கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புது வசந்தம் 1974-1999

Page 1


Page 2
‘புது வசந்தம்" புதுப்புத வசந்தி
ஒரு குடை உங்கள் தேவைகளைப்
வசந்தி சினிமா
வசந்தம் றெஸ் ரோறன்ஸ்
தனி, இருவர் அறைகள், குளிரூட்ட வரவேற்பு மண்டபம், கல்யாண சினிமா, தொலைபேசி, வாகனத்தf
தொலைபேசி : 024-22366 024-22607
‘புது வசந்தம்" புதுப்புத வசந்த
நம்பிக்கையுடன்
இட
176, பஸார் வீதி, ഖഖങ്ങിu.
 
 
 
 
 

நங்கள் காண வாழ்த்துகின்றோம்.
யின் கீழ்
பூர்த்தி செய்து கொள்ள
வசந்தி தொலைத்தொடர்பு நிலையம்
வசந்தம் திருமண மண்டபம்
ப்பட்ட அறைகள், உணவுச்சாலை, மண்டபம், விருந்து ஏற்பாடுகள், ப்பிட வசதி அனைத்தும் உண்டு.
இல. 40, கண்டி வீதி, ഖഖങ്ങിut.
ங்கள் காண வாழ்த்துகின்றோம்.
தங்க நகைகளுக்கு நாட வேண்டிய th

Page 3
தேசிய கலை இலக் வெள்ளி விழாச் சிற
வைகாசி
 
 

கியப் பேரவையின்
{1外4一1朔)

Page 4
6)ld
தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெள்ளி வி
வெளியீடு : தேசிய கலை இலக்கியப்
வைகாசி, 1999
அச்சு ஒன் லைன் பட்பிளிசேர்ஸ்
இலங்கை,
விலை : 2007
PUTHU VASA
Thesiya Kalai lakkiap Peravai Silver Jub
Published Thesiya Kalai Ilakkiap Pe
Sri Lanka May, 1999.
Printers : On-Line Publishers, Vavu
Sri Lanka.
Prize : 200/-
 
 

ச் சிறப்பிதழ் (1974 - 1999)
பேரவை,
வவுனியா
ப் பண்பாட்டுப் பேரவை ம், 44, 8 ஆம் மாடி, பர் மார்க்கற் கொம்ப்ளெக்ஸ், கொழும்பு - 11.
இலங்கை.
NTHAM
ilee Issue (1974 - 1999)
avai
iya.
p Panpaddup Peravai
44, 3rd Floor, .S.M. Complex, Colombo - 11 Sri Lanka.

Page 5
மக்கள் கலை இல
நினைவு
4) அ.ந.கந்தசாமி
4) பசுபதி
சி) முருகுகந்தராசா
4 சுபத்திரன்
A க.கைலாசபதி
சி) சி.வி.வேலுப்பிள்ளை
சி) கேடானியல்
4) செல்வபத்மநாத சி) வீ.எம். குகராஜ சி) ஜெயக்குமார் சி) கே.ஏ.சுப்பி சி) இ.சிவான
A) ஆன Ap dfh
2

ன்
2T
ரமணியம் னந்தன்
இளங்கீரன் ந்தன் ல்லையூர் செல்வராஜன் சி.பற்குணம்
பெனடிக்ற் பாலன் Zɔ சாருமதி
A) கோமல் சுவாமிநாதன்
2) கோ.கேசவன்

Page 6
இல, உள்ளடக்கம்
01. புதுவசந்த முரசம்
02. தே.க.இ.பேரவையும் 25-ஆண்டுகளும்
03. போரும் அமைதியும். ஒரு நவீனத்துவப் பி
04. சாதியமும் சமூக மாற்றமும்
05. நாடக அரங்கில் நான் கற்ற மூன்று பாடங்
06. அறுபதுகளிலான மலையகத் தமிழிலக்கிய
07. நஞ்சூட்டப்பட்ட எங்கள் தேசம்
08. மொழி பெயர்ப்புக் கவிதைகள்
09. இரு விமர்சன நூல்கள் ஒரு பார்வை
10. புதிதான புதிதான நிலையாகி
11. இலக்கிய வளர்ச்சியைத் துண்டல்
12. வேள்வி
13. ബ്
14. மலையகப் படைப்பிலக்கியத்தின் பயன்ப
15. தமிழில் தோன்றிய முதல் நாத்திக இதழ்
16. மாக்சிய விமர்சகள்களை எதிர்நோக்கும் ட
17. வேண்டும் நமக்கோர் முனைப்பு
18. சவால்
19. மறுப்புகள்
20. புதிதாய் ஒரு வையம் நாம் புனைவோம்
4 புது வசந்தம் -

புது வசந்தம்
உள்வோ
Liéatti
ன் வாசிப்பு
கள்
ஸ்தாபிதப் பிரயத்தனங்கள்
ாட்டுவாதம்
னிகள்

Page 7
21.
22.
24.
25.
26.
27.
28.
29.
31.
32.
33.
35.
36.
37.
38.
39.
41.
42.
43.
45.
புதிய கல்விக் கொள்கையும் சீர்திருத்தங்க
மலையக நாட்டாரியற் பண்புகள்
மெளனமான கலகம்
அந்தப் பெட்டைக் குட்டிகள்
கற்பனை அழகு
வன்னியாச்சி
முடியவில்லை
FLDITg5T60, 3FITU 51956i
இவர்களைப்போல் இன்னும், எத்தனை பேர்
வால்பிரி மொழிக் கவிதைகள்
தமிழில் இலக்கிய விமர்சனம் - ஒரு பார்ை
வன்னிப் பண்பாட்டுப் பகைப்புலத்தில் வன்
'கலிலியோ
எரிஷ ஃப்றீட் கவிதைகள் - தமிழில் மணி,
மலையகச் சிறுகதைகள்
வயல் ஓரக் கனவுகள்
அம்மிக்காக.
முதியமாடு வண்டில் இழுக்கிறது
மலையகக் கவிதைகள்
(36)jit
என் நாடக உலக அனுபவத் துளிகள்
சிதைந்த மனிதத்திலிருந்து சிந்துகின்ற கை
வாழ்க்கையின் எதிர் நீச்சல்
சில நினைவுகளும் சில குறிப்புக்களும்
நன்றி

நம்
ராதை
iରofit

Page 8
"புத வசந்தம் புதுப்புெ
ஜவுளிக் க
DeClers in textiles, For
கீர்த்திகாஸ்
No.34B, Tharmolingom Street, WowUniya.
 
 

லிவு பெற வாழ்த்துகிறோம்.
ரின் மனதைக் கவர்ந்த
HIEK
cy Goods & Toiloring
කීර්තිකාස්
| , 34බී. ධර්මලිංගම් වීදිය,
EE5cs)

Page 9
புது வசர்
இருபத வீறுநடைபோட் இனிப் புதிய நூ இந்த நூற்ற செழுமைகளா
உலை 1917ல் சோவி எழுச்சியும் வீழ் கிளர்ச்சியூட்ட மக்களிடமிரு பலபடிப்பினைக்
மக்கள் வெற்றி நிதர்சனமாக்கு
சோஷ களைந்தெறிந்து
முனைந்திருக்கி
g2 6D 60DB5 GF G
பண்பாட்டைச் நிகழ்த்துகிறது
வரலாறு எண்பதாம் ஆன நச்சுச் சூழல் தொடங்கியுள்ள
தகவல் பொய்யும் புை அமெரிக்க ே
நடைமுறை முகத்திரையை உலகுக்குக் க
 
 

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு
புதிய கலாசாரம்
த முரசம்
ாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில்
டு முன்னேறிய தேசிய கலை இலக்கியப் பேரவை
ாற்றாண்டை முகங்கொண்டு நிற்கிறது. கடந்து செல்லும், ாண்டு பல மக்கள் எழுச்சிகளின் அனுபவச்
ல் புடம்போட்டெடுக்கப்பட்டிருந்தது.
கக் குலுக்கிய மகத்தான ஒக்டோபர் புரட்சி வாயிலாக யத் யூனியன் சிருஷ்டிக்கப்பட்டது. சோவியத்தின் ச்சியும் என்ற மாபெரும் அனுபவக் கொந்தளிப்புகளால் ப்பட்டிருக்கிறது இந்த நூற்றாண்டு. சோவியத் ந்து நேரடியனுபவமாயும் எதிர்நிலையிலும் 5ளை உலக மக்கள் பெற்றுள்ளார்கள்.
எழுச்சிக் கொந்தளிப்புகள் பெற்றுத் தந்த வெற்றிகள் 5 அரசுகளை பலநாடுகளில் சிருஷ்ட்டிக்க உதவின. கியூபா, வியட்னாம், வடகொரியா போன்ற நாடுகள் களைத் தக்கவைத்து சோஷலிஸக் கட்டுமானத்தை வதற்காகச் சளைக்காமற் போராடிவருகின்றன.
லிஸத்தை உலகப்பரப்பிலிருந்து முற்றாகக் து ஒரேபூலோக சாம்ராச்சியம் என்ற கனவுலகைத் நின் கீழ் கட்டியெழுப்பிவிட முடியும் என்ற எண்ணத்தில் றது அமெரிக்க மேலாதிக்க வல்லுறு. அதன்பொருட்டு டுகாடாக்கியபடி; ஆயுதக் காடுகளாக்கியபடி: சிதைக்கும் மிருகங்களாக்கியபடி - வெறியாட்டு அமெரிக்க மேலாதிக்க வல்லுறு.
து வளைவு சுழிவுகளுடன் முன்னேறிச் செல்வது. ன்டுகளிலிருந்து அமெரிக்க எதேச்சாதிகாரம் விதைத்த இப்போதுதான் முழு அளவில் அம்பலமாகத் IՖl.
தொடர்பு வலைப்பின்னலைத் தனதாக அபகரித்துப் னசுருட்டுமான செய்திகளால் உலகை இனியும் மலாதிக்க வல்லூறுகளால் ஏமாற்ற முடியாது. அனுபவம் அதன் போலியான ஜனநாயக க் கிழித்துக் கொடுரமான யுத்த சன்னதக் கோலத்தை ாட்டி வருகிறது.
g வசந்தம் 7

Page 10
ஒவ்வெ தலைமையில் தூக்கிப்பிடிக்க சக்திகள் புை மனப்பாங்குக: LD51T6öb6ffL(pl வரலாற்றை ம வரலாற்றை சி
இலங்ை முதலாளிவர்க்க கொன்டது. பு தொடங்கியது.
இலங்கைக்கான
gių GFTiTl சில உரிமைக வர்க்கத்தின் சந்தர்ப்பவாதங் ஆழ்த்திவிட்டதி
எழுபத கொண்டிருந்த கிழடுதட்டிய் பே துடைத்தழித்து இலங்கையை
இனியுப் தேசிய முதல நிலை ஏற்படா6 மக்கள் இலக்கி
LI6) b போரிடும் உல
ஒருவர் பொதுவுடைடை
23.05.1999
 

ாரு நாட்டிலும் மக்கள் பாட்டாளி வர்க்கத் எழுச்சியுற்று சோஷலிஸ் சர்வதேசியத்தை இனி அதிக நாட்கள் செல்லா. மேலாதிக்கவாத ரயோடச்செய்துள்ள யுத்தவெறிகொண்ட குரோத ளிலிருந்து மக்கள் விடுதலைகொள்வர். சில ம் சூரர்களிடமும் சுயநலமிகளிடமும் சிக்கியுள்ள )க்கள் விரைவில் மீட்டெடுத்துத் தங்களுக்கான ருஷ்ட்டிப்பர்.
கயில் மக்கள் எழுச்சியின் தலைமையை தேசிய 5ம் அரை நூற்றாண்டின் முன் தனதாக ஆக்கிக் அதன் காரணமாய் பண்டாரநாயக்கா சகாப்தம் ஐம்பதுகளில் அந்த வர்க்கத்தின் பலமும் பலவீனமும் பிரத்தியேக வரலாற்றைத் தொடக்கி வைத்தது.
புப் பொருளாதாரம் முதல் உழைக்கும் மக்களுக்கான 5ள் வரை வென்றெடுத்தமை தேசிய முதலாளி பலமான பக்கத்தைக் காட்டியது. இனவாதச் கள் இன்றைய யுத்த இருளுக்குள் இலங்கையை ல் அந்த வர்க்கத்தின் பலவீனம் வெளிப்பட்டது.
ாம் ஆண்டுகளில் கூட சில பலமான அம்சங்களைக்
அந்த வர்க்கம் இன்று அறவே பலவீனப்பட்டுக் ாய்விட்டது. சுய பொருளாதாரத்தின் மிச்சசொச்சங்களை ப் பல்தேசியக் கம்பனிக்ளின் வேட்டைக்காடாக இன்று ஆக்கிவிட்டார்கள்.
D இலங்கை மக்களின் ஏதாயினும் ஒரு எழுச்சிக்கு rளிவர்க்கம் தலைமையேற்பது அர்த்தமற்றது. அந்த வண்ணம் மக்களை விழிப்புறத் தூண்ட வேண்டியது யெ வாதிகளது பணி. பாட்ாளிவர்க்கத் தலைமையில் திரட்டக் கலை இலக்கிய ஊடகங்கள் முழு அளவில் ட்டாக வேண்டும்.
துகளில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ால் 'வசந்தம் படைக்கப்பட்டது. இது புது வசந்தம்
சந்தம் போர்த்திய புத்துலகம் எழுக!
று குரோதங்களால் புரையோடிப் போயுள்ள கெட்ட கை வேரொடு சாய்ப்போம்.
$காக எல்லோரும், எல்லோர்க்குமாக ஒருவர் எனும் )ச் சமுதாய இலட்சிய உலகு எம்முன்னே.
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 11
தேசிய கலை இல 25 ஆன
1999ல் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது 25வது ஆண்டு நிறைவைப் பூர்த்தி செய்து கொள்கிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றிவந்த கலை இலக்கியப் பணிகள் காத்திரம் மிக்கவைகளாகும். இலக்கிய சவால்கள், நிதி நெருக்கடிகள் சமூகத்துயரங்கள், அரசியல் - யுத்த கொடுரங்கள், மனித அவலங்கள் - இழப்புக்கள் போன்றன மத்தியில் கடுமையான எதிர்நீச்சல் இட்டே தனது பணியினை முன்னெடுத்து வந்துள்ளது. அவ்வாறான பணிகளை வெற்றிகரமாக நடைமுறையாக்குவதற்கு அடிப்படையாக அமைந்த காரணங்கள் இரண்டு. ஒன்று தேசிய கலை இலக்கியப் பேரவை வகுத்துக் கொண்ட கலை இலக்கியக் கொள்கை. இரண்டாவது அத்தகைய கலை இலக்கியக் கொள்கையை அமைப்பு வாயிலாக முன்னெடுத்த நபர்களின் கூட்டு முயற்சியிலான அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பு அந்த உழைப்பானது சுயநலம், பொருள்தேடல், புகழ் நாட்டம், பட்டம் பதவி பெறல், பொன்னாடை சுமத்தல், தனிமனித வெற்றிப் புலம்பல் போன்றவற்றுக்கு அப்பால் தன்னடக்கமும் சமூக அக்கறையும் கொண்ட கனதிமிக்க கலை இலக்கியப் பங்களிப்பு என்பதாகவே அமைந்து வந்திருக்கிறது. மக்கள் இலக்கியக் கோட்பாட்டை உயர்த்தி நின்று தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றிவந்த பன்முகப் பணிகளும் பங்களிப்பும் இவ் இருபத்தி ஐந்தாவது ஆண்டு நிறைவின் போது நினைவு கூறப்படுதல் அவசியமாகின்றது.
ஒரு நாட்டில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு கலை இலக்கியக் கோட்பாடும் அதனை முன்னெடுக்கும் கலை இலக்கிய அமைப்பும் அந்த நாட்டின் அரசியல் பொருளாதார சமூக கலாச்சார வரலாற்று வளர்ச்சிக்கு அட்பாற்பட்டதாக அமைந்து கொள்வதில்லை. அவற்றை உள்வாங்கிக் கொண்டு தத்தமது நிலைக்களங்களுக்கு ஏற்ப கலை இலக்கிய அமைப்புக்களும் கலை இலக்கியவாதிகளும் செயலாற்றுவர். அத்தகைய கலை இலக்கிய நோக்கிலும் போக்கிலும் ஏதோ ஒரு வர்க்க முத்திரையானது ஆழப்பதிந்தே இருக்கும். இத்தகைய ஒரு வரலாற்று வளர்ச்சியின் தேவை

க்கியப் பேரவையும் சிருகளும்
காரணமாக தோற்றம் பெற்று வளர்ச்சியுற்றதே தேசிய
கலை இலக்கியப் பேரவையாகும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாற்பது ஐம்பதுகளில் பொதுவுடமை இயக்கம் தனது ஆழமான செல்வாக்கை செலுத்தி நின்றது. அதன் காரணமாக உருவாகிய இலக்கிய அமைப்பே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாகும். இவ் அமைப்பை கட்டியெழுப்பி அதற்குரிய முற்போக்கு கலை இலக்கிய கொள்கையினை வகுத்து முன்னெடுப்பதற்கு அவ் இயக்கத்தைச் சேர்ந்த கலை இலக்கிய வாதிகள் கடுமையாக உழைத்து வந்துள்ளார்கள். அத்தகைய முன்னோடிகளில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர் மலையகத்தைச் சேர்ந்த முதுபெரும் எழுத்தாளரான கே.கணேஷ் ஆவார். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்து இலக்கியப் பரப்பிலே குறிப்பிடக் கூடிய இலக்கியப் பணிபுரிந்து சமூக அக்கறையும் வர்க்க முனைப்பும் கொண்ட எழுத்தாளர்களை உருவாக்கி நின்றது. ஈழத்து இலக்கியத்தின் தனித்துவத்தை அடையாளம் காட்டி தேசிய இலக்கியத்தின் முக்கியத்துவத்தை அன்றைய சூழலில் வற்புறுத்தி விதேசிய இலக்கியச் சீரழிவை எதிர்ப்பதில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆற்றி நின்ற பணி வரலாற்று முக்கியத்துவம் கொண்டது என்பது மறுப்பதற்குரிய ஒன்றல்ல.
ஆனால் அதே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறுபதுகளின் முற்கூறுடன் திசைமாறிச் செல்ல ஆரம்பித்து தன்னை முற்று முழுதான சீரழிவுக்கு உள்ளாக்கிக் கொண்டது. இலங்கையின் பொதுவுட்மை இயக்கத்தில் அறுபதுகளின் ஆரம்பத்துடன் ஆழமான அரசியல் தத்துவார்த்த விவாதங்கள் இடம்பெற்றன. இறுதியில் பொதுவுடமை இயக்கம் 1964ல் பிளவடைந்து கொண்டது. மேற்படி பிளவும் அணி பிரிதலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இயங்காத நிலைக்கு உள்ளாக்கியது. தலைமைப் பொறுப்பில் இருந்த பிரேம்ஜி ஞானசுந்தரன் மற்றும் பேராசிரியர் கா.சிவத்தம்பி, மல்லிகை ஜீவா, அகஸ்தியர் போன்றோர் இடம்பெற்ற அரசியல் தத்துவார்த்தப் பிளவின் போது
வசந்தம் 9 )

Page 12
முற்று முழுதான சமாதானப் பாராளுமன்றப் பாதை என்னும் அரசியல் மார்க்கத்தில் நின்ற அணியின் பக்கம் தம்மை நிறுத்திக் கொண்டனர். அதேவேளை கவிஞர் பசுபதி, பேராசிரியர் க.கைலாசபதி, சுபைர் இளங்கீரன், என்.கே.இரகுநாதன், கேடானியல், எச்.எம்.பி.முகைதீன், சில்லையூர் செல்வராசன், செ.கணேசலிங்கன், நீவைப் பொன்னையன், கவிஞள் சுபத்திரன், இளைய பத்மநாதன், இ.சிவானந்தன், கே.தங்கவடிவேல், முருகையன் போன்ற கலை இலக்கிய வாதிகள் புரட்சிகர வர்க்கட் போராட்டத்தை வலியுறுத்திய அரசியல் மார்க்க அணியில் நின்று தத்தமது கலை இலக்கிய ஆக்க முயற்சிகளில் செயற்படாலாயினர்.
1964 - 1972 காலகட்டம் தேசிய சர்வதேசிய அளவில் சமூக முரண்பாடுகள் தோற்றுவித்த சகலவகை ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டப் புரட்சிகர எழுச்சிகளும் போராட்டங்களும் இடம்பெற்று வந்த ஒரு காலப் பகுதியாகும். இலங்கையின் பல பகுதிகளில் பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் வெடிப்பதற்கான சூழல்கள் தோன்றின. 1965ல் ஐக்கிய தேசியக் கட்சியானது தமிழரசு - தமிழ்க்காங்கிரஸ் கட்சிகளுடனும் ஏனைய சிங்கள இனவாதக் கட்சிகளையும் இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் வர்க்க ரீதியில் ஒன்றிணைத்து வலதுசாரி அரசாங்கம் ஒன்றினைத் தேசிய அரசாங்கம் என்னும் பெயரில் அமைத்துக் கொண்டது. அதேவேளை பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலை முற்று முழுதாக ஏற்றுக் கொண்ட இடதுசாரி சக்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து சந்தர்ப்பவாத அரசியலில் இறங்கி நின்றனர். ஆனால் புரட்சிகரப் போராட்டக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட சக்திகள் தோழர் நா.சண்முகதாசன் தலைமையில் பொதுவுடமைக் கட்சியின் வழிகாட்டலில் நடைமுறைப் போராட்டங்களின் ஊடாக தமது அரசியல், தத்துவார்த்தக் கொள்கைகளைப் பரீட்சார்த்தம் செய்யும் முயற்சிகளில் செயல்பட்டனர். இவை கலை இலக்கியப் பரப்பிலும் பிரதிபலித்து பல்வேறு விதமான தாக்கங்களை உருவாக்கின.
கலை இலக்கியத்துறையிலும் செய்யக் கூட்டிய முயற்சிகள் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. அதன் ஆரம்ப செயற்பாடாக 'வசந்தம் கலை இலக்கிய சஞ்சிகை வெளியிடும் முடிவு மேற்கொள்ளப்பட்டு 1964ம் ஆண்டின் பிற்கூறிலே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தது. இதனை முன்ன்று வெளிக்கொணர்வதில் அன்றைய இளம் எழுத்தாளர்களாக வளர் நிலையில் இருந்த செ.யோகநாதன், இ.செ.கந்தசாமி, நீர்வைப்
10 புது வசந்தம்

பொன்னையன், யோ.பெனடிக்ற்பாலன், ச.முத்துலிங்கம், செல்வபத்மநாதன், அகந்தசாமி போன்றோர் முன்னின்று செயல்பட்டனர். இவர்களது வெளியிட்டு முயற்சிக்கும் வசந்தத்தின் இலக்கியத் தரத்திற்கும் ஏற்கனவே பெயர் குறிப்பிட்ட நாடறிந்த எழுத்தாளர் கள் தமது ஆக்கங்களை வழங்கி பக்கபலமாக நின்றனர். வசந்தம் ஒரு வருடம் மட்டுமே தனது இலக்கியப் பணிஆற்றிய பின் நிதி வளம் இன்மையால் நின்று போனது. வசந்தம் சஞ்சிகை நின்று போனாலும் அது தோற்றுவித்த இலக்கிய தாகமும் காட்டிய திசை வழியும் எழுத்தாளர்களுக்கு ஒரு உந்து விசையாக அமைந்தது. ஆனால் எவ்வித கலை இலக்கிய அமைப்பும் தோற்றுவிக்கப்படாமலே கலை இலக்கிய முயற்சிகள் நாடு பூராகவும் உள்ள எழுத்தாளர்களால் முன்னெடுக்கப்பட்டன.
1964ம் ஆண்டைத் தொடர்ந்து வடக்கிலும் தெற்கிலும் மலையகத்திலும் அரசியல் தொழிற்சங்கப் போராட்டங்கள் வளர்ச்சியடைந்தன. தெற்கிலே தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் பல இடம்பெற்றன. அவை தனியே பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு மட்டுமன்றி அரசியல் கோரிக்கைகளையும் இணைத்து முன்னெடுத்தன.
வடக்கில் 1966ம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சி சாதிய-தீண்டாமை அமைப்புக்கு எதிரான புரட்சிகரட் போராட்டிக் களத்தை திறந்து வைத்து ஒரு வரலாற்றுத் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அத்தகைய போராட்டங்கள் பல்வேறு நிலைகளில் முன்னேறிச் சென்ற அதே காலப் பகுதியில் வடபகுதியில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் பல இடம்பெற்றன. அத்துடன் அரசாங்கத்தின் மக்கள் விரோதநிலைப்பாடுகளுக்கு எதிராகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இயக்கங்களும் முன்னெடுக்கப்பட்டன.
மலையகத்தில் என்றுமில்லாதவாறு தொழிற்சங்கப் போராட்டங்கள் வர்க்க உணர்வின் உச்ச நிலையில் பற்றிப்பரவிச் சென்றன. பல்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஆண்களும் பெண்களுமான தோட்டத் தொழிலாளர்கள் தமக்கே உரிய வர்க்க உணர்வுகளை வெளிப்படுத்தி நின்றனர்.
மேற்கூறிய இயக்கங்களும் போராட்டங்களும் மக்கள் இலக்கிய கோட்பாட்டு அடிப்படையில் சமூக மாற்றத்தை வேண்டி நின்ற 560) 6) இலக்கியவாதிகளுக்கு புதிய புதிய அனுபவங்களை வழங்கலாயின. அவற்றின் செழுமையான பின்புலத்தை வைத்து வளம்மிக்க ஆக்க

Page 13
இலக்கியங்கள் எழுதலாயினர். கவிதைகள், பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள் எழுத்துருவம் பெற்றன. அத்துடன் நாடக வடிவங்கள் புதிய புதிய பரிசோதனைகளில் வெற்றி பெற்றன.
எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும் நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும் குச்சுக் குடிசைக்குள்/ கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகின்றேன். பாளையைச் சீவிடும் கைகளைப் புதுப் பணி/ பார்த்துக் கிடக்குதடா என்று கவிஞர் சுபத்திரனும், ஆற்றல் மிகுகரத்தில் ஆயுதங்கள் ஏந்துவதே மாற்றத்திற்கான வழி மாற்றுவழி ஏதுமில்லை என கவிஞர் கணேசவேலும், மாவிட்டபுரத்திலோர் மந்தி நின்று மடைச் சேட்டை புரியுது வாசலில் குந்தி என கவிஞர் வில்வராசனும் பாடிய கவிதைகள் மக்களது போராட்ட களத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்தன. மேலும் மெளனகுரு, சில்லையூர் செய்வராசன், சாருமதி, சிவானந்தன், புதுவை இரத் தினதுரை, முருகையன், முருகுகந்தராசா, முருகு இரத்தினம், தில்லை முகிலன் போன்ற கவிஞர்களின் கவிதைகள் அக்காலகட்டத்தில் மக்களது வர்க்க உணர்வுகள் கவிதைகளாகவும் பாடல்களாகவும் பாடப்பட்டன. அவை அக்காலத்தில் போராட்டத்தி ஒன்று, போராட்டத் தீ இரண்டு என நூல் உருவம் பெற்றன. மலையகக் கவிஞர்கள் எம். முத்துவேல், பி.மரியதாஸ், ஆர்.இராமலிங்கம் போன்றவர்கள்
பொருள் ஆழம் மிக்க கவிதைகள் படைத்தனர்.
அவ்வாறே சிறுகதைகளை அதன் ஆழ்ந்த வடிவத்தில், என்.கே.இரகுநாதன், கே.டானியல், பெனடிக்ற்பாலன், செ.யோகநாதன், நா.யோகேந்திரநாதன், நந்தினிசேவியர், நா.தருமராஜா, போன்றோர் படைத்தனர். சிறுகதை ஆக்கத்துடன் நாவல்களும் எழுத்துருவம் பெற்றன. செ.கணேசலிங்கன், சுபைர் இளங்கீரன் பெனடிக்ற் பாலன் கே.டானியல் போன்றோர் அக்காலப் போராட்டச் சூழற் பின்னணி யில் நாவல்கள் படைத்தனர். சுபைர் இளங்கீரனின் "நீதியே நீ கேள்", கணேசலிங்கனின் "செவ்வானம்", மலையகப் பின்னணியில் பெனடிக்ற் பாலனின் "சொந்தக்காரன்” போன்றவை குறிப்பிடக் கூடியவையாகும் டானியல் எழுதிய பஞ்சமர் நாவல் கடுமையான விமர்சனங்களை எதிர்நோக்கிய அதேவேளை சாதிய ஒடுக்குமுறையின் பல்வேறு அம்சங்களை வெளிக் கொண்ந்தது. அதே போன்று குறுநாவல்களும் எழுதப்பட்டன.
மேற்கூறிய இலக்கிய ஆக்கங்கள் யாவும்
அக்காலத்தின் மக்களது வர்க்க சமூகப் பிரச்சினைகளையும் அவர்களது போராட்ட

நியாயங்களையும் ஆற்றல்களையும் பிரதிபலித்ததுடன் மக்கள் இலக்கியக் கூறுகளின் வலுவான அடிப்படை அம்சங்களையும் கொண்டிருந்தன. இவை அனைத்தும் உச்சமானவை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. சிகரங்களைத் தொட்டவை என்று கூறுவதோ அன்றி ஏனைய எழுத்தாளர்கள் மக்கள் இலக்கியக் கூறுகளைத் தொடவே இல்லை என மறுப்பதோ நமது நோக்கு அல்ல. அவை பற்றிய பன்முக நோக்கும் ஆய்வுகளும் விமர்சனங்களும் ஏற்கனவே வெளிவந்திருப்பினும் எதிர்காலத்திலும் அவை ஆக்கபூர்வமாக காணப்படல் வேண்டும்.
கவிதை சிறுகதை நாவல்கள் குறுநாவல்கள் போன்றே விமர்சனமும் கலை இலக்கியத்துறையின் கவனத்திற்குரிய ஒரு துறையாக அக்காலத்தில் செழுமை பெற்றது. விமர்சனத்துறையின் கவனத்தை ஈர்ப்பவராக கைலாசபதி செயல்பட்டார்.
அக் காலத்தில் எழுதப் பெற்று மேடை யேற்றப்பட்ட நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. மக்கள் கலை இலக்கிய கோட்பாட்டு வழி நின்று தரம் மிக்க நாடகங்களை உருவாக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணங் களக அவை விளங்கின. மெளனகுருவின் சங்காரம் முதல் நாடகமாகியது. மட்டக்களப்பு நாடகசபா தயாரித்து மெளனகுருவின் நெறியாள்கையில் 1969ம் ஆண்டில் முதல் தடவையாக மேடையேற்றப்பட்டது. வடமோடி தென்மோடிக் கூத்துக் கலையின் அடிப்படையில் அமைந்த இந் நாடகம் உருவம் உள்ளக்கம் இரண்டிலும் பெரு வரவேற்பைப் பெற்றது.
அடுத்து வடபகுதியில் என்.கே.இரகுநாதனால் எழுதப்பட்ட ‘கந்தன் கருணை நாடகப் பிரதி அம்பலத்தாடிகளினால் காத்தவராயன் கூத்துப் பாணியில் இளைய பத்தமநாதனின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்டது. 1969 - 74 வரையான காலப்பகுதியில் கந்தன் கருணை கொழும்பு உட்பட வடபகுகியில் ஐம்பது தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டது. கந்தன் கருணை நாடகத்தின் வெற்றி என்பது ஒரு தனிநபரின் வெற்றி என்பதாகாது. இளைய பத்மநாதன் சுட்டிக் காட்டியிருப்பது போல் அது ஒரு கூட்டு முயற்சியினது வெற்றியேயாகும். இந் நாடகம் சாதிய அமைப்பை அம்பலமாக்கி ஒடுக்கு முன்றக்கு எதிரான போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்தி நின்ற மக்கள் கலை வடிவமாகத் திகழ்ந்தமை
புது வசந்தம் 11

Page 14
குறிப்பிடக் கூடிய தொன்றாகும் அவ்வாறே மட்டுவில் மோகனதாஸ் கலைக்கழகம் தயாரித்த குடி நிலம், புதிய வாழ்வு, முருகையனின் கடூழியம், காலையடி மறுமலர்ச்சி மன்றம் தயாரித்த காகிதப் புலிகள், மற்றும் மாவை நித்தியானந்தனின் ஐயா லக்சன் கேட்கிறார் போன்ற நாடகங்கள் அக் காலத்தில் மக்கள் மத்தியில் ஆழமான கருத்துக்களை எடுத்துச் சென்றவையாகும். கந்தன் கருணை நாடகம் கொழும்பில் நடிகர் ஒன்றியத்திலும் வேறு பகுகளிலும் வெவ்வேறு நாடக மன்றங்கள் அமைப்புக்களிலும் புதிய வகை உத்தி * முறைகளைப் பயன்படுத்தி நடிக்கப் பெற்றது. இப் புதிய உத்திமுறைகளைப் பயன்படுத்தியதில் மெளனகுரு, இளைய பத்மநாதன், தாசீசியஸ், முருகையன் போன்றோர் தத்தமது ஆற்றல்களை ஏனையோருடன் இணைந்து வெளிப்படுத்தினர்.
சித்திரம், ஓவியம் என்பனவற்றிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக தீண் டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டிற்கான சித்திரக் கண்காட்சி குறிப்பிடத் தக்கதாகும். அன்று வரை சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான சாதிய - தீண்டாமைக் கொடுமைகளை உயிர்ப்புடன் சித்தரிக்கும் சித்திரங்கள் ஒவியங்கள் பலரிடமிருந்து பெறப்பட்டு கண்காட்சியாக நடாத்தப்பட்டது. இக் கண்காட்சி 1969ம் ஆண்டில் வடக்கின் பல பகுதிகளிலும் நடாத்தப்பட்டதுடன் கொழும்பில் பலரது கவனத்தை ஈர்த்தது. மறைந்த பேராசிரியர் சரச்சந்திரா இக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். பெரும் தொகையான தென் இலங்கை மக்கள் இதனைப் பார்வையிட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் கண்காட்சி முடிவடைய இருந்த தினத்தில் இருந்து மேலும் இரண்டு தினங்கள் நீடிக்க வேண்டியதாயிற்று. இக் கண்காட்சியை நடாத்துவதில் பேராசிரியர் ககைலாசபதி முன்னின்று உழைத்தார். இச் சித்திரக் கண்காட்சிக்கான சித்திரங்கள் வரைவதிலும் ஏனையோரிட்ம் பெறுவதிலும் என்.கே.இரகுநாதன், கே.தங்கவடிவேல் போன்றோர் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு 1964-72 வரையான கால கட்டத்தில் நடைபெற்ற அனைத்து மக்கள் போராட்டங்கள் அவற்றின் வளமான அனுபவங்கள் ஒரு பரந்த மக்கள் இலக்கிய கோட்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்தி செழுமையாக்கிக் கொண்டது. அதேவேளை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை மிக நெருக்கமாகச் சுற்றி நின்ற இலக்கியவாதிகளது அரசியல் நிலைப்பாடு மக்கள் இலக்கியக் கோட்பாட்டுக்கு எதிர்த்திசையிலேயே நின்று
12 புது வசந்தம்

கொண்டது. யாவற்றிலும் சமரச மார்க்கத்தைப் பின்பற்றிய இவர்கள் அரசியல் ரீதியிலும் இலக்கியத்தளத்திலும் வெகுஜன மார்க்கப்பாதைக்கு விரோதமாக செயல்பட்டு மக்கள் இலக்கியக் கோட்பாட்டிலிருந்து தூர விலகி நின்றனர். 1970ல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வரவும் 1971ன் ஏப்பிரல் கிளர்ச்சியும் அதனையொட்டிய அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளும் புரட்சிகர இயக்கத்தில் கடுமையான பின்னடைவு களை ஏற்படுத்தின. இத்தகைய தேக்க நிலையில் இருந்து மீண்டு கொள்ள இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றன. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தன்னை மீள் அமைத்துக் கொள்ள முயன்றது. எவ்வாறாயினும் நாட்டின் யதார்த்த சூழலுக்கு ஏற்ப கலை இலக்கியக் கோட்பாட்டை அதனால் நிலை நிறுத்த முடியவில்லை. ஆளும் நிலையில் இருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஆதரித்து நின்ற நிலைப் பாட்டிற்கு அப்பால் கலை இலக்கியத்துறையில் எதனையும் செய்ய அவர்களுக்க இயலவில்லை.
மேற்கூறப்பட்ட அரசயில் - கலை இலக்கிய வரலாற்றுப் பின்னணியில் கிடைக்கப் பெற்ற நடைமுறை அனுபவங்களும் பட்டறிவும் ஒரு கலை இலக் கிய அமைப்புக் கான தேவையை வலியுறுத்தியது. தேசிய ரீதியில் மக்கள் இலக்கியக் கோட்பாட்டை வரையறை செய்து அதனை கலை இலக்கிய அமைப்பு வாயிலாக முன்னெடுக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஆக்கபூர்வ கருத்துக்களும் ஆலோசனைகளும் பல்வேறு கலை இலக்கிய மட்டங்களில் பெறப்பட்டு அவை விவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. இவ் விவாதங்களில் நமது நாட்டின் சமூக அமைப்பும் அது எதிர்நோக்கி நிற்கும் அடிப்படை முரண்பாடு, மக்கள் என்போர் யார்? மக்கள் இலக்கியத்தின அடிப்படைகள் யாது? அவற்றை முன்னெடுக்கும் வழிவகைகள் எத்தகையவை? போன்றன விவாதிக்கப்பட்டன. இவ்விவாதங்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் பல்வேறு நிலைகளில் நிகழ்ந்தன. இதில் கே.ஏ.சுப்பிரமணியம், க.தணிகாசலம், க.கைலாசபதி, சி.கா.செந்திவேல், க.குணேந்திரராசா, என்.கே.இரகுநாதன், கி.சிவஞானம், இ.செல்வநாயகம், அ.இராஜலிங்கம், வை.வன்னியசிங்கம் இளைய-பத்மநாதன், க.சிவம், கேடானியல், நந்தினி சேவியர், சி.நவரத்தினம், த.குணரத்தினம், க.தர்மகுலசிங்கம், கே.இரத்தினம், கு.சிவராசா, முருகுகந்தராசா, குட்டிக்கிளி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இத்தகைய கூட்டான கலந்துரையாடல் மூலம் 1973ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 15
அமைப்பு ரீதியாகத் தோற்றுவிக்கப்பட்டது. அதன் இணைச் செயலாளர்களாக க.தணிகாசலம், க.குணேந்திரராசா ஆகியோரும் பொருளாளராக கி.சிவஞானமும் தெரிவு செய்யப்பட்டனர்.
தேசியக் கலை இலக்கியப் பேரவையின் தோற்றம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போதிலும் அதன் இலக்கியக் கோட்பாடும் கொள்கையும் நிறுவன அமைப்பும் முழு இலங்கை நாட்டையும் தழுவியதாகவே வகுக்கட்பட்டது. சமுதாயத்தை வெறுமனே வியாக்கியானம் செய்வதுமட்டுமன்றி அதனை மாற்றியமைப்பதே நமது குறிக்கோள் என்னும் மாக்சிச லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாட்டில் இருந்தே தேசிய கலை இலக்கியப் பேரவையின் கலை இலக்கியக் கொள்கை உருவாக்கப்பட்டது. சமூக மாற்றத்திற்கான கலை இலக்கியத்தை மக்களுடன் இணைக்கும் மக்கள் இலக்கியக் கோட்பாட்டை தேசிய கலை இலக்கியப் பேரவை தனது பயணத்திற்கான இலக்காக்கிக் கொண்டது. அதன் காரணமாக புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு. புதிய கலாசாரம் என்னும் இலக்கிய முழக்கம் முழு நாட்டிற்முரியதாக வகுக்கப்பட்டது. அதன் காரணமாகவே தேசிய கலை இலக்கியப் பேரவை கொழும்பிலும் மலையகத்திலும் ஏனைய பகுதிகளிலும் விரிவு பெற்று செயல்பட முடிந்தது.
தேசிய கலை இலக்கியப் பேரவை தனது முதற் செயற்பாடாக தாயகம் என்னும் பெயரிலான கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிடும் முடிவினை மேற்கொண்டது. அதன் முதல் இதழ் 1974ம் ஆண்டு தேசிய கலை இலக்கியப் பேரவையின் இணை அமைப்பாகத் தோற்றுவிக்கப்பட்ட அம் பலத்தாடிகள் நெல்லியடியில் நடாத்திய புதுவருடக் கலை விழாவின் போது வெளியிடப்பட்டது. தாயகத்தின் வெளியீட்டாளராகவும் பொறுப்பாசிரியராகவும் க.தணிகாசலம் பொறுப்பேற்றார். ஆசிரியர் குழுவும் செயல்பட்டது. தாயகம் சஞ்சிகையின் முதல் பிரதிய்ை பேராசிரியர் க.கைலாசபதி மேற்படி புதுவருடக் கலைவிழாவில் வெளியிட்டு வைத்து மிகமுக்கியமான இலக்கிய வழிகாட்டும் உரையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். தாயகம் சஞ்சிகை எட்டு இதழ்கள் வெளிவந்த நிலையில் சிறு சஞ்சிகைகள் எதிர்நோக்கும் வழமையான நிதி நெருக்கடி காரணமாக நின்று போனது. அதே வேளை எட்டு இதழ்களும் மிகவும் காத்திரமான படைப்புகளைத் தாங்கி வந்ததுடன் அதன் முதலாவது இதழில் வெளிவந்த ஆசிரியத் தலையங்கம் மக்கள் இலக்கியக் கோட்பாட்டையும் அதன் செல்நெறியினையும் கோடிட்டுக் காட்டியிருந்தமை

குறிப்பிடத்தக்கதாகும். இருந்த போதிலும் தேசியக் கலை இலக்கியப் பேரவை தனது நடைமுறை வேலைகளில் அவ்வப்போது தவறுகளுக்கும் உள்ளாக நேர்ந்தது. அது தாயகத்திலும் சில சந்தர்ப்பங்களில் பிரதிபலித்தண்டு. ஆனால் அத்தவறுகள் அடையாளம் காணப்பட்டதும் திருத்திக் கொள்ளப்பட்டமை குறிப்பிட வேண்டியதொன்றாகும்.
இச் சந்தர்ப்பத்தில் 1974ம் ஆண்டு யூன் மாதத்தில் திருகோணமலையில் இடம்பெற்ற எழுத்தாளர் மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. தேசிய கலை இலக்கியப் பேரவை உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து கலை இலக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து இவ் எழுத்தாளர் மாநாட்டினை நடாத்தின. இரண்டு நாட்கள் இடம்பெற்ற மேற்படி மாநாடு மக்கள் இலக்கிய கோட்பாட்டை வற்புறுத்தி உயர்த்தி நின்றதுடன் வர்க்க சமரசமும் சமூக மாற்றத்தை முன்னிறுத்தாத சந்தர்ப்பவாத நழுவல் இலக்கியப் போக்கை எதிர்த்து நின்றது. குறிப்பாக முற்போக்கு எழுத்தாள் சங்கம் தன்னை மீள் அமைப்பாக்கி ஐக்கிய முன்னணி ஆட்சியின் குடையின் கீழ் நிறுத்திக் கொள்ள எடுத்த முயற்சியினை இம் மாநாடு அம்பலமாக்கி சமூக மாற்றத்திற்கும் சமூக நீதிக்குமான போராட்ட இலக்கியப் பாதையில் அணிதிரளுமாறு எழுத்தாள்களுக்கு அறைகூவல் விடுத்தது. இம்மாநாட்டினை வெற்றிகரமாக நடாத்துவதில் சில்லையூர் செல்வராசன், என்.கே.இரகுநாதன், கே.டானியல், க.தணிகாசலம் போன்றோர் முக்கிய பங்குவகித்தனர்.
தாயகத்தின் வருகை தற்காலிகமாக நின்று போன போதிலும் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது பரந்த கலை இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தது. இலக்கியக் கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புக்கள் நாடக முயற்சிகள் நடாத்தப்பட்டன. புதுவருட, பொங்கல் விழாக்களில் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் சார்பான நிகழ்ச்சிகள் அரங்கேறின. இலக்கிய கருத்தரங்குடன் முக்கியமாக கவியரங்கு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமளவிற்கு கிராமங்களில் இடம் பெற்றன. புதுவை இரத் தினதுரை, கதனிகாசலம், முருகு கந்தராசா, க.தர்மகுலசிங்கம், நன்தினிசேவியர் போன்ற கவிஞர்கள் மேற்படி கவியரங்குகளை கட்டச் செய்தனர்.
கொழும்பில் 1975ல் தேசிய கலை இலக்கியப் பேரவையை உருவாக்கி வழி
al புது வசந்தம் 13

Page 16
நடத்துவதில் இளைய பத்மநாதன் முதன்மை யாளராக இருந்தார். அவருடன் சோ.தேவராஜா சிறிபாலன் போன்றோர் இணைந்து பல ஆக்க முயற்சிகளில் ஈடுபட்டனர். கவிதை, சிறுகதை பயிற்சி வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டன. நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடாத்தப்பட்டதுடன் கவிதைப் பட்டறையும் நடாத்தப்பட்டது.
அவ்வாறே மலையகத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை நஇரவீந்திரனின் வழிகாட்டலில் தனது செயற்பாட்டை ஆரம்பித்து முன்னெடுத்தது. அதன் ஆரம்ப நடவடிக்கைகளில் வி.விஜயரட்ணம் முக்கிய பங்கு வகித்தார். எஸ்.இராஜேந்திரன், இதம்பையா, க.சிங்கராயன் தேசியகலை இலக்கியப் பேரவையை மலையகத்தில் விரிவுபடுத்துவதில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர்.
எண்பதுகளின் ஆரம்பத்துடன் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது ஆறு வருடகால வேலை முறைகளின் அனுபவங்களுடன் புதிய உத்வேகத் துடன் காலடி எடுத்து வைத்துக் கொண்டது. அன்று வரை செய்து வந்த கலை இலக்கியப் பணிகளை விரிவுபடுத்திக் கொள்ளும் அதேவேளை தாயகம் சஞ்சிகையை மீளவும் வெளியிடவேண்டும் என்னும் திடசங்கற்பம் மேற்கொள்ளப்பட்டது. கலை இலக்கியப் பேரவையை மேலும் பரந்த தளத்தில் பல்வேறு கலை இலக்கிய முயற்சியாளர்கள், எழுத்தாளர்கள், வர்சகர்கள், மக்கள் என்போரிடையிடையே விரிவுபடுத்தி முன்னெடுக்க வேண்டும். என்னும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
1981ல் சீனாவின் மாபெரும் இலக்கிய கள்த்தாவும் மக்கள் இலக்கிய முன்னோடியுமான லூசூன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு தின விழாவினை பேராசரியர் கைலாசபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. சீன மக்களின் விடுதலைக்காக கலை இலக்கியத் துறையில் லூசூன் ஆற்றிய பன்முகப் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகள் இந் நூற்றாண்டு கருத்தரங்கில் படிக்கப்பட்டன. அவரது வழிப்போக்கன் எம்.ஏ.நு. மானின் மொழிபெயப்பில் வி.எம். குகராஜாவினால் நெறியாள்கை செய்யப்பட்டு அரகேறியது.
கொழும்பில் லூாசூன் நூற்றாண்டு விழாக்கூட்டம் கே.நடனசபாபதி தலைமையில் நடைபெற்றது. இதில் மறைந்த மக்கள் எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை கலந்து கொண்டு சிறப்பான இலக்கிய உரையினை வழங்கியமை குறிப்பிடத் தக்கதாகும்.
14 புது வசந்தம்

இதனைத் தொடர்ந்து 1982 இல் பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி மாதா மாதம் பாரதி ஆய்வரங்கை நடாத்தி அவ் ஆய்வுக் கட்டுரைகளை தாயகம் இதழ் ஒவ்வொன்றிலும் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. இவ் ஆய்வரங்கை நெறிப்படுத்தி தலைமை தாங்கி பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளைப் படிக்க வைப்பதில் கைலாசபதி தானே முன்னின்று செயற்பட்டார். அவரது வழிகாட்டலில் தாயகம் சஞ்சிகையில் வெளிவந்து கொண்டிருந்த ஆய்வரங்குக் கட்டுரைகள் பாரதி பன்முகப் பார்வை என்னும் தலைப்பில் நூல் உருவம் பெறுவதற்கு முன்பாகவே 1982ம் ஆண்டு டிசெம்பர் ஆறாம் திகதி கைலாசபதி நம்மிடையே இருந்து மறைந்து விட்டார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகியது. தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றல் மிகுந்த ஒரு வழி காட்டியைப் பறிகொடுக்க நேர்ந்தது.
கைலாஸ் மறைவுற்ற போதிலும் அவரது வழிகாட்டலில் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது மக்கள் இலக்கியக் கோட்பாட்டுப் பாதையில் புதிய உத்வேகத்துடன் கலை இலக்கியப் பயணத்தை தொடர்ந்தது. கைலாசின் நினைவை வருடாவருடம் நினைவு கூர்ந்து இலக்கியப் பணிகளைச் செழுமைப்படுத்திக் கொள்கிறது. அவரது மறைவின் பத்தாவது ஆண்டு நினைவின் போது கைலாஸ் ஆய்வரங்குத் தொடரில் படிக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து பன்முக ஆய்வில் கைலாசபதி என்னும் கட்டுரை நூலினை வெளியிட்டது.
ஈழத்து இலக்கியத்தின் தனித்துவத்தை அடையாளங் கண்டு அதற்கு பட்டை தீட்டி ஒளி வீசச் செய்ததுடன் மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்னெடுப்பதில் மாக்சிச லெனினிச அடிப்படையில் வழி காட்டிச் சென்றவர் கைலாசபதி ஆவார். அவரது திசை வழியில் பயணித்து பல்வேறு இலக்கிய சவால்களுக்கு முகம் கொடுத்து மக்கள் இலக்கியக் கோட்பாட்டை தேசிய கலை இலக்கியப் பேரவை பாதுகாத்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடக் கூடியதாகும். ஒரு புறத்தில் கைலாசபதியை எதிர்த்து நின்ற இலக்கிய வைரிகளும் மறுபுறத்தில் கைலாசபதியுடன் இலக்கியப் பயணம் செய்தவர்களும் மக்கள் இலக்கியக் கோட்பாட்டிற்கு எதிராக பின் நவீனத்துவ மலட்டுக் கோட்பாடுகளால் கணை தொடுத்துக் கொண்டனர். ஆனால் தேசிய கலை இலக்கியப் பேரவை அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு முறியடித்து மக்கள் இலக்கியக் கோட்பாட்டைப்

Page 17
பாதுகாத்து முன்னெடுத்து தனது பங்களிப்பை வழங்கி நிற்பதில் பெருமிதம் கொள்கின்றது.
எண்பதுகளின் ஆரம்பத்துடன் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு புதிய உத்வேகம் ஊட்டுவதில் க.தணிகாசலம், சோ.தேவராஜா, நஇரவீந்திரன், கே.நடனசபாபதி, சி.நவரத்தினம், இ.செல்வநாயகம், கா.மகாதேவன், அ.சந்திரகாசன், கா.கதிர்காமநாதன், வை.வன்னியசிங்கம், கா.பஞ்சலிங்கம், இ.தம்பையா, டொன் பொஸ்கோ, க.தயாளன், இ.இராஜேந்திரன், ந.ஆனந்தராசா, குமார் போன்றோர் முக்கிய பங்கினை வழங்கி நின்றனர். பேராசிரியர் சி.சிவசேகரம் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் மிக நெருங்கி ஒத்துழைக்கலாயினார். முருகையன் தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து தனது இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்தார். தாயகம் சஞ்சிகை மீண்டும் புதுப் பொலிவுடன் வெளிவரத் தொடங்கியது. அதன் ஆசிரியர் குழுவில் க.தணிகாசலம், கே.ஏ.சுப்பிரமணியம், நஇரவீந்திரன், முருகையன், சோ.தேவராஜா, ம.சண்முகலிங்கம் ஆகியோர் இடம்பெற்றனர்.
தாயகம் நாட்டின் பல்வேறு பிரதேங்களிலும் விற்பனை செய்யப்பட்டிது. கிராமங்கள் நகரங்கள் எங்கும் தேசிய கலை இலக்கிய உறுப்பினர்களால் மக்கள் மத்திக்கு எடுத்துச் சென்று விற்பனை யாக்கப்பட்டது. எண்பதுகளின் நடுக்கூறிலே தாயகம் மூவாயிரத்து ஐந்நூறு பிரதிகள் விற்பனையாகியமை குறிப்பிடத் தக்க அம்சமாகம். இது தேசிய கலை இலக்கியப் பேரவையின் மக்கள் இலக்கிய கோட்பாட்டின் சரியான நிலைப் பாட்டினை உறுதிப்படுத்தி நின்றது.
எண்பதுகளில் தேசிய கலை இலக்கியப் பேரவை யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் இலக்கியக் கருத்தரங்குகள், விமர்சன அரங்குகள், வெளியீட்டு அரங்குகள் என நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்கவையாகும். யாழ்ப்பாணத்திலும் மலைலயத்திலும் இசைப்பாடல்கள் ஆக்கம் பெற்றன. யாழ்ப்பாணத்தின் பிரபல இசையமைப்பாளர் எம்.கண்ணனின் இசையமைப்பில் தாயகத்தில் வெளி வந்த சிவசேகரம், முருகையன், சோ.ப.சன்மார்க்கா, தணிகையன், சோ.தேவராஜா ஆகியோரது கவிதைகள் இசை உருவம் பெற்றன. அவை எஸ்.ஜெயக் குமார், வீ. திவ் வியராஜா, எம்.ரி.கலாலக்ஷ்மி, பாலச்சந்திரன் ஆகியோர் கொண்ட இசைக் குழுவினால் பல்வேறு கிராமங்களிலும் நகரங்களிலும் பாடப்பட்டன. அவ்

இசைப் பாடல்களே புதுவரலாறும் நாமே படைப்போம் என்னும் இசை நாடாவாக 1986ன் சூழலில் சுய முயற்சியால் வெளியிடப்பட்டது. அதே போன்று பின் நாளில் குன்றத்துக் குமுறல் மலையக கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகள் தமிழ்நாட்டில் வீதிவ்வியராஜாவின் முயற்சிகயால் இசையமைக்கப்பட்டு குன்றத்து குமுறல் இசை நாடாவாக வெளிவந்தது.
தேசிய கலை இலக்கியப் பேரவை ஈழத்து இலக்கியப் பரப்பில் மிகவும் ஆழமாகப் பதித்துக்கொண்ட பணி, நூல் வெளியீட்டுப் பணியாகும். எண்பதுகளின் முற் பகுதியில் பாரதி பன்முகப் பார்வை என்னும் நூலுடன் ஆரம்பித்த இந்நூல் வெளியீட்டுப் பணியானது இன்று தேசிய கலை இலக்கியப் பேரவை வெள்ளி விழாக் காணும் இவ் வேளையில் எழுபத்தியேழு நூல்களை வெளியிட்ட தன்னடக்கப் பெருமையுடன் நிற்கிறது. தனி ஒரு இலக்கிய அமைப்பு ஈழத்தைப் பொறுத்த வரை இத்தன்ை தொகையான நூல்களை வெளியிட்டிருப்பது எல்லோரது கவனத்தையும் ஈர்க்கும் ஒன்றாகும். அதில் குறிப்பான சிறப்புத் தன்மைகள் அடங்கி நிற்பது முக்கியமானதாகும். நூல் வெளியீட்டில் தேசிய கலை இலக்கியப் பேரவை கவனத்திற்கு எடுத்த விடயங்கள் உண்டு. நூல் உருவம் பெறும் ஆக்கத்தின் தரம், ஆக்க இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியிருத்தல் அந் நாட்டின் சகல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அமைந்திருத்தல். அந்த வகையில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், விமர்சனங்கள், கட்டுரைகள் என்பன தேசிய கலை இலக்கியப் பேரவையால் நூல்களாக்கப்பட்டன. இதில் மற்றொரு சிறப்பு யாதெனில் தமிழ் நாட்டில் பெரும் பகுதியான நூல்கள் பதிப்பிக்கப்பட்டதினால் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் வாசகள்களிடையே ஈழத்து எழுத்துக்களும் எழுத்தாளர்களும் நன்கு அறிமுகமாவதற்கு வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டமையாகும். தேசிய கலை இலக்கியப் பேரவையின் இந்நூல் வெளியீட்டு முன்முயற்சிக்கு முன்னின்று பணியாற்றியதில் சோ.தேவராஜா அவர்களுக்கு பெரும் பங்குண்டு. அவ்வாறு தமிழ் நாட்டில் இந்நூல்களை சிறப்புடன் பதிப்பித்து துணை புரிந்ததில் சென்னை புக்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்பாலாஜி அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. இவர்களுக்கு தேசிய கலை இலக்கியப் பேரவை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்நூல்களை வெளியிடுவதோடு நின்று விடாது வாசகர்கள் மத்திக்கு அவற்றை எடுத்துச் செல்வதில் தமிழ்
புது வசந்தம் 15

Page 18
நூல் வெளியிட்டு விநியோக அமையம் ஒன்றினை நிறுவி அதன் ஊடாக பரந்த வாசகள் தளத்தினையும் விரிவாக்க முடிந்தது. தொடர்ந்து பல்வேறு வகைப்பட்ட நெருக்கடிகள் நிதிக்கடன் பளுக்கள் போன்றவற்றின் மத்தியிலும் தேசிய கலை இலக்ககியப் பேரவை மாதம் ஒரு நூல் வெளியிடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்திட்டத்திற்கு நூல் வெளியீட்டுக்கு உதவும் தமிழ்ப் புரவலர்கள் நிதிஉதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய கலை இலக்கியப் பேரவை தொண்ணுறுகளின் யுத்த சூழல், பொருளாதார நெருக்கடிகள் இடம்பெயர்வுகள் மத்தியிலும் தனது கலை இலக்கியப் பணியையும் பயணத்தையும் நிறுத்திவிடவில்லை. இக்கால கட்டத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை தமிழகத்து கலை இலக்கிய அறிஞர்கள் இருவரை இங்கு அழைத்து இலக்கிய நிகழ்ச்சிகளை பல்வேறு பிரதேசங்களில் நடாத்தியது. ஒருவர் பாரதியியல் ஆய்வாளரும் அறிஞருமான பெ.சு.மணி. மற்றையவர் மதிப்புக்குரிய மறைந்த கலை இலக்கிய அறிஞரான கோமல் சுவாமிநாதன் குறிப்பாக கோமல் சுவாமிநாதன் மிகவும் நெருக்கடியான சூழலிலும் இலங்கைக்கு வருகை தந்து பல பிரதேசங்களுக்கும் சென்றதுடன் யாழ்ப்பாணத்திற்கும் இலக்கியப் பயணம் செய்து இலக்கிய நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டமை தேசிய கலை இலக்கியப் பேரவையின் பணிகளுக்கு உரம் இடுவதாக அமைந்துகொண்டது. அத்துடன் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுபமங்கள சஞ்சிகையுடன் இணைந்து தேசிய கலை இலக்கியப் பேரவை ஒரு குறுநாவல் போட்டியையும் நடாத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று தேசிய கலை இலக்கியப் பேரவை யாழ்ப்பாணம் கொழும்பு மலையகம் வவுனியா ஆகிய பிரதேசங்களில் தனது பணியினை விரிவுபடுத்தி முன்னெடுத்து வருகின்றது. யுத்த சூழலிலும் பன்முக நெருக்கடிகளின் மத்தியிலும் வட பகுதியில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடு பல்வேறு நிலைகளில் முன்னெடுக்கப்படுகிறது. ஆய்வரங்குகள் விமர்சன அரங்குகள், நூல் வெளியீடு, நாடக முயற்சிகள், கவிதை, சிறுகதை பயிற்சி வகுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாயகம் நெருக்கடிகளின் ஊடாகவும் அங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. புதிய இளம் தலைமுறை எழுத்தாளர்களை கலை இலக்கிய ஆர்வலர்களை சமூக மாற்றத்திற்கான உணர்வுடன்
16 புது வசந்தம்

உருவாக்குவதில் கலை இலக்கியப் பேரவை அங்கு முனைப்படன் செயற்பட்டு வருகின்றது. அதன் செயற்பாடுகளுக்கு முருகையன்.ம.சண்முகலிங்கம், ஏ.ஜே.கனகரட்ண பேராசிரியர்.நா.சுப்பிரமணியன், பேராசிரியர்.அ.சண்முகதாஸ், போன்றோர் முதல் இளம் எழுத்தாளர்கள் கிராமிய ஆர்வலர்கள் வரை உறுதுணையாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மலையகத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் செய்ற்பாடு பரந்தளவில் காணப்படுகிறது. இசைப்பாடல் குழுக்கள், பட்டிமன்ற குழுக்கள் மக்கள் மத்தியில் பரந்த செல்வாக்கினை வகித்து வருகின்றன. ஆய்வரங்கு, விமர்சன அரங்குகள், தொடராக நடாத்தப்படுகின்றன. இளம் கவிஞர் இராகலைப் பன்னிரின் புதிய தலைமுறை கவிதைநூல் வெளியிடப்பட்டுள்ளது. இலக்கிய சிறு சஞ்சிகைக்கான முயற்சியில் தேசிய கலை இலக்கியப் பேரவை மலையகத்தில் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
கொழும்பில் பல்வேறு வகையான கலை இலக்கிய அரங்குகளையும் ஒன்று கூடல்களையும் தேசியக் கலை இலக்கியப் பேரவை தொடராக நடாத்தி வருகின்றது. அரங்கப் பண்பாட்டுப் பேரவையை நிறுவி நாடக அரங்கேற்ற முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வாறே வவுனியாவில் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது கலை இலக்கியப் பணிகளை விரிவுபடுத்தி வருகின்றது பல்வேறு அரங்குகளை நடாத்தியும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் பேரவை தனது செற்பாட்டைக் கொண்டுள்ளது. தேசிய கலை இலக்கியப் பேரவை தனது இருபத்திஐந்து வருட நிறைவினைப் பூர்த்தி செய்து நிற்கும் இன்றைய கால கட்டம் இருபதாம் நூற்றாண்டு முடிவுறப் போகும் காலப்பகுதியாகும். இருபத்தியோராம் நூற்றாண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் போது தேசிய கலை இலக்கியப் பேரவை இதுவரை பயணம் செய்து வந்த பாதையில் ஆற்றி வந்த பணியினை பல மடங்காக விரிவுபடுத்தி முன்னெடுக்க வேண்டியுள்ளது. இது நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரும் சமூக கடமையாகவும் உள்ளது. அதேவேளை கலை இலக்கியப் பரப்பில் பன்முக சவால்களுக்கு முகம் கொடுத்து முன் செல்ல வேண்டிய கட்டாயத் தேவையையும் தேசிய கலை இலக்கிய பேரவை எதிர்நோக்கி நிற்கிறது. ஒரு புறத்தில் நீடித்து வந்த நிலமானிய பழமைவாதப் பிற்போக்குச் சிந்தனைகளின் வழியாக வெளிவ்ரும் கலை இல்ககியக் கருத்துக்களுக்கும்

Page 19
கலாச்சார நடைமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. மறுபுறத்தில் பின் நவீனத்துவத்தின் பெயரால் மேற்குலகத்தில் இருந்து தமிழ்நாட்டின் ஊடாகப் பரப்பப்படும் மக்கள் விரோத நவீன கோட்பாடுகளுக்கு எதிராகக் கடும் சமர்புரிய வேண்டியும் உள்ளது. முன்னையதை எதிர்த்து சமரசமற்றுப் போராட வேண்டியது போன்றே புதிய தலை முறையினர் மத்தியில் பின்னையதன் நச்சுத்தனமான கருத்துக்களுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிராக ஈவிரக்கம் இன்றிப் போராடவும் வேண்டும்
இன்று பூகோள மயமாதல் என்னும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் கீழ் ஒவ்வொரு மூன்றாம் உலக நாடும் பொருளாதார அரசியல் சமூக கலாச்சாரத் துறைகளில் திட்டமிட்டே சீரழிக்கப்பட்டு நவகாலனியத்தால் கபளிகரம் செய்யப்பட்டு வருகிறது. நவகாலனியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி தமது கரங்களில் வைத்திருப்பதற்கேற்ற அரசியல் சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் இருத்திக் கொள்வதில் ஏகாதிபத்திய சக்திகள் முனைந்து செயல்படுகின்றனர். அவற்றுக்கு ஏற்றவாறான கலாச்சார சீரழிவுகளை மிகவும் நாசுக்காகவும் புதிய புதிய வழிமுறைகளின் மூலமும் கலை இலக்கியத்துறைகளின் ஊடாகப் புகுத்தியும் பரப்பியும் வருகின்றமை கவனத்திற். குரியவையாகும். பின் நவீனத்துவக் கோட்பாடுகள் பின்வரும் கருத்துக்களை பரப்பி வருவதைக் காண முடிகிறது. கலை இலக்கியப் படைப்புகளுக்கு சமூக முரண்பாடுகளை கூர்மையாகப் பார்க்கும் வர்க்கப் போராட்ட பார்வை தேவையற்றது. எழுத்தாளன் எப்படியும் இருக்கலாம் அவனுடைய எழுத்தை மட்டும் பார்த்தால் போதுமானது எழுத்தாளன் அல்ல பிரதி தான் முக்கியமானது. பிரதி உருவம் பெற்றதும் எழுத்தாளன் இறந்து விடுகிறான். மையக் கட்டவிழ்ப்பு, கட்டுடைப்பு, மறுவாசிப்பு போன்றவற்றின் மூலமும் தேசியம், பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றில் காணப்படும் குழப்ப கரமான கருத்துக்களை கலை இலக்கியத்தறையில் புகுத்தி நிலைப்படுத்திக் கொள்ளப்படுகின்றன. மேற் குறித்த கருத்துக் களைப் பரப்பும் ஒழுங்குபடுத்தப்பட்ட முகவர் நிலையங்களாக அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேற்குலகில் இருந்து பெறப்படும் தாராள நிதி வளத்தைக் கொண்டும் எளிதில் விலை போகக் கூடிய புத்திஜீவிகள் - கல்வியாளர்கள் எனப்படுவோர் மூலமாகவும் மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டிற்கு எதிராக பல்வேறு முனைகளில் அவை செயற்பட்டும் வருகின்றன.

ஆதலால் தேசிய கலை இலக்கியப் பேரவை தனக்கு முன்னால் உள்ள வரலாற்றுப் பணியினை மிகவும் நிதானமாகவும் ஊசலாட்டம் இன்றியும் கலை இலக்கிய விரசங்களுக்கோ அன்றி கலை இலக்கிய சந்தர்ப்பவாத விபச்சாரங்களுக்கோ உள்ளாகாது வர்க்க சமரசமற்ற பாதையில் தொடர்ந்தும் முன்செல்ல வேண்டி உள்ளது. மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டினை சமகாலச் சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு விரிவுபடுத்தி முன்னெடுத்தல் வேண்டும். நூறு மலர்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் முட்டிமோதட்டும் இலங்கை நாட்டினது தேசிய இனங்களின் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளின் தனித்துவங்களையும் தன்னடையாளங் களையும் அவற்றின் வரலாற்று ரீதியான மரபுகளில் இருந்து கண்டறிதல் மேலும் அவசியமாகின்றது. அவற்றை மாக்சிச கலை இலக்கியக் கண்ணோட்டத்தின் ஊடே பகுத்தறிந்து சமகால நவகாலனியச் சூழலுக்கு ஏற்ற மக்கள் கலை இலக்கியக் கோட்பாடாக மேலும் விரிவுபடுத்திக் கொள்ளும் திடசங்கற்பத்தினை எடுத்துக் கொள்கின்றது.
தேசிய*கலை இலக்கியப் பேரவை நாட்டின் முக்கிய பிரதேசங்களில் இருந்து ஆற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க கலை இலக்கியப் படைப்பாளிகளையும் ஆர்வலர்களையும் வாசகள்களையும் புதிய இரத்தமாகப் பெற்று புத்துணர்வுடன் திகழ்கின்றது. அடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்தினுள் பிரவேசிப்பதற்கு தகுந்ததோர் மக்கள் கலை இலக்கிய அமைப்பாக தன்னை மேலும் மறுவார்ட்புச் செய்து கொள்கிறது. இச் சந்தர்ப்பத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அதன் பணிகளுக்கும் தமது ஆற்றல்கள் அனைத்தையும் பங்களிப்புச் செய்த ஒவ்வொருவரையும் மிகுந்த நன்றிப் பெருக்கோடு அது நினைவு கூர்கின்றது. குறிப்பாக கே.ஏ.சுப்பிரமணியம், பேராசிரியர் க.கைலாசபதி ஆகியோர் உட்பட மறைந்த படைபாளிகள் உறுப்பினர்கள் ஆர்வலர்கள் அனைவரையும் உயர்ந்த கெளரவத்துடன் நினைவு கூர்கின்றது. தொடர்ந்தும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் கலை இலக்கியப் பணிக்கு தோள் கொடுத்தும் கை கொடுத்தும் பொருள் தந்தும் ஆதரவளித்தும் நிற்குமாறு மக்களையும் மக்கள் இலக்ககியத்தை நேசிக்கும் அனைவரையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றேர்ம்.
நன்றி

Page 20
போரும் அமைதியும்
ஒரு நவீனத்து
போரென்று ஒன்று இல்லாத போ அமைதியென ஒன்று பொருளற்று எனவே/ எனவோ! எனினும் எனும போர் மூலம் அமைதி எனவும் அமைதிக்கான போர் எனவும் போரும் அமைதியும் வாசிக்கப்படு மேலுங் கட்டுடைப்பின் ஈற்றில் அமைதியெனின் போரென்றும் போரெனின் அமைதியென்றும்
மீள வாசிக்கலாம்
மெய்யாக
இன்னும் எதையும் அதுவாக அன்றி வேறு எதுவாகவும்
வேண்டின் எவரும்
(எவரும் எனின் எவருமே 6 எவ்வாறும் வாசிக்கலாம்.
இதுவரை எவரும் போரையும் அமைதியையும் கட்டு அமைதி மூல்ம் போர் எனவும் போருக்கான அமைதி எனவும் மீள வாசித்ததில்லை.
(வாசித்து மீளவில்லை என வாசிப்புக்களின் வரையறையின்ன இனியும் அவ்வாறே இருக்க வே: ஆதலின்
இதையும் அமைதிக்/ போருக் + கு/ கும்/கு என்று எவ்வாறுங்
கொள்க/கொள்ளற்க.
*இலங்கையின் வடக்கில் அரசாங்கம் நடத்தும் ே

Gf. dff6a168aJ 35J
விடுகிறது. ாறு/ எவ்வாறும்
}கின்றன.
Z
ரிய/கே/ கோ/காக/ காகா//
பார் இவ்வாறே குறிக்கப்பட்டு வுருகிறது)

Page 21
பொதுவாக இந்தியச் சமூகமும் குறிப்பாகத் தமிழர் சமூகமும் சாதியத் தளையால் விலங்கிடப்பட்டுள்ளன. தொழில்நுட்பவிருத்தியும் முதலாளித்துவ மாற்றியமைத்தலும் சாதியத்தைத் தகர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டதுண்டு. முதலாளித்துவ முறைமைக்கான முழுமையான மாற்றம் நிகழவில்லையெனிலும், ஏற்பட்ட மாற்றத்துக்குரிய விகிதாசாரத்தில் சாதியம் தளர்ந்து போய்விடிவில்லை; மேலும் இறுக்கமடைவதாகவே எண்ணத்தோன்றுகிறது.
இந்த நிலையில் சோஷலிஸ் சமூகத்தில் கூட சாதியம் தொடரும் என்றே கொள்ள வேண்டியுள்ளது. அக்காரணத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் சோஷலிஸத்துக்காகப் போராடுவதைவிட சாதியத்துக்கெதிராகப் போராடுவதே முதன்மைத் தேன்)வ என தலித்தியவாதிகள் குறிப்பிடுவர். ஆதலால், தலித்துக்கள் தனித்தே போரிட வேண்டும் என்றும் வலியுறுத்துவர். வர்க்கங்களை இல்லாதொழிப்பதற்கான சோஷலிஸ்க் கட்டுமானத்துக்காகப் போராடுவதா சாதியத்துக்கெதிராகப் போராடுவதா இன்றைய முதன்மைப் பணி?
இரண்டுக் காகவும் போராடுவதே அவசியமானது. ஒன்றில்லாமல் மற்றதைச் சாத்தியமாக்கிவிட முடியாது. சோஷலிஸ் சமூகம் மக்களுக்கு விரிவுபடுத்தித்தரும் ஜனநாயக சூழலிலேயே சாதியத்துக்கெதிரான இறுதியான பேர்த்தொடுப்பு நிகழமுடியும் சாதியத்தைத் தகர்த்து முன்னேறவில்லையெனில் சோஷலிஸக் குறிக் கோள்களை வெற்றிகொண்டு முன்னெடுக்கவோ, இறுதியாக வர்க்கங்களை ஒழிக்கவோ முடியாமல் இருக்கும். அந்தவகையில் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாகியுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் (தலித்துக்கள்) தனித்துப் போராட வேண்டும் எனக்கூறுவது, இறுதியாய்வில் தலித் மக்களது விடுதலைக்கு எதிரான குரல்தான்.
வர்க்கங்கள் தோற்றம் பெறுமுன்னரே
சாதியம் தோன்றவில்லையா? ஆரியர்கள் இந்தியாவினுள் நுழையும் போதே சாதியத்துடன்
 

_நஇரவீந்திரன்
வரவில்லையா? அவ்வாறெனின் வர்கங்கள் ஒழிந்த பின்னும் சாதியம் நீடிக்கும் ஆபத்து இருக்கப் போகிறதல்லவா?
இவை வெறும் பொய்களே, ஆரியர்கள் இந்தியாவினுள் சாதியத்துடன் நுழையவில்லை. வர்ணக் கோட்பாட்டுடன் வந்தனர். ஆரியர்கள் கடந்துவந்த ஈரான் ஈராக் பிரதேசங்களில் சாதியத்தின் நிழல்கூட இல்லை. பிராமணர், சத்திரியர், வைசியர் என்ற வர்ணங்களை ஆரியர்கள் இந்தியாவினுள் 'நுழையுமுன்னரே பெற்றுக்கொண்டுவிட்டனர். 5}9یگ|l சாதியமாக பரிணமிக்காததால் ஈரான் - ஈராக் பகுதிகளில் வர்ணக் கோட்பாடும் செயலிழந்துபோயிற்று. இந்தியாவினுள் வர்ணக் கோட்பாடு சாதியமாகப் பரிணமித்தமையினாலேயே இன்றுவரை அது நீடித்து நிலவுகிறது. இவ்வாறு சாதியமாகப் பரிணமிப்பதற்கும் வர்க்கபேதங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது. அதாவது ஆரியரது வர்ணக் கோட்பாடும் வர்க்கங்களாய்ப் பிளவுபட்டிருந்த சிந்துவெளித் திராவிடர்களின் கருத்தியல்களும் கலந்ததனால் பிறந்ததே சாதியம். தனியே வர்ணக்கோட்பாடு கொண்டிருந்த ஈரான் - ஈராக் குடியிருப்புகளோ, வர்க்கபேதங்கண்ட கிரேக்க - ரோம் சமூகங்களே வந்தடையாத சாதியத்தை ஆரியத் - திராவிடக் கலப்புக் கோட்பாடு வந்தடைந்தது என்பதே உண்மை,
ஆரிய - திராவிட இனக்கலப்பு நிகழுமுன் உள்ள வர்ணக்கோட்பாட்டுக்கும், கலப்பின் பினனர் வர்ணக்கோட்பாடு சாதியமாகப் பரிணமித்தமைக்குமிடையே என்ன வேறு பாட்டைக் காண முடியும்?
ஆரியர்களின் தூய வர்ணக் கோட்பாடு தொழில் அடிப்படையிலானது. அவற்றிடையே எந்தவகையான ஏற்றத்தாழ்வும் இல்லை. ஒருவர் விரும்பிய வர்ணத்தைத் தெரிய முடியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் பிராமணராயும் இன்னொருவர் சத்திரியராயும் மற்றொருவர் வைசியராயும் ஆக முடியும் சலித்துப்போனால் இருந்த வர்ணத்திலிருந்து
வசந்தம் 19

Page 22
மாறிவிடவும் முடியும். வேள்வி வேட்பதில் நாட்டமுள்ளவர் பிராமணராவார்; யுத்த வலிமை கைவரப்பெற்றால் சத்திரியராவர்; வருவாய்த்துறையை விருத்திசெய்ய முடிந்தவர் வைசியராவார்.
சாதியமாகப் பரிணமித்த பின்னர் இந்த நெகிழ்வு தொடர முடியவில்லை. ஒரு குடும்பம் ஒரே வர்ணமாகவே இருக்க முடிந்தது. ஒரு வர்ணத்துக் குள் பல சாதிகள். அவை வம்சாவளியாய்த் தொடர்வது. ஒருவர் தொழிலிலோ பொருளாதார நிலையிலோ மாற்றங்கண்டாலும் சாதியும் வர்ணமும் மாறப்போவதில்லை.
இந்தியாவினுள் நுழையும் போது ஆரியர்கள் தமக்குள் சமத்துவமாய் இருந்த நிலையில் மூன்று வர்ணங்களாய் விளங்கினர்; உடல் உழைப்பு கீழானது என்ற கருத்தியல் தோன்றிய பிற்காலத்தில் உருவானது நான்காவது வர்ணமாகிய சூத்திரர். தென்னிந்தியத் திராவிடர்களை வர்ணக்கோட்பாடு சந்தித்தபோது சதுர்வேதியர் (நால்வர்ணப்பிராமணர்) வேளிர் குலத்தை சூத்திரர்களாய் வைத்துக்கொண்டார்கள். வேளாளரில் ஆள்வோரைச் சத்திரியராய் வரித்தபோதிலும் நிலத்தோடு பிணைந்திருந்தவர்களை சூத்திரர்களாயே வைக்கநேர்ந்தது.
ஆயினும் பத்தாம் நூற்றாண்டளவில் பெரும் நிலவுடைமையாளர்களான வேளாளர்கள் புராணப் புனைவுகளுடன் தமது வர்ணத்தை வைசியர் நிலைக்கு "உயர்த்த முடிந்தது. இவ்வாறு விதிவிலக்காக ஓரிரு வர்ண மாற்றம் நிகழினும் சாதி மாறி விடவில்லை. வர்ணத்தில் நெகிழ்வு சாத்தியமாயினும் சாதி மாறப்போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
வர்ணத்தில் நெகிழ்வு இருந்தபோதிலும் சாதி இறுக்க முடையதாக, மாறாமல் த்ொடர்ந்து வருவது எதனால்?
வர்ணம் தனது தோற்ற காலத்தில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருந்தது போல சாதியம் தொடங்கியபோது இருக்கவில்லை. இந்தியாவினுள்ளும் ஆரியர்கள் நீண்டகாலம் சமத்துவம் நிலவும் இனக்குழுக்குல வாழ்முறையுடனேயே இருந்தனர். அவர்கள் வென்றடக்கிய சிந்துவெளித் திராவிடர்களோ வர்க்கபேதம் பெற்றவர்கள். மத ரீதியான கருத்தியல் வளர்ச்சி கண்டவர்கள். மூர்த்தி - தலம் - தீர்த்தம் என்ற சமய விருத்தி பெற்றவர்கள் வெறும் இயற்கை வழிபாட்டு நிலையிலிருந்த
20 வசந்தம்

ஆரியர்களால் சிந்துவெளிப் பண்பாட்டைத் தோற்கடிக்கமுடியவில்லை. அதனைத் தமதாக வரித்தனர். அதன் பூசாரிகளுடன் கலப்புற்றுகப் புதிய பிராமணியத்தைத் தோற்றுவித்தனர். அதன் மூர்த்தியை, அதன் கோயிலில் தன் வேள்வியைக் குறுக்கித்தறித்து பூசையாக்கி வழிபட்டனர்.
இவ்வாறு கலப்படைந்த புதிய பிராமணர்கள், கலப்படைந்து வர்க்க சமூகமாக மாறிய புதிய சமூகத்தின் கருத்தியலாளர்களாயினர். சிந்து வெளிப்பண்பாட்டளவுக்கு இல்லையெனினும், பின்னர் ஏற்பட்ட, வரலாற்றின் முதல் பேரரசாகக் கொள்ளப்பட்ட, மகதப்பேரரசும் தூய ஆரியர்களது அல்ல. அரசுருவாக்கம் பெற்ற இக் கலப்பு இனம் புதிய பிரதேசங்களை வெற்றி கொண்டபோது அவற்றின் இனக்குழுக்குலவாழ்முறையின்
தமக்குள் இரத்த உறவுடையனவாய் இருப்பவை. இந்த இரத்த உறவுத் தூய்மை சாதியத்தன் அடிப்படையாக ஆகியது.
ஒருபுறம் தமது இரத்த உறவுத் தூய்மையைப் பேணிய படியே சாதியத் தளைக்குள் அடிமைப்பட்டன புது இனக் குழுக்கள். இந்த இரத்த உறவுத் துய்மை பேணலை இன்றைய கால வரை சாதிகளில் காணமுடியம். திருமண பந்தங்கள் தத்தமது குல எல்லைக்குள் முடக்கப்படுவதை விருப்போடு ஏற்பது இனக்குழு வாழ்முறையின் தொடர்ச்சியெனவே கருதமுடியும்.
தமிழில் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற இலட்சிய உத்வேகம் இனக்குழுக்குல வாழ்முறையைத் தகர்க்க முடியவில்லையா?
இல்லை. இனக்குழுக் குலவாழ் முறையைத் தகள்த்து அரசுருவாக்கம் பெற்று, ஊர் எல்லை பேரரசுத் தளத்தை நோக்கி முன்னேறியபோது இந்த இலட்சிய முழக்கம் எழுந்தது. அதற்குள் சாதியக் கருத்தியல் தமிழகத்தினுள் நுழைந்தது. அரசுருவாக்க மாற்றம் நிகழ்ந்தபோது நாலு நிலங்களினிடையே திருமணபந்தத் தடை இருக்கவில்லை. ஒரு நிலத்தவன் வேறு நிலத்தில் காதல் கொள்வதும் மண உறவு கொள்வதும் ஏற்கப்பட்ட பந்தம். பின்னால், சாதியம் வெற்றிகொண்ட போது இது தடைப்பட்டது.
மருதம் ஏனைய நிலங்களை வெற்றி
கொண்ட போது எழுந்த யாதும ஊரே என்பது சமத்துவ உணர்வுடன் கூடியதல்ல. ஆக்கிரமிப்புத்

Page 23
தன்மையது. ஆதலால் யாவரும் உறவினர் (கேளிர்) ஆகவில்லை. இனக்குழு இரத்த உறவு தகர்ந்து வடாமல் சாதிகளாய்க் கெட்டிதட்டிப் போனது. உலகம் பொதுவுடமை அமைப்பைக் காணும்போது தான், "யாதும் ஊரே" என்ற சமத்துவ உணர்வு சாத்த்தியமாக முடியும். அப்போது தான் இரத்த உறவுச் சாதியத் தளைகளிலிருந்தும் விடுதலை சித்திக்கும்.
சாதியத்தைத் தகர்க்கும் சமுக மாற்றப் புரட்சி சாதி தோன்றிய போதே வெடித்தெழாதது ஏன்? சாதயத்தைத் தகர்ப்பதற்கு எத்தகைய போராட்டங்கள் அவசியம்?
கிரேக்க - ரோம் சமுதாயங்களில் அடிமைப்புரட்சி வெடித்தெழுந்தது போல சாதியத்துக்கு எதிரான கூர்மையான வர்க்கப் போர் இங்கு நிகழவில்லை. அங்கே அடிமைகள் வேறு பகுதிகளிலிருந்து கைப்பற்றிக் கொண்டுவரப்பட்டவர்கள். தமது பண்பாட்டு வேர்களையும் குடும்ப வாழ்வையும் இழந்தவர்கள். அந்த வெறுப்போடு அடிமைத்தனததைத் தகர்க்கும் போர்ச்சுவாலை அவர்களுக்குள் கனன்றெரிய முடிந்தது. கூர்மைமிகு வர்க்கப்போர் வெடித்தெழ முடிந்தது.
இங்கே சாதியத்தளைக்குள் இறுகிப் போன இனக்குழுக் குலங்கள் தமது பண்பாடு - வழிபாடு - வாழ்முறை ஆகியவற்றை இழக்காத நிலையிலே சுரண்டப்பட்டனர். இரத்த உறவு புனிதமாக்கப்பட்டது. அடங்கியிருக்க ஏற்ற தளையாக சாதியம் இருந்தது. சிறுசிறு சலசலப் புகழ் எழுந்தபோதிலும் பெரும் போர்ச்சுவாலை எழவில்லை. பக்கத்துச் சாதியுடன் அந்தஸ்த்து உரிமைப்போர் இருந்த அளவுக்கு ஆள்வோர்க்கு எதிராகக் கூர்மைப்பட்ட வர்க்கப் போர் வெடிக்கவில்லை.
வணிகவர்க்க ஆதிக்கத்திலிருந்து நிலம் சார்ந்த அரசியலுக்கு மாறியது பக்திப்பேரியக்கம் எனும் பண்பாட்டு இயக்கத்தின் ஊடே சாத்தியமானது. தமிழர் வரலாற்றின் அறநெறிக்காலத்தல் வணிக வர்க்கம் அதிகாரம் பெற்றிருந்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது. பக்திப்பேரியக்கம் மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி எனும் அக்காலத்துக்குப் பெரும் புதுமையான போக்கை தோற்றுவித்தபோது நிலம் வழம்கொழிக்கும் வண்ணம் நீர்ப்பாசன - நிர்வாக முறைகளைக் காணமுடிந்தது; அதற்கான அரசியல் மாற்றம் விளையவே எழுந்தது. பக்திப் பேரியக்கம் எனும் பண்பாட்டெழுச்சி.

நெல் தந்தது நிலம் சார்ந்த ஆரசியல் அல்ல, எந்நாட்டவர்க்கும் இறையான சிவன் மற்றும் விஷ்ணு என்றபோது சைவமும் வைணவமும் தளைத்தோங்கின. "ஆவுரித்துத் துன்றுவலும் புலையரையும் ஐக்கியப்படுத்தி எழுந்த பக்திப் பேரியக்கத்தின் பேராலேயே பிராமணியம் தமிழகம் எங்கும் கோலோச்சும் நிலை தோன்றியது. சாதிய இறுக்கம் தமிழில் முழுவடிவம் பெற்றது.
'யாதும் ஊரே என்ற இலட்சிய வேகம் இரத்த உறவுத் தளையைத் தகள்க்கத் தவறியது போன்றே வர்க்க சமூக நியதிகாரணமாக பக்திப்பேரியக்கமும் மறுபக்கத் தீய அம்சத்தைப் பிணைத்துவிட்டது.
இன்று வாக்கப்போராட்ட மற்றும் பொதுவுடைமைக் கோட்பாடு எனும் சர்வதேசக் கருத்தியல் எம்மிடம் உண்டு. அதனுடன் பண்பாட்டுப் பேரியக்கம் என்ற தமிழர் அனுபவமும் எமக் குண்டு. அந்தவகையில் கூர்மையான வர்க்கப் போராட்டமும் பண்பாட்டுப் பேரியச் ம் இணைந் ன்னெடுக்கட் படுவதன் மூலமாகவே இறுதியில் சாதியத்தைத் தகள்க்க முடியும். இதன்போது பாட்டாளி வர்க்கத் தலைமையிலான மக்கள் ஜனநாயக சர்வாதிகார அரசு சாதியத்தைத் தகர்க்கும் பண்பாட்டுப் பேரியக்கத்துக்கான நெடுங்கதவை அகலத்திறக்கும்; வர்க்கங்களை ஒழிப்பதற்காகவும் சாதியத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்காகவும் பண்பாட்டுப் பேரியக்கங்கள் தொடர்ந்தும் எழும்.
அப்போது,
அப்போது மட்டுமே
யாதும் ஒளரே
யாவரும் கேளிர்

Page 24
‘புத வசந்தம்”
RANJANA COMMUNICATION
I.D.D, Local Calls, Fax Lami
Tel : 024-22522 : 024-22260 : 024-22802
Fax : 024-22470
Tlx : 23483 Antony CE
163, Mannar Road, Vavuniya.
"புத வசந்தம்” மலர்
 
 

றப்புற வாழ்த்தகிறோம்!
SHRS COMMUNICATION
ating And Photocopying Service.
Tel : 024-22410
: 024-22470
: 024-22515
: 024-22614
à : 024-22841
Fax : 9424-22470
Tlx : 23483Antony CE E mail : SHRIS (GDSLTLIK
186, Mannar Road, Vavuniya.
சிறப்புற வாழ்த்துகின்றோம்!
ஸ்ரோர்ஸ்
இல.05, பேரூந்து நிலையம், வவுனியா.

Page 25
bids நான் கற்ற மூ6
இக்கட்டுரையில் நாடக அரங்கு (theatre) பற்றிய என் சிந்தனையைத் தூண்டிய மூன்று நாடக அரங்காக்கங்கள் பற்றியும், அவற்றின் ஊடாக நான் கற்ற மூன்று பாடங்கள் (leSSons) பற்றியும் கூற விழைகிறேன். இங்கு அவற்றின் அரங்காக்கச் செயல்முறைகளோ அல்லது அங்கு நான் பெற்ற அனுபவங்களோ விவரிக்கப்படவில்லை. நாடகப் பனுவல்களும் (text) விளக்கிக் கூறப்படவில்லை. இது ஒரு வகையில் அரங்கின் அரசியல் (politics of theatre) (8 Joidsubgl.
முதலில், அம்பலத்தாடிகளின் ‘கந்தன் கருணை" (1970) நாடகத்திற்கும் எனக்கும் உள்ள உறவைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. இளைய பத்மநாதன் அதை எழுதினார், நெறியாள்கை செய்தார், பல இடங்களில் மேடையேற்றினார், என்று தவறுதலாகச் சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. நான் அதன் நாடக ஆசிரியன் இல்லை - என்கே.ரகுநாதன் அவர்களின் கந்தன் கருணை, வசன நடையில் அமைந்த அங்கத நாடகக் கையெழுத்துப் பிரதியை மூலமாகக் கொண்டு, பலர் கூட்டாகப் பல நாட்கள் உழைத்து, காத்தவராயன் பாணிக் கூத்தாக உருவாக்கினோம். நான் அதை (சரியான அர்த்தத்தில் கூறுவதாயின்) நெறியாள்கை செய்யவுமில்லை - அதில் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் தரமான நடிகள்கள், தாமாகவே இயங்கினார்கள். நான் அதை மேடையேற்றவும் இல்லை - முதல் மேடையேற்றம் அம்பலத்தாடிகள் முயற்சி. தொடர்ந்து பல இடங்களிலும் மேடையேற்றியது. தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம். மொத்தத்தில் கூறுவதானால், அது ஒரு கூட்டு முயற்சி. அதற்குப் பின்னால் ஒரு வலுவான இயக்கம் இருந்தது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக முன்நின்று உழைத்த சிலருள் நானும் ஒருவன் என்ற பெருமைக்கு உரியவன். (அம்பலத்தாடிகளின் “கந்தன் கருணை"1973இல்பிரசுரமானது. கூட்டு

அரங்கில் ன்று பாடங்கள்
இளைய பத்மநாதன்
முயற்சியின் தொடர்ச்சியாக அதன் வரலாறு தொகுக்கப்பட வேண்டும். அத்துடன் மறுபிரசுரம் செய்யப்பட வேண்டும் - அது வேறு விஷயம்)
இந்தப் பின்னணியில், கந்தன் கருணை நாடகத்துடன் ஏற்பட்ட உறவால் நான் பெற்ற அனுபவங்கள் பல, கசப்பானவையும் உள, பயனுள்ள பாடங்களும் பல. அவற்றுள் ஒரு பாடத்தைப் பற்றியே இங்கு கூற விழைகிறேன். மருதனாமடம் (இடம் சரியாக நினைவிலில்லை) சந்தை மைதானத்தில் அமைந்த நாடக அரங்கில் “கந்தன் கருணை மேடையேறுகிறது. நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் வழமையாகக் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் காத்தவராயன் கூத்திலிருந்து சில பாடல்களைப் பாடுவார். இது ஒரு வகையில், நாடகத்தின் முன் நிகழ்வாக (curtain - Taiser) அமையும். என்றும் பாடுகிறார். நான் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு பார்வையாளர். களுடன் இருக்கிறேன். எமக்கு முன்னாலிருந்த கிழவர், "என்ன இது கந்தன் கருணை எண்டாங்கள், காத்தவராயன் பாட்டுப் பாடுறாங்கள் கர்த்தவராயன் எங்கட கூத்து, இவையள் என்ன செய்யினம் பாப்ப்ம்", என்று சற்று உரக்கவே கூறுகிறார். அவர் குரலில் ஒஉரிமைக் கோரிக்கை இருந்ததை உணர முடிந்தது. நாடகம் ஆரம்பிக்கிறது. நாரதர் தோன்றி யாழ்ப்பாணத்திலுள்ள தீண்டாமைக் கொடுமை பற்றி விளக்கிப் பாடுகிறார். கிழவர் நிமிர்ந்து உட்காருகிறார். 'காத்தவராயன் கூத்தில எங்கட பிரச்சினை பேசுறாங்கள். கிழவர் நாடகத்தில் முழுமையாக மூழ்கிப் போகிறார். நாடகம் கூறும் செய்தியில் மட்டுமல்ல அதன் உருவத்திலும் அவர் தன்னை அடையாளம் காண்கிறார். 'எங்கட கூத்து, எங்கட பிரச்சினை' - எங்கள் வாழ்க்கை, எங்கள் அரங்கம் - எங்கள் உள்ளடக்கம், எங்கள் உருவம் ஒரு நாடகத்தின் முழுமையை இங்குதான் காண்கிறேன். பார்வையாளர்கள் நாடகத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல அதன் அரங்க வடிவத்திலும் தம்மை அடையாளம் கண்டுணர
வேண்டும்.

