்கிட ஆ ஜோதியை வாழ்த்துகின்றனர்.
மங்கல மங்கையரும், ச ஆர்வமுடன் தீப பூஜையைச் செய் நற்புத்திரர்களையும் சுமங்கலிகள் வேண்டிப் பூஜிப்பதால் நன்மையை தீபவழிபாடும் முதன்மை பெறுகிற
திரு விளக்கி திருவிளக்கின் நுனியில் - மகா விஷ்ணுவையும், நெய்விடு பிரம்மாவும், ஐந்து முகங்களில் வாமதேவம், சத்யோயாதம் என சி நிறத்தில் சௌபாக்ய லட்சுமி காட் நிறத்தில் காளி துர்க்கையும் இரு நான்கும் பெண்மைக்குரிய அச்ச அறம், பொருள், இன்பம், வீடு எல்
 
 

விளக்குப் பூசை
ழ்வை விளங்க வைப்பது. இறைவன் ஜோதி வடிவானவன். க்கே” என அறிஞர்கள் இறைவனைப் போற்றுகிறார்கள். மரபுகளில் தீபம் ஒரு மங்களப் பொருள் மட்டுமல்ல. நமது ருளை அகற்றி நன்மை பயக்கும் ஒரு காரணியுமாகும். யில் தீச்சடை வைத்துள்ளாள். நடராஜப் பெருமான் இடது Tம் புரிகிறார்.
ா அருட்பெரும் ஜோதி” என மணிவாசகரும், னத் திருமாளிகைத் தேவரும், கண்டாய்”, “ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே", சம் பொற் சோதி” என அப்பர் சுவாமிகளும், ரியை அறிமின்” எனவும், “விளக்கின் முன்னே வேதனை
ணவம் எனுமோர் இருளற”என வள்ளலாரும் புகழ்ந்து தீப
மங்கலிப் பெண்களும் வீடுகளிலும் ஆலயங்களிலும் கிறார்கள். சர்பீஷ்ட சித்திகளையும், குடும்ப சுகத்தையும் T பெறுவார்கள். கன்னிப் பெண்கள் நல்ல கணவனை டவார்கள். சமயக்கிரியை வழிபாட்டில் விநாயக வழிபாடும், Bil
Iல் எழுந்தருளும் தெய்வங்கள் ஓங்கார ரூபமாக கணபதி வீற்றிருக்கிறார். தண்டுப்பாகம் ம் அகல் பாகம் சிவனையும் குறிக்கின்றன. அடிப்பாகம் கிரி வைக்கும் இடத்தில் ஈசானம், தற்புருஷம், அகோரம், பனின் ஐந்துமுகங்கள் காணப்படும். ஒளிச்சுடரின் மஞ்சள் சிதருகிறாள். சுடரின் வெண்மையில் சரஸ்வதியும், சிவந்த கிறார்கள். திருவிளக்கின் அகல், நெய், சுடர், திரி, ஆகிய ம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களையும் னும் நான்கு புருஷார்த்தங்களையும் தரவல்லது.

Page 202


Page 203


Page 204


Page 205
மயூரமங்கலம்
இவள் பிரமனால் உரு கல்வியின் அதிதேவதை. இவள் ஜபமாலை, புத்தகம், வீணை, எழு வித்தை முகமாகவும், நான்கு வே பாதங்களாகவும், ஒங்காரம் யாழா தன்னைச் சிருஷ்டித்த பி அஞ்சியோடப்பிரமனும் ஆண்மானு பிரமனையே கணவனாய்ப் பெற்ற
பிரம்மன் தன்னை நீக்கி பிரமனின் யாகத்தை அழிக்க வந் தன் நாயகனான பிரமனே பாடல் கேட்டுச் சரஸ்வதி தாமதிக் குளித்தது கண்டு இவள் கோபிக் பூவுலகத்தில் நாற்பத்தெட்டுப் புல சங்கப்பலகையில் இருந்து வருக !
ஒரு யாகத்தில் இவள் ஒருத்தியைத் தாரமாகப் பெற்றன வரலாறு.
ஒருமுறை இவளும் இலட்ச என்று பிரமனைக் கேட்கப் பி உருவெடுத்தனளாம்.
பிரமன் யாகம் செய்ய அ அரக்கனாகும்படி சபித்தவள். ச கொண்டவள்.
தன்னைப்படைத்த பிரமன் அங்ங்ணம் மோகவார்த்தைகளைக்
நீ பூசித்து அவனால் அறுபடுவாய்
சொல்லும் செய்திகள்.
இவளும் கங்கை, லஷ்மி கங்கையிடம் அதிக ஆசை கொன்
 
 

சரஸ்வதி
வாக்கப்பட்டுப் பின் அவனாலேயே மணக்கப்பட்டவள். வெள்ளை நிறமானவள். வெள்ளைநிற வஸ்திரம், கைகளில் த்தாணி தரித்து எழுந்தருளியிருப்பவள். இவளுக்குப்பிரம்ம தமும் கரங்களாகவும், எண்ணும் எழுத்தும் இதிகாசங்கள் கவும் திகழ்கின்றன. ரமனே தன்னைக்கூட வருவது கண்டு மான் வடிவோடு றுருக்கொண்டு துரத்தியதாகவும் பின் சிவன் கருணையால் தாகவும் புராணங்கள் கூறுகின்றன. யாகம் செய்தால் சரஸ்வதி எனும் பெயரிலான நதியாகிப் தவள். ாடு கங்கையில் குளிக்கச் சென்றபோது ஓர் கந்தர்வன் க, அவளை விட்டுச் சென்ற பிரமன் மற்றைய தேவியரோடு க, உன் குற்றமுணராது கோபித்ததால் அட்சரவடிவாகிய நீ வருருவாகத் தோன்றிச் சிவனைப்பணிந்து அவன் தரும ானச் சபிக்க அச்சாயமேற்று நடந்தவள். வரத்தாமதித்ததால் பிரமன் இடைக்குலக்கன்னிகை ண், அதனால் கோபங்கோண்டு தேவரை இவள் சபித்ததாய்
மியும் தம்முள் மாறு கொண்டு தங்களில் உயர்ந்தவள் யார் ரமன் இலட்சுமியே என்றதனால் நதியாய் இவள்
ந்த யாககலசத்துள் தோன்றியவள். புலத்திய முனிவரை த்காலத்தில் பூஜிக்கப்படுவதால் சாரதை எனவும் பெயர்
மோகித்துக் கூறிய வார்த்தைகளால் கோபங் கொண்டு கூறிய பிரம்மனின் ஐந்துமுகங்களுள் ஒன்றினைச் சிவனை எனச் சாபமிட்டவள். இவை அனைத்தும் சிவமகாபுராணம்
முதலியவர்களும் விஷ்ணுபத்தினிகள். ஒரு கால் விஷ்ணு ாடு அவளுடன் நகை முகமாயிருத்தலைக்கண்ட சரஸ்வதி,
ܓܒܝܒܒܒܐ
C183

Page 206
பொறாமை கொண்டு லஷ்மியை நோக்க லஷ்மி கங்கைக்குச்சார்பாயிருத்தலைக் கண்டு இவள் லஷ்மியைச் சேடியாகவும் நதியாகவும் போகச்சபித்தாள். கங்கை சரஸ்வதியை நதியுருவமாகவெனச் சபித்தாள். பின் ஸரஸ்வதி கங்கையைநோக்கி நீயும் நதியுருவமாய் உலகத்தவரது பாவத்தைச் சுமக்க என்றனள். லஷ்மி இதனால் தர்மஜ்வஜருக்குக் குமரியாகித் துளசியாகவும் பத்மாவதியெனும் நதியாகவும் பிரவகித்தாள். இலஷ்மி சங்கசூடனை மணந்தனள். கங்கை சந்தனுவை மணந்தனள். சரஸ்வதி பிரமபத்தினி ஆயினள். சரஸ்வதி பாரதவருஷத்தில் நதியாக வந்தபடியால் பாரதி என்றும், பிரமனுக்குப் பத்தினியாதலால் பிரம்மி என்றும், வாக்குகளுக்குத் தேவியாதலால் வாணி என்றும், அக்கினியைப்போல் பாவத்தைக் கொளுத்தி யாவருங்கான மஞ்சணிறம் பெற்றிருத்தலின் சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகின்றனள். இந்த மூன்று தேவியரும் பூலோகத்தில் கலி வருஷம் ஐயாயிரம் சென்றபின் தங்கள் பதமடைவர் என்று தேவி பாகவதத்தில் கூறப்படுகின்றது.
மகாசரஸ்வதி
மகாசரஸ்வதியின் சரிதம் மார்க்கண்டேய புராணத்தைச் சேர்ந்த தேவி மகாத்மியத்திலே விரிவாகக் கூறப்பெற்றிருக்கிறது. சும்ப நிசும்பர்களால் வருத்தமுற்ற தேவர்கள் வேண்டப், பார்வதியின் கோசத்தினின்றும் வெளிவந்த காரணத்தினால் கெளசீகி என்று அழைக்கப்படுகிறாள். மணி, சூலம், ஏறு, சங்கம், உலக்கை, சக்கரம், வில், அம்பு இவற்றைக் கரங்களில் தரிப்பவள். “கலீம்” பீஜரூபிணி
மேகத்தினின்று வெளிவரும் சந்திரனைப் போன்ற ஒளியினள். தன் இசையால் சும்பநிசும்பர்களைக் கவர்ந்து தன்னை அடைவதற்காப் போரிடச் செய்தவள். தன் ஓங்கார சத்தத்தினால் தூம்ரலோசனை பஸ்பமாக்கியவள்.
பிரம்மசக்தி சரஸ்வதி வித்தைகளின் அதிதேவதையான சரஸ்வதி தேவி பிரம்மனின் சக்தியாவாள். இந்தச் சரஸ்வதி பற்றித் தேவி மகாத்மயிம் ப்ராதரனி கரவிறன்யத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதிசக்தி முழுமையான சத்வகுணம் கொண்டு சரஸ்வதியின்
C80

ரூபம் பெற்றவளாம். அக்கமாலை, அங்குசம், வீணை, புத்தகம் ஏந்திய நான்கு கரங்களுடன் விளங்குபவள் இவள். மகாவித்யா, மகாவாணி, பாரதி, வாக்சரஸ்வதி, சூரியா, ப்ராம்பூரீ, காமதேனு, பிஜகர்பதீஸ்வரி எனப் பல பெயர் கொண்டவள் இவள்.
கவிதை, சாஸ்திரம், கலை, சங்கீதம் போன்ற அனைத்தையும் அளிப்பவள். சப்த பிரபஞ்சத்தின் ஆதாரமாய் உள்ளவள். 51 அட்சரருபிணியாகவும் விளங்குகின்றாள்.
உபய பாரதி. (பூமியில் அன்னை சரஸ்வதியின் அவதாரம்)
ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரம்மதேவருடைய சந்நிதியில் முனிவர்கள் ஒன்று கூடி அவரவர் அத்யனம் செய்த வேதப் பகுதிகளைக் கூறிப் பிரம்ம தேவரை மகிழ்வித்தனர். அப்போது கோபத்தின் உருவமான துர்வாச மகரிசிதானும் வேதத்தைக் கூறினார். அப்போது ஓரிடத்தில் ஸ்வரம் தவறியது. இதைக்கண்டு பக்கத்திலிருந்த சரஸ்வதிதேவி சிரித்தாள். அதனால் கோபமுற்றதுர்வாசர்"சரஸ்வதி நீமனுசியாகப் பிறப்பாய் எனச் சாபமிட்டார்”அச்சாபத்தின் காரணமாக அன்னை சரஸ்வதி பூலோகத்தில் அவதரித்தாள். இவள் ஹிமமித்திரரின் புத்திரரான விச்வரூபரை (மண்டன மிச்சரை) மணந்தாள். இவளே மண்டனமிச்சரருக்கும். சங்கர பகவத்பாதருக்கும் நடந்த வாதத்தில் சாட்சியாக வரிக்கப்பட்டாள். மண்டனர் சங்கரரிடம தோற்றுப் போனபின் இவள் தன்னையும் சங்கரர் ஜெயித்தால்தான் மண்டனரை ஜெயித்ததாக உபய பாரதியுடனும் வாதிட இசைந்தார்.
பதினேழுதினங்கள் நடந்த வாதத்தில் இவள் காமசாஸ்திரத்தை வாதிட முனைய, சங்கரர் அவ்விடயத்தை வாதிடத் தனக்கு ஒருமாதகாலம் அவகாசம் கேட்டுப்பெற்று அமருமகன் எனும் அரசனின் சரீரத்தில் புகுந்து பின் அவளுடன் வாதிட வந்தார்.
அவரைக்கண்டு நீங்கள் சதாசிவன் எனக்கூறிப் பாரதி மறையச் சங்கரர் அவளை யோக சக்தியினால் கண்டு தாயே! சரஸ்வதி தேவியே ஆன தாங்கள் நான் ஏற்படுத்தும் சிருங்கேரியில் சாரதா எனும் பெயருடனும், காஞ்சியில் காமகோடி எனும் பெயருடனும் சாந்நித்தியம் பெற வேண்டுமெனப் பெயர் பெற்றார்.
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 207
சரஸ்வதியின்அருள்பெற்றஅடியர்.
ஊமைப்பிள்ளையாகப் பிறந்து முருகன் அருளால் அரியவரம் பெற்றுப் பல அருள் நூல்களை இயற்றிய பூரீகுமரகுருபர சுவாமிகள் காசியில் வசித்த முஸ்லிம் மன்னரை நேரில் சந்தித்து அளவளாவி, இந்து சமுதாயத்தை நிலைநிறுத்த விரும்பி வட இந்திய பாஷைகளைக் கற்கக் கருதினார். அன்னை சரஸ்வதியைப் போற்றிச் சகலகலா வல்லி மாலையை இவர் பாட, அம்மொழிகள் இவருக்கு இயல்பாயின. அதனால் அம்மன்னனிடம் பேசிக் காசியில் ஒரு மடத்தினை ஸ்தாபித்தார்.
அன்னை சரஸ்வதி அருளும்
1. அக்கர இலக்கணம் 2. இலிகிதம் 3. கணிதம் 4. வேதம் 5. புராணம் 6. வியாகரணம் 7. நீதி சாஸ்திரம் 8. சோதிட சாஸ்திரம் 9. தரும சாஸ்திரம் 10. யோக சாஸ்திரம் 11. மந்திர சாஸ்திரம் 12. சகுன சாஸ்திரம் 13. சிற்ப சாஸ்திரம் 14. வைத்திய சாஸ்திரம் 15. உருவ சாஸ்திரம் 16. இதிகாசம் 17. காவியம் 18. அலங்காரம் 19. மதுரபாடனம் 20. நாடகம் 21 நிருத்தம் 22. சக்தபிரமம் 23. 6,60)600া 24. வேணு 25. மிருதங்கம் 26. தாளம் 27. அத்திர பரீஷை 28. கனக பரீஷை 29. இரத பரீஷை 30. கஜபரீஷை 31 அசுவ பரீஷை 32. இரத்தின பரீஷை
மயூர மங்கலம்

தேவி பாகவதத்தில் சரஸ்வதி
மூலப் பிரகிருதியான பராசக்தியிடமிருந்து தோன்றிய ஐந்து பிரதான சக்திகளில் சரஸ்வதியும் ஒருவள் எனவும், அம் மூலப்பிரகிருதியில் இருந்து தோன்றிய ராதாதேவியின் சக்தியின் நாக்கு நுனியிலிருந்து வெண்ணிறம் கொண்டவளும், வெண்ணாடை தரித்தவளுமான இச் சரஸ்வதி தோன்றினாள் எனவும், இவள் படைத்தற் கடவுளான பிரம்மனுக்குச் சக்தியாகக் கொடுக்கப்பட்டாள் எனத் தேவி பாகவதம் கூறுகின்றது.
அறுபத்து நான்கு கலைகள்
33. பூபரீஷை 34. சங்கிராம இலக்கணம் 35. மல்யத்தம் 36. ஆகருஷணம் 37. உச்சாடனம் 38. வித்துவேஷணம் 39. மதன சாஸ்திரம் 40. மோகனம் 41. வசீகரணம் 42. இரசவாதம் 43. காந்தர்வவாதம் 44. பைபீலவாகம் 45. கெளத்துகவாதம் 46. தாது வாதம் 47. காருடம் 48. நாட்டம் 49. முட்டி 50. ஆகாயப்பிரவேசம் 51. ஆகாயமனம் 52. பாகாயப் பிரவேசம் 53. அதிரிச்சயம் 54. இந்திர ஜாலம் 55. மகேந்திர ஜாலம் 56. அக்கினித்தம்பம் 57. ஜலஸ்தம்பம் 58. வாயுத் தம்பம் 59. திட்டித் தம்பம் 60. வாக்குத் தம்பம் 61. சுக்கிலத் தம்பம் 62. கன்னத்தம்பம் 63. கட்கத்தம்பம் 64. அவத்தைப் பிரயோகம்.

Page 208

lyooɓ sẽitetųoffs
LaĚơı (osi
யூரபதி ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ரும்பாபிஷேக் பவர்-2000

Page 209
மயூரமங்கம்
 

ஒன்று ஓதுதியா மேடு பி

Page 210

gooo uusunumop @o gửi
wop ums#gs &#-as gì
மயூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 211
மயூரமங்கலம்
 

goog) ($rsoplitus sĩ
秘必
*
微劑%*
卧窥,然褶鳃就阶修
§. 8 kg%多km%
*)%*鯊影 o No.2,;心
*E?~--~姆é劑
恐移怨》*** fr〜
į
goɖɔ ŋmɔɑoguro ĝis
X☆腿踢
3
89

Page 212


Page 213
نسا
ത്ത
pipun
谜
O
防
O
d
O
概要
O
D
d
(O)
V
لا
w
 
 

ܚܐ
m
تعتختخ
&ت
پشتنb
DEOEOESOEK

Page 214


Page 215
போக மோக்ஷப் பிரதாயி
முத்தியின்பத்தையும் ஒருசேர வழ பேறுகளைப் பெறுதற்கேற்ற விரத
憩 龚 翡
R 33 கே { كړه؟ -Sబ్దసోడ్ల ജ്
ペ豪。ヘ
d
புரட்டாதி வளர்பிறை இருபத்தொரு நாட்கள் கடைப்பிடி பூஜை செய்தது போல் பெண்கள் நூலில் இருபத்தொரு முடிச்சிட்டு திதிகளில் பூஜை செய்து இருபத்ே விழித்திருந்து அந்நூலை எடுத்து நீராடி புனப்பூஜை செய்து அந்நீன அபிஷேகம் செய்து கொள்ளுதல்
t
数
Za
S
கட்டிக் கொள்ளப்பட்ட ரக்ஷாபந்த ரக்ஷாபந்தனம்:- இது தசமி
கட்டிக்கொள்வதாம். தோரகபந்தனம் :- இதன் இருபத்தொரிழையில் இருபத்தொ
இருபத்தொராவது நாள் கட்டிக் ெ “ஐந்து மாதத்திற்கு மேல் பெற்ற பெண்களும் இருபத்தொரு அம்முறை வந்தபின் அமாவாசை மூன்று நாட்களோ அல்லது அ முடிச்சிட்ப்பட்ட கயிற்றை இடதுபுய ஆண்களும் இவ்விரதத்தைப் பின்
புரட்டாதி மாத சுக்லபக் அநுஷ்டிக்கப்படும் இந்த அற்பு
 
 
 

தி விரதங்கள்
னியாகிய அம்பிகை இகலோக இன்பங்களையும் ஈற்றில் ங்கக் கூடியவள் என்பதால் அவளை ஆராதித்து அத்தகைய ங்கள் பற்றி இங்க எடுத்துரைக்கப்படுகின்றன.
தார கெளரி விரதம் நவமி தொடக்கம் ஐப்பசி தீபாவளி அமாவாசைவரை க்கப்படும். மண்ணினால் செய்யப்பட்ட லிங்கத்தை அம்பாள் செய்தல் வேண்டும். இருபத்தொரு இழைகள் கொண்ட கும்பத்தின் மேல் வைத்துப் பூஜை செய்து இருபத்தொரு தாராவது திதியான அமாவாசைத் திதியன்று இரவில் கண் க் கட்டிக் கொண்டு மறுநாட்காலை சூர்யோதயத்திற்கு முன் ரை குரு மூலம் மக்கள் புரோகூழித்து கொள்ளுதல் அல்லது வேண்டும். பின் பிரசாதம் பெற்றுக் கொண்டு முதல் நாளில் னத்தை அவிழ்த்தல் வேண்டும்.
திதியன்று விரதமிருப்பதற்கு மக்கள் சங்கற்பித்துக்
கருத்து மந்திரக் கயிற்றைக் கட்டிக் கொள்ளுதல். ரு முடிச்சிடப்பட்ட கயிற்றை அமாவாசை திதியுள்ள இரவில் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணியாக இல்லாத பெண்களும், மாதவிலக்கு நீங்கப் நாட்களும் விரதமிருக்கலாம். மற்றப்பெண்கள் மாதவிலக்கு த் திதிக்கு முன்னுள்ள ஒன்பது நாட்களோ, ஏழு நாட்களோ, ன்றாவதோ இவ்விரதத்தை அனுஷ்டித்து இருபத்தொரு பத்திலோ அல்லது இடதுகைக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். பற்றுவது தவறாகாது.
வராத்திரி விரதம் கூடிப் பிரதமை முதல் நவமியீறாகவரும் ஒன்பது நாட்கள் தமான விரதம் தேவி விரதங்களுட் சிறந்த ஒன்றாகும்.

Page 216
கந்தபுராணத்தில் இதன் மகிமை பேசப்படுகிறது. சூதமுனிவரால் ஏனைய முனிவர்களுக்கு இந்த விரத கதை சொல்லப்படுகிறது. அமாவாசைத் தொடர்பின்றி அதிகாலையில் பிரதமை வியாபித் திருக்கும் நாளே நவராத்திரி ஆரம்ப தினமாகும். மறுநாட்காலை பிரதமை அற்றுப் போய்விடுமாயின் முதல் நாளிலேயே கொள்ள வேண்டும். பிரதமை திதியில் தான் கும்பம் வைத்துப் பூஜை ஆரம்பிக்க வேண்டும்.
முதல் மூன்று நாட்களிலும் வீரத்தையும் தைரியத்தையும் வேண்டி துர்க்கையை - பராசக்தியை வழிபட வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலசுஷ்மியை வழிபட வேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.
ஒன்பது நாள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவுபடுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வெத் தேவியருக்கு எத்தனை நாட்கள் என்ற பிரச்சனை எழுவதுண்டு. அதற்கு வேறொரு விதியும் சொல்லப்பட்டிருக்கிறது. சரஸ்வதியை மூல நட்சத்திரத்தில் ஆவாஹனம் செய்து வழிபடத் தொடங்கித் திருவோண நட்சத்திரத்தில் உத்வாசனம் செய்யவேண்டும் அதனை மனத்திலிருத்திச் சரஸ்வதிக்குரிய நாட்களைத் தெரிவுசெய்தபின் ஏனைய நாட்களை உசிதப்படி துர்க்கா லக்ஷமிக்கு பிரித்துக் கொள்ளலாம்.
கோயில்களில் ஒரு புறத்திலே சந்திரகும்பம் தனியாக ஸ்தாபித்து சுற்றிலும் அங்குரார்ப்பணம் செய்து (நவதானியம் இட்டு முளைப்பாலிகை வைத்தல்) மண்டப நடுவிலே நவராத்திரி விசேஷ கும்பத்தை நவராத்திரி முதல் நாட் காலையில் அதாவது பிரதமைத் திதியில் முறைப்படி பூர்வாங்கக் கிரியைகளுடன் ஸ்தாபித்து ஆவாகனாதிஉபசார பூஜைகளும் செய்து விசேஷ அக்னி காரியம், பலிதானம் இவற்றுடன் சிறப்பான வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஒன்பதாம் நாள் இரவு விசேஷ பூஜை அக்னிகாரியம், பலிதானம் என்பன நிகழும் சில இடங்களில் மகிஷாசுரவதம் நடத்தப்படும். பத்தாம் நாட்காலையில் (விஜயதசமியன்று) கும்பத்தை உத்வாசனம் செய்வர். இதனைக் கும்பம் சரித்தல் என்று சொல்வர். அம்மன் ஆலயமானால் இக்கும்ப நீரை மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்வர். வேறு ஆலயங்களானால் தீர்த்தக்கிணற்றிலோ, ஆற்றிலோ, கடலிலோ ஊற்றி விடுவது வழக்கம்.

மகிஷாசுரவதம், வன்னி வாழை வெட்டுதல் என்பன புராணக்கதைகளை நினைவூட்டும் வகையில் நடத்தப்பெறும் நிகழ்ச்சிகளாம். மகிஷாசுரன் மட்டுமல்லாமல் பண்டாசுரன் மது கைடபர்கள், சும்பநிசும்பர்கள் முதலிய மற்றும் பல அசுரர்களை அம்பிகை கொன்றொழித்த கதைகள் தேவீபாகவதம், தேவி மஹாத்மியம் போன்ற நூல்களிலும் புராணங்களிலும் உரைக்கப் படுகின்றன. அவற்றை இங்கே விரிப்பதற்கில்லை.
வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மை எனப்படுகின்ற பல பதுமைகளை அழகாக அடுக்கி வைத்து அலங்கரித்து இக்கொலு அமைக்கப்படுகின்றது. 5, 7 என ஒற்றைப்படையாகப் படிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
கர்ம சகுனமாக கீழ் உள்ள படிகளில் உலக வாழ்க்கைக்கு தேவையபன பொருட்களை வைப்பார்கள். நடுபகுதியில் ராஜ ராணி, படைவீரர்கள், மக்கள் போன்ற பொம்மைகளை வைப்பர். மேற் பகுதியில் கலசமும், தெய்வங்களின் பொம்மையும் காணப்படும். இது சத்துவ குணத்தை குறிக்கும். சக்தியின் திருவருளைக்குறிப்பதே மேல் கலசம், கீழே உள்ள மூன்று குணங்களையும் கடந்த பிறகே சக்தியின் திருவருள் கிடைக்கும் என்பதை இந்த அமுதகலசம் உணர்த்துகிறது.
நவராத்திரியின் முதல் நாள் மகேஸ்வரியாக மது கைடபரை அழிக்க உருவம் எடுத்தாள். தேவியை அபயம், வரதம், புஸ்தகம், அட்சயமாலை இவற்றுடன் அலங்கரிப்பார்கள்.
இரண்டாம் நாள் கெளமாரியாக தேவி மகிக்ஷா சுரனின் சேனைகளை கொல்லப் புறப்பட்டாள். ராஜ ராஜேஸ்வரியாக கரும்பு, வில், மலரம்பு, பாசாங்குசம் ஆகியவற்றுடன் அலங்களிப்பார்கள்.
மூன்றாம் நாள் வராகியாக தேவியை சூலமும் கையுமாக எருமை மீதுவீற்றிப்பதாக அலங்கரிப்பார்கள். நான்காம் நாள் மகாலசுஷ்மியாகதுர்க்கையை ஜய துர்க்கையாக வழிபடுகின்றனர். துர்க்கை வெற்றிக் கோலத்தில் சிம்ம வாகனத்தில் அமர்ந்து, தேவர்களின் துதியை ஏற்றுக்கொள்வது போல காட்சி தருமாறு அலங்களிப்பர்.
ஐந்தாம் நாள் வைசுஷ்ணவியாக அமர்ந்த கோலத்தில் சும்பனின் தூதுவனாக, சுக்ரீவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருப்பதைப் போல அலங்காரம் செய்வார்கள்.
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 217
ஆறாம் நாள் ஐந்திரியாக தூம்பரலோசனை அழிப்பதற்காக சண்டிகாதேவியாக சர்ப்ப ஆசனத்தில் அமர்ந்து கையில் அட்சர மாலையும், கபாலமும், தாமரை மலரும், பொற்கலசமும் ஏந்திப் பிறை அணிந்த கோலத்தில் அலங்கரிப்பர்.
ஏழாம் நாள் பிராஹ்மியாக தேவி, சண்ட முண்டர்களை வதம் செய்து சந்தோகூடித்துடன் பொற்பீடத்தில் அமர்ந்து ஒருபாதத்தை கீழே தாமரை மலரில் ஊன்றி, வீணை வாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் காட்சி தருமாறு அலங்களிப்பர். துர்க்கையை சாம்பவி என்றும் சொல்லுவார்கள்.
எட்டாம் நாள் நாரஸிம்ஹியாக தேவி கருணை மிகுந்த முகத்துடன் கரும்பு, வில்லுடன் காட்சி தருகிறாள். தேவியை அவ்வாறே அலங்கரித்து துர்க்கா என்று அழைப்பர்.
ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தேவி கைகளில் வில், பாணம், அங்குசம், சூலம் இவற்றை ஏந்திய கோலத்துடன் சுபத்ரா தேவியாக காட்சி தருமாறு அலங்காரம் செய்வர்.
சிவனும், சக்தியும் கூடியிருப்பதால் எல்லா அனுக்கிரகமும் கிடைக்கும் வண்ணம் பத்தாம் நாள் சிவசக்தியாக அலங்கரிப்பர்.
வீட்டிலே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களிலும் விதவிதமான பட்சணங்களை நைவேத்தியம் செய்து பூஜித்தல் முறை, முக்கியமாக அவல், கடலைச் சுண்டல் என்பன நவராத்திரியில் அம்பிகைக்கான விசேஷ நிவேதனங்களாம். நாவற்பழம், கற்கண்டு முதலியனவும் வெற்றிலை, பாக்கு, பழவகை, தேங்காய் என்பனவும் படைக்கப்படும்.
நவராத்திரி ஒன்பது நாட்களும், ஒவ்வொரு வித மலரால் தேவிக்கு மாலையிடுவர். மல்லிகை, முல்லை, சம்பங்கி, ஜாதி, பாரியாதம், செம்பருத்தி, தாழம்பூ ரோஜா, தாமரை, என்றும் வில்வம், துளசி, மருகு, கதிர்பச்சை, விபூதிப்பச்சை, சந்தன இலை, தும்பை இலை, பன்னிர் இலை, மருக்கொழுந்து மாலை முதலியவற்றையும் சாற்றுவர்.
நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசி நூல் கொண்டு பழந்துணி தைப்பதும் கூடாது. புரட்டாதிச் சனி விரதம் இந்த நவராத்திரி நாளினுள் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தையும் கைக் கொள்ளலாம். எள்ளெண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.
மயூரமங்கலம்

நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜைமுடிந்தபின்பால்பழம், பலகாரம் என்பன சாப்பிட்டு நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜய தசமியன்று காலை எட்டரை மணிக்குமுன் பாரணைசெய்ய வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு (பகல் அன்னம்) கடைசி நாளில் பால்பழம் மட்டும் கொள்ளலாம்.
விஜயதசமியன்று காலை அறுசுவை உண்டி சமைத்து அதனை நிவேதித்து விசேஷ பூஜை செய்தபின் நாட்படிப்பு நாட்கருமங்களை ஆரம்பித்த பின் பாரணை செய்வதே முறை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து இவ்விரதம் அனுஷ்டித்த பின் விரதோத்யாபனம் செய்யலாம்.
வரலசுஷ்மீ விரதம் பவிஷ்யோத்தர புராணத்திலே சிறப்பித்துக் கூறப்படும் இந்த வரலஷ்மீ விரதம் ஆவணிமாத பெளர்ணமிக்கு முந்திய வெள்ளிக்கிழமையிலே அனுஷ்டிக்கப்பட வேண்டியது.
ஒரு சமயம் உமாதேவியார் சிவபெருமானை நோக்கி, ஜயனே பூவுலகில் சகலசெல்வ போகங்களையும் செளக்கியங்களையும் புத்திர சம்பத்தையும் வழங்கக் கூடிய விரதம் எது? என்று வினாவியபோது அவர் உமாதேவியாருக்கு இந்த விரத மகிமையைக் கூறினார். முன்புகுண்டினம் என்ற நாட்டிலே சாருமதி என்ற சுமங்கலிப் பெண் இருந்தாள். அவள் நல்ல தெய்வ பக்தியும் தூய்மையும் ஆசார அனுஷ்டானமும் உடையவளாக இருந்தாள். ஒருநாள் அவள் கனவிலே வரலசுஷ்மிதேவி தோன்றி இந்த விரதத்தை உபதேசித்து மறைந்தாள். அவளும் உடனே சகல பெண்களையும் அழைத்து இப்புதுமையைக் கூறினாள்.
குறித்த விரத நாளிலே சகல பெண்களுமாக நகர் முழுவதும் அலங்களித்துமுறைப்படி இவ்விரதமனுஷ்டித்து
வரலாயினர். என்றுமில்லாதவாறு அங்கு சகல செல்வமும் பொலிந்து விளங்கிற்று.
நன்கு தூய்மையாக்கி மாவிலை
தோரணங்களாலே அலங்கரித்த மண்டப நடுவிலே மேடையொன்றில் நெல், அரிசி முதலியவற்றை முறைப்படி பரப்பித் தாமரைக் கோலத்தை அதன் மேல் இட்டுக்

Page 218
கும்பத்தை அதன்மீது வைக்க வேண்டும். ஏனைய பூஜைகளுக்கு நீர் நிரப்பிய கும்பம் வைப்பது வழக்கம். ஆனால் வரலசுஷ்மீ விரத பூஜைக்குப் பச்சரிசியால் நிரப்பப்பட்ட கும்பத்தை வைக்க வேண்டும்.
நல்ல கழிநூலிலே மஞ்சள் தோய்த்து ஒன்பது இரவுகள் கொண்டதாக முறுக்கி எடுத்து ஒன்பது முடிச்சுக்கள் முடிந்து இந்தக் காப்பினைக் கும்பத்தில் வைத்துப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
வழக்கம்போல சங்கல்ப பூர்வமாக புண்யாகவாசன முதலிய பூர்வாங்க பூஜைகளுடன் விசேஷ உபசாரபூஜை, அங்கபூஜை முதலியன செய்து ஒன்பது நாமங்களால் நூலிலுள்ள ஒன்பது முடிச்சுக்களையும் பூஜித்து அதனை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். பொதுவாக விரதங்களுக்குக் காப்புக் கட்டும்போது ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடதுகையிலும் கட்டுவது வழக்கம் ஆனால் வரலசுஷ்மீ பூஜைக்கு மட்டும் இது பெண்களுக்குரிய விரதம் வலது கையிலேயே காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும். ஸ்லோகத்திலேயே இவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது. காப்பினைக் கையிலே கட்டும்போது சொலும் ஸ்லோகம் இது.
ஸர்வ மங்கல மாங்கல்யே ஸத்வப்ரிதா ப்ரனாஸினி தோரகம் ப்ரகிக்ருஹனாமிஸ்பிப்ரீதா பவ ஸர்வதா! பத்னாமிதகூறினேஹஸ்தே நவகுத்ரம் சுபப்ரதம் புத்ர பெளத்ராபி வருத்திம்ச ஸெளபாக்யம் தேஹிமேரேமே!
ஒன்பது முடிச்சுக்களுக்கும் உரிய நாமங்கள்
வருமாறு கமலா, ரமா,லோகமாதா, விஸ்வஜனனி,
மஹாலக்டிமீ, கூழிராப்திதநயா, விஸ்வஸாகூழினி, சந்த்ரஸஹோதரீ, ஹரிவல்லபா இவை ஒவ்வொன்றுக்கும் முன்னால் ஓங்காரமும் பின்னால் நம என்றும் சேர்த்துப் பூஜை செய்க.
விசேஷ நைவேத்தியமாக நெய்யுடன் கூடிய ஹவிஸ் (நெய்ச்சாதம்) சொல்லப்பட்டிருக்கின்றது வரலாக்ஷமி பூஜைக்குரிய விசேஷ அர்ச்சனைப் பொருள்
5.
உபவாசம் போன்று கடுமையான விதிமுறைகள் இந்த விரதத்துக்கில்லை. மத்தியானம் ஒரு நேரம் போசனம் செய்யலாம். இரவு பலகாரபட்சணங்கள் ஏதாவது உட்கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுஷ்டித்தபின் விரதோத்யாபனம் செய்யலாம்.

காரடை நோன்பு (காரடையா நோன்பு அல்லது காமாட்சி நோன்பு) பார்வதிதேவி ஒரு சமயம் காஞ்சியில் ஏகாம்பர நாதரைப் பூஜை செய்து சிவசக்தியிடையே பிரிவு நேராதிருக்க வேண்டுமெனப் பிரார்த்தித்தாள். அந்தத் தினத்தையே காமாட்சி நோன்பு என்கின்றனர்.
சத்தியவான் மனைவி சாவித்திரி காட்டில் இருக்கும் போது தனக்குக் கிடைத்த கார் அரிசியைக் கொண்டு அடைதட்டி வைத்து அம்பிகையைப் பிரார்த்தித்துக் கணவனின் உயிரை மீட்ட தினமே காரடை நோன்பு என்கிறார்கள் சிலர். (சாவித்திரி கணவனை மீட்டதினம் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமியில் என்று கூறி அதனைச் சாவித்திரி நோன்பு என அனுஷ்டிப்பதும் உண்டு).
மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் கொள்ளப்படும் விரதமான காரடையா நோன்பு சுமங்கலிப் பெண்களுக்குரியது. “மாசிக்கயிறு பாசி படியும்’ என்பது பழமொழி. சுமங்கலிகள் தமது திருமாங்கல்யக் கயிற்றினை மாற்றிப்புதிய கயிற்றினைக் கட்டிக் கொள்வர்.
இவ்விரத நாளில் பகல் முழுவதும் உபவாசமிருக்க வேண்டும். குத்துவிளக்கேற்றி வைத்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், அடை, வெண்ணெய் என்பவற்றை நிவேதனம் செய்து பூஜித்து “உருகாத வெண்ணெய்யும் ஒரடையும் வைத்து நோன்பு நோற்கிறேன். ஒருநாளும் என் கணவர் பிரியாமல் இருக்க வரம் அருள்வாய் என்று பிரார்த்திக்க வேண்டும். புதிய மாங்கல்யக் கயிற்றைப் பூஜையில் வைத்துப் பூஜித்த பின் அதனைக் கழுத்தில் கட்டிப்பழையதை நீக்க வேண்டும்.
சார் அரிசி எனப்படும் தவிட்டுப்பச்சரிசியை நீரில் நனைத்து, தேங்காய், உப்பு, சர்க்கரை என்பன சேர்த்து அரைத்து அடையாகத் தட்டி நீராவியில் வேகவைத்து எடுப்பதே காரடையாகும். துவரையும் சேர்த்து அரைக்க வேண்டுமெனச் சிலர் கூறுவர்.
இவற்றை ஆலம் இலையில் படைத்துப் பூஜை முடிவில் அடையும் வெண்ணெயும் மட்டும் உணவாக உண்டு மறு நாட்காலை பாரணை செய்ய வேண்டும். ஏனைய நாட்களில் கணவனை முதலில் உணவருந்தச் செய்யும் மனைவி இவ்விரத நாளில் மட்டும் முதலில் தான் உண்ண வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 219
கருடபஞ்சமி விரதம் (பணிகெளரீ விரதம் அல்லது நாகசதுர்த்தி)
நாகதோஷம் முதலிய பல்வேறு காரணங்களால் உரிய காலத்தில் திருமணம் நடைபெறாது பெருமூச்சுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கன்னியர்கள் நம்மிடையே ஏராளம். இவர்களது தோஷங்களை நீக்கி விரைவில் திருமணமாகி நல்வாழ்வு வாழ்வதற்கும் நன்மக்களைப் பெறுவதற்கும் ஒரு விரதத்தை வைத்திருக்கிறார்கள். அதுவே கருட பஞ்சமி விரதம்.
ஆவணி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதியிலே இந்த விரதம் அனுஷ்டிக்க வேண்டும். காஸ்யப மகரிஷியின் புதல்வரான கருடரென்பார் தனது தாயினுடைய அடிமைத் தளையை நீக்குதற்காக மிகுந்த சிரமத்துடன் தேவலோகத்திலிருந்து அமிர்தகலசம் கொண்டு வந்த நாள்தான் இந்தக் கருட பஞ்சமி, பிரமாண்ட புராணத்திலே பிரம்மதேவர் நாரதருக்கு இவ்விரத மகிமையை உரைத்ததாக சூதபுராணிகர் செளனகர் முதலிய முனிவர்களுக்குக் கூறுகிறார். கருடரின் சிற்றன்னை பிள்ளைகளான நாகங்களுக்காகவே அமிர்தம் கொண்டு வந்தார் என்பதால் நாகசதுர்த்தி என்றும் சொல்லப்படுகிறது.
சதுரமான மண்டபத்திலே பஞ்ச வர்ணக் கோலங்கள் இட்டு வெள்ளியினால் அல்லது செப்பினால் நாகப் பிரதிமையொன்று செய்து அரிசிபரப்பி அதன் மீது வைத்து நாக படத்தின் மத்தியில் மஞ்சளினால் கெளரீ பிம்பம் செய்து ஸ்தாபித்து விரத சங்கல்பம் செய்து ஆவாஹனாதிஉபசார பூஜைகள் செய்யவேண்டும். பத்து இழைகள் கொண்ட பட்டுநூலில் பத்து முடிச்சுகளிட்டு குங்குமம் பூசி அங்கு வைத்துப் பூஜிக்க வேண்டும்.
பூஜை முடிவில் “பத்து முடிச்சுகளுடையதும் குங்குமம் பூசப்பட்டதும் மங்களகரமானதும், உனக்கு மகிழ்ச்சி தரக் கூடியதுமான இந்தக் காப்பினைக் கட்டுகிறேன். நல்லருள் புரிவாய் தேவி” என்று பிரார்த்தித்து (தசகிரந்தி சமாயுக்தம் குங்குமாக்தம் ஸ9தோரகம, கரேபத்னாமிவரதே தவப் ரீகரம் சுபம்") மணிக்கட்டிலே காப்பினைக் கட்டிக்கொள்ள வேண்டும் பத்து வருடம் இவ்விதம்' கைக்கொண்டபின் விரதோத்யாபனம் செய்யலாம்.
இதற்கு முதல்நாளாகிய சதுர்த்தியினை நாகசதுர்த்தி என்று கொண்டாடுவதுண்டு. நாகப் பிரதிஷ்டை, நாகபூஜை, நாகப்புற்றுக்குப் பால் வார்த்தல் முதலியவற்றை இந்நாளில் செய்வர் வாசல்
மயூரமங்கலம்

நிலையின் இருபுறமும் பாம்புப் படங்களை குங்குமத்தால் வரைவர். புற்றுமண்ணுடன் அட்சதை சேர்த்து மூத்த சகோதரர்களைக் கொண்டு ஆசி பெறுவர்.
சாவித்திரி விரதம்
சாவித்திரி என்னும் புண்ணியவதிதன்கணவன் சத்யவானை இயமனிடமிருந்து மீளப் பெற்றது இந்தச் சாவித்திரி விரதமே, பிரபத்தினியாகிய சாவித்திரியை நோக்கிக் கைக் கொள்ளப்படுவது இது. மாங்கல்ய விருத்தியையும், புத்திர சம்பத்தையும் வழங்கிக் குடும்ப நலத்திற்கு வளம் சேர்க்கும் இந்த விரதம் ஆவணி மாதப் பெளர்ணமி தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது. பெண்களுக்கேற்ற விரதம் இது.
சாவித்திரீ கெளரீ விரதம் மார்க்கண்டேய முனிவர் தர்மநந்தனருக்கு உபதேசித்த விரதம் இது தர்மவர்மன் என்கிற மன்னன் மனைவி தமது புரோகிதராகிய சோமயாஜியினுடைய தர்மபத்தினி இச் சாவித்திரீ கெளரீ விரதமனுஷ்டித்து வந்தது கண்டு அந்த விரத மகிமையைப் பரீஷித்துப் பார்த்து அதிசயித்து தானும் அதனைக் கைக்கொண்டு பெரும்பேறடைந்தாள்.
தைமாதம் இரண்டாம் நாள் அதாவது தைப்பொங்கலுக்கு மறுநாள்.ஆரம்பித்து ஒன்பது நாட்கள் தொடர்ந்து சாவித்திரீ கெளரீதேவியை வழிபட்டுப்பூஜை செய்து ஒன்பது இழைகளும் ஒன்பது முடிச்சும் கொண்ட நூலினைப் பூஜையில் வைத்திருந்து ஒன்பதாம் நாள் அதனை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மத்தியானம் ஒரு நேரம் அன்னம் மட்டும் உண்பது நன்று இயலாதவர்கள் இரவில் பால்பழம் அல்லது பலகாரம் சேர்க்கலாம்.
ஸ்கந்த புராணத்தில் கெளரீ காண்டத்திலே சொல்லப்பட்டிருக்கும் இந்த விரதம் பெண்களுக்குரிய குடும்ப சுகத்தையும் புத்திர லாபத்தையும் தரவல்லது, ஒன்பது வருடங்கள் கைக் கொண்டபின் விரதோத்யாபனம் செய்யலாம்.
மங்கள கெளரீ விரதம் மங்கள கெளரி விரதம் பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டிய விரதம், திருமணமான பெண்கள் மாங்கல்ய பலத்திற்காகச் செய்யும் விரத பூஜையே மங்கள கெளரி விரத பூஜை

Page 220
அதிகாலையில் குத்து விளக்கில் பதினாறு திரிகள் இட்டு, நெய்விட்டுக் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். தட்டில் பூஜை சாமான்களுடன், ரவிக்கைத் துண்டு, மஞ்சள், குங்குமம், அரிசி, வெல்லம், தாம்பூலம், கடலை தட்சிணைப் பணம் ஆகியவற்றை வைத்துப் பூஜைகள் செய்ய வேண்டும்.
இந்த மங்கள கெளரி விரதத்தைத் திருமணமான முதல் ஆண்டு தன்தாய் வீட்டிலும், மற்ற நான்கு ஆண்டுகள் கணவன் வீட்டிலும் செய்ய வேண்டும். ஆக ஐந்து ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் நீண்ட ஆயுளுடன் மஞ்சள் குங்குமம் மாங்கல்யத்தோடு மங்களகரமான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.
ஸ்வர்ண கெளரீ விரதம்
விரைவில் திருமணமாக வேண்டியும் நல்ல கணவனை வேண்டியும், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு வேண்டியும் பெண்கள் அம்பிகையை வழிபட்டுக் கொள்ளும் விரதம் இது. ருக்மணி இந்த விரதம் இருந்து பகவான் பூரீ கிருஷ்ணமூர்த்தியை அடைந்தாள். ஸ்கந்தபுராணத்தில் இவ்விரத மகிமை சொல்லப்பட்டுள்ளது.
ஆவணி மாதம் வளர்பிறைத் திருதியைத் தினத்தில் அதாவது விநாயக சதுர்த்திக்கு முதல் நாளில் இவ்விரதமிருக்க வேண்டும். கும்பத்திலே ஸ்வர்ணகெளரியை ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜை நிகழ்த்த வேண்டும். பதினாறு இழை கொண்ட பட்டு நூலில் பதினாறு முடிச்சு இட்டு அந்தச் சரட்டினையும் கும்பத்தில் வைத்துப் பூஜித்த பின் வலது கையிலே அதனைக் கட்டிக் கொள்ள வேண்டும்.
பதினாறு வருடம் அல்லது எட்டு வருடம் இந்த விரதத்தைக் கைக்கொண்ட பின் விரதோத்யாபனம் செய்யலாம்.
யமுனா விரத பூஜை
இந்த யமுனா பூஜை பெண்கள் மட்டுமே செய்யும் பூஜை, இந்தப்பூஜை செய்யும் பெண்கள் தொடர்ந்துரிஷி பஞ்சமி என்ற பூஜையையும் செய்ய வேண்டும். இந்த இரண்டு பூஜைகளில் எந்த ஒரு பூஜையையும் தனியாகச் செய்யக் கூடாது என்பது சம்பிரதாயம்.
ஒவ்வொரு வருஷமும் புரட்டாசி மாதம் சுக்ல பகூடியஞ்சமி திதியன்று நடுப்பகலில் இந்த யமுனா விரத பூஜையைச் செய்யவேண்டும். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன்பு நாயுருவி வேரால் பல்துலக்க வேண்டும்.

குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விட்டு சிவப்பு நிற உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
உடன் பஞ்சகவ்வியம் சிறிது சாப்பிட வேண்டும். பஞ்ச கவ்வியம் என்பது பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுஞ்சாணம், பசு மூத்திரம் ஆகியவற்றின் கலவை, தயங்குபவர்கள் பேருக்காகவாவது நாக்கில் இவற்றைத் தொட்டு வைத்துக் கொள்ளுகிறார்கள்.
பூஜை அறையிலோ நடுக் கூடத்திலோ மேடை அமைத்து ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி அஷ்டகள பத்மம் எனும் தாமரை மலரின் படத்தை வரைந்து அதன் மீது கலசத்தை அமைக்க வேண்டும்.
எந்த ஒரு விரத பூசைகளுக்கும் பயன் படுத்தப்படும் விளக்குகள் பித்தளை அல்லது செம்பு பாத்திரமாகவே இருக்க வேண்டும்.
எந்த ஒரு விரத பூஜைக்கும் பயன்படுத்தப்படும் கலசம்பித்தளை அல்லது செம்புபாத்திரமாகவே இருக்க வேண்டும். அதேபோல இந்த யமுனா விரத பூஜைக்குப் பித்தளை அல்லது செம்புப் பாத்திரத்தில் கலசம் வைத்து மேல்பகுதியில் தேங்காய் வைத்துச் சுற்றி மாவிலைகளை வைத்து அமைக்க வேண்டும்.
கலசத்தின் உள்ளே தண்ணிரோ அல்லது பச்சரிசியோ நிரப்பி வைக்கலாம்.
கலசச் செம்பிற்குச் சந்தனம் மற்றும் குங்குமத்தால் திலகம் இடவேண்டும்.
பிறகு தேங்காய், பழம், கற்பூரம், தாம்பூலம் இவற்றுடன் சித்திரான்னங்கள் செய்து வைத்து ராஜராஜேஸ்வரியின் படத்தைப் பிண்னணியில் வைத்து, நெய் விளக்கு ஏற்றி தேவியின் தோத்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும்.
இந்த பூஜையைக் கன்னிப்பெண்களும் சுமங்கலிப் பெண்களும் செய்யலாம். விதவைகளோ, ஆண்களோ இந்த விரத பூஜையை மேற்கொள்ள முடியாது.
இந்த யமுனா விரத பூஜையைச் செய்யும் எந்தப் பெண்ணிற்கும் ருதுவான காலத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி மாங்கல்ய பலம் ஏற்படும்.
திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும். நவக்கிரக நாயகியான ராஜராஜேஸ்வரிகிரக தோஷங்களை நீக்கி, பாவங்களைப் போக்கி சகல சௌபாக்கியங்களையும் அருள்வாள்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேகம்லர் - 2000

Page 221
ரிஷி பஞ்சமி விரத பூஜை யமுனா விரத பூஜையை நடுப் பகலில் செய்த பெண்கள் இரவில் ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்ய வேண்டும்.
யமுனா விரத பூஜைக்கு பயன்படுத்திய அதே கலசத்தைத் தொடர்ந்து இதற்கும் பயன்படுத்தலாம். ஆனால் நிவேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்து விடவேண்டும். புதிதாக மலர்ச் சரங்கள் சார்த்திக் கலசத்தை சப்தரிஷிகளாகப் பாவித்து இந்தப் பூஜை செய்யப்பட வேண்டும்.
பகலில் நிவேதனம் செய்த சித்ரான்னங்களைப் பிறருக்குப் பிரசாதமாக அளித்துவிட்டு உபவாசமாகவே இருந்து இரவில் ரிஷிபஞ்சமி விரத பூஜை செய்ய வேண்டும்.
ரிஷி பஞ்சமி விரத பூஜைக்கு நிவேதனமாக எல்லாவகைக் கனிகளும், தேன், பசும்பால் ஆகியவற்றையும் வைக்க வேண்டும்.
ரிஷி பஞ்சமி விரத பூஜையை சப்த ரிஷி விரத பூஜை என்றும் சொல்வதுண்டு. இதில் காலையிலிருந்து உபவாசமிருக்கும் பெண்கள், பகலில் யமுனா பூஜையில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பூசையை முதலில் செய்துவிட வேண்டும். பிறகு ராஜ ராஜேஸ்வரி தோத்திரத்தையும், சிவ தோத்திரங்களையும் சொல்லி, தூபதிபம் காட்டி, நிவேதனம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இந்தப் பூசை செய்யும் மந்திரங்களைத் தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று அப்படியே செய்யலாம்.
இப்படி யமுனா விரதபூசையையும், ரிஷி பஞ்சமி விரத பூசையையும் முறைப்படி கடைப்பிடிப்பவர்களுக்கு, முன் ஜென்ம, இந்த ஜென்மப் பாவங்கள் நீக்கி மறு ஜென்மத்தில் சகல செளபாக்கியங்களுடன் வாழ்க்கை அமையும் என்பது ரிஷி பஞ்சுமி மூலம் எனும் நூலில் கூறப்பட்டிருக்கிறது.
சரஸ்வதி விரத பூஜை வாரம் ஒருமுறை அந்த வெள்ளைத் தாமரை மலர்மீது வீற்றிருக்கும் அன்னையைப் பூசிப்பதால் கல்வி, அறிவாற்றல், ஞானம் இவற்றைப் பெறமுடியும். கலைமகள் அருள் கிடைத்தால் அலைமகள், மலைமகள் அருள் விரைவில் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு புதன் கிழமை காலையிலும் குளித்து ஆசார அனுஷ்
tegy totúakajúb

டானங்களை முடித்துவிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கி ஆசி பெறவேண்டும்.
அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்றோ, வீட்டிலுள்ள கலைமகள் எனும் சரஸ்வதி தேவியின் படத்தின் முன்னின்றோ தேங்காய், பழம், அவல், பொரிகடலை,வெல்லம் ஆகியவற்றை நிவேதனப் பொருள்களாக வைத்துத் தூப தீபம் காட்டி, மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். வெண் தாமரை மலரை அர்ச்சனை செய்து வழிபட்டுப் போற்ற வேண்டும்.
மனு தர்ம சாஸ்த்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துப் பின்வருமாறு.
இந்த விரதத்தை ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஐம்பத்தி இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் கடைப்பிடித்து விரதம் இருந்தால், சரஸ்வதியின் அருள்பெற்று கல்வியிலும் கலைகளிலும், புகழ்பெற்று முடிவில் பிரம்ம லோகத்தை அடைவர். இது மனுதர்ம சாஸ்திர நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தாகும்.
மகாலட்சுமி விரத பூஜை பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் பாதத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி தேவியை வேண்டி இருக்கும் விரதமிது.
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, காலை குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து, பட்டு தரித்து, விநாயகப் பெருமானை வணங்க வேண்டும்.
அனந்த பத்மநாபனை வணங்க வேண்டும். மகாலட்சுமி தேவி படத்திற்கு மல்லிகை முல்லைச் சரங்களால் ஆன மலர்களை மாலையாகப் போட்டு அலங்கரிக்க வேண்டும்.
தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் அவல் வெல்லம், கற்கண்டு ஆகியவற்றை நிவேதனப் பொருளாக வைதுப் பொற்காசுகள் அல்லது வெள்ளி ரூபாய்கள் அல்லது நடைமுறையிலுள்ள நாணயங்களை தட்டில் வைக்க வேண்டும்.
மகாலட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி மூன்று முறை வணங்க வேண்டும். இப்படி இருபத்தொரு வெள்ளிக் கிழமை விரதமிருந்து அலைமகளை வணங்கினால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என அஷ்டலட்சுமி அருள் நூலில் கூறப்பட்டுள்ளது.

Page 222
பராசக்தி விரத பூஜை
மலைமகள் எனும் பார்வதி தேவியை, பராசக்தியை வழிபடும் விரதமாகும் இது. இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் வரும் கடைசிச் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள வேண்டும். அன்று அதிகாலை குளித்து, ஆசார அனுஷ்டானங்களை முடித்துவிட வேண்டும்.
விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு அலங்கரிக்கப்பட்ட மேடையில் பார்வதி தேவி அல்லது பராசக்தியின் படத்தை வைத்து, செந்நிற மலர்களால் அலங்கரித்து, இளநீர் கற்கண்டு கலந்த பால், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக வைத்து, தூப தீப ஆராதனை காட்டி வணங்க வேண்டும்.
அன்று பகல் உணவு மட்டுமே உண்டுவிட்டு உபவாசமிருக்க வேண்டும். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.
இதனால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கி குடும்பல நலம் ஏற்படும். பெண்களுக்கு மாங்கல்யபலம் கிடைக்கும். மகத்தான சக்தி வாய்ந்த விரதம் இதுவெனத் தட்சாசுரசம்ஹாரம் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.
ரோகிணி விரதம் திங்கட்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் அது வளர்பிறையாக இருந்தால், அன்று அஷ்டமி திதி இருந்தால் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இதனால் இலட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.
லசுஷ்மி குபேர விரத பூஜை
லட்சுமி கடாட்சமும் குபேரகடாட்சமும் பெறுவதற்கும், நீண்ட காலத் தரித்திரம் நீங்குவதற்கும், இந்த லட்சுமி குபேர விரத பூசை செய்யப்படுகிறது.
ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை காலை குளித்து, மகாலட்சுமி மகாவிஷ்ணு கோவிலுக்குச் சென்று தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சித்ரான்னங்கள், இளநீர், கனிவகைகள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை நிவேதனமாக வைத்து இந்த விரதத்தைச் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் அடுத்த பிறவியில் குபேரர்களாகச் செல்வச் செழிப்பு அடைகிறார்கள் என்கிறது கந்தபுராணம்.

சப்தமி விரதம் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்தால் லக்ஷ்மிகபாக்ஷம்ஏற்படும்என்றுவிஷ்ணுபுராணம்கூறுகிறது. இதை மாசிமாதம் வரும் சுத்த பஞ்சமியன்று ஆரம்பித்து
ம்பத்தியிரண்டு நாட்கள் ப்பிடிக்க வேண்டுப்
உமா சுக்கிரவார விரதம் (கெளரி வெள்ளி விரதம்)
பார்வதி தேவியைக் குறித்து வெள்ளிக்கிழமை தோறும் அநுஷ்டிக்கப்படும் இந்த விரதம் சித்திரை மாத வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கப்பட வேண்டும் பகல் ஒரு பொழுது போசனம் செய்யலாம். இமைய மீன்றெடுத்தளித்தவள் விரதமிதிழைத்தோர் அமைய நல்கிய பெருவளந் துய்த்தனராகி உமைதரும்பெருங் கருணையா லருங்கதியுவந்தார் தமையெடுத்தெடுத்துணர்ந்துதியாருழைத் தருமே.
ஐப்பசி உத்தர விரதம் ஐப்பசி மாத உத்தர நட்சத்திரத்தில் கைக் கொள்ளப்படும் இந்தத் தேவி விரதத்துக்குப் பகல் ஒரு பொழுது போசனம் செய்தல் விதி.
பங்குனித் திங்கள் பங்குனி மாதம் வரும் திங்கட்கிழமைகளில் விரதமிருந்து பொங்கிப் படைத்தல் சிறப்பு.
ஆடிப்பூரம் அம்பிகை ருதுவாகிய நாள். விரதமிருந்து ருதுஷோபன விழா, ஊஞ்சல் காணுதல் சிறப்பு.
பங்குனி உத்தரம் அம்பிகை திருமணநாள். விரதமிருந்து தேவியைத் தியானித்தல் சிறப்பு
தை அமாவாசை அபிராமிப்பட்டருக்காக காதணியைக் கழற்றி பெளர்ணமியாகக் காட்டிய தினம். விரதமிருந்து அபிராமி அந்தாதி ஒதுதல் சிறப்பு
மயூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 223
渥兮
O
구
O
*司
KO)
Ο
Ο
"비 书
{
| F| sTË TIJ DI| s■] { 枪)
} |
]
同知的可 靛
"디" 引
]
]
(
?Fရှ်)F၍
白河
 
 
 
 

| [ 子:/1之子日子 啊
| [| || 《电 枪)
久F 祝
si [
}
*__L_」_L— 子日子/1之子日子:/1之子日子/1之日1,1之다. 枪)
日
4市
有时 的
(O)

Page 224


Page 225
மயூரமங்கலம்
வேதம் தோன்றிய பாரத நலிவடைய ஆரம்பிக்கும் பொழுது, செய்யத் தேர்ந்தெடுத்த இடம்தான் சற்றேறக்குறையப் பன்னிரண்டு நூ ஆர்யாம்பா தம்பதிகள் மக்கட் பேறி பாடுகிடக்க அவர்கள் கோரியது கிட் நட்சத்திரத்தில் சிவகுரு தம்பதிய சுகமளிக்கப்போகும் மழலைக்குச் நாட்டில் குழந்தைகள் பிறக்கும் ெ சூட்டுவார்கள். அதுபோலவே சங்க எண்ணிக்கை 5,2,1என்று வருவதா ஐந்தாவது திதியாகிய பஞ்சமியில் பி பொழுதொரு வண்ணமுமாகக் கு! இயல்புகளும் வளர்ந்தன.
ஒருசமயம் சிவகுரு வெளியூ அனைவரும் உண்பது அக்குடும்ப செய்வது. பால சங்கரருக்கு ஒரே பசி வேண்டும் என்ற உணர்வு சிறுவ6 திருவுருவங்களுக்கு மலர்தூவி ஒரு நேந்திர வாழைப் பழத்தையும் 6ை நிவேதயாமி கதலிபழம் நிவேதய மூடிக்கொண்டு தியானித்தது கு! திருவுருவமும் இணைந்து ஓர் பேரெ ஏற்றுக்கொண்டது. சிறுவன் கண் பழம் இருந்த இடமும் காலியாகவே மல்கியது. பிஞ்சு இதழ்கள் துடித் சங்கரக் குழந்தைக்கும் ஞானப்பால் தென்தமிழ். சங்கரரின் திருவாயிலி
 
 

SÜTGDGU நள் பெற்ற டியவர்கள்
ஆதிசங்கரர்
மண்ணிலே அந்த வேதம் திரித்துக்கூறப்பட்டு வேதநெறி பரிபூரணைப் பொருளாகிய இறைவன் தானே அவதாரம்
பூரணா நதி தீரத்திலுள்ள காலடி என்னும் திருத்தலம். ாற்றாண்டுகளுக்கு முன்னர் காலடியில் வாழ்ந்த சிவகுரு, ன்றி வருந்தித் திருச்சூரிலுள்ள வடக்குநாதரை வேண்டிப் ட்டியது. வைசாக மாதச் சுக்லபஞ்சமி ஆதிவாரம்புனர்வசு பினருக்கு அழகிய ஆண்மகவு பிறந்தது. உலகிற்கே சங்கரன்” என்று பெயரிட்டனர் பெற்றோர். மலையாள பாழுது உள்ள கிரக நிலையைப் பார்த்துத்தான் பெயர் ார் என்ற வடமொழிச் சொல்லிலுள்ள எழுத்துக்களுக்குரிய ல் முதல்பகூடித்தில் இரண்டாவது மாதமாகிய வைகாசியில் றந்ததைக் கொண்டு பெயரிட்டனர். நாளொருமேனியும் தந்தை சங்கரன் வளர்ந்தான். அவனுடன் சில அபூர்வ
பூர் சென்றிருந்தார். வீட்டிலே பூஜை முடிந்த பிறகுதான் வழக்கம். தந்தை வெளியூர் சென்றிருப்பதால் யார் பூஜை இறைவனுக்கு நிவேதனம் செய்து விட்டுத்தான் உண்ண ா மனதில் மேலோங்கியது. பூஜையறைக்குள் சென்று கிண்ணத்தில் தான் அருந்த வேண்டிய பாலையும், ஒரு பத்து, தந்தை வழக்கமாகக் கூறுவதுபோன்று, “கூrரம் மி என்று கூறிச் சின்னஞ்சிறிய தாமரைக் கண்களை ந்தை. இறைவனின் திருவுருவத்தோடு இறைவியின் ாளிதோன்றிமழலைச் சிறுவன் படைத்த நிவேதனங்களை விழித்துப் பார்த்தான். - கிண்ணத்தில் பாலும் இல்லை, இருந்தது. பசிமிகுந்த பாலகனின் கண்களில் கண்ணிர் நன. சீர்காழிக் குழவிக்குப் பால்ஊட்டிய பார்வதி தேவி ஊட்டினாள். சம்பந்தர் திருவாயிலிருந்து ஊற்றெடுத்தது நந்து ஊற்றெடுத்தது வடமொழி வெள்ளம்.
99

Page 226
அபாரமான மேதாவிலாசம் பொருந்திய சங்கரனின் மூன்றாவது வயதில் தந்தை சிவகுரு சிவகதியடைந்தார். ஐந்தாவது வயதில் உபநயனம் செய்து குருகுலம் சேர்ந்தார். எட்டாவது வயதில் குருகுலவாசம் முடிந்து வீடுதிரும்பித் தாய்க்குப் பணிவிடை செய்து கொண்டே தந்தை விட்டுச் சென்ற நூல்களில் தேர்ந்தார்.
குருகுல வாசத்தில் ஒரு நாள் சிறுவன் சங்கரன் பிகூைடி ஏற்பதற்காக ஒரு வீட்டு வாசலில் நின்றபொழுது திருவோட்டில் நெல்லிக் கனியோடு அவ்வீட்டுப் பெண்மனியின் கண்ணிர்த் திவலைகளும் விழுந்ததைக் கண்டதும் உள்ளம் நெகிழ்ந்து திருமகளிடம் அந்த வீட்டின் ஏழ்மை நீங்குமாறு பிரார்த்தித்துக் “கனகதாராஸ்தவம்’ என்ற பாடலைப் பாடத், தங்க நெல்லிக் காய்களே மழையாகப் பொழிந்தன. ‘ஸ்வர்ணத்துமனை என்று இன்றும் அந்த வீடு இருக்கிறது.
அந்தக் காலத்தில் காலடிக்கு அருகில் ஒடிய பூரணா நதிக்குச் சென்று ஒவ்வொருநாளும் நீராடுவது ஆர்யாம்மாவின் வழக்கம். அந்த நதி அவர்கள் இல்லத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருந்தது. ஆர்யாம்மாவிற்கு வயதாகிய காரணத்தால் ஒருநாள் நீராடச் செல்லும் பொழுது வழியில் மயங்கி விழுந்து 6LTsi. வெகுநேரமாகியும் அன்னை வீடு திரும்பாததால் சங்கரர் தேடிச் சென்றார். மயக்க நிலையிலுள்ள தாயை வீட்டிற்குக் கூட்டி வந்தார். நெடுந்துாரம் சென்று பூர்ணாநதியில் அன்னையால் நீராட முடியாத காரணத்தால் தனது வீட்டிற்கு அருகாமையிலேயே அந்நதியைத் தடம் மாறச் செய்து இறைவன் திருவருளால் வரவழைத்தார்.
இதற்கிடையில் உருவத்தால் சிறுவனாகவும் உள்ளத்தால் பெரியவனாகவும் உள்ள சங்கரருக்குத் துறவுபூணும் எண்ணம் மேலிட்டது. இதற்கு ஆர்யாம்பா சம்மதிக்க மாட்டார் என்பது அவருக்குத் தெரியும். அன்னையின் விருப்பத்திற்கு மாறாக நடக்க விரும்பாத ஐயன் தக்க தருணத்திற்குக் காத்திருந்தான்.
ஒருநாள் அந்த வேளை வந்தது. தாயுடன் நீராடச் சங்கரரும் சென்றார். தண்ணிரில் முழுகிய சங்கரரை ஒரு முதலை கெளவி இழுத்தது. ஆர்யாம்பிகை கூக்குரலிட்டாள். ஊரார் கூடினர். எவ்வளவோ முயன்றும் முதலையின் பிடியிலிருந்து குழந்தையை மீட்க முடியவில்லை. சிறிது சிறிதாக முதலை சிறுவனை விழுங்கிக் கொண்டிருந்தது. தன் கண்ணெதிரிலேயே தன்செல்வன் மரணப் பிடிக்குள் செல்வதை அந்தத்

தாயால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கதறி அழுதாள். அப்போது சங்கரர் அம்மா! நீ மனம் வைத்தால் நான் முதலையின் பிடியிலிருந்து மீள முடியும் என்றார்.
அவலமான நான் எப்படியடா உன்னைக் காப்பாற்றுவேன்? என்று கதறினாள் அந்தத் தாய்.
"தாயே எனக்குத் துறவுபூண அனுமதி தாருங்கள். இப்பிறவி ஒழிந்து அது எனக்கு மறுபிறவி” என்றார்.
வேறு வழி தெரியாத அந்த அபலை எப்படியோ மைந்தன் உயிருடன் இருந்தால் போதும் எனநினைத்து இணக்கம் தந்தாள்.
சங்கரரும் துறவிற்குரிய மந்திரங்களைக் கூறி நீரில்மூழ்கி எழ அவரது காலைப் பிடித்த முதலை கந்தர்வனாகி நற்கதி பெற்றது.
கரையேறிய சங்கரர் தாயை வணங்கி முறைப்படி சந்நியாசம் பெறுவதற்காகத் தக்க குருவைத் தேடிச் செல்ல அனுமதி வேண்டினார். குமுறும் உள்ளத்துடன் குழந்தைக்கு விடை கொடுத்தவள். தனது அந்திம காலத்திலே தவறாது வந்து தனது ஈமக் கடன்களைச் செய்ய வேண்டும் என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டாள்.
காலடியிலிருந்து கிளம்பிய அந்த ஞானக் கன்று காலாற நடந்து மத்தியப் பிரதேசத்திலுள்ள நர்மதை நதிக்கரையை அடைந்தது. அங்குள்ள மலைக்குகையொன்றில் கோவிந்த யோகீந்தரர் என்ற யோகி தவம் செய்வதைக் கண்டார். இவரையே குருவாக அடைவாயாக என்று அசரீரி தெரிவிக்கக் கரங்களைக் குவித்தவாறு குகையை மும்முறை வலம் வந்து வணங்கினார். யோகம் கலைந்த கோவிந்த பகவத்பாதர் "நீயார்”? என்று கேட்டார். அந்த வெண்கலக் குரல் குகைச் சுவர்களில் முட்டிமோதிச் சங்கரரின் செவிகளில் பாய்ந்தது.
உடனே அவர் "இங்கு வந்திருக்கும் நான் மண், நீர்,தீ, காற்று, வான் முதலிய நிலையற்ற பூதங்களும் புலனும் சேர்ந்த தொகுப்பில்லை. அறிவு ஆழ்ந்திருக்கும் பொழுது ஒளிரும் இரண்டறியாத ஒரே பொருள். “சுத்த சிவம்’என்று பத்து பாடல்களைக் கொண்ட தசஸ்லோகியால் தம்மை அறிமுகம் செய்து கொண்டார். இந்த நேரத்தில் நர்மதை நீர் கரை புரண்டோடியது. கரையிலிருக்கும் ஆஸ்ரமங்கள் அழிவின் விளிம்பில் எண்ணற்ற உயிர்கள் அழிவை எதிர்நோக்கின. முனிவர்களும் மக்களும் அச்சம் கொண்டனர். அங்கு வந்த சங்கரர் தமது கமண்டலத்தை ஆற்றின் குறுக்கே வைத்தார்.என்ன ஆச்சரியம்! நுங்கும் நுரையுமாக வந்த பேரலைகள் சுருண்டு சுருண்டு அந்தப்
யூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 227
ļoğusposo | urýs, mig, | fosso奴婢巨或Ļo ulog) | ựgolo31ņoh -Ựsốn |-ỰğrıfrissãoğusfēỰt? -столщфшёg)Jအ၂ဓါnடிொடி 99 ŲlseșUnųısımístųos ஒரய9றுgagoonri9ộqấquaen@rtotųoĮri@ristųoys|| gs1so0$rī ļņíslomso@offo | ĢnfurtosẾIшп996gĢģĶķ ļq-in uoluso ļousufrigo|| @qing (ogsựri | sqinguinquţi | ass@sễm | Juleșulqılığı | quasioiss | Nonosillo | ¡TÉilístoųstiĝrtotųosso | q: sonUso orķī£LY LLLLT S LLLLL LLL LLLLLLL YY LLLLLLLML LLLLĢiun luogos@ự ļotss@g | @@sée JunqusiųıtụoğêmșUsquí-lÇıqun@Țmuņots, | qr-unqĝisí (głąžisūÚÐUn | quonsumęíų51, I do???Ųolosiţigặınmıştı | tousuuņ9 | ļošlosjoổ | ĝusvgo@hIstooling)109,9*țigă,༄༅་ལྟའི།། qırmogoșure1ụmrı,0) qī£$ųġu(sẽonq1@reso lụuoșơnqiúısı | @@@fão|| @$±oặeresso | qıñğș#efs, þņrnuosėdįsiqo| qı-ı-ırı | işoğș-Ion | quae?的Q9硕 Csip Ipss!!!110!!9 fiņJI(191@ 1ņ9Ųloops!IJI $1009ĢIG’ oġġJI@91@ |s|ssssssssssẽ)
மயூரமங்கலம்

Ųlsoņuiquíssi冯ng取遇u引 (usuriojqofujoqrtslaestųı | ĢsımsııınnsựfiInns(głę oặp | peqartë (nun | souos||surolo | Ģfisurtolośto@h |ųITUı ış9ượążę-qassosog qi-Tsumộtņ9 േJuleșơiquíssi역「minqmo, (gofyngsou soțuluirỗs?தீழquosogg) | gặpolmộtņ9|| ļoqatë trun | quặśsoolimo) | {{slogsjøoffe || ~ugosłoഭ്രൂറ-* േഴ്സ്ŲlkoşmquíssiĮrtsog)quậśogg) | qimugštų, quoqṁyumu'n :9 Iontņ(UỔIsos)qŴŵŶrs啦啦9Įfrompos:90|{{#şelmului | Ipsos? (sgïmọrtootastoloıssıs@mặg [q]-ino) ngyo-qrt9ğựIī£ §@rmą பூயடிாரம்டு*ļģuojį94ộ\logsỹrtotųostus역명A토% aplitusingo | §tusț¢ qi& | qsortos)?Ųmộę(ogrįso gŵ| sývoisuuso | ffriquaeso | ĝių99mặpfromộtgi(No ķīIȚusốIII gss | soo? Iso Q9013) UnulffinIulooÚTJussi|ш009пшtшчішоропшfшЧifolloĝrtoinrrunship

Page 228
பாத்திரத்துள் அடங்கின. இதைக் கண்ட கோவிந்த பாதர் சங்கரரை அருகே அழைத்து “ஜயனே” எனது குருவாகிய பகவான் வியாசர், நர்மதைப் பேராற்றினைத் தனது கமண்டலத்துள் அடக்க வல்லவன் எனது வேதாந்த சூத்திரத்திற்குப் பாஷ்யம் (உரை) செய்ய வல்லவன். அந்தப் புண்ணியன் விரைவில் இங்கு வருவான் என்று கூறிச் சென்றார். அவரது திருவாக்குப் பலித்துவிட்டது. நீயே அந்தச் சித்தாந்தத்தை விளக்க வேண்டும் என்று கூறி 'அத்வைதம்" என்னும் அருள் பெருஞ் செல்வத்தைக் கோவிந்த பகவத்பாதர் ஆதிசங்கரருக்கு வழங்கி அவருக்குத் துறவினை அருளினார்.
உடனே சங்கரர் அகந்தையைக் குறிக்கும் சிகையை மழித்து, மனம், வாக்கு, காயம் இவற்றைத் தண்டிக்கும் தண்டத்தை ஏந்தித் துறவுக் கோலம் பூண்டார். மூன்றாண்டுகளில் அனைத்து சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். குருநாதரின் ஆணையின் வண்ணம் விஷ்ணு சகஸ்ரநாம பாஷ்யம் செய்ததாக வரலாறு கூறுகின்றது. இதுவே ஆதிசங்கரரின் முதல் நூல் என்றும் கூறப்படுகின்றது.
பின்பு சங்கரரைக் காசிக்குச் செல்லுமாறு பணித்து விட்டுப் பத்ரிகாஸ்ரமம் சென்றார் கோவிந்தபாதர். கங்கைச் கரையில் மணி கர்ணிகைத்துறைக்கு அருகிலுள்ள முக்தி மண்டபத்தில் பிரம்ம சூத்திரத்தின் தெளிவையும், உபநிடத உண்மைகளையும் சீடர்களுக்கு விளக்கினார் சங்கரர்.
ஒரு நாள் சீடர்களுக்கு உபநிடத பாடத்தை நடத்தும் பொழுது கங்கையின் எதிர்க்கரையில் சோழ நாட்டைச் சேர்ந்த சனந்தனர் குருவின் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தார். அவரது பக்குவத்தை மற்றைய சீடர்களுக்கு உணர்த்தச்சனந்தனனை சைகை காட்டி அழைத்தார். அடுத்த விநாடியே கடத்தற்கரிய கங்கை நதி இடைப்படுவதையும் பொருட்படுத்தாது நீரில் இறங்கி நடக்கலானார். நீரிலே அவர் அடியெடுத்து வைக்குந் தோறும் ஒர் தாமரை மலர் தோன்றி அவரது பாதத்தைத் தாங்கியது. நீரிலே ஓர் அற்புதமான தாமரை மலர்ப் பாலமே உருவாகிவிட்டது. சனந்தனரின் குருபக்தியைக் கண்ட சீடர்கள் வியப்புற்றனர். அன்று முதல் சனந்தனர் பத்மபாதர் ஆனார். இந் நிகழ்ச்சியினைப் பகவத் பாதாம்புயம் ” என்ற நூல் அழகாக வர்ணிக்கின்றது.
இச்சமயத்தில் ஆதிசங்கரர் பகவத் கீதைக்கும் உபநிஷதங்களுக்கும், பிரம்ம சூத்திரத்திற்கும், சனத் சுஜாதீயத்திற்கும் உரை எழுதும் பணியை நிறைவு

செய்திருந்தார். அப்பொழுது ஒரு நாள் . சங்கரர் வழக்கம் போலக் கங்கையில் நீராடிவிட்டுத் தனது சீடர்களுடன் நடந்துகொண்டிருந்தார். எதிரே புலையன் ஒருவன் நான்கு நாய்கள் புடைசூழத் தோளிலே கள்ளுக் குடுவை தொங்கக் கையில் கோல் ஒன்றைத் தாங்கியவாறு வந்தான். வந்தவன் சங்கரரின் மீது உராய்வது போல் வந்தான். அவனைச் சற்று விலகிப் போகும்படி சங்கரர் கூறினார். அதற்கு அவன் ஆசாரியரிடம் " எதை விலகிப் போகச் சொல்கிறீர்? அன்னமயமான ஒரு உடம்பை அதே போல அன்னத்தினால் வளர்ந்த இன்னொரு கூட்டினை விட்டு விலகச் சொல்கிறீர்களா? அல்லது சைதன்யத்திலிருந்து சைதன்யத்தையே விலகச் சொல்கிறீர்களா? உணவால் உருவாகும் இரண்டு உடல்களும் எலும்பும் ஊனும் குருதியும் உருவாக்கிய பிண்டங்கள் தானே? அவற்றில் ஒன்றினால் மற்றொன்றுக்கு எப்படித் தீட்டு ஏற்பட முடியும்? இரண்டுமே மனித உடல்கள் தானே இதில் சேருதல் ஏது? விலகுதல் ஏது? கதிரவனின் பிம்பம் கங்கையிலும் விழுகிறது. குட்டையிலும் விழுகிறது. இந்த பிம்பங்களில் வேற்றுமை உண்டா? காலியாக உள்ள ஒரு பொற்குடத்தின் உள்ளே இருக்கும் வெற்றிடம் தான் மண்ணால் ஆன கலயத்தின் உள்ளும் இருக்கிறது. அது போலத் தேகத்தின் மாறுபாடு இருந்தாலும் உள்ளே உள்ள ஆத்மா ஒன்று தானே! இதில் அந்தணன், புலையன் என்னும் பேத மயக்கம் எங்கிருந்து வந்தது சுவாமி”
தனது ஆத்மாவையே செவியாக்கிச் செவிமடுத்தார் சங்கரர். அதன் உண்மையை உணர்ந்தார். உடனே புலையனின் திருவடியில் வீழ்ந்து தனது குருவாக ஏற்று ஐந்து பாடல்களை அவர்மீது பாடினார். அதுவே மனிஷா பஞ்சகம்” ஆகும். எதிரே வந்தவன் சிவபெருமானாகிக் காட்சியளித்தார்.
பத்ரிநோக்கித்தன்சீடர்களுடன் யாத்திரையைத் தொடர்ந்தார். மன்னர்களும், மக்களும், கல்விமான்களும் வரவேற்று உபசாரம் செய்தனர். இறுதியில் பத்ரியை அடைந்த பொழுது ஜோதிர்தாம மன்னனால் வரவேற்கப்பட்டுச் சீடர்களுடன் அங்கு தங்கினார். அலகநாந்தா நதியில் நாரத குண்டத்தில் மறைந்து கிடந்த பூரீ நாராயணனின் விக்ரகத்தை எடுத்து அங்குள்ள திருக்கோயில் பிரதிஷ்டை செய்தார். அவரே பத்ரி நாராயணன்.
பத்ரிகாச்சிரமத்தில் நான்காண்டுகள் தங்கிப் பாஷ்யங்கயைச் செய்தும், தம்மிடம் வந்தவர்களுக்கு உபதேசம் செய்தும் பணிபுரிந்தார். பின்னர் அங்கிருந்து
மயூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானகும்பாபிஷேக மலர் - 2000

Page 229
காஷ்மீர் சென்று தங்கினார். ஆச்சாரியார் தங்கியதால் அந்த இடம் பூரீநகராயிற்று. ஒரு நாள் நூல்நிலையம் ஒன்றினுள் சென்ற பொழுது ஒரு பெண் இங்கும் அங்குமாக நடப்பதைக் கண்டு பெண்ணே எனக்கு ஒரு ஏடு எடுத்துத் தருக என்று கேட்டார். அக்ஷரங்களின் வடிவமாகிய அன்னையை முன்வைத்தே லலிதா சஹஸ்ர நாமத்திற்கே முதலில் பாஷ்யம் செய்ய வேண்டும் என்ற கருத்தில் ஏட்டினைக் கேட்டார். ஆனால் அந்தப் பெண் கொண்டு வந்து கொடுத்ததோ விஷ்ணு சஹஸ்ரநாமம். அதைப்பார்த்த சங்கரர் இன்னொரு நூல் எடுத்துக் கொடுதாயே! என்று கேட்க அப்பெண் மீண்டும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தையே கொண்டு வந்து தந்தாள். மூன்றாம் முறை கேட்க மீண்டும் கிடைத்தது அந்நூலே. இது இறைவனது ஆணை என்று ஏற்றுப் பாஷ்யம் செய்தார் சங்கரர்.
காஷ்மீரத்திலிருந்து மீண்டும் காசிக்கு வந்தார். நடுவில் கேதாரநாத். உத்தர காசியில் தங்கித் தியானத்தில் மகிழ்ந்தார். ஒருநாள் வயோதிக அந்தணர் ஒருவர் வந்து சங்கரருடன் பிரும்ம சூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயம்பற்றி விவாதம் செய்தார். அந்த விவாதம் பல நாட்கள் தொடர்ந்தன. முடிவில் அந்தணர் தனது உண்மை உருவைக் காட்டினார். அவர்தான் பிரம்ம சூத்திரத்தையே உலகிற்குத் தந்த வேதவியாசர். மறைக்கு உரை செய்த துறவி வேந்தன், மறைதனைத் தொகுத்தளித்த மன்னன் முன் வீழ்ந்து வணங்கினார். அப்பொழுது ஆச்சாரிய சங்கரருக்கு வயது பதினாறு. அவரது ஆயுள் முடிய வேண்டிய காலம். ஆனால் அவர் செய்ய இருக்கும் மாபெரும்பணியை உத்தேசித்து மேலும் பதினாறு ஆண்டுகாலம் வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆசி அருளி மறைந்தார் வியாசபகவான்.
பிறகு அவ்விடம் விட்டுப் பெயர்ந்த சங்கரர் தனது சீடர்களுடன் பிரயாகைக்கு வந்தார். அங்கு உமித்தீயில் கருகிக் கொண்டிருந்த குமாரில பட்டரைக் கண்டார். குமாரில பட்டர் பூர்வ மீமாம்டையில் சிறந்த புலமை பெற்றவர். வேதாந்த விசாரம் செய்யும் ஞான மார்க்கத்தை விட்டு யாகாதி கர்மங்கள், சடங்குகள் இவற்றிற்கே முக்கியத்துவம் அளித்தார். புத்தமத உண்மைகளை அறிவதற்காக அவர்களில் ஒருவராக அவர்களை ஏமாற்றி அனைத்தையும் அறிந்து கொண்டார். அச்சமயம் அவரது பொய் வேடத்தினை அறிந்த மற்றைய சீடர்கள் அவரைக் கொலை செய்ய முயன்று புத்த விசாகத்தின் ஏழாவதுமாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். "வேதங்கள் உண்மையானால் எனது
மயூரமங்கலம்

உயிர் பிரியக் கூடாது' என்று கூறியவாறே கீழே விழுந்தார். அவர் எண்ணியது போல உடலில் ஒரு சிறு ஊறும் நேரவில்லை. ஆனால் ஒரு கண்ணில் கல் ஒன்று குத்திக் காயமேற்படுத்தியது. வேதங்கள் உண்மையானால் என்று கூறியதே அவர் வேதத்தை முழுமையாக நம்பவில்லை என்று காட்டுகின்றது. உயிரும், உடலும் பிழைத்தாலும் கண் ஊனப்பட்டு விட்டது. குமாரில பட்டர் தமது தவறுக்கு வருந்தி அதற்குப் பிராயச்சித்தமாகத் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொள்வது என்ற முடிவிற்கு வந்தார். உமிக்காந்தல் தீக்குள் இறங்கிவிட்டார். இதனை தூஷாக்னிப்பிரவேசம் என்பர். துஷம் என்றால் உமி. உமிக் காந்தலில் உடல் கருகிய நிலையில் ஆதி சங்கரரைச் சந்தித்தார் குமாரில பட்டர். அவரது அத்வைத தத்துவத்தை ஏற்ற பட்டர் தனது சீடர்களில் ஒருவரான மண்டன மிச்ரரைச் சந்திக்கும்படி கூறிவிட்டு உமித் தீயில் வெந்து மரணமானார்.
சங்கரரும் மாகிஷ்மதி நகரத்திலுள்ள மண்டன மிச்ரரின் வீட்டிற்குச் சென்றார். அவரது வீட்டுத் திண்ணையில் கிளிகள் வேத விசாரணை செய்து கொண்டிருப்பதைக் கண்டார். வீட்டின் கதவுகள் தாழிடப்பட்டு உள்ளே சிரார்த்தம் நடந்து கொண்டிருப்பதை அறிந்து தமது யோக சக்தியால் வீட்டினுள்ளே சென்று தாம் வாத பிஷைக்கு வந்திருப்பதாகக் கூறி அவருடன் வாதம் நிகழ்த்தினார்.
மண்டன மிச்ரரின் மனைவி சரஸவாணிசாக்ஷாத் சரஸ்வதி தேவிதான். அவளே இருவர் வாதங்களுக்கும் நடுவராக அமர்ந்தார். இருவருக்கும் இரண்டு மலர்மாலைகளை அணிவித்து யாருடைய மாலை கடைசி வரையிலும் வாடாமல் உள்ளதோ அவரே வென்றவராவார் என்று தீர்ப்பும் கூறிவிட்டார். விவாதம் பல நாட்கள் தொடர்ந்தன. சங்கரருடன் மண்டன மிச்சரரால் ஈடுகொடுக்க முடியவில்லை. அத்துடன் கழுத்திலிருந்த மாலையும் வாட ஆரம்பித்து விட்டது. மண்டனர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
சரஸவாணி தன்னுடனும் வாதம் செய்து வெல்ல வேண்டும் என்று கூறச் சங்கரரும் அதற்கு உடன்பட்டார். பல சாஸ்திரங்களிலும் வாதம் செய்து காம சாஸ்திரத்திலும் வாதிடக் கோரினாள். அதைக் கற்று வரச் சிறிது அவகாசம் வேண்டிச் சீடர்களுடன் கானகம் சென்றார். அங்கே அமருகன் என்ற மன்னன் இறந்து கிடந்தான். அவனது உடலில் தான் புகுந்துகொண்டு (பரகாயப்பிரவேசம்) தனது உடலை ஒரு குகையில் பாதுகாத்து வரச் செய்தார்.
eas S

Page 230
அமருகன் அரண்மனைக்குச் சென்று தன்னுடைய மனைவியுடன் அரச காரியங்களில் ஈடுபட்டு மிகத் திறம்பட நாடத்தினான். அரசனது போக்கில் சில மாறுதல்களைக் கண்ட அமைச்சர்கள் அரசனது உடலில் ஒரு யோக புருஷன் புகுந்திருக்கக் கூடும் என ஊகித்து. பணியாட்களை நாட்டின் நாலாபுறமும் அனுப்பி எங்கேயாவது உயிரற்ற உடலைக் கண்டால் உடனே எரித்துவிடும்படிபணித்தனர். ஏவலாட்கள் கானகத்துக் குகையில் சங்கரரின் சீடர்கள் காத்து நின்ற சங்கரரின் உடலைக் கண்டு, அதனைச் சிதையில் வைத்துத் தீமூட்டினர். இவ்விஷயத்தை அறிந்த சங்கரர் உடனே அரசனது உடலை உகுத்துவிட்டுச் சிதையில் உள்ள தனது உடலில் புகுந்து கொண்டார். அதற்குள் ஆச்சாரியரின் வலது கரத்தை தீ பதம் பார்த்துவிட்டது. இதனைக் கண்ட பத்மபாதர் துடிதுடித்து லக்ஷமி நரசிம்மன் வேண்டினார். சங்கரர் நரசிம்மகராவலம்ப துதி செய்யக் கரமும் பழைய நிலையை அடைந்தது. அமருகனாக இருந்து செய்த காம இலக்கியம் அமருகம் என அழைக்கப்பட்டது.
நிபந்தனைப் படியே சரஸவாணியை வெற்றி கொண்டார். மண்டனமிச்ரர் துறவு பூண்டு சுரேஸ்வராச்சாரியார்’ என்ற பெயருடன் சங்கரருக்குச் சீடரானார்.
தலயாத்திரை தொடர்ந்தது. நாசிக், பஞ்சவடி, பாண்டரிபுரம் முதலிய தலங்களைத் தரிசித்துச் பூரீசைலத்திற்கு வந்தார். அங்கு காபாலிகர்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டினார். அதனை முறியடித்து பூரீ கோகர்ணத்தைத் தரிசித்து சிவராத்திரியன்று வில்வ அர்ச்சனை செய்தார். ஹரிஹரகூேடித்திரம் சென்று அரனும் அரியும் ஒன்றே என்ற தத்துவத்தை மெய்ப்பித்தார். பிறகு மூகாம்பீஎன்ற சக்தி தலத்திற்குச் சென்று அங்கு உக்ரகலையோடு விளங்கிய தேவியின் முன்பாக பூரீசக்ரப் பிரதிஷ்டை செய்து சௌம்யமூர்த்தியாக்கினார். அங்கிருந்துழரீவலி என்ற தலத்திற்குச் சென்றார்.
அங்கு சங்கரரின் அத்வைத போதனையைக் கேட்பதற்கு ஏராளமான மக்கள் கூடுவர். அவ்வூரிலே பிரபாகரபட்டர் என்பவர் கர்மவாதத்தில் உறுதிபூண்டவர். அவருக்கு ஒரு அழகான மகன். ஆனால் அவன் பிறந்தது' முதல் யாருடனும் பேசுவது இல்லை. பெற்றோர்களும் மற்றவர்களும் ஊமை என்று தீர்மானித்தனர். ஆதிசங்கரரின் வருகையை அறிந்த பெற்றோர்கள் தங்கள் மகனை அவரிடம் அழைத்துச் சென்று நிலத்திலே கிடத்தினர். சங்கரர் அக்குழந்தையை அன்பொழுகப்

பார்த்து எழுந்திருக்கச் செய்து “நீ யாரப்பா” என்று கேட்டார்.
அதுவரை ஊமையாக இருந்த அந்தச் சிறுவன் "நான் மனிதனல்ல, தேவனுமல்ல, நான் வேதியணுமல்ல, வீரனுமல்ல, வேளாளனுமல்ல, பிரமச்சாரியுமல்ல, இல்லறத்தவனுமல்ல, துறவியுமல்ல. நான் ஞானமே உருவான மெய்ப்பொருள்” என்று மடைதிறந்தாற்போல் வார்த்தைகளைக் கொட்டினான். “வேதாந்தத்தின் பரமரகசியம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல உனக்குப் புரிந்துவிட்டதால் இன்று முதல் ஹஸ்தாமலகன் என்னும் நாமத்துடன் விளங்குவாய் என ஆசிகூறி தன்னுடைய சீடனாக ஆக்கிக் கொண்டார்.
அங்கிருந்து சிருங்கேரியை அடைந்தார். காமமும் குரோதமும் அறியாத ரிஷ்ய சிருங்கர். இங்கு தவம் செய்ததால் சிருங்ககிரி என்ற பெயர் ஏற்பட்டது. பகையற்ற பூமி. கருக்கொண்ட தவளைஒன்றுக்கு நாகம் படம் பிடித்து வெயில் அந்தத் தவளையைத் தாக்காதவாறு காத்த மாண்புடைய தலம். திருமால் வராக அவதாரம் எடுத்துத் தனது கோரைப் பற்களால் உலகைத் தூக்கி நிறுத்திய பொழுது அவரது இரண்டு பற்கள் பதிந்த புண்ணிய பூமி.
இங்கு வனதுர்க்கா மந்திரத்தினால் முன்பு பந்தனம் செய்த சாரதையின் திருவுருவத்தைச் பூரீசக்கர பீடத்தின் மீது பிரதிஸ்டை செய்தார். அங்கு ஒருமடத்தை நிறுவி சுரேஸ்வராசாரியாரிடம் அதன் பொறுப்பை ஒப்படைத்தார். யஜுர் வேதச் சார்புடையோர் இந்த மடத்தின் சீடர்களாவர். சிலமாதங்கள் அங்கு தங்கிய ஆச்சாரிய சங்கரர் விவேக சூடாமணி, ஆத்மபோதம், அகரோக்ஷானுபூதி போன்ற வேதாந்த நூல்களை இயற்றினார்.
சிருங்கேரியில் தங்கியிருந்த போது கிரி என்ற அந்தணச் சிறுவன் குருவிற்குரிய பணிவிடைகளை எல்லாம் செய்து வந்தான். ஆனால் மந்த புத்தி கொண்டவன். ஆச்சாரியர் சீடர்களுக்குப் பாடம் நடத்துவதைத் தூரத்திலிருந்தே கவனிப்பான். ஒருநாள் ஆச்சாரியார் வந்ததும் பாடம் நடாத்தாமல் இருந்தார். காரணம் கிரி வரவில்லை என்பதாகும். புரிந்து கொள்ளமுடியாத அவன் வருவதும் வராததும் ஒன்று தான் என்று மாணவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் கருத்தைக் குருநாதர் புரிந்து கொண்டார். ஆற்றில் குருநாதரின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்த கிரியின் நிலையில் ஒரு அதிசயிக்கத்தக்க மாற்றம் நிகழந்தது. ஞானம்
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 231
பூரணமாக அவனுள் நிரம்பியது. நேராகக் குருநாதரிடம் ஓடிவந்து அவரது திருவடிகளைப் பற்றிக்கொண்டு அற்புதமாக எட்டுப்பாடல்களைப் பாடினான். அதுவே மந்திரசக்தி வாய்ந்த “தோடகாஷ்டகமாகும். கிரிக்குச் சந்நியாசத்தை அளித்து தோடகாச்சாரியார் ஆக்கினார். அவரே பின்னர் ஜோதிர்மடத்தின் முதல் ஆசாரியரானார். இப்படி இருக்கையில் திடீரென்று ஒரு நாள். காலடியில் உள்ள தனது தாய் மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை அறிந்தார். மரணத் தறுவாயில் தான் அருகில் இருப்பேன் என்று கூறிய உறுதி மொழியைக் காக்க யோக சக்தியால் காலடியில் தாயின் காலடியில் சேர்ந்தார். சங்கரனைக் கண்ட ஆர்யாம்பிகையின் கண்கள் ஆனந்தபாஷ்யத்தைச் சொரிந்தது. சிவனையும் மகாவிஷ்ணுவையும் குறித்துத் துதி பாட, அன்னையின் ஆன்மா உடலைவிட்டுப் பிரிந்தது. எல்லாவற்றையும் துறந்த சங்கரருக்குத் தாய்ப் பாசத்தைத் துறக்க முடியாமல் கண்கள் நீரைப் பொழிந்தன.
தாயின் உடலைத் தகனம் செய்ய எழுந்தார். சந்நியாசி தாய்க்கு ஈமக்கடன்களைச் செய்யக்கூடாது என்று ஊரார் புறக்கணித்து அவ்விடம் விட்டு அகன்றனர். சங்கரர் தமது வீட்டுக் கொல்லைப் புறத்திற்குச் சென்று பச்சை வாழை மரங்களை வெட்டி அதனையே சிதையாக்கிப்பத்துமாதம் தன்னைச் சுமந்த தாயின் உடலைத் தாமே சுமந்து சிதையில் வைத்துச் சில மந்திரங்களைக் கூறிநிரைத் தெளித்தார். தீமூண்டு தாயின் உடல் தகனமாகியது. இதனைக் கண்ட ஊரார்கள் ஓடிவந்து திருவடியில் வீழ்ந்து மன்னிப்பு வேண்டினர்.
சங்கரர் சீடர்களுடன் யாத்திரையைத் தொடர்ந்தார். சென்ற இடங்களிலெல்லாம் சிறந்த வரவேற்பு இமயம் முதல் குமரி வரையிலும், அஸ்சாம் முதல் ஆப்கானிஸ்தானம் வரையும், பாரத முழுவதும் விஜய யாத்திரை செய்து ஒரே கலாச்சாரத்தைத் தெளிவாக்கினார். மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும்போக்கினார். சைவம், வைணவம், செளரம், சாக்தம், காணபதம், கௌமாரம் ஆகிய பலமதங்களைச் சீர்திருத்தம் செய்து “ஷண்மத ஸ்தாபனாச்சாரியார்”என்று போற்றப்பட்டார். அன்னையின் மறைவிற்குப் பிறகு சிருங்ககிரிக்குச் சென்று, அங்கிருந்து சீடர்களுடன் சிதம்பரம் வந்து அங்கு "அன்னாகர்ஷண யந்திரத்தை” ஸ்தாபித்துத் திருஇடைமருதூர் வந்து இங்கு சிவானந்த லஹரி இயற்றியதாகக் கூறப்படுகின்றது. திருசிரபுரம்
மயூரமங்கலம்

ஆனைக்கா அகிலாண்டேஸ்வரிக்குச் ழரீ சக்ர வடிவமாகியதாடங்கப் பிரதிஷ்டை செய்து, பூரீரங்கத்தில் “ஜனாகர்ஷண யந்திரத்தை” நிறுவி மதுரையை அடைந்து மீனாஷியை வழிபட்டு மீனாஷி பஞ்சரத்தினம் பாடி, துண்டி விநாயகரை வழிபட்டுக் 'கணேச பஞ்சரத்தினம் இயற்றித், திருச்செந்தூர் ஆண்டவனைப் பணிந்து பூரீ சுப்பிரமணி புஜங்கத்தைப் பாடி, குமரி சென்று நீராடி, திருமால் உறையும் திருப்பதியில் "தனாகர்ஷணயந்திரத்தை”ஸ்தாபித்துவிஷ்ணுபாதாதி கேசத்தால் போற்றி, வட இந்தியாவிலுள்ள ஜோதிர்லிங்கத் தலமான சோமநாதபுரம் சென்று துவாதஷ லிங்கத் தோத்திரம் பாடித், துவாரகை, உஜ்ஜயணி, வடமதுரை, காஷ்மீரம், நேபாளம், திருக்கயிலை விஜயம் செய்து செளந்தர்ய லஹரி பாடித் துதித்தார். நேபாளத்தில், கைலாயத்திலிருந்து பெற்றுக் கொண்ட ஐந்து ஸ்படிக லிங்கங்களில் வரலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். கேதாரத்தில் முக்திலிங்கத்தையும் ஸ்தாபித்து விட்டுக் காசிக்கு வந்தார். அங்கு காசியவுடகம், அன்னபூர்ணாஷ்டகத்தால் விஸ்வநாதரையும் விசாலாசுஷ்ஷியையும் போற்றி வணங்கினார்.
அதன் பிறகு பூரிஜகந்நாதம் சென்று கோவர்த்தன மடத்தை ஸ்தாபித்து அதற்குப்பத்மபாதரை அதிபதியாக்கினார். மீண்டும் சிருங்க கிரிக்கு வந்து போகச் சந்திர மெளலின் வரவைப் பிரதிஷ்டை செய்தார். தில்லையில் மோக்ஷலிங்கத்தை ஸ்தாபித்தார். திருச்சி வழியாக இராமேஸ்வரம் வந்து கங்கை நீரினால் இராமநாதருக்குத் தனது கரத்தினாலேயே அபிஷேகம் செய்து யாத்திரையைப் பூர்த்தியாக்கினார். திருவொற்றியூரில் திரிபுரசுந்தரியின் முன்பு பூரீ சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்த பின்பு காஞ்சிபுரம் நோக்கிப் புறப்பட்டார்.
பூவிருந்தவல்லி, மாங்காடு முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு காஞ்சிபுரம் சர்வதீர்த்தக் கரையிலுள்ள விஸ்வேஸ்வரரின் ஆலயத்தை அடைந்தார். மன்னன் இராசசேனனைக் கொண்டு காஞ்சிபுரத்தின் நகர அமைப்பையே பூரீ சக்ர வடிவில் அமைக்குமாறு செய்தார். சக்கரத்தின் மையப் பகுதியில் பூரீ காமாட்சியம்மனின் ஆலயத்தை அமைத்தார்.
விஷ்ணு காஞ்சிக்கும், சிவகாஞ்சிக்கும் நடுவில் அன்னையின் ஆலயம் அமைக்கப்பட்டது. உற்சவ காலங்களில் வரதநாதரும், ஏகாம்பரநாதரும் காமாகூரி கோயிலை வலம்வந்து செல்வார்கள். தலதீட்சண்யத்தில் இருந்த பூரீகாமாட்சியின் திருமுன் பூரீசக்கரப்

Page 232
பிரதிஷ்டையைச் சங்கரர் செய்தார். ஒருகையில் பாசமும், ஒரு கையில் அங்குசமும் மலர்க்கணை, கரும்புவில்லும் தாங்கி நான்கு திருக்கரங்களுடன் அபய வரத கரங்களின்றிச் சாந்தமே வடிவமாக, கருணை பொங்கும் விழிகளுடன் காட்சி தருகின்றாள்.
அத்வைத சித்தாந்தத்தைப் பாரெங்கும் பறைசாற்றுவதற்காகச் “சர்வக்ஞபீடம் அமைத்தார். தன்னுடன் ஏழு நாட்கள் அயராது வாதிட்ட ஏழுவயது அந்தணச் சிறுவனைச் சர்வக்ஞாக்மன் என்று பெயர் சூட்டி ஆசியருளினார். ஆதிசங்கரருக்குப்பிறகு காஞ்சி காமகோடி பீடத்தின் அதிபதியாக விளங்கினார்.
காஞ்சியிலே காமகோடி பீடத்தை ஸ்தாபித்து, நான்கு திசைகளிலுமுள்ள பீடங்களுக்கு மூலஸ்தானமான அந்த பீடத்தில் தாமே பீடாதிபதியாக ஆரோஹணித்தார். காஞ்சி மடத்திற்கு பூரீ சாரதாமடம் என்று பெயர் சூட்டினார். சரஸ்வதி தேவி சங்கரரிடம் தோற்றுச் சரஸ்வதி என்ற விருதை அவருக்கு வழங்கினாள்.
ஆச்சார்ய சார்வபெளமர் அத்வைத சித்தாந்தத்தை உபதேசித்ததுடன் பக்திச் சுவை ததும்பும் அவரது பாடல்கள் மூலமும் மக்களை நன்னெறிப் படுத்தினார். கணேச பஞ்சரத்தினம், மீனாகூழி பஞ்சரத்னம், லலிதா பஞ்சரத்னம், கனகதாக ஸ்தவாந்தம், அன்னபூர்ணாஷ்டகம், காமாகூழி ஸ்தோத்திரம், தகூரிணாமூர்த்தி ஸ்தோத்திரம், சிவபுஜங்கம், விஷ்ணுபுஜங்கம், சுப்பிரமணி புஜங்கம், ஹனுமத்புஜங்கம், செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, கங்காஷ்டகம், தசஸ்லோகி, குர்வஷ்டகம் போன்று ஏராளமான தோத்திரங்களை இயற்றி அருளியிருக்கின்றார்.
ஆதிசங்கரர் தமது அவதாரத்தைப் பூர்த்தி செய்யும் தருணம் சீடர்கள் அவர்தம் பிரிவு கருதி வருந்தினார்கள். தமது ஆயுட்காலம் முழுவதும் உபதேசித்த தத்துவாரத்தை ஒருங்கு திரட்டி ஐந்து பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார். அதுவே சோபான பஞ்சகம்.
இரக்தாகூரி ஆண்டு வைகாசிமாதம்சுக்கிலபக்ஷ ஏகாதசி திதி. மக்கள், காஞ்சி சாரதா மடத்தில் பெருங் கூட்டமாகக் கூடியிருந்தார்கள். அவர்களுக்குத் தமது அத்வைத சித்தார்த்தத்தைத் தெளிவாகக் கூறியருளினார். அதற்குப் பிறகு அம்மக்கள் தொடர காமாட்சியன்னையின் சந்நிதியை அடைந்தார். அன்னையின் திருமுன்பு “திரிபுர சுந்தரி வேதமாதஸ்தவம்’ என்ற அற்புதமான துதிப்
C206

பாடல்களைக் கூறிக் கொண்டே அன்னை காமாட்சி தேவியின் திருவடியில் சிதாகாசத்தில் கலந்து விட்டார். கற்பூரம் எரிந்த பின்பு சாம்பலைக் காணமுடியாதல்லவா! அது போல ஸ்தூல, சூக்ஷம, காரண உடல்களைக் கரைத்து ஒளிமயமான தேவியின் திருவடியில் ஐக்கியமானார்.
காளிதாசன்
இவன் முழுமூடன். இயற்பெயர் தெரியவில்லை. நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் அளவுக்கு அறிவற்றவன். ஆடுமேய்த்துப் பிழைத்து வந்தான். எப்படியோ ஒரு குருட்டு அதிர்ஷடம் அவ்வூர் இராஜகுமாரியை மணந்து கொள்ளும் பேறு கிடைத்தது. திருமணத்திற்குப் பிறகுதான் தான்மணந்து கொண்டவன் மூடன் என்பதை உணர்ந்தாள். அவள் சிறந்த கல்வியறிவும் பண்பாடும் தெய்வபக்கியும் கொண்டவள். தனக்குக் கணவனாக வந்த ஆட்டு இடையனை நோக்கி, அன்பனே! இவ்வூரின் (உஞ்ஜயினி) கோடியில் ஒரு காளிகோயில் உள்ளது. அந்தக் காளி மிகுந்த சக்தி படைத்தவள். அந்தத் தேவி ஒவ்வொருநாளும் ஊர்க் காவலுக்காக நடுநிசியில் கோயிலை விட்டு நகரத்திற்குச் சென்று வருவாள். அவள் வெளியில் புறப்பட்ட சமயத்திலே நீ கோவிலிற்குள் சென்று கதவைத் தாழ்ப்பால் போட்டுக் கொள். காளித் தாய் திரும்பிவந்து எவ்வளவு அச்சுறுத்தினாலும் கதவைத் திறக்காதே. கல்வி நலத்தை அருளினால் கதவைத் திறப்பதாகக் கூறி அன்னையிடம் அதனைப் பெற்றுக் கொண்டு வா’ என்று கூறித் தனது கணவனாகிய அந்த மூடனை அனுப்பினாள்.
அவனும் அரசகுமாரி சொல்லியது போலவே செய்தான். விடியும் நேரம் நெருங்கும் சமயம் காளிதேவி கோயிலிற்கு வந்தாள். கதவுதாழிடப்பட்டிருப்பதைக் கண்டு கோபமுற்றாள். கூச்சலிட்டாள். உள்ளே இருந்தவனோ எதற்கும் அஞ்சாமல் தனக்குக் கல்வி அறிவு அளிக்குமாறு இறைஞ்சினான். அன்னையும் அவனுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டுக் கதவின் துவாரத்தின் வழியே நாக்கை நீட்டுமாறு பணித்தாள். நீட்டிய நாவிலே பீஜாக்ஷ மந்திரத்தைப் பதித்தர்ள். முழுமூடன் முற்றும் உணர்ந்த கவி காளிதாசனாக மாறினான்.
போஜராஜனின் அன்பைப் பெற்று வடமொழி இலக்கிய வானிலே முழுநிலவாகத் தோற்றம்கொண்டார்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 233
கம்பர்
இவர் சோழமண்டலத்தில் குலோதுங்க சோழன் அரசாண்டிருக்கையில் திருவழுந்துாரில் இருந்த ஒரு உவச்சன் குமரர் என்பர். இவர் இங்கு வளர்ந்து காளிவரப் பிரசாதியாய்க் கம்பநாடனென்று பலராலும் அழைக்கப்பட்டுத் தீவிர புத்திமானாயிருந்தனர்.
சோழ அரசன் தன் சமஸ்தான வித்துவான்களில் ஒருவராகிய ஒட்டக் கூத்தரையும் இவரையும் இராமாயணம் பாடும் படி கட்டளையிட்டனன். ஒட்டக் கூத்தர் கடல் காண் படலம்வரையில் பாடவும் கம்பர் ஒரு கவியும் பாடாதிருப்பதைப் பிறராலறிந்த அரசன் இருவரையும் அழைத்து இராமயணம் எவ்வளவு தூரம் ஆயிற்றென, கூத்தர் கடல் காண் படலம் வரை என்றார். கம்பரை வினவக் கம்பர், கூத்தரிலும் அதிகங் கூற வேண்டும் என்னும் எண்ணத்தால் திருவணைப் படலம் வரையும் ஆயிற்றென்றார். இதனைக் கேட்ட அரசன் ஆயின் அப்படலத்தில் ஒரு செய்யுளைப் பிரசங்கியும் என்றனன். கம்பர், இசைந்து அந்நிமிஷத்தில் “குமுதனிட்ட குலவரை கூத்தரின், திமிதமிட்டுத்திரையுந் திரைக்கடற், றுமிதமூர் புகவானவர் துள்ளினார், அமுதமின்னுமெழு மெனுமாசையால்” என்கிற செய்யுளைப் பாடிப் பிரசங்கிக்கையில் கூத்தர் துமி என்னுஞ் சொல் செய்யுட் பிரயோகங்களில், இன்று இல்லை என்றாட்சேபிக்கக் கம்பர் அது உலகவழக்கெனச் சமர்த்தித்துச் சரசுவதியினருளால் இடைப் பெண்கள் பேசப் பிரத்தியகூஷத்தில் காட்டிச் சமர்த்தித்து இராமாயணம் பாடத் தொடங்கித் தொண்டை நாட்டை யடைந்தனர்.
இவர் இரவில் தம் மாணாக்கர் எழுதப் பாடுகையில் திருவொற்றியூர்க் காளியைத் தீவட்டிப் பிடிக்கச் செய்தனர் என்பதை, “ஒற்றியூர் காக்கவுறை கின்ற காளியே, வெற்றியூர்க் காக்குதன் மெய்ச்சரிதை - பற்றியே, நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர், பிந்தாமற்பந்தம் பிடி” என்பதாலறியலாம்.
பாண்டி நாடு போய் அந்தச் சமஸ்தான வித்துவான்கள் கம்பராமாயணம் பிரசங்கிக்க, இவர் வியக்கத்தக்க இடங்களில் வியக்காதிருந்தனர். இதனைப் பாண்டியன் கண்டு நீர் வியக்கத்தக்க இடங்களில் வியக்காததற்குக் காரணம் என்னென் றனன். புலவர் கம்பரது அபிப்ராயம் சரிவரவில்லை யென்று கூறினார். பாண்டியன் புலவரை நோக்கி “நீ யாரெ”னப் புலவர் நான் “கம்பர் கற்றுச் சொல்லி”
மயூரமங்கலம்

யென்றனர். ஆயின் “உமக்குப் பிரசங்க வன்மை யுண்டோ"வென“உண்டெ"ன இசைந்து பிரசங்கித்தனர். இவர் பிரசங்கிக்கக் கேட்டு அரசன் களித்தனன். அரச னிவரிடத்தில் அன்பு கொண்டிருத்தலையறிந்த அந்தச் சமஸ்தான வித்துவான்கள் அம்பட்டன் ஒருவனுக்கு வேண்டிய பொருள் கொடுத்துக் கம்பரைத் தம்மவரெனக்கூறச் செய்தனர். கம்பர் சற்றேனும் அஞ்சாது சரசுவதியின் திருவடிப் பொற்சிலம்பில் ஒன்று வாங்கிப் பாண்டியனுக்குக் காட்டி இப்படிப்பட்ட சிலம்பு ஒன்று என் தாயாதியாகிய இவனுக்கும் எங்கள் முன்னோர் கொடுத்துப் போயினர். அதை அவன் தரின் இரண்டு சிலம்பும் அரச பத்தினிக்கு ஆகும் வருவிக்க எனப் பாண்டியன் அம்பட்டனைக் கேட்க அது அம்பட்டனில்லையென்றனன். கம்பர் இவன் இளமை முதல் மகாகபடன் நன்றாயடித்துக் கேளுங்களெனப் பாண்டியன் அம்முறை செய்விக்க அம்பட்டன் நடந்ததையொளியாது அரசனிடங் கூறினன். சமஸ்தானத்து வித்துவான்களைத் தண்டிக்க எத்தனிக்கையில் கம்பர் அப்புலவர்களின் உயிரைக் காத்துப் பாண்டியனுக்குச் சரசுவதி தரிசனங்காட்டிச் சிலம்பினைச் சிலம்பில்லாத திருவடிக்கு நேராக நீட்டி அச்சிலம்பைத் திருவடியில் சேர்த்திச் சரசுவதியந்தாதி பாடித்துதித்தனர்.
காளமேகம்
இவர் பிறப்பால் வைணவர். வரதன் என்ற பெயருடையவர். திருவானைக்கா ஆலயத்தில் இறைவனுக்கு நிருத்யோபசாரம் செய்யும் மோகனாங்கி என்ற பெண்ணின் மீது கொண்ட காதலால் அவனது விருப்பத்திற்கிணங்கிச் சிவன் அருள் பெற்று ஜம்புகேன்வரத்தில் பரிசாரகராகப் பணிவிடை புரிந்து வந்தார்.
அதே ஊரில் வாழ்ந்த பூரீவித்தியா உபாசகன் ஒருவனும் அகிலாண்ட நாயகியின் அருள் வேண்டி ஆலயத்தில் பாடுகிடப்பான். ஒரு நாள் வரதன் மோகனாங்கியிடம் அர்த்தசாம பூசைக்குக் குடமுறை கழித்த பின்னர் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு, இருண்ட ஒரு மூலையில் உறங்கிவிட்டார். குடமுறை கழித்து வந்த மோகனாங்கி வரதரைக் காணாததால் வீட்டிற்குச் சென்று விட்டாள். அர்ச்சகர்களும் ஆலயத்தைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டனர். விழித்துப் பார்த்த வரதர் கோயில்

Page 234
பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு மீண்டும் உறங்கி விட்டார்.
நேரம் நடுநிஷியைக் கடந்தது. தனது அருளை வேண்டி நாளும் தவமிருக்கும் பூரீவித்தியா உபாசனுக்கு இரங்கி அருள் புரிவதற்காக அன்னை அகிலாண்டேஸ்வரி அழகிய சிறு பெண்ணாக உருமாறி அவனிடம் சென்று வாயைத் திறக்குமாறு கூறினாள். பூரீவித்தியா உபாசகன் புறவிழிப்புப் பெற்றான். மனத்தை மயக்கும் மணமுடன் மோகன உருவம் கொண்ட ஒரு பெண் அருகில் நிற்பதைக் கண்டான். இந்த நடுநிசியில் ஓர் ஆடவனுக்கருகில் வருபவள் நிச்சயம் குலமகளாக இருக்க மாட்டாள் என்று அறிவு நிலையில் அருவருத்து ஒதுக்கினான்.
பக்கத்திலே வாயைத் திறந்தவாறு உறங்கிக்கொண்டிருக்கும் பரிசாரகனான வரதனின் வாயிலே தனது தாம்பூல எச்சிலை உமிழ்ந்தாள். அவனும் மோகனாங்கியின் நினைப்பிலே அதனை விழுங்கினான். அன்னையும் அவனைக் காளமேகமாக விளங்குக என்று அருள் செய்தாள்.
அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருள் பெற்ற காளமேகமும் இம்மென்னும் முன்னாலே ஐந்நூறும், அறுநூறும்அம்மென்னும் முன்னாலே ஆயிரமுமாகக் கவிதையை மழையாகப் பொழிந்தார்.
குமரகுருபரர்
பொருநை நதிக் கரையில் சைவர்கள் திருக்கையிலையென்றும், வைணவர்கள் வைகுந்த மென்றும் அழைக்கும் பதியில் அவதரித்தார். இது திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையேயுள்ளது. இங்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே சைவவேளாளர்குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர், சிவகாமியம்மை என்பாருக்கு முதற் பிள்ளையாகத் தோன்றினார் அடிகள். இவரது பிறந்த நாள் ஆண்டு முதலானவை பற்றிச் சரியான செய்திகள் கிடைக்கப் பெறவில்லை. ஆயினும் அவரது வரலாற்று நிகழ்ச்சிகளைக் கொண்டு, அடிகள் தோன்றிய காலம், கி. பி. 1618க்கும் கி.பி. 1654க்கு இடைப்பட்டது எனக் கொள்வது பொருத்தமுடையதாகக் கூறுவர். பெற்றோர் பெயர் செவிவழிச் செய்தியாக வழங்கி வருகிறது. ஐந்து அகவை வரை, பேச்சாற்றலின்றி இருந்து இறுதியில் திருச்செந்தூர் குமரன் அருளால் பேசும் திறம் வரப்பெற்று அவராலேயே குருபரர் என்ற பெயரையும் பெற்றார்.
<20৪>
10

ஊமைத்தன்மை நீங்கப் பெற்று முதலில் பாடியது கந்தர் கலிவெண்பா. கவிராயர் பரம்பரையாதலால் இளமையிலே கவி பாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றிருக்கலாம். இந்நூலின் இறுதியில் “கோடி விக்கினமும் பல்பிணியும் வந்தாலும் அவற்றைப் பொடிபடுத்தி வரம் தந்து அருளவேண்டும்' என முருகனிடம் வேண்டுகிறார். பல்கோடி விக்கினம், பிணி என்றும் குறிப்பது, தனது ஊமைத்தன்மை நீங்கிய அருட்செயலை நினைத்துப் பாடியது எனக் கருத இடமுண்டு. கந்தர் கலிவெண்பாவை அடுத்துகைலைக் கலம்பகம்' எனும் சிறுகாப்பியம் ஒன்றை இயற்றினார்.
சில நாட்கள் கழித்துத் திருநெல்வேலி, திருக்குற்றாலம், திருசுழியல், திருக்கானப்பேர், திருவாடானை, திருப்புனவாயில், திருப்புவனம், திருப்பத்தூர், திருப்பெருந்துறை முதலான ஊர்களைக் கண்டு இறுதியாக மதுரையை அடைந்தார். அங்கு அடியார்களின் வேண்டுகோளின்படி அங்கயற் கண்ணியின் திரு முன் அமர்ந்து அம்மையைப் பற்றிப் பிள்ளைத் தமிழொன்று பாடினார். அப்போது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கனவில் அம்மை தோன்றி அடிகள் எழுதிய நூலை அரங்கேற்றம் செய்விக்கும்படி கூறி அவரும் அவ்வாறேசெய்தார். அப்பொழுது'அம்மை குழந்தை வடிவாக வந்தே மன்னரிடத்து வீற்றிருந்து வருகைப் பருவத்தில் தொடுக்குங் கடவுள் பழம்பாடல் என்ற பாடலை பாடும் போது அரசன் கழுத்தில் இருந்து முத்தாரத்தை எடுத்து அடிகள் கழுத்தில் இட்டு மறைந்ததாகக் கூறப்படுகின்றது. பின்னர் மன்னரின் வேண்டுகோளின்படி மதுரை மடத்தில் தங்கியிருந்து மீனாட்சியம்மைகுறம், மீனாட்சியம்மை இரட்டைமணி மாலை முதலிய நூல்களைப் பாடினார். “நீதி நெறி விளக்கம்” என்ற நூலியற்றியதற்காக இருபதாயிரஞ் சிறுபொன் வருவாயையுடைய 'அரியநாயகிபுரம் நன்கொடையாக அளிக்கப்பட்டது. பின்னர் அம்மையைப் பாடியது போன்று ஐயன்மீது மதுரைக் கலம்பகம்' என்ற பெயரில் ஒரு நூலைப் பாடினார். பின்னர் திருச்சிராப்பள்ளியடைந்து அதனைச் சுற்றிலுமுள்ள திருப்பதிகளைக் கண்டு மீண்டார். அப்பொழுது வைணவத் தொண்டர் ஒருவருடன் சமயவாதம் செய்து வென்றார். பின்னர் திருக்கானூர், திருமழபாடி, திருநெய்த்தானம், திருவையாறு, திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருப்பழனம் முதலிய பதிகளை வணங்கி, திருக்குடந்தை, திருவிடை மருதூர் முதலிய பெரும்பதிகளையும் வணங்கித்
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 235
திருவாவடுதுறை அடைந்தார். அங்கு இறைவனை வணங்கி மடத்தலைவரிடம் விடைபெற்று, மயிலாடுதுறை இறைவனை வணங்கித் தருமபுரவாதீனம் சென்று அம்மடத்தலைவராகிய மாசிலாமணித் தேசிகரைக் கண்டார். அவர் அடிகளை நோக்கி, “ஐந்து பேரறிவு” என்ற பெரிய புராணபாடலின் அனுபவப் பொருளை வினவ, அடிகள் வாக்குத் தடைபட, தேசிகர் பால் தீர்க்கைப்பெற்றுமெய்யறிவுபெறவிரும்பினார். தேசிகர் அடிகளைச் சிதம்பர யாத்திரை செய்து மீளும்படி கூறினார். எனவே அங்கிருந்து புறப்பட்டுத் தருமையாதீன முதல் தலைவரின் பரமாசாரியார் வீற்றிருந்த திருவாரூர் சென்று இறைவனை வழிபட்டு ஒருமடத்தில் அமர்ந்து திருவாரூர் நான்மணிமாலை பாடி இறைவர் முன் அரங்கேற்றினார். சமயவாதியரோடு வாதாடிச் சித்தாந்த உண்மையைத் தெளிவாக விளக்கினார். பின் அங்கிருந்து சென்று வழியிலுள்ள பதிகளையும் வணங்கிப் புள்ளிருக்குவேளூரை அடைந்தார். அங்கு மருந்தீசரையும், தையல் நாயகியையும், முத்துக் குமாரசாமியையும் வழிபட்டு முத்துக்குமாரசாமிபிள்ளைத் தமிழைப்பாடினார். பின்னர் திருக்கழுமல இறைவனை வணங்கித் தில்லையை அடைந்தார், அங்கு இறைவனின் திருநடம் கண்டு “சிதம்பரச் செய்யுட் கோவை"யைப் பாடினார். அடிகள் யாப்பிலக்கணம் அறிந்தவரோ என ஒருவர் அடைந்த ஐயத்தைப் போக்குவதற்காக இந்நூல் பாடப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சிவகாமியம்மை இரட்டை
மணிமாலையையும் அங்கேயே பாடியருளினார். பின்னர் தருமபுரம் சென்று, தேசிகர் பால் ஞானோபதேசம் பெற்று அவர்மீது, “பண்டார மும்மணிக்கோவை’ என்ற நூலையும் பாடினார். அடிகள் ஒப்புவித்த பொருளைத் தேசிகர் அடிகளிடமே ஒப்புவித்துக் காசிக்குப் போய்ப்பல அறங்களையும் அப்பொருளைக் கொண்டு வழியில் திருவேகம்பம், திருக்காளத்தி முதலிய தலங்களைத் தரிசித்து, காசிக் கலம்பகமும் பாடினார். அறங்களை இயற்றுதற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்தற்பொருட்டு அந்நகர் அரசரைக் காண விரும்பினார் அடிகள். அரசன் வேற்று மொழியினனாய் இருந்தமையால் கலைமகளை வேண்டி அவளருளால் இந்துத்தானி மொழியில் திறமை வரப்பெற்றார். இங்கு கலைமகள் மீது பாடியபதிகம் ‘சகலகலாவல்லி மாலை' எனப்படும். அங்கிருந்த மகமதிய மன்னன் அடிகளின் ஆற்றலை அறிந்து மிகுந்து சிறப்புச் செய்தான். அவரது சொல் வன்மையைக் கண்டு திருமடம் ஒன்றும் அமைத்துக் கொடுத்தான்.
மயூரமங்கலம்

கங்கைக்கரையில் மடத்திற்கு அருகில் இருந்த கேதாரநாதர் கோயிலைச் சீர் செய்து தென்னாட்டுப் பூசை நியமங்களை ஏற்படுத்தினார். தெய்வ ஆற்றலும், பக்திச்சிறப்பும், ஒழுக்கமும் விளங்கும் வகையில் பல அற்புதச் செயல்களை ஆற்றினார். அடிகள் காசியில் தங்கியிருந்த மடத்திற்கு குமாரசாமி மடமென்று பெயர். இன்றும் இம்மடம் இப்பெயரில் வழங்கி வருகிறது. தாம் வாழ்ந்திருந்த இம்மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும், தமிழிலும் புராணப் பிரசங்கம் செய்து வந்தார். சிறந்த இராமபக்தராகிய துளசிதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனர் என்றும், அதன் பின்னரே கம்பராமயணத்தில் உள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டனர் என்றும் கூறுவர். இவ்வாறிருக்கையில் சிவக் கண்மணி நன்கு விளையும் இமய மலைச் சாரலில் ஒரு திருமடம் அமைக்கக் கருதினார். இதனை வாகீச முனிவர் எனும் தம்பிரானுக்கு அறிவிக்க, அவர் நேபாள நாடு சென்று முகரங்கி என்னும் இடத்தில் திருமடம் ஒன்றை நிறுவி, அங்கிருந்த சைவர் யாவருக்கும் சிவக்கண்மணிகளை காசிக்கும் தமிழகத்துக்கும் அனுப்பினார். முகரங்கி மடம் தொடர்ந்து இயங்கி வந்திருத்தலில் ஐயப்பாடு இல்லை. காசி மடத்தின் கிளை மடமாக அடிகள் காலத்தில் அமைக்கப்பட்ட முதல் மடம் முகரங்கியில் அமைந்ததாகலாம் என்று கருதுவது பொருந்தும். ஆயின் முகரங்கி மடம் பற்றிய மேற்குறித்த செய்திகள் தவிர பின்னர் எவ்வித வரலாறும் அறியக்கூடவில்லை. இப்பொழுது அங்குக் கிளை மடம் எதுவும் இயங்கி வரவில்லை என்று தற்போது இருபத்தொன்றாம் பட்டத்தில் வீற்றிருந்த முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அடிகள் காசியில் வீற்றிருந்து அறம் செய்து வந்த நிலையில் இடையில் மூன்று முறை தருமபுரம் வந்து தம் ஞானாசிரியரை வணங்கிச் சின்னாள் தங்கியிருந்து மறுபடியும் காசி அடைந்தார். நான்காம் முறை வந்து வணங்கியபோது தம் ஞானாசிரியரைத் தரிசிப்பதை விட்டுக் காசியில் இருக்க மனம் இல்லையென்று விண்ணப்பித்தார். ஞானாசிரியர், “எங்கிருந்தாலும் திருவாரூர் ஞானப்பிரகாசர் அருளால் பிறவாநெறி கிட்டும் என்பதைக்கூறி, சொக்கலிங்கரையும், மீனாட்சி அம்மையையும் எழுந்தருளப் பண்ணிக் கொடுத்து காசிக்குச் செல்ல விடைகொடுத்தனுப்பினார். காசிக்கு

Page 236
வந்து சிலநாட்கள் வரை அறங்கள் செய்திருந்து இறுதிக் காலத்தில் தம் மாணவருள் சிறந்தவரான சொக்கநாத முனிவர் என்பாரிடத்தில் பொறுப்புகளை ஒப்படைத்து வைகாசித் திங்கள் மூன்றாம் நாள் இறைவனடி சேர்ந்தார். அடிகள் கங்கையுள் மறைந்தாரென்ற கதையும் கேட்கப்படுகின்றது. அடிகளின் நினைவு நாளன்று நூல் வெளியீடு, அன்னதானம் முதலிய அறப்பணிகள் திருப்பனந்தாள் மடத்தின் மூலம் நிகழ்ந்து வருதல் குறிப்பிடத்தக்கதாகும். அடிகளின் வரலாற்றுச் சித்திரங்கள் திருப்பனந்தாள் காசிமடத்தில் வரையப்பட்டிருப்பதோடு அங்கு வெளியிட்ட நூலிலும் அச்சிடப்பட்டுள்ளன.
சொக்கநாதருக்குப் பின் பலர் மடத்துத் தலைவராக இருந்து பொறுப்பை நடத்தினர். அவருள் தில்லைநாயக சுவாமிகள் (1729-1756) என்பார் காசியில் வேறொருவரை நியமித்து விட்டுத் திருப்பனந்தாளிலே ஒரு மடமமைத்து அங்குத் தங்கிப் பணியாற்றி வந்தார். அதுமுதல் அவருக்குப் பின்வந்தோர்களால் திருப்பனந்தாள் தலைமையிடமாகவும், காசி கிளையிடமாகவும் கொள்ளப்பட்டது. அடிகள் வரலாற்றினை அறிவதற்கான அகச்சான்றுகள் மிகக் குறைவாக உள்ளன. திருஞான சம்பந்தரைப் போன்று சிறு வயதிலேயே இறைவன் திருவருளைப் பெற்றமையாலும், அவரைப் போன்றே சிவிகை, சின்னம் முதலியவற்றோடு சென்றதாய் அறிகின்றமையாலும் இவரைக் குட்டித் திருஞானசம்பந்தர்’ எனக் குறிப்பிடுவர். பிற சமயத்தாரிடையே சென்று வாதித்துச் சைவத்தை வளர்த்தமையாலும் இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.
மீனாட்சி அம்மையால் ஆட்கொள்ளப்பட்ட குமரகுருபரர் தம்மைப் பாடுவித்தலும், கேட்டலும் அம்மையே என்பதைத் தமது பாடல் ஒன்றிலேயே குறிப்பிட்டுள்ளார். இவருக்குப் பக்தியும் ஞானமும் இயற்கையிலேயே அமையப் பெற்றிருந்தது என்பதை உணர்த்தமருவுக்கு வாசனை வாய்த்தாற்போன்று பக்தி ஞான வைராக்கியங்கள் இவளிடத்தே உண்டாகி வளரத் தொடங்கின' என்பர்.
அடிகள் காசியில் மடமமைத்துச் சைவத்தை நிலைநாட்டியது தென்னாட்டுச் சைவ சித்தாந்தத்தை வடநாட்டினர் அறிதற்கு ஏதுவாயிற்று. தென்னகத்தைச் சிறப்புற ஆண்ட தமிழ் மன்னர்கள் வடக்கிலும் தங்கள் ஆட்சியை நிறுவியிருந்தனர் என்பதைச் சுட்டும் வகையில் இன்றும் உத்திரப்பிரதேச அரசாங்கம் இரண்டு
C2O

கயலையும், ஒரு வில்லையும் அரசாங்கச் சின்னமாகக் கொண்டு விளங்குவதைக் காணலாம். இதனால் தொன்று தொட்டுத் தமிழகத்துக்கும் வடநாட்டுக்கும் பண்பாட்டுத் தொடர்பு இருந்தமை புலனாகும். குமரகுருபரரும் சைவ சமயக் கொள்கையை நிலைநாட்ட வடநாட்டில் மடத்தை நிறுவினார். அவர் அமைத்த நெறியைத் தொடர்ந்து பின்பற்றாமையால் நேர்ந்த இழப்பை அடிகட்குப்பின்வந்தோர், காசியிலே செந்நெறி கடைப்பிடித்துச் சைவத்தை நிலைநாட்டியிருப்பின் இன்று வடநாடு முழுவதும் சைவசித்தாந்தம் பரவியிருத்தல் கூடும். பின் வந்தோர் பொருளிட்டத்தையும் பாதுகாப்பையும் கருதித் தென்னாட்டிலே தமக்கு நிலையான இடத்தையமைத்துக் கொண்டனர் போலும் என்ற கா. சுப்பிரமணியப்பிள்ளை கூற்று உணர்த்தும்.
மகமதியர் ஆட்சி பெற்றிருந்த அக்காலத்தில் இவரது செயல் செயற்கரியதொன்றாகும். ‘சிதம்பர மும்மணிக் கோவையில் முதற்செய்யுளில் காசிக்குச் செல்வதில் உள்ளவாகும் துன்பங்களையும், சிதம்பரத்திற்குச் சென்று தரிசனம்செய்யும் எளிமையையும் “காசியில் இறத்தல் நோக்கி” (452) என்பது முதலிய அடிகளில் உணர்த்தியிருக்கிறார். அவ்வடிகள் தம்மை ஆசிரியர் காசிக்குச் செல்லப் பணித்ததும்,அதன் அருமையைத் தாம் விண்ணப்பித்துக்
கொண்டபோது சிதம்பரவாசம் செய்யும்படி கட்டளையிட்டதுமாகிய நிகழ்ச்சிகளின் நினைவிலிருந்து எழுந்தனவென்றே தோன்றுகிறது.
அடிகள் காசியில் பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பது அறியப்படினும், அச்செயல்கள் பற்றிய விளக்கமான செய்திகள் கிடைக்கப் பெறவில்லை. பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையிலேந்தியது, சிங்கத்தின் மேலேறி வந்தது என்பன அவற்றுள் ஒரு சிலவாகும். புறச்சமயத்தார் நடுவே தமது சமயத்தை நிலைநாட்டுதற்கு அற்புதச் செயல்களை மேற்கொண்டிருக்கலாம் எனக் கூறுவர்.
இன்று கயிலாசபுரத்தில் அடிகள் பிறந்த வீட்டுப் பகுதியை அடிகளின் மடமாகப் புதுப்பித்து அமைத்துள்ளனர். 31-08-1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத் துறையில் அடிகளின் சிறப்பைப் காண்கையில் 'தமிழ்ப் புலவர்களுள் வடநாடு சென்று தங்கியிருந்து தமிழ் நூல்கள் பாடியவர் அவர் ஒருவரே என மு. வ. கூறுகின்றார். அவர் பாடிய கயிலைக் கலம்பகம் முற்றுங் கிடைத்திலதாயினும் அதனையும்
யூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 237
சேர்த்து மொத்தம் பதினாறு பிரபந்த மன்னர் என்ற சிறப்பையும் பெறுகிறார்.
இவ்வாறு மதிநுட்பத்தோடு, நூலறிவும் இறையருளும் வாய்க்கப் பெற்ற இவர் உலகியலறிவோடு கூடிய கற்பனையைத் தம் நூல்களில் படைத்துள்ளார். வேற்றிடங்களுக்குச் செல்லும் பொழுது வழியிலுள்ள சிறு ஊரினையும் விடாது கண்டு சென்ற தன்மையும், வடநாட்டுப்பயணமும் இவரது உலகியலறிவு மிகுதற்குக் காரணமாயிற்று. காணும் பொருட்களை நுட்பமாகக் கண்ட தன்மை அவ்வுலகியல் அறிவைத் தம் கற்பனைக்குப்பயன்படுத்த வழிகோலிற்று. ஒருதெய்வம், ஒரு மொழி, ஒரு கலை, ஒரு நாடு என்னும் வரையறையின்றிப் பல தெய்வங்களையும், பல மொழிக் கருத்துக்களையும், பலகலைச் செய்திகளையும், பல நாட்டு வருணனைகளையும் தம் கற்பனையில் பயன்படுத்தற்கும் இவரது நீண்ட பயணமும் விரிந்த உலகியலறிவும், பரந்த நோக்கும் காரணமாயிற்று எனலாம்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து- தவழ்ந்து வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும், கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்த்துக் கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தவர் குமரகுருபரர். இயற்கையழகு மிக்க இத்தகு சூழலும் கங்கைபோல் காவிரிபோல் வற்றாது வளஞ்சுரக்கும் இவரது கவிதைகளின் கற்பனையூற்றுக்குக் காரணமாயிற் றெனலாம்.
அபிராமிப்பட்டர்
திருக்கடவூராம் தலத்தில் வசித்து வந்த அந்தணக் குடும்பத்தில் அபிராம பட்டர் பிறந்தவராவார். இவர் இயற்பெயர் சுப்பிரமணியம். இவர் அன்னையாம் அபிராமியிடம் ஆழ்ந்த அன்பும் அளவில்லாப் பக்தியும் உடையவராய் விளங்கினார். ஆனால் தாயானவளின் மேல் தாம் கொண்டிருந்த பற்றினையும் பக்தியினையும் பட்டர் அவர்கள் ஒரு போதும் பிறர் அறிந்திடும் வண்ணம் வெளிப்படுத்தியது இல்லை. இதன் காரணமாய்ப் பட்டரைப் பார்ப்போர் எல்லாம். ஏதோ தேவதையை வழிபடுவர் என்றே எண்ணி வந்தனர். இவரிடம் வெறுப்புற்ற ஒரு சிலர் தஞ்சை சரபோஜி மன்னரிடம் பட்டரைப் பற்றிக் குறை கூறினர்.
இது கேட்ட சரபோஜி மன்னரும் தம்மிடம் வந்திடுமாறுபட்டரை அழைத்து வரச் செய்தார். மன்னர்
மயூரமங்கலம்

சரபோஜியார் பட்டரின் உருவத்தைப் பார்த்து பின் அவர் கையில் ஏதோ இருப்பதைக் கண்டு பட்டரை நோக்கி, உமது கையில் என்ன உள்ளது?’ என்று வினவ, பட்டர் பஞ்சாங்கம்' என்றுரைத்தார். பட்டரின் பதிலைக் கேட்ட மன்னர்,நல்லது. நாளை என்ன திதி? என்றுவினவவும் பட்டர் எதையும் ஆராய்ந்திடாமல் பெளர்ணமி என்று பதில் உரைத்தார்.
ஆனால் உண்மையில் மறுநாள் அமாவாசை திதியாகும். இவ்வாறு இருக்கையில் பட்டரின் பதிலானது மன்னரைத் திகைப்படையச் செய்தது. மன்னர் பட்டரின் பதிலினால் சினம் கொண்டு, நாளை பெளர்ணமி என்று கூறிடும் உம்மால் முழுநிலவினைக் காட்டிட இயலுமோ? என்று பட்டரை நோக்கி வினவினார். மன்னரின் கோபத்தை அறிந்திடாப் பட்டர் அபிராமியின் அருளால் முழுமதியை தம்மால் மறுதினம் காட்டிட முடியும் என்றுரைத்தார்.
பட்டரின் பதில் கேட்டு மீண்டும் சினம் கொண்ட மன்னர் பட்டரை மறுநாள் வரையிலும் சிறையில் அடைந்தார். பின் அக்னி குண்டம் ஒன்றை வளர்த்திடச் செய்தார். அக்குண்டத்தின் மீது சற்று மேலாகத் தொங்குமாறு நூறு பிரிவுகளை உடைய உறி ஒன்றைக் கட்டி, பட்டர் அவ்வுறியில் இருந்து முழுமதியைக் காட்டிட வேண்டும் என்று உரைத்து உறியில் பட்டரை ஏற்றி விட்டனர்.
உறியில் ஏறி நின்ற பட்டர் அபிராமியின் மேல் ஒவ்வொரு கவியாகப் பாடி முடிக்க, உறியின் ஒவ்வொரு பிரியும் மன்னரின் ஆணையால் அறுக்கப்பட்டது. இவ்வாறு எழுபத்து எட்டுக் கவிகள் பட்டர் பாடி முடிக்க மன்னரின் ஆணைப்படி எழுபத்தெட்டுப் பிரிவுகள் அறுக்கப்பட்டன. எழுபத்தொன்பதாம் கவியான, விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ்வழி கிடக்கப் பழிக்கே உழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடு என்ன கூட்டினியே பாடலைப்பாடி முடித்தார். அதாவது "அபிராமி வல்லியின் திருவிழிகளுக்கு எனக்கருள அருள் உண்டு. அவளது அந்த அருளினை அடைந்திடும் பொருட்டு வேதம் சொன்ன நெறியில் வழிபட எனக்குத் துணையாக என் மனம் உண்டு. இங்ங்ணம் அந்த நல்வழி இருக்கவும் பழிச்செயல்களில் உழன்று திரிந்திடும், கொடிய பாவச் செயல்களைச் செய்கின்றதன் பலனாய்ப் பாழமான நரக்குழியில் வீழ்ந்து மூழ்க இருந்திடும் கயவர்களோடு

Page 238
இனி என்ன உறவு எனக்குள்ளது?” என்று வேதனை வெளிப்படாத மன உறுதியோடு அபிராமியின் மீது நம்பிக்கை வைத்துப் பாடினார். இப்பாடலினைப் பாடி முடிக்கவும் அன்னையாம் அபிராமி எழுந்தருளினாள். அவளிடம் பட்டர் தன் குறையை முறையிட்டு மன்னரின் ஆணையையும் எடுத்துக் கூறி, அவள் அருளினோடு அன்னையிடம் இருந்து குண்டலம் ஒன்றினைப் பெற்று வானம் மீதில் எறிய, அக்குண்டலமானது வானத்தில் முழுமதியாய் மாறி ஒளி வீசியது. மன்னரும் மற்றோரும் வானில் முழுமதியைக் கண்டதும் பட்டரின் பக்தியை கண்டுணர்ந்து பணிந்து தொழுது தம் பிழையைப் பொறுத்தருளவும் வேண்டினர்.
அபிராமிப்பட்டர் இந்த மேலான அபிராமி அந்தாதியை இயற்றியதோடு, திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார் பதிகம், அமுத கடேசுவரர் பதிகம், கால சம்ஹார மூர்த்திப் பதிகம், அபிராமியம்மை பதிகம் முதலான நூல்களையும், பக்திச் சுவை ததும்ப அழகொழுகும் நடையில் இயற்றியுள்ளார்.
இவற்றையெல்லாம் ஒருங்கு சேரத்தொகுத்துத் திருகடவூர் அபிராமிப்பட்டர் பிரபந்தம்'என்று ஒரு நூலும் வெளியிடப் பெற்றுள்ளது.
தாயுமானவர்
இற்றைக்குச் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமறைக்காட்டில் கேடிலியப்பப்பிள்ளை என்பவர் அவரது துணைவியார் கஜவல்லி அம்மையாருடன் அறம் தவறாது இல்வாழ்க்கையைச் செம்மையாக வாழ்ந்தும் திருமறைக்காட்டிலுள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்தைச் செவ்வனே பரிபாலிக்கும் பொறுப்பை ஏற்றும் பணிசெய்து வந்தார் - அப்பொழுது திருச்சியிலிருந்து ஆட்சி செய்துவந்த விஜயரங்க சொக்கநாதர் திருமறைக் காட்டிற்கு விஜயம் செய்த பொழுது பிள்ளையவர்களின் கல்வியறிவு, ஒழுக்கம். பேச்சுவன்மை இவற்றைக் கண்டு மகிழ்ந்து திருச்சிக்கு வந்து அரசாங்க சம்பிராதர் (தலைமைக்கணக்கர்) பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்ட கேடிலியைப்பப்பிள்ளை அவர்களும் உடன்பட்டு
திருச்சி செல்ல ஆயத்தமானார்.
இந்நிலையில் பிள்ளையவர்களின் துணைவியார் கஜவல்லியம்மையார் அழகிய ஆண்மகவை
ஈன்றெடுத்தார். குழந்தைக்குச் சிவசிதம்பரம் என்று பெயர்சூட்டி வளர்த்து வருகையில் தனது தமையனார் வேதாரண்ய பிள்ளையவர்கள் மக்கட்பேறு இல்லாமல்
C22d

வருந்துவது கண்டு சிவசிதம்பரத்தை அண்ணனுக்குத் தத்தளித்துவிட்டுச் திருச்சி வந்து அரசாங்க பதவியை வகித்து வந்தார். திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் தாயுமான சுவாமியிடம் தங்களுக்கொரு குழந்தையை அருளவேண்டும் என்று தன்மனைவியுடன் சென்று நாள் தோறும் இறைஞ்சி வந்தார். அவர்களது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த இறைவன் திருவருளால் அழகான ஆண் குழந்தைக்குத் தாய் தந்தையாகிக் குழந்தைக்குத் "தாயுமானவன்” என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.
தாயுமானவனும் சிறந்த ஆசிரியனாகிய சிற்றம்பல தேசிகர் என்ற அறிஞரின் துணையினால் கல்வியில் மட்டுமல்லாது பக்தி நிலையிலும் தலைநின்றார். திருவானைக்கா அகிலாண்டநாயகியிடம் அயராத அன்பு செலுத்தி வந்தார். ஒருநாள் மலைக்கோட்டை ஆலயத்தில் திருமூலர் மரபில் வந்த மெளனகுரு என்ற சித்தரைச் சந்தித்தார். அவரது திருவடிகளில் வீழ்ந்து தன்னையே அவரிடம் ஒப்படைத்தார். சித்தரும் “சும்மாஇரு, சொல்லற. என்று குறிப்புக் காட்டி மறைந்தார். கல்வி கேள்வியில் வல்ல தனது மகன் உலகியல் நாட்டம் கொள்ளாமல் இருக்கிறானே என்று எண்ணி, மட்டுவார் குழலி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார் கேடிலியப்பப்பிள்ளை.
பெற்றோர்களின் மனஅமைதிக்காகத்திருமணம் செய்துகொண்ட தாயுமானவர் கனகசபாபதி என்ற ஆண்மகவிற்கும் தந்தையானார். குழந்தை பிறந்த சிலமாதங்களிலேயேதாயுமானவரின் மனைவி இறைபதம் எய்திவிட்டார். தாயற்ற சிறுகுழந்தையை வளர்க்கும் பொறுப்பைத் தாயுமானாரின் தமையன் சிவசிதம்பரம் ஏற்றுக்கொண்டார்.
தாயுமானவரின் தந்தை இறந்ததும் அந்தப்பொறுப்பை மன்னன் தனயனிடம் ஒப்புவித்தார். ஒருநாள். பிற்பகல் நேரம் ராணி மீனாட்சி அரியணையில் அமர்ந்திருக்க சபை மந்திரி பிரதானிகளால் நிரம்பியிருந்தது. தலைமைக் கணக்கர் தாயுமானவர் அரசின் நிதிநிலைமையைத் தெரிவிக்கும் ஒலைகளைக் கையில் தாங்கிச் சபையில் வாசித்துக் கொண்டிருந்தார். திடீரெனப் படித்துக்கொண்டிருந்த ஆவண ஒலைகளைக் கையினால் கசக்கித் தூள்தூளாக்கித் தூர எறிந்தார். இச்செயலைப் பார்த்துக் கொண்டிருந்த சபை திகைத்து நின்றது. சிறிது நேரத்தில் தனது நிலையுணர்ந்த தாயுமானவர் தனது செய்கைக்கு
யூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 239
வருந்தி, “திருவானைக்கா அம்பிகை அகிலாண்டேஸ்வரியின் பட்டுப் புடவையில் கற்பூர வில்லை தவறி விழுந்து தீப்பற்றி எரிவது போல ஒர் அகக்காட்சி என்னுள் விரிந்தது. தீயை அணைப்பதாக நினைத்து ஆவணங்களை வீணடித்து விட்டேன்” என்று தாயுமானவர் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அங்கு வந்த அரச சேவகன் ஆலயத்தில் நடந்தவற்றைக் கூறினான்.
தாயுமானவரின் அகத்தெளிவைப் புரிந்துகொண்ட இராணி மீனாட்சி அவரை அரியாசனத்தில் அமர்த்தி அவரது பக்தியை வியந்தாள். அரசியாரிடம், “தாயே! எனது மனம் இறைநாட்டம் கொண்டு தவிக்கின்றது. அரசியல் பதவியை மேலும் நான் வகிப்பது தகாது தயவு கூர்ந்து அரசியலியிருந்து எனக்கு விடுதலை தாருங்கள்” எனத் தாயுமானவர் வேண்ட அவரது வேட்கையுள்ளத்தைப் புரிந்துகொண்ட அரசியும் சம்மதம் தந்தார்.
துறவு வாழ்க்கையை மேற்கொண்ட தாயுமான அடிகள் பல தலங்களுக்கும் சென்று இறை புகழைப் பாடியவாறு இராமேஸ்வரம் சென்று"மலைவளர் காதலி" என்ற பாடல்களால் அன்னையைத் துதித்து மேலும் “அகிலாண்ட நாயகி பெரியநாயகி என்ற பாமாலைகளையும் சாத்தி இறைவைனின் எழுதரிய கோலத்தைத் தெள்ளு தமிழில் 1452 பாடல்களால் புகழ்ந்து கி. பி. 1659 தைத் திங்கள் சோமவாரம் விசாக நட்சத்திரம் கூடிய பூரணை நன்னாளில் இராமநாத புரத்தையடுத்தகாட்டூரணி என்னும் இடத்தில் ஓர் புளிய மரத்தின் அடியில் நிட்டை கூடித் தேகத்தை உகுத்தார்.
பூg பாஸ்கரராயர்
இந்த மஹான் ழீமான் கம்பீரராயருக்கும் கோணாம்பிகாவுக்கும்மாஹாராசுடிரதேசப்பாஹா என்ற ஊரில் பிறந்தார். இவர் காலம் 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையுமாகும.
பூரீ பாஸ்கரராயருக்குத்தக்க வயது வந்ததும் தகப்பனார் கம்பீரராயர் ஸரஸ்வதி மந்திரத்தை உபதேசித்துக் காசிக்கு அழைத்துச் சென்று உபநயனம் செய்வித்தார். ந்குளிம்ஹாத்வரீ எனும் மஹா புருஷரிடம் கல்வி கற்றபாஸ்கரராயர் சிறுவயதிலேயே சரஸ்வதியின் உபதேசம் பெற்றதினால் சுலபமாக வித்தைகளைக் கற்றார். பின்பு கெளடதர்க்க சாஸ்திரத்தைக் கங்காதர
மயூரமங்கலம்

வாஜபேயிஎன்பவரிடம் கற்றார். பின் ஆனந்தி என்பவரை மணந்து ஒரு குழந்தைக்குத் தந்தையரானார்.
பூரீ வித்தையால் மந்திர சக்தி அடைந்து, தெய்வ தரிசனம் கண்ட சிவதத்த சுக்கிலர் என்னும் மகான் பாஸ்கரராயருக்கும் மனைவிக்கும்பூரீவித்யை உபதேசம் செய்து பூரணாபிஷேகம் நடாத்திப் பாஸ்கரராயருக்குப் பாஸுராநந்த நாதர் என்றும் மனைவிக்குப் பத்மாவத்யம்பிகா என்னும் தீக்ஷா நாமங்கள் வழங்கினார். மாத்வ சம்பிரதாய வித்துவானை வாதத்தில் வென்று அவர் உறவினர் பெண்ணையும் மணந்த பாஸ்கரராயர் காசியில் சோமயாகம்முடித்துக்கிருஷ்ணா நதிக்கரையில் சிறிது காலம் வசித்தார்.
அப்போது தஞ்சையை ஆண்ட போசள வம்சத்து அரசன் வேண்டுதலின்படி சோழ நாட்டுக்கு வந்தார். காவேரிக்கரையில் திருவாலங்காடு என்ற தலத்தில் தன் குரு கங்காதரவாஜபேயை இருப்பது கண்டு அவருக்கருகில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் மன்னனிடம் ஒரு அக்ரகாரத்தை இனாமாகப் பெற்று வாழ்ந்து வந்தார். அவ்விடம் இன்று பாஸ்கரராயபுரம் என்று அழைக்கப்படுகிறது.
அங்கிருந்து தினமும் அம்பாளை உபாசித்து வந்தார். இவருக்குப் பல சிஷ்யர்கள் வாய்த்தனர். இவர்களுள் உமாநந்தநாதர் முக்கியமானவர். இவர் பூரீவித்யா உபாசனையில் நித்தியோற்சவம் எனும் பூஜைப் பத்ததியை அமைத்துக் குருவின் பாதங்களில் சமர்ப்பித்தார்.
பாஸ்கரராயர் எழுதிய நூல்களின் விபரங்கள் 1. வேதாந்தம் - சண்டபாஸ்கரம், நீலாசலபேடிகா 2. மீமாம்சா - வாத கெளதுகலம், பாட்ட சந்ரோதயம் 3. வ்யாகரணம் - ரசிக ரஞ்சனி 4. ந்யாயம் - ந்யாய மண்டனம் 5. சந்தஸ் - சந்தோ பாஸ்கரம், சந்த கெளஸ்துபம், வ்ருத்த சந்ரோதயம், வார்த்திக ராஜம், சோடீவ்ருத்தி 6. காவ்யம் - சந்திர சாலா, மதுராம்பலம், ஸ்பைாஷிதம் 7. வேதம் - வைதீக கோஷம் 8. ஸம்ருதி - ஸம்ருதி தத்துவம், ஏகாதசி நிர்ணயம், ஸகஸ்ர போஜன விதி கன்டிகா, சங்க சக்ராங்ங்ன பிராயச்சித்தம், பிரதோஷ் பாஸ்கரம், த்ரிஷபாஸ்கரம், குண்ட பாஸ்கரம். 9. ஸ்தோத்திரம் - சிவதண்டகம், தேவீ ஸ்தவம், சிவஸ்தவம், 10.மந்ர சாஸ்திரம் - சிவாஸ்டோத்திர சத நாமவ்யாக்யா, கத்யோதம், சந்ரலாம்பா மகாத்யம்யடிக, நாத நவரத்தின

Page 240
மாலா மஞ்சுஷா, பாவநோபனிஷத் பாஷ்யம் ப்ரயோகம், பூரீ சூத்தபாஷியம், கெள லோபநிஷத் பாஷ்யம், த்ரிபுரோபனிஷத் பாஷ்யம், செளபாக்ய பாஸ்கரம் எனப்படும் பூரீ லலிதா சகஸ்ரநாம பாஷ்யம், செளபாக்ய சந்ரோதயம், வரிபாஷ்யரகஷியம் ப்ரகாஷம், திரிபுரசுந்தரி பாஹிய வரிவஷ்ய, ரத்னாலோகம் என்கிற பரசுராம கல்ப சூத்திர பாஷ்யம், குப்தவதி என்கிற ஸ்பத சதி பாஷ்யம், சதஸ்லோகீ, மாலா மந்ரோத்தாரம், சேதுபந்தம்.
இவ்வாறு விசய ஞானத்தாலும் பரதேவதையின் அனுக்கிரகத்தாலும் குருவின் கிருபையாலும் பலவிதமான க்ரந்தங்களை ஏற்படுத்தியழரீபாஸ்கரராயர் பூரீவித்யாவின் விசய ஞானத்தை உருவாக்கியவராக இருக்கிறார்.
பூரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்
புண்ணிய பூமியாகிய பரதகண்டத்தில் வங்க தேசத்திலே ஹுக்கிஜில்லாவைச் சேர்ந்த 'க்ாமார்ப்புகுர் என்னும் சிறு கிராமத்தில் பூரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், சகாப்தம் 1757-ஆம் வருஷத்தில் மாசி மாதத்துப் பூர்வ பகூடித்துத் துவிதியையில், (கி. பி. 1836 பூரீ பிப்ரவரி மீ 18உ)அவதரித்தருளினர். இவரது தாய் தந்தையர்களின் பெயர்கள் முறையே சந்திரமணிதேவி, கூrதிராம் சட்டோ பாத்யாயர் என்பன. கூரதிராமின் பூர்வ கிராமம் காமார்ப் புகுருக்கு மூன்று மைல் தூரத்திலுள்ள ‘தேரே என்னும் சிற்றுார். அவ்வூர் ஜமீன்தார் ஒரு சமயம் சட்டோபாத் யாயரைத் தனக்கு அனுகூலமாக நியாயஸ்தலத்தில் உண் மைக்கு மாறாகச் சாகூரி சொல்ல வரவேண்டுமென நிர்ப் பந்தித்தான். அப்படி வரமுடியாதென இவர் மறுத்ததும் அதிகாரிக்குக் கோபமுண்டாகி இவரைப் பலவிதத்திலும் இம்சிக்கத்தொடங்கினான். இது காரணமாக கூrதிராம் தமது ஜன்ம கிராமத்தை விட்டகன்று காமார்ப்புகுரில் குடியேறினர். குலத்தில் உயர்ந்தவராயினும் இவ்வுல கத்தவர் கொண்டாடும் பொருட் செல்வம் இவர்பால் இல்லை. என்றாலும் பக்தி பூர்வமாய்ப் பகவதாராதனம் செய்து வந்தாராகையால் மகா தர்மிஷ்டரெனவும், வர்ஸ் தவமான பக்தரெனவும் பிரசித்தி பெற்றிருந்தார். இவருக்கு வாக்கு ஸித்தி முதலிய திவ்ய சக்திகள் உண் டென்றும் இவர் ஈசுவரானுக்கிரகம் பெற்றவரென்றும் அவ்வூர் ஜனங்கள் நம்பியபடியால், இவரைக் கண்டவுடன் பயபக்தியுடன் மரியாதை செய்வார்கள். இவரெதிரில்

அற்பமான பேச்சுக்களையும் பேசமாட்டார்கள்.
இவரது பக்தியைப்பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. இவர் தமது குமாரத்தியைப் பார்ப்பதற்காகப் பன்னிரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு கிராமத்துக்கு ஒரு நாள் போய்க்கொண்டிருக்கையில் பாதி வழியில் யதேஷ்டமாய்த் தளிர்த்துக் கொண்டிருந்த ஒரு வில்வமரத்தைக் கண்டார். உடனே மரத்தின் மீதேறி வேண்டியமட்டும் வில்வதளங்களைக் கொய்துகொண்டு தமது உத்தேசப்படி மகளைப் பார்க்கப் போகாமல், அவற்றைக் கொண்டு சிவபூஜை செய்வதற்காகத் தம் வீட்டுக்கே திருப்பிவிட்டார். இவருக்கு பூரீ ராமச்சந்திர மூர்த்தியே குல தெய்வம். தாம் செய்யும் காரியங்களையெல்லாம் ரகுவீரனுக்கே அர்ப்பணம் செய்து விடுவார். அந்த பக்தவத்சலனுடைய கிருபா விசேஷத்தால் சட்டோபாத்யாயருக்கு எவ்விதக் குறையும் நேராதிருந்தது. ஒரு நாள் இவர் தீர்த்த யாத்திரையாகக் கயா கூேடித்திரத்துக்குச் சென்றிருந்த போது அங்கு கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும்பூரீமகாவிஷ்ணு இவருடைய பக்திக்கு மெச்சி, இவர் கனவில் தோன்றி, நான் உனக்குக் குமாரனாக அவதரிக்கப் போகிறேன்' என்றருளி மறைந்தனர். இதன் பிரகாரம் சந்திரமணி தேவி கர்ப்பவதியாகி உரிய காலத்தில் நல்ல லக்ஷணங்கள் பொருந்திய புருஷப் பிரஜையைப் பெற்றனர். பூரீ மகாவிஷ்ணுவின் பெயர்களில் ஒன்றான சுதாதரர்' என்ற நாமம் இக்குழந்தைக்கு இடப்பட்டது. இந்தக் கதாதரர்தான் பின்னர் பூரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரெனப்பிரஸித்தி வாய்ந்த பரமாசாரியரானார். இவருக்கு ராமகுமாரன் என்ற ஜேஷ்ட சகோதரர் ஒருவரிருந்தார்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது கதாரர் விஷயத்தில் முற்றிலும் உண்மையாகவே இருந்தது. ஸமதர்சனம், எல்லோரிடத்தும் அன்பு அருள், சாந்தம், சீலம் முதலிய நற்குணங்கள் இவரிடம் பிற்காலத்து விளங்கினவென்பதை நாமறிவோம். அப்படிப்பட்ட குணங்கள் அதிபால்ய தசையிலும் இவரிடத்து மிகுந்து தோன்றின. கிராமத்துக்கு அருகாமையில் உள்ள ஒரு மாந்தோப்பில் கதாதரர் தலைமையின்கீழ் சிறுவர்களெல்லோரும் கூடி விளையாடுவதுண்டு. அங்கு கதாதரர் மற்றைய எல்லா ஜாதிப் பிள்ளைகளோடும் சேர்ந்து யாதொரு ஜாதி வித்தியாசமும் பாராட்டாமல் விளையாடிக்களிப்பார்.
வங்க தேசத்தில் கூத்தாடிகள் ஊரூராய்ச் சென்று நாடகமாடி ஜனங்களை இன்புறுத்தித்
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 241
தாங்களும் பணம் பெறுவது வெகு காலமாக நடைபெற்ற வழக்கம். இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் இவைகளினின்றும், பதினெண் புராணங்களினின்றும், ஏதாவதொரு கதையை எடுத்துக்கொண்டு அதை நடித்துக் காட்டுவது அத்தகைய கூத்தாடிகளின் தொழில். இவர்களுடைய நாடகத்தில் சங்கீதந்தான் பிரதானம். அதைக் கேட்பதற்கு ஜனங்கள் திரள் திரளாய்க்கூடுவார்களாதலால், சற்றும் எழுதப்படிக்கத் தெரியாதவனுக்கும் இக்கூத்தாடிகள் மூலமாகப் புராணக் கதைகள் தெரிந்துவிடும். இப்படிப்பட்ட கூத்துக்கள் சுற்றுப்பக்கத்தில் சமீபத்திலுள்ள எந்தக் கிராமத்தில் நடந்தாலும் சரி, அங்கு கதாதரரை நிச்சயமாகப் பார்க்கலாம். பார்த்த நாடகத்தை அவர் தாமே திரும்பவும் நடிக்கக்கூடிய ஞாபகசக்தி வாய்ந்தவராகவிருந்தார்.
ஒரு நாள் மேற்கூறிய மாஞ்சோலையில் ஊர்ச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது, கதாதரர் வெகு இனிமையாகப் பாடித் தம் தோழர்களை ஆனந்தப்படுத்திக்கொண்டிருந்தனர். திடீரென்று பாட்டை நிறுத்திய கதாதரர், “தம்பிகளே! நாம் அன்று பக்கத்துக் கிராமத்தில் பார்த்த ராதா சோகம்' என்ற நாடகத்தை இப்போது நடிக்கலாமா?” என்றனர். உடனே "நடிக்கலாம், நடிக்கலாம்” என்று அனைவரும் ஒரே குரலாய்க் கூறினர். கதாதரருக்கு ராதை வேஷமும் மற்றவர்க்குச் சேடிகளின் வேஷமும் போடப்பட்டன. கிருஷ்ணனுடைய பிரிவாற்றாமைக்குப்பெரிதும் வருந்திய ராதைக்குப் பிராணபயம் நேரிடுமெனக் கண்டுகொண்ட சேடிகள், தங்களுள் ஒருத்தியான பிருந்தையைக் கிருஷ்ணனிடம் தூதனுப்பியதாக வரும் சந்தர்ப்பத்தை நடிக்கும்போது, பிருந்தையாக வேஷம் பூண்டவன் ராதையாக வேஷம் தரித்த கதாதரரிடம் சென்று “கிருஷ்ணனிடம் என்ன சொல்கிறது?’ என்று கேட்டான். கதாதரர் யாதொருபதிலும் சொல்லாமல், “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று சொல்லிக்கொண்டே மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார். இதனால் நாடகம் பாதியில் நிற்க வேண்டியதாயிற்று. கதாதரர் ஒரு வேஷதாரனாக நினையாமல் வாஸ்தவத்தில் கண்ணனைப் பிரிந்து துயரமடைந்த ராதையேயெனப் பாவித்தனர். கண்ணபிரான் உரலுடன் சேர்த்துப் பிணிக்கப்பட்டதைக் கேட்டு. “எத்திறம் உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே” என்று பூரீ நம்மாழ்வார் மூர்ச்சித்துக் கிடந்ததும், பூரீராமபிரான் தனிமையில் கரதூஷணாதியருடன் யுத்தஞ் செய்கிறாரென்பதைக் கேட்டதும் சதுரங்க
மயூரமங்கலம்

சேனைகளையும் கூட்டிக்கொண்டு சகாயத்திற்கு பூரீ குலசேகராழ்வார் புறப்பட்டதும் இப்படிப்பட்ட மனநிலைமைக்கு உதாரணங்களாம்.
கதாதரருக்கு உலகப்பற்று பால்ய முதற்கொண்டே அற்றிருந்தது. ஸந்யாஸிகளைக் 56TLITs) அவருக்குப் ULO சந்தோஷம். அவர்களோடுபேசுவதும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிவதும் கதாரருக்கு உவப்பான காரியங்கள். ஒருநாள் சந்திரமணிதேவியார் கதாதரருக்கு ஒரு புது வஸ்திரத்தைக் கொடுத்தனர். இவர் அதை உடுத்திக்கொண்டு, ஜகந்நாத்துக்கு யாத்திரையாகச் செல்லும் சில சாதுக்கள் தங்கியிருந்த இடத்திற்கு அவர்களைத் தரிசிக்கச் சென்றனர். அந்த சாதுக்கள் கெளமீன தாரிகளாக இருப்பதைப் பார்த்துத் தாமும் அவ்வாறே இருக்க எண்ணித் தமது புதுவஸ்திரத்தைக் துண்டு துண்டாகக் கிழித்து, இரண்டு துண்டுகளைக் கெளமீனமாக உடுத்திக்கொண்டு, தம் தாய் முன்னர்ச்சென்று, ‘அம்மாஸ நான் ஸந்யாஸியாகி விட்டேன் பார்” என்றனர்.
பால்யத்தில் கதாதரர் பார்வைக்கு வெகு அழகுள்ளவராக இருந்தார். ஆகவே ஊரார் எல்லோரும் அவரைக் கொண்டாடிக் கண்டபோதெல்லாம் அவருக்குப் பகூடின பலகாரங்களைக் கொடுப்பதுண்டு. வயது முதிர்ந்தோர் கூட இவரிடமிருந்த பக்தியைப்பார்த்து இவர் தேவாம்சரெனவேமதித்தனர். கதாதரர் பிறந்ததும் அவர் குடுபத்தைப் பீடித்துவந்த தரித்திரியம் ஒருவாறு நீங்கி விட்டதாகையால், அவருடைய பெற்றோர்களும் உற்றார் உறவினர்களும் அவரை வெகு உயர்வாகவே பாராட்டி வந்தனர். குழந்தைப் பருவத்திலேயே அவர் சித்திரங்களை எழுதுவதிலும் மண்பிரதிமைகளைச் செய்வதிலும் அபார சாமர்த்தியமுள்ளவராக இருந்தார். மண்பதுமைகள் மட்டுமின்றி ஊனமாய்ப் போன சில விக்ரகங்களையும் கூடச் செப்பனிடத் தொடங்கினார். தகூழினேசுவர ஆலயத்தில் இவரால் செப்பம் செய்யப்பட்ட கிருஷ்ண விக்ரம் ஒன்று இன்னும் இருக்கிறது.
ஒன்பதாவது வயதில் கதாதரருக்கு உபநயனமாயிற்று. அத்தருணத்தில் வழக்கப்படி உயர்குலத்துதித்த ஸ்திரீயிடம் பிகூைடியேற்க வேண்டியிருக்க, இவர் அவ்வாறு செய்யாமல் ஒரே பிடிவாதமாய்த் தாழ்ந்த குலஸ்திரீ யொருத்தியிடம் பிகூைடியேற்றுத் தம்முடைய சம திருஷ்டியை வெளிப்படுத்தினர்.

Page 242
பிறகு கதாதரரின் தமையனாரான ராமகுமார சட்டோபாத்யாயர் தாம் கல்கத்தாவில் ஏற்படுத்தியிருந்த பாடசாலையில் சேர்ந்து படிக்கும்படி அவரைத்தூண்டினார். ஆனால் அங்கு நிகழும் வீண் வாதங்களைக் கண்டு வெறுப்புற்ற கதாதரர் தமக்கு அப்படிப்பட்ட கல்வி தேவையில்லை யென்றும், வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியின்றி FF56u町6D6T அடையவேண்டிய கல்விதான் தமக்கு வேண்டுமென்றும் சொல்லிப்பாடசாலையில் கற்க மறுத்துவிட்டார்.
அக்காலத்தில் கல்கத்தாவுக்கு வடக்கே ஐந்து மைல் தூரத்திலுள்ள தகூறினேசுவரம் என்னுமிடத்தில் வெகு பொருள் செலவிட்டு ராணி ராஸமணி அம்பாள் காளி தேவிக்கு நேர்த்தியான கோயில் ஒன்று கட்டுவித்தாள். அங்கு ராமகுமாரர் அர்ச்சகராக அமர்ந்து தமது தம்பியான கதாதரரையும் உதவிக்கு அழைத்துச் சென்றார். கதாதரர் கோயிற் பிரசாதத்தைப் புசியாது கங்கைக் கரையில் சுயம் பாகம் செய்துகொண்டு சாப்பிடுவார். சில காலம் சென்றதும் ராமகுமாரர் நோயால் வருந்தி இறந்து விட்டார். பின்னர் கதாதரரே அக்கோயிலுக்கு அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
காளிதேவியை ஆராதனை செய்வதில் அவர் காட்டிய பக்திக்கு அளவேயில்லை. அவர் ஜகன்மாதாவைத் தமது தாயெனவே நம்பினார்; தாயைப் பார்த்துக் குழந்தை கொஞ்சுவதுபோலப் பேசுவார்; பின்னும் ஸ்தோத்திரம் செய்வார்; ஆடுவார்; பாடுவார்; தேவி தமக்குப் பிரத்தி யக்ஷமாகாததைத் கண்டு மனங்கசிந்து அழுவார். சில வேளைகளில் பக்திப் பரவசத்தால் தேவிக்கு அர்ச்சிக்க வேண்டிய மலர்களைத் தம் தலையிலே போட்டுக்கொள்வார். ஆரத்தி முடியும் காலம் கழிந்து பிறகும் கூட ஆரத்தியைச் சுற்றிக்கொண்டே யிருப்பார். இவ்விதமான விபரீதச் செய்கைகளினால் இவருக்குப்பைத்தியம் பிடித்து விட்டதென்று எல்லோரும் எண்ணினார்கள். இவருக்குக் கல்யாணம் செய்து வைத்தால் சித்தப்பிரமை தீருமென்று நினைத்துத் தாயாகிய சந்திரமணி தேவியார் இவரைக் காமார்ப்புகுருக்கு அழைப்பித்து இவருக்கு ராமச்சந்திர மகோபாத்தியாயர் என்பவரின் குமாரத்தியான, சாரதாமணி தேவி யென்னும் ஐந்து வயதுப் பெண்ணை விவாகம் செய்வித்தார். விவாகமான பிறகு இவர் கல்கத்தாவுக்கு வந்து பழையபடியே காளிகோயிலில் பூஜையை ஒப்புக்கொண்டார். ஆனால் சித்தப்பிரமை மட்டும் முன்னிலும் மடங்கு அதிகமாயிற்று. தேவியை நோக்கி, “தாயே, அடியேனுக்குப் பிரத்யகூஷமாவது
*エs

என்று? எப்பொழுது?’ என்க் கதறித் துயரமுறுவர். டாக்கா நகரவாசியான வைத்தியர் ஒருவரே அவருக்குத் தெய்வப் பித்தேறியிருக்கிறதென்று கண்டு பிடித்தாரேயொழிய மற்றையோரெல்லாரும் அவரைப் பைத்தியமென்றே கருதினர்.
அன்பும் பக்தியும் இப்படி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகையில் ஒரு நாள் தேவி தமக்குப் பிரத்யகூஷ் மாகாததற்குக் கதாதரர் மிகவும் வருந்தித் தம்முயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார். அடியவர்களுடைய துயரத்தைப் பொறுக்காத தேவி உடனே பிரத்யகூஷமாக, கதாதரர் மெய்ம்மறந்து தரையில் வீழ்ந்தார்; அன்றும் மறுநாளும் அவ்வாறே கிடந்தார். எழுந்ததும், பேரானந்தம் தம்முட் பெருகியதாக உரைத்தனர்.
பிறகு நிர்விகல்ப சமாதியை அடையும் வரை இவர் பன்னிரண்டு வருஷங்கள் கொடிய தவம்புரிந்தார். அக்காலத்தில் அவர் நீண்டகாலம் கண்மூடித் தூங்கினதில்லை. ஸமாதி நிஷ்டையிலிருக்கும் போதெல்லாம் அவருடைய மருகரான ஹிருதயர் அவரது சரீர ஆராதனையின் பொருட்டுக் கொஞ்சம் அன்னம் ஊட்டுவர். சில வேளைகளில் பிறரறியாது கதாதர் தாழ்ந்த ஜாதி யார் வீடுகளில் நுழைந்து துடைப்பம் எடுத்துப் பெருக்கிக் கொண்ட “தாயே நான் பெரியவனென்றும் பிராம்மணனென்றும், இவர்கள் ஈன ஜாதியரென்றும் எண்ணுகிற மனோபாவம் என்னிடம் இருக்கவேண்டாம்; இவர்கள் அனைவரும்பிரம்மஸ்ரூபம் என்னும் எண்ணம் எனக்குண்டாகும்படி அனுக்கிரகிக்க வேண்டும்” என்று பிரார்த்திப்பார்.
செல்வத்தை இவர் ஒருபோதும் மதித்ததில்லை. ஒரு கையில் மண்ணையும் மற்றொரு கையில் பணத்தையும் வைத்துக்கொண்டு, "பணம் மண், மண் பணம்” என்று கூறிக்கொண்டேமாற்றி இரண்டையும் கங்கையில் எறிந்த விபரத்தையும், கோயில் அதிகாரியான மதுர நாதர் கொடுத்த விலையுயர்ந்த சால்வையை மண்ணில் போட்டு மிதித்து அப்பால் அகற்றிய சம்பவத்தையும் அவருடைய விரக்திக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இத்தருணத்தில் பிராம்மண ஸ்திரீ ஒருத்தி தோன்றி, கதாதரருக்குக் கடுந்தவத்தால் ஏற்பட்டதேக எரிச்சலையும் தீராப் பசியையும் போக்கி யோகாப்பியாசத்தின் இரகசியங்களை எல்லாம் அவருக்குப் போதித்தாள். அவர் வைஷ்ணவ ஸித்தாந்தத்தை அனுசரித்துப் பக்தியோகத்தால்
யூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 243
ஈசுவரனை ஆராதிக்கத் தொடங்கினார். தம்மை ராதையாகப் பாவித்து, பூரீ கிருஷ்ணனைத் தமக்கு நாயகனாகக் கருதி அவரதுஸாந்நித்தியத்தை அடைந்து ஆனந்தித்தார். இதுபோலவே இன்னும் பல தெய்வீகக் காட்சிகளைக் கண்டு களித்தார். பின்னர் கதாதரர் பாரமார்த்திக ஞானமனைத்தையும் உணர்ந்து ஞானியாக வேண்டுமென்று முயலுகையில், தோதாப்புரி என்ற ஒரு மகான் வந்து இவருக்குச் சகல வேதாந்த ரகசியங்களையும் உபதேசித்தார். கதாதரர் அவருடைய உபதேசப்படி மூன்று நாள் அப்பியாசம் செய்து நிர்விகல்ப சமாதிநிலை அடையப்பெற்றார். தோதாப்புரி நாற்பது வருஷம் சிரமப்பட்டு அடைந்த நிர்விகல்ப ஸமாதியைக் கதாதரர் மூன்று நாளிலேயே பெற்றதால் முன்னவர் ஆச்சரியமடைந்து,"அப்பா, இனி எனக்கு நீசிஷ்யனல்ல, எனக்குச் சமானன்” என்று சொல்லிச் சிலகாலம் அவருடன் தங்கி, தமக்குத் தெரிந்த விஷயங்களையெல்லாம் கதாரருக்குச் சொல்லித் தாமும் அவரிடமிருந்து பல கற்றுப்பின் அதைவிட்டுச் சென்றார்.
தோதப்புரி மஹான் போனபிறகு, காதாரர் ஆறு மாதகாலம் நிர்விகல்பஸமாதியிலிருந்தார். அதன்பயனாக அவருக்கு இரத்தக் கடுப்பு உண்டாயிற்று. உடம்பு ஒருவாறு குணமானதும், அவருடைய பக்தி வைராக்கியம் வேறுவிதத்தில் திரும்பியது. பின்னர் அன்னிய மதமான முகமதிய மதம் முதலான இதர தர்மங்களையும் முறையே கொஞ்ச காலம் அனுசரித்து, அவைகளின் மூலமாயும் தமது இஷ்ட சித்தியை வெகு சீக்கிரத்தில் அடைந்தார். அப்பால் கிருஸ்துவ மதத்தையும் அனுசரித்து ஞான நிஷ்டையில் ஏசு கிறிஸ்துவைக் கண்டு வாழ்த்தித் திருப்தியடைந்தார். இப்படிப் பல்வேறு தர்மங்களின் கோட்பாடுகளை அப்பியசித்து அவைகளின்படி பக்தி செய்து தரிசனம் கண்ட் பிறகு, எல்லா மதங்களும் உண்மையே யென்றும், சச்சிதாநந்தப் பரப்பிரம்மம் ஒன்றே யென்றும் அதையே ஒவ்வொரு மதஸ்தரும் ஒவ்வொரு விதமாக ஆராதிக்கின்றனரென்றும், ஒன்றுக்கொன்று விரோதமாகக் காணப்படும் இந்தத் தர்மங்களெல்லாம் அந்தப் பரப்பிரம்மத்தை அடைவதற்கான பல்வேறு மார்க்கங்களேயென்றும் கதாதரர் சித்தாந்தப்படுத்தினர்.
இத்தருணத்தில் கதாதரின் மனைவியரான பூரீ சாரதாமணிதேவிக்கு 18-வயது ஆகியிருந்தது. அவர் தம் புருஷனுக்குச் சித்த ஸ்வாதீனமில்லாதிருப்பதாகக் கேட்டுத் துக்கித்து, அவரை நேரில் தரிசித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று,
மயூரமங்கலம்

தம்கிராமத்தை விட்டு, தகூழிணேசுவரத்துக்குக் கால்நடையாக நடந்து வந்து கணவரைக் கண்டார். கதாதரர் அவரைவெகு பிரியமுடன் வரவேற்றாரென்றாலும், அவரிடம், “உன்னைமுன் மணந்த கதாதரன் இறந்து விட்டான். இப்போதிருக்கும் புதிய கதாதரன் எந்த ஸ்திரியையும் மனைவியாக ஏற்பதில்லை. உன்னிடம் ஜகந்மாதாவான காளி தேவியின் ஸ்வரூபத்தைத் தவிர வேறோன்றையும் அவன் காணவில்லை” என்று சொன்னார். அவரது கருத்தையறிந்த சாரதாமணி தேவியும், அவருக்குப் பணிவிடை புரிந்துகொண்டு அவர் அருகிலேயே இருக்க மட்டும் அனுமதி தரவேண்டுமென்று கேட்டுப் பெற்று, அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டும், அவர் உபதேசித் தருளியபடி நடந்துகொண்டும் காலம் கழித்தனர். தமது கணவரைப் பகவானது அவதாரமாகவே பாவித்து அவரைக்போலவே ஞானச் செல்வம் பெற்றுப்பரமபக்தையாய் வாழ்ந்து வந்த அவ்வுத்தமியார் தம்மைச் சார்ந்த அடியார்கட்கும் தொண்டாற்றி மகிழ்ந்தார்.
ஒரு சமயம் மதுரநாதர் குடும்ப சகிதராய் தீர்த்த யாத்திரை சென்றபோது தம்முடன் பரமஹம்ஸரையும் அழைத்துச் சென்றனர். போகும் வழியில் வைத்திய நாதம் என்ற ஊரில் உள்ள ஜனங்கள் பரம தரித்திரர்களாய் ஊண் உடையின்றித் தவிப்பதைக் கண்டு மனமிரங்கி அவர்களுடைய குறைகள் தீர்ந்தாலன்றித் தாம் யாத்திரைக்குக்கூட வருவதில்லையென நின்றுவிட்டார். இதைக் கண்ட மதுரநாதர் அவ்வூராரெல்லாருக்கும் வேண்டிய அளவு ஆகாராதிகளும் ஆடைகளும் கொடுத்துப் பரமஹம்ஸரைத் திருப்திப்படுத்தி அவரைக் கூட அழைத்துக்கொண்டு காசி சேர்ந்தார். பின் பிருந்தாவனம் வரை போய்த் திரும்பினார். பரமஹம்ஸருக்கு, காசியில் பிரசித்தி பெற்றிருந்த த்ரைலிங்க சுவாமிகள் முதலிய மஹான்களுடைய பரிச்சயம் ஏற்பட்டது. பரம ஹம்ஸருக்குப் பிருந்தாவனத்திலேயே தங்கிவிட வேண்டுமென்ற அவா மிகுந்திருந்தது. ஆனால் ஜகன்மாதாவான காளிதேவியை விட்டுப் பிரிய மனமில்லாதவராகித் திரும்பவும் தகூறினேசுவரத்துக்கே வந்துவிட்டார்.
அதன் பிறகு பரமஹம்ஸருடைய காலம் முழுவதும் அவரிடம் வருபவருக்கு உபதேசம் செய்வதிலேயே பெரும் பாலும் கழிந்தது. அவரைத் தரிசித்து ஞானோபதேசம் பெற்று உய்வதற்காகக் தகூறினேசுவரத்துக்கு வந்து
פC21

Page 244
ஜனங்களுக்கு அளவில்லை. பிரம்ம ஸமாஜத் தலைவரான பாபுகேசவ சந்திரஸேனர் பரமஹம்ஸரொடு பலநாள் பழகி, அவருடைய மஹிமைகளை வெளியிட்ட பிறகு, அவரை நேரில் தரிசிக்க வந்த ஜனங்களைப் பல்லாயிரக் கணக்கில் தான் அளவிடல் வேண்டும். கேசவ சந்திரருக்கும், பரமஹம்ஸருக்கும் பரஸ்பர அன்பு மேலிட்டது. பிரம்ம ஸமாஜத்தார் ஈசுவரனைத் தாயாகப் பாவித்து வழிபடும் கொள்கை பரமஹம்ஸருடைய அணுக்கிரகத்தால் ஆனதே. ஐரோப்பா, அமெரிக்கா, முதலிய மேற்றிசைக் கண்டங்களில் வேதாந்த தர்சனத்தைப் பரவச் செய்து புகழ்பெற்ற பூரீ விவேகானந்த சுவாமிகளெனப் பின்னர் கொண்டாடப்பட்ட நரேந்திரநாத தத்தர் முதலியோர் பரமஹம்ஸரிடம் உபதேசம் பெற்றுச் சிஷ்யர்களானது இக்காலத்தில்தான்.
பரமஹம்ஸர் தம்மைப் பார்க்க வந்தவர்களுடன் உதயம் முதல் அஸ்தமனம் வரையில் வேதாந்த விசாரம் செய்து அவர்களுடைய பக்குவ நிலைக்கு ஏற்றபடி உப தேசம் செய்து வந்தார். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதே அவரது கொள்கையாதலால் தம் சரீர செளக்கியத்தைக் கொஞ்சமேனும் கவனிக்காமல் பிறர்க்கு உபதேசம் செய்வதையே பிரதானமாகக் கொண்டிருந்தார். சற்றுச் சிரம பரிகாரம் செய்துகொள்ளும்படியாரேனும் நிர்ப்பந்தித்தால், “எனது முயற்சியினால் ஒர் ஆத்மாவேனும் பந்தத்திலிருந்து நீங்கி மோக்ஷமடையுமானால் அதற்காக என் சரீர வருத்தங்கள் இன்னும் " நூறாயிரம் மடங்கு அதிகமானாலும் சகித்துக் கொள்வேன்” என்பார். தன்க்கென வாழாப் பிறர்க்குரியாளன்' என்பது புத்த தேவருக்கு மட்டும் பொருந்திய மொழியன்று; அது பூரீ ராமகிருஷ்ணருக்கும் நன்கு பொருந்தும்.
1885-ம் வருஷத்தில் பரமஹம்ஸருக்குத் தொண்டைப் புண் நோய் உண்டாகி வரவர முதிர்ந்தது. சிகிச்சை செய்த வைத்தியர்கள் இவர் ஒன்றுமே செய்யாது படுத்த படுக்கையோடிருந்தால் குணமுண்டாகுமென்றனர். தினமும் ஆர்வத்தோடு கும்பல் கும்பலாகக் கூடும் ஜனங்களை வீணே போகச் சொல்வதற்கு மனமுறாத பரமஹம்ஸர் அவர்களோடு ஏதாவது வார்த்தையாடிக் கொண்டேயிருப்பார். தொண்டை புண்ணாகிக் கஞ்சி பாயஸம் முதலிய திரவ பதார்த்தம்கூட உட்செல்லாத சமயத்திலும் அவர் ஞானோபதேசத்தை நிறுத்தவில்லை. இப்படிப் பரோபகாரத்திலேயே அவர் காலத்தைக் கழித்து 1886

ம் ஆகஸ்டுமீ உ அதிகாலையில் ஸமாதியிற் புகுந்து பரப்பிரம்மத்தில் இரண்டறக் கலந்தனர்.
பரமஹம்ஸர் செல்வத்தைத் திரணமாக மதித்தனரென்பதை முன்னமேயே கூறியிருக்கிறோம். பொன் வெள்ளிகளை அவர் தொட்டதேயில்லை. தூக்கத்திலிருக்கும் போது கூட அவை தேகத்தில் பட்டால் அவருக்கு நடுக்கமுண்டாகும். மதுரநாதர் தகூழிணேசுவரம் கோயிலையும் அதற்காக வருஷமொன்றுக்கு ரூ. 25,000 வருமானமுள்ள சொத்துக்களையும் பரமஹம்ஸரிடம் விட்டு விடுவதாகப் பலமுறை சொன்னபோதிலும், இவர் அத்தகைய பெருங் கொடையை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து விட்டதன்றி, மறுமுறையும் அப்படி நிர்ப்பந்தப்படுத்தினால் தாம் அவ்விடத்தையே விட்டுப் போய்விடுவதாகவும் பயமுறுத்தினார்.
பரமஹம்ஸர் உத்தம யோக சித்திகளைப் பெற்றிருந்தும் அவற்றை வெளிப்படுத்திப் புகழ்பெற வேண்டுமென்று கருதவில்லை. தாம் செய்த உபதேசங்களிலும் சித்திகளைப் பிறர்க்குக் காட்டி அவர்களுடைய புகழை நாடவேண்டாமென்றும், யோகாப்பியாசம் செய்வது பிரம்மத்தோடு இரண்டறக் கலப்பதற்கேயன்றி, பாமர ஜனங்களுக்கு விநோதம் உண்டாக்குவதற்கன்று என்றும் அடிக்கடி போதித்தி ருக்கின்றார்.
அவர் ஸமாதியிலிருக்கும்போது தமது சரீரத்தையும், உலகத்தையும் முற்றிலும் மறந்திருப்பார். ஒரு சமயம் அவர் ஸமாதியிலிருக்கையில், அவருக்குச் சமீபத்திலிருந்த அக்கினியின்மீது விழுந்து விட்டார்; என்றாலும் அதை உணரவில்லை. சிஷ்யர்கள் வந்து சிகிச்சை செய்தபோது தான் தமது உடலில் தீப்புண் இருந்ததைத் தெரிந்து கொண்டார். மற்றொரு சமயம் அவர் கால் நழுவிக் கீழே விழுந்ததனால் கையில் காயமுண்டாயிற்று. தெய்வத்தைப் பற்றிய சம்பாஷணை நேரும்போது அவர் ஸமாதியில் ஆழ்ந்து விடுவாராதலால், வைத்தியன் கட்டிய கட்டு அவிழ்ந்து, கை மறுபடியும் காயமுறும். இப்படியாக அந்த அற்பமான காயம் ஆறுவதற்கும் ஆறு மாதங்களுக்கு மேல் சென்றது.
பரமஸம்ஸர் மனிதரூபமாய் அவதரித்த ஈசுவரன் தான் என்பதற்குச் சந்தேகமில்லை. அவர் கல்வியில் தேர்ந்தவர் அல்லர்; அவருக்கு ஸமஸ்கிருத ஞானம் கிடையாது. தாய்ப் பாஷையாகிய வங்க பாஷையிலும் அவர் தகுந்த பாண்டித்தியம் பெறவில்லை. என்றாலும் அவருடைய உபதேச மொழிகள் தவிக்கும் மனத்துக்குச்
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 245
சாந்தத்தைக் கொடுக்கின்றன. அவ்வுபதேச வாக்கியங்கள் சூத்திரங்கள் போலத் திட்ப நுட்பம் செறிந்து விளங்குகின்றன. அவை வேதங்கள், உபநிஷத்துகள், தர்சன சித்தாந்தங்கள் முதலியவற்றுக்கெல்லாம் வியாக்யான வடிவமாய் நின்று, அவற்றின் ஸாரங்கள் அனைத்தையும் எளிய நடையில் யாவரும் தெரிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்றன. ஷோபன்ஹாயர் என்னும் ஜெர்மானிய தத்துவஞானி உபநிஷத்துக்களைப் பற்றிப் பேசுகையில், “அவை எனது வாழ்நாளுக்கோர் ஆறுதலாக இருக்கின்றன; எனது அந்திய காலத்தும் அவை எனக்கு ஆறுதலளிக்கும்" என்று சொல்லியிருக்கிறார். பரம ஹம்ஸருடைய உபதேசமொழிகளுக்கும் இப்படிப்பட்ட குணம் உண்டு என்பதை நாம் தனித்துச் சொல்ல வேண்டியதில்லை.
முததரத தாணடவா
இவர் சீர்காழியில் இசைவேளாளர் மரபில் பிறந்து தாண்டவர் என்னும் பெயருடன் சிவபெருமானிடம் நீங்காத அன்பு கொண்டு விளங்கினார். கர்ம வினைவசத்தால் தீராத நோய் இவரைப்பற்றியது. நோயின் கொடுமை இவரை வாட்டினாலும் சிவபெருமான் மீது கொண்ட பக்தி குறையவில்லை. ஒரு பசியுடன் சந்நிதியிலேயே உறங்கிவிட்டார். அம்பிகை தங்கக் கிண்ணத்தில் இவருக்கு அமுது சுமந்து வந்து அளித்தார். பசியும் மறைந்தது. கொடிய நோயும் அகன்றது. அம்பிகையின் ஆணையின் வண்ணம் சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானைக் கனகசபையிலே வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்த கூட்டத்தில் ஒருவர் பூலோக கைலாசகிரி சிதம்பரம்” என்று கூறிய வார்த்தையையே அருள் முதலாகக் கொண்டு பவப்பிரியா இராகத்தில் “பூலோக கைலாசகிரி சிதம்பரமல்லால் புவனத்தில் வேறும் உண்டோ” என்று பாடினார். பொற்காசு பொழிந்தது. தாண்டவர் முத்துத்தாண்டவர் ஆனார்.
தில்லையை வணங்கிச் சீர்காழிக்குச் சென்றார். மக்கள் பெரும் கூட்டமாக எதிர்கொண்டு, “சேவிக்க வேண்டுமையா” என்று கூறி வணங்க அதனையே முதலாகக் கொண்டு” சேவிக்க வேண்டுமையா” என்று ஆபோகி இராகத்தில் பாடினார். இவரது கீர்த்தனைகள் பிரபலம் பெற்றன.
ஒருநாள் தில்லைக்குத் திரும்பிக் கொண்டிருந்த பொழுது கொள்ளிட நதியில் வெள்ளம் பெருகியது.
மயூரமங்கலம்

ஆற்றைக் கடக்க முடியவில்லை. அன்னையை மனதில் நினைந்து இரண்டு கீர்த்தனங்கள் பாட வெள்ளம் வடிந்தது.
இவர் எங்கு சென்றாலும் இறைவன் சந்நிதியில் பக்தர்களின் எவராவது ஒரு சொல் கூற அதை வைத்துப் பாடுவதே இவரது வழக்கம். ஒரு நாள் நெடுநேரம் காத்திருந்தும் யாருமே அடியெடுத்துக் கொடுக்கவில்லை. உடனே சூரியகாந்த இராகத்தில் பேசாதே நெஞ்சே என்று அரிய தத்துவங்களை அமைத்துப் பாடினார்.
மற்றொரு நாள் சிதம்பரத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது இவரைப் பாம்பு தீண்டி விட்டது. அருகே யாரும் துணைக்கு இல்லை. அம்பலத்தானையே துணைக் கொண்டு “அருமருந்தொரு தனி மருந்திது அம்பலத்தையே கண்டேனே' என்று காம்போதி இராகத்தில் பாட விஷம் இறங்கியது.
நடனமாதர்கள் ஆடும் தெருவில் வாரனோ” என்ற கமாஸ் இராகப் பாடலும் “தண்டனிட்டேன் என்று சொல்லடி” என்ற பதமும் மிகவும் புகழ் பெற்ற பாடல்களாகும்.
சங்கீத மும்மூர்த்திகளுக்கும் ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகள் முன்னால் தோன்றியவர். ஆனிமாதம் மக நட்சத்திரம்மாணிக்க வாசக சுவாமிகள் தில்லையிலே ஆடும் கூத்தனின் திருவடியில் ஐக்கியமான நாள், நடராசப் பெருமான் திருமுன் நின்று “மாணிக்க வாசகர் பேறெனக்குத் தரவல்லையோ” என்று கோகிலப்பிரியா இராகத்தில் பாட, பாடல் முடிந்ததும் ஒரு ஜோதி எழுந்தது. அந்த ஜோதியிலே தாண்டவர் இரண்டறக் கலந்தார்.
முத்துஸ்வாமி தீகூஷிதர்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துஸ்வாமி தீகூரிதர். இவருடைய தந்தை இராமஸ்வாமி தீகூழிதருக்கு நீண்டநாட்களாக மழலைப்பேறுகிட்டவில்லை. அதனால் அவர் வைத்தீஸ்வரன் கோயிலிலுள்ள பாலாம்பிகை (தையல் நாயகி) சந்நிதியில் ஒருமண்டலம் ஆவரண பூஜை செய்தததன் பலனாக பூரீ முத்துஸ்வாமி தீகூழிதர் திருவாரூரில் பிறந்தார். இவருக்குப் பின்னர் சின்னஸ்வாமி, பாலுஸ்வாமி என்ற இரு புதல்வர்களும், பாலாம்பிகை என்ற புதல்வியும் பிறந்தனர்.
சிதம்பரநாத யோகி என்பவர் தனக்குப் பலவிதத்திலும் பணிபுரிந்த முத்துஸ்வாமியைக் காசிக்கு

Page 246
அழைத்துச் சென்று ஐந்தாண்டுகள் பூரீ வித்யா மந்திர உபதேசம் செய்து வேதாந்த சாஸ்திரங்களின் நுட்பத்தை அறிவித்துப் பலசித்திகளையும் அருளினார். தென்னிந்தியாவிற்குத் திரும்பு முன் குருநாதரின் கட்டளைப்படி கங்கை நதியில் இறங்க வீணை ஒன்று அவரது கரம்சேர்த்தது. வைணிக - காயக - குருகுஹ என்று முத்திரை பதித்துக் கொண்ட தீகூழிதரின் கடுமையான வீணைப்பயிற்சி அவரது கிருதிகளில் பிரதி பலிக்கின்றன.
தனது குருநாதரின் இஷ்டதெய்வமான முருகப் பெருமானை வணங்கும் பொருட்டுத் திருத்தனி சென்று சுப்ரமண்ய சடாக்ஷரி மந்திரத்தை ஜெபம் செய்து வரும் பொழுது, ஒருகிழவர் அவர் முன்னே வந்து வாயைத் திறக்குமாறு கூறி ஒரு கற்கண்டுக் கட்டியை அவரது வாயிலே போட அவர் மனக்கண்முன் ஞான பண்டிதனான கந்தப் பெருமான் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்தார். மெய்சிலிர்த்த தீகூழிதர் மாயாமாளவகொள இராகத்தில் “பூரீ நாதாதி குருகுஹோ" என்ற அற்புதமான கீர்த்தனையைப் பாடி அருளினார். இக் கீர்த்தனையின் சிறப்பு அம்சம், முதல் வேற்றுமை அமைந்து அணிசெய்வது மற்றும் ஏழு வேற்றுமைகளிலும் ஏழுகீர்த்தனங்கள் செய்து’ திருத்தணி சுப்பிரமணிய கீர்த்தனைத் தொகுதியைப் பூர்த்தி செய்தார்.
காஞ்சிகாமாகூரி அம்மனின் திருமுன்னிலையில் கஞ்சதனாயதாகூரி என்ற கமலாமனோஹரி இராகக் கீர்த்தனையை அன்னைக்குச் சூட்டித் திருவாரூக்குச் சென்று அன்னை கமலாம்பிகையின் மீது “கமலாம்பா நவாவரணக் கீர்த்தனைகள் பாடி வழிபட்டார். பதினொறு கீர்த்தனைகள் கொண்ட இந்தத் தொகுதி தாந்திரீக மார்க்கத்தில் தேவியை வழிபடுவர்களுக்கு ஒர் அருட் பிரசாரம்.
தீகூழிதர் தனது ஐம்பத்தைந்தாவது வயதில் தம்பி பாலுஸ்வாமி தீக்ஷிதரின் திருமணத்திற்காக எட்டையபுரம் சென்றிருந்த பொழுது, மழையின்மையால் பயிர்கள் வாடியிருக்கக் கண்டு வருந்தினார். அங்கிருந்த தேவியின் ஆலயம் ஒன்றுள் சென்று விசேட பூஜைகள் செய்து அமிர்தவர்ஷிணி இராகத்தில் “ஆனந்தாம்ருத வர்ஷிணி” என்று அம்பிகையைப் போற்றி மனங்கசிந்து பாட நிர்மலமான ஆகாயத்தில் கருமேகங்கள் குவிந்து பெருமழையைக் கொட்டியது.
C220

1835ம் ஆண்டு தீபாவளிநாள் எட்டயபுரம்மன்னர் அதிகாலையில் தீகூழிதரின் இருப்பிடத்திற்கு வந்து தனது பட்டத்து யானையாகிய காங்கேயனுக்கு மதம் பிடித்து இடுகாட்டிற்குச் சென்று படுத்துக்கொண்டு திரும்பி வரமறுப்பதாகவும், இதனால் தனக்கு ஏதும் தீங்கு நேருமோ என்று அஞ்சுவதாகவும் தெரிவித்தான். இந்நிகழ்ச்சி தனது அந்திம காலத்தையே குறிக்கின்றது என்று அறிந்த தீகூழிதர் மன்னனுக்கு அமைதி கூறி அனுப்பி வைத்தார். தனது இளைய சகோதரன் பாலுஸ்வாமி தீகூழிதரையும் மற்ற சிஷ்யர்களையும் அழைத்துத் தான் மதுரை மீனாட்சியம்பிகை மீது கமகப்பிரியா இராகத்தில் இயற்றிய மீனாகூரிமேமுதம்" என்ற கிருதியைப் பாடுமாறு கூறினார். அதன் அனுபல்லவியில் வரும் “மீனலோசனி, பாசமோசனி " என்ற அடியை அவர்கள் பாடிக்கொண்டிருக்கும்பொழுது நிச்சலமான தேவியின் பாதாரவிந்தங்களில் ஐக்கியமானார்.
மூககவி
இவர் பிறப்பிலே ஊமை அன்னையின் அருளால் பேசும் ஆற்றல் பெற்றுக் கடல்மடை திறந்தது போல் கவிதை பாடும் ஆற்றலைப் பெற்றவர். காஞ்சி காமாகூழியம்பிகையின் மகிமையைப் பற்றி"ஆர்யா” என்ற விருத்தத்தில் நூறுபாடல்கள் கொண்ட ஆர்யா சதகம், திருவடிகளின் அழகை வர்ணிப்பது "பாதார விந்த சதகம், திருநாமங்களின் பெருமை கூறுவது” “ஸ்துதிசதகம்” திருக்கண் பார்வையின் வீர்யத்தை வர்ணிக்கும், “கடாக்ஷ சதகம்”அம்பிகையின் புன்சிரிப்பை வர்ணிப்பது “மந்தஸ்மித சதகம்” ஆகிய பாடற் தொகுப்புக்களைப் பாடினார்.ஐந்நூறுபாடல்கள் கொண்ட இவ்வமைப்பினை “மூகபஞ்சசதி” என்று அழைப்பார்கள்.
அம்பிகையின் புகழைக் கூறும் மூன்று நூல்களைப் 'பிரஸ்தானத்ரயம் ” என்பர். அவை ஆதிசங்கரரின் செளந்தரியலஹரி இருநூறு பாடல்களைக் கொண்டு துர்வாசமகரிஷி அமைத்த “ஆர்யா திவிசத், மூகரின் மூகமஞ்சசதி என்பனவாகும்.
குருநமசிவாயர்
இவர் குகைநமசிவாயரின் மாணவர். திருவண்ணாமலையில் இருந்தவர். தனது குருவினிடத்து மிகவும் பக்தி பூண்டவர். ஒருநாள்
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 247
குருவிற்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கையில் நமசிவாயர் பெரிதாக நகைக்க, அந்தச் சிரிப்பின் காரணத்தைக் குருகேட்க, அதற்கு நமசிவாயர், திருவாரூரில் சுவாமியின் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்த தேவதாசியொருவர் கால் வழுக்கிக் கீழே விழ அனைவரும் சிரித்தனர். நானும் சிரித்தேன் என்றார். மற்றொரு நாள் தனது இரண்டு கைகளையும் அவசர அவசரமாகத் தேய்த்துக் கொண்டிருக்க, அங்கு வந்த ஆச்சாரியார் ஏன் இவ்விதம் செய்கிறாய் என்று வினாவினார். சிதம்பரத்தில் நடராசப் பெருமானின் திரையில் தீப்பற்ற, அனைவரும் கையினால் தேய்த்து நெருப்பை அணைத்தனர். நானும் அவ்வாறு செய்தேன் என்று கூறினார். மற்றொருநாள் குருவானவர் வாந்தி எடுத்து, அதனை யாரும் மிதியாத இடத்தில் கொட்டி விடு எனக் கூற, அதனை நமசிவாயர் உட்கொண்டுவிட்டார். இதனைக்கண்ட குகை நமசிவாயர் தனது மாணவனின் பரிபாகத்தைக் கண்டு மகிழ்ந்து ஒரு உறையில் இரண்டு கத்திகளும், ஒரு தறியில் இரண்டு யானைகளும் இருக்கக் கூடாது. ஆதலால் நீசிதம்பரம் சென்று ஞானத்தவம் இயற்றுவாய் என்று அருளினார். ஆனால் குருநாதரின் பிரிவை அஞ்சிய குரு நமச்சிவாயருக்கு ஆறுதல் கூறி நடராசமூர்த்தி தரிசனம் கொடுத்தார். இரு என்று ஆசிசுடறி அனுப்பி வைத்தார்.
சிதம்பரம் சென்ற குருநமச்சிவாயரை ஆதரிப்பார் யாரும் இல்லை. பசி இவரை வாட்டி எடுத்தது. உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் உணவூட்டுகின்ற சிவகாமித்தாயை நோக்கி,
மின்னும்படி வந்த மேககளத்து ஈசருடன் மன்னும் திருமுகத்து வாளியே - பொன்னின் மலையாளே!தாயே!வன் மனத்தே நின்ற மலையாளே! சோறு கொண்டுவா’
அத்திமுதலெறும்பிறான வுயிரனைத்திற்கும் சித்தமகிழ்க் தளிக்கும் தேசிகா - மெத்தப் பசிக்கு தையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி எரிக்குதையா காரோணரே, என்று விண்ணப்பிக்க, பொற்கிண்ணத்தில் அமுதுகொண்டு வந்து படைத்தாள் அன்னை பராசக்தி. பல இடங்களுக்குச் சென்ற இடத்தும், அன்னை இவரது பசியறிந்து அமுது படைத்த பெரும்பேறு பெற்றவர் குருநமசிவாயர் அவர்கள்.
மயூரமங்கலம்

நமசிவாயர்
பாபநாசம் விக்கிரம சிங்கபுரத்தைச் சேர்ந்த நமசிவாயர். அன்றாடம் கவிமாலையால் பாபநாசத்து உலகம்மையை அழகுறுத்திப் பார்க்கும் பக்தி பாவலர். இவரது பாடலில் மயக்கம் கொண்டவள் அன்னை உலகம்மை.
"பேயே எனக்குழறும் பேதாய் ! உனக்குமொரு வாயோ? என்றென்னை யிகழ்வாயோ? மகிழ்வாயோ?
துரயோர் தொழும் உலகே சொல்வதெல்லாம் சொல்வேன்.
காயோ பழமோ நீகட்டளை செய் காரியமே.” இவ்வாறு பணிவுடன் பாடிக்கொண்டே கோயிலிலிருந்து வெளியேறி, வெற்றியைச் சுவைத்தபடியே,
பொன்னை நொந்து கொண்டாலப்பொன் வருமோ முன்னை வினைதன்னை நொந்து கொண்டால் அத்தண்மைநன்மை ஆயிடுமோ
என்னை நொந்து கொள்கிலனால் இன்பமின்றித் துன்பம் வரின்
உன்னை நொந்து கொள்வேன் உலகுடைய மாதாவே! என்று பாடிக்கொண்டே வெற்றிலை எச்சிலைத் துப்பிய வண்ணம் செல்ல தன்பின்னால் யாரோ வருவதுபோலத் தோன்றவே நின்று பார்த்தார் யாரும் இல்லை. தனது மனப்பிரமை என்று எண்ணி நடந்தார்.
மறுநாள் காலை வழக்கம் போல் அர்ச்சகர் திருக்கோயிலிற்கு வந்து அன்னை உலகம்மையின் சந்நிதியைத் திறந்தார். அன்னையின் ஆடை முழுதும் வெற்றிலை எச்சில். இச்செய்தி மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தனது ஆட்சியில் இப்படி ஒரு fasp6).JT...... எனவருந்திய மன்னன் உண்ணாது உறங்காது கவன்றான். கடைசி யாமத்தில் சிறிது கண்ணயர்ந்த பொழுது, மன்னனின் கனவில் உலகன்னை தோன்றி மன்னவா என்னை வழிபடும் அன்பர்களில் நமச்சிவாயம் சிறந்தவன். அவனது பாடல்களில் ஆர்வம் கொண்டு அவனறியாமல் பின்தொடர்ந்தேன். அவன் வெற்றிலை எச்சிலை உமிழ்ந்த வண்ணம் சென்றான். அதுவே எனது ஆடைகளில் கறையாகப் படிந்தது. அவனது பாடல்களின் சிறப்பை நீயும் கேட்டு மகிழ்வாயாக என்று அருளி மறைந்தாள்.

Page 248
மறுநாள் மன்னன் நமசிவாயரை அரச சபைக்கு அழைத்து வரச்செய்து, “அன்னை உலகம்மை மீது எச்சிலைத் துப்பியன் நீதானா? இக்குற்றத்தை நீ அறிந்து செய்யவில்லை என்பதை மெய்ப்பிக்க வேண்டுமென்றால் இதோ தேவியின் திருக்கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்து தங்க நூலால் கட்டியிருக்கின்றேன். நீ பாடலைப்பாடு. பாடப்பாட ஒவ்வொரு நூலாக அறுத்துபூச்செண்டு உனது கரத்தில் விழுந்தால் நீ குற்றமற்றவன் என்பதை அனைவரும் உணர்வர். என்று ஆணையிட்டான். நமச்சிவாயமோ! அம்மா! இதுவும் உனது திருவிளையாடலா! நானா இப்படிச் செய்தேன் தாயே.
"என்றைக்கும் நீ துணை அம்மா! என் ஆவி இறந்திடும்
அன்றைக்கும் ஓடிவந்து அஞ்சலென்பாய்”
என்று அன்னையை வணங்கிப் பாடத் தொடங்கிப்
"பொழுதுகழிந்தது வீணே எனக்கென்னபுத்திஉன்னை தொழுது பணிந்து துதித்திலனே இதைச் சொல்லச் (kriTób6ó) அழுது புலம்பல் விடுமோ யமன் இனியாயினும் என் பழுது களைந்து புரப்பாய் உலகம் படைப்பவளே!
என்று பாடல்களைத் தொடர்ந்து அன்னைமேல் பாடிய வண்ணம் இருந்தார். ஒவ்வொரு பாடலும் முடிய முடிய ஒவ்வொரு தங்க இழையாக அறுபட்டு இறுதியில் பூச்செண்டும் நமச்சிவாயரின் கரத்தில் வீழ்ந்தது.
மன்னரும் மக்களும் நமசிவாயரின் பக்தித் திறத்தைப் போற்றி அவரது திருவடியில் வீழ்ந்து வணங்க மகிழ்ந்தனர்.
இராமலிங்கர் திருவருட் பிரகாச வள்ளலாரென்று வழங்கப்படுகின்ற இராமலிங்கசுவாமிகள், சோணாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூரில் கருணிகர் குலத்தில் இராமையபிள்ளை, சின்னம்மையார் தம்பதிக்கு

1823 வருடம் அக்டோபர் மாதம் 5ந் திகதி பிறந்தவர். இவருடைய சிறுபராயத்திலேயே தந்தை இறந்ததனால் இவருடைய தமையனாகிய சபாபதிப்பிள்ளையென்பவர், சென்னைக்குத் தமது தாய் தம்பிமார் முதலியவர்களோடு வந்து அங்குள்ளதொரு வித்தியாலயத்திற் போதகா சிரியராயிருந்து அதிற் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு குடும்பத்தைப் போஷித்து, தமது தம்பிமார்க்கு வித்தையையும் போதித்தார். இந்த இராமலிங்க சுவாமிகள் அதனை வியாசமாகக் கொண்டு நல்லறிவுதோன்றச் சுப்பிரமணியக் கடவுளை உபாசித்து அவரது திருவருளைப் பரிபூரணமாகக் பெற்று ஞானமுதிர்ச்சி யடைந்தார். ஒருநாள் பசியோடு வீட்டுத் திண்ணையில் தூங்கிய இவருக்குச் சக்தி அமுது வழங்கினாள்.
பின்பு இவருக்கு விருப்பமில்லாதிருக்கையில் இவர் அண்ணனார் தமக்கை மகளை மணம்புரிவித்தனர். இவர் பற்றற்றவராய் சதாநந்த சகஜநிஷ்டை சாதனமுடையராய்ப் பல பாடல்களையும் அருளிச் செய்து கொண்டிருந்தனர். பின், இவர் சிதம்பரத்தின் நான்கு கோபுரமுந் தோன்றுமெல்லையாகிய வடலூரென்கிற பார்வதிபுரத்தில் சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை, சமரசவேதபாடசாலை, சன்மார்க்கசங்கத்திருக்கோயில், நிருத்தசித்தி வினாயகராலயம் முதலியவைகளை நிறுவினார். பின், இவர் வடலூரையடுத்த கருங்குழிக் கருகில் மேட்டுக்குப்பமெனுஞ் சிற்றுாரில் சித்திவளாகத் திருமாளிகையில் சிவத்தியானத்துட னெழுந்தருளி யிருக்கையில், சிவஞானயோக முதிர்ச்சியால் தோன்றிய சோதிவடிவமான அருட்பெருஞ்சோதியைத் தரிசித்து செயற்கையுடல் இயற்கையுடலாகத் திரிவுபடுஞ் சின்மாத்திர சகஜமாதியில் அசைவறவிருந்து சற்குருவைச் சிந்தித்து தாம் அமர்ந்திருந்த அறையை மூடிப் பூட்டிக்கொள்ளத் தமது அன்பர்க்கு குறிப்புணர்த்தித் தாமும் தமது இந்திரியக் கதவை மூடி மவுன நிட்டை கூடி நித்தியானந்தமுற்றனர். இவர் அவ்வப்போது கடவுளுடைய திருவருளாற் பாடிய பாடல்கள் சிறந்த பக்திப் பாடல்களாம்.
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 249
N)^O网日 福Bɔ 总 冯 C) 总 @國圖圖圖圖圖圖圖圖
HOHOHOHC
 
 
 

|1 [ 4山形式主나
| [
*다"나는 枪瞄
一__*| {| | 司記者同心的本的的갈미한"갈비 枪)
] [
} |
-다-다: 书
~] [ 『디, CĒ
| [
T-T - 冯沿
渲

Page 250


Page 251
į
б2//760H
研
G
560)
கருணை
கயி
சங்ை
சதுர்பெ
புங்கவர்
பூண்டெ
மங்கள ட
வாமி!சு
ம்
மயூரமங்கல
 
 

SUUTudÜULT UTL6tassir
திருக்கடவூர் விராமியம்மை பதிகம் - 1
காப்பு மிழ்ப்பாமாலை குட்டுதற்கு மும்மதநால் பங்கரன்றாள் வழுத்துவTம்-நேயர்நிதம் றும் புகழ்க்கடவூர்எங்கள்அபிராமவல்லி றும்பொற்பாதத்தில் நன்கு.
பதிகம் யாடுதும்பையும் அணிந்தவர் வியக்குங் கலாமதியை நிகர்வதனமுங் பொழி விழிகளும் விண்முகில்கள் வெளிறெனக் 5ாட்டிய கருங்கூந்தலுஞ்
ல் லாதொளிருமாங்கல்யதாரணந் தங்குமணி மிடறுமிக்க ருகு துங்கபாசாங்குசம் இலங்குகர 5லமுவிரலணியும் அரவும் க் கமுதருளுமந்தரகு சங்களும் பாலியுநவமணி நூபுரம் சஞ்சேவடியைநாளும் புகழ்ந்துமே பாற்றியென வாழ்த்த விடைமேல் விகுந்தநின் பதியுடன் வந்தருள்செய் பளர்திருக்கடவூரில்வாழ்
நேமி!புகழ்நாமிசிவசாமிமகிழ் ாமி! அபி ராமி உமையே!

Page 252
சந்திர சடாதரி! முகுந்தசோதரி!துங்க
சலசலோ சனமாதவி! சம்பரமபயோதரி சுமங்கலி!சுலட்சணி!
சாற்றருங் கருணாகரி! அந்தரி! வாராகி சாம்பவி!அமர சோதரி!
அமலை! செக சால சூத்திரி! அகிலாத்ம காரணி! விநோதசயநாரணி!
அகண்டசின்மயபூரணி! சுந்தரி! நிரந்தரிதுரந்தரி! வரைராச
சுகுமாரி கெளமாரி உத் துங்ககல்யாணிபுஷ் பாஸ்திராம் புயபாணி
தொண்டர்கட் கருள்சர் வாணி! அந்தரி!மலர்ப்பிரமராதிதுதி வேதவொலி
வளர்திருக்கடவூரில்வாழ் வாமி!சுப நேமி புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே! 2
வாசமலர் மருவளக பாரமும் தண்கிரண
மதிமுகமும் அயில்விழிகளும் வள்ளநிகர் முலையுமான் நடையுநகை மொழிகளும்
வளமுடன் கண்டுமின்னார் பாசபந்தத்திடை மனங்கலங்கித்தினம் பலவழியும் எண்ணியெண்ணிப் பழிபாவம் இன்னதென்றறியாமல் மாயப்ர
பஞ்சவாழ்வுண்மை என்றே ஆசைமேலிட்டுவீணாகநாய் போல்திரிந்(து)
அலைவதல்லாமல் உன்றன் அம்புயப் போதெனுஞ் செம்பதந்துதியாத அசடன்மேற்கருணை வருமோ? மாசிலாதோங்கிய குணாகரிபவானிசீர்
வளர்திருக்கடவூரில்வாழ் வாமி சுப நேமிபுகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி!உமையே! 3

நன்றென்று தீதென்று நவிலுமிவ்விரண்டினுள்
நவின்றதே உலகிலுள்ளோர் நாடுவார் ஆதலின் நானுமே அவ்விதம்
நாடினேன் நாடினாலும் இன்றென்று சொல்லாமல் நினதுதிருவுள்ளம(து)
இரங்கியருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன் மெய்யான மொழியிஃதுன்
இதயமறியாத துண்டோ? குன்றமெல்லாம்உறைந்(து) என்றும்அன்பர்க்கருள்
குமாரதேவனைஅளித்த குமரி மரகதவருணி விமலி பைரவி! கருணை
குலவுகிரிராசபுத்ரி! மன்றல்மிகுநந்தன வனங்கள்சிறை அளிமுரல
வளர்திருக்கடவூரில்வாழ் வாமி சுப நேமி புகழ்நாமி! சிவ சாமிமகிழ்
வாமி! அபிராமி!உமையே! 4.
ஒருநாள் இரண்டுநாள் அல்லநான் உலகத்து
உதித்தஇந் நாள்வரைக்கும் ஒழியாத கவலையால் தீராத இன்னல்கொண்டு)
உள்ளந்தளர்ந்து மிகவும் அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்குமிவ்
வடிமைபாற்கருணை கூர்ந்து அஞ்சேலெனச்சொல்லி ஆதரிப்பவர்கள்உனை
அன்றியிலை உண்மையாக இருநாழிகைப்போதும் வேண்டாது நிமிடத்தில்
இவ்வகில புவனத்தையும் இயற்றியருளுந்திறங் கொண்டநீஏழையேன்
இன்னல்தீர்த்தருளல் அரிதோ? வருநாவலூரர்முதலோர்பரவும் இனியபுகழ்
வளர்திருக்கடவூரில்வாழ் வாமி சுப நேமி புகழ்நாமி சிவ சாமிமகிழ்
வாமி அபிராமி உமையே! 5
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 253
எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல்
ஏறிட்டொறுக்க அந்தோ! எவ்விதம் உளஞ்சகித் துய்குவேன் இப்பொழுது
எடுத்திட்ட சன்மம் இதனில் நண்ணியெள்ளளவுசுகமானதொரு நாளினும்
நான்அனுபவித்ததில்லை நாடெலாம் அறியுமிது கேட்பதேன்? நின்னுளமும்
நன்றாய் அறிந்திருக்கும் புண்ணியம் பூர்வசன் மத்தினிற் செய்யாத
புலைய னானாலும் நினது பூரண கடாட்சவீட் சண்ணியஞ்செய்தெனது
புன்மையை அகற்றியருள்வாய்,
வளர்திருக்கடவூரில்வாழ் வாமி!சுப நேமி புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி!உமையே! 6
தெரிந்தோ அலாதுதெரியாமலோ இவ்வடிமை
செய்திட்ட பிழையிருந்தால் சினங்கொண்டதோர்கணக்காகவையாதுநின்
திருவுளம் இரங்கி மிகவும் பரிந்துவந்தினியேனும் பாழ்வினையில் ஆழ்ந்து)இனற்
படாதுநல் வரம்அளித்துப்
பரிவுடன் அளித்த முதல்வி! புரந்தரன் போதன்மாதவனாதியோர்கள்துதி
புரியும்பதாம்புயமலர்ப் புங்கவி!புராந்தகி புரந்தரி!புராதனி!
புராணி திரிபுவனேஸ்வரி! மருந்தினும் நயந்தசொற் பைங்கிளிவராகி எழில்
வளர்திருக்கடவூரில்வாழ் வாமி சுப நேமி!புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி!உமையே! 7
மயூரமங்கலம்

வஞ்சகக் கொடியோர்கள் நட்புவேண்டாமலும்
மருந்தினுக்காகவேண்டினும் மறந்துமோர் பொய்ம்மொழிசொலாமலுந் தீமையாம்
வழியினிற் செல்லாமலும் விஞ்சுநெஞ்சதனிற் பொறாமைதரியாமலும்
வீண்வம்பு புரியாமலும்
வெகுளியவை கொள்ளாமலும் தஞ்சமென நிண்(து) உபய கஞ்சந்துதித்திடத்
தமியேனுக் கருள்புரிந்து சர்வகாலமுமெனைக் காத்தருள வேண்டினேன்;
சலக்கயல்கள் விழியை அனைய வஞ்சியர்செவ்வாய்நிகருவாவியாம்பல்மலரும்
வளர்திருக்கடவூரில்வாழ் வாமி சுப நேமி புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி!உமையே! 8
எனதின்னல்இன்னபடியென்றுவேறொருவர்க்(கு) இசைத்திடவும் அவர்கள் கேட்(டு) இவ் வின்னல்தீர்த்துள்ளத்து)இரங்கிநன்மைகள்செயவும்
எள்ளளவுமுடியாதுநின் உனதமருவுங்கடைக் கண்ணருள் சிறிதுசெயின்
உதவாத நுண்மணல்களும் ஓங்குமாற்றுயர்சொர்ணமலையாகும்; அதுவன்றி
உயரகில புவனங்களைக் கனமுடன் அளித்துமுப்பத்திரண்டறங்களும்
கவின்பெறச் செய்யுநின்னைக் கருதுநல்லடியவர்க் கெளிவந்து சடுதியிற்
காத்துரட்சித்த தோர்ந்து வனசநிகர் நின்பாதம் நம்பினேன்; வந்தருள்செய்
வளர்திருக்கடவூரில்வாழ் வாமி சுப நேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி!உமையே! 9

Page 254
கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட
கண்தண்ட வெம்பாசமுங் கைக்கொண்டு சண்டமாகாலன்முன் எதிர்க்கமார்க்
கண்டன் வெருண்டு நோக்க இருநீலகண்டனெனும் நின்பதியை உள்ளத்தில்
இன்புகொண்டருச்சனை செய ஈசனவ்விலிங்கம் பிளப்பநின்னொடுதோன்றி
யமனைச்சூலத்திலூன்றிப் பெருநீலமலையென நிலத்தில்அன்னவன்விழப்
பிறங்குதா ளால்உதைத்துப் பேசுமுனி மைந்தனுக் கருள்செய்த(து) உணதரிய
பேரருளின் வண்ண மலவோ? வருநீல மடமாதர் விழியென்ன மலர்வாவி
வளர்திருக்கடவூரில்வாழ் வாமி!சுப நேமி புகழ்நாமி! சிவ சாமிமகிழ்
வாமி! அபிராமி!உமையே! 10
சகலசெல்வங்களுந்தரும்இமயகிரிராச
தனயைமாதேவி நின்னைச் சத்யமாய் நித்யமுள்ளத்தில்துதிக்குமுத்
தமருக்(கு) இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந்தானம்வலிதுணிவுவாழ்நாள்வெற்றி
ஆகுநல்லூழ்நுகர்ச்சி தொகைதரும்பதினாறு பேறும்தந்தருளிநீ
சுகானந்த வாழ்வளிப்பாய்; சுகிர்தகுண சாலி!பரிபாலி! அநுகூலி! திரி
சூலி!மங்களவிசாலி! மகவுநான்! நீதாய்!அளிக்கொணாதோ? மகிமை
வளர்திருக்கடவூரில்வாழ் வாமி சுப நேமி!புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே! f

திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம் II
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப்பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய், அலையாழி அறிதுயிலுமாயனது தங்கையே!
ஆதிகடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! 1
காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரியபுருவச்சிலைகளும் கர்ணகுண்டலமுமதிமுகமண்டலம்நுதற்
கத்துரிப் பொட்டு மிட்டுக் கூரணிந்திடுவிழியும் அமுதமொழியுஞ்சிறிய
கொவ்வையின் கனிய தரமும் குமிழனைய நாசியும் முத்தநிகர் தந்தமும்
கோடுசோ டான களமும் வாரணிந்திறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணிநூ புரப்பாதமும் வந்தெனது முன்னின்றுமந்தகா சமுமாக
வல்வினையை மாற்றுவாயே, ஆரமணிவானிலுறை தாரகைகள் போலநிறை
ஆதிகடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! 2
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 255
மகரவார் குழல்மேல் அடர்ந்துகுமிழ்மீதினில்
மறைந்து வாளைத் துறந்து மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள்
வரம்பெற்ற பேர்களன்றோ? செகமுழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்துமேற்
சிங்கா தனத்திலுற்றுச் செங்கோலும் மநுநீதிமுறைமையும் பெற்றுமிகு
திகிரியுல காண்டு பின்பு புகர்முகத்து ஐராவதப்பாக ராகிநிறை
புத்தேளிர் வந்து போற்றிப் போகதேவேந்திரன் எனப்புகழவிண்ணில்
புலோமசை யொடுஞ்சு கிப்பர்; அகரமுதலாகிவளர் ஆனந்தரூபியே!
ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! 3
மறிகடல்கள் ஏழையுந்திகிரிஇரு நான்கையும்
மாதிற்க்கரியெட்டையும் மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும்
மாகூர்மம் ஆனதையுமோர் பொறியரவுதாங்கிவருபுவனமீரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும் பூமகளையுந்திகிரி மாயவனையும்அரையிற்
புலியாடை உடையானையும் முறைமுறைகளாயின்ற முதியவர்களாய்பழைமை
முறைகள்தெரியாத நின்னை மூவுலகிலுள்ளவர்கள் வாலையென்(று) அறியாமல்
மொழிகின்றதேது சொல்லாய்; அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!
ஆதிகடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே! 4.
மயூரமங்கலம்

வாடாமல் உயிரெனும் பயிர்தழைத்தோங்கிவர
அருள்மழைபொழிந்தும் இன்ப வாரிதியிலேநின்ன தன்பெனுஞ் சிறகால்
வருந்தாமலேயணைத்துக் கோடாமல் வளர்சிற்றெறும்புமுதற் குஞ்சரக்
கூட்டமுதலான சிவ கோடிகள் தமக்குப்புசிக்கும் புசிப்பினைக்
குறையாமலேகொடுத்து நீடாழியுலகங்கள் யாவையும் நேயமாய்
நின்னுதரபந்திபூக்கும் நின்மலி! அகிலங்களுக்கு)அன்னை என்றோதும்
நீலியென்(று) ஒதுவாரோ? ஆடாத நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ்
ஆதிகடவூரில் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! 5
பல்குஞ்சரந்தொட்டெறும்புகடையானதொரு
பல்லுயிர்க் குங்கல்லிடைப் பட்டதே ரைக்கும்.அன்றுற்பவித் திடுகருப்
பையுறுசீவனுக்கும் மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவர்க்கு மியாவர்க்கும் அவரவர்
மனச்சலிப்பில்லாமலே
நல்குந் தொழிற்பெருமை உண்டாயிருந்துமிகு
நவநிதி உனக்கிருந்தும் நானொருவன் வறுமையிற் சிறியனா னால்அந்
நகைப்புனக் கேஅல்லவோ? அல்கலந்தும்பர்நாடளவெடுக் குஞ்சோலை
ஆதிகடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே. 6

Page 256
நீடுலகங்களுக்(கு) ஆதரமாய்நின்று
நித்தமாய் முத்தி வடிவாய் நியமமுடன் முப்பத்திரண்டறம் வளர்க்கின்ற
நீமனை வியாய்இருந்தும் வீடுவீடுகடோறும் ஒடிப் புகுந்துகால்
வேசற்(று)இலச்சையும்போய் வெண்டுகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமுங்கொண்டு கைக்கோர் ஒடேந்தி நாடெங்கும் உள்ளந்தளர்ந்துநின்(று)
உன்மத்தனாகி அம்மா! உன்கணவன் எங்கெங்கும் ஐயம்புகுந் தேங்கி
உழல்கின்ற தேது சொல்வாய்; ஆடுகொடிமாடமிசைமாதர்விளையாடிவரும்
ஆதிகடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! 7
ஞானந்தழைத்துன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தினிற்போய் நடுவினிலிருந்துவந்தடிமையும் பூண்டவர்
நவிற்றும்உபதேசமுட்கொண் டீனந்தனைத்தள்ளி எனதுநானெனுமானம்
இல்லாமலேது ரத்தி இந்திரிய வாயில்களை இறுகப்புதைத்துநெஞ்(சு)
இருளற விளக்கேற்றியே ஆனந்தமானவிழி அன்னமே! உன்னைஎன்
அகத்தாமரைப்போதிலே வைத்துவேறேகவலையற்றுமேலுற்றபர
வசமாகி அழியாத தோர் ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றதென்றுகாண்;
ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே! 8
C228C

சலதியுலகத்திற் சராசரங்களையீன்ற
தாயா கினாலெனக்குத் தாயல்லவே? யான் உன் மைந்தனன்றோ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன் முலைசுரந்தொழுபாலூட்டிஎன் முகத்தைஉன்
முந்தானை யால்துடைத்து மொழிகின்ற மழலைக்குகந்துகொண்டு டிளநிலா
முறுவல்இன் புற்றிருகில்யான்
கொட்டி வாவென்(று அழைத்துக் குஞ்சரமுகன்கந்தனுக்கு)இளையன் என்றெனைக்
கூறினால் ஈனம் உண்டோ? அலைகடலிலேதோன்று மாறாத அமுதமே!
ஆதிகடவூரின் வாழ்வே அமுசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே! 9
கைப்போது கொண்டுன் பதப்போது தன்னில்
கணப்போதும் அர்ச்சிக் கிலேன் கண்போதினாலுன் முகப்போது தன்னையான்
கண்டுதரிசனைபுரிகிலேன் முப்போதில் ஒருபோதும் என்மனப்போதிலே
முன்னிஉன் ஆலயத்தின் முன்போதுவார்தமது பின்போத நினைகிலேன்;
மோசமே போய்உழன்றேன் மைப்போதகத்திற்கு நிகரெனப் போதெரு
மைக்கடா மீதேறியே மாகோர காலன் வரும்போது தமியேன்
மனங்கலங்கித்தியங்கும் அப்போது வந்துன் அருட்போது தந்தருள்
ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே! 10
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 257
மிகையுந் துரத்தவெம் வெகுளியானது மிடியுந் துரத்தநரைதி வேதனைகளுந்: பகையுந் துரத்தவஞ்ச பசியென் பதுந்து பாவந் துரத்தஅதி மே பலகாரியமுந்து நகையுந் துரத்தஊழ் 6 நாளுந்துரத்த ெ நாவரண் டோடியே கா நமனுந் துரத்துவ அகிலஉலகங்கட்கும்
ஆதிகடவூரின் 6 அமுதீசர் ஒருபாகம் அ அருள்வாமி அபி
J9/Uý%I/1ub)
d
தார்.அமர் கொன்றையும் ச ஊரர்தம் பாகத்து உமைடை சீர்அபிராமி அந்தாதி எப்ே
கார்அமர் மேனிக் கணபதி
நூ
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்
திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்
குங்குமத் தோயம்என்ன விதிக்கின்ற மேனி அபிராமி
என்தன் விழுத்துணையே. t
மயூரமங்கலம்

பிணியுந் துரத்த
துரத்த ரையும் துரத்தமிகு துரத்தப் னையுந் துரத்தப் ரத்தப் கந் துரத்தப்
த்த பினையுந் துரத்த வகுவாய் ல் தளர்ந்திடும்என்னை ITGOTIT? ஆதார தெய்வமே! ாழ்வே! கலாத சுகபாணி! ITT Gu! ti
அந்தாதி
ப்பு ண்பக மாலையும் சாத்தும்தில்லை மந்தனே! உலகுனரழும் பெற்ற பாதும் என் சிந்தையுள்ளே
யே! நிற்கக் கட்டுரையே.
துணையும். தொழுந்தெய்வமும், பெற்ற
தாயும், சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட
வேரும், பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்
குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி
ஆவது அறிந்தனமே. 2

Page 258
அறிந்தேன் எவரும் அறியா
மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே:
திருவே வெருவிப் பிறிந்தேன், நின்அன்பர் பெருமை
எண்ணாத கரும நெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்குஉற வாய மனிதரையே!
மனிதரும், தேவரும், மாயா
முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமளமே!
கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும்என் புந்தி
எந்நாளும் பொருந்துகவே.
பொருந்திய முப்புரை, செப்புரை
செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல்
மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய
அம்பிகை அம்புயம்மேல் திருந்திய சுந்தரி, அந்தரி
பாதம்என் சென்னியதே
சென்னியது உன்பொற் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே மன்னியது உன்திரு மந்திரம்;
சிந்துர வண்ணப்பெண்ணே! முன்னிய நின் அடியாருடன்
கூடி முறைமுறையே பன்னியது, என்றும் உந்தன்
பரமஆகம பத்ததியே!
ததியுறு மத்தில் சுழலும்என்
ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண் டாய் கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும்
மாலும், வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய்! சிந்துர ஆனன சுந்தரியே!

சுந்தரி எந்தை துணைவி, என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி, சிந்துர வண்ணத்தினாள்,
மகிடன் தலைமேல் அந்தரி, நீலி, அழியாத
கன்னிகை, ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் மலர்த்
தாள்என் கருத்தனவே. 8
கருத்தன எந்தைதன், கண்ணன, வண்ணக் கணகவெற்பில் பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு
நல்கின, பேர்அருள்கூர் திருத்தன பாரமும்; ஆரமும்,
செங்கைச் சிலையும், அம்பும் முருத்துஅன மூரலும், நீயும்.அம்மே!
வந்துஎன் முன்நிற்கவே. 9
நின்றும் இருந்தும் கிடந்தும்
நடந்தும் நினைப்பதுஉன்னை; என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்; எழு தாமறையின் ஒன்றும் அரும்பொருளே! அருளே!
உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியா
முத்தி ஆனந்தமே! 10
ஆனந்தமாய், என் அறிவாய்,
நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவுடையாள்,
மறை நான்கினுக்கும் தான்.அந்த மான சரணார
விந்தத் தவளநிறக் கானம்தம் ஆடரங்காம் எம்பிரான்
முடிக் கண்ணியதே. 11
கண்ணியது உன்புகழ்; கற்பதுஉன்
நாமம்; கசிந்துபத்தி பண்ணியது உன்இரு பாதாம்
புயத்தில், பகல்இரவா நண்ணியது உன்னை நயந்தோர்
அவையத்து; நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே!புவி
ஏழையும் பூத்தவளே! t2
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 259
பூத்தவளே புவனம் பதி
னான்கையும், பூத்தவண்ணம் காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூவா
முகுந்தற்கு இளையவளே! மாத்தவளே! உன்னை அன்றி, மற்றுஒர்தெய்வம் வந்திப்பதே? 13
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்; சிந்திப்பவர், நல் திசைமுகர்
நாரணர், சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர்,
பாரில் உன்னைச் சந்திப்ப வர்க்(கு) எளிதாம்
எம்பிராட்டி! நின் தண்ணளியே. 14
தண்ணளிக்கு என்று முன்னேபல
கோடி தவங்கள் செய்வார், மண்அளிக்கும் செல்வமோ பெறு வார்? மதி வானவர்தம் விண்அளிக்கும் செல்வமும், அழியா
முத்தி வீடும்அன்றோ? பண் அளிக்கும் சொற் பரிமள
யாமளைப் பைங்கிளியே! 15
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து
கிளர்ந்து ஒளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்குஇடமே!
எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே வெளிமுதற் பூதங்களாகி
விரிந்த அம்மே! அளியேன் அறிவு அளவிற்குஅள
வானது அதிசயமே! 16
அதிசய மான வடிவுடை
யாள் அரவிந்தமெல்லாம் துதிசயஆனன சுந்தர வல்லி!
துணை இரதி பதிசயமானது அபசய
மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாக அன்றோ, வாம
பாகத்தை வவ்வியதே? 17
மயூரமங்கலம்

வவ்விய பாகத்து இறைவரும்
நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக்
கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்துஎன்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து, வெவ்விய காலன்என் மேல்வரும்
போது, வெளிநிற்கவே! 18
வெளிநின்ற நின் திருமேனியைப்
பார்த்து, என் விழியும்நெஞ்சும் களிறின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை; கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது
என்ன திருவுளமோ! ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும்
மேவி உறைபவளே! 19
உறைகின்ற நின்திருக் கோயில், நின்
கேள்வர் ஒருபக்கமோ? அறைகின்ற நான்மறையின் அடியோ?
முடியோ? அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ?
கஞ்சமோ? என்தன் நெஞ்சகமோ? மறைகின்ற வாரிதி யோ? பூர
ணாசல மங்கலையே! 20
மங்கலை, செங்கல சம்முலை
யாள், மலையாள், வருணச் சங்குஅலை செங்கைச் சகல கலாமயில், தாவுகங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன்
60LLUITsir, 9.60)Luist6ir பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள்
பசும்பெண் கொடியே. 2
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே!
பணிமால் இமயப் பிடியே பிரமன் முதலாய
தேவரைப் பெற்றஅம்மே! அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல்
வந்து ஆண்டு கொள்ளே! 22

Page 260
கொள்ளேன் மனத்தில்நின் கோலம்அல்
லாது, அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன்; பரசமயம்
விரும்பேன்; வியன்மூவுலக்கு உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே
உள்ளத்தே விளைந்த கள்ளே களிக்கும் களியே
அளியளன் கண்மணியே! 23
மணியே மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே அணியும் அணிக்கு அழகே!
அணு காதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே!
அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை, நின்பத்ம
பாதம் பணிந்தபின்னே! 24
பின்னே திரிந்துஉன் அடியாரைப்
பேணிப் பிறப்புஅறுக்க முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன்;
முதல் மூவருக்கும் அன்னே உலகுக்கு அபிராமி
என்னும் அருமருந்தே! என்னே? இனிஉன்னை யான்மற
வாமல்நின்று ஏத்துவனே! 25
ஏத்தும் அடியவர் ஈரேழு
உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்;
கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல்அணங்கே! மணம்
நாறும்நின் தாள்இணைக்(கு)என்
நாத்தங்கு புன்மொழி ஏறிய
வாறு நகையுடைத்தே! 26
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும்.அன்பு படைத்தனை, பத்ம பதயுகம்
சூடும் பணிஎனக்கே அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம்நின் அருட்புனலால் துடைத்தனை, சுந்தரி! நின்அருள்
ஏதென்று சொல்லுவதே! 27
C232d

சொல்லும் பொருளும் என, நட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே!
நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும்அவர்க்கே
அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவ
லோகமும் சித்திக்குமே. 28
சித்தியும், சித்தி தரும்தெய்வம்
ஆகித் திகழும்பரா சத்தியும், சத்தி தழைக்கும்
சிவமும், தவம்முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும்,
வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும், புத்தியின் உள்ளே
புரக்கும் புரத்தைஅன்றே. 29
அன்றே தடுத்துஎன்னை ஆண்டுகொண்
டாய்; கொண்ட(து) அல்லனன்கை நன்றே? உனக்கினி நான்என்
செயினும், நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை
நின் திருவுளமே ஒன்றே பலஉருவே! அருவே!
என் உமையவளே! 30
உமையும் உமையொரு பாகரும்
ஏக உருவில்வந்துஇங்கு, எமையும் தமக்குஅன்பு செய்யவைத் தார்;இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை; ஈன்றுஎடுப்
பாள்ஒரு தாயும்இல்லை; அமையும், அமையுறு தோளியர்
மேல்வைத்த ஆசையுமே! 31
ஆசைக் கடலில் அகப்பட்(டு),
அருள் அற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லற்படஇருந்தேனை, நின்
பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல்
வலியவைத்(து) ஆண்டுகொண்ட நேசத்தை என்சொல்லுவேன்! ஈசர்
பாகத்து நேரிழையே! 32
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர்-2000

Page 261
இழைக்கும் வினைவழியே அடும்
காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுதுவந்து, அஞ்சல் என்பாய்;அத்தர் சித்தம்எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை
யாமளைக் கோமளமே! உழைக்கும்பொழுது உன்னையேஅன்னையே
என்பன், ஓடிவந்தே. 33
வந்தே சரணம் புகும்
அடியார்க்கு, வானுலகம் தந்தே, பரிவொடு தான்போய்
இருக்கும் சதுர்முகமும், பைந்தேன் அலங்கற் பருமனி ஆகமும், பாகமும், பொற் செந்தேன் மலரும், அலர்கதிர்
ஞாயிறும், திங்களுமே. 34
திங்கட் பகவின் மனம்நாறும்
சீறடி சென்னிவைக்க, எங்கட் கொருதவம் எய்தியவா?
எண்இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம்எய்துமோ?
தரங்கக் கடலுள் வெங்கட் பணிஅணை மேல்துயில்
கூறும் விழுப்பொருளே! 35
பொருளே! பொருள்முடிக்கும் போகமே!
அரும் போகம்செய்யும் மருளே மருளில் வரும்தெருளே! என் மனத்துவஞ்சத்(து) இருள்ஏதும் இன்றி ஒளிவெளி
ஆகியிருக்கும் உன்றன் அருள் ஏ(து) அறிகின்லேன்,
அம்புயஆதனத்து அம்பிகையே! 36
கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம்அன்ன மெய்க்கே அணிவது விெண்முத்து
மாலை; விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக்
கோவையும் பட்டும்; எட்டுத் திக்கே அணியும் திருவுடை
யான்இடம் சேர்பவளே! 37
மயூரமங்கலம்

பவளக் கொடியில் பழுத்தசெவ்
வாயும், பணிமுறுவல் தவளத் திருநகை யும்துணையா,
எங்கள் சங்கரனைத் துவளப் பொருது, துடிஇடை
சாய்க்கும் துணைமுலையாள் அவளைப் பணிமின் கண்டீர்
அமராவதி ஆளுகைக்கே. 38
ஆளுகைக்(கு) உன்தன் அடித்
தாமரைகள்உண்டு; அந்தகன்பால் மீளுகைக்(கு) உன்தன் விழியின்
கடைஉண்டு; மேல்இவற்றின் மூளுகைக்(கு) என்குறை நின்குறையே
அன்று; முப்புரங்கள் மாளுகைக்(கு) அம்பு தொடுத்தவில்லான் பங்கில் வாள்நுதலே! 39
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்துஇறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெரு
மாட்டியைப் பேதைநெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, கானும்அன்பு பூணுதற்(கு) எண்ணிய எண்ணம்அன்றோ,
முன்செய் புண்ணியமே! 40
புண்ணியம் செய்தனமே மனமே!
புதுப் பூங்குவளைக் கண்ணியும், செய்ய கணவரும்
கூடி, நம் காரணத்தால் நண்ணி இங்கேவந்து, தம்அடி யார்கள் நடுஇருக்கப் பண்ணி, நம் சென்னியின்மேல்
பத்மபாதம் பதித்திடவே. 41
இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு
இறுகி இளகி,முத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு
இறைவர் வலியநெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட
நாயகி! நல்அரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி,
வேதப் பரிபுரையே. 42

Page 262
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல் திரிபுர சுந்தரி, சிந்துர
மேனியள், தீமைநெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக்
குனிபொருப் புச்சிலைக்கை, எரிபுரை மேனி இறைவர்செம்
பாகத்து இருந்தவளே! 43
தவளே இவள் எங்கள்
சங்கரனார் மனைமங்கலமாம்; அவளே அவர்தமக்(கு) அன்னையும் ஆயினள்; ஆகையினால், இவளே கடவுளர் யாவர்க்கும்
மேலை இறைவியுமாம்; துவளேன், இனிஒரு தெய்வம்உண்
டாகமெய்த் தொண்டு செய்தே. 44
தொண்டு செய்யாது, நின்பாதம்
தொழாது, துணிந்(து)இச்சையே பண்டு செய்தார் உளரோஇலரோ?
அப்பரி(சு) அடியேன் கண்டு செய்தால், அது கைதவமோ
அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கைநன்றே.
பின் வெறுக்கைஅன்றே. 45
வெறுக்கும் தகைமைகள் செய்யினும்,
தம்அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதிய(து)அன்றே,
புதுநஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம்
கலந்த பொன்னே! மறுக்கும் தகைமைகள் செய்யினும்
யான்உன்னை வாழ்த்துவனே. 46
வாழும் படிஒன்று கண்டுகொண்டேன்:
மனத்தே ஒருவர் வீழும் படிஅன்று; விள்ளும்படி அன்று வேலைநிலம் ஏழும், பருவரை எட்டும்
எட்டாமல், இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே
கிடந்து சுடர்கின்றதே. 47

சுடரும் கலைமதி துன்றும்
சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்
கொடியைப் பதித்துநெஞ்சில், இடரும் தவிர்த்(து), இமைப்போ(து)இருப்பார்
பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும்
தோயும் குரம்பையிலே? 48
குரம்பை அடுத்துக் குடிபுக்க
ஆவி, வெங் கூற்றுக்(கு)இட்ட வரம்பை அடுத்து மறுகும்.அப்போது,
வளைக்கை அமைத்து அரம்பை யடுத்த அரிவையர்
சூழவந்(து), அஞ்சல்' என்பாய், நரம்பை அடுத்த இசைவடி
வாய்நின்ற நாயகியே! 49
நாயகி, நான்முகி, நாராயணி,
கை நளினபஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி,
சாமளை, சாதிநச்சு வாயகி மாலினி, வாராகி,
சூலினி, மாதங்கிஎன்று ஆயகியாதி உடையாள் சரணம்
அரண் நமக்கே. 50
அரணம் பொருள்ளன்(று) அருள்
ஒன்(று)இலாத அசுரர்தங்கள் முரண் அன்(று) அழியமுனிந்த பெம்மானும் முகுந்தனுமே, சரணம் சரணம் எனநின்ற நாயகிதன் அடியார், மரணம் பிறவி இரண்டும்எய்தார்,
இந்த வையகத்தே. 51
வையம், துரகம், மதகரி,
மாமகுடம், சிவிகை, பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த ஐயன் திருமனை யாள்அடித்
தாமரைக்கு அன்புமுன்பு செய்யும் தவமுடை யார்க்(கு)
உளவாகிய சின்னங்களே. 52
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 263
சின்னஞ் சிறிய மருங்கினில்
சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையும்,
முத்தாரமும், பிச்சிமொய்த்த கன்னங் கரிய குழலும், கண்
மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந் தனிஇருப் பார்க்(கு)இது
போலும் தவம்இல்லையே. 53
இல்லாமை சொல்லி, ஒருவர்தம்
பால்சென்று, இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்,
நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம்பால்
ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை
பாதங்கள் சேர்மின்களே. 54
மின்ஆயிரம் ஒரு மெய்வடி
வாகி விளங்குகின்ற அன்னாள், அகமகிழ் ஆனந்த வல்லி, அருமறைக்கு முன்னாய், நடுஎங்குமாய், முடிவாய
முதல்வி தன்னை உன்னாது ஒழியினும் உன்னினும்,
வேண்டுவது ஒன்றில்லையே. 55
ஒன்றாய் அரும்பிப் பலவாய்
விரிந்(து), இவ்வுல(கு)எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கிநிற்பாள்
என்தன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா!
இப்பொருள் அறிவார் அன்(று) ஆலிலையில் துயின்ற
பெம்மானும் என்ஜயனுமே. 56
ஐயன் அளந்தபடி இருநாழி
கொண்டு), அண்டமெல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும்
போற்றி, ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும்
கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ
உன்தன் மெய்யருளே? 57
மயூரமங்கலம்

அருணாம் புயத்தும், என் சித்தாம்
புயத்தும், அமர்ந்திருக்கும் தருணாம் புயமுலைத் தையல்
நல்லாள், தகை சேர்நயனக் கருனாம் புயமும், வதனாம்
புயமும், கராம்புயமும், சரணாம் புயமும் அல்லால்
கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. 58
தஞ்சம் பிறி(து)இல்லை ஈதுஅல்ல(து)
என்று, உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்;
ஒற்றை நீள் சிலையும் அஞ்(சு)அம்பும் இக்(கு)அலராகி நின்றாய்!
அறியார் எனினும், பஞ்(சு)அஞ்சும் மெல்லடியார் அடியார்
பெற்ற பாலரையே. 59
பாலினும் சொல்இனி யாய்பணி
மாமலர்ப் பாதம்வைக்க, மாலினும், தேவர்வணங்க நின்றோன்
கொன்றை வார்சடையின் மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒரு நாலினும், சாலநன்றோ அடியேன்
முடை நாய்த்தலையே? 60
நாயே னையும் இங்(கு)ஒரு
பொருளாக நயந்துவந்து, நீயே நினைவின்றி ஆண்டுகொண்
டாய், நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய்; என்ன பேறுபெற்றேன்! தாயே, மலைமகளே, செங்கண்
மால்திருத் தங்கைச்சியே! 61
தங்கச் சிலைகொண்டு, தானவர்
முப்புரம் சாய்த்து, மத வெங்கண் கரிஉரி போர்த்த
செஞ்சேவகன் மெய்அடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட
நாயகி, கோகநகச் செங்கைக் கரும்பும், மலரும்எப்
போதும் என்சிந்தையதே. 62

Page 264
தேறும் படிசில ஏதுவும்
காட்டி, முன் செல்கதிக்குக் கூறும் பொருள், குன்றில் கொட்டும்
தறி, குறிக்கும் சமயம் ஆறும் தலைவி இவளாய்
இருப்பது அறிந்திருந்தும், வேறும் சமயம்உண்(டு) என்று
கொண்டாடிய வீனருக்கே. 63
வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று, மிக்கஅன்பு பூனேன்; உனக்(கு)அன்பு பூண்டு
கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப் பேனேன், ஒருபொழுதும்; திரு
மேனிப்ரகாசம் அன்றிக் காணேன் இருநில மும், திசை
நான்கும், ககனமுமே. 64
ககனமும் வானும் புவனமும்
கான, விற் காமன்அங்கம் தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம் முகனும் முந்நான்கு இருமூன்றுஎனத்
தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோ?வல்லி
நீசெய்த வல்லபமே. 65
வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன்
நின் மலரடிச்செம் பல்லவம் அல்லது பற்றுஒன்று
இலேன்; பசும் பொன்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்,
வினையேன் தொடுத்த சொல்அவ மாயினும், நின்திரு
நாமங்கள் தோத்திரமே. 66
தோத்திரம் செய்து தொழுதுமின்
போலும்நின் தோற்றம் ஒரு மாத்திரைப் போதும் மனத்தில்
வையாதவர் வண்மை, குலம், கோத்திரம், கல்வி, குணம்குன்றி,
நாளும் குடில்கள்தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குஉழலா
நிற்பர் பாரெங்குமே. 67
G236D tog

பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர்விசும்பும்; ஊரும் முருகு சுவைஒளி
ஊறுஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாம
சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார்
படையாத தனம்இல்லையே. 68
தனம்தரும்; கல்வி தரும்;ஒரு
நாளும் தளர்வுஅறியா மனம்தரும்; தெய்வ வடிவும்
தரும்; நெஞ்சில் வஞ்சம்இல்லா இனம்தரும்; நல்லன எல்லாம்
தரும்அன்பர் என்பவர்க்கே, கனம்தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே. 69
கண்களிக் கும்படி கண்டுகொண்
(SL6T, esLo UTL6silulsio: பண்களிக்கும் குரல் வீணையும்,
கையும், பயோதரமும், மண்களிக்கும் பச்சை வண்ணமும்
ஆகி, மதங்கர்குலப் பெண்களில் தோன்றிய எம்பெரு
மாட்டிதன் பேரழகே. 7Ο
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்
தாள், பனி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள
யாமளைக் கொம்பிருக்க, இழவுற்று நின்றநெஞ்சே! இரங்கேல்!
உனக்கு என்குறையே? 71
என்குறை தீரநின்று ஏத்துகின்
றேன்;இனி யான்பிறக்கின், நின்குறையே அன்றி யார்குறை
காண்?இரு நீள்விகம்பின் மின்குறை காட்டி மெலிகின்ற
நேரிடை மெல்லியலாய்! தன்குறை தீர, எம் கோன்சடை
மேல்வைத்த தாமரையே. 72
பூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 265
தாமம் கடம்பு; படைபஞ்ச
பாணம், தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும்
பொழுதுஎமக்கென்று வைத்த சேமம் திருவடி; செங்கைகள்
நான்கு, ஒளி செம்மை; அம்மை நாமம் திரிபுரை ஒன்றோ(டு)
இரண்டு நயனங்களே. 73
நயனங்கள் மூன்றுடை நாதனும்,
வேதமும், நாரணனும், அயனும் பரவும் அபிராம
வல்லி அடிஇணையைப் பயன்என்று கொண்டவர், பாவையர்
ஆடவும் பாடவும், பொன் சயனம் பொருந்து தமனியக்
காவினில் தங்குவரே. 74
தங்குவர் கற்பகத் தாருவின்
நீழலில்; தாயர்இன்றி மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை, மால்வரையும், பொங்குவர் ஆழியும் ஈரேழ்
புவனமும் பூத்தஉந்திக் கொங்குஇவர் பூங்குழலாள்திரு
மேனி குறித்தவரே. 75
குறித்தேன் மனத்தில், நின்கோலம் எல்லாம்;நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்
பிரான்ஒரு கூற்றைமெய்யில் பறித்தே குடிபுகுதும் பஞ்ச
பான பயிரவியே! 76
பயிரவி! பஞ்சமி பாசாங்
குசை! பஞ்ச பாணி! வஞ்சர் உயிரவி உண்ணும் உய்ர்சண்டி!
காளி ஒளிரும்கலா வயிரவி! மண்டலி மாலினி!
சூலி வராகிஎன்றே செயிர்அவிநான்மறை சேர்திரு
நாமங்கள் செப்புவரே. 77 .ی
மயூரமங்கலம்

செப்பும் கனக கலசமும்
போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம
வல்லி அணிதரளக் கொப்பும், வயிரக் குழையும்,
விழியின் கொழும்கடையும், துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்
என் துணைவிழிக்கே. 78
விழிக்கே அருளுண்டு) அபிராம
வல்லிக்கு; வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு)
எமக்கு;அவ் வழிகிடக்கப், பழிக்கே சுழன்று, வெம்பாவங்களே,
செய்து, பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம்
மோடு என்ன கூட்(டு)இனியே? 79
கூட்டியவா என்னைத் தன்அடி
யாரில், கொடியவினை ஒட்டியவா, என்கண் ஒடியவா, தன்னை உள்ளவண்ணம் காட்டியவா, கண்ட கண்ணும்
மனமும் களிக்கின்றவா, ஆட்டியவா நடம் ஆடகத்
தாமரை ஆரணங்கே. 80
அணங்கே! அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன்
நெஞ்சில்; வஞ்சகரோடு இணங்கேன்; எனதுஉன(து) என்று “ இருப்பார்சிலர் யாவரொடும் பிணங்கேன்; அறிவொன்றி லேன்; என்
கண்நிவைத்த பேரளியே! 81
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே
அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர்திரு
மேனியை உள்ளுந்தொறும் களியாகி, அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு வெளியாய் விடின், எங்ங்னே மறப்பேன்
நின் விரகினையே? 82
23D گسسه

Page 266
விரவும் புதுமலர் இட்டு, நின் பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல்லார்,
இமையோர் எவரும் பரவும் பதமும், அயிரா
வதமும், பகீரதியும் உரவும் குலிசமும், கற்பகக்
காவும் உடையவரே. 83
உடையாளை, ஒல்குசெம் பட்(டு)
உடையாளை, ஒளிர்மதிச்செஞ் சடையாளை, வஞ்சகர் நெஞ்சடையாளை,
தயங்கும் நுண்ணுால் இடையாளை, எங்கள் பெம்மான்
இடையாளை, இங்கென்னைஇனிப் படையாளை, உங்களையும் படையா
வண்ணம் பார்த்திருமே. 84
பார்க்கும் திசைதொறும் பாசாங்
குசமும், பனிச்சிறைவண்டு) ஆர்க்கும் புதுமலர் ஐந்தும்,
கரும்பும்,என் அல்லல்எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திரு
மேனியும், சிற்றிடையும், வார்க்குங்கும் முலையும், முலைமேல்
முத்து மாலையுமே. 85
மால்அயன் தேட மறைதேட,
வானவர்தேட நின்ற காலையும் சூடகக் கையையும்
கொண்டு, கதித்தகப்பு வேலை வெங்காலன் என்மேல்
விடும்போது, வெளிநில்கண்டாய்! பாலையும் தேனையும் பாகையும்
போலும் பணிமொழியே! 86
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத
நின்திருமூர்த்தி, எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற
தால்,விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா
விரதத்தை, அண்டமெல்லாம் பழிக்கும் படி,ஒரு பாகம்
கொண்டு)ஆளும் பராபரையே! 87
به -ة

பரம்என்(று) உனை அடைந்தேன்
தமியேனும், உன்பத்தருக்குள் தரம்அன்(று) இவன்என்று தள்ளத்
தகாது; தரியலர்தம் புரம்அன்(று) எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில்அயன் சிரம்ஒன்று செற்ற கையான்இடப்
பாகம் சிறந்தவளே! 88
சிறக்கும் கமலத் திருவே! நின்
சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும்நின் துணைவரும்
நீயும், துரியமற்ற உறக்கம் தரவந்து, உடம்போ(டு)
உயிர்உறவு அற்(று)அறிவு மறக்கும் பொழு(து), என் முன்னே
வரல்வேண்டும் வருந்தியுமே. 89
வருந்தா வகை என் மனத்
தாமரையினில் வந்துபுகுந்து இருந்தாள், பழைய இருப்பிடமாக;
இனி எனக்குப் பொருந்தாத ஒருபொருள் இல்லை;
விண்மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை
நல்கும் மெல்லியலே! 90
மெல்லிய நுண்இடை மின்அனை யாளை, விரிசடையோன் புல்லிய மென்முலை பொன்அனை யாளைப் புகழ்ந்து, மறை சொல்லிய வண்ணம் தொழும்அடி
யாரைத்தொழும் அவர்க்கு பல்லியம் ஆர்த்துஎழ, வெண்பகடு
ஊரும் பதம் தருமே. 91
பதத்தே உருகி, நின்பாதத்திலே
மனம்பற்றி, உன்றன் இதத்தே ஒழுக, அடிமை கொண் டாய்;இணியான் ஒருவர் மதத்தே மதிமயங் கேன்;அவர்
போனவழியும் செல்லேன்! முதல்தேவர் மூவரும் யாவரும்
போற்றும் முகிழ்நகையே! 92
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 267
நகையே இஃதுஇந்த ஞாலம்எல்
லாம்பெற்ற நாயகிக்கு முகையே, முகிழ்முலை மானே
முதுகண் முடிவில்அந்த வகையே பிறவியும் வம்பே;
மலைமகள் என்பதுநாம்; மிகையே, இவள்தன் தகைமையை
நாடி விரும்புவதே.
விரும்பித் தொழும் அடியார்விழி
நீர்மல்கி, மெய்புளகம் அரும்பித், ததும்பிய ஆனந்த மாகி, அறிவிழந்து, சுரும்பிற் களித்து, மொழிதடு
மாறி, முன் சொன்னளல்லாம் தரும் பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம்நன்றே!
நன்றே வருகினும், தீதே
விளைகினும், நான்அறிவ(து) ஒன்றேயும் இல்லை; உனக்கே
பரம்; எனக்(கு) உள்ளஎல்லாம் அன்றே உனதென்(று) அளித்து
விட்டேன்; அழியாதகுணக் குன்றே அருட்கடலே! இம
வான்பெற்ற கோமளமே!
கோமளவல்லியை, அல்லியந்
தாமரைக் கோயில்வைகும் யாமள வல்லியை, ஏதம்
இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா
மயில் தன்னைத்தம்மால் ஆமளவும் தொழு வார், எழு
பாருக்கும் ஆதிபரே.
ஆதித்தன் அம்புலி, அங்கி,
குபேரன், அமரர்தங்கோன், போதில் பிரமன், புராரி,
முராரி, பொதியமுனி, காதிப் பொருபடைக் கந்தன்,
கணபதி, காமன்முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர்
போற்றுவர் தையலையே.
மயூரமங்கலம்
93
94
95
96

தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக், கைவந்த தீயும் தலைவந்த
ஆறும் கரந்ததுஎங்கே? மெய்வந்த நெஞ்சின் அல்லால்,
ஒருகாலும் விரகர்தங்கள் பொய்வந்த நெஞ்சில் புகல்அறியா
மடப் பூங்குயிலே! 98
குயிலாய் இருக்கும் கடம்பா
டவியிடை கோலவியன் மயிலாய் இருக்கும் இமயாசலத் திடை வந்(து)உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில்;
கமலத்தின்மீது அன்னமாம் கயிலாய ருக்(கு) அன்றுஇமவான்
அளித்த கணங்குழையே. 99
குழையைத் தழுவிய கொன்றையந்
தார்கமழ் கொங்கைவல்லி, கழையைப் பொருத திருநெடுந்
தோளும், கருப்புவில்லும், விழையப் பொருதிறல் வேரிஅம்
பாணமும், வெண்ணகையும், உழையைப் பொருகண்ணும், நெஞ்சில்
எப்போதும் உதிக்கின்றவே! 100
நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராம
வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத்
தாளை, புவி அடங்கக் காத்தாளை, ஐங்கனை பாசாங்
குசமும் கரும்பும்அங்கை சேர்த்தாளை, முக்கண்ணியைத்
தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே.
** 聳

Page 268
o
f
Y, i.
(s
റ്റ്
240
மீனாட்சி
கார்கொண்ட க
கடைக்கன கடவாது தடவுச் கடைக்கா
போர்கொண்ட பொடிதுடி புழுதியாட் டயர போர்க்களி தார்கொண்ட ப சாத்தக் கி தவழுமிள வெய றண்ணெ வார்கொண் ட
வல்லியபி
மாணிக்க வல்ல
வல்லிசொ
மணிகொண்ட
மாசுணச் மால்களிறு பிட
வாலுளை அணிகொண்ட ஐயனொ(
 
 

நருபரசுவாமிகள்
UTL6th656ir
மதுரை யம்மை பிள்ளைத்தமிழ்
விநாயகர் துதி வுண்மதக் கடைவெள்ள முங்கட் டக் கனலுமெல்லை க் குழைச்செவி முகந்தெறி
றிரட்டவெங்கோன் வெண்டோட் பொலங்குவடு பொதியும்வெண் யடித்துவைத்துப் ாவொ ரயிராவணத்துலவு ரிற் றைத்துதிப்பாம் திமுடி யொருத்தன் றிருக்கண்மலர் ளெர்ந்துபொங்கித் பிலுமழ நிலவுமள வளவலாற் ன்று வெச்சென்றுபொன் ணந்தமுலை மலைவல்லி கர்ப்பூர ராமவல்லி மிமரகதவல்லியபிடேக
ற் றமிழ்தழையவே.
1. காப்புப் பருவம்
திருமால் நெடுநேமி வலயஞ் சுமந்தாற்று சூட்டுமோட்டு ர்வைத்த வளரொளி விமானத்து மடங்கறாங்கும் பீடிகையினம்பொன்முடி முடிவைத்தெம்
வீற்றிருந்த
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 269
அங்கயற்கண்ணமுதை மங்கையர்க் கரசியையெம்
அம்மனையையினிதுகாக்க கணிகொண்ட தண்டுழாய்க் காடலைத் தோடுதேங்
கலுழிபாய்ந்தளறுசெய்யக் கழனிபடு நடவையிற் கமலத் தணங்கரசொர்
கையனை முகந்துசெல்லப் பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப்
பணைத்தோ ளெருத்தலைப்பப் பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே. (1)
சிவபெருமான் 3. சிகர வடவரை குனிய நிமிர்தரு
செருவி லொருபொரு வில்லெனக் கோட்டினர் செடிகொள பறிதலை யமண ரெதிரெதிர்
செலவொர் மதலைசொல் வையையிற் கூட்டினர் திருவு மிமையவர் தருவு மரவொலி
செயவ லவர்கொள நல்குகைத் தீட்டினர் சிறிய வெனதுடன் மொழியும் வடிதமிழ்
தெரியுமவர்முது சொல்லெனச் சூட்டினர் பகரு மிசைதிசை பரவ விருவர்கள்
பயிலுமியறெரி வெள்வளைத் தோட்டினர் பசிய வறுகொடு வெளிய நிலவிரி
பவள வனமடர் பல்சடைக் காட்டினர் பதும முதல்வனு மெழுத வரியதொர்
பனுவ லெழுதிய வைதிகப் பாட்டினர் பரசு மிரசத சபையி னடமிடு
பரத பதயுக முள்ளம்வைத் தேத்துதும் தகர மொழுகிய குழலு நிலவுமிழ்
தரள நகையுமெ மையனைப் பார்த்தெதிர் சருவியமர்பொரு விழியு மறுகிடை
தளர வளர்வதொர் செவ்விமுற்றாக்கன தனமுமனனுற வெழுதி யெழுதரு
தமது வடிவையு மெள்ளிமட் டூற்றிய தவள மலர்வரு மிளமினொடுசத
தளமின் வழிபடு தையலைத் தூத்திரை மகர மெறிகட லமுதை யமுதுகு
மழலை பழகிய கிள்ளையைப் பேட்டனம் மடவ நடைபயில் பிடியை விரைசெறி
வரைசெய் புயமிசை வையம்வைத் தாற்றிய வழுதியுடையகண் மணியொ டுலவுபெண்
மணியை யணிதிகழ் செல்வியைத் தேக்கமழ் மதுர மொழுகிய தமிழினியல்பயில்
மதுரை மரகத வல்லியைக் காக்கவே. (2)
மயூரமங்கலம்

சித்திவிநாயகக் கடவுள் கைத்தல மோடிரு கரடக் கரைத்திரை
கக்குக டாமுடை கடலிற் குளித்தெமர் சித்தம தாமொரு தறியிற் றுவக்குறு
சித்திவிநாயக ரிைசையைப் பழிச்சுதும் புத்தமு தோவருடழையத் தழைத்ததொர்
பொற்கொடி யோவென மதுரித் துவட்டெழு முத்தமிழ் தேர்தரு மதுரைத் தலத்துறை
முத்தன மேவுபெணரசைப் புரக்கவே. (3)
முருகக்கடவுள் பமர மடுப்பக் கடாமெடுத் தூற்றுமொர்
பகடு நடத்திப் புலோமசைச் சூர்ப்புயல் பருகி யிடக்கற் பகாடவிப் பாற்பொலி
பரவை யிடைப்பற் பமாதெனத் தோற்றிய குமரி யிருக்கக் கலாமயிற் கூத்தயர்
குளிர்புன மொய்த்திட்டசாரலிற் போய்ச்சிறு குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனைமுத்துக் குமாரனைப் போற்றுதும் இமிழ்திரை முற்றத் துமேருமத் தார்த்துமுள்
எயிறுகு நச்சுப் பணாடவித் தாப்பிசைத் திறுக விறுக்கித் துழாய்முடித் தீர்த்தனொ
டெவரு மதித்துப் பராபவத் தீச்சுட அமுதுசெய் வித்திட்டபோனகத் தாற்சுடர்
அடரு மிருட்டுக் கிரீவமட் டாக்கிய அழகிய சொக்கற் குமால்செயத் தோட்டிகல்
அமர்செய் கயற்கட் குமாரியைக் காக்கவே. (4)
பிரமதேவர் மேகப் பசுங்குழவி வாய்மடுத் துண்ணவும்
விட்புலம் விருந்தயரவும் வெள்ளமுதம் வீசுங் கருந்திரைப் பைந்துகில்
விரித்துடுத் துத்திவிரியும் நாகத்து மீச்சுடிகை நடுவட் கிடந்தமட
நங்கையைப் பெற்றுமற்றந் நாகணைத் துஞ்சுதன் றந்தைக்கு வந்துதவு
நளினக் குழந்தைகாக்க பாகத்து மரகதக் குன்றொன்றொர் தமனியக்
குன்றொடு கிளைத்துநின்ற பவளத் தடங்குன்றுளக்கண்ண தென்றப்
பரஞ்சுடர் முடிக்குமுடிமூன் றாகத் தமைத்துப்பி னொருமுடிதன் முடிவைத்
தணங்கரசு வீற்றிருக்கும் அபிடேக வல்லியை யளிக்குல முழக்குகுழல்
அங்கயற் கண்ணமுதையே, (5)

Page 270
தேவேந்திரன் 7. சுழியுங் கருங்கட் குண்டகழி
சுவற்றுஞ் சுடர்வேல் கிரிதிரித்த தோன்றற் களித்துச் சுறவுயர்த்த
சொக்கப் பெருமாள் செக்கர்முடி பொழியுந் தரங்கக் கங்கைவிரைப்
புனல்கால் பாய்ச்சத் தழைந்துவிரி புவனந் தனிபூத் தருள்பழுத்த
பொன்னங் கொடியைப் புரக்கவழிந் திழியுந் துணர்க்கற் பகத்தினற
விதழ்த்தேன் குடித்துக் குமட்டியெதிர் எடுக்குஞ் சிறைவண் டுவட்டுறவுண் டிரைக்கக் கரைக்கு மதக்கலுழிக் குழியுஞ் சிறுக னேற்றுருமுக்
குரல்வெண் புயலுங் கரும்புயலும் குன்றங் குலைய வுகைத்தேறும்
குலிசத் தடக்கைப் புத்தேளே. (6)
திருமகள் 8. வெஞ்சூட்டு நெட்டுடல் விரிக்கும் படப்பாயல்
மீமிசைத் துஞ்சுநீல மேகத்தி னாகத்து விடுசுடர்ப் படலைமணி
மென்பர லுறுத்தநொந்து பஞ்சூட்டு சீறடி பதைத்துமதன் வெங்கதிர்
படுமிள வெயிற்குடைந்தும் பைந்தழாய்க் காடுவிரி தண்ணிழலொதுங்குமொர்
பசுங்கொடியை யஞ்சலிப்பாம் மஞ்சூட்டகட்டுநெடு வான்முகடு துருவுமொரு
மறையோதி மஞ்சலிக்க மறிதிரைச் சிறைவிரியுமாயிர முகக்கடவுண்
மந்தா கினிப்பெயர்த்த செஞ்சூட்டு வெள்ளோ திமங்குடி யிருக்கும்வளர்
செஞ்சடைக் கருமிடற்றுத் தேவுக்கு முன்னின்ற தெய்வத்தை மும்முலைத்
திருவைப் புரக்கவென்றே. (7)
கலைமகள் 9. வெள்ளித் தகட்டுநெட் டேடவிழ்த் தின்னிசை
விரும்புஞ் சுரும்பர்பாட விளைநறவு கக்கும் பொலம்பொகுட் டலர்கமல
வீட்டுக் கொழித்தெடுத்துத் தெள்ளித் தெளிக்குந் தமிழ்க்கடலி னன்பினைந்
திணையென வெடுத்தவிறை நூற்
G242 s so

றெள்ளமுதுகூட்டுணுமொர் வெள்ளோதிமத்தினிரு
சீறடி முடிப்பம்வளர்பைங் கிள்ளைக்கு மழலைப் பசுங்குதலை யொழுகுதீங்
கிளவியுங் களிமயிற்குக் கிளரிளஞ் சாயலு நவ்விக்கு நோக்கும்விரி
கிஞ்சுகச் சூட்டரசனப் பிள்ளைக்கு மடநடையு முடனாடு மகளிர்க்கொர்
பேதைமையு முதவிமுதிராப் பிள்ளைமையின் வள்ளன்மைகொள்ளுமொருபாண்டிப் பிராட்டியைக் காக்கவென்றே. (8)
துர்க்கை 10. வடிபட்ட முக்குடுமி வடிவே றிரித்திட்டு வளைகருங் கோட்டுமோட்டு மயிடங் கவிழ்த்துக் கடாங்கவிழ்க் குஞ்சிறுகண்
மால்யானை வீங்கவாங்கும் துடிபட்ட கொடிநுண் ணுசுப்பிற் குடைந்தெனச்
சுடுகடைக் கனலி தூண்டும் சுழல்கண் முடங்குளை மடங்கலை யுகைத்தேறு
சூரரிப் பிணவுகாக்க பிடிபட்ட மடநடைக் கேக்கற்ற கூந்தற்
பிடிக்குழாஞ் சுற்றவொற்றைப் பிறைமருப்புடையதொர் களிற்றினைப் பெற்றெந்தை
பிட்டுண்டு கட்டுண்டுநின் றடிபட்ட திருமேனி குழையக் குழைத்திட்ட
அணிமணிக் கிம்புரிக்கோ டாகத்ததாகக் கடம்பா டவிக்குள்விளை
யாடுமொர் மடப்பிடியையே. (9)
சத்த மாதர்கள் 11. கடகளிறுதவுக பாய்மிசைப் போர்த்தவள்
கவிகுவி துறுகலின் வாரியைத் தூர்த்தவள் கடல்வயி றெரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள் இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள் எயிறுகொ டுழுதெழு பாரினைப் பேர்த்தவள் எனுமிவ ரெழுவர்க டாண்முடிச் சூட்டுதும் குடமொடு குடவியர் பாணிகைக் கோத்திடு
குரவையுமலதொர்பணாமுடிச் சூட்டருள் குதிகொள நடமிடு மாடலுக் கேற்பவொர்
சூழலிசை பழகளி பாடிடக் கேட்டுடை மடலவிழ் துளபந றாவெடுத் தூற்றிட
மழகளிறெனவெழு கார்முகச் சூற்புயல் வரவரு மிளையகுமாரியைக் கோட்டெயில்
மதுரையில் வளர்கவுமாரியைக் காக்கவே. (10)
யூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 271
12.
13.
மயூர மங்கலம்
முப்பத்து மூவர் அமரில் வெந்நிடுமவுதியர் பின்னிடுமொர்
அபயர் முன்னிடுவனத்தொக்க வோடவும் அளவு மெம்முடைய திறையி தென்னமுடி
அரச ரெண்ணிலரொர் முற்றத்து வாடவும் அகில மன்னரவர் திசையின் மன்னரிவர்
அமர ரென்னுமுரை திக்கெட்டு மூடவும் அமுத வெண்மதியின் மரபை யுன்னியுணி
அலரியண்ணன்முழு வெப்பத்து மூழ்கவும் குமரி பொன்னிவயை பொருநை நன்னதிகள்
குதிகொள் விண்ணதியின் மிக்குக்கு லாவவும் குவடு தென்மலையினிகர தின்மைசுரர்
குடிகொள் பொன்மலைது தித்துப்ப ராவவும் குமரர் முன்னிருவரமர ரன்னையிவள்
குமரி யின்னமுமெனச்சித்தர் பாடவும் குரவை விம்மவர மகளிர் மண்ணிலெழில்
குலவு கன்னியர்கள் கைக்கொக்க வாடவும் கமலன் முன்னிவிடு மரச வன்னமெழு
கடலிலன்னமுட னட்புக்கை கூடவும் கரிய செம்மலொடு மிளைய செம்மல்விடு
கருடன் மஞ்ஞையொரு கட்சிக்கு ரூடவும் கடவி விண்ணரசு நடவும் வெம்முனைய
களிறு கைம்மலைசெல் கொப்பத்து வீழவும் கனக மன்னுதட நளினி துன்னியிரு
கமல மின்னுமொரு பற்பத்துண் மேவவும் இமய மென்னமனு முறைகொ டென்னருமெம்
இறையை நன்மருகெனப்பெற்று வாழவும் எவர்கொல்பண்ணவர்களெவர்கொன் மண்ணவர்கள் எதுகொல் பொன்னுலகெனத்தட்டு மாறவும் எழில்செய் தென்மதுரை தழைய மும்முலையொ
டெழுமெனம்மனைவனப்புக்கொர் காவலர் இருவ ரெண்மர்பதினொருவர் பன்னிருவர்
எனும விண்ணவர்கண் முப்பத்து மூவரே. (1)
2. செங்கீரைப் பருவம் நீராட்டி யாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி
நெற்றியிற் றொட்டிட்டவெண் ணிற்றினொடு புண்டரக் கீற்றுக்கு மேற்றிடவொர்
நித்திலச் சுட்டிசாத்தித் தாராட்டு சூழியக் கொண்டையு முடித்துத்
தலைப்பணி திருத்திமுத்தின் தண்ணொளிததும்புங்குதம்பையொடு காதுக்கொர்
தமனியக் கொப்புமிட்டுப்

14.
15.
பாராட்டு பாண்டிப் பெருந்தேவி திருமுலைப்
பாலமுத மூட்டியொருநின் பானாறு குமுதங் கனிந்துறு தேறறன்
படடாடை மடிநணைபபச சீராட்டி வைத்துமுத் தாடும் பசுங்கிள்ளை
செங்கீரையாடியருளே தென்னற்குமம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி செங்கீரையாடியருளே. (1)
உண்ணிலா வுவகைப் பெருங்களி துளும்பநின்
றுன்றிருத் தாதைநின்னை ஒருமுறை கரம்பொத்தி வருகென வழைத்திடுமுன்
ஒடித் தவழ்ந்துசென்று தண்ணுலா மழலைப் பசுங்குதலை யமுதினிய
தாய்வயிறு குளிரவூட்டித் தடமார்ப நிறைகுங் குமச்சே றளைந்துபொற்
றாடோய் தடக்கைபற்றிப் பண்ணுலாம் வடிதமிழ்ப் பைந்தாமம் விரியும்
பணைத்தோ ளெருத்தமேறிப் பாசொளிய மரகதத் திருமேனி பச்சைப்
பசுங்கதிர் ததும்பமணிவாய்த் தெண்ணிலா விரியநின்றாடும் பசுந்தோகை
செங்கீரையாடியருளே தென்னற்குமம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி செங்கீரையாடியருளே. (2)
சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய வெட்டுச்
சுவர்க்கா னிறுத்திமேருத் தூணொன்று நடுநட்டு வெளிமுகடு மூடியிரு
சுடர்விளக் கிட்டுமுற்ற எற்றுபுனலிற்கமுவு புவனப் பழங்கலம்
எடுத்தடுக் கிப்புதுக்கூழ் இன்னமுத முஞ்சமைத் தன்னைநீ பன்முறை
இழைத்திட வழித்தழித்தோர் முற்றவெளி யிற்றிரியு மத்தப் பெரும்பித்தன்
முன்னின்று தொந்தமிடவும் முனியாது வைகலு மெடுத்தடுக் கிப்பெரிய
மூதண்ட கூடமூடும் சிற்றில்விளையாடுமொரு பச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரையாடியருளே தென்னற்குமம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி செங்கீரையாடியருளே. (3)

Page 272
6.
17.
8.
மங்குல்படு கந்தரச் சுந்தரக் கடவுட்கு
மழகதிர்க் கற்றைசுற்றும் வாணயன மூன்றுங் குளிர்ந்தமுத கலைதலை
மடுப்பக் கடைக்கணோக்கும் பொங்குமதர் நோக்கிற் பிறந்தவானந்தப்
புதுப்புணரி நீத்தமையன் புந்தித் தடத்தினை நிரப்பவழி யடியர்பாற்
போகசா கரமடுப்ப அங்கணெடு ஞாலத்து வித்தின்றி வித்திய
வனைத்துயிர் களுந்தளிர்ப்ப அருண்மடை திறந்தகடை வெள்ளம் பெருக்கெடுத்
தலையெறிந்துகளவுகளும் செங்கயல் கிடக்குங் கருங்கட் பசுந்தோகை
செங்கீரையாடியருளே தென்னற்குமம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி செங்கீரையாடியருளே. (4)
பண்ணறா வரிமிடற்றறுகான் மடுப்பப்
பசுந்தேறலாறலைக்கும் பதுமயி டிகையுமுது பழமறை விரிந்தொளி
பழுத்தசெந் நாவுமிமையாக் கண்ணறா மரகதக் கற்றைக் கலாமஞ்ஞை
கணமுகி றதும்பவேங்கும் கார்வரையும் வெள்ளெனவொர் கன்னிமாடத்துவளர்
கர்ப்பூர வல்லிகதிர்கால் விண்ணறா மதிமுயற் கலைகிழிந் திழியமுத
வெள்ளருவி பாயவெடிபோய் மீளுந் தகட்டகட் டிளவாளை மோதமுகை
விண்டொழுகு முண்டகப்பூந் தெண்ணறா வருவிபாய் மதுரைமரகதவல்லி
செங்கீரையாடியருளே தென்னற்குமம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி செங்கீரையாடியருளே. (5)
முகமதியூடெழு நகைநில வாட
முடிச்சூழியமாட முரிபுரு வக்கொடி நுதலிடு சுட்டி
முரிப்பொ டசைந்தாட இகல்விழி மகரமு மம்மகரம்பொரும்
இருமகரமுமாட இடுநூ புரவடி பெயரக் கிண்கி
ணெனுங்கிண் கிணியாடத் துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்குல்
துவண்டு துவண்டாடத்
のイエミ

தொந்தி சரிந்திட வந்தி கரந்தொளிர்
சூலுடை யாலடைமற் றகில சராசர நிகிலமொ டாடிட
ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
ஆடுக செங்கீரை. (6)
19. தசைந்திடு கொங்கை யிரண்டல வெனவுரை
தருதிரு மார்பாடத் தாய்வரு கென்பவர் பேதைமை கண்டு
ததும்புபு னகையாடப் பசைந்திடு ஞால மலர்ந்தமை வெளிறியொர்
பச்சுடல் சொல்லவுமோர் பைங்கொடி யொல்கவுமொல்கி நுடங்கிய
பண்டி சரிந்தாட இசைந்திடு தேவை நினைந்தன வென்ன
இரங்கிடு மேகலையோ டிடுகிடையாட வியற்கை மணம்பொதி
இதழ்வழி தேறலினோ டசைந்தொசி கின்ற பசுங்கொடி யெனவினி
தாடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
ஆடுக செங்கீரை. (7)
20. பரிமள மூறியவுச்சியின் முச்சி
பதிந்தா டச்சுடர்பொற் பட்டமுடன்சிறு சுட்டியும் வெயிலொடு
பனிவெண் ணிலவாடத் திருநுதன் மீதெழு குறுவெயர் வாடத்
தெய்வமணங்கமழும் திருமேனியின்முழு மரகத வொளியெண்
டிக்கும்விரிந்தாடக் கருவிளை நாறு குதம்பை ததும்பிய
காது தழைந்தாடக் கதிர்வெண் முறுவலரும்ப மலர்ந்திடு
கமலத் திருமுகநின் அருள்விழி யொடும்வளர் கருணை பொழிந்திட
ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
ஆடுக செங்கீரை. (8)
21. குருமணி வெயில்விட மரகத நிழல்விரி
குன்றே நின்றுாதும் குழலிசை பழகிய மழைமுகி லெழவெழு
கொம்பே வெம்பாசம்
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 273
22.
23.
மயூரமங்கலம்
மருவிய பிணிகெட மலைதரு மருமைம
ருந்தே சந்தானம் வளர்புவனமுமுணர் வருமரு மறையின்வ
ரம்பே செம்போதிற் கருணையின் முழுகிய கயறிரி பசியக
ரும்பே வெண்சோதிக் கலைமதி மரபிலொரிளமதி யெனவளர்
கன்றே யென்றோதும் திருமகள் கலைமக டலைமகண் மலைமகள்
செங்கோ செங்கீரை தெளிதமிழ் மதுரையில் வளருமொரிளமயில்
செங்கோ செங்கீரை. (9)
சங்குகிடந்தத டங்கைநெடும்புயல்
தங்காய் பங்காயோர் தமனிய மலைபடர் கொடியென வடிவுத
ழைந்தா யெந்தாயென் றங்கணெடும்புவனங்கடொழுந்தொறும்
அஞ்சே லென்றோதும் அபயமும் வரதமு முபயமு முடையவ
ணங்கே வெங்கோபக் கங்குன்ம தங்கயமங்குல டங்கவி
டுங்கா மன்சேமக் கயல்குடி புகுமொரு துகிலிகை யெனநின
கண்போ லுஞ்சாயற் செங்கய றங்குபொலன்கொடி மின்கொடி
செங்கோ செங்கீரை தெளிதமிழ் மதுரையில் வளருமோ ரிளமயில்
செங்கோ செங்கீரை. (10)
3. தாலப் பருவம் தென்னந் தமிழினுடன்பிறந்த சிறுகா லரும்பத் தீயரும்பும் தேமா நிழற்கண் டுஞ்சுமிளஞ்
செங்கட் கயவாய்ப் புனிற்றெருமை இன்னம் பசும்புற் கறிக்கல்லா
இளங்கன் றுள்ளி மடித்தலநின் றிழிபா லருவி யுவட்டெறிய
எறியுந் திரைத்தீம் புனற்பொய்கைப் பொன்னங் கமலப் பசுந்தோட்டுப் பொற்றா தாடிக் கற்றைநிலாப் பொழியுந் தரங்கம் பொறையுயிர்த்த
பொன்போற் றொடுதோ லடிப்பொலன்சூட்

24.
25.
26.
டன்னம் பொலியுந் தமிழ்மதுரைக்
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
அமுதே தாலோ தாலேலோ. (1)
விக்குஞ் சிறுபைந்துகிற்றோகை
விரியுங் கலாப மருங்கலைப்ப விளையாட் டயருமணற்சிற்றில்
வீட்டுக் குடிபுக் கோட்டியிருள் சீக்குஞ் சுடர்தூங் கழன்மணியின் செந்தீ மடுத்த சூட்டடுப்பிற் செழுந்தாட் பவளத் துவரடுக்கித்
தெளிக்கு நறுந்தண் டேறலுலை வாக்குங் குடக்கூன் குழிசியிலம்
மதுவார்த் தரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்தெடுத்து
வயன்மா மகளிர் குழாஞ்சிறுசோ றாக்கும் பெருந்தண் பணைமதுரைக்
கரசே தாலோ தாலேலோ அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
அமுதே தாலோ தாலேலோ. (2)
ஒடும் படலை முகிற்படலம்
உவர்நீத் துவரி மேய்ந்துகரு ஊறுங் கமஞ்சூல் வயிறுடைய
உகைத்துக் கடவுட் கற்பகப்பூங் காடுந் தரங்கக் கங்கைநெடுங்
கழியு நீந்தியமுதிறைக்கும் கலைவெண் மதியின் முயறடவிக் கதிர்மீன் கற்றை திரைத்துதறி மூடுங் ககன வெளிக்கூட
முகடு திறந்து புறங்கோத்த முந்நீ ருழக்கிச் சினவாளை
மூரிச் சுறவி னோடும்விளை யாடும் பழனத் தமிழ்மதுரைக்
கரசே தாலோ தாலேலோ அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
அமுதே தாலோ தாலேலோ. (3)
ஊறுங் கரடக் கடத்துமுகந்
தூற்று மதமா மடவியர்நின்
றுதறுங் குழற்பூந் துகளடங்க
ஒட விடுத்த குங்குமச்செஞ்
சேறு வழுக்கியோட்டறுக்கும் திருமா மறுகி லரசர்பெருந்

Page 274
27.
28.
திண்டே ரொதுங்கக் கொடுஞ்சிநெடுஞ்
சிறுதே ருருட்டுஞ் செங்கண்மழ வேறு பொருவே லிளைஞர்கட
விவுளி கடைவாய் குதட்டவழிந் திழியும் விலாழி குமிழியெறிந்
திரைத்துத் திரைத்து நுரைத்தொருபே ராறு மடுக்குந் தமிழ்மதுரைக்
கரசே தாலோ தாலேலோ அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
அமுதே தாலோ தாலேலோ. (4)
வார்க்குன்றிரண்டு சுமந்தொசியும்
மலர்க்கொம் பனையார் குழற்றுஞ்சும் மழலைச் சுரும்பர் புகுந்துழக்க
மலர்த்தா துகுத்து வானதியைத் தூர்க்கும் பொதும்பின் முயற்கலைமேல்
துள்ளி யுகளு முசுக்கலையின் துழனிக் கொதுங்கிக் கழனியினெற்
சூட்டுப் படப்பை மேய்ந்துகதிர்ப் போர்க்குன் றேறுங் கருமுகிலை
வெள்வாய் மள்ளர் பிணையலிடும் பொருகோட் டெருமைப் போத்தினொடும்
பூட்டி யடிக்க விடிக்குரல்விட் டார்க்கும் பழனத் தமிழ்ம்துரைக் கரசே தாலோ தாலேலோ அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
அமுதே தாலோ தாலேலோ. (5)
காரிற் பொழிமழை நீரிற் சுழியெறி
கழியிற் சிறுகுழியிற் கரையிற் கரைபொரு திரையிற் றலைபிரி
கண்டலில் வண்டலினெற் போரிற் களநிறைசேரிற் குளநிறை
புனலிற் பொருகயலிற் பொழிலிற் சுருள்புரி சூழலிற் கணிகையர்
குழையிற் பொருகயல்போய்த் தேரிற் குமரர்கண் மார்பிற் பொலிதரு
திருவிற் பொருவில்வரிச் சிலையிற் றிரள்புய மலையிற் புலவி
திருத்திட வூழ்த்தமுடித் தாரிற் பொருதிடு மதுரைத் துரைமகள்
தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
தாலோ தாலேலோ. (6)

29. சேனைத் தலைவர்க டிசையிற் றலைவர்கள்
செருவிற் றலைவர்களாய்ச் சிலையிற்றிடமுடி தேரிற் கொடியோடு
சிந்தச் சீந்தியிடும் சோனைக் கணைமழை சொரியப் பெருகிய
குருதிக் கடலிடையே தொந்த மிடும்பல் கவந்த நிவந்தொரு
சுழியிற் பவுரிகொள ஆனைத் திரளொடு குதிரைத் திரளையும்
அப்பெயர் மீனைமுகந் தம்மனை யாடு கடற்றிரை போல
அடற்றிரை மோதவெழும் தானைக் கடலொடு பொலியுந் திருமகள்
தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
தாலோ தாலேலோ. (7)
30. அமரர்க் கதிபதி வெளிறக் களிறெதிர்
பிளிறக் குளிறியிடா அண்ட மிசைப்பொலி கொண்ட லுகைத்தடும்
அமரிற்றமளினொடும் கமரிற் கவிழ்தரு திசையிற் றலைவர்கள்
மலையிற் சிறகரியும் கடவுட் படையொடு பிறகிட் டுடைவது
கண்டு முகங்குளிராப் பமரத் தருமலர் மிலையப் படுமுடி தொலையக் கொடுமுடிதாழ் பைம்பொற் றடவரை திரியக் கடல்வயி
றெரியப் படைதிரியாச் சமரிற் பொருதிரு மகனைத் தருமயில்
தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
தாலோ தாலேலோ. (8)
31. முதுசொற் புலவர்தெளித்தப சுந்தமிழ்
நூல்பாழ் போகாமே முளரிக் கடவுள்படைத்தவ சுந்தரை
கீழ்மேலாகாமே அதிரப் பொருதுக லிப்பகைஞன்றமிழ்
நீர்நா டாளாமே அகிலத் துயிர்கள யர்த்தும றங்கடை
நீனிர் தோயாமே சிதைவுற் றரசியனற்றரு மங்குடி
போய்மாய் வாகாமே
மயூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 275
32.
33.
மயூரமங்கலம்
செழியர்க் கபயரு மொப்பென நின்றுண
ராதா ரோதாமே
மதுரைப் பதிதழையத்தழையுங்கொடி
தாலோ தாலேலோ
மலயத் துவசன்வளர்த்தப சுங்கிளி
தாலோ தாலேலோ. (9)
தகரக் கரியகுழற்சிறு பெண்பிளை
நீயோ தூயோன்வாழ் சயிலத் தெயிலைவளைப்பவ ளென்றெதிர்
சீறா விறோதா நிகரிட் டமர்செய்கணத்தவர் நந்திபி
ரானோ டேயோடா நிலைகெட் டுலையவு டற்றவு டைந்ததொ
ரானே றாகாமே சிகரப் பொதியமி சைத்தவ முஞ்சிறு
தேர்மே லேபோயோர் சிவனைப் பொருதச மர்த்தனு கந்துள
சேல்போன் மாயாமே மகரத் துவசமுயர்த்தபொலன்கொடி
தாலோ தாலேலோ மலயத் துவசன்வளர்த்தப சுங்கிளி
தாலோ தாலேலோ. (10)
4. சப்பாணிப் பருவம் நாளவட்டத்தளிம நளினத் தொடுந்துத்தி
நாகனையும் விட்டொரெட்டு நாட்டத்த னும்பரம வீட்டத்த லுந்துஞ்சு
நள்ளிருளி னாப்பணண்ட கோளவட் டம்பழைய நேமிவட்டத்தினொடு
குப்புற்று வெற்பெட்டுமேழ் குட்டத்தி னிற்கவிழ மூதண்ட வேதண்ட
கோதண்ட மோடுசக்ர வாளவட் டஞ்சுழல மட்டித்து நட்டமிடு
மதமத்தர் சுத்தநித்த வட்டத்தி னுக்கிசைய வொத்திக்க ணத்ததன
வட்டத்தை யொத்திட்டதோர் தாளவட்டங்கொட்டு கைப்பாணி யொப்பவொரு
சப்பாணி கொட்டியருளே தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே. (1)

34.
35.
36.
பொய்வந்த நுண்ணிடை நுடங்கக் கொடுஞ்சிப்
பொலந்தேரொ டமரகத்துப் பொன்மேரு வில்லியை யெதிர்ப்பட்ட ஞான்றம்மை
பொம்மன்முலை மூன்றிலொன்று கைவந்த கொழுநரொடு முள்ளப் புணர்ச்சிக்
கருத்தா னகத்தொடுங்கக் கவிழ்தலை வணக்கொடு முலைக்கண்வைத்திடுமொரு
கடைக்கணோக் கமுதமுற்ற மெய்வந்த நாணினொடு நுதல்வந் தெழுங்குறு
வெயர்ப்பினொ டுயிர்ப்புவீங்கும் விம்மிதமுமாய்நின்ற வுயிரோவ மெனவூன்று
விற்கடை விரற்கடைதழிஇத் தைவந்த நாணினொடு தவழ்தந்த செங்கைகொடு
சப்பாணி கொட்டியருளே தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே. (2)
பூமரு வெடிப்பமுகை விண்டதண் டலையீன்ற
புனைநறுந் தளிர்கள் கொய்தும் பொய்தற் பிணாக்களொடு வண்டற் கலம்பெய்து
புழுதிவிளையாட்டயர்ந்தும் காமரு மயிற்குஞ்சு மடவனப் பார்ப்பினொடு
புறவுபிறவும்வளர்த்தும் காந்தள்செங் கமலத்த கழுநீர் மணந்தெனக்
கண்பொத்தி விளையாடியும் தேமரு பசுங்கிள்ளை வைத்துமுத் தாடியும்
திரள்பொற் கழங்காடியும் செயற்கையா னன்றியுமியற்கைச் சிவப்பூறு
சேயிதழ் விரிந்த தெய்வத் தாமரை பழுத்தகைத் தளிரொளி துளும்பவொரு
சப்பாணி கொட்டியருளே தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே. (3)
விண்ணளிக் குஞ்சுடர் விமானமும் பரநாத
வெளியிற் றுவாதசாந்த வீடுங் கடம்புபொதி காடுந் தடம்பணை
விரிந்ததமிழ் நாடுநெற்றிக் கண்ணளிக் குஞ்சுந்த ரக்கடவுள் பொலியுமறு
காற்பீடமும்மெம்பிரான் காமர்பரியங்கக் கவான்றங்கு பள்ளியங்
கட்டிலுந் தொட்டிலாகப் பண்ணளிக் குங்குதலை யமுதொழுகு குமுதப்
பசுந்தேற லூறவாடும்

Page 276
37.
38.
39.
பைங்குழவி பெருவிரல் சுவைத்துநீ பருகிடப்
பைந்தேற லூறுவண்கைத்
தண்ணளிக் கமலஞ் சிவப்பூற வம்மையொரு
சப்பாணி கொட்டியருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே. (4)
சேலாட்டு வாட்கட் கருங்கடற் கடைமடை
திறந்தமுத மூற்றுகருணைத் தெண்டிரைகொழித்தெறியவெண்டிரை நெருப்பூட்டு
தெய்வக் குழந்தையைச்செங் கோலாட்டு நின்சிறு கணைக்காற் கிடத்திக்
குளிபாட்டி யுச்சிமுச்சிக் குஞ்சிக்கு நெய்போற்றி வெண்காப்பு மிட்டுவளர்
கொங்கையிற் சங்குவாக்கும் பாலாட்டி வாயிதழ் நெரித்துTட்டி யுடலிற்
பசுஞ்சுண்ண முந்திமிர்ந்து பைம்பொற் குறங்கினிற் கண்வளர்த் திச்சிறிய
பருமணித் தொட்டிலேற்றித் தாலாட்டி யாட்டுகைத் தாமரை முகிழ்த்தம்மை
சப்பாணி கொட்டியருளே தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே. (5)
வானத் துருமொ டுடுத்திரள் சிந்த
மலைந்த பறந்தலையில்
மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர்
மற்றவர் பொற்றொடியார்
பானற் கணையு முலைக்குவடும்பொரு
படையிற் படவிமையோர் பைங்குடர் மூளையொ டும்புதிதுண்டு
பசுந்தடி சுவைகாணாச் சேனப் பந்தரினலகைத் திரள்பல
குரவை பிணைத்தாடத் திசையிற் றலைவர்கள் பெருநாணெய்தச்
சிறுநா ணொலிசெய்யாக் கூனற் சிலையி னெடுங்கணை தொட்டவள்
கொட்டுக சப்பாணி குடைநிழலிற்புவி மகளை வளர்த்தவள்
கொட்டுக சப்பாணி. (6)
சமளிற் பிறகிடு முதியருமபயரும்
எதிரிட் டமராடத்
தண்ட தரன்செல் கரும்பக டிந்திரன்
வெண்பக டோடுடையாத்

திமிரக் கடல்புக வருணன் விடுஞ்சுற
வருணன் விடுங்கடவுட் டேரினுகண்டெழ வார்வில் வழங்கு
கொடுங்கோல் செங்கோலா இமயத் தொடும்வளர் குலவெற் பெட்டையும்
எல்லைக் கல்லினிறீஇ எண்டிசை யுந்தனி கொண்டு புரந்து
வடாது கடற்றுறைதென் குமரித் துறையென வாடு மடப்பிடி
கொட்டுக சப்பாணி குடைநிழலிற்புவி மகளை வளர்த்தவள்
கொட்டுக சப்பாணி. (7)
40. சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள்
ஞாளியி லாளியெனச் செருமலை செம்மலை முதலியர் சிந்தச்
சிந்திட நந்திபிரான் நின்றில னோடலு முன்னழ கும்மவன்
ShsiT6OTyp (e5rÄ185mr6OOTIT நிலவுவிரிந்திடு குறுநகை கொண்டு
நெடுங்கயி லைக்கிரியின் முன்றிலி னாடன் மறந்தமராடியொர்
மூரிச் சிலைகுனியா முரிபுரு வச்சிலை கடைகுனியச்சில
முளரிக் கணைதொட்டுக் குன்றவி லாளியை வென்ற தடாதகை
கொட்டுக சப்பாணி குடைநிழலிற்புவி மகளை வளர்த்தவள்
கொட்டுக சப்பாணி. (8)
41. ஒழுகியகருணையுவட்டெழவைத்தவருட்பார்வைக் குளநெகிழடியர்பவக்கடல்வற்றவலைத்தோடிக்
குமிழொடு பழகிமதர்த்தகயற்கண்மடப்பாவாய் தழைகெழுபொழிலின்முசுக்கலைமைப்புயலிற்பாயத் தவழிளமதிகலைநெக்குகுபுத்தமுதத்தோடே மழைபொழியிமயமயிற்பெடை கொட்டுகசப்பாணி
மதுரையில் வளருமடப்பிடிகொட்டுகசப்பாணி. (9)
42. செழுமறைதெளியவடித்ததமிழ்ப்பதிகத்தோடே
திருவருளமுதுகுழைத்துவிடுத்தமுலைப்பாலாற் கழுமலமதலைவயிற்றைநிரப்பிமயிற்சேயைக்
களிறொடும் வளரவளர்த்தவருட்செவிலித்தாயே
மயூரபதி யூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 277
43.
44.
45.
மயூரமங்கலம்
குழலிசைபழகிமுழுப்பிரசத்திர சத்தோடே
குதிகொளுநறியகனிச்சுவைநெக்கபெருக்கேபோல்
மழலையினமுதுகுசொற்கிளிகொட்டுகசப்பாணி
மதுரையில் வளருமடப்பிடிகொட்டுகசப்பாணி (0)
5. முத்தப் பருவம் காலத் தொடுகற்பனைகடந்த கருவூலத்துப் பழம்பாடற் கலைமாச் செல்வர் தேடிவைத்த கடவுண் மணியே யுயிரால வாலத் துணர்வு நீர்பாய்ச்சி
வளர்ப்பார்க் கொளிபூத் தளிபழுத்த மலர்க்கற் பகமே யெழுதாச்சொல்
மழலை ததும்பு பசுங்குதலைச் சோலைக் கிளியே யுயிர்த்துணையாம்
தோன்றாத் துணைக்கோர் துணையாகித் துவாத சாந்தப் பெருவெளளளளியிற்
றுரியங் கடந்த பரநாத மூலத் தலத்து முளைத்தமுழு
முதலே முத்தந் தருகவே முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே. (1)
உருகி யுருகி நெக்குநெக்குள்
உடைந்து கசிந்திட்டசும்பூறும் உழுவலன்பிற் பழவடியார்
உள்ளத் தடத்தி லூற்றெடுத்துப் பெருகு பரமா னந்தவெள்ளப்
பெருக்கே சிறியேம் பெற்றபெரும் பேறே யூறு நறைக்கூந்தற்
பிடியே கொடிநுண் ணுகப்பொசிய வருகுங்குமக்குன்றிரண்டேந்தும்
மலர்ப்பூங்கொம்பே தீங்குழலின் மதுரங் கனிந்த பசுங்குதலை
மழலை யரும்பச் சேதாம்பல் முருகு விரியுஞ் செங்கனிவாய்
முத்தந் தருக முத்தமே முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே. (2)
கொழுதி மதர்வண் டுழக்குகுழற்
கோதைக் குடைந்த கொண்டலுநின்
குதலைக் கிளிமென் மொழிக்குடைந்த குறுங்கட் கரும்புங் கூன்பிறைக்கோ

46.
47.
டுழுத பொலன்சீறடிக்குடைந்த
செந்தா மரையும் பசுங்கழுத்துக் குடைந்த கமஞ்சூற் சங்குமொழு
கொளிய கமுகு மழகுதொய்யில் எழுது தடந்தோட் குடைந்ததடம்
பணையும் பணைமென் முலைக்குடைந்த இணைமா மருப்புந் தருமுத்துன்
திருமுத் தொவ்வா விகபரங்கள் முழுதுந் தருவாய் நின்கனிவாய்
முத்தந் தருக முத்தமே முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே. (3)
மத்த மதமாக் கவுட்டொருநான்
மருப்புப் பொருப்பு மிசைப்பொலிந்த வானத் தரசு கோயில்வளர்
சிந்தா மணியும் வடபுலத்தார் நத்தம் வளர வளகையர்கோன்
நகரில் வளரும் வான்மணியும் நளினப் பொகுட்டில் வீற்றிருக்கும்
நங்கை மனைக்கோர் விளக்கமெனப் பைத்த சுடிகைப் படப்பாயற்
பதும நாயன் மார்பில்வளர் பருதி மணியுமெமக்கம்மை பணியல் வாழி வேயின்ற முத்த முகந்த நின்கனிவாய் முத்தந் தருக முத்தமே முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே. (4)
கோடுங் குவடும் பொருதரங்கக் குமரித் துறையிற் படுமுத்தும் கொற்கைத் துறையிற்றுறைவாணர்
குளிக்குஞ் சலாபக் குவான்முத்தும் ஆடும் பெருந்தண் டுறைப்பொருநை ஆற்றிற் படுதெண் ணிலாமுத்தும் அந்தண் பொதியத் தடஞ்சாரல்
அருவி சொரியுங் குளிர்முத்தும் வாடுங் கொடிநுண் ணுசுப்பொசிய
மடவ மகளிருடனாடும் வண்டற்றுறைக்கு வைத்துநெய்த்து
மணந்தாழ் நறுமென் புகைப்படலம் மூடுங் குழலாய் நின்கனிவாய்
முத்தந் தருக முத்தமே முக்கட் கூடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தந் தருகவே. (5)

Page 278
48. பைவைத்த துத்திப் பரூஊச்சுடிகை முன்றிற்
பசுங்கொடி யுடுக்கைகிழியப் பாயிருட் படலங் கிழித்தெழு சுடர்ப்பருதி
பருதிக் கொடுஞ்சி மான்றேர் மொய்வைத்த கொய்யுளை வயப்புரவி வாய்ச்செல்ல
முட்கோல் பிடித்துநெடுவான் முற்றத்தை யிருள்பட விழுங்கத் துகிற்கொடி
முனைக்கணை வடிம்புநக்கா மைவைத்த செஞ்சிலையுமம்புலியு மோடநெடு
வான்மீன் மணந்துகந்த வடவரை முகந்தநின் வயக்கொடி யெனப்பொலியுப்
மஞ்சிவர் வளாகநொச்சித் தெய்வத் தமிழ்க்கூட றழையத் தழைத்தவள்
திருப்பவள முத்தமருளே சேல்வைக்கவொண்ெ ம்வைக்கபெண்ெ
திருப்பவள முத்தமருளே. (6)
49. பின்னற்றிரைக்கடன் மதுக்குட மறத்தேக்கு
பெய்முகிற் காருடலவெண் பிறைமதிக் கூன்குயக் கைக்கடைஞ ரொடுபுடை
பெயர்ந்திடை நுடங்கவொல்கும் மின்னற்றடித்துக் கரும்பொற் றொடிக்கடைசி
மெல்லியர் வெரீஇப்பெயரவான் மீன்கணம்பெருக்கொள்ள வெடிவரால் குதிகொள்ளு
விட்புலம் விளைபுலமெனக் கன்னற் பெருங்காடு கற்பகக் காட்டுவளர்
கடவுண்மா கவளங்கொளக் காமதேனுவுநின்று கடைவாய் குதட்டக்
கதிர்க்குலை முதிர்ந்துவிளையும் செந்நெற் படப்பைமது ரைப்பதி புரப்பவள்
திருப்பவள முத்தமருளே சேல்வைக்கவொண்கொடியைவலம்வைக்கபெண்ெ
திருப்பவள முத்தமருளே. (7
50. சங்கோ லிடுங்கடற் றானைக்கு வெந்நிடு
தராபதிகண் முன்றிறுார்த்த தமனியக் குப்பையுந் திசைமுதல்வர் தடமுடித்
தாமமுந் தலைமயங்கக் கொங்கோ லிடுங்கைக் கொடுங்கோ லொடுந்திரி
குறும்பன் கொடிச்சுறவுநின் கொற்றப் பதாகைக் குழாத்தினொடு மிரசதக்
குன்றினுஞ் சென்றுலாவப்

51.
52.
பொங்கோல வேலைப் புறத்தினொ டகத்தினிமிர்
போராழி பருதியிரதப் பொங்காழி மற்றப் பொருப்பாழியிற்றிரி
புலம்பைப் புலம்புசெய்யச் செங்கோ றிருத்திய முடிச்செழியர் கோமகள்
திருப்பவள முத்தமருளே சேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடி திருப்பவள முத்தமருளே. (8)
பருவரை முதுபல வடியினி னெடுநில
நெக்ககு டக்கனியிற் படுநறை படுநிறை கடமுடை படுவக
டுப்பவு வட்டெழவும் விரிதலை முதலொடு விளைபுல முலையவு
ழக்கிய முட்சுறவின் விசையினின் வழிநறை மிடறொடி கமுகின்வி
ழுக்குலை நெக்குகவும் கரையெறி புணரியி னிருமடி பெருகுத
டத்தும டுத்தகடக் களிறொடு பிளிறிட விகவிய முகிலினி
ரட்டியிரட்டியமும் முரசதிர் கடிநகர் மதுரையில் வளர்கிளி
முத்தம ணித்தருளே முழுதுல குடையவொர் கவுரியர் குலமணி
முத்தமளித்தருளே. (9)
புதையிருள் கிழிதர வெழுதரு பருதிவ
ளைத்தக டற்புவியிற் பொதுவற வடிமைசெய் திடுவழி யடியர்பொ
ருட்டலர் வட்டணையிற் றதைமலர் பொதுளிய களியளி குமிறுகு
ழற்றிரு வைத்தவளச் சததள முளரியின் வனிதையை யுதவுக
டைக்கண்ம டப்பிடியே பதுமொ டொழுகொளி வளையுநினளினமு
கத்துமிடற்றுமுறப் பனிமதி யொடுசுவை யமுதமு நுதலொடு
சொற்குதலைக்கணிறீஇ முதுதமிழுததியில் வருமொரு திருமகள்
முத்தமளித்தருளே முழுதுல குடையவொர் கவுரியர் குலமணி
முத்தமளித்தருளே. (10)
மயூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 279
53.
54.
55.
மயூரமங்கலம்
6 வருகைப் பருவம் அஞ்சிலம் போலிட வரிக்குரற் கிண்கிணி
அரற்றுசெஞ்சீறடிபெயர்த் தடியிடுந் தொறுநின்னலத்தகச் சுவடுபட்
டம்புவி யரம்பையர்கடம் மஞ்சு துஞ் சளகத் திளம்பிறையுமெந்தைகுடி
வளரிளம் பிறையுநாற மணிநூ புரத்தவிழுமென்குரற் கோவசையும்
மடநடைக் கோதொடர்ந்துன் செஞ்சிலம் படிபற்று தெய்வக் குழாத்தினொடு
சிறையோதி மம்பின்செலச் சிற்றிடைக் கொல்கிமணி மேகலை யிரங்கத்
திருக்கோயிலெனவெனெஞ்சக் கஞ்சமுஞ் செஞ்சொற்றமிழ்க்கூட லுங்கொண்ட
காமர்பூங் கொடிவருகவே கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யிகிவருகவே, (1)
குண்டுபடு பேரகழி வயிறுவளைந் தீன்றபைங்
கோதையும் மதுரமொழுகும் கொழி தமிழ்ப் பனுவற்றுறைப்படியுமடநடைக்
கூந்தலம் பிடியுமறுகால் வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ
மணங்கமழ விண்டதொண்டர் மானதத் தடமலர்ப் பொற்கோயில் குடிகொண்ட
மாணிக்க வல்லிவில்வேள் துண்டுபடு மதிநுதற் றோகையொடுமளவில்பல
தொல்லுரு வெடுத்தமர்செயும் தொடுசிலை யெனக்ககன முகடுமுட் டிப்பூந்
துணர்த்தலை வணங்கி நிற்கும் கண்டுபடு கன்னல்பைங் காடுபடு கூடற்
கலாபமா மயில்வருகவே கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே (2)
முயல்பாய் மதிக்குழவி தவழ்சூ லடிப்பலவின்
முட்பொதி குடக்கனியொடு முடவுத் தடந்தாழை முப்புடைக் கனிசிந்த
மோதி நீருண்டிருண்ட புயல்பாய் படப்பைத் தடம்பொழில்க ளன்றியேம்
பொழிலையு மொருங்கலைத்துப் புறமூடு மண்டச் சுவர்த்தல மிடித்தப்
புறக்கடன் மடுத்துழக்கிச்

56.
57.
செயல்பாய் கடற்றானை செங்களங் கொளவம்மை
திக்குவிசயங்கொண்ட நாள் தெய்வக் கயற்கொடிக டிசைதிசை யெடுத்தெனத்
திக்கெட்டு முட்டவெடி போய்க் கயல்பாய் குரம்பணை பெரும்பணைத் தமிழ்மதுரை
காவலன் மகள்வருகவே கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே, (3)
வடம்பட்ட நின்றுணைக் கொங்கைக் குடங்கொட்டு
மதுரவமு துண்டுகடைவாய் வழியும்வெள்ளருவியென நிலவுபொழி கிம்புரி
மருப்பிற் பொருப்பிடித்துத் தடம்பட்ட பொற்றாது சிந்துரங்கும்பத்
தலத்தணிவ தொப்பவப்பிச் சலராசி யேழுந் தடக்கையின் முகந்துபின்
தானநீரானிரப்பி முடம்பட்ட மதியங்குசப்படை யெனக்ககன
முகடுகை தடவியுடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடா மெனவெழு
முகிற்படா நெற்றிசுற்றும் கடம்பட்ட சிறுகட் பெருங்கொலைய மழவிளங்
களிறீன்ற பிடிவருகவே கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே. (4.
தேனெழுகு கஞ்சப் பொலன்சீறடிக்கூட்டு
செம்பஞ்சியின்குழம்பாற் றெள்ளமு திறைக்கும் பசுங்குழவி வெண்டிங்கள்
செக்கர்மதி யாக்கரைபொரும் வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை
வாணிநதி யாச்சிவபிரான் மகுடகோ டிரத் தடிச்சுவடழுத்தியிடு
மரகதக் கொம்புகதிர்கால் மீனொழுகு மாயிரு விசும்பிற் செலுங்கடவுள்
வேழத்தின் மத்தகத்து வீற்றிருக் குஞ்சேயிழைக்கும் பசுங்கமுகு
வெண்கவரி வீசும்வாசக் கானொழுகு தடமலர்க் கடிபொழிற் கூடல்வளர்
கவுரியன் மகள்வருகவே கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே. (5)

Page 280
58. வடக்குங்குமக்குன்றிரண்டேந்தும்
வண்டன் மகளிர் சிறுமுற்றில் வாரிக் குவித்த மணிக்குப்பை
வானா றடைப்ப வழிபிழைத்து நடக்குங் கதிர்பொற் பரிசிலா
நகுவெண் பிறைகைத் தோணியா நாண்மீன் பரப்புச் சிறுமி தப்பா
நாப்பண் மிதப்ப நாற்கோட்டுக் கடக்குஞ் சரத்தின் மதநதியும்
கங்கா நதியுமெதிர்கொள்ளக் ககன வெளியுங் கற்பகப்பூங்
காடுங் கடந்து கடல்சுருங்க மடுக்குந் திரைத்தண் டுறைவைகை
வளநாட் டரசே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. (6)
59. சுண்ணந் திமிர்ந்து தேனருவி
துளைந்தா டறுகாற்றும்பிபசுந் தோட்டுந் கதவந் திறப்பமலர்த்
தோகை குடிபுக் கோகைசெயும் தண்ணங் கமலத் கோயில் பல
சமைத்த மருதத் தச்சன்முழுத் தாற்றுக் கமுகு நாற்றியிடும்
தடங்கா மணப்பந்தரில்வீக்கும் விண்ணம் பொதிந்த மேகபடாம்
மிசைத்துக் கியன் மணிக்கொத்து விரிந்தா லெனக்கா னிமிர்ந்துதலை விரியுங் குலைநெற் கற்றைபல வண்ணம் பொலியும் பண்ணைவயல்
மதுரைக் கரசே வருகவே மலயத்துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. (7)
60. தகரத் குழலினறையுநறை
தருதீம் புகையுந் திசைக்களிற்றின்
தடக்கை நாசிப் புழைமடுப்பத்
தளருஞ் சிறுநுண் மருங்குல்பெருஞ்
சிகரக் களபப் பொம்மன் முலைத்
தெய்வ மகளிர் புடையிரட்டும்
செங்கைக் கவரி முகந்தெறியும்
சிறுகாற் கொசிந்து குடிவாங்க
C252d

முகரக் களிவண் டடைகிடக்கும்
முளரிக் கொடிக்குங் கலைக்கொடிக்கும் முருந்து முறுவல் விருந்திடுபுன்
மூர னெடுவெண் ணிலவெறிப்ப மகரக் கருங்கட் செங்கனிவாய் மடமான் கன்று வருகவே மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. (8)
61. தொடுக்கும் கடவுட் பழம் பாடற்
றொடையின் பயனே நறைபழுத்த துறைத்தீந் தமிழினொழுகுநறுங்
சுவையே யகந்தைக் கிழங்யையகழ்ந் தெடுக்குந் தொழும்புப ருளக்கோயிற்
கேற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பெருப்பில் விளையாடும்
இளமென் பிடியே யெறி தரங்கம் உடுக்கும் புவனங் கடந்து நின்ற ஒருவன் றிருவுள் ளத்திலழ கொழுக வெழுதிப் பார்த்திருக்கும்
உயிரோ வியமே மதுகரம்வாய் மடுக்குங் குழற்கா டேந்துமிள
வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. (3
62. பெருந்தே னிறைக்கு நறைக்கூந்தற் பிடியே வருக முழுஞானப் பெருக்கே வருக பிறைமெளலிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல் விருந்தே வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி விளைந்த பரமா னந்தத்தின்
விளைவே வருக பழமறையின் குருந்தே வருக வருள் பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெருவெள்ளம்
குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர் மருந்தே வருக பசுங்குதலை
மழலைக் கிளியே வருகவே மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே (10)
மயூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 281
63.
64.
65.
மயூரமங்கலம்
7 அம்புலிப் பருவம் கண்டுபடு குதலைப் பசுங்கிளி யிவட்கொரு
கலாபேத மென்ன நின்னைக்
கலாநிதி யெனத்தெரிந்தோ வண்டுபடு தெரியற் றிருத்தாதை யார்மரபின்
வழிமுதலெனக்குறித்தோ வளர்சடை முடிக்கெந்தை தண்ணறுங் கண்ணியா
வைத்தது கடைப்பிடித்தோ குண்டுபடு பாற்கடல் வருந்திருச் சேடியொடு
கூடப் பிறந்ததோர்ந்தோ கோமாட்டியிவனின்னை வம்மெனக் கொம்மெனக்
கூவிடப் பெற்றாயுனக் கண்டுபடு சீரிதன் றாதாலா லிவளுடன்
அம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிப்புணர் மாணிக்க வல்லியுடன் அம்புலி யாடவாவே (1)
குலத்தோடு தெய்வக் குழாம்பிழிந் தூற்றி
குடித்துச் சுவைத்துமிழ்ந்த கோதென்று மழல்விடங்கொப்புளிக்கின்றவிரு
கோளினுச் சிட்டமென்றும் கலைத்தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட
கயரோகி யென்றுமொருநாள் கண் கொண்டு பார்க்கவுங் கடவதன் தெனவும்
கடற்புவி யெடுத்திகழவிட் புலத்தோடு முடுமீன் கணத்தோடு மோடுநின்
போல்வார்க்கு மாபாதகம் போக்குமித் தலமலது புகலில்லை காண்மிசைப்
பொங்குபுனல் கற்பகக்கா டலைத்தோடு வைகைத் துறைப்படி மடப்பிடியொ
டம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலி யாடவாவே. (2)
கீற்றுமதி யென நிலவு தோற்றுபரு வத்திலொளி
கிளர்நுதற் செவ்விவவ்விக்
கெண்டைத் தடங்கணா ரெருவிட் டிறைஞ்சக்
கிடந்தது முடைந்தமுதம்விண்
டூற்றுப்புது வெண்கலை யுடுத்துமுழு மதியென
உதித்தவமயத்துமம்மை
ஒண்முகத் தொழுகுதிரு வழகைக் கவர்ந்துகொண்
டோடினது நிற்கமற்றை

66.
67.
மாற்றவ ளொடுங்கேள்வர் மெளலியிலுறைந்ததும்
மறந்துனை யழைத்த பொழுதே மற்றிவன் பெருங்கருணை சொற்றிடக் கடவதோ
மண்முழுவதும் விம்முபுயம்வைத் தாற்றுமுடியரசுதவுமரசிளங் குமரியுடன்
அம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிப்புணர் மாணிக்க வல்லியுடன் அம்புலி யாடவாவே (3)
விண்டலம் பொலிய பொலிந்திடுதி யேலுனது
வெம்பணிப் பகைவிழுங்கி விக்கிடக் கக்கிடத் தொக்கிடர்ப் படுதிவெயில்
விரியுஞ் சுடர்ப்பருதியின் மண்மடலம் புக்கனை யிருத்தியெனி னொள்ளொளி
மழுங்கிட வழுங்கிடுதிபொன் வளர்சடைக் காட்டெந்தை வைத்திடப் பெறுதியேல்
மாசுணஞ் சுற்றவச்சம் கொண்டுகண் டுஞ்சா திருப்பது மருப்பொங்கு
கோதையிவள் சீறடிகணின் குடர்குழம் பிடவே குமைப்பதும் பெறுதியெங்
கோமாட்டி பாலடைந்தால் அண்டபதி ரண்டமு மகண்டமும் பெறுதியால்
அம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலி பாடவாவே. (4)
எண்ணில்பல புவனப் பெருந்தட்டை யூடுருவி
இவள் பெரும் புகழ்நெடு நிலா எங்கணு நிறைந்திடுவதங்கதனின் மெள்ள நீ
எள்ளளவு மொண்டுகொண்டு வெண்ணிலவு பொழிவது கிடைத்தனை மடுத்திவள்
விழிக்கடை கொழித்தகருணை வெள்ளந் திளைத்தாடு பெற்றியாற் றண்ணளி
விளைப்பதும் பெற்றனைக்கொல்லாம் மண்ணிலொண் பைங்கூழ் வளர்ப்பது னிடத்தம்மை
வைத்திடுஞ் சத்தியேகாண் மற்றொரு சுதந்தர நினக்கென விலைக்கலை
மதிக்கடவுணியுமுனர்வாய் அண்ணலங்களியானை யரசர்கோ மகளுடன்
அம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலி யாடவாவே . (5)

Page 282
68.
69.
70.
முன்பும்ப ரசுசெய் பெரும்பாவ முங்கோவ
மூரிமாத் தொடர்சாவமும்
மோசித்த வித்தலத்தின் தன்பெருந்தன்மையையுணர்திந்லை கொல் சிவராச
தானியாய் சீவன்முத்தித் தலமுமாய் துவாதசாந் தத்தலமுமானதித்
தலமித் தலத்தடை தியேல் மன்பெருங் குறவற் பிழைத்தபா வழும் மற்றை
மாமடிகளிடசாவமும் வளரிளம் பருவத்து கரைதிரையு முதிர்கூனும்
மாற்றிடப் பெறுதி கண்டாய் அன்பரென் புருகக் கசிந்திடு பசுந்தேனோ
டம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிப்புணர் மாணிக்க வல்லியுடன் அம்புலி யாடவாவே (6)
கும்பஞ் சுமந்தமத வெள்ளநீர் கொட்டும் கொடுங்களிறிடும்போர்வையான் குடிலகோ டீரத் திருந்துகொண் டந்நலார்
கொய்தளிர்க் கைவருடவும் செம்பஞ் சுறுத்தவும் பதைபதைத் தாரழற்
சிகையெனக் கொப்புளிக்கும் சீறடிகள் கன்றிச் சிவந்திட செய்வதும்
திருவுளத் தடையாதுபொற் றம்பஞ் சுமந்தீன்ற மானிட விலங்கின்
தனிப்புதல்வ னுக்குவட்டத் தண்குடை நிழற்றுநினை வம்மென வழைத்தனள்
தழைத்திடு கழைக்கரும்பொன் றம்பஞ் சுடன் கொண்ட மகரக் கொடிக்கொடியொ
டம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலி யாடவாவே (7)
துளிதுரங்கு தெள்ளமுத வெள்ளருவி பொழியுநின்
தொன்மரபு தழையவந்து தோன்றிடுங் கெளரியர் குலக்கொழுந்தைக்கண்டு
துணைவிழியு மனமுநின்று களிதுரங்க வளவனாய் வாழாம லுண்ணமுது
கலையொடு மிழந்துவெறுமட் கலத்திடு புதுக் கூழி னுக்கிரவு பூண்டொரு
களங்கம்வைத் தாயிதுவலால்

ஒருத்தன் கரத்தின் வாரி உண்டொதுக் கீயமிச்சினள்ளிருளிலள்ளியுண்
டோகின் ருகயன் செய்தாய் அளிதூங்கும் Dமிறெழுந்தார்க்குங் குழற்றிவொ
டம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிப்புணர் மாணிக்க வல்லியுடன் அம்புலி யாடவாவே (8)
71. மழைக்கொந் தளக்கோதை வம்மென்ற வளவினி
வந்திலை யெனக் கடுகலும்
வரவொல்கியோபணிகள் கோள்
திருந்தனன் போலுமெனயாம் இத்துணையு மொருவாறு தப்புவித் தேம்வெகுளின்
இனியொரு பிழைப்பில்லைகாண் தழைக்குந்துகிற்கொடி முகிற்கொடி திரைத்துமேற்
றலம்வளர் நகிற்கொடிகளைத் தாழ்குழலு நீவிநுதல் வெயர்வுந்துடைத்தம்மை
சமயமிது வென்றலுவலிட் டழைக்குந் தடம் புரிசை மதுரைத் துரைப்பெனுடன்
அம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிப்புணர் மாணிக்க வல்லியுடன்
அம்புலி யாடவாவே
72. ஏடகத் தெழுதாத வேதச் சிரத்தர
சிருக்குமிவள் சீறடிகணின் இதயத் தடத்தும் பொலிந்தவா திருவுளத்
தெண்ணியன் றேகபடமா நாடகத்தைந்தொழி னடத்தும் பிரான்றெயவ
நதியொடு முடித்தல்பெற்றாய் நங்கையிவடிருவுள மகிழ்ச்சிபெறினிதுபோலொர்
நற்றவப் பேறில்லைகாண் மாடகக் கடைதிரித்தின்னரம் பார்த்துகிர்
வடிம்புதை வருமந்நலார் மகரயாழ் மழலைக்கு மரவங்க ணுண்டுகில்
வழங்கக் கொழுங்கோங்கு தூங் காடகப் பொற்கிழி யவிழ்க்குமதுரைத்திருவொ
டம்புலி யாடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலி யாடவாவே 事0°
யூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 283
73.
74.
75.
மயூர மங்கலம்
8. அம்மானைப் பருவம் கரைக்குங் கடாமிரு கவுட்குட முடைந்துாற்று
களிறுபெரு வயிறுதுார்ப்பக் கவளந் திரட்டிக் கொடுப்பதென வுஞ்சூழ்ந்தொர்
கலைமதிக் கலசவமுதுக் கிரைக்கும் பெருந்தேவர் புன்கண் டுடைத்திட
எடுத்தமுதகலசம்வெவ்வே றிந்திடுவதெனவுமுழு முத்திட்டிழைத்திட்ட
எறிபந்தி னிரையென்னவும் விரைக்குந் தளிர்க்கைக் கொழுந்தா மரைத்துஞ்சி
மீதெழுந்தார்த்தபிள்ளை வெள்ளோ திமத்திரளி தெனவுங் கரும்பாறை
மீமிசைச் செஞ்சாந்துவைத் தரைக்குந் திரைக்கைவெள்ளருவிவை கைத்துறைவி
அம்மானை யாடியருளே ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
அம்மானை யாடியருளே. (1)
திங்கட் கொழுந்தைக் கொழுந்துபடு படர்சடைச்
செருகுதிரு மணவாளன்மேற் செழுமணப் பந்தரி லெடுந்தெரியு மமுதவெண்
திரளையிற் புரளுமறுகாற் பைங்கட் சுரும்பென விசும்பிற் படர்ந்தெழும்
பனிமதி மிசைத்தாவிடும் பருவமட மானெனவெனம்மணைநினம்மனைப்
படைவிழிக் கயல்பாய்ந்தெழ வெங்கட் கடுங்கொலைய வேழக்குழாமிதென
மேகக் குழாத்தை முட்டி விளையாடு மழகளிறு கடைவாய் குதட்டமுகை
விண்டவம் பைந்துகோத்த அங்கட் கரும்பேந்து மபிடேக வல்லிதிரு
அம்மானை யாடியருளே ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
அம்மானை யாடியருளே (2)
கள்ளூறு கஞ்சக் கரத்தூறு சேயொளி
கலப்பச் சிவப்பூறியும்
கருணைப் பெருக்கூற வமுதுர்று பார்வைக்
கடைக்கட் க்றுப்பூறியும்
நள்ளூறு மறுவூ றகற்றுமுக மதியில்வெண்
ணகையூறு நிலவூறியும்
நற்றரள வம்மனையொர் சிற்குணத் திணைமூன்று
நற்குணங் கதுவல்காட்ட

76.
77.
உள்ளூறு களிதுளும் பக்குரவ ரிருவீரும்
உற்றிடு துவாதாசந்தத் தொருபெரு வெளிக்கே விழித்துறங்குந்தொண்டர்
உழுவலன் பென்புருகநெக் கள்ளுற வுள்ளே கசிந்துறு பைந்தேறல்
அம்மானை யாடியருளே அங்க கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
அம்மானை யாடியருளே (3)
குலைப்பட்ட காந்தட்டளிர்க்கையிற் செம்மணி
குயின்றவம் மனைநித்திலம் கோத்தவம் மனைமுன் செவப்பின் செலுந்தன்மை
கோகனக மனையாட்டிபாற் கலைபட்ட வெண்சுடர்க் கடவுடோய்ந் தேகவது
கண்டுகொண் டேபுழுங்கும் காய்கதிர்க் கடவுளும் பின்றொடர்வ தேய்ப்பக்
கறங்கருவி துரங்கவோங்கும் மலைபட்ட வாரமும் வயிரமும் பிறவுமா
மாமணித் திரளைவாரி மறிதிரைக் கையா லெடுத்தெறிய நாற்கோட்டு
மதகளிறு பிளிறியோடும் அலைபட்ட வைகைத் துறைச்சிறை யனப்பேடை
அம்மானை யாடியருளே ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
அம்மானை யாடியருளே. (4)
தமரான நின்றுணைச் சேடியரி லொருசிலர்
தடக்கையி னெடுத்தாடுநின் தரளவம் மனைபிடித் தெதிர்வீசி வீசியிட
சாரிவல சாரிதிரியா நிமிராமு னம்மனையொ ராயிர மெடுத்தெறிய
நிரை நிரைய வாய்க்ககனமேல் நிற்கின்ற தம்மைநீ பெற்றவகி லாண்டமும்
நிரைத்துவைத் ததுகடுப்ப இமிரா வரிச்சுரும் பார்த்தெழப் பொழிலுT
டெழுந்தபைந்தாதுலகெலாம் இருள்செயச் செய்து நின் சேனா பராகமெனும்
ஏக்கமள காபுரிக்கும் அமரா பதிக்குஞ்செய் மதுரா புரித்தலைவி
அம்மானை யாடியருளே ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
அம்மானை யாடியருளே. (5)

Page 284
78.
79.
80.
உயிரா யிருக்கின்ற சேடியரின் மலர்மீ துதித்தவ ளெதிர்த்துநின்னோ டொட்டியெட் டிப்பிடித் திட்டவம் மணைதேடி
ஒடியா டித்திரியநீ பெயரா திருந்துவிளையாடுவது கண்டெந்தை
பிறைமுடி துளக்கமுடிமேற் பெருகுசுர கங்கைநுரை பொங்கலம் மானையப்ள
பெண்கொடியுமாடன்மான வெயரா மனம்புழுங் கிடுமமரர் தச்சனும்
வியப்பச் செயுந்தவளமா மேடையுந் தண்டரள மாடமுந் தெண்ணிலா
வீசத் திசைக்களிறெலாம் அயிரா பதத்தினை நிகர்க்குமதுரைத்தலைவி
அம்மானை யாடியருளே ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
அம்மானை யாடியருளே. (6)
முத்தம முத்திய வம்மனை கைம்மலர்
முளரிம ணங்கமழ மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்
முயங்கி மயங்கியிடக் கொத்து மணித்திர னிற்செயு மம்மனை
குயிலின்மி ழற்றியநின் குழலினி சைக்குரு கிப்பனி தூங்கு
குறுந்துளி சிந்தியிட வித்துரு மத்திலிழைத்தவு நின்கை
விரற்பவளத்தளிரின்
விளைதரு மொள்ளொளி திருடப் போவது
மீள்வது மாய்த்திரிய அத்தன் மனத்தெழுதியவுயி ரோவியம்
ஆடுக வம்மனையே அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
ஆடுக வம்மனையே. (7
விளரிமிழற்றளி குமுறுகுழற்கொடி
வீசிய வம்மனைபோய்
விண்ணி னிரைத்தெழுவதுகக னந்திரு
மேனிய தானவருக்
கிளநில வுமிழ்பரு முத்தின் கோவை
யெடுத்தவர் திருமார்புக்
கிடுவ கடுப்பவுமப்பரி சேபல மணியி னியற்றியிடும்
《《
C256)

வளரொளி விம்மிய வம்மனை செல்வது
வானவி லொத்திடவும் மனனெக் குருகப் பரமா னந்த மடுத்த திருத்தொண்டர்க் களிகனியத்திரு வருள்கனி யுங்கனி
ஆடுக வம்மனையே அழகு தழைந்தகல்யாண சவுந்தரி
ஆடுக வம்மனையே. (8)
81. கைம்மலரிற்பொலி கதிர்முத் தம்மனை
நகைமுத் தொளிதோயக் கண்டவர் நிற்கப் பிறர்சிலர் செங்கைக்
கமலச் சுடர்கதுவச் செம்மணி யிற்செய்திழைத்தன வெனவும்
சிற்சிலர் கட்கடையின் செவ்வியை வவ்விய பின்கரு மணியிற்
செய்தன கொல்லெனவும் தம்மன மொப்ப வுரைப்பன மற்றிைச்
சமயத் தமைவுபெறார் தத்தமி னின்று பிதற்றுவ பொருவத்
தனிமுதல் யாமென்பார்க் கம்மனை யாயவர் தம்மனை யானவள்
ஆடுக வம்மனையே அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
ஆடுக வம்மனைளே. (9)
82. ஒள்ளொளி மரகத மும்முழு நீலமும்
ஒண்டர ளத்திரளும் ஒழுகொளி பொங்க விழைத்திடு மம்மனை
ஒருமூன் றடைவிலெடாக் கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவ
கண்ணுதல் பாற்செலநின் கையில் வளர்த்த பசுங்கிளி யும்வளர்
காமர் கருங்குயிலும் பிள்ளைவெளோதிமமும்முறை முறையாற்
பெருகிய காதலைமேற் பேச விடுப்ப கடுப்ப வணைத்தொரு
பெடையோ டரசவனம் அள்ளல் வயற்றுயின் மதுரைத் துரைமகள்
ஆடுக வம்மனையே அழகு தழைந்தகல்யாண சவுந்தரி
ஆடுக வம்மனையே. (10)
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 285
83.
85.
மயூரமங்கலம்
9. நீராடற் பருவம் வளையாடு வண்கைப் பொலன்சங் கொடும்பொங்கு
மறிதிரைச் சங்கோலிட மதரரிக் கட்கயல் வரிக்கய லொடும்புரள
மகரந்த முண்டுவண்டின் கிளையாடு நின்றிருக் கேசபாரத்தினொடு
கிளர்சைவ லக்கொத்தெழக் கிடையாத புதுவிருந் தெதிர்கொண்டு தத்தமிற்
கேளிர்க டழிஇக்கொண்டெனத் தளையாடு கறையடிச் சிறுகட் பெருங்கைத்
தடங்களி றெடுத்துமத்தத் தவளக் களிற்றினொடு முட்டவிட் டெட்டுமத
தந்தியும் பந்தடித்து விளையாடு வைகைத் தடந்துறை குடைந்துபுது
வெள்ளநீராடியருளே விடைக்கொடியவர்க்கொருகயற்கொடிகொடுத்தகொடி வெள்ளநீராடியருளே. (1)
நிரைபொங்கிடுஞ்செங்கை வெள்வளை கலிப்பநகை
நிலவுவிரி பவளம்வெளிற நீலக் கருங்குவளை செங்குவளை பூப்பவறல்
நெறிகுழற் கற்றைசரியத் திரைபொங்கு தண்ணந்துறைக்குடைந்தாடுவ
செழுந்தரங்கக்கங்கைநுண் சிறுதிவலை யாப்பொங்கு மானந்த மாக்கடல்
திளைத்தாடு கின்றதேய்ப்பக் கரைபொங்கு மறிதிரைக் கையாற் றடம்பணைக்
கழனியிற் கன்னியர்முலைக் களபக் குழம்பைக் கரைத்துவிட்டள்ளற்
கருஞ்சேறு செஞ்சேறதாய் விரைபொங் கிடத்துங்க வேகவதி பொங்குபுது
வெள்ளநீராடியருளே விடைக்கொடியவர்க்கொருகயற்கொடிகொடுத்தகொடி வெள்ளநீராடியருளே. (2)
பண்ணாறு கிளிமொழிப் பாவைநின்றிருமேனி
பாசொளி விரிப்பவந்தண் , பவளக் கொடிக்காமர் பச்சிளங் கொடியதாய்ப்
பருமுத்த மரகதமதாய்த் தண்ணாறு மல்லற்றுறைச்சிறை யணங்களி
தழைக்குங் கலாமஞ்ஞையாய்ச் சகலமு நின்றிருச் சொருபமென்றோலிடும்
சதுர்மறைப் பொருள்வெளியிடக்

87.
கண்ணாறு குழலியர் குடக்கொங்கை பொங்குசெங்
களபமுங் கத்தூரியும் கப்புரமு மொக்கக் கரைத்தோடி வாணியும்
காளிந்தியுங்கங்கையாம் விண்ணாறு மளவலாய் விளையாடு புதுவைகை
வெள்ளநீராடியருளே விடைகொடியவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி வெள்ளநீராடியருளே. (3)
தூங்குசிறையறுகாலுறங்குகுழ னின்றுணைத்
தோழியர்கண் மேற்குங்குமம் தோயும் பணித்துறைச் சிவிறிவீ சக்குறுந்
துளியெம் மருங்குமோடி வாங்குமலை வில்லியார் விண்ணுரு நனைத்தவர்
வணைந்திடு திகம்பரஞ்செவ் வண்ணமாச் செய்வதச் செவ்வான வண்ணரொடு
மஞ்சள்விளையாடலேய்ப்பத் தேங்குமலை யருவிநெடு நீத்தத்து மாசுணத்
திரள்புறஞ் சுற்றியீர்ப்பச் சினவேழ மொன்றொரு சுழிச்சுழல்வ மந்தரம்
திரைகடன் மதித்தன்மானும் வீங்குபுனல் வைகைத் தடந்துறை குடைந்துபுது
வெள்ளநீராடியருளே விடைக்கொடியவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீராடியருளே
துளிக்கும் பனித்திவலை சிதறக் குடைந்தாடு
துறையிற்றுறைத்தமிழொடும் தொன்மறை தெளிக்குங்கலைக்கொடியெனுந்துணைத்
தோழிமூழ்கிப்புனன்மடுத் தொளிக்கும் பதத்துமற்றவளென வனப்பெடையை
ஒடிப் பிடிப்பதம்மை ஒண்பரி புரத்தொனியு மடநடையும் வெளவின
துணர்ந்துபின் றொடர்வதேய்ப்ப நெளிக்குந் தரங்கப் பெருங்கங்கை யுடனொட்டி
நித்திலப் பந்தாடவும் நிரைமணித் திரளின் கழங்காட வுந்தன்
நெடுந்திரைக் கையெடுத்து விளிக்கும் பெருந்தண் டுறைக்கடவுள் வைகைநெடு
வெள்ளநீராடியருளே
வெள்ளநீராடியருளே. (5)

Page 286
88.
89.
துங்க முலைப்பொற் குடங்கொண்டு
தூநீர் நீந்தி விளையாடும் துணைச்சே டியர்கண் மேற்பசும்பொற்
சுண்ண மெறிய வறச்சேந்த அங்கண் விசும்பி னின்குழற்காட் டறுகாற் சுரும்ப ரெழுந்தார்ப்ப தையன் றிருமேனியிலம்மை
அருட்கட் சுரும்பார்த்தெழன்மானச் செங்க ணிளைஞர் களிக்காமத்
தீமூண் டிடக்கண் டிளமகளிர் செழுமென் குழற்கூட்டகிற்புகையாற் றிரள்காய்க் கதலி பழுத்துநறை பொங்கு மதுரைப் பெருமாட்டி புதுநீராடி யருளுகவே பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புதுநீராடி யருளுகவே (6)
இழியும் புனற்றண் டுறைமுன்றில்
இதுவெம் பெருமான் மண்சுமந்த இடமென் றலர்வெண் கமலப்பெண் இசைப்பக் கசிந்துள்ளுருகியிரு விழியுஞ் சிவப்ப வானந்த
வெள்ளம் பொழிந்து நின்றனையால் மீண்டும் பெருக விடுத்தவற்கோர்
வேலை யிடுதன் மிகையன்றே
பிழியு நறைக்கற் பகமலர்ந்த
90.
ර258>
பிரச மலர்ப்பூந் துகண்மூழ்கும் பிறைக்கோட்ட டயிரா பதங்கூந்தற்
பிடியோ டாடத் தேனருவி பொழியும் பொழிற்கூடலிற்பொலிவாய்
புதுநீராடி யருளுகவே பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புதுநீராடி யருளுகவே. (7)
மறிக்குந் திரைத்தண் புனல்வைகை
வண்ட லிடுமண் கூடைகட்டி வாரிச் சுமந்தோ ரம்மைதுணை
மணிப்பொற் குடத்திற் கரைத்தூற்றும் வெறிக்குங் குமச்சே றெக்கரிடும்
விரைப்பூந் துறைமண் பெறினொருத்தி வெண்பிட் டிடவு மடித்தொருவன்
வேலை கொளவும் வேண்டுமெனக்

குறிக்கு மிடத்திற் றடந் தூநீர்
குடையப் பெறினக் கங்கைதிருக் கோடீ ரத்துக் குடியிருப்பும்
கூடா போலும் பொலன்குவட்டுப் பொறிக்குஞ் சுறவக் கொடியுயர்த்தாய்
புதுநீராடி யருளுகவே பொருநைந் துறைவன் பொற்பாவாய்
புதுநீராடி யருளுகவே. (8)
91. சொற்கொடி யோடு மலர்க்கொடி கொய்து
தொடுத்த விரைத்தொடையும் சுந்தரி தீட்டிய சிந்துர மும்மிரு துங்கக் கொங்கைகளின் விற்கொடி கோட்டிய குங்கும முங்குடை
வெள்ளங் கொள்ளைகொள வெளியே கண்டுநின் வடிவழகையன்
விழிக்கு விருந்துசெய இற்கொடி யோடு கயற்கொடி வீரன்
எடுத்த கருப்புவிலும் இந்திர தனுவும் வணங்க வணங்கும்
இணைப்புருவக் கொடி சேர் பொற் கொடி யிமய மடக்கொடி வைகைப்
புதுநீராடுகவே பொருநைத் துறையொடு குமரித் துறையவள்
புதுநீராடுகவே. (9)
92. கொள்ளைவெள ளருவி படிந்திடு மிமயக்
கூந்தன் மடப்பிடிபோற் கொற்கைத் துறையிற் சிறைவிரி யப்புனல்
குடையு மனப்பெடைபோல் தெள்ளமு தக்கட னடுவிற்றோன்று
செழுங்கம லக்குயில்போல் தெய்வக் கங்கைத் திரையூ டெழுமொரு
செம்பவளக்கொடிபோற் கள்ளவிழ் கோதையர் குழலிற் குழலிசை
கற்றுப் பொற்றருவிற் களிநற வுண்ட மடப்பெடை யோடு
கலந்து முயங்கிவுரிப் புள்ளுறை பூம்பொழின் மதுரைத் துரைமகள்
புதுநீராடுகவே பொருநைத் துறையொடு குமரித் துறையவள்
புதுநீராடுகவே. (10)
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 287
93.
94.
95.
மயூரமங்கலம்
10. ஊசற் பருவம் ஒள்ளொளியபவளக் கொழுங்கான் மிசைப்பொங்கும்
ஒழுகொளிய வயிரவிட்டத் தூற்றுஞ் செழுந்தண் ணிலாக்கால் விழுந்தனைய
ஒண்டரள வடம்வீக்கியே அள்ளிட வழிந்துசே யொளிதுளும் புங்கிரண
அருணரத் நப்பலகைபுக் காடுநின் றோற்றமப் பருதிமண்டலம்வளர்
அரும்பெருஞ் சுடரையேய்ப்பத் தெள்ளுசுவை யமுதங் கனிந்தவா னந்தத்
திரைக்கடன் மடுத்துழக்கும் செல்வச் செருக்கர்கண் மணக்கமல நெக்கபூஞ்
சேக்கையிற் பழையபாடற் புள்ளொலி யெழக்குடி புகுந்தசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. (1)
விற்பொலிய நிலவுபொழி வெண்ணித்திலம்பூண்டு
விழுதுபட மழகதிர்விடும் வெண்டரள வூசலின் மிசைப்பொலிவ புண்டரிக
வீட்டிற் பொலிந்துமதுரச் சொற்பொலி பழம்பாடல் சொல்லுகின்றவளுநின்
சொருபமென்பதுமிள நிலாத் தோற்றுமதி மண்டலத் தமுதமய மாயம்மை
தோன்றுகின்றதும்விரிப்ப எற்பொலிய வொழுகுமுழு மாணிக்க மணிமுகப்
பேறிமழை முகிறவழ்வதவ் வெறிசுடர்க் கடவுடிரு மடியிலவன் மடமகள்
இருந்துவிளையாடலேய்க்கும் பொற்புரிசை மதுரா புரிப்பொலி திருப்பாவை
பொன்னூச லாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. (2)
உருகிய பசும்பொன்னசும்பவெயில் வீசுபொன்
ஊசலை யுதைந்தாடலும் ஒண்டளிரடிச்சுவடுறப்பெறு மசோகுநற
வொழுகுமலர் பூத்துதிர்வதுன் திருமு னுருவங்கரந்தெந்தையார் நிற்பது
தெரிந்திட நமக்கிதுவெனாச் செஞ்சிலைக் கள்வனொரு வன்றொடை மடக்காது
தெரிகணைகள் சொரிவதேய்ப்ப

96.
97.
எரிமணி குயின்றபொற் செய்குன்று மழகதிர்
எறிப்பவெழு செஞ்சோதியூ டிளமதியிமைப்பதுன் றிருமுகச் செவ்விவேட்
டெழுநாத் தலைத்தவமவன் புரிவது கடுக்குமதுராபுரி மடக்கிள்ளை
பொன்னூ சலாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. (3)
கங்கைமுடி மகிழ்நர்திருவுளமசைந்தாடக்
கலந்தாடு பொன்னூசலக் கடவுடிரு நோக்கத்து நெக்குருகி யிடநின்
கடைக்கணோக் கத்துமற்றச் செங்கண்விடையவர்மனமு மொக்கச் கரைந்துருகு
செய்கையவர் சித்தமேபொற் றிருவூசலாவிருந்தாடுகின் றாயெனும்
செய்தியை யெடுத்துரைப்ப அங்கணெடு நிலம்விடர் படக்கிழித் தோடுவேர்
அடியிற் பழுத்தபலவின் அளிபொற் சுளைக்குடக் கனியுடைந் தூற்றுதேன்
அருவிபில மேழுமுட்டிப் பொங்கிவரு பொழின்மதுர மதுரைநாயகிதிருப்
பொன்னூ சலாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. (4)
சேர்க்குஞ் சுவைப்பாடலமுதொழுகவொழுகுபொற்
றிருவூசல் பாடியாடச் சிவபிரான் றிருமுடி யசைப்பமுடி மேற்பொங்கு
செங்கணர வரசகிலம்வைத் தார்க்கும் பணாடவியசைப்பச் சராசரமும்
அசைகின்ற தம்மனையசைந் தாடலா லண்டமு மகண்டபகிரண்டமும்
அசைந்தாடு கின்றதேய்ப்பக் கார்க்கொந் தளக்கோதை மடவியர் குழற்கூட்டு
கமழ்நறும் புகைவிண்மிசைக் கைபரந்தெழுவதுரு மாறிரவி மண்டலம்
கைக்கொள விருட்படலம்வான் போர்க்கின்ற தொக்குமதுராபுரி மடக்கிள்ளை
பொன்னூ சலாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னுரச லாடியருளே. (5)

Page 288
98.
99.
100。
தேர்க்கோல மொடுநின்றிருக்கோல முங்கண்டு
சிந்தனை புழுங்குகோபத் தீயவிய மூண்டெழுங் காமா னலங்கனற்
சிகையென வெழுந்துபொங்கத் தார்க்கோல வேணியர்த முள்ளமென வேபொற்
றடஞ்சிலையு முருகியோடத் தண்மதி முடித்ததும் வெள்விடைக் கொண்மணி
தரித்ததும் விருத்தமாகக் கார்க்கோல நீலக் கருங்களத் தோடொருவர்
செங்களத் தேற்றலுமலர்க் கட்கணை துரக்குங் கரும்புருவ வில்லொடொரு
கைவிற் குனித்துநின்ற போர்க்கோல மேதிருமணக்கோல மானபெண்
பொன்னூ சலாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. (6)
குழியும் பசுங்கண் முசுக்கலை வெரீஇச்சிறு
குறும்பலவி னெடியபாரக் கொம்பொடி படத்துங்கு முட்புறக் கனியின்
குடங்கொண்டு நீந்தமடைவாய் வழியுங் கொழுந்தே னுவுட்டெழு தடங்காவின்
வள்ளுகீர்க் கருவிரற்கூன் மந்திகளிரிந்தேகும் விசையினில் விசைத்தெழு
மரக்கோடு பாயவயிறு கிழியுங் கலைத்திங்க ளமுதருவி தூங்குவ
கிளைத்தவண் டுழுபைந்துழாய்க் கேசவன் கால்வீச வண்டகோளகைமுகடு
கீண்டுவெள்ளருவிபொங்கிப் பொழியுந் திறத்தினை நிகர்க்குமதுரைத்தலைவி
பொன்னூ சலாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. (7)
ஒல்குங் கொடிச்சிறு மருங்கிற் கிரங்கிமெல்
லோதிவண் டார்த்தெழப்பொன் ஊசலை யுதைந்தாடு மளவின்மலர் மகளம்மை
உள்ளடிக் கூன்பிறைதழிஇ மல்குஞ் சுவட்டினை வலம்புரிக் கீற்றிதுகொல்
வாணியென் றசதியாடி மணிமுறுவல் கோட்டநின் வணங்கா முடிக்கொரு
வணக்கநெடு நாண்வழங்கப்

பில்குங் குறும்பனிக் கூதிர்க் குடைந்தெனப்
பிரசநா றைம்பாற்கிளம் பேதையர்களூட்டுங் கொழும்புகை மடுத்துமென்
பெடையொடு வரிச்சுரும்பர் புல்குந் தடம்பணை யுடுத்தமது ரைத்தலைவி
பொன்னூ சலாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. (8)
101. கொன்செய்த செழுமணித் திருவூசலரமகளிர்
கொண்டாட வாடுந்தொறும் குறுமுறுவ னெடுநில வருந்துஞ் சகோரமாய்க்
கூந்தலங் கற்றைசுற்றும் தென்செய்த மழலைச் சுரும்பராய் மங்கைநின்
செங்கைப் பசுங்கிள்ளையாய்த் தேவதே வன்பொலிவ தெய்வுருவு மாமவன்
திருவுருவின் முறைதெரிப்ப மின்செய்த சாயலவர் மேற்றலத் தாடிய
விரைப்புனலி னருவிகுடையும் வெள்ளானை குங்குமச் செஞ்சேறு நாறமட
மென்பிடியை யஞ்சிநிற்கும் பொன்செய்த மாடமலி கூடற் பெருஞ்செல்வி
பொன்னூ சலாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. (9)
102. இருபதமுமென்குரற் கிண்கிணியு முறையிட்
டிரைத்திடு மரிச்சிலம்பும் இறுமிறு மருங்கென் றிரங்குமே கலையும்பொன்
எழுதுசெம் பட்டுவீக்கும் திருவிடையு முடைதார மும்மொட் டியாணமும்
செங்கைப் பசுங்கிள்ளையும் திருமுலைத் தரளவுத் தரியமும் மங்கலத்
திருநாணு மழகொழுகநின் றருள்பொழியுமதிமுகமு முகமதியி னெடுநில
வரும்புகுறு நகையுஞான ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொ
டமராடு மோடரிக்கட் பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி
பொன்னூ சலாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. (10)
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 289
மயூரமங்கலம்
தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை
நேரிசை வெண்பா சீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென் கார்பூத்த நெஞ்சகமாக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள் ஐய மொருங்கின்ற வந்நுண் மருங்கொசிய வைய மொருங்கின்ற மான்.
(கட்டளைக் கலித்துறை . மாகந்திருவுரு மன்றுடையார்க்கெனின் மற்றுனக்கோர்
பாகந் தரவொர் படிவமுண் டேபர மானந்தமே ஏகந் தருந்திருமேனிய தாக்கிமற் றெண்ணிறந்த ஆகந் தருவதுமம்மைநின்னாடல்கொலங்கவர்க்கே.
(நேரிசை வெண்பா . அங்கம் பகுந்தளித்த வம்பலத்தார்க் காம்பலங்கைச்
க்கொன்றுகொங்கைத் தழும்பொன்றே - நந் வந்திப்பார் பெற்றவர மற்றொருநீ வாய்த்ததிரு உந்திப்பா ரேழு மொருங்கு.
(கட்டளைக் கலித்துறை
. ஒருவல்லி யல்லிக் கமலத்து ரூறுபைந் தேறலொத்த திருவல்லிதில்லைச்சி ல்லியென் சித்தத்துள்ே வருவல்லிசெம்பொன் வடமேருவில்லியை வாட்கணம்பாற்
பொருவல்லி பூத்தலினன்றேயிப் பூமியைப் பூவென்பதே.
(நேரிசை வெண்பா) . பூத்ததுவு மீரேழ் புவனமே யப்புவனம்
காத்ததுவுமம்மை கருணையே - கூத்தரவர் பாடுகின்ற வேதமே பாராவிப் பாரொடுங்க ஆடுகின்ற வேதமே யங்கு.
(கட்டளைக் கலித்துறை)
. அங்கைகொண்டேநின் னடிதைவந்தாரழலாறமுடிக் கங்கைகொண்டாட்டுநங்கண்ணுதலாரக் கணகவெற்பைச் செங்கைகொண்டேகுழைத்தார்சிவகாமிநின் சித்திரமென்

(நேரிசை வெண்பா 7. குன்றஞ்சுமந்தொசிந்த கொம்பேநின் கோயிலும்பொன்
மன்றும் பணிந்தேம் வழிவந்தாற் - பொன்றாழ் வரைசென்ற திண்டோண் மறலிக்கு நெய்தல் முரைசன்றே வென்றி முரசு.
(கட்டளைக் கலித்துறை) 8. முருந்தடர்ந்தார முகிழ்த்தபுன் மூரன் முதல்விகயல்
பொருந்தடங்கண்விழிக்கும்புலியூரர்பொன்மார்பின்மற்றுன் பெருந்தடங்கொங்கைகுறியிட்டவாகண்டப்பிஞ்ஞகர்க்குன் கருந்தடங்கண்ணுங்குறியிட்டபோலுங்கறைக்கண்டமே.
(நேரிசை வெண்பா) 9. கறைகொண்டு நச்சரவக் கச்சணிந்தா ரென்று
மறைகொண்டு வாழ்த்துவதும் வம்பே - இறைகொண் டயிலிருக்கு முத்தலைவேலண்ணலுக்கென்னேயோர் மயிலிருக்கத் தில்லை வனத்து.
(கட்டளைக் கலித்துறை) 10 வன்னஞ்செறிவளைக்கைச்சிறகாற்றன்வயிற்றினுள்வைத் தின்னஞ்சராசரவீர்ங்குஞ்சணைத்திரை தேர்ந்தருத்திப் பொன்னம்பலத்துளொ ரானந்த வாரிபுக் காடும்பச்சை
அன்னம் பயந்தன கொல்லாம்பல் லாயிர வண்டமுமே.
(நேரிசை வெண்பா) 11. அண்டந் திருமேனியம்பலத்தார்க் கென்பதுரை
கொண்டங் குணர்தல் குறைபாடே - கண்டளவில் விண்ணம் பொலிந்ததொருமின்கொடியே சொல்லாதோ வண்ணம் பொலிந்திருந்த வா.
(கட்டளைக் கலித்துறை) 12. வாய்ந்ததுநின்மனை வாழ்க்கையென்றேதில்லைவாணரம்மே காய்ந்ததுவென்றிவிற்காமனையேமுடிக்கங்கையைப்பின் வேய்ந்தது பாவநின்மென்பதந்தாக்கவவ்வெண்மதியும் தேய்ந்தது பெண்மதி யென்படு மோவச் சிறுநுதற்கே.

Page 290
(நேரிசை வெண்பா) 13.சிறைசெய்த தூநீர்த் திருத்தில்லைத் தொல்லை
மறைசெய்த வீர்ந்தண் மழலைப் - பிறைசெய்த ஒண்ணுதலைக்கண்ணுதலோடுள்ளத்திருத்தியின்பம் நண்ணுதலைக் கண்ணுதலே நன்று.
(கட்டளைக் கலித்துறை) 14.நங்காய் திருத்தில்லை நன்னுகலாய்நுத னாட்டமொத்துன் செங்காவியங்கண் சிவப்பதென்னேசெழுங்கங்கையைநின் பங்காளர் நின்னைப் பணியுமப்போதுகைப்பற்றிமற்றென் தங்கா யெழுந்திரென்றாலவட் கேது தலையெடுப்பே.
(நேரிசை வெண்பா)
குலைவளைத்த கற்பகப்பூங்கொம்பர் - கலைமறைகள் நான்குமரி யார்க்கிந்த ஞாலமெலா மீன்றளித்தும் தான்குமரி யாகியிருந் தாள்.
(கட்டளைக் கலித்துறை) 16.தாளிற் பதித்த மதித்தழும் புக்குச் சரியெம்பிரான்
தோளிற்பதித்தவளைத்தழும்பேதொல்லைத்தில்லைப்பிரான் வாளிற் பதித்த முலைத்தழும் பங்கவர் மார்பினிலந் நாளிற்பதித்ததொன்றேயெம் பிராட்டி நடுவின்மையே.
đEEdE56ùÔ c55 (6ùÔf T6)
வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ
லோசக மேழுமளித் துண்டா னுறங்க ஒழித்தான்பித்
தாகஉண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.

(நேரிசை வெண்பா 17. இன்றளிர்க்கைக்கிள்ளைக்கேயீர்ங்குதலை கற்பிக்கும் பொன்றளிர்ந்த காமர் பொலங்கொம்பு - மன்றவர்தம் பாகத் திருந்தாள் பதுமத்தாள் பாவித்தாள் ஆகத் திருந்தா ளவள்.
(கட்டளைக் கலித்துறை 18 அல்லிக்கமலத்துணைத்தாளதென்றுமென்னாவிக்குள்ளே புல்லிக் கிடந்ததுபோலுங்கெட்டேன்புன் மலக்கிழங்கைக் கல்லிப் புலக்களை கட்டருள் பூத்துட் கனிந்தமலை வல்லிக்கிலைகொல் மருங்கென்றிரங்கு மறைச்சிலம்பே
(நேரிசை வெண்பா 19.மறைநாறுஞ் செவ்வாய் மடக்கிள்ளாய் பிள்ளைப் பிறைநாறுஞ் சீறடியெம் பேதாய் - நறைநாறும் நாட்கமலஞ் சூடே நறுந்துழாய் தேடேநின் தாட்கமலஞ் சூடத் தரின்.
(கட்டளைக் கலித்துறை) 20.தருவற நாணத் திருவறச் சாலை சமைத்தம்மைநீ
பொருவறுநல்லறம்பூண்டதென்னாமெந்தை பொற்புலியூர் மருவறு மத்த முடித்துக் கடைப்பலி தேர்ந்துவம்பே தெருவறவோடித் திரிதருமான்மற்றுன் சீர்த்திகொண்டே,
பல்லி மாலை
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே
சகல கலாவல்லியே. 2
யூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 291
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே
சகல கலாவல்லியே.
தூக்கும் பனுவற்றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல்லியே.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்
னேநெடுந்தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே.
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங்காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே.
மயூரமங்கலம்

பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும்வண்ணங் காட்டும்வெள்ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே. 7
சொல்விற் பணமு மவதான முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள்
வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே. 8
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ
டரசன்ன நானநடை கற்கும் பதாம்புயத் தாளே
சகல கலாவல்லியே. 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ
சகல கலாவல்லியே. 10

Page 292
FD
À
ஆய கலைகள் அ ஏய உணர்விக்கு உருப் பளிங்கு பே இருப்பள் ; இங்கு
படிக நிறமும் பவ: கடி கமழ் பூந்தாம அல்லும் பகலும் கல்லும் சொல்லா
சீர் தந்த
El தார் தந்
தா பார் தந்த ஆ வாாதநத
6.
வணங்கு G. சுணங்கு Gl பிணங்கு ே உணங்கு
 
 

ம்பன் கவிகள்
"ஸ்வதி அந்தாதி
காப்பு
|றுபத்து நான்கினையும் ம் என் அம்மை - துTய ால்வாள்; என் உள்ளத்தின் உள்ளே
வாரா(து) இடர். 1
ளச் செவ்வாயும் ரைபோல் கையும் - துடி இடையும் அனவரதமும் துதித்தால் தோ கவி? 2
நூல்
வெள் இதழ்ப்பூங் லாசனத் தேவி; செஞ்சொல் த என் மனத் மரையாட்டி; சரோருகம் மேல் 5 நாதன் இசைதந்த ரணப் பங்கயத்தாள் ;
சோதி அம்போருகத்தாளை ணங்குதுமே! 1
ம் சிலை நுதலும் கழைத் ாளும் வன முலைமேல்
ம் புதிய நிலவு எழு
னியும் தோட்டுடனே ம் கருந் தடங் கண்களும் ாக்கி, பிரமன், அன்பால்
நம் திரு முன்றிலாய் றை நான்கும் உரைப்பவளே! 2
மயூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 293
உரைப்பார் உரைக்கும் கலைகள் எல்லாம்
எண்ணில் உன்னை அன்றித் தரைப்பால் ஒருவர் தர வல்லரோ?
தண் தரளமுலை வரைப் பால் அமுது தந்(து) இங்கு
எனை வாழ்வித்த மாமயிலே, விரைப் பாசடை மலர் வெண் தாமரைப்பதி
மெல்லியலே! 3
இயல் ஆனது கொண்டு நின்
திரு நாமங்கள் ஏத்துதற்கு முயலாமையால் தடுமாறுகின்றேன்;
இந்த மூவுலகும் செயலால் அமைந்த கலை மகளே,
நின் திரு அருளுக்கு அயலாய் விடாமல் அடியேனையும்
உவந்து ஆண்டு அருளே! 4.
அருக்கோதயத்தினும் சந்திரோதயம் ஒத்(து)
அழ(கு) எறிக்கும் திருக்கோல நாயகி, செந்தமிழ்ப் பாவை
திசைமுகத்தான் இருக்(கு) ஒது நாதனும் தானும்
எப்போதும் இனி(து) இருக்கும் மருக்கோல நாள் மலராள்;
என்னை ஆளும் மடமயிலே. 5
மயிலே, மடப்பிடியே, கொடியே
இள மான் பிணையே. குயிலே, பசுங்கிளியே, அன்னமே, மனக் கூர் இருட்(கு) ஒர் வெயிலே, நிலவு) எழுமேனி மின்னே,
இனி வேறு தவம் பயிலேன்; மகிழ்ந்து பணிவேன்
உனது பொற் பாதங்களே. 6
பாதாம்புயத்தினிற் பணிவார்தமக்குப்
பல கலையும் வேதாந்த முத்தியும் தந்(து) அருள் பாரதி,
வெள் இதழ்ப் பூஞ் சீதாம்புயத்தில் இருப்பாள் இருப்ப,
என் சிந்தை உள்ளே - ஏதாம் புவியிற் பெறல் அரி(து) ஆவது
எனக்(கு) இனியே? 7
மயூரமங்கலம்

இனி, நான் உணர்வது எண்எண் கலையாளை,
இலகு தொண்டைக் கனி நானும் செவ்விதழ் வெண் நிறத்தாளை,
கமல அயன் தனி நாயகியை, அகிலாண்டமும்
பெற்ற தாயை மணப் பனி நாள் மலர் உறை பூவையை
ஆரணப் பாவையையே. 8
பாவும் தொடையும் பதங்களும் சீரும்
பலவிதமா மேவும் கலைகள் விதிப்பாள் இடம் -
விதியின் முதிய நாவும் பகர்ந்த தொல் வேதங்கள் நான்கும்
நாறுமலர்ப் பூவும் திருப்பதம் பூவால் அணிபவர்
புந்தியுமே. 9
புந்தியில் கூர் இருள் நீக்கும்
புதிய மதியம் என்கோ? அந்தியில் தோன்றிய தீபம் என்கோ?
நல் அரு மறையோர் சந்தியிற் தோன்றும் தபனன் என்கோ?
மணித் தாமம் என்கோ? உந்தியில் தோன்றும் பிரான் புயம் தோயும்
ஒருத்தியையே. 10
ஒருத்தியை, ஒன்றும் இலா என் மனத்தில்
உவந்து தன்னை இருத்தியை, வெண் கமலத்(து) இருப்பாளை,
எண்எண் கலை தோய் கருத்தியை, ஐம்புலனும் கலங்காமல்
கருத்தை எல்லாம் திருத்தியை யான் மறவேன்
திசைமுகன் தேவியையே. 11
தேவரும் தெய்வப் பெருமானும்
நான் மறை செப்புகின்ற மூவரும் தானவராகி உள்ளோரும்
முனிவரரும் யாவரும் ஏனைய எல்லா உயிரும்
இதழ் வெளுத்த பூவருமாதின் அருள் கொண்டு
ஞானம் புரிகின்றதே. 12

Page 294
புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து,
புகுந்(து) இருளை அரிகின்றது, ஆய்கின்ற எல்லா அறிவின்
அரும் பொருளைத் தெரிகின்ற இன்பம் கனிந்து ஊறி, நெஞ்சம் தெளிந்து, முற்ற விரிகின்ற(து) - எண்எண் கலைமா(து)
உணர்த்திய வேதமுமே.
வேதமும் வேதத்தின் அந்தமும்
அந்தத்தின் மெய்பொருளாம் பேதமும் பேதத்தின் மார்க்கமும்
மார்க்கப் பிணக்(கு) அறுக்கும் போதமும் போத உருவாகி
எங்கும் பொதிந்த விந்து நாதமும் - நாத வண்டு) ஆர்க்கும்
வெண் தாமரை நாயகியே. 14
நாயகமான மலரக மாவது
ஞான இன்பச் சேயகமான மலரக மாவதும்
தீவினையா லேயக மாறி விடுமக மாவதும்
எவ்வுயிர்க்கும் தாயகம் ஆவதும் தாது ஆர்
சுவேத சரோருகமே. 15
சரோருகமே - திருக் கோயிலும்,
கைகளும், தாள் இணையும், உரோருகமும், திரு அல்குலும், நாபியும்,
ஒங்(கு) இருள் போல் சிரோருகம் சூழ்ந்த வதனமும்,
நாட்டமும், சேயிதழும், ஒரோருகம் ஈர்அரை மாத்திரை ஆன
உரைமகட்கே. 怡
கருந்தா மரைமலர் கண்தாமரை மலர்
காமருதாள் அருந்தா மரைமலர், செந்தாமரை
மலர் ஆலயமாத் தரும் தாமரைமலர், வெண்தாமரை மலர்
தா இல் எழில் பெருந்தாமரை மணக்கும்
கலைக்கூட்டப் பிணை தனக்கே. 17
266 to

தனக்கே துணி பொருள் என்னும் தொல் வேதம்
சதுர்முகத்தோன் “எனக்கே சமைத்த அபிடேகம்” என்னும்,
இமையவர் தாம், “மனக்கேதம் மாற்றும் மருந்து” என்ப; “சூடு மலர்” என்பன் யான்; கனக் கேச பந்திக் கலைமங்கை
பாத கமலங்களே. 18
கமலம் தனில் இருப்பாள் விருப்போ(டு)
அம் கரம் குவித்துக் கமலம் கடவுளர் போற்றும் என்
பூவை கண்ணில் கருணைக் கமலம் தனைக்கொண்டு கண்(டு) ஒருகால் தம்
கருத்துள் வைப்பார் கள்மலம் கழிக்கும் கலைமங்கை,
ஆரணி, காரணியே. 19
காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும் நாரணன் ஆகம் அகலாத் திருவும்
ஒர் நால் மருப்பு வாரணன் தேவியும் மற்று உள்ள தெய்வ மடந்தையரும் - ஆரணப் பாவை பணித்த
குற்றேவல் அடியவரே. 20
அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும் முடிவே, தவள முளரி மின்னே,
முடியா இரத்தின வடிவே, மகிழ்ந்து பணிவார் தமது
மயல் இரவின் விடிவே அறிந்து என்னை ஆள்வார்-தலம்தனில்
வேறு இலையே! 21
வேறு இலை என்று உன் அடியாரில் கூடி,
விளங்கு நின்பேர் கூறிலை, யானும் குறித்து நின்றேன்;
ஐம்புலக் குறும்பாம் ஆறலை கள்வர் மயக்காமல், நின்
மலர்த்தாள் நெறியில் சேறிலை ஈந்(து) அருள் வெண்தாமரைச்
சேயிழையே! 22
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 295
சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள்;
எவ்வெவர் சிந்தையும் சோதிக்கலாம் உறப் போதிக்கலாம்;
சொன்னதே துணிந்து சாதிக்கலாம்; மிகப் போதிக்கலாம்;
முத்திதான் எய்தலாம்;- ஆதிக் கலாமயில் வல்லி பொன் தாளை
அடைந்தவர்க்கே. 23
அடையாள நாள்மலர் அங்கையில் ஏடும்
அணி வடமும் உடையாளை, நுண் இடை ஒன்றும் இலாளை,
உபநிடதப் படையாளை, எவ்வுயிரும் படைப்பாளை,
பதும நறுந் தொடையாளை அல்லது - மற்று இனி,
ஆரைத் தொழுவதுவே? 24
தொழுவார்; வலம் வருவார்; துதிப்பார்;
தம் தொழில் மறந்து விழுவார்; அருமறை மெய் தெரிவார்;
இன்பம் மெய் புளசித்து அழுவார்; இனும் கண்ணில் நீர் மல்குவார் ;-
என்கண் ஆவது என்னை?- வழுவாத செஞ்சொல் கலை மங்கை பால்
அன்பு வைத்தவரே. 25
மற்(று)ளப் பொருளும் பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருள் அல்ல;
பூதலத்தின் மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும்
விழுப் பொருளும் உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப் பொருளே. 26
“பொருளால் இரண்டும் பெறல் ஆகும்” என்ற
பொருள் பொருளோ? மருளதசொற்கலை வான்பொருளே பொருள்?
வந்து, வந்தித்(து) அருளாய் விளங்கும் அவர்க்(கு) ஒளியாய்,
அறியாதவர்க்(கு) இருளாய் விளங்கும் நலம்கிளர் மேனி
இலங்கிழையே. 27
மயூரமங்கலம்

இலங்கும் திருமுகம், மெய்யிற் புளகம் எழும்;
கண்கள் நீர் மலங்கும்; பழுதற்ற வாக்கும் பலிக்கும்;
மனம் மிகவே துலங்கும் முறுவல் செயக் களிகூரும்;
சுழல் புனல் போல் கலங்கும் பொழுது தெளியும்;
சொல்மானைக் கருதினர்க்கே. 28
கரி ஆர் அளகமும், கண்ணும், கதிர் முலைக்கண்ணும், செய்ய சரி ஆர் கரமும், பதமும், இதழும்.
தவள நறும் புரி ஆர்ந்த தாமரையும், திருமேனியும்,
பூண்பனவும் - பிரியாது என் நெஞ்சிலும் நாவிலும் நிற்கும்
பெரும் திருவே. 29
பெரும் திருவும் சய மங்கையுமாகி,
என் பேதை நெஞ்சில் இருந்து அருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றின்,
எல்லா உயிர்க்கும் பொருந்திய ஞானம் தரும் இன்ப
வேதப் பொருளும் தரும்; திருந்திய செல்வம் தரும்; அழியாப்
பெரும் சீர் தருமே. 30
கம்பராமாயணக் கடவுள் வாழ்த்து
மாதுளங் கனியை, சோதி
வயங்கு இரு நிதியை, வாசத் தாது உகு நறு மென் செய்ய
தாமரைத் துணைமென் போதை, மோது பாற்கடலில் முன்நாள்,
முளைத்த நால் கரத்தில் ஏந்தும் போது தாயாகத் தோன்றும்
பொன் அடி போற்றி செய்வாம்.
பொத்தகம், படிகமாலை,
குண்டிகை, பொருள் சேர் ஞான வித்தகம் தரித்த செங்கை
விமலையை அமலைதன்னை, மொய்த்த கொந்து அழகபார
முகிழ் முலைத் தவள மேனி மைத் தகு கருங் கண் செவ் வாய்
அணங்கினை, வணங்கல் செய்வாம்.

Page 296
C28
போற்றி உலெ மாற்றுவாய், து
கணியிலே சுை
கலந்தாற் போ உலகெலாந்த அன்னை, போ புதியதிற் புதுன்
உயிரிலே உயி
உண்டெனும் ( நானெனும் ெ தானென மாற் கவலைநோய் பிணியிருள் ெ யானென தின்
ஞானமா மகு செய்கையாய்,
நின்றிடும் தா இன்பங் கேட் துன்பம் வேண் அமுதம் கேட் சக்தி, போற்றி முக்தி, போற் சாவினை வே
 
 

தியார் பாடல்கள்
போற்றி அகவல்
காரு மூன்றையும் புணர்ப்பாய் டைப்பாய், வளர்ப்பாய்,காப்பாய் வயும், காற்றிலே இயக்கமும் லநீ, அனைத்திலும் கலந்தாய், ானாய் ஒளிர்வாய், போற்றி 5 ற்றி அமுதமே போற்றி மையாய், முதியதில் முதுமையாய் ராய் இறப்பிலும் உயிராய், பொருளில் உண்மையாய் என்னுளே பாருளாய், நானையே பெருக்கித் 10 ]றுஞ் சாகாச் சுடராய், தீர்க்கும் மருந்தின் கடலாய், கடுக்கும் பேரொளி ஞாயிறாய், ாறியிருக்குநல் யோகியர் - நடுத்திகழ் மணியாய், 15
ஊக்கமாய், சித்தமாய், அறிவாய் யே, நித்தமும் போற்றி!
டேன், ஈவாய் போற்றி! rடேன், துடைப்பாய் போற்றி! டேன், அளிப்பாய் போற்றி! 20 ! தாயே, போற்றி!
வி1 மோனமே, போற்றி!
ண்டேன், தவிர்ப்பாய் போற்றி!
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 297
சிவசக்தி
இயற்கையென்றுனையுரைப்பார் -சிலர்
இணங்கும்ஐம்பூதங்கள் என்றிசைப்பார்; செயற்கையின் சக்தியென்பார்-உயிர்த்
தீயென்பர், அறிவென்பர், ஈசனென்பர். வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய்திடுமெங்கள்'ஓம்' என்னும் நயப்படுமதுவுண்டே? -சிவ
நாட்டியங்காட்டிநல் லருள் புரிவாய்.
அன்புறு சோதியென்பர் -சிலர்
ஆரிருட்காளியென்றுனைப்புகழ்வார்; இன்பமென்றுரைத்திடுவார் -சிலர்
எண்ணருந்துன்பமென்றுணைஇசைப்பார்; புன்பலிகொண்டுவந்தோம் அருள்
பூண்டெமைத் தேவர்தங்குலத்திடுவாய் மின்படு சிவசக்தி -எங்கள்
விரைநின் திருவடி சரண்புகுந்தோம் 2
உண்மையில் அமுதாவாய், -புண்கள் ஒழித்திடுவாய்களிஉதவிடுவாய் வண்மைகொள் உயிர்ச்சுடராய் -இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய், ஒண்மையும் ஊக்கமுந்தான் -என்றும் ஊறிடுந்திருவருட் சுனையாவாய், அண்மையில் என்றும்நின்றே -எம்மை
ஆதரித்தருள்செய்யும் விரதமுற்றாய். 3
தெளிவுறும் அறிவினைநாம் -கொண்டு
சேர்த்தனம், நினக்கது சோமரசம், ஒளியுறும் உயிர்ச்செடியில் -இதை
ஓங்கிடு மதிவலிதனிற்பிழிந்தோம்; களியுறக் குடித்திடுவாய் -நின்றன்
களிநடங்காண்பதற்குளங்கனிந்தோம்; குளிர்சுவைப்பாட்டிசைத்தே -சுரர்
த்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம். 4
மயூரமங்கலம்

அச்சமும் துயரும்என்றே -இரண்டு
அசுரர்வந்தெமையிங்கு சூழ்ந்துநின்றார்; துச்சமிங்கிவர்படைகள் -பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்; இச்சையுற்றிவரடைந்தார் - எங்கள்
இன்னமுதைக்கவர்ந்தேகிடவே, பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு
பெருநகர் உடலெனும் பெயரினதாம் 5
கோடிமண்டபந்திகழும் -திறற்
நாடிநின்றிடர்புரிவார் -உயிர்
நதியினைத்தடுத்தெமை நலித்திடுவார்; சாடுபல் குண்டுகளால் -ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின்றுனைப்புகழ்வோம் -எங்கள்
பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்.6
நின்னருள் வேண்டுகின்றோம் -எங்கள் நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே பொன்னவிர் கோயில்களும் எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும், அன்னநல் லணிவயல்கள். -எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும், இன்னவை காத்திடவே-அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம். 7
எம்முயிராசைகளும் -எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும், செம்மையுற்றிடஅருள்வாய் -நின்றன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம். மும்மையின் உடைமைகளும் -திரு
முன்னரிட்டஞ்சலிசெய்து நிற்போம் அம்மைநற் சிவசக்தி -எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் 8
269

Page 298
கானி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்; -அங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணி நிலத்திடையே -ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும்;-அங்கு கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்றுமிள நீரும்.
பத்துப்பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும் -நல்ல முத்துச் சுடர்போலே -நிலாவொளி
முன்பு வர வேணும்;- அங்கு கத்துங்குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்;- என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப்பெண்வேணும்;-எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்; -அந்தக் காட்டு வெளியினிலே,-அம்மா நின்றன் காவலுற வேணும்; -என்றன் பாட்டுத்திறத்தாலே -இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணை செய்தே-அதை
நலங்கெடப்புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி, -எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! -நிலச்
சுமையென வாழ்ந்திடப்புரிகுவையோ? 1 விசையுறுபந்தினைப்போல் -உள்ளம்
வேண்டியபடிசெலும் உடல்கேட்டேன், நசையறுமனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத்தீசுடினும் -சிவ
சக்தியைப்பாடும்நல் அகங்கேட்டேன். அசைவறுமதிகேட்டேன்;- இவை
அருள்வதில்உனக்கெதுந்தடையுளதோ? 2

மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு- அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு; யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு; ஏகத்திருந்துலகம்-இங்குள்ளன
யாவையும் செய்பவளே 1
பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு; சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு; இந்தப்பதர்களையே-நெல்லா மென
எண்ணி இருப்பேனோ? எந்தப்பொருளிலுமே-உள்ளேநின்று
இயங்கியிருப்பவளே! 2
உள்ளம் குளிராதோ? - பொய்யானவ
ஊனம் ஒழியாதோ? கள்ளம் உருகாதோ? - அம்மா பக்திக்
கண்ணிர் பெருகாதோ? வெள்ளக் கருணையிலே-இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ? விள்ளற் கரியவளே - அனைத்திலும்
மேவியிருப்பவளே! 3
அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்தநல்லறிவு வேண்டும்; பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பணியே போல, நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 299
பூலோக குமாரி
பல்லவி பூலோக குமாரி ஹேஅம்ருத நாரி
அநுபல்லவி ஆலோக ஸ்ருங்காரி,அம்ருத கலச குசபாரே கால பய குடாரி காம வாரி, கனக லாத ரூப
கர்வதிமிராரே.
சரணம் பாலே ரஸஜாலே, பகவதி ப்ரஸித காலே, நீல ரத்னமயநேத்ர விசாலே, நித்ய யுவதி பத
நீரஜமாலே லீலா ஜ்வாலா நிர்மிதவாணி,நிரந்தரே நிகில
லோகே சாநி நிருபமஸந்தரிநித்யகல்யாணி,நிஜம்மாம் குரு ஹே மன்மத ராணி.
மஹா சக்தி வெண்பா
தன்னை மறந்து சகல உலகினையும் மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி - அன்னை அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம் துவள திருத்தல் சுகம். 1
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி, அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை -தஞ்சமென்றே வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு 2
வையகத்துக் கில்லை மனமே நினக்குநலஞ் செய்யக் கருதியிவை செப்புவேன் -பொய்யில்லை எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற சொல்லால் அழியும் துயர். 3
எண்ணிற்கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற்சுடர்கின்றமீனையெல்லாம்-பண்ணியதோர் சக்தியேநம்மைச் சமைத்ததுகாண்,நூற்றாண்டு பக்தியுடன் வாழும்படிக்கு. 4.
மயூரமங்கலம்

ஓம் சக்தி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண். பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ. வஞ்சனையின்றிப்பகையின்றிச் சூதின்றி
வையக மாந்த ரெல்லாம், தஞ்சமென்றேயுரைப் பீர் அவள் பேர், சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். “நல்லதுந் தீயதுஞ்செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்; அல்லது நீங்கும்” என்றேயுலகேழும்
அறைந்திடுவா முரசே! சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு
சொல்லுமவர் தமையே அல்லல் கெடுத்தமரர்க்கினை யாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 2
நம்புவதேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம் கும்பிட்டெந்நேரமும் “சக்தி”யென்றாலுனைக்
கும்பிடுவேன்மன மே அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வுதரும்பதம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். 3
பொன்னைப்பொழிந்திடு, மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்; அன்னை பராசக்தி என்றுரைத் தோம்; தளை
அத்தனையுங்களைந்தோம்; சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மேதொழில் வேறில்லை, காண்; இன்னுமதேயுரைப்போம், சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். 4. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய் தெள்ளு கலைத்தமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்; எள்ளத்தனைப்பொழுதும்பய னின்றி
இராதென்றன் நாவினிலே வெள்ளமெனப்பொழிவாய்சக்திவேல், சக்தி
வேல், சக்திவேல், சக்திவேல் 5

Page 300
பராசக்தி
கதைகள் சொல்லிக் கவிதையெழுதென்பார்;
காவியம்பல நீண்டன கட்டென்பார்; விதவிதப்படுமக்களின் சித்திரம்
மேவி நாடகச் செய்யுளை மேவென்பார்; இதயமோ எனிற் காலையும் மாலையும்
எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால், எதையும் வேண்டில தன்னை பராசக்தி
இன்பமொன்றினைப்பாடுதல் அன்றியே. 1
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப்பாடென்றொருதெய்வங் கூறுமே கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப் பாட்டிலேயறங்காட்டெனுமோர்தெய்வம்,
பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட
ஒங்கும் இன்கவிஒதெனும் வேறொன்றே. 2
நாட்டு மக்கள் நலமுற்றுவாழவும்
நானிலத்தவர் மேனிலை யெய்தவும் பாட்டிலேதனியின்பத்தை நாட்டவும்,
பண்ணிலேகளிகூட்டவும் வேண்டி, நான் மூட்டும் அன்புக் கனலொடு வாணியை
முன்னுகின்றபொழுதி லெலாங்குரல் காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
கவிதையாவுந்தனக்கெனக் கேட்கிறாள். 3
மழைபொழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்
வானிருண்டு கரும்புயல்கூடியே இழையுமின்னல் சரேலென்று பாயவும், ஈர வாடை இரைந்தொலி செய்யவும் உழையலாம்இடையின்றியில் வானநீர்
ஊற்றுஞ்செய்திஉரைத்திடவேண்டுங்கால், “மழையுங்காற்றும் பராசக்தி செய்கைகாண்
வாழ்கதாய்"என்றுபாடுமென்வாணியே 4
C272) tog

சொல்லினுக்கெளிதாகவும் நின்றிடாள்
சொல்லை வேறிடஞ்செல்ல வழிவிடாள்; அல்லினுக்குட்பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார், கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,
கால வெள்ளத்திலேநிலை காணுங்கால் புல்லினில்வயிரப்படை காணுங்கால்
பூத லத்தில் பராசக்திதோன்றுமே 5
சக்திக் கூத்து ராகம் - மரியாக்
பல்லவி
தகத்தகத்தகத் தகதகவென்றாடோமோ? --சிவ சக்தி சக்தி சக்தியென்றுபாடோமோ? (தகத்)
சரணங்கள்
1. அகத்தகத்தகத்தினிலே உள்நின்றாள் -அவள் அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள் தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே சரணமென்றுவாழ்ந்திடுவோம்நாமென்றே (தகத்)
2. புகப்புகப் புகவின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம், குகைக்குளங்கேயிருக்குதடா தீபோலே -அது குழந்தையதன் தாயடிக்கீழ்சேய்போல. (தகத்)
3. மிகத்தகைப்படுகளியினிலே மெய்சோர-உள
வீரம்வந்து சோர்வை வென்று கைதேர
த்தினிலுள்ளமனிதரெல்லாம்நன்றுநன்றென-நாம் சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென
(தகத்)
4. இந்திரனாருலகினிலே நல்லின்பம்
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் -நல்ல மதமுறவே அமுதநிலை கண்டெய்திக் (தகத்)
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 301
சக்தி
துன்பமிலாத நிலையே சக்தி,
தூக்கமிலாக்கண் விழிப்பே சக்தி; அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி; இன்பமுதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத்திருக்கும் எளியே சக்தி; முன்புநிற்கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி. 1
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி; தீம்பழந் தன்னில் சுவையே சக்தி;
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி; பாம்பை அடிக்கும் படையே சக்தி,
பாட்டினில் வந்த களியே சக்தி; சாம்பரைப்பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி. 2
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
மாநிலங்காக்கும் மதியே சக்தி, தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்குந்தவமே சக்தி; வீழ்வு தடுக்கும் விறலே சக்தி
விண்ணையளக்கும் விரிவே சக்தி; ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி. 3
வையம் முழுதும்
கண்ணிகள்
வையம் முழுதும் படைத்தளிக் கின்ற
மஹாசக்திதன்புகழ் வாழ்த்துகின்றோம்;
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே.
மயூர மங்கலம்

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங்கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம்;
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச்செய்தல் வேண்டுமென்றே. 2
வேகம் கவர்ச்சிமுதலிய பல்வினை
மேவிடும் சக்தியை மேவுகின்றோம்;
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
யாகங்கள் அறிந்திட வேண்டுமென்றே. 3
உயிரெனத் தோன்றி உணவுகொண்டேவளர்ந் தோங்கிடும் சக்தியை ஒதுகின்றோம்;
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாலித்து நித்தம் வளர்க்க வென்றே. 4.
சித்தத்திலேநின்று சேர்வதுணரும்
சிவசக்தி தன்புகழ் செப்புகின்றோம்;
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே. 5
மாறுதலின்றிப்பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடுகின்றோம்;
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிடவேண்டும் மென்றே.6
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி என்றுரை செய்திடுவோம்;
ஓம்சக்தி என்பவர் உண்மைகண்டார்,சுடர்
ஒண்மைகொண்பார், உயிர் வண்மைகொண்டார். 7
சக்தி விளக்கம்
ஆதிப்பரம்பொருளின் ஊக்கம் -அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்;
சூதில்லை காணுமிந்த நாட்டீர்!-மற்றத்
தொல்லை மதங்கள் செய்யும் துக்கம். 1
மூலப்பழம்பொருளின் நாட்டம்-இந்த மூன்று புவியுமதன் ஆட்டம்;
காலப் பெருங்களத்தின் மீதே-எங்கள்
காளி நடமுலகக் கூட்டம். 2
C273)

Page 302
காலை இளவெயிலின் காட்சி-அவள்
கண்ணொளிகாட்டுகின்றமாட்சி;
நீல விசும்பினிடை இரவில்-சுடர்
நேமியனைத்துமவள் ஆட்சி. 3
நாரணனென்று பழவேதம்-சொல்லும்
நாயகன் சக்திதிருப்பாதம்;
சேரத் தவம்புரிந்து பெறுவார் இங்கு
செல்வம் அறிவு சிவபோதம். 4
ஆதி சிவனுடைய சக்தி-எங்கள்
அன்னை யருள்பெறுதல் முக்தி;
மீதி உயிரிருக்கும் போதே -அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி. 5
பண்டை விதியுடைய தேவி-வெள்ளைப்
பாரதியன்னையருள் மேவி, கண்ட பொருள் விளக்கும் நூல்கள் -பல
கற்றலில்லாதவனோர் பாவி 6
மூர்த்திகள் மூன்று, பொருள் ஒன்று;-அந்த
மூலப்பொருள் ஒளியின் குன் று:
நேர்த்தி திகழும் அந்த ஒளியை -எந்த
நேரமும் போற்று சக்தி என்று. 7
சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
ராகம் -பூபாரம் தாளம் - சதுஸ்ர ஏகம்
கையைச், சக்தி தனக்கே கருவியாக்கு -அது சாதனைகள் யாவினையுங் கூடும்
கையைச், சக்தி தனக்கே கருவியாக்கு-அது சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும். 1 கண்ணைச் சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி வழியதனைக் காணும்
கண்ணைச், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சத்தியமும் நல்லருளும் பூணும். 2

செவி, சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்திசொல்லும் மொழியது கேட்கும்
செவி சக்தி தனக்கே கருவியாக்கு -அது சக்திதிருப்பாடலினை வேட்கும். 3 வாய், சக்தி தனக்கே கருவியாக்கு-சிவ
சக்தி புகழினையது முழங்கும்-வாய் சக்தி தனக்கே கருவியாக்கு -அது சக்திநெறியாவினையும் வழங்கும். 4 சிவ சக்திதனை நாசி நித்தம்முகரும்-அதைச்
சக்தி தனக்கே கருவியாக்கு-சிவ சக்தி திருச்சுவையினை நுகரும் -சிவ சக்தி தனக்கே எமது நாக்கு. 5 மெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு-சிவ
சக்திதருந்திறனதிலேறும் -
மெய்யைச் சக்தி தனக்கே கருவியாக்கு -அது சாதலற்ற வழியினைத் தேறும். 6 கண்டம், சக்தி தனக்கே கருவியாக்கு-அது
சந்ததமும் நல்லமுதைப் பாடும் -
கண்டம் சக்தி தனக்கே கருவியாக்கு-அது
சக்தியுடன் என்றும்உறவாடும். 7 தோள், சக்தி தனக்கே கருவியாக்கு -அது
தாரணியும் மேலுலகுந்தாங்கும்
தோள்
சக்தி தனக்கே கருவியாக்கு -அது சக்தி பெற்றுமேருவென ஓங்கும். 8 நெஞ்சம், சக்தி தனக்கே கருவியாக்கு -அது
சக்தியுறநித்தம் விரிவாகும்-நெஞ்சம் சக்தி தனக்கே கருவியாக்கு -அதைத் தாக்கவரும்வாளெதுங்கிப்போகும் 9 சிவ சக்தி தனக்கே எமது வயிறு -அது
சாம்பரையும் நல்லவுண வாக்கும் -சிவ சக்தி தனக்கே எமது வயிறு -அது சக்திபெற உடலினைக் காக்கும். 10 இடை, சக்தி தனக்கே கருவியாக்கு-நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் -
g50L சக்தி தனக்கே கருவியாக்கு-நின்றன் சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும் 11
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 303
கால்,
மனம்,
மனம்,
மனம்,
மனம்,
மனம்,
மனம்,
மனம்,
மனம்,
மயூரமங்கலம்
சக்தி தனக்கே கருவியாக்கு -அது சாடியெழு கடலையுந்தாவும்-கால் சக்தி தனக்கே கருவியாக்கு -அது சஞ்சலமில்லாமலெங்கும் மேவும். 12 சக்தி தனக்கே கருவியாக்கு -அது சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும்
மனம் சக்தி தனக்கே கருவியாக்கு -அது சாத்துவிகத்தன்மையினைச்சூடும் 13 சக்தி தனக்கே கருவியாக்கு -அது சக்தியற்ற சிந்தனைகள் தீரும்-மனம் சக்தி தனக்கே கருவியாக்கு -அதில்
சாரும்நல்ல உறுதியும் சீரும். 14 சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்திசக்தி சக்தியென்று பேசும் -
ഥങ്ങ
சக்தி தனக்கே கருவியாக்கு - அதில் சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும். 15 சக்தி தனக்கே கருவியாக்கு -அது சக்திநுட்பம் யாவினையும் நாடும் -
மனம் சக்தி தனக்கே கருவியாக்கு -அது சக்திசக்தியென்றுகுதித்தாடும். 16 சக்தி தனக்கே கருவியாக்கு-அது சக்தியினை எத்திசையும் சேர்க்கும் -
மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - அது தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும் 17 சக்தி தனக்கே கருவியாக்கு-அது சந்ததமும் சக்திதனைச் சூழும்-மனம் சக்தி தனக்கே கருவியாக்கு-அதில் சாவுபெறும் தீவினையும் ஊழும். 18 சக்தி தனக்கே உரிமையாக்கு-எதைத் தான் விரும்பினாலும்வந்து சாரும்
மனம் சக்தி தனக்கே உரிமையாக்கு-உடல் தன்னிலுயர் சக்திவந்துசேரும் 伯 சக்தி தனக்கே கருவியாக்கு-இந்தத் தாரணியில் நூறுவயதாகும்-மனம் சக்தி தனக்கே கருவியாக்கு -
உன்னைச்
சாரவந்த நோயNந்து போகும். 20

மனம்,
மனம்,
மனம்,
சித்தம்,
சித்தம்,
சித்தம்,
சித்தம்,
சித்தம்,
சக்தி தனக்கே கருவியாக்கு-தோள் சக்திபெற்றுநல்லதொழில் செய்யும்
மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு -எங்கும் சக்தியருள் மாரிவந்து பெய்யும். 21 சக்தி தனக்கே கருவியாக்கு-சிவ சக்தி நடையாவும் நன்கு பழகும் -
மனம் சக்தி தனக்கே கருவியாக்கு -முகம் சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும். 22 சக்தி தனக்கே கருவியாக்கு-உயர் சாத்திரங்கள்யாவும் நன்கு தெரியும்
மனம் சக்தி தனக்கே கருவியாக்கு-நல்ல சத்திய விளக்கு நித்தம் எரியும். 23 சக்தி தனக்கே உரிமையாக்கு -நல்ல தாளவகை சந்தவகை காட்டும்
சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு -அதில் சாரும்நல்லவார்த்தைகளும்பாட்டும் 24 சக்தி தனக்கே உரிமையாக்கு -அறு
சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு -அது சக்திபுகழ் திக்கனைத்தும் நிறுத்தும் 25 சக்தி தனக்கே உரிமையாக்கு -அது சக்திசக்தியென்று குழலூதும் -
சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு -அதில் சார்வதில்லை அச்சமுடன் சூதும். 26 சக்தி தனக்கே உரிமையாக்கு -அது சக்தியென்று வீணைதனில் பேசும் -
சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு-அது சக்திபரிமளமிங்கு வீசும். 27 சக்தி தனக்கே உரிமையாக்கு -அது சக்தியென்றுதாளமிட்டு முழக்கும்
சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு -அது
*சலங்கள்யாவி ம் அழிக்கும் 28

Page 304
சித்தம்,
சக்தி தனக்கே உரிமையாக்கு -அது சக்திவந்து கோட்டைகட்டி வாழும்
சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு -அது சக்தியருட் சித்திரத்தில் ஆழும். 29 சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது சங்கடங்கள் யாவினையும் உடைக்கும்
மதி சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு சத்தியமும் நல்லுறமும் கிடைக்கும். 30 சக்தி தனக்கே உடைமையாக்கு -அது சாரவருந்தீமைகளை விலக்கும்-மதி சக்தி தனக்கே உடைமையாக்கு -அது சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும். 31 சக்தி தனக்கே உடைமை யாக்கு -அது சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும்
- மதி சக்தி தனக்கே உடைமையாக்கு -அது சக்தியுறை விடங்களை நாடும். 32 சக்தி தனக்கே உடைமையாக்கு -அது தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீக்கும்
மதி சக்தி தனக்கே உடைமையாக்கு -அதில் தள்ளிவிடும் பொய்ந்நெறியும் தீங்கும். 33 சக்தி தனக்கே உடைமையாக்கு-அதில் சஞ்சலத்தின் தீயவிருள் விலகும்-மதி சக்தி தனக்கே உடைமையாக்கு-அதில் சக்தியொளி நித்தமுநின்றிலகும். 34 சக்தி தனக்கே உடமையாக்கு-அதில்
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு-மதி சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு 35 சக்தி தனக்கே அடிமையாக்கு -அது தாரணியில் அன்பு நிலை நாட்டும் - மதி சக்தி தனக்கே அடிமையாக்கு -அது சர்வசிவசக்தியினைக் காட்டும். 36 சக்தி தனக்கே அடிமையாக்கு -அது சத்திதிருவருளினைச் சேர்க்கும்-மதி சக்தி தனக்கே அடிமையாக்கு -அது தாமதப் பொய்த் தீமைகளைப்போக்கும் 37

அகம்,
அகம்,
அகம்,
அகம்,
சக்தி தனக்கே அடிமையாக்கு -அது சத்தியத்தின் வெல்கொடியைநாட்டும்-மதி சக்தி தனக்கே அடிமையாக்கு -அது தாக்க வரும் பொய்ப்புலியை ஒட்டும். 38 சக்தி தனக்கே அடிமையாக்கு-அது சத்தியநல்லிரவியைக் காட்டும்-மதி சக்தி தனக்கே அடிமையாக்கு -அதில் சாரவரும் புயல்களை வாட்டும். 39 சக்தி தனக்கே அடிமையாக்கு -அது சக்திவிரதத்தை யென்றும் பூணும்-மதி சக்திவிரதத்தையென்றுங்காத்தால் -சிவ சக்திதரும் இன்பமும்நல்லூணும். 40 சக்தி தனக்கே அடிமையாக்கு-தெளி தந்தமுதப் பொய்கையென ஒளிரும்-மதி சக்தி தனக்கே அடிமையாக்கு -அது சந்ததமும் இன்பமுற மிளிரும். 41 சக்தி தனக்கே உடைமையாக்கு -அது தன்னையொரு சக்தியென்று தேரும்
-அகம் சக்தி தனக்கே உடைமை யாக்கு -அது தாமதமும் ஆணவமும் தீரும். 42
சக்தி தனக்கே உடைமையாக்கு-அது தன்னையவள் கோயிலென்று காணும்
-அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு -அது தன்னையெண்ணித் துன்பமுறநாணும் 43 சக்தி தனக்கே உடைமையாக்கு-அது சக்தியெனும் கடலிலோர் திவலை -
அகம் சக்தி தனக்கே உடைமையாக்கு-சிவ சக்தியுண்டு நமக்கில்லை கவலை. 44 சக்தி தனக்கே உடைமை யாக்கு -அதில் சக்திசிவநாதநித்தம் ஒலிக்கும் -
அகம் சக்தி தனக்கே உடைமை யாக்கு -அது சக்திதிருமேனியொளி ஜ்வலிக்கும். 45 சக்தி என்றும் வாழி என்று பாடு-சிவ சக்திசக்தி என்று குதித்தாடு -சிவ சக்தி என்றும் வாழி என்று பாடு-சிவ சக்திசக்தி என்றுவிளையாடு. 46
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 305
சக்தி திருப்புகழ்
சக்திசக்தி சக்தீசக்தீசக்தீசக்தி என்றோது சக்திசக்தி சக்தீஎன்பார்-சாகார் என்றே நின்றோது.
சக்திசக்தி என்றே வாழ்தல்-சால்பாம் நம்மைச்
சார்ந்தீரே சக்திசக்தி என்றிராகில்-சாகா உண்மை சேர்ந்திரே!
சக்திசக்தி என்றால் சக்தி-தானே சேரும் கண்டீரே! சக்திசக்திஎன்றால் வெற்றி-தானே நேரும் கண்டீரே
சக்திசக்தி என்றே செய்தால் -தானே செய்கை
நேராகும் சக்திசக்தி என்றால் அஃது-தானே முக்திவேராகும்.
சக்திசக்தி சக்தி சக்தி சக்தி என்றே ஆடோமோ? சக்திசக்தி சக்தியென்றே-தாளங்கொட்டிப்
LITGL TG. DIT?
சக்திசக்தி என்றால் துன்பம் -தானே தீரும் கண்டீரே சக்திசக்தி என்றால் இன்பம் -தானே சேரும்
கண்டீரே
சக்திசக்தி என்றால் செல்வம் -தானே ஊறும் கண்டீரோ? சக்திசக்தி என்றால் கல்வி-தானே தேறும்
கண்டிரோ?
சக்திசக்தி சக்தீ சக்தி சக்தீ சக்தி வாழி நீ! சக்திசக்தி சக்தீ * சக்தீ சக்தீவாழி நீ!
சக்திசக்திவாழி என்றால்-சம்பத்தெல்லாம் நேராகும். சக்திசக்தி என்றால் சக்தி-தாசன் என்றே பேராகும்
சிவசக்தி புகழ் ராகம் -தன்யாசி தாளம் - சதுஸ்ர ஏகம்
ஒம்சக்திசக்தி சக்தியென்றுசொல்லு-கெட்
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு சக்திசக்தி சக்தியென்று சொல்லி-அவள்
சந்நிதியிலேதொழுது நில்லு
மயூரமங்கலம்

ஒம், சக்திமிசை பாடல்பல பாடு -ஒம்
சக்திசக்தி என்றுதாளம் போடு
சக்திதருஞ் செய்கைநிலந்தனிலே -சீவ
சக்திவெறிகொண்டுகளித்தாடு, 2
ஓம், சக்திதனையேசரணங் கொள்ளு-என்றும்
சாவினுக்கொரச்சமில்லை தள்ளு,
சக்திபுகழாமமுதை அள்ளு-மது
தன்னிலினிப்பாகுமந்தக் கள்ளு. 3
ஓம், சக்திசெய்யும் புதுமைகள் பேசு -நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு
சக்திதிருக்கோயிலுள்ள மாக்கி-அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு. 4.
ஓம்சக்தியினைச்சேர்ந்ததிந்தச்செய் இதைச்
சார்ந்துநிற்ப தேநமக்கொருய்கை
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை-அதில்
தன்னமுதமாரிநித்தம் பொய்கை. 5
ஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு;
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் - புவிச்
சாதிகளெல்லாமதனைக் கேட்டு, 6
ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு - அவள்
தந்திரமெல்லாம்உலகில் வழங்கு;
சக்தியருள் கூடிவிடுமாயின் - உயிர்
சந்ததமும் வாழுநல்ல கிழங்கு 7
ஓம்சக்திசெய்யுந்தொழில்களை எண்ணு-நித்தம்
சக்தியுள்ள தொழில்பல பண்ணு;
சக்திதனையேயிழந்து விட்டால் - இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு 8
ஓம் சக்தியருளாலுலகில் ஏறு- ஒரு
சங்கடம்வந்தாலிரண்டு கூறு
சக்திசில சோதனைகள் செய்தால் - அவள்
தண்ணருளென்றேமனது தேறு. 9
ஓம் சக்திதுணை என்று நம்பி வாழ்த்து - சிவ
சக்திதனையேஅகத்தில் ஆழ்த்து
சக்தியும் சிறப்பும்மிகப்பெறுவாய் - சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து O

Page 306
பேதை நெஞ்சே
இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே!
எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை; முன்னர்நம திச்சையினாற் பிறந் தோமில்லை
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை; மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்தில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய் பின்னையொரு கவலையுமிங் கில்லை, நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய் 1
நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,
நினைத்தபயன் காண்பதவள் செய்கை யன்றோ? மனமார உண்மையினைப் புரட்ட லாமோ?
மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ? எனையாளும் மாதேவி வீரர் தேவி,
இமையவருந் தொழுந்தேவி, எல்லைத்தேவி மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி,
மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே! 2
சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்;
சங்கரனென்றுரைத்திடுவோம், கண்ணன் என்போம்; நித்தியமிங்கவள்சரணே நிலையென் றெண்ணி,
நினக்குள்ள குறைகளெல்லாம் தீர்க்கச் சொல்லி, பத்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி
பசிபிணிகளில்லாமற் காக்கச் சொல்லி, உத்தமநன்னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய் நெஞ்சே! 3
செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்,
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்; கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும், தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும், துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்,
நமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே! 4
பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல்லாகும்
பயனன்றி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே! கேட்டதுநீ பெற்றிடுவாய், ஐயமில்லை;
கேடில்லை, தெய்வமுண்டு, வெற்றியுண்டு; மீட்டுமுனக் குரைத்திடுவேன்; ஆதி சக்தி,
வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி, நாட்டினிலே சனகனைப்போல் நமையும் செய்தாள்;
நமோநம ஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே! 5

மஹா சக்தி
சந்திரனொளியில் அவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன் இந்திரியங்களை வென்று விட்டேன்,
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன். 1 பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள் பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள் துயரிலாதெனைச் செய்து விட்டாள்,
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள். 2 மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்,
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்; வான்கணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். 3.
நவராத்திரிப்பாட்டு (உஜ்ஜயினி) 1. உஜ்ஜயினி நித்யகல்யாணி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
(உஜ்ஜயினி) 2. உஜ்ஜயகாரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதீழரீமாதா ஸா. (உஜ்ஜயினி) 3. வாழிபுனைந்துமஹேசுவர தேவன்
தோழிபதங்கள் பணிந்து துணிந்தனம்
(உஜ்ஜயினி) 4. சத்ய யுகத்தை அகத்திலிருத்தி,
திறத்தை நமக்கருளிச்செய்யும் உத்தமி.
(உஜ்ஜயினி)
#fff; பாட்டு யாதுமாகி நின்றாய்-காளி எங்கும் நீநிறைந்தாய்;
தீதுநன்மையெல்லாம்-காளி-தெய்வலீலையன்றோ! பூத மைந்தும் ஆனாய்-காளி-பொறிகளைந்தும்
ஆனாய் போதமாகிநின்றாய்-காளிபொறியைவிஞ்சிநின்றாய்; இன்பமாகி விட்டாய்-காளி-என்னு ளேபுகுந்தாய்? பின்புநின்னையல்லால்-காளி-பிறிது நானும்
உண்டோ? அன்பளித்துவிட்டாய்-காளி-ஆண்மை தந்து
விட்டாய், துன்பம் நீக்கிவிட்டாய்-காளி-தொல்லை போக்கி
விட்டாய்
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் -2000

Page 307
காளி ஸ்தோத்திரம்
யாதுமாகி நின்றாய்-காளி எங்கும் நீநிறைந்தாய்; தீது நன்மையெல்லாம்-நின்றன்-செயல்களன்றியில் போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை
யெல்லாம் ஆதி சக்தி, தாயே!-என்மீது-அருள் புரிந்து காப்பாய். 1
எந்தநாளும் நின்மேல்-தாயே இசைகள் பாடிவாழ்வேன்; கந்த னைப்ப யந்தாய்-தாயே கருணை
வெள்ளமானாய்; மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில், சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்செம்மைதோன்றும் அன்றே 2
கர்ம யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்; தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்பதின்றி, மர்மமான பொருளாம்-நின்றன்-மலரடிக்கண்நெஞ்சம்,
செம்மையுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும் 3
என்றனுள்ள வெளியில்-ஞானத்-திரவியேற வேண்டும்; குன்ற மொத்த தோளும்-மேருக்-கோல மொத்த வடிவும், நன்றை நாடு மனமும்-நீயெந்-நாளு மீதல் வேண்டும்; ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-உழலும் நெஞ்சம்
வேண்டா 4.
வான கத்தினொளியைக்-கண்டே-மனமகிழ்ச்சி பொங்கி, யானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-எந்த நாளும் வாழ்வேன்; ஞான மொத்த தம்மா!-உவமை-நானுரைக்கொணாதாம் வானகத்தினொளியின்-அழகை-வாழ்த்துமாறியாதோ? 5
ஞாயி றென்ற கோளம்-தருமோர்-நல்ல பேரொளிக்கே தேய மீதோர் உவமை-எவரோ-தேடி யோத வல்லார்?
வாயினிக்கும் அம்மா!-அழகாம்-மதியின் இன்ப ஒளியை நேயமோ டுரைத்தால்-ஆங்கே-நெஞ்சிளக்க மெய்தும். 6
காளி மீது நெஞ்சம்-என்றும்-கலந்து நிற்க வேண்டும்; வேளை யொத்த விறலும்-பாரில்-வேந்த ரேத்து புகழும், யாளியொத்த வலியும்-என்றும்-இன்பம் நிற்கும் மணமும் வழியீதல்வேண்டும்-அன்னாய்வாழ்க நின்றன் அருளே 7
மயூரமங்கலம்

யோக சித்தி
வரங் கேட்டல்
விண்ணும் மண்ணும் தனியாளும்- எங்கள்
வீரை சக்தி நினதருளே - என்றன் கண்ணுங் கருத்தும் எனக்கொண்டு - அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி-நான் பண்ணும் பூசனைகள்எல்லாம் - வெறும்
பாலைவனத்தில் இட்ட நீரோ?-உனக் கெண்ணுஞ் சிந்தையொன்றிலையோ? - அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ? நீயே சரணமென்று கூவி - என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு-அடி தாயே! எனக்குமிக நிதியும் - அறந்
தன்னைக் காக்கு மொரு திறனும்-தரு வாயே என்றுபணிந்தேத்திப் - பல வாறா நினதுடிகழ் பாடி - வாய் ஒயேனாவதுன ராயோ? - நின
துண்மை தவறுவதோ அழகோ? 2
காளி வலியசாமுண்டி-ஒங்
காரத் தலைவியென்னிராணி - பல நாளிங்கெனையலைக்கலாமோ? - உள்ளம் நாடும் பொருளடைதற் கன்றோ?-மலர்த் தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது
தாராயெனிலுயிரைத் தீராய் - துன்பம் நீளில் உயிர்தரிக்க மாட்டேன்-கரு
நீலியென்னியல்பறியாயோ? 3
தேடிச் சோறுநிதந் நின்று-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வே னென்றுநினைத்தாயோ? 4.
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்?-என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி என்னைப் புதியவுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து -என்றும் தன்னை மிகத்தெளிவுசெய்து-என்றும்
சந்தோஷங்கொண்டிருக்கச் செய்வாய், 5

Page 308
தோளை வலியுடையதாக்கி-உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி-அரி வாளைக் கொண்டுபிளந்தாலும்-கட்டு
மாறா வுடலுறுதி தந்து-சுடர் நாளைக் கண்டதோர் மலர்போல் -ஒளி நண்ணித் திகழுமுகந்தந்து-மத வேளை வெல்லுமுறை கூறித்-தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும். 6
எண்ணுங்காரியங்களெல்லாம்-வெற்றி
யேறப்புரிந்தருளல் வேண்டும்-தொழில் பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும்-சுவை நண்ணும் பாட்டினொடு தாளம் -மிக
நன்றா வுளத்தழுந்தல் வேண்டும்-பல பண்ணிற்கோடிவகை இன்பம் -நான்
பாடத் திறனடைதல் வேண்டும். 7
கல்லை வயிரமணியாக்கல் -செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும் புல்லை நெல்லெனப்புரிதல்-பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல்-மண்ணை வெல்லத்தினிப்புவரச் செய்தல்-என
விந்தை தோன்றிடஇந்நாட்டை-நான் தொல்லை தீர்த்துயர்வு கல்வி-வெற்றி
சூழும் வீரமறிவாண்மை. 8
கூடுந் திரவியத்தின் குவைகள் -திறல்
கொள்ளுங்கோடிவகைத் தொழில்கள் - இவை நாடும் படிக்குவினை செய்து-இந்த
நாட்டோர் கீர்த்தியெங்குமோங்கக்-கலி சாடுந் திறனெனக்குத் தருவாய்-அடி தாயே!உனக்கரிய துண்டோ? -மதி மூடும் பொய்ம்மையிரு ளெல்லாம் -எனை
முற்றும் விட்டகல வேண்டும். 9
ஐயம் தீர்த்துவிடல் வேண்டும்-புலை
அச்சம் போயொழிதல் வேண்டும்-பல பையச்சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா -எனை உய்யக் கொண்டருள வேண்டும்-அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் -இனி வையத் தலைமையெனக் கருள்வாய்-அன்னை
வாழிநின்னதருள் வாழி!
ஓம் காளி; வலிய சாமுண்டி ஓங்காரத் தலைவி என் இராணி
C28O ш09

மஹா சக்தி பஞ்சகம்
கரணமுந்தனுவும் நினக்கெனத் தந்தேன்,
காளிநீகாத்தருள் செய்யே; மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்;
மாரவெம்பேயினை அஞ்சேன், இரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்; சரணமென்றுனது பதமலர் பணிந்தேன்;
தாயெனைக் காத்தலுன் கடனே. 1
எண்ணிலாப் பொருளும்,எல்லையில் வெளியும்
யாவுமாம் நின்றனைப் போற்றி மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ்செறினும் மயங்கிலேன், மனமெனும் பெயர் கொள் கண்ணிலாப்பேயை எள்ளுவேன்; இனியெக்
காலுமே அமைதியிலிருப்பேன்; தண்ணிலா முடியிற் புனைந்துநின்றிலகும்
தாயுனைச் சரண்புகுந்தேனால், 2
நீசருக்கினிதாந்தனத்தினும், மாதர்
நினைப்பினும், நெறியிலா மாக்கள் மாசுறு பொய்ந்நட் பதனினும், பன்னாள்
மயங்கினேன்; அவையினிமதியேன்; தேசுறுநீல நிறத்தினாள், அறிவாய்ச்
சிந்தையிற் குலவிடுதிறத்தாள், வீசுறுங்காற்றில் நெருப்பினில் வெளியில்
விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன். 3
ஐயமுந் திகைப்புந்தொலைந்தன; ஆங்கே
அச்சமுந்தொலைந்தது; சினமும் பொய்யுமென்றினைய புன்மைகளெல்லாம்
போயின உறுதிநான் கண்டேன், வையமிங்கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத் துய்யவெண்ணிறத்தாள்தனைக்கரியவளைத்
துணையெனத் தொடர்ந்தது கொண்டே 4
தவத்தினை எளிதாப்புரிந்தனள், யோகத்
தனிநிலை ஒளியெனப்புரிந்தாள்; சிவத்தினை இனிதாப்புரிந்தனள், மூடச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள், பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம் பான்மைகொன்றவள்மயம் புரிந்தாள்; அவத்தினைக் களைந்தாள் அறிவென -விளைந்தாள்;
அநந்தமா வாழ்கயிங்கவளே! 5
பூரபதிழறி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 309
மஹா சக்தி வாழ்த்து
விண்டுரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான் வெளியென -நின்றனை; அண்ட கோடிகள் வானில் அமைத்தனை,
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை, மண்டலத்தை அணுவணுவாக்கினால்,
வருவதெத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே நினைக் காளியென்றேத்துவேன். 1
நாடு காக்கும் அரசன் தனையந்த
நாட்டுளோர்அர சென்றறிவார்எனில்; பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
பண்ணும் அப்பன் இவனென்றறிந்திடும்; கோடியண்டம் இயக்கியளிக்கும்நின் கோலம் ஏழை குறித்திடலாகுமோ? நாடியிச்சிறுபூமியிற் காணுநின்
நலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே. 2
பரிதியென்னும் பொருளிடையேய்ந்தனை,
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை, கரிய மேகத்திரளெனச் செல்லுவை,
காலு மின்னென வந்துயிர் கொல்லுவை; சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை; சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை; விரியும் நீள்கடலென்ன நிறைந்தனை,
வெல்க காளியெனதம்மை வெல்கவே. 3
வாயுவாகி வெளியை அளந்தனை,
வாழ்வெதற்கும் உயிர்நிலை ஆயினை தேயுவாகி ஒளியருள் செய்குவை,
செத்தவற்றைக் கருப்பொருள் ஆக்குவை; பாயுமாயிரஞ்சக்திகளாகியே
பாரிலுள்ள தொழில்கள் இயற்றுவை; சாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை 4.
மயூரமங்கலம்

நிலத்தின் கீழ்பல்லுலோகங்கள் ஆயினை,
நீரின் கீழெண்ணிலாநிதி வைத்தனை, தலத்தின் மீது மலையும் நதிகளும்,
சாருங்காடுஞ்சுனைகளும் ஆயினை, குலத்திலெண்ணற்ற பூண்டுபயிரினம்
கூட்டி வைத்துப் பலநலந்துய்த்தனை, புலத்தையிட்டிங்குயிர்கள்செய்தாய்,அன்னே!
போற்றி போற்றி நினதருள் போற்றியே 5
சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்
செய்த கர்மப் பயனெனப்பல்கினை; தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கியெற்றிடுங்காற்றுமுள்ளோட்டமுஞ் சுத்த மோனப்பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் சுட்டவெந்நீருமென்று ஒத்த நீர்க்கடல் போலப் பலவகை
உள்ள மென்னுங்கடலில் அமைத்தனை 6
ஊழிக்கூத்து
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட -வெறும்
வெளியிலிரத்தக் களியொடு பூதம் பாடப்-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் -களித்
தாடுங் காளி சாமுண் டீகங்காளி
அன்னை அன்னை ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை. f
ஐந்துறு பூதம் சிந்தப் போயொன் றாகப் -பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக -அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே முடியா நடனம் புரிவாய், அடுதீ சொரிவாய்
அன்னை அன்னை ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை 2
பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் -சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்"ஓஹோஹோ"வென்றலைய-வெறித்
துறுமித் திரிவாய், செருவெங் கூத்தே புரிவாய்
அன்னை அன்னை ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை. 3

Page 310
சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் -சட்டச் சடசட சட்டென்றுடைபடு தாளங்கொட்டி -அங்கே
எத்திக் கினிலும் நின்விழியனல்போய் எட்டித் -தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை. 4.
காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும் -அங்கே
கடவுள் மோனத்தொளியே தனியா யிலகும் -சிவன்
கோலங்கண்டுன் கனல் செய்சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்
அன்னை அன்னை ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை. 5
காளிக்குச் சமர்ப்பணம்
இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத்தேழு வருடங்கள் காத்தனன்; வந்தனம்; அடி பேரருள் அன்னாய்
வைர வீதிறற் சாமுண்டி காளி சிந்தனை தெளிந்தேனினியுன்றன்
திருவருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்; வந்திருந்து பலபயனாகும்
வகைதெரிந்துகொள் வாழியடிநீ.
காளி தருவாள்
எண்ணிலாத பொருட்குவை தானும்,
ஏற்றமும், புவியாட்சியும் ஆங்கே விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்
வெம்மையும்பெருந் திண்மையும் அறிவும், தண்ணிலாவின் அமைதியும் அருளும்,
தருவள் இன்றென தன்னையென் காளி மண்ணிலார்க்குந்துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை வண்மிசைமாய்ப்பேன். 1
தானம் வேள்வி தவங்கல்வியாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன், வானம் மூன்று மழைதரச் செய்வேன்,
மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; மானம் வீரியம் ஆண்மைநன்னேர்மை
வண்மையாவும் வழங்குறச் செய்வேன், ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்,
நான்விரும்பிய காளி தருவாள். 2

மஹா காளியின் புகழ் காவடிச் சிந்து ராகம் - ஆனந்த பைரவி தாளம் - ஆதி
காலமாம் வனத்திலண்டக் கோலமாமரத்தின்மீது காளிசக்தியென்றபெயர் கொண்டு-fங் காரமிட் டுலவுமொரு வண்டு-தழல் காலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும் கால்களாறுடையதெனக் கண்டு-மறை காணுமுணிவோருரைத்தார் பண்டு. மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணுமண்ணுமானசக்தி வெள்ளம் -இந்த விந்தையெல்லாம் மாங்கதுசெய் கள்ளம்-பழ வேதமாயதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக வேண்டும் நித்த மென்றனேழையுள்ளம்.
அன்புவடிவாகிநிற்பள் துன்பெலாமவளிழைப்பாள் ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை -இதை ஆர்ந்துணர்ந்தவர்களுக்குண்டுய்கை-அவள் ஆதியாயநாதியா யகண்டறிவாவளுன்றன் அறிவுமவள் மேனியிலோர் சைகை -அவள்
ஆனந்தத்தினெல்லையற்ற பொய்கை இன்பவடிவாகிநிற்பள் துன்பெலாமவளிழைப்பாள்
இஃதெலாமவள்புரியும் மாயை-அவள் ஏதுமற்ற மெய்பொருளின் சாயை-எனில் எண்ணியேஒம்சக்தியெனும்புண்ணியமுனிவர்நித்தம்
எய்துவார்மெய்ஞ்ஞானமெனுந்தீயை-எரித்து ஏற்றுவாரிந் நானெனும் பொய்ப்-பேயை 2
ஆதியாஞ்சிவனுமவன் சோதியான சக்தியுந்தான் அங்குமிங்குமெங்குமுள வாகும்-ஒன்றே யாகினாலுலகனைத்தும் சாகும்-அவை யன்றியோர்பொருளுமிலை அன்றியொன்றும்மில்லை ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்த அறிவுதான் பரமஞான மாகும். நீதியா மரசுசெய்வார் நிதிகள்பல கோடிதுய்ப்பர் நீண்டகாலம் வாழ்வர்தரை மீது -அந்த நெறியுமெய்து வர்நினைத்த போது -அந்த நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங்காளிபத
நீழலடைந்ததார்க்கில்லையோர் தீது-என்றும் நேர்மைவேதம் சொல்லும்வழியீது. 3
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 311
வெற்றி
எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றிமற்றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி, வேண்டினேனுக் கருளினள் காளி, தடுத்து நிற்பது தெய்வதமேனும்
சாகுமானுடமாயினும் அஃதைப் படுத்துமாய்ப்பாள் அருட்பெருங்காளி, பாரில் வெற்றி எனக்குறுமாறே.
எண்ணுமெண்ணங்கள் யாவினும் வெற்றி, எங்கும் வெற்றி, எதனினும் வெற்றி, கண்ணுமாருயிரும்மென நின்றாள்
காளித்தாயிங் கெனக்கருள் செய்தாள்; மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ? விண்ணுளோர்பணிந்தேவல்செய்யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே.
முத்துமாரி
உலகத்துநாயகியே!-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி உன் பாதம் சரண்புகுந்தோம், -எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி கலகத் தரக்கர்பலர், -எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி கருத்தினுள்ளே புகுந்துவிட்டார்-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி பலகற்றும் பலகேட்டும், -எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி பயனொன்றுமில்லையடி-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி நின்பாதம் சரண்புகுந்தோம்-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி
மயூரமங்கலம்
2

துணிவெளுக்க மண்ணுண்டு, -எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி தோல்வெளுக்கச் சாம்பருண்டு -எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி மணிவெளுக்கச் சாணையுண்டு-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி மனம் வெளுக்க வழியில்லை -எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி பிணிகளுக்கு மாற்றுண்டு, -எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி பேதைமைக்கு மாற்றில்லை, -எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி அணிகளுக்கொரெல்லையில்லாய், எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி அடைக்கலமிங் குனைப்புகுந்தோம், எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி 2
தேச முத்துமாரி
தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்துமாரி கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந்தருவாய் 1
பாடியுனைச் சரணடைந்தேன்,பாசமெல்லாங்களைவாய் G ந்செய்திடுவாய் ளெல்லாந்தீர்ப்பாய் 2
எப்பொழுதுங்கவலையிலே இணங்கிநிற்பான் பாவி ப்பியுனதேவல்செய்வேன் உனதருளல்வாழ்வேன். 3
சக்தியென்று நேரமெல்லாந்தமிழ்க் கவிதை பாடி, பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும். 4
ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்; யாதானுந்தொழில்புரிவோம்;யாதுமவள் தொழிலாம். 5
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந்திடுவோம் இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள். 6
நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு
h ச்சுரண்புகுந்தால் அதி ம்ெ 血7

Page 312
கோமதி மஹிமை
தாருக வனத்திலே - சிவன்
சரணநன் மலரிடையுளம்பதித்துச் சீருறத் தவம் புரிவார் - பர
சிவன்புகழமுதினை அருந்திடுவார். பேருயர் முனிவர் முன்னே - கல்விப்
பெருங்கடல்பருகிய சூதனென்பான் தேருமெய்ஞ்ஞானத்தினால்-உயர்
சிவனிகர் முனிவரன் செப்புகின்றான். 1
“வாழிய,முனிவர்களே! - புகழ்
வளர்ந்திடுஞ்சங்கரன் கோயிலிலே ஊழியைச் சமைத்த பிரான் - இந்த
உலகமெலாமுருக் கொண்டபிரான், ஏழிருபுவனத்திலும் - என்றும்
இயல்பெரும் உயிர்களுக்குயிராவான் ஆழுநல்லறிவாவான், - ஒளி
யறிவினைக் கடந்தமெய்ப்பொருளவான்.2 தேவர்க்கெலாந்தேவன், - உயர்
சிவபெருமான்பண்டொர் காலத்திலே காவலினுலகளிக்கும் - அந்தக்
கண்ணனுந்தானுமிங்கோருருவாய், ஆவலொ டருந்தவங்கள் - பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே மேவிநின்றருள்புரிந்தான், - அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன். 3 கேளிர், முனிவர்களே! - இந்தக்
கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே வேள்விகள் கோடிசெய்தால் - சதுர்
வேதங்களாயிரமுறைபடித்தால், மூளுநற் புண்ணியந்தான் - வந்து
மொய்த்திடும்; சிவனியல் விளங்கிநிற்கும்; நாளுநற்செல்வங்கள் - பல
நணுகிடும்; சரதமெய் வாழ்வுண்டாம். 4. இக்கதை உரைத்திடுவேன், -உளம்
இன்புறக் கேட்பீர்,முனிவர்களே! நக்கபிரானருளல்-இங்கு s
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம் தொக்கன அண்டங்கள்-வளர்
தொகைபல கோடிபல் கோடிகளம் இக்கணக்கெவரறிவார்-புவி
எத்தனையுளதென்பதியாரறிவார்? 5
G28

நக்க பிரானறிவான்;-மற்று
நானறியேன்பிற நரரறியார்; தொக்கபேரண்டங்கள்-கொண்ட
தொகைக்கெல்லையில்லையென்று சொல்லுகின்ற தக்கபல் சாத்திரங்கள் ஒளி
தருகின்ற வானமொர் கடல்போலாம்; அக்கடலதனுக்கே -எங்கும்
அக்கரை இக்கரை யொன்றில்லையாம். 6
இக்கடலதனகத்தே-அங்கங்
கிடையிடைத்தோன்றும்புன்குமிழிகள் போல் தொக்கன உலகங்கள்;-திசைத்
தூவெளியதனிடை விரைந்தோடும்; மிக்கதொர் வியப்புடைத்தாம் -இந்த
வியன்பெருவையத்தின் காட்சி காண்டீர்; மெய்க்கலை முனிவர்களே! - இதன்
மெய்ப்பொருள் பரசிவன் சக்திகண்டீர் 7
எல்லையுண்டோஇலையோ? -இங்கு
யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?
சொல்லுமொர் வரம்பிட்டால்-அதை 8
LSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0 (இது முற்றுப் பெறவில்லை)
திருக்காதல்
திருவேநினைக்காதல்கொண்டேனே-நினதுதிரு உருவே மறவாதிருந்தேனே - பல திசையில் தேடித்திரிந்திளைத் தேனே - நினக்கு மனம் வாடித் தினங்களைத் தேனே - அடி, நினது பருவம் பொறுத்திருந்தேனே - மிகவும் கருவம் படைத்திருந்தேனே - இடை நடுவில் பையச் சதிகள்செய்தாயே - அதனிலுமென் மையல் வளர்தல் கண்டாயே - அமுதமழை பெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில் உய்யக்கருணைசெய்வாயே-பெருமைகொண்டு வையந் தழைக்கவைப்பேனே - அமரயுகஞ் செய்யத் துணிந்துநிற்பேனே - அடியெனது தேனே! எனதிருகண்ணே-எனையுகந்து தானே! வருந்திருப்-பெண்ணே!
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 313
திருவேட்கை ராகம் -நாட்டை தாளம் - சதுஸ்ர ஏகம்
மலரின் மேவு திருவே - உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்; நிலவு செய்யும் முகமும் - காண்பார்
நினைவழிக்கும் விழியும், கலகலென்ற மொழியும் - தெய்வக்
களிது லங்கு நகையும் இலகு செல்வ வடிவும் - கண்டுன்
இன்பம் வேண்டுகின்றேன். 1 கமல மேவும் திருவே! நின்மேல்
காதலாகி நின்றேன் குமரி தன்னை இங்கே - பெற்றோர்
கோடியின்பமுற்றார்; அமரர் போல வாழ்வேன், -என்மேல் அன்புகொள்வையாயின்; இமய வெற்பின் மோத,-நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன். 2
வாணி தன்னை என்றும் - நினது
வரிசை பாட வைப்பேன்! நாணியேக லாமோ? என்னை நன்கறிந்திலாயோ? பேணி வைய மெல்லாம் - நன்மை பெருக வைக்கும் விரதம் பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்
பொறிகளாவரன்றோ? 3
பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய்
பூண்களேந்திவந்தாய் மின்னு நின்றன் வடிவிற்பணிகள்
மேவி நிற்கும் அழகை என்னுரைப்பனேடி - திருவே
என்னுயிர்க்கொரமுதே நின்னை மார்பு சேரத் - தழுவி
நிகரிலாது வாழ்வேன். 4. செல்வமெட்டு மெய்தி-நின்னாற் செம்மையேறி வாழ்வேன்; இல்லை என்ற கொடுமை-உலகில்
இல்லையாக வைப்பேன்; முல்லை போன்ற முறுவல் - காட்டி
மோக வாதை நீக்கி, எல்லையற்ற சுவையே! - எனை நீ
என்றும் வாழ வைப்பாய். 5
மயூரமங்கலம்

திருமகள் துதி
ராகம் - சக்கர வாகம் தாளம் - திஸ்ர ஏகம்
நித்தமுனை வேண்டி மனம்
நினைப்பதெல்லாம் நீயாய்ப் பித்தனைப்போல் வாழ்வதிலே
பெருமையுண்டோ? திருவே சித்தவுறுதிகொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றிகொண்டே உத்தமநிலை சேர்வரென்றே
உயர்ந்த வேத முரைப்பதெல்லாம் சுத்த வெறும் பொய்யோடீ? சுடர் மணியே திருவே மெத்தமையல் கொண்டு விட்டேன்
மேவிடுவாய், திருவே
உன்னையன்றி இன்பமுண்டோ
உலகமிசை வேறே? பொன்னை வடிவென்றுடையாய்
புத்தமுதே, திருவே மின்னொளிதருநன் மணிகள்
மேடையுயர்ந்த மாளிகைகள் வண்ணமுடைய தாமரைப்பூ
மணிக்குளமுள்ள சோலைகளும்; அன்னம் நறுநெய்பாலும்
அதிசயமாத் தருவாய் நின்னருளை வாழ்த்தி என்றும்
நிலைத்திருப்பேன், திருவே 2
ஆடுகளும் மாடுகளும்
அழகுடைய பளியும் வீடுகளும் நெடுநிலமும்
விரைவினிலே தருவாய் ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
எனக்குணையன்றிச் சரணுமுண்டோ? வாடு நிலத்தைக் கண்டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ? நாடு மணிச் செல்வமெல்லாம்
நன்கருள்வாய்,திருவே பீடுடைய வான் பொருளே
பெருங்களியே திருவே 3

Page 314
திருமகளைச் சரண் புகுதல்
மாதவன் சக்தியினைச் -செய்ய
மலர்வளர்மணியினை வாழ்த்திடுவோம்; போதுமிவ் வறுமையெலாம்-எந்தப்
போதிலுங் சிறுமையின் புகைதனிலே வேதனைப்படுமனமும் -உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும் வாதனை பொறுக்கவில்லை -அன்னை
மாமக ளடியிணை சரண் புகுவோம். 1
கீழ்களின் அவமதிப்பு- தொழில்
கெட்டவரிணக்கமும் கிணற்றினுள்ளே மூழ்கிய விளக்கினைப்போல் - செய்யும்
முயற்சியெல்லாங்கெட்டு முடிவதுவும் ஏழ்கடலோடியுமோர் -பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும், வீழ்கஇக் கொடுநோய்தான் -வைய
மீதினில்வறுமையோர்கொடுமையன்றோ? 2
பாற்கடலிடைப்பிறந்தாள்-அது
பயந்தநல்லமுதத்தின் பன்மைகொண்டாள்; ஏற்குமோர் தாமரைப்பூ - அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்; நாற்கரந்தானுடையாள் -அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்; வேற்கருவிழிபுடையாள் -செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள். 3
நாராணன் மார்பினிலே -அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்; தோரணப்பந்தரிலும் -பசுத்
தொழுவிலும் சுடர்மணிமாடத்திலும், வீரர்தந் தோளினிலும்-உடல்
வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் பாரதி சிரத்தினிலும் -ஒளி
பரவிட வீற்றிருந்தருள் புரிவாள். 4
286

பொன்னிலும் மணிகளிலும்-நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும், கன்னியர் நகைப்பினிலும் -செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும், முன்னிய துணிவினிலும்-மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் பன்னிநற் புகழ்பாடி-அவள்
பதமலர் வாழ்த்திநற்பதம்பெறுவோம். 5
மண்ணினுட் கனிகளிலும்-மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும் புண்ணிய வேள்வியிலும் -உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும் பண்ணுநற்பாவையிலும்-நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும் நண்ணிய தேவிதனை-எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம். 6
வெற்றிகொள் படையினிலும் -பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும், நற்றவ நடையினிலும் -நல்ல
நாவலர் தேமொழித்தொடரினிலும் உற்றசெந்திருத்தாயை-நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்; கற்றபல் கலைகளெல்லாம்-அவள்
கருணைநல்லொளிபெறக்கலிதவிர்ப்போம் 7
கலைமகளை வேண்டுதல்
நொண்டிச் சிந்து
எங்ங்ணம் சென்றிருந்தீர்? - எனது
இன்னுயிரே! என்றன் இசையமுதே திங்களைக் கண்டவுடன் - கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன், கங்குலைப்பார்த்தவுடன் - இங்கு
காலையில் இரவியைத் தொழுதவுடன், பொங்குவீர் அமிழ்தெனவே - அந்தப்
புதுமையிலேதுயர் மறந்திருப்பேன்.
மயூரபதி பூg பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 315
மாதமொர் நான்காநீர் - அன்பு
வறுமையிலேயெனை வீழ்த்திவிட்டீர்; பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன் பாவமெலாங்கெட்டு ஞானகங்கை நாதமொ டெப்பொழுதும் - என்றன்
நாவினிலேபொழிந்திடவேண்டும்; வேதங்களாக்கிடுவீர்!- அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்! 2
கண்மணி போன்றவரே! இங்குக்
காலையும் மாலையும் திருமகளாம் பெண்மணியின்பத்தையும் - சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும் வண்மையில் ஒதிடுவீர்! - என்றன்
வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்! அண்மையில் இருந்திடுவீர்-இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ 3
தானெனும் பேய்கெடவே, - பல
சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே, வானெனும் ஒளிபெறவே, - நல்ல
வாய்மையிலேமதி நிலைத்திடவே, தேனெனப்பொழிந்திடுவீர்!-அந்தக்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்! ஊனங்கள் போக்கிடுவீர்-நல்ல
ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர் 4
தீயினை நிறுத்திடுவீர்! - நல்ல
தீரமுந் தெளிவுமிங்கருள்புரிவீர்! மாயையில் அறிவிழந்தே -உம்மை
மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம், தாயென உமைப்பணிந்தேன் - பொறை
சார்த்திநல்லருள்செய வேண்டுகின்றேன் வாயினிற் சபதமிட்டேன், -இனி
மறக்ககி லேன், எனை மறக்ககிலீர்! 5
மயூரமங்கலம்

வெள்ளைத் தாமரை ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சாப்பு
வெள்ளைத் தாமரைப்பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்,
கொள்ளையின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்நின்றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்.1
(வெள்ளைத்) மாதர் தீங்குரற்பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்; கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங்கொண்டாள்; கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவுச் சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடிவாகிடப் பெற்றாள். 2
(வெள்ளைத்) வஞ்ச மற்ற தொழில்புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்; வெஞ்சமர்க்குயிராகிய கொல்லர்
வித்தையோர்ந்திடு சிற்பியர், தச்சர், மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர் பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறிவாகிய தெய்வம். 3
(வெள்ளைத்) தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந்தெய்வம்; உய்வ மென்ற கருத்துடையோர்கள்
உயிரினுக்குயிராகிய தெய்வம்;
செய்வமென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்; கைவருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். 4
(வெள்ளைத்) செந்தமிழ்மணிநாட்டிடையுள்ளிர்
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்! வந்தனம்இவட்கேசெய்வதென்றால்
வாழியஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல் சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம்இவள் பூசனையன்றாம் 5
(வெள்ளைத்)

Page 316
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி; நாடு முற்றிலும் உள்ளனவூர்கள்
நகர்களெங்கும்பலபல பள்ளி; தேடு கல்வியிலாததொரூரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். 6
(வெள்ளைத்) ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற்றொளிபெறுநாடு; சேன கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம் தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்கடற்கப் புறத்தினில் இன்னும் காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந்தோங்க 7
(வெள்ளைத்) ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்! ஊனம் இன்று பெரிதிழைக்கின்றீர்!
ஓங்கு கல்வியுழைப்பை மறந்தீர்! மான மற்று விலங்குகளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ? போனதற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்பமுயலுவம் வாரீர்! 8
(வெள்ளைத்) இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம்பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர்விளங்கியொளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல். 9
(வெள்ளைத்)
நிதிமிகுந்தவர் பொற்குவைதாரீர்!
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர் அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளிர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்! மதுரத் தேமொழி மாதர்களெல்லாம் வாணிபூசைக்குரியன பேசீர்! எதுவும் நல்கியிங் கெவ்வகையானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்! 10
(வெள்ளைத்)
288

நவராத்திரிப்பாட்டு (மாதா பராசக்தி) பராசக்தி (மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)
மாதா பராசக்திவையமெல்லாம் நீநிறைந்தாய்! ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப்பாரினிலே! ஏதாயினும் வழி நீசொல்வாய் எமதுயிரே! வேதாவின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே. 1.
வாணி வாணிகலைத்தெய்வம் மணிவாக்குதவிடுவாள் ஆணிமுத்தைப்போலே அறிவுமுத்துமாலையினாள் காணுகின்றகாட்சியாய்க் காண்பெ வ்காட்டு மானுயர்ந் நிற்பாள் மலரடியே சூழ்வோமே. 2
பூEரீதேவி பொன்னரசிநாரணனார் தேவி, புகழரசி மின்னுநவரத்தினம்போல் மேனியழகுடையாள், அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள்,ழரீதேவி தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. 3
பார்வதி மலையிலேதான்பிறந்தாள்,சங்கரணைமாலையிட்டாள், உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள் நிலையில் உயர்ந்திடுவாள், நேரே அவள்பாதம் தலையிலே தாங்கித்தரணிமிசை வாழ்வோமே. 4
மூன்று காதல்
முதலாவது - சரஸ்வதி காதல்
ராகம் - எலரஸ்வதி மனோஹரி தாளம் - திஸ்ர ரகம்
பிள்ளைப் பிராயத்திலே - அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு பள்ளிப்படிப்பினிலே - மதி
பற்றிட வில்லையெனிலுந் தனிப்பட வெள்ளை மலரணைமேல் - அவள்
வீணையுங்கையும் விரிந்த முகமலர் விள்ளும் பொருளமுதம்-கண்டென்
வெள்ளை மனது பறிகொடுத்தேன், அம்மா! 1
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 317
ஆடிவருகையிலே - அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள் ; கையில் ஏடு தரித்திருப்பாள் - அதில்
இங்கிதமாகப் பதம்படிப்பாள், அதை நாடி யருகனைந்தால் - பல
ஞானங்கள் சொல்லிஇனிமைசெய்வாள்,"இன்று கூடி மகிழ்வ”மென்றால் விழிக்
கோணத்திலேநகைகாட்டிச்செல்வாள்,அம்மா! 2
ஆற்றங்கரைதனிலே - தனி
யானதோர் மண்டபமீதினிலே, தென்றற் காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை ஏற்று மனமகிழ்ந்தே-அடி
என்னோ டிணங்கி, மணம்புரிவாய்” என்று போற்றிய போதினிலே - இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாள்; அம்மா! 3
சித்தந்தளர்ந்ததுண்டோ? - கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு பித்துப்பிடித்ததுபோல்-பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவையல்லால் - பிற
வாஞ்சையுண்டோ? வயதங்ங்ண மேயிரு பத்திரண்டாமளவும்-வெள்ளைப்
பண்மகள் காதலைப்பற்றிநின்றேன்,அம்மா! 4
இரண்டாவது- லசுஷ்மி காதல்
ராகம் - பூஞரீராகம் தாளம் - திஸ்ர ஏகம்
இந்த நிலையினிலே - அங்கொர்
இன்பப்பொழிலினிடையினில் வேறொரு சுந்தரி வந்துநின்றாள் - அவள்
சோதிமுகத்தின் அழகினைக் கண்டென்றன் சிந்தை திறைகொடுத்தேன் - அவள்
செந்திருவென்றுபெயர் சொல்லினாள்;மற்றும் அந்தத்தன முதலா - நெஞ்சம்
ஆரத் தழுவிடவேண்டுகின்றேன், அம்மா! 5
மயூரமங்கலம்

புன்னகை செய்திடுவாள் -அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்; சற்றென் முன்னின்று பார்த்திடுவாள் - அந்த
மோகத்திலேதலை சுற்றிடுங் காண்; பின்னர் என்ன பிழைகள் கண்டோ - அவள்
என்னைப் புறக்கணித்தேகிடுவாள்; அங்கு சின்னமும் பின்னமுமா - மனஞ்
சிந்தியுளமிக நொந்திடுவேன், அம்மா! 6
காட்டு வழிகளிலே - மலைக்
காட்சியிலே, புனல் வீழ்ச்சியிலே, பல நாட்டுப்புறங்களிலே - நகர்
நண்ணு சிலசுடர் மாடத்திலே, சில வேட்டுவர் சார்பினிலே - சில
வீரரிடத்திலும், வேந்த ரிடத்திலும், மீட்டுமவள்வருவாள் - கண்ட
፴ኽ பிலேயின்பமேற்கொண்டுபோம்.அம்மா 7
மூன்றாவது - காளி காதல்
ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்
பின்னொர் இராவினிலே - கரும்
பெண்மையழகொன்று வந்தது கண்முன்பு கன்னி வடிவமென்றே - களி
கண்டு சற்றேயருகிற்சென்று பார்க்கையில் அன்னை வடிவமடா! - இவள்
ஆதிபராசக்திதேவியடா-இவள் இன்னருள் வேண்டுமடா பின்னர்
யாவுமுலகில் வசப்பட்டுப்போமடா! 8
செல்வங்கள் பொங்கிவரும்;-நல்ல
தெள்ளறிவெய்தி நலம்பல சார்ந்திடும் அல்லும் பகலுமிங்கே -இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று வில்லையசைப்பவளை-இந்த
C ம் செய்யம் வினைச்சியைச் தொல்லை தவிர்ப்பவளை-நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடுவோமபா! 9
ஆறு துணை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் -பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஒம். ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி-ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஒம்
289

Page 318
கணபதி ராயன் - அவனிரு
காலைப்பிடித்திடுவோம்;
குண முயர்ந்திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே. (ஒம் சக்தி.)
சொல்லுக்கடங்காவே -பரா சக்தி
சூரத்தனங்களெல்லாம்; வல்லமை தந்திடுவாள் -பரா சக்தி
வாழியென்றே துதிப்போம் (ஒம்சக்தி.) 2
வெற்றி வடிவேலன் -அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்;
சுற்றி நில்லாதே போ! - பகையே
துள்ளி வருகுது வேல். (ஒம்சக்தி.) 3
தாமரைப் பூவினிலே -சுருதியைத்
தனியிருந்துரைப்பாள்
பூமணித் தாளினையே - கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். ஓம்சக்தி.) 4.
பாம்புத் தலைமேலே - நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ் வோம்;
மாம்பழ வாயினிலே - குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்; ஓம்சக்தி.) 5
செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி
திக்க னைத்தும் பரவும். (ஒம் சக்தி.) 6
விடுதலை வெண்பா
சக்திபதமே சரனென்று நாம்புகுந்து பக்தியினாற் பாடிப்பலகாலும் - முக்தி நிலை காண்போம், அதனாற் கவலைப்பிணிதீர்ந்து பூண்போம் அமரப் பொறி.
பொறிகிந்து வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ வெறிகொண்டால் ஆங்கதுவேவிபாம்-நெறிகொண்ட வையமெலாந்தெய்வ வலியன்றி வேறில்லை ஐயமெலாந்தீர்ந்த தறிவு. 2
Lo

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும், வறிஞராய்ப்பூமியிலே வாழ்வீர்!- குறி கண்டு செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும் வெல்வயிரச்சீர்மிகுந்த வேல். 3.
வேலைப்பணிந்தால் விடுதலையாம்; வேல்முருகன் காலைப்பணிந்தால் கவலைபோம்-மேலறிவு தன்னாலேதான்பெற்று, சக்திசக்தி சக்தியென்று சொன்னால் அதுவே சுகம், 4.
சுகத்தினைநான் வேண்டித்தொழுதேன்,எப்போதும் அகத்தினிலே துன்புற்றழுதேன் - யுகத்தினிலோர் மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
ஆறுதலைத் தந்தாள் அவள். 5
ஜயம் உண்டு
ராகம் - கமாஸ் தாளம் - ஆதி
பல்லவி ஜயமுண்டு பயமில்லை மனமே! - இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய)
அதுபல்லவி பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற் பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)
சரணங்கள் 1 புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி
பொற்பாதமுண்டு அதன் மேலே, நியமமெல்லாம்சக்தி நினைவன்றிப்பிறிதில்லை; நெறியுண்டு, குறியுண்டு; குலசக்தி
வெறியுண்டு. (ஜய) 2. மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
வலியுண்டு தீமையைப் பேர்க்கும்; விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு;
குறைவில்லை; விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு (ஜய) 3. அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
அருளென்னுந்தோணியினாலே, தொலையெட்டிச் ற்றுத்துயரற்றுவிடுபட்டுத் துணிவுற்றகுலசக்திசரணத்தில்முடிதொட்டு (ஜய)
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 319
வள்ளிப் பாட்டு -1
பல்லவி எந்த நேரமும்நின்மையல் ஏறுதe குற வள்ளி சிறு கள்ளி
சரணங்கள் 1. (இந்த) நேரத்திலேமலை வாரத்திலேநதி
யோரத்திலேயுனைக் கூடி-நின்றன் வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம் மிக்க மகிழ்ச்சிகொண்டாடி-குழல் பாரத்திலேஇதழிரத்திலேமுலை
யோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம் ஆரத் தழுவி அமரநிலைபெற்றதன்
பயனையின்று காண்பேன். (எந்த நேரமும்)
2. வெள்ளை நிலாவிங்குவானத்தை மூடி
விரிந்து மொழிவது கண்டாய்-ஒளிக்
கொள்ளையிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பினிலேயொன்று பட்டு-நின்றன்
பிள்ளைக் கிளிமென் குதலையிலேமனம் பின்ன மறச் சொல்லவிட்டு-அடி
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வமே நினைச்
சேர விரும்பினன் கண்டாய் (எந்த நேரமும்)
மயூரமங்கலம்
 

3. வட்டங்களிட்டுங்குளமகலாத
மணிப்பெருந்தெப்பத்தைப் போலே-நினை
விட்டு விட்டுப்பலலீலைகள் செய்துநின்
மேனிதனைவிட லின்றி-அடி
எட்டுத் திசையும் ஒளிந்திடுங்காலை
இரவியைப் போன்ற முகத்தாய்-முத்தம்
இட்டுப் பலமுத்தமிட்டுப் பலமுத்தம்
இட்டுனைச்சேர்ந்திடவந்தேன். (எந்த நேரமும்)
வள்ளிப் பாட்டு - 2
Waasah - 4062/Duttfau/ தானம் - ஆதி
பல்லவி
உனையே மயல் கொண்டேன், - வள்ளி உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்!
(உனையே)
சரணம் எனையாள்வாய், வள்ளி வள்ளி இளமையி லே' என் இதயமலர் வாழ்வே கனியேசுவையுறு தேனே கலவியிலேஅமு தனையாய் - (கலவியிலே) தனியே, ஞான விழியாய் நிலவினில் நினை மருவி, வள்ளி வள்ளி நீயா கிடவே வந்தேன். (உனையே)

Page 320
292
பூனி மஹி
அயிகிரிநந்தினி, நந்தி கிரிவரவிந்த்ய சிரோதி பகவதிஹேசிதிகண்ட ஜயஜய ஹே மஹிஷா
ஸரவர வர்ஷிணி துர் த்ரிபுவன போஷிணிக தநுஜநிரோஷிணி துர் ஜயஜய ஹே மஹிஷா
அயிஜகதம்ப கதம்பவ சிகரிசிரோமணி துங் மதுமதுரேமதுகைதவ ஜயஜய ஹேமஹிஷாலி
அயிநிஜ ஹங்க்ருதிய ஸமரவிசோனித பீஜ சிவ சிவ கம்யநிகம்ய
ஜயஜய ஹே மஹிஷா
அயிபோ சதமக கண் ரிபுகஜகண்ட விதார6 நிஜபுஜகண்ட நிவாரி ஜயஜய ஹே மஹிஷா
 
 
 

சக்தி
b8லாகங்கள்
ஷாஸ"ர மர்தினிஸ்தோத்ரம்
தெ மோதிநி, விச்வவிநோதிநி நந்தநுதே தி நிவாஸிநி, விஷ்ணுவிலாஸிநிஜிஷ்ணுறுதே
குடும்பிநி, பூரிகுடும்பிநி, பூரிக்ருதே ஸுரமர்தினி ரம்யகபர்தினி சைலஸுதே 1
தரதர்ஷிணி துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே Fங்கரதோஷிணி கல்மஷ மோசனி கோரரதே மதசோஷிணி துக்க நிவாரிணி ஸிந்துஸாதே ஸுரமர்தினி ரம்யகபர்தினி சைலஸுதே 1
நப்ரிய வாஸவிலாஸ் நிவாஸரதே கஹிமாலயச்ருங்க நிஜாலய மத்யகதே பஞ்சனி கைடப பஞ்சனி ராஸரதே ஸுரமர்தினி ரம்யக பர்தினி சைலஸுதே 1
ாத்ர நிராக்ருத தூம்ரவிலோசன தூம்ரசிகே ஸமுத்பவ பீஜலதாதிக பீஜலதே மஹாஹவதர்பித பூதபிசாசபதே ஸரமர்தினி ரம்யகபர்தினி சைலஸாதே
டித குண்டலி துண்டித முண்டகஜாதி பதே ன சண்டபராக்ரம சௌண்டம்ரு காதிபதே ! த சண்டநி பாதித முண்ட படாதிபதே ஸுரமர்தினி ரம்யகபர்தினி சைலஸவதே !
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 321
ஹயரணமர்மரசாத்ரவதோர்துரதுர்ஜயநிர்ஜராசக்திப்ருதே சதுரவிதாரதுfணமஹாசிவதூதக்ருதப்ரமதாதிபதே துரித துரீஹதுராசயதுர்மததாநவதுாத துரந்தகதே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினிரம்யகபர்தினிசைலஸுதே
அயிசரணாகதவைரிவதுவரகீரவராயநாசகரே த்ரிபுவனமஸ்தகசூலிவிரோதிநிரோத க்ருதாமலசூலகரே துர்நிமிதாவரதுந்துபிநாதமுஹுர்முகரீக்ருத தீநகரே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினிரம்யகபர்தினிசைசஸதே
ஸ9ரலலனாதததேயிததேயித தாளநிமித்த ஜலாஸ்யரதே ககுபாம்பதிவர தோங்கததாலகதாலகு தூஹலநாதரதே திம்திம் திமிகிடதிந்திமிதத்வநிதீரம்ருதங்கநிநாதரதே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினிரம்யகபர்தினிசைலஸுதேl
ஜனஜணஜணஹிங்க்ருத வரநூபுர சிஞ்சிதமோஹிதபூதபதே நடித நடார் தநடிநடநாயக நாடிக நாடகநாட்யரதே பதநதபாலிநிபாலவிலோசணிபத்மவிலாஸிநிவிச்வதுரே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினிரம்பகபர்தினிசைலஸுதே
தநுஜஸஸங்கரரசுஷ்ணஸங்க பரிஸ்புரதங்க நடத்கடகே கனக விஷங்கவ்ருஷத்கவிஸங்கரஸத்படப்ருங்கஹடாவடகே ஹதசதுரங்க பலகூழிதிரங்க கடத்பகுரங்க வலத்கடகே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினிரம்யகபர்தினிசைலஸாதே
மஹிதமஹாஹவமல்லமதல்லிகவேல்லிகடில்லகபிக்ஷரதே விரசிதவல்லிக வல்லிக வேல்லிகமல்லிகபில்லகவர் கப்ருதே ப்ருதிக்ருதபுல்லஸமுல்லஸிதாருண் பல்லவதல்லஜஸல்லதிகே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினி ரம்யகபர்தினிசைலஸுதே
அயிதவஸமனஸ்ஸுமனஸ்ஸுமனோஹரகாந்திலஸத்கலகாந்தியுதே நூதரஜநீசரநீரஜநீரஜனிகர வக்த்ரவிலாஸக்ருதே ஸநயன வரநயன ஸவிைப்ரமரப்ரமரப்ரமராதிபதே ஜயஜய ஹேமஹிஷாஸுரமர்தினிரம்யகபர்தினிசைலஸுதேl
மயூரமங்கலம்

அவிரள கண்டகமேதுர முன்மத மத்தமதங்கஜராஜகதே த்ரிபுவன பூஷண பூதகளாநிதிருபயோநிதிராஜநுதே அயிஸததீஜனலாலஸமாநஸ்மோஹனமன்மதராஜகதே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினிரம்யகபர்தினிசைலஸுதே
கமலதளமலகோமலகாந்திகளாக லிதாகுலபாலலதே ஸகலகளாநிசயக்ரமகேளிசலத்கலஹம்ஸகுலாலிகுலே அலிகுலஸங்குலகுவலயமண்டிதமெளளிமிலத்ஸமதாலிகுலே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினிரம்யகபர்தினிசைலஸதே
கலமுரளிரவரஞ்சிதகூஜிதகோகிலமஞ்சுலமஞ்சுரவே மிளிதமிளிந்த மனோஹரகும்பிதரஞ்சிதசைல நிகுஞ்சகதே ம்ருககணபூதமஹா சபரீகனரிங்கணஸம்ப்ருதகேளிப்ருதே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினிரம்யகபர்தினிசைலஸுதே
கடிதடி நீததுகூல விசித்ரமயூகஸரஞ்சித சந்திரகலே நிஜகனகாசல மெளளிபயோகத நிர்ஜகுஞ்சர பீமருசே ப்ரணதஸராஸுரமௌளிமணிஸ்புரதம்சுலதாகிகசந்த்ரலதே ஜயஜயஹேமஹிஷாஸரமர்தினி ரம்யகபர்தினிசைலஸுதே
விஜிதஸஹஸ்ரகரைகஸஹஸ்ரஸுதாஸமரூபகரைகநூதே க்ருதஸததாரக ஸங்கரதாரக தாரகஸங்கரஸங்க நுதே கஜமுக ஷண்முக ரஞ்சிதபார்ச்வஸாசோபிதமாநஸ கஞ்சபுடே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினி ரம்யகபர்தினிசைலஸுதே
பதகமலம் கமலாநிலயே வரிவஸ்யதியோ நுதினம்ஸசிவே அயிகமலே விமலேகமலாநில சீகரஸேவ்யமுகாம்புருஹே தவபதமத்யஹி சிவதம் த்ருஷ்டியதம் கதமஸ்துமபின்னசிவே ஜயஜயஹேமஹிஷாஸுரமர்தினிரம்யகபர்தினிசலஸுதஸேl
ஸ்துதிமிதிஸ் திமிதஸ்துஸமாதிநா நியமதோயமதோ நுதினம் படேத் பரமயாரமயா ஸதுஸேவ்யதே பரிஜநோபிஜநோபிசதம்பஜேத்

Page 322
மங்களசண்டிக
தேவீம் ஷோடேச வர்ஷியம் சச் பிம்போஷ்டீம் ஸததிம் சுத்தரம் ச ச்வேத சம்பக வர்ணாபாம் ஸுநீ ஜகத் தாத்ரீம்து ஸர்வேப்ப ஸர் ஸம்ஸார ஸாகரே கோரே ஜ்யோ தேவ்யாச்சத்பானமித்யேவம் ஸ் ரகூடிரகூடி ஜகன்மாத் ; தேவி மங் ஹாரிகே விபதாம் ராஸே ஹர்ல ஹர்ஷ மங்கள தக்ஷேச, ஹர்ஷ ! சுபே மங்கள தக்ஷேஸ சுபே மங் மங்களே மங்களார்ஹேச, ஸர்வ ஸதாம் மங்களதே தேவி ஸர்வே பூஜ்யே மங்கள வாரேச, மங்கள பூஜ்யே மங்கள பூபஸ்ய, மனுவம் மங்களா திஷ்டாத்ருதேவி மங்க ஸம்ஸாரமங்களாதாரே, மோகூ ஸாரேசமங்களாதாரே, பாரேச ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங் ஸ்தோத்ரேணாநேன, சம்புச்சஸ் ப்ரதி மங்களவாரேச பூஜாம் தத் ப்ரதமே பூஜிதா தேவி சிவனே ெ த்விதீயே பூஜிதா ஸாச, மங்களே த்ருதீயே பூஜிதா பத்ர, மங்களே சதுர்த்தே மங்கள வாரே, ஸுந்த பஞ்சமே மங்களா காங்கூழிதரை பூஜிதா ப்ரதி விஸ்வேஷுவிஸ்:ே தத ; ஸர்வத்ர ஸம்பூஜ்யா பபூவ தேவைச்ச முனியிச்வைசமான6 தேவ்யாச்சமங்கள ஸ்தோத்ரம் தன்மங்களம் பவேத் தஸ்ய, நே
வாததே புத்ர பெளத்ரைச்சமங்

ா ஸ்தோத்திரம்
வத்ஸாஸ்திர யெளவநாம் Fரத் பத்ம நிபானனாம் லோத்பல லோசனாம் வ ஸம்பதாம்
தீருபாம் ஸ்தாபஜே தவனம் ச்ரூபவாம் முனே கள சண்டிகே டி மங்கள காரிகே மங்கள தாயிகே கள சண்டிகே
மங்களே மங்களே
ஷாம் மங்களாலயே ாபீஷ்ட தேவதே சஸ்ய ஸந்ததம்
ளானாம்ச மங்களே
மங்கள தாயினி
ஸர்வ கர்மணாம்
வ்கள ஸகேப்ரதே துத்வாமங்கள சண்டிகாம் வா கத சிவ
ஸ்ர்வ மங்களா
ான க்ரஹேணச ன ந்குபேணச நரீபி ப்ரபூஜிதா
மங்கள சண்டிகா வச பூஜிதா ஸதா
பரமேஸ்வரி
வை; மனுபி முனே ப; ச்ருயோதி ஸ்மாஹித : வந்தத மங்களம் களாம்சே தினே தினே :
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 323
o
·*(
மயூரமங்கலம்
ஞான கே ஞான ஸ்க
ஞான ஸத
ஞானா ன
ஆக்கும் ெ பூக்கும் ந6 சேர்க்கும்
காக்கும் க மாதா ஜெ மாதா ஜெ
கற்றும் தெளிய கண்மூடி ( பெற்றும் தெளி பெருகும் ட பற்றும் வயிரப் ட
பகைவர்க்
வற்றாத அருட்
மாதா ஜெ
 
 

லிதாம்பிகை ரத்தின மாலை
OOTeFrt &FJ 600Tuh &FJ 600Th
ந்தா சரணம் சரணம் குரு சரணம் சரணம்
ந்தா சரணம் சரணம்
காப்பு
தாழில் ஐங்கரனாற்றநலம் கையள் புவனேஸ் வரிபால் நவரத்தினமாலையினைக் ணநாயகவா ரணமே! யஒம் லலிதாம்பிகையே
யஒம் லலிதாம்பிகையே
வைரம்
ார் காடே கதியாய்க் நெடுங் கனவான தவம் யார் நிலையென்னில் அவர் பிழையென் பேசத்தகுமோ! படைவாள் வயிரப்
கெமனாக எடுத் தவளே சுனையே வருவாய்
பஒம் லலிதாம் பிகையே! (மாதா)
C295)

Page 324
நீலம்
மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம் கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம் நீலத்திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமரி வருவாய் வருவாய்!
மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே! (மாதா)
முத்து
முத்தே வருமுத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாஸினியே சரணம் தத்தேறியநான் தனயன் தாய்நீ
சாகாதவரம் தரவே வருவாய் மத்தேறுததிக்கிணை வாழ்வடையேன்
மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே! (மாதா)
பவளம்
அந்திமயங்கிய வானவிதானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்தமேடை சிந்தை நிரம்ப வளம்பொழிவாளோ
தேம்பொழிலாமிது செய்தவளாரோ எந்தையிடத்து மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுத்தாள் மந்திர வேதமயப்பொருளானாள்
மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே! (மாதா
மாணிக்கம்
காணக் கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே பூணக் கிடையாப்பொலிவானவளே
புனையக் கிடையாப்புதுமைத்தவளே நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடா தவளே! மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே (மாதா
296 S.

மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம் அரஹர சிவளன்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம் வரநவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே! (மாதா)
கோமேதகம்
பூமே வியநான் புரியும் செயல்கள்
பொன்றாது பயனும் குன்றா வரமும் தீமேல் இடினும் ஜெயசக்தியெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும் கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய்மொழியே தருவாய் தருவாய் மாமேருவிலே வளர்கோ கிலமே
மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே (மாதா)
பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கனி பதும
ராகவி காசவியாபினி அம்பா சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவிசந்த்ரகலாதரி ராணி அஞ்சன மேனிஅலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்யகல்யாணி மஞ்சுள மேருச்ருங்க நிவாஸினி
மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே (மாதா)
வைடூரியம்
வலையொத்த வினை கலையொத்த மனம்
அருளப்பறையாற்றொளியொத்தவிதால் நிலையற் றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய் அலையற்றசைவற்றநூபூதிபெறும் அடியார் முடிவாழ்வைடூரியமே மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே (மாதா)
நூற்பயன் எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தினமாலை நவின் றிடுவார் அவர் அற்புதசக்தியெலாம் அடைவர் சிவரத்தினமாய்த் திகழ்வாரவரே (மாதா)
மயூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 325
Ο
--N- ECEOEOFC
“乱O - 司法有司記石同편"감비전"石川편"갈비전"갈비전"갈비전"갈비력 啊
 
 
 

| |) {知识知红叶片叶片叶片叶片叶 9真真真咲真咲真咲真
] {
*다"나는 枪瞄

Page 326


Page 327
மயூர மங்கலம்
உலகில் உள்ள இயற்கைத் மகிழ்வது சைவத்தமிழ்ச் சான்றே தேவியெனவும், நீர் வளம் சுரக்கும் , எனும் மூன்று வேளைகளும் சந்தியா பெண்பாலில் பேசப்படுவது வழமை எதிலும் பார்க்குமிடமெங்கும் பர இக்கட்டுரையிலும் நாம் தேட வே தேடிக்கண்டுகொள்ள முடியவில்6ை இவ்வாக்கத்தின் நோக்கம் ஆக்ஞையில் (தெய்வம் மனித வடி செவிகளில் சதா ஒலிக்கும் மந்திர சொல்வதோ, எதைக் கேட்பதோ, என கண்) தடுமாறுகின்றன. மற்றைய நுகர்ந்து உணர்கின்றன. எனே ஆரம்பமாகின்றது.
மந்திரமென்பது நினைப்பவ4 மாத்ர சம்ரக்ஷண” மாகிய மந்திர விடையில் பஞ்சாக்ஷர ஜபம் என்று பத்ததிகளும் கூறியுள்ளன. அப்படி நிலைமைக்கு ஆட்படுகின்றோம்.
பகவான் கிருஷ்ணன் மந்தி நீலோத்பலமும் உயர்ந்தவையாகக் மந்திரம் என்பது தெளிவாகின்றது பாராயணம் எனப்படுவதில்லை. 'கிரியாக்கிரம ஜோதி” எனும் அ (மனனத்தால், வாசித்தலால், உரத்து பரம்பொருளை வழிபடுமுறைகளி கீர்த்தனம்) கூறப்படுகின்றது. (வ இன்று ஒலிநாடாக்கள் மூலம் அந்த இசையே வடிவான இறைவனின் ச
 
 

க்திமந்திரம்
‘வேதாகம பூஷணம்' பிரம்மபூரீ விஸ்வ நாராயணசர்மா
தோற்றங்களைச் சக்தி வடிவமாகப் பரிணமிக்கவைத்து ாரின் இயல்பாகிவிட்டது. நாம் வாழும் பூவுலகை பூமி ஆறுகளை கங்காதேவியெனவும், காலை, மதியம், மாலை தேவியெனவும், முழுமையாக இயற்கையன்னையெனவும் பாகிவிட்டது. 'பாட்டுக்கு ஒரு புலவன்’ பாரதியும் எங்கும் ாசக்தியைப் பாமாலை சூட்டிப் பரவசமடைகின்றான். ண்டிய கருப்பொருள் தெளிவாகத் தெரியினும் அதைத் v என்பதே எனது ஆதங்கம்.
எம்மை இதனை ஆக்கப்பணித்த அன்னையின் அருள் டிவில்) தேவியின் திருக்கோவில்களில் வழிபடுவோரின் ஒசை எதுவாக இருக்கும் என்பதே. ஆயினும் “எதைச் தக் காண்பதோ” என எனது முப்புலன்களும் (வாய், செவி, இரு புலன்களும் (நாசி, உடல்) தடுமாற்றமின்றி தேவியை வதான் மந்திர சக்தி வாய்ந்த, சக்தி மந்திரத் தேடல்
ரைக் காப்பது. இதனை எப்படிக் கேட்க முடியும்? “ஸ்மரண ம் ஜபிக்க வேண்டியது. இதனை நாவலர் சைவ வினா ம், ஆகம வைதீக பூஜைகளில் மூலமந்திர ஜபம் என்று யாயின் முதலில் மூலமந்திரம் எதுவெனத் தேடவேண்டிய
ரங்களில் காயத்ரீயும், பாத்திரங்களில் சங்கும், மலர்களில் குறிப்பிடுகின்றான். ஆகவே காயத்ரீ மந்திரமே சிறந்த . காயத்ரீ மந்திர ஜபம் என்பதே தவிர, காயத்ரீ மந்திர
மந்திரங்களை மூவகையாகக் கூறவேண்டும் என கோர சிவாசார்யார் பத்ததியில் காணப்படுகின்றது. துக் கூறுவதால் மானஸம், வாசிகம், உபாம்சூர்). ஆயினும் ல் முதன்மையாகக் கேட்டலும், பாடுதலும் (சிரவணம், ழிபாட்டு முறைகள் ஒன்பது என்பது வேறு) எனவேதான் ந்தத் தெய்வங்களை சந்தோஷிக்கச் செய்யும் மந்திரங்கள் ந்நிதிகளில் ஒலிக்கின்றன.

Page 328
இப்பொழுது காயத்ரீ மந்திரம் தேவியின் மந்திரமா? எனும் வினா நம் முன் எழுந்துள்ளது. ஆம் என்பது பதிலாகவரின் இக்கட்டுரை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. இன்றைய சன்மார்க்க சமாஜங்களின் பிரதான அங்கம் தியான மண்டபம். அங்கு எப்பொழுதும் இமயம் முதல் குமரி வரை” சைவம் வளர்க்கும் உலக நாடுகளில் எல்லாம் காயத்ரீ ஒலி நாடா இனிமையாக ஒலிக்க பக்தர்கள் சேர்ந்து கண்மூடிப் பாராயணம் செய்வது வழமையாகிவிட்டது. ஆனால் இம்மேலான காயத்ரீ சைவத்தின் தனிச்சொத்தாகி இந்துக் கோவில்களை இனங்காண வழி சமைக்குமேயன்றி, அன்னையின் கோவில்களுக்கெனத் தனியாக அமைந்தது அல்ல என்பது என் முடிவு.
கிறிஸ்தவ மதம் தேவன் விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகிற்கு மக்கள் துயர் தீர்க்க இறங்கி வருவதைச் சிறப்பாகக் காட்டுகின்றது. ஆனால், எனக்கிடப்பட்ட பணியின் நிமித்தம் பூவுலகில் இருந்த அம்மை, அப்பன் உறையும் திருகைலாசமலைக்கு இக்கட்டுரையை வாசிக்கும் அனைவர் சகிதம் புறப்படுகின்றேன். போகும் வழியில் காயத்ரீ மந்திர பலத்தால், விஸ்வாமித்திர முனிவரால் நிர்மாணிக்கப்பட்ட திரிசங்கு சொர்க்கத்தில் சில விநாடிகள் இளைப்பாறுவோம். வேதங்கள் தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் நான்கு திருமுகங்களால் சிவனிடமிருந்து அருளப்பட்டவை. இவைகள் வேதவியாஸரால் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் எனத் தொகுக்கப்பட்டு அதில் இருக்கு வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டது காயத்ரி. நாம் அறிய, பூநீராமனுக்கு, விஸ்வாமித்திர முனிவனால் வேள்விகாக்கப் புறப்பட்டபொழுது கூறப்பட்டதேயாகும். அதிசிறந்த மந்திரமாகிய காயத்ரீஜபத்தினால் உருவான சொர்க்கத்தில் நின்று, தேவி மந்திரங்களைத் தேடிய பொழுது தமிழில் நிகண்டு எனும் நூலுக்கு ஒப்பான முன்னோடியான அமரகோசம் என் சிந்தையின் கோடியில் ஒளிகாட்டியது. அமரம் என்பது ஒரு பொருளுக்குப் பல சொல் கூறும் சமஸ்கிருத நூலாகும். இதில் தேவியின் திருநாமங்களில் இருந்து நாம் தேடும் சக்தியின் தனி மந்திரம் உண்டாவெனத் தேடுவோம்.
1. 9) LLOT 2. காத்யாயணி
3. கெளரி 4. காளி
5. ஹெமவதி 6. ஈஸ்வரி
7. சிவா 8. Luerreof
9. ருத்ராணி 10. சர்வாணி
es

1. சர்வமங்களா 12. ஆர்யா 13. தாக்ஷாயணி 14. கிரிஜா
15. மேனகா 16. ஆத்மஜா
எனப் பதினாறு பதங்கள் அம்பிகையெனப் பொருள்படும். இவைதான் நாம் தேடும்
மந்திரங்களாயின் முறையே (108, 300, 1000) அஷ்டோத்தர சதம்,திரிசதி, சஹஸ்ரநாமாவளிகள் எனப் பல பிரதிகள் கிடைக்கும். இக் காலகட்டத்தில் அனைவரும் இதனை ஒப்புக்கொள்ள முடியாது என்பர். மேற்கூறப்பட்ட நாமங்களில் எல்லாம் ஆகார, ஈகார ஒசையைக் கவனிக்கவும். உதாரணமாக சிவ' என்றால் ஆண்பாலும் 'சிவா’ என்றால் பெண்பாலும் எனப் பொருள்படும். நம்மில் எத்தனை பேர்சிவசிவ என்றும் ‘சிவ சிவா’ என்றும் உத்தூளனமாக திருநீறு அணிகிறோம் என்பதை இக்கைலாச யாத்திரையில் பங்குகொள்ளும் அன்பர்களுக்குப் பயண சிரமம் தோன்றாதிருக்கும் வண்ணம் சிற்றுண்டியாகப் படைத்துப் புறப்படுகின்றேன்.
“சம்போ மஹாதேவா, சங்கரா சிவ சிவ சம்போ மஹாதேவா’ எனும் சிவ மஹிம்நாஸ்தோத்ர ஒலி மிருதுவாக ஒலிக்க ஸப்தரிஷி பூஜை நடைபெறும் வேளையில் கைலாச பர்வத்தை அடைகின்றோம். அங்கு ஓர் பக்கமாக ஹயக்கீரிவர் (விஷ்ணு அவதாரங்களில் ஒன்று) கிரகஸ்தரான அகஸ்திய முனிவருடன் சம்பாஷிப்பது காதில் விழுந்தது. ஆஹா! நாம் தேடிய பொருள்பற்றி குருசிஷ்ய பாணியில் இருவரும் சம்பாஷணையைத் தொடர, அமைதியாகச் செவி மடுத்தேன்.
அகஸ்தியர், “சிஷ்யர்களிடம் அன்பானவரே, உம்முடைய அருளால் எனக்கு அம்பிகையின் இரகசியமான லலிதா ஸ்கஸ்ரம் உபதேசிக்கப்பட்டது. தன்யனானேன். இது தவிரவும் அம்பிகையின் வேறு விசேட மந்திரங்கள் உண்டா?’ என வினவுகிறார். “ஏனெனில் அம்பாளின் பூரணமான விடயங்களை அறிந்த திருப்தி என் சித்தத்தில் ஏற்படவில்லை” என வணங்குகிறார்.
வேறு: லலிதா ஸகஸ்ர நாம வளியில் அம்பிகையின் மந்திர சரீர வடிவம் மிக இரகசியமாக மூன்று நாமாக்களில் கூறப்பட்டுள்ளது. எத்தெய்வமாகினும் அத்தெய்வம் மூலமந்திர வடிவில் மந்திர சரீரம் பெற்றமையால் நிஷ்கள வடிவாகி (அருவம்) அருள் செய்யும்.
பஞ்சாக்ஷரம் - சிவன்
ஷடாக்ஷரம் - முருகன்
யூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 329
இம்மூல மந்திரம் அருவுருவ வடிவில் ஜிவமந்திரமாகி விடுகின்றது. (சிவலிங்க வடிவம்). இதுவேஷகள வடிவில் உருவத்திருமேனியில் பிரதிஷ்டை செய்யும் பொழுது பிராண சக்தியாக ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு அங்கமாகப் பதிக்கப்படுகின்றது. (நியாஸம்). ஜீவன், பிராணன் இரண்டும் வேறு. இம்மூலமந்திரங்கள் யாவும் அக்ஷரங்களின் கூட்டு அல்லது கூடம் எனப்படும். இன்றும் நம் இல்லங்களில் அனைவரும் கூடியிருந்து சம்பாஷிக்கும் இடத்தைக் கூடம்' என்பதை அறிவோம். இவ்வாறு பூரீ லலிதா திரிபுரசுந்தரியும் மூன்று கூடங்களாக வாக்பவ கூடம் (முகமண்டலம்), மத்திய கூடம் (கழுத்திலிருந்து இடுப்புவரை), சக்தி கூடம் (இடுப்பிலிருந்து பாதம் வரை) என ஸஹஸ்ரநாமத்தில் வணங்கப்படுகிறாள்.
பூரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூபமுக பங்கஜா” “கண்டாதக் கடி பாயந்த மத்ய கூட ஸ்வரூபிணி” “சக்தி கூடைக தாபன்ன கட்ய தோபாகதாரிணி”
எனவே மிக இரகசியமான மூலமந்திரக் கூடங்களோடு கூடிய அன்னையின் அருட் பேராயிரங் (லலிதா ஸகஸ்ரநாமம்) களை ஒலிப்பதன் மூலம் அம்பாள் கோவில்களை தனித்து அடையாளம் காணலாம். எனினும் நாமங்களின் பொருள் விளங்காமையினாலும் இது அம்பாளின் நாமாவளி எனப் பலரால் அறியப்படாமையாலும் எமது தேடலின் நோக்கமும் பயனும் பூரணப்படவில்லையென்பது என் தெளிவு.
"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்”
(சிவபுராணம்) "மெய்ப்பொருள் காண்பதறிவு”
எனும் தொடர்கள் மூலம் எதையும் பொருளுணர்ந்து (காயத்ரீ மந்திரம் உட்பட) சொன்னால்தான் பலன் என்பதாம். சக்தி மந்திரத்தேடலில் தெளிவடையாத சிந்தையனாய் மீண்டும், ஹயக்கிரீவ அகஸ்திய சம்பாஷணையை செவிமடுக்கின்றேன்.
அகஸ்தியர் ஹயக்கிரீவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய வேளையில் அம்பிகை சிவனுடன் இடபாரூடராய் காட்சி கொடுத்து “எம்மிருவரினாலும் (காமேஸ்வரன் காமேஸ்வரி) அருளிச் செய்யப்பட்ட'ஸர்வ பூர்த்திகரீ’ எனும் பெயருடைய ஸ்துதியை உபதேசம் செய்” எனக் கட்டளையிட்டு மறைந்தார்.
(ஆதாரம் - பூரீ லலிதா திரிசதி பாஷ்யம், ராமகிருஷ்ண வெளியீடு)
மயூரமங்கலம்

ஹயக்கிரீவர் “தேவரும் முனிவரும் காணவொண்ணாத காட்சியை நாம் காண வாய்ப்பளித்த கும்ப முனியே! எழுந்திரும். நீர் கிருதார்த்தர். மூவுலகிலும் உமக்கு இணையான தேவிபக்தன் இல்லை. பரதேவதையே உனக்கு இதனை உபதேசிக்கும்படி ஆணையிட்டார்” என்று கூறி “இரகசியத்துள் இரகசியமான மகிமை மிக்க திரிசதி ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்கின்றேன்” என்றார். மேலும் கூறுகிறார்: "ஓ கும்பமுனியே, இந்தஸ்துதி வெறும் பெயர் வடிவாகாது. அம்பாளின் மூலமந்திர எழுத்துக்கள் பதினைந்தும் தனிப் பெருமையுடையவை” எனக் கூறினார்.
“பஞ்ச தசாக்ஷரீ” ஒவ்வொரு எழுத்துக்கும் இருபது நாமங்கள் வீதம் கொண்ட சர்வபூர்த்திகரி தோத்திரத்தை உபதேசம் செய்தார். அதனை செவிமடுத்து தேடலைத் தொடர்வதற்கு பூவுலகை அடைந்தோம்.
ஒவ்வொரு நாமமும் திவ்விய ஒளி பொருந்திய மந்திர வடிவானவையே. முன்பு நாம் கண்ட
வாக்பவ கூடம் 5 அட்சரம் மத்திய கூடம் 6 அட்சரம் சக்தி கூடம் 4 அட்சரம்.
பதினைந்து எழுத்துக்களால் ஆன திரிசதி ஸ்தோத்ரம் சைவ சித்தாந்த அடிப்படையில் 36 தத்துவங்களையும் கடந்து நிற்பது. அதனைத் தொட்டால் நமது தேடலின் நோக்கம் வேறுபட்டு விடும் என்பதால் அதனை விடுத்துச் செல்வோம். இப் பதினைந்து எழுத்துக்களும் சிவஅக்ஷரம், சக்திஅக்ஷரம், உபயாக்ஷரம் என வகுக்கப்பட்டு நாமங்களாக உபதேசம் செய்யப்பட்டுள்ளன. இது மஹாரகஸ்யம் என்பதால் இதற்கு மேல் ஆராயாது இதனை அம்பாள் கோவில் அடையாளம் காட்டும் மந்திரமாகக் கொள்ளலாமா என்றால் இதன் மகிமையும், புனிதமும் பூரீவித்தையும் மூலத்தன்மையும் அவ்வாறு செய்ய முடியாதவாறு தடுக்கின்றன.
நிறைவாக, சிவாலங்களில் ஒம் நமசிவாய சிவாய நம ஓம் போலவும், விஷ்ணுவாலயங்களில் ஒம் நமோ நாராயணாய போலவும் சக்தி ஆலயங்களில் தனித்துவமான மந்திர ஓசையாக சக்திமந்திரமே சிறந்து விளங்குகின்றது என நம்புகிறேன்.
299

Page 330
罪
(
மானிடவியலாளர் பெண் ஆண்வழிச் சமுதாய அமைப்புத் இவ்வாறு முக்கியம் பெற்ற பிரபல்யமடைந்திருந்தது ஆச்சரிய கற்காலத்திலேயே காணலாம். இன தனங்களும், அகன்ற பிருஷ்டங்க தாய்மை வழிபாட்டின் சின்னங்கள இது வளர்ச்சிகண்டது. செம்புக்க ஆகியவற்றில் இதற்கான தடயங்க சோப், குல்லி ஆகிய கலாசாரங்க சுடுமண்ணினாலான பெண் பாை வழிபாட்டின் எச்சங்களாகும். இத் ஆகியவற்றிலும் காணப்படுகின்ற
இதனால் இதன் வழிபாட்6 குறிப்பிட்ட கலாசாரத்தின் சி தென்னாசியாவில் வாழ்ந்த பல்லின் இதன் ஆரம்ப கர்த்தாக்களாக தென்னாசிய நாகரிகத்தின் அடித் அல்லது 'ஒஸ்ரலோயிட்' என அ முண்டர்கள்,சண்டாளர்கள், புலின் குறிப்பிடும் யக்ஷர்களும் இவர்க குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.ஈ ஆகியோரோடு சபரர்களை நிை ஈழத்தின் பழங்குடிகள் இந்தியாை காட்டுகின்றன. வேடர்கள் இவர்க
இத்தகைய வழிபாடு த்ெ இலக்கியங்களிற் குறிப்பிடப்படும். ஆதி ஈழத்தில் இவர்களாலும், பின் என்று ஊகிப்பதில் தவறில்லை. ஆ
 
 
 

ாய்த்தெய்வ வழிபாட்டின் தொன்மை
பேராசிரியர் சி. க. சிற்றம்பலம்
வழிச் சமுதாய அமைப்பே ஆதியானதென்றும், பின்னரே தோன்றியதென்றும் சமூக வழக்காறு என்று வாதிடுவர். நாய்வழிச் சமுதாய அமைப்பில் அன்னை வழிபாடு மன்று. இத்தகைய வழிபாட்டின் தோற்றத்தினைப் பழைய விருத்தியின் சின்னமாக ஐரோப்பாவிற்காணப்படும் பெரிய ளையுமுடைய பெண் பாவைகளே உலகிலுள்ள மிகப் பழைய ாகும். பின்னர், புதிய கற்காலத்திலும் செம்புக் காலத்திலும் ால நாகரிகங்களான சுமேரியா, எகிப்து, கிறீஸ், சிந்துவெளி 5ள் உள. இந்தியாவில் சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட 1ளிலும், சிந்துவெளி நாகரிகத்திலும் கண்டு எடுக்கப்பட்ட வகளே இப்பகுதியிற் கிடைத்துள்ள மிகப் பழைய அன்னை தகைய எச்சங்கள் புதிய கற்காலம், குறுணிக் கற்காலம்
T. டை ஒரு குறிப்பிட்ட மக்களின் வழிபாடாகவோ அன்றி ஒரு ன்னமாகவோ கொள்ள முடியாது. ஈழம் உட்பட்ட ா மக்கள் வளர்த்தெடுத்த வழிபாடாக இது அமைந்துள்ளது. க் குறுணிக் கற்கால மக்களைக் கூறலாம். இவர்களே தளமானவர்கள். மானிடவியலாளர் இவர்கள் வேடொயிட் புழைப்பர். இவர்களைத்தான் இலக்கியங்கள் சபரர்கள், னடர்கள் என அழைக்கின்றன. ஈழத்துபாளி இலக்கியங்கள் ள் தான். இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரோ ஏசியாற்றிக் ரத்திலும் மகாவம்சம் குறிக்கும் சண்டாளர்கள், புலிண்டர்கள் னவுபடுத்தும் சப்ரகமுவ என்ற மகாணத்தின் பெயரும் வப் போன்று ஒரே தன்மையினராக விளங்கியதை எடுத்துக் ளின் சந்ததியினரே. நன்னாசியாவில் திராவிடரால் வளர்க்கப்பட்டது. பாளி யக்ஷருடைய தாய்த் தெய்வ வழிபாடு பற்றிய செய்திகள் வந்த திராவிடர்களாலும் பேணப்பட்ட வழிபாட்டு நெறிகள் தியில் ஆரியரின் வழிபாட்டில் அன்னை வழிபாடு முக்கியம்
பூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 331
பெறவில்லை. கங்கைச் சமவெளியில் ஆரியரின் நாகரிகம் பரந்த பின்னர் தான் தாய்த் தெய்வங்களான துர்க்கை, உமா, அம்பிகா, பார்வதி, காளி போன்றவை முக்கியம் பெற்றுப் புராண இதிகாச காலத்தில் திராவிட, ஆரிய நாகரிகங்களின் கலப்பால் அகில இந்திய வழிபாட்டு முறையாக மேன்மை பெற்றன. இருக்கு வேதத்திற் தாய்த்தெய்வத்திற்குப் பதிலாக ஆண் தெய்வங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதற்கு ஆரிய சமுதாய அமைப்பானது ஆண்வழிச் சமுதாயப் பண்புகளைக் கொண்டிருந்தமை முக்கிய காரணமாகும். இதனால் ஆரியரின் ஆரம்ப காலச் சமய நடவடிக்கைகளை எடுத்தியம்பும் இருக்கு வேதப் பாக்களிற் தாய்த்தெய்வவழிபாடு முதன்மை பெறவில்லை என்பது புலனாகின்றது.
ஆனால் இருக்கு வேதப்பாக்களில், உஷஷ், ராத்ரி, ராகா, சினிவாலி, குங்கு, அதிதி, பிருதுவி, திதி, சுவஸ்தி, பிருஷ்னி, புரம்தி, அனுமி, ஆப்தேவிஸ், சரஸ்வதி, வாக், ஆண்யானி, இந்திராணி, வருனானி, சசிரோதசி,சீதா, ஊர்வரா, ஆரணி, சிரார்த்த திஷனா, ஈள, நிருத்தி, குன்றிதா, சூர்யா போன்ற பெண்வழிப் பெயர்கள் காணப்படுகின்றன. இவை இயற்கைக்குத் தெய்வாம்சம் கொடுத்து வழிபட்ட தன்மையைப் பிரதிபலிப்பனவாகும். அதாவது உஷஷ் என்ற தெய்வம் விடியற் காலையைக் குறித்து நின்றது. பிருதுவி நிலத்திற்குரிய தெய்வமாகக் குறிக்கப்பட்டது. இவற்றிற்கு உருவம் அமைத்து வழிபடும் மரபு இக்காலத்திற் காணப்படவில்லை. அத்துடன் பிற்பட்ட வேத இலக்கியங்களில் இவை செல்வாக்கைப் பெற்ற தெய்வங்களாகவும் காணப்படவில்லை. பிருதுவி பற்றி மூன்று வரிகள் மாத்திரமே இருக்கு வேதத்தில் உண்டு. பிற்பட்ட அதர்வவேதத்தில் இத்தெய்வம் பற்றிய நீண்ட பா ஒன்று மட்டும் காணப்படுகின்றது. அதில் இத்தெய்வம் தயுஸ் என்ற தெய்வத்துடன் இணைத்து விளிக்கப்படுவதானது இத்தெய்வங்கள் உயர்ந்த நிலையிற் பேணப்படவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
மேற்கூறப்பட்ட இத்தெய்வங்களுக்கும் பிற்பட்ட வேத காலத்திற் குறிப்பாக ஆரண்யங்களிலும் உபநிடதங்களிலும் செல்வாக்குற்றுக் காணப்படும் உமா, அம்பிகா, ஹிமபதி (பார்வதி), துர்க்கா, காளி போன்றவற்றிற்கும் எவ்வித தொடர்பும் காணப்படவில்லை. இத்தெய்வங்கள் பண்டைய வழிபாட்டு மரபில் திராவிடத் தெய்வாம்சங்களைப் பெற்றிருந்தன. ஆரியர் சிந்து வெளியில் இருந்து
மயூரமங்கலம்

கங்கைச் சமவெளிக்குப் பரந்த காலத்தில் அதாவது பிற்பட்ட வேத, உபநிடத, ஆரண்ய காலத்தில்தான் இத்தெய்வங்களின் கலப்புகள் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆதலால் இப்பெண் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் ஆரியர் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னர் இங்கு வழக்கிலிருந்த தாய்த் தெய்வ வழிபாட்டை ஆரியர் தம்மோடு இணைத்துக் கொண்டதை எடுத்துக் காட்டுகின்றன எனலாம்.
இத்தகைய இணைப்பைப் பிற்பட்ட இந்து வழிபாட்டு நெறிகளிலும் காணலாம். இருக்கு வேதத்தில் தெய்வமாகக் குறிக்கப்பட்ட சரஸ்வதி பிற்பட்ட வேத, ஆரண்ய உபநிடத காலத்தில் வாக் தெய்வத்துடன் இணைக்கப்பட்டுக் கல்வித் தெய்வமாக உயர்ச்சி பெறுகின்றாள். இவ்வாக் தெய்வம் ஆரியருக்கு முன்பிருந்த வழிபாட்டு மரபின் எச்சமாகவும் விளங்கியிருக்கலாம். நாளடைவில் இரண்டும் சங்கமித்தன. இவ்வாறேழநீயும் செல்வத்தின் அம்சமாகக் குறிக்கப்பட்டாலும் பிற்காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய லசுஷ்மியுடன் இணைக்கப்பட்டு பூரீயும் லசுஷ்மியும் வளம், செல்வம் ஆகியவற்றின் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன. இதனால் ஆரிய சமய நம்பிக்கைகளுக்கு முன்னர் வட இந்தியாவில் செல்வாக்குடன் விளங்கியதிராவிடராற் பேணப்பட்ட பல தாய்த் தெய்வங்களுக்கு வடமொழி நாமங்கள் சூட்டப்பட்டு, இத்தெய்வங்கள் ஆரிய மயமாக்கப்பட்டன எனக் கூறுவதே பொருத்தமாகின்றது. ஈழத்திலோ வெனில் தமிழகத்தினைப் போன்று சங்க இலக்கியங்களோ, அன்றி அகில இந்திய ரீதியில் கிடைக்கும் வடமொழி இலக்கியங்களைப் போன்ற இலக்கியங்களோ, காணப்படவில்லை. இதனால் இந்தியாவை போன்று ஈழத்திற் காணப்பட்ட அன்னை வழிபாடு பற்றி அறிவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. இதற்குக் காரணம் பெளத்த மதம் கி.மு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கு புகுந்தமையும் இம்மதத்தோடு கூடிய பெளத்தம் சார்ந்த செய்திகள் அந்நூல்களில் முக்கியத்துவம் பெற்றமையுமாகும். இதனால் இத்தகைய வழிபாட்டு முறைகள் இவற்றில் இடம் பெறாது போயின. ஆதலால் இப்பாளி நூல்களில் இவ்வழிபாடு பற்றி அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் சான்றுகளே தாய்த் தெய்வ வழிபாடு பற்றி ஈழத்திற் கிடைக்கும் மிகப் பழைய இலக்கியச் சான்றுகளாக அமைகின்றன.

Page 332
ஈழத்திற்கு பெளத்தம் வந்தபோது நிலை பெற்றிருந்த யக்ஷ வழிபாடு கூடத் தாய்த் தெய்வத்தின் வழிபாடே எனலாம். செழுமை, வளம் ஆகியவற்றின் சின்னமாக வழிபடப்பட்ட உள்ளூர் கிராமியத் தெய்வங்களான இவற்றைப் பெளத்த மதம் தன்னுடன் இணைத்ததென்பர் அறிஞர். ஈழத்தில் இவ் யக்ஷிகள் பற்றிய குறிப்புகள் பண்டுகாபய மன்னனின் காலத்திலிருந்தே காணப்படுகின்றன. இவர்களுள் சேத்திய என்ற யக்ஷி குதிரை முகத்தையுடையவள். இவள் பண்டுகாபய மன்னன் அரசனாக வருவதற்கு உதவியவள். இவளுக்கு நன்றிக் கடன் செலுத்தும் முகமாக இம்மன்னன் அரண்மனையில் இவளை அமைத்து வழிபாடாற்றியதாக மகாவம்சம் குறிக்கின்றது. இத்தகைய குதிரை முகத்தையுடைய யக்ஷி உருவங்கள் இந்தியாவிலுள்ள பெளத்த மதக் கலைப்பீடங்களான பாரூட், சாஞ்சி, புத்தகாயா, பாடலிபுத்திரம் ஆகிய இடங்களிற் காணப்படுகின்றன. அம்பாளின் பல்வேறு மூர்த்தங்களில் குதிரை முகத்தையுடைய மூர்த்தமொன்று அமைந்திருப்பதால் இது தாய்த் தெய்வத்தினைக் குறிக்கின்றது எனலாம். இதனைவிட அனுராதபுர நகரின் தெற்கு வாசலில் “சித்த” என்ற யக்ஷ்க்கும் மேற்கு வாசலில் “பச்சிமராஜினி” என்ற யக்ஷிக்கும் அமைவிடங்களை இம்மன்னன் அமைத்ததாகவும் மகாவம்சம் குறிக்கின்றது. இம் மன்னனின் காலத்தில் நகரத்தின் காவல் தெய்வமாகப்புரதேவ என்ற தெய்வம் விளங்கியதென்ற குறிப்பும் உண்டு. பெண் தெய்வங்களான மேற்கூறிய யக்ஷிகளும் அநுராதபுர நகரின் காவல் தெய்வங்களாக விளங்கியிருக்கலாம். நகர்களின் காவல் தெய்வங்களாகப் பெண் தெய்வங்கள் விளங்கியதைச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. இத்தகைய காவல் தெய்வங்களில் துர்க்கை முன்னணியில் இருந்ததைச் சிலப்பதிகாரம் எடுத்தியம்புகின்றது. துர்க்கை மதுராபதித் தேவதை எனச் சிலப்பதிகாரத்தின் 23வது காதையில் விளிக்கப்படுகின்றாள். இந்நூலில் இன்னோரிடத்தில் இம்மதுராபதித் தேவதை மகாலக்ஷமி, மகாசரஸ்வதி, மகாதுர்க்கை ஆகிய தெய்வங்களின் அம்சங்களை உடையவளாகக் குறிப்பிடப்படுவதைப் பின்வரும் பாடல் எடுத்துக் காட்டுகின்றது.
மாமகளு நாமகளுமாமயிடற்செற்றுகந்த கோமகளுந்தாம்படைத்த கொற்றத்தாள் - நாம
602)
шу

முதிரா முலைகுறைத்தான் முன்னரே வந்தாள் மதுராபதி என்னு மாது” (சிலப்பதிகாரம் : மதுரைக் காண்டம் 22 வெண்பா)
மேற்கூறியவாறு துர்க்கையைச் சரஸ்வதி, லக்ஷமி ஆகியோருடன் இணைக்கும் மரபை மார்க்கண்டேய புராணத்திலும் காணக்கூடியதாக உள்ளது. மணிமேகலையில் குறிப்பிடப்படும் சம்பாபதித் தெய்வம் பற்றிக் காணப்படும் வர்ணனையும் துர்க்கையைக் குறிப்பிடுகின்றதென நாகசுவாமி கருதுகின்றார். இச் சம்பாபதி காவிரிப்பூம்பட்டினத்தின் காவல் தெய்வமாகக் குறிப்பிடப்படுகின்றாள். இவ்வாறே காடமர் செல்வியான காளியின் கோயிலும் இங்குள்ள சுடுகாட்டிற் காணப்பட்டதாக இந்நூலில் குறிப்புண்டு. இக்காளிதான் விந்தியாவாசினியாகப் பழைய சாக்த இலக்கியங்களிலே விளிக்கப்பட்டாள். காளி தன் கைகளிலே கபாலங்களைத் தாங்கியவாறு பேய்களைப் போஷிப்பவளாக மணிமேகலையிற் (18 15 - 16) குறிக்கப்படும் பின்வரும் செய்யுளை நாகசுவாமி மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளார்.
"காட்மர் செல்வி கடிப்பசிகளைய
ஒடுகைக் கொண்டுநின்றுரட்டுநள்”
இதே நூலில் (17:87 - 88) காளியின் கோயில் முதியோள் கோட்டம்' என விளிக்கப்படுவதும் ஈண்டு அவதானிக்கத்தக்கது. மேற்கூறிய சான்றுகள் தமிழகம், ஈழம் ஆகிய பகுதிகளில் நகரின் காவல் தெய்வங்களாக, நகரின் பல்வேறு திகைகளிலும் இருந்த தெய்வங்களை எடுத்துக் காட்டியுள்ளன. இத்தகைய மரபு தமிழகத்தில் இருந்ததைச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன கூற, ஈழத்தில் இத்தகைய மரபு வழக்கிலிருந்தமையை மகாவம்சம் பிரதிபலிக்கின்றது. இவ்வாறேதான் பெளத்தம் இங்கு வந்தபோது பலர் பெளத்த மதத்தினைத் தழுவினாலும் கூட அப்போது அவர்கள் சூடியிருந்த பெயர்கள் அவர்களின் பழைய வழிபாட்டு முறைகளைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. இத்தகைய பெயர்களாகக் கல்வெட்டுக்களிற் காணப்படும் ஸிரி(திரு),பத்மா (பதும), லஷ்மி (வஸி), அம்பிகா (அபிக) காளி (துடி), துர்க்கை (துக), கார்த்திகா (கதி), கெளரி (குர), மீனாட்சி (மச்சக) ஆகியன அமைகின்றன. இவ்வழிபாட்டின் எச்சங்களாக நாட்டின் பல்வேறு தொல்லியல் மையங்களில் காணப்பட்ட சுடு மண்ணினாலான பெண்பாவை உருவங்களும் விளங்குகின்றன.
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 333
மயூரமங்கலம்
மாரியம்மன் வழிபாடு
மாரியம்மன் வழிபாடு விருப்பத்தோடு மேற்கொள்ள சிற்றுார்களிலும், நகரங்களிலும் L வளம் வழங்கும் தெய்வம் என்று என்றும், சிற்றுார்களில் காவல் ெ இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அதிகமாக வாழும் சில மேலை நா சிறப்பான வழிபாடுகளும் அங்கெ
பலவகை ஆய்வுகள்
மாரியம்மன் வழிபாடு 6 அறிஞர்கள் பலர் கருதுகின்றனர். வழிபாடே பின்னர் மாரியம்மன் வ கருதப்பட்டிருக்கவேண்டும் என்று நிலையில் வாழ்ந்திருந்த கிராமப்பு ஒன்றே மாரியம்மன் வழிபாடு என் மழை தரும் தெய்வம் என்ற ெ கூறுகின்றனர். ஆய்வுகள் பலவ வழிபாடாகவே சிவபெருமானின்
திருநாமங்கள்
மாரியம்மன் அம்சமாக( இவ்வம்மைக்குக் கோயில்கள் விளங்குதல் பற்றி எல்லையம்மன் எ செல்லியம்மன் (செல்- மேகம் அங்காளம்மன் என்றும், குளிர்ச்சி வழங்கப்பெற்று வருகின்றன. இ திகழும் அம்மையும் மாரியம்மன் ஆ
 
 

гт цогтпflшіöшо6üт நள் வரலாறு
டாக்டர் இரா.செல்வகணபதி
பலநூறு ஆண்டுகளாகத் தமிழ் மக்களால் மிகுந்த ப் பெற்றுவருகின்றது. தமிழ்நாட்டின் பெரும்பாலான 0ாரியம்மனுக்கு எனத் தனிக்கோயில்கள் உள்ளன. மழை ம், அம்மை முதலிய நோய் நீங்கி அருள்வழங்கும் இறைவி தய்வம் என்றும் மாரியம்மனைத் தமிழ்நாட்டில் மட்டுமன்றி
பர்மா, ஜாவா முதலிய கீழை நாடுகளிலும், தமிழ்மக்கள் டுகளிலும் மாரியம்மனுக்கெனத் தனிக்கோயிகள் உள்ளன. ல்லாம் நடைபெற்றுவருகின்றன.
ான்பது, மக்களின் சக்தி வழிபாட்டின் ஒரு பிரிவே என வேறு ஒரு பிரிவினர் தமிழ் மக்கள் மேற்கொண்ட பத்தினி ழிபாடாகத் திரிந்து, மிகப் பிற்காலத்தில் சக்தி அம்சமாகக் ஆராய்ந்து உரைக்கின்றனர். அச்சம் காரணமாகக் கீழ் றமக்கள் மேற்கொண்டு ஒழுகிய சிறுதெய்வவழிபாடுகளுள் பர் சிலர்.சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற கண்ணகிவழிபாடே, பாருளில் மாரியம்மன் வழிபாடாக உருப்பெற்றது என்று ாக இருந்தாலும், இன்று மாரியம்மன் வழிபாடு உமையவள் சக்தி அம்சமாகக் கருதப்பெற்று வருகின்றது.
வே, இன்று தமிழ் நாட்டில் வெவ்வேறு திருநாமங்களில் அமைந்துள்ளன. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக ான்றும், மழை வழங்கும் மேகத்தை ஏவல் கொள்ளுதல் பற்றிச் ) என்றும், வெப்பு நோய்களை நீக்கியருளுதல் பற்றி சியைத் தருதல் பற்றிச் சீதளாதேவி என்றும், பலபெயர்கள் வையன்றி, இரேணுகாதேவி, கருமாரி முதலிய பெயர்களிற் அம்சமே என்று கூறப்படுகிறது.

Page 334
மாரிக்கு முதற்கோயில்
சக்திவழிபாடு பற்றிய குறிப்புக்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்கள் முதலாகக் காணமுடிகிறது. மாரியம்மன் வழிபாடு பற்றிய அவ்வாறான குறிப்புக்களைப் பழந்தமிழ் இலக்கியங்களில் காணமுடியவில்லை. மாரியம்மன் வழிபாடு தமிழ்நாட்டில், எக்காலத்தில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டது என்பதைத் திட்டவட்டமாக அறியமுடியவில்லை. தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பிற்காலச்சோழ மரபினரே முதன்முதலாக மாரியம்மனுக்குத் தனிக்கோயில் எடுப்பித்துள்ளனர். தஞ்சாவூருக்குக் கிழக்கே ஐந்துகல் தூரத்தில் மாரியம்மன் கோயில் என்ற பெயரில் அமைந்துள்ள சிற்றுாரும், அங்குள்ள ஆலயமும் கி.பி 10ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலப்பகுதியில் சோழ மன்னர்களால் தோற்றுவிக்கப் பெற்றனவாகத் தெரிகின்றன. மாரியம்மனுக்கு அமைந்த முதல் தனிப்பெருங் கோயில் இதுவே எனக் கூறப்படுகிறது. எனவே கி.பி 10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது மாரியம்மன் வழிபாடு என்பது தெளிவாக அறிய வருகிறது.
தமிழகத்தில் சக்தி வழிபாடு
சிவபரம்பொருளின் அருளைச் சக்தி என்று குறிப்பர் சாஸ்த்திர வல்லுநர். இறைவனின் அருட் சக்தியைப் பெண் தெய்வமாக உருவகித்து வழிபடுதல் நெடுங் காலமாக நிலவி வருகின்றது. கி. மு. 7ம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் தொல்காப்பியத்திலே சக்தி வழிபாடு பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. நேரடியாகப் பாலைத் தெய்வமான கொற்றவை தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பெறவில்லை என்றாலும், வெற்றித் தெய்வமாகச் சக்தியைக் கொற்றவை என்று தொல்காப்பியம் குறிக்கின்றது. உரையாசிரியர்கள் நிலத் தெய்வமாக ஏற்றுப் போற்றியுள்ளனர். மறங்கடை கட்டிய கொற்றவை நிலை "எனத் தொல்காப்பியத் துறை வகுத்துக் காட்டுகிறது.
சங்க இலக்கியங்களில் சக்தி வழிபாடு
தொல்காப்பியத்தை அடுத்துச் சங்க இலக்கிய மேற்கணக்கு நூல்களாகிய பத்துப்பாட்டு மற்றும் எட்டுத் தொகை நூல்களுள் கொற்றவை வழிபாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பழையோள்' என்றும், வெற்றி வெல்போர்க் கொற்றவை என்றும் திருமுருகாற்றுப்படை
630

குறிக்கின்றது. இங்கே வெற்றித் தெய்வமாகிய கொற்றவை உமையம்மை அம்சமாக, சிவனார் துணைவி என்றும், முருகனின் தாய் என்றும் குறிப்பிடப் பெறுகின்றாள். கொற்றவையைப் போற்றி காடுகிழாள் என்ற பெயரில் பரிபாடல் இசைப் பாடல்கள் கொண்டிருந்ததாக அறிய முடிகிறது. அப்பாடல்கள் கிடைத்தில. போர் வெற்றிக்கு வீரர்கள் கொற்றவையை வழிபட்ட செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தில்
சிவசக்தி தொடர்பான புராண வரலாறுகளும், கதைகளும் சிலப்பதிகாரத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளன. வேட்டுவவரி முழுவதும் கொற்றவை வழிபாட்டு இசைப்பாடல்களாக அமைந்துள்ளன. கடலாடு காதையிலும், வழக்குரை காதையிலும், சிவனோடு அம்மை ஆடிய பல்வகைக்கூத்துக்களும், அம்மையின் வீர வரலாறுகளும் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தின் நிறைவில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து வழிபட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. நிலத்தெய்வ வழிபாடாகத் தொடங்கப் பெற்று, வெற்றித் தெய்வமாய் மாற்ற முற்று, உமையவள் அம்சமாகக் கருதப் பெற்று வளர்ந்த சக்தி வழிபாட்டில், பத்தினித் தெய்வ வழிபாடு சிலப்பதிகார காலத்தில் உருப்பெற்றது. தொடர்ந்து மணிமேகலை, பழமொழி நானூறு, பெருங் கதை முதலிய நூல்களிலும் சக்தி வழிபாடு பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
சைவத் திருமுறைகள்
கி. பி. 7ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட மூவர் தேவாரங்களில் உமை வழிபாடு, சிவ வழிபாட்டின் அங்கமாக உள்ளடக்கியே பேசப்படுகின்றது. திருவாசகத்தில் சக்தியை வியந்து தொடங்கும் திருவெம்பாவைப் பாடல் முதற் சக்தி தோத்திரமாகச் சைவத் திருமுறைகளுள் காணப்படுகின்றது. திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்துள் சிவ சக்தி வழிபாடு, சக்தி மந்திரங்கள் சக்கரங்கள் முதலியன விரிவாகப் பேசப்பட்டுள்ளன. கலிங்கத்துப் பரணி முதலிய பரணி நூல்களில் "கொற்றவை"வழிபாடுபற்றிய விரிவான செய்திகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுச் சித்தர்கள் வாமை, பாலா, மனோன்மணி முதலிய பெயர்களில் சக்தியைப் போற்றி உள்ளனர்.
யூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 335
சக்தித் தோத்திரங்கள்
தமிழகத்தின் நீண்ட பாரம்பரிய சக்தி வழிபாட்டின் பயனாக, அரிய சக்தி வழிபாட்டுத் தோத்திர நூல்கள் பல தோன்றின. மதுராபுரி அம்மைமேல் அம்பிகை மாலை என்ற முப்பது பாடல்கள் கொண்ட சிறு நூல் வரகுணராம குலசேகர பாண்டியரால் பாடப்பட்டுள்ளது. அதி வீரரான பாண்டியர் தம் காசிக் காண்டத்தில் 'சக்தி கவசம்' என்ற பகுதி ஒன்றைப் பாடியுள்ளார். அபிராமிப்பட்டர் திருக்கடவூர் அபிராமி அம்மைமேல் அபிராமி அந்தாதி, அபிராமி அம்மைப் பதிகம் முதலியன யாத்துள்ளார். கவிராஜபண்டிதர் ஆதி சங்கரரின் “செளந்தர்யலகரி" யைத் தமிழில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்துள்ளார். இவர் பாடிய “வராகிமாலை’ பகைவரை வெல்லப் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. மற்றும் செளந்தர்ய அந்தாதி, புவனாம்பிகை கலைஞான தீபம் என்பனவும் இவரால் பாடப் பெற்றன.
சிற்றிலக்கியங்கள்
கல்வி தரும் தெய்வமாகிய சரஸ்வதி, செல்வம் தரும் தெய்வமாகிய இலக்குமி முதலிய பெண் தெய்வங்களைப் போற்றி மேலும் தமிழில் பல நூல்கள் பாடப் பெற்றன. கம்பர் பாடியதாக வழங்கப்பெற்று வரும் சரசுவதி அந்தாதி குமரகுருபரசுவாமிகள் பாடிய சகல கலா வல்லிமாலை முதலியன குறிப்பிடத்தக்க சரஸ்வதி துதி நூல்களாகும். இலக்குமி தேவிமேல் அதி வீர ராம பாண்டியர், தொட்டிக்காலை சுப்ரமணிய புலவர் முதலியோர் சிறு நூல்கள் பாடியுள்ளனர். பிற்காலத்தில் சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள அம்மை மீது அம்மை தோத்திரமாகப் பிள்ளைத்தமிழ், அந்தாதி மாலை, கலிவெண்பா முதலிய நூல்கள் பல பாடப் பெற்றன.மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், காந்திமதி யம்மை பிள்ளைத்தமிழ். கோமதி அந்தாதி முதலிய நூல்கள் சிறப்பானவை.
மாரியம்மன் தாலாட்டு ,
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் சிவசக்தி தோத்திரப் பாடல்களைப் பாடியுள்ளார். இவரே மாரியை, முத்துமாரி என்ற பெயரில் சிறப்பித்துப் பாடுகிறார். நாட்டுப்புற பாடல் அமைப்பில் மாரிமீது மாரியம்மன் தாலாட்டு என்ற நூல் ஒன்று பாடப்பட்டுள்ளது. இதனை, அம்மை முதலிய நோய்
மயூரமங்கலம்

பீடித்த காலத்தில் பாடுவதும், படிக்கச் சொல்லிக் கேட்பதுவும் வழக்கமாகவுள்ளது. ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக வளர்ந்துவரும் சக்தி வழிபாட்டின் ஒரு பிரிவாகவே மாரியம்மன் வழிபாடும் வளர்ந்து வந்துள்ளது. மாரியம்மன் வரலாறாகப் பல கதைகள் வழங்கப்பெற்று வருகின்றன. பெரும்பாலும் செவிவழிச் செய்தியாகவே அவை வழங்கி வந்துள்ளன.
மாரி வரலாறு
கி. பி 1899 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற ஆசிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி, மாரியம்மன் வரலாறாகச் சிலசெய்திகளைத் தருகின்றது. மாரி என்ற சொல்லால் குறிக்கப்பெறுபவர் ஜமதக்கனி மாமுனிவரின் துணைவியாகிய இரேணுகை. இவரை இரேணுகாதேவி என்றும் குறிப்பர். ஒருமுறை கார்த்த வீரியார்ச்சுனனின் புதல்வர்கள் ஜமதக்கன்னி முனிவரைக் கொன்றனர். இரேணுகை, கணவன் சிதைமேற் பாய்ந்து உடன் கட்டை ஏறினார். இவ்வம்மையின் மரணத்தைத் தடுக்கும் நோக்குடன் இந்திரன் வருணனை ஏவிப் பெருமழை பெய்வித்தான். சிதை அவிந்து, இரேணுகை அணிந்திருந்த ஆடைகள் எரிந்து, உடலெங்கும் தீக்கொப்புளங்கள் தோன்றின. சிதையிலிருந்து எழுந்த இரேணுகை, ஆடை எரிந்து போயினமையால் அங்கிருந்த வேப்பிலையைப் பறித்து உடையாக அணிந்தனள். அதிலிருந்து புலைச்சேரிக்குச் சென்ற இரேணுகை பசிதீர்க்க உணவு தருமாறு அங்குள்ள மக்களிடம் வேண்டினார்.
சக்தி அம்சமாதல்
அம்மையின் தோற்றத்தைக் கண்டு, இவர் வேதியர் குலப்பெண் என்று கருதிய புலைச்சேரி மக்கள், தாங்கள் உண்ணும் உணவை வழங்காது பச்சரிசி, வெல்லம், மா, இளநீர், பானகம், முதலியவற்றை வழங்கினர். அவற்றை விருப்பத்தோடு உண்டு இளைப்பாறி, இரேணுகை அடுத்து ஒரு வண்ணார் வீதி சென்று, அவர் வழங்கிய ஆடையை விரும்பி அணிந்தனர். அம்மை, மீண்டும் தம் கணவர் சிதைமுன் சென்று வருந்தி நின்றனர். அக்காலை, சிவபெருமான் அசரீரியாக இரேணுகையை நோக்கி, “நீ நம் சிவசக்தி அம்சமாக வந்தவள் ; நீ நிலவுலகத்திலேயே கிராம தேவதையாகக் கோயில் கொண்டு வாழ்ந்திடு; கிராமப்புற மக்களுக்கு வரும் துன்பங்களையும், துயரங்களையும்

Page 336
நீக்கி அவர்களுக்கு அருள் செய்; நீ மாரி எனப் பெயர் கொண்டு சக்தி அம்சமாக வாழ்ந்திடு’ என்று வாழ்த்தியருளினார்.
சிவனார் கட்டளை
மேலும், சிவபெருமான், உன் உடம்பில் ஏற்றப்பட்ட தீப்புண்ணாகிய கொப்புளங்களே உலகவர்க்கு வரும் அம்மை நோய். நீ தரித்த வேப்பிலையே அந்நோய்க்கு மருந்து. நீ விரும்பிப்பூசித்த பச்சரிசி, மா, வெல்லம், இளநீர், பானகம் முதலியனவே உனக்கு உரிய நைவேத்தியம். உன்னைப் போற்றி வழிபடுவார் துயர் நீக்குக. போற்றாதாரை, உன் அருகில் இருக்கும் சண்டாள ரூபத்தை உன்னுள் ஆவேசித்துக் கொண்டு வருத்துக என்றும் உரைத்து மறைந்தார். இரேணுகை மாரி என்றும் முத்துமாரி என்றும் அழைக்கப் பெற்றார். இரேணுகை வழிபாடே மாரியம்மன் வழிபாடாக மருவி வழங்குகின்றது என்பது ஒரு வரலாறு.
இலக்கியக் குறிப்புக்கள்
மேற்குறித்த வரலாற்றுக்கு மாறாக இரேணுகை வரலாறு பற்றி ஆ. சிங்காரவேல்முதலியார் பிறிதொரு வரலாற்றையும் குறித்துள்ளார். இரேணுகை வரலாறு பற்றிய சிறுகுறிப்புகள் வியாச பாரதம், உபநிடதம், தேவி பாகவதம், சிவஞான சுவாமிகள் பாடிய காஞ்சிப்புராணம் முதலியவற்றிலும் சிறு சிறு மாற்றங்களுடன் காணப்படுகின்றன.
அபிதான சிந்தாமணியில்
இரேணுகை, இரேணு என்னும் மன்னன் மகள். ஜமதக்கினி மாமுனிவரின் துணைவி. சிறந்த கற்பரசியாக திகழ்ந்த இரேணுகை நாள் தோறும் கங்கையில் நீராடி, புதிய பச்சை மண்ணால் குடம் சமைத்து நீர்முகப்பார். இவர் கற்புத்திறத்தால் பச்சை மண் குடம் உடையாது நிற்கும். ஒருநாள் அம்மை பச்சை மண் குடத்தில் நீர்முகக்கும்போது, விண்வழியே சென்ற சித்திரசேனன் என்பானின் வடிவம் நீரில் தோன்றிற்று. அவன் அழகைக் கண்டு சற்றே நிலைகுலைந்தாள். புது மண் குடம் உடைந்தது. பல முறை முயன்றும் குடம் உருப்பெறவில்லை. இரேணுகை மனம் வருந்தி கணவர் முன் சென்றாள். சினங் கொண்ட ஜமதக்கினி முனிவர், தன் குமாரர்களாகிய தன்னுகன், அனுவன், விசுவாசு முதலியோரிடம் இரேணுகையைக் கொல்லுமாறு கூற,
G300

தாயாரைக் கொல்ல இயலாது என அவர்கள் மறுத்தனர். நான்காவது குமாரராகிய பரசுராமரிடம் தந்தை கட்டளையிட, பரசுராமர் எதிர்த்தவர்கள் பலரையும் கொன்று தாயாரையும் கொலை செய்து தந்தை முன் துயரத்தோடு நின்றார்.
கணவர் கட்டளை
தம் சொற் கேட்ட பரசுராமனுக்கு வேண்டிய வரம் தர ஜமதக்கினி முன்வந்தார். பரசுராமர் தம் தாய் உயிர் பெற வரம் வேண்டினான். உடன்பட்ட ஜமதக்கினி மந்திர நீர் தெளித்து தாயை உயிர்ப்பித்து வர ஆணையிட்டார். பரசுராமர் கங்கைக் கரைக்குச் சென்று தன் தாயின் தலையை எடுத்து அங்கு வெட்டுண்டு கிடந்த வேறொரு பெண் ஒருத்தியின் உடலோடு பொருத்துகின்றார். இரேணுகை உயிர் பெற்று எழுகின்றார். கணவன் முன் சென்ற இரேணுகையை, “நீ கிராமப்புறங்களில் நிலைத்து நின்று, அங்குள்ள மக்களின் நோய்களை நீக்கி, அவர் தரும் பலிகளை ஏற்றுநிலைபெற்று வாழ்ந்திரு” என்று பணித்தார். அம்மை தலை மட்டும் வெளியில் தோன்றுமாறு, உடல் மறைத்துக் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
சிவபுராணத்தில் இரேணு
இரேணுகை வரலாறு பற்றி வேறுபட்ட கதை ஒன்று சிவபுராணத்தில் காணப்படுகிறது.
முன்னொருகாலத்தில் பிருகு வம்சத்தில் உதித்த உருத்திராம்சமான ஜமதக்கினி முனிவர் காட்டில் தவமியற்றி வந்தார். அப்பொழுது விதர்ப்ப நாட்டை ஆண்டுவந்தவன் இரைவதராசன். அவனுக்குப் பிரமனின் வரத்தால் உதித்தவள் உமையம்மையின் அம்சமான இரேணுகை. தம்மைத் திருமணம் புரிந்துகொள்ளுமாறு ஜமதக்கினி முனிவரை வற்புறுத்தினார். ஜமதக்கினி முனிவர் கோபமுற்றார். தனது சீடர்களில் சிலரை அழைத்து, இரேணுகையைக் கொன்று வருமாறு கூறினார். இரேணுகை தன்னைக் கொல்லவந்த ஜமதக்கினி முனிவரின் சீடர்களைக் கொன்றுவிட்டார். அதனால் சீற்றமடைந்த முனிவர் தானே போருக்குக் கிளம்பினார். இரேணுகையுடன் போரிட்டார். இரேணுகை முனிவரைக் காட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு சென்று ஓரிடத்தில் தன்தலைமட்டும் சிலையாகத் தெரியும் வண்ணம் செய்து மறைந்தார். முனிவர் அச்சிலையைக் கண்டு
யூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 337
இரேணுகையைச் சிலையாகவே இருக்குமாறு சாபமிட்டுத் தன் ஆசிரமம் திரும்பினார். முனிவர் இட்ட சாபம் இரேணுகையை நெருங்க வில்லை.
இரேணுகை முனிவரின் சீடர்களை முன்போலவே உயிர்பெற்று வாழுமாறு செய்து அவர்களையும் உடனழைத்துக் கொண்டு ஆசிரமம் சென்றார். முனிவர் மனம்மாறி இரேணுகையை மணம்புரிந்து கொண்டார். இரேணுகைக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.
இரேணுகை நாள்தோறும் காலையில் எழுந்து, நீராடி முனிவரின் வழிபாட்டிற்குக் கங்கைநீர் எடுத்து வருதல் வழக்கம். தன் கற்பின் ஆற்றலால் நீராடியபின் புதுமண்ணால் குடம்செய்து, கங்கையில் கை வைத்தவுடன் ஒன்றுதிரண்டு நீர் குடத்தை அடையும். இரேணுகை அதனை ஆசிரமத்திற்கு எடுத்து வருதல் வழககம.
இரேணுகை கங்கையில் நீராடும் போது விண்வழியாகச் சென்ற கார்த்த வீரியார்ச்சுனனின் நிழல் நீரில் தெரியக்கண்ட இரேணுகை, அதனைக் கண்டுவியந்து, பின் தெளிந்து எழுந்து புது மண்ணைத் திரட்ட முற்பட்டார். மண் ஒன்று சேரவில்லை. வெறுங்கையுடன் ஆசிரமத்திற்குத் திரும்பினார் இரேணுகை .
ஜமதக்கினி முனிவர் ஞானக்கண்ணால் நிகழ்ந்ததை அறிந்து, சினந்து தனது நான்காவது புதல்வராகிய பரசுராமரை அழைத்து இரேணுகையின் தலையை வெட்டும்படி உத்தரவிட்டார். தந்தையின் கட்டளைப்படி பரசுராமர் தன்தாயின் தலையை வெட்டியதோடு அத்தலையை வெட்டிய தனது வலக்கையையும் வெட்டிக் கொண்டார். தன் கட்டளையை நிறைவேற்றிய தனயனது செயல்கண்டு மகிழ்ந்து, பரசுராமரை நோக்கி, உனக்கு யாது வரம் வேண்டும் கேள் எனக் கூறினார். பரசுராமர் தந்தையை வணங்கித்தாயை எழுப்பித் தர வேண்டுமென வேண்டினார். முனிவர் பரசுராமரை நோக்கி அவரது வெட்டுண்டகையை முன்போல ஒட்டிவைக்குமாறு கூறினார். வெட்டுண்ட பாகம் ஒட்டிக் கொண்டு பழைய நிலையை எய்திற்று. அவ்வாறு அவரது தாயார் தன்லயையும் வெட்டுண்ட உடலோடு சேர்க்குமாறு கூறினார். பரசுராமர் தன் தாயை வெட்டிய இடத்தில் கிடந்த புலைச்சியின் தலையைத் தவறுதலாக எடுத்துவந்து தாயின் உடலோடு சேர்த்தார். இரேணுகை அத்தலையோடு உயிர் பெற்று எழுந்தார்.
சிலகாலம் சென்றதும், ஜமதக்கினி முனிவர்
மயூரமங்கலம்

இறந்தார். முனிவரின் உடலைத் தகனம் செய்யும் போது இரேணுகை உடன் கட்டை ஏறினார். இந்நிகழ்ச்சியை அறிந்த இந்திரன் இரேணுகை இறவாமல் இருந்து உலகிற்கு நலம் செய்யவேண்டுமென்னும் கருத்தால் புனித நீரைப்பொழிந்து சிதையை அணைந்து போகும் படிச்செய்தான். சிதை அவிந்தது. இரேணுகையின் ஆடைகள் எரிந்து விட்டன. உடல்முழுவதும் தீக் கொப்புளங்களுடன் எழுந்த இரேணுகை வேப்பிலையால் உடலை மறைத்துக் கொண்டு சென்று, வண்ணான் ஒருவனிடம் பழைய ஆடை பெற்று, உடுத்திக் கொண்டு, பசிமேலிட்டால் புலைச்சேரி சென்று உணவு கேட்டார். புலைச்சேரி மக்கள் மீன்குழம்பு கலந்த பழைய அன்னத்தை உணவாகப்படைத்தனர். அவ்வன்னத்தைப் பார்த்த அளவில் இரேணுகை மீனை வெங்காயமாக மாற்றி உண்டார். இதனைக் கண்ட புலையர்கள் இவள் அந்தணப் பெண் என்றும், இவளுக்கு நாம் உணவு அளித்தல் கூடாதென எண்ணி, சர்க்கரை கலந்த அரிசி மாவையும், பேயன் பழம், பானகம், நீர் மோர் முதலியவற்றையும் அளித்து உண்ணச் செய்தனர். இரேணுகை அவற்றை உண்டு அவர்களிடமிருந்து பிரிந்து தேவர்கள் பலரும் தன்னைச் சூழ்ந்து வர சிவபெருமான் திருமுன் சென்றார். சிவபெருமான் இரேணுகையைப் பார்த்து நீ பூரீ சக்தி அம்சம் உடையவள். இறப்பதற்கு உரியவள் அல்லள்; ஆதலால் இவ்வுடலுடனேயே உலகில் இருந்து மக்களைக் காப்பாற்று எனவும், ஜமதக்கினியை மணக்குமுன், புதருக்குள் சரீரத்தை மறைத்துச் சிரம் சிலை உருவில் தெரியும் படி செய்தாய். அவ்வண்ணமே, எப்பொழுதும் தலைமட்டும் தெரியுமாறு இருந்து மக்களைக் காப்பாற்றி வருக எனவும் பணித்தார்.
இரேணுகை நிலவுலகை அடைந்து ஊர் எல்லையில் காவல் தெய்வமாக விளங்கி மக்கள், மாடு, கன்றுகள் இவற்றுக்கு வெம்மைத் தன்மைகளால் விளையும் அம்மை, காலரா, சீதபேதி முதலானவற்றையும், கோமாரி போன்ற நோய்களையும் குணப்படுத்தி நலம் செய்யும் சக்தியாக விளங்கி அருள்புரிந்து வரத் தொடங்கினார்.
சீதளாதேவி
அசுரர்களின் ஆட்சி காலங்களில் உலகில் தருமம் குன்றியது. அதர்மம் மேலோங்கியது. அசுரர்களால் துயருற்ற தேவர்கள், தெய்வத்துணையால் அசுரர்களை அழித்தும், ஒடுக்கியும், பாதாள உலகிற்கு

Page 338
அனுப்பியும் மீண்டும் உலகில் அறநெறியை நிலைநாட்டினர். தேவர்களால் துயருழந்த அசுரர்கள் தேவர்களை அழிக்கத் திட்டமிட்டனர்.
தங்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்று முறையிட்டனர். சுக்கிராச்சாரியார் தேவர்களை ஒடுக்க எண்ணி அபிசார வேள்வி ஒன்றை இயற்றினார். வேள்வியின் விளைவால் உலகில் வெம்மை விளைந்தது. தேவர்களின் உலகமெங்கும் கொப்புளங்கள் தோன்றின. தேவர்கள் அவற்றால் மிக்க இடர்ப்பாடுற்று செய்வதறியாது சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தனர். இறைவன் அவர்கள் முன் தோன்றி 'யாது வரம் வேண்டும்” எனக் கேட்டார். தேவர்கள் தாங்கள் அடைந்துள்ள வெம்மை நோயினின்றும் காத்தருளுமாறு வேண்டினர். தேவர்கட்கு அருள் புரிய திருவுளம் கொண்ட பெருமான் தனது சடைமுடியிலுள்ள சந்திரனில் இருந்தும், கங்கையில் இருந்தும் மாயா சக்தியைக் கொண்டு சிவந்த மேனியளாகவும், கத்தி, கபாலம், உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்திய நான்கு திருக்கரங்கள் உடையவளாகவும், தீக்கொழுந்துபோன்ற முடி உடையவளாகவும், ஐந்தலை நாகம் குடைப்பிடிக்கும் நிலையில் அம்பிகையைத் தோற்றுவித்து, அவள் கரங்களில் வேப்பிலையும், பிரம்பும் கொடுத்து தேவர்களைக் காக்குமாறு உலகில் அவ்வப்போது அன்பர்களுக்கு விளையும் வெப்பு நோய்களைக் குணப்படுத்துமாறும் கூறி மறைந்தார்.
குளிர்ந்த சந்திரனிடம் இருந்தும், கங்கையிடம் இருந்தும் தோன்றியதால் இவ்வம்மை சீதளாதேவி (குளிர்ந்த தன்மை உள்ளவள்) எனப் பெற்றார்.
சீதளாதேவி சிவபெருமானது கட்டளையை ஏற்றுத்தம் கரத்தில் உள்ள கங்கை நீரை வேப்பிலையால் எடுத்துத் தேவர்கள் மேல் தெளித்துப் பிரம்பினால் அவர் தம் உடலைத் தடவினாள். தேவர்கள் உடலெங்கும் தோன்றி இருந்த கொப்புளங்கள் மறைந்தன. தேவர்கள் உடல்நலம் பெற்று அம்பிகை சீதளாதேவியை ஆதரித்து வழிபட்டனர்.
இவ்வம்பிகை சிவபெருமான் அருளியவாறு மாரியம்மன் முதலிய பெயர்களோடு உலகில் விளங்கி, மக்கள் அறநெறி தவறும் காலங்களில் வெப்பு நோயையும், வைசூரியையும் கொடுத்து மக்களைத் திருத்தி நல் வழிப்படுத்தி வருகின்றாள். மழை வேண்டும் காலங்களில் மழையைப் பொழியச் செய்து
வருகின்றாள்.

வைசூரிக்கு இவ்வம்மையின் அருளைத் தவிர உலகில் மருந்து எதுவும் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.
இந்நோய் கண்டவர்கள் மாரியம்மனை வழிபட்டும்,வேப்பிலை கொண்டு தடவச் செய்தும், ஆசார நியமங்களை மேற்கொண்டும் உடல் நலம் பெறுவதைக் காணலாம்.
மகாமாரி
அசுர குருவான சுக்கிராச்சாரியார் அசுரர்கள்
அடையும் தோல்விகளைக் கண்டு மனம் பொறாதவராய் மீண்டும் அபிசார வேள்வியைச் செய்தார். வேள்வித் தீயிலிருந்து கண்டார்க்கு அச்சம் விளைக்கும் தோற்றத்தோடு ஒர் அசுரன் தோன்றினான். அவ்வசுரன் தன்னை எதிர்க்க வந்தவர்களை எல்லாம் மரணம் செய்வித்த படியால் மகாசுரன் எனப் பெயர் பெற்றான். மகாசுரன் தேவர் உலகம் சென்று தேவர்களைப் பலவாறாகக் கொடுமைப்படுத்தினான். மகாசுரனின் கொடுமை தாங்காது தேவர்கள் அனைவரும் சென்று பலவாறு தோத்திரித்து அம்பிகையை வழிபட்டுத் தங்களைக் காத்தருளுமாறு பிரார்த்தித்தனர்.
அம்பிகை தேவர்களின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து மகாசுரனைச் சம்கரிக்கும் பொருட்டுச் சிவந்த திருமேனியும், நான்கு கைகளும், அக்கைகளில் கத்தி, கபாலம்,உடுக்கை, சூலம் உடையவளாய், ஐந்தலை நாகம் குடைபிடிக்க எழுந்தருளி மகாசுரனோடு கடும் போர் செய்து அவனைச் சம்ஹாரம் செய்தார்.
மகாசுரனைச் சம்ஹரித்த பெருமையால் இவ்வம்பிகைக்கு மகா (பெரிய) மாரி என்ற பெயர் பெற்றாள்.
கருமாரி
சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் பிரபலமாக விளங்கும் தெய்வம் கருமாரி. கருமாரியம்மன் பற்றி இத்தலத்தில் கூறப்படும் வரலாறு அறிதற்கு உரியது. முன்னொரு காலத்தில் சிவபெருமான் உருத்ரபூமியாகிய இடுக்காட்டில் இருந்துகையிலைக்குத் திரும்பினார். அப்பொழுது தன் அருகில் இருந்த பாலாம்பிகையிடம் தன் திருமேனியில் இருந்து விபூதியை எடுத்துக்கொடுத்து, இதைக்கொண்டு உலகின் ஐந்தொழில்களையும் புரிந்து வருக எனப் பணித்து, கைலை சென்று நிஷ்டையில் அமர்ந்தார். உமையன்னை ஈசன் இருந்த இடத்தில் வடக்கு திசையில் அமர்ந்து எழு
யூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 339
கன்னிகைகளாகத் தம்மை மாற்றிக் கொண்டார். அவ்வேழு கன்னியர், அந்தராட்சி, ஆகாட்சி, பிரமாட்சி, காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, மாரி எனப் பெறுவர். அந்தராட்சி காடுகளிலும், ஆகாட்சி மலைகளிலும், பிரமாட்சி நதிகளிலும், விசாலாட்சி காசியிலும் சென்று தங்குகின்றனர். மாரி இறைவன் தன்னைப் பிரிந்து சென்ற இடத்தையே இருப்பிடமாகக் கொண்டார். தன்னை இருஉருவங்களாக மாற்றிக்கொண்டு முன்னும் பின்னுமாக அமர்ந்தார்.
முன்னுள்ள தன் இல்லத்தில் தலை மட்டும் மேலே விளங்க உடலை பூமியாகிய கருவில் மறைத்துச் சிவசக்தி ஐக்கிய உருவாக விளங்குகின்றார்.
பின்புறம் உள்ள இரண்டாம் உருவம் முழு உருவமாகக் கைகளில் பொற்கிண்ணம், சூலம்,உடுக்கை, கத்தி இவைகளை ஏந்தி, ஐந்தலை நாகம் குடையாய் விளங்க வீராசனத்தில் அமர்ந்துள்ளார். முன்புறம் உள்ள திருவுருவத்திற்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்து வருகின்றன.
மாரியம்மனுக்கு உகந்த பொருள்கள்
வேப்பிலை
இது சக்தி அம்சமாகவும், நோய்களைத்தடுத்துக் குணப்படுத்தும் மூலிகையாகவும் திகழ்வது. வெம்மையைத் தணித்துத் தண்மையைத் தரும் இவ்விலை மாரியம்மனுக்கு உகந்த பச்சிலையாம்.
மாவிளக்கு
இரேணுகைக்குச் சேரி மக்கள் அளித்த இனிய
உணவு. அரிசி மாவுடன் சர்க்கரை கலந்து பிசைந்து
அதில் நெய்விட்டு விளக்கேற்றி அம்பிகைக்கு
மயூரமங்கலம்
 

நிவேதனமாகப் படைத்து அதனைப் பிரசாதமாக உட் கொள்வர். எல்லோரும் இதனைத் தயாரித்துப் படைத்து அருந்தலாம்.
பானகம்
வெல்லம் கலந்த தண்ணிர், ஏலக்காய் முதலியன இட்டு, சுவையும், மணமும் உடையதாகத் தயாரித்துப் படைத்து உண்ணலாம். காவடி எடுத்து வழிபடுதல் இவ்வம்மைக்கு மிக உகந்ததாகும்.
மாரியம்மையின் சிறந்த தலங்கள்
தஞ்சைக்கு தென் கிழக்கில் மிகப் பெரிய ஆலயத்தில் அன்னை மாரியம்மன் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார். புகழ்பெற்ற தெய்வமாகவும் மாரியம்மன் விளங்கி வருகின்றார்.
இராஜராஜசோழனால் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனின் மனைவியின் பொருட்டுக் கட்டப்பெற்ற மாரியம்மன் ஆலயம் சிங்களாச்சியம்மன் கோயில் எனப்படும். இது செங்களாச்சி எனத் திரிந்து செங்கமல நாச்சியார் கோயில் எனவும் வழங்குகிறது. இது தஞ்சாவூரில் இராசப்பா நகரின் தென்புறம் உள்ளது. மாரியம்மன் எழுந்தருளி உள்ள சிறப்புடைத் தலங்களாக சமயபுரம், ஒலுங்கை மங்கலம், வலங்கைமான், சென்னைத் திருவேற்காடு எனப் பல தலங்கள் உள்ளன.
ஈரோடு பெரியமாரியம்மன், சக்தி மங்கலம் பண்ணாரி மாரியம்மன், சேலம் கோட்டை மாரியம்மன், அம்மாப் பேட்டை மாரியம்மன் என வழிபட்டு வருகின்றோம். நம் காவல் தெய்வமாக, நோய் நீக்கி வாழ்வளிக்கும் மகா சக்தியாக என்றென்றும் மாரித்தாயை வழிபட்டு வாழ்வோம்.

Page 340
30
1. சம்பந்தர் பாடல் வகு ஞானக் குழந்தை சம்பந் பதிகம் பாடியவர். செந்தமிழிலே அ அவர் பாடிய பதிகங்களின் தொன இறைவன் வீற்றிருக்கும் இடமெ மூன்று திருமுறைகளாக வகுக் திருமுறைகளாகத் தொகுக்கப்பட் வந்து சம்பந்தர் பாடினார். பதிக பாடல்களை வகுத்துப் பாடியுள்ள ஆட்கொள்ளும் சிறப்பையும் அட வைக்கிறது. இளமை நிலையி பாடல்களைப் பாடவல்லவர் என்று வல்லவர் என்றும் உடற் சோர் ஒழித்தவராவர். உள்ளத்திலே நில இன்னும் சம்பந்தருடைய L ஆய்வுகள் செய்துள்ளனர். பதிக அ சம்பந்தர் பாடவில்லை. அவர்களு கூடச் சிறப்பாகப் பாடியுள்ளா மணிவாசகருடைய பாடல்களிலும் இளமை ஏனையவர்களிலிருந்து அ சம்பந்தர் பதினாறு வயதில் அவர் மூன்றாவது வயதிலே முத ஆண்டுக் காலப்பகுதிகளில் ஏறச் முறையினை அவர் முன்னோரது அப் பதிகங்கள் சில தனித்துவங் நிலையை எடுத்துக் காட்டுகின்ற புலப்படுத்துகின்றது.
 
 

பந்தர் காட்டும் தியின் பேரழத
பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
ப்பும் தொகுப்பும் தன் ஞானப்பால் உண்டு பாலறாவாயோடு இறைவன் மீது வர் பாடிய தேவாரங்கள் பல. நல்லிசையோடுபண் அமைய கை 383 ஆகும். தன்னை ஞானப் பாலூட்டிப் பாடவைத்த ல்லாம் சென்று பாடப்பட்ட இப்பதிகங்கள் பிற்காலத்தில் கப்பட்டன. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று டுள்ளன. இறைவன் கோயில்களை- யெல்லாம் வலம் க அமைப்பிலே ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் பத்துப் ார். இறைவனையும் இறைவியையும், எம்மை, இருவரும் க்கி அவர் பாடிய இசைஞானம் எம்மை இன்று வியக்க லே இனிமை குன்றாத அழகு தமிழில் அமைந்த அப் ம் வானுலகாளும் தகுதியாளர். அப்பாடல்களைச் சொல்ல வு அற்றவர். நாள் தோறும் கேட்பவர் வினைகளை னைப்பவர் நேயம் மிக்கவர். ாடற்சிறப்பினைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் பலரும் புமைப்பிலே இறைவன், இறைவியின் அருளைப்பற்றி மட்டும் டைய அருட் கோலங்களையும் அழகுத் தோற்றங்களையும் ர். ஏனைய சமய குரவர்களாகிய அப்பர், சுந்தரர், இப்பண்புகள் காணப்படுகின்றன. ஆனால் சம்பந்தரது வரை வேறுபடுத்திக் காட்டுகிறது. முத்தியடைந்தாரென அவருடைய வரலாறு கூறுகின்றது. ன் முதல் தேவாரம் பாடியவர். எனவே இட்ைப்பட்ட 13 குறைய 4000 பாடல்களைப் பாடியுள்ளார். பதிக அமைப்பு மரபிலிருந்து பெற்றிருப்பினும் பாடற் பொருளமைதியிலே களையும் கொண்டுள்ளன. அது அவருடைய இளமை து. இயற்கை அழகிலே அவருக்கு இருந்த ஈடுபாட்டையும்
பூரபதி பூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 341
2. அழகுக்கோலம் காட்டும் பண்பு
சம்பந்தருடைய பாடல்களிலே இருவகையான அழகுத் தோற்றங்கள் காட்டப்பட்டுள்ளன. ஒன்று இறைவன் இறைவியினுடைய கோல அழகுநிலை. மற்றது அவர்கள் வீற்றிருக்கும் கோயில்களின் சுற்றுப்புறச் சூழல்களின் இயற்கைத் தோற்ற அழகு நிலை. கோயிற் சூழலைப் பாடும் போது அவ்வப் பிரதேசத்து இயற்கை வளநிலையை ஊன்றி நோக்கிப்பாடியுள்ளார். இறைவன் இறைவியின் திருக்கோலங்களைப் பாடும் போது சம்பந்தர் முன்னவர் மரபினைப்பின்பற்றியே பாடியுள்ளார். இக் கட்டுரை சிறப்பாக அவர் பாடிய சக்தியின் பேரழகு பற்றிய கருத்துக்களை எடுத்துக் காட்டவுள்ளது. சம்பந்தருடைய வரலாற்றில் மூன்றாவது வயதிலே இறைவியின் முலைப் பாலுண்ட தெய்வீக அநுபவம் அவருடைய பாடல்களின் அடிநாதமாக அமைந்தது. இறைவியின் எல்லையற்ற பேரழகு அவர் உள்ளமெல்லாம் நிறைந்திருந்தமையால் அதைப் பற்றிப் பலவாறு பாடமுடிந்தது. கண்ணிலே தோன்றிக் கருத்திலே நிறைந்து பாலின் சுவையுடன் உடலெங்கும் பரந்த அந்த அற்புத அழகை ஏனைய நாயன்மார்கள் அநுபவித்திருக்கவில்லை. இளமையுணர்வால் மட்டும் சம்பந்தர் பாடல்களில் இறைவியின் அழகு விபரிக்கப்படவில்லை. அவர் சிறுவயதிலே பெற்ற அநுபவம்'உண்ணாமுலையாளின் உன்னதமான அழகு பற்றி என்றும் எண்ணவைத்தது. அதுவே இனிய தேவாரங்களிலும் இடம் பெற்றது. அழுத குரல் கேட்டு முன்னே தோன்றிய அன்னையின் அழகை எல்லாக் குழந்தைகளும் என்றும் நினைவில் வைத்திருக்கும் இயல்புடையன. அம்மாவின் முகம் மட்டுமல்ல அவளின் முழுஉருவமுமே குழந்தைகளின் நினைவில் நிறைந்திருக்கும். தாயைத் தேடி அழும் குழந்தைகள் தமது தாய்மாரின் முகத்தை நினைவில் வைத்துக் கொண்டுதான் தேடியழுகின்றன. அந்த நினைவு முகத்தை நேரிற் கண்டவுடனே அழுகையை நிறுத்தி விடுகின்றன. இதனைச் சம்பந்தர் பாடல்களில் வருகின்ற இறைவியின் வர்ணனைகள் எமக்கு மேலும் விளக்குகின்றன.
சம்பந்தர் பாடல்களில்ே இறைவியின் அழகு முழுமையாகப் பேசப்படுகிறது. சாதாரண பெண்ணுடைய உறுப்புக்களின் அழகைப் பாடுவது போல இளைஞரான சம்பந்தர் இறைவியின் அழகினைப் பாடியுள்ளார். உமையைப் பல பாடல்களில் மலைமகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மயூரமங்கலம்

மலைமகள் - "திருச்செங்காட்டங்குடிப்பதிகம்) விளங்குஇழைமடந்தைமணமங்கை-திருநள்ளாறுப்பதிகம்) மலைமல்கு மங்கை’- (திருக்கோட்டாறுப்பதிகம்) மையகண்மலைமகள்-(திருவைகல்மாடக்கோயில்பதிகம்) மடமொழிமலைமகள்-(திருவைகல்மாடக் கோயில்பதிகம்) பண் இயல் மலைமகள் -திருநள்ளாறுப்பதிகம்) வரி அணிநயனிகல் மலைமகள் -திருரடகப் பதிகம்) இழை வார்தரும் முலை மகள் - (திருமறைக்காடு)
மலையிலே வீற்றிருக்கின்ற இறைவியின் தோற்றத்துடன் அவள் குரலையும் எடுத்துக் காட்டுகின்றார். தாயின் குரல் கேட்கும் திசை நோக்கி பார்க்கும் சம்பந்தக் குழந்தையின் அநுபவம் வேறு பாடலடிகளிலும் வெளிப்பட்டு நிற்கிறது.
தேனின்பொலிமொழியாள்(திருக்கொடுங்குன்றப்பதிகம்) “தேனை வென்ற மொழியாள்'(சீர்காழிப்பதிகம்)
பண்நிலாவிய மொழி உமை”(திருத்தேவூர்) பாகு அமர் மொழி உமை” (திருப்பூந்தராய்) கரும்பின் மொழியாள்"(திருவதிகை வீரட்டானம்) பண்நிலவிய மொழி உமை’- (திருத்தேவூர்) பண்ணியாழ்எனமுரலும்பணிமொழிஉமை(திருமறைக்காடு) இன் மொழித் தேவி”(திருஆனைக்கா)
பண்தடவு சொல்லின் மலைவல்லி”(திருத்தேவூர்) பண்தலைமழலைசெய்யாழ்எனமொழிஉமை(திருவிளமர் அம்மாவின் குரல் இனிமையானது. உருவம் உள்ளத்திலே பதியுமுன் குரல் நினைவிலே பதியும் நிலையில் குழந்தை தாயை நினைவிலே பதித்துக் கொள்ள குரலே முதலில் உதவி செய்கிறது. சம்பந்தர் காட்டும் அன்னையின் குரல் அவர் மட்டுமே உணர்ந்தது. ஆனால் சம்பந்தர் முன்னைய செய்யுள் வல்லாரின் மரபு பற்றியே இறைவியின் குரலைப் பற்றிப் பாடியுள்ளார் என்றும் கொள்ளப்படுகிறது. சம்பந்தரின் பாடல்களிலே உள்ள தாயழகின் வர்ணனை பொதுவானதன்று. அது உலகியலின் தன்மையோடு அமைவது. இதனை அவருடைய ஏனைய அழகுக் கோலத்தைக் காட்டுகின்ற தன்மைகளோடும் இணைத்து நோக்கும் போது தெளிவாகப் புலப்படுகின்றது.
குழந்தையானது தாயின் குரலுக்குத் தன் கவனத்தைத் திருப்பும் போது தன் பசியைத் தீர்க்க வல்லவள் அவளே என்பதையும் உணர்ந்துள்ளது. தாயிடம் பாலுண்ணத் தன் அழுகைக்குரலை எழுப்புகிறது. குழந்தைக்குப் பாலூட்டும் தாயின்

Page 342
முலையையே குழந்தை தேடுகிறது. தாய் தன்னைத் தூக்கியவுடன் முலைப் பாலுண்ண அவள் முலைகளை கைகளால் தடவித் தேடுகிறது. அச்சமயம் தாயினுடைய மார்பிலுள்ள அணிகளும் அலங்காரங்களும் குழந்தையின் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. அந்த அநுபவ நிலையிலே சம்பந்தர் பாடல்களில் தாயின் அழகு பேசப்பட்டுள்ளது.
"வாடா முலை மங்கை”(திருவிடைமருதூர்
வார் அணி வளமுலை மங்கை"(திருப்பாம்புரம்) வடம் திகழ் மென்முலையாள்"(திருக்கற்குடி) "போகம் ஆர்த்த பூண்முலையாள்"(திருநள்ளாறு) இடை ஈர் போகா இளமுலையாள்"(திருநாத்தூர்) குது அகம் சேர் கொங்கையாள்"(திருச்சண்பை நகர்) "வார் ஆர் கொங்கை மாது’ (திருக்குடந்தைக் காரோகனம்)
வார் உறுவனமுலை”(திருச்சிரபுரம்) "கதிர்இள மென் கொங்கையாள்"(திரு அரசிலி) "வார் உலாவிய வனமுலை”(திருக் கேள் வேளுர்) "பெருந்தடங்கொங்கை”(திருக்கழுமலம்)
சந்தம் ஆர்முலையாள்'(சீர்காழி) "வார் அமைமுலை மங்கை"திருக்கச்சிநெறிக்காரைக் காடு) "வார் அணி கொங்கை நல்லாள்"(திருவலஞ்சுழி)
குழந்தையின் அனுபவ நிலையிலே மூன்று வயதிலே சம்பந்தர்தான் நேரிற் கண்ட பேரழகைப் பாடுவது இயல்பானதாகவுள்ளது. பாடல்களிலே அவர் பயன்படுத்திய சொற்கள் புலமை மரபான சொற்களாக இருந்த போதும் உணர்வு நிலையில் விகற்பமில்லை. இப்பண்புநிலைபாரதியின் “கண்ணம்மா என் குழந்தை" என்ற பாடலிலும் வந்து பொருந்தியுள்ளது.
அழகுக் கோல நிலையில் தாய்மையின் முழுவடிவையும் சம்பந்தர் பாடியுள்ளார். தாயின் மேனியின் பண்பு குழந்தை நன்கறிந்தது. இதனால் தலைமயிர்,நெற்றி, கண்,வாய், கழுத்து, இடை, கால் என எல்லாவற்றையும் குழந்தை அனுபவத்தினால் பாடல்களிலே வெளிப்படுத்தியுள்ளார். உலக மகா சக்தியின் பேரழகைச் சம்பந்தரின் குழந்தை உள்ளம் வியந்து பாடியுள்ளது. அன்னையின் அழகைப் பிறரும் காணும் வகையிலே அறிமுகம் செய்கிறார். சம்பந்தரது பாடல்களிலே வருகின்ற அழகுக்கோலங்கள் சக்தியின் பேரழகை எல்லோருக்கும் காட்டுகின்றன. அவள் கூந்தலின் அழகைப் பின்வருமாறு தொடர்களில் காட்டுகின்றார்.
C32d

மலர்மலிகுழல் உமை"(திருவிழிமிழலை) “கந்தம் மல்குகுழலி"திருக்கச்சி ஏகம்பம்) வண்டு வாழ்குழல் மங்கை"திருவலஞ்சுழி) வண்டு வாழும் குழல் மங்கை (திருப்புகலி) "கொட்டமே கமழும் குழலாள்"(கோயில்) பூங்கமழ் கோதை"(திருப்புகலி) "வண்டு அமரும் குழல் மங்கை”(திருப்புனவாயில்)
ஏலமலர்க் குழல் மங்கை நல்லாள்"(திருக்கோட்டாறு) "வண்டு அமரும் குழல் மங்கை”(திருக்கோட்டாறு தாது அணி குழல் உமை"(திருப்பூந்தராய்) கருகிய குழல் உமை"திருப்பூந்தராய்) "கள் அணி குழல் உமை"(திருப்பூந்தராய்)
வண்டு அமர்குழலி”(திருப்பூந்தராய்) "காசை செய்குழல் உமை"திருப்பூந்தராய்) "கொத்து அணி குழல்”(திருப்பூந்தராய்) வண்டார்குழல் அரிவை”(திருவிஷ்ணுபுரம்) குரவம் கமழ் நறுமென் குழல் அரிவை'(திருவியலூர்) 'ஏலம் ஆர்தரு ஏழை'(திருரடகம்)
மேற்காட்டிய பாடல் தொடர்களில் இறைவியின் கூந்தலழகைச் சம்பந்தர் பல கோணங்களில் எடுத்துக் காட்டியுள்ளார். நறுமணமான மலர்களைச் சூடிய அன்னையின் கூந்தலின் நறுமணம் அழகுத் தோற்றத்தை மட்டுமன்றி அவள் வரவு கூறும் உணர்வாகவும் அமைந்துள்ளது. கூந்தலின் கருமையும் மலர்கள் சூடிய வண்டுகள் மொய்க்கின்ற காட்சியும் பெண்களின் பொதுவான கூந்தல் அணி செய் மரபைக் கூறுவது போலிருப்பினும் அது ஞானப் பாலூட்டிய் தேவியின் ஒப்பற்ற அழகையே சம்பந்தர் கோயில்கள் தோறும் கண்டதை உணர்த்துகிறது.
அடுத்து சம்பந்தர் அன்னையின் அருள்தவழும் கண்களின் பேரழகைப் பலவாறு பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகத்தவர் யாவரையும் பரிவுடன் பார்த்துப் பேணும் தாயின் கருணை நிறைந்த கண்களின் அழகுத் தோற்றத்தைச் சம்பந்தர் காட்டுகிறார்.
வடிவுடைவாள்நெடுங்கண்உமை"திருவாழ்கெளித்தூர் “மையார் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள்’ (திருச்செங்காட்டாங்குடி)
கருந்தட மலர்க் கண்ணி”(திருமாற்பேறு “பெருந்தடங்கண் செந்துவர் வாய் பீடு உடை மலைச்செல்வி"திருக்கழுமலம்)
நீலம் உண்டதடங்கண்உமை"திருஅநேகதங்காவதம்) சேல் அன கண்ணி”(திருக்கொச்சைவயம்) கயல் அனவரி நெடுங்கண்ணி”(திருப்புகலி)
யூரபதி யூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 343
அஞ்சனக் கண்உமை"திருவிழிமிழலை) "வரி அணிநயனிகல் மலைமகள்"(திருரடகம்) "வேல் அன கண்ணி”(திருவெண்டுறை) அம்பு அனைய கண் உமை மடந்தை”(திருமணிகுழி) மைத்தகு மதர்விழி மலைமகள்"(திருவிழிமிழலை) "அம் கயல் கண்ணி (திருஆலவாய்) "வேல் ஒண் கண்ணியினாள்'(திருச்சிக்கல்)
அன்னையின் நீண்ட பெரிய அழகிய கண்களின் தோற்றம் சம்பந்தருடைய நினைவில் ஆழப்பதிந்துள்ளது. அழகுரல் கேட்டு வந்து அமுதப் பாலூட்டிப் பரிவுடன் தேற்றிய அவள் திருவிழிகளின் நோக்கால் அவர் வாக்குப் புலமை பெற்றார். அம்மையின் கண்கள் கரிய கண்கள். எப்போதும் குளிர்ந்த நோக்குடன் விளங்குபவை. வரி அணி நயனி’ என்ற தொடர் இங்கு ஒரு கருத்தைத் தோற்றுவிக்கிறது. நயினையம்பதியிலே வீற்றிருக்கும் தேவிக்குச் சிறப்பாகப் பொருந்துகின்றது.'நயனம்’எனக் கண்ணைக் குறிக்கின்ற சொல்லே காலப்போக்கில் மருவி நயினாதீவு, நயினையம்பதி' என அழைக்கப் பட்டிருக்கலாம். அன்னையின் அழகிய நயனங்களே இத்தலத்திற்கு பெயரைச் சூட்டக் காரணமாயிற்றுப் போலும். கடல் சூழ்ந்த தீவிலே சேலும் கயலும் துள்ளும் கரையிலே அவள் கருணைக் கண்களுடன் அடியாரைத் திரு நோக்கம் செய்தபடி வீற்றிருக்கின்றாள். அவள் கண்ணழகே இத்தலத்தின் சிறப்புடையதாயிற்று எனல் சாலப் பொருந்தும்.
3. தாயின் பேரழகு பாடும் சேய்
தாயின் பேரழகைப் பற்றிப் பாடும் சேய் சம்பந்தரது பாடல்களில் ஏனைய உறுப்புகளின் விளக்கம் குறைவாகவே உள்ளது. அவள் வந்த தோற்றத்தை அவளுடைய சிற்றிடையைச் சில அடிகளிலே பாடியுள்ளார்.
மின் இடையாள்"(கீழைத்திருக் காட்டுப் பள்ளி) இழை ஆர்.இடை மடவாள்'(திருமுதுகுன்றம்) மயில் ஆர் சாயல் மாது'(திருக்கோலக்கா) தளிர் மேனிஅரிவை”(திருப்பேரூர்த்துறை) மின் ஆர்இடையாள்"(திருப்புக்லி) தளிர்போல்மேனித்தையல்நல்லாள்(திருப்பரங்குன்றம்) அன்ன மென்நடை அரிவை"(திருச்சிரபுரம்) நுண் இடைப்பேர்அல்குல் நூபுரமெல் அடிப்பெண்ணின் நல்லாள்"(திருக்கானப்பேர்)
"பட்டு இசைத்த அல்குலாள் பாவையாள்” (திரு ஆலவாய்)
மயூரமங்கலம்

அன்னையின் மேனி வண்ணம், அவள் அழகுத் தோற்றம் சம்பந்தர் பாடல்களிலே விரிவாகப் பாடப்படாமைக்கு அவருடைய குழந்தையுள்ளமே காரணமாகும். புலமை மரபிலே தானறிந்தவற்றை முழுமையாகச் சம்பந்தர் பயன்படுத்தாமைக்கு அவருடைய உலக வாழ்வின் அனுபவக் குறைவும் ஒரு காரணமாகும். பதினாறு வயதிலே அவர் உலக வாழ்வை முடித்துக் கொண்டவர். அதனால் குறுகியகால உலகியல் அனுபவமே பெற்றவர். குடும்ப வாழ்வு மேற் கொள்ளாதவர். எனினும் பெண்களின் பருவவயது மாற்றத்தைத் தாய்மை நிலையிலேயே உணர்ந்துள்ளார் என்பது அவருடைய பாடல்களின் மூலம் பெறப்படுகின்றது. அவர் பயன்படுத்திய சொற்கள் இதற்குச் சான்றாக உள்ளன. மங்கை, அரிவை, தையல், மாது, பாவை, மடந்தை, பேதை போன்ற சொற்களால் உமையை விளக்கியுள்ளார். ஆனால் இவற்றுள் மங்கை என்ற சொல்லையே U6) இடங்களில் பயன்படுத்தியுள்ளார். புலமை மரபிலே மங்கை' என்னும் பருவம் திருமணமானவளையே குறிக்கின்றது. எனவே உமையை உலகத்தவர் எல்லோருக்குமே தாயாகக் காட்டச் சம்பந்தர் முற்பட்டுள்ளார். சேயைக்காக்கின்ற நல்ல தாயாக எல்லோரும் அவளைக் காண வேண்டுமென விரும்பியுள்ளார்.
உலகக் கனல் வளர்க்கும் தாயாக உமையைப் பிற்காலத்துத் தோன்றிய புதுமைக் கவிஞன் பாரதியும் பாடியுள்ளான்.
மலையிலேதான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள். உலையிலேயூதி உலகக் கனல் வளர்ப்பாள் நிலையிலுயர்ந்திடுவாள் நேரே அவள்பாதம் தலையிலேதாங்கித்தரணிமிசை வாழ்வோமே.”
தாய்மையின் உணவூட்டும் பணியை முதலில் உணர்ந்தவர் சம்பந்தர். முலைப்பாலூண்டு உயிர் வாழும் உயிர்களெல்லாமே இந்த அநுபவத்தைப் பெற்றிருக்கும். மணிவாசகரும் இவ்வனுபவத்தைப் பாடியுள்ளார். “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” ஆட் கொள்ளும் இறைவன் கருணையை அவர் பாடியுள்ளார். ஆனால் சம்பந்தர் பாடும் அனுபவம் குழந்தமையானது. அது பின்னர் அபிராமி புகழ் பாடிய பட்டருக்கும் வழி காட்டியுள்ளது. திருக்கடவூரிலே வீற்றிருக்கின்ற அன்னை அபிராமி உமையின் இன்னுமோர் வடிவம். பட்டர் பாடிய அபிராமி அந்தாதியில் அமைந்த முதற் பாடல் அன்னையிடம் அவர் கண்டவற்றைக் காட்டுகிறது.

Page 344
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்
திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
போது மலர்க் கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்
குங்குமத் தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி
என்றன் விழுத்துணையே’ அன்னை சம்பந்தனுக்குப் பாலூட்டியதையும் பட்டர் பாடியுள்ளார். பசிப்பிணி போக்கும் உலகத்தாயர்க்கெல்லாம் மூத்தவளாக உமையை அவர் பாடியுள்ளார். “பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருளை” நினைத்துப் பாடியுள்ளார். எனவே அருள் செய்யும் தகுதியிலே தாய்மை நிலையிலே “கறைக்கண்டனுக்கு மூத்தவளாக” ப் பேரன்னையாக அவளைக் கண்டார். “ஈன்றெடுப்பதற்கு இனியொரு தாய் தனக்கில்லை” எனப் போற்றுகின்றார். சம்பந்தர் மூன்று வயதிலே கண்ட சக்தியின் அதே பேரழகு வடிவத்தை தமது உள்ளத்திலும் நிறைத்துப் பாடியுள்ளார்.
"செப்பும் கனக கலசமும்
போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம
வல்லி அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும்
விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத்
தேனென்துணை விழிக்கே" சம்பந்தர் பாடல்களில் வருகின்ற அன்னையின் வண்ண வடிவழகினையே அபிராமியைப் பாடுவதற்கு முனைந்த பட்டரும் காண்கிறார். சம்பந்தரது காலமும் பட்டருடைய காலமும் வேறுபட்டதாக இருப்பினும் தெய்விக அநுபவநிலையில் ஒன்றியவர்களாயுள்ளனர். தாய்மை எனும் நிலையில் அன்னையின் அருள் உலகெங்கும் இன்னும் விளங்குகின்றது. தாயும் சேயும் என்ற உறவு நிலையிலே உலகத்து அன்னையர்

எல்லோரும் உமையின் தோற்றமாக விளங்குகின்றனர். பெண்ணைத் தெய்வமாக மதித்துப் போற்றும் நமது மரபு காலங்காலமாகத் தொடர்ந்துள்ளது. வாழும் நிலையிலே வாழ்க்கையே சமயநெறியாக வழிகாட்டிய சம்பந்தருடைய பெருமையை நாம் காண்பதற்கு அவருடைய பாடல்களே இன்று சான்றாகவுள்ளன. தமிழின் வளத்தையும், இலக்கிய நெறியையும், தொண்டின் பெருமையையும் எடுத்து இயம்பும் சம்பந்தர் பாடல்கள் இன்னிசையோடு பாடவும் சிறந்த பாடல்களாகவுள்ளன. தாயின் புகழையும் பணியையும் மறவாத சம்பந்தர் உலகத்துக் குழந்தைகளுக்கு எல்லாம் சிறந்த வழிகாட்டி, உருவம் அறியாத குழந்தைகள் காணவேண்டி, தனது தெய்விகத் தாயைப் பாடல்களிலே காட்டிச் சென்றுள்ளார். எமக்கெல்லாம் விழுத்துணையாக விளங்க ஒரு உருவத்தைச் சமைத்துள்ளார்.
இயற்கை நிலையிலே இறையருள் பற்றிய தெளிவைக் காட்டியவர் சம்பந்தர். அம்மாவின் அழகு பற்றி ஆசையோடு சொல்லும் சின்னக் குழவி அவர். பண்ணிசையோடு அவரது பாடல்கள் பாடப்பட வேண்டும். அப்போதுதான் அவர் காட்டிய அன்புத்தாயை, அருள் நிறைந்த அன்னையை, அவள் பேரெழில் வடிவத்தை நாமும் உள்ளத்தில் இருத்திக் கொள்ள முடியும். பன்னிரு திருமுறைகளில் முதலில் சம்பந்தரது பாடல் தொகுக்கப்பட்டுள்ளது. இளமையிலே இறையருளை நன்கு உணர்ந்த அவரது பேரனுபவம் எல்லோருக்குமே இளமையில் வர வேண்டும். அப்போதுதான் அன்னை பற்றிய முழுமையான விளக்கத்தை அனைவரும் பெற முடியும்.
ைேமம்மருபூங்குழல்கற்றைதுற்றமான்விழிமங்கையோடும் பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த புகலிநிலாவிய புண்ணியனே எம்இறையே இமையாத முக்கண் ஈச என்நேசஇது என் கொல் சொல்லாய் மெய்ம் மொழி நால்மறையோர் மிழலை விண்இழி கோயில்விரும்பியதே.
శీ
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 345
மயூரமங்கலம்
அம்மை வழிபாடு பொ வழங்குகிறது. ஆங்கில மொழித் வழிபாடு' என்ற தொடரை இன்று
திராவிடர் ஆதியிலே அம் அறிஞர் சிலரால் முன்வைக்கப்பட் பகுதியிலே, பெண்களே சமூகத்தி பெண் தெய்வமே சமூகத்திலே மு கூறுவர். பெண் முழு முதன்மை இருந்திருக்கக் கூடுமாயினும், ! இருந்திருக்க வேண்டும். அத்தசை காலத்தில் நாங்கள் காணக்கூடிய சுமார் மூவாயிரத்தைந்நூறு இந்தியாவின் வடமேற்கில் காண இன்று பரவலாக ஏற்றுக் கொள்ள தடயங்கள் கிடைத்துள்ளன. சிவலி வழிபாடும் ஆங்கு இடம் பெற்றிருந் சங்க காலத் தமிழகத்தி குறிப்பிடுந் தொல்காப்பியம் அம்ை நூல்களிலே கொற்றவையைப் ட தெய்வமான கொற்றவைக்கு இருந்தனவென்றும் முருகன் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் தொல் காப்பியத்திலே பாலை நில வாகைசூடும் வாகைத்திணை வாகைத்திணை எனப்படுவதாலு சிலர் கொள்வர்.
ஆரியருடைய தெய்வங் என்பனவற்றோடு இரண்டறக் ஆரியருடைய துர்க்கையாக மாறி
 
 

ரகுருபரர் பாடிய ற்மை வழிபாடு
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை
துமக்களிடையே அம்மன் வழிபாடு எனத் திரிபுபட்டு தொடரை நேரடியாக மொழி பெயர்ப்போர் தாய்த்தெய்வ பயன்படுத்தி வருகின்றனர். மை வழிபாட்டுக்காரராக இருந்தனரென்ற கருதுகோள் டுள்ளது. மானிடப் பண்பாட்டு வளர்ச்சியிலே, ஒரு காலப் ல் முதன்மை பெற்று விளங்கினரென்றும், அக்காலத்திலே pதன்மை பெற்று விளங்கியதென்றும் மானிடவியலாளர் பெற்று விளங்கிய தாய் வழி உரிமைச் சமுதாயம் ஒன்று அது வரலாற்றுக் காலத்துக்கு முந்திய காலத்திலேயே sய சமுதாயம் ஒன்றன் எச்ச சொச்சங்களையே வரலாற்றுக் தாயிருக்கிறது.
- நாலாயிரத்தைந் நூறு ஆண்டுகள் காலத்துக்கு முன்பு ப்பட்ட இந்துவெளி நாகரிகம் திராவிடருடையதென்பது ப்படுகிறது. அம்மை வழிபாடு அங்கு இடம் பெற்றதற்கான மிங்க வழிபாடு முதலிய வேறுபல வழிபாடுகளுடன், அம்மை திருக்கிறது. லே, நிலவாரித் தெய்வங்களை நானிலங்களுக்குக் ம வழிபாடு எதனையும் குறிப்பிடவில்லை. மேற் கணக்கு பற்றிச் சில கூற்றுகள் இடம் பெற்றுள்ளன. வெற்றித் ஐயை, காடு கிழாள் என்னும் பெயர்களும் கொற்றவையின் மகனாகக் கருதப்பட்டான் எனவும் முதலிய இலக்கியங்களில் இருந்து தெரிய வருகின்றன. த்துக்குத் தெய்வங் கூறப்படாமையாலும், வெற்றி பெற்று ாயே பாலைநிலத்துக்குரிய புறத் திணையாகிய ம் கொற்றவையைப் பாலை நிலத்தெய்வமென அறிஞர்
கள், கடவுட் கொள்கைகள், வழிபாட்டு முறைகள்
கலந்து இந்து நெறி' உருப்பட்டபோது, கொற்றவை விட்டாள். கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிலே, விசயாலய

Page 346
  

Page 347
பண்டிகையாக மாறுகிறது. துர்க்கை, இலக்குமி, சரஸ்வதியாகிய மூவரும் சக்தியின் மூன்று முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டு, ஒவ்வொருவருக்கும் மும்மூன்று இரவுகள் பூசை பெறுகின்றனர். சப்தமாதர்' எனப்படும் ஏழுபெண் தெய்வங்கள் வழிபாடு பல்லவர் காலத்திலே சாளுக்கியர் நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குட் புகுந்தது. ஏழு பெண் தெய்வங்களை எவரெவர் எனப் பெயரிடும் முறையில் வேறுபாடு காணப்படுகிறது. இவர்களைக் 'கன்னிமார், நாச்சிமார்’ எனவும் வழங்குவதுண்டு. நாயக்க மன்னர் காலத்திலே அம்மை வணக்கம் செல்வாக்குப் பெற்றதற்கு இன்னொரு காரணமுண்டு. மன்னர்கள் பெரும்பாலும் வைணவர்களாகவும் தமிழர்கள் பெரும்பாலோர் சைவர்களாகவும் இருந்ததனால், அம்மை இவர்களை இணைத்து வைக்கும் பாலமாக மாறிவிட்டாள். சிவபெருமானுக்குத் தேவியாகிய அம்மை திருமாலின் தங்கையாகக் குறிக்கப்படுவதைப் பல இடங்களிலே காணலாம்.
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குமரகுருபர சுவாமிகளின் அம்மை வழிபாடு எவ்வாறு அமைந்ததென ஆராய்வது சுவைபயப்பது. சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் தோன்றியதற்குப் பின் தமிழ் நாட்டிலே வாழ்ந்த பெரும் புலவர்கள் பலர் வெவ்வேறு வழிகளிலே சென்றிருக்கிறார்கள். அருணகிரிநாதர் கெளமார மார்க்கத்தினர் போல முருக வணக்கத்துக்கே முதன்மை வழங்கி, சந்தங்களுடன் கூடீய பக்திப் பாடல்களைப் பாடிக் குவித்திருக்கிறார். சிவப் பிரகாச சுவாமிகள் கருநாடக நாட்டிலே பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலே உருவான இலிங்காயதம் அல்லது வீரசைவம் என்ற புதிய சமயப் பிரிவின் பிரசாரகராக ஒருவகைக் கற்பனை மிகுந்த பக்திப் பாடல்களைப் பல்வேறு பிரபந்த வடிவங்களிற் பாடியுள்ளார். தாயுமானவரைச் சைவசித்தாந்தி என்று கூறுவதற்கு இடமுண்டாயினும் அவருடைய சமய நெறியிலே வேதாந்த நெறியும் தமிழ்நாடுச் சித்தர் மரபும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். இராமலிங்க சுவாமிகள் சைவசித்தாந்தத்தை நிராகரிக்காத போதிலும், சுத்தசமரச சன்மார்க்கத்தின் பிரசாரகராகக் காணப்படுகிறார்.
பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பாண்டிய நாட்டின் வடபகுதியும் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளும் குழப்பங்கள் மிகுந்த அந்நிய மதத்தினர், அந்நிய மொழியினர், அந்நிய இனத்தினர் என்போர்
மயூரமங்கலம்

ஊடுருவல்களால் தமிழரல்லாரதும் தமிழ் நெறியுணராதாரதும் வேட்டைக் காடாக மாறிய சூழ்நிலையில் பாண்டிய மரபினர் ஆட்சி தென்பாட்டி நாட்டிலே மட்டும் சிலகாலம் தொடர்ந்தது. பொருநையாகிய தாமிர பரணியாற்றை மையமாகக் கொண்டதிருநெல்வேலிப்பிரதேசம்தமிழர் பண்பாட்டுக்கு நிலைக்களனாகியது. இதே காலத்தில் இலங்கையில் யாழ்ப்பாண அரசும் தமிழர் பண்பாட்டை அழியாமற்பேணி, வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்தமை நினைவு கூரத்தக்கது. பொருநையாற்றங்கரை புனிதப்பிரதேசமாக மாறிக் கொண்டிருந்த வேளையிலே ஆற்றங் கரையிலிருந்த ஊர்கள் பலவற்றுக்குச் சைவர்கள் கைலாசமென்றும், வைணவர்கள் திருப்பதியென்றும் பெயரிட்டனர். தமிழ்நாட்டிலிருந்த பிரபல ஆதீனங்களின் முக்கியமான கிளைகள் திருநெல்வேலியில் இயங்கின. சைவசித்தாந்தத்தைத் தூயமுறையிற் பேணுவன என்ற பெருமை திருநெல்வேலிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இக்காலச் சூழலிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும். சைவசித்தாந்தத்தின் தூண்களெனக் கூறத்தக்க குமரகுருபர சுவாமிகளையும், சிவஞானமுனிவரையும் தமிழ் இனத்துக்கே தந்து வான்புகழ் கொண்டது தென்பாண்டி நாடு.
குமரகுருபர சுவாமிகள் தலைசிறந்த சைவசித்தாந்தியாவார். சைவ சமயத்தில் உதித்துச் சைவ ஆசிரியர் ஒருவருக்கு அடியவராகிச் சைவசந்நியாசம் பூண்டு வாழ்ந்த இவருடைய சைவப் பற்றும், சைவசித்தாந்த நூற்பயிற்சியும், மூர்த்தி தல தீர்த்தங்களில் உள்ள அன்பும், குருபக்தியும், தொண்டர்பாலுள்ள பெருமதிப்பும் அளவிடற் கரியவையென உ. வெ. சாமிநாதையர் எடுத்துக் காட்டுவர். இவருடைய சைவசமயப் பணி ஒருவகையிலே சைவ சமயகுரவர் நால்வர் பணியோடு ஒப்பிடத்தகுந்தது. பாரத நாட்டின் தென் எல்லையிலே பொருநை யாற்றங்கரையிலே ஒதுங்கிக் கொண்டிருந்த சைவசித்தாந்தத்தை புனிதம்மிக்க காசிக்கும் கங்கைக் கரைக்கும் எடுத்துச் சென்று, அற்புதங்கள் சில செய்து காசியில் மடம் அமைத்துச் சைவ மறுமலர்ச்சிக்கு இவர் உதவினார். இத்தகைய சைவசித்தாந்தி எத்தகைய அம்மை வழிபாட்டில் ஈடுபட்டாரென நோக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

Page 348
அம்மை வழிபாடு பற்றித் தமிழில் எழுந்த செந்நெறி இலக்கியங்கள் சிறு தொகையினவே. “எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழுகடல் அவள் வண்ணமடா” என்று பாடத் தொடங்கிய பாரதிதாசன் வெகு விரைவில் திராவிடக் கழகத்தின் பிரசாரகனாக மாறிவிட்டதால், அவனுடைய பக்தியூற்று கொதிநீராக மாறிவிட்டது. புதுமைக் கவி சுப்பிரமணிய பாரதியாரே அம்மையைப் பல்வேறு கோணங்களில் நின்றுநோக்கிக் குறிப்பிடத்தக்க அளவான தோத்திரப் பாடல்களைப் பாடியுள்ளார். அன்னையை வேண்டுதல், ஓம்சக்தி, பராசக்தி, சக்தி, சக்தி விளக்கம், சக்திக் கூத்து, சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம், காளி தருவாள், மகா காளியின் புகழ் முதலிய தோத்திரங்களைக் காளி மேலேயே பாடியுள்ளார். சிவசக்தி, முத்துமாரி முதலிய மூர்த்தங்களைப் பாடியுள்ள பாரதியார் நவராத்திரிப் பாட்டுப் பாடியதோடு திருமகள் துதி, திருமகளைச் சரண் புகுதல் முதலியவற்றை இலக்குமி மேலும் கலைமகளை வேண்டுதல், வெள்ளைத் தாமரை முதலியவற்றைச் சரஸ்வதி மேலும் பாடியுள்ளார். கண்ணனைப் பெண்ணாக உருவகித்து கண்ணம்மாவின் காதல், கண்ணம்மாவின் நினைப்பு கண்ணம்மாவின் எழில் முதலியவற்றைப் பாடிய பாரதி வைணவ சக்தி வழிபாடு தொடர்பாக, ராதைப் பாட்டும் இயற்றியுள்ளார். அபிராமிப்பட்டர் ஆக்கிய அபிராமி யந்தாதியும் சிறந்த அம்மை வழிபாட்டு இலக்கியமாகக் காணப்படுகிறது.
இவை தவிர, ஏனைய சிறந்த சக்தி வழிபாட்டிலக்கியங்கள் யாவும் குமரகுருபரரோடு தொடர்பு படுத்துகின்றன. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், சகலகலாவல்லிமாலை, மதுரைமீனாட்சியம்மை, இரட்டை மணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம், தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை என்று ஐந்து பிரபந்தங்கள். சில ஏட்டுப் பிரதிகளிலே கண்டு பிடிக்கப்பட்டு, அச்சாகி வெளியாகியுமுள்ளன. மீனாட்சியம்மை இரட்டை மணிமாலையிலிருந்து இதன் ஆசிரியர் தேவி உபாசகரென்பதும் அவ்வுபாசனையால் வாக்குவன்மை பெற்றவரென்பதும் தெரிய வருகின்றன. குறம் என்ற பிரபந்தம்பாட்டுடைத் தலைவனைக் காமுற்ற தலைவி ஒருத்தியைக் கண்டு குறத்தி குறி கூறுவதாக அமைப்பது மரபு. இங்கே பாட்டுடைத் தலைவி மீனாட்சியம்மை; ஆதலினால் சொக்கர் பாற்கருத்திழந்த தலைவி கூறப்படுகிறாள். மீனாட்சியம்மையின்

திருநாமமும் புகழும் சார்த்துவகையாற் சொல்லப் பெறுகின்றன. சிவகாமியம்மை இரட்டைமணிமாலையில் உள்ள பல செய்யுட்களில் இறைவனுடைய பெருமையிலும் இறைவியின் பெருமை பெரிதென்பது குறிப்பிடப் படுகின்றது. வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஐந்து பிரபந்தங்களிலே மேலே சுட்டப்பட்ட மூன்றும் குமரகுருபரராற் பாடப்படவில்லை என்பது பதிப்பாசிரியர் சாமிநாதையர் முடிபு.
எனவே, குமரகுருபரர் பாடிய அம்மை வழிபாட்டுப் பிரபந்தங்கள் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழும், சகலகலாவல்லிமாலையுமாகும். சகலகலாவல்லிமாலை பாடிக் கலைமகள் அருள்பெற்று இந்துஸ்தானி மொழியில் வல்லுநரானாரென்றும், இந்துஸ்தானி மொழியில் முகமதிய பாதுஷாவுடன் உரையாடி, காசியில் சைவ மடம் அமைத்துச் சமயப்பணி புரியச் சலுகை பெற்றாரென்றும் கூறப்படுகின்றன. தாமசம், சாத்துவீகம்,இராசதம் என்ற முக்குணங்கள் ஒவ்வொன்றும் முதன்மை பெற்ற நிலையிலே துர்க்கை, கலைமகள், திருமகள் என்ற சக்தி மூர்த்தங்கள் உருவாகின்றன. நவராத்திரியிலே மேற்படி மூவரும் வழிபடப்படினும், வழிபாடு முழுவதும் சாத்துவீக குணத்தவளான சரஸ்வதிக்கே உரியதாகக் கூறப்படுவதுண்டு. எளிய நடையில் அமைந்துள்ள சகலகலாவல்லி மாலை நவராத்திரி காலப் பாராயண நூலாக இன்று விளங்குகிறது. வெண்டாமரைக்கன்றி நின்பதம் என்று தொடங்கிப் பத்துப் பாடல்களால் இது அமைந்துள்ளது.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தமிழில் அரிதாகக் கிடைக்கும் பெண்பாற் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களுள் ஒன்றாகும். ஆண்பாற்பிள்ளைத் தமிழாக முருகன்மேல் முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ் செய்துள்ள குமரகுருபரர் இரண்டு பிள்ளைத் தமிழ்களிலும் சப்தமாதர் வணக்கம் காப்புச் செய்யுட்களுக்குள் பாடியுள்ளார். மாகேசுவரி, இந்திராணி, காளி, அபிராமி, நாராயணி, கெளமாரி, வாராகி என்போரே குமரகுருபரராற் பாடப்படும் எழுவராவர். தலைவர்கள் செயல்களை அவர்கள் சக்திகளுக்கும் ஏற்றிக் கூறும் மரபுபற்றி ஏழுமகளிர் செயல்கள் இவ்விரண்டு பிள்ளைத் தமிழ்க் காப்புக்களிலும் பாடப்பட்டுள்ளமையைக் காணலாம். திருமகள், கலைமகள், துர்க்கை முதலிய மூவரையும் தனித்தனிச் செய்யுள்களிலே காப்புத் தெய்வங்களாக மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழிலே பாடிய குமர
யூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 349
குரபரர், தலத்து அம்பிகையாகிய தையல் நாயகியைத் தனிச் செய்யுளிலே பாடியதனாற் போலும் முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழிலே துர்க்கையைத் தனியே பாடவில்லை.
நாயக்க மன்னராட்சிக் காலத்திலே சக்திவழிபாடு மேம்பாடுற்றமையால், சக்திக்கு முதன்மை வழங்கும் போக்குக் காணப்படுகிறது. சிவபெருமானுடைய சக்தி மூன்று முக்கியமான சிவத்தலங்களிலே கண்ணின் தன்மைகொண்டு , மூன்று பெயர்கள் கொண்டு தமிழ் நாடெங்கும் பிரபலமெய்துவதை இக்காலத்திலே காணலாம். காசிவிசுவநாதரின் சக்தி விசாலாட்சியாகவும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரின் சக்தி காமாட்சியாகவும், மதுரைச் சொக்க நாதரின் சக்தி மீனாட்சியாகவும் போற்றப்படும் நிலை தோன்றுகிறது. முகமதியர் படையெடுப்புகளினால் ஏகாம்பர நாதர் கோவிலும் சொக்கநாதரின் கோவிலும் அழிய, நாயக்கர் காலத்திலே திருப்பிக் கட்டப்பட்ட புதிய கோவில்களிலே காமாட்சியும், மீனாட்சியும் முக்கிய தெய்வங்களாகின்றனர். கோவில்கள் தாமும் காஞ்சி காமாட்சி கோவிலெனவும் மதுரை மீனாட்சி கோவிலெனவும் புதுப் பெயர்கள் பெறுகின்றன. சிதம்பரத்து ஆடவல்லானாகிய சபாநாயகரது பிரியை சிவகாமியெனச் சிலரால் பாராட்டிப் பாடப்பட்டபோதும் அக்கோவிலிலே சிவபிரானுடைய முதன்மை பாதிக்கப்படவில்லை.
திருமலைநாயக்கர், மதுரைமீனாட்சியம்மை கோவிலை ஏறத்தாழ இன்றைய வடிவத்திலே புதுக்கியமைத்தவர். குமரகுருபரர் தலயாத்திரை புறப்பட்டு மதுரையிலே தங்கிய போது மீனாட்சியம்மைமேல் பிள்ளைத் தமிழ் பாடி திருமலைநாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். அதனை அரங்கேற்றுகையில் மீனாட்சியே குழந்தையுருவாக எழுந்தருளி வந்து கேட்டு மகிழ்ந்தனரென்று, குமர குருபரர் முத்தப் பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கையில் தம்திருக் கழுத்திலிருந்த முத்துமாலையொன்றை எடுத்து இவருக்கு அணிந்துவிட்டு மறைந்தனரென்றும் கூறுவர். அந்தப் பிள்ளைத் தமிழைக்கேட்டு மன மகிழ்ந்த திருமலைநாயக்கரும் குமரகுருபரருக்குப் பல பரிசில்களை அளித்து வழிபட்டனர்.
மயூரமங்கலம

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் நூறு செய்யுள்களால் அமைந்தது. மீனாட்சியைக் குழந்தையாக உருவகித்துக் காப்பு முதலிய பத்துப் பருவங்களை அமைத்துப் பாடப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து ஏழாவது நாள் காப்பிடலென்னும் வழக்கம் ஒன்று உண்டு. அதனை ஒட்டிய இலக்கிய வழக்கே இக் காப்புப் பருவம், பொருள் தெரியாத ஒலியை எழுப்புஞ் செங்கீரைப் பருவம், தாலாட்டுப் பாடிக் குழந்தையைத் துயிலச் செய்யும் தாலப்பருவம், கையோடு கைசேர்த்துக் கொட்டுஞ் சப்பாணிப்பருவம், குழந்தையை முத்தந்தரும்படி தாயாரும், பிறரும் வேண்டும் முத்தப் பருவம், தளர்நடையிட்டு வரும் குழந்தையை வாவென்று அழைக்கும் வருகைப் பருவம், சந்திரனைக் குழந்தையோடு விளையாட அழைக்கும் அம்புலிப்பருவம். பாட்டுடைத் தலைவியை அம்மானையாடும்படி கூறும் அம்மானைப் பருவம், பாட்டுடைத் தலைவியை நீராட அழைக்கும் நீராடற் பருவம், பாட்டுடைத் தலைவியை ஊஞ்சலாடவேண்டும் என அழைக்கும் ஊஞ்சற் பருவம் என இவையொவ்வொன்றிலும் குமரகுருபரர் குழந்தை மீனாட்சியம்மைபற்றிப் பப்பத்துச் செய்யுள்கள் இயற்றியுள்ளார்.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் மிகவும் பிரபலமான செய்யுள் வருமாறு:-
தொடுக்கும் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனேநறைபழுத்த துறைத்திந்தமிழினொழுகுநறுஞ்
சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந் தெடுக்குந் தொழும்ப ருளக்கோயிற்
கேற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே யெறிதரங்கம் உடுக்கும் புவனங் கடந்துநின்ற
ஒருவன்றிருவுள்ளத்திலழ கொழுக வெழுதிப் பார்த்திருக்கும்
உயிரோ வியமே மதுகரம்வாய் மடுக்குங் குழற்கா டேந்துமிள
வஞ்சிக் கொடியே வருகவே மலயத்துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே

Page 350
320
என்கல்
浮莎幻 உள்ளத் 62gh வெள்ளப նkնց கள்ளக்
é安ffリ
இது ஏழாம் திருமுறைய நாயனார் அருளிச் செய்தது. நாயனாருக்குத் திருவாரூர் திருவி நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூ நாடி அரிய வழிநடையை மேற்கெ மீறியதினால் கண் பார்வை மறை சென்று‘சங்கிலிக்கா என்கண் ெ பாடுவார்.
திருவெண்பாக்கத்து எழு ஈன்றவனே வெண்கோயில் இங்க போகீர் என்றானே” என்று பாடின ஏகாம்பரத்தில் நின்று ஏச விண்ணாள்வார் அமுதுை கடையானேன் எண்ணாத பிை ணளித்தருளாய்” எனப் பிரார்த்தி
பங்கயச்செங்கைத்தளி செங்கயற்கண் மலைவல் பொங்கிய அன் பொடுபர மங்கைதழுவக்குழைந்த இடக்கண் பெற்ற நாயனார் காத
 
 

bihufuULUTSUUTé5656to
ாட்சி காதலித்த கம்பர் பூசை
சிவ சண்முக வடிவேல், ஏழாலை
இன்றிஇமையவர் கோனை னைவழிபாடுசெய்வாள்போல் துள்கிஉகந்துமைநங்கை டச் சென்று நின்றவா கண்டு ர் காட்டி வெருட்டிட அஞ்சி ரவி ஒழத் தழுவ வெளிப்பட்ட கம்பனை எங்கள் பிரானைக் ாக் கண்அடி பேன்பெற்றவாறே.
பிலுள்ள பாமாலை மலர். ஏழாம் திருமுறை சுந்தர மூர்த்தி
திருவொற்றி யூரில் சங்கிலியாரோடு இன்புற்றிருந்த விழாச் சிறப்புக் கண் முன்னே தோற்றுகின்றது. “எத்தனை நர் இறைவனையே’ என்று ஏங்கிப் பாடுகின்றார் ஆரூரை ாள்ளுகின்றார். சங்கிலியாருக்குக் கொடுத்த வாக்குறுதியை ந்தது. வரும் வழியில் அமைந்த திருக்கோவில்கள் தோறும் காண்ட பண்பகாணக் கண் தர வேண்டும்” என்று இரங்கிப்
ந்தருளி இருக்கும் பெருமான் முன்னின்று உலகமெலாம், கிருந்தாயோ என்ன ஊன்றுவதோர் கோல் அருளி உளோம் TTi.
றவோடு எம்பெருமானை ஏத்துவார் நம்பியாரூரர். ண்ண மிக்கபெரு விடமுண்ட கண்ணாளா! கச்சிஏ கம்பனே! ழ பொறுத்திங்கியான் காண எழிற்பவள வண்ணா! கண் த்ெதார்.
ரால் பனிமலர்கொண்டருச்சித்துச் லிபணிந்தசே வடிநினைந்து விப் போற்றிய ஆரூரருக்கு 7ர் மறைந்தஇடம் கண்கொடுத்தார்” லி தழுவக் குழைந்த கம்பரைக் கண்டு களிப்புற்றார்.
மயூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 351
"ஞாலந்தான் இடந்தவனும் நளிர்விசும்பு கடந்தவனும் மூலந்தான்.அறிவரியார்கண்ணளித்துமுலைச்சுவட்டுக் கோலந்தான்காட்டுதலும் குறுகிவிழுந்தெழுந்துகளித்து ஆலந்தான் உகந்தவன் என்றெடுத்துப் பாடினார்” என்பன அருண்மோழித்தேவருடைய திருவருள் சிறந்த செய்யுட்கள் .
“ஆலந்தான் உகந்து”என்றுதொடங்கும்தக்கேசிப் பண் திருப்பதிகத்தில் திருக்கடைக் காப்புத் தவிர்ந்த பத்துப் பாடல்களிலும்" ஏல வார்குழ லாள்உமை நங்கை, என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற சீலம் வியந்து ஒதப்படும்.
காமாட்சி அம்பாள் ஏகாம்பர நாதனைப் பங்கயச் செங் கைத்தளினால் பனிமலர் கொண்டு அருச்சித்த அற்புதத்தை எண்ணும்பொழுதெல்லாம் இன்பம் பயக்கும். அன்னையின் ஆகமம் வழிபாட்டு அருச்சனை பெரிய புராணத்தில் பேசப்படுகிறது. சேக்கிழார் பத்தித் தமிழால் இன்சுவை நனசொட்டச் சொட்டப்பாடியுள்ளார். “வெள்ளிமயமான திருக்கைலையில் வீற்றிருந்து உண்மைப் பொருளை எல்லாம் உமா தேவியாருக்கு உபதேசித்தருளினர் . உமாபதியை உமையம்மையார் வணங்கி, தெள்ளத் தெளிந்த மெய்ப்பொருளாகிய சிவாகம உண்மைகளை எல்லாம் கேட்டருளினார்.
உமாதேவியார் அளவிறந்த ஆகமங்களை அருளிச் செய்த அண்ணலார் தாம் விரும்பும் உண்மையாவது பூசனை என உணர்ந்தார். பெண்ணில் நல்லவளான அப்பெருந்தவக் கொழுந்து அண்ணலாரை அர்ச்சனை செய்வதற்கு ஆதரவு கொண்டார்.
உமையம்மையாருடைய உள்ளன்பைத் திருவுளங் கொண்ட பெருமான் உவந்து உரைப்பார். "உமையே உன் உள்ளக் கருத்துத் தான் யாதோ? “எம்பிரான்மொழிந்த ஆகமத்தொடர்பினால் பெருமானை அர்ச்சனை புரிய ஆதரிக்கின்றது என் உள்ளம்.
மகாதேவர் தேவியினுடைய விருப்பத்திற்கு திருவுளம் செய்தார் “தேவியே தென்னாடு செய்த மாதவத்தினால் காஞ்சிப்பதி உலகில் எஞ்ஞான்றும் நிலைத்திருப்பது. யாம் அங்கு மாமரத்தின் அடியில் எழுந்தருள்வோம். நமது இருப்பிடத்தை அடைந்து நின்னுடைய பூசையினை நீ மகிழ்ந்து புரிவாய்.
அண்ணலாரிடத்தில் அருள்விடை வெற்று அன்னை திருக்கயிலையினின்றும் எழுந்தருளினார்.
மலையரசன் மகிழ்வோடு வந்தான் பெருமாட்டியார் பெருந்தவம் புரிந்திருளுதற்கு வேண்டிய செல்வவளத்தோடுபரிசனங்களையும் உடனாக அனுப்பி வைத்தான்.
மயூரமங்கலம்

காமாட்சி அம்மையார் காஞ்சியம் பதியை அடையப் பதுமன் என்னும் நாகம் வந்து வரவேற்றது. தம்பிராட்டியினுடைய திருத்தாளை தன் தலைமீது தாங்கியது.
"தாயாக உலகனைத்தையும் ஈன்ற தயாபரியே! அடியேனுடைய பிலத்தினிடமாகக் கோயில் கொண்டருள வேண்டுகிறேன்.
காமாட்சி அம்மையார் உயிர்கள் மீது கொண்ட கருணையோடு அங்கு அமர்ந்தனர். தெண்ணிலா மலர்ந்த வேணியினாருக்குச் சிறந்த சிவாகமப் பூசையினை விரும்பிச் செய்தார். எம்பெருமான் அன்னையாருக்கு அருள் புரியத் திருவுளங்கொண்டார். ஒரு திருவிளையாடலைப் புரிந்தார். அம்பிகை எங்கு நாடியும் மாமரத்தடியினில் எழுந்தருளாது ஒழிந்தனர். பொன்மலைவல்லி நிறைந்த பெருந்தவம் செய்து பெருமானைக் காண விழைந்தார்.
அம்மை எப்பொழுதும் தஞ்சமாகிய அருந்தவம் செய்தார் அது கண்டு திருக்கணவர் தரியாதவரானார். மலைமகள் காண தூய மாமரத்தின் அடியில் வந்து வெளிப்பட்டார்.
காமாட்சி அம்மை கணவனாரைக் கண்டார். தவப்பயனாக ஏகாம்பரத்தில் எழுந்தருளி இருக்கும் தம்பெருமானைத்தாழ்ந்தனர். வண்டுகள் சூழும் ஏலவார் குழல் முன் தாழ வணங்கினர். அண்ணலாரை அர்ச்சனை ஆற்றும் ஆசை பொங்கி எழுந்தது கொவ்வைப்பழம் போன்றவாயினையுடைய அன்னையார் தூய ஆகமப் பூசையை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களைப் புரிவார்.
பூங்கொம்பு போன்ற சேடியார் திருப்பூங் கூடையைத் தாங்கி வந்தார்கள். உமையம்மையார் தளிர் போன்ற மிருதுவான பாதங்களால் பூசைக்குரிய பூக்களைப் பறிப்பதற்கு நடந்து சென்றார். அம்பிகா வனத்தில், தூய்மையான வாசனை மிக்க புதுமலர்கள் கொய்தார்.
திருமஞ்சனத்திற்கும் கம்பை ஆற்று நீர், வாசனைத் திரவியங்கள், நெய்த் தீபம், வாசனை மிக்க தூபம் முதலானவற்றை அன்பினோடு தேடிக்கொண்டார். எம்பிராட்டியிடம் வேண்டுவனவற்றை வேண்டும் வேளைகளில் வேடியர்கள் எடுத்து உதவினார்கள். ஆகமங்களில் வகுக்கப் பெற்ற விதி முறைகள் யாவற்றையும் வகுத்துக்கொண்டார்.
அம்பிகை கைகள் தரும்பயன் அண்ண லாருக்கு அகம அர்ச்சனை ஆற்றுதல் என்று அறிந்தார். ஏகாம்பர
C32D

Page 352
நாதரிடத்தில் பேரன்புடைய உள்ளத்தவரானார். பிராட்டியாருடைய மலர்ந்த அன்புப் பெருக்கால் தலையினால் வணங்கி எழும் ஆகம அர்ச்சனை நாள் தோறும் திருவுள்ளத்தில் பெருகிய,
சிவபிரான்சிவபிராட்டியாருக்கு அருள் பாலிக்கத் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். கம்பை ஆற்றினை கடல்கள் ஏழும் ஒன்றாகி உயர்ந்து பரந்து வருவது போல வெள்ளம் பெருகிடச் செய்தார்.
அண்ணலார் அருள் வெள்ளத்தை அம்பிகைஆற்றுப்பெருக்கெனக் கருதினார். வானளவப் பெருகிவரும் பெருவெள்ளம் பெருமான் மீது வந்துவிடும் என அஞ்சினார். தமது திருக்கரங்களால் தடுத்தார். வெள்ளம் நில்லாமையினால் ஏகாம்பர நாதரைத் தழுவிக் GassmTSTITf.
காதலியார் அன்பு வெள்ளத்தில் ஆற்று வெள்ளத்தைத் திருவருள் வெள்ளம் என்று உணராமல் இறுகிடத் தழுவினர். கம்பர் தம் காதலியாருக்குத் தமது திருமேனியை மென்மையதாக்கினர்.
அம்பாளின் அரவணைப்பில் அண்ணலார் திருமேனி மிருதுவான தன்மை அனைத்து உயிரும் அறிந்தன. சரம் அசரம் அனைத்தும் உருகின உடலும் உயிரும் ஒன்றுபட்டன. | ६
“எம்பிராட்டிக்கு ஏகாம்பரநாதர் குழைந்த கொள்கையரானார்” என்று தேவர் முதல் அனைத்து உயிரும் எடுத்து ஏத்தின வானம் வாசனை மிக்க மலர் மழைபொழிந்தது. ஏகாம்பர நாதரைக் கம்பை ஆறுமுன் வணங்கியது.
ஏகாம்பர நாதர் திருநீறு தரித்து, பொங்கும் கங்கை தோய்ந்த முடி புனைந்து, திருச் செவியில்
எண்னரும்பெரு
கெம்பிராட்டித் மண்ணின் மேல்வழ மனையறம்ெ நண்ணு மன்னுயிர் நாடு காதலில் புண்ணியத்திருக்
பொலிய முப்ப

சங்குக்குழை பூண்டு, உருத்திராக்கம் அணிந்து, யோகத்தில் பொருந்திய கொள்கையரானார். ஆதி தேவன்பால் ஆராய்ந்து மாதவம் செய்யும் வரம் தானே? அண்டம் எல்லாம் பூத்த மாதுமையார் திருமேனிப் பயனைக் கொடுப்பவளைத்தழும்போடு தனச்சுவடு தரித்தார்.
கம்பர் காமாட்சி அம்பாள் வாரத் தமது மணவாளக் கோலத்தைக் கண்டு களிப்பக் காட்டினார்.
அம்பிகையே! வேண்டும் வரம் கேள் அன்னை அச்சத்தோடு அங்கைகள் கூப்பினார்!
“இங்கு நாதா! நான் இயற்றிய சிவாகம பூசை என்றும் குறை நிரம்பிடக் கொண்டருள வேண்டும்.
“நாயகியே நம்மிடத்தில் நின் பூசை என்றும் முற்றுப் பெறுவதில்லை. வேறு என்ன வேண்டும்?
மாறிலாத என்பூசை மன்னுவது கேட்டு மகிழ்ந்தேன். அழிவில்லாத இப்பதியில் அறங்கள் அனைத்தும் யான் செய அருள வேண்டும். திருவடி மறதல் தவிர இப்பதியில் உள்ளார் வேறு வினைகளைச் செய்தாலும் தவப் பயன் கொடுத்தருள வேண்டும்.
அம்பிகை கேட்டவரம் அருளினார் குறைவில்லாத அறம் வளர்க்கும் மூலமாக இருநாழிநெல் அருள் புரிந்தார்.
வரம் பெற்ற வார்குழலார் வார்சடையார் மகிழ மண் மீது வழிபாடு செய்வார். இல்லறம் வளர்க்கும் பெருங் கருணையினால் உரைகேர் 84 நூறாயிர யோனி பேத உயிர்களும் பெருக விருப்பினோடு புண்ணியத் திருக்காமக் கோட்டத்தில் 32 அறம் சிறக்க அம்பிகை வளர்ப்பார்.
வரங்கள்முன் பெற்றங் நம் பிரான்மகிழ்ந்தருள மிபாடுசெய்தருளி ருக்குங்கருனையினால் யாவையும் பல்க fடிய வாழ்க்கைப் காமக்கோட்டத்துப்
தோடிரண்டறம் புரக்கும்
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 353
மயூரமங்கலம்
எறும்பு முதல் யானையிறா சக்தி. அவற்றுக்குச் சக்தியைக் செ பல்வேறு வகையான இய அவற்றை இயக்குவதற்கான சச் முதலியவற்றிலிருந்து பெறப்படுகின் கிரகங்களுக்கும் நட்சத்தி நோக்கினும் அங்கங்கெல்லாம் சக்தி மேலே கூறப்பட்டனவும் கூறப்படா நோக்குவோம்.
சக்தி உண்டென்பதை உை சேமித்து வைக்க முடியும். அதை ஆ விரும்பியவாறு உபயோகிக்க முடியு வரையறைக்குட்பட்டது. நாம் உப அழியும் போது அதன் முதலும் அழி பொருள்களால் சக்தியைத் தோற்று இயல்புகள் சடசக்திகளுக்கிருக்கல காணப்படுகின்ற இவ்வுல உண்டென்பதை அனு மானித் தன்னோடொப்பிட்டு, இன்ன தன் ஒரளவு அனுமானித்தறிய உதவலா டொப்பிட்டுச் சிவசக்தியைப் பற்றி
அறிவற்ற பொருள்களால் இயந்திரத்தை இயக்க முடியுமே தவி பொருள்களால் மாத்திரமே அறிவற் ஒருவரால் மாத்திரமே மற்றவர்களை பிரபஞ்சம் முழுவதும் ஒழுங்காக வேண்டும்.
செய்பவனின்றிச் செயல் உருவாகாது. இந்த உலகம் உரு வேண்டும். இதை உருவாக்குவதற்
 
 

சிவசக்தி
மட்டுவில் ஆ. நடராசா
 ைஉயிரினங்களின் இயக்கத்துக்குக் காரணமாயிருப்பது ாடுப்பது உணவு. ந்திரங்கள் இயங்குவதற்குக் காரணமாயிருப்பது சக்தி. தி நிலநெய், நீராவி, மின், அணு, காற்று, சூரிய ஒளி ாறது. ரங்களுக்கும் ஈர்ப்புச் சக்தி உண்டு. நாம் எங்கெங்கு தியைக் காண்கின்றோம். சக்தி இல்லாத இடமே இல்லை. தனவுமாகிய சடசக்திகளின் இயல்புகளைத் தொகுத்து
ணர முடியுமே தவிர அதைக் காண முடியாது. சக்தியை அளந்தறிய முடியும். சக்தியை எமது தேவைக்கேற்ப நாம் ம். சக்தியை மனிதனால் வெற்றி கொள்ள முடியும். சக்தி யோகிக்கும் சக்திகள் அனைத்தும் சடசக்திகள். சக்தி யும், சடப்பொருளிலிருந்து சடசக்தியே தோன்றும், சடப் விக்கவும் ஒடுக்கவும் முடியாது. இவ்வாறான மேலுஞ்சில )Tíb. பகம் இதைப் படைக்கும் ஆற்றலுடையானொருவன் நறிய உதவுகின்றது. அது போலச் சடசக்தியும் மையளென்றறி யொணாச் சிவசக்தியின் இயல்புகளை ம், அதனால் மேலே தரப்பட்ட சடசக்தியின் இயல்புகளோ அறிய முயல்வோம்.
அறிவுள்ளவற்றை இயக்க முடியாது. மனிதனால் ர இயந்திரத்தால் மனிதனை இயக்க முடியாது. அறிவுள்ள ரபொருள்களை இயக்க முடியும். அறிவும் ஆற்றலும் உள்ள ாத் தன் ஆணையின் வழி நடக்கச் செய்ய முடியும். இந்தப் இயங்குவதால் இதை இயக்குவோன் ஒருவன் இருத்தல்
நிகழாது. செய்தொழிலின்றி எந்த ஒரு பொருளும் பாகியிருக்கின்றது. இதை ஒருவர் உருவாக்கியிருத்தல் கு அவருக்குச் சக்தி வேண்டும். சக்தியில்லாதவரால்
C323d

Page 354
இவ்வுலகம் படைக்கப் பட்டிருக்க முடியாது. அதனால் இவ்வுலகத்தைப் படைத்தவன் சத்தன் என்பது பெறப்படும். சத்தன் - சக்தியை உடையவன்.
நாம் காணும் சேதன அசேதனப் பிரபஞ்சம் அனைத்தும் இயங்குகின்றது. அதை இயக்கும் சக்தியொன்றுண்டு. சேதனம் அறிவுள்ளது. அசேதனம் - அறிவற்றது.
ஒரு காரியத்தைச் செய்வதற்கு நிமித்த காரணம், முதற் காரணம், துணைக் காரணம், என்னும் மூன்றும் வேண்டப்படும். மின் சக்தியை உண்டாக்குவதற்கு அதை உற்பத்திசெய்யும் பொறியாளன் நிமித்த காரணன். நீர் முதற் காரணம் மின்உற்பத்திசெய்யும்எந்திரம்துணைக்காரணம் இதைப்போலச் சிவசக்தி தோன்றுவதற்கு முதல் துணை நிமித்தக் காரணங்கள் உண்டா என்பதைப் பார்ப்போம்.
சிவனுக்குச் சொரூப நிலை, தடத்த நிலையென இரு நிலைகள் உண்டு. அவன் நிட்களனாய், நிர்மலனாய் ஞான மயமாய் நிற்கும் நிலை சொரூப நிலை. உருவ அருவுருவ, அருவத் திருமேனிகளைக் கொண்டு ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் நிலை தடத்த நிலை. ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு ஐந்தொழில் செய்யக் கருதிய நிலையில் சிவனிடத்தில் ஒடுங்கியிருந்த சக்தி விரிந்து அவனுக்குரிய வடிவங்களாய் அமைய, சிவன் அவற்றைப் பொருந்தி நின்று ஐந்தொழில் செய்வன்.
பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி முதலிய சக்திகளாயும் லய, போக, அதிகார சக்திகளாயும் பல்வேறு நிலைகளில் நின்று சிவனுக்குரிய அருட்டிருமேனிகளை ஆக்கியும் தத்துவங்களை இயக்கியும் பல்வேறு தொழில்களைச் செய்யும். பராசக்தி மனோன்மணி, மகேஸ்வரி, உமை, திரு, வாணி என்னும் சக்திகளாயும், துர்க்கை, காளி, திருமால் முதலிய சக்திகளாயும் விளங்கும்.
ஓராய மேயுல கேழும் படைப்பதும் ஓராய மேயுல கேழும் அளிப்பதும் ஒராய மேயுல கேழுந்துடைப்பதும் ஓராய மேயுல கோடுயிர் தானே’ என்கிறார் திருமூலர். ஆயம்-கூட்டம். அது சிவசக்திகளின் கூட்டம். நாடகம் நடிப்போன் பலப் பல வேடங்களைத் தாங்கி நடித்தாலும் தன் நிலையிற்றிரியாதிருப்பது போலச், சக்தியும் பலப் பல வேடமாகி நின்று அருட்

செயல்களைச் செய்கின்ற போதிலும், அச்சக்திகளைப் பொருந்தி நிற்குஞ் சிவன் தன்நிலையிற் திரியாது நிர்விகாரியாகவே இருப்பன்.
தன்னிடத்தில் ஒடுங்கியிருக்கும் சக்தியை விரியச் செய்யும் சிவனே, இச்சக்தியின் தோற்றத்துக்கு நிமித்த காரணன். சூடு தீயின் குணமாய் இருப்பதுபோல சிவனின் குணமாய்ச் சிவனிடத்திலிருந்து தோன்றுவதால் சிவசக்தியின் தோற்றத்துக்கு முதற் காரணமுஞ் சிவன், ஆன்மாக்களுக்கு அருள் செய்ய வேண்டுமென்னுஞ் சிவனது இச்சை காரணமாகச் சிவசக்தி பரந்து விரிதலால் சத்தியின் தோற்றத்துக்குத் துணைக் காரணமுஞ் சிவன்.
அழகான பொற்குட மொன்றிருக்கின்றது. அதற்கு நிமித்த காரணம் அதைச் செய்தோன் ; முதற் காரணம் பொன்; துணைக் காரணம் அதைச் செய்வதற்கு உபயோகிக்கப்பட்ட கருவிகள். குடம் உருவானவுடன் நிமித்தக் காரணமும் துணைக் காரணமும் அதை விட்டு நீங்கி நிற்கும். முதற் காரணமாகிய பொன் அதை விட்டு நீங்காது.
பொன்னின்றிப் பொற்குடமிருக்க முடியாது. குடத்தின் வடிவமின்றிப் பொன் மாத்திரம் இருந்தால் அது பொற் குடமாகாது. பொன்னும் குடத்தின் வடிவமும் ஒன்றாயிருப்பது போலவே எந்நிலையிலும் சிவமுஞ் சக்தியும் ஒன்றாயிருக்கும். சிவமுஞ் சக்தியும் ஒன்றை விட்டொன்று நீங்கி நிற்க மாட்டா. “அருளது சக்தியாகும் அரன்றனக்கு, அருளை யின்றித் தெருள் சிவம் இல்லை, அந்தச் சிவமின்றிச் சக்தியில்லை” என்கிறார் அருணந்தி சிவாச்சாரியார். சிவசக்தி அருள் வடிவமானது. சடசக்தி அருட் குணம் இல்லாதது.
கடவுள் உண்டெனக் கொள்வோர், அவர்கள் எந்தச் சமயத்தவ ரானாலும், அவர் ஆதியந்தம் இல்லாதவர் - என்று முள்ளவர் என்பதை ஒப்புக் கொள்கின்றார்கள். ஒரு நாமமும் ஒருருவமும் இல்லாத கடவுளுக்குச் சிவனென்று பெயரிட்டால், சிவன் என்று முள்ளவரென்பதை எவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். சிவம் என்று முள்ளதெனவே சிவ சக்தியும் என்றும் உள்ளது.
சடசத்தி என்று முள்ளதல்ல; முடிவிலாற்ற லுடையதல்ல. அது ஆக்கப்படுஞ்சக்தி; அழிந்துபோகுஞ் சக்தி.
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் -2000

Page 355
மின்சக்தி உற்பத்தி செய்யப் படுகின்றது. உபயோகிப்பதனால் அது அழிந்து போகின்றது. அதை அளவையால் அளந்தறிய முடியும். சிவசக்தி அளந்தறிய முடியாதது; மன வாக்குக் கெட்டாதது.
பூமிக்கு ஈர்ப்புச் சக்தி இருக்கிறது. அச் சக்தி ஒரு வரையறைக்குட்பட்டே செயற்படும். அவ்வெல்லைக் கப்பாலுள்ள பொருள்களைப் பூமியின் ஈர்ப்புச் சக்தியால் இழுக்க முடியாது.
சூரிய ஒளி பூமியின் ஒரு பகுதியில் விழும்போது மறு பகுதி இருளாயிருக்கும். சூரிய ஒளி பூமியெங்கும் வியாபிக்குமானாலும் சம காலத்தில் அது பூமியெங்கும் வியாபகமாயிருக்க மாட்டாது. சிவசக்தி சமகாலத்தில் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும். அது நுணுக்கரிய நுண்ணிதாய் எதையும் ஊடுருவி நிற்கும்.
ஒளியைத் தரும் சூரியன் ஏற்றிய விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருப்பது போல ஒளியுடன் இருக்கின்றான். ஒளியை ஒடுக்கும் ஆற்றலோ, ஒளியைத் தோன்றச் செய்யும் ஆற்றலோ சூரியனுக்கில்லை. மகா சங்கரா காலத்தில் பிரபஞ்சம் முழுவதும் ஒடுங்கும்போது சூரியனுஞ் சிவசக்தியால் ஒடுக்கப்படுகின்றான்.
மயூரமங்கலம்
 

மீண்டும் புதுச் சிருட்டி தொடங்கும் போது சூரியனுந் தோன்றுகின்றான். இவ்வாறே இயற்கைச் சக்தி களெல்லாம் சிவசக்தியாற் தோற்றுகின்றன.
அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு மதியினிற்றண்மை வைத்தோன் திண்டிறல் தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன் மேதகு காலின் ஊக்கங்கண்டோன் நிழல்திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணிற்றிண்மை வைத்தோ னென்றென் றெனைப்பல கோடி யெனைப்பல பிறவும் அனைத் தனைத் தவ்வயின் அடைத்தோன்.” என்கிறார் மாணிக்கவாசக சுவாமிகள். (திருவண்டப்பகுதி 20-28)
சடசக்தி தான் என்ன செய்கின்ற தென்பதை அறியாது. சிவசக்தியே அறியுஞ் சக்தி. அதுவே அறிவிக்குஞ் சக்தி. சிவசக்திக்கு சடசக்திக்குமிடையிற் பல வேறுபாடுகள் இருப்பினும் சிவசக்தி அருளுருவாயும் இச்சா ஞானக் கிரியா சக்திகளாய் விரியும் இயல்புடையதாயும் இருப்பதையே இவ்விடத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

Page 356


Page 357


Page 358


Page 359


Page 360


Page 361
மயூரமங்கலம்
சென்னையில் இருந்து காஞ்சிமா தலத்தில் இருந்து உல காமாட்சித் தாய்
அகிலம் அனைத்தையும் ஈ விளங்கிடும் அன்னையாம் சக் அவைகள் அனைத்திலும் பெரிது வாய்ந்தவை காமாட்சி,மீனாட்சி ஆகும்.
இக்கூற்றை மெய்ப்பிக்கு விசாலாட்சி என போற்றுதல் விளங்கிடுவது காமாட்சித் தலி பெருமைகளையும் பெற்று காஞ்சியம்பதியில் காமாட்சியும் தொட்டு இன்றளவும் அத்தல சிறப்புகளுக்குக் காரணம் ஆகு
காமாட்சித் தாயானவள் தன்னிரு கண்களாகக் கொண் கூறப்படுகிறது. காமாட்சி என்னு பிரித்திடலாம். கா என்றால் ஆ குறித்திடும். கலைமகள், திரு கண்களால் தனது அருட்யார்? காமாட்சியாகும்.
இன்னொரு விதமாவும் இ காம + ஆட்சி எனப் பிரித்து அ பேரருள் வாய்ந்தவள் எனக் கொ மூன்றாவதாக க+அ+மர் என்றால் பிரம்மாவையும் அ என் என்றால் தன்கண்ணால் படைத் பொருள் கூறுகின்றனர்.
 
 
 

bóflösTUDITLðfl
கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள க மக்களை காத்து வருகின்றாள் உலகத்து அன்னையாம்
ன்றவளாயும், மீண்டும் கன்னி எனத் திருமறைகள் போற்ற தியவளுக்கு பற்பல திருப்பெயர்கள் இருந்த போதிலும் தும் போற்றி வழங்கப் பெறுகின்ற சிறப்பு முக்கியத்துவம் மற்றும் விசாலாட்சி ஆகிய மூன் று திருப்பெயர்கள் மட்டுமே
ம் வகையில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காஞ்சி விளக்குகிறது. இம்மூன்றிலும் முதன்மைச் சிறப்புடன் மான காஞ்சிபுரம் ஆகும். பழமையாயும் மகத்தான விளங்கிடும் தமிழகத் திருத்தலங்கள் பலவற்றுள் ம் மதுரையம்பதியில் மீனாட்சியும் எழுந்தருளி அன்று பங்களில் அருளாட்சி செய்து வருவதே இத்தகைய
D.
கலைமகளான வாணியையும், திருமகளானழரீதேவியையும் டு விளங்கிடுவதால் இத்திருப் பெயரைப் பெற்றாள் எனக் ம் பெயரைப் பதம் பிரித்துப் பார்த்தால் கா+ மா+ அட்சி என து கலைமகளையும் மா என்றால் அது திருமகளையும் மகள் ஆகிய இரு தேவியாரையும் அட்சியான தன்னிரு வையை வழங்கி உலகினைக் காத்தருளும் தேவியவள்
த்திருப்பெயருக்கான பொருள் விளக்கம் கூறப்படுகின்றது. டியார்களின் விருப்பங்கள் அனைத்தினையும் வழங்கிடும் ள்கின்றனர்.
அட்சி எனவும் பிரித்தும் பொருள் கூறப்படுகின்றது. க ாறால் திருமாலையும் ம என்றால் உருத்திரனையும் அட்சி திடுபவள் என்னும் பேருண்மையை விளக்கிடும் விதமாகவும்

Page 362
அன்னையானவள் காஞ்சியம்பதியில் அவதரிப் பதற்கும் முழுமுதற் காரணமாய் அமைந்தவர்கள் பந்தகாசுரன், பண்டாசுரன் என்னும் இரு கொடிய அசுரர்களே ஆவார். இவர்களது துன்பங்களைத் தாங்கிடாதவர்களாய் தேவர்கள் திருக் கயிலாயம் சென்று அங்கு ஈசனின் இடப்பாகத்தவளான உமையவளிடம் முறையிட்டனர். தேவர்களின் அல்லல் நீங்கிட தேவியும் கருணை கொண்டு கிளி உருவெடுத்து காஞ்சியம்பதியில் செண்பக மரம் ஒன்றில் வாசம் செய்ய எழுந்தருளினார். அவ்வாறு எழுந்தருளிய அன்னையானவளே இங்குள்ள பிலமான வளை புற்று ஒன்றினுள் தோன்றி மக்கள் துன்பம் அற வாழ அருளாட்சி புரிந்து வருகின்றார். திருக் கோயிலில் வீற்றிருக்கும் அன்னை காமாட்சியானவள் பிலத்திலிருந்து தோன்றியவளே என தலபுராணம் வாயிலாக அறிந்திட முடிகிறது.
மங்கை நல்லா ஒருத்திக்கு சுயம்புவாகத் மனைத்தக்க மாண்புகளும் மனை மாட்சிமையும் வாய்த்திருக்க வேண்டும். இத்தகைய நற்பண்புகளுக்கு பெரும் எடுத்துக் காட்டாய் விளங்குபவள் நம் அன்னையாம் காமாட்சித் தாயே.
அன்னை காமாட்சி தன் பதியாகிய ஈஸ்வரன் தன்னிடம் அளித்த இரு நாழி அளவு நெல்லினைக் கொண்டே இப்பூவுலகில் முப்பத்திரண்டு அறங்களையும் செவ்வனே குறை இன்றிச் செய்து முடித்தார்.
இதனால்தான் சேக்கிழார் பெருமான் நம் அன்னையான காமாட்சியை பெண்ணின் 'நல்லவள் ஆயின பெருந் தவக் கொழுந்து' எனப் போற்றி யுரைக்கின்றார். இதன் காரணமாகவே அன்னையாம் காமாட்சிக்கு அறம் வளர்த்த நாயகி என மற்றொரு பெயரும் உண்டு.
பூரீ காம கோட்டமான இவ்வாலயத்தில் தேவியானவள் ஐந்து காமாட்சிகளாக எழுந்தருளி யுள்ளார். அவர்கள் 1ழரீ காமகோடி காமாட்சி 2. தபஸ் காமாட்சி 3. சொர்ண காமாட்சியான பங்காரு காமாட்சி 4. அரூப காமாட்சியான அஞ்சன காமாட்சி 5. உற்சவ காமாட்சி ஆகியோர் ஆவார்.
இந்த ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் இருந்திடும் காயத்ரி மண்டபத்தின் மையப் பகுதியில் தென் கிழக்கு திசை நோக்கியவளாய் பூரீ காமகோடி காமாட்சி அன்னை எழுந்தருளியுள்ளாள்.
C328)

அம்பாளான காமாட்சி இவ்விடத்தில் பத்மாசனக் கோலம் கொண்டவளாய் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களையும் தக்காசனமாய்க் கொண்டவளாய், தனது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்புவில் ஆகிய நான்கினையும் ஆயுதங்களையும் ஏந்தியவளாய், முக்கண்ணுடன் ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி, பூரீ சக்கர நாயகி, காமாட்சி, காமேஸ்வரி எனப் பல திருப் பெயர்கள் கொண்டு விளங்கிடுகிறாள். முன் கூறியபடி பந்தகாசுரன் மற்றும் பண்டாசுரன் ஆகியோரின் கொடுஞ்செயல்களையும் அவர்களையும் அழித்திட வேண்டி ஸ்தல விருட்சமான செண்பக மரத்தினில் கிளி வடிவுடன் வாசம் செய்தவள். இந்த அம்பிகையை தியானித்தும், வணங்கி வழிபட்டும் வந்த தேவர்களின் துக்பங்களைக் களையவேண்டி அன்னை காமாட்சி தனது வாசஸ்தலமான பிலாகாசத்தில் இருந்து வெளிப்பட்டு அவ்விரு அசுரர்களையும் கொன்று, தேவர்களுக்கும் மானிடர்களுக்கும் அனுகிரகம் செய்யும் நிமித்தமாக எழுந்தருளியவள்.
அதனால் தேவியான காமாட்சியன்னையை இத் தலத்தில் எவரும் பிரதிஷ்டை செய்திடவில்லை. இத்தலத்தில் சுயம்புவாக வளைப்புற்றான பிலாகாசத்தில் இருந்து தானே தோன்றியவளே நம் அன்னை ஆவாள். நம் அன்னைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவை ஸ்தூல வடிவம், சூட்சும வடிவம், காரண வடிவம் என மூவடிவம் கொண்டு தேவியானவள் சான்னித்தியத்துடன் விளங்கி அருள் பாலித்திடுகின்றாள்.
இவ்விடத்தில் ஸ்தூல வடிவில் அன்னை தன் பக்தர்களுக்கு தனது தரிசனத்தாலேயே சர்வ காமங்களையும் தனது கடாக்ஷ வீக்ஷண்யத்தால் கோடி கோடியாக அருளிடுவதால் காமகோடி காமாட்சி என்னும் திருநாமத்தினைப்பெற்று அருள் பாலித்து வருகின்றாள். காமாட்சி அன்னையின் திருஆலயத்தில் காயத்ரி மண்டபத்தில் உள்ள அம்பாளின் சந்நிதிக்கு எதிரில் காமகோடி பீடமான பூரீ சக்கரம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில்தான் நம் அன்னையான காமாட்சி சூட்சும ரூபத்தவளாய் மந்திரளூபம் கொண்டு விளங்கிடு கின்றாள்.
அன்னையின் பீடத்தின் கீழாகத்தான்பூரீசக்கரம் அனைத்து ஆலயங்களிலும் அமைந்திடுவது வழக்கம். ஆனால் இத்தலத்தில் அன்னை காமாட்சியின் உக்கிரம்
யூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் 4 2000

Page 363
தனிந்திட வேண்டிய ஆதிசங்கரர் தேவியின் முன்பாக ழரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார் எனக் கூறப்படுகின்றது. காஞ்சிபுரத்தில் உள்ள பிற சிவாலயங்களில் அம்பாளுக்கென தனி சந்நிதிகள் கிடையாது. காம கோட்டமே அனைத்து சிவாலயங்களுக்கும் பொதுவான அம்பாள் சந்நிதியாக விளங்கிடுகிறது.
பீடத்தின் மையத்தில் பூரீ சக்கரம் அமைந்துள்ளது. பூரீ சக்கரத்தினைச் சுற்றிலுமாக அஷ்ட சக்திகளும் உள்ளனர். அன்னை என்று வளைப் புற்றில் இருந்து சுயம்பு வடிவமாய் எழுந்தருளினாளோ அன்று தொட்டு பூரீ சக்கரமானது இருந்து வருவதாக கூறப்படுகின்றது.
அனேக காலமாக பற்பல மகான்களால் இப்பீடம் பூஜித்து வரப்பட்டுள்ளது. அத்துடன் இன்றுவரை ஜிர்ணோத்தாரம் செய்யப்பட்டும் விளங்கி வருகின்றது.
சர்வேஸ்வரனே தேவியின் அருள் பெறவேண்டி நான்கு யுகங்களிலும் இந்த பீடத்தில் துர்வாச முனிவராயும் பரசுராமனாயும், தெளம்யராயும் அவதாரம் செய்ததோடு அந்தந்த யுகங்களில் பூரீ காமகோடி பீடத்தினை ஜிர்னோத்தாரணம் செய்ததும் பூஜை செய்தும் அம்பிகையின் சான்னித்தியத்தினை அடைந்தார் எனக் கூறப்படுகின்றது.
ழரீகாமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மையத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் பூரீ காமகோடி காமாட்சியின் வலப்புறமாய் உள்ள பூரீ தபஸ் காமாட்சியன்னையின் எதிர்புறமாக பிலாகாசம் எனக் கூறப்படும் வளைப்புற்று அமைந்துள்ளது.
பரம ரகசியமான இடமான இப்பிலாகாசக் குகையில் தான் தேவி காமாட்சியின் வாசஸ்தானம் இருந்திடுகின்றது. இவ்விடத்தில் இருந்துதான் தேவியானவள் வெளியாகி பந்தகாசுரன், பண்டாசுரன் ஆகியோரை வதம் செய்ததோடு பிரம்மாதி தேவர்கள் அனைவருக்கும் தமது விஸ்வரூப தரிசனத்தினை அருளினாள் எனத் தல புராணம் கூறுகிறது.
இப்பிலாகாசத்தினிடம் தேவியின் அருட்சக்தியான ஆத்ம சக்தி எக்காலத்திலும் விளங்கி வருகிறது என்பது உண்மையாகும்.
காமாட்சி அன்னையின் ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மையத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில் பூரீ காமகோடி காமாட்சி சந்நிதிக்கு வலப்புறமாய் தபச காமாட்சி எழுந்தருளி உள்ளாள்.
மயூரமங்கலம்

பார்வதிதேவி ரிஷிகள் இட்ட சாபத்தின் காரணமாய் பூவுலகினை அடைந்து தம் பதியான பரமசிவனை அடைந்திட வேண்டி காசியம்பதிக்குச் சென்று பன்னிரு வருடங்கள் தபஸ் செய்தும் அங்கு பிடித்து இருந்த துர்பிட்சயத்தினைப் போக்கியதால் அன்னபூரணி எனத் திருப்பெயர் பெற்று காத்யாயன முனிவரின் ஆக்ஞைப்படி காசியை விடச் சிறந்த தலமான காஞ்சியம்பதியை அடைந்தாள். பின் இஷ்டார்த்தங்களை கோடி கோடியாகத் தந்தருளும் ஆற்றல் வாய்ந்த காமகோடி பீடத்தினை அடைந்த அன்னை அங்கு இறைவனைக் குறித்துத் தவம் இயற்றினாள்.
ழரீ தேவியின் அணுக்கிரகத்தின்படி தபஸ் காமாட்சி எனும் திருப்பெயர் கொண்டவளாய் பூர்வம் மதுகைடபர்களின் வதத்தின் போது தனது மாயா சக்தியினால் வாயு மூலையில் உருத்திர கோட்டத்தில் எகாம்பரம் என்னும் திருப்பெயருடன் விளங்கிடும் மகாவிருட்சத்தின் கீழ் தபம் செய்திடும் பேறுபெற்றாள்.
இவ்வாறு பூரீ காமகோடி காமாட்சியின் வலப்புறமாய் அம்பிகையான தபஸ் காமாட்சியானவள் உருத்திர கோட்டத்தில் ஏகாம்பரம் எனும். மாவிருட்சத்தினடியில் மணலினால் லிங்கம் அமைத்து பூஜை செய்து வரும் சமயம் இறைவன் தன் துணையான பார்வதியான தபஸ் காமாட்சியுடன் அவ்விருட்சத்திலேயே இரண்டறக் கலந்தனர் எனத் தல புராணம் கூறுகின்றது.
அஞ்சன காமாட்சி
அரூப லசுஷ்மியே அஞ்சன காமாட்சி என அழைக்கப்படுகின்றாள். இவ்வம்பிகையின் சன்னிதானம் பூரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் மையப்பகுதியில் உள்ள காயத்ரிமண்டபத்தில் காமகோடி காமாட்சியின் இடப்புறமாக வடதிசை நோக்கி உள்ளது. இச் சந்நிதியில் அம்பிகை அருவமாய் தவம் இயற்றிடுகின்றாள்.
மகாலசுஷ்மி ஒரு சமயம் விஷ்ணுவைதன் அழகின் மமதையால் பரிகாசம் செய்தபடியால் மகாவிஷ்ணு கோபம் கொண்டு அவளின் செளந்தர்யம் அருபமாக போக சாபம் இட்டார்.
இச்சாயத்தின் காரணமாக இதற்கான பரிகாரம் என்ன என்று லசுஷ்மி தன் பர்த்தாவினைக் கேட்க, மகா விஷ்ணுவும் தன் கோபம் தணிந்து அவளைப் பூலோகம்

Page 364
சென்று இஷ்டார்த்தார்களைத் தந்தருளும் ஆற்றல்மிக்க ழரீ காம கோட்டத்தினை அடைந்து தவம் செய்திடுமாறு கூறியருளினார்.
மகாவிஷ்ணுவின் வார்த்தைப்படியே மாஹாலஷ்மியும் காமகோட்டத்தினை அடைந்து அம்பாளை வேண்டி வணங்கியபோது அம்பாளும் பிலமான வளைப்புற்றில் இருந்து வெளியாகி மஹாலக்ஷமியை ஆசிர்வாதம் செய்ததோடு, அவளுக்கு அஞ்சன காமாட்சி என்ற திருநாமமும் இட்டு எனது இடப்புறத்தில் தவம் செய்து கொண்டு என்னை தரிசிக்க வரும் பக்தப் பெருமக்கள் அனைவரும் எனது அர்ச்சனைக் குங்கும நிர்மால்யப் பிரசாதத்தினை உனது மேனியில் போட்டு உச்சிமுதல் பாதம் வரை ஸ்பரிசம் செய்து உனது பிரசாதத்தினை பெற்றிடுவர்.
எனது குங்கும நிர்மால்யப் பிரசாதத்தின் மகிமையால் உனக்கு சுயரூபம் உண்டாகிடும். அப்போது என்னை தரிசித்திட வேண்டி வரும் பக்தர்களுக்கும் இவ்வுலக மாந்தர்களுக்கும் நீ சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் சகலவிதமான சம்பத்துக்களையும் அளித்து வருவதோடு என்னுடைய தரிசன பலத்தையும் நீ பெற்றிடுவாய், என அருளி அம்பாள் தனது வாசஸ்தலமான பிலத்தினுள் மறைந்தருளினாள். இதுவே அரூப காமாட்சியின் வரலாறு ஆகும். இந்த சந்நிதிக்கு முன்பாக சௌபாக்ய கணபதி சந்நிதியும் உள்ளது.
பூரீ காமாட்சியம்மன் ஆலயத்தின் முதல் பிரகார மத்தியில் உள்ள காயத்ரி மண்டபத்தில் பூரீ காம கோடி காமாட்சி சந்நிதிக்கு இடப்புறமாய் அரூப லசுஷ்மிக்கும் அருகில் வடதிசை நோக்கியப்படி வாராஹி அம்மனின் சந்நிதி உள்ளது.
இவ்வம்மனாகப் பட்டவள் அம்பாளின் பரிவார தேவதை ஆவாள். அம்பாளுடைய பூரீ சக்கர ராஜ கிரகத்திற்கு வாராஹிதேவி சேனாதிபதியாவாள்.
&muomtéfluhlosit ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மையத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில்
பூரீ காமகோடி காமாட்சி சந்நிதிக்கு இடப்புறமாயும் பூரீ,
வாராஹியின் எதிர்ப்புறமாயும் சந்தான ஸ்தம்பம் அமைந்துள்ளது.
தசரதச் சக்கரவர்த்தி புத்திர பாக்யம் வேண்டி தீர்த்த யாத்திரை வரும் சமயத்தில் காஞ்சியம்பதியை அடைந்து தேவியான பூரீ காமாட்சியம்மனை தரிசித்து
G330
tog

வணங்க இந்த ஸ்தம்பத்தில் இருந்து அசரீரியாக தசரதச் சக்கரவர்திக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் என காமாட்சியம்மன் கூறியருளினாள்.
இதனால் இந்த ஸ்தம்பமானது சந்தான ஸ்தம்பம் என அழைக்கப் பெறலாயிற்று. இந்த சந்தான ஸ்தம் பத்தினை பிரதட்சணம் செய்திடும் மெய்யன்பர்களுக்கு வம்ச விருத்தியும் புத்திர பாக்கியமும் உண்டாகிடும் என்பது அம்பாளின் வாக்காக அமைந்துள்ளது எனவும் கூறப்படுகின்றது. இச்சந்தான ஸ்தம்பத்திற்கு எதிரிலே கணபதியின் சந்நிதி உள்ளது.
காயத்ரி மண்டபத்தில் பூரீ தேவியின் சந்நிதிக்கு வலப் புறமாக தென்திசை நோக்கியப் படி செளந்தர்ய லசுஷ்மியும் தென்கிழக்கினை நோக்கியப்படி கள்வர் பெருமானும் எழுந்தருளியுள்ளனர்.
முன்பு தன்னால் சபிக்கப்பட்ட தன் துணையான மகாலக்ஷமிக்கு சுயரூபம் உண்டானதா என்று அறிந்து கொள்ள வேண்டி மகாவிஷ்ணுவானவர் கள்வர் வடிவம் கொண்டு மகாலசுஷ்மியை நோக்கிய போது மஹாலசுஷ்மி சுயரூபம் கொண்டு இருந்திடுவதை அறிந்து மனமகிழ்ந்து அம்பாளானழரீகாமாட்சியின் ஆசிர்வாதம் பெற்று தனது பத்தினியான மஹாலசுஷ்மியுடன் புண்ய வைகுந்தத்தை அடைந்ததாக தல வரலாறு மூலம் அறிய முடிகின்றது.
காயத்ரி மண்டபத்தினுள் சென்றிடும் வழியில் அன்னபூரணி சந்நிதி அமைந்துள்ளது. இவ்வம்மன் தென்கிழக்குதிக்கு நோக்கியப்படி எழுந்தருளியுள்ளாள். முன்பு அம்பாளான தேவியானவள் பந்தகாசுரன், பண்டாசுரன் முதலான அசுரர்களை வதம் செய்ததால் உண்டான பிரம்மஹத்தி தோஷமானது நீங்கும் பொருட்டு, தானே அன்ன பூரணியாய் வடிவம் கொண்டதோடு தனது ஒரு கரத்தில் அன்ன பாத்திரமும், மறு கரத்தில் கரண்டியும் ஏந்தியவளாக 32 தர்மங்கள் அனைத்தையும் செய்தவளாய் தனது வாசஸ்தலமான காயத்ரி மண்டபத்தினை அடைந்தாள் எனவும் தல புராணம் வாயிலாக அறிய முடிகிறது.
தர்ம துவாரம், பிக்ஷத்துவ துவாரம் என இரு துவாரங்கள் இச்சந்நிதிக்கு உள்ளன. தர்மதுவாரத்தின் மூலமாக தேவியைப் பிரார்த்தித்தும் பிக்ஷத்வாரத் வாரத்தின் மூலமாக 'பவதி - பிக்ஷாம் தேஹி' என கையேந்தி பிச்சை கேட்டிடுவது ஐதீகமாக உள்ளது. இச்சந்நிதானத்தில் ஐப்பசி மாதத்தில் தேவிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
பதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 365
ஏகாம்பரேஸ்வரின் திருக் கல்யாணத்தின் போது அம்பாள் மூன்றாவது கண்ணில் இருந்து ஏகாம்பிகை என்னும் திருப்பெயருடன் சிருஷ்டிக்கப் பட்டாள்.
இந்த அன்னையை பங்காரு காமாட்சி என அழைத்திடுகின்றனர். பாரத தேசத்தினை முகலாய வம்சத்தினர் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்த சமயத்தில், அவர்கள் காஞ்சியம்பதியில் பலவிதமான கலகங்களை உண்டாக்கினர்.
இதனால் பரம்பரை பரம்பரையாக தேவியான காமாட்சியை ஆராதனை செய்து வந்த வம்சாவழியினர் முகலாய படையெடுப்பையும் அதனால் உண்டான கலகங்களையும் கண்டு அஞ்சினர். இவர்களுள் சியாமா சாஸ்த்திரி என்னும் காமாட்சி தாசரும் ஒருவர் ஆவார். இவருடைய முன்னோர்கள் முகலாயருக்கு அஞ்சி ஸ்வர்ண காமாட்சியம்மனை தஞ்சைக்கு எடுத்துச் சென்று விட்டனர்.
இதனால் ஸ்வர்ண காமாட்சியின் சந்நிதியானது வெற்றிடமாய் போனது. முகலாயர் காலத்திற்குப் பிறகு கூட ஸ்வர்ண காமாட்சி அம்மனை மீண்டும் காஞ்சிக்குக் கொண்டுவர இயலாமல் போனது. இச் சந்நிதி பாழாகாமல் இருந்திட வேண்டி, அப்போதைய பரமாச்சாரியான பூரீ காமகோடி பீடத்து ஜெகத்குருபூரீ சந்திரசேகர் சரஸ்வதி ஸ்வாமிகள், 1944 - ம் ஆண்டு நடைபெற்ற இவ்வாலயத்துக்கும்பாபிஷேகத்தின் போது பூரீ பங்காரு காமாட்சியன்னையின் பாது கைகளை (சரணங்களை) இவ்விடத்தில் ஸ்தாபித்தார்.
இந்த பங்காரு காமாட்சியன்னையின் பாதுகைகளை ஆலயத்துள் இருக்கும் காயத்ரி மண்டபத்திற்குள் சென்று தரிசித்து வணங்கி வந்தவர்க்கு செய்த பாவங்கள் நீங்கும்.
அஷ்ட புஜங்களோடு கூடிய ராஜசியாமளா என்று அழைக்கப் பெறும் சரஸ்வதிதேவியானவள் ழரீ காமாட்சி அம்மனின் பரிவார தேவதை ஆவார் என்பதோடு பூரீ சக்கர ராஜகிரகத்திற்கு மந்திரிணியும் ஆவாள்.
கமாட்சியம்மனின் ஆலயத்தில் உள்ள மூன்றாம் பிராகாரத்தில் இருந்திடும் கீழ் கோபுரத்தின் உட்புறமாக
மயூரமங்கலம்

அம்பாளை நோக்கியப்படி துர்க்கை எனப் போற்றப் பெறும் மகிஷாரமர்த்தினி நின்ற கோலம் கொண்டு அருள்பாலிக்கின்றார். இந்த மகிஷாரமர்த்தினி காமாட்சியம்மன் ஆலயத்து துவார பாலகர்களில் ஒருவராகக் கருதப்பட்டுப் போற்றப்படவும் செய்கிறாள்.
இவ்வாலயத்து காமாட்சி அன்னையானவள் உற்சவத்தின் காரணமாக லசுஷ்மி, சரஸ்வதி ஆகிய இரு சக்திகளால் இடப்புறமும் வலப்புறமுமாக சாமரம் மற்றும் உபசாரம் செய்திடும் வகையாக எழுந்தருளியுள்ளாள்.
காமகோட்டமான காஞ்சியம்பதி ஆலயத்தில் சாஸ்தா சந்நிதி, துர்வாசர் சந்நிதி, ஆதிசங்கரர் சந்நிதி, கால பைரவர் சந்நிதி என பல சந்நிதிகள் அமைந்து விளங்குகின்றன.
இத்திருக்கோயிலான காமக்கோட்டத்தினுள் சென்றால் எவராலும் திசைகள் அறிந்திட இயலாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. அதனால் திசைமயக்கம் உள்ள திருக் கோயிலான இதனைச் சேக்கிழார் பெருமான்,
திசைமயக்கம் ஒன்று என்றுமுளது அஃது இன்றும் அங்குளதால் என்று பாடுகின்றனர். ஆனால் காசி விஸ்வநாதரின் சந்நிதி நேராக கிழக்கில் அமைந்தள்ளதால் இதனைக் கொண்டு திசைகளை அறிந்திடலாம். இவ்வாலயத்தினைச் சுற்றிலுமாக செண்பக மரங்கள் நிறைய இருந்தமையால் இத்தலத்தினை சண்பகாரண்யம் எனவும் அழைத்து வந்தனர்.
பஞ்சமூர்த்திகளால் உண்டாக்கப் பெற்ற பஞ்ச தீர்த்தமும், காமக்கோட்டத்தில் வெளிவாயிலுக்கு எதிராக ஞானகூபம் எனப்பெறும் கிணறும் உள்ளது. முன் கூறப்பட்ட பஞ்ச தீர்த்தத்தினை உலகாணித் தீர்த்தம் எனக் கூறுகின்றனர்.
இந்த காமக்கோட்டத்துக் காமாட்சித் தாயினுடைய மாசி மாதப் பிரம்மோற்சவம் மிகவும் பிரபலமானது. இவ்விழாவின் இறுதி நாளன்று அன்னையின் விஸ்வரூப தரிசனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விசேஷம் ஆகும்.

Page 366
ಇಜ್ಜಿ''
Dg
غر میما
مح... Cl3)
களஞ்சி காமாட்சி, மதுரை தொடரில் இரண்டாவதாக நிலைெ வரிசையிலும் இரண்டாவதாக அணி மந்திரிணி பீடத்தலமாகும்.
காசி என்ற தலம் கங்ை விசாலாட்சி ஆட்சி செய்கிறாள்.அ அளித்திடக் கூடியவை. ஆனால் கரையில் இருந்திடும் மீனாட்சி ஆ முக்தி அளித்திடும் மாபெரும் சிறப் பெயரால் நம் சான்றோர் முற்கால காத்திடும் அம்மையப்பன் இருவரு திருக்கோயில் கொண்டு அருள்பா கருணை வடிவான அன்ை மீனாட்சி என்ற திருப்பெயர் கொன தலமும், திருமுருகப்பெருமானே உ மதுரையம்பதியே ஆகும். இராஜ கால்மாறி நடனமாடிய தலமும்தன செய்தருளிய தலமும், மதுரையம்ட திறமையால் திருஞானசம்பந்: மங்கையற்கரசியாரும், அவரது மூர்த்திநாயனாரும் வாழ்ந்தார்கள் ஆலவாய், நான்மாடக்கூட சீவன் முக்தி புரம், சிவபுரம், துவ இம்மதுரையம்பதிக்கு உண்டு.
மேலும் மதுரையம்பதியான குறிப்பிடத்தக்க பெருமை உண முக்கியத்துவம் அளிக்கப்படுகிற சுந்தரேஸ்வரர் கோயில் என்று அ பெண் குலத்துக்குப் பேரர இம்மதுரையம்பதியை ஆட்சிசெய்
 
 

|ரை மீனாட்சி
மீனாட்சி, காசி விசாலாட்சி என்று கூறப்படும் வழக்குத் பெற்றது இம்மதுரையம்பதியாகும். சக்தியின் பீடத்தலங்கள் மையப் பெற்ற தலம் இதுவாகும். அத்துடன் இத் தலமானது
கயாற்றின் கரையில் அமைந்துள்ளது. அங்கு அன்னை வள் ஆட்சி செய்திடும் தலங்கள் மறுமையில் வீடுபேற்றினை
நம் தென் தமிழ் நாட்டில் பாய்ந்திடும் வைகையாற்றின் பூட்சி புரிந்திடும் மதுரையம்பதியோ இம்மையிலேயே ஜீவன் புடைய தலமாகும். அதனால்தான் ஜீவன் முக்திபுரம் என்ற பத்தில் இத்தலத்தைப் போற்றிப் புகழ்ந்தார்கள். உலகைக் ம் இங்கு சுந்தரேஸ்வரராகவும் மீனாட்சியாகவும் இணைந்து லித்திடுவதே இப்பெயர் வரக் காரணமாகக் கூறுகின்றனர். னபார்வதி,மதுரைப்பாண்டியனின் புதல்வியாக அவதரித்து ண்டு சோமசுந்தரப் பெருமானை தம் நாயகனாகப் பெற்றிட்ட டக்கிர பாண்டியராகத் தோன்றிய பெருமை வாய்ந்த தலமும் சேகரப் பாண்டியரின் வேண்டுகோளின்படி எம்பெருமான் து அறுபத்துநான்கு திருவிளையாடல்களையும் அற்புதமாக தியே ஆகும். இத்தலத்தில்தான் சமணர்களை தம் வாதத் தர் வென்றார். இத்தலத்தில்தான் பாண்டிமாதேவி து அமைச்சர் சைவம் காத்திட்ட குலச்சிறையாரும்,
-ல், கடம்பவனம், சிவராஜதானி, கூடல்புரம், கன்னிபுரீசம், த சாந்தபுரம், சிவராஜதானி ஆகிய பல்வேறு பெயர்களும்
ாது சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தலங்களுள் டையது ஆகும். இத்தலத்தில் அன்னை மீனாட்சிக்கு து. இதன் காரணமாகவேதான் இவ்வாலயம் மீனாட்சி ழைக்கப்படுகின்றது.
சியாய் விளங்கிடும் அன்னை மீனாட்சி கருணை வடிவாய் து வருகிறாள். மீனானது முட்டைகளை இட்டு முடித்ததும்
யூரபதிறு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 367
அதனை தன் கண்ணால் பார்த்து நின்று தன் பார்வைத் திறத்தால் அம்முட்டைகளில் இருந்து குஞ்சுகளைப் பொரிக்கச் செய்திடுமாம். பின் அவற்றை எவ்வித துன்பமும் தாக்கிடாமல் பாதுகாத்து வருமாம். அது போன்றே இத்தலத்து மீனாட்சித் தாயும் இப்பூவுலகத்து உயிர்கள் அனைத்தையும் தன் அருள் பொழிந்திடும் கண்களால் காத்து அருள்கின்றாள். இதன் காரணமாய் அன்னை மீனாட்சியானவள், அன்னை காமாட்சியைப் போன்றே அபயவரதங்கள் இல்லாமல் காட்சி அருளுகின்றாள்.
சடை மறைத்துக் கதிர்மகுடம்தரித்துநறும்
கொன்றையந்தார்தனந்து வேப்பம் தொடைமுடித்து விடநாகக் கலன் அகற்றி
மாணிக்கச் சுடர்பூண் ஏந்தி விடைநிறுத்திக் கயல் எடுத்து வழுதிமரு
மகன் ஆகி மீன நோக்கின் மடவரலை மணந்துலகம் முழுதாண்ட
சுந்தரனை வணக்கம் செய்வோம். என்று பரஞ்சோதி முனிவர் மீனாட்சி சுந்தரேஸ்வரரைப் போற்றுகின்றார். உலகத்து அன்னையாம் மீனாட்சியை தடாதகைப் பிராட்டியை மணம் புரிந்து கொண்டதினால் சுந்தரபாண்டியனாகிய சிவபெருமான் பற்பல பெருமைகளை அடைந்தார். சடைமுடி தரித்த அப்பெருமானாகப்பட்டவர் அம்முடி துறந்து மணிமுடி தரித்தார். கொன்றை மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலையை அணிந்த அப்பெருமான் அம்மாலையைத் துறந்து பாண்டியர்க்கே உரித்தான வேப்பம்பூ மாலையை அணியும் சிறப்பினைப் பெற்றார். தன் அணிகலன்களாக பாம்புகளையே கொண்டிருந்த எம்பெருமான் சுடர்விடும் மாணிக்க அணியைப் பூண்ட கோலத்தினைப் பெற்றார். இடபக் கொடி ஏந்தியவர் அக்கொடியை நீக்கி கயல் கொடியினை ஏந்தினார். ஆண்டியாகப் பிச்சாண்டியாக திரிந்து கொண்டிருந்த நிலை நீங்கப் பெற்று பாண்டியனின் மருமகனாகி இப்பூவுலகம் முழுமையையும் ஆட்சி புரிந்திடும் பேற்றினையும் பெற்றார். இவை அனைத்தும் எம் அன்னையாம் மீனாட்சியால் அப்பெருமானுக்கு உண்டானவையே ஆகும் என்று பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார்.
அன்னை மீனாட்சியம்மையின் திருக்கோயில் வானுற ஓங்கி விளங்கும் வண்ணக் கோபுரங்கள் நான்குடன் திகழ்கின்றது. இத்திருக்கோயில் மிகவும் பெரியது. இத்திருக்கோயிலில் விளங்கும் கலையழகும், சிலையழகும், சிற்பத் திறனழகும், சித்திரப் பேரழகும் கண்டு வியக்கத்தக்கவையாகும்.
மயூரமங்கலம்

இத்திருக்கோயிலுள்ளே அமைந்து விளங்கும் பல மண்டபங்களும், விமானங்களும், பொற்றாமரைக்குளமும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குவன. சிற்பக் கலை வடிவங்களாக மூர்த்திகளின் சிலைகளும், வேறுபல திருவுருவங்களும் விளங்குகின்றன. சில தூண்கள் இசை பாடுகின்றன. இறைவன் திருவிளையாடல்கள்ை விளக்கும் நாடக, நடனச் சிற்பங்களும் உள்ளன. சித்திரங்களும் வரையப்பெற்றுள்ளன. எனவே, இத்திருக்கோயில் முத்தமிழ்க் கோயிலாகவும் மிளிர்கின்றது.
இந்திரன், தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ளப் பல தலங்கட்கும் சென்று வரும்போது, கடம்ப மரங்கள் செறிந்து விளங்கியதால் கடம்பவனம் என்னும் பெயர் பெற்ற இத்தலத்தில் ஒர் இலிங்கத்தைக் கண்டு, அதனைப் பூசித்து வழிபடவே, பாவம் நீங்கியதால், அவன் இந்திர விமானத்துடன் கூடிய இப்பெருந்திருக்கோயிலைக் கட்டுவித்தான் என்று கூறுவர்.
இத்தலத்து மாநகரின் நடுவே அமைந்து விளங்கும் இத்திருக்கோயிலினுள்ளே எட்டுக் கோபுரங்களும், இரண்டு விமானங்களும் எழிலுற்று விளங்க, வலப்புறம் அன்னை மீனாட்சி கோயிலும், இடப்புறம் சுவாமி கோயிலும் அமைந்து விளங்குகின்றன. மீனாட்சி கோயிலக்கு முன்னே அட்டசித்தி மண்டபமும், சுவாமி கோயிலுக்கு முன்னே பெரிய கோபுரமும் அமைந்து விளங்குகின்றன. இத்தலம் சக்திக்கு முக்கியத்துவம் உடைய தலமாதலின் அன்னை மீனாட்சியை முதலில் தரிசித்து, பின்னர் சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டியது முறையாகும். இத்திருக்கோயிலினுள் ஆடி வீதியும், வெளியில் சித்திரை வீதி, ஆவணி மூலவீதி, மாசி வீதி, வெளி வீதி ஆகிய வீதிகளும் அமைந்துள்ளன.
அங்கயற்கண்ணி கோயிலின் முன்னே அமைந்த அட்டசக்தி மண்டபத்தில் கெளமாரி, ரெளத்திரி, வைணவி, மகாலக்குமி, யக்ஞரூபிணி, சாமளை, மகேசுவரி, மனோன்மணி என்னும் எட்டுச் சக்திகளின் திருவுருவச் சிலைகள் தூண்களில் திகழ்கின்றன. இம்மண்டபத்தில் மீனாட்சி அவதரித்தது முதல் சுந்தரேசுவரரை மணம் புரிந்ததுவரையிலான வரலாற்றை ஒவியங்கள் உணர்த்துகின்றன.
இம்மண்டபத்தையடுத்து வாயிலின் வலப்புறம் வல்லப கணபதியும், இடப்புறம் சண்முகரும் காட்சியளிக்கின்றனர். இவ்வாயிலையடுத்து உள்ளே

Page 368
சென்றால் வடக்கில் வேடுவர், வேடுவச்சி உருவச்சிலைகள் உள்ளன. இச்சிலைகள் இரண்டும் ஓர் அந்தணனுக்கு மாபாதகந் தீர்த்தருளிய அடையாளத் திருவுருவங்களாகும்.
அடுத்து விளங்குவது மீனாட்சி நாயக்கர் மண்டபம். இம்மண்டபம் கடந்தை முதலியாரால் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் பிட்சாடனர், முனிபத்தினி, தாருக முனிவர் ஆகியோர் சிலைகளும், மோகினி, கடந்தை முதலியார் சிலைகளும் மிகவும் அழகுடையனவாக அமைந்துள்ளன.
இம்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பொற்றாமரைக் குளம் உள்ளது. இத்தலத்துக்குரிய தீர்த்தங்களில் இது முதன்மையானது. இக்குளத்திற்கு மேற்கில் அன்னை மீனாட்சி சந்நிதிக்கு எதிரில் கிளிக்கட்டு மண்டபம் அமைந்துள்ளது.
இம்மண்டபத்தில் கிளிக்கூண்டுகள் இருப்பதாலும், அன்னையின் திருக்கரத்தில் கிளி இருப்பதாலும் இம்மண்டபம், கிளிக்கட்டு மண்டபம் என்னும் பெயர் பெற்றது. இம்மண்டபத் தூண்களில் யாளிகளின் சிற்பங்கள் இருப்பதால், இதற்கு யாளி மண்டபம் என்னும் பெயரும் உண்டு. இம்மண்டபத்தில் பஞ்சபாண்டவர் சிலைகளும், திரெளபதி சிலையும் அற்புதமாக அமைந்துள்ளன. இம் மண்டபத்தில்தான் அன்னை மீனாட்சி சந்நிதியின் பிரதான வாயில் அமைந்துள்ளது.
மீனாட்சி கோயிலுள் இரண்டாம் பிரகாரத்துக் கிழக்குப் பகுதியில் திருமலைநாயக்கர் மண்டபமும், மேற்குப் பகுதியில் கொலு மண்டபமும் அமைந்துள்ளன. கூடல் குமரர் திருச்சந்நிதியும் அமைந்துள்ளது.
இப்பிரகாரத்தையடுத்து அறுகாற் பீடவாயில் உள்ளது. இவ்விடத்தில்தான் 'மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் நூல் அரங்கேற்றப்பட்டது. இவ்வாயிலின் இருபுறமும் இப்பிள்ளைத் தமிழ்ப்பாடல்கள் வெண்சலவைக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
இவ்வாயிலின் வலப்புறம் திருமலை விநாயகர் சந்நிதியும், இடப்புறம் திருமலைக் குமரர் சந்நிதியும் அமைந்துள்ளது.
இதனையடுத்து உள்ளது உட்பிராகாரம் - முதற் பிராகாரம். இப்பிரகாரத்தில் ஐராவத விநாயகர், வல்லப கணபதி, நிருத்த கணபதி, முத்துக்குமார சுவாமி, சண்டிகேசுவரி ஆகியோரைக் கண்டு வழிபடலாம்.
திருக்கோயிலுள் கருவறையில் நடுநாயகமாக அன்னை மீனாட்சியம்மையார் கருணை நோக்குடனும்,
C33

இரண்டு திருக்கரங்களுடனும் திருக் காட்சியருளுகின்றாள். அங்கயற்கண்ணி அடிக்கமலங்கள் போற்றி வணங்கி வழிபடுதல் வேண்டும். இத்தலத்துத் தீர்த்தங்களுள் முதன்மையானது பொற்றாமரைக்குளம். இப்பொற்றாமரைத் தீர்த்தம் ஒப்பற்ற பெருமையுடையது. இதற்குச் சிவகங்கை என்னும் திருப்பெயரும் உண்டு. இந்திரன் பூசிப்பதற்காகப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம் இது. எனவே, இதற்கு இப்பெயர் அமைந்தது.
இப்பொற்றாமரைத் தீர்த்தம் மற்ற தீர்த்தங்கள் எல்லாவற்றையும்விட மேலானது. இதன் காரணமாக இதற்குப் பரம தீர்த்தம் என்னும் பெயரும் உண்டு.
இப்பொற்றாமரைத் தீர்த்தம், தன்னிடத்தே மூழ்கி வழிபடுவோர்க்கு அருளையும் மங்கலத்தையும் விளைவித்தலால் அருட்சிவ தீர்த்தம் என்னும் பெயரையும், அன்பர்களின் அஞ்ஞானத்தை அகற்றி ஞானத்தை அளித்தலால் ஞானதீர்த்தம் என்னும் பெயரையும், முத்தியின்பம் எய்துமாறு செய்வித்தலால் முக்தி தீர்த்தம் என்னும் பெயரையும் பிற தீர்த்தங்கள் அனைத்தையும் விட உத்தமமானதால் உத்தம தீர்த்தம் என்னும் பெயரையும், செந்தாமரை மலர் பூத்து விளங்குவதால் தாமரைத் தீர்த்தம் என்னும் பெயரையும், தன்னிடத்தே நீராடி வழிபடுவோர்க்குத் தருமம்,அருத்தம், காமம், மோட்சம் என்னும் நான்கினையும் தருதலால் தருமதீர்த்தம் அருத்ததீர்த்தம், காமதீர்த்தம், மோட்சதீர்த்தம் என்னும் பெயர்களையும் பெற்று விளங்குகின்றது.
இப்பொற்றாமரைத் தீர்த்தம் திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப் பலகை தோன்றிய இடம். எனவே, இக்குளத்தைச் சுற்றிலுமுள்ள சுவர்களில் - தெற்குச் சுவரில் வெண் சலவைக் கற்களில் 1330 குறட்பாடல்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஏனைய சுவர்களில் திருவிளையாடற் புராணக் கதைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இத்தீர்த்தக் குளத்தில் நீர்வாழ் உயிர்களுள் எதுவுமே இல்லாதிருப்பது ஒர் அதிசயமாகும். இக்குளத்தின் நடுவில் தற்போது ஒரு பொன் தாமரை மலர் மிதக்க விடப்பட்டுள்ளது.
அன்னை மீனாட்சி அருளரசாட்சி புரிந்தருளும் இத்தலத்தில் விழாவிற்குக் குறைவே இல்லை! நாளுந் திருவிழாதான்! ஆயினும் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவும், தை மாதத் தெழப்பத் திருவிழாவும், ஆவணிமாதத்தில் ஆவணி மூல விழாவும் மிகவும் விசேடமான விழாக்களாகும்.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 369
霹
്立労
赛
[2%ණ්
f
மயூரமங்கலம்
SS
懿
(è
线ގަ&}
را به
&
}
S
sསྤྱི
3
ՓՈd
2
སྡེ་
靈
メ
*கங்கைக்கு நிகரான ந இந்துக்களின் கொள்கை. பழங்க நதியையும், காசிப்பதியையும் போ கங்கை நதிக்கரையில் , இக்காசித்தலம் மணிகர்ணிகை பீ தலமாகும். இத்தலத்திற்குப்பம்பா செல்லலாம்.
இக்காசித்தலம் முத்தி தரு பூலோகக் கயிலாயம் என்று போற்ற அளித்து விளங்குவது கங்கை நதி புகழ் பெற்ற கங்கை | வெளிப்பாடாகும். பாரதநாடு ெ விண்ணுக்கு அடங்காமல், இமயெ கங்கை பெருக்கெடுக்க, அதனை புனிதர் போற்றும் பெருநதி அருந்தவம் முயன்று இன்பப்பேறு அமைந்து விளங்கும் காசியம்பதி கரையிலிருந்தே காண வேண்டுப்
தெய்வத் திருநதியாகிய மைல் (8 கிமீ) நீளம் கொண்ட தெ
தென்னாட்டில் அன்னை வடநாட்டில் காசித்தலத்தில் அன் திகழ்கின்றாள். அன்னை விச மாநகராகவும், பிறவிப் பிணிதீர் பாவங்களைப் போக்கிப்பு கூறுவார்கள். இக்காசித் தல காசியைவிட வீசம் பாகம் அதிக அதிகப் பலனுள்ள- தலங்களாக அன்பர்களின் பாவங்க புனிதமாக்குகின்ற கங்கை, த6
 
 
 

f6) of T6DT'df
தியுமில்லை, காசிக்கு நிகரான பதியுமில்லை என்பது ாலத்திலிருந்து பாரத நாட்டு மன்னரும், மக்களும் கங்கை ற்றி வணங்கி வருகின்றனர்.
அமைந்து விளங்கும் பெரும் புகழ்த் திருத்தலம் காசி. டத்தலம். சக்தி பீடத்தலங்களுள் இஃது ஒரு முக்கியமான ய் வழியாகவும், கல்கத்தா வழியாகவும், நாகபுரி வழியாகவும்
நம் தலங்கள் ஏழினுள் ஒன்று; இறக்க முத்தி தரும் தலம்; ரப்பெறும் இத்தலத்திற்குப் பெருஞ்சிறப்பையும், பேரழகையும் 5. நதி, கருணையின் வடிவாகிய அன்னை சக்தியின் சய்த பெருந்தவத்தின் பயனாக இமயமலையில் பிறந்து, வற்புக்கு அடங்காமல் அன்னை சக்தியின் கருணை வடிவாக ப் பேணி அணைத்துத் தன் வேணியில் அமைத்தான் ஈசன். தியாகிய இத்திருநதியின் புண்ணியத் துறையில் அமர்ந்து, பெற்றவர் எண்ணிறந்தோர். இப்புண்ணிய நதிக் கரையில் யின் பேரழகைக் காண வேண்டுமெனில், கங்கை நதிக்
). கங்கையின் கரையில் அமைந்த காசித்தலம், சுமார் ஐந்து ய்வநலம் சான்ற பெரியதொரு பட்டணமாகத் திகழ்கின்றது. காமாட்சியும், அம்மை மீனாட்சியும் விளங்குவது போன்றே ானை விசாலாட்சி திருக்கோயில் கொண்டு எழுந்தருளித் ாலாட்சியின் அருள் திறத்தால் மக்கள் மனமாசகற்றும் க்கும் பெரும்பதியாகவும் அமைந்து விளங்குகின்றது. னிதமாக்குவதில் காசிக்கு நிகரான தலம் இல்லையென்று த்தைப் போல் தென்னாட்டில் ‘காசியில் வீசங்கூட - முள்ள - காசியைவிட அதிகச் சிறப்புள்ள-காசியைவிட த் திருவாஞ்சியமும், குத்தாலமும் விளங்குகின்றன. ளையெல்லாம் தான் ஏற்றுக் கொண்டு, அவர்களைப் எனிடத்துள்ள பாவங்களையெல்லாம் கரைப்பதற்காகத்
C335)

Page 370
துலாமாதத்தில் காவிரியாகப் பெருக்கெடுத்துவருவதாக ஐதிகம். எனவேதான், கங்கையிற் புனிதமாய காவிரி, என்று காவிரியையும் போற்றினர்.
மக்களின் கருமந் தொலைப்பதில் தலைசிறந்து விளங்குகின்ற இக்காசித் தலத்தில், கேதாரீசுவரர், விசுவநாதர், விசாலட்சி, டுண்டிகணபதி, அன்னபூரணி, பைரவர், தண்டபாணி, துர்க்கை, கெளடிபாய் முதலியோர் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
இத்திருக்கோயில்களுள் முக்கியத்துவம் வாய்ந்தவை விசுவநாதர் திருக்கோயிலும், அன்னை விசாலாட்சி திருக்கோயிலுமாகும்.
விசுவநாதர் திருக்கோயிலின் கருவறைக் கோயில் முழுவதும் பளிங்குக் கற்களால் பதிக்கப்பட்டுள்ளது. இது கண்ணிற்கும் கருத்திற்கும் இன்பம் அளிப்பதாக உள்ளது. சுவரில் சுற்றிலும் பல பளிங்குச் சிலைகள் பொலிவுற்று விளங்குகின்றன. இத்திருக்கோயிலில் விசுவநாதருக்கு நடை பெறும் பூசைகளுள் சப்த ரிஷி பூசை மிகவும் விசேடமானது. இப்பூசையில் அர்ச்சகர்பலர் மந்திரம் சொல்லி அபிடேகம் செய்து, நாகாபரணம் வெள்ளிக் குடைசாத்தித் தீபாராதனை செய்கின்றனர்.
இப்பூசை நிகழ்ந்து முடிந்த பின்னர், தமருகம் முழங்க பைரவருக்குப் பூசை நடைபெறுகின்றது; பைரவர் பூசை முடிந்தவுடன், எல்லோரும் உள்ளே சென்று சுவாமியைத் தொட்டு வணங்கி வழிபடலாம்.
விசுவநாதர் திருக்கோயிலின் பின்புறத்தில் ஆதிவிசுவநாதர் திருச்சந்நிதி அமைந்துள்ளது. இது தற்பொழுது பள்ளிவாசலாகவும், ஒரு பெரிய நந்தியையும் கிணற்றையும் உடையதாகவும் உள்ளது.
சக்தி பீடமாகத் திகழ்கின்ற அன்னை விசாலாட்சியின் திருக்கோயில், விசுவநாதர் கோயிலிருந்து சுமார் இரண்டு பர்லாங்கு (0.4 கி.மீ.) தூரத்தில் அமைந்து விளங்குகின்றது. அன்னையின் கோயில், தென்னிந்திய கோயிற்பாணியில் அமைந்துள்ளது. தன்னை அன்புடன் வணங்கி வழிபட வருவோரின் விசனங்களையெல்லாம் போக்கி, வேண்டுவனவற்றையருளும் அன்னை விசாலாட்சி, கருவறை நடுவகத்தில் திருவருள் சுரக்கும் திருநோக்குடன் எழுந்தருளி காட்சி தருகின்றாள்.
அன்னை விசாலாட்சி மட்டுமன்றி, அன்னபூரணியும் இத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளித் திகழ்கின்றாள். உலக உயிர்கள்

அனைத்தும் முதற்கண் தேடுவது உணவு. அகில உலகத்தையும், உலகத்துயிர்களையும் படைத்தவளாகிய அன்னை சக்தி, அவ்வுயிர்கட்கெல்லாம் உணவளித்துக் காக்கும் கடமையினளாகத் திகழ்கின்றாள். அவளே அன்னபூரணி என்னும் திருப்பெயரினளாக இத்தலத்தில் கோயில் கொண்டு விளங்குகின்றாள்.
கல்லினுள் தேரைக்கும் கருப்பையுள் உயிருக்கும் அன்னம் இடுபவள் அன்னபூரணி.
உலகுக்கெல்லாம் உணவூட்டுபவன் உமாபதி. அத்தி முதல் எறும்பீறாகச் சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகா' என்றார் பட்டினத்தடிகள். அந்தத் தேசிகனுக்கும் கபாலத்தில் பிச்சையளிப்பவள் அன்னபூரணி.
அனைத்துயிர்களின் களைப்பையும் நீக்கி, இறுதியிலும் உறுதுணையாக இருந்து, வினைப் பிணிப்புகளாகிய முடிச்சுகளை அவிழ்த்து, நம் தீவினைகளைத் திருவருட் பார்வையால் போக்கி, என்றும் மீளாத இன்பத் திருவடியை அளிக்கிறாள் அன்பூரணி.
ஞானம், வைராக்கியம் என்னும் மோட்ச சாதனங்கள் இரண்டையும் அன்பர்கட்குப் பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி.
இவ்வன்னபூரணி ஒரு திருக்கரத்தில் கரண்டியையும், ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கியவளாக, திருக்கோயில் கொண்டு எழுந்தருளித் திகழ்கின்றாள்.
இத் திருக்கோயிலில் அன்னபூரணியைச் சூழ்ந்தவர்களாக காளி, இராஜேசுவரி, கங்காதேவியின் வருகை, பகீரதன் தவம், இலக்குமிநாராயணர், கோபால கிருஷ்ணர், பார்வதி பரமேசுவரர், ஆஞ்சநேயர், விக்னேசுவரர் ஆகியோர் பளிங்கு வடிவங்களாகத் திருச்சந்நிதிகள் கொண்டு விளங்குகின்றனர்.
இக்காசித்தலத்தில் துர்க்கா குண்டு என்னும் குளத்தை அடுத்துச் சிறிது தூரத்தில் கெளடிபாய் அம்மையார் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வம்மையார், விசுவநாதப் பெருமானின் சகோதரி என்று கூறப்படுகின்றது.
விசுவநாதப்பெருமான் எல்லோராலும் தொடப்படுவது தனக்குப் பிடிக்கவில்லை என்று கெளடிபாய் அம்மையார் கூற, விசுவநாதர் தமக்குப் பக்தியே முக்கியம் என்றும், நீ பக்தர்களை அவமதித்தாய் என்றும் கூறி, அவமதித்ததன் காரணமாகத் தம்மைவிட்டு நீங்கிச் சேரியில் வாசம்
யூரபதி பூரிபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் -2000

Page 371
செய்யக் கடவாய் என்று சபித்ததாகவும், அதற்கு
அம்மையார் 6S Glomforth கேட்க, என் தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் யாத்திரை நிறைவுறுதற் பொருட்டு உன்னையும்
தரிசிக்கவேண்டும். அப்போது அவர்கள் அடைந்த புண்ணியத்தின் பெரும்பகுதியில் ஒரு சோழி அளவை உனக்குக் கொடுப்பார்கள். அந்தப் புண்ணியத்தின் பலனாக நீ செய்த குற்றம் நீங்கும் என்று சாப நிவர்த்தி அளித்ததாகவும் கூறப்படுகின்றது.
அதன்படியே கெளடிபாய் அம்மையார் கோயில் சேரியில் அமைந்துள்ளது. பக்தர்களும்
மயூரமங்கலம்
 

சோழியுடன் சென்று சோழியைப் போட்டு வழிபட்டு
வருகின்றனர்.
இச்சக்தி பீடத்தலத்தில் கங்கைக் கரையோரத்தில் நீராடுவதற்கென்று 64 படித்துறைகள்
அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை 'ஸ்நான கட்டங்கள் என்றும், தீர்த்த கட்டங்கள்’ என்றும் கூறுவார்கள். அவற்றுள் அசிகாட், அரிச்சந்திரகாட், கேதார்காட், பஞ்சகங்காகாட், அசுவமேதகாட், மணிகர்ணிகை காட் வார்ணைகாட் ஆகிய கட்டங்கள் முக்கியமானவையாகும் வார்ணைகாட் கடைசிக் கட்டமாகும். இதில் நீராடினால் 64 கட்டங்களிலும் நீராடிய பலன் உண்டு.

Page 372
\一方
羧
රූ338>
Y.
جہ ؟
り
ရွှံ
a.
v9
3.
நெல்
ફૂ;
器
இ
"م
t
அன்னையின் அருட்சக்தி காந்திமதியம்மனின் திருக்கோயி மணந்திடும் மாட்சிமை பொருந்திய நெல்லை காந்திமதியும் தனித்தன் வருகின்றார்கள்.
இத் தலங்களுள் மதுரைக்கு நெருக்கமான ஒற்றுமையைக் காண திருக்கோயில் இருந்திடுவது அமைந்துள்ளது.
மதுரைக்கு எவ்வாறு மீனா அதேபோன்று நெல்லைக்குப் ெ திருக்கோயிலாகும். இவ்விரு கோ! தலங்களிலும் திருக்கோயில் குளங்க மீனாட்சியம்மையின் நினைவு வரு அம்மைதான் நினைவுக்கு வந்திடுகி நெல்லை என அழைக்கப் திருக்கோயிலும் நெல்லையப்பர் இணைந்துள்ளன.
நெல்லையப்பர் திருக்கோயி நெல்லையப்பர் சந்நிதியாகும். இர மூங்கில் புற்று ஒன்றில் இருந்து திருப்பெயராலும் அழைக்கப்படுகின் பஞ்சசபைத் தலங்களுள் ஒலி இத்திருக்கோயிலின் கருவற்ைபின் தூண்கள் இசையொலி எழுப்பிடும் ஒலிகள் எழும்புகின்றன.
இத்தலத்தில் இறைவனுக்க யாசித்து எடுத்து வந்த நெல்லிை போகாதபடி இறைவன் வேலி அை
 
 
 

வை) காந்திமதி
பெருகிச் சிறந்திடும் திருத்தலங்கள் பலவற்றுள் நெல்லை லும் ஒன்றாகும். அருள் நெறி சிறந்திடும், திருவருள் தமிழகத்தில் காஞ்சி காமாட்சியும், மதுரை மீனாட்சியும், மை வாய்ந்த அம்மன்களாக விளங்கி அருளாட்சி புரிந்து
நம் நெல்லை என அழைக்கப் பெறும் திருநெல்வேலிக்கும் லாம். வைகையாற்றின் கரையில் மதுரை மீனாட்சியம்மன் போல் பொருநை நதிக்கரையில் நெல்லையம்பதி
ாட்சியம்மன் திருக்கோயிலால் பெருமை உண்டானதோ பருமை சேர்ப்பது நெல்லை காந்திமதி அம்மனின் பில்களிலும் பொற்றாமரைக் குளங்கள் உண்டு. இவ்விரு கள் அைைமந்து உள்ளன. மதுரையம்பதி என்றாலே எப்படி நகின்றதோஅதே போல் நெல்லை என்றால் காந்திமதி கிறாள்.
பெறும் திருநெல்வேலி மாநகர் தலத்தில் அம்மனின் திருக்கோயிலும் தனித்தனிப் பெரும் கோயில்களாக
பிலில் இரு திருச்சந்நிதிகள் அமைந்தள்ளன. ஒன்று ாண்டாவது வேணுநாதர் சந்நிதியாகும். இத் தலத்தில் இறைவன் தோன்றியதால் வேய்முத்த நாதர்' என்னும் றார்.
ன்றாக நெல்லையில் அமைந்திருப்பது தாமிர சபையாகும். ா எதிர்புறமாய் அமைந்துள்ள நாலுகால் மண்டபத்தின் தூண்களாகும். இத்தூண்களை தட்டினால் சப்தஸ்வர
ான நைவேத்தியத்துக்காக வேதசருமர் என்ற அந்தணர் ன உலர்த்திய போது, பெரு வெள்ளம் வந்து அடித்துப் மத்து காத்திட்டதால் இத்தலம் நெல்வேலி என பெயர்
ரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 373
பெற்று திருஎனும் அடைமொழியுடன் திருநெல்வேலி என அழைக்கப்பட்டது.
இத்தலத்திற்கு வருன்க தந்த திருஞானசம்பந்த பெருமான் இயற்கை வளத்தோடு இணைத்து"தென்றல் வந்துலாவிய திருநெல்வேலி’ எனவும், “தேனில் வண்டமர் பொழில் திருநெல்வேலி' எனவும் “செறிபொழில் தழுவிய திருநெல்வேலி எனவும்"போற்றி திருநெல்வேலி பதிகம் பாடியருளியுள்ளார். மேலும் அழகிய சொக்கநாதப் பிள்ளை என்பவர் அன்னையாம் காந்திமதி மீது பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார்.
இவ்வாறான பெருமைகளைப் பெற்றுள்ள நெல்லையம்பதியில், அன்னையாம் காந்திமதி அம்மையின் திருக்கோயில் உயர்ந்த இராஜகோபுரத்துடன் கூடிய திரு ஆலயமாக விளங்குகின்றது. அம்மன் அம்பலம் ஒன்று இத்திருக்கோயிலின் முகப்பில் உள்ளது.
கோபுர வாயிலைக் கடந்து சென்றால் முதலில் காணப்படுவது ஊஞ்சல் மண்டபமாகும். இம்மண்டபத்தில் 96 கல்தூண்கள் உள்ளன. இது 96ம் தத்துவங்களை உணர்த்திடும் தத்துவ தூண்களாக அமைந்துள்ளமை சிறப்புக்கு உரியதாகும்.
இந்த ஊஞ்சல் மண்டபத்தை அடுத்துள்ளது திருக்கல்யாண மண்டபமாகும். இம்மண்டபமே ஆயிரம் கல் மண்டபமாகும். அன்னை காந்திமதியம்மைக்கு இம்மண்டபத்தில் தான் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
இம்மண்டபத்துடன், திருக்கோயிலில் நடுமண்டபம், மணிமண்டபம் என இன்னும் சில மண்டபங்கள் உள்ளன.
முன் கூறப்பட்ட மண்டபங்களை கடந்து சென்றால் கருவறையில் அன்னை காந்திமதியின் திருமேனியை கண்டு வணங்கிடலாம். மணக்கோலம் கொண்டுள்ள புதுப் பெண்ணின் திருக்காட்சியுடன் எழிலுற விளங்கிடுகிற கோலமுடன் அன்னை காந்திமதி தரிசனம் அருளுகின்றாள்.
வைரமணி முடி தலைமீது அணியப்பெற்று, இராக்குடி,திருநெற்றியில் குங்கும திலகம், மூக்கில்,
மயூரமங்கலம்

终
மூக்குத்தி புல்லாக்கு, மார்பு பகுதியில் நவமணிகளோடு கூடிய வடம் திருவடிகளில் மணிச்சிலம்புகள், உயர்த்திய வலக்கரத்தில் மலர் செண்டு, இடக்கரம் தாழ்ந்த கோலமுடன் திருநயன அழகோடு அன்னை திருக்கோலம் கொண்டு அருள் பாலிக்கின்றாள்.
இமவான் மகளான உமையவளை இறைவன் திருக்கைலாயத்தில் திருமணம் கொண்டார். இறைவனுக்கும் இறைவிக்கும் நடைபெறும் திருமணம் கண்டிட தேவர் அசுரர், மக்கள் என அனைவரும் கைலாயத்தில் ஒன்றாய் கூடியதால் பாரம் தாங்கிடாமல் தென் திசை உயர்ந்து வடதிசையானது தாழ்ந்து போயிற்று.
இந்நிலை கண்ட இறைவன் குறுமுனியாம் அகத்தியரை அழைத்து இருதிசைகளையும் சமன் செய்திட வேண்டி தென் திசை நோக்கி சென்றிடுமாறு பணித்தார். இறைவனின் அருளாணையை ஏற்ற அகத்திய முனிவர், இறைவனின் திருமணக்கோலம் காண தாம் விரும்புவதாக கூறியபோது அகத்தியர் தென் திசையை சென்று அடைந்ததும் தமது திருமணக்கோலத்தினை அவருக்கு காட்சியாக அருளுவதாக வாக்கும் அளித்தார்.
இது கேட்ட அகத்தியர் தென் திசை சென்று பொதிகைமலையினை அடைந்தபோது உயர்ந்து இருந்த தென்திசையானது தாழ்ந்து இரு திசைகளும் சமநிலையை அடைந்தன. தமது வாக்கின் படியே இறைவனும் உமையவளுடன் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு முன்பாய்த் தோன்றி திருக்காட்சியை அருளினார். இதன் காரணமாய் தான் அன்னை காந்திமதி மணப்பெண் கோலத்திலேயே இத்தலத்தில் எழுந்தருளியுள்ளாள்.
அன்னையாம் காந்திமதி, இறைவனை மணம் புரிந்த கொண்ட விழா, இத்தலத்தில் ஐப்பசி மாதத்தில் நடைபெறுகின்றது. இம்மாதத்தில் நடைபெறும் ஊஞ்சல் விழாவும் விசேடமான திருவிழாவாகும். ஆனி மாதத்தில் நெல்லையப்பர், காந்திமதி அம்மை ஆகியோருக்கு நடைபெறுகின்ற பத்து நாட்கள் பெரிய திருவிழா
விசேடமாக நடைபெறும் திருவிழாவாகும்.

Page 374
i ヤソー
స్త్ర
SYO
もf
(※
金
த்
γρΚΟ
მადდა... (ბ2-ჯ. 登 (&SXS 以红
அம்பகரத்தூர் என்னும் இ
உள்ள பூந்தோட்டம் ரயில் நிலய அமைந்துள்ளது. இத்தலத்தினை இருந்து ஒரு கிலோமீட்டர் தொன துர்வாசர் எனும் முனி காணவேண்டி வெகு விரைவா மதலோலை என்ற தேவகன்னிை இதனைக்கண்ட துர்வாசர் வெகு சென்றிடும் சமயத்தில் காம வேட் படியால் அவள் அசுரகுணம் மிக்க துர்வாச முனிவாசரின் சா அம்பரன், அம்பன் என்ற இரு பிள் அசுரகுருவான சுக்கிராச்சாரியா அசுரர்களையும் ஆசிர்வதித்துபி வரத்தினை கொண்டு தேவர் கு சுக்ராச்சாரியாரின் ஆலை தவம் இருந்து அவரிடம் இருந் திருமணம் செய்து கொள்ளும் சுக்ராச்சாரியார், இவர்களை ரே ஆதலால் உங்களுக்கு திருமண எப்பெண்டிரைவேண்டுமானாலும் உரைத்தார்.
குருவின் உரை கேட்ட சென்று எதிர்ப்பட்ட மகளிர் அை இவ்வசுரர்களின் அடா தலைவனாம் தேவேந்திரனிடம் ( துன்பங்களையும் எடுத்துக் கூறி
 
 
 
 

ம்பகரத்தூர்
6T6flutbD6t
இத்தலம் நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகாமையில் த்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கோயில் மாகாளம் என அழைக்கின்றனர். இக்கோயிலில் லவில் அம்பர் பெருங் கோயில் அமைந்திருக்கின்றது. வர் பெரும் சிவபக்தர் ஆவார். இவர் இறைவனைக் க ககன வழிகளில் சென்று கொண்டு இருந்த போது க தனக்குப்புத்திர பேறு வேண்டி துர்வாசரை அணுகினாள். கோபம் கொண்டு, தான் சிவ தரிசனம் காணவேண்டிச் கை மிகுதியால் வெட்கத்தினை விட்டு மகப்பேறு வேண்டிய க பிள்ளைகளைப் பெற்றிடுமாறு சபித்து விட்டுச் சென்றார். பத்தின் காரணமாக தேவ கன்னிகையான மதலோலையும் ளைகளைப் பெற்றெடுத்தாள். தன் புத்திரர்கள் இருவரையும் டம் அழைத்துச் சென்றாள். சுக்ராச்சாரியாரியாரும் அவ்விரு ம்மபுரீஸ்வரரை வழிபட்டு வரம் பெற்றிடும்படியும் பின் பெற்ற லத்தை அழித்தொழிக்கும் படியும் ஆணை இட்டார். ணப்படியே அசுரர்கள் இருவரும்பிரம்மபுரீஸ்வரனை குறித்து து வரம் பல பெற்றனர். பின் இவ்விரு அசுரர்களுக்கும் ஆசையுண்டானது. இவர்களின் ஆசையை உணர்ந்த ாக்கி, அசுர குலத்தில் நீங்கள் இருவரும் பிறந்தவர்கள். னம் போன்ற வைதீகச் சடங்குகள் கிடையாது. நீங்கள்
அடைந்து புணர்ந்திடலாம் அதுவே அசுரகுல வழக்கம் என
அசுரர்கள் இருவரும் ஆரவாரித்து திக்குகள் பலவற்றிலும் னவரையும் புணர்ந்து மகிழ்ந்தனர்.
த செயல்களைக் கண்டு வெகுண்ட தேவர்கள் தங்கள் முறையிட, அவன் பிரம்மதேவனிடம் தங்கள் குறைகளையும் னான். அவர்களின் துன்பங்களைக் கேட்டறிந்த பிரம்மதேவர்
யூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 375
அனைவரையும் காக்கும் கடவுளான திருமாலிடம் அழைத்துச் சென்றார். திருமாலானவர் அவர்களை இத் தலத்தில் உறையும் பிரம்மபுரீஸ்வரரிடம் அழைத்து வந்து முறையிட்டார்.
பிரம்மபுரீஸ்வர் தாமே அசுரர்களுக்கு வரம் அளித்து இருப்பதால் அவர்களைத் தான் அழித்திடுவது முறையாகாது எனக் கருதி திருமாலுடன் தன் துணையாம், அன்னை உமாதேவியாரையும் அனுப்பி வைத்தார்.
உமாதேவியார் தனது அம்சமான காளியை இளம் பெண்ணுருவாக்கி திருமாலுடன் அனுப்பி வைத்தாள். அம்பரணையும் அம்பனையும் வதம் செய்திட வேண்டி திருமால் கிழவேதியர் உருக்கொண்டு இளங்கன்னி வடிவெடுத்துள்ள தங்கை காளியுடன் அசுரர்கள் இருக்கும் இடத்தினை அடைந்தார்.
அசுரர்கள் இருவரும் கிழவேதியருடன் வந்த இளம் கன்னியைக் கண்டு காமம் உற்று அவளைப் புணர்ந்திட ஆசை கொண்டனர். அதனால் வேதியரிடம், அப்பெண்ணைத் தங்களிடம் விட்டுவிடுமாறு கூறினர்.
உரை கேட்ட வேதியர், இருவருக்கும் தன் ஒரே மகளைக் கொடுப்பது இயலாத காரியம். உங்கள் இருவரிலும் எவன் வீரனோ அவனுக்கு என் பெண்ணைப் பரிசாகக் கொடுக்கிறேன்' என்று கூறியவுடன் அம்பகரன் உடனே தன் தம்பியான அம்பனை தானே சண்டையிட்டுக் கொன்றான். பின் வேதியருடன் வந்த இளங்கன்னியைப் புணர்ந்திட வேண்டி அவளை தன் உடல் மீது படியுமாறு தழுவ முற்பட்டான்.
அப்போது இவ்விளம் பெண்ணான காளியானவள் தான் எடுத்து வந்த உருவை ஒழித்து சுய உருவுடன் அம்பகரனுடன் போரிட்டு அவனை வதைத்தாள். இதனால் தேவர்கள் துயரம் களையப்பட்டது.
மயூரமங்கலம்
 

அம்பகரனை காளி கொன்ற இடம் இத்தலம் என்பதால் அம்பகரம் எனப்பெயர் பெற்றது. அம்பகரனை காளி சம்காரம் செய்தபடியால் அன்னை கோயில் கொண்ட திருக்கோயிலுக்கு அம்பர் மாகாளம் எனப் பெயர் வரலாயிற்று. அம்பகரம் என்ற இத்தலத்துப் பெயர் நாளடைவில் மருவி அம்பகரத்தூர் என வழங்கப் படுகின்றது.
காளகண்டேஸ்வரர் திருக்கோயிலில் வெளிப்பிரகாரத்திற்குத் தென்புறமாய் அன்னை பத்ரகாளியின் திருக்கோயில் அமைந்துள்ளது. அன்னை வடதிசை நோக்கியவளாய் சுதை மேனியளாய் காட்சியருளுகின்றாள். அன்னையின் திருமேனியை எவரும் தம் கையால் தீண்டாமல் கோல் ஒன்றின் உதவியுடன் ஆடை முதலானவை சாத்தப் பெற்று வழிபாடு நடைப் பெறுகின்றது.
இத்தலத்திற்கு வருகை தந்த சம்பந்தர்,
கொந்தண் பொழில் சோலை கோல வரிவண்டு மந்தம்மலி அம்பர் மாகாளம் மேய
என இத்தலச் சிறப்பினைப் போற்றிப்பாடுகின்றார்.
அன்னையாம் பத்ரகாளிக்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாய்கிழமையன்று மிகப்பெரும் திருவிழா நடைப் பெறுகிறது. அது சமயத்தில் சுற்றுப்புற ஊர்கள் மற்றும் கிராமங்களில் இருந்து மக்கள் பெரும் திரளாய் இத்தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்து பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.
அன்னையின் சன்னிதியில் தினந்தோறும் திருவிழா தான். தினமும் கணக்கில் அடங்கிடாதபடி அநேகர் அன்னையிடம் தம் குறைகளைக் கூறி மன அமைதி பெற்றுச் செல்கின்றனர். அன்னையும் தன்னை நாடி வருவோரின் குறைகள் அனைத்தையும் களைந்து அருளுகின்றாள்.

Page 376
56
சூடாமணி என்ற நிகண் பொருளைத் தருகின்றது. ஐம்புலன் கொண்டு இல்லற வாழ்க்கை ஏ பெண்கள் பெளத்த, சமண மற்றும் பெண் துறவிகளை கன்னியாஸ்தி நம் கிராமத்து தேவதைக மக்கள் வழிபட்டு வருதலைக் கா கன்னியாகுமரி யாசித்தவம் ெ அந்நோக்கம் நிறைவேறிடாத இருந்திடுகிறாளாம் இக்கன்னித் காரணம் உண்டு. தாயுள்ளம் ெ கன்னியாகுமரியில் தவம் செய் கூறுகின்றார். இக்கருத்தினைத் நீல நித் இப்போதுள்ள கன் பெரும் நிலப்பரப்பாக இருந்ததால் போக்கில் அப்பகுதி கடலால் கொ நிலப்பரப்பும் நீரில் மூழ்கி மறைந்தது பாண்டிய நாடு தடாதகை என்ற க நாடு என்று சங்க இலக்கியங்கள்
இத்தலம் தமிழ் நாட்டின் வங்கக்கடல், இந்து மகா சமுத்தி ஆக இருந்திடுகின்றது. மேலு அரண்போல் விரிந்து, நிமிர்ந்து தலம் ஆகும்.
கி.பி. 984 ஆம் ஆண்டு முதலாம் திருப்பணி நடந்தது என் பாண்டிய மன்னர்களாலும் விஜய
fog.
 
 

TaofuatGÖBDf
பகவதி
டு கன்னி' என்ற வார்த்தைக்கு தவப்பெண்’ என்ற களை அடக்கியதோடு இப்புலன் அடக்கத்தையே தவமாகக் ற்றிடாமல் என்றென்றும் கன்னிகளாகவே இருந்திடும் கிருத்துவமதங்களில் இன்றும் காணப்படுகின்றனர். இந்தப் ரிகள்'என்றுகிருத்தவர்கள் அழைக்கின்றார்கள். ளில் சப்த கன்னிமார் என்ற ஏழு தேவதைளை இன்றும் ணலாம். நம் பாரத தேசத்தின் தென்கோடி முனையில் சய்யத் தொடங்கியவள்தான் இக்கன்னித் தெய்வம். லால் தொடர்ந்து தவம் செய்த வண்ணமாய் தாய். இவளை கன்னித்தாய் என்று நாம் போற்றுவதற்கு காண்டவள் இக்கன்னி. தன் மக்கள் நலன் கருதியே ய்கிறாள் என்று பாட்டுக்கொரு புலவனான பாரதி தான், த் திரைக்கடல் ஒரத்தில் நின்று தம் தவம் செய் குமரியன்னை என்றுரைத்தார் போலும். னியாகுமரித்தலத்திற்கு தெற்காக முன்னொரு காலத்தில் அப்பகுதியில் குமரி என்ற ஒரு ஆறும் ஓடியது. காலப் ாள்ளப்பட்டதால் நீரில் ஆறும் அதைச் சார்ந்த அப்பெரு து. குமரி ஆற்றை கன்னி ஆறு என்றும் கூறினார்களாம். ன்னியரசி ஆண்ட காரணத்தினால் அந்நாட்டை கன்னி கூறுகின்றன.
நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ளது. இத்தலம் Tம், அரபிக் கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் இடமும் ம் இம்முனையில் வலிமைமிக்க பெரிய பாறைகள் ம் இருப்பதுடன் இயற்கை அழகுடன் கூடியும் உள்ள
முதலாம் இராஜராஜ சோழர் காலத்தில் இக்கோயிலில் று ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருகின்றது. சோழ
நகரப் பேரரசின் வழிவந்த நாயக்க மன்னர்களாலும்
ரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர்-2000

Page 377
குமரிக்கோயில் அவ்வப்போது புதிப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகின்றது. இக்கோயில் ஒரு காலத்தில் திருவாங்கூர் மன்னர் பாதுகாப்பிலும் இருந்ததாகக் கூறுகின்றார்கள். இதற்குச் சான்றாக கோயில் சுவர்களின் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளின் கல்வெட்டுக்கள் இன்றும் காணப்பெறுகின்றன.
இனி இத்தலத்தின் வரலாற்றினைக் காண்போம். முன்னொரு காலத்தில் இரண்டு அசுரர்களான பகன், முகன் என்ற இருவரும் தேவர்களுக்கு அடிக்கடி பல கொடுமைகள் செய்து துன்பம் இழைத்து வந்தனர். இதனால் பெரும் வேதனை அடைந்த தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி காசிவிஸ்வநாதரிடம் சென்று முறையிட்டனர். அவரும் தேவர்கள் குறையைப் போக்கிட வாக்களித்தார். அவ்வாக்கிற்கு இணங்க எம்பெருமான் இரு கன்னியர்களை படைத்து அருளினார். அவர்களில் ஒருத்தியான காளிமாதா வடக்கிலும், தெற்கில் கன்னியாகுமரியும் அவ்வசுரர்களை அழித்ததோடு இப்புண்ணிய பாரத பூமிக்கு எவ்விதத் தீங்கும் நேராவண்ணம் காத்தருள்கின்றனர் என்று வரலாற்றின் ஒரு பகுதி கூறுகின்றது.
இத்தலத்தில் அன்னையாம் குமரியானவள் தென் எல்லையில் எழுந்தருளியதற்கு ஒரு வரலாறும், தென் எல்லையில் தவம் புரிந்து வருவதற்கான ஒரு வரலாறும், கூறப்பட்டு வருகின்றன. இப்பாரத பூமியை ஆதியில் ஆண்டு வந்தவன் பரதன் என்னும் மன்னர் ஆவார். இவருக்கு எட்டு புதல்வர்களும், ஒரு புதல்வியும் இருந்தனர். பரதன் தம் மக்களான மகள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கும் நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தார். அவருடைய ஒரே மகள் தான் அன்னைக் குமரி ஆவாள். பரதன் தன் மகளான குமரிக்கு பாகமாகக் கொடுத்த பகுதியே இந்தியத் தென் கோடிப் பகுதியான குமரிப் பகுதியாகும். அம்மக்கள் குமரியில் இருந்து ஆண்ட இடமே குமரி முனையாகும். எனவேதான் அக்குமரியன்னை இத்தலத்தில் வாழ்கின்றாள் என்று ஒரு வரலாறு கூறுகின்றது.
இக்குமரித்தலத்தில் இருந்த் குமரியின் பேரழகை இத்தலத்திற்கு எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுசீந்திரத்தலத்தில் குடிகொண்டிருக்கும் தானுர்மாலயக் கடவுள் அறிந்து அவளை மணந்திட விருப்பம் கொண்டார். உடனே தானுர்மாலயர் தேவர்களை அழைத்துத் தம் விருப்பத்தைக் கூறினார். இவ்வாறு
மயூரமங்கலம்

தேவர்கள் அனைவரும் ஒன்று கூடிய இடத்தை சுசீந்திரத்தில் 'கன்னியம்பலம் என்று அழைக்கின்றனர். தானுர்மாலயக் கடவுளின் விருப்பத்தை அறிந்த தேவர்கள் கன்னியாம்பகவதிகுமரிமனையில் அசுர வதம் நிமித்தம் தவமியற்றி வருகிறாள். இந்நிலையில் தானுர்மாலயர் விருப்பப்படி இத்திருமணம் நடைபெறு மேயானால் குமரியான பகவதியின் தவமானது தடைப்பட்டு அசுரவதம் நிகழ்ந்திடாமல் போகுமே என்று வருந்தினார். அச்சமயம் திரிலோக சஞ்சாரியான நாரதர் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். தேவர்கள் வருத்தம் அறிந்த நாரதர் அவர்களை சமாதானம் செய்ததுடன் தாமே முன்னின்று பகவதி தானுர்மாலயர் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைப்பதாக உரைத்தார். பின் நாரதர் தாணுர்மாலயர் உறையும் சுசீந்திரம் சென்றடைந்துதானுர்மாலயரை சந்தித்து இத்திருமணம் நடைபெற வேண்டும் என்றால் இரு நிபந்தனைகள் உண்டு என்று கூறி அவ்விரு நிபந்தனைகளையும் தானுர்மாலயர் அறியும்படி உரைத்திடவும்செய்தார்.
1. கண்ணில்லாத தேங்காய், காம்பில்லாத மாங்காய், நரம்பில்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ்,இல்லாத மலர் ஆகியவற்றை திருமணத்திற்கு பெண்ணுக்கு சீதனப் பொருட்களாகத் தானுர்மாலயர் கொண்டு வரவேண்டும். 2. திருமணத்திற்கான முகூர்த்தம் சூரிய உதயத்தின் போது நிகழும் என்றும் அதற்கு ஒரு நாழிகைக்கு முன்பாக மணமகனான தானுர்மாலயர் மணவறைக்கு வந்திடல் வேண்டும் என்றும் கூறி தானுர்மாலயருக்கு இவ்விரு நிபந்தனைகளுக்குத் தான் சம்மதிப்பதாக கூறிய தானுர்மாலயர் நாரதர் கூறிய சீதனப் பொருட்கள் அனைத்தையும் வண்டிகளில் ஏற்றி குமரிப்பகுதிக்கு அனுப்பி வைத்தார். திருமணம் தடையின்றி நடந்திடவேண்டி நாரதர் விதித்த இரண்டாவது நிபந்தனையின்படி சுசீந்திரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமாரியம்பதிக்கு சென்றிட நள்ளிரவிலேயே புறப்பட்டார்.
தானுர்மாலயர் குமரியம்பதிக்குப்புறப்பட்டுவிட்ட விபரம் அறிந்த நாரதர் உடனே சேவல் உருக் கொண்டு சூரிய உதயத்தினை அறிவித்திடும் வகையில் கொக்க ரக்கோ’ என்று கூவி சூரிய உதயத்தை அறிவித்தார். இவ்வொலிகேட்டதானுர்மாலயர் முகூர்த்த நேரம் தவறி

Page 378
விட்டது. நாம் நிபந்தனையில் வழுக்கிவிட்டடோம் எனக் கருதி அவமானத்தோடு மேற் கொண்டு சென்றிட விரும்பாமல் தாம் புறப்பட்ட தலமான சுசீந்திரத்திற்கே திரும்பி விட்டார். இவ்வாறு தானுர்மாலயக் கடவுள் சுசீந்திரத்திற்கு திரும்பிய இடமே இன்று வழுக்குப்பாறை என்று அழைத்திடப்படும் இடமாகும். அப்பாறையில் சேவல் கோழியின் தடமும் தானுர்மாலயரின் காலடித் தடமும் பதிந்து உள்ளன.
இவ்வாறு தானுர்மாலயக் கடவுள் குமரிக்கு வந்திடாமல் சுசீந்திரத்திற்கே திரும்பியதால் அன்னை பகவதியின் திருமணம் தடைப்பட்டது. அதனால் அசுரவதம் வேண்டி அன்னை பகவதியின் தவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. திருமணம் தடைப்பட்டதை அறிந்த அன்னை பகவதி தனக்குச் சீதனப் பொருட்களாய் வந்த பொன், மணி, மாலை, நெல், கரும்பு அகியவற்றை கடலில் வீசி எறிந்தாள். அவ்வாறு வீசியெறிந்த பொருட்களே இன்று பல வண்ண மணல்களாக இருந்திடுகின்றன என்று தல வரலாறு கூறுகின்றது.
இனி குமரிக்கடவுளாம் அன்னை பகவதியின் ஆலயச் சிறப்புகள் பகுதிக்கு வருவோம். இவ்வாறு தவக்கோலம் பூண்டு உலகைக் காத்திடும் அன்னை பகவதியின் திருக்கோயில் கடல் ஒரமாக அமைந்துள்ளது. பெரிய சமவெளியாய் நான்கு பக்கமும் மதிலால் சுற்றி வளைத்துக் கட்டப் பெற்றுள்ளது.
கோயிலுக்குள் நுழைந்தும் மணிமண்டபம் என்று கூறப்படுகின்ற உள் மண்டபம் வருகின்றது. இந்த உள் மண்டபத்துத் தூண்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியுள்ளது. இத்தூண்கள் சிறுவிரலால் சுண்டிப் பார்த்தால் மெல்லிய நரம்பில் இருந்து வெளிப்படும் இனியநாதம் போல் ஏழு சுரங்கள் இணைந்த மெல்லிய ஓசையை நம்மால் கேட்க முடிகின்றது. இவ்வாறு ஏழு ஸ்வரங்களின் மெல்லிசையை கருங்கல்லில் பொறித்து இருக்கும் சிற்பியின் கை வண்ணம் கன்னியாகுமரிக் கோயிலின் தனிச் சிறப்பாகவும் விளங்குகிறது எனலாம்.
இந்த உள் மண்டபத்தின் நடுநாயகமாக அன்னை பகவதியின் கருவறை அமைந்துள்ளது. அன்னை பகவதி நின்ற கோலத்தில் கிழக்கு முகம் நோக்கிக் காட்சியருளுகின்றாள். ஒரு கரத்தில் இலுப்பைப் பூ
G4)

மாலையையும் மற்றொரு கரத்தை தன் துடை மீதும் வைத்துக் கொண்டு தவக் கோலம் பூண்டவளாக அன்னை பகவதி காட்சி தருகின்றாள்.
அன்னையின் திருமுடி மீது விளங்கிடும் கிரீடத்தில் பிறை நிலவு ஒளி வீசித் திகழ்கின்றது. இவ்வன்னைக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும் அணிகலன்களின் வைர மூக்குத்தி பேரொளி வீசிடுகிறது. இக்கன்னித் தாயின் வைர மூக்குத்தியில் இருந்து எழும் ஒளியைக் கடலில் செல்லுகின்ற மாலுமிகள் கண்டு கலங்கரை விளக்கம் என தவறாகக் கொண்டு வழி தவறிடக் கூடாது என்பதற்காகவே அன்னையின் திருக்கோயில் வாசல் வடக்குப்புறமாக அமைந்துள்ளது என்று கூறுகின்றனர்.
அன்னை பகவதித் தாயின் மூக்குத்தி மின்னும் முகப் பொலிவும், கருணை பொழிந்திடும் இரு கண்களும், புருவங்களும், பரந்த நெற்றியும், அதில் ஒளி வீசித் திகழும் மாணிக்கத்திலகமும், இதழ்களின் கோடியில் தெரிந்திடும் புன்முறுவலும், நிமிர்ந்த தோற்றப் பொலிவும் காண்போர்க்கு ஒரு பேரின்ப விருந்தாக அமைகின்றது.
அக்கோயிலின் உள் பிரகாரத்துத் தென்மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களைக் கொண்டதாகும். இம்மண்டபத்தின் முன்பாக சபா மண்டபம் அமைந்துள்ளது.
உள்பிரகாரத்தைவிட அகன்ற இடைவெளியுடன் கூடியதாக வெளிப்பிரகாரம் அமைந்துள்ளது. நாள் தோறும் அன்னை பகவதி இப்பிரகாரத்தில் பவனி வந்திடுகிறாள். இவ் வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் மண்டபமும் உள்ளது.
இத்தலத்தில் குடி கொண்டுள்ள அன்னை பகவதிக்கு எவ்வளவு சிறப்புகள் உண்டோ அவ்வளவு சிறப்புகள் இங்குள்ள கன்னித் தீர்த்ததிற்கும் உண்டு. இத்தீர்த்தம் தான் ஆதிசேதுவாகக் கருதப்படுவதால் மிகவும் விசேஷமான தீர்த்தம் இதுவாகும். இக்கருத்தை மணிமேகலை காப்பியத்தில் இடம்பெறும் குரங்கு செய் கடல் குமரியம் பெருந்துறை என்ற அடியால் விளங்கப் பெற்றிடலாம். இவ்வடியின் கருத்தில் இருந்து இராமரால் கட்டப்பட்ட சேது இத்தலத்தில் இருந்து தான் தொடங்கி இருத்தல் வேண்டும் என்பதும் புலனாகின்றது. இத்தீர்த்தத்துறையானது
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 379
பாறைகளுக்கு இடையே கோயில் மதிலின் வாசலுக்கு முன்பாக நாற் சதுர வடிவுடன், நீர் நிரம்பிய பெருந் தொட்டிப் போல் அமைந்துள்ளது. இத்துறையில் குழந்தை முதல் முதியோர் வரையில் அனைவரும் இறங்கித் தலைமுழுகிக் குளிப்பதற்கு ஏதுவாக இடுப்பளவு நீரே நிறைந்து உள்ளது. தேவார காலத்திற்கு முன்பாகவே 56taTL85 sta) Lot 5 குமரித்துறையானது ஒரு புனித நீராடும் துறையாக இருந்து வந்திருக்கின்றது.
கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்? என்ற தேவாரப்பாடல் வரிகள் மூலமாக அப்பர் பெருமான் விளக்கிக் கூறுகின்றார். கி. பி. 1293 ல் தான் உலகை சுற்றி வந்த மார்க்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு அறிஞர் குமரி முனையை வந்தடைந்தார் என்றும் அவர் வந்தடைந்த நேரம் குமரித்துறை பெருங்காடாக விளங்கியது என்றும் தெரியவருகிறது. சாவகத்தீவில் இருந்து வந்த மார்க்கோபோலோ இக்குமரித்துறையை அடைந்து பின் இங்கிருந்து கிழக்குக் கரை வழியாக கொற்கை சென்றடைந்ததாகக் கூறப்படுகின்றது.
கி.பி. 1203ம் ஆண்டு அபுல் பீடா என்ற இஸ்லாமிய அறிஞர் குமரித் துறையானது மலபாருக்கும் பாண்டிய நாட்டிற்கு எல்லையாகத் திகழ்ந்து என்றும் கூறுகின்றார்.
நம் தேசப் பிதா மஹாத்மா காந்தியடிகளும் குமரி முனைக்கு வந்து குமரி அன்னையாம் பகவதியை வழிபட்டு இருக்கின்றார். இப்பூவுலகில் முக்கடல்கள் ஒன்றாய் கூடிடும் இடம் குமரிமுனையைத் தவிர வேறெங்கும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், புனித நீரான குமரித்துறையைச் சூழ்ந்து இருக்கும் கடல் நீரும் குமரியன்னையைப் போன்றே கன்னித்தன்மை வாய்ந்தவையாகவே உள்ளது. காரணம் இது கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகம் அல்ல' என்று குமரித் துறையை பற்றி வியந்து கூறுகின்றார்.
1992ஆம் ஆண்டு இத்தலத்திற்கு வந்த ஸ்வாமி விவேகானந்தர் இக்கடற்கரையில் உலவினார். இயற்கை அன்னையும், குமரித்தாயும் அளித்த தெய்வீக ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெற்ற அவர் கடலில் ஒன்றே கால் கிலோ மிட்டர் தொலைவில் உள்ள
மயூரமங்கலம்

பாறைக்கு நீந்திச் சென்று அப்பாறை மீது அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.
இக்குமரிப் பாறையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து தவம் புரிந்தமையால் தான் இப்பாறையை விவேகானந்தர் பாறை என்று அழைத்திடுகின்றனர். இன்று உலகமே வியந்திடும் அளவுக்கு விவேகானந்தர் நினைவாலயத்தை இப்பாறையின் மீது எழுப்பியும் உள்ளனர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் இங்கு நடைபெறும் நவராத்திரி விழா சிறப்பான ஒன்றாகும். விழாவின் பத்தாம் நாளில் விஜயதசமியன்று- குமரிக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றுார் ஒன்றுக்கு தேவியின் திருமேனியை, உற்சவத்த் திருஉருவை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றார்கள். அங்கு சென்றதும் குமரித்தாய் அகரவதம் நிகழ்த்தியது நாடகமாக பூசாரிகளால் நடத்தப் பெறுகின்றது. அதாவது முன் கூறிய குமரிமுனை தல வலாற்றின்படி நாரதர் தாணுர்மாலயருக்கும் பகவதி அன்னைக்கும் நடைபெறவிருந்த திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க சேவல் உருக் கொண்டு கூவிப் பொழுது புலர்ந்ததால் தடைப்பட்ட திருமணத்தால் பகவதி தொடர்ந்தும் தவத்தில் ஈடுபட்டாள்.
கன்னித் தெய்வமான பகவதி கன்னியாகவே தவக் கோலத்தில் குமரி முனையில் இருந்ததைக் கண்ட முன் கூறிய பகன், முகன் ஆகிய அசுரர்களின் ஒருவன் அன்னையின் பேரழகில் மயங்கி அவளை மணம் செய்து கொள்ள விரும்பியதோடு தன் உடல் வலிவால் அன்னையைக் கவர்ந்து செல்லவும் முயன்றான்.
இதைக் கண்ட அன்னை, அசுரனின் அடாத செயலால் கடுங்கோபம் கொண்டதோடு அவனோடு போர் புரிந்து முடிவில் அவ்வசுரனை வதம் செய்தாள். இவ்வாறு அன்னைக்கும் அசுரனுக்கும் நடைபெற்ற போர் நிகழ்வும் அதைத் தொடர்ந்த அசுர வதமும் தான் பூசாரிகளால் இசை நாடகமாக நடத்தப்படுகிறது. இந்நாடகத்தில் பாடும் பாடல்கள் யாவும் நாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இவ்வாறு நடத்தப் பெறுகின்ற நாடகத்தையே பரிவேட்டை என்று குறிப்பிடுகின்றனர்.
இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மட்டும் அல்லாமல் காந்தி நினைவு மண்டபமும் உள்ளது.

Page 380
கஉத்த
மயிலாடுதுறை - காரை நிலையத்தில் இருந்து 12 கிலோ மீ இத்தலத்திற்கு பூர்வீகப்பெ கூத்தனூர் என மாறுவதற்குக் கார ஆவார்.
இவருக்கு கம்ப இராமாய கவிஞானம் வர வேண்டும் என்ற ஆ தினந்தோறும் வணங்கி வழிபடலா கல்விச் செல்வம் பெற ே ஒன்றினைத் தேடி தஞ்சைக்கு அ பாய்ந்திடும் அரிநாகேஸ்வரம் என்ற இவரது கடும் தவத்தைக்க பாடும் திறமையை அவருக்கு அளி செய்து ஆசி பல வழங்கினாள். இ உண்டாயிற்று.
தான் வரகவி பாடிட வரம் பூ தலத்திலேயே எழுந்தருள வேண்டி தேவியும் அரிநாகேஸ்வரத்தில் தி வரம் வேண்டி வழிபடுவோர்க்கு எ6 மகிமையை அறிந்திட இன்னும் ஒரு
முதலில் ஒட்டக்கூத்தர் முழுமையாகப் பாடி முடித்ததாக காவியத்தைப் போன்று சொல் நய ஒட்டக்கூத்தர் தாம் எழுதிய இராப இருந்தார்.
இந்த சமயத்தில் கம்ப ந ஒட்டக்கூத்தர் தாம் எழுதிய ஏடு கண்டு மனம் வருந்திய கம்பநாடர்
 
 

னுாள் சரஸ்வதி
க்கால் இரயில் மாக்கத்தில் உள்ள நன்னிலம் இரயில் ட்டர் தொலைவில் கூத்தனூர் தலம் அமைந்துள்ளது.
யர் அரிநாகேஸ்வரம் என்பதாக இருந்தது. பின் அப்பெயர் ணமாக அமைந்தவர் ஒட்டக்கூத்தர் என்னும் தமிழ்ப்புலவர்
ணத்தை இயற்றிய கம்ப நாட்டாரைப் போன்று பெரும் அவா இருந்தது. இதனால் கல்வியை அருளும் வாணியை னார்.
வண்டி வாணியை நோக்கித் தவம் புரிய தகுந்த இடம் ருகில் உள்ள அரிநதி என அழைக்கப்படும் அரசலாறு சிறிய ஊரினைத் தேர்வுசெய்து கடும் தவம் புரியலானார். ண்டுமெச்சிய பிரம்ம தேவியானவள் இவர் கேட்ட வரகவி த்திட சம்மதித்து தனது திருவாய்த் தாம்பூலத்தை அருளிச் தன் காரணமாக ஒட்டக்கூத்தருக்கு அதிகமான ஞானம்
அருளிய வாணி தேவியை ஒட்டக்கூத்தர் தாம் வரம் பெற்ற டினார். இவரது வேண்டுகோளுக்குச் சம்மதித்த வாணி ருக் கோயில் கொண்டாள். இத்தலத்தில் தன்னை நாடி ல்லாம் வேண்டிய வரங்களை அளித்திடுகிறாள். இவளின் த தல வரலாற்றினையும் அறிய முடிகிறது.
கம்பர் பாடியதைப் போன்று இராமாயண கதையை வும், ஆனால் தாம் பாடியது கம்ப நாட்டாரின் இராம மும் சிறப்பும் இல்லாது இருக்கக் கண்டு மனம் வருந்திய 0 கதையை எரியும் நெருப்பில் இட்டு எரித்துக் கொண்டு
ாடரும் ஒட்டக்கூத்தர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். களை நெருப்பில் இட்டு எரித்துக் கொண்டு இருப்பதைக்
, நெருப்பில் இடப்போன இராமயண உத்தர காண்டத்தை
பூரபதி யூனி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 381
வாங்கி அதனைப் படித்துப் பார்க்கலானார். பின் ஒட்டக்கூத்தரிடம், கூத்தரே, இன்னும் உத்தர காண்டத்தினை நான் பாடிடவில்லை. சிறந்த புலவாரம் தாங்கள் உத்தரகாண்டம் uirișu îl irl அக்காண்டத்தினை பாடிட நான் விரும்பவும் இல்லை என கூறி ஆறுதல் அளித்தார். ஆக கம்ப இராமாயணத்தில் உள்ள உத்தர காண்டமானது ஒட்டக்கூத்தரால் பாடப் பெற்றது ஆகும். தக்கயாகப் பரணி என்னும் ஒரு நூலும் இவரால் இயற்றப்பட்டது ஆகும். இப்பரணி நூலில் கூத்தனூர் சரஸ்வதியை தம் வாழ்த்துப் பகுதியில் பாடும் போது,
ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே' எனப் போற்றியுரைக்கின்றார். இவ்வன்னையின் மகிமையைக் கூற இன்னொரு வரலாற்றினையும் கூறிடலாம்.
இத்தலத்தில் ஒரு சமயம் உத்தமன் என்றழைக்கப் பெற்ற ஊமை ஒருவன் வாழ்த்து வந்தான். இவன் பிறவியிலேயே ஊமையாக பிறந்தவன். மேலும் தலை சிறந்த திருமால் பக்தனும் ஆவான். தன் குறை நீக்கிட திருமாலை வேண்டிக் கடும் தவம் புரிந்தபோது, திருமால் அவன் முன்பதாக தோன்றி அவனை இது தொடர்பாக கூத்தனூர் சரஸ்வதியை வழிபடுமாறு கூறியருளினார்.
அவரது ஆக்ஞைப்படியே உத்தமனும் சரஸ்வதியை வழிபட்டுத் தவம் புரிய, சரஸ்வதி தேவியும் அவன் தவத்தினை மெச்சியவளாய் அவனது பிறவி ஊமை நிலையை மாற்றி வரகவி பாடும் வரத்தையும் அருளிச் செய்தாள். சரஸ்வதிதேவியின் அருளால் கவி பாடும் திறன் பெற்ற உத்தமனை அத்தலத்து வாழ்ந்த மக்கள் புருஷோத்தம பாரதி என அழைக்கலாயினர்.
இத்தலத்தில் பிரம்மதேவன் சிவபெருமானையும் கூத்தாடும் விநாயகப் பெருமானையும் வழிபட்டதாக தல புராணம் வாயிலாக அறிந்திட முடிகிறது. இத்தலத்தில் கூத்தாடும் விநாயகர் எழுந்தருளியிருப்பதாலும் இத்தலத்திற்குக் கூத்தனூர் எனப் பெயர் வந்தது எனக் கூறுவோரும் உண்டு. மேலும் இத்தலத்தில்
மயூரமங்கலம்
 

வாணிதேவியின் கோயில் தவிர ஐயனார், பெருமாள், சிவன் ஆகியோருக்கும் தனித்தனியாகக் கோயில்கள் அமைந்துள்ளன.
வாணி தேவியின் திருக்கோயில் ஒரே பிரகாரத்துடன் நான்கு பெரிய மதில் சுவர்களால் சூழப்பெற்று அமைந்துள்ளது. மேற்கு மதிலில் தென்மேற்கு மூலையில் மூலப் பிள்ளையார் சந்நிதியும் உண்டு. மேலும் நவராத்திரிப் பண்டிகையின் போது அன்னை வாணியின் திருபாதங்களை அந்த ஒன்பது நாள் திருவிழாவின் போது தம் கைகளால் தொட்டு வணங்கிட பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இக்கோயிலில் தனிச் சிறப்பு இதுவாகும்.
வெள்ளைத் தாமரை மலரின் மேல் அன்னையாம் வாணிதேவிஎழுந்தருளியிருப்பதோடு தனது மேல் வலது கரத்தில் ஜபமாலையும் கீழ்ப்புறமாய் உள்ள வலக்கையில் சின்முத்திரையையும், மேல்புற இடதுகையில் சுவடியையும் தாங்கியவளாய் திருக்கோலம் கொண்டு அருள் பாலிக்கின்றாள்.
மலர் உடையார் இந்தக் கவிச் சக்கரவர்த்திகள் பேரானவர் கவிபெருமான் ஆன ஒவ்வாத கூத்தன் சரஸ்வதியை எழுந்தருளிவித்தான் என்னும் கல்வெட்டு வாசகத்தில் இருந்து இக்கோயிலினை செப்பனிடும் பணியை முடித்தவர் ஒட்டக்கூத்தப் பெருமானின் வம்சா வழிவந்த பேரன் முறையுள்ளவர் என அறியமுடிகின்றது. இக்கல்வெட்டினை திருக்கோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றின் அருகில் இருந்து காஞ்சி மாமுனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இத்தலத்தில் மகாலட்சுமிக்கும் துர்க்கையம்மனுக்கும் தனித் தனிக் கோயில்கள் இருந்திடுவதால் முத்தேவியரும் இத்தலத்தில் குடி கொண்டு உலக மக்கள் அனைவரையும்ரட்சித்து அருளி வருகின்றார்கள்.

Page 382
() LO
படியேறிவ s R 舞v ଇ S. என்று சேலம் மாநகரிலும் அந்நக போற்றிப் புகழ்ந்திடும் வண்ணம் ق<6
பாலிக்கின்றாள். இம்மாரியம்மன் சுற்றிலும் உள்ள ஒவ்வொரு ஊரி இருந்த போதிலும் சேலம் மாநகரி நாடி தினந்தோறும் மக்கள் கூட திருவிழாதான்.
அந்த அளவுக்கு இந்த ே ஈர்த்திடுகின்றது. ஒரு தாயானவ மற்ற குழந்தைகளையும் தனது ம இத்தலத்தில் குடிகொண்ட அன்ே ஏழை பணக்காரன் என்ற வித்தி
வழங்கும் தன்மையை உடையவள் கண்ணாரக் கண்டு துதித்து, இ( வணங்கும் மக்களைப் பார்க்கும் எண்ணி புளங்காகிதம் உண்டாகி அன்னையானவள் சேலம் மணிமுத்தாறின் கிழக்குக் கை கொண்டுள்ளாள். இவ்வன்னையி சுற்றிலும் அமைந்துள்ளன என்று
தமிழகம் ஆதியில் சேர, இருந்தது என்பதை எல்லோரும் நாட்டில் இருந்து இந்த சேலம் ப ஒன்று கூடி அம்மனுக்கு இந்
 
 

கோட்டை ) Titut)(D6
சேலத்தில் நடுவாக இடம் கொண்ட லைத்தேவி கோட்டை மாரி ந்தார்க்கு கடலாக வளம் சேர்க்கும் பாற்பாதம் போற்றி போற்றி கரினைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் வாழும் மக்கள் கோட்டை மாரியம்மன் இத்தலத்தில் குடி கொண்டு அருள் அற்புத சக்திகள் பல கொண்டவள். சேலம் மாநகரைச் லும் எண்ணிக்கையில் அடங்காத மாரியம்மன் கோயில்கள் ல் குடி கொண்ட இந்த கோட்டை மாரியம்மனின் கோவிலை டி வழிபடுகின்றனர். ஆம் . நாளெல்லாம் இவளுக்குத்
காட்டை மாரியம்மனின் அருள் அனைவரையும் தன்பால் 1ள் எப்படி தான் பெற்றெடுத்த குழந்தையை மட்டுமல்லாது ாசற்ற அன்பால் கவர்ந்து அணைத்திடுவாளோ அதுபோல் னையாம் கோட்டை மாரியம்மனும் சாதி சமயம் இல்லாமல், பாசம் பார்க்காமல் அனைவருக்கும் தனது அருளை வாரி ாய் இருந்திடுகிறாள். இக்கோவிலுக்கு வந்து இத்தாயைக் நகரம் குவித்து, தரையில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து போதே நம் நெஞ்சமெல்லாம் அன்னையின் மகிமையை
四gk மாநகரில் ஒரு காலத்தில் பொங்கிப் பெருகி ஓடிய ஆறான ரயில் சேலத்தில் மையப் பகுதியில் தன் கோவிலைக் பின் கோவிலை மையமாக வைத்தே நகரின் பிற கோயில்கள் கூறலாம். சோழ, பாண்டிய நாடுகள் என்ற முப்பெரும் பிரிவுகளாக அறிவோம். அந்த மூன்று பிரிவுகளில் ஒன்றான சோழ ாநகரில் குடியேறிய வேளாளப் பெருமக்கள் அனைவரும் த ஆலயத்தை மணிமுத்தாற்றின் கிழக்குக் கரையில்
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 383
எழுப்பினார்கள். இவர்களால் எழுப்பப்பட்ட ஆலயம் முன்பு மிகச் சிறிதாய் இருந்தது. இப்போது இவ்வாலயம் பார்க்கும் போதே பக்திப் பரவசம் உண்டாகும் அளவுக்கு சீரும் சிறப்புமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அம்மனைச் சுற்றிவர ஒரு நீண்ட பிரகாரமும் மகாமண்டபமும் உள்ளன. இம்மண்டபத்தில் கண்ணை கவரும் வண்ணம் அம்மனின் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன.
இவ்வாலயத்தில் உள்ள தெற்குப் பிராந்தியத்தில் மதுரைவீரன் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் பொம்மி, வெள்ளையம்மாள் ஆகிய தன் இரு தேவியர்களுடன் மதுரைவீரன் வீற்றிருக்கின்றார். வடக்குப் பிரகாரப் பக்கமாய் சென்று பார்த்தால் யானைக்காரக் கொட்டடி என்ற இடம் அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் பார்த்துவிட்டு அம்மனை தரிசிக்கச் சென்றால் கர்ப்பக் கிரகத்தில் கோட்டை மாரியம்மன் ஜோதிப் பிரகாசமாய்
மயூரமங்கலம்
 

காட்சிதந்தருளுகின்றாள். ஆடிமாதத்தில் நடைபெறும் கோட்டை மாரியம்மன் பண்டிகையின் போது நகரமே திருவிழாக் கோலம் பூண்டு விளங்குகிறது. இந்த ஆலயத்தை நிர்மாணித்த வேளாள சமுதாயத்தினரால் பண்டிகை தொடக்க நாளன்று பூச்சொரிதல் விழா அம்மனுக்கு எடுக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு மாரியம்மனுக்கு பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்று அம்மன் திருவீதி உலா நடைபெறுகின்றது. பதினைந்தாம் நாள் பக்தர்கள் பெரு வெள்ளமாய்த் திரண்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உருளு தண்டம் இட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். அம்மனுக்குப் பொங்கல் இட்டும் மாவிளக்கு இட்டும் மக்கள் வணங்குகிறார்கள்.
இந்த சேலம் கோட்டை மாரியம்மனைத் துதித்து வணங்கினால் செல்வம் கொழிப்பதோடு நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுளும் கிடைத்திடுகின்றது.

Page 384
*-- /* 美N/賞へべ賞 状ーイ \{(මූලGබ්‍රඥාන(බ්‍රෙටබු\! థ్రోకెన్లి
KR ※ C. (5ჯC2)
Οι ,\3^رC
محمد۔۔
:
c
fA
/
ငြှိမ္ပိ
බ්‍රි.
లైన్ల
GB
ତ୍ରୈ)
s يختلفة 当の窪み స్త్రీ,
கோவை எனப்படும கே என்பதாகும்.
சோழன் பூர்வ பட்டியம் எ கரிகாற் சோழர் என்ற செய்தியை பின்பாக சோழ மன்னர் அவ்வூரு குடிகொண்ட சிவபெருமானை வழி விளங்கியவளும் ஊர்த்தெய்வமா இடத்தில் பிரதிஷ்டை செய்து வழி இப்பகுதி முன்பொரு 8 இக்காட்டினில் இருளர் என்ற இவ்விருளர்களின் தலைவனே சே ஊர் கோவன் புதூர் என்றழைக்க இருளர் தலைவனாய் இரு புறங்களாய் விளங்கிய, ஊரில் ஒ நட்டு வைத்தான். தான் நட்டு 6 அக்கல்லையே தாம் வாழும் கி வந்தான்.
தாங்கள் குடியிருந்த ஊரில் கூரை வேய்ந்த கோயில் ஒன்ை அம்மையாக அக் கோயிலினுள் உ நட்ட கல் நேராக நின்றிடாமல் ச கொண்டு நின்றது அம்மையின் தி கோணலாக தான் நட்டு 6 என்ற திருநாமம் இட்டு வழிபட அவன் குடும்பம் அத்தெய்வத்ை சுற்றத்தார் அத்தெய்வத்தைத் தெ உட்பட்ட அக்கிராமமே இத்தெய் கோயிலில் குடிகொண்ட கோணி
og
 
 
 
 

கோவை 5T600fut)(D6)
ாயம்புத்தூரின் ஆதிகாலப் பெயர் கோவன் புத்தூர்
ன்ற நூலின் மூலமாய் கோவன் பதியை புத்துராக்கியவர் அறிந்திட முடிகிறது. கோவன் பதியை புத்தூராக்கியவர் க்கு அருகாமையுள்ள பேரூருக்குச் சென்று அத்தலத்தில் ப்பட்டாராம். இதற்கு முன்பாக கோவனின் குலதெய்வமாய் ய் விளங்கியவளுமான கோணியம்மனை தற்போதுள்ள பட்டார் என்றும் அறிய முடிகிறது. காலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். காவன் ஆவான். அவன் பெயராலேயே அவர்கள் வாழ்ந்த பட்டது. ருந்த கோவன் தாம் வாழ்ந்த காட்டுப் பகுதிகள் சுற்றுப் ரு சிறு கோயில் ஒன்றைக் கட்டி அதில் ஒரு கல்லையும் வைத்த கல்லுக்கு கோனியம்மன் என்ற பெயரை இட்டு ராமத்தின் காவல் தேவதையாய் எண்ணி வழிபட்டு
ாமத்தியில் உலகத்தை சக்தியாய் காத்தருளும் அம்மைக்கு ற கட்டினான். கல்லில் சற்று செதுக்கிய உருவத்தை றைபவளாக நாட்டான். சக்திக்கு அறிகுறியாக கோவன் ற்று கோணலாக சாய்ந்து நின்றது. இவ்வாறு கோணிக் ருவுருவம்தான் போலும்.
வைத்த தெய்வத்தை சக்தியாக பாவித்து கோணியம்மன் த் துவங்கினான். அவன் மட்டும் தொழுதிடவில்லை. தத் தொழுதிட ஆரம்பித்தது. பின் அவனைச் சார்ந்த தாழுதிட ஆரம்பித்தனர். முடிவாய் அவன் ஆளுகைக்கு வத்தை தொழுது போற்றிட ஆரம்பித்தது. பின் அக் யம்மன் அவ்வூரின் காவல் தெய்வமாக விளங்கினாள்.
பரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர்-2000

Page 385
பல வருடங்களுக்குப் பின்னர் கொங்கு நாட்டை கோசர் மரபினர் ஆண்டு வந்தனர். கோசர் மரபினர் ஒரு மண் கோட்டையையும், பெரிதும் சிறிதும் இல்லாத ஊர் ஒன்றினையும் நிர்மானித்ததோடு அக்கோட்டையின் காவல் தெய்வமான கோனியம்மனுக்கு கோயில் ஒன்றைக் கட்டி எழுந்தருளச் செய்தனர். அன்னை கோனியம்மனின் திருவருளால் தான் சிறு கிராமமாய் இருந்த ஊர்பின் பெருநகரமாகிட முடிந்தது என்றால் அது மிகையான ஒன்றல்ல. கோவை மாநகர மக்களும் கோணியம்மனை முக்கிய தெய்வமாகவும் தங்கள் குறைகளைப்போக்கி அருள் புரிபவளாகவும்பாவித்து வழி பட்டு வந்து இன்று அம்மாவை நகரத்துத் தலைமை தெய்வமாக போற்றி வழிபடவும் ஆரம்பித்துள்ளனர்.
கோன் என்ற சொல்லுக்கு அரசன் என்ற பெயரும் உண்டு. அந்தவாறே கோனி என்ற சொல்லிற்கு அரசி என்றும் பொருள் கொள்ளலாம். கோவையின் மத்திய பகுதியில் உறைபவளாய், உலகத்துநாயகியாய், உலகத்து மக்கள் அனைவரும் போற்றிப்பணிந்து வழிபடும் உத்தம தெய்வமாய் விளங்கிடுபவள் கோணியம்மன் தாயே ஆவாள்.
மயூரமங்கலம்
 

தனக்கும் மேலாய் ஒரு சக்தி இல்லை என்பதை உணர்த்திடுபவளாக, ஒரு தாயிடம் விளங்கிட வேண்டிய அன்பு, அறிவு, ஆற்றல், கருணை ஆகிய குணங்களைக் கொண்டவளாக விளங்கி அருள்பாலிக்கின்றாள். கோணியம்மனின் திருக் கோயிலுள் இருந்திடும் பீடத்தின் மீது அன்னை யானவள் வீற்றிருந்திடும் கோலத்தில் காட்சி அளித்திடுகின்றாள். கருணையைப் பொழிந்திடும் முகம், அம்முகத்தில் தவழ்ந்திடும் புன்னகை, அருளைச் சுரந்திடும் வண்ணம் அவளின் திருநயனங்கள், அட்டபுஜங்கள் ஆகியவை ஒன்றுபடக் கொண்டு வெற்றி நாயகியாய் வீற்றிருந்து கோவன் புதுTரான கோயம்புத்தூரினை ஆட்சி செய்து வருகிறாள்.
இக்கோயிலில் நவராத்திரி போன்ற விழாக்கள் பல உண்டு. நவராத்திரி விழாவினை சிறப்பாக இக்கோயிலில் கொண்டாடுகின்றார்கள். இவைகள் அனைத்திலும் சிறப்பாக அமைந்திடுவது ஒவ்வொரு வருஷமும் மாசி மாதம் வளர்பிறையில் நடைபெற்று வரும் தேர்த் திருவிழாவே ஆகும்.

Page 386
: ;&/窯 Yasara YaY2YNay-&
[QQQడ్రైకొర్తొర్రెరైడ్నై (බුණ්ඨික), 2) 熙
。*な را بر
இAஇV ဒါ့ဒ္ဓိပ္:''' (c. ኳ து O VITY
器 S.
*క్షణ இ2 }}N3} {BACر) ox く、{〉エく $? ଶ୍ରିଣ୍ଠି) YrSYS ܕ݁f73f ؟ܢ
இத்தலம் திருச்சி மாந தொலைவில் இருந்திடுகின்றது வாய்க்கால் கரையில் அமைந்து இத்தலத்திற்கு வந்துசமயபுரத்தா உள்ள கோயில்களான திருவாை வருகின்ற பக்தர்கள் இத்தலத்தி சென்றிடுவர். வாரத்தில் மூன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழி
இத்தலத்து நாயகியான சமயபுரத்துமகமாயி என்றும், மாற எண்ணிடும் எண்ணம் போல் நட
என்றும், எங்களாத்தா மகமாயி ஆடிவருவோரும் அக்னிச்சட்டி கண்டிடலாம்.
இப்பக்தர்கள் இவ்வாறு ஆ தீராத வினைகளைத் தீர்த்து ை காத்தருள்வதுதான். இவ்வாறு த இன்றியும் ஏழை பணக்காரர் என் வீற்றிருக்கின்றாள் நம் சமயபுரத் கண்ணனூர் என்ற பகுதி என்றாலு இவ்வம்மனை கண்ணனூர் ம துதித்திடுகின்றனர்.
சோழ நாட்டு மன்னர் ஒரு மணம் முடித்துக் கொடுத்து அவர் நகரத்தையும் உருவாக்கிக் ெ குடிகொண்டுள்ள கோயில் இருந் தொடுத்த போரினால் அக்கோட்6 அரண்மனை மற்றும் நகரம் இரு
 
 

otDuotb D(TfutbudGöT
கருக்கு அருகாமையில் சுமார் பதினோரு கிலோமீட்டர் இவ்வூர் காவேரி ஆற்றின் கிளையான பெருவளை ர்ளது. வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் ளை வணங்கிவழிபட்டுச் செல்கின்றார்கள். மற்றும் அருகில் னக் கோவில், மற்றும் பூரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கும் ற்கு வந்து சமயபுரத்து அம்மனை வணங்கி வழிபட்டும் நாட்கள் சுற்றுப்புறத்து கிராம மக்கள் சமயபுரம் வந்து பட்டுச் செல்கின்றார்கள்.
சமயபுரத்தாளை, தீராத வினை தீர்த்திடும் மகமாயி ாத பிணி போக்கும் மகமாயிசமயபுரத்து மகமாயி என்றும், த்தி வைத்திடுபவள் என்றும், எங்களைக் காத்தருள்வாள் மாரியாயி என்றும் சமயபுரத்து வீதிகளில் கரகம் எடுத்து டி ஏந்தி வருவோரும் பாடி வருவதை நாள்தோறும்
டியும் பாடியும் வருவதற்கு காரணம் சமயபுரத்து மாரியம்மன் வப்பதும் மாறாத பிணிகளைப் போக்கியும் மக்களைக் ம்மை நாடி வரும் மக்கள் அனைவரையும் சமய வேறுபாடு ாற ஏற்றத் தாழ்வு இல்லாமல் காத்தருளும் தேவதையாக தாளான மாரியம்மன். இக்கோயில் அமைந்துள்ள இடம் ம் இக்கண்ணனூர் சமயபுரத்தைச் சார்ந்து இருந்திடுவதால் ாரியம்மன் என்றும் சமயபுரத்தாள் என்றும் போற்றி
வர் தன் தங்கையை கங்க நாட்டு வேந்தன் ஒருவனுக்கு *களுக்குத் தாய்வீட்டுச் சீதனமாக ஒரு கோட்டையையும் காடுத்த இடமே அன்னை சமயபுரத்து மாரியம்மன் ந்திடும் கண்ணுரர் ஆகும். பிற்காலத்தில் பாண்டியர்கள் டையும் நகரமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இப்போது ந்த இடம் உருமாறி வேம்பு மரக்காடாக மாறிவரப்பட்டது.
பூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர்-2000

Page 387
பூநீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோயிலில் இருந்த வைணவி என்ற பெயருடன் இருந்த மாரியம்மனின் உக்கிரம் அதிகமாக இருந்ததாம். அப்போது அக்கோயிலில் இருந்த ஜியர் ஸ்வாமிகள் அந்த உக்கிர உருவாய் இருந்த வைணவி திருவுருவை ரங்கநாதர் கோயிலில் இருந்து அகற்றிட ஏற்பாடு செய்தார். அதன் படி அத்திருவுருவினை சிலர் எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒரு இடத்தில் களைப்பு அதிகமாகவே அங்கு இளைப்பாறினார்கள். அப்படி அவர்கள் இளைப்பாறிய இடம் தற்போது இனாம் சமயபுரம் என்ற பெயரில் உள்ளது.
இவ்வாறு இளைப்பாறிய பிறகு அவர்கள் வைணவி திருவுருவை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டினில் அன்னையின் திருவுருவை வைத்து விட்டுத் திரும்பிச் சென்று விட்டனர். இவ்வாறு அவர்கள் வைத்த இடத்திலேயே அன்னையின் திருக்கோயில் இன்று உள்ளது. அன்னையாம் மாரியின் திருவுருவம் வைக்கப்பட்ட இடம் கண்ணனூர் அரண்மனை மேடு என்பதால் அன்னை கண்ணனூர் மாரியம்மன் என்ற திருப்பெயருடன் விளங்குகின்றாள்.
மாரியம்மனை கிராமப்புற மக்கள் மகமாயி என்ற பெயரில் அழைத்திடுவர். இந்த மகமாயி திருவரங்கத்தானின் தங்கை என்கின்றனர். இத்தங்கையான சமயபுரத்தாள் தனக்குக் காணிக்கையாக கிடைத்திடுகின்ற அனைத்து பொன் பொருள்களையும் ஆடு மாடுகளையும் தன் சகோதரன் ஆகிய திருவரங்கத்தானுக்கே அர்ப்பணம் ஆக்கிவிடுகிறாள் என்று கூறுப்படுகின்றது.
அன்னையாம் சமயபுரத்தாளின் கோயில் எழும்பியதற்கான வரலாறாக ஒரு நிகழ்ச்சி கூறப்படுகின்றது. ஒரு சமயம் விஜயநகரத்து மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த போது இக்கண்ணனூரில் முகாம் இட்டார். கண்ணனூர் காட்டுக்குள் முகாமிட்டு இருந்த அம்மன்னன் அரண்மனை மேட்டில் வைக்கப்பட்டு இருந்த அன்னையாம் மாரியம்மனின் திருவுருவை தரிசித்து தென்னாட்டில் நடைபெற்று வரும் போரில் தான் வெற்றிபெற்று அரசினை நிறுவினால் அன்னை குடிகொண்டுள்ள இடத்திலேயே கோயில் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டார்.
மயூரமங்கலம்

அன்னையின் பேரருளால் அம்மன்னன் தென்னாட்டில் நடைபெற்ற போரில் வெற்றி வாகை சூடி தனது பேரரசை தென்னாட்டிலும் நிறுவினார். தாம் செய்த வேண்டுதல்படியே அன்னை மாரியம்மனுக்கு அவள் வைக்கப்பட்டு இருந்த கண்ணனூர் அரண்மனை மேட்டிலேயே திருக் கோயில் கட்டினார். அத்துடன் அன்னை மாரியின் பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும் கருப்பண்ண சாமியையும் அக்கோயிலில் பிரதிஷ்டை செய்தார். அன்னை மாரியம்மனுக்கு குடமுழுக்குப் பெருவிழா செய்ததோடு மட்டுமல்லாமல் அன்னைக்கு தங்குதடையில்லாமல் பூஜைகள் நடைபெற்றிடவும் ஏற்பாடுகளைச் செய்தார் என்று கூறுப்படுகின்றது.
ஒரு சமயம் கண்ணனூர் அன்னையாம் மாரியம்மனிடம் பெரும் பக்தி கொண்ட சூரப்ப நாயக்கர் என்பவர் அன்னையின் பழைய திருவுருவத்திற்குப் பதிலாக புதிய திருவுருவை பிரதிஷ்டை செய்திட விரும்பினார். தம் விருப்பப்படியே அன்னை மாரியம்மனுக்கு புதிய திரு உருவை உருவாக்கி அதனை பிரதிஷ்டையும் செய்தார். ஆனால் தாயான மாரி சூரப்ப நாயக்கரின் இச்செயலுக்கு அருள் தரவில்லை. இதனால் சூரப்ப நாயக்கர் பெரிதும் மனம் வருந்தினார். தன் மனவருத்தம் போக்கிட அன்னை மாரியம்மனை மனமுருக வேண்டினார். சூரப்ப நாயக்கரின் மெய்யான பக்தியை மெச்சிய அன்னை மாரியம்மன் அவருக்கு அருள் செய்தாள். இன்றும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறுகின்ற ஒன்பதாம் நாள் விழாவன்று அன்னையின் புதிய திருமேனி திருஉலாவாக கொண்டு வரப்படுகின்றது.
முன்கூறியபடி விஜயநகரப் பேரரசரின் முயற்சியால் எழுப்பப்பட்ட திருக்கோயிலினுள் உயர்ந்து அமைந்துள்ள பீடம் ஒன்றில் அஷ்டபுஜ நாயகியாக அன்னையாம் மாரியம்மன் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார். அன்னையாம் மாரியம்மனின் திருமுடி மீது இப்பூவுலகம் முழுமைக்கும் அருள் வழங்கிடும் வண்ணம் கிரீடம் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது. அன்னையின் திருநயனங்கள் அன்னையின் பேரருளைப் பொழிந்த வண்ணம் கருணையோடு தம் அடியார்களை நோக்கி உள்ளன.
C353d

Page 388
சுந்தர வடிவுடன் உயர்ந்த பீடத்தில் வீற்றிருக்கும் அன்னை மாரியம்மன் இவ்வாலயத்தைக் காத்து வருகின்றாள். அன்னையின் எட்டு திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு உடுக்கை, பாசம் ஆகியவை அமைந்து உள்ளன. அழகே வடிவமான அன்னைக்கு ஐந்து தலைகள் கொண்ட நாகமானது படம் விரித்தப்படி குடை பிடித்துக் கொண்டு தானும் பெருமை கொள்கிறது. இவ்வாறு அமைந்த திருஉருவே, தாயாம் சமயபுரத்தாளின் திருஉருவ அமைப்பாக விளங்குகின்றது. மேலும் அன்னையின் திருவடிகளின் இடது பக்கத் திருவடி பீடத்தில் மடங்கியிருக்க வலது திருவடி ஐந்து அரக்கர்களின் தலைகளை மிதித்த வண்ணம் அமைந்துள்ளது.
இவ்வாறு வீற்றிருந்து சமயபுரத் தலத்தில் அருள் செய்திடும் இத்தாய்க்கு நம் உள்ளழர்வ பக்தியைச் செலுத்தினால் அவள் மனம் கனிந்து நமக்கு திருவருள் செய்திடுவாள். அவள் பாதம் பணிந்தால் அவள் மனம் குளிர்ந்து போகும். இதனால் நம் மனமும் உலக ஆசாபாசங்களில் இருந்து விடுபட்டு உருகி ஒருமுகப்படுத்தப்படுகின்றது.
ஒரு சமயம் சிவத்திலிங்க ஸ்வாமிகள் கண்ணொளிமுற்றிலுமாக மங்கிப் போய் இத்தலத்திற்கு வந்தார். பிறர் வாய்ச்சொல்லாக அன்னையின் திருமேனி பற்றி தன் செவி வாயிலாக கேட்டதை வைத்து மனக் கண்ணினால் அன்னையின் திருஉருவைக் கண்டு களித்தார். அன்னையின் மீது அருட்பாக்கள் பலவற்றை அகமகிழ்ந்து பாடி மீண்டும் அன்னையின் அருளால் கண்ணொளியை பெற்றார்.
இத்திருக்கோயிலுக்கு அருகில் பெருவளை வாய்க் காலும் திருக்கோயிலுக்கு மேற்குப் புறமாக திருக்குளமும் உள்ளது. இவை இரண்டும்
 

இத்தலத்துக்கான விசேட தீர்த்தங்கள் ஆகும். திருக்குளத்தினை மாரி தீர்த்தம் என்று கூறுகின்றார்.
இத்தலத்துத் தாயான சமயபுரத்து மாரியம்மனுக்கு நாள் தோறும் விழாக்கள் போன்று பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்றாலும் சித்திரை மாதம் நடைபெறுகின்ற பெருவிழாவான தேர்த்திருவிழா மிகவும் விசேடமானது ஆகும். எட்டாம் நாள் திருவிழாவன்று அன்னையான மாரியம்மன் தன் திருஉருவை பூரீரங்கத்தில் இருந்து கொண்டு வந்தவர்கள் இளைப்பாறிய இடமான இனாம் சமயபுரத்திற்கு எழுந்தருளி அன்றைய இரவு அங்கேயே தங்கி மறுநாள் புறப்பட்டு தன்னுடைய தலத்திற்கு மீண்டும் எழுந்தருளுகின்றாள்.
ஆண்டு தோறும் இத்தலத்தில் மூன்று பெரிய விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றான பூச்சொரியல் விழா அன்று இருபத்து நான்கு மணி நேரமும் அன்னைக்கு மூலஸ்தானத்தில் ஏராளமான செலவு செய்து மலர் மாரி போல் பூக்கள் சொரியப்படுகின்றன. நாமும் நம் தாயான சமயபுரத்தாளை பணிந்து வணங்கினால் சகலமும் நமக்களித்து நம்மைக் காத்தருள்வாள் என்பது திண்ணம்.
சமயபுரத்து பூத்திருவிழாவிற்கு ஒரு வார காலத்திற்குப் பிறகு கொன்னையூர் முத்துமாரியம்மன் திருக்கோயிலிலும் மூன்றாம் வாரம் நார்த்தாமலை மாரியம்மன் திருக்கோயிலிலும் நான்காம் வாரம் கீரணிப்பட்டி மாரியம்மன் திருக்கோயிலிலும் ஐந்தாம் வாரம் புதுக்கோட்டை மாரியம்மன் திருக்கோயிலிலும் (இரயில்வே கேட் அருகாமையில் உள்ள திருக்கோயில்) இப்பூச்சொரியல் நடைபெறுவது சிறப்பான ஒன்றாகும். இத்தகைய தொடர் விழா வேறு எத்தலங்களிலும் நடைபெறுவது இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 389
-ぐ - >-- مر سمہ جسمبر ۔ ن۔ 14@බ්‍රමුබ්‍රඥාණ(@ల్లిష్ణా * OMN فر KANSK 道「?、 මූಙ್ క్విఫ్రత్త
繼
وزنی)
Sク
藻
"wh.
மயூரமங்கலம்
შ*(დ7, C)
SN Ο)
dBT
சென்னை மாநகரில் மக் பேட்டையாகும். இப்பகுதியில் உள்ள கொண்டுள்ளாள். இத்திருக் கே இருந்து ஒரு கிலோ மீட்டர் தொ தொலைவிலுமாக அமைந்துள்ளது. சென்னைப் பகுதியில் முன் போரிட்டு வந்த சத்ரபதி சிவாஜி மல் பிற உதவிகளும் புரிந்ததன் காரண திருப்பணிகள் செய்திட சத்ரபதி சி ஆதியில் அன்னை காளிகா உட்ப்பட்ட எல்லைக்குள் இருந்தட அழைக்கின்றனர்.
சென்னை என இந்நகருக் இவ்வம்மனின் மற்றொரு பெயரா அமைந்தது எனவும் கூறுகின்றனர் தம்புச் செட்டித்தெருவில் இ அன்னை காளிகாம்பாள் திருக்கே நடராஜர் ஆகியோரின் திருச்சந்நிதி இத்தலத்தில் பூரீசக்ரத்தி வெண்கலத்தால் வார்க்கப் பட்ட ெ உள்ளது. இத்தேரினை நான்கு நூ அன்னையின்திருச்சந்நிதியி கால்களுடன் எலும்புருவாய்நின்றகே எனக் கூறிசக்தியை அவமதித்ததன் சிவசக்தி வழிபாடு செய்து முடிவாக என்பதை உணர்ந்து சாபவிமோசன வாரத்தின் ஏழுநாட்களுமே இருந்திடும். சில வருடங்களுக்கு திருப்பணி செவ்வனே செய்து முடிக் நடைபெறும் ஆடித்திருவிழாவும், நவ
 
 
 
 

சென்னை Grflöttbusir
கள் நெருக்கம் அதிகமாய் உள்ள பகுதி முத்தியால் தம்புச் செட்டித் தெருவில் அன்னை காளியம்பாள் கோயில் ாயிலானது சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் லைவிலும், பாரிமுனையில் இருந்து ஒரு கிலோ மீட்டர்
பு ஆங்கிலேயர்களையும், இஸ்லாமியர்களையும் எதிர்த்துப் ானரின் படையினருக்கு இப்பகுதி மக்கள் தங்கிட இடமும் மைாக அன்னை காளிகாம்பாள் ஆலயத்திற்கு என பல வாஜி உதவினாராம்.
ம்பாளின் திருக்கோயிலானது புனித ஜார்ஜ் கோட்டைக்கு டியால் இவ்வம்மனை கோட்டை காளியம்மன் எனவும்
கு பெயர் வர கூறப்படும் பல காரணங்களுள் ஒன்றாக ன சென்னியம்மன் என்ற பெயரால் இந் நகர்ப் பெயர்
ருந்து சற்று உள்ளடங்கி கிழக்குமுகம் நோக்கி இருந்திடும் ாயிலில் இறைவன் கமலேஸ்வரர், அருணா சலேஸ்வரர் திகளும் அமைந்துள்ளன. ல்ெ அன்னையானவள் வீற்றிருக்கிறாள். மேலும் |வள்ளித் தேர் ஒன்றும் அம்பாளுக்கு என இக்கோயிலில் ாற்றாண்டுகளுக்கு முன்பு வார்த்ததாகக் கூறுகின்றனர். ல்பிருங்கிமுனிவர்தன் உடலானது இளைத்துப்போய்மூன்று காலத்தில் உள்ளர். இம்முனிவர்சக்தியைவிட சிவமே பெரிது காரணமாக பெற்றசாபத்தினால் பல தலங்களுக்கும் சென்று இத்தலம் வந்தடைந்து சக்தி இல்லையேல் சிவம் இல்லை ம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
இத்திருக் கோயிலானது திருவிழாக் கோலம் பூண்டபடி முன்பாக காமகோடி சங்கராச்சாரியார்களால் இக்கோயில் கப்பெற்றுகும்பாபிஷேகமும் நடைபெற்றது. இக் கோயிலில் ராத்திரிவிழாவும்மிகவும் சிறப்புவாய்ந்ததிருவிழாக்களாகும்.

Page 390
ീ
(O X
Ο
மயிலாடுதுறை - தரங்கம்ட புகைவண்டி நிலையத்தில் இறங்கி இ காலப் போக்கில் மருவி திருக்கடை இத்தலத்தில் குடிகொண் மார்க்கண்டேயர், என்றும்பதினாறு அபிராமியின் திருவருளால் அபிராமி நிகழ்ச்சிகள் இத்தலத்துச் சிறப்பின இத்தலத்து நாயகர் அமிர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கீழ்கண்ட
கொன்றாய் காலன், உயிர் மறையோனுக்கு, மான் கன்றாடுங்கரவா கடவூர்த் திருவிரட்டத்துள் என்று பாடித் துதித்திடுகின்றார். உயிர் கொடுத்தாய் என்று குறிப்பிட் படுவாய்' என்ற விதி இருந்தி( மார்க்கண்டேயனின் உயிரைப் பறி உயிர் கொடுத்தார் இறைவன் குறிப்பிடுகின்றார்.
முன்பொரு காலத்தில் ( வேண்டித் திருப்பாற் கடலைக் கை அசுரர்களுக்கு அளித்திடாமல் வேண்டி தேவர்கள் அனைவரு கலசத்தில் நிரப்பி எடுத்து வந் எடுத்துக் கொண்டு வந்திடும் ே நீராடிடச் சென்றனர். நீராடி மு போது அக்கலசமானது நன்ற இயலாமல் இலிங்கத் திருவுருவா
(ogg
 
 

டிர் 6UlJT
ாடி புகைவண்டி மார்க்கத்தில் உள்ள திருக்கடவூர் என்ற இத்தலத்திற்குச் சென்றிடலாம். திருக்கடவூர் என்ற பெயரே யூர் என்று பெயர் பெற்றது. ட இறைவன் அமிர்தகடேஸ்வரர் திருவருளால்தான் என்ற வயதுடைய நிலையினை அடைந்தார். அன்னையாம் ப்பட்டர் அபிராமி அந்தாதியை அருளிச் செய்தார். இவ்விரு ன பறைசாற்றுகின்றன. தகடேஸ்வரரை மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்ததை வாறு பாடிப் போற்றுகின்றார்.
கொடுத்தாய்
இப்பாடலில், சுந்தர மூர்த்தி, சுவாமிகள் மறையோனுக்கு டது தனது பதினாறாம் வயதில் காலனால் உயிர் பறிக்கப் டும் மார்க்கண்டேயரை எமதருமன் பாசக்கயிற்றுடன் த்திட வந்தபோது, எமனை தடுத்து மார்க்கண்டேயனுக்கு அமிர்தகடேஸ்வரர் என்பதையே முன் கூறியவாறு
தேவர்களும் அசுரர்களும் அமரத்துவம் அடைந்திட டைந்து அமிர்தத்தை எடுத்தனர். இந்த அமிர்தத்தினை தாங்களே உண்டு என்றும் அமரத்துவம் அடைந்திட ம் அசுரர் அறிந்திடா வண்ணம் அமிர்தத்தை ஒரு தனர். அவ்வாறு அமிர்தம் நிரம்பிய கலசத்தினை பாது ஒரு இடத்தில் அதனை இறக்கி வைத்து விட்டு டித்த தேவர்கள் அக்கலசத்தினை எடுத்திட முயன்ற ாக அவ்விடத்தில் வேரூன்றியது போல் எடுத்திட ாக இருந்தது.
பூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 391
இந்த அமிர்தலிங்கமே அமிர்தகடேஸ்வரர் ஆவார். அமிர்த கடம் (கலசம்) இலிங்கத் திருவுருவாக எழுந்தருளப்பட்டதால் இத்தலம் திரு என்ற அடைமொழியுடன் கூடி திருக்கடையூர் - திருக்கடவூர் என்ற பெயரினை பெற்றது. இறைவன் சிவபெருமானின் எட்டு வீரட்டங்களுள் ஒன்றான தலம் திருக்கடவூர் ஆகும். மார்க்கண்டேயனை காலதேவனான எமதருமனின் பாசக் கயிற்று பாய்ச்சலில் இருந்து காப்பாற்றிட வேண்டி கால தேவனை இறைவன் காலால் எட்டி உதைத்திட்டது இத் தலத்தில் நிகழ்ந்த வீரச் செயலாகும். இத்தலத்துத் திருக்கோயில் மகாமண்டபத்தினுள் அழகிய சபைதனில் கால சம்ஹார மூர்த்தி பெரிய உருக்கொண்டு கம்பீரமாக காட்சி அளித்திடுகின்றார். காலதேவர், மூலவரான அமிர்தகடேஸ்வரரின் மீது அதாவது மூலஸ்தானத்தில் உள்ள மகா லிங்கத்தின்மீது வீசிய பாசக்கயிற்றுத் தழும்பானது காணப்படுகின்றது.
இவ்வாறு விளங்கிடும் அமிர்த கடேஸ்வரரையும் கால சம்ஹார மூர்த்தியையும் விட அதிகப்படியான பெருமையையும் புகழையும் கொண்டவளாக அன்னை அபிராமி இத்தலத்தில் இருந்து உலக ஜீவன்களுக்கு அருள் பாலித்திடுகின்றாள்.
இனி இக்கோயிலின் அமைப்பு பற்றிக் காண்போம். கம்பீரமாய் உயர்ந்து விளங்கும் இராஜகோபுரத்தினைக் கொண்டது இத்தலத்துத் திருக்கோயிலாகும். இக்கோயிலின் மூன்று பிரகாரங்களைக் கடந்து சென்றால் மகா மண்டபம் இருந்திடும். இம்மண்டபத்தில் கால சம்ஹாரரின் செப்புத் திருமேனியைத் தரிசித்து வணங்கிடலாம். காலனை சம்ஹரித்ததற்குச் சாட்சியாக நிற்பது போல் அன்னையானவள் கருணையுடன் நோக்குவது போன்று நின்றிட, என்றும் பதினாறாய் வரம் பெற்ற மார்க்கண்டேயர் இருகரம் கூப்பி வணங்கி நின்றிட, காலனைக் கடிந்த அவசரக் கோலத்துடன் எம்பெருமான் இறைவன் தன் திருக்கரங்களில் சூலம், மழு, பாசம், தர்சனி ஆகியவற்றைத் தரித்தவராய் தென்திசை நோக்கியவராய் எழுந்தருளியுள்ளார்.
இம்மகா மண்டபத்தை அடுத்து உள்ளது சங்கு மண்டபம் ஆகும். இம் மண்டபத்தில் தான் அமிர்தகடேஸ்வரருக்கு ஆயிரத்து எட்டு சங்கு அபிஷேகம் நடைபெறுன்றது. இந்த ஆயிரத்து எட்டு சங்குகளில் நீர்நிறைத்து இறைவனுக்குமார்க்கண்டேயர் அபிஷேகம் செய்வித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சங்கு
மயூரமங்கலம்

மண்டபத்தை அடுத்துள்ள கருவறையுள் மேல் திசை நோக்கியப்படி மகாலிங்கத் திருமேனியராய் அமிர்தகடேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இப்பெருமானை வழிபட்டு வந்தால் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ்ந்திடலாம். இன்றும் சஷ்டியப்த பூர்த்தி போன்றவை இத்தலத்தில் பெரும்பாலும் நடைபெற்று வருவதைக் காணலாம். இத்தலத்தில் இந்த சஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாடி இறைவனை வழிபட்டு வணங்கினால் அவரின் திருவருள் ஆசி பெற்று தம்பதியர் இருவரும் நீண்ட ஆயுள் பெற்று இணை பிரியாது வாழ்ந்திடுவர் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. குறிப்பாக செட்டிநாட்டு சமூகத்தவரிடம் சாந்தி செய்தல் என்ற இந்நிகழ்ச்சி இத்தலத்தில் தான்செய்து கொள்ளும் வழக்கம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது எனலாம். இறைவனை வணங்கி வழிபட்டதும் அவரின் திருச்சந்நிதிக்கு எதிர் புறமாய் வெளிப்பிரகாரத்தில் அன்னை அபிராமி கிழக்கு திசை நோக்கித் திருக்கோயில் கொண்டுள்ளார். இவ்வன்ணையின் வடிவம் அழகுடையதாக விளங்குகிறது. நான்கு திருக்கரங்கள் கொண்டு மூன்றடி உயரமுள்ள பீடம் ஒன்றில் நின்றவாறு அன்னை காட்சியளித்திடுகின்றாள். இரு கரங்கள் அபய, வரத முத்திரைகள் தாங்கிட, இரு கரங்கள் மலரினையும் மாலையையும் தாங்கியுள்ளன. அன்னையின் அருளினை திரு நயனங்கள் வாரிவழங்கிய வண்ணம் உள்ளன.
நீண்ட ஆயுளினையும் இன்னல் அற்று இன்பமுடன் கூடிய வாழ்வினையும் பெற்றிட வேண்டிடுவோர் அபிராமி அன்னையை வணங்கி வழிபட்டால் அவளின் பேரருளைப் பெற்று தங்கள் வேண்டுகோளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
தேவாரம் அருளிய மூவரும் இத்தலத்தில் பதிகங்கள் பாடியுள்ளனர். இத்தலத்தை தாம் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் குறிப்பிட்டுப் போற்றி உரைக்கின்றார். அதுமட்டும் அல்லாது காரிநாயனார், குங்குலிக்கலய நாயனார் ஆகியோர் திருக்கடையூரில் வாழ்ந்து வீடுபேறு அடைந்தவர்கள் ஆவார். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை சோம வாரத்தில் எம்பெருமான் அமிர்தகடேஸ்வரருக்கு நடந்திடும் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம் மிகவும் விசேஷமான நிகழ்ச்சியாகும்.
அபிராமி அந்தாதிமட்டும் அல்லாது திருக்கடவூர் அபிராமி அம்மை பதிகம் என்று பதினோரு பாடல்கள் இவ்வன்னையை பற்றிப் போற்றிப் பாடப்பட்டுள்ளது.

Page 392
@@@@
器、マヘ次焼袋 శిక్స్టి
29
\j ̆፲፩o፯ {`)
○
Ο
}4@ට(ට မ္ဘိန္ဓိမ္ပိ (ပ္ရ္ဟိ)
○次3り
s கருக் હૈં 器
曾ー R இ
ゞ二ぐYる。 葱※
Cyg)& §်ပွဲC)
ప్ర్రా o పలినై §ಿQQ3ವಿಕ್ರಿ@ತ್ರಿಶ್ಲ?
மயிலாடுதுறையில் இரு ஊரில் இருந்து தென் புறமாய் ஐ இத்தலம் அமைந்துள்ளது.
இத்தலம் தமிழகத்துப் புலி இத்தலத்திற்கு கருப்பபுரி, கருகா உண்டு.
முன்னொரு சமயம் முல் இறைவன் ஈசனார் எழுந்தருளின என்னும் மாதவனேஸ்வரர் எனறு உருவான இலிங்கத்தின் மேல் தழும்பானது இலிங்கத்தின் மீது ஆவார் இத்தலத்து அம்மன் கரு கரும்பனையாம்பிகை எனவும் பே
ஒரு சமயம் தேவி உபாசக என்பவளுடன் இத்தலத்தில் குடி பாதர் என்னும் முனிவர் தலயாத்தி
இத்தலத்தினை வந்தன குடிசையை அடைந்த போது ை நிறைமாதகர்ப்பிணியாய் இருந்த உடன் எழுந்து அவரை உபசரித்தி
வேதிகையின் நிலை அற உபசரித்திட தவறினாள் எனச் அப்பெண்ணின் கர்ப்பம் சிதைந்தி
முனிவர் இட்ட சாபத்ை உலகினையே காத்தருளும் அன் சாபத்தில் இருந்து தன்னைக் க வளர்ந்து வரும் தன்சிசுவை சிை
 
 
 

நக்கருகாவூர் GödöÖD 6ÍTudf
ந்து கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசம் என்னும் ந்து கிலோமீட்டர் தொலைவில் திருக்கருகாவூர் என்னும்
ரிதநதியான காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. வூர், மாதவி வனம், முல்லை வனம் என்ற பிற பெயர்களும்
லைக் காடாக இருந்த இத்தலத்தில் சுயம்பு வடிவமாய் ார். இதன் காரணமாக இறைவனை முல்லை வனநாதர் ம் அழைக்கின்றனர். முல்லைக் கொடியானது இறைவனின் சுற்றியிருந்ததை மெய்ப்பிக்கும் விதமாய் கொடியின் இன்றும் காணப்படுகின்றது. மணலால் ஆன திருமேனியர் காக்கும் நாயகி ஆவார். இவ்வம்மனை கர்ப்பரட்சாம்பிகை, ாற்றுகின்றனர். கரான நைத்துருவர் என்பவர் தன் மனைவியான வேதிகை சை ஒன்றினை அமைத்து வசித்து வந்த போது ஊர்த்துவ நிரையாக இத்தலத்திற்கு வருகை தந்தார். டந்த ஊர்த்துவ பாதமுனிவர் நேராக நைத்துருவரின் நத்துருவர் பணி நிமித்தம் வெளியில் சென்று இருந்தார். அவர் மனைவிபடுத்திருந்ததால் முனிவர் வந்ததை அறிந்து திட இயலவில்லை. V நிந்திடாத ஊர்த்துவ முனிவர் அவள் தன்னை வரவேற்று கருதி ஆத்திரமுற்று உண்டான பெரும் கோபத்தால் திட சாபம் இட்டவாறு அங்கிருந்து அகன்றார். த கேட்ட வேதிகையோ துடித்துப் போய் வருந்தினாள். னையாம் உமையவளை மனதால் நினைத்து முனிவர் இட்ட ாத்திட வேண்டி துதித்தாள். தனது வயிற்றில் உருவாகி தந்திடாமல் காத்தருளும்படி வேண்டினாள்.
மயூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 393
இந்நிலையில் வெளியே சென்று இருந்த நைத்துருவர் வீடு திரும்பியதும் நடந்தவற்றை அனைத்தையும் தம்மனைவியாம் வேதிகையின் மூலமாய் அறிந்துமணம் வருந்தி. அத்தலத்து ஆலயத்துள் உறையும் அம்பிகையிடம் சென்று முறையிட்டு அழுதார். தன் வாரிசாக உருவாகி மனைவியின் கர்ப்பத்தில் வளர்ந்து வரும் சிசுவை சிதைந்திடாது காத்து அருளும் படி வேண்டினார்.
சதி-பதி ஆகிய இருவரின் துயரங்களை மனதாரக் கேட்டறிந்த அம்பிகையானவள் ஊர்த்துவ முனிவரின் சாபம் பலித்திடாமல் கருவைக் காத்து அருளினாள். இதனால் இத்தலத்து அம்மையை கருக் காக்கும் நாயகி எனப் போற்றி உரைக்கின்றனர். அன்று முதல் நாளது தேதிவரை கர்ப்பம் அடைந்த பெண்கள் மட்டுமல்லாது, அடிக்கடி கருச்சிதைவு அடைந்திடும் பெண்களும் இவ்வாலயத்திற்கு வந்து அம்மனை தரிசித்து அவள் அருள் பெற்றுச் செல்கின்றனர். கருக்காக்கும் நாயகியும் தன் பெயருக்கு ஏற்றாற்போல் அப்பெண்ணின் கருவைக் காப்பதோடு எவ்வித துயரமும் உண்டாக்காமல் அவர்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகிடவும் அருளுகின்றார். அன்னையின் அருள் போற்றுதற்கு உரியதல்லவா!
இக்கோயில் அழகிய கோபுரமும் அகலமான பிரகாரமும் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாய் அமைந்து உள்ளன. இக்கோயிலின் மையப் பகுதியில் இறைவன் முல்லை வன நாதர் சுயம்பு வடிவமாய்
மயூரமங்கலம்
 

எழுந்தருளி காட்சி தருகின்றார். இவருக்கு தீர்த்த அபிஷேகம் கிடையாது. புனுகுச் சட்ட அபிஷேகம் மட்டும் உண்டு. இவ்வபிஷேகத்தைச் செய்பவர்கள் இறைவனின் அருளினைப் பெறுவதோடு சகலவித சௌபாக்கியங் களையும் பெற்று நலமுடன் வாழ்கின்றனர்.
இறைவனின் சந்நிதிக்கு வடபுறமாய் நந்தவனம் அமைந்துள்ளது. இந்த நந்தவனத்திற்கு அடுத்தாற் போல் கருக்காக்கும் நாயகி தனிச்சந்நிதி கொண்டு அமர்ந்துள்ளாள். பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் அன்னை பொலிவுடன் காணப்படுவதோடு உலக மக்கள் அனைவரையும் காப்பதில் ஈடு இணையற்றவளாய் விளங்கிடுகின்றார். அன்னையை ஒரு முறை தரிசித்து வந்தால் மறுமுறையும் இத்தலம் சென்று அன்னையை மீண்டும் தரிசித்திட மாட்டோமா என தங்க வைத்திடும் அளவிற்கு அதில் வருவாய் அமைந்துள்ளாள். பக்தர்களின் குறைகள் மட்டுமல்லாது அன்னையை மனத்தால் நினைத்துத் துதித்தாலே தீராத நோயும் தீர்ந்து குணமாகிடும் என்னும் ஐதீகம் நிலவிடுகிறது.
வெட்டாறு, இத்தலத்துத் தீர்த்தம் ஆகும். இது மட்டும் அல்லாது காமதேனு இத்தலத்து ஈசனாரைப் பூஜித்திட வேண்டி அதனால் தோண்டப் பெற்ற கூtர குண்டம் என்னும் தீர்த்தமும் உள்ளது. ஆலயத்தில் மேல்புறமாய் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தங்களில் நீராடி இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் ஆணவம் ஆகிய மலமானது மறைந்து முத்திக்கான வழி பிறப்பதோடு, அழகான சத்புத்ர பாக்யமும் கிடைத்திடும்.

Page 394
24@@@@බඳතනශුට(Gබු`` ဖြုံနွှဲရွှဲ غلام : ২%, র্চষ্ট্র బ్న్ §ಳಿ?" "oos
Ε και Φπι Ο AG甚 Eع= 袋八岁 రైన్డీ ఫైన
గనై's متج S 20 క్తినై }ଷ୍ଠ୍ଯ OXOSÉ
Α இத்தலத்திற்கு மாங்காடு
பிற பெயர்களும் உண்டு. இத்தல காமாட்சி என்ற சிறப்புப் பெயரு ) மக்களுக்கு அருள்புரிந்திடும் காம
கருதப்படுகிறாள்.
இறைவனாகிய சிவபெரு போகும். காரணம் அவரின் திருந ஒரு சமயம் அன்னை உமையவளு உண்டானது. அதனால் அன்6ை நயனங்களாகிய கண்களை தம்
(
l
கண்கள் உமையவளால் மூடப்பட் உயிர்களும் மூச்சு விட இயலாமல் இந்நிலைகண்ட சிவபெரு பூவுலகம் சென்று ஏகாம்பரம் என்று தம்மை வந்தடையுமாறு கூறினார்.
இறைவனின் திருவானை இத்தலம் வந்தடைந்து ஐந்தணல குறித்து தவம் மேற்கொண்டாள். செய்து தவத்தினை சிறப்புடன் வரலாறு ஆகும்.
மாங்காடு என்ற ஆதிசங்கர பகவத் பாதாளால் மேருவான பூரீ சக்கர யந்திரம் ச ஜடாமஞ்சரி கச்சோலம் கோே அழைக்கப் பெறும் நறுமணப்பெ அர்த்த மேருவில் தான் அன்னை காமாட்சி அம்மனின் திரு தவக்கோலத்தில் அமர்ந்த நிலைய
 
 
 
 
 
 

மாங்காடு DTdf 6DDD6ÖT
எனும் பெயரோடு ஆமராண்யம், மாவை, சூதவனம் என்ற ந்தில் கோயில் கொண்டுள்ள அன்னையாம் தேவிக்கு ஆதி ம் உண்டு. அதாவது காஞ்சிபுரத்தில் எழுந்தருளி உலக ாட்சியம்மனுக்கு முற்பட்டவளாக இத்தலத்துகாமாட்சியம்மன்
மான் தன் கண்களை மூடினால் இப்பூவுலகம் இருண்டு யனங்களாக விளங்குபவர்கள் சூரியனும் சந்திரனும் ஆவர். க்கு இறைவனின் கண்களைப் பொத்தி விளையாட ஆவல் ன உமையவள் இறைவனின் பின்புறமாய் வந்து அவரின் திருக்கரங்களால் பொத்தினாள். இவ்வாறு இறைவனின் டதும் அகில உலகமும் இருண்டு போனதோடு அனைத்து
திணறிப் போயின.
ான் பெருஞ்சினம் கொண்டு அன்னை உமையவனை நோக்கி கூறப்படும் ஒற்றை மாமரத்தடியில் கடும் தவம் புரிந்து பின்
ணப்படியே அன்னை பார்வதி தேவியும் மாங்காடு எனும் ாகிய பஞ்சாக்னி வளர்த்து இறைவனாம் பஞ்சாட்சரனைக்
பின் இங்கிருந்து காஞ்சியம்பதியை அடைந்து சிவபூஜை டித்து மீண்டும் இறைவனுடன் ஐக்கியமானாள் என்பதுதல
இத்தலத்தில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோயிலில் அர்த்த மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அர்த்த *ந்தனம், அகில் பச்சைக் கற்பூரம், குங்கும பூ, சலாஜித் ராசனம் ஆகிய எட்டு வகை அஷ்டகந்தங்கள் என்று ாருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ா காமாட்சி அம்மையானவள் வாசம் செய்கிறாள். வுருவம் அர்த்த மேருவான யூரீ சக்கரத்திற்கு பின்புறமாய் பில் காணப்படுகின்றது.
யூரபதி பூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 395


Page 396
#
儒 徽 伽
s.
|분||
 


Page 397
t
ANUARA
|×
 


Page 398


Page 399
|-
 


Page 400
துேம்"
3.
 


Page 401
o.
:
总
C
醫魯 g&a gè* 3
{x s
二、 E( 6 SA ஜி3 >ーく。 six< s { Yi. リ
ェミーリ }
《g༦
உள்ளது.
இருந்தார்.
மயூரமங்கலம்
திருமயிலை எனப் போற் பெருமை வாய்ந்த தலம் ஆகும்.
தற்போது சாந்தோம் என் கபாலீச்சுரம் என அழைக்கப்ப நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் இறைவனையும் இறைவியையும்
இக்கோயிலினைச் சுற்றிய இராஜகோபுரம், பின்புறமாக உள் இவ்வாலயத்திற்கு பெருமை சேர் கிழக்கு முகமாய் அமைந்து அன்னையாம் கற்பகாம்பிகையும் கபாலீஸ்வரர் சந்நிதி மேல்திசை சந்நிதி தென்திசை நோக்கி உள் மயில் வடிவம் கொண்டுஇ இறைவனைக் குறித்து தவம் ெ இத்தலத்தில் இறைவனை விட
இவ்வாலயத்தில் அம்பிகை ஞாயிறு ஆகிய நாட்களிலும் மற்ற வரை விசேட நாட்களிலும் அ பெருந்திரளாய் கூடி அம்பிகைை
இத்தலத்தின் பெருமை கூறப்படுகின்றது.
சமயக்குரவர் நால்வரில் ஒ சமயம் அது. அப்போது திருமயிை வணிகர் வாழ்ந்து வந்தார். அவரு சம்பந்தர் ஸ்வாமிகளுக்கு மண
 
 

திருமயிலை DC5 TDT6T
றப்பெற்றிடும் மயிலாப்பூர் சென்னை மாநாகரின் மிகப் பழம்
றழைக்கப்படும் கடற்கரைப் பகுதிக்கு அருகாமையில் தான் டும் ஆலயம் முன்பு இருந்ததாம். கிட்டத்தட்ட மூன்று இப்போது இருக்கும் இடத்தில் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்துள்ளனர். புள்ள நான்கு திருவீதிகள், கோயிலில் முன்புறமாக உள்ள ாள சிறு கோபுர வாயில், பெரிய திருக் குளம், ஆகியவை த்திடும் வகையில் அமைந்துள்ளன. து இருக்கும் இவ்வாலயத்தின் இறைவனாம் கபாலீஸ்வரரும் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இறைவன் நோக்கி இருந்திடுகின்றது. அன்னை கற்பகாம்பிகையின்
ளது. இத்தலத்தில் உலகத்து அன்னை சக்தியானவள் எழுந்தருளி சய்தபடியால் இத்தலத்தினை மயிலை என அழைத்தனர். அன்னை காற்பகாம்பிகையின் மகிமையே மேலோங்கி
யாம் கற்பக வல்லியின் சந்நிதியில் பிரதிசெவ்வாய், வெள்ளி, விசேட நாட்களிலும் அதிகாலை முதற் கொண்டு நள்ளிரவு திகாலை முதற் கொண்டு நள்ளிரவு வரை பக்தர்கள் ய வழிபட்ட வண்ணம் இருந்திடுவர்.
யை உலகுக்கு உணர்த்தும் விதமாக நிகழ்வு ஒன்று
ருவரான சம்பந்தர் அவர்களின் புகழ் எங்கும் பரவி இருந்த லயில் பெரும் சிவபக்தரான சிவநேசச் செட்டியார் என்னும் க்குப்பூம்பாவை என்னும் மகள் இருந்தாள். இத்திருமகளை, ம் முடித்து வைக்க சிவநேசச் செட்டியார் முடிவு செய்து

Page 402
ஆனால் விதிப்பயனின் விளைவாக எவரும் எதிர் பாராதபடி பூம்பாவையை அரவம் ஒன்று தீண்டியதால் அப்பெண் மரணத்தைத் தழுவ வேண்டியதாயிற்று. தன் ஆசை நிராசையானதால் சிவநேசச் செட்டியார் மிகவும் மனம் வருந்தினார். மகளின் சடலத்தை எரித்த சாம்பலையும் துண்டு எலும்புகளையும் சட்டி ஒன்றில் இட்டு, செட்டியார் பத்திரமாய்ப் பாதுகாத்து வந்தார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில நாட்களில் சம்பந்தர் அவர்கள் திருமயிலைக்கு எழுந்தருளினார். அவரது வருகையை அறிந்த செட்டியார் அவர்கள் அவரின் முன்பாக தன் மகளின் சடலத்தை எரித்த சாம்பல் மற்றும் எலும்புத் துண்டுகள் அடங்கிய கலசத்தினை வைத்துத் தமக்கு ஏற்பட்ட ஆசையையும் விதிவசத்தால் தன் ஆசை நிராசையானதையும் கூறி வருந்தினார்.
செட்டியார் நிலைகண்டுமனம் இரங்கிய சம்பந்தர் அக்கலசத்தினை இறைவனின் சந்நிதி முன்பாக வைத்து இறைவனைக் குறித்து பதிகம் ஒன்றினைப் பாட, கலசத்தில் எலும்பும் சாம்பலுமாய் ஆகியிருந்த பூம்பாவையானவள் கலசத்தில் இருந்து உயிருள்ள மங்கை நல்லாளாக வெளிவந்தாள் என தலவரலாறு மூலம் அறிய முடிகிறது. இம்மங்கை நல்லாளாம் பூம் பாவைக்கு என சந்நிதி ஒன்றும் உள்ளது.
 

பற்பல காரணங்களால் திருமயிலையானது சர்வ மதங்களும் பெரும் சம்பந்தம் பெற்றுள்ள தலமாக விளங்குகிறது. முன்பொரு சமயம் இத்தலத்தில் சமணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததாகவும், அச் சமயத்தில் 23 ம் தீர்த்தங்கரராம் நேமிநாதரின் ஆலயம் ஒன்றும் இத்தலத்தில் இருந்துள்ளது.
அவிரோதி ஆழ்வார் என்னும் சமணப் பெரியார் தீர்த்தங்கரர் நேமிநாதர் குறித்துப் பாடல்கள் பல பாடியுள்ளார். மேலும் இஸ்லாமிய ஞானியான குணங்குடிமஸ்தான் சாகிப் இம்மயிலைத் தலத்தில் தான் வாழ்ந்ததாகத் தெரியவருகிறது. சைவத் திருக்குளமான கபாலீஸ்வரர் திருக்குளம் இஸ்லாமிய சமுதாயப் பண்டிகையான மொகரம் பண்டிகையின் பத்தாம் நாளன்று அச்சமுதாயத்தினர் பயன்படுத்திட அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வளவு சிறப்புகள் பலவற்றை பெற்றுள்ள திருமயிலை தலத்தினை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து அருளாசி வழங்குபவள் அன்னை கற்பகாம்பிகையே ஆவாள். இவளை வழிபட்டோருக்கு எத்துன்பமும் நிகழ்ந்திடாது. இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவமும் அறுபத்து மூவர் திருவிழாவும் பெரும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
மயூரபதி ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 403
2
សិក្ខាថ្មី人$
స్త్ర
シ
器
r一イ
※
宅、 بكلمي للمخر
v. A இத்தலத்துப் பெயரான தி B Y அருகே இன்னும் ஒரு தலமும் உ
பாடல் பாடிப்பெற்றத் தலங்கள் சீர்காழிக்கு அருகில் உள்ள தல K AA சைவசமயக் குரவர் நால்வி ప>ప பார்வையை இழந்த பின்னர் வட
நாயகி உடனுறையும் மாசிலாமணி வேண்டி பதினோரு பாடல்களை
வட திருமுல்லைவாயில் த மூன்றுபடலங்களாக உள்ளது. மு முனிவர்களுக்கு சூதமாமுனிவர் மூன்று முதல் ஐந்து படலங்கள் த6 ஏழாம் படலங்களில் பிரம்மனும் நாயகியையும் வணங்கி பேறு படலங்களில் பிருகு முனிவர் த விவரித்துக் கூறப்பட்டுள்ளன.
பத்தில் இருந்து பனிரெ நட்சத்திரங்கள், சூரியன் ஆகியே பதின்மூன்றாம் படலத்தில் லவன் வழிபட்டமை பற்றியும், பதிநான்க பதினைந்து, பதினாறு, பதினே இந்திரன் ஆகியோர் தம் சாபம் நீ விரதம் பற்றியும், பத்தொன்பத இருபதாவது படலத்தில் சம்புதா நேர் எதிரிடை குணம் கொண்ட தொண்டமான் சக்கரவர்த்திவழி மற்றும் விதிமுறைகளைப் பற்றியு
இக்கோயில் தோன்றக்க பதிகத்தில்,
APU மங்கலம்
i
 
 
 
 
 

முல்லைவாயில் Dufl6DL5(Tudfl
திருமுல்லைவாயில் என்ற பெயரில் தமிழ்நாட்டில் சீர்காழிக்கு ள்ளது. இவ்விரு தலங்களுமே சைவ சமயக் குரவர்களால் ஆகும். இத்தலத்தினை வடதிருமுல்லைவாயில் உன்றும் த்தினைத் தென்முல்லை வாயில் எனவும் கூறுகின்றனர்.
பரின் ஒருவரானசுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் திருமுல்லைவாயிலான இத்தலத்திற்கு வந்து கொடியிடை ரீசுரரைப் பணிந்து வணங்கி தம் துயர் நீங்கிட அருள்புரிய கொண்ட பதிகத்தைப் பாடி எம்பெருமான் அருள் பெற்றார். நலத்தில் தல புராணம் 1458 பாடல்கள் கொண்ட இருபத்து தல் இரண்டுபடலங்களில் நைமிசவனத்தில் தவம் புரிந்திடும் இத்தலத்துப்பெருமைகளைப் போற்றி உரைப்பதாக உள்ளது. ப விசேடம் ஆகியவற்றை எடுத்துரைக்கின்றன. ஆறு மற்றும் முருகனும் இத்தலத்தில் எம்பெருமானையும் கொடியிடை பெற்றமை கூறப்பட்டுள்ளது. எட்டு மற்றும் ஒன்பதாம் வம் பற்றியும் வசிஷ்டர் காமதேனுவை பெற்றது பற்றியும்
ண்டாம் படலங்கள் வரை சந்திரன், அசுவினி முதலிய 27 ார்தம் துயர் நீங்கிய விபரங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. , குசன் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து அம்மை அப்பனை ாம் படலத்தில் துர்வாசர் தன் சாபம் நீங்கப் பெற்றமையும், ழு ஆகிய படலங்களில் வெள்ளை யானை, இந்திராணி, ங்கப் பெற்றமையும் பதினெட்டாவது படலத்தில் சிவராத்திரி ாவது படலத்தில் தேவமித்ரன் கதிபேறு பெற்றமையும், சன் கதியடைந்தமையும், இருபத்தொன்றில் சம்புதாசனுக்கு சித்திரதன்மன் சிவசக்தி பெற்றமையும், இருபத்திரெண்டில் படுதல் பற்றியும் இருபத்து மூன்றில் இறைவனை வழிபடுதல் ம் கூறப்பட்டுள்ளன.
ாரணமாய் இருந்த நிகழ்வினை சுந்தரமூர்த்தி நாயனார் தம்
פC37

Page 404
சொல்லாரும் புகழான் தொண்டமான் களிற்றைச்
குழ்கொடி முல்லையால் கட்டிட்டு எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு
அருளிய இறைவனே
என்றுஉரைக்கின்றார். இனி அந்நிகழ்வினைகாண்போம்.
சோழ நாட்டின் வடதிசையில் இருந்த பகுதிகள் தொண்டை நாடு என்று கூறப்பட்டது. இப்பகுதிக்கு வடபுறமாக குறும்பர் இனத்தவர் வாழ்ந்து வந்தனர். அவர்களின் அநீதியான செயல்களால் கோபமுற்று அவர்களை நோக்கிப் படையெடுத்த அரசன் தொண்டைமான் தோல்வியுற்று யானையில் பின்வாங்கி வரும்போது யானையின் கால்களை முல்லைக்கொடி தடுத்ததாகவும் கொடியை அறுக்க மன்னன் வீசிய வாள் உள் மறைந்திருந்த சிவலிங்கப் பெருமானைக் காயம் செய்ததாகவும்பின்வருந்திமன்னிப்புக்கோரியமன்னனுக்கு இறைவன் காட்சி கொடுத்ததாகவும் நந்தி துணையோடு மன்னன் இறுதியில்குறும்பரை வென்றதாகவும்வரலாற்றுக் கதை உள்ளது. மீண்டும் மன்னன் திருமுல்லைவாயிலை அடைந்தார். எல்லையில் துன்பத்தை நீக்கிய எம்பெருமான் இறைவனுக்குத்திருக்கோயில்ஒன்றைஎழுப்பிடகாஞ்சியில் இருந்து பொன்னும் பொருளும், ஆட்களையும் வரவழைத்து மாசிலாமணிஸ்வரருக்கும், அம்பிகையாம் கொடியிடை நாயகிக்கும் கருவறைகளை முறையே இட வலமாக எழுப்பினர்.
எப்போதும் இறைவனின் இடது பக்கமாக இருந்திடும் இறைவி இத்தலத்தில் வலப்புறமாக இறைவனுடன் எழுந்தருளி இருக்கின்றாள். தன்னை மாய்த்துக் கொள்ள எத்தனித்த மன்னன் தொண்டமானைத்தடுத்திட இறைவன் ரிஷயத்தில் இருந்து இறங்கி வரும்போது உண்டான பதைபதைப்பில் இடமாக வரவேண்டிய உமையவள் இறைவனுக்கு வலப்புறமாக வந்திட்டதை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் மாசிலாமணிஸ்வரர் சன்னதிக்கு வலப்புறமாக தாயான கொடியிடை நாயகியின் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் மாசிலாமணிஸ்வரர் கருவ ைற முன்பாக வெள்ளெருக்குத் தூண்கள் இரண்டு காணப்படுகின்றது. இவ்விரு தூண்களும் குறும்பர் அரணில் இருந்து தொண்டைமான் கொண்டு வந்தது ஆகும். மற்றும் இத்தலத்தில் மகா மண்டபம், பட்டி மண்டபம், நிருத்த மண்டபம், அலங்கார மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவையும் தொண்டமான் மன்னரால் எழுப்பப்பட்டுள்ளன. குறும்பர்களின் அரணில் இருந்து கொண்டு வரப்பெற்ற வேல் பிடித்த வைரவன் காவலாய் அமைந்துள்ளார். பரிவார தேவர்களுக்குச் சுற்றாலயம் அமைக்கப் பெற்றுள்ளது. எல்லா கோவில்களிலும்

இறைவனை நோக்கியவாறு அமையப் பெற்றுள்ள நந்தியானது இத்தலத்தில் இறைவன் நோக்கிடும் கிழக்கு திசையை நோக்கியவாறு இருந்திடுகின்றார். இந்த நந்தியை வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணங்கள் எல்லாவித தடைகளும் நீங்கப் பெற்று நடந்தேறும் என்பது ஐதீகம்.
இத்தலத்திற்கு சைவ சமயக் குரவர் நால்வரின் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் வருகை தந்த போது திருப்பதிகம் பாடியுள்ளார்.
நம்பனே! அன்று வெண்ணெய்நல்லூரில்
நாயினேன்தன்னை ஆட்கொண்ட சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும்
தடங்கடல் நஞ்சுண்டா கண்டா! செம்பொன் மாளிகை சூழ்திருமுல்லை
வாயில் தேடியான் திரிதர்வேன் கண்ட டைம்பொனே! அடியேன்படுதுயர்களையாய்!
பாசுபதா! பரஞ்சுடரே! என்று தான் திருவொற்றியூர் தலத்தில் தன் மனையாளான சங்கிலி நாச்சியாருக்கு கொடுத்த வாக்கினை தவறியமையனால் தன் பார்வை பறிபோனதை குறித்துதன் துயர்களைய வேண்டுகிறார். இத்தலத்து பிரமோற்சவம் பிரதி வருடம் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று நடைபெறும். இப்பெரு விழா பதினோரு நாட்கள் நடைபெறுகின்றது. மேலும் இத்தலத்தில் நடைபெறுகின்ற நவராத்திரிப் பெருவிழா சிறப்புடைய விழாவாகும். ஒன்பது நாட்களும் தேவியை அலங்கரித்து பூஜைகள் நடைபெறுகின்றன ஒன்பதாம் நாள் அம்மனுக்கு சந்தனக்காப்பு நடைபெறுகின்றது.
மேலும் கடந்த ஒரு நூற்றாண்டாக முத்தலத்து தேவி வழிபாட்டில் இத்தலத்து தேவியும் முக்கியத்துவம் பெறுகின்றாள். சக்தி வழிபாட்டில் இம்முத்தலத்து தேவி வழிபாடு மிகவும் சிறப்பாகக் கருதப்படுகின்றது. பொதுவாகவே பூரீசக்கரம் அம்மனுக்கு உரியதாகும் இச்சக்கரத்துகடைசிபாகமான திரிகோணத்தில் மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர் திருவுடையம்மன் திருவொற்றியூர் வடிவுடையம்மன். திருமுல்லை வாயில் கொடியிடையம்மன் ஆகியோர் இருந்திடுவதாக ஐதீகம் இதன் காரணமாய் இச்சக்தி வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து உள்ளது. பெளர்ணமி திதி நாளன்று இம்முத்தலத்து சக்தி வழிபாடு நடைபெறுகின்றது. காலசந்தி பத்து மணிக்குள்ளாக மீஞ்சூர் மேலூர் அம்மன் தரிசனமும் உச்சிக்காலத்தில் பகல் 12 மணிக்குள்ளாக திருவொற்றியூர் அம்மன் தரிசனமும் மாலை ஆறுமணிக்குள்ளாக கொடியிடை நாயகி தரிசனமும் நடைபெறுதல் வேண்டும்.
மயூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 405
S.f)功
影
劉
EO:
இ
اور
ཎྜི་s
S)
C
K)
宗
驚 额
மயூரமங்கலம்
Yష్ట్రాణహాతా(N を) を 急ー
‘‘දකි.)(2දී 2_%
೪NP
-- Yyaw-S CO2)Y.
ኋ سمحمحم..ع
ஜி AC}
ぐ熱ー
tSNO)
அருள் கூடிய பல அற்பு திருத்தலங்களுள் திருவாமாத்தூர் திரு என அடைமொழி சேர்க்கப் ெ விழுப்புரத்திற்கு அருகாமையில் உ
இத்தலத்தில் எழுந்தருளி அழகிய நாதர் எனவும் அழைக்கின் ஆமாத்தூர் ஐயன்"எனப் போற்றுச் வென்ற முறுவலால் என்றும் அழகி பெரும்பாலான சிவாலயங்களில் இறைவனுக்கு வலப்புறமாகவும் அ திருவாமாத்தூரில் இவ்விருவரி இத்தலத்தின் பெரும் சிறப்பாகும்
இலங்கையில் இராவணன் அத்தலத்து இறைவனை வழிபட் முடிகிறது. தேவாரம் அருளிய மூவர் இத்தலத்தில் இறைவி அழ ஒன்று அமைந்துள்ளது.
அம்பிகையானவள் இவ் வட்டப்பாறையம்மனாகவும் எழு தலைப்பகுதி இருக்க, அப்பாம்பில் இருக்கின்றது. பாம்பின் வடிவம் த என்பது சிவலிங்கத்திற்கு என்று
இத்தலத்தில் இந்த வட்டப் கருதப்படுகிறது. இந்த வட்டப்பாை திருவாமாத்தூர் புகழ் பெற்று விள இத்தலத்தில் வீற்று இருக் அற்புதமான பேரழகோடு, தலை சி
 
 
 
 
 
 

வாமாத்தூர்
UT6DDDD60
நங்கள் புரிந்து அகிலத்தைக் காத்திடும் அன்னையின் தலமும் ஒன்றாகும். இத்தலத்தின் பெயர் ஆமாத்தூர் ஆகும். பற்று திருவாமாத்தூர் என அழைக்கப்படுகிறது. இத்தலம் ள்ளது. இருக்கும் இறைவன் அபிராமாஸ்வரர் ஆவார். இவரை றனர். இவ்விறைவனையே திருஞானசம்பந்தமூர்த்திகள் கின்றார். இறைவியாம் அன்னையின் திருப்பெயர் முத்தை ய நாயகி என்ற பெயராலும் அழைக்கப் பெறுகின்றாள்.
இறைவனுக்கு இடப்புறமாகவும் சில சிவாலயங்களில் ம்பாள் சந்நிதி அமைந்து இருப்பது வழக்கம். ஆனால் ன் சந்நிதிகளும் எதிர் எதிராய் அமைந்துஇருப்பது
னைக் கொன்று சீதையை மீட்டு வந்த இராமபிரான் டுச் சென்றுள்ளதை தல புராணத்து வாயிலாக அறிய இத்தலத்து இறைவனைப் போற்றிப்பாடி அருளியுள்ளனர். கிய நாயகியின் சந்நிதிக்கு தென்புறமாய் வட்டப்பாறை
வட்டப் பாறையில் வட்டப் பாறை தெய்வமாகவும் ந்தருளியுள்ளாள். வட்டப் பாறையில் ஒரு பாம்பின் ா வால் பகுதியானது அம்பிகையின் திருவடிகளின் கீழ் த்ரூபமாய் கல்லால் வடிக்கப்பெற்றுள்ளது. வட்டப்பாறை அமையப் பெற்று இருந்திடும் சந்நிதியே ஆகும். பாறை லிங்கத்தையும் வழிபடுவது சிறப்பான ஒன்றாகக் றயால் - வட்டப்பாறை அம்மனின் மகிமையால் இத்தலமாம் ங்கிடும் சத்தியத் தலமாக விளங்கிடுகிறது. கும் அன்னையாம் முத்தாம்பிகை, வட்டப்பாறையம்மன், றந்த வரப்பிரசாதியாகவும் திகழ்கின்றாள்.

Page 406
இரட்டைப் புலவர்களின் மூலமாக வட்டப் பாறையம்மன் திருவிளையாடல் புரிந்துள்ளாள். ஒரு சமயம் இரட்டைப் புலவர்கள் இருவரும் இத்தலத்திற்கு வருகை தந்து கலம்பகம் பாடினர். அந்த சமயத்தில் இத்திருக்கோயில் பெண்ணையாற்றில் இருந்து கிளை நதியாகப் பிரிந்தோடும் பம்பை நதியின் கிழக்குக் கரை ஒரமாய் இருந்தது. இந்நிலையைச் சரிவர கவனித்திடாது இருந்த இரட்டைப்புலவர்கள் தாம்பாடிய கலம்பகத்தில்
ஆற்குழையோ, அரவோ,
ஆயர்பாடி அருமனையோ, பாற்கடலோ, திங்களோ,
தங்கும் ஆகம் பலபலவாம் மார்கமும் ஆகிநின்றார் மாதைநாதர்
an Iopirolleg/Tair Lithisa)L/ மேற்கரையில் கோயில் கொண்டா
புரம் சிறிய வெங்கனைக்கே" என இத்திருக்கோயில் பம்பை நதியின் மேற்குக் கரையில் இருப்பதாக பாடியருளினர். இக்கலம்ப நூலினை இரட்டைப் புலவர்கள் அரங்கேற்றம் செய்த போது சபையில் கூடியிருந்தோர் இத்தவறினைச் சுட்டிக் காட்டிகுற்றம் சுமத்தினர். -
இது கேட்ட இரட்டைப் புலவர்கள் மனம் வருந்தியதோடுயாமும் அறியோம்; அவளும் பொய் உரைந்திடாள் எனப் பழியை கலைமகள் மீது போட்டு தங்களின் அறியாமை நிலையைக் கூறினர்.
637)
 

அன்றைய இரவு இத்தலத்தில் பெரும் மழை பெய்ததால் ஆற்றில் பெருவெள்ளமும்பெருக்கெடுத்தது. மறுநாள் காலையில் எல்லோரும் சென்று பார்த்தபோது முந்தைய நாள் வரையில் திருக்கோயிலின் இடப்புறமாய் ஒடிக் கொண்டு இருந்த பம்பை நதியானது தனது போக்கை மாற்றியதாய் திருக்கோயிலின் வலது புறமாய் ஒடிக்கொண்டிருந்தத்து. வட்டபாறை அம்மனின் அருளால் இரட்டைப்புலவர்களின் வாக்குப் பொய்த்திடாது நிலைத்தது. இதனால் இரட்டைப் புலவர்களின் வளம்கொள் பம்பை மேற்கரையில் கோயில் கொண்டார் என முடித்திடும் பாடல் பெரும் புகழ்பெற்றது.
திருவாமாத்தூர் மக்கள் மட்டும் அல்லாது பிறபகுதி மக்களும் கூட தங்களுக்குள் உண்டாகிடும் வெகு சிக்கலான வழக்குகளை வட்டப் பாறையம்மனின் சந்நிதிக்கு வருகை தந்து, சத்தியம் செய்திடக் கூறி தீர்வு கண்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
ஒரு வேளை வழக்கு சம்பந்தமாக சத்தியம் செய்பவர் பொய் சத்தியம் செய்து இருப்பின் வட்டப்பாறையில் இருந்து பாம்பு வெளிவந்து அப்பொய் சத்தியம் செய்தோரை கொன்று விடும். மக்களிடையே காலம் காலமாக இருந்து வரும் இந்நம்பிக்கை இன்றும் பொய்த்திடாமல் வழக்கத்தில் இருந்து வருகிறது.
மயூரபதி பூரிபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 407
リ
மயூரமங்கலம்
ృతితతాQGON
'a-1” ーな込ージ
d
é
鑫
影
C
S. 器 。
હેો
م:
έ.
திருவாரூர் ஆலயமும் விளங்குகின்றன. ஒவ்வொன்றும் அழகுடன் அமைந்திருப்பது மட்டு தேராகவும் விளங்குகின்றது. இதன
இத்திருவாரூர்த்தலம் பெருமையுடையது எனக் கூறப்படு தம் பாடலில், s
மாடமொடு
La ஆடுவான்
எனப் போற்றிப்பாடுகின்றார்.
பஞ்ச பூதத்தலங்களுள் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன் ஒன்றாகவும் விளங்கிடுகின்றது. என்னும் பிறபெயர்களாலும் அ இத்திருக்குளத்து நடுவே தீவு ஒ ஒன்றும் எழும்பியுள்ளது. இக்கோ இக்கோயிலில் நாகநாதரு சென்று இறைவனையும் அம்பாை அமைந்துள்ள திருக்குளத்தின் ெ பெற்றதும் இத்தலத்துச் சிறப்பாக
சுந்தரர் முதுகுன்றத்தில் மணிமுத்தாறு நதியில் போட்டு திருக்குளத்தில் எடுத்தார். அப்ெ மாற்றுரைத்த விநாயகராக இத்தலத்திற்குள்ள இன்னும் ஒரு தலம் திருவாரூர்த்தலம் ஆகும்.
இத்தலத்து இறைவன்வன் புற்றிடங்கொண்டார் எனவும் அs
 
 

திருவாரூர் D6D TD GD65
திருக்குளமும் மிகப்பெரிய பரப்பினை உடையனவாக ஐந்து ஏக்கர் பரப்பளவு உடையவை ஆகும். திருவாரூர் தேர் மல்லாமல் தமிழ் நாட்டுத் திருத்தேர்களிலேயே மிகப்பெரிய னயே பழமொழியாக'திருவாரூர்த்தேரழகு எனவும் கூறுவர். காலத்தால் கண்டுணர முடியாத அளவிற்கு பழம் கின்றது. இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் திருநாவுக்கரசர்
மாளிகைகள் மல்கு தில்லை
"புகுதற்கு முன்னோ பின்னோ னிஆருர் கோயிலாக் கொண்டநாளே
திருவாரூரை பிருதுவித்தலமாக உரைக்கின்றனர். ாறாகவும் கருதப்படுகின்றது. முக்தி தரும் தலங்களுள் இத்தலத்தினை பூங்கோயில் எனவும் திருமூலட்டானம் ழைக்கின்றனர். கலாலயம் எனப் போற்றி உரைத்திடும் ன்று அமைந்துள்ளது. அத்தீவில் அழகுடன் திருக்கோயில் யிலினை நடுவநாயனார் கோயில் எனக் கூறுகின்றனர். ம் யோகாம்பிகையும் எழுந்தருளியுள்ளனர்.இக்கோயிலுக்குச் ாயும் தரிசித்துவர ஒடங்கள் விடப்படுகின்றன. இக்கோயில் பெயர் காரணமாகவே இத்தலம் பூங்கோயில் எனும் பெயர் அமைந்திடுகிறது. இறைவனைப் பாடிப் பெற்ற பொன்னினை அங்கிருக்கும் திருவாரூர் தலத்திற்கு வந்து அத்தலத்து கமலாயத்து பொன்னை எடுத்து உரைத்து மாற்று அறிந்த விநாயகர், இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். இவ்வரலாறும் சிறப்பாகும். இச்சிறப்புகள் போல் பற்பல சிறப்புகள் பெற்ற
ாமீக நாதர் ஆவார். புற்றில் இருந்து இவர் தோன்றியபடியால்
ழைக்கப்படுகின்றார்.
C375)

Page 408
இத்தலத்தில் இரு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. அவர்கள் நீலோத் பாலாம்பிகை மற்றும் கமலாம்பிகை ஆகியோர் ஆவர். இவ்விருவரும் தனித்தனி அம்மன்களாகக் காட்சியளித்த போதிலும் இருவரும் ஒருவரே ஆவர்.
இவ்வாறு அன்னையாம் சக்தியானவள் இருவகையான உருவங்களில் எழுந்தருளி இல்லறம் மற்றும் துறவறம் மேற்கொண்டோர்க்கு திருவருள் புரிபவளாகத் திகழ்கின்றாள்.
திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அன்னை நீலோத் பலாம்பிகையானவள் தனிச் சந்நிதி கொண்டு காட்சியருளுகின்றாள். அவளின் திருக்கரம் ஒன்று கருங்குவளைமலர் ஒன்றினை ஏந்தியபடி இருக்க, நின்ற திருக்கோலம் கொண்டு அருள்புரிகின்றாள். இவ்வம்மனின் அருகே அம்மனின் தோழியானவள் பாலமுருகனை தோள்மீது சுமந்து நிற்க, அன்னையின் திருக்கரமானது பாலமுருகனின் கட்டு விரலினைப் பற்றியபடி இருந்திடுகிறது. இத்தகைய அமைப்பானது வேறு எந்தத் தலங்களிலும் காண இயலாத ஒன்றாக அமைந்து தனிச்சிறப்பு பெற்று விளங்குகின்றது.
நீலோத்பலாம்பிகை அன்னையானவள் தன் இளைய புதல்வனோடு எழுந்தருளி இருப்பது இல்லற வாழ்வினுடைய மாண்பினை விளக்குவதாக அமைந்துள்ளது. அதனால் இல்லறம் கொண்ட நல்லோர்க்கு அருள்பாலித்திடும் அன்னையாக நீலோத்பலாம்பிகை திகழ்கின்றாள்.
எப்படி நீலோத்பலாம்பிகை அன்னையானவள் இல்லறம் மேற்கொண்டோர்க்கு அருள்பாலித்திடுவது போன்று துறவறம் மேற்கொண்டோர்க்காக அன்னை கமலாம்பிகை தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றாள்.
அன்னையாம் கமலாம்பிகை தான் கொண்ட தனிச் சந்திதியில் தவக்கோலம் கொண்டவளாய், கால்மேல் காலிட்டு யோகாசன நிலையமர்ந்து காட்சி அருளுகின்றாள்.
அன்னையின் திருக்கரங்களில் பாசம், உருத்திராட்சம், தாமரை, அபயம் ஆகியவை உள்ளன. இத்தகைய அழகு உருவாய் அன்னையான கமலாம்பிகை யோக நிலையில் அமர்ந்து துறவறம் மேற்கொண்டோர்க்கு திருவருள் புரிந்திடுகின்றாள்.
சுத்த சித்த நிலை என்பது யோக நிலையில் தோன்றுவதே ஆகும். இந்த சுத்த சித்த நிலையை அடைந்திட அன்னையாம் கமலாம்பிகையை மனத்தால்

தியானம் செய்திடல் வேண்டும். இந்நிலையை உணர்த்தும் விதமாகவே அன்னையாம் கமலாம்பிகை யோக நிலையில் அமர்ந்து அருள்புரிகின்றாள்.
அகில உலகெங்கும் சக்தி என்பது ஒன்றே எனப் போற்றி உரைக்கும் போது இத்தலத்தில் மட்டும் சக்தியானவள் இரு வடிவம் தாங்கி அருள் புரிந்தாலும் இரண்டிலும் விளையும் பயன் ஒன்றாகவே அமைந்திடுகிறது.
பிறவி எடுத்த எந்த உயிராய் இருந்தாலும் அவ்வுயிரானது இறப்பு நிலையை அடைந்தே தீரும். அப்படி இறப்பு நிலையை அடையும் அவ்வுயிரானது மீண்டும்பிறவாமையை அடைந்திட வேண்டும். அவ்வாறு உய்யும் நிலைக்கான வழியும் இவ்வுலகினில் உண்டு. அப்படி மீண்டும் பிறவா நிலையினையே நாம் முக்தி அடைதல், வீடுபேறு அடைதல் எனப் பலவாறாகக் கூறுகின்றோம். இந்நிலையை அடைந்திடவே மெய்யன்பர்கள் இத்தலத்தில் இரு வடிவங்களெடுத்து எழுந்தருளி இருக்கும் அன்னையாம் சக்தியவளைப் பணிந்து வழிபட்டு அவளின் பேரருளைப் பெற்றுய்கின்றனர்.
இல்லற வாழ்க்கைக்கு அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் அத்தியாவசியம் ஆகும். இம்மூன்றினையும் தடையின்றி அருள்பவள் அன்னையாம் நீலோத் பலாம்பிகை ஆவாள். இந்நிலை அடைந்த இல்லற நெறி வாழ்ந்த மெய்யன்பர்கள் துறவற நிலையான தவநிலை மேற்கொண்டு முக்தியான வீடுபேறு அடைய வேண்டும். இந்நிலையை அருள்பவள் கமலாம்பிகை ஆவாள்.
இத்தலத்தில் இரு அம்மன் சந்நிதிகள் உள்ளது போலவே இரு சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. கமலாலயத்திற்கு வருபவர்கள் திருக்குளத்தில் நீராடி பின் ஆலய சந்நிதிக்குச் சென்றிடல் வேண்டும். முதலில் சோமசுந்தரராக எழுந்தருளி இருக்கும் இறைவனாம் தியாகேசப் பெருமானை வணங்கி அவர் அருளைப் பெற்றிட வேண்டும். பின் அம்பிகையின் இரு சந்நிதிகளுக்கும் சென்று வணங்கி அன்னையின் அருளினைப் பெற்றிட வேண்டும்.
இத்தலத்தில் நவக்கிரகங்கள் வக்கரித்திடாமல் ஒரே வரிசையில் நின்று அருள்புரிகின்றனர். இதுவும் இத்தலத்தின் சிறப்பாகும். மனுநீதிச் சோழன் இத்தலத்தில் இருந்து ஆண்டு வந்தபோதுதான் பசுவிற்கு தவறிழைத்த தன் மகனைத் தேர்க்காலில் படுக்க வைத்தான் என்ற
சரித்திரப் புகழ் இத்தலத்திற்குச் சேர்கிறது.
மயூரபதிபூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 409
à
鉴
9.
ఫ్టూ
இ{
ဦ§Y 翠
23
)(
f
Հ
徽
དེ་
SS
۔۔۔۔
محی
冰
ܐ
O
激s
Kè.
翌
鲁
c
独
3.
)نم؟
ତ୍ରି
类狄
இ
T
i ভ্ৰষ্ঠ
S)
جمع ،
மயூரமங்கலம்
பஞ்சபூதங்களுள் ஒ பரமேஸ்வரி தண்ணிரை லிங்க அமுதீஸ்வரம் எனப் பெயர் பெ சுற்றிலுமாக நீர் ஊற்று இருந்தி முன்னொரு காலத்தில் இத் யானைக்கா என அழைக்கப்பெற் தல விருட்சமாக நாவல்மரம் இரு வழங்கப்படுகின்றது.
சிலந்தி ஒன்று இத்தலத்தி வலையைக் கட்டிக் காத்துவந்தது வலையைத் தன் பூஜையின் போ சிலந்தியானது யானையின் துதி யானையின் உடலில் பரவியாை வந்தமையால், கவர்க்கம் அடைந் செங்கட் சோழனாகப் பிறப்பெடு வரலாறு மூலம் அறிய முடிகிறது ஒரு சமயம் உலகத்து அன்ன வந்து தவம் புரிந்த போது தாம்பூ புரிந்து வந்தார். அப்போது அன்ன தாம் அன்னையைப் பார்த்த நிை வணங்கினார்.
திருவானைக்கா ஆலயத் இவ்வாலயத்தில் ஏழு கோபுரங்க ஆயிரங்கால் மண்டபமும் உள் சந்நிதிகள் உள்ளன.
ஒரு சமயம் உறையூர்
f
எழுந்தபோது அவன் கழுத் போய்விட்டது. அம்முத்து மா6 அணிவிக்க நினைத்து இருந்த மனம் வருந்தினான்.
 
 
 
 
 

நவானைக்கா 6DMT6oTL MbMTUl6
ன்றான அப்பு(நீர்)க்கான தலம் திருவானைக்கா தலம் ஆகும். வடிவாகப் பிடித்து வைத்து பூஜை செய்தபடியால் இத்தலம் ற்றது. இன்றும் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கத்தைச் டுவதைக் காணமுடிகின்றது.
தலம்யானைகள் நடமாடும்பசுஞ்சோலையாக இருந்தமையால் றது.கா என்றால் சோலை எனப்பொருள்படும். இத்தலத்தில் நந்திடுவதால் இத்தலத்திற்கு ஜம்புகேஸ்வரம் எனவும் பெயர்
ல் உள்ள சிலிங்கத்தின் மீது சருகுகள் விழுந்திடாதபடி 1.சிவபெருமானை பூஜித்துவந்த யானை ஒன்று இந்த சிலந்தி து அறுத்து விட்டது. இதன் காரணமாகக் கோபம் கொண்ட நிக்கையைத் தீண்டியது. இதனால் சிலந்தியின் விஷமானது ன இறந்தது. இறந்து போன யானை, சிவபூஜையில் ஈடுபட்டு தது யானையைக் கொன்ற சிலந்தியானது இறந்த பிறகு கோச் த்து இந்த ஜம்புகேஸ்வரர் ஆலயத்தினை எழுப்பியதாகத் தல
னையாம் உமாமகேஸ்வரியானவள் இத்திருவானைக்காவுக்கு ஜித்திட வேண்டி சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்து தவம் னை அகிலாண்டேஸ்வரி எனப் பெயர் பெற்றாள். பிரம்மதேவர் லயிலேயே அன்னையின் திருவுருவினை பிரதிஷ்டை செய்து
தின் முன்பாக நான்கு கால் மண்டபம் ஒன்று உள்ளது. ள் உள்ளன. ஐந்து பிரகாரங்களுடன் கூடிய இவ்வாலயத்தில் ளது. இவ்வாலயத்தில் நான்கு திக்குகளிலும் விநாயகர்,
நீராடு கட்டத்தில் சோழராஜன் நீராட நீரில் மூழ்கி தில் அணிந்திருந்த முத்துமாலை கழன்று ஆற்றில் லையை சோழராஜன் இறைவனாம் ஜம்புகேஸ்வரருக்கு நதால் அம்மாலை காணாமல் போனது குறித்து மிகவும்
כדדG

Page 410
பின் ஒருவாறு மனம் தேறி ஈஸ்வர தரிசனம் காண வேண்டி, திருவானைக்கா தலத்திற்குச் சென்றபோது இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள், ஆரம்பம் ஆக இருந்தன. மன்னன் இறைவன் சந்நிதியை அடைந்ததும் சிவாச்சாரியார் தீர்த்தம் நிறைந்து இருந்த குடத்தினைத் தூக்கி இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். நீர்நிறைந்த குடம் இறைவனின் மேல் கவிழ்க்கப்பெற்றதும், குடத்தில் இருந்த நீருடன் மன்னன் இறைவனுக்கு அணிவிக்க நினைத்த முத்துமாலையும் சேர்ந்து இறைவனின் மேல் வந்து வீழ்ந்தது. இக்காட்சி கண்ட சோழராஜன் திகைத்து எம்பெருமான் இறைவனின் திருவிளையாடலை எண்ணிப்பெரிதும் வியந்து உள்ளம் பூரித்துப் போனான்.
இத்தலத்தில் தலை காணிக்கை அளித்திடும் வழக்கம் இருந்ததாக பல கல்வெட்டுக்களின் மூலமாகவும் ஆன்மீக நூல்கள் மூலமாகவும் அறிந்திட முடிகிறது. தனக்காகவோ, அல்லது தன் நாட்டு மன்னருக்காகவோ அல்லது வேறுயாருக்காகவோ வீரன் ஒருவன் பலிபீடத்தின் முன்பாக வந்து நின்று கொண்டு தன் வலக்கையால் வாளினை ஏந்தித் தன் கழுத்தினை, அறுத்துத் தலையை பலிபீடத்தில் வைத்துச் சுற்றியதாகக் கூறப்படும் காட்சியைச் சித்தரிக்கும் விதமான பல சிற்பங்கள் இவ்வாலயத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன.
ஆலயத்தினைச் சுற்றியுள்ள திருவிதியைக் காட்டிலும் ஆலயத்தின் உட்பகுதி தாழ்வாக உள்ளது. இவ்வமைப்பு ஜம்புகேஸ்வரர் சந்நிதிவரை உள்ளது.
ஐந்தாம் பிரகாரத்தில் நான்கு புறங்களிலும் வாயில்கள் காணப்படுகின்றன. உயரமான மதில்களை உடைய இப்பிரகாரத்தில் அனுமார், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. ஆலயத்துள் நுழையும் கோபுரவாயிலின் மாடத்தில் விநாயகருடன் வீரபத்திரரும் எழுந்தருளியுள்ளார்.
இத்தலம் ஈசனாரின் பெயரில் அமைந்து இருந்த போதிலும் இங்கு அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு அதிகப்படியான மகிமையுண்டு. சக்தி ஸ்வரூபமாய் விளங்கிடும் அன்னை மிகவும் உக்கிரமூர்த்தமாய் இருந்தபடியால் காலையில் ஆலயத்தினைத் திறப்பவருக்குத் தீங்கு நேரும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
ஆதிசங்கரர் ஒரு சமயம் இவ்வாலயத்திற்கு வருகை தந்தபோது அவரிடம் அகிலாண்டேஸ்வரியின் உக்கிரமான ஸ்வரூபத்தினைப் பற்றி உரைத்தார்கள்.

ஆதிசங்கரர் இத்தலத்து இறைவனுக்காக இரு சக்கரங்கள் எடுத்துவந்து இருந்தார். அவைகளுள் ஒன்று இறைவனுக்கான யந்திர சக்கரம் ஆகும். மற்றொன்று அகிலாண்டேஸ்வரிக்கான பூரீ சக்கரம் ஆகும்.
ஆனால் ஆதிசங்கரர் இத்தலத்திற்குச் சென்றிடும் சமயத்தில் தலத்தினை காவிரி ஆறு வலம் வந்தமையால் அவரால் சென்றடைய முடியவில்லை. இதன் காரணமாக அவரால் தாம் கொண்டுவந்த சக்கரங்களை ஸ்தாபனம் செய்திட இயலவில்லை.
அன்னை அகிலாண்டேஸ்வரியின் உக்கிரம் பற்றி விபரத்தைக் கேள்விப்பட்டதும் தாம் கொண்டுவந்த இரு சக்கரங்களையும் தாடங்கமாகச் செய்து அன்னையின் காதுகளில் அணிவித்திடச் செய்தார். இருச்சக்கரங்களில் ஒன்று தன ஆகர்ஷணச் சக்கரம் ஆகும். மற்றொன்று ஜன ஆகர்ஷணச் சக்கரம் ஆகும்.
முதல் சக்கரமான தன ஆகர்ஷண சக்கரத்தின் மகிமையால் ஆலயத்திற்கு பொன்னும் மணியும் பெருமளவில் குவிந்திட வேண்டும் என்பதாகும். இரண்டாவது சக்கரமான ஜன ஆகர்ஷண சக்கரத்திற்கான மகிமை ஆலயத்திற்கு மக்களைக் கவர்ந்து இழுப்பது ஆகும்.
ஆக இவ்விரு சக்கரங்களையும் தாடகங்களாக அன்னைக்கு அணிவித்தும் அன்னை அகிலாண் டேஸ்வரியின் உக்கிரமானது முற்றிலுமாகத் தனிந்திடவில்லை. அவளின் உக்கிரமானது முழுவதுமாக சாந்தமடைந்திட அன்னையின் தலைமகனாம் விநாயகப் பெருமானின் பெரிய உருவச் சிலை ஒன்றினை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார். இவ்வாறு செய்த பிறகுதான் அன்னையின் உக்கிரம் முற்றிலுமாக மறைந்ததாம். இப்போதும் கூட அன்னையின் திருஉருவுக்கு தீப ஆராதனை செய்திடும் போது அன்னையின் திருமேனியைக் காண்போர் எப்படிப்பட்ட மன தைரியம் உள்ளவர்களாக இருந்தாலும் கூட சிறிது கலக்கம் அடைந்திடுவர்.
அன்னையின் மகிமைக்கும், அவளின் அரும்பெரும் சக்திக்கும் எடுத்துக்காட்டாக கவி காளமேகப் புலவரை கூறிடலாம்.
இவ்வாலயத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண் டேஸ்வரி, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த விநாயகர் ஆகியோரின் சந்நிதிகளோடு சொக்கநாதர், மீனாட்சி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஏகாம்பரர், சரஸ்வதி ஆகியோருக்கான சந்நிதிகளும் உண்டு.
யூரபதி பூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 411
இந்த ஆலயத்திற்கான பல காலக்கட்டங்களில் நடைபெற்ற பல திருப்பணிகள் பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர், நாயக்க மன்னர்கள் மற்றும் தற் காலத்திய நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆகிய பெரு மக்கள் ஆகியோரால் செய்யப்பட்டவை ஆகும்.
இந்திர தீர்த்தம் ஜம்பு தீர்த்தம், அக்னி தீர்த்தம், பூரீ ராமபிரானால் உண்டாக்கப் பெற்ற ராமதீர்த்தம் ஆகிய புனித தீர்த்தங்களும் பராசரக் குண்டம் எனப் பெரும் கிணறும் இத்தலத்துத் தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
அகிலாண்ட நாயகியின் திருக்கோயிலில் பற்பல திருவிழாக்கள் நடைபெற்று வந்தாலும் அவற்றில் பஞ்சப் பிரகாரப் பெருவிழா மிகவும் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. காரணம் இந்த பஞ்சப்பிரகாரம் பெருவிழா இத்தலத்தைத் தவிர வேறு எத்தலத்திலும், நடைபெறுவது இல்லை என்பதாகும். இந்த பஞ்சப்பிரகாரப் பெருவிழா பற்றிய வரலாறும் கூறப்பட்டுள்ளது.
மயூரமங்கலம்
 

ஒருசமயம் மும்மூர்த்திகளுள் ஒருவரான மிரம்மதேவர் தான் படைத்திட்ட பெண்ணின் பேரெழில் கண்டு மயங்கி தன்னிலை உணராது தாம் செய்து வந்த படைப்புத் தொழிலையே செய்திட இயலாதவராகிப் போனார்.
பின்னர் தன் தவற்றினை உணர்ந்த பிரம்மதேவர் இறைவனாம் எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு பெறவேண்டி இறைவனைக் குறித்து பெரும் தவம் இயற்றினார். பிரம்மதேவரின் கடும் தவம் கண்டு மெச்சிய இறைவன் தன் மனையாளான உமாதேவியோடு பிரம்மதேவரின் முன்பாக ஜம்புகேஸ்வரராகவும் அகிலாண்டேஸ்வரியாகவும் எழுந்தருளினார். இவ்வாறு மாறுபட்ட வேடத்துடன் தம் முன்பாக எழுந்தருளிய இறைவனையும் இறைவியையும் கண்ட பிரம்மதேவர் வெட்கித் தலை குனிர்ந்தார். பின்னர் அவர்களின் திருவருள் பெற்று மீண்டும் தமது படைப்புத் தொழிலைத் தொடர்ந்து செய்திடலானார். இதுவே பஞ்சப்பிரகாரப் பெருவிழாவிற்கான வரலாறாகக் கூறப்படுகிறது.

Page 412
><) N 6.
dò
Y A ή சென்னை மாநகருக்கு Y பூந்தமல்லிநெடுஞ்சாலையில் உள் தொலைவில் திருவேற்காடு தலம் 畿 鳍 摄 முன்பொருசமயம் அகத்தி கும்பம் ஒன்றில் ஆவாஹனம் செய்
அகத்திய மாமுனிவரின் பூஜை தோன்றினார்.
தன் முன்தோன்றிய அ அன்னையின் பாதங்களில் வீழ்ந் கோலம் காண விரும்புவதாகக் சு அதுகேட்ட கருமாரியன்ை தான் கொண்ட திருமணக் கோல அகத்தியர் கும்பம் வைத்து பூஜித் இருந்ததாகவும் அங்குதான் தேவி காலமாக அவ்விடத்தில் திருச் தனிக்கோயில் எழுப்பப்பட்டு பிரதி ஒரு சமயம் சித்தர்கள் ப6 பெருமைகள் பலவற்றைக் பேசிக்கொண்டு இருந்தவர்க சந்தேகம் எழுந்தது.
அச்சந்தேகம் குறித்து இ கருமாரித்தாய் எனவும் அருள் பல அச்சித்தரின் சந்தேகம் தீர்ந்தது. கருமாரியம்மனின் ஆ மதிற்கவர்களுடனும், விசாலமான அன்னையாம் கருமாரி அமர்ந்து
புற்றில் இருந்து தோன் முழுமையையும் மறைத்தவள கொண்டவளாய் நான்கு திருக் மற்றொரு காலினை தாழ்த்திய
 
 
 

lருவேற்காடு BDT futbud6
மேற்குப் புறமாய் பதினாறு கீலோமீட்டர் தொலைவில் ள வேலப்பன் சாவடிக்கு வடபுறமாய் ஒன்றரைக் கிலோமீட்டர்
அமைந்துள்ளது.
யமாமுனிவர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது, அம்பாளை துதிரிசூலிமந்திரத்தினை உச்சரித்து பூஜை செய்து வந்தார். ஐ கண்டு மகிழ்ந்த கருமாரியம்மன் அவர் முன்பாகத்
|ன்னை கருமாரியைக் கண்ட அகத்திய மாமுனிவர், து வணங்கி, இறைவன், இறைவி ஆகியோரின் திருமணக் கூறினார். ன முனிவரின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமானுடன் த்துடன் ரிஷய வாகனத்தில் காட்சியளித்திட்டார். இவ்வாறு த இடத்தில் சில காலங்களுக்கு முன்பாக குறிமேடு ஒன்று பியின் திருக்கோயில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வெகு க்கோயில் கொண்டு இருந்த அன்னைக்கு தற்போது திஷ்டை செய்யப்பட்டது. லர் ஒன்றாய்க் கூடி திருவேற் காட்டுக் கருமாரியம்மனின் கூறிப் பேசிக் கொண்டு இருந்தனர். அவ்வாறு ளில் சித்தர் ஒருவருக்கு அன்னையின் சக்தி பற்றிய
இன்னொரு சித்தர், வேதங்கள் போற்றும் தாயானவளே வழங்கிடும் சக்தியை நிரம்பப்பெற்றவள் என விளக்கியதும்
பூலயம் உயர்ந்த இராஜகோபுரத்துடனும், பெரும் பிரகாரத்துடனும் அமைந்துள்ளது. ஆலயத்தின் நடுவில், அருள்பாலித்து வருகின்றாள்.
றியவள் நம் அன்னையாம் கருமாரி என்பதால், உடல் ாய், தன் திருமுகத்தினை மட்டும் காட்டிய நிலை கரங்கள் கொண்டவளாய் தன்னொரு காலினை மடித்து நிலையோடு அமர்ந்தவளாய்க் காட்சி தரும் அன்னையின்
யூரபதி பூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 413
எழிலுருவினைக் காண்போர் முற்பிறவிப் பாவங்கள் அனைத்தும் களையப் பெற்று புண்ணியங்கள் பல பெற்றிடுவர்.
அன்னையாம் கருமாரித்தாய்க்கு உரிய நாட்கள், பெளர்ணமி, அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகள் ஆகியவை ஆகும். இவற்றுள் சித்ரா பெளர்ணமியன்று நடைபெற்றிடும் இத்தலத்து திருவிழா மிகவும் விசேடமான திருவிழாவாகும்.
கருணையே வடிவாய் இருந்த கருமாரித் தாயினை அவள் சந்நிதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் யாவற்றையும் விரும்பிய வண்ணமே அருளும் அன்னையவள் நம் கருமாரி ஆவாள். இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கையும் அமைந்து வருவது அன்னையின் அருள் சக்திக்குச் சான்றாய்
மயூரமங்கலம்
 

விளங்கி வருவது. கண்கூடாய் காணலாம். அன்னையின் பேரருளால் O6)ly. 66t தூற்றப்பெற்றவர்கள் கூட அழகும் அறிவும் கூடிய நன்மக்களைப் பெற்று அன்னைக்குத் தம் வேண்டுதல் காணிக்கையைச் செலுத்தி வருவதனையும் காணலாம். கொடிய, தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப்பெறுகின்றன என்பது பொய் கலப்பில்லாத உண்மையாகும்.
அன்னையின் அருமையையும் புகழினையும் அருள் சித்தரான ராமதாஸர் அகிலம் எங்கும் பரப்பி வருகின்றார். இச்சித்தரின் அரும்பெரும் பணிகளால் வெளியூர்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் பெரும் திரளாய் ஆலயத்திற்கு வந்து அன்னை கருமாரியின் அருளினைப் பெற்றுச் சென்றவண்ணம் இருந்திடுகின்றனர்.

Page 414
2)s
德
'Q
※)
濠
-
f
Éé
金ー
@S
ہح~نمبر
محی.
خ؟
^^Nడ\$"{ бGӘ)S*
திரு 腺 6)
வாவியெல் காவநங்கள் ஈதுசிவலோ ஒதும் திருெ என்று பட்டினத்தாரால் புகழப்ெ புகழ்பெற்ற தொண்டை திருத்தலங்களில் இத்தலமும் ஒன் அமைந்து இருப்பதால் இம் மாநக( அது மிகையான ஒன்றல்ல.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் பெருமையை உடையது இத்திரு6ெ பெற்றிடுவர் என்றும் முத்திக்குச் திருவெண்காட்டு அடிகளாரது (ட என்று தொடங்கும் பாடல் மூலம்
திருவொற்றியூர் என்னும் இருந்து உண்டாகிய மூலாக்கினி கொண்டவராய் ஆதிபுரீஸ்வரர் அம்மையாருடன் எழுந்தருளியுள் என்றும் வடிவுடைநாயகி என்றும் பிரம்ம யோகத்தில் நின் பலகைவடிநாதர் என்றும், எழுத்த என்றும், இத்தலத்து ஆதிபுரீஸ்வ 1250 ஆண்டுகளுக்கு முன்பாக இக்கோயில் திருப்பணி நடைபெற் இத்தலமானது சைவர்க ஆதிசைவர், நம்பூதிரிகள் என் இமயமலையைச் சார்ந்து இரு திருவொற்றியூர் வந்து கெள
 
 
 
 

நவொற்றியூர் 26GDLubb6
லாதீர்த்தம் மண்லெல்லாம் வெண்ணிறு "எல்லாம் கனநாத பூவுலகில் கம் என்று என்றே மெய்த்தவத்தோர்
வாற்றியூர் பற்ற சைவத் திருத்தலம் திருவொற்றியூர் ஆகும். - மண்டலத்தில் உள்ள முப்பத்திரெண்டு சைவத் றாகும். சென்னை மாநகரின் வடக்கு எல்லையாக இத்தலம் ருக்கு திலகம் இட்டதுபோல் இத்தலம் விளங்கிறது என்றால்
என்று சைவக் குரவர் நால்வருள் மூவரால் பாடப்பெற்ற வாற்றியூர் தலம் ஆகும். மெய்யடியார்கள் இத்தலத்தில் பக்தி சிறந்தது இத்தலம் என்றும் பட்டினத்துப் பிள்ளையாரான ட்டினத்தார்) கண்டங்கரியதாம் கண் மூன்று உடையதாம் அறிய முடிகிறது.
இத்திருப்பதியில் பிரம்மனால் செய்யப்பட்ட யோகத்தில் ரி சூழப்பட்ட அக்னி வடிவாய் தீண்டிட இயலா திருமேனி அருஉருவமாய் சித்சக்தியாகிய திரிபுர சுந்தரி நாயகி ளார். இத்தலத்து நாயகியான அம்மனை திரிபுர சுந்தரி
அழைக்கின்றனர். ாறு ஜோதிவடிவாய் பல கையாய்த் தோன்றியபடியால் றியும் பெருமான் என்றும்மாணிக்கத் தியாகேசர் ரருக்குப் பிற பெயர்களும் வழங்கப் பெறுகின்றன. சுமார் ஆண்டுவந்த தொண்டைமான் சக்கரவர்த்தி அவர்களால் றதாகத் தல புராணம் கூறுகின்றது. ளுக்கு மட்டுமல்லாது வைணவர், ஸ்மார்த்தார், ஒசர், று பிற சமயத்தவர்களும் வழிபடும் தலமாக உள்ளது. ந்த கெளட நாட்டில் இருந்து வந்த ஆதிசைவர் சிலர் ாடீஸ்வரரை பிரதிஷ்டைசெய்து பூஜைகள் செய்து
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர்-2000

Page 415
வந்தமையால் கெளடீஸ்வரர் ஆலயம் ஒன்று இங்குள்ளது. இச்சந்நிதியில் அக்காலம் தொடங்கி பிரணவ மந்திரமான ஓம் என்ற ரீங்காரம் ஒலித்திடுகிறதாக ஐதீகம். ஆனால் அப்பிரணவ மந்திரம் ஒலி தற்போது கேட்பது இல்லை.
இத்தலத்தில் கம்ப நாட்டாழ்வார் சிலகாலம் தங்கியிருந்து கம்பராமாயண காவியத்தின் சில பகுதிகளை எழுதிக்கொண்டு இருந்தபோது, மதுரையம்பதியை அக்னிக்கு இரையாக்கிய கற்புத் தெய்வமாம் கண்ணகி துர்க்கை வடிவாய் பந்தம் பிடித்ததாக தலவரலாறு கூறுகிறது. இவ்வம்மனை ஆதிசங்கரர் இத்தலத்தில் மந்திர யந்திர ஸ்தாபனத்தை இட்டுப் பாறை அமைத்தபடியால் இவ்வம்மனை வட்டப்பாறை அம்மன் அழைக்கின்றனர். இவ்வம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். முற்காலத்தில் இவ்வம்மனுக்கு பலிகள் கொடுக்கப்பட்டு வந்தாலும் தற்போது அம்முறையானது ஜீவகாருண்ய அடிப்படையில் தடுக்கப் பெற்றுள்ளன.
திருவருட்பா வழங்கிய வடலூர் வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் பல ஆண்டுகளாக இத்தலத்திற்கு வந்து வழிபட்டதாகவும், வடிவுடையம்மனே அவருக்கு அமுது படைத்ததாகவும் கூறப்படுகிறது. பட்டினத்து அடிகளார் இத்தலத்தில்தான் முக்தியடைந்தார்.
சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில் சங்கிலி நாச்சியாரை மணம் புரிந்தார் என்ற நிகழ்வு தலபுராணக் கூற்றுப்படி தெரிய வருகிறது.
திருவெண்ணைய் நல்லூரில் இருந்து தல யாத்திரைகள் மேற்கொண்ட சுந்தரர் பண்ருட்டியை அடுத்து திருவதிகைக்கு அருகாமையிலுள்ள சித்தவட மடத்தில் தங்கியிருந்த போது ஒருநாள் இரவில் சுந்தரருக்கு திருவடி சூட்டி எனை அறியாயோ” என்று கூறி மறைந்தார். இது கேட்ட சுந்தரர் “தம்மானை
மயூரமங்கலம்
 

அறியாத சாதியர் உளரே” என்று திருப்பதிகம் பாடினார். பின் சிதம்பரம் சென்று கூத்தப்பெருனை தரிசித்து திருவாரூர் சென்று இறைவன் ஆணைப்படி பரவை நாச்சியாரை மணம் புரிந்தார். பின் பல சிவாலயங்கள் சென்று தரிசித்து இறுதியில் திருவொற்றியூர் தலம் வந்து அடைந்தார். அது சமயம் மாசி மாதம் மகநட்சத்திரத்தன்று மகிழ மரத்தடியில் அமர்ந்து சுந்தரர் சங்கிலிநாச்சியாரை மணம் புரிந்தார் திருமணம் முடிந்ததும் திருமணக்கோலத்துடன் திருவொற்றியூரினையும் சங்கிலி நாச்சியாரையும் எந்நாளும் பிரியேன் என்று வடிவுடைநாயகி சமேதரரான தியாகேசரை மும்முறை வலம் வந்து சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அச்சத்தியம் தவறி திருவொற்றியூரையும்சங்கிலி நாச்சியாரையும் சுந்தரர் நீங்கிச் சென்றமையால் பார்வை பறிபோய் பின் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருவருளால் பார்வை மீளப்பட்டார் என்று தலபுராணம் கூறுகின்றது. மகிழ மரம் தல விருட்சம் ஆகும். இத்தலத்தில் உறைந்திடும் மகிமை பொருந்திய வட்டப்பாறை அம்மனுக்கு சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தன்று உற்சவம் ஆரம்பம் ஆகிறது. பின்வரும் நாட்கள் உற்சவம் தொடரப்பெற்று சித்திரை மாதத்து அமாவாசை அன்று உற்சவம் பூர்த்தியாகின்றது. இந்த வட்டப்பாறை அம்மன் தம் அடியார்கள் வேண்டிடும் அனைத்தையும் அளித்திடும் தெய்வமாக விளங்குகிறாள். மனதினை ஒருமுகப்படுத்தி தூய சிந்தனையோடு இவ்வம்மனை வழிபட்டால் கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளிடுகின்றாள்.
ஆடி மாதத்து பூரத்திருநாளன்று வடிவுடை நாயகி அம்மனுக்கும் ஆதிபுரீஸ்வரருக்கும் சந்தனக்காப்பு நடைபெறுகின்றது. இவ்விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. புரட்டாதி மாதத்தில் நடைபெறும் உற்சவமான நவராத்திரியன்று லட்சார்ச்சனையும் அம்மன் அலங்கார திருவீதிஉலாவும் நடைபெறுகின்றன.

Page 416
6ନ୍ତି
శ్లో
影
ళ్ళ
器
*
S.
è
i
முன்னொரு காலத்தில் இருந்தபடியால் இத்தலத்தை தில்6 காளி கோயில் ஒன்று இருந்தது. பூ அம்சமான காளி தானே இங்கு அ வனத்திற்குள் அனுமதிப்பது இல்ல இதுகண்ட இறைவன் தி வெளியேற்றிட தில்லைவனத்தி இறைவனை காளியானவள் வன காரணமாய் தில்லைக் காளிக்கு அ நடனத்தில் சென்று முடிந்தது.
அதன்படி ஆடலரசரும் தில் தோற்றுப் போகிறார்களோ அவர்க முடிவெடுத்தனர்.
இம்முடிவின்படி தில்லைக் இருவரும் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக ஆடத் துவங்கியது திருமால் பிரம்மன். இந்திரன், தோ விட்டு வைக்கவில்லை.
இவ்வாறு பலவிதமாய் ஆடி ஆடிய ஆட்டம் அனைத்தையும் ஒ ஆடலரசருக்குதான் இளைத்தவள் ஆட்டம் அமைந்தது.
முடிவில் ஆடலரசன் ஊர்த்து நோக்கி உயர்த்தி ஆடினார். இது கலக்கத்திற்குக் காரணம் அவள் தாண்டவத்தை தன்னால் ஆட இ தோல்வியைத் தானே ஒப்புக் கொண் வனத்தை விட்டு நீங்கி அதன் வட
 
 
 

தில்லைக்
TGflutbudget
தில்லைச் செடிகள் நிரம்பப் பெற்ற பெருவனமாக லைவனம் என அழைத்து வந்தனர். ஆதியில் இப்பகுதியில் அவளைத்தில்லைக் காளி என அழைத்தனர். பராசக்தியின் பூட்சி செய்து வந்தமையால் வேறு எவரையும் இத்தில்லை
6. ருவுளம் கொண்டு காளியை அவ்வனத்தில் இருந்து ற்கு ஆடலரசனாக எழுந்தருளினார். அவ்வாறு வந்த த்துக்குள் நுழைந்திடக் கூட அனுமதிக்கவில்லை. இதன் பூடலரசருக்கும் வாக்குவாதம் உண்டானது. வாதம் முடிவில்
ஸ்லைக் காளியும் நடனம் ஆடுவது எனவும் இருவரில் எவர் ள் தில்லை வன எல்லைக்குள் இருந்திடக்கூடாது எனவும்
காளியும், ஆடலரசரும் நடனம் ஆடத் தொடங்கினர். சளைத்தவர் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக ம் அண்டசராசரங்கள் அனைத்தும் நடுங்கின. இந்நடுக்கம் வர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், யட்சர் என எவரையும்
வரும்போது நடனம் உச்சநிலையை அடைந்தது. ஆடலரசன் ன்று விடாமல் தில்லைக் காளியும் ஆடினாள். ஆட்டத்தில் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாய் அவளின் சரிநிகர்
துவதாண்டவம் ஆடத்துவங்கி தமது இடது பாதத்தை வான் துகண்ட தில்லைக் காளி மனம் கலங்கினாள். அவளது ா ஒரு பெண் என்பதால் ஆடலரசர் ஆடிய ஊர்த்துவ இயலாமல் போனதே என வருந்தினாள். முடிவில் தன் ாடாள். போட்டியின் நிபந்தனை படி தில்லைக் காளிதில்லை எல்லையை அடைந்தாள் என தல வரலாறு கூறுகின்றது.
பூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 417
இவ்வம்மன் குறித்தும் இன்னும் ஒரு தலபுராணமும் கூறப்படுகின்றது. காசியம்பதியில் வியாக்ரபாதர் என்பவர் வாழ்ந்து வந்தபோது, தனது தந்தை வாயிலாக தில்லையம்பதியைக் காண வேண்டி அவர் தில்லைக்கு வந்ததோடு அங்கு இருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் அமர்ந்து தவத்தினை மேற்கொண்டார். அப்போது அதே ஆலமரத்தின் அடியில் சுயம்புவாய் இலிங்க வடிவொன்று தோன்றியது.
அதனைக் கண்ட வியாக்ரபாதர் அந்த சுயம்பு வடிவான இலிங்கத்தையே நித்தமும் பூஜை செய்து வழிபடலானார். இலிங்கத்தின் அர்ச்சனைக்கு என வண்டு மொய்த்திடாத மலர்களைப் பறித்து வரவேண்டி அதிகாலைப் பொழுதிலேயே முனிவர் புறப்பட்டு விடுவார். இருட்டிலும் தம் பார்வை தெளிவாக இருந்திட இறைவரம் பெற்று இருந்தமையால் இம்முறைப்படி வெகுகாலம் தவம் இயற்றி சிவபூஜை செய்து வந்த போது அவ்விடத்திற்கு பதஞ்சலி முனிவரும் வருகை தந்தார்.
இறைவனின் ஆனந்தத் திருநடனத்தினை தேவருலகில் கண்டு உயர்ந்த பஞ்சலி முனிவர், பூவுலகிலும் இறைவனின் நடனத்தை காண விரும்பினார். இறைவனாம் திருமாலிடம் தம் விருப்பத்தை பதஞ்சலி முனிவர் கூறிய போது தில்லைவனத்திற்கு சென்றிட ஆணை பிறப்பித்தார் அவரின் திருவுளப்படியே பதஞ்சலியும் தில்லைவனம் வந்தடைந்தார். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் ஒரு சேர அவ்வனத்திலேயே தவம் இயற்றி வரலாயினர். தவம் கண்டு மெச்சிய இறைவன் தில்லைவனத்திற்கு வந்து அவர்களின் ஆசைப்படியே திருநடனம் புரிந்திட திருவுளம் கொண்டார்.
மயூரமங்கலம்
 

அப்போதுதான் தில்லைக் காளியுடன் ஆடலரசருக்குவாதம் உண்டாகி முடிவில் நடனப் போட்டி நடந்தது. அப்போட்டியில் தில்லைக் காளியை வென்று அவளது செருக்கை அடக்கியதாக தலவரலாறு கூறுகின்றது.
தில்லை காளியம்மன் ஆலயம் சிறியதாய் இருந்தாலும் தில்லைக் காளியானவள் அப்பகுதி மக்களுக்கு எல்லைக் காவல் தெய்வமாக விளங்கிடுகிறார். இக் கோயிலில் இரண்டு காளிசிலைகள் உள்ளன. ஒரு சிலையில் காளியானவள் சர்வ லிங்கங்களுடன் விளங்குகின்றாள். மற்றொன்று சிவப்பு:ஆடை உடுத்தியவளாய் உச்சிமுதல் உள்ளங்கால் 660) குங்குமம் அப்பியவளாய் கோலம் கொண்டருளுகின்றாள்.
தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்த்திடுவதே தில்லைகாளியம்மனின் பெரும் பணியாய் உள்ளது. இக்கோயிலில் பில்லி, சூன்யம் போன்ற வைப்புக்களால் பாதிப்புக்கு உள்ளானவர்கள், புத்தி பேதலிப்பு அடைந்தவர்கள் வந்து அன்னையாம் காளியம்மனை வழிபட்டால் நிவர்த்தி அடைவர்.
இந்நகரத்து மக்களின் பெரும்பாலோர் தங்கள் வீடுகளிலோ அல்லது திருமணக்கூடங்களிலோ தங்கள் இல்லத்துத் திருமணங்களை நிகழ்த்துவதை விட தில்லையம்மன் சந்நிதியில் நடத்துவதை தங்கள் பாக்யமாக கருதுவதால் முகூர்த்த நாட்களில் பல திருமணங்கள் நடைபெறுகின்றன. இக்காளியம்மனை அர்ச்சகர் மட்டுமல்லாது ஜாதி மத இன பேதங்கள் இன்றி அனைவரும் தொட்டு வணங்கிட அனுமதியுண்டு.

Page 418
கொங்கு நாட்டின் வட ே மாரியம்மன் சக்தி வாய்ந்த தெய்வ வேண்டியவாறு கொடுத்து அருளு மாவட்டத்தில் சத்தியமங்கலத்தில் தொலைவில் உள்ளது. இத்த அமைந்துள்ளாள், இத்தலத்தில் மூ அம்பிகையான மாரியம்மன் எழுந் செய்தும் வருகின்றாள்.
இத்தலத்து ஆலயம் மண்டியிருந்திருக்கின்றது. இக்கா நஞ்சைய் கவுண்டனூர், நூண வெள்ளியம்பாளயம் போன்ற கிரா தங்கள் மாடுகள் மற்றும் ஆடுகை ஒட்டி வரும் ஆடுகளையும் மr பாதுகாப்பார்கள். இப்படி அமை வெளியேறி இவ்வனத்தில் சுயம் தன்மடியில் ஊறியிருந்த பாலைச்
இம்மாதிரி பல நாட்க உரிமையாளருக்கு தெரிந்திட வி உணர்ந்த குடியானவன், ஒருநாள் இருந்திடும் இடத்தில் பொழிந் அற்புதமான விஷயம் இருந்திட மாடு மேய்த்திட வந்த மற்ற குடிய வரவழைத்தான். பின் அன்ைவ அங்கு இருந்த புதர்களை விலக் புற்கள் சூழ்ந்து இருந்த ஒரு புற் கண்டனர். சுயம்புவடிவாய் அதிசயித்ததோடு சுற்றியுள்ள சி தகவல் அனுப்பி வைத்தனர்.
 
 

Ιωσιωπή DTDD6)
மற்கு எல்லையில் வீற்றிருக்கும் அருள் மிகு பண்ணாரி ம் ஆகும். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டியதை ம் தெய்வம் அவள். இவ்வன்னை பண்ணாரியம்மன் ஈரோடு இருந்து மைசூர் செல்லுகின்ற பாதையில் 12 கிலோமீட்டர் லத்தில் பண்ணாரி அம்மன் சுயம்பு லிங்க வடிவாய் முர்த்தி மிகவும் சிறப்புடையது ஆகும். இப்படி சுயம்புவாய் தருளி பற்பல அற்புதங்களை இத்தலத்தில் செய்துள்ளாள்.
உருவாவதற்கு முன் புதர்கள் நிறைந்த காடாக ாட்டை சார்ந்து இருந்த ஊர்களான எம்மனூர், பரிசபாளய்ம், மத்தி போன்ற ஊர்களில் இருந்தும் பீர்க்கம்பாலயம், மங்களில் இருந்தும் குடியானவர்கள் மாடு மேய்ப்பதற்காக ள ஒட்டிக் கொண்டு இக்காட்டுக்கு வருவார்கள். இப்படி ாடுகளையும் இரவு நேரங்களின் பட்டிகள் அமைத்து த்துள்ள பட்டியில் இருந்து ஒரு நாள் காராம் பசு ஒன்று ம்பு வாக தோன்றி இருந்த அம்பிகையான மூர்த்திக்கு சொரிந்தது.
ள் நடைபெற்று வந்தும் அந்த காராம் பசுவின் ல்லை. இப்பசுவிடம் பால் கறந்திட இயலாமல் இருப்பதை ர் இப்பசு தன் மடியில் சுரந்து இருக்கும் பாலினை சுயம்பு திடுவதை கண்டு அதிசயித்தான். இதில் ஏதோ ஒரு வேண்டும் என்பதை உணர்ந்த குடியானவன், தன்னுடன் ானவர்கள் மூலம் ஊர்ப்பெரியவர்களுக்கு தகவல் அனுப்பி ரும் காராம் பசு பால் பொழிந்திட்ட இடத்துக்கு சென்று கிப் பார்த்தனர். அங்கு கனாங்கு புல் என்ற ஒரு வகை ற்றும் அதனருகில் ஒரு இலிங்கத் திருவுருவும் இருக்கக் இருந்த அந்த மூர்த்தியையும் புற்றினையும் கண்டு கிராமப் பெரியோர்களுக்குக் பெருந்தனக்காரர்களுக்கும்
யூரபதிபூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 419
இப்படித் தகவல் அனுப்பித் எல்லோரும் சுயம்பு மூர்த்தி இருந்த இடத்திற்கு வந்து, அது தோன்றியது குறித்து ஏதும் தோன்றாமல் செய்வதறியாது திகைத்து நின்ற போது, அக்கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு அருள் (தெய்வ ஆவேசம்) வந்து சுயம்புவாய்த் தோன்றி இருக்கும் தன்னை பண்ணாரி மாரி எனக் கொண்டாடிப் பணியும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இத்தெய்வ வாக்கு கிடைத்த மறுகணமே அங்கு கூடியிருந்தோர் அவ்வனத்தில் இருந்த செடிகளையும் கிளைகளையும் கொண்டு சிறு பந்தலை அச்சுயம்பு இருந்த இடத்தில் அமைத்து உடன் தேவியை பூஜித்தனர். பின் மற்ற மாரியம்மன் தலங்கள் போலவே இத்தலத்திலும் திருவிழாவைபவங்கள் நடத்தி வழிபடத் துவங்கினர். பின் சில காலம் கழித்து சிறு கூரை ஒன்றை வேய்ந்து கோயில் அமைத்தனர். இக்கூரை வேய்ந்த கோயில், சிறிது காலத்திற்கு பின் ஒடு வேய்ந்த கோயிலாகவும், பின் U6) வருடங்களுக்குப் பிறகு தற்போதுள்ளகோபுரத்துடன் கூடிய கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இத்தலத்தில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் பெளர்ணமிக்கு முதல் பதினைந்தாம் நாள் உத்திர நட்சத்திரத்து அன்று இரவு சிக்கரசன்பாளையம் புதுTர், வெள்ளியம்பாளையம் போன்ற ஊர்களில் இருந்து ஊர்மக்களும், பெருந்தனக் காரர்களும் தர்ம கர்த்தாக்களும், கோயில் அலுவலர்களும் ஒன்று கூடி அம்மனுக்கு அபிஷேகம் செய்வித்து அலங்காரம் செய்து பூச்சாற்று நடத்திடுவார்கள்.
பூச்சாற்று நடந்த மறுநாள் தேவியாம் பண்ணாரி அம்மனை சப்பரத்தில் எழுந்தருளச் செய்து அலங்காரம் செய்து சுற்றியுள்ள அனைத்து ஊர்களுக்கும் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர். அங்கங்கே வேண்டுதல் காரர்கள் அனைவரும் பூஜைகள் செய்தும் காணிக்கைகள் செலுத்தியும் வணங்கிடுகிறார்கள். இப்படி அம்மன் புறப்பாடு நடைபெறும் போது அருந்ததி இனத்தாரும் சோலகர் என்ற மலை ஜாதி மக்களும் தங்களுக்கான வாத்தியங்களை முழக்கிவருவர். இப்படி தாரை தப்பட்டையுடன் பண்ணாரி அம்மன் ஊர் தோறும் வலம் வருவது காண கண் கொள்ளா காட்சியாக இருந்திடுகிறது.
பூச்சாற்றுதலுக்கு 9ம் நாள் செவ்வாய்க் கிழமை அன்று இரவு அனைவரும் கோயிலில் ஒன்று கூடி
மயூரமங்கலம்

அம்பிகையாம் அன்னைக்கு ஆராதனை செய்து அக்கினிக் கம்பம் நட்டிடுவர். அன்றைய தினத்தில் இருந்து ஒவ்வொரு நாள் இரவும் 15 நாட்களுக்கு சோலகர் மலை ஜாதியினரும் அருந்ததியினரும் தமிழ் வாத்திய முழக்கத்தோடு ஆடிப்பாடி பண்ணாரி அம்மனின் மகிமையைப் போற்றிப் புகழ்ந்திடுவர். இந்த ஆடல் பாடல்கள் அனைத்தும் தமிழ் நாட்டுக்கே உரித்தான கிராமியமணம் கமழும் வண்ணம் இருந்திடும். பூச்சாற்று தினத்தில் இருந்து பதினைந்து நாட்களும் தினமும் அம்மனுக்கு மண்டகப் படி பூஜைகள் நடைபெறும்.
பூச்சாற்றில் இருந்து பதினைந்தாம் நாளான திங்கட் கிழமையன்று சத்திய மங்கலத்தில் இருந்து பண்ணாரி அம்மன் தலம் வரை வாழைமரங்களினாலும் தோரணங்களினாலும் அலங்கரித்து அங்கங்கே தண்ணிர் பந்தல்கள் அமைத்து அன்னையை வழிபட வருகை தரும் பக்தர்களுக்கு தாகம் தணித்திடுவர். இப்படி வரும் பக்தர்கள் அக்கினி கலசம் ஏந்தியும் வேல் சூலம் ஆகியவை தாங்கியும் மேள தாளங்கள் முழங்கிட ஊர்வலமாக திருக்கோயில் சந்நிதிக்கு வருகை தந்திடுவர்.
முதல் நாள் ஞாயிறு அன்று இரவு உற்சவ மூர்த்திகளையும் அம்மனின் அலங்கார நகைகளையும் அலங்காரம் செய்யப்பட்ட சப்பரம் ஒன்று வைத்து தெப்பக்குளத்தருகே பூஜைகள் செய்து கோவிலுக்குக் கொண்டு வந்திடுவர். அன்றைய தினம் இரவில் இப்படி ஊர்வலமாக எடுத்து வரப் பெற்ற ஆபரணங்கள் மட்டும் அலங்கார வகைகள் அனைத்தையும் அம்மனுக்கு சூட்டுவதோடு மலர்களை அம்மனுக்குக் குவித்திடுவர். அம்பிகையை தங்க கவசம் இட்டு, மணிகள், இணைக்கப்பட்ட ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பட்டாடை அணிவித்து அலங்காரம் செய்திடுவர்.
திங்கட்கிழமை காலையில் இருந்தே கோயிலில் பக்தர்கள் பெருவெள்ளமாய் கூடிதங்கள் வேண்டுதலான மெரவணை திருவீதிஉலா செய்திடுவர். இம்மெரவணை திருவீதி உலா,பக்தர்கள் விருப்பப்படி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திலும், வெள்ளிச் சப்பரத்திலுமாக அம்மனை அலங்காரம் செய்து கொண்டு வருவர். இரவு வரை இத்திருவீதி உலா நடைபெறும்.

Page 420
மேலும் ஞாயிறு முதற்கொண்டே திருமுடி களைதல் நடைபெறும். இப்பிரார்த்தனை நிறைவேற்றலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்திடும். பின்திங்கட்கிழமை இரவு கோயில் முன்பாக அக்னிகுண்டம் ஒன்று ஏற்படுத்தப்படும். இந்த அக்னி குண்டத்திலும் முன்கூறிய அக்னி கம்பத்திலும் குடியானவர்கள் தங்களின் விளை பொருட்களையும், கோழி, சேவல் ஆகியவற்றைக் காணிக்கை ஆக்கிடுவர். சூரைத் தேங்காய்கள் சூரையிடப்படும்.
அன்று இரவு சுமார் இரண்டு மணியளவில் அம்மை அழைப்பு நடைபெறும். இத்தலத்தில் உள்ள தெப்பக் குளத்தில் இருந்து அம்மை அழைப்பு புறப்பட்டு குண்டத்தருகே வரும். இச்சமயத்தில் குண்டத்தைச் சுற்றிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி இருப்பார்கள். குண்டத்தருகே வந்ததும் அம்மைப் புறப்பாட்டுடன் வந்த அனைவரும் பின் நிற்க திருக்கோயில் பூசாரி பூஜைகள் செய்து முதலில் குண்டத்தில் இறங்குவார் இவரைத் தொடர்ந்து அம்மனை வேண்டிக் கொண்டுட ஆண்கள் பெண்கள் அனைவரும் வரிசையாக குண்டத்தில் இறங்கி நடந்து செல்வர். இந்நிகழ்ச்சி மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை பத்துமணிவரையிலும் நடைபெறும். இவர்களைத் தொடர்ந்து கால் நடைகளான ஆடு, மாடுகள் இறங்கிடும். இத்துடன் குண்டம் மிதித்தல் நிகழ்ச்சி ഗ്രഖg.
பின் மதியம் அம்மனுக்குப் பொங்கலிட்டும் மாவிளக்கு இட்டும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர் அன்று இரவுமின் விளக்குகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அம்பிகையை எழுந்தருளச் செய்து புறப்பாடு மேளதாளம் நாதஸ்வரக் கச்சேரியுடன் நடைபெறும்.
 

இவ்வூர்வலத்தின் போது தமிழ்நாட்டு கிராமியக் கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியவை நடைபெறும்.
புதனன்று அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் அருந்ததியினரு சோலகர் மலை ஜாதியினரும் அம்மனுக்கு பொங்கல் இட்டும் மாவிளக்கு இட்டும் வழிபடுவர். நள்ளிரவில் அக்னிக் கம்பம் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். இப்படி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் அக்னிக் கம்பம் தலத்தில் உள்ள முன்கூறிய தெப்பக்குளத்தில் விடப்படும்.
வியாழனன்று காலை மஞ்சள் நீராடல் உற்சவம் நடைபெறும். திருக்கோயில் சார்பாக அன்னதானம் அன்று நடைபெறும். பின் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இக்குண்டத் திருவிழா நடைபெற்ற எட்டாம் நாள் திங்கட்கிழமையன்று அம்மனுக்கு மறு பூஜை நடக்கும்.இப்பூஜையைக் கண்டு அம்மனருள் பெற்றிட ஞாயிற்றுக்கிழமை இரவு முதற் கொண்டே திருக்கோயிலில் பக்தர் கூட்டம் அதிகரித்திட ஆரம்பிக்கும். ஞாயிறு இரவே இப்பூஜைக்காக அம்மனை அலங்கரித்து பக்தர்களின் அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடைபெற்றிடும்.
இம்மறு பூசைக்கு அடுத்து வரும் வெள்ளிக் கிழமையன்று அம்மனுக்கு திருவிளக்கு பூசை நடைபெறும். இப்பூஜையில் கலந்து கொள்ள தமிழகம் எங்கும் இருந்து பெரும் திரளாகப் பெண் பக்தர்கள்கூடி அம்மனை வழிபட்டு அவளருள் பெற்றிடுவர். திருவிளக்கு பூசை நடைபெற்று முடிந்ததும் வழக்கமாய் நடைபெறும் இன்னிசை கச்சேரியுடன் இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் பண்ணாரி அம்மன் குண்டத் திருவிழா நிறைவுபெற்றிடும்.
حیح۔۔۔۔۔۔
శ్రీ
家重-T ༢ ཡོད། ང་
營
3.
it.
மயூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் -2000

Page 421
※ ΣΚ)
激
மயூரமங்கலம்
Dê(බුටGබඛශනන(බුටGබු`දී వ్లో శస్త్రఙ్ఞ
~-്
༤༧འུ་
}
9.
sèl, f
Οη
స్ట్ S)
/
திருநெல்வேலி தென்கா நிலையத்தில் இருந்து சுமார் எட் அமைந்துள்ளது.
இத்தலத்து இறைவன் ப இத்தலத்துத் தீர்த்தம் பாபநாசம் ஆ பிடித்த சகல பாவங்களும் அழிந் விளக்கும் விதமாக ஒரு நிகழ்வு த
இந்நிலையில் ஒன்றாய் ஒருவர் இக்கலவரத்தின் கார6 பயனில்லாமல் போனது. முடிவில் இருவருமே பருவ வயதினை எய் உணர்வு ஏற்பட்ட போதிலும், ஒ( ஒன்று பட்டு திருமணமும் செய் நிலையை அறிந்து துடித்தார். பரிகாரம் காண வேண்டி சாஸ்தி உபாயம் ஒன்றினைக் கூறினார்.
அது படி அவர்கள் இருவி எனவும், அவ்வுடையுடனேயே புண் வரவேண்டும் என்றும், எந்த தீர் அவ்வாடை வெண்மையாகிறதோ என உரைத்தார்.
அந்த யோகியின் அறிவு ஊராகச் சென்று புனித நீரில் நீ அவர்கள் உடுத்தியிருந்த ஆடை மனவருத்தத்தோடு முடிவில் ப தீர்த்தத்தின் படித்துறையைக் உலகம்மையையும் இறைவனார் இறங்கி மும்முறை மூழ்கி எழுந்த
 
 
 
 

uTubtotò 6D SDOD
சி இரயில் மார்க்கத்தில் உள்ள அம்பாசமுத்திரம் இரயில் டு கிலோ மீட்டர் தொலைவில் பாபநாசம் எனும் இத்தலம்
ாபவிநாச ஈஸ்வரர் ஆவார். ஈஸ்வரி உலகம்மை ஆவார். ஆகும். இப்பாபநாச தீர்த்தத்தில் மூழ்கி நீராடினால் நம்மைப் து ஒழிந்திடும். இந்த பாபநாச தீர்த்தத்தின் மகிமையை தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இருந்த சகோதரனும் ஒருவரை சகோதரியும் ஒருவரை ணமாய் பிரிந்து போயினர். ஒருவர் தேடிப் பார்த்தும் இருவருமே காசிமாநாகரினை அடைந்த போது அவர்கள் ப்தி இருந்தனர். ஒரு நாள் இருவரும் அறிந்திட முடியாத ருவர் மீது ஒருவர் கொண்ட பரஸ்பர அன்பினால் மனம் து கொண்டனர். சில நாட்களுக்குப் பின்தான் உண்மை இக்கொடிய செயலைத் தாங்கள் செய்த பாவத்திற்கான ரம் பல கற்றோரை அணுகிய போது ஒரு யோகியானவர்
பரும் அன்று முதல் கருப்பு ஆடையே உடுத்த வேண்டும் ணியதீர்த்தங்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று நீராடி த்தத்தில் மூழ்கி நீராடி வரும் போது கருப்பு நிறமுடைய அப்போதே அவர்கள் செய்திட்ட பாவமும் அகன்று போகும்
ரைப்படியே இருவரும் கருப்பு ஆடைகளை உடுத்தி ஊர் ராடி வரலாயினர். இவ்வாறு பல தீர்த்தங்களில் நீராடியும் களின் நிறமானது மாறியபாடில்லை. இதனால் உண்டான ாபநாசத் தலத்திற்கு வந்தனர். அங்கிருந்த பாபநாச கண்டு, அக்கரையில் நின்று கொண்டு அன்னையாம் பாபநாசேஸ்வரரையும் மனதால் நினைத்து தீர்த்தத்தில் னர். அவர்கள் எதிர்பாராத விதமாய் அவர்களின் கருப்பு
389

Page 422
நிற ஆடை நிறம் மாறி வெண்மை ஆகியிருந்தது. அப்போது அவர்கள் முன்பாக இறைவனும் இறைவியும் தோன்றி அவர்களைத் தம்முடன் அடங்கிடச் செய்தனர் என அவர்கள் பாவம் நீங்கிய வரலாற்றினை தலபுராணம் மூலம் அறிய முடிகிறது.
இத்தலத்து ஆலயம் மிகவும் பெரிய ஆலயமாகும் பார்ப்ப்போரை பரவசப்படுத்தும் விதமாக இவ்வாலயக் கோபுரமானது இவ்வுலக மாந்தர் அனைவரையும் இறைவனையும், இறைவியையும் தரிசிக்க அழைக்கும் விதமாக உயர்ந்து விளங்குகிறது.
கோபுர வாயிலை கடந்து சென்றால் பெரிய பிரகாரம் வருகிறது. இப்பிரகாரத்தின் மேல்புறமாய்களா மரம் ஒன்றுள்ளது. இம்மரத்தின் அடியில் முக்காளலிங்கேசர் தரிசனம் காணலாம். மரத்தில் காணப்படும் மூன்று வடுக்களால் தான் இறைவனை முக்காள ஈசர் என அழைக்கின்றனர்.
 

இவற்றை அடுத்துள்ள நந்தி மண்டபம் மகா மண்டபம் ஆகியவை மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளன. கற்பகிரகத்தில் பாப வினேஸ்வரர் இலிங்க உருக் கொண்டு தரிசனம் தந்து அருளுகின்றார். பிராகாரத்தினுடைய ஒரு மூலையில் சோமாஸ்கந்த உற்சவமூர்த்தியும் அங்குள்ள சிறு மண்டபத்தின் உயர்ந்த பீடத்தில் இறைவனும் இறைவியும் திருமணக் கோலம் கொண்டு அகத்திய முனிவருக்கு தரிசனம் தந்தவாறு காட்சியளிக்கின்றனர். பீடத்தின் அடியில் அகத்திய முனிவர் தம் இல்லாள் லோபாமுத்திரையுடன் இறை தரிசனம் கண்டவாறே உள்ளார். இறைவனின் சந்நிதிக்கு இடப்புறமாக உலகம்மை சந்நிதி அமைந்துள்ளது. திருமாலாகபட்டவர் பூரீ தேவி, பூதேவி தாயார்களுடன் பிரத்தியேட்சம் தருகின்றார்.
மயூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 423
发
(○ぷ6ーやゲ
3)
送〉 @ノ
Ο
鲁
率برمحہ
3. 3.
ལྷོ་
*ල
గ్రనై
Ν
மயூர மங்கலம்
"EGSFORÇ
බ්‍රබුදෙවන(යූටGබු`දී
○ : w 'M
S) క్సిడ్లతో
f
O
○次
Gluf
புராணக் கதையின்படி தந் மீண்டும் உயிர் பெற்று மாற்று என்ற பெயர் உண்டானது.
முன்பொரு சமயம் வேற்று விற்பனை செய்திட வேண்டி சென்
இவர்கள் பெண்களுக்கு வாழ்த்திடும் வண்ணம் அவர்களுக் வழக்கமாகும். அதனால் வளையல் செல்லும்போது உடன் மஞ்சளும் கு இவ்வாறு இருக்க ஒரு சமய இச்சமூகத்தைச் சேர்ந்த வளையல் சேர்ந்தார். நெடுந்தூரம் நடந்து வந் மரத்தடியில் தன்னிடம் இருந்த வ6 கண் அயர்ந்தார்.
பின் கண் விழித்துப்பார்த்த காணாமல் திகைத்தார் அந்த வியா அந்த வளையல் மூட்டையானதுவே விழுந்து கிடந்தது.
இதனைக் கண்ட அந்த வ6 எடுத்து புற்றுக்குள் விட்டு உள்ளிரு துழாவினார். இப்படி அவர் துழாவும் மோதியது போன்று கணிர்' என்று பயந்து நடுங்கிய வளையல் வியா வேதனையுடன் ஊர் திரும்பினார்.
அன்றையதினம் இரவு அவ்வி அம்பிகையாம் அன்னை தோன்றி, ெ பவானியாகிய நான் சுயம்புவாய் குடி தொழுதிடும் வண்ணம் எமக்குத் திரு அம்பிகையின் கட்டளைப்படி சேர்ந்து பெரிபாளையத்து அம்மனுக்
 
 
 
 
 

யபாளையத்து
அமமன
தையின் சொற்கேட்டு மைந்தனாகிய பரசுராமன் கொல்ல, அங்கத்தைப் பெற்றமையால் ரேணுகா தேவிக்கு மாதங்கி
ஊரில் இருந்த பலிஜா நாயுடு சமூகத்தினர் வளையல் னைக்கு வந்து செல்வர். வளையல் அணிவித்தும் அப்பெண்களை மங்கலமாய் கு மஞ்சளும் குங்குமமும் கொடுத்திடுவர். இது அவர்கள் வியாபாரத்திற்காக பலிஜா நாயுடு சமூகத்தினர் புறப்பட்டுச் |ங்குமமும் கொண்டு செல்வார்கள். பம் சென்னைக்கு வந்து விட்டு தமது ஊருக்குத் திரும்பிய வியாபாரி திரும்பும் வழியில் பெரிய பாளையத்திற்கு வந்து தமையால் உண்டான களைப்பு நீங்கிட அங்கிருந்த வேப்ப ளையல் முடிச்சினை வைத்துவிட்டு அமர்ந்து சற்று நேரம்
போது தன்னருகே வைத்திருந்த வளையல் மூட்டையைக் பாரி. சுற்றும் முற்றும் அவர் அம்மூட்டையைத் தேடியபோது ப்பமரத்துக்கு சற்றுதொலைவில் இருந்த புற்று ஒன்றினுள்
ளையல் வியாபாரி ஒரு நீண்ட இரும்புக் கம்பி ஒன்றினை க்கும் வளையல் மூட்டையை வெளியே எடுத்திட வேண்டித் போது அந்த இரும்புக் கம்பியானது பெரும்பாறை ஒன்றில் ஒசையினை எழுப்பியது. இவ்வோசையினைக் கேட்டதும் ாரி வளையல் மூட்டையை வெளியே எடுத்திட பயந்து
ரியாளையத்து வேப்பமரத்துப் புற்றில் ரேணுகா தேவியான கொண்டுள்ளேன். கவலையை விட்டு தினமும் என்னைத் க்கோயில் ஒன்றினை எழுப்பிடு என்று கூறி மறைந்தாள்.
டியே வளையல் வியாபாரியும் மற்றவர்களும் ஒன்றாய்ச் க்குத் திருக்கோயில் ஒன்றினை எழுப்பினார்கள். மூலக்

Page 424
கர்ப்பக்கிரகத்தில் உள்ள அம்பிகையின் தலைப்பகுதியில் வளையல்கார வியாபாரி இரும்புக் கம்பி கொண்டு துழாவியதால் உண்டான வடுவை இன்றும் காணலாம். சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் அன்னையானவள் கவசம் இடப்பட்டு முன்புறமாய் அமர்ந்து இருக்க, பின்புறமாய் அன்னையின் திருவுருவம் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து தலை நாகமானது குடை பிடித்திடும் வண்ணம் அன்னையின் சந்நிதி அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.
உலக மக்கள் அனைவரையும் காத்தருளும் வண்ணம் அன்னையானவள் நான்கு கரங்கள் கொண்டு திகழ்கின்றாள். வலது முன்புறக் கரத்தில் சக்தி ஆயுதமும் பின் புறக்கரத்தில் சக்ராயுதமும் ஏந்தப்பட்டுள்ளன. இடது முன்புறக் கையில் கபாலமும் பின்புறக் கையில் சங்கும் ஏந்தப்பட்டுள்ளன.இடது முன்புற கையில் ஏந்தப்பட்டுள்ள கபாலத்தில் முத்தேவிகளும் இருப்பதாக கூறப்படுகின்றது. அன்னையானவளின் முக அமைப்பு எல்லோரையும் கவர்ந்து இழுத்திடும் வண்ணம் அமைந்துள்ளது. எடுப்பான மூக்கும், அதில் மின்னி ஒளிர்ந்திடும் மூக்குத்தியும், இதழ்களில் தவழும் புன்னகையும், அன்னையைப் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருந்திடுகின்றது. அவளுக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும் பட்டுப் புடவையும், ஆபரணங்களும் அவளின் தெய்வீக எழில் உருவுக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றன என்றும் கூறலாம். சுயம்பு மூர்த்தியான அம்பிகையானவள் கவசம் பெற்று முன்புறமாக அமர்ந்து அருள்பாலிக்க, பின்புறமாய் சிலா வடிவம் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பிகையின் பக்தர்கள் தங்கள் திருமணத்தின் போது ஒரு புதிய சடங்கு ஒன்றினை நடத்தி வருகின்றனர். திருமணத்தன்று மணமகன் மணமகளுக்கு கட்டியதாலியைக் கழற்றி அம்பாளுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். பின் அன்னையின் அருள் மிகுந்து இருக்கும் மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்றுக் கொண்டு, அதனை, அருளும் நீண்ட ஆயுளும் தருகின்ற அன்னையின் அருள் பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்வதை இன்றும் காண முடிகின்றது.
இப்படிக் காணிக்கை செலுத்திடுவதால் காணிக்கை செலுத்தியவர்களின் குடும்பம் தழைத்து ஓங்குவதோடு அப்பெண்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் தந்து தாலிக்கு வலிமையைத் தந்தருளும் அன்னையாக அம்பிகை திகழ்கின்றாள்.

கரகப் பிரார்த்தனை, வேப்ப ஆடைப் பிரார்த்தனை, முடி காணிக்கைப் பிரார்த்தனை, அடி தண்டப் பிரார்த்தனை, கோழி சுற்றி விடும் பிரார்த்தனை 66 பலவாய் இக்கோயிலில் வேண்டிக் கொள்ளப்படுகின்றன.
இதில் வேப்பஞ்சேலைப் பிரார்த்தனை என்பது வேப்ப இலைகள் கயிறுகளால் கட்டி உடலில் ஆடையாகச் சுற்றிக் கொண்டு மும்முறை ஆலயத்தைச் சுற்றி வருவதாகும். இப்பிரார்த்தனை செலுத்திடும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திடும்.
அடிதண்டப் பிரார்த்தனை என்பது ஈரத்துணி உடுத்தி தேங்காய் ஒன்றினை சுற்றுப் பிரகாரத்தில் உருட்டி விட்டு பின் அந்த தேங்காய் நின்றிடும் இடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அம்மனுக்குத் தங்கள் பிரார்த்தனையைச் செலுத்துவது ஆகும்.
கோழி சுற்றி விடும் பிரார்த்தனை என்பது பெரிய பாளையத்துக் கோயிலில் மிகவும் முக்கியமான பிரார்த்தனையாகக்கருதப்படுகின்றது.சுமார்முப்பதுநாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக உயிர்பலி கொடுத்திடும் தலமாக பெரியபாளையம் தலம் இருந்து வந்தது. பின் ஜீவகாருண்ய அடிப்படையில் இவ்வாறு உயிர்பலி கொடுப்பது தடுக்கப் பெற்று ஒரு கோழியை உயிருடன் ஆலயத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் உண்டானது. இதனையே கோழி சுற்றி விடும் பிரார்த்தனை எனக் கூறுகிறார்கள். உயிருக்கு உயிர் கொடுக்கும் பிரார்த்தனையாக கருதப்படுவதால், குடும்பத்தில் உள்ளவருக்கு உடல் நலம் குன்றினால் உயிர் கொடுத்திடுவதாக அம்மனை வேண்டிக் கொண்டால் அம்மன் அந்தநபரின் வியாதியைக் குணப்படுத்திவிடுகிறாள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இத்தலத்தில் அம்மனுக்கு எடுத்திடும் ஆடிப்பெருவிழா மிகவும் விமரிசையுடன் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தின் முதல் வாரம் சூரிய பிரபை, இரண்டாவது வாரம் அம்மன் குதிரை வாகனம் ஏறியும், மூன்றாவது வாரம் நாக வாகனம் ஏறியும், நான்காவது வாரம் சிம்ம வாகனம் ஏறியும், ஆவணி மாதம் முதல் வாரம் அன்ன வாகனம் ஏறியும், இரண்டாம் வாரம்சந்திரபிரபை, பின் அடுத்தடுத்துவரும் நான்கு வாரங்கள் அன்னையின் திருவீதிரத உற்சவமும் நடைபெறும். இந்நாட்களில் பலவகை மேள தாளங்களுடன் வாண வேடிக்கைகளும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. இப்பெருவிழாவின் முடிவாக தொடர்ந்து நான்கு வாரங்கள் அம்மனுக்கு விடையாற்றி உற்சவம் நடைபெறுகின்றது.
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 425
g
yܪ
ତ୍ରି
\\
( GEG?
XO)
9SS(*როპოლი
9.
Yగ్రి
S
,ޙީ{
மயூரமங்கலம்
༤།། CNMMNMNATYRf
ଽନ୍ତି
g/
O
හී
6S
R
ಘ್ವಿ
༦)སྤྱི་
3.
କଙ୍କ
影
5
ジ
برمنی
&
影
திருக்குற்றாலமலை முச் திரிகூட மலை எனவும் அழை முச்சிறப்புகளினையும் இத்திரிகூட ஒரு அற்புத தத்துவத்தினை உண திருக்குற் அதன் மு: Althumøøpsvu இம்மலையில் உள்ள மூன் மும்மூர்த்திகளும் உலகினைக்காத் திருக்குற்றால மலையே அன்ன பெருக்கெடுத்து ஓடிவரும் அருவி போற்றி உரைக்கின்றனர்.
அன்னையின் கருணை வெ உலகத்து உயிர்கள் அனைத்தும் இவ்வகையில் உடலுக்கும், உயிர்க்கு இன்பத்தையும் ஊட்டிடும் மலை அ உரைத்தால் அது மிகையான ஒன் அன்னை பராசக்தியின் தி திகழ்கிறது. இக் கருத்தினை ( உணர்ந்திட முடியும் இம்மலையின் இம்மலையில் இருந்து மெல்லிய பூ வட்டமிடும் கருமேகத்தி6ை பூங்காற்றினை அன்னையின் நாசி அதனால் திரிகூடமலை எனக் கூ திகழ்ந்திடும் அன்னையாம் பாராச உணர்த்தும் அற்புதத் தத்துவமும் ! குற்றாலம் எனும் இத்தி மேலோங்கித் திகழ்ந்திடும் தலமா
 
 
 
 
 

க்குற்றாலத்து TöUfUGMTUldß
சிகரங்கள் உடையதாக விளங்கிடுவதால் இம்மலையை க்கின்றனர். சிகரங்கள், அருவிகள், மலை என்ற மலையானது பெற்று இருப்பதினால் இதன் அமைப்பானது ர்த்திடும் மலையாகவும் விளங்கிடுகிறது. றால மலையே திருத்தலம் ஆகும். ச்சிகரங்கள் மும்மூர்த்திகள் ஆவர். பின் அருவியே தீர்த்தமும் ஆகும். ாறு சிகரங்களும் மும்மூர்த்திகளைக் குறிப்பதாகவும், தருளும் அன்னையாம்பராசக்தியின் குழந்தைகள் எனவும் னை பராசக்தியின் வடிவாகவும் மலையில் இருந்து யே அன்னை பராசக்தியின் கருணை வெள்ளம் எனவும்
பள்ளமாகிய திருக்குற்றாலமலை அருவியில் நீராடும்போது தளிர்க்கின்றன. நீராடும் நம் உடல் சிலிர்க்கின்றது. நம்மட்டுமல்லாது மனித உள்ளங்களுக்கும் தனிவலிமையும் ருவியை அன்னை பராசக்தியின் கருணை வெள்ளம் என றல்லவே! ருவுருவே பச்சைத் திருமேனியாய் திருகூட மலையாய்த் இம்மலையினுள் காணும் பசுமையைக் கண்டவர்களால் ா முகட்டில் மேகங்கள் கருநிறம் கொண்டு வட்டமிடும். ங்காற்று வீசிடும். ன அன்னையின் கடைக் கண்களாகவும் வீசும் மெல்லிய பில் இருந்து வெளியாகிடும் சுவாசமூச்செனவம் கூறிடுவர். றப் பெறும் திருக்குற்றால மலையே இயற்கை உருவாய் க்தியின் எழில் பொருந்திய அருள் வடிவாகும். இம்மலை இதுவே ஆகும்.
ருத்தலம் அன்னையாம் பராசக்தியின் திருவருள் ாக அமைந்திடுவதால் பிறவிப் பிணியினை அறுத்திடும்
693)

Page 426
அரும் தலமாக விளங்கிடுகிறது. குற்றாலம் எனும் பதத்தைப் பிரித்தோமானால் கு+தாலம் எனப் பிரித்திடலாம். 'கு' என்றால் பிறவிப் பிணியையும் தாலம்' என்பது தீர்ப்பது என்பதையும் குறித்திடுவதாக தமிழறிஞர்கள் உரையின் மூலம் தெரிய வருகின்றது.
இத்தலத்தில் திருக்கோயில் சங்கு வடிவில் மலையடி வாரப் பகுதியில் அமைந்து பெரும் கோயிலாக விளங்கிடுகிறது. இக்கோயிலின் உள்ளே அருவி நீரானது எழில் பொங்க வருகின்றது. இக்கோயிலில் எழுந்தருளும் இறைவன் குறும்பலாநாதர் ஆவார். இவரை குற்றால நாதர் எனவும் அழைக்கின்றனர்.
குற்றாலநாதர் ஆலயத்துள் வடதிசையில் அன்னை பராசக்தியானவள் யோக வடிவுடையவளாய் வீற்று இருந்து தனிக்கோயில் கொண்டுள்ளாள். இதன் காரணமாகவே சக்திபீடங்களுள் இத்தலம் யோக பீடமாய் அமைந்துள்ளது. இந்த யோக பீடத்துள் அன்னை பராசக்தியே யோக பீட நாயகியாக ஆதிபராசக்தியாய் உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூலகாரணமாய் அமைந்ததால் இத்தலத்தில் உள்ள பீடத்தைத் தரணி பீடம் எனவும் உரைக்கின்றனர்.
 

அன்னை பராசக்தியே ஒவ்வொரு கர்ப்பத்திலும் அரி, அரன் அயன், ஆகிய மும்மூர்த்திகளையும் ஈன்றவள் என்பதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள சந்நிதியில் தாணுமாலயன் தொட்டில் ஆடிக் கொண்டுள்ளது. மலையுருவாக ஒளிர்கின்ற அன்னையாம் பராசக்தி திருக்கோயினுள் சிலை வடிவினளாய் விளங்கிடும் சிறப்புடைய 56) DIT 85 திருக்குற்றாலம் விளங்கிடுகின்றது.
இக்கோயிலின் நான்கு வாயில்களும் நான்கு வேதங்களைக் குறிப்பனவாகும். கோயிலின் மையப்பகுதியில் குற்றாலநாதராகிய குறும்பலாநாதர் கோயில் கொண்டிருக்க அவருக்கு வலப்புறமாய் குழல்வாய் மொழியம்மையும் இடப்புறமாய் அன்னை பராசக்தியும் கோயில் கொண்டுள்ளார். இத்தலத்து விருட்சமாக குறும்பலா மரமே திகழ்கின்றது. மும்மூர்த்திகளையும் தம் குழந்தைகளாய் ஈன்ற அன்னையாம்பராசக்தியானவள், இவ்வுலகத்துஉயிர்கள் அனைத்தையும் ஈன்று காத்து அருளும் அன்னையாய் விளங்கி வருகின்றாள்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 427
W. 字ー念)
محمسیہ.
மயூரமங்கலம்
:
**
** లా",",2"x ب میر -سری است
恋Y*Y香Y公Y○s@あ資yasYrSYSYS
{QQప్రొలిQQXQస్త్ర
{}" 盛
് ""; 幼 نرما؟
“ặ(?
''
w
تم محلا
வெக்
3.
w
அருள் மிகு வெக்காளி ஆ சோலை சூழ்ந்த புறநகரில் ஆலய உறையூர், நாச்சியார் கே மேற்கில் சென்றால், அன்னை அ காணலாம்.
தினசரி காலையும் மாலை இருப்பதை காணலாம் செவ்வாய், பூஜை தினங்களிலும், கணக்கி அடைகிறார்கள்.
வெட்டவெளியில் மேல்ல ஏதுவும் பாராமல் அனைத்தைய அடியார்க்கு அருள்பாலித்து,அ அவைத்து அறங்கெட அறிய மெய்ப்பித்து வருகிறாள்.
நீதியை நிலைநிறுத்தி, ே என்று நாடே நம்புகின்றது. தெ தன்னையே தியாகத்தீயில் இ வெக்கையைத் தணிப்பவளாக, ெ நிரம்பிய அருட்தெய்வமாக, விள ஒரு கரத்தில் திரிசூலமும் மற்றொரு கரத்தில் அக்ஷயம பாத் அம்மை பீடத்தில் அமர்ந்த வாளும் - கேடயமும் தரித்த அசு அருள் தவழும் முகத்தில் கருத்த முகமோ, கோரமான சொரூ வந்து கண்டு தரிசித்து மகிழலாம் இடுப்பில் யோக பட்டம் பூ நாளெல்லாம் பார்த்திருந்தாலும் ஆ
 
 
 
 
 
 
 
 

5காளி அம்மன்
ம்மன் உறையூர், பாண்டமங்கலத்திற்கு, மேற்குத் திசையில், ம் கொண்டு அருட்செங்கோல் ஒச்சி வருகிறாள்.
ாயிலில் பேருந்து நிற்குமிடத்தில் இறங்கி, சாலைவழியாக ருள்மிகு வெக்காளி அம்மன் ஆலயம் அமைந்திருப்பதைக்
யும் அம்மனை தரிசிக்க மக்கள் கூட்டம் வந்த வண்ணமாக வெள்ளிக்கிழமைகளிலும் பெளர்ணமி திதிகளிலும், விசேட ல்லாமல் மக்கள் வந்து அம்மனைத் தரிசித்து ஆனந்தம்
விமானம் இல்லாத கருவறையில் வெயில், பனி, குளிர் பும் சமமாகப் பாவித்து, அருள்மிகு வெக்காளி அம்மன் றம் துஞ்சும் உறந்தை என்பதை மெய்ப்பித்து உறந்தை ாது என்ற சங்கத் தமிழ் வார்த்தைகளை இன்றும்
வண்டும் வரம் தருவாள். வெக்காளி துணை வருவாள் ாழுகிறது. ஆனந்தம் அடைகிறது. தன் மக்களுக்காக, ட்டு, மக்களின் வேட்கையை தணிப்பவளாக, உலக வயில் உகந்த நாயகியாக, வெக்காளித் தாயாக, கருணை ங்குகின்றாள் அருள்மிகு வெக்காளியம்மன்.
ஒரு கரத்தில் உடுக்கையும் அடுத்த கரத்தில் பாசத்தையும், திரத்தையும் அம்மை தரித்து தரிசனம் தருகிறாள். திருக்கும் கோலத்தில் வலது காலை மடித்து இடது காலை
சக்தியின் மீது பதிய வைத்திருக்கிறார். கடைவாய்பற்கள் இரண்டும் சற்று நீண்டிருப்பதைத் தவிர, நபமோ அன்னையின் சுந்தர வடிவில் இல்லாமல் இருப்பதை
ண்டு அம்மை கொலுவமர்ந்திருக்கும் ஆனந்தக் காட்சியை அலுக்காது, சலிக்காது.

Page 428
தன் எதிரேயுள்ள வேல்களில் அடியார்களின் அடியார்களின் முறையீடுகள், கோரிக்கைகள், விண்ணப்பங்கள் குவிந்திருப்பதை நோக்கிய வண்ணம் அன்னை வெக்காளி அருட்செங்கோல் ஒச்சுகிறாள்.
மற்ற தேவிமார்கள் இடது காலை மடித்து வலது காலால்பாதம்கீழேபதியுமாறுஅமர்ந்ருப்பார்கள். கால்மாறி ஆடிய கூத்தப் பெருமானைப் போல, வெக்காளி அம்மன் வலது காலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரசக்தியின் உடலில் பதிய வைத்திருப்பது அபூர்வ காட்சியாக அமைந்திருக்கின்றது. அன்னையின் கொலு பீடத்திற்கு அருகில் இருதிருவடிகள் பதிந்திருந்தன. ஆதிபீடமாக
தொன்மையானதாக இன்றும் காட்சி தருகிறது.
கைதேர்ந்த சிற்பி அம்மையின் அனுமதி பெற்ற கலைஞன், ஜகன்மாதாவாகிய வெக்காளி அம்மன் சிலையை செதுக்கி இருக்க வேண்டும். மகனியர் அம்மையின் அருள் பெற்று இங்கு இதனை எழுந்தருளச் செய்திருக்க வேண்டும்.
698
 

அருள் பொழியும் திருமுகம், தலையில் ஒளி - பொருந்திய மகுடம், ஜோதிச் சுடர் போல் தோற்றம் தருகிறது. காதுவரை நீண்ட கண்கள், வில்போல் வளைந்த புருவங்கள் சூரிய - சந்திரர்களை இருவிழிகளாகக் கொண்ட பார்வை, கொவ்வைக் கணி போல சிவந்த அதரங்கள், அன்பர்களுக்கு அனுக்கிரஹம் செய்யும் திருவாய், இத்தனையும் அன்னையின் சன்னிதியில் நின்று அனுபவித்துப் பார்க்கும் போது தியாகத்தின் சின்னமாக யோகயோகீஸ்வரியாக, வெக்காளி அம்மன் காட்சி தருவதை உணரும் போது உள்ளம் பரிபூரணம் அடையும். அமைதியும் ஆனந்தமும் அங்கு நிலவுகிறது.
இத்திருக்கோயிலில் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை சீட்டில் எழுதி அம்பாளிடம் சமர்பித்து, பின்னர் திரிசூலத்தில் கட்டி இஷ்ட சித்திப் பெற்று வருகின்றனர். இம்முறை இத்திருக் கோயிலுக்கே உரிய தனிச்சிறப்பு அம்சமாகும்.
மயூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானகும்பாபிஷேக மலர் - 2000

Page 429
SS
மயூரமங்கலம்
Sയ
&
கொல்லூர் என்னும் க உள்ள குந்தாயூர் என்னும் வட் மலையின் அடிவாரத்தில், ம உள்ளது; தென்கன்னட மாவட் அழகிய கிராமம்.
கொல்லூர் என்னும் இத் இத்தலத்திற்கு ஆதியில் மகாரன் இப்புனிதப்பதியில் சித்தர்களும், மு பெருமை கொண்டு விளங்கியுள்ள இத்திருத்தலத்தில் அ மூகாம்பிகையின் ஆலயம்-எப்ெ அளவிற்குப் பழமைச் சிறப்புடைய கொல்லூர்த்தலம் அடர்ந் சிகரங்களாலும் சூழப்பட்டு, கைபு இத்தலம் அமைப்பில் பூரீசக்கரத்ை வரிசைகளால் சூழப்பட்ட இக்கொ அன்னை மூகாம்பிகையின் பழ அவனிபுரந்து விளங்குகின்றது.
இவ்வம்பிகையின் திருக்ே விளங்குகின்றது.
அன்னை மூகாம்பிகைத் கி.மீ.) தூரத்தில் சௌபர்ணிகை கரையில் விநாயகர் கோயில் வழிபட்டுத்தான் அம்பிகை கோயி அவ்வாறு செல்லும்போது இக் காளிகோயிலுள் ஆறு அ இக்காளியையும் வணங்கிக் ெ மூகாம்பிகை திருக்கோயிலின் ே
 

கால்லூர் )6(TD1606
ருணையன்னையின் தலம், கர்நாடக மாநிலத்தில் டத்தில் அமைந்த ஒரு சிறிய கிராமம்; குடட்சாத்திரி ங்களூரிலிருந்து 139 கிலோ மீட்டர் தொலைவில் டத்தின் வடகிழக்கு எல்லையில் அமைந்து விளங்கும்
தலத்திற்குக் கோபுரம் என்னும் திருப்பெயரும் உண்டு. ாணியபுரம் என்னும் திருப்பெயரும் வழங்கப் பட்டுள்ளது. pனிவர்களும் வாழ்ந்து அன்னையின் அருள் பெற்றுள்ளனர்; ானர். மைந்து விளங்குகின்ற திருக்கோயில்-அன்னை பாழுது எவரால் எழுப்பப் பெற்றது என்று அறியமுடியாத தாகவும் விளங்குகின்றது. த பசிய இலைக் காடுகளாலும், ஓங்கி உயர்ந்த மலைச் னைந்தியற்றாகவின்பெரு வனப்புடையதாகத் திகழ்கின்றது. தை ஒத்துள்ளது, மரகதம் போன்ற பசுமை விளங்கும் மலை ல்லூர்த்தலத்திலே அகிலாண்டநாயகியும், பராசக்தியுமாகிய மையான திருக்கோயில் அமைந்து, அருள்மணம் பரப்பி,
காயில், செளபர்ணிகையாற்றின் கரையோரமாக அமைந்து
திருக்கோயிலின் மேற்குப் புறத்தில் சுமார் அரை மைல் (0.8 பாற்றின் நீர்த்துறை அமைந்துள்ளது. இந் நீர்த்துறையின் ஒன்று உள்ளது. இந்த ஆற்றில் நீராடி விநாயகரை லை நோக்கிச் செல்லுதல் வேண்டும்.
, இடையில் ஒரு சிறிய காளி கோயில் காணப்படுகின்றது. டி (1.80 மீ.) உயரமுள்ள ஒரு புற்று காட்சியளிக்கிறது. காண்டு கீழ்த்திசையை நோக்கிச் சென்றால், அன்னை மற்குக் கோபுர வாயிலை அடையலாம். இக் கோபுர வாயில்

Page 430
திருக்கோயிலின் பின்புற வாயிலாகும். இந்த வாயில் எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும். இந்தக் கோபுர வாயிலின் வழியாகவே ஆதி சங்கராச்சாரியார் முதன் முதலில் திருக்கோயிலுக்குள் நுழைந்து சென்றார். இந்தப் புனிதத்தைக் காக்க வேண்டியே இந்த வாயில் எப்பொழுதும் மூடப்பட்டிருப்பதாக ஐதிகம். எவரேனும் இந்தக் கோபுர வாயில் வழியாகச் செல்ல விரும்பினால், குறிப்பிட்ட தொகையைக் காணிக்கையாகச் செலுத்தல் வேண்டும்.
இத்திருக்கோயிலின் முக்கிய வாயில், கிழக்கு நோக்கியுள்ள கோபுர வாயிலேயாகும். பக்தர்கள் சென்று அம்பிகையைக் கண்டு வழிபடுவதற்குரிய வாயில் இதுவே.
பிராகாரத்துடன் அமைந்த இத் திருக்கோயிலின் கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்றால், முன் மண்டபம் அமைந்துள்ளது, இம்மண்டபத்தைக் கடந்து சென்றால், கம்பீரமாக நின்று காட்சி தரும் வீரபத்திரரைக் காணலாம். இவ்வீரபத்திரர் எல்லைக் காவல் புரிவதாகக் கூறப்படுகின்றது.
இக்கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் பத்துத் திருக்கரங்களுடன் விநாயகப்பெருமான் மூஞ்சூறு வாகனத்தின் மீது காட்சி தரக் காணலாம். இப்பிராகாரத்தின் தென் கிழக்குப் பகுதியில் இரண்டு நாக உருவில் சுப்பிரமணியர் காட்சி தருகின்றார்.
சுப்பிரமணியருக்கு அருகில் சரசுவதி மண்டபம் வடக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இத்திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் சந்திர மெளலீசுவரர், நஞ்சுண்டேசுவரர் முதலிய பரமேசுவரனின் பல திருவுருவங்கள் காட்சி தரும் திருச்சந்நிதிகள் உள்ளன. சந்திரமௌலீசுவரர் சந்நிதிக்கும் நஞ்சுண்டேசுவரர் திருச்சந்நிதிக்கும் இடையில் பஞ்சமுக கணபதியின் திருச்சந்நிதி அமைந்துள்ளது. W
திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயர் சந்நிதியும், இதனை எதிர்நோக்கிக் கிழக்குப்புறத்தில் கோபாலகிருஷ்ணர் சந்நிதியும், இதன் தென்புறத்தில் வீரபத்திர சுவாமியின் திருச்சந்நிதியும் அமைந்துள்ளன.
398

இத்திருக்கோயிற் கருவறையுள் திருவருள் புரிந்து திகழும் அன்னை மூகாம்பிகை, சங்கு சக்ரதாரியாகக் காட்சி தருகின்றாள். இஃது இத்தலத்துப் புதுமையும் தனிச் சிறப்புமாகும்.
இக்கோயிற் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்டுப் பிரகாசமாக விளங்குகின்றது. கருவறையிலுள்ள சிவலிங்கமானது மற்ற தலங்களில் உள்ளதைப் போன்று அல்லாமல், சத்தியும் சிவமும் இணைந்தாற்போல் சுவர்ண ரேகையினால் இருபிளவுகளாகப் பிரிக்கப்பட்டு, அம்மையின் பாகமாகிய இடப்பாகம் வலப்பாகத்தைவிடப் பெரியதாகவும், சோதி மிக்கதாகவும் விளங்குகின்றது. இதுபோன்ற சுவயம்பு இலிங்கத்தை வேறு எத்தலத்திலும் காணல் அரிது.
இந்த இலிங்கம், அம்பிகையின் திருவுருவத்திற்கு முன்பாக அமைந்து காட்சியளிக்கின்றது. இது சுயம்பு ஜோதிலிங்கம் என்று கூறப்படும். இஃது ஆன்மீக ஆற்றலின் ஒளிமிக்க மையமாகும். இஃது அளவிட முடியாத பழமையுடையது என்று நம்பப்படுகின்றது.
ஐதிகப்படி, இப்பொழுது நடைபெறும் மன்வந்தரத்தின் 28 ஆவது துவாபரயுகத்தில் கோல மகரிஷி இங்குத் தவம் புரிந்து கொண்டிருந்தபொழுது, தானாகத் தோன்றிய இலிங்கம் இது.
இந்த ஜோதிர்லிங்கம் கோகர்ணம் வரையில் ஆதாரமாகக் கொண்டு - பரவியுள்ள ஒரு மகாசக்கரத்தின் மையமாகும் என்பது ஐதிகம்.
தங்கக் கோட்டினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுக் காட்சி தரும் இந்த இலிங்கம் போன்று வேறெங்கும்மூன்று உலகங்களிலும் - இல்லை. உச்சிவேளையின் போது சூரியனின் ஒளிக்கதிரைக் கண்ணாடி மூலமாகப் பிரதி பலிக்கச் செய்து, பக்தர்களுக்கு அந்தத் தங்கக் கோட்டின் தரிசனம் அளிக்கப்படுகின்றது.
தங்கக் கோட்டின் வலப்புறமிருக்கும் இலிங்கப்பகுதி மாற்றமற்ற பரம்பொருளின் வடிவங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளைக் குறிக்கின்றது; இடப்புறம் இருக்கும் இலிங்கப் பகுதி எல்லையற்ற ஆற்றலாகியபரம்பொருளின் சக்தியாகிய - சத்தியம், ஞானம், இன்பம் என்னும் வடிவுகளையுடையவளாகிய ஆதிபராசக்தியின் மூவுருவங்களான மகாகாளி, மகாலட்சுமி, மகா சரசுவதியைக் குறிக்கின்றது.
பூரபதி பூனி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 431
அசைகின்ற தன்மையுடையது சக்தி அசையாத தன்மையுடையது சிவன் - பரம்பொருள். அசைவற்ற பரம்பொருள்,அசைகின்ற அதன் சக்தி ஆகிய இரண்டின் சேர்க்கையைக் குறிப்பதே அத் தங்கக்கோடு. இந்த விசேடமான இலிங்கம், அனைத்துக் கடவுளர்களின் பொருளாகத் திகழ்வதாகப் போற்றப்படுகின்றது.
இவ்வாறு பரம்பொருளின் சக்தி வடிவான பராசக்திக்கு ஜோதிர்லிங்கத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதால்தான், இங்குத் திருமேனிக்குப் பெண்ணுருவம் அளிக்கப்பட்டுள்ளது.
புனித அருளொளி வழங்கியருளும் மூகாம்பிகையின் திருவுருவம், ஆதிசங்கரரால்
மயூரமங்கலம்
 

பிரதிட்டை செய்யப்பட்டதாகும். அம்பிகையின் பிரதிட்டைக்கு முன் இங்கு ஜோதிர்லிங்கமும், அது குறிக்கின்ற பூரீசக்கரமுமே இருந்தனவாக நம்பப்படுகின்றது.
ஜோதிர்லிங்கம், அன்னை மூகாம்பிகையின் திருவுருவத் திருமேனிக்கு முன்பாக அமைந்து காட்சி தருகின்றது. உலக அன்னையாகிய மூகாம்பிகையின் திருச்சந்நிதியில் நின்று அன்னை பராசக்தியை அன்புடன் வழிபட்ட பின்னர், வீரபத்திரர் சுவாமி கோயிலில் வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
399

Page 432
(BD6
அகிலாண்ட நாயகியா ஒதற்கரியவள்; அகிலாண்ட கே வருகின்றவள். இத்தகைய அன் மேல்மருவத்துர் என்னும் மேன் திருக்காட்சி தருகின்றாள்; அன் புரிந்து காக்கின்றாள்; ஆக்கம்ப
அன்னையின் அருள் மன நெடுஞ்சாலையில், சென்னை விளங்குகின்றது.
இம் மேல்மருவத்துார்ப் ! ஆதிபராசக்தி சுயம்புவாகத் தே அடிகளாரின் நிலப்பகுதியில், வேட் தோன்றியவள். சுயம்பு என்பது, தி
அன்னை அவ்வாறு தே அன்னையின் அருள் சக்தி வடிவ சுயம்புவாகத் தோன்றியதன் பின் அமைக்கப் பெற்று, அதன் பின் திகழ்கின்றது.
மேல்மருவத்துர் அன்னை என்பது குறிப்பிடத்தக்கது. இத் அருவுருவாகத் - தோன்றி வில் நிலையில் நிர்மாணிக்கப் பெற்றுள் பெற்றவர்களல்லர். W
இத் திருக்கோயிலில் கோபுரத்துடன் கூடிய நான்கு கா முகமண்டபம், அதன் வலப்பக்க பெற்றுள்ளன. இத் திருக்கோயி பெற்றுள்ளது.
 

i) மருவத்துள் திபராசக்தி
கிய அன்னை ஆதிபராசக்தி உலககெலாம் உணர்ந்து ாடிகளையும் அனைத்துயிர்களையும், அளித்து, காத்து ானை ஆதிபராசக்தி, சித்தர்கள் பலரும் மறைந்துறையும் ாமைப் பதியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளித் றாடம் நாடி வரும் ஆயிரக்கணக்கான அன்பர்கட்கு அருள் ல அளிக்கின்றாள்.
ாக்கும் பதியாகிய மேல் மருவத்தூர், சென்னை - திருச்சி யிலிருந்து 92 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து
தியில் எழுந்தருளி, அருள் பெருக்கித் திகழும் அன்னை ான்றியவள்; இத்தலத்தில் உறையும் அருள்மிகு பங்காரு பமரம் ஒன்றின் கீழ் புற்றினிடமாகக் கொண்டு சுயம்புவாகத் நானே தோன்றியது எனப் பொருள்படும்.
ான்றுவதற்கு இடமான பாம்புப் புற்றும், வேப்பமரமும் ங்களாயின. அன்னை ஆதிபராசக்தி புற்றினிடத்தினின்று னர், அவ்விடம் ஒரு சிறு ஆலயமாக - வழிபாட்டிடமாக - ானரே தற்போதுள்ள திருக்கோயில் எழுப்பப் பெற்றுத்
யின் திருக்கோயில் ஆகம விதிப்படி அமைக்கப்பெற்றதன்று திருக்கோயிலில் அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக - ாங்குதல் போன்றே, பரிவார தேவதைகளும் உருவமற்ற ாளனர். பரிவார தேவதைகளும் ஆகமவிதிப்படி அமைக்கப்
கருவறை முன்னர் அர்த்த மண்டபம் மகாமண்டபம், ல் மண்டபம், வலப்பக்கத்தில் புற்றுமண்டபம், அதன் முன்னே கத்தில் சப்த கன்னியர் கோயில் ஆகியவை அமைக்கப் லின் முகப்பில் ஓம்சக்தி' என்னும் மூலமந்திரம் பொறிக்கப்
பாயகி மரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 433
நெடுஞ்சாலையின் மேல்புறத்தில் அன்னை ஆதிபரா சக்தியின் திருக்கோயில் அமைந்து விளங்க, கீழ்ப்புறத்தில் அதர்வண பத்ரகாளி கோயில் அமைந்து விளங்குகின்றது.
இத்தலத்தில் மற்றும் தியான மண்டபம், திருமண மண்டபம் முதலியவை தனித்தனியே அமைக்கப் பெற்றுள்ளன.
திருக்கோயிற் கருவறையுள் அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவம், சுயம்புவின் பின்புறத்தே அருட்காட்சி அளிக்கின்றது. இத்திருவுருவம் கண்குளிரக் கண்டு கரங்குவித்து வழிபடத் தகுந்தது. இவ்வன்னையின் திருவுருவம் மூன்றடி (90 செ. மீ.) உயரமுள்ளதும், வீற்றிருக்குங்கோல முடையது மாகும்.
அன்னை பராசக்தி தாமரைபீடத்தில் அமர்ந்து, வலது திருவடியை மடக்கியும், இடது திருவடியைத் தாமரை மலரின் புற இதழ்களில் ஊன்றியும், வலது திருக்கரத்தில் தாமரை மொட்டு ஒன்றினைத் தாங்கியும், இடம் திருக்கரத்தால் சின்முத்திரை காட்டியும், கருணை நோக்குடன் அருள் மழைபொழிந்த வண்ணம் காட்சி தருகின்றாள். r
அன்னை அருட்காட்சி தரும் இக்கருவறையைச் சுற்றிலும் பரிவார தேவதைகள் உருவமற்ற பாங்கில் அமைக்கப் பெற்றுள்ளனர். சப்த கன்னியர் கோயில் விமானம் இன்றி அமைக்கப் பெற்றுள்ளது.
இத் திருக்கோயிலைச் சுற்றிலும் அன்னையின் அருட் சக்தி வடிவங்களாகக் கருதப்படும் வேப்பமரங்கள் உள்ளன. திருக்கோயிலின் எதிரில் அதர்வன
மயூரமங்கலம்
 

பத்ரகாளிக்குக் கோயில் அமைக்கப் பெற்றுள்ளது. இக்காளியின் கோயிலை இத்தலத்திலன்றி வேறெங்கும் காணவியலாது. பில்லி சூனியம் ஆகியவற்றால் அல்லற்படுபவர்கள் இக்காளியைப் பூசித்து வழிபட்டால், அவ்வல்லல்கள் நீங்குவது உறுதி.
இத்தலமும், கோயிலும் தற்காலத்தவை; அருள்மிகு பங்காரு அடிகளாரால் அன்னையின் ஆணைவழி அமைக்கப் பட்டவை. அன்னை பராசக்தியின் அருள் பெற்றவர் பங்காரு அடிகளார். அன்னை பராசக்தியும் அவ்வடிகளார் வாயிலாக வெளிப்பட்டு, அன்புடன் வழிபடும் அன்பர்கட்கு அருள்வாக்கு அளிக்கின்றாள்; அன்பர்களின் குறை தவிர்த்து அருள் புரிகின்றாள்; அன்பர்களின் தீராத நோய்களையெல்லாம் தீர்த்துத் திருவருள் புரிகின்றாள். இத்தலத்தில் உள்ள புற்று மண்டபம், அருள்வாக்கு L06üTL-ULOm 5 அமைந்து விளங்குகின்றது.
இத்தலத்தின் அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தில் பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் ஆடிப்பூர விழா, நவராத்திரி விழா, தைப்பூச விழா ஆகிய விழாக்கள் விசேடமானவை.
இவ்வன்னை பராசக்தி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா, ஈஸ்டர் பண்டிகை, ரம்சான் பண்டிகை, மகாவீர் ஜெயந்தி ஆகியவையும் நடைபெறுகின்றன. அவ்வச் சமயத்தவரும் தத்தம் விழாக்களைக் கொண்டாடும் பாங்கில் நடைபெறுகின்றன. இஃது இத்தலத்தின் தனிச் சிறப்புக்களுள் ஒன்று.

Page 434
ኦ$ مسج؟ 基/7○○Y否Y)○○○○Y/SYs\倉や患 (Çရှို၍ ‘ို’’ န္တိ
དུ་ཤྲི་ 泾赠
திருமறைக்காடு என்பது திருத்தலமாகும். வேதாரண்யம், தி உள்ள இரயில் நிலையமாகும். இர திருமறைக்காட்டுத் திருக்கோயில் இவ்வேதாரண்யம் தலம் 1 'சத்தியகிரி என்னும் திருப் பெய புருஷர்களும் இங்கு இறைவனைப் மறைக்காடு எனப்பல திருப்பெயர்ச வடமொழிப் பெயர்களே வேதாரண் இம்மறைக்காட்டுத் தலம் ச திருக்கோயில் திருவாரூர்ப் பூ பிரகாரங்களுடனும்,இராஜகோபுரத்து கோயிலுக்கு வட பக்கத்தில் அன்ை விளங்குகின்றது. இதுசக்திபீடங்க பெயருக்கேற்ப இங்கு எழுந்தருளிய அன்னை மொழியுமையாள் நின்று, தன்னை வழிபடும் அன்பர் இத்தலத்தில் அன்னை து திகழ்கின்றாள். பலரும் வழிப தெய்வமாகவும், வெளிப்பிரகாரத்து இவ்வன்னை துர்க்கைை கொள்கின்றனர். பில்லி, சூன்ய துர்க்கை போக்கியிருக்கின்றாள்.
இவ்வன்னை துர்க்கையிட வைத்து மந்திரித்துப் பயன்படுத்து இத்தலம் துர்க்கைக்குச் சி அன்னை மொழியுமையா திகழ்வதோடன்றி, திருமகள், சரசு திருச்சந்நிதிகளில் எழுந்தருளித்
சக்தி பீடத் தலங்களுள் ே
C402 o
 
 
 

றைக்காட்டுச் OBOTfL BTudfi
தற்போது வேதாரண்யம் என வழங்கப் பெற்று வரும் ருத்துறைப்பூண்டி-கோடியக்கரை புகைவண்டிப்பாதையில் யில் நிலையத்திலிருந்து அரை மைல் (0.8 கி.மீ) தூரத்தில்
அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்தது. இத்தலத்திற்கு 'ஆதிசேது", ர்களும் இருந்துள்ளன. அதன் பின்னர் நான்கு வேத பூசித்து வழிபட்ட காரணத்தால் வேதாரண்யம், வேதவனம், களால் வழங்கப்பெற்றுவருகின்றது. மறைக்காடு என்பதன் யம், வேதவனம் என்னும் இரண்டு பெயர்களும். ப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. ஆகையால், இத்தலத்துத் வ்கோயிலைப் போன்றே அமைந்துள்ளது. இரண்டு துடனும் அமைந்து விளங்குகின்ற இத்திருக்கோயிலில்,சுவாமி ன யாழைப்பழித்தமொழியுமையாள் திருக்கோயில் அமைந்து ளுள் ஒன்று இத்தலம் சுந்தரபீடத்தலம். சுந்தரபீடம் என்னும் ப அன்னையும் அழகின் திருவுருவாகத் திகழ்கின்றாள்.
சுந்தர பீடத்துச் சுந்தரியாக - சுந்தர பீடத்து நாயகியாக - கட்குத் திருவருள் புரிகின்றாள். ர்க்கையும் புகழ் பெற்றவளாக சிறந்த வரப்பிரசாதியாகத் டு தெய்வமாகவும், பலரும் விரும்பிக் கொண்டாடும் து வடப்பக்கத்தில் நின்று விளங்குகின்றாள். ய வழிபட்டுப் பல துன்பங்களை அன்பர்கள் போக்கிக் ம் முதலியவையும், கிரகக் கோளாறுகளையும் அன்னை
ம் சிறப்பாக மஞ்சள், குங்குமம், நூல்கயிறு ஆகியவற்றை வதன் மூலம் எல்லா நன்மைகளையும் பெறுகின்றனர். றந்த தலம். ளும், அன்னைத் துர்க்கையும் இத்தலத்தில் எழுந்தருளித் வதி, அன்னபூரணி ஆகிய அன்னையர்களும் தனித்தனித் திகழ்கின்றனர். வதாரண்ய சுந்தரபீடத் தலம் மிகவும் சிறப்புமிக்கதாகும்.
யூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 435
}|{{ග්‍රිටැබ්‍රබලම
மயூரமங்கலம்
総ー
ଲିy~~}}\{
శ్లో
Uůeč
பட்டிச்சுரமும், சக்தி பட்டீச்சுரத்தில் தேனுடிரீசுவ திருக்கோயில் கொண்டு எழுந் வரலாற்றுப் புகழ் பெற்ற பழைய முதலிய தலங்களை உள்ளடக் பழங்காலத்தில் விளங்கியது.
பழையாறை என்பது இர புரிந்த இடம். காவிரியின் கிளை
* ஐந்துமைல் (8 கி. மீ.) நீளமும்,
வரலாற்றுச் சிறப்புடைய பழைய இருந்திருக்கின்றன. எனே வழங்கப்படுகின்றது. சோழமன்ன நான்கு பிரிவாக வைத்திருக் ஆரியப்படையூர், பம்பைப் படையூ பெற்றுவருகின்றன.
பழையாறைப் பகுதி நான் பழையாறை வடதளி, மேற்றளி, கீழ் என்று பொருள்.
இத்தகைய பழையாறைப்பு காமதேனுவின் புதல்வியர் நால்வ வழிபட்ட தலம் பட்டீச்சுரம் என்னு பட்டீச்சுரத் திருக்கோ தேனுடபுரீசுவரர். இப் பெருமானுச் கோயில் கொண்டு எழுந்தருளி ஞானாம்பிகை என்னும் திருப்பெ இராவணனை வதம் செ அதனால், இராமபிரான் இத்தல பெற்றிருக்கின்றார். அவ்விரா
 
 
 

tசுரம் துர்க்கை
முற்றமும் அடுத்தடுத்து இருக்கின்ற பதிகள். ரரும், சத்திமுற்றத்தில் சிவக்கொழுந்தீசுவரரும் ந்தருளித் திகழ்கின்றனர். அத்தலங்களை அடுத்தே ாறை என்னும் இடம் உள்ளது. பட்டீச்சுரம், சத்திமுற்றம் கிய பெரும்பகுதியே பழையாறை என்னும் பெயரில்
ாசராச சோழனுக்கு முந்திய சோழர்கள் இருந்து ஆட்சி நதியான முடிகொண்டான், அரசிலாறு இவற்றுக் கிடையே மூன்று மைல் (4.5 கி. மீ.) அகலமும் உள்ள பகுதியே ாறை யாகும். இங்கே சோழமன்னரின் மாளிகைகள் வ, இந்தப் பகுதி சோழமாளிகை என்ற பெயரில் ார்கள் இங்கேயே படைகளையெல்லாம் திரட்டி, அவற்றை கின்றார்கள். அப் படைகள் இருந்த இடங்களே பூர், புதுப்படையூர், மனப்படையூர் என இன்றும் வழங்கப்
ாகு சிறு பிரிவுகளை உடையதாக இருக்கிறது. அவை த்தளி, தென்தளி என்பவையாகும். தளிஎன்றால் கோயில்
குதியில் அடங்கியதே பட்டீச்சுரம் என்னும் சிவத்திருத்தலம். ருள் பட்டி என்பவள் ஒருத்தி. இவள் இறைவனைப் பூசித்து ம் திருப்பெயர்பெற்று விளங்குகின்றது. பிலில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருப்பெயர் குப் பட்டீச்சுரர் என்னும் திருப்பெயரும் உண்டு. இங்குக் யுள்ள அம்பிகை பல்வளை நாயகி. இவ்வம்பிகைக்கு யரும் உண்டு. ய்த இராமபிரானை காயஹத்தி பற்றிக் கொள்கின்றது. த்திற்கு வந்து பட்டீச்சுரரை வணங்கித் தோஷம் நீங்கப் மபிரான் தமது கோதண்டத்தால் கீறிய இடத்திலே ஒரு

Page 436
கிணறு உள்ளது. இதற்குத் தனுஷ்கோடி தீர்த்தம் என்பதாகும். தனு என்றால் வில் என்று பொருள்.
தொலைதூரத்தில் உள்ள தனுஷ்கோடிக்குச் செல்ல இயலாதவர்கள், இக்கிணற்றுத் தீர்த்தத்திலே மார்கழி அமாவாசையன்று நீராடி, அத்தனுஷ்கோடியிலே நீராடிய பலனைப் பெறுகின்றார்கள்.
பட்டீச்சுரர் திருக்கோயிலை நான்கு திருக்கோபுரங்கள் அணி செய்கின்றன. இக்கோயிற் கருவறைக்குத் தெற்கே சண்முகப் பெருமான் வள்ளி தெய்வயானையோடு நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.
இத்திருக்கோயிலில் காட்சி தருகின்ற பைரவர் திருவுருவம் மிகவும் பெரியதும், கண்டாரை அஞ்சவைக்கும் கோரமுடையதும் ஆகும்.
இவ்வாறு அமைந்து விளங்குகின்ற இத்திருக் கோயிலில் வடக்கு வாயிலிலேயே அன்னை துர்க்காதேவி எழுந்தருளிக் காட்சி தருகின்றாள்.
Ο
இ
@g
@గొట్టంg
渤 `ဒို့ဒ္ဒိ၊
S.
6)
T tᏮᏔ Ꮕ @撃 సైక్లిక్ల్లో S ఫ్రిక్త لعلمخ{
வைத்தியநாதன் கோய என்னும் புள்ளிருக்கு வேளுர். இ வேப்ப மரத்தடியிலே,
இந்த வைத்தீஸ்வரன் ே நாயகி. பெண்களை அதிலும் என்று அழைப்பது வழக்கம். அர் நிலை இந்தத் தையல் நாயகிக்கு
 
 
 
 
 
 

இத்துர்க்கையன்னை இத்தலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் தேவதையாகும்.
இவ்வன்னை துர்க்கை எட்டுத் திருக்கரங்களுடன் திருக் காட்சியருள்கின்றாள். இத்திருக்கரங்களில் சூலம், தனு, பாசம், அங்குசம், சங்கு முதலியவை அமைந்து விளங்குகின்றன.
அன்னை துர்க்காதேவி, மகிஷன் தலைமீது ஏறி நிற்கும் திருக்கோலம் ஏழு எட்டு அடி உயரத் திருவுருவம். கருணைபொழியும் திருவதனம். இத்தலத்தில் இவ்வன்னை சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கின்றாள். ஆகையால் இத்தலத்திற்துச் செல்வோர் இவ்வன்னையைக் கண்டு வழிபடாமல் செல்வதில்லை.
இவ்வன்னை துர்க்காதேவி பண்டைய சோழமன்னர்களால் பிரதிட்டை செய்யப்பட்டவள் இத்தலத்தில் அன்பர்களின் குறை தீர்த்து அருள்புரியும் கருணைத் தாயாகக் காட்சி தருகின்றாள்.
வேளுள் 5u6b (builds
பில் கொண்டிருக்கும் தலம்தான் வைத்தீஸ்வரன் கோயில்
இங்கு ஆதி வைத்தியநாதன் கோயில் கொண்டிருப்பது ஒரு
காயில் தலத்தில் இருக்கும் அம்பிகையின் பெயர் தையல் நல்ல அழகும் குணமும் உள்ள பெண்களைத் தான் தையல் ந்தத் தையல்களுக்கு எல்லாம் நாயகியாக வாழ்வதற்கு உரிய ந வாய்த்திருக்கிறது.
மயூரபதிபூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 437
محبر
متمر
ଠୁଁ
፭ ፩ ̆ Š » 3S.鲁 CS
溶
པ་།
N
v:eZ
s 畿
Sy
)
○
مہ
9డై
மயூரமங்கலம்
o茨
غ
مجھ
dà
P
عی
&
魏
※
ミ*
தில்லையம் பெருந்தல திருக்கோயிலினுள், தனிப் பெருங் திருவருள் புரிகின்றாள்.
சிவகாமசுந்தரி என் உணர்த்துவதாக உள்ளது. சிறிதும் நீக்கமின்றிச் சிவத்தை காமம் என்பது விருப்பம் என்னு குறிக்கும்.
உலகங்களையும், உயிர் இளமை எழில் நலம் குன்றாத விளக்குகின்றது. சுந்தரம் - அ பெருஞ்சிறப்பை,
"எவ்வுலகும் எவ்வுயிரும் ஈை எழில் அழியாகச் செவ்வியா எனக் கல்வெட்டுப்பாடல் பே இவ்வாறு எழில் அழியாச் ஞானசக்தியாக, அன்பின் பெருக் பெருமை கொள்ளத் திருக் காட்சிய
 
 
 

ெை) சிவகாமி
த்தில் திருத்தாண்டவம் புரிந்தருளும் கூத்தப்பிரான் கோயில் கொண்டு அன்னை சிவகாமசுந்தரி எழுந்தருளித்
றும் திருப்பெயரே அன்னையின் எழிற்பாங்கை அகில உலக அன்னையாகிய சுந்தரி, எஞ்ஞான்றும் விரும்பித் திகழ்கின்றாள். சிவம் + காமம் + சுந்தரி, ம் பொருள்படும். சிவம் என்பது சிவபரம் பொருளைக்
களையும் ஈன்ற அன்னையாகியும், இளமைநலம் - வளாகித் திகழ்கின்றாள் என்பதைச் சுந்தரி என்பது அழகு, சுந்தரி - அழகை உடையவள். இச்சுந்தரியின்
*று
● 罗
ாற்றுகின்றது.
செவ்வியளாகிய சிவகாம சுந்தரியன்னை, இத்தலத்தில் கோடு அழகின் உருவாக, அருள் நோக்கும் புன்னகையும் பருள்கின்றாள்.

Page 438
öfald
s
ĝi
s
محیح
ゾ
ஆ என்றால் பசு. பசுக்க ஆவுடையாள். இந்த ஆவுடையா அவளைத்தான் கோமதி என்றும்
அம்மையின் திரு முன் அச்சக்கரத்துக்குக் கோமதியம்6 ஆடாத பேயும் ஆடுகிறது, தீர அத்தனை சக்தியை அருளச் :ெ இவர் நெற்கட்டும் செவல் ஜமீன்
என்றும், அந்த ஜமீன்தார் வேன்
என்றும் தெரிகிறது.
சங்கரனால் அன்னை வரப்பிரசாதிகளாக அமைந் கொண்டவர் சங்கரன். அ அருமருந்தாக உதவுகிறது. உ மக்கள் எத்தனையோ பேர். புரிகின்றார். இந்த வன்மீ எல்லோருக்கும் அருள் புரிபவ விசேஷ சலுகை காட்டுபவள பிள்ளைப் பேற்றை அருளுகி அவர்களை இன்பமான குடு பூரானும், பூச்சியும் அன்ன வருவதில்லை. மக்கள் தங்க வெள்ளியினால் தேளும், கொள்கின்றனர்.
406
 
 
 

BOTGÖT (GBGBTus6b
(BÖTD6,
ளைத் தன் உடைமை யாகக் கொண்டு காப்பாற்றுகிறவள் ள் கோயில் கொண்டிருக்கும் இடந்தான் சங்கரன் கோயில்.
அழைப்பர். ன் ஒரு மந்திர சக்கரம் பதித்து வைத்திருக்கிறது. மை தந்தருளிய வல்லமையினாலே இன்றும் அதன் அருகில் ாத நோயும் தீர்கிறது. இச்சக்கரத்தைப் பதித்து அதற்கு சய்தவர் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் வேலப்பதேசிகர். ாதாரான சிவஞான பூலித்தேவரின் குன்ம நோய் தீர்த்தார் ண்டுகோளின்படியே மந்திர சக்கரத்தைப் பதித்தருளினார்
கோமதியும், அம்மை கோமதியால் சங்கரனும், இங்கு திருக்கின்றனர். புன்னை வனத்திலே புற்றில் இடம் ந்தப் புற்றுமண் இன்று மக்கள் பிணியைத் தீர்க்கும் டலில் பூசியும் உள்ளே கரைத்துக் குடித்தும் நலம் பெறும் ஆண் பெண் என்ற வித்தியாசமில்லாமலேயே அருள் 5 நாதராம் சங்கரன். அன்னை பொதுவாக மக்கள் ள்தான் என்றாலும் தன் இனத்தாராகிய பெண்களிடத்து க இருக்கிறாள். பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்குப் றாள், பேய்பிடித்தவர்களாக இருந்தால் பேயை ஒட்டி ம்ப வாழ்க்கையில் இருத்துகிறாள். தேளும், பாம்பும், னயையும் அத்தனையும் நினைப்பவர்கள் பக்கமே ளுக்கு இப்பூச்சி பொட்டுகளால் துன்பம் நேராதிருக்க, பாம்பும் செய்து காணிக்கை செலுத்தி வேண்டிக்
மயூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 439
மயூரமங்கலம்
(Σ.
滨
சிறப்புமிக்க சக்திபீடத் பஞ்சபூதத் தலங்களுள் திருவண் இத்தலத்தின் பெயர், தலி கொண்ட இறைவனின் பெயர் எழுந்தருளியுள்ள அண்ணமை விளங்குகின்றது. இத்திருக்கோய் எழுந்தருளியுள்ளான். இவருக்கு திருக்கோயிலில் எழுந்தருளிய இவ்வம்பிகைக்கு உண்ணா முலை நினைக்க முக்தியளிக்கு திருத்தலத்தில் அன்னை அபீதகு அர்த்தநாரீசுவரராகத் திகழ்கின் அர்த்தநாரீசுவரராகவும் திகழ்கின் அன்னை அபீதகுசாம்பி இடப்பக்கத்திலேயே அமைந்துள்ள முதலிய மண்டபங்களோடு அமை
அபீதகுசாம்பிகை அழகே உருவா
 
 
 
 
 
 

ண்ணாமுலை
5056 (TD1606
தலங்களுள் திருவண்ணாமலைத் தலமும் ஒன்றாகும். ணாமலைத்தலம் நெருப்புத் தலமாகும். பத்து மலையடிவாரத்துக் கோயிலின் பெயர், கோயிலில் எல்லாமே அண்ணாமலைதான். அண்ணாமலையார் லக்கோயில், அண்ணா மலையடிவாரத்தில் அமைந்து பிலில் அருணாசலேசுவரர் என்னும் திருப்பெயரில் இறைவன் கு அண்ணா மலையான் என்னும் திருப்பெயரும் உண்டு. |ள்ள அம்பிகையின் திருப்பெயர் அபீதகுசாம்பிகை.
யம்மை என்னும் திருப்பெயரும் உண்டு. ம் நிர்மலப்பதி, திருவண்ணாமலைத் தலம். இத்தகைய சாம்பிகையைத் தமது இடப்பக்கத்தில் இறைவன்கொண்டு றார். மூலவர் சிவலிங்கத் திருமேனியராகவும், உற்சவர் றனர். கையின் கோயிலும், அண்ணாமலையார் சந்நிதிக்கு
ாது. அன்னை கோயில் மகாமண்டபம், நவசக்தி மண்டபம்
ந்த பெரிய கோயில். இக்கோயிற் கருவறையில் அன்னை க நின்று அருள் புரிகின்றாள்.

Page 440


Page 441


Page 442


Page 443
மயூர மங்கலம்
へ。
அம்ப
溪
s
4އ
YC)
}}
*
ثمعرخاً في تفر
*محصہ ہۂلاً محی
ら。
-
திரெளபதி அ
மட்டக்களப்பின் பழைமை பாண்டிருப்பு என்னும் கிராமத்தி மட்டக்களப்புத் தமிழில்தீப்பள்ளயப் என இங்கு பொருளாகும். எனவே தீப்பள்ளயமாகும் என்பது பெறப்படு கண்டி மன்னனான விமலதரும சூ என்று தெரிகின்றது. அக்காலத்திே கவுத்தன் என்பவர் இங்கிருந்த இக்கோயிலை அமைத்தனர் என்று தீப்பள்ளயச் சடங்குக் கால கூறும் பாரதக் கதை படிக்கப்பெறு நிகழ்ச்சியே இவ்விழாவில் மிக மு பாண்டுவின் மக்களை இ இருப்பு பாண்டிருப்பு என ஊர் சிலைகளை வைத்து வழிபட்டு வ பெறுவதால் இன்று பாண்டிருப்பு இந்தத் திரெளபதி அம்மன் கோ பூசை தொடங்குவதற்குச் விஷ்ணு கோயிலிலிருந்தே நிகழ்ந் ஆலயத்திலிருந்து எழுந்தருள்வத இக்கோயிலிலுள்ள விக்கி சகாதேவன் சிலை இப்போது இ இயலாததெனக்கூறி, இப்போதுள் என்றும், அந்தச் சிலையை வீசிய போனவழியாலேயே திரும்பியும் அறியக்கிடக்கின்றது. தீக்குழி ஒன் குழியாகவும், தென்பக்கம் ஒரு கு அவற்றைப் பிள்ளையார் குழி என் இடத்தின் அடியில் பல யந்திரங்க
 
 

T600 (DT6)ÚLb
ம்மன் கோவில், பாண்டிருப்பு. யான திரெளபதியம்மன் கோயில் கல்முனைக்கருகிலே ல் அமைந்துள்ளது. அங்கு நடக்கும் வருடாந்த விழா "என்றழைக்கப்படுவது.பள்ளயம்” என்றால் பெருவேள்வி பதிரெளபதி அம்மனுக்கெடுக்கும் பெருந் தீ வேள்வியே ம். பாண்டிருப்புக்கோவிலும், திரெளபதி அம்மன் வழிபாடும் ரியன் (கி.பி. 1594 - 1604) காலத்தில் இங்கு நிறுவப்பட்டன, லே வட இந்தியாவிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த தாதன் சிற்றரசனான எதிர்மன்னசிங்கனின் உதவியோடு பாண்டிருப்புக் கோயில் பற்றிய பட்டயங்கள் கூறுகின்றன. முற்றும் கோயிலில் பாண்டவர் வனவாசம் முதலியவற்றைக் ம். சடங்கின் இறுதி நாளன்று நடைபெறுவதான தீப்பாயும் க்கியமானதாகும். ங்கு வைத்துப்பூசை செய்து வந்த காரணத்தால் பாண்டு ப்பெயராயிற்று எனவும் கூறுவர். பாண்டவர்களின் ந்தாலும், திரெளபதி அம்மன் கோவில் என்றே வழங்கப் என்றவுடன் நமது நினைவில் முதலில் தோன்றுவது விலே, சுவாமியை எழுந்தருளப் பண்ணுவது பெரிய நீலாவணை து வந்தது. காலகதியில் இங்குள்ள மாணிக்கப்பிள்ளையார் ாக மாற்றிக் கொண்டார்கள். ாகங்கள் எல்லாம் தாதன் கொண்டு வந்தவைகளேயாகும். க்கோவிலில் இல்லை என்றும், அதற்குப் பூசை செய்தல் ாள பூசகர்கள் அதனை கடலினுள் எறிந்து விட்டார்கள் இடத்தில்தான் தீப்பாயுமுன் சென்று மஞ்சள் குளித்து, வந்து தீக்குழியின் மேல் நடந்து செல்வார்கள் என்றும் ண்றாக இருந்தாலும், அதன் நடுவிலிருந்து வடபக்கம் ஒரு ழியாகவும் கொண்டு, மாறி மாறி வெட்டித் தீ மூட்டுவர். ாறும், அம்மன் குழி என்றும் கூறுவர். குழி வெட்டப்படும் ள் தாதனால் தாழ்க்கப்பட்டுள்ளதென்று சொல்கிறார்கள்.
409

Page 444
அதனாலேதான் இக்காலத்திலும் எவ்வித பயமுமில்லாது தீக்குழியில் பாய்கிறார்கள். இல்லையெனில் வீரத்தழற் பிழம்பு காலைத் துளைத்து விடுமே. அப்படி நிகழாததின் காரணம் தாதன் புதைத்த யந்திரத்தின் மகிமையே என்ற அபிப்பிராயமும் நிலவுகிறது. அஞ்சிப்பாய்கிறவர்களுக்கு அனல் அடித்தாலும் சுடுவதில்லையாம். எல்லாம் திரெளபதி அம்மனின் திருவருளே என்று பக்தி பரவசத்தினாற் சொல்லுகின்றனர்.
கண்ணகை அம்மன் கோவில், காரைதீவு காரைதீவு மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்காகச் செல்லும் நெடும் வீதியில், 27வது மைல் தொலைவில், அம்பாறைக்குச் செல்லும் வீதி பிரியும் சந்தியில் இருக்கின்றது. இவ்வூரிலே பிரதான வீதி செல்வதை அடுத்துத்தான் கண்ணகையம்மன் கோவில் காட்சி தருகின்றது.
இக்கோவிற் சிலை கஜபாகு காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பது ஐதீகம். கண்ணகி வழக்குரை, வசந்தன் கவித்திரட்டு என்னும் நூற்பாடல்களிலிருந்து இதன் பழமைதோன்றுகின்றது. கண்டி இராச்சியத்தோடு இணைத்தே கிழக்குக் கரையோரப்பகுதி என்றும் இருந்தமைக்குச் சான்றுகள் பல உள்ளன. அதனால் கண்டிக்கு வந்த கண்ணகி வழிபாடு கண்டிக்கட்டு வழியாக வீரமுனைக்கு வந்து, அங்கிருந்து காரைதீவுக்கும் வந்திருக்கக் கூடும் என்றும் நம்பக்கிடக்கின்றது. அதற்கு ஊர்ச்சுற்றுக் காவியத்தில் வரும் ஊர்ப்பெயர்கள் பற்றிய குறிப்புக்களும் சான்றாகின்றன. ---
இங்கேயும் ஆதிகாலத்தில் வருடத்திற் கொருமுறையே கதவு திறந்து பத்துநாள் சடங்கும் குளுத்தியும் வைத்த பின்னர், கதவைப் பூட்டி விடுவார்கள். இடையிலே கோவில் வழிபாட்டுக்காக வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் செய்து வெளியில் படைத்துக் கும்பிட்டு வந்திருக்கிறார்கள். காலம் செல்லச் செல்ல வெள்ளிக்கிழமை தோறும் பூசகர் வந்து பூசனை செய்யும் வழக்கம் உண்டாயிருக்கிறது. பின்னரே, சடங்கென்று விசேடமாகக் கோயில் திறப்பதோடு, மற்றைய நாட்களிலும் திறந்து பூசை நடைபெறும் வழக்கம் வந்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன் கட்டிடங்கள் யாவும் புனரமைப்புச் செய்து கும்பாபிஷேகம் செய்யப் பெற்ற பின்னர், கோவில் சிறப்பான தோற்றத்தை அளிக்கிறதெனலாம். இதிலுள்ள விமானம் புதிதாக
GO

நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சுற்றிவர உயர்ந்த மதிலினால் அரண் செய்யப் பெற்றுள்ள இக்கோவிலில் இப்போதுள்ள இராஜகோபுரம் மிக அண்மையில் மேலும் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது. கண்ணகை அம்மன் கோவிலைச் சுற்றிவர, பிள்ளையார், கந்தசுவாமி, நாகதம்பிரான் கோயில்களும், நவக்கிரக கோவில், வயிரவர் கோயிலும், காலத்துக்குக் காலம் அமைக்கப் பெற்றுப் பூசைகள் நடைபெறுகின்றது. இதனால் கண்ணகை அம்மன் கோவில் ஒரு பூரண கோவிலாக விளங்குகின்றதெனலாம்.
பூசை, அபிஷேகம், திருவிழாக்கள் எல்லாம் சிறப்பாகவும், ஒழுங்காகவும் நடைபெறுகின்ற இக்கோயில் பத்தினிக்கண்ணகை அம்மனுக்கும் உரிய இடமளித்துள்ளது என்பதை வைகாசி மாதத்தில் நிகழுகின்ற சடங்கு, குளுத்தி முதலிய வைபவங்களிலிருந்து அறிய முடிகின்றது. வேறு பல கண்ணகை அம்மன் கோவில்களில் குளுத்தி வைபவம் வைகாசிப் பூரணையன்றே நிகழ்த்தப்பெறுவதை காணுகின்றோம். வைகாசித் திங்கள் வருவேன் என்று பத்தினித் தெய்வமான கண்ணகி தேவி திருவாய் மலர்ந்துள்ளார் என்பதில் “ திங்கள்’ என்பதை திங்கட்கிழமையெனக் கொண்டு, வைகாசிப்பூரணையை ஒட்டிய திங்கட்கிழமையிலேயே குளுத்தி பாடிச் சடங்கினை நிறைவு செய்யும் வழக்கம் காரைதீவுக் கண்ணகை அம்மன் கோவிலில் நடைமுறைப்படுத்தப் பெற்று வருகின்றது. திங்கட்கிழமைக்கு முந்திய எட்டு நாள் பூசையும், குளிர்த்தியும் மட்டும் பெறுவதையும், மக்கள் மிகுந்த பயபக்தியுடன் இருந்து கேட்பதையும் இங்கு காணலாம். இந்த ஏட்டில் இருந்து “கோவலன் வெட்டுண்ட காதை’ படிக்கப்பெறும் அன்று அங்கு நடைபெறம் பூசைமுறையும், அதற்காகக் கையாளும் வாத்திய ஓசையும், மிகவும் அமைதியான சூழ்நிலையும் பார்ப்போருக்கும் கேட்போருக்கும் மிக்க அச்சத்தினையும் பயத்தினையும் விளைவிப்பனவாயிருக்கும். அநீதியான முறையில்தான் கோவலன் வெட்டுண்டான் என்பதை இவ்வச்சமும் பயமும், மக்களுக்கு உணர வைக்கும். அன்றைய பூசை முடிவில் உரிமைக் குடிகளுக்கு அமுது உள்ளிட்ட சிறு குடுக்கைகள், (முட்டிகள்) கொடுக்கப்பெறுவதைக் காணலாம்.
கப்புகன்மாரால் நடாத்தப்பெறும் இவ்வெட்டுநாள் சடங்கின் போதும், பூசனையை அடுத்து உடுக்குச்சிந்து என்று சொல்லப்படும் ஊர்ச்சுற்றுக்காவியம் முதலான காவியப் பாடல்கள் பாடப்படுவதையும், அவற்றிற்குப்
பூரபதி பூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் -2000

Page 445
பொருத்தமான வகையில் நிலத்தில் வைத்து மூன்று பேரால் அடிக்கப்பெறும் பெரிய உடுக்கை வாத்தியம் வாசிக்கப்படுவதையும் காணலாம். இந்த உடுக்கை வாத்தியம் இக்கோயிலில் மாத்திரமே உள்ளதென்று கொள்ளலாம். குளுத்தி விழா நடக்கும் இரவு ஒரு விசேடமான நாளாகக் கருதப்படும். அன்று அதிகாலை நேரத்தில் குளுத்திப் பாடல்களை முறைப்படி இருவர் சேர்ந்து இராகத்தோடு பாடி, குளுத்திப் பாணக்கத்தை அனைவருக்கும் பங்கீடு செய்வதோடு குளுத்திவிழா இனிதே நிறைவேறுகின்றது அதுவரை கோவில் அடையாளம் கொடுத்தல், பொங்கல் செய்தல் முதலாக பல வேலைகள் நடைபெறுவனவாகும்.
பூரீமங்கைமாரிஅம்மன்,திருக்கோயில்
திருக்கோவிலிலே கோரைக்களப்புத் தோட்டத்தினுள்ளேயுள்ள மங்கைமாரி அம்மன் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆலயம் சிறிதாயினும், அங்கு எழுந்தருளியிருக்கும் அம்மன் வழங்கும் அருள் பிரசாதம் அளவிலாததாகும்.
திருக்கோவில் பிரதேசத்திலே கோரைக் களப்புத் தோட்டத்திலே இப்பகுதி மக்களுக்குத் தாயாக எழுந்து அருள்பாலித்து வருகிறாள் மங்கைமாரி அம்மன்.
இப்பிரதேச மக்களால் வருடாவருடம் ஆனிமாதம் பூரணைத்தினத்தன்று அவ் அன்னைக்கு எடுக்கப்படும் விழா ஓர் சிறப்பம்சமாகும். மங்கைமாரியம்மன் தோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் இவ் அன்னை தான்தோன்றிச் சக்தியாக விளங்கி அருள்பாலிக்கின்றாள்.
1840ம் ஆண்டளவில் சிங்கப்பூர் நாட்டிலிருந்து வியாபார நோக்குடன் தனவந்தரான திரு. வைத்திலிங்கம் இலங்கை வந்நிருந்தபோது திருக்கோயில் பிரதேசத்திற்கு வருகை தந்ததாகவும், தென்னைப் பயிர்செய்கை உத்தியோகத்தர் பதவி வகித்ததினால் காடாய்க் கிடந்த கோரைக்களப்பு தோட்டம் அதற்கு உகந்ததென்று அறிந்து அத்தோட்டத்தை வாங்கிக்கொண்டதாகவும். தொழில் செய்வதற்கு மட்டக்களப்பு களுதாவளையிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்ததாவும் அவர்கள் தோட்டத்தைத் துப்பரவு செய்யும்போது அங்கு வைத்திலிங்கம் அவர்கள் ஆலமரம் ஒன்றைக் கண்டதாகவும் நிழலுக்கு உகந்த இடமென்று அதன் கீழ் தங்கி நின்றபோது அதனருகே கிடந்த சிறிய பற்றை ஒன்றினுள் ஒரு சிலை காணப்பட்டதாகவும் அது
மயூரமங்கலம்

ஒரு அம்மன் சிலையென்றும் பின்னர் அங்குள்ள தொழிலாளர்களை அழைத்துக் காண்பித்ததாகவும் கூறப்படுகின்றது. அன்று தொட்டு அவரது குடும்பத்தினர் அதற்குரிய வழிபாட்டில் இறங்கியதாகவும், அது மங்கைமாரியம்மனுடைய சாயலேயென்றும் கருதி மங்கைமாரியம்மன் என்றழைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அப்பகுதிக்கு மங்கைமாரியம்மன் தோட்டம் என்று பெயர் வழங்கலாயிற்றென்றும் அறிய முடிகிறது. அம்மனுக்குப் பூசை செய்யும் ஒருவர் உற்சவ காலங்களிலில்லாத நாளில் ஒரு நாள் வழமைபோல் அம்மனைக்குளிப்பாட்டி பட்டுடுத்தி நெற்றியில் குங்குமத் திலகமிட்டாராம் அப்போது குங்குமம் அவ் அன்னையின் மூக்கின் மேலே விழவே அவ் அம்மனின் மூக்கின் நுனியிலிருந்து குங்குமத்தை அகற்ற மூக்கின் நுனி அசைந்ததாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய பெருமைமிகு அன்னையை வழிபட்டோர் பல இன்பம் பெற்று வாழ்கின்றனர். அன்னைக்கு தற்போது புதியதோர் ஆலயம் அமைக்கப்படுகின்றது.
கண்ணகை அம்மன், தம்பிலுவில்
தென்புறம் பச்சைப் பசேல் எனப்பளிச்சிடும் நெல்வயல். மாரிகாலத்தில் இது, குளமாகவும் காட்சியளிக்கும். கிழக்கே கடற்கரை வரையும் வடக்கே நீர்ப்புறமும் போக்குவரவும் நிறைந்திருக்கும், தனித்தமிழ் குடியிருப்புக்கள். மேற்கே சொற்ப தூரத்தில் அமைந்திருக்கும் மட்டக்களப்பு வாவியின் தென்னிறுதியுடன் கலக்கும் நீரோடை, இவ்வாறான சூழலில் தென்வயல் ஒரத்தே வடக்கு நோக்கி அமைந்ததிருப்பதுதான் தம்பிலுவில் கண்ணகி கோவில்.
நம்மை சுத்திகரித்துப் போகும் போது எதிரே காண்பது விநாயகர் ஆலயமாகும்.
பிள்ளையாரை வணங்கி வலம் வந்து உட்பிரகாரத்துள் நுழைந்தால் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், வெளி மண்டபம் கும்பங்களோடு காட்சி அளிக்கும், வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் அம்மன் கோயிலைக் காணலாம். இதன் அமைப்பு முறையும் படிப்படியாக முன்னேறியதாகும். ஆதிகாலத்தில் ஒரு கொத்துப் பந்தலின் கீழ் அமைந்திருந்த கர்ப்பக்கிருகம் சிறு குடிசையாக மாறி நாளாவட்டத்தில் கற்கோயிலாகி நீண்ட காலம் வழிபடப்பெற்று வந்தது. பின்பு அவ்வப்போது கடமை ஏற்ற வண்ணக்கர்மாரின்

Page 446
பெருமுயற்சியாலும் மக்களின் வரையறையற்ற நன்கொடைகளாலும் காலத்துக்குக் காலம்புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய உருவ அமைப்பை பெற்றுள்ளது. இதன் உட்பிரகாரத்திலேயே அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட நாகதம்பிரான் கோவில் அமைந்துள்ளது. அழகான கோபுரமும் உள்மேடையும் அதில் பிரதிஷ்ட பண்ணப்பட்டிருக்கும் சிலைகளும் இத்தலத்திற்குப் பிரத்தியேக அழகைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
வெளிப்பிரகாரத்தில் தொன்று தொட்டு ஒரு வைரவர் கோவில் அமைந்துள்ளது. அதில் வைரவர் தடிகள் சாத்தப்பட்டு முறையான பூசை நடைபெற்று வருகின்றது. அடுத்து வெளிப்பிரகாரத்தில் உள்மதிலையண்டி எட்டுத்திசையிலும் அட்டபாலகர் பீடங்கள் அமைந்துள்ளன. பொங்கல் அல்லது சடங்கு காலமாகிய ஏழு நாட்களிலும் அவற்றிற்கு முறையான பூசைகள் நடைபெறும்.
இப்பிரகாரத்தில் ஆலும் வம்மியும், தென்னையும் கமுகும் நிறைந்து எப்போதும் குளிர்ச்சியே நிறைந்திருக்கும், மட்டக்களப்பு பொத்துவில் பிரதான பாதையில் 45 ஆவது மைல் கல்லுக்கருகில் சந்தியொன்றுள்ளது. அங்கிருந்து பார்த்தோமானால் கோயிலின் பிரதான வாயிலும் மண்டபத்தின் முன்பகுதியும் விநாயகர் ஆலயமும் காட்சியளிக்கும். இதுவே இன்றைய தோற்றமாகும். கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய கண்ணகி கோயில்களோடுதான் இதன் ஆரம்பமும் இருக்கவேண்டும் என எண்ண இடமுண்டு. அன்னம்புறாவர் எனப்படும் கட்டப்பத்தான்குடி வம்சத்தவரே இக்கோயிலின் வண்ணக்கர் பதவியை வகிப்பது நிரந்தரமாகும். இக்கோயில் வழக்கமாக வைகாசிப் பூரணையை அண்டிய ஏழு நாட்கள் திறந்து கோலாகலமாக நடைபெறும்.
திங்கட்கிழமையிலேயே பொங்கலும் குளிர்த்தியும் நடைபெறும். எனவே, வைகாசிப் பெளர்ணமியை முன்னிட்ட ஏழு நாட்களை அண்டிய ஒரு செவ்வாய்க்கிழமை கதவு திறக்கப்பட்டுப் பூசைகள் ஆரம்பிக்கப்பெறும். தொடர்ந்து ஐந்து நாட்கள் பூசையும் திருவிழாவும் நடைபெறும். ஆறாம் நாள் அம்மன் ஊர்வலம் செல்வார். ஏழாவதுநாள் பொங்கலும், குளிர்த்தியும் நடைபெற்று, திங்கள் இரவு கதவு அடைக்கப்படும்.
கோயில் திறந்த முதலாம் நாள் பூசை வண்ணக்கருடையது. இது சிறப்புற நடந்தபின் இரண்டாம்நாள் மண்ணெடுத்தல் வைபவம் நடைபெறும்.
C42 N2

குறிக்கப்பட்ட காலத்தில் குறித்த இடத்திலிருந்து கொட்டு மேளத்துடன் மண் எடுத்துக்கொண்டு வரப்படும். இந்த மண்ணைக்கொண்டே மட்பாண்டத் தொழில் தெரிந்த சில பெண்களால் அம்மன் பொங்கலுக்குரிய பானைகள், குடுக்கைகள் (சிறிய பானைகள்) என்பன தயாரிக்கப்படும். அடுத்த விசேடம் கல்யாணக்கால்நாட்டுதலாகும். வழமையாகப் பாடப்படும் வழக்குரைக் காவியத்தில் நாகமணி மீகாமனால் கொண்டு வரப்பட்டுச் சிலம்பியற்றிக் கண்ணகி கோவலன் திருமணம் நடைபெறுதலாகிய கல்யாணப் படிப்பு அன்று வருகின்றது. அன்றே, இங்கு உரிய முறையில் கல்யாணக்கால் நாட்டி அலங்கரிக்கப்படுகின்றது. அதன் பின்பு வழக்குரை மீதிப்பாடல்கள் தொடரும்.
ஆறாம் நாள் ஊர்வலம் இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும். அன்று தம்பிலுவில் முழு ஊருமே திருவிழாக்கோலம் கொள்ளும். ஆறாவது நாள்அதாவது ஞாயிற்றுக்கிழமை முன்னிரவில் நன்றாக அலங்கரிக்கப்பட்ட ஏடகத்தில் (தேரில்) கோயில் வடக்கு வாயிலாக அம்மன் ஊர்வலம் வெளிப்படும் போது அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். மின்விளக்குகள் ஒளிபிரகாசிக்க, மேளவாத்தியங்கள் பேரொலி செய்ய, நன்றாக வேடமணிந்த வளர்ந்தோர்களும் சிறுவர்களும் முன்னும் பின்னும் தத்தமக்குரிய கிராமிய நடனங்கள் ஆடிவர, தம்பிலுவில் கண்ணகி அம்மனுக்கே உரிய தனிக் காவியங்கள் இன்னிசை அளிக்க, வாணங்களும் வெடிகளும், விண்ணை அலங்கரிக்க, “அம்மம்மா கூய் கூய்”என்ற இரைச்சல்பின்தொடர வடக்குவாயில் மூலம் புறப்படும் அம்மன் தேரினைக் காண்பதற்குக் கண்கள் அடங்காத பூரண கும்பங்கள் நிறைந்திருக்கும். எல்லாக் கும்பங்களிலும் ஊர்வலம் நின்று, கும்பம் சொரிந்து தேங்காய் உடைத்து உரியவர்கட்கு விபூதி மஞ்சள் வழங்கி, ஊர்வலம் தொடர்ந்து நடைபெறும். அதே நேரத்தில் குறிக்கப்பட்ட பாதையின் பிரதான சந்திகளில் பெரும் பந்தல்கள் அமைத்துப் பாட்டு, கூத்து, கும்மி கோலாட்டம், நடனம் என்பன ஆயத்தமாக இருக்கும். இவ்வாறான ஒவ்வொரு பந்தரிலும் நின்று செய்வன செய்து, ஆவன முடித்து அம்மன் தேர்விடியற்காலையில் அதே வடக்கு வாயில் வழியாகக் கோயிலை அடையும். அத்தோடு காலைப்பூசை முடித்து அடுத்தநாள் பொங்கலுக்கான ஆயத்தங்கள் நடைபெறும்.
ஏழாம் நாள் பொங்கலின்போது, காலையிலே பெண்கள் கூடிவிடுவார்கள். மடிப்பிச்சை நெல், மடை நெல் என்பவற்றில் பொங்கலுக்குரிய நெல்லைக்குற்றி
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 447
எடுப்பார்கள். அப்போதெல்லாம் சிலம்புகூறல் போன்ற இசைப்பாடல்கள் பாடப்படுவதனால் அவர்கள் எவ்விதகளைப்புமின்றி இதனைச் செய்து முடிப்பார்கள். மதியபூசையின் பின் உடனே மக்கள் தங்கள் பானை பால் விறகு என்பவற்றோடு பொங்கலுக்கு ஆயத்தமாவார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பொங்கல் பானைகள் பொங்கிக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் கோயில் உட்பிரகாரத்தில் அம்மனுக்குரிய பிரத்தியேக பொங்கலும் நடைபெறும். இவற்றிலிருந்தே மேற்கூறிய குடுக்கைகட்கும் பிரசாதம் நிரப்பப்படும். இரவு எட்டு மணியளவில் பானைகள் யாவும் முறையாகப் படைக்கப்பட்டு விநாயகர் பூசை, அட்டபாலகர் பூசை என்பனவற்றோடு அம்மன் தீர்த்தம் எறியப்படும்.
அதை அடுத்து 'பணிமாறல்” என்ற பாரம்பரிய நடைமுறை உண்டு. நேர்த்தி காரணமாகவும், வேண்டுதல் காரணமாகவும் கோயிலுக்குப் பல சேலைகள் வருவதும் வழக்கம். ஒவ்வொரு வருடமும் வரும் சேலைகளை ஒவ்வென்றாக அணிந்து கப்புகனார் பின்தொடர வண்ணக்கர் மடையைச் சுற்றிவருவார். அப்பொழுது ஏகப்பட்ட கூட்டம் இருந்தாலும் அமைதி நிலவியே இருக்கும். அதனை அனைவரும் கண் இமைக்காது பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வைபவம் மற்றும் கடவுள் பூசைகள் செய்து, விபூதி மஞ்சள் பரிமாறியபின் "வட்டா கூறுதல்" என்ற வைபவம் நடைபெறும்.
பின் குடுக்கைகள் யாவும் உரிய உரிய பாகைக்காரருக்கும் தொண்டர்கட்கும் சேர்ப்பித்து எல்லோரும் உபயம் கொடுத்த பின் அன்று கதவு அடைக்கப் பின்னிரவாகிவிடும்.
கம்ப காமாட்சி அம்பாள், சேனைக்குடியிருப்பு வெள்ளிக்கிழமை தோறும் பூசை ஆவணிச் சதுர்த்திக்கு முன் ஏழு நாட்கள் திருவிழா நடந்தேறித் தீக்குளிப்புடன் முடிவடையும்.
பூரீசித்தி விநாயகர் அரசடி அம்பாள், பாண்டிருப்பு
சுமார் 300 வருடங்களுக்கு முந்தியதெனக் கூறப்படுகின்றது. பரிவார மூர்த்திகள் பூரீ சிவசுப்பிரமணியர், நாகதம்பிரான், வைரவர் நவக்கிரகம் மூஷிகம், பலிபீடம், சிங்கம் தினமும் இரண்டு காலப்பூசை திருவெம்பாவை விஷேட திருவிழாவாக நடைபெறுகின்றது.
மயூரமங்கலம்

பூரீபத்திரகாளியம்பாள், நற்பிட்டிமுனை 300 வருடங்களுக்குப் பழமை வாய்ந்த ஆலயம் எனக் கூறப்படுகின்றது. சக்தி வழிபாடு நடைபெற்று வருகின்றது. நவராத்திரிக்குப்பத்து தினங்களுக்கு முன் கொடியேறி உற்சவம் நடைபெறும்.
பூரீவடபத்திரகாளியம்மன், பாண்டிருப்பு 50 வருடங்கள் பழமை வாய்ந்தது. மூலமூர்த்தி - காளி அம்பாள்; பரிவார மூர்த்திகள் - வீரபத்திரர், நாகதம்பிரான், வைரவர். ஆவணிப் பூரணையில் கொடியேறி கதவு திறப்பு விழா ஒன்பது நாள் நடைபெற்று தீக்குளிப்புடன் முடிவடைகின்றது.
பரீமுத்துமாரியம்மன், சேனைக்குடியிருப்பு 400 வருடங்கள் பழமை வாய்ந்த கோவில் என்று கருதப்படுகின்றது. மூலமூர்த்தி மாரியம்மன். பரிவார மூர்த்திகள் - பேச்சியம்பாள், வைரவர், வீரபத்திரர். நவராத்திரி காலத்தில் பத்து நாட்களுக்கு வருடாந்த உற்சவம் நடைபெறும்.
பூரீமாரியம்மன், கல்முனை புராதன கல்வெட்டுக்களும் பாடல்களும் உள்ளன. மூலமூர்த்தி-மாரியம்மன். பரிவாரமூர்த்திகள் - பிள்ளையார், கந்தசுவாமியார், வைரவர், நாகதம்பிரான் ஆகியோர். ஆணியில் உற்சவம் 7 நாட்கள் நடைபெறும். திருவிழாக் காலத்தில் ஊர் சுற்றிக் கும்பத்தால் காவல் செய்வது வழக்கம்.
கடற்கரைக் கண்ணகியம்மன், கல்முனை மூலமூர்த்தி - கண்ணகி அம்மன். சித்திரை வருடப்பிறப்பு, சித்திரா பெளர்ணமி ஆடி அமாவாசை, கார்த்திகை தினங்களில் விஷேட பூசைகளும் நடைபெற்று வருகின்றன.
பூரீகண்ணகியம்மன், கல்முனை
தினமும் பூசை நடைபெற்று வருகின்றது. வருடாவருடம் வைகாசித்திங்கள் உற்சவம் நடைபெற்று வருகின்றது.

Page 448
பூரீமீனாட்சியம்மன், நிந்தவூர்
450 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. வன்னியரால் செய்யப்பட்ட கோவில் என்பது வரலாறு. மூலமூர்த்தி - அம்பாள், பரிவார மூர்த்தி, நாகதம்பிரான். வெள்ளிக்கிழமைதோறும் பூசை, தைப்பொங்கல், சித்திரா பூரணையில் விஷேட பூசை வழிபாடு உண்டு.
பூரீபத்திரகாளியம்பாள், வளத்தாப்பிட்டி
வெள்ளிக்கிழமை தோறும் பூசை நடைபெற்று வருகின்றது. ஆவணி மாதத்தில் பத்துத் தினங்களுக்கு உற்சவம் நடைபெறுகின்றது.
பூரீவடபத்திரகாளிஅம்பாள், அன்னமலை விஷேட தினங்களில் பூசை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பூரீமாரியம்மன், மல்லிகைத்தீவு
அம்பாளைக் குலதெய்வமாக மக்கள் போற்றி வருகின்றனர். விஷேட காலங்களில் விஷேட பூசை வழிபாடுகள் நடைபெறும்.
பூரீகண்ணகை அம்பாள், வீரமுனை
மூலமூர்த்தி - பூரீ கண்ணகி அம்பாள். பரிவாரமூர்த்தி - வைரவர். வெள்ளிதோறும் பூசை வழிபாடுகள் உண்டு. வைகாசி மாதத்தில் ஏழு நாட்களுக்கு நடைபெறும். உற்சவம் குளிர்த்தித் திருவிழாவுடன் முடிவடையும்.
பூரீகண்ணகை அம்மன், சம்மாந்துறை
வெள்ளிகிழமைகளில் பூசைகள் நடைபெறும். வைகாசித்திங்களில் தொடர்ந்து எட்டு நாட்களுக்கு பூசையும், திருவிழாவும் நடைபெறும்.
பட்டிநகர்பூரீகண்ணகை அம்பாள், அக்கரைப்பற்று கண்ணகி வரலாற்றோடு தொடர்புடைய ஆலயம். மூலமூர்த்தி - பூரீ கண்ணகை அம்பாள். பரிவார மூர்த்திகள் - விநாயகர், வைரவர், நாகதம்பிரான்.

வைகாசித்திங்களில் குளிர்த்தி நடைபெறும் வகையில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது.
பூரீசகலகலை அம்பாள், கள்ளியற்தீவு
ஆண்டு தோறும் மேமாதப் பெளர்ணமியில் விஷேட பூசை வழிபாடு நடைபெறும். திருவிழா தொடர்ந்து மூன்று தினங்களுக்கு நடைபெற்று வருகின்றது.
பூரீபத்திரகாளியம்பாள், முனையூர்
தொன்று தொட்டு தம்பிலுவில் வாழ்மக்களால் வணங்கப்பட்டு வரும் ஆலயம். வாரந்தம் பூசை நடைபெறுகின்றது. ஆவணிப் பூரணையில் விஷேட திருவிழா நடைபெறும்.
ஆலையடி பூரீமுத்து மாரியம்மன், ой5лилды/лф வருடாந்தம் மூன்று நாட்களுக்குப் பூசை நடத்தப்படுகின்றது. இதர முக்கிய நாட்களில் விளக்கு ஏற்றி வழிபாடு நடைபெறும்.
பூரீமுத்துமாரியம்மன், கோளாவில்
கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றிலிருந்து அரைமைல் தூரத்தில் கோளாவில் 03 எனும் பதியில் வம்சமரம் புடைசூழ காணப்படும் ஆலயம் தான் பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம். 1622இல் ராசசிங்க மன்னன் அம்மனின் முகக்களை, வாள், மணி, போன்றவற்றை வழங்கியுள்ளான்.
1880-1890 இடைப்பகுதியில் அம்மைநோய் பரவி, மருந்தில்லாது மக்கள் மடிந்தனர். ஒரு பக்தருக்குக் கனவின் மூலம் அம்மன் தனது குறையை வெளிப்படுத்தி கோதாரிக்கும்பம் வைத்து வழிபட வேண்டினாள். அதன் படி நடக்க நோய் மறைந்தது. 1905 இல் வெள்ளப் பெருக்கால் ஆலயம் இடம் மாற்றப்பட்டு பூசைகள் நடைபெற்றன. 1935இல் கோயில் நிறுவப்பட்டு தற்போது ராஜகோபுரப் பணியும் நடைபெற்று வருகிறது. ஆணித்திங்கள் வருடத்திற்கொரு தடவையே மூலஸ்தானக்கதவு திறக்கப்பட்டு மரபு வழி பூசகராற் பூசை நடத்தப்படும். இவ்வேளை 5 சிறுவர்கள் கும்பங்கள் தூக்கி வருவர்.
பூரபதிபூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 449
S.
S శ్లో
སྤྱི་
器
鬱
)
S.
༣.
{@j{
C
NΥ.
"مس
مز
மயூரமங்கலம்
囊
繳
翠
懿
ジ
༦
y؟
S
இ)
ΥΝ S.
گر تحصہ
5
'
همتی
"WN.
સ્વ
ரீமுத்து
அனுராதபுர நகரிலே எரு சேர்ந்த நகர சபைத் தொழிலாளர்க வணங்கப்பட்டுவந்த தெய்வமே பூசைகளை இந்து மதத்குருவை வ இன்றும் விஜய தசமியன்று மிக கொண்டாடுகின்றனர்.
1950ம் ஆண்டளவில் சிறு வணங்கத் தொடங்கினர்.
அனுராதபுரம் புனித எருக்கலங்காடு மக்கள் எம் ஏற்பட்டது. இதன் பிரகாரம் நீர புதுப்பெயருடன் ஒரு குடியேற்ற அடியவர்கள் இடம் பெயர்க்கட் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
பரிபாலன சபையினரும் ஒதுக்கப்பட்ட காணியில் ஒரு சிற அனுராதபுரத்தில் ஏற்பட்ட சேதமாக்கப்பட்ட போதும் இவ் ஆலயத்தைச் சேதமாக்கமுற்பட்ட பலமற்ற கதவை காலால் உதைத்
வணங்கிச் சென்றான்.
 
 
 
 
 
 

gogog (D(T6)LL()
மாரியம்மன், அனுராதபுரம்
க்கலங்காடு எனும் கிராமத்திலே உள்ள இந்து சமயத்தைச் ளினால் ஒருவேப்பமரத்தின் கீழ் வைத்து தொன்று தொட்டு இம் முத்துமாரியம்மன். அப்போதிருந்தே நைமித்திய ரவழைத்து மிகவும் கோலாகலமாக நடாத்தி வருகின்றனர்.
வும் கோலாகலமாக அலங்கார ஊர்வலத் திருவிழாவை
கோயில்அமைத்து ஒரு அம்பாளின் திருவுருவத்தை செய்து
நகராகப்பிரகடனப் படுத்தப்பட்டபடியால் 1991ல் அம்பாளுடன் இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ாவியடி எனும் கிராமம் தேவநம்பியதிஸ்ஸபுரம் எனும் த்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, 1993ல் எம் அம்பாளுடன் பட்டனர். இங்கு அம்பாளுக்கென வெறும் காணி
ஊர்மக்களும் மிகவும் கஷ்டப்பட்டு அம்பாளுக்காக பிய கோவிலைக் கட்டி வணங்கி வந்தனர்.
வன்செயல்களினால் அனேகமான இந்து ஆலயங்கள் அம்பாள் ஆலயம் சேதமாக்கப்படவில்லை. எமது காடையர் தலைவன் அம்பாளின் கதவை உடைப்பதற்காக
3தபோது அவனதுகால் இயக்கத்தை இழந்ததையடுத்து

Page 450
@gడ్లే
பூரீமுத் மாவளைத் தோட்டத்த ஒரு அன்பரின் கனவில் தோ வேண்ட அதன்படி ஊரவரின் கும்பாபிஷேகம் நடைபெற்ற சபாமண்டபம், விநாயகர், முழு மாசிமகத்தன்று தேர்த்திருவிழ தற்போது பிரமாண்டமாக நிரு வந்துள்ளது. இக்கோவிலி கோவிலையடைந்து பின் ந இக்கோவிலை கருநாகம் கா நிவாரணம் பெறுவதையும், திரு மூர்ச்சித்து விழுந்ததையும், சம்பந்தப்பட்டோர் கண்ணை பார்வை பெற்றதையும் மகிமைக தினமும் 4 சாமபூசை நன நடைபெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள
பூரீமுத்து தினமும் மூன்று காலப் நடைபெறுகிறது.
பூரீமுத் மூலமூர்த்தி முத்துமாரி அ தினமும் மூன்று காலப் பூசை வரு
 
 
 
 
 

5ரத்தினபுரி (D(T6)LL(I)
துமாரிஅம்மன், மாவளை டியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முத்துமாரியம்மன் ன்றி கிழக்கு வாசலையுடைய கோயிலமைக்குமாறு ஒத்துழைப்புடன் கோயிலை நிர்மாணித்து 1965இல் து. மூலஸ்தானம், கோபுரம், அர்த்த மண்டபம், நகன் ஆகிய பரிவாரமூர்த்திகளை உள்ளடக்கியது. ாவும், தீமிதிப்பும், அன்னதானமும் நடைபெறுகிறது. மாண வேலைகள் நடைபெற்று இறுதிக் கட்டத்திற்கு ன் திருவிழாவில் தேர் இரத்தினபுரி சிவன் கர்வலம் வரும். பாற்குடபவனியும் நடைபெறும் வல் காப்பதையும், பாம்புக்கடியால் அவதிப்படுவோர் நடர்கள் ஒரு முறை விக்கிரகங்களைத் திருடுகையில் 1983இல் உண்டியல் கொள்ளையிடப்பட்டு பின் இழந்ததையும், தவறுக்காகப் பிரார்த்திக்க மீண்டும் களாகக் கூறலாம். டைபெறுகிறது. 2001 இல் மாசி மகத்தில் கும்பாபிஷேகம்
ாது.
மாரியம்மன், பலாங்கொடை
பூசை உண்டு. நவராத்திரியில் 10 தினங்கள் உற்சவம்
ந்துமாரியம்மன், நீலகாமம் ம்பாள். பரிவார மூர்த்திகள் விநாயகர், முருகன், வைரவர்.
நடா வருடம் அலங்கார உற்சவம்.
யூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 451
M
SY
xSa
છે
O
மயூர மங்கலம்
கண்
ரீமுத்து மத்தியமலையகத்தின் த6 கொத்மலை வீதியில் வைத்தியசா தேவஸ் தானமாகும். இந்த தே ஆரம்பிக்கப்பட்டாலும் உலக யுத் கூறலாம். ஆரம்பத்தில் பெய்லி வி என்றே கூறப்படுகிறது.
ஊரின் மத்தியில் உய முத்துமாரியம்பாள் என்ற திரு அன்னையாகவிருந்து அருளாட்சி முத்துமாரியம்மன் ஆலயத்து குறிப்பிடத்தக்கதாகும்.
மலையக பிரதேசத்தில் கு தங்களின் ஊரிலிருந்தே தெய்வ வகையில் இவ்வாலயமும் தென் ( வரலாற்றின் மூலம் அறியலாம்.
தென்இந்தியாவில் கீர் அம்மன் ஆலயமும் ஒன்று, அங் தங்கிக் கொள்வதுண்டு. அவ்வ “அப்பனே நாம் இலங்காபுரி நாவலப்பிட்டி என்னும் நற்பகு உடனே புறப்பட்டு அங்கு செல்வ இலங்காபுரி எங்குள்ளது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடையாக மாத்தளை வந்து அ நிலையம் வந்து தான் இந்திய காரணமாக வைத்தியசாலையி முகத்தினை வைத்து பூசிக்கும்ட
 
 
 

ONg) (D(T6)ICLib
மாரியம்பாள், நாவலப்பிட்டி
லைநகர்களில் ஒன்றான நாவலப்பிட்டி நன் நகரின் மத்தியில் லைக்கு முன்பாக அமையப்பெற்றது பூரீ முத்துமாரியம்பாள் வஸ்தானத்தின் ஆரம்ப கால வரலாறு 1914 க்கு முன் தம் காரணமாக வளர்ச்சி அடையாமல் இருந்தது என்றே வீதியை முகப்பாகக் கொண்டு ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது
ர்ந்து விளங்கி அருள் புரிபவளாக எம்பிராட்டி, பூரீ நாமத்துடனே குடி கொண்டு சகல இன மக்களுக்கும் செய்து வருகின்றாள். மத்திய மாகாணத்தின் மாத்தளை |க்கு அடுத்தபடியாக இவ்வாலயம் விளங்குவது
குடியேறிய தென் இந்திய மக்கள் தங்களின் வழிபாட்டிற்காக ங்களின் பிடிமண் கொண்டு வந்து பூஜித்தார்கள். அந்த இந்தியாவிலிருந்தே ஆதி சக்தி முகம் கொண்டு வந்ததாக
ந்தி பெற்று விளங்கும் அம்மன் தலங்களுள் சமயபுரம் கு பல சாதுக்கள் இரவுப்பொழுதில் அம்மன் சந்நிதியில் ாறான சாதுக்கள் ஒருவரின் கனவில் அம்பாள் தோன்றி யில் மத்திய மலைநாட்டின் நகரங்களுள் ஒன்றான தியில் குடியேறி பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும். ாயாக’ என்று கட்டளையிட்டாள். சாதுமிரண்டு எழுந்து பயத்தாலும் அன்னையின் கட்டளையை நிறைவேற்றக் யணத்தை மேற்கொண்டு தலைமன்னார் வந்து கால் ங்கிருந்து புகையிரத மூலமாக நாவலப்பிட்டி புகையிரத ாவிலிருந்து வந்த அடியவர் என்றும் உடல் சுகயினம் ஸ் சுகம்பெற போவதாகவும் தன்னிடமுள்ள அன்னையின் டியும் தாம் சுகம் பெற்று திரும்பி வந்து பெற்று செல்வதாக

Page 452
கூறி வேலு ஆசாரியரி என்பவரிடம் அன்னையின் திருமுகத்தை ஒப்படைத்து வைத்தியசாலைக்குச் சென்றதாக அறியப்படுகின்றது.
சுகவீனமுற்ற சாது (தேவி உபாசகர்) சுகம் பெற்று வந்த வேலு ஆசாரியின் இல்லத்தில் அம்பாளின் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை கண்டு வீட்டில் வைத்து பூஜிப்பதை விட வெளியே ஆலயம் அமைத்து பூஜிக்கும் படி கட்டளையிட்டு சென்றதாகவும், அதன் பின் அவரை எங்கும் காணக்கிடைக்கவில்லை. இங்கனம் அன்னையே விரும்பி குடி புகுந்த பதியாக நாவலப்பிட்டி பூரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம் அமைகிறது.
பிளேக் நோய் காரணமாக இவ்வாலயமும் ஆலயவீதியும் மூடப்பட்டு ஒன்றரை மாதத்தின்பின் ஆலயத்தை இடிப்பதற்கென வந்த வெள்ளைக்கார அதிகாரி மூடிக்கிடந்த ஆலயத்தைத் திறந்து பார்க்க.
என்ன அதிசயம் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன் அன்னைக்கு வைத்து பூஜிக்கப்பட்ட மலர்கள், பூமாலைகள் அன்று மலர்ந்த மலராக அம்பாளின் திருக்கழுத்தில் வாசனையுடன் இருந்ததையும், உடைத்து வைத்த தேங்காய் மூடி அப்படியே பழுதாகாமல் இருந்தன ஊதுவர்த்தி வாசனையுடன், எரிந்த விளக்கு புதிய திரியுடன் எரிந்தது. அந்த சிறிய சரவிளக்கின் ஒளியில் அன்னை அகிலாண்டேஸ்வரி ஜெக ஜோதியாக அனைவருக்கும் அருள் காட்சி தந்தார். இதனை கண்ட வெள்ளைக்கார சுகாதார வைத்திய அதிகாரி திகைத்து போய் தான் தகரம் வைத்து அடித்து மூடியபின் யாரும் இந்த ஆலயத்தில் நுழைந்து பூஜை வழிபாடுகள் செய்திருக்க முடியாது என்று உணர்ந்து அன்னையை நெடுஞ்சானாக வீழ்ந்து வணங்கி அங்கிருந்து அகன்றதாக வாய்மொழி கதை மூலம் அறியப்படுகின்றது.
அம்பாளின் திருக்கோயில் முதலாவது கும்பாபிஷேகம் 1928ம் ஆண்டு நடைபெற்றது. 1966ல் பாரிய திருப்பணி செய்யப்பட்டு ஆலயம் முற்று முழுதாக திருத்தி அமைக்கப்பட்டு 1967ல் இரண்டாவது
கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்றாவது கும்பாபிஷேகம் 1982 லும் நான்காவது கும்பாபிஷேகம் 1996ல் நடைபெற்றதுடன் கொடிக்கம்பம்
ஸ்தாபிக்கப்பட்டு, கொடி ஏற்றும் ஆலயமாக மறு சீரமைக்கப்பட்டு சிறிய தேரொன்று செய்து மண்டலாபிஷேக முடிவில் மலரால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறி வெளி வந்தது.

ஆலய மூலஸ்தானத்தில் கருங்கல்லில் அமையப்பெற்ற அம்பாள் சிலை அலங்காரக் காட்சியளிக்கின்றது. வலது இடது புறத்தில் விநாயகர், முருகன் விக்கிரகங்கள் இடம் பெற்றுள்ளன. சுற்று வட்டாரத்தில் பிரம்மி, துர்க்கை, மகேஸ்வரி ஆகிய தேவிகளும் நவக்கிரகம், விஷ்ணு ஆகிய விக்கிரகங்களும் அமையப்பெற்ற திருத்தலமாக திகழ்வது சிறப்பம்சமாகும்.
பூரீமுத்துமாரியம்பாள், வத்துகாமம்
இத் தேவஸ்தானம் யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வத்துகாமத்தில் உயர்பதவி வகித்தவருமான பூரீ கனகசபை வைத்தியலிங்கம்பிள்ளை அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. கண்டிகட்டுகலைப் பிள்ளையார் தேவஸ்தானம் நிறைவுற்றபோது அங்கிருந்த சிற்பாசிரியர்களை அழைப்பித்து 1897ம் ஆண்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு சிற்ப விதிப்படி மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற நியதிக்கமைய திருமஞ்சனக் கிணறும் வெட்டிக்கட்டப்பட்டது. தலவிருட்சமாக ஒரு வேப்ப மரமும் தென்மேற்கு கரையில் வளர்ந்தது. இத் தேவஸ்தானத்தில் திருப்பணி வேலைகள் முடிவுற்று 31.05.1901இல் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மஹா கும்பாபிஷேகம் செய்த வைகாசி விசாகநாள் வரும் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகத்தன்று வருடாவருடம் தேர்த்திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முத்துமாரியம்மன் தேவஸ்தானம் சுமார் நூறுவருடம்பழமை வாய்ந்தமையால் இத்தேவஸ்தானத்தை புனரமைத்து திருப்பணி செய்ய 1982.01.30 அன்று பாலஸ்தானம் செய்யப்பட்டது. இலட்சக்கணக்கான ரூபா செலவிடப்பட்டு திருப்பணி வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு 1984ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் 22.10.1999ம் ஆண்டு பாலஸ்தானம் செய்யப்பட்டது. நூறு வருடங்களாக கோபுரம் இன்றி இருந்த ஆலயத்திற்கு கோபுரம் அமைக்கப்பட்டது.
எமது அருள்மிகு பூரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தில் அம்பாள் விநாயகர், முருகன், தாரிகா சண்டேஸ்வரி, லிங்கேஸ்வரன், வைரவர் ஆகியவற்றிற்கு விமானங்கள் அமைந்திருப்பதனைக் காணலாம்.
மூன்றாவது கும்பாபிஷேகம் 30.08.2000ல் மிக சிறப்பாக நடைபெற்றது.
பூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 453
பூரீமுத்துமாரியம்மன், தெல்தெனியா
மூலமூர்த்தி யூரீ முத்துமாரி அம்பாள். பரிவாரமூர்த்திகளாக விநாயகர், தண்டாயுதபாணி உள்ளனர். பங்குனித் திங்களில் அலங்கார உற்சவம்.
பூரீமுத்துமாரியம்மன், அளவத்துக்கொட பஜார் தினமும் இருகாலப் பூசை நடைபெறுகிறது. தைப்பொங்கலன்று திருவிழா.
பூரீமுத்துமாரியம்மன், ஊருகல நித்திய பூசையோடு மாசி மகத்தையொட்டி வருடாந்தத் திருவிழா நடைபெறுகின்றது.
பூரீமுத்துமாரியம்மன், கம்பளை இவ்வாலயம் ஆரம்ப காலத்தில் அரசமரத்தடியில் அம்பாளின் சிலையையும் திரிசூலத்தையும் வைத்து அடியார்கள் வழிபட்டு வந்தனர். காலம் செல்லச் செல்ல ஊர் மக்கள் ஒன்று கூடி, சிறு கொட்டகை அமைத்து” அம்பாளுக்குப் பூசை செய்து வழிபட்டனர். 1935ம் ஆண்டு ஊர்மக்கள் ஒன்று கூடி,கோயில் கட்டினார்கள். இவ்வருடமே முதலாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ஆரம்ப காலத்தில் அம்பாள் மாத்திரம் வீற்றிருந்த ஆலயத்தில் விநாயகர், முருகன், மகாவிஷ்ணு, உற்சவ மூர்த்தியான எழுந்தருளி அம்பாள் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இரண்டாவது கும்பாபிஷேகம் 1947ம் ஆண்டும் மூன்றாவது கும்பாபிஷேகம் 1959ம் ஆண்டும் நடாத்தி வைக்கப்பட்டன.
40 அடி உயரமான இராஜகோபுரப்பணியும் 1971ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. இக்காலத்தில் கோயிலில் நவக்கிரக சிலைகளும், சண்டேஸ்வரி சிலையும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இவ்வாலயத்தில் ஆரம்ப காலந்தொட்டே அரசமரம் இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக வலதுபுறம் அத்தி மரமும், இடது புறம் ஆலமரமும் இவ்வரசமரத்தோடு பின்னிப்பிணைந்து தானாகவே வளர்ந்து வருகின்றன. இதுவும் அம்பாளின் சக்தியாகவே கருதப்படுகிறது.
பொதுவாக அம்மன் ஆலயமென்றால் திரிசூலமும், முருகன் ஆலயமென்றால் வேலாயுதமும்
மயூரமங்கலம்

மட்டுமே இருக்கும். ஆனால் இக்கோயிலில் உள்ள திரிசூலத்தில் முருகனின் வேலாயுதம் சேர்ந்து, ஒருங்கே காணப்படுகிறது. இங்கு அடியார்களினால் சூலாயுதமே வைரவராகக் கருதி வழிபடப்படுகிறது. சூலாயுதமும், வேலாயுதமும் ஒருங்கே காணப்படுவது இவ்வாலயத்தில் சத்தியோடு சேர்ந்து முருகனும் அருளாட்சி செய்வதாகவே எண்ணத் தோன்றுகிறது. நேர்த்திக்கடன் வைப்போர் இந்தத் திரிசூலத்தில் காணிக்கைகளைக் கட்டிச் செல்வார்கள். மேலும் இவ்வாலயத்தில் சிங்கள மக்கள் வருகை பெரும்எண்ணிக்கையாக இருக்கும். அவர்களால் “பத்தினி தேவாலய’ என அழைக்கப்படுகின்றது. 1987ல் மீண்டும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 1989ம் ஆண்டு ஒர் அன்பரின் உபயமாக விநாயகப்பெருமான், சிவகாமிசமேத நடராஜர், பூதேவி லட்சுமி சமேத மகாவிஷ்ணு சிலைகள் உற்சவ மூர்த்திகளாக கிடைத்தன. இதுவரை காலமும் அம்பாள் தனியே இரத பவனி வந்து காட்சி கொடுத்த இவ்வாலயத்தில் இதன் பின் மூன்று இரதங்கள் பவனிவரத் தொடங்கின.
இவ்வாலயத்தில் பங்குனி உத்தரப் பத்து நாள் திருவிழாக்கள் குறிப்பிடத்தக்கது. இப்பத்து நாள் விழாவின் நிறை நாளான பங்குனி உத்தரத்திலன்று மகாவலி கங்கையில் நடைபெறும் “கரகம்பாலித்தல்” சிறப்பம்சமாகும். மூன்று கரகங்கள் பாலிக்கப்படும். இதில் சக்தி கரகம் என்பது அம்பாளின் அம்சமாகக் கருதப்படும். இக் கரகத்தைக் கோவில் தேசிகர் சுமந்து வருவார். ஏனைய இரண்டு கரங்களும் திருவுளச் சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்படும். இவை இரண்டும் தேர்ந்தெடுக்கப்படும் இரு அடியார்களினால் சுமந்து வரப்படும்.
இக் கரகங்கள் வீதி வரும்போது தத்தம் இல்லங்களின் முன் பெண்கள், நீரினாலும் பூக்களினாலும் சுமந்து வருவோரின் பாதங்களில் அர்ச்சித்து பாத பூஜை செய்து வணங்குவர். மகாவலி கங்கையை கரகங்கள் அடைந்தவுடன் பருவமடையாத பெண்கள் தாங்கள் கொண்டு வந்த முளைப் பாலிகைகளைக் கங்கையில் கரைப்பர். தொடர்ந்து வண்ண வண்ண நிறங்களில் கும்மி அடித்து ஆடிப்பாடும் காட்சியும், ஆண்கள் வயதுவித்தியாசமின்றி ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரைத் தெளித்து விளையாடுவதும் கண் கொள்ளாக் காட்சியாகும். பின் இக் கரகங்கள் மூன்றும் தீர்த்த விழாவன்று மாலையில் கங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு கங்கையில் கரைக்கப்படும்.

Page 454
பூரீமுத்துமாரியம்ம
பாண்டிய நாட்டின் "செட் என்று அழைக்கப்பட்ட செட்டிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் 1840ம் ஆண்டில் சிறுகோ சிறப்பான தெய்வத் திருப்பணியை
இவ்வாலயத்தின் முதன் சுவாமியையும் வீதியுலா வரச்செய் காரணமாகத் தமிழ் நாட்டிலிருந்து சித்திரத்தேர்கள் அமைத்து 1899ம்
இத்தேர்கள் வீதியுலாச் ( தேவாலயத்தை தாண்டித் தேர் செ காரணமாகக் கிறிஸ்துவ பெண் தேர்களில் ஏறிய தெய்வங்கள் வெ நினைவாக நிற்கிறது. நம்பி இவ்வாலயத்தினை மீள் புனரமை செய்வித்தனர்.
106. 1992 அன்று பாலஸ் முகமாக புனர் நிர்மாணத்திருப்பன வெகு சிறப்பாகச் செய்து முடிக்கப் இவ்வாலயத்தில் முத்து கருங்கல்லினால் ஆனவை. கதிர் பூசை செய்யப்படுகிறது.
1899ம் ஆண்டிலிருந்து ந அருட்கடாட்சம் பெருகுமுகமாக பச் வீதியுலா வலம் வருதலும் தொ அம்பாளும் கதிர் வேலாயுத சுவாமி “காணக் கண் கோடி வேண்டும்"
 
 

QDT DT6)ÚLb
ன் கதிர்வேலாயுத சுவாமி, நீர்கொழும்பு
டி நாடு" வழிவந்தவர்களான நாட்டுக் கோட்டை நகரத்தார் ார் குலத்தினரே, நீர்கொழும்பு பூரீ முத்துமாரியம்மன் னை அமைத்தவர்கள்.
விலாக, காலந் தவறாத பூசை புனஸ்காரங்களுடன் கூடிய ச் செய்து முடித்தனர்.
மூர்த்திகளான முத்துமாரி அம்மனையும் கதிர்வேலாயுத து அருள் பொழியச் செய்ய வேண்டுமென்ற பேரவாவின் வருவிக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு அழகிய ஆண்டுதேர்பவனிதிருவிழாவைமிகச் சிறப்பாகச் செய்தனர். சென்ற முதல் நாள் இங்குள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் ல்லக்கூடாது என்று மறியல் செய்ததும், - அக்கலவரத்தின் ணொருவர் பொலிஸாரால் கட்டுக் கொல்லப்பட்டதும், jறிகரமாக வீதியுலாக் கண்டதும் மறக்க முடியாத வரலாற்று வந்த அனைவருக்கும் அருள் பொழிந்து விளங்கிய புச் செய்து, 2. 6. 1952ம் ஆண்டு மகா கும்பாபிஷேகமும்
தாபனம் செய்வித்து ஆலயத்தை மீண்டும் அழகு செய்யும் ரிகள் செய்யப்பட்டு 02.06.1993 அன்றுமகாகும்பாபிஷேகம் பட்டது.
மாரியம்மன், பிள்ளையார், வைரவர் விக்கிரகங்கள் வேலாயுத சுவாமியின் இடத்தில் “வேல்" வடிவமே வைத்துப்
வராத்திரி இறுதி நாளான விஜயதசமியன்று அம்பாளின் தர்கள் பாற்குடம் எடுத்தலும், அபிஷேகங்களும் தேர், நகர் டர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்த் திருவிழாவன்று பும் இருவேறு சித்திரத்தேர்களில் பவனி வருங்காட்சியைக்
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 455
பூரீ சிங்கமகாகாளியம்மன், நீர்கொழும்பு நீர்கொழும்பு கடற்கரை வீதியிலேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது. இவ்வாலயம் "திருவிளங்கு நகரத்தார்” எனச் சிறப்புப் பெயர் பெற்ற வாணிபச் செட்டியார் வம்சத்தினரால் அமைக்கப் பெற்று இன்று வரை மிகச் சிறப்பாகப் பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.
1948ம் ஆண்டு வேலய்யாச் செட்டியார் என்பவரால் கட்டிமுடிக்கப் பெற்ற இவ்வாலயம் நீர் கொழும்பில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும் திகழ்கிறது.
தமிழ் நாட்டிலிருந்து சுண்ணாம்பு வியாபாரம் நிமித்தமாக வந்து குடியேறி வாழ்ந்தவர்களாலேயே சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னால் இவ்விடத்தில் ஏதோவொரு வடிவத்தில் வழிபாடு தொடங்கிற்று என்றும், பின்னாளில் மண்ணால் செய்யப்பட்ட துர்க்கையம்மன் சிலையொன்றினை அவ்விடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த கேரள நாட்டைச் சேர்ந்த குஞ்சப்பன் என்ற ஒருவர் வேறு ஒரு இடத்தில் இருந்து கொண்டு வந்து வைத்து வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
1889ம் ஆண்டு இந்நிலம் திருவிளங்கு நகரத்தாரால் (வாணிபர்கள்) வாங்கப்பட்டதாகவும் பழுதடைந்த நிலையிலிருந்த சிலையொன்று கடலில் போடப்பட்டதாகவும் - அவ்விடத்தில் வேறு காளியம்மன் சிலையை வைத்துச் சிலரால் வணங்கப்பட்டு வந்ததாகவும், பின்னாளில் அந்நிலம் கவனிப்பாரற்றுக் கிடந்ததாகவும் மிக நம்பகமாகத் தெரிய வருகிறது.
அக்காலங்களில் அந்தத் தெருவிலே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுருட்டுத் தொழிலாளர்கள் நூற்றுக் கணக்கானோர் வாழ்ந்திருந்தனர். அவர்களிடம் பணம் சேர்த்து “தம்பளைச் சின்னையா” என்றழைக்கப்பட்ட சுருட்டுத் தொழிலாளரால் அந்தக் காளியம்மனுக்கு சிறியதொரு மூலஸ்தான மண்டபம் கட்டப்பட்டு விளக்கேற்றி வழிபடப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
1948ம் ஆண்டு சிங்கமகா காளியம்மன் சிலை புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு காளியம்மன் கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. 1988ம் ஆண்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்டு அழகிய கோபுரம் அமைந்த ஆலயமாகக் கட்டப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்பட்டுப் புதுப் பொலிவு கொண்டது.
மயூரமங்கலம்

இவ்வாலயத் தோற்றத்தின் 50வது வருடமான 1998ம் ஆண்டு அம்பாள் தேரிலேறி நகர் உலா வந்து அருள் மழை பொழிந்தாள். அதேபோல் அனைவரது மனம் நிறைந்த ஆதரவுடன் ஆலயத்திற்குச் சொந்தமாக அழகிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.
இவ்வாலயம் கட்டப்பட்ட காலத்திலிருந்து பங்குனி மாதம் 12 நாட்கள் அலங்காரத் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது 21 நாட்கள் அலங்காரத் திருவிழா விசேட யாகங்கள், பால்குடம் எடுத்தல் போன்ற பல சிறப்புகளுடனும், புதுப்பொலிவுடன் திகழ்ந்திருந்த சிங்கமகா காளியம்மன் ஆலயம் முற்றாக உடைக்கப்பட்டு தேர்முட்டி மண்டபத்துடன் முழுக்க முழுக்கப் புதிய கோவிலாகக் கட்டப்பட்டு வருகிறது.
பூரீதேவிகருமாரியம்மன், சுலாதுவை
நீர்கொழும்பில் உள்ள சுலாதுவை எனும் பகுதியில் பூரீ தேவி கருமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
பூர்வீகம் என்று குறிப்பிட்டுக் கூறக்கூடிய நீண்ட வரலாறு இல்லாத இந்த ஆலயம் 1995ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு 12.06. 1995 அன்று மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சுமார் 1957ம் ஆண்டளவில் இப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களில் ஒரு இந்துப் பெரியவர் முதன் முதலில் அம்மன் படமொன்றினை வைத்து “பூமாரி அம்மன்” என்று வழிபட்டு வந்ததாகவும் அக்கிராமத்து இளைஞர் சிலரின் முன் முயற்சியால் ஒலைக்குடிசையாக இருந்த கோயில் சிறிய கட்டிடமாகக் கட்டப்பட்டு 1983 கருமாரி அம்மன் ஆலயத்திற்கான முதற் கட்ட வேலை பூர்த்தி செய்யப்பட்டது. பின்பு மக்களின் ஒத்துழைப்புடன் இன்றைய நிலையில் ஆலயம் பெருப்பிக்கப்பட்டு 12.06. 1995 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அவ்வாலயத்திற்காக மூலஸ்தான விக்கிரக கருமாரி அம்மன் சிலையையும் அதற்கான பொருட்களையும் ஒரு பெண்மணி வழங்கினார்.
இவ்வாலயத்தில் வைகாசி விசாகத்தன்று முடிகின்ற பத்து நாள் அலங்காரத் திரு விழாக்களுடன் இறுதி நாளன்று கருமாரி அன்னை சப்பரத் தேரில் ஏறி நகர் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள் மழை பொழிவாள். அன்று காலையில் பால்குடம் எடுத்தலும் தீ மிதிப்பும் நடைபெறுவது வழக்கமாகும்.

Page 456
}4@GYඛබලශක්‍යාඛ්‍ය(ඛබැ\\
&
受
s
3. 株s@A○
澤※ (ΟΥΕβ SC) ମୁଁ ଖୁଁ କଁ నైన్ద 懿重鹦
பூரீமுத்துமாரிய
1977ம் ஆண்டு கும்பாபி விநாயகர், பாலசுப்பிரமணியர், உற்சவத்துடன் கூடிய பன்னிரண்
☆-・t حسين حمم lŹ SY T'NS. བ་༣ཅིའ: 芝**。
※ , “్ళ | & } ኢW% ኳ f fa C) ※滤 劉芝 S. SVO) (භ්‍රම් હેિ
怒》
s s
s
*
பூரீமுத்
தென் மாகாணத்தில் க எழில் மிகு தோற்றத்துடன் அடை 1956ம் ஆண்டு மிகவும்ப சிறுகல் வைத்து வழிபாடு செய் உருவாகி வளர்ந்தது. இக் ே விசேடமான ஒன்று.
1957ம் ஆண்டு கோவிலு உதவியுடனும் பொதுமக்களின் 4
1995ல் இக் கோவிலைப் சிறப்பாகக் கோவில் புனரமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ளுத்துறை (D(T6)|LL(I)
ம்மன், றைகம் தோட்டம், இங்கிரியா
ஷேகம் நடைபெற்றது. மூலமூர்த்தி அம்பாள். பரிவாரங்கள் வைரவர். மூன்று காலப் பூசை. மாசிமகத்தன்று தீர்த்த ாடு நாட்கள் உற்சவ காலம்.
65 (DT6) Ltb
துமாரிஅம்மன், படகெடிய
ாலி மாவட்டத்தில் தலங்கா தோட்டத்தில் படகெடியப் பிரிவில் மயப்பெற்றுள்ளது.
ள்ளத்தாக்கில் அமையப் பெற்றிருந்தது. தொடக்கத்தில் ஒரு யப்பட்டது. பின் மக்களின் ஆர்வம் காரணமாக கோயில் காவிலின் முன் புறமாக விநாயகர் கோயில் உள்ளமை
லுக்குப் பெருமனி யொன்றும் கட்டப்பட்டு, தோட்டநிர்வாக உதவியுடனும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
புனரமைக்க அரசாங்கம் நன்கொடை அளித்தமையால் மிகச் க்கப்பட்டு, அத்துடன் புதிதாக முருகன் சந்நிதானமும்
மயூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 457
நிறுவப்பட்டது. புதிதான கலசத்துடனும் கோவில் சிறப்பாக அமையப்பெற்றுள்ளமை அம்பாளின் திருவருளே.
இக்கோவிலில் வருடாந்தம் ரதபவனியாம். நவராத்திரி,மார்கழித்திருவெம்பாவை போன்ற பூசைகள், விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
1956ல் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோயில் கட்டும் பணியில் ஈடுபட இசைந்து, ஆலயத்தினை உயர்த்திக் கட்டத் தீர்மானித்து விநாயகர் சிலை தற்பொழுது உள்ள இடத்திற்கு கோயிலை மாற்றினர், பின்பு ஊரிலுள்ள சிறியோர் முதல் பெரியோர் வரை கல், மண் என்பவற்றினை கொண்டுவந்து அப்பள்ளத்தினை நிறைத்துள்ளனர். இவ் ஆலயத்திற்குப் பக்கத்தில் சுமார் பதினைந்து (15) அடி வரை கல்வேலியையும் அமைத்து அதற்குரிய மண்ணையும் கற்களையும் இட்டபின்பே ஆலயம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருடமும் வைகாசிமாதம் பெளர்ணமி தினத்திலேயே கரகம்பாலித்துமூன்று நாட்கள் திருவிழா நடைபெற்று வருகின்றது. அத்தோடு மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் திருவெம்பாவை விஷேடமாக நடைபெற்று வருகின்றது.
இக்கோயிலின் சிறப்பம்சம் யாதெனில் விநாயகர் கோயில் தனியாகவே அமைக்கப் பட்டுள்ளதுதான். கோயிலில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில் அரசமரத்தடியில் கல்லினால் சிலை செதுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கோயிலுக்கு இடதுபுறமாக இன்னமும் ஆரம்பகாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வேலி உண்டு. இது சுமார் 12 அடி வரை உயரம் உடையதாக அமைந்துள்ளது.
1995 ஆம் ஆண்டு ஆலயம் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டதோடு நீர்த்தாங்கியும் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து சிலையும் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயம் புனரமைப்பின் பின்பு கோயிலின் உட்புறச்சுவரிலே அழகான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. தற்பொழுது இரு அறைகளாகப் பிரிக்கப்பட்டு மூலஸ்தானத்தில்
t à
மயூரமங்கலம்

அம்பாளுடைய சிலையும் முருகப் பெருமானுடைய சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆலய வாசலிற்கு உட்புறமாக வேல்கள் இரண்டும் இரண்டு இடங்களில் நடப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டு ஆலயத்திற்குக்கலசம் வைக்கப்பட்டு மாபெரும் திரு விழாவும் நடாத்தப்பட்டது. அத்தோடுரதபவனி விழாவும் நடைபெற்றது.
பூரீமுத்துமாரியம்மன், தலங்கா
தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் தலங்காத் தோட்ட குரங்குமலைப் பிரிவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆகம முறைப்படி அமையப் பெறாவிட்டாலும் அமைதியான பசுமைநிறைந்த சோலைகளின் நடுவில், படர்ந்து விரிந்துள்ள ஆலமரநிழலிலும், மலைக்குன்றின் மத்தியிலும் ஒரு கற்பாறையின் மேல் கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ளது.
1964ம் ஆண்டு ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கற்களின் மத்தியில் ஒரு கல்வேலி ஒன்றினை அமைத்து நான்கு சிறிய தூண்களை நிறுத்திப் பச்சைப் பந்தரிட்டு அதன் கீழ் ஒரு கல் வைத்து வழிபாடு செய்து வந்தனர். அந்த இடத்தில் ஒரு நாகபாம்பு குடியேறியது. 1965ம் ஆண்டு மக்களின் ஆர்வத்தினால் ஒரு விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து மக்களின் முயற்சியின் பயனாக முன் மண்டபம், கோயிலுக்கு வரப் பாதைகள் என்பன அமைக்கப்பட்டுப் பூசைகளையும், தேர்த்திருவிழாவையும் சிறப்புறச் செய்து வந்தனர்.
ஆலயம் அமைக்கப்பட்டபோது நாகபாம்பு அங்கு குடியேறியதன் காரணமாக மூலஸ்தானத்துக்கு எதிரே ஒரு பெரும்புற்று ஒன்று பெரிதாக வளர்ந்து உள்ளது. பூசையின் போது நாகத்துக்கும் பூசை செய்யப்படும்.
1985ம் ஆண்டு கோவில் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டது. ஆலயத்தில் அம்மன், விநாயகர், முருகன், சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுப் பூசைகள் நடைபெறுகின்றன.
1993ம் ஆண்டு புதிய மாபெரும் ரதம் கொண்டு வரப்பட்டு விழா செய்யப்பட்டது. நவராத்திரி, திருவெம்பாவை பஜனை விழாவும் சிறப்புற நடைபெறுகின்றது.
露

Page 458
Y
మ్రి","ప్ట] Nళ్సి يغا ‹ዖ ಗಾಳಿ" %ಣೆ
(༦)
് ୬ଷ୍ଠ୍ଯ
Y Α ́ 4560, Y A P D
கிளிநொச்சி மாவட்டத்தி f | y யோகர் சுவாமிகளின் விருப்புட் s ) முற்பகுதியில் ஆலயம் அமைக்கும் ܨܠ క్ష : இல் மதுரையிலிருந்து செய்விக்க ܝܢܳ
கற்பக்கிரகம், அர்த்த மகாமன் கும்பாபிஷேகம் இடம்பெற்றது. 19 தினங்களுள் புயலுடன் மழை பெய
வருடாந்த விழாவிற்கு பாதையில், பகலிரவாக அம்பா
கடந்த 39 வருடங்களாகநடை மண்டபம், சுற்றுமதில் முதலிய வைரவர், சண்டேஸ்வரர் முத மண்டபமும் அமைக்கப்பட்ட நடைபெற்றது. 1983முதல் : அலங்கார உற்சவம் நடத்தப்ப மகோற்சவமாக மாறியது.
யோகர் சுவாமிகள் நாட் மூன்று சித்திரத் தேர்களைக் இக்கோவில் பெருங்கோவிலாகு பெண்களும் தேரிழுப்பர். சித்திை சித்திரை பூரணை, கார்த்திகை மகாலட்சுமி வழிபாடும் இடம் நடத்தப்பட்டது.
1990 முதல் கடைசி ஆடி செவ்வாயும் சிறப்பாக இடம் கொண்டுள்ளதுடன் மதுரை மீன குடமுழுக்கன்று கருடன்கள் கூட்
 
 
 
 
 
 

6ίl65Πάό DT6) Ltb
காம்பிகை, இரணைமடு
ல உள்ள பெரியகுளமான இரணைமடுக்குளத்தினருகிலே படி மதுரை மீனாட்சி ஆலய அமைப்புப்படி 1960இன் பணிபலரது அவாவிற்கேற்ப ஆரம்பிக்கப்பட்டது.13.04.1961 ப்பட்ட விக்கிரகம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ண்டபங்கள் பூர்த்தியாகிய நிலையில் 22.01.1961 இல் 64 மழையின்மையால் மக்கள் யாகமொன்றைச் செய்ய சில ய்தது. w
முன்னதாக பிரபல்ய கோவில்களை உள்ளடக்கிய ாள் ஊர்வலம் வந்து அருள்பாலிக்கும் எழுச்சி விழா பெற்று வருகிறது. மணிக்கூட்டு கோபுரம், ஸ்தம்ப னவும் பிள்ளையார், முருகன், நவக்கிரகதேவர்கள், லிய பரிவார மூர்த்திகளும் அமைக்கப்பட்டு வசந்த து. பின் 20.03.1981இல் மகாகும்பாபிஷேகம் சித்திரைப் பூரணைக்கு முன்வரும் 10 தினங்களில் ட்டு, கொடித்தம்பம், தேர் கட்டப்பட்டபின் 1984இல்
டிய மாமரம் இன்றும் விருட்சமாக காட்சியளிக்கிறது. கொண்டும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கேயுமுள்ள ம். 18.04.1989இல் முதல் வெள்ளோட்டம் இடம்பெற்றது. ரப்பூரணையன்று தீர்த்தம் நடைபெற்று இரவு பொங்குவர். தினம் ஆகிய தினங்களில் தீபழஜை நடத்தப்படுவதுடன் பெறும். 26.01.1996இல் மீண்டும் கும்பாபிஷேகம்
ச் செவ்வாயன்று மகா யாகம் நடத்தப்படுவதுடன் ஆடிச் பெறும். அம்பாள் பூரீ கனகாம்பிகை எனப் பெயர் ாட்சியை ஒத்துக் காணப்படுகிறார். 1996ல் மூன்றாவது ம் சுற்றிப் பறந்தது ஓர் அதிசயமாகக் கருதப்படுகிறது.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 459
பூரீநடனமுத்துமாரிஅம்மன், ஸ்கந்தபுரம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்கந்தபுரத்தில் அரசினரால் வழங்கப்பட்ட காணிகளை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளையில் ஒர் அன்பருக்கு ஒரு இத்திமரத்தடியில் தன்னை வெளிப்படுத்திய மகாமாரி அங்கு வீற்றிருந்து அருள் பாலிக்கத் தொடங்கியமை ஒரு அற்புத வரலாறாகும்.
அக்குடியேற்றத்திட்டத்தில் குடியேறிய மக்கள் அனைவரும் நடன முத்துமாரியை தரிசனம் செய்து பொங்கல் பூசைகள் செய்யத் தொடங்கினர். இதன் விளைவாக பல அன்பர்கள் சேர்ந்து இத்திமரத்தடியில் இருந்த ஆலயத்திற்கு புதிய கட்டங்களை அமைத்து விரிவுபடுத்தினர். ஓர் அன்பர் அம்பாளின் விக்கிரகத்தை அன்பளிப்பு செய்ததன் காரணமாக, கோவிலில் அவ் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
1997ல் கோவிலின் வீதியில் வைரவருக்கு ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டு வைரவரும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே விநாயகர், முருகன் சிலைகளையும் அன்பர்கள் கோவிலுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதன் காரணமாக வெளி மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டு கோவில் மேலும் அபிவிருத்தியடைந்தது.
1998ல் புதிய நிர்வாக சபையின் கீழ் ஓர் அலங்கார மண்டபமும் அமைக்கப்பட்டது.
கண்ணகை அம்மன், குறிஞ்சாத்தீவு, ஆனையிறவு யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் கடற்கரை பக்கமாக உள்ளது. நித்திய பூசை உண்டு. பத்துத்
மயூரமங்கலம்
 

தினங்களுக்குத் திருவிழா நடைபெற்று வைகாசிப் பெளர்ணமியில் முடிவுறுகிறது.
பூரீமுத்துமாரிஅம்பாள்முரசுமோட்டை, சேற்றுக்கண்டி 300 ஆண்டுகளுக்கு முன்பு பெருங்காடாக இருந்த முரசுமோட்டை பழைய கமம் என்னும் கிராமத்தில் பூசை வேள்வி என்பவற்றால் வழிபாடு இயற்றப்பட்டது. 1955 இல் முரசுமோட்டைக் குடியேற்றம் நடந்த காலத்தில் குடியேறிய மக்கள் மரச் சோலையில் கொட்டிலில் இருந்த அம்பிகை ஆலயத்தை மடாலயமாக அமைத்து 1970ல் கும்பாபிஷேகம் செய்தனர். ஓர் அன்பரின் கனவில் குறித்த ஓர் இடத்தில் பெருங் கோயில் எடுக்க வேண்டும் என்று சொன்னதன்படி 1980ல் பாலஸ்தாபனம் நடைபெற்று மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், தரிசன மண்டபம், ஸ்தம்ப மண்டபம் ஆகியவற்றுடன் விநாயகர், பாலசுப்பிரமணியர், நாகதம்பிரான், வைரவர், வீரபத்திரர், சண்டேஸ்வரர் ஆகியோர்க்கான சந்நிதானங்களும் மணிக்கோபுரம், தீர்த்தக் கிணறு போன்றனவும் அமைக்கப்பட்டு 1983ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அவ்வாண்டில் இருந்து ஆணி உத்தரத்தை தீர்த்த விழாவாகக் கொண்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது.
1996ல் ஆணையிறவு, பரந்தன், கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற போரினால் அன்னையின் திருவுருவம் சுதந்திரபுரம் சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்துப் பூசிக்கப்பட்டு வருகிறது.

Page 460
四珊珊* ... ..., 概颗6 如而 加比 伽感吧6 3锦卿©9 身材 娜娜 渝線癥傷「渝密歇。*鄉灣 沧念函赛资ä沧%器迫 沧シQや聲 {iị @咏 C)\\9\滔 突额邬“女心 (C)怒A. )シジ 懿湄)尧诊@姆%歐
பூரீமுத்துமாரி
那呼 姆翻 5 ÇÃ 圆吨 脚娜 瞬 娜 即 咖 5 历产
·伍 行 伍L
 
 
 
 
 
 

T66b (DT6) Ltb
டெய்சி வெளித் தோட்டம், மாவத்துகாமம்
பரிவார மூர்த்திகள் விநாயகர், முருகன், மகாவிஷ்ணு. டபெறுகிறது. ஆடி மாதத்தில் வருடாந்தத் திருவிழா.
T6)6D (DT6)IČLdb
யம்மன், பிரதான விதி- புவக்பிட்டி
ாரி அம்மன். பரிவார மூர்த்திகள் விநாயகர், முருகன், ம் இருகாலப் பூசை. பங்குனி உத்தரத்தையொட்டி உற்சவம்.
யூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர்-2000

Page 461
|
Y ή ή
تعمیر
ソ
స్థాస్ర
ప్రొ
།
மயூரமங்கலம்
- * s #
戦ーイ
མ་ན།
6ιαδΠα
முத்துமாரி
கொழும்புநகரிலே போர் சக்தி தலமாகும். தற்போது கொட் னது, போர்த்துக்கீசர் காலத்தில் அண்மையில் உள்ள கத்தோலிக் அதனை அவர்கள் (போர்த்துக் வாணிபச் செட்டிமார் (திருவிள அமைத்தார்களாம்.
இக்கோவிலின் சிறப்பு ஆலயங்களிலும், வேறு எந்தத் தி பெயர் அமையும். அதற்கு விதில் ஆலயப் பெயர் அமைந்திருப்பது கு மூலமூர்த்தி காளியாகவும், உற்சவ மூர்த்தி அமைப்பிலேயே இந்த இருவர்களினதும் வலது கீழ் கையி மாரி அம்மனுக்கு கட்கமாக அமைந்திருப்பதாகும்.
1918, 1954,1982.1994ம் ஆ கும்பாபிஷேகம் நடாத்தப் பெற்றது மூல அம்பாள் புதிதாகச் செய்ய திருவுருவம் மூலஸ்தானத்துக்கு அவருக்கே செய்யப்பட்டு வருகிறது தினமும் ஐந்து வேளை பூ மகத்தில் தேர்த் திருவிழா நடைெ
பூரீமகா கா
கொழும்பில் தமிழர்கள் பெரடைஸ் பிளேஸ் என்ற ஆங்கி என்பதாகும்.
 
 
 
 

Dib (DT6) Ltb
'அம்மன், கொட்டாஞ்சேனை
த்துக்கீசர் காலத்துக்கு முற்பட்டதும் மகிமை வாய்ந்ததுமான டாஞ் சேனையின் மத்தியில் அமைந்திருக்கும் இத்தலமாதற்போதைய பொன்னம் பலவாணேஸ்வரர் கோயிலுக்கு 5 ஆலயம் அமைந்துள்ள வளவில் அமைந்திருந்ததாகவும், கீசர்) அப்புறப்படுத்த, அவ்வேளை கொழும்பில் இருந்த ங்க நகரத்தார்) தற்போதைய இடத்தில் இக்கோவிலை
யாதெனில் இலங்கையில் பிரசித்தி பெற்ற பழைய ருத்தலங்களிலும் மூல மூர்த்தியின் பெயரிலேயே ஆலயப் விலக்காக இவ்வாலயத்தில் உற்சவ மூர்த்தியின் பெயரில் குறிப்பிடத்தக்கது. கொழும்பு முத்துமாரி அம்மன் கோவில் மூர்த்தி முத்துமாரியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வேறுபாடு அமைகிறது. காளியம்மன், முத்துமாரி ல் உள்ள அமைப்பினாலே இந்த வேறுபாடு வெளிப்படுகிறது. வும், (குத்துவாள்) காளியம்மாளுக்கு சூலமாகவும்
ஆண்டுகளிலும் அவ்வப்போதிருந்த தர்மகர்த்தாக்களினால் து. 1994ம் ஆண்டு செய்யப்பட்ட கும்பாபிஷேகத்தின்போது ப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய அம்பாளின் ப் பின்புறத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதற்பூசை ilபூசை, குறிப்பிட்ட நேரந்தவறாது நடைபெறுகிறது. மாசி பறுகிறது.
"GmfluuübupGör, ug Goo Giv f'Gom Giv
செறிந்து வாழுகின்ற ஒரு பகுதி பெரடைஸ் பிளேஸ். vப் பதத்திற்கு உரிய தமிழ் வரைவிலக்கணம் சொர்க்கபுரி

Page 462
இன்று இலங்கையில் பல பாகங்களிலும் இருந்தும் இந்து பக்தர்களும் தமிழர்களும் ஏன் சிங்கள பெளத்தர்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இவ்வாலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அம்பாளின் சக்தியை உணர்ந்து கொழும்பு பெரடைஸ் பிளேஸுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அரசும் பனையும் பின்னிப் பிணைந்த அபூர்வ தலம் 1931ஆம் ஆண்டு அமைந்தது.
இத்தல விருட்சங்களில் அன்று நாகமாக நிலைகொண்டு நாகத்தம்பாளாக அருள்பாலித்து வந்தவள் பூரீ மகா காளியம்மன். இதனை உணர்ந்த அம்பாள் அடியார்கள் இவ்விருட்சங்களை சுற்றி மாடம் அமைத்து அதில் சூலாயுதத்தை வைத்து வணங்கத் தலைப்பட்டனர்.
இம்மக்கள் கிராமிய வழக்கப்படியே பூஜைகளை நடாத்தி வந்தனர். அம்பாளின் சக்தி படிப்படியாக வெளிப்பட இவ்வாலயத்தை கட்டியெழுப்ப வாய்ப்புக் கிடைத்தது. அதற்கமைய மக்கள் அனைவரும் அம்பாள் அருளால் ஒன்றிணைந்து 1949 ஆம் ஆண்டு ஜுன் 25ஆம் திகதி இவ்வாலயத்தைக் கட்டியெழுப்பத் திட்டமிட்டனர்.
மூலமூர்த்தியான சப்தசதி பூரீ மகா காளியம்மனுக்கும், பூரீ முனிஸ்வரப் பெருமானுக்கும், பூரீ சூலாயுத மூர்த்திக்கும் கோபுரங்களுடன் கூடிய திருக்கோயில்கள் அமைக்கப்பட்டன.
இக்கோயில்களில் இவ் இஷ்ட தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு புரட்டாதி மாதம் 30 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருடா வருடம் திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
எட்டாம் நாள் திருவிழா கொழும்பு பெரடைஸ் பிளேஸிலிருந்து அருள்பாலிக்கும் அம்பாளுக்கு முகத்துவாரம் சங்குமுகத்தில் கரகம் பாலித்தல் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்தும் கரகம், காவடி, தீச்சட்டிகள் என பக்தர்கள் புடைசூழ அம்பாள் முகத்துவாரம் ஆலயத்திலிருந்து பாலத்துறை, சேதவத்தை, பலாமரச்சந்தி, பபாபுள்ளத் தோட்டம், கிராண்ட்பாஸ் வீதியூடாக ஆலயத்தை வந்தடைவாள்.
பத்தாவது நாளன்று பக்த கோடிகள் மஞ்சள் நீராடி அம்மன் அருளைப் பெற்று சக்தி அடியார்களுக்கு அருள்வாக்குக் கூறுவர். அந்த அருளோடு சக்திகரகமும் தீச்சட்டியும் ஏந்திமுகத்துவார சங்குமுகத்திற்குச் சென்று

தீர்த்தமாடுவர். அதனைத் தொடர்ந்து பெரடைஸ் பிளேஸ் பூரீமகா காளியம்மன் சன்னிதானத்தில் மகேஸ்வர பூஜை நடாத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.
1949ம் ஆண்டுக்குப் பின் அதாவது நாற்பத்தி மூன்று வருடங்களுக்குப் பின் அதி சுந்தர ஆலயவிமானம், வசந்தமண்டபம், இராஜகோபுரம் அமைப்பதற்காக பாலஸ்தாபனம் நடத்தப்பட்டது.
பூரீ விநாயகப் பெருமான், யூரீ முருகப் பெருமான், சந்திரன், சூரியன், ரேணுகா தேவி, உற்சவதேவி, இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி, பூரீ துர்க்காதேவி ஆகிய தெய்வங்களினதும் நவக்கிரகங்களினதும் திருவுருச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
(9.2.1996) வெள்ளிக்கிழமை பஞ்சமி திதியும் அம்பாளின் நட்சத்திரமான அத்த நட்சத்திரமும் கூடிய வேளையில் புனராவர்த்தன ஜிர்னோத்தாரண மகா கும்பாபிஷேகம் நடாத்தி வைக்கப்பட்டது.
இத் திருக்கோவிலில் விஷேஷமாக முதலில் சூரியன், சந்திரனுக்கும் தலவிருட்ஷங்களான அரசும், பனையும் பின்னிப் பிணைந்த நிழலில் வீற்றிருக்கும் பூரீ விநாயகருக்கும் பூஜை செய்தபின் பூரீ விநாயகர், மூலமூர்த்தியும் சப்த சதி நாயகியுமாகிய பூரீ மகா காளியம்மனுக்கும், பூரீமுருகனுக்கும் பூஜை நடைபெற்று ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் பூஜை நடைபெறும்.
எட்டு திக்குப் பாலகர்களுக்கும் நித்திய பலிபீட பூஜை நடைபெறும். அம்பாளுக்கு காலை பூஜையும், மாலை நேரம் சாயரட்டை பூஜையும் நித்திய அக்கினி பூஜையும் நடைபெறும். நித்திய உற்சவ அம்மன் உள்வீதி உலா வந்து அஷ்ட பலிபீட பூஜை நடைபெற்று சண்டேசுர பூஜையும் நடைபெறும்.
பரீதுர்க்கையம்மன், தட்டாரத் தெரு
இஸ்லாமியர்கள் செறிந்து வாழுகின்ற இப்பகுதிக்குள் இவ்வாலயம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, ஆலயங்களைப் போல் இறைவியை முன்னிலைப்படுத்தும் ஆலயம் இது. செவ்வாய், வெள்ளி தோறும் துர்க்கை அம்பாளுக்கு ராகுகால பூஜை நடைபெறும். பெளர்ணமி தோறும் கஞ்சி தானம் வழங்கப்படும். மங்களப் பெண்களுக்காக மாங்கல்ய வரமும் வேண்டி நடாத்தப்படும் திருவிளக்கு பூசையும் இங்கு பெளர்ணமிதோறும் நடாத்தப்படுகிறது.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 463
பூரீதேவிகருமாரி, கொள்ளுபிட்டி
கொள்ளுப்பிட்டியில் அஸ்ரல் வர்த்தக கட்டிடத் தொகுதியில் ஒன்பதாவது தளத்திலே எழில் கோலமாகத் தேவி கருமாரி அருள் ஆட்சி புரிகின்றாள்.
திருவேற்காடு கருமாரி அம்மனின் அளவற்ற பக்தி கொண்ட ஆலய நிர்வாகி என். செல்வகுமார் மனதில் உதித்த விருப்பு திருவுளச் சீட்டால் உறுதிப்படுத்தப்பட்ட காஞ்சிப் பெரியவரின் ஆசியுடனும், ஆலோசனையுடனும் அவரது வியாபாரத் தலத்தின் மேலே 9வது மாடியில் அன்னை கருமாரிக்கு ஆலயம் அமைந்தது. சபரிமலை ஐயப்ப கோவில் அமைப்பு டையதாக ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், கருமாரி அம்பாள், முருகன், வைரவர், நாகர், சண்டேஸ்வரி, சிம்ம பலிபீடம், 18 படிகளுடன் கூடிய சபரிமலை அமைப்புடைய பூரீ ஐயப்பன் சுவாமி கோவில் என்பன இவ்வாலயத்தில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டு மகாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. 1996ல் புதிய சந்நிதானங்கள் பல அமைக்கப்பட்டன.
இங்கு வருடத்தில் நடைபெறும் விரத விழாக்கள் அனைத்தும் மிகமிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. மற்றும் வெள்ளி, செவ்வாய் வாரங்களில் சகஸ்ரநாம அர்ச்சனை ராகு காலப்பூஜை என்பனவும் சனிக்கிழமைகளில் ஐயப்ப படிப்பூஜை, பஜனை என்பனவும், ஞாயிற்றுகிழமைகளில் வெங்கடேசர் விஷேட பூஜை, வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயர் விஷேட பூஜையும், செவ்வாய் இரவு வைரவர் பூஜையும், எனயிக விஷேடமான பூஜைகள் நடைபெறுவதுண்டு. கருமாளி அம்பாள் வருஷாபிஷேகத் தினத்தை முன்னிட்டு முதல்
மயூரமங்கலம்
 

பத்துநாட்கள் காலை, மாலை, இருவேளையும் இலட்ச நாம அர்ச்சனை, உபசாரஹோமம் என்பன நடைபெற்று, வருஷாபிஷேக தினத்தன்று சங்காபிஷேகமும், ரதபவனி விழாவும் சிறப்பாக நடைபெறுவதுண்டு.
பூரீஇராஜேஸ்வரிஅம்பாள், மேட்டுத் தெரு, கொழும்பு 13 21.01.1991 புதிதாக அமைக்கப்பெற்று
கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றது. தை மாதம் வருஷாபிஷேகம்பத்துத் தினங்கள் நடைபெறும். பங்குனி உத்தரதினப் பஞ்சமுக அர்ச்சனை, ஆடிப்பூரவிழா, வைகாசி பெளர்ணமி, நவசக்தி ஹோமம், ஆவணிமாதம் தொடக்கம் புரட்டாதித் தசமி வரை ஒரு மண்டல மஹா சண்டி ஹோமம், சபரிமலை ஒரு மண்டலபூஜை ஆகியன இவ்வாலயத்தில் இடம்பெறும் சிறப்புச் சமய விழாக்களாகும்.
இலங்கை மாகாளியம்மன் கோயில் இரட்ணம் வீதி, கெழும்பு-13. மூலமூர்த்தியோடு பரிவார மூர்த்திகளாக சிவலிங்கம், விநாயகர், வைரவர், இடும்பன், நாகேஸ்வரி ஆகியோர் உளர். தினமும் இரு காலப்பூசை.
பூரீவீரமகாகாளியம்மன் கோயில் பூரீஇராமநாதன் வீதி, கொழும்பு-13.
17ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தது. மூலமூர்த்தியோடு பரிவார மூர்த்திகளாகப் பிள்ளையார், வேல்முருகன், காத்தவராயன், சண்டேஸ்வரி ஆகியோர்
உளர். தினமும் மூன்று காலப் பூசை,

Page 464
திரு
% 器
ရှံ၊
3.
ぐ。 ܟܐ-܂ 'C് སྡེ་) དར་ ઉC A.
பூரீபத்திரகா
இந்த ஆலயம் திருகே அமைந்திருக்கின்றது. திருக்கோன தூரத்தில் பேருந்துநிலையத்திற்கு ஆலயத்திற்கெதிராக பரந்த விளை இந்து சமுத்திரமும் இவ்வாலயத்தி
ஈழநாட்டின் தலைசிற திருகோணேஸ்வரத்தை இவ்வ அருட்கடாட்சம் அம்பாளுடைய ஆ இவ்வாலயத்தில் நிற்கும்போது ஏற் புனிதமாகவேயிருக்கும்.
இவ்வாலயத்தின் வரலாறு யென்றாலும் இவ்வாலயத்தில் கி பரம்பரையாக வழங்கிவரும் கை ஆலயத்திலிருக்கும் விக்கிரகப் ஆதாரமாகக்கொண்டு முதலாட் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்பு திரு.செ.குணசிங்கம் அவர்கள் கு காலத்திலிருந்தே வழிபாட்டுக்குரிய தற்போது இவ்வாலயமிருக்குமிடத் ஒரு தகளி கிடைத்ததாகவும் . இருந்ததாகவும் கூறுகின்றார்கள் சில விசேஷ உற்சவங்களுக்கு இ ஒன்றை இந்தியாவிலிருந்து ஒரு கொண்டிருந்ததாயும், பூரீ பத்தி நின்றுவிட்டதாகவும், அம்பிகையில் சிங்கவாகனத்தை இவ்வாலயத் கர்ணபரம்பரைக் கதையொ இவ்வாலயத்திலிருக்கின்றது. மே
 
 

கோணமுலை
DT6)LLD
ளிஅம்பாள், திருகோணமலை
ாணமலைப் பட்டினத்தின் இருதய ஸ்தானம் போல் ாமலைப் புகையிரத நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் F சமீபத்தில் டொக்கியாட் வீதிக்கு அருகாமையில் உள்ளது. பாட்டு மைதானமும், அதையடுத்துவிரிந்து பரந்து கிடக்கும் ற்கும் இயற்கையழகை ஊட்டிக்கொண்டிருக்கின்றன.
ந்த புண்ணிய கூேடித்திரமாகிய பாடல்பெற்ற ாலயத்தில் நின்றபடியே தரிச்சிக்கலாம். அம்பாளின் ஆலயத்தில் நிறைந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு, படுகின்றது. ஆலயத்தின் உள்ளும், புறமும் எப்பொழுதும்
களைத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லை டைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண நகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய்த் தற்போது , தகளி, வாகனம், மற்றும் பொருட்களாகியவற்றை இராஜேந்திர சோழனுடைய காலமாகிய பதினோராம் ற்று இருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் றிப்பிட்டுள்ளார்கள். இதனால் இவ்வாலயம் அதற்கு முற்பட்ட ஸ்தலமாக இருந்துவந்துள்ளதென்பதை துணிந்து கூறலாம். தில் பன்னெடுங்காலத்திற்கு முன்புநிலத்தை அகழ்ந்தபோது புதற்குள்ளே அம்பாளின் திருவுருவம் (தாமிரவிக்கிரகம்) அந்தத் திருவுருவம் இப்போதும் ஆலயத்திலிருக்கின்றது. ந்த அம்பாளை எழுந்தருளச் செய்வார்கள். சிங்கவாகனம் கப்பலில் ஏற்றி கொண்டு இந்து சமுத்திரத்தில் சென்று காளியம்பாள் ஆலயத்திற்கு நேராக இக்கப்பல் ஓடாமல் அருளால் கப்பற்தலைவன் கண்ட சொற்பனத்தின்படி அந்தச் திற் சேர்த்த பின்னரே கப்பல் ஒடத்தொடங்கியதாகவும் ாறு கூறப்படுகின்றது. அந்தச் சிங்கவாகனமும் ல குறிப்பிட்ட கல்வெட்டும் ஆலயத்திலிருக்கின்றது.
யூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 465
சுமார் 560ITO ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்ததாகக் கூறப்படும் கர்ணபரம்பரைக் கதையொன்று பூரீ பத்திரகாளி அம்பாளிடத்துப் பயபக்தியை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கின்றது. பண்டைக்காலத்தில் இவ்வாலயத்திலும், ஆலயச் சூழலிலும் அநாச்சாரமாக நடந்துகொள்வதற்கு மக்கள் பயப்படுவார்களாம். இன்றுமப்படித்தான். ஒருநாள் ஒரு யாவுகப்பெண் தலைவிரிகோலமொடு அம்பாளுடைய சந்நிதானத்திற்கு முன்பாக உதாசீனமாகச் சென்றாளாம். அதனால் அப்பெண்ணுடைய தலை ஒருபக்கம் திரும்பிவிட்டதாம். (கழுத்து வாங்கல்) அம்பாளுக்கு அபசாரம் செய்துவிட்டதாக அப்பெண் சொற்பனங்கண்டு, குற்றத்தையுணர்ந்து ஆலயத்திற்கு வந்து தனது தலைமயிர்களைக் கத்தரித்து நேர்கடனாகக் கொடுத்தபின்புதான் தலையைச் சரியான நிலைக்குத் திருப்பக் கூடியதாயிருந்ததாம். அதனைப் பாதுகாத்து வைத்திருந்து மகிஷாசூர சம்மாரம் நடைபெறும்போது அம்பாளுடைய சடைமுடியோடு சேர்த்துக் கட்டி அலங்கரிக்கும் வழக்கம் இருந்து வந்ததாம். அந்த மயிர்களில் ஒரு பகுதி இன்றும் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.
முன்னொரு காலத்தில் இவ்வாலயத்திற் பூசை செய்துகொண்டிருந்த குருக்கள் ஒருவர், இரவுபூசையை முடித்துக் கொண்டு திருக்கதவை அடைத்துக்கொண்டு வீட்டுக்குப்போய்ச் சாப்பாட்டுவேளையில் பிள்ளையைக் காணாமல் எங்கும் தேடிவிட்டு ஆலயத்திற்கு வந்து பார்த்தபோது, பிள்ளை அங்கிருப்பதைக் கண்டு மனைவியிடம் கூறினாராம். பூசை முடிந்து கதவடைத்தபின் ஆலயத்தைத் திறப்பது சாஸ்திரவிரோதமானது. அதனால் காலையில் பார்க்கலாம் என்று கூறியும் மனைவி ஏற்றுக்கொள்ளாமல் அடம்பிடித்தாளாம். அதனால் குருக்கள் ஆலயத்தைத் திறந்தபோது காவல்தெய்வமாகிய வைரவர் அந்தப் பிள்ளையை இரண்டாகக் கிழித்துப்போடுவதைக் கண்டாராம். அத்தகைய உக்கிரமூர்த்தியாகிய வைரவரை மந்திர, தந்திரக் கிரியைகளால் இடம்பெயர்த்து எங்கேயோ ஒரு மலையிற்கொண்டு போய்ஸ்தாபித்ததாக ஆலயக் குருக்கள் கூறுகின்றார். முன்னொருநாள் இவ்வாலயத்தினுள் சுருண்டு படுத்திருந்த ஒரு சர்ப்பத்தின் மேல், பெரிய பாரமானகிடாரமொன்றை கவலையீனமாகத் தூக்கி வைத்துவிட்டார்களாம். சர்ப்பம் அதனடியில் நசுங்கி இறந்துவிட்டது. அந்தச் சர்ப்பத்தின் சாபத்தால் இவ்வாலயத்தில் பூசை செய்துவந்த அந்தணர்
மயூரமங்கலம்

பரம்பரையில் ஏழு சந்திக்குப் பின்பே ஆண்குழந்தை பிறந்ததாம். அதற்கு முன்பெல்லாம் பெண் சந்ததியே தொடர்ந்து பிறந்திருக்கின்றது.
பூரீ பத்திரகாளியம்பாளின் ஆலய முன்னாள் பூசகர் பிரம்மழரீ சு. கு. சோமஸ்கந்தக் குருக்கள் தமது தந்தையார் இயற்கையெய்திய காரணத்தினால் பதினாறாவது வயதில் இவ்வாலயத்தின் பூசைப்பொறுப்பை ஏற்றுநடத்தி வந்தார். இவர் பொறுப்பேற்கும் பொழுது கர்ப்பக் கிரகமும், மற்றும் மண்டபங்களும் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. மரங்களினால் முட்டுக்கொடுத்துக் கருவறை
விமானத்தைப் பாதுக்காக்க வேண்டிய நிலையிருந்தது."என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற இலட்சியத்தோடு அம்பாளின்
திருவருளைவேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டு திருப்பணிவேலைகளை ஆரம்பித்தார்.1933 ஆம் ஆண்டு அம்பாளின் ஆலயத் திருப்பணிவேலைகள் சிலவற்றைச் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அக்காலத்தில் சகடையில் கம்புதடிகளாலே தேர்போலக் கட்டி இரதோற்சவம் செய்யப்பட்டு வந்தது. இந்தக் கும்பாபிஷேகத்தின்பின் ஒரு புதியதேருக்குக் கீழண்டம் மாத்திரம் செய்து கட்டுத்தேரை இரதோற்சவத்திற்குப் பயன்படுத்தி வந்தார்கள். 1947இல் மகாமண்டபம் கோபுரமண்டபங்களைச் சிறப்பாகத் திருத்தியமைத்து இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 1962 ஆம் ஆண்டில் வசந்தமண்டபத்தையும் மற்றும் சில திருத்தவேலைகளையும் செய்து முடித்து மூன்றாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1979ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம் விமானத்தைப் பூரணமாகத் திருத்தியமைத்து அதில் கதைச் சித்திரங்களாகச் சப்தகன்னியர்கள் அமைக்கப்பட்டனர். அர்த்த மண்டபத்தின் தென்புறத்தில் முச்சக்திகளும், வடபுறத்தில் அம்பாள், விநாயகர், முருகனும் அமைக்கப்பட்டனர். மகாமண்டபத்தின் சாளக்கிராமத்தில் இராஜராஜேஸ்வரியின் திருவுருவமும், விமானத்தில் கெளரியம்பாளின் திருவுருவும் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்நபனமண்டபம் சிற்பசித்திர வேலைப்பாடுகளோடு மிகச் சிறப்பாகப் பூரணமாக மாற்றியமைக் கப்பட்டிருக்கின்றது. மேற்தளத்தில் அட்டநாக பந்தனம், இராசிச்சக்கரம் என்பன சுதையினால் அமைக்கப் பட்டிருக்கின்றன. அம்மண்டபத்தின் தெற்குப்பக்கம் மகாலட்சுமியையும், வடக்குப்பக்கம் சரஸ்வதியையும், பரிவார மூர்த்திகளாக வைக்கும் ஆலயம்

Page 466
அமைக்கப்பட்டுத் திருவுருங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிம்மம், பலிபீடம், கொடிஸ் தம்பம், மூலாதாரகணபதி என்பனவும், நாகதம்பிரான், பைரவர் ஆலயங்களும் பூரணமாகத் திருத்தியமைக் கப்பட்டுள்ளன.வெளி மண்டபத்தோடுள்ள சாளக் கிராமத்தில் பத்திரகாளியம்பாளின் திருவுருவம் கதையினால் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது. மண்டப வாசலுக்கருகே மணிக்கூட்டுக் கோபுரத்தை நாற்பதடி உயரத்திற்கு உயர்த்திக்கட்டி அறுநூறு இறாத்தல் எடையுள்ள கண்டாமணி ஏற்றப்பட்டிருக்கின்றது. மேலே கூறிய திருப்பணிகளைச் சிறப்பாகச் செய்து 6.2.80ஆம் ஆண்டு சம்புரோட்சண கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்வாலயத்திலிருந்த கட்டுத்தேருக்குப் பதிலாக 1972ஆம் ஆண்டு சித்திரத்தேர் மூன்றும் மஞ்சமும் செய்யப்பட்டு இரதோற்சவத்திற்குப் பயன்பட்டு வருகின்றது. கிழக்கிலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட சித்திரத் தேர் இதுவாகும். 1981ஆம் ஆண்டு இந்தத் தேர்களைப் பாதுகாப்பதற்காகப் பெரும் பணச் செலவில் தேராலயம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
1992ல் வசந்த மண்டபத்தில் கெளரி அம்பாள் சமேத கேதீஸ்வரருக்குச் சந்நிதியும், ஆலயத்துள் பூரீ துர்க்கா தேவிக்கு தனிக் கோயிலும், நீண்ட தரிசன மண்டபமும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
கருவறையில் சதுர்ப் புஜங்களையுடைய அம்பாளின் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. சூலம், டமருகம்,கட்கம், கபாலம் தாங்கிய திருக்கரங்களோடு அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றார். மகாமண்டபத்தில் பூரீ பத்திரகாளியம்பாள், விநாயகர், முருகன், தகளியில் கிடைத்த அம்பாள், ராஜராஜேஸ்வரி, சண்டேஸ்வரி என்னும் தாமிரவிக்கிரகங்களும், அர்த்த மண்டபத்தில் பிள்ளையாரும் வடக்குப்பக்கம் தண்டாயுதபாணியின் சிலாவிக்கிரகங்களும், வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாலயத்தில் உச்சிக்காலம், சாயரட்சை ஆகிய இரண்டு காலங்களிலும் நித்திய பூசை நடைபெற்று வருகின்றது.
பங்குனி உத்தரத்தைத் தீர்தோற்சவ தினமாகக்கொண்டு பத்துநாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது. ஒன்பதாம் நாள் இரதோற்சவம் நடைபெற்று வருகின்றது. பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப்பெருமான் எழுந்தருளியிருக்குப்

கோணவரையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவார். அன்று மக்கள்வெள்ளம் கடல்வெள்ளத்தை மறைத்து நிற்கும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
வைகாசிப் பெளர்ணமிக்கு முதல்வரும் திங்கட்கிழமை இவ்வாலயத்தில் பொங்கல்விழா நடைபெற்று வருகின்றது. திருக்கோணமலையில் எழுந்தருளியிருக்கும் பூரீ பத்திரகாளியம்பாளுக்கும், திருக்கோணமலையிலிருந்து பத்தொன்பது கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் சல்லியம்மனுக்கும் ஏதோ ஒருவிதத் தொடர்பு பண்டுதொட்டு இருந்து வருகின்றது.
வைகாசிப்பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை பூரீ பத்திரகாளி அம்பாள் கோவிற் பொங்கலும், இந்தத்தினத்திற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை பாலம் போட்டாற்றுப் பத்தினியம்மன் கோவிற் பொங்கலும், இந்த தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாய்க்கிழமை சல்லியம்மன் கோவில் பொங்கலும் நடைபெற்று வருகின்றன. இந்த ஒழுங்கு பண்டுதொட்டு நடைமுறையிலிருந்து வருகின்றது. இதனால் வைகாசிமாதம் முழுவதும் திருக்கோணமலையில் சக்திவழிபாடு பக்திவெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காணலாம். பத்திரகாளியம்மன் பொங்கல், ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதியில் நடைபெறும். பொங்கலுக்குரிய இடம் பிடிப்பதில் மக்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொள்வார்கள். அன்றிரவு ஆலய வீதி முழுவதும் யாகசாலைபோல் காட்சியளிக்கும். புகைமண்டலம் இருளைமூடி இருண்டு நிற்கும். அக்கினி தேவன் வீதியெங்கும் பிரகாசித்துக் கொண்டிருப்பான். மக்கட் கூட்டம் வீதியில் எஞ்சியுள்ள இடங்களை மூடியிருப்பார்கள். அம்பாளின் பொங்கல் மண்டப வாசலில் வெளியில் நடைபெறும். அடியார்களின் பொங்கல் வீதியெங்கும் நடைபெறும். அம்பாளின் பொங்கட் பிரசாதமும், அடியார்களின் பிரசாதமும் தேவிக்குப் படைக்கப்பட்டுப் பூசை நடைபெற்றுப் பொங்கல் விழா நிறைவேறும். வெண்மணல் பரந்த வீதி காலையில் கரிக் குவியல்களால் மூடுண்டு கிடப்பதைக் காணலாம்.
விஜயதசமியன்று திருக்கோணமலையில் பரவலாகக்கும்பவிழா நடைபெற்றுவருகின்றது. எனினும் இவ்விடத்தில் இவ்விழாவைப்பற்றிக் குறிப்பிடுவது சாலவும் பொருத்தமுடையதெனக் கருதுகின்றேன். பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சிசெலுத்தி வரும் காலத்தில் திருக்கோணமலையில் கடற்
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 467
படைத்தளம் அமைக்கும் வேலையை ஆரம்பித்தார்கள். அத்தளத்தில் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து சீக்கியமக்களையும், பஞ்சாபியர் களையும் அழைத்து வந்திருந்தார்கள். இஸ்லாமியர்கள் மதவழிபாடுடைய பஞ்சாபியர்கள், தமது மதபக்தி யினாலும், நம்பிக்கையினாலும் தங்கள் நாட்டில் கடைப்பிடித்துவந்த விழாக்களை இங்கும் ஆரம்பித்தார்கள். “பஞ்சா” எடுத்தல் என்பது அவ்விழா. சந்தனக்கூடுகட்டி (தேர்போல் அலங்கரித்து அமைப்பது). அதில் பஞ்சா என்ற சின்னத்தை வைத்து, வீதிதோறும் கொண்டுசென்று பெருவிழாவாகக் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்குப் 6) இடங்களிலுமிருந்து இஸ்லாமியர்கள் வந்து கலந்துகொள்வார்கள். பஞ்சா எனப்படும் விழா திருக்கோணமலையில் பல பள்ளிவாசல்களிலும் நடைபெற்றது. அவ்வவ் விடங்களிலிருந்து அழகாக அலங்கரிக்கப்பட்ட பஞ்சாக்கள் (கரகம்போல் முக்கோணவடிவில் கட்டுவது) குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில், தற்போது இங்கு கும்பவிழா நடைபெறுவது போல வீதிகள் தோறும் கொண்டு செல்லப்படும். விழாமுடிவில் அந்தப் பஞ்சாக்களை விஸ்வபத்திரிக் கோணேசர் கோவிலுக்கு அருகிலிருந்த குளத்திலே போடுவார்கள். இதனால் பிற்காலத்தில் அந்தக் குளத்திற்குத் தக்கியாக் குளம் என்று பெயர் வந்ததாம். பஞ்சாபியர் ஒப்பந்தம் முடிந்து, தங்கள் நாட்டுக்குச் சென்றபின் இவ்விழா அருகிக்கொண்டே வந்து தொடர்ந்து நடைபெறாமல் மறைந்துவிட்டது. இங்குள்ள இஸ்லாமியர்கள் அதனைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லைப் போலும். பஞ்சாபியர்களைப்போல் இந்துக்களாகிய சீக்கியர்கள் கும்பவிழாவை நடத்தினார்கள். சீக்கியரால் ஆரம்பிக்கப்பட்ட கும்பவிழா, அவர்கள் இந்த நாட்டைவிட்டுச் சென்றபின்னரும் இங்குள்ள இந்துக்களால் தொடர்ந்து விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. திருக்கோணமலை மாவட்டம் இந்துக்களின் குடியிருப்பாகப் பன்னெடுங் காலமாக இருந்து வருகின்றது. கோணேசப் பெருமானுடைய தெய்வீக அருள் இப்பிரதேசமெங்கணும் வியாபித்திருப்பதை ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தப் பெருமான் தேவாரத் திருப்பதிகத்தில் பாடியருளினார். கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை என்பது அவருடைய திருவாக்கு. திருக்கோணமலையில் இந்துக் கோவில்கள் நிறைந்திருந்ததால் சீக்கியர் ஆரம்பித்த கும்ப விழாவை, அவர்கள் இந்த நாட்டை விட்டுச் சென்றபின்னரும்
மயூரமங்கலம்

இங்குள்ள ஆலயங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஆலயங்களிலிருந்து கரகங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டுப் பக்திபூர்மாக, அதேவேளையில் போட்டிமனப்பான்மையுடன் வீதிகளில் வலம் வந்துகொண்டிருக்கும். ஒரு ஆலயத்துக் கும்பம் இன்னொரு ஆலயத்துக்கும்பத்தை எதிர்ப்படாமல் (எதிர்ப்பு ஏற்படாமலிருப்பதற்காக ராஜமேளம் அடிக்கப்படும் தாளத்திற்கமைய ஆடிக்கொண்டும் வருவார்கள். உடுக்கடித்துக் காவியங்கள், காவடிச்சிந்துக்கள், பாடிக்கொண்டும் வருவார்கள். மங்களமேளங்களும் வாசிப்பதுண்டு. கும்பம் கரகங்களைத் தாங்கிவருவோர் உருவேறி ஆடுவதுமுண்டு. அருள்வாக்குகள் கூறுவதுமுண்டு. விஜயதசமியன்று இரவுபூராவும் இவ்விழா நடைபெறும். கும்பம் கரகங்களைப் பயபக்தியுடன் வரவேற்க மக்கள் தத்தம் வீட்டு வாசல்களில் நிறைகுடம் வைத்துக் காத்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஆலயத்திலு மிருந்து புறப்படும் கும்பம், கரகங்கள், மற்ற ஆலயங்களுக்குச் சென்று தரிசித்துக்கொண்டு மீண்டும் புறப்பட்ட இடத்தைப் போய்ச் சேர்வதுடன் இவ்விழா நிறைவுபெறும். கும்பம் எனப்படுவது பெரிய செப்புக்குடத்தில் வேப்பம் பத்திரத்தினால் அகலமான அடித்தளம் அமைத்து சுமார் பத்தடி உயரத்திற்கு தேர்போல மலர்களாலும், வர்ணக் காகிதங்களாலும் அலங்கரித்துக் கட்டப்படுவது. கும்பத்தின் அடிப்பாகம் அகன்றும் மேலே போகப் போகப் ஒடுங்கியும் செல்லும். கரகம் செப்புக்குடத்தில் அம்பாளின் முகபடாம் வைத்து, வேப்பம் பத்திரத்தினால் கட்டப்படுவது. எல்லா ஆலயங்களிலிருந்து புறப்படும் கும்பம் கரங்கள் தத்தம் கோஷ்டிகளுடன் பூரீ பத்திரகாளியம்பாள் ஆலயத்திற்கு வந்து தரிசிப்பார்கள். இவைகளைப் பார்ப்பதற்காக இவ்வாலயத்தில் மக்கள் திரளாகக் கூடிநிற்பார்கள். அன்று இவ் அம்பாள் ஆலயத்திற்கு எதிரேயுள்ள மைதானத்தில் மானம்புத் திருவிழாவுக்காக எழுந்தருளுவார். அவ்விடத்தில் கோணேசர் கோவிலிருந்துமாதுமையம்பாளும், சிவன் கோவிலிருந்து விசாலாட்சியம்பாளும் வந்து மானம்பு விழா நடத்திச் செல்வர். இதுவும் இந்துக்களுக்கு ஒருவாய்ப்பான சமய நிகழ்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற திதிக்கு வருடாவருடம் சங்காபிஷேகத்திற்கு முன்னுள்ள பத்து நாட்களும், இலட்சார்ச்சனை நடைபெற்றுமறுநாள் சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. அம்பிகையின் ஆயிரத்தெட்டு நாமங்களைப் பீஜமந்திரத்தோடு
G433)

Page 468
உச்சரித்து ஐந்து சிவாச்சாரியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தரம் பத்து நாட்களுக்கு அர்ச்சனை செய்து இலட்சார்ச்சனையை நிறைவு செய்வார்கள்.
புரட்டாதிமாதம் விஜயதசமியன்று இவ்விரதம் ஆரம்பிக்கப்பட்டு ஐப்பசிமாத அமாவாசைத்திதியில் நிறைவு பெறுகின்றது. இருபத்தொரு நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படும் இவ்விரதம், திருகோணமலை பூரீ பத்திரகாளியம்பாள் ஆலயத்தில் கடந்த நூற்றுஜம்பது வருடங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து இவ்விரதத்தை அனுட்டிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு வந்து கூடுவார்கள். அம்பிகையின் அற்புதமான அருட்பலத்தால் வருடாவருடம் இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரும் இவ்விரதத்தை அனுட்டிக்கலாம். அனுட்டிப்பவர்கள் தரிப்பதற்குரிய விரதநூலும் வகைக்கு இருபத்தொன்றாக பழம், பாக்கு, வெற்றிலை, மஞ்சள், பூ, பலகாரம் என்பனவும், தேங்காய், விபூதி, குங்குமம் என்பனவும் அடங்கிய பூசைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு அலங்காரப் பூசை நடைபெறும். பூசை முடிவில் இவ்விரதத்திற்காக முன்னரே பதிவு செய்து கொண்டவர்களை அழைத்துப் பூசைப் பெட்டிகள் வழங்குவார்கள். தனியாக விரத நூலைமாத்திரம் பெற்று இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களுமுண்டு. ஆலயத்தில் தங்கியிருந்து விரதமனுட்டிப்பவர்களுக்கு அடுத்தநாள் பாரணைப் பூசையும் செய்து அனுப்புவார்கள்.
6.3.80இல் நடைபெற்றகும்பாபிஷேகத்தின் பின் ஆனி உத்தரத் திருவிழாவும் தொடர்ந்து பத்துத் தினங்களுக்கு நடைபெற்று வருகின்றது. சிவராத்திரியைத் தொடர்ந்து நடைபெறும் கோணேசர் ஊர்வலத்தில் மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் பூரீபத்திர காளியம்பாள் ஆலயத்தில் ஒருநாள் தங்கியிருப்பார். கோணேசப்பெருமானை இவ் வாலயத்தின் ஆதீனகர்த்தரும், அடியார்களும் சோடோபசார மங்களச் சின்னங்கள் புடைசூழ மங்களவாத்தியங்களோடு வரவேற்று ஆலயத்திற்கு எழுந்தருளச் செய்துபூசை முதலியன முடித்துமாலையில் மங்களவாத்தியம் Մ)լքthiծ வீதியுலாவுக்கு அனுப்பிவைப்பார்கள்.
பண்டைக்காலம் தொடக்கம் இன்றுவரை, ழீ பத்திரகாளியம்பாளின் திருவருளால் இவ்வாலயத்தில் பல அற்புதங்கள் நடைபெற்று வந்துள்ளன. இவற்றினால் மக்களிடம் பயபக்தி வளர்ந்து கொண்டு வருகின்றது.

இதனால் பக்தியோடு வழிபடும் அடியார்கள் அம்பிகையின் கிருபாகடாட்சத்தால் எண்ணியன எண்ணியாங்கெய்தி இன்புற்று வாழ்கிறார்கள். இவ்வாலயத்தில் குறித்த நேரத்தில் பூஜைதிருவிழாக்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடதக்க சிறப்பம்சமாகும்.
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் அமைப்பதற்கு 1996ல் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து 65 அடி சப்த தளஇராஜகோபுரமும் கருவறையின் திரிதளவிமானமும் அமைக்கப்பட்டு வருகின்றன. அம்பாள் அருளாலும் பக்தர் ஆதரவாலும் ஆதீன கர்த்தா வேதாகம மாமணி சோ. இரவிச்சந்திரக் குருக்கள் திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார். 2001ம் ஆண்டு தைப்பூசத்தன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
காளியம்மன், உப்புவெளி
இந்த ஆலயம் பெரியதொடுவாய்ப் பிள்ளையார் கோவிலுக்கு அருகே இருக்கின்றது. 1980 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 22ஆம் திகதி இவ்வாலயத்தில் பத்திரகாளியம்பாளைப் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடத்தியிருக்கின்றார்கள். இவ்வாலயத்தின் பழைய வரலாறு இரண்டாவது மகாயுத்தத்தின் தாக்கத்தால் புதுவரலாறாக மாறியமைந்திருக்கின்றது. சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன் தற்போது உபதயாற்கந்தோர் இருக்குமிடத்திற்கு அருகாமையில் இவ்வாலயம் இருந்தது. உப்புவெளி மக்கள் பயபக்தியோடு இவ்வாலயத்தில் வழிபட்டுவந்தார்கள். அப்போது இதற்கு நடுப்பத்திரகாளி கோவில் என்றும் ஒரு பெயரிருந்தது. இரண்டாவது உலக மகா யுத்தம் நடைபெற்றபோது இந்தக் கோவில் இருந்த பிரதேசம் முழுவதையும் சுமார் நூறு ஏக்கர் நிலத்தைப் பிரித்தானிய அரசாங்கம் கடற்படைத் தளம் அமைப்பதற்காகச் சுவீகரித்துக் கொண்டது. இதனால் பொதுமக்கள் இவ்வாலயத்திற்குச் சென்று வழிபட முடியாமற் போய்விட்டது. இவ்வாலயத்திலிருந்து அம்பாளையும் வெள்ளியினாலான சூலத்தையும் எடுத்துச் சென்று பெரியதொடுவாய்ப் பிள்ளையார் கோவிலில் வைத்திருந்தார்கள். இந்தச் சூலத்தையும்பத்திரகாளி அம்பாளின் திருவுருவத்தையும் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உப்புவெளிப் பத்திரகாளி கோவிலில் நாம் தரிசிக்கக் கூடியதாயிருக்கின்றது.
மயூரபதி பூgபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 469
கற்பக்கிரகம் அர்த்தமண்டபம் என்பனவற்றைக் கொண்ட இந்தச் சிறிய கற்கோவிலின் கருவறையில் அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றாள். கற்பக்கிரகத்திற்குத் தூபி அமைத்திருக்கின்றார்கள். சூலம், கபாலம், பாசம், கட்கம் தாங்கிய சதுர்ப் புஜங்களோடு அம்பாள் திருக்காட்சி கொடுத்து அருள்புரிகின்றாள். அம்பாளுக்கருகில் வெள்ளிச் சூலமும் வீரபத்திரரும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.
காலைச்சந்தி, மாலைச்சந்தி ஆகிய இரண்டுகாலப் பூசைகள் நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் கும்பாபிஷேக தினத்தை முதல் நாளாகக் கொண்டு விசேட ஸ்நபன அபிஷேகமும் அலங்கார உற்சவமும் நடைபெற்றுப்பதினோராவது நாள் தீமிதிப்பு வைபவம் நடை பெறுகின்றது. வைகாசிப் பொங்கல், நவராத்திரி, கெளரி நோன்பு, திருவெம்பாவை என்பன விசேட வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன.
எல்லைக் காளியம்மன், பறையன்குளம்
திருக்கோணமலையிலிருந்து அனுராதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில், இருபத்தைந்து கிலோமீற்றர் தூரத்தில் முதலிக்குளச் சந்தியிலிருந்து வடக்கே ஒரு சிறுசாலை பிரிந்து செல்கின்றது. அந்தச் சாலையில் பத்துக் கிலோமீற்றர் தூரத்தில் நல்லபிட்டியா என்ற கிராமம் இருக்கின்றது. அங்கிருந்து காட்டுப் பாதையினூடாக ஐந்து கிலோமீற்றர் தூரம் சென்றால் பறையன்குளம் எல்லைக்காளியம்மன் கோவிலை LUGOLuja).Th.
இந்தக் காட்டின் மத்தியிலே நல்லபிட்டி ஆற்றுக்கருகே பறையன்குளம் எல்லைக் காளியம்மன் கோவில் இருக்கின்றது. கோவிலைப் பார்க்கும் நினைப்போடு இங்குசென்றால் ஏமாற்றமாகவேயிருக்கும். சாஸ்திர ரீதியாகச் சீராயமைக்கப்பட்ட கோவில் அங்கு இல்லை. களிமண்ணால் கட்டப்பட்ட ஒரு சிறு கோவில்தானுண்டு.
இவ்வாலயத்தில் மிகஅழகிய பத்திரகாளி அம்பாள் சிலாவிக்கிரகம் ஒன்று இருக்கின்றது. இந்த விக்கிரகமே கடந்தகால வரலாற்றைப் பற்றி ஆராய்வதற்குக் காரணியாயிருந்து வருகின்றது. இடதுகாலை மடக்கி, வலதுகாலைத் தொங்கவிட்டபடி சதுர்ப்புஜங்களைக் கொண்டவளாகப் பீடத்தில் அம்பாள் அமர்ந்திருக்கின்றாள். இயற்கையின் தாக்கங்களால் சிலையின் அழுத்தம் சிறிது குறைந்திருந்தாலும், திருவுருவத்தில் பின்ன மேற்படவில்லை.
மயூரமங்கலம்

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்குமுன் திரு. முத்தையா சாமியார் என்பவருடைய தலைமையில் கொமரங்கடவையில் வாழ்ந்த அப்புகாமியும், தட்டையா என்பவரும் இந்தக் கோவில் இருந்த இடத்தைத் தேடிப் பலநாட்கள் காட்டில் அலைந்து திரிந்திருக்கின்றார்கள். சிரமங்களையும், கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் விடாமுயற்சியோடு இந்தப் பயங்கர வனத்தில் தேடியலைந்தபோது இந்தக் காளியம்மன் சிலை கழுத்து மட்டம் வரையில் மண்ணில் புதைந்திருப்பதைக் கண்டார்கள். இந்த இடத்தை அடைவதற்குரிய வழியடையாளங்களை வைத்துக் கொண்டு வந்து, வேண்டிய உபகரணங்களோடு மீண்டும் சென்று நிலத்தை அகழ்ந்தபோது காளியம்பாளின் திருவுருவம் நிமிர்ந்தபடியே ஒரு கற்பாறையின் மேல் இருந்ததாம். அகழ்ந்த இடத்தில் சிதைந்த செங்கற்களும் காணப்பட்டன. எனவே இங்கு ஆலயமொன்றிருந்து பன்னெடுங்காலத்திற்கு முன்னரே இயற்கை ஏதுக்களினாலோ அன்றி வேறு காரணங்களினாலோ அழிந்திருக்கலாம். சற்றுத் தூரத்தில் எட்டடி உயரமான கருங்கற் தூண்களும் காணப் படுகின்றன. சிதைந்த தூண்களும் சிலவுண்டு. சிறிய மண்டபம் அமைப்பதற்கு நாட்டப்பட்டது போல் காணப்படுகின்றன.
இந்தக் காளியம்மன் திருவுருவத்தைக் கண்டுபிடித்தவர்கள் இது இருந்த இடத்திலேயே வைத்துக் கொத்துப் பந்தல் அமைத்தார்கள். பின்னர் திரு. முத்தையாச்சாமியார் களி மண்ணினாலும், கல்லினாலும் சிறுகோவில் கட்டி வழிபட்டு வந்தார். அவருடைய விடாமுயற்சியால் மக்களுக்கும் இந்தக் காளியம்பாளில் ஈடுபாடும் பயபக்தியும் ஏற்பட்டது. இப்போது ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் பொங்கல்விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆலயம் இருந்த இடத்தைச் சுற்றிப்பல சிறிய ஆலயங்கள் இருந்து அழிந்துபோனதற்குரிய அறிகுறிகள் காணப்படுகின்றன. பறையன்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்தைச் சுற்றி இடும்பன்மலை, வெள்ளாட்டிமலை, நாச்சியார்மலை, மச்சமலை, அசுவத்மலை, பிள்ளையார்மலை எனப் பல மலைகளுண்டு. இடும்பன் மலை மிக விசேடமானது. யோகிகள் தவம் செய்த இடம்போலக் குகைகளை யுடையதாய்க் காணப்படுகின்றது. பல ஆண்டுகளாகப் பரிபாலித்து வந்த முத்தையாச்சாமியார் இப்போது திருக்கோணமலை இந்து இளைஞர் மன்றத்தினிடம் ஆலயத்தை ஒப்படைத்துள்ளார். இலங்கையைச் சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் திருக்கோ ணேஸ்வரத்திற்கு இது எல்லைக் காணியாக இருந்ததாம்.

Page 470
அதேபோலக் கந்தளாயிலும், சம்பூரிலும், எல்லைக் காணிகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாகக் கர்ணபரம்பரைக் கதைகள் இருந்து வருகின்றன.
படுக்கைப் பத்திரகாளி
திருக்கோணமலையிலிருந்து நிலாவெளிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் திருக்கோணமலைப் பட்டினத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இவ்வாலயம் இருக்கின்றது. பெரியதொடுவாய்ப் பிள்ளையார் கோவிலுக்கும், சின்னத்தொடுவாய்ப் பிள்ளையார் கோவிலுக்கும் இடையில் கடற்
கரையோரமாக இவ்வாலயம் அமைந்திருக்கின்றது.
முற்காலத்தில் தொடுவாயாறு என்ற ஒரு ஆறு, கந்தசாமி மலையடிவாரத்தில் உள்ள மனையாவெளிக் குளத்திலிருந்து ஆரம்பித்துத் தக்கியாக்குளம், செங்கற்பண்ணைக்குளம் என்பவற்றினூடாக ஓடி வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கருகாமையிலுள்ள தாமரைக்குளத்தை நிரப்பி அங்கிருந்து ஓடி இரண்டு கிளைகளாகப் பிரிந்து, ஒருகிளை பெரியதொடுவாய்ப் பிள்ளையார் கோவிலையும், மற்றக்கிளை சின்னத்தொடுவாய்ப் பிள்ளையார் கோவிலையும், தாண்டிச் சென்று கடலை அடைந்தது. இந்த ஆறு இப்பொழுது இல்லையெனினும் முன்னர் அந்த ஆறு ஓடிய நிலப்பகுதி பள்ளநிலமாகக் காணப்படுகின்றது. இந்த இரண்டு கிளைகளுக்கும் இடைப்பகுதி “படுக்கை” எனப்பட்டது. இந்த இடத்தில் இவ்வாலயம் இருப்பதால் படுக்கைப் பத்திரகாளி கோவில் எனப் பெயர் பெற்றது.
சுமார் நூறு வருடங்களுக்குமுன் குப்பையர் தம்பு என்பவர், புதர்கள் மண்டிக்கிடந்த இந்தப் படுக்கை மேய்ச்சற்தரையில் மாடுமேய்க்கச் செல்வது வழக்கமாம். தீராத நோய் வாய்ப்பட்டிருந்தபோதிலும், மாடுமேய்ப்பதை விட்டுவிடவில்லை.தனது நோயைப்பற்றிக் கவலைப்பட்டு அதனைத் தெய்வத்திடம் ஒப்படைத்து வாழ்ந்து வந்த அவர், ஒரு நாள் மாடுகளை மேயவிட்டு ஒரு மரநிழலில் படுத்துறங்கினார். அப்போது அவருடைய கனவில் பத்திரகாளி பிரசன்னமாகி "உனது நோயைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த நோயை நீக்கிவிடுவேன்" என்று வாக்கருளினாளாம். இந்த அற்புதத்தில் பெருமகிழ்ச்சியடைந்த தம்பு என்பவர் பத்திரகாளி காட்சியளித்த இடத்தில் ஒரு கொட்டில் கட்டி ஒரு சூலத்தை வைத்து வழிபட்டு வந்தார். அக்காலத்தில் அவருடைய மைத்துனர் ரெங்கசாமி முத்துச்சாமி என்பவரும் சேர்ந்து இந்தக் கோவிலைச் சிறப்பாக

நடத்தக் கருதி, சுதையாற் செய்யப்பட்ட துர்க்காதேவியின் சிலையொன்றை இந்தியாவிலிருந்து கொண்டு வந்து ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்து வந்தார்கள்.
ஆலயத்திலிருந்த சுதைத் திருவுருவம் பழுதடைந்த நிலையிலிருந்ததால் மக்கள் அந்த இடத்தில் அழகிய கற்கோவிலொன்றைக் 5t'gن பத்திரகாளியம்பாளின் சிலாவிக்கிரகமொன்றை ஸ்தாபித்து வழிபட்டு வருகின்றார்கள். கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தரிசன மண்டபங்களைக் கொண்ட மடாலயமாக இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. கருவறையிலுள்ள பத்திரகாளி ஒருகையில் பாசமும், ஒருகையில் உடுக்கும், மற்றிருகைகளிலும் சூலமும், கபாலமும் தரித்துப் பத்மபீடத்தில் ஒருகாலை மடித்து மறு காலைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள்.
இங்கு காலைச்சந்தி, மாலைச்சந்தி ஆகிய இரண்டுகால நித்திய பூசைகள் நடைபெற்று வருகின்றன. ஆடிப்பூரத்தைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு பத்துநாள் அலங்கார உற்சவமும், பதினோராம் நாள் தீர்த்தோற்சவமும் நடைபெற்று வருகின்றன. தைப்பூசம், சிவராத்திரி, சித்திராபர்வம், வைகாசிப் பொங்கல், நவராத்திரி, ஐப்பசி கும்பாபிஷேக தின மணவாளக் கோலவிழா, திருவெம்பாவை என்பன விசேடபூசை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன.
பத்திரகாளிஅம்மன், சம்பூர்
திருக்கோணமலை மாவட்டத்தில் கொட்டியா புரத்தில் மூதூரிலிருந்து கட்டைபறிச்சான் என்னும் கிராமத்திற் கூடாக ஆறு கிலோமீற்றர் தூரத்தில் கடற்கரையோரமாகவுள்ள கிராமம் சம்பூர். குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரத்தில் திருப்பணிகள் செய்து நிறைவேற்றியபின் கோவிற் தொழும்பு களுக்காகத் தென்னிந்தியாவிலிருந்து 6) (մ: குடிமக்களைக் கொட்டியாரப்பற்று, கட்டுக்குளப்பற்று, தம்பலகாமப்பற்றுமுதலிய இடங்களிற் குடியமர்த்தினான். அவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்களுக்குக் குளக்கோட்டு மன்னன் மானியங்களை வழங்கியுள்ளான். இந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள் மன்னன் கொடுத்த மானியத்தை ஏற்று “யாவும் சம்பூரணம்” என்று பரம திருப்தியடைந்தார்களாம். ஆதலால் இந்த இடம் சம்பூர்ணமான ஊர் என்ற பொருளில் “சம்பூர்” என வழங்கிவந்ததாக இவ்வூர் மக்கள் கர்ணபரம்பரையாகக்
மயூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 471
கூறி வருகின்றார்கள். இங்கிருக்கும் பத்திரகாளி கோவில் மிகப்பிரசித்திபெற்றது. திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள எல்லாச் சைவமக்களும் இந்த அம்பாளுக்கு நேர்கடன் வைத்துப் பயபக்தியோடு பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றார்கள்.
இங்கு எழுந்தருளியிருக்கும் பத்திரகாளி அம்பாளுக்கு வரலாற்றுப்பின்னணியொன்று இருந்து வருகின்றது. சுமார் 600 வருடங்களுக்குமுன் இந்தியாவிலிருந்து வந்த கப்பலொன்றில் இந்த அம்பாளின் திருவுருவம் கொண்டுவரப்பட்டது. அம்பாளின் அருளாணைப்படி அத்திருவுருவம் கெவுளியாமுனையில் இறக்கப்பட்டது. அந்த அம்பாளுக்குச் சிறிய கோவிலொன்றமைத்து, அக்கோவிலையும் மரத்தையும் சுற்றி மதிலெழுப்பிமிகவும் பயபக்தியோடு வழிபட்டு வருகின்றார்கள். எட்டுத்திருக் கரங்களையுடைய பத்திரகாளியம்பாள் ஒருகையிலுள்ள சூலத்தால் மகிஷாசுரனைமர்த்தனம் செய்த பாவனையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கருகில் பத்திரகாளியம்பாளுக்குப் பெரிய கற்கோவில் கட்டி அதே திருவுருவ அமைப்பில் சிலாவிக்கிரகம் செய்து கருவறையிற் பிரதிஷ்டை செய்திருக்கின்றார்கள். இந்தக்கோவில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தெரிசன மண்டபம் என்பவற்றைக் கொண்ட மடாலயமாக இக்கோவில் அமைந்திருக்கின்றது. மகாமண்டபத்தில் எழுந்தருளி அம்பாளும், விநாயகரும் வைக்கப்பட்டுப் பூசை நடைபெற்று வருகின்றது. வீதியில் வீரபத்திரன்,பைரவர், நாகதம்பிரானுக்குத் தனிக்கோவில்கள் கட்டப் பட்டிருக்கின்றன. தெரிசன மண்டபத்தில் சிங்கம், பலிபீடம் என்பன உண்டு. இந்த ஆலயத்தில் ஒரு சிறப்பம்சத்தை அவதானிக்கக் கூடியதாயிருக்கின்றது. வடக்கு வீதியிலும், தெற்கு வீதியிலும், பத்து இடத்தில் பஞ்ச லோகத்தாலமைக்கப்பட்ட அழகிய திரிசூலங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பலிபீடங்கள் காணப்படுகின்றன. திக்குக் காவற்தெய்வங்களாகக் கருதி இவைகளுக்குப் பூசை நடைபெற்று வருகின்றது.
இவ்வாலயத்தில் பொங்கல் நடத்தி நேர்கடன் கொடுப்பதுதான் மிக முக்கியமாகும். அம்பாளுக்குப் பொங்கல் செய்ய வருபவர்கள் ஒவ்வொருவரும் ஏழு பானை வைத்துப் பொங்குவார்கள். செவ்வாய்க் கிழமைகளில் பொங்கல் நடைபெற்று வருகின்றது. குளக்கோட்டு மன்னனால் குடியமர்த்தப்பட்ட ஏழு குடிமக்களின் மகிமையைக் கெளரவிப்பதற்காகவும், ஏழு
மயூரமங்கலம்

குடிமக்களும் அம்பாளின் தொழும்பாளர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் ஏழு பானை வைத்துப் பொங்கிப்படைக்கும் வழக்கம் இங்கிருந்து வருகின்றது. சித்திராப் பூரணையை அடுத்துவரும் ஐந்தாம் நாள் தொடக்கம் சித்திரை மாத அமாவாசை வரையுமுள்ள பத்து நாட்களும் லெட்சார்ச்சனை நடைபெற்று முடிவில் சகஸ்ர சங்காபிஷேகம் செய்து வருகின்றார்கள். நவராத்திரி ஒன்பது நாளும் விசேட அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. சிவராத்திரி, கெளரிவிரதம், திருவெம்பாவை, தைப்பொங்கல், சித்திரைப் பிறப்பு என்பன விசேட விழாக்களாக நடைபெறுகின்றன. நித்தியம் மூன்று காலப் பூசை நடைபெறுகின்றது.
பத்தினிஅம்மன், பாலம் போட்டாறு
திருக்கோணமலையிலிருந்து கொழும்பு, கண்டிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் திருக் கோணமலையிலிருந்து பதினாறு கிலோ மீற்றர் தூரத்தில் இந்தக் கோயில் இருக்கின்றது. இவ்வாலயத்திற்குப் பக்கமாக ஒரு ஆறு ஓடுகின்றது. இது களுமுட்டியான் குளத்திலிருந்து ஊற்றெடுத்துப் பாய்ந்து திருக் கோணமலைத் துறைமுகத்தில் கப்பல்துறை என்ற இடத்தில் கடலோடு சங்கமமாகின்றது. இந்தக் கோவிலுக்குச் சமீபத்தில் இந்த ஆற்றுக்குமேலே ஒருபாலம் போடப்பட்டது. இதனால் இக்கோவில் பாலம்போட்டாறு பத்தினியம்மன் கோவில் எனப்பட்டது.
இற்றைக்குச் சுமார் நூறு வருடங்களுக்குமுன், இக்கோவிலிலிருக்கும் காட்டுப் பிரதேசத்தில் மரம் வெட்டச் சென்றவர்கள், பயபக்தியினாலே தங்கள் தொழிலுக்குப் பாதுகாப்பாயிருந்து காக்கும்படி வேண்டுதல் செய்து காளியம்மன் ஆலயத்தைக் கொட்டில் கோவிலாகக் கட்டி வழிபாடு செய்து வந்தார்கள். அக்காலந் தொடக்கம் இவ்வாலயத்தில் பலியிடும் வழக்கம் இருந்து வந்தது. பத்தினித் தெய்வ வழிபாட்டுக்கு முக்கியமான தினம் வைகாசித் திங்கள். ஆதலால் வருடத்தில் ஒருமுறைவரும் வைகாசித் திங்கள் நாளில் இவ்வாலயத்தில் பொங்கல்விழா நடத்திப் பலியிட்டுப் பூசை செய்து வந்தார்கள். பிற்காலத்தில் சிவபூீ கா. யோகீஸ்வரக்குருக்கள் பொது மக்களின் உதவியோடு கோவிலைக் கல்லால் கட்டுவித்துக் காளியம்மன் சிலையைப் பிரதிஷ்டை செய்து பூசையை நடத்தி வந்தார். ஆனால் வழக்கம்போல முன்பு பூசை
岑

Page 472
செய்து வந்த பூசாரிமார்களுடைய பலியிடும் பூசையும் நடைபெற்றுவந்தது. பொங்கல் பூசை மூலஸ்தானத்தில் நடைபெற்றபின் கோவிலுக்கு வெளியே விடியற் சாமத்தில் ஆடு,கோழிபலியிட்டு வந்தார்கள். இப்போது பலியிடும் வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. இவ்வாலயத்திற்குரிய எழுந்தருளியம்பாளைப் பாதுகாப்பின் நிமித்தம் தம்பலகாமம் கோணேசர் கோவிலில் வைத்திருக் கின்றார்கள். வைகாசித் திங்களன்று அங்கிருந்து மங்கல வாத்தியங்களோடு எழுந்தருளச் செய்து கோவிலில் வைத்துப் பொங்கல் பூசை நடத்துவார்கள். மறுநாள் மீண்டும் தம்பலகாமம் கோணேசர் கோவிலுக்குக் கொண்டுபோய் வைத்து விடுவார்கள்.
திருக்கோணமலை பத்திரகாளியம்பாள் தேவஸ்தானக் குருக்கள் பூசைகளைச் செய்து வருகின்றார். வைகாசித் திங்களன்று
திருக்கோணமலைப் பத்திரகாளி கோவிலில் இருந்தும், மாரியம்மன் கோவிலில் இருந்தும் பெண்களும், ஆண்களும், பிள்ளைகளும், பாற்செம்பு, கும்பம், கரகம், காவடி எடுத்துப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தி மயமான பாதயாத்திரை செய்வார்கள். வழியெங்கும் மக்கள் நிறைகுடம் வைத்து வரவேற்று ஆதரித்துப் பக்தர்களை வழியனுப்பி வைப்பார்கள். பத்தினியம்மன் கோவிலில் இரவு பூராவும் விழா நடைபெறும். ஒரு வருடத்தில் ஒரு நாளில் மாத்திரம் நடைபெறும் இவ்விழாவில் இத்தனை ஆயிரம் மக்களும் பயபக்தியோடு வழிபாடு செய்யக் கூடுவதைச் சிந்திக்கும் போது இந்தப் பத்தினியம்பாளுடைய சக்தி மகத்துவமானது என்பது புலனாகின்றது. இந்த அம்பாளுக்கு நேர்கடன் வைத்து எண்ணியதை எண்ணியவாறு எய்தப் பெறுவதால் மக்களின் நம்பிக்கை வளர்ந்து கொண்டே வருகின்றது. அந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களும், பாதசாரிகளும் பத்தினியம்பாள் ஆலயத்தில்சூடம் எரித்துத் தேங்காய் உடைத்துப் பிரார்த்தித்திச் செல்வார்கள்.
கண்ணகி அம்மன், உவர்மலை
உவர்மலைக் கண்ணகி அம்மன் கோவில் திருக்கோணமலைப் பட்டணமும் சூழலுக்கும் உட்பட்ட உவர்மலைக் குன்றின் மத்தியில் அமைந்திருக்கின்றது. திருக்கோணமலைப் புகையிரத நிலையத்திலிருந்து அரை மைல் தூரத்திலும் திருக்கோணமலைப்
C38)

பட்டணத்திலிருந்து ஒருமைல் தூரத்திலுமுள்ள இந்த ஆலயத்திற்கு உவர்மலை மத்தியவீதி வழியாகச் சென்று கண்ணகி புரத்தை அடையலாம். அங்கு இவ்வாலயம் அமைந்திருக்கின்றது.
திருக்கோணமலையில் கண்ணகி வழிபாடு பற்றிய ஆய்வுக்குரிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது இந்த ஆலயம். சேரன் செங்குட்டுவன் திருச்செங்கோட்டில் கண்ணகிக்குச் சிலையெடுத்த பெருவிழாவுக்கு ஈழநாட்டில் கண்டியிலிருந்து அரசாண்ட கஜபாகு மன்னன் திருகோணமலைத்துறை முகத்திலிருந்து சேரநாட்டுக்குச் சென்ற கடற் பிரயாண வரலாறும், அம்மன்னன் சேரநாட்டிலிருந்து கண்ணகி அம்மன் சிலையைத் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்ட வந்து, அங்கிருந்து பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் சிலையைக் கண்டிக்குக் கொண்டு சென்ற வரலாறும், கண்ணகிக்கு கஜபாகு மன்னன் கண்டியில் ஆடிமாதத்தில் எடுத்த விழாவானது ஏசலப் பெரகராவாக மாறியமைந்த வரலாறும், ஈழநாட்டில் கண்ணகியம்மன் வழிபாட்டைப் பரப்பிய வரலாறும் உவர்மலைக் கண்ணகி அம்மன் கோவில் தோன்றுவதற்குக் காரணியாய் அமைந்திருப்பதாகச் சரித்திர வாயிலாக அறியக் கிடக்கின்றது.
கண்ணகி அம்மன் அங்கு எழுந்தருளியிருப்பதாக நம்பிக் கண்ணகிக்குக் கற்கோவில் கட்டுவதற்குத் திட்டமிட்டு அங்கு வாழ்ந்த மக்களின் உதவியோடு அந்த இடத்துக் கண்ணகிபுரம் எனப் பெயரிட்டு ஆலயம் அமைக்கத் தொடங்கினார்.
கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்பவற்றைக் கொண்ட பெரிய மடாலயம் அமைக்கப்பட்டு 1988ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கற்பக் கிரகத்தில் திரிபங்க வடிவமான கண்ணகியின் தாமிர விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. கண்ணகியின் வலக்கரத்தில் சிலம்பு காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் வழிபட்டு வந்து முகக்களையுடன் கூடிய கல்லும் கற்பக்கிரகத்தில் வைக்கப்பட்டுப் பூசை நடைபெற்று வருகிறது. வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அம்பாளின் திருவுருவம் காணப்படுகிறது. இந்த அம்பாளை வீதியுலாவுக்கும், நகர்வலத்துக்கும் எழுந்தருளச் செய்வார்கள்.
ஆலய வீதியில் பரிவார மூர்த்திகளுக்குத் தனிச் சந்நிதிகள் அமைத்துள்ளார்கள். ஆலயத்தை வலம்வரும்
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 473
அடியார்கள் முதலில் கோணேசலிங்கப் பெருமானைத் தரிசிக்கலாம். திருக்கோணேஸ்வரத்தைப் பார்த்த வண்ணம் இச்சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. பஞ்சமுக சர்ப்பக் குடையின்கீழ் ஆவுடையாரோடு கோணேசலிங்கப் பெருமான் எழுந்தருளி இருக்கிறார். அதையடுத்த நிருதி சந்நிதியில் பிள்ளையார் சந்நிதி காணப்படுகின்றது. பிள்ளையாரின் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. கற்பக் கிரகத்துக்குப் பின்னால் தலவிருட்சமாகிய வேப்பமரம் காணப்படுகிறது. அதைத் தாண்டிச் சென்றால் வாயு சந்நிதியில் உள்ள நாகதம்பிரானின் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. வடக்கு வீதியில் குபேர சந்நிதியில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப் பெருமானின் சிலாவிக்கிகமும் பஞ்சலோகத்தினாலான வேலும்பிரதிஷ்டைசெய்யப்பட்டிருக்கிறது. அதையடுத்து நவக்கிரக சந்நிதியும் - ஆலய வாசலுக்கு நேரே ஒரு பக்கம் வீரபத்திரரும் மறுபக்கம் வீரமாகாளியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். தனித்தனிச் சந்நிதிகள் காணப்படுகின்றன. ஈசானதிக்கில் வைரவப் பெருமானின் சந்நிதியில் வைரவக் கடவுளும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.
கண்ணகி அம்மன் ஆலயத்தில் காலை, மாலை இரண்டு நேரப் பூசை நடைபெற்று வருகின்றது. வைகாசிப் பூரணையில் நடைபெறும் சடங்குதான் இவ்வாலயத்தில் அதியுயர்ந்த விழாவாகும். கண்ணகி அம்மன் வழிபாடு மரபுப்படி பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது.
சித்திரை வருடப்பிறப்பு, தைப்பொங்கல், தைப்பூசத்தில் விசேட அபிஷேகம் பூசையும், நவராத்திரிப் பூசை, திருவெம்பாவைப் பூசை, கந்தசஷ்டி, கெளரியம்மன் விரத பூசை, கார்த்திகை விளக்கீடு என்னும் விசேட காலங்களில் அபிஷேகம் பூசை என்பன நடைபெறுகின்றன. பிள்ளையார் கதை, மாதாந்த சதுர்த்தி, ஆடிப்பூரம், பங்குனி உத்தரம். மாசிமகம் என்னும் விசேட காலங்களிலும் சிறப்பான பூசைகள் நடைபெற்று வருகின்றன.
நவக்கிரக ஆலயம் ' கட்டியபின் நவக் கிரகங்களுக்கும் முருகன் வள்ளி தெய்வயானைக்கும், வைரவருக்கும் 1993ஆம் ஆண்டு ஆவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1996ஆம் ஆண்டு உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
மயூரமங்கலம்

பரீதுர்க்கை அம்மன், உவர்மலை
திருக்கோணமலைப் பட்டணத்துக்கு மேற்குத் திசையில் உள்ள துறை முகத்துக்கு வடக்குப்பக்க அரணாக இருப்பது உவர்மலைத் தொடர். இம்மலைத் தொடரின் நாலாபக்கமும் தமிழ் பேசும் இந்துக்களின் குடியிருப்பாக அமைந்துள்ளது. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் காடாய்க் கிடந்த இம்மலைப் பிரதேசம் இன்று அழகிய பட்டினமாக மாறி அமைக்கப்பட்டு வருகின்றது. கோணேசபுரம், கண்ணகிபுரம் என்பன உவர்மலை எனப்படும் மலைப்பிரதேசத்துள் அடங்கும்.
திருக்கோணமலைப்பட்டினத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் கண்ணகி புரத்துக்குத் தெற்கே இருப்பது பூரீ துர்க்கை அம்மன் ஆலயம். 1979 ஆம் ஆண்டு குடியிருப்பதற்காக ஏற்பட்ட வீட்டுத் திட்டத்தின் பிரகாரம் வீடு கட்ட அத்திவாரம் வெட்டியபோது 605 வேப்பமரத் தடியில் வேர்களுக்கிடையே அம்பாளின் தாமிர விக்கிரகமொன்று நிலத்திற்கடியிலிருந்து கிடைத்ததாக கூறுகின்றனர். அந்த விக்கிரகத்தை வேப்பமரத்தடியில் சிறு கொட்டில் அமைத்து அதில் வைத்து பூரீஸ்கந்த குருக்கள் என்பவர் வழிபாடுசெய்து வரலானார். உவர்மலை மக்களும் அங்கு சென்று வழிபடத் தொடங்கினார்கள்.
கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், LO S5T மண்டபங்களைக் கொண்ட இந்த ஆலயம் 1987ஆம் ஆண்டு திருப்பணிகள் நிறைவேறி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கற்பக் கிரகத்தின் மேல் அழகிய தூபி அமைக்கப்பட்டிருக்கின்றது. சதுர்ப்புஜங்களையுடைய துர்க்கை அம்பாளின் சிலாவிக்கிரகம் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. மகா மண்டபத்தின் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி மூர்த்தியாகிய துர்க்கை அம்மனின் தாமிர விக்கிரகமும் நிலத்திலிருந்து கிடைத்த சிறிய அம்பாளின் விக்கிரகமும் வைத்துப் பூசை நடைபெற்று வருகின்றது. மகா மண்டபத்தில் பிள்ளையார் சிலாவிக்கிரகமும், வடக்கு வீதியில் தீர்த்தக் கிணறும், நவக்கிரக மூர்த்திகளுக்குத் தனிச் சந்நிதியும் இருக்கின்றது. ஆலயத்தின் ஈசான திக்கில் வைரவமூர்த்திக்குத் தனிச்சந்நிதியும் காணப்படுகின்றது. தலவிருட்சம் வேம்பு நித்திய பூசையாகக் காலை, மாலை இரண்டு நேரப்பூசைகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தவிர மாசிமாதம் அலங்கார உற்சவம் பத்து நாட்கள் நடைபெற்றுப் பதினோராம் நாள் மாசி மகத்தில்

Page 474
தீர்த்தோற்சவமும் பன்னிரண்டாம் நாள் பூங்காவனமும் அடுத்தநாள் பிராயச்சித்த அபிஷேகமும் நடைபெற்று வருகின்றன.
வைகாசி விசாகத்தில் பொங்கல் பூசையும், ஆடிச் செவ்வாயில்விசேட அபிஷேகமும், ஆடிப்பூரவிழா, ஆவணியில் வரலட்சுமிக்குச் சுமங்கலி பூசையும், நவராத்திரி விழாவில் மகிஷாசுர மர்த்தனமும், திரவெம்பாவையும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாலயத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ராகுகாலத்தில் அம்பாளுக்கு விசேட பூசை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மாரியம்மன், மடத்தடி திருக்கோணமலையிலுள்ள “மடத்தடி’ என்னுமிடம் இற்றைக்குச் சுமார் மூன்று நூற் றாண்டுகளுக்கு முன்னதாகவே முக்கியமான இடமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த மடத்தடியில்தான் கிருஷ்ணன் கோவிலும், மாரியம்மன் கோவிலும் இருக்கின்றன. திருக்கோணமலைப் புகையிரத நிலையத்திலிருந்து அரைக் கிலோ மீற்றர் தூரத்தில் திருஞானசம்பந்தர் வீதியில் மாரியம்மன் கோவில் காணப்படுகின்றது.
இரண்டாவது உலக மகா மகாயுத்த காலத்தில் திருக்கோணமலையில் ஜப்பானியரின் குண்டு வீச்சினால் மக்கள் குடிபெயர்ந்து சென்று விட்டார்கள். இந்த யுத்தக் கெடுபிடியினால் ஆலயப் பராபரிப்புச் சீர்குலைந்து விட்டது. 1938 ஆம் ஆண்டு இவ்வாலயத்தில் கடைசியாகப் பிரம்மோற்சவம் நடைபெற்றது. அதன் பின்னர் 1945ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்வதற்காகப் “பாலஸ்தாபனம்” நடைபெற்றுத் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாத பல காரணங்களால் திருப்பணி வேலைகள் பூர்த்தியடையாத நிலையில் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது. இவ்வாலயத்தைப் பற்றி எழுதுவதற்கு விஷயங்களைச் சேகரிக்கச் சென்றபோது இவ்வாலய வரலாற்றை உறுதிப்படுத்தும் கல்வெட்டுச் செய்தியொன்றும், ஆலய வரலாற்றுப்பின்னணியின் சுவையான சம்பவமொன்றும் கிடைத்தன. ஆலயத்தின் கருவறையிலுள்ள ஆதார சிலையில் ஒரு கல்வெட்டு இருப்பதைக் காண்பித்தார்கள்.
கல்வெட்டு - சித்திரபானு வருஷம் (மார்கழி)மீ திருக்கோணசமலையூர் மாரியம்மனுக்கு திருநல்வேலியூர்க்காடு இளைய பெருமாள் பிள்ளை சிவகயிலம் உபையம்.
G440

இந்தியாவில் இருந்து வந்து இங்கு வாழ்ந்து கொண்டிருந்த பக்தர் ஒருவர்தாம் வரும்போது கொண்டு வந்த முத்துமாரியம்மனைக் கோயில் இருக்கும் இடத்தில் வைத்து ஆதரித்து வந்தாராம். அந்த மாரியம்மனைக் கும்பத்தில் வைத்துக் கட்டி, மாரியம்மன் கும்பத்தை இந்தக் கோயிலில் இருந்து புறப்பாடு செய்து வீதிகளில் எடுத்துச் செல்வாராம். இதனை மக்களும் பயபக்தியுடன் வழிபட்டு ஆதரித்து வந்தார்கள். இந்தக் கும்பத்தை அந்த பக்தர் கன்னியாய்க்கும் எடுத்துச் செல்வதுண்டு. ஒருநாள் அங்கு சென்றிருந்தபோது திருகோணமலையை ஆட்சி செய்த பறங்கியர் அதிகாரி ஒருவர் இந்தக் கும்பத்தை ஏளனம் செய்து காலால் உதைத்துத் தள்ளி விட்டார். அன்று தொடக்கம் அந்த அதிகாரி நோய்வாய்ப்பட்டு வருந்தினாராம். இந்த விஷயத்தை அறிந்த சிலர் அதிகாரியிடம் முத்துமாரியம்மனுடைய தெய்வீக சக்தியையும், அதிகாரிசெய்தஅபச்சாரத்தையும் கூறினார்கள். அதிகாரியுடைய விருப்பப்படி அந்த பக்தர் அழைக்கப்பட்டார். அவர் அதிகாரிக்கு விபூதிப்பிரசாதம் கொடுத்து மந்திர சக்தியால் நோயைக் குணப்படுத்தினார். இதனால் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்த அதிகாரி தற்போது மாரியம்மன் கோவிலில் இருக்கும் காணியையும் (சுமார்10 ஏக்கர்) கன்னியாவிலுள்ள கமுகஞ்சோலைக் காணியையும் நன்கொடையாக உபகரித்தார். தற்போது மாரியம்மன் கோவில் இருக்கும் இடத்தில் முன்னிருந்த சிறிய கோயிலைத் திருத்திக் கட்டி அந்த இந்தியப் பக்தர் தான்கொண்டுவந்த மாரியம்மன் சிலையை வைத்துப் பிரதிஷ்டை செய்தார். இந்த விக்கிரகம் இன்று மாரியம்மன் கோயிலில் வழிபாட்டு மூர்த்தமாயிருந்து வழிபட்டு வருகிறது.
இந்தியப் பக்தருடைய மறைவுக்குப் பின் அவரோடு நட்புறவு கொண்டிருந்த குருகுலத்தவருடைய பராமரிப்பில் இவ்வாலயம் இருந்து வந்தது.
கட்கம், கபாலம், டமருகம், பாசம் தாங்கிய சதுர்ப்புஜங்களோடு சுமார் பதின்மூன்றரைத் தேவாங்குல உயரமான மாரியம்மன் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. மகாமண்டபத்தில் பன்னிரண்டு தேவாங்குல 9luJ(p6oluu எழுந்தருளியம்பாள், மாரியம்பாளுக்கு உரிய பரிவாரங்களாகக் காத்தவராயர், ஆரவல்லி, சூரவல்லி, தொட்டியச் சின்னான் என்பனவும், நாகதம்பிரான் பிள்ளையார் சிலாவிக்கிரகங்களும் வைக்கப் பட்டிருக்கின்றன. ஸ்தம்ப மண்டபம்,யாகசாலை, பாகசாலை, வசந்தமண்டபம், களஞ்சியம், வாகனசாலை
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 475
என்பனவற்றையும் சுற்றுமதிலோடு கூடிய இரண்டு வீதிகளையுமுடைய இவ்வாலயம் உள்வீதியில் (தெற்கில்) வடக்கு நோக்கியதாக பேச்சியம்மன் ஆலயம் பரிவாரமூர்த்தமாக அமைந்திருந்தபோதிலும், இதற்குத் தனியாகச் சிறப்புப் பூசைகள் நடைபெற்று வருகின்றன. நோய் துன்பங்களை நீக்கும் தெய்வமாகக் கருதி மக்கள் இதனை பயக்கியோடுவழிபட்டுவருகின்றார்கள். சாதி, சமய பேதமில்லாமல் சகலரும் பேச்சியம்மையை வழிபடுவார்கள். முற்காலத்தில் பேச்சியம்மனுக்கு பலியிடும் வழக்கம் இருந்து வந்ததாம் அது இப்போது நடைபெறுவதில்லை. சுகப்பிரசவத்தை விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பேச்சியம்மனுக்கு நேர்த்தி வைத்து வழிபட்டு வரும் வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது.
சித்திரைப் பூரணையில் தீர்த்தோற்சவம் நடைபெறக்கூடியதாகப் பத்து நாட்களுக்கு மகோற்சவம் நடைபெற்று வந்தது. பத்தாம் நாள் இரதோற்சவம் நடைபெற்றுவந்ததாம். தேர் இப்போது இல்லை. அழிந்து விட்டது. திருகோணமலையில் இந்த ஆலயத்தில் மாத்திரந்தான் துலாக்காவடி நடைபெறும். கும்ப விழாவுக்குத் திருகோணமலையிலுள்ள எல்லா ஆலயங்களிலும் கும்பம் வைத்து எடுப்பார்கள். அந்தக் கும்பங்களுக்கு இந்த ஆலயத்தில் இருந்து தீர்த்தமெடுத்துச் சென்று கும்பம் வைப்பது வழக்க மாயிருந்து வந்தது. பாலம்போட்டாற்றுப்பத்தினியம்மன் கோவிலுக்கும் சல்லியம்மன் கோயிலுக்கும் கும்பம், கரகம், காவடி, பாற்செம்பு எடுத்துச் செலும் அடியார்கள் இவ்வாலயத்துக்கு வந்து வழிபட்டுச் செல்வார்கள். இப்போது இவ்வாலயத்தில் இரண்டு காலப் பூசை மாத்திரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கருமாரியம்மன், கும்பத்துமால்
திருக்கோணமலை மாணிக்கவாசகர் வீதியில் இக்கோவில் இருக்கின்றது. சிற்பசாஸ்திர முறைப்படி அழகாக அமைக்கப்பட்ட இவ்வாலயம் கற்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபங்களைக் கொண்டது. மண்டபத்தின் தெற்குப் பக்கமுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி மூர்த்தி இருக்கும் சந்நிதியும், வடகிழக்கில் வைரவர் சந்நிதியும் இருக்கின்றது.
சந்நிதியும், வடமேற்கு மூலையில் கும்பத்துமால் தோன்றிய காலத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பிள்ளையார் கல் என்று கூறப்படும் இலிங்க வடிவமான
மயூரமங்கலம்

கல்லும்,திரிசூலமும்பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ள சந்நிதி காணப்படுகின்றது. இவ்வாலயத்தில் ஆகம முறைப்படி பூசைவழிபாடுகள் நடைபெறுகின்ற போதிலும், திரிசூலமும் இலிங்க வடிவமான கல்லும் இருக்கும் சந்நிதியில் பண்டைய மரபுப்படியே பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இவை இரண்டும் கும்பத்துமால் என்ற வழிபாட்டுத் தலத்தின் ஆதி வரலாறுகளைக் கூறும் காரணிகளாக விளங்குகின்றன. ஆலயங்கள் தோறும் புரட்டாதி மாதத்தில் கும்பவிழா நடைபெறும்போது, கும்பத்துமாலிலும் கும்பம், கரகம், எடுத்து விழா நடத்தப்பட்டது.
முன்பு வைத்து வழிபட்ட இலிங்க வடிவமான கல்லும் திரிசூலமும்புதிய கற்கோவில் கட்டப்பட்ட பின்பும் கும்பத்துமால் கருமாரியம்மன் கோவிலின் வடமேற்கு மூலையில் சந்நிதியமைத்து அதில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. புரட்டாதி மாதத்தில் நவராத்திரி காலத்தில் இந்தச் சந்நிதியில் தான் கும்பம் வைப்பார்கள். புதிய கருமாரியம்மன் கோயிலுக்குள் கும்பம் வைப்பதில்லை.
மூலஸ்தானத்தில் கருமாரியம்மன் சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. மகாமண்டபச் சந்நிதியில் எழுந்தருளி அம்மன் வைக்கப்பட்டிருக்கிறது.
1993ம் ஆண்டு புதிய கற்கோவில் சிற்பசாஸ்திர முறைப்படி அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகம சாஸ்திரமுறைப்படி பூசைகள் நடைபெறுவதால் பூசைக்கு அந்தணர்களை நியமித்தார்கள்.
இவ்வாலயத்தில் மூன்று நேரம் நித்திய பூசையும் பத்து நாட்களுக்கு அலங்கார உற்சவமும், நவராத்திரி, சிவராத்திரி, வைகாசிப் பொங்கல் திருவெம்பாவைப் பூசையும் ஒவ்வொரு பூரணைக்கும் விசேட அபிஷேக பூசைகளும் நடைபெறுகின்றன.
பூரீமாரியம்மன், மாங்கிணாய், சாம்பல் தீவு
இந்தக் கோயில் திருக்கோணமலைப் பட்டிணத்திலிருந்து பத்து கில்லோ மீற்றர் தூரத்தில் சாம்பல்தீவுக்கிராமத்தைச் சேர்ந்தமாங்கினாய் என்னும் இடத்தில் இருக்கின்றது. டச்சுக்காரர்களுடைய காலத்திற் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் இந்தக் கோவிலுக்கு சற்றுத் தூரத்தில் இருக்கின்றது. எனினும் இங்கு வாழ்கின்றவர்கள் சைவமக்களாகவே காணப்படுகின்றார்கள்.

Page 476
ஆலயத் திருப்பணியைச் சிறப்பாகச் செய்து 1942ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடாத்தப்பட்டது. இருபது வருடங்களுக்குப்பின் சுவாமி சச்சிதானந்த யோகிராஜ் அவர்களின் ஆசியும் அனுசரணையும் கிடைக்கப்பெற்று 1962ஆம் ஆண்டு மேலும் திருப்பணிகள் செய்து இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த ஆலயத்தைக் கட்டியவர்களே பரம்பரை பரம்பரையாகப் பூசை செய்து வந்துள்ளார்கள். சர்ப்பம், உடுக்கு, கட்கம், கபாலம் தாங்கிய சதுர்ப்புஜங்களையுடைய மாரியம்மன் சிலைகருவறையில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றது. மகாமண்டபத்தில் எழுந்தருளியம்பாளும், பிள்ளையாரும் மேலும் வைக்கப்பட்டிருக்கின்றன. வீதியில் வைரவர், நாகதம்பிரான், காளி என்பனவும், கோயில் வாசலில் கழுகுமரமும் உண்டு. பலியிடும் வழக்கம் இப்போது இல்லை. நித்தியம் ஒரு நேரப் பூசையும், சித்திரா பூரணைத் திதியில் தீர்த்த தினமாகக் கொண்டு அதற்கு முந்திய பத்து நாட்களுக்கு விசேட அலங்கார உற்சவமும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாலயத்தை மையமாக வைத்து ஊர்க்காவல் செய்யும் மரபொன்று இங்கிருந்து வருகின்றது. இதனைத் தூளி” என்று கூறுவார்கள். கிராமத்தின் நான்குதிக்குகளிலும் வெள்ளைச் சீலை விரித்துயந்திரம் வரைந்து மந்திர உச்சாடனம் செய்து அம்மன் வந்து உருவாடுவார்கள். பிரதம பூசாரியார் வெற்றிலைச் சுருளில் அரிசியை நிரப்பி மந்திர உச்சாடனம் செய்து அரிசியை ஆகாயத்தை நோக்கி வீசுவார். இப்படிச் செய்வதையே தூளிகாவல் என்பர். தீர்த்தமாடச் செல்லும்போது இந்தக் கிரியை நடைபெறுகிறது.
முத்துமாரியம்மன், சல்லி
இந்த ஆலயம் திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து பதினொரு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்றது. சாம்பல் தீவு பிரதான வீதிவழியாகச் சென்று கிழக்கே பிரிந்து செல்லும் மாங்கினாய் சல்லிவீதி வழியாகச் சென்றால் கடற்கரையோரமாக அமைந்துள்ள இவ்வாலயத்தை அடையலாம். ஆண்டா குளத்தில் உற்பத்தியாகும் செம்பியன் ஆறு சல்லிமுத்துமாரியம்மன் கோவிலுக்கருகே ஒடிச் சென்று திருகோணமலைக் கடலில் சங்கமமாகிறது. சங்கமமாகும் இடத்திலுள்ள வெள்ளைமலைக் குன்றில் கோவில் காணப்படுகின்றது. கிழக்கு நோக்கிய வாசலையுடையதாய், கடற்

கரையோரமாகக் கோணேசர் ஆலயத்தைப் பார்த்த வண்ணம் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. கடல்வழியாக இவ்வாலயம் கோணேசர் கோயிலில் இருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திலிருக்கின்றது. இரவில் கோணேசர் ஆலயத்தில் ஏற்றப்படும் தீபத்தை இவ்வாலயத்தில் இருந்து தரிசிக்கலாம்.
1927ஆம் ஆண்டு இவ்வாலயத்தைக் கல்லினால் கட்டுவதற்காகத் திருப்பணிகளை ஆரம்பித்தது. 1933ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
1979ம் ஆண்டு மீண்டும் பெரும் பொருட் செலவில் ஆலயத்தில் புனருத்தாரணத் திருப்பணிகள் செய்து இரண்டாம்முறை மிகச் சிறப்பாகக் கும்பாபிஷேகம் செய்வித்தார்கள். இந்தக் கும்பாபிஷேகத்துக்குப் பின் பரம்பரைப் பூசகரின் பூசை முறையைக் கைவிட்டு இலிங்கதாரிகளாகிய சங்கமக் குருக்கள்மாரைக் கொண்டு பூசை செய்வித்து வருகின்றார்கள்.
வைகாசித் திங்கள் அன்று இவ்வாலயத்தில் கும்பம் வைத்து அலங்கார உற்சவம் ஆரம்பமாகும். அன்று பரம்பரைப்பூசாரியில் அம்பாள் வந்து உருவாடும். அவர் மண்கலசத்தில் கும்பம் எடுத்து , இருப்புக் கும்பத்தை ஆலயத்தினுள் ஸ்தாபிப்பார். இந்த நிகழ்ச்சியோடு வருடாந்த உற்சவம் ஆரம்பமாகும். தொடர்ந்து பத்து நாட்கள் உற்சவம் நடைபெற்று பதினோராம் நாள் தீர்த்தோற்சவம் நடைபெறும்.
தீர்த்தோற்சவத்தன்றும் பரம்பரைப் பூசாரியார் ஆலயத்திலுள்ள இருப்புக் கும்பத்தை எடுத்துச் சென்று தீர்த்தமாடும் வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. தீர்த்தத்திற்கு முதல்நாள் திருக்கோணமலையிலிருந்து பக்திப்பரவசமான பாதயாத்திரையொன்று வருடாவருடம் நடைபெற்று வருகின்றது.
ஆலயத்தின் கருவறையில் முத்துமாரியம்மன் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. மகாமண்டபத்தில் எழுந்தருளி விக்கிரகமிருக்கின்றது. தரிசனமண்டபத்தில் பலிபீடமும், அந்த மண்டபத்தின் RéfT60T திக்கில் வைரவருக்குத் தனி ஆலயமுமிருக்கின்றன. மண்டப வாசலில் கழுமரமும், அருகே மணிக் கோபுரமுமுண்டு.
காலை, மாலை இரண்டு வேளையும் நித்தியபூசை நடைபெற்று வருகின்றது. நவராத்திரி, திருவெம்பாவை போன்ற காலங்களில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்று தீர்த்தோற்சவம் நடைபெறும். அதன்பின் கண்ணகியம்மன் குளித்தி பாடுவார்கள். தொடர்ந்து சுண்ணமிடித்துத் துள்ளுமாவைத்துந் தீபாராதனை
பூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 477
நடைபெறும். அதன்பின்புதான் அம்பாளைப் பீடத்தில் இருத்துவார்கள். இது இவ்வாலயத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வழக்கமாகும். இந்த ஆலயத்தின் தெய்வ சாந்நித்தியம் இங்கு வைத்துப் பூஜிக்கப்படும் பூரீசக்கரத்தின் மாபெரும் சக்தியால் பேணப்பட்டு வருகின்றது. திருக்கோணமலையில் பல கோவில்களிலுள்ள பூரீ சக்கரங்கள் வரையப்பட்டவை. ஆனால் இவ் ஆலயத்திலுள்ள பூரீசக்கரம் வார்ப்பினாலமைந்தது.
முத்துமாரியம்மன், கிளிவெட்டி திருக்கோணமலை மாவட்டத்தில் கொட்டியாபுரப் பற்றில், மூதூரிலிருந்து பதினாறு கில்லோமீற்றர் தூரத்தில் கிளிவெட்டி என்ற சைவத் தமிழ்க் கிராமம் இருக்கின்றது.
கிளிவெட்டி முத்துமாரியம்மன் கோவில் சுமார் இரு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னேகட்டப்பட்டது. கிளிவெட்டி மக்கள் சேர்ந்து இவ்வாலயத்தைக் கல்லினாலே கட்டினார்கள் . கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், தெரிசன மண்டபங்களைக் கொண்ட மடாலயமாக இவ்வாலயம் அமைக்கப்பட்டது. கருவறையில் சதுர்ப்புஜங்களோடுள்ள முத்துமாரியம்மன் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை
செய்யப்பட்டிருக்கின்றது. அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி விக்கிரகங்களுமுண்டு. தெரிசன மண்டபத்தில் சிம்மம், usólúLñ என்பன
காணப்படுகின்றன. விநாயகருக்குத் தனியாலயம் இருக்கின்றது. மூன்று காலம் நித்திய பூசையும், நவராத்திரி, சிவராத்திரி, திருவெம்பாவை, பிள்ளையார் கதை, கந்தசஷ்டி முதலிய விசேட பூசைகளும் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தின் விழாவைச் சிறப்பு விழாவாகக் கொண்டாடுகின்றார்கள். இவ்வாலயத்துக்குப் பக்கத்தில் கிளிவெட்டி ஆறு ஒடிக்கொண்டு இருக்கின்றது. கொடிய அம்மை நோய் நடைபெற்ற காலத்தில்முத்துமாரியம்மனுடைய அருளால் நோய் பரவாது தடுக்கப்பட்ட்துபோல, கடும் வரட்சி ஏற்பட்ட காலத்தில் இந்த அம்பாளைக் கிளிவெட்டி ஆற்றில் வைத்து அபிஷேகம் செய்தபோது மழை கொட்டிய அதிசயமும் இங்கு நிகழ்ந்துள்ளதாம். 1947 ஆம் ஆண்டு ஊர்மக்கள் கூடி ஆலயப்புணருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளார்கள்.
மயூர மங்கலம்

செண்பக நாச்சியம்மன், இலங்கைத்துறை
திருக்கோணேஸ்வரத்திற்கு திருப்பணி செய்யக் குளக்கோட்டு மன்னன் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிந்து நாட்டவர்களை பண்டுகுடியமர்த்திய இடம் இலங்கைத்துறை.
இந்தியாவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்குக் கொண்டு வரப்பட்ட மூன்று அம்மன் விக்கிரகங்களில் செண்பக நாச்சியம்மன் விக்கிரகமும் ஒன்று செண்பகப் பூப்போல அழகுப்பொலிவோடு இருந்ததால் செண்பக நாச்சியெனப் பெயரிட்டார்களாம். இந்த அம்மனை இலங்கைத் துறையில் இறக்கியபோதுஅங்கு வாழ்ந்த சிந்து நாட்டவர்கள் கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள். மற்ற இரண்டு விக்கிரகங்களில் ஒன்று சம்பூரிலும்,மற்றதுமட்டக்களப்பிலுள்ள தம்பிலுவில் என்ற இடத்தி லிருப்பதாகவும் கூறுகின்றார்கள். இலங்கைத் துறையில் கல்லினால் கோயில் கட்டிச் செண்பக நாச்சியம்மையாரை ஸ்தாபித்திருந்தார்கள்.
அக் காலத்தில் இலங்கைத் துறையில் ஏற்பட்ட
இயற்கைத் தாக்கங்களால் அங்கு வாழ்ந்த சிந்து நாட்டு மக்கள் செண்பக நாச்சியம்மனை எடுத்து வந்து ஈச்சிலம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆலயம் அமைத்து ஸ்தாபித்து வழிபட்டு வந்தார்கள். இப்போது அந்த அம்மன் ஈச்சிலம்பத்தையில் இருக்கின்றது. தினமும் பூசை செய்து வழிபாடு நடைபெறுகின்றது. முன்னர் செண்பக நாச்சிம்மன் ஆலயம் இருந்த இடத்தில் இப்போது ஒரு அம்மனை வைத்து செண்பக நாச்சியம்மன் என்ற பெயரில் வேடர் பரம்பரையில் வந்த சீர்திருத்திய மக்கள் வழிபட்டு ஆதரித்து வருகின்றார்கள். முன்னே கூறப்பட்ட குளங்களில் இருந்து தாமரைப்பூ எடுத்து அம்பாளுக்குப் பூசை செய்து வருகின்றார்கள்.
முத்துமாரியம்மன், நிலாவெளி
திருகோணமலை மாவட்டத்தில் திருக் கோணாசலம் தலத்தில் வடதிசையில் 8 மைல் தொலைவிலுள்ளது நிலாவெளி. இங்குள்ள இவ்வாலயம் 300 ஆண்டு பழமையுள்ள தான் தோன்றி ஆலயமாகும். ஒரு அன்பரின் புகையிலைக் குடிசைக்கு காவல் காக்கவென நெய்விட்டடெரிந்த சிட்டி விளக்கு மறுநாளும் எரிந்துக் கொண்டிருக்கக் கண்டு ஆச்சரியத்துடன் நித்திரை செய்த போது கனவில் அம்மன் எழுந்தருளி, வழிபடக் கூறியதால் தோன்றியது இவ்வாலயம். காலப்போக்கில் மூலஸ்தானம் கழுமரத்தடி

Page 478
மணடபமும் பேச்சியம்மனுக்குத் தனியான கோயிலும் கட்டுப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது. பரிவார மூர்த்திகளாக வீரபத்திரர், பரிகலவிநாயகர், காத்தவராயர், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. காத்தவராயருக்கு கழுமரமும் பேச்சியம் esh Larfuui க்கும் நிலத்துள் தகடுகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இவ்வாலயத் தலவிருட்சமாக வேம்பு உள்ளது. 150 ஆண்டு பழமையுள்ள 2வேப்பமரங்கள் நின்றன. அவற்றிலொன்று 2 ஆண்களுக்கு முன் பட்டுப்பின் வேப்பங்கன்றை அருகில் நட வீரபத்திரரோ அதே இடத்தில் நடு என உருவில் கூற அப்படியே நடப்பட்டது.
வைகாசியில் கும்பவிழா 10 நாட்கள் நடைபெறும்.
ஆரம்ப நாள் 12000 பரிகலங்களை அழைத்து நிவேதித்து (துளி கொடுத்தல்) பரிவாரத் தெய்வங்களைக் கும்பத்தில் நிறுத்திப் பூசிப்பார். பேச்சியம்மனுக்கு நடைபெறுகையால் கதவு பூட்டிச் செய்வார். 3ம் நாள் கும்பம் அருகிலுள்ள அம்மனாலயத்துக்குச் சென்று திரும்பி5,7,9,ம் நாட்களில் கும்பஊர்வலம் நடைபெறும். வலம் வருகையில் 7 இடங்களில் தூளி கொடுக்கப்பட்டு வதனன் ஆட்டமும் நடைபெறும். 7ம் நாள் கன்னிப்பெண்கள் ஐவர் உருவில் அரிசி, வேப்பம் இலை இடித்து நிவேதிப்பதைத் துள்ளுமா இடித்தல் என்பர். 9ம் நாள் தீமிதிப்பும் 10 நாள் நீர்ச்சோற்றுப் பாளயம் எனும் குளிர்த்தியும் நடைபெறும் 10ம் நாள் இரவுகச்சு நேர்தல், வளந்து நேர்தல் முதலியவை நடைபெற்று பொங்கிப்படைப்பர். விழா முடிந்ததும் 8ம் நாள் கதவு திறக்கப்பட்டு மடைசெய்வர்.
“கோதாரி”எனும்பேதிநோய் 80ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட போது கும்ப விழாவே அதனை மாற்றியது. 1940 இலும் இவ்வாறு நடைபெற்றது. தற்போது செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் ஒரு நேரப் பூசை நடைபெறுகிறது.
பத்தினியம்மன், நிலாவெளி
திருகோணமலை நகருக்கு வடதிசையிலுள்ள நிலாவெளியில் வசித்த மக்கள் சைவ ஆசாரமுடைய வர்களாகவிருந்தனர். காலத்தை வரையறுக்க முடியாத ஆலயமாக இவ்வாலயம் காணப்படுகின்றது. இந்திய மன்னன் சேரன் செங்குட்டுவன் பத்தினிக்கு விழாவெடுத்த போது இங்கிருந்து கஜபாகு மன்னன் சென்று எமது நாட்டுக்கு அருள்புரியவேண்ட, "தந்தேன் வரம்" என அசரீரி கேட்டதாம். அதன் பின் மன்னன்
C444D

பல பத்தினி யாலயங்கள் ஆரம்பித்ததாகவும் கருதப்படுகின்றது. எனவே அக் காலத்தில் எழுந்த ஆலயம் தற்போது கர்ப்பக்கிரகம், மகா, சந்தன மண்டபங்களைக் கொண்டும் “விறுமன்” தெய்வத்தைப் பரிவார மூர்த்தியாகவும் கொண்டுள்ளது.
திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ஒரு நேரப் பூசை நடைபெறுவதுடன், வைகாசியில் பூரணைக்கு முதல் வரும் திங்கட்கிழமைக்கு முன்னுள்ள திங்களில் கும்பம் நிறுத்தி எட்டு நாட்கள் விசேட பூசை செய்து எட்டாம் நாள் கும்பம் சொரிதலும் நடைபெறுகின்றது. 9ம் நாள் குளிர்த்திப்பதிகம்படிப்பர். நவராத்திரி விழா மகிடாசுர சங்காரத்துடன் நடைபெறும். மழையை வேண்டியும், மழையை வேண்டாமெனவும் நேர்ந்து பட்டுச் சாத்தினால் வேண்டியது நடைபெறுவது அற்புதமாகும். தல விருட்சங்களாக 2 ஆலமரங்கள் நின்றன. பின் 1944இல் இவைதநிக்கப்பட்டுள்ளன. முன்பு அம்மன் இம்மரங்களுக்குக் கீழ் ஊஞ்சலாடியதை முதியவர்கள் கண்டுள்ளனர்.
முத்துமாரிஅம்மன், சம்மாந்துறை, கள்ளிமேடு, தம்பலகாமம் 200 வருடங்கள் பழமை வாய்ந்த இவ்வாலயம் ஆரம்பத்தில் மண்பானையில் கும்பம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் வழிபடப்பட்டு வந்தது. காலப்போக்கில் பிள்ளையார் dsinsuuh, முத்துமாரியம்மன் சிலையும் அன்பர்களால் வழங்கப்பட்டு,1940இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுண்ணாம்புக் கட்டிடமாதலால் ஆலயம் நிலைகுலைய, மாரியம்மன் சிலையை ஊர்வலமாய் எடுத்துச்சென்று சேர்த்த பணத்தின் மூலம் சீர்செய்யப்பட்டது. இவ்வாறு காலப்போக்கில் 1980ஆம் ஆண்டு ஆவணி மூலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1987இல் பாலஸ்தாபனம் செய்து ஊர்வலங்களின் மூலம் சேர்ந்த நிதியினால் ஆலயத்தைக் கட்டி 1999 ஆம் ஆண்டு ஆவணி 6ந் திகதி கும்பாபிஷேகம் நிறைவேறியது.
இங்கு கணபதி, பத்திரகாளி, துர்க்கை, நாராயணன், பாமாருக்குமணி, வேலாயுதர், வீரபத்திரர், நாகதம்பிரான், வைரவர் போன்ற தெய்வங்கள் வைத்து வழிபடப்படுகிறன. நித்திய
யூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 479
பூசைகள் “தமிழில்’ மந்திரம் சொல்லி நடத்தப்படுவதுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 100 பிள்ளைகட்கு இலவச வகுப்பும் நடத்தப்படுகிறது.
வருடாந்த ஊர்வலம் ஆவணியில் நடத்தப்பட்டுப் புனர்பூசத்தில் தீமிதிப்பும் இடம்பெறும். பெளர்ணமி தினங்களிலும் நவராத்திரி விழாக் காலங்களிலும் விசேட வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வராகி அம்பாள், கும்புறுப்பிட்டி
மூலமூர்த்திவராகி அம்பாள். பரிவாரமூர்த்திகள் வைரவர், பத்திரகாளி ஆகியோர். வெள்ளிக்கிழமைளில் பூசை நடைபெறுகிறது. வைகாசி மாதத்தில் பொங்கல் விழா இடம் பெறும்.
கண்ணகை அம்மன், கும்புறுப்பிட்டி
மூலமூர்த்தி கண்ணகை அம்பாள். பரிவாரமூர்த்தி வைரவர், வெள்ளிக்கிழமைகளில் பூசை நடைபெறுகிறது. வருடந்தோறும் வைகாசி மாதத்தில் பொங்கல் நடைபெறுகிறது.
மயூரமங்கலம்
 

கடற்கரைக் கண்ணகி அம்மன், கோபாலபுரம்- நிலாவெளி பழைய புராதன ஆலயம், பாரம்பரிய வழிபாட்டு முறைகடைபிடிக்கப்படுகின்றது. மூலமூர்த்தி கண்ணகி அம்பாள். வைகாசிப் பூரணையுடன் ஐந்து தினங்கள் திருவிழா நடைபெறுகிறது.
எல்லைக்காளி பன்குளம்
சோழப் பெருமன்னர்களால் பரிபாலனம் செய்யப்பட்ட வரலாற்றைப் பெருமை மிக்க அருள் மிகு கோவில். தைப்பூசத்தன்று பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1977 ம் ஆண்டு இவ்வாலயம் சிதைவுற்றதைத் தொடர்ந்து திருத்தி அமைக்கப்பட்டது. ஆலயத்திற்கான கல்வெட்டுக்களும் உண்டு. சோழர் காலத்திற்குரிய புராதனமான அம்பாளின் விக்கிரகம் இங்கு மூல மூர்த்தியாகவும், பரிவாரமூர்த்திகளாக வைரவர், நாகதம்பிரான் ஆகியோரும் உளர். தினமும் காலை மாலைப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

Page 480
446
பூரீ முத்
இலங்கையில் பசுமையா தொடர்களின் அடிவாரத்தில் அை ழரீமுத்துமாரியம்மன் ஆலயமாகு பக்தியுணர்வுக்கு வடிகாலாக அன ஏறத்தாழ 75 ஆண்டுகளாகும். நு இதுவேயாகும்.
இவ்வாலயம் ஆரம்ப கால வசிப்பிடமாக இருந்த இடத்தில் சி வணங்கினர். கிராமிய தெய்வ வ மாதுளத்தை ஏற்றியும் வழிபாடாற் வருடந்தோறும் ஆவணிமூ ஒடும் நீருற்றில் கரகம் பாலித்து, சிறப்பாக நடத்தியதாக அறிகி நிலைக்களமாக அமைந்த இச்சிறு பக்தியால் ஒன்றிணைத்தது. நகர வழிபாடாற்றினர்.
இக்கால கட்டத்தில் டெ யாழ்பாணம் திரு. அருளம்பளம் கோவிலுக்கருகில் 1930ம் ஆண்டு காரணமானார். ஆவேலியா பூரீ அக்கோவிலின் கருவறையில் செய்யப்பட்டிருந்தது. அம்பாளின் அம்பாள் உருவம் பித்தளைக் க திருவுருவங்கள் கற்சிலையாக பிர கோவில் நீரோடைக்கு அப்பால் நடத்தப்பட்டு வந்தது. உள்வி மஹாமண்டபம், பர்ணசாலை. கல் மண்டபத்தில் பிள்ளையார், பூரீ மு விக்கிரகங்கள் பஞ்சலோக சிலை
 
 
 

நுவரெலிழா DT6)LLD
துமாரியம்மன், ஆவேலியா
ன நகரமாகிய நுவரெலியாவில், பிதுருதாலகால மலைத் மந்த ஆவேலியா என்ற புனித திருப்பதியில் அமைந்திருப்பது ம். இன்று நுவரெலியா நகரவாழ் இந்து, பெளத்த மக்களின் மந்திருப்பது இவ்வாலயமே. இவ்வாலயத்தின் தொன்மை வரெலியா நகரில் ஆகம முறைப்படி அமைந்துள்ள ஆலயமும்
பத்தில் ஆவேலியாவாழ் பொது வேலைப்பகுதி மக்களின் றுகொட்டில் அமைத்து ஒரு கல்லையும் சூலத்தையும் வைத்து பரிசையிலுள்ள பூரீ முத்துமாரியம்மனுக்கு அக்கால மக்கள் றி வந்துள்ளதை அறியக்கூடியதாக உள்ளது.
நலநாளில் இக்கிராமமக்கள் இவ்வாலயத்தின் அருகிலேயே காவடி எடுத்து, தீ மிதித்து ஒரு நாள் திருவிழாவினைச் றோம். இவ்வாறாக இந்து மக்களின் வழிபாட்டிற்கு ஆலயம் காலப்போக்கில் நகர வாழ் மக்கள் அனைவரையும் மக்கள் அனைவரும் விஷேட காலங்களில் இக்கோவிலில்
ாதுவேலைப் பகுதியில் ஒவசியராகக் கடமையாற்றிய அவர்கள் ஊராரின் உதவியோடு பழைய சிறு கொட்டில் ஆகம முறையிலமைந்த பெரிய கோவிலை உருவாக்கக் முத்துமாரியம்மன் ஆலயம் என்ற பெயரில் நிலைபெற்றது. ஆரம்பகால மக்கள் வழிபட்ட ஒரு கல்லே பிரதிஷ்டை திருவுருவம் இல்லை. புராதனமான அந்தக்கல்லின் மேல் வசம் இட்டு பூஜை நடத்தினர். பிள்ளையார், முருகன் திஷ்டை செய்யப்பட்டிருந்தது. தற்போதுள்ள மஹா காளியின் சிறிய கொட்டிலாக சூலாயுதம் மட்டும் வைத்து வழிபாடு தியும் அமையவில்லை. கருவறை, அர்த்தமண்டபம், பாண மண்டபம் போன்றனஅமைக்கப்பட்டிருந்தன. வசந்த ததுமாரியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் ளாக வைக்கப்பட்டிருந்தது. உள்வீதி வெளிவீதிஉலாவாக
பூரபதி பூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 481
இவைகள் எடுத்துச் செல்லப்பட்டன. கோவிலின் உள்ளேயே தீர்த்தக் கிணறும் அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அமைந்து நுவரெலியா வாழ் மக்களின் பக்தியின் நிலைக்களமாக விளங்கிய இவ்வாலயத்தினை சகல அம்சங்களுடன் Bulguu gaoul offs ஆக்கவேண்டுமென்ற அவா மக்களிடம் வேரூன்றியது. அதன் காரணமாகப் பர்னசாலை, மணிக்கோபுரம், மதுரவீர சுவாமிக்குத் தனிக்கோயில், மஹாகாளி தேவி கோயில், பரிவார தெய்வங்கள், பிள்ளையார், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் என்பவர்களுக்கு தனியாகப் பளிங்குக் கோயில் என்பவற்றோடு ஒற்றை சுற்றுப்பிரகாரம் வடக்கில் துர்க்கையம்மன், கிழக்கிலிருந்து மேற்கு பார்வையில் வைரவப்பெருமான், நவக்கிரக மூர்த்திகளுக்கு தனிக்கோபுரம் என்பன புதிதாக நிர்மானிக்கப்பட்டன. வடபுறத்திலே தெற்கு நோக்கி சண்டேஸ்வரி தேவியின் சந்நிதானமும் அமைக்கப்பட்டு 1996ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வருடாந்தம் மகோற்சவமாக சித்திரா பெளர்ணமி அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
சீதையம்மன், சித்தா-எலிய
சீத்தா - எலியா என்ற பெயரே சீதையுடன் சம்பந்தப்பட்ட விஷேட பெயராகத் தொனிக்கின்றது. இதிகாசகால வரலாற்றுப் பின்னணியில் அமைந்த இச்சீதையம்மன் ஆலயம் பாரத மக்களால் நன்கு போற்றப்படும் இராமாயணத்தில் இராமனின் மனைவியாகிய சீதையை இலங்காபுரி வேந்தனாகிய இராவணன் கடத்தி புஷ்பக விமானம் மூலம் இலங்காபுரியில் அசோகவனத்தில் சிறை வைத்தான் என்பது இதிகாசம். அந்த அசோகவனமே ஹக்கலையில் உள்ள சீத்தா - எலிய என்ற கிராமமாக இன்று கொள்ளப்படுகின்றது. இவ் அசோக வனத்தில் ஒடும் சிற்றோடைக் கரையிலே கோவில் கொண்டு அருள் பாலிப்பவளே பூரீ இலக்குமிதேவியின் அவதாரமாகிய சீதையம்மன் ஆவாள். அதனால் இவ்வாலயம் இராவனேஸ்வரனின் ஆட்சிக்குப் பிற்பட்ட காலத்தில் அமைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இவ்வாலயம் நிர்வாக சபையினால் புனர்நிர்மானம் செய்யப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டு 19.03.1998ம் ஆண்டு வியாழக்கிழமை பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. தென்னிந்திய கட்டிடக் கலைஞர்களால் ஆகம முறைப்படி இவ்வாலயம் வடநாட்டுக் கோயில் அமைப்புப்படி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
மயூரமங்கலம்

சரித்திரப் பிரசித்தி பெற்ற இவ்வாலயம் பல சீதையம்மன், இராமர், இலக்குமணன் ஆகியோர் கற்சிலையாக முழுமையாக உருப்பெறாமல் காட்சி கொடுத்தனர். தற்பொழுது பூரீ இராமர், சீதை, இலக்குமணன், ஆகிய தெய்வங்கள் பளிங்குப்படிவமாக கண்கொள்ளா அழகுடன் வடநாட்டு உடைபாணியில் காட்சி தருகின்றனர்.
புதிதாக நிர்மானிக்கப்பட்ட சீதையம்மன் ஆலயத்தில் பூரீஆஞ்சநேயருக்கென தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
மற்றும் கோபுரத்தில் திருமாலின் ஒன்பது அவதாரங்களும் அவயகத்தியுடன் விக்கிரகமாகச் செதுக்கப்பட்டுள்ளமை வைணவக் கோவிலின் அமைப்பை ஒத்துச் சிறப்புப் பெறுகின்றது. தூண்கள் தோறும் இராமாயணக் காட்சிகள் படைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. சுவரின் மேற்பகுதியில் காணப்படும் இராவணன் சீதையை தூக்கி வருதல், சடாயுவின் இறகு வெட்டப்பட்டமை, அசோக வனத்தில் அரக்கியர் மத்தியில் சீதை போன்ற ஒவியங்கள் மனதை கவருவதோடு இதிகாச கால உணர்வுகளுக்கு எம்மை இட்டு செல்லுகின்றன.
இயற்கையாகவே பாய்ந்து வரும் இயற்கை ஆற்றுத்தீர்த்தத்தோடுபுவியியல் வரலாற்றில் காலத்தால் முந்திய மரவகைகளும், செடிகொடிகளும் வளம் என்ற சொல்லை மிகைப்படச் செய்கின்றது. இவ்வாறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டு விளங்கும் இவ்வாலயம் இலங்கையிலே தனிப்பெரும் ஆலயமாக விளங்குகின்றது.
பரீ முத்துமாரியம்மன், மிட்லண்ஸ்
மலைகளும் ஓடைகளும் எழில் சேர்க்கும் மிட்லண்ஸ் திருப்பதியில் அமர்ந்திருந்து அருள் தரும் அம்மன் ஆலய வரலாறு சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள் பழமையைக் கொண்டுள்ளது. 1928ம் ஆண்டளவில் தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியாக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட திரு. சின்னத்தம்பி அவர்களின் அயராத முயற்சியாலும், இத்தோட்டத்தில் வாகன சாரதியாகக் கடமையாற்றிய பெளத்த சமயத்தைச் சேர்ந்த வில்லியம் என்பவரின் ஈடுபாட்டுடனும் தற்போதைய விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள ஆலமரத்தடியில் பரம்பரை பரம்பரையாக வழிபாடு இயற்றப்பட்டுவந்த கருங்கல்லால்

Page 482
ஆன மாரியம்மன் சிலை தெய்வ அனுக்கிரகத்துடன் தற்போதைய ஆலய கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையானது திடீரென ஒரு நாள் களவாடப்பட்டது. சிலையைக் களவாடிச் சென்றவர் பாதி வழிச் செல்கையிலேயே கண்பார்வை மங்கத் தொடங்கிற்று. இவ்வாறு அவனது பார்வை மிக மோசமான நிலைக்கு சென்றதையடுத்து தன் கண் பார்வை மங்கிவரக் காரணம்தான் களவாடிச் சென்ற தெய்வச் சிலையே என்பதனை உணர்ந்த அவன் தான் சென்றுகொண்டிருந்த வெரலுகஸ்தன்ன கிராமத்தையும் இரத்தோட்டை நகரையும் இணைக்கும் வழியிலுள்ள ஆடு பாலத்தினருகே இருந்த கிடங்கினுள் சிலையைக் கிடத்திவிட்டு ஓடிவிட்டான்.
இக்காலகட்டத்தில் இங்கு பெரிய கங்காணியாக கடமையாற்றிய திரு. நாகமுத்து என்பவருக்கு கிடைத்த திருவருட் கட்டளையால் அம்பிகைத் திருச்சிலை ஆவாகனப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் கிரமமாக வழிபாடுகள் இடம்பெறத் தொடங்கின. இவ் ஆலயத்தில் கரகம் பாலிக்கப்பட்டு சிறப்பு சேர்க்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாலயத்தில் 1960களில் அம்மனுக்கு இரதோற்சவம் ஆரம்பித்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இடம் பெறத் தொடங்கியது. 1980களில் ஆலயத்திற்கு நீண்ட மண்டபம் அமைக்கப் பெற்று ஆலயம் சிறப்பெய்தியது. இவ் ஆலயத்தில் இடம்பெறும் இரதோற்சவத்தில் அம்பிகை வலம்வரப் புதிய சித்திரத்தேர் ஒன்றினை அமைக்க அடியார்களிடையே எண்ணம் தோன்றியது.
தேர் வெள்ளோட்டம் 09-08-1996ல் நடைபெற்றது. தற்போது இவ்வாலயத்தை ஆலய விதிப்படி அமைப்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பூரீமுத்துமாரியம்மன், வில்பிரட்டிபுரம், அட்டன் மத்திய மாகாணத்தில் அட்டன் மாநகரில் வில்பிரட்டிபுரத்தில் பாம்புக் கோவில் எனச் சிறப்புப்பெயர்

கொண்டு காணப்படும் இவ்வாலயத்தில் மூலஸ்தானத்திலே புற்றிலே வெள்ளை நாகபாம்பொன்று வசித்து வருகிறது. பூரணை தினத்தன்று வெளியே வரும். இப்புற்றுக்குச் செவ்வாய், வெள்ளிகளில் முட்டை வைத்து வழிபடுவர். எலுமிச்சம்பழம் வைத்து விளக்கேற்றுவர். எல்லாமதத்தவரும் வழிபடுவர். 1890இல் இந்தியத் தமிழர்களே வழிபடத் தொடங்கினர். (அண்மையில் தான் சிங்கமலைச் சுரங்கமுள்ளது) பின் சிறுகாலம் வழிபாடு கைவிடப்பட்டு 1959ம் ஆண்டு மீண்டும் ஆலயம் கட்டப்பட்டுத் தற்போது ஒரு ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் பூரீ மாணிக்கப்பிள்ளையார் கோவில் சித்திரா பெளர்ணமி, திருக்கார்த்திகை, பொங்கல் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு மாதப் பூரணைக்கும் விளக்குபூசை நடத்தப்படுகிறது. எல்லா மதத்தவரும் ஒற்றுமையுடன் இங்கு வழிபடுகின்றனர்.
பூரீமுத்துமாரியம்மன், கட்டுமானை, நுவரெலியா பங்குனி, சித்திரை மாதங்களில் விசேட வழிபாடுகள், பூசைகள் நடைபெறுகின்றன.
பூரீமுத்துமாரியம்மன், மல்லியப்பு, அட்டன் நித்திய பூசை உண்டு. வருடாவருடம் நவராத்திரியும், திருக்கார்த்திகையும் விசேடமாகக் கொண்டாடப்படுகிறது.
பூரீமுத்துமாரியம்மன், மேமலைத் தோட்டம் , றம்பொடை
வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளிற் பூசை நடைபெறும். பங்குனியில் வருடாந்தத் திருவிழா நடைபெறுகிறது.
பூரீமுத்துமாரியம்மன்,
தறவளைத் தோட்டம், டிக்கோயா
நித்திய பூசையுண்டு.
نه
யூரபதி பூணூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 483
}4@ඛඛබ්‍රබමාණ(ලූමGබ්‍රඩ් ( S. సో ಇಳ್ದ { ద్ర
意
ごシ
۶ی
g
器
རྡོ་རྗེ་
影
હેિ
శ్రీ
Ν*学
邀
A / பூரீ
பதுளை நகரிலிருந்து 2 锣Y பிரித்தானியர் ஆட்சிக்காலத்தி தென்னிந்தியாவின் கேரளாவில் (محمد வழிபடத் தொடங்கியதால் உருவ محہ.8: A ஆம் ஆண்டு அம்மனுக்கு மண் காலப்பூசைகளும் ஆகம விதிப் J ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1975 த் ஆலயம் மண்டபங்களுடன் கட் சேதமடைந்த ஆலயம் 1986இல் தி பெரிய மண்டபமொன்று நிர் மக்களினுதவியுடன் திருப்பணி ே இங்கு ஒரு தெய்வீக கொள்ளையடித்ததைத் தொ ஆலயமணியோசை என்பன
Y
s
මූල්‍ය
c
ஒப்படைக்கப்பட்டன. பூசாரி கொடுக்கப்பட்டதும், பூசாரி அப் இருவருக்குமிடையில் வாதம் வெளிப்படையாகக் கூறிக்குன ரதபவனியும், தீச்சட்டி ஊர்வல
பரீகாளிய
தினமும்மூன்று காலப்பூ பரிவார மூர்த்திகள் பிள்ளையார்
மயூரமங்கலம்
 
 
 
 

DGT UDT6IČLtò
காளியம்மன், ரொக்கில்
கிலோமீற்றர் தொலைவிலுள்ள ரொக்கில் பிரதேசத்தில் ல், ஆலமரமும் வேப்பமரமும் இணைந்திருந்த சூழலில், லிருந்து கொண்டுவரப்பட்ட அம்மன் சிலையை வைத்து ானதே, இந்த 100 வருடப்பழமைமிக்க ஆலயமாகும். 1959 Tடபம் அமைத்துக் கும்பாபிஷேகம் நடந்தது. 1964இல் படி பூசகரை நியமித்து நித்திய பூசைகளும் நடைபெற ஆம் ஆண்டு 8 ஏக்கர் காணி குத்தகைக்கு எடுக்கப்பட்டு, டப்பட்டது. 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தால் ருத்தப்பட்டுக்குக்கும்பாபிஷேகம் நடைபெற்றது.1990இலும் மாணிக்கப்பட்டது. தற்போது மிகப்பெரிய செலவில் வலைகள் இடம்பெற்று வருகின்றன. ப்பாம்பு வசித்து வருவது சிறப்பாகும். 1993இல் டர்ந்து இரவு வேளைகளில் அம்மனின் சிரிப்பொலி, கேட்டதால் பொருள்கள் கள்வர்களாற் திருப்பி யிடம் பிரச்சினையை நினைத்தவாறு வெற்றிலை மன் பாதத்தில் வெற்றிலையை வைத்து இரந்து வேண்டி நடைபெற்றுப் பின் பூசாரியார் முன்பு நடந்தவற்றை றகளைத் தீர்த்து வைப்பார். வருடாந்த உற்சவத்தில் மும் சிறப்பான விழாக்களாகும்.
பம்மன், இம்புள்கொட, பதுளை
சை, ஆடி மாதத்தில் பதினைந்து நாட்கள் உற்சவம் உண்டு. சுப்பிரமணியர், நவக்கிரகங்கள்.
449

Page 484
澳
cடு
ষ্ট্রে
N(EAS
○
t_员
9 ۔۔۔۔
S.
3)
兹
A.
இக் கோயில் ஆண்டிமு
R தென்மேற்குத் திசையில், கடற் , , காணப்படுகின்றது.
\ , செம்பலிங்க உடையாரது
N ޕޯހ( gjil
g*る உடப்பு:ஊரார்களுக்கு கட்டைக்கா
இது கர்ண பரம்பரைக் கதையாக அண்மையிலேயே கிழக்குத் திை செல்பவன் மணி அடித்துக் கொண் வீதி என அழைத்தனர். கற்பி ஒற்றைப்பனை, ஆண்டிப்பனை, க ஊடாக கொழும்புசெல்வர். ஆங்கி பிரயாணப் பாதை எனக் குறி இருந்திருக்கலாம். அக்காலக்கட்ட வேண்டும். கொழும்புக்குப் பிரய வழிபாட்டை மரத்தின் அடியிலோ மாரி என்றால் மழை அல் மக்களைக் காத்து கொடிய நோன ஒரு திராவிடத் தெய்வமாகும். காணப்படவில்லை. மாரியாத்தாளு கிராம மக்களிடம் நிலவுகிறது. களஞ்சியத்தில் கூறப்படுகிறது.
கிராமங்களில் காணப்படு அல்லாதோரே பூசாரிகளாக உள் சிறப்பான நாட்களாகக் கருதப்படு படைப்பர். காவடி கரகம் என்பன மகிழ்வித்து நேர்த்திக் கடன் அணிகலன்களாகக் கருதப்படுகி மாரியம்மன் கோயிலில் “i கண்டாமணி ஒன்று உள்ளது.
 
 
 

GITtb DT6) Ltb
D/a/fuuubupGör, 9 LLüu/ னைக் கோயில் தோட்டத்தில் அமைந்துள்ளது. இதன் கரைக்கு அருகில் பழமையான கந்தசாமி கோயிலும்
குறிப்பின் படி 1678ம் ஆண்டளவில் மாரியம்மன் கோயில் ட்டு உடையார் ஒருவரால் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றும் நிலவுகிறது. மணியகாரன் வீதி இக்கோயிலுக்கு சயில் இருந்துள்ளது. அக்காலத்தில் தபால் கொண்டு ாடு இப்பாதையால் சென்று வந்ததால் இதை மணியகாரன் ட்டியிலிருந்து கொழும்பு செல்வோர் தேத்தாப்பளை, ருக்குப்பனை, வெண்ண பூவல் (வென்னப்புவ) வத்தளை கிலேயரது குறிப்புகளில் மழைகாலத்தில் சேறும் சகதியுமாக பிட்டுள்ளார். அதில் ஆண்டி முனை தங்குமிடமாக த்தில் அப்பிரதேசம் முழுவதும் சைவர்களாக இருந்திருக்க ாணம் செய்த சைவர்கள் ஆண்டிமுனையில் மாரியம்மன் அல்லது சிறு கொட்டிலிலோ அமைத்திருக்க வேண்டும்.
பது அம்மை நோய் என்று பொருள்படும். இன்றும் கிராம யப் போக்கும் மாரி அம்மனாக வணங்கப்படுகிறாள். இது ஆரியரது கதைகளிலோ, புராணங்களிலோ இப்பெயர் நக்கு மடை போட்டால் மழைபொழியும் என்னும் நம்பிக்கை ாரியம்மனின் தோற்றம் பற்றிய பல கதைகள் வாழ்வியல்
ம் பெரும்பாலான மாரியம்மன் கோவில்களில் பார்ப்பனர் 'ளனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்குச் கின்றது. பொங்கல், மாவிளக்கு, பானகம் என்பவற்றைப் எடுத்து, அலகுகுத்தி, அக்கினிச் சட்டி எடுத்து அம்மனை கழிப்பர். வேப்பிலையும், மஞ்சட் துணியும் சிறந்த
bil
50 ஆண்டு உடப்பு ஊரார் உபயம்” என்று பொறிக்கப்பட்ட ங்குள்ள மாரியம்மன் சிலை இருந்த நிலையில் நான்கு
பூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 485
கரங்களுடன் உள்ள அமைப்பைக் கொண்டுள்ளது. அச்சிலை நாயக்கர் காலத்தை - 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என பேராசிரியர் திரு. சி. பத்ம நாதன் குறப்பிடுகிறார்.
“1880 மாரியம்மன் கோயிலில் சிகரம் வைத்து மூலத்தானம் உண்டுபடுத்தினது” என்றும், 1884 கட்டி முடிந்ததும் என்றும் செம்பலிங்க உடையாரது குறிப்புகளில் காணப்படுகிறது. எனவே மாரியம்மன் கோயிலில் முதல் கும்பாபிஷேகம் 1884ம் ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டும்.
இதே காலப் பகுதியில் நாயக்கர் வம்சத்தவர்களால் புளிச்சாக்குளம் என்னும் கிழக்கே உள்ள அயல் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கட்டப்படுகிறது. அக்கோயிலுக்கு உடப்பு மாரியம்மன் கோயிலில் இருந்த மாரியம்மன் சிலை கொண்டு போய் பிரதிஷ்டை பண்ணப்படுகிறது. உடப்புக்கு புதிய சிலை கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை பண்ணப்பட்டதாக பிறைசூடியார் கூறுகிறார். 1922ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
26. 6. 1966ம் ஆண்டில் பழைய கோயில் முழுவதையும் உடைத்து தற்போது உள்ளது போன்று கோயிலும், மடமும், மதிலும் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சந்நிதி அமைத்து கோயிலைப் புனருத்தாரணம் பண்ணி கும்பாபிஷேகம் பண்ணப் பட்டது. இக்கோவிலில் நீண்ட காலமாக மாசிமகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
ஆரம்ப காலத்தில் குளத்தடி ஐயனார் கோயிலில் நடைபெற்றுவந்த நவராத்திரி விழாவும், சூரசம்காரமும் 1945ம் ஆண்டிற்கு முன், பின்னாக ஐயனார் கோயிலில் நடைபெறுவது பொருத்தமற்றது அம்மன் கோயில் ஒன்றிலேயே நடைபெறவேண்டும் எனக் கருதி இவ்விழா மாரியம்மன் கோயிலுக்கு மாற்றப்பட்டிருக்கலாம்.
இக் கோயிலுக்குப் பிராமணர் அல்லாத பூசகர் குடும்பத்தவரே அர்ச்சகர்களாக உள்ளனர்.
காளி அம்மன், உடப்பு
செம்பலிங்க உடையார் தனது குறிப்பில் “1853ம் ஆண்டில் காளி அம்மன் கோயில் கொத்தக் கிழவனார் என்பவரால் பேதி வியாதி வராதபடி சாமி வந்து கடல் தண்ணிர் ஊத்தி விளக்கு ஏற்றி கடல் தண்ணிர் மண் குடத்துக்கு வேப்பிலை.உடனே காச்சிபூத்து ஒரு. அதிலிருந்து நன்மை செய்து”(புள்ளிகள் இடப்பட்டபகுதி தெளிவற்றவை) என்று எழுதி உள்ளார்.
மயூரமங்கலம்

இக் குறிப்பை சரியானது என எற்றுக் கொண்டால் ஏறக்குறைய 175 ஆண்டுகளாக மாரியம்மன் கோயிலே இம்மக்களது வழிபாட்டுத்தலமாக இருந்திருக்க வேண்டும். இக்கால கட்டத்துள் வேறு கோயில்கள் அமைக்கப்படவில்லை.
19ம் நூற்றாண்டின் மத்திய பாகத்தில் கொள்ளைநோய், பேதி நோய் என்பன பரவி பலரைப்பலி கொண்டது. பலர் காடுகளுக்கு ஓடி தம்மைப்பாதுகாக்க முனைந்தனர். சிலர் காடுகளிலேயே குழந்தைகளை ஈன்றனர். அவர்களுக்கு “காடுவத்தா” என்ற பெயரும் உள்ளது. அது “காடு பெத்தாள்” என்பதன் மருவிய வடிவமாகும்.
இவ் வேளையில் மக்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள். தெய்வங்களை வேண்டிக் கையெடுக்கிறார்கள். அம்மி கொத்த வந்த கொத்த கிழவனாருக்கு இன்றைய காளி அம்மன் கோயில் மையத்தளத்தில் உரு உண்டாகிறது. காளியை பாவனை செய்து பல அருள் வாக்குகள் கூறுகிறார். "என்னை வேப்பிலை கும்பத்தில் வைத்து, கடல் நீரில் விளக்கேற்றி வருடந் தோறும் வழிபட்டு வருவாயானால் உங்களை எல்லாம் நோயினின்றும் காப்பாற்றுவேன்” என்று திருவாய் மலர்ந்ததாகவும் கதைகள் உள்ளன. தாம் கொடுத்த வாக்கைக் கும்பம் வைத்து, கடல் நீரில் விளக்கேற்றி வழிபாடு செய்வதை இன்றும் காணலாம். காளியின் தோற்றம் பற்றிய கதைகள் பல உள்ளன. காளியின் உருவச் சிலை சினக் குறிப்பு காட்டப்பட்டிருக்கும். கடைவாயில் கோரைப் பற்கள் இருக்கும். தலை, சுடர்முடி, அமைப்பில் இருக்கும். திருக்கரங்களில் ஈட்டி, கத்தி, உடுக்கை, தலை, பாசம், முத்தலை ஈட்டி என்பன இருக்கும்.
செம்பலிங்க உடையார் 1878ம் ஆண்டில் கோயில் கல்லால் கட்டி சிகரம் வைத்துள்ளனர். எனக் கூறுகின்றார். இன்னுமொரு குறிப்பின்படி 1898 இல் முதன் முதல் பாலஸ்தாபனம் பண்ணப்படுகிறது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட விக்கிரகமே இன்று கோயிலின் கர்ப்ப கிரகத்துள் பிரதிஷ்டை பண்ணப்பட்டுள்ளது. இச்சிலையின் வடிவமைப்பு அற்புதமானது. அது ஆண்பாதி, பெண் பாதியாக செதுக்கப்பட்டுள்ளது. இரு பகுதி ஆடை, அணிகளும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. வீரபத்திரரும், காளியும், இணைந்த சிலையாகக் கருதப்படுகிறது.
இங்கு ஆரம்பகாலத்திலிருந்து நாளாந்த பூசை நடைபெறுவதில்லை. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்

Page 486
உச்சிக் காலப் பூசை மாத்திரம் நடைபெறும். ஏனைய தினங்களில் பூசகர் வந்து தீபமேற்றிவிட்டுச் சென்று விடுவார்.
முன்னைய காலத்தில் காளிகோயிலுக்கு அருகில் “காமண்டிக்” கூத்து நடைபெற்றுள்ளது. காமனை சிவபெருமான் எரித்த கதையைக் கூத்தாக நடத்தி உள்ளனர். இக் கூத்து நடந்த இடத்தை “காமண்டிக் காணி" என்று கூறுவர்.
1980ம் ஆண்டு பாலஸ்தாபனம் பண்ணப்பட்டு தர்சன மண்டபம், மணிக்கோபுரம், வைரவர் சந்நிதி என்பன அமைத்து 1983ல் கும்பாபிஷேகம் பண்ணப்பட்டது. இக்காலத்திலிருந்து நாளாந்தம் மூன்றுகாலப்பூசை, பூசகர் மரபினால் செய்யப்படுகிறது.
திரெளபதை அம்மன், உடப்பு இத் தெய்வ வழிபாடு உடப்பு ஊரவரின் கலை, கலாச்சாரத்தோடு தொடர்புடையதாக விளங்குகிறது. இக் கோயிலின் ஆடித்திருவிழா நாடெங்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கரகம் பாலிக்கும் பூசகரை திரெளபதா தேவியாகவே கருதி பக்தி பூர்வமாக வழிபடுகிறார்கள்.
திருவிழாக் காலத்தில் பாடப்படும் பாரத அம்மானைக் கதையைக் கேட்டுச் சமய இலக்கிய அறிவைப் பெறுகின்றனர். விழாக் காலத்தில் பல நாடகங்களும் அரங்கேற்றப்படுகினறன. மக்கள் புத்தாடை புனைந்து புதுநகைகள் அணிந்து, வீடுகளைச் சுத்தமாக்கி, வீதிகளுக்கு நீர் தெளித்து திருவிழாவை ஆனந்தத்துடன் கொண்டாடுவர்.
உடப்பூரில் வாழும் ஒவ்வொரு குலத்தவரும் ஒவ்வொரு தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழிபடுவர். முனிய சாமியையும், ராக்குரிசி” அம்மனையும், காளியையும், மாரி அம்மனையும் தத்தமது குலதெய்வங்களாக வழிபாடுசெய்யும் குலங்கள் இன்றும் உள்ளன. அவ்வாறு திரெளபதை அம்மனை குல தெய்வமாக வழிபடும் குலத்தவர்கள் ஊரவருடன் இணைந்து இக் கோயிலை அமைத்திருக்கலாம்.
ஊரில் உள்ள பெரியோர்கள் காளி அம்மன் தோன்றியதற்குப் பின்பே திரெளபதை அம்மன் தோன்றியதாக உறுதியாகக் கூறுகின்றார். 1886ல் ஊர் அளக்கப்பட்ட போது நிலை அளவைப் படத்தில் திரெளபதை அம்மன் கோயிலுக்கான எல்லைகளை வரைந்து அதன் மத்தியில் கோயிலையும் குறியீடு மூலம்
G52C

காட்டி உள்ளனர். எனவேதிரெளபதை அம்மன் கோயில் 1853ம் ஆண்டிற்கும் 1886ம் ஆண்டிற்கும் இடையில் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.
இக் கோயில் 19056 கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. மூலஸ்தானத்தில் சந்தன மரத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது.
1908ம் ஆண்டு நடந்த கும்பாபிசேகம் திரெளபதை அம்மன் கோயிலில் முக்கியமாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மூல மூர்த்தியாக ருக்மணி, சத்தியபாமா சமேத பார்த்தசாரதி பெருமாள் பிரதிஷ்டை பண்ணப்படுகிறார். திரெளபதா தேவியின் சந்தனச் சிலை முந்தல் ஊரவருக்கு அன்பளிப்புச் செய்யப்படுகிறது. தேவியின் கற்சிலை அர்த்த மண்டபத்தில் நிறுவப்படுகிறது.
தீமிதிப்பு உற்சவம் கோயில் தோன்றிய காலத்திலிருந்தே நடைபெற்றிருக்க வேண்டும். புத்தளத்தில் வாழ்ந்த குடும்பங்கள் தாம் அமைத்த திரெளபதை அம்மன் கோயிலில் தீமிதிப்பு வைபவம் நடத்தி உள்ளனர். புத்தளத்திலிருந்து உடப்பிற்கு வந்த அவர்கள் தீமிதிப்பு வைபவத்தை அறிமுகப்படுத்தி இருக்கலாம். ஆரம்பத்தில் ஊரில் உள்ள ஒருவர் கரகம் பாலித்து தீமிதிப்பு உற்சவத்தை நிகழ்த்தி இருக்கலாம்.
தீ மிதிப்பு சடங்கு இரு காரணங்களுக்காக நடாத்தப்படுகிறது. ஒன்று துருபத மன்னன் செய்த தவத்தின் பயனாக திரெளபதாதேவி, யாகாக்கினியில் தோன்றுகின்றாள் அதை நினைவு கூறும் முகமாவும் தீ மிதிப்பு வைபவம் நடைபெறுகிறது எனலாம்.
இரண்டாவது திரெளபதா தேவியானவள் பாண்டவரில் ஒருவருடன் வாழ்ந்து விட்டு மற்றவருடன் இணைந்து வாழமுன் தீயின் மீது நடந்து தனது கற்பின் தூய்மையை நிருபிப்பது வழக்கம். அது போல் அடியவர்களுக்கும் தீமிதிப்பு தெய்வத்தின் மீது தமது பக்தியைக் காட்டுவதற்காக தீமிதிப்பாகிய பூமிதிப்பு நடத்தப்படுகிறது.
கருமுத்து மாரியம்மன், தாழையடி
தாழை மரப்பொந்தில் நாகம் வெளிப்பட்டதால் ஆரம்பித்த வழிபாடு ஆண்டிமுனை மாரியம்மனே அருளுவதாக நம்பிக்கை ஏற்பட்டு விரிவடைந்தது. திருவிளக்குப் பூசை, இராகுகாலப் பூசை என்பன சிறப்புடையன. 1999ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் -2000

Page 487
இராக்குரிசிஅம்மன் 1958 அளவில் உடப்பு வடக்கு தொட்டக் களியன் மேல்கரையோரமாக காட்டுக்கு மத்தியில் நாகமிருந்த இடத்தில் அம்பாள் இராக்குரிசியாக வெளிக்காட்டியதால் ஆரம்பித்த வழிபாடு 1996ல் ஆலயமாக அமையக் காரணமாயிற்று.
முத்துமாரி முந்துபந்தி உடப்பின் தெற்கே பாலைமரச் சோலையில் நாகங்கள் நிறைந்த காட்டிடையே அம்மனுக்கு கோயில் உள்ளது. கட்டிடங்கள் அமைக்கும் முயற்சி எதுவும் கைகூடவில்லை. முத்தெடுப்போர்க்கு இத்தாயே காவல் தெய்வம்.
பூரீமுத்துமாரியம்மன், புளிச்சான்குளம், Զ -ւմւյ நித்திய பூசை உண்டு. விசேட தினங்களில் விசேட பூசை உண்டு.
பூரீதிரெளபதை அம்மன், முந்தல்
15ம் நூற்றாண்டு காலப் பகுதிகளில் தென் இந்தியாவின் பலபகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்து கற்பிட்டி, மாம்புரி, நரக்களி, நாயக்கர் சேனை, முந்தல், புளிச்சாக்குளம், உடப்பு போன்ற பகுதிகளில் இந்து மக்கள் குடியேறினர். இப்பகுதிகளிலே வந்து குடியேறிய மக்கள் தமிழ் நாட்டின் இராமநாதபுரம், வேப்பங்குளம், புதுக்கோட்டை, கோட்டைப்பட்டணம் போன்ற பகுதிகளில் இருந்து வந்து குடியேறினர் என்று நம்பப்படுகின்றது. இவ்வாறு வந்து குடியேறிய மக்கள் பெரும்பாலும் சக்தி வழிபாட்டினையே மேற் கொண்டிருந்தனர்.
கற்பிட்டியில் மாரியம்மன்,நரக்களியில் காளியம்மன், புத்தளத்தில் மாரியம்மன், சேனைக் குடியிருப்பில் பத்தினியம்மன், முந்தலில் மீனாட்சி அம்மன், திரெளபதை அம்மன், உடப்பில் திரெளபதை அம்மன், காளியம்மன், மாரியம்மன், முத்துமாரியம்மன், புளிச்சாக்குளத்தில் மாரியம்மன் போன்ற சக்தி ஆலயங்களை உருவாக்கி வழிபட்டு வந்துள்ளனர். இவ்வாலயங்களை தற்போதும் காணக்கூடியதாக உள்ளது.
சுமார் 17ம் நூற்றாண்டளவில் முந்தலில் வாழ்ந்த மக்கள் சக்தி வழிபாட்டினையே மேற்கொண்டு மீனாட்சி அம்மன் என்று நாமம் சூட்டி வழிபட்டு வந்தனர்.
மயூர மங்கலம்

ஆரம்பத்தில் இவ்வாலயம் ஒலைக்குடிசையாக அமைக்கப்பட்டது.
காலப்போக்கில் கிராமத்தவர்கள் வருடத்தில் ஒரு முறை திருவிழா எடுப்பதற்காக மரபியல் ரீதியாக பாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு அம்மனுக்கு திரெளபதை அம்மன் என்று நாமம் சூட்டி திருவிழா எடுத்தனர். ஆரம்பத்தில் கர்ப்பக் கிரகத்தில் சந்தனச் சிலையே இருந்தது. ஆடி அமாவாசையில் கொடியேறி 18 நாட்கள் திருவிழா நடைபெறும். 18 நாட்களும் மாலையில் பாரதக்கதை படித்து பின் 18ஆம் நாள் தீமிதிப்புத் திருவிழாவுடன் வருடாந்த உற்சவம் நிறைவு பெறும்.
1952-1960 கால இடைவெளியில் இவ்வாலயம் படிப்படியாக கல்லால் கட்டப்பட்டது. சிவாகம முறைப்படி கும்பாபிஷேகமும் நடத்தி வைக்கப்பட்டது.
அம்மனின் அருளால் மூலஸ்தானம் திருத்தி யமைக்கப்பட்டு 23.01.1993ம் திகதி கும்பாபிஷேகமும் நடைபெற்றது. நித்திய நைமித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன.
இவ்வூர்ப் பெண்கள் சித்திரை மாதத்தில் முதற் செவ்வாய்க்கிழமை முளை போட்டு அடுத்த செவ்வாய்க்கிழமை முளைக்கொட்டுப் பாட்டுடன் கும்மி கொட்டி, புதன் காலையில் முளைகளை கடலில் கொட்டுவார்கள். இவ்விழா உடப்புதிரெளபதை அம்மன் ஆலயத்திலும் முந்தல் திரெளபதை அம்மன் ஆலயத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கத்தோலிக்க, பெளத்த மக்கள் கலந்து வாழும் இவ் முந்தல் கிராமத்தில் வருடாந்த தீமிதிப்பு விழாவில் எல்லாச் சமயத்தவர்களும் நேர்த்தி வைத்து தீயிறங்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இன்றும் பிற சமயத்தவர்கள் ஆலயத்துக்கு வந்து தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி அருச்சனை செய்யும் வழக்கமும் உண்டு.
அத்துடன் இவ்வாலயத்தை பெளத்தர்கள் மகா தேவாலய என்று கூறி வழிபடுகிறார்கள்.
பூரீமுத்துமாரியம்மன், கற்பிட்டி
புத்தளத்தில் கற்பிட்டியில் ஆனைவாசல் பகுதியில் வடக்கு நோக்கியுள்ள இவ்வாலயம், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்ற முன், கற்பிட்டியில் முத்துக்குளித்த மக்கள் சக்தியை முத்துமாரியம்மனாக வழிபடத்தொடங்கினர். எனினும் போர்த்துக்கேயரால்

Page 488
இவ்வாலயம் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். 1660 இற்கு பிறகு இராமேஸ்வரம் சேதுக்கரையில் இருந்தவர்கள் இங்கு வந்து குடியேறி, ஆலயத்தை புதுப்பித்து வழிபட்டனர். இவ்வாலயத்தைச் சூழ விநாயகர், முருகன், நாச்சியம்மன், வைரவர், காளி ஆலயங்களிருந்துள்ளன. முருகன், நாச்சியம்மனா லயங்கள் முற்றாக அழிந்தும் ஏனையவை நிருமாணிக்க வேண்டிய நிலையிலும் உள்ளன. ஐந்துவருடங்களுக்கு முன் இங்கிருந்துகளவு போன அம்பாள் விக்கிரகம் பல்லவர் காலத்துக்குரியது. இவ்வாலயத்தை ஊரார்கள் ஏழு வருடங்களுக்கு முன், கோபுரம் அமைத்து பாலஸ்தாபனஞ்செய்து புனரமைத்துள்ளனர். கும்பாபிஷேகம் மட்டும் எஞ்சியிருக்கின்றது. நித்திய பூசைகள் நடைபெறுகிறது. நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் ஏழாவது நாள், தலையில் கரகக் குடத்துடன் ஆலயப்பூசைகள் கற்பிட்டி நகர் முழுவதும் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி. மானம்பூத்திருவிழா அன்று அம்பாள் கற்பிட்டி நகர் வழியே பவனி வருவார். 10ம் நாள் திருவிழா முடிந்த பின் இடும்பன் பூசை நடத்தியதாக முன்னோர் கூறுகின்றனர். இன்று வழக்கில் இல்லை.
ஊரார் அம்மைநோய், பிணி, குழந்தை வரம் போன்ற பலவற்றிற்கான நேர்த்தி வைக்கின்றனர். நேர்த்திக்கடன்களை பிரதிவெள்ளி தோறும் இன, மத, மொழி வேறுபாடின்றி செலுத்துவதைக்கணலாம்.
மகாபத்திரகாளியம்மை, முன்னேஸ்வரம் இலங்கையை ஆண்ட இராவனேஸ்வரன் நவகாளியாக வழிபட்டு பெருபேறுபெற்றுய்த அருள்மிகு மகா பத்திரகாளியம்மன் தேவஸ்தானம் வடமேல் மாகாணத்தில் சிலாபம் மாநகரிலிருந்து ஒரு மைல்நடை தூரத்தில் இம் முன்னேஸ்வரப் பதியில் உள்ளது.
சுமார் ஐந்து ஏக்கர் விஸ்தீரணமான பூமியில், இவ் ஆலய நுழைவாயிலில் மதிப்பிட முடியாத பழமை வாய்ந்த ஸ்தலவிருட்சமாக அமைந்திருப்பதும், அனைவருக்கும் பொதுவாகவும், அபயகரமளித்து வரவேற்பதும் படர்ந்த அரசமரமாகும்.
இவ்வாலய வருடாந்த உற்சவம் ஆவணிமாத' நடுப்பகுதியில் எல்லாம்வல்ல அருள்மிகு மகா பத்திரகாளியம்பிகைக்கு கும்பஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்புற நடைபெறும்.
மாபெரும் தரிசனமண்டபமும், அர்த்தமண்டபமும்,
மகா மண்டபம், மணி மண்டபம் போன்ற மண்டபமும்,

முப்பத்திரண்டு கம்பங்கள் தாங்கிய 90 அடி நீண்ட, 45 அடி அகலமான விமானமும், சுமார் 50 அடி உயரமான மூலஸ்தான கோபுரமும், ஏனைய பரிவார மூர்த்திகளான, முருகன் பிள்ளையார், பேச்சியம்மனுக்கு ஆலயங்களும், புதிதாக விஷேட வசந்த மண்டபமும், நவக்கிரகமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 1993ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கருமாரிஅம்மன், புத்தளம்
புத்தளம் மணற்குன்றின் எல்லையிலே “தம்மன் அடவி” என்னும் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள கருமாரி அம்மனுக்கு சிறப்பைத் தருவனவாக தலவிருட்சம் புற்று, நாகபாம்பு என்பன விளங்குகின்றன. இக்கோயில் இற்றைக்கு ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையினை உடையது. இவ்வாலயத்தின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தவை தலவிருட்சமான ஆலமரத்தின் அடியிலே அழகிய கருமாரியம்மனின் வடிவிலே காணப்பட்ட புற்றும் அதனைக் காவல் செய்த பாம்பும் ஆகும். இதனைத் தான்தோன்றீஸ்வரியாக எண்ணினர்.
ஆரம்பத்திலே காடு, வயல் முதலியனவற்றிற்குத் தொழில் புரியச் செல்வோரும், பிறரும் இவ்வாலயத்திற்கு வந்து அருகிலுள்ள மரங்களிலே குழைகளை ஒடித்து எந்தவிதமான இடையூறும் நேராமல் காத்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தவாறு உரிய புற்றின் மீதும் ஆலம்வேர் விழுதுகளுக்கிடையிலும் வைத்து வழிபாடு செய்தனர்.
தம்மன் அடவி கருமாரி அம்மனை வழிபட்டு இட்டசித்திகளைப் பெற்றவர்களில் பொம்மக்கா என்பவளும் ஒருத்தியாவாள். இவள் செல்வவளமும் சிவபக்தியும் உடையவள். ஒருமுறை பொம்மக்கா நாகதோஷத்தால் பீடிக்கப்பட்டு பெரும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாய் இருந்தது. நாகதோஷம் நீங்கும் பொருட்டு புத்தளம் சேனைக்குடியிருப்பு பத்தினியம்மனைத் தினமும் வழிபாடு செய்து வந்தாள். ஒரு நாள் இவள் பத்தினியம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள வில்லுக்குளத்திலே நீராடிக்கொண்டிருந்த வேளை, மூதாட்டி ஒருத்தி அவள் முன் தோன்றி நாகதோஷம் முற்றாக நீங்கத் தான்பூசை செய்யும் கோயிலுக்கு வருமாறு கூறி காட்டு வழியே அழைத்துச் சென்றாளாம். பொம்மக்காவுக்கு முன்னே சென்ற மூதாட்டி தம்மன் அடவி ஆலயத் தலவிருட்சத்துக்கு அருகில் சென்றதும் மறைந்தருளினாளாம். உடன்
பூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 489
பொம்மக்காவிணைப்பீடித்திருந்த நாகதோஷம் நீங்கியது. மிகவும் ஆச்சரியமடைந்த பொம்மக்கா நடந்த சம்பவத்தை ஊரவர்களிடம் தெரிவித்திருக்கிறாள். ஊரவர்களின் உதவியுடன் கருமாரி அம்மன் ஆலயத்துக்கு அருகில் திருமடம் ஒன்றை அமைத்து அதில் தங்கினாள். மண், மரம் ஒலை கொண்டு அம்மனுக்கு கோயிலெடுத்தாள். மிகுந்த சிரமப்பட்டு காசியில் இருந்து சக்தியந்திரம் ஒன்றைத் தருவித்து அதனைக் கோயிலிலே பிரதிட்டை செய்து பூசித்து வந்தாள். இவளது வழிபாட்டில் பெரும்பாதி தியானமாகவே இருந்தது.
கருமாரியம்மன் ஆலயத்தில் பொம்மக்கா சமாதியடைந்த பின்னர் இக்கோயிலின் மகத்துவம் நாளுக்கு நாள் ஓங்கி வளர்ந்தது. கருமாரியம்மனை பொம்மக்கா அம்மன் என்று போற்றினர். வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் நெய் விளக்கேற்றி பொங்கல் வழிபாடு செய்தனர். ஒவ்வொரு நாகசதுர்த்தி தினத்தன்றும் ஆலமரப்பொந்திலிருந்து வெண்மை நிற நாகப்பாம்பு வெளியே வந்து மக்களுக்கு காட்சி
பூரீபத்திரகா வல்லிந்தைக் கிரா கொலக்கனாவெளி என்னும் ஜோர்ஜ் மன்னரால் வழங்கப்ப மருங்கும் வயல்வெளிகளும் ( பேராறும் இக் கிராமத்தை வ6 வல்லிந்தை ஊர்க்காளி கோவி
 
 

கொடுத்துச் செல்வதும் வழக்கமாகிவிட்டது. நாக தரிசனத்தைப் பெரும்பேறாக இவ்வூரவர்கள் கருதுகின்றனர். இப்பாம்மைத்தவிர வேறு இருபாம்புகள் கோயில் சுற்றாடலில் திரிவதைச் சாதாரணமாகக் காணலாம். இவை இங்குள்ளவர்களுக்கு இதுவரை எத்தீங்கையும் ஏற்படுத்தவில்லை. இப்பாம்புகள் தமது இட்ட தெய்வமாகிய கருமாரியம்மாளுடையவை என்றும் அவற்றிற்கு எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது என்பதும் இவ்வூரவரின் கண்டிப்பான உத்தரவு
பாம்புகளைப் போலவே தலவிருட்சமும் மிகவும் மகத்துவமுடையதாகும். இதனை எவரும் தீண்டுவது கிடையாது.
பூரீமுத்துமாரியம்மன், குசலை, Uusijas Gg Gofuua 1952ல் புதிதாகக் கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பரிவாரங்கள் பிள்ளையார், முருகன், வைரவர்.
பாலனறுவை
DT6)ULLD
ரிஅம்பாள், சவன்பிட்டி - கறப்பளை
மம் பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தை அடுத்துள்ளது. இவ்விடம் 1905ம் ஆண்டு 5ம் ட்டது எனக் காணி உறுதிகளில் காணக்கிடக்கின்றது. இரு
மேற்கே மகாவலி ஆற்றின் சிறு கிளையான 'வில்' என்னும்
ாப்படுத்தின. இவற்றிற்கு மெருகூட்டியது போல விளங்கியது

Page 490
1926ம் ஆண்டளவில் நாவல் போன்ற மரங்களினாலும் அதன் கொத்துக்களைக் கொண்டும் ஒரு கொத்துப் பந்தல் அமைத்துக் காளி அம்பாளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரலாயினர். வருடந்தோறும் வைகாசி மாத விசாக நட்சத்திரத்தன்று கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியும் ஆவணி மாதப் பெளர்ணமி தினத்தன்று பத்திரகாளி அம்பாள் உற்சவமும் நடைபெற்று வந்தன. இன்னும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகின்றது.
அருள்வாக்கு சொல்பவரிடம் காளி அம்பாளே வந்து தானும் தனது பரிவாரங்களும் தங்குவதற்கு ஒர் நிரந்தரமான இடத்தை நிர்மாணித்துத் தரும்படி வேண்டுகோள் விடுத்தார். எனவே, மக்கள் பழைய இடத்திலேயே ஒரு கற்கோயிலைக் கட்டி அம்பாளை பிரதிஷ்டை செய்தனர்.
1984ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பீ வலயத்தில் இக் கிராம மக்களும் இவ் ஊரிலிருந்து இரண்டு மைல்களுக்கப்பால் அமைந்திருந்த கறப்பளை என்னும் கிராம மக்களும் கறப்பளை’ என்னும் கிராமமாக ஒன்றிணைக்கப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர்.
ஊர் மக்கள் இப்புது இடத்திற்கு வந்தபோதும் எமது அன்னையையும் தனியாக விட்டுவிடவில்லை. பெருங்காடாகவிருந்த குடியிருப்பு நிலங்களை வெட்டித் துப்பரவு செய்தது போலவே அன்னைக்காகவும் ஒரிடத்தைத் தெரிவு செய்து புனிதப்படுத்தி குடியமர்த்தி வழிபட்டு வந்தனர். இவ்வாறிருக்கும் வேளை
இப்புதுக்கிராமத்திலும் தமது பழைய காளி கோயிலைப்
 

போன்று ஒர் கற்கோயிலைக் கட்டவேண்டிய தேவையை ஊர் மக்கள் யாவரும் உணர்ந்து காளி கோவில் வங்கி இருப்பிலிருந்த பணத்துடன் எமது பூர்வீகக் கிராமத்து மக்களிடமிருந்து பெறப்பட்டவரிப்பணத்தையும் சேர்த்துக் கற்கோயில் கட்டுவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன.
இக்கோயில் கட்டும் பணி 2000ம் புத்தாண்டிலேயே இனிது நிறைவுபெற்றது. இவ்வாலயம் பூர்வீக ஆலயத்தைவிடச் சற்றுப் பெரிதாக இனிய வடிவமைப்புடன் அமைந்துள்ளது. போரைதீவு என்னும் ஊரிலிருந்து தருவிக்கப்பட்ட மூலமூர்த்தியுடன் 2000ம் ஆண்டு ஆனிமாதம் இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடாத்தி முடிக்கப்பட்டது.
இக்காளி கோயிலின் வருடாந்த உற்சவம் ஆவணி மாதப் பெளர்ணமி தினத்தன்று முடிவுறுமாறு ஐந்து நாட்கள் நடைபெறும், சடங்கின் ஆரம்ப நாளன்று 'வட்டாமடை எடுத்தல்' என்னும் நிகழ்வு நடைபெறும். இது கோயிலிருந்து சற்றுத்தொலைவிலுள்ள hairsopotumi ஆலயத்திலிருந்து மாலையில் தெய்வம் ஆடுபவர்களோடு அன்னையின் ‘முகக்களை’ வைக்கப்பட்ட வட்டா, பிள்ளையார் ஆலயத்தில் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, பெரியவர் ஒருவரால் காளி கோயிலுக்குக் கொண்டு வரப்படும். இவ்வட்டாமடை ஆலயத்தை அடைந்ததும் ஆலயக்கதவு திறக்கப்படும். இது கதவு திறத்தல்' என அழைக்கப்படுகிறது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்குப் பூசைகள் நடைபெற்று, ஐந்தாம் நாட்காலை தீ மிதித்தலுடன் உற்சவம் நிறைவு பெறும்.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 491
மயூரமங்கலம்
○
முத்தும/ புளியந்தீவின் வட மேற்கி வழங்கப்பெறும் பாங்களில் பராசக் எழுந்தருளியிருக்கும் பராசக்தி முத்துமாரியம்மன் என்றும் பெய கோவில்தான், மட்டக்களப்புப் பகு கோவில் என்று கூறுகிறார்கள். வழிபாட்டுக்காரரான மூன்று சே புளியந்தீவின் வடமேல் புறவாவி ( மக்கள் குடியேறியிருந்த கொத்து தாம் கனவிடைப் பெற்ற திரு கொத்துக்குளத்தில் நிறுவிய சக் தாண்டவன் வெளியில் இரண்டாய கோவில் கொள்ளப்பெற்றார் என்னு நிலையமே பின்னர் “மாதா” கோல் கோயில் எழுந்தகாலம் கம தோன்றுகிறது. அக்கோவில் மூலஸ்தானமாகிய ஒரு அறை மட்( ஒரு பந்தலை முன்புறமாகக் கொ6 இத்தலம் பிரபலம்பெற்றுவழங்கத்( இருந்து வந்துள்ள தென்றறிகிே பூரணைதோறும் நடக்கும் பெ அக்காலத்திலே அம்மன், தான் அ கட்டுச்சொல்வோர் வாயிலாக)பக் முதலானோருக்கும், தனிப்பட்டன வழக்கம் இருந்திருக்கிறதென்று கோவிலில் கூறப்பெறும் கட்டு (ெ அனுசரிக்கப்பட்டுவந்திருக்கின்ற வெள்ளிக்கிழமைகளில் மதிய வே பொங்கல் செய்து படைத்து வழிபா
 
 

DÚLábdô6ITýIU
(D(T6)LL(I)
ரிஅம்மன், கொத்துக்குளம் லே, மட்டக்களப்பு நகர் எல்லையில் கொத்துக்குளம் என்று தி கோவில் ஒன்று அமைந்திருக்கின்றது. இக் கோவிலில் யை மாரியம்மன் என்றும், மகாமாரியம்மன் என்றும், Iர் குறிப்பிடுவர். இந்தக் கொத்துக்குளத்து மாரியம்மன் தி முழுவதிலும் அறியப் பெற்ற ஆதியான ஒரு மாரியம்மன் கலிங்கநாட்டில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த சக்தி கோதரியர், மாமங்கை நதியில் நீராடி வழிபாடாற்றியபின் எல்லையை வந்தடைந்தனர் என்றும், அவர்கள், அக்காலம் க்குளத்தில் ஒருவரும், தாண்டவன் வெளியில் இருவருமாக வருளாணைப்படி தங்கிவிட்டனர் என்றும், முன்னவர் தி வழிபாட்டு நிலையம் முத்துமாரியம்மன் கோவிலாகவும், வர் நிறுவிய பராசக்தி,கண்ணகை அம்மன் என்று பின்னர் றும்,மற்றையவர் அதே சூழலில் நிறுவிய அன்னை வழிபாட்டு பிலாயிற்றென்றும் ஐதீகங்கள் வழங்குகின்றன. ார் 300 ஆண்டுகட்குச் சற்றுமுன்னராக இருக்கலாம் என்றே ஆரம்பித்த காலத்திலிருந்து, நீண்ட காலத்துக்கு, ம்ெ கொண்டதாகவும், மக்கள் நின்றுவழிபடுதற்காகப் பெரிய *ண்டதாகவுமே இருந்திருக்கின்றது. மாரியம்மன் கோவிலாக தொடங்கியகாலத்திலிருந்துஉயிர்ப்பலிகொடுக்கும் வழக்கம் றாம். தொடக்கத்தில் மூன்று நாட் சடங்குடன் ஆனிப் ருவிழாவே அத்தலத்தின் புகழ்பெற்ற விழாவாகவும், திட்டித்துத் தோன்றும் பூமரங்கள் மூலமாக (தெய்வமாடிக் தர்க்கும், கோவில் தலைவர்கட்கும், ஊர்த்தலைவர், அதிகாரி வும் பொதுவானதுமான பல உண்மைகளை அறிவிக்கும் ம் கேட்கப் பெறுகின்றது. கொத்துக்குளத்து மாரியம்மன் தய்வீக வாக்குகளின்படி) ஒழுகுதல் மிகுந்த பயத்தியோடு இத்தகைய ஆண்டுச் சடங்கு விழாவைவிட, வாரந்தோறும் ளைகளில் மட்டும் பல ஊர்களிலிருந்து வரும் அடியார்கள் டாற்றி வந்ததாகவும் அறிகின்றோம்.

Page 492
கோவிலை அண்டியிருந்த குடிமனைகளிலிருந்து அடிக்கடி கேட்கப் பெற்ற அவலிடிக்கும் சத்தம் அம்மனுக்குப்பிடிக்கவில்லையாம். அதனால் மக்கள்தாம் பெற்ற கனவுக் கட்டளைகளின்படி இடம் பெயர்ந்தனரென்றும் கூறுகிறார்கள். மட்டக்களப்பு நாட்டிலுள்ள அம்மன் கோவில்களில் கதவுதிறந்து சடங்கு தொடங்கினால் அவ்வூர்களில் அவல் இடித்தல், மா இடித்தல், மஞ்சள் இடித்தல், பொரியல் வகை செய்தல், பலகாரம் சுடுதல் முதலானவையும் தடுக்கப்படுதலை இன்னமும் காண்கின்றோம்.
வீரசைவர் பரம்பரையைச் சார்ந்த சைவக் குருக்கள்மாரே மூலத்தானத்தில் அம்மனுக்குப் பூசையாற்றிவருகின்றனர். கோவிற்சடங்குகளை மட்டும் அதற்கென உள்ள கட்டாடிமார், (பூசாரிமார்) செய்வது வழக்கம். கோவில் மூலஸ்தானத்துள் இவர்கள் செல்வதில்லை. மூன்றாம் மண்டபத்துள் சடங்குக்காக அம்மனுக்கென அமைக்கப்படும் முதற் பந்தலில் தலைமைக் கசிட்டாடி நின்று தமிழ் மந்திரங்களால் உடுக்கு, தவில் முதலான வாத்தியங்கள் ஒலிக்கப் பூசனைசெய்து உருக்கொள்வோர் மீது உரிய தேவதைகளையும் ஏற்றி ஆடச்செய்து, அதாவது தெய்வம் ஆடுவோர் ஆவேசங் கொண்டு ஆடத்தக்கதான சூழ்நிலையை மந்திரங்களாலும், காவியப்பாடல்களாலும், உடுக்கை ஒலி முதலியவற்றாலும் உண்டாக்கிவைப்பர். அவ்வேளை, கோவில் முழுவதும்பயமும் பக்திப்பரவசமும் கலந்த நிலை பொங்கக் காணலாம். மேலும் கோவில் உள்வீதியில் வடபுறமாக வயிரவர் கோவிலின் முன் காளி தேவிக்கு ஒரு பந்தலும், தெற்கு வீதியில் வீரபத்திரர், நரசிங்கர் சுவாமியர்க்கு இரு பந்தல்களும் அமைத்து அவற்றிலும் இவ்வாறே தினமும் பூசை நடக்கும். இவைகளைவிட கோவிலின் நேர்எதிரே வெளி வீதியில் யாகசாலை எனப்படும் ஒரு பெரிய பந்தலையும் அமைத்து பூசை செய்வர். சடங்கின் இறுதிநாளை ஒட்டிப் பலி கொடுக்கப்படுதற்குரிய ஆடு, கோழிகளை இந்த யாகசாலைக் குண்டத்தின் பக்கத்தில் உள்ள கழுமரத்தடியில், “கழுவடிக்கிடா” எனப்படும் தலைப் பலிக்கிடாவும், தலைப்பலிச் சேவலும் கட்டப்பெற, யாகசாலையின் நான்கு வாசல்களிலும் ஒவ்வொராடும், ஒவ்வொரு கோழியுமாகக் கட்டிவைக்கப்படும். மறுநாளாகிய உயிர்ப்பலி நாட்காலை வேளையில் கோவிற் கதவு, வெளிமதில் வாசலிலுள்ள “கேற்” என்பவற்றை மூடி, வெளியில் நடப்பது கோவிலுள்

தெரியாதவாறு வெள்ளைச் சீலையால் கேற்றை மேலும் மூடி மறைத்தபின் தலைக்கடா, தலைச்சேவல் என்ற ஒழுங்கிலிருந்து பலியெடுக்கும் தேவதைகட்காக உரிய கடாக்களும் சேவல்களும் முறையே கழுத்துத் துண்டித்துப் பலி கொடுக்கப்படும். அந்நிகழ்ச்சியின் பின்னர் நீரிற் தோய்ந்து உடைமாற்றியன்றி, இந்த வெளி நிகழ்ச்சியிற் பங்கெடுத்தோரோ, பார்த்து நின்றோரோ உள் வீதிக்குக்கூடச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சடங்குகாலமுற்றும் கட்டாடிமார் எனப் பெறும் பூசாரிமாரும், தெய்வம் ஆடுவோரும், ஆலாத்தியெடுக்கும் சிறுமியர்களும் முதலான யாவரும் கோவிலிலேயே தங்கியிருத்தலும் கோவிற் செலவில் அவர்கள் பராமரிக்கப் பெறுதல் வழக்காறு. வருடந்தோறும் இவ்வாறு நடைபெற்று வந்த, சடங்குகள் ஒன்பதும், இறுதியான பலிச்சடங்கு ஒன்றுமாகும். இச்சடங்குகள் முறையே, கோவில் ஐயர், வண்ணார், ஊறணி மக்கள், தூண்டி மக்கள், வலையிறவு மக்கள் ஆகியோரால் நடத்தப் பெற்று வந்தன. பலிச் சடங்குச் செலவுகள் பொதுமக்களாற் கொடுக்கப்படும் நேத்திக்கடன்களேயாகும். சடங்குகள் திருவிழாக்களான பின்னும் இதே ஒழுங்கிலேயே அவை நடைபெறுகின்றன. பலிச்சடங்கு நிறுத்தப்பட்டு அது பள்ளயமாகவும், சர்க்கரை அமுதாகவும் மாறியபின் பொதுச் செலவில் அவை இலகுவாக நடந்து வரக் காணலாம்.
தலைக்கட்டாடியார், சடங்கின் முதல் நாளில் கோவிலுக்கு எதிரிலுள்ள வாவியிலிருந்து கலசத்துள்,நீர் கொண்டு வந்து அம்மனின் திருவடி விளக்கில் ஊற்றி விளக்கேற்றி வைப்பர் என்றும் அது அணையாத நிறைமணி விளக்காக இறுதிநாள் வரையும் எரிந்து கொண்டிருக்கும் அதிசயம், அண்மைக்காலம்வரை நிகழ்ந்து வந்ததென்றும் கூறப்படுகின்றது. இதே தலைக்கட்டாடியார், பலிச்சடங்கின் முதல்நாள் மாலை அம்மனின் வேடம் பூண்டு நிறைகுடமும் பிரம்பும் தாங்கி, ஊர்வலம் வருவர் என்றும் அறிகிறோம்.
சுமார் 1832ம் ஆண்டளவிலேதான் உட்புகுந்து கொண்டதாகக் கருதப்படுகின்ற இந்தச் சடங்கு முறை திருவிழாவாக மாறியதற்கேற்ப கோவில் அமைப்பும் மாற்றம் பெற்று வளர்ந்து வந்திருப்பதை நாம் காணலாம். 1864ம் ஆண்டு வைகாசிப்பூசத்திலன்று சம்புரோட்சண கும்பாபிஷேகமொன்றும் நடத்தியிருக்கின்றனர். பின்னர் நாலாம் மண்டபமும் உள்வீதிச் சுற்று மதிலும் எழுப்பப்பெற்று, 1922ல் இரண்டாவது முறையாக
மயூரபதி யூனி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 493
கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். பழைய கட்டிடம் முழுவதும் இடிக்கப்பெற்று புதிய முறையில் கருங்கற் தளமும், வீதியும் அமைந்தன. புதுமுறையிலான ஒவியமும், சிற்பமும், நிறைந்த விமானம் கொண்டதாய், ஆகம விதி முறைக்கமைய நிருமாணிக்கப் பெற்ற கொத்துக்குளத்து மாரியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகமும் 19736) நடந்தேறியது. மகாமாரியம்மையார் உமையம்மையாராகவே காட்சிதந்து, அக் கோவிலிலுள்ள சிங்க வாகனத்தின் மீது இருந்த கோலத்தில் காட்சி கொடுத்து விளங்கும் அருளன்னையாக விளங்குகிறாள். இன்றுள்ள முத்துமாரியம்மன் இதற்கு முன்பு இக் கோவிலுள் இருந்த அம்மன் சிலையின் கீழ் வைக்கப் பெற்றிருந்த “யந்திரம்" மலையாள மந்திரம் வரையப் பெற்ற, தாமிரத் தகட்டினாலான தென்றும், அந்தத்தகடு இறந்து படப்பட உயிர்ப்பலி கோரும், அம்மனின் கோரமூர்த்தமும் காலகதியில் வலியிழந்து போயிற்றென்றும் இங்கு கூறுவார்கள். இக்கூற்றை மெய்ப்பித்து, அருளொளி வீசிக் கொண்டிருக்கிறாள் இன்றைய அன்னபூரணியான மகமாரி.
மட்டக்களப்புப் பகுதிக் கோவில்கள் பலவற்றில் இருந்த உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தினை மாற்றியமைத்த வகையில் மட்டுமன்றி, கோவிலமைப்பு பூசை முறைகள் முதலிய முக்கியமான வேறுபலவற்றிலும் முன்னோடியாக விளங்கும் இக் கோவிலில், வருடாந்தத் திருவிழாவாக மாற்றம் பெற்ற ஆனிச் சடங்குடன் சித்திரை வருடப் பூசை, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்தரம், சித்திரா பூரணை, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆடி அமாவாசை, ஆவணிச் சதுர்த்தி, புரட்டாதிச் சனி, நவராத்திரி, கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவாதிரை முதலான 52 சிறப்புப் பூசைகள் ஒரு வருடத்தில் நடக்கின்றன.
இந்த 1977ம் ஆண்டில் அம்மன் கோவிலின் உள்வீதியில் பின்புறமுள்ள இருமூலைகளிலும் முறையே பிள்ளையார் கோவில் ஒன்றும், முருகன் கோவில் ஒன்றும் புதிதாக அமைத்துக் குடமுழுக்காட்டிக்,கோயிற்சிறப்பை மேலும் உயர்த்தியுள்ளார்கள். '
புன்னையம்பதி மகாமாரியம்மன், கோட்டைமுனை ஏறக்குறைய நூறு ஆண்டுகட்கு முன்னர் கோட்டைமுனைப் பகுதியில் வாழ்ந்த சைவநன் மக்கள்
மயூரமங்கலம்

அடிக்கடி, கொடுமையான அம்மை நோய்க்கு ஆட்பட்டு அழிவுறலாயினர். தற்போது ஆலயம் நிறுவப்பட்டுள்ள பகுதி புன்னை மரங்கள் நிறைந்த சோலையாகக் காணப்பட்டது. அப்புன்னை மரங்களின் நடுவே வெள்ளிக்கிழமை தோறும் பிரகாசமான சோதி தோன்றுவதைக் கண்ணுற்ற மக்கள், அது அம்மையின் அருட்சோதிதான் என்று துணிந்து அவ்விடத்தணுகித் தம்மைப் பீடித்த அம்மை நோய் நீங்க, சிறியதோர் பந்தர் அமைத்து அம்பிகையை வெள்ளிக்கிழமை தோறும் வழிபடலாயினர். அவ்வாறு வழிபட்டதன் பின்னர் அம்மை நோய் படிப்படியாக அவ்விடத்தை விட்டு நீங்கக் கண்டனர். இதனால் அகமகிழ்ந்த அம்மக்கள் ஆலயம் அமைத்து ஆண்டுக்கொரு முறை வரும் ஆணிப் பூரணையில் சடங்கு செய்து பெருவிழாக் கொண்டாடினர். இற்றைக்கு அறுபது ஆண்டுகட்கு முன்னர் செங்கல்லாலான ஆலயத்தை நிறுவி அம்பிகையைப் பிரதிஷ்டை செய்தனர்.
ஆரம்ப காலத்தில் புன்னைமரச் சோலை சூழ்ந்த இடமாக இருந்த இந்த இடத்தில் களிமண்ணாலும், செங்கல்லாலும் ஒரு சிறு கோவில் அமைக்கப் பெற்றது. இது ஒரு மடாலயம் போன்ற தோற்றத்தில் அமைந்திருந்தது. இக்கோயில் சுமார் நூறு வருடப்பழமை வாய்ந்ததெனக் கருத இடமுண்டு. இக் கோயிலுக்குப் “புன்னைச்சோலை" என்றே பெயருண்டாகியது.
1928ம் வருடம் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதற்குச் சிறிது காலத்தின் முன்பு இப்போதுள்ள அம்மனின் சிலையொன்று காமாட்சி அம்மனின் தோற்றப்பொலிவுடன் மகாமாரிஅம்மன் என்ற பெயரால் இங்கு கொணர்ந்து வைக்கப்பட்டது.
இங்கெழுந்தருளியிருக்கும் மகாமாரியம்மனுக்கு "சிம்மவாகினி" என்று ஒரு பெயர் உண்டு. மாரியம்மன் ஆலயங்களில் சிங்கமே பலிபீடத்திற்கு முன்னால் வைப்பது வழமை. ஆனால் புன்னையம்பதி மகா மாரியம்பாளுக்கு நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். அம்பிகை சாந்த (சொரூபிணியாக) காட்சியளிக்கிறாள். காமாட்சியின் கருணையை அவள் கண்கள் சொரிய அருள் வீற்றிருக்கின்றாள்.
1968ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந் திகதி புதிய ஆலயத்திற்கான கல்நாட்டுவிழா நடைபெற்றது. 30.11979 வெள்ளிக்கிழமை காலை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

Page 494
கண்ணகியம்மன், களுவாஞ்சிக்குடி
மட்டுநகரிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் வீதியில் 16வது மைலில் களுவாஞ்சிக்குடி என்னும் ஊர் உள்ளது. இக்கிராமத்திலுள்ள இவ்வாலயம் இன்றைக்கு 200 வருடங்கட்கு மேற்பட்ட புராதன ஆலயங்களில் ஒன்று. பண்டைய சரிதையின் படி இவ்வாலயம் மட்டக்களப்பு வாவிக்கணித்தாய் குளக்கட்டுகள் சந்திக்கும், மருதமரச்சோலையில் அமைய நேர்ந்தது. அதற்குரிய காரணங்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். சேர நாட்டினின்றும் பூரீ கண்ணகை அம்பாளின் சிலை, பத்தி, முத்தி என்னும் இரு பெண்மணிகளால் மட்டக்களப்புவாவியினூடாக மட்டக்களப்புக்குகொண்டு வரப்பட்டது. இச்சிலை வைக்கப்பட்டிருந்த சிலைப்பேழை தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்திலேயே இடம் பெயராது பத்தி, முத்தி ஆகிய இருவரும் இளைப்பாறத் தங்கியபோதில் நிலைத்திருந்ததென்றும், பெண்மணிகள் தாம் கண்ட கனவின்படி அவ்விடத்திலேயே ஆலயம் அமைக்கச் சிலையை உதவி ஒத்துழைப்பு நல்கினார்கள் என்றும், கர்ண பரம்பரை வாயிலாக அறிய முடிகிறது.
இற்றைக்கு அறுபது வருடங்கட்கு முன் கற்கோவிலாக அமைக்கப்பட்டு கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், யாக மண்டபம் முதலியன உருவாகிப் பொலிவுறக் காட்சியளித்து வந்தன. சென்ற ஆண்டில் சூறாவளிச் சீற்றத்தால், கர்ப்பக்கிரக மண்டபம் தவிர்ந்த அனைத்தும் தவிடு பொடியாகின. கிராம மக்களின் பண உதவியுடன் அரசினர் நல்கிய பண உதவியையும் கொண்டு இரு மண்டபங்க்ளை மட்டும் புனரமைப்புச் செய்ய நேர்ந்தது.
பாடல்கள், சிலப்பதிகார ஏடு உற்சவ காலத்தில் படித்தல் உடுக்குத்தாளத்தோடு ஊர்ச்சுற்றுக் காவியங்கள், வழக்குரைக் காவியங்கள், உற்சவமுடிவில் குளுத்தி விழாவில் படிக்கும் குளுத்திப் பாடல்கள் என்பன இவ்வாலயத்தின் சொத்துக்களாயுள்ளன.
இங்கு நித்திய பூசை நடப்பதில்லை. அவசியமேற்படும் போதெல்லாம், கர்ப்பக் கிரகக் கதவு திறக்காமல், மகாமண்டபத்துள் பூசை, ஆராதனைகள் நடத்திவருகின்றனர்.உழவர் மழைகேட்டும், கிராமத்துள் தொற்று நோய்கள் தோன்றினால் அவை நீங்கவும், இன்னும் கிரகக் கோளாறுகள் சாந்திப்படவும் இவ்வாறான பொங்கல் விழாக்கள் செய்யப்பட்டுத் தேவியின் அருளைப் பெறுகின்றனர். இங்கு வருடந்தோறும் நிகழும் வைகாசிப் பெளர்ணமிக்கு முன்

ஏழு நாட்கள் கதவு திறக்கப்பட்டு பரிபாலன சபையாரின் தீர்மானப்படி பாகைச் சடங்குமுறையில் நைமித்திய விழா நடைபெற்று வருகின்றது.
பூரீமுத்துமாரியம்மன், (சுவாதியம்மன்) வெல்லாவெளி
வெல்லாவெளி என்னும் கிராமம் படுவான் கரையில் பட்டிருப்பு துறையிலிருந்து சுமார் ஐந்து மைல் தூரத்தில் உள்ளது.
இந்த ஊரிலே வடகரையால் நாம் செல்லும்போது முதலில் தெரிவது பூரீ முத்துமாரி அம்மன் ஆலயமாகும். வெல்லா வெளிக் குளத்தின் தென்கரை சார்ந்து பசிய வயல் பரப்புகள் சூழவர காட்சி தரும் ஆலயமானது பார்ப்போர் கண்ணையும், கருத்தையும் கவர்வனவாய் உள்ளன. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுக் காரணங்களோடு கூடியது இக்கோயில். அக்காலத்தில் இக்கோயில் சுவாதி அம்மன் பெயரால் வேறு ஒரு இடத்தில் இருந்திருக்கின்றது.
கி. பி. சுமார் 1820ம் ஆண்டளவில் சிறிய அளவிலான ஆலயத்தை நிருமாணித்து பூரீ முத்துமாரி அம்மனை வழிபடத் தொடங்கினர். பின்னர் 25 ஆண்டுகள் சென்றதும் சூழவர வயல் நிலங்களையும் முற்பக்கத்தில் அழகிய தாமரைத் தடாகத்தையும் கொண்டிருந்த அதே இடத்தில் அம்மனுக்குச் சிறப்பான முறையில் ஆலயத்தை நிருமாணிக்கத் திட்டமிட்டார்கள். அன்பர்களின் மன எண்ணப்படி பூரீ முத்துமாரியம்மன் கோயில் எழுந்தது. அவ்வாலயத்தை அண்டி சிவன், பிள்ளையார், முருகன், விஷ்ணு, நாகதம்பிரான் போன்ற தெய்வங்களுக்கு ஆலயங்கள் தனி அன்பர்களின் உதவியாலும், கோவில் பணத்தினாலும் எழுப்பட்டன.
1850 இல், திட்டமாக இடம் தீர்மானிக்கப்பட்டு ஆலயம் எழுப்பப்பட்ட பின்னர் 1917ம் ஆண்டளவில் மேலும் திருத்தியமைக்கப்பட்டது. அதன் பின்னர் 1967ம் ஆண்டில் இவ்வாலயம் முற்றாக இடிக்கப்பட்டு மூலஸ்தானம் முன்பிருந்த இடத்திலிருந்து சிறிது பின் நகர்த்தி கோயிலைவிட்டு விசாலிப்பி த்து நிர்மானித்தார்கள். 1968ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதோடு கோயில் திருப்பணி நிறைவேறிற்று எனலாம்.
மேலும் மக்களுக்கு கொடிய அம்மன் நோய் வந்து சிலர் இறந்தும் பலர் கஷ்டப்பட்டதாலும் 1816. 08. 16 வேப்பமரத்தடியில் அம்மனை வழிபட்டதாகவும்
மயூரபதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர்-2000

Page 495
1889 இல் மடாலயமாக கட்டி தங்கம், பொன், வெள்ளி, செப்பு போன்ற உலோகங்கள் சேர்ந்து விக்கிரகம் 9 அங்குல உயரத்தில் செய்யப்பட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு. 1990 வன் செயல்களால் தொடர்ந்து 5 வருடங்களிற்கு ஆலயம் பாதிப்படைந்தது. 1990 இல் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்று 1999 இல் பல விக்கிரகங்கள் வைத்து பிரதிஷ்டா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிள்ளையார், முருகன், சிவன், விஷ்ணு, நாகதம்பிரான், வீரபத்திரர், காளி, பேச்சி, பைரவர் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனிக் கோயில்கள் உண்டு.
வருடந் தோறும் ஆணித்திங்கள் பூரணைத் தினத்திற்குப்பத்து நாட்களுக்கு முந்தியதாக வரும்மகம், பூரம், உத்தரம் என்னும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் கும்பஸ்தாபனத்துடன் ஆரம்பமாகிய 10 நாட்களுக்கு உற்சவம் நடைபெற்று, மூலம் அல்லது கேட்டை நட்சத்திரத்தில் கும்பம் சொரிதலுடன் திருவிழா முடிவடையும்.
கோல வள்ளிநாயகி, கோராவெளி
மட்டக்களப்பு வடக்கில் 16வது மைல் தூரத்திலிருக்கும் ஒரு சிற்றுார் கிரான் எனப்படுவது. இங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் வாழைச்சேனை ஆறு குறுக்கிடும். ஆற்றறைக்கடந்து 4 மைல் சென்றதும் பிரசித்தி பெற்ற கோராவெளி வள்ளியம்மன் ஆலயத்தை அடைந்து விடுவோம். ஆலயம் என்றால் பிரமாண்டமான ஆலயமல்ல, ஆலயமே இல்லை எனலாம்.
இரண்டு மெல்லிய கொக்கட்டிக் கன்றுகள், ஐந்து அடி உயரம் இருக்கும். அவற்றின் மேல் கொத்துப் பந்தரிட்டு இருக்கும். இது தான் பிரசித்தி பெற்ற ஆலயம். அந்தக் கொக்கட்டிக் கன்றுகளைப் பற்றி ஒரு அதிசயம். சுமார் 30,40 வருடங்களாக வளர்ச்சியோ, தேய்வோ இன்றி அன்றும், இன்றும் குறையாத இளமையோடு காட்சி தருகின்றன. அவற்றின் பக்கத்தில் நிற்கும் மற்றைய கொக்கட்டி மரங்களும், வீரை மரங்களும், வம்மி மரங்களும் முதலான வேறு மரங்களும் வளர்ச்சி உற்று வான் ஓங்கி நிற்கும் போது இந்தக் கன்றுகள் மட்டும் இளமை குன்றாது, முதுமை, மூப்பும் பெறாது நிற்பது பார்ப்போரை வியப்புக் குள்ளாக்குகின்றது. அதிலும் ஒரு விந்தை என்ன வென்றால் அதில் (காணிக்கை) காசு போடுவோர் ஒரு
மயூரமங்கலம்

போருக்குள் போடுகிறார்கள். கணிர் என்ற சத்தத்துடன் போய்ப் பூமியில் விழுமாம். இந்தப் போர் மண்ணால் மூடப்பட்டு விட்டபடியால் நம்மால் பரீட்சித்துப் பார்க்க முடியவில்லை.
அம்மன் குடி கொண்டுள்ள இடம் மேடாகக் காட்சிதருகின்றது.மருது, விளா, வீரை முதலிய மரங்கள் மேடையை நிழல் செய்து குளிர்விக்கின்றன. அக்குளிர்ச்சி போதாதென்று ஆலயத்தின் நாற்புறமும் மகாவலிகங்கையின் கிளைநதி ஒன்று வளைந்தோடிச் செழுமை தருகின்றது. வைகாசிப் பூரணை தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் பொங்கலிட்டு பக்தி செலுத்துவதன் மர்மந்தான் என்ன. அது பற்றி பல ஐதீகங்கள் உண்டு.
வேட்டுவக் குடும்பத்தில் அழகான ஒரு பெண் மகவு பிறந்தது. குழந்தை பிறந்து பருவ வயது எய்தியதும் தனது தாய் தந்தையாரிடம் - தான் சமாதியில் இருக்கப்போவதாகவும், அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்து தரும்படியும் வேண்டினாள். பெற்றோர் தடுத்தனர். கலங்கினர். எதற்கும் பயன் இல்லை. சில நாட்களில் பெண் சமாதியானாள். அந்த இடத்தில் ஒரு கொக்கட்டியமரம் முளைத்தது. முளைத்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகத் திடீரென்று வளர்ந்து வளர்ந்த படியே திடீரென்று பட்டுப் போயிற்று. அதிலிருந்து தழைவிட்ட இரண்டு கன்றுகளே குறிப்பிட்ட கால வளர்ச்சிக்குப் பின்னர் இன்றும் வளர்ச்சியும், தேய்வுமின்றி காணப்படும் கன்றுகளாகும்.
ஆரம்பத்தில் வள்ளியம்மனையே மக்கள் இந்த இடத்தில் நினைந்து பூசித்து வந்தார்கள். கோரா வள்ளி என்றுபக்தியோடு பெயரிட்டு வணங்கினர். அப்பெயரான கோராவள்ளி என்பது திரிந்து கோரா வெளியாக இன்று ஆகிற்றெனலாம்.
எனினும் மக்கள் இன்று வள்ளியம்மனுக்குப் பதிலாகச் சில ஆண்டுகளாக கண்ணகை அம்மனை நினைந்து வணங்குகின்றார்கள்.
பத்திரகாளி அம்மன், ஏறாவூர் ஏறாவூர் முதலாம் வட்டாரத்தில் இக் கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் வரலாறு சுமார் 175 வருடங்களுக்கு முன்னர் தான் உண்டாகியதென்று தெரிகிறது. இந்தக் காலத்தில் மட்டக்களப்புப் பகுதி

Page 496
கண்டியை அரசாண்ட பூரீ விக்கிரம ராஜசிங்கனின் கீழ் (1798 - 1815) இருந்த காலமாக இருக்கலாம்.
கோயில் வருடத்தில் ஒரு முறைதான் கதவு திறக்கப்படுவதென்றாலும், மூலஸ்தானக் கதவு திறக்காமல் அதற்கு முன்னால் உள்ள கதவுவரையும் திறந்து வெள்ளிக்கிழமை தோறும் பூசை செய்து வருகிறார்கள்.
ஏறாவூர் 4ம் குறிச்சி கிராமத்தில் வசித்து வந்த பொற்கொல்லர் இனத்தைச் சேர்ந்த உலகனார் என்பவர், காட்டில் கம்புகளை வெட்டிக் கொண்டிருக்கும் போது அடர்ந்த காட்டின்பகுதியில் நெருப்பு எரிவதையும் அங்கே ஒரு கன்னிப் பெண் நிற்பதையும், கண்டு அஞ்சி தனது வீட்டுக்கு ஓடி வந்துவிட்டார்.
அன்று தொடக்கம் இவர் காய்ச்சலாய் பீடிக்கப்பட்டிருந்தார். ஓர் இரவு கனவில் ஒரு பெண் தோன்றி, நாங்கள் மூவராக இந்தியாவில் இருந்து வந்தோம். இங்கு என்னை இருக்க விட்டு மற்ற இருவரும் சென்றுவிட்டார்கள். எனவே நான் இங்கு இருப்பதற்கு ஓர் இடம் அமைத்துக் கொடு. உனது நோய்கள் யாவும் தீர்ந்து விடுமெனக் கூறி மறைந்தார். காலையில் கண்விழித்த உலகனார் தனது நோய்கள் தீர்ந்தவராக, சிலரின் உதவியுடன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று காடுகளைத் துப்பரவுசெய்து காட்டுக் கம்புகளினால் ஓர் பந்தலை அமைத்து வழிபாடு செய்து வந்தனர். வருடத்தில் ஒரு நாள் மாத்திரம் பொங்கல் பூசைகள் நடத்திக் கொண்டிருந்தனர்.
இக் கோயிலை பராமரித்து வந்த நிர்வாகிகள் ஆலயத்தை செங்கலால் கட்டி புனருத்தாரணம் செய்து, கும்பாபிஷேகம் செய்வித்து, வருடம் ஒரு முறை பன்னிரெண்டு நாட்கள் விழா நடத்தி, பதின்மூன்றாம் நாள் தீமித்தல், பள்ளயம் இடல் ஆகிய விசேட வைபவங்களுடன் விழா முடிவுறச் செய்தனர்.
1958ம் ஆண்டு தொடக்கத்தில் இக் கோயில் பரிபாலனத்தைப் பொறுப்பேற்ற நிருவாகிகள் இக் கோயிலுக்குரிய சுற்று மதில், களஞ்சிய மண்டபம், கிணறுகள் ஆகியவற்றை அமைத்து 1972ம் ஆண்டு கோயிலைத் திருத்தி, மகா கும்பாபிஷேகம் செய்வித்து தினப் பூசையை உண்டாக்கி ஆடு, கோழி பலியிடும் முறையை நிறுத்தி கெளரி விரதம், மானம் பூ போன்ற விழாக்களையும் உண்டாக்கினார்கள்.
அடர்ந்த காட்டு மாமரங்கள் இருந்தமையால் மாங்காட்டுக் காளி என்றும், பத்திரக்காளி என்றும் அழைக்கப்பட்டுவரும் அம்பிகையின் வருடாந்த உற்சவம்

ஆனி உத்தரத்தில் தொடங்கி தொடர்ந்து 13 நாட்கள் நடக்கும். அகில இலங்கையிலிருந்தும் இவ்விழாவிற்கு மக்கள் சமூகம் கொடுத்து வருகிறார்கள்.
புறவீதியில் வைரவர், மாரியம்மன், கண்ணகையம்மன்,பாலாவதனன், பேச்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கும் வருடமொரு பூசை நடைபெறும்.
பத்திரகாளி அம்மன், பெரிய போரைதீவு
மட்டுமா நகரின் தென்பால் பதினெட்டரை மைல் தொலைவில் பெரிய போரை தீவு என்னும் கிராமம் உள்ளது. இதனைப் பெரிய போர் ஏறுதீவு என்றும் சொல்வர். இக்கிராமத்தில் வடபத்திரகாளி கோயில் ஒன்றுண்டு.
1556ம் ஆண்டிற்குட்பட்ட காலத்தில் இவ்வாலயம் உருவாக்கப்பட்டு, 1825ஆம் ஆண்டில் கல்லால் கட்டப் பெற்றதென்று ஊகிக்கப்படுகின்றது. இன்றும் ஆலய வாயிலில் உள்ள கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ள 1876 என்பது, கோயில் மதில் கட்டிய காலமெனக் கருதப்படுவதால், அதற்கு முன்னரே ஆலயம் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்று கூறுவோரது கருத்துப் பொருத்தமான்தே எனலாம். மடாலய முறையில் அமைந்து கும்பாபிஷேகம் செய்யப் பெற்ற இக்கோயில், கர்ப்பக்கிரகம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், ஸ்தம்ப மண்டபம் ஆகியவற்றை உடையதாக இன்று விளங்குகிறது. ஏனைய பரிவார தெய்வங்களுக்குச் சிறு சிறுகோயில்கள், வெளிவீதியில் இவ்வாலயத்தைச் சுற்றி அமைந்தள்ளன.
வருடாந்த உற்சவம் புரட்டாதி மாதத்தில் நடப்பது, இவ்வுற்சவத்திற்காக நவராத்திரி பூசை காலத்தில் வரும் ஒரு சனிக்கிழமையில் கதவு திறத்தல் நிகழும். அன்று அம்மனைப் பெட்டகத்திலிருந்து வெளியே எடுத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று ஆலயத்திற்குக் கொணர்ந்து வைத்துக் கதவு திறக்கும் வைபவத்தினை நடாத்துவர். மகா மண்டப நடுவில் சீலை விரித்து, அதன் மேல் மடைவைத்து முதலில் இருவிளக்குகளைத் தீபமேற்றி பூசை செய்வர். இது லட்சுமி பூசை எனப்படும். பின்னர் கதவடியில் பூசை நடக்கப் பெற்றதும், கதவு திறக்கப்படும். உடனே அந்த இரு விளக்குகளையும் உள்ளே கொண்டு சென்று, அம்மனது பள்ளியங்கட்டிலுக்கு அருகிலுள்ள இரு தூண்களில் வைப்பர். அன்றிரவு நடைபெறும் அபிஷேக பூசையோடு சடங்கு ஆரம்பிக்கப்படும்.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர்-2000

Page 497
அன்றிலிருந்து எட்டாம் நாள் செவ்வாய்க்கிழமை “வைரவ வேள்வி’ பூசை நடக்கும். அன்றிரவு உரொட்டிகள் சுட்டு கதவு திறந்து, மடைகளெல்லாம் வைத்து, உருவேறி ஆடுகின்ற தெய்வங்கள், கோயிற் தரிசனத்திற்காக வந்து, விரும்பிக் கேட்கின்ற மக்களுக்கெல்லாம் நல்வாக்குக் கூறும். முடிவுற்றதும், வைரவகாவியம், வாழிப்பாடல்கள் பாடப்பெற்று, மறுநாட் காலை அனைத்தும் முடிவுறும். அத்துடன் கதவும் பூட்டப் பெற்றால், வைகாசி மாதச் சடங்குக்கே கதவு திறப்பார்கள்.
வருடாந்த உற்சவகாலத்தில் இரவு வேளைகளில் திருவிழா மிக விமரிசையாக நடக்கும். கடைசி ஐந்து திருவிழாக்களிலும் மூன்று உற்சவ மூர்த்திகள் சகிதம் அம்பாள் வெளிவீதிவலம்வரும். அவ்வமயம், உபயகாரக் குடியினரில் முதியோரிருவரை அழைத்து அவர்களுக்கு, மலர் மாலை அணிந்து, வெண்சாமரத்தைக் கொடுத்து, வாகனத்தில் ஏற்றி, அம்மனுக்குச் சாமரம் வீசும் திருப்பணியைச் செய்யும் உரிமையைக் கொடுத்தல் குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். திருவிழா முடிந்ததும், கோயிலின் முன்புறத்தில் வைக்கப் பெற்றுள்ள மேசை ஒன்றின்மேல், சுவாமிக்குரிய பிரசாதங்களைக் கொணர்ந்து வைத்து, முறைய்ே, தலைவர், காரியதரிசி, தனாதிகாரி, என்பவர்களையும் குடிவழமையில் உள்ளவர்களையும், வரிசைக் கிரமமாகப் பூசகர் அழைத்துப் பிரசாதங்களை வழங்குவார். இறுதியில் தேசத்துக்கென்று ஒரு பங்கும் வழங்கப் பெறும்.
கண்ணகி அம்மன், செட்டிபாளையம்
மட்டக்களப்பு வாவியின் அருகிலே அழகிய வெண்மணற் பரப்பிலே, மருத நில வயற் சூழலிலே அம்மன் குளத்திற்கு அண்மையிலே, வம்மி, வேம்பு, ஆல், அரசு, மருது, மகிழ், கூழா, பனிச்சை, தேற்றா, வில்வம், நாவல், அத்தி, இத்தி, கடம்பு, பயறி, வன்னிச்சை, குழை அடம்புமுதலான பெரு விருட்சங்களின் நிழலிலே அம்மன் ஆலயம் அழகுற அமைந்துள்ளது.படிமுறை வளர்ச்சியிலே மடாலயம் மாறி தூபி ஆலயமாகத் துலங்குகின்றது. ஐந்து தள அமைப்புடைய இராசகோபுரம் இரண்டு பக்கமும் மணித்துரண் கொண்டதாகக் கட்டப்பட்டு வருகிறது.
மதுரையை எரித்த கண்ணகி கடல்கடந்து இலங்கைக்கு வந்து பல இடங்களிலே தங்கி இறுதியில் செட்டிபாளையத்திற்கு வந்து பரந்து விரிந்துநின்ற வம்மி
மயூரமங்கலம்

மரத்தடியில் வசித்ததாகவும், வன்னிச்சியார் என்ற பெயர் கொண்ட அவருடன் செட்டிபாளையத்தில் வாழ்ந்த செட்டிச்சியார் என்ற வணிகர் குலப் பெண் நட்புக் கொண்டதாகவும், உணவு முதலியவற்றை உச்சிப் பொழுதிலே அனுப்பியதாகவும், வைகாசித் திங்களில் மாலை நேரம் வன்னிச்சியார் மஞ்சள் வெய்யிலில் தலைமயிரை அவிழ்த்துக் காயவிட்டபடி இருக்கும்போது செட்டியாச்சி அதிசயமுற ‘வைகாசித் திங்களில் வருவேன்’-என்று கூறி வன்னிச்சியார் மாயமாக மறைத்து விட்டதாகவும் கதை. அவ்விடத்தில் ஆலயம் அமைப்பதற்குக் கண்ணகி அம்மனே நிலையம் எடுத்து வேப்பிலைகளினால் அடையாளப்படுத்தியதாகவும் சொல்கின்றனர்.
மட்டக்களப்பு மான்மியம் நூலிலே செட்டிப்பாளையம் கண்ணகி அம்மன் கோவில் பற்றிய குறிப்புகள் பல உள.
செட்டிப்பாளையம் கண்ணகை அம்மன் ஆலயத்தின் கூட்டக் குறிப்புக்களைப் பார்க்கும்போது அதன் முக்கியத்துவமும், பழமையும் தெளிவாகின்றன.
1816 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2916 ஆம் இலக்க வழக்குத் தீர்ப்பின் பிரதி கிடைத்துள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றத்திலே, ஜேம்ஸ் மக்னற் என்னும் நீதிபதி முன்னிலையிலே மண்முனைக்குட்டி இருபத்தைஞ்சாப் போடி என்பவரால் கண்ணப்பக்கட்டாடி என்பவருக்கு எதிராக அவ்வழக்கு நடைபெற்றுள்ளது. கண்ணப்ப கட்டாடியின் பரம்பரையினரே செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோயிற் சடங்கு செய்யும் உரிமையுடையோர் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்திய கூட்டக் குறிப்புகள் முதலானவற்றுக்குரிய தடயங்கள் மட்டுமே உண்டு. 1816 ஆம் ஆண்டிற்கு முன்பே இவ்வாலயம் சிறப்பான நிருவாகத்திற்கு உட்பட்டிருந்தமை புலனாகின்றது.
கண்ணகி அம்மனுக்குரிய பூசையினைச் “சடங்கு”-என்ற பெயர் சூட்டி அழைப்பது மட்டக்களப்பு மரபு செட்டிபாளையத்தில் முன்பு மூன்று சடங்குகளும் பின் ஐந்து சடங்குகளும் நடைபெற்றன. இப்பொழுது ஏழு சடங்குகள் இடம்பெறுகின்றன. ஏழு சிலைகள் கொண்டு வரப்பட்டமையினை இது நினைவூட்டுகிறது. இரவிலும் பகலிலும் சடங்குகள் நிகழ்கின்றன.
வைகாசி மாதத்திலும் பூரணையிலும் வரும் திங்கட்கிழமை திருக்குளிர்த்தி இடம் பெறும் வண்ணம்

Page 498
வெள்ளிக்கிழமைகதவுதிறக்கப்படும்.வருடம் ஒருமுறை வைகாசித் திங்களில் வருவேன்’-என்று கண்ணகி கூறியபடி பூரணையைவிட பூரணையை அண்மிய திங்கட்கிழமைக்கே முதன்மை வழங்கப்படுகிறது. ஏழு சடங்குகளும் தனித்தனியே முக்கியத்துவமும், சிறப்பும்
6L6) கதவு திறத்தல்:- கண்ணகி அம்மன் கோயில்களுக்கு நித்திய பூசையில்லை அவை வருடம் முழுவதும் பூட்டப்பட்டிருக்கும். இக்கோயில்களில் வருடாந்தச் சடங்கிற்காகச் வைகாசியில் கதவு திறக்கப்படுவதையே கதவு திறத்தல் என்பர். கலியாணச் சடங்கு - ஞாயிற்றுக்கிழமை பகலில் நடைபெறும் இச்சடங்கில் நான்காம் மண்டபத்துள் இருக்கும் ஒரு தடியைக் கரப்புடுப்புப் போன்று சேலைகளைக் கட்டிப்பெண்ணொருத்தியின் உருவத்தை அமைப்பார்கள். மார்பகங்களுக்கு இரண்டு செவ்விளநீர்களைக் கட்டிக் கண்ணகியம்மனாகப் பாவனை செய்வர். குளிர்த்திச் சடங்கு :- திங்கட்கிழமை பின்னிரவு குருவிகொக்குப்பூமியில் இறங்குவதற்கு முன், குளிர்ந்த வேளையிலே கண்ணகி அம்மனைக் குளிரப் பண்ணும் சடங்கினைக் களுதாவளை மக்கள் செய்து வருகின்றனர். மதுரையை எரித்த கண்ணகியின் மார்பிலே வெண்நெய், தயிர் பூசி குளிரும் வேண்டியதை நினைவூட்டுவதே திருக்குளிர்த்தி. அம்மனைக் குளிர்த்தி ஆட்டுவதற்குரிய பானம் ஒன்று தயாரிக்கப்படும். பாலும், பல பழ வர்க்கங்களும் தேன், சர்க்கரை, சீனி, நெய் முதலானவையும் சேர்க்கப்படும். இப்புனித தீர்த்தம் அடியாருக்கு வழங்கப்படும். குளிர்த்தி ஏடு படித்தல்:- வருடத்தில் ஒரு தடவை அம்மனைக் குளிரும்படி ஏடு படிக்கின்ற கடமையும், உரிமையும் குளிர்த்திச் சடங்கினைச் செய்பவர்களுக் குரியது. களுதாவனைக் கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஏடு படிப்பர். எட்டாம் சடங்கு :- இதனைத் தெளிவு சடங்கு என்றுஞ் சொல்வர். திருக்குளிர்த்தி ஆடி முடிந்த பின் ஆலயத்தில் செய்ய வேண்டிய சகல வேலைகளையுஞ் செய்து முடித்த பின், கட்டாடியார் மூலத்தானத்துள் உள்ள தூண்டா மணி விளக்கிற்கு எண்ணெய் நிறைய ஊற்றி அம்மனை வழிபட்டு மூலத்தானக் கதவினைப்பூட்டுவார். சடங்கு செய்யும் பூசாரியாரைக் கட்டாடியார் என்பர். செட்டி பாளையம் கண்ணகை அம்மன் கோவில்
464

தோன்றிய காலம் முதலாகப் பரம்பரை பரம்பரையாக இச்சேவை தொடர்கிறது.
14. 07. 1983 வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்துடன் புதிய நடைமுறைகள் ஏற்பட்டன. ஆலயத்தில் உள்ள வெண்கல உடுக்கின் அபூர்வ அற்புத அருட்சத்தி வாய்ந்தது. இவ்வுடுக்கின் குற்றி வெண்கலத்தினால் வார்த்து எடுக்கப்பட்டது. அது சுமார் ஒன்றரை அடி உயரமும் 9 அங்குல விட்டமும் கொண்டது. வாய் வளையமாக இரண்டு சிலம்புகள் உள்ளன. குற்றியின் நடுவிலும் ஒரு சிலம்பு கழன்று விழாத வகையிலே போடப்பட்டுள்ளது. ஆண்டிலே மூன்று தடவை மட்டுமே இது அடிக்கப்படும்.
செட்டிப்பாளையம் ஆண்டுச் சடங்கின்போது விநாயகர் பானையைத் தவிர வேறு பொங்கல் இடம் பெறுவதில்லை. திங்கட்கிழமை திருக்குளிர்த்திக்காக விநாகயர் பானை பொங்கப்படும்.
முட்டி கூறுதல் என்பது குளிர்த்தி முடிவுற்றபின் நடைபெறுகின்றது. தேசம், வன்னிமை, குடி, கோத்திரம், வண்ணக்கர், கடுக் கண்டவர், தலைமைக்காரர் முதலியோரைக் கெளரவப்படுத்துவதாக இது நடைபெறுகிறது.
இதுவ்ரை பல கும்பாபிஷேகங்கள் நடை பெற்றுள்ளன. சைவக் குருரமாரே இவற்றை நடாத்தினர். 14. 07. 1983 வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றதிலிருந்து தினப் பூசையும் நடைபெறுகிறது.
பூரீகண்ணகி அம்மன், குளக்கட்டு
மட்டு மாநகரின் தாண்டவன் வெளிப் பகுதியில் குளக்கட்டு என்னுமிடத்தில் முற்புறம் வயல் வெளியும் பிற்புறம் இசைபாடும் மீன் வாழும் வாவியும் அமைய மதுரை மரநிழலிலே அமைந்திருக்கும் ஆலயம் தாண்டவன்வெளி குளக்கட்டு பூரீ கண்ணகி அம்பாள் ஆலயம்.
கடல் சூழ் இலங்கைக் கஜபாகு வேந்தன் காலத்தே முதன் முதலாக இலங்கையில் உருவான இப்பத்தினித் தெய்வ வழிபாட்டின் கால கட்டத்தில்தான் இப்பகுதியிலும் அன்னையின் ஆலய வழிபாடு உருவானதாக முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.
ஆலயத்தின் முன்புறம் இருமருங்கிலும் இரு மதுரை மரங்களும் பின்புறம் ஒரு மதுரை மரமுமாக மூன்று மதுரை மரங்கள் இருந்தன. 856) வெள்ளோட்டத்திலேபிள்புறமரம் தீக்கிரையாகியது. ஒரு
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 499
மரம் மட்டுமாநகரிலே ஏற்பட்ட சூறாவளியினால் சிறிது, சிறிதாக சேதமுற்று இறுதியில் ஆலயப் புனரமைப்பின்போது அது முற்றாக அழிக்கப்பட்டது.
ஒரு மரம் மாத்திரம் பெரிய விருட்சமாகி அதனுடன் ஆல், வேம்பு போன்ற மரங்களும் இணைந்து வளர்கின்றன. இம்மரத்திலுண்டான பொந்து ஒன்றினுள் தான் அம்மாளுக்குரிய சிலம்பு, வெள்ளிப்பிரம்பு, இன்னும்பல 90LLust 6T. பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு சிறிதாக ஒரு ஆலயம் உருவானதாகக் கூறப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் ஆலயங்களிலுள்ள சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது சகலரும் அறிந்ததே, அவ்வாறே இவ்வாயத்திலிருந்த அம்மன் சிலையை மூன்று திருடர்கள் பலிபீட வாசலை உடைத்து நிலையாக நிறுத்தப்பட்டிருந்த சிலையின் பாதங்களை வெட்டி சிலையைத் திருடினர். அச்சமயத்தில் அங்கிருந்த ஒரு நாக அரவம் ஒருவரைத் தீண்டியதால் அவர் அவ்விடத்திலே மரணமானார். ஏனைய இருவரும் அந்த அரவத்தை வாளினால் வெட்டி ஆலயக்கிணற்றினுள் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
அடுத்த நாட்காலை அவர்கள் சிலையை ஒரு கோணிப் பையினுள் போட்டு படகொன்றின்மூலம் மட்டுநகர் வாவி மூலமாக எடுத்துச் சென்றுள்ளானர். அச்சமயம் அக்கோணியினுள்ளே ஆலயமணி ஒலிப்பது போலவும், பூசை மந்திரங்கள் கேட்பது போலவும் ஒசை உண்டாகவும் படகு திருப்பப்பட்டு கோட்டைமுனைப் பாலத்தருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் படகுக்காரரினால் அவ்விருவரும் கோணிப்பையுடன்
ஒப்படைக் கப்பட்டனர். அவ்விருவரும் வாந்திபேதியினால் மாண்டதாக பின்னர் அறியக்கிடக்கின்றது.
பின்னர் அச்சிலை முறைப்படி ஆலய வண்ணக்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வண்ணக்கர் அச்சமயத்தில் மட்டுநகர் மாமாங்கேஸ்வரர்ஆலயத்திலும் வண்ணக்கராக இருந்தார். எனவே உடைந்த சிலையை மீண்டும் ஆலயத்தினுள் கொண்டு செல்லக் கூடாதென்னும் நோக்கில் ஆலயத் தீர்த்தக் குளத்தின் சேறு நிறைந்த பகுதியில் போட்டுவிட்டாரெனவும்பின்னர் அதை எடுப்பதற்குப் பலர் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை யெனவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் வேறுசிலை உருவாக்கப்பட்டு வருடந் தோறும் ஆலய உற்சவம் முடிந்ததும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வைத்து விடுவார்கள்.
மயூரமங்கலம்

பூரீபேச்சியம்மாள், நொச்சிமுனை,
கல்லடி, உப்போடை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பழமையும் புகழும் மிக்க அம்மன் ஆலயங்களுள், கல்லடி உப்போடை, நொச்சிமுனை பூரீ பேச்சியம்மன் ஆலயம் பிரபல்யம் வாய்ந்ததொன்றாகும். சிவமும் சக்தியும் சேர்ந்து இயங்கும் பாங்கில், பூரீ சித்தி விநாயகப் பெருமானுக்கு இடப்புறமாகப் பாலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
அன்னையின் இன்னொரு தனிச்சிறப்பு அவர் குடி கொண்டுள்ள 'ஒலைக்குடில் ஆகும். அடியார்கள் ஆலயத்தைக் கற்கோயிலாக்க எடுத்த முயற்சிகளெல்லாம் வியர்த்தமாகின. ஒலைக்கூரையின் மீது தண்ணிழல் பரப்பிக் கொண்டிருப்பது “தேத்தா” விருட்சமாகும். பெரிய நாக பாம்பொன்று இவ்விருட்சத்தில் தங்குவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் ஒவ்வொருவெள்ளிக்கிழமையும் சர்க்கரைப் பொங்கல் படைப்பு பாணக்க நிவேதனம் என்பவற்றுடன் கூடிய விசேட மதிய பூசை நடக்கிறது. வாராந்தப் பூசை கடந்த சுமார் 50 வருடங்களாகவே நடக்கிறது. அதற்கு முந்திய காலத்தில் வருடாந்தச் சடங்கு கடல் நீராட்டுடன் முடிவுற்று அன்றிரவு பூட்டப்படும் கதவு, அடுத்த வருட உற்சவ ஆரம்ப தினத்தன்றே திறக்கப்படுதல் வழக்கமாயிருக்கின்றது.
வருடாந்த உற்சவம் பிரதி வருடமும் ஆடி அமாவாசையின் பின் வரும் ஞாயிற்றுக் கிழமை இரவில் கும்பம் வைத்தலுடன் ஆரம்பிக்கும்,
வருடாந்த உற்சவ காலத்தில் நடைபெறும் மதிய பூசை, இராப்பூசையின் போது ‘தெய்வம் ஆடுதல் நிகழும், அதாவது பேச்சியம்மாள், காளியம்மாள், வைரவ சுவாமி, வீரபத்திர சுவாமி போன்ற தேவதைகள் வரப் பெற்றவர்கள்’ பூசையின் போது தெய்வமாடிப் பக்தர்களுக்குவாக்குகளைக் கொடுத்து அணுக்கிரகம் செய்வர். மூன்றாம் நாள் மதிய பூசை முடிந்தவுடன், தேவாதிகள் முன் செல்ல, பூசாரிமார், அடியார்கள் பின் தொடர, அனைவருமாக 'அக்காளிடம் செல்லுதல் நிகழ்வு நடை பெறும் அதாவது அவர்கள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, தென்புறத்தில் மஞ்சத்தொடுவாய்க் கிராமத்திலுள்ள மாரியம்மன் ஆலயம். கல்லடி வேலூரிலுள்ள காளியம்மன் ஆலயம் என்பவற்றைத் தரிசித்து வருவதே 'அக்காளிடம் செல்லுதல்' என அழைக்கப்படுவதாகும்.

Page 500
ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பலிச் சடங்கு நிகழும்.
ஏழாம் நாள் சனிக்கிழமை மதிய பூசையின் பின்பு தேவாதிகள் சாட்டைப் பலி பெறுவர்.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை கும்பச் சடங்கு எனப்படும் பொதுச் சடங்கு நடைபெறும், அன்று காலை, சிறப்பான, பக்திபூர்வமான ஒரு நிகழ்வினை நாம் காண முடியும். கிராமத்து யுவதிகளும், சுமங்கலிகளும் அதிகாலையில் ஸ்நானஞ் செய்து, பக்தி பூர்வமான அடையணிந்து, வேப்பம்பத்திரம், மஞ்சள், விபூதி போன்ற அம்மாளுக்குரிய சின்னங்கள் கொண்ட தட்டங்களைக் கரங்களில் ஏந்தியவாறு, தங்கள் அயலிலுள்ள மூன்றோ, ஐந்தோ அல்லது ஏழோ வீடுகளுக்குச் சென்று, "அம்பாளின் பெயரால் மடிப்பிச்சை இடுங்கள்” என வேண்டி, அவர்கள் இடும் நெல்லைப் பெற்று ஆலயத்துக் கொணர்ந்து கொடுப்பர்.
ஆரம்பதினத்தன்று ஸ்தாபனம்பெற்றகும்பங்கள் அன்று மாலை பிரிக்கப்பட்டு, புதிதாக மந்திர உச்சாடனங்களுடன் ஸ்தாபனம் பெறுவதாலேயே இச் சடங்கு ‘கும்பச் சடங்கு என அழைக்கப்படுகின்றது.
ஞாயிறுபிற்பகலில் நெல்லுக்குத்தும் வைபவமும் சிறப்பான ஒன்றாகும். தேவாதிகள், பூசாரிமார், அடியார்கள் ஆகியோர் கைகளில் உலக்கைகளை ஏந்தியவாறு உரலிலுள்ள நெல்லைக் குத்துவர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஒருவித நேர்த்திக் கடனாகவே இதையும் செய்வர்.
ஒன்பதாம் நாள் திங்கட் கிழமை ஆண்டு உற்சவத்தின் இறுதிநாளாகும். அன்றுமதிய பூசையின் கன்னிமார் பங்குபற்றும் பள்ளயம் நிகழும்.
அன்று மாலை சுமார் 5 மணியளவில் கும்பம் சொரிதல்' எனப்படும் சமுத்திர நீராட்டு வைபவம் நிகழும். பேச்சியம்மன், காளியம்மன், மாரியம்மன் ஆகிய முப்பெரும் தேவியரின் அருள் வேண்டித் தாபனம் செய்யப்பட்டிருந்த கும்பங்கள் மூன்றினையும் பக்தி பூர்வமாக எடுத்துச் சென்று, கடலில் சேர்ப்பித்து, அடியார்களும் கடல் நீராடுவர்.
துறையடி மாரியம்மன், மண்டுக்கொட்டைமுனை, மண்டுர்
மட்டக்களப்பில் மிகவும் பழமையும் பிரசித்தமும் உள்ளனவான திருப்படைக் கோயில்களுள் ஒன்றான தில்லை மண்டூர் முருகன் கோயிலைக் கொண்டது மண்டூர் என்னும் திருப்பதி.
466

இவ்வாலயம் வாவியின் வலது கரையில் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே சுமார் 20 மைல் தொலைவில் மண்டூரையும், குறுமண்வெளியையும், மட்டக்களப்பு வாவியின் மூலமாக இணைக்குமிடத்தில் இருக்கின்றது. அக்காலத்தில் குறுமண் வெளித்துறையிலிருந்து தமது வயல்களுக்குச் செல்வதற்காக மண்டூர்ப் பக்கம் வருவோரும், மண்டூரிலிருந்து துறையைக் கடந்து அப்பால் செல்வோரும் தமக்கு வாவியிற் செல்லும் போது எவ்வித இடையூறும் நேராவண்ணம் இவ்வாலயத்து அம்மனைப் பிரார்த்தித்து வந்தனர். அதற்காகவே இவ்வம்பாள் ஆதியில் இவ்விடத்தில் வைக்கப்பட்டது என்றும் பொதுவாகக் கூறப்படுகின்றது. இவ்வாலயத்திற்குத் தலவிருட்சமாய் அரசமரமொன்று மிகப் பழமை வாய்ந்ததாக உள்ளது. இதன் வடக்குத் தெற்குப் பக்கங்களில் மட்டக்களப்பு வாவிக்கரையோரமாக வயல்வெளிகளும், மேற்குப் புறமாய் மண்டூர்க் கிராமமும் அமைந்துள்ளன. இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை, குறுமண்வெளியிலிருந்து வாவியினூடாக மண்டூருக்கு வரும் பிரயாணிகளை வரவேற்கும் மண்டூர் மாதாவாக அருள் சொரிந்து நிற்கின்றாள். இத்துறையடிக்கு வரும் எவரும் இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னையை வணங்கிவிட்டே செல்வது வழக்கம். மண்டூர்க் கந்தசுவாமி கோயிலுக்குக் காவடி எடுப்பவர்கள் விசேடமாக விழாக்காலங்களில் இவ்வாலயத்திலிருந்தே வாய்க்கு அலகு, முதுகுக்கு முள் என்பன பக்தியுடன் ஏற்றிச் செல்வது இன்றும் நடைபெறுகின்றது.
1957ம் ஆண்டு வந்த பெருவெள்ளத்தில் இந்த மாரியம்மன் ஆலயம் முன் முகப்பு சுற்றுமதில்கள் அழிந்துபோக, படிப்படியாக ஆறுவருணத்தாரும் சேர்ந்து பணம்போட்டும் கோயில் ஆதனத்தின் வருமானங்களையும் கொண்டு அழிந்த கட்டிடங்களும், பழுதடைந்த கட்டிடங்களும் திருத்தப்பட்டன. இதன் பின் 1978ம் ஆண்டு வந்த சூறாவளியால் சில சேதங்கள் ஏற்பட்டு அதையும் திருத்தி 04-07-79ந் திகதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் வருடாந்த உற்சவம் ஆனி மாதப் பூரணையின் முதல் 7 நாட்களும் பண்டுபோல் இன்றும் தவறாது நடக்கிறது. இக்கோயிலில் தெய்வமாடுதலும் கட்டுச் சொல்லுதல் போன்றவை இருப்பினும், உயிர்ப்பலி கொடுத்தல் ஒரு போதும் இருந்ததில்லை. இறுதி நாள் சடங்கு பள்ளயம் எனப்படும். பள்ளயத்திற்கு முதல்,
மயூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 501
அம்மனாகப் பிரதம பூசாரி கோலம் செய்த பந்தலின் கீழ் மண்டுக் கொட்டைமுனை மண்டூர் பாலமுனை, தம்பலவத்தை ஆகிய ஊர்களுக்கு வலம் வருதலுண்டு, அப்போது சேகரிக்கும் அரிசி, நெல், பழவகைகள் என்பனவெல்லாம் பள்ளயத்திற்குப் பயன்படுத்தப்படும்.
பூாநி திரெளபதியம்மன், பழுகாமம்
இவ்வாலயத்தை மக்கள் பள்ளயக்கோயில் எனவே அழைப்பர். பள்ளயம் என்பது நோர்ப்பு என வழங்கும் உணவையே குறிக்கும்.
பூசகர் ஆதி தொடக்கம் நம்பி என அழைக்கப்பட்டு வருகிறார். இவரைக் கிராமத்து மக்கள் மிக்க மதிப்புடன் கெளரவமாக நடத்துவர்.
மார்கழி மாதம் முழுவதும், (தமிழ்க்கணக்கு) பாண்டவர் தவத்துக்குப் போவதாகவும், அம்மாதத்தில் காவற்காரரே ஊரைப்பாதுகாப்பார் எனவும் மக்கள் நம்பி வாழ்கின்றனர். இந்தச் சடங்கின் போது தவத்துக்குப் போனவர்கள் தவங்கலைந்து வாருங்கோ” எனக் கூவி அழைப்பதாலும் மக்கள் பரிபூரணமாக நம்புகின்றனர்.
பிள்ளைச் செல்வமில்லாதோர், இங்குவந்து முறைப்படி அம்மையை வேண்டிப் பிள்ளைப்பாக்கியம் பெறுவர்.
இவ்வாலயத்துடன் கண்ணகியம்மன் ஆலயமும் அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் வைகாசிப் பெளர்ணமியில் கண்ணகியம்மன் திருக்குளிர்த்தி விழா சாதிமதபேதமின்றிக் கிராமமக்கள் யாவராலும் சிறப்பாக நடைபெறும். ܚ
திரெளபதை அம்மன் ஆலயத்தின் வடதிசையில் கண்ணகி ஆலயம் அமைந்துள்ளது.கிராமத்தில் ஏதாவது கொள்ளைநோய், துன்பங்கள் வந்தால் மக்கள் ஒன்றுகூடிக் கண்ணகி அம்மனுக்கு விஷேட ஆராதனைகள் செய்து, தேங்காய் அடித்தல், கொம்பு முறித்தல் ஆகிய வைபவங்களைச் செய்வர். தினமும் வசந்தன் கூத்தும் நடைபெறும்.
இவ்விரு தெய்வங்களும் பழுகாமமக்களின் இருகண்போலப் போற்றப்படுவதோடு, அவர்களின் தயவால் நோய் நொடியின்றிச் சீர்சிறப்பாகவும் வாழ்கின்றனர்.
மாதாந்தச் சடங்குகள் சித்திரை மாதப் பிறப்பன்று சித்திரைச் சடங்கும், வைகாசிப் பிறப்பில் வைகாசிச் சடங்கும், கார்த்திகைப் பிறப்பில் கார்த்திகைச் சடங்கும், மார்கழிப்பிறப்பில் மார்கழிச் சடங்கும், தைப்பிறப்பில் தைச்சடங்கும் விசேட பூசைகளாக செய்து வந்தனர்.
மயூரமங்கலம்

இச்சடங்குகளில் பாண்டவர் கொலுசடங்கில் கலந்து சிறப்பிப்பதோடு தெய்வமேறிய கட்டாடிமாரும் ஆடிச்சிறப்பிப்பர்.
விசேட பூசைகள் - சித்திரா பெளர்ணமி, வைகாசி பெளர்ணமி ஆனி உத்தரம், ஆடிப் பெளர்ணமி, ஆடி அமாவாசை, ஆவணி ஒணம், நவராத்திரி, ஐப்பசி வெள்ளி, கந்தசஷ்டி, கார்த்திகைத் தீபம், விநாயக ஷ்டி, திருவெம்பாவை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம் ஆகிய விசேட காலங்களில் சிறப்பான பூசைகள் நடைபெற்று வந்தன.
ஆண்டு விழா - ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கதிர்காமத்தீர்த்தத்தை அடுத்துவரும் வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும்.
கண்ணகி அம்மன், துறை நீலாவணை
மட்டக்களப்பில் துறை நீலாவணை கிராமமும் ஒன்றாகும். இவ்வூர் மட்டக்களப்பு நகரிலிருந்து இருபத்தி நான்கு மைல் தொலைவுக்கு அப்பால் தென் பகுதியிலுள்ளது. இக்கிராமம், மட்டக்களப்பு வாவியினாலும், குளங்களினாலும் வயல் நிலங்களினாலும் சூழப்பெற்றிருக்கின்றது.
கண்ணகி அம்மன் கோயில் அமைந்துள்ள இடமோ கிழக்கும் தெற்கும் வயல் நிலங்களாலும்,மேற்கும் வடக்கும் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பெற்று கிராமத்தின் வட அந்தத்தில் சுமார் கால் மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. கோயிலைச் சுற்றிச் சிறு சிறு குன்றுகளும் அதன் மேல் விருட்சங்களும் வளர்ந்து காணப்படுகின்றன. இக்கிராமத்தில் பாறைகள் காணக்கூடியதாக இருப்பது இவ்விடத்திலேதான். இதனால் இங்கு எழுந்தருளி இருக்கும் அம்மனுக்குக் கல்லடி அம்மன், கல்லடி நாச்சி என்று வேறு பெயர்கள் சூட்டியும் வழிபடுகின்றனர்.
இக்கோயில் அமைந்திருக்கும் இவ்விடம் சுமார் ஆயிரம் வருடங்களுக்குமுன் காடடர்ந்த பகுதியாக இருந்தது.சிலமுனிவர்கள் இவ்விடத்தைத்தேர்ந்தெடுத்து ஆச்சிரமம் அமைத்து உறைவிடமாக்கிக் கொண்டார்கள். இவர்கள் மந்திர, தந்திர, சித்து, வித்தைகளில் மேம்பட்டிருந்ததனால் மக்கள் இப்பகுதிக்குச் செல்லப்பயப்பட்டார்கள். இம்முனிவர்கள் சக்தி வழிபாட்டைக் கடைப்பிடித்திருந்தார்கள். சில காலத்தின் பின் இம்முனிவர்கள் ஏதோ காரணத்தை யொட்டி வேறிடத்துக்குச் சென்று விட்டார்கள். இதன் பின்னர் மக்கள் இப்பகுதியினுள் சென்று ஊடாடித்திரிந்தார்கள்.
467

Page 502
இவ்வாறு சனநடமாட்டம் ஒரளவு ஏற்பட்டு வருங்காலத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு சென்ற போது ஓர் ஆச்சரியத்தைக் கண்டார். அங்கு மூன்று சிலைகளையும், முக்கோண வடிவமுடையதும், அதிக சித்திர வேலைப்பாடுடையதுமான இரு சோடி சிலம்புகளையும் தண்டைச் சிலம்பு இருசோடிகளையும் கண்ட அவர் பயத்தோடு கிராமத்துச் சனங்களுக்குத் தான் கண்டதை எடுத்துக் கூறினார். கிராமத்துச் சனங்களும் புதுமையினைக் காண விரைந்து வந்து சிலம்புகளையும் சிலைகளையும் கண்டார்கள். ஒரு புறம் பயமும், மறுபுறம் பக்தியும் கொண்டு பணிந்தார்கள். இச்சிலைகள் உருவ அமைப்பில் கண்ணகியின் அம்சங்களைக் கொண்டிருந்தபடியால் “கண்ணகி அம்மன்” என்று நாமஞ் சூட்டி வழிபாடாற்றி வந்தார்கள். பின் இக்கிராம மக்கள் இக்குன்றையும் சிலைகளையும் நடுவணாகக் கொண்டு ஒரு கோயில் அமைத்தார்கள். இக்கோயில் வாவியை நோக்கி வடபக்க முகப்பாகக் கட்டப்பட்டது.
அக்காலத்தில் குறுமண்வெளி என்னும் இடத்திலும் பல முனிவர்கள் வசித்தார்கள். அவர்களில் ஒருவரான “கெங்காதசி ஐயர்” என்பவரை அழைத்துவந்து அந்த மூன்று சிலைகளையும் காண்பித்தார்கள். அவர் சிலை வடிவிலமைந்த கண்ணகி அம்மனுக்குப் பூசைசெய்யும் விதிகளைக் கொண்ட பத்ததி ஒன்று வழங்கினார். ஆனால் இந்த பத்ததி முறைப்படி பூஜை செய்யுங்கால் வருடாவருடம் பூசை செய்யும் பூசகர் அப்பூசனைக்குப் பின்னர் இறந்து விட நேரிட்டது. இதைக்கண்டு மக்கள் அச்சங் கொண்டார்கள், வருடாவருடம் வழிபாடு நடாத்துவதற்காக இருந்த பூசகராகிய “தன்மார்” என்பவருக்கு அம்மனுடைய தரிசனமும் கட்டளையும் கிடைத்தன. “இந்த மூன்று சிலைகளில் மிக்க ஒளியுடையதும் அகோரம் பொருந்தியதுமான சிலையைக் கோயிலுக்கு எதிரே மட்டக்களப்பு வாவியில் நான்கு உபவாவிகள் ஒன்று சேரும் இடத்தில் அமிழ்த்திவிட வேண்டும்” என்பதுவே இக்கட்டளையாகும். அதன்படி கிராம மக்களுடன் சேர்ந்து பூசகர் செய்து முடித்தார். இதன் பின்னர் பூசகர் வருடம் ஒரு முறை இறக்கும் வழக்கமும் நின்று விட்டது. அத்தோடு அம்மனால் ஆஞ்ஞாபிக்கப்பட்டபடி பூசைவேளையில் தீபம் வாவியை நோக்கியும் காட்டப்படும் வழக்கம் இன்றும் இருந்து கொண்டு வருகின்றது. தெய்வங்களுக்கு ஆடும் சில
468

பக்தர்கள் சிலவேளை வாவியின் அம்மன் அமிழ்த்தப்பட்ட இடத்தை நோக்கிக் குதித்துச் செல்வதும் உண்டு. மற்றைய சிலைகளில் ஒரு சிலை ஊர்வலத்தின் போது தேரில் வைத்துக் கொண்டு செல்லப்படுவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மற்றையது ஆலய கர்ப்பக்கிரகத்தில் வைத்து வழிபடப்படுகிறது.
இக்கண்ணகி அம்மன் ஆலயத்தில் உயர்சாதிப் பல நாகங்கள் வாழ்கின்றன. கோயில் பூட்டப்பட்டிருக்கும் காலத்தில் இவைகளே கோயிலைப் பாதுக்காக்கும் காவலர்களாக இருக்கின்றன. வழிபாடு செய்வோருக்கு ஒரு தீங்கும் செய்யாது, தீய எண்ணத்துடன் செல்பவர்களைக் கோபத்தைக்காட்டி விரட்டித் துன்புறுத்துமேதவிர ஒருவரையும் கடிப்பதேயில்லை, முன்னிருந்த ஒரு நாகம் வெள்ளிக்கிழமைகளில் மட்டக்களப்பு வாவியில் நீந்தி மண்டூர்க் கோயிலுக்குச் சென்று வந்ததாகவும் இக்கிராம மக்கள் கூறுவர்.
விழா ஒரு வருடத்திற்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் பூர்வபட்சத்தில் நடைபெறும். வண்ணக்கர், கோயில் நிருவாகிகள், ஊர் மக்கள் எல்லோரும் ஒன்றுகூடி கோயில் விழா தொடங்கும் நாளையும் பூஜை முறைகளைப்பற்றியும் கலந்துரையாடித் தீர்மானிப்பார். பழங்காலந் தொட்டு செவ்வாய்க்கிழமை இரவு ஆரம்பமாகி அடுத்த திங்கட்கிழமை பின் இரவுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை இவ்விழா முடிவடையும். வெள்ளிக்கிழமை இரவு அம்மன் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்படும் இதனைப்"பல்லக்கு ஊர் சுற்று” என அழைப்பர். ஞாயிறு பிற்பகல் “கல்யாணக்கால் வெட்டு” நடைபெறும். இத்தினத்திலிருந்தேதான் கோயிலின் சிறப்பான பூசைகளும் காவடி முதலியவைகளும், பக்தர்கள் நெருக்கமும் அதிகமாகும். பூசகருக்கு அம்மன் கனவில் அறிவிக்கும் இடத்திலுள்ள பூவரசங்கிளையினையே"காலாக வெட்டி எடுப்பர் பூசகர் உண்ணாவிரதம் இருந்தே இக்கல்யாணக்கால் வெட்டினை நடாத்துவர். இக்காலை பூசகர் வெட்டியதும் பூசகர் அறிவு மயங்கி விழுவார். அவ்வேளை பூசைவிதிமுறை தெரிந்த ஒருவரால், இவர் சுயநிலைக்கு மீட்கப்படுவார். வெட்டப்பட்ட கம்பு (கல்யாணக்கால்) பூசை விதிமுறைக்கமையக் கிரியைக்கு உட்படுத்தப்பட்டு பூசகரும், அவரது சகாக்களும், தோளில் தாங்கிய வண்ணம் கோயிலுக்குக் கொண்டு செல்வர். இக்கல்யாணக்காலை அங்கு கொண்டு சென்றதும் கல்யாண மண்டபத்தில் அது வைக்கப்பட்டு அன்றிரவு கோவலர் கண்ணகி கல்யாண வைபவமும் பூசையும் கோயிலில் விசேடமாக நடைபெறும்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 503
கல்யாணக்கால் வெட்டச் செல்லும் போது உருவேற்றப்பட்ட சிலம்புப் பெட்டிகளுடன், அம்மன் பல்லக்கும் புடைசூழ மக்கள் பெருவெள்ளம் திரண்டு செல்லும். இன்றைய தினத்தில் இச்சிலம்புப் பெட்டியே முக்கிய இடத்தை வகிக்கும். உருவேற்றப்பட்ட சிலம்புப்பெட்டி, வெள்ளிக்கிழமை ஊர்வலத்தின் போது காப்புக்கட்டி ஒரு பொழுது உண்டு. அன்றைய தினத்தில் உபவாசம் கடைப்பிடிக்கும் பக்தரின் தலையிலேயே வைக்கப்படும். தலையில் வைக்கப்பட்டது முதல் இப்பக்தர் அடிக்கடி சுய நினைவு இழப்பார். பெட்டியிலுள்ள சிலம்பும் வெளிவர முயலும். இதற்காக இவைகளைக் கவனிப்பதற்குக் கோயில் பூசை விதிமுறை தெரிந்த குறைந்தது மூவராவது பெட்டியைப் பிடித்தபடி செல்வர். இக்காட்சி காண்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளக்கூடியதாகவும், பக்திப் பரவசத்தை ஊட்டக்கூடியதாகவும் இருக்கும்.
திங்கட்கிழமை பகல் பூசையை “நெற்குத்துப் பூசை” என்றும் “வட்டுக்குற்றுப் பூசை” என்றும் அழைப்பர். இப்பூசை வேளையில் மலைக்குன்றிலே குளியாக்கப்பட்ட நெற்குற்றும் இடத்தில் பூசை நடைபெறும் பூசை முடிந்த பின்னர் பூசகர் உலக்கையில் மூன்று தரம் குற்றிய பின்னர் பிள்ளைப்பேறற்ற பெண்கள் இவரிடமிருந்து உலக்கையைப் பெற்று நெற்குற்றுவர். இதனை “உலக்கை பறித்தல்” என அழைப்பர். இவ்வுலக்கைபறித்தல் பெரும் கண்கொள்ளாப் புதினமாகவே காட்சி தரும். இக்கிராமத்தில் மட்டுமன்றி வேறிடங்களிலிருந்தும் பிள்ளைப் பேறற்ற பெண்கள் இச்செயலால் அம்மனின் திருவருள் கைகூடப்பெற்று, மக்கட்பேறு பெற்று வாழுகின்றனர்.
இவ்வாறு குற்றப்பட்ட அரிசியே குளிர்த்திப் பொங்கலுக்காகக் கோயில் நிருவாகிகளால் உபயோகத்திற்கு எடுக்கப்படும். செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மன் குளிர்த்தியும், நாகங்களின் உணவாகிய “பாணக்கப் பூசையும்” நடைபெறும் சிறுவர்கள் வசந்தன் கூத்து ஆடிக் கோலாட்டம் அடிப்பார்கள். பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரள் திரளாக வந்து சேர்வதால் இடநெருக்கடி ஏற்பட்டுவிடும். இடநெருக்கடி இல்லாத வயல்வெளிகளில் ஒரே பொங்கல் பானையாகவே காணப்படும். பின் அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் பூசகர் அம்மன் வேடம் தாங்கி ஊர் சுற்றுக்காகக் கொண்டு செல்லப்படும் அம்மனைத் தாங்கிய படி முன் மண்டபத்துக்கு வர, அதற்கென உள்ளவர்கள் குளுர்த்தி ஏடு பாடுவார்கள். பூசகர் வசந்தன் ஆட்டுவிழாவில் கலந்துகொண்ட பின்னரே சுய நிலைக்கு வருவார்.
மயூரமங்கலம்

இந்த ஏழு நாட்களும் இக்கிராம மக்கள் மச்சம், மாமிசம்புசியாது புத்தாடை புனைந்து வீதிகள் பெருக்கி குதுகலத்துடன் இருப்பார்கள். இக்கிராம மக்களுக்குப் பரிபூரண விழா இந்தக் கோயில் திருவிழா ஒன்றே தான். தைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு, தீபாவளி முதலிய மங்கள நாட்களுக்குக்கூடப் புத்தாடை புனையாதவர்கள். இக்காலத்தில் புனைந்து கொள்வார்கள். இவ்வாலயத்தில் இந்த ஏழு தினங்களிலும் வழக்குரை படிப்பார்கள்.
விழா முடிவுற்றதும் நடைபெறும் ஒழுங்குகளுக்கு வழக்கம் போல “கதவடைப்பு” என்று பெயர். இந்தக் கதவடைப்பின்போது மூலஸ்தானத்திலுள்ள அம்மன் சிலையினை எடுத்து, அதே அறையிலுள்ள மச்சுகளின் மேல் அதற்கெனவுள்ள ஒரு சிறிய துவாரம் வழியாகப் பூசகர் எடுத்து வைப்பார். மச்சு நிறைய நாகங்கள் படமெடுத்துக்கொண்டிருக்கும். இருந்தும், அவர் அச்சமின்றி, அம்மன் சிலையைக் கையால் வைத்துவிட்டு, வெளியில் வந்து பூசை மந்திரங்களைச் சொல்லி முறைப்படி கதவடைப்பு விழாவினை நிறைவேற்றுவார்.
அதற்குப் பின்னர் ஒவ்வொரு வெள்ளியும் மத்தியானங்களில் கர்ப்பக்கிருக அறைக்கதவுக்கு முன்னால் படையல் படைத்து, பூசனைகள் ஆற்றப்படும். அதற்குக் கிராம மக்கள் நிறையப்பேர் கூடுவார்கள். இவ்வழக்கம் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பக்தர்கள் உள்ளத்தில் நிறைந்த பக்தியையும் எழுச்சியையும் ஊட்டிவளர்த்துக் கொண்டிருக்கும் துறை நீலாவணைக் கண்ணகி அம்மன் கோயில் மட்டக்களப்பு வாவியின் தென்கோடியில் ஒரு சிகரமாக இன்றும் விளங்குகின்றது.
பூரீகடலாட்சியம்மன், நாவலடி
நாவலடி என்னும் கிராமத்தின் பால் நிலவொளிரும் பரந்த வெண்மணற் பரப்பில், பக்தகோடிகளை அட்டதிக்கிலுமிருந்து தனது அருட்கடாட்சத்தால் கவர்ந்திழுக்கும் அன்னை பூரீ கடலாட்சியம்மன் ஆலயம் புகழுடன் அமைந் திலங்குகின்றது.
1978ம் ஆண்டு கார்த்திகை 23ல் கிழக்கிலங்கையைக் கதிகலக்கிய பெரும்புயலும், கடற்பெருக்குமாகிய இயற்கையின் சீற்றம் இவ்வாலயத்தின் மூலஸ்தானம் தவிர்ந்த எல்லா மண்டபங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியது. ஏதோ இறைவியின் இன்னருளாலும், ஊரவர்களின்
469

Page 504
மனமுவந்த நன்கொடையாலும், அரசாங்கத்தின் ஆலயப் புனருத்தாரண நிதியொதுக்கீட்டினாலும், பரிபாலன சபையின் அயரா உழைப்பினாலும் ஆலயம் முன்பிருந்ததைவிடப் பலத்துடனும், புதுப்பொலிவுடனும் அமைத்து முடிக்கப்பட்டது.
இவ்வாலயத்தின் சடங்கு எனப்படும் உற்சவம் ஆனிப்பூரணைக்கு 6) Աք நாட்களுக்குமுன் ஆரம்பிக்கப்பட்டுப் பூரணை அன்று ஆலயத்திற்கு அண்மையிலுள்ள சாகரக்கரையில் கும்பஞ் சொரிதலுடன் முடிவுறும்.
உற்சவ ஏழுநாட்களும் தெய்வம் உடலேறப்பெற்ற பக்தர்கள் உருவேறி ஆடுவார்கள். பல ஊர்களிலும் இருந்து நோய் நொடிகளுடனும், மனச் சஞ்சலத்துடனும் வந்த பக்தர்களுக்கு மன நிறைவளிக்கும் அம்பாளின் அருள் வாக்குகள் தெய்வங்கள் மூவம் கிடைக்கும். இதை விடப் பூசாரியார் என்பவர் அம்பாளிடம் கேட்டு, குறி சொல்வதை இவ்வாலயத்தில் வியப் புறக் காணலாம். தெய்வமாடுவோர் சாட்டையடிகள் பெற்றும், நெற்றியில் வாளால் உதிரம் வழியும்படி கொத்தியும் முப்பது அடிக்கு மேற்பட்ட கம்பத்தில் ஏறிச் சூலத்தில் வயிற்றை வைத்து அந்தரத்தில் நின்றும் அற்புதஞ் செய்துகாட்டுவார்கள். 'அரோகரா’ என்ற பக்தர்களின் குரலை எங்கும் கேட்கலாம். மந்திரம் கற்றவர்களின் கட்டுக்களும், வெட்டுக்களும் பக்தர்களைப் பிரமிப்படையச் செய்வதை இங்கு காணமுடியும்.
இத்தகைய கடலாட்சி அம்மனுக்கு ஆதியில் ஒரு காணிக்கை உண்டியல் மாத்திரம் பிரதிநிதியாக இருந்தது. கடலுக்குத் தொழிலுக்குச் செல்வோர் யாவரும் தமக்கு எத்தகைய தீங்கும் நேராவண்ணம் கடல் அம்மனை வேண்டி இக்காணிக்கை உண்டியலை வைத்து அதனுள் பணம் போட்டு வந்தார்கள் என்பது ஐதீகம். இதனால் அந்த இடம் கடலாட்சி அம்மனுக்குரிய இடமாகப் பிரதிபலித்தது. பின்னர் காலஞ்செல்லக் கோயில் ஒன்று கட்ட வேண்டி ஏற்பட்டது. கடலாட்சி அம்மனால் கடற்தொழிலுக்குக் செல்வாருக்கு எவ்விதத்தீங்கும் வராமல் காப்பாற்றப்படுவதோடு அப்பகுதிக் கடலுட் செல்லும் கப்பல் முதலிய சாதனங்களும் எவ்வித இடையூறுமின்றி செல்கின்றன என்பது அறிந்தோர் கூற்று.
கண்ணகை அம்மன், ஆரையம்பதி
மட்டக்களப்பின் தென்பகுதியிலுள்ள ஆரையம் பதியில் மூன்றாங்குறிச்சியில் பூரீகந்தசுவாமி கோயிலின்

தெற்கு வீதியில் வடக்கு நோக்கியுள்ள இவ்வாலய மானது, பறங்கியர் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குப் புலம் பெயர்ந்த ஒரு அன்பரின் குடும்பத்தினரால் கொண்டுவரப்பட்ட கண்ணகி சிலையை கிரானிற்கும் புதுக் குடியிருப்புக்குமிடையே சிறாம்பியடித்துபூசை செய்து வந்தமையால் உருவானது. அவ்வன்பரை கண்டியரசன் பறங்கியரின் ஒற்றரென நினைத்து மட்டக்களப்பு வாவியில் அமிழ்த்திக்கொன்றுவிட்டு கண்ணகி சிலைக்கு பூசைகளை நடத்துமாறு கட்டளையிட்டான். சிறாம்பியடியிலிருந்த சிலையை மண்முனைக்குக் கொண்டு வந்து வழிபட்டனர். அகோரமானதான இச்சிலைக்குச் சடங்கு செய்கையில் குறுக்காக அல்லது எதிராகச் செல்வோருக்கு துன்பங்கள் ஏற்பட்டும் ஆண்களுக்கு பீடையும் மரணங்களும் ஏற்பட்டும் வந்ததால் ஊரவர் ରଥFlibl୩ நாச்சியின் வழித்தோன்றல்களிடம் சிலையைக்கையளித்து, புதிய சிலையைச் செய்து தானங்குடாவில் கோயில் கட்டி வழிபட்டனர்.
ஆரையம்பதியில் சிறுகோயில் கட்டி மண்முனை கண்ணகியம்மன் கோயிலிலிருந்து ஒரு பேழையையும் அம்மனயுைம் கொண்டு வந்து வைகாசிப் பூரணையை குளிர்த்தி தினமாக கொண்டு 7 நாட்கள் வழிபட்டு வந்தனர். பூரீ கந்தசுவாமி கோவிலின் கணக்கர், மண் முனையில் செம்பிநாச்சியின் வழித்தோன்றலைச் சந்தித்து கண்ணகி சிலையை ஆரையம்பதியில் வைத்து வழிபட எனக்கேட்டபோது அவர் உடன்பட்டார், எனினும் அவருடனிருந்தவருக்குப் பிடிக்காதலால் சிலையை தேங்காய் குவியலுக்குள் ஒளித்துவிட, கிளிப்பிள்ளை அதனைக் கண்டுகூறி சிலையைப் பணம் கொடுத்துப் பெற்றுக்கொண்டார். ஆரையம்பதி கண்ணகை அம்மனாலயத்தின் ஆரம்ப வரலாறு இதுவே.
உலோகப்பீடத்தில் அம்மனின் சிலை பொருத்தப்பட்டுள்ளது. உண்மையான அம்மன் சிலை பேழையினுள் உள்ளதாகவும் அதைத்திறக்க முற்பட்ட அன்பருக்கு கண் பார்வை போனதாகவும் அறிய முடிகிறது. வைகாசிப் பூரணை தினத்தைக் குளிர்த்தியாகக் கொண்டு அதற்குமுன் ஏழு நாட்களுக்குச் சடங்கு (அம்மன் விழா) நடைபெறும். முதல் நாள் விநாயகரின் அனுமதியுடன் கதவு திறக்கப்படும். அன்று பிற்பகல் கந்தசுவாமி கோவிலிருந்து கண்ணகி
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 505
அம்மனை எழுந்தருளிவிப்பர். ஆலயத்தில் கண்ணகி அம்மனுக்குப் பாத தீர்த்தத்தின் பாவனையைச் செய்வர். அர்த்த மண்டபத்தில் காளி, வீரபத்திரன், மாரி, வைரவருக்கும் வெளி வீதியில் நாமர், வீரபத்திரர், காளிக்கும் அரசமரத்தடியில் நாகதேவருக்கும் மடைகள் பரப்பி பூசைகள் நடைபெறுகின்றன.
5ம் நாள் கண்ணகி - கோவலன் திருமணப் பாவனையாக கல்யாணச்சடங்கு நடைபெறும். பூவரசங்கம்பொன்றை வெள்ளைச்சீலையால் மூடி (கல்யாணக்கால்) மகாமண்டபத்தில் நட்டு கண்ணகி போல் உருவம் சமைத்து சடங்கு ஆரவாரமாக விமரிசையாக நடக்கும். மறுநாள் கண்ணகி கோவலனுக்குக் கொடுத்த இறுதிச்சாப்பாட்டின் பாவனையாக கப்பல் சடங்கு நடைபெறும். அடுத்து திருக்குளிர்த்தி நடைபெறும்.
1910இல் இவ்வாலயம் இயற்கையழிவுகளால் பாதிப்புற்று 1912இல் மீண்டும் கட்டப்பெற்றது.
மாரியம்மன், ஆரையம்பதி
இது ஆரையம்பதி 2ம் குறிச்சி காத்தான்குடி தெற்கு எல்லை வீதியில் உள்ள இக்கோவில் 1890-1900 காலப்பகுதியில் கட்டப்பட்டது. கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்டும் காத்தான், வீரபத்திரன், வைரவன் ஆகியோரைப் பரிவார மூர்த்திகளாகக் கொண்டும் காணப்படுகிறது. வருடாந்த உற்சவமாக 7 நாட்கள் சடங்கு நடைபெறுவதுடன் ஏனைய காலத்தில் கர்ப்பக்கிரகம் பூட்டப்பட்டுவிடும். ஆனிமாதப் பூரனை தினத்தைக் குளிர்த்தியாகக் கொண்டு சடங்கு நடைபெறும். பூசை நேரங்களில் ஆடவர் உருக்கொண்டு அம்மன் பெயர்களில் ஆடுவார்கள். தேர்ச்சடங்கு, கப்பற்சடங்கு, சாயரட்டைச்சடங்கு, தவநிலைச்சடங்கு (உயர மரப்பந்தலில் ஏறியிருந்து அம்மன் சிவனை நோக்கிப் பூசை செய்தல்) என்னும் விசேட விழாக்களும் இடம்பெறும். இறுதிநாள் இரவு குளிர்த்தியின் போது குளிர்த்திப்பாட்டுக்கள் படிப்பர்.
மாரியம்மன், வம்மிக்கேணி ஆரையம்பதி
ஆரையம்பதி 2ம் குறிச்சியில் சலவைத் தொழிலாளர் தெருவில் வம்மிக்கேணியருகிலுள்ள இக்கோயில் 1939ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ஓர் இரவு மாரியம்மன் உலாவந்ததைத் தொடந்தே வழிபாடு
மயூர மங்கலம்

ஆரம்பித்தது. பின் செங்கற்களால் கட்டப்பட்டு கர்ப்பக்கிரகம், மகாமண்டபங்களைக் கொண்டிருந்தது. ஆனிப் பூரணையைக் குளிர்த்தியாகக் கொண்டு 7 நாட்சடங்கு நடைபெறுகிறது. பரிவாரதெய்வங்களாக பேச்சி, காளி, வீரபத்திரர், பெரிய தம்பிரான் ஆகியோர் உள்ளனர். சடங்கு நேரங்களில் ஆடவர்கள் உருக்கொண்டாடுவர். 5ம் நாள் இரவு தவநிலை நடைபெற்று மாரியம்மன் ஊர்வலம் வருவார். 7ம் நாள் திருக்குளிர்த்தி நடைபெறும். அடுத்த நாள் கும்பவிசர்ஜனம் இடம்பெறும். தலவிருட்சம் வம்மி (கடம்பு) ஆகும்.
பத்திரகாளிஅம்மன், ஆரையம்பதி
இது வம்மிக்கேணியின் தென் அந்தத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆரம்பத்தில் ஆனிமாத அபரபட்ச திரயோதசியில் காளி தேவிக்கு ஒரு சடங்கு நடத்தப்பட்டு வந்தது. இது இன்றும் வருடந்தோறும் நடத்தப்படுகிறது. கும்பம் வைத்து நிவேதித்து, பறையடித்து, பலிகொடுத்துச் சடங்கு செய்வர், தற்போது பலியிடல் நிறுத்தப்பட்டுத் தீப்பாய்தல் நடைபெறுகிறது. கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்பவற்றுடன் வீரபத்திரர், பேச்சி, மாரி, வைரவரைப்பரிவார மூர்த்திகளாகக் கொண்டு கோவில் கட்டப்பெற்றுள்ளது. ஆடிப்பூரணையைத் தீப்பாயும் நாளாக வைத்து முன் 5 நாட்களிலும் சடங்கு நடக்கிறது.
வடபத்திரகாளிஅம்மன், ஆரையம்பதி
செங்குத்தா வீதியிலுள்ள இவ்வாலயம் பொற்கொல்லர்களால் கட்டப்பட்டது. இக்கோவிலிருக்கும் இடத்தில் முன்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். அவ்வாறு ஒரு நாள் ஒருவர் காளி பாத்திரம் ஏற்று நடிக்கையில் தெய்வநிலைக்குயர்ந்து வாக்குக்கொடுத்ததைத் தொடர்ந்து 1946இல் கோவில் பந்தலால் அமைத்து வழிபட்டனர். 1956 முதல் வருடாந்த உற்சவமாக சடங்கு செய்யலானார்கள்.1979இல் கோவில் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆனிமாத பூர்வபக்க நவமியைத் தீ மிதிக்கும் நாளாகக் கொண்டு முன் 5 நாட்களும் சடங்கு நடைபெறுகிறது. 3ம் நாள் ஊர்வலமும் 4ம் நாள் நீராட்டு விழாவும் அன்றிரவு அம்மனுக்கு மது கொடுத்தலும் இடம் பெறுகின்றது. அடுத்த நாட்காலை தீ மிதிப்பு நடைபெற்று அடுத்த நாள் கும்பம் சொரிதல் நடைபெறும் தலவிருட்சம் ஆலமரமாகும்.

Page 506
பத்திரகாளிஅம்மன், செல்வா நகர் வேடர்குடியிருப்பு, ஆரையம்பதி
இரண்டாம் குறிச்சி செல்வா நகருக்குக் கிழக்கே பாலமுனைக்கு மேற்கே வேடரிருந்த இடத்தில் அமைந்துள்ளது. பற்றைக் காட்டிடையே குடியேறுகையில் அம்மனின் முகக்களையொன்று கண்டெடுக்கப்பட்டது. கிணறு கட்டுவதற்காகத் தோண்டும் போது செங்கற்களைக் கண்டனர். இது வேடுவர் வணங்கியவையாகும். மக்கள் ஆரம்பத்தில் பந்தல் கட்டி ஆடிப்பூரணையை இறுதி நாளாகக் கொண்டு 5 நாட்சடங்கு செய்து வந்தார்கள். ஊராரின் உதவியுடனும் அரசுப்பணத்துடனும் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபங்களைக் கொண்டு சிறந்த கோவிலைக் கட்டினர். காளியின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 01. 09. 2000 அன்று மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது.
பேச்சியம்மன், ஆரையம்பதி
செங்குந்தர் வீதிக்குத்தெற்கே எள்ளுச்சேனை என்னுமிடத்திலுள்ள இக்கோயில் ஒரு அன்பர் வழிபட்டுப்பின் பொருட்களைப்புதைத்து விட, பலவருடங்களின் பின் வேறொருவர் அகழ அப்பொருட்கள் தென்பட, அதனைப்பிள்ளையார் கோயிலில் ஒப்படைத்திட்டனர். ஒரு அன்பரின் குடும்பத்தினர் பிள்ளையார் கோயிலில் தங்கியிருக்கையில் அரசமரத்தின் கீழ் கண்ணன் குழல் ஊதுகிற காட்சியைக் கண்டு தெரிவிக்க அவ்விடத்தில் 1944 முதல் சடங்கு செய்ய ஆரம்பித்தனர். முதல் வருடத்திலே பந்தல் எரிந்தது. மீண்டும் பந்தலமைத்து கும்பஸ்தானம் செய்தனர். கும்பம் தானாகவே மேடை ஏறியதெனச் சொல்கின்றனர். 5வது சிறுமி உருவேறிக்கூறிய செய்திகளை வைத்து கர்ப்பக்கிரகம், அர்த்த மகா மண்டபங்களைக் கொண்ட கோயில் கட்டப்பட்டது. ஆடிப்பூரணையை அடுத்த திங்களில் கதவு திறந்து 5 நாட்சடங்கு நடைபெற்று 5ம் நாள் வெள்ளி தீப்பாயும் நிகழ்வு இடம்பெறும். அன்றிரவு அம்பாளுக்கு நிவேதித்து வழிபடுவதைப்பள்ளயம் என்பர். பரிவாரமூர்த்திகளாக ராமர்,காளி, வைரவர், மாரி ஆகிய தெய்வங்களுண்டு. தலவிருட்சம் அரசு.

பூரீபத்திரகாளிஅம்பாள், தாளையடித்தெரு, முதலைக் குடா
மூலமூர்த்தி அம்பாள் விசேட நாட்களில் விசேட பூசை நடைபெறும். ஆவணி மாதத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
காளியம்பாள், அருள் நேசபுரம், குருக்கள் மடம்
அருள் நேசபுரக் கிராமக் குடியேற்றத் திட்டத்தினரால் அம்மன் வழிபாட்டுக்காகத் தாபிக்கப்பட்ட கோயில் இது. மூலமூர்த்தி காளியம்பாள். பரிவார மூர்த்தி வைரவர். புரட்டாதி மாதத்தில் மூன்று நாட்களுக்குத் திருவிழா நடைபெற்றுத் தீர்த் தோற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.
பூரீசிவமுத்து மாரியம்மன், பழுகாமம், பெரிய போரதிவு மூலமூர்த்தி மாரியம்மன், பேச்சியம்மன், பிள்ளையார், நாகதம்பிரான், முருகன், வைரவர் ஆகிய மூர்த்திகளும் இங்கு உளர். வெள்ளிக்கிழமைகளில் விசேட பூசை உண்டு. ஆனி உத்தரம், ஆனிப்பூரணை ஆகியன திருவிழாக் காலங்களாகும்.
பூரீமுத்துமாரியம்மன், 37ம் கிராமம், 1ம் கண்டம், வக்கிஎல்ல ஆலயம் 1956ம் ஆண்டில் குடியேற்றக் கிராமங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்டது. வெள்ளிக் கிழமை தோறும் பூசை நடைபெறும். ஆனிப்பூரணை, குளிர்த்தி போன்ற நாட்களில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
பூரீமாரியம்மன், 2ம் வட்டாரம், 40ம் கிராமம், தும்பங்கேணி 1958ம் ஆண்டு தாபிக்கப்பட்டது. மூலமூர்த்தி அம்பாள். ஆனி உத்திரத்திற்கு ஏழு நாட்களுக்கு முன் கொடியேறி பெளர்ணமியன்று வருடாந்த உற்சவம் முடிவடையும்.
பூரீமாரியம்மன், மட்டக்களப்பு வாவிக்கரை, மண்டூர்த்துறை வாரத்திற்கொரு முறை பூசையும் , விசேட தினங்களில் பூசைகளும் நடைபெறும். ஆனிமாதத்தில்
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானகும்பாபிஷேக மலர் - 2000

Page 507
ஏழு நாட்களுக்கு ஆனிப்பூரணையுடன் நிறைவுறும் வகையில் திருவிழாக்கள் நடைபெறும்.
பூரீமுத்துமாரியம்மன், 35ம் கிராமம், பாலையடிவட்டை, வெல்லாவெளி
மூலமூர்த்தி வெண்கலத்திலான அம்பாள் விக்கிரகம், பரிவாரத்தில் பிள்ளையார், வைரவர் உளர். வெள்ளிக்கிழமை பூசை நடைபெறும். ஆனிமாதத்தில் திருவிழா நடைபெறும்.
தெய்வானை அம்பாள், தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை மிகப்பழமை வாய்ந்த ஆலயம். மூலமூர்த்தி அம்பாள். நித்தியபூசை உண்டு. ஆடிப் பெளர்ணமி தினத்தன்று தீர்த்தம் உடையதாக திருவிழா நடைபெறுகிறது.
வள்ளிஅம்பாள், தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை பழமை வாய்ந்த ஆலயம். மூலமூர்த்தி வள்ளி அம்பாள். நித்தியபூசை உண்டு.
பூரீகண்ணகை அம்பாள், குறிஞ்சிநகர், கொக்கட்டிச்சோலை மூல மூர்த்தி கண்ணகை அம்பாள். வைகாசிப் பூரணையில் உற்சவம் நடைபெறும்.
பூரீகண்ணகை அம்பாள், முனைக்காடு, கொக்கட்டிச்சோலை 1943ல் தாபிக்கப்பட்டது. மூல மூர்த்தி கண்ணகை அம்பாள். நித்தியபூசை, வைகாசிப் பூரணையுடன் உற்சவம் இடம் பெறும்.
பூரீகண்ணகை அம்பாள், தும்பங்கேணி
மூலமூர்த்தி கண்ணகை அம்பாள். வைகாசிப் பெளர்ணமிக்கு குளிர்த்தி நடைபெறும்.
கண்ணகை அம்பாள், 13ம் கிராமம், மண்டுர் 1953ல் ஸ்தாபிக்கப்பட்டது. மூலமூர்த்தி கண்ணகி அம்மன். பரிவார மூர்த்திகள் விநாயகர் வைரவர். நாகதம்பிரதான். வாரத்தில் ஒரு நாள் பூசை.
மயூரமங்கலம்

கண்ணகை அம்பாள், 38 ம் கிராமம், வக்கிஎல்ல கண்ணகை அம்பாளுக்கு நித்தியபூசை. வைகாசிப் பூரணை விசேஷம்.
பூரீகண்ணகை அம்பாள், மகிழமுடித்தீவு, கொக்கட்டிச் சோலை
மூலமூர்த்தி கண்ணகை அம்பாள். பரிவாரத்தில்
விநாயகர், வைரவர், நாகதம்பிரான் உளர். நித்தியபூசை உண்டு. வைகாசி விசாகம் விசேட தினம்.
பூரீகண்ணகை அம்பாள், பெரிய போரதிவு, கோயில் போரதிவு
மூலமூர்த்தி கண்ணகை அம்பாள் பரிவாரமூர்த்திகள் பிள்ளையார், முருகன், வைரவர், நாகதம்பிரான்.
பூரீபத்திரகாளிஅம்மன், 3ம் வட்டாரம், கன்னன் குடா. 1815ம் ஆண்டில் தாபிக்கப்பட்டதாக வரலாறு. தினந்தோறும் பூசை.
பூரீமாரியம்மன், பாவற் கொடிச்சேனை
வருடாவருடம் ஆனி மாதத்தில் மூன்று சடங்குகள் நடைபெறுகின்றன.
பூரீமாரியம்மன், நாவற்காடு மூலமூர்த்தி பூரீ முத்துமாரி அம்மன். காளி வைரவர் மூர்த்திகளும் உளர். வாரந் தோறும் வெள்ளிக்கிழமைகளில் பூசை
பூரீபத்திரகாளிஅம்மன், கொடுவாமடு, செங்கலடி வெள்ளிக்கிழமை தோறும் பூசை உண்டு. பரிவாரத்தில் நரசிங்ககாளி, மாடன் போன்ற மூர்த்திகள் உளர்.
பூரீபத்திரகாளி அம்மன், சித்தாண்டிக் கொலனி முறக்கொட்டாஞ்சேனை வெள்ளிக்கிழமைகளில் பூசை உண்டு அட்டவைரவர் பரிவார மூர்த்தி.

Page 508
பூரீமுத்துமாரியம்மன், முறக் கொட்டாஞ்சேனை
மூலமூர்த்தி முத்து மாரியம்மன். பரிவார மூர்த்திகள் சித்திவிநாயகர், வீரபத்திரர், நாகதம்பிரான், வைரவர். இருநூற்று எழுபது ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். வெள்ளிக்கிழமைதோறும் பூசை. வைகாசிப் பூரணையை நிறைவாகக் கொண்டு பதினைந்து நாட்கள் உற்சவம் உண்டு.
பூரீமுத்து மாரியம்மன், வந்தாறுமூலை, செங்கலடி வருடாந்த உற்சவங்கள் நடைபெற்றுவருகின்றன.
பூரீமுத்து மாரியம்மன், உறுகாமம், செங்கலடி சுமார் இருநூற்றி இருபது ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வைகாசிப் பூரணையன்று பொங்கல் பூசை நடைபெறுகின்றது.
பூரீ மாரியம்மன், வந்தாறுமூலை
வெள்ளிக்கிழமைகளில் பூசை நடைபெற்று வருகின்றது. குளிர்த்தி ஆனிமாதத்தில் நடைபெறும்.
பூரீமுத்துமாரியம்மன், ஏறாவூர், செங்கலடி மூலமூர்த்தி முத்துமாரி அம்மன். பரிவாரத்தில் காளி, கறுப்பாயி, மாரி, வதனமார், வைரவர், போன்ற மூர்த்தங்கள் உள்ளன.
பூரீமதுரை மீனாட்சி அம்மன்,
பாலைச்சேனை, கதிரைவெளி
வெள்ளிக்கிழமைகளில் பூசையும், ஆனியில் வருடாந்தப் பொங்கல், சடங்கு முதலியன நடைபெறும்.
பூநீதுர்க்கையம்மன், சோழன் குளம், கதிரை வெளி செவ்வாய்க்கிழமைகளில், பூசை வழிபாடுகள் நடைபெறும்.
பூரீபத்திரகாளி அம்மந்தனாவெளி கதிரைவெளி
வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெறும்.
at N

பூரீபத்தினியம்மன், கதிரைவெளி
திங்கட்கிழமை தோறும் பூசை நடை பெறும். கெளரியம்பாள் விரதம் இருபத்தொரு நாட்கள் நடைபெறும்.
காளாந்தனை அம்மன், பேரில்லாவெளி கிரான் வைகாசியில் வருடாந்தக் குளிர்த்தியும், விசேடதினங்களில் பூசைகளும் நடைபெறும்.
பூரீமுத்து மாரியம்மன், முறக் கொட்டாஞ்சேனை இக்கோயில் 350 வருடம் பழமையானது. வாராந்திர பூசை உளது. ஆனி முதலாம் பிறையில் விசேட உற்சவம் 14 நாட்கள் நடைபெறும்.
பூரீமுத்து மாரியம்மன், வாகனேரி, வாழைச்சேனை மூலமூர்த்தி அம்பாள். பரிவார மூர்த்திகள் வைரவர், நாகாதம் பிரான்.
பூரீமுத்து மாரியம்மன், பாசிக்குடா வீதி, கற்குடா ஆலயம் முன்னோரினால் ஸ்தாபிக்கப்பட்டது. மூலமூர்த்திமாரியம்பாள். பரிவாரமூர்த்திகள் பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான், காத்தவராயர். வெள்ளி தோறும் பூசை. ஆனி மாதத்தில் ஐந்து நாள் உற்சவம்.
மாவடி மாரியம்மன், பேத்தாளை, வாழைச்சேனை வெள்ளிக்கிழமைகள் தோறும் பூசை. ஆனிப் பூரணையில் தீர்த்தத்துடன் கூடிய ஒன்பது நாட்கள் 9-péF6 L).
பூநீ மாரியம்மன், பெரிய வேரம், கிரான்
வருடா வருடம் வைகாசி மாதத்திற் பந்தல் அமைத்துமூன்று நாட் திருவிழா நடைபெற்றுவருகின்றது.
பூரீகண்ணகையம்மன், கல்குடா, வாழைச்சேனை வருடாந்தம் ஏழு நாட்களுக்குப் பூசை நடைபெறுகின்றது. வைகாசியில் குளிர்த்தி நடைபெறும்.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 509
பூரீகண்ணகையம்மன், கோராவெளி முறக் கொட்டாஞ்சேனை கண்ணகை வழிபாடு தொடங்கிய காலத்திய கோவில் இது. வைகாசிப் பூரணையில் பொங்கல் குளிர்த்தி நடைபெறும்.
கண்ணகையம்மன், சந்திவெளி சித்தாண்டி வெள்ளி தோறும் பூசை, ஆடி மாதத்தில் பெளர்ணமியை நிறைவாகக் கொண்டு பதினைந்து நாட்கள் உற்சவம்.
கண்ணகையம்பாள், மாயவட்டை வடக்கு, குடும்பிமலை, கிரான் மூலமூர்த்தி அம்பாள் பரிவாரமூர்த்தி வேல் வைகாசி உட்பட வருடத்தில் மூன்று நாட்கள் உற்சவம்.
பூநீபத்திரகாளியம்மன், பெரிய ஊறணி
நூற்றிருபது ஆண்டுகள் தொன்மையானது. ஆடிமாதம் உற்சவம். பரிவாரம் பிள்ளையார்.
பூரீமகாகாளியம்பாள், புன்னைச் சோலை, அமிர்தகழி மூலமூர்த்தி காளி அம்பாள். பிள்ளையார், பரிவார மூர்த்திகள்: பத்தினி அம்பாள் நாகதம்பிரான் ஆனிமாதத்தில் வருடாந்தம் உற்சவம் நடைபெறுகின்றது.
பூரீபத்திரகாளிஅம்பாள், குறிஞ்சாமுனை, கன்னன் குடா மூலமூர்த்தி பத்திரகாளி. தினமும் மூன்று காலப்பூசை.
பூரீமுத்துமாரியம்மன், கிரான்குளம், குருக்கள் மடம் ஏழுதினங்களுக்கு பூசை நடைபெற்று குளிர்த்தி ஆனி மாதப் பூரணையில் வருடாந்த உற்சவம் முடிவுறும்.
பூரீமுத்துமாரியம்மன், முகத்துவாரம், கல்லடி மூலமூர்த்தி மாரியம்மன். பரிவார, மூர்த்திகள் வீரபத்திரர், வைரவர், நாகதம்பிரான், பேச்சியம்மன் உளர். ஆனிப் பூரணைக்கு குளிர்த்தி.
மயூரமங்கலம்

பரீமாரியம்மன், அமிர்தகழி மூலமூர்த்தி மாரியம்பாள். பரிவார மூர்த்திகள் சிவலிங்கம், வைரவர், வீரபத்திரர், ஐயனார், காத்தவராயர், நாகதம்பிரான், அனுமார் ஆகியோர். ஆனிப்பெளர்ணமியில் வருடாந்த உற்சவம் நடைபெறும்.
பூரீமாரியம்மன், நாவற் குடா, காத்தான் குடி இது 1934ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. வருடத்திற்கு ஒரு முறை கதவு திறந்து உற்சவம் நடை பெறுகிறது.
பூாநீகண்ணகையம்மன்,
சத்துருக் கொண்டான் இது 120 வருடங்களுக்கு முற்பட்ட கோவில். மூலமூர்த்தி கண்ணகை அம்மன். வருடாந்த உற்சவம்
வைகாசியில் நடைபெறும்.
கண்ணகையம்மன், புன்னைச் சோலை, அமிர்தகழி மூலமூர்த்தி கண்ணகி அம்மன். பரிவார மூர்த்திகள் வைரவர், வீரபத்திரர், ஐயனார், ஆனுமார், நாகதம்பிரான் ஆகியோர். 1871ம் ஆண்டுக்கு முற்பட்ட ஆலயம். வைகாசிப் பெளர்ணமியில் உற்சவம்.
கண்ணகையம்மன், புதுக் குடியிருப்பு
வைகாசிப்பூரணையில் திருக்குளிர்த்தியுடன் முதல் ஐந்து நாட்களுக்கு சடங்கு. வருடாந்தப்பொங்கல் தைப்பூசத்தில் நடைபெறும்.
பூரீகண்ணகையம்மன்,
விடத்தல் முனை, புளியந் தீவு
மாதந்தோறும் பெளர்ணமி தினத்தன்று பொங்கல் பூசை நடைபெறும். வைகாசிப் பெளர்ணமிக்குப் பத்துநாள் முன்னர் திருவிழா ஆரம்பமாகி குளிர்த்தியுடன் விழா நிறைவுறும். வீரபத்திரர், நரசிம்மம் காளி, நாகதம்பிரான் ஆகியன இங்குள்ள மூர்த்திகள்.

Page 510
பூரீகண்ணகையம்மன், தாளங்குடா, காத்தான் குடி
இந்தியாவில் கண்ணகி வழிபாடு ஆரம்பிக்கப்பட்ட காலத்துக் கோவில், பழமை வாய்ந்த கட்டுப்பாடுகளுக்கமைய இன்றும் பூசைகள் நடைபெற்று வருகின்றன. பரிவார மூர்த்திகள் நாகதம்பிரான், வைரவர் வருடா வருடம் வைகாசித் திங்களுக்கு 7 நாட்களுக்கு முன் திருவிழா ஆரம்பமாகி குளிர்த்தியுடன் முடிவடையும். உற்சவகாலங்களில் இருகாலப்பூசை இடம் பெறும்.
பூரீ நாகபூரணியம்மன், நாவலடி
மூல மூர்த்தி - நாகதம்பிரான். புரட்டாதி மாதத்தில் மூன்று தினங்களுக்கு பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
பூரீதிரெளபதை அம்பாள், இல, 2, வாவி வீதி
1875ம் ஆண்டில் மூலமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு. மூலமூர்த்தி இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது. வருடாந்த உற்சவ காலங்களில் பஞ்ச பாண்டவர்களுக்காக ஐவரும், திரெளபதைக்காக ஒருவரும் விஷ்ணுவுக்காக ஒருவரும் காப்புக்கட்டி அவர்களைக் கொலுவில் இருந்திப் பூசை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகின்றது. பத்து தினங்கள் வருடாந்த உற்சவம் நடைபெற்று முடியப் பதினோராம் நாள் தீக்குளிப்பும் இடம் பெறுகின்றது.
uநீதுரோபதாதேவிஅம்மன், மட்டிக்களி பரிவார மூர்த்திகளாகப் பஞ்சபாண்டவர்கள் உள்ளனர். வெள்ளிக்கிழமை தோறும் பூசைகள் நடைபெறுகின்றன. புரட்டாதி மாதத்தில் கொடியேறிப் பத்துத் தினங்களுக்குத் திரு விழாக்கள் நடைபெறும்.
கண்ணகையம்மன், தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி நித்திய பூசை உண்டு. ஆனி மாதத்தில் 7 நாட்களுக்கு அலங்காரத் திருவிழா நடை பெற்றுப் பொங்கலுடன் திருவிழா பூர்த்தியாகும்.
G70

பூரீமாரியம்மன், கோட்டைக் கல்லாறு
வருடம் ஒருமுறை கதவுதிறக்கப்பட்டு கும்பத்தில் அம்பாளின் முகச்சிலையை வைத்து ஆராதித்து ஐந்து நாட்களுக்கு விழா நடை பெறுகின்றது. ஆனி மாதப் பூரணையை அனுசரித்துத் திருவிழா நடைபெறுகின்றது.
பூரீமுத்துமாரிஅம்மன், எருவில் விசேட காலங்களில் பூசை வழிபாடுகள் நடை பெறுகின்றன. ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறும்.
பூரீமுத்து மாரிஅம்மன், எருவில், களுவாஞ்சிக் குடி ஆனிப்பூரணையில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பூரீமாரியம்மன், துறை நீலாவணை 7
ஆனிப்பூரணைக்கு முன் எட்டு நாட்களுக்கு திருவிழா நடைபெறுகின்றது. உற்சவம் ஆரம்பித்த ஐந்தாம் நாள் கன்னிக்கால்வெட்டு விழாவும், ஏழாம் நாள் குளிர்த்தியும், எட்டாம் நாள் தீ மிதிப்பு விழாவும் இடம் பெறும்.
பூரீமுத்து மாரிஅம்மன், கோட்டைக் கல்லாறு இக்கோயில் ஆதிகாலம் தொட்டு வழிபாடு ஆற்றப்பட்டு வருகின்றது. இக்கோயிலைப் பற்றிய காவியமும் உண்டு. வருடாவருடம் ஆனிப் பூரணையில் விசேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
பூரீமாரியம்மன், குருமண்வெளி களவாஞ்சிக்குடி வருடத்துக்கு ஒரு முறை புரட்டாதி பூரணையில் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. கும்பத்தில் அம்பாளின் முக அங்கியை வைத்து வழிபட்டு வருகின்றார்கள்.
பூரீகண்ணகை அம்பாள், பெரியபோரதீவு
மூல மூர்த்தி கண்ணகை அம்பாள் வெள்ளிக் கிழமைகளில் பூசை. வைகாசிப் பெளர்ணமிக்கு முதல் மூன்று நாள் உற்சவம்.
யூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் -2000

Page 511
பூரீகண்ணகை அம்பாள், முதலைக்குடா
மூல மூர்த்தி கண்ணகை அம்பாள். பரிவாரத் தெய்வங்கள் வைரவர் முதலியோர். வைகாசிப் பெளர்ணமிக்கு முதல் ஐந்தாம் நாள் குளிர்த்தி. தைமாதத்தில் சடங்கு.
பூநீகண்ணகை அம்பாள், மண்டுர்
விக்னேஸ்வரர், நாகதம்பிரான், வீரபத்திரர், வைரவர் ஆகியோர் உளர். வைகாசிப் பூரணையில் குளிர்த்தி. அதற்கு முதல் பதினொரு நாட்கள் திருவிழா.
பரீகண்ணகை அம்பாள், கொக்கட்டிச்சோலை மூலமூர்த்தி நாகதம்பிரான். வைரவமூர்த்தமும் உண்டு. வைகாசிப் பூரணையை ஒட்டித் திருவிழா.
D6)
பூரீ செல்வ மன்னார் மாவட்டத் நானாட்டானில், அந்நியரின் பல வியாய மரத்தடியில் வழிபடப் ( முயற்சியால் காணி கிடைக்க முருகன் படங்கள் வைத்தும் கு நாக பாம்பு ஒன்று வசித்து வழி தான் இவ்வாலயத்தம்மன். திருவாதிரை நாளும் கொண்ட திருப்பணி தடைப்பட்டிருந்தாலு நடப்பட்டது.
மயூர மங்கலம்
 
 
 

பூநீகண்ணகை அம்பாள், கன்னன்குடா, வவுணதீவு மூல மூர்த்தி கண்ணகை அம்பாள். ஆலமும் வம்மியும் தலவிருட்சங்கள். வைகாசித் திங்களில் குளிர்த்தி.
பூரீபத்திரகாளிஅம்பாள், பெரிய புல்லுமலை வைகாசி அமாவாசை தொடக்கம் ஐந்து நாட்கள் திருவிழா. புராதன கோயிற் கற்றுாண்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பூரீநாக கன்னி நாவலடி வெள்ளிக் கிழமைகளில் பூசை வருடத்துக்கு ஒருமுறை திருவிழா.
Gornát (DT6)IüLb
முத்து மாரியம்மன், நானாட்டான்
தில் நகருக்கு தெற்கே 10 கல் தொலைவில் உள்ள டையெடுப்பொன்றுக்குப்பின்பு கானகமாயிருந்த கிராமத்தில், பெற்ற அம்மன் தான் இவ்வாலயத்தம்மன். 1936இல் கடும் ப்பெற்று அங்கு கொட்டிலமைத்து பத்திரகாளி, விநாயகர், லத்தை வைத்தும் வழிபட்டு வந்தனர். வியாய மரத்தடியில் பட்டு வந்தது. வியாய மரத்தடியில் வழிபடப்பெற்ற அம்மன் 1960இல் திருவெம்பாவையும் ஆரம்பிக்கப்பட்டு 1963இல் ாடப்பட்டது. 1958இல் கோயில் கட்டவென ஆரம்பித்துப்பின் லும் 1963.09.16 அன்று புதிய கோவிலுக்கு அத்திவாரக்கல்

Page 512
இரண்டு கட்டடங்கள் நடைபெற்ற திருப்பணியில் மூலஸ்தானம்,அர்த்த மண்டபம், மணிக்கோபுரம், தரிசன மண்டபம், தம்ப மண்டபம், மடைப்பள்ளியறை, திருமஞ்சனக் கிணறு என்பன கட்டப்பட்டன. 1968ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் 1969ம் இல் களஞ்சியசாலையும் 1979ம் இல் முருகனாலயமும் 1983இல் கட்டுத் தேரும், செப்புக் கொடித்தம்பமும் ஊரார்களின் ஊக்கத்தால் உருவாக்கப்பட்டன. இங்கு மூலவிக்கிரகங்கள் கருங்கல்லாலும், எழுந்தருளிகள் வெண்கலத்தாலும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வசந்தமண்டபம், யாகமண்டபம், வைரவர்,நாகதம்பிரான் மண்டபங்கள், தீர்த்தக்கிணறு, காரியாலய கட்டிடங்கள் என்பவற்றுடன் சிறப்பாக காட்சியளிக்கும். இவ்வாலயத்தில் ஆவணியில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். நல்லூர் முருகன் ஆலய தேர், தீர்த்த நாட்களிலே இங்கும் தேர், தீர்த்தம் நடைபெறும்.
இவ்வாலயம் 1991இல் யுத்தத்தால் சேதமுற்று ஆதரவின்றி 1995 இல் மீண்டு வந்த மக்கள் ஆலயத்தைத் துப்பரவாக்கி வழிபட்டனர். 21 03, 2000 அன்று பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புனர் நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவில் மீண்டும் புதுப்பிக்கப்பட அம்பாள் அருள் பாலிப்பார்.
பரீதேவிமுத்துமாரியம்பாள்,
தலைமன்னார், பெருந்தருவை
1946ஆம் ஆண்டு பெருந்தரவைப் பகுதியில் வணங்கப்பட்ட அம்மன், 1949 ஆம் ஆண்டு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பால் தலைமன்னார் பிரதான பாதையில், தினசரி பூசைகளுடன் வழிபடப்பட்டார். அன்பர் ஒருவரின் அனுசரணையுடன்1950ஆம் ஆண்டு கட்டடம் அமைக்கப்பட்டு, திருக்கேதீஸ்வர ஆலயம் பொறுப் பேற்றது. இருவேளை ஐந்து காலப்பூசைகள் நடைபெற்றன. இந்து வளர்ச்சி சங்கம் இராஜகோபுரம் அமைத்து, 14. 09, 1982 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
1983 இல் நாட்டுச் சூழலால் செயல் இழந்த ஆலயம் மீண்டும் 22, 09. 1999 அன்று பாலஸ்தானம் செய்யப்பட்டு திருப்பணிவேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபை இதற்குதவியது. அப்பகுதி மக்கள் பணம் கொடுத்துதவினர். பல அன்பர்களின் உதவியால் திருப்பணிகள் நிறைவேறியுள்ளது. இரண்டாவது மகா கும்பாபிஷேகம் 06. 12000 அன்று நடைபெற உள்ளது.

பூரீமுத்துமாரிஅம்மன் கோவில் பரிகாரிகண்டல், முருங்கன்
நித்திய பூஜை உண்டு. மாசி மகத்தன்று திருவிழா நடைபெறுகிறது. ஆலயத்தில் வேல், ஐயனார் ஆகிய மூர்த்திகள் உளர். கதிர்காமத் தீர்த்தம், சிவராத்திரி மற்றும் விசேட நாட்களில் சிவப்பணிகள், வழிபாடுகள் சிறப்பாக உண்டு. இந்து இளைஞர் மன்றத் தொண்டர் படையினரால் சமயப் பிரசங்கங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
பூரீ செல்வ முத்துமாரிஅம்மன், மோட்டைக் கடைக்கிராமம், நானாட்டான் தினமும் மூன்று காலப் பூசை, ஆனி மாதப்புனர் பூச நட்சத்திரத்தை நிறைவு நாளாகக் கொண்டு பத்து நாட்களுக்கு அலங்காரத் திருவிழா நடைபெறுகிறது. ஆலயத்தில் விநாயகர், சுப்பிரமணியர், வைரவர், நாக தம்பிரான் ஆகிய மூர்த்திகள் உள்ளனர். கூட்டுப் பிரார்த்தனை, சமயச் சொற்பொழிவுகள் ஆகியன நடைபெறுகின்றன. 1981 ம் ஆண்டு பங்குனி மாதம் சம்புரோக்ஷணமகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
பூரீஇராஜேஸ்வரிஅம்மன், உப்புக்குளம்
தினமும் மூன்று காலப் பூஜை உண்டு. ஊஞ்சற்பாடல்கள் உள. தை மாதத்தில் 12 நாள் அலங்காரத் திருவிழா சிறப்பானது. பிள்ளையார் கதை, திருவெம்பாவை, சதுர்த்தி போன்ற முக்கிய நாட்களில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. மன்னார் இந்துசமய வளர்ச்சிக் கழகம் இவ்வாலயத்தில் சமயப்பணி புரிந்து வருகின்றது.
பூரீமுத்துமாரிஅம்மன், சிலாவத்துறை, மன்னார் வெள்ளி தோறும் பிற்பகலில் பூசை உண்டு. பஜனை நடைபெறும் பரிவார மூர்த்திகளாக விநாயகர், வைரவர், நாகதம்பிரான் ஆகியோர் உள்ளனர்.
பூரீமுத்துமாரிஅம்மன், விடத்தல்தீவு
மூலவர் முத்துமாரி அம்பாள். பரிவாரத்தில் காத்தவராயர், கம்பகாளி, நாகதம்பிரான் ஆகிய
மயூரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 513
மூர்த்திகள் உளர். திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடைபெறும். வைகாசிப் பூரணை முதல் ஐந்து தினங்களுக்குத் திருவிழா இடம் பெறும் பிள்ளையார் கதை படிக்கப்பட்டு உற்சவமும் நடைபெறும்.
பூரீமாரியம்மன், நானாட்டான் மேற்கு,
அச்சங்குளம்
வாரத்திற்கொரு தடவை பூசை நடை பெறுகிறது. ஆலயத்தில் விநாயகர், வேல், வைரவர்,
சூலம் ஆகிய மூர்த்திகள் உளர்.
பூரீமாரியம்மன், பெரிய கட்டைக் காடு, நானாட்டான் மேற்கு தலவிருட்ச வழிபாடு நடைபெற்றுவருகிறது. தல
விருட்சம் வேம்பு
\一? ヘヘ。 -

Page 514
இன்று மாத்தளை என்னும் நாமத்தால் அழைக்கப்படும் இத்திருநகர் முன்பு பன்னாகமம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. பல்+நாகம் பன்னாகமாகும். ஆதியில் நாக வழிபாடு உலகின் பல பாகங்களில் காணப்பட்டதுபோல் நாகர் வாழ்ந்த நம் நாட்டிலும் நடைபெற்றுள்ளது. பன்னாகத்தில் பல தலைகளை யுடைய ஒரு நாகம் இவ் அம்மனை பூஜித்து வழிபட்டதாகவும் ஒரு கர்ண பரம்பரைக் கதை கூறுகின்றது. இதுவே இப் பெயர் ஏற்படக் காரணம் என்போரும் உளர்.
மலையகத்தின் வடக்கு வாயிலெனத் திகழும் மாத்தளை மாவட்டம் பல்வேறு வகையான சிறப்புகளை உள்ளடக்கியது. சங்க இலக்கியங்களில் கூறப்படும் குறிஞ்சி,முல்லை,மருதம் ஆகிய மூவகை நிலங்களையும் கொண்டது. வெற்பெடுத்த திருமேனியான் இராவணேசனின் கோட்டை கொத்தளங்கள் இம் மாவட்டத்தில் இரத்தினங்கள் நிறைந்த “லக்கல” பகுதியில் அமைந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எழுதாமறையாக விளங்கிய திரிபீடகம்மாத்தளை மாநகரில் அமைந்துள்ள அலுவிகாரவில் எழுதப்பட்டது. இலங்கை விடுதலைப் போரில் கொங்காலே கொடபண்டா, வீரபுரன் அப்பு ஆகியோருக்கு நிகராக சுதந்திர வேட்கையுடன் செயல்பட்ட முத்துசாமி நாயக்கரும் இம் மண்ணின் மைந்தனேயாவர். தம்புள்ளை, சீகிரிய சித்திரங்களோடு சைவத் தமிழ் பண்பாட்டினை எடுத்தியம்பும் நாலந்த கெடிகேயும் இம்மாவட்டத்தின் பெருமைக்குத் துணை நிற்கும் இன்னுமொரு சான்றாகும்.
இத்தகைய சிறப்புகள் பல ஒருங்கே அமையப் பெற்றமாத்தளை நகரில் அன்னை முத்துமாரி"குற்றாலம் என ஏழு அருவிகள் கொட்டும்” அழகு மலை குன்றுகளுக்குக் கிழக்கே, மகாவலிகங்கை கலந்து புரண்டோடும் சுதுகங்கை தீர்த்தத்திற்கு மேற்கே, சோழன்காமம் என்னும் திருநாமத்தால் அழைக்கப்பட்ட கனங்காமம் பிள்ளையார் ஆலயத்திற்கு வடக்கே வெள்ளைக்கல் பூரீ அழகர் பெருமான் ஆலயத்திற்கு தெற்கே மந்தண்டாவளை வழிப்பிள்ளையார் ஆலயம், பூரீ முத்து விநாயகர் ஆலயம், ழரீகதிர்வேலாயுத சுவாமிகள் ஆலயம், பூரீ ஏழுமுக காளியம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்கள் நாற்புறமும் புடைசூழ நடுவே கோவில் கொண்டு எழுந்தருளி உள்ளார்.
480

சிவ வழிபாட்டினைப் போன்றே சக்தி வழிபாடும் தொன்மையானதாகும். நான்கு வேதங்களிலும் சக்தியை முதன்மைப்படுத்தியுள்ளமையை சைவப் பெரியார்கள் எடுத்தியம்பி உள்ளனர். இது போலவே கால வரலாற்று அடிப்படையில் சங்க, சங்கமருவிய, பல்லவ, சோழர் காலப் பரப்பிலும் சக்தி வழிபாடு முதன்மை பெற்று இருப்பதை இந்துமக்கள் நன்கறிவார்கள்.
இந்த பூர்வீகத்தின் அடியொற்றியே இலங்கை, இந்திய இந்து மக்களும், பிறரும் சக்தி வழிபாட்டை மாத்தளையில் வேரூன்றச் செய்து செழுமையும் வளர்ச்சியும் பெறச் செய்துள்ளனர். இவ்வாறெல்லாம் வரலாற்றுக் காலத்தின் முன்பே நிலை பெற்றுவிட்ட மாத்தளை பூரீமுத்துமாரியம்மனின் ஆரம்ப வரலாற்றைத் துல்லியமாக எடுத்துச் சொல்லும் திருவருள் மாட்சியைக் கொண்டோர் நம்மிடையே இப்பொழுது இல்லையென்றே நினைக்கத் தோன்றுகிறது.
மெய்யடியார்களுக்கு தன்னை பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தி அருளாட்சிபுரியும் கருணைப் பெருங்கடலாம் முத்துமாரி நம்மாத்தளை திருப்பதியில் ஆதியில் ஒரு ஒப்பனைக் கலைஞருக்கு தன் திருவுருவத்தை வில்வமரத்தடியில் வெளிப்படுத்திக் காட்சி கொடுத்தருளினாள் என்றும் பெரியோர்கள் கர்ணபரம்பர்ை கதையாகக் கூறக்கேட்கலாம், முன்பு வடக்கையும் மலையகத்தையும் இணைக்கும் ஒரு சந்திப்பு கேந்திர நிலையமாக இன்றைய மாத்தளை நகர் விளங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஒற்றையடிப்பாதை வழியாகவும், பின்னர் மாட்டுவண்டில்களிலும் வடக்கில் இருந்து மலையகத்திற்கு வந்தோர் இந்த கிராமத்தில் தங்கி இளைப்பாறி பண்டமாற்று செய்து பயணம் செய்துள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் பெருந் தோட்டத்துறைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்களைக் கொண்டு வந்த போது, அவர்கள் மன்னார் அரிப்பு முதலான துறைகளில் இறங்கிவனாந்தரங்களுக்கூடாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து நளந்தகணவாய்க்கூடாக இப்பன்னாகமத்தை அடைந்து சிறு ஆலயமாக விளங்கிய இவ்வாலயத்தைத் தரிசித்து தங்கி ஓய்வு பெற்று பின்னர் மலையகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரிந்து சென்றுள்ளனர். இலங்கையில் கஜபாகு மன்னனால் ஊக்குவிக்கப்பட்ட பத்தினி வழிபாடு பின்னர் தளர்ச்சியடைந்திருந்த வேளையில் இந்திய வம்சாவளிமக்களின் குடியேற்றம் மலையகத்தில் ஏற்பட்ட போது, மீண்டும் சக்தி வழிபாடு புத்துயிர் பெற்றது. தென்னிந்திய தமிழ் மக்கள் தம் கிராமத்து கோவில்களிற் கொண்டாடிய அம்மன் வழிபாட்டை இங்கு
யூரபதி பூீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 515
நிலைபெறச் செய்தனர். இந்த அம்சம் மாத்தளை பூரீ முத்து மாரியம்மன் ஆலயம் பிரசித்திபெற காரணமாயிற்று. மலையகத் திருத்தலங்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது நாட்டுக் கோட்டை நகரத்தாரின் வரலாறாகும். “லேவாதேவி’ வியாபாரத்திற்காக வந்த இவர்கள் தம் உழைப்பின் பெரும் பகுதியை ஆலயங்களுக்கு ஈந்தனர்.
இவ் ஆலய நிர்வாகத்தின் வரலாற்றுப் போக்கிலும் வளர்ச்சி அடிப்படையிலும் தடம் பதித்து மிளிரும் சில கால கட்ட அம்சங்களை இங்கு குறிப்பிடுவதுஆரம்ப கால வரலாற்றினை அறிய விரும்புவோருக்கு பயனுடையதாகும். மிகச் சிறிய அளவில் விளங்கிய இக்கோயிலை பல்வேறு கால கட்டங்களில் தனியாகவும், குழுவாகவும் செயற்பட்ட பெரியார் பலர் அயரா முயற்சியால் கட்டி எழுப்பி வந்துள்ளனர். இவர்கள் பற்றிய விபரங்களை வரன்முறையாகத் தொகுப்பது இவ்ஆலயத் திருப்பணியோடு ஒட்டிய ஒன்றேயாம். வியாபாரிகள் தங்கிச்செல்லும் சத்திரமாக இப்பதிவிளங்கிய காலத்தில் ஒருநாள் ஒரு சிறுபிள்ளை அங்கு தோன்றியது. மறுநாள் அப்பிள்ளையின் சட்டை மாத்திரமே இருந்ததாம். அன்றைய தினம் இரவு திரு நல்லமுத்து” என்பவரின் கனவில் தோன்றி இதற்கு முன்னர் குழந்தை வடிவில் காட்சி அளித்தது அம்பிகைதான் என்றதாம். அத்துடன் அவ்விடத்தில் ஒரு கல்லும் உள்ளது. அதற்கு தினமும் தீபம் இடுங்கள் என்று கூறி மறைந்ததாம். பின்னர் அக்கல்லுக்குத் தீபமிட்டு வணங்கினர். பின்னர் அவ்விடத்தில் ஒரு சிறு குடில் அமைத்து வழிபட்டுள்ளனர். இவ்வாறு குடில் அமைத்து கோவிலாக அமைத்து வழிபடும் முறையை முதன் முதலில் அமைத்தவர் திரு கருப்பண்ணன் சாமி என்ற பக்திமான். இவர் சிவகங்கையைச் சேர்ந்த காளையார் கோவில் என்னும் ஊரைப்பூர்வீகமாகக் கொண்டவர். இவருக்கு சீடராக இருந்த கப்பாபிள்ளை என்பவர் கோவிலில் பூஜை முதலானவைகளை நடாத்தியதாக தெரியவருகின்றது. கருப்பண்ணசாமி குடும்பத்தினர் வைகாசி திருவிழாவை நீண்டகாலம் நடாத்தி உள்ளனர். திரு. சுப்பாபிள்ளை குடிலாக இருந்த கோவிலை கட்டிடம் அமைத்து திருத்தியதுடன் சுற்றியுள்ள நிலத்தையும் வாங்கி 1852 ம் ஆண்டில் இதற்கு மானியம் செய்து வைத்தாக அக்காலப் பதிவேடுகளில் இருந்து தெரிய வருகின்றது. சுப்பாபிள்ளை காலத்திற்குப் பின்னர் நொத்தாரிஸ் முருகேசு என்ற பக்திமான் இக்கோவில் நிர்வாகத்தை நடாத்தியதாக தெரிய வருகின்றது. 1850 களில்
மயூரமங்கலம்

சுப்பாபிள்ளை நாட்டார் தமக்கு உதவியாக ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றினை அமைத்துக் கொண்டதாக தெரிய வருகின்றது. சுப்பாபிள்ளைக்கு உதவியாக இந்திய தன வணிக செட்டியார்களும், யாழ்ப்பான வர்த்தகர்களும் தொண்டாற்றியுள்ளார்கள். இக்கால கட்டத்தில் தற்போது அம்பாள் எழுந்தருளி இருக்கும் மூலஸ்தானம் வரிச்சு மண்சுவரால் கட்டப்பட்டு, கூரை நாட்டு ஒட்டினால் வேயப்பட்டிருந்தது. மூலஸ் தானத்திற்கு முன்புறமாக தென்னோலை வேயப்பட்ட மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக ஒப்பனைக் கலைஞர் அதற்குப் பின்னர் பண்டாரங்கள் பூஜை செய்யும் நிலைமாறி, பிராமண அர்ச்சகர்கள் பூஜைகளுக்குப் பொறுப்பாயினர்.
ஆரம்பத்தில் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்துள்ளன. பின்னர் படிப்படியாக திருவிழாக்களும், ஏற்படுத்தப்பட்டு, சப்பரத்தேர் எடுக்கும் வழக்கம் தோன்றியுள்ளது. 1934ம் ஆண்டு அளவில் சப்பரத்தை மாற்றி விநாயகரையும், சிவனம்பாள், முருகன் இரதோற்சவமும் நடாத்தியுள்ளனர்.
1955களில் திரு. s குமாரசாமி தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற காலகட்டத்தில் இராஜகோபுரம் உட்பட பல ஆலய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களும் ஒத்துழைத்து பெரும் பணியாற்றி ஆலயத்தில் மகாமண்டபம் உட்பட முருகன் கோயில், வசந்த மண்டபம், விஷ்ணுகோயில், நாயன்மார் கோயில், மீனாட்சி, சிவன் கோயில் என்பன திருப்பணி செய்யப்பட்டன.
19776 சித்திரத்தேர் அம்பாளுக்கு அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. 1983 இனக்கலவரத்தின் போது சித்திரத் தேரும், ஏனைய இரதங்களும் எரியூட்டப்பட்டதுடன், கல்யாண மண்டபம் உட்பட பலபகுதிகள் சேதமாக்கப்பட்டு, பெரும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டமையால் ஆலய வளர்ச்சி குன்றியது. இக்காலப் பகுதியில் திரு. இராஜரட்ணம் அவர்கள் தலைமையேற்றுச் செயல்பட்டார்.
1992ம் ஆண்டு பிற்பகுதியில் மீண்டும் ஆலய அறங்காவல் சபையில் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட திரு.த. மாரிமுத்து செட்டியார் இந்து மக்களை மட்டுமன்றி, பல்வேறு இனத்தவரையும் அரவணைத்துக் கொண்டு, ஆலயத்திற்கு அணியாய் விளங்கிய சித்திரத்தேரையும், ஏனைய இரதங்களையும் அமைக்கும் திருப்பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். அப்போதைய செயலாளரும் தற்போதைய தலைவருமான திருவாளர்

Page 516
சண்முகம் சந்திரசேகரம் அவர்களும் இப்பணியில் பெரும் பங்கு கொண்டவர். இவர் 1999 ம் ஆண்டு முதல் தலைமைப் பதவியை ஏற்று பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு இராஜகோபுரம், வடக்கு வெளி வீதி என்பன அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அறநெறிப்பாடசாலையும் நடாத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாலயத்தைத் தேவஸ்தான அந்தஸ்திற்கு உயர்த்துவது இராஜ கோபுரமாகும். இந்த இராஜ கோபுரத்திற்கு 25.01.1973ல் முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோயிலுக்கு சாஸ்திரிய முறையான கொடிமரம் (துவஜஸ்தம்பம்) தாமிர உலோகத்தால் செய்யப்பட்டு, மேலே வெள்ளிப்பூச்சு பூசப்பட்டு, 1968 ல் நிறைவேற்றப்பட்டது. பழைய கட்டிடம் 1958 களில் முற்றும் முழுதாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், மகாமண்டபம், அர்த்தமண்டபம், மூலஸ்தானம் போன்றவை அமைக்கப்பட்டு, 1960 களில் மூலஸ்தான கோபுரம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது, 1963ல் சந்திரசேகரர், சண்டேஸ்வரி ஆகிய மூர்த்திகளுக்கு தனித்தனி கோவில்களும், நடராஜப் பெருமான் கோவில், வயிரவர் கோவில் என்பனவும் நிர்மாணிக்கப்பட்டன. 1968 களில் வசந்த மண்டபமும் பின்சுற்று மதிலும் அமைக்கப்பட்டன. ஆலயத்தினுள்ளே ஆனைமுகன், கருப்பண்ணசாமி, மதுரை வீரர்,பஞ்சமுக விநாயகர், முருகப்பெருமான், பூரீ விஷ்ணுவின் அநந்த சயனம், சரஸ்வதி, துர்க்காதேவி, லட்சுமி, நவக்கிரகங்கள், மீனாட்சி அம்பிகை, நந்தி, நடராஜன் சந்திதானம் நான்கு நாயன்மார்கள் ஆகியோர்க்கு சந்நிதானங்கள் சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டு, அருள் பாலிக்கின்றனர். ஆலயத்தினுள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவலிங்கம் வார்க்கப்பட்டதோ, செதுக்கப்பட்டதோ, உருவாக்கியதோ அல்ல இது காசியில் இருந்து எடுத்துவரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
மலையகத்தில் விளங்கும் திருத்தலங்களில் தலைசிறந்து விளங்கும் மாத்தளை பூரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வரலாற்று நோக்கில் இது ஒரு சிறு குறிப்பேயாகும். இவ் ஆலய வளர்ச்சிக்காக தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த பெரியார் பலரின் திருநாமங்களும், நிர்தாட்ஷயணியமான காலகட்டத்தில் அவர்கள் ஆற்றிய பெரும் பணியும் முற்று முழுதாக இச் சிறு கட்டுரையில் அடங்காதது வருந்தத் தக்கது.

பூரீமுத்துமாரியம்மன், அம்பன் கங்கை
மாத்தளை மாநகரில் வள்ளிவெல கிராமத்தின் நடுவே அம்பன் கங்கை என்ற பதியில் அமர்ந்திருக்கும் அன்னையின் 6) I T6 or நாகர், இயக்கர் வழிபாட்டுக்குட்பபட்டதெனவும் சிலர் தோட்டத் தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட தெனவும் கூறுகின்றனர்.
முன்னொரு காலத்தில் இவ்விடத்தில் அரசமரம் ஆலமரமும் இருந்தது. இவற்றை வழிபட்டுவந்த மக்கள் வளர்ச்சியடைந்து அம்மனை உருவகித்து வழிபடத் தொடங்கினர். 1910ஆம் ஆண்டிற்கு பின் வளர்ச்சியுற்ற ஆலயம் ஒரு பெரியாரின் உதவியுடன் வளர்ந்தது. "கரக உற்சவம்” எனும் விழா வருடந்தோறும் ஆங்கிலேயர் அனுசரணையுடன் நடைபெற்று வந்தது. 1988 இல் அடியார்கள், ஊர்ப்பெரியவர்கள் கூடி ஆலயத்தை பெரிதாகக் கட்டவென முடிவு எடுத்து, கிராமத்தவரின் உழைப்பாலும் அன்பர்களின் உதவியாலும் ஆலயம் கட்டப்பட்டு 1990.03.25 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும். காப்பு கட்டுதலுடன் ஆரம்பித்து கரக உற்சவம், பால்குடம், கற்பூரச்சட்டி நீர்வெட்டு, வைரவர் பூஜை என நடைபெறும். ஆரம்பத்தில் இயற்கை வழிபாடாக விருந்த ஆலயம் தற்போது விநாயக, முருகன் விக்கிரகங்களுடன் சிறப்பாக அமைந்துள்ளது. பால் குடம், கற்பூரச் சட்டி என்பன பூரீ ஆனந்த முருகன் ஆலயத்திலிருந்து எடுத்து வந்து அம்பாளை நீராட்டுவது கண்கொள்ளாக் காட்சி 1992இல் ஆலயத்தில் அறநெறிப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இங்கு 1997இல் இளைஞர் மன்ற முயற்சியால் தேர் இழுக்கப்பட்டது. 1999இல் ஆலயத்தைச் சுற்றி மதில் கட்டப்பட்டது. தலவிருட்சம் ஆலமரமாகவும், கோயிலைச்சுற்றி வேப்பமரச் சோலைகளாகவும் காணப்படுகின்றது. இங்கு இன, மத, மொழி வேறுபாடின்றி வழிபடுகின்றனர்.
பூரீமாரியம்மன், வரக்காமுனை, உக்குவளை 125 வருடங்கள் பழமையானது. 1925ம் ஆண்டில் “ஹிஸ்ரோறே ஹன்யு’ என்ற வெள்ளைக்காரர் கல்லினால் இக்கோவிலைக் கட்டுவித்தார்.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 517
மயூரமங்கலம்
கண்ண6
வன்னிப்பிரதேசத்தில் பிர அம்மன் கோவிலாகும். முல்லைத்தி வயல்வெளியாலும், பாலைமரச் எழில்மிகு தோற்றத்துடன் காட்சி அம்மன் கோவில். வருடம் தே திங்கட்கிழமை வற்றாப்பழை கண் வருகின்றது.
வன்னி மக்களின் நம்பிக்ை அம்மனுக்கு செய்யும் பொங்கல் நடைபெற்று வருகின்றது. வற்ற பொங்கலை ஞாபகமூட்டும் பாக் அடுத்த திங்கட்கிழமை அதாவது வைப்பதற்காக, குறிப்பிட்ட குலத் கோவில் உரிமையாளர்கள் பூசர் சிலாவத்தை கடற்கரையில் உள்ள சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலி ஆலயத்தில் வைத்து அதற்குள் கோவில் கடமைகளைச் செய் மடைப்பண்டங்களும் வற்றாப்பழை காட்டு விநாயகர் ஆலயத்திலிரு வெள்ளிப் பிரம்புடன் பூசகர் காட் புறப்பட கோவில் கடமைகளைச் மடைப்பண்டங்களுடன் புறப்படும் வற்றாப்பழை கண்ணகை அம்மன் பூசகர் தமது கடமைகளைத் தொட கண்ணகை அம்மன் பொங்கல் தி வாசித்தலாகும். கோவலன் கண்
 
 

ல்லைத்தீவு
DT6)ULLD
கை அம்மன், வற்றாப்பழை
பல்யம் அடைந்த அம்மன் கோவில் வற்றாப்பழை கண்ணகை தீவு மாவட்டத்தில் வற்றாப்பழை கிராமத்தில் நந்திக்கடலாலும் சோலையாலும் சூழப்பட்டு நந்திக் கடற்கரையோரத்தில் யளித்துக்கொண்டிருக்கின்றது வற்றாப்பழை கண்ணகை ாறும் வைகாசி மாதபெளர்ணமியை அண்டி வருகின்ற எணகை அம்மனுக்குச் சிறப்பாக பொங்கல் நடத்தப்பட்டு
கைக்குரிய தெய்வமாக விளங்கும் வற்றாப்பழை கண்ணகை பழைய பாரம்பரிய முறைகளுக்கு ஏற்பவே இப்போதும் ாப்பழை கண்ணகை அம்மன் கோவில் உரிமையாளருக்கு குத்தெண்டல் நிகழ்ச்சியுடன் திங்கட்கிழமை ஆரம்பமாகி பொங்கலுக்கு முதல் திங்கள் தீர்த்தம் எடுத்து விளக்கு தில் உள்ள ஒருவர் புதிய பானையுடன் செல்ல அவருடன் கள் ஆகியோருடன் முல்லைத்தீவுக்கு அண்மையிலுள்ள T வழமையாகத் தீர்த்தம் எடுக்கும் தீர்த்தக் கடற்கரைக்குச் மாக அழைத்து வரப்பட்டு முள்ளியவளை காட்டு விநாயகர் வெள்ளைத் துணியிட்டு விளக்கு ஏற்றப்படும். குறிப்பிட்ட யும் குலத்தவர்களும், பூசகரும் ஏற்றப்பட்ட விளக்கும் கண்ணகை அம்மன் கோவிலுக்கு கொண்டு போகும் வரை, ந்து தமது கோவில் கடமைகளைச் செய்வார்கள். சிலம்பு, -டு விநாயகர் ஆலயத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு செய்யும் குறிப்பிட்ட குலத்தவர்களால் ஏற்றப்பட்ட விளக்கு போது மேளத்துடன் கோவில் உரிமையாளர்கள் அவர்களை கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு சென்றதும் டங்கியதும் சிலம்புகூறல் படலம் ஆரம்பமாகும். வற்றாப்பழை னத்தன்று நடக்கும் சிறப்பான நிகழ்ச்சி சிலம்புகூறல் படலம் ானகி கதையைக் கூறும் சிலப்பதிகாரம் வாசிக்கும் போது,

Page 518
ஒருவர் புராணபடலத்தை வாசிக்க இன்னொருவர் பயன் கூற அதனைச் செவிமடுத்து பல வயோதிபர்கள் கூடி இருப்பார்கள். பலர் மாறி மாறிப் புராணபடலம் வாசிக்க பலர் மாறி மாறிப் பயன் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இது திங்கட்கிழமை இரவு நிறைவு செய்யப்படும். இதனை சிலம்புகூறல் என பயபக்தியுடன் கூறவார்கள். மதுரையில் விளக்கியதும் பாண்டியனும் கோப்பெருந்தேவியும் இறக்க, கோபங்கொண்ட கண்ணகை அம்மனாக மாறி மதுரையை எரித்த பின் பல திக்குகளுக்கும் சென்று பின் சக்தி வடிவம் பெற்று இறுதியாக வற்றாப்பழையில் நந்திக்கடற்கரையில் பதிகொண்டதால் அத்தலத்தைத் தரிசிப்பதற்கு இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பொங்கல் தினத்தன்று பல ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் வருடந்தோறும் வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஐம்பெரும் காப்பியங்களில் சிறந்து விளங்கும் சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் கண்ணகி கதையை, பண்டைக்காலம் தொட்டு வன்னி மக்கள் குறிப்பாக அடங்காப்பற்றில் உள்ள முள்ளியவளை, தண்ணிருற்று, வற்றாப்பழை, புதுக்குடியிருப்பு முதலிய கிராமங்களில் நாட்டுக்கூத்தாக வருடம் தோறும் மேடை ஏற்றிவருகின்றார்கள். இக் கிராமங்களில் பரம்பரையாக இருக்கும் அண்ணாவிமார்கள் பழைய கலைஞர்களையும் புதிய கலைஞர்களையும் சேர்த்து பழக்கி அவ் அவ்வூர்களில் உள்ள அம்மன் கோவில்களில் வட்டக்களரி அமைத்து அம்மன் தெய்வத்துக்குரிய நாளான திங்கட்கிழமையில் மேடை ஏற்றுவார்கள். கூத்து இறுதிக்கட்டத்தில் கோபங்கொண்டிருக்கும் கண்ணகியை "தாயே குளிர்ந்திடும் அம்மா எங்களை பெற்ற நீயே குளிர்ந்திடும் அம்மா” என கண்ணகியை அம்மன் தெய்வமாக வணங்குவதுடன் கோவலன் கூத்து முடிவடைகின்றது. வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவிலில் வருடம்தோறும் வட்டக் களரி அமைத்து இதனை மேடை ஏற்றி வருகின்றார்கள்.
வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவில் தோன்றியதற்கு முல்லைத்தீவு பிரதேச மக்கள் மத்தியில் கர்ணபரம்பரையாக வரும் கதையொன்று உண்டு. வற்றாப்பழை நந்திக்கடற் கரையோரத்தில் அமைந்துள்ள வயல்வெளிகளில் மாடுகள் மேய்ப்பதற்காக இடையர்கள் செல்லுவது வழக்கம். வழக்கம் போல மாடுகளை
حصے

வயல்களில் மேயவிட்டு நந்திக்கடற்கரையிலும் பாலைமரநிழலிலும் விளையாடிக் கொண்டிருக்கும் போது வெள்ளைச் சேலையும், தளர்ந்த நடையுடனும் கையில் உள்ளதடியை ஆதாரமாக ஊன்றியபடிதங்களை நோக்கி ஒரு பாட்டி வருவதைக் கண்ட சிறுவர்கள் பாட்டியை நோக்கி ஓடிச் சென்று அன்புடன் அழைத்து வந்து பக்கத்திலுள்ள வேப்பமரத்தடியில் உழவு கலப்பைக்கு வெட்டி உள்ள, வேப்பம் படுவாளுக்கு மேல் இருத்தினர். களைப்பு சோர்வுடனும் இருந்த பாட்டியை நோக்கி குசலம் விசாரித்த சிறுவர்களை நோக்கி பாட்டி தனக்கு பசிக்கின்றது எனக் கூறவே, மாடுகள் பாலை எடுத்து வழமையாக பொங்கும் பொங்கலை அவசரமாக பொங்கி முடித்த போது பாட்டிக்கு பொங்கிய பொங்கலை கொடுப்பதற்கு இலை இல்லையே என அங்கும் இங்கும் சிறுவர்கள் பார்க்கவே பக்கத்திலுள்ள விடத்தல் மரத்தில் உள்ள இலைகளை பிடுங்கிக் கொடுக்கவே அவற்றை கோர்வை செய்து தட்டாக்கிய பின் அதில் தனக்கு பொங்கலைத் தரும்படி நீட்டினாள். சிறுவர்களும் தாங்கள் பொங்கிய பொங்கலை ஆச்சிக்கு படைத்தனர். சந்தோசத்துடன் ஆச்சியும் சிறுவர்களும் சாப்பிட்டனர். களைப்பு எல்லாம் மாறி ஆச்சி தனது தலையில் பேன் எடுத்துவிடும்படி கூறவே சிறுவர்களும் தலையை விரித்த போது தலை எல்லாம் கண்கள் இருப்பதைக்கண்ட சிறுவர்கள் பயந்து அதனை ஆச்சியிடம் கூறினார்கள். பதட்டப்படாமல் இருந்த ஆச்சி, இதனை ஊர்மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் எனக் கூறினார். சிறுவர்களும் ஒடிச் சென்று ஊர் பெரியவர்களுக்குக்கூறி அவர்களை அழைத்துவந்தபோது ஆச்சியைக் காணவில்லை. ஆச்சி இருந்த வேப்பம் படுவாள் தளைத்திருந்ததைக் கண்ட எல்லோரும் ஆச்சரியம் அடைந்திருந்தனர் ஆச்சிஇருந்த வேப்பமரத்தடியில் கோவில் அமைத்து வருடந்தோறும் வைகாசி மாத பெளர்ணமி தினத்திற்கு அண்டி வருகின்ற திங்கட்கிழமையில் பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் வேப்ப மரத்தடியில் கொட்டில் அமைத்து வழிபட்ட மக்கள் தற்போது பெரிய கட்டிடங்களால் கோவில் அமைத்து அதனைச் சூழ அன்னதான மடங்களும் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
அடங்காப்பற்றை பண்டாரவன்னியன் ஆட்சி செய்த காலத்தில் முல்லைத்தீவு நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்த
யூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 519
நெவில் என்ற வெள்ளையன் வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவிலை அழிப்பதற்குச் சென்ற போது அங்கிருந்த பூசகருக்கும் வேற்று மதத்தவனான நெவில் என்ற வெள்ளையனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராற்றின் பின் குறிப்பிட்ட தினத்தில் கோவிலுக்கு வருவதாகவும், அத்தினத்தில் கண்ணகை அம்மன் புதுமை செய்யாது விட்டால் கோவிலை அழித்து விடுவதாகவும் கூறிச் சென்றான். வேதனையுடன் படுத்திருந்த பூசாரியின் கனவில் தோன்றியவற்றாப்பழை ஆச்சி (கோவிலுக்குள் இருக்கும் வெள்ளிப்பிரம்பினால்) வெள்ளையன் வந்ததும் பக்கத்திலுள்ள பனிச்சம்மரத்தினை வலம் வந்த பின் அதனை தட்டிவிடும் படி கூறி மறைந்தாள். குறிப்பிட்ட நாளில் வெள்ளையன் வந்ததும் கோவிலுக்குள் இருந்த வெள்ளிப்பிரம்பினை எடுத்து வந்து பணிச்சமரத்தினை வலம் வந்த பின் அந்த பணிச்ச மரத்தினைத் தட்டினார். என்ன ஆச்சரியம் நிறைகாய்களுடன் இருந்த பனிச்சமரம் ஆடத்தொடங்கி அதில் உள்ள காய்கள் எல்லாம் வெள்ளையர்கள் மேல் குண்டுகளாக வீசப்பட்டன. தலைதெறிக்க தப்பினால் போதும் என்று நந்திக்கடல் ஊடாக முல்லைதீவு நோக்கி ஓடினார்கள். கோடைகாலத்தில் குதிரை பாய்ந்த இறக்கம் என அழைக்கப்படும் வெள்ளையர் குதிரையில் பாய்ந்த பள்ளத்தினை இப்போதும் காணலாம். அந்த பனிச்சமரமும் அதன்பின் காய்ப்பதில்லை. அதில் வெள்ளை நாகம் குடியிருப்பதைக் கண்ட மக்கள் அதன் அடியில் நாகதம்பிரானுக்கு கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவில் பொங்கல் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே வன்னிப்பிரதேச மக்கள் குறிப்பாக பண்டார வன்னியன் ஆட்சி செய்த அடங்காப் பற்று மக்கள் அதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்வார்கள். மக்கள் மனதிலும் ஒரு குதுகலத்தைக் காணக்கூடியதாக இருக்கும். இளைஞர்கள் மத்தியிலும் ஒரு உற்சாகத்தைக் காணக்கூடியதாக இருக்கும். வீட்டுப் பெண்கள் கூட வற்றாப்பழை கண்ணகை அம்மன் பொங்கலில் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு தங்களைத் தயார் செய்து கொண்டிருப்பார்கள். பொங்கல் நடைபெறும் திங்கட் கிழமைக்கு முன்பு பதினைந்து நாட்களோ அல்லது ஏழு நாட்களோ அப்பிரதேச மக்கள் கண்ணகை அம்மனுக்கு விரதம்
மயூரமங்கலம்

இருந்து பொங்கல் தினத்தன்று கோவிலுக்குச் சென்று கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள கிணறுகளில் நீராடி கற்பூரச் சட்டி எடுத்தோ அல்லது கண்குடம் வைத்தோ அல்லது தீமிதித்தோ தமது நேர்த்திக் கடன்களை முடிக்கின்றனர். பொங்கல் தினத்தன்று காவடி எடுப்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருக்கின்றது. சூழவுள்ள கிராமமக்கள் தங்கள் ஊர் கோவிலிருந்தும் வற்றாப்பழை கண்ணகை அம்மன் கோவிலுக்கு அண்மையில் இருந்தும் கூட்டம் கூட்டமாக காவடி எடுத்து வந்து தமது நேர்த்திக் கடன்களை முடிக்கின்றனர். மேள வாத்தியங்களுடன் ஆட்டத்துடனும் காவடிகள் வர, அவற்றின் பின்னால் கற்பூரச்சிட்டிகள், பால் செம்புகள் ஏந்தியபடி பெண்கள் பின் தொடர்ந்து வரஅவற்றைச்சூழ மக்கள் வரும் இக்காட்சிகள் மக்கள் மனத்தை மிகவும் கவருவனவாக இருக்கும். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தண்ணிரூற்று, முள்ளியவளை, குமுளமுனை, கொக்கிளாய், ஒட்டிசுட்டான் முதலிய கிராமங்களில் இருந்து அவ்வூர்மக்கள் முற்காலத்தில் சோறு கறிகளையும் சமைத்துக் கொண்டு மாட்டு வண்டிகளில் தமது உறவினர் சகிதம் இரவு, இரவாகப் புறப்பட்டு ஒன்றின் பின் ஒன்றாக வரும்போது மாடுகளுக்கு கட்டப்பட்ட சலங்கை ஒலிநாத ஒசைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். பொழுது விடியும் போது நந்திக் கடற்கரையை வந்தடையும் வண்டி நிரைகளில் இளம்காளைகளை பூட்டி ஏற்கனவே பழக்கி வைத்திருந்தவர்கள் நிரைகளை விலக்கி முந்திச் செல்லும் போது ஏனைய வண்டிக்காரர்களும் தங்களது மாடுகளை உசார்படுத்தி ஒடவைக்கும்போது ஒரு மாட்டு வண்டிப் போட்டி நடைபெறுவது போன்ற காட்சியாகத் தான் இருக்கும். நிரை வண்டிகள் பாலைமரங்களின் கீழ் வண்டிகளை நிறுத்தி விட்டு, கோவிலைச் சூழவுள்ள கிணறுகளில் நீராடி தங்களது நேர்த்திக் கடன்களை முடிப்பார்கள் அதன்பின் பாலை மர நிழல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது வண்டிகளுக்கு வந்து கடகம், பெட்டிகளில் கொண்டு வந்த சோறு கறிகள் எல்லாவற்றையும் சேர்த்து குழைத்து கவளம், கவளமாக வட்டமாக இருந்து எல்லோரும் சாப்பிடுவார்கள். பின்பு மரநிழல்களில் படுத்து ஒய்வு எடுத்த பின் கோவிலைச் சூழ நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கடைகளையும் பார்ப்பதற்கு சிறுவர்கள் செல்ல, பெண்கள் தங்களுக்குத் தேவையான வீட்டுப்பொருட்களை

Page 520
வாங்க கடைகளுக்குச் செல்ல வயோதிபர்கள் கோவிலுக்குள் படிக்கும் சிலம்புகூறலைக் கேட்பதற்குச் செல்வார்கள். காலங்களின் கோலத்தால் இக்காட்சிகள் எல்லாம் கனவுக் காட்சிகளா என எண்ணம் தோன்றுகின்றது.
வற்றாப்பழை கண்ணகை அம்மன் பொங்கல் நடைபெறும் போதுதான் கதிர்காம பாதயாத்திரிகர்கள் ஒன்றுகூடுவார்கள். வன்னிப்பிரதேச யாத்திரிகர்களும், யாழ்ப்பாணத்திலிருந்து கரையோரப்பாதை வழியாக வரும்யாத்திரிகர்களும் வற்றாப்பழைபொங்கலில் கலந்து கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து கரையோரப்பாதை வழியாக தமது கதிர்காம யாத்திரையைத் தொடங்குவார்கள்.
வற்றாப்பழை கண்ணகை அம்மனுக்கு விழா எடுக்கும் இன்னொரு தினம் பங்குனித் திங்களாகும். ஒவ்வொரு பங்குனி மாதத்திலும் வரும் திங்கட்கிழமைகளில் விசேஷ பூசைகளும் கடைசிப் பங்குனித்திங்களில் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும்.
பூரீகண்ணகி அம்மன், கொக்கிளாய்
முல்லைத்தீவிலிருந்து 22 மைல் வடக்கேயும் திருமலையிலிருந்து 40 மைல் தெற்கேயும் அமைந்துள்ள கொக்கிளாய் இயற்கையெழில் கொஞ்சிக்குலுங்கும் கிராமம் ஆகும். 'வன்னியும் வன்னியர்களும்' எனும் ஆங்கில நூல் குமாரபுர இராசதானியில் புரட்சி செய்த குலசேகர வன்னியின் தலைமையில் குடியேறியவர்கள் கொக்கிளாய் என்ற காரணப்பெயர் வந்தது என்றும் கூறுகிறது. காலப்போக்கில் அது கொக்கிளாய் என மருவியது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கிராமத்தவர்கள் கதிர்காமக்கந்தனை கால் நடையாகச் சென்று தரிசிப்பர். அப்படியொரு நாள் ஒரு பிள்ளையார் வடிவ கல்லை வேப்பமர நிழலில் வைத்து வழிபட அம்பாள் கனவில் தோன்றி அம்மனை வைத்து வழிபடும்படி கூற மக்களும் அவ்வாறு செய்தனர். இவ்வாறு வளர்ந்து வந்த இவ்வாலயம் வைகாசி இறுதியில் பொங்கல் மடை செய்து வழிபடப்பட்டது.
 

1970 ஆம் ஆண்டு ஊர் மக்கள் கூடி புனரமைப்புச் செய்யவெனத் தீர்மானித்து முடிவைச் செயல்படுத்த ஆரம்பித்தனர். கிராமத்தவர் ஒவ்வொருவரினதும் பங்களிப்பால் 1979இல் கட்டி முடிக்கப்பட்டது. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் பலிபீட நிலையம், வசந்த மண்டம், உள்வீதியில் வைரவர் ஆலயம், பூசகர் விடுதி அமைக்கப்பட்டு தற்போது மூன்று காலப்பூசைகளும் நடைபெறுகின்றன.
திருவிழாக்காலங்களில் “கோவலன் கூத்து” இடம்பெற்றுவருகின்றது. திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெற்று இறுதி நாள் காவடியாட்டம், தீக்குளிப்பு நடைபெறும்.
கண்ணகி அம்பாள், கொக்கிளாய், முல்லைத்தீவு மூலமூர்த்தி கண்ணகை அம்பாள் பரிவார மூர்த்திகள் மாணிக்கப்பிள்ளையார், முருகன், வைரவர் தினமும் இரண்டு காலப் பூசை உண்டு. சித்திரைப் பூசத்தில் இருந்து பத்து நாட்களுக்கு அலங்காரத் திருவிழா நடைபெறும்.
முத்துமாரியம்மன், வன்னிவிளாங்குளம்,
முல்லைத்தீவு மூலமூர்த்தி யூரீ முத்துமாரி அம்பாள் பரிவாரத்தில் sitsostumi, சுப்பிரமணியர்,
காத்தவராயர், வைரவர், குருநாதசுவாமி ஆகிய மூர்த்திகள் உளர். வைகாசி விசாகத்தில் விசேட பொங்கல் உண்டு.
பரீமுத்துமாரிஅம்மன், கொக்குத் தொடுவாய், முல்லைத்தீவு
மூலமூர்த்தி முத்துமாரியம்மன், பரிவார மூர்த்திகள் வைரவர், கண்ணகை அம்பாள், பிள்ளையார், முருகன். ஆனிமாதத்தில் பத்து நாட்களுக்கு வருடாந்த திருவிழா நடைபெறுகிறது.
மயூரபதியூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 521
ရို့ရှု
X.
r
}
运
ఫ
aஒடு
)(
e
I6
༩ལ།༽-N
{ର
)
மயூரமங்கலம்
హీబ్రpxତ୍ରି }); 战
6D
器
-2
Y
gW {
○
Sí
பூரீகரும
மொனராகலை நகரிலி தொலைவில் அமைந்திருக்கும் ஆலயம் அமைந்துள்ளது. இ கொண்டிருக்கிறது. மருத மரங் இத்தகைய அழகிய சூழலில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்
இக்கோவில் வெள்ளை தாபிக்கப்பட்டது. ஒரு சிறுகுடிை செய்யப்பட்டது. 1981ம் ஆண்ட கொண்டு வந்த கருமாரியம் குறிப்பிடத்தக்கது. இதனால் இ கிழமைகளில் பக்தர்கள் நிறைந் பெற்றதன் பயனாக ராஜ கோட வைக்கப்பட்டும் புதுப்பொலிவு ெ
சிறப்பாகச் செய்யப்பட்டது.
 
 
 
 

ானராகலை
DT6)LLD
2ாரியம்மன், மொனராகலை
ருந்து கதிர்காமம் செல்லும் பாதையில் சுமார் 8 மைல் பாராவில்' என்ற தோட்டத்தில் பூரீ கருமாரியம்மன் த்தோட்டத்தின் அருகே கும்புக்கன் ஒயா ஒடிக் களும், புங்க மரங்களும் வானுயர்ந்து இருக்கின்றன. மூர்த்தி, தலம், தீர்த்த விசேடங்களுடன் அம்பிகை றாள்.
ாயரின் ஆட்சிக் காலத்தில் 1909ம் ஆண்டளவில் சயில் ஒரு நாக உருவமும் திரிசூலமும் வைத்து வழிபாடு ளவில் ஒரு அன்பர் சமயபுரம் சென்று வந்த போது மன் சிலையை வைத்து வழிபாடு செய்யப்பட்டமை க்கோவிலில் ஆருடம் கேட்பதற்கு வெள்ளி, செவ்வாய் து விடுவார்கள். இதனால் ஆலயம் பலரின் ஆதரவைப் புரம் அமைக்கப்பட்டும், கற்றுச் சுவர்களில் சிற்பங்கள்
பற்றது. இப் புனரமைப்பின் 25. 5. 1999ல் கும்பாபிஷேகம்

Page 522
ડબ્રહ
༽
م
魏
@?
خمسي
இலங்கையில் வடபா நடுநாயகமாகத் திகழ்வது நயில் கொண்ட இத்தீவில் அறுபத்து நா அலங்கரித்துக் கொண்டு, தன் தன்பால் ஈர்த்து அருளாட்சி ெ அம்பிகையாகும்.
நயினாதீவுக்கு இடப்பட்ட ப இலங்கை எங்கணும் உள்ள ஆலய நாகபூசணி அம்மன் ஆலயம் என்ட நயினை ஆலயத்தின் கரு அம்பாளும் இணைந்த விக்கிரகப் மூர்த்தங்களே இவை, நாகவழிப்பா வளர்ந்து, அவ்வழிபாட்டு வளர்ச் நாகபூசணி அம்பாள் ஆலயம் விள நயினைதீவு நாகேஸ்வரி தோன்றியது யார்தாபித்தது என்று காலத்திற்கு முற்பட்ட நாகவழிப இலங்கையில் நாகவழிபாட்டுக்கு இ பிறிதில்லை எனலாம். மூலஸ்தான வருடங்களுக்கு முந்தியதாகப் புலப் நாகபடம் பார்க்கப் பயங்கரமாகவுள் “இந்தியாவிலும் நாகவழி கோவிலைக் காண்பதரிது. க நயினாதீவில் காணலாம். சரித்தி இது என்பது புலனாகின்றது” என் வல்லுனராகிய எம். நரசிம்மன்
 
 
 
 
 
 
 
 
 

ாழ்ப்புான (D(T6)LL()
தீவகம்
ஷணி அம்மன், நயினாதீவு
ல் யாழ்ப்பாணத்திற்கு அருகேயுள்ள சப்த தீவுகளில் னாதீவாகும். பாரம்பரியமான வரலாற்றுச்சிறப்பினைக் ான்கு சக்திபீடங்களில் ஒன்றான புவனேஸ்வரி பீடத்தை அருட்பிரவாகத்தால் அகிலத்து மக்களை எல்லாம் சய்து கொண்டிருப்பவள் அன்னை பூரீ நாகபூஷணி
ழைய பெயர் நாகதீவு அல்லது நாகத்தீவு எனத் தெரிகிறது. 1ங்கள் யாவற்றிலும் மிகவும் பழமை வாய்ந்தது நயினை பூரீ து ஐயமின்றி அறியக்கிடக்கின்றது. நவறையான மூலஸ்தானத்திலே ஐந்து தலை நாகமும் ம் உள்ளது. பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சுயம்பு ட்டிலே தொடங்கிக் காலப்போக்கில் நாகபூசணி வழிபாடாக சியின் மகோன்னத நினைவுச் சின்னமாக நயினை பூரீ ங்குகின்றது.
அல்லது நாகபூசணி அம்பாள் ஆலயம் எப்பொழுது அறியப்படாப்புராதனமுடையது.இப்புனித ஆலயம் சரித்திர ாட்டை எடுத்துக் காட்டும் சின்னமாக அமைந்தள்ளது. ப்புனித ஆலயத்தைப் போன்றுதொன்மை வாய்ந்த ஆலயம் விக்கிரகத்தின் அமைப்பைப் பார்த்தால் அது பல்லாயிரம் படுகின்றது. மூலஸ்தான விக்கிரகத்திற்குப்பின்புறம் உள்ள ர்ளது. பாட்டுக்கே பிரத்தியேகமாகவுள்ள இவ்வாறான புராதன லப்பற்ற தூய்மையான நாகவழிபாட்டுப் பண்பினை ர காலத்திற்கு எட்டாத காலத் தொடக்கமுள்ள கோவில் ாறு இத்தலத்தைத் தரிசித்த தென்னிந்திய சிற்ப சரித்திர அவர்கள் தமது கருத்தை வெளியிட்டிருக் கின்றார்கள்.
பூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 523
உயிருள்ள நாகபாம்பு வழிபாடு கூட நயினாதீவில் இருந்ததென, வரலாற்றாசிரியர் சி. எவ் கோர்டன் கம்மிங் குறிப்பிட்டிருப்பதாக வண ஜேம்ஸ் காட்மன் என்பவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
விலை மதித்தற்கரிய மாணிக்கம் பதித்த அரியணை ஒன்று தேவலோக வேந்தனாகிய இந்திரனால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்பெறுமதி வாய்ந்த அரியணைக்காக நாகமன்னர்கள் இருவர் போரிட்டதாகவும், இப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில் புத்தர்பிரான் வருகை தந்து, இவ்வரியணை இந்திரனால் புவனேஸ்வரி அம்பாளுக்கெனப் பிரதிஷ்டை செய்யப்பட்டதென்றே உண்மையினை எடுத்துரைத்து அன்னைக்குரிய இவ்வரியணையை வணங்கிச் செல்லுமாறு வேண்டி அவர்களைச் சமாதானப் படுத்தியதாகவும், அவர்களும் அவ்வாறே பகை நீங்கிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. புத்தர் பிரான் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்ததாகவும், மூன்றாவது தடவை இம் மணிபல்லவத்திற்கு வருகை தந்ததாகவும், அவரின் வருகைக்கு முன்பே இந்திரனால் அமைக்கப்பட்ட பீடமான புவனேஸ்வரி பீடம் இங்கு அமைந்திருந் ததாகவும், இப்பீடத்தைத் தேவர் கோனாகிய இந்திரன் வழிபட்டதாகவும் அறிய முடிகிறது.
“பெரியவன் தோன்றா முன்னர் இப்பீடிகை கரியவன் இட்ட காரணத்தாலும்” (25, 54 55) எனும் மணிமேகலைக் காப்பிய வரிகளால் இதனை உணரலாம். சிவனுக்குத் தில்லை, அண்ணாமலை முதலிய பஞ்ச லிங்கத் தலங்கள் இருப்பது போல பராசக்திக்குக் குண்டலினி யோகத்திலுள்ள ஆறு ஆதாரங்களை உருவகப்படுத்தி ஆறு தலங்களை அமைத்த நம் ஆன்றோர்கள், நயினாதீவை மணிபூரகமாகப் பாவித்து அதற்கு மணிபீடகம் என்று திருநாமம் சூட்டியதாகவும் அறிகின்றோம். அதுமட்டுமன்றிசக்திபீடங்கள் அறுபத்து நான்கினுள் இது இலங்கையில் புவனேஸ்வரி பீடம் எனப் பெயர் கொண்டு இருப்பதும் குறிப்பிட வேண்டிய தொன்றாகும்.
முன்னொரு காலத்தில் நயினாதீவில் உள்ள அம்பிகையை ஒரு நாகம் வழிபட்டதாகவும், பூசித்து வந்ததாகவும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு. ஒரு நாள் அந்த நாகம் அம்பாளைப் பூசிக்கும் பொருட்டு
மயூரமங்கலம்

பூக்களைக் கொய்து கொண்டு, இவ்வாலயத்தின் வடபாற் கடலுக்கு அப்பால் உள்ள புளியந்தீவில் இருந்து கடலூடாக வரும் போது ஒரு கருடன் அதனைக் கொல்லும் பொருட்டு எதிர்த்து வந்தது. கருடனைக் கண்டஞ்சிய நாகம் கடல் நடுவேயுள்ள கல்லொன்றில் சுற்றிக் கொண்டது. கருடனும் நாகத்தை விட்டகலாமல் எதிரேயுள்ள கல்லொன்றில் இருந்தது. அக்கடல் வழியாக மரக்கலத்தில் சென்ற வணிகன் ஒருவன் (மாநாய்கன் என்பர் ஆய்வாளர்) அந்நாகத்தின் பயத்தினைக் குறிப்பால் உணர்ந்து மரக்கலத்தை நிறுத்தி, அக்கருடனை விலகிச் செல்லுமாறு கேட்டான். அவ்வேளை உனது செல்வம் யாவற்றையும் கொணர்ந்து நாகம்மாள் கோயிலுக்குக் கொடுப்பாயானால் விலகிக்கொள்வேன்” என்ற வாக்கு அசரீரியாகக் கேட்டது. வணிகனும் உடன்பாட்டான். நாகம் தனது நன்றியைச் செலுத்தி நயினாதீவை அடைந்து அம்பிகையைப் பூசித்தது. வணிகனும் தனது நாட்டிற்குத் திரும்பினான். அன்றிரவு வணிகனும் மனைவியும் நித்திரை கொள்ளச் செல்லும் பொழுது ஒரு பேரொளி தோன்றி அவர்களின் கண்களை கூசச் செய்தது. அவர்கள் அத்திசை நோக்கிச் சென்ற போது நாகரத்தினக் கற்கள் தம் சயன அறையினுள்ளே இருப்பதைக் கண்டார்கள். நயினை அம்பிகையின் திருவருள் என்னே என வியந்து, நயினாதீவுக்கு யாத்திரை செய்யப்புறப்பட்டார்கள். அவர்கள் நயினாதீவை அடைந்ததும், தீவின் வடகிழக்குக் கடற்கரையில் நாகம்மாளுக்கு ஆலயம் ஒன்றைக் கட்டுவித்தார்கள். ஏழு வீதிகளும் கோபுரம் அமைத்தார்கள். நயினார்பட்டர் என்ற பிராமணக் குருவை பூசகராக நியமித்தார்கள். பூசகராக நியமிகப்பட்ட நயினார்பட்டர் நயினாதீவுக்குத் தெற்கே மண்ணிப்புளி என்னும் இடத்தில் வாழ்ந்தார்கள். என்றும், அக்காணியே பின்பு பட்டர் வளவு என வழங்கப்பட்டது என்றும் கூறுவர். நயினைப்பட்டரின் பெயரால் மணிபல்லவம் நயினாதீவு ஆயிற்று எனலாம். நயினார் பட்டர் ஆதிப்பூசகராக இவ்வாலயத்திற்கு அமைந்த காரணத்தால் நயினார்தீவு என்பது நாளடைவில் மருவி நயினாதீவாக மாறிற்று என்றும் கொள்ளலாம். அவ்வாறே நாகர் வழிபட்டதாலும். நாகம்பூசித்து வழிபட்டதாலும் நாகதீவு என்ற பெயரும் வந்திருக்க
489
مصیب

Page 524
வேண்டும். மேற்குறித்த நாகம் பூசித்த கதைக்குச் சான்றாக நயினாதீவின் வட கடல் நடுவே இரு கற்கள் இன்றும் தெளிவாகக் காணப்படுகின்றன. அவை “பாம்பு சுற்றிய கல்” “கருடன் இருந்த கல்” என்ற பெயர் கொண்டு இன்றும் புராதன வரலாற்றுச் சின்னங்களாக வழங்கப்பட்டும், வணங்கப்பட்டும் வருகின்றன. இவ் அம்பிகையை நாகர் வழிபட்டதாலும், நாகம் பூசித்து வழிபட்டதாலும் நாகேஸ்வரி,நாகபூசணி என்றும் பெயர் அமைந்தது என்றும் கூறுவர். அன்று தொட்டு இன்றுவரை காலாதி காலமாக நடை பெற்றுவரும் யாகபூசையின் போது “நாகராஜேஸ்வரி மந்திரபுஸ்பம் சமர்ப்பயமாகி’ எனச் சொல்லப்பட்டு பூசிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் நாகவழிபாடாக இருந்து நாளடைவில் நாகபூஷணி வழிபாடாக இவ்வழிபாடு வளர்ச்சி பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் இதனால் பெறப்படுகின்றது.
யாழ்ப்பாணக் கச்சேரியில் சைவசமயக் கோவில்களைப் பதிவுசெய்து வைத்திருக்கும் இடாப்பில் (இது 1788 ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது.) இந்நாகபூஷணி அம்மன் ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சில குறிப்புகள் வருமாறு
t இராமலிங்கர் இராமச்சந்திரரால் 1788ல்
கட்டியது (கல்லுக் கட்டிடம்)
2. திருவிழா ஆண்டுக்கொருமுறை ஆனிமாதம்
பத்துத் தினங்கள் நடைபெறும்
புராதன பெருமை வாய்ந்த இவ்வாலயம் அன்று வணிகர்களின் பொருளுதவியினால் விஸ்தரிக்கப்பட்டு விளங்குவதைக் கண்ட போர்த்திக்கீசர் பொருளாசை யாலும், பொறாமையாலும், மதக்காழ்ப்பாலும் இவ்வாலயத்தை அழிக்கத் தொடங்கினர். கோவில் அழிக்கப்பட்டது. (கோவிலை இடித்துப் பெறப்பட்ட கற்களைக் கொண்டு ஊர்காவற்துறையிலே கடற்கோட்டை கட்டப்பட்டது என்பர்) இது கண்டு சைவ மக்கள் மனம் வெதும்பினர். ஆலய உற்சவ அம்பாளை ஆலயத்தின் மேற்குப்பக்கமாகவுள்ள ஆலமரப் பொந்தில் வைத்து வழிபட்டு வந்தனர் “அம்பாள் ஒளித்த ஆல்” என இப்போதும் இம்மரம் வழங்கப்பட்டும், வணங்கப்பட்டும் வருகின்றது. கோவிலை இடித்தபோதும், அடியார்களின் அம்பாள் வழிபாட்டை நிறுத்தமுடியவில்லை. டச்சுக்காரர் ஆட்சியின் பின்னர் மீண்டும் நாகேஸ்வரி ஆலயம்
es

சிறிய அளவில் கட்டப்பட்டது. காலத்துக்குக் காலம் இக்கோவிலில் அனேக திருப்பணிகள் நடைபெற்று வரலாயிற்று. இக்கோவிலின் பெருமைக்கமைய வானுற ஓங்கிய கோபுரம் ஒன்று கிழக்கு வாயிலில் அமைந்துள்ளது. இக்கோபுரம் 1935ல் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலின் விமான புனரமைப்பு வேலை 1951ல் மேற்கொள்ளப்பட்டது. பாண்டி நாட்டுச் சிற்ப முறையில் அமைந்த விமானம் இங்கு அமைக்கப்பட்டது. விமான வேலைகள் முடிவடைந்த பின்னர் பரிவார மூர்த்திகளின் பண்டிகைகளும் திருத்தியமைக்கப்பட்டன. நன்கு புனரமைக்கப்பட்ட இவ்வாலயம் 26. 04, 1951 திகதியன்று மகா கும்பாபிஷேகத்தைக் கண்டது.
1957ம் ஆண்டு வெள்ளோட்டம் விடப்பட்டு,1958ம் ஆண்டின் தேர்த்திருவிழாவன்று திருவீதி உலா வந்த அம்பிகையின் சிற்பச்சித்திரத் தேர் இலங்கையில் வேறெந்த ஆலயங்களிலும் அமைக்கப்படாத சிறந்த சித்திரத்தேராகும். இவ்வாலய வரலாற்றுச் செய்திகள் ஒவ்வொன்றையும் சிற்பங்களாக அழகுற வடித்துப் பொருத்தி வடிவமைக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற திருப்பணிகளைத் தொடர்ந்து 1963ம் ஆண்டிலும் பின்னர் பிரமாண்டமான ஆலயத் தென்கோபுரம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1983ம் ஆண்டிலும் ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்களின் நலன்கருதி, ஆலய வடக்கு வீதியில் கல்யாண மண்டபமும், “இறைபயணிகள் இல்லம்” என்ற பெயர் கொண்ட அழகான மண்டபமும் அமைக்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற பாரிய திருப்பணிகளைத் தொடர்ந்து 1988ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
1960ம் ஆண்டு வரை இவ்வாலயத்தில் பத்து நாள் திருவிழாக்களே நடைபெற்றன. பின்னர் பதினாறு நாட்கள் திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கின. அதன் பிரகாரம் தற்போது வருடந்தோறும் ஆனிமாதத்தில் பதினாறு தினங்கள் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. இவற்றில் கொடியேற்றம், கைலைக்காட்சி, மஞ்சம், பூந்தண்டிகை, சப்பறம், தேர், தீர்த்தம், பூங்காவனம் (கடல் திருவிழா) என்பன சிறப்பான உற்சவங்களாகும். இவ்வாலயத்தில் 1986ம் ஆண்டு நடைபெற்ற அசம்பாவிதத்தினால்,
நயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 525
அம்பிகையின் சித்திரத் திருத்தேர் தவிர்ந்த ஏனைய பிள்ளையார், முருகன் தேர்களும், அம்பிகையின் திருமஞ்சமும் அழிக்கப்பட்டன. பிள்ளையாருக்கான புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டு 1998ல் வீதி வலம் வந்தது. தொடர்ந்து 1999ல் முருகனின் புதிய சித்திரத்தேர் திருவீதி வலம் வந்தது. அம்பிகைக்கான அழகிய திருமஞ்சம் 2000ம் ஆண்டு மகோற்சவத்தின் போது திருவீதி வலம் வந்தது.
நீண்ட நாட்களாக பிள்ளைப்பாக்கியம் இல்லாதவர்களுக்கு இவ் ஆலயத்தில் நாகசாந்திக் கிரியைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பெருஞ்சாந்தி கடல் நடுவே அமைந்துள்ள சமுத்திர மண்டபத்தில் நிறைவேற்றப்பட்டு உரியவர்கள் சமுத்திர தீர்த்தமாடியபின் அம்பிகையின் அருளாசி வேண்டி நாகப்பிரதிஷ்டை செய்து பிரார்த்திக்கப்படுகின்றது.
வேப்பமரத் தோப்பு நிழல் கோயில் வித்தகியாக அம்பாள் வீற்றிருந்த போதும், இவ்வாலயத்தின் தலவிருட்சமாகத் திகழ்வது வன்னிமரமாகும். ஆலயத்தின் பிரதான கிழக்குவாயில் கோபுரத்திற்கு அருகே தென்புறமாகப் பண்டுதொட்டு இன்று வரை ஒரே மாதிரியான தோற்றத்துடன் காலத்தைக் கடந்து நின்று காட்சி தந்து கொண்டிருக்கின்றது இத்தல விருட்சம். இது அடியார்கள் வணங்கிச் செல்லும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நயினாதீவு சுவாமியார் என ஈழத்து மக்களால் போற்றப்படும் முத்துக்குமார சுவாமிகள் (முத்துச்சாமியார்) அவர்களின் விருப்பத்திற்கும் முயற்சிக்கும் வழிகாட்டலுக்கும் அமைய அமைக்கப்பட்டுள்ள, “சித்தாமிர்த புட்கரணி” எனும் புனித தீர்த்தக்கேணியே இத்தலத்தின் புண்ணிய தீர்த்தமாகும். மேற்குக் கரையோரமாக இது அமைந்துள்ளது. வருடாந்தம் ஆனிமாத மகோற்சவத்தைத் தொடர்ந்து ஆனிப்பூரணையில் அம்பாள் இப்புனித நீராடுவதற்கு எழுந்தருளிச் செல்லும் அருட்காட்சி மிகவும் அற்புதமானது. மேலும் மாசி மகம் போன்ற ஏனைய விஷேட தினங்களில் அம்பாள் ஆலயத்தின் முன்பாக உள்ள சமுத்திரத்தில் சமுத்திர தீர்த்தமாடி அடியார்களுக்கு அருள் சுரக்கும் இடமும் உள்ளது. அதேபோல் நாகதோஷ நிவர்த்திக்காகவும், சமுத்திர தீர்த்தம் ஆடுவதற்குரிய இடமும் உண்டு.
மயூரமங்கலம்

பசிப்பிணி தீர்க்கும் நோக்குடன் அருட் கொடையாக ஆபுத்திரனுக்கு வழங்கப்பட்டதே “அமுதசுரபி' என்னும் அட்சய பாத்திரமாகும். இவ்வரலாற்றுச் செய்தியுடன் தொடர்புடைய புண்ணிய தலமாகையால் மகோற்சவகாலங்களில் பெருந்திரளாகக் கூடும் அடியார்களின் பசிப்பிணி போக்கி "அமுதசுரபி" அன்னதான சபையினரின் நிர்வாகத்தின் கீழ் "அமுதசுரபி அன்னதான மண்டபம்’ அமைக்கப் பட்டுள்ளது. வருடந்தோறும் மகோற்சவ காலத்தில் இம்மண்டபத்தில் அன்னதானப்பணி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
காளியம்மன், நயினாதீவு (5)
மூலமூர்த்தி திரிசூலம் பரிவாரமூர்த்தி காளியம்மன் நித்திய பூசை வழிபாடுகள் நடை பெறுகின்றன. வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப் பிராத்தனை நடைபெறும்.
பரீமதுரை மீனாட்சியம்மன், பெருங்குளம், நயினாதீவு தினமும் ஒரு நேரப் பூசை. வெள்ளிக் கிழமைகளிலும் விசேட தினங்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
பூரீமகாமாரியம்மன், புளியங்கடல் ஊர்காவற்றுறை
தீவகத்தில் நயினாதீவு நாகபூஷணி கோவிலையடுத்து பிரசித்தம் பெற்று விளங்கும் பெரிய இவ்வாலயம் நூறு வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டது. தினமும் ஐந்து காலப் பூசை வருடா வருடம் வைகாசி இறுதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் பத்து நாட்களுக்கு திருவிழா நடைபெறும். மூலமூர்த்தி மகமாரியம்மன் பரிவார மூர்த்திகள் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகம், வைரவர்.
பூரீமுத்துமாரியம்பாள், தம்பட்டி நுனிபுரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற் துறையிலுள்ள தம்பாட்டி கிராமத்திலுள்ள வைரவ ராலயத்தில் 100 வருடங்களுக்கு முன் நடைபெற்ற வைகாசிப் பொங்கல் விழாவில் அடியவருக்கு வந்த

Page 526
கலை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட விக்கிரகத்தை நுனிபுரத்தில் வைத்து வழிபட்டுவந்த மக்கள் வேப்பமரத்தடியில் “பத்தினி அம்மன்” என வழங்கி அம்மனைப் போற்றி வந்தனர். கோவில் அமைக்கவெனத் திட்டமிட்டு மக்களின் சகலவித உதவிகளுடன் திருப்பணி ஆரம்பமாகியது. எனினும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளால் பல வருடங்களாய்த் திருப்பணி தடைப்பட்டிருந்தது. மீண்டும் 1976இல் இளைஞர்களால் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1980இல் அம்பிகையைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின் நித்திய பூசைகளுடன் அபிராமிப்பட்டர் விழா, நவராத்திரி, ஆடிப்புரம், திருவெம்பாவை சிறப்பாக நடைபெற்று வந்தன.
1990 ஆனிமாதம் 16ம் திகதி முதல் 1996ம் ஆண்டு ஆனி மாதம் வரை எவ்வித பூசைகளும் நடைபெறவில்லை. மீண்டும் 1998இல் ஆலயப் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சகல பூசைகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
பூாநீமனோன்மணி அம்பாள், பண்டாரபுலம், நாரந்தனை
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறைத் தொகுதியில் உள்ள நாரந்தனைக் கிராமத்தில் காட்டிடையே 1951ம் ஆண்டு பங்குனி மாதம் இரு தொழிலாளர்கள் பெரிய கல்லைக் கண்டுவிட்டு கிளறியெடுக்க முடியாததால் வெடிவைத்தனர். மறுகணமே கலிர் என்ற ஓசையைத் தொடர்ந்து தங்கச் சிலையொன்றைக் கண்டெடுத்து வழிபட்டனர். அச்சிலை அரசிடம் கையளிக்கப்பட்டதால் திருவுருவத்தை வரைந்து வழிபடுகையில் அன்னை கனவில் தோன்றி “நாளை நீ என்னைக் கடலில் காண்பாய்” என்றுரைக்க அடுத்தநாள் கல்லில் சமைத்த நாகத்தைக் கண்டெடுத்து வழிபட்டனர். 1953இல் வீசிய புயலால் நாகத்தின் ஒரு தலை சிதைவுற்றது. ஆலயம் புதிதாக அமைக்கப்பட்டு கடுமையான அம்மை நோய் பரவியதால் சுகாதாரப் பிரிவினர் கிளியைகளைத் தடுக்க பின்பு அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகையை வழங்கிக் கிரியைகள் நடைபெற்றன. அபிராமிப்பட்டர் விழா வருடாவருடம் சிறப்பகக் கொண்டாடப் படுகிறது.இவ்வாலயத்திலே பூரீ

மேருயந்திர பூசையும் நடைபெறுகிறது. 1973இல் புனரமைத்தும் புதிதாக வைரவர் கோவில் அமைக்கப்பட்டும் 1973இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மக்களின் மகத்தான உழைப்பால் தேர், தேர் மண்டபம் என்பன உருவாக்கப்பட்டுள்ளன. 25வது வருடத்திலே கொடியேற்றம், தேர்த்திருவிழா நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது.
முத்துமாரிஅம்மன், பெருங்குளம், வேலணை
வேலணையில் கிழக்குப் புறமாக ஒரு நெடுங்குளம் உள்ளது. அந்தக் குளத்தின் அருகில் வீற்றிருந்து அருள் பொழியும் பூரீ முத்துமாரி அம்மன் கோவில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமாகும். ஒல்லாந்தர் காலத்துப் பழமையான பத்திரங்களில் உள்ள கோவில் பதிவேடுகளில் இக் கோயிலைப்பற்றிய குறிப்பு உண்டு தற்போது இருக்கும் கர்ப்பக்கிரகம் 1875ம் ஆண்டளவில் கட்டப்பட்டது என அறியக் கூடியதாக இருக்கிறது.
இக்கோவிலைப் பற்றிய பழமை வரலாற்றை ஓரளவே அறியக்கூடியதாக இருக்கிறது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின்போது ஓர் அன்பரால்பெருங்குளத்தின் வடகரையில் கண்டெடுக்கப்பட்ட முத்துமாரி அம்மன் சிலையைத் தற்போது கோவிலுள்ள இடத்துக்கு வடக்கே நெடுங்கேணி என்ற காணித்துண்டில் தாபித்து வழிபாடு நடைபெற்றது. இதன் பின் இன்னொரு அன்பர் வழங்கிய காணித்துண்டில் 1795ம் ஆண்டளவில் இன்றைய கோவில் அமைக்கப்பட்டது. அதன் பின் 1875ல் கோவில் புனரமைக்கப்பட்டு தூபி அர்த்த மண்டபம், சபா மண்டபம், மாமண்டபம், வசந்த மண்டபம், சுற்றுமதில்கள், கூரைகளுக்கு ஒடுகள் பதித்தல் போன்ற திருப்பணிகள் நடைபெற்றது.
1986 கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1991ல் கோபுரம் அமைக்கத் தொடங்கிய வேளையில் தீவுப் பகுதியில் நடைபெற்ற இடப்பெயர்வினால் இத்திருப்பணி தடைப்பட்டு கோவிலும் நித்திய பூசைகளின்றி ஐந்து வருடங்கள் பூட்டப்பட்டு இருந்தது.
1996ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பூசைகள், விழாக்கள் மறுபடியும் தொடங்கப்பட்டன. மூன்று காலப்பூசை நடைபெறுகிறது. வருடாந்தம் 10 நாட்கள் மகோற்சவம் நடைபெறும்.
மயூரபதி பூgபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 527
பூரீமனோண்மணிஅம்மன், குறிக்காட்டுவான்
யாழ்ப்பாண மாவட்டத்தென்பாலுள்ள புங்குடுதீவிலே மேற்குப்புறத்திலே 3ம் வட்டாரத்தில் குறிக்காட்டுவான் கிராமத்திலே, நூற்றாண்டுகளுக்கு முன்னரே, பேச்சிஅம்மன் என அழைக்கப்பட்டு வரும் பூரீ ஜெகன்மாதா மனோன்மணி அம்மனாலயம் அமைந்துள்ளது. இந்து சமுத்திர ஆழ்கடலிலே அலையுடன் வந்து குறிகாட்டுவான் கரையோரமாகச் சேர்ந்த அம்மன் சிலையை ஊரவர் தேவவாக்குப்படி ஆலயம் அமைத்து வழிபடத்தொடங்கினர். வாகனங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து பிரயாணம் செய்யக்கூடிய ஒரே ஒரு துறைமுகமான குறிகாட்டுவானிலே அன்னையருளால் எதுவித அனர்த்தங்களுமோ அழிவுகளுமோ நடைபெறவில்லை. இவ்வாலயத்திற்கு மேற்கேதான் நயினாதீவு - நாகபூஷணி அம்மனும் எழுந்தருளி இருக்கின்றார்.
வருடாந்தத்திருவிழா ஆனி மாதத்திலே கொடியேற்றத்துடன் ஆரம்பித்து தேர்த்திருவிழாவுடன் நிறைவுறும் இதைத்தவிர தைப்பூசம், தைப்பொங்கல், மாசிமகம் குறிப்பாக இத்தினத்தில் அன்னை புங்குடுதீவு முழுவதும் இரவுபகலாக ஊர்வலம் சென்று அருள் பாலிப்பார். நித்திய பூசை 3 நேரமும் நடைபெற்று வந்துள்ளன. எனினும் தற்போது நாட்டு நிலைமையால் ஒரு அம்மையார் ஒரு நேரப்பூசையாக திருத்தொண்டு செய்து வருகின்றார்.
குழந்தை இல்லாதோருக்குக் குழந்தை வரத்தையளிக்கும் அம்மனுக்கு கடந்த 10 வருடங்களாக ஒரு நேரப்பூசையைத்தவிர வேறு எதுவும் நடைபெறுவது இல்லை. தமிழிலேயே பூசைகள் நடாத்தப்படுகின்றன.
பூரீஇராஜராஜேஸ்வரிஅம்மன், இத்தியடிப்புலம், புங்குடுதீவு
இக் கோவில் கண்ணகி அம்மன் கோவில் என்று வழங்கப்படும். இது சுமார் 130 வருடங்ககள் பழமையான ஆலயம். இரை தேடப் போன கால் நடைகள் திரும்பாத போது அவைகளைத் தேடிச் சென்றபோது அவை ஒரு பேழையைச் சுற்றிப்படுத்திருந்ததாகவும், அதைத் திறந்து பார்த்த போது அதற்குள்ளிருந்து இந்தக் கண்ணகி சிலை
மயூரமங்கலம்

கண்டெடுக்கப்பட்டதாகவும் வரலாறுஉள்ளது. மூலமூர்த்தி கண்ணகி,பரிவாரமூர்த்திகள் ராஜராஜேஸ்வரிபிள்ளையர், முருகன், பத்திரகாளி, நடராஜர், வைரவர் ஆகியோர் தினமும் நான்கு காலப் பூஜை
வருடாந்த உற்சவம் சித்திரை மாதம் பெளர்ணமியன்று தேர்த்திருவிழாவாகக் கொண்டு பதினைந்து நாட்கள் நடைபெறும். ஆடிப்பூரம், வைகாசி விசாகப் பொங்கல் ஆகியன சிறப்பான உற்சவங் களாகும்.
பரீமனோன்மணிஅம்பாள், அனலைதீவு
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த அனலைதீவிலே கிட்டத்தட்ட 13ம் நூற்றாண்டளவில் எழுவடிவயல் காணியில் நின்ற எழுமரமொன்றை வெட்ட இரத்தம் பெருக்கோடியதால், அவ்விடத்தில் விளக்கேற்றி வழிபட்டதன் மூலமே இவ்வாலயம் தோற்றம் பெற்றது. காலப் போக்கில் எழுமரம் அழிந்திடவே அவ்விடத்தில் வேம்பும் அரசும் பிணைந்தவாறு வளர்ந்து ஆலயத்தின் விருட்சமாகின. சப்த மாதர்களான பிராம்மி, மகேஸ்வரி, வராகி, வைஷ்ணவி, மகேந்திரி, கெளமாரி, சாமுண்டி எனும் திருவுருவங்களை ஆலயத்தில் எழுந்தருளச் செய்தும், இவர்களது அற்புதங்களைச் சிலா விக்கிரகமாகச் சுவரிலே பதித்தும் வழிபட்டு வந்தார்கள்.
நோயுற்ற வேளைகளில் நேர்த்தி வைத்தும், நேர்த்தியாகத் தேங்காயெண்ணை வழங்கியும் கன்னியர் 7 செவ்வாய் விரதமனுட்டித்தும் மகப்பேறில்லாத தம்பதியர் ஈரஆடையுடன் 108 தடவை தலவிருட்சத்தை வலம் வந்தும் தமது குறைகளைப் போக்கிக் கொண்டனர். 70 ஆண்டுகளுக்கு முன் சீமெந்து ஆலயமாக அமைத்து, மணிக்கோபுரமும் அமைக்கப் பெற்றது. இற்றைக்கு 1008 குடங்கள், 1008 சங்ககள், 1008 இளநீர்கள் வைத்து அபிஷேகம் நடத்தப்பட்டுக் கோயில் முழுவதும் அபிஷேக நீரினுள் மூழ்கியது. அதற்கேற்றவாறு கோமுகித் துவாரம் அடைக்கப்பட்டு கதவு வழிகளில் ஒரடி உயரதுக்கு மண்ணால் தடுக்கப்பட்டு இருந்தது. உடனே பெருமழை பெய்து வெள்ளம் புரண்டோடியது. இவ்வாறான சக்தி மிக்க அன்னைக்கு 1982இல் புனருத்தாரண வேலைகள் ஆரம்பித்து ஸ்தூபி, மகாமண்டபம், பரிவார மூர்த்திகளுக்கான ஆலயங்கள், ஸ்தம்பமண்டபம், வசந்த

Page 528
மண்டபம், யாகசாலை, பாகசாலை, வாகனசாலை, குருசாலை போன்றன அமைக்கப்பட்டு 1988ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தேறியது.
மகோற்சவம், வைகாசிப் பெளர்ணமியைத் தீர்த்தமாகக் கொண்டு 10 தினங்கள் நடைபெற்று வருகிறது. சித்திரை மாத 3வதுவெள்ளிவிசேட பூசையும் பொங்கலும், ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை, சிவராத்திரிஎன்பனவும் பெளர்ணமிகளில் திருவிளக்குப் பூசையும் சிறப்பாக நடைபெறுகின்றன. 1988இலிருந்து 5 காலப் பூசைகளாக நடைபெற்று வருகின்றன. அனலைதீவு எழுமங்கை நாச்சிமார் பதிகம், மனோண்மணி அம்பாள் திருவூஞ்சற்பா, பராக்கு லாலி, மங்களப்பாடல்கள் எனப்பல இசைப்பாக்களும் அம்பாள் மீது அன்பர்களால் பாடப்பட்டுள்ளன.
பூரீ கெளரியம்பாள், துறைமுகம், அனலைதீவு போர்த்துக்கீசர் காலத்தில் அழிக்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. தினமும் சாயரட்டைப் பூசை நடைபெறுகிறது.
பூரீஇராஜராஜேஸ்வரிஅம்பாள், அனலைதீவு 4 அம்பாள் தான் தோன்றிமூர்த்தி தினமும்மூன்று காலப் பூசை. புரட்டாதி மாதம் அலங்காரத் திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெற்றுவறுகிறது.
பூரீமுத்துமாரியம்மன், 5ம் வட்டாரம், நெடுந்தீவு மூல மூர்த்தி அம்பாள் பரிவார மூர்த்தி வைரவர் நித்திய பூசை உண்டு. ஆனியிற் பொங்கள் விழா நடைபெரும்.
பூரீ காளிஅம்பாள், மெலிஞ்சியபதி, நெடுந்தீவு மூல மூர்த்தி அம்பாள். பரிவார மூர்த்தி பிள்ளையார். தினமும் இருகாலப் பூசை உண்டு. ஆடி அமாவாசையன்று தீர்த்தம் நடைபெறும். சிவராத்திரி நவராத்திரி ஆகிய தினங்களில் விசேட வழிபாடுகள் உண்டு.
494

பூரீபிடாரிஅம்மன், திருக் கோயிலுக்காடு, நெடுந்தீவு
மூல மூர்த்தி அம்பாள் பரிவார மூர்த்தி வைரவர் நித்திய பூசை உண்டு நவராத்திரி திருவெம்பாவை சித்திரா பெளர்ணமி நாட்களில் விசேட பூசைகள் உண்டு.
கும்பநாயகியூரீமுத்துமாரிஅம்மன், மணற்காடு, காரைநகர்
காரை நகரில் உள்ள மணற்காடு எனுமிடத்தில் இக்கோயில்அமைந்துள்ளது. ஈழத்துச் சிதம்பர தல புராணப் படி போர்த்துக்கீசர் காலத்துக்கு முந்தைய வரலாறு கொண்ட ஆலயம். போர்த்துக்கேயரால் இவ்வாலயம் அழிக்கப்படும்போது அவர்களுக்கு அம்மை நோய் வந்ததாகவும், அதனால் அவர்கள் பின்வாங்கிச் சென்றனர் என்றும் கூறுவர்.
மூலமூர்த்தியாக முத்துமாரி அம்மன் வீற்றிருக்கிறார். பரிவாரமூர்த்திகளாக விநாயகர்,வள்ளி தெய்வானை சமேதராக கப்பிரமணியரும் வைரவரும் வீற்றிருக்கின்றனர். மகோற்சவம் பங்குனி மாதத்தில்பதினைந்து நாட்கள் நடைபெறுகிறது. மகோற்சவத்தைத் தொடர்ந்துவேள்வியும், பொங்கலும் சிறப்பானதொரு உற்சவமாக நடைபெறும்.
இக்கோவிலில் 1947, 1985, 1999ஆண்டுகளில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பூரீமுத்துமாரிஅம்மன், களபூமி, Ua GaGolaGOL, 45/10/1545d
காரை நகரில் உள்ள பெருங்கோவில்களில் பாலாவோடை பூரீ முத்துமாரி அம்மன் கோவில் வரலாற்றுப் பழமைமிக்க கோவிலாகும். இக்கோவிலின் மகோற்சவ காலத்தின் ஏழாவது நாளில் கண்ணகி வழிபாட்டுக்குப் பெயர் போன வற்றாப்பளைக் கோவிலிலிருந்து அம்மன் இங்கு வருகை வந்துவைகாசி விசாகம், பெளர்ணமி தினங்களில் அருள்பாலித்துச் செல்லுவதான ஐதீகம் இங்கு நிலவி வருகிறது.
நாகவழிபாட்டைக் கொண்ட நாகர்களின் செல்வாக்கைக் கொண்ட பிரதேசமாக இவ்வூர் இருந்ததென்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் உள்ளன. இதைவிடக் கனபூமி எனும் பிரதேசம் போர்க்களமாக இருந்ததென்றும் கூறுவர். இக்கோவிலில் ஐந்து தலைநாகச் சின்னத்தின் கீழ் வீற்றிருக்கும் அம்மன் மூலமூர்த்தியாக கொற்றவை தெய்வத்துக்குரிய அம்சங்களுடன் வீற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மயூரபதி பூர் பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 529
தொடக்கத்தில் மடாலயமாக இருந்த ஆலயப் ஆகம விதிகளுக்கமைய புனரமைக்கப்பட்டு 1942ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் விநாயகர் சுப்பிரமணியர், பைரவர்,நவக்கிரகம் சண்டேசுவரி ஆகிய தெய்வங்கள் பரிவார மூர்த்திகளாக வீற்றிருக்கின்றனர் 1977ልህ புனரமைக்கப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வருடாந்த மகோற்சவம் வைகாசி விசாக பெளர்ணமியைத் தீர்த்த உற்சவமாகக் கொண்டு 10 நாட்கள் நடைபெறுகிறது. 11ம் நாள் பூங்காவணத் திருவிழா நடைபெறும். இவ்விழாவைத் தொடர்ந்து “வேள்வி' எனும் பொங்கல் வைபவம் மடைபரவுதல் வழிவெட்டல் போன்ற கிரியைகளுடன் நடைபெறுவது விசேட விழாவாகும்.
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின்போதும் அம்பிகை உதயத்தில் கடலுக்கு தீர்த்தமாடச் செல்வது வழக்கம்.
கண்ணகை அம்மன், வலந்தாலை, காரைநகர்
1725 ஆம் ஆண்டளவில் ஸ்தாபிக்கப்பட்டது. பழம் பெருமை வாய்ந்தது. ஏட்டுச் சுவடியளும், ஆவணங்களும் உண்டு மூலமூர்த்திசந்தனமரத்திலான கண்ணகை அம்மன், வைரவரும் உண்டு. தினமும் இரு காலப் பூசை நடைபெறுகிறது. வருடாந்த உற்சவம் சித்திரை வருடப்பிறப்பை அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமைகும்பம் வைத்துவிளக்கேற்றி ஒன்பதாம் நான் திருவிழா நடைபெறும்.
முரீஇராஜராஜேஸ்வரி பாலகாடு, காரைநகர் மூல மூர்த்தியாகிய அம்பாளோடு பிள்ளையார், வேல், வைலவர் ஆகிய மூர்த்திகளும் ஆலயத்தில் உளர். தினமும் இருகாலப் பூசை சூரப்பூரத்தை இறுதியாகக் கொண்டு முதல் பத்து நாட்களுக்கு அலங்கார உற்சவம் நடைபெறுகின்றது. இவ்வாலயம் போர்த்துக் கீசர் காலத்தில் அழிவுற்றுப் பின்னர் புனரமைக்கப்பட்டது. இன்று கடற்படைத் தளத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.
துர்க்கை அம்மன், நீலிப்பந்தனை, காரைநகர்
மூலமூர்த்தியாக துர்க்கை அம்பாள் வீற்றிருக்கிறாள். பரிவாரமூர்த்திகளாக விநாயகர்
மயூரமங்கலம்

முருகன், வைரவர் அமர்ந்திருக்கின்றனர். பத்து நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. தினமும்மூன்று காலப் பூசை நடைபெறுகிறது. 1999இல் மகாகும்பாபிஷேகம் , நடைபெற்றது.
மாதா, களபூமி, காரைநகர் மூலமூர்த்தியாக அம்மன் அமர்ந்திருக்கின்றாள். ஒல்லாந்தர் கால வரலாற்றில் இக்கோவிலைப் பற்றிய குறிப்பு உண்டு. இரண்டு காலப் பூசை நடைபெறுகிறது. இப்போது கோவில் புனரமைக்கப்படுகிறது.
காளிஅம்மன், சந்திரந்தை, காரைநகர்
மூலமூர்த்தியாக காளி அமர்ந்திருக்கின்றாள். தினமும் இரண்டு காலப்பூசை நடைபெறுகின்றது.
பூரீமுத்துமாரிஅம்மன் கோவில் வலந்தலை, காரைநகர் தினமும் இரண்டு காலப்பூசை நடைபெறுகின்றது. விசேட தினங்களில் அபிஷேகம், பூசை நடைபெறுகிறது.
நாகம்மாள், கிராவத்தை, காரைநகர்
தினமும் இரண்டு காலப் பூசை நடைபெறுகிறது. விசேட தினங்களில் அபிஷேகம், பூசை நடைபெற்று வருகிறது.
சிவகாமியம்மன், மண்கும்பான், அல்லைப்பிட்டி மூலமூர்த்தி அம்பாள். பரிவாரமூர்த்தி வைரவர். தினமும் ஒரு நேரப் பூசை. கும்பாபிஷேகத்தினம் வைகாசியில் சிறப்புற நடைபெறும்.
கண்ணகி அம்மன், 1ம் மாவட்டம், மண்டைதீவு
ஆலயம் 1942ல் தாபிக்கப்பட்டது நேர்காவியமும், கண்ணகி நேர்காவியமும், கண்ணகி தோத்திரப் பாடல்களும் உண்டு. மூலமூர்த்தி கண்ணகி பரிவார மூர்த்திகள் பிள்ளையார், முருகன், வைரவர், காத்தவராயர், வருடந்தோறும் ஆனிப்பெளர்ணமி முதல் கிரியைகள் ஆரம்பமாகி காவிய ஏடு வாசித்தல், பொங்கல், தீக்குளித்தல் என்பன எட்டுநாட்களுக்குத் திருவிழா நடை பெறும்.

Page 530
496
ရွိ
இ
|
3)
رسی
V/ー
SN
பன்
ஆதிசக்தியாகவும் வராக பன்றித்தலைச்சி என்னும் திவ்விட அம்பாளும், பூரீஇராஜ ராஜேஸ்வரி அருள்பாலித்துக் கொண்டிருக்கிற ஈழவள நாட்டின் கண் உல் அம்மன் தலமும் ஒன்றாகும். ஈழ கோயில்,செல்லச்சந்நிதி,தெல்லிப் கோயில்களில் இதுவும் ஒன்று, ! பழம்பெரும் புதுமைமிக்க தலம்; ை ஆனைமுகன் என்பது அ பன்றித்தலையையுடைய தெய்வம் என்றும், பண்டு தொட்டு இத்தல என வழங்கி வருவதாகக் கூறுவ பெயரே அருளாட்சியுள்ள பெயரா பங்குனித் திங்களிற் பக் வருபவர்கள் எல்லாம் பொங்கலுக் தாமும் உண்டு, அடியார்க்கும் வழ அன்ன ஆகாரமாகவும் நின்று அ வாளி தீர்த்தமாவது தன் தலை முழுநாளும் பூசையும் அபிஷேகமு பன்றித்தலைச்சி அன்னையிடம் காவடி எடுத்தும் பக்தர்கள் வ்ரும் கொடிய தொற்று நோய் அகன்றுவிடும். கண்நோய் சுகம் ஏழைகளைக் கைவிடாள். அவள் தீராத நோய்களைத் தீர் மூர்த்தி, தலம், தீர்த்த விசேஷங்க
 

ாழ்ப்புான DT6)LLD
Oj56OIL nitritë
றித் தலைச்சி அம்மன் ச் சிரந்தனை மாற்றிய அன்னை தலமாகவும் விளங்கும் ப கூேடித்திரத்தில் பூரீ கண்ணகை அம்பாளும், பூரீசிவகாமி அம்பாளும், பூரீ சக்கர வாசினி அம்பாளும் எழுந்தருளி ார்கள். ாள பழம்பெரும் பதிகளுள் புதுமைமிக்க பன்றிச் தலைச்சி நாட்டிலுள்ள கதிர்காமம், நல்லூர், நயினாதீவு, வல்லிபுரக் பளை துர்க்கை அம்மன் போன்று அருள்பாலிக்கும் அற்புதக் இது அகில இலங்கை மக்களும் அன்புடன் வழிபடும் ஒரு சவமும் தமிழுந் தழைத்தோங்கும் தலம். பூனைமுகத்தையுடைய பிள்ளையாரைக் குறிப்பதுபோலப் என்றும், மாட்டுத்தலையைப்பன்றித்தலையாக்கிய தெய்வம் த்தினள் என்றும், பொருள்பட்டு பண்டித்தலைச்சி தெய்வம் ர். எது எப்படியாயினும், பன்றித் தலைச்சி அம்மன் என்ற க இன்று விளங்குகிறது. தகோடிகள் வைகறை தொடங்கி வந்த வண்ணமிருப்பர். கு வேண்டிய பொருட்களுடன் வந்து, பொங்கிப்படைத்துத் ங்கி அருள் பெற்றுச் செல்வர். அம்மாளாச்சி தீர்த்தமாகவும், னைத்துயிரையும் காக்கும் சக்தியாக விளங்குவாள். ஒரு பில் ஊற்றாத பக்தர் இல்லை என்றே கூறலாம். அன்று ம் பொலிய விளங்கும். தாயிடம் வரும் குழந்தைகள் போலப், பல திக்கிலுமிருந்து ஆடியும் பாடியும் பிரதட்சணம் செய்தும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். களும், கலகங்களும் அன்னை பெயரைச் சொல்லவே பெற்றோர் கொடுக்கும் கண்மடல்கள் அனந்தம். அன்னை ஏழைகளின் தெய்வம். ந்தருளுகின்ற பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மனின் ள் பிரபலமானவை.
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 531
கார்த்திகைச் சோமவார விரதமும், பங்குனித் திங்கள் விரதமும் அனுஷ்டிக்காத மக்களை யாழ் குடாநாட்டுப் பகுதியில் காணமுடியாது. பெரும்பாலும் இப்பகுதி மக்கள் கோயிலுக்குச் சென்று பொங்கி வந்தே விரதம் முடிப்பது வழக்கம்.
கோயில் வரலாறு :-
யாழ் மாவட்டத்தில் மட்டுவில் அத்தாய்வளவு எனும் காணியில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மனை மூலமூர்த்தியாகக் கொண்ட ஒரு கோயில் காணப்பட்டிருத்தல் வேண்டும். எனினும் பின்பு கி. பி. 1750 ஆம் ஆண்டில் வைரக்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இவ்வாலயத்தில் 1900 ஆம் ஆண்டு வரை பங்குனித் திங்கள் விழாக்களும், சுவாமி வீதிவலம் வருவதும் நடைபெறவில்லை. பின் இவை மாலை 5 மணிக்கு முன் நடைபெற ஏற்பாடாயிற்று. திருக்குளமும் திருத்தியமைத்து வைர (வெள்ளை) கற்களால் படிக்கட்டுகளும் கட்டுவிக்கப்பட்டன. 1939இல் நித்திய பூசை நடைமுறைக்கு வந்தது. 1940ஆம் ஆண்டளவில் வெளி மண்டபம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், சபை மண்டபம், தரிசன மண்டபம் என்பன கட்டப் பெற்றன. 1946இல் கண்ணகை அம்மனின் தாமிர விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மார்கழித் திருவெம்பாவையில் கொடியேற்றத் திருவிழாவும் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டளவில் சுற்றுமதில், வைரவர் கோவில், யாகமண்டபம், மணிக்கோபுரம் என்பன கட்ட ஆரம்பிக்கப்பட்டன. நான்கு நேர நித்திய பூசையும் நடைமுறைக்கு வந்தது. 1955இல் வைரவ கோயில் கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1958ல் சிவகாமி அம்மன் தாமிர விக்கிரகம் செய்யப்பட்டுக்கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1961ல் பூரீ சக்கர இயந்திரம் செய்துவைத்துக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1964இல் மூலமூர்த்திக்கும், பரிவார மூர்த்திக்கும், சனிஸ்வரருக்கும், சண்டேஸ்வரிக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1968ல் அசையா மணிக்கோபுரத்தில் மணி வைக்கப்பட்டுக் குடமுழுக்குச் செய்யப்பட்டது. பிள்ளையார் கேர்விலும் கந்தசுவாமியார் கோவிலும் அமைத்துக் குடமுழுக்கு நடத்தப்பட்டது. 1974இலாகும். புதிய களஞ்சிய அறைகள், மடைப்பள்ளி, பணிமனை, கொடித்தம்பத்துக்குச் செப்புக் கலசம், தம்பம் கொட்டகை, புதிய மஞ்சக்கொட்டகை, சிறுவாகன சாலை, தம்பக் கொட்டகைத்தனம் என்பன காலப்போக்கில்
மயூரமங்கலம்

கட்டப் பெற்றன. மூலஸ்தானம், நீராவி மண்டபம், விமானம் என்பனவும் சிவகாமியம்மன் கோவில், பிள்ளையார் கோவில், கந்தகவாமி கோயில், வைரவர் கோயில், நாகதம்பிரான் கோவில், சனிஸ்வரன் கோவில் ஆகியவற்றின் விமானங்களும் வைரக்கற்களால் ஸ்தம்பக்குறடும் அழகாக அமைக்கப்பட்டு 1991-07-04ல் மகாகும்பாபிஷேகமும், தொடர்ந்து மண்டலாபிஷேகமும் நடைபெற்றது சிறப்பு நிகழ்வாகும்.
ஆதி சக்தியாகவும் அன்னைத் தலமாகவும் விளங்கும் பன்றித்தலச்சி என்னும் திவ்விய க்ஷேத்திரத்தில் பூரீ கண்ணகை அம்பாளும், பூரீசிவகாமி அம்பாளும், பூநீராஜராஜேஸ்வரி அம்பாளும், பூரீ சக்கிரவாசினி அம்பாளும் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழவள நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான இவ்வா லயத்திலுள்ள அம்மனை பன்றித் தலையையுடைய தெய்வம் என்றும், மாட்டுத் தலையைப் பன்றித் தலையாக்கிய தெய்வம் என்றும் கூறுவர். பங்குனித் திங்கட் கிழமைகளில் பொங்கிப் படைத்துப் பூசையும் அபிஷேகமுமாக வழிபட்டுப் பலன் பெறுவர். தீராத நோய்களைத் தீர்த்தருள்கின்ற அம்மனுக்குப் பக்தர்கள் பொங்கும் போது பத்து மைல்களுக்கப்பால் பார்த்தாலே பக்தரின் யாக புகை (பொங்கல்) முகில்களில் முட்டுவதைக் காணலாம்.
மார்கழித் திருவெம்பாவை ஆரம்ப நாளில் கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பிக்கின்றது.
கண்ணகை அம்பாள், சிட்டிவேரம் (சுட்டிபுரம்)
இவ்வாலயம் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சியில் வரணியம்பதியில் சந்தனம், ஆல், அரசு, வேம்பு கொக்கட்டி, மா போன்ற தெய்வீக விருட்சங்கள் சூழ்ந்த சோலையின் நடுவே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமைந்து காணப்படுகிறது. சிட்டிவேரம் என்பது கால ஓட்டத்தில் சுட்டிபுரம் என அழைக்கப்படுகிறது. கண்ணகி ஜம்புத்துறையில் இறங்கி வந்து பத்து இடங்களில் உறைந்துசென்று கைலாசத்தை அடைந்தார். இவ்வாறுபத்துஇடங்களில் உறைந்தபோது முதலாவது காரைநகர் கல்லுவத்தை கோயில், இரண்டாவதுமானிப்பாய் கட்டுடை அம்மன், மூன்றாவது மட்டுவில் பன்றித் தலைச்சி அம்பாள், நான்காவது மண்டுவில் கண்ணகை அம்பாள், ஐந்தாவது
G497)

Page 532
வரணிசிட்டிவேரம் கண்ணகை அம்மன், ஆறாவது கச்சாய் கண்ணகை அம்மன், ஏழாவது அறத்தி அம்மன், எட்டாவது பொறிக்கடவை அம்மன் என்றவாறு ஆலயங்கள் தோன்றியதாகக் கூறப்படுகிறது. பத்தாவது வற்றாப்பழைக் கண்ணகை அம்மனாகும்.
முதலாம் கஜபாகு மன்னன் கண்ணகி வழிபாட்டை ஈழத்தில் அறிமுகப்படுத்தி ஆதரித்ததற்கு, வரணி ஊடாகப் பழைய காலத்தில் ராஜதெரு சென்றதற்கான தடயங்கள் காணப்படுவது சான்றாக அமைகின்றது. இதுவே பழைய கண்டிவீதியாகும். தமிழகத்தைச் சேர்ந்த ஞானியர் பரம்பரையினர் இவ்வாலயத்தைப் பூசித்து வந்துள்ளனர். இப்பரம்பரையில் வந்த ஒருவர் பனம்பழக்கடகத்தைத் தூக்க முடியாதிருக்கையில் மூதாட்டியொருவர் உதவிபுரிந்து விட்டு மறைந்துவிட்டார். அன்றிரவு கனவில் அருளியபடி ஆரம்பித்த ஆலயவழிபாடு1812இல் செங்கற்கள் கொண்டு புதுப்பிக்கப்பட்டது. 1938இல் இவ்வாலயத்தைக் கற்றளி ஆக்கினர். முதலாவது கும்பாபிஷேகம் 1938ஆம் ஆண்டு ஆனிமாதம் 13ம் நாள் நடைபெற்றது. புதிய சித்திரத்தேர் 1974இல் உருவாக்கப்பட்டு 26.05.1980இல் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1983இலிருந்து நிருத்த மண்டபம், தம்ப மண்டபம், மடப்பள்ளி, களஞ்சியம், தண்ணிர்த்தாங்கி, விநாயகராலயம், வசந்த மண்டபம், வெளி மண்டபம் என்பன அடியார்களின் உதவியுடன் பூர்த்தியாக்கப் பட்டன.
இவ்வாலயத்தில் புராதன கோவலன் கண்ணகி ஏடு பாதுகாக்கப்பட்டுப் படிக்கப்பட்டு வந்தது. இவ்வாலயத்திற்குக் காவலாகத் தெற்கே எருவன் விநாயகர், வடகிழக்கே மாசேரி புராதன குருநாதர் கோயில், வரணி இயற்றாலை வீரபத்திரர், குடமியன் விறுமர் ஆகிய எட்டு ஆலயங்கள் அணிசெய்து வருகின்றன.
1942களின் பின் சைவக் குருமாரால் வேதாகம முறைப்படியான வழிபாடுகள் நடைபெறுகின்றன. நித்திய இருகாலப் பூசைகளும் திங்கட்கிழமைகளில் விசேட வழிபாடும் நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்துடன் வரும் திங்களுக்குமுன் 15வது நாளில் வரும் திங்கள் பாக்குத் தெண்டலுடன் ஊருக்கு அறிவிக்கப்பட்டுப் பொங்கல் ஆலயத்தில் நடைபெறும். விசேட அபிஷேகமும் 15 தினங்கள் உற்சவமும் நடைபெறும். 8ம் நாள் வேட்டைத்திருவிழாவும் 12ம் நாள் சப்பறம், 13ம் நாள் தேர், 14ம் நாள் தீர்த்தமும் நடைபெறும். பங்குனித்
498 )

திங்கட்கிழமைகளில் விசேட அபிஷேகம், குளிர்த்தி, உற்சவம் என்பன நடைபெறும். நேர்த்திக்கடன் செலுத்தவும், நீர்க்கஞ்சி பெறவும் அடியார்கூட்டம் அணிதிரளும். மேலும் நவராத்திரி, மானம்பூ, கேதாரகெளரி நோன்பு, தைமாத அமாவாசையில் அபிராமிப்பட்டர் விழா, ஆடிப்பூரம், பெளர்ணமி தோறும் திருவாசகம் முற்றும் ஒதுதல், அமாவாசை தோறும் அபிராமி அந்தாதி ஒதுதல் போன்ற நைமித்திய விழாக்களும் நடைபெறுகின்றன. அறநெறிப் பாடசாலையும் திங்கள், வெள்ளிக் கிழமைகளிற் கூட்டுப் பிரார்த்தனையும் இடம் பெறுகின்றன.
இவ்வாலயம் இந்து கலாசார அமைச்சினால் தென்மராட்சியிலே யாத்திரிகர் தலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. நல்வாழ்வுக்கும் கண்பார்வை வேண்டியும் அம்மன் நோயிலிருந்து நீங்கவும் தீக்குளித்தல், குளிர்த்தியிடல், காவடி, கற்பூரச்சட்டியெடுத்தல், கண்மடல் வழங்கல், மடிப்பிச்சை எடுத்தல் என்பனவற்றை அடியார்கள் நிறைவேற்றுகின்றனர். வரணியில் அருளாட்சி செய்து வரும் அன்னைபாதம் பணிந்து எல்லோரும் நல்வாழ்வு வேண்டுவோம்.
முரீஇலஞ்சியாரண்யம் சோலை அம்மன், மண்டுவில்
இவ்வாலய வரலாற்றை கி.பி.1600ம் ஆண்டிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. அக்காலத்தில் யாழ்ப்பாண அரசனாக இருந்த பரராஜ சேகரனிடத்திலிருந்து 1658ல் போர்த்துக்கீசரும் அதன்பின் 1711ல் டச்சுக்காரரும், அதன்பின் ஆங்கிலேயரும் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்தனர். போர்த்துக்கீசருடைய ஆட்சிக்காலத்தில் மாரமத்து அதிகாரியாகவிருந்த வான் டீவாற் என்ற அதிகாரி வீதி அமைப்புச் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, அவன் ஏறிவந்த குதிரை அம்பாள் ஆலயத்திற்கு அருகாமையில் வந்தபோது நோய் கண்டு வீழ்ந்தது. அக்காலத்தில் இலஞ்சியராணியம் அம்மன் ஆலயத்தின் அர்ச்சகராகவிருந்த கந்தரென்பார் இலஞ்சித் தீர்த்தத்தை அக் குதிரைக்குத் தெளித்து விபூதியிட்டுச் சுகப்படுத்தி வைத்ததன் காரணமாக அவ்வதிகாரி ஆலயத்தை வணங்கி அதற்கு நிலத்தையும் ஒதுக்கி மானியம் செய்து கொடுத்து வீதி அமைப்பையும் செய்து கொடுத்ததாக வரலாறு கூறுகின்றது.
யூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 533
மருதமும், முல்லை நிலமும் இணைந்த தண் நில அமைப்பில் அமைந்த, மண்டுவில் என்ற நீர் நிலையைக் காரணப் பெயராகக் கொண்ட இடத்தில் இலஞ்சியாரணியம் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட அடர்ந்த வானுயர்ந்து நிற்கும் சோலையில் அமைந்துள்ளது. இலஞ்சியென்றால் மகிழ் அல்லது வற்றாத நீர்ஊற்று என்று பொருள்படும். இங்கே மருத்துவமூலிகை வகையினதான மகிழமரங்களும் வற்றாத நீர் ஊற்றும் அமைந்துள்ளமை தனித்துவமான சிறப்பாகும். இவ்வாலயத்தின் தலவிருட்சமாக மகிழமரம் அமைந்துள்ளது. இம்மரத்தின் பட்டை, வேர், பூ, காய், பழம் அனைத்துமே ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படுகின்றன.
இச் சோலையின் கண்ணே அமைந்துள்ள பாவநாசினி என்னும் நீர் நிலையில் நீராடுபவர்க்கு மனநோய்களும், சொறி, சிரங்கு, பார்வைக்குறைவு முதலிய பலரோகங்களும் நீங்கப்பெறுதல் உண்டாம். பல நோயாளர்கள் சுகப்பட்டுள்ளனர். மூன்று நூற்றாண்டுகள் பழைய கற்கட்டினைக் கொண்ட இந்த நீர் நிலைமைப் பார்த்தால் ஓர் சிறு குன்றினுள் ஒரு சில வாளி தண்ணிரே உள்ளது போலத் தெரியும். ஆயினும் அள்ள அள்ள வற்றாது இருக்கும்.
இவ்வாலயம் ஆகம நெறிகட்கு அமைவாக அமைந்துள்ளமையும் சிறப்பாகும். நடுவே பொழி கற்களால் அமைக்கப்பட்ட கர்ப்பக்கிருகமும், மஹாமண்டபம், ஸ்நபனமண்டபம் ஆகியனவும், சூழவே பரிவார மூர்த்திகளாக விநாயகர், கண்ணகி, மஹாமாரி, பைரவர், முனீஸ்வரர் மற்றும் காளிஅம்மாளும் உள்ள அமைப்பு உண்டு. காளி அம்பாள் ஆலயம் சுமார் 500 மீற்றர் தொலைவில் சோலைக்கு வெளியே தனியான ஆலமரச் சூழலில் அமைந்து விளங்குகின்றது. கர்ப்பக்கிருகத்தில் மனோண்மணி அம்பாள் அபயவரத கரங்கள் உள்ளிட்ட நான்கு கரங்களுடன் அழகுற வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள்.
ஆனிமாதப் பூர்வ பக்க ஷஷ்டியிலிருந்து கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகி பெளர்ணமி தினத்தில் தீர்த்தத்துடன் நிறைவாகும்.
மூன்று நூற்றாண்டுகளின் முன்பு முருகைகளாலும், சுண்ணாம்புக் கலவையினாலும் கட்டப்பட்டிருந்த ஆலயம் 1971ல் பொழிகற்களால் புதுப்பிக்கப்பட்டு அவ்வருடம் ஆனி உத்தர
மயூரமங்கலம்

நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 1986ல் சுற்றுமதில் களஞ்சியம், வாகனசாலை முதலாம் பல திருப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு மீளவும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது சுற்றுமண்டப வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுத் திருப்பணி வேலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பூரீமஹாமுத்துமாரிஅம்பாள், upt'(SG)?Gib
யாழ்ப்பாணத்திலே மட்டுவிற்பதியிலே புத்தூர் - சாவகச்சேரி வீதியருகே பன்றித் தலைச்சி அம்மனுக்கு அணித்தாகவுள்ள இவ்வாலயம் “ஆவரசம்பிட்டி வளவு" என்ற காணியில் உள்ளது. வேம்பு வன்னி, நெல்லி, அரசு என்பன தலவிருட்சங்களாகும். LOTIJTERIJ606ST சங்கரித்ததனால் மகாமாரி எனப்பெயர் பெற்ற அம்மன் கபாலம், கத்தி, பாசம், உடுக்கு எனும் நான்கு ஆயுதங்களையும் ஏந்தியுள்ளார். வீரசைவர் என்போர் கும்பத்தில் அம்பாளை எழுந்தருளச்செய்துவிளக்கேற்றிப் பூசைசெய்து பொங்கி, மடைவைத்து நீர்க்கஞ்சி வார்த்து வழிபட்டு வந்தனர். கரகம், காத்தவராயன் கூத்து, மாரியம்மன் தாலாட்டுப் படித்தல் போன்றன இங்கு நடைபெறும். எனினும் இவர்களிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இரு ஆலயங்கள் தோன்றின.
சுமார் 250 ஆண்டுகளுக்குமுன் கொட்டிலில் வழிபட்டவர்கள் தற்போது அன்பர்களின் உதவியுடன் மணிக்கூட்டுக் கோபுரம், இராஜகோபுரத்துடன் கூடிய ஆலயமாக்கி வழிபட்டனர். 05.07.1965 அன்று முத்துமாரியம்பாளுக்கும், பரிவாரமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து,ஒவ்வொரு வருடமும் பத்துத் தினங்களுக்கு அலங்கார உற்சவம் இடம்பெறும். 13.06.1971 இல் 2வது கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் அசையாமணிக்குரிய கோபுரம் அமைக்கப்பட்டு 03.07.77 அன்று கும்பாபிஷேகம் இடம் பெற்றது. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை போற்றிய இவ்வாலயம் 14.06.1990 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1994இல் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இருநேரப்பூசைகளுடன் வெள்ளிக் கிழமைகளில் விசேட பூசையும் சித்திரா பூரணையை மையமாகக் கொண்டு 10 தினங்கள் மகோற்சவமும் நடைபெறுகின்றன.
499

Page 534
ஞானதுர்க்கை, துர்க்காபுரி மிருசுவில்
யாழ்ப்பாணம் கண்டி வீதியில் கொடிகாமம்பளை நகரங்களுக்கிடையில் மிருசுவிலில் மருதங்குளம் வீதியில் அமைந்துள்ள இவ்வாலயம் தோன்றிய வரலாறு அற்புதமானது. நாஸ்திகனாக வாழ்ந்த ஒருவரும் அவர்தம் மனைவியும் இல்லறம் நடத்தி வருகையில், இரவு நேரங்களில் மணியோசை கேட்பதுவும், சில உருவங்கள் நடமாடுவது போன்ற ஒலிகள் ஒலிப்பதுவும், வெண்துகிலுடுத்த உருவம் தெரிவதும் எனப்பல நிகழ்வுகள் இடம் பெற்றன. எனினும் இந்நாஸ்திகர் அதனை நம்பாதிருக்க, அம்பாளும் பல்வேறு விதமாகத் தன்னை வெளிப்படுத்தவும் அவரும் அதனை மதிக்கவில்லை. 1979இல் அவரது மனைவி கலையாக ஆடி "நான் ஓர் தான்தோன்றீஸ்வரி. என்னை இவ்விடத்தில் ஆதரிக்கவும்" என அம்மன் வேண்டவும் அதனையும் உதாசீனப்படுத்தினார். பின் அவ்விடத்திலிருந்த வேப்பமரத்தைத்தறித்தும் விட்டார். அதன்பின் அவரது குடும்பம் வருமானமிழந்து கடனாளியாகி அல்லற்படத் தொடங்கியது.
அப்போதுதான் தன்தவற்றை உணர்ந்து அன்னையின் பக்தனாக மாறி ஓர் கல்லை வைத்து அம்பிகையை வணங்கத் தொடங்கினார். வேப்ப மரத்தருகே ஓரிடத்திலே இருக்கும் பொருளை எடுத்து ஆலயங்கட்டுமாறு அம்பாள் கட்டளையிடவே, இவரும் மந்திரவாதியும் சேர்ந்து எடுக்கமுனைய ஒரு பெரிய கமண்டலம் மிக மிக ஆழமாகக் காணப்பட்டது. அக்கமண்டலத்தை எடுத்துக் கழற்றிக் கொட்டியதும், தங்க நாணயங்களாகச் சிதறிப்பின் ஒன்றாகின. இவர்கள் எடுக்க முனைய அது மாயமாக மறைந்தது. இதனை எடுக்கும் போது வெட்டிய குழியே தற்போது தீர்த்தக் கிணறாகவுள்ளது.
துர்க்கையை வணங்கத் தொடங்கி மூன்றாம் மாதம் அளவில் உயிருள்ள வலம்புரிச்சங்கொன்று இருக்கக் கண்டு அதனையும் வணங்கி வந்தனர். 1985ஆம் ஆண்டிலிருந்து திங்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் வாக்களித்து நோய் தீர்த்தருளுகின்றாள் அன்னை. ஆலயச் சூழலை அம்பாளே காத்தருளுவதால் அச்சூழலை துர்க்காபுரி” என மக்கள் அழைக்கின்றனர். 1985இல் ஆரம்பித்த
GOO

திருப்பணிகள் அன்னையின் வழிகாட்டலுடன் 1990இல் முடிவுற்று 2.7.1990 அன்று கும்பாபிஷேகம் நிறைவேறியது. காராம்பசுவில் ஆறு திருக்கரங்களுடன் மூலமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் அன்னை அருள் பாலித்த வண்ணமுள்ளாள்.
வாரிவன மஹாமாரிஅம்மன், 4,1G/454Gaff
யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சித் தலைநகர் சாவகச்சேரியில் (வாரிவனத்தில்) 1800ம் ஆண்டிற்கு முன்பே தோன்றிய சக்தியாலயம் இதுவாகும். ஆரம்பத்தில் சாக்தாவாரி மூலிகைகள் நிறைந்திருந்த மையால் வாரிவனம் எனவும் பின் மருவி சாவகச்சேரி எனவும் அழைக்கப்படுகின்றது. தலவிருட்சமாகிய புன்னை மரத்தடியில் எழுந்தருளியிருக்கிறாள் அம்பாள். 1900 ஆம் ஆண்டில் பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டு இருப்பிடத்தை மாற்றவென முயற்சிக்கையில் அம்பாள் உருவில் தோன்றி "மாற்ற வேண்டாம்” எனக் கூறினார். இதனையும் மீறிச் செயற்பட 1910இல் கொள்ளை நோய் வந்து பலர் மாண்டனர். பின் 1920இல் புன்னைமரத்தடியில் சிறிய கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தது.
1965இல் அன்னதான மடமும் 1966இல் மணிக்கூட்டுக் கோபுரமும் உருவாக்கப்பட்டு 1967இல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1994இல் கொட்டகைகளும் 1998இல் மகாமண்டபம், தரிசனமண்டபம், விக்னேஸ்வரர் விக்கிரகம் என்பனவும் அமைக்கப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
வைகாசி விசாகத்தை அந்தமாக வைத்து 15 நாட்கள் மடிப்பிச்சை எடுப்பர். சித்திரா பெளர்ணமியன்று அன்ன அபிஷேகம், ஆடிப்பூரத்தில் தேரில் பவனி, நவராத்திரி கொலுப்பூசை, பங்குனி உத்தரம், பங்குனித் திங்களில் அபிஷேகம், நீர்க்கஞ்சி வார்த்தல் என்பன சிறப்பாக நடைபெறும். இருவேளைப் பூசைகளும் திங்கட்கிழமைகளில் 3 நேரப் பூசைகளும் இடம் பெறுகின்றன. ஆலய வட கிழக்கு மூலையில் கலைமண்டபம் அமைக்கப்பட்டுக் கிராமியக் கலை நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த 10 வருடங்களாக நாட்டுச் சூழலால் ஆலயம் பொலிவிழந்து திகழ்கிறதாயினும், படிப்படியாக முன்னேற்றம் காண்கிறது.
யூரபதி பூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 535
பரீதுர்க்காதேவி, தாழையம்பதி, சாவகச்சேரி
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றால் மிகவும் விசேடமாக அமைந்துள்ளது, சாவகச்சேரி (தாழையம்பதி) அருள்மிகு பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம். இவ்வாலயம் அமைந்துள்ள இடம் சாவகச்சேரி கண்டி வீதியிலிருந்து சுமார் 1 1/2 கி.மீ தூரத்தில் உள்ளது. மட்டுவிலுக்கும் கல்வயலூருக்கும் இடையில் விளைவேலி என்னும் கிராமத்தில், வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய தாழைமரங்கள் நிறைந்துள்ள சோலை சூழ்ந்த திவ்விய ஸ்தலத்தில், வடக்கு நோக்கி வீற்றிருந்தருள் பாலிக்கிறாள் அன்னை பராசக்தி அருள்மிகு பூரீ துர்க்கையம்பாள்.
இவ்வம்பிகையின் ஆலயம் ஏறக்குறைய 1805ம் ஆண்டுக்கு முன் பழமை வாய்ந்தது. அம்பிகை கைகளில் சங்கு சக்கரம் அபயம் வரதம் என்பவற்றுடன் பாதத்தில் மகிடன் தலையைக் கொண்ட மகிஷாசுர மர்த்தனியாகவும், விஷ்ணு துர்க்கையாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்கள். ஆதிகாலத்திலிருந்து அம்பிகை பஞ்சலோகத்திலான விக்கிரகமாக மூலாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்துள்ளாள். அதன் பின்பு இந்தியாவில் சிதம்பரத்திலிருந்து தருவிக்கப்பட்ட அழகுறு சிலாவிக்கிரகம் 1956ம் ஆண்டு பிரதிஷ்டைசெய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்துள்ளது.
இத்தலத்தின் தலவிருட்சமாக ஆலயத்தின் தென்கிழக்குப் பகுதிமுழுவதும் தாழைமரங்கள் சூழ்ந்துள்ளன. அத்தாழை மரத்தில் எந்நாளும் பூவிருக்கும். ஆனால் காய்ப்பதில்லை. பாம்புகளிருக்கும். ஆனால் எவருக்கும் தொந்தரவு செய்வதில்லை. அம்பிகையின் அருளாட்சிக்குட்பட்ட முன்னைய பெரியார்கள், அம்பிகை அத்தாழை மரங்களுக்குள் ஒர் கிழவியாக நடமாடிக் கொண்டதாகவும் சொல்வார்கள். இத்துணைச் சிறப்பினால் அம்பிகை தாழையடியம்மன், தாழையம்பதி துர்க்கையம்மன் என்றெல்லாம் நாமம் கொண்டுள்ளார். ஆலயத்தின் பின்புறமாக மட்டுவிலிலிருந்து நுணாவிலூடாகச் சாவகச்சேரி வரையுள்ள தெரு தாழையம்பதி வீதி என்னும் பெயர் பெற்றுள்ளது.
பக்தர் நித்திய நைமித்தியங்களையும், திருப் பணிகளையும் வழுவாது சிறப்புற நடாத்தி வருகின்றனர். திருப்பணிகளும் நிறைவுற்று ஆலயம் தற்போது அழகுடன் மிளிர்கிறது.
மயூரமங்கலம்

ஆலயத்தின் 1வது கும்பாபிஷேகம் 1956ம் ஆண்டிலும், இரண்டாவது மகா கும்பாபிஷேகம் 1981ம் ஆண்டிலும் நடைபெற்றது. பின் மகாகும்பாபிஷேகம் 1998ம் ஆண்டிலும் நடைபெற்றன.
ஆலயத்தில் மூன்று காலப்பூஜை நித்தியமும் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை இராகுகாலப் பூஜை உற்சவம் பூரணை விசேட பூஜை என்பன விசேடமாக நடைபெறுகின்றன. 1956ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த அலங்கார உற்சவம் 1989ம் ஆண்டு முதல் மகோற்சவமாக புதிய சித்திரத் தேர் உற்சவத்தோடு ஆடி அமாவாசை அன்று தீர்த்தம் ஈறாகப் பத்துத் தினங்கள் நடைபெறுகின்றன. இத்துடன் ஆடிப்பூரத்துக்கு 108 தீப பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
பூநீவீரமாகாளிஅம்மன், இலந்தித்திடல், சரசாலை யாழ் நகரிலிருந்து 10கல் தொலைவில் சரசாலையில் அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஆலயம் இலந்தித்திடல் அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோவில்.
சென்ற 20ஆம் தசாப்தத்தின் பிற்பகுதியில் ஏறக்குறைய 1927ஆம் ஆண்டளவில் காளிதேவியின் பிரதிஷ்டையும், முதலாவது கும்பாபிஷேகமும் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. லண்டனில் இருந்து வந்த கண்டாமணியைக் காளி கோயிலில் அதற்கு தகுந்த கோபுரத்தை அமைப்பித்து ஏற்றிவைத்தனர். கும்பாபிஷேகத்தின் பின் உருஎறத் திருவேறிய காரணத்தினால் நித்திய நைமித்திய பூஜைக்கு சிவப்பிராமணர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு ஆலய நிர்வாகம் செவ்வனே நடைபெறத் தொடங்கியது.
நவராத்திரி பூசையும், அதில் இடம் பெறும் பூரீ சக்கர பூசையும், மானம்பூ எனப்படும் மகிஷாசுர சங்காரமும் நடைப்பெறும்.
1981ஆம் ஆண்டு ஆலயகுருக்கள் சிவபூரீ சி. சிதம்பரநாதக் குருக்களைத் தலைவராகக் கொண்ட திருப்பணிச்சபை அமைக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, பிள்ளையார் கோவில், வசந்த மண்டபம், வைரவர் கோவில்,யாகசாலை, மடைப்பள்ளி, களஞ்சியம், முன் கொட்டகை என்பன புதிதாக நிர்மாணிக்கப்பட்டன.
60D

Page 536
காளிதேவியின் திருவருளாள் யாவும் இனிதாக முடிவுற்று 1985ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி இரண்டாவது மகாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.
1999இல் குருக்கள் ஐயாவைத் தலைவராகக் கொண்டு ஒரு திருப்பணிச் சபை தெரியப்பட்டது. உள் வீதிச்சுற்றுக் கொட்டகை, வீதி முழுவதும் சீமெந்துத் தளம் போடுதல், வர்ணப் பூச்சுகள் முதலிய பலவிதமான திருப்பணிகள் விரைவில் நடந்தேறின. கோவிலின் அருகே தென்புறத்தில் குருவாசம் ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது.
திருப்பணிகள் ஓரளவு நிறைவுபெற்று பிரமாதி ஆண்டு ஆணித் திங்கள் 17ஆம் நாள் (01.7.1999) வியாழக்கிழமை சிங்க லக்கின சுபமுகூர்த்தத்தில், புனருத்தாரண மூன்றாவது மகா கும்பாபிஷேகம் பஞ்ச குண்டபசுடி மகாயகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
வேலம்பிராய் கண்ணகை அம்மன் தச்சன் தோப்பு, நாவற்குழி
தென்மராட்சியின் தென்மேற்குப் பகுதியில் நாவற்குழி-கேரதீவுகடற்கரை ஓரமாக இந்த பழம்பெரும் ஆலயம் அமைந்திருந்தது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புதுப்பிப்ப்பபதற்காக இடிக்கப்பட்ட நிலையில் இது ஐம்பது வருடங்களைக் கடந்தும் திரும்பக் கட்டியெழுப்பப் படவில்லை. தலவிருட்சமாக ஆலமரம் சுமார் பதினைந்து அடி விட்டத்தைக் கொண்ட அடிமரமாக விளங்க விழுதுகளைத் தாங்கி நிற்கிறது. இவ்வாலயத்தில் காணப்பட்ட தேர், அன்னவாகனம் என்பவற்றின் சிதைவுகள் இன்று வரை இவ்வாலய சுற்றாடலில் பெருமை சாற்றி நிற்கின்றன. இங்கும் பொங்கல், பூசை வழிபாடுகள் ஏனைய அம்மன் ஆலயத்தைப் போலவே நடந்தேறி வருகின்றன.
கண்ணகை அம்மன், கைதடி
மூலமூர்த்தி கண்ணகை அம்பாள். பரிவார மூர்த்திகள் ஆறுமுகசுவாமி, வைரவர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூசை நடைபெற்று வருகின்றது. வருடாந்த உற்சவம் பங்குனி மாதத்தில் நடைபெறும். தலவிருட்சம் அரசு. கண்ணகை அம்பாள் சரித்திரம், புராண படனமாக உள்ளது. இது 1947ல் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம்.
G02D

கண்ணகை அம்மன் (துர்க்கை அம்மன்) விளைவேலி, கல்வயல் “தாளையடி அம்மன்” என ஆதியில் அழைக்கப்பட்ட கல்வயல் - விளைவேலி கண்ணகை அம்மன் கோயில் மட்டுவில் சந்திக்கு அண்மையாக வயலின் நடுவே அமைந்துள்ள தென்னஞ்சோலையில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் தாளை மரங்கள் தல விருட்சமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அம்மனின் புதுமையான சக்தி காரணமாக இங்கு காணப்படும் பாம்புகள் அடியவர்களை ஒரு போதும் தீண்ட வருவதில்லை. தற்போது துர்க்கை அம்மன் என்ற பெயரில் இவ்வாலயம் பிரசித்திப் பெற்று வருகின்றது.
Guффилüри06јт, கண்டி வீதி, நுணாவில்
மூலமூர்த்தி அம்பாள். பிரதி திங்கட் கிழமையும் மாலைப் பூசை நடைபெறுகின்றது.
நகரக் காளியம்மன், சாவகச்சேரி
அரசாங்க மருத்துவமனை அருகே அமர்ந்துள்ள இந்த வீரமாகாளி தேவியானவள் தன்னை வழிபடும் அடியவர்களுக்கு பெருஞ் செல்வத்தையும் சுகவாழ்வையும் அருளுகிறாள். பிரசவ வலியால் வேதனைப்படும் தாய்மார்கள் பலர் இந்த காளிதேவியின் புதுமையை அறிந்து நேர்த்திவைத்து உடனே சுகப்பிரசவம் ஆவது அறியப்பட்டு உள்ளது. இத்தேவியை இரவு நேரங்களில் நகருக்கு அருகில் சந்தர்ப்ப வசமாக உலாவுவோர் முன்பு தரிசனம் காண்பது வழக்கமாயிருந்தது.
கண்ணகை அம்மன், கச்சாய்
தென்மராட்சியின் தெற்குப் புறமாக யாழ்ப்பாணக் கடனீரேரியை அடுத்து வரிசையாகப் பல ஆலயங்கள் அமைந்துள்ளன. சாவகச்சேரி நகரிலிருந்து கிளாலி நோக்கிச் செல்லும் வீதியில் 4 மைல் தொலைவில் கச்சாய் கண்ணகை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலிலிருந்து கொடிகாமம் கிளாலி ஆகிய இடங்கள் நோக்கி இரு வீதிகள் செல்கின்றன. வயலும் தென்னஞ்சோலைகளும் அழகிய தோற்றம் தரும் இக்கோயில் பல ஆண்டு காலமாக மக்களின் காவல் தெய்வமாய்ப் பண்புடனும் பரவசத்துடனும் போற்றி வழிபடப்படுகிறது.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 537
கண்ணகை அம்மன், கச்சாய் 1885ம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. “கண்ணகை வரலாறு”என்னும்புத்தகத்தில் இவ்வாலயம் குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள், வெள்ளிநாட்களில் ஒரு நேரப் பூசை. வைகாசி விசாகத்தன்று பொங்கல், ஆனிமாதம் அத்த நட்சத்திரத்தன்றுமணவாளக் கோலத் திருவிழா நடைபெறுகின்றன.
பூரீஇராஜராஜேஸ்வரிஅம்மன், கொடிகாமம்
நூறு வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் மூலமூர்த்தி இராஜராஜேஸ்வரி அம்பாள் தினமும் இருகாலப்பூசைகள் நடைபெறுகின்றன. வைகாசி அமாவாசைக்கு மூன்றாம் நாள் கொடியேறி உற்சவம் நடைபெற்று பெளர்ணமியில் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.
கோயிற்குளத்து அம்மன்,
மிருசுவில், சாவகச்சேரி கண்ணகை அம்மன் மதுரையை எரித்து விட்டு கோபந்தணிந்து இலங்கைக்கு வந்து களைப்பாறிய இடங்களில் இதுவும் ஒன்றென்பது நம்பிக்கை. மூலமூர்த்தி மகேஸ்வரி அம்பாள், பரிவார மூர்த்திகளாக விநாயகர், சுப்பிரமணியர், கண்ணகை அம்மன், வைரவர் ஆகியவர்கள் உளர். இருகாலப்பூசை நடைபெறுகிறது.
மயூரமங்கலம்
 

ஆனி பூர்வபக்க ஷஷ்டித் திதிக்குக் கொடியேறிப் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.
கண்ணகை அம்மன், மேளாய் நல்லூர், பூநகரி
இந்த ஆலயம் நல்லூர் ஆலங்கேணி மக்களின் தாய்த் தலமாக விளங்குகின்றது. பல நூற்றாண்டுகள் முந்தியது. மூலமூர்த்தி கண்ணகை அம்பாள். பரிவாரமூர்த்திகள் பிள்ளையார், முருகன், ஐயனார், வைரவர், நாகதம்பிரான். நித்திய பூசை உண்டு. விசேட தினங்களில் விசேட பூசைகள் உண்டு.
அறத்தி அம்மன்,
புலோப்பளை, பச்சிலைப்பள்ளி
1931ம் வருடத்தில் இயற்றப்பட்ட கண்ணகி அம்மன். மூலமூர்த்தி கண்ணகி அம்பாள். பரிவார மூர்த்திகள், பிள்ளையார், சிவன், முத்துமாரியம்பாள், நாகதம்பிரான், வைரவர் ஆகியோர் உள்ளனர். இருநேரப் பூசைகள் நடைபெறுகின்றது. வைகாசி பூரணைப் பொங்கல், சிவராத்திரி விழா என்பனவும், சித்திரை மாதத்தில் மணவாளக் கோலமும் நடைபெறுகின்றன.
முத்துமாரியம்பாள், (ஈஸ்வரிஅம்பாள்) வரணி
இவ்வாலயத்தில் தினமும் இருகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. ஆவணி மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது.

Page 538
ή
உல்லியனொ ஈழமணித் திருநாட்டின் வடமராட்சியில் வதிரியம்பதி உ உள்ளது.
ஆதியில், வதிரி உல்லியெ ஒர் வேப்பமர நிழலின் கீழ், குடிசை கடல் கடந்து வந்ததாக அறியப் அவ்விடத்தில் இருக்க விரும்பு தம்பதியினர் அன்னையின் கடாட் அதன் பின்பு அங்கு வந் அவருக்கே அமைந்த ஓர் புனித இ அன்று தொட்டு ஆலயம் வழிபாட்டுத் தலமாகப் பரிமளித்து வரலாறு ஆகும்.
இன்றும் இவ்வாலயச் கு தருமரங்களும் சூழ இயற்கை அழ இற்றைக்கு இருநூற்றை மேலாக) இவ்வாறு அமைந்த அணுக்கிரகத்தையும் கண்டும் பெற் ஆவணித் திங்கள் ரேவதி நட்ச குடமுழுக்குத் தினத்தினையே அ தோறும் பதினான்கு நாட்களில் பதினைந்தாம் நாளன்று தேர் வருகின்றனர்.
வதிரியூர் கனகசிங்க மு கருத்தாக்களாகத் தொடர்ந்து அட 1987ல் தைத்திங்களில் (19 கும்பாபிஷேகம் இனிது நிறைவு ெ
 
 
 

ாழ்ப்புான (D(T6)LU(D
வடமராட்சி
ல்லைக் கண்ணகி அம்பாள், வதிரி வடபால், யாழ் மாவட்டம், கட்டைவேலிக் கோவில்பற்று,
ல்லியனொல்லைக் கண்ணகை அம்பாள் தேவஸ்தானம்
னொல்லைக் கண்ணகி அம்பாள் தேவஸ்தானப் பகுதியில் ச அமைத்து, வாழ்ந்துவந்த, வயதான தம்பதியினரின் முன், ப்பட்ட வெண்துகில் உடுத்த மூதாட்டியொருவர், தான் வதாகக் கூறி மறைந்தமையையிட்டு அவ்வயோதியத் சத்தால் அவ்விடத்தைவிட்டு அகன்றனர். த வெண்துகில் மூதாட்டி அம்பிகை என்று உணரப்பட்டு, இடமாகக் கொள்ளப்பட்டு வழிபாடியற்றப்பட்டது. அமைந்த இடம், வதிரியம்பதி வாழ் சைவாபிமானிகளின் வந்ததென்பது தொன்று தொட்டு வழங்கும் கர்ணபரம்பரை
பூழல் மனோரம்மிய மிக்கதாயும், தோட்டங்களும் நிழல் குடன் மிளிர்கின்றது. ம்பது வருடங்களுக்கு முன்பு (இரு நூற்றாண்டுகளுக்கு இந்த ஆலயத்தை அன்னையின் அருளாட்சியையும், ]றும் அனுபவித்த அவ்வூர் மக்கள் புனர்நிர்மாணஞ் செய்து, த்திரம் கூடும் சுபவேளையில் குடமுழுக்காட்டினர். இக் ம்பாளின் அலங்கார உற்சவகாலமாகக் கொண்டு வருடம் அம்பாளுக்கு அலங்கார உற்சவ விழாக் கொண்டாடி, உற்சவமும், தீர்த்தோற்சமும் வெகுசிறப்பாகச் செய்து
தலியாரின் வழித்தோன்றல்களே இவ்வாலத்தின் தரும ம்பாளின் ஆலய வளர்ச்சிக்கு உழைத்தவர்கள். 87.02. 09) இறுதியாக புனருத்தாரணம், அட்டபந்தன மகா பற்றது.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 539
இக்காலப் பகுதியில் ஆலயத்தின் நிறைவு செய்யப்படாத பகுதிகள் யாவும் வெளிநாட்டு உள்நாட்டு அம்பாளின் அடியார்களுடைய மனநிறைவான நிதி வளத்துடன் 1999ஆம் ஆண்டில் இனிதே பூர்த்தி செய்யப்பட்டது.
தற்போது பலவித அனர்த்தங்கள் மத்தியிலும், இவ்வாலய நித்திய, நைமித்திய பூசைகளும், வழிபாடுகளும் எதுவித இடையூறுமின்றித் தொடர்ந்து வருகின்றன.
பூநிமிந்திரன் கண்ணகை அம்பாள்
யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள துன்னாலை என்னும் ஊரின் மத்தியில் வலப்பாகமாய் கோவிற்கடவை சித்தி விநாயகரும், இடப்பாகமாய் அல்லையம்பதி முருகப் பெருமானும் பெரு ஆலயங்களாய் அமைய இரு ஆலயங்களின் நடைதூரத்தில் நடு மத்தியே அமைந்த ஆலயம் தான் ழீ மிந்திரன் கண்ணகை அம்பாள் ஆலயம்.
இங்குள்ள ஆலயங்களிலே சுயம்பு ஆலயம் (தான்தோன்றி) என்கின்ற பெருமை பூரீ மிந்திரன் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கே உண்டு. இவ்வூர் மக்களால் “மிந்திரன் அம்பாள்” என்றே இவ்வாலயம் அழைக்கப்படுகின்றது. இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே நிலம் தோண்டும்போது சிலம்பும், சிறு கண்ணகை அம்மன் எழுந்தருளி விக்கிரஹமும் வெளிவந்தன. அதேபோல் ஆலய ஈசான மூலையில் சிறு மலை உண்டு. நிலம் தோண்டும் போது இரத்தம் பீறிடவும் அந்த மலை தென்பட்டது. நிலச்சொந்தகாரனுக்கு விநாயகர் கனவில் தோன்றி தன்னை பூஜிக்கும்படி கூறவே அதன்படியே அந்த இடத்தில் விநாயகர் வழிபாடு தொடங்கிற்று. இன்றும் அந்த விநாயகர் ஆலயத்தின் உள்ளே அந்த மலைக்கே பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன. அத்தோடு மலை வெட்டுபட்ட மறுவும் உண்டு. ஒரு ஆலயத்தை நாம் எடுத்துக்கொண்டால் ஆலயப் பிரகாரத்தின் முதற்கோவில் விநாயகர் ஆலயமாகவே அமையும். ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் “சுயம்பு'ஆலய சிறப்பும், பெருமையும், நிறைவாய், விநாயகர் கோவில் இருக்க வேண்டிய இடத்திலே ஞானவைரவ பெருமானும் வைரவர் அமைய வேண்டிய ஈசானமூலையில் விநாயகர் கோவிலும் அமைந்திருப்பதே விசித்திரமான சிறப்பம்சமாகும். இந்த ஆலய கர்ண பரம்பரை வரலாற்று கூற்றை நிரூபிக்கும் வகையில் இவ் ஆலயங்கள் அமைந்திருப்பதே மேலும் சிறப்பையும் அருளையும் தருவனவாகும்.
மயூரமங்கலம்

சக்தியும், அருளும் நிறைந்த அம்மனாக யூரீ மித்திரன் அம்பாள் ஆலயம் திகழ்கின்றது. இவ்வாலயம் காலங்காலமாக அம்பாளை “சுயம்பாக”க் கண்டெடுத்த அவ் இடத்தின் உரிமையாளர்களே பூசகர்களாக நிர்வாகத்தையும், நித்திய பூஜைகளையும் நடாத்தி வருகின்றனர். விசேட உற்சவங்கள் அந்தண சிவாச்சாரியார்களால் நடாத்தப்படுகின்றது.
இந்த ஆலயத்தில் ஆடிப்பூர தினத்தைத் தீர்த்த உற்சவமாய் கொண்டு. பத்து தினங்கள் அலங்கார உற்சவம் நடைபெறுவது உண்டு. ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் “குங்கும அர்ச்சனை’ உபயம் நடைபெறுவதுண்டு. கரு வறையிலே மூல மூர்த்தியாக ழரீ கண்ணகா பரமேஸ்வரியும், ஈசான மூலையில் கோவில் உள்ளே சென்றவுடன் இடப்பாகம் விநாயகர் ஆலயமும் ஆலயத்தின் உள்ளே விநாயகரின் ஆதித் தோற்றமான மலையும் எழுந்தருளி விநாயகர் விக்கிரஹமும் அழகுற அமைந்துள்ளன. பிரகாரத்தை சுற்றி வந்தால் வலப்பாகத்தினிலே விநாயகர் ஆலயம் அமையவேண்டி இடத்தில் பூரீ ஞான வைரவ பெருமான் பிரதிஸ்டை செய்யப்பட்ட வைரவர் ஆலயம். ஆலயத்தின் பின்புறத்தே ஆலய விமானத்தின் மேல் குடை விரித்து நிழல் தரும் அமைப்பாய் அழகிய கொண்டல் மரம் மங்களமாய் மஞ்சள் நிறப் பூக்களுடன் காட்சி தரும். வெளியே பெரு மண்டபமும் வெளிவீதியின் ஈசான மூலையில் தீர்த்தக்கேணியும், வெளிப்பிரகார தெற்குப் பகுதியில் சிறிய ஞான வைரவர் கோவிலும் அமைந்துள்ளன.
உச்சில் புவனேஸ்வரி அம்பாள், கரணைவாய்
யாழ்க் குடா நாட்டிலே வடமராட்சிப் பிரிவின் மையப்பகுதியிலே கருணைவாய் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் கீழ்த் திசையிலே கரவையம்பதியை மருவிய மருதநிலச் சூழலிலே உச்சில் என்ற குக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் மாணிக்கவளை என்னும் நன்னீர்த் தடாகத்தின் அருகே இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தைச் சூழச் சிவன், விநாயகர், முருகன் முதலானோர்க்கு இந்து ஆலயங்கள் அமைந்துள்ளன. மேலும் புவனேஸ்வரித் தாயானவள் தம்முடன் கண்ணகாதேவியைப் பக்கத்தே அமரச் செய்து அருளாட்சி புரிவது புதுமையிலும் புதுமை.
இவ்வாலயம் ஏறத்தாழ 1870ஆம் ஆண்டளவிலே மாவிலங்கை மரநிழலிலே தென்னங்கீற்றுக் கொட்டிலிலே

Page 540
சைவ மரபினரான பொன்னுஞானியர் என்னும் பெருமகனால் ஆரம்பிக்கப் பட்டதாகவும் 1910-1912ஆம் ஆண்டு காலத்தில் பொழிந்த சுண்ணாம்புக் கல்லினால் மண்டபங்கள் நிர்மாணிக்கப்பட்டு வளர்ச்சியுற்றதாகவும் அறிய முடிகிறது.
புவனேஸ்வரி அம்மாளுக்கு மூலஸ்தானம், அர்த்த மண்டபம் முதலானவற்றை 1910ஆம் ஆண்டளவிலே கட்டுவித்து 1912ஆம் ஆண்டிலே அம்பாளைப் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். தொடர்ந்து மகாமண்டபம், நிருத்த மண்டபம், தர்சன மண்டபம், ஸ்தம்ப மண்டபம், முகப்புக் கோபுரம் முதலான திருப்பணிகள் நிறைவுற்றன.
1989.09.14ஆம் திகதி அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தேறியது. 1970களில் அத்திவாரமிடப்பட்ட கலைக்கூடம் பூரணப்படுத்தப்பட்டு, ஆலயத்தின் நுழைவாயிலில் பொலிவுறக் காட்சியளிக்கிறது. 1991ஆம் ஆண்டளவில் ஒரு அழகிய சித்திரத் தேர் அமைக்கப்பட்டது. ஆடி மாதத்தில் அம்பாளின் சிறப்பு வழிபாட்டு நாளான ஆடிப்பூரத் தினத்திலே அருகிலுள்ள சிவன் கோவிலிலிருந்து பாற்காவடியெடுத்து, அம்பாளுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடாத்தப்படுகின்றன. இரதோற்சவ தினத்திலே ஆனந்தக் காவடிகள் புடைசூழத் தேரின் ஒரு வடத்தைப் பெண்கள் பற்றியிழுத்து வீதி உலாவருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
வீட்டம்மன், துன்னாலை வடக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணத்திலே வடமராட்சியிலே
துன்னாலையிலுள்ள, 200 வருடங்களுக்கு முற்பட்ட இவ்வாலயம் ஆரம்பத்தில் புவனேஸ்வரி அம்மன் சிலையை சிறு கட்டிடம் கட்டிப் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்டதுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின் காலப்போக்கில் மூல மண்டபம், மகா மண்டபம், கடைசி மண்டபம் எனும் 3 மண்டபங்களுடன் காணப்படுகிறது. நேர்த்திக்கடன்கள் செய்து வழிபடும் மக்களுக்கு அம்மன் அருள்புரிந்து கொண்டிருக்கிறார்.
பூநீவீரபத்திர பத்திரகாளி அம்மன், தல்லையப்புலம், கரவெட்டி ஆலயம் தோம்புக் காலத்துக்கு முற்பட்டது. வழிபாட்டுப் பாடல்களும், நாட்டு மக்கள் பாடநூல்களும் உள்ளன. மூலமூர்த்தி வீரபத்திர பத்திரகாளி, பரிவார

மூர்த்திகள் மகாகணபதிப்பிள்ளையார், வெளிக்காளி. தினமும் மூன்று காலப்பூசை உண்டு.
பூநீபத்திரகாளி அம்மன் கோயில், கரவெட்டிட்கிழக்கு 1700 ஆம் ஆண்டுக்கு முற்பட்டதென்று கருதப்பட்டு வருகிது. தோம்புச் சாசனமும் உண்டு. மூலமூர்த்தி பத்திரகாளி சமேத வீரபத்திரர். பரிவார மூர்த்திகள் முருகன், வைரவர், காளி. ஒருகாலப்பூசை நடைபெறுகிறது. சிவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை, நவராத்திரி நாட்களில் விவேட உற்சவங்கள் உண்டு. மணவாளக் கோலமும்
அபிடேகமும் விசேடமாக நடைபெற்று வருகிறது.
வேயிலந்தை பூரீமுத்துமாரிஅம்மன், அல்வாய் வடக்கு தினமும் மூன்று காலப்பூசை, ஆடி அமாவாசையில் கொடியேறி பெளர்ணமியில் தேர்த் திருவிழா நடைபெறும். நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயம் ஆதியில் சிறு கொட்டிலாக இருந்தது.
தேவரையாளிகண்ணகை அம்மன், அல்வாய் மேற்கு தினமும் ஒரு காலப்பூசை. 115 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த ஆலயம் இது. விநாயகர், முருகன், இராஜராஜேஸ்வரி ஆகிய மூர்த்திகளும் ஆலயத்தில் உள்ளனர். வருடாவருடம் பத்து நாட் திருவிழா நடைபெறுகிறது.
நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன், தும்பளை
300 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவின் வேதாரணியத்தைச் சேர்ந்த சந்நியாசியின் கனவில் அம்மன் உரைத்ததன்படி அம்பாள்லிங்கத்தை வைத்தவிடத்திலிருந்து எடுக்க முடியாதிருந்தது. இவ்வாறு ஆரம்பித்த வழிபாடு “கட்டைச்சிமா” என்ற மாமரத்தின் கீழ் வீற்றிருந்த அம்மனுக்குக் கோவில் கட்டியபோது தலவிருட்சமாக இம்மாமரம் அமைந்தது.
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 541
“இத்தி மரத்தாள்” எனப்படும் அம்மனுக்கு பொங்கல், குளிர்த்தி, அபிஷேகம், கூத்து, காவடி, கரகம், பாற்செம்பு, அன்னதானம் என்பன நடைபெறுகின்றன. தற்போது விசாலமான அமைப்புக்கள், மடங்கள், கிணறுகள், பிற கட்டிடங்களுடன் காணப்படும். இவ்வாலயம் இலவச சமய வகுப்புகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள், பஜனை வகுப்புகள் என்பவற்றை நடத்துகிறது. சித்திரைப் பூரணையை அடுத்தமையும் அமாவாசையில் பூர்வபட்ச முதல் வெள்ளிக்கிழமையில் வெளிமடை (பொங்கல்) நடைபெறும்.
இந்நிகழ்வு ஒல்லாந்தர் காலத்தில்தான் ஆரம்பமானதென கர்ணபரம்பரைக் கதை கூறுகிறது. 32 பானைகளிலே பண்டம் எடுத்தல் என்ற நிகழ்ச்சியும் நடைபெறும். வெளி மடைத்தினத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை விளக்கு வைத்தல் நடைபெற்று, அன்றிலிருந்து பண்டங்கள் சேகரிக்கப்படும். இவைகளை வெளிமடையன்று ஒழுங்குபடுத்திப் பிரார்த்தனை நடைபெறும். பின் பண்டம் எடுத்தல், வளந்து கட்டுதல் நடைபெற்றுபூசை ஆரம்பமாகும். பின்பு பிரசாதம் வழங்கப்படும்.
பத்திரகாளியம்மன், பிள்ளையார் கோவில் வீதி, தும்பளை
நித்திய பூசையோடு வருடாந்த பொங்கலும் விசேடமாக நடைபெற்று வருகின்றது.
பூரீமுதலியம்பாள், புலோலி தெற்கு
மூலமூர்த்தியாக பூரீ முதலியம்பாள் வீற்றிருக்க விநாயகர், முருகன், வைரவர் ஆகிய மூர்த்திகள் பரிவாரத்தில் உள்ளனர். தினமும் இருகாலப்பூசை. மாசி மகத்தை நிறைவு நாளாகக் கொண்டு முதற் 19 நாட்களுக்கும் மகோற்சவம் நடைபெறுகின்றது.
பூரீமுத்துமாரிஅம்மன், கெருடாவில்
இருநூற்று இருபத்தைந்து வருடங்களுக்கு முந்திய ஆலயம். தினமும் இருகாலப்பூசை. சித்திரா பெளர்ணமியில் தீர்த்தம் அமையக் கூடியதாகப் பத்து நாட்களுக்கு அலங்கார உற்சவம் நன்கு நடைபெறுகின்றது.
மயூரமங்கலம்

முத்துமாரியம்மன், வல்வெட்டித்துறை
யாழ்ப்பாண மாவட்டம் வட மராட்சியிலே (வடமறவர் ஆட்சி) உள்ள வல்வெட்டித்துறை எனும் ஊரில் அமைந்துள்ள இவ்வாலயம், 1795ஆம் ஆண்டில் இருந்தது என உறுதிப்படுத்தப்பட்டாலும், அதற்கு முன்பேயே தோன்றியிருக்கிறது. முன்பு தென்னிந்தியா விற்குப் படகுப் போக்குவரத்திருந்த காலத்தில் ஒரு நாள் ஒரு கிழவி தன்னை இலங்கைக்குக் கொண்டு சென்று விடுமாறு வள்ளமோட்டிகளிடம் கேட்டு பின் அவ்வாறு இங்கு வந்ததும், இரண்டு நாட்களுக்குள் இரவில் சில நேரங்களில் வெளிச்சம் காணப்பட்டதால் அவ்விடத்தில் மக்கள் அம்மன் வழிபாட்டை ஆரம்பித்ததுவே இக்கோவிலுற்பத்தி எனக் கருதப்படுகிறது.
தமிழரசர்கள் சண்டைக்குத் தலைமை பூண்ட பெண் தெய்வமாக அம்மனை வணங்கி வந்தனர் என்பது வரலாறு. இந்தியாவின் மறவர் குலத்தவர் குடியேறியபோது உருவான ஆலயங்களில் ஒன்றான இவ்வாலயம் திருக்குளத்தையும் கிணறுகளையும், அர்த்த மண்டபம், மகாமண்டபம், தசின மண்டபம், சபா(வசந்த) மண்டபம், விநாயகர், கப்பிரமணியர், சண்டேஸ்வரி ஆகியோருக்கும் பரிவார ஆலயங்களும், நந்திபலிபீடமும் எனப்பல கட்டமைப்புக்களை உடையது. 1935ஆம் ஆண்டு ஆனிமாதம் 24ந் திகதி சம்புரோகூடிண கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1943இல் மணிக்கோபுரமும் பெரிய மணியும் 1952இல் உள்வீதிச் சுற்றுக் கொட்டகைகளும் உருவாக்கப்பட்டன. 1957இல் பழைய இராச கோபுரமிடிக்கப்பட்டு வைரக்கல், கருங்கற்களினால் புதிதாகக் கட்டப்பட்டது.
தற்போது ஆலயத்தில் பூசைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
சொக்கற்கலட்டி முத்துமாரியம்பாள்,
வாணக்குடியிருப்பு, புலோலி மேற்கு
நூற்றி நாற்பது வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டதாக வரலாறு உண்டு. வேப்ப மரத்தடியில் தோன்றிய அம்பாளுக்கு ஆலயம்பின்னர் அமைக்கப்பட்டது. மூலமூர்த்தி அம்பாள் பரிவார மூர்த்திகள் வேல், விநாயகர். தினமும் இருகாலப் பூசைகள் நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் விசேட பொங்கல் நடைபெறும் வருடப் பிறப்பு

Page 542
தைப்பொங்கல் ஆகிய தினங்களில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
பூநீபத்திரகாளியம்மன், பருத்தித்துறை
தினமும் மூன்று காலப்பூசை உண்டு. தலவிருட்சம் வேம்பு, விசேட தினங்களில் பொங்கல் விசேட பூசைகள் உண்டு.
கோட்டடி அம்மன், பருத்தித்துறை
தினமும் ஐந்து காலப்பூசை. 10 நாட்கள் அலங்கார உற்சவம், சித்திரா பெளர்ணமியன்று தீர்த்தம். பரிவாரமூத்திகள் விக்னேஸ்வரர், முருகன், நவக்கிரகம், நாகதம்பிரான்.
கண்ணகை அம்மன், பருத்தித்துறை
அரசினர் வைத்தியசாலைக்கு அருகாமையில் இக்கோயில் அமைந்துள்ளது. தினமும் மூன்று காலப் பூசை. தைமாத உத்தர நட்சத்திரத்தில் ஆரம்பித்து 15 நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறும். ஆலயத்தில்
 

விநாயகர் அலங்கார உற்சவம் நடைபெறும். ஆலயத்தில் விநாயகர், முருகன் ஆகிய மூர்த்திகளும் உண்டு.
கண்ணகை அம்மன், நாகர்கோவில்
மிகப்புராதன ஆலயம். தலவிருட்சம் ஆல். பழமை வாய்ந்த கோவலன் கண்ணகி கதை ஏடு ஒன்றும் உண்டு. 1978ம் ஆண்டு சித்திரை மாதம் கோவில் கல்லினால் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பங்குனித் திங்கட்கிழமைகளில் விசேட பூசை, அன்னதானம் நடைபெறும். வைகாசி விசாகத்திற்கு முன் எட்டு நாட்களுக்குத் திருவிழா நடைபெறும். இந்நாட்களில் கண்ணகி கதை பாகம்
பாகமாகப் படிக்கப்படுகிறது.
பூரீகண்ணகை அம்மன், குடத்தனை, பருத்தித்துறை நித்திய பூசை உண்டு. ஆனிஉத்தரத்தில் கொடியேற்றம் நடைபெற்று பத்து நாட்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது.
யூரபதி பூgபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக யலர் - 2000

Page 543
மயூரமங்கலம்
墨
" s
துர்க்
யாழ்ப்பாணத்தின் வட
மைல் கல் தொலைவில் அமை
சக்தியைப் பறைசாற்றிக் கொண் பழமை சார்ந்தது இவ்ஆலயம்.
பூர்வீகச் சிறப்பு :
தொன்றுதொட்டு வளமு தெல்லிப்பழை கொண்டுள்ள பிரி புகழுக்கு வித்தாய கொடைப் சைவமரபிலே வந்த பெரியார் கத் ஏறக்குறைய 1750ம் ஆ காங்கேசன்துறையில் தோணி வேதாரணியத்திலே கரையேறின் செய்து கொண்டு காசிவரை ெ வருடங்கள் கழிந்தன. இக்கா கற்றுத்தேறி ஒரு துர்க்காதேவி 1760ம் ஆண்டளவில் தாம் யாழ் வெண்கலத்தி னாலமைந்த 'தி வந்தார். குறித்த அன்பர் கதிர் பீடங்கள் அறுபத்து நான்கினுள் துர்க்காதேவி சகலகலைகளுடனு இயந்திரத்தை அங்கிருந்தே பெ க்ாசியாத்திரையை முடித் கீரிமலையில் தீர்த்தமாடி அங்கி கொண்டிருந்தார். திருவருக ஆயிரக்கணக்கான மைல் தொ அடங்கிக் கிடக்கும் துர்க்கை திருக்கருணை கொண்டாள்.
 
 

TubČITOT (D(T6)ULCD
காதேவி, தெல்லிப்பழை
பால் காங்கேசன்துறைப் பெருந்தெரு வழியே எட்டாவது ந்திருக்கும் இவ்வாலயம் துர்க்கை அம்பாளின் பரிபூரண டிருக்கிறது. இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான
ம், பண்பாடு சான்ற மக்களும் இலங்கும் யாழ்ப்பாணத்துத் வுகளிலே உழவுத் தொழிலைக் கைக்கொண்டவரும், உயர் பண்புடையவரும் செறிந்திலங்கும் வவுணாவத்தையிலே நிர்காமர். பூண்டளவிற் கதிர்காமர் தலயாத்திரைக்காகப் புறப்பட்டு ரியேறித் தென்னிந்தியாவின் கீழைக் கரையில் உள்ள னார். அவர் அங்கிருந்து பாதயாத்திரையாகத் தல வழிபாடு சன்றார். இவ்வகையில் இந்தியாவில் ஏறக்குறைய பத்து லவெல்லைக்குள் அவர் தமிழும் சமஸ்கிருதமும் நன்கு பி உபாசகராகவும் மாறிவிட்டார். அதனால் ஏறக்குறைய ப்பாணம் திரும்பும்போது துர்க்காதேவி இயந்திரமொன்றும் ருமுகக் கெண்டி உருவமொன்றுங் கையோடு கொண்டு காமர் என்பவர் காசியிற் பலநாள் தங்கியிருந்தார். சக்தி ளும் காசியிலுள்ள சொப்பனேஸ்வரி பீடம் முக்கியமானது. றும் பொலிந்திருக்கும் பீடம் அது. அன்பர் கதிர்காமர் குறித்த ற்றிருப்பார் என எண்ணுதற்கு இடமுண்டு. துக்கொண்டு காங்கேசன்துறையை வந்தடைந்த இப்பெரியார் ருந்து நடந்து மூன்றுமைல் தூரம் இவ்விடம் நோக்கிவந்து அவரது நடையிலே தளர்வைத் தோற்றுவித்தது. லைவெல்லாம் நடைகொண்ட நம் பெருந்தகையின் ஆற்றலில் புங்கிருந்துகொண்டு அனைவர்க்கும் திருவருள் பாலிக்கும் டைதளர, உடல்தளர ஆங்கிருந்த இலுப்பைத் தோப்பிலே

Page 544
இளைப்பாறினார். திருவருட் கருணையால் அவர் முன் ஒரு சோதி தோன்றி, அவர் கொண்டு வந்த துர்க்கா சக்கரத்தை அங்கே ஸ்தாபிக்குமாறு ஆணையிட்டது. அவ்வாணையைச் சிரமேல் தாங்கி மரத்தடியிலே சக்கரத்தை அமைத்து வழிபடத் தொடங்கினார். தெல்லிப்பழை உழுகுடைப்பதி இலுப்பைத் தோப்பிலே நாகசர்ப்பங்கள் வருவதுண்டு. அவை பூசை முடிந்தவுடன் மறைந்துவிடும். வெளிப்படத்தோன்றும். காலங்களிலும் பிற காலங்களிலும் யாரையும் அச்சமுறும் அளவிற்குக்கூட நாகங்கள் நடந்து கொண்டதில்லை. பூசைக்காலத்திலே குருக்கள் பாம்புகட்குப்பாலும் பழமும் வைத்து வழிபடலும் அவை அவற்றை உட்கொள்ளலும் உண்டு. கதிர்காமர் தாம் கொண்டு வந்த இயந்திரத்தையும், திருமுகக் கெண்டியையும் தாபனம் செய்து வழிபட்ட இடமே இன்று துர்க்காதேவி தேவஸ்தானமாக வானளாவும் கோபுரமும், அலங்கார வளைவு கொண்ட நுழைவாயிலும், அழகிய தெப்பக்குளமும் எழிலூட்டி நிற்கக் காட்சி தருகிறது.
கதிர்காமரின் ஆத்மார்த்த பூசை நிலையமாயிருந்த இந்த ஆலயம் பரார்த்த பூசைக்குரிய நிலையமாய் இன்று விருத்தி அடைந்தவாற்றை மேற்கூறிய செய்தி உணர்த்துகிறது.
மாவிட்டபுரத் தொடர்பு :
மா விட்டபுரம் கந்தசாமி கோயிலோடு இவ்வாலயத்துக்கு ஆரம்பகாலம் முதலே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதைப் பழைய ஏட்டுப்பிரதிகள் குறிப்பிடுகின்றன. மாவை முருகன் ஆலயத்தில் கருங்கற்றிருப்பணி நிறைவேற்றப்பட்டு 1815 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றதெனவும் அடுத்த ஐந்து ஆண்டுகளின் பின் (கி. பி. 1820) தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்
மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதெனவும் அறிகின்றோம். மேலும் அரசாங்க கச்சேரிப் பதிவுகளில் துர்க்காதேவி ஆலயம்
கற்கோவிலென்று 1820ல் பதியப்பட்ட செய்தியும் மேற்கூறியதற்குச் சான்றாக உள்ளது. 1829ம் ஆண்டு புரட்டாதி விஜயதசமி அன்று மாவை முருகன் இவ்வாலயத்துக்கு எழுந்தருளிவந்து வன்னி வாழைவெட்டும் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. இந்தவிழா வாசிட்ட இலிங்கபுராண சுப்பிரமீனிய பராக்கிரமத்தை அடிப்படையாகக் கொண்டது.
NINC OMNC

புராணபடனச் சிறப்பு:
இவ்வாலயத்திற் தொன்றுதொட்டுத் தொடர்ந்து வரும் மற்றொரு சிறப்பம்சம் புராணபடனமாகும். வருடந்தோறும் பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகியன கிரமமாகப் படிக்கப்பெற்றுவந்துள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல அறிஞர்கள் பலர் இப்படிப்புக்களிற் பங்குபற்றியுள்ளனர். உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவர் அவர்கள் இவர்களில் ஒருவர். 1958ம் ஆண்டு தொடக்கம் மூன்று பெரும்புராணங்களும் படிக்கப்பட்டு உரைகூறிப் பயன்கூறப்பட்டு வந்தமையும் சிறப்பம்சமாகும்.
ஆலய அமைப்பு:
கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஸ்தான மண்டபம், ஸ்தம்ப மண்டபம், வசந்த மண்டபம், யாக மண்டபம் முதலிய மண்டபங்களும், விநாயகர், நாகதம்பிரான், வைரவர், பாலசுப்பிரமணியர், பூரீகஜலக்ஷ்மி, சண்டேஸ்வரர் முதலியோர்க்கான சந்நிதானங்களும், இராஜகோபுரம், துர்க்கா புஷ்கரணி என்னும் தீர்த்தக்குளம், மணிக்கோபுரம், நந்தவனம், சித்திரத்தேர் முதலியனவும் உள்ளடங்கிச் சிறக்க இவ்வாலயம் பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கின்றது.
அம்பாள், விநாயகர், ஆறுமுகசுவாமி, சண்டேஸ்வரர், அஸ்திர தேவர் முதலியோர்க்குச் சிறந்த எழுந்தருளி விக்கிரகங்கள் காணப் படுகின்றன.
தர்மகர்த்தா சபையும் நிர்வாக சபையும்:
1948ல் தனி முகாமையிலிருந்து பதினொரு பேரைக் கொண்ட தர்மகர்த்தா சபையினரிடம் ஒப்புவிக்கப்பட்ட கோயிற் பரிபாலனம், 1965ல் உயசபையாக 18பேர் கொண்ட நிர்வாக சபையைத் தெரிவு செய்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பிரகாரம் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக ஒரே நிர்வாகசபை எதுவித குறுக்கீடுமின்றி இவ்வாலயத்தைப் பரிபாலித்து வருவது அம்பாளின் அற்புதத்தை எடுத்துக்காட்டுவதாகும். இதனை முன்னிட்டு முதற் கும்பாபிஷேகம் 1965ம் ஆண்டு ஆவணி ஒணத்திலும், இரண்டாவது கும்பாபிஷேகம் 1981 சித்திரை உத்தரத்திலும், மூன்றாவது கும்பாபிஷேகம் 1997 ஆவணிச் சோதியிலும் நடைபெற்றது.
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 545
மகோற்சவம்
துர்க்காதேவி ஆலய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது 1968ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மகோற்சவமாகும். ஆவணிமாத வளர்பிறை பூர நட்சத்திரத்தில் ஆரம்பமாகித் திருவோணத்தில் தீர்த்த விழாவோடு நிறைவு பெறுவது இம்மகோற்சவ ஒழுங்காகும். மகோற்சவம் பன்னிரண்டு தினங்கள் நடைபெறும்.
மகாகும்பாபிஷேகமும் சைவசித்தாந்த மகாநாடும்:
1981ம் ஆண்டு சித்திரைத் திங்கள் ஐந்தாம்நாள் ஆலயத்துக்கும், இராசகோபுரத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து வருகை தந்த வேத விற்பன்னர்களும், பூரீஹரிதாஸ் சுவாமிகளும், ஈழத்து நாலாபுறத்திலுமிருந்து வருகைதந்த சிவாச்சாரியார்களும், பக்தகோடிகளும் குழுமி நின்று நடாத்திய இக்கும்பாபிஷேக விழாவைத் தரிசிக்க ஆயிரங்கண்கள் போதா என்ற அங்கலாய்ப்பு அன்று அன்பர்களிடையே இருந்தது.
இதனை அடுத்து மேமாதம் 10ம், 11ம், 12ம் திகதிகளில் இவ்வாலய முன்றலில் சென்னை சைவசித்தாந்த மகாநாட்டுப்பவளவிழா நடைபெற்றது. தமிழகத்திலிருந்து முந்நூறுக்கு மேற்பட்ட அறிஞர்கள் இங்கு வருகை தந்தனர், கலாநிதிகள், சைவசித்தாந்தப் பேரறிஞர்கள், புலவர்கள், பட்டதாரிகள், இசை மேதைகள், ஒதுவார்கள், கல்லூரி அதிபர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலிய பலர் தமிழகத்தி லிருந்து வருகை தந்த பெருவிழா அதுவாகும். இவ்வைபவத்தோடு தொடர்பாக யாழ். பல்கலைக்கழகச் சைவசித்தாந்த பீடத்துக்கு துர்க்காதேவி தேவஸ்தானம் ஐம்பதினாயிரம் ரூபாவை வைப்பு நிதியாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
துர்க்காபுரம் மகளிர் இல்லம்:
தேவஸ்தானம் ஆற்றும் பணிகளிலிலே தலையாய ஒரு அறப்பணியாகக் கருதப்படுவது துர்க்காபுரம் மகளிர் இல்லப்பணியாகும். ஆதரவற்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளை ஆதரித்துக் கல்வியூட்டி, உணவூட்டி, சகலபராமரிப்பையும் மேற்கொண்டு பணிபுரிவதற்கு ஆரம்பத்தில் சிறிய கட்டிடத்தில் இடம் பெற்றது. 1985ம் ஆண்டு சகல வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டடம் கட்டப்பட்டது.
மயூரமங்கலம்

பல்துறைப்பட்ட சமூகப்பணிகள்:
ஆலயங்களெல்லாம் அறச்சாலைகளாக அமைய வேண்டும் என்ற புனித நோக்கத்துக்கமைய கடந்த இருபது ஆண்டுகளாக இவ் ஆலயம் ஆற்றிவரும் பணிகள் குறிப்பிடத்தக்கனவாகும். கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி அம்மையார் அவர்களின் பிறந்த நாள் அறநிதியம் 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 7ம் திகதியில் இதன் பயன்பாடு நிகழ்கிறது. நூல் வெளியீடு, அறிஞர்களைக் கெளரவித்தல், வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவுதல், கைதடி வயோதிபர் இல்லத்துக்கு அன்பளிப்பு, யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு உதவியமை, யாழ் போதனா வைத்தியசாலைக்குஉதவியமை முதலியன குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இந்த வருடம் இந்நிதியத்தின் சார்பிலே சிவத்தமிழ்ச்செல்வி அன்னையர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு அநாதைகளாக விளங்குகின்ற அன்னையர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். பிறந்தநாள் அறநிதியத்தின் சார்பில் தற்போது பத்து இலட்சம் ரூபா வரையில் நிரந்தரவைப்பிலிடப்பட்டு இதன் வட்டி ஆண்டு தோறும் சமூகப்பணிக்கு ஒதுக்கப்படுகின்றது.
மற்றும் இவ்வாலயத்தின் நிதியிலிருந்து இந்நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் வைத்தியசாலைகளும் பாடசாலைகளும் பயன் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயப் பணிகளோடு மக்கள் பணியும் இடம் பெறுகின்றது. இதைவிடக் காலந்தோறும் எம்மண்ணில் அகதிகளாக்கப்பட்டுத் தவித்து நிற்கும் மக்களுக்கு அவ்வப்போது உணவு, உடை, உறையுள், பணஉதவி புரிந்து வருவதை இந்த நாடு நன்கு அறியும். மேலும் விழிப்புலனற்றோர், புற்றுநோயாளர் ஆகியோருக்கு உதவி செய்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆலயப் பணிகளோடு மகளிர் இல்லப்பணி, ஆதரவற்ற அன்னையர் பணி, மற்றும் சமூகப்பணிகள் அனைத்தும் சகலரும் வியக்கும்படி நடைபெறுகின்றன.
செல்விதங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாகத்தலைவராக இருந்து பணியாற்றுகிற நிர்வாகசபை கண்ணியமாகப் பணிபுரிந்து வருகிறது. ஆலயத்தில் நிரந்தரமாக ஒன்பது அந்தணப் பெருமக்களும், பன்னிரண்டு உத்தியோகத்தர்களும், ஏழு சிற்றுாழியர்களும் பணிபுரிந்து சிறப்பிக்கின்றனர்.

Page 546
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் இவ்வாலயத்தோடு கடந்த முப்பத்தைந்து வருடங்களாக இணைந்து தொண்டாற்றி வருவது ஆலயத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கை அளிக்கிறது. துர்க்காதேவிப் பெண்கள் தொண்டர் சபையினரும் பல்வேறுபட்ட பணிகளைச் செய்து வருகிறார்கள். இச்சபை 1979ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இன்று உலகமெங்கணும் வாழும் சைவத் தமிழ் மக்களிற் பெரும்பாலோர் துர்க்காதேவியின் அடியார்களாக விளங்குகின்றனர். ம்ெய்யடியார்கள் பலரதும் அன்பும் பக்தியும் ஆதரவும் பொங்கி வந்து கொண்டிருப்பதால் எல்லாவகையான சிறப்பையும் இவ்வாலயம் பெற்று மிளிர்கிறது என்பது வெள்ளிடைமலை.
பூரீவீரமாகாளி அம்மன், வண்ணை
யாழ்ப்பாணத்தில் வண்ணைப் பதியில் வடகிழக்கே அமைந்துள்ள இவ்வாலயம் தமிழரசர்களால் அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த ஆலயமாகும். 1268ம் ஆண்டு நல்லூரிலே தமிழரசமைந்திருந்த வேளையிற் புகழேந்திப் புலவர் பாடிப் பரிசுபெற்றமையும், பிறநாட்டு யாத்திரிகர் யாழ்ப்பாணத்தரசரின் உதவிபெற்றுச் சிவனொளிபாதமலைக்குச் சென்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும். நல்லூரை அழகுபடுத்திய பரராசசேகரனே நாற்றிசைகளிலும் நகர்க் காவற் கோயில்கள் செய்ய விரும்பி கிழக்கில் வெயிலுகந்தப் பிள்ளையார் கோவிலையும், தெற்கில் கைலாசநாதர் கோவிலையும் (புனரமைத்தும்) மேற்கில் வீரமாகாளி அம்மன் கோவிலையும், வடக்கில் சட்டநாதர் கோவிலையும் 1470ஆம் ஆண்டளவில் அமைத்தான்.
காளி, கொற்றவை, துர்க்கை எனும் நாமங்களுடன் விளங்கும் அம்பிகை வடக்கு வாசலில் எழுந்தருளியிருப்பதால் வடவாயிற் கிழத்தி எனவும்பெயர் பெற்றவள். இவ்வாலயம் வடக்கில் பருத்தித்துறை வீதியையும், கிழக்கில் வைமன் வீதியையும், தெற்கில் நாவலர் வீதியையும், மேற்கில் பருத்தித்துறை வீதியையும் கொண்டு நிலவுகிறது. வடக்கிலுள்ள பெரியகுளம் அம்மைச்சியார்குளம் எனவே வழங்குகிறது. ஆரியச் சக்கரவர்த்திகள் அம்பிகையைத் தியானித்து வழிபட்டு வீரம் பெற்றனர். அவர்கள் செய்து வந்த

பெருவிழாக்களுள் நவராத்திரி குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
அம்பிகையின் அழகுக் கோலம் வர்ணிக்க முடியாதது. அம்மன் பெருஞ்சாந்நித்தியம் உடைய அழகுத் தெய்வம். கட்டழகு, வீரத்திருவுரு, யோகத்திருவுரு, அருட்டிருவுரு கொண்டு அன்னையாயும் குமரியாயும் இருப்பவள். பெயரளவிற் கோரத் திருவுருவினளாயினும் அருள் பாலிக்கையில் போகத்திருவினள். பெருமுலைச்சியாய் பெருவயிறளாய் உள்ளவள். அமுதுTட்டுபவள். பக்தர்கள் தாய் என்றும் ஆச்சி என்றும் கிழவி என்றும் வழங்குகின்றனர். உண்மையில் தாயான கிழவியுமானவள், புரத்தியானவள், பழமையானவளாவள்.
கர்ப்பக் கிரகத்திலுள்ள சிலாவிக்கிரகம் கருணாம்பிகை வடிவமுள்ளது. இடது திருவடியை ஊன்றி, வலது திருவடியை மடித்து ஒரு வகைச் சுகாசனத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மை பத்துத் திருக்கரத்தினள். அப்படிப்பட்ட அம்பிகையைப் பறங்கியர் அழிக்கவென வந்தனர். கோயில் வாசலுக்கு வந்தபோது அங்கே பெரிய சிங்கமொன்று சடைவிரித்துக் கர்ச்சித்ததைக் கேட்டு உடனடியாகவே அவ்விடத்தை விட்டோடினர். இவ்வாறாக 1621ഴ്ന്ന ஆண்டளவில் பறங்கியர் பூசைகளுக்குத் தடைவிதிக்க மக்களின் வழிபாடும் வாழ்வும் குன்றின. ஆங்கிலேயர் இலங்கையை நிரந்தரமாக ஆளத் தொடங்கியதும் ஒரளவு வழிபடவிட்டனர். அம்பிகை கோயிலைப் புனரமைத்து வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தன.
இடைக்காலத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றபோது மந்திரலோபம், கிரியாலோபமின்றி நடைபெற்ற பிரதிட்டை ஆவாகனம், அபிடேகம், அர்ச்சனை வழிபாடு காரணமாக அம்பிகையின் பேரருள் சுரந்து சுபீட்சம் உண்டாகியது. முன் அரசர்க்குரிய நிலம் அரசர்கள் மறைந்தபின் ஆலயத்திற்குரியதாயிற்று. வானவேடிக்கை, பரதநாட்டியம், பல கூட்ட மேளம், தேரும் திருவிழாவும் என்பன இங்கே இடம்பெற்று வந்தன. 18 நாள் உற்சவம் நாளடைவில் 25 நாட்களாகியது. தேர் உடனுக்குடன் வல்லவர்களாற் கட்டப்பெறுவது வழக்கம். 1941ஆம் ஆண்டு சிற்பக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட சித்திரத்தேர் 2001ம் ஆண்டில் மணிவிழாவைக் கொண்டாட உள்ளது. ஒரு தடவை இத்தேர் வெள்ளோட்டத்தைக் காண்கையில் அம்பாளே கிழவி வடிவிலே தோன்றி உருவாக்கிய சிற்பக் கலைஞருக்கு ஐந்து ரூபாவினைத் தட்சணையாகக்
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 547


Page 548
நூரி
லிப்பழை சிதல்
 
 


Page 549
திருநெல்வேலி பூறி முத்துமாரி அம்பாள்
 

வண்னை பூரீ வீரமாகாளி அம்பாள்

Page 550

さ | rhs
*品
罹会 술 | E
5)
당

Page 551
கொடுத்ததுடன் கைவழங்காமலிருந்த அவரின் கையைச் சாதாரண முறையிற் செயற்படும் கையாக மாற்றினார். இது ஒரு அற்புதமாகும். இவ்வாலயம் தற்போது 3 சித்திரத் தேர்களைக் கொண்டு விளங்குகிறது.
வடக்குத் திசையை நோக்கியுள்ள இவ்வாலயம் உட்பிரகாரத்தில் விநாயகர், நாகதம்பிரான், சுப்பிரமணியர், சனீஸ்வரன், சண்டேஸ்வரி ஆகிய மூர்த்தங்களையும் வெளிப் பிரகாரத்தில் சந்தான கோபாலர், வைரவர் ஆகியோரையும் தனித்தனிக் கோயில்களாகக் கொண்டு விளங்குகிறது. இங்கு அம்பாள், ள் முந்தருளி விக்கிரமாகவும் (சங்கிலி மன்னனால் வணங்கப்பட்டது) உற்சவ மூர்த்தியாகவும், மகிடாசுரனை வதம்புரிந்த சிங்கமேறிய எட்டுக் கரங்களுடன் கூடிய திருவுருவமாகவும் மூன்று வடிவங்களிற் காட்சி தருகின்றாள். சங்கிலி மன்னன் போரிற்குப் புறப்படுகையில் ஆயுதங்களை அம்பாளின் திருவடியில் வைத்துப் பூஜை செய்து செல்வது வழக்கம். இன்றும் மன்னனின் உடைவாள் இங்கு காணப்படுவதுடன் மானம்பூவில் வாழை வெட்டிற்கும் பயன் படுத்தப்படுகிறது.
தேரோடும் வீதியும், சுத்தநீர்க்கிணறும், மருதமரமும், அரசமரமும் உள்ளன. மேற்குவீதியில் எண்கோணத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தொட்டி காணப்படுகிறது. இங்கு வருடாந்த உற்சவமும்மாதாந்தத் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
நாச்சிமார், வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்திலே, மாநகர எல்லைக்குள் அமைந்த வண்ணார் பண்ணையின் வடக்குப் பிரிவிலே, காங்கேசன்துறை வீதியோடு இராமநாதன் வீதி சேருஞ் சந்தியிலே, நாச்சிமார் கோயில் என வழங்கும் வண்ணை பூரீ காமாட்சி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே நாச்சிமார் கோயில் என்னும் நாமத்தோடு இக்கோயில் விளங்கியது.
யாழ்ப்பாண அரசாங்க அதிபரினாலே 1898 ஆம் ஆண்டிலே சைவக் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றைப் பற்றித் தயாரிக்கப்பட்ட பதிவேட்டில் கி.பி. 1880 இல் காசிநாதர் தம்பர் கட்டியது. கல்லினாலமைத்த கட்டிடம் என மேற்படி ஆலயம்
கூறப்பட்டுள்ளது.
மயூரமங்கலம்

நாச்சிமார் கோயிலின் உற்பத்தி பற்றிப் பொதுமக்களிடையே கர்ண பரம்பரைக் கதையொன்று நிலவிவருகின்றது. முற்காலத்தில் இங்கு குளமொன்றும், மருத மரங்களும், நாவல் மரங்களும், அவற்றைச் சூழ்ந்து வயல்களும் அமைந்திருந்தன. அத்தகைய சூழலில் விஸ்வேஸ்வரனது அடியார்களான விஸ்வபிரம்மகுல மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் பெண்கள் குளங்கரை மருதடியில் விறகு பொறுக்குவது வழமை. ஒருநாள் கன்னியொருவள் விறகு எடுக்கப்போன சமயம் மருதடியிலே குந்தியிருந்து சிறுநீர் கழித்தாள். உடனே அவளுக்கு அம்மரத்திலிருந்து வந்த தேவதையொன்று முலைகளைத் திருகியதைப் போன்ற வேதனை உணர்வு ஏற்பட்டது. அவள் அதிர்ச்சியுற்று வீட்டுக்கு ஓடிப்போய் உற்றதனை உறவினர்க்கு உரைத்தாள். எல்லோருக்கும் பீதி உண்டாகியது.
அயலில் வாழ்ந்த கண்ணாத்தை என்னுங் கிழவி அக்கன்னிப் பெண்ணுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி அவளைத் தேற்றினாள். மருதடித் தெய்வத்தைச் சாந்தப்படுத்துவதற்குக் கண்ணாத்தை வழிபாடுசெய்யத் தொடங்கினாள். அங்கே விளக்கேற்றி ஆசாரத்தோடு அவளாற் பொங்கல் பூசைகள் செய்யப்பட்டன. மருதடித் தெய்வத்தை நாச்சியார் என்று அழைக்கலானார்கள். கண்ணாத்தையின் முன்மாதிரியைப் பின்பற்றிக் கிராம மக்களும் வழிபாடு செய்யத் தொடங்கினார்கள். அத்துடன் கண்ணாத்தை அம்மையாரையும் நாச்சியார் என்று அன்போடு அழைக்கலானார்கள். நாளடைவிலே விக்கிரக ஆராதனை பண்ணுவதற்கென்று ஆலயமொன்றினை அமைத்தார்கள்.
கோயிலின் மூலஸ்தானமும் அர்த்த மண்டபமும் புதிதாக அமைக்கப்பெற்றபோது காமாட்சியின் விக்கிரகமும் தாபிக்கப்பெற்றது. அதன் பின் 1887 ஆம் ஆண்டிலே கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதிதாகச் செய்த மாரியம்மன் சிலையொன்றினை ஆலயத்தின் வேறோரிடத்திலே தாபித்தார்கள்.
பிரகார மண்டபம் புதிதாக அமைக்கப் பெற்றதோடு 1926 ஆம் ஆண்டிலே மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அக்காலகட்டத்திற் கொடித்தம்பமும் தாபிக்கப் பெற்றது. கொடியேற்றம் முதலாகத் தீர்த்தோற்சவம் வரையாகப் பத்து

Page 552
நாள்கள் திருவிழா நடைபெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
1967 ஆம் ஆண்டிலே மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதோடு திருவிழா நாட்களும் 15 ஆக அதிகரிக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பெற்ற சப்பரமும் சிறுமஞ்சமும்முறையே 1965, 1968 ஆகிய ஆண்டுகளிலே வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டன. தேர் வெள்ளோட்டம் 1971 இல் நடைபெற்றது. சித்திரத்தேரின் அடித்தளத்துச் சிற்பங்கள் சில இந்தியாவிலே செய்யப்பட்டவை.
இராச கோபுரத்திருப்பணி வேலைகள் 1976 ஆம் ஆண்டிலே ஆரம்பமாகின. இதன் கட்டிட வேலைகள் தமிழகத்துச் சிற்பாசாரியாரான நாகலிங்கம் தலைமையில் நடைபெற்றன. வலப்புறத்து, மணிக்கோபுரம் 1985 ஆம் ஆண்டிலே கட்டப்பெற்றது.
1986 ஆம் ஆண்டிலே, சுற்றுப் பிரகார மண்டபத்தில் அதுவரை காலமும் அமைந்திருந்த மகா மாரியம்மன் சிலையானது அதற்கென அமைக்கப்பெற்ற தனியான கோயிலிற் பிரதிட்டை செய்யப்பெற்றது.
63F550 விதிகளுக்கு 960) Lou நிர்மாணிக்கப்பட்டுள்ள இக் கோயிலின் இராசகோபுரம் கவர்ச்சியான தோற்றமுடையது. அது 515 அடி உயரமும் 17.5 விட்டமுங் கொண்டது. அதில் 5 வாசல்களும் 5 கலசங்களும் உள்ளன. கோபுரத்தின் அடித்தளத்திற் கோயில் வரலாறு பற்றிய ஐதீகங்கள் சிற்பவடிவில் அம்ைக்கப்பட்டுள்ளன.
நாச்சிமார் கோயிலின் அமைப்பு மிஸ்ராலயம் என்ற வகைக்குரியது. அது தேவிக்கும் இறைவனுக்கும் பரிவார தேவர்களுக்கும் உரிய அமைப்பு வடிவத்தைக் கொண்டதாகும்.
கர்ப்பக்கிருகத்தில் மூலமூர்த்தியாக அமைந்துள்ள காமாட்சியின் வடிவம் ஸ்தானக நிலையிலே கருங்கல்லில் அமைக்கப் பெற்றுள்ளது. அம்மனின் இடக் கரங்களிற் பாசமும், முல்லை, அசோகு, மா, நெய்தல், தாமரை ஆகிய ஐவகை மலர் அரும்புகளும் அமைந்துள்ளன. வலக் கரங்களுள் ஒன்றிலே கரும்பு வில்லும் மற்றொன்றிலே அங்குசமுங் காணப்படுகின்றன. மகாமண்டபத்திற் சிவன், சண்டேஸ்வரி, நந்தன
கோபாலர், சுக்கிரவார அம்மன், முருகன், பிள்ளையார்

ஆகியோரின் பித்தளைச் சிலைகள் அமைந்துள்ளன. மகாமண்டபத்து வாசலில் நந்தா, சகந்தா என்னுந்துவார பாலகரின் கருங்கற் சிலைகள் உள்ளன. சரஸ்வதி ஆகியோரின் ஒவியங்கள் 6 அடி உயரமான சட்டங்கள் பூட்டிய படங்களாக மகா மண்டபத்தின் இரு பக்கங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. ஞானகுரு என்பவர் வரைந்த காமாட்சி, பிள்ளையார், முருகன் ஆகியோரின் சித்திரங்களும் அங்கு இவ்வண்ணமாகவே வைக்கப்பெற்றுள்ளன.
பிள்ளையார், பூமாதேவி, மகாலசுஷ்மி, முருகன், வைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலிலுள்ள பரிவார மூர்த்திகளாவர். இவர்களுள் ஒவ்வொரு வருக்குந் தனித்தனியான கட்டிடங்கள் உள்ளன. திருமுறைகளுக்கும் விராட் புருஷனாகிய விஸ்வப் பிரம்மனுக்கும் பூசை செய்வது இக்கோயிலுக்குச் சிறப்பாகவுள்ள வழமையாகும். உட்பிரகாரத்துச் கவர்களிலே சமயகுரவர், காமாட்சி அம்மன், மாரியம்மன், ஜம்முகனான விஸ்வப்பிரம்மன் ஆகியோரின் உருவங்கள் அழகிய ஓவியங்களிலே சித்திரிக்கப்பெற்றுள்ளன.
ஆலயத்திற் பல உலோகச் சிற்பங்களும் உள்ளன. அவற்றுள் அஸ்திரதேவர், பிள்ளையார், சுப்பிரமணியர், காமாட்சி அம்மன், மாரியம்மன், சந்தான கோபாலர், சண்டேஸ்வரி ஆகியோரின் படிமங்கள் குறிப்பிடத்தக்கவை.
வெள்ளிக்கிழமைகளிற் கன்னிகளாயும், சுமங்கலிகளாயுமுள்ள பெண்களின் நன்மையின் பொருட்டுத் திருவிளக்குப் பூசை என்னும் வழிபாடு நடைபெறும். இப்பூசை15.06.1973 முதலாக நடைபெற்று வருகின்றது.
வருடத் திருவிழாக்கள் 1967 ஆம் ஆண்டு முதலாகப் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றன. மகாமாரியம்மன் ஊர்வலத்தோடு திருவிழாக்கள் தொடங்கும். அதற்கடுத்த நாளிற் குளிர்த்தி, பிள்ளையார் பூசை, கிராம சாந்தி, கொடியேற்றம் என்பன நிகழும். தேர், தீர்த்தம், பூங்காவனம், சண்டேஸ்வரி பூசை, வைரவர் மடை ஆகியவற்றோடு திருவிழாக்கள் நிறைவுபெறும்.
பூரபதி பூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேகமலம் - 2000

Page 553
பூரீ புவனேஸ்வரிஅம்பாள், சுதுமலை
காசியிலே விசாலாட்சி, மதுரையிலே மீனாட்சி, காஞ்சியிலே காமாட்சி போன்று ஈழநாட்டின் வடபால் சுதுகிரி என்னும் சக்தி ஷேத்திரத்திலே புராதன வரலாற்றுப்புகழும் புதுமையும் கொண்டுழநீபுவனேஸ்வரி பீடத்திலே வேண்டுவார் வேண்டுவதைச் சிறப்பாகக் கொடுத்துபூரீமாதா புவனேஸ்வரி அம்பிகை வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
யாழ்ப்பாண நகரின் வடபால் நான்கு மைல் தூரத்தில் உள்ள கிராமம் சுதுமலை. இதனை சுதுவையம்பதி, சுதுவைநகர், சுதுகிரி என்றும் அழைப்பதுண்டு. இக் கிராமத்தின் மையத்திலே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புகளையும் கொண்டு ஆகம விதிகளிற்கு அமையக் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், தரிசன மண்டபம், ஸ்தம்ப மண்டபம், இராசகோபுரம் ஆகியவற்றுடன் தங்குசங்களை என்னும் புராதனமான வரலாற்றுச் சிறப்பையும் தன்னகத்தே கொண்டு புவனேஸ்வரி அம்பாள் அருள்பாலித்து வருகிறார். இவ் ஆலயத்தைச் சூழச் சிவன்கோயில், முருகன் கோயில், வைரவர்கோயில் ஆகியனவும் அமைந்து அழகு செய்கின்றன.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம் 1775ம் ஆண்டு மண்ணாற் கட்டப்பட்டதாகவும் 1822ம் ஆண்டு கல்லாற் கட்டப்பட்டதென்றும் யாழ்ப்பாணக் கச்சேரிப் பதிவுகள் கூறுகின்றன. அக்காலத்தில் பர்வத வர்த்தனி அம்மன் கோயில் என்று அழைக்கப் பட்டதாகவும் அறிய முடிகிறது. கண்ணகித் தெய்வம் மதுரை மாநகரை அழித்து அவ்வேகத்துடன்ஈழம் நோக்கி நவாலிகளையோடை ஊடாக இங்கு வந்து தங்கியதாகக் கருதப்படுகிறது. இதனாலே தங்குசங்களை என இவ்வாலயத்தின் தலவிருட்சம் அழைக்கப்படுகின்றது.
கண்ணகி வழிபாட்டைப் போற்றிக் கண்ணகிக்கு விழா எடுத்து வரும் சமயம் இவ்வூர் அன்பரான கதிர்காமர் வேலாயுதர் என்னும் சக்தி உபாசகர் தனது வயலில் உச்சிவேளையில் உழுது கொண்டு நிற்கும் சமயம், ஒர் மூதாட்டி பால்போல் நிறமுள்ள நரைத்த மயிரோடும், தொழ தொழத்த உடலோடும், வெண்ணிறஆடை அணிந்தவராகச் சோலைகள் நடு மத்தியில் நிற்பதை அவதானித்தார். உழுது கொண்டு நின்றவர் தனது வேலையை அப்படியே விட்டுவிட்டு அவ்வயது முதிர்ந்த மூதாட்டியிடம் சென்றார். அம்மூதாட்டி தனக்குத் தாகம் அதிகம் எனவும், குடிப்பதற்கு நீர் தேவை எனவும் கூறினார். உபாசகர்
மயூரமங்கலம்

மூதாட்டியை அவ்விடத்தில் சிறிது நேரம் தங்கும்படி கூறிவிட்டு, அயலில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று இளநீருடன் மீண்டும் அவ்விடம் வந்து பார்த்தபோது மூதாட்டியைக் காணவில்லை. உபாசகர் எங்கும் தேடிக் காணாது களைத்து மனம் சோர்ந்தார். அன்றிரவே அவருக்கு அம்பாள் முன்பு காட்டிய தோற்றத்துடன் காட்சி கொடுத்து என்னை அவ்விடத்தில் வைத்து ஆதரிக்கும்படி ஆஞ்ஞையிட்டு மறைந்தருளினார். விடிந்ததும் இவர் இந்த அற்புத அதிசயத்தைச் சுற்றத்தார்க்கும் சொல்லி வியப்பும் பெருமிதமும் அடைந்தார். அவ்வடியார் அம்பாள் தோற்றமளித்த இடத்தில் அம்பாளை வழிபட்டு வைகாசி மாதத்தில் பொங்கல், குளிர்த்தி, அவியல், படைப்பு போன்ற நிவேதனப் பொருள்களை வைத்துத் தேவி வழிபாடு செய்து வந்தார்.
ஏறக்குறைய 1775ம் ஆண்டளவில் இவ்வாலயம் குடிசையாய் ஆக்கப்பட்டு, பின்னர் 1822ம் ஆண்டளவில் கட்டடமாய் அமைக்கப்பட்டது. பின் கொடியேற்றத் திருவிழாவுடன் 18 தினங்கள் திருவிழா நடைபெற்றது. காலக்கிரமத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றை ஆகம முறைப்படி வைரக்கல்லால் செப்பமிட்டு, ஸ்தம்பமண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை முதலியவற்றைச் சீராக நிர்ணயித்து, விநாயகர், சுப்பிரமணியர், நந்தி, பலிபீடம், நவக்கிரகம், பைரவர் முதலிய பரிவார மூர்த்திகளை முறைப்படி பிரதிஷ்டைசெய்து,1919ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடந்து வருடந்தோறும் வைகாசி மாதத்தில் 18 தினங்கள் திருவிழா நடைபெற்று பூரணைத் தினத்தில் தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. இன்று பிள்ளையார், சுப்பிரமணியர், சந்தானகோபாலர், நவக்கிரகம், பைரவர், சண்டேஸ்வரி, சமயகுரவர் நால்வர், சூரியன், சந்திரன் ஆகியோருக்கும் தனித்தனி ஆலயங்கள் அழகுற விளங்குகின்றன. இராசகோபுரம் அம்மாளின் அருளாட்சியைப் பறைசாற்றிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. ஆதி மூலத்தின் மேல் உள்ள விமானம் சமய தத்துவங்களையும் கலாசாரங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள தலவிருட்சம் ஆலயத்தின் தொன்மையினைப் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. இவ்விடத்தில் அடியார்கள் பொங்கிப் படைத்து வழிபட்டு அம்மனின் திருவருளை மெய்மறந்து வேண்டிநிற்பர். காலை 9 மணி பூசையின் போது தினமும்

Page 554
விருட்சத்திற்கு பூசை வழிபாடு இயற்றப்படுகிறது. தினமும் ஆலயத்தில் அம்பாளிற்கும் பரிவார மூர்த்திகளிற்கும் ஐந்து வேளைப் பூசைகள் ஆகம விதிப்படி நடைபெறுகின்றன. அம்பிகையின் தேர்ப்பவனி நடைபெறும் வைகாசி விசாகப் பெருநாளன்று அழகான சிற்பங்கள் நிறைந்த சித்திரத்தேரில் அன்னை புவனேஸ்வரி அம்மாள் வீதியுலா வரும்போது அன்னைக்கு முன்பாக முருகன், விநாயகர் தேர்களும் பவனிவருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இத்திருத்தேர் பவனியின் போது வீதிகளில் அடியவர் கூட்டம் நிரம்பிவழியும். ஆலயத்தின் கிழக்குப்பக்கமாகப் பல கிராமத்து மக்கள் வண்டிகளிற் குடும்பம் குடும்பமாக வருகைதந்து, பந்தல் அமைத்து, மடைபரவிப் பக்தியோடு அம்பாளின் வருகைக்குக் காத்திருக்கும் காட்சி எவ் ஆலயத்திலும் காணமுடியாத இனியகாட்சி. சுளகுமடை, குரக்கன்பிட்டு, ஒடியற்பிட்டு, அரிசிப்பிட்டு போன்றவற்றைத் தூரவே மடைபரவிப் படையலாக வைத்து வணங்கப்படுவதனை இன்றும் காணலாம். தீராத நோய்களைத் தீர்க்குந் தாயாக, வறுமையைப் போக்கி வாழ்வளிக்கும் வடிவாம்பிகையாக இப்புனிதப்பதிவாழ் அம்பாளைப் பலரும் பலவிதமாக வணங்கி இஷ்ட சித்திகளை எய்தி உய்வர்.
அம்பாளின் ஆலயத்திற் கந்த புராணபடனம், திருக்கலியாணப்படிப்பு இலட்சார்ச்சனை, நவராத்திரி, ஸ்கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை, தைப்பூசம், விநாயகர் பெருங்கதை, பங்குனி உத்திரம் என்பன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இலட்சார்ச்சனைப் பூர்த்தித் தினமான ஆடிப்பூரத்தில் அம்பாளிற்கு ருதுசாந்திவிழாவும், நவராத்திரியின் விஜயதசமிக்கு முதல் நாள் மகிஷாசுரவதமும், ஸ்கந்தசஷ்டியின் போது சூரன்போரும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பங்குனித் திங்கள் கடைசி நாளன்று குளிர்த்தி விழாவும் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. தேர்ப்பவனி முடிந்து மாலையிலே தலவிருட்சமாகிய தங்குசங்களைக்கு மக்கள் பொங்கல் செய்து வழிபடும் மரபும் காணப்படுகிறது.
சுதுமலைப் பதியிலே எழுந்தருளி, புல அற்புதங்களைச் செய்து, அருள் பாலித்து வரும் அருள்மிகு பூரீ புவனேஸ்வரித் தாய்க்கு கடந்த வருடம் சித்திரா பெளர்ணமி நன்நாளில் மகாகும்பாஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இத்திருத்தலத்தின் பெருமையும் அம்பாளின் எண்ணிறைந்த ஆற்றலும் பலவரலாற்று நூல்களில் முதன்மை பெற்று நிற்பதைக் காணலாம்.

பூரீ முத்துமாரிஅம்பாள், திருநெல்வேலி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமை களோடு சீரும் சிறப்பும்பெற்றுவிளங்குவது திருநெல்வேலி அருள்மிகுழநீ முத்துமாரி அம்பாள் ஆலயம் ஆகும்.
தொன்மையும், பெருமையும் வாய்ந்த இவ்வாலயம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசபைச் செயலரின் நிர்வாகத்துக்கு உட்பட்ட திருநெல்வேலி வடக்குப் பக்கமாக அமைந்துள்ளது. இயற்கை எழிலும் தெய்வத் திருவருட் பெருக்கமும் பெற்று சிறந்து விளங்கும் இவ் ஆலயம் கிழக்கு நோக்கிய சந்நிதியுடன் அன்னை முத்துமாரியை மூலமூர்த்தியாகக் கொண்டு சீர்பெற்று விளங்குகிறது.
ஈழத்திலுள்ள பெருமை வாய்ந்த ஆலயங்களைப் போன்று இந்த ஸ்தலத்தின் பூர்வீகம், அதாவது அதனுடைய தோற்றம், சரித்திர ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக விளங்குகிறது. எனினும், போர்த்துக்கேயர் ஆலயங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்ட காலத்தில் இக்கோயிலும் அழிக்கப் பட்டிருக்கலாம் என்றும், அக்காலத்து மறைத்து வைக்கும் மரபுக்கேற்ப அம்பாள் கோயிலும் பனை ஓலையால் வேயப்பட்டு அடியார்களாற் பேணப்பட்டு வந்தது எனவும் கருத இடமுண்டு. பின்னர், காலம் செல்லச் செல்ல, செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஆலயமாக விளங்கிப் படிப்படியாக வளர்ச்சி பெற்று, தற்போது உட்சுற்றுப் பிரகார மண்டபத் திருப்பணி வேலைகள் யாவும் நிறைவுபெற்றுப் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
அமைதியும் தூய்மையும் பெற்று விளங்கும் இவ்வாலயத்தின் நுழைவாயில் முன்னால் பெரிய மண்டபம் உள்ளது.
இவ்வாலயம் கர்ப்பக்கிரகத்தை அடுத்து அர்த்த மண்டபமும், மகா மண்டபமும், தரிசன மண்டபமும், ஸ்தம்ப மண்டபமும் யாவும் ஒருங்கே அமையப்பெற்று அழகுறக் காட்சி தருகின்றது. விநாயகர், துர்க்கை, நாகேஸ்வரி, வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், வைரவர், சந்தான கோபாலர், சனீஸ்வரர், காத்தவராயர், சண்டேசுவரர் முதலிய பரிவார மூர்த்திகளும், அவற்றுக்குத் தனித் தனியே பரிவாரக் கோயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கொடிமரம், நந்தி, பலிபீடம் என்பன ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன. வசந்த மண்டபம் புதுப்பிக்கப்பட்டு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கின்றன. யாகசாலை, பாகசாலை, வாகன சாலை, களஞ்சிய அறை யாவும் அமைக்கப் பெற்று
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 555
ஆலயம் சிறந்து விளங்குகிறது. தேவசபை தெற்கு நோக்கியவாறு காட்சி தருகின்றது. உற்சவ மூர்த்திகளான விநாயகர், அன்னை முத்துமாரி, துர்க்கா தேவி, இலக்குமி தேவி, சரஸ்வதி தேவி, வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், நாகேஸ்வரி, இராஜராஜேஸ்வரி, சந்தான கோபாலர் ஆகிய எழுந்தருளி மூர்த்தங்கள் இந்தத் தேவசபையில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர்.
கோயில்களில், துர்க்கையின் திருவுருவம் பெரும்பாலும் கருவறையின் வடக்குப் பக்கச் சுவரில் உள்ள மாடத்திற் காணப்படும். ஆனால், இங்கு உட்சுற்றுப் பிரகாரத்தில் வடபகுதியில் துர்க்கையம்மனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டு வடக்கு வாயிலை நோக்கியபடி துர்க்கையம்மன் வீற்றிருந்து அருள்பாலித்த வண்ணம் இருக்கிறாள். வைரவர் சந்நிதிக்கு அருகிற் புதிதாக அமைக்கப்பட்ட கண்டாமணிக் கோபுரம் நெடிதுயர்ந்து விளங்குகின்றது. இந்த ஆலயம், உள்வீதி, வெளிவீதியென இரண்டு சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றுத் திருநெல்வேலிக் கிராமத்தில் ஒர் அருளாலயமாக விளங்கும் அன்னை முத்துமாரிஅம்பாளின் திருப்பதியின் தலவிருட்சமாகக் கொன்றையும், வேம்பும், பலாவும் விளங்குகின்றது.
இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்திலே, அகில புவன மாதாவாகிய முத்துமாரியம்பாள், நான்கு திருக்கரங்களுடன் இடது காலை மடித்து வலது காலைத் தொங்க வைத்த வண்ணம் கிழக்குத் திசை நோக்கியபடி கொலுவீற்றிருக்கிறாள். அந்தக் குவலயம் போற்றும் நாயகி வலது பக்கத்திருக்கரங்களில் சூலமும் வாளும் இடது பக்கத் திருக்கரங்களில் டமருகமும் கபாலமும் ஏந்தியபடி அக்கினிச் சடாபாரத்துடன் விளங்குகிறாள். அன்னையின் பாதார விந்தத்திலே பூரீசக்கரம் என்னும் மகிமை வாய்ந்த யந்திரம் வைத்துப் பூசிக்கப்படுகிறது.
இவ்வாலயத்தில் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று நடைபெறும் பொங்கல் விழா ஒரு தனிச் சிறப்பும் பெருமையும் வாய்ந்தது. காலை தொடக்கம் மாலை வரைக்கும் ஆலய முன்வாசலிலும் வடக்குத் தெற்கு வீதிகளிலும் பொங்கல் நடைபெற்ற வண்ணம் இருக்கும். இப்பொங்கலில் ஆரம்பம் நாயகவளுந்துப் பொங்கலாக மிக முக்கிய சிறப்பம்சமாக நடைபெறும் பொங்கல் அவிர்ப்பாகம் யாவும் காத்தவராயருடைய மண்டபத்திலே படைக்கப்படும்.
மயூரமங்கலம்

அன்றைய தினம் மாலையில் அம்பாள் வீதிவலம் நிறைவுபெற்றதும் அடியார்களின் தீ மிதிப்பு வைபவமும் நடைபெறும்.
முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த மகோற்சவம் ஆனி மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று கொடியேற்ற விழாவுடன் ஆரம்பித்துத் தொடர்ந்து பத்துத் தினங்கள் திருவிழா நடைபெறும்.
திருத்தேர்த் திருப்பணி 25.05.1994ல் ஆரம்பித்து 1997ஆம் ஆண்டில் இனிது நிறைவு பெற்றது. இதே ஆண்டில் நடைபெற்ற மகோற்சவ காலத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டு இரதோற்சவத்தன்று புதிய சித்திரத் தேரில் அன்னை பூரீ முத்துமாரி அம்பாள் ஆரோகணித்து வீதிஉலா வந்தாள்.
சிரணியூரீநாகபூஷணியம்மை, áFGøóTugaớPüuauiu
ஈழத் திருநாட்டின் சைவசமயம், தமிழ்ப்பண்பு என்னும் இவற்றின் தொன்மைக்குஞ் சின்னமாக விளங்குவன திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்னும் இரு சிவத்தலங்களாகும்.
அதுபோன்று தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இருகண்களாக விளங்குவன நயினை, சீரணி என்னுமிடங்களில் விளங்கும் நாகபூஷணியம்மை ஆலயங்கள் ஆகும்.
திருச்சீரணி நாகபூஷணி :-
தம்மை வழிபட்டுப் பூசித்த நாகமொன்றைத் தம்மருமைத் திருமேனியில் ஆபரணமாய்ப் பூண்டகாரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை யென்று அழைக்கப்படுகிறாள். அந்த நாகபூஷணியம்மை சண்டிலிப்பாய்ப் பகுதியைச் சார்ந்த சீரணிப்பதியிற் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய திருவருள் மகிமை மிகவும் பெரிது.
அக்காலத்தில் இப்பதியிலே சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஒரு இயந்திரம் வைத்துப் பூசைசெய்து பிரபல்யமாகச் சாத்திரம் சொல்லி வந்தார்.
இவருடன் இராமுத்தர் என்னும் ஒருவர் வசித்து வந்தார். சண்முகம் பொன்னம்பலம், இயந்திரத்தைச் சரிவரப் பூசிக்காமையால் அவர் வீட்டிற் சில துர்ச் சகுனங்கள் நிகழ்ந்தன. அவை முத்தர்க்கு பிடிக்காமையாலும், யந்திரம் இராக்காலத்தே கலகலப்பான பேரொலி செய்தமையாலும் அதனை

Page 556
அப்புறப்படுத்த நினைத்தார். ஒருநாள் முத்தர் நன்றாய் மதுபானம் அருந்திவிட்டுக் குறித்த யந்திரத்தையும் அத்துடனிருந்த பொருள்களையும் பெட்டியுடன் எடுத்துச் சென்று வீட்டினருகாமையிலுள்ள ஒரு அலரிப் பூம்பற்றைக்குட் போட்டுச் சென்று விட்டார். எம்பெருமாட்டி நாகபூஷணியம்மை இங்குள்ள அன்பர்கள் பலரிடத்தே கனவிற் தோன்றி “நான் நயினை நாகபூஷணி, என்னை ஆதரியுங்கள்” எனக் காட்சியளிப்பாளாயினள். “நாமெல்லாரும் வறியவர்கள் தாயே! எங்ங்னம் எங்களால் ஆதரிக்க முடியும்” என அன்பர்கள் கூறி வருந்தினார்கள். “என்னை ஆதரியுங்கள் தொண்டர்கள் வருவார்கள். செல்வம் செழிக்கும், நாடு நலம்பெறும், வாழ்வு வளம் பெறும்” என்று அவ்வன்பர்களுக்கு அருள் பாலித்துக் குறித்த அன்பராகிய முருகேசபிள்ளைக்குக் கனவிலே வெளிப்பட்டுப் பல முறைகளிலும் பலதிருவருட் தன்மைகளைக் காட்டியருளினாள்.
ஒருமுறை ஓரிடத்தைக் குறிப்பிட்டு “இவ்விடத்திலே நம்மைத் தாபித்து வழிபட்டு வருவாயாக’ என அம்மை அருளிச் செய்தாள். அவர் தமது நிலைமையை எண்ணி அஞ்சி அச்சொப்பனங்களைப் பிறருக்குச் சொல்லாது தம்முள்ளே சிந்தித்து வழிபட்டு வருவராயினர்.
இங்ங்ணமான 1896 விளம்பி வருடம் சித்திரை மாதப் பெளர்ணமி தினத்தன்றிரவுஎம்பெருமாட்டி அருள் வள்ளலாகிய பெருமானொடும், பாலசுப்பிரமணியரோடும் சோமாஸ்கந்த மூர்த்தத்தைக் காட்டிச் சொப்பனத்திலே வெளிப்பட்டு, “உனக்குச் சொன்னவைகளை நீ உண்மையென்று சிந்தித்தாய் இல்லை. அதனுண்மையை உனக்கு இப்பொழுது காட்டுவோம். அதோ தோன்றுகின்றதென்னை மரத்திலே சில இளநீர் பறித்து வந்து தா?” என்று கூறியருளினார். அன்பருக்கு அது ஒரு முதிர்ந்த, வரண்ட படுமரமாகத் தோன்றியது, அதனையுணர்ந்த அவர் "அதிற்குரும்பைகள் இல்லையே யான் உமக்கு எப்படி இளநீர் தரக்கூடும்" என்ன “நன்று நீ சென்று சமீபத்திலே பார், வேண்டிய குலைகள் தோன்று" மென அம்மையார் அருளினார். அங்ஙனமே அவர் சென்று பார்த்துத் தொங்கும் இளநீர்க்குலைகளைக் கண்டு வியப்பும் அச்சமுங் கொண்டவராய்ச் சில குரும்பைகளைப் பறித்துக் கொணர்ந்து கொடுத்தார். அம்மூவரும் அதிக தாகமுடையார் போலப் பருகினர். பின்னர் அவரை நோக்கி "அன்பனே! இந்த இடத்தைத் தோண்டிப்பார்,
Cs2)

இங்கு ஒரு சிலை தோன்றும். அதனையே மூலமாக வைத்து ஒரு கொட்டகை அமைத்து வழிபடுவாயாக. சில காலத்துள் பல திசைகளிலுமிருந்து அடியார்கள் வந்து வழிபட்டுஇட்டசித்திகளையெல்லாம் அடைவார்கள். வேண்டிய திரவியங்களையெல்லாம் காணிக்கையாக இடுவார்கள். அவற்றைக் கொண்டு திருப்பணிகளைச் செய்யத் தொடங்குக. அது பூர்த்தியாகும் வண்ணம் அருள் செய்வோம். நமக்கு வழிபாடு அன்பின் பூசையேயாகும். மேலும் உனது மனம் புனிதமுறும் வண்ணம் ஒரு மந்திரமும் உபதேசஞ் செய்வோம்” என அருளி, மந்திரோபதேசமும் புரிந்து மறைந்தருளினார்.
சிலை தோன்றுதல் :-
எம்பெருமாட்டியின் பெருங் கருணையை நினைந்து, கண்களினின்றும் ஆனந்த அருவி மல்க, உண்மையை அறியும்படி, குறிப்பிட்ட இடத்தை மறுநாள் அகழ்ந்து பார்த்தார். ஆங்கு ஒரு விம்ப வடிவமைந்த சிலை காணப்பட்டது. அதனைக் கண்டுபரவசப்பட்டவராய் “இனி எல்லாம் ஈஸ்வரியின் செயலால் இனிதாகும்” என்னும் நம்பிக்கையுடனே ஒரு மண்டபம் அமைத்தார். (1896) ஆடிமாதம் திங்கட்கிழமையும் அமாவாசையுங் &önly tu புண்ணியதினத்திலே, பூசை தொடங்கி காலந் தவறாது பக்தி சிரத்தையோடும் நடப்பித்து வந்தார். தேவியருளிய திருவாக்கின்படி நானா திசைகளினின்றும் அடியார்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தார்கள். நாகபூஷணியம்மையை வழிபட்டனர்.
குட்டம், காசம், ஈளை முதலான கன்ம நோய்களினால் வருந்தியோர் இத்தலத்தை அடைந்து தேவியை வழிபட்டுத் தம்நோய்கள் தீரப் பெற்றனர். நாக சாபத்தினாலே நீண்டகாலம்பிள்ளைப்பேறில்லாதவர்கள் எம்பெருமாட்டி எழுந்தருளியிருக்கும் இத்தலத்தை யடைந்து வந்தனை வழிபாடுகள் புரிந்து பிள்ளைச் செல்வம் பெற்று உய்வடைந்தனர்.
அம்பாளின் அதிசயமான அருட் செயல்கள் பற்றிப் பல கர்ணபரம்பரையான கதைகள் காலங்கண்ட முதியோர்களினாலே கூறப்படுகின்றன.
கோயில் அமைவு -
சீரணித் திருப்பதியிலும் நயினை நாகபூஷணியம்மை ஆலயம் போற் பாகங்களிலே ஐய்னார்கோயில், காளிகோயில் முதலான ஆலயங்கள் விளங்குகின்றமை குறிப்பிடக்கூடியது.
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 557
யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர்வீதியில் சண்டிலிப்பாய் - சீரணிச் சந்தியிலிருந்து சுமார் 50 யார் தூரத்திலே அமைந்துள்ளது.
இக்கால நிலை:-
சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் திருப்பணிகளை நடத்தும் பொருட்டு 10.10.1962இல் திருப்பணிச் சபையொன்று தாபிக்கப்பட்டது. இச்சபையின் நிருவாக சபையினர் கட்டுடை, சண்டிலிப்பாய், அளவெட்டி, சங்கானை முதலான பல இடங்களிலும் நிதி திரட்டிச் சிறந்த முறையில் அம்பாளின் அருளினாலே மேலான தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.
மகாமண்டபம், யாகசாலை, கொட்டகை, வசந்தமண்டபம்,கொடித்தம்பம் முதலான பழுதடைந்தன வற்றையெல்லாம் புதுப்பித்துத் திருத்தியமைத்துள்ளனர். கோபுரத் தூண்களின் இருமருங்கிலும் அம்பாளுடைய அபிநய ஓவியங்கள் வரையப்பட்டு விளங்கும் அற்புதமான காட்சிகள் உள்ளத்தையிர்க்குந் தன்மையன.
உள்வீதியில் கலியுகவரதனான முருகப் பெருமான் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். அழகு பொழியுஞ் சித்திரத்தேர் விழாக்காலங்களில் மேலான சிறப்பைக் கொடுக்கும் பொருட்டாக ஆக்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள தேரோடும் வீதி ஆலயத்திற்கு மேலும் அழகு செய்து நிற்கின்றது.
நித்திய நைமித்தியங்கள் :-
ஆறுகால நித்திய பூசைகள் கிரமமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் சித்திரை மாதத்திலே மகோற்சவம் நடைபெறும். சித்திரை பூரணையன்று தேர்த்திருவிழா நடைபெறும்.
சிவகாமிஅம்மன், இணுவை
இணுவைச் சிவகாமி அம்மன் கோயில் யாழ்ப்பாண அரசர் காலத்துச் சக்தி திருத்தலம். யாழ்ப்பாண அரசர் தமது நாட்டைப் பல ஆட்சிப் பிரிவுகளாக வகுத்து ஒவ்வொரு ஆட்சிப் பிரிவுக்கும் ஒவ்வொரு ஆட்சித் தலைவர்களை நியமித்தனர். இணுவையூர் ஆட்சிப்பிரிவுக்குத் தமிழகத்து நடுநாட்டுத் திருக்கோவலூர்ப் பேராயிரவன் தலைவன் ஆனான். இவன் சிதம்பரத்தில் இருந்து சிவகாமியம்மை திருவுருவத்தை வரவழைத்துத், தான் வாழ்ந்த இடத்தில்
மயூர மங்கலம

சிவகாமியம்மை வழிபாட்டை அமைத்தான் எனவும், அவ்விடத்திற்குச் சிதம்பர வளவு எனப் பெயரிட்டான் எனவும் செவிவழிச் செய்தி தெரிவிக்கின்றது.
பேராயிரவனின் பின் இப்பகுதி ஆட்சித் தலைவனாக இருந்த காலிங்கராயன் நாள்தோறும் சிவகாமியம்மையை வழிபட்டு, அதன்பின் ஆட்சிக் so மேற்கொண்டான் எனவும், இவன் மகன் கைலாயநாதனின் உலாவின்போது, அவ்வுலாவின் முன்பாகச் சிவகாமியம்மை திருவுரு தேரிற் சென்றது எனவும் பஞ்சவன்னத் தூது நூல் கூறுகின்றது.
போத்துக்கேயர் ஆட்சியாளர் இக்கோவிலை இடித்து அழித்தனர். ஒல்லாந்தர் ஆட்சியில் இக்கோயில் வழிபாடு மீண்டும் தொடங்கியது. ஒல்லாந்தர் ஆட்சியிற் தோம்பு எழுதும் உத்தியோகத்தராய் இருந்த இவ்வூர்ச் சின்னத்தம்பிப் புலவர் சிவகாமியம்மையை நாளும் வழிபாடு செய்தவர். இவரை ஒல்லாந்த ஆட்சியாளர் சிறையில் இட்ட போது இவ்ர் சிவகாமியம்மை அருளினாற் சிறைக்கதவு திறந்து வெளி வந்த நிகழ்ச்சி இத்திருத்தலத்தின் பெருமையைப் பலரும் அறியச் செய்தது. இப்புலவர் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ், சிறைநீக்கு பதிகம், சிவகாமியம்மை துதி, திருவூஞ்சல் ஆகியவற்றைப் பாடியுள்ளார்.
இத்திருத்தலம் சிறந்த தெய்வச் சூழலில் அமைந்துள்ளது. இவ்வூர்ப் பண்டைய ஆட்சியாளர் தம் வீரத்திற்காக வழிபட்ட வைரவர், பத்திரகாளி கோவில் இத் திருத்தலத்தின் மேற்கு வீதியில் இருக்கிறது. இக் கோயில் இன்றும் அருளாற்றலொடு விளங்குகிறது. இத் திருத்தலத்திற்குக் கிழக்கிற் சோழர்காலத் தொடர்புள்ள அருள்மிகு காரைக்காற் சிவன்கோவில் இருக்கிறது. மேற்கில் பெருஞ்சித்தராக விளங்கிய பெரிய சந்நியாசியாரின் அடக்கத் திருத்தலம் உள்ளது. வடமேற்கில் இப்பகுதியின் பண்டைய அரசர் ஒருவருக்கு அமைந்த இளந்தாரி கோவில் உள்ளது.
இந் நூற்றாண்டில் இக் கோயிற் கட்டடங்கள் திருத்தியமைக்கப் பெற்றன. திருத்தொண்டுகள் செய்வதிற் பலர் ஈடுபட்டனர். புதிய அமைப்புக்கள் உருவாகின. பணிகள் பல நடைபெற்றன. சிறந்த பூந்தோட்டம் ஒன்று உள்ளது. வேம்பு, அரசு, வில்வை, மகிழ் முதலிய பல புனித மரங்கள் வீதிகளில் உள்ளன. அழகிய இராசகோபுரம் காட்சி தருகிறது. சிற்ப வேலைகள் அமைந்த அழகிய திருத்தேர் அண்மையில் அமைக்கப் பெற்றுள்ளது. அழகிய சிற்ப அமைவுகள்

Page 558
உள்ள ஊர்திகள் உள்ளன. உள் வீதியில் எல்லாக் கடவுளர்க்கும் கோயில்கள் உள்ளன. வெளி வீதியிற் திருமடமும் சின்னத்தம்பிப் புலவர் அரங்கும் உள்ளன.
நித்திய நைமியத்திய பூசைகள் ஒழுங்காகவும் சிறப்பாகவும் நடைபெற்றுவருகின்றன. எல்லாச் சிறப்புத் தினங்களும் விழாக்களும் ஆண்டு தோறும் நடை பெறுகின்றன. ஆண்டுத் திருவிழா, ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை என்பன மிகச் சிறப்பானவை. ஆண்டுத் திருவிழா பங்குனி மாதத்தில் பன்னிருநாள் நிகழும். உத்தரநாள் தீர்த்தத் திருவிழாவும் அதற்கு முதல்நாள் தேர்த்திருவிழாவும் நடைபெறும். மகேசுவர பூசையும் நடைபெறும். ஆடிப்பூரக் கற்பூரத் திருவிழா மிகச் சிறப்பானது. பகல் சங்காபிஷேகம் நடைபெறும்.
பத்திரகாளியம்மை, பிட்டியம்பதி, சங்கரத்தை
யாழ்ப்பாணத்தில் வலிமேற்கு பிரதேசத்தில் அமைந்திருக்கும் அழகிய சிற்றுார் சங்கரத்தை. அவ்வூரின் மேற்குப் பகுதியில் நெல்வயல்களாற் சூழப்பட்ட பிட்டியம்பதி என்னும் புண்ணிய தலத்திலே பத்திரகாளியம்மை வீரபத்திரர் சமேதராகக் கோயில் கொண்டு அடியார்களுக்கு அருள்பாலித்த வண்ணம் இருக்கின்றார்.
பிட்டியம்பதி என்பது பூர்வத்தில் இருமரபுந்துய்ய முதலியார் பரம்பரையில் வந்த பெருமையினாரின் குமாரர் முதன்மையினார் என்பவரிற்கு உரியது. அவ்விடத்தில் உண்டாகி இருந்த புளியமரத்தில் அமர்ந்திருந்து கிளிகள் அயலில் உள்ள நெல்வயல்களில் வேளாண்மைக் காலத்தில் வேளாண்மையைச் சேதப்படுத்துவதைக் கண்ணுற்ற முதன்மையினார் அக்காலத்தில் (1678) வட்டுக்கோட்டைக் கிறிஸ்தவ தேவாலய அமைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த தச்சுத் தொழிலாளியை அழைத்து அப்புளிய மரத்தைத் தறிக்கும்படி ஏவினார். அதற்கு அவன் மறுப்புத் தெரிவிக்கவே தாமே அதனைச் செய்ய முனைந்தார். அப்போது அம்மரத்தினடிப் புற்றுக்குள்ளிருந்து வெளிப்பட்ட நாகசர்ப்பம் அவரைத் துரத்திச் சென்றது. சிறிது தூரம் சென்றதும் பாம்பு தலை தூக்கி ஆடிநிற்பதைக் கண்ட அவர் தம் அபசாரத்தைப் பொறுத்தருளும்படி தம்முட்பிரார்த்தித்து தமது இருப்பிடத்திற்குச் சென்றார். அன்றிரவே அம்மையார்

முதன்மையினாரின் சொப்பனத்திலே தோன்றித் தமக்கு 'நிழல்" அமைத்து வழிபடுமாறு பணித்தார். அடுத்த நாளே அவ்விடத்தில் நிழல் அமைத்து வழிபடத் தொடங்கினார். அம்மரமே இன்றும் தலவிருட்சமாக வியாபித்து நிற்கின்றது. அவரின் வழித்தோன்றல்களே அன்றில் இருந்து இன்றுவரை பூசகர்களாகவும் அறங்காவலர்களாகவும் இருந்து வருகின்றனர். இது கர்ண பரம்பரைக்கதை.
பிட்டியம்பதியிற் கோயில் கொண்டமையினால் பிட்டியம்பதிபத்திரகாளியம்மை என்ற நாமம் அம்பாளிற்கு ஏற்பட்டது. புளியமரத்தடியிற் கதிரை ஒன்றை வைத்து அதனை வீரபத்திரக் கடவுளுக்குரிய ஆசனமாக மனத்தின்கண் நினைத்து வழிபட்டு வந்தனர். அம்பாளின் அற்புதங்களாற் கவரப்பட்டு அயற் கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடத் தொடங்கினார்கள். இங்கே திராவிட மு ைறப்படி பூசைகள் நடைபெற்று வந்ததுடன், பொங்கிப் படைத்தல், உயிர்பலி கொடுத்தல் போன்ற வைபவங்களும் நடைபெற்று வந்தன.
சிறு குடில் அமைத்து வழிபடத் தொடங்கிய இவ்வாலயம் 18ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் கர்ப்பக்கிரகமும்பிள்ளையார், வைரவர் என்னும் பரிவாரத் தெய்வங்களிற்கு சந்நிதிகளும் மண்டபங்களும் அமைக்கப் பெற்றுக் கற்கோயிலாக மாறியது. மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள விக்கிரகங்கள் அக்காலத்தைச் சேர்ந்தவை. 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து கொடியேற்றத்துடன் தொடங்கிப் பத்தாவது நாளான பங்குனிமாத உத்தர நட்சத்திரத்திலே தேர்த்திருவிழாவும், அடுத்த நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று வருகின்றது. இன்று எழுந்தருளி விக்கிரகங்களாக உள்ள அம்மையார் விக்கிரகங்கள் 1880ம் ஆண்டு அமைக்கப்பட்டன.
1947 ம் ஆண்டு ஆலய அறங்காவலரும் ஊர்மக்கள் சிலருமாகச் சேர்ந்து உயிர்ப்பலி கொடுப்பதனை நிறுத்தினார்கள். இதே ஆண்டு நந்திதேவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். திராவிடச் சந்தர்ப்பங்கள் யாவற்றிலுமே நீத்துக்காய் வெட்டிப் பலி கொடுக்கப்படுகின்றது. ஆனாலும் இன்றும் பக்தர்கள் தமது நேர்த்திக்காகச் சேவல்களையும் கடாக்களையும் கோவிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதை வழமையாகக் கொண்டுள்ளனர். இவ்வாண்டிலேயே கோவில் ஆகம விதிகளிற்கு அமைவாக அமைக்கப்பட்டது.
ரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 559
1978 ம் ஆண்டு சித்திரத் தேர்கள் செய்து வெள்ளோட்டம் நடைபெற்றது. 1985ம் ஆண்டு திருத்த வேலைகள் நடைபெற்று, வைகாசிப் புனர்பூச நட்சத்திரத்திற் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1988ம் ஆண்டு நவக்கிரக மண்டபமும் 1989ம் ஆண்டு சண்டேஸ்வரர் மண்டபமும் அமைக்கப்பட்டன.
இவ்வாலயத்தில் வருடத்திற்கு இரண்டு முறை கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் நடைபெறுவது ஒர் சிறப்பம்சமாகும். பங்குனி மாதத்தில் நடைபெறும் திருவிழா பத்திரகாளியம்மைக்கும் ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழா வீரபத்திரருக்கும் உரியன. பங்குனி மாதத்தில் நடைபெறும். திருவிழாவே மிக விமர்சையாக நடைபெறும். 11ம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா அன்று எழுந்தருளி சுவாமிகளுக்கு விசேட அபிசேகம் நடைபெறும். கொடியிறக்கமும், விசேஷமாக மகேசுவர பூசையும் சிறப்பாக நடைபெறும்.
இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்பம்சங்களுடன் விளங்குகிறது. இக் கோவிலில் தினமும் மூன்று காலப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.
பூாநீசிவகாமிஅம்பாள்,
தில்லையம்பதி, கோண்டாவில்
யாழ்நகரின் வடபால் மூன்று மைல் தொலைவிலுள்ள கோண்டாவில் தில்லையம்பதியில், 135 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்ற இவ்வாலயத்தில், ஆரம்ப காலத்தில் அன்னை மாமர நிழல் தனில் சிறு கொட்டகையில் பேச்சியம்மன் எனும் பெயருடனும், பின் சிவகாமியாகவும் எழுந்தருளினார். அக்காலத்தில் வைகாசி விசாகத்தில் அம்பாளுக்குப் பொங்கி மடைவைப்பதுடன் ஆடு,கோழி என்பவற்றைப் பலியிட்டு விழாக் கொண்டாடினர். பின் காலையும், மாலையும் பூசைகள் நடைபெற்றதுடன் பலியிடல், மடைவைத்தல் என்பன நிறுத்தப்பட்டு, 1962இல் பெருங்கோயில் அமைப்பதற்காகப் பாலஸ்தாபனம் செய்தனர். 1965 ஆனிமாதம் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டதுடன் சிவகாமி அம்பாள் எனத் திருநர்மம் சூட்டப்பட்டது.
1966இல் இருந்து அம்பாளுக்கு வைகாசி விசாகத் தினத்தை முன்னிட்டுப் பத்து தினங்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வந்தது. மேலும் பலிபீடம், கொடித்தம்பம், வசந்த மண்டபம், மணிக்கோபுரம், சித்திரத்தேர், திருமஞ்சனக்கிணறு என்பன அமைக்கப்பட்டு, 1976இல்மகோற்சவம்
மயூர மங்கலம்

ஆரம்பமானது. மகோற்சவ காலத்தில் வேட்டைத் திருவிழாவன்று மாலையில் அம்பாள் ஞான வைரவர் சுவாமி கோவிலுக்குச் சென்று பரிவேட்டையாடலும், இரவு சப்பரத் திருவிழாவும், மறுநாள் தேர்த்திருவிழாவும், வைகாசிப் பெளர்ணமியில் தீர்த்த உற்சவமும் நடைபெறுவது வழக்கமாகியது. ஆலய வாயிலில் தலவிருட்சமான ஆலும் அரசும் ஒன்றிணைந்த பொந்தினூடாக விமானக் கலசத்தைக் காண்பது அற்புதமான காட்சியாகும். மேலும் 1982இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, மூலமூர்த்தியான சிவகாமியம்பாள், வள்ளி தெய்வானை சமேதழரீமுருகன், நாகதம்பிரான், சந்தான கோபாலர், நர்த்தனகணபதி, மகேஸ்வரி, வைஷ்ணவி,பிராமகி, துர்க்கை, சண்டேஸ்வரி ஆகிய மூர்த்திகளுக்குத் தனிக் கோயில்களும் சிவகாமி சமேத பூரீ நடராஜருக்கு கனகசபையும் அமைக்கப்பட்டு, மூலவிக்கிரகம்பிரதிஷ்டைசெய்யப்பட்டு 1989இல் பங்குனி உத்தரப் பெளர்ணமி நாளில் மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது. இக்கும்பாபிஷேகத்துக்குக் கங்கைத் தீர்த்தம் பயன்படுத்தப்பட்டது. இந்நன்னாளிலே கோயில் சுற்றாடலுக்குத் தில்லையம்பதி எனும் திருநாமம் சூட்டப் பெற்றது. பங்குனி உத்தர சங்காபிஷேகம், வேட்டைத் திருவிழா, விஜயதசமி, மானம்பூ ஆகிய தினங்களில் அம்பாள் வீதியுலா வருவார். 1994 பங்குனி உத்தர சங்காபிஷேகத்தின்போது அம்பாளுக்குப் பொன்முடியும், திருக்கோரண சூட்டு விழாவும் நடத்தப்பட்டது. திருவூஞ்சல் ஒலிப்பதிவு நாடா ரி. எம். செளந்தரராஜனால் பாடப்பட்டு 1974இல் வெளியிடப் பெற்றது. இவ்வாறாக அம்பாள் பல்வேறு சிறப்புக்களுடன் அருள் பாலிக்கின்றார்.
காளியம்பாள், கன்னாதிட்டி
யாழ்ப்பாணம் கன்னாதிட்டியிலுள்ள இவ்வாலயம் 1775ஆம் ஆண்டு விஸ்வ கர்மாக்களின் ஆதரவிற் கட்டப்பட்டு வழிபடப்பட்டது. அப்போது இருகாலப் பூசைகள் நடைபெற்றதுடன் நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தினமும் கொலு பூசையுடன் 10ம் நாள் மானம்பூவும் 11ம் நாள் திருவூஞ்சல் முடித்து வசந்த மண்டப பூசையும் 12ம் நாள் விடையார்த்தியும் (வேட்டைத் திருவிழா) 15ம் நாள் வரும் பெளர்ணமியில் சந்திரபூசையும் நடைபெறுவது சிறப்பம்சங்களாகும். 1800 ஆம் ஆண்டுப்பகுதியில் மக்களின் ஒத்துழைப்புடன் மேலும் விசாலமாக்கப்பட்டுக் குடமுழுக்குச் செய்யப்பட்டது. ஆரம்பித்து ஒரு நூற்றாண்டு காலத்திற்கு விஸ்வப் பிராமண குருமாரே
(52వ్)

Page 560
பூசை செய்து வந்தனராயினும் பின் ஆருஷேய குருமார்களே பூசை செய்து வருகின்றனர். 1891இல் வைரக் கற்களாற் கர்ப்பக்கிரகமும் அந்தராண முகசோபன மண்டபமும் கட்டப்பட்டு 1901 ஆவணியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் 1918 வரையில் நிருத்த மண்டபத்தையும் யாக வேதிகா மண்டபத்தையும் ராஜகோபுர வாயிலையும் நிர்மாணித்தனர். 1971இல் கர்ப்பக்கிரகம், விதனவிமானம், மகாமண்டப சிற்பசபை விமானம், கற்றுக் கோவில்கள்,வெளியேயுள்ள விநாயகர் ஆலயம் என்பன புதுப்பிக்கப்பட்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டன. 1974 வைகாசி 27இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1984 இல் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பிரமோற்சவத்தை வருடாவருடம் நடத்தினர். 1982இல் பூரீசக்கரமேரு எனும் யந்திரராஜம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கேதாரகெளரி நோன்பு அனுஷ்ட்டிக்கப்பட்டு கெளரி காப்பு நூலும் வழங்கப்படுகிறது. சித்திரத்தேர் நிர்மாணிக்கப் பட்டிருந்தாலும் மகோற்சவ காலங்களில் உபயோகிக்க முடியாமலிருந்து தற்போது அத்தடையும் நீங்கியுள்ளது. 19.03.1999 பாலஸ்தாபனம் நடைபெற்று 2001 இல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
நொச்சியம்பதி பூரீபத்திரகாளி அம்பாள், வண்ணார்பண்ணை யாழ்ப்பாண மாவட்டத்தில் வண்ணார் பண்ணையில் வடமேற்கு நொச்சியம்பதியில் 1900 ஆண்டளவில் கொழும்பிலிருந்து பெண்ணொரு வருக்குக் கலை வந்து"வண்ணார்பண்ணையில் குறித்த இடத்திலுள்ள பலாமரத்தில் நான் இருக்க வேண்டும். எனக் கூறவே, அவரது மாமனார் குறித்த இடத்திற்குச் சென்று அம்மன் படமும் சங்கும் வைத்து வழிபட்டதிலிருந்து ஆரம்பித்தது இவ்வாலய வழிபாடு. 1915ம் ஆண்டளவில் நவராத்திரி, திருவெம்பாவை, ஆனி உத்தரம், பங்குனித் திங்கள், ஆடிப்பூரம், வைகாசி விசாகம் போன்ற விசேட தினங்களில் பொங்கல் நடைபெற்று வந்தது. 1916இல் பலா தறிக்கப்பட்டுக் கிணறு தோண்டப்பட்டது. பின் சூலம் வைத்து வழிபட்டு வருகையில் ஆலங்கன்றொன்றும் வளர்ந்து வந்து தல விருட்சமாகியது. அவ்வாலம் விழுதை அறுத்தெறிந்த ஒருவர் ஒரு கிழமையில் அம்மை நோயால் மாண்டார்.
அம்மன் அருளியபடி ஆலயத்தடியில் புதையலெடுத்து விக்கிரகம் வார்த்து வசந்த மண்டபம், மடைப்பள்ளி, மணிக்கூட்டுக் கோபுரம், சுற்றுமதில் அமைக்கப்பட்டு 1928 ஆனிமாதம் முதலாவது

கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கார உற்சவம் நடைபெற்று வந்தது. காலப்போக்கில் விநாயகர், வைரவர், வாராகி ஆலயங்களும், ஆலய வீதிகளும், வாகனங்களும் உருவாக்கப்பட்டன. திருவிழா 10 நாள்களும், மார்கழித் திருவாதிரை ஆருத்திரா தரிசனத்தன்றும் அம்மன் பவனி வருவார். இடையில் பஞ்சம் காரணமாகப் பூசைகளும் வழிபாடும் சிறிது நலிவுற்றன. பின் 1969இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 14.07. 1971இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மீண்டும் 1988இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு29.06.1990 ஆனி உத்தரத்தில் மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இப்போது வழமையான பூசைகளும் விழாக்களும் நடைபெற்று வருகின்றன.
ирѣли0лfилфи06äт, கலட்டி எச்சாட்டி, வண்ணார்பண்ணை
தினமும் மூன்று காலப் பூசை நடைபெறுகிறது. ஊஞ்சற் பாடல்கள் உண்டு. ஆடிப் பூரத்திற்குத் தீர்த்தம் அமையக் கூடியதாக முதற் பதினைந்து நாட்களுக்கு மகோற்சவம் நடைபெறும்.
மனோன்மணிஅம்பாள், நல்லூர்
யாழ்ப்பாணம் நல்லூரிலே கந்தசுவாமி கோவிலின் வடகீழ்வீதியில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் 1926ம் ஆண்டு விநாயகர், சந்தான கோபாலர், வைரவர், பலிபீடம், முருகன் முதலிய விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்துவழிபடப்பட்டன. இவ்வாலயத்தைப்புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்ய ஆரம்பித்ததும் வேலைகள் முற்றுப் பெறாமல் இருப்பதைக் கண்டு வருந்தித் திருவுளச்சீட்டுப்போட்டுப்பார்க்க, சக்திவழிபாடுசெய்யவும் எனக் கிடைத்தது. பின் அம்பாள் யந்திரம் வைத்துப் பூசிக்கையில் திருப்பணி நிறைவுற்றது. 1952இல் பரிவாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. எழுந்தருளி அம்பாளைப் பிரதிஷ்டை செய்து, பங்குனித் திங்கள் உற்சவம் நடைபெற்று வருகிறது.
மதுர மகாமுத்துமாரி வேளாளர் தோப்பு, நல்லூர் வடக்கு
ஆலயம் 290 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகின்றது. மூலமூர்த்தி அம்மன் மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்டது. பரிவார மூர்த்திகளாக பிள்ளையார், வேல், சிவலிங்கம், வைரவர், நாகதம்பிரான் ஆகியோர் அமர்ந்துள்ளனர். நித்திய பூசை உண்டு. பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.
பூரபதியூரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 561
இராஜராஜேஸ்வரி(பேச்சியம்பாள்), நாயன்மார்கட்டு
மூல மூர்த்தி அம்பாள். பரிவார மூர்த்திகள் பிள்ளையார், முருகன், வைரவர் ஆகியோர். தினமும் இரண்டு காலப் பூசைகள் நடைபெறுகின்றன. ஆடிப் பூரத்தன்று தீர்த்தம் நடைபெறக் கூடியவாறு பத்துத் தினங்களுக்கு வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது.
மகாமாரியம்மன், அரியாலை
யாழ் மாவட்டத்தில் அரியாலையூரில் பிரப்பன்குளம் எனுமிடத்திலிருக்கும் s மாரியம்மனாலயம் முன்பு பெரிய நாச்சிமார் ஆலயம் என அழைக்கப்பட்டுப் பின், காலப்போக்கில் பிரப்பன்குளம் மகாமாரியம்மனாலயம் என அழைக்கப்படுகிறது.
இராஜேஸ்வரியம்மன், அரியாலை
அரியாலையின் வடமேற்கே வெட்டுக்குளம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. நாச்சிமார் ஆலயம் என முன்பு அழைக்கப்பட்டது.
சரஸ்வதி, அரியாலை
அரியாலை மேற்கில் சரஸ்வதி அம்பாள் ஆலயம் திகழ்கின்றது. இவ்வாலயத்தில் அலங்காரத் திருவிழா இடம் பெறுகின்றது.
ஒர் அடியவரின் கனவுப்படி 1929 கார்த்திகை மாத மக நட்சத்திர தினத்தில் கல்வைத்துக் கோவில் கட்டத் தொடங்கினர். அன்றைய தினம் நாவலர் குருபூசைத்தினமாகும். இங்கு தமிழில் பாடல்கள் பாடப்பட்டு பூசை நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும், திருவெம்பாவைப்பூசையும், பங்குனி மூன்றாம் திங்களன்று குளிர்த்தியும் அன்னதானமும் சிறப்பாக இடம்பெறுகின்றன. இவ்வாலயச் சூழல் எல்லாம் கிலைமகள் மயமாகத் திகழ்கிறது.
பத்திரகாளியம்மன், திருநெல்வேலி
யாழ் மாவட்டத்திலே திருநெல்வேலியில் எழுந்தருளியுள்ள பத்திரகாளியம்மனாலயம் 150 வருடங்களின் முன்னரேயே கால் கொண்டது. கன்னியர்கள் இருவருக்கு தேற்றா மரத்தடியிலாடிக் காட்டிய அம்மன் கனவில் தன்னை வழிபடும்படி கூற அவர்களும் அவ்வாறே வழிபட்டனர். பின்னைய காலங்களில் அன்னையின் சிலையைச் செய்வித்து வழிபாடாற்றினர். இவ்வாறாக ஆரம்பப் பிரதிஷ்டை
மயூரமங்கலம்

வைபவம் 1861இல் நடைபெற்றது. 1927இல் ஐம்பொன் விக்கிரகம் வார்க்கப்பட்டுப் பின்பு நித்திய பூசைகளும், நைமித்திய பூசைகளும்அலங்காரத் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. 1961இல் முதல் குடமுழுக்கு விழாவின் நூற்றாண்டு விழாவும் 1971இல் புது அம்மன் விக்கிரகத்துடன் கும்பாபிஷேகமும் நடைபெற்றன. 1978ஆம் ஆண்டு மாமல்லபுரச் சிற்பக் கல்லூரி அதிபர் அமைப்பைப் பார்த்துப் பாராட்டினார். கொடித்தம்பம், வசந்த மண்டபம் புனரமைக்கப்பட்டு 1984இல் தம்ப மண்டபம், ஆலய மண்டபம் கட்டப்பட்டு நவக்கிரக பிரதிஷ்டையும் நடைபெற்றது. 1985இல் மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது. 1999 இல் வைகாசி 24ம் திகதி சித்திரத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இங்கு சித்திரை வருடப்பிறப்பு மகோற்சவம், ஆடிப்பூரம், ஆடிச்செவ்வாய், ஆவணிஞாயிறு, நவராத்திரி, கார்த்திகை விளக்கீடு, தைப்பொங்கல், கெளரி நோன்பு, திருவெம்பாவை, மாசிமகம், பங்குனிச் சங்காபிஷேக மணவாளக்கோலம் ஆகிய ஒருநாட் பூசைகளும், நடேசர் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
பூரீசாயிதுர்க்கா தேவி, கொக்குவில்
இவ்வாலயத்தின் தலவிருட்சமாக இன்று மிளிரும் வேப்பம் மரத்தடியில், மிகப் பழங்காலத்தில் கொக்குவில் கோணாவலை வைரவர் ஆலய வேள்வியின் போது ஆடு பலியெடுக்கப்பட்டு வந்தது. தெய்வங்களின் பெயரால் ஆடு பலியெடுக்கப்படும் கோர நிகழ்வு நிறுத்தப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த கொக்குவில் வாழ் இந்துக்கள், இவ் வேப்ப மரத்தடியில் வைரவ சுவாமியும், காளி அம்மனும் குடி கொண்டிருப்பதாக உணர்ந்து, அவ்விடத்தினை வணங்க ஆரம்பித்ததோடு பலியெடுக்கும் நிகழ்வும் நிறுத்தப்பட்டது.
1983b ஆண்டளவில், இப்பக்தர்கள் அவ்விடத்தில் அம்மனுக்கு ஆலயமொன்று அமைத்து வணங்க விரும்பினார். இவ்வாலயத்தின் மூல மூர்த்தி துர்க்கை அம்மன் என திருவுளச் சீட்டின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. அடியார்களின் நிதியுதவியுடன் ஆகம விதிகளுக்கமைவாக இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆலய நிர்மாணப் பணிகள் பூர்த்தி அடைந்ததும் இதன் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம், 01.07.1984 இல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் ஆனிப்பூச நட்சத்திரத்தை ஆரம்ப நாளாகக் கொண்டு பத்துத்தினங்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வந்தது.

Page 562
கால ஓட்டத்தில், இவ்வாலயம் மெல்ல மெல்ல வளர்ச்சியடையத் தொடங்கியது. 1997ம் ஆண்டின் முற் பகுதியில் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. புனருத்தாரண வேலைகள் பூர்த்தியானதும், 08.06.1997 இல் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஆடி மாதப் பெளர்ணமி தினத்தைத் தீர்த்தோற்சவ தினமாகக் கொண்டு 1997ம் ஆண்டு தொடக்கம் மஹோற்சவம் நடைபெற்று வருகின்றது.
கற்புலத்து மனோன்மணிஅம்பாள், நந்தாவில், கொக்குவில்
கொக்குவில் நந்தாவில் நீர்வளம், நிலவளம் பொருந்திய நல்ல அழகான இடம், பல குளங்களும் நெல் வயல்களும் தோட்ட நிலங்களும் பல விதமான சோலைகளும் நிரம்பியுள்ளன. மூர்த்தி, தலம் தீர்த்தம் முறையாக இங்கு அமைந்துள்ள நிலையில், இற்றைக்கு 200
கோயிலென அழைக்கப்படும் சிவன் கோயிலைச் சீரமைத்த வைசிய குலதிலகம் பூரீ வைத்திலிங்கம் செட்டியார் திருவருள் நிரம்பப்பெற்றவர். அவர் நந்தாவில் கற்புலத்தில் ஒளி கண்டார் . புதையல் எடுத்தார், திரவியம் பெற்றார், எனக்கூறுவார்கள். சிவன்கோவில் திருப்பணிகளுக்காகக் கற்புல்த்திலிருந்து கற்களை எடுத்தாரெனவும் சொல்லுவார்கள். இங்குள்ள வேளாண் பிரபுக்களும் கற்களில் வேலை செய்த கற்றச்சரும்,செட்டியாரின் துணை கொண்டு இங்குள்ள ஆலயத்தைக் கற்களால் கட்டியதாகவும் கதைகளுண்டு. அவர் இங்கு கற்புலத்து இறைவியான அம்மையாரைக் கண்டாரென்றும் கூறுவர்.
கற்புலத்தம்மை' எனவும் கற்புலத்துக் கண்ணகை எனவும் அழைக்கப்பட்ட இறைவியையே 'கற்புலத்து மனோன்மணி அம்பாள்'என அழைத்தும் வணங்குகிறோம்.
சிவனுக்குக் கோயில் அமைத்த பெரியார், அம்பாளுக்கும் தனிக்கோயில் அமைக்கத் துணை செய்தார் போலும். கற்புலத்தம்மை கண்ணகை அம்மன் எனவழங்கிய காலத்தில் சில பெரியார்கள் இராஜ இராஜேஸ்வரி விக்கிரகத்தை அமைக்க முயற்சித்ததாகவும், அதில் சில கஸ்டங்கள் ஏற்பட, பல சைவப் பெரியார்களுடைய துணை கொண்டு 60 ஆண்டுகளுக்கு முன் மனோன்மணி அம்பாளைப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். கற்புலத்தம்மை ஆலயத்திலிருந்த பீடமொன்றில், ஏதோ ஒரு யந்திரம் அமைந்துள்ளதாக முதியவர்கள் கூறுவர். மனோன்மணி

அம்பாளைப் பிரதிஷ்டை செய்த காலங்களில் இந்த யந்திரம் தகட்டில் அமைக்கப்பட்டுள்ளதாம்.
அம்பாளைப் பிரதிஷ்டை செய்த காலங்களில் இந்த யந்திரத்தைப் பார்த்த பெரியோர்கள் பூரீசக்கரம் அமைத்துள்ளதாகக் கூறுவதிலிருந்து இங்குள்ள தெய்வீகம் புலப்படுகின்றது. சிறந்த சக்தி பீடமாக விளங்கும் இந்த ஆலயம் இப்பொழுது திருமுடியில் சடாபாரமும் திருமுகத்தில் முச்சுடரும், புன்சிரிப்பும் தவழ, நாற்கரங் கொண்டு அபயமும் வரமும் செய்வதுடன், செங்காந்தளும் செபமாலையும் தரித்து, பொன்னாபரணம் பூண்டபெருமாட்டியாய், சுத்த சிவமாக விளங்கும் சதாசிவனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் மனோன் மணியாய் நந்தாவில் கற்புலத்தில் இனிது வீற்றிருக்கும் சிறப்பைப் பார்த்து, மகிழ்ந்து, வணங்கி அவள் திருவருளைப் பெறுவோமாக.
காளியம்பாள், கேணியடி, கோண்டாவில் கிழக்கு
இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் கோண்டாவில் கிழக்கினிலே ஒர் அன்பர் தீராத நோயைத் தீர்க்கும்படி சூல வடிவில் வைத்து அன்னையை வழிபட்டும் பொங்கியும் பலிகொடுத்தும் வர நோய் மாறிவிட்டது. அதுவே கோவிலாகியதெனினும் முன்பிருந்த விடத்தில் தற்போது ஆலயம் இல்லை. சற்றுத்தள்ளியுள்ளது. ஆலயத்தடியில் முன்பு கேணி இருந்ததால் கேணியடி அம்பாள் என அழைத்தனர். வைகாசி விசாகப் பொங்கல், ஊர்வலம் வரல், நீராகாரம் செய்தல், தீமிதிப்பு, திருவெம்பாவை, நவராத்திரி என்பன சிறப்பாக நடைபெற்றது. பின் 23.09.1988 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு08.06.1989இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விநாயகர், முருகன், வைரவர் பரிவார மூர்த்திகளாகவும் விளங்குகின்றன. சிங்க வாகனமொன்று இருந்ததெனினும் 1992இல் காளை வாகனமும் அன்பரால் வழங்கப்பட்டது. 1994 பங்குனித் திங்கள் பூசை நடக்கும் நேரத்தில் வெள்ளைப்பாம்புவந்து வைரவ கோயிலின் மேல் நின்று தரிசனம் தந்தது. மக்களும் பாம்பை வணங்கினர். 10.06.1994 அன்று சித்திரத்தேர் வெள்ளோட்டவிழா இடம் பெற்றது. இவ்வாலய ரதத்தினை அன்னையர் இழுப்பது சிறப்பு. இடையிலே இடம் பெயர்வால் சில தடைகள் ஏற்பட்டாலும் நித்திய பூசைகள் நிகழ்ந்தன.
2000ம் ஆண்டு தையில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு வசந்த மண்டபம், விநாயகர், முருகன், வைரவருக்குத் தனித்தனிக் கட்டிடங்களும் யாக பாக
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 563
சாலைகள், மணிக்கோபுரம், கொடிமரம் என்பனவும் அமைக்கப்பட்டன. 01.09.2000 இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து 2001 முதல் கொடி யேற்றவிழாவும் இடம் பெறவுள்ளது.
பூரீவடபத்திரகாளிஅம்மன், தாவடி
தாவடியில் கருமரங்கள் நடுவே ஊர் எங்கும் அருள் பரப்பும் வடபத்திர காளி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் 18ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும்.
மூல மூர்த்தியாகப் பத்திரகாளி அம்பாளும், சுற்றுப்பிரகாரத்தில் பிள்ளையார், முருகன், சிம்மபலிபீடம், சந்தான கோபாலர், நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரரும் வீற்றிருக்கின்றனர். உற்சவ விக்கிரகங்களாக அம்பாள், பிள்ளையார், வீரபத்திரர், சுப்பிரமணியர், மாணிக்கவாசகர், அசுவதேவர் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.
இவ்வாலயம் இரண்டு வீதிகளைக் கொண்டுள்ளது. உள்வீதியில் கருங்கல்லினாலான திருமஞ்சக் கிணறு உள்ளது. மூலத்தானம் தனிக்கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கோபுர வாசல், தூண்கள், சுண்ணாம்பு முருகை கற்களால் கட்டப்பட்டுள்ளன.
1921ம் ஆண்டுகொடிஸ்தம்பம் ஸ்தாபிக்கப்பட்டுச் சித்திரா பெளர்ணமித் தினத்தைத் தீர்த்த உற்சவமாகக் கொண்டு பத்துத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
1985ல் இந்திய அமைதிப் படை வருகையினால் கோவில் சேதமாகியதால் 1990ல் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பூரீ காளியம்பாள், தாவடி
தாவடியின் மத்தியில், வீதியின் மேற்குப்புறமாக அமைந்துள்ள இவ்வாலயம், தலவிருட்சமான அரசமரத்தடியில் வீற்றிருக்கும் அம்மனைத் தெய்வமாகக் கொண்டு திகழ்கிறது. நூறு வருடங்களுக்குமுன் மூதாட்டியொருவர் அம்பிகையின் முகம் கொண்ட கல்லை வைத்துப் பூசை செய்து வருகையில் ஒரு நாள் பெருமழையால் அக்கல் நனைய அன்றிரவு கனவில் அம்பிகை தன்னை நனையாது வைத்துவிடு என வேண்ட மூதாட்டியும் குடிசைகட்டி வழிபட்டார். ஆனால் ஊர்மக்களோ நம்பவில்லை. ஒருமுறை பொங்கலை ஊற்றிய இடத்தில் அரசங்கன்று முளைத்ததாம். அதுவே இன்று பெருவிருட்சமாக நிற்கின்றது. 1970இல் மண்டபம்
மயூரமங்கலம்

கட்டியபின் மேலுமொரு மண்டபம் கட்டி வைரவ சூலத்தையும் வைத்து வணங்கினர். 1980ஆம் ஆண்டு விக்கிரகம் உருவாக்கப்பட்டு, ஆவணி கிருஷ்ண பட்சத்தில் தொடங்கி சுக்கில பட்சத்தில் முடியும் 15 தினங்களில் அலங்காரத் திருவிழாவும் செய்யப்பட்டது. இறுதி 3 தினங்களும் முறையே சப்பறம், தேர், தீர்த்தம் என்பன விமரிசையாக நடைபெறும். 1982இல் மணிவார்த்து ஏற்றப்பட்டது. இரண்டு நேரப் பூசைகள் நடைபெறுகின்றன. விநாயகர், வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியர், சிவலிங்கம் போன்ற பரிவார மூர்த்தங்களும் சிங்கம், குதிரை வாகனங்களும் காணப்படுவதுடன் விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனிமாதம் நாலாம் வார வெள்ளிக்கிழமை கிராம வீதியுலா இடம்பெறும். காளி அம்பாளைச் சுற்றி நான்கு திசைகளிலும் ஆலயங்கள் காணப்படுகின்றன. 1998.06.04 அன்று பாலஸ்தாபனம் நடைபெற்று திருப்பணிகள் தற்போதுநடைபெறுகின்றன. அரச மரத்திலே விநாயகருடைய முகத்தோற்றம் காணப்படுகிறது. பாடசாலை, சனசமூக நிலையம் என்பன ஆலயத்தை மையமாக வைத்து உருவாக்கப் பட்டிருக்கின்றன.
பூரீமுத்துமாரிஅம்மன், கட்டப்பிராய், இருபாலை
1750ம் ஆண்டளவில் அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டதென அறியப்படுகிறது. பிள்ளையார், முருகன், வைரவர், நாகதம்பிரான் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக விளங்குகின்றனர். தினமும் இருகால பூசை உளது. வைகாசி மாதத்தில் அலங்கார உற்சவம் நடைபெறுகின்றது.
பலானை கண்ணகி அம்மன், கோப்பாய் வடக்கு
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலமைத்து எடுத்த பெருவிழாவிற் கலந்து கொண்ட கஜபாகு மன்னன், எடுத்துவந்த கண்ணகிதேவியின் திருவுருங்களுள் ஒன்றே இங்கு ஸ்தாபிக்கப்பட்டது. 1500 ஆண்டுகளுக்கு மேலாகக் கொடிக் கோயிலாக இருந்து வந்தது. தலவிருட்சமாக மாமரத்தைக் கொண்டுள்ள இக்கோயில், முன்பு சிவகாமியம்மன் கோயிலெனவும் வழங்கப்பட்டுவந்துள்ளது. ஆடிமாதத்தில் இருபத்தொரு நாள்கள் உற்சவம் நடைபெறுகிறது. இக்கோயில் பற்றி, சேனாதிராய முதலியார் பாடியுள்ள பாடல்கள் உள்ளன.

Page 564
பூரீமுத்துமாரியம்மன், கோப்பாய் மத்தி
கோப்பாய் மத்தி உச்சிவயல் வடகரையில் களுவடி எனும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இருபாலைக் கோட்டை வளவில் 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த கோனர் வன்னியரசனின் மனைவி சிவகாமன் அம்மையார், அக்காலத்தில் மக்களைத் துன்புறுத்திய போர்த்துக்கேயரை எதிர்த்து அழித்து வீரமரண மடைந்தார். அவரின் உதவியாளர்கள் இப்பொழுது கோயில் ஆதிமூலமுள்ள இடத்தில் வீரக்கல் நாட்டி வழிபட்டனர். அம்மையாரின் நகைகள் கோவிற்குத் தென்புறமாகப் புதையலாக வைக்கப்பட்டன. அவரின் வழித்தோன்றல்களாற் தூப, தீப ஆராதனையாக வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில்நாச்சிமார் கோயில் 60 அழைக்கப்பட்டது.
ஆலமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ள இவ்வாலயத் திருவிழா, ஆடிப்பூரத்தை நிறைவாகக் கொண்டு பத்து நாள்கள் இடம்பெற்று வருகிறது.
1988ல் செய்யப்பெற்ற பாலஸ்தாபனத்தின் பின் புதிய வசந்த மண்டபம் அமைக்கப்பெற்று, 1990ல் மகா கும்பாபிஷேகம் நடாத்தப்பெற்றது. புதிதாகத் தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடாத்தப்பெற்றுள்ளது. இப்பொழுது தீர்த்தக் கேணி, கொடிஸ்தம்பம் முதலியன அமைக்கப்படுகின்றன.
பூரீபத்திரகாளி அம்பாள், கோப்பாய்
கோப்பாயிலே கட்டப்பிலானை எனுங் கிராமத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். காங்கேசன்துறையிலே ஆதிசைவர் ஒருவர் கனவிலே அம்பாள் கூறியபடி கொன்றை மரத்தடியில் சூலத்தையும் கல்லையும் வைத்து வழிபட்டு, பின்பு 1940-1985 காலப்பகுதியில் புகுந்த வீட்டருகே கோப்பாயில் வைத்துப் பூசித்து வந்தார். 1985ஆம் ஆண்டளவில் மூலவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு நித்திய பூசைகள் நடத்தப்பட்டன. இங்குசெவ்வாய் கிழமைகளில் ராகுகால பூஜை சிறப்பம்சமாக அமைகிறது. அத்துடன் ஆடிப்பூரவிழாவும், கேதார கெளரி நோன்பும் இடம் பெறுகின்றன.
தற்கொலை Lirfiu முயன்றவளைக் காப்பாற்றி அவள் தாலியைத் தன் கழுத்திலே அணிந்திருக்கும் அம்பாள், அற்புதங்கள் பல புரிந்திட்டவர் ஆவார்.

பூரீமகாமாரியம்மன், கோப்பாய் தெற்கு
கோப்பாய் தெற்கு மாந்தோப்பிலே இருபாலைச் சந்திக்கருகில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள இவ்வாலயம் சுறுக்கர் என்பாரால் ஆரம்பத்தில் வழிபடப்பட்டு வந்தது. பாம்பு ஒன்று அம்மனாகக் காட்சி அளித்ததாலேயே வழிபாடு ஆரம்பித்தது. புற்றுக்குச் சற்றுத் தள்ளிக் கோவில் கட்ட அம்மன் கனவிலே மறுத்ததால் புற்றிலேயே கோவில் கட்டப்பட்டு கர்ப்பக்கிரகம், அர்த்த, மகா மண்டபங்கள் என்பவற்றைக் கொண்டு விளங்கியது. 1959 பங்குனி ரோகிணி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, வருடாவருடம் பங்குனி ரோகிணி நட்சத்திரம் தொடக்கம் 10 நாள்கள் அலங்கார விழா நடைபெறும். 1989இல் பிள்ளையார், முருகன், சந்தானகோபாலர், வைரவர் ஆலயங்கள் கட்டப்பட்டு ஆலயம் திருத்தப்பட்டு தூபி அமைக்கப்பட்டிருந்தபோது 1990 இல் போர்ச்சூழல் உருவாகியது. எனினும், அன்பர்களின் ஆதரவால் 1994 வைகாசி 29ம் நாள் மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது.
நாச்சிமார், கோப்பாய் வருடாந்தப் பொங்கலும், விசேட தினங்களில் விசேட பூசை வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.
பூரீசாந்திதுர்க்கை அம்மன், கோப்பாய்
வேப்ப மரத்தடியில் வணங்கி வரப்பட்டு, 1963ம் ஆண்டு ஒலைக்கொட்டில் அமைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. அதன் பின் 1986ல் மூன்று மண்டபங்கள் அமைத்து 1987 தைத் திங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று அன்று தொடக்கம் நித்திய பூசையும், அலங்கார உற்சவமும் நடைபெற்று வந்தன. 2000ம் ஆண்டு தைத் திங்கள் முதல் சாந்தீக மகோற்சவம் நடை பெற்று வருகின்றது. மேலும் ஒரு மண்டபமும் அசையா மணி, திருமஞ்சனக் கிணறு, இரு வாகனம், சிங்கம், குதிரை, உற்சவமூர்த்தி அமையப் பெற்றன. 1995ம் ஆண்டு வன் செயலின் போது ஆலயத்திற்கு சேதம் ஏற்பட்டது.
மேலும் இவ் ஆலயத்தில் சாந்தீக மகோற்சவம், சிவராத்திரி, ஆடிச் செவ்வாய், நவராத்திரி, கேதார கெளரி விரதம், சர்வாலயதீபம், திருவெம்பாவை முதலிய உற்சவங்களும், வருடாந்தம் பொங்கல், அன்னதானம், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ராகுகாலத்தீப பூஜையும், சுமங்கலிப்பூஜையும் இடம்பெற்றுவருகின்றன.
பதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 565
பூரீ இராஜராஜேஸ்வரி அம்பாள், நீர்வேலி நீர்வேலி வடக்கில் சங்கணக்கடவை என்னும் காணியில் இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னராகவே கோயில் கொண்டெழுந்தருளி அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றது அன்னை இராஜராசேஸ்வரி அம்பாள் ஆலயம். இவ்வாலயம் இப்பகுதியில் பழம் பெருமைமிக்கதால் “பழைய அம்மாள் கோயில்" எனவும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுவதுண்டு. குறிப்பாக இப்பகுதியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட அம்மன் ஆலயம் இதுவே என அறியக்கிடக்கின்றது.
ஆரம்ப காலத்தில் தெற்கு வாயில் கோயிலாக இருந்த இவ்வாலயம் கால நீரோட்டத்தில் 1930ஆம் ஆண்டளவில் வடக்கு வாயிலாகவும் மீண்டும் இப்போ தெற்கு வாயிலாகவும் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்துக்குப் பக்கத்தில் பாரிய ஆலமரம் ஒன்று நின்று இவ்வாலயத்தின் தலவிருட்சமாக அமைந்தமையால் இவ்வாலயம் “ஆலடியாள் ஆலயம்” எனவும் இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தது.
ஆரம்பத்தில் சிறிய கட்டிடத்தில் அமைந்திருந்த இவ்வாலயம் காலப் போக்கில் அடியார்களின் அயரா முயற்சியாலும், அம்பிகையின் அருளுட்டத்தினாலும் புதிய கட்டிட அமைப்புகளுடன், புனருத்தாரணம் செய்யப்பட்டு 1998ஆம் ஆண்டு ஆவணி (248.1998) உத்தர நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 12 நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகிறது.
சப்த கன்னிகள், நீர்வேலி
வாய்க்கால் தரவைப் பிள்ளையார் கோயிலுக்கு வடகிழக்காக ஈசான திசையிலே கிராமத்துக்கு காவல் தெய்வம் போன்று அமைந்ததே முதலி கோயில் என அழைக்கப்பட்டு வந்த சப்தகன்னிகள் கோயில் ஆகும்.
நீர்வேலிச் சந்திக்கு வடகிழக்காக அமைந்ததே பன்னாலை என்னும் பகுதி. இப்பகுதியின் கிழக்குப் பக்கம் வயலும் நீர்நிலைகளும் உண்டு.
இற்றைக்கு முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் முதலியார் என்னும் பெயர் கொண்ட பெரியார் ஒருவர் ஆலங்கன்றின் கீழ் அம்பிகையை சிறுவடிவங் கொண்டமைத்து வழிபட்டு வந்தார். இதனாலேயே இவ்வாலயம் “முதலிகோவில்” என அழைக்கப்
மயூரமங்கலம்

படலாயிற்று, இன்று வளர்ந்து பெருவிருட்சமாக நிற்கும் இந்த ஆலமரத்தில் குழைவெட்டவோ, மரத்தில் ஏறியோ, அல்லது கீழ்நின்று சிறுவர்கள் விளையாடவோ அம்பிகைகள் அனுமதிக்காத பல சம்பவங்கள் உண்டு.
இச்சப்த கன்னிகளுக்கும் 1992ஆம் ஆண்டு ஆலயப் புனருத்தாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அழகிய கட்டிட அமைப்புகளுடன் கூடிய இவ்வாலயம் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் 02-06-1992 இல் மகாகும்பாபிஷேகமும் செய்யப்பட்டதோடு, வைகாசிமாத விசாக நட்சத்திரத்தை கடைசி நாளாக வைத்துப் பன்னிரண்டு தினங்கள் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயச் சூழலில் ஆங்காங்கே வைரவர் அண்ணமார்,வீரபத்திரர் போன்ற காவல் தெய்வங்களின் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.
இவ்வாலயத்தின் ஈசான திசையில் மேலும் காவல் தெய்வங்களாக பழைய அண்ணமார் கோயில்களும், அம்மன் கோயிலும், வீரபத்திரர் கோயிலும் அமைந்துள்ளன. இவற்றில் அண்ணமார் கோயில்களிலும் வீரபத்திரர் கோயிலிலும் மிருகப் பலியிடும் வேள்வியென அழைக்கப்படும் நிகழ்வும் நடைபெறுவதோடு ஆண்டுக் கொரு தடவை பெரும் பொங்கல் நடைபெற்று வருகின்றது.
முழக்கம்பிட்டி நாச்சிமார் நீர்வேலி
கிராமத்தின் கிழக்குப் பக்கமாக வயலும், வயல் சார்ந்த இடமுமான மருத நிலச் சூழலில், அப்பகுதியில் உயரமான பகுதியாகக் காணப்பட்ட “முழக்கம்பிட்டி’ எனப் பெயர் பெற்ற பதியில் இற்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கோயில் கொண்டெழுந்தருளி அடியார்களின் அல்லல் அகற்றிக் கொண்டிருக்கும் அன்னை நாச்சிமாரின் கோயில் அமைந்துள்ளது.
நாலாபக்கங்களும் வயலால் சூழப்பட்டதும், மருத மரங்களின் கூடலில் அமைந்துள்ளதுமான இவ்வாலயம் கிராமத்தின் கிழக்குத் திசையில் எல்லைக் கண்மையில் அமைந்துள்ளதால் கிராமத்தின் கிழக்கெல்லைக் காவல் தெய்வமாக அமைந்துள்ளது.
விவசாயிகள் வயல் விதைப்புக் காலங்களில் இந்த நாச்சிமாருக்கு நேர்த்தி வைப்பதும் அறுவடைக் காலத்தில் தமது காணிக்கையைச் செலுத்துவதும் வழக்கமாகவுள்ளது.

Page 566
இவ்வாலயத்தில் வைகாசி மாசத்து விசாகத்தை அடுத்துவரும் திங்கட்கிழமை பெரும் பொங்கல் நிகழ்ச்சி அதி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
நாச்சிமார், நீர்வேலி தெற்கு
யாழ்ப்பாணப்பூர்வீகக் குடிகள் நாகசாதியர்கள் அவர்கள் நாகவழிபாடுடையவர்கள். நாகதம்பிரான், நாகபூசணியம்மாள் கோயில்களும் நாச்சிமார் கோயில்களும் எல்லைக் கிராமங்களில் அமைந்திருந்தமை இதற்குச் சான்றாகும்.
அந்த வகையிலேயே கோப்பாய் கிராமத்தையும் நீர்வேலிக் கிராமத்தையும் பிரிக்கும் எல்லையாகிய நீர்வேலியின் தெற்கெல்லையிலே கிழக்குப் பக்கமாக வயல் சார்ந்த இடத்தில் அமைந்ததே இந்த நாச்சிமார் கோயில் இது ஒரு பூர்வீகமான கோயிலாகும். இன்று கட்டிடங்கள் அழிந்த நிலையிலும் மக்கள் தமது பொங்கல் வழிபாடுகளைக் காலத்துக்குக் காலம் ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றும் நீர்வேலிக் கந்தசுவாமி கோயில் முருகன் வேட்டைத்திருவிழாவிற்கு குறித்த நாச்சிமார் கோயிலுக்குப் போய் வருவது பழம்பெரும் தொடர்பைப் பேணும் சிறப்புடைய ஒர் அம்சமாகும்.
அம்மன், வெள்ளந்தள்ளிவீதி, நீர்வேலி
இக்கிராமத்தின் காவல் தெய்வமாக தெற் கெல்லைக்கணித்தாக அமைந்துள்ளது இக்கோவில்.
ஆரம்ப காலத்தில் மிருக பலியீடு செய்து, பெரும் பொங்கல் ஆனி மாதத்தில் நடைபெற்று வந்த இவ்வாலயம் 1982ஆம் ஆண்டிலிருந்து நீர்வேலி கந்தசுவாமி கோயில் பிரதம குருக்கள் அனுசரணையுடன் அவரின் பிரதிநிதிகளால் பூசாகருமங்கள் செய்யப்பெற்று வருகின்றன. இப்போது மிருக பலியீடு நடை பெறுவதில்லை.
சிவநாகபூஷணிஅம்பாள், கரந்தன்
நீர்வேலிக் கிராமத்தின் மேற்குப் பகுதியில் கரந்தன் வீதியின் அருகில் “குக்குறுமான்” என்னும் காணியில் அமைந்ததே இக்கோயிலாகும்.
ஆரம்பத்தில் இக்காணிக்குள் நின்ற வேப்பமரத்தின் அடியில் வீற்றிருந்து பாம்பு வடிவத்தில் காட்சி தந்த நாகபூசணி அம்பாளை விளக்கேற்றி வழிபாடாற்றி வந்தனர்.

குறித்த காணியின் சொந்தக்காரரது கனவில் தோன்றித்தன்னை ஓர் இடத்தில் முறைப்படி பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறியதற்கமைய 05.02.1997 இல் அத்திவாரமிட்டு ஆலய அமைப்பு வேலைகள் செய்து 12.05.1997ல்கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்றுமுதல் தினசரி ஒரு நேரப்பூசை நடைபெற்று வருகின்றது.
சிறப்பாக நவராத்திரிவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நவராத்திரியின் கடைசி நாளான மானம்பூ தினத்தன்று நீர்வேலி கோப்பாய் உரும்பிராய்க் கிராமங்களின் எல்லையில் அமைந்துள்ள சிவபூத நாதேஸ்வராயர் கோயிலிலிருந்து சிவபூத நாதேஸ்வரப் பெருமான் எழுந்தருளி வந்து இவ்வாலயத்தில் மகிடாசூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி இவ்வாலய சூழுலுக்கே பெருமை தரும் ஒரு சிறப்பு அம்சமாகும்.
காளி புட்டியன்புலம், நீர்வேலி
நீர்வேலி வடக்குப் பகுதியில் இராச பாதைக் கண்மையாக 4ஆம் கட்டைக்குக் கிழக்கே "புட்டியன் புலம்" என்னும் காணியில் அமைந்துள்ளதே இக் கோயில்.
65 ஆண்டுகளுக்கு முன் நீர்வேலி மேற்கு மீனாட்சி அம்மன் கோயில் அடியவர்களில் ஒருவரான தம்பிப்பிள்ளை ஆறுமுகம் என்பவர் தினமும் குறித்த கோயிலுக்குச் சென்று வழிபாடாற்ற முடியாமையால் தனது காணிக்குள் ஈசான திசையில் மேற்படி மீனாட்சி அம்பாளின் அருளை வேண்டி அம்பாள் மீது கொண்ட அபிமானத்தாலும் பக்தி வைராக்கியத்தாலும் ஒரு ஆலயத்தை அமைத்து அங்கே அம்பிகையைப் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றி வந்தார்.
வருடாந்தம் ஆனி உத்திரத்தில் விசேட பொங்கல் பூசைகளும் பெரும் படையல்களும் மடை போடுதலும், குளிர்த்திகளும் நடைபெற்றுவரும் வேளை ஒரு மிருக பலியீடும், மாமிசப்படையலும் நடைபெற்றுவந்தது. பூசை, ஆராதனைகளை எடுத்து அன்னதானம் வழங்கப்படுதலும் நடைபெற்றது.
பிற்காலத்தில் மாமிச உணவு படைப்பது நிறுத்தப்பட்டது. தனிக் குடும்பக் கோயிலாக இருந்த இக்கோயில் இப்போது எல்லோரும் வழிபடவும் பொங்கல் பூசைகள் விழாக்கள் செய்யவும் கூடியதாகப் பொதுவாக்கப்பட்டது. சிறுகோயிலாயிருந்த இவ்வாலயம் புதிய மண்டபங்கள் அமைக்கப்பட்டு அம்பிகையின் அருளூட்டத்தால் அழகிய கோயிலாக விளங்குகின்றது.
ரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 567
மனோன்மணி அம்மன், இராசபாதை
நீர்வேலி வடக்கில் மாசுவன் சந்தியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் இராசபாதை வீதியின் ஒரமாகச் சந்தியில் இருந்து 150 யார் தூரத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். தனியொருவரால் இவ்வாலயம் 1989ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாலயம் கிராமத்தில் வடக்கெல்லையில் காவல் தெய்வம்போல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது 14-07-1999 புதன் கிழமை கும்பாபிஷேகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அம்பிகையின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.
கருணைமிகு காமாட்சி அம்பாள், நீர்வேலி நீர்வேலி வடக்கில் நீர்வேலிப் புன்னாலைக் கட்டுவன் வீதியோரமாக நீர்வேலிச் சந்தியில் இருந்து சுமார்3,4 மைல் தூரத்தில் அரசும் வேம்பும் தலவிருட்சமாக அமைந்துள்ள இடத்தில் கண்பன் புலம் என்னும் பதியில் கோயில் கொண்டெழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றது இவ்வாலயம்.
அன்னை சொப்பனத்தில் தெரிவித்ததற்கமைய குறிப்பிட்ட இடத்தில் வேப்ப மரத்தின்கீழ் 1943ஆம் ஆண்டு சுபானுவருஷம் வைகாசி மாதம் 24ஆம் திகதி திங்கட்கிழமை தற்போது கோயில் அமைந்திருக்கும் “கண்பன்புலம்’ என்னும் காணிக்குள் நிலையம் பார்க்கப்பட்டது. 1944ஆம் ஆண்டு தாரண வருஷம் வைகாசி மாதம் 21ஆந் திகதி சனிக்கிழமை எழுந்திருப்பு முகூர்த்தத்தில் அத்திவாரம் இடப்பட்டது.
1947ஆம் ஆண்டு இக்கோயிலுக்கான மூலஸ்தானம் அர்த்த மண்டபம், சபாமண்டபம், மகாமண்டபம், தரிசன மண்டபம் எல்லாம் அமைக்கப்பட்டதோடு மடைப்பள்ளி களஞ்சிய அறை என்பனவும் 1948ல் திருமஞ்சனக் கிணறும் அமைக்கப்பட்டது.
1956ஆம் ஆண்டு துர்முகி வருஷம் வைகாசி மாதம் 29ஆம் திகதி (1.06.1956) திங்கட்கிழபை மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
காலப்போக்கில் ஆலய கட்டிடங்கள் பழுதடைந்து இருந்தமையால் முழுவதும் இடித்து மீண்டும் அதே இடத்தில் 19.01.1987ல் அத்திவாரமிடப்பட்டு அழகிய புதி கோவில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், சபா மண்டபப் மகா மண்டபம், தரிசன மண்டபம், மணிக்கூ( ஆகியவைகளுடன் பிள்ளையார், முருகன், வைரவ ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனி சந்நிதானங்களும் கட்டப்பட்டன.
மயூரமங்கலம

மகாவிஷ்ணுவிற்கு ஆலயச் சுற்றுப் பிரகாரத்துக்கு வெளியே வடக்குப் புறமாகத் தனி ஆலயமும் அமைக்கப்பட்டது. மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
பன்னிரண்டு தினங்கள் அலங்கார உற்சவமும், மாசிமகத் தினத்தன்று சங்காபிஷேகமும் நடைபெற்று வருகின்றன.
காளியம்மன், நீர்வேலிவடக்கு தற்போது நீர்வேலி வடக்கில் வெளியிலடைப்பு என்னும் காணியில் கோயில் கொண்டெழுந்தருளி அடியார்களின் அல்லல் போக்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் இவ்வாலயம் மிகவும் பழமைமிக்கது.
சிறுப்பிட்டிப் பகுதியில் வாழ்ந்த தச்சுத் தொழிலைத் தமது தொழிலாகக் கொண்ட இம்மக்கள் தாமிருந்த இடத்தில் தமது வணக்கத்திற்காகத் தமது குலதெய்வமான காளியம்மனை வைத்து வழிபட்டு வந்தனர்.
அப்பகுதியில் இருந்து நீர்வேலியில் வந்து குடியேறியபோது அங்கு தாம் வைத்து வழிபட்டு வந்த அந்த அம்மன் விக்கிரகத்தைத் தற்போது கோயில் அமைத்துள்ள வெளியிலடைப்பு என்னும் காணியில் வைத்து வழிபட்டனர்.
இக்காணியில் ஆலயம் அமைத்து 1962ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டுப் பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
பங்குனி உத்தரத்தை (பூரணையை) கடைசியாக வைத்துப் பன்னிரண்டு தினங்கள் அலங்காரத் திருவிழா நடைபெற்று வருகின்றது. மேலும் பிள்ளையார், முருகன், பூரீசக்கரம், சந்தானகோபாலர், வைரவர் என்பன தனித்தனி சந்நிதானங்கள் அமைத்து வழிபாடாற்றி வருவது ஆலய வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது.
பூாரீமீனாட்சி அம்மன், நீர்வேலி மேற்கு
நீர்வேலி மேற்கில் உள்ள இவ்வாலயம் மாசுவன் சந்தியிலிருந்து சுமார் 1/4 மைல் தூரத்தில் மேற்கே அமைந்துள்ளது.
கூத்துவாரி' என்னும் காணியில் அமைந்த இவ்வாலயம் ஆரம்பத்தில் 'ஊரிப்பிட்டிக்காளி கோயில் எனவும் 'கூத்துவாரி அம்மன் கோயில்” எனவும் வழங்கப்பட்டு வந்ததாக அறியக்கிடக்கிறது.
1985ஆம் ஆண்டளவில் இவ்வாலயச் சூழலில் உள்ள அடியார்கள் சேர்ந்து இவ்வாலயத்தைப் பொது ஆலயமாக்கிப் பரிபாலன சபையையும் அமைத்து ஆலயச்
G533)

Page 568
சூழலில் ஆலய வளர்ச்சிக்காக மேலும் காணிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டு வீதிகள் விசாலிக்கப்பட்டு சிறிதாகவிருந்த இவ்வாலயம் கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், சபாமண்டபம், தரிசன மண்டபம், மணிக்கூடு, மடைப்பள்ளி, களஞ்சியம் போன்ற அமைப்புக்களுடன் புனருத்தாரணம் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இங்கு தினசரி பூஜைகளும், விசேட காலங்களில் விசேட உற்சவங்களும் ஆடிப்பூரத்தை இறுதியாகக் கொண்டு12நாள் அலங்கார உற்சவங்களும் நடைபெற்று வருகின்றது. மானம்பூதினத்தன்று நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார், மகிடாசூர சம்காரத்திற்கு இங்கு எழுந்தருளி வரும் சிறப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.
காளியம்மன், நீர்வேலி மத்தி
நீர்வேலி மத்தியில் இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக எழுந்தருளி அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றது இவ்வாலயம். “செட்டியா வளவு” என்னும் காணியில் அமைந்துள்ளது இவ்வாலயம்.
1955ஆம் ஆண்டளவில் புனராவர்த்தன கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இவ்வாலயத்தில் காளியம்மனும் வைரவப் பெருமானும் தனித்தனி சந்நிதானங்களில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாலயத்தில் வைகாசி மாதத்தில் விசேட பொங்கல் பூஜைகளும், நடைபெற்று வருகின்றது.
அம்மன், அச்செழு 1838) ஆண்டு இப்பகுதி கொக்கிருந்த காடாக
இருந்து, கிராமத்தின் கமக்காரர்களின் ஆடு, மாடுகளை இடையர் கொண்டுவந்து மேய்ப்பது வழக்கம். அப்படி இருக்கும் போது ஒரு உருவம் கை அசைக்கின்ற மாதிரி இடையர்களுக்குத் தென்பட்டது. இதனால் இவர்கள் பயந்து சென்று கிராமத்தில் இருந்த பெருமனிதர் ஆகிய திருவாளர் விநாயகர் பூதத்தம்பியிடம் சென்று முறையிட்டனர். அவர் அங்குள்ள மக்கள் அனைவரையும் அழைத்து சென்று இந்த இடத்தைத் துப்பரவு செய்து அன்று தொட்டு விளக்கேற்றி வந்துள்ளார். பின்பு கொட்டில் அமைத்து கண்ணகை அம்மன் சிலை வைத்து வழிபாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அம்மன் ஆலயத்திற்கு வலது பக்கமாக பின்புறமாக விநாயகர் ஆலயத்திற்கு ஒரு கொட்டில் போட்டுச் சிலை வைத்து வழிபடத் தொடங்கியுள்ளனர்.

1964, 1986 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற குடும்ப அபிஷேகங்களின் போது கோவில் புனரமைக்கப்பட்டுப் பிள்ளையார், தண்டபாணிய தேசிக வைரவர், நாகதம்பிரான், சந்தான கோபாலர் வைத்து வழிபட்டு வரப்படுகிறது. 1986ம் ஆண்டு நடைபெற்ற கும்ப அபிஷேக தினத்தின் போது ஆதிமூர்த்தியாகிய கண்ணகை எனப் போற்றி வழிபட்டு வந்த மூல மூர்த்தி சிவகாமி எனக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அச்செழுகண்ணகை அம்மனை சிவகாமி அம்மன் எனக் கொண்டுவழிபடப்பட்டது. மானம்பூத்திருவிழா பண்டு தொட்டு நீர்வேலி மூத்த நயினார் (வாய்க்கத்தரவை பிள்ளையார்) கோவிலில் இருந்து வருகை தந்து நடைபெறும்.
மதுரையை எரித்த கண்ணகை அந்த நாட்டிலிருந்து கடல் கடந்து வந்து திருவடி நிலைக் கடற் கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து வந்துமாசியப்பிட்டி அங்கணமைக் கடவையில் தங்கி அங்கிருந்த ஊரெழுவிலும் அதன் அச்செழு கொக்கு காட்டில் அமர்ந்து அதன் பின்னர் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மனில் அமர்ந்து அதன் பின்னர் சுட்டிபுரம் அமைந்து அதன் பின்னர் முல்லைத்தீவின் வற்றாப்பளை அம்மன் நின்றும் இருந்தும் வந்துள்ளதாகக் கர்ணபரம்பரை கதைகள் கூறுகின்றன.
கண்ணகை அம்மன், கொக்கிருந்த பதி, அச்செழு மூலமூர்த்தி கண்ணகை அம்மன். பரிவார மூர்த்திகள் வைரவர், சண்டேஸ்வரர். தினமும் மூன்று காலப் பூசை. அலங்காரத் திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.
நாச்சிமார், மருதடி, சிறுப்பிட்டி
தல விருட்சங்களான மருது, ஆல், வேம்பு ஆகியவற்றின் மத்தியில் நாச்சிமார் வீற்றிருக்கின்றார். இங்கு விசேட தினங்களில் விசேட பூசை, பொங்கல் என்பன சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கண்ணகை அம்மன்,
ஆவரங்கால், புத்தூர் ஆவரங்கால் சந்தையிலிருந்து சுமார் 12மைல் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இக்கண்ணகை அம்மனின் மறுபெயர் கண்ணாரை அம்மன் என்பதாகும். மூலஸ்தானத்தை அம்பாள் விக்கிரகம் அலங்கரிக்க
பதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 569
பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் ஆகிய மூர்த்திகளும் ஆலயத்தில் உளர். தினமும் ஒரு காலப்பூசை பங்குனிமாத திங்கட்கிழமைகளில் பொங்கல் வைபவம் நடைபெறும்.
பூரீபுவனேஸ்வரிஅம்பாள், இடைக்காடு
தொண்டமானாறு ஆற்றின் ஒரு கரையில் அச்சுவேலியிலிருந்து 2 மைல் தொலைவிலுள்ள இடைக்காட்டில் கி.பி.18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒல்லாந்தரின் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது இவ்வாலயம். அன்று ஒரு அன்பளிடம் மூதாட்டியாக வந்து சிவலிங்கத்தையும் செப்பிலான சிலம்பையும் கல்லாலான அம்மையையும் கொடுத்து மறைந்திட்ட அம்மன், அன்றிரவு அவ்வன்பரின் கனவில் நான் தந்த மூன்று மூர்த்தங்களையும் வைத்து நித்திய பூசைகள் செய்து வா எனத் திருவாய் மலர்ந்து மறைந்தார். தெய்வ சக்தி வாய்ந்துள்ள அவ்வன்பர் அம்மையின் வாக்குப்படி வழிபட்டு வரலானார். தலவிருட்சங்களாக அரசையும் வேம்பையும் நட்டு வைத்தார். இவ்வன்பரின் வழி வந்தவர்களே பலகாலம் தொடர்ச்சியாகப் பூசை செய்து வந்தனர். 1920இல் ஊரவர் ஊக்கத்தால் ஆலயம் பெருப்பித்துக் கட்டப்பட்டது. மூல மூர்த்தியாக புவனேஸ்வரியும், பரிவாரமூர்த்திகளாக கண்ணகை அம்பாளுக்கும் சந்தான கோபாலருக்கும் கோயில் கட்டுவிக்கப்பட்டது. 03.05.1974 அன்று மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
1987இல் நாட்டிலிடம் பெற்ற அனர்த்தங்களால் ஆலயம் சேதமுற்றுப்பின்பு புனரமைக்கப்பட்டு, மேலதிகமாக விநாயகர், முருகன், நாகதம்பிரான், நவக்கிரகநாயகர்கள், சண்டேஸ்வரி ஆகியோருக்குப் புதிதாகக் கோவில்கள் கட்டப்பட்டு 08.06.1989இல் மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது.
வருடாந்த உற்சவம் சித்திரைப் பூரணைக்கு 10 நாட்களுக்குமுன் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பூரணையன்று தீர்த்தத்துடன் முடிவுறும். அன்றிரவு அம்பாளை ஊஞ்சலில் வைத்து ஊஞ்சற் பாட்டுப்பாடி, அடுத்த நாள் வைரவர் உற்சவத்துடன் இனிதே நிறைவேறும்.
பர்வதபத்தினி அம்பாள், உரும்பிராய்
உரும்பிராய்ப் பதியிற் கோயில் கொண்டு, எழுந்தருளி அடியார்களின் நோய் தீர்க்குந் தாயாகிய பர்வதபத்தினி அம்பாளின் திருத்தலத்தின் வரலாறு
மயூரமங்கலம்

சரித்திரவியலாளர்களின் கருத்துக்கெட்டாத காலத்தில் இருந்தே தொடங்குகிறது. வில்வமரத்தடியில் பொங்கரவம் பூண்டு வீற்றிருந்த அன்னை பர்வத பத்தினியின் மடியில் தவழ்ந்த பாம்புகளுக்குப் பால் வைத்துப் பூசித்து வந்தவர் விநாசித்தம்பி என்பார். அன்றொரு நாள் அவர் கனவிலே தோன்றிய அன்னை, ஆலயம் அமைத்து வழிபடும் வண்ணம் கேட்டதற்கிணங்கச் சிறுகுடில் அமைத்து அங்கு அம்பிகையை எழுந்தருளச் செய்து நித்திய பூசைகள் ஒழுங்குடன் நடைபெற வேண்டியன செய்தார். 1930ம் ஆண்டளவில் ஸ்தூபியுடன் வெளிமண்டபங்களும் அமைக்கப்பட்டன. உள்வீதியைச் சுற்றி மதில் வெளிவீதி எல்லையைச் சுற்றி முள்ளுக் கம்பி வேலிகளும் அமைக்கப்பட்டன. அம்பாளின் நித்திய பூசை ஒழுங்காக நடைபெறும் பொருட்டு பெரியார்கள் பலர் விவசாய நிலங்களை குறித்த ஆலயத்துக்குத் தர்மசாதனம் செய்துள்ளனர்.
1948 சித்திரையில் மகோற்சவம் ஆரம்பமானது. அம்பாள் புதிய சித்திரத்தேரில் ஆரோகணித்து வீதிவலம் எழுந்தருளும் காட்சி அற்புதமாக இருக்கும். மகளிரும் மைந்தருமாக வடம் பிடித்துத் திருத்தேரை இழுப்பர். இற்றைக்கு 60 வருடங்களுக்கு முன் திங்கள் தோறும் ஆலயத்தில் சிவநாமம் சொல்லும் முறை ஆரம்பிக்கப்பட்து.
பங்குனித் திங்கள் விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். ஆலயத்தின் கிழக்குப் புறமாக உள்ள ஆலமரத்தின் கீழ் இருந்து முரசு அறைதலுடன் ஆரம்பமாகும் இவ்விழா. ஊரார்கள் அயல் ஊரார்கள் பத்தி சிரத்தையுடன் பொங்கிப் படைத்து தமது நேர்த்தியைப் பூர்த்தி செய்வார்கள். பங்குனியில் திருக்குளிர்த்தி விழாவுடன் பூர்த்தி செய்வார்கள்.
தை மாச அமாவாசை அன்று அபிராமி பட்டர் விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இவ்வாலயத்தில் புதிய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி, ஏக தளமாக இருந்த மூலஸ்தான தூபி துவிதளமாக மாற்றப்பட்டு, 1990ம் ஆண்டு கும்பாபிஷேகம் இனிதே நிறைவுற்றது.
45/16f, so cool jaau மூலமூர்த்தி அம்பாள். பரிவார மூர்த்திகள் பிள்ளையார், கந்தசுவாமியார், வைரவர் ஆகியோர்.

Page 570
நித்திய பூசை உண்டு. தை உத்தரத்திற்கு விசேட திருவிழா நடைபெறக் கூடியதாக முதல் இருபது நாட்களுக்கு உற்சவம் நடைபெறும். திருவெம்பாவை, நவராத்திரி போன்றவை விசேட உற்சவ தினங்களாகும். வெள்ளி தோறும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
பர்வதவர்த்தினிமனோன்மணிஅம்மன், கிளானைப்பதி, ஊரெழு யாழ்ப்பாணத்தில் ஊரெழுவில் பூரீபர்வத வர்த்தினியாகவும், பூரீ மனோண்மணியாகவும் ஒரே கோயிலில் இரு மூர்த்தங்களில் கோயில் கொண்டெழுந்தருளிஉள்ள இவ்வாலயம் 200 வருடங்கள் பழமையானது.
ஊரெழு மக்களால் “ஆதி அன்னை” எனச் செல்லமாகப் போற்றப்படும் அம்பிகையின் ஆலய வரலாறு மிகவும் புதுமை மிக்கதாகும். ஆதிகாலத்தில் முன்னோர்கள் விலங்குகளிற்கு அஞ்சி,முத்துமாரியம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர்.
பின்னர் அன்பர் ஒருவர் மர நிழலில் அமர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்த பர்வதபத்தினி என்னும் நாமத்துடன் விளங்கிய,முத்துமாரிக்கு மடாலயம் ஒன்றை அமைத்தார். முத்துமாரியம்மன் மனித உருவிலான நடமாட்டமும், நடனமும், சிலம்பொலியும் மக்கள் கண்ணுக்கும் செவிக்கும் தென்பட்டது. இதனால் அகோர மூர்த்தமான முத்துமாரியைச் சாந்தப்படுத்துதற்காக அருள்வடிவான பூரீ மனோன்மணி அம்பாளை, மூலமூர்த்தியாகக் கொண்டு ஆகம முறைப்படி திணைக்கல்லினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர்.
ஆதியில் வைத்து வழிபாடாற்றி வந்த பர்வதபத்தினி அம்பாளை" (மனோன்மணி அம்பாள்) தெற்கு நோக்கியவாறு தனிக்கருவறை அமைத்து 1924ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர்.
பின் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு பல மண்டப அமைப்புக்களுடன் கூடிய பேராலயமாக 1954ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார உற்சவம் கிரமமாக நடைபெற்று வரும் நாளில், 1962ம் ஆண்டு திருடர்கள் அம்பாளின் நகைகளையும், எழுந்தருளி மூர்த்தியையும் களவாடிச் சென்று விக்கிரகத்தை உரும்பிராயில் சனநடமாட்டம் இல்லாத ஒரு பாழும்கிணற்றுக்குள் போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.

இதனாற் கவலையடைந்த தர்மகர்த்தாக்க்ள் புதிதாக விக்கிரகம் ஒன்றைச் செய்து உற்சவத்தை நடாத்தி வந்தனர். 1972ம் ஆண்டு குறித்த பாழடைந்த கிணற்றைத் திருத்தியவேளை அக்கிணற்றுக்குள் இவ்வெழுந்தருளி விக்கிரகம் கிடக்கக் காணப்பட்டு, குறித்த காணியின் சொந்தக்காரர் விக்கிரகத்தை ஆலயத்திற்குக் கொண்டு வந்து வழங்கினர். அன்றிலிருந்து ஆலயம் புதுப்பொலிவு பெற்று மறுமலர்ச்சியடைந்தது.
ஆலய உட்பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளுக்குப் புதிதாக ஆலயங்கள் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மக்களின் பெருமுயற்சியால் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு 1979ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து இக்கோயிலில் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. ஆடிப்பூர நாளைத் தீர்த்தத் திருவிழாவாகக் கொண்டு 12 நாள் உற்சவம் நடைபெற்று வருகின்றது.
இவ்வாலயத்தில் திட்டமிட்டபடி நடராஜப் பெருமானுக்குத் தனியான சபை, சண்முகப் பெருமானுக்குத் தனியானசபை, நந்திபலிபீடத் திருத்தம், நாச்சிமாருக்குத் தனி ஆலயம் முதலிய திருப்பணி வேலைகளைச் செய்ததோடு, புதிதாக கொடிமரம் செய்து புதுப்பித்ததோடு, புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் 20.03.2000ம் திகதி வெகு சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்பிகை வீதிவலம் வருவதற்காகப் புதிய சித்திரத்தேர் ஒன்று உருவாக்கப்படுகின்றது.
பூரீகண்ணகை அம்மன், ஊரெழு மேற்கு
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் ஐந்தாவது மைல் தொலைவில் அமைந்துள்ளதே ஊரெழு எனும் கிராமம் ஆகும். இராமரின் வில்லூன்றியதால் வற்றாத பொய்கையொன்று அமைந்து “பொக்கணை” என அழைக்கப்படுகிறது. ஏழு ஊர்களுக்கு நடுநாயகமாக விளங்குவதால்"ஊரெழு” என்னும் பெயரைக் கொண்டது இக்கிராமம். சந்தியிலிருந்து சுன்னாகம் செல்லும் வீதியில் சுமார் அரை மைல் தொலைவில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளதே இக்கண்ணகை அம்மன் கோயில் ஆகும். கிழக்கு நோக்கிய சந்நிதானத்தையுடையது இக்கோயில். அந்தணப் பெருமான் ஒருவர் இவ்வாலயத்தை அமைத்து
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 571
வழிபாடாற்றி வந்ததோடு ஆலய வருடாந்த மகோற்சவத்தில் ஒன்றைச் செய்து வந்துள்ளார்.
இவரது மனைவி கோயில் நித்திய, நைமித்திய பூசைகளில் பங்கு கொண்டு தொண்டாற்றி வந்தார். கணவனின் மறைவுக்குப்பின்னர் தானே கோயில் பூசை ஆராதனைகளையும் நடாத்தி வந்தார்.
1922ம் ஆண்டு தென்னங்கீற்று கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம் பின்னர் ஆலயமாக அமைக்கப்பெற்று 1926ம் ஆண்டு அட்சய வருஷம் ஆவணி மாதம் 23ம் திகதி மகா கும்பாபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் 35 வருடங்களின் பின் கட்டடநிர்மாண அமைப்புக்கள் செய்யப்பட்டு மங்கள வருடம் ஆவணி மாதம் 26ம் திகதி (1.09.1961ல்) மகா கும்பாபிசேகம் செய்யப்பட்டது.
ஆவணி உத்தர நட்சத்திரத்தில் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெற்று வந்த அலங்கார உற்சவம் 1964ல் இருந்து பதினைந்து திருவிழாக்களைக் கொண்ட பெருவிழாவாக வளர்ச்சி அடைந்தது. 19.03.1973ல் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்த பொன் விழாவும் கொண்டாடப்பட்டது. பங்குனி உத்தர தினத்தன்று அம்பாள் திக்கு விஜயம் செய்வாள்.
1974ம் ஆண்டு புதிதாகக் கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டுத் தேர், தீர்த்தம் உட்பட 18 தினங்கள் மகோற்சவம் நடைபெற்றது.
07.07.74ல் வடக்கு வீதிக்கான நிலம் அடியார்களின் உதவியால் அம்பாள் பெயரில் வாங்கப்பட்டது. அடியார்களின் தீராத நோய்கள் தீர்த்தாள் கண்ணகை அன்னை. பேயும், பிசாசும், பில்லி, சூனியம் அவளின் திருநீற்றுக்கு கிட்ட நில்லாது அகன்றன.
வெள்ளி தோறும் விசேட பூசை வழிபாடுகளும் திருவெம்பாவை, நவராத்திரி, கெளரிநோன்பு என்பனவும் சிறப்பு உற்சவங்களாயின. பல்வகைப்பட்ட அடியார்களினது பங்களிப்புடன் ஆலயத்தின் கர்ப்பக்கிரகம் மற்றும் மண்டபங்கள் எல்லாம் புனரமைக்கப்பட்டு 01.02.1979ல் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விநாயகர், சுப்பிரமணியர், சனீஸ்வரன், வைரவர் சண்டேஸ்வரி ஆகிய மூர்த்தங்களுக்கும் தனித்தனிச் சந்நிதானங்கள் அமைக்கப்பட்டன.
மயூரமங்கலம்

தீர்த்தக் கிணறும் புதிதாக அமைக்கப் பட்டிருக்கின்றது. தலவிருட்சமாக வேம்பு படர்ந்து நிழல் பரப்பி நிற்கின்றது.
பூரீகாளி அம்மன், சக்திபுரம், ஊரெழு இத்தி மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட ஆலயத்தின் மகோற்சவம் வைகாசிப் பூரணையை
ஒட்டி நடைபெறுகின்றது.
இராஜராஜேஸ்வரி அம்பாள்,
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
மூலவர் இராஜராஜேஸ்வரி அம்பாள். பரிவாரமூர்த்திகள் விநாயகர், முருகன், கிருஷ்ணர், நவக்கிரகம், தினமும் இருகாலப்பூசை. ஆனிமாதத்தில் பத்துத் தினங்களுக்கு அலங்காரத் திருவிழா உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளிற் சமய பாட வகுப்புகள் உள.
ubaoTaiwáFuuubuaGini, ஈவினை, புன்னாலைக்கட்டுவன்
மூல மூர்த்தியாகபூரீமீனாட்சியம்பாள் உள்ளார். பரிவாரத்திலே பிள்ளையார், வேல், துர்க்கை ஆகியோர் உளர். தினமும் இருகாலப் பூஜை, பங்குனி உத்தரத்தை நிறைவு நாளாகக் கொண்டு முதற் பத்துத் தினங்கள் அலங்கார உற்சவம் நடைபெறுகிறது. வருடாவருடம் சமய அறிவுப்போட்டி நடைபெற்று மாணவர்க்குப் பரிசு வழங்கப்படுகின்றன.
uநீராஜராஜேஸ்வரிஅம்பாள், பலாலி
உண்டு வருடாந்த உற்சவம் சிறப்புறநடைபெற்று வருகிறது
வட்டுவினிபதியுறை காயத்ரிபீட
கண்ணகா பரமேஸ்வரி, இணுவில்
இணுவில் மேற்கில் இணுவில் வைத்திய சாலையிலிருந்து கால்மைல் தூரத்திலுள்ள இவ்வாலயத்தில் ஆதியில் கண்ணகையின் சிலையே பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன் கெளரி அம்பிகை பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா மண்டபத்தில் விநாயகரும், கண்ணகையும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். இங்கு தர்ம சாஸ்தா குருகுலம் அமைந்துள்ளது. இங்கு வேத சிவாகம கல்வி பயின்ற சிவாச்சாரியார்கள் அகில இலங்கை ரீதியிலும்,

Page 572
உலகளாவிய ரீதியிலும் கடமையாற்றுகிறார்கள். இங்கு பல உபநயனங்கள் சிவாசார்யாபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பூரீ சக்கரபூஜை, வரலட்சுமி விரதம் என்பனவும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. உலகப் புகழ்பெற்ற பல அறிஞர்கள், பேச்சாளர்கள் மாசிமகத்தில் நடைபெறும் உற்சவத்தில் தொடர் பிரசங்கங்கள் செய்திருக்கிறார்கள். ஆதிசங்கரர் இயற்றிய செளந்தர்யலஹரி 100 சுலோகங்களையும் கீர்த்தனைகளாகப் பாடி வித்வான் வீரமணி ஐயர் சமர்ப்பித்து இருக்கிறார். இங்கு வேதபாராயணம், சஹஸ்ரநாம பாராயணம், சண்டிபாராயணம் முதலியன ஒலித்துக் கொண்டே யிருக்கும். உலகளவில் பல கும்பாபிஷேகங்களைச் சர்வசாதகராகவும் சர்வ போதகராகவும் கடமையாற்றி நடாத்தி வைக்கின்ற சிவழீ. தா. மகாதேவக்குருக்கள் இவ்வாலயத்தின் பிரதமகுருவாக அமைந்து ஆலயத்தைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
பூரீமீனாட்சிசுந்தரேஸ்வர சுவாமி உடுவில்
யாழ்மாவட்டத்தின் வடபால் அமைந்த உடுவையம்பதியில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னே வயற்பரப்பிலே உழும்போது, கலப்பை பெரிய கல்லொன்றிலே பட்டதால் அதிலிருந்து உதிரம் பெருகியதால் உழவு செய்தவர் மயக்கமடைந்தார். உடனே"நான் கண்ணகை அம்மன். என்னை வழிபாடு செய்” என்று அசரீரிவாக்கு கேட்டது. மயக்கந்தெளிந்த அவர் அச்சிலையை எடுக்க அது வெறும் முண்டாகிருதியாக காணப்பட்டதால் அங்கே வைத்து வழிபட்டனர். 300 ஆண்டுகளுக்கு முன்னே மதுரைமீனாட்சி பிரதிஸ்டை செய்யப்பட்டுக் கோயில் அமைக்கப்பட்டது. பின் சோமசுந்தரரேசப் பெருமானுக்குரிய கோயில் அமைக்கப்பட்டு மகாமண்டபம், மடப்பள்ளி, அமைக்கப்பட்டுப் பரிபாலிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன்திருமணக் கோலக்காட்சியையொத்த சந்நிதானமாக
அமைந்துள்ள இவ்வாலயத்தில் விநாயகரும்,
வள்ளிதேவசேனாசமேத சுப்பிரமணியரும் சனீஸ்வரரும் நவக்கிரகங்களும் வைரவரும் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். சபா மண்டபத்தில் நடராஜரும் மகாவிஷ்ணு சந்தான கோபாலரும் எழுந்தருளியுள்ளனர். மூலஸ்தானத்தில் அம்மன் யந்திரம் தர்சனா யந்திரமாகவுள்ளது. வெளிவீதியில் ஆதி வைரவர்
638)

கோயிலும் நாகதம்பிரான் கோவிலுமுள்ளன. 1972இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் 10.02.1989இலும் 19.03.1995 இலும் சம்புரோக்ஷண கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன. 1987ஆம் ஆண்டு சித்திரத்தேர் உருவாக்கப்பட்டது. சித்திராபூரணைத் தினத்தைத் தீர்த்தமாகக் கொண்டு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆலயத் தலவிருட்சமாக வேப்பமரம் திகழ்கிறது. 64 திருவிளையாடல்களில் வன்னியும் லிங்கமும் கிணறும் சாட்சி சொன்ன காட்சியை ஆலயத்திலே காணலாம். வசந்த மண்டபம், யாகசாலை, மணிக்கோபுரம், பாகசாலை,களஞ்சியம், வாகனசாலை என்பன அமைந்திருக்கின்றன.
பூரீஅம்பாள், மல்வம், உடுவில் நித்திய பூசை உண்டு வருடாந்தப் பொங்கலும் உண்டு. விசேட நாட்களில் விசேட பூசை நடைபெறும்.
மகாமாரி அம்மன், வாரியப்புலம், சுன்னாகம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் என்னும் கிராமத்தின் வடக்கெல்லைக் கண்மித்ததாக குறித்த பிரதான வீதியின் கிழக்குப்பக்கமாக சுமார் 200 யார் தொலைவில் அமைந்துள்ள இவ்வாலயம் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
அக்காலத்தில் பெரியம்மை, சின்னம்மை கொப்பளிப்பான், கோதாரி என்னும் பேதி என்னும் நோய்களால் இறப்பவர்களை இரகசியமாக நோயாளியைத் தனிமைப்படுத்திப் பராமரிப்பதும், மாரியம்மன் தாலாட்டுப்பாடி நோய்குணமாவதும் யாவரும் அறிந்ததே.
அக்காலத்தில் மேற்படி நோயினால் பீடிக்கப்பட்ட ஒரு பெண் இறந்தபோது உடனே அவரது உடலைப் பாயுடன் சுருட்டிக் குறித்த வாரியப்புலம் காணிக்குள் வடலிகள் சூழ்ந்த மறைவான இடத்தில் வைத்ததாகவும், ஊரடங்கிய இரவு வேளையில் அடக்கம் செய்யப்போன அவ்விடத்தில் சடலத்தைக் காணவில்லை எனவும் சுருட்டிய வெறும்பாயே இருந்தால் மக்கள் திகைப்படைந்த நிலையில் வீடு சேர்ந்தனர். அன்றிரவு அவர்களின் சொப்பனத்தில் “நான் மாரியம்மன் என்னை நீங்கள் தேடவேண்டாம் அதே இடத்தில் என்னை ஆதரித்து வணங்குங்கள்" என்று கூறிமறைந்ததாம் அந்த உருவம்
பதிபூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 573
அன்றிலிருந்து அவ்விடத்தை துப்பரவு செய்து அதே இடத்தில் ஒரு கல்லை வைத்து வழிபாடாற்றி வந்தனர்.
அன்னை மகாமாரியின் அருளுட்டத்தால் ஆரம்பத்தில் சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஆலயம் வளர்ச்சியடைந்து இப்போது பலவகையான மண்டபங்கள்,சுற்றுப்பிரகாரங்கள் பிள்ளையார், முருகன், வைரவர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனி சந்நிதானங்களும் அமைக்கப்பட்டு கொடித்தம்பம், நந்திபலிபீட அமைப்புக்களுடன் கூடிய பெரிய ஆலயமாக விளங்குகின்றது.
16.02.2000 அன்று சித்திரத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இவ்வாலயத்தில் இவ்வாண்டு முதன்முதலாகக் கொடியேறித் திருவிழா நடைபெற்றுத் தேர்த்திருவிழா, தீர்த்தத்திருவிழா என்பன சிறப்பாக நடைபெற்றன. இவ்வாலயத்தில் திருவெம்பாவை, நவராத்திரி, வருடாந்தப்பொங்கல் என்பவற்றோடு கார்த்திகைச் சோமவார உற்சவம் என்பனவும் நடைபெற்று வருகின்றன.
பூரீமுத்துமாரிஅம்மன், மயிலனி
இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன் வடலிகளால் சூழப்பட்ட பெரிய ஒதிகை மரத்தடியில் இருந்த கல்லில் தான் இருப்பதாக அடியவர்களுக்குக் கனவின் மூலம் வெளிப்படுத்தியதால், ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம் மக்களைக் கவர்ந்த சம்பவமாக, ஒருநாள் ஒருவர் மதுஅருந்தி விட்டு நண்பர்களுடன் வெளவால் வேட்டைக்குச் செல்கையில் அம்மனை நிந்தித்துவிட்டுச் சென்றதால் துப்பாக்கியும் இயங்கவில்லை. தூக்கிய கையையும் விடமுடியவில்லை. பின்பு வருந்தி தேங்காய் உடைப்பித்ததன் மூலம் குணமாகியதைக் குறிப்பிடலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் தைப்பொங்கல், வருடப்பிறப்புத் தினங்களிலும் விசேட பூசைகள் இடம் பெறுகின்றன. 1993 ம் ஆண்டு முதல் நித்திய பூசைகளும் மாதாந்தத் திருவிழாக்களும் பிரதி செவ்வாய்க் கிழமைகளில் சொற்பொழிவும் நடைபெறுகின்றன. தீராத நோய்களைத் தீர்க்கும். குழந்தைப் பேற்றை அருளும் அம்மனுக்கு 03.09.1998இல் அடிக்கலிடப்பட்டு 12.09.1999 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இப்பொழுது இரு நேரட்
மயூரமங்கலம்

பூசைகள் நடைபெறுகின்றன. வசந்த மண்டபமும் அன்பர்களால் கட்டப்பட்டு உள்ளது.
காளிகாதேவி, மல்லாகம் யாழ்ப்பாணத்தில் மல்லாகம் எனும் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது காளிகாதேவி ஆலயம்.
இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு மல்லாகம் கிராமத்தில் வாழ்ந்து வந்த விஸ்வ கர்ம குலத்தவர்களினால் காளிதேவிக்கு ஒரு ஆலயம் அமைக்கப்பட்டது. இங்கு சைவ ஆகம விதிப்படி அந்தணர்களை நியமித்துப் பூஜை வழிபாடு செய்யப்பட்டது.
காலப்போக்கில் அம்பிகையின் திருவருள் துணை கொண்டு அடியார்கள் எடுத்த முயற்சியால் 1966, 1978, 1992ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கும்பாபி ஷேகங்களில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இவ்வாலயம் வளர்ச்சியுற்று தற்போது சிறப்புற விளங்குகிறது.
ஆலயத்தின் மூலஸ்தானத்திலே, சூலம், கபோதம், பாசம், உடுக்கை என்பன தாங்கிய அம்பாள் அழகிய கருங்கல்லினால் ஆன விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், விநாயகர், சுப்பிரமணியர்,ஞான வைரவர், சந்தான கோபாலர் ஆகிய பரிவார மூர்த்திகளும் நந்தி, பலி பீடமும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளன.
அழகிய ஸ்தூபி கொண்ட கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம், யாக சாலை, பாக சாலை கூடிய பிரமாண்டமான கோவிலாக அமைந்துள்ளது.
அம்பிகையின் திருக் கோவிலில் ஆல், அரசு, போன்ற தலவிருட்சங்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஆலயத்திற்கு அழகு சேர்க்கின்றது.
காளி தேவிக்குத் தினமும் இரண்டு கால நித்திய பூஜை நடைபெறுகின்றது. மேலும் வருடாந்தம் பன்னிரு தினங்கள் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
வசந்த நாகபூசணிஅம்பிகை, ஏழாலை, களபாவோடை அன்னை பராசக்தியால் களபாவோடையைச் சேர்ந்த வசந்தகுமாரி என்பவர் ஆட்கொள்ளப்பட்டதன் விளைவாக அமைந்த கோயிலிது. ஆரம்பத்தில் அவரில்லத்திலேயே பூசைகள் நடாத்தப்பட்டு வந்தன. ஏழாலை கண்ணகை அம்மன் கோயிலிலிருந்து

Page 574
அம்மனின் சிலை எடுத்து வரப்பட்டு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டதால் முன்பு கண்ணகி அம்மன் என்ற பெயரே வழக்கத்திலிருந்து வந்தது. கண்ணகியம்மன் முடியில் நாகம் சார்ந்த அழகிய கோலமும் விளங்குவதால், நாகபூஷணி எனப் பின்பு அழைக்கப்பட அப்பெயரே வழங்கிவருவதாயிற்று.
இக்கோயில் கும்பாபிஷேகம் 1990 இல் நடாத்தப்பட்டது.
கண்ணகியம்மன், ஏழாலை
மூலமூர்த்தியாகக் கண்ணகியம்மன் வீற்றிருக்கிறார். பரிவாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் அமர்ந்துள்ளார். இரு நேரப்பூசை உண்டு. வைகாசி விசாகப் பொங்கல் இங்கு சிறப்பாக நடைபெறும். பங்குனி மாதக் கடைசித் திங்களில் குளிர்த்தி இடம் பெறுகிறது. கிராம மக்களிடையே சமய அறிவுப் போட்டி வைத்துப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
தவளகிரிமுத்துமாரி அளவெட்டி
யாழ் குடா நாட்டின் வடபால் அளவெட்டி என்னும் புகழ் படைத்த ஊரில் அமைதி மிகு சூழலில் அன்னை முத்துமாரி கோயில் கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலம் அமைந்திருக்கின்றது. தவளகிரித் திருத்தலத்தின் வரலாற்றைப் பரம்பரைக் கதைகள் எடுத்துக் கூறுகின்றன. நீண்ட நெடுங் காலத்திற்கு முன்பு வட்டுக்கோட்டை யாழ் மக்கள் கடலில் இருந்து எடுத்த அன்னையின் திருவுருவச் சிலையை வீடொன்றில் வைத்து ஆராதிப்பார்கள்.
அம்பிகையை அயலூரில் உள்ள யாவரும் வந்து வழிபாடாற்றிச் செல்வார்கள். இருப்பினும் இந்தஅம்மனைப்பிரதிஷ்டை செய்ய முன்பு காத்தவராயர் கோயில் என்று வழங்கி வந்தார்கள். காத்தவராயர் உற்சவ மூர்த்தியும் கழுமரமும் இன்னும் கோயிலில் உள்ளது. வேள்வி கொடியேற்றிப் பலியிடும் வழக்கம் இருந்து வந்தது. 1918ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுப் பலியிடுதல் நிறுத்தப்பட்டு மகோற்சவம் செய்யத் தொடங்கினார்கள். 1935ஆம் ஆண்டு ஸ்தூபி திருத்தம் செய்து இரண்டாவது மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1965ஆம் ஆண்டு தை மாதம் மூன்றாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1990ஆம் ஆண்டு தை பதினெட்டாம் திகதி நாலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் வீர சைவத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக பூஜை

செய்கின்றார்கள். இக்கோயிலுக்குரிய தலவிருட்சம் சரற்கொன்றை. இது வடக்குவெளி வீதியில் வானுயர வளர்ந்து நிற்கிறது. ஆனி மகோற்சவ காலத்தில் பொன் போல பூச்சொரிந்து தேவியை பூசித்து நிற்கும் வயல் நிலங்கள் தோட்டக் காணிகளும் கோவிலுக்குத் தருமாசாசனஞ்செய்யப்பட்டுள்ளது. அம்பிகையே உற்சவ மூர்த்தியாக வீதிவலம் வருகின்றாள். இவ்வம்பிகையின் அழகும் ஒளியும் அருட்பொலிவும் மிக மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. பங்குனி இரண்டாவது திங்கள் அம்பிகைக்குச் செய்யப்படும் குளிர்த்தி விழா விசேடமானது.
வெண்மையான சிகரங்களைக் கொண் டிருப்பதால் இமய மலைக்குத் தவளகிரி என்றும் பெயருண்டு. இமயத்தின் திருச் செல்வி பார்வதி. பார்வதிதேவியின் ஒரு அம்சமான அன்னை முத்துமாரி எங்கள் அளவையூர்த் தவளகிரியில் இருந்து அருளாட்சி செய்து வருகின்றாள்.
வற்றாக்கை அம்மன், கந்தரோடை
காலத்தால் முற்பட்டு அளவிற் பெரியதாக விளங்கும் ஆலயம் வற்றாக்கை அம்மன் கோயில் எனச் சொல்லப்படும் விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி கோயிலாகும்.
இப்போதுள்ள ஆலயத்தில் உள்ள வீதியில் பிள்ளையார் சந்நிதானத்துக்குத் தென்கிழக்கில், கிழக்கு வாசலுடன் கூடிய சிறிய ஆலயத்தில் அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் காற் கூற்றில் இப்புனித நிகழ்ச்சி நடந்ததாக ஊகிக்கப்படுகின்றது.
தென் இந்தியாவில் இருந்து வருகை தந்த சைவத் துறவி ஒருவர் வழங்கிய இயந்திரம் இக்கோவிலில் வைத்துப் பூசிக்கப்படத் தொடங்கியதும் அம்பாளின் அருளாட்சி மேலும் ஓங்கியதாகச் சொல்லப்படுகின்றது.
ஆரம்பத்தில் இது அம்பாள் ஆலயமாகவே இருந்தது. ஆலயத்தை நிர்வகித்து வந்த அந்தணர்களுள் ஒருவர், தலயாத்திரையை மேற்கொண்டு இந்தியாவிற்குச் சென்றார். தென்னிந்தியாவிலுள்ள தலங்களைத் தரிசித்த பின்னர், வட இந்தியாவிலுள்ள காசிக்குச் சென்று, கங்கையில் நீராடிக் காசி விஸ்நாதரைத் தரிசித்து, அங்கிருந்தே ஒரு சிவலிங்கத்தையும் கொண்டு வந்து,
ரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 575
புதிதாக ஒர் ஆலயம் அமைக்க அங்கே பிரதிஷ்டை செய்தார். முன்னர் சிறிய கோவிலிற் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விசாலாட்சி அம்பாள், காசி விஸ்வநாதப் பெருமானின் சக்தியாக, இறைவனின் இடதுபுறத்தில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட ஆலயத்திற் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், வற்றாக்கை அம்மன் கோவில், விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதஸ்வாமி கோவில் ஆயிற்று.
கந்தரோடையிலும் அயற்கிராமங்களிலுமுள்ள அடியார்கள் பலர், காலத்துக்குக் காலம் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். பிள்ளையார், கப்பிரமணியர், சனீஸ்வரன், வைரவர், நாகதம்பிரான், சூரிய சந்திரர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்குத் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டன. 1982ம் ஆண்டில் நடராஜர் - சிவகாமி அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.
ஆனி உத்தரத்தை அந்தமாகக் கொண்டு பிரம்மோற்சவத்தை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
குருந்தடி இராஜராஜேஸ்வரிஅம்பாள், தெல்லிப்பழை
மூலமூர்த்தி இராஜராஜேஸ்வரி அம்பாள், பரிவார மூர்த்திகள் பிள்ளையார், வைரவர். தினமும் இருகாலப்பூசை, சித்திரை மாதப் புனர்பூச நட்சத்திரத்தில் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி 12 தினங்கள் நடைபெற்று வருகின்றன. தலவிருட்சம் அரசு, திருவாதவூடிகள் புராணம், சித்திரப்புத்திரனார் கதை என்பன படிக்கப்படும். திருவெம்பாவை, நவராத்திரி, சிவராத்திரி ஆகியவை விசேட தினங்களாகப் பூசை நடைபெறும். வெள்ளிக் கிழமைகளில் கூட்டுப் பிரார்த்தனை உண்டு.
பூரீஇராஜராஜேஸ்வரிஅம்பாள், வீணியவரை , மாவிட்டபுரம் யாழ்ப்பாணத்தின் வடபால் மாவிட்டபுரத்தின் தெற்குப் புறத்தில் அரைக்கிலோ மீற்றர் தூரத்தில் காங்கேசன்துறைப் பெருவீதியின் கிழக்குப் புறமாக அமைந்துள்ளது. இவ்வாலயம் குதிரை முகம் மாருதப் புரவீகவல்லிக்கு மாறியதால் மாவிட்டபுரம் எனப் பெயர்
மயூரமங்கலம்

பெற்ற இக்கிராமம் அதற்கு முன் கோயிற்கடவை எனப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருந்தது. தற்போது இவ்வாலயத்திற்கு வடகிழக்கே காணப்படும் உத்தியவத்தைப் பிள்ளையார் கோயிலும், அதன் கேணியும் தலவிருட்ச அளவும் கேணிப்பிட்டியிலுள்ள நீர்வற்றாக்கேணியும், எனப் பல்வேறு இடிபாடுகளுடைய இடங்களும் அமைப்புக்களும், முன்னொரு காலத்தில் கோயிற் கடவையாக இக்கிராமம் திகழ்ந்ததாகச் சான்று பகருகின்றன. தற்போது வீணியவரை எனப்படும் இக்கிராமத்திலுள்ள இவ்வாலயத்தில் 1950இல் சித்திரைமாதம் கண்ணகி பிரதிஷ்டை செய்யப்பட்டு, 1970ம் ஆண்டு மேமாதம் 11ம் திகதி பாலஸ்தானம் செய்யப்பட்டுத் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1977 ஆவணி 19ம் திகதி பூரீ இராஜராஜேஸ்வரி ஆலயமாக மாற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
sirosmunit, கண்ணகி, வைரவர் ஆகியோருக்குத் தனிக் கோயில்களும் உற்சவ மூர்த்திக்குத் தனித்தனி மண்டபமும் அமைக்கப் பட்டுள்ளது. 198604.15 அன்று கொடியேற்ற உற்சவத்துடன் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு சித்திரைப் பெளர்ணமியைத் தீர்த்தமாய்க் கொண்டு 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று வருகிறது. சித்திரைப்பூரணை, வைகாசிவிசாகம்,நவராத்திரி திருவாதிரை, பங்குனித் திங்கள் என்பனவும் கொண்டாடப்படுகிறது.ழரீசக்கரபூசையும்இடம்பெறுகிறது. திங்கட்கிழமைகளில் உள்வீதியுலாவும், ஆடிப்பூரமும் கும்பாபிஷேகத் தினம் சங்காபிஷேகமும், பூந்தண்டிகை உற்சவமும், பிள்ளையார் கதையும் திருவெம்பாவையும், திருவாதவூரடிகள் புராணப்படிப்பும், கந்தபுராணப் படிப்பும் சிறப்பாக இடம் பெறுகின்றன. 1987இல் ஆரம்பிக்கப்பட்ட கலைப்பெருமன்றம் சமய சங்கீத வகுப்புக்களை நடத்தியும் நூலகத்தை அமைத்தும் செயற்பட்டு வந்தது.
எனினும் 1990இல் நாட்டுச் சூழலால் கைவிடப் பட்டு 1999 சித்திரையில் மீண்டும் பூசைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
பநீகாளியம்மன், ஊரியவத்தை மடத்தடி, மாவிட்டபுரம்
மூலமூர்த்தி காளியம்பாள் பரிவார மூர்த்திகள் பிள்ளையார், வைரவர் தினசரி இருகாலப்பூசை, வைகாசி மாதத்தில் பதினைந்து நாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெறுகின்றது.

Page 576
பூரீமுத்துமாரிஅம்மன், கடற்கரை விதி, கீரிமலை மூலமூர்த்தி முத்துமாரி அம்மன், பரிவார மூர்த்திகள் விநாயகர், காத்தவராயர், முருகன், வைரவர் நித்திய நைமித்திய பூசை உண்டு. மாசி மகத்தன்று தீர்த்த உற்சவம் நடைபெறக் கூடியதாக பன்னிரண்டு நாட்களுக்கு உற்சவம் நடைபெறும்.
கண்ணகை அம்மன், தையிட்டி தெற்கு, காங்கேசன்துறை
இவ்வாலயம் போர்த்துக்கீசர் ஆக்கிரமிப்பின் போது இடிக்கப்பட்டது. பின்பு கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்களை வைத்து ஊர்மக்கள் கண்ணகி ஆலயம் என்று பெயர் சூட்டி வழிபாடு செய்தனர். தினமும் ஒருகாலப்பூசை திருவெம்பாவை, நவராத்திரி,சிவராத்திரி போன்ற தினங்களில் விசேட வழிபாடுகள் உண்டு.
கடலூர்யூரீஇராஜேஸ்வரிஅம்பாள், குமார கோவில் வீதி, காங்கேசன்துறை
தான்தோன்றீஸ்வரியாக உள்ள மூல மூர்த்தி என்பது வரலாறு. மூலமூர்த்திராஜராஜேஸ்வரி அம்பாள். பரிவார மூர்த்திகள் பிள்ளையார், முருகன், வைரவர், வீரபத்திரர், அனுமர் தினமும் சாயரட்சைப் பூசை நடைபெறும்.
தூதுலிடைக் கண்ணகியம்மன், தையிட்டி, காங்கேசன்துறை 825ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதாக வரலாறு. மூலமூர்த்தி கண்ணகி அம்மன் பரிவார மூர்த்திகள் பிள்ளையார், நாகதம்பிரான், வைரவர், நித்திய பூசையும், விசேட தினங்களில் விசேட உற்சவங்கள் நடைபெறுகின்றன.
களையோடை அம்பாள், நவாலியூர்
யாழ்ப்பாணத்திலுள்ள ஆனைக்கோட்டைக் கிராமத்தையும், வட்டுக்கோட்டைக் கிராமத்தையும் இணைக்கும் சாலை நாவலியூரூடாகச் செல்கிறது.
இப்பாதையில் தென்புறம் கல்லுண்டாய் என்ற சிற்றுாரின் எல்லைவரை செறிந்து கிடக்கும் வயல்களினிடையே அங்குமிங்கும் பல மண்மேடுகள் காணப்படும்.
இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் இவ்வயற் பகுதிக்குச் சென்ற அவ்வூர்

மனிதர் ஒருவர் இத்தகைய மண்மேடொன்றிற் கையில் ஓர் தடியுடன் ஒரு மூதாட்டி உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அம்மூதாட்டி அவரைத் தன்னருகே அழைத்து "மகனே, எனக்குத் தாகமாயிருக்கிறது தண்ணீர் கொஞ்சம் தருவாயா?” எனக் கேட்டார். “ இங்கே அண்மையிற் கிணறுகள் இல்லை. என்னுடைய வீட்டுக்குத்தான் போகவேண்டும் ” என்று அம்மனிதர் பதிலளித்தார். "அப்படியென்றால்வா போகலாம்” என்று கூறிய அம்மூதாட்டியை அழைத்துக்கொண்டு தன் வீடு நோக்கிச் சென்றார் அம்மனிதர். பாதிவழியில்“எனக்குக் களைப்பாயிருக்கிறது மகனே நான் இங்கேயே இருக்கிறேன் நீ போய்த் தண்ணீர் கொண்டுவா” என்று கூறிய அம்மூதாட்டி “கொஞ்சம் நில் மகனே "என்று சொல்லித் தன் கையிலிருந்த தடியை நிலத்தில் ஊன்ற அவ்விடத்திலிருந்து நீர் பொங்கியெழுந்தது. அதைக் கைகளில் ஏந்திப் பருகினார் அம்மூதாட்டி, அம்மனிதரை அழைத்துக் கொண்டு மீண்டும் தான் உட்கார்ந்திருந்த மண்மேட்டுக்குச் சென்றார் மூதாட்டி, “என்னுடைய தலையில் பேன் கடிக்கிறது, பேன் எடுத்து விடுவாயா மகனே?” என்று அம்மனிதரிடங் கேட்டார் மூதாட்டி அம்மனிதர் அதற்கு இசைந்ததும் அவருடைய மடியிலே தலைவைத்துப் படுத்தார் அம்மூதாட்டி. அவருடைய வெள்ளை வெளேரென்ற கூந்தலைக் கோதிய அம்மனிதர் மூதாட்டியின் தலையில் நிறையக் கண்கள் இருப்பதைக் கண்டதும் பயந்து அப்படியே மூர்ச்சித்து விட்டார். அவர் கண்விழித்துப் பார்த்தால் மூதாட்டியைக் காணவில்லை. அன்றிரவு அம்மனிதருடைய கனவில் ஒரு அதிசெளந்தர்யம் மிக்க இளம் பெண்ணொருத்தி தோன்றி “நான்தான் கண்ணகை, நான் தான் மத்தியானம் உன்னிடம் தண்ணீர் கேட்ட கிழவி. நான் தண்ணிர் பருகிய இடத்திற்கருகில் எனக்கொரு மனை அமைத்துவிடு மகனே! நான் இங்கேயே இருந்து உனக்கும், உனது ஊராருக்கும் அருள்புரிவேன்” என்று கூறினார். இதன் பிரகாரம் அவ்விடத்தில் ஒர் ஆலயம் அமைக்கப்பட்டது. தண்ணீர் பொங்கியெழுந்த இடத்தில் இரண்டு முழம்வரை ஆழமான கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மிகமிகச் சிறிய இக்கிணறு அற்புதமானது. உவர்நீர் அதிகமாகக் காணப்படும் அவ்விடத்தில் நன்னீர்க் கிணறாக அது அமைந்திருக்கிறது.
மூதாட்டியாகத் தோன்றிய கண்ணகை அம்பாளின் நினைவாக அவர் முதலில் உட்கார்ந்திருந்தும், பின்பு மறைந்ததுமான மண்மேட்டில், மூடு சாந்தினால் ஒரு சிறுஆலயம் அமைக்கப்
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் -2000

Page 577
பட்டுள்ளது. இந்த ஆலயத்திலும் தினமும் வழிபாடு இயற்றப்படுகிறது.
கஜபாகு மன்னன் கண்ணகியின் சிலையை இலங்கைக்குக் கொண்டுவந்தது மாதகல் துறையினூடாகவே எனவும், அவ்வாறு தென் இலங்கைக்குச் செல்லும் வழியில் அம்மன்னன் நவாலியூரில் இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்திற் சிலையுடன் தங்கிச் சென்றதாகவும், கர்ணபரம்பரையான வரலாறுள்ளது.
ஏறத்தாழப்பன்னிரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலப்பரப்பில் மேற்கே இந்த ஆலயமும், அதற்கு முன்புறமாகக் கிழக்கே நாகதம்பிரான் ஆலயமும், தென்புறமாக முருகன் ஆலயமும், அதற்குத் தென்புறமாக விநாயகருக்கான சிறு வழிபாட்டிடமும் (அரசமரத்தின் கீழ்) அமைந்துள்ளன.
“களையோடை அம்பாள்” என்ற பெயராலேயே இந்த அம்பாள் ஆலயம் வழங்கப்பட்டு வருவது களையோடு வந்து தண்ணிர் கேட்ட அம்பாள் என்ற காரணத்தினாலாகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம், வைகாசி விசாகம் போன்ற உற்சவங்களும், சிறப்புப் பொங்கல் உற்சவமும் விமரிசையாகக் கொண்டாடப்படும். இவை தவிர மழை பொய்க்கும் காலங்களிலும், தொற்று நோய்கள் ஏற்படுங் காலங்களிலும், “குளிர்த்தி" எனப்படும் பெருமளவிலான இளநீர், பால் அபிஷேகமும், பொங்கல் பூஜைகளும் விஷேசமாக இயற்றப்படும்.
மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் (தீர்த்தக் கேணி) என்னும் மூன்று அம்சங்களும் ஒருங்கே பொருந்திய இந்த ஆலயத்தின் தலவிருட்சம் புன்னைமரமாகும்.
நாச்சிமார்முருகன், நவாலிவடக்கு
யாழ் மாவட்டத்திலே நவாலிப்பதியிலே 1735ஆம் ஆண்டளவிலே ஸ்தாபிக்கப்பட்ட இவ்வாலயம் ஆரம்பத்தில் 7 கன்னிமார்களைத் தெய்வங்களாகக் கொண்டு வழிபடப் பெற்றது. முதலில் கல்லாலும் செங்கட்டிகளாலும் ஆலயச் சுவர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கு வரும்போது மூப்பனார்கள் முரசறைந்து கொண்டு வந்து அங்கிருந்தும் முரசறைவர். ஆலமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட இங்கு இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் பொங்கல் விழா 12 மணியளவில் பூர்த்தியடையும். ஒரு நேரப் பூசையே நடந்து வந்தது. பக்தர்கள் தங்குவதற்கு ஆலமரம் பெரிதும் உதவுகிறது. இம்மரத்தடியில் இரவு 12 மணியளவில் வெளிச்சம் தோன்றி அதைத் தொடர்ந்து
மயூரமங்கலம்

கன்னிமார்களது நடனம் நடக்குமெனவும் அடியார்கள் கூறுவர். பகல் 12 மணியளவில் இளம் பெண்கள் அங்கு செல்வதில்லை. மச்சம் உண்போரும் செல்வதில்லை. 1900 இல் முருகனுக்கு ஒரு ஆலயமும் அமைக்கப்பட்டது. 12 நாட்திருவிழா நடைபெறுகிறது.
தில்லைக் காளியம்மன், நவாலி சிவபூமி என்று சிறப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்த ஆவரங்கால் என்னும் புண்ணிய பூமியில் இருந்து தென்னிந்தியத் திருத்தலங்களைத் தரிசிப்பதற்குச் சென்ற ஆதி சைவப் பெரியார் ஒருவர் காஞ்சிப் பதியை அடைந்த சமயம், காஞ்சிப் பெரியாரால் ஓர் சக்தி யந்திரம் வழங்கப்பட்டு, ஆவரங்காலில் கொண்டு சென்று வைத்து வழிபாடு செய்யும்படி ஆணையிடப்பட்டது. அதன்படி ஊரை அடைந்து ஒர் ஆலயம் அமைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. விசேட பூசைகள் நடைபெற்று, பூசையின் பலனை ஒப்படைக்கும் சமயம் அம்பாள் ஓர் சிறு பெண் குழந்தை வடிவில் காட்சி கொடுத்து பூசையில் ஏற்பட்ட குற்றம் குறைகளையும் அதற்கு ஏற்ற நிவர்த்தி முறைகளையும் நாட்டு நடப்புக்களையும் கூறும் அற்புத மூர்த்திகரம் கொண்டதாக அந்த யந்திரம் விளங்கியது. இதை நோக்கிய ஆலய ஸ்தாபகரும் ஏனையோரும் தம்முள் கண்ட முடிவு பின்வருமாறு,
இவ்வளவு அற்புதமூர்த்திகரம் கொண்ட யந்திரம் எதிர்வரும் காலங்களில் வழிபாட்டிற்கு உரியதாக அமையுமாயின், கடவுள் நிந்தனையும் பக்குவமற்ற நிலையும் மிகுதியாக உள்ள எதிர்கால சந்ததி துன்பமடைய நேரிடும். எனவே இதன் மூர்த்திகரம் குறையும் பொருட்டு பரிவார தேவதைகளை வெவ்வேறு இடங்களில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதாகும். இந்த முடிவின்படி பிரதான அதி தேவதையை “மாரியம்மன்” என்ற பெயருடன் எமது ஊரின் தென் பகுதியிலும் இதற்குக் காவலாகத் தென்கிழக்கில் கல்லுண்டாயில் நரசிங்க வயிரவரையும் வடமேற்கே சங்கரத்தையில் பத்திரகாளி சமேத வீரபத்திரனையும் வடக்கே இடிகுண்டிற்கு மேற்காக ஆதிஞான வைரவரும் ஆதி சைவர்களால் ஸ்தாபிதம் செய்யப்பட்டு வருடாவருடம் விசேட உற்சவங்கள் மட்டும் நடத்தப் பெற்று வந்தன. நவாலியில் ஸ்தாபிதம் செய்யப்பட்ட மாரியம்மன் யந்திரம் ஒர் மூடிய பெட்டியில் வைக்கப்பட்டது.
அதன் உற்சவம், பலிபூசை என்பன தற்போது நாகநாதி குழந்தைவேல் என்னும் ஆசிரியருக்குச்
643)

Page 578
சொந்தமான நிலத்தில் நடைபெறும் ஏனைய காலங்களில் பத்தினித் தெய்வமாம் கண்ணகை ஆலயத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. தற்போது ஆலயம் அமைந்தள்ள இடத்தில் ஒலைக் கொட்டிலிலும், பின்னர் கண்ணாம்புக் கட்டிடமாகவும் அமைக்கப்பட்டு உற்சவம் மட்டும் ஆவரங்கால் சைவர்களால் நடத்தப்பட்டு வந்தது.
ஆதியில் மாரியம்மன் ஆலயத்தில் நித்தியமாக விளக்கேற்ற வசதிப்படாத காரணத்தால் 100-110 வருடங்கட்கு முன்னரே ஆவரங்கால் சைவர்களால் ஓர் அன்பர் வீட்டில் இடம் அமைத்து நித்திய விளக்கேற்றவும் விசேட மடை போடவும் ஏற்பாடானது. அந்த ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு மிக விமரிசையாக ஆதரிக்கப்பட்டு வருகிறது.
1989ல் ஆலயம் பாலஸ்தானம் செய்யப்பட்டது. 1990ல் 70 ஆண்டுகட்கு முன் மறைவான பத்ததி சேதாரமடைந்த நிலையில் கைக்குக் கிட்டியது.
2000ல் அம்பாள் திருவருளோடு கூடிய
மெய்யடியார்கள் பேராதரவுடன் மஹா கும்பாபிஷேகம் இனிது நடைபெற்றது.
முத்துமாரியம்மன், ஆவரம்பிட்டி, அராலிகிழக்கு
யாழ்ப்பாண மாவட்டத்திலே அராலிப் பாலத்திலிருந்து தெற்கு நோக்கிக் கால்மைல் தூரத்தில், மேற்கு நோக்கிய வீதியில் ஆவரம்பிட்டியில் அமைந்துள்ள இவ்வம்மன் மலையாளதேசத்திலிருந்துவந்ததாக ஐதீகம். இக்கோவிலின் வடக்கு வீதியில் அமைந்துள்ள நாவல் மரம் மிகப்பழமை வாய்ந்தது. அடுத்த வெள்ளி, சனிக்கிழமைகளில் முடிவடையுமாறு உற்சவம் நடைபெறும் 9வது நாள் ஆடு கோழிகளைப் பலியிடும் வேள்வி இற்றைக்கு 57 ஆண்டுகளுக்குமுன் நடைமுறையில் இருந்தது. பின் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒவ்வொரு வருடமும் புதிய கமுகு மரத்தின் உச்சியில் நடுவே சிங்கம் வரையப்பட்ட வெள்ளைச் சீலையும், நான்கு திசைகளிலும் நான்கு நிறச்சேலைகளும் கட்டப்பட்டுத் திறந்த வெளி அரங்கில் கொடிமரம் ஏற்றப்படும். 8ம் நாள் சுவாமி வேட்டைக்குச் சென்று திரும்ப வைகறையாகிவிடும். அடுத்த நாள் பொங்கல் பூசைகள் நடைபெறும். இதற்குப்பின் சங்காபிஷேகமும் நடந்தேறும் அன்று பகல் அன்னதானம் வழங்கப்பட்டு மாலை பூந்தண்டிகையில் அம்பாள் வலம்வரும் காட்சி கண்கொள்ளக் காட்சியாகும்.
 

பூரீவாலையம்பாள், அராலி மூல மூர்த்தி அம்பாள் பரிவார மூர்த்திகள் வைரவர், காத்தவராயர் ஆகியோர் தினமும் இரு காலப் பூசை நடைபெறும். தைப்பொங்கல், சிவராத்திரி,சித்திரா பூரணை, திருவெம்பாவை ஆகிய தினங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
முத்துமாரிஅம்பாள், வியோடை, இலுப்பையடி, வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டைக் கிராமத்தின் வீயோடை வளவில் கோவில் கொண்டருளும் அம்பாளைப் பற்றி ஒன்றுண்டு.
விண்ணில் நின்று கண்ணைக் கவரும் ஒளிப்பிழம்பு ஒன்று பண்டொருநாள் யாழகத்து மண்ணில் புகுந்ததாம். அதிசயம் அதில் நின்று, எழுதாயர் தோன்றினராம். அவர்கள் ஒருவர் பின் ஒருவர் தொடர்ந்தனராம். முதற் கண் ஒரு தாய், சங்கானைக் கூடத்து அம்மன் கோயிலுட் புகுந்தனராம். தொடர்ந்து ஒரு தாய், வட்டு இலுப்பை நிழல் வான் தனியுள் அமர்ந்தனராம். மற்றொருத்தி தொல்புரம் வடக்கம்பரை ஆலயத்துள்ளும், இன்னொருத்தி வட்டு கிழக்கு துறட்டிப்பனைக் கோயிலுக்குள்ளும், பிறிதொருத்தி சங்கரத்தைப் பத்திரகாளி கோயிலுக்குள்ளும் அடுத்த இருவரும் அராலி வடக்கு, அராலி தெற்குத் திருக்கோயிலுக்குள் மேலி “அந்தர்யாமி” ஆயினராம்.
முன்னைநாளில் வட்டூர் வீயோடை முத்துமாரித்தாய் கொலு வீற்றிருந்த இலுப்பைமரம் இன்றில்லை. எல்லோரும் அன்புசொட்ட இலுப்பையடி ஆத்தாள் என்றே கூறுகின்றனர்.
கடந்த 1972இல் தேவஸ்தான குடமுழுக்குவிழா நடத்தப்பட்டது.
மூலவராக முத்துமாரி அம்மையார் வீற்றிருக்கின்றார். பிரகாரத்தில் விநாயகன், முருகன் முதலியவர்கள் வீற்றிருக்கின்றனர். வேறு வைரவர், காத்தவராயர் முதலியோர்களுக்கும் கோயில்கள் உள்ளன.
துறட்டிப்பனைமுத்துமாரிஅம்பாள், வட்டுக்கோட்டை மூல மூர்த்தி அம்பிகை, பரிவார மூர்த்திகள் விநாயகர், வைரவர். தினமும்மூன்று காலப்பூசை.ஆனி மாதத்தில் வருடாந்த உற்சவம் நடைபெறுகிறது.
ரபதி யூரி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 579
பூரீபத்திரகாளிஅம்பாள், பூரீ காளி கோட்டம், சண்டிலிப்பாய் மத்தி
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச பிரிவில் சண்டிலிப்பாய் எனும் பேரூர் உண்டு. இவ்வூரின் மத்தியிலே நவனியாத் தோட்டம் என அழைக்கப்படும் சேத்திரத்தில் காணப்படும் பழைமை வாய்ந்த ஆலயமே ழரீ காளி கோட்டம் அன்னை பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் ஆகும்.
இராமபிரான் வந்து தரிசித்துச் சென்றதாக ஐதீகக் கதைகள் கூறுகின்றன. எனினும் இவ்வாலயத்தை ஸ்தாபித்தது யாரென அறிய முடியாதுள்ளது. வரலாற்றுக்குட்பட்டு நோக்கும் போது இற்றைக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஆலமரத்தின் கீழ் இவ்வாலயம் இருந்ததாகவும், காலப்போக்கில் ஆல மரத்தின் கீழே அக்கால மரபிற்கேற்ப மண்ணினால் கட்டிப் பனை ஒலையால் வேயப்பட்ட சிறு கொட்டகையில் இவ்வாலயம் வழிபட்டு வந்ததாகவும் அறிய முடிகின்றது. இன்று அர்த்த மண்டபத்தில் காணப்படும் காளியினது சிலையே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
வெள்ளைக்கல்லால் ஆக்கப்பட்ட இவ்விக்கிரகமானது இரண்டுகரங்களைக்கொண்டுள்ளது. வலது கரம் மடிந்தும் அபயகரமாக கையில் மலர் ஒன்றை வைத்திருப்பது போலவும், இடது கரம் சற்று வளைந்தும் இடுப்பில் ஊன்றிய படியும் காணப்பட, ஆசனத்தில் அமர்ந்திருக்கும் விக்கிரகத்தின் வலது கால் முழந்தாளில் மடிந்து கீழே தொங்குகிறது. இட கால் முழந்தாளில் மடிந்து பீடத்தில் குறுக்காகக் காணப்படுகின்றது. தலை சடா மகுடமாகப் புனையப்பட்டுள்ளது. மார்பில் ஆபரணமும் காணப்படுகின்றது.
வழிபடப்பட்டு வந்த பழமையான விக்கிரகம் அபிஷேக ஆராதனைகளினால் தேய்வடைந்து காணப்படுவதால், கருங்கல்லிலே புதிய பத்திர காளியினுடைய விக்கிரகம் அமைத்ததோடு, விநாயகரின் கருங்கல் விக்கிரகமும், வெள்ளிவேலும் இரும்பிலே வைரவர் சூலமும் உருவாக்கப்பட்டது. மண்டபத்தில் பிரதான வாயிலின் இருமருங்கிலும் இரு சிறிய மாடங்கள் அமைக்கப்பட்டு, முறையே வடக்குப் புறத்தில் விநாயகரும், தெற்குப் புறத்தில் வேலும், வைரவர் சூலமும் பிரதிஷ்டை செய்யப்பட்டும், மூலஸ்தானத்தில் இருந்த பழமையான விக்கிரகத்தை அர்த்த மண்டபத்தில் வடக்குப் புறத்தில் பிரதிஷ்டை செய்தும்,
மயூரமங்கலம்

மூலஸ்தானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பூரீ பத்திரகாளி விக்கிரகம் பிரதிஷ்டை செய்து 1957ம் ஆண்டு 2வது மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. 7.6.79ல் 3வது கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1986th ஆண்டு எழுந்தருளிக்கென ஐம்பொன்னில் பூரீ பத்திரகாளி விக்கிரகம் வடிக்கப்பட்டு மகா மண்டபத்தில் வடக்கே தெற்கு நோக்கிச் சிறு ஆலயம் அமைத்து ஐப்பசி 27ம் நாள் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மீண்டும் புனரமைப்பதற்கான 11. 4. 2000 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பூநிமீனாட்சி அம்மன்,
D/1âPuüUŷu'g, ar Goônnig, GöttiU (Tulu
இவ்வாலயம் குளக்கோட்டு மன்னன், கயவாகு மன்னன் காலத்துடன் தொடர்புடையது. தினமும் இருகாலப் பூசை உள்ளது. ஆடிப் பெளர்ணமியில் தீர்த்தம் வரக்கூடியதாகப் பதினொரு தினங்களுக்கு மகோற்சவம் நடைபெறுகின்றன.
கண்ணகை அம்மன், அங்கணாக்கடவை, சண்டிலிப்பாய்
கண்ணகி கதைப்படிப்பு இங்கு சிறப்பாக நடைபெறுகின்றது. பொங்கல் குளிர்த்தி என்பனவும் உள. வைகாசி விசாகப் பொங்கல் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. தினமும் இருகாலப் பூசை உண்டு.
Guddutburgh, குளத்தடி ஒழுங்கை, சங்கானை
வெள்ளிக்கிழமை தோறும் பூசை நடைபெறும். தைப்பூசம், ஆணிப்பொங்கல், நவராத்திரி தினங்கள் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன. பரிவாரமூர்த்தி வைரவர்.
பேச்சியம்மன், மாதகல் 1948ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. மூலமூர்த்தி அம்பாள். பரிவாரமூர்த்திகள் பிள்ளையார், முருகன், வைரவர் தினமும் மூன்று காலப் பூசை. வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் சாயரட்சைப் பூசை நடை பெற்று வருகிறது. தைப் பொங்கல், நவராத்திரி ஆகிய தினங்களில் விசேட உற்சவங்கள் நடைபெறும்.

Page 580
பூரீ புவனேஸ்வரிஅம்மன், மாதகல்
யாழ்ப்பாணத்திலே வடமேற்கு மூலையிலுள்ள மாதகலில் தெற்குப் பக்கமாக, பண்டத்தரிப்பு எல்லைக் கருகில் அமைந்துள்ளதுபாணாவெட்டியூரீ புவனேஸ்வரி அம்மனாலயம். துறைமுகச் சிறப்புச் செறிந்த மாதகல் வரலாற்றுப் பின்னணியையுங் கொண்டு திகழ்கிறது. கஜபாகு மன்னன் கண்ணகி சிலையுடன் சம்புத் துறைமுகத்திலிறங்கிபாணவெட்டிக்குளக்கரையில் சில நாட்கள் தங்கி சண்டிலிப்பாய் அங்கணாம் கடவையிலும், மட்டுவில்பன்றித்தலைச்சியிலும், சுட்டிபுரத்திலும், புளியம் பொக்கணையிலும் தங்கிப் பின் கண்டிக்குச் சென்று அங்கு கண்ணகிக்குக் கோயிலமைத்தார். அவர் கண்ணகி சிலையுடன் தங்கிய விடங்களிலெல்லாம் கண்ணகிக்கும் கோயிலமைத்து வழிபட்டனர். அதன் பிரகாரம் பாணாவெட்டியிலும் கண்ணகி சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். கற்புடைய பெண் தெய்வத்தை மூலஸ்தானத்தில் வழிபடல் தகாது என்பதால் பூரீபுவனேஸ்வரி அம்மனைப் பிரதிஷ்டை செய்தனர். தென்மேற்கே கண்ணகி சிலையை கோயில் கட்டி வைத்தனர். சில காலத்தில் கண்ணகி சிலை காணாமற் போகவே வேறொரு கண்ணகி சிலையை வைத்து வழிபட்டனர். ஒரு குடியானவன் கனவில் கண்ணகி தான் சேற்றில் புதையுண்டிருப்பதாகத் தெரிவித்ததையடுத்து ஊரவர் குளத்தில் கண்ணகி, பூரீ புவனேஸ்வரி அம்பாள் சிலைகளைக் கண்டெடுத்தனர். கண்ணகி சிலையை முன்பிருந்த இடத்திலும் பூரீ புவனேஸ்வரி அம்மன் சிலையை ஆலய வசந்த மண்டபத்திலும் வைத்தனர்.
பிள்ளையார், கோபாலகிருஷ்ணர், முருகன், மகாலட்சுமி, சண்டேஸ்வரர், நவக்கிரகதேவர், நடேஸ்வரர் அம்மன் சமேதரர் எனப் பரிவார தெய்வங்கள் ஆலயத்தினுள் அமைந்துள்ளனர். புதிய தேரும் உருவாக்கப்பட்டது. ஒல்லாந்தனொருவன் பொங்கற் பானையை உதைத்ததால் அவன் கால் முறிந்தது என்பது ஐதிகம். இதனைத்தேரிலும் செதுக்கியுள்ளனர். பங்குனி உத்தரத்தைத் தேர்த்திருவிழாவாகக் கொண்டு மகோற்சவம் நடைபெறும். ஆடிச் செவ்வாயன்றுஅம்மன் வீதிஉலா வருவார்.
முத்துமாரியம்மன், வழக்கம்பரை
இவ்வாலய வரலாறுயாழ்ப்பாணச் சரித்திரத்தில் உள்ளது. ஒல்லாந்தர்காலத்தில் ஏற்பட்ட மசூரிகாரோகம் எனும்பட்ட கொடிய நோயினைத் தணிப்பதற்காகத்

தொல்புரத்தில் அமைக்கப்பட்ட மாரியம்மன் கோவிலாகும். இவ்வாலயம் அமைக்கப் பட்டதும் வழக்கம்பரை என அழைக்கப் படுகின்றது.
1862ல் மூலஸ்தானம் பொழிந்த வெள்ளைக் கல்லால் அமைக்கப்பட்டது.
பூரீபத்ரகாளிஅம்பாள், சுழிபுரம்
யாழ்ப்பாண நற்பதியின் வடமேற்கே அமைந்துள்ள சுழிபுரத்தில், திருவடிநிலை தீர்த்தம், பறாளாய் விநாயகர் ஆலயம் என்பவற்றால் சூழப்பெற்ற பதியில் போர்த்துக்கேயர் காலத்துக்கு முன் இந்தியாவிலிருந்து வந்த சிவன் முத்தர் ஒருவர் தாம் கொண்டு வந்த இயந்திரத்தைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டு வந்தார். ஒருநாள் மாலையில் அவர் அவ்வியந்திரம் நிலத்திற்குள் இறங்கியிருந்ததைக் கண்டதும் மக்களுக்குக் கூறி வழிபட வைத்துவிட்டு மறைந்துவிட்டார். காலப்போக்கில் குடிலமைத்தபின் மண்ணால் கட்டிப்பின் கோயிலமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் 2ஆவது கும்பாபிஷேகமும் இடம் பெற்றது. மூன்று காலப் பூசைகளும் நடைபெறுகின்றன. 1990இல் மீண்டும் ஆலயத்தைப் புதுப்பித்து மெருகூட்ட முற்பட்ட வேளையில் நாடு அனர்த்தம் கண்டது. எனினும் பக்தர்களின் விடாமுயற்சியால் 10. 02. 1995 பத்திரகாளி அம்பாளுக்கும் பரிவாரமூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது.
தீராதநோய்களைத் தீர்த்தும், மக்கள் மனதினை நல்வழிப்படுத்தியும் வந்த அம்மனிடத்தே அரசு மரமும் வாகை மரமும் நிற்கின்றன. பங்குனி மாத முதற் செவ்வாயன்று விளக்கேற்றும் வைபவமும் பாடல்களைப் பாடுவதும் இடம்பெறும். அடுத்த செவ்வாய் வேள்வி நடைபெற்று அடுத்த செவ்வாய் எட்டாம் மடை இடம்பெறும். பழங்கால ஆரிய யாகங்களைப் போலப் பலியிடும் வழக்கம் இங்கு காணப்படுகிறது. தற்போது பொங்கல், பூசை சிறப்பாக நடக்கின்றன.
ராஜராஜேஸ்வரிஅம்பாள், கம்பனை, சுழிபுரம் சுழிபுரம் என்பது அழகிய கிராமம். இங்குள்ள மக்கள் கல்விவளத்திலும், செல்வத்திலும் சிறப்புடையவர் அம்மக்களின் சிறப்புக்கு எல்லாம் காரணமானவள். இவ் ஊரில் உள்ள கம்பனை ராஜ ராஜேஸ்வரி அம்பாள். இக்கோயிலுக்குக் கம்பனை என்று வந்ததன் நோக்கமே
ரபதி பூஞரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 581
ஒரு பனை மரத்தின் ஒலைகள் இல்லாது கம்புகள் இருந்தமையால் அவ் இடத்தை கம்பு பனை கம்பனை என்று பெயர் வழங்கலாயிற்று. இவ்வூரில் இருந்த ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு பெண் குழந்தையுடன் ஒரு பாம்பும் பிறந்தது என்றும், அது பிறந்தவுடன் ஒரு இடத்தில் ஒடி ஒளிந்தது என்றும் பின்பு அந்த பெண் குழந்தைக்குத் திருமணம் பேசும்போது இப் பாம்பும் தனக்கும் ஒரு நிலம் வேண்டும். என்று கனவில் கூறியதாகவும், அதற்கு இணங்க அப்பாம்புக்கும் அத்தாயார் ஒரு சிறு நிலத்தைக் கொடுத்தார் என்றும் பின்பு அப்பாம்பை அம்மனாக நினைத்து அவ்வூர் மக்கள் வழிபட்டனர். என்பதும் இம் அம்மன் தோன்றியதன் பூர்வீகக் கதை ஆகும்.
அம்பாள் ராஜ ராஜேஸ்வரி சிறு ஆலயமாகப் பிரசித்தி பெற்றாள். இவ்வூர் மக்கள் இவ் அம்மன் ஆலயத்தைப் பெரிதுபடுத்தும் நோக்கோடு பெரிய ஆலயமாக நிர்மாணிக்கத் தொடங்கினர். கருங்கல்லால் அமைக்கப்பட்டு இருந்த சிறு ஆலயம் பெரிய மூலஸ்தானம்,வசந்தமண்டபம், சிறுபிள்ளையார், வயிரவர் கோயில் என விசாலமாக அமைக்கப்பட்டது. அழகிய இரு வீதிகளும், பூந்தோட்டமும் அமைக்கப்பட்டது. 1980 ம் ஆண்டு இவ்வாலயம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆவணி சதுர்த்தியின் போது இவ் அம்மன் ஆலயத்தில்
மயூரமங்கலம்
 

இருந்து பறாளாய் விநாயகர் ஆலயத்துக்கு பால்காவடி செல்லும் அழகு கண்கொள்ளாக் காட்சி, பறாளாய் முருகனுக்கு செல்லும் காவடிகள் எல்லாம் இவ் அம்மனின் அருள் பெற்றுத் தான் செல்லும்,
பூரீபத்திரகாளிஅம்மன், தச்சன்புலோ, சுழிபுரம்
நூற்றைம்பது வருடங்களுக்கு முற்பட்ட வரலாறு உண்டு. மூல மூர்த்திபத்திரகாளி. வீரபத்திரர், பரிவார மூர்த்தி எழுந்தருளி நிலையில் பத்திரகாளி. திரிசூலம், நாகதம்பிரான் ஆகியோர் உளர். தினமும் மூன்று காலப் பூசைகள். சித்திரை அத்தத்தில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
பூரீவள்ளியம்மன் கோவில் சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் மூல மூர்த்தி இந்தியாவில் வேதாரண்யம் என்னும் பகுதியிலுள்ள scs சாமியார் கொடுத்த வள்ளியம்மன் விக்கிரகம், பரிவார மூர்த்திகள் நடேசர், வேல். தினமும் இருநேரப் பூசைகள் நடைபெறுகின்றன. நூறு வருடங்கள் பழமை வாய்ந்தது.

Page 582
6)6)6.
(C
"yتي؟
S.
ད་ནི་
பூரீகா6
வவுனியா மன்னார் வீதியி இங்கு வசித்த மக்களில் சிலர் கல் வந்தனர். இது ஒர் அனிஞ்சி அமைந்திருந்தது. இம்மரத்தைச் நாகம் ஒன்று தென்பட்டதினால் இடைக்கிடையே விரும்பிய அடியா இந்திய இராணுவம் வவுன் அவர்களின் முகாமிற்கு அருகா வழிபாடாற்றினர். அத்துடன் அவ் 1990 ல் இந்திய இராணு அசம்பாவிதங்களால் இவ்விடத்து நடுப்பகுதியில் மக்கள் மீளக் குடி மக்களால் இவ்வாலயம் புனரமைக் 23-10-94 ல் நிர்வாகம் ஆ தினங்களில் பிரத்தியேக பூசைகளு மக்களின் இடம்பெயர்வுக இதனால் கோவில் வழிபாடு பெருச் 5-4-95ல் அன்பர் ஒருவ பிரதிஸ்டை செய்து கும்பாபிஷேச வயிரவர் ஆகிய பரிவார மூர்த்திக இக்காலத்தில் முதலாவது வைக்கப்பட்டது.
ஒரு வருட காலத்துக்குள் கலைக் கோவில் பூரீ காளியம்மனி வேதாகம சிற்ப விதிகளுக்கமை தெய்வானை சமேதரராய், பைரவர் சிம்மம், பலிபீடம், ஆகியனவும் அன கோபுரம், ஸ்தம்ப மண்டபம் ஆக பெருமானுக்கும் சபை அமைத்து
 
 

pfluT (DT6)ICLtb
ரிஅம்மன், குருமண்காடு ல் குருமண்காடு சந்தியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. லொன்றை வைத்துக் காளியம்மனாகப் பாவித்து வணங்கி ல் மர அடியில் வேம்பாளங் கொடிபடர்ந்த நிழலில் சுற்றி ஒரு புற்றும் காணப்பட்டது. இப்புற்றில் வெள்ளை நாகதம் பிரான் வணக்கமும் இதனோடு நடைபெற்றது. ர்கள் பொங்கல் செய்து வழிபட்டனர். ரியா பகுதியில் முகாமிட்டிருந்த காலத்தில் இவ்வாலயம் மையில் இருந்ததினால் அவர்களும் பூரீ காளியம்மனை விடத்தில் ஒரு கொட்டிலமைப்பித்தனர். றுவம் இலங்கையை விட்டு சென்ற பின்னர் ஏற்பட்ட மக்களும் இடம் பெயர வேண்டியேற்பட்டது. பின்னர் 1992 டியேறியதுடன் யாழ்குடா நாட்டிலிருந்து இடம் பெயர்ந்த கப்பெற்று பொங்கல் வழிபாடுகள் நிகழ்ந்தன. அமைந்தது. நித்திய பூசை நடைபெற வழிசெய்து, விசேட ரும் நடைபெற அது ஏற்பாடு செய்தது. ாரணமாக இவ்விடம் ஒரு சன நெருக்கமிக்கதாக மாறியது. கியதால் கோவில் வருமானமும் அதிகரிக்கத் தொடங்கியது. பரினால் அளிக்கப் பெற்ற பூரீ காளியம்மன் சிலையை மும் நடாத்தப் பட்டது. அத்துடன் விநாயகர், முருகன், ளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகோற்சவ விழாவும் இரதோற்சவமும் சிறப்பாக நடாத்தி
பாலஸ்தாபனம் நடைபெற்று புதிய அழகிய கவின் மிகு அருட் கடாட்சத்தால் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வாலயம் ப பரிவார மூர்த்திகளான விநாயகர், முருகன், வள்ளி, , நவக்கிரக நாயகர்கள், ஸ்தம்பம், ஸ்தம்பப் பிள்ளையார், மக்கப் பெற்றுள்ளன. அத்துடன் வசந்த மண்டபம், மணிக் கியனவும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நடராஜப் ஆடற் பெருமானின் சிலையும் அமையப் பெற்றுள்ளது.
பூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 583
இப்புதிய ஆலய கும்பாபிஷேகம் 7-6-98ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பூரீமுத்துமாரிஅம்மன், கறடிப்பிலவு, நெடுங்கேணி மூலமூர்த்தி அம்பாள். வெள்ளிக்கிழமைகளில் பூசை வழிபாடு நடைபெறும்.
பூரீஅம்பாள், கோமோட்டை, நெடுங்கேணி வெள்ளிக்கிழமைகளில் பகற்பூசை நடைபெறும். ஆவணியில் பொங்கல் விழா இடம்பெறும். சுமார் நூற்றி இருபது வருடங்களுக்கு மேற்பட்டபழைமை வாய்ந்த ஆலயம் இது.
பரீமுத்து மாரியம்மன், பட்டிக் குடியிருப்பு,நெடுங்கேணி
திங்கள் தோறும் காலைப் பூசையும் ஆவணிப் பெளர்ணமியில் பொங்கலும் நடைபெறும். பரிவார மூர்த்திகள் பேச்சியம்பாள், காத்தவராயர்.
பூரீமுத்துமாரிஅம்மன், குறிசுட்டான், கனகராயன் குளம் பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் பூசை நடைபெறும். ஆவணியில் பொங்கல் விழா இடம்பெறும்.
பரீமுத்துமாரியம்மன், பனை நின்றான், நெடுங்கேணி மூலமூர்த்தி முத்துமாரியம்பாள். பரிவார மூர்த்திகள் காத்தவராயர், வைரவர். வெள்ளிக்கிழமை தோறும் பூசை நடைபெறுகிறது. வைகாசி மாதத்தில் பொங்கலும் நடைபெறும்.
பூரீமுத்துமாரிஅம்மன், திடாச்சூரி, நெடுங்கேணி ஆதி காலத்துக் கோவில். வெள்ளிக்கிழமை
தோறும் பூசையும் வைகாசி மாதத்தில் பொங்கலும் நடைபெறுகிறது. காத்தவராயர்,வைரவர் மூர்த்திகளும் உளர். ஆனிமாதத்தில் கொடியேற்றத்துடன் பதினைந்து தினங்களுக்கு வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகிறது.
மயூரமங்கலம்

பூரீமுத்துமாரிஅம்மன், சின்னடம்பன், நெடுங்கேணி வெள்ளிக்கிழமை தோறும் பூசையும் ஆனிமாதத்தில் பொங்கலும் நடைபெறும்.
பூரீமுத்துமாரிஅம்மன், நாம்பன்குளம், ஒமந்தை பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கோவில். சிதைந்த ஆலயத்தின் கற்றுாண்கள், சந்திர வட்டக்கல், பழங்காலச் செங்கற்கள் ஆகியன காணப்படுகின்றன. பூசை அணிகலன்களும் பழமை வாய்ந்தவை. மூல மூர்த்தி முத்துமாரியம்மன். பரிவாரமூர்த்திகள் பிள்ளையார், முருகன், சிவன். தினமும் விளக்கேற்றுவதோடு வெள்ளிதோறும் பூசையும் நடைபெற்று வருகின்றது. ஆண்டு தோறும் பொங்கல் விசேடமாக நடைபெற்று வருகின்றது.
பூரீமுத்துமாரியம்பாள், வெடிவைத்த கல்லு, நெடுங்கேணி
மூலமூர்த்தி முத்துமாரியம்பாள். பரிவார மூர்த்திகள் வைரவர், காத்தவராயர், பிள்ளையார், நாகதம்பிரான், ஆகியோர். வெள்ளிக்கிழமை தோறும் உச்சிக்காலப் பூசைகள் மட்டும் நடைபெறும். ஆவணிப் பெளர்ணமியை இறுதி நாளாகக் கொண்டு வருடாந்த உற்சவம் நடைபெறுகிறது. இக்கோவில் பற்றிய கல்வெட்டுக்கள், ஏடுகள் உள்ளன.
பூரீமுத்துமாரிஅம்மன், புளியங்குளம்
வெள்ளிக்கிழமைகளில் பூசை நடைபெறுகிறது. ஆவணியில் வருடாந்த உற்சவம்.
பூரீகண்ணகை அம்பாள்,
வண்ணான்குளம், ஒமந்தை
மூதாதையர்களால் காட்டில் கண்டு பிடிக்கப்பட்டது. கோவிலில் கோவலன் கண்ணகி சரித்திர வரலாறு ஏட்டுப்பிரதிகள் உண்டு. மூல மூர்த்தி கண்ணகி அம்பாள், பரிவார மூர்த்திகள் பிள்ளையார், முருகன், காத்தவராயர், வைரவர். வெள்ளி, திங்கட் கிழமைகளில் பூசை நடைபெறுகிறது. ஆனி மாதப் பிற்பகுதியில் கொடியேறி பொங்கலுடன் திருவிழா

Page 584
முடிவடையும். விசேட தினங்களில் பொங்கலுடன் திருவிழா முடிவடையும். விசேட தினங்களில் விசேட பூசைகள் உண்டு.
பூரீகண்ணகை அம்பாள், புற்குளம், மாங்குளம்
திங்கள், வெள்ளி தோறும் உச்சிக்காலப் பூசை நடைபெறும். பரிவாரமூர்த்திகள் நாகதம்பிரான், காத்தவராயர், வைரவர் ஆகியோர். வைகாசி அமாவாசையுடன் வரும் திங்கள் இரவு பொங்கல் நடைபெறும். அன்று கண்ணகி கதை ஏட்டுப் பிரதியிலிருந்து படிக்கப்படும். சிலம்பு, பிரம்பு, படை ஆயுதம் ஆகியவை சின்னமாக வைத்து வணங்கப்பட்டு வருகின்றன.
வவுனியா மாவட்ட அம்மன் கோவில்கள்
(அ) முத்துமாரியம்மன் கோவில்கள்.
1. பெரியமடு ஆதிமுத்துமாரியம்மன் ஆலயம், ஓமந்தை. 2. நாம்பன்குளம் பூரீ முத்துமாரியம்மன் கோவில்,
ஓமந்தை. 3. அலைகல்லுப் போட்டகுளம் பூரீ முத்துமாரியம்மன்
ஆலயம், ஓமந்தை. 4. கோயிற்குஞ்சுக்குளம் பூரீ முத்துமாரியம்மன்
ஆலயம்,ஓமந்தை. 5. மகிழங்குளம் ஆதிமுத்துமாரியம்மன் கோவில்,
ஓமந்தை. 6. வவுனியா பொதிக்களஞ்சிய வீதி, மாரியம்மன்
கோவில், வவுனியா. 7. பண்டாரிகுளம் முத்துமாரியம்மன் ஆலயம்,
வவுனியா. 8. தேக்கங்காடு (கற்குழி) முத்துமாரியம்மன் ஆலயம்,
வவுனியா. 9. ஆஸ்பத்திரி சுற்றுவட்ட வீதி பூரீ முத்துமாரியம்மன்
ஆலயம், வவுனியா. 10. தோணிக்கல் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம்,
வவுனியா. 11. கூளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலயம், வவுனியா.

12.
13.
4.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
தெற்கிலுப்பைக்குளம் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், வவுனியா. தம்பனைச்சோலை பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், வவுனியா. ழரீ முத்துமாரியம்மன் கோயில், காத்தார், சின்னக்குளம், வவுனியா. முத்துமாரியம்மன் ஆலயம், நாகர் இலுப்பைக்குளம், வவுனியா. சம்மளங்குளம் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், வவுனியா. இராஜேந்திரங்குளம்பூரீமுத்துமாரியம்மன் ஆலயம், வவுனியா. பூம்புகார் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், கல்மடு, காளம்பன் யூரீ முத்துமாரியம்மன் கோவில், கல்மடு, கிடாச்சூரி பூரீ முத்துமாரியம்மன் கோவில், பம்பைமடு. கற்பகபுரம் பூரீ முத்துமாரியம்மன் கோயில், நெளுக்குளம், வவுனியா. சமயபுரம் பூரீ முத்துமாரியம்மன் கோயில், நெளுக்குளம், வவுனியா. இராமர் புளியங்குளம் பூரீ முத்துமாரியம்மன் கோவில், புளியங்குளம். புளியங்குளம் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், புளியங்குளம். குறிசுட்டகுளம் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், மாங்குளம். குஞ்சுக்குளம் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், மாங்குளம். சின்னடம்பன் யூரீ முத்துமாரியம்மன் ஆலயம், நயினாமடு. வேலங்குளம் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், நெடுங்கேணி. பனைநின்றான் முத்துமாரியம்மன் கோயில், நெடுங்கேணி நெடுங்கேணி பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், நெடுங்கேணி. சேனைப்பிலவு பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், நெடுங்கேணி,
யூரபதி பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர் - 2000

Page 585
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
4.
42.
43.
வெடிவைத்த கல்லுறுநீ முத்துமாரியம்மன் ஆலயம், நெடுங்கேணி. கோரைமோட்டை பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், நெடுங்கேணி. புளியடிமுறிப்பு பூரீ முத்துமாரியம்மன் ஆலயம், பெரியதம்பனை. கரம்பைமடு முத்துமாரியம்மன் ஆலயம், முதலியார்குளம், செட்டிக்குளம். வீரபுரம் மாரியம்மன் ஆலயம், நேரியகுளம். குருக்கள் புதுக்குளம்பூரீமுத்துமாரியம்மன் ஆலயம், பூவரசங்குளம். நித்திய நகர் பூரீமுத்துமாரியம்மன் கோயில், பூவரசங்குளம். இறைம்பைக்குளம் பூரீமுத்துமாரியம்மன் கோயில், வவுனியா. சகாயமாதாபுரம் பூரீ முத்துமாரியம்மன் கோயில், வவுனியா. துட்டுவாகை பூரீ முத்துமாரியம்மன் கோயில், செட்டிக்குளம், அடப்பங்குளம் பூரீ முத்துமாரியம்மன் கோயில், செட்டிக்குளம். சமளங்குளம் முத்துமாரியம்மன் கோயில்,
சமளங்குளம்.
(ஆ) கண்ணகியம்மன் கோவில்கள்.
1.
வண்ணாங்குளம் கண்ணகியம்மன் கோயில்,
கதிரவேலர் பூவரசங்குளம், ஓமந்தை.
 

கண்ணகியம்மன் ஆலயம், பாவற்குளம் 4 - ஆம் யூனிற், வாரிக்குட்டியூர். கண்ணகியம்மன் ஆலயம், கோயிற்புளியங்குளம், பூவரசங்குளம், கண்ணகியம்மன் ஆலயம், கிடாச்சூரி, பம்பைமடு, பூீபத்தினியம்மன் ஆலயம், தெற்கிலுப்பைக்குளம், வவுனியா. ஈட்டிமுறிந்தான் கண்ணகியம்மன் கோயில், நெடுங்கேணி.
புற்குளம் கண்ணகியம்மன் கோயில்,
கனகராயன்குளம்.
(இ) பத்திரகாளியம்மன் கோவில்கள்.
(FF)
குருமண்காடு பூரீ பத்திரகாளியம்மன் ஆலயம், வவுனியா. கரப்புக்குத்தி பத்திரகாளியம்மன் ஆலயம், கனகராயன்குளம். புளியங்குளம் பூரீ பத்திரகாளியம்மன் கோயில், புளியங்குளம்.
வீரசக்தியம்மன் கோவில்கள்.
விளாத்திக்குளம் வீரசக்தியம்மன் ஆலயம்,
ஓமந்தை. நாவற்குளம் வீரசக்தியம்மன் ஆலயம், ஓமந்தை.
நாம்பன்குளம் வீரசக்தியம்மன் ஆலயம், ஓமந்தை.

Page 586
மலராக்கத்திற்கு :
அகிலாண்ட நாயகியின் அற்புதங்கள் - உருத்திரன் அபிதான சிந்தாமணி ஆலயம் இதழ்கள் ஆனந்தவிகடன் தீபாவளி மலர்-1989, இந்துசமயக்களஞ்சியம் - பூ திரவியர் இந்துமதத்தின் இனிய திருவிழாக்கள்
- துரீவிஸ்வநாத கணேச குருக்கள் இந்துமத விரதங்களும் அவற்றின் பலன்களும்
- கனிகேஆப்பிரசரம் இலங்கைத் திருநாட்டின் திருத்தலங்கள்
- கலாசாரத்தினைக்கா வெளியீடு இலங்கையின் இந்துக் கோயில்கள் - பகுதி1
- பதிப்பு பேராசி பத்மநாதன் உடப்பூர் (வரலாறும் மரபுகளும்) - தீ மிதிப்பு திருவிழா
சிறப்புமலர். கம்பகாஞ்சியம் கல்கி தீபாவளிமலர் - 1974 கலைமகள் தீபாவளிமலர் - 1989, 1995 குண்டலினி சக்தி-நஜன். கோதார கெளரிவிரதம், கோபுர தரிசனம் தீபாவளி மலர்-1996, சரஸ்வதி கடாஷம் = துரீபரத்வாஜ் ஸ்வாமிகள் சைவத்திருக்கோயிற் கிரியை நெறி
-பேரா. கா. கைலாசநாதக்குருக்கள் சைவவிரதங்களும் விழாக்களும் - கோப்பாய் சிலர் ஞானபூமி இதழ்கள் ஞானமணி இதழ்கள் தம்பன் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகமலர். திருகோணமலை மாவட்ட திருத்தலங்கள்
- பண்டிதர்இ வடிவேல்
(கட்டுரைகள் எழுதியும், தக
'சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
தென்கிப்பழை
தமிழவேள்'இ.க.கந்தசுவாமி 'சிவநெறிச் செம்மல் வைடஅநவரத விநாயகமூர்த்தி சி.சிவசரவணபவன் 'சிற்பி, சுன்னாகம் தமிழ்மணி' அகளங்கன் சசிவபாலசிங்கம், ஆாடிையூர் மு.கா. ஆதியாகராசா, நயினாதீவு வேகணபதிப்பிள்ளை,கல்வது. க.இராசரெத்தினம், ஆரையம்பதி வண்ணக்கர் சிவா.
தயா, தம்பிலுமின், ச. விஜயரெத்தினம் B.A. எனியா சி. ஜெயகணேசன், பெரியமாவடி த. தருமலிங்கம், நீர்கொழும்பு

உதவிய நூல்கள்.
திருவருட் பயன் - அ. சிாதசுந்தரம் உகிர. தேவி பாகவதம் (மூன்று பாகம்) - பதிப்பு அரு. ராமநாதன் நவக்கிரக வரலாறு வழிபாடு மஹா கும்பாபிஷேக சிறப்புமலர் - பூந்துர்க்கா தேவஸ்தாாம்,
தெல்லிப்பழை. மகாசக்தி மகத்துவமவர் - நயினாதீவுபூரீ நாகபூசணி அம்மன்
கோயில் கும்பாபிஷேக வெளியீடு-1998. மட்டக்களப்பு சைவக்கோயில்கள். மயூறாபிளேஸ் பூரீ பத்திரகாளி அம்மன் கோபு
கும்பாபிஷேகசிறப்பு மலர்-1987 மஹாகும்பாபிஷேக மலர் - பூநீ காளி அம்மன் தேவஸ்தா
குருமண்காடு - 1998 வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்
- ந. நகுசிேகரீ 1ா வல்லை முத்துமாரி அம்மன் கோவில் சரித்திரம்
H. சிரந்நிகர விரத நிதிகள் -பொன் தேய்வேந்திரன் வீனியவரை பூரீ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய கும்பாபிநேக -
LOGJIT. வெக்காளி அம்மன் திருக்கோயில் தலவரலாறு
- கிருஷ்னசாமி ரெட்டியார் பூரீ கருமாரி (பொம்மக்கா) அம்மன் கோயில் கும்பாபிஷேக
ஞாபகார்த்த மலர் - 2000 ழநி குமரகுருபா சுவாமிகள் பிரபந்த திரட்டு
-பதிப்பு குமரகுருபரன்பிள்ளை பூநீ துர்க்கா பூஜை - துதிதுர்க்கைச்சித்தர் ரீ துர்காதேவி மகிமை -ழரீபரத்வாஜ் ஸ்வாமிகள் பூநீ துர்காலக்டிமி சரஸ்வதி ஸ்தோத்திரங்கள்
- சுந்ாமி விஜயான ஆ பூரீ லலிதாம்பிகையின் அற்புதலீலைகள்
-துரீபரத்வாஜ் ஸ்வாமிகள் வலகளதுநதும உதவியோர்)
நா. நித்தியானந்தன், கொக்குவிப் பல்கலைப்புலவர் நா. சச்சிதானந்தன், நவாபி கா. சிவபாலன், பட்டுவில் சீ. சிவசொரூபநாத்பிள்ளை, உடுவிப் சிவகுருதபலிங்கசிவம், வெண்பாவெளி கோ. குணசேகர், கற்பிட்டி, வீ. சதாசிவம், ரொனராகலை, ந. கதிரேசபிள்ளை .P, பெரியரேதி: சிவபூநி. சி. பூரீகாந்தன் குருக்கள், உவர்பவை வ, மாணிக்கராசா, மூதூர் திருமதி செல்வநாயகி முத்தையா, விேயக்கொட வி. சுவாமிநாதன், இடைக்காடு ஆ. இராமசுப்பிரமணியம், கம்பளை பாண்டித்துமிலன் பாஸ்கரன், கண்முனை. சா. கங்காதரன் B.A., காரைதீவு

Page 587
த. பராசசிங்கம் .P, நீர்வேலி சா. சோமதேவசர்மா, நீர்வேலி க.ஜெயரத்தினம், நிலாவெளி தம்பு பத்மநாதன், நீர்வேலி த. வைத்திலிங்கம், வட்டுக்கோட்டை செல்வி. கே. சத்தியா, சுழிபுரம் இலட்சுமணன் சிவரூபன், தாவடி, ரவிஜயர், தாவடி,
சி.சபாநாதன், சங்கரத்தை. பிரம்மபூரீ க. கிருஷ்ணநாதசர்மா, இரணைமடு சிவழி. தா. மகாதேவக்குருக்கள், இணுவில் வை. சிவசுப்பிரமணியம், பானாவெட்டி, சி. சிவதாசன், அரியாலை சிவழி. சிவ. கிருபாகரக்குருக்கள், திருநெல்வேலி பரோபகாரமணி கே. கே. சுப்பிரமணியம், காரைநகர் வாகீசகலாநிதி க.நாகேஸ்வரன் M.A. தெகோபாலசிங்கம்,நீர்வேலி பிரம்மழநீ. அ. துரைசாமி ஐயர், மாவிட்டபுரம் க. நாகேந்திரன், மல்லாகம் கா. நித்தியானந்தன், முரசுமோட்டை ந.சி. ஆனந்தராசா, தில்லையம்பதி சி. சிவசந்திரன், புலோலி 'மதுரகவி காரை. எமயி. அருளானந்தன், யாழ்ப்பாணம் செல்வி, பூரீகாந்தா அமுதசுரபி, ஆனைப்பந்தி க. செளந்தரராஜ ஐயர், அனலைதீவு சு. முத்துக்குமாரசாமி J.P, தொல்புரம் 'சைவப்புலவர் சி.கா. கமலநாதன், வரணி சிவபூநீ. க. கிருபானந்தக் குருக்கள், சாவகச்சேரி எஸ். சிவகுரு, மட்டுவில் எஸ். ராஜேஸ்வரன், சுண்டிக்குளி வ.செ. துரை, மாதகல் வி. சிவசுப்பிரமணியம், மாதகல் வி. இராமசாமி.P, ஹற்றன். பிரம்மழநீ.ப. ராமதாஸ், வத்தேகம என். எம். இந்திராதநேந்திரன், மாத்தளை. க. அமிர்தலிங்கம். கி. பொன்னுத்துரை J.P, நாவலப்பிட்டி
திருகோணமலைகும்பத்துமால்கருமாரிஅம்மன் ஆலயபரிபாலன சை சரசாலைஇலந்தைத்திடல்பூரீவீரமாகாளிஅம்மன்கோவிற்பரிபாலனசை கொக்கிளாய் பூரீ கண்ணகி அம்மன் ஆலயபரிபாலன சபை தலைமன்னார் பூரீதேவி முத்துமாரிஅம்மாள் தேவஸ்தான இந் சமய வளர்ச்சிச் சங்கம் நுவரேலியா, ஆவேலியா பூரீமுத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலி சீதாயம்மன் ஆலயபரிபாலன சபை ஸ்கந்தபுரம் பூரீநடனமுத்துமாரி அம்மன் ஆலயபரிபாலன சபை, நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் ஆலய சபை, பூரீ காளி கோட்டம் பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் இரத்தினபுரி மாவளை பூரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான நிர்வாக சன

ஆ. நடராசா. க. குமரேசபிள்ளை, முள்ளியவளை. வ. சுவாமிநாதன், முள்ளியவளை. சிவபூீ. தேவலோகேஸ்வரக்குருக்கள், கொழும்பு சி. கணபதிப்பிள்ளை, வெல்லாவெளி ஆர். கிருபாமூர்த்தி, குருமண்காடு வி. நடராசா, துன்னாலை ச. நாகேஸ்வரக்குருக்கள், கோப்பாய்மத்தி பிரம்மழநீ. க. கிருஸ்ணநாத சர்மா,இரணைமடு சி. சிவகுரு. மட்டுவில் டாக்டர். சாம்பசிவமணிக்குருக்கள், கொழும்பு சோ. சிவப்பிரகாசம், கொழும்பு க. மகேந்திரன், தெகிவலை ம. பரமேஸ்வரன், சாவகச்சேரி த. செல்லையா, கோப்பாய் சைவப்புலவர்'கந்தசத்தியதாசன் B.A., சண்டிலிப்பாய் ஆ. சிவானந்தம், சங்கரத்தை சி. ரூபன், வட்டுக்கோட்டை எஸ். நித்தியானந்தம், சண்டிலிப்பாய் எஸ். சிவநேசராசா, மட்டக்களப்பு க. சிவஞானம், கொழும்பு வீ. சதாசிவம், மொனறாகலை வி. கனகநாயகம், இணுவில் ஆர். திருமுருகன், இணுவில் இ. சிவரூபன், தாவடி,
குணசீலன், காலி
சு.இராஜேந்திரன், காலி பிரம்மறி. இ. முருகேச ஜயர், காரநகர் சிவழி. இ. குமாரசுவாமி குருக்கள், வரணி கவிமணி இ.ழநீதரன், வண்ணார்பண்ணை. ஏ. சந்திரன், அநுராதபுரம் கே. காளியப்பன், கறுப்பளை. சிவபூீ. கே. கருபானந்தக்குருக்கள், தொல்புரம் சோ.பத்மநாதன், சண்டிலிப்பாய் ரீ.பத்மநாதன்,நீர்வேலி பி. பஞ்சலிங்கம், கோண்டாவில்
உதவிய சபைகள்.)
தம்பலகாமம் சம்மாந்துறையூரீமுத்துமாரிஅம்மன் ஆலயபரிபானசய பானாவெட்டியூரீ புவனேஸ்வரி அம்மன் இந்து தர்மபரிபாளை சாய மல்லாகம் காளிகாதேவி ஆலயபரிபாலன சபை தவளகிரி முத்துமாரியம்மன் ங்காவலர் சுதுமலையூரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய தர்மகர்த்தா சபை உச்சிற் புவனேஸ்வரி அம்பாள் ஆலயபரிபாலன சபை சல்லி அம்மன் தேவஸ்தானம் கோண்பாவில்தில்லையம்பதிழரீசிவகாமிஅம்பாள்கோயிற்பரிபாலணசபை பதுளை பூரீ காளியம்மன் தேவஸ்தான பரிபாலன சபை வல்வைழிமுத்துமாரி அம்மாள் கோயில் தர்மகர்த்தா சபை அனலைதீவு பூரீ எழுமங்கை நாச்சிமார் மனோன்மணி அம்பாள்

Page 588
தேவஸ்தான அறங்காவலர் சபை உரும்பிராய் பர்வத பத்தினி அம்மன் கோவில் பரிபாலன சபை, குருமன்காடு பூரீ காளியம்மன் தேவஸ்தான பரிபாலன சபை தம்பாட்டியூரீமுத்துமாரி அம்பாள் ஆலயபரிபாலன சபை நொச்சியம்பதியூரீ பத்திரகாளி அம்பாள் ஆலயபரிபாலன சபை வரிவனம் மகாமாரியம்மன் ஆலயபரிபாலன சபை கன்னாதிட்டி காளியம்பாள தேவஸ்தானம் நரந்தனைபண்பரபுரம்தான்தோன்றிரீமனோன்மணிஅம்பாள் ஆலயபரிபாலனசபை தாவடி பூரீ காளியம்பாள் தேவஸ்தானம் ஹற்றன் வில்பிரட் புரம் பூரீமுத்துமாரி அம்மன் ஆலயம் மயிலனி முத்துமாரி அம்மன் (வடலி) தேவஸ்தானம் திருநெல்வேலியூரீ பத்திரகாளி அம்மன் ஆலயபரிபாலன சபை பாண்டிருப்புழநீதிரெளபதை அம்மன் தேவஸ்தானம் வெல்லாவெளியூரீமுத்துமாரி அம்மன் ஆலயபரிபாலன சபை கோளவில்ரீமுத்துமாரிஅம்மன் சமேதழநீசித்திவினாயகர்தேவஸ்தானம் கல்பிட்டியூரீமுத்துமாரி அம்மன் ஆலயபரிபாலன சபை அம்பன் கங்கை பூரீமுத்துமாரி அம்மன் ஆலயபரிபாலன சபை நானாட்டான்றிசெல்வமுத்துமாரிஅம்மன் ஆலயபுனரமைப்புதிருப்பணிச்சபை முந்தல் பூரீதிரெளபதை அம்மன் ஆலயபரிபாலன சபை மிட்லண்ஸ் பூரீ முத்துமாரி அம்மன் ஆலய அறங்காவலர் செருத்தனைப்பதியூரீ மகாமாரி அம்பாள் தேவஸ்தானம் கோப்பாய் மத்தியூரீமுத்துமாரி அம்மன் ஆலயபரிபாலன சபை
அன்பர்களுக்கு, 05.01.2ō၊
வணக்கம் எம்மால் முடிந்த அளவு இந்நூலிற் செய்திகளைத் திரட்டித்தந்துள்ளோம். சக்தி பற்றிய முழுவிபரங்களையும் திரட்டவேண்டும் என்பது எமது நோக்கம். இதுவரை சாக்தம் பற்றிய முழுமையான செய்திகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளிவந்ததாய்த்தெரியவில்லை. இந்நூல் ஓரளவு அத்தகுதியைக் கொள்ளும் எனக் கருதுகிறோம். பலசெய்திகள் தவறவிடப்பட்டிருக்கலாம். அறிஞர்கள் தவறவிடப்பட்ட விடயங்களை எமக்கு அறியத்தரின் இனிவரும்பதிப்புக்களை முழுமையாக்கலாம்.
ஆலயங்கள் பற்றியதொகுப்பிலும், தமிழகத்தைப்பொறுத்தவரைமுக்கிய ஆலயங்கள் சிலவேதொகுக்கப்பட்டுள்ளன. அத்தொகுப்புப்பூரணமானதொன்றன்று. அதுபோலவே நம்நாட்டு ஆலயங்கள் பற்றியதொகுப்பில், பத்திரிகை விளம்பரம் கண்டு விபரம் தந்தவர்களின் மூலம் கிடைத்தவையும் முன்னமே ஆலயங்கள் பற்றிய நூல்களில் வெளிவந்தவையும் தொகுக்கப்பட்டுள்ளன. நாட்டின் போர்ச்சூழலாற்பல ஊர்களில் இன்று மக்கள் இல்லாதநிலை. அதனாற்பல ஆலயங்கள் பற்றிய செய்திகள் எமக்குக் கிடைக்காமற் போயிருக்கலாம் ஆகவே ஈழக்கோயில்கள் பற்றிய தொகுப்பினையும் முற்றாக முழுமைபெற்ற ஓர் தொகுப்பெனக் கூறமுடியாது. முன்னர் சொன்னதுபோலவே இனியும் அன்பர்களால் விபரம் தரப்படின் அவற்றை
சக்திபற்றிய செய்திகளிலும் சில விடுபட்டுப்போயிருக்க வாய்ப்புண்டு. கிராமங்களில் ஆடப்படும்காத்தவராயன் கூத்தில் ஓர்மனரியம்மன்பாத்திரம் உண்டு

கோண்டாவில் கேணியடி காளியம்பாள் தேவஸ்தானம் தும்பளை நெல்லன்டை அம்மன் ஆலயபரிபாலன சபை இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் பரிபாலன சபை கோப்பாய் தெற்கு மாந்தோப்பு மாரியம்மன் ஆலயபரிபாலன சபை நல்லூர் மனோன்மணியம்மாள் ஆலயம் கொழும்பு பரடைஸ்பிளேஸ் பூரீமகாகாளியம்மன் திருக்கோவில் கொழும்புதட்டாதெரு யூரீ துர்க்கையம்பாள் திருக்கோயில் கொழும்பு அஸ்ரல் கட்டிடத்தொகுதியூரீதேவிகருமாரி அம்மன் கோயில் மாத்தளை பூரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தானம் உல்லியனொல்லைக் கண்ணகி அம்பாள் தேவஸ்தானம் அச்செழு அம்மன் ஆலயபரிபாலன சபை கழிபுரம் பூரீ பத்திரகாளி அம்பாள்ஆலயபரிபாலன சபை பூரீமிந்திரன் கண்ணகை அம்பாள் ஆலயம் வேலணை பெருங்குளம்பூரீமுத்துமாரிஅம்மன் ஆலயபரிபாலன சபை கோப்பாய் பூரீசாந்தி துர்க்கை அம்மன் ஆலயம் குறிகட்டுவான்பூரீ மனோன்மணி அம்மன் ஆலய திருப்பணிச் சபை வீயோடை இலுப்பையடியூரீமுத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் ஊரெழு பூரீ பர்வபத்தினி மனோன்மணி அம்பாள் ஆலயம் சுன்னாகம் வாரியப்புலம் மகாமாரி அம்மன் கோயில் ஊரெழு மேற்கு பூரீ கண்ணகை அம்மன் கோயில் அம்பன் கங்கை பூரீமுத்துமாரி அம்மன் ஆலயம். வண்ணை ரீகாமாட்சி அம்பாள் ஆலயம்
அம்மன் சிவனை மதுவால் மயக்கிக் காத்தவராயனைப் பெற்றதாய்க் கூறப்படும் அக்கூத்துக்கதை,
அதனால் அச்செய்திதவிர்க்கப்பட்டுள்ளது. அதுபோலவே அர்த்தநாரீ எனும் வடிவிலும் சிவன் பாதி, சக்தி பாதி ஆன நிலையே சொல்லப்படுவதால்,
சிறுகுறிப்போடு அதனை விடுத்துள்ளோம்.
இந்நூற்பணிமிகப்பெரிய வேலை. பல அபூர்வ விடயங்கள் அன்னை அருளால் வலிய நம்பார்வைக்குக் கிட்டிற்று தொகுப்பின் முழுமைநோக்கிப் பல நூல்களில் இருந்தும் விடயங்களும், ஓவியங்களும் இத்தொகுப்பிற்சேர்க்கப்பட்டுள்ளன.
f ல் நூலாசிரியர்களிடமும் ஓவியர்களிடமும் ப்புதல் பெற முடியாமற்போயிற்று. அன்னைபற்றிய செய்திகளை முழுமையாக்கும் இம்முயற்சியில் தங்கள் ஆக்கங்கள் இணைக்கப்பட்டமையை அவ்வறிஞர்கள் குறையாய் எண்ணாதொழியவேண்டுகிறோம். தாயின் திருக்கருணை அவர்களுக்காகும் என்பது நிச்சயம். அற்புதமான இந்நூற்பணியில் மனம்,மொழி, மெய்களாற்துணைசெய்த, அத்தனை அன்புநெஞ்சங்களுக்கும் எம் நன்றியும், வணக்கங்களும் அன்னையின் கருணை இந்நூல் மூலம் அனைவர்க்கும் ஆகவேண்டி நிற்கிறோம். நன்றி.
வணக்கம்
இங்ங்ணம் 48, புதுச்செட்டித்தெரு uaviá adi. கொழும்பு 13.

Page 589


Page 590


Page 591


Page 592

\ ,| 腳 娜 | 鄭阳 )|×|:|| Ê .© ® s s š Ť |- ! | 断|-
தேவஸ்த்தா
17A,மயூரா பிளேஸ்
कान्तान्यस्तु
靛
&IԱյՈԼ