கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிள்ளையார் வழிபாடும் அபரக்கிரியை விளக்கமும் 2010

Page 1
பரப்பிள்லை
భభ??:?
 

蔓
ಝೂಠar
ॐ ܀ ܀ ܀

Page 2

16-10-2010陵
உதிர்வு
ய்வானை
స్:RNF
அறி. திதி புரட்டாதி மாதப் பூர்வபக்கத்தசமி
அமர 莎型@驴
புரட்டாதிப் பூர்வபக்கம்
பூண்ட தசமித் திதியினிலே - நீண்டபுகழ் கண்ட கரவெட்டி மூதாட்டி தெய்வானை
-al
திதி வெண்பா
ஆண்டு விகிர்திப்
(விஜயதசமி)
//
器 /密 i //德 Ë ) |-//舞 湖Ä
NIGGSNÄT
:|释|-|-"Noso, !
『나디후
அன்டர் உலகடைந்தார் -
மலர்வு
స్
魏 07-03-1919
திருமதி சின்ன

Page 3

ழ்பில்
*
溢リ
- பார்போற்ற
ளை இளையத
GSNE
திதி வெண்பா
சீரார் விகிர்த்தியிலே சேர்ஐப் பசிமாதம் பேரார் அபரப் பிரதமையே
ఘ
היהודים
ULIJI I
திதி ஐப்பசி மாத அபரபக்கப் பிரதமை
மன்னு கரவெட்டி மானன்பார் இளையதம்பி
பொன்னுலகு சேர்ந்த திதி
■
畫 М26
W
sae
திரு. சித
/) |MM혁

Page 4

முரி வெல்லம் விநாயகப் பெருமான் (கிராய் பிள்ளையார்) அருள் பாலிக்கவும் திருவருள் கிடைக்க வேண்டி பிள்ளையார் வழிபாடும் அபாரக்கிரியை விளக்கமும் என்ற நினைவுவெளியீட்டைஅமரர்களான திருமதி சின்னத்துரை தெய்வானை, திரு சிதம்பரப்பிளை இளையதம்பி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.
இனிய எங்கள் உள்ளங்களாய் ஏற்ற கல்வி எமக்களித்துக் கனிவோ டெம்மை நெறிப்படுத்திக் கற்றோர் சபையின் முன்னாக்கி மனித ரெனின வாழ்வளித்த மனிதர்கள் நினைவாய் இந்நூலைப் புனிதன் விநாயகன் தாள்களிலே புனைந்து வழுத்தி நிற்கின்றோம்
குடும்பத்தினர்

Page 5

அமரர் திருமதி சின்னத்துரை தெய்வானை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
யாழப்பாண குடாநாட்டில் வடகிழக்குப் பிரதேசமாகிய வடமராட்சி ஈழத்துப்பாரம்பரியத்திற்குரிய சிறப்புக் கூறுகள் பலவற்றை தன்னகத்தே கொண்டது. வடமராட்சிக்கரவெட்டிக்கிராமம் பல அறிஞர் பெருமக்களைத் தந்து ஈழவளநாட்டிற்கு பெருமை தேடிக்கொண்டிருக்கிறது. இன்றும் புகழ் பூத்த பேராசிரியர்கள், வைத்தியர்கள், கல்விமான்கள், வாழ்ந்து வருகின்ற இக் கிராமம் பிரபல நாவலாசிரியர்களையும், எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கி பெருமை கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஆன்மீகத்துறையில் அதிக ஈடுபாடுகளைக் கொண்டு சைவநெறி வழுவாது வாழும் மக்களைக் கொண்டது கரவெட்டி கிராமத்தை சுற்றியும், மத்தியிலும் பழைமை வாய்ந்த பல கோயில்களும் காணப்படுகின்றன.
இப்புனித பூமியில் அமரர் தெய்வானை அவர்கள் 07-03-1919ம் ஆண்டில் வல்லிபுரம் பார்வதி தம்பதியினருக்கு ஏக புதல்வியாகப் பிறந்தார். இவர் கரவ்ெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். இளமைக்காலத்தில் இருந்து சமய பக்தியுடன் வாழ்ந்து வரும் காலத்தில் அமரர் சின்னத்துரை ஆசிரியரை துணைவராக ஏற்றுக்கொண்டார். இவர் எக்காரியங்களைச் செய்வதாலும் பிள்ளையாரை நினைவில் கொண்டு தொடங்குவார். எவ்வளவுதான் துன்பம் வரினும் மனஉறுதியுடன் வாழ்ந்து தம்மை அனுகிவருபவர்களை தம்மக்கள் போன்று நேசித்து வேண்டிய உதவிகளை செய்வதோடு அயலவர்களை அன்பாக அரவணைத்து வாழ்ந்து வந்தார். தொண்டமனாறு செல்லச்சந்நிதி முருகன், பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் கோயில்களுக்கு கிழமைக்கு ஒருமுறையாவது சென்று வர தவறுவதில்லை. இவருக்கு இரத்தினபூபதி, இராஜேஸ்வரி என்ற பெண்பிள்ளைகளும், விவேகானந்தன், சிவசுப்பிரமணியம், கணேஸ்வரன் என்னும் ஆண்
03

Page 6
பிள்ளைகளும் உண்டு. இவரது பிள்ளைகள் சீரும் சிறப்புமாகவும் உள்ளநாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அன்பாக தெய்வானை அக்கை என அழைக்கப்படும் தெய்வானை காலனிடம் சிக்காமல் நேரடியாக கடவுளிடம் சென்றுவிட்டார் என்ற நினைப்பில் அமைதிகொள்வோமாக.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
04
 

கரவெட்ழயூர் அமரர் திரு. சிதம்பரப்பிள்ளை இளையதம்பி
அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
அறிவு வளர்ச்சி மனிதவாழ்வில் பலமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மனிதன் அறிவுத்திறன் கொண்டு, இல்லாத எதையும் உலகிற் புதிதாகப்படைத்துவிடவில்லை. ஆழந்து சிந்தித்தால் உலகில் உள்ளவற்றையே மனிதகுலத்தேவைக்கேற்ப மாற்றியமைத்துப் புத்துருக் கொடுத்து வாழ்வைச் சிறப்படையச் செய்ய அறிவு வளர்ச்சி பயன்பட்டு வந்தது. மனிதகுல வரலாறு உணர்த்தும் உண்மை இது. கூட்டுறவு இந்த உண்மைக் கருத்துக்கு மாறுபட்டதன்று.
இந்தவகையில் யாழ்மாவட்டத்தில் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக இயங்கிய காலத்தில் நெல்லியடி கட்டவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் முதன்மைவாய்ந்த சங்கங்களில் ஒன்றாக இயங்கியது. இச்சங்கம் கரவெட்டி கிராமத்தையும் உள்ளடக்கியது. இச்சங்கத்தில் சுமார் நாற்பது வருடங்கள் சேவைபுரிந்து பணிகளை ஆற்றியவர் தான் அமரர் சிதம்பரபிள்ளை இளையதம்பி ஆவார். எழுது வினைஞாராக சேர்ந்த இவர் களஞ்சியப்பொறுப்பாளராக பதில் பொது முகாமையாளராக, பொதுச்சபை உறுப்பினராக, நிர்வாக இயக்குனர் சபை உறுப்பினராக பணியாற்றினார். இவர் கம்பீரமான தோற்றத்துடனும் வெள்ளை வேட்டியுடன் காணப்படுவார். அனைவருடனும் கலகலப்பாக பேசி அன்புடன் நடந்துகொள்வார்.
அன்னார் சிதம்பரபிள்ளை வேதாதை தம்பதிகளின் புத்திரராக 01-04-1932 பிறந்தார். ஆரம்பக்கல்வியை கரவெட்டி இருதயக்கல்லூரியும், பின் கரவெட்டி விக்னேஸ்வராக்கல்லூரியிலும் கல்வி பயின்றார். சின்னத்துரை தெய்வானையின் மகளாகிய இரத்தின பூபதியை வாழ்க்கைத் துணைவியாக எற்றுக்கொண்டார்.
இல்லறவாழ்வில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த அன்னாருக்கு ஞானரூபன் என்ற புத்திரனும், வாசுகி, கிரிஜா, வானதி என்ற
05

Page 7
புதல்விகளும் பிள்ளைகள் வழி மருமக்களாக கீதாஞ்சலி (கனடா), சுகந்தன் (கனடா), நிரஞ்சன் (நியூஸ்லாந்து), சரவணபவன் ஆகியோரை இவர் அடைந்திருந்தார். இவர்கள் வழி பேரப்பிள்ளைகள் அனுஷா, நிதுஷா, பிரவீன், ராகவி, சாயிநாத் ஆகியோரையும் கண்டு மகிழ்ந்தார். தன் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளின் சூழலோடு நிறைவான
வாழ்வு வாழ்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
06
ラぎ`
2
 
 
 
 

(356III grid
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே
திருவாசகம்
வேண்டத் தக்கது அறியோய் நீ
வேண்ட முழுவதும் தருவோய் நீ வேண்டும் அயன்மார்க்கு அரியோய் நீ
வேண்டி என்னை பணிகொண்டாய் வேண்டி நீ யாதுஅருள் செய்கின்றாய்
யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில்
அதுவும் உந்தன் விருப்பன்றோ.
திருவிசைப்பா
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த அங்கணா போற்றியமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி தங்கணான் மறைநூல் சகலமுங்கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும் எங்கணா யகனே போற்றியேழிரக்கை
இறைவனே போற்றியே போற்றி.
07

Page 8
திருப்பல்லாண்டு
குழலொலி யாழொலி கூத்தொலியேத்தொலி
யெங்குங் குழாம் பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
மிகுதிருவாரூரின் மழவிடையார்க்கு வழிவழியாளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த பழவடியாரொடுங்கூடியெம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
6LfII LIIT60Tib
இறவாத இன்பவன்பு வேண்டிப்பின்
வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே(ல்)
உன்னை யென்றும்
மறவாமை வேண்டு மின்னும் வேண்டும் நான்
மகிழ்ந்து பாடி
அறவா நீயாடும் போதுன்னடியின் கீ(ழ்)
இருக்க வென்றார்.
வாழ்த்து
வான்மகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்கமன்னன் கோன்முறை யரசுசெய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்விமல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
08
 

6சிவமயம்
பிள்ளையார் வழிபாடு
ஓங்கார ஒலி
அ என்பது முதல் ஒலி, வாயைத் திறந்தவுடன் எழும் ஒலி, ஒலிகட்கெல்லாம் தாயாகவும் தந்தையாகவும் உள்ள ஒலி, அடிப்படையான ஒலி.
உ என்பது அடுத்த ஒலி, இது உயிர் ஒலி. எல்லா மொழிகளிலும் உள்ள உயிர் ஒலி. அகர ஒலியும் உகர ஒலியும் இணையும் பொழுது ஓகார ஒலி பிறக்கிறது. அ + உ = ஒ, ஓகாரமும் ம் ஒலியும் சேர்ந்தே ஓங்கார ஒலி. ஓங்கார ஒலி உயர்த்துவதைக் குறிக்கும். ஓ. எனத் தொடர்ச்சியாகச் சொல்லிப் பாருங்கள். சிந்தனையில் தெளிவு ஏற்படும், உள்ளத்தில் அமைதி ஏற்படும்.
ஓங்காரத்தை உச்சரித்தால் உச்சரித்தவர் உயர்வுறுவார், உயர்ந்த கதியை அடைவார்.
ஓங்கார ஒலி உயிர்க் குற்றங்களை அகற்றுகிறது. இறைவனடியில் ஆன்மாவைச் சேர்ப்பிக்கின்றது.
ஓங்காரம் இறைவனை உணர்த்தும் ஒலி. ஓம் என்ற சொல் இறைவனை உணர்த்தும் சொல்.
ஓம் என்ற சொல்லைத் தியானித்தால் பேரின்பநிலை எய்தலாம்.
ஓம் என்ற சொல்லில் அகர ஒலி உண்டு. உகர ஒலி உண்டு. மகர ஒலி உண்டு.
ஓம் என்பது பிரணவம். இந்தப் பிரணவமே வேதத்தின் மூலம்.
ஓம் என்ற ஒலியின் வடிவமே பிள்ளையார். ஓங்கார வடிவானவர் பிள்ளையார்.
பிள்ளையார் குற்றங்களை நீக்குபவர். துன்பங்களை நீக்குபவர். இடையூறுகளைப் போக்குபவர்.
பிள்ளையார் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். தனக்கு மேல் தலைவன் இல்லாதவர். வடமொழியில் இவரின் பெயர் விநாயகன். வி. நாயகன் என்றால் வேறு தலைவர் இல்லாதவர் என்பது பொருள்.
09

Page 9
நமது வாழ்க்கை மனித வாழ்க்கை. உயிரானது ஒருபுறம் இறைவனது தொடர்பை நாடுகிறது. இறைவனது திருவடிகளை அடைந்து பேரின்பப் பெருவாழ்வை அடைய முயல்கிறது.
மறுபுறத்தில் உயிரினை ஈர்த்து, உலகாயத வாழ்வில் ஈடுபடுத்துகின்றன மலங்கள். இதனால் துன்பங்கள் ஏற்படுகின்றன. குற்றங்கள் வருகின்றன. வினைக்கு உரியதாகின்றது உயிர்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் அறிவை மயக்குகின்றன. புத்தியைக் கலக்குகின்றன. புலன் ஐந்தின் வழி அறிவை மயங்கவைக்கின்றன.
இந்த மயக்கத்தில் இருந்து விடுபடவேண்டும். இந்த மாயை நம்மை விட்டு அகலவேண்டும். அறிவு தெளிவாக இருக்கவேண்டும். சிந்தனை இறைவன் தனக்கு ஆகவேண்டும். இறைவனால் நாம் ஆட்கொள்ளப்பட வேண்டும்.
பிள்ளையார் மலங்களின் பிடியில் இருந்து விடுவிப்பவர். வாழ்க்கையில் புலன்கள் வழி வரும் துன்பங்களில் இருந்து விடுவிப்பவர்.
பிள்ளையாரை வழிபட்டால் துன்பம் நீங்கும் ஓங்கார ஒலியுடன் இணைந்தவர் பிள்ளையார். ஓங்கார வடிவானவர் பிள்ளையார்.
துன்பங்கள், துயரங்கள், இடையூறுகள், வல்வினைகள், அச்சங்கள், அபாயங்கள், ஆபத்துக்கள் வரும்பொழுதே நாம் பிள்ளையாரையே நினைக்கின்றோம்.
ஓங்கார வடிவானவனையே நினைக்கின்றோம். விக்கினம் தீர்க்கும் விநாயகனை வேண்டுகிறோம். வேதத்தின் முழுப் பொருளை உள்ளத்தில் இருத்துகிறோம். ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனை வழுத்துகிறோம்.
துன்பங்கள் வந்த பின்பு வழிபடுவதை விடத் துன்பங்கள் வருமுன்பும் வழிபடுகிறோம். வருமுன் காப்பவர் பிள்ளையார்.
இதனால் எந்தச் செயலில் ஈடுபடு முன்பும் பிள்ளையாரை வணங்குகின்றோம். செய்யப்போகும் செயல் அறிவுத் தெளிவுடனும், சிந்தனைக் கூர்மையுடனும், மலங்களாலும், அதன் வழி புலன்களாலும் மயக்கப்படாமலும் இருக்கப் பிள்ளையாரை வேண்டுகிறோம்.
நமது புலன்வழி நமக்குப் புதிய துன்பங்கள் வரக்கூடாது. நமது முன்வினைவழி, நமக்குத் துன்பங்கள் ஏற்படக்கூடாது.
நமது வினைகள் நல்வினைகளாக வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நற்செயல்களாக வேண்டும்.
10

தீவினைகள் நம்மை அணுகாதிருக்கப் பிள்ளையார் நமக்கு அருள் புரிகிறார். நம்மால் நமக்குத் துன்பம் ஏற்படக்கூடாது. பிறரால் நமக்குத் துன்பம் ஏற்படக்கூடாது. ஊழ் வலிவுபெற அதன் வழி நமக்குத் துன்பங்கள் வரக்கூடாது.
இம்மூன்று வழிகளிலும் துன்பங்கள் வராமல் காப்பவர் பிள்ளையார். ஓங்கார ஒலியின் உண்மையான வடிவமான பிள்ளையார் உயிர் உயர்வுற உதவுகிறார்.
ஓம் என்ற சொல்லை உச்சரித்துத் தியானிக்க வேண்டும். பிரணவ மந்திரம் எனப்படுவது ஒம் எனும் சொல்லே. பிரணவப் பொருள் எனப் பிள்ளையாரை அழைக்கிறோம்.
ஓம் என எப்பொழுதும் ஒலித்து வழிபட வேண்டும். துன்பங்கள் போகும். துயரங்கள் நீங்கும். பேரின்பப் பெருவாழ்வு கிட்டும்.
பிள்ளையார் சுழி
தொடர்புக்கு ஒலி எத்துணை முக்கியமோ, வரிவடிவங்களும் அத்துணை முக்கியமே.
புள்ளிகள் சேர்ந்துதான் கோடுகள் அமைகின்றன. இரண்டு மூன்று புள்ளிகளை நெருக்கமாக அமைந்து விட்டால் கோடு ஆகிவிடும்.
புள்ளி, அதன் கூட்டமான கோடு, அந்தக் கோட்டின் வளைவு, நெளிவு, நீட்டம் இவ்ைதான் எழுத்துகள்.
ஒலி எப்படிப் பேச்சாகிறதோ அதைப் போல் புள்ளி அதற்கு வடிவம் கொடுக்கிறது.
ஒலிகளில் அகரமும் உகரமும் சேர்ந்து ஓங்காரமாகி, உயர்வுதரும் ஒலியாவதைப் போல், புள்ளியும் கோடும் சேர்ந்த வரிவடிவமே எழுத்துகளின் அடிப்படையாகின்றது.
இதனாலன்றோ எழுதத் தொடங்கு முன்பு எவரும் புள்ளி இட்டு, கோடு போட்டு, எழுத்துகளின் அடிப்படைகள் சரியாக எழுதப்படுகின்றனவா எனப் பார்க்கின்றனர்.
ஏட்டையும் எழுத்தானிகோலான பேனாவையும் எழுதுவதற்குரிய தாளையும் எடுத்துக் கொண்டாலோ ஒரு புள்ளி, ஒரு கோடு இரண்டையும் போட்டு, ஒழுதுகோல் ஏற்றதா, ஏடு நல்லதா, தாள் உரியது தானா என உறுதி செய்கின்றனர்.
11

Page 10
புள்ளியை முதலில் இட்டு, அதனுடன் சேர்த்துக் கோடு நீட்டாமல் எழுதத் தொடங்குபவர்க்ள மிகக் குறைவு.
இதுவே பிள்ளையார் சுழி. தொடக்க வரிவடிவம். எழுத்துகட்கு முதலான, அடிப்படையான வரிவடிவம். பிள்ளையாருக்கு உரிய வரிவடிவம். பிள்ளையார் வடிவான வரிவடிவம்.
எனவேதான், எழுதத் தொடங்கும் பொழுது பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கவேண்டும் எனக் கூறுகிறார்கள். புள்ளியும் கோடும் செம்மையாக எழுதப்பட்டால்தானே, எழுதத் தெரிந்தால்தானே எல்லா எழுத்துகளையும் முறையாக எழுதலாம்.
பிந்து புள்ளி வடிவம். இது சக்தி, நாதம் கோடு வடிவம். இது சிவம். சக்தியும் சிவமும் இணைந்த வடிவமே பிள்ளையார் சுழி.
நாத பிந்துகளை ஒலிப்பது எவ்வாறு? முடியாது. எனவே, இது ஊமை எழுத்து. இது மெளனக்குறி.
உயிர் புள்ளி. கோடு இறைவன். உயிரும் இறையும் கலந்தால் பேரின்பம். புள்ளியும் கோடும் இணைந்த பிள்ளையார் சுழி பேரின்பப் பெருவாழ்வின் அடையாளச் சின்னம்.
அகர Ф—8ѣЛ ஒலிகள் ஓங்காரமாகி வழிபாட்டுக்கு உரியதாகின்றன. உயிர்களை உயர்நிலைக்கு உயர்த்துகின்றன.
புள்ளியும் கோடும் பிள்ளையார் சுழியாகி வழிபாட்டிற்குரிய வரிவடிவங்களாகின்றன. நல்வழிப்படுத்தும் சின்னமாகின்றன.
அகரம் உயிர், உகரம் இறைவன், உயிர் இறைவனுடன் இரண்டறக் கலந்து, இறைவனாகவே புலப்படும். புள்ளியானது கோட்டுடன் இணைந்து, உகரமாகி நிற்கும், பிள்ளையார்சுழியாக அமையும். இந்த நிலை அத்துவிதமாய் நிற்கும் சுத்தாத்துவித சித்தாந்த முத்தி நிலை. பிள்ளையார் சுழியின் சித்தாந்த நெறி இதுவே.
வினை நீக்கும் விநாயகன், வருமுன் காப்பவன். அவனே எழுத்துகட்கெல்லாம் தொடக்கமாக அமைகிறான்.
ஒரு செயலுக்குப் பிள்ளையார் சுழி போட்டாயிற்றா என்றால் தொடங்கியாயிற்றா என்பதே வினா.
பிள்ளையாரை வழிபட்டே செயலைத் தொடங்க வேண்டும். பிள்ளையார் துன்பங்களையும் இடையூறுகளையும் நீக்குபவர். பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்கும் எழுத்துகள் நல்லனவாக அமையும். நிறைவானதாக அமையும். உயிர் உயர்ச் சிக்கானதாய் அமையும். இறைவனடி சார்வதாய் அமையும்.
12

பிள்ளையார் திருவுருவம்
இறைவனுக்கு உருவம் இல்லை. இறைவனோ எல்லா உருவங்களிலும் உள்ளார்.
உருவமற்றவர் இறைவன். உருவமுள்ளவரும் இறைவனே. பார்க்கும் இடம் எங்கும் நீக்கம் அறநிறைந்திருப்பவர் இறைவன்.
ஒலிகளில் ஓங்காரமாகி உள்ளவர் பிள்ளையார் . வரிவடிவங்களில் பிள்ளையார் சுழியாக உள்ளவர். பிரணவமாயும் பிரணவப் பொருளாகவும் உள்ளவர். வேதங்களின் முதலாக உள்ளவர். வேதங்களாகவும் உள்ளவர் பிள்ளையார்.
தன்னை நினைப்பவர், தன்னை வழிபடுபவர், தன்னைத் தியானிப்பவர், இவர்களின் உள்ளத்தில் பிள்ளையார் எப்படித் தோன்றுகிறார்? பொருள் பொதிந்த உருவமாகத் தோன்றுகிறார்.
விலங்கு வடிவமாகத் தோன்றுகிறார். மனித வடிவமாகத் தோன்றுகிறார்.
பூத வடிவமாகத் தோன்றுகிறார். தேவர்கள் வடிவமாகத் தோன்றுகிறார்.
விலங்காய், மனிதராய்ப், பூதமாய்த், தேவராய் இந்நான்கு படைப்புகளின் இணைந்த உருவமாய்ப் பிள்ளையார் தோன்றுகிறார்.
யானைத் தலையும், சுளகுச் செவியும், தும்பிக்கையும் யானையாகிய விலங்கிடம் இருந்து பெற்றார்.
புருவ வடிவத்தையும் கண்களையும் மனிதரிடம் இருந்து பெற்றார்.
பேழை வயிற்றையும் குறுகிய கால்களையும் பூதகணத்தில் இருந்து பெற்றார்.
நான்கு கைகளையும் தேவர்களிடம் இருந்து பெற்றார்.
“ஐந்து கரத்தனை, யானை முகத்தனை, இந்து இளம் பிறை போலும் எயிற்றனை,” எனத் திருமூலர் பிள்ளையாரின் வடிவத்தைத் திருமந்திரத்தில் எடுத்துக் கூறி உள்ளார்.
13

Page 11
திருவடிகள்
இறைவனின் திருவடிகளை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு பெறுவதே உயிர்களின் நோக்கம். பிள்ளையாரின் திருவடிகள் உயிர்கட்கு அபயம் கொடுக்கும் திருவடிகள்.
உண்மையான அறிவு எதுவோ அதுவே ஞானம். உயிர்கள் பாசங்களால் கட்டப்பெற்றுத் துன்பப்படாமல், இறைவன்பால் உயிர்களை வழிப்படுத்துவதே ஞானம்.
ஊழிவழி வினைகள் அறவேண்டும். வருவினையும் செய்வினையும் நீங்கவேண்டும். ஞானம் பொருந்தினால் வினைகள் தாமாக நீங்கும். துன்பம் போகும். இன்பம் பெருகும்.
பிள்ளையாரின் திருவடிகள் ஞானமாக உள்ளன. உயிர்களின் துன்பத்தைப் போக்குகின்றன. இன்பம் பெருக்குகின்றன.
வயிறு
பிள்ளையாரின் வயிறு பெரு வயிறு. பேழை வயிறு. அந்த வயிற்றினுள் யாவுமே அடக்கமாகி உள. பரவெளியாக உள்ள அனைத்தும் அடங்கி உள. அண்டங்கள் யாவும் அடங்கி உள. அனைத்து உலகமும் அடங்கி உள. அனைத்து உயிர்களும் அடங்கி
D 6T.
பிள்ளையாரின் திருவுருவம் அனைத்தையும் அடக்கிய திருவுருவம். பிள்ளையார் எங்கும் எதிலும் உள்ளார். அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரந்து வியாபித்து நிற்கிறார். இந்தத் தத்துவத்தையே பேழை வயிறு குறிக்கும்.
ஐந்த வகைகள்
பிள்ளையாருக்கு நான்கு கைகளுடன் தும்பிக்கையும் சேர்த்தால்
ஐந்து கைகள். தொடர்ச்சியாக, இடையீடு இன்றி நடைபெறும் ஐந்து
தொழில்களையே ஐந்து கைகளும் குறிக்கின்றன.
ஐந்து கைகளுள் ஒரு கையில் பாசம் உள்ளது. ஒரு கையில் அங்குசம் உள்ளது.
ஒரு கை அஞ்சேல் என அபயம் காட்டி நிற்கிறது.
14

ஒரு கையில் மோதகம் உள்ளது. மற்றது தும்பிக் கையாகும்
பற்றுள்ளதைப் பிறப்பிப்பதும் பாசம். பிணித்து நிற்பதும் பாசம். படைத்தலைக் குறிப்பது பாசத்தைத் தாங்கிய கை. ஐந்தொழில்களுள் முதலாவது படைத்தல் தொழில்.
பிறவி எடுத்தாலே வினை சூழ்ந்து கொள்கிறது. துன்பங்களும் இன்பங்களும் மாறி மாறி வருகின்றன. இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டு ஓடி, பிறவியில் இருந்து விடுபட வரும் உயிர்கட்கு அஞ்சேல் எனப் பாதுகாப்பு அளிக்கும் கை அபயக் கை. காத்தல் தொழில் ஐந்தொழில்களுள் இரண்டாவது.
அங்குசம் அழித்தலைக் குறிக்கும். பிள்ளையாரின் ஒரு கையில் அங்குசம் உண்டு. ஐந்தொழில்களுள் மூன்றாவதாகிய அழித்தல் தொழிலை அங்குசம் தாங்கிய கை செய்கிறது.
அஞ்சேல் எனப் பாதுகாப்பு அளித்த, அபயம் பெற்ற உயிர்கட்கு அருளலைச் செய்வது செய்வது மோதகம் ஏந்திய கையாகும். இந்தக் கை கீழ் நோக்கி இருப்பதன் காரணம், பிறவிக்கு அஞ்சி வரும் உயிர்கள், அடையுமிடம் திருவடியாகிய முத்திப் பேறு என்பதை உணர்த்தவேயாம். ஐந்தொழில்களுள் நான்காவது அருளல் தொழில்.
ஐந்தொழில்களுள் ஐந்தாவது மறைத்தல் தொழில். திரோதானமாகிய இந்தத் தொழிலைச் செய்வது தும்பிக்கையே.
பிள்ளையாரின் முகத்தில் இரு கொம்புகள் உள. இடது பக்கத்தில் உள்ள கொம்பு முழுமையான அழகான கொம்பு.
வலது பக்கத்தில் உள்ள கொம்பு ஒடிந்த கொம்பு. வலது பக்கத்தில் முழுமையான நீட்டுக் கொம்பு இருந்தது. பிள்ளையார் பாரதக் கையை எழுதியவர். வியாச பகவான் சொல்ல எழுதியவர். அப்பொழுது, வலது கொம்பை உடைத்து எழுத்தானியாகப் பயன்படுத்தி எழுதினார். இதனால் வலது கொம்பு உடைந்த கொம்பாகவே உள்ளது.
இடது கொம்பு பதிஞானத்திற்கு உரியது. ஒடிந்த வலது கொம்பு பாசஞானத்திற்கு உரியது.

Page 12
சுளகு போன்ற இரு செவிகள் பிள்ளையாருக்கு உண்டு. அகன்று விரிந்த இச்செவிகள் யானையின் செவிகளைப் போன்றவை.
உயிர்கள் மலங்களின் பிணிப்பால் துன்பப்படாமல் இச்செவிகள் காக்கின்றன. வினைகளினால் வரும் துன்பங்களில் இருந்து போக்கி அருள்கின்றன.
பிள்ளையாருக்கு மூன்று கண்கள் உள. வழமையான இரு கண்களுடன் நெற்றிக் கண்ணும் சேர்ந்து மூன்று கண்களாக உள.
பிறைச் சந்திரனைத் தனது முடியில் பிள்ளையார் அணிந்துள்ளார். குற்றங்கள் தேய்ந்து உடல் சிறுத்து, வட்டமான சந்திரன் பிறைவடிவம் கொண்டது.
அறியாமை என்னும் இருள் தேய, ஞானம் பெற்ற உயிர்களை
உயர்ச்சி அடையச் செய்து தலைமேல் வைப்பர் பிள்ளையார் என்பதையே முடியில் உள்ள பிறை எடுத்துக்காட்டுகிறது.
பிள்ளையார் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பு குண்டலினி சக்தியின் வடிவம். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி பாம்பு படம் விரிந்தது போல் எழுந்து பரந்து நின்று, உயிர்களைச் சிவ LDu uLDTäs(G5aÉl6ögDg5.
இப்படியாக, பிள்ளையார் அடியவர்களுக்கு அருள்புரிவதற்காக
எடுத்த திருமேனியின் திருவுருவத்தில் சிவதத்துவங்கள் அடங்கி உள்ளன.
நாம் பிள்ளையாரின் திருவுருவத்தை நினைத்து, வழிபட்டு, தியானிக்கும் பொழுது நமக்கு ஈடேற்றம் உண்டு. ஆன்ம ஈடேற்றம் உண்டு. உயிர் உயர்ச்சி உண்டு.
ஓங்கார ஒலியானவன்
பிள்ளையார் சுழி வரி வடிவானவன்
விலங்கு, மனிதர், பூதர், தேவர் இவர்கள் இணைந்த திருவுருவத்தைக் கொண்டவர்.
அவரே பிள்ளையார்.
16

பிள்ளையார் தோன்றினார்
பிள்ளை என்றாலே மகன்தான். பிள்ளையார் என்றால் தலைசிறந்த மகன். பிள்ளைகட்கெல்லாம் பிள்ளை. மூத்த மகன் எனப் பொருள்படும்.
பிள்ளையார் யாருக்கு மகன்? சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் பிள்ளையார் மகனாவார். மூத்த மகனாவார்.
சிவபெருமான் முழு முதற் கடவுள். ஆதியும் அந்தமும் இல்லாத அருற்பெரும் சோதி.
சிவபெருமானே ஐந்தொழில்களுக்கும் மூல காரணன்.
சிவனுக்கும் உமைக்கும் மகனாகப் பிறந்தவர், மூத்த ம்கனாகப் பிறந்தவர் பிள்ளையார்.
பிள்ளையாரின் தோற்றத்தைப் பற்றிப் பல்வேறு புராணங்கள் பல்வேறு கதைகளைக் கூறுகின்றன.
பிடி என்றால் பெண் யானை, கரி என்றால் புராணங்கள் பல்வேறு கதைகளைக் கூறுகின்ன.
இவ்வுருவுகள் கொண்ட சிவனும் உமையும் அடியவர் வினைதீர்க்க விழைந்தனர். பிள்ளை யாரைப் பெற்றெடுத்தனர்.
"பிடியதன் உரு உமை கொள, மிகு கரியது வடி கொடு, தனது அடி வழிபடும் அவர் இடர் கடி கணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறைனே"
எனத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவலிவலம் என்கின்ற கோவிலில் எழுந்தருளி உள்ள சிவபெருமான், பிள்ளையார்
தோன்றக் காரணமாக இருந்தார் எனத் தேவாரத்தில் பாடுகிறார்.
ஓம் என்பது பிரணவ வடிவம். திருக்கயிலாய மலையில் பூஞ்சோலை உளது. அப் பூஞ்சோலையில் சித்திர மண்டபம் ஒன்று உண்டு.
17

Page 13
அச் சித்திர மண்டபத்தில் ஒம் எனும் பிரணவ வடிவம் எழுதப்பட்டு இருந்தது. சிவனும் உமையும் அப் பிரணவ வடிவைப் பார்த்தனர்.
ஆண் யானை பெண் யானை வடிவு கொண்டனர். பிரணவப் பொருளாகிய பிள்ளையாரைப் பெற்றுத் தந்தனர்.
ஓங்கார ஒலி பிரிந்து அகரம், உகரம் இரண்டும் ஆண் யானை பெண் யானை வடிவுகள் எடுத்துப் பிள்ளையார் தோன்றக் காரணமாக இருந்தன என்றும் புராணங்கள் கூறுகின்றன.
ஓங்கார ஒலியின் வடிவமே பிள்ளையர் என்பதை முன்பு தெரிந்து கொண்டோம்.
நாம் கானும் பிள்ளையார்
நாம் பிள்ளையார் கோவிலுக்குப் போகிறோம். அங்கே பிள்ளையாரைக் காண்கிறோம். அவர் திருவுருவம் உட்கார்ந்த நிலையில் உள்ளது.
இன்னுமொரு பிள்ளையார் கோவிலுக்குப் போகிறோம். அங்கே பிள்ளையார் நின்று கொண்டிருக்கிறார்.
இன்னுமொரு கோவிலில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.
சில கோவில்களில் பிள்ளையாருக்கு எட்டுக்கைகளும் உண்டு.
இதற்குக் காரணம் என்ன?
கடவுளை வழிபடுபவர்களின் உள்ளம் அவர்களுடைய வளர்ச்சிக்கு ஏற்ப வேறுபடுகிறது. பக்குவத்துக்கு ஏற்ப வேறுபடுகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப வேறுபடுகிறது.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திருவுருவ அமைப்பில் ஈடுபடும் உள்ளம் இருக்கும். அவ்வத் திருவுருவங்கள் அவரவரின் உள்ளம் ஒன்ற வகைசெய்யும். ஒன்றிய உள்ளம் தியானித்து உயர்கிறது.
எந்தத் திருவுருவத்தில் அவருக்கு ஈடுபாடும் ஒன்றிப் போதலும்
தியானமும் ஏற்படுகிறதோ அந்தத் திருவுருவம் அவருக்கு ஈடேற்றத்தை அளிக்கிறது.
18

இடையறாத தியானம் இன்பங்களைத் தருகிறது. உயிர் உயர்வடையச் செய்கிறது.
இவ்வாறாக உள்ள திருவுருவங்கள், பிள்ளையாரின் திருவுருவங்கள் முப்பத்திரண்டு ஆகும்.
அடுத்து வரும் பக்கங்களில் ஒவ்வொரு திருவுருவத்தையும் படமாகக் காண்பீர்கள். அதற்குரிய சிறப்புச் செய்திகளையும் படத்தின் கீழ்க் காண்பீர்கள்.
திருவுருவப்படம் கிடைக்காத முர்த்தம்
லட்சுமி கணபதி:
எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம், வரதம் இவற்றையுடையவர். அமுதப் பிரவாகம் போன்ற வெண்மை நிறத்தோடு நீலத் தாமரைப் பூவை ஏந்திய இருபெருந் தேவிமார்களோடு திகழுபவர்.
19

Page 14
श्रे a. འ། ༄ཡཁན་དེ་《2
ご琴
37 KE<5%
பால கணபதி
நான்கு திருக்கரங்களும், யானைமுகமும் உடையவர். உதிக்கின்ற செங்கதிர்போன்ற நிறம் உடையவர். குழந்தைத் திருமேனியுடையவர். வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு இவற்றை நான்கு திருக்கரங்களிலும், தாங்கியவர். இவரது துதிக்கையில் மோதகம் விளங்கும்.
20
 
 
 
 
 

}
A
... o ,
* , بسکتےسےکستےتھےتھےسےسبسےکستےسےسسکے
ه . . . . . . . . . . . . . " ، " . به
தருண கணபதி
எட்டுத் திருக்கரங்களையும், யானை முகத்தையம் உடையவர். கைகளில் பாசம், அங்குசம், பணியாரமாகிய மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு இவற்றையுடையவர். நண்பகல் தோன்றுகின்ற சூரியனைப் போன்ற நல்ல சிவந்த திருமேனி படைத்தவர்.
21

Page 15
றிபக்தி கணபதி
சரத்காலத்து நிறைமதி போன்ற வெண்ணிறம் படைத்தவராக, தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயஸ பாத்திரம் இவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தி, யானைமுகமும் உடையவராக விளங்குபவர்.
22
 

f
أسد * ܚ . SE
e ミ物 t 乙/ UANSE
エ天之。ペム"Aム2人以ペ2Sミエリエ
السد حد . . . . . . . . , 1 \\ \ A\ \ a \ , an n 1 دحدححيحدسجنسا
வீர கணபதி
வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், சுத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூழல், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறையும் தாங்கிய பதினாறு திருக்கரங்களையும், சிவந்த திருமேனியையும், சிறிது சினந்த திருமுகத்தையும் உடையவர்.
23

Page 16
titlist 1 i, 6 kV VY VA VVA A AV vAyA V Y
சத்தி கணபதி
செவ்வந்திவானம் போன்ற நிறமுடையவராக, பச்சைநிற மேனியளாகிய தேவியைத் தழுவிக் கொண்டு இருப்பவர். ஒருவர்க்கொருவர் இடுப்பில் கைகொடுத்துத் தழுவிக்கொண்டிருப்பது தனியழகு. பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் அஞ்சலென்கிற அபயகரமும் உடையவர்.
24
 

துவிஜ கணபதி
நான்கு திருக்கரங்களிலும் முறையே புஸ்தகம், அட்சமாலை, தண்டம், கமண்டலம் இவற்றைத் தரித்தவர். மின்னற் கொடிபோல விளங்குகின்ற கைவளையல்களை உடையவர். சந்திரன்போல் வெண்மையானவர். நான்கு யானைமுகங்களை உடையவர்.
25

Page 17
·
H f4'44 (444444 í ഞെ. لسفنغسطسلصنالك
சித்தி கணபதி
மாம்பழம், பூங்கொத்து, கரும்புத் துண்டு, எள்ளுருண்டை, பரசு
இவற்றைத் துதிக்கையுள்பட ஐந்து கரங்களில் தரித்தவரும், பொன்கலந்த பசுமை நிறமுடையவருமாக விளங்குபவர்.
26
 

<\്പ്പ\ശ്നീട്ടു
«ፖ.
δ. 9ܝܕ ܙܗܝ
سمسہ حسنسسہح
○|松づ名。 窦స్ట్రాం V, గx c
τ. N
vs t wV Α. Α
İkli il v Alt. LV Sot Skakk ,
உச்சிஷ்ட கணபதி
நீலோற்பலம், மாதுளம்பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை இவற்றைத் தரித்தவரும், நீல நிறத் திருமேனி உடையவருமாக விளங்குபவர்.
வேறுவகை:- பெண்ணின் யோனியில் துதிக்கையை வைத்தவராக காமமோகிதராக விளங்குபவர். நீல வர்ணம் உடையவர்.
27

Page 18
下《
s
W
Yayo 2ܠܬ݂ܵܐ NAŠAs
ܠܠܓܠܢ
N-1 Z R ※
残 戮 s \\) \),
参
V`>
مع
:
விக்ன கணபதி
சங்கு, கரும்புவில், பஷ்பபாணம், கோடலி,
பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து,
பாணம் முதலியவற்றோடு கூடிய திருக்கரங்களை யுடையவரும், ஆபரணங்களை நிரம்பத் தரித்தவரும், பொன்மேனியருமாக விளங்குபவர்.
28
 

கூறப்ர கணபதி
தந்தம், கற்பகக்கொடி, பாசம், ரத்னகும்பம், அங்குசம் இவற்றை ஏந்தியவர். செவ்வரத்தம் பூப்போன்ற அழகிய மேனியர். செந்நிறமானவர்.
29

Page 19
t 2,\ S. R s
{ ఘ్కీS.
Éà SSRS
ஏரம்ப கணபதி
அபயம், வரதமாகிய கைகளையுடையவர், பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் இவற்றைத் தாங்கியவர். சிங்கவாகனத்தில் ஏறியவர், யானைமுகம் ஐந்துடையவர், பசுமை கலந்த கருமை நிறம் உடையவர்.
30
 
 
 
 

انا V \ |ا\\ با ب ‘‘ بن یا \ A \" \ \| \
a
Litt tւ } \\ لمادة سا ༥༥ ༥ ༥ ཏེ་ حا
மஹா கணபதி
ரத்னகலசம் இவற்றைத்
கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம்,
தந்தம்,
நெற்கதிர், திருக்கரங்களில் தாங்கியவர். செங்கதிர்போன்ற நிறம் உடையவர்.
மாதுளம்பழம், கதை,
முக்கண்ணர், பிறை முடியர். மடிமீது எழுந்தருளியிருக்கிற-தாமரையை
ஏந்திய தேவியாற் சுவையோடு தழுவப்பெற்றவர்.
நீலோத்பலம்,
31

Page 20
விஜய கணபதி
பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் தரித்தவர்.
பெருச்சாளி வாகனத்தில் ஏறியிருப்பவர். செந்நிறமானவர்.
32
 

நிருத்த கணபதி
இவர் கூத்தாடும் பிள்ளையார் எனப்பெறுவர். மோதிரங்களனிந்த விரல்களையுடைய கைகளால் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் இவற்றைத் தரித்தவர். பொன்போன்ற நிறமுடைய திருமேனியர். கற்பக விருட்சத்தினடியில் எழுந்தருளியிருப்பவர்.
33

Page 21
. * .' .. :,::.."..،،،،،،....:؟.ۂ ،i۰'.*.su!**،ثم ۲۱نsi: aaaaG AA AqAaACSaaaLGGAaAAA AA AAAAALSLAqAqASA ALAK
ஊர்த்துவ கணபதி
நீலப் பூ, தெற்பயிர், தாமரை, கரும்புவில், பாணம், தந்தம் இவற்றையுடையவர். பொன்வண்ண வண்ணர். பச்சைநிற மேனியோடு
விளங்குகின்ற தேவியைத் தழுவியிருப்பவர்.
34
 

grööITIÚLörr öföGOTLğ5
செந்நிறமானவர், செம்பட்டாடையர், செம்மலர் மாலையர், பிறை முடியர், முக்கண்ணர், குறுந்தாளர், குறுங்கையர். மாதுளம்பழம், பாசம், அங்குசம், வரதம் இவை தாங்கிய கரங்களையுடையவர், யானைமுகவர், பதுமாசனத்திருப்பவர், பெருச்சாளி வாகனர்.
35

Page 22
வர கணபதி
செவ்வண்ணர், யானைமுகவர், முக்கண்ணர், பாசம் அங்குசங்களைத் தரித்தவர். தேன்நிறைந்த மண்டையையுடையவர். பிறைமுடியர்.
36
 

>
6
=
侬侬%兖
திரயாகூழ்ர கணபதி
அசைகின்ற செவிகளில் சாமரையணிந்தவர். பொன்னிறமானவர். நான்கு கரங்களை உடையவர். பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் தாங்கியவர், துதிக்கை நுனியில் மோதகம் D-60Luj65.
37

Page 23
VV,
.8 s Akk (SA:Kli SV S: Sv. a \\ YA' علهكسلسلالا
கூறப்ரபிரசாதர்
பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளம்பழம், தாமரை, தருப்பை
விஷ்டரம் இவற்றைத் தரித்தவர், பேழை வயிற்றையுடையவர்.
திருவாபரணங்களை அணிந்தவர்,
38
 

ஹரித்திரா கணபதி
மஞ்சள் நிறமானவர், நான்கு கரங்களையுடையவர், அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் இவற்றைத் தரித்திருப்பவர்.
39

Page 24
ஏகதந்தர்
பேழை வயிற்றுடன், நீலமேனியர், கோடரி, அட்சமாலை, இலட்டு, தந்தம் இவற்றையுடையவர்.
40
 

சிருஷ்ழ கணபதி
பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைக் கரங்களில் ஏந்தியவர், பெருச்சாளி வாகனத்தையுடையவர். சிவந்த திருமேனியர்.
41

Page 25
உத்தண்ட கணபதி
நீலம், தாமரை, மாதுளம்பழம், கதை, தந்தம், கரும்புவில், இரத்னகலசம், பாசம், நெற்கதிர், மாலை இவற்றை யேந்திய பத்துக் கைகளை உடையவர். அழகிய தாமரைப் பூவை ஏந்திய பச்சை மேனியளாகிய தேவியால் தழுவப்பெற்றவர்.
42
 

pretorGBDITöfGors
பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தரித்தவர். வெண்பளிங்குபோன்ற மேனியர். செந்நிறப் பட்டாடையுடுத்தியவர்.
43

Page 26
துண்ழ2 விநாயகர்
அட்சமாலை, கோடரி, இரத்னகலசம், தந்தம் இவற்றை ஏந்தியவர்.
 

蕊 , ve ܛܔܡ̈ܡܶܐ$ '/4
ޣަސ~ g =(S്
欧陵仙 11K?为
ÁCIECĪCUCM) YNÒ
துவிமுக கணபதி
தந்தம், பாசம், அங்குசம், இரத்னபாத்திரம் இவற்றைக் கையில்
ஏந்தியவர், பசுநீலமேனியர், செம்பட்டாடையும், இரத்தின கிரீடமும் அணிந்தவர். இருமுகம் உடையவர்.
45

Page 27
v بینایی پیرس
pibgpöföČI Lf6f6oo6TUIITTI
வலது கைகளில் கூரிய அங்குசம், அட்சமாலை, வரதம இவற்றை உடையவர். இடது கைகளில் பாசம், அமுதகலசம், அபயம் இவற்றை உடையவர். பொற்றாமரையாஸனத்தின் நடுப் பொகுட்டில் மூன்று முகங்களோடு எழுந்தருளியிருப்பவர். புரசம் பூப்போன்ற சிவந்த நிறம் உடையவர்.
46
 

சிங்க கணபதி
வீணை, கற்பகக்கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கைகளில் தாங்கியவர். தாமரை, இரத்ன கலசம், பூங்கொத்து, அபயம் இவையமைந்த இடது கைகளை யுடையவர். வெண்ணிறமான மேனியர், யானைமுகவர், சிங்க வாகனத்தில் எழுந்தருளியிருப்பவர்.
47

Page 28
யோக கணபதி
யோக நிலையில் யோகபட்டம் தரித்துக்கொண்டு, இளஞ்சூரியன்
போன்ற நிறத்தோடு, இந்திரநீலம் போன்ற ஆடையை உடுத்திக்கொணடு, பாசம், அக்ஷமாலை, யோகதண்டம், கரும்பு
இவற்றை ஏந்தி இருப்பவர்.
48
 

2
A Allstaaasa AA.K.A AKAYALAAAi
l 7. f \
துர்க்கா கணபதி
சுட்ட பசும்பொன்னிறம், எட்டுக் கை, பெரிய மேனி, அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம் இவற்றை வலது கைகளில் ஏந்தியவர். பாசம், வில், கொடி, நாவற்பழம் இவற்றை இடது கைகளில் உடையவர். செந்நிற ஆடையர்.
49

Page 29
öflÉIöLSMTr
இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு, இடப்பாகத் தொடையில் அம்மையை உடையவர். அம்மை பசியமேனியளாக, நீலப் பூவை ஏந்தியவளாக இருப்பள். வலது கையில் அங்குசம், வரதம் உடையவர். இடது கையில் பாசம், பாயசபாத்திரம் ஏந்தியவர், செந்தாமரைப் பீடத்தில் நிற்பவர். நீலநிறமான ஆடையணிந்தவர்.
நன்றி - பிள்ளையார் வழிபாடு கொட்டாஞ்சேனை ழறி வரதராஜ விநாயகர் கோவில்
SO
 

சிவமயம்
அபரக் கிரியை
இறந்தவருக்குக் கிரியை செய்வதன் அர்த்த மென்ன? இறந்ததன் மேலும் அவருக்கு வாழ்வுண்டு என்பதே அர்த்தமாகும்.
இறந்த பின்பு அவருக்கு எங்கே வாழ்வு எப்படி வாழ்வு? அவருக்குச் சுவர்க்கத்திலும், நரகத்திலும் வாழ்வுண்டு, திரும்பவும் அவர் பூமியிற் பிறந்து முன் வாழ்ந்ததுபோல வாழும் வாழ்வுமுண்டு. சுவர்க்க வாழ்வு இன்பாநுபவம். நரக வாழ்வு துன்பாநுபவம். திரும்ப வரும் பூமி வாழ்வு இன்ப துன்பக் கலப்பான அநுபவம்.
இறந்த பின்பு அவர் இங்கில்லை. இந்நிலையில் அவருக் செய்வதை அவர் பெறுவதெப்படி? இறந்த பின்பும் குறைந்தது முப்பத்தொரு நாள்வரை அதாவது அந்தியேஷ்டிவரை அவர் இங்கேதான் இருக்கிறார். அதாவது தான்விட்ட உடலின் தொடர்பு நீங்காமல் அருவமாய் இருந்து கொண்டிருக்கிறார். அந்நிலையில் உடலைத் தொடர்புபடுத்திச் செய்யுங் கிரியைகளின் பலனை அவர் நேரடியாகவே பெறுகிறார். அந்தியேட்டியின் பிறகு நிகழுங் கிரியைகளின் பலனை மேலுலகத்திலுள்ள பிதிரர்கள் என்ற தேவசாதியார் ஏற்று அவர்கள் எங்கெங்கிருந்தாலும்-அங்கங்கு சேரச் செய்கிறார்கள்.
இக்கிரியைகளை அபரக் கிரியைகள் என்பதேன்? அவை இறந்தபின் செய்யப்படுங் கிரியைகள் என்பதனால்தான். அபரம் என்றால் பின்.
அபரக் கிரியைகள் எவையெவை? பிரேதக் கிரியை, சாம்பலஸ்ளுதல், அந்தியேட்டி, மாசிகம், ஆட்டைத்திதி, திவசம் என்பனவாகும்.
அபரக் கிரியைகள் உடலுக்காகவோ உயிருக்காகவோ? உயிருக்காகவேதான் ஆனால் அந்தியேஷ்டி வரை உடல் தொடர்பில் வைத்தும் பிறகு தனியாகவும் உயிரைக் கருதிச் செய்யப்படும்.
S1

Page 30
10.
இக்கிரியைகளினால் உயிருக்கு நன்மை விளைவது எங்ங்ணம்? இக் கிரியைகளால் உயிருக்கு இருவிதத்தில் நன்மை விளையும். தனது சரீரத்தை விட்டுக் கிளம்பிய உயிர் அதன் மேல் பெறவேண்டிய அநுபவங்களுக்கு உபகரிப்பது ஒன்று. படிப்படியாக அவ்வுயிர் சிவத்தன்மை பெறுவது ஒன்று.
சிவத்தன்மை பெறுவதென்பது எங்ங்ணம்? அபரக் கிரியைகளைச் செய்வதனால் உயிரின் பாவங்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன. அதற்குத்தக்க அளவு உயிரைப்பற்றியுள்ள மலபந்தம் விலகிக் கொடுக்கும். மலம் விலகுமளவுக்குச் சிவத்தன்மை சிறிது சிறிதாகப் பற்றும். கால அடைவில் சரியான பக்குவம் வாய்க்கும்போது முழுமையாக அது சிவத்தன்மை பெற்றுவிடும்.
நினைவஞ்சலிகளில் அவர் சிவபதம் அடைந்தார் என்றுதானே எல்லாரையும் குறிக்கிறார்கள். அப்படியானால் கிரியைக்கு என்ன அவசியம்? அப்படிக் குறிப்பது ஒவ்வொருவரும் சிவபதமடைய வேண்டும் என்ற நல்விருப்பத்தினால். இப்படி நல்விருப்பத்தினால் உரைப்பது உபசாரம் என்ற அளவில் வைத்துக் கொண்டு உரிய கிரியைகளை முறைப்படி செய்ய வேண்டும்.
பிரேதக் கிரியையில் கும்பபூஜை அக்கினி காரியம் எல்லாம் செய்வதேன்? அவையெல்லாம் முன் சொல்லியவாறு இறந்தவரைச் சிவமாக்கும் முயற்சிகள் தான்.
கும்பங்களில் உருத்திரனையும் திக்குப் பாலகர்களையும் எழுந்தருள வைத்துப் பூசிக்கப்படுகிறது. கும்பங்களைப் பூசிப்பதனால் அவற்றிலுள்ள நீருக்குச் சிவத்தன்மை உண்டாகும். அந்நீரினால் இறந்த உடலுக்கு நீராட்டுதலால் நீரிலுள்ள சிவத்தன்மை உடலிற் செறியும். அக்கினி சிவமாகப் பூசிக்கப்பட்டதால் அதில் ஏற்பட்ட சிவத்தன்மை அந்த அக்கினியினால் உடலை எரிக்கும்போது அதன் சிவத்தன்மை மேலும் அதிகரிக்க உதவும். உடலைவிட்டுப் பிரிந்தாலும்
52

11.
12.
13.
ஒருவகையில் அதன் தொடர்பு நீங்காதிருக்கும் உயிருக்கும் அச்சிவத்தன்மை பதியும்.
உடலை விட்டுப்பிரிந்த பின்னும் உயிர் உடல் தொடர்பு நீங்காதிருக்கிறதென்பதை விளங்க முடியவில்லையே! அதை எப்படி
நம்ப முடியும்.
அப்படி அது தொடர்பு நீங்காதிருப்பதை நாங்கள் காட்சியாற் காண முடியாது. காணும் பக் குவம் (FIT Est J 600TLDT 60T எங்களுக்கில்லை. பக்குவமுள்ளவர்கள் கண்டுசொல்லி
யுள்ளார்கள். அவர்கள் சொல்வதை நாம் அநுமானித்து நம்புவதற்குரிய ஏதுக்கள் நடைமுறையில் இருக்கின்றன. இறந்தவர் உயிர்விடும்போது கிடந்த இடத்தில் அன்று தொடக்கம் இளநீர், அல்லது தண்ணிர்ச் செம்பு வைப்பதுண்டு. ‘எட்டு’ என்ற வைபவத்திலன்று அவர் விரும்பியருந்திவந்த சகல உணவுப் பண்டங்களும் படைப்பதுண்டு. அங்கே பாடல் படிப்புகள் முடிந்தபின், படைத்தவற்றிற் சிறிது சிறிது எடுத்து முகட்டைநோக்கிக் காட்டுவதுண்டு. இவையெல்லாம் இறந்தவர் தனது உடம்பு எரிந்தபின்னுங் கூட உடல் இருந்த சூழலில் இருக்கிறார் என்பதை அறிவிக்கும் ஏதுக்களாகும்.
அங்ங்ணமாயின், அவர் சுவர்க்க நரகம் போவரென்றல்லவோ முதலிற் சொல்லப்பட்டது. இப்போ, இங்கேதான் இருக்கிறார் என்பது அதற்கு மாறுபாடாயிருக்கிறதே! அதற்கு இது மாறுபடாது. எங்ங்னமெனில், இப்போ சொல்லப்படுகிற இந்தத் தொடர்பு முற்றாக நீக்கப்பட்டதன் மேல்தான் அவர் சுவர்க்க நரகங்களிற் செல்வர். அந்தியேட்டியில்தான் அத்தொடர்பு முற்றாக நீக்கப்படும்.
அந்தியேட்டியில் தான் அத்தொடர்பு என்பது எப்படி?
அந்தியேட்டிக் கிரியையை அவதானிப்பதால் அது புலனாகும். அந்தியேட்டிக் கிரியைக்கு அமைக்கும் மாக்கோடிட்ட மண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் ஐந்துநிறமாக்கள் சதுரவடிவாகப் பரப்பப்பட்டிருக்குமே! அதில் ஒவ்வொரு நிறமும் பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றைக் குறிக்கும். பஞ்ச பூதங்களால் அமைந்தது அவர்
53

Page 31
14.
15.
16.
17.
உடம்பு. பங்ச பூதங்கள் மூலமாகத்தான் அவர் உடம்பில் தொடர்புற்றிருந்தார் என்ற உண்மையின் அடிப்படையில், மாவடிவான சதுரங்களில் பஞ்ச பூதங்களைப் பொருத்தி அவ்வப் பூதங்களுக்குரிய தெய்வங்களைப் பூசித்து அவற்றின் கருணையால் அவருக்கு அப்பூதங்களோடு இருந்த தொடர்புகளை நீக்கிவிடுவது அக்கிரியையின் விளக்கமாகும்.
அந்தியேட்டியிலும் தர்ப்பையில் ஆளுருவஞ் செய்து குளிப்பாட்டி, பொற்சுண்ணமிடித்துச் சுடுகிறார்களே அது ஏன்? அதுவும் அந்தியேட்டிவரை உயிருக்கு உடல் தொடர்பு இருக்கிறதென்பதற்கான மற்றொரு அறிகுறிதான்.
சிலருக்கு மட்டும் பிரேதக்கிரியையோடே அந்தியேட்டியும் செய்கிறார்கள். அது ஏன்? அதையும் அறியத்தான் வேண்டும். சாதாரணமாக நம்மவரைப் போலல்லாது சிலர் விசேஷமான தீவுை, ஆசாரம், ஒழுக்கம், சாதனை, சிவபூசை ஒழுங்கு உள்ளவர்களாயிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு விசேட பக்குவம் இருக்கிறது. அந்தவாய்ப்பினால் அவர்கள் இறந்த உடனேயே தேகத்தொடர்பை நீக்கிவிடக்கூடிய தகுதியும் இருக்கிறது. அதனால்தான் அப்படி நிகழ்கிறது.
அ.திருக்க பிரேதக் கிரியையிலும் அந்தியேட்டியிலும் பொற்சுண்ணமிடிக்கிறார்களே அது எதற்காக? அதுவும் அவர் உடல் தொடர்புள்ளவராயிருத்தலிற் சம்பந்தப்படும் அவருடைய தநு, கரணம், புவனம், போகம் எல்லாவற்றையும் இடித்து நொறுக்கி இல்லாமற் செய்தல் என்ற கருத்தில் தான் செய்யப்படுகின்றது.
பொற் சுண்ணமிடிக்கையில் திருவாசகத்தில் இருக்கும் திருப்பொற்சுண்ணம் பதிகமும் படிக்கிறார்களே! அது ஏன்?
பொற்சுண்ணமிடித்தலினால் இறந்தவருடைய தேகத்தொடர்பு நீக்கப்பட அவர் சிவலோகஞ் சேரத் தகுதியாகிறார். அப்படி அவர் சிவலோகஞ் சேரும் பட்சத்தில் அவருக்கு அங்கு வரவேற்பு நிகழும்.
54

18.
19.
அந்நிகழ்ச்சியைப் பிரதிபலிக்கும் ஒசைப் பொலிவும் பொருள் விளக்கமும் திருப்பொற்சுண்ணப் பதிகப் பாடல்களில் உண்டு. அதனாலேயே பொற்சுண்ணமிடிக்கும் நிகழ்ச்சியோடு இதுவும் தொடர்புபட்டிருக்கின்றது. உண்மையில் சிவலோகஞ் சேருந் தகுதியுள்ளவர் விஷயத்தில் அது உண்மையாய் முடியும். மற்றவர் விஷயத்தில் உபசாரமாகும். என்றாலும் பரவாயில்லை. ஏனெனில், இவர்களும் எப்போவெனினும் தமக்குரிய காலத்திற் சிவலோகமடைய வேண்டியவர்களே. அது நியதமான உண்மை நியதமான உண்மையை உபசாரமாகக் கையாளுவதிற் பழுதில்லை அது திருத்தத்துக்குச் சிறந்த வழி என்பது சைவ விளக்க நிலை.
அந்தியேஷ்டி முடிவில் வீட்டுக்கிரியை செய்வதேன்? அந்தியேஷ்டி முடிவில் இறந்தவரது வீட்டில், நக்னதானம், ஏகோத்திட்டம், தசதானம், சபிண்டீகரணம் முதலிய பல கிரியைகள் நிகழும். இவையெல்லாம் பொதுவில் வீட்டுக் கிரியைகள் எனப்படும். அந்தியேட்டியில் தேகத்தொடர்பு நீங்கப்பெற்றவர் தனக்குரிய சுவர்க்க, நரக கதிகளிற் செல்வார். அவ்வாறு செல்லும் அவர் பாதை தனிமையானது, இருளானது விக்கினங்களோடு கூடியது ஆதலால் அவ்வித கஷ்டங்களில் இருந்து அவருக்கு விமோசனமளிக்கும் நோக்கில் வீட்டுக் கிரியைகள் நிகழ்கின்றன. கிரியைகளில், குடை, செருப்பு, விளக்கு, செம்பு தண்ணிர் முதலிய எல்லாம் கொடுப்பது அவ்வசதிகள் வேண்டியிருக்கும் பாதையில் அவை அவருக்கு உதவட்டும் என்பதனால்தான். வீட்டுக்கிரியை அழைப்பிதழிற் சிலர் சபிண்டிக்கிரியை என்று மட்டுங் குறிக்கிறார்களே அது ஏன்? அது வேறொரு விசேஷத்தினாலுமல்ல, வீட்டுக் கிரியையின் பகுதிகள் என மேற்சொன்னவற்றிற் சபிண்டீகரணம் பிரதானமானது
என்பதனால்தான். எங்ங்னமெனில், இறந்தவர் மேற்குறித்த கஷ்ட
வழியெல்லாந் தாண்டிப் போய்த்தன் சுவர்க்க நரகப் பேறுகளைப் பெறுவதற்கு, முன் சொன்ன பிதிரர்களின் சகாயம் வேண்டும். அதற்காக அவர் பிதிரர்களோடு சேர்க்கப்பட வேண்டும். பிதிரர்களுக்கு அறிகுறியாக, மாவுடன் எள், அரிசி, தேன், சர்க்கரை தயிர் குழைத்துருட்டிய பிண்டங்களையிட்டு வைத்து அவற்றுக்
55

Page 32
20.
21.
கெதிர் இறந்தவர்க்கு அறிகுறியாக ஒரு பிண்டமிட்டு, கிரியை செய்பவர் எல்லோரையும் ஒருசேரப் பூசித்து எல்லோருக்கும் நைவேத்யம் கதலிபல தாம்பூலம் எல்லாம் சமர்ப்பித்துத் தூபதீபாராதனை செய்து முடிவில் இறந்தவரைக் குறிக்கும் பிண்டத்தை மற்றப் பிண்டங்களோடு ஒன்று சேர்த்தல் காரணமாக இது சபிண்டீகரணம் எனப்பெயர் பெற்றது.
அவ்வாறு பிண்டத்தாற் குறிக்கப்படும் பிதிரர் என்பார் யார்? அவர்களுக்கும் இறந்தவர்க்கும் உள்ள தொடர்பு யாது? பிதிரர் என்பார் படைப்புக் காலத்திற் சிவனால் படைக்கப்பட்ட ஒரு தேவசாதியார். இறந்தவர் நலன்களைக் கவனிக்கும் அலுவலர்களாகச் சிவனால் நியமிக்கப்பட்டவர்கள் அவர்கள். இறந்தவர் ஒரு ஆண் ஆனால் அவரது பிதாமகர் (பேரன்), பிதபிதாமகர் (பூட்டன்) என்றதற்குப் பொருந்தும் நிலைகளில் அவர்கள் இருப்பர். இறந்தவர் பெண்ணானால் அவரின் மாதா, மாதாமஹி (பேர்த்தி), பிரமாதாமஹி' என்ற முறைக்குப் பொருந்தும் நிலைகளில் இருப்பார்கள், அதாவது இறந்தவர் பேரில், அவரது தகப்பன், தாய், பேரன், பேர்த்தி, பூட்டன் பூட்டி என்போர்க்கிருக்கும் கரிசனைக்குச் சமானமான கரிசனையுள்ளவர்களாக அவர்கள் இருப்பார்கள். இறந்தவர் பேரில் அவர்களைக் குறித்துச் செய்யப்படும் எள்ளுந் தண்ணீருமிறைத்தற் (திலதர்ப்பணம்) கிரியையால் அவர்கள் திருப்தியுற்று இவரைக் குறித்துச் செய்யும் தானதருமப் பலன்களை அவர்கள் ஏற்று அவற்றின் மூலம் அவருக்கு நம்மை விளைவிப்பார்கள். அதேவேளை, கிரியை செய்பவர்மேல் அவர் தந்தை, தாய் முதலியோர் சொரியும் அன்பையும் ஆசியையும் இவர்கள் பெறவும் வகை செய்வார்கள்
அதனால் தான் ‘பிதிர்க்டன் பிரதான கடன்’ எனப்படுகிறது.
இப்படியான பரிவர்த்தனைகள் (கொடுக்கல் வாங்கல்) உண்மையென நம்பலாமா? இவற்றுக்கான தொடர்பு சாதனங்கள் எங்கே?
ஏன் நம்பக் கூடாது? சந்திர மண்டலத்துக்கு ஏதும் அனுப்பினாற் போய்ச் சேரும் என்று இப்போ சில வருடங்களுக்குமுன் யாருமே நம்பியதில்லை. இப்போ நம்புகிறார்கள். உண்மையில் பூமிக்கும்
56

சந்திரனுக்குமிடையில் மெயில் வண்டியோ, தந்திக்கும்பியோா ஒரு சாதனமுமில்லை. ஆனால் அனுப்பும் பொருள் போய்ச்சேர விஞ்ஞானத்தில் தொடர்பு சாதனம் இருக்கிறது. இச்சாதனத்தை மனிதன் இப்போதான் கண்டறிந்தான் என்பதேயன்றி இதற்குமுன் அதற்கு வழி இருந்ததில்லை என்பதற்கில்லை. அந்த அமைப்பை ஏற்படுத்தி வைத்த சிவன் மேற்குறித்த பிதிர்களுக்கும், பூமியிலுள்ளார்க்கும் இடையில் அப்படியொரு தொடர்புக்கான சாதனங்களை அமைத்து வைத்திருந்திருக்க மாட்டார் என்பதற்கு ஆதாரமில்லை. ஆனால், கடவுள் சம்பந்தப்பட்ட தொடர்பு சாதனங்கள் அருவமாயிருந்தே தொழில் செய்யும் மனிதன் சம்பந்தப்பட்டவை தான் உருவமாயிருக்க வேண்டிய நிர்ப்பந்தமுண்டு. எனில், சந்திர மண்டலத் தொடர்பு சாதனம் போலப் பிதிர்மண்டல தொடர்பு சாதனமும் ஒரு காலத்தில் வரலாமோ எனில் ஆகாது. காரணம் என்னெனில், நமது சூழலாகிய பஞ்சபூதப் பிராந்தியத்துக்குட்பட்ட அளவில்தான் உருவ அமைப்பு வாய்க்கும். அதற்கு அப்பாலான பிதிர் லோகம் முதலியவற்றுக்கு அது வாய்க்காது. தத்துவ இயல்பின்படி அது என்றும் அருவமாயேயிருக்கும். ஆனால் நம்பலாம்.
. இப் பரிவர்த்தனையில் புரோகிதராய் இருப்பவரின் பங்கு யாது?
கிரியை செய்பவருக்கும் இறந்தவருக்கும் தொடர்பூடதிகாரிபோலப் பிதிரர் இருப்பது போல கிரியை செய்பவருக்கும் பிதிரர்க்கும் இடையில் தொடர்பூட்டதிகாரி போல இருப்பவர் புரோகிதர். புரோகிதராவார் நல்லறிவொழுக்கம், அக்கினிகாரியம், சிவபூசை நெறிகளும் உடையவராயிருந்தால் அவரிடத்தில் பிதிரர்கள் திருப்தியடைவார்கள். அத்தொடர்பில் இவர் ஏற்கும் தானம் முதலியவற்றிற் பல பிதிரர்களையடையும். அதற்குபகாரமாக இவர் தானங்களை ஏற்கும் போது “இதம் சிவாய நமம’. ‘இது சிவனுக்கு எனக்கல்ல’ என்று சொல்லி ஏற்க வேண்டிய விதியுண்டு. தானம் சற்பாத்திரமானவர்கள் கையில் கொடுக்கப்பட்டால் சிப்பியின் வாயில் விழுந்த நீர் முத்தாய் விளைவது போலப் பெரும்பயனாய் விளையும். அந்நிலையில்லாதபோது கமரிலுாற்றிய பால்போலாகும்.
57

Page 33
23. சிராத்தம் என்பது யாது?
அந்தியேட்டிக்குப் பின் இறந்தவரைக் குறித்து நிகழும் கிரியைகள் எல்லாம் பொதுவில் சிராத்தம் எனப்படும். சிரத்தையோடு செய்வது சிராத்தம் என்ற விளக்கத்தின் பேரில் அது அமையும். ‘சிரத்தை என்பது, சிரியை செய்பவர் இறந்தவர்மேற் கொள்ளும் அன்பு, அவரைக் குறித்துச் செய்யுஞ் செயல்களிற் காட்டும் நேர்மை, மேற்கொள்ளும் பிரயாசை எல்லாவற்றையும் அடக்கும் நம்மவர் சூழலில், ஆட்டைத்திதி, திவசம் இரண்டுந்தான் சிராத்தம் எனச் சிறப்பாகக் குறிக்கப்படுவதுண்டு. ‘சும்மா, ஐயருக்கரிசி கொடுப்பது’ என்ற பாவனை மட்டிலிருந்தால் அது சிராத்தமாகாது. தெய்வ சிந்தனையும் , தேவார திருவாசக பாராயணமும் , உபவாசமுமாயிருந்து உத்தமமான திரவியங்களைத் தேடிப் பக்திபூர்வமாகச் செய்தாற்றான் அது சிராத்தமென்ற பெயர்க்குப் பொருத்தமாகும்.
24. துடக்குக் காத்தல் என்ற ஒரு வழக்கம் இருக்கிறதே! அது என்ன?
அது எதற்காக? துடக்கு என்பது ஒருவர் தொடர்பு காரணமாக ஒருவர்க்கேற்படும் அசுகுசுப்பான அகப்புறச் சூழ்நிலைகளைக் குறிக்கும். விசேஷமாக பிறப்பு, இறப்பு, ருதுவாதல் காரணமாக நிகழும் அத்தகைய அகப்புறச் சூழ்நிலையை அது குறிப்பதுண்டு. அது தொடக்கு எனவும்படும். வடமொழியில் “தூய்மையின்மை’ என்ற கருத்தில் ஆசௌசம் எனப்படும். குறித்த நிகழ்ச்சிகள் காரணமாக சம்பந்தப்பட்டவர்களின் உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றச் சார்பான திரவங்கள், கிருமிகள் முதலியன அகச்சூழ்நிலையை மட்டுமன்றிப் புறச் சூழ்நிலையையும் பாதிப்பதுண்டு. இறப்பு விஷயத்தில் பிரத்தியேகமான மனத்திகில், அதிர்ச்சி, அமைதியின்மை, கவலைகள் மிகுந்து அதனால் தனிப்பட்டவரும், அவர் தொடர்புள்ளாரும், அவர் சூழலும் துடக்காகும் நிலை தொடர்ப்பு அடிப்படையில் பலரைத் தாக்கும் என்பது அநுபவ உண்மை. ஒருவர் சம்பந்தப்பட்ட துடக்கு இரத்தத்தொடர்பு அடிப்படையில் பரைத் தாக்கும் என்பது அநுபவ உண்மை. அவ்வகையான தொடக்குக்குட்பட்ட அகப்புறச் சூழ்நிலைகள் சாந்தம், பொறுமை, நேர்மை, திருப்தி முதலிய சத்துவ
S8

குணநிலைக்குப் பாதகமானவை. பெரும்பாலும் சோம்பல், கவலை, மந்தம் முதலிய தாமசகுண விருத்திகளே அச்சூழ்நிலையில் இருக்கும். அதனால், சத்துவ குணவிருத்தி நிலையில் செய்யப்பட வேண்டிய, தெய்வகைங்கரியங்கள், விரதங்கள், தானம், தவங்கள், கல்யாணம் போன்ற நன்மைக் காரியங்கள் ஆதியவற்றுக்கு அத்துடக்குக் காலம் விலக்காகும். புனித நிலையங்களிற் பிரவேசித்தற்கும் அது தடையாகும். இந்த ஒழுங்கை அநுசரித்தல் துடக்குக் காத்தல் எனப்படும் சைவப் பண்பாட்டில் பாரம்பரியமான ஒரு நடைமுறை விதி இதுவாகும்.
மேற்காட்டியவாறான அகப்புற அசுகுசுப்ப் சூழ்நிலைகள் மாறுவதற்குக் குறிக்கப்பட்ட ஒரு கால எல்லையுண்டு. அது இயற்கை நியதி. அவ்வெல்லையில் மந்திரக் கிரியை சம்பந்தம்ான ஒரு தூய்மை செய்தல் மூலம் அகப்புறச் சூழ்நிலையில் ஒரு திருப்தியும் பரிமளிப்பும் பது மலர்ச்சியும் ஏற்படுதல் சாத்யமாகும். அந்நோக்கில் நிகழும் மந்திரக் கிரியை துடக்குக் கழித்தல், ஆசௌச நீக்கம் எனப் பெயர் பெறும்.
நன்றி - அபரக் கிரியை விளக்கம் இலக்கிய கலாநிதி பண்டிதமணி மு. கந்தையா
59

Page 34
a * அமரர் சிதம்பரப்பிள்ளை இளையதம்பி
உதவிப் பொதுமுகாமையாளர்,பொதுச்சபை உறுப்பினர், மூன்னாள் கீபுக்கு: 莎
கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கம்} sy
கட்டைவேலி நைல்லியடி ப.நோ.கூ.ஈங்கத்தில் 40 வருடங்களுக்கு மேலாகப் பணிபாற்றிய பழம்பெரும் கூட்டுறவுப் பணியாளர், Uණ්röööÜ (Jගීඝ්‍රණtp:rté. பழகுவதில் இனியவறruப், பார்க்கும்போது கணிவுள்ளவரtய், ຮູບapປ86p ffirafupດແບໍ່ ຄອຍເບັດ. அனைவரோடும் அர்பாகப் பழகிப்பேசி கடமைதனை மூடித்து தனி காலத்தை இச்சங்கமதில் கழித்தவராய் சேவைக்காலக் முடிந்து ஓய்வுபெற்றுள்ள போலும் இச்சங்கத்தோடு பற்றுள்ளவராகத் திகழ்ந்த எம்இனிய பணியாளரும் சேவகியுet8ார் அண்ணாரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களுக்ளும் உற்றார் உறவினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். şi
பணிப்பாளர்கள்
பணியாளர்கள்
(II. FEL...&# Iš: 635 tù
সংস্কৃ9*****Kস্কৃ৮
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது அன்பு தெய்வங்களின் இறுதி கிரியைகளில் கலந்தும், பலவழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும், கடிதம் மூலமாகவும், தந்தி மூலமாகவும், தொலைபேசியிலும், துண்டுப்பிரசுரம் மூலமும் (கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ.ச) துயர்த்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்,
மற்றும் அந்தியேட்டி, சபண்டிகரண கிரியைகளில் கலந்து பங்களிப்பு செய்தவர்களுக்கும் இந் நினைவுமலரை வெளியிட உதவியோருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Page 35
1ņ919ĝo Loĝqjuć0ĝi运巨69写图ĝIlgismuleழ9ஐயமிlistos@gi 11?!!0ígyoழ9ழ99之凉号Ljótos@@ IJsstoß1ņ919II100919úeஒ98இயகித 1ņ909ơılığı1ņ9@@十之之十 $nılgı-ā函nu949顷ņ9$ĵo*:宦由白M強}Ilå?!!!? 19@gioso*••• §§İLGT-a 19@@@(fi) + umọ9ęı930! |goqji|ss] Qì + ĻĢIG? Ips@gogi目ழகிழவி ^{^ Ļ09||Úourng)ựrtoņ1988)II (1)}IIGILIO99),1909ų9Țıņğrıldsoo向Tatom19@9@ +++' + 1ņ9ÚTU9ọ1910099)?qırmų,09ơıúļiņoorlog? 1ņ9@gilsoloftog)Ļ9Ųstoņ19868)II (1@ஒளிம9ததாகு ^メ^^�
ம99யா9ரகுே + பிம9திேம9ழ9ழ பு99ழயினவி
ĢĒĢoúņ9 10909LITSIA@e) (oog)s@đī) Imɑsɑ9ọ990)
† * † * † * † |
ĢstoņIIII + qıúhọ9ọ919
Ilmı99091ņ9IITIŲ) IỆț¢fī)orgi@*forosiolog,ImQoqoQ980). Ģitoņus,
恶兴
^ * *!î——↓ |
11909ų9ţiņķęIIgs + fillsoņĝo
ரeரபிழeeெ

写9944பக்டீரே $1]gismus?1ņ9Ļ9úŲıIlőU9TŐīĞİGo
�之之 199f9fī100919úe 1999@úgí 199$ąjose Q9ę@uggo ++十十 Ģ109II1U9Lễụlo|?souro 199rīgÐ1091,49) ^^^�
ஒளிடி9ததற்கு+ JiqoĚmı9099 · @@ įúGIIG)
1919ĝo Loĝğı'étoffọ90īņsழிகிழேQ9[U9ედ9ტfoglaტįIIGI@stog பகிர்ge图图uqTதிய9மிகுதிழகிறீர்0909@@@@LễII(19ņ990Į0ņ191093)Roh பழிை00$IIIIGI-GImộ9£1,93(9)ĻĢsoQ9199) oặsoĮ0ņ1988)||ÍNo 181|sq|Isso Ļ9||solimo)ყ[U9Qu9ზმეJííIIGILIO99)|€ 1,909||9ņņģfilosoob?ш09лImɑ909ņ9ĝiĻĢIỆmı908€
十十十十十十十 19ÍTƯỢ91,99£ qimų,90īís||gnos soosiolonogae ystoņosoņıß §nsloĝĝsgHņĘąjąĮsqısmı909@ IGIQIIE\SITIÐIIGIQI09ņ990
!!M1—1† * , †!# -* 19091|noņ@e)|பிற9தீேழ9ழ9ழ96დ9IIGärU9ფე +主 ரeநஇழeeடு

Page 36


Page 37