Page 26
உருவம் இல்லாமல் உள்ளடக்கம் இல்லை. உள்ளடக்கம் இல்லாமல் உருவம் இல்லை. நாம் சிந்திப்பதே உருவத்தில்தான். இது நியதி. இருந்தாலும் உள்ளடக்கத்தையும் உருவத்தையும் பிரித்துப் பார்க்க முடியும். அவ்வாறு பார்க்கும்போது இன்னொரு உருவத்திலோ, உள்ளடக்கத்திலோ வைத்துத்தான் பார்க்க வேண்டும். ஆனாலும், உள்ளடக்கம் தன்னியல்பாக ஒரு உருவத்தைக் கொள்வதில்லை. அதற்கும் வேறு புறக்காரணிகள் வேண்டும் கலைப்படைப்புகளைப் பொறுத்தவரை உள்ளடக்க உருவ இணைப்பைக் கொண்டுவரும் புறக்காரணி படைப்பாளியே. கலை வடிவ வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருந்தாலும், கரு உரு சேர்க்கை படைப்பாளியிடமே உண்டாகிறது. அது அவரவர் ஆற்றல், அறிவு, வசதி, தேவை, அரசியல் நிலைப்பாடு சம்பந்தப்பட்டது. நாடக அரங்கில் அரங்காக்கத்துக்கான வடிவத்தைத் தேர்வு செய்வதும் ஓர் அரசியல் நடவடிக்கை. ஆகவே உள்ளடக்கம் மட்டுமல்ல உருவமும் செய்தியாகும் இதை ‘கந்தன் கருணை அரங்காக்கத்தின் போது உணர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அவைக்காற்றும்போது அறிந்து கொண்டேன். இது உருவவாதம்அல்ல, உள்ளடக்கங்களை உருவப்படுத்துவதற்கான வாதம் கலைப் படைப்பில் உருவமும் அதனளவில் பெரும் பங்கு வகிக்கிறது. உருவ, உள்ளடக்க உறவு வேறு, உருவங்களுக்கிடையிலான உறவு வேறு. seljefu J60 segőBob LD (BD (political theatre) H(BLп(B கொண்டிருந்த என்னை, கந்தன் கருணை அனுபவம் 9).JI516,66 g).Jfu 1656)|D (theatre politics) F(BLILவைத்தது. இதைத் தொடர்ந்தே எமது நாடக மரபு பற்றிய எனது பார்வை விரிவடைந்தது. 'ஏகலைவன் போன்ற படைப்புகள் தொடர்ந்தன.
கந்தன்கருணை அரங்கேறி இருபது ஆண்டுகளின் பின், நாடக அரங்கின் அரசியலில் இரண்டாவது பிரதான பாடத்தைக் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது ‘சென்னை பல்கலை அரங்கம்’. தொடர்ச்சியாகச் சில நாடக அரங்கப் பட்டறைகள் நடத்திப் பெற்ற அனுபவத்தில் பயிற்சிமுகாம் ஒன்று நடாத்தினார்கள். அவர் களின் அரங்க நடவடிக்கைகளில், பயிற்றுனர்களில் ஒருவனாக நானும் பங்கு கொண்டேன். பயிற்சி முகாமின் பெறுபேறாக நாடகம் ஒன்றை அரங்கேற்ற விரும்பினார்கள். ஜேர்மன் நாடக ஆசான் Bertol Brecht 96) TE6ffair "The exception and the rule' என்னும் நாடகம் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதன் தமிழ் மொழி பெய்ர்ப்புகள் பல படிக்கப்பட்டன. அவை திருப்தியைத் தராததால், நாடக ஒத்திகைகளின்
24 வசந்தம்

போதே கூட்டாகத் தமிழாக்கம் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. பயிற்சி முகாமைத் தொடர்ந்து பல பட்டறைகளும், பயிற்சிகளும், நடந்தன. 'ஒரு பயணத்தின் கதை' உருவானது.
ஒரு பயணத்தின் கதை அரங்காக்கத்திற்கு அண்ணாவியம் செய்யும் வாய்ப்பை "சென்னை பல்கலை அரங்கம் எனக்குத் தந்தது. ஆனாலும், தமிழாக்கம் செய்ததிலிருந்து அரங்கேற்றம்வரை அது ஒரு கூட்டு முயற்சி. பட்டறைகளுக்கூடாக நாடகங்கள் உருவாவதற்கும், கூட்டு முயற்சிக்கும், இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இந்த நாடகத்தைப் பொறுத்தவரை, நான் முன் கூட்டியே திட்டமிட்டு ஒத்திகைகளை நடத்தவில்லை. இதற்கான ஆடுகளம் வட்டக்களரி எனத் தீர்மானித்ததிலிருந்து, பாத்திரப் பகிர்வுகள், அசைவுகள், நகர்வுகள், ஆடல், பாடல் யாவுமே நடகப் பயிற்சிக் களத்தில் கூட்டாக, சரியாகக் கூறுவதாயின், நடிகர்கள் பாத்திரங்களாக நிறுை எடுத்த முடிவுகள். 'ஒரு பயணத்தின் கதை அரங்காக்கத்தின்போது, என்னைப் பொறுத்தவரை நான் இருட்டிலேதான் நடந்துகொண்டிருந்தேன். ஆனால், குருட்டுப் போக்கில் அல்ல. நாடக அரங்கு பற்றி எனக்குள் ஒரு தேடல் இருந்தது. அதுதான் 'அடையாளத்தேடல்.
சொந்த நாட்டைவிட்டு வேறு நாட்டில் அகதியாகக் குடிபெயர்ந்த ஒருவர் முதலில் முகங் கொடுக்க வேண்டிய பிரச்சினை, பொருளாதாரம், மொழி, கலாச்சாரம், ஆகியவற்றிற்கு மேலாக அவருடைய அடையாளம் பற்றியதே. இதனை நான் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த புதிதில் (1985) வேலூர்த் தெருக்களில் உணர்ந்தேன். என் முகத்தைக் தொலைத்துவிட்டேன். என் அடையாளத்தைத் தொலைத்துவிட்டேன். என் நடை உடைகளைப் பார்த்து ஹிந்திக்காரனா என்று கேட்டார்கள். என் தமிழைக் கேட்டு மலையாளியா என்றார்கள். என் தோற்றமும் என்னை அடையாளம் காட்டவில்லை. என் மொழியும் என்னை இனம் காட்டவில்லை. என் குடும்பத்தினருக்கும், என் ஈழத்து நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் வேடிக்கை நிறைந்தவை. இது இந்தியாவிலுள்ள ஈழத் தமிழர் அனைவருக்கும் பொருந்தும், ஆனால், வேலூரை அண்டிய கிராமங்களில் தெருக்கூத்துகளைப் பார்த்தபோது, தொலைத்துவிட்ட ஒன்றைத் தேடிப் பெற்ற மனஅமைதி கிடைத்தது. கிராமத்துக் கலை வடிவங்களில் தமிழின அடையாளங்களைக் கண்டேன். அவைகளிலிருந்தே தமிழின அடையாளம் காட்டும் புதிய அரங்கு (new theatre) உருவாக வேண்டும் என்று எண்ணினேன். இன்றைய வரலாற்றுக் கால கட்டத்தில் தமிழின

Page 27
அடையாளத் தேடல் தவிர்க்க முடியாதது. அதுவும் அகதியாக அலையும் ஒருவரின் அடையாளத் தேடல் ஆத்மார்த்தமானது. நாடகருக்கு அது அரங்கிலும் தொடரும்.
‘ஒரு பயணத்தின் கதை’(1979) அரங்கேறியது. அது ஜேர்மன் நாடகம், ஆனால், அரங்கம் தமிழருடையது. நாங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தும் நாடகப் பாடங்களை எடுக்கத் தயங்கப் போவதில்லை. ஆனால் எதைச் செய்தாலும், எமக்குரிய மரபோடு வழங்கவே விரும்புகிறோம்’ என்ற அரங்கக் கோட்பாடு உருவானது. இந் நாடகத்தின் இசை வசந்தன் கூத்து மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டது. ஆடல் அசைவுகள் நாட்டுத்தெருக்கூத்துப் பாணிகளைப் பின்பற்றுகிறது. நடிப்பில் பராதீனம்(alienation) எமது பாரம்பரியத்திற்கு உரித்தானது. பல நடிகர்கள் ஒரே பாத்திரத்தை தாங்கி ஒரே நேரத்தில் அரங்கில் தோன்றி பங்கிட்டு வசனம் பேசி நடிப்பதும் எமது பாரம்பரியத்தில் உள்ளது. ஒரு பொருள் இன்னொன்றாகப் பாவனை செய்யப்படுகின்றது. ஒரு சால்வைத் துண்டு பெறும் பல கோலங்களை எமது கூத்துக்களில் இன்றும் காணலாம். இன்னும் கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், வாத்தியங்கள் எனக் கூறிக்கொண்டெ போகலாம். சுருங்கக் கூறின், 'ஒரு பயணத்தின் கதை'நாடக அரங்காக்கத்தின் அடிநாதம் தமிழர் பாரம்பரியங்களே. அடையாளத் தேடலில் ‘தீனிப் போர்’ போன்ற நாடக அரங்காக்கங்கள் தொடர்கின்றன. தமிழின அடையாளத் தேடலுடன் இந்தியாவை விட்டு வெளியேறுகிறேன். (1993)
அவுஸ்திரேலியாவில் எனது மூன்றாவது பிரதான பாடத்துக்கான கேள்வி எழுந்துள்ளது. Victoria University 96Ü Utʼ LÜu LJLç2ÜJLqéi536T60T (B.A.Hons.-Performance Studies) GFuj60p60Bf பாடத்திட்டத்தின் கீழ் ஓர் அரங்க நிகழ்வு (performance) உருவாக்கிக் காட்டவேண்டும். Inter - cultralismin performance 616ip3 j606ui isi) segi 506) மேற்கொண்டேன். பிரபல ஆங்கில நாடக நெறியாளர் Peter Brook அவர்களை ஆய்வுப் பொருளாகக் கொண்டேன். அவருடைய பல்லின நடிகர்களில் ஒருவர், யப்பான் நாட்டைச் சேர்ந்த Yoshi Oiyda 6T66L6 it. Peter Brook 96irds6ffsöT பிரசித்தி பெற்ற படைப்பாகிய "Mahabarata நாடகத்தைப் பார்த்தவர்கள் துரோணரை மறக்கமாட்டார்கள். அப்பேர்ட்பட்ட தரமான, பலரின் மதிப்பிற்குரிய நடிகராக இருந்தும் பரிஸ் நகரத் தெருக்களில் கேலிகளையும் கிண்டல்களையும் சந்திக்கவேண்டி இருந்தது. பல நல்ல நாடக

நண்பர்கள் மத்தியிலிருந்தும், அவர் தன்னை வெளியாளாகவே உணர்ந்தார். தன் அடி வேர்களைத் தேடிப் போகவே விரும்பினார். போகவும் செய்தார். தன்னுடைய நாடக அரங்கிற்கு மட்டுமல்ல, உலக நாடக அரங்கிற்கும் பல புதியனவற்றைத் தந்தார். அவரை இன்று என்னால், இரத்தமும் தசையுமாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
அவுஸ்திரேலியாவில் எனது பட்டப்படிப்பு, நான் பெற்ற அனுபவங்கள், என் கவனிப்புக்குள்ளானவை, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரங்க நிகழ்வை உருவாக்கினேன். 'Skin is Deep' (1996) 6T66B gebb 9JThis 585poils), L6mo Glg5(bě56ss60 ab60ön– 2b25 "China man'- யப்பானியர்களையும் அப்படித்தான் கேலி செய்வார்களாம். எம்மவரைப் பாக்கி’ என்பது போல - எனது படைப்பில் ஒரு கரிய உருவமாக மாறுகிறது. அந்தக் கரிய உருவம் வேறு யாருமல்ல நான் தான். கரிய உருவம் வெண் சூழலுடன் இணங்கிப் போவதற்காகப் பல பயனற்ற முயற்சிகளைச் செய்கிறது, தனது தொப்பூழ்க் கொடியையே அறுத்தெறிய முயல்கிறது. முடிவில் தன்னுள் மட்டுமல்ல, வெண்மைக்கு அடியிலும் பல வர்ணங்கள் இருப்பதை உணர் கிறது. தன்னைத்தானே ஏற்றுக்கொள்கிறது. தன் தொப்புள் கொடியை உயர்த்திப் பிடிக்கிறது.
எதற்காக இதைச் செய்தேனோ - Honours Project - அந்த அளவில் வெற்றி. யாருக்காக இதைச்செய்தேனோ - Examiners - அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் அரங்க நிகழ்வுகள் வெறும் வகுப்பறை நிகழ்வுகளல்லவே. சிலர், இதன் கதை என்ன என்று கேட்டார்கள். இவர்கள் மேடையைப் பார்த்தார்களே தவிர அரங்கைக் காணத்தவறிவிட்டார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஆனாலும், நான் அவர்களைக் குறை கூற மாட்டேன் நாடகம் பார்வைக்குரியதென அரங்கப் படைப்பாளி. களிலும் பலர்புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. நம்மில் பலர், நாடகம் பார்க்கப்போகின்றோம் என்று சும்மா ஒரு பழக்கத்தில் சொல்லுகின்றோமே தவிர, நாடகத்திலும் கதை கேட்கத்தான் போகின்றோம். இன்னும் நாடகம் பார்க்கப் பழகவில்லை. அதில் ஒரு அரங்கப் படைப்பாளி போடும் முடிச்சுகளை அவிழ்க்கத் தெரியவில்லை. புரிதலும், இரசனையும் கூடப்பழக்கம் தான்.
எனது இந்த அரங்க நிகழ்வு, மொழி, கலாச்சார எல்லைகளைத் தாண்டி, ஆனால் அரங்கில் இன அடையாளங்களை இழக்காது, மற்றவ்ருடன் (other)தொடர்பு கொள்வதற்கான ஓர்
வசந்தம் 25

Page 28
அரங்க மொழித் தேடலாகும். இதில் வாய்மொழி இல்லை. இது பெரும்பாலும் கட்புலனுக்கே அரங்காக்கம் செய்யப்பட்டது. எண்ணங்கள்; அரங்கப் பொருட்களாலும், கைப் பொருட்களாலும், படிமங்களாக்கப்பட்டன. 'சாமான் அரங்கு (property theatre) வகை நிகழ்வுகளைப் பார்த்துப் பழையவர்களுடன், அவர்கள் நம்வர்களாக இருந்தாலும், மற்றவராக இருந்தாலும், அரங்கில் தொடர்புகொள்வது சிரமமாக இல்லை. ஆனால், அரங்கில் இன அடையாளம் கான்பதில் முழு வெற்றியடைந்ததாகக் கூறமுடியாது. இந்த அரங்க நிகழ்வின் மூலம் என்னுள் எழுந்துள்ள பிரதான கேள்வி, இன அடையாளத்தை இழக்காது அரங்கில் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியுமா, என்பதாகும்.
பரதநாட்டியம் போன்ற நடன வடிவங்கள், தேசிய அல்லது இன அடையாளங்களைக் கொண்டவையாக இருக்கலாம், ஆனால் அவற்றினுடாக மற்றவருடன் எமது எண்ணங்களைப் பரிமாற முடிந்ததா என்றால், சந்தேகமே. எமது நடனங்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தொடர்ந்தால், காலக் கிரமத்தில் புதைபடிவங்கள் (fossils) ஆகிப் போய்விடக்கூடிய ஆபத்தும் உள்ளது. ஒரு சில புதிய முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் பெற்றாலும் அவைகளும் சம்பிரதாயங்களிலிருந்து விடுபட்டவையாகத் தெரியவில்லை. சம்பிரதாயங்கள்தான் நடனத்தின் வரம்புகள் என்ற மாயை மாறவில்லை. பரதநாட்டியம், மொழியாலும், பொருளாலும் மட்டுமல்ல அதன் சம்பிரதாயங்களிலிருந்தும் தமிழுக்கு மீட்டெடுக்கப்பட வேண்டும் இது ஒரு தேவை. அது ஒருபுறம் நடக்க, அத்துடன்,
 

புதிய பரதக் கூத்துகள் உருவாக வேண்டும் அவை: தமிழின அடையாளங்களைக் கொண்டிருக்கும் அதேவேளை, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றையும் தாண்டி, மற்றவர்க்கும் எமது எண்ணங்களைட் புரியவைக்க வேண்டும். இவ்வகையிலான அரங்க நிகழ்வுகள் உருவாக வேண்டும். குறிப்பாக, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இது மிகமிக அவசியமாகும்.
பார்வையாளர், அரங்கில் தம்மை அடையாளம் காணமுடியும் என்று ‘கந்தன்கருணை அரங்கேறியபோது உணர்ந்தேன். கலைப்படைப்பில் உருவமும் அதனளவில் பெரும் பங்கு வகிக்கிறது என்ற, எனது முதலாவது பிரதான பாடத்தைக் கற்றேன். மற்றவருடையதைச் செய்தாலும் அரங்கு எம்முடையதாக இருக்கவேண்டும் என்று, 'ஒரு பயணத்தின் கதை அரங்கேறியபோது உணர்ந்தேன் அரங்கு ஒரு தொடர்பு சாதனம் என்பதற்கு அப்பாலும் சென்று அடையாளமும் காட்டும், என்ற எனது இரண்டாவது பிரதான பாடத்தைக் கற்றேன். 'Skin is Deep' 6TLD(p60)Lugs), LDiBs136 (53535T35 நிகழ்த்தப்பட்டது. அந்த அரங்க நிகழ்வில் அடையாளம் முழுமைபெறாததை உணர்ந்தேன். மற்றவருடன் தொடர்புகொள்ளும் போதும், இன அடையாளத்தை இழக்காத அரங்க நிகழ்வுகள் அவசியம், என்ற மூன்றாவது பிரதான பாடத்தை இங்கு கற்றேன். ஆனால், இது இன்னும் நிறைவேறவில்லை. மூன்று நாடுகள், மூன்று
ஒன்றுதான். அடிவேர், அதன் மூலமே எமக்கும், உலகிற்கும், இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில், அரங்கில் எம்மால் புதியனவற்றைக் கொடுக்க முடியும் என்று நம்புகின்றேன்.

Page 29
- அறுபதுகளிலான மன ஸ்தாபிதப் பிர
ஈழத்து இலக்கியம் என்பது இலங்கையிற் பயிலப்படும் தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலானதுமான இலக்கியங்களின் தொகுதியையே குறிப்பதாகும். இவ்விரு மொழிகளினதுந் தொகுதியே நமது தேசிய இலக்கியமெனல் வேண்டும். ஒரு நாட்டின் தேசிய இலக்கியமானது, அந்நாட்டு மக்கள் வாழ்க்கையில் நிலைபேறடைந்துள்ள பண்பாட்டையடிநிலையாகக் கொண்டே முகிழ்ப் புற்று வளர்வதென்பது இலக்கியத்தின் மூலாதாரமான அம்சமாகும். இலங்கையின் பண்பாடு, தமிழ், சிங் கள, இஸ்லாமியப் பண்பாடுகளென முத்திறப்பட்டதாயமைந்து நிலவுவதே. இப்பண்பாடு கள் யாவும் தத்தமக்கேயுரிய பூரணத்துவம் பெற்ற தனித்துவமுடையனவெனக் கொள்வது பொருந்தாது. ஒவ்வொரு பண்பாடும் அதனதனுக்குரிய விஷேசித்த குணாதிசயங்களைக் கொண்டியல் வதோடு அவையொவ்வொன்றும் மற்றைய பண்பாடுகளின் தாக்கத்துக்குள்ளாகி, மாற்றமடைந்துள்ளமையும் யதார்த்தமே. ஒவ்வொரு பண்பாட்டினதும் இயல்பு, வரலாறு ஆகியவற்றை அவ்வப் பண்பாடு பயிலப்படுகின்ற பிரதேச உற்பத்தியமைப்பும்
சமூகக் கட்டமைப்பும், அக் கட்டமைப்பே தீமானஞ்செய்யும் உற்பத்தியுறவுகளும், அவற்றின் வழியே எழுந்து யதார்த்தமாகியுள்ள வர்க்க முரண்பாடுகளுமே தீர்மானிக்கின்றன.
இவ்வம்சங்களில் வேறுபாடுகள் நிலவுகின்றமை போலவே இவற்றை மேவியும் ஊடுருவியும் மக்கள் வாழ்க்கையிற் தாக்கம் விளைவிக்கத் தக்கதான, பொதுமை வாய்ந்த தேசத்தின் மொத்தமானதும் ஒருமைமிக்கதுமான அம்சமொன்றுள்ள தென்பதும் நோக்கற்பாலதே. இந்நோக்கிலேயே இம்முத்திறப் பண்பாடுகளையும் உள்வாங்கிச் செரித்த தேசியப் பண்பாடொன்றுள்ளதென்பதனைத் தெளிய முடிகின்றது. இவ்வகை நோக்கில், மலையக இலக்கியமெனும் இலக்கிய வகையானது, மொத்தத் தேசிய இலக்கியத்தினின்றும் கிளைத் து முகிழ்த்தெழும் இலக்கியமே எனல் வேண்டும். அந்தவகையில் மலையக இலக்கியமானது ஈழத்திலக்கியத்தின் ஒட்டுமொத்தமான தாற்பரியங்

லையகத் தமிழிலக்கிய
ாயத்தனங்கள்
எம். முத்துவேல்
களை மூலாதாரமாக்க கொள்வதோடமையாது அவ்விலக்கியம் அடித்தளமாகக் கொள்ளும் மலையகப் பிரதேசத்துக்கேயுரிய தனித்துவங்களைத் தனது விசேஷ குணாதிசயமாகவுங் கொள்கிறது. மண்வாசனை என்னுந் தொடராற் குறிக்கத் தகும் எண்ணக்கருவின் விளக்கமும் இதுவேயெனலாம் “தேசிய இலக்கியம்” எனும் பரந்த பொருள் பற்றிப் பேசுகையில், "மலையகம்” என்னும் அடையோடு, குறித்தவொரு பிரதேசத்து இலக்கியத்தை வேறுபடுத்தி நோக்குதல் மார்க்ஸிய நோக்கிலான இலக்கியக் கோட்பாட்டினை ஊறு செய்யும் என இந்த இடத்தில் வாதிக்க இடமுண்டு. இவ்வாறு எழுகின்ற வாதமானது பொருளற்றதும் யாந்திரீக ரீதியாகத் தத்துவத்தைத் திணிக்க முயலும் முயற்சியின் வெளிப்பாடுமேயன்றி வேறல்ல. மலையகப் பிரதேசத்தின் உற்பத்தியமைப்பும் உற்பத்தியுறவுகளும் மற்றைய பிரதேசங்களின் உற்பத்தியமைப்பு, உற்பத்தியுறவுகளினின்றும் வேறுபட்டவை; வரலாறும் வேறுபாடுடையதே.
மலையகச் சமூக அமைப்பு கலப்பேயில்லாத முதலாளித்துவ சமூக அமைப்பாகவே தோற்றம் பெற்று ஸ்தாபிதமானது. மலையகத்தின் அடிப்படை மக்கள் (அடிநிலை மக்கள்) "இழப்பதற்கெனச் சொத்துடைமையேதுமில்லாத கூலித்தொழிலாளர்களே” யாவர். முதலாளித்துவம் தோற்றுவித்த சொற்ப கூலிக்காக உடலுழைப்பை விற்கும் "தொழிலாளி வர்க்கமாகவே இப்பிரதேசத்திற் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு மூலதனக்காரருக்கும் உழைப்பை விற்பவர்களான பாட்டாளி வர்க்கத்தினருக்கும் இடையில் நிலவுகின்ற உற்பத்தியுறவே, மலையகச் சமூகத்து மனிதவூடாட்டத்தின் அடிப்படையாகும். இது ஒரு முரண்பாடுடைய உறவு. அதுவும் நேச முரண்பாடன்றிப் பகை முரண்பாடேயாம். வரலாற்றைப் பரிணாமமடையச் செய்வதன் மூலாதார அம்சமான வர்க்கப் போராட்டமானது இப்பகை முரண்பாட்டினடியாகப் பிறப்பதேயாம்.
மலையகச் சமூகத்திலான இவ்வுற்பத்தியுறவுகளுக்கும் இதர பிரதேசங்களிலான உற்பத்தி
புது வசந்தம் 27

Page 30
யுறவுகளுக்குமிடையில் வேறுபாடுகளுண்டு. ஏனெனில், இதர பிரதேசங்களிலான உற்பத்தியானது மலையகத்திலான தேயிலை, இறப்பர் உற்பத்தியினின்றும் வேறுபடுவதாகும் (இவற்றுக்கிடையில் அடிப்படையொருமைப்பாடு நிலவல் தவிர்க்கவியலாததே) ஆதலால் அடிப்படையில் ஒருமைப் பாடுகள் நிலவிய போதும் மேலமைப்புக்களில் (SUPER STRUCTURE) வேறுபாடுகள் நிலவுதலென்பது, தவிர்க்கமுடியாத யதார்த்த விளைவாகக் காணப்படுதலை மனங்கொள்ளுதல் இன்றியமையாதவொன்றாகும். கலாசாரம், மேலமைப்பைச் சார்ந்ததென்ற வகையில் இவ்வேறுபாடுகளின் வெளிப்பாடு, கலை - இலக்கியத்திற் பயின்று வருதலுந் தவிர்க்கவியலாத விளைவுகளிலொன்றே. இந்தப் பார்வையில் "மலையகம் இலக்கியம்" எனவருந் தொடரில் வரும் "மலையகம்” எனும் அடையானது, மார்க்ஸியக் கோட்பாட்டை ஊறு செய்வதெனக் கொள்வது பொருத்தமுடையதல்ல; மார்க்ஸியக் கோட்பாட்டினை ஜீவன் மிக்கதாக வளர்த்தெடுப்பதற்கும் பிரயோகத்திற்கும் இன்றியமையாததே.
மலையக மக்களின் குடியேற்றமானது, பிரிட்டிஷ் காலனித்துவம் இலங்கையில் ஸ்திரமடையுந் தறுவாயில் அக்காலத்துவத்தின் அரசியற் பொருளியற் பின்புலத்தில் நிகழ்ந்ததே என்பது வரலாறு. இந்தியத் தமிழகத்தினின்றும் பிரபுத்துவச் சமூகக் கட்டமைப்புக்குட்பட்டிருந்த விவசாயிகளை பெருந்தோட்ட முதலாளித்துவப் பொருளாதாரத் தேவை நோக்கியே காலனித்துவம் குடியேற்றியது. நேரடியாகச் சொல்வதாயின், தேயிலை, றப்பர் உற்பத்தியின் உடலுழைப்புத் தேவையே இக்குடியேற்றத்தை நிர்ணயஞ் செய்வதிலான அடிப்படைக் காரணியாகும் எனல் வேண்டும். இவ்வாறு செய்யப்பட்ட முதற் குடியேற்றமானது, 1823 ஆம் ஆண்டு நிகழ்ந்ததென்று மலையக வரலாற்றை ஆராயப் நீதவர்கள் வரையறுக்கிறார்கள். கூலித் தொழிலாளர்களாய்க் குடியேற்றப்பட்ட தென்னிந்தியத் தமிழ் விவசாயிகள், வறியவர்களாயினும் நீண்ட கால வரலாற்றையுடைய சமூகத்தினராதலால் சிறப்பு மிக்கதும் நன்கு விருத்தியடைந்ததும் செழுமையும் உறுதியும் வாயந்ததுமான பாரம்பரியத்தையுடையோராயிருந்தனர். கலை - இலக்கியமென்ற வகையில் வெகுஜனங்களிலிருந்து உருவாகி வளர்ந்த வாய்மொழியிலக்கியங்கள் தொடக்கம் இலக்கண வரம்பிற்கமைய எழுதப்பெற்ற உயர்வழக்கிலான இலக்கியங்கள் வரை கலைத்துவச் செழுமையும் உள்ளடக்கத்தகவும் உன்னதறிலை பெற்று விளங்கிய பாரம்பரியமுடையவராகவே விளங்கினர்.
28 புது வசந்தம்

ஆகவே மலையத் தமிழர், இந்நாட்டிற் குடியேற்றப்பட்ட வரலாற்றுக் கட்டத்துடனேயே ஒரு விருத்திகரமான கலை-இலக்கியப் பாரம்பரியமும் தனது சிறப்பியல்பு மாறாத வண்ணம் புதிய களத்தில் வேரூன்றிப் பரவி வளருஞ் சாத்தியக்கூறுகளுந் தோற்றம் பெற்று விடுகின்றன 6T60T6)TLD.
தாலாட்டு, ஒட்பாரி போன்ற தனியொருவரே பாடும் பாடல்களும் அவ்வாறே நிகழும் மாரியம்மன் தாலாட்டும் கூட்டு முயற்சியில் நிகழும் கும்மி, கோலாட்டப்பாடல்களும் நாட்டுக் கூத்துக்களான, “காமன் கூத்து”, “பொன்னர் சங்கர் நாடகம்", “அருச்சுனன் தவசு", "இராமநாடகம்", "மதுரை வீரன் நாடகம்” போன்றனவும் தமிழ்நாட்டு மரபிற் தோன்றி வளர்ந்து, மலையகத்தில் நுகரப்படுபவையே. சில வேளை "உடுக்கு” எனுந் தோற்கருவியுடன் தனியொருவர் பாடும் பாடல்களையும் கூத்துக்களிலான பாடல்களையுந் தனியொருவர் பாடி வருதலும் வழக்காறாயிருந்தது.
இவற்றுட் சில, தனிநிலைச் செய்யுள்களைப் போல, சிறு சிறு சம்பவங்களை விளக்குவனவாயும் சில தொடர்நிலைச் செய்யுள்களைப் போல உரையாடற் பாங்கிலும் அமைந்து விளங்கின. இவற்றின் உள்ளடக்கம், ஒரு பக்கத்தில் மனித வர்க்கத்துக்கே பொதுமையாய் உரியனவாகி விளங்கும் காதலனுபவங்கள் போன்றனவற்றைப் பொருளாகக் கொண்டனவாயும் மறுபக்கத்தில் வர்க்க முரண்பாட்டினடியாகப் பிறக்கும் பிரச்சினைகளை விளக்குபவையாயும் காணப்படுகின்றன. காட்டாக,
‘வங்களா ஓரத்துல வளந்த மட்டம் ஒடிக்கயில அப்பையா சொன்ன சொல்ல - எங்க அப்பங் கிட்ட சொல்லாதடி’ எனும் பாடலையும் *காட்டுத் தொங்கலில் - கண்டக்கையா டோக்கு தோள் மேல நீட்டி சுடயில - தண்டக்கையா நெனவு ஏம்மேல”
என்பதையுங் கொள்ளலாம். இவையிரண்டு பாடல்களும் காதல் தொடர்பானவையாய் முன்னதற் காதாரமாயமைந்தன. பின்னதற்கு ஆதாரங்களாய் 960) Dud UTL6356it 6 (5LDITB
*கோண கோண மலை ஏறி கோப்பி பழம் பறிக்கையிலே ஒரு பழம் தப்புச்சின்னு
ஒதச்சானாம் சின்ன தோர”

Page 31
*ஊத்தாத அடழையில் ஒதறல் எடுக்குதடா - அந்த காதத்தான் கணக்கப்புள்ள கத்தி தொலைக்கிறானே! ஏத்துல ஏறி எறங்க முடியாம சித்துபூத்தன் னெனக்கு சீவன் வதை போகுதையோ எத்தனை நாளைக்கிதான் - இந்த எழவு எடுக்கிறது வெக்கங்கெட்ட நாயிகளும் எகத்தாளம் போடுதுன்னு இருந்துதான் பாத்துடுவோம்’
இவையிரண்டு பாடல்களும் வர்க்க முரண்பாடுகளை வெளிக்கொணர்வனவாய் பின்னதற்குச் சான்றாய் அமைகின்றன. மக்கள், தமதனுபவங்களைத் தமக்கேயுரித்தானதும் இயல்பானதுமான மொழிநடையில் வெளிப்படுத்தும் வகையிலமையும் இப்பாடல்கள் பற்றிய ஆய்வைத் தனியாக மேற்கொள்ளுதலே பொருத்தமுடையதாகும்.
பிரித்தானிய காலனியமைப்பின் சர்வதேசிய விளைவுகளிலொன்றான படித்த மத்தியதர வர்க்கத்தின் தோற்றப்பாடு, தேசிய ரீதியாக நிகழ்ந்தமை போலவே மலையகத்திலும் நிகழ்ந்தது. எழுத்துருவிலான இலக்கியம் உருவாவதற்கான அடிப் படையை இது நல் கியதெனலாம் , தோட்டப்பாடசாலைகளில் ஐந்தாந் தரம் வரையிலான ஆரம்பக் கல்வியை முடித்தோருட் சிறு அளவினரும் அடைநிலைப் பள்ளிகளில் கல்வி கற்றோருட் சொற்ப தொகையினரும் இவ்வகை அடைநிலைக் கல்வி நிறுவனங்களில் கனிஷ்ட, சிரேஷ்ட தரங்களிலான கல்வி வரைக்குந் தொடந்தனர். இவருள்ளும் அதிகபட்ச வசதி படைத்தோரான பெரியகங்காணி பரம்பரையில் வந்த மிகச் சிலர் ” பட்டப்படிப்பு வரைக்குந் தமது கல்வியைத் தொடர்ந்தனர். இவ்வாறு கற்றோருட் சமூக பிரக்ஞையும் எழுத்தாற்றலுமுடையோராய் விளங்கியவர்கள், தமது சமுகத்தின் அடிமைத் தனங்களையும் துன்ப துயரங்களையும் பற்றிய தமது அநுஷ்டானங்களை இலக்கிய வடிவிற் தரத் தலைப்பட்டனர். இவர்களில் முதன்மையானவராகக் கருதப்படத் தக்கவர் ஸி.வி.வேலுப்பிள்யையெனலாம். இவரது சமகாலத்தவரே எஸ்.கணேஸ், சக்தி அபாலையா, க.ப.சிவம் போன்றோராவர். இவ்மூவருள்ளும் எஸ்.கணேஸ் முற்போக்குச் சிந்தனையின் தாக்கத்துக்குட்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கதாகும்

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க அங்கத்தவரான கணேஸ் , பின்னாளில் அச்சங்கத்தின் கண்டிக்கிளையை ஸ்தாபித்தவரென்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். எனினும் மலையக இலக்கியம்” என்ற பிரதேச முத்திரையுடன் மக்கள் வாழ்வை இலக்கியமாக்கும் பிரயத்தனங்கள் ஸ்தாபனமயமாக்கபட்டத்தற்கான தடயங்களெதுவும் அக்கால வரலாற்றில் இல்லை.
அறுபதுகள், மலையக இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் வகிக்கத் தக்க பாலப்பகுதியென்பது அவ்வரலாற்றை நுணுகி நோக்குவோர்க்குப் புலனாவதாகும். இக்காலக்கட்டத்தில் தான் முனைப்பான ஸ்தாபனமயப்பட்ட நடவடிக்கைகள் பிரக்ஞை பூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு, அவ் வரலாற்றுக் கட்டத்தின் சமகாலத்தினதும் அதன் முற்பட்ட காலத்தினதும் அரசியல் வரலாறே பின்னணியாயமைந்ததெனலாம் 1956 ஆம் ஆண்டிலான சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கும் சட்டமும் அச்சட்டத்தின் விளைவாய்க் கிளர்ந்தெழுந்த தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டங்களும் இலக்கியத்தின் எழுச் சிகரமான மகிழ்ப் பின் துTண் டு சக்திகளாயமைந்தன.
மலையத்தில் ஏலவே பலம் வாய்ந்த ஸ்தாபனங்களாய் நிலைபெற்றிருந்த தொழிற்சங்க ஸ்தாபனங்களை விடவும் சிறு சிறு மன்றங்கள் குறுகிய பிரதேசச் சிற்றெல்லைகளைக் கொண்டு ஐம்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உதயமாயின. இவற்றுட் சில, "மலையகம்” என்ற பிரதேச வரையறையையுங் கடந்து, தமிழினவுணர்வையும் தமிழுணர்வையும் மையமாய்க் கொண்டெழுந்தன. இவற்றுள் தலவாக்கொல்லைப் பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட "இளைஞர் மன்றம்” குறிப்பிடத் தக்க ஒன்றெனலாம் "மருதமுத்து” என்ற இயற்பெயர் கொண்ட எல்லாளனின் தலைமையில் உருவான இம்மன்றம் "தமிழரசுக் கட்சி” யின் கொள்கைத் தாக்கத்துக்குட்பட்டிருந்தது. இவ்விளைஞர் மன்றம் எல்லாளனை ஆசிரியராகக் கொண்டு “இளைஞன் குரல்" என்ற எழுச்சி இதழ் ஒன்றை 1959 ஆம் ஆண்டில் வெளியிட்டது. மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல்வாழ்க்கை பற்றிய சீர்திருத்தக் கருத்துக்களைப் பலர் இவ்விதழில் எழுதினார்கள். இம்மன்றமும் இவ்விதழும் நிலை பெற்று வாழமுடியவில்லையென்றாலும் சிறு தொகையினரான இளைஞர்கள் மத்தியிலாயினும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஸ்தாபனம்
புது வசந்தம் 29

Page 32
நிலைபெறாமற் சுவடற்றுப் போனமைக்கு இதன் நிலைப்பாடே காரணமெனலாம்.
மலையக சமூகம் நிலைபேறடைந்துள்ள இப்பிரதேச உற்பத்தியமைப்பு பற்றியதும் அவ்வுற்பத்தியமைப்பு தொடர்புபட்டுள்ள தேசிய பொருளாதார அமைப்பினதும் தாற்பரியங்களை விஞ்ஞானபூர்வமான தத்துவார்த்த அடிப்படையில் இத்தாபனம், ஆய்ந்து பார்க்கும் திராணியில்லாததாய்க் காணப்பட்டது; அதனால், வெறுமனே மொழிசார்ந்த அடிப்படையிலும் பழைமையுடன் கூடிய மரபினடிப்படையிலுமே பிரச்சினைகளை யணுகியது; அணுகவே, வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே ஆட்பட்டு, யதார்த்தத்தில் நிலைகொண்டு வளர்வதற்குப் பதிலாகக் காலத்தாற் தோன்றி அழிவுறும் புற்றீசல் போல் தோன்றியகதியில் சுவடற்று மறைந்துபோனது.
1960 ஆம் ஆண்டில் மலையக சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவஞ் செய்யும் வகையில் பரந்த அடிப்படையிலான ஸ்தாபனம் ஒன்று உதயமானது "மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம்” என்று நாமகரணம் செய்யப்பட்ட இந்த ஸ்தாபனத்தின் தோற்றம் பற்றிய குறிப்பொன்றை திரு.வி.டிதர்மலிங்கம் பின்வருமாறு தருகிறார்:-
“கல்வி கற்ற D606)uably பட்டதாரிகளும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களும் மலையகத்தின் கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும்; மலையக சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து “மலையக நல்வாழ்வு வாலிபர் சங்கம்” (இதன் சரியான வடிவம் "மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம்” என்பதாகும் - கட்டுரையாசிரியர்) உருவாக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் கண்டியைச் சேர்ந்த பி.டிராஜன், திரு.க.பொ.சிவம் (திரு.க.ப.சிவம் - கட்டுரையாசிரியர்) திரு.க.வேலாயுதம், திரு.எஸ்.நடேசன், திரு.ஏ.கருப்பையா ஆகியோர் இச்சங்கத்தை தோற்றுவித்தனர்” (மலையக அரசியல் சமூக, கலாச்சார அமைப்புக்கள் - 9."சரிநிகள்” ஒக் 27-நவ 9, 1994)"
இச்சங்கத்தின் வளர்ச்சிக் கிரமத்திலான மாற்றங்களிற் பிரதானமான ஒன்றைப்பற்றிய குறிப்பொன்றையும் இக் கட்டுரை தருகின்றது. “அட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களான, திருவாளர்கள் இரா.சிவலிங்கம், (இர.சிவலிங்கம். இரத்தினசாமி சிவலிங்கம் - கட்டுரையாசிரியர்) பி.எஸ் திருச்செந்தூரன், பதுளைப் பிரதேசத்திலிருந்து திருவாளர்கள் பாரதி, இராமசாமி, பெரி.கந்தசாமி
30 புது வசந்தம்

போன்றவர்கள் பின் இணைந்தனர். இவர்களின் பிரவேசம் இவ்வமைப்புக்கு புதிய உணர்வலைகளைக் கொண்டு வந்தது"
இக்குறிப்புகள் மலையக, சமூக, அரசியல், கலாச்சாரப் பரிணாமத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புச் செலுத்திய ஒரு ஸ்தாபனத்தின் தோற்றம் பற்றியதான தகவலைத் தருதலை அவதானிக்கலாம். "மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின்” ஸ்தாபிதம் யாரால் நிகழ்ந்திருந்த போதும், மலையக இளைஞர்களுக்கு குறித்த வரலாற்றுக் கட்டத் தேவையையொட்டி தீர்க்கமிக்கதும் தூரதிருஷ்டியுடன் கூடியதுமர்ன தலைமையைக் கொடுத்தது திரு.இர.சிவலிங்கத்தின் தலைமைத்துவமே.
அக்கால இளைஞர்கள், சுதந்திர உணர்வும். அர்ப்பணிப்பும் உடையவர்களாயும், பறிக்கப்பட்ட அரசியலுரிமைகளை (குறிப்பாகப் பறிக்கப்பட்ட பிரசாவுரிமையை) வென்றெடுப்பதிலும் பல்வேறு துறைகளிலும் நாட்டின் இதர சமூகத்தினரைப் போலத் தமது சமூக வாழ்வை நிர்மாணித்துக் கொள்வதிலும் தீவிரமான செயலாக்கங் கொண்டவர்களாயுமிருந்தனர்.
மொத்தத்தில் காலனியல் அமைப்பு ஏற்படுத்தித் தந்த பெருந்தோட்டப் பொருளியல் முறைமையின் விளைவாயுருவான தோட்டத்து அடிமை வாழ்வினின்றும் விடுதலையடைந்து, தேசப் பற்றுடையவர்களாக நாட்டின் நிர்மாணத்திற் பங்களிப்புச் செலுத்தி, உன்னதமானதும் சுதந்திரமானதுமான வாழ்வை ஸ்தாபித்துக் கொள்வதில் பிரக்ஞை பூர்வமான உறுதி மிக்கவர்களாயிருந்தனர்.
சிந்தாந்த பூர்வமான நோக்கில் தொழிற் சங்கங்கள், தொழிற் சங்கங்களுக்கான வர்க்க நிலைப்பாட்டுடன் கூடிய அரசியற் சார்பின் வழிபிசகாது நின்று, அரசுக்குச் சாதகமான இயக் கப் பாடுகளைக் கொண்டனவாயப் க் கருமமாற்றினவெனவே கொள்ளுதல் வேண்டும்; உண்மையதுவே. தொழிற்சங்கங்கள், மலையக மக்களின் ஜீவாதார உரிமையான, பறிக்கப்பட்ட பிரசாவுரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டங்களையே புறந்தள்ளின
மலையகப் புத்திஜீவிகளின் பிரக்ஞை, சிந்தனை என்பன, பெருந்தோட்டப் பிரதேசத்திற் பெரும்பான்மையாய் வாழும் இந்திய வம்சாவழித் தமிழரின் நலன்களை அடிநிலையாகக் கொண்டு

Page 33
பரிணமித்தன. மலையக மக்களின் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வு நோக்கி அவர்களளின் சிந்தனை கூர்மையடைந்தது. பிரசாவுரிமை பறிக்கப்பட்டவர்களாக நிர்க்கதிக்குள்ளாக்கப்L" uQ(55ğ5 LD60)6\)Uu uéE6 LDö53É56iT, g5LDğ5] 2g60TbTu_135 பூர்வமான அடிப்படையுரிமையை நிலைநாட்டிக் கொள்ளுதலே மூலாதாரமானதென்பது, புத்தி ஜீவிகள் தமது அனுஷ்டானத்தினுடாக நிதர்சனப்படுத்திக் கொண்டதாகும். அரச தொழில் வாய்ப்புகள் பற்றி, இலங்கையையே பிறப்பிடமாகக் கொண்ட மலையகத் தமிழர் எண்ணிப்பார்க்கவும் முடிந்ததில்லை, பட்டதாரிகளாக வெளிவந்த சொற்ப தொகையினருங்கூட தனியார் கல்லூரிகளிலேயே ஆசிரியராயிருந்தனர். சிரேஷ்ட கனிஷட தராதரமுடையோர், பெருந்தோட்டக் காரியாலயங்களில் எழுதுவினைஞர்களாயோ மலைகளிற் தொழிலாளருழைப்பை உறிஞ்சிக் கவர்வதற்கான நடத்துனர்களாயோ அமைவதே மலையத்தவர். களுக்கான வரப்பிரசாதமாயமைந்தது. பிசாவுரிமை பறிக்கப்பட்டவர்களாயிருந்தமையால் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி நடந்த "தோட்டப் பாடசாலைகளிற் கூட ஆசிரிய நியமனம் பெறுந் தகைமையற்றோராய்க் கருதப்பட்டனர். யாவற்றுக்கு மேலாக, தொழுவங்களாயமைந்த லயங்களில் (LINES) தாம் குடியிருக்கும் காம்பிராக்களும் ( e6og56 - ROOMS) Luussi G3u ggi தோட்டங்களும் இன்ன பிறவும் தோட்டச் சொந்தக் காரர்களான மூலதனக் காரரின் சொத்துக்களாயிருந்தமையால் நிலம், காணி போன்ற ஆதனங்கள் ஏதுமற்றோராய், இதர மனிதவுரிமைகளும் பறிக்கப்பட்டோராய் தோட்டத் தொழிலை இழந்தபோது ஒதுங்குதற்கே இடமில்லாக் கையறு நிலைக்குட்பட்டு, உயிர் வாழ்க்கைக்கே உத்தரவாதமில்லாத நிலைமைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாயினர். மற்றொரு புறத்தில், கல்வி ரீதியான ஒடுக்குமுறையாற் சமூகம் நலிவுற்றது. நாட்டின் தேசிய கல்வியமைப்பிற்குள் தோட்டப் பாடசாலைகள் அடங்கியிருக்கவில்லை. மிகக் குறைந்தபட்ச சமூகத் தொடர்பிற்கான ஊடகமாக விளங்கும் கடிதமெழுதுதல் போன்ற தேவைகளையும் தனிமனிதரொருவரின் அன்றாட வரவு செலவுக் கணக்குகளைக் கணித்துக் கொள்ளும் தேவைகளையும் பூரணப்படுத்துதலையே கருத்திற் கொண்டு, தோட்டப் பாடசாலைகளின் aboo)55 Lip (CURRICULAM), 6T60ö1, GLDIT ஆகிய இரு பாடங்களுக்குள் மட்டுமே வரையறுக்கப் பட்டிருந்தது.
இதன் விளைவாக அரச நிறுவனங்களிலான சேவைகளில் மலையக மக்களுக்கான

நியமனங்களைக் கோருதல் நிகழ்ந்த து. "மலையக இளைஞர் முன்னணி (வரலாற்று மாற்றங்களின் விளைவாக, மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் "மலையக இளைஞர் முன்னணி” எனும் மாற்றுப் பெயர்பெற்றியங்கியது). அக்காலத்தமைந்த கூட்டரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளில் இதனை வலியுறுத்தியதன் விளைவாக 1970 ஆம் ஆண்டிற்குப்பின்னர், ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. சிறு தொகையினர்க்குப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் கிடைத்தன. அதன் தொடர் நிகழ்வாக தராதரப் பத்திரமற்ற ஆசிரியர் க.பொ.த. (சாத) தகைமையுடையோருக்கு கூட்டரசாங்கத்தால் வழங்கப்பட்டன. இதனைச் சாதனையிலாக்கியதிற் பெரும் பங்கு திரு.இரசிவலிங்கம் அவர்களுக்கேயுரியது. இந்நிகழ்வு வரலாற்று முக்கியத்துவமுடைய நிகழ்வென்பதை மனங்கொள்வதும், இதன் பின்னரான அரச நிறுவன நியமனங்களுக்கு இதுவே அடிப்படையாயமைந்த முன்னிகழ்வென்பதை உணர்தலுமே, அடக்கு முறைக்குள்ளான சமூகமொன்றின் வரலாற்றை முன்னெடுக்க விழைவோர்தம் நேர்மையுணர்விற்குச் சான்றாயமையும்.
"மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம்” ஒரரசியலியக்கமாக வளர்ச்சியட்ையக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகுதியும் நிலவின எனல் வேண்டும். எனினும் , தெளிவானதும் வரையறுக்கப்பட்டதுமான கோட்பாடொன்றை அவ்வியக்கம் கொண்டிருக்கவில்லையென்பது பிரத்தியட்சமானது. தெளிவாகச் சொல்வதானால், இச்சங்கம், தான் பிரதிநிதித்துவப் படுத்தியதாகக் கூறிக்கொண்ட “மலையக மக்கள்” (மக்கள் என்ற பதம் முழு இந்திய வம்சாவழியினரையுமல்லாது மலையகப் பாட்டாளிகளையே குறிக்கும் என்பதனைக் கருத்திற் கொள்க) நாட்டின் தேசிய சமூகக் &E5ʼ L60)LDLʼi l f6Ö எவ் வகைக் குணாதிசயத்தைக் கொண்டவராயிருந்தனரென்பது பற்றிய விஞ்ஞானபூர்வமான வரையறையைக்
அரசியற் செல்நெறியில் மலையக மக்கள் வகிக்கத் தக்க பாத்திர்ம் பற்றியும், விஞ்ஞானபூர்வமான கணிப்பீட் டைக் கொண்டிருக்கவில்லை. எவ்வாறெனினும் இத்தாபனத்தின் சார்பு தெளிவானதாகவே காணப்பட்டது. பல்வேறு வகையிலும் பாதிப்புக்குள்ளாகி வந்த மலையக மத்தியதர வர்க்கத்தின் நலன்களையே சங்கம் பிரதிநிதித்துவஞ் செய்தது. சங்கத்தில் அங்கம் வகித்தோர் குறைந்தபட்சம், க.பொ.த.(சா.த) தராதரத்தையோ கூடியபட்சம், மூன்றாம் நிலைக் கல்வித் தரத்தையுணர்த்தும் பட்டப்படிப்பையோ
புது வசந்தம் 31

Page 34
முடித்தோராயிருந்தனர். இவர்களுள் தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்தோர் அவ்வத் தொழில்களிலான மேனிலை நோக்கி நகள்வதற்கான அபிலாசையுடையோராய்க் காணப்பட்டனர். குறிப்பாக ஆசிரியராயிருந்தோர் அதிபர்களாயும் அதிபர்களாகவிருந்தோர் வட்டாரக் கல்வியதிகாரிகளாயும் பதவியுயர்வை நாடுவோராயிருந்தனர். இவ்வாறு மத்தியதர வர்க்கத்தினரையே மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் பிரதிநிதித்துவஞ் செய்தது.
கல்வியபிவிருத்திக்கான முயற்சிகளுடனேயே கலாச்சாரத்தை முன்னெடுப்பதற்கான எத்தனங்கள் இக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. 1963ம் ஆண்டின் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் நடாத்திய நாடகப்போட்டியை இங்குக் குறிப்பிடலாம் இப்போட்யினுாடாக மிகவும் ஆற்றல் வாய்ந்த நடிகர்கள் இனங்காணப்பட்டனர். பொதுவாக நாடகம் மேடையேற்றலின் திட்பநுட்பங்கள் இருளிலிருந் தோருக்கு வெளிச்சமாயின என்பது இதன் மற்றொரு விளைவெனக் கொள்ளலாம். நாடகம் என்பது தனித்த இலக்கியத்துறையானதால் இலக்கியம் பற்றி விரிவாக விவரணப்படுத்தும் போது அதனை ஆராயலாம்.
திரு.சிவலிங்கம் மலையக சமூகங் குறித்த தீட்சண்யமிக்கதும் யதார்த்த பூர்வமானதுமான தத்துவார்த்தத் தளத்தைக் கொண்டிராதமை காரணமாக, அவரைப் பின்பற்றியோரும் சமூக, அரசியல், கலாசாரங் குறித்து விஞ்ஞான பூர்வமான தெளிவுடையோராய்க் காணப்படவில்லை. இர.சிவலிங்கம், தாமே, ட்ரொஸ்கிய சார்புடையராக விருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கால எல்லையில் மார்க்ஸியக் கோட்பாட்டுத் தாக்கத்துக்குட்பட்டு, கலை-இலக்கியத்தைச் சமூக விஞ்ஞான நோக்கில் பார்க்கத் தலைப்பட்வர்கள், அவரோடு முரண்பாடுடையோராய் மாறினரென்பது மற்றொரு வரலாற்றுச் செல்நெறியின் தோற்றுவாயாக அமைந்ததெனலாம்.
இதுகாறும் கூறப்பட்ட வரலாற்றுப் பின்னணியிலேயே மலையத் தமிழிலக்கியம் தனித்துவமுடையதாய் வளரத் தொடங்கியது. சர்வதேசிய வரலாற்றில் இலக்கியம், அவ்வரலாற்றை முன்னெடுப்பதில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்திருப்பதைப் பல்வேறு அறிஞர்களுஞ் சுட்டுகின்றனர். பிரான்ஸியப் புரட்சி, அமெரிக்க சுதந்திரப் புரட்சி போன்றவற்றிலும், இந்தியாவில் காலனித்துவத்துக் கெதிராக நிகழ்ந்த போராட்டங்களிலும் இலக்கியம் வகித்த பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவற்றை விடவும்
32 புது வசந்தம்

சோவியத்திலும், சீனத்திலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் இலக்கியம் காத்திரமானதும் உன்னதமானதுமான பாத்திரத்தை வகித்துள்ளமை மானுடம் நிலைபெறலுக்காக இலக்கியம் பிரயோகப்பட்டுள்ளமையை பிரத்தியட்சமாக்கு கின்றது.
ஈழத் தமிழிலக் கிய வரலாற்றை முற்போக்குத்திசையில் முன்னெடுப்பதில் பிரதான பங்களிப்புச் செலுத்திய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தூண்டு சக்தியாயமைய 1960 ஆம் ஆண்டில் "மலைநாட்டு எழுத்தாளர் சங்கம்" தோற்றுவிக்கப்பட்டது. மலைநாட்டு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டதன் பின்பே இலக்குகளைக் கொண்டு கருமமாற்றத் தக்க வரலாற்றுச் சூழல் உருவானதெனக் கூறுதல் வேண்டும். இச்சங்கத்தின் தோற்றம் நிகழ்வதற்கு முன்னரான காலங்களில், இங்கொருவரும் அங்கொருவருமாக மலையக, எழுத்தாளர் உதிரிகளாய்ச் சிதறிக் கிடந்தனர். இவர்களின் எழுத்துக்களில், ஒருமுகப்பட்ட சமூகப் பிரக்ஞையுடன் கூடிய மலையக மக்களின் வாழ்க்கை விளக்கப்பட்டதெனக் கொள்ள முடியாது. பெரும்பான்மையோரது கருத்தோட்டங்களையும், இலக்கியக் கலாவுணர்வையும் இந்திய சஞ்சிகைகளின் இலக்கியக் கோட்பாடுகளும் செல் நெறிகளுமே தீர்மானித்தன என்பது பிரத்தியட்சமானது. குறிப்பிடத் தக்க சிலரது இலக்கிய ஆக்கவியலுணர்விலும், இரசனையிலுமே எதிர்மறையான தாக்கம் விளைந்திருந்ததெனல் வேண்டும். மார்க்ஸியக் கோட்பாட்டின் தாக்கம் இவ்வகையானோரின் சிந்தனைகளில் ஆரம்பநிலையினதாகக் காணப்பட்டது. அதிலும் வளர்ச்சியின்னையின் காரணமாயமையும் தெளிவின்மையே நிலவியது இவர்களுக்கு இலக்கியம் என்ற வகையில் வையாபுரிப்பிள்ளை, புதுமைப்பித்தன் போன்றோரது எழுத்துக்களே ஆதர்ஷமாயிருந்தன. இவர்களைத் தவிர்ந்த ஏனையோரைப் பொறுத்த வரையில் அனைவருமே தமிழ் நாட்டு இலக்கியச் செல்நெறியினால் மேலாண்மை செய்யப்பட்டவர்களே. இலக்கியம் குறித்த இவர்களின் கோட்பாடானது, அ.".தோர் அழகியலென்ற வகையில் நுகர்ச்சிக்குரியதென்றே கருத்தியல் (IDEOLOGY) FTir bgigstas (36 இருந்தது. அதனால் இலக்கியம் குறித்த சார்புடைமை பற்றிய கோட்பாட் டோடு முரண்பாடுடையவர்களாய், அதனைப் பொதுமை வாய்ந்ததாகவே கண்டனரெனலாம். அதாவது மனித வர்க்கத்திடையேயான வர்க்க வேறுபாடென்பது, கற்பிதமானதெனக் கொள்வோராயே இவருள் பெரும்பான்மையோர் இருந்ததோடு, வர்க்கங்கள்

Page 35
பற்றிய பார்வையுடனான இலக்கியப்புனைவுகளும் விமரிசனங்களும் இலக்கியத்தின் அழகியலை ஊறு செய்வதாயும் கருதினர், எனினும் இலக்கியத்தின் வடிவங்களிலும் எடுத்துரைப்பு முறைகளிலும் நிகழும் மாற்றங்களை அங்கீகரிக்கும் இயல்புடையோராயிருந்தனர். இதனை ஒரெடுத்துக்தாட்டுடன் நிறுவதாயின் பிாரதியின் கவிதைகள் குறித்த இவர்களின் கருத்துக்களைக் குறிப்பிடலாம் பாரயின் காலனியல் எதிர்ப்புக் கவிதைகளிலும் பார்க்க அவரது குயில்பாட்டும் கண்ணன் பாட்டுமே இலக்கியத்தின் பாற்பட்டவையென்ற கருத்து நிலைச் சார்புடையோராய் இவர்கள் காணப்பட்டனர். இறுதியாய்வில், இவர்கள் தமது சமூக இருப்பின் வழி நின்றவர்களாய் மத்தியதர வர்க்கத்தின் நலன்களைச் சார்ந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தனரென்பது தெளிவானதும் மறுக்க முடியாததுமாய்க் காணப்பட்ட தெனலாம்.
"மலைநாட்டு எழுத்தாளர் சங்கம் , இ.மு.எ.ச.வைப் போலவோ, இதர ஈழத்துத் தமிழிலக்கிய அமைப்புக்களைப் போலவோ, இலக்கியக் கோட்பாடொன்றை வகுத்து, அக்கோட்பாட்டின் ஸ்தாபிதம் நோக்கிச் செயலாற்றியதெனக் கூறுதற்கு இடமில்லை. அச்ச்ங்கத்தினது குறிக்கோளாயமைந்ததெல்லாம், மலையகப் பிரதேசத்தைக் களமாகக் கொண்டெழும் தனித்துவமுடைய இலக்கியத் தின் நிலைபேறுடைமை குறித்ததே எனல் வேண்டும். அவ்வாறெழும் இலக்கியமானது மலையகப் பிரதேசத்தின் விசேஷ குணாதிசயங்களின் வெளிப்பாடாயும், அட்பிரதேச மக்கள் வாழ்க்கையின் சிறப்பியல்புகளைப் பொருளாக்க கொண்டதாயுமே அமைதல் வேண்டும் என்பதனை ஒரு விதிபோலவே கொண்டியங்கியது. இவ்வாறான கொள்கையொன்றை வகுத்துக் கொண்டதன் தாற்பரியம் யாதெனில் பல்வேறு வகையாலும் பின் தள்ளப்பட்ட சமூகமொன்றின் கலாசாரத்தை மேம்ப்டுத்துதலேயெனலாம். "மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் முனைப் பானதும் உறுதிவாய்ந்ததுமான பிரயத்தனங்களால் மலையக மக்களின் வாழ்க்கையையே அட்பிரதேசத்தில் பிறந்து, வளர்ந்து வாழ்க்கை நிலைபேறடைந்து இலக்கியம் செய்யப் புதத்தோர் புனைதல் வேண்டுமெனுங் கொள்கை பரவலாகி வலுப்பெற்றது. இக் கொள்கை இயக்கவுருப்பெற்று வலுப்பெறு முன்பே, 1960 ஆம், ஆண்டில் எஸ்.திருச்செந்தூரனின் "உரிமை எங்கே" என்னுந் தலைப்பிலான சிறுகதை "கல்கி" நடாத்திய ஈழத்துச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றிருந்தது. மலையகச் சிறுகதை வரலாற்றில்

அப்பிரதேச மக்கள் வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்டு எழுதப்பெற்ற முதலாவது சிறுகதை இதுவேயென இலக்கிய விமர்சகர் குறிப்பர். இச்சிறுகதை தமிழ்நாட்டுச் சஞ்சிகையான கல்கியிற் பிரசுரமானமை மலையக எழுத்தாளரின் படைப்பிலக்கிய ஆளுமைக்குக் கிடைத்த அங்கீகாரமாயமைந்ததோடு இலக்கியந் தொடர்பான நம்பிக்கையை உறுதி செய்வதாயுமமைந்தது.
"மலைநாட்டு எழுத்தாளர் சங்கம்’ மலையகப் பிரதேசத்து எழுத்தாளர்களுக்குத் தனித்த பிரசுரக் களத்தை அமைத்துக் கொடுத்தலே, மலையக இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லவும், அதனை ஸ்தாபிதப்படுத்தவும் துணை செய்யுமெனக் கண்டதன் விளைவாக, “வீரகேசரி’ ஞாயிறு வெளியீட்டில், "தோட்டப் பகுதி” என்ற தலைப்புடன் மலையகத்துக்கெனத் தனிப்பகுதியொன்று தொடங்கப் பெற்றது. சங்கத்தின் தலைவராயிருந்தவர் இர.சிவலிங்கம் அவர்களே; அதன் செயலாளராகவிருந்தவர் எஸ்.கார்மேகம் என்பவராவார். எஸ்.கார்மேகம், வீரகேசரி உதவியாசிரியர் அவரை "தோட்டப்பகுதி” க்கான பொறுப்பாசிரியராயும் நியமித்திருந்தனர். வீரகேசரியிலான "தோட்டப்பகுதி” மலையக எழுத்தாளர்க்கான பயிற்சிக் களமாகவேயமைந்ததெனல் வேண்டும்.
"தோட்டப்பகுதி” எனும் இக்களத்தை அக்கால எழுத்தளர் நன்கு பயன்படுத்திக் கொண்டனரென்றே கூறுதல் வேண்டும். இற்றை நாளில் மலையக எழுத்தாளருள்ளே தொகையான சிறுகதைகளைப் புனைந்தவராகக் கருதப்படுபவரான மல்லிகை சி.குமாரின், "பூரணி” என்னுஞ் சிறுகதை இத்தோட்டப்பகுதியிலேயே பிரசுரமாகியிருந்தது. மலையக எழுத்தாளருட் சில, மனித குலத்துக்கான பொதுமைவாய்ந்த இயல்புகளை உள்ளடக்கமாகக் கொண்டெழுதி வந்தனரென்பதற்கு தக்க சான்றாய் இதமையுமெனலாம்.
பூரணி, காதலை மகோன்னதமான நிலையில் வைத்துப் பார்க்கும் மரபின் வழிவந்த படைப் பென்பதை அதனை வாசித் தோர் நன்குணந்திருப்பர். குமார் "கல்கி” வாசகராயிருந்தவரென்பது இதன் தொடர்பில் கவனிக்கத் தக்கதாகும். ஐம்பதுகளின் கடைக்கூற்றிலும் அறுபதுகளின் தொடக்கத்திலும் கல்கியில் வெளியான, வேங்கையின் மைந்தன், பாண்டிமாதேவி, குறிஞ்சி மலர் போன்ற படைப்புகளை ஆர்வத்தோடு வாசித்தவரென்பதும் குறிப்பிடத்தக்கதே. இதனால் நா.பார்த்தசாரதி, கி.இராஜேந்திரன் போன்றோரது எழுத்தின் தாக்கம் ஆரம்ப காலத்தில் கணிசமாகவே,
புது வசந்தம் 33

Page 36
அவரில் இருந்ததென்பதும் குறிப்பிடத் தக்கதே. அவரது சிருஷ்டிகர ஆளுமையை நிர்ணயித்த புறக்காரணி களிலொன்றாக இதனைக் கருதலாம்.
வீரகேசரியின் தோட்டப் பகுதியில் வளர்ச்சியடைந்து எழுத்தாளர் அடங்கலாகக் கணிசமானோர் எழுதினர். அவ்வாறெழுதியோர் அனைவரது பெயர்களையும் நினைவில் வைத்திருதலென்பது சாத்தியமானவொன்றல்ல. பி.மரியதாஸ், எம்.வாமதேவன், மு.சிவலிங்கம் போன்றோரது பெயர்கள், கட்டுரைகளின் தொடர்பிற் குறித்துச் சொல்லத் தக்கனவெனலாம். விமர்சனம் தொடர்பான அம்சத்தில் பி.மரியதாஸின் கட்டுரைகள் காத்திர மிக்கனவாய் வளர்ச்சியடைந்த இலக்கியக்காரரோடு ஒப்பு நோக்கிக் காணத் தக்கனவாய் விளங்கிய்மையை மறுத்தலியலாது. விஞ்ஞான பூர்வமான சமூகவியல் ஆய்வு முறைமையின் தொடக்கக் காலப் பண்பமைதி கொண்டனவாக அவரது கட்டுரைகள் காணப்பட்டன. எம்.வாமதேவனின், கட்டுரைகளில் ஓரளவிற்கு முற்போக்கின் தாக்கத்தை அறிய முடிந்ததெனினும் விஞ்ஞானபூர்வமான சமூகப் பார்வையினால் செழுமை பெறவில்லையென்பது குறிக்கத் தக்கதாகும்.
"தோட்டப்பகுதி" தொடக்க நிலையில் புனைகதைகளை அதிகமாக உள்ளடக்கி வெளிவந்ததாகக் கூறவியலாது. வளர்ச்சிக் கட்டத்தில் அவற்றின் பரிணாமத்தை நிதர்சனப்படுத்தியதென்பது மனங்கொள்ளத்தக்கதே. அவ்வளர்ச்சி பற்றி பின்னர் குறிப்பிடலாம். எனினும், இற்றை நாளில், பலராலும் வெகுவாகச் சிலாகித்துப் பேசப்படும் சி.வி.வேலுப்பிள்ளையின், “வீடற்றவன்” குறுநாவல் இட்பகுதியில் வெளியானதை ஈண்டுக் குறிபிடுதல் வேண்டும் இக்குறுநாவல் மலையகத்தில் தொழிற்சங்கங்கள் தொடங்கப்பெற்று, அவை தொழிலாளரது வாழ்க்கையிைல் பிரிக்க முடியாத ஓரம்சமாக பரிணமிக்கத் தொடங்கிய போதான வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டெழுதப்பட்டது. இக்கால மலையக வாழ்வின் யதார்த்தங்களை இக் குறுநாவல் வெளிக் கொணர்ந்திருப்பது இதன் சிறப்பியல்பாகும்.
பெரும்பான்மையாக அதிகமான எழுத்தாளர் எழுதியவற்றின் உள்ளடக்கம், மதுவருந்தும் பழக்கம் , மூடப் பழக்கங்கள் சுகாதாரம் பேணுவதிலான சீர்கேடுகள், சிக்கனம் பேணாது செய்யப்படும் வீன் பணவிரயம், அயலவரோடான இசைவாக்கமின்மை, காலமாற்றத்தோடான ஒத்திசைவின்மை, சமூகத்தில் நீண்டகாலமாக
34 புது வசந்தம்

அகலாதிருந்து வரும் சாதியொடுக்கு முறை போன்ற விஷயங்கள் பற்றியதாகவே அமைந்தது. இவ்வகையெழுத்துக்களால் சாதாரண உழைக்கும் வெகுஜனங்கள் கிஞ்சித்தும் பயனடையாவிட்டாலும் அவற்றுக்கான பிரசுர ஆங்கிகாரமானது எழுதியோரின இலக்கிய ஆளுமையை வளர்த்து உறுதிசெய்ததென்பது மறுக்கவியலாதாகும்.
மலையக எழுத்தாளர்க்கெனச் சிறுகதைப் போட்டியொன்றை, வீரகேசரி தோட்டப் பகுதியின் வாயிலாக ம.எ.ச.நடாத்தியது. அச்சிறுகதைப் போட்டியும் அதன் விளைவுகளும் மலையக இலக்கியத்தின் மைல் கல்லாகவமைந்து, காத்திரமிக்கதான இலக்கியப் பாரம்பரியத்தை நிர்மாணிப்பவையாயும் அமைந்தனவென்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போட்டிகள் பற்றி மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராயிருந்தவரான எஸ்.கார்மேகம், “கதைக் கனிகள்” என்னும் போட்டிகளிற் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பு நூலிற் கெழுதிய முன்னுரையிற் பின்வருமாறு எழுதுகிறார்:-
"தனிப்பக்கத்தை ஒதுக்கி விட்டால் போதும் என்று நாம் நின்று விடவில்லை. போட்டிகள் மூலம் நல்ல ஆரோக்கியமான எழுத்துலகைச் சிருஷ்டிக்க விரும்பினோம். எமது முயற்சி இன்று நல்ல பயன் தந்திருக்கிறது என்பதை அறியும் போது உள்ளபடியே பெருமையாயிருக்கிறது”
இப்போட்டியின் மூலம், இலக்கிய உலகுக்குச் சிறுகதையாசிரியர்களாய் அறிமுகப்பட்டவர்களில் முதன்மையானவர்களாய்க் கருததத்தக்கவர்கள் தெளிவத்தை (82g|TF) சாரல் நாடன் (மு.க.நல்லையா), தங்கப் பிரகாஷ் ஆகியோராவர். தெளிவத்தை ஜோசப்பின் "பாட்டி சொன்ன கதையும்", சாரல்நாடனின் "கால ஓட்டமும்” தங்கப் பிரகாஷின் காயமும், முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்றனவாய் இலக்கியத் தரமுடைய புனைகதைகளாக ஈழத்துத் தமிழிலக்கியத் தொகுதிக்க வழங்கப்பட்டன. இரண்டாவது சிறுகதைப் போட்டி 1964 இலும் மூன்றாவது சிறுகதைப் போட்டி 1966 இலும் முதலாவது போட்டியின் தொடர் நிகழ்வாய் நடாத்தப் பெற்றன.
பொதுவாக இலங்கைத் தமிழருக்கு எதிரானது போல மலையகத் தமிழ்த் தேசிய இனத்தை நோக்கியதான அடக்குமுறைகளிலும் பேரினவாதக் கோட்பாட்டின் பிரயோக முறைமைகள் கையாளப்படுகின்றன. எனினும், மூலாதாரமானது,

Page 37
உற்பத்தியமைப்புடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. நாட்டின் உழைக்கும் வர்க்கம் முழுமைக்குமான அடக்கு முறையின் மொத்த தாக்கத்துக்கு மலையக மக்களும் முகங்கொடுப்பது பொதுவானது. எனினும் மலையக மக்கள் தேசத்தின் இதர மக்கள் சாரியினரிலிருந்தும் வேறுபடுத்தி இனங்காணப்படுவதையும் விசேஷித்த அடக்கு முறைக்குள்ளாவதையும் மறுக்கவியலாது. அவ்வாறு வேறுபடுத்திக் காட்டப்படுவதில் இருவேறு, அடிப்படைக் காரணிகள் உண்டு. முதலாவது, தேசத்து இதர உழைக்கும் மக்கட் சாரியினரோடு ஒப்பு நோக்கிப் பார்க்கையில், (முன் குறித்தமை போல) சொத்துக்களே இல்லாதவராயும் தாம் விலைப்படுத்தும் உழைப்பிற்கான கூலியிலேயே தங்கியிருத்தல். இரண்டாவது, காலனித்துவ வாதிகளாற் குடியேற்றப்பட்ட வந்தேறு குடிகளாக இருத்தலால் நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியம் இல்லாதிருத்தல். இவை இரண்டு காரணிகளைக் கொண்டும் மலையக மக்கள், தேசத்தின் ஏனைய மக்களிலிருந்தும் வேறானவர்களாய், பேரினவாதிகளால் இனங்காட்டப்பட்டனர். இவ்வாறு இனங்காட்டப்பட்டமையோடு, நாட்டில் வாழ்வதற்கான தகவைத் தருகின்றதான பிரசாவுரிமையும் பறிக்கப்பட்டது. பிரசாவுரிமையென்பது குறித்ததொரு நாட்டில் வாழ்வதற்கும் அந்நாட்டின் வளங்களை அனுபவிப்பதற்குமான அடிப்படையுரிமையானதால், அவ்வுரிமையைப் பறித்தலானது ஒரு மனிதனது ஜீவனையே பறிப்பதற்கு இணையாக ஆகிவிடுகின்றது. மலையக மக்களின் ஜீவாதார உரிமையான, நாட்டின் குடிமகனாயிருக்கத்தக்க, பிரசாவுரிமையைப் பறித்ததன் மூலமாக, அவர்களைப் பூரண ஒடுக்குதலுக்குட்படுத்த முடிந்தது. இவ்வாறான ஒடுக்குமுறைக்கு இலங்கையின் ஏனைய தேசிய இனங்கள் உட்படுத்தப்படவில்லையென்பது வெளிப்படையானது. இதனால் மலையக மக்கள், தேசத்தின் பொத நீரோட்டத்தோடு இசைவுபட்டுச் செல்ல இயலாதவராயிரென்பதோடு, அவ்வாறு செல்லவியலாமற் போனதன் காரணமாக, சகல துறைகளிலுமான வளர்ச்சியையும் பூரணமாக இழந்தவர்களாய்த் தேக்க நிலையடைந்து போயினர். அதுவே ஏனைய தேசிய இனங்கள் மலையக மக்களைக் கணிக்காமைக்கான சூழலைபுருவாக்கியதெனல் வேண்டும்.
இவ்வாறு இடர்ப்பாடுகளுக்கும் அகெளரவத்திற்கும், முகங்கொடுக்கும் அடிமைச் சமூகம் தனது தலைவிதியைத் தானே கையிலெடுத்துக் கொள்ளுமாயின் அதன் அடிமைத்தளைகள் அறுத்தெறியப்படுதலில் ஐயறவு

வேண்டுவதில்லை. மலையகச் சமூகம் தனது நிலைபேற்றை உக்கிரமான போராட்டங்களின் மூலமாகவே நிறுவிக் கொண்டதென்ங்தே மலையத்துக்கான வரலாறு. இவ்வரலாற்று செல் நெறியில் எண்ணிறந்த உயிர்கள் பலியிடப்பட்டுள்ளன. மக்கள் போராட்டங்களை நெறிப்படுத்துதலில், மத்தியதரவர்க்கத்தின் பாத்திரத்தை உலக வரலாறு எல்லாவற்றிலுங் காணலாம். அதனால் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சியொன்று ஒரு சமூகத்தின் வரலாற்றை முன்னெடுத்தலில் இன்றியமையாத் தேவைகளிலொன்றாய்க் கருதப்படுகின்றது. அவ்வெழுச்சியானது அரசியல், சமூக, கலாசார, கல்வி ஆகிய பல்வேறு துறைகளிலும் விளையலாம்
மலையகத்தில் இத் துறைகளிலான எழுச்சியானது அவ்வக்காலத்தின் வரலாற்றின் யதார்த்த சூழ்நிலைமைகளையொட்டித் தரீர் மானி க கப் படுகளினி ற தென லா மீ . இவ்வாறெழுந்ததோரெழுச்சியே அரசியல் சமூகத் துறைகளிற் தொடங்கி, கல்வி, கலாச்சாரத்துறைகளிலும் பரிணாமமெய்தி வந்துள்ளது. இலக்கியத் துறைகளிலான எழுச்சியானது கலாச்சாரத்தில் விளைத்துள்ள எழுச்சியே. இவ்வெழுச்சி அரசியல் சமூகத்துறைகளிலான எழுச்சியுடனிசைவுடையதாகி விளைந்ததே. அதன் அறுவடைகளாய், திருப்திகாணத் தக்க பரிமாணம் கொண்டதும் தனித்துவமிக்கதுமான மலையக இலக்கியத்தொகுதியொன்று வளர்ந்துள்ளது. இவ்விலக்கியத்தொகுதியின் இலக்கியப் பெறுமதி பற்றிய மதிப்பீடுகள் செய்யப்படும் போதிலேயே, அதனை மேலும் செழுமையுறுத்தல் இயலுவதாகும்
மலையகத்தில் இலக்கியம் படைக்கத் தலைப்பட்டோரனைவரும் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தோரே தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்தோர் நமது கவனத்துக்கெட்டியவரை இருவரே, ஒருவர் கவிஞர் குறிஞ்சி தென்னவன்; மற்றையவர் சிறுகதையாசிரியர் மல்லிகை சி.குமார். ஒரு வர்க்க சமூக அமைப்பின், சமூக அங்கத்தவனாயிருக்கும் ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும் ஏதாகிலும் வர்க்க முத்திரையொன்று பொறிக்கப்பட்டே இருக்கும். இது சிந்தனை தொடர்பான தவிர்க்கவியலாதவொரு நியதியெனலாம். வர்க்க சமூக அமைப்பின் தவிர்க்கவியலாத மற்றுமொரு நியதி அதன் லாபநோக்கமாகும்.
மத்தியதரவர்க்கம், ஈடாட்டமுடையதென்பதும் மார்க்ஸிய விதியேயாகும். ஈடாட்டம் என்பதன் கருத்து யாதெனின், அவ்வர்க்கம். பாழ்டாளி
புது வசந்தம் 35

Page 38
வர்க்கத்திற்கும் மேல்மட் - க்கமிடையில் ஊசலாடும் இயல்பைக் குறிப்பதாகும் எனலாம். ஒரு பக்கத்தில் புரட்சிகரமானதாயும் மறுபக்கத்தில் பிற்போக்குத் தனம்மிக்கதாயும் எதிர்ப்புரட்சிகரத் தன்மை வாய்ந்ததாயும் இவ்வர்க்கம் விளங்குதலை சகல தேச வரலாறும் நிறுவுவனவாயுள்ளன.
பில் புரட்சிகர சித்தாந்தத் யேர் அதனை விருத்தி செய்து பாட்டாளி வர்க்க விடுதலையை நிதர்சனப்படுத்த இவ்வர்க்கமே, எதிர்ப்புரட்சிகரச் சித்தாந்த நெறியின் சென்று சொத்துடமை வர்க்கத்தின் நிலைபேற்றை நிதர்சனப்படுத் க் செய்யம் அர் பில் அதன் சேவையானது ஒரு பக்கத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கும் மறுபக்கத்தில் சொத்துடமை வர்க்கத்துக்குமாக இருவேறு நிலைப்பாடுகளில் நிகழ்கிறது.
மலையகப் பிரதேசத்து மத்தியதர வர்க்கத்தின் குணவியல்புகளும் இத்தத்துவார்த்த முடிபுகளுக்கு விலக்கானவையல்ல. குறிப்பாக, தோட்டங்களில் உத்தியோகத்தராகத் தொழில் புரிவோர் மலையக மக்கள் குறித்துக் கொள்ளுகின்ற நிலைப்பாடு இவ்வர்க்கத்தின் பிற்போக்குச் சார்புடைமைக்குச் சான்றாயமையும். லயத்துக் காட்டான், தோட்டக்
ட்டான், கம்பளி, புல்லுவெட்டி போன்ற பதங் இழிவுக்குறிப்புப் பொருளில் தொழிலாளி வர்க்கத்தை நோக்கிப் பிரயோகிப்பவர்கள் முதன்மை பெறுவோர் இவரே. தோட்டத் துரைமாரையும் கம்பனிகளிலான அதிகாரித்துவ வர்க்கத்தினரையும் துதிபாடிப் புகழ்பவரும் இவரே பாட்டாளி வாக்கத்தவருடனான முரண்பட் வே, இவர்களின் இந்நிலைப்பாட்டுச் கான காரணமெனலாம். இவர்களிலும் இன்னொரு சாராருளர். அவர்கள் புரட்சிவாதிகளாயில்லா விடினும் முற்போக்கானவர்களாயிருத்தலைக் 85T600T6) TLD.
தோட்டத்தையன்றி அதன் புறநிலைகளில் அரசாங்க, தனியார் நிறுவனங்களில் தொழில் புரிவோர் மத்தியதர வர்க்கத்தின் மறுபிரிவினராவர். இவர்களிலும் ஒரு சாரார், பெரும்பான்மையோர், பாட்டாளி வர்க்கத்தை வெறுத்து இழிவுறுத்தும் நிலைப்பாடுடையவர்களே. தோட்டத்துலயக்காம் பிராக்களை விட்டு நகள்ப்புறம் நோக்கிய இவர்களின் நகர்வானது, இவர்களின் நிலைப்பாட்டினை நிறுவுவதாகும். பேச்சு வழக்கிற் கூட மலையகப் பேச்சுமொழி வழக்கை உதாசீனஞ் செய்து, யுழிழ்ப்பாண வழக்கை உயர்ந்ததெனக் கருதிக் கைக்கொள்வோராய் இவர்கள் காணப்படுவர்.
எழுத்தாள்களாய் இலக்கியம் வார்க்கப் புகுந்தோருட் பெரும்பாலானவர்கள் மத்தியதர
36 புது வசந்தம்

வர்க்கத்தவரேயெனல் வேண்டும். "இலக்கியம் என்பது யாது? இவ்வினா இவ்விடத்தில் ஆதார முக்கியத்துவம் வாய்ந்தவொன்றாயப் க் காணப்படுகின்றது. சுருக்கமாகச் சொல்வதானால் உலகத்துடனான மனிதனின் ஊடாட்டந் தரும் அநுபவங்களின் வார்ட்பே இலக்கியம் என்று கூறலாம் இந்த வரையறைக்கும் மிஞ்சிய இலக்கியமொன்று இருத்தலியலாது. அநுபவங்கள் வேறுபாடுடையவை; அவ்வனுபவங்களை மனிதன் உள்வாங்கிக் கொள்கிற பாங்கிலும் வியாக்கியானஞ் செய்கிற வகையிலும் முரண்பாடுகள் நிலவுகின்றன. ஆதலால் இலக்கியந் தொடர்பில் அநுபவமும், அவ்வநுபவம் யாருக்கு ஏற்பட்டது என்பதும், அவ்வநுபவம் ஏற்பட்டவர் அதனை நோக்கிய பார்வையும் அதன் வாயிலாக ஏற்படுத்திக் கொண்ட உணர்கையும் நுணுகியாராயப் படவேண்டியவை. ஏனெனில் இலக்கியவாதி, தனது படைப்புகளிற் தன்னையே தருகிறான் என்பதனாலேயே. அதாவது எழுதுபவரெவரும் தனது அநுபவத்தையே இலக்கியமாக்குகின்றாரென்ற வகையில், அவருக்கு ஏற்பட்ட அநுபவத்தின் தாற்பரியமே இலக்கித்தினுடே பாய்கிறது. வர்க்க சமூக அமைப்பொன்றில் மனிதனின் சமூகாநுபவங்கள், வர்க்கங்களைக் கடந்தனவாயிருப்பதில்லை. அதனால் எழுத்தாளன் தனது இலக்கிய வார்ப்புக்களில், தான் சார்ந்திருக்கின்ற வர்க்கத்தையே பிரதிநிதித்துவஞ் செய்பவனாயுள்ளான்.
மலையக எழுத்தாளரிற் பெரும்பான்மையோர், மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தோரேயென்பதனை முன்னரே கண் டோம் . இவ் வர் க் கத்தின் குணாதிசயங்களும் அவ்வாறே சுட்டப்பட்டன. மலையக மக்களை இவ்வர்க்கம் நோக்கிய பார்வையில் பாட்டாளி வர்க்கச் சார்பினைக் காணுதலரிது. எனினும் தவிர்க்கவியலாதவாறு அவர்கள் தேர்ந்து கொண்ட மானுட வகைமாதிரிகள் цT Lпећањ6тав&n asтеш"Left LT u Gg Test கதையில் தெளிவத்தை ஜோசப்பின் கிழவியும், காவேரியுமாகிய பாத்திரங்களும் சாரல்நாடனின் கால ஓட்டத்திலான துரைசாமியும் “இதுவும் ஒரு கதையில்” மு.சிவலிங்கம் காட்டும் ராமுவும் பன்னி செல்வத்தின் இலவு காத்த கிளியில் வரும் குட்டியப்பன் கங்காணியும் தனது “பிரசவக் காசில்” பரிபூரணன் காட்டும் கன்னாசியும் தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தோரே எனினும், இவர்களனைவருமே பாட்டாளிவர்க்கத்தை உள்ளவாறு சித்தரித்துள்ளனராவெனின் இல்லையென்றே கூறுதல் வேண்டும். மேற்குறித்த பாத்திரங்களைத் தமது பார்வையிலேயே, அதாவது மத்தியதர வர்க்கத்திற்கேயுரிய பார்வையிலேயே கண்டு

Page 39
சித்தரித்துள்ளனர். தொழிலாளி ஜோசப்பின் கிருஷ்டிப்பில் , தெளிவத்தை வர் க்கம் நையாண்டிக்குட்படுத்தப்படுவதைத் தெளிவாகவே காணக்கூடியதாகவுள்ளது. இது போன்ற , பரிபூரணனின் பார்வையிலும் மலையகத் தொழிலாளரை நோக்கிய நையாண்டிப் பான்மையைக் காணமுடிகின்றது. "கால ஓட்டத்தில்" துரைசாமியின் இடக்குமுறைக்கெதிரான வீரார்ந்த போராட்டமானது வர்க்கங்களைக் கடந்த மனிதாபிமான உணர்வுடன் நோக்கப்பட்டிருத்தல் துலாம்பரமாகத் தெரிகின்றது. தொழிலாளி வர்க்கத்தை அவ்வர்க்கத்தின் நலனைச் சார்ந்திருந்து சித்திரிக்கும் படைப்புக்களாக சொந்தக்காரன் போன்ற நாவல்களையும், கைதேர்ந்தவர்கள் போன்ற
சிறுகதைகளையுமே குறிபபிடல் வேண்டும்.
நஞ்சூட்டப்பட்ட
O ಛಿಜ್ಜಳ್ಳಿ «» நிஞ்சூட்டப்பட்ட _
எங்கள் தேசம் அழுகின்றது .
۲۰۰۷٬۰۰۰
8.
மண்ணிற்கு நஞ்சூட்டினிகள்
எங்கள் அன்பு தாவரங்களுக்கு நஞ்சூட்டினீர்கள்
மலர்களுக்கு நஞ்சூட்டினீர்கள்
தாங்கிக் கொண்டோம்
எமத வானத்தை நஞ்சர்க்கினீர்கள் சுவாசத்தை நஞ்சாக்கனீர்கள் எம் உதிரத்தை மட்டுமல்ல மானத்தைக் მრთ „L- நஞ்சாக்கினீர்கள் தாங்கிக் கொண்டோம். * . . .... . .م
எங்கள் குழந்தைகளுக்கு 。・
நஞ்சூட்டினீர்கள்
 
 
 
 
 
 

இக்கட்டுரையில் "மலையக இலக்கியம்” எனும் இலக்கியத் தொகுதியை, ஸ்தாபிதம் செய்வதிலான வரலாற்றுப் பின்புலத்தை விளக்குவதே எனது நோக்கமாயிருந்தது. எனினும், அவ்விலக்கியத்தின் அடிப்படையான சார்புடைமை பற்றி ஓரளவு விளக்க முற்பட்டிருக்கின்றேன். மலையக இலக்கியத்தின் பொருளமைதி, அழகியல் என்பன குறித்து காத்திரம்மிக்க ஆய்வுகளும் மதிப்பீடுகளும் வருதல் இன்றிமையாதது. அவ்வாறான ஆய்வுகளும் மதிப்பீடுகளுமே மலையக இலக்கியத்தின் திசை மார்க்கத்தைச் சரியாகத் தீர்மானிக்க வல்லன. 6)ITuj6OLDu D.
女女女。
எங்கள் தேசம்
சை.கிங்ஸ்லி கோமஸ்
எமது பிள்ளைகளின் உடல்களுக்கும்
நஞ்சூட்டினீர்கள் s ல் இருக்கும் சிசுவை மட்டுமல்ல எங்கள் கருப்பையையே விசமாக்கினீர்கள்
தாங்கிக் கொண்டோம்.
இனி கனவிலும்
> நஞ்சுக்கு எதிரான மாற்று மருந்த ~ எம்
புதிய தலை முறையின்ரின்
கைகளில்!
நஞ்சூட்டுபவர்களுக்கு எதிராக -எம் தேசம் நிமிர்கின்றது.

Page 40
With Best Compliments From:
Generd MerChonis, ImpOrie Tronsporter
Distributors For Lever Brothers (Ceylon) LTD, Evereddy Battery Co, Lonko LTD, MoliboCan Biscuits MonufoCturerS LTD, Little Lion ASSOCiote LTD, Lonko Milk Foods (C.W.E) LTD, Tmol Lanko (PVT) Limited, Reckit & Colmon Ceylon LTD, H. DOn CCrOis 8 SOnS LTD, Associoted Motorr Woys LTD. S.V.R., SOmbC Rice,
With Best Compliments From:
NO, ] 6, Mil| RO
DeOilers & DistriloutOrS in :- Ever S Temple Reduisite:- Bells, Lorge&Smoll in All SiZES, DeCOIAfive COIOUN UNmBrellCS, W
 
 

'S, MOnufo.CturerS, DistributorS,
And MillerS,
City Office l76, CentrC ROCIC, ColombO-12, Sri LCnkO. Tel/Fox : 434709
85,87, BOZOOr Street, VOVUniyO, Tel: O24-22302, 22387
)Cd, VOVUniyC.
Ver, Aminion, BrOnze Utensils,
Stotues of Cill Descriptions, Oil LOmp
e Specjalizein PresentOiiOn Giff PresenfS,

Page 41
மொழிபெயர்ப்புச்
மறப்பதற்கு
மடக்கதை கதையாதே' என்கிறது
'உலகம் சுழலுகிறது' எல்லாம் மாறு
முடிந்ததை நீ மறந்தே ஆக வேண்
நீ உன் வயலை மறக்க முடியுமெ
நீ உன் வெள்ளை வீட்டை மறக்க பழுப்பு நிறக் குடத்தை நீ மறக்க ஒலிவ் மரத்தை நீ மறக்க முடியுெ
தோடை மரங்களை' என்கிறது எரிந்
'நீ உன் சகோதரியர் இருவரையும்
என்கிறது புதைகுழிகட்குச் செல்லு
'ஒலங்களை நீ மறக்க முடியுமெனி
'அட்போது நீ அபாயத்துடன் விளை
பிடுங்கப்பட்ட மரத்தினின்று விடுதை
கப்பலின் வயிற்றினுள் நீ கடற்பய6
காற்றில் மணற் துளிபோல விடுதை
முடிவில்
நீ இழந்த சொந்த மண்ணினின்று
'உலகம் சுழல்கிறது, முடிந்ததை
மடக்கதை கதையாதே என்கிறது உன்னை விரட்டினோரின் தரப்பிலிரு
(எரிஷ் ஃப்றீட் பு ஒஸ்ற்றிய நாட்டு

ர் கவிதைகள்
அழைப்பு
5ாற்று
Big5),
டும்.
னின் என்கிறது நஞ்சூட்டப்பட்ட பயிர்
முடியுமெனின் என்கிறது இடிந்த கல்
முடியுமெனின் என்கின்றன ஒட்டுத் துண்டுகள்.
மனின் என்கிறது மரக்குற்றி.
த தோப்பு
மறக்க முடியுமெனின்
D UT605
ன் என்றன செவிகள்
ாயாடுவதை நிறுத்தலாம்.
லை பெற்ற அத்திக்கனி போல
OOTLD (8LJITa56OTLD,
b6)60)ulds 85.T600T6)TD,
விடுதலை பெறலாம்,
நீ மறந்தே தீர வேண்டும்,
காற்று -
]ந்து வீசியவாறு
லம்பெயர்ந்த க் கவிஞர்)

Page 42
மெளன
(திமோதெய
வண்ணத்துப் பூச்சி
எப்போதேன் தன் சிறகுக மிகவும் வலிதாக மடக்கி அவர்கள் கூவினர். அை
அருண்ட பறவையொன்ற சிறகு சூரியக் கதிரில் உரசுப் பட்டாலும் - அவர்கள் கூவினர்; நிசப்
இவ்வாறு அவர்கள் - முரசங்கள் மீது இரையா யானைகட்கும் மண்மீது நடக்க மனிதர்க்
வயல்வெளிகளில் மரங்க ஒலியின்றி எழுந்தன அச்சத்தில் ரோமம் எழுவது போல
sc
(திமோதெய
எரியும் வனத்தினின்று மr கவிஞனை அவனது துயி துள்ளச் செய்த
துர்ச் சொப்பனம் எது?
அவனது உவமேயத்தின் தன் சிறகுகளால் 96).g.) அவர் வருணித்த கதவுக் நடுக்குற்றது.
(40 புது வசந்தம் H

PITI LITTLD
|ளம் கார்போவிச்)
பதம்!
மல் நடக்க
கும் கற்பித்தனர்
னவு
ாளம் காபோவிச்/
6T (UT6)
|லினின்று
வண்ணத்துப்பூச்சி க்கு முகத்திரை இட்டிருந்தது
குமிழ்
(காபோவிச் போலந்து நாட்டவர்)

Page 43
விமர்சனக் கண்ணோ
യ0ഴ്സു കമ്മീr്7]'L) சிலருக்குப் பயனற்றதாய்த் தெரிகிறது ஏனெனில்
அவர்களது விமர்சனத்தை அரசு அசட்டை செய்கிறது
இங்கே பயனற்ற கண்ணோட்டம் என்பது பலவீனமான கண்ணோட்டமே விமர்சனத்தை ஆயுதபாணியாக்கினால் அது அரசுகளை அழித்தொழிக்கும்
ஆற்றுக்கு அணை கட்டல் கனிமரத்துக்கு ஒட்டு வைத்தல் ஒருவருக்குக் கற்பித்தல் அரசை மாற்றியமைத்தல்
ജ്ഞയuff) ஆக்கமான விமர்சனத்துக்கு உதாரணங்கள் அதேவேளை
கலைக்குரிய உதாரணங்கள்
நேற்றுப் போல் உ
Uസ്ക് தான் மலமுண்ணிஎன்று அவன் சொன்னான் அனைவரும் அவனுக்கு விருந்தளிக்க விரும்பினர் 'அவன் எமது குடல்களைத் தூய்மையாக்குகிறான்" என்று பாதிரியின் பட்டாளத்தானின் சனாதிபதியின் ம ஒரு நல்ல குடல் கழுவிதேவையான ஒவ்வொருவரு
பின்னர் நிசப்தத்தில் மிதந்து வந்தது இருள். இராப்ப தொழிலமைச்சரின் பாதங்களை முத்தமிட ஓசையின்றி மெதுவாக மலமுண்ணிமேல்மாடி சென்ற
நேற்றுப்போல் உண்டான் மறுநாள் அவனது தாசர்கட்கு என்ன ஒரு அதிசயம்! கொடும் பதைப்பு அமைச்சர் மறைந்து விதடார் அது என்னவோ உண்மை, அவள் தனது கட்டிலில் இல்லை.

ாட்டம் பற்றி.
*(ப்றெஹ்ற் நன்கறியப்பட்ட ஜேர்மன் நாடகவியலாளரும் கவிஞருமாவர்)
உண்டான்
(எட்காடோ டுறான் றெஸ்ற்றெபோ)
னைவியரும் ம் கூறினர்.
றவைகள், தூரத்து மின்னல்
pføớr
(றெஸ்ற்றெபோ லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த லத்தின் அமெரிக்கக் கவிஞர்)

Page 44
இலையுதிர்கா நமக்கு உ
இந்த இலையுதிர்காலத்தின் முடி5
"எமது உடல்களை நிலக்கரிபோல
இவ்வயலில் இன்னொரு
எனக் கேட்கவும் எமக்கு உரிமைய
இலையுதிர்காலமொன்று பொன்ன
பருவ மாற்றங்களைப் பார்த்திருப்
அத்தி இலைகளாகவோ கவ
இருக்கலாம் என எண்ணுக
ஈட்டி முனையிற் பிறந்த போதில் g என்று கேட்பதற்காக நாம் ந
பிரியாவிடை கூறாமல் இ(
கவிதையும் கடவுளின் பேரும் எம
அழகிய பெண்களை இரவுகளில் இ
வடக்கை எட்டும் வரை திசை காட
வழிப்போக்கர் இருவருக்க
பேசவும் நமக்கு உரிமை உ
ஒரு இலையுதிர்காலம் இவ் இை
இரவினிடம் ஒரு கனவைக்
മൃ_fിത0 മീ .മീ0
கனவு காணன்பவர் போல’கனவும் 6
ஒரு இலையுதிர்காலம், ஒரு இை
கிவற்றின் மீது மக்கள் பிறக்க இயலு
நாம் விரும்பியபடி சாக நமக்கு 2
பூமிஒரு கோதுமை மணக்குள் பே
கிலற்றின் ; மேலிருந்து விழுந்து வெட்டும்
42 புது வசந்தம்

லத்தை நேசிக்க
ரிமையுண்டு
வை நேசிக்கவும்
அமர்த்த
இலையுதிர்காலத்திற்கு இடமுண்டா?
/മീ.
ண ஒத்த தன் இலைகளைத் தாழ்த்துகிறது.
பதற்காக நாம்
னிப்பாரற்ற ஒரு மரமாகவோ
றேன்
ம் தந்தையர் என்ன கேட்டனர்
தமது கண்களின் தென்திசைக்குப்
ருந்திருக்கலாமென எண்ணுகிறேன்
க்குக் கருணையுடையனவாய் உள்ளன.
േഖfമസ്കബ
ட்டியைக் காத்திருக்கும்
ாக இரவைக் குறுக்குவது எது என்பது பற்றிப்
.മീ லயுதிர்காலத்தின் மணத்தை முகரவும்
கோரவும் உண்மையில் நமக்கு
நாய்வாய்ப்படுகிறதா?
லயுதிர்காலம்
60്?
_്ത0 ) ീ
ய் ஒளியட்டும்.
கனமான அலகையுடைய ஒரு கொலைக் கருவி)
-மஹற்முத் தள்விஷ் (பலஸ்தினக் கவிஞர்)

Page 45
இரு விமர்ச
205
நூல்கள்:-
கலாச்சாரம், எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்
பின்நவீனத்துவமும் அழகியலும்
பாரதியின் மெய்ஞ்ஞானம் (ஆய்வு) ஏன் சிறுகதைத் தொகுதி) ஆகிய இரு நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ள நடேசன் இரவீந்திரன் ஒரு தீவிர மாக்சீயவாதியாக தொடர்ந்தும் அரசியல், இலக்கிய சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் விளைவாக வெளிவந்தவையே புதிய நூல்களான, கலாச்சாரம், எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம் மற்றும் 'பின் நவீனத்துவமும் அழகியலும் என்பவை. 97லும், 98லும் முன் பின்னாக வெளிவந்த இந்த இரு நூல்களும் சமகாலத்து இலக்கிய பிரச்சினைகளில் மையம் கொண்டுள்ளன.
பாரதியின் ஆய்வில் தொடங்கும் முதலாவது நூல், பாரதியின் அரசியல், இலக்கியப் பணிகளுடாக அவரது சமூக உணர்வை எடுத்துச் சொல்கிறது. அரசியல் இலக்கியத்தின் முன்னோடியான பாரதியார் ஆரம்பத்தில் ஒரு புரட்சியாளனாகவும், புதுவை வாழ்வுக்கு பின் காந்தியத்தை அனைத்து ஒரு ஆன்மீகவாதியாகவும் மாறிவிட்டார் எனக்கூறும் ஆய்வு முடிவுகளை ஆதாரத்துடன் மறுக்கும் இரவீந்திரன் பாரதியின் புரட்சிப்போக்கு 1921இல் அவர் மறையும் வரை மாறியதில்லை என்கிறார். காந்தியை அவரது மக்களை கிளர்ச்சியூட்ட வைக்கும் தன்மைக்காகவே பாரதி ஏற்றுக்கொள்ளுகிறார் என்றும், பிரிட்டிஷ் பொலிசாருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி கொள்வதை பாரதியார் ஆதரித்துப் பாடுவதையும் சுட்டிக் காட்டுகிறார். இந்த வகைகளில் அவரது வரலாறு மறுமதிப்பீட்டுக்கு உள்ளாக வேண்டும் என்றும் தமிழக விமர்சகள் கேசவனது வரட்டு மாக்சீய பார்வையில் பாரதியை ஆன்மீகவாதியாக காண்பதை மறுத்து இயங்கியல் ரீதியான மாக்சீயப் பார்வையே இங்கு அவசியமானது எனக் கூறும் இரண்டாவது கட்டுரையும் பாரதியியலிலேயே மையம் கொண்டுள்ளது.

ன நூல்கள்
ார்வை -
- கந்தையா யூனிகணேசன் -
இத்தொகுப்பின் மூன்றாவது கட்டுைைரயான 'இருபதாம் நூற்றாண்டின் தமிழ் புனைகதை இலக்கியம் என்பது பாரதியையே இத் துறையின் முன்னோடி என விமர்சனப்பார்வையுடன் முன் வைக்கிறது. 1879இல் தமிழ் நாவலின் தோற்றம் கைவரப் பெற்றபோதும் அவை உட்புச் சப்பற்ற படைப்புகள் எனவும் 1896, 1898, 1900 ஆண்டுகளில வேதநாயகம் பிள்ளையும் , ராஜம் ஐயரும் , மாதவய்யாவும் குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதிய போதும் அவை நவீனத்துவப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லையெனவும் வாதிட்டு பாரதியின் சிறுகதைகளுடாகவே தமிழ் புனைகதை இலக்கியம் முழுமைபெறுகிறது என கூறுகிறது.
வெறும் இன்பமூட்டல், அறிவூட்டல் என்ற அளவில் தம்மை மட்டுப்படுத்திய இலக்கியவாதிகள், பாரதியார் எளிமையான நடையில் கவிதையை சமூக மாற்றத்திற்கு, செயலுக்கமிக்க பங்களிப்பு வழங்குவதில் பயன்படுத்தியதுபோல அக்கறையாய் இருக்கவில்லை. எனினும் கவிதைபோல கதைவடிவம் பாரதிக்கு கைகொடுக்கவில்லை என்றும், வடிவ அமைதி பெறாது பிரச்சாரத்தன்மை கொண்டவை அவை என்ற விமர்சனங்களை, சி.சு.செல்லப்பா போன்றோர் எதிர்கொண்டு கூறுவது: பாரதியார் வ.வே.சு.ஐயரைவிடவும் தமிழ் மரபினுடாக புனைகதை இலக்கியத்தினை வளர்த்தார் என்பதாகும். இதனை இரவீந்திரன் ஆதரித்து மேலும்கூறுவதாவது, இத்தமிழ் மரபை சிறப்புற கையேற்ற கல்கி, வெறுமனே கொச்சை உணர்ச்சிகளுக்குத் தீனி போடும் வணிக இலக்கியப் பண்டங்களை உற்பத்தி செய்து வாசகர்களை மயக்கியது தமிழ் இலக்கிய உலகின் அவலமே என்பதாகும்.
மறுபுறமாக, மேற்கத்தேய நவீன இலக்கிய வடிவமான சிறுகதையை வளமாக பயன்படுத்திய புதுமைப்பித்தன் சமூகப் பிரச்சினையை வீச்சுடனும் வடிவ அமைதியுடனும் கையாண்டபோதும் அவரது கிண்டல்தொனியினால் சமூக மாற்றச் சிந்தனையில் தடம் பதிக்காது, மக்கள் கலை வடிவமாக வளர்த்தெடுக்கப்படாது போய்விட்டது என இரவீந்திரன் ஆதங்கப்படுகிறார்.

Page 46
பாரதி வழியில் பணியாற்றிய "சரஸ்வதியில் சாதாரண மக்கள் இலக்கியத்தை வளர்த்தெடுத்த ஜெயகாந் தன் பின்னாளில் உளவியல் தத்துவங்களுக்குள் ஒடுங்கிச் சரிந்தார். அதேபோல சிறந்த எழுத்தாளர்களாக பரிணமித்த சா.கந்தசாமி, பாலகுமாரன், நீல.பத்மநாதன், வண்ணநிலவன், வண்ணதாசன், முத்துசாமி, அசோகமித்திரன், சிவசங்கரி, பூமணி, அம்பை, திலீப்குமார், மாலன் என்போர் உள்மனத்தேடல்களுக்குள் ஒடுங்கிப்போய்விட்டதை எடுத்துக் கூறுகிறார் நூலாசிரியர். நம்பிக்கையினம், வரட்சி, கயமை, துணிவின்மை என்பனவே அவர்கள் உள்ளடக்கங்களாகும் என மேலும் கூறுகிறார்.
என்பதுகளில் ஏற்பட்டி, இன்னொரு சரிவு: ஒருபுறம் வணிக இலக்கியப் பத்திரிகைகளின் பெருக்கம் மறுபுறம் பெண்விடுதலை, சாதிவிடுதலை, தேசியவிடுதலை எனத் தனித்தனி பிரச்சினைகளை நோக்கி இலக்கியவாதிகளின் பயணம் அமைப்பியல் வாதிகள் மையத் தகர்ப்பு வாதம் செய்து கதையே தேவையில்லை எனக் கூறி ஆசிரியன் இறப்பு என்றும் வாசகன் மறுவாசிப்பு என்றும் புதிய புதிய சித்தாந்தங்களுக்குள் அமுங்கி கருத்துமுதல்வாதத்தை நோக்கி நடைபோட்டனர். பின்நவீனத்துவச் சகதிக்குள் சிக்கி ஒட்டுமொத்தமான சமூக விடுதலையை மறுதலித்தனர் என்றும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
இத் தொடர்ச்சியில் யதார்த்த மறுப்புடன் புறப்பட்ட ஜெயமோகன் போன்றோர் படிமக்குவியல்கள் ஊடாக பல தளத்துக்கு இலக்கியம் இட்டுச் செல்லப்பட வேண்டும் என்று வாதிட, மேலாண்மை பொன்னுச்சாமி போன்றோர் சமூக உணர்வுடன் யதார்த்த சித்திரிப்பு ஊடாக மக்கள் பிரச்சினைகளை இலக்கிய தரத்துடன் படைப்பதை ஒப்பிடுகிறார் இரவீந்திரன்.
இக்கட்டுரையில் ஈழத்திலக்கியத்தின் தரம் பற்றி கேள்வியெழுப்பிய ஜெயமோகனை மறுத்து, தொடர்ந்து நான்காம் கட்டுரையான "ஜெயமோகன் திசையழிந்த அத்துவானவெளியில்” என்பதில் அவரின் இலக்கிய பணி பற்றி ஆய்வு செய்கிறார் ஆசிரியர். 'திசைகளின் நடுவே எனும் தொகுதியில் உள்ள மாடனின் மோட்சம் போன்ற கதைகள் சமூக உணர்வுடன் படைக்கப்பட்டுள்ள அதேவேளை, ஆழ்மனத் தேடல்களுக்குள் தொன்மங்களையும், படிமங்களையும் பின்னி கலைத்தரம் என்ற போர்வையில் மனுக்குலமீட்சிக்கு வித்திடாத படைப்புகளை தரும் ஜெயமோகன், விடுதலைப் போராட்டத்தீயினுள் வாழும் ஈழத்தவர் வாழ்வை
44 புது வசந்தம்

யதார்த்த சித்திரிப்புடன் படைக்கும் எழுத்துக்களை கலைத் தரம் அற்றன என்று வாதிடுவதை வன்மையாக இரவீந்திரன் மறுக்கும்போது நாமும் அதற்கு உடன்பட வேண்டியவராகின்றோம். ஆயினும் காத்திரமான நவீன ஈழத்திலக்கியப் படைப்புகள் பற்றி முழுமையான கட்டுரை எழுதப்பட வேண்டும். முதன் நூலின் இறுதிக் கட்டுரை பாரதி நவீனத்துவ் முன்னோடி அல்ல என பூடகமாக மறுக்கும் தமிழக விமர்சகர் அ.மாக்ஸின் கருத்துக்களை மறுக்கிறது. பார்ப்பனிய மரபை மறுத்தல், அழகியல் இடத்தில் அரசியலை வைத்தல், மரபை மறுத்தல், படைப்பின் புனிதத்துவத்தை அழித்தல், எதிர்மரபுக் கூறுகளைத் தேடல், ஒழுங்கமைப்புகளைச் சிதைத்தல் என்பனவற்றை நவீனத்துவ சிந்தனையாகக் கூறும் அ.மாக்ஸ் பின்நவீனத்துவச் சிந்தனையான தலித்தியத்தை முன்னிறுத்தி பாரதியின் நவீனத்துவ சிந்தனைகளை மறுப்பதை இரவீந்திரன் ஆதாரபூர்வமாக மறுக்கிறார்.
ஆக மரபுக் கலாச்சாரத்தில் உள்ள உழைப்பாளர் கூறுகளையும், ஆதிக்கத்தை மறுத்து எழும் எதிர்க்கலாச்சார கூறுகளையும் இணைத்து சமூக விடுதலையைத் தரக் கூடிய புதிய கலாச்சாரத்தின் தோற்றம் அவசியமானது என இரவீந்திரன் அறைகூவல் விடுக்கிறார். ஆயினும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தினூடாக 69(5 சமத்துவ வாழ்வை எட்டுதல் என்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது விரிவாக விளக்கப்பட வேண்டியதே.
பின் நவீனத்துவமும் அழகியலும் எனும் இரண்டாம் புத்தகத்தின் முதற் கட்டுரை. அத்தலைப்பிலேயே அமைந்துள்ளது. ஆயினும் முதல் நூலின் இறுதிக் கட்டுரையான ‘கலாச்சாரம், எதிர்க்கலாச்சாரம், புதிய கலாச்சாரம்பற்றிய விடயங்களுக்கு மேலும் விளக்கங்கள் இதில் கிடைக்கின்றன. அந்த வகையில் முதல் நூலின் தொடர்ச்சியாக இருப்பது தவிர்க்கமுடியாததே.
பின்நவீனத்துவச் சிந்தனையான, சகல அமைப்பையும் தகர்த்தெறியும் குழப்பம் இயற்கையானது என்பதை மறுத்து எந்தக் குழப்ங்களுக்கும் ஒரு நியதி உண்டு என்கிறார் இரவீந்திரன். குழப்பங்களால் கிடைக்கும் கும்பல் கலாச்சாரத்துக்கு பதிலீடு எதிர்க்கலாச்சாரம் அல்ல. ஏற்கனவே இறுகிப்போய் உள்ள முதலாளித்துவ அமைப்பைத் தகர்க்க மாக்சிஸ அடிப்படையில் அமைந்த புதிய கலாச்சாரமே தேவை. பன்மைத் தன்மை, மிகுந்த சமூக அமைப்பில் எவருடையது

Page 47
புதிய கலாச்சாரம் என்பதற்கு பாட்டாளி வர்க்க கலாச்சாரமே என்றும் அது மக்கள் கலாச்சாரமாக வர்க்கங்கள் மறையும்போது மாறும் என்கிறார். இது ஒரு கேள்விக்குரிய விடயமாகும். மக்கள் கலாச்சாரமாக மாறும் வரை பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தை சமூகம் பொதுவாக ஏற்கும் என்பது யதார்த்தமல்ல என சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியம், ஏனெனில் சர்வாதிகாரம் எந்தவடிவிலும் ஆபத்தானது.
பெரியாரின் கோட்பாடுகள் பற்றி ஆராயும் இரண்டாம் கட்டுரை பெரியாரின் தீவிர மத எதிர்ப்புவாதம் , தனிமனித வழிபாட்டில் (எம்.ஜி.ஆர்.வழிபாடு) கொண்டு வந்ததையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். தீண்டாமை ஒழிப்பு பார்ட்பன எதிர்ப்பு என்பதில் மட்டும் ஒடுங்கியதால் இன்று தலித்தியம் எனவும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை எனவும் தனியான சிந்தனையாக ஒடுங்கியது மட்டுமல்லாது தமிழகமெங்கும் சாதிக் கலவரம் மூண்டெழுகின்ற அவலமும் தோன்றியது என மேலும் கூறுகிறார். இதற்கு மாற்றாக பெரியார் கோட்பாடுகளை முற்றாக ஒதுக்கும் கேசவனின் வாதங்களை மறுத்து அதில் உள்ள நல்ல அம்சங்களை மூடநம்பிக்கை ஒழிப்பு, மற்றும் சமூக விடுதலை ஊடாக சாதி விடுதலை எட்டப்படுதல் என்பவற்றை இரவீந்திரன் முன் வைப்பது நியாயமாகப்படுகிறது. வெறுமனே சாதி விடுதலை மட்டும் பேசும் அ.மாக்ஸின் ‘தலித்தியம்’ அர்த்தமற்றது என்பதும் ஏற்கப்படக்கூடியதே.
மூன்றாவது கட்டுரை "பாட்டாளி வர்க்க இலக்கியத்துக்கு தனித்துவமான அழகியல் உண்டா?” என வினாவெழுப்பி அது பாட்டாளி வர்க்க இலக்கியத்தினுடாகவே சாத்தியம் என்கிறார். முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான சுரண்டலற்ற அமைப்பாக, இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க அமைப்பே திகழ முடியும்; அதனால் அது புரட்சியை நடாத்த தகுதியுடையது; அதன் தொடர்ச்சியில் வாக்கங்கள் அற்ற மக்கள் அமைப்பு சாத்தியப்படும்; மக்கள் இலக்கியம் உருவாகும்.
இந்த மக்கள் இலக்கியம் ஏற்கனவே உழைப்பாளிகளின் கலைக்கூறுகளால் நிரம்பியுள்ள மரபு இலக்கியங்களிலும், எதிர்ப்பு இலக்கியக் கூறுகளிலும் புடம் போடப்பட்டு உருவாகக் கூடியது. அப்போது அதற்கு தனித்துவமான அழகியல் சாத்தியம். இதன் இலக்கியப்படைப்புகள் மக்கள் பிரச்சினைகளை துல்லியமாகப் படைக்கக் கூடிய யதார்த்த முறைமைகள் மட்டுமல்லாது, மக்கள் விடுதலையைச் சாத்தியமாக்கும் பிறெக்றின்

செயலூக்கமுள்ள 'காவியப்பாணி நாடக இலக்கிய வகைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியன என்ற இரவீந்திரனின் வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. நிலமான்ய, முதலாளித்துவ கலை இலக்கிய வடிவங்களை சோசலிச அமைப்பு தனக்குரியதாக வளர்த்தெடுக்க வேண்டுமென்பது தவிர்க்க முடியாததே.
இந்த வாதத்தின் தொடர்ச்சியை இறுதிக் கட்டுரையின் ‘ஈழத் தமிழிலக்கியத்தில் பயன்பாட்டுவாதமும் அழகியல்வாதமும் என்பதிலும் காணலாம். தமிழிலக்கியம் பொதுவாகவும், ஈழத்திலக்கியம் குறிப்பாகவும் மக்கள் பயன்பாட்டு அடிப்படையிலேயே வளர்ந்து வந்துள்ளது. ஆயினும் அவ்வப்போது அழகியல் வாதங்களும் எழாமல் இல்லை. இந்த அழகியல் வாதங்கள் மக்கள் விடுதலையை எவ்வளவு தூரம் சாத்தியமாக்க உதவின என வாதாடும் இரவீந்திரன் ஈழத்திலக் கியத்தில் (நவீன) இவை ஆற்றிய பங்களிப்பை விரிவாக எடுத்துரைக்கிறார்.
ஈழத்திலக்கிய முன்னோடிகளான (சிறுகதை) சம்பந்தர், இலங்கையர்கோன், வைத்தியலிங்கம் ஆகியோர் சமூக நிதர்சனத் தரிசிப்பை விடவும், உளவியல், ஆண் பெண் உறவு, காவிய ரசனை, வடிவ அமைதி என்பதற்குள் தம்மை கட்டுப்படுத்திக் கொண்டனர். இரண்டாம் கட்ட எழுத்தாள்களான தி.ச.வரதர், அசெ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி ஆகியோர் கிராமிய வாழ்வு சமூகச் சீர்திருத்தம் பற்றி எழுதினி. அதேவேளை வ.அ.இராசரத்தினம், பித்தன் கிழக்கில் சமூக உணர்வுடனும் இயற்கை இரசனையுடனும் எழுத வடக்கில் சமூக முரண் அதிகமாக உள்ள சூழலில் ஜீவா, டானியல் முற்போக்கு சார்ந்து எழுதினர். பிரச்சாரம் என இவர்கள் படைப்புகள் முத்திரை குத்தப்பட்டபோதும் டானியல் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாக எழுதியபோது, மக்கள் சார்ந்து வர்க்க நிலைப்பட்டு எழுதியதை இரவீந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.
தீண்டாமை ஒழிப்பு எனும் பயன்பாட்டு நெறியை ஆதரிக்காது, மு.தளையசிங்கம் மு.பொன்னம்பலம், யேசுராசா போன்றோர் ஆத்மார்த்த வாதத்துள்ளும் அழகியல் வாதத்துள்ளும் குறுகிப் போனதை எடுத்துக் காட்டி இன்றைய மனிதனின் சுயம் இழந்த நெருக்கடியை மீட்க இலக்கியம் ஆற்றக் கூடிய பணியை மறுதலித்து வெறும் அழகியல் வாதம் பேசி தொன்மங்களுக்கும் படிமங்களுக்கும் நடையியலுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அர்த்தமற்றது எனும் கருத்து சமூக விடுதலையின் பேரில் ஏற்க வேண்டியதே.
புது வசந்தம் 45

Page 48
‘புது வசந்தம்" மலர்
சென் அன்ரனிஸ் இறம்டை
ରilଈ{

சிறப்புற வாழ்த்துகின்றோம்
கல்வி நிலையம் க்குளம், furt.

Page 49
இந்த இரு நூல்களிலும் இரவீந்திரன் கையாளும் மொழிநடை பற்றியும் ஒரு வார்த்தை கூறப்பட வேண்டும். ஒரு சமூகப் பிரக்ஞையுள்ளவனுக்கு இருக்கும் ஆவேசம் காரணமாக எதிர் நிலைப்பாடுகளை காரசாரமாகவும், நையாண்டியாகவும் தாக்குவது தவிர்க்க முடியாததே. ஆயினும் ஆய்வு நடையில் கருத்துக்களை நிதானமாக எதிர்கொண்டால் மட்டும் போதுமானதே. அடுத்து, நீண்ட வசனங்களும் ஆய்வு நூலில் தவிர்க்க முடியாதபோதும், ஒரு நேர்கோட்டுத் தன்மைகொண்ட விவாதப் போக்கு வாசகர்களால் விடயத்தை நேரடியாக விளங்கிக் கொள்ள உதவும். மேலும் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு விவாதம் நகரும்போது உபதலைப்புகளுடன் நகர்த்துவது வாசிப்பை இலகுபடுத்தும் (முதல் நூலின் முதலிரு கட்டுரைகளும் எழுதப்பட்டது போல). எதிர்க்கருத்துகளின் ஆய்வு முறைமையை, ஆய்வு நூல் ஒன்றின் மூலம் எதிர் கொள்ள வேண்டியது அவசியமானது. அந்த வகையில் இரவீந்திரனின் இந்த இரு நூல்களும் அவரது புலமைத்துவத்தை
புதிதான புதிதா6
புதிதான புதிதான நிலையாகி நின்றாளே மனமிதில் நிதம் ஊறிதேனானாள் புதிதான புதிதான.
ஒளிகோடி நிறை என்னுள் பலவாண செயல் கள்ளி இவள் நாட மனம் துள்ளி நான் நணைவேனே! - மணமிதில் புதிதான புதிதான.
அறியாத பராயம் அது ஆகும். அலைநூறு உருவாகும் இதயம் எனதாகும்.
பரிவேதும் இலையாகி எனை மீறும் செயல் ஆகி மனம் கிறிமுழுதாகி நிறைந்தாளே. வேறேதும் நிணையாதபடியாக உளம் அள்ள நிலைமாறிக் கலைவேனே! பலபேர் எனை எள்ளல் செய்யும்படியாகி பரிவேதும் இலையாகி Uறிதேதும் நிணையாதவாறாக
புதிதான புதிதான நிலையாகி நின்றாளே மணமிதில் நிதம் ஊறிதேனானாளே புதிதான புதிதான.
46 புது வசந்தம்

சுட்டி நிற்கின்றன. பத்திரிகை நடையில் பொதுவாசகனை கருத்தில் கொண்டு எழுதப்படும் கட்டுரைகளும் எமக்கு அவசியமானதே. அதற்காக ஆய்வு நூல்களின் தேவையை மறுக்க முடியாது.
இறுதியாக இந்த இரு நூல்கள் வாயிலாக இரவீந்திரன் சமூகத்துக்கு தரும் சேதி என்ன? நில மான்ய,முதலாளித்துவ நெருக்கடிகளினால் மக்கள் விடுதலை அற்று சீரழிவு கலாச்சாரத்துக்குள் மூழ்கியுள்ளனர். இதனிலிருந்து மீள பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட புதிய கலாச்சாரமே தேவை. அது ஏற்கனவே உள்ள மரபு மற்றும் எதிர் கலாச்சாரக் கூறுகளையும் உள்வாங்கி பாரதி வழியில் சமூக விடுதலையை எய்தும் நோக்கில் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை ஏற்கக் கூடிய ஒன்றே.
(தேசிய கலை இலக்கியப் பேரவையின்
கொழும்புக் கிளை ஏற்பாடு செய்த இரு நூல்களின் விமர்சன அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)
ன நிலையாகி.
ஆழம் மிக அடி ஆவிகவர்வதும் ஏனோ? விடு எனை காலம் கொன்று எனை மருவுதல் பெரும் பிழை
மாயம் ஏதெடி
அட விடு
67ങ്ങമീu. பாவம் இது பரிதாபம் மிக உளது.
தேனின் இனிமை நீஎனினும் உளம் அழியும் செயல் புரிவது
്fu്? நாளின் முழுமையும் உனதாய் கவர்தல்
பெருமடமை. வேறுள காரியம் அறியா மடையன் இவன் என பிறர் பேசும்படியாக செயல்புரிதல் பெரும் பிழை
ീL
യി ഞെര്6്ധ.
பவித்தரன்

Page 50
இலக்கியம் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக மட்டுமன்றி அதனை மேம்படுத்தக் கூடிய ஒன்றாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. வாழ்க்கை அனுபவங்களுள் இன்பம் பயப்பனவற்றையும் பயன் தரத்தக்கனவற்றையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விழைபவர்கள் மொழியாற்றலும் சிருஷ்டித்திறனும் பொருந்தியவர்களாக உள்ளவிடத்தே இலக்கியம் பிறக்கக் கூடும். அத்தகைய இலக்கியங்களின் வெளிப்பாட்டுக்கும் பரம்பலுக்கும் அனுகூலமான காரியங்களை மேற்கொள்வது இலக்கிய வளர்ச்சியினைத் துண்டுவதாகும்.
இலக்கியத்தை வளர்ப்பதென்றால் என்ன, ஏன் அதனை வளர்க்க வேண்டும் என்பவை குறித்த தெளிவான விளக்கம் இன்றியமையாததாகும். சகட்டுமேனிக்கு எழுதுபவர்களை எல்லாம் ஆதரிப்பதும் நிறைய எழுதுவதற்கு வசதி செய்து கொடுப்பதும் உண்மையான இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவதாக முடியாது. தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பிரசித் திப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் சிலர் பிரயத்தனங்களை மேற்கொள்ளக்கூடும். தங்களை இலக்கியப் பரிச்சயமுள்ளவர்களாகவும் கலைப்புரவலர்களாகவும் காட்டித் தமது சமுதாய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதில் இச்சை கொண்டவர். களாலும் இலக்கியத்தை வளர்க்கவியலும் என்று கூற முடியாது. நல்ல இலக்கியங்களும் அவற்றை வாசிப்பவர்களும் பெருகுவதைத்தான் உண்மையான இலக்கிய வளர்ச்சி என்று ஒத்துக்கொள்ள முடியும்
ஏன் இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்றால், அது மனித வாழ்வை வளம்படுத்த உதவுவது என்பதனால் ஆகும். அது "சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவி” மனிதனுக்கு இன்பத்தையும் பிரயோசனத்தையும் வழங்கக் கூடியதாய் அமைய வேண்டியது இன்றைய தேவையாகும். வாழ்வைப் புரிந்து கொண்டு துன்பத்தைப் பொறுத்தற்கும் இன்பத்தை நுகள்தற்கும் இலக்கியம் உதவவேண்டும். எங்கள் இயல்புகள், அபிலாசைகள், விழுமியங்கள், அழகியல் உணர்வு, வாழ்க்கை நோக்கு முதலானவற்றை எமக்கு எடுத்துக்காட்டுவதோடு எமது எதிர்காலச் சந்ததி யினருக்கும் பதிவுசெய்து வைக்க வேண்டும். யாம்
 

பேராசிரியர் சிதில்லைநாதன்
எவற்றைப் புறங்காண எத்தனிக்கிறோம், எவற்றைப் பேணி வளர்க்க முயல்கிறோம் என்பதையெல்லாம் அது பிரதிபலிக்க வேண்டும். அல்லாதவிடத்து இலக்கியத்தை வளர்ப்பதென்பது அர்த்தமற்ற ஒன்றாகவே இருக்கும். புரிந்துணர்வையும் சமாதானத்தையும் மனித கெளரவத்தையும் நோக்கி மனித குலத்தை உந்தும் இலக்கியங்கள் வரவேற்கப்பட வேண்டும் என்றால், பொய்யும் பகைமையும் பாதுகாப்பின்மையும் போலி வேடமும் மலிந்திருக்கும் நிலையில் வெறும் இலட்சியங்களை நோக்கி எண்ணஞ் செலுத்துவதால் ஆகும் பயன் என்ன என்று சிலர் கேட்கலாம். ஆனால், இதுவரை எட்டாத இலட்சியங்களை எட்டிப் பிடிக்கும் பிரயத்தனங்களாலேதான் மனித குலத்தின் உலகியல் முன்னேற்றமும் ஆத்மீக முன்னேற்றமும் சாத்தியமாகியிருக்கின்றன.
முன்னைய காலங்களில் அரசர்களும் ஆட்சித் தலைவர்களும் இலக்கியப் புலவர்களுக்கு ஆதரவளித்து வந்திருப்பதை அறிவோம். அவ்வாறு ஆதரித்தவர்களுள், சிறந்த இலக்கியங்களை உவந்தமையின் காரணமாக அவற்றை ஆக்கியவர்களை ஆதரித்த பலரும் இருந்திருக்கிறார்கள். தாங்கள் பாராட்டப்பட்டதால் உண்டான மகிழ்ச்சியினாலும் தங்கள் புகழை நிலைநாட்டும் வேட்கையின் விளைவாகவும், தங்களுக்கு மக்களின் ஆதரவைப்பெற்றுக் கொடுத்தமை கண்டும் புலவர்களுக்கு ஆதரவளித்தவர்களும் பலராவர். அதிகாரத்தில் அமர்ந்தவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இலக்கியங்களைப் புனைந்து பொருளும் பாராட்டும் பெற்ற புலவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். உண்மை எனக் கண்டவற்றை அஞ்சாது எடுத்துக்கூறி, ஒதுக்கப்பட முடியாத சிருஷ்டித் திறனால் இலக்கிய உலகில் அழியா இடம் பெற்ற புலவர்களும் இருந்திருக்கிறார்கள்.
அதிகார பலமும் பொருள் வளமும் உள்ளவர்களால் உபசரிக்கப்படுவது ஒரு வகையானது. சான்றோரால் கெளரவிக்கப்படும் சிறப்பு இன்னொரு வகையானது. ஒருவர் எதை விரும்புகிறார் என்பது அவரது விழுமியத்தை எடுத்துக்காட்டுவதாகும். சங்கம் வைத்துத் தமிழராய்ந்த சிறப்புப்பற்றிப் பலவாறாகப்
புது வசந்தம் 47

Page 51
பேசப்படுகிறது. நூல்களை இயற்றியவர்கள் பெரும் புலவர்கள் கூடிய அவைகளில் அவற்றை அரங்கேற்றி அப்புலவர்களின் அங்கீகாரத்தை வேண்டியவை பற்றிய செய்திகள் பலவற்றைக் கேள்விப்படுகின்றோம் நூலொன்றைப் பற்றிய குறை நிறைகள் சான்றோர் சபையில் காய்தலுவத்தலற்ற முறையில் ஆராயப்படுவதும் அதனைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடையவர்களாய் நூலாசிரியர்கள் இருப்பதும் ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு உகந்தவையாகும்.
முடியாட்சிகள் முடிந்துவிட்ட ஜனநாயக காலத்தில் இலக்கிய வளர்ச்சி பெருமளவுக்கு மக்களிடத்தில் தங்கியுள்ளது. "மானிடத்தைப் பாடும்" இலக்கியகர்த்தாக்களை ஆதரிப்பது மக்கட் சமுதாயக் கடமையாகிறது. இக்கடமை செவ்வனே நிறைவேற்றப்படுமிடத்து நல்ல இலக்கியப் படைப்பாளிகளின் பங்களிப்பினை மென்மேலும் பெற்றுச் சமுதாயம் பயனடைவது சாத்தியமாகிறது அதற்கு உகந்த வகையில் சமுதாயத்தில் இலக்கிய் விழிப்புணர்வினை வளர்த்தல் அவசியமாகும். நல்ல இலக்கியங்களைத் தேர்ந்து வரவேற்கும் வாசகள் தொகை வளராதவிடத்து தரமான இலக்கிய வளர்ச்சியை எதிர்பார்த்தல் சாலாது.
இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சியை நோக்காகக் கொண்டு அரசுகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. கடதாசிவிலை மிக உயர்ந்துவிட்ட நிலையில் இலக்கிய நூல்களையும் சஞ்சிகைகளையும் வெளியிடுவது சிரமமாயிருக்கிறதென்று முறையிடப்பட்டபோது குறைந்த விலைக்குக் கடதாசி > பெறும் சலுகை வழங்கப்பட்டது. கடதாசியைக் கறுப்புச் சந்தையில் விற்று இலாபம் சம்பாதிப்பது இலேசெனத் தோன்றியவிடத்து, அது பலரது இலக்கிய ஆர்வத்தை மழுங்கடித்து விட்டது.
தமிழ் நாட்டில் ஒரு தொகையான இலக்கியப் புத்தகங்களை அரசு வாங்கி நூல் நிலையங்களுக்கு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசியல் செல்வாக்குள்ள புத்தக வெளியீட்டாளர்கள் முந்திக் கொண்டு அதற்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றக்கொண்டு
நானுறு, ஐநூறு புத்தகங்களை இலேசாக விற்றுவிடலாம் என்று கண்டபோது அவ்வளவு புத்தகங்களிலேயே ஆகக்கூடிய இலாபத்தை ஈட்டக் கருதினர். அதனால் புத்தகங்களின் விலைகள் சாதாரண வாசகரைக் கருத்திற் கொள்ளாது கூட்டப்பட்டன. மேலதிக புத்தகங்களை அச்சிட்டு விநியோகிப்பதைச் சிரமமாய்க் கருதிப் பலர் தவிர்க்கலாயினர். மழைகாலக் காளான்கள் போலத் தோன்றிய பலவெளியீட்டாளர்கள் அரச அனுமதி
48 புது வசந்தம்

பெற்ற நூல் நிலைய விற்பனையை மட்டும் நம்பியே தம் வியாபாரத்தை நடாத்தினர். அதனால் சாதாரண வாசகர்களுக்கு எட்டாத அளவுக்குப் புத்தக விலைகள் ஏறின. புத்தகங்களைத் தேடிப்பெறுவதும் கடினமாயிற்று. ஏனெனில், சாதாரண வாசகள்களுக்கு எட்டத்தக்க வகையில் புத்தகங்களை விநியோகிப் பதில் வெளியீட்டாளர்கள் அக்கறைகாட்டவில்லை. பல வெளியீட்டாளர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே முடியாததாயிற்று.
அவ்வாறு சலுகைகள் துர்ப்பிரயோகம் செய்யப்படுவது இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வாறு குந்தகம் விளைவிக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. எழுத்தாளின் கெளரவத்தை அது எவ்வாறு பாதிக்கும் என்பதற்கான ஓர் உதாரணத்தை மட்டும் இங்கு கூறவேண்டும். நூல் நிலையங்களுக்குப் புத்தகங்களை விற்க இலேசாக உத்தரவு பெறக்கூடிய நிலையிலிருந்த அரசியல் செல்வாக்குள்ள வெளியீட்டாளர் ஒருவர் தமிழ் நாட்டின் புகழ்பூத்த ஓர் இலக்கிய கள்த்தாவைப் பார்த்து “உங்கள் பெயரை வைத்து நான் பிளைக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? ஆக்கியவன் பெயரை "நாய்" என்று போட்டுக்கூட என்னால் புத்தகங்களை விற்கமுடியும்" என்று கூறினாராம். அதிர்ந்து போன எழுத்தாளருக்கு அது ஒரு புதிய அனுபவம்
இலக்கியத்தை வளர்க்கவென்று சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, புத்தக வெளியீட்டாளர்களும் விற்பனையாளர்களுமே பெரும்பாலும் இலாபமடைகின்றனர். எழுத்தாளர்களும் வாசகள்களும் நன்மையடையத் தக்க ஏற்பாடுகளே இலக்கிய வளர்ச்சியினைத் தூண்டுவனவாகும்.
அது ஒரு புறமாக, இலக்கியப் படைப்பாளி ஒருவர் எந்தத் துண்டுதலால், எதை எதிர்பார்த்து, எதைத்திட்டமிட்டு எழுதுகிறார் என்பதும் எண்ணிப் பார்க்கப்பட வேண்டியது. புகழையும் பொருளையும் நாடப்படாது என்றோ அவை இலக்கிய வளர்ச்சியைத் தூண்டுவனவாகா என்றோ கூறக்கூடாது. ஆனால், புகழையோ பொருளையோ, ஒரு எழுத்தாளர் தலையாய குறிக்கோளாகக் கொள்வது சாலுமோ என்பது சிந்தனைக்குரியது. இரவீந்திரநாத் தாகூரை யாரோ பார்த்து, "நீங்கள் உலகப்புகழ் பெற்ற கவிஞராயிற்றே, சிறுகதைகளை எழுதுவதில் ஏன் காலத்தைச் செலவிடுகிறீர்கள்? என்று கேட்ட போது, "என்னால் அவற்றை எழுதாமல் இருக்க முடியவில்லை” என்று பதில் உரைத்தாராம் படைப்பாளர்கள் தாம் என்ன தூண்டுதலால், யாருக்காக, யார் மீது கொண்ட ஆர்வமுடைமையால் எழுதுகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

Page 52
சில எழுதுவதிலும் பார்க்கப் புத்தகங்களை அச்சேற்றுவதிலும் விெயீட்டு வைபவங்களை ஏற்பாடு செய்வதிலும் திறமை மிகுந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். பொருளாதார, அரசியல், வெகுசனத்தொடர்புச் சாதன செல்வாக்குள்ள சிலரை வளைத்துக் கொள்வதால் உருவாகும் விளம்பரத்துக்கும் சுலபத்தில் வழிபிறக்கும் என்று கூறப்படுகிறது.
இது அவசர யுகம். எழுதுவதிலும், வெளியிடுவதிலும், பாராட்டுவதிலும், விற்பனை செய்வதிலும், பரிசு பெறுவதிலும் பலரிடத்து ஒரு வித அவசரம் காணப்படுகிறது "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் எத்தனங்களும் இலக்கிய வளர்ச்சியும் எவ்வாறு சம்பந்தப்படும்? சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கவிதை எழுதுவதில் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு நின்ற ஒருவர், "நான் எழுதிய கவிதைகள் எல்லாவற்றையும் சேர்த்தால் தொண்ணுறு பக்கம் வரும். இன்னும் பத்துப்பன்னிரண்டு பக்கங்கள் எப்படியாவது எழுதி அடுத்த மாதத்துக்கு முன் புத்தமாக வெளியிட்டு விட்டால் சாகித்திய மண்டலப் பரிசுக்கு முயலலாம்” என்றார். இலங்கைத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் அவருக்கு உண்மையான ஆர்வம் இருந்திருப்பின், நூலுருப்பெறாது அன்று சிதறிக் கிடந்த சிறந்த ஒரு கவிஞனின் ஆக்கங்களை நூலாக வெளியிட அவர் முயன்றிருக்கலாம். ஆனால், தங்கள் பெயரைப் பத்திரிகைகளிலும் புத்தக அட்டைகளிலும் பார்க்கும் ஆவலினால்தானே பலர் எழுதுகின்றனர்; நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர்.
இலக்கிய வளர்ச்சி குறித்துப் பேசும்போது எழுத்தாளரைப் பற்றி மட்டுமன்றி வாசகள்களைப் பற்றியும் சிந்தித்தல் அவசியமாகும். அவர்களைச் சுற்றி இன்று புத்தகங்களும் சஞ்சிகைகளும் வெள்ளம் போல் பெருகியுள்ளன. அவற்றினுட்பல அவர்களுடைய அறியாமையையும் பலவீனங்களையும் சாதகமாகக் கொண்டு அவர்களை வசீகரித்துச் சுரண்டுகின்றன. தேர்ந்தெடுத்து உகந்தவற்றை வாசிக்கும் திறனை வளர்க்க உதவும் திறனாய்வுகளும் கருத்தரங்குகளும் வேண்டப்படுகின்றன. நல்ல புத்தகங்களையும் நல்ல நண்பர்களையும தேர்ந்து தான் எடுக்கவேண்டும் என்பர். வெகுசனத் தொடர்பு சாதனங்கள் அந்த வகையில் உதவ முடியாதா? ஆர்வமுடைய ஒரு எழுத்தாளன் பணத்தோடும் பிரசித்தியோடும் திருப்தி அடைய மாட்டான். தன் படைப்புகளைத் தரமான வாசகள்கள் விரும்பிப்படித்துப் பயனடைகின்றனர் என்று அறியுமிடத்தே அவனது உள்ளம் பூரிக்கும்.
இலக்கிய விழாக்களும் கருத்தரங்குகளும் மக்கள் மத்தியில் இலக்கிய விழிப்புணர்ச்சியினை

ஏற்படுத்த வேண்டும். தங்கள் எழுத்தாளர்களைப்
போற்ற வேண்டும் எழுத்தாள்களுக்கான பரிசுகளும் கெளரவங்களும் வரிசை அறிந்து வழங்கப்படும் போதுதான் அவை ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சியைத் தூண்டுவனவாகும். அல்லாதவிடத்து அப்பரிசுகளும் கெளரவங்களும் விரைந்து மதிப்பற்றவை ஆகிவிடும். ஓர் ஆக்கத்தைக் காட்டி அதற்கு ஏன் பரிசு கிடைக்கவில்லை என்று கேட்கப்படுவது அவ்வளவு விசனத்துக்குரியதன்று. ஆனால், ஒன்றைக்காட்டி அதற்கு ஏன் பரிசு கொடுக்கப்பட்டது என்று கேட்கப்படுவது விசனத்துக்குரியதாகும்.
மிகப்பே ரெவ்வ முறினு மெனைத்தும் உணர்ச்சி யில்லோருடைமையுள்ளேம் நல்லறிவுடையோர் நல்குரவுள்ளுதும் பெருமயா முவந்துநனி பெரிதே'
என்று புறநானூற்றில் கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக்குமரனார் பாடுகிறார். பெருந் துன்பத்துக்கு ஆட்பட்டவிடத்தும் மதியற்றவர்களின் செல்வத்தை மதிக்கமாட்டோம், நல்லறிவாளர்களின் வறுமையையே விரும்பி மதிப்போம் என்கிறார். தன்மானமிக்க அத்தமிழ்ப் புலவர். அவரைப்போன்ற புலவர்க்ள உணர்ச்சியில்லாதவர்களுடைய ஆதரவை நாடவில்லை. நல்லறிவாளர்களையே அவர்கள் மதித்தனர்.
"பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே” என்று மலையமான் திருமுடிக்காரியை நோக்கிக் கபிலர் கூறியது எண்ணிப்பார்க்கத்தக்கது. வரிசை கருதாது அறிவுடையோரை ஒரே தரமாக நடத்துதல் தகாததென்பது அவரது துணிவு.
“பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அது நோக்கி வாழ்வார் பலர்”
என்கிறார் வள்ளுவர், வரிசையறிதல் என்பது திறந்த மனதுடன் காய்தலுவத்தல் இன்றித் தகைமை வாய்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். தன்னம்பிக்கையும் தன்மானமும் உள்ள சிருஷ்டிகள்த்தாக்கள் வரிசையறிந்து வழங்கப்படும் பரிசில் களாலும் கெளரவங்களினாலுமே தூண்டப்படுவார்கள்
கலையோசை
(இலங்கைக் கலைக்கழக இலக்கியக்குழு வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து நடத்திய திருகோணமலை பிரதேச கலை இலக்கியத்துறை
சிறப்புமலர்)
1996-07-15
புது வசந்தம் 49

Page 53
(36
n
எதை வேண்டி எழுகிறது எதை வேண்டி நிகழ்கிறது இனமென்று மொழியொ வீரியமாய் இங்கு ஒரு
தேசத்தின் பேராநில தொட
தீவளர்க்க வேண்டியும் தீவளர்க்க வேண்டாதது தீபற்றிநன்கு அறிந்தும், 3 தீக்குட் குதிக்கின்றார்ளு சுள்ளிகளாய்ச் சடலங்கள் நெய்யென்னச் செங்குரு: பெய்யப் பெருகிவிரிகிறது எல்லையற எட்டியன எல்லாம் தமத/
இம் மண்ணை வளைத்து ஓம குண்டம் ஒன்றமைத்து கனல் மூட்டி போய் விட்ட போனவரின் கற்சிலைகள் காவற்தெய்வங்கள் போல் மூலைக்கு மூலை கை விை இம்மணன் எரிகிறது எம் மனிதர் எரிகின்றார்.
670 മത്സ്ക് 67ീuffഗ്) ഉ எவர்க்காக இவ் வேள்வி எவர்க்காக இந் நெருப்பு?
50 புது வசந்தம் wa

வள்வி
ல்வப்னா
இந்தப் பெருநெருப்பு? இந்தப் பெரு வேள்வி? സ്ത്ര மதமென்று காற்றடிக்க
டர்கிறது பகைமைத் தீ
ஏறியாதும்
列
நெடு நெருப்பு.
ாக்கும் பொன் கரங்கள்
க்
றத்து நின்றிருக்க
ன்பார்த்து நிற்கின்றோம்?

Page 54


Page 55
எஞ்சிக்கிடக்கிறது. அது அண்ணாவினுடையது நெஞ்சுக்குழிக்குள் இரும்புக்குண்டைச் சுமப்பதாய் உணர்ந்தேன். அக்கா மெல்ல விசும்பினாள். அன்று ஆறு உருண்டைகளும் தட்டில் எஞ்சிக்கிடந்தன தேநீர் குளிர்ந்து போயிற்று அன்று சின்னக்கதிரையில் இருப்பதற்காக நானும் சசியும் போட்டியிடவில்லை.
ஹோலின் மறுமூலைக்குப்போனேன். தாயறையும் திறந்தே கிடந்தது. இந்த வாசலில் தான் அம்மாபடுப்பாள். பரீய் போடுவது கிடையாது. சேலையை விரிந்துவிட்டுச் சரிந்துவிடுவாள். நிலக்குளிர் நாரியுளைவுக்கு இதமாக இருக்கிறதாம் அநேகமாக அண்ணாவும் அம்மாவுடன் அதே சேலையில் படுத்துவிடுவான். அவனுக்கு படுக்கையோ, தலையணையோ அவசியமென்ப தில்லை. நான் அம்மாவுடன் படுப்பதில்லை. அம்மாவிலிருந்து வியர்வை நாற்றம் வீசும். அது நான் அம்மாவுடன் படுட்பதைத் தடுத்தது. அம்மா விடிந்ததிலிருந்து பம்பரமாகச்சுழன்று வேலைகளைக் கவனிப்பாள். அவளுக்கு உதவிக்கு யாரும் கிடையாது வேலைகளோ தலைக்குமேலிருந்தன. ஆடு, மாடு, கோழி, நாய், பூனை எங்கள் ஆறுபேரின் வயிற்றுக்கும் அவள் தான் பதில் சொல்லவேண்டும். அப்பா, மதியச் சாட்பாட்டுக்கு விரும்போது எல்லாம் ரெடியாய் இருக்கவேண்டும். கதைபேச்சு ஆகாது. முக்கில் கோபம் வந்துவிடும். சாப்பிட்டு ஆயிற்றா, வேண்டுமானால் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு வைத்தாலும் சீமான் சிரிப்பார். சந்தைக்குப்போக வேண்டுமா? சங்கக் கடைக்கியூவில் நிக்கவேனுமா? எல்லாம் அம்மாதான். அக்கா குசினிப்பக்கம் எட்டிக்கூடப்பார்க்கமாட்டாள். சுத்த சோம்பேறி. ஆவிஸ் ஆகவோ. ராகுபென்சலாகவோ பகற்கனவில் உலாவுவாள்.
எப்போதும் கையிலொரு கதைப்புத்தகம். எனக்கும் அவளுக்கும் ஒரு ஒற்றுமை. இருவரும் காலையில் எழும்பும் போது அப்பா வேலைக்குப் போயிருப்பார், தலைமாட்டில் ரீ ஆறியிருக்கும். சசியோ செல்லப்பிள்ளை. வேலை செய்யவந்தால் எதையாவது போட்டுடைத்துவிடுவாள். இவற்றை விட அம்மா தனியே வெலைசெய்வது சுகம் எனக்கண்டு விட்டாள். பம்பரம் ஒய்கிறபோது இந்த இடத்தில் தான் சரியும். குளிப்பதைவிட ஒரு சுகமான ஓய்வை
52 வசந்தம்

விரும்புவாள். வியர்வை நாறும் நான் அம்மாவுடன் படுப்பதில்லை. சின்னனிலிருந்தே அநேகமாக அப்பாவுடனேயே படுப்பேன். வேலிமரங்கள் ஜன்னலுடு பேய்களாய்த் தெரிந்தவயதில் அப்பாவின் நெஞ்சிலேறிப் படுத்ததாய் ஞாபகம் அப்பா சாரத்தை லூசாக்கிவிட்டு சீராகப் போர்த்துத் தூங்குவார். விடியலில் அதேபோல் எழும்புவார். நானும் அவ்வாறே பழகிக்கொண்டேன். அப்பா பெற்சிற்றிலை முகம் போர்க்கும் பக்கத்தில் முடிச்சிடுவார். நானும் பெற்சிற்றில் முடிச்சிட்டுக் கொண்டேன்.
தாயறைக்குள் புகுந்தேன். கபேட்டில் ஓரிரண்டு பழைய துணிகள் எஞ்சிக்கிடந்தன. முன்னர் அம்மா கபேட்டில் பூச்சி உருண்டை வைட்பாள். அது அருமையான வாசந்தரும். சிலநாள் பின் வாசமிருக்கும் பூச்சி உருண்டைகள் இராசபல்லி முட்டைகள் தான் இருக்கும். பல்லிகள் தான் களவாடினவோ? ஐயுற்றிருக்கிறேன். பூக்களோ, விளக்குகளோ இன்றி சுவாமிப்படங்கள் தொங்கின. துரசு மட்டும் போதியளவு அப்பிக்கிடந்தது.
‘என்னறைக்குப் போனேன். புத்தகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்தன. அட்டை எழுத்துக்களை தூசு பொத்தியிருந்தது. சுவரில் நான் வரைந்த அனுமன், சசி கிறுக்கிய கோடுகள், பெளதீகச்சமன்பாடுகள் அழியாமல் கிடந்தன. மூலைப்பக்கத்து ஓடு ஒன்றில் சிறு துவாரம் . அதன் உபயத்தில் சுவரில் வேலிமரங்களின் பசுமையும் தலைகீழாகப் பறக்கிற காக்கைகளும் தெரிந்தன.
மேசைலாச்சியைத் திறந்தேன். கொலுசுகள், இவை சசி கட்டித்திரிந்தவை. ஓடுகிற அவசரத்தில் வெள்ளிக் கொலுசுகளையா நினைத்திருக்கப்போகிறோம்? அவற்றைக் கையிலெடுத்தேன். கொலுசுகளை இவ்வளவு நாள் தனியேவிட்டது பெரும்பாவம் செய்ததுபோல் உணர்ந்தேன். அவை ஒரு ஜீவனைக்கொண்டிருக்கும் என நம்பினேன். கொலுசுகளை என் வலக்கரத்திலெடுத்து காதுக்கருகில் வைத்து மெல்லக்குலுக்கினேன். அவை ஒரு நீண்ட பெருமூச்சைப் போலவா அன்றி அழுது ஓய்ந்து பின் வரும் விம்மலைப் போலவா ஒலித்தன, என்று எனக்குப் புரியவில்லை.

Page 56
D60)6) 6O. Ligó II
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு ஐரோப்பியவாதிகள் மூன்றாம் உலக நாடுகளை தமது காலனித்துவ ஆட்சிக்குட்படுத்தியதுடன், அந்நாடுகளில் பெருந்தோட்ட பயின்செய்கையையும் அறிமுகம் செய்தனர். அவ்வாறு அறிமுகம் செய்த பெருந்தோட்ட பயிர்செய்கையை மேற்கொள்ளத் தேவையான தொழிலாளர்களை தமது காலனித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்தனர். இவ்வடிப்படையில் தான் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கம் நிலைப்பெற்றதுடன், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை செய்வதற்கு தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்தனர். அவ்வாறு ஒப்பந்தக் கூலிகளாக இங்கு கொண்டு வரப்பட்ட மக்கள் கூட்டமே மலையக மக்களாவர்.
தென்னிந்தியாவில் தமிழ் கிராம பின்னணியில் வாழ்ந்த இம் மக்கள், விவசாயிகளாகவும், விவசாய வர்க்கத்திற்குரிய குணாதிசயம் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். இங்கு கொண்டுவரப்பட்ட பொழுது முதலாளித்துவ சமூக அமைப்பில் புதிய உற்பத்தி முறைகளுக்கேற்ப உற்பத்தி உறவுகளுக்கேற்பவும் பரந்துபட்ட தொழிலாள வாக்கமாக மாற்றமடைந்தன. இவ்வாறு இங்கு வந்த மக்களும் இதனுடன் இணைந்து வந்த வர்க்கமே மலையக மக்கள் என்ற பதம் கொண்டு அழைக்கப்படுகின்றனர். குறிப்பாக ஒரு புறமான காலனித் துவ ஆதிக் கமும், மறுபுறமான சமூகவுருவாக்கமும் இணைந்து இம் மக்களை வளர்ந்து வருகின்ற தேசிய சிறுபான்மையினர் என்ற உணர்வினை ஏற்படுத்தியது. இன்றுவரை இவர்கள் பல்வேறுவிதமான ஒடுக்குமுறைக்கும், சுரண்டல்களுக்கும் உட்பட்டு வருகின்றனர்.
இவ்வடிப்படையில் மலையக படைப்பிலக்கியம் என்று நோக்குகின்றபொழுது இம் மக்கள் குழுவினரிடையே தோன்றியவையே மலையக படைப்பிலக்கியம் என்று கொள்ளப்படுகின்றது. இந்த சொற்தொடர்களுக்கு ஒரு பிரதேச அடிப்படையும், இனத்துவ அடிப்படையும் உண்டு.

ப்பிலக்கியத்தின் ட்ருவாதம்
மலையக படைப்பிலக்கியம் என்ற பதத்தினைக் கொண்டு நோக்குகின்ற பொழுது மலையக பிரதேசத்தை தளமாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களைக் குறிப்பதாக அமையும். இவ்விடத்தில் பிறிதொரு விடயம் பற்றிய தெளிவும் அவசியமாகின்றது. அதாவது மலையக இலக்கியம் எனும் போது அது இரண்டு நிலைப்பட்டவையாக காணப்படுகின்றன. ஒன்று மலையக பெருந்தோட்டத் துறை சார்ந்த மக்களிடையே காணப்பட்ட வாய் மொழி இலக்கியங்கள். மற்றது மலையக மக்கள் பற்றிய ஆக்க இலக்கியங்கள். இங்கு படைப்பு இலக்கியங்களான கவிதை, சிறுகதை, நாவல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட , இந்த ஆய்வினை சமர்ப்பிக்கின்றேன்.
மலையக படைப்பிலக்கியத்தின் பயன்பாட்டு வாதத்தினை பின்வரும் அடிப்படை கொண்டு நோக்குதல் பயன்மிக்கதாகும். சமூக மாற்றத்துக்கான செயற்பாடுகளில் இலக்கியத்தின் பங்கு முக்கியமான ஒன்றாகும். சமூகத்தின் அசைவியக்கத்திற்கும் இலக்கியம் வழிகாட்ட வேண்டும். அதனைச் சாதிப்பதற்கான அணுகுமுறையை வாழ்க்கை பிரச்சனைகளை தெளிவுபடுத்துவதாக அமைய வேண்டும். எனவேதான் இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாக மட்டுமன்று அது காலத்தினை உருவாக்குகின்ற பணியினையும் ஆற்றுகின்றது. இவ்வம்சம் மலையக படைப்பிலக்கியத்திற்கும் பொருந்தும்.
மேற்குறிப்பிட்ட கருதுகோளின் அடிப்படையில் மலையக படைப்பிலக்கியத்தின் பயன்பாட்டு வாதம் பற்றி நோக்குகின்ற இக்கட்டுரை, அதனுடைய முனைப்பற்ற சில போக்குகளை சுட்டிக் காட்டுவதாகவே அமையும் அவ்வகையில், இதனை நிரூபிப்பதற்காக நீண்ட பட்டியல் நீட்ட நான் விரும்பவில்லை. அட்டவணை போட்டு இலக்கிய கணக்கெடுக்கும் ரசிக விமசகர்களுக்கு அப் பணியினை விட் டுவிட்டு மலையக் இலக்கியத்தின் பயன்பாடு எத்தகைய பண்பில் வளர்ந்து வந்தது என்பதையும், அதற்கு
ーマ - புது வசந்தம் 53

Page 57
அனுசரணையாக இருந்த இலக்கியங்களையும், எழுத்தாளர்களையும் சுட்டிக் காட்டிச்செல்வது இதன் gayful DIT(5D.
மலையக படைப்பு இலக்கியம் இரு நிலைப்பட்டவர்களால் எழுதப்பட்டுள்ளது.
1) மலையகத்து பெருந்தோட்டப்பண்பாட்டினுள் இருந்தவர்களால் எழுதப்பட்டது.(மலையக மண்ணின் மைந்தர்கள்)
2) மலையக பிரதேசத்துடன் ஊடாடிய பிற
பிரதேசவாதிகளால் எழுதப்பட்டவை.
இவ்விரு தரப்பினருக்கும் இடையில் பல்வேறுபட்ட வித்தியாசங்கள் உள்ளன. மலையக மக்களின் வாழ்வியலை புரிந்து கொண்டு அதற்கேற்றவகையில் அவற்றினை இலக்கிய படைப்பாக்கித் தருவதிலேயே இவ்வேறுபாடு காணப்படுகின்றது.
மண்ணை சார்ந்து நின்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை நோக்கும்போது இந்த வாழ்வியலுடன் உள் நின்று எழுதுகின்ற நிலையினைக் காணலாம். இவ்வகைப் பாட்டினுள் மலையக இலக்கியம் படைத்த அனைத்து எழுத்தாளர்களையும் குறிப்பிட முடியாது. யதார்த்த நோக்கு, சமூக ஆசைகள் என்ற அடிப்படைகளை புரிந்து கொள்வதில் இவர்களிடையே வேறுபாடுகள் உண்டு என்பதும் கவனத்திற் கொள்ளத் தக்கது.
மற்றது மலையக பிரதேசத்துடன் தொடர்பு கொண்ட பிற பிரதேசவாதிகளால் எழுதப்பட்ட இலக்கிய படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற பொழுது இம் மக்களின் மீது உணர்வு கொண்டவர்களாக இருந்தும், இம் மண்ணின் வாழ்வியலைப் புரிந்து இலக்கியம் படைத்துள்ளனர் என்பதைக் கூற முடியாது. உதாரணமாக வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மலையக மக்கள் குறித்து மனிதாபிமானமாகச் சிந்தித்தபோது அவர்கள் நிலவுடமை சார்ந்த சிந்தனையையே முன்வைத்தனர். அதாவது நிலத்தை பெருக்குவதன் மூலம், அல்லது நிலத்தைச் சொந்தமாக்குவதன் மூலம் விடுதலை அடையலாம் என்ற விவசாய வர்க்கத்திற்குரிய சிந்தனைப் போக்கை மூன்வைத்தனர். அத்துடன் யதார்த்த உடைவும் இடம் பெற்றது. உதாரணமாக புதுமைப் பித்தனின் துன்பகேணியில் மாலதி மரத்தில் கட்டி வைத்து கற்பழிக்கப்படுவது, தாமோதிரம் ஆசிரியர் திடீரென பாய்ந்து காப்பாற்றுதல் என்று இம் மக்களின்
54 புது வசந்தம் ܫ

வாழ்வியலை சிறப்பாக உள்வாங்காமையால் ஏற்பட்ட யதார்த்த சிதைவு எனலாம்.
மலையக படைப்பு இலக்கியத்தின் ஆரம்பகாலக்(1920ற்கு) கவிதைகள் பல பாடல்களை மலையக சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து பாடுவதாக இருந்தது. குறிப்பாக அருள்வாக்கி அப்துல் காதுறு புலவர் மத அடிப்படையான சில பாடல்களை இயற்றி அவற்றினை மலையக சூழ்நிலைக்கு ஏற்பவும் பாடியுள்ளார். 1921க்குப் பின்னர் மலையகத்தில் நடேசய்யரின் வருகை இடம் பெறுகின்றது. இவர் மலையக மக்களிடையே தொழிற்சங்கம் அமைப்பதில் முனைப்பாக செயற்பட்டவராவர். இந்திய தேசியவாதத்தினால் கவரப்பட்ட இவர் இம் மக்களுக்காக உழைப்பதில் தனது கவனத்தைச் செலுத்தினார். இவர் மட்டுமல்லாது இவரது மனைவியான மீனாட்சியம்மாளும் இணைந்து செயற்பட்டனர். இவர்கள் தோட்டத் தொழிலாளர்களிடையே உணர்வினை ஏற்படுத்துவதற்காக பல பாரதி பாடல்களை மலையக மக்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றிப் புதிதாய்ப் புனைந்து பாடினர். இது மலையக மக்களிடையே பரவியதுடன், அவர்களிடையே புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது என்பது மறுப்பதற்கில்லை. இவ்வகையில் இக்காலகட்டத்தில் பாரதியின் பல பாடல்களை மலையக மக்களுக்குரியதாக மாற்றிப் பாடினார்.
இலங்கையில் காந்தி காலமுதல் சிறிமா சாஸ்திரி காலம் வரையிலான காலப்பகுதி மலையக அரசியலில் குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன. இக் காலப்பகுதியில் தான் மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பு, சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் மலையக் மக்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புதல் ஆகிய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. இக்காலப் பின்னணியில் இலக்கியம் படைத்தவர்களில் சி.வி.வேலுப்பிள்ளை குறிப்பிடத்தக் கவர். மலையக மக்களின் வாழ்வியலைப் புரிந்து இலக்கியம் படைத்ததில் சி.வி.யின் பங்கு கணிசமானது. இவரது In Ceylon Tea Garden 61663 E6560), 55 Qg5 Tg5 LiD Born to I என்ற விவரணத்தொகுதியும் முக்கியத்துவம் 60)Lugb(Tg5ub. In Ceylon Tea Garden 6T6örb கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதை ஒன்றினை இங்கு நோக்குதல் அவசியமானது.
பிரட்டின் அதிர்வில்
விடியலே அதிர்ந்துபோய்
தேயிலை மீது
சரிந்து கிடந்தது.

Page 58
விடியல் பொழுதின் ஆக்கிரமிப்பின் முன்னர் இறுதியாய் சொட்டும் - இப் பனித்துளி புதிது.
பொருந்தும் இந்த பொழுதின்கணத்தில்தான் துயரும் நோவும் நசிவும் இறப்பும் இம் மக்களின் முச்சில் இவ்வாழ்க்கையின் முகிழ்ப்பின் அம்சம் ஒன்றென ஆகி போயின.
(மொழிபெயர்ப்பு - நந்தலாலா சஞ்சிகை குழு)
மேற்குறிப்பிட்ட கவிதையினை ஆழ்ந்து நோக்குகின்ற பொழுது மலையக மண்ணின் உணர்வுகளையும், இயற்கையையும் ஒன்றாக சேர்த்து நேசிக்கின்ற பண்பை கவிஞர் சி.வி.யின் கவிதைகளில் காணக்கூடியதாக உள்ளது. இக்காலத்தில் இவர் எழுதிய நாவல்களில் வீடற்றவன் குறிப்பிடத்தக்கது. இது மலையக மக்களிடையே தொழிற்சங்க உருவாக்கம், அதனை நிலை நிறுத்துவதில் உள்ள இடர்பாடுகள் என்பனவற்றை இலக்கியமாக்குவதில் இதன் பங்கு கணிசமானது. குறிப்பாக இக்காலத்தில் வளர்ச்சிபெற்று வந்த மிதவாத தொழிற்சங்கத்தையும், அதன் போக்குகளையும் சித்தரித்துக் காட்டுவதில் இதன் பங்கு முக்கியமானது.
இதே காலத்தில் மலையக படைப்புக்குரிய துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கிய பிறிதொரு இலக் கியப் படைப் பாளி என்.எஸ் .எம் .இராமையா ஆவர். இவரது சிறுகதைகளும் மலையக மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை உள்நின்று இலக்கியப் படைப்பாக்கித் தருவதாக அமைகின்றது. இவர் இயன்றவரை நடப்பியலைப் புரிந்துக் கொண்டு நியாயத்தின் பக்கம் நின்று எழுத முயன்றுள்ளார். அவ்வகையில் இவரது ஒருகூடைக் கொழுந்து என்ற சிறுகதைத் தொகுதி மலையக இலக்கியத்திற்கு ஒரு புதிய குருதியை பாய்ச்சுகின்றது எனலாம்.
இச்சந்தர்ப்பத்தில் பிறிதொரு விடயம் பற்றி நோக்குதலும் அவசியமாகின்றது. அதாவது 1960களில் மலையகத்தில் திரு.சண்முகதாசன் தலைமையிலான இடதுசாரி இயக்கமானது ஒரு புதிய பரிணாமத்தை எட்டியது. இவ்வியக்கமானது மலையகமெங்கும் கிளைபரப்பி, வேர்கொண்டபோது

பல்வேறு ஆளுமைகளை - புத்திஜீவிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என தன்நோக்கி வேகமாக ஆர்கசித்திருந்தது.இதன் காரணமாக மலையக மக்கள் புத்துணர்வு பெற்றவர்களாக காணப்பட்டதுடன், தங்களது நல்வாழ்வுக்கான போராட்டங்களையும் மேற்கொண்டனர். குறிப்பாக மடக்கும்பர, மே."யில்ட் ஆகிய தோட்டங்களில் இடம் பெற்ற போராட்டங்கள் முக்கியமானவை.
இவ்வாறான கால கட்டத்தில் தோற்றம் பெற்ற சி.வியினதும் என்எஸ்எம்இராமையாவினதும் இலக்கியப் படைப்புகள் இத்தகைய போராட்டவுணர்வுகளை உள்வாங்கவில்லை என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்வதில் இவை முக்கியத்துவம் உடையனவாக காணப்பட்ட அதே சந்தர்ப்ப்தில் மலையக மக்களின் பல்வேறு பட்ட எழுச்சிகளையும், போராட்டங்களையும் உள்வாங்கவில்லை என்பது சமூகவியல் நிலைப்பட்ட ஆய்வாகும். ஒருவகையில் இவை மலையக நாட்டார் இலக்கியத்தின் மறுவடிவமாகத் தான் காணப்பட்டன.
இக்காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான ஒடுக்குமுறைகள் தோட்ட உத்தியோகத்தர்களினாலும் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக தோட்டப் பெண் களை கணக்கப்பிள்ளை மார்கள் சகஜமாக பாலியல் சேஷடைகளுக்கு உட்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவ் ஒடுக்கு முறையானது இடதுசாரி தொழிற்சங்க எழுச்சியுடன் தான் விடிவு பெற்றது. எத்தனையோ கணக்கப்பிள்ளைமார்களை அடித்து, அவர்களின் கை வெட்டப்பட்ட சம்பவங்கள் மலையகத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றினையும் என்.எஸ்.எம்.இராமையாவின் சிறுகதைகள் படம் பிடிக்கவில்லை. குறிப்பாக இவரது சிறுகதைகளில் ஒரு மனித நேயமிக்க கணக்கப்பிள்ளையே வந்து செல்கின்றார். எனவே மேற்கூறப்பட்ட போக்கினை இவரது சிறுகதைகள் உள்வாங்கவில்லை என்று குறிப்பிடலாம். r
இவ்வம்சம் மலையக மக்கள் தொடர்பாக இக்காலத்தில் இயற்றப்பட்ட சில கவிதைகள் மூலமாக அறியக் கூடியதாக உள்ளது. உ-ம் நூல் சுல் தான், கோவிந்தசாமிதேவர், பெரியதம்பிபிள்ளை ஆகியோர் இயற்றிப் பாடிய பாடல்களில் காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும் இவ்விடதுசாரி இயக்கப்போக்கு அக்காலகட்ட படைப்புகளில் உள்வாங்கப்படவில்லை. அவை இன்று தான்,இலக்கியமாக்கப்பட்டு வருகிறது.
* புது வசந்தம் 55

Page 59
60களிற்குப் பின்னர் 80களில் மலையக இலக்கியத்தில் புதிய பரிணாமம் தோன்றுவதைக் காணலாம். இடதுசாரி இயக்கங்களின் தளர்ச்சி, மிதவாத அரசியல் தலையெடுப்பு, பல தீவிரவாதப்போக்கு என்பன மலையகத்தில் இடம் பெற்றமையால், மலையக மக்களின் வாழ்வு இலக்கியமாக்குவதில் தேக்கநிலை ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் 80களின் ஆரம்பத்தில் தோன்றிய தீர்த்தக்கரையின் பங்களிப்பு விதந்து குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சி.வி.யின், என்.எஸ்.எம்.இராமையாவின் இலக்கிய படைப்புகளின் சற்று வளர்ச்சியடைந்த பரிணாமத்தை நாம் தீர்த்தக்கரை கதையில் காணலாம். குறிப்பாக 80களில் இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளை ஆனந்தராகவனின் சிறுகதைகளும், வன்முறைகளின் பின்னர் துளிர்ந்த வசந்தகால நம்பிக்கைகளை கேகாலை கையிலைநாதனின் சிறுகதைகளும் அழகாய்,விவேகமாய் எடுத்துக் காட்டுகின்றன. மலையக சிறார்களின் குறிப்பிட்ட காலநிலையினை தொட்டுக் காட்டுவதில் ஏ.எஸ்.சந்திரபோஸ் ஆகியோரின் சிறுகதை முக்கியத்துவம் உடையதாக காணப்படுகிறது. குறிப்பாக இவர்களின் இன்றைய படைப்புகளில் ஓர் இடதுசாரி பார்வை ஊசலாடிக்கிடந்தது.
இவைதவிர மலையக மக்களின் பிரச்சினைகளை, தொட்டுக் காட்டுவதில் சு.முரளிதரன், மல்லிகை சி.குமார், சிவஞானசுந்தரம் போன்றோரின் கவிதைகளும், மாத்தளை சோமு, மலரன்பன், வடிவேலன் போன்றோரின் சிறுகதைகள் குறிப்பிடத்தக்கன. இவற்றுக்கிடையே மலையக மக்களின் வாழ்வியலைப் புரிந்து கொண்டு இலக்கியம் படைப்பதில் நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்பட்டபோதும் மலையக பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்வதில்
80களில் ஏற்படுத்திய இலக்கிய போக்கின் தொடர்ச்சி 90களில் சிறப்படைந்து அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. இக்காலகட்டத்தில் முன்னர் முற்போக்குணர்வுடன் இலக்கியம் படைத்த சிலர் சமூகவியல் நிலையில்நின்று விலகி சென்றுள்ளதையும் 90களில் நாம் காணக்கூடியதாக உள்ளது. இதே சமயம் பல இளைய தலைமுறையினர் இம் மக்களின் பிரச்சினைகளை கம்பீரத்துடனும், விவேகத்துடனும் வெளிக்கொணர் வதைக் காணலாம். இன்று முற்போக்கு இலக்கியத்திற்கு ஒரு கம்பீரத்தை வழங்குவது
 

மலையக இலக்கியம் என்று கூறின் அது மிகையாகாது. குறிப்பாக 60களில் காணப்பட்ட இடதுசாரி இயக்க வரலாற்றினை இலக்கியமாக்குவதிலும் 90கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உதாரணமாக கேகாலை கையிலைநாதனின் 60களில் மலையக வாழ்வியலின் ஒரு கீற்று என்ற விவரணம் இதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.
இவைதவிர முருகவேல் ராமையாவின் சிறுகதைகள் மலையக படைப்பு இலக்கியத்திற்கு மேலும நம்பிக்கை ஒளிபரப்புவதாக உள்ளது. கேகாலை கையிலைநாதனின் சிறுகதைகள், மல்லிகை சி.குமார் ச.பன்னிர்செல்வம் ஆகியோரது கவிதைகளும் மலையக வாழ்வியலை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளது.
மலையக வாழ்வியலை பிரதிபலித்து நிற்கின்ற மலையக இலக்கியத்தின் சர்வதேசிய தன்மை பற்றி நோக்க கார்ல்மாக்ஸின் கருத்து ஒன்றினை நோக்குதல் அவசியமான ஒன்றாகின்றது.
"தேசங்கள் உலக ரீதியாக ஒன்றை ஒன்று சர்ந்திருக்கின்றன. பெளதீக பொருள் உற்பத்தியைப் போலவே அறிவுப்பொருள் உற்பத்தியிலும், இதே நிலைமை. தனிப்பட்ட நாடுகளின் அறிவுப் படைப்புகள் பொதுச் சொத்தாகின்றன. ஒரு தலைப்பட்சமான தேசியப்பார்வையும், குறுகிய
மிகப்பல தேசிய இலக்கியங்களிலிருந்தும் தல இலக்கியங்களிலிருந்தும் ஓர் உலக இலக்கியம் உதயமாகின்றது"
இவ்வடிப்படையைக் கொண்டு மலையக படைப்பாக்கத்தை நோக்குகின்றபொழுது அவை மலையக மக்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தோன்றியிருப்பினும், ஏனைய ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கும் கீதமாக அமையக் கூடியது. எனவேதான் மாக்ஸின் மேற்குறிப்பிட்ட கூற்று கண்முன் காணக்கூடிய தத்துவ தரிசனமாக அமைந்து விளங்குகின்றது எனலாம்.
இறுதியாக நோக்குகின்றபொழுது மலையக மக்களின் நிலைமைகளையும், கருத்து நிலைகளின் தொழிற்பாடுகளையும் ஒருங்குசேர வைத்து நோக்கி,
கொள்வோமாக.
女女★

Page 60
தமிழில் தோன்றிய
ஓர் அறிமுகம்
1896இல் வெளிவந்த யாழ்ப்பாணம் கொக்குவில் குகதாஸ் ச.சபாரத்தின முதலியாரின் (1858 - 1922) "ஈச்சுரநிச்சயம்” எனும் நூலில் சென்னையில் இருந்துவந்த இரு பெளதிகவாத இதழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பாகிட்டனின் புகழ்பூத்த நாத்திக இயக்கத் தலைவரான சார்ல்ஸ் பிறாட்லாவின் (1833 - 1890) நாத்திகக் கொள்கைகளைப் பரப்பிவந்தன. இதன் தொடர்பாக "ஈச்சுரநிச்சயம்" நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“பெளதிகவாத சேட்டராகிய பிறட்லா (BRAD LAUGH) (pg56o T60T g5 f 6 T g5 f6 567 வாசித்துணர்ந்த நம்மவரிற் பலர் அக்கொள்கையின் கண்ணே பேரபிமான முற்று. அதனை எடுத்துப் பத்திரிகைகள் வாயிலாகப் பிரதிபாதிக்கத் தொடங்கிக் கொண்டார்கள். இற்றைக்கு பல வருடங்கட்கு முன்னே சென்னை புரியிற் பிரசுரிக்கப்பட்டு வந்த " தத்துவ விசாரிணி”, “தத்துவ விவேகினி” என்னும் பத்திரிகைகளிலே இப்பெளதிகவாதம் பெரிது பிரதி பாதிப்பப்பட்டு வந்தமை காரணமாக நாம் அந்தக் காலத்திற்றானே,
உலோகாயுத முதலிய நிரீச் சுரவாதக் கொள்கைகளையும் கண்டித்து, யாழ்ப்பாணம், "உதயபானு” பத்திரிகை வாயிலாகப் பற்பல கடிதங்களை எழுதிப் பிரசுரித்து வந்தோம்”
மேற்கானும் செய்தியில் “தத்துவ விசாரிணி" “தத்துவ விவேகினி” என இரு இதழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. "தத்துவ விசாரிணி” எனும் பெயரில் முதலில் வெளிவந்த இதழே பிறகு “தத்துவ விவேகினி” என்று பெயர் மாற்றம் பெற்று வெளிவந்தது.
1878 இல் சென்னை நகரத்தில் இருந்து வெளிவந்த “தத்துவ விசாரிணி", 1882 ஜூலை 26இல் "தத்துவ விவேகினி” என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்தப் பெயர் மாற்றம் குறித்த விளக்கத்தை 1883, ஜூலை 01-ந் தேதி இதழில் பின்வருமாறு அறிகின்றோம்.

முதல் நாத்திக இதழ்
- பெ.சு.மணி
"நமது நாட் டின் விருத்திக்கு வேர்ப்புழுவாயிருந்த சமய சுயாதீனமின்மையை யொழிக்கும்படி, சமய விசாரணை செய்து காட்டும் பொருட்டு இப் பத்திரிகையைத் தத்துவவிசாரிணி யென்னும் பெயரால் 1878முதல் நடத்தி வந்தோம். சென்ற வருடம் ஜூலை மாதம் தொடங்கி தத்துவ விவேகினியென்னும் பெயரால் அதையே பதித்து வருகின்றோம். இப் பத்திரிகை தவஞான சாதனையைப் பிரதிபலிக்கின்றமை ஒவ்வொருவருக்கும் சமயசுயாதீனம் இருத்தல் வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டேயாதலால் இதனை விவேவிகள் வேறாகக் கருதார்கள். இந்தப் பத்திரிகையேற்பட்ட பின்னர் தவஞான சங்கம் ஒன்று ஏற்பட்டது" தத்துவவிசாரிணியின் தோற்றம் குறித்து 1883 செப்டம்பர் 30இல் 'தத்துவ விவேகினியில் பின்வருமாறு எழுதப்பட்டது.
"எக் காலத்திலும் எத்தேசத்திலும் விஞ்ஞான அனுபோகத்தைப் பரவச் செய்யப் பாடுபட்டாரு. முண்டு. பாடுபடுபவருமுண்டு. இப்போது ஆங்கிலேய நாட்டின் திடகாத்திர சிங்கமாகிய பிராட்லாதுரையும், அமெரிக்கா கண்டத்தின் ஞானமுனியாகிய கள்நல் இங்கர் சல்துரையும் , பிரான்ஸ் நாட்டின் மெய்யோகியாகிய அட்கின்சன்துரையும், இன்னும் பற்பல தேசங்களில் பற்பலரும் தத்தம் சுயபாஷை யில் தமது கருத்தை வெளிப்படுத்துகிற புத்தகங்கள், பிரசங்கருடியாகவும், பிரசனோத்ரருடியாகவும் வெளிப்படுத்தி, அஞ்ஞான பிரஜைகளுக்கு மெய்ஞானதீபச் சுடர் விளக்கிப் பேரும் புகழும் பெற்றனர். அம் மொழியை அனுசரித்தே இச்சென்னையில் க அ எ அ - வது வருஷத்தில் “தத்துவ விசாரிணி"யென்னும் பேர் கொண்ட பத்திரிகை பிரசுரஞ் செய்யப்பட்டது.
“தத்துவ விசாரிணி” எனும் பெயர்க் காரணத்தைப் பற்றிக் கூறப்பட்டதாவது:
"யாதொன்றையுந் துணியாதும், யாதொரு
வஸ்துவையுஞ் சீர்தூக்கிப் பாராது இருப்பதும் அறிவாளியின் மார்க்கமன்று. ஆதலால்
ls, வசந்தம் ※7

Page 61
விசாரணையே அறிவை விருத்தி பண்ணும் மர்க்கம் இவ் விசாரணையை ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுமென்று கருதியேயிட் பத்திரிகைக்குத் தத்துவ விவேசினி என்று நாமஞ் சூட்டப்பட்டது” ଧ୍ବଂଶୟ) ରେ) 6, 1884.
gby.g6, 6i36.36i up"THE THINKER" 6 god ஆங்கில இதழும் இணைந்து இருமொழி இதழாக வாரந்தோறும் வெளிவந்தது.
தத்துவ விவேசினியின் முதல் பக்கம் முகட்பு பின்வருமாறு அமைந்திருந்தது. "தத்துவ விவேசிணி இந்து சுயக்கியான சங்கத்தாரால் பரிபாலிக்கப்பட்டு வருகின்ற வாராந்த ஆங்கிலோ திராவிட சுயக்கியான பத்திரிகை” w
"HINDU FREE THOUGHT UNION" 616önigssist தமிழாக்கம் "இந்துசுயக்கியான சங்கம்" என்பதாகும்
மேலை நாடுகளில் பகுத்தறிவு, நாத்திகவாதம் பேசியவர்கள் "சுதந்திர சிந்தனையாளர்கள் - FREE THINKERS என்று பெயர் பெற்றனர். சார்லஸ் GJIT 6MNT "FREE THINKERS TEXT BOOK" (1875) எனும் நூலை வெளியிட்டார். ஆங்கிலத்தில் உள்ள "THE THINKER" (p5 6ð Lu &# 35 (ip &bu s 6ð "A CRUSADE AGAINSTSUPERSITION, CUSTOM, POVERTY AND PROSTITUTION" 666 (gift fullபட்டுள்ளது. "தத்துவ விவேசினி”யின் இதழியல் கொள்கைக்கும் பொருந்தியது.
“தத்துவ விவே சினி’யின் ஆசிரியர் வெளியிடுபவர் பு:முனிசாமி நாயகர். இதன் அலுவலகம் 307, லிங்கசெட்டித்தெரு, சென்னையில் இருந்து சென்னை ஆதிகலாநிதி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. ஆங்கிலப் பதிப்பு நான்கு பக்கங்களிலும், தமிழ் பதிப்பு நான்கு பக்கங்களிலும் அமைந்தன. தமிழ் பதிப்பு, ஆங்கிலப் பதிப்பின் எதிரொலியாக வரவில்லை. ஒவ்வொரு பக்கமும் இரண்டு பந்திகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. முதல் பக்கத்தில் பயின் கீழ் ட்பா ஒன்று அமைந்தது. ஞாயிறு தோறும் வெளிவந்தது.
*戏
遴〕
சந்தா விபரம் வருமாறு:
உள்ளுரார்க்கு
ஒரு மாதம் 6 вероят மூன்று மாதம் 1 ரூ ஆறுமாதம் 2 ரூ 6)(BLUD 4 (Ֆ
58 புது வசந்தம்
 
 
 

வெளியூரார்க்கு
மூன்று மாதம் 1 ரூ - 4 ஆனா ஆறுமாதம் 2 ரூ - 8 ஆனா வருடம் 5 ლნ
டிசம்பர் 10 - 1882 ஆம் இதழின் வழியே உள்ளடக்கம் பற்றிய விபரம் வருமாறு
L35. 189
பொருளடக்கம் என்று குறிப்பிடாமல் பின்வரும் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. "வறுமையை வெறுமையாக்குவதெப்படி", "மறுமை தோற்றுமா?, "விதவா விவாக திருமணம்", "மோசேயின் சில
"வறுமையை வெறுமையாக்குவதெப்படி”எனும் கட்டுரையும், இரண்டாம் பத்தியில் "மறுமை தோற்றுமா?” எனும் கட்டுரையும் அச்சாகியுள்ளன. கட்டுரையாளர் பெயரில்லை.
Ljä. 190
முதல் பத்தியில் முதல் பக்கக் கட்டுரையான "மறுமை தோற்றுமா?’விண் தொடர்ச்சி கட்டுரையாளரின் பெயர் ஆங்கில எழுத்தில் Y என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் பத்தியில் "விதவா விவாக திருமணம்” எனும் கட்டுரை வெளிவந்துள்ளது. இந்தக் கட்டுரை, "திராவிடவர்த்தமானி'யில் PVDV என்பவர் விதவைகள் விவாகம் பொருந்தாது என்றெழுதியது மறுத்து பொருந்துமென்று பல சான்றுகளைக் கொண்டு 'A' என்பவரால் எழுதப்பட்டது. இந்தக் கட்டுரை இரண்டாவது பத்தியிலும் தொடர்ந்தது. இரண்டாவது பத்தியில் "மோசேயின் சில தவறுகள்" எனும் கட்டுரையும், பதிஞானம் பற்றிய மறுப்புக் கட்டுரையின் முன் இதழ் தொடர்ச்சியும் வெளிவந்தன.
Jib. 19
முதல் பந்தியில் "மோசேயின் சில தவறுகள்" கட்டுரையின் தொடர்ச்சி, இரண்டாவது பத்தியில் REVIEW எனும் தலைப்பில் ஊஞ்சல் என்ற நூலைப் பற்றிய விமர்சனமும், "புலோலியம்ப மிஐ6 FüHAst 6uê608{Ljäßiss696ft 16st86rfft
த்தோடு இயற்றப்பட்ட “ஊஞ்சல்” நூல் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
š 磨影戮
窯リ
*
பக். 192
முதல் பந்தியில் "எறும்பு" எனும் கட்டுரை:
இலங்கை நேசன் எழுதியது, வர்த்தமான சாங்கிரகம்
இரண்டாவது பந்தியில் வர்தமான சாங்கிரகம்

Page 62
தத்துவ விவேசிணி தியசாபிகள் விசாரணை சொஸ்ைடி கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்து வந்தது. மூடநம்பிக்கைகளைச் சாடி வந்த கட்டுரைகளில் ஒன்று. 'அஞ்சனப் பொட்டு. இதில் ஒரு பகுதி பின்வருவது.
”நமது தேசத்திலுள்ளவர்கள் அனேகள் அஞ்சனமென்கிற மையினால் போக்கடித்த பொருள்களையும், புதைந்து கிடக்கிற பொருள். களையும் வெகு இலேசில் கண்டு பிடிக்கிறதாக அநேகரை மயக்கி, அவர்களிடத்திலுள்ள பொருள்களைப் பறித்துப் போகின்றனர். இந்த உண்மையை உள்ளுணர்ந்து பாராமல் அவர்கள் சொல்லில் நம்பிக்கை வைத்து, உட்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பினிபோல் நம்மிற் சிலர் உள்ள பொருள்களை இழந்து மயங்கி வாளாவிருக்கின்றனர்" (டிசம்பர் 24, 1882).
சைவசமயம், வேதசமயம், கிறித்துவம் முதலான மதங்களைக் கண்டித்து கட்டுரைகள் தத்துவ விவேசினியில் வெளிவந்தன. சாதிபேத ஒழிப்பு, வர்ணாச்சார அமைப்பாவாதத்திற்கு பார்ப்பனர் ஆதிக்க ஒழிப்பு முதலானக் கண்ணோட்டங்களிலும் கட்டுரைகள் வெளிவந்தன.
‘கடவுள் உண்டா!' எனும் கேள்வியைக் கொண்ட தொடர் கட்டுரையில் கடவுள் இல்லை என்பது நிறுவப் பெற்றது. "ஆஸ்திக நாஸ்திக வாதம்” எனும் தலைப்பில் சுமார் ஓராண்டு காலம் தொடர் கட்டுரை வெளிவந்தது. இதை எழுதியவவர் "கிருஸ்ணகிரி உண்மைவிரும்பி" இந்த வாதத்தில் ஆஸ்திகன், நாளில் திகனாக மாறியதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாதத்தின் இறுதியில் நாஸ்திகன் வாதிட்டதில் ஒரு பகுதி, பின்வருவது.
“முதுமை ஞானம், பழக்க ஞானம், சாஸ்திர ஆானம், சிரவகை ஞானம், சாஸ்திரவனுபவ ஞானம் முதலிய அஞ்ஞானங்களையெல்லாம் தம்முடைய சுய ஞானம் , சுயானுபவ ஞானம் என்னும் ஞானங்களினால் சுட்டெரித்து, அவைகளிருந்த விதந் தெரியாமற் செய்து ஜெகமெங்கும் கூயக்கியானிகளாய் நிற்கவும் சுவஞானமேயெங்குந் தழைத்தோங்கவும், தும்முடைய சக்திக்கேற்ப சாவகாஸகாலங்களில் திரிகரண சுத்தியுடனே போதித்து, துர் ப் போதகரை வாதித் து துப்போதனையால் விளைந்த(என்றுமொழியாத) ஜாதி. மதம், ஆகாசம், கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம். பாயூம் புண்ணியம், புநர்ஜனனம், சிருஷ்டி முதலிய ஆபாச வேதங்களாகிய அஞ்ஞானமும் காட்டின நியாயமென்னும் சுயக்ஞானகோடரியல்

வெட்டித் துணித்து வெளியாக்கும் (பிறகு) நட்பென்னும் நீ பாய்ச்சி, சாந்தமென்னும் ஏருழுது, நடத்தையென்னும் வரம்படித்து, நியாயமென்னும் விதைவிதைத்து, ஆஸ்திகமென்னும் களைபிடுங்கி விசாலமென்னும் வளர்ச்சியுற்று (முதிர்ந்தபின்) வாதமென்னும் வாளால் தானறுத்து சோதனையென்னும் களமடித்து, சுயக்ஞானமென்னும் மணியை, சுயானுபவமென்னும் களஞ்சியத்திற் சேர்த்து (வேண்டியபோது) புத்தியென்னும் கரத் கொடுத்து, இல்லார்க்குங் கொடுத்து சுகஜிவிகளாய் வாழக்கடவீ எம்மாற் பெறப்பட்டதிதுவே"
தத்துவவிவேசினி’ ஆசிரியர் பு:முனிசுவாமிநாயகள் அவர்களுக்கும், புதுச்சேரி மு.கந்தசாமி பிள்ளையவர்களுக்குமிடையே கடவுளைப் பற்றிய வாதம் 1886 செப்டம்பர் 21இல் புதுச்சேரியில் நிகழ்ந்தது. இந்தச் சொற்போரில் பு:முனிசுவாமி நாயகள் கடவுள் இல்லை என்று வாதாடினார். வாதப்பிரதிவாதங்கள் தத்துவவிவேசினியில் வெளிவந்தது. எந்த முடிவும் ஏற்படாமல் விவாதம் திடீரென்று முடிந்தது.
நாஸ்திகன் பெருமை கீர்த்தனம்’ எனும் தலைப்பில் கிருஷ்ணகிரி உண்மை விரும்பி எழுதிய இசைப் பாடலொன்று அக்டோபர் 19,1884 ஆம் இதழில் வெளிவந்தது. பல்லவி அனுபல்லவி மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது.
பல்லவி நயந(முடையவரே நாடிக்கொள்வீரே நாஸ்திகரா மெங்கள் நளிமதியை
அனுபல்லவி
பயமுடனே பக்தி பண்ணுவோனை யடிப்போம் பரமேசனையும்வென்று பறையடிப்போம் சுயஞானமாமெங்கள் சூரியனுக்குமுன்னே சுருதியாமுங்கள் மதி சுடர்விடுமோ (நயந)
இதையடுத்து பதினொரு சரணங்கள் இயற்றப்பட்டுள்ளன.
வள்ளலார் மறைவு குறித்து தத்துவ விவேசிணி
வள்ளலார் தற்கொலை செய்து கொண்டு
மறைந்தார் எனும் செய்தியை தினவர்த்தமானி "நாள், மாசத்தோடு வெளியிட்டதாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது, தத்துவவிவேசினி.
புது வசந்தம் 59

Page 63
“திருவருட்பிரகாச வள்ளலாரது வள்ளாற் றன்மையாம் அவர் தற்கொலை புரிந்து கொண்டமையும் இதனால் விளங்கும். அவர் அடங்கியிருந்தவிடத்தில் மஞ்சகுப்பம் பொன்னுச்சாமிபிள்ளையும் இன்னும் இரண்டொருவர் அப்போது அங்கு கலக்டராயிருந்தவரும் போய்ப் பார்த்தபோது அவ்வருட்பிரகாசர் தேகம் சவமாய் மெலிந்து கிடக்கக் கண்டு நாற்றம் வீசவொட்டாமல் முன்னமே போடப்பட்டிருந்த கற்பூரம் விபூதியோடு பின்னும் கொஞ்சம் போட்டு மூடிவிட்டு வந்து விட்டார்கள். இவர்கள் போனபோது கட்டெறும்பு மொய்த்து இருந்ததாம். இவற்றை நாள் தேதி மாசத்தோடு அப்போது வெளியிடப்பட்ட தினவர்த்தமானியிற் đ5ff6ff6ùÎlb", (1)j6uÎ, 8, 1853 - LJ, 272)
'காஞ்சிபுரம் சவுளிமாளிகை வரதராஜ முதலியார் என்பவர் வள்ளலார் மறைவு, தற்கொலை அன்று என மறுத்தார். இவருக்கு தத்துவவ விவேசினி மனேஜர் 4. முனிசுவாமி நாயகள் - மறுப்பு கூறியது ஏப்ரல் , 1883ஆம் இதழில் பின்வருமாறு வெளிவந்துள்ளது.
"கருங்குழி இராமலிங்கம் பிள்ளையவவர்கள் தற்கொலை புரிந்தார் என்று யாம் அனுமானித்துக கூறியதற்குப் போதிய ஆதாரங்கள் முன்னரே எம்மால் எடுத்துக் காட்டப்பட்டன. அவற்றில் ஒன்றிற்கேனும் மறுக்கத் திறமில்லாத நீவிர் அபிமானங் காரணமாகவோ ஆவேசங் காரணமாகவோ இராகத்துவேஷாதிகள் மேற்கொண்டு ருஜப்படுத்தும் படிக் கேட்கின்றீர். கைப்புண்ணுக்கு கண்ணாடியும், சந்தையிலடித்ததற்குச் சா கூலியும் வெயிலிலுள்ள பொருளைத் தேட விளக்கும் வேண்டுமா?
"இராமலிங்கம்பிள்ளை உயிருடனிருந்ததைச் சகலரும் அறிவார்கள். அவர் தாமே வலிந்து அறைக்குட்சென்று கதவடைத்துக் கொண்டதாக சகலரும் அறிவார்கள். எழும்புவதாகச் சொன்னாரென்று சில சீடர்களும், இருபத்தோர் நாளில் வெளிவருவாரென்று சில சீடர்களும் சொல்லி இலவு காத்த கிளிகள் போல் அவ்விடத்தில் காத்திருந்தார்கள். பின்பு மூன்று மாதமும் கழிந்து ஆறுமாதமும் கழிந்து வருஷமுமாய் விட்டபின், உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பினிபோல வெளியிற் சொல்ல வெட்கிப் பெரும்பாலோர் அவ்விடம் விட்டகன்று தங்களிருட்யிடம் சென்று பிழைக்கும் வழியைாத் தேடி சீவனம் செய்து வருகிறார்கள். இவை ஒன்றையும் நிரூபிக்கக் கூடாத வழி அவர் தற்கொலை புரிந்தாரென்பதற்கு யாது சந்தேகம் முதலியாரே! அபிமானமொழித்துப் பேசுக, பேசுக"
(60 புது வசந்தம் )

“தத்துவ விவே சினி'யில் அறிவியல் தொடர்பினைக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பிராணவாயு, ஜலவாயு, அப்பு அல்லது தண்ணி, உட்புவாயு, கரியமிலவாயு, மங்கனிசியம் முதலிய பல அறிவியல் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
பிராட்லா, அன்னிபெகால்ட் இணைந்து வெளியிட்ட “மக்கள் பெருக்கத்தின் விதி” எனும் நூலின் கருத்துக்களை தத்துவவிவேசினி பிரசாரம் செய்து குடும்பக்கட்டுப்பாடு பற்றிய பிரசாரத்திற்கு அன்றே ஆதரவு தந்தது தத்துவவிவேசினி.
சென்னையில் தோன்றிய "தவஞானசங்கத்தின் வளாச்சிக்காக "தரித்திர நாச சமாஜம்" எனும் துணை அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. "இச் சங்கத்தின் நோக்கம் யாதெனின் வறுமையின் காரணமாகிய ஜனசங்க மிகுதிப்பாட்டைத் தடைசெய்ய வேண்டுமென்பதே. இந்த தரித்திரநாச சமாஜத்திற்குச் சார்பாய் சில சிறு பத்திரிகைகளை அச்சிட்டு இலவசமாகக் கொடுத்து வந்தோம்" இவ்வாறு தத்துவவிவேசினி முறி ப. 1883 ஆம் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழநாட்டில் சுவஞானத்தினை பரப்பப் பாடுபட்ட நண்பர்களுக்கு நன்றி கூறியுள்ளது. தத்துவவிவேசினி.
தமிழ் பற்றிலும், தமிழ் வளர்ச்சியிலும் தத்துவவிவேசினி பிரசாரம் செய்துள்ளது. ஆங்கிலம் - தமிழ் இரண்டையும் கலந்து பேசுவோரைக் கண்டித்துள்ளது “தத்துவவிவேசினி"
தமிழ் இதழியல் வரலாற்றில் சமயப் பிரசாரத்திற்காகத் தொடக்கப்பெற்ற இதழ்கள் முதல் காலகட்டமாகும். ஆனால் சமய மறுப்பு, நாத்திக சிந்தனை வளர்ப்பிற்காக பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முதல் தமிழ் இதழ் தத்துவவிவேசினி.
பி.கு: (அன்னிபெசண்ட் பிராட்லா கூட்டுறவில் வளர்த்தெடுக்கப்பட்ட நாத்திகவாதம், ராபர்ட்- இங்கள்சால் பரப்பிய நாத்திக வாதம், பேராசிரியன் லட்சுமிசரசு, தோழர் சிங்காரவேலர் கண்ட நாத்திக இயக்கம் ஆகிய வரலாற்றுத் தொடர்ச்சியுடன் g55gol6icolási "THE THINKER" g5pts6ffair நாத்திகப் பிரசாரம் விரிவாக இக் கட்டுரையாளரின் "தமிழர் முதல் நாத்திக இதழ் - தத்துவவிவேசினி எனும் வரவிருக்கும் நூலில் வெளியாகும்)

Page 64
மாக்சிய விமர்சகர்
60)
(1)
மாக்சிய மெய்யியல் அதற்கு முந்திய காலத்து மெய்யியலிலிருந்தும் அதன் காலத்து மெய்யியலிலிருந்தும் ஒரு முக்கியமான வகையில் வேறுபட்டது. அதன் நோக்கம் உலகை அறிவதோடு நில்லாமல் உலகை மாற்றுவதையும் உள்ளடக்கியது. உலகை மாற்றுவது என்பது மாக்சியச் சிந்தனையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஊடுருவி நிற்கும் இலக்காகும். அதுவே மாக்சியத்தின் அடிநாதம் மாக்சியத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் அதன் அதிர்வை நாம் உணரலாம்.
மனித இனத்தின் உயப் வு மனித விடுதலையினின்று பிரிக்க முடியாதது. மனித விடுதலை என்பது கூறுபோட இயலாதது. மனிதரை ஒடுக்கும் சிந்தனைகளை முறியடிப்பது மனிதரை அடிமை செய்யும் விலங்குகளை நொறுக்குவதற்கு அவசியமான ஒரு முன் நிபந்தனை எனலாம்.
மாக்சியத்தின் பார்வையில் சமுதாயத்தை அறிய முயலும்போதும் சடப்பொருட்களை ஆராயும்போதும, மனித இனத்தின் விடுதலையும் மேம்பாடுமே முதன்மை பெறுகின்றன. இது விஞ்ஞானத்துக்குப் பொருந்தும் அளவுக்குக் கலை இலக்கியங்கட்கும் பொருந்தும். மாக்ஸியத் திறனாய்வின் வருகை கலை இலக்கியங்கள் பற்றிய பல மாயைகளைச் சிதறடித்தது. மனித இருப்பும் மனித வாழ்வும் மனிதச் செயற்பாடுகளும் சமுதாய நோக்கிற் காணப்படும்போது கலை இலக்கியங்கள் அவற்றுடன் கொண்டுள்ள உறவு தெளிவாகிறது. கலை இலக்கியங்கள் பற்றிய மரபு சார்ந்த பார்வைகள் தகர்ந்ததுடன் கலை இலக்கியங்களின் சமுதாயத் தன்மை உறுதிப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகச் சமுதாயத்தை மாற்றுவதில் கலை இலக்கியங்களது பங்கும் முக்கியமடைகிறது.
கலை இலக்கியங்கள் தம்மளவிலேயே சமுதாயத்தை மாற்றவல்லனவல்ல. எந்தக் கலை

களை எதிர்நோக்கும் விகள்
சிவசேகரம்=
இலக்கியவாதியாலும் சமுதாயத்தைத் தனியனாக நின்று மாற்றவும் முடியாது. இவ் விடயங்களில் மாக்ஸியக் கலை இலக்கியவாதிகளது மனதில் பிரமைகட்கு இடம் இல்லை. அதே வேளை, மாற்றத்துக்காகத் துடித்துக் கொண்டுள்ள ஒரு சமுதாயத்தில் அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்குரிய ஆற்றலை உடைய ஒரு சமுதாயச் சக்தியின் கையில் கலை இலக்கியங்கள் வலிய
ஆயுதங்களாகின்றன. மக்களைப் போதையூட்டி
மயக்கத்தில் ஆழ்த்தும் முதலாளியக் கலை இலக்கியங்கட்கு எதிரான வலிய கவசமாகவும் அவை செயற்படுகின்றன. மாக் ஸியச்
சிந்தனையாளர்கள் கலை இலக்கியங்கள் பற்றி
மிகவும் ஆராய்ந்துள்ளனர். மா ஓ சேதுங்,
ஹோசிமின் ஆகியோர் உட்படப் பல மாக்ஸியத் தலைவர்கள் சிறந்த படைப்பாளிகளாகவும்
இருந்துள்ளனர்.
மாக்சியக் கலை இலக்கியப் பார்வையை மிகவும் விறைப்பான முறையில் அணுகுவதன் குறைபாடுகள் மாக்சியத்தை விறைப்பான முறையில் சமுதாயப் புரட்சி தொடர்பாகப் பயன்படுத்துவதன் குறைபாடுகளை ஒத்தவை. மாக்சியத்தை ஆக்கமான முறையில் வளர்த்தெடுத்தவர்கள் மாக்ஸியத்தை வரட்டுச் சூத்திரங்களாகக் காண மறுத்தார்கள் தாம் மாக்ஸியக் கலை இலக்கியப் பார்வைக்கும் இது பொருந்தும்.
மாக்சிய கலை இலக்கியப் பார்வையும் இலக்கும் அதன் கால இடச் சூழல்களில் வைத்துக் காணப்பட வேண்டும். அதன் வளர்ச்சி சமூக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கருதப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதரது சமுதாய இருப்பும் சமுதாயச் செயற்பாடும் அவரது சமுதாயப் பார்வையை நிர்ணயிக்கின்ற காரணத்தால், ஒரு கலை இலக்கியவாதியின் சமுதாயப் பார்வை அவரது படைப்பின் முனைப்பை நிர்ணயிக்கின்றது. மக்களைச் சார்ந்து நிற்கும் படைப்பாளிகளை
61 一 புது வசந்த்ம் مقلد

Page 65
மக்களிடமிருந்து அந்நியப்பட்ட படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்துவது படைப்பாளியின் சமுதாயப் பார்வையே.
மாக்சிய விரோதிகள் 85 6.O6) இலக்கியங்களில் சமுதாயப் பார்வை இருப்பதை விரும்புவதில்லை. குறிப்பாக, பாட்டாளிவர்க்கப் பார்வையையும் ஒடுக் கப்பட்ட மக்களது எழுச்சிக்கான குரலையும் அவர்கள் வெறுக்கிறார்கள் அதற்கு வசதியான இலக்கிய அளவு கோல்கள் அவர்களால் வகுக்கப்படுகின்றன. தூய கலை இலக்கியம் சார்ந்த துய அழகியற் கோட்பாடுகளும் காலம் இடம் என்ற வரையறைகள் கடந்த அமர
அவசியமாகின்றன. இந்த விதமான கலை இலக்கியப் பார்வை மாக்சிச் சார்பான கலை இலக்கியப் படைப்பாளிகளையும் திறனாய்வாளர்களையும் பாதிக்காமல் இல்லை.
சோவியத் யூனியனின் சரிவு மாக்ஸியத்தின் முடிவு என்று சிலரால் உறுதியுடன் கூறப்பட்டது. இதன் விளைவாக மருண்ட சில முற்போக்குவாதிகள் தங்களது சமுதாயப் பார்வையைத் தலைகீழாக மாற்றிக் கொண்டதையும் நாம் கண்டுள்ளோம். இந்த விதமான குழப்பமான சூழலில் மாக்ஸியத்தின் சமுதாயத் தாக்கத்தைப் பலவீனப்படுத்தவும், நவகொலனியத்தின் உலக ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் தாக்கத்தைத் தமிழகத்தின் இரவற் சிந்தனையாளர்களிடமும் அவர்களிடமிருந்து மூன்றாங் கையாக வாங்குகிற ஈழத்துத் திறனாய்வாளர்கள் சிலரிடமும் நாம் காணலாம்.
மேற்குறிப்பிட்டவாறான சூழ்நிலைகளில் மாக்ஸியத் திறனாய்வு எதிர்நோக்குகின்ற சவால்களையும் அவை சார்ந்த மாக்ஸியக் கலை இலக்கியப் பணிகளையும் நாம் சரிவர அடையாளங் காண்பது அவசியமானது. மாக்ஸியக் கலை இலக்கியப் பார்வையை மீளவலியுறுத்தவும் அதற்கு மேலும் வலுவூட்டவும் மாக்ஸியக் கலை இலக்கியப் பணிகளை ஊக்குவிக்கவும் நெறிப்படுத்தவும் மாக்ஸிய விமர்சகள்கட்கு ஒரு முக்கியமான கடமை உள்ளது.
அடுத்து, மாக்ஸ்லியத் திறனாய்வாளர்களது அடிப்படையான பணிகளென அடையாளங்
E60 S (3 நடைமுறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளைப்
62 புது வசந்தம்

பற்றிப் பின்னர் கவனிப்போம். இவற்றை விளக்கும் போக்கில் மாக்ஸியக் கலை இலக்கியப் பார்வைக்கு எதிரான சில விமர்சனங்கள் பற்றியும் சிறிது கவனிப்போம்.
(2)
மாக்ஸியத் திறனாய்வு எனும் போதே அங்கு மாக்ஸிய அணுகுமுறைக்கான தேவை ஏற்கப்படுகிறது. மாக்ஸியம் என்பது உலகை மாற்றுவதற்கான ஒரு தத்துவம் என்ற அளவில் மாக்ஸிய உலகநோக்குக்கும் சமுதாய இலக்குக்கும் சார்பாக ஒரு படைப்பின் நிலைப்பாட்டை மதிப்பிட வேண்டிய தேவையும் ஏற்கப்படுகிறது. இங்கே, யாந்திரிகமான பார்வைக்கு மாறாக, ஒரு படைப்பை அதன் கால, இடச் சூழலில் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் வைத்துப் பார்க்கும் முனைப்பும் கலை இலக்கியங்கட்கும் மனிதவாழ்வுக்கும் உள்ள உறவை இயங்கிக் கண்ணோட்டத்தில் மதிப்பிடும் தன்மையும் மாக்ஸியத் திறனாய்வை அடையாளங் காட்டுகின்றன. ஒரு படைப்பு எவ்விதமான சமூக அமைப்பைச் சார்ந்து எவ்விதமான சமூகப் பார்வையுடன் எழுகிறது என்பது மாக்ஸியத் திறனாய்வாளருக்கு முக்கியமானது.
எவ்வாறாயினும் மாக்ஸியர்களான பல திறனாய்வாளர்கள் சில சமயங்களில் யாந்திரிகமான முறையில் கலை இலக்கியங்களை அணுகி. யுள்ளனர். மிகவும் மேலோட்டமான ஒரு பார்வையால் வழிநடத்தப்பட்டுச் சில படைப்புக்கள் பற்றியும் படைப்பாளிகள் பற்றியும் தவறான முடிவுகட்கும் வந்துள்ளனர். இவ்வாறான தவறுகள் தவிர்க்க வேண்டியன. எனினும், தவறுகள் தவிர்ந்த நடைமுறை எதுவும் இல்லை என்பதால் தவறுதலாக அடையாளங் காணப்பட்டுத் திருத்தப்படுவது முக்கியமாகிறது. கடந்தகாலம் என்பது எப்போதும் மீளாய்வு செய்யப்பட்டே வருகிறது. இவ்வாறே, மேலும் சரியான முறையில் வரலாற்றை நாம் விளங்கிக் கொள்ள இயலுமாகிறது. இதை வேளைக்கு ஒரு கருத்தைக் கூறுகிற தடுமாற்றப் போக்குடன் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.
வர்க்க சமுதாயத்தின் மனிதச் செயற்பாடு கள் அனைத்திலும் ஒரு வர்க்க முத்திரை குத்தப்பட்டே இருக்கும். இந்த வர்க்க அடையாளம் எல்லாவிடத்தும் ஒரே விதமான வெளி வெளியான பண்புடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஒரு படைப்பாளியின் வர்க்க நிலைப்பாடு அவர் எந்த வர்க்கத்திற் பிறந்தவர் என்பதால் மட்டுமே

Page 66
தீர்மானமாவதில்லை. பெண்ணுரிமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண் எழுத்தாளர்கள், தேசிய இன ஒடுக்கலுக்கு நியாயங்கற்பிக்கும் ஒடுக்கப்படட இனத்தின் படைப்பாளிகள், சாதியத்துடன் சமரசம் செய்ய முனையும் பிற்படுத்தப்பட்ட சமூகத்து எழுத்தாளர்கள் ஆகியோர் போலவே, ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற் பிறந்து அதற்குத் துரோகமாக எழுதுவோர் உள்ளனர். ஒரு சமுதாயத்தில் எந்த வர்க்கச் சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதுவே அச் சமுதாயத்தின் ஒடுக்கும் வர்க்கச் சிந்தனையை வழிநடத்துகிறது. அதுமட்டுமன்றி, அது ஒடுக்கப்படும் மக்களது சிந்தனையையும் வெவ்வேறு வகைகளிலும் வெவ்வேறு அளவுகட்கு ஊடறுத்துச் செல்கிறது. பாட்டாளிவர்க்க உணர்வு என்பது சமூகத்தின் வர்க்கப் பண்பு பற்றிய அடையாளங்காணலின் மூலமும் ஒடுக்கப்பட்ட மக்களது எழுச்சிக்கான தேவையை அறிவதன் மூலமுமே உருவாகி வளர்வது. இது இயல்பாகவே பிறப்பால் அமையும் ஒரு பண்பல்ல. மாறாகச் சமூக
நடைமுறை மூலமும் முக்கியமாகப் போராட்ட நடைமுறை மூலமும், வர்க்கப் போராட்டத்தில் பங்குபற்றுதல் மூலமுமே வளர்வது. முழுமையான பாட்டாளிவர்க்கப் பார்வை என்பது படிப்படியாகவே விருத்தி பெறுகிறது.
மாக்சியத்தை ஏற்றுக் கொண்டவர் என்ற ஒரே காரணத்தால் ஒருவரது சிந்தனை ஒடுக்கும் வர்க்கச் சித்தாந்தத்தால் தீண்டப்படாதது என்று நாம் கருத முடியுமா? சுரண்டும் வர்க்க மாசு படிந்த சமுதாயச் சூழலில் நம் அனைவரது சிந்தனைகளிலும் சுரண்டும் வர்க்கச் சித்தாந்தத்தின் பாதிப்பு இருக்கவே செய்யும். ஆழமான மாக்ஸிய ஈடுபாடு இல்லாத பல ஆய்வறிவாளர்கள் எளிதாகவே தடுமாறுவதை நாம் காணுகிறோம். மரம் பழுத்தால் வருகிற வெளவால்கள் போலவும் பருவகாலத்தில் வந்து தங்கிப் போகும் பறவைகள் போலவும் இவர்களிற் பலர் நடந்துகொள்வது இவர்கள் சார்ந்துள்ள நடுத்தர வர்க்கத்தின் ஊசலாட்டத் தன்மையை மட்டும் பிரதிபலிப்பதல்ல. சமுதாயத்தில் தம்மை முன்னிறுத்திக் கொள்வதற்கு மாக்ஸியத்தை ஒரு ஊன்றுகோலாகப் பயன்படுத்தி வந்த புல் லுருவிகளின் நடத்தையை வெறும் ஊசலாட்டத்தன்மையால் மட்டும் விளக்கிவிட முடியாது. தலித்தியம், தேசியவாதம், பெண்ணியம், பிரதேசவாதம், பேரினவாதம், மதம் போன்ற எதையுமே தமது தனிப்பட்ட முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்த இவர்கள் கூசமாட்டார்கள். எனவேதான் மாக் ஸிய விமர்சகர்கள் இத்தகைய சந்தர்ப்பவாதிகள் பற்றியும் சந்தர்ப்பவாதப்

போக்குகள் பற்றியும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்
மிகவும் தீவிரமான வரட்டு மாக்ஸியம் பேசியவர்களுள்ளும் மற்ற எல்லாரையும் விடத் துய மாக்ஸியரும் புரட்சியாளரும் தாமே என்ற விதமாகப் பேசியவர்களுள்ளுமே அதிக வீதமானோர் எதிரணிக்குத் தாவியுள்ளனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். வெளிவெளியான பிற்போக்கு எழுத்தை அடையாளங் காண்பது எளிது இலைமறை காயாகப் பிற்போக்குச் சிந்தனையை ஊட்ட முயலுகிற முயற்சிகளும், தூய இலக்கியம் என்ற பேரில் மக்களது போராட்டங்களையும் போராட்ட அமைப்புக்களையும் இழிவு செய்கிற முயற்சிகளுங்கூட நம்மிற் பலருக்கு அடையாளங் காண முடியுமானவை. இவற்றைவிட ஆபத்தானவை, முற்போக்கு முகத்திரையுடன் விஷத்தன்மையுடைய சிந்தனைகளை ஊட்டுகிற படைப்புக்கள். சில சமயங்களில் படைப்பாளியின் சிந்தன்னயிலும் சமூகப் பார்வையிலும் உள்ள குறைபாடுகள் இவ்வாறு வெளிவரலாம். சில சமயங்களில் இவை தந்திரமாக உட்புகுத்தப்படலாம். எவ்வாறாயினும், இவை பற்றிய வெளிவெளியான விவாதங்களும் கலந்துரையாடல்களும் பயனுள்ளவை.
தீவிர இடதுசாரிப் பாங்கில் எழுதப்பிடும் பல படைப்புக்கள் சமூக வாழ்வின் உண்மையான தன்மைகளை அப்படியே புறக்கணித்து விடுகின்றன. ஒரு வகையான கற்பனாவாதத்தை எதிர்க்கும் போக்கில் இன்னொரு வகையான கற்பனவாதத்தை வளர்க்கும் முயற்சிகள் பற்றி மாக்ஸிய விமர்சகள்கள் கவனமாயிருக்க வேண்டும்.
மேற்கூறியவாறு, சமூக மாற்த்தி
தடையாக எழுகிற படைப்புக்கள்ையும் அவை முன்வைக்கப்படும் பார்வைக் கோணங்களையும் அடையாளங் காண்பதும் விமர்சிப்பதும் மாக்ஸிய விமர்சகள்களது கடமையாகிறது. அதே வேளை சகல விமர்சனங்களும் பகைமையான கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுவது தவறானது. அதிலும் முக்கியமாக எந்த விமர்சனமும் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுவதின் காய்தல் உவத்தலற்ற சமநிலை பேண வேண்டும்.
ஒரு படைப்பின் உள்ளடக்கத்தை மாக்ஸிய விமர்சனம் முதன்மைப்படுத்துவது பற்றிய ஆட்சேபனைகள் தூய் அழகியற்காரர்களிடமிருந்து எழுகிறது. அவர்களைப் பொறுத்தவரை, இலக்கியம் என்பதற்கு அதன் உள்ளடக்கத்தினின்று வேறுபட்டு
-- புது வசந்தம் 63 )

Page 67
நிற்கும் ஆற்றல் உண்டு என்று ஒரு நம்பிக்கை. மாக்ஸிய விமர்சனம் உள்ளடக்கத்தைப் புறக்கணிக் கின்ற பொழுதே தனது விமர்சனக் கடமையினின்று தவறுகிறது. எனவே அழகியற்காரர்கள் எடுத்த எடுப்பிலேயே மாக்ஸிய விமர்சனத்தை மறுக்க வேண்டி வருகிறது. இந்த அழகியல்வாதம் படுபிற்போக்கானதும் மாக்ஸிய விரோதமானதுமான இலக்கியங்களை மட்டுமல்லாமல் நச்சு இலக்கியங்களைக் கூடச் சமூகப் பார்வை கொண்ட ஒரு விமர்சனத் தாக்குதலினின்று காக்கும் நோக்கை உடையது. இப்போது சில அழகியற்காரர்கள் ஒரு படி கீழே இறங்கியோ கொஞ்சம் மனது வைத்தோ "அரசியலோ வரலாறோ சமூகச் சிந்தனையோ இலக்கியவடிவம் பெறலாம், ஆனால் இலக்கியத்தை அரசியலாக் குவதோ சித்தாந்தச் சார்புடையதாக்குவதோ வரலாற்று மெய்மை கொண்டதாகவோ செய்ய முயல்வது தவறு" என்று சொல்கிறார்கள் உண்மையில் இவர்கள் சொல்வது என்ன? ஒரு இலக்கியத்தின் மூலம் படைப்பாளி உணர்த்த முயல்கிற சில விஷயங்களைக் கண்டு கொள்ளாதீர்கள் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். ஆட்டுத் தோலின் அழகை ரசியுங்கள், உள்ளே ஒளிந்திருக்கும் ஓநாயைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று சொல்கிறார்கள். இது பற்றிய முடிவை எடுக்க வேண்டிய மாக்ஸிய விமர்சகள் இந்தத் தூய அழகியற்காரர்களது சாம, பேத, தான, தண்ட உத்திகளின் முன் மிரளும்போது பின்னோக்கிய பயணம் ஒன்றையே மேற்கொள்கிறார்.
மாக்ஸிய விமர்சகள்கள் மற்றவர்கள் எதை எப்படி எழுத வேண்டும் என்று கட்டளை இடுகிற இலக்கியக் கொமிசார்கள் என்ற கண்டனம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. கொமிசார்கள் எல்லா இடங்களிலும் இருந்திருக்கிறார்கள். கட்டளைகள் எவரால் இடப்படுகின்றன என்பதையொட்டியே மறுப்புக்கள் எழுகின்றன. சில கொமிசார்கள் தங்களுடைய கடந்த காலத்தை மற்ந்து இப்போது புதிய எசமானர்களுடைய கொமிசார்களாகவும் மாறி இருக்கிறார்கள். ஆயினும் மாக்ஸிய விமர்சகள்கள் மற்றவர்களுக்கு ஆணை பிறப்பிக்கிற மனோபாவத் துடன் இருப்பது நல்லதல்ல. மாஓசேதுங் மக்களிடமிருந்து கற்பது பற்றியும் மக்களுக்கான கலை இலக்கியம் பற்றியும் சொன்னதோடு “நூறு மலர்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்" என்றும் கூறி மாறுபட்ட சிந்தனைகள் வெளிவெளியாக மோதுவதை ஊக்குவித்ததை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
ஒரு பிற்போக்குவாதி எப்படி எழுத வேண்டும் என்று ஆணையிடுவது மாக்ஸிய விமர்சகர்
64 s வசந்தம்

எவருக்கும் இயலாதது. ஆயினும் குறிப்பிட்ட எழுத்தின் நிலைப்பாட்டை அடையாளங் காட்ட முயல்கிற ஒருவரை எவரும் இலக்கியக் கொமிசார் என்று இகழ முடியுமா? அது மட்டுமன்றித், திறனாய்வின் நோக்கம் என்ன? ஒரு படைப்பை அதன் பல்வேறு கோணங்களினின்றும் நோக்கிப் படைப்பின் உள்ளடக்கம் பற்றிய ஒரு மதிப்பீட்டை வழங்குவது அதன் அடிப்படையான நோக்கமல்லவா? அது வெறுமனே ஒரு படைப்பை மதிப்பிடுகிற அளவுடனேயே நிற்க முடியுமா? இலக்கியத்தின் செல்நெறியை நிருணயிப்பதில் படைப்பாளியினளவுக்கு விமர்சகர்கட்கும் ஒரு பங்கு உண்டல்லவா. படைப்புக்களது சிறப்பான அம்சங்களையும் குறைபாடுகளையும் திறனாய்ந்து கூறுவதற்கும் மேலாக ஒரு படைப்பு ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் பற்றியும் எதிர்காலப் படைப்புக்களைச் சிறப்பிக்கக் கூடிய விடயங்கள் பற்றியும் வெறும் நிபுணத்துவ நிலைப்பாட்டிலில்லாமல் நுகர்வோரது பார்வையில் நின்று கருத்துரைப்பதும் ஆக்கமான விமர்சகப் பணியாகும்
முற்குறிப்பிட்ட விதமான ஆலோசனைகள் சினேகபூர்வமான முறையில் முன்வைக்கப்பட வேண்டியன. ஒரு படைப்பு மக்கள் நலன்சார்ந்து எழுத முற்படுகிற ஒருவரால் முன்வைக்கப்படும்போது அது பற்றி மாக்ஸிய விமர்சகர்கள் தருகிற ஆலோசனைகள் ஆணைகளாக இருக்கக் கூடாது. அவை படைப் பாளியை ஊக்குவிக்கும்
பகைமையோடு நோக்குவோருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அவசியமானவை என்று எண்ணுவோருக்கும் ஒரு மாக்ஸிய விமர்சகர் ஆக் கபூர்வமாகச் சொல்ல என்னதான் இருக்கமுடியும்! அவ்விடத்துப் படைப்பின் முனைப்பை அடையாளங் காட்டும் இடத்தோடேயே கடமை நின்றுவிடுகிறது.
(3)
அழகியல் பற்றி மாக்ஸியத் திறனாய்வுக்கு அக்கறை இல்லை என்ற குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் விதமாகச் சில விமர்சகர்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளனர். இது ஒரு குறிப்பிட்ட சமுதாய வரலாற்றுச் சூழலில் இலக்கியம் பற்றிய விவாதம் முன்னொருகல் சென்ற தவறான திசையுடன் தொடர்புடையது. "உள்ளடக்கமே அனைத்தும்” என்ற நிலைப்பாடு, மாக்ஸிய இலக்கியப் பார்வையைக் கொச்சைப்படுத்துவது. மாறாக, உள்ளடக்கமே அடிப்படையானது என்பதன் பொருள் சரியான நிலைப்பாடு இருந்தால்

Page 68
வேறெதுவுமே தேவையில்லை என்றாகிவிடுமா? முற்குறிப்பிட்ட நோய்ப்பட்ட மனநிலையினின்று ஈழத்தமிழ் இலக்கியச் சூழல் பெரும்பாலும் விடுபட்டுவிட்டது என்றே நம்புகிறேன்.
கலை இலக்கிய வடிவங்களுள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில் ஒரு குறிப்பிட்ட தேவை சார்ந்தே உருவாகி விரிவு கண்டன. சில கலை வடிவங்கள் தமது அழகியற் சிறப்புக் காரணமாகவும் நீண்ட காலம் சமுதாயப் பயன்பாட்டின் விளைவாகப் பண்பாட்டின் ஒரு கூறாகவும் இன்னமும் நிலைக்கின்றன. இக் கலைவடிவங்களுடு சமகாலச் சமூகச் சூழலுக்கு ஏற்ற படைப்புக்களை உருவாக்குவதில் உள்ள சிரமங்கள் பல. சில வடிவங்கள் சமகாலத் தேவைகட்கு ஏற்ப எடுத்தாள இயலாதன. உதாரணமாக, மரபு சார்ந்த காவியச் செய்யுள் வடிவம். மறுபுறம் மரபு சார்ந்த சில செய்யுள் வடிவங்கள் இன்றும் பயன்படுத்த ஏற்றவை. பரதமும் கருநாடக இசையும் இன்னமும் பரந்துபட்ட மக்களை மனதிற் கொண்டும் அவர்களது வாழ்வும் தேவைகளும் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டும் அமையத் தவறிவிட்டன. இடையே ஒரு சில நல்ல முயற்சிகள் இருந்தும், மரபு சார்ந்த இக் கலை வடிவங்கள் ஒருபுறம் பழமைவாதிகளது நுகள்வுக்காக விறைப்பான முறையில் பேணப்படுகின்றன. மறுபுறம், வணிகக் கலாசாரம், வசதிபடைத்த நடுத்தர வர்க்க நுகள்வை நோக்கி மரபுக் கலை வடிவங்களை நகர்த்த முயல் கிறது. இரண்டுமே இக் கலைவடிவங்கள் மூலம் உழைக்கும் மக்களது உணர்வுகளையும் வாழ்வையும் தேவைகளையும் எவ்வாறு கூறுவது என்பது பற்றிய அக்கறை இல்லாதவை. மாக் ஸியக் ᏧᎬᎬ 6ᏈᎠ 6ᏙᎠ இலக்கியவாதிகளும் திறனாய்வாளர்களும் குறுக்கிட வேண்டிய பயனுள்ள இடைவெளிகள் இங்கு உள்ளன.
வெகு சனங்களை எட்டக்கூடிய நிலையில் நாட்டார் கலைகளும் சனரஞ்சகமான வியாபாரக் கலை இலக்கியங்களும் உள்ளன. இவற்றின் உள்ளடக்கம் எவ்வாறிருப்பினும், இவற்றின் நலிவான கூறுகளை நீக்கி மக்களிடம் எளிதாகச் செல்லக்கூடிய நல்ல ஆக்கங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய பலனுள்ள வழிகாட்டல்கட்கான தேவை உள்ளது.
மக்களைச் சென்றடைகிற கலை இலக்கிய
வடிவங்கள் பலவற்றிலும் மக்களது மேம்பாட்டுக் கானவற்றையும் நல்ல அம்சங்கள் உடையன.

வற்றையும் அடையாளங் காட்டி ஊக்குவிக்கிற அதே வேளை, அவை கலை இலக்கியங்கள் என்ற வகையில் கொண்டிருக்கிற குறை நிறைகளையும் மாக்ஸிய விமர்சகள்கள் கூறத் தயங்கக் கூடாது. ஒவ்வொரு கலை வடிவத்துக்கும் உரிய அழகியற் கொள்கைகள் கவனிக்கப்படாதபோது, படைப்பில் குறைபாடு நேரலாம். இது பற்றிய எச்சரிக்கை உணர்வு படைப்பாளிக்கு அவசியம் அதைச் சுட்டிக் காட்டுவது விமர்சகரது பொறுப்பு மறுபுறம், மரபு சார்ந்த சில அழகியற் பார்வைகளைப் படைப்பாளி வேண்டுமென்றே நிராகரிக்கும் தேவை உள்ளது. அழகியலோடு சேர்த்துக் கூறப்படும் சில படைப்பு நெறிகள் காலத்துக்கு ஒவ்வாதவையாக இருக்கலாம் அல்லது சுரண்டும் வக்க ஆதிக்கத்தை ஆணாதிக்கம், சாதியம் போன்ற பல வடிவங்களுள் ஒன்றாகவோ அதிகமாகவோ அவை தம்முட் கொண்டிருக்கலாம். இத்தகைய பண்புகள் அடையாளங் காட்டப்பட்டு நீக்கவும் மாற்றவும் அவசியமானவை. இங்கே படைப்பாளிக்கும் விமர்சகருக்குமிடையில் மிகுந்த ஒத்துழைப்புக்கான தேவை உள்ளது.
புதிய கலை வடிவங்கள் தொடர்பாகவும் விமர்சகள்கட்கு நிதானமான பார்வை தேவை. பல இடங்களிற் புதிய கலை வடிவங்கள் வெறுமனே புதுமை புதுமைக்காக - என்ற விதமாக அயலிலிருந்து உள்வாங்கப்பட்டுள்ளன. சில வேளைகளில் புதுமை நாட்டத்தால் ஏதாவது வித்தியாசமாகச் செய்யப்பட்டுள்ளன. புதுக்கவிதை தொட்டு மஜிக்கல் றியலிசம்' எனப்படும் (லத்தின் அமெரிக்கக்)கதைகூறும் பாணிவரை பல உதாரணங்கள் உள்ளன. இவற்றை அறிமுகப்படுத்துவோரின் சமூக உணர்வின் குறைபாடும் ‘கலை கலைக்காகவே' என்கிற மயக்கமும், உள்வாங்கப்பட்ட கலை வடிவங்களின் ஆற்றலை மறைத்து, வெறும் மினுமினுப்பையே வலியுறுத்துகின்றன. மாக்ஸியத் திறனாய்வு இந்த மினுமினுப்பை ஊடறுத்துக் கலை இலக்கிய வடிவத்தின் தோற்றுவாயையும் பகைப்புலத்தையும் அடையாளம் காட்டுவதோடு எவ்விதமாக அதுவோ அதன் பயனுள்ள கூறுகளே நமது தேவைகட்கு ஏற்ற விதமாக உள்வாங்கப்படலாம் என்பதை விசாரிக்க வேண்டும். புதுக்கவிதை தொடர்பான விவாதம் அன்றைய புதுக் கவிதையின் உள்ளடக்கத்தின் நிராகரிப்பாக மட்டும் இல்லாது வடிவத்தினது நிராகரிப்பாகியது தவறானது. மறுபுறம், தாங்கள் எவ்வகையிலும் பின்தங்கியோராகவோ எதையும் தவற விட்டவர்களையோ தோன்றக் கூடாது என்ற காரணத்துக்காக
வசந்தம் 65

Page 69
எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஏற்கும் ஆபத்தான அணுகுமுறையையும் அண்மைக் காலங்களிற் கண்டுள்ளோம்.
பின்அமைப்பியல், பின் நவீனத்துவம், மஜிகல் றியலிஸம் போன்றவை இல்லாமல் தமிழிலக்கியம் ஒருபடி கூட முன்னால் நகர முடியாது என்று நம்புகிற அளவுக்கு மூடத்தனம் சிலரிடம் உள்ளது. உன்னதமான உலக இலக்கியங்கள் எளிமையும் தெளிவும் சார்ந்தே அமைந்துள்ளன என்ற உண்மையை இவர்கள் ஏனோ அறிவதில்லை. ஆழமான விடயம் தெளிவாகவே இருக்கலாம் என்பதை இவர்களால் ஏற்க முடியவில்லை என்றால், மனித அறிவு எங்கிருந்து வருகிறது என்பது பற்றி இவர்கள் மீளாய்வு செய்வது பயனுள்ளது.
மாக்ஸிய விமர்சகர்கள் இவ்வாறான விடயங்களிற் பரவலாகவும் கவனமாகவும் வாசிப்பதும் உறுதியுடன் தமது கருத்துக்களைத் தடுமாற்றமின்றிச் சொல்வதும் அவசியம்.
வேண்டும் நமக்
முன்னைப் பழம்பொருளின் மூடக் கொள்கைகளை எண்னாளும் நினைந்து மனதிலேற்றிச் செல்நெறி இதுவெனச்
சொல்வார் கரண்!
சொல்லால் ஏசிச் சுட்டெரித்து கல்லா நீவி மூடர்
நாமே கடவுள்:
என்றிரைந்தே
சன்னதம் கொள்வார்.
பாவிகள் நீர் பல்லிளித்து
எமை ஆராதனை பண்ணி
கொலுவிருக்க
சாதனங்கள் செய்க
என்றார்
வேதனை கோடி வேறேதும் மிச்சமில்லை
பூமாலை குரங்கின் கையாயிற்று
(66 புது வசத்தம் -

(4)
மாக்ஸிய விமர்சகரின் வரலாற்றுட் பணி அடிப்படையில் மாறவில்லை. மனிதர் அன்றாடம் முகங்கொடுக்கும் சூழல் மாறுகிற அளவுக்கு விமர்சனத்தின் குறிப்பான பணிகள் மாறுபடுகின்றன. மற்றப்படி, எந்த ஒரு கலை இலக்கியப்
தனது நோக்கத்தை எந்தளவு சிறப்புடன் நிறைவு செய்கின்றது என்பதைக் கூறுவதில் மாக்ஸிய விமர்சகரது பொறுப்பு அப்படியே தான் உள்ளது.
விமர்சனம் என்பது பெரும்பாலும் பகைமையற்ற நோக்கில் நிகழ்த்தப்படுகிற ஒரு ஆய்வு. எனவே ஒரு விமர்சகள் முதலில் தனது அழகியல் அளவுகோல்கள் பற்றியும் சமூகப் பார்வைக்கோணம் பற்றியும் ஒளிவு மறைவு இல்லாது இருப்பது நல்லது போராடும் உலகில் மெய்யான நடுநிலை என்று ஒன்று இல்லை. நேர்மை என்று ஒன்று இயலுமானது. மாக்ஸிய விமர்சகர்கள் இவ்விடத்தில் உறுதி தளரக்கூடாது.
கோர் முனைப்பு D
நாவலன்
புவியில்
ஆமோ எமை வெல்ல?
ஆருளார்:
கூறுபடுத்திக் குற்றுயிராக்க நாமே பிறந்தோம்
என்றார்த்தார்.
நாயகரானார்.
பேசித் திரித்து
பழமையின் நச்சுக் கனியை
சாறெடுத்துச் சுவைத்தார்ளு போனார் சற்றேனும் விழிப்பில்லா
இவர்
போன வழியேயே சுற்றிச் சுழன்றார்
தச்சுக் கனி விலக்கி
நல்ல தேன் கனியுண்ணல் புத்தூக்கப் பாதையின் புதுமை வழி
வேண்டும் நமக்கோர் முனைப்பு

Page 70
இரண்டு மூன்று நாட்களாக இடைவிடாமற் பெய்துகொண்டிருந்த 'அடை LD 60) yge` அட்பொழுதுதான் டக் கென்று ஓய்ந்தது. வெயில் சுள் ளென்று எறித்தது. நேரம் பிற்பகல் இரண்டு மணியிருக்கலாம். அந்த வேளையிற் தான் கேள்விக் குறிபோல வளைந்து துண்டில் முள்ளுப்போல மெலிந்திருந்த அந்த நாய் படுக்கையை விட்டெழுந்தது. இரவு பகலாகக் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் களைத்துப் போயிருந்த அந்த நாய்க் குப் udf வயிற்றைக்கிள்ளியது. காற்றுப்போன "டியூப்’ பைப்போல அதன் வயிறு ஒட்டியிருந்தது.
உரோமக் கண்களைச் சிலிர்த்து உடம்பில் ஒட்டியிருந்த மண்ணை உதறிக்கொட்டிவிட்டுச் சாட்பாடு தேடப் புறப்பட்டது.
தாயின் பிரிவை உணர்ந்த குட்டிகள் ஒலமிட்டன. கண் விழிக்காத பச்சைக் குட்டிகள், குட்டிகளை நாய் பரவாய் பண்ணவில்லை. அது ஒடியேவிட்டது. மனிதர்களுக்கே பசி வந்திடட் பத்தும் பறந்து போகு மென்றால். நாய்க்கு? அதுவுங் குட்டி போட்ட நாய்க்கு.?
تھتھ84%ک
கோடியிலே கூரை, சுவர், கதவு, ஜன்னல்களனைத்தும் கிடுகுகளினாலேயே தயாரிக்க்ட்பட்டவொரு "றெடிமேட் (பாழ்) வீடு இருக்கின்றது. அந்த வீடுதான் அந்த நாயின் இல்லம், வீடு, பிரசவ விடுதி எல்லாம் அந்த வீடுதான் அதற்கு.
அதேவீட்டில் மனிதர் வசிக்கும் காலத்தில் எப்பொழுதோ - அடுப்பு மூட்டிய இடத்தில் தன் கால்களாற் தோண்டிப் பக்குவட்படுத்தப்பட்டவொரு கிடங்குதான் அந்த நாய்க்கும் குட்டிகளுக்கும் படுக்கையாயமைந்திருந்தது.
எங்கிருந்தோ வந்து கடைத் தெருவில் நிலையாகக் குடியூன்றி விட்டவொரு அனாதை தான் அந்த் நாய் தனது வறுமைப்பாட்டையும், தான் பிறந்த பொன்னாட்டின் பொருளாதார மந்த
 
 
 
 

வன்னியூர்க் assyកuកំ
s ம் சாட்டை பண் 95ھ (٦ க்கு முறை இனவிருத்தி செய்து கொண்டே வந்தது.
மோட்டார் இயமனுக்குப் பலியானவை, திருட்டுக்குப் போனவிடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டவை, அரசாங்க உத்தரவுட்படி பாய்ந்த குண்டுகளுக்கு இரையாகியவை. நல்லகுட்டிகள், வேட்டையாடக்கூடிய கடுவன் குட்டிகள் என்று மனிதர்களால் வளர்ப்புக் குக் கொண்டு போகப்பட்டவை போக மிகுதியாக கடைத் தெருவில் நிரந்தரமாகத் தங்கிநிற்கும் நாற்பத்திரெண்டு நாய்களும் அந்தப் பெட் டை நாயரின்
வழித்தோன்றல்களே!
கவிஞர்களாலும் எழுத்தாளர்களாலும் "நன்றியின் சிகரம்" என்று வர்ணிக்கப்படும் நாய்க் த்திற்தான் அர் ரஞ் செய்தது.
குலப்பெருமை மட்டுமிருந்து விட்டாற் போதுமா..?
மாடிவிடுகளிலே கட்டில் கதிரைகளிலிருந்து, பஞ்சு மெத்தைகளிற் துங்கி, பீங்கான்களில்
பாக்கியத்தான் அதற்கு கிடைக்கவில்லை. சொந்தமாக வசிக்க ஒரு ஏழை மனிதன் வீடு, வேளாவேளைக்குப் புசிப்பதற்கு எச்சிலுணவு, படுப்பதற்கு ஒரு ப சாக்கக்கூட YWerஅதன் சந்ததிகளுக்கும் கிட்டியதா? இல்லை இல்லவேயில்லை.
சினிமாவில் நடித்து இரசிகப் பெருமக்களின் அமோகமான பாராட்டுதல்களைப் பெறவும், மனித குலத்தின் வளர்ச்சிக்காக, "செய்மதி' யிலேறி
KR
தச் சுற்றிவந்து உயிரைத் தியாகம் செய்து இறவாப் புகழ் பெறவும், நாய்ச் சங்கங்களில் அங்கத்துவம் பெற்றுக் கண்காட்சிகளிற் தோன்றி மனிதர்களின் பரிசுகளைப் பெறவுந்தான் அதற்கு "மண்ணாய்ப்போன அதிர்ஸ்டம்” கிட்டவில்லை. தனக்கென ஒரு பெயரைச் சூட்டிக்கொள்ளவாவது
*、 @爱
புது வசந்தம் 67

Page 71
அத்துL அதன் பரம்பரைக்கும் "பலன்"
நாய் என்ற குலப்பெயராலேயே அதையும் அதன் சந்ததிகளையும் மனிதர்கள் அழைத்தனர்.
கடைத் தெருவில் எறியப்படும் எச்சில் உணவுகளை அந்த நாய்ட் Lரம்பரை உண்டு காலம் கடத்தியது. ஒரோர் சமயங்களில் கடைக்குசினிகளிலும் கடைத்தெருவுக்கு அண்மையிலுள்ள வீடுகளிலும் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருக்கும் தின் பண்டங்களை அந்த நாய்க்குலம் சாப்பிட்டு விடுவதுண்டு. அவைகள் அப்படிச் சாப்பிடுவதை மனிதன் "திருட்டு என்று சொல்லிக் கொள்வார்கள், தங்கள் மொழியில்
"என்னை நிர்க்கதியாக்கி அனாதையாக அலையளிட்டவன் மனிதன் என்னைப் போன்ற தெருநாய்கள் அங்காடி நாய்கள் பரம்பரை உருவாகவும வளரவும் மூலகாரனமானவன் மனிதன் எனக்குச் செய்த தீமைக்காக மனிதகுலத்தின் மீது பழிக்குப்பழி வாங்கியே திருவேன்" என்கிற வஞ்சின உணர்ச்சியால் வீர சபதமெடுத்துக் கொண்டு அந்த நாயும் அதன் பரம்பரையும் அவ்வாறு உத்தரவு பெறாமல் உண்பதில்லை. பசி எல்லைக்கோட்டைத் தாண்டும் வேளைகளில் சந்தட்ப வசமாக அவ்வாறு நடந்து விடுவதுண்டு. இதுதான் அந்தக் கடைவீதி நாய்க் குலத்தின் வரலாறு.
உணவு தேடிப் புறப்பட்ட அந்த நாய் தன் வழமைப் படி கடைத் தெருவின் முன்பக்கம், பின்பக்கம், உணவு விடுதிகளில் எச்சிலிலை போடப்படுமிடங்கள் தெருக்கான் எல்லாவிடங்களையும் ஒரு அங்குல இடங்கூடத் தவறாமல் துருவியாராய்ந்து மோட்பம் பிடித்துப் பார்த்துவிட்டது. ஒரு வெள்ளெலும்புத் துண்டு ஒரு கருவாட்டுச் செதில் கூட அகப்படவேயில்லை.
அவ்வளவு நேரத்துக்கும் மற்றைய நாய்கள் விட்டு வைக்குங்களா?
அதனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான - கடை சிப்புகலிடமான "பேக்கரி யைக்கூட பலதடவை சுற்றிப் பார்த்துவிட்டது. ஒரு காய்ந்த Tருகிய மாக்கட்டி கூட அகப்படவில்லை.
கடைவிதியிலிருந்து தென்திசை நோக்கிச் செல்லும் "மருதமடுசசாலை வழியே குறியில்லாமற் சுட்ட குண்டு போலக் குறிக்கோளின்றி கடுகதியில் ஒடியது அந்த நாய்,
8ே புது சந்தர்

ஏதோவொரு நட்டாசை அதை உந்தித் தள்ளியது. ஒருமைல் தூரத்திற்கு இருபுறமுங் காடLந்த அந்த விதியில் சுமாள் அரை மைல் தூரத்தைத் தாண்டிவிட்டது அந்த நாய்
கிடைத்தது எதிர்பாராதவொரு அதிர்ஷ்டம் ஆமாம்! தெருக்கானிலே, நிறைய ஏதோ கட்டப்பட்டதாக ஒரு சாக்கு மூடை கிடந்தது. முடையைப் பல தடவைகள் சுற்றிச் சுற்றி மோட்பம் பிடித்துப் பார்த்தது. நாசி வழி புகுந்த வாசனை அதை மகிழ்வுறச் செய்தது. முடையை முகாந்து முகந்து இன்பமடைந்தது. அதன் நாவில் ஐலம் இவறி வழிந்தது.
(Լք հ3)ւ Ճ3) եւ இழுத் து எங்காவது மறைவிடத்துக்கு கொண்டுபோய் அங்கு வைத்துக் கடித்துப் பிய்த்து அதனுள்ளிருக்கும் உணவுப் பொருள்கள் முழுவதையும் வயிராறத் தின்ன வேண்டுமென்று திட்டம் போட்டது. தனது திட்டத்திற்கு எதிர்ப்பெதுவுமில்லாமையால் உடனே செயற்படுத்தவும் ஆரம்பித்து மூடையை இழுததுப் பர்த்தது. ப்ங்ற் அரையங்குல தூரங்கூட முடையை நகர்த்துவதற்கு அதனால் முடியவில்லை. முடியவும் மாட்டாது.
வருவது வரட்டுமென்ற அசட்டுத் துணிவுடன் ஸ்தலத்தில் வைத்தே சாக்கைக் கடித்துப் பிய்க்கத் தொடங்கியது. அது மூடையைக் கடிக்கத் தொடங்குவதற்கும் கடைத் தெருவிலுள்ள மற்ற நாற்பத்தொரு நாய்களும் அந்த இடத்தைச் சேர்வதற்கும் சொல்லி வைத்தாற் போன்றிருந்தது.
மற்றைய நாய்களைக் கண்டதும் அதன் அடிவயிற்றிலே இடிவிழுந்ததைப் போன்றிருந்தது. உறுமிக் குரைத்து, சீறிச் சினந்து பற்களை இழித்து வால் ரோமங்களைச் சிலிர்த்து நாய்களைக் கலைக்கத் தொடங்கியது.
ஒருபுறமாக இரண்டு நாய்களைக் குரைத்துத் துரத்திக்கொண்டோடும் மறுபுறமாக வந்து நாலு நாய்கள் சாக்கைக் கடிக்கத் தொடங்கிவிடுங்கள், அந்த நாலு நாய்களை இன்னொரு புறமாகத் துரத்திக்கெண்டோடும். பிறிதோள் பக்கமாக எட்டு நாய்கள் வந்து கடிக்குங்கள். இப்படியே.
தானும் தின்னமுடியாமல் மற்ற நாய்களையும் தின்னவிடாமல் அந்த மூடையைக் கனகச்சிதமாகக் காவல் புரிந்தது, அந்தப் பெட்டைநாய் மற்ற நாய்களும எதிர்பைத் தளர்த்தவில்லை. பெட்டை நாயும் தன் கடமையில்

Page 72
சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. கண்ணுக்குள் எண்ணெயூற்றியதுபோற் கவனமாக மூடையைக் கிட்ட மற்ற நாய்களை அணுகவிடாமல் மூடையைச் சுற்றிச் சுற்றி “ட்யூட்டி” செய்தபடியே நின்றது. காலம்
அவ்வழியே சென்றவொரு மனிதன் அந்தக் காட்சியைக் கண்டான். ஒரு தடியை எடுத்து நாய்களை அடித்துத் துரத்தினான். பெட்டை நாயைத் தவிர மற்ற நாய்கள் தூரத்திற்கு ஓடிவிட்டன. பெட்டை நாய் பக்கதிலேயே நின்றது.
மனிதன் மூடையை அவிழ்த்துப் பார்த்தான். சாக்கு நிறையப் பானும் பணிசும் இருந்தன. யாரோ சயிக்கிளில் பாண் விற்பனவு செய்பவர்கள் தவவறவிட்டிருக்க் கூடுமென்று ஊகித்தவனாக மூடையைக் கட்டினான்.அப்பொழுது.
தன்னுடைய இரண்டு காதுகளையும் மடக்கித் தாழ்ததிச் சிரித்து வாலைக்குழைத்து மனிதனிடம் ஏதோ விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தது அந்தப் பெட்டை நாய்.
அதன் விண்ணப்பத்தை ஈவுஇரக்கமின்றி அந்த மனிதன் நிராகரித்தான். அதன் பஞ்சக் கோலம் அவனுடைய மனதில் இரக்கத்தைச் சுரப்பிக்கவில்லைப் போலிருக்கிறது. அதனுடைய பசியை அவன் எப்படியறிவான்.?
த் துக்கிக்ெ SG கட்டினான். நாய்கள் ஏமாற்றமடைந்தன. பெட்டை நாய் பெருத்த ஏமாற்றமடைந்தது. அதனுை
அந்த நாய் சோர்ந்து வாடிய கொடியாகத் துவண்டபடி தன்னுடைய இருப்பிடத்தை நோக்கித்
ஒரு வெள்ளைத் தாமரை கறுப்பு உடை அணிகிறது.
வீணையின் நாதம் குடத்தினுள் முடக்கப்படுகிறது. ஒரு பறவையின் சிறகு ஆராய்ச்சிக்காக வெட்டப்படுகிறது.
ஒரு
குழந்தையின் கால்கள் கண்ணி வெடிக்குப்
 
 

தளர்நடை போட்டது பாவம்! அதற்குக் கொடுத்து
நாற்பத்திரெண்டும் ஏகோபித்து ஒற்றுமையாக அந்த மூடையைக் கடித்துப் பிய்த்திருந்தால், அத்தனை நாய்களுக்கும் ஒருவேளை திருட்தியான உணவு கிடைத்திருக்கும். மனிதன் வந்து சந்திக்கு முன்பே விஷயமும் இலகுவாக முடிந்திருக்கலாம்.
நாய்களுக்கோ “ஒற்றுமையின் உயர்வு" பற்றித் தெரிந்தாற்தானே!
நன்றியின் சிகரமென்று பெயர் பெற்ற நாய்க்குத் தான் ஒற்றுமை என்பது சுத்த சூனியமாகிவிட்டது.
அந்த நாய் தனது இருப்பிடத்தையடைந்து தன் படுக்கையில் படுத்துக் கொண்டது. கவலையும், தோல்வியும், ஏமாற்றமும் பசியும், அதை வாட்டி வதைத்தன.
கூடியதாக பல எறும்புகள் ஒன்றுசேர்ந்து ஒரு எறும்பைப் பார்க்கிலும் பன்மடங்கு பெரிதான வொரு உணவுட்பொருளை இழுத்துக் கொண்டு போயின.
எறும்புகளின் செய்கை நாய்க்கு வெந்த
புண்ணில் தீயிற் காய்ச்சிய வேல் பாய்ச்சுவது
போலவும், “சனால்” விடுவது போலவுந்
ன்ூயிாகக்கக் கூடுந்தான்
ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியந் தேவையான தொன்றென்று சிந்தித்து நடப்பதற்கும் முனையுந்தான்! அதற்கு. அந்த நாய்க்கு. ஆறாவது அறிவு இருந்திருக்குமானால்..?
தரைமட்டம் ஆக்கப்படுகிறது.
65
சாவு மணி அடிக்கப்படுகிறது.
ஜெயமதி
வசந்தம் 69

Page 73
புதிதாய் ஒ நாம் புை
70
பெண்ணென்றும் பேயென
கண்ணென்றே 5ഞ്ഞു திபேச்
ஒன்ரி 7, 7
':,
 
 
 

கண்ணன்

Page 74
நாட்டின் கல்விக் கொள்கையானது காலத்திற்கு காலம் மாற்றம் உற்று வந்துள்ளது. சமுதாய தேவைகள் கல்விப் பொருளாக அமைய வேண்டியுள்ளது. இதற்கேற்ப பொருளாதாரம் மாறி வருகின்ற சமுதாயங்களுக்கு ஏற்ப கல்வி முறையும் மாற வேண்டியது அவசியமாகும். இதன் பிரகாரம் கல்விக்கொள்கையாக்கம் என்பது ஒரு நாட்டில் இடம் பெறும் ஒரு தொடர் நிகழ்வாக அமைகின்றது.
கல்விக் கொள்கைகள் காலத்திற்கு காலம் அரசியல், கல்விச்சிந்தனையாளர், இளைஞர் வேலைவாய்ப்பு போன்ற காரணிகளால் உருவாக்கம் பெற்றன. 21ம் நூற்றாண்டின் கல்வி கொள்கையாக்கத்திற்கு மனிதவலு அணுகுமுறையும் சமுதாயதேவை அணுகு முறையும் முக்கிய காரணியாக அமைகின்றன.
இலங்கை கல்வி வரலாற்றில் இலவச கல்வித்திட்டமும் சுயமொழிக் கல்வியும் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைகின்றன. இலங்கையின் எழுத்தறிவு வீதம் 88% ஆக இருப்பதற்கு மேற்கூறிய இரு காரணிகளும் பெரும் உந்து சக்தியாக விளங்குகின்றன. அத்துடன் இலவச புத்தக விநியோகம் இலவச சீருடைகள் வழங்கல் மதிய உணவு வழங்கல் சலுகை அடிப்படையில் சீசன் ரிக்கற் வழங்கலும் உதவியாக விளங்கின.
இலங்கையின் தனிநபர், வருமானம் 1996ல் 710 அடொலர்(42000) ரூபா. ஆனால் வறுமைக் கோட்டின் கீழ் 60 வீத மக்கள் வாழ்கின்றனர். (வறுமைக் கோட்டின் வருமான எல்லை மாதம் 1500 என நிர்ணயித்து உணவு முத்திரை வழங்குகின்ற்னர்). இலங்கையில் வறுமை காரணமாக மாணவர்கள் இடைவிலகல் அதிகரித்து செல்லுகின்றது. இது யுத்த பிரதேசத்தில் இன்னும் கூடுதலாகும். உ-ம்: இலங்கையில் ஆண்டு 1ல் 42இலட்சம் மாணவர்கள் பாடசாலையில் சேர்கின்றனர். மாணவர்கள் (ஆண்டு 11) ல் 1996ல் 492,422 பேர் படித்து க.பொ.த(சா/த) பரீட்சை எடுத்தனர். ஆகவே ஆண்டு 1ல் இருந்து ஆண்டு 11 வரும் பொழுது கிடைக்கவில்லை ஏறக்குறைய
 

க.பரஞ்சோதி
38 லட்சமாகும். இதே போன்று க.பொ.த(உத) பரீட்சைக்குத் தோற்றும் சுமார் 170,000 மாணவர்களுள் 12,500 பேர் மாத்திரம் பல்கலைக்கழகம் செல்கின்றனர். மிகுதி 1,57,500 பேர் உயர்கல்வி பெறமுடியாது உள்ளது. எனவே இலங்கையின் கல்விக் கொள்கையின் பயனாக புத்தக கல்விக்கு முக்கியம் கொடுக்கப்படுகின்றதே தவிர செயல்முறையான தொழில்நுட்பம் கணனிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
எனவே புதிய கல்வித்திட்டத்தில் தொழில் நுட்பகல்வி, கணனி, ஆங்கில கல்விக்கு முக்கியத்துவம்கொடுக்கப்படுகின்றது. அத்துடன் இவ்வளவு காலமும் வகுப்பு அறையில் ஆசிரியரை மையமாக வைத்தே கல்வி கற்பித்தல் அமைந்தது. புதிய கல்விக் கொள்கையின் பிரகாரம் மாணவனை மையமாக வைத்து கல் விக் கொள்கை அமைகின்றது.
உயர் கல்வியைப் பொறுத்தவரை பல்கலைக்கழக கல்வி கற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெறமுடியாத நிலையில் இருகின்றனர். 1971ல் இதே நிலைமைகாரணமாக இளைஞர் கிளர்ச்சி தோன்றின. இக்கிளர்ச்சி 1989ல் திரும்பவும் ஏற்பட்டது. இதன் காரணமாக 1990ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இளைஞர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் விதப்புரைகளுக்கு இணங்கவே தேசிய கல்வி ஆணைக்குழு நிறுவ கருத்து முன்வைக்கப்பட்டது. மேற்படி ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்த பெரும்பாலான கிராமப்புற இளைஞர்களும் மக்களும் தமக்கு நியாயமான கல்வி பெறுவதற்கான வாய்ப்பு கிடையாமை பற்றிக் கருத்து தெரிவித்தனர். அத்துடன் இலங்கையின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக அமைந்திருப்பது, நிலவுகின்ற கல்வி முறையே என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே 21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்கு மாணவ சமுதாயத்தை தயார்படுத்த புதிய கல்விக் கொள்கை அமையும்.
புது வசந்தம் 71

Page 75
எனவே முதலில் தேசிய கல்விக் கொள்கையானது ஐந்து பகுதிகளாக வகுத்து உள்ளனர். முதலாவது (1) கல்வி வாய்ப்புக்களை விரிவாக்கல் (i) கல்வி தர அபிவிருத்தி (i) ஆசிரியத்தொழில் (iv) தொழில்நுட்ப செயல்திறன் கல்வி (V) கல்வி முகாமைத்துவமும் வள ஏற்பாடும்
ஆகிய முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
கல்விச் சந்தர்ப்பத்தை விரிவாக்கல் என்னும்போது பாடசாலைப்படவரை நடைமுறை ஒன்றின் மூலம் கல்வி வசதிகள் குறைவாக காணப்படும் பிரதேசங்களை அறிந்து போதிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். இந்த நடைமுறை மூலம் கல்வி வழங்கும் ஏற்பாட்டிற் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளும் எடுத்து காட்டப்படும் இதன் மூலம் நாடு முழுவதும் பாடச்ாலைப் பரம்பலை அபிவிருத்தி செய்ய திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு வழிகோலும்,
இரண்டாவதாக கல்வி தர அபிவிருத்தியை நோக்கும் பொழுது செயற்பாட்டு முறைகளுக்கும் முக்கியம் அளித்து கல்வியின் பண்பு சார்ந்த அம்சங்களுக்கு உரிய கவனஞ் செலுத்தப்படும் பாடதிட்ட மீளாய்வு ஆசிரியர்களுக் உடைய திறமையை அபிவிருத்தி செய்தல் கணிதம் மொழிகள் ஆகியவற்றுக்கு கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதின் அவசியம் பல்வேறு மட்டங்களில் மதிப்பீடு செய்தல் ஆகிய விடயங்கள் பற்றி கலந்துலையாடப்பட்டது.
ஆசிரியத் தொழில் என்னும் போது வேலைக் கமர்த்தப்படவதற்கு முன்னர் பயிற்ச்சியளிக்கப்பட வேண்டியதன் அவசியம். சேவைக் கால பயிற்ச்சியளிக்கப்பட வேண்டியதன் அவசியம், சேவைக்கால பயிற்சி போன்ற ஆசிரிய சேவையில் காணப்படும் குறைபாடுகள் ஆனைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கற்பிக்கும் சமுதாயத்தின் தொழில் சார்ந்த தேவைகளைக் கவனித்தற் பொருட்டு ஆசிரியர் சேவை ஆணைக்குழு ஒன்றினைத் தாபிக்க வேண்டுமெனச் சிபார்சு செய்யப்பட்டது.
நான்காவதாக தொழில்நுட்ப செயல் திறன் கல்வி என்னும் பொழுது பாடசாலைகள் ஏட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற கல்லூரிக் கல்வி வழங்குவதுடன் நின்றுவிடாது வாழ்க்கை , தொழில் உலகு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட

தகவல்கள் ஆற்றல்கள் ஆகியவற்றைப் பெறுவதற்குரிய வசதிகளையும் வழங்கும், பொதுக் கல்வியையும் வழங்கும் சாதாரண பாடசாலைகளால் முறைசார்ந்த தொழில் கல்வியை வழங்க முடியாதாயினும் இத்தகைய ஒழுங்குகள் பெரிதும் சாத்தியமாகும்.
கல்வி முகாமைத்துவமும் வள ஏற்பாடும் என்னும் பொழுது நாட்டில் உள்ள எல்லா தாபனங்களையும் தழுவிய கல்வி முறையின் முகாமைத்துவம் மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண சபைகளினாலும் முகாமை செய்யப்படும் தாபனங்களை ஒன்றிணைக்கப்பட வேண்டியதன் அவசியம், சிறந்த இணைப்புக்களை ஏற்படுத்தும் உபாயங்கள், கொள்கையாய்வினை காலத்திற்கு காலம் மேற்கொள்ளவேண்டியதின் அவசியம் முதலிய விடயங்கள், கொள்கைப் பத்திரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. கல்வி முறையில் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கப்பட்ட மாற்றங்கள் அண்மையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. புதிய சிந்தனைகள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு அதிக வளங்கள் ஒதுக்கப்பட வேண்டிய தன் அவசியம், காரணங்கள் ஆகியன பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை பொதுக்கல்வி, பல்கலைக்கழக்க்கல்வி, தொழில்நுட்ப கல்வியும் தொழில்கல்வியும் என வகுத்து நோக்கலாம்.
பொதுக்கல்வி வாய்ப்புக்களை விரிவாக்கல் தற்பொழுது 05-14 வயது வரையான கல்வி பயில வேண்டிய சிறார்களுள் சுமார் 14% கல்வி கற்பதில்லை. இச் சிறார்கள் பல்வேறான ஒழுக்கக் கேடான நடத்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களில் வேலைக்காரராகவும் ஈடுபடுத்தப்படுகின்றனர். வேறு சில ஊக்குவிப்புக்களை வழங்குவதின் மூலமாகவும் பாடசாலைக்கு வரவழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சாதாரண பாடசாலைக்கு வர முடியாதவர்களுக்கு செயற்பாடசாலைகளும் திறந்த பாடசாலைகளும் அமைக்கப்படும் 2000 ஆண்டளவில் "அனைவருக்கும் கல்வி" என்ற கோட்பாடு நடைமுறைப்படுத்தப்படும்.
ஆரம்ப கல்வியைப் பொறுத்த மட்டில் 1 ஆம் தரம் முதல் 5ம் தரம் வரையான ஆரம்ப கட்டத்திலான பிள்ளைகளுக்கு செயற்பாட்டு மூளை அடிப்படையாக கொண்ட கல்வியைப் பெறுவதற்கு “பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், வேலைப்புத்தகங்கள், ஆசிரியன் கைநூல் முதலியவற்றை

Page 76
மறுசீரமைத்தல், வண்ணப் புகைப் படங்களைக் கொண்ட பாடநூல்களை வழங்கல் 1ம் தரத்தில் இருந்து ஆங்கில சொற்களின் பிரயோசனத்தைட் பழக்குதல். இத்திட்டம் 1999 தரம் 1ல் அறிமுகப்படுத்தப்பட்டு 2003 ல் தரம் 5ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்
கனிஷ்ட இடைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை 6ம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையாகும். பாடத்துறை சார்ந்த அறிவுக்கு மேலதிகமாக கையாளும் திறமைகளும் வளர்ச்சியுறத்தக்க முறையில் பாடவிதானங்களும் பாடத்திட்டங்களும் மறு சீரமைக்கப்படும். பிள்ளைகளின் கையாளும் திறமைகளை வள்ப்பதற்கு தேவையான பல்வேறு பிரிவுகளுக்கு தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கப்படும். இதன்படி நிருமானத் தொழில்நுட்பம், இயந்திர தொழில்நுட்பம், இலத்திரனியலும் மின்சாரமும், கலைகள், விவசாயம் மனைப்பொருளியல் சாதனங்கள் வழங்கப்படும்.
க.பொ.த(சாதாரண)தரம் பாடவிதானமானது 07 பாடங்களையும் விருப்பத்திற்கு உரிய பாடங்கள் பலவற்றையும் உள்ளடக்கியதாகும். சமயம், முதலாம் மொழி, கணிதம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், ஆங்கிலம், சமூகக்கல்வியும் வரலாறும், அழகியற் பாடங்கள் போன்றவையே. இந்த நிகழ்ச்சி திட்டம் 2000 ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும். விருப்பத்திற்குரிய பாடங்களாக இரண்டாம் மொழியாக சிங்களம், தமிழ், வரலாறு, புவியியல், அபிவிருத்தி கல்வி, சுகாதாரமும் உடற்கல்வியும், நவீன புராதன மொழிகள், தொழில்நுட்பம் . இதில் 3 விருப்பத்திற்குரிய பாடங்களை கற்கலாம். கணித பாடம், கணிதம் 1, கணிதம் II எனவும் விஞ்ஞான பாடம் விஞ்ஞானம் 1 விஞ்ஞானம் II என 2 வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். கலை, வர்த்தகம், படிக்கின்றவர்கள் கணிதம் 1 ம் விஞ்ஞானம் 1 ம் சித்தியடைந்தால் போதுமானது. விஞ்ஞான துறை படிப்பவர்கள் விஞ்ஞானம் 11 ம் கணிதத்துறை படிப்பவர்கள் கணிதம் Iம் சித்தியடைதல் வேண்டும் இவ் சாதாரண பரீட்சையானது 2000 ஆண்டளவில் நடைமுறைக்கு வரும்.
க.பொ.த(உயர்தரம்) மாணவர்களைப் பொறுத்தவரை தொழில்நுட்ப பாடம் அறிமுகம் செய்யப்படும் பல்கலைக்கழக புகுமுக மாணவர்கள் பயில வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை நான்கில் இருந்து மூன்றாக குறைக்கப்படும். இவர்களுக்கு தேசிய சர்வதேசிய ரீதியில் நிகழும் மாற்றங்கள் பற்றி அறிவை விருத்தி செய்வதற்கு ஏற்றதாக

மாவட்ட ரீதியில் கூடிய புள்ளி அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுடன் பல்கலைக்கழகத்திற்கு தெரிந்து எடுக்கப்படுவார்கள். இவ் உளச்சார்பு சோதனை ஒரு பல்தேர்வு வினாக்களாக அமையும். இதன் மூலம் மாணவர்களின் (1) தர்க்க ரீதியாக சிந்திக்கும் ஆற்றல் (2) சிக்கல்களை தீர்க்கும் ஆற்றல், புரிந்து கொள்ளும் திறமை, தொடர்பாடல் ஆற்றல் பற்றிய மதிப்பீட்டுக்கு ஆளாக்கப்படுவர். இது 1999 இல் இருந்து அமுலாக்கப்படும். பல்கலைக்கழகம் போகாதவர்கள் (3) பாடங்களில் சித்தியடைந்தால் க.பொ.த(உயர்தரம்) சித்தியடைந்தவர்களாகக் கொள்ளப்படுவர். இவர்களுக்கு பரீட்சை திணைகைகளத்தினால் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆங்கில கல்வியைப் பொறுத்தமட்டில் 1ம் தரத்தில் இருந்து மேல் வகுப்பு வரை ஆங்கிலம் கற்பிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும். கணனிக்கல்வி பாடசாலைக் கல்வி பயில்வோருக்கும், பல்கலைக்கல்வி பயில்வோருக்கும் விரிவான வாய்ப்புக்கள் வழங்கப்படும்.
மதியுரையும் தொழில்சார் வழிகாட்டலும் மாணவர்களுக்கும், பட்டம் பெற்று வெளியேறியவர்களுக்கும் வழங்கப்படும், மாணவர்கள் திறமை இனங்கண்டு அதற்கேற்ப தொழில்களைத் தெரிவு செய்வதற்கும் மற்றும் தொழில் உலகம், வேலை வாய்ப்பு சந்தை பற்றிய அறிவையும் வழங்குவதற்கு பாடசாலைகளில் மதியுரை சேவையும் பல்கலைக்கழக மட்டத்தில் தொழில்சார் வழிகாட்டல் உத்தியோகத்தரும் நியமிக்கப்படுவர்.
ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதற்கு தேசிய ஆசிரியர் பயிற்சி அதிகார சபை நிறுவப்படும். பயிற்றப்படாத ஆசிரியர்கள் எல்லோரையும் பயிற்றுவித்தல், புதிய 5 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளை ஆரம்பித்தல், பல்கலைக்கழகங்களில் கல்வி மாணி பாடநெறியை மீண்டும் ஆரம்பித்தல். கல்வியல் பீடங்களின் பாடவிதானங்களை மறு சீரமைத்தல். நாடு முழுவதும் 84 ஆசிரியர் நிலையங்களை தாபித்தல் முதலியன ஆகும்
பாடசாலை ஒழுங்கமைப்பும் முகாமைத்துவமும் கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக நடைபெற உயர்மட்டத்தில் பேணப்படவேண்டும். கிராமப்புற பாடசாலைகளை முன்னேற்ற மேலும் வளங்களைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். பிரதேச சபைப் பிரிவுகளில் 312 பாடசாலைகளைத் தெரிவு செய்து 1A,B தரத்திற்கு கொண்டு வருதல் ஆகும்.
வசந்தம் 73

Page 77
குறைவிருத்தி பிரதேசங்களாக இனங்காணப் பட்டுள்ள பெருந்தோட்டங்கள், தொலைத்(துார) கிராமங்கள், கரையோர மீன்பிடி கிராமங்கள், நகள்ப்புற அபிவிருத்தியடையாத மக்கள் கூட்டத்தினர் வசிக்கும் பிரதேசங்களில் கனிஷ்ட பாடசாலைகள் விருத்தி செய்யப்படும்.
பாடசாலை அபிவிருத்தி சபை மூலம் பாடசாலை அபிவிருத்தி செயற்பாடுகளில் பிற மாணவர்களின் பெற்றோர்களைப் பங்குபற்றச் செய்தல். முகாமைத்துவம் தொடர்பாக அதிபர், பிரதியதிபருக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.
கல்வியமைச்சு, மாகாணக் கல்வி திணைக்களம், பிராந்திய கல்வி திணைக்களம் போன்றவற்றின் நிருவாகம் மறுசீரமைக்கப்படும்.
மொத்த தேசிய உற்பத்தியில் தற்பொழுது 3 வீதம் கல்விக்காக ஒதுக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் இது 4.5 வீதமாக அதிகரிக்கப்படும்.
முன்பாடசாலைக் கல்வியைப் பொறுத்த வரை முன் பாடசாலைக்கான ஆகக்குறைந்த தரம், ஆசிரியர்களின் தகமை பேணுவதற்கான பிரமாணங்கள் கொண்டு வரப்படும் முன் பாடசாலை ஆசிரியர்கள் பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களின் உதவிகள் வழங்கப்படும் இவ் முன்பாடசாலைகளில் இனங்களுக்கிடையில் ஒத்துழைப்பை, ஏற்படுத்தும் பொருட்டு சிங்களப் பாடசாலைகளில் தமிழும், தமிழ் பாடசாலைகளில் சிங்களமும் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பல்கலைக்கல்வியைப் பொறுத்த வரை 12 பல்கலைக்கழகங்களும் 1 திறந்த பல்கலைக்
74 புது வசந்தம்
 

கழகமும் உண்டு. 1994 பின்பு ரஜரட்ட, சப்பிரகமுவ, தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. இவ்வாறு புதிய பல்கலைக்கழக தோற்றத்துடன் அனுமதி தொகை 12,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ் அனுமதித்தொகை 2000 ம் ஆண்டில் 15,000ஆக அதிகரித்தல். இதைத் தவிர புதிதாக வடமேல் மாகாண, ஊவா பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப்படும். அத்துடன் மாத வருமானம் (7500/-) கீழ் பெறும் குடும்ப மாணவர்களுக்கு மாணவர் உதவித்தொகை வழங்கப்படும்.
பல்கலைக்கல்வி கிடையாத மாணவர்களுக்கு தொழில்நுட்பக்கல்வி வழங்க அரசாங்மும் தனியாரும் சேர்ந்து முயற்ச்சி எடுப்பார்கள். எனவே புதிய கல்விக் கொள்கை ஒரு செயல் திறன் மிக்க மாணவர்களை உருவாக்குவதுடன் தொழில்களைப் பொறுத்த வரை தனிப்பட்ட ரீதியிலும் அல்லது தனியார் துறையிலும் தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கான நடவடிக்கையாக அமையும் ஆனால் ஒரு சமூக நலன் சார் அரசாங்கம் செய்து வந்த சமூக நலன்களைக் குறைத்து அரசாங்கதுறை கூட்டுத்தாபனத்துறைகளில் வேலைவாய்ப்புக்களை குறைத்து தனியார் துறைகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்று கொள்வது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற க.பொ.த.சாதாரண, உயர்தரம், பட்டம் பெற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொள்வது கஷ்டமான ஒன்றாக அமையலாம். ஏனெனில் இம் மாணவர்களின் சுயமொழிக் கல்வி, செல்வாக்கு முதலீடுகள், போன்றன தடைகளாக அமையலாம். எனவே குறைவிருத்தியடைகின்ற இலங்கை போன்ற நாட்டுக்கு கல்வியையும், வேலைவாய்ப்பையும் பொறுத்த வரை ஒரு சமதர்ம நலன் பேணும் அரசாங்கமே துண்டுகோலாக அமையும்.

Page 78
மலையக நாட்
“கிராமியப் பாடல்களை இயற்றியோர் மிகக் கடினமான வாழ்க்கை நடத்தினர். அவர்கள் வருந்திச் செய்த வெறுப்பூட்டுகிற மட்டு மீறிய உழைப்புக்குக் கூட அர்த்தம் எதுவும் இல்லாத வகையில் மேலிருந்தோரால் ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டனர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் எத்தகைய உரிமையோ பாதுகாப்போ அற்றவராய் அல்லலுற்றனர். அவ்வாறிருந்தும் அம்மக்கள் உருவாக்கிய கிராமியப் பாடல்களில் சேர்வு வாதமோ துன்ப இயற்கைக் கோட்பாடுகளே எள்ளளவும் தலை காட்டுவதில்லை. அதுமட்டுமன்று ஒட்டு மொத்தமாக நோக்கும்பொழுது அம்மக்களிடையே தமது நித்தியத்துவத்தைப் பற்றிய உணர்வும் இறுதியில் தமது எதிர்சக்திகள் வெல்லப்படும் என்ற மன உறுதியும் ஆழமாகப் பதிந்திருக்கக் காணலாம்"
பேராசிரியர் க.கைலாசபதியின் இக்கூற்று மலையக நாட்டாரியலிலும் முழுமையாக தரிசிக்க (yPLQUILD.
நாட்டாரியல், சமூகவியலைச் சார்ந்த மானுடவியலோடு தொடர்புள்ளது. மலையக மக்களின் நாட்டுப்பாடல்கள், அவர்களின் வழிபாட்டுமுறைகள், கூத்துக்கள், நாட்டர் கதைகள், பழமொழிகள், பேச்சுவழக்கு சொற்கள் என்பவற்றில் மலையக மக்களின் வாழ்வியல் கூறுகளையும், மொழியியல் அம்சங்களையும் பண்பாட்டு அம்சங்களையும் காணலாம்,
மலையக மக்களின் நாட்டாரியல் பண்புகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 01. இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கையில் வந்து குடியேறிய மக்கள் வெறும் "எலும்புகளுடனும் சதைகளுடனும் மட்டும் வரவில்லை. அனுபவங்கள், உணர்வுகள் பண்பாட்டுப் பாரம்பரியங்கள் என்பவற்றையும் தங்களோடு எடுத்தே வந்தனர்.
ஆகவே தமிழகத்தின் நாட்டாரியல் பண்புகளை
அவ்வாறே பேணுகின்ற மரபு - இவ்வகைக்குள் அடக்கலாம்.

ாரியற் பண்புகள்
-வ.செல்வராஜா
பாரம்பரிய கூத்துக்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், தாலாட்டு, ஒப்பாரி என்பவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.
02. புதியதொரு பொருளாதார அமைப்பில், புதியதொரு வாழ்க்கையை - உற்பத்தி முறையை உடைய பெருந்தோட்டத்துறையில் மலையக மக்களுக்கு ஏற்பட்ட புதிய அனுபவங்கள் உணர்வுகள் என்பவற்றிற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அல்லது உருவாகிய நாட்டாரியல் பண்புகளை இவ் வகையில் அடக்கலாம்.
தனித்துவமிக்க மலையக வாழ்வைப் பிரதிபலிக்கும் நாட்டார் பாடல்கள், வழிபாட்டுமுறைகள், சடங்கு முறைகள், மொழியியல் அம்சங்கள், பழமொழிகள் என்பவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.
இக்கட்டுரை பின்வரும் விடயங்களை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்துகின்றது. 01. மலையக மக்களின் வருக்ை தொடர்பான ஆய்வாளர்களின் கருத்துக்களும் , நாட்டாரியலின் வெளிப்பாடுகளும், 02. மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களும்
பண்பாட்டு அம்சங்களும், 03. பல்லினச் சூழலில் - நாட்டாரியற் பண்புகளின்
வெளிப்பாடுகள் 04, மலையக மக்களின் வழிபாட்டு முறைகள்
இதில் பழமொழிகள், நாட்டார் கதைகள், மொழியியற் கூறுகள், கூத்துக்கள் என்பன தவிர்த்து. மலையக மக்களின் நாட்டுப் பாடல்கள் சடங்கு முறைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆய்வு செய்யப்படுகின்றது.
தென்னிந்தியாவில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், கோயம்புத்துார், ஆர்க்காடு, செங்கல்பட்டு, க்கோட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து இலங்கையின் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த மாவட்டங்களுக்கு மலையக மக்கள் குடியேற்றப்பட்டனர்.
புது வசக்கம் 75

Page 79
“இந்தியா வறுமைமிக்க ஒருநாடு. இந்தியாவில் பிரித்தானியா ஆட்சியின் விளைவாக உழைப்பைத் தவிர வேறு எதனையும் விற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை உருவாக்கியது. இதனால் இந்தியாவானது ஆபிரிக்கக் கண்டத்துக்கு அடுத்ததாக பாரிய அளவில் தொழிலாளர்களை சந்தைப்படுத்தும் நாடாகப் பரிணமித்தது" என 19ம் நூற்றாண்டு இந்தியாவின் நிலை தொடர்பாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிப்பர்.
இந்நிலையில் இலங்கையில் கோப்பிப் பயச செய்கைக்கான தொழிலாளர் தேவையை தென்னிந்திய தமிழ்த் தொழிலாளர்களைக் கொண்டு நிறைவேற்ற பிரிட்டிஷார் எண்ணினர். ஆரம்பத்தில்
ஆனால், அதற்கு அதிகச் செலவாகும் என்ற காரணத்தினால் அம்முயற்சி கைவிடப்பட்டது. தென்னிந்தியா இலங்கைக்கு அருகில் இருந்தபடியால் அதிகச் செலவின்றி தமிழர்களைக் கொண்டு வர முடிந்தது. அத்தோடு இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தமையால் இதனை சுலபமாகச் செய்யக் கூடியதாகவும் இருந்தது.
"இந்தியாவில் அப்போது கடும் பஞ்சமும் வரட்சியும் நிலவியதால் அங்கிருந்து மக்களை ஆசை வர்த்தைகள் கூறி அழைத்து வரக் கூடியதாக
“தேயிலைக்கடியில் தேங்காயும் மாசியும் இருக்குதென்று”என்று மலையக மக்கள் தாங்கள் ஏமாற்றப் பட்ட கதைகளைக் கூறும் போது, பேச்சுவழக்கில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
19ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் வரட்சி பற்றி ஆய்வாளர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்.
”சென்னை மாகாணத்தில் 1880 - 1890 ஆண்டு காலப்பகுதியைத் தவிர்ந்த ஏனைய எல்லா தசாப்தங்களிலும் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடியது. 1799 - 1834 வரை பலமுறை கடுமையான பஞ்சங்கள் ஏற்பட்டன. 1804 - 1807, 1811 1813, 1824 காலப்பகுதியிலும் கடுமையான வரட்சி ஏற்பட்டது. 1833 - 1834 காலகட்டத்தில் குண்டுள் பகுதியில் 30 - 50% மானோர் பஞ்சத்தில் இறந்தனர் எனவும் 1876 - 1878 காலப்பகுதியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 இலட்சம் பேர் மடிந்தனர்” எனவும்

சில மாவட்டங்களில் செயற்கையான முறையிலும் அடிக்கடி பஞ்சம் ஏற்படுத்தப்பட்டது. நிலவரி, கிஸ்திமுறை என்பன மக்களை கடன் காரர்களாகவும் தண்டனைக்கு உள்ளாகுபவர்களாகவும் ஆக்கியது. இத்தொல்லையிலிருந்து மீள்வதற்கு ஒரு மாற்று வழியாக இலங்கைக்குத் தப்பி ஓடுவதை அவர்கள் கருதினர்.(நிலவரி - விளைவில் 1/2 பங்கு)
1834 இல் பிரித்தானியாவில் அடிமைமுறை நீக்கப்பட்டமையினால் நீக்ரோக்களைக் கொண்டு வரமுடியவில்லை. மேலும் இந்தியாவின் பாரம்பரிய பொருளாதாரமுறை சிதைவடைந்தமை, பிரித்தானியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாடுகளில் உருவாக்கப்பட்ட தொழில் வாய்ப்புக்கள் என்பனவும் இந்தியத் தமிழர் இலங்கையில் குடியேற்றப்பட்டமைக்கு காரணங்களாகக் கூறலாம்.
கைத்தொழில் புரட்சியின் விளைவாக இந்தியா, பொருள் உற்பத்தி செய்யும் நாடு என்ற நிலை மாறி மூலப்பொருட்களை விநியோகித்து முடிவுப் பொருட்களை வாங்கும் சந்தையாக மாறியது. 1720இல் பருத்தி - பட்டு இறக்குமதி தடைசெய்யப்பட்டது. நிலவுடைமையாளர் நிலங்களை விற்பதற்கான சட்டங்கள் மாற்றி இலகுபடுத்தப்பட்டது. நிலவுடைமையாளர் நிலங்களை விற்றனர். கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் நிலங்களை இழந்தனர்.
மேலும், இந்திய சமுதாய அமைப்பில்
சாதிமுறை வகித்த இடம் சாதி அடக்குமுறையும் மக்கள் புலம்பெயரக் காரணமாயின.
"இந்தியர்களும் தமது சொந்த கிராமங்களில் நிலங்களை உழுது பயிரிட்டு வாழவே விரும்பினர். ஆயினும் கிராமிய வாழ்வு சீகேடு அடைந்தபோது அவர்கள் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்ல விரும்பினர். நிலபிரபுக்களின் கொடுங்கோண்மையினாலும் பாதகமான காலநிலையாலும் பொருளாதார உறுதியின்மையினாலும் பாதிக்கப்பட்டு குடிபெயர்ந்தவர்கள் சமூக அமைப்பின் கீழ் நிலையிலிருந்தவர் களேயாவர். இவர்கள் குடிபெயர்வதற்கு இலங்கையில் கிடைக்கப் பெற்ற வேலை வாய்ப்புகளே காரணம் என்று கூறுவதைவிட, இந்தியாவிலிருந்து அவர்கள் தள்ளிவிடப்பட்டவர்" ബങ്ങി.
அத்தோடு பெருந்தோட்ட விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பினை வழங்க இந்நாடுகளில் வாழ்ந்த

Page 80
உள்ளுர் மக்கள் ஆயத்தமாக இருக்கவில்லை. கூலிகுறைவு, விதேசிகள் என்ற உணர்வு, மக்கள் தொகை குறைவு, பாரம்பரிய தொழிலைவிட தயாராக இருக்கவில்லை என்பன போன்றன 35TJ600T15.356 FITE6) TLD.
இந்தப் பின்னணியில் மலையக மக்களின் வரலாற்றுப் பதிவுகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும், பண்பாட்டும் பாரம்பரியங்களையும் இம் மக்கள் பதிவுகளாக்கியுள்ளனர்.
தமிழகத்தின் பண்புகளையும், மலையகத் துக்கே உரித்தான பண்புகளையும் இப்பதிவுகளில் அடையாளம் காணலாம்.
மலையக மக்களின் வருகைக்குரிய LT605560)u SBGL366T 96i56i (A History of the upcountry Tamil people) 'LDJ600T6)lg't LJT605 61601 is குறிப்பிட்டுள்ளார். மலையக மக்கள் மத்தியில் நிலவும் மரபுவழிக் கதைகளிலும் இவ்வுண்மையைக்
85 T6006)ITL.D.
தலைமன்னாரிலிருந்து கண்டிக்குச் செல்வது வரையிலான காட்டுப்பாதையில் - வரும்வழியில் சுகவீனம் உற்றவர்களை ஒரு மரத்தடியில் சிரட்டையில் தண்ணிரும் கட்டுச்சோறில் ஒரு பகுதியையும் வைத்து விட்டு வந்து விடுவார்களாம். அவர்கள் உயிருடன் போராடி இறுதியில் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை. பின்னால் வருபவர்கள் - இறந்து போனவர்களின் எலும்புத்துண்டுகளையே வழிக்கான அடையாளமாகக் கொண்டு நடந்து வருவார்களாம்.
“சுக்கு புக்கு நீலகிரி தொப்பித் தோட்டம் நாங்க போற கப்பலில் சனம் கூட்டம்”
(“சுக்கு சுக்கு நீலகிரி தொப்பித் தோட்டம் நாங்க போற கப்பலில் மிச்சங் கூட்டம்"
எனவும் பாடப்படுகிறது)
எனவே, இவர்கள் வந்த கப்பலில் சனம் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர் என்பதோடு, வாந்திபேதிபோன்ற நோயில் பாதிக்கப்பட்டு இறப்பவர்களை கடலில் தூக்கி எறிந்து விட்டும் வந்துள்ளனர் எனவும் அறியக் கூடியதாக உள்ளது.
வறுமை, வரட்சி என்பவற்றினதும் பண்ணையாளர்களினது அடக்குமுறை, சாதிக் கொடுமைகளால் இம் மக்கள் புலம் பெயர்ந்திருந்தாலும் பிழைப்புத் தேடி வந்த ஓர்

இடமாகத்தான் இவர்கள் கண்டியை (இலங்கையைப்) பார்த்தார்கள். அதாவது தாயக நினைவிலிருந்து விடுபடாதவர்களாக, மீண்டும் தாயகம் நோக்கி சென்றுவிட வேண்டும் என்ற விருப்புடனே வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குப் பல நாட்டார் பாடல்கள் ஆவணமாகின்றன.
"ஆளுக் கட்டும் நம்ம சீமை அரிசி போடும் நம்ம சீமை சோறு போடும் கண்டிச் சீமை சொந்த மினு எண்ணாதீங்க."
புலம் பெயர்ந்து செல்லும் அனைத்து மக்களும் தங்களது தாயக நினைவுகளை மறப்பதில்லை.
ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே பெத்த தாயே நாமறந்தேன்.
"பாதையிலே வீடிருக்க பழனிச் சம்பா சோறிருக்க எருமே தயிரிருக்க ஏனடி வந்தே கண்டிச் சீமை”
என்ற வரிகள் தாயக நினைவுகளை மட்டுமல்ல தாயகத்தில் தாம் வாழ்ந்த வாழ்க்கையையும் அந்த மண்ணோடு தமக்கிருந்த பிடிப்பினையும் கோடிட்டுக் காட்டுகிறது.
வெறும் வறுமைமட்டுமல்ல வேறு பல காரணிகளும் புலம் பெயர்வதற்கு காரணமாகலாம் என்பதையும் 'தொனியாகக் கொண்டுள்ளது இப்பாடல்.
மலையகத்தில் தமது வாழ்நிலையையும் தாம் அடக்கப்பட்டமையும் அந்நிய மண்ணில் தமது வாழ்க்கைப் போராட்டங்களையும் நாட்டார் பாடல்கள் பதிவுபடுத்தியுள்ளன.
“கண்டி கண்டி எங்காதீங்க கண்டி பேச்சு பேசாதீங்க கண்டி படும் சீரழிவே கண்ட பேரு சொல்லு வாங்க”
“கண்டி கண்டி எங்காதிங்க கண்டி பேச்சு பேசாதிங்க
சாதி கெட்ட கண்டியிலே
சக்கிலியன், கங்காணி"
புது வசந்தம் 77

Page 81
”அட்டே கடியும்
கட்டே எடறுவதும் காணலாம் கண்டிலே"
என்ற பாடல் அடிகள் கண்டிச்சீமையினை அந்நியமாக பார்க்கும் தன்மை வெளிப்படுகின்றன. தங்களது உழைப்பை விற்ற இம்மக்கள் கூட்டம் உழைப்பைமட்டுமல்ல தங்களது உயிர்களை இந்தமண்ணுக்காக இழந்த நிலையினையும் நாட்டார் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
கோப்பிக் கன்னு போட்ட மலை அண்ணனைத் தோத்த மலை அந்தா தெரியுதடி"
இட்பாடல் வரிகளை விபரிக்கும் போது, நாட்டார் பாடல்களில் ஈடுபாடு மிக்க சி.வி
வேலுப்பிள்ளை
“காடுகளை அழித்து புதிய மலைகளை உருவாக்கும் போது, சாவு என்பது சர்வ சகஜமானது. மலையகத்தின் ஒவ்வொரு மலைகளும் நிச்சயம் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தத்தக்க யாரோ ஒரு தங்கையின் அண்ணனைத் தோத்த மலைகளாகத் தானிருக்கும். மலையகத்தின் மலைகளின் மீது உங்களுக்கு ஏறிடச் சந்தர்ப்பம் வாய்த்தால் உங்கள் காலடிகளைக் கவனமாக எடுத்து வையுங்கள் ஏனெனில் அவை அண்ணனைத் தோத்த மலைகள்.”
எனக் கூறுவது - இழப்புகளை வேதனையோடு உணர்த்துகின் மலையக மக்கள் - பெருந்தோட்டத்துறை
நிர்வாகத்தினால் சுரண்டப்பட்டாலும் - அவர்களோடு நேரடித் தொடர்பு கொண்ட, கங்காணி, கணக்கப்பிள்ளை, தோட்ட நிர்வாகி, பெரிய கங்காணி அவர்களோடு முரண்டுபடுகின்ற அம்சங்களையே அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
வாழ்க்கையின் நேரடி அனுபவங்களே இங்கு பாடல்களாக வெளிப்படுகின்றன.
“கங்காணி காட்டு மேலே கண்டக்கையா ரோட்டு மேலே பொடியன் பழமெடுக்க
(ot JT66).T A. (3b
"காலையிலே நெரெ புடிச்சு காட்டுத் தொங்க போய் முடிச்சு
(78 புது சைத்தம்
 
 

கூட நெறயலயே - இந்தக் கூனட்பய தோட்டத்திலே"
"அந்தன தோட்டமினு ஆசையா தானிந்தேன் ஒர மூட்டத் தூக்கச் சொல்லி ஒதைக்கிறாரே கண்டாக்கையா"
“கல்லாறு தோட்டத்திே கண்டக்கையா பொல்லாதவன் மொட்டே புடுங்குதின்னு மூனாளு விரட்டி விட்டான்."
“ஓடி நெரெ புடிச்சு ஒரு கூடே கொழுந்தெடுக்க பாவி கணக்குப் புள்ளே பத்து ராத்த போடுறானே"
"எண்ணிக் குழி வெட்டி இடுப்பொடிஞ்சி நிக்கயிலே வெட்டு வெட்டு எங்கிறானே வேலை யத்த கங்காணி”
"தோட்டம் பிரளியில்லே தொரே மேலே குத்தமில்லே கங்காணி மாராளே கன பிரளி யாகுதையா."
இவ்வாறு தமது தொழில் சார்ந்த 6)jTübä ம் அதில் 6iLGBt பிரச்சினைகளையும் இப்பாடல்கள் தொட்டுக்
பல்லினச் சூழலிலே, மலையக நாட்டார் வழக்கியல் இனப்புரிந்துணர்வை வெளிப்படுத்தியுள்ளமை இங்கு கவனத் குரியது.
Karieris! 廖兖
முதலில் நாட்டார் பாடல்களை எடுத்து நோக்குவோம்.
சிங்கள தமிழ் தொழிலாளர்களிடையே "காதல் ஏற்பட்டமைக்கான பதிவுகள் நாட்டார் பாடல்களிலே காணப்படுகின்றன.
தாழ் நிலை, இடைநிலை பெருந் - தோட்டங்களில் சிங்கள - தமிழ்த் தொழிலாள்கள்
அதிகம். இவர்களிடையே இன, மொழி, மத, சாதி பேதங்களுக்கு அப்பால் தொழிலாள்கள் என்ற உணர்வின் மேலோங்கல் இக் காதல் மலர்வதற்கு காரணமாகலாம்.

Page 82
“சிங்களக்குட்டி அடி செவத்தக்குட்டி ரன்மெனிக்கே ஒன்னாலே என் உசிரு என் தங்க ரத்தினமே வீணாகப் போகுதடி என் தங்க ரத்தினமே"
இன முரண்பாடுகளுக் J6) peiti காதலுக்கு ஆவணமாகின்றது, இப்பாடல்,
årf ப் பெண்ணோடு மட்டுமல்ல - 6 பெண்ணோடு இக்காதல் மலர்ந்த கதைக்கு இன்னுமொரு பாடல் சாட்சி கூறும்
"நானூறு ஆளுக்குள்ள நடுவே நிற்கும் துலக்கக் குட்டி விரல்கள் பத்தும் தேயிலையில் விழிக ரெண்டும் எம்மேலே".
இனப் புரிந்துணர்வை இப்பாடல்கள் வெளிப்படுத்தியபோதிலும், இன முரண்பாடுகளை வெளிப்படுத்தும் பாடல்களும், மலையக நாட்டார் பாடல்களில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வின முரண்பாடுகளுக்கு நிர்வாக ரீதியாக உயர்பதவிகளுக்கு சிங்களவர்கள் நியமிக்கப்பட்டமை ஒரு காரணமாகலாம். பிரித்தானிய நிர்வாகத்தில் பிரித்தாளும் தந்திரம் மிக முக்கிய இடத்தைப் பெற்றது என்பது சகலரும் அறிந்ததே. எனவே பெருந்தோட்டத்துறையில் நிர்வாகிகளாக யாழ்ப்பாணத்துத் தமிழர்களையும் சிங்களவர்களையும் நியமித்ததோடு சாதி அடிப்படையில் மலையகத் தமிழர்களுள் உயர் சாதியினர் எனக் கருதப்படுபவர்களை - கங்காணி போன்ற நிர்வாகப் பதவிகளில் அமர்த்தினர். அது மட்டும் அல்லாமல் சாதி ரீதியான குடியமர்வு களையும் ஏற்படுத்தினர். எனவே, வர்க்க ரீதியான முரண்பாடுகளின் கூர்மையை தவிர்க்கு முகமாக இன, மத, சாதி முரண்பாடுகள் வலிமை பெறவழிவகுத்தனர்.
தோட்டங்கள் தேசிய உடமையாக்கட்பட்டபின் பெரும்பாலும் சிங்களவர்களை உயர் பதவிகளில் அமர்த்தியமையும் வர்க்க முரண்பாடுகளை விட இன முரண்பாடுகள் கூர்மை அடைவதற்கு வழி வகுத்தன என்பதையும் உறுதியாகக் கூறலாம்.
தமிழ்த் தொழிலாளர்கள் சிங்களவர்கள் மீது கசப்புணர்வு இருந்தமைக்கு நாட்டார் பாடல்கள் சான்று பகர்கின்றன.
"அப்பு குசினி மேட்டி ஆயம்மா சிங்களத்தி

வாங்கோழி ரெண்ட காணோம் வாங்க மச்சான் தேடிப் போகலாம்"
“சிங்களவா சிங்களவா தவறான சிங்களவா நாலு பணத்துக்கு நீ கொடுத்த சாராயம் SAST LDL kżGEb5 அல்லோல கல்லோல” என்ற பாடல்களோடு
"ஆட்பத்தே சுட்டு & அது நடுவ மருந்த வச்சு
கோப்பிக் குடிக்கச் சொல்லி கொல்லுறாளே சிங்களத்தி"
(3LT63 UTL6 * ம்வியல்
சூழல் இன முரண்பாடுகளுக்கும் களம்
அமைந்ததாக காணப்படுவதை நாட்டார் பாடல்கள்
ஆவணங்களாகின்றன. நாட்டார் வழக்காற்றியலில்
- மதசார்பான சடங்குகள் வழிபாட்டு அம்சங்கள்
befullä to G கின்றன.
த்தின் "தெய்வ வழிபாட்டை 3
01. (56 du LD L 6.5uTG
குடும்ப மட்ட வழிபாட்டில் இருவித தன்மைகளைக் காணலாம். ஒன்று பொதுவாக இந்துக்கள் Nபடும் மரபுரீதியான தெய்வங் வணங்குதல், இரண்டாவது, இறந்தவர்களை வணங்குதல்,
குலமட்ட வழிபாடு என்பது சாதி, கோத்திரம் *றிற்கு ஏற்ப ட்டத் தெய்வங்
6爾_襄磷發籌
அவற்றின் வழிபாடுகளும் அமைகின்றன.
ரெட்டியாட்டி, வரதம்மா, அங்காயம்மா, பேச்சியம்மா, பெரியண்ணன், மதுரைனிரன், மாயாமி, முனியாண்டி, சங்கிலி கறுப்பன், காளி, கறுப்புத் தெய்வம், வல்லடியான், காட்டுமுனி, வால்ராசா, மாயாண்டி, கருப்பண்ணன் சாமி, வீரமாகாளி, பத்திரகாளி, சுடலை மாடன், உத்திரகாளி என்பன குலமட்ட வழிபாட்டுத் தெய்வங்களாக அடையாளம்
காணப்பட்டுள்ளன.
பொதுவாக இவ்வழிபாடு சாதியினை
வசந்தம் 79

Page 83
பெரும்பாலும் மரக்கறி பயிர் பண்ணப்படும் தோட்டங்கள் அல்லது சேனைகளாகவே இருக்கும்
தோட்ட மக்கள் இணைந்து குழுநிலையில் வழிபடுவதை இரு வகைப்படுத்தலாம். 01. தொழிலோடு நேரடித் தொடர்புள்ள தெய்வ
வழிபாடு. இதில் ரோதைமுனி, தி கம்பிமுனி, கவ்வாத்துமுனி
கொழுந்துசாமி, மட்டத்துச்சாமி.
02. தொழிலோடு நேரடித் தொடர்பில்லாத
இந்துமத மரபிற்குரிய தெய்வ வழிபாடு.
இதில் ஈரவலய மலையகப் பகுதிகளில் மாரியம்மனும், உலர்வலய மலையகப் பகுதிகளில் முருகனும் வழிபாட்டுத் தெய்வமாக வணங்குகின்றனர்.
பொதுவாகக் குடும்ப மட்ட, குலமட்ட, தொழிற்சார் வழிபாடுகளில் பெரும்பாலும் உயிர்பலிகளுடன் வழிபாடு இடம் பெறும்.
வீட்டுக்கு வெளியில் நடக்கும் வழிபாடுகளில் சிறப்பாக உயிர்ப்பலியுடன் கூடிய வழிபாடுகளில் பெண்கள் கலந்து கொள்வதில்லை. இவற்றில்
60L s - E கொண்டு செல்வதில்லை.
மலையக மக்களின் வாழ்வியலோடு இணைந்த மதவழிபாடுகள், சடங்குகள், பாரம்பரிய நிகழ்வுகள் போன்ற நாட்டாரியலிலும் இன உணர்வுகள் உறவுகள் தொடர்பான வெளிப்பாடுகளை அடையாளம் காணலாம்.
தொழிலோடு தொடர்பான கவ்வாத்துசாமி, ரோதைமுனி, கொழுந்துசாமி, மட்டத்துசாமி, தவறனை முனி, கம்பிமுனி, தன்னைமுனி போன்ற தெய்வ வழிபாடுகள் மலையக மக்கள் மத்தியில் மேற்ககொள்ளப்படுகின்றன.
கவ்வாத்து வேலையின்போது கைகால்கள் வெட்டுப்படாமல் இருப்பதற்காகவும், தேயிலை நன்றாக வளர வேண்டும் என்பதற்காகவும், கவ்வாத்து மலையில் சண்டைகள் ஏற்படாதிருக்க வேண்டும் என்பதற்காகவும் கவ் வாத்து சாமியினை தொழிலாள்கள் வழிபடுகின்றார்கள்.
தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்யும்போது it சக்கரத் a I A (C விடக்கூடாது என்பதற்காக "ரோதைமுனியை
வணங்குகிறார்கள்.
 
 
 
 

இதனைப் போலவே தொழிலோடு தொடர்புடைய அனைத்து தெய்வங்களையும் இத்
இத் தொழிற்சர் தெய் பாட்டில் இந்து தொழிலாளர்களும் பெளத்த தொழிலாளர். களும் மிகுந்த நம்பிக்கையுடன் எவ்வித வேறுபாடுமின்றி ஈடுபடுகிறார்கள். ஆனால் இஸ்லாம் கிறிஸ்தவ தொழிலாளர்கள் இதில் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை. ஏனைய தெய்வ வழிபாடுகளிலும் இதே தன்மையை நாம் அவதானிக்கலாம்.
காளி வழிபாடு பெளத்தர்கள் மத்தியிலும் அதிக செல்வாக்குக்கு உட்பட்டுள்ளது. மிகவும் பயபக்தியுடன் காளியை வணங்குகிறார்கள். பெளத்தர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ள பத்தினி வழிபாடு இதற்கு காரணமாகலாம்.
தோட்டங்களில் இடம் பெறும் பொது நிகழ்வுகளான திருவிழா, பஜனை, காமன்கூத்து, கார்த்திகைப் பெருநாள் போன்ற நிகழ்வுகளிலும் பெளத்தர்கள் மிகுந்த அக்கறையுடன் பங்கு
கோயில் நிர்வாகக் குழுவிலும், பஜனைக் குழுவிலும், பெளத்தர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் இடம் பெற்றுள் r. மேலும் காமன்கூத்து போன்ற கூத்துகளிலும் முக்கிய பாத்திரமேற்று ஆடியுள்ளார்கள் இறைவழிபாடுகளில்
நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் விபூதி மந்திரித்தல், கோடங்கி அடித்தல் போன்ற விடயங்களிலும் பெளத்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கலாநிதி கேடியூடர் சில்வா, தனது ஆய்வுக் கட்டுரையின் (யாத்திரை) அடிக்குறிப்பில் பின்வருமாறு கூறுகின்றார்.
"1977ம் ஆண்டு நிகழ்ச்சிகளின் பின்னர் வெலிவிட்ட கிராமத்தில் இடம் பெற்ற அகால மரணங்களும் இயற்கை அழிவுகளும் மேற்கூறிய 6 Frg5 வரங்களின் போது கிராமவாசிகளின் தாக்குதலுக்கு உட்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் சாபங்களின் விளைவாகவே ஏற்பட்டனவென பெரும்பாலான கிராமவாசிகள் கருதினர்.”

Page 84
குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தினால் தண்டிக்கட் படாவிட்டாலும் தெய்வம் அவர்களைத் தண்டித்துவிட்டது என்ற கருத்தினை சிங்கள கிராமவாசிகள் ஓரளவு ஏற்றுக்கொண்டனர்.”
இக்கூற்று எர் Gliagh dfiri s: A இந்து தெய்வங்கள் தொடர்பான அதீத பக்தியினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனைத் தெளிவு.
இந்து ஆலயங்களில் பெளத்தர்கள் ஈடுபாடு கொண்டுள்ளமையை ஏ.இராமகிருஷ்ணன் தனது
“இக்கோயிலுக்கு ஏனைய மதங்களைச் சேர்ந்தோரும் வந்து வழிபடுவதைக் காணலாம் உதாரணமாக கேகாலை கதிர்வேலாயுத சுவாமி கோயில், கண்டி செல்வவிநாயகர் கோயில், மாத்தளை முத்துமாரியம்மன்
பெளத்தர்களின் வருகையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவற்றில் சில தலங்களில் கோயிலுக்கென்று பாவனைப் பொருட்கள் ‘உபயம்’ என்ற பெயரில் பெளத்தர்களால் வழங்கப்பட்டுள்ளன. இத் தலங்களில் நடைபெறும் தேர்த்திருவிழாக் களில் காவடி, கரகாட்டம், தீ மிதிப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கூட இவர்கள் பங்கெடுத்துக்
எனவே, இந்து ஆலயங்கள் பெளத்தர்களின் வழிபாட்டுத் தலமாகவும் காணப்படுவதை அவதானிக்கலாம்.
மறுபக்கதில் தமிழ் மக்கள் சிறப்பாக இந்துக்கள் பெளத்தத் ங்களில் எவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டு வழிபடுகிறார்கள் என்பதை அவதானிக்கலாம்.
தாழ்நில, இடைநில தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் புத்தரை வழிபடுவதைப் போல - உயர்நில தோட்ட மக்கள் அவ்வளவாக புத்தரை வழிபடுவதில்லை எனலாம்.
எஸ்.விஜயசந்திரன் தனது ஆய்வில்,
"குடும்பநிலை வழிபாட்டு முறைகளில் சில மாற்றங்களை இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே குறிப்பாகக் காணக்கூடியதாகவுள்ளது. இப்பகுதி சிங்கள மக்களது ஊடுருவல்
 
 
 
 

காரணமாக குடும்ப மட்டத்தில் வழிபடும் போக்கு - அதிகரித்து வந்துள்ளது. சில வீடுகளில் பெளத்த வழிபாட்டு முறைகளையும் கொண்டுள்ளனர். மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி பகுதிகளில் பெளத்தவழிபாட்டு அம்சங்கள் இந்து வழிபாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளதைக் காண முடிகிறது."
மேலும், அவரது ஆய்வில் - பெளத்த குருமாரை விட்டுக்கு அழைத்து வந்து சடங்குகள் செய்தல், பெளத்த கோவில்களுக்கு பெளர்ணமி தினங்களில் செல்லுதல் போன்றவற்றையும் குறிப்பிட்டுள்ளார். எனவே பெளத்த மத வழிபாடு உயர்நில தமிழ் மக்களை விட ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி வருகின்றார்கள் எனக் கூறலாம்.
ஆனால், உயர்நிலப் பகுதிகளில் - வாழும் தமிழ் மக்களால் புத்தர். இனவொடுக்கலின் குறியீடாக நோக்கும் பார்வையே அதிகமாகக் காணப்படுகின்றது. தென்னிந்தியத் தமிழர்களுள் மலையகத்தில் குடியேறியவர்களுள் 95வீதமானோர் தொழிலாளர்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களே.
LDSO60u 16586), Sétil u9u fst, Stil H__f, அம்பலக்காரர், ஆசாரி, இடையர், ஒட்டர், கம்மாள், கவுண்டர், கள்ளர், குயவர், குறும்பர், கோனார், சக்கிலியர், சாணார், செட்டி (கோமுட்டிச்செட்டி, வளையற் செட்டி) தேவர், நாடார், நாயன், நாயுடு, பள்ளர் (தேவேந்திர பள்ளர்), பறையர் (வள்ளுவப்பறையர்), பண்டாரம், பொதுகை வண்ணார், மறவர், முத்துராசா, முதலி, செட்டியார், வடுக வண்ணார், வண்ணார், வலையள், வள்ளுவர், வேளாளர் (அக்கா வீட்டில் பெண் எடுக்கும் வேளாளர், ஆறுநாட்டு வேளாளர், கொங்கு வேளாளர், கொடிக்கா வேளாளர், சோழியவேளாளர்) என்ற சாதிட்பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ன.
தமிழ்நாட்டில் வேரூன்றிய அடக்குமுறைப் பண்போடு கூடிய சாதி ஒடுக்குமுறை அல்லது அமைப்பு மலையகத்தில் இல்லை எனலாம். இதற்கான அடிப்படைக் காரணம் மலையகத்தின் தொழில் அமைப்பாகும். ஆனால் சம்பிரதாய பாரம்பரிய சடங்குமுறைகள், தெய்வ வழிபாடு போன்றவற்றிலும் மலையகத்தின் அரசியலிலும் சாதி
அமைப்பு உள்வாரியாக வேரூன்றி உள்ளது.
தோட்டங்களில் சாதி அமைப்புகள் முனைப்பாக அல்லது வெளிப்படையாகத் தோன்றாவிட்டாலும்,வாழ்வியல் முறைகளில் இவை
- புது வசந்தம் 8)

Page 85
வேரூன்றி உள்ளன. திருமண உறவுகள் சடங்கு முறைகள் என்பவற்றில் இவை அதிகமாக வெளிப்படுத்தப்படுகின்றன.
D6DD6Dulas D&56f6ör bäT LITT LJETL6ão E6E6Eu போன்றே தமிழகத்திலும் மக்கள் பாடல்களுள் எழுந்துள்ளன. பிரதேசம் வேறாக இருந்தபோதிலும் மக்களின் அநுபவம் ஒன்றாக இருக்குமாயின் அதன் கலை - இலக்கிய வெளிப்பாடுகளும் ஒன்றாகவே இருக்க முடியும்.
“ஏத்தமடி கோட்டமலை
இறக்கமடி சடையாறு
துரமடி நம் காடு
தொயந்து வாடி நாம் போவோம்”
(திருநெல்வேலி மாவட்டம்)
"ஏத்தமடி பெத்துராசி எறக்கமடி ராசாத் தோட்டம் துரமடி தொட்பித் தோட்டம் தொடந்து வாடி நடந்து போவோம்"
(10606lXLjá5Lb)
மெளனமா
கல்வயல் வே
பல்லி கேட்டது நான்வாய் திறந்தால் உன் என்ன? " என்று நான் ஒருவருக்கும் சொல்ல வால் ஆட்டிற்று நாய் ஆடும் அதற்குத் தலையாட் 676tavni) 616orate, b6tsixтиј 1D7G 615 LHirodou (76) நாக்கையும் நீட்டி முக்கையு வாலால் வீசி முதுகு துவட் (562i; துட்டாக்கி தூக்கி ஷெல் வ சுவாமி என்னிலும் இருப்பர்
 
 
 
 

66stg | J6IAD UATL,_so35606T SD-STIJGORIYLDTaF55 35TL6) Tib.
நாட்டாரியல் என்பது உழைக்கும் மக்களின் அநுபவ உணர்வுகளாகவே வெளிப்படுவது. மக்கள் உழைப்பு அவர்களது கூட்டு முயற்சி பரம்பரை கையளிப்புக்கு உட்பட்டது. எனவேதான் நாட்டாரியல், உழைக்கும் மக்களின் நேர்மையான, உண்மையான உணர்வாக உள்ளது. ஏனைய கலை இலக்கியப் படைப்புகளையும் விட, உழைக்கும் மக்கள் வாயிலாக இது வெளிப்படுவது அதன் சத்தியத்தை உணர்த்துகிறது.
"நாட்டுப் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினரின் வரலாற்றுச் சான்றுகளாக மட்டும் அமையவில்லை. அவர்களது கனவுகளின் இலட்சியக் குரலாகவும் விளங்குகின்றன." என்பார் க.கைலாசபதி
60 GA) D
1.குமாரசாமீ
நிலைமை
s
Loma 66 6ör
多
விளங்கும்
7ாத வரை
வீழ்ந்ததே!

Page 86
அது வாலை ஆட்டிக் குழைந்த படி வீட்டைச் சுற்றி வந்த போதே எனக்குத் தெரியும் இப்படி ஒரு பிரச்சினை வருமென்று. யுத்த நடவடிக்கைகளினால் சனங்கள் இடம் பெயர்ந்து போகேக்க நாயையும் கொண்டு போய் எங்க வைச்சிருக்கிறது. கட்டாக்காலி நாய்களுக்கு குறைவேயில் இட் ங்கயிருந்ே வந்து சேர்ந்ததுதான் இந்த நாய். எப்படி கல்லெறிஞ்சு கலைச்சாலும் அது வீட்டைச் சுத்தி சுத்தி வந்து கடைசியில வாசலில் கிடக்கத் தொடங்கி விட்டது. எங்கட அயலில எல்லாரும் அதை பெட்டை நாய் எனக் கூப்பிட்டு கடைசியில அதன் பெயன் பெட்டை நாய் என்பதாகவே மாறி விட்டது. அந்த மார்கழி மாதம் வரும் வரையில் அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. வீட்டில மிஞ்சிப்போன சாட்பாடுகள் எல்லாம் அதுக்குத்தான். பிறகுதான் சில பிரச்சினைகள் வரத்தொடங்கின. எங்கட நித்திரையும் அடிக்கடி குழம்பத்தொடங்கியது. வீட்டை சுற்றி ஒரே நாய்களின் ஊழையிடலும் குலைப்பும் முறைப்புமாக சில நாட்கள் போயின. வீட்டின் வெளிச் சுவர்கள் எல்லாம் ஊர் நாய்கள் காலத்துக்கும் இடமாக மாறி நாறத்தொடங்கி விட்டது. தொல்லை தாங்கேலாமல் விறகுக்கட்டையுடன் நான் ஒவ்வொரு இரவும் ரெண்டு மூண்டு தரமென எழும்பி நாய்களை கலைத்து
வேண்டி வந்தது. எல்லாம் சரி ஒரு மாதிரி அந்தப் பிரச்சினை அடங்கினது பெரிய விடுதலைமாதிரி. நிம்மதியா படுக்கத் தொடங்கினால் ஆறு மாதம் கழிஞ்சிருக்கும். இப்ப பிரச்சினை புது வடிவில் வந்து விட்டது.
காலையில நித்திரையால் எழும்பேக்கையே ஈனக் குரலில் புதிய சில சத்தங்கள் எழத்தொடங்கியதுடன் நான் விளங்கிக் கொண்டேன். பாத் துறு முக்கு பக்கத்தில் கொஞ்சம் மண்குவிச்சுக்கிடந்தது. அது மதில் கட்டியதுக்கு பறிச்ச மிச்ச மண். இந்த மணற்குவியலுக்கு பக்கத்தில சுவர் மூலையில இருந்து தான் சத்தங்கள் வந்தன. அருகே போனபோது பெட்டை நாயின் உறுமல் எழுந்தது. பிறகு என்ன நினைத்ததோ பேசாமல் கிடந்தது. நான்
 
 
 

முத்து இராதாகிருஷ்ணன்
அவதானமாகப் போய் நாய் பாய முடியாத தொலைவில் நின்று கவனித்தேன். ஆ. மொத்தம்
ஒரு குட்டி மட்டும் சாதுவாக நெத்தியில கறுப்பாக பக்கத்து விட்டு மணியண்ணையின் தடியன் நாயை நினைவு படுத்தியது. எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு புரண்டு கொண்டு கிடந்தன. ஒண்டு ரெண்டு
கொண்டு கிடந்தன.
நாய் குட்டி போட்டு விட்டது என கேட்டவுடனேயே எனது மகள் பறக்கத்தொடங்கி விட்டாள். அன்று மாலையே எனது மகளின் அயல்வீட்டு நண்பர்கள் குளம் எல்லாம் எங்கட வீட்டு கொல்லையிலதான். கிட்டட்போனால் நாய் கடிக்குமென அவர்களை நாயின் அருகில் அண்டவிடாமல் கலைக்க வேண்டிய மேலதிக வேலையும் எனக்கு ஏற்பட்டு விட்டது.
இப்போதெல்லாம் நாய் தன் பட்டில் எழுந்து உலாவத்தொடங்கிவிட்டது. குட்டிகள் வீடு வாசல் எல்லாம் திரிந்தன. மாலை என்றால் அயல் விட்டுக்கு விளையாடச் செல்லும் எனது மகள் இட்ப முழு நேரமும் வீட்டில் தான். அவளுக்கு நாய்க்
நாய் குட்டிகள் போட்டு ஒரு கிழமையாகிவிட்டது. எங்கட விட்டில தோட்ட வேலை செய்யவென்று வாற மணியம் வந்துதான் குட் டையை கிளப்பிவிட்டது. என்ன வாத்தியார் எல்லாம் பெட்டைக் குட்டிகளைப்போல கிடக்கு. என கூறியபடி குட்டிகளை ஆராயத்தொடங்கி விட்டான். நானும் அதுக்குப் பிறகுதான் குட்டி கடுவனே பெட்டையோ என்று விடைதேட முயன்றேன். கடைசியல ஒரேயொரு குட்டிதான் கடுவன் என்பது
கடுவன் குட்டிக்கு எங்கட அயலிலேயே நல்ல டிமான்ட். ஆனாலும் எப்போதாவது பென்சன் அலுவலாவாற கந்தையா மாமாதான் கையோட கடுவன் குட்டியை கிளப்பிக் கொண்டார். ஐந்து பெட்டை குட்டியையும் நான் என்ன செய்யிறது. உது வளந்தா இங்கையிருத்து கலைக்கவும் முடியாது. கொண்டு போய் எங்காவது விட்டு

Page 87
விடுங்கோ. என எனது மனைவி கூறியதை முதலில் பொருட்டாகவே எடுக்கவில்லை. ஏனெனில் அவை 3)6.5GT6 诞 i-Té5 giggift26t. எனது மகளும் அதுகளுக்கு பின்னாலேயே ஒடியாடித் திரிந்தாள் குட்டிகள் பழையதுணி, சாக்கு என அகப்பட்டவற்றை கடித்து இழுபட்டு விளையாடின.
ஆனாலும் மணியம் தான் திரும்பவும் குட்டையை குழப்பிவிட்டது. தங்கட அயல் வீட்டில ஆருக்கோ விசர் நாய் கடித்து நாய் மாதிரி குலைத்து மிக அவலமாகச்செத்துபோன கதைதான் அது. இந்தக் கதையை எங்கட வீடு பக்கத்து வீடு என எல்லாருக்கும் சொல்லி குட்டி நாய்களுக்குத் தான் இட்ப விசர் கூடுதலாக வருவதாக ஊரில் கதைப்பதாகவும் கவனமாக இருக்க வேணுமென மிகநீளமான விரிவுரையாற்றி விட்டுச் சென்றுவிட்டான். இதுக்குப் பிறகு பக்கத்து விட்டார் எங்கட குட்டிகளை பார்க்கும் போதெல்லாம் ஏதோ விசர் நாய் கூட்டத்தையே பார்ப்பது போல் பார்த்தனர். அது மட்டு மில்லாமல் சாடைமாடையாக எனக்கு கூறத்தொடங்கி விட்டனர். மாஸ்டர் குட்டிகள் முழுக்க பெட்டைக்குட்டிகள். உதுகளின்ற தாய்தாயும் ஊரெல்லாம் ஒடித்திரியுது. உதுகளை வச்சு என்ன செய்யப்போறியள். வளர முத்தி கொண்டு போய் எங்காலும் விடுங்கோ. என எதிர் வீட்டு தம்பிராசா அண்ணன் அவசரமாக ஒரு நாள் கூறினார். எனது வீட்டிலும் இதையே காலையில எழுந்ததும் எனக்கு கூறத்தொடங்கி விட்டனர். நானும் பார்ட்போம் பார்ப்போம் என ஒரு மாதிரிமூன்று கிழமை போய் விட்டது.
இந்த நாய்க் குட்டி விடயத்தால் எனக்கும் எனது மனைவிக்கும் கூட அடிக்கடி தகராறு ஏற்படத்தொடங்கிவிட்து. ஆனாலும் மகள் எனது பக்கம் தான் நிற்பாள். குட்டிகள் பாவம் என்பாள். த்து விட்டேன் குட்டிகளை அப்புறப்படுத்துவதென்று. ஆனா இப்போதுதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. எங்க கொண்டு போய் விடுவது. விட்டால் அதுகள் சாட்பாட்டிற்கு என்ன செய்யும். என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. உண்மையிலேயே நாய்ப் பிறவி கொடுமையானது. அதிலும் பெட்டை நாய் என்றால் சொல்ல வேண்டாம் என்பது எனது வீட்டைப் பார்க்க விளங்கியது.
அன்று காலை நாய்க்குட்டிகளை இன்று எங்காவது கொண்டுபோய் விட்டேயாகவேண்டும் என என் மனைவி முடிவாகச் சொல்லி விட்டாள். பாவம் குட்டிகள் சில வேளைகளில் வீட்டினுள்ளும் நுழைந்து தமது காலைக்கடன்களை சத்தமில்லாமல் முடித்துவிடும். அப்படித்தான் அன்று காலையும். நான் மாலையில் குட்டிகளை அட்புறப்படுத்துவதென
(84 புது வசந்தம் )
 
 
 

தீர்மானித்தபடி வேலைக்குச் சென்றுவிட்டேன். மாலையில் வேலையால் வீடு திரும்பிய போது குட்டிகள் பற்றி மனைவி நினைவூட்டினாள் ஒரு யூரியா உரப்பையையும் எடுத்து வைத்திருந்தாள்.
இப்ப எங்க கொண்டு போய்விடுவது. செம்மணிப்பக்கம் என்டால் துரவாய் போச்சு. இனி சுடலப்பக்கம். என மனைவியிடம் கூறினேன் கனதுரம் வேண்டாம் உதில கோண்டாவில்ட் பக்கம்
அதுகள் எங்காலும் போகட்டும். என மனைவி கூறினான். எனக்கும் அதுவே சரியென்று பட்டது. எதுக்கும் கொஞ்சம் இருட்டட்டும் எனக் காத்திருந்தேன். எனது மகள் நின்றால் குட்டிகளை கொண்டு போக விடமாட்டாள் என்பதனால் முன்னமேயே பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டாள்.
எனது மனைவி இலகுவாக குட்டிகளை பிடிக்கக்கூடியதாக பழைய அடிவிட்டுப் போன பரல் தகரம் ஒன்றிற்குள் குட்டிகளை விட்டிருந்தாள். ஒரு ஏழு மணி அளவில் நான் மெல்ல சைக்கிளை இறக்கி ஆயத்தமாக வைத்துக் கொண்டு உரப்பையை எடுத்தபடி குட்டிகளை நோக்கி த்துக்குள்ளே கையை விட்டவுடன் குட்டிகள் நான்முத்தி நீ முத்தியென துன்னி விழுந்து வெளியில் வரத்துடித்தன. ஒவ்வொன்றாகப்பிடித்து சட்டென உரப்பையில் போடத்தொடங்கினேன்.
eeg
a A w. జీ. மாதிரி நான்கு குட்டிகளை போட்டாயிற்று. ஐந்தாவது. ஏனைய குட்டிகளை #6 リ க்கொடுத்து விட்டது. அது சட்டென பிடியில் இருந்து நழுவி தகரத்துக்கு வெளியில் விழுந்து ஒடத் தொடங்கியது. நான் உரப்பையை ஒருகையில்
ஓடினேன். உரப்பையில் இருந்த குட்டிகள் புரண்டு கத்தத் தொடங்கி விட்டன. கடைசிக் குட்டி பின்புற விறாந்தையில் படிக்கட்டின் கீழ் போய் நின்று
விறாந்தைக்கு போய் படிக்கு அருகில் நின்ற குட்டியை நோக்கிப் பாய்ந்தேன்.
a x ,هور ع:
@
ருவிரல் நகம் பெயர்ந்து இரத்தம் வரலாயிற்று. றுமுனையில் நின்று தலையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு இயலாமையும் கோபமும் ஏற்பட்டு பற்கள் நறநறத்தன. இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று தீர்மானித்து கொண்டேன். உரப்பையின் வாயை கட்டி மரக்கட்டில் மேல்

Page 88
போட்டு விட்டேன். உள்ளே குட்டிகள் வெளியில் வர துடித்து பிறாண்டிக் கொண்டிருந்தன.
மெல்ல விறாந்தையில் நின்ற குட்டியை நோக்கிச் சென்றேன். அது என்னைக் கண்டவுடன் ஒடத் தொடங்கியது. நானும் விடவில்லை. வீட்டைச்சுற்றி உள்ள எல்லா விளக்குகளையும் போட்டேன். நாலாவது முறை வீட்டைச் சுற்றி ஓடும் போது தான் அந்தக் குட்டி எனது கையில் அகப்பட்டது. கழுத்துப் பிடியில் கொண்டு வந்து உரைட்டையில் போட்டுக் கொண்டு சைக்கிளை எடுத்த போது மணி எட்டைத் தாண்டிவிட்டது.
உரப்பையை முன் கான்டிலில் வைத்துக் கொண்டு கோண்டாவில்ட் பக்கமாக மிதித்தேன். இந்தக் குட்டிகளுடன் உலைந்ததில் எனது இரக்கத்தன்மை எங்கோ மறைந்து விட்டிருந்தது. உரைப்பையை பிறான்டிக் கொண்டு ஒரு குட்டியின் மூக்கு வெளியில் தெரிந்தது. ஒரு பத்து நிமிட நேர சைக்கிள் ஓட்டத்தின் பின் அந்த தோட்ட வெளி வந்தது. மறு புறத்தில் விட்டால் தான் இதுகள் இருக்கிறவீடுகள் பக்கம் போய் ஏதாவது சாட்பாட்டைப் பார்த்துக் கொள்ளும். இல்லாட்டி திரும்ப எங்கட பக்கமே வந்திடும். என்று நான் எண்ணிக் கொண்டு சந்திட்பக்கமாக உசிதமான ஒரு இடத்தைத் தேர்ந்தேன்.
சத்தம் மட்டுமே கேட்டது. துரத்தில் மோட்டார் சைக் கிள் ஒன்று வெளிச் சமாக வந்து கொண்டிருத்தது. திரும்பிப் பார்க்காமல் நான் உரப்பையை கரியரில் வைத்து விட்டு சட்டென்று சைக்கிளை திருப்பியவாறு புறப்பட்டு விட்டேன்.
அப்பாடா. ஒரு மாதிரி பெரிய ஒரு பிரச்சினை தீந்தது. என்ற நிம்மதி மனதில் எழுந்தது
போகும். என்னத்தை தின்னும். மனதில் என்னவோ உறுத்திக் கொண்டிருந்தது. சீ என்ன வாழ்க்கை என்பது போன்ற உணர்வு எழுந்தது. மனதில் எழுந்த சோர்வு உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்த சைக்கிள் LEas மெதுவாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்தது. எனது மனநிலையைப் புரிந்து கொண்ட எனது மனைவி “எத்தனையோ பிரச்சினையிருக்க இதைப்போய். யோசிச்சு மண்டையைக்குளப்பிறியள்" என்றாள்.
எனது மகளுக்கும் குட்டிகள் போனது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவள் நிலைமையை புரிந்து விட்டிருந்தாள். பிறகு நான்
 
 
 
 
 

அதை மறந்து விட்டேன். மறுநாள் பொழுதும்
பள்ளிக் கூடத்தில் ஏதோ விழாவுடன் பிசியாக
முடிந்து விட்டது. மூன்றாம் நாள் மாலையில்தான்
கோண்டாவில்ப் பக்கம் போக வேண்டிய தேவை
எழுத்த போதே குட்டிகளைப் பற்றிய எண்ணம்
is L-35l.
நான் மாலை வேளைகளில் சற்று ஓய்வாக இருக்கும் நேரத்தில் கோண்டாவில் பக்கம் சென்று எனது நண்பர் கருணாவுடன் அட்பொழுதை கழிப்பது வழக்கம். இது கொஞ்சநாட்களாக தடைப்பட்டுக் கிடந்தது. இன்று எப்படியும் ஒரு முறை போக வேண்டும் என நினைத்தேன். கருணாவுடன் எனக்கு ஏற்பட்ட நெருக்கம் அவன் ஒரு இலக்கிய ஆர்வலர் என்பதற்கு மேலாக நான் கூறுபவைகளை செவிமடுத்து கேட்கக் கூடியதாகவும் இருந்தமையே ஆகும் இருவரும் சுவாரசியமாக பல விடயங்களைய் பற்றி, சினிமா, இலக்கியம், ஒவியம், புத்தகம் என தெடுகக் கதைப்போம்.
சைக்கிள் கோண்டாவில் சந்தியை ன்மித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே எனக்கு அந்த பெட்டை குட்டிகளின் நினைட்பு எழுந்தது. இன்று மூன்றாவது நாள். அவை எங்காவது ஓடி புகலிடம் தேடியிருக்கும். அல்லது. இறந்து
அந்த நினைப்பே என்மனதைக் கசக்கியது. இல்லை சந்திக்கு அருகில் தேத்தண்ணிக்கடைகள் JLLLLLL S LLLS TMM0L LSTT TTOTLCLLL STTTTTTLTTS TLTL வாற மிச்சங்களை சாப்பிட்டு திரியும் என வேண்டாத
சைக்கிள் தோட்ட வெளியை கடந்து கொண்டிருக்கிறது. எனது மனச் சஞ்சலத்தை வெளிக்காட்டாது ஒரு சினிமாப்பாடலை விசில் செய்து கொண்டு செல்கிறேன். எனது பார்வைகள் றியாமல் வீதியின் இரு மருங்கும் தேடின.
繙魏
குட்டிகள் வீதியில் திரிவது போல எனது மனக் கண்களுக்குள் காட்சியும் விரிந்தது. வலுக்கட்டாயமாக நினைப்பை மாத்தினேன்.
வீடுகள் புலப்படலாயின. சந்தியும் அண்மித்துக் கொண்டிகர் A. ற் போஸ்ட்ற் நில் இருக்கும் வீட்டின் மதிலுடன் தானே விட்டதாக
ஞாபகம். எனது கண்கள் மேலோட்டமாக அந்த
அங்கே. அந்த ஐந்து குட்டிகளும் அந்த இடத்திலேயே ஒன்றாக ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக ஒன்றுக்குள் ஒன்று என்ற நிலையில்

Page 89
இணைந்து திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தன. அவற்றின் உடல் பசிக்களையால் நடுங்கிக் கொண்டிருந்தது. வீதியில் போகும் வரும் வாகனங்களின் இரைச்சலால் அவை பயந்து போய்க் கிடந்தன.
நான் மெல்ல சைக்கிளை ஒட்டியவாறு அவ்விடத்தை கடந்து சென்றேன். ஆனால் என் மனமும் வேகமும் அவ்விடத்துடன் நின்று விட்டன. உண்மையில் நான் தளர்வடைந்து விட்டேன். நிச்சயம் நான் இதை எதிர்பார்க்கவில்லை. மூன்று நாட்களாக நான் போட்ட இடத்திலேயே அந்தக் குட்டிகள் உணவு எதுவுமின்றி இதென்னடா. என மனம் சோர்வடைந்து விட்டது. எனக்குத் தெரியும் நான் இப்படித்தான் என்பது. எனது மனைவி கூட என் னைக் குற்றம் சொல்வது நீங்கள் தேவையில்லாத விசயத்துக்கெல்லாம் சும்மா கவலைப்பட்டுக் கொண்டு இருப்பியள் என்று. நானும் என்னை சற்று மாற்றிக் கொள்ள முயற்சி எடுத்துப் பார்ப்பதுண்டு. ஆனால் எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான்.
இப்படித்தான் ஒருமுறை எங்கட வளவில் தேங்காய்களை களவெடுத்ததாக ஒருவனைப் பிடித்தனர். நான் அவனைக் கடுமையாகப் பேசி ஒரு முடிவு எடுப்பதென கூறிக் கொண்டே அவன் இருந்த இடம் நோக்கிப் போனேன். பிறகு அவனது கதைகள். உழைப்பு. ஏதுமில்லாத் தன்மை இவற்றையெல்லாம் அவன் எனக்குக் கூறிய போது எனது நிலை தளர்ந்து மேலும் சில தேங்காய்களை அவனிடம் கொடுத்து அனுப்பியதே நடந்தது.
கருணாவை நான் சந்தித்தபோது கருணா கேட்ட முதல் கேள்வி என்ன மாஸ்டர்.ஏதும் பிரச்சினையை. எனக்கு எல்லாவற்றையும் கருணாவிடம் சட்டென ஒப்புவிக்க வேண்டும் போல் இருந்தாலும் . உடனடியாக சொல் ல விரும்பவில்லை.
சீ. அப்படி ஒன்றுமில்லை. லேசா தலையிடி என ஒப்புக்கு கூறி வைத்தேன் கொஞ்சநேரம் பலவித கதைகளையும் கதைத்து விட்டு எனது பிரச்சினையை நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்சினையாக கதைபோல கருணாவிடம் கூறினேன். குட்டிகளை மீண்டும் அதே இடத்தில் காணுவதையும் கூறி இதன் முடிவு என்னவாக இருக்கும் எனக் கேட்டபோதுதான் கருணா மெல்ல கேட்டான். நீங்கள் தானே அந்த நண்பர் என்று. மெல்ல புன்னகைத்தபடி தலையை ஆட்டினேன். கதைக்கு முடிவு சொல்ல கருணா முன்வரவில்லை.
நண்பரே. வாழுறதுக்கான உரிமை எல்லா உயிர்களுக்கும் இருக்கு. ஆனால். இந்த நாயக்குட்டிகளின்ர நிலையிலைதான் இப்ப
86 புது வசந்தம்

ஆயிரக்கணக்கான தமிழ்ப்பிள்ளையன் பெற்றோரை இழந்து அகதி முகாம்களில் ஆதரவுக்கு ஏங்கிக் கொண்டிருக்குதுகள். அதுகளுக்கே தங்கட தாய்தகப்பனோட வாழுற உரிமை தங்கட வீடுகளில் பாதுகாப்பா சுதந்திரமா வாழுற உரிமை மறுக்கப்பட்டிருக்கு.
நான் முடிவுகள் எதுவும் அற்ற நிலையில் குழம்பிய மனதுடனேயே அங்கிருந்து புறப்பட்டேன். சந்தியில் இருந்த கடைகள் கைவிளக்குகளால் வெளிச்சப்படுத்தப்பட்டிருந்தன. நேரம் எப்படியும் ஏழரை மணியாகி இருக்கும். குட்டிகளின் நினைப்பு மீண்டும் எழுந்தது. அவற்றைக் கடந்து தான் நான் மீண்டும் செல்ல வேண்டும். அந்தக் கடையில் கண்ணாடி அலுமாரியில் ஒன்றிரண்டு பாண் அடுக்கி வைப்பப்பட்டிருந்தன. சேட் பொக்கற்றைத் தடவி ஒரு பத்து ரூபாவை எடுத்தேன்.
இப்போதைக்கு இதுதான் வழி. கடையில் ஒரு றாத்தல் பாண் வாங்கிக் கொண்டேன். அதனை மூன்று துண்டுகளாக பிரித்து பையில் போட்டுக் கொண்டு சைக்கிளை மிதித்தேன்.
சந்தி கடந்து தோட்டப்பாதையில் இறங்கிவிட்டேன். பான் பையை வசதியாக மற்றக்கையில் மாற்றிக் கொண்டேன். இறங்கி நின்று குட்டிகளுக்கு உணவைக் கொடுத்தால் அயல் வீட்டுக்காரன் கண்டு நான் தான் குட்டிகளை கொண்டு வந்து விட்டுவிட்டேன் என தெரிந்து என்னிடம் ஆத்திரம் கொள்ளக் கூடும். எனவே குட்டிகள் இருக்கும் இடத்தைக் கடக்கும் போது பாண் இருக்கும் பையை எறிந்து விட்டால் சரி. அவைபிறகு என்னபாடாவது படட்டும், இதுதான் எனது இறுதி முடிவு
அந்த இடத்தை சைக்கிள் மெல்ல நெருங்கியிருந்தது. எங்கும் கும்மிருட்டு பாதை மட்டும் தான் ஓரளவு புலப்பட்டது. குட்டிகள் இருந்த மதில் ஓரளவு புலப்பட்டது. இருளுக்குள் குட்டிகள் தெரியவில்லை. நான் அந்தத் திசையில் பையை மெல்ல எறிய ஆயத்தமானேன். ஒரு வாகனம் வெளிச்சத்தைப் பரப்பியவாறு வந்து கொண்டிருந்தது. வாகனத்தில் இருப்பவர்கள் கவனிக்காமல் எறிய வேண்டும்.ஆ. அந்த. மதில். இதோ பையை எறிந்து விட்டேன். பை போய் விழும் சத்தம் கேட்டது. ஆனால் இப்போது அந்த வாகன வெளிச்சம் மதிற்பகுதியை நன்றாக புலப்பட வைத்து விட்டது.
அங்கு நான் எறிந்த பை மட்டுமே இருந்தது. அதில் இருந்த பாண் துண்டுகள் வெளியே வந்து விழுந்து கிடந்தன. ஆனால் குட்டிகளை காணவில்லை.
_女女★

Page 90
கற்பை
சராசரி மனிதர்களைவிடக் கவிஞர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்பது பலரும் அறிந்த விடயந்தான்.
கற்றறிந்தோர்களுக்கும் கவிஞர்களுக்கும் கூடக் கணிசமான அளவு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
கற்றறிந்தோரிடம் உள்ள பொறுமை கவிஞர்களிடம் இருப்பது குறைவு. கற்றோர், அறிவினால் அடங்கி வாழ்பவர். கவிஞர், உணர்வினால் பொங்கி எழுபவர்.
கற்றறிந்தவர்கள் பாடல் பாடும்போது அறக்கருத்துக்களையே அதிகம் பாடுவார்கள். அவர்கள் எதையும் அறிவுபூர்வமாகச் சிந்தித்துப் பாடுவதால் அவர்கள் அறிவுமயமானவர்களாக மாறிவிடுகிறார்கள்.
அவர்களது அறக்கருத்துக் கவிதைகளிலே உணர்வுகளின் பிரதிபலிப்புக் குறைவாகவே காணப்படும். அதனால் அவர்களது கவிதைகளில் உயிர்த்துடிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
அவர்களிடம் கவிஞர்களுக்கே உரிய சிறப்பியல்புகள் இல்லாததால் அவர்களது கவிதைகளும் சிறந்த இலக்கியமாவதில்லை.
சங்கமருவிய காலத்துச் சமணத் துறவிகளால் பாடப்பட்ட பல பாடல்கள் இக்கூற்றுக்குச் சான்றாக அமையும்,
பக்திக் கவிதைகளைப் பாடுபவர்கள் இறைபக்தியில் மூழ்கிப்போய் விடுவதால் அவர்களது கவிதைகளில் பக்தி உணர்வும் அதற்குரிய உயிர்த்துடிப்பும் இருக்கவே செய்கின்றன.
ஆனால் சமூகத்தைப் பாடும் கவிஞர்கள் எப்போதுமே உணர்ச்சியில் விளையாடுபவர்களாகவே காணப்படுகின்றனர்.
கவிதைகளின் சிறப்பே உணர்ச்சிதான் என்பர் சிலர். சில காட்சிகளைக் காணும்போது

O 905
தமிழ்மணி அகளங்கன்
கவிஞர்களுக்குத் தோன்றுகின்ற உணர்ச்சி, அக்காட்சிகளைச் சிறந்த கவிதைகளாகப் பாடச் செய்து விடுகின்றது.
தான் காணுகின்ற காட்சியில் கவிஞன் தனது கற்பனையைக் கலந்து, தனது கருத்தைப் புலப்படுத்தக்கூடிய வகையில் கவிபாடுகிறான்.
இங்கே சில காட்சிகளையும் கவிஞர்களது கற்பனைச் சிறப்புக்களையும் காண்போம்.
திருஈங்கோய்மலை எழுபது
நக்கீரதேவர் என்னும் பழந்தமிழ்ப் புலவர் இயற்றிய கவிச்சுவையும் கற்பனைச் சுவையும்
கருத்துச் சுவையும் நிரம்பிய அற்புதமான நூல் "திருஈங்கோய்மலை எழுபது" என்பது.
பன்னிரு திருமுறைகளில் பதினோராந்திருமுறையில் இந்நூல்
சேர்க்கப்பட்டுள்ளது."
திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய சங்க இலக்கிய நூல்களைப் பாடியவரும், தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்தவர் எனச் சொல்லப்படுபவருமான நக்கீரரே நக்கீரதேவர்
என்பார் சிலர்.
நக்கீரதேவர் நக்கீரருக்குப் பிந்தியார் என்றும் சங்கமருவிய காலத்தவர் என்றும் சில தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.
எது எப்படி இருந்தபோதும் இவரது கவியாற்றல், கற்பனைச் சிறப்பு என்பன இவரைப் பெரும் புலவர் வரிசையில் வைத்து எண்ணச் செய்கின்றன.
திருஈங்கோய்மலையிலே சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார். அம்மலைச் சிறப்பை இயற்கைக் காட்சிகளின் மூலம் காட்டுகிறார் புலவர்.
தாம் காணுகின்ற ஒவ்வொரு காட்சியையும் மிகவும் சிறந்த அர்த்தத்தோடு கண்டு, கற்பனை
புது வசந்தம் 87

Page 91
நயத்தைக் குழைத்துக் கவிதையாக்கி எம் உள்ளத்திற்கு இனிய உணவாக்கித் தருகிறார் L6)6.iii.
மலையடி வாரத்தில் அமைந்திருக்கும் நீர்நிலையொன்றிலே அழகான செந்நிற இதழ்கள் விரிந்து காந்தள் மலர்கள் மலர்ந்திருக்கின்றன.
அந்தக் காந்தள் மலர்கள் இதழ்கள் விரிந்து மலர்ந்திருக்கின்ற காட்சியைப் பார்த்தால் நெருப்பு எரிவது போலத் தோன்றுகிறது. அத்தனை செந்நிறமான காட்சி அது.
*கக் கார்கள் ப் பக்கத்திே மரம் ஒன்றின்மேல் இருந்த வயது முதிர்ந்த பெண் குரங்கு ஒன்று உற்று உற்றுப் பார்க்கிறது.
நெருப்பானது சுடர்விட்டுச் சுவாலித்து எரிந்து பிரகாசிப்பது போல அதன் கண்ணில் தெரிகிறதே அன்றிக் காந்தள் மலர்கள் மலர்ந்திருப்பது போலத் தெரியவில்லை.
வயது முதிர்ந்த மந்திக்குரங்கு என்பதால், மரத்திலே இருந்து பார்க்க, பள்ளத்திலே அப்படித்
காட்டுக்குள் நெருப்புப் பிடித்துவிட்டால் காடு முழுவதும் எரிந்து நாசமாகிப் போய்விடுமே என்று நினைத்திருக்கும் அந்த மந்திக் குரங்கு.
Gobbi 60)LJUD UITD600Dujud fßulug5 35 TG360 என்று எண்ணிப் பொருட்படுத்தாமல் அசட்டை செய்து
விடக் கூடாது என்பார்கள் அறிஞர்கள்.
ஆனால் இந்தக் கிழட்டு மந்திக் குரங்கிற்கு அந்த அறிவு எங்கிருந்து வந்திருக்கும். செந்நிற இதழ்கள் விரிந்து நெருக்கமாக மலர்ந்து பிரகாசிக்கும் காந்தள் மலர்களை மரத்தின் உச்சியில் இருந்து கொண்டு உற்று உற்றுப் பார்த்துத் திகைப்படைகிறது.
என்ன செய்யலாம். எப்படி இந்த தெருப்பை அணைக்கலாம் என்று நினைத்துச் செய்வதறியாது கையோடு கையைப் பிசைந்து யோசித்துக் கொண்டிருக்கிறது அந்தப் பெண் குரங்கு.
அந்த நேரத்தில் ஒரு கருவண்டு தேன் குடிப்பதற்காகப் பறந்து வந்து காந்தள் மலரிலே அமர்ந்து விட்டது.

அந்த மந்திக் குரங்குக்கு இருப்புக் கொள்ளவில்லை. "ஐயோ! பறந்து வந்த வண்டு நெருப் பென்று அறியாமல் , நெருப்பில் விழுந்துவிட்டதே. பாவம்! இறந்து கருகிச் சாம்பலாகப் போகிறதே", என்று மிகவும் கவலைப்பட்டுச் செய்வதறியாது திகைத்து, எழுந்து, எழுந்து அக்காட்சியை எட்டிப் பார்த்துப் பார்த்து, கையைப் பிசைந்து பிசைந்து, எவ்வாறு அந்த வண்டைக் காப்பாற்றலாம் என்று யோசித்துக்
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ முழகியதெனி நஞ்சிமுது மந்தி - பழகி எழந்தெழந்து கைநெரிக்கும் ஈங்கேயே திங்கள்க் கொழுந் தெழந்த செஞ்சடையான் குன்று.
(திருஈங் - 70)
ஆண்களைவிடப் பெண்களுக்கே இரக்கம் அதிகம் என்பார்கள். "பெண் என்றால் பேயும் இரங்கும்” என்ற பழமொழிக்கு, இரக்கமே இல்லாத பேய் கூட பெண்களுக்காக இரங்கும் என்று, இன்று
இக்கருத்து சரியாயின் "பேயும் பெண் என்றால் இரங்கும்” என்றுதான் பழமொழி இருந்திருக்க வேண்டும். ஆனால் பழமொழி அப்படி இல்லையே.
இப்பழமொழியின் சரியான பொருள் என்னவென்றால், இரக்கம் என்பது சிறிதளவும் இல்லாத பேய்ச் த்தில் கூட, பெண் பேய்க் இரக்கம் இருக்கும் என்பதேயாகும்.
பெண் க்கு இயல்பாக இரக்க சுபாவத்தை வெளிப்படுத்தவே இந்த பழமொழி உண்டாயிற்று. இப்பொழுதுள்ள சில பெண்களை ஆதாரமாக்கி இப்பழமொழியின் பொருளையே மாற்றிவிட்டார்கள் போலும்,
இப்பாடலில் குரங்கை மந்திக் குரங்காகவும், அது வயது முதிர்ந்த மந்திக் குரங்கு எனவும், புலவர் காட்டிய நயம் ரசிக்கவும் மகிழவும் தக்கதே.
வயது முதிர்ந்த குரங்கு என்பதால் அக் குரங்கால் இரக்கப்பட முடியுமே அன்றி நெருப்பை அணைக்க முடியாது, என்பதையும் பெண் குரங்கு அதிலும் வயது முதிர்ந்த குரங்கு பெண் குரங்கு என்பதால் இரக்க மிகுதியையும் எடுத்துக் காட்டிய நயம் ரசிக்க வைக்கிறது.

Page 92
இன்னொரு உயிரினத்தின் துன்பத்தைக் கண்டு. அத்துன்பத்தைப் போக்க முடியாது போனால், தானும் அத்துன்பத்தை அனுபவிக்கின்ற உயர்ந்த மனோபாவம் அந்த முது மந்திக் குரங்கிடம் இருந்தது.
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வள்ளலாரின் இரக்க உணர்ச்சிக்கு திருஈங்கோய் மலையில் வாழ்ந்த அந்த முது மந்தியின் இரக்க உணர்ச்சி சற்றும் குறைந்ததல்ல என்று கூறலாம் போல் தெரிகிறது.
தம்மோடு சம்பந்தமில்லாத விலங்கினமே அல்லாத பறவையினத்து வண்டு, நெருப்பிலே விழுந்து விட்டதே என்று பரிதாபப்பட்டுனிற்கும் அந்த முது மந்தியின் உணர்வு பல மனிதர்களிடம் இல்லாமல் போய் விட்டதே. மனிதன் மனிதனுக்காக இரங்குவதுகூடக் குறைந்து விட்டதே.
முத்தொள்ளாயிரம்:
முத்தொள்ளாயிரம் என்ற பழந்தமிழ்
க்கியத்திலே ஒரு காட்சியைக் காண்போம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட மூன்று தொளாயிரம் பாடல்கள், அதாவது இரண்டாயிரத்தி எழுநூறு பாடல்கள் கொண்டதே முத்தொளாயிரம் என்னும் தொகுப்பு நூல் என்பர் சிலர்.
இம் மூவேந்தர்களைப் பற்றியும் பாடப்பட்ட தொளாயிரம் பாடல்களின் தொகுப் பே முத்தொளாயிரம் என்பர் வேறு சிலர்.
ஆனால் இப்பொழுது கிடைத் து தொகுக்கப்பட்டுள்ள பாடல்களின் தொகையோ நுாற்று முப்பது மட்டுமே. ஏனையவை கால
கிடைத்துள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பில்லாத முத்துக்களே. இப்பாடல்களை ஒருவர் பாடினாரா அல்லது பலர் பாடினரா, பாடியவர் யார், யாவர் என்ற விபரங்கள் இது வரையில் அறியப்படவில்லை.
சேர மன்னனைக் கோதை என்றும் அழைப்பள். அந்தக் கோதை என அழைக்கப்படும் சேரமன்னர்களின் சின்னம் வில். வில்லைச் சிலை என்றும் சொல்வர்.
சேர மன்னனது செங்கோலாட்சி நடைபெறும் சேர நாட்டிலே உள்ள மக்களுக்கு எந்த விதமான
 

மக்களுக்கு மட்டுமல்ல பறவைகள் விலங்குகள் முதலான ஜீவராசிகள் எவற்றுக்குமே எந்தவிதமான துன்பமும் வராத வண்ணமாக நல்லாட்சி புரிகின்றான் சேரமன்னன்.
து அர் ல்லாட்சிப் பரப்புக்குள்ே ஒரு துன்பத்தைக் கண்டார் புலவர். அத்துன்பம் என்ன என்பதையும், அது யாருக்கு ஏற்பட்டது என்பதையும் பார்ப்போம்.
சேறு பொருந்திய வயல் நிலத்திலே, செந்நிற ஆம்பல் மலர்கள் இதழ் விரிந்து மலர்ந்து, நெருங்கி, சேற்று நீப்பரப்பு முழுவதும் பரந்து
அந்த மருத நிலத்து வயலோரத்திலே இருந்த மரங்களின் உயர்ந்த கிளைகளிலே பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டுக், குஞ்சு பொரித்துச் சுதந்திரமாக, நிம்மதியாகச் சந்தோஷமாக வாழ்ந்தன.
மரத்தின் உயர்கிளிையில் கூட்டுக்குள்ளே குஞ்சுகளோடு குலாவி மகிழ்ந்து நித்திரை செய்த
மாலையிலே மொட்டாக இருந்த செவ்வாம் பல்கள் காலையிலே மலர்ந்து
காட்சியளிக்கின்றன.
நெருப்புப் போன்ற செந்நிற இதழ்களைக்
முழுவதும் நீக்கமற நிறைந்து கானட்பட, நீரிலே நெருப்புப் பிடித்து விட்டது என்று பயந்து விட்டன LB60656it.
அதனால் அதைப் பார்த்தவுடனே பதறித் துடித்துத் தமது சிறகுகளுக்குள் தமது குஞ்சுகளை மூடித் துன்பமுற்று நடுங்குகின்றன.
பறவைகளால் நெருப்பை அணைக்க முடியாதே. அதனால் தம் குஞ்சுகளைப் பாதுகாக்கச் சிறகுக்குள் அவைகளை ஒடுக்கி மூடிக் கொண்டன என்கிறார் புலவர்.
அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாய் அவிழ வெள்ளம் தீப்பட்டது எனவெகுவிப் ~ புள்ளினந்தம் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு.
(pë - 110)
புது வசந்தம் 69 )

Page 93
நீரிலே நெருப்புப் பிடித்து விட்டது என்ற அர்த்தமில்லாத அச்சத்தினால் பறவைகள் அஞ்சினவேயன்றி வேறு அச்சம் எதுவும் யாருக்கும் அந்நாட்டில் இல்லை என்கிறார் புலவர்.
செவ்வாம்பல் மலர்ந்து நீர்ப்பரப்பை மூடியிருக்கும் காட்சியை மனக்கண்ணால் கண்டு
JTCBs356it.
எப்படி இருக்கும் என்று கற் முடியாது போனால் புலவர் புலமைப் பித்தனின் “பொய்கை என்னும் நீர் மகளும் பூவாடை பேர்த்திருந்தாள்" என்ற திரை இசைப் பாடல் வரியை நினைத்துப் பாருங்கள் இயற்கையின் கெத்துவத்
மன்னனாலே ஆளப்படாத பறவைகளே இன்பமாக வாழ்கின்றன. 令。,* a - - அறியாமையினாலே ஏற்பட்ட சிறுதுன்பமே. அது சிறு பொழுதுக்குள் அகன்றுவிடும். அப்படியென்றால் மக்களின் வாழ்க்கை எவ்வளவு இன்பகரமானதாக
எழுபது என்ற நூலில் நக்கீரதேவர் இன்னும் அற்புதமாகக் காட்டுகிறார். அக்காட்சியையும் காண்போம்.
இலவ மரம் செழித்து உயர்ந்து, பரந்து வளர்ந்திருந்தது.
அது செந்நிறமான தளிர்களையும், அரும்புகளையும் கொண்டிருப்பதை, உயர்ந்த ஒரு மூங்கில் மரத்தின் கிளையிலே இருந்த ஒரு கடுவன் குரங்கு கண்டு விட்டது.
இலவந் தளிர்கள் நெருப்புச் சுவாலைகள் போலக் காணப்படுகின்றன. “செந்தியின் நாட்போலச் செழுந்தளிர்கள் ஈன்று” என்று, இலவ மரத்தின் தளிர்களை, எமது நாட்டுச் சோமசுந்தரப்புலவர் தனது "இலவு காத்த கிளி" என்ற பாடலில் குறிப்பிடுகின்றார்.
நெருப்புச் சுவாலைபோல, இலவந்தளிர்களும், அரும்புகளும் இருப்பதைக் கண்ட கடுவன் குரங்கு அச்சங் கொண்டது.
 
 
 
 

முன்னொரு போதும் அப்படி ஒரு காட்சியைக் கண்டிராத அக்கடுவன் குரங்கு, இலவமரத்திலே நெருப்புப் பிடித்து விட்டது என்று
அச்சங் கொண்டது.
வயது முதிர்ந்த, முது மந்தியாகிய பெண்குரங்கு, காந்தள் மலர்மேலே வண்டு இருப்பதைப் பார்த்து, வண்டு நெருப்பிலே வீழ்ந்து விட்டதே என்று கவலை கொண்டு எழுந்து, எழுந்து கையை நெரித்துக் கொண்டு செயலற்றிருந் போல இக்கடுவன் குரங்கு இருக்கவில்லை.
"G ܕ݂ 鲇 g 66 ત્રિો 梦 தன்து குஞ்சுகளைச் சிறகுக்குள் மூடிக் கொண்ட
爱筠帝彦
அதன் சமூக உணர்வு அதனைச் செயலாற்றத் தூண்டியது. தான் இருந்த மூங்கில் மரத்தின் குழைகளை ஒடித்துப் பிடுங்கிக் கொண்டு தாவிட் பாய்ந்து இலவ மரத்தில் ஏறிக் கொள்கிறது.
அக்குழைகளாலே அடித்து அடித்து
நெருப்பை அணைக்க முயல்கிறது. கவிஞர் அக்காட்சியை அற்புதமாகக் காட்டுகிறார்.
ý0zúážý பரந்தெழந்த ஒலிஇன் வக் தாங்குவதோர் கோன்னி எனக்கடுவன் - மூங்கில் தழைஇறுத்துக் கொண்டோக்கம் சங்கோயே சங்கக் குழை இரத்த காதடையான் குண்று
(திருஈங்- 17)
இலவமரத்தில் தூங்குகின்ற சிறு சிறு அரும்புகளை, சிறு சிறு நெருப்புக் கொள்ளிகள் என எண்ணிய அக்கடுவன் குரங்கு, அந்த நெருப்புக் கொள்ளிகளை அப்படியே எரிய விட்டால் அவை எரிந்து காட்டையே அழித்தவிடும் என் க்ககிர
நெருப்பை அணைக்க முயன்றது; என ஒரு காட்சியைக் காட்டுகிறார் புலவர்.
குரங்குக்கே இருக்கும் இந்தத் தியாக உணர்வும், சமூக உணர்வும் மனிதரிடம் குறைந்து விட்டதே என்ற எண்ணம் என் நெஞ்சை எரிக்கின்றது.
கம்பராமாயணம்
கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவன் கம்பன். தமிழ்த்தாய் தவமிருந்து பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் கம்பன் என்பார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை.

Page 94
3. த்தின் எல் سے ہ سحت”ء + حـیـہ - سا பாடிய இராமாயணத்தில் ஒரு காட்சியைப்
JríT}{3}Tto.
உயிரினங்களுக்கிடையே இருக்கின்ற ஒற்றுமையையும், விட்டுக் கொடுப்பையும், ஒருவரின் சந்தோஷத்தை, நிம்மதியை, சுதந்திரத்தை, வாழ்க்கையை மற்றவர் குழப்பாமல் வாழுகின்ற மானுடப் பண்பின் மேன்மையையும் அறிணை உயிர்கள் மூலமாக அற்புதமாகக் காட்டுகிறான் கம்பன்.
கோசல நாட்டிலே கம்பன் கற்பனையிலே கண்ட காட்சிகள், அந்நாட்டின் மேன்மையை உலகுக்குப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன.
சங்குகள் நீரிலே நிம்மதியாகக் கிடக்க வேண்டும் என்ற காரணத்தால் எருமைகள் நீரிலே சென்று கிடந்து, சங்குகளைக் குழப்புவதில்லை.
எருமைகள் நீரைக் குடிக்கச் சென்றால், சங்குகளின் நிம்மதி குழம்பாதவண்ணமாக நீரைக் குடித்து விட்டு, நீரிலே கிடக்காமல் வெளியில் வந்து மரநிழலிலே கிடந்து உறங்குகின்றன.
நீரிலும் நிலத்திலுமாக இரண்டிலும், கிடந்து ஓய்வு கொண்டு மகிழ்சி அடையும் எருமை, நீரில் மடடும் வாழும் சங்கின் நிம்மதியைக் குழப்பாமல், தனது மற்றோர் ஓய்விடமாகிய மரநிழலைநாடி, சங்குகள் நிம்மதியாக வாழ்வதற்கு நீரை விட்டுக் கொடுத்து விடுகின்றன.
வண்டுகள், ஆண்கள் பெண்கள் அணிந்திருக்கின்ற மாலையிலே மொய்த்துக் கிடக்குமேயல்லாமல் செந்தாமரை மலரிலே சென்று
நித்திரையைக் குழப்புவதில்லை.
இலக்குமிதேவி செந்தாமரையிலே வாசஞ் செய்பவர். வண்டுகள் இலக்குமிதேவியாம் செந்திருமகளைக் குழப்பாமல் மாலைகளிலே துயில்கின்றன.
தாமரைப் பூவிலும், மாலைகளிலும் சென்று தேன்குடித்துத் தங்கும் வண்டுகள், இலக்குமிதேவி இனிதே துயில்வதற்காக, செந்தாமரைப் பூவை நாடாமல் மாலைகளிலே தேன் குடித்து உறங்குகின்றன.
இலக்குமிதேவியை யாரும் அழைக்காததால் இலக்குமிதேவி நிம்மதியாக நித்திரை செய்கிறாள். வறுமை இல்லாததால் யாரும் இலக்குமியை அழைக்கவில்லை. வண்டுகளும் குழப்பவில்லை.
 
 
 

சிப்பிகள் நீர்த்துறைகளில் நிம்மதியாக நித்திரை செய்யவேண்டுமென்பதால், ஆமைகள் நீர்த்துறையிலே சென்று சிப்பிகளைக் குழப்பாமல், காட்டுப் புதர்களிலே நித்திரை செய்கின்றன.
இயல்பு கொண்ட ஆமை நீத்துறையில் மட்டும் வாழும் இயல்பு கொண்ட சிப்பிக்கு நீர்த்துறையை விட்டுக் கொடுத்துவிட்டு, அதன் நிம்மதியைக் குழப்பாமல் தான் சென்று நிலப்புதர்களிலே
அன்னப் பறவைகள் வைக்கோற் போரிலே நிம்மதியாக உறங்க வேண்டுமென்ற காரணத்தால், மயில்கள் வைக்கோற் போரிலே வந்து இருந்து கெல் க் கொறித்து அன்னங் | FldGu, சோலையிலே சென்று உறங்குகின்றன.
மயில்கள் வைக்கோற்போரை அன்னங்களுக்காக விட்டுவிட்டுத் தாம் சென்று பூஞ்சோலையிலே உறங்குகின்றன.
இட் *றின் நிம்மதியை மற்றொன்று குழப்பாத இனிமையான வாழ்க்கை பறவைகள், விலங்குகள் முதலான உயிர்களிடத்திலேயே இருந்தால் அந்நாட்டு மக்களிடத்தில் எத்தகைய மேன்மையான பண்புகள் இருந்திருக்கும் என்று எம்மைச் சிந்திக்க வைக்கிறான் கம்பன்.
நீரிடை உறங்குஞ் சங்கம்
நிழலிடை உறங்கும் மேதி, தாரிடை உறங்கும் வண்டு
தாமரை உறங்கும் செய்யாள், தாரிடை உறங்கும் ஆமை
போரிடை உறங்கும் அண்ணம்
பொழிலிடை உறங்கும் தோகை
(5ubl HT6).fb/IL6)
உறங்கும், உறையும் என்ற சொற்கள் நித்திரை கொள்ளும் என்ற பொருளினைமட்டுமன்றி, வாழும், கிடக்கும் என்ற பொருள்களையும் இப்பாடலில் காட்டுகின்றன.
ன்ற தத்துவத்தை விட்டு நீக்கி, எல்லோரும் எல்லா வகையிலும் சிறப்போடு நிம்மதியாக, சந்தோஷமாக, சுதந்திரமாக வாழவேண்டுமென்ற தியாக மனப்பான்மையையும், கம்பன் காட்டுகின்ற அந்தக் காட்சியிலே கண்டு களிக்கிறோம்.
கம்பனிசின் கற்பனைக் காட்சி, கருத்திலே மாட்சியுற்று, எமக்கு எத்தனையோ செய்திகளைச் சொல்லுகிறதல்லவா. வாழ்க கம்பன் புகழ்,
saad iš 6îò 91

Page 95
‘புத வசந்தம்” மலர் பூத்தி
அத்தியாவசியப் பொருட்களி
வன்னி மாநக நல்லெண்ணெய், w
உற்பத்தி
உள்நாட்டு, வெளிநாட் பக்ஸ், போட்டோபி ஒரு நிமிடத்தில் ஆ கலர் புகைப்ட போன்றவற்றை நியாயமான க
தொலைத்தெட
jäFITT
666.
 
 
 

துக்குலுங்க வாழ்த்துகின்றோம்
YA M.P.C.S Ltd.
ப.நோ.கூ.சங்கம்
ன் ஏக விநியோகஸ்த்தர்கள்
5ரின் தரமான
தேங்காய் எண்ணெய் யாளர்கள்
நா.கூ. சங்கம்
ஆலை, வீதி,
ýflu}{I.
டுத் தொலைத்தொடர்பு, ரதி, லெமனேட்டிங், அடையாள அட்டை படம் பிடித்தல் ட்டணத்தில் பெற்றுக் கொள்ள
நா.கூ. சங்கம் டர்பு நிலையம்,
வீதி,
ரியா.
தொலைபேசி : 024 - 22384

Page 96
வன்ன
SETED65
என்ர எண்பத்திரெண்டு வயது வரைக்கும் இப்படியான வெடிச்சத்தத்தை நான் கேட்டதே இல்லை. என்ர அம்மாளாச்சி.சதிரம் எல்லாம் பதறுது. நெஞ்சு படக்கு படக்கெண்டு இடிக்குது. கிழவி எண்டஈப்போல பயப்பிடாமல் இருக்க ஏலுமே.இந்தச் சத்தங்கள் கொஞ்ச நாளாய் கூடுதலாய்க் கேக்குது. காடெல்லாம் அதிருது மரத்து இலையள் கூட நடுங்குது. இப்ப இருக்கிற மாதிரி பயமும் பதட்டமும் முந்தி ஒருக்காலும் இருக் கேல்லை.
இட்ப என்ன நேரம் எண்டு தெரியேலை. விறாந்தைக் கரையில பாயை விரிச்சு அதில காலை நீட்டிக் கொண்டு இருக்கிறன். றோட்டில ஒரு மோர்ட்டர்சைக்கிள் படபடவெண்ட சத்தத்தோட போகுது. மற்றபடி ஒரு ஈ காக்கை றோட்டில இல்லை.
மாங்குளத்திலயிருந்து துணுக்காய்க்குப் போற றோட்டுக்கரையிலதான் எங்கட ஊர் இருக்கு. நல்ல உயரமான மரங்கள் காடாய் சூழ்ந்திருக்கிற இடம். ஊருக்கு நடுவில றோட்டுக்கு பக்கத்தில எங்கட அம்மாளாச்சியின்ர கோயில்
அம்மாளாச்சியின்ர வாசலைட் பார்த்தபடி எங்கட வீடு. அங்க கொழுத்திற விளக்கு எங்கட வீட்டில நிண்டு பார்க்கத் தெரியும், விடியக்காத்தால முழுகியிட்டு அவவின்ர கோயிலுக்குப் போய் கும்பிட்டுட்டு வந்துதான் நான் தேத்தண்ணி குடிக்கிறது. இந்த வன்னிவிளாங்குளத்தில தலைமுறை தலைமுறையாய் நாங்கள் இருக்கிறம் இந்தக் கோயிலும் இருக்குது.
என்ர சின்னவயதுக் காலமெல்லாம் இந்தக் கோயில் வாசல் லதான் விளையாட்டோட போயிருக்கு. கோயில்ல வைகாசி விசாகத்தில பொங்கல் நடக்கும். பொங்கல் எண்டால் நீவேலியிலயிருந்து வாழைக்குலையும் சாவகச்சேரி கொடிகாமத்திலயிருந்து தேங்காய், இளனி, வாழைக்காயும் பண்டவண்டிகளில் மேளதாளத்தோட வரும். விடிய விடிய அன்னதானம் நடக்கும். எத்தினை திசையளிலயிருந்து சனம் வரும். கோயிலுக்கெண்டே ஒவ்வொரு இடத்திலயிருந்தும் விசேசமாய் பஸ்விடுவினம்.

fu ITF f
ரச்செல்வி
என்ர அப்பு வைத்தியம் செய்யிற ஆள். கட்டுக்குடுமியும் காதில தோடும் தோளில சால்வையுமாய் இருப்பார். காட்டுக்குள்ள போய் மூலிகை எடுத்து எண்ணெய் காய்ச்சி ஆக்களுக்கு குடுக்கிறவர். அதால சனங்கள் திருவிழா காலத்தில எங்கட விட்டயும் வந்து குவிஞ்சிடுங்கள். அத்தினை பேருக்கும் சாட்பாடு. பின்பக்கம் கிடாரத்தில அவியல் நடக்க தலைவாசலில தொடர்ந்து பந்தி நடக்கும். கோயிலில சாட்பிட்டாலும் கூட ஒரு நேரம் எங்கட வீட்டயும் சாப்பிட்டிட்டுத்தான் சனம் போகுங்கள்.
அறுவது வருசத்துக்கு முந்தி என்ர மனிசனும் வைத்தியம் செய்ய வந்துதான் அட்புக்கு பழக்கமானவர். பிறகு அவற்ற குணம் நடை பார்த்து அப்பு எனக்கு கட்டி வைச்சவர். சரசாலையிலயிருந்து வன்னிக்கு வந்து என்னைக் கலியாணம் கட்ட
>ன் இருந்திருக்கு. இங்கயே எங் வாழ்க்கை தொடங்கிச்சுது. இந்தக் காட்டு வாழ்க்கைக்கு அவரும் கொஞ்சம் கொஞ்சமாய் பழக்கமாயிட்டார். அடர்ந்த காட்டுக்குள்ள சுத்தித் திரிஞ்சம் எத்தனை சந்தோஷம் அது.
என்ர அட்பு எனக்கு வச்ச பேர் வன்னி நாச்சியார். அது மாறி இப்ப நான் எல்லாருக்கும் வன்னியாச்சி எண்டு ஆகிப் போனன். இந்த ஊருக்கயே வயசு கூடினவள் நான்தான். என்னில எல்லாருக்கும் நல்ல மதிப்பும் மரியாதையும் எங்கட அமைதியான வாழ்க்கையெல்லாம் இட்ப கொஞ்சக் காலமாய் கலகலத்துப் போச்சு. ரோட்டுப் பிடிக்கிறது எண்டு ஒரே சண்டை.
நேற்று அம்மாளச்சியின்ர கோயில் வாசல்ல நிற்கேக்க பொம்மர் வந்திட்டுது. அய்யோ. அய்யோ.என்டு சனமெல்லாம் பதைபதைச்சு ஒடுபட்டு விழுந்து கிடந்திட்டுதுகள். பார்த்துக்
விழுந்துது. காது செவிடாகிப் போனது மாதிரி சத்தம்.
கொஞ்ச துரத்திலே இருந்த குளக்கட்டில குண்டு போட்டிட்டாங்கள் எண்டு பிறகுதான் தெரிஞ்சுது. அதில மாடு மேய்ச்சுக் கொண்டு நிண்ட கோவிந்தியின்ர சின்னப்பெடியன் உடம்பு சிதறிச்

Page 97
செத்துப்போச்சு. நேற்று தொடக்கம் அதுகளின்ர வீட்டில அழுகுரல் கேக்குது. அம்மாளாச்சி.ஏன் இப்படி நடக்குது.எங்களுக்கு ஏன் இந்த கலக்கமும் நெஞ்சிடியும்.வயது போன நேரத்தில எத்தினை ஆக்கினையள். இரவு வந்தாலே Uu. (Uplb பதட்டமுமாய்க் கிடக்கு.இப்பிடியே ஒவ்வொரு ராவிலும் பாயில இருந்து யோசிச்சுக் கொண்டிருக்க * வேண்டிக் கிடக்கு.
"ஏன் ஆச்சி.எழும்பி இருக்கிறாய். தண்ணி ஏதும் வேணுமே. விறாந்தையின் மற்றியக்கத்தில படுத்திருந்த வன்னியசிங்கம் அவன் என்ர கடைசி Lbäå Êæ__féà,
படு” எண்டு சொல்லிப் போட்டு தலைமாட்டில இருக்கிற கண்ணாடிப் பையை எடுத்துப் பார்த்தன். பொயிலைக் காம்போட ஒரு தாள் தட்டுப்பட்டுது. தடவிப் பார்க்க மொறு மொறுவெண்டு இருக்கிற நூறு ரூபாத்தாள்.
இண்டைக்கு பின்னேரம் பெரியவன் வந்தவன். எப்பவாவது பனங்காமத்திலயிருந்து இந்தப் பக்கம் அலுவலாய் வந்தால் என்னட்ட வருவான். எப்பிடியணை இருக்கிறாய் எண்டு கேட்டிட்டு அம்பதோ நூறோ தந்திட்டுப் போவான். இண்டைக்கும் வந்து நூறு ரூபா தந்திட்டு போனவன் இந்த நூறு ரூபா இப்போதைக்கு எவ்வளவு பெரிய காசு. இப்ப வீட்டில சரியான கஸ்டம். வயல் செய்தும் லாபம் வாறேல்லை. வன்னியசிங்கம் வைத்திலிங்கத்தின்ர மிசின் ஒடுற வேலைக்குப் போறவன். அதில கொண்டு வாற காசிலதான் குடும்பம் நடக்குது. ஏதோ காய்ச்சிற கஞ்சியிலே எனக்கும் ஒரு வாய் தருகுதுகள். இப்ப வைத்திலிங்கத்தின்ர மிசினும் பிழைப்பட்டு நிக்கிறதால உழைப்பும் இல்லை என்ன செய்யிறது.ஊரொத்த கஸ்டம்தான்.
அப்பு இருக்கேக்க என்னைச் சீமாட்டி மாதிரி வைச்சிருந்தவர். வீட்டில ஒரு குறை இல்லை. மூட்டை மூட்டையாய் நெல்லு இருக்கும். அப்புவிட்ட வைத்தியம் பார்த்திட்டு சனம் தேனும் நெய்யும் மரக்கறி வகையுமாய் கொண்டு வந்து தருங்கள். இந்த வன்னிக்காடு தவிர எனக்கு வேற ஊர் தெரியாது. ஆனாலும் நான் ராசாத்தி மாதிரி இருந்தனான். அதே செல்வாக்கு என்ர மனிசன்ர காலத்திலயும் இருந்தது. மனிசன் நல்ல உழைப்பாளி. ஒரு பக்கம் வயல் விதைப்பு மற்றப்பக்கம் வேற தொழிலும்.
94 வசந்தம்

நல்ல வடக்கன் மாடுகள் பூட்டின வண்டிலில காட்டுக்க போய் விறகு வெட்டி ஏத்தி மாங்குளத்தில இருக்கிற மரக்காலைக்கு கொண்டு போய் குடுக்கிறது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை, நெல்லியடியிலயிருந்தெல்லாம் ஏத்திப்போக ஆட்கள் வருவினம். ஊருக்குள்ள ஆரும் ஏதாவது ஏத்தி இறக்க வேணும் எண்டால் எங்கட வண்டிலைத்தான் பிடிப்பினம்.
வயலும் பஞ்சமில்லாமல் விளைஞ்சுது. அது மனசு நிரம்பின வாழ்க்கையல்லோ, என்ர மனிசன் ೩-6Öpáp àT6ರಾತಿ 6TesotL 5é(Bb 9tu Ubತಿಆb பிடிச்சு எத்தினை நகை நட்டு செய்து வைத்திருந்தனான்.
இப்ப.இப்ப.எல்லாம் வித்தாச்சுது. காதில இருக்கிற தோடு மட்டும்தான் இருக்கு. மனிசன் போன கையோட என்ர வாழ்வான வாழ்வும் போயிட்டுது. பத்து வருசமாய் என்ன பாடுபட்டிட்டன்.
வண்டிலில மனிசன் இருந்து போற நேரம் காட்டுக் கரையில வைச்சு இந்திய ஆமி சுட்டுப்போட்டுது. இந்த வயது போன மனிசனை சுட்டாங்களே பாவியள். -
அம்மாளே. அண்டைக்கு அலறியடிச்சுக் கொண்டு ஓடிப்போய் விழுந்து குளறினது நேற்றுப்போல கிடக்கு. அந்த சீமானையும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் நினைச்சு நினைச்சு இண்டைக்கு வரைக்கும் அழுகிறன்.
அப்ப மூத்தவன் தன்னோட பனங்காமத்துக்கு வந்து இருக்கச்சொல்லிக் கேட்டவன். கற்சிலைமடுவில கலியாணம் முடிச்சிருக்கிற என்ர பெட்டையும் வந்து கேட்டவள். நான் ஒருதரோடயும் போகேல்லை.
இது நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு. சின்ன வீடுதான். ஒலையால மேய்ஞ்ச வீடு. எந்தக் கோடையிலயும் குளு குளுவெண்டு இருக்கிற வீடு.
இந்த வீடு வாசல். என்ர கால் அளைஞ்சு விளையாடின இந்த முத்தம் . என் ர அம்மாளாச்சி.இதெல்லாத்தையும் விட்டு என்னால எங்கயும் போக ஏலாது. இந்த இடத்தில இருந்து சாக வேணும் எண்டதுதான் என்ர ஆசை. அதால வீடு வாசலை வன்னியசிங்கத்துக்கு குடுத்திட்டு அவனோடை இங்கேயே இருந்திட்டன் இட்ப இந்த ஆசையிலயும் மண் விழப்போகுதுபோலதான்

Page 98
கிடக்கு. சண்டை சண்டை எண்டு சனம் ஒரே கதைச்சபடி. அதுக்குத் தக்கதாய் நெடுகவம் சத்தங்களும் கேட்குது. ஒவ்வொரு சத்தத்துக்கும் நெஞ்சு நடுங்குது.
“காந்தன் என்ன நேரமடாப்பா.” பக்கத்தில படுத்திருக்கிற பேரீனைத் தட்டிக் கேட்டன்
“பத்து மணிவரும் ஆச்சி. நீ இன்னும் படுக்கேலையே. அது தூரத்திலதான் சத்தம் கேட்குது. பயப்பிடாமல் கிடவணை" அவன்தலையைத் தூக்கி சொல்லிப்போட்டு திரும்பிக் கிடந்திட்டான்.
"மெய்யே மோனை முப்பது மைலுக்கு அடிக்கிற செல்லும் வைச்சிருக்கிறாங்களாம். அடிச்சுப் போடுறாங்களோ தெரியேல்லை."
“உதெல்லாம் உனக்கு ஆரணை சொன்னது. பேசாமல் படன் . இருந்து யோசிச் சுக் கொண்டிருக்கிறாய்.”
நித்திரையும் வருகுதில்லையே.மனிசர் நித்திரை கொண்டு எவ்வளவு காலம்.காத்தும் வீசுதில்லை. ஒரே புழுக்கமாய்க் கிடக்கு.
இந்தக் காட்டுக் கிராமத்தில பரம்பரை பரம்பரையாய் இருக்கிற சனங்களைவிட எழுவத்தேழிலயும் எண்பத்திமூண்டிலயும் நாட்டில நடந்த இனக்கலவரத்தோடஒரு நாற்பது குடும்பம் வந்து குடியேறி இருந்ததுகள் குளக்கட்டில வாற தண்ணியில கமம் தோட்டம் எண்டு செய்து சீவிச்சுதுகள். பிறகு மருந்து பசளை டீசலை இங்க வரவிடாமல் மறிச்ச பிறகு விவசாயம் செய்ய முடியாமல் போயிட்டுது. விவசாயம் இல்லாததால மற்ற சனத்துக்கும் வேலை தொழில் இல்லாமல் போயிட்டுது.
இப்ப எல்லாப் பக்கத்தாலயம் சனம் இடம் பெயர்ந்து வந்து வன்னிவிளாங்குளத்தில இருக்குதுகள். எப்பிடித்தான் இந்தச் சனங்களின்ர சீவியம் போகுதோ தெரியேல்லை.நிலையாய் இருக்கிற எங்கட பாடே பெரும்பாடாய் இருக்கேக்க இதுகள் பசி பட்டினியோடதான் இருக்க வேண்டிக்கிடக்கு.
பசி இருக்கிற நேரங்களில பழைய நினைவு வரும். பரம்பரைப் பெருமை பேசி என்ன இப்ப மிஞ்சிக் கிடக்கு. பசிதானே.சிலநேரம் அழுகை அழுகையாய் வரும். அம்மாளாச்சியிட்ட சொல்லி அழுதிட்டு வருவன்.

கோவிந்தியின்ர வீட்ட அழுகிற சத்தம் இங்கவரை கேக்குது. பாவங்கள் இடம் பேர்ந்து வந்திருந்த சனங்கள். இந்தப் பெடியன் மாடு மேய்ச்சுக் கொண்டு வாற காசிலதான் ஒரு நேரச் சாப்பாடு சாப்பிடுதுகள். இனி என்ன செய்யப் போகுதுகளோ.
இவ்வளவு அவலத்தையும் எங்கட அம் மாளாச்சி என்னெண் டு பார்த்துக் கொண்டிருக்கிறாளோ எண்டு எனக்கெண்டால்
முதுகு சீலையை உதறி விரிச்சிட்டு சரிஞ்சு படுத்திட்டன். நான் நித்திரை கொண்டிருக்க மாட்டன்.எத்தினை மணி வருமோ தெரியேல்லை.
இருந்தாட்போல டொமார் டொமார் எண்டு செல் அடிக்கிற சத்தம் கேட்குது. அய்யோ பக்கத்திலதான் வந்து விழுந்து வெடிக்குது. பதறிக் கொண்டு எழும்பியிட்டன். வன்னியசிங்கத்தின்ர கடைசி பெடியன் வீரிட்டு கத்த பவழம் தூக்கிக்கொண்டு வெளியில ஓடிவந்தாள். எல்லாரும் ஓடி வந்து முத்தத்தில நிற்கினம்.
"ஆச்சி.ஆச்சி.எழும்பி வெளியில வாணை. செல்அடிக்கிறாங்கள்” காந்தன் பயத்தோட என்னைக் கூப்பிட்டான். எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது. "ஏன் மோனை இங்க அடிக்கிறாங்கள்.” கேக்க ஏலாமல் வாய் தடுக்குது. சொல்லு வெளியில வராதாம் அடுத்த சத்தம் இன்னும் கிட்ட
"ஆச்சி ஓடி வாணை. எங்களோட வந்து முத்தத்தில நில்லு பயப்பிடாதயணை"
அய்யோ...இடி இடிக்கிற மாதிரி அடிக்கிறாங்கள். என்னெண்டு பயப்பிடாமல் இருக்கிறது. எங்கட தலையில வந்து விழுந்தால் என்ன செய்யிறது.
றோட்டில சனத்தின்ர போக்கு வரத்து தெரியுது. அவ்வளவு நேரமும் அமைதியாய் இருந்த றோட்டில சனம் பாய்ஞ்சு கொண்டு போகுது.
"வன்னியசிங்கம் சரியாய் சத்தம் கேக்குது. கொஞ்சத்துாரம் போய் நிற்பம். ஆச்சியையும் பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வாவன்.” றோட்டில மாப்பாணன்ர குரல் கேக்குது. அய்யோ. ஆமி வாறானோ.என்ர அம்மாளே. -
சத்தம் கேட்க நாங்கள் குளறிக் 5ڑ9ICBj5عه و கொண்டு றோட்டுக்கு வந்திட்டம் இருட்டுக்க தட்டுத்
வசந்தம் 95

Page 99
தடவிக்கொண்டு அம்மாளாச்சியின்ர கோயிலுக்க போய் கொஞ்ச நேரம் நிண்டம்.
"ஆரப்பா கோயிலுக்க நிற்கிறது. விசர்ச்சனங்கள் கொஞ்சம் துரத்துக்குப் போங்கோ.”
ஆரோ கத்திச் சொல்லிப் போட்டு போறான். பக்கத்தில செல் விழுந்ததாக்கும். வெடி மருந்து தலை சுத்திற அளவுக்கு மணக்குது. றோட்டில குளறுற சத்தம் கேக்குது. வைத்திலிங்கத்தின்ர கடைசிப் பெட்டைக்கு செல் பட்டிட்டுதாம் ரத்தம் வழிய வண்டிலில தூக்கிப் போட்டுக் கொண்டு மல்லாவி ஆஸ்பத்திரிக்கு போகினமாம்.அந்தப் பெட்டைக்கு கலியாணம் முற்றாக்கியல்லே இருந்தது.இதென்ன அநியாயமடாட்பா.
இதுக்குள்ள இருந்தாப்போல றோட்டால மாடுகளும் மூசிக்கொண்டு ஓடுது. குளக்கட்டு பக்கம் செல் விழுந்திருக்க வேனும் பட்டி பிரிச்சு மாடுகளும் பயந்து போய் மனிசரோட ஓடுது.
"நீங்கள் முன்னால நடவுங்கோ. நாங்கள் வீட்ட பூட்டிக்கொண்டு வாறம்"
Y வன்னியசிங்கமும் பவழமும் திரும்பி வீட்டுப்பக்கம் போக காந்தன் என்னையும் தாரணிப் பெட்டையையும் பிடிச்சுக் கொள்ள சனத்தோட நடந்தம், அம்மாளாச்சியின்ர கோயிலை விட்டுப் போக கால்தயங்குது. என்ர ஆச்சியை விட்டுப் போறதோ எண்டு மனம் கலங்குது.
"ஆச்சி கவனமாய் நடவணை. இருட்டுக்க தடக்குட்பட்டுப் போவாய்” காந்தன் என்ர கையை இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு வாறான்.
இருட்டுக்க கண்ணும் தெரியேலை ஒரு மண்ணும் தெரியேலை. றோட்டில எங்க பள்ளம் புட்டி இருக்கெண்டும் தெரியேல்லை. சீலை தடுக்குது நாலைஞ்சு சனம் முன்னாலை போகுது. இருட்டுக்க ஒருதரையும் அடையாளம் தெரியேல்லை. ஆனா அன்னத்தின்ர குரலும் செல்லாச்சியின்ர குரலும் கேக்குது. மில்கார வீரசிங்கம் பெரிய குரலில கதைக்கிறது கேக்குது.
ஏன் இப்படி நடுச்சாமத்தில செல்லை அடிக்கிறாங்களாக்கும். பயக் கெடுதியில 6fல்லாருக்கும் நித்திரை முறிஞ்சு போச்சு.
நாலாங்கட்டை சந்தியோட வீரசிங்கம் ஆட்கள் பாண்டியன்குளம் பக்கம் திரும்பி
96. ôlad Ffiji, Sib

நடந்ததுகள், நாங்கள் வடகாடு வரைக்கும் போவம் எண்டு நேர நடந்தம்
முன்னால போன சைக்கிள் கண்ணுக்கு தெரியேல. மோதுப்பட்டு விழுந்து போனன். பாழ்பட
பக்கமாய் கொண்டுபோனால் என்ன.காந்தன் பிடிச்சு துக்கிவிட்டான்.காலில நோகுது கல்லு இடிச்சுப் போட்டுது. அய்யோ எண்டு அழவேணும் போல fêLätiö. SÐDA DIT SÐD DIT 6T6IsiK6 Luuģ566) SEKuggb தாரணிப் பெட்டையை காந்தன் சமாதானப்படுத்தி கூட்டி வாறான்.
கால் உழைய றோட்டுக் கரையில இருந்திட்டம். மனப்பதை பதைப்பில என்னைய மறியாமல் கண்ணிலயிருந்து தண்ணி வழியுது. பின்னால ஆரோ லாம்பு பிடிச்சுக் கொண்டு வருகுதுகள் "இஞ்ச.இஞச லாம்பை நூர் வெளிச்சம் பார்த்திட்டு இங்க செல்லை அடிக்கப்போறாங்கள்." எண் டு ஆரோ கத்த அதுகள் லாம் பை
நூர்த்துப்போட்டு இருட்டுக்குள்ள நடந்து
கொஞ்ச நேரத்தில வன்னியசிங்கமும் பவழமும் வந்து எங்களைப் பிடிச்சிட்டினம். ரெண்டு பசளைப் பையளில சாமான்களை கட்டிக்கொண்டு வந்திருக்கினம்,
திரும்பவும் நடக்கத் தொடங்கினம். மெல்லிசாய் விடியத் தொடங்க வடகாடு வரை வந்திட்டம் இனி நடக்க ஏலாது எண்டு சந்தியில இருந்திட்டம். மூண்டு கட்டைக்கு மேல நடந்து வந்தாச் சு. இனி அவ்வளவு பயப்பிடத் (3 வில் எண்டு வன்னியசிங்கம் சொல் ன் எண்டாலும் கை கால் எல்லாம் பதறிக் கொண்டுதான் இருக்குது. பிள்ளையளின்ர முகங்களில பசியும் ടങ്ങണ്ട .jp.
சந்தியில இருந்த தேத்தண்ணிக் கடையில தேத்தண்ணி வாங்கிக் குடிச்சம். நேரம் போகப் போக சத்தம் கூடிக்கொண்டு போச்சு.ஒவ்வொரு சத்தமும் நெஞ்சில விழுமாப்போலகிடக்கு. திடீரெண்டு பொம்டன் சத்தமும் கேட்குது. ஐயோ கிபி வந்திட்டுது எண்டு கொஞ்ச நேரம் சந்தியில நிண்ட சனம் பதறிக் கொண்டிருந்துதுகள். அய்யோ.அம்மாளாச்சி இப்ப எங்க ஒடித் தட்பிறது.சந்தியில இருக்கிறம்.
கொஞ்சம் தூரத்தில சுத்திட்போட்டு அது போட்டுது. அதுக்குப் பிறகுதான் கொஞ்சம் மூச்சு வந்தது. பத்து ஒட்டறுத்தகுளம் வந்திட்டம்

Page 100
வெய்யில் சுள்ளெண்டு எறிக்குது. ஒரு மரத்துக்குக் கீழ இருந்திட்டம். ஒரு காலமும் இப்பிடி நாங்கள் வெளிக்கிட்டு ஓடி வரேல்லை. என்ன செய்யிறது. எங்க போறது எண்டு ஒண்டுமாய் விளங்கேலை. பனங்காமத்துக்கு மூத்தவன் வீட்ட போகலாம்தான். ஏதோ வன்னியசிங்கத்துக்கு தெரியும்தானே எண்டு நான் பேசாமல் இருந்திட்டன். நடந்த களைப்பு அடிவயிற்றிலயிருந்து மூச்சு வாங்குது. சின்னப் பெடியன் பவழத்தின்ர இடுப்பில இருந்து அழுது கொண்டேயிருந்தான்.
மத்தியானம் ஒரு மணிக்கு மேல சத்தமெல்லாம் நிண்டிட்டுது. ரெண்டு மணிக்கு மேல வயிறு புகைய பசி பசி எண்டு பேரப்பிள்ளையஸ் அழத்தொடங்கியிட்டுதுகள்.
நான் கிழவி அழ ஏலுமே.வயிறு காந்தக் காந்த
நிற்க எனக்கு விளங்கியிட்டுது, அவனிட்ட காசு இல்லை. இருந்த காசுக்கு காலமை எல்லாருக்கும் தேத்தண்ணி வாங்கிக் தந்திட்டான். இப்ப ஆளுக்கொரு பணிசு வாங்கிறதெண்டாலும் காசு வேணுமே. கடைவாசலில இருந்த றம்முக்குள்ள இருக்கிற தண்ணியைத்தான் கொண்டுவந்து திருப்பி திருப்பி தந்தான். நாலைஞ்சு பேரிட்ட காசு ஏதும் இருக்கோ எண்டு கேட்டுப் பார்த்தான் "பசி பசி எண்டு பிள்ளிையள் அழ ஒரு பணிசு வேண்டக் கூட காசில்லையே."எண்டு பவழம் கவலைப்பட்டுச் சொல்லத்தான் எனக்கு பகிரிட்டுது. என்ர பொயிலைப் பையுக்க கிடக்கிற காசு இப்பதான் நினைவுக்கு வந்துது
முடியவி
சொந்தப் பூமியில் சொத்துக்களை இழந்து சொகுசாக வாழ - எம்மால் முடியவில்லை
பிறந்த உடன் பிறப்பின் பிணைப்பில் இல்லாது அலைந்து திரியும் வாழ்க்கை வாழ ~ எமக்கு முடியவில்லை
அம்மாவின் அரவணைப்பில் அழதுண்டு உறங்கி ஆனந்தமாய் இருக்க - இப்போ முடியவில்லை
 

"அய்யோ.என்ர காசு.” எண்டு நான் குளறின சத்தத்தில எல்லாரும் என்னைத் திரும்பிட்
JF Frisiséold.
நூறுருபா எவ்வளவு பெரிய காசு.இப்ப எங்கட பசியை தீர்த்திருக்குமே. தடுதாளியில விட்டிட்டு வந்திட்டனே..எனக்கு அதுக்குப் பிறகு இருப்புக் கொள்ளேலை.
நாலுமனியாச்சு. ஊர்ப்பக்கம் என்ன நிலைமையோ எண்டு பார்க்க வெளிக்கிட்ட ஆக்களோட நானும் வாறன் என்டு சொல்ல "உனக்கென்ன விசரே.பேசாமல்இரு."எண்டு என்னை அதட்டிப் போட்டுதுகள்.
"அட்ப என்ர காசு.? "
"நான் போய் எடுத்துக்கொண்டு வாறன்" எண்டு வன்னியசிங்கம் வெளிக்கிட்டான்.
"கிடந்த பாய் கூட சுத்தேலையடாட்பா. தலை மாட்டில பொயிலைட் பையுக்க இருக்கு. வடிவாய்ப் பர்” அட்பதான் மாட்பாணன் ஓடிவந்தான்
"நான் ஊருக்கு போய் பார்த்திட்டு இட்பதான் வாறன். உன்ர வீடு செல்பட்டு அப்பிடியே எரிஞ்சு சாம்பலாய்ட் போய்க் கிடக்கு" வன்னியசிங்கமும் பவழமும் அய்யோ எங்கட விடு எண்டு குளறி அழ நான் ஏங்கிப் போய் நிண்டிட்டன். எனக்கு காதை அடைச்சுக் கொண்டு வந்திட்டுது,
என்ர நூறுருபாக்காசு.அய்யோ.அதுவும் வீட்டோட எரிஞ்சிருக்கும் நூறு ரூபாவுக்கும் பத்து றாத்தல் பாண் வாங்கலாமே.ரெண்டு நாளைக்கு எங்கட பசியைத் தீர்த்திருக்குமே. என்ர அம்மாளாச்சி.என்ர காசு.
நண்பர்களின் நட்பில் நானும் பொழுது கழிக்க நல்ல நேரம் ஒன்று தோன்ற ~ இங்கு முடியவில்லை.
ஆண்டவனிடம் சென்று "ஆண்டவா" என்று ஆறுதல் அடைய முடியவில்லை
கண் இருந்தும் குருடாய் காது இருந்தும் செவிடாய் வாய் இருந்தும் ஊமையாய் கால் இருந்தும் முடவனாய் - இங்கு வாழ முடியவில்லை
sa&F išsifò

Page 101
dFIDIgj60
98
வசங்
966760)(13ul......... சில. மதவாதிகளே. மனித சித்தாந்தம்
மதங்கொண்டு விட்ட
மந்திகளும் சிரித்துக்
உங்கள்.
மிதவாதக் கெ
சமாதான மேனி
அசுர வடுக்கள் எழுதப்படுகின்ற போதிமர சருகுகளை
இனவாத குப்பைகள அதிகாரத்தையே. உலுக்கிக் கொள்ளு தந்திரம் உங்கள். சிந்தையில் அலசப்ப
வல்லரசுகளுக்கு வால் பிடிக்க.
ஒப்பந்த கைuெ எங்கள் குருதிச உறிஞ்சப்படுகி: நீங்கள். மதக் கோலம் பூண்ட வன்முறைப் பேய்க6ெ மனித இதயங்கள். மருளுகின்றன.
மனித நேயம்.
LD6)LITEl (BUT601
வறண்ட மண்ை சுதந்திர சிசுக்க நரகலோகத் த
இங்கே.
உங்கள் போலி
g-LDT.g5T60T FITLII
சபிக்கப்படுகின்

dIII,356i
இரணையூர் - பால.சுதர்சினி
6
டகளுக்கு
56it.
ரிசனங்களாகின்றன.
வேதாந்தம்
S6 Trf6)
36......

Page 102
இவர்களைப்
எத்தை
க.ரவீந்தி
ஓங்கி வளர்ந்த காட்டு மரங்களும் இரசாயன பசளை தேவையில்லாது நல்ல விளைச்சல் தரக்கூடிய மண்வளம் கொண்ட வயலோடு ஒட்டி உறவாடும் கரிப்பட்ட முறிப்புக் கிராமம்.
விளையிற நெல்லில சாப்பாட்டுக்குத் தேவையான அளவு வைச்சுக்கொண்டு மிச்சமாக கிடக்கிற நெல்லைத்தான் நெல்லுக் கட்ட வாறவங்களுக்கு குடுக்கிறது. கிராமமக்கள் நெல்லைக் குத்தி சோறு காச்சி சம்பலோடையும் சாப்பிடுவினம் ஆனால். குளத்து மீனுக்கும் முட்டையுடும்புக்கும் குறைவான இடமில்ல கரிப்பட்ட முறிப்பு. மான், மரை, வத்தலும் பறணுக்குள்ள பாளம் பாளமா கிடக்கும். வயிறு பசிக்க வாடத்தேவையில்ல. கூலிவேலை செய்யிறவையும் கதிர்பொறுக்கி நெல்லுச் சேர்த்துப் போடுவினம் தொழில் வத்தின காலத்தில அவையளின்ர வீட்டிலையும் நெல்லிருக்கும். பச்சையரிசிச் சோறும் குளத்து மீன்குளம்பும் அவையளின்ர தேகத்த காயாக் கம்புபோல வைச்சிருக்கும்.
அப்பிடித்தான் முருகையாவும் கூலிவேல செய்யிறவன். குனிஞ்சு வளைஞ்சு வேலையெண்டால் சளைக்கமாட்டான். நாலுபொம்பிளப் பிள்ளையஸ், கடைக்குட்டி பொடியன், அஞ்சு பிள்ளையன் மனைவி பார்வதியோட ஏழுபேரும் குடிசை வாழ்வில் குதுாகலம் கண்டவயள். கஸ்ரமெண்டால் சிலவேளை பார்வதியும் களைபிடுங்கப் போவாள். கதிரும் பொறுக்கி நெல்லுச் சேர்ப்பாள், ஏழுபேரின்ரையும் வயித்துக்கு குறையில்லை.
இப்படி எல்லா மக்களும் மகிழ்வோடுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர்.
காட்டு மரங்களையும் வேரோட பிரட்டிச் சாய்க்கிற புயலடிச்சுது மென்மை கொண்ட குளிர்ச்சி தந்த எல்லாம் வேரோடு சாய்ந்தன. சிட்டுக்குருவிகளும், அணில்களும் கீச்சிட மான், மரை கத்த காட்டுக்கோழியும் சத்தமெழுப்ப கலகலப்பாய் வாழ்ந்த மக்களிடையே வேட்டோசையும்

போல இன்னும் னை பேர்
ரன் (கனகரவி)
வெடிகுண்டோசையும் முழங்கி அதிர்வுகொடுக்க அவலப்பட்ட மக்கள் இருப்பிடம் விட்டு அகன்றனர்.
முருகையாவும் வெளிக்கிடுவதில் வேகம் காட்டினான். பசளைப் பைகள் பாத்திரங்கள், உடுப்புகள் வாய்க் கட்டுடன் ஒருபையில் எடுத்துக்கொண்டு கால் நடையா சனத்தோட சனமா வெளிக்கிட்டு கால் கடுகடுக்க கச்சிலை மடுவரை நடந்தே போயாச்சு.
கச்சிலை மடு பள்ளிக்கூடத்தில அகதி வாழ்வுக்குள் சனத்தோட சனமா நுளைஞ்சாச்சு. சாப்பாட்டுக்கு வரிசையில் முன்னுக்கு நிக்கிறதுக்கும், நோய் குணமாக மருந்துக்கு வரிசையில் முன்னுக்கு நிக்க. முண்டியடிக்கிறதுமாக காலம் ஓடிக்கொண்டிருந்தது.
ஊரின் ரை நினைவும் அடிக் கடி முருகையாவுக்கு வரும். வர்றநேரம் சோகத்தில தொங்கும்முகம் குலைக்கப்பட்ட வாழ்நிலையில் முழுவரும் ஒருவர் நிலை ஒருவர் அறிய கேள்வி எழுப்பி ஆறுதல் அடைவினம்
எல்லாம் தட்டுப்பாடு, கட்டுப்பாடு, தடை, நோய், நுளம்பு, மலேரியா, இலையான். தடைசெய்யவோ, கட்டுப்படுத்தவோ, யாருமேயில்ல. முருகையாவின்ர குடும்பத்திலையும் அடிக்கடி காச்சலால எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கினம். மனைவி பார்வதி காச்சலால் நடுங்கிக் கொண்டிருந்தாள். முருகையாவும் தன்னால ஏலுமானதைச் செய்தான். குளிரால நடுங்கிக் கொண்டிருந்த பார்வதிக்கு சாக்கொண்டெடுத்து போர்த்துவிட்டான். சனம் வந்து அகதிமுகமான பாடசாலையில முளைச்ச பெட்டிக் கடையில பனடோல் இரண்டு வேண்டிக் குடுத்தான். பார்வதி அனுங்கலோட இருக்க முருகையாவும் நித்திரை இல்லாமலே யோசிச்சுக் கொண்டிருந்தான். பொழுதுபட ஆறுமணி போல தொடங்கின நடுக்கம் காலையில நாலு மணிபோல கொஞ்சம் குறைவாத் தெரிஞ்சுது. அனுங்கலும் மெதுவா இருக்க முருண்கயாவுக் கு கொஞ்சம் சந்தோசமா
புது வசந்தம் 99)

Page 103
இருந்திருக்க, மந்தியள்கத்திச்சு, மயில் அகவுது, காகம் கரையுது, குருவிகள் கீச்சிடுது, நிலம் வெளிச்சு விடியல் பொழுதானது.
முருகையா எழும்பி சுள்ளிய முறிச்சு வைச்சு அடுப்ப முட்டினான் தேத்தண்ணி ஊத்தி பார்வதிக்கு குடுக்கத்தான். பார்வதியும் அனுக்கம் குறைஞ்சு காச்சல் விட்டமாதிரி படுத்திருந்தாள். தேத்தண்ணி ஊத்திக் கொண்டுவந்து பார் வதியை எழுப்பேக்குள்ள தான் இந்த விடியல் பொழுதினில் தனது வாழ்வில் இருள் சூழந்ததை உணர்ந்தான். கொதித்துக் கொண்டிருந்த பார்வதியின் தேகம் சில்லிட்டது. அனுங்கல் குறைஞ்சு நீண்டநேரமே மூச்சு நிண்டதை உணர்ந்து வாயடைத்துப் போனான் (Լp(5605Ա III...........
தாயை இழந்த அஞ்சு பிள்ளையளேட கச்சிலமடுவிட்டு வெளியேறவும் சந்தர்ப்பம் சிடைச்சது. துப்பாக்கிகள் சட. சடக்க. எறிகணைகள். முழங்க இலக்குத் தெரியாத எறிகணை எகிறல்போல இவர்களும் உயிர் இருக்கே என்று கால்நடையாக புதுக்குடியிருப்பு நோக்கிய பாதையில் நடைதொடங்கலாச்சு. பார்வதியின்ர சேலைகளை கொண்டு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில பெரிய காட்டு மரநிழலில் சதிரமாக கம்பு இடித்து சேலையை மறைப்புக் கட்டி குடி புகுந்தார்கள்.
போய் இருந்த அன்றே விமானக்குண்டு வீச்சு வேகமாய் நடந்தது. சனங்களுடாக தகவல்கள் செவிகளில் புகுந்தன. நாலுபேர் குண்டு போட்ட இடத்திலையே சரியாம். ஆஸ்பத்திரிக்குப் பத்துப் பேருக்கு மேல கொண்டு போயிருக்கு அதிலையும் மூண்டபேர் தப்புவினமோ எண்டது சந்தேகமாம்.
முருகையா ஏற்கனவே சோர்ந்து சுருண்டு போயிருந்தான் இப்ப பிள்ளையள நினைக்கவும் ஏக்கமேரி ஏக்கம். இங்கிருந்து எங்குதான் போவது? சக்தியற்று நின்றான். செத்தா எல்லாரும் ஒண்டா செத்திற்றா பிரச்சனையில்ல என்று சொல்லிக் கொள்ளுவான். புதுக்குடியிருப்பு வந்த பிறகு சாப்பாட்டுக்கும் பெரிய கஸ்ரம். கூலி வேலை செய்வம் எண்டாலும் வேலையும் இல்ல. நிவாரணமும் இல்ல.
பிள்ளையஸ் சூரக்காயையும் பசியில திண்டிச்சுதுகள் ஏதாவது வழியாக்காசு கிடைச்சால் பாலு எண்டாலும் வேண்டிக் குடுப்பான் முருகையா. விழியே இல்ல. இப்படிக் களில் ரப்பட்டுக் கொண்டிருக்கிற காலத்தில இவர்களுடைய
OO வசந்தம்

வாழ்வில மாற்றமில்ல, கால நிலையில மட்டும் மாற்றம் வந்திச்சு. மாரிகாலமாச்சு. மரம் வெயிலுக்க நிழல் தரும். மழைக்கு குடை தருமோ?
தங்கட ஊர் சனங்கள் சொல்லித் தகவல் ஒண்டு கிடைச்சுது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அகதி முக்ாமில இருக்கலாமாம் இங்கிருந்து கனக்கச் சனம் போகுதுகள் எண்டு முருகையா முடிவு செய்தான் பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு போவம். இங்கிருந்தா சாப்பாடில்லாமலே செத்துப்போயிடுவம். அதால வெளிக்கிடுறது தான் நல்ல முடிவு. ஓரளவு கையில மடியில உள்ளவையள் முந்திக்கொண்டினம். முருகையா முழுசிக் கொண்டிருந்தான். சாப்பாட்டுக்கே திண்டாட்டம். பசித்தீயை அணைக்க ஒவ்வொரு நாளும் தனிப்போராட்டம் பிள்ளையன் எதையாவது சாப்பிட முடியாமல் வாழையிலையக் கூட சப்பிசாறு விழுங்கிய கொடுமையுமுன்டு. முருகையா பார்வதி செத்ததுக்கும் அழாத அழுகை குழறி அழவான். ஊர்நினைவு பொங்கி வரும். பொன்னம்பலத்தார் புழுதியுழவே பத்தேக்கள் உழுதவர். இந்த மழைக்கு விதைப்புக் காணாத வயல் முழுவதும் மந்தும் புல்லுமாக காடாகக்கிடக்கப்போகுது அந்த நினைவுகள் வந்து போகேக்குள்ள வெளியில் ஏன் என்று காரணம் தெரியாமல் கண்ணீர் பொலபொலன்ன கன்னம் வழியே கொட்டியிருக்கும்.
மூத்த மகளின்ர காதில கிடந்த தோட்டுக் குச்சு கழட்டி புதுக்குடியிருப்புக் கடையொன்றில் குடுத்து காசு கொஞ்சம் கிடைச் சுது. பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு நம்பிக்கையுடன் நடைப்பயணம் ஒன்று ஆரம்பமாகியது.
தனிப்பயணமல்ல, இவர்களைப்போல இன்னும் எத்தனையோ மக்கள், பசளை பைகளில் ஏதோ தம்மிடம் இருந்த பொருட்களையும் சுமந்து கொண்டு புதுர் வீதி வழியே புதுள் திருவிழாவுக்கு வெளிக்கிட்டது போல குடும்பம் குடும்பமா இந்த அவலப் பயணம். புதுாருக்கு மகிழ் வுடன் சென்றவர்கள் தொகைச்சனத்தைக் கண்டால் அந்த நினைவு வரும் மறுகணம் தங்களது நிலை நிலைவில் வரவே ஏனடா இந்தநிலை இனிவரும் காலங்களில் எங்கட பிள்ளையள வளர்க்க நாங்கள் பட்டயாடுகளுக்கு பலன் என்னதான் கிடைக்கப் போகுதோ? இது தான் எல்லோர் ஏக்கமும். சிலவேளை கொஞ்சம். வேறுபடலாம் ஆனால் எல்லோருக்கும் ஏக்கம்தான்.
கால்நடையாகவே நீண்டதுார நடையில் முருகையா சரியா களைச்சுப் போயிருந்தான்.

Page 104
கையில கிடந்த கொஞ்சக் காசில பிள்ளையஞக்கு ஏதோ அரை வயித்துக்கெண்டாலும் சாப்பாடு வேண்டிக்குடுத்து தான் பட்டினி கிடந்து ஒரு இறுதி நடவடிக்கை போல தங்களுக்கு விடிவொன்று கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு தான் நடையாய் நடந்தான்.
முகம் கடைசிக் களைப்பை வெளிக்காட்ட துடித்துக்கொண்டிருந்தது முருகையாவுக்கு. பிள்ளையளின்ர முகத்தையும் அடிக்கடி பார்த்துக் கொள்ளுவான் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று பொங்கி எழுவது போல, அழுகையாக கொட்டித்தீாக்கத்தான் விருப்பம். அதற்கும் சக்திவற்றிப் போயிருந்தது கண்ணிர் மட்டும் எங்கிருந்து தான் வந்து கொண்டிருக்குமோ?
முருகையா நடையால் களைச் சுப் போயிருந்தாலும் சந்தோசம் முகத்தில் சிறுதுளியாக வெளிப்பட்டது. அதற்கான காரணம் இராணுவத் தடைமுகாமிற்கு அண்மித்து விட்டதுதான். இன்னும் ஒரு மைல் தான் இருக்கும் வெள்ளைக் கொடியுடன் முன்னுக்குச் சென்ற குடும்பம் முருகையாவின்ர குடும்பம் தான்.
‘புது வசந்தம்" மலர் பூத்த
உங்கள் இல்லங்களில் நடைபெறும் மங்
முறையில் குறைந்த விலையில் கலர் போட்டோ மற்றும் க
மற்றும் VIDEO படப் கணனி முறையில் செ நீங்கள் நாட வே
 
 

"T
திடீர் என்று முருகையா கீழ விழுந்தான். கால் பின்னுப்பட தோளில் இழுத்துச் சுமந்து கொண்டு வந்த பசளைப்பை கீழ விழவும் முருகையாவின்ர உறுதியான உழைப்பைத் தந்த தேகம் மண்ணில விழவும் நேரம் எடுக்கேல்ல. கீழே விழுந்த முருகையா கை இரண்டையும் உயர்த்திக் கொண்டு எல்லாப் பிள்ளைகளையும் திரும்பத் திரும்பப் பார்க்கிறான். கூடவந்தவர்களில் பெரியவர்கள் தண்ணி எடுத்து முகத்தில் தெளிக்க முருகையாவின்ர கன்னத்தில மட்டும் பட்ட நீர் பலமடங்காய் ஊற்றெடுத்தது. வாயை மேலும் கீழுமாக எடுத்து விம்மினான். விம்மலும் குறைஞ்சு அமைதியான காட்டுக்குள் அமைதியாகக் கிடந்தான் முருகையா. அவனது இறுதி நினைவு என்னவாக இருக்குமென்பதை சொல்லாமல் விடேலாது. தன்ர பிள்ளையஞக்கு உள்ள இழப்புப்போல இன்னும் எத்தனை இழப்புக்கள் வேணும் மனிதன் சுதந்திரமாய் வாழ்வதற்கு?
முருகையாவின் உடலத்தை கூடவே வந்தவர்களின் உதவியுடன் இரண்டு ட்டுத்தடியெடுத் ன் இ த்து முருகையாவின் இறுதிப்பயணத்துடன் பெற்றவர்களை இழந்த பின்னும் உயிர்மட்டும் இருக்கவே என்று பிள்ள்ைகளும் பயணம் தொடர்ந்தனர்.
壶
துக்குலுங்க வாழ்த்துகின்றோம்
கள வைபவங்கள் அனைத்தையும் சிறந்த
b
றுப்பு,வெள்ளை போட்டோ பிடிப்பு அனைத்தையும் ய்து பெற்றுக் கொள்ள ண்டிய ஒரே இடம்
நவீன CAMARA கள் மூலம்
N073, New bus Stand Complex, Wavuniya.
புது வசந்தம் 101

Page 105
"புத வசந்தம்" மலர் சிற
வவுனியாவில் முன்னணி
இக்
O
AL கலை, வர்த்தக, 'கணி
ஆண்டு 04 தொடக்கம் 11 வரை
L'itik 73est aanpa diretts.
NEW INDRA TALKES.
ASHVTNAA LODGE,
ASHVTNAA HOTEL
Tel-024-22628, 024-21904
No. 180, 182, 184,
Kandy Road, Proprietors: Wa Wuniya, S. Kanagalingam. Sri Lanka. S. Sivalingam.
 
 
 

ப்புற எமது நல் வாழ்த்துக்கள்
வி கல்வி நிறுவனங்கள்!
பான வகுப்புகள் நடைபெகின்றன.
TH
கைகளில் துப்பாக்கி
கைகளில் துப்பாகியேந்தி
"ே
எங்கள் பிரச்சினைகள் தீர
எந்த ஆயுதம் பதில் தரும்?
*-
-கனகரவி

Page 106
கங் மலைகளின் அடியில் தன சிற்றோடையினின்று மெது மலைகளை நோக்கிப் பா
வளரும் செம்மலர்களைக் கிளைகளில் அமர்ந்தபடி பறவைகள் முகருகின்றன.
துள்ளித்திரிந்து மிக்ககலை நிழலிற் படுத்துள்ளது மிக மெதுவாகப் பாய்கிற தண்ணிருக்குக் காது கொ(
தன்மீது ஈட்டி பாய்ச்ச மன மகிழ்வாய் இருக்கிறது
செம்மலர்களை முகர்ந்தப மிகக் களைத்துக் கண்ணு
தலி கர்ங் கருக்க
தலி கங்: கருக்கற் பொழு ஆழ் கிடங்கிற் கிடக்கிறது பழுப்பு நீர், ஆழ்ந்து இலைகளும் பட்டை கிடங்கின் குத்தான கெட்டி மூடினாற் போல் மேவும்
பசுஞ்சாம்பல் நெடும அழகிய பறவைகள் கிளைக்குக் கிளை தாவி திடுமென வரும் பொன் ம
தலி கள்ங். கருக்கற்பொழு; குளநீரின் ஒரமாய் வேட்ை
' oIII foif(D.
என் இதயத்துள் ஆழப்பா பூமியின் ஆழத்துள் துறப்ட “யுலோ” பிரியச் செய்வது பேராசைக் களிப்புடன் கெ
 

ாத்த கங்காரு
டுக்கிறது.
ரிதர் இல்லையென
9. றங்குகிறது.
ர் பொழுதின் பாம்பு
ழதின் பாம்பு
குளம்
இருண்டது; களுமாய் குளிர்ந்த குளப் படுக்கை ச் சுவர்
ரங்கள்
ஆடிப் பறக்கும்;
இனிதாய்ப் பாடும்
ாலைப் பொழுதும்
தின் பாம்ப: டயாடும்.
நீதிக்காரர்”
பச்சிய ஈட்டி போல ணம் சுற்றுகிறது.
போல Tம்பனி கொல்கிறது.
புது வசந்தம் 108

Page 107
சப்பிய தடியாலான துரிை
வெகு காலம் முன்பு, இங்
பெருமிதமிக்க வேட்டைகா அவர்களது மொழியும் அ6
சின்னஞ் சிறு சித்திர វិទ្យា
 
 
 

யைத் தர இயலும், அனைத்தோடும் அதைப் பகிர்வேன் சோதரன் என்பேன்.
கிறேன்
ாக வைக்கப் பார்க்கும் பற்கள்
ம் தாழ்வாக இருந்தது. ாலு துள்ளியது
வர் யாரென நினைத்தேன் வெண்மையாக, சிலது பழுப்பாக, சிலது கறுப்பாக கையால் இவற்றைத் தீட்டியவள் யார்? *கள் அவற்றை இங்கு வைத்தனர்.
மனிதன்
போது எஞ்சியுள்ளது இது மட்டுமே.
ர்களும் மட்டா தோண்டும் மாதரும் போய் விட்டனர் வர்களது ஆட்டமும் பாட்டும் சியிருப்பது ங்குகள்
ஜூலி வற்ஸன் நூங்கார்ராயி Julie Watson Nungarrayi.

Page 108
D6)
மழை பொழிகிறது
மழை எதற்காகப் பொழிகிறது? எல்லால் மரங்கட்காக, மலர்கட்காக, புல்லுக்காக மரங்கள் வளர்வதற்காக, மலர்கள் விளிை ‘ஓ’, மழைபொழியும் போது எவ்வளவு ந
குதிரை
குதிரை ஒன்று ஓடுகிறது, அஞ்சி ஓடுகிறது தடிகளும் கற்களும் கொண்டு விரட்டும் சிறுவர்களிடமிருந்து விலகி ஓடுகிறது புண்பட்டு நோயுண்ட குதிரை பாவம், அதற்கு இரங்காமல் அதை விரட்டுகிறா நாளுக்குப் பின் நாளாக இது நடந்து 6 குதிரை பாவம், அது என்னை மிகவும்
பாறைகள் தாண்டிப் பாய்கிறது தண்ணி.
பிற பல விலங்குள்.
மேகங்கள் திரள்வன, வெகுதொலைவில் ப
பின்பு மனிதர் வேட்டைக்கு வந்தனர், எவ்வி விலங்குள் எல்லாம் எங்கே போயின?
நீங்கிப் பறந்தோடி விட்டன. ,
எத்துணை சிவட்பாக மலையின் பின் சூரி தமது கூட்டில் உறங்கின, எல்லா வகைய
ஆற்றோரமாகப் பிறந்து ஆம்பல் இலையில் மெதுவாகத் தாங்கப்ப பெண் - அயர்வுற்ற விழிகள் இழைப்பையில் ஆம்பல் வேர்களையும் மீன்களையும் சிறிய ஆமைகளையும் அருட்
 
 

ற்றுக்குமாகத் தான்
புதர்க்காட்டிற் u35iST86
35 fab, குடிபதறகாக 苓。
வலெரி பர்ெ ன் நபானங்க்க Valerie Patterson Napanangka.
சிறிய பாறைகள், பெரிய பாறைகள்
>ரங்களையும் புற்களையும் எறிந்து
கையான விலங்கு எதையும் காணவில்லை.
தா?

Page 109
நிரப்பியபடி அருகாக நீந்தும் பெண்டபடியவாறு
நெருப்பைச் சூழ இராட்பொழுதில்
உற்றாருடன் அமர்ந்து கடுசாம்ப
உணவைப் பகிர்தல்
குழந்தைகளின் சிரிப்பு தாயின் பாடல்
மாள் மீது குழந்தை
மொழியில்
கதைகள் சொல்லும் பகிர
_LTடில்கள், ஆவிகளின் டே
தரும் பெண்கள்
இனிமேல் இல்லாத ஆறு - இப்ே வெறும் நூற்பை
இப்போது சூட்டர் மார்க்கெ பெரிய வீடுகளில் இருந்த படி
பகிர்ந்தும் பாடியும் தாய் அழக் குழந்தை ஒட்
கதை சொல்லும் பெண்கள்
புதிய கதைகள், புதிய பே புதிய மொழி
յ11=
"புத வசந்தம் மலர் பூத்
அழகிற்கு அ அழகிய தங்கப்பவு
உங்கள் பிறந்த இரத்தினக்சுற்களையும்
 
 
 
 

।
li
ਪੰ
ாது பெரும் அனை
க்கொள்வதை
நுக்குலங்க வாழ்த்துகின்றோம்
تھے۔ ழகு செய்யும் 2ள் நகைகளுக்கும்
திகதிக்கேற்ப பெற்றுக் கொள்ள

Page 110
தமிழில் இலக்கிய விம
தமிழ்மணி
'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தம்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறிவெயிற் றரிவை கூந்தலின் தறியவு முளவோ நீயறியும் பூவே"
- குறுந்தொகை
மலர்களில் மகரந்தங்களை ஆராய்வதே வாழ்க்கையாக உடைய அழகிய சிறகுகளையுடைய
அன்பின் மிகுதியால் ஒருதலைப் பட்சமாகக் கூறாது உண்மையென்று கண்டதைக் கூறுவாயாக. பழகும் தோறும் அன்பு மிகுவதற்குக் காரணமாயுள்ளவளும் மயிலின் சாயலை ஒத்தவளும் செறிவான அடுக்கான அழகிய பற்களையுடையவளுமாகிய என் தலைவியின் கூந்தலின் நறுமணத்தைவிட மேலான வாசனையை நீ எந்தப் பூவிலாவது கண்டதுண்டோ?
இப்பாடலைப் பாடியவர் இறையனார் என்னும் புலவர். தலைவன் ஒருவன் தலைவியின் நலம் புனைவதாக இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாடலின் நேரடிக் கருத்தைவிட இலக்கிய விமர்சனத்துக்குப் பாடலில் தொனிக்கும் கருத்தினை வழிகாட்டியாகக் கொள்ளலாம் என டாக்டர்
மு.வரதராசன் கருதுகின்றார்.
தேன் வண்டுகள் மலருக்கு மலர் சென்று மகரந்தங்களை ஆராய்வதே வாழ்க்கையாக ?-63)_u 16:H. Sti t.Jgu T6ð 6a}6öGæ5{SibôG55 g5!T6öI மலர்களின் தாரதம்மியம் தெரியும்.
இலக்கிய விமர்சகனும் பலநூல்களையும் ஆழ்ந்து பயில்வதில் வாழ்க்கை முழுவதும் ஈடுபட்டவனாக இருக்க வேண்டும். பழைய இலக்கியங்களையும் நவீன இலக்கியங்களையும் கற்று அவற்றை நயட்பவனாக தல் வேண்டும்
邬
ஒருதலைப்பட்சமாக விமர்சனம் செய்வதைத் தவிர்த்து நடுநிலையில் நின்று இலக்கியத்தின் நலந்தீங்குகளைச் சீர்தூக்கிச் சொல்ல வேண்டும். உண்மையென்று கண்டவற்றை மொழியவேண்டும்
 
 

ர்சனம் - ஒரு பார்வை
psio Gresouborsaf
"இவர் நமக்கு வேண்டியவர், உறவினர், உயர்ந்த
நமது கூடாரத்தைச் சேர்ந்தவர், இவரது படைப்பில் குறைபாடு இருந்தபோதும் அதனைச் சுட்டிக்காட்டுவதோ, புட்டுக்காட்டுவதோ சரியல்ல, நாலு வார்த்தை புகழ்ந்துதான் கூறிவிடுவோமே” என்கின்ற மனட்டாங்கினையுடையவர் நல்ல விமர்சகள் ஆகார்.
ஒரு உன்னதமான இலக்கியத்தைப் பயிலுந்தோறும் பயிலுந்தோறும் புதுப்புதுக் கருத்துக்கள், புதிய புதிய நயங்கள் தோன்றும். தலைவியோடு பழகுந்தோறும் ஏற்படும் காதலைப் போலவே இலக்கியத்தை பயிலும் தோறும் இன்பம் பிறக்கும். விமர்சகர்கள் மேலோட்டமாக இலக்கியப் படைப்பைப் படித்துவிட்டுத் திறனாய்வு செய்வதைத் தவிர்த்தல் வேண்டும். yo வேண்டும். * GoFui ರಾ?"
தலைவி மயிலின் சாயலையுடையவள் -
ஆன்ம குணங்கள் அவனது இலக்கிய நடையிலே அவனையறியாமலே புகுந்து விடுகின்றன. இலக்கிய நடையை விமர்சகன் உணர்ந்து கொள்வது s96niëflu rú),
மயிலின் சாயல் எப்படியானது என விளக்குவது கடினம். அதுபோலவே இலக்கிய நடையை விளக்குவதும் கஷ்டமான காரியத்தான்.
தலைவி செறிவான, அடுக்கான பற்களை இலக்கியத்தில் இடம்பெறும் சொற். களும் செறிவானதாக அர்த்தபுஷ்டியுடையனவாக மதல் வேண்டும் சங்க இலக்கியங்களில் இடம் பெறும் சொற்கள் செறிவுடையன எனக் கூறுவர். வெறும் ஒலியொழுங்கிற்காக - மோனை எதுகைக்காக - வெற்றுச் சொற்களைப்
பயன்படுத்தும் கவிதை மட்டமானது.
என்னும் உட்கருத்து மேலே குறிப்பிட்ட பாடலில் இடம் பெற்றுத் திறனாய்வுக்கு வழிகாட்டுகின்றது.
- புது வசந்தம் 107

Page 111
குனம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்"
என்னும் திருக்குறளும் திறனாய்வுக்கு வழிகாட்டியாக அமைகிறது.
“ஒரு இலக்கியப் படைப்பின் இயல்புகளை இனங்கண்டு அதனை விபரிப்பதும், விளக்கம் தருவதும் இலக்கிய விமர்சனம் ஆகும்.
ஒரு படைப்பை விளக்கி அறிமுகம் செய்வதும் அது பற்றி அபிப்பிராயம் தெரிவிப்பதும் விமர்சனந்தான்.
இன்னதைச் செய்; இன்னதைச் செய்யாதே என்று விதிப்பது விமர்சனம் ஆகாது.
திறனாய்வாளரின் விபரிப்பும் விளக்கமும் சிலவேளை படைப்பாளியின் வருங்காலப் படைப்பு
முயற்சியை பல்வேறு அளவுகளில் வழிநடத்தலாம்.
விமர்சகனின் பணி பிரேத பரிசோதனையாக இல்லாமல் மகப்பேற்றுத் தாதியின் பணியாக இருத்தல் வேண்டும்.
இலக்கியத்தின் சுவையை நுகர்தல் இன்றியமையாததாய் உள்ளதுபோலவே அதன் இயல்பினைப் பகுத்துணர்தலும் இன்றியமையாத
எடுத்துக்கொண்ட இலக்கியத்தின் உயிர்நாடி எது எனக் கண்டு அதனை ஏனைய பகுதியிலிருந்து பிரித்தெடுத்தல் வேண்டும். இலக்கிய கர்த்தாவின் விருப்பத்தையொட்டியோ அன்றி அவனையும் மீறியோ சில மெய்ம்மைகளும் சிறப்புகளும் அவனுடைய இலக்கியத்தில் காணப்படலாம் நூலுள் மறைந்திருக்கும் இவற்றை நன்கு எடுத்துக் காட்டுவது
திறனாய்வாளரின் பணியாகும்.
நிலைபேறுடைய பகுதிகளை விமர்சகன்
முறையில் திறனாய்வு செய்தல் வேண்டும்.
புலவனின் தனிச்சிறப்பை அறிந்து அதனை பிரித்தெடுப்பதும், பிரித்ததை வகைப்படுத்திக் கூறுவதும் திறனாய்வாளரின் கடமையாகும்.
இலக்கிய ஆராய்ச்சி என்பது ஒருவர் இயற்றிய இலக்கியத்தினுள் புகுந்து மற்றொருவர் காணும் காட்சியாகும்.
0.8 a5šašt
 
 

விமர்சகன் படைப்பாளியின் எதிரியல்லன், நண்பன்தான். படைப்புக்கும் வாசகனுக்கும் ஒரு தொடர்பை விமர்கசன் உண்டாக்குகின்றான்.
கலையைப் பற்றிய பரிசீலனையே அது. கலையானது வாழ்க்கையைப் புத்தி பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் பரிசீலனை செய்யும். விமர்கனமோ அந்தக் கலையை அறிவுபூர்வமாக அணுகும்
விமர்சகனின் ஆலோசனைகள் சில சமயங்களில் படைப்பாளிக்கும் பெரிதும் உதவி
பணியும் பற்றி மேலே குறிப்பிடப்பட்டுள்ள
a ய்வாளரால் அவ்வப்போது எடுத்துச் Öing UL606i.
பல்வேறு திறனாய்வு முறைகள் பற்றி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலக்கியப் படைப்பைப் பிற வெளியுலக சமாச்சாரங்களுடனும், தத் துவக் கோட்பாடுகளுடனும், சட்டம்
திறனாய்வின் இருவேறு நோக்குகள் பற்றி முருகையன் குறிப்பிடுவார்:
.கவிஞன் ஒருவன் ஒரு கவிதையை எழுதுகின்றான்; அத்தக் கவிதையில் இடம் பெற்றுள்ள சொற்கள் மட்டுமே விமர்சகனால் சீர் துர்க்கிப் பார்க்கப்பட வேண்டியவை.
ரசொர் GJuli L'Ua s8 a தனி முழுமை வாய்ந்தவை; அக் கவிதையை பிற கவிஞர்களுடைய கவிதைகளுடனோ,அரசியற் கோட்பாடுகளுடனோ சேர்த்து எண்ணுவது முறையாகாது - இப்படி எல்லாம் கருதுகின்ற இலக்கியக் கோட்பாடு ஒன்று உண்டு. இதனை தனிமுழுமை வாதம் எனலாம்.
“மேற்சொன்ன நோக்குக்கு எதிர்மாறான நோக்குடையவர்கள் சார்பியல்வாதிகள். மனித முயற்சியின் விளைபொருட்கள் யாவுமே காலத்தின் தன்மையாலும் இடத்தின் தன்மையாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. கலையும் இலக்கியமும் இதற்கு விதிவிலக்கானவையல்ல; எனவே இலக்கியம் படைக்கும் கலைஞர்களுக்கும் அவர்களுடைய சூழலுக்குமிடையேயுள்ள

Page 112
தொடர்பை நன்கு உணர்ந்து கொள்வதோடு,
பரிபூரணமாக விளங்கிக் கொண்டாலொழிய அதனை நாம் முற்றிலும் கிரகித்துக் கொண்டவர்களாவோம். சூழல் எனும்போது பழைய மரபுகள், சமுதாய நிலைமைகள், வழக்கிலுள்ள சட்டங்கள், சம்பிரதாயங்கள், தத்துவ தரிசனப் பார்வைகள், அரசியற் கொள்கைகள், அறிவியல்விருத்தி முதலான யாவும் கவனிக்கப்படல் வேண்டும். இவற்றையெல்லாம் கவனித்துச் செய்யப்படுவதே உண்மையான பயனுள்ள விமர்சனமாகும் எனச்சார்பியல்வாதிகள் கூறுகின்றார்கள்."
இவ்விருவகை விமர்சன முறைகளுள்ளும் பல்வேறு நாமங்களால் குறிப்பிடப்படும் விமர்சனங்கள் அடங்கும்.
ஏறக்குறைய நாற்பதுகளின் பிற்பகுதிவரை இரசனைமுறைத் திறனாய்வே வழக்கிலிருந்தது. இலக்கியப் படைப் பின் சிறப்புகளையும், நலன்களையும் மட்டும் கூறிவிட்டு ஏனைய அம்சங்களைப் பற்றிக் கூறாமல் விடுவதே இம்முறையாகும். இலக்கியத்துக்கு உரை தந்த புலமையாளர் அனைவரும் இம்முறையையே கையாண் டனர் . இரசிகமணி டி.கே.சி., கனக செந்திநாதன், மறைமலையடிகள், அ.ச.ஞானசம்பந்தன் முதலானோர் இவ்வகையான விமர்சனங்களைச் செய்தனர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, க.நா.சுப்பிரமணியன் முதலானோர் இரசனை முறை விமர்சனத்தைப் பின் பற்றியபோதும் சிலசமயங்களில் இலக்கியப்படைப்பின் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டினர். இரசனை வெளிப்பாடும், நயம் கூறுவதும் இவர்களின் முக்கிய பணியாக இருந்தபோதும் அவ்வப்போது இலக்கியத்தை பகுப்பாய்வு செய்து விமர்சனம் செய்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. 'சிலப்பதிகாரத்துக்கு செவியைக் கொடுப்போம் நெஞ்சைக் கொடுக்க தயாராகவில்லை என்னும் பண்டிதமணியின் கட்டுரை சிலப்பதிகாரத்தை நுணுகி ஆராய்ந்து எழுதியதாகும்.
இலக்கிய வரலாற்றில் ஓர் இலக்கியட்படைப்பு வகிக்கும் இடத்தையும் அது இலக்கிய வளர்ச்சிக்கு செய்யும் பணியையும் எடுத்துக் கூறுவது வரலாற்று முறைத் திறனாய்வு என்பர். பாரதியாரின் பாடல்களை ஆராயப் புகுவோர் சங்ககாலம் தொடக்கம் இக்காலம் வரையும் இலக்கியம் எவ்வெவ் வகையில் வளர்ச்சி அடைந்து வருகின்றது என்பதைக் காட்டி பாரதி எவ்வாறு இலக்கியத்தில் திருப்புமுனையாக அமைந்தான்
 

என்பதைக் காட்டுதல் இவ் வகை விமர்சனத்தைச் சாரும். பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் க.சிவத்தம்பி முதலானோரின் விமர்சனங்களில் இவ்வாய்வு முறை பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம்.
நூலின் பல்வேறு அம்சங்களையும் பகுப்பாய்வு செய்து அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தும் வகையை விளக்குதல் பகுப்பாய்வுத் திறனாய்வு என்பர். ஹட்சன் அவள்கள் தனது 'An Introduction to the study of literature' 66id DJsö6) நாவலின் கூறுபாடுகளைக் கூறுவர். (1) கதைப்பின்னல் (2) பாத்திரங்கள் (3) g2 .60 upfl. 6) (4) காலமும் இடமும் (5) 56(6) BT6)}6Ó6ð önsBir í 66iKT 2-60ö16O D.
இது ஏனைய இலக்கியத்துறைக்கும் பொருந்தும் எனலாம். இலக்கியப் படைப்பை மேற்கண்டவாறு பகுப்பாய்வு செய்து நிறை கு ச் சுட்டிக் ட்டுவதே இத்தி
பின் இரா.நாகலிங்கப்
தவத்திரு அந்தனிஜான் முதலானோர் இவ்வகைத் திறனாய்வை மேற் கொள்வர்.
இலக்கியம் தோன்றிய சூழ்நிலை, சமுதாய நிலைமைகள் சம்பிரதாயங்கள், அரசியல் முதலானவை இலக்கிய ஆக்கங்களைப் பாதிக்கின்றன. இதனால் ஆய்வாளர் இவற்றையெல்லாம் கவனித்தே ஆய்வு செய்ய வேண்டும். இலக்கியம் சமுதாயத்தை மேம்படுத்த என்ன கூறுகின்றது. சமுதாயத்தை மாற் மக்கக் கூடிய கருத்துக்கள் இலக்கியத்தில் அழுத்தம் பெறுகின்றனவா? இலக்கியம் அறிவாயுதமாகப் பயன்படுகின்றதா? என்பவற்றையெல்லாம் ஆராய்வது சமுதாயவியல் நோக்கு விமர்சனமாகும்.
விமர்சன முறையாகும். பேராசிரியன் க.கைலாசபதி முதலானோர் மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் திறனாய்வில் சமூகவியல் நோக்கினை வலியுறுத்துகின்றனர். இதன் செல்வாக்கு முற்போக்கு அணியைச் சாராத கலாநிதி நா.சுப்பிரமணியம் அவர்களிடமும் படிந்திருப்பதைக் காணலாம்.
இறைக்
ஒரு மொழியில் தோன்றிய ஒரே வகையான இலக்கியங் ift 6i ஒப்புநோக்கி ஆராய்தல், பிறமொழி இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்புநோக்கி விமர்சித்தல்,
- ua asal 109)

Page 113
ஒற்றுமை வேற்றுமை காணல் ஒப்பியல் நோக்குத் திறனாய்வு எனப்படும்.
தமிழ் இலக்கிய ஆய்வாளர்களில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை காட்டிய ஒப்பியல் நோக் கினைக் கூர்மையாக் கி இத்திறனாய்வுத் துறையைச் செழுமைப்படுத்தியவர் பேராசிரியர் க.கைலாசபதி அவர்களாகும்.
தமிழில் வெளியிடப்படும் நூல்களுக்கு அணிந்துரையும் முகவுரையும் எழுதுவேர் அவற்றை விமர்சனரீதியாக ஆராய்வதுண்டு. அவற்றில் சிலவற்றை பெயர்களைக் குறிப்படாமலே நோக்குவோம்.
"இந்த நெடுங்கவிதை நவீன தமிழ்க் கவிதையில் ஈடிணையற்ற சாதனைகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. இருபதாம் நூற்றாண்டு உணர்வு இட்பாடலில் இடம் பெற்றிருப்பதைப் போல வேறு இரண் டொரு படைப்புக் களிலேயே காண்படுகின்றது எனக் கூறுதல் பெரும் புகழ்ச்சி ஆகாது ஈழத்துப் பிரபல விமர்சகர் ஒருவர் நெடுங்கவிதையொன்றிற்கு அளித்த முகவுரையில் இடம்பெறும் வாசகங்கள் இவை. கவிதையை எழுதியவர் தனது நண்பர் என்பதற்காகவோ அல்லது அரசியல் கொள்கையில் பங்காளி என்பதற்காகவோ அவரைத் துக்கிவிட வேண்டும் என்ற ஆசைட்ற்றியோ அறையப்பட்ட வாசகங்கள் இவை. இதனைப் பாராட்டு முறை விமர்சனம் எனலாம்.
"...இந்நூல் நமது கலைப்பாதையில் கடந்தகாலச் சுவடுகளை எடுத்துக் காட்டுகிறது. மீண்டும் வலியுறுத்தப்படவேண்டிய கலைப் பாரம்பரியத்தின் வரலாறு இங்கு முதன் முறையாகக் கூறப்படுகின்றது. இந்த நூலை எழுதியுள்ள முறையில், உண்மையில் எதிர்க் குரலிலும பார்க்கத் துணைக் குரல்களே அதிகம் கிளம்பும் போலத் தெரிகிறது. நூலாசிரியர் இவ்வரலாற்றைத் திறம்பட எழுதுவதற்கான புலமைப் பின்புலத்தையுடையவர், பாராட்டுப் பெற்ற இலக்கிய ஆக்க வல்லுநர்" நாடக வரலாற்று நூலொன்றின் முகவுரையாக நாடக இலக்கியத் துறையின் நீண்ட வரலாறொன்றை எழுதியபின்னர் கூறட்பட்டவை இவை. இதில் குணம் நாடிக் குற்றமும் நாடி மிக்க கொள்ளும் தன்மை இல்லை. வரலாற்றை எழுதுவதற்குரிய புலமைப் பின்புலத்தையுடையவர், பாராட்டுப் பெற்ற ஆக்கவல்லுநர் இந்த இரண்டு தகுதியும் இவரிடம் இருப்பதால் இந்த நூல் சிறப்பானதாக இருக்கும் என்ற தொனியில் முகவுரை எழுதப்பட்டுள்ளது.
“இந்தக் கவிஞர் நல்ல கவிதைகளை நமக்குத் தருவார் என்று நாங்கள் நம்பியிருக்கலாம்.
O a3F É Dİ

இது என் சொந்த அனுபவம். அவருடைய கவிதைகளில் மிகவும் தரங்குறைந்தன என எண்ணக் கூடியவைகள் கூட நமது சராசரிக் கவிதைகளைவிட உயர்ந்தனவாகவே உள்ளன. அவர் எட்டியுள்ள உச் சங்களோ யாருமே சென்றடையாத உச்சங்களாக உள்ளன" இரசிகமணி டி.கே.சி யின் இரசிக விமர்சனத்திற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. கவிதை நூலை விமர்சிக்க முன்பே எழுதிய கவிஞர் நல்ல கவிதைகளைத் தருவர் என நம்பலாம் எனக் "கன்வஸ்” செய்கிறார் இந்த விமர்சகர்.
”.............. அவர்கள் சமூகப் பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டு பிடிக்கும் ஆர்வத்தால் உந்தப்பட்டு இலக்கியத் துறையில் அடியெடுத்து வைத்தவர்; அக்காரணிகளைப் புலப்படுத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீவு காணலாம் என்ற நம்பிக்கையுடையவர்; சமூக முரண்பாடுகளை கலை நயத்துடன் சிறுகதைகளாகப் படைத்து ஈழத்துச் சிறுகதைத் துறையில் தனது முத்திரையைப் பதித்துப் பரிசும் பாராட்டும் பெற்றவர்" ஒரு நாவலுக்க எழுதிய மதிப்புரையில் விமர்சகர் ஒருவர் நாவலாசிரியரை அறிமுகப்படுத்துகின்றார். ஆசிரியர் சமூக நோக்கடையவர் பரிசும் பாராட்டும் பெற்றவர் என நாவலை ஆய்வு செய்யு முன்பே கூறிவிடுகின்றார். இப்படியானவர் எழுதிய நாவல் நல்லதாக சமூகவியல் நோக்குடையதாக சமுதாயத்தை மாற்றி யமைக்கக் கூடிய சிந்தனையுடையதாக இருக்கும்; வாசகள்களாகிய நீங்கள் இதனை நம்பலாம் என்ற பாணியில் அறிமுகஞ் செய்த பின்னர்.
“சமூக பண்பாட்டம்சங்களை இலக்கியத்தில் நிலைத்த வாழ்வு பெறச் செய்ய வேண்டும் என்பதில் ஆசிரியர் காட்டிய மிதமிஞ்சிய ஆர்வம் நாவலின் கட்டமைப்புக்கு ஓரளவு ஊறு விளைவித்துள்ளது. தம்பி மரணமானதைக் கேட்டுக் குமுறி அழுதபடி
தம்பிக்குத் தானே கொள்ளிக் கடன் செய்ய முயல்வதுடன் நாவல் நிறைவு பெற்றுவிட அப்பால் பிரேத ஊர்வலம், மயானக் காட்சி என்பன. மிகையாக அமைகின்றன’
"கதை சாதாரணமான கதைதான் வயதான ஆனால் கலியாணமாகாத பெண், மாற்றாந்தாய், பிச்சுட்பிராமணன், தேசபக்தி ஆங்கிலோ இந்தியச்சி மோகங்கொண்ட நவயுகன், மாதர் முன்னேற்றம், ஒருமாமியார், காந்திக்கு ஜே முதலியனவெல்லாம் சமயத்துக்குத் தக்கபடி உபயோகப்படுத்திக் கொள்ளப்படுகின்றன. மனித சபாவத்தை தொடர்கதை படிக்கும் சுபாவம், தொடர்கதை

Page 114
படிக்காத சுபாவம் என இரண்டாகப் பிரிக்கலாம். மேலே என்ன? 'உம் உம் என்று கேட்டுக்கொண்டு போகக் கூடிய ‘குழந்தை' உள்ளங்களை உத்தேசித்தே தியாகபூமி எழுதப்பட்டிருக்கிறது.
இதனை விமர்சனத்தின் எந்தவகையிலும் சேர்க்க முடியாது. நாவலாசிரியரையும், நாவலையும், பாத்திரங்களையும், நுதலிய பொருளையும் நையாண்டி செய்வதாக இது அமைகிறது.
மதிப்புரை இதுவெனக் கூறினால் ஆச்சரியமாக 3(b35356a)(TLD.
“தொழிலாளர்கள் வர்க்க ரீதியாக ஒன்றுபட்டு, முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடத் துணிந்து அணிவகுத்து முன்னேறும் முடிவை உணர்ச்சி புர்வமாகச் சித்தரிக்கிறது வழிபிறந்தது நாவல். அறிவு விழிப்பு ஏற்படுத்தவும், சிந்தித்துச் செயல்புரியவும் உதவக் கூடிய முறையில் இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது” இந்த விமர்சனம் சமூகவியல் நோக்கிலான மாக்சீயய் Li Tito,36}}u_60)Lugo).
பிழைக்க முற்படும் அடிக்கருத்தை மையமாகக் கொண்ட பிழைப்பு என்னும் இக்கதை குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது. புதுமைப்பித்தனிலிருந்து ஜெயகாந்தன் வரை இப்பொருளைப் பல ஆசிரியர்கள் பலகோணங்களிலும் அணுகியுள்ளனர். புதுமைப்பித்தனின் கவந்தனும் காமனும் மஹாகவி இயற்றிய சீமாட்டி, விட்டமுதல் ஆகியவை உடனடியாகவே என் நினைவுக்கு வருகின்றன” இவ் விமர்சனத்தில் ஒப்பியல் நோக்கு வெளிப்படுவதைக் காணலாம்.
“சுந்தர ராமசாமி என்ற தமிழ்நாட்டு எழுத்தாளரின் கதைகளைப் படிக்கும்போது எழும் Jids 3943) J6). D........ என்பவரின் கதையைப் படிக்கும் போது ஏற்படுகின்றது. சமூகட்பர்வையும், உளவியல் நுணுக்கவும், மனித உறவுகளைப் புரிந்துகொண்ட தன்மையும், லலிதச் சித்தரிப்பும் ஒடுங்கு சேர்வதினால் இவரது கதைகளில் கலைநயம் பளிச்சிடுகின்றத" ஒப்பியல் நோக்கு, சமூகப்பார்வை, அழகியல் நோக்கு என்பவை இவ்விமர்சனத்தில் இடம்பெறுகின்றன.
`.................... தொகுப்பிலுள்ள கதைகள் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றன. ஆயினும் அடிநாதமாதப் பெண்விடுதலை பற்றியே முரசறையப் படுகின்றது" கதைகளின் அடிக்கருத்தை - நுதலிய

பொருளை - திறனாய்வாளர் கண்டுபிடித்திருப்பதை உணர்த்துகின்றது.
மூன்றுவகையான இலக்கிய கள்த்தாக்கள் பற்றிப் பேராசிரியர் க.கைலாசபதி குறிப்பிடுகின்றார்.
ஒருபிரிவினர் பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும், துன்பதுயரங்களையும் எதிர்நோக்குவராய் அவற்றுடன் சம்பந்தப்படாமல் இன்ப மூட்டுவதையே எழுத்தின் தலையாய நோக்கமாகக் கொண்டு அதற்கியையக் கற்பனைச் சம்பவங்களையும், கதைகளையும் உணர்ச்சிகளையும் இலக்கியம் ஆக்குபவர்கள்.
இரண்டாவது பிரிவினர் சமுதாய முரண்பாடு களையும் பிரச்சினைகளையும் ஓரளவு நோக்கி அவற்றைத் தமது எழுத்தின் பொருளாகக் கொள்பவர்கள். சமுதாயத்தில் காணப்படும் துன்ப துயரங்களை உணர்ச்சியின் அடிப்படையில் இப்பிரிவினர் பார்க்கின்றார். இவர்கள் தம்மைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை நோக்ககின்றனர். சமுதாய நிலைமைகளைப் பிரதிபலிப்பதாலே போதும் என்ற எண்ணம் இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறது. பிரச்சினைகளைப் பிரதிபலித்தால் போதும் காலப் போக்கில் சமுதாயம் திருந்தும் என்ற நம்பிக்கை இவர்களுக்குண்டு.
மூன்றாவது பிரிவினர் சமுதாயப் முரண்பாடுகளை நுணுக்கமாகப் பிரதிபலிப்பது மட்டுமன்றி அதனை மாற்றியமைக்கும் பணியில் பங்குபற்றுவதுடன் அட்பணி வெற்றி பெறுவதற்குரிய மார்க்கங்களை இலக்கியப் பொருளாகத் துணிந்து ஏற்றுக் கொள்வதும் இன்றைய தேவையாகும் என இப்பிரிவினர் வற்புறுத்துகின்றனர்.
வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது தொழிலாளர் விவசாயிகள் வர்க்கத்திலிருந்து தோன்றும் கலை இலக்கியக் கோட்பாட்டின் காத்திரமான குரல் இது.
மேலே குறிப்பிட்ட கூற்றுக்களைச் சற்றுக் கூர்ந்து நோக்கும்வோம். மனித வாழ்க்கையில் இன்பமும் துன்ப துயரங்களும் கலந்திருக்கின்றன. அழகான ஒவியத்தைப் பார்த்து இரசிக்கிறோம். இசையும் கூத்தும் எம்மை மகிழ்விக்கின்றன. காதலியின் சிரிப்பில் குழந்தையின் மழலையில் எல்லாம் உள்ளத்தைப் பறி கொடுக்கிறோம்.
"மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்க”
என்பது வள்ளுவர் வாக்கு
a fibb 1

Page 115
இன்பத்தைப் போலவே பல்வேறு துன்பா களையும் அனுபவிக்கிறோம். வறுமையைப் போல கொடிய துன்பம் வேறில்லை. இன்னா இளை வறுமை இளமையில் வறுமை இன்னமு! கொடியது. தமது வறுமை நிலையை பெருந்தலைச் சாத்தனர் என்னும் புலவ குமணனுக்கு எடுத்துக் கூறுவதைக் காட்டும் பாட6 ஒன்று புறநானூற்றில் இடம்பெறுகின்றது.
'வீட்டில் அடுப்பு எரியவில்லை சமையல் நடைபெறவில்லை பசியோடிருக்கும் என் மனைவி எப்படிப் பிள்ளைக்குப் பால் கொடுக்க முடியும் முலைக்காம்பின் கண்கூடத் தூர்ந்துவிட்டது முலையை சுவைத்துப் பால்வராததால் பிள்ளை அழுகிறது மனைவி என்னை நோக்க நான் உன்னிடம் வந்தேன்
ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்பசி உழவர் பாஅல் இன்மையில் தோலொடு திரங்கி இல்லி தர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொறும் உழுஉம் தம்மகத்து முகம் நோக்கி நீரொடு நிறைந்த ஈர்இதழ் மறைக்கண் மனையோள் எவ்வம் நேர்ககி நினைஇ நிறப்படர்ந் திசினே நல்போர்க குமண.
இலக்கியம் வாழ்க்கையிலிருந்து தோன்றுகிறது என்றால் அது இன்பக் கூறுகளையும் துன்பக் கூறுகளையும் கொண்டிருத்தல் தவிர்க்க முடியாதது. கைலாசபதி அவர்கள் குறிப்பிடும் முதல் வகையினர் வாழ்க்கையின் இன்பக் கூறுகளை முதன்மைப்படுத்தி இலக்கியம் செய்கின்றனர். உணர்ச்சி கற்பனை கலைநயம் பொருந்தியதாக இருந்தால் அது
அதனைக் கையாளும் முறையும் மனித வாழ்க்கையை மேம்படுத்த உதவினால் அது சிறந்த இலக்கியந்தான்.
இரண்டாம் மூன்றாம் வகை இலக்கிய கர்த்தாக்கள் சமுதாய முரண்பாடுகளையும், துன்ப துயரங்களையும் இலக்கியப் பொருளாக்குகின்றனர். வாழ்க்கைப் பிரச்சினைகளை இலக்கியத்தில் கையாள்கின்றனர். மூன்றாவது பிரிவினர் சமுதாயத்தை மாற்றியமைக்கும் மார்க்கங்களைக்
மூன்றாவது அணியினர் முற்போக்காளர் என முத்திரை குத்திக் கொள்கின்றனர். அவர்களின் இலக்கியப் பார்வை சிறந்தது தான் எனினும் ஏனைய இரு பிரிவினரையும் பிற்போக்கு இலக்கியக்காரர் எனக் கூறுவிடமுடியாது.
2 Saif is abeth

தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி முற்போக்கு முத்திரை குத்திய இலக்கியக் காரரைவிட ஏனைய படைப்பாளிகளின் தொகை பல மடங்காகும் எண்ணிக்கையில் கூட இருப்பதால் அவர்கள் படைப்புக்கள் அனைத்தும் சிறந்த இலக்கியங்கள் என்று நான் கூற முயைவில்லை. அவர்கள் அனைவரது படைப்புக்களையும் புறக்கணிக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து கொண்ட முற்போக்குச் சஞ்சிகைகள் முதலாம் இரண்டாம் பிரிவினரின் ஆக்கங்களையம் பிரசுரிக்கின்றன. அவர்களில் உருவப்படங்களை முகப்பு அட்டையில் போடுகின்றன. மார்க்சீயக் கண்டோட்ட விமர்சகள்களும் தமது வட்டம் மிகச் சிறியது என உணர்ந்து எல்லா இலக்கிய கர்த்தாக்களையும் அரவணைத்து அவர்களின் ஆக்கங்களுக்கு அணிந்துரையும், முகவுரையும் வழங்கிச் சிறப்பிக்கின்றனர். விமர்சனம் செய்யும் போது மூன்றாம் அணியினரைத் துரக்கி உயர்த்த முனைகின்றனர்.
எத்தனையோ இலக்கியக் கோட்பாடுகளை விளக்கியம் விரித்தும் எழுதியுள்ள பிரபல விமர்சகர்கள் நடைமுறையில் அவற்றை மறந்து எழுத்தாளரைப் போற்றுவதிலும் தூற்றுவதிலும் புகழ்வதிலும் கேலியும் கிண்டலும் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு இது பயன்படப் போவதில்லை.
உசாத்துணை நூல்கள் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை
இலக்கியச் சிந்தனை, இலக்கியதீபம் டாக்டர் மு.வரதராசன்
இலக்கிய ஆராய்ச்சி சிதம்பர ரகுநாதன்
இலக்கிய விமர்சனம் பேராசிரியர் க.கைலாசபதி
இலக்கிய சிந்தனை முருகையன்
இன்றைய உலகியல் இலக்கியம் கவிதைச் சிந்தனைகள் தவத்திரு அந்தனி ஜோன்
இலக்கியத் திறனில் பார்வை டாக்டர் மு.வரதராசன்
கொங்குதேர் வாழ்க்கை
திருக்குறள், புறநானூறு, சிறுகதை, நாவல் அணிந்துரைகள், குறுந்தொகை.
Hudsun An Introduction to the study of Lieratûre.

Page 116
வன்னிப் பண்பாட்(
வன்னியர்
வன்னியூர்க் கவிராயராக இலக்கிய உலகில் எழுந்து இடம் பிடித்த எஸ்.எல்.சவுந்தரநாயகம் என்றதொரு படைப்பாளியை இயன்றவரை எண்ணிப் பார்க்கிற முயற்சி இது. வன்னிப் பண்பாட்டுப்
அந்த வகையில் அவர் வாழ்ந்த வன்னிச் சூழலின் வளர்ச்சிப் போக்கையும், பின்னணிகளையும், வரலாற்று நகள்வுகளையும் இனம் காண்பது இதன் முதற் தேவையாகும். அந்த நோக்கிலான அடிப்படையிலேயே இக் கட்டுரையை அமைக்க வேண்டியுள்ளதால் முதலில் வன்னி பற்றி அறிந்துகொண்டு கவிராயரின் இலக்கிய எழில் பற்றி நோக்குவோம்.
குடியிருப்புகளுமாகச் செறிந்து பரந்த பெருநிலம். வனம்சார் வாழ்வினதும் வயல்சூழ் வாழ்வினதும் கூட்டுப் பண்பாடு இந்த மண்ணில் குழைந்து கிடக்கிறது. நிலத்திற்கும், வேலி எல்லைக்கும் மல்லாடி அடிபட்டு அழிந்துபோக இடம் கொடாத ஒரு வாழ்வியற் சிந்தனையின் கொள்ளிடங்களாக அந்தப் பகுதிக் கிராமங்கள் அப்போது இருந்தன.
ஏழ்மையும், இடர்ப்பாடுகளும். கல்வி வாய்ப்பின்மையும் அன்று இருந்தபோதும் கொடுமைக் குணங்கள் அந்தக் கிராமங்களில் கோலோச்சியதில்லை; ஆளை ஆள் அடிமைப்படுத்துகிற அநியாயங்கள் நடக்கவில்லை. பட்டினியால் ஒருவன் DL955, T661 என்ற கதை வன்னியில் அன்று
இருந்ததில்லை.
இயற்கையோடியைந்து எளிய வாழ்வு வாழ்ந்த அந்தக் கால வன்னி மக்கள் வனச் சூழலின் அச்சுறுத்தல்களுக்குத் தாக்குப் பிடித்துப் பழகியதால் உறுதியும் , எதிர் புணர்வும் கொண்டவர்களாக இருந்தனர். இருந்தபோதும் நேயய் பண்புகள் பல் அவர்களின் நெஞ்சங்களில் நிறைந்து கிடந்தன.

ப் பகைப்புலத்தில் க் கவிராயர்
முத்து சிவலிங்கம்
இரும்புப் பாதைகளும் பெருந்தெருக்களும் போடப்படுவதற்கு முன்பே இவர்கள் யாழ்ப்பாணத் தோடும், மன்னாரோடும் தமக்கு முடிந்த அளவு தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தனர். இந்த இடங்களிலிருந்து காட்டுப் பாதைவழியே மாட்டு வண்டிகளில் கொண்டு வந்த பொருள்களை பண்டமாற்றுச் செய்து கொண்டனர். இப்பொழுதும் பண்டம் எடுத்துச் செல்வதென்பது வண்டித் தொடர்களில் கோவில்களுக்கு வேள்விப் பொருள்களைக் கொண்டு செல்வதாக எஞ்சி நிற்கிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் இந்தப் பண்டமாற்றுப் பண்பாடு பாலம் போட்டிருந்தது.
கிராமங்களின் வெளிவருகை
இதையும் கடந்து 1950ம் ஆண்டை அடுத்து தொடர்ந்த பெருங் குடியேற்றங்களான செட்டிகுளம், பாவற்குளம் பெரியதம்பனை, சேமமடு போன்ற gßLIË ம் மேலும் நகரை iuou (8sr6ils D தச்சன்குளம், பண்டாரிகுளம் மற்றும் சிறு குடியேற்றத்திட்டங்களும், இன்னும் கிராம விஸ்தரிப்புத் திட்டங்களும் வவுனியா நகரைத் தொட்டிருந்த வன்னிப் பரப்பின் பழைய கிராமங்களைக் காடுகளின் பிடியிலிருந்து மீட்கின்றன. இந்த மீட்பு ஒரு புதிய கலாசார கலந்துருவாக்கத்திற்கான கருத்தரிப்புக்குக் காரணமாகிறது.
தெருக்களும் சாலைகளும் திறக்கப்பட்டதால் சமூகங்களுடனான தொடர்புகள் புதிதுபுதிதாக உருவாக பழைய கிராமங்களும் புதிய கிராமங்களும் ஒன்றோடு மற்றது உறவு நெருக்கம் கொள்கின்றன. ஆங்காங்கு s}}60ibá685üLjLL- LufTL-3FFT65)6u5(65Lb, sebg5Új பாடசாலைகளில் கல்வி கற்பிக்க வந்த ஆசிரிய சமுதாயமும் தமது பணியின் வீச்சினை இந்த மண்ணில் விதைத்து, புதியதொரு ஊக்கம் பிறக்க
Clio are gif 13

Page 117
வழிசமைத்துவிடும் திருப்பமொன்றும் இங்கே நிகழ்கிறது.
வவுனியா பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சி.சுந்தரலிங்கம், மாவட்ட இறைவரி உத்தியோகத்தராக இருந்த சிறிணிவாசன், மற்றும் அரச அதிபர்களாக இருந்த மாணிக்க இடைக்காடர், இராசதுரை போன்றவர்கள் குடியேற்றங்கள் உருவாகவும், நிலைகொள்ளவும் காரணமான முன்னோடிகள் என்று கருதப்படுகிறார்கள்.
காலத்துக்குக் காலம் பலராலும் பங்கு போடப்பட்ட தமிழீழ சித்தாந்தத்தின் சொந்தக்காரரும் அந்த சுந்தரலிங்கம்தான் என்பது பலருக்கும் தெரிந்த விடயமே. அடங்காப் பற்றாக அறியப்பட்ட இந்த வன்னிப் பரப்பில்தான் அவரது 'அடங்காத் தமிழர் முன்னணியும் அறிமுகமாகியது. சட்ட அறிஞரும், கணித விற்பன்னருமாகக் கண்டு கொள்ளப்பட்ட அந்த மனிதன் காங்கேசன்துறையில் கண்ணாடி விடு கட்டிய காலத்தில், இங்கு வவுனியாவிலும் நிலம் திருத்தி வயல் பெருக்கியதோடு வீடு, தோட்டங்களையும் விஸ்தரித்திருந்தார். மாவிட்டபுரம் ஆலயப் பிரவேச விடயத்தில் அவர் நடந்துகொண்ட முறையினால், "சாதித் திமிர் கொண்ட படு மோசமானதொரு பிற்போக்குவாதி” என்றும் அவள்
சோதனைக் களம்
அந்தக் காலத்தில் எழுந்து ஓங்கிய அரசியற் கருத்தலையில் குடியேற்றத் திட்டங்களும் இடையிடையே பொட்டுப் பொட்டாகவிருந்த பழங்குடிக் கிராமங்களும் எடுபட்டு எழுந்தன. தெளிவற்ற, ஆயினும் ஒரு தீவிரத்தன்மை கொண்ட உணர்ச்சிட்போக்கு உருவாகியது. சம அந்தஸ்து, சமஸ்டி, தமிழரசு, ஈழட்பிரிவினை போன்ற கருத்துத் தோற்றங்களின் சோதனைக் களமாகவும் வன்னி முக்கியத்துவம் பெற்றது. இந்த மண்ணில் சோசலிச, கொம்யூனிச கோட்பாடுகளும் உரைத்துப் t. Fri 335i il it 667.
வந்து குடியேறிய மக்கள், வடபுலத்தின் தீவுப் பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்து சேர்ந்தவர்களாக இருந்தனர். வணிக நோக்கோடு வந்து நகர்ப்புற வர்த்தகத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்களும் கணிசமான தொகையினர். 50களின் இந்த வன்னி வருகை வடபுலத்து வாழ்முறைகளையும், கலாசாரக் கட்டுகளையும் அவரவர் பிரதேச பண்புக்கூறுளையும் அவர்களுடன் கூடவே கொண்டு வந்தது.
| 114 புது வசந்தம்

நீர் கொழும்பு, அனுராதபுரம் போன்ற இடங்களிலிருந்து இன வன்முறையால் அடிபட்டு வந்தவர்களது கலாசாரமும் இருந்த நிலைமைகளோடு இணைந்து கொண்டது.
1948ன் சுதந்திரத்தை அடுத்துத் தொடர்ந்த காலங்களில் வன்னியில் பணியாற்ற வந்த அரச ஊழியர்கள், மற்றும் வியாபாரிகள் குடும்ப வருகையும், இடையிடையே மன்னார் வழிவந்த தென்னிந்திய குடியேற்றக்காரர் வருகையும், மலையக மக்களின் ஒரு கட்ட நகள்வும் ஏற்பட்டுக் கொண்டிருந்த கலாசார மாற்றத்துக்கான
ஏதுக்களோடு ஏற்கெனவே இணைந்து கொண்டன.
வடபுல பிரதேச வேறுபாடுகளைக் கொண்ட பிடுங்குட்பாடுகள் இங்கு வந்து சேர்ந்தவர்களிடம் இருந்தபோதும் அவை பெரிதாகவில்லை. எனினும் தமக்குள் இருந்த சாதி, குல வேறுபாடுகளைப் பத்திரப்படுத்திக் கொள்வதில் சில மட்டங்கள் அக்கறை காட்டிக் கொள்ளத்தான் செய்தன.
இவ்வாறு நிகழ்ந்த சமுதாய சங்கமத்துக்கு முன்பு, வன்னியில் வன்னியன் தவிர்ந்த வேறு குல அல்லது சாதித் தமிழர் சமூகங்கள் இருந்ததாக அறியப்படவில்லை. தேன் சேகரிப்பதிலும், வேட்டையிலும் ஈடுபட்டு வாழ்ந்த வேடர்குடிகள் இடையிடையே சில இடங்களில் இருந்தன. சிறு விவசாய முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்த அவர்கள் இலங்கையின் தென்பகுதி வேடர்களுடன் அடையாளம் காணக் கூடிய ஒற்றுமைகளைக் கொண் டவர்களல்ல. வேடர் கள் என்று கூறப்பட்டபோதும் மற்றைய மக்களைப் போலவே பழக்கவழக்கங்கள் பலவற்றைக் கொண்டவர்களாக இருந்துள்ளனர். இவர்களிற் குறிப்பிடக் கூடிய தொகையினர் மற்றைய மக்களுடன் கலந்தும் விட்டனர்.
வன்னிக் கிராமங்களோடு இடையிடையே முஸ்லிம் கிராமங்களும் அக்கம் பக்கமாக இருப்பதோடு, சிங்களக் கிராமங்கள் சிலவும் இக் கிராமங்களை அண்டி இருந்தன. வெவ்வேறு இனக் குழுவினரான இந்த மக்கள் சமூகங்கள் ஒன்றோடொன்று கலந்துவிடவில்லை னும் நீண்ட காலமாக ஐக்கியமாகவே வாழ்ந்து வந்துள்ளன. இந்தக் கிராமங்களிலுள்ள முதியவர்கள் தாங்கள் அவ்வாறு ஐக்கியமாக வாழ்ந்ததை இன்னும் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தைப்போல அடிமை, குடிமைகளைக் கொண்ட சாதியமைப்புமுறை இங்கு

Page 118
இருக்கவில்லை. அந்த முறையிலான தொழில் மேற்கொண்ட குடும்பங்கள் மிகப் பழைய வன்னிக் குடிமக்களாக அறியப்பட்டதற்கான ஆதாரங்களும் இல்லை.
இரண்டாம் உலகப் போர்க் காலத்திலும் அதற்கு முன்பும் பொருளாதார காரணங்களின் நிமித்தம் வன்னி வந்து சேர்ந்த சிலர் காலட்போக்கில் இங்குள்ளவர்களுடன் கலந்து கொண்டனர். படித்தவர்களிற் பலர் திருமண உறவுகளையும் யாழ்ப்பாணத்துடன் ஏற்படுத்திக் கொண்டனர். இந்தக் கலவையில் வந்தவர்களே புதிய அதிகார பரம்பரை ஒன்றை உருவாக்குவதற்காக, மெல்ல மெல்ல பிந்தி வந்த குடியேற்றக்காரரினதும், மற்றவர்களினதும் கைகளில் அதிகாரம் போகவிடாது பார்த்துக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். சமூக வெறுப்புச் சிந்தனைகளை இரகசியமாகக் கட்டவிழ்த்துவிட்டு அந்தக் குரோதங்களில் தமது அதிகார அறுவடைகளை நடத்திக் கொண்டிருந்தனர். என்றபோதும் சாதாரண மக்கள் இந்தக் குரோதங்களால் கூடிய அளவுக்குப் பலியெடுக்கப் படவில்லை என்றே கூறவேண்டும். எனினும் மடுக்குளப் பண்பாடு மெல்ல அருகி நகர்நோக்கிய வசதிப்பாடுளின் விருப்பும் படிப்படியாகப் பரவியதற்குப் புதிய நிலைமைகள் காரணமாயின.
இயற்கையோடியைந்த எளிய வாழ்வு
பழைய வன்னி மக்கள் கூடுதலாகவே உணவு, உடை, உறையுள் போன்றவற்றைப் பொறுத்த பழக்கவழக்கங்களில் இயற்கையையும், எளிமையையம் விரும்பி எர்டிச் ட்யிடிக்கவர்கள் பணம் பவுண் ஆகியவற்றைக் கூடுதலாகச் சேர்த்துக் கூட்டிக் கட்டிவைத்துக் கொண்டு, தங்கப் பன உளச் சிக்கலில் அவர்கள் மாட்டிக் கொண்டதில்லை. உணவுகூட மிக எளிமைப்பண்பு கொண்டதாகவே இருக்கும். பத்துக் கறியும் பதினெட்டுப் பச்சடியும் வைத்துச் சாப்பிடும் சாப்பாட்டுச் சடங்கில் அவர்கள் நேரம் போக்கவில்லை. ஆடம்பர உடைகளை அணிந்துகொண்டு அலங்காரம் காட்டுபவர்களாகவோ, யார் பெரிய விடு கட்டுவது என்ற போட்டியில் தமது உழைப்பைக் கரைத்துக் கொண்டவர்களாகவோ அவர்கள் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடக் கூடியதாகும்.
நெல்லைப் புழுக்கி புழுங்கல் அரிசியாக்கி சோறு சமைக்கும் நடைமுறை அன்றைய வன்னியில் இருக்கவில்லை. பச்சை நெல்லைக் குற்றிக் கொழித்தெடுத்த முழுத்தவிட்டு அரிசிச் சோறும்,

கீரை , காய்கறிகளோடு குளவாழைமீன் கறியும் சமைத்து, சுவை மனக்க கூடி அமர்ந்து குதுகலித்து உண்டவர்கள். அந்தப் பச்சையரிசிப் பண்பாடு அவர்களுடையதாகும். கருநாகின் தீம்பாலும், கட்டித் தயிரும், காட்டுத் தேனில் ஊறிவெந்த இறைச்சியோடு, இன்னும் பல்வேறு பழவகைகள், கிழங்கு வகைகளையும் உண்ணும் உணவுப் பழக்கமும் இவர்களுடையதுதான்.
சிறியதும் பெரியதுமாக காட்டு மரங்கள் கொண்டு கட்டப்பட்டு, வைக்கோலால் வேய்ந்த அழகிய மண்குடிசைகள் பழைய வன்னியின் பண்பாட்டு மனைகளாக விளங்கின. இன்றும் அவ்வாறான குடிசைகள் கிராமங்கள் சிலவற்றில்
வன்னிப் பழங்குடி மக்களின் வாழ்க்கை இதுவாக விருக்க, 50களில் வந்து குடியேறியவர்களின் வாழ்முறை இவர்களிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதாக இருந்தது. இவர்களது உணவுப் பழக்கம் கூடுதலாகப் புழுங்கலரிசி விருட்பம் கொண்டதாகும். பச்சையரிசியைப் 'புக்கை” ஆக்குவதற்கும், வீட்டுப் பொங்கல் மற்றும் கோவிற் பொங்கல், பூசைகளுக்குமே சிறப்பாக உபயோகிப் பவர்களாக இருந்தனர். ஆற்று மீனையோ, குனத்து மீனையோ அதிகமாக விரும்பி உண்ணாதவர். களாகவும், கடல் மீனோடு இறைச்சி, மரக்கறி
கூடுதலாகப் பயன்படுத்துபவர்களாகவும் இருந்தனர்.
இப்படி இரு கூட்டத்தாரிடையேயும் வேறுபட்டிருந்த பழக்கவழக்கங்கள் படிப்படியாக ஒன்றிணைந்து கொன்கின்றன. ஆடு, கோழி இறைச்சி
ளோடு காட்டிறைச்சி, கடல்மீன், குளத்துமீன் யாவும் கலந்து கொள்கின்றன. புழுங்கலரிசி, பச்சையரிசி எல்லாமே விருப்பத்துக்கேற்றபடி ருசிக்கப்படுகின்றன.
கவிராயர் எழுகிறார்
வன்னியின் சமுதாய மாற்ற உருவாக்கத் தோடு, அதை உணர்ந்தபடி சிந்தித்து, சமூக மேலெழலுக்கான பங்களிப்புகளைச் செய்யும்
என்றதொரு மனிதர் தக்க முறையில் அடையாளம் காணப்பட வேண்டியவராகிறார். இருந்தவர்கள், வந்தவர்கள் என்றுள்ள பலரிடையேயும் முன்னெழுந்து நின்றவர்களில் பலர் தம்மைப் பற்றியும், தமது வாழ்வு நலம் பற்றியுமே சுயநல மையத்தில் நின்று சிந்தித்துக் கொண்டிருக்க, இந்த
{புது வசத்தம் 15

Page 119
மனிதர் வித்தியாசமானவராக சமுதாய, அரசியல், பொருளாதார விடுதலைக்காக வெல் லாம் குரலெழுப்பும் விடுதலைப் படைப்பாளியாக நிமிர்கிறார். காடடர்ந்திருந்த செட்டிகுளப் பகுதிக் கிராமமான இலுப்பைக் குளத்தில் வாழ்ந்துகொண்டு, அண்மையிலுள்ள மதவாச்சியோடும், செட்டிகுளத் தோடும், வவுனியாவோடும் தொடர்புகளைப் பேணிக்கொண்டு, அங்கு படர்ந்திருந்த பல் சமூகப் பண்பாட்டை உள் வாங்கியபடி கவிராயர் சிந்தனை உயர்ச்சி பெறுகிறார் என்றும் கூறமுடியும்.
பலருக்கும் தெரிந்தவராகக் கவிராயர் இருந்தபோதும், திரையிடப்படல் காரணமாக மறைந்து கிடந்த நிலையில் கண்டுபிடித்துக் கொண்டு வந்து வெளிக்காட்ட வேண்டிய அவசியம் ஒன்று இப்போது உருவாகியுள்ளது. வன்னியூர்க் கவிராயர் என்கிற சவுந்தரநாயகம் முன்கூறிய சூழலுக்குள்ளால் இப்பகுதியின் முந்திய முதல் எழுத்தாளராக அரங்கேறுகிறாள். வளர்ச்சியடைந்து, வன்னிக்
தனி மனிதர் அவர். கவிராயர் தம்முடைய வாழ்க்கையை ஒரு புரட்சிகர சோதனைக்கு உட்படுத்தி வாழ்ந்தவர் என்பது அவரது வாழ்க்கைட் போக்குகளையும், கருத்து நோக்குகளையும் புரிந்து கொள்வதன் மூலம் கண்டு கொள்ளப்பட வேண்டிய 6ĥLiu Ft DFT (g5ŭD.
ஆறுதலான ஆற்றோட்டம்போல இருந்த அமைதிச் சூழல் 56ஐத் தொடர்ந்து நிலைகுலைந்து அலைப்புண்ணத் தொடங்கியது. மொழியும், மதமும், மற்றைய குறுகிய எல்லைகளும் குறுக்கிடாத ஒரு மனிதநேயப் பண்பாட்டுப் பகைப்புலத்துள் புதிய நோய் ஒன்று புகுந்து கொள்கிறது. நகரங்களில் எழுந்த ‘சிங்கள' என்ற பேரின மனோபாவ நோய்க்குறி சில கிராமங்களுக்கும் சொறி சிரங்குபோலப் பரவியது. இதையடுத்து தமிழ் என்று எழுந்து, பேரினவாதத்துக்கு எதிர்ப்பூசி போட எண்ணிய சிந்தனை பக்கவிளைவுகள் பலவற்றால் காலப்போக்கில் தடம் மாறிக் கொண்டது. இப்படி முற்றிய சிங்கள' 'தமிழ் நோய் (3LDITSFLDIT60T விளைவுகளை இரு சமூக மக்களிடையேயும் ஏற்படுத்தி வெற்றிகாண முடியாததொரு அடிபட்டு அழியும் யுத் தத்துக் குள் அவர்களைத் தள்ளிவிட்டுள்ளது.
இவ்வாறானதொரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு அதன் அவலத்தை, அநீதியை, கொடுமையை எழுத்தில் வடிக்க வன்னியூரார் இல்லையென்றாலும், சமுதாய உணர்வுமிகுந்த அவரை அவரது இலக்கியப் பயணத்துக்கூடாக
1 16 igál slajšji
 
 

நுழைந்து நோக்குவது ஒரு இலக்கியக்
இலக்கிய உலகு நீண்ட காலமாக இதனது இலக்கிய நிகழ்வுகளிலோ மலர் இதழ்களிலோ இந்தப் பெயரை வெளிக் காட்ட மனம் கொள்ளவில்லை. வவுனியா பிரதேச இலக்கிய விழா மலர் 95 கலைமருதம் என்ற பெயரில் வெளிவந்தது. வன்னியூர்க் கவிராயன் பற்றி ஒரு வார்த்தைகூட அதில் இல்லை. "வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழா மலர் 96" மருதநிலாவாக வந்தது. இதிலும் எல்லாம் தெரிந்த எழுத்தாள்கள் எவரும் இவரைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. ஏன் பேசவில்லை? என்று தெருக்களில் தொடுக்கப்பட்ட கேள்வி மருத நிலாவை வன்னியூர்க் கவிராயர் அரங்கு' என்று எழுதப்பட்ட சேலை தொங்கிய அரங்கில் வெளியிட வைத்தது. அப்பொழுதுகூட அரங்கின் அறிஞர் எவர்கூட வன்னியூரார் பற்றி அறிய அக்கறைப்படவில்லை என்பது ஆச்சரியப்படத்தக்கதுதான்.
இந்தப் "பம்மாத்துப் பகுமானத்தைக்” கண்டித்து நவமணி 02.1197 திகதிய வார இதழின் வன்னிவாசல் பகுதியில் "வன்னியூர்க் கவிராயர் அரங்கில், மருதநிலா மண்டபம்" என்ற தலைப்பில் முனைவனின் கட்டுரை வந்தது. இதன் பிறகுதான் முன்னைய இரண்டு மலர்களின் ஆசிரிய குழுவிலிருந்தவர்களால் வவுனியாவும் இலக்கிய வளர்ச்சியும் என்று 'கிண்டிக்கிளறி அண்மையில் எழுதப்பட்ட நூலில் வன்னியூர்க் கவிராயர் வேறுவழியில்லாத நிலையில் வவுனியாவின் னோடி எழுத்தாளர் வன்னியூர்க் கவிராயர் என்று பேசப்படுகிறார். எனினும் அவர் பற்றிய முக்கியத்துவம் அதில் பெரிதாக விரிக்கப்படவில்லை. வேண்டாதவராக இருந்தவரை வெளிக்காட்ட வேண்டிவந்துவிட்டதே என்ற மனோநிலையே இதற்குக் காரணமாக
இப்படி ஒரு நிலைக்குள்ளால் வெளித் தெரியத் தொடங்கியுள்ள வன்னியூர்க் கவிராயன் ஒரு சாதாரணர்தான். ஆனால் அவர் ஒரு அசாதாரண படைப்பாளி. வெங்கலச்செட்டிகுள கிழக்கிலுப்பைக்குளம் கிராமம் கவிராயரரின் தாயகம். 04.04.1921இல் பிறந்த அவர் வன்னிப்
மண்ணின் வித்தாய்ப் புதைந்தவர். கவிராயர் என்ற பெயரோடு 'வன்னியூர்’ என்ற சொல்லை முதனிலைப்படுத்தியதன் மூலம் அவருக்குள்ள வ்ன்னிமண் பற்றை திெந்துகெர்ள்ள முடியும்

Page 120
கவிராயரின் எழுத்து வேள்வி
காட்டு மாங்குளத்துக்கு அண்மையில் ஒரு மாட்டுவண்டித் தடத்தினால் மட்டுமே அன்று இணைக்கப்பட்டிருந்த உள்ளொதுங்கிய கிராமம் அது அங்கிருந்துகொண்டேதான் தமது எழுத்து வேள்வியை அவர் தொடர்ந்து நடத்தினார். கிழக்கிலுப்பைக்குளம் கிராமசபை உறுப்பினராகி, உபதலைவராகவும் இருந்துகொண்டு தமக்கு முடிந்த அளவில் சமுதாயப் பொதுப் பணிகளை மேற்கொண்டார். கால் நடையாகத் திரிந்து வைத்திய சேவையை அயல்கிராமங்களுக்கும் வழங்கினார். அவரது அரிய பணிகளை அந்தக் கிராமத்தவர்கள் இன்றும் நினைவு கூருகிறார்கள்.
மன்னர் கிறிஸ்தவ பாடசாலையில் தமது கல்வியைப் பெற்றுக்கொண்ட கவிராயர் 1953ல்தான் தமது இலக்கியப் பணியைத் தொடங்கியதாக 'ஈழத்துக் காவிய தீபகம்’ என்ற தலைப்பில் வெளிவந்த அவரது சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். கவிதைகளையும், சிறுகதைகளையும் வேறு கட்டுரைகளையும் படைத்துள்ள கவிஞரின் எழுத்துக் களங்களாக வீரகேசரி, சுதந்திரன், ஈழநாடு, விவேகி, கலைச்செல்வி ஆகிய இதழ்கள் இருந்துள்ளன.
எழுதவேண்டும் என்ற கொள்கையுடையவர்களில் அடியேனும் ஒருவன் என்று அவர் கூறுவதன் மூலம் தனித் தனிக் கொள்கை முகாம்களுக்குள் தம்மை அடையாளம் காட்டும் எழுத்தாளர்களிலிருந்து விலகிக் கொள்கிறார். இந்தப் போக்குக்கு அவர் வாழ்ந்த குடும்ப, சமயப் பின்னணியின் செல்வாக்கும், குறிப்பாக அவர் பெற்ற மறைக் கல்வியின் தொடர்பும் காரணமாக இருக்கலாம். அவரது தந்தையார் சந்தியோகுப்பிள்ளை அவர்கள் மன்னார் நாடக பரம்பரைட் புலவராக விளங்கியவர். எம்பிரதோர் டிராமாவை முறைப்படி ஒழுங்கமைத் தவர் என்பது நோக்கத்தக்கதாகும்.
வன்னியூரார் இப்படியொரு கிறிஸ்தவ குடும்பப் பின்னணியைக் கொண்ட கிறிஸ்தவராக இருந்தபோதும் அவர் தொடர்பு கொண்டிருந் 7- Warr வெவ்வேறு சமயச் சூழலையும் கருத்து நிலைகளை யும் கொண்டிருந்ததால் அந்தப் பாதிப்புகள் பலவும் அவரது எழுத்துக்களில் அடையாளம் காணப்படக் கூடியனவர்க உள்ளன. இந்துக் கடவுளர் மீதும் அவர் பாடல்கள் பாடியுள்ளார்.
 

கவிதைகள்
வன்னியூர்க் கவிராயர் யாத்த கவிதைகள், தொகுப்பு வடிவம் ஒன்றைப் பெறுகிற வாய்ப்பை அடையாதது இலக்கிய உலகத்துக்குப் பெருத்த ஏமாற்றம் தான். அப்படியொரு பணியைச் செய்திருக்கக் கூடிய பொருள் வளம் கவிராயரிடம்
ந்தக் காலத் டுத்ே ச் சூழ்ந்திருர் வன்னியின் இலக்கியக் களத்தில் தம்மைத் தலையாளிகளாகக் காட்டிக் கொண்ட தனிநபர்களே
a: பக்களோகூட a 'iufiର୍ଣ୍ଣ அக்கறை எதுவும் காட்டவில்லை. அவருக்கு உதவும் எண்ணம் கொள்ளவும் இல்லை.
இலங்கையில் வெளிவரும் தமிழ்த் தேசிய தினசரிகள் உட்பட பல்வேறு பத்திரிகைகளிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்தன. அவ்வாறு அச்சில் வர் ம் இன்னும் வரா க இருந் வேறு கவிதைகளையும் படித்தறிந்து கவிராயரின் கவிப் பரப்பைக் கண்டுகொள்ள விரிவான முயற்சி தேவை. சிரமப்பட்டேனும் அவற்றைச் சேகரித்துத் தொகுத்து ஒன்றுபடுத்தினால் மட்டுமே அவரது ås is ப் பரிமானத் ம் இனம் காணுவது எளிதாகும். இதற்கு முன்பாக, இப்பொழுது பார்வைக்குக் கிட்டியுள்ள சில கவிதைகளை வைத்துக் கொண்டுமட்டுமே அவரது
கவிராயரது கவியூற்று எங்கிருந்து
廷必
羲
அவரது படைப்பு மனட்பங்கு *#if:: பரிணாமக் கோட்பாட்டுத் தடத்தில் அவரது கவிதா சிந்தனை கால் பதித்துச் செல்கிறது. இதுதான் கவிதை,
உப்பரிகை மீதுயர்த்தி வைத்தாய்! வாடிக்கையாய் மரப்பட்டை தரித்தோனை வண்ண உடைகள் அணிய வைத்தாய்.”
எனத் தொடங்கி
"எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று எல்லோரும் இன்றும் ~ என்றும் வாழ்ந்திட "நான்" - "நாம் ஆகச் செய் சிந்தனையை”
வசந்தம் 1 17

Page 121
என்று சிந்தனைக்கு விண்ணப்பம் செய்கிறார். பாரதி வழியில், ஒரு குலச் சமுதாயமொன்றைக் கான விளையும் சிந்தனையாளராகக் கவிராயர் காணப்படுகிறார். ‘நான் அழிந்து ‘நாம் என்ற பொதுமைப் பண்பாடு உருவாக வேண்டும் என்பதுதான் அவரின் குறிக்கோளாக இருந்தமை இதில் தெரிகிறது.
வேறொரு கவிதையில் “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி” என்று மற்றவர்களைப்போல் கூறி பகுத்தறிவோடு பகைமை கொள்ளது கொஞ்சம் பக்குவமாகவே தமிழின் கால மூட்பைக் கணக்குப் LIFTidb353rf.
"கன்னித் தமிழே காலம் கணிக்கவொண்ணா முன்னைத் தமிழே இவ்வுலகின் மூத்த இயற்கைத் தமிழே
என்று தொடங்கி நன்நயமார் வாழ்வு தந்தும் நானிவ்வுடலைவிட்ட பின்னும் புகழுடம்பில் பெருமைதரும் நற்றமிழே.
என்று பாடிக்கொண்டு தொடர்ந்து போகிறார்.
தாய்நாட்டு அஞ்சலிப் பாடலில்
"தாய்வயிற்றில் தவநிலையிலிருந்து தள்ளித் தான்குதிக்க ஏந்தித் தாலாட்டு மண்ணே சேயாகிச் சிரித்து விளையாடித் தின்றிட்ட அமுத மண்ணே இனித்த மண்ணே. என்று பாடி
அவருக்குத் தாய் மண்ணோடிருந்த இரத்த உறவை வேறெந்தக் கவிஞனும் வெளிப்படுத்தாத முறையில் விளங்கப்படுத்தியுள்ளார். "சேயாகிச் சிரித்து விளையாடித் தின்றிட்ட அமுத மண்ணே! என்ற அடிகளில் அந்த உணர்வு உச்சம் பெறுகிறது.
கவிராயர் கிறிஸ்தவராயினும் கதிர்காமக் கந்தனிடம் பல்வேறு கோரிக்கைகளைப் பாட்டாக விடுகிறார். கோரிக்கைகள்;
'எண் கவிதை நீடூழி வாழவேண்டும் எனது புகழ் மலை விளக்காய் இலங்க வேண்டும் பொன்வேண்டும், பொருள்வேண்டும், பூமி வேண்டும் பூவை தெய்வானை - வள்ளி சகிதம் நின்னை கண்கள் சிந்தை பூரிக்கக் காணவேண்டும் காயத்திற் பிணி மூப்புச் சாக்காடற்ற குன்றாத எழிலிளமை வேண்டும்ஞ இந்தக் குவலயத்தில் பிறப்புடனே முத்தி வேண்டும்
இன்னவைகள் கேட்கின்றேன், சம்பிரதாயம் இவைகளை நீ தந்தாலும் தராவிட்டாலும் உண்ணிடத்தில் யான் கேட்பதொன்றேயொன்று உடல் பொருள் ஆவி ஆத்மாவில் மேலாம் என்
18 a8áFÅ Sò

அண்ணைமொழி இனியமொழி தமிழ் ஈழத்தில் அரியணையில் அனவரதம் வாழ வேண்டும் நண்தயமார் இவ்வரத்தைத் தரத்தான் வேண்டும் நானிலத்தோர் போற்று கதிர்காமக் கந்தர
ஈழத்தில் அன்னை தமிழை அரியணை ஏற்றுவோம் என்ற இன மொழிச் சிந்தனை எழுச்சி பெற்ற காலத்தில் அவ்வாறு சிந்தனைத்
த்தில் பிறப்புடனே முத்தி வேண்டும் என்ற அடியில் இந்த உலகத்திலேயே அமர நிலை எய்தி வாழும் அவாவினை வெளிப்படுத்தி பூவுலகைப் பொன்னுலகாக்கப் புறப்படுகிறார்.
கடவுட் காட்சியில் கண்களும் சிந்தையும் ஒன்றிப் பூரித்து குன்றாத எழிலிளமைக் கோலத்தோடு பிணி, மூப்புச் சாக்காடற்ற நித்திய வாழ்வு வேண்டியும் கதிர்காமக் கந்தனிடம் வரம் கேட்கிறார் 8ŵyfFujir.
இவ்வாறு வரும் கவிதைகள் சிலவற்றில் அவரது கருத்துப் பின்னணிகளை உற்றுப் பார்க்க முடியும், கவிதை நூலை வெளியிடவில்லை என்றாலும் கவிதையில் சாதனை படைத்த சந்தோஷம் அவருக்கு இருந்தது. சிக்கலான
அனாயாசமாக வெளியிட்டுவிட்ட திருப்தியும் அவருக்கு இருக்கிறது. ஈழத்துக் காவிய தீபக முன்னுரையில் இந்தத் திருப்தியை அவர்
வித்தாரம் ஆகிய மூவகைப் பாவினங்களையும் சரளமாகப் படைத்தும்விட்டேன். கஷ்டமான இனமாகிய சித்திரகவிப் பாவினத்தையும் தேர்ந்து நாகபந்தம், சக்கர பத்தம், நீரோட்டம் அன்ன கவிதைகளையாக்கும் புலமை விளையாட்டுக்களையே அனாயாசமாகச் செய்தும் விட்டேன்”
கதைகள்
கவிராயர் என்று பெயரெடுத்த வன்னியூரார் கவிதைத் தொகுட்பொன்றை முதலில் வெளியிடாது சிறுகதைகளின் தொகுப்பொன்றை வெளியிட்டு, கதைராயராகவே முதலில் நூலரங்கேறுவது வியப்புக்குரியதுதான். கதை வடிவங்களையே கூடுதலான வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம் அந்த வகையில் அவர் தமது கதைகள் சிலவற்றைத் தொகுத்து "ஈழத்துக் காவிய தீபகம்” நூலை வெளியிட்டார்.

Page 122
சிறுகதைகளின் தொகுப்பாக இருந்தபோதும் கதைத் தன்மைக்கான தலைப்பிடாது, கவிதைக் குணமுள்ள தலைப்பையே நூலுக்கு இட்டுள்ளார். அவரது கவிதை மனமே அதற்குக் காரணம். சிந்தனையிற் சிறந்த ஒரு கவிஞன் எழுதிய கதைகள் என்பதால்,
செல்கின்றன.
கதைகள் தமிழ் மக்கள் வாழ்கிற பிரதேசப் jilbési த்திலுமே படிந்து அந்த வாழ்ச் கூறுகளை வெளிக்காட்டுபவையாக இருப்பதுடன் வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் அனைத்திலுமே கைபோட்டுக் கதைகள் சொல்கின்றன. பாத்திரங்கள் அந்தந்தப் பிரதேச மொழி வழக்கில் அட்படியே பேசுகின்றன. சாதாரண வாழ்வின் ஏழ்மையும், இதய நெருடல்களும், முனகல்களும், ஏக்கங்களும் உள்ளவாறே அந்தக் கதைகளில் காட்டப்படுகின்றன. அவரது நூலில் அவர் சிறிதும் பெரிதுமாக பதினைந்து கதைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். மொத்தத்தில், விடுதலை அவாவுள்ள ஒரு தேடல்காரனின்
விற்பனைக் கருத்தில் அவர் கதைகளை உருவாக்கவில்லை என்பதைக் கதைகளைப் படித்த மாத்திரத்தே உணர்ந்து கொள்ள முடியும். எந்தச் சிரமமுமில்லாமலே இயல்பான ஓட்டத்தில் சம்பவ வளர்ச்சிட்போக்கோடு, பாத்திரங்களை நகர்த்தி, நடத்திச் செல்வதில் கவிராயர் கதைராயராகவே மாறிவிடுகிறார்.
வெள்ளிதிசை, தெய்வப் சிக்க பொங்கர் பரிசு, சவால், விளைநிலம், மயானப் பிசாசு, கள்வத்தின் முடிவு, தகரவிளக்கு, அந்தக் காரணம், அழுங்குப்பிடி, தியாகச் சுடர்கள், வேலப்பன், பதவித் தேர்வு, புத்தாண்டுக் கொண்டாட்டம், இரு மனிதர்கள் ஒட்டப் பந்தயம் ஆகிய தலைப்புக்களில் அந்தக் கதைகள் உருவாகியுள்ளன.
நூலின் (pg56) ft 6ig 3560) 35 u ft 60f வெள்ளிதிசை மட்டக்களப்பு மண்ணில் வேரோடிபுள்ளது. மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த ஒரு குடும்பத்தில் முன்னும் பிள்ளைகளைப் பெற்றதாய், இன்னும் ஒரு குழர் ப் பிரசவிக்க இருக்குப் நாள் அது. அந்தப் பிரசவத்துக்கான ஆயத்த" மெதுவும் அந்த வீட்டிலில்லை. தலைக்கோழி கூவும் போது நூர்ந்துகொண்டு போகும் லாம்புக்குவிட எண்ணை இல்லை.
“மூணாங் கோழியும் கூவுது தேத்தண்ணிக்கு
சீனி தேயிலை இல்லையாடி கனகம்மா?

“ஒள்ளுப்பம்போல சக்கர இருக்கு. தண்ணி வைக்கன் தொட்டிற்றுக் குடிட்பம்"
இவ்வாறு கண்ணம்மாவின் பிரசவத்துக்காகக் கூடியிருந்த அயலவப் பெண்களைப் பேசவைத்து சுப்பையாவின் வீட்டு நிலையை விளங்க வைத்துவிட்டு, ஒரு அடிமட்ட நிலையிருந்த கிராமத்துப் பிரசவத்தைப் படம் பிடித்துக்
மெருகூட்டியுள்ளதும் காணக் கூடியதே.
மருத்துவிச்சி தங்கநாச்சியோடு சுதேச
த்தியர் அச் பற்றுப் பரமானந்தர், மாந்திரீகள் கோளாவில் தம்பிப்பிள்ளை, சில்லறை வியாபாரி நிந்தவூர்ப் பக்கிரிக்காக்கா இப்படிப் பலரையும் கதாசிரியர் சுட் வின் வீட்டுக்குக் கொண்டுவர் விடுகிறார்.
வந்த வைத்தியருக்கு கண்ணம்மாவின் பிரசவநோவு பற்றி மருத்துவிச்சி கூறும் முறை
அனாதியானது.
"தங்கநாச்சியக்கா! எப்ப நோய் புடிச்ச?” இப்ப என்ன பருவத்தில இருக்கு?" இது வைத்தியரின் கேள்வி.
"நேத்து மால கருக்கப் புடிச்ச நோ பரிசாரியார். விடிய விடிய சண்டி தோவாத்தான் நிண்ட தலக்கோழி கூவுறதியாலம் பன்னிக்குடம் பொழிஞ்ச. அதோட உமைக்கு மன் வைச்சாய்பில நோ நிண்டு போயித்து முருக்கம் பூவும்
பாருங்களின். பாத்து மருத்தக் குடுங்க. ஓங்களுக்கு நாங்க என்னத்தச் சொல்லிற.”
இப் படி, பாத்திரங்களை அவரவர் 夺 செய்யவைத்து, 鬱葛 ariacariei இயல்பான மொழியில் பேசவைத்து
நாலு பெண்களுக்குப் பிறகு ஐந்தாங்கால் ஆண் பிள்ளையான இந்தப் பிள்ளையை வெள்ளிதிசையில் பிறந்ததாகச் சோதிடமும் குறிக்க வைத்து, இளஞ்செழியனின் தகப் பன் சுப்பையாவையும் அதை நம்பவைத்து, அவனைப் புதிய மனிதனுமாக்கி விடுகிறார் 96).
தீவிர உழைப்பினாலும், திட்டமிட்ட வாழ்க்கை முறையரிலும் 'வாரக்காரன்’ என்ற
aari sib !

Page 123
நுகத்தடியிலிருந்து, போராட்டமில்லாமலே விடுதலையடைந்துவிட்ட சுப்பையா இப்பொழுது "யாருக்கும் அடிமையில்லாத, யாரையும் அடிமை கொள்ளாதசுதந்திர மனிதன்” இந்தக் கதைக்குள் ஒரு கிராமத்து வாழ்வின் இயக்க அசைவுகள் நிழலாட்டம் காட்டுகின்றன.
மயானப்பிசாசு கதையில், மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக மாறிவிடுவதையும், சுடலையில் ஒரு கடதாசித்துண்டு காற்றிலாடிக் கொண்டபோது இரவில் அந்த வழியால் போனவர்கள், அவர்களுக்குத் தெரிந்த அந்த மாந்திரீகன் சடையாண்டியைச் சுட்ட இடத்தில் மயானப் பிசாசு கூத்தாடுவதாகவும் நம்பிக்கைகொண்டு நடுநடுங்கிய பித்தலாட்டத்தின் மூடத்தனத்தையும் கிழித்தெறிந்து விடுகிறார். மலையகத்தைப் பகைட்புலமாக் கொண்டு அந்த மக்களின் மாய, மந்திர, பேய், பிசாசு நம்பிக்கைகளின் பின்னணியை மையமாக வைத்து எழுதிய கதைதான் இது.
கதை நகள்கிறது.
"மாயனத்துக்கு இன்னும் ஒரு பெர்லாங் தூரமிருக்கையில். என்னை எதிர்நோக்கியபடி மயானத்துப் பக்கமிருந்து வெளிச்சமின்றி றொக்கட் வேகத்தில் பைசிக்கிளிலில் வந்த ஒருவர் என்மீது மோதிவிட்டார். இருவரும் ஏககாலத்தில் விழுந்தெழும்பினோம்.அவர் நல்லறிவில்லாத குழப்பநிலையில்;
”சொடலையில் சடையாண்டியச் சுட்ட இடத்தில கூத்தாடிக்கிட்டு நிண்ட நீ என்னய அடிச்சுப்பிட்டியே! நான் பொளைக்கமாட்டன். இம் புட்டுத் துரத்துக்குத் தெஈரத்திவந்து அடிச்சிட்டியே.” என்று அவலக்குரல் எழுப்பியவராகவே நின்றார். கண நேரந்தான். தன்னும் சயிக்கிளில் ஏறி, வந்த வழியே திரும்பியோடி மறைந்துவிட்டார். என்னைப் பற்றிச் சிறிதும் சட்டை G|Fu Li6ifeo606).
போகிறீர்கள்? யார் நீங்கள்?" என்னுை கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் தரவில்லை. சம்பந்தா சம்பந்தமின்றி,
"சடையாண்டியோட கம்புளி வைரவன்” என்றுமட்டும் அடிக்கடி சொன்னார். எதிர்பாராத விதமாக வந்து என்னுடன் மோதியவருக்குப் படுகாயம். அவர் முகம் குப்புற விழுந்தெழும்பினர். அவர் பைசிக்கிள் பிழையுறவில்லை என்பது அவர்
120 புது வசந்தம் !
 
 

மீண்டும் பைசிக்கிளில் ஏறியோடினதின் மூலம் அறிந்து கொண்டேன்.
நல்லவேளையாக எனக்குக் காயமெதுவும் ஏற்படவில்லை. எனது பைசிக்கிள் கொக் - வில் வளைந்துவிட்டதால் ஓடமுடியவில்லை.
இந்த மனிதர்தான் பழைய பாடையொன்றிற் சிக்கிக் கிடந்து பலரையும் பயப்படுத்திப் பிசாசுக்கூத்தாடிய அந்த வெள்ளைக் கடதாசியைத் துணிச்சலோடு சுடலைக்குள் போய் துக்கி எறிந்து, அதைத் தகனமும் செய்தவள்.
மலையகத்தின் பேச்சு வழக்கில் எல்லாப் பாத்திரங்களும் பேசிக் கொள்கின்றன. மலைநாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் எழுதியதுபோலவே பேச்சுமொழி பிசகாமல் எழுதப்பட்டுள்ளமை இதன் முக்கிய அம்சமாகும்.
தியாகச் சுடர்கள் என்ற கதை மன்னார் மாவட்டத்திலுள்ள எருக்கிலம்பிட்டியைக் களமாகக் கொண்டது. ஒருவருக்காக மற்றவர் வாழ்ந்த காதலர்களின் கதையாகப் பின்னப்பட்டுள்ளது. ஸ்லிம் சமூகத்துப் பாத்திரங் க அந்தக் கதை மாந்தர்கள் காட்டப்படுகிறார்கள்.
இஸ்லாத்தின் நம்பிக்கைகளை நன்கு தெரிந்து கொண்டு முறை பிசகாமல் அவற்றை மதித்துக் கொண்டே அந்தக் கதையின் சப் w seoraAr 4 Arw அசைத்துக்கொண்டு செல்ல வைத்துள்ளார் எழுத்தாள்.
கதைபோகிறது;
“மழையென்றால் அசுர மழை. சூரிய, சந்திர, நட்சத்திரங்களனைத்துமே கரைந்து தன்னிராகிக் கொட்டுவதைப் போன்ற பெரு மழை 360)Luig6üsus LD60)p!"
"ஒன்றுபட்டிருந்த வானம் பூமியைப் பிரித்துவைத்து, நீரைக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் நாமே உயிரைக் கொடுத்தோம்” என்று திருக்குள் ஆனில் இறைவன் கூறியபடி.எல்லா உயிர்களுக்கும் ருளாயும், மூலப் பொருளாயும் ※芬菸 ŠSðőGD &F&E6) சீவராசிகளும் நீராகவே மாறி, முடிவுதான் எய்தப்போகிறதோ?”
- அட்துல் காதரின் சிந்தனைத் தொடரை
"இந்தாங்க -1 என்ற விளிப்புச் சொல்லால் அறுத்த பரீதா பேகம், பிளாஸ்கில் இருந்த சூடான கோப்பியை ஒரு கப்பில் ஊற்றிக் கொடுத்தாள்"

Page 124
அவர்களது குடும்ப வாழ்வின் ஓட்டத்தைக் கதாசிரியர் காட்டும்போது, "மலட்டுப் பெருங்காயம்
போன்ற நாகரீக மாத்திரைகளையோ சதா விழுங்கிக் கொண் டிராமலும், சத்திர சிகிச்சையை மேற்கொள்ளாமலும்.குடும்பக் கட்டுப்பாட்டு நிபுணர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமலும் இயற்கையோ டொட்டிய வழியில் மனக் கட்டுப்பாட்டை அனுசரித்து ஆஸ்திக்கோர் ஆணும் ஆசைக்கோர் பெண்ணும் பெற்று இன்ப வாழ்க்கை நடத்தினர்.”
பெருவெள்ளத்துக்குக் காரணமாகி பலநாள் பெய்த பேய் மழை நின்றபோது; மறுநாள்
பல தினங்களாக அஞ்ஞாதவாசம் புரிந்த சூரியன் கருமேகத் திரையைக் கிழித்த வண்ணம் தனது ஆயிரம் பொற்கிரணங்களைப் பரப்பியவனாக, குணதிசையிலே கம்பீரமாகத் தலை நிமிர்ந்து பவனி வரத் தொடங்கினான்.
காற்று, மழை, அனைத்துமே கப் சிப்”
வெள்ளத்திற் சிக்குண்ட காதலர்கள் ஒருவர் மற்றவரைக் காட்பாற்றத் தம்முயிரைத் தியாகம் செய்ய ஆயத்தமானபோதும், ஒருவரை மற்றவர் இழக்காமலே இருவரும் இந்தக் கதையில் கரைசேர்க்கப்படுகிறார்கள்.
"சூறாவளி, கடல்கோள், பெருவெள்ளங் களினாற் சிதைக்கப்படாத அவர்களின் தியாக மனப்பான்மை புதிய வீச்சுடன் சிரஞ்சீவித் தீபமாக ஒளிவிடத் தொடங்கியது” என்று கதையை முடிக்கிறார்.
அழுங்குப்பிடி கதையில் சாதிபார்க்கிற வடக் கைச் சேர்ந்த மனிதரொருவரை அனுராதபுரத்தில் வைத்து இனங்காட்டுகிறார் எழுத்தாளர். அங்கு நடந்த வள்ளுவர் விழாவில் சொற்பொழிவு கேட் டவர்கள் அங்குள்ள கடையொன்றுக் குள் சாப்பிடுவதற்காகப் போகிறார்கள் போனவரில் ஒருவருக்கு சாட்பிட மனம் இடம் கொடுக்கவில்லை.
"நீங்கள் ஏன் இடியட்பம் சாப்பிடவில்லை?”
என்று கூடி வந்தவரை மற்றவள் வடபுலத்தின் வழக்கமான பாஷையில் கேட்கிறார்.
"இடியட்பம் அவிச்சது ஆரெண்டு தெரியுமே? அவன் மன்னாரில இருக்கிற பறட்பெடியன்" எனக்கு

அவனைக் கண்டதோட அவருக்கத் தொடங்கிவிட்டுது.
அதுதான் டி மட்டும் குடிச்சனான்.
“எட உதுதானே. நான் வேற ஏதோ எண்டல்லோ நினைச்சன். இந்தக் காலத்திலை - அதுகும் கடையளில - வெளிக்கிட்ட இடங்களில உதுகளைப் பாக்கேலுமே?”
"கோவிக்காதையுங்கோ மச்சான் தீண்டாமை என்கிறது எங்கட மனதிலதான் இருக்கிறதே ஒழிய அது ஆக்களிலை இல்லை. அசெளசமென்கிறது எங்கட உள்ளத்திலதான் இருக்கேயொழிய அது தாழ்த்தப்பட்டவங்களெண்டு நாங்கள் தாழ்த்தி வைச்சிருக்கிற மனிதனில இல்லை.”
தொடர்ந்து சொல்லிவிட்டு டி மேக்கள் பொடியன் யாரென்றதையும் விளக்கமாகச் சொன்னார்.
"டீ மேக்கள் பெடியன் என்ன வடிவாயும் துப்புரவாயும் இருக்கிறான் பாத்தியளே. பிராமணப் பெடியன் மாதிரி. அவன் என்ன சாதிப் பெடியன் தெரியுமே? வண்ணாரப் பெடியன். தாழ்த்தப்பட்டவங்களுக்கு வெளுக்கிற வண்ணார சாதியில உள்ள பெடியன்”
இப்படி இந்தப் பிரச்சினை பேசப்பட்ட பொழுது அனுராதபுரத்தில் அன்று திருக்குறள் மாநாடு நடந்தது. எல்லா இனத்தவரின் ஆதரவோடும் பங்குபற்றலோடும் இந்த விழா இடம் பெற்றது. இதைக் கதாசிரியர் காட்டும்போது;
"இந்த மாநாடு வீண் கிலியைக் கிளட்பவில்லை. நல்லறிஞர்களின் தெள்ளுதமிழ் உரைகள் உள்ளத்தைக் கிள்ளி வகைக் nay” என்றுகூறி இனப் பூசலற்ற அமைதிச் சூழலை, பரஸ்பர ஒற்றுமை இருத்த காலத்தை கண்முன் காட்டுகிறார். பல ஆண்டுகளுக்கு முன் u TuplJT68äg6) ol im D_60ěš, SßkofffffüLF மாநாட்டுக்கு ஏற்பட்ட சோக முடிவும், உயிர்
போக்குக்கான காரணிகளில் முக்கியமானதாக அது அமைந்து விட்டதும் கதாசிரியரின் கருத்துக்குள் நிற்பது தெரிகிறது.
தொடர்ந்து,
66
eK 囊萎篆酸鲍
ஏன் - ?
அன்று சிங்களவர் தமிழர் நட்புறவு உச்சம் பெற்றிருந்த காலம் அனபுே ததும்பிய காலம் ஐக்கியம்
av å asb

Page 125
அரசோச்சிய காலம் அரசியல்வாதிகளால் மக்களின் மனங்கள் சேற்றுக் குட்டைகளாக்கப்படாத சிந்தனைத் தெளிவுடைய காலம். அரசியல் ஆதாயம் கருதி இனத் துவேஷ வெறியூட்டப்படாத காலம் வகுப்புவாத நச்சுப் புகையடிக்கப்படாத காலம்"
இந்தக் கதையில் மனிதனை மனிதன் தாழ்த்த இடம் கொடாத, வகுப்புவாத குரோதங்களற்ற உயர்ந்த சமுதாயமொன்றை அவர் கனவு காண்கிறார்.
விளைநலம் கதை, விவசாயக் கிராமமொன்றில் வயலுக்கு நீ பாய்ச்சும்பொழுது, வாய்க்காலில் ஏற்பட்ட தகராரொன்று நீதிமன்றம் போனதையும், இடையிலுள்ள சுயநலமிகள் சிலர் இந்த நிலையை தமது சுய லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொண்ட போக்கையும் விளக்குகிறது.
கதாசிரியர் வாழ்ந்த சூழலில் இருந்திருக்கக்கூடிய ஒரு பிரச்சினையின் ஆய்வுதான் இந்தக் கதை. கதையில் வழக்காளி லேசாக சீல்சாராயம் பாவித்திருந்த வயதில் மூத்தவராகவும், எதிரி வடி சாராயம் அடித்திருந்த இளம் ஆளாகவும் வருகிறார்கள். இந்தப் பிரச்சினைக்குக் குடிபோதை மதிமயக்கம் காரணமாகக் காட்டப்படுகிறது.
முதியவரை வாய்க் கால் கரையில்
வந்து நிற்கிறான். மனம் வருந்தி வழக்காளியிடமே வந்து தன்னை மீட்டெடுக்குமாறு வேண்டிக் கேட்கிறான்.
”சொந்தக் காணி இரண்டு ஏக்கரையும் பிள்ளைகுட்டியள் வயித்துக்கு வாய்க்கு இல்லாத நேரங்களில பட்ட கடனுக்கு ஈடு வைச்சதும், அறுதியாய்ப் போனதும் உனக்குத் தெரியுந்தானே அட்டா ஆக, இல்லையெண்ணாமல் வதுவைக் காணி இரண்டு ஏக்கள் கிடக்குது. அதைக் கூடிய தொகைக்கு ஈடுவைக்க ஏலுமே. என்ன செய்யிறது? வேறை வழியில்லாமல் அதை 200ரூபாவுக்கு ஈடுவைச்சுத்தான் புறக்கராசி புடிச்சுப் புனையில வந்து நிற்கிறன்”
"சாட்சிக்காரண்ட காலிலை விழுகிறதைப் பார்க்கிலும் சண்டைக்காரண்ட கால்லை விழு” என்டதைப் போல உன்னைக் கும் பிட்டுக் கேட்கிறனப்பா உன்ர பெத்த பிள்ளையா நினைச்சு என்னை மீண்டாளும் மீளு, குடுத்தாலும் குடு”

கதையின் சூழல் பாவமன்னிப்புச் சிந்தனை பதிந்த கிறிஸ்தவச் சூழல் போதையும், ஆத்திரமும், அவசரமும் முனை மழுங்கியபோது, அறிவும், தவறுக்கு வருந்தும் மனோ நிலையும் தலையெடுப்பதை கவிராயர் தொடுத்துச் செல்வது இயல்பாகவே இருக்கிறது. நல்ல சிந்தனையொன்றை இந்தக் கதையில் ஆசிரியர் விட்டுச் செல்கிறார்.
"சாலையின் இரு மருங்கிலும் தரிசு நிலமும் விளைநிலமும் நீண்டு பரந்து கிடந்தவாறு காட்சியளித்தன. பண்படாத, மனச்சாட்சி மரத்துப்போன தீயவர்களின் உள்ளம் போன்ற தரிசு நிலங்களில் முளைத்திருந்த களைப் பூண்டுகளும், முட்செடிகளும் இடையீடின்றி நெருங்கி வளர்ந்து நின்றன.
“தரிசு நிலத்தில் மாத்திரமல்ல பண்பட்ட நல்லவர்களின் உள்ளம் போன்ற விளைநிலத்திலும் களைப் பூண்டுகளும், முட்செடிகளும் முளைத்த அறிகுறி தென்படத்தான் செய்தது. ஆனால் அவைகள் அவ்வப்பொழுது வெட்டி, வேருடன் ழ்ந்தெடுக்கட்பட்டுச் பந்த நி பிற் கிடந்தன. விளை நிலத்தில் களைப்பூண்டுகள் தட்ப முடியுமா?"
சவால் என்ற சிறுகதை அவரை அண்மித் திருந்த கிராம கடைத்தெருவில் கிளைத்திருந்த 42 நாய்களுக்குத் தலைமைத் தாயாக இருந்த ஒரு நாயின் கதை. நாய்களை வைத்து எழுதிய இந்தக் கதை நம்முடைய மனிதக் கதையோடு ஒற்றுமையாகிற பல அம்சங்களைக்
நன்றி விசுவாசத்துக்குப் பெயரெடுத்த நாய்கள், தன்னின ஒற்றுமை இல்லாததால் சீரழியும் சிறுமையை விளக்கிக் கூறுகிறார்.
"நேரியகுளம் கடைவீதி அந்தத்தின் கிழக்குக் கோடியிலே கூரை, சுவர், கதவு, யன்னல்கள் அனைத்தும் கிடுகளினாலேயே தயாரிக்கப்பட்ட ஒர் ‘றெடிமேட்’(பாழ்) வீடு இருக்கிறது. அந்த வீடுதான் அந்த நாயின் இல்லம் வீடு, பிரசவ விடுதி எல்லாம் அந்த வீடுதான் அதற்கு,
மோட்டார் இயமனுக்குட் பலியானவை, திருட்டுக்குப் போன இடத்தில் மர்மமாகக் கொலை செய்ய்பட்டவை, அரசாங்க உத்தரவுப்படி பாய்ந்த குண்டுகளுக்குப் பலியானவை, நல்ல" குட்டிகள், வேட்டையாடக்கூடிய கடுவன் குட்டிகள் என்று மனிதர்களால் வளர்ப்புக் குக் கொண்டு போகப்பட்டவை போக, மிகுதியாகக் கடைத்

Page 126
தெருவில் நிற்கும் நாற்பத்திரெண்டு நாய்களும் அந்தப் பெட்டை நாயின் வழித் தோன்றல்களே”
வழமையாக கடைக் கோடியைச் சல்லடைபோட்டு ஏதாவது மிச்ச சொச்சங்களை, எறிந்துவிட்ட எச்சில்களை சாட்பாடாக்கிக் கொள்ளும் இந்த நாய்க்கு, குட்டிபோட்ட பின் எழுந்து வந்தபோது ஒரு வெள்ளெலும்புத் துண்டோ கருவாட்டுச் செதிளே கூட அகப்படவில்லை. பாதை நீளம் ஓடிப் போனபோது ஒர் மூடையைக் கண்டது. தனியே இழுத்துப் பார்க்க முயற்சி செய்து முடியவில்லை. நாய்களும் பல சேர்ந்துவிட்டன. வந்த நாய்களையும் சேர்த்து இழுக்கத் தெரியாத இந்த நாய் அந்த நாய்களை ஒட்டி ஒட்டிக் கலைத்தது. மனிதன் வந்து மூடையை எடுத்துக்கொண்டான். நாய்க்கு ஏமாற்றம், ஒட்டிய குடலோடு ஓடிப்போய்ட்படுத்துக் கொண்டது.
படுத்துக்கிடக்கையில், தம்மிலும் பெரிய அளவுள்ள பொருள்களை எறும்புகள் பல நேர்ந்து இழுத்துச் செல்வதைக் கண்டபோது, அந்தக் காட்சி அந்தக் குட்டிபோட்ட நாய்க்கு ஒரு பெரும் சவாலாகவே ஆகிவிட்டது என்னதான் இருந்தபோதும் தன்னினப் பகை என்ற நாய்க்குணம் இருந்து விடடால் விடுதலை வாழ்வு கிடையாது என்பதை கதை சூசகமாக வெளிப்படுத்துகிறது. கதையின் கருப்பொருளும், சொல்லுகிற உத்தியும் இந்தக் கதைய்ைப பொறுத்தவரை மிகச்சிறப்பாகவே உச்சமடைந்துள்ளன என்று கூறமுடியும்
அந்தக் காரணம் என்றதொரு நீண்ட கதை வருகிறது. தமது கிராமமான இலுப்பைக் குளத்தைக் களமாக வைத்தே கவிராயர் அந்தக் கதையைப் பின்னியுள்ளார். அந்தக் கதையுள் குடியேற்றவாத குமாஸ்தா கல்வி முறை, பொருளாதார சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சோசலிசம் போன்ற விடயங்கள் சிந்தனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. காதல் ச் சிக்கலைக் கதையாக்கி, காதலர்களிடையே இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வு, காதல் கைகூடத்
இருந்ததைக் காட்டுகிறார்.
தமது அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவரைத் திருமணம் செய்துவைக்க மாஜி உடையார் மங்களநாதர் முயன்றார்; ஆனாலும் மகள் விசராக நடித்ததால் முடியவில்லை. என்றாலும் உண்மையாகவே மனநோய்தான் என்று நம்பிய மங்களநாதர் மகளுக்கு மருந்துகள் செய்வித்ததால் அந்த மருந்துகளால் அவளின் உடல் உப்பிட்ட பாண்டமாகிவிட்டது.
 

எப்படியோ கடைசியில் காதலன் காதலியைச் சந்திக்க நேர்ந்தபோதுதான் அவனுக்கும் உண்மை விளங்கியது. ஆனால், அவளைப்பற்றி அறிந்துகொள்ள முடியாதிருந்த போது, தன்னை மறந்துவிட்டாள் தனது காதலி என்று எண்ணியபோது:
"காதல், ஆமாம் மாளிகை வாசிகளைப் பொறுத்த வரையில் பாட்மின்டன், டென்னிஸ், கிறிக்கட் போன்ற ஒருவகை பொழுதுபோக்கு விளையாட்டு, மண்குடிசை வாசிகளுக்கோ கானல் நீர் நீமேலெழுத்து, ஊமை கண்ட பகற்கனவு.ஒ இப்படியே சொல்லிக்கொண்டு போகிறான். "தனியுடமைக் கொள்கையுள்ள பொருளாதார அமைப்பில் வாழும் ஏழை - பணக்காரன் காதல் எங்கே” என்று கேட்கிறான்.
அவளும்தான் தன்னை இறுதியில் வந்து சந்தித்த காதலனிடம் கொடுத்த இரகசிய மடலில்; "இனிமேல், நான் உயிர் வாழமாட்டேன் என்பது நிச்சயமாகிவிட்டது. நீங்கள் உங்கள் மனத்திற்கேற்ற மங்கை நல்லாளை மணம்புரிந்து மங்களமாக வாழுங்கள். சோசலிச சமுதாயம் உருவாக்கப்பட்டு, தொழில்வளம் பெருக்கி, பொருளாதார சமத்துவம் ஏற்பட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக மனிதமனம் வளர்ச்சியடைந்தால்தான் மெய்க் காதல் வாழும்” என்று எழுதுகிறாள்.
சமத்துவமுள்ள சோசலிச சமுதாயத்தில்தான் சாத்தியமாக முடியும் என்கிற எண்ணம் கவிராயரின் மனத்தில் ஆழமாய்ப் பதிந்திருந்த பாதிப்பில் இந்தக் கதை உருவாகியுள்ளது.
அந்தக் கதையில் “நம்மைப் போன்ற உண்மைக் காதலர்களின் காதல் வாழ்வு வெற்றிபெறக்கூடியதொரு புதுச் சமுதாயம் உருவாவதற்கு தங்களுடைய, ஆற்றல், அறிவு, கல்வியைப் பயன்படுத்துங்கள்” என்று காதலை இழந்துவிட்ட காதலியை கடிதத்தில் எழுதவைத்து, புதிய சமுதாயத்தை உருவாக்க வருமாறு
இன்னும் இத்தொகுப்பிலுள்ள மற்றைய கதைகளும் இன்றுள்ள சூழலில் எழுதப்பட்டன போலவே இருப்பதும் கதைகளின் பலமான அம்சமாக இருக்கிறது.
நலிந்துகிடக்கிற மக்களின் விடிவுக்கான எண்ணத்தில் பிறந்த, அந்தச் π, ά56ί
一 புது east 23

Page 127
நல்ல தேசிய இலக்கிய அம்சங்களைக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும். "இன ஐக்கியம் என்ற விடயத்தில் அவர் கூடிய அக்கறை காட்டியிருக்கிறார். என்றாலும் இதையும் தாண்டிய கட்டுக்கடந்த மனிதநேயம் அவரது கனவாக
இருந்திருக்கிறது.
இயல்பு மாசடையாத எளிமையும், பழிக்கஞ்சும் வாழ்க்கையும், மட்டுப்படுத்தப்படாத உணர்வுடன் மானிடத்தை நேசிக்கும் மனச் செழுமையும் கொண்ட மாமனிதராக அவர் விளங்கினார் என்றால் அவரைத் தெரிந்தவர்கள் இது ஒரு மிகையான கூற்று என்று கூற முன்வரமாட்டார்கள்.
அவரைச் சூழ்ந்திருந்த ஏழ்மையால் அவரது இலக்கிய நெஞ்சத்தைச் சூறையாட முடியவில்லை.
அவள் பொறி வைத்துக் கொண்டு திரிந்ததில்லை. இலக்கியத் தகைமை என்பது ஒருவர் எத்தனை நூல்களை எழுதினார் என்பதை வைத்து எண்ணப்படாமல், எந்தக் கால சூழ்நிலையில் எவ்வாறான விடயங்களை எழுதினார் என்பதைப் பொறுத்து மதிக்கப்படுவதாகும். நூல்களை தொகையாக முண்டியடித்துக்கொண்டு வெளியிட்டு விடுவதால் மட்டுமே இந்தக் தகைமை வந்துவிடுவதில்லை.
ஆனானப்பட்டவர்’ என்று பேசப்படாத வன்னியூரார், அதிக நூல்களை வெளியிட வாய்ப்பில்லாத சூழ்நிலையிலும் வாழ்ந்தார். ஆனாலும் இலக்கியத்தின் ஆத்மாவைத் தரிசித்து விட வேண்டும் என்ற தாகம் அவரில் மேலோங்கி நின்றது. அந்த முனைப்பே அவரது எழுத்தின் மூச்சாகவும் விளங்கியது.
"மிகவும் சாதாரண மனிதனாய்ட் பிறந்து, தனது சித்த வைத்தியத் தொழிலுடன் சாதாரண வாழ்வு வாழ்ந்த கவிஞர், இலக்கியப் பரப்பில் அகன்றதாக தனது காலடிகளைப் பதியவைக்க முயன்று கொண்டிருந்த காலகட்டத்தில் மரணம் அவரை வந்தடைந்து விட்டதாயினும், குறிப்பிடக் கூடிய அளவிற்கு தமது காலடிகளை இலக்கியப் பரப்பில் பதித்துவிட அவர் தவறவில்லை" என மறைந்த எழுத்தாளர் டானியல் கவிஞரின் நினைவு மலர்க் குறிப்பில் கூறுவது சரியானதுதான்.
அவள் வாழ்ந்த காலப்போக்கின் எழுச்சி
அவரின் உணர்வுகளைப் பாதித்ததுடன் அதுவே அவரது சிந்தனைப் பின்னணியாகவும் இருந்தது
24 வசந்தம்

என்னவோ உண்மையே. ஆயினும் அவர் மொழிவெறி கொண்டவராகவோ, இனவெறி தலைக்கேறியவராகவோ இருக்கவில்லை. அவரை
*மித்திருந்த சிங் s586 TT6ub, üsúSup மக்களோடும் நேய உணர்வோடு, தோழமைபூண்டு கொண்டும் கொடுத்தும், உடன்சேர்ந்து உண்டும் வாழ்ந்தார்.
ஊரவர்க்கெல்லாம் உதவும் நல்ல வைத்தியராக விளங்கிய கவிராயர், அந்தத் தொழிலால் பணம் சேர்த்துக்கொண்டு தம் வாழ்வுக்கு வளம் சேர்க்கவில்லை. அவரது குடும்பத்துக்கு போதிய அளவுக்கு உணவு கொடுக்கவோ, தமது பிள்ளைகளுக்கு வேண்டிய கல்வியைக் கொடுக்கவோகூடிய அளவுக்கு சராசரி வசதியுள்ளவராகக்கூட அவரால் வாழமுடியவில்லை என்பது வருத்தப்படக் கூடியதே.
தமது பிள்ளைக்கு 'பாரதி' என்று பெயர் வைக்கிற அளவுக்கு பாவரசன் பாரதி மீது பற்றுக்கொண்டிருந்த பாவலர், பாரதிபோலவே பஞ்சத்திலும் உழன்றார். இந்த நிலையில் குடத்து விளக்காக் கிடந்த அவர் தமக்கிருந்த விடுதலை வேட்கையினாலும், சமுதாய அக்கறையினாலும் வெளித் தெரியத் தொடங்கினார்.
அவருக்குக் கைகொடுத்து உதவ, உயர்த்திவிட யாரும் முன் வரவில்லை.
பிரசாரக் கூட்டங்களில் இவர்கள் போன்றோரும் மேடையாடிகளாகச் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டார்கள். பதவியை சரியாகப் பிரயோகிகக் கூடிய தகுதியும் , கிராமப் - பகுதிகளுக்கான தேவைட்பாடும் இருந்த போதும் த்தில் பாஉகளின் கைச்சரக்காக இருந்த சமாதான நீதவான் பதவிகள் போன்றனசுட இப்படியானவர்களைப் பொறுத்தவரையில் தொட்டால் தொடக்கு என்று அவள்களைச் சேராது தடுக்கப்பட்டுவிட்டன. மனிதத்தன்மையைக் கெளரவிக்காத கயமைதான் அந்தக் கால அரசியலிலும் ஆணிவேராக இருந்தது. ஒலையால் வேயப்பட்டு, ஒழுக்கு விழும் குடிசைக்குள் வாழ்ந்த கவிராயர் குடும்பம் சிறு விவசாய முயற்சிகளில் ஈடுபட்டே சீவியத்தை ஒட்டியது.
39;ig585856Digi:56.
இப்படியொரு இக்கட்டுக்குள் இருந்து கொண்டுதான் அவர் புத்தகங்களைப் படித்தார்; பழைய வைத்திய ஏடுகளையும் வாகடங்கள் ளயும் புரட்டினார். அறியாமைக்கும், மூடநம்பிக்கைக்கும், சாதிமயக்கங்களுக்கும், சுரண்டலுக்கும் எதிராகச்

Page 128
சிந்தித்தார். அந்த ஓட்டத்தில்தான் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என்று பல்வேறு படைப்பு வடிவங்களில் தமது சிந்தனையைப் பதியவைத்துள்ளார்.
வன்னி குறிப்பாக பல்வேறு பிரதேசப் பண்பாடுகளின் சங்கமமாக மாறிக்கொண்டுள்ளதால் அந்த மாற்றங்களின் செல்வாக்கு கவிஞரின் கருத்தோட்டத்திலும் படிமுறையான பாதிப்பை ஏற்படுத்தி வந்தள்ளதை இனங்காண முடியும். 36): Tg5! Lj60)L( 356061T 96.6) T(3) EFTS)(p65B Lig. பகுத்து நோக்குவதன் மூலமே இதைக் கண்டு கொள்ளவும் முடியும். இது அதற்கெனத் தனியாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுமாகும். அவரது சிறுகதைத்தொகுப்பான 'ஈழத்துக் காவிய தீபகம் நூலை அடுத்து 'அமுதகங்கை என்ற பெயரிலான கவிதைத் தொகுதியையும் துண்டுகோல் என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுதி ஒன்றையும் அவர் வெளியிட எண்ணியிருந்ததாக அறியமுடிகிறத. அவைகள் வெளிவந்திருந்தால் கவிராயரைச் சரிவரப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கூடியிருக்கும்.
எவ்வாறாயினும் 1973ம் ஆண்டு அவரது ஈழத்துக் காவிய தீபகம் சிறுகதைத்தொகுப்பு, நூலாக வடிவெடுத்த போதுதான் வன்னிப் பகைப்புலத்தில் படைப்பிலக்கியப் பண்பாடு பிரசவமாகியது. அமைப்புக் கட்டை உடைத்துக் கொண் டு வெளிக் கிளம்பும் இலக் கிய கலாசார மொன்றை இந்தப் பண்பாடு உருவாக்குகிறது. இதிலிருந்து ஒரு ஆரோக்கியமான தொடர்ச்சியொன்று இறுக்கமடையவில்லை என்பது ஏன் என்ற கேள்விக்குரியதாகும். பின்வந்த 'அவசர இலக்கியப்படைப்பு எண்ணங்களும் இதற்கான காரணங்களுள் ஒன்றாக இருக்கலாம், எனினும் நல்ல படைப்புகள் இப்பொழுது வெளிவரத் தொடங்கியிருப்பது நம்பிக்கை ஊட்ட்க்கூடிய அம்சமாகும்,
铃
குழிவெட்டிப் புதைத்த குப்பை கூளங்களை கிண்டிக் கிளறி எடுத்துக்கொண்டு வந்து வெளியில் போட்டுவிட்டு, ‘இலக்கிய வரலாற்றுப் புதையல் இதோ பாருங்கள், இலக்கியப் பணியின் தடயங்களும் இவைகள்தாம் என்று யாராவது கூறினால் அதை நல்லதொரு இலக்கியக் குணாம்சமாக எவரேனும் ஏற்றுவிடுவார்களா? வேண்டுமானல் முன்பின் பாராமல் முகமனுரை எழுதுகிறவர்கள் இதுவரை வந்த இலக்கிய வரலாறு கூறும் படைப்புகளில் இதுதான் ஏ வண்' என்று பின் முன் யோசியாமலே சந்தோஷத்தில் எழுதிவிடலாம்.
 

கவிராயரைப் பொறுத்தவரையில் இலக்கிய முதுகு சொறிவை அடியோடு வெறுத்தவர். ஆக்க இலக்கியக் களத்தில் மிகச் சிரமப்பட்டு உழைத்த உழைப்பாளி அவர் இலக்கிய வியாபாரத்தை அவள் வெறுத்தார். தமது வைத்தியத் தொழிலையே வியாபாரமாக்காத அவர் இலக்கியத்தை, எழுத்தையா வியாபாரமாக்குவார்! அப்படி ஆக்க அவரது இலக்கிய நெஞ்சம் இடம்தராது.
கண்டது, காணாததை எல்லாம் 'கண்டபடி எழுதி, எழுதுகிறவனுக்குக் காசுதேற, வாசிப்பவனுக்கு எதுவுமே தேறாத மட்டமான படைப்புகளைச் சந்தையில் விடுகிற வக்கிரப் பிரமாக்கள் இருக்கிறார்கள். விஷயம் புரியாமலே களத்தில் இறங்கிவிடுகின்ற வெள்ளையடிப்பு எழுத்தாளர்களும் அவர்களிற் சிலர். வெள்ளைக் கொக்குகளுக்கும் கூழைக்கடாக்களுக்கும் 6,fì gồ gốìu JT 3 tò L{flu JT tD6ò 6)fì6ìẹu ! Lí) (3LJ ở வெளிப்பட்டுவிடுவார்கள்.
இப்படிப்பட்ட எழுத்து எக்ஸ்பிறஸ்களுடன் வைத்து எண்ணும்போது வன்னியூர்க் கவிராயர் வியாபாரக் குணப்போக்கும், முண்டியடிப்பம் இல்லாத, அந்த நோய் சற்றும் தொற்றாத எழுத்து
தொடர்பான பரந்துபட்ட ஆய்வொன்று, ஆர்வமுள்ளவர்களின் அமைப்பொன்றுக்கூடாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இலக்கிய வரலாற்றின் பயனுள்ள பக்கமொற்றைப் பார்க்க வசதி கிடைக்கலாம்.
கவிராயரும் நானும்
1973ம் ஆண்டென்று நினைக்கின்றேன். வவுனியா முற்றவெளியில் தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்த கூட்டமொன்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஒரு கவிஞர் தனியாக வந்து கவிதை ஒன்றை அழகாக வாசித்துவிட்டு இறங்கிச் சென்றார். மேடையில் அவர் அமர்ந்திருட்பதற்கான ஏற்பாடு எதுவும் இருக்கவில்லை. தமது கவிதையைப் படித்துவிட்டு அவர் மேடையைவிட்டு வேகமாக இறங்கி வந்து புற்றரையில் அமர்ந்துகொள்கிறார்.
அண்மையில் நின்று கொண்டிருந்த நான் அவரிடம் சென்று அவரது கவிதையின் சிறப்பைக் கூறி 6T63 g5, List JTL 60). Lulf தெரிவித்துக்கொண்டேன். அவர் மகிழ்ந்து முகம் மலர ஏழுந்தார். என்னைப்பற்றியும் விசாரித்துக் கொண்டார் . இருவரும் அமர்ந்ததிருந்து உரையாடினோம். இதன் பின்பு இடைக்கிடை

Page 129
எட்போதாவது வாய்ப்பு நேரும்போது சந்தித்துக் கொள்ளும் நண்பர்களானோம் . இந்தக் காலகட்டத்தில் பூநகள் மரியதாஸ் என்றொரு இளைஞர் வவுனியா வத்து, பூந்தோட்டத்தை அண்மித்திருந்த தோட்டக்காணியொன்றில் கண்காணிப்பாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அப்பொழுது 20 அல்லது 22 வயது இருக்கலாம்.
புதுக்கவிதை எழுதுகிற முயற்சியும் நிறைய வாசிக்கும் ஆர்வமும் கொண்டவராகக் காணப்பட்ட அந்த இளைஞர், யாரோ ஒருவர் என்னுடைய முகவரியைக் கொடுத்தாகக் கூறிக்கொண்டு என்னை ஒரு நாள் தேடிவந்தார்.
இலக்கிய எண்ணமுள்ளவர்களைத் தேடி இணைத்து, அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என்பது அவரது ஆர்வமாக இருந்தது. கவி அரங்கொன்று ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கூறினார். முதிரா இளைஞன் ஒருவனின் முனைப்பு வேகம் காட்டியது. யாரைத் தலைமைக்கவிஞனாக அழைக்கலாம் என்று கேட்டபோது, வன்னியூர்க் கவிராயர் என்றொரு மூத்த கவிஞர் இருக்கிறார்,
அழைத்து நடத்தலாமே என்றேன்.
அதை நீங்கள் ஏற்பாடு செய்கிறீர்களா என்று மரியதாஸ் கேட்டபோது, நானும் செய்யலா
பஸ் ஸில் சென்று இறங்கி ஒற்றையடிப் பாதையொன்றுக்கூடாக நடந்து போய் அவரைக் கண்டு விடயத்தைக் கூறினேன் மகிழ்வோடு விருப்பம் தெரிவித்தார். நிகழ்விடத்தையும், திகதி நேரத்தையும் தெரிவித்துவிட்டுத் திரும்ப ஆயத்தமானேன். நான் பஸ் ஏறும் இம்வரை என்னுடன் கூடவே நடந்து வந்து பஸ்ஸில் ஏற்றிவிட்டே வீடு சென்றார்.
அடுத்தவாரம் அந்த இலக்கிய நிகழ்வு வவுனியா நகரசபையின் முன்னைய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் அந்தமாதத்தில் வெளியாகியிருந்த 'மல்லிகை இதழின் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை பற்றிய விமர்சன அரங்கும் நடந்தது. மக்கள்வங்கி உத்தியோகத்தராக அந்தக்காலத்தில் இங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ழரீதரன் அந்த விமர்சன உரையை நிகழ்த்தினார்.
இந்த முதல் இலக்கிய நிகழ்வை வழிகாட்டிகள் என்ற இலக்கிய அமைப்பே ஏற்பாடு
1 26 Egi amddiffágsib
 

செய்தது. இதில் நான் உறுப்பினனாக இருக்கவில்லை என்றாலும் இது முன்னெடுத்த முயற்சிகளுக்கு ஆதரவளித்தேன். பூனகர் மரியதாஸ், சரவணையூர் சுகந்தன் ஆகியோர் இந்த அமைப்பின் இணைச்செயலாளர்களாக இயங்கினர்.
இந்த அமைப்பு ஏற்பாடு செய்த அந்த நிகழ்வின் கவியரங்கு திட்டமிட்டபடி வன்னியூர்க் கவிராயரின் தலைமையில் நடந்தது. பூனகள் மரியதாஸ், சரவணைபூர் சுகந்தன், திருமலை சுந்தா, முத்துசிவன் ஆகியோர் இதில் கவிதை படித்தனர். பள்ளிமாணர்வர்கள் இருவரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் பெயர்கள் எனது
இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் வழிகாட்டிகள் என்ற மகுடத்தில் கவிதை நூல் ஒன்றை கூட்டாக யாழ்ப்பாணத்தில் வெளியிட்டதாக ந்தேன். அந்தக்காலத்தில் நான் கிளிநொச்சியில் இருந்ததால் இவர்களுடனான தொடர்புகள் மேலும் தொடரவில்லை.
கவிராயரோடு 1978ம் ஆண்டின் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள இருந்தேன்.
அது. வன்னியூர்க்கவிராயர் தலைமையிலான இத்த அரங்கை நிறைவு செய்யும் கவிஞனாக என்னைட்
கவிதையைப் படித்த பிறகு, தொடக்கி வைக்கும் கவிஞனாக எழுந்து கவிதை பாடிய கவிஞர் நவபாலகோபால் (கவிதைச்சுரங்கம் நூலின் ஆசிரியர்) தமது கவிதையை ஏற்ற இறக்கங்களுடன், சொற்சிலேடை விளையாட கருணாநிதி பாணியில் வாசித்துக்கொண்டிருந்தார்.
隱魏
கவிதாரசிகர்கள் கைகொட்டி உற்சாகத் துடன் ஆரவாரிக்கத் தொடர்ந்த அரங்கு சோவெனப் பொழிந்த பெருமழையால் இடைநின்று விட்டது. விழாவும் தொடர்ந்து நடைபெற முடியாத நிலையில் நிறுத்தப்பட் ஈயரின் கடைசிக் கவியரங்கும்
இலக்கியவாதியை மட்டுமல்ல நட்புக்கினிய இதயமொன்றை இழந்துவிட்ட துன்பத்தை அன்று

Page 130
(பிறெச்ந்தின் நாடகத்தை
நாடக மாந்தர் 'கலிலியோ, வேஜினியா (கலிலியே
கதவிலே தட்டுதல், செருமல்)
star Geau’s
அன்
Geau’s
அன் Gau’
Geau’s
வே"ஜி
பிள்ளை, பிள்ளை! தங்கைச்சி! உஷ்ஷ் மெல்லப் பேசுங்கள். குரு நான் யார் தெரிகிறதா? நான் தான்
ஒ, தெரியுமே! அவ்வளவு கடும் மற அது சரி, வேஜினியா, நான் உன் அட்பாவையா? நீங்களா? திருச்சபைu வைத்திருக்கிறது. இது உங்களுக்கு இங்குள்ள காவல்களையும் மீறி? (காவற்காரன் வந்து நின்று திரும்பிட் எப்படியோ வந்துவிட்டேன். நான் இத்த
சந்திக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்
அப்பா உங்களைச் சந்திக்க விருட்ட
முன்னைய 'கலிலியோ இல்லை, ஆ என்று பரப்பிய காலத்திலே தான் இப்போது அவர் திருச்சபையின் உ மன்னிட்புக் கேட்டுவிட்டார். அவர் பு அவருக்குப் புதிதாகக் கிட்டியுள்ள ம குழப்ப வேண்டாம், இல்லை. தங்கைச்சி. போய்ச் சொல்லு Lങ്ങgu Drങ്ങഒങ് வந்திருக்கிறான். G வந்திருக்கிறான் - என்று தயவு செய் சரி. சொல்லுகிறேன். ஆனால் மீண்டும் வேதாகம நிந்திப்பு வழியிலே தூண் வேண்டாம். பாவம் அப்பா. எதை வேஜினியா சொல்லுகிறாய்,
مA3%A2-0132& xP%* و6 N 隆子女
விஞ்ஞானமாவது விண்ணாணமாவ: வேதாகமத்தில் இருக்கிறது. இதற்கு தொலைகாட்டி, சோதனைச்சாலை, கன இவற்றால் எல்லாம்? மண்ணுலகம் மன் மையம் வழிவழியாக மரபுநெறி தவ நித்தியமான சத்தியத்தை நீக்கிவிட்( புகுத்தப் பார்க்கிறீர்கள். உங்களைட்
 
 
 
 

ஆதாரமாய்க் கொண்டது)
-முருகையன்
வின் மகள்), அன்ட்றியா (கலிலியோவின் மாணவர்)
வானவர் கோபிட்டார்.
அன்ட்றியா. 'கலிலியோவின் மாணவன்; அவரால்
தி உள்ளவளல்ல, நான். அட்யாவைப் பார்க்க வேணும். பின் விசாரனை மன்றம் அவரைத் தடுப்புக் காவலில் ம் தெரியும் என்று நினைக்கிறேன். எட்படி வந்திகள்,
போகும் காலடியோசை தாலியை விட்டுப் போகப் போகிறேன் - ஒல்லாந்துக்கு ன் போகும் வழியில், இவரை - கலிலியோவை . அதுதான் கண்டு கொண்டு போவோம் என்று. பப்படுவாரோ தெரியாது.
ள்? இல்லை. அவர் இட்போது முற்றிலும் மாறிவிட்டர். வள் வேத விரோதமான செய்திகளை விஞ்ஞானம்
நீங்கள் அவருக்கு உதவியாளாய் இருந்தீர்கள். த்தம விசுவாசி ஆகிவிட்டார். அவர் மனம் திரும்பி நிய மனிதர். உங்களைப் பார்க்க விரும்பமாட்டார். னச் சாத்தியைக் குழப்ப வேண்டாம். தயவு செய்து
வெளிநாடு செல்வதற்கு முன்பு விடைபெற்றுப் போக து அவரிடம் சொல்லு,
சாத்தானை அவரிடம் அணுகல்
பிடாதீர்கள். அபசார டிவிட வேண்டாம். படுகுழியில் மீண்டும் விழுத்த
குழி என்று? விஞ்ஞானம் சாத்தானா? 'கலிலியோவின்
கொண்டிருட்பது? து மனிதர் அறிய வேண்டியவை அனைத்தும் மேல் என்ன ஆராய்ச்சி? என்ன பரிசோதனை? சிட்பு வேலை, கண்றாவி! என்ன பயனைக் கண்டோம் தனுக்காய் படைக்கட்பட்டது. பூமிதான் பிரபஞ்சத்தின் 3ாமல் நம்மவள் பூண்டொழுகிவந்த கொள்கை இது. }, புத்திசாதுரியத்தினால் புதிய கொள்கைகளைப் போன்ற சிலர் பூமி அசைகிறது; பிரபஞ்சத்தின்

Page 131
Geau’s
S Starji
மையம் சூரியன் தான் என்று டே புனிதத்தை மறுத்து ஒதுக்கி வி வேதாகமத்தைப் பழித்துவிட்டீர்கள். உன்னுடைய அப்பாதானே, இவற்ை 9(b$56)T(d. 935s setbabis absT6 D
சர்வேசுவரனின் சக்திக்குச் சவால் 6 உணர்ந்து விட்டார் அப்பா. திருச் விட்டது. முன்னர் செய்த பாவங்க அவர் பழைய கலிலியோ அல்ல உயிருடன் இல்லை. இவர் புதிய அது சரி, வேஜினியா (ஆதரவாக) மாணவன் நான் என்ற முறையிலே பாடம் கேட்ட ஒருவன் என்ற அடக்கத் வந்திருக்கிறேன். விஞ்ஞான ஆராய் தடவை அவரைப் பார்க்க வேண்டுப் பயப்படாதே. நான் அவரை ஒரே ஒ சரி, சரி அவரே பார்த்து விட்டார்.
த்து, துரத்தில்) யாரது? அ
இவ்வளவு ம்? முன்பெல்லாம் நீ அய்யா, எப்படி? நலந்தானே! ஓ! சுகத்துக்கு என்ன குறை? { ஈடுபட்டிருக்கிறாய்? நீரியல் பற்றி ஏ ஜம்ஸ்ற்றடாமில், 'வைட்iறிஷியசை சொன்னார். நான் நல்ல சுகமாயிருக்கிறேன். இங் மெத்த மகிழ்ச்சி. நான் ட்வைப்றிவழி சொல்லு சொல்லு இங்கு எனக்கு 6 உணர்ந்து பச்சாத்தாபப்பட்டு மன் மேற்பார்வையாளர்கள் என்மீது செய்வதற்குக்கூட அனுமதி தந்திரு தான். அவை எல்லாம் திருச்சபையி ஆமாம் கேள்விப்பட்டோம். நீங்கள் கொடுக்கிறது. அவர்களுக்குத் திரு அன்ட்றியா, நீ என்ன சொல்லுகிறாய் தான் கூறுகிறாயா? இல்லை, அய்யா, நீங்கள் குறை நீ புதிய கருத்துக்கள் கொண்ட ஆரா திருச்சபையின் அதிகாரம் செல்லுப என்ன நடக்குமோ! அந்த நாடுகளிலே கூட ஒரு தாக்க அப்படியா? டெக்காட்டைப் பற்றி ஒ புதினம்? ஆமாம் நீங்கள் உங்கள் கொள்கை ஒளியின் இயல்பு பற்றித் தாம் எழு
 
 
 

சுகிறீர்கள். விண்ணுலகத்தின் மேன்மையை, அதன் டீர்கள். விண்ணுலகத்தையே ஒழித்து விட்டீர்கள்.
ற எல்லாம் கண்டறிந்து எங்களுக்குக் கூறினார்.! கேடுகெட்ட அந்தப் பழைய காலம் முடிந்து விட்டது. விடுவது எத்தனை இழிந்த காரியம் என்பதை மனமார சபையின் விசாரணை மன்றம் அவரைத் திருத்தி ளுக்கெல்லாம் அவர் பிராயச்சித்தம் தேடிவிட்டார். கடவுளுக்கு விரோதமான 'கலிலியோ இப்போது கலிலியோ; முற்றிலும் புதிய கலிலியோ.
ச்சிக்காக ஒல்லாந்துக்குட் 。 ) என்ற ஆசையோடு வத்திருக்கிறேன். நீ ஒன்றுக்கும்
(ಥೀół. உங்கள் குரலைக் கொண்டே மட்டுக்கட்டியிருப்பார். ன்ட்றியாவின் குரல்போல இருக்கிறதே! அன்ட்றியா
ப்புடன்) சரி, சரி போய்ப் பேசுங்கள். இனி நான் பயன் கிட்டாது. போங்கள் போய்ப் பாருங்கள்.
டுமையான வெறுப்பா, என் மீது? ஏன், வேஜினியா. இப்படி இல்லை.(கலிலியோவை அணுகி) வணக்கம்
வா கிட்ட இரு. இப்போது என்ன வேலையிலே தோ ஆராய்கிறாயாமே! மெய் தானா? ச் சந்தித்தேன். உங்கள் சுகத்தைப் பற்றி விசாரிக்கச்
கு என்னை நல்லாய்க் கவனித்துக் கொள்கிறார்கள். iயசுக்குச் சொல்லுவேன் - உங்கள் சுகத்தைப் பற்றி. ால்லா வசதிகளும் கிடைக்கின்றன. என் தவறுகளை னிப்பு கேட்டுத் திருத்தி விட்டபடியால், இங்குள்ள பரிவு காட்டுகிறார்கள். விஞ்ஞான ஆராய்ச்சி க்கிறார்கள். சில நிபந்தனைகள் உண்டு. அவ்வளவு னால் விதிக்கப்பட்டவை. முற்றாகப் பணிந்து போய்விட்டது நல்ல பயனைக் பதியாய்த்தான் இருக்கும். ? விகடமாகப் பேசுகிறாயோ? அல்லது மெய்யுணர்ந்து
னைக்கக் கூடாது. நீங்கள் அடங்கிப் போன பிறகு,
பச்சி எதுவும் இத்தாலியிலே வெளியிடப்படவில்லை. டி ஆகாத நாடுகளும் உண்டுதானே அங்கெல்லாம்
ந்தை ஏற்படுத்தி உள்ளது, தங்கள் செய்கை. ரு செய்தியும் வரவில்லையா? பரிசிலிருந்து என்ன
யை மறுத்துரைத்த பிறகு, தயங்குகிறாராம், அவரும் திய பெருநூலை, ஒளித்துவிட்டாராம்!

Page 132
*கலி
'க'லி "Gas's
*a'ఇటి “Gesaa'
*$'
(ஒரு நெடிய மவுனம் - பின் பெருமூ தான் எனக்குக் கவலையாய் இருக்கி விட்டேனோ என்று தான் அஞ்சுகிறே என் விஞ்ஞான வேலைகளைத் தொ போக நினைத்திருக்கிறேன். இராசா6 வைக்கப் போகிறார்கள்? அது சரி, உன் கருத்து எனக்கு வி பிள்ளை வேஜினியாவும் பக்கத்திலே தான் இருக்கும். அவள் தான் இட்போதெல்லாம் எனக் ஏன், சமையல் வேலையைக் கவனிப் வகை பிடிக்கும் என்று முற்றும் அறி LDasG36m, (36au'giĝasfluu ! É 63_JETübŁDr. G3 (சிணுங்கி) சரியட்பா, வர வர உங்க பாவம், வேஜினியா! அவள் நினைக்கிறாள். நான் உங்க உங்களோடு சண்டை பிடிப்பதற்காக சண்டையா? என்னுடனா? எதற்காக?
அல்லவா? கொள்கை வைதிகரி கண்டிப்பதற்காகத் தான் நான் இங்கே கள்ளம் கபடமில்லாத வெள்ளை உள்
Lä 圣z ஆனால், நீ என்ன நினைக்கிறாய் அ என்னத்தைப் பற்றி? என்னைப் பற்றி, என் வாழ்க்கையை உங்களைப் பற்றி.அபிட்பிராயமா? என்பது அவ்வளவு முக்கியமான
பற்றி அரிஸ்ற்றோற்றிள் சொன்னார், ஐயம் கொள்வதே தவறு; இப்படி கொண்டிருந்தார்கள், எல்லாரும் ஆ கவிழ்த்து விட்டீர்கள். வெறும் சிந்த ஆராய்ச்சியும் முக்கியமானவை என் ஆராய்ச்சி, தொலைகாட்டி கொண்டு ெ இவற்றை எல்லாம் எண்ணும்போது. ஆம், அன்ட்றியா இப்போதும் என் ர ஒருவர் என் ஆய்வுகூடத்துக்கு வந்திரு அவர் நம்பவே இல்லை. தொலை கா சொன்னேன். அவர் விரும்பவில்லை
邸摄影 it is 8, 登_
என்பதுதான் அவருடைய அசையா தயாரில்லை. பெரும்பாலான மக்கள் என்ன செய்யலாம்? கண்ணை இறுக்கி மூடிக்கொண்ட உண்மையைப் பொய் என்று வரி விடுமா?
 
 

pச்சு) என் விஞ்ஞான நண்பர்கள் சிலரைட் பற்றித் றது. அவர்களை நான் தவறான வழியிலே செலுத்தி ன் உன் வருங்காலத் திட்டம் என்ன?
டர்ந்து செய்வதற்கு வசதியாக நான் ஒல்லாந்துக்குப் ஷக்கே தடை விதித்தவர்கள், மந்திரியையா விட்டு
இல்லாவிட்டால் உங்களுக்குப் பெரிய துன்பமாய்த்
ககுப் பேச்சுத்துணை. பதும் நான்தானே! உங்களுக்கு என்னென்ன உணவு ந்த ஒரே ஒரு சீவன் நான் தானே! அட்டா.
JFT (3 Tui F FSBD,DuJ60D6Ioá5 3566á. ளூக்கு என்னைக் கண்டாலே வெறுப்பு (போகிறாள்)
ள் அமைதியைக் கெடுக்க வந்திருக்கிறேன் என்று.
நான் வரவில்லை.
உங்கள் கொள்கைகளை நீங்களே மறுத்துரைத்திகள் ன் வயிரத்துக்குப் பணிந்து போய்விட்டதைக்
வத்திருக்கிறேன் என்று எண்ணுகி
பற்றி. உங்களைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் சங்கதியா, என்ன? உலக வரலாற்றிலேயே இடம்
அறிஞர் பெருமான் சொன்னார் - அவர்கள் பேச்சில் யாகத் தான் கிளிப்பிள்ளை போலச் சொல்லிக் னால், அதை எல்லாம் புரட்டி விட்டீர்கள். னையை விட, செயல்வழிப்பட்ட பரிசோதனையும் று காட்டிவிட்டீர்கள். விழும் பொருள்களைப் பற்றிய சய்த சோதனைகள்.ஊசலைப் பற்றிய உண்மைகள்
நினைவிலே பசுமையாக இருக்கிறது. தத்துவஞானி ந்தார். நட்சத்திரங்களைப் நான் சொன்னவற்றை ட்டியின் ஊடே வானத்தை ஒரு தடவை பார்க்கும்படி 1. நான் வற்புறுத்திப் பார்த்தேன். மறுத்துவிட்டார்.
வத்தது தவறாக இருந்துவிட்டால்.அப்படி இருக்காது த நம்பிக்கை. ஆனால் சோதித்துப் பார்க்க அவர் * அப்படிப்பட்டவர்களாகத் தான் இருக்கிறார்கள்
ால், உண்மை பொய்யாகி விடுமா? அல்லது யாலே மறுத்துவிட்டால் மட்டும் அது பொய்யாகி

Page 133
':'൫
“æ'sð
ᏉᏕᏏᏉᏍᎴ
*கலி
அய்யோ, அன்ட்றியா! தயவு செய் திெயும் அறிவுதான் என் மதம் என் இல்லை, அய்யா என்னை மன்னிய எனக்குத் தெரியும், அன்ட்றியா - அடைந்திருக்கிறார்கள் என்பது என ஒருவருமே எதிர்பார்த்திருக்கவில்ை 6tätig, அறிவுலகத்தையே நான் காட்டிக் நான் துரோகி என்று தானே எண்ணு இதைவிட அதிக தைரியசாலியாக என்ன செய்வேன், அன்ட்றியா? 6 விஞ்ஞானம் என் மூச்சல்லவா? (56 (but LDgBis35LDT LIril 856i. அப்படியானால், நான் ஏன் அவ்வாறா சொல்லுகிறேன் கேள். என் கொள் செய்வோம் என்று பயமுறுத்தினார் அம்மம்மா! எத்தனை கொடிய ப நோவையும் துன்பத்தையும் மட்டும் எ6 ஆகட்டும் என்று சொல்லிவிட்டேன். அப்படியானால் மனமார நீங்கள் ப நினைத்தேன்! உரத்துப் பேசாதே, அன்ட்றியா யாரு என்றெல்லாம் வாய்கிழியப் பேசலாப்
கொள்ளும் பக்குவம் எனக்கில்லை.
புதுமைகளைக் கண்டறிந்த மகான், வேண்டாம், அன்ட்றியா, வேண்டாம் கேட்டுக் கொள்கிறேன். என்னைக் க நீங்கள் பலகாலம் வாழவேண்டும். ஆமாம். புதிய புத்தகம் ஆராய்ச்சி எனக்குக் கடதாசி, மை பேனை எல்ல பறித்துக் கொண்டு போய்விடுகிறார்க கண் விழித்துத் தயாரித்து வைத்த ஆராய்ச்சி. ஆகா! பத்திரமாய்க் கொண்டுபோ சென்றுவிட்டால் அப்புறம் ஆபத்தில்ை வாழ்க அன்ட்றியா சென்று வா. (அன்ட்றியா போகிறார்) அட்பாடி (ஆறுதற் பெருமூச்சு விட்டு என்று ஏதாவது சளாய்பிக் கொண்டே தர்க்கிப்பதும் தான் அவருக்கு மிகவு ஆம், அம்மா அவன் போய்விட்டான் என்று வாசனை வீசுகிறதே! கொண்
அறிவொளி'IV.)
V
 

து என்னைக் குத்திக் காட்ட வேண்டாம் எனக்குத் பது எல்லாம் நல்லாய் அறிந்த நீயுமா, இப்படி. ங்கள் - நான் தவறிப் பேசிவிட்டேன். விஞ்ஞானப் பற்றுடையவர்கள் எவ்வளவு வேதனை க்குத் தெரியும். ல - நீங்கள் இப்படியாக நடந்து கொள்ளுவீர்கள்
கொடுத்துவிட்டேன் என்று தானே நினைக்கிறீர்கள்? றுகிறீர்கள் எல்லாரும்?
இருப்பிகள் என்று தான் எண்ணியிருந்தார்கள் பலர். னக்கு மட்டும் இல்லையா, பற்றும் வேட்கையும்?
ன சிறுசெயலைச் செய்தேன் என்று வியட்படைவீர்கள். கைகளை மறுமீட்புச் செய்யாவிட்டால், சித்திரவதை கள். சித்திரவதைக் கருவிகளைக் காட்டினார்கள். பங்கரங்கள்! நான் எதையும் தாங்குவேன். உடல் ன்னாலே தாங்க முடியாது. சரி, உங்கள் எண்ணப்படியே
றுப்புச் செய்யவில்லை! நான் நினைத்தேன்! நான்
நக்காவது கேட்டுவிட்டால் ஆபத்து. சத்தியம், தன்மம் D. ஆனால் நடைமுறை வாழ்வில் இவை எல்லாம். , நான் பாவி, உங்கள் பெருமையை விளங்கிக் பிரபஞ்சம் பற்றிய உண்மைகளைப் புதியனவாகக் ந்துவம் தர்மம், நீதி, மனச்சாட்சி - இவை பற்றியும்
நீங்கள். நீ போற்றும விஞ்ஞானத்தின் பெயரால் உன்னைக் கடவுள் ஆக்காதே. நான் மனிதன்.
நூல் இரகசியமாக. இங்கே
D s KEJKAW#Arg ள். ஆனால், நான் கள்ளமாக ஒரு பிரதி - இரவிலே ருக்கிறேன் அதுதான் இது. இயக்கவியல் பற்றிய
பச் சேர்க்கிறேன். இத்தாலியை விட்டுக் கடத்திச் ல. வணக்கம், அய்யா வருகிறேன். விடை தாருங்கள்.
போய்விட்டாரா, அந்த மனிதர்? ச்சிக் வனவளவுள இருட்டார். சண்டைக்காரரும்கூட! வாதம் செய்வதும் ம் விருப்பமான பொழுதுபோக்கு இல்லையா அப்பா? சமையல் பிரமாதம் போல் இருக்கிறது. கம கம B வா. ஒரு கை பார்க்கலாம்.
(திரை)

Page 134
எரிவடி ஃப்றீட் கவிதைகள் தமிழில் மணி
பேச்சற்றேன் "கவிதைகள் மூலஞ் சிறுபான்மையானோரையே (of6363)Luj6FTD என்ற போதும் நீ ஏன்
கவிதை எழுதுகிறாய்? என்று பொறுமையற்ற என் நண்பர்கள் கேட்கின்றனர் ஏனெனில் அவர்கள் தமது மார்க்கங்களுடுஞ் சிறுபான்மையானோரையே சென்றடைகின்றனர் அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.
பேணுவதற்கான உபதேசங்கள்
எதிரிகள்
ଜିତା தொ வில் உள் so அத்துடன் பெருமளவிற்கு நல்ல பாதுகாவலுடன் உள்ளனர்.
எனவே நும் நண்பர்களை எதிரிகள் என்பீர் அவர் பற்களைக் குத்தி உதிர்ப்பீ
இவ்வாறு அவர்களை எதிரிகளாக்க உம்மால் இயலும் அதன்பின் நீர் பெருமை பேசலாம்.
”அவர்கட்கெதிரான போராட்டத்தில் எழுந்து நின்று முதல் உதை கொடுத்தவன் நானே"
அச்சங்களும் மிச்சங்களும் தான் அஞ்சுவதாக உன்னிடஞ் சொல்பவனைப் பற்றி ஐயுறாதே
தன்னிடம் ஐயங்களே இல்லையென உன்னிடங் சொல்பவனைப்பற்றி அஞ்சு
 

செய்முறைப் பணி
திச் fTujf பேசக்
கற்பிக்க
அவர்களுள் ஒருவன் போற் சரளமாகத் திக்கிப் பேசக் கற்றேன்
அவர்கள்
ஏன் இப்போது என்னை உதைக்கிறார்கள்?

Page 135
‘புது வசந்தம் சி
A ATHY STU
ஸ்டூடிே
போட்டோ, வீடியோ, முத்து ஒடர்கள் ஏற்றுச்
‘புது வசந்தம்" சிற
BEAUT
/%്ട് /
K. RAVINDRATHAS Proprietor
 
 
 

ப்புற வாழ்த்துகிறோம்!
DIO & VIDEO
III, 6bs261T
மணவறை, பந்தல் ஆகிய கொள்ளப்படும்.
No.83, Bus Stand Complex, Vavuniya.
SPOT
f00്Wഗ്ഗr
No. A 62, Modern Market,
Bazaar Street, Vavuniya.

Page 136
மலையக சிறுகதைகளைப் பற்றி ஆழமான அகலமான பார்வையை நோக்கும் முன்கள் மலையக மக்களைப் பற்றியும் "மலையகம்" என்ற பதம் கையாளப்படுவதற்கான காரணங்களையும் அறிய வேண்டியுள்ளது. மக்களது சமூக பொருளாதார அரசியல், பண்பாட்டின் நிலைகள் ஊடாகத்தான் இலக்கியம் உருவாக்கப்படுகின்றது. கலை இலக்கிபம் மேல்கட்டுமானம் மட்டுமே, அதன் ஆடிக்கட்டுமானமாக அரசியல் பொருளாதாரம் சமுக நிலைகளே கானப்படுகின்றன.
மலையக மக்களின் வருகை
இலங்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் பிரித்தானியார்களால் குடியேற்றப்பட்ட இந்திய வம்சாவழி மக்களே மலையக மக்களாவர். தென்னிந்தியாவில் காணப்பட்ட பசி, பட்டினி, வறுமை, மூடநம்பிக்கை, பண்ணை நிலப்பிரபுத்துவ அடக்குமுறை போல் பல்வேறு காரணங்களின் விளைவாக பிழைப்புத் தேடி பல நாடுகளுக்கு தமிழ் மக்கள் புலம் பெயர்ந்ததுபோல, இலங்கைக்கும் புலம் பெயர்ந்தனர். பிரித்தானியரின் கைக்கூலிகளாக செயற்பட்ட கங்கானிமார்களின் தலைமைகளில் அழைத்துவரப்பட்டு குடியமர்த்தப் பட்டனர். பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை, இறப்பா, கோப்பி போன்ற பயிர் செய்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இங்கு இருண்ட இப்ப வாழ்க்கையினை அனுபவித்தனர். தோட்டங்களில் சிறை வாழ்க்கையைப் போல வாழ்ந்தனர். உள்ளுள் மேலாதிக்கவாதிகளாலும் கொடுரமானமுறையில் காண்டப்பட்டனர்.
1930 இன் பின்னரே இம் மக்களின் அரசியல் # "լք: Ի பொருளாதார செயற்பாடுகள் முனைப்படையத் தொடங்கின. இடதுசாரி கருத்துகளின் செல்வாக்கும், இந்திய சுதந்திர போராட்ட அலைகளும், இலங்கை - இந்திய காங்கிரஸின் தோற்றமும் காரணமாக இம் மக்களின் இன அரசியல் செயற்பாடுகள் வெளியுலகத்திற்கு தெரியத் தொடங்கின. இதன் பின்னர் இலங்கையில் இவர்களின் நிலை உணரப்பட்டது. 1948 ஆம்
 

-ஜெ.சற்குருநாதன்
ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர் மலையக மக்களின் வர்க்க இன அரசியல் உணர்வுகளைக் கண்டு பயந்த இனவாதிகள் இவர்களின் வாக்குரிமையை வஞ்சகமான முறையில் பறித்தனர். அதன் பின் னர் இந்திய - இலங்கை அரசுகளினிடையே ஏற்பட்ட பல ஒப்பந்தங்களின் விளைவாக சிலர் இந்தியாவிலும், பலர் இலங்கையிலும் வாழத் தலைப்பட்டனர். 1980களுக்குப் பின்னர் இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையிலான கப்பல் சேவை நிறுத்தப்பட்டவுடன் இவர்கள் தொடர்ந்தும் இலங்கையிலே வாழ்ந்து வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே பல வழிகளில் இம்மக்களது அரசியல் உணர்வுகளை தடுக்க முயன்றும் இனவாதிகளிடையே தாங்கள் யாள் என்பதை பல போராட்டங்கள் ஊடாக நிரூபித்து வருகின்றனர்.
மலையகத் தமிழர் என்ற சிந்தனை
மலையகத் தமிழன் என்ற சொற்பிரயோகம் அறுபதுகளுக்குப் பின்னரே கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் இந்தியத் தமிழர் என அழைத்த அதே வேளையில் தோட்டக்காட்டான், கள்ளத்தோணி போன்ற வார்த்தைகளாலும் அழைக்கப்பட்டனர். அறுபதுகளுக்குப் பின்னர் விரல் விட்டு எண்ணக் கூடிய படித்த இளைஞர்கள் மலையகத் தமிழன் என்ற சொற்பிரயோகத்தைக் கையாண்டாலும், மக்களின் வர்க்க இன இருப்பு வாழ்வியல் நிலைகளே மலையகத் தமிழன் என அழைப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது எனலாம், காலா காலமாக இம்மக்கள் பல்வேறு வழிகளில் நடத்தி வருகின்ற போராட்டங்கள் ஊடாகவும், இவர்களில் பெருந்தொகையானவர்கள் தொழிலாளர்கள் என்ற வகையிலும் "மலையகத் தமிழர் என பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது. அத்துடன் இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய உணர்வுகள், சிந்தனைகள், தலைதுாக்கி வருவதையும் இவ்விடத்தில் கவனிக்க வேண்டியுள்ளது. மேலும் அண்மைக்காலங்களில் இவர்கள் மத்தியில் கல்வி
as a gifth 33.

Page 137
அரசியல் ரீதியாக ஒரு அசைவியக்கம் நடைபெற்று வருவதை உன்னிப்பாக அவதானித்தால் மலையகத் தமிழர் என்ற பதம் பற்றிய கேள்விக்கு இடமிருக்காது.
மலையகச் சிறுகதைகள் தோற்றம், வளர்ச்சி பற்றிய சில குறிப்புகள்
மலையகச் சிறுகதைகளை நோக்கும்பொழுது மலையக இலக்கியத்தின் போக்கு பற்றியும் சிறிது கூற வேண்டியுள்ளது. ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் மலையக இலக்கியம் தேசியத்தன்மை பெற்று வருவதை அவதானிக்க வேண்டும். தனது தன்னடையாளங்களையும், பாரம்பரிய தன்மைகளையும், தங்களின் உணர்வுகளையும் மலையக இலக்கியம் வெளிப்படுத்தி வருவதையும் நோக்க வேண்டும். தமிழகத்திலிருந்து இங்கு வந்த பெ.சு.மணி அவர்களும், காலஞ்சென்ற கோமல் சுவாமிநாதன் அவர்களும் மலையக இலக்கியத்தை தெளிவாக இனங்கண்டு கூறியமை கவனிக்கத்தக்கது.
மலையக இலக்கியத்தின் இச் சிந்தனை ஊடாகத்தான் சிறுகதைகளையும் பார்க்க வேண்டியுள்ளது. மலையக சிறுகதைகளின் தோற்றம் முப்பதுகளுக்கு பின்னரே ஏற்பட்டது எனலாம். தமிழ் சிறுகதை மன்னன் என போற்றப்படும் புதுமைப்பித்தன் தனது "துன்பக்கேணி” என்ற கதைகளினூடாக மலையக மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்தார். தமிழகத்தில் இருந்து கொண்டே இவர் எழுதிய இக்கதை அப்போதைய மணிக்கொடியில் வெளிவந்தது.
"விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே ~ தன்பக் கேணியிலே யெங்கள் பெண்கள் அழுதசொல்
என பாரதியார் வரிகளால் கவரப்பட்ட புதுமைப்பித்தன் தென்னிந்தியாவிலிருந்து கொண்டே இலங்கை புலம் பெயர்ந்த மக்களின் அவல நிலைபற்றி துன்பக்கேணியில் வெளிப்படுத்தினார். தமிழகத்தில் வாசன்பட்டி கிராமத்தில் ஆரம்பித்து பின்னர் இலங்கைக்கு வந்து பல வேதனைகளை அனுபவித்த ஒரு பெண்ணின் கதை இதில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் வாழ்க்கை முறை, வேலைகள் செய்யும் விதம், அடக்குமுறை காணப்படும் போக்கு என்பனவற்றை ஒரு சோக நாடகம் போல துன்பக்கேணி என்ற கதையை படைத்துள்ளார். அக்காலத்தில் பெருந்தோட்ட வாழ்க்கை எட்படிப்பட்டது என்பதை பின்வருமாறு காட்டுகின்றார்.
34 வசந்தம்

"அங்கு போய் குடியிருந்தால் இரண்டு விதமான மனப்பான்மை தான் ஏற்படும். ஒன்று
சிறைக்குத் தயாராவது மூன்றாவது ஒன்றிருக்கின்றது அதுதான் வாழ்க்கைககு முற்றுப்புள்ளி போடுவது”
என துன்பக்கேணி கதையில் ஓரிடத்தில் எழுதுகிறார். இதன் மூலம் அக்கால வாழ்க்கை தோட்டப்புறங்களில் எவ்வாறு இருக்குமென்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 1930களில் மலையக மக்களின் வாழ்க்கையை தமிழகத்தில் இருந்து கொண்டு யதார்த்தமாக புதுமைப்பித்தன் வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் வாழ்க்கையை கிண்டலாக, நகைச்சுவையாக, சோகமாக பார்ட்பது மட்டுமே இவரது நோக்கு. இது இக்கதையிலும் காணப்படுவது தவிர்க்க முடியாததே.
பெருந்தோட்ட பகுதிகளில் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை கொடுரமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தாலும் அதனை மீறிய போராட்ட உணர்வுகள் மலையகப் பகுதிகளில் தலைதுாக்கி வந்தன. அந்த உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் அடுத்தக்கட்ட சிறுகதைகள் சிறப்பாக அமைவதற்கு வித்திட்டன.
1940களில் மலையக தோட்டப்புறங்களில் இடதுசாரிக் கருத்துக்கள் பரவியமையும், இலங்கை - இந்திய காங்கிரஸின் செயற்பாடுகளாலும் ஓரளவு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. படிப்பறிவில்லாத உழைப்பு ஒன்றையே மூலதனமாக கொண்ட ஒரு சமூகத்தினரால் எழுத்து ரீதியான படைப்புகளை எதிர்பார்ப்பது கடினமே. இருப்பினும் மலையகப் பகுதிகளில் கங்காணி மற்றும் உயர் தொழில் பார்ப்பவர்களின் பிள்ளைகள் படித்து மக்கள் மீது மனிதாபிமானம் கொண்டு ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டனர். கோ.நடேசய்யர் போன்றவர்களும் அதனைத் தொடர்ந்து வந்த சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஸ் போன்றவர்கள் இத்தகைய ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டனர். இக்கால கட்டத்தில் அ.ந.கந்தசாமி, முருகானந்தம் போன்ற ஈழத்து சிறுகதை ஆசிரியர்களும், மலையக மக்களின் வாழ்க்கையைச் சித்திரித்து சிறுகதைகளைப் படைத்தனர்.
இவ்விடத்தில் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஈழத்து தமிழ் இலக்கிய சிறுகதைகளையும் நோக்க வேண்டியுள்ளது. இக் கால கட்டத்தில் சிறுகதைகளை எழுதியோர் தனிமனித உண்ர்வுகளுக்கு முக்கியுத்துவம் கொடுத்து

Page 138
எழுதினர். ஆங்கில இலக்கிய பரிச்சயமும், தமிழ் நாட்டு சிறுகதைகளின் தாக்கத்தின் காரணமாக ஈழத்து தமிழ் சிறுகதைகளினால் அழகியல் பண்புகளுக்கே கூடுதலான இடம் தரப்பட்டன. ஆனால் மலையகச் சிறுகதைகள் உணர்வு, போராட்ட தளங்களிலிருந்து தோன்றியமையால் ஆரம்பமே ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடாகத்தான் அமைந்தது எனக் கூறிக் கொள்ளலாம்.
சுதந்திரத்திற்குப் பின்னர் வஞ்சக முறையில் இவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டு பல அரசியல் அநாதைகளாக ஆக்கப்பட்டனர். இதனை எதிர்த்து 1952ம் ஆண்டு கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டது. இது இலங்கையின் ஏனைய அடக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், மலையக மக்களின் உணர்வுகளையும் தட்டியெழுப்பியது. இதனால் இலங்கையில் ஏற்பட்ட சடுதியான அரசியல் மாற்றங்களும், சமூக சிந்தனைகளும், மொழி உணர்வுகளும் மலையகத்தைப் பாதிக்கத் தொடங்கின.
1956 ஆம் ஆண்டு இலங்கையில் தேசிய அரசியலில் ஏற்பட்ட அரசியல் சமூக விளைவுகள் நாடு முழுவதும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின. விதேசிய எதிர்ப்புணர்ச்சிகளும் சுதேசிய சிந்தனைகளும் மக்கள் மத்தியில் எழுந்தன. இது இலக்கிய துறையையும் பாதித்தது. இக்காலகட்டம் வரை உதிரியாக இருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஸ்தாபன ரீதியாக உருவெடுத்து முனைட்படையத் தொடங்கியது. இலங்கைக்கென தனித்துவமான இலக்கியம் படைக்க வேண்டும் என்ற சிந்தனை இதனுடாக மேலெழுந்தது. மண்வாசனை சோஸலிசம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து இலக்கியங்கள் படைக்கப்பட்டன.
இந்த அலைகள் மலையகத்திலும் வீசத்தொடங்கின. படித்த சில இளைஞர்கள் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டனர். சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் கவிதைத்துறை, நாவல் இலக்கியத்துறையிலும் மலையக சமூகத்தைபிரதிபலித்தார். இவரை தொடர்ந்து பலர் இலக்கிய துறையில் காலடி எடுத்து வைத்தனர். சிறுகதை என்ற இலக்கிய வடிவம் மலையகப் பகுதிகளில் படைக்கப்பட்டன. படித்த விரல் விட்டு எண்ணக்கூடிய இளைஞர்கள் சமூக நோக்கைக் கொண்டு பல சிறுகதைகளைப் படைத்தனர். திருச்செந்தூரன், என்.எஸ்.எம்.இராமையா, தெளிவத்தை ஜோசப், கார்மேகம், சாரல்நாடன், மாத்தளை வடிவேலன், மலரன்பன், நூரளை சண்முகநாதன், பன்னிசெல்வம், மல்லிகை.சி.குமார்,

பூரணி மொழிவரதன், பி.மரியதாஸ் போன்ற ஆளுமைமிக்க சிறுகதையாசிரியர்கள் மலையகத்தில் உருவாகினர்.
அதனைத் தொடர்ந்து மலையகத்தில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் சமூக பண்பாட்டு போராட்டங்கள் ஊடாக புதிய தலைமுறை எழுத்தாளர்கள் தோன்றி மலையக மண்வாசனைமிக்க கதைகளை எழுதி வருகின்றனர். அல் அஸ்மத், கோவிந்தராஜ், மு.சிவலிங்கம், கேகாலை கைலைநாதன், ராமையா, முருகவேள், மெய்யன் நடராஜா, த.மயில்வாகனம், இபரமேஸ்வரன், ரோஹினி முத்தையா, மாத்தளை சோமு, ந.பார்த்தீபன், சம்பந்தன் போன்ற பலர் எழுதி வருகின்றனர். 1997 வரை சுமார் பன்னிரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மலையக சிறுகதைகளின் சமூக உள்ளடக்கம்
மலையக சிறுகதைளில் சமூக உள்ளடக்கங்கள் பல்வேறு விதமாக வெளிப் பட்டிருந்தாலும் அதனது ஒட்டு மொத்தமான தன்மை இம் மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டியதாகும். இந் நாட்டில் உரிமை இல்லாமலிருந்து உரிமை கிடைத்ததும் அது கைமாறிய கதையை திருச்செந்தூரனின் “உரிமை எங்கே” என்ற கதை பேசுகின்றது. இந்நாட்டில் வாழ்வதற்கு தேவைப்படும் பத்திரமான பிரஜா உரிமை சான்றிதழைப் பெறுவதற்கு கண்டிக்குப் போய் அங்கு தனது பெயரிலிருந்த பிரஜா உரிமை அதே பெயரிலுள்ள இன்னொருவருக்கு மாறியதைக் கண்டு அதிர்ச்சியடையும் ஒரு தொழிலாளியின் கதை பேசப்படுகிறது. அறுபதுகள் இம்மக்களின் அரசியல் அவல நிலையினை கதை ஓட்டத்தின் ஊடாக வெளிப்படுத்துகின்றார் திருச்செந்தூரன்.
மலையக மக்களின் வாழ்க்கையை தனித்துவமான முறையில் கலையழகோடு சித்திரித்த பெருமை என்.எஸ்.எம்.இராமையாவைச் சாரும். மலையக சிறுகதை மன்னன் என்றும் இவரைச் சொல்லலாம். இவரது சிறுகதைகளின் தொகுப்பு "ஒரு கூடைக் கொழுந்து" என்ற தொகுதியாக வெளிவந்தது. அறுபதுகளில் எழுத்துத் துறையில் நுழைந்த என்.எஸ்.எம்.இராமையா அவர்கள் குறைவான சிறுகதைகளை எழுதி நிறைவை சாதித்திருக்கின்றார்.
பிஞ்சுக்குவியல் என்ற கதையில் மலையக தோட்ட தொழிலாளிகளின் பிள்ளைகள் பற்றியும் அவர்களோடு தாய்மார்கள் கொண்டிருக்கும்
புது வசந்தம் 135

Page 139
பாசப்பிணைப்பினையும் சொல்கின்றார். பிள்ளை மடுவத்தில் பிள்ளைகளை அனுப்பும் விதம், பிள்ளைகளைப் படிப்பறிவில்லாத கிழவி பார்க்கும் விதம் என்பனவற்றை அனுதாப உணர்ச்சியோடு படைத் திருக்கின்றார். மலையக மக்கள் அறியாமையிலும் தங்கள் வாழ்வை எதிர்கொள்ளும் அவல நிலையினையும் மிக நேர்த்தியாக சொல்லிருக்கின்றார்.
"வேட்கை" என்ற கதையில் பெற்றோல்மக்ஸ் விளக்கு ஒன்று வாங்க ஒரு தோட்ட தொழிலாளி எடுத்துக் கொண்ட பகீரதப்பிரயத்தனத்தைக் காட்டுகின்றார். ஓய்வூதிய தொகையை இழந்த அத் தோட்த் தொழிலாளி பெற்றோல்மக்ஸ் விளக்கு வாங்குவதற்காக நிலத்தை கொத்தி பயிரிடுகின்றான். போதா காலத்தில் அடித்த மழையின் காரணமாக அவனது நிலம் பாழாயப் போனதை இக்கதை சித்திரிக்கின்றது. "தரிசனம்" என்ற கதையில் கோவிலுக்கும் இம் மக்களுக்குமிடையிலான உறவை இயல்பாக பேசுகின்றார். "மழை" என்ற கதையில் வரட்சியைப் போக்குவதற்கு மழை வேண்டிய தொழிலாளர்கள் புல்லு மலைக்கு தீவைட்பதை எடுத்து கூறி தொழிலாளர்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டுகிறார்.
"ஒரு கூடைக் கொழுந்து" ஒர் அற்புதமான கதையாகும். கணக்குப்பிள்ளை 57 இறாத்தல் கொழுந்து எடுத்து காட்டு என லட்சுமி என்ற பெண்ணிடம் கூற அதனை சவாலாக எடுத்து கணக்கப்பிள்ளை கேட்ட இறாத்தல் எடுத்து காட்டுகிறாள் லட்சுமி. தேயிலைச்செடி, தேயிலைக் கொழுந்து என்பவற்றோடு பழகிப் போன மலையகப் பெண்களின் உணர்வுகளை இக்கதையில் பதிவு செய்கின்றார். 57 இறாத்தல் கொழுந்து எடுத்து வந்த லட்சுமியை பார்த்து குறைவாக இருக்கின்றது எனக் கூற "இத பார்த்து விட்டு போங்க ஐயா, இது நல்ல கொழுந்தோ, கெட்ட கொழுந்தோ இவ்வளத்தையும் எடுத்த கையி. இந்த இறாத்தலை தர மாட்டேன்னு சொல்லுறிங்க” என லட்சுமி ஆவேசமாக கூறுவதை இயல்பாக காட்டி இருக்கின்றார். இவ்விடயம் அக்கால மலையக பெண்களின் எதிர்ப்புக்குரல் இவ்வழிகளில் வெளிப்பட்டு வந்ததை பதிவு செய்கின்றார்.
"தீக்குளிப்பு” என்ற கதையில் மென்மையான உறுதியான காதல் உணர்வுகளையும் அதனை மீறிய குடும்ப உணர்வுகளையும் கூறுகின்றார். மத்தியதர வர்க்க காதல் எதனையும் எதிர்பார்த்து நிகழ்வது. ஆனால் எதுவுமே இல்லாத உழைப்பு ஒன்றே மூலதனமாக கொண்ட தொழிலாளிகளுக்கு
136 அசத்தம்

அத்தகைய எதிர்பார்ப்பு குறைவாகும். இதனை இக்கதையில் தெளிவாக காட்டுகின்றார். ரஞ்சிதம் என்ற பெண் ஒருவருடன் ஒடிப்போய் ஒரே நாளில் தனது குடும்பப் பொறு D, LT3F r உணர்ந்து தன் வீடு திரும்புகிறாள். இக்கதையில் மிக நளினமான முறையில் உணர்வுகளை ஒட விட்டிருக்கின்றார்.
இத்தொகுப்பில் ரணம், ரகுபதிராகவ, முற்றுகை போன்ற கதைகள் மலையக மக்களின் உணர்வுகளை இயல்பாக கூறிநிற்கின்றன. மலையக மக்களின் எதிர்ப்புக்குரல் ஆங்காங்கே உதிரிகளாக வெளிப்பட்டு நிற்பதை இக்கதைகள் எடுத்துக் காட்டுகின்றன. "வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட சொந்த ஆளுமையின் பலத்தால் சவால் விடுகின்றனர்" என இக் கதைகளுக்கு முன்னுரை எழுதிய மு.நித்தியானந்தன் கூறியிருட்பது கவனிக்கத்தக்கது. மலையக மக்களின் பேச்சு வழக்கு, சடங்கு சம்பிரதாயங்கள், இயல்பான மக்கள், வாழ்க்கை முறைகளை இவரது கதைகளில் காணலாம். வாழ்வியல், உழைப்பின் மகத்துவம், பெண்ணின் நிலை, போராட்ட உணர்வு, கடமை உணர்வு போன்ற சமூக அம்சங்களை தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளைப் படைத்திருக்கின்றார்.
இவருடைய கதைகள் உதிரிகளாக நிற்கும் தனி மனித மூலம் சமூக நிகழ்வுகளுக்கு முதன்மை அளித்தார் ஒழிய, சமூக மொத்தத்திலிருந்து கொண்டு பிரச்சினைகளை அணுகாமல் விட்டதுதான்
தனிமனிதர்களிடையே உள்ள முரண்பாடுகளை சமூக, அரசியல், பொருளாதார பின்புலத்ததில் விளக்கியிருந்தால் மேலும் அவரது கதைகள் சிறப்படைந்திருக்கும்.
அடுத்ததாக மலையக சிறுகதைகளுக்கு பங்காற்றியவர்களுள் முக்கியமானவர் தெளிவத்தை ஜோசப் அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர்
படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவருடைய சிறுகதைகள் "நாமிருக்கும் நாடே" என்ற தலைப் பில் தொகுப்பாக வெளிவந்தது. வார்த்தைகளாலும், சிறந்த நடைப்பண்புகளாலும் நளினமாகச் சொல்லும் ஆற்றலும் இவரது கதைகளுக்கு வலிமை சேர்ப்பவையாயுள்ளன. ஜோசப் கதைகள் பற்றி இக்கதைகளுக்கு முன்னுரை எழுதிய மு.நித்தியானந்தன் பின்வருமாறு

Page 140
"சமுதாயத்தில் ஆளுமை நசிந்து அழிந்து தனிமைப்படுத்தப்பட்ட சமுதாய இழையத்திலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட உதிரிப் பாத்திரங்களின் துயரங்கள் ஏக் கங்களுக்கு $26፻፲ ፱ - fff &ጅ5 இச்சமுதாயத்தின் கேவலங்களை நோக்குகின்றது. இவரது கதைகளில் வரும் அநேகள் ஊர் பேரில்லாத தனித்துவமான ஆளுழை அழிந்து போன பாத்திரங்களே. சாதாரண தோட்டத் தொழிலாளிகள், கிளாக்குகள், ஆசிரியர்கள், ட்றைவர்மார்கள், மெக்கானிக்குகள், சிறுவியாபாரிகள், ஆகியோரை இவர்கதைகளில் சந்திக்கலாம்"
"நாமிருக்கும் நாடே” என்ற சிறுகதை அக்காலத்தில் காணப்பட்ட நாடற்றவர்களின் நிலையினை கூறுகின்றது. இந்தியாவில் வீடு கட்டுவதற்காக வீரமுத்து கிழவன் தேயிலை மண்ணில் உழைத்த பணத்தை அனுப்புகின்றான். அங்கு வீடும் கட்டப்படுகின்றது. அதற்குள் இந்நாட்டில் வாழ்வதற்கு பிரஜா உரிமை கிடைத்து விடுகின்றது. கடைசியில் அதனை அனுபவிக்க முடியாமல் அத்தோட்டத்திலேயே தங்கி வருகின்றான். இதனை இயல்பாக ஆசிரியர் காட்டி
நினைத்த தொழிலாளர்களின் அவலநிலை
பேசப்படுகின்றது.
மீன்கள் என்ற கதைக்கு ஒரு வீட்டுக்காகத் தொழிலாளி படும் வேதனைகளை நிதர்சனமாக்கு கின்றது. கங்காணிக்கு சாராய போத்தலை வாங்கி கொடுத்து ஒரு காம்பிராவை பெற்றுக்கொள்ள முயன்று இறுதியில் நடக்க முடியாமல் போனதைப் பற்றி பேசுகின்றது. மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது. மக்கள் துணிந்து ஸ்தாபனரீதியாக அணி திரண்டு போராடுவதை தவிர்த்து தனிமனித நிலையிலிருந்து தனக்கே உரிய நிலையிலிருந்து போராடுவதை இவர் காட்டுகின்றார். தோட்டத் தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில் தொழிற்சாலையிலிருந்து தேயிலை களவெடுப்பதையும் எடுக்கும் தேயிலை சொற்ப அளவில் இருந்தும் அதனை வைத்து குடிக்கப் போய் நடுவீதியில் நிற்பதை கூனல் என்ற கதை
இத்தொகுப்பில் "தீட்டு ரொட்டி”, “ஒரு தொழிற் பையன்கள் படம் பார்க்க போகின்றார்கள்", ”போலித் திருப்தி” போன்ற கதைகள் வர்க்க உணர்வுகளையும், சாதியத்துக்கெதிராக போராடுவதையும், மலையகத்தில் எழுந்து வரும் மத்தியதர வர்க்கத்தினரையும் துல்லியமாக பதிவு

செய்கின்றது. இந்திய மண்ணில் காணப்பட்ட சாதி முறைகளுக்கும் வேறுபட்ட பண்பினையே மலைய சாதிய முறைகள் பெற்றுள்ளன. நிலமானிய
மலையக மக்கள் மத்தியில் இல்லை. சாதிய முரண்பாடுகளைவிட அவர்களின் சமூக அரசியல் வர்க்க பிரச்சினைகளே முக்கியமாக கருதப்பட்டது. இருப்பினும் சாதிய பிரச்சினைகள் மலையகப் பகுதிகளில் அலைதுாக்குவதையும் மறுக்க முடியாது. இதனை தீட்டு ரொட்டி சிறப்பாக பதிவு
பாட்டி சொன்ன கதை, பெண்மைச் சிந்தனைகளை பேகதின்றது. அனுபவத்தில் உதித்த பாட்டியின் கதையால் இளம் பெண் ஒருவனுடன் ஒடிட்போகும் சிந்தனை மாற்றப்படும் விதம் அழகாக சொல்லப்படுகின்றது. இளம் வயதில் வாழ்க்கையைப் பற்றி அறியாத மலையக பெண்ணின் அறியாமையை தீர்த்துக் கொள்வதே இக்கதை
ட்படுத்துகின்றது.
இப்படியான தனிமனிதர்களின் நிலையில் மலையக மக்களின் வாழ்க்கை அணு 激荔茨葱漆控 ஜோசப் சித்திரிக்கின்றார். ஒரு கிளார்க் ஆக வேலை செய்த இவர் தனது வர்க்க மனோபாவங்களுக்கு ஏற்பவே இச் சிறுகதைகளை எழுதியுள்ளார் என தெரிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக சமுதாயத்தின் அவலங்களை புலப்படுத்தியிருட்பது அவரது சமூக நோக்கின் விளைவு எனக் கருதலாம்.
哆 雛機撥認薔籌義
மேற்குறிப்பிட்ட இரண்டு முக்கியமான மலையக சிறுகதைகள் அறுபதுகளுக்கும் எண்பதுகளுக்குமிடைப்பட்ட காலங்களில் வெளிவந்ததாகும். இக் கால பகுதியில் மலையகத்தில் காணப்பட்ட ஏக்கம், வறுமை, காதல், சோகம் போன்ற கதை கருக்களாக அமைந்த
கேே சமூக பொறுப்புள் ளேேைெ : மண்வாசனை படைத்ததாகவும் போராட்ட உணர்வுகளை பிரக்ஞை பூர்வமாக படைத்திருந்தால் மேலும் இவர்களது சிட் ந்திருக்குப் இவ்விருவரும் எழுதிய கதைகள் தவிர, பல சிறுகதை தொகுப்புகள் வெளிவந்திருப்பினும்,
உடையதாயிருக்கும். "தோட்டகாட்டினிலே’ என்ற சிறுகதைத் தொகுதி பேராசிரியர் கைலாசபதியின் அணிந்துரையுடன் வெளிவந்தது. மாத்தளை வடிவேலன், மலரன்பன், மாத்தளை சோமு போன்ற படைப்பாளர்களால் படைக்கப்பட்ட சிறுகதைகள் இந்நூலில் காணப்படுகின்றன. மலையக பகுதிகளில்
வசந்தத் 137

Page 141
ஆங்காங்கே முளைத்த எதிர்ப்பு குரல்கள் இக்கதையினூடாக வெளிவந்தன. இறப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களின் துயரங்கள் இக் கதைகளில் பேசப்படுகின்றன.
மலரன்பன் தனது கதைகளை தொகுத்து கோடிச் சேலை” என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
காலத்து மரங்கள், ஞானரதம், இவர்களும் மனிதர்கள், கறிவேப்பிலைகள், மலர்வளையம், வானவில், உறவுகள், தார்மீகம், பார்வதி, சுயம்வரம் போன்ற கதைகள் இத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. "அக்கினி குஞ்சுகள்" என்ற கதை மலையத்தில் உருவாகிவரும் தீவிர சிந்தனைகளை
வர்க்க சிந்தனை, மத்தியதர வர்க்க மனோபாவம் போன்ற இவரத கதைகளில் பரவி நிற்கின்றன.
மு.சிவலிங்கத்தின் சாகித்திய பரிசு பெற்ற "மலைகளின் மக்கள்” என்ற சிறுகதை தொகுப்பு 1992ல் வெளிவந்தது. அவர் கதையின் முன்னுரையில் 165 ஆண்டு வரலாற்றில் நான் கண்ட ஜீவாதாரப் பிரச்சினைகளையும் அம்மக்களின் தேசிய அந்தஸ்து, அரசியல் உரிமைகள், பொருளாதார சமூக கலாச்சார வளர்ச்சி இவைகளின் நிலைமைகளைப் பற்றியும் எனது கதைகளில் தொட்டுக் காட்டியிருக்கும் உண்மைகள் என கூறுவதிலிருந்து அவரது கதைகளில் சமூக உள்ளடக்கத்தினை கதைகளுடாக அறிந்து கொள்ள முடிகின்றது. மலைகளின் மக்கள் என்ற கதையில் சிங்கள கிராமவாசிகளுக்கும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையிலான பரஸ்பர ஒற்றுமை பேசப்படுகின்றது. மதுரகீதம், நிரந்தம், காகமும் நரியும், லேபர். இருள், ஞானட்பிரவேசம், வல்லமை தாராயோ, எனக்குள் ஒரு மயக்கம், அந்தரங்கம் கேவலமானது, ஒருபிடித் தேயிலை, என்னப் பெத்த ஆத்தா போன்ற கதைகள் மலையக சமூகத்தின் அவலங்களை எடுத்துக் காட்டுகின்றன.
சமகாலத்தில் வெளிவந்த முக்கிய சிறுகதைத் தொகுப்பு தீர்த்தக்கரைக் கதைகளாகும் மலையக மக்களின் போராட்ட உணர்வுகளையும், வர்க்க சிந்தனைகளையும் துல்லியமாக வெளிப்படுத்திய இத்தொகுப்புக் கதைகள் மலையக மக்கள் மத்தியில் தேசிய உணர்வுகளைக் கூர்மையாக்கி படைக்கப்பட்டிருக்கின்றது. "தீர்த்தக்கரை” என்ற சஞ்சிகை மலையகத்தில் சமதர்ம கருத்துக்களைக் கொண்டிருந்த இளைஞள் கூட்டத்தால் நடத்தப்பட்டதாகும். இவ்விதழில்
138 让垂 时夺酶登粗
 

வெளிவந்த கதைகளும் சமகால இதழான "நந்தலாலாவில் ”வெளிவந்த கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றன.
தீர்த்தக்கரைக் கதைகளில் உதய காலத்து ஜனனங்கள், நண்பனே உன் நினைவாக, வினையை மேவும் விரல்கள் போன்ற கதைகளை ஆனந்தராகவன் எழுதியுள்ளார். 1983ம் ஆண்டு நாடெங்கும் நடந்த இனக்கலவரத்தை "நண்பனே உன் நினைவாக” என்ற கதை பதிவு செய்கிறது. இதன் பின்னர் வடக்கு கிழக்குப் போராட்டம் முனைப்புப் பெற்ற வேளையில் நாடு முழுவதும் அடக் நிலவியதால் ஏற்பட்ட ஒரு பெண்ணின் கொடுமைகளை சித்திரித்து "உதய காலத்து ஜனனங்கள்" என்ற கதை எடுத்துக் காட்டுகிறது.
பிரான் சில்ை சேவியர் வடக் கைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் மலையகத்தில் எழுந்து வருகின்ற வளர்ந்து வருகின்ற தேசிய சிந்தனைகளைப் பதிவு செய்கிறார். இத் தொகுப்பில் கேகாலைக் கைலநாதன் கதைகள் விசேடமாக நோக்கத் தச் ணிே வற்றிடும் குளங்கள் என்ற கதையில் மலையக மக்களது இன வர்க்க உணர்வு தேசிய சிந்தனைகள் முன் வைக்கப்படுகின்றன. கண்டிப் பிரதேசத்தில் காணப்படும் தோட்டங்களை அரசாங்கம் குடியேற்றத்துக்காக எடுத்தபோது அதனை எதிர்த்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். இது எங்கள் சொந்தப் பிரதேசம் என்ற உணர்வு இக்கதையில் வெளிப்படுகிறது.
“மீண்டும் வசந்தம்” என்ற கதையில் மலையகத்தில் எழுந்து வரும் மத்தியதர வர்க்கசிந்தனை சொல்லப்படுகிறது. "துரிகை” என்ற இவரது கதையில் ஒரு ஓவியக் கலைஞனின் சமூகப் பொறுப்பு பேசப்படுகிறது. இக்கதையில் தமிழ் வாலிபனுடன் இணைந்த பாத்திரமாக சிங்கள வாலிபன் என்ற பாத்திரம் வார்க்கப்பட்டுள்ளது.
இராமையா முருகவேள் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர். இவரது "சிறுவன்"என்ற கதை சமகால மலையக சமூக சிந்தனைகளை படம் பிடித்துக் காட்டுகிறது. சமூக நிகழ்வே ஒருவனை நிர்ணயம் செய்கிறது என்பதற்கு இக்கதை நல்ல உதாரணமாகும், ஒழுங்குபடுத்தப் படாத நிலையிலும் மலையக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து அடுத்த தலைமுறையைப் பாதித்து வருவதை இக்கதை பதிவு செய்கிறது. இக்கதையில் விரும் சிறுவன் தோட்டத்துரையை தொலைபேசியில் தன் சமூக நியாயம் கேட்டு மிரட்டுகிறான்.

Page 142
பொதுவாக தீர்த்தக்கரைக் கதைகள் சோக உணர்வுகளை வாசகர் முன் பதித்தாலும் அச்சோகம் அடுத்த கட்டத்தை நோக்கி முற்போக்கான நிகழ்வுக்கு இட்டுச் செல்வது இக்கதைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
ஆங்கில மொழியிலோ அல்லது வேறு மொழிகளின் கதைகளிலிருந்தோ வடிவம், 2. 6f 6 E L is 3b f , கதை என்பவற்றைப் பெற்றுக்கொள்ளாது தனது சூழ்நிலைகளையும் அனுபவத்தையும் வைத்துக் கொண்டு சிறுகதைகளைப் படைத்திருப்பது மலையகச் சிறுகதைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
அதன் வீச்சை உள்வாங்கிய கலை நயங்களே மலையகச் சிறுகதைகளில் விஞ்சி நிற்கின்றன.
மலையகச்சிறுகதைகளெல்லாம் புரியாத புதிரல்ல. சமூக அவலங்களைச் சொல்லும்போது அதனிடையே ஓர் எளிமைத் தன்மையையும் காணலாம் கலையே பிரச்சாரமாக இல்லாவிட்டாலும் சமூக மாற்றங்களைச் சிந்திக்கத் துண்டும் கலைப் படைப்புக்களில் மலையகச் சிறுகதைகள் தரம் வாய்ந்தவையாக உள்ளன.
"புத வசந்தம்’ சிற
 

ஆய்வுக்குரிய நூல்கள்
01. புதுமைப்பித்தன் கதைகள் 02. ஒரு கூடைக் கொழுந்து சிறுகதைத் தொகுதி 03. நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதி 04. தோட்டக்காட்டினிலே சிறுகதைத் தொகுதி 05. கோடிச் சேலை சிறுகதைத் தொகுப்பு 06. மலைகளின் மக்கள் சிறுகதைத் தொகுதி 07. தீர்த்தக்கதைக் கதைகள் சிறுகதைத் தொகுதி 08. கதை கனிகள் சிறுகதைத் தொகுதி 09. மேக மலைகளின் ராகங்கள் சிறுகதைத்
தொகுதி 10. மலையகப் பரிசுக் கதைகள் சிறுகதைத்
தொகுதி 11. மலையக மக்கள் என்போர் யார் -
3-5D60) JuJIT 12. இலங்கையின் இனத்துவமும் சமூக மாற்றமும்
- விஞ்ஞானக் கழக வெளியிடு 13. ஈழத்தில் தமிழ் இலக்கியம் - பேராசிரியர்
கா.சிவத்தம்பி 14. இலக்கிய சிந்தனைகள் - பேராசிரியர்
கைலாசபதி 15. தேச பக்தர் நடேசய்யன் - சாரல்நாடன் 16. அக்கா என்ற சிறுகதைத் தொகுப்புக்கு பேராசிரியர் கைலாசபதி எழுதிய முன்னுரை 17. மாக்லிச அழகிகள் - அருணன்
ப்புற வாழ்த்துகிறோம்!
aa í stíð í

Page 143
வயல் ஒர
3.
பெரும்பசுமையான நிலப்பரப்பு
அதன் உயர்ந்தவரப்புகளில் நாங்கள்
கால்பதித்து நடந்தது உண்டு. சறுக்கி விழுந்ததும் உண்டு வயல் உழுத நாட்களில் இருந்து அறுவடை காலம் வரை நாம் எமது அழகிய வயலை சுற்றிச் சுற்றி திரிந்து வந்தோம் விதைத்த தெல்
கொத்த கொக்குகளும் கிளிகளும் வந்தபோது
நாங்கள்
விரட்டினோம் எமது விரட்டல்கள்
பசிய
6TD 6)luj606) பாதுகாக்கவே அல்லாமல் கொக்குகளையும் கிளிகளையும் கொல்வதற்கு அல்ல.
நாங்கள்
வியர்வை சிந்தி
அழகான பாத்திகளை
த்திருந்தோம்
அவற்றில் எல்லாம்
அடர்த்தியா நார் முளைவிடத்
figsfrtill நாம்
35(5D 1360)3F, காற்றிலே அ இனிய பாட
தானம்போட்
Bl-68ELDTiguu சூல் கொண் மேகங்களில்
சோ வெனட் பொழிந்தது.
தாண்டி வெள்ளம் ஒடிக் கொன
 
 

தொடங்கியபோது
Fuiu
DEFGIRTLD
T600 sto
JITÉ
டிருந்தது
-trafdasaf

Page 144
வந்தபோது
நாம்
கட்டுச்சோற்றை எறிந்துவிட்டு கவராயத்தை எடுத்துக்கொண்டோம்.
நாரைகளும் சிதறிஓடின
A.C.S. College
 

தான்
565
36Gissio,
ன்ே
டித்தோம்.
56 Tes
Φ
அவற்றுடன் கூடவே

Page 145
“ ! 'itif, “P3es. *Éampéiments. ''an': -
Offs2t platgmakers, Off logttgr Orgss Orint
*){'hth * 0.6est е отрtтеnts.
MATLATR M01TDETEN SONS
Dedters in: FOncy Goods, Cycle Ports, Gift items etc
| 78, BOZCO Sfreet, Tel: O24-2242 Vavuniya. Office: O24-2264
 
 

set printers, Tgpg$2tt2r$, Zrs & Book Bindgrs.
Kandy Road, Vavuniya.
'llith 2est еотритеnts.
DeCiers in: Foncy Goods, Cycle Ports, Gift items etc
45, BCZOO Street, Tel 024-2242 VOvUniyCa. Office : 024-2264

Page 146
obidi
கதைக்கிறியள். இட்ப கிளாலியால போட் ஒடுறதும் ஐமிச்சம், அடையாள அட்டை இல்லாமல் நான் இங்க நிண்டா என்ன நடக்கும் எண்டு உங்களுக்குத் தெரியும்தான?
நாலஞ்சு நாளில இங்கால வந்திடுவாங்கள் எண்டுறதும் உங்களுக்குத் தெரியும்தான?
தம்பி, இனி ஒண்டும் செய்யேலாது, எங்கட காரியாலயம் எல்லாத்தையும் உடன கிளிநொச்சிக்கு மாத்தச் சொல்லி மேலிடத்தில இருந்து அறிவித்தல் வந்திட்டுது. அதால இனி உங்கட TTTTL TkTCCST0LL S LS ATM0TLL LLL LLLTH TT TTL0LLTLL
தைப்பது பிரயோசனமற்றது என்ற முடிவுக்கு வந்த சிவா மாலிசந்தி பாஸ் வழங்கும் காரியாலயத்திலிருந்து வீட்டுக்குப் t_{PL}_{ t.-T6ði.
யாழில், ரிவிரச இராணுவ நடவடிக்கைை தொடர்ந்து வடமராட்சிக்கும் ஆமி வரலாம் என்ற அச்சத்தில் தமயன், தம்பியுடன் கேர்த்து
தாயும் தந்தையும் மட்டும் வீட்டை விட்டுட்டு வர மனமில்லாமல் வீட்டோடயே இருந்திட்டினம்.
இப்பிடித்தான் சிலபேர் விடுவளவைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டிருக்க பலடேர் உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு கிளாலி கடந்து பட்ட கஸ்ரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
சிவாவைப் போலத்தான் ஒவ்வொருவரைக் கேட்டாலும் ரிவிரச. கிளாலிப் பயணம். பற்றி ஒரு பார்தக் கதையையே சொல் லத் தொடங்கிவிடுவார்கள் இட்ப சனமெல்லாம் வனவாசம் தான்.
 
 
 
 
 

d6s d6...
க.ரனேஸ்
சிவா ஓமந்தையில இருக்கேக்க தான் கல்வியற் கல்லூரிக்கு பதிவு செய்வதற்கான அழைப்பு பத்திரிகைகளில் வந்தது.
அழைப்பைக் கண்டவுடன், சிவாவைப் போலத்தான் வன்னியில் இடம் பெயர்ந்திருந்த கனபேர் சந்தோசப்பட்டார்கள். இவர்களின் சந்தோசமெல்லாம் வவுனியா செல்வதற்கான பாஸ் எடுத்து முடியும் போது வடிந்துவிட்டது.
ஒரு தடவையா, இருதடவையா, ஐந்து தடவைகள், சிவா ஓமந்தையில் இருந்து அறுபது மைலுக்கு அங்கால இருக்கிற கிளிநொச்சிக்கு செல்ல வேண்டி இருந்தது.
அங்குதான் இடம்பெயர்ந்தவர் SEFESOT JF6fio
ஒருக்கால் மட்டும் மினிபஸ் ஓடும். அதுக்கும் முன்னுறு ரூபா. மோட்டார் சைக்கிள் எண்டால் அறுநூறு ரூபா. இடம்பெயர்ந்த இடத்தில் சாட்பாட்டுக்கே ரொம்ப கஸ்ரமாக இருந்தது.
கடைசியில தமிழற்ர தேசிய போக்குவரத்துச் சாதனம் தான் கை கொடுத்தது. அதுவும் பொருளாதாரத் தடையையால இழமையிலேயே
முதுமை அடைஞ்சது.
சுதன் மட்டும் இல்லை எண்டால், சிவா கல்லூரிக்குச் செல்லும் எண்ணத்தையே கைவிட்டிருப்பான். சுதன்தான் ஐந்து தடவைகளும் சிவாவுக்கு பிரயாணத்துணையானான்.
இருவரும் நான்கு தடவைகள் கிளிநொச் சிக்குப் போய் வந்தும் பாஸ் கிடைக்கவில்லை. எண்டாலும் இவர்கள் விக்கிரமாதித்தன் போலவே தமது முயற்சியில் சலிக்கவில்லை.
புது அசத்தம் 143 !

Page 147
ஐந்தாவது தடவையில் எத்தனையோ ழுபறிகள், கஸ்ரத்தின் மத்தியில் பாஸ் கிடைத்தது.
சிவா. தொண்ணுற்றி ஐந்து மார்கழி முட்பதில் கல்லூரி வந்து சேர்ந்தான்.
கல்லூரி வாழ்க்கை முதலில் கஸ்ரமாக இருந்தாலும் பின்னர் எல்லாம் பழகிவிட்டது. மூன்று மாதம் எட்டிப் போனதென்றே தெரியவில்லை. முதலாம் தவணை லிவு வந்துவிட்டது.
ஆமி யாழ் நகரத்தோடயே நின்டு விட்டதால வீட்டுக் காரரை பாக்கும் ஆசையில் எல்லோரைப் போலவுமே சிவாவும் கிளாலி கடந்தான்.
கடக்கும் முன்னர் கிளிநொச்சியில் பிணைவெட்ட இரண்டு நாள் மினைக் கட வேண்டியிருந்ததால் குடும்பக் காட்டையும் அடையாள அட்டையையும் கிளிநொச்சி அலுவலகத்தில் கொடுத்து விட்டு வீடு சென்றான்.
ஆனால் இப் போது பிரச்சனை பெரிதாகிவிட்டது. கிளாலி கடப்பதைத் தவிர சிவாவுக்கு வேறுவழியே இல்லை.
d6).T.............. என்று கூப்பிட்ட சத்தம் கேட்டு வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்ப மர நிழலில்படுத்து இருந்த சிவா எழுந்து பார்த்தான்.
ஆதியும் காந்தனும் வந்திருந்தார்கள். இவர்களும் கல்லூரி விடுமுறைக்கு வீடு வந்தவர்கள் எனினும் அடையாள அட்டையை கையிலே வைத்திருக்கிறார்கள்.
(3L... uu..... 6) ThisLFt...... உங்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்கிறன் என்றான் சிவா.
அவர்களும் சயிக்கிளை நிறுத்தி விட்டு வேப்பமரத்தடியில் வந்து இருந்தார்கள்.
6| 661 ö. (35 39 60 lu T6 sell 60L 6ı b gibi சேரவில்லை அதால நாளைக்கே கிளாலி கடக்கலாம் எண்டிருக்கிறன் உங்கட பிளான் என்ன?
நாங்களும் அதைப் பற்றித்தான் கதைச்சுக் கொண்டு வந்த நாங்கள், இன்னும் இரண்டு மூன்டு நாளில ஆடமி கிளாலியிக்கு போய்யிடுவாங்கள் எண்டு சனம் கதைக்குதுகள். அதுக்கு பிறகு எண்டால் கப்பலிலை திருகோணமலைக்கு போய்த்தான் வவுனியா வர வேணும். அதுவும் எட்டப்
44 இரசத்தம்

சரிவருமோ ஆருக்குத் தெரியும் ஆதால நாங்களும் நாளைக்கே போவம் எண்டு முடிவு எடுத்திட்டம்
அப்பசரி, நான் கற் கண்டனிட்டை மோட்ட சயிக்கிளுக்கு சொல்லியிட்டன், மூண்டு பேரும் போகலாம். ஆளுக்கு இருநூற்று ஐம்பது ரூபாதான் 6(5D.
பாக்குகளை சின்னனா கொண்டு வாங்கோ. எங்க எங்கபடுத்து எழும்ப வேண்டி வருதொ தெரியாது? இண்டைக்கும் கிளாலிய் பக்கம் பொம்பர் அடி போல கிடக்குது.
நேற்றும் கெலி அடிச்சு ஒரு போட் கவிண்டு போய்ச்சாம் இருபது பேருக்குக் கிட்ட காணேல்ல எண்டு சனம் கதைக்குதுகள் என்றான் ஆதி.
காலம நியூஸ்சில சொன்னத கேட்டணிய என்று இடையால் புகுந்தான் காந்தன்.
என்ன வழமையான பல்லவியாகத்தானே
ஓம், ஓம். கிளாலி தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப் பட்டிருக்காம். நேற்றுப் பின்னேரம் கிளாலி கடல் நீரேரியில பயங்கர வாதிகளின் ஒரு போட் நிர்மூலம் ஆக்கப்பட்டதாம். இருபது தீவிரவாதிகள் வரை கொல்லப் Lt. Lirifab6ttfrid.
ஓம், ஒம். இப்ப சனமெல்லாம் தீவிர வாதிகள் தான. சிலவேளை நாங்களும் நாளைக்கு தீவிரவாதிகள் தானோ தெரியாது.
டேய் சிவா சும்மாய் இருடா, ஏற்கனவே காந்தன் கொஞ்சம், பயந்து போய் இருக்கிறான். உன் ர கதையைக் கேட்டு நாளைக் கு வராமல்விட்டாலும் விட்டுவான்.
சீச் சி. அப்படி எல்லாம் ஒண்டும் இலலையடா. அம்மா அப்பாதான் கொஞ்சம் பயப்பிடினம்.
கதைச்சுக் கொண்டிருக்கும் போதே சிவாவின் அப்பா தேசிக்காய்த் தண்ணியுடன் வந்தார்.
அன்ரி, நாளைக்கு கிளாலி கடக்கப் போறம் இனி எட்ப இப்பிடி இருந்து கதைக்கப் போறமோ தெரியாது?

Page 148
கொலிச்சில, மற்ற இடத்துப் பெடியளெல்லாம் இரண்டு நாள் லீவு என்ட உடன வீட்டுக்கு ஒடுறான்கள், நாங்கள் மட்டும். தொண்ணுறு மைல் தூரத்தில் இருக்கிற வீட்டுக்கு வரேலாமல் இருக்கு.
அங்க இருந்து வீட்டை நினைக்க அழுகை அழுகையாகத்தான் வரும். இனிமேல் கிளாலி ஒட்டமும் இருக்காது போல கிடக்கு இங்கால நாங்கள் எப்பிடி வாறதெண்டே தெரியாமல் கிடக்கு.
வெளிநாட்டில இருக்கிற சனத்தோடகூட உடன உடன போனில கதைக்க ஏலுது. இங்க ஒரு பிரச்சனை எண்டால் ஒண்டுமே அறியேலாமல் கிடக்கு படிப்பு எல்லாம் வெறுத்துப் போச்சு. பேசாமல் இங்காலயே இருந்திடலாம் போல கிடக்குது; எண்டு எல்லாக் கல்லூரி மாணவர்களின் மன உழைச்சலையும் ஒருவனாகவே கொட்டித் தீர்த்தான் ஆதி.
என்னப்பு செய்யிறது நாங்கள் வயது போன ஆக்கள் தானே, ஏதோ இங்க இருந்து சமாளிச்சிருவம் நீங்கள் படிப்பையும் விட்டிட்டு இங்கால நிண்டு என்ன செய்யிறது போய்த்தானே ஆகவேனும் என்று விரிவுரை ஒன்றைத் தொடங்கினர் சிவாவின் அம்மா.
சரி அன்ரி. நாங்கள் போட்டுவாறம் இனிப் ப்ோய்த்தான் நாளைக்கு போறதுக்கான ஆயத்தம் எல்லாம் செய்யவேணும் என்று கூறிக்கொண்டே னும் புறப்பட ஆயத்தம் ஆனார்கள்.
இரண்டரை போல வத்திடுங்கோ நேரத்தோட போனால்த்தான் போட் கிடைக்கும் இட்ப கிளாலியில எக்கச்சக்கமான சனமாம் என்றான் சிவா
காந்தனும் ஆதியும் புறப்பட்டார்கள். சிவா சோம்பலாகவே வீட்டுக்குள் சென்று தன் உடமைகளை அடுக்கத் தொடங்கினான்.
(294 List, 39tfLDIT.........................போட்டுவாறம்
அன்ரி. போட்டுவாறம்
டேய் புறுாஸ். போட்டு வாறமடா. சிவா
தன்ர நாய்க்கும் சொல்ல மறக்கவில்லை.
கூட்யிட்ட உடனேயே வாலாட்டிக்கொண்டு நிண்ட புறூஸ் ஒடிப்போய் சிவாவை நக்கி தன் அன்பைச் சொன்னது.
 
 

கவனமாய் போட்டுவாங்கோ. கற்கண்டு ஆக் கள 6f L G L (6 வந்து நிலமய சொல்லிப்போட்டுப்போ என்றார் சிவாவின் அப்பா,
ஒமெண்டு கொண்டே கற்கண்டன் மோட்டசயிக்கிளை ஸ்ராட் பண்ணினான்.
நாலு பேரையும் , பாக்குகளையும் ஏத்திக்கொண்டு அந்த M.D.90 குட்டித் தேர்போல புறட்பட்டது. ஜப்பான்காரன் கண்டால் நிச்சயமாக ஆச்சரியப்படுவான்.
மோட்டசைக்கிள் மந்திகையைக் கடந்து வறணி றோட்டில ஓடிக் கொண்டிருந்தது. பெருவாரியான சனம் கிளாலி நோக்கிப் போய்க்கொண்டிருந்
மோாட்ட சைக்கிள் முள்ளி வெளியை
அடைந்தபோது கிளாலிப்பக்கமா பொம்பரும்,
ஹெலியும் பறப்பது தெரிந்தது. கற்கண்டன்ர
கண்மட்டும்தான் றோட்டில இருந்தது. மற்ர மூண்டு
ன் நி த்திருர்
பேற்ர கண்ணும் அகாயத்தின்
இப்ப கிளஈலிக்குப் போன சனம் சிலதுகள்
திரும்பி வாற சனத்தை மறிச்சுக் கிளாலி நிலைபற்றிக் கேட்டபோது எல்லோரும் ஒரே
யாரும் கிளாலி வரை செல்லவில்லை. பாதியிலேயே திரும்பி இருந்தார்கள். பொம்டன் அடி பயங்கரமாக இருக்காம், காயக்காரரை அம்புலன்ஸ் கொண்டு போகுதாம்.
இதுக்குப் பிறகும் கிளாலிக்குப் போறதுக்கு காந்தனுக்கு விருப்பமில்லை. எண்டாலும் சிவாவின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது. அடையாள அட்டை இல்லாமல் இஞ்ச நிண்டால் பெரிய பிரச்சினை ஆகிவிடும்.
ஆதிதான் சொன்னான், எதுக்கும் கிளாலி வரை போய்ப்பார்ப்பம், சனம் பயத்திலையும் கண்டபடி கதைக்கும் என்றான்.
காந்தனும் அரை மனதுடன் ஒம்பட்டான். கற்கண்டனுக்கு பயமெண்டதே இல்ல போல
வசந்தம் 14

Page 149
கிடக்கு, அவன் எதற்கும் தலையாட்டுபவனாக இருந்தான்.
இப்ப மோட்டசைக்கிள் கொடிகாமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எங்களைத் தவிர யாருமே கிளாலி நோக்கிப் போவாரில்லை போல கிடக்கு. எங்களைப் போலவே வீறாட்புடன் போன சனங்கள் நிறைய திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் சொன்ன கதைகள் யாவும் பயங்கரமானவை. ஒரு றெகுளா படத்தை நடுஜாமத்தில் சுடலயில இருந்து பார்த்தது
இப்போ பொம்மர், ஹெலி அடிக்கும் சத்தங்களும் தெளிவாகக் கேட்டது. அம்புலன்சின் சத்தம் கூட விட்டு விட்டு கேட்டுக் கொண்டே
இனியும் கிளாலி நோக்கிப் போக யாருக்கும் தைரியமில்லை. மோட்டசைக்கிள் மீண்டும் ஊர்திரும்பியது.
கற்கண்டன் மட்டும் இப்போதும் எதுக்குமே தயாராகவே இருந்தான். இவர்களின் தொழிலே மரணத்துள் வாழ்வது தானோ? அவன் என்ன செய்வான் இன்று கிளாலி ஒட்டம் இல்லை எண்டால் விட்டில பெஞ்சாதி, பிள்ளை எல்லாம் பட்டினியாச்சே,
மோட்டசைக்கிள் சிவாவின், வீட்டில வந்து நிண்டது. பயணம் முடியவில்லைத்தான் எண்டாலும் கற்கண்டனுடன் நாங்கள் பேரம் பேசவில்லை. எழுநூற்றி ஐம்பது ரூபாவையும் கொடுத்தோம்.
அவனுக்கு காசை வாங்குவதற்கு
ஒருமாதிரியாகத்தான் இருந்தது. ஆனாலும் வாங்கிக் கொண்டான். Ꮥ*
நாளையும் கிளாலி போய்ட்டார்ட்பதென்றே முடிவு செய்தோம். ஆனாலும் காந்தன் தீக்கமான முடிவெடுத்துவிட்டான் தான் வரவில்லை என்றே கூறிவிட்டான்.
காந்தனை கற்கண்டன்ர மோட்டசைக்கிளில ஏத்திவிட்டுட்டு நானும், ஆதியும் சைக்கிளில LBi Lit (3-17s).
என்னடா திரும்பி வந்திட்டியள் ஆதியின் அட்டாதான் கேற்றடியில் நிண்டார்.
46 வசக்தம்

ஆறு மணியாகுது, நீங்கள் இட்ப கிளாலியில நிப்பியள் எண்டெல்ல யோசிச்சுக் கொண்டு
நிக்கிறன் என்றார்.
அவருக்கு விசயத்தை விளக்கி, நாளை போவது பற்றியும் சொன்னோம். ஆச்சரியமாக இருந்தது, அவர் பயந்து கொள்ளவில்லை. நாங்கள் போவதற்கும் சம்மதித்து விட்டார்.
எண்டால் வீட்டுக்கும் கேற்றுக்குமாக குட்டிபோட்ட பூனை மாதிரி ஒடித்திரியிற இவரா கினாலி போக சம்மதித்தார்? எல்லாமே புதிராத்தானிருக்கு.
ஒருவேளை கிளாலிப் பயங்கரத்தைக் காட்டிலும், இங்கிருந்தால் அதிக பயங்கரம் நிகழுமோ?
சிவாவுக்கு இரவு முழுவதும் ஏதேதோ கனவுகள், விடிந்ததே தெரியவில்லை. அம்மாதான் அவசரப்பட்டு எழுப்பின.
அதுக்கிடன அம்மா ஊர் முழுவதும் துப்புத்துலக்கி பெறுமதியான செய்தி கொண்டு வந்தா.
(3-til..... சிவா. இட்ப சும்மா சனத்தை கிளாலியால விடேல்லையாம். மாவீரர் போராளி
குடும்பங்களைத்தானாம் விடுறாங்களாம்.
நித்தியண்ண குடும்பமும், சுந்தரன்ன குடும்பமும் கார்பிடிச்சு கிளஈலி போகினம் அவையில பதினொருடேர் இருக்கினம் உன்னையும் வரலாமாம்
அவையளோட போனி எண்டா எப்படியும் கிளாலி கடந்திடலாம். அதுகளும் எல்லாம் வயசு போனதுகளும் குஞ்சு குருமன்களும்தான, நீயும் வந்தால் தங்களுக்கும் உதவியாக இருக்கும் எண்டு
சொல்லீச்சினம்.
ஒரு உளவாளி போல திறமையாக தகவல்களை சேகரித்திருந்தார்.
கார் ஒரு குட்டி ஊரையே சுமந்து கொண்டு நிண்டது. கரியலில் சாமான்கள் ஏற்றப் பட்டுக் கொண்டிருந்தது. டிக்கி நிரம்பியிருந்தது. என்ர பாக் சின்னதுதான் ரைவர் வாங்கி முன்னுக்கு வைத்தார்.
அனைவரும் ஏறியாச்சு கதவு கஸ்ரப்பட்டு சாத்தப்பட்டது. இடிமுழக்கத்துக்கு புத்தில

Page 150
முழைக்கிற காளான் போல எல்லாற்ர கைகளும் கதவுக் கண்ணாடியினூடாக நீண்டு அசைந்தது. கார் உருளத் தொடங்கியது.
ஆதிக்குச் சொல்லக்கூட நேரம் இருக்கவில்லை. அப்பா போய்ச் சொல்வதாகக் கூறினார். அவனை விட்டுட்டு போறது ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. மனசுக்க சமாதானம் கூறிக் கொண்டேன். அவனுக்கு அடையாள அட்டை இருக்குத்தான.
இவையள் கொண்டாற சாமான்களை பார்த்த உடனயே எனக்கு வயித்தைக் கலக்கியது. புத்த கங்களிலிருந்து உப்புப் புளிவரை கட்டி ஏத்தியிருந்தார்கள்.
இவ்வளவத்தையும் கொண்டு இழுபட வேண்டும் எண்டு நினைக்கேக்கயே பேசாமல் வீடு திரும்பி விடலாம் போலிருந்தது. என்னசெய்வது.
பத்து மணியளவில கிளாலியை வந்தடைந்தோம் மூண்டு மணித்தியால பயணத்தில எல்லாரும் வாடி வதங்கி இருந்தார்கள்.
கிளாலி செல்லடியிலும் பொம்டன் அடியிலும் நாசமாகி இருந்தது. தென்னைகள் முறிபட்டும் கிளிபட்டும் கிடந்தன. தேங்காய்கள், கோம்மைபகள் போலவே சனமும் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தனர்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னை மரங்கள், செல்லடியிலயும், பொம்பர் அடியிலும் இருந்து எங்கட சனத்தை பாதுகாப்போம் என்ற வீறாட்புடன் நிண்டன.
குடும்பம், குடும்பமாக சனம் தென்னை மரத்தடிகளையே வீடுகளாக்கிக் கொண்டனர். அனேகமானவர்களின் சாப்பாடு இளநீரும், வழுவலுமாகத் தான் இருந்தது. சுமார் பத்தாயிரம் சனமளவில் கிளாலிக்கரையில் பரவி இருந்தனர். எங்கள் பயணம் இலகுவானதில்லை எண்டது மட்டும் புரிந்தது.
அண்ண, இனி கார் போகேலாது, இறங்கி நடவுங்கோ என்றார் ஒருவள். எனக்கு நெஞ்சு பகீர் என்றது. இறங்குதுறைக்கு இன்னும் சுமார் ஒரு
இறங்கினோம் சாமான்களையும் இறக்கினோம் கார்க்காரருக்கு காசு கொடுத்து அனுப்பினோம். எனக்குரிய பங்கை எடுத்து நீட்டினேன் நித்தியண்ணை வாங்க மறுத்துவிட்டார்.

நேரம் பதினொரு மணியாகிக் கொண்டிருந்தது. கொண்டு வந்த தண்ணியில கொஞ்சம் வாயை நனைச் சுப் போட்டு சாமான்களைக் காவத் தொடங்கினோம்.
நானும், நித்தியண்ணையும், சுந்தரண்ணையும் தான் சாமான்களைக் காவினோம். மற்றவர்களை சுமார் அரைமைல் துரத்திலுள்ள கியூவில் விட்டுட்டு சாமான்களையும் அங்கேயே கொண்டு போய்ச் சேர்ந்தோம்.
நான்தான் இளைஞனாம் என் தலையிலேயே பாரமான சாமான் எல்லாத்தையும் கட்டினார்கள்.
கார்க்காசு வாங்காதது இப்ப ஏனெண்டு புரிஞ்சது.
மனசுக்குள் எரிச்சல் எரிச்சலாக வந்தது. உள்ள நாட்டு சாமான்கள் எல்லாம் யூரியா பாக்கில கட்டி இருந்தார்கள். கல்லு மண்ணுகளும் கட்டி வந்திருப்பினம் போலகிடக்கு.
ஒரு மணியளவில் சாமான்கள் எல்லாத்தையும் கியூவில் சேர்த்துவிட்டு நாங்களும் வரிசையில் தங்கினோம்.
அவை ரண்டு பேற்ற முகத்திலயும் இட்ப கடுகடுப்பு தெரிஞ்சுது. மனிசிமாரை மனசுக்குள் திட்டுவதை முகத்தில் வழியும் வேர்வையிலும், எரிச்சலிலும் உணர்ந்து கொண்டேன்.
நான் எதையுமே வெளிக்காட்டவில்லை.
படகுத்துறை முழுவதும் சனத்தால் நிரம்பி இருந்தது.
ம் எல்லாரைட் போலவுே a w கழுதை போலவே நகர்த்தோம்.
பசி, தண்ணிவிடாய், கால்வலி எல்லாமாக உயிரே போய்விடும் போலிருந்தது. தண்ணி குடிக்கக்கூட தாமதிக்க முடியவில்லை. கியூவை விட்டு விலத்தினால் இடம்பறிபோய்விடும்.
குஞ்சு குருமன் எல்லாம் நெருக்குப்பட்டு நசுங்கிக் கொண்டிருந்தனர். வல்லிபுரக் கோயில் கடல் தீத்தம் ஞாபத்துக்கு வந்து போய்க்
கழுத்தில என்ர சிறியபாக் என்னைக் காயப்படுத்தாமல் அமைதியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. நித்தியண்ண ஆக்களின்ர ஒரு ரவலிங்பாக் இடது கையிலயும், மற்றது ஒரு பெரிய யூரியாபாக் வலது கையிலயுமாய் இழுத்துக் கொண்டு நத்தை வேகத்தில் நகரும் கியூவில் நானும் சேர்ந்து இழுபட்டேன்.
புது வசந்தம் 147

Page 151
இந்த நிலமையில் கூட எங்கட சனம் சண்டையை விட்டபாடில்லை. வேலிச்சண்டைகள் இங்கும் புதிய வடிவில் தொடர்ந்தது. சச்சரவுகளோடேயே கியூ நகர்ந்து கொண்டிருந்தது.
நத்தை, பனப்பாதையில் விட்டுட்டுப் போற வினி போலவே இப்ப ஒவ்வொரு சனமும் கொஞ்சக் கொஞ்சச் சாமான்களாக கைவிடத் தொடங்கி விட்டினம்
கியூ அரைவாசித் துரத்தைக் கடந்த போது பTதையின் இரு மருங்கிலும் ஏராளமான சைக்கிள்களும் பூரியாபாக் முட்டைகளும், பெறுமதியான கம்பளங்களும், ஏன் மோட்டார் சைக்கிள் கூட எறிந்து கிடந்தது.
என் பாரம் மட்டும் குறையவில்லை. அவையள் பாய், சிறிய புத்தகப் பெட்டியள் சட்டிபானை, பாக் எண்டு கொஞ்சம் கொஞ்சமாக கைவிடத் தொடங்கினார்கள் இப்ப அவையளின் கைகளில சிறிய சிறிய உடுப்புபாக் மட்டும் வைத்திருந்தர்கள் என்ர ஒரு கையில இருந்த ரவலிங் பாக்கை நித்தியன்னை வாங்கிக் கொன்டாள்.
வலதுகை பூரியா பாக் இட்போதும் கனத்தது. எரிச்சலோட மெதுவாகக் குனிந்து தடவிப் பார்த்தேன் ஆடியில கொஞ்ச உடுப்புப் போல கிடக்கு இடையில கல்லுட்போல ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. என்னவென்று ஊகிக்க நேரமில்லை. பின்னவர்களின் தள்ளலையும் முன்வைகளின் பேச்சுக்களையும் சகித்துக் கொண்டே கியூவில் நகர்ந்தேன்.
நேரம் ஆறுமணியாகிக் கொண்டிருந்தது. படகுத்துறையை அடைந்துவிட்டோம் சனக் கூட்டம் அலைமோதியது.
ஒரு இடத்தில சாமான்க்ளை இறக்கி வைக்கட்டு தொப் பெண்டு ஈரமண்ணில இருந்திட்டம் கடல் காற்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அப்படியே விழுந்து படுக்க வேனும் போல கிடந்தது இடம் இல்லையே..!
வலது கை தோள்முட்டு வரை காணாமல் போய்விட்டது போன்ற உணர்வு உடம்பு முழுவதும் இருக்கிற ஒவ்வொரு முட்டுக்களையும் களட்டிப் பூட்டியது போல ஒரு வலி,
கொண்டு வந்த சாட்பாட்டு பாசல்களை பிரித்து சாப்பிடத் தொடங்கினோம் காலம வெள்ளான கட்டின் சாட்பாடு. சாடையாக பழுதடைந்திருந்தது. எல்லாப்
| || 鼬事重击匣

பாசல்களும் களியாகியிருந்தன. ஆனாலும் அள்ளி அடைந்து கொண்டோம் மிச்சமிருந்த தண்ணியால நாக்கைக் கழுவிக் கொண்டோம் கைகளையும், முகத்தையும் கடல்தண்ணியில அலம்பினம்
இட்பத்தான் போன உயிர் திரும்பி வாறமாதிரிக் கிடந்தது.
போட் եl:El ճյլն ஒடுற மாதிரித்தெரியவில்லை.
நித்தியன்னையும், சுந்தரன்னையும் சாமான்களை மேலும் குறைக்கத் தொடங்கினர்கள்.
இதை அங்கேயே செய்திருக்கலாம்தான. மனசுக்குள்ளேயே கறுவிக் கொண்டேன்.
என்ர வலது கையை தொலையச் செய்த அந்த பாக்கை ஆராய்ந்தர்கள் அதுக்குள்ள இருந்த ரண்டு பயில் கட்டை மாத்திரம் எடுத்துப்
பத்திரப்படுத்திக் கொண்டார்கள் காணி உறுதியாம்
பெதுவ அந்த பாக்குக்குள்ள கையை விட்டுத் தடவிப் பார்த் தன் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. அழுகை கூட வந்திட்டுது.
பாக்குக்குள்ள அம்மி கிடந்தது.
"அம்மி". என்னைப் பார்த்து சிரிப்பதுபோல. இல்லை இல்லை அழுவது போலக் கிடந்தது
கஸ்ரப்பட்டுக்காவினன். இவ்வளவு தூரமும் எவ்வளவு கஸ்ரப்பட்டுக்காவினன்.
இட்ப இதில வந்து விட்டுட்டுப் போட்டபின்மாம்
அவர்கள் படகுத்துறையை அடைந்த சந்தோசத்தில போட்டுக்காக கடலையே பார்த்துக்
கொண்டு நிண்டாள்கள்.
நான் மட்டும்.

Page 152
முதியமாரு வண
அந்த
முதியமாடு விறகுக்கட்டுகள்
ஏற்றிய பெரிய வண்டிலையும்
எசமானனையும்
நகர்ந்து கொண்டிருந்தது அதனது தோல் எலும்புடன் ஒட்டி துருத்திக் கொண்டிருந்தது கண்கள் எதையோ i Të gjyshiu i tij ஈரத்தன்மைப்ே இல்லாமல் வரண்டு போயிருந்தன
குச்சுக்கால்களின் 5)ITL{LfL5öi சேர்ந்து குளம்புகளும் தேய்ந்து போயின
அந்த ܨ¬
பெரிய வண்டிலையும் அதனது எசமானையும்: இழுத்தபடி நகள்ந்து கொண்டிருந்தது அது சென்ற வீதியின் ஒரத்தில்தான் அந்த
ՅյքLքlail பெரும்பள்ளம்
அதிலே முட்களும் FIB3551}յԼԸ நிறைந்து இருந்தன.
மெலிந்த
(LPÉLILTE
Li சவுக்கு அடிக்குப்
莖
எலும்புதுருத்தி தவிது
5. – Lőj)Gl வளைத்துக்ெ முட்களும்
நிரம்பிய ஆழமான கிட அதனை உள்வாங்கிக் கொண்டது. ஆனாலும் எப்படியோ அந்தமுதியமா ஊனமாகிய
தனது காலை இழுத்தபடி விறகுக் கட்டு 5ifu " பெரிய வண்டி அதனது "
"நகர்ந்து கொன்
இவற்றை எல் நானும் sièig6',
கேட்டாள் சாவதா? வாழ் நல்லது சிலநிமிட நகள்வுகளின்
 
 

ன்டில் இழுக்கிறது
ÜffL}
ஆண்டு
ஓருந்தோம்
TɆा
வதா?
- சசி =
பின்
நான்
கூறினேன் சுகமாகச் சாவதைவிட கஷ்டத்தில் வாழ்வதே சிறந்தது,
எD ஐ நீர்ஸ்ைய உலகின் புதியுதலைமுறை விழித்தெழுந்து
மொழியில்
கிஷ்டத்தில்
புரட்சி வெடிக்கும்
ہاتھ کھیے
அழகிய மலர்கள் ಟ್ವಿಹಿಜ್ರಿ ! இதில்
முதிய மாடு விறகுக் கட்டுகள் ஏற்றிய பெரியவண்டிலையும் அதனது எசமானனையும் இழுத்தபடி
மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது ஆதனுடைய வறண்ட
கண்கள்
எதையோ LLJIT fig).
Gug të tij i 49

Page 153
மலையகக்
1824ம் ஆண்டு 14 குடும்பங்கள் கோப்பிட் பயிர்ச்செய் நிமித்தம் தமிழகத்தில் இரு r,
பெற்ற நிரந்தர குடிகளாக இந்நாட்டில் தமது அடையாளத்தை நிரூபிக்க நாடோறும் அக்னி பிரவேசம் செய்யும் முனைப்பான பிரயத்தனங்கள் தொடரும் இந்தூற்றாண்டின் இறுதிவரை நீளும் மலையக மக்களின் வரலாற்று காலத்தில் இலக்கிய வரலாற்றுக் காலமென்பது ஒரு நூற்றாண்டுக்கும் குறைவானதுதான். மற்றுமொரு வகையில் சொல்லப்போனால் தமிழில் நவீன இலக்கிய அறிமுக காலமும் மலையக இலக்கியத்தின் தோற்றக் காலமும் ஏறக்குறைய சமகாலத்திலேயே
எழுதப்பட்ட இல்கியமென்ற வகையில் கவிதைகள் மலையகத்தில் தோன்றும் வரை கவிதைகளுக்குரிய ஆத்மார்த்தத்தை ஜீவது
நாட்டார் பாடலுக்குரியது. மலையக நாட்டார் பாடல்களை நுண்மையாக நோக்கும்போது, அவைகளை தமிழகத்தில் வழங்குபவை - தமிழகத்தில் வழங்குபவைகளை தழுவி அமைந்தவை - மலையக வரலாற்றோடு எழுந்தவை எனப்பாகுபடுத்தல் முடியும். இவற்றிலே மலையக வரலாற்றோடு எழுந்த நாட்டார் பாடலின் சுருதியே, மலையகக் கவிதைப் பாரம்பரியத்தில் இன்று வரைக்குமான அடிநாதமாக அமைந்திருக்கக் காணலாம். அல்லது நாட்டார் பாடல்களின் தொடர்ச்சியே இன்றைய கவிதைகள் என்றும் கூறுவதற்கு அவற்றில் இழையோடும் பண்புகளையொட்டியும் தொனிப்பொருட்களை
溺、雳延覆
புலம் பெயர் காரணம் - கப்பற் பயணம் - கால் நடைப் பயணம் - இழப்புகள் - ஏமாற்றங்கள் - புதுச் சூழல் அனர்த்தங்கள் என்பன நாட்டார் பாடல்களுடாக நேர்த்தியாக பதிவுற்றிருப்பதும் 6ᎼᎥ Ꭲ 6u fᎢ gi3 [i3i éᏐ, #5 fᎢ 60Ꭲ நுண் செய்திகளை கொண்டிருப்பதும் அதன் சிலாகிக்கத்தக்க அம்சங்களாகவும் மானிடவியல் ஆவணமாகவும்
150 tā sagšbi
 
 
 
 
 

கவிதைகள்
சு. முரளிதரன்
s
9வக்கின்றன. எழுதப்பட்ட இலக்கியங்கள் தோன்றுவதற்கு நீண்ட மெளனம் நிலவியமையை பிரதியீடு செய்யக்கூடிய பெருமை வாய்மொழி பாடல்களுக்கு இருந்த
மீட்டிப் பார்த்தாலே வஞ்சிக்கப்பட்டிருந்தமை புரிந்துவிடும்.
1842ம் ஆண்டு கண்டியையொட்டி sagasas A. L. Baptist Mission TLSTfGosa) (5 ft - உடமையாளர்களின் எதிர்ப்பை சமாளிக்க (puqu TLD6) géois assiss6ssful (pL All வேண்டியதாயிற்று. அதன்பின் 1870களில் Line Schools என்ற கங்காணிமங்களினால் அமைத்து T TTTLLLLLLL L L S LLLLLLTTTT LLLL STzLMeM TTTMTTTT
வழங்கியமை 1920ல் எழுத்தறிவு விதமானது 20% யாத நிலையில் இவர்களை
எழுதப்பட்ட இலக்கியங்கள் இம் மக்களிடையே இம் மக்களுக்காக தோன்றுவதற்கு சாத்தியமான நிலைமையில் லாதபோதும் கவிதைகள் எழுதப்பட்டமையைக் காணும்போது வியக்க
வேண்டியிருக்கின்றது.
மலையக இலக்கியத்தில் முதலில் தோன்றியது பாடல் வகையாகும். 1918ம் ஆண்டு "கும்மியோ கும்மி கோப்பிக் காட்டுக் கும்மி" என்ற வில்சனின் 24 பக்க பாடல் நூல், இவர்களின் வாய்மொழி இலக்கிய மரபின் தொடர்ச்சியான படைப்பிலக்கியத்தின் முன்னோடியாக திகழ்கின்றது. 9இல் கண்டி மாவட்டத்தின் பன்விலை பகுதியில் 2த்தழகு தாஸ் என்பவரால் "பஞ்சக் கொடுமை சிந்து” பாடல் இயற்றப்பட்டு வெளியிடப்படுவதிலிருந்து, ஐம்பதுகள்வரை இப்பாடல் செல்வாக்கு மலையக கவிதை இலக்கியத்தில் ரீடித்திருந்தது.
"பாடல் இயற்றுவதற்கு நிறைந்த கல்வி அறிவு தேவையில்லை. உணர்வுகளின் வெளிட்பாடே

Page 154
பாடல்களாக வெளிப்படும். இவ்வாறான பாடல்களை அச்சில் கொண்டுவருவதற்கு மேலதிக முடிற்சி தேவை. துணிவும் தொடர்பும் அனுபவமும் மிகுந்த சாதாரண தமிழ் அறிந்தவர்கள் இவ்விதப் பாடல்களை இயற்றி அச்சில் கொண்டு வந்தனர்” என்று கூறும் சாரல்நாடன் தனது பகுப்பாய்வொன்றில் 1920க்கு முன் 03 பாடல் நூல்களும், 1921 - 30 ற்கிடையில் மூன்று பாடல் நூல்களும், 1931 - 40 ற்கிடையில் 81 பாடல் நூல்களும், 1941 - 50 ற்குமிடையில் 23 நூல்களும் 1951 - 60 ற்குமிடையில் 03 பாடல் நூல்களும் 1961 - 70ற்குமிடையில் 06 பாடல் நூல்களும் வந்ததாக காட்டுவார். 1990 வரையான காலப்பகுதியில் வெளிவந்த 157 கவிதை நூல்களில் 122 நூல்கள் பாடல் நூல்களாகும்.
இப்பாடல் நூல்கள் யாவுமே மலையக மக்கள் சார்பானதாக இல்லை. இவற்றில் சில பக்திமார்க்கம் சார்ந்தவை. சில இந்திய தலைவர்களை புகழ்வதாக அமைந்தவை. ஏனையவை மலையக மக்களின் bluu JLb சொல்பவை. இவ்வாறான பாடல் நூல்கள் சில பக்கங்களைக் கொண்டதும் மலிவான விலையில் விற்கப்படுபவையாகவும் இருந்ததுண்டு. பாடலாசிரியர்கள் தோட்டம் தோட்டமாக சென்று
செய்ததாகவும் கூடியதாக உள்ளது.
இவ்வாறான பாடல் நூல் பாரம்பரிய பெருக்கத்துக்கு, சி.வி.வேலுப்பிள்ளை தனது புதுமை இலக்கியம் என்ற கட்டுரையில் கூறும் கருத்து ஆதாரமாகக் கொள்ளப்படலாம்.
"1939க்கு முன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தங்கு தடையின்றி பிரயாணம் செய்வதற்கு வசதிகள் இருந்தன. அட்போது மிதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான புலவர்கள், கவிஞர்கள், அறிவாளிகள் கதிர்காமம், சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்டு வந்தனர்.”
"இவ்வாறு இலங்கை வந்த இவர்கள் மலையகத்தின் பெரிய வீடுகளுக்குச் சென்று பாடி சன்மானம் பெற்றுப் போவதுண்டு. இவர்களின் வருகை இலக்கிய உணர்ச்சியை வளர்த்தது.”
இவ்வாறு தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பும் மலையக மக்கள் தாம் இந்திய மக்களே என்ற உணர்வும் கொண்டவர்களாக இந்திய தலைவர்களே தமது தலைவர்கள் என்ற
 

மனப்பாங்கும் கொண்டவர்களாக இருந்த காலத்தில் பாரதி, நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை, மதுரை பாஸ்கரதாஸ், சுந்தவாத்தியார், உடுமலை முத்துசாமி கவிராயர், கங்காதரன் சுவாமிகள் முதலானோரின் பாடல்கள் மலையகத்தில்
LJETLÜL(BJ60D6) Ku Ta6 Dbib567.
மலையகத்தில் வாழ்ந்த அருள்வாக்கி அட்துல்காதிருப் புலவர் (1866 - 1918) மலையக சூழலைக் கொண்டு கும்மி, நொண்டிச்சிந்து,
மலையக மக்களின் மதிப்பிற்குரியவராக விளங்கினார். சமயச்சார்பு கவிதைகளை அதிகமாக
இவரையே, மலையகத்தின் முன்னோடிக் கவிஞராக கொள்ளல் வேண்டும் என்பன்.
சிந்துமரபில் பாடல் நூல்கள் பாடி, பரப்பியவர்கள் என்ற வகையில், சிதம்பரநாதபாவலர்,
தொண்டன் எளில் எளில் .நாதன், பதுளை வ.ஞானபண்டிதன் பி.ஆர்பெரியசமி, வேல்சாமிதாசன் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவ்வாறு இந்த மரபின் பாடல்கள் கும்மிய் பாடல்கள் என்பன மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தமை கண்டு, பெருந்தோட்டப்பகுதி கோப்பி, தேயிலைத் தோட்ட சொந்தக்காரர்கள் தமது பயிற்செய்கை வளர்ச்சி கருதி மக்களுக்கு ஆர்வம் ஏற்படுத்த "கோப்பி கிருஷி கும்மி",
எழுதுவித்து பதித்து பரப்பினமையும்
இக்கால கட்டத்தில் முக்கியமானவர்களாக கருதத்தக்க இருவர் கோ.நடேசய்யன் - மீனாட்சி அம்மாள் தம்பதிகளாவர். தஞ்சாவூரிலிருந்து வேறு கத்துக்காக இலங்கை வந்த நடேசய்ய இங்கு
1930களையொட்டிய காலப்பகுதிகளில் இவரின்
சிந்தும் வேர்வை ரெத்தக்காசுதானே - அடா இரவு பகல்
Ο ன்றி ஏய்த்துப் பறிக்கலாமா? என்ற நடேசய்யரின் கவிதையை அந்தனி
angss gstë

Page 155
ஜிவா தனது நூலில் (மலையகமும் இலக்கியமும்) எடுத்துக் காட்டுகிறார். நடேசய்யரின் பாரியார் மீனாட்சியம்மையாள் பாடல்கள் இயற்றியதோடு அவற்றை தோட்டங்களின் கூட்டங்களில் தொழிலாள் முன் பாடிய செயன்முறை அவரை மகத்தான மனுசியாக்கிக் காட்டுகிறது என்பார் மு.நித்தியானந்தன்.
பாரதியின் "கரும்புத் தோட்டத்திலே." கவிதையைப் பின்பற்றி இவர் "தேயிலைத் தோட்டத்திலே" எனப் பாடிய பாடலும் "இலங்கையில் இந்திய தொழிலாளர் அந்தரப் பிழைப்பு" எனும் இவரின் சிறிய பாடல் நூலும் இலக்கியமானவை.
தீட்டின மரத்தில் கூகு பார்க்கிறீர்களா? வெறுவாய்க்கு அவல் போல் மெல்லுரீர் சேதியொன்று சொல்ல வேணுமிப்போ
கட்டைக்கு உயிர் கொடுத்தால் போலே
என சாதாரண மக்களின் பேச்சு மொழியை பிரயோகித்தும்,
இந்தியர் இலங்கையைச் சுரண்டுகிறார் என்று எக்காளம் கொட்டிடும் இலங்கையர்கள் சிந்தனை செய்யாது பேசிடும் பேச்சுக்கு சேதியொன்று சொல்லவேனும் இப்போ
"நூறு வருஷங்கள் முன்னாலே யிலங்கையின் நேர்த்திதா னெப்படி யிருந்ததென்று பாருங்கள் பங்களா தோட்டங்கள் தோட்டங்கள் பண்பாயமைந்து விளங்குவதை
இவ்வாறு மலையக இலக்கிய வரலாற்றுக் கட்டங்களின் தொடக்கத்தில் ஆதிக்கம் செய்தும் அறுபதுகள் வரை செல்வாக்கு உடையதாகவும் விளங்கிய தனிப் பாடல்கள் குறித்து எஸ்.சாமிநாதனின் தோட்டத் தொழிலாளியின் குரல், கரெங்கநாதனின் கட்சி நிலையும் கப்பல் பயனமும் எஸ்.ஆர்.பெரியாம்பிள்ளையின் பாட்டாளியின் பயணம் அ.செ.வெள்ளைச்சாமியின் பாட்டாளியின் பாடலும் சரசுவின் கணவன் பழனியின் மரண தண்டனையும் ஆகிய பாடல் நூல் கனை அடிப்படையாகக் கொண்டு - ஆராய்ந்த க.நவஜோதி தனது தோட்டத் தொழிலாளர் வரலாறு கூறும் மலையகத் தனிப்பாடல்கள் என்ற கட்டுரையில், "வரலாற்று ஆதாரங்கள் உண்மைக்கு மாறாய் இருக்குமிடங்களில் அவ்வெற்றிடங்களை மரபு
 

வழிப்பட்ட ஆதாரங்கள் நிரப்பும் தன்மை
பினும் ப் போன்று
Barri ir care Ara : 登。
தருவது மலையக நாட்டுப் பாடல்களினதும் தனிப்பாடல்களினம் சிறப்பு அம்சமாகும்"
எனக் குறிப்பிடுவதோடு - தென்னிந்தியத் தமிழ்த் தொழிலாளரின் முக்கியத்துவம், தொழிலாள் வருகை, நம்பிக்கை வாக்குறுதி, மலையக யாத்திரையும் காட்டை அழித்தலும், உழைப்புத்திறன், வேலை ஒழுங்கு, தொழிலாளர் பிரச்சினைகள், அதிகாரிகள் கங்காணிகளின் அட்டூழியங்கள், உரிமை இழப்பு, பழிச்சொல், உலகத் தொழிலாளர் ஒற்றுமை, தொழிற்சங்கங்ககளும் தொழிலாளர்களும், சமூகப்பிரச்சனைகள், வரலாற்றுச் செய்திகள், இழப்பு, சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், புதிய நம்பிக்கைப் பயணம் என்பதாக அட்பாடல்களின் சிறப்புகளை எடுத்துக் கூறியுள்ளார்.
இவ்வாண்டு மறைந்த தனிப்பாடல் மரபின் முக்கியமானவரான பாவலர் எம்பிவேல்சாமிதாசனின் இந்தியாவிலிருந்து வந்த சேதி என்ற கவிதையின் சில அடிகளை பார்ட்போம்
"இந்தியாவிலிருந்து வந்த சேதி கேளுங்கோ! முன் இறந்துபோன பாட்டன் படகில் வந்தார் பாருங்கோ இலங்கைதகள் ஈறுழையாக்காடு தானுங்கோ - பாட்டன் இருதயத்தை கலங்கவிடா தழித்திட்டாருங்கோ காலை மணி ஐந்துக்கெல்லாத் தப்படிப்பாங்கோ ~ வந்து கணக்குபோலே ஆறுக்கெல்லாம் பிரட்டெடுப்பாங்கோ வேலையிலே யேழுக்கெல்லாம் இல்லாவிட்டாங்கோ ~ நமக்கு வேலையில்லை என்ற சொல்லி விரட்டிடுவாங்கோ
என எட்டுவரிக்குள் வர் d 6T. அவலத்தையும் அம்மாக்கள் மொழியிலே சொல்லிவிடுகின்றமை இவ்வகை தனிப்பாடல்களின் சிறப்புக்கு காரணமாக இருக்கின்றன எனலாம்.
தனிப்பாடல்கள் சிறப்புற்றிருந்த முப்பதுகளின் காலத்தே அடுத்து நாற்பதுகளில் கோ.நடேசய்யரை அடுத்து மலையக இலக்கிய தனித்துவத்துக்கு வித்திட்டதாக கருதப்படும் சி.வி.வேலுப்பிள்ளையின் வரவு அமைகின்றது. இவர் ஒரு சிறந்த கவிஞர். ஆனால் அவர் ஆங்கிலத்திலேயே கவிதைகள் வடித்தமை மலையக மக்களை எந்தளவுக்கு அக்காலத்தே அடைந்தது என்பது கேள்விக்கறி என்றாலும், மலையக மக்களின் நிலையையும் அவர்களின் துயரத்தையும் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஆதங்க
*

Page 156
உணர்வு இழையோடுவதாக "இன் சிலோன்ஸ் டி கார்டன்” நூலில் வடித்த கவிதைகள் சக்தி பாலயாவின் மொழிபெயர்ப்பின் ஊடாக தமிழில் கிடைக்கும்போது அதன் சிறப்பை உணர்ந்து
கொள்ளக் கூடியதாக அமைகின்றது.
*ஆழப்புதைந்த தேயிலைச் செடியின் அடியிற் புதைந்த அப்பனின் சிதைமேல் ஏழை மகனும் ஏறி மிதித்து இங்கெவர் வாழவோ தன்னுயிர் தருவண்
என்பது இன்னும் பலரால் மேற்கோள் காட்டப்படும் கவிதை வரிகளைவிட,
என்ன விழாப்பல வந்தது போயினும் இவர்க்கே அரச பிரபுவாய் விளங்கும் சின்ன துரைகளும் பெரிய தரைகளும் செய்யதிகாரச் செல்வத் தொப்புமோ தாமே எஜமான் தாமே பிரபு தாமே அரசர் தமதே ராஜ்யம் ஆமாம், இதனை மறுப்பாரில்லை அவரது உரிமைகள் கணிப்பாரில்லை! ஏனெனில் அவர்கள் இயம்பினால் அதுவே இங்கொரு கூட்டம் இயற்றுவதாகும் ஏனெனில் அவரதே உலகம் ஆனதால் இங்கவர் சொல்வதே நீதி என்றாகும்.
என்பதும்
தகரக் கூரைகள் தாங்கிய லயங்களில் தழைத்த உழைப்பினர் விளைபயன் எனினும் பகரக் கூடா அவர் குடியிருப்பைப் பகரவும் வெட்கம்ரூ பகர்ந்திடுவோமேல் ~ ஈராறடியும் ஈரைந்தடியும் இங்கவர் வாழும் இல்லமேயாகும் யாரே மனிதரை மிருகமாய் எண்ணி யாவையும் ஒடுக்கப் பிறந்தார் பகர்வீர் பெற்றவருடனே மருமான், மருமாள் புத்திரன், புத்திரி பூட்டனும் பேரனும் உற்ற அவ்வறையிலே அடுப்பும் மூட்டுவர் உணவுஞ் சமைத்து உண்டு உறங்குவர் கண்ணைக் கயக்கும் புகைப்படலத்து ~ முறைக் காதலும் புரிவர் குழுவிகள் பெறுவர் எண்ணளவற்ற இத்தனை பாடும் இவர் படுவதும் ஏனெனில் ~ அவர்தம் எஜமான் கொண்ட எதேச்சாவாத எழுச்சி யாணக் கட்டளைக்காகவே எஜமான் என்றதோர் வகுப்புப் பிரிவின் இறும்ாப்புணர்வுக் கட்டளைக்காகவே. என்பதும்,
 

சி.வி.வேலுப்பிள்ளையவர்கள் படிப்போர் மனத்தில் இவள் குறித்து எழும் அவலம் அவர்களில் இவர்களுக்காய் போர்க்குரல் கொடுக்கவைக்கும் வகையில் அமைந்திடும் உத்தியை அவரின் கவிதைகளில் மாத்திரமன்றி நாவல்கள், உணர்வூட்டும் சித்திரங்கள் என்பவற்றிலும் கா
இவ்வாறு மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் அதன் வழிவந்த தனிப்பாடல்கள் என்பவற்றின் ஊற்றுமூலங்களை சரியாக உள்வாங்கி, ஆழ்ந்த மானுட நேய வெளிப்பாடாக கவிதைகளை அமைத்த சி.வி.வேலுப்பிள்ளையின் படைப்பாக்க முறையின் செல்வாக்கு அறுபதுகளில் எழுச்சியுற்ற மலையக படைப்பாளிகளுக்கு அடிப்படையாக இருந்தது என்றாலும் ஐம்பதுகளில் மலையகப் பகுதியில் செல்வாக்கு செலுத்திய திராவிட இயக்கத்தின் தாக்கமும் அக்காலட்பகுதியின் கவிஞர்களில் காணப்பட்டிருந்ததை 1965 இல் வெளிவந்த மலையகக் கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட குறிஞ்சிப்பூ நூலிலுள்ள கவிதைகளை நோக்கும் போது காணக்கூடியதாக இருக்கின்றது. அறுபதுகளில் முகிழ்ந்த மலையகக் கவிஞர்களில் ஓரிருவரைத் தவிர கல்வி கற்ற தலைமுறையினர் என்ற வகையிலும் அவர்களால் மலையகம் என்ற எண்ணக்கரு அர்த்த புஷ்டியாக முன்னெடுக்கப்படுவதையும் காணலாம்.
விழிதிறந்து உணவென்று உறக்கமென்றோம் வேறென்ன உலகமதில் தமிழா, கண்டோம் எனும் வெண்சங்குவேரும்
கடந்ததை எண்ணி வருந்தும் தமிழா நடந்ததை எண்ணி திருந்தி விடு கண்ணின் மணியும் இமை போன்று கலாச் சாரமும் ஒன்றொனறாய் எனும் பி.எஸ்.ராகவனும்,
மங்குகின்ற தமிழ்த்தாயின் மானங்காத்து மனம் திறந்து சுதந்திரமாய் தமிழர் வாழச் "சிங்களஞ்சேர் தென்னாட்டார் தீரர்" என்னும் செழுங்கவிஞன் வாக்கினையும் காப்பதற்கு நீங்கள்
ழாவியனும்,
பாரதிதாசன் வழியிலும் திராவிட இயக்க செல்வாக்காலும் மலையகத்தை படம் பிடிக்க முனைந்தவர்கள் எனும் வகைப்பாட்டில் அடக்கப் கூடியவர்கள். இவர்கள் அணியில் ஈழக்குமார்,
குமரன் முத்லானோரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
புது வசந்தம் 53

Page 157
s
கறுப்புக் கம்பளிக்குள்ளே - தோட்டத்துக் காரிகையர் கூடி பொறுப்புடனே புகுந்து ~ தினமும் போதல றபோவர் நாடு உயிர் வாழ ~ தோட்டத்த தாரியர் செய்யும் நண்மை ஈடு இணையற்றது ~ சரித்திர ஏட்டில் இடம் பெற்றது. எனும் ஐயந்தனும்,
தேயிலைத் தோட்டத் தொழிற் பெண்ணாள் செல்ல மகளை மடத்திலிட்டு பாய்ந்து மலை மீதேறினாள் தன் பாலகன் நினைவே மனம் நிறைப்பாள். எனும் பூண்டுலோயாத் தர்முவும்
மக்கள் வதியும் மாண்பு அற்று மாடுகள் வாழும் வகையு மின்றி கேடுகள் நிறைந்த கீழ்மை மிகுந்த மலைநாடு - இன்று இன்னல் தீர்ந்த கலை நாடாய் கன்னல் உகுக்கும் களி நாடாய் காணுமிந்த மலைநாடு. என்னும் நூரளை இரா. *செல்
பதவி எனும் பூச்சாண்டி காட்டிக் காட்டி உதவி சில பெறுவார் தன் உடல் வளர்க்க இந்நிலை அதிகரித்துப் போனதாலே மந்தநிலை போகவில்லை - எம் மலை நாட்டாருக்கு என்னும் கண்டி எம்.ராமச்சந்திரனும்,
மலையகக் கவிதைப் பாரம்பரியத்திலும் சி.வி.யின் வழியிலும் செல் பவர்களாக காணக்கிடைக்கின்றது. இவ்வகையில் சாரல்நாடன், குறிஞ்சித் தென்னவன், ராம சுப்பிரமணியம், பண்ணாமத்து கவிராயர், குறிஞ்சி நாடன், பானா தங்கம், மூக்கன், லிங்கதாசன் முதலானோரைக் கொள்ளலாம்.
எண்னருமை மலைநாட்டின் திசைகள் எல்லாம் எழிற்கண்ணி அரவணைப்பில் சிரிப்புதிர்க்கும் தன்னிலையை ஓராத முறையால் இங்கு தவிக்கின்றார் எண் மக்கள் ஐயோ இந்த துன்பம் நிறை மக்கள் மட்டும் துயிலுணர்த்தால் தூரத்தில் ஓடாதோ இன்னல் யாவும்: எண்னருமை தோழர்காள்! எழில் முகத்தீர் எடுத்திடுவோம் சபதமிந்தத் துயிலைப் போக்க
எனும் மரியதாசன் அறுபதுகளின் கவிஞரிடையே புதுப்பாரம்பரியம் ஒன்றை உருவாக்க
54 அசந்தம் !

முனைந்த கவிஞர்களில் ஒருவராக கொள்ளப் படலாம். இவ்வகையினோரில் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் ஆழமாக பொதிந்திருக்கக் காணலாம் அவ்வகையினோர் எழுபதுகளில் செல்வாக்கு பெற்ற கவிஞர்களாக இருப்பதைக் காணலாம். தமிழுணர்வு கவிஞர்களும் தங்கள் பிடியினை விட்டு, எழுபதுகளில் மலையகக் கவிதைகள் என்று
வந்து சேரலாயினர். அதன்போது மலையக மக்களின் பெருவாரியான பிரச்சினைகள் பதிவாவதைப் போல நுணுக்கமான பிரச்சினைகளும் கவிஞர்களினால் காட்டப்படுவதோடு, எழுபதுகளில் கோட்டங்கள் கேசி தல், ம் திரும்புதல் இனவாத கொடுமைகளுக்கு பலியாதல், குடியேற்றங்கள் என்ற f6e A szer: pr. e. வாழ் வில் ஏற்படுத்திய சலனங்களை பிரதிபலிக்கத்தக்கதாக கவிதைகளைப் படைத்தனர்.
அவ்வகையோரில் அறுபதுகளில் முகிழ்ந்து எழுபதுகளில் பிரகாசித்த குறிஞ்சித் ெ (pásaŝu jLpTabä5 Ga5FT6i6m6vxTD,
፳፻፱ ፻፳፭ ፳፻፬ ፳3፻፮ኽ
தலைவரெனச் சொல்லிப் பெருந் தலை களிங்கு வந்தார் தனக்குவியல் சேர்ப்பதிலே நாட்டமெல்லாங் கொண்டார் பலகாரம் சேர்த்து பெரும் பதவிகளும் கண்டார் பாட்டாளிக் கூட்டமெல்லாம் என்ன சுகம் கண்டார் என தோட்டத் தொழிலாளியான குறிஞ்சித் தென்னவன் தனது தம்மவரைப் பார்த்துக் கேட்டதாகவும்,
அண்று இந்த ஈழநாட்டில் அனுமன் வைத்த தீ பரந்ததுவே! இன்று மலையக மக்களின் வீடுகள் எரித்து மகிழ்ந்தவர் உந்தனாயவர் கண்றும் தாயும் கதறியழுதிட காண்பவர் நெஞ்சம் பதறித் தடித்திட கொன்று தீர்த்து கனிவெறி கொண்டனர் கோடியுண்மை நிண்பெயர் சொல்லும் கூட்டமே
என புத்தனுக்கு ஓர் விண்ணப்பத்தில் பொங்குவதும் அவரின் ஆழ்ந்திருக்கும் ஆற்புதமான கவிதைகள்,
ജക്റ്റേ ழக்கன், புசெல்லாவை இஸ்மாலிகா, லிங்கதாசன், குறிஞ்சிநாடன் என்போர் ஒரு புறமாகவும்,
நான் பிறந்த நாட்டினிலே
நான் இருக்க வழியில்லை
எண் ஜென்ம புதியிலே
எனக்கு உரிமையில்லை

Page 158
என ஒப்பந்தம் காரணமாக தமிழகத்திற்கு புலம்பெயர வேண்டிய நிர்ப்பத்தத்தில் குமுறிய அரு.சிவானந்தன் (வண்ணச்சிறகு) மொழிவரதன் போன்றோர் ஒரு புறமாகவும் மலையக கவிதைத் துறைக்கு உரம் சேர்ப்பதாக எழுபதுகளில் மலையகக் கவிதைத்துறை
என்பதுகளின் தொடக்கம் எழுபதுகளின் தொடர்ச்சியாகவும் தீர்த்தக்கரை முதலான சஞ்சிகைகள் ஊடாக கவிதைகளில் புதிய முனைட்பும் வேகமும் தோன்றியது. ஆனால் 1983 இல் ஏற்பட்ட ஜீலை கலவரம் மலையக கவிஞர்களில் ஏற்படுத்திய ஸ்தம்பிதம் காரணமாக தேக்கம் ஏற்பட்டது. இத் தேக்கம் காரணமான தொய்வு நீங்க சிலகாலமெடுத்தது.
1986 இல் சுமுரளிதரனின் தியாகயந்திரங்கள் புதுக்கவிதை நூல் வரவும், மலையகத்தில் கவிதைத்துறை நோக்கிய இளைஞர்களின் கவனம் புதிய கவிஞர்களை வரவாக தந்தது. 1988 இல் சு.முரளிதரனின் கூடைக்குள் தேசம் ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு வெளிவருகின்றது.
சங்கங்களுக்காகச் செத்தது போதும் - இனி எங்களுக்காய் சாவோமென எழுதப்பட்ட முதல் அத்தியாயம் சிவனு லெட்சுமணன்! நாம் வதியும்
ஏழாயிரம் ஏக்கரா பாதையாக வேண்டுமென பதறினான்
மலையக மக்களின் மனவெளிகள் தோறும்
டெவன் நீர் வீழ்ச்சியில் வீரச்சாவின் வெடியோசை இன்றும் எதிரொலிக்க இறந்து போன லெட்சுமணன்
எழுபத்தேழில் விடிவெள்ளி
இது முரளிதரனின் கவிதைகளில் ஒன்று. இவ்வாறு புதுக்கவிதை வழியில் எண்பதுகளின் இறுதியில் உருவானவர்களில் இரா.நித்தியானந்தன், செல்வராஜ், அன்புச்செல்வன், ராம்ஜி உலகநாதன், வெலமலரபிக் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
என்பதுகளின் இறுதியிலும் தொண்ணுறுகளின் தொடக்கத்திலும் சிவராஜேந்திரன், தம்பையா போன்றவர்களால் மலையகக் கவிதைகளுக்கு புதிய உயிரோட்டம் ஏற்படுகிறது.

இப்போ, எமது தோட்டமும் கொலனியானதனால் இந்த வேலிகள் - சிங்கள கொலனி வேலிகள் எங்கள் குடிகளில் சிலதை மேய்ந்தனவே மிஞ்சிய எம்மையும் மேய்வதற்கே முள்ளால் வேலியாய் அமைந்தனவே ஐயோ! எம்மை காத்திடுவோம் - முள் வேலியிலிருந்து காத்திடுவோம் வேலியின் முள்ளை அகற்றிவிட்டு வேங்கை மேயா நிலையினிலே வேலியேயில்லா தொழித்திடுவோம் எனும் இ.தம்பையாவின் கவிதையும்,
மலையகத்தில் பெரும் மாற்றத்தைக் கண்டிட மலைகளாய் உயருது மக்கள் படை - எம் அடிமை வாழ்வினை அறுத்துத் தொலைத்திட ஆறாய் பெருகுது தொழிலாளர் படை உரிமைகள் இன்றியே உழைத்திட்ட மக்களின் உண்மைத் தோழனாய் இணையும் படை எனும் சிவ.ராஜேந்திரனின் கவிதையும்,
மலையக மக்களை ஓரணியில் திரட்ட புதியபாதை வழிநடைபோட அழைக்கின்ற கவிதைகளாக விளங்குகின்றன.
தொண்ணுறுகளின் நடுப்பகுதியில்
நீ யேறிய ஏழாம் நம்பர்
மலைகளோ - உன்
ஏக்கத்தைச் சொல்லும்
உண் அவஸ்த்தையைச் சொல்லும்
ஆறாம் நம்பர் மலைகளே
அம்மா.
உன் அழகிய கரம்
தேயிலைக் கறையால்
சேதமாக்கப்பட்டது -
என தொழிலாளர் அவலம் - வீரம்
கவிதைக்கு
FAKEYPA
அனாதைக் குழந்தை முதலான கவிதைகள் உயிர்ப்பானவை. அதேபோல நந்தலாலா சஞ்சிகையூடாக அறிமுகமாகும் பிஷ்மா அத்தகு வரவுகளில் ஒன்று. இவ்விரு கவிதா ஆளுை
களோடு, தோழரீதரன், ஜன்டர், மாரி மகேந்திரன் போன்ற இளைய வரவுகளும் கவனத்திற்குரியன.
வசந்தம் 1

Page 159
இவ்விடத்தில் சிறுகதையாளர்களாக பரவலாக அறியப்பட்டிருந்த இருவர் எண்பதுகளில் தனித்து乐}驻至丽T穹 கவிதைகளால் மலையக கவிதைக்கு காத்திரம் சேர்த்த அல்அஸமத் மல்லிகை சி.குமர் ஆகிய இருவரை குறிப்பிட்டாக வேண்டும்.
பூரணமானதும் ஆழ்ந்த கருத்துச் செறி கொண்டதுமாக அமையும். மல்லிகை சி.குமாரின் கவிதைகள் புதுக்கவிதைகளாக அமைந்து சமகால மலையக அரசியல் - வாடுவியல் நிலைகளை நாசூக்காக படம் பிடித்து மனதில் நெருடலை ஏற்படுத்தும் வகையினதாக அமைந்திருக்கும்.
இவ்வாறு இதுவரை மலையக கவிதை தோற்றம் குறித்து அதன் வளர்ச்சி குறித்தும் கவிஞர்கள் கவிதைகள் என்பவைகளை உதாரணமாகக் கொண்டு ஓன் எழுபதாண்டு கால கவிதை வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சியை அடுத்து. மலையக கவிதைகள் தொடர்பில் வைக்கக்கூடிய சில முடிவுகளைக் காண்போம். 1. இருநூறாண்டுகளும் எட்டாத இம்மக்கள் வரலாற்றில் பேர் சொல்லி பிரலாபிக்க எந்தவொரு முன்னோடி பண்டித புலவர்களும் இல் லாத நிலையில் வாய் மொழிப் பாடல்களையே முதன்மையாகக் கொண்டு முகிழ்ந்ததாக இருக்கின்றது.
2.
கவிதையின் தொடக்கம் சிந்துவகை தனிப்பாடல்களாக இருந்தது. கவிதைகள் வித்துவச் செருக்கை வெளிப்படுத்தி தமிழ் வளர்க்கும் பணிக்காக யாக்கப்படாமல் உண்மையிலே மக்களை அடைந்து பயன்பாடு விளைப்பதற்காக உருவான கவிதைப் பாரம்பரியம் காணப்படுகின்றது.
3.
மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதைகளின் முகம் வேறுபாடானது. அது மலையக மக்கள் படித்து பயன்பெற வேண்டியதன்று. இம்மக்கள் குறித்து பிறரறிய வேண்டியமை குறித்த முனைப்பை முதலில்
அவர் கவிதைகள் தமிழாகும்போது அதன் பிறப்பும் தனித்துவமும் பிற கவிஞர்களில் செல்வாக்கை ஏற்படுத்துவதாகின்றது.
4. அறுபதுகள் மலையக கவிதை உலகில் ஒரு வேகமான வளர்ச்சி ஏற்பட மலையகத்தில் தொழிலாளர் குடியிருப்புகளிலிருந்து கல்வி கற்று ஒரு தலைமுறையின் தோன்றுவதும்
அவர்களின் மலையகம் குறித்த தெளிவான
56 is against

எண்ணங்கள் ஏற்படுவதும் காரணமெனக் Qa561616) Tib.
5.
எழுபதுகளில் கவிதையுலகில் அறுபதுகளை ஒத்த வளர்ச்சி வேகம் இல் ல் இருந்
தாயகம் திரும் புதல் , தோட்டங்கள் அரசமயமாதல், பஞ்சம் ஏற்படுதல், ஏப்ரல் கிளர்ச்சி போன்றவற்றால் மக்களில் ஏற்பட்டிருந்த நிலைமை பட்டாளிகளில் ஏற்பட்டிருந்ததாகக் கொள்ளலாம். என்றாலும் இக் காலப் பகுதியில் இடதுசாரிகளின் செல்வாக்கு மலையக கவிதைகளில் செல்வாக்குச் செலுத்தியிருந்ததைக் குறிப்பிட வேண்டும். ஆர்வம் கொண்ட, நவீன சிந்தனைகள் கொண்ட ஒரு சில கவிஞர்கள் இப்பகுதியில் தோன்றுகிறார்கள் என்றாலும்
77 இன் நிகழ்வு எண்பதுகள் வரை சிறு மந்தத்தை ஏற்படுத்துகின்றது.
6. எண்பதுகள் மலையக மக்கள் அரசியல் அடிப்படையில் வரையறுத்துக் கொண்டு, இலங்கை மண்ணை தம் தாயகமாக எற்றுக் கொண்ட தமக்கு வேண்டிய அந்தஸ்துகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தும் காலமாகும். அத்தொனி கவிதைகளில் தீவிரமாக இடம்பெறுகின்றது.
S. 60 D, இருந்தாலும் அதற்கு அனுசரணையாக இலக்கிய முயற்சிகள் கணிசமாக அமைய வேண்டிய தேவையை வலியுறுத்தும் பகுதியாக அமைகின்றது. இந்நூற்றாண்டின் முடிவில் இப்பகுதியை பூரணமாக எடைபோட முடியும்.
õ፣ ፰jl எவ்வாறாயினும் Os) 6 is புனைகதைத்துறையினர் சாதித்த அளவோடு கவிதையை ஒட்பு நோக்கும்போது, ஒரு இடைவெளி இருக்கத்தான் செய்கின்றது. கவிதைத்துறை
அது வலியுறுத்துகின்றது.
零染、*多
女女★

Page 160
வேர்
வானொலி மிகவும் பிந்திய ஸ்கோர் விபரங்களை வெளியிட்டது. வழமைபோல இராணுவ செய்திகளும் புலிகளின் தகவல்களும் முரண்பட்டன. அனுபவங்களின் அடிப்படையில் உண்மையை கண்டறிய யோகிக்கும் சூத்திரத்தை ன்படுத்தி பெருக்கி பிரித்து கூட்டி கழித்தார் பரமசிவம்.
த்தில் திருட்தியின் அறிகுறிகள் ஒட்டிக்கொண்டது. இனி அவுஸ் திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்த தமிழ் நிகழ்ச்சிகளின் தொகுப்பு. பிரமுகர்களின் பெயர்களையும் பிள்ளைகளின் பெயர்களையும் கேட்பதிலே அவருக்கு ஆர்வம் கிடையாது. அவருக்குத் தெரிந்தவர்கள் பிற மாநிலங்களிலும் இல்லை. வானொலியின் குரல்வளையை நெரித்தார். அது இறுதி மூச்சை விட்டது. இனி அடுத்த வாரம் SBS தமிழ் சேவைக்காக மீண்டும் உயிர்த்தெழலாம்.
தமிழ் கலாச்சாரத்தை காட்பாற்ற பெண் பிள்ளைகளை பரதம் பயில விட்டுவிட்டு ஹோம்புஸ் ஆரம்ப பாடசாலை வாசலில் காரிலே தவமிருக்கும் தமிழ் பெருங்குடி மக்களில் பரமசிவமும் ஒருவர். இந்த நேரங்களில் SBS தமிழ் சேவையே உற்ற நண்பன். சிட்னியில் நிதி திரட்ட நடக்கும் கலைவிழாக்களின் நிகழ்ச்சி நிரலில் பிள்ளையின் பெயருடன் ஒட்டிக் கொண்டு "பரமசிவம்” என பாரறிய வரலாற்றில் பதித்துவிடுவதைக் கான எத்தனை தவம் இருந்தாலும் என அவள் எண்ணிக்கொள்ளுவார்.
ஸ்கோரில் சில அட்ஜெஸ்ட்மென்ற்களை செய்து வெற்றிக் களிப்பில் மூழ்கியிருந்த ULDéfengodogs,
"என்ன மகள் டான்ஸ் பழகிறாவோ" என்ற குரல் புகலிடத்திற்கு இழுத்து விழுத்தியது. பக்கத்திலுள்ள தமிழ்கடையில் வாங்கிய சாமானும் கையுமாக மிஸ்ஸிஸ் சுந்தா.
"ஒமோம். சனி ஞாயிறு வந்தால் பிள்ளையளை வகுப்புகளுக்கு கொண்டு திரியிற றைவி வேலைதானே எங்களுக்கு என்ன கடையால போல இழுத்தார் பரமசிவம்
 
 
 
 
 

德
(F
"அடுப்பில சட்டியை வைச்ச பிறகுதான் உட்பு முடிஞ்சது ஞாபகத்திற்கு வந்தது. அதுதான் உடுத்த உடுப்போடை ஓடிவந்தனான். கறி அடுப்பிலை. நான் வாறன்” ஓடினார் மிஸ்ஸிஸ் சுந்தா.
தன்ரை லெவலுக்கு இந்த உடுப்போடை வெளியிலை திரியேலாது எண்டு திமிராய் சொல்லிப்போட்டு போறதாய் அவருக்குப் பட்டது. உண்மையிலை அவருக்குக் கோபம் "மகள் டான்ஸ் பழகிறாவோ?’ எண்டு கேட்டதிலைதான். தமிழ் மேடைகள் பல கண்ட "துவடிானி பரமசிவம்” எண்ட பேரையே கேள்விப்படாமல் சிட்னியிலை இவ
போனால் காசு கரைஞ்சு போகும் எண்டு நினைக்கிற கஞ்சல் தமிழ் கூட்டம் என மனதுள் முழு
இனத்தையே திட்டி திருப்திப்பட்டார்.
உழுத்தம்பருப்பு வாங்கிக் கொண்டு வரச்சொல்லி வசந்தி சொன்னது *ጌረይ
இன்னும் பத்து SuBaFLD இருக்கிறது 登鯊藥籌露絮對簽 போய் வந்துவிடலாமென புறப்பட்டார். கடைக்கு பின்புறமுள்ள கார்ப்பாக்கில் இடமே இல்லை. சீனர்களுக்கு ஏதோ கொண்டாட்டமோ என்னமோ, முன்னுக்கு பின்னுக்கு எல்லா இடமும் அவர்களுடைய கார்கள்தான். ஊருவதற்கு
முடியவில்லை. சீனர்களின் தொகை கூடுவதாலே
தேகித்தார் பரமசிவம் பக்கத்திலுள்ள இடம் காலியாகுமட்டும் தமது காரை நிறுத்தி பின்னால் நிற்பவர்களை "இவருக்கு விரைவிலே ஒரு இடம் கிடைக்க வேண்டுமே” என பிரார்த்தனை செய்ய
曼
劉リ
杰
மகள் டான் எல் முடிந்து தன்னைத் தேடுவாளே என்ற பதைப்பில் சீன இனத்திற்கே சாபம் போட்டார். எதிபார காருக்கு அருகில் நிறுத்தி ஒரு வயதுபோன சீன தம்பதிகள் தயாரானார்கள். அது அவள் செல்லும் திசைக்கு எதிர் புறத்தில்
புது வசந்தம் 157

Page 161
இருந்தாலும் எதிர் திசையில் ஒரு வாகனமும் அந்த நேரத்தில் வராதபடியால் சிக்னலை போட்டுவிட்டு காத்திருந்தார். அந்த சீனதம்பதிகள் தங்களால் சீன இனத்திற்கே சாப விமோசனம் கிடைத்ததை
வந்த சாமான்களை மிக கவனமாக நிதானமாக காரிலே அடுக்கத் தொடங்கினார்கள். எட்படியோ அந்த இடம் கிடைத்த திருப்தியில் தனது பொறுமையின் எல்லையை கொஞ்சம் தாராளமாகவே பின்னுக்கு தள்ளினார் பரமசிவம், பரமசிவத்துக்கு இந்த அவசர நிலைமையிலும் காத்திருக்க வேண்டி வந்ததில் வெறுப்பு ஏற்பட்ட போதும் பல சீனர்களை தனக்கு பின்னாலே காத்திருக்க வைத்து பழி வாங்கியதில் திருப்திப் பட்டார். அவரின் பொறுமையின் எல்லையை அதிகம் நீட்ட விரும்பாத வயது முதிர்ந்த தம்பதிகள் தங்கள் காரை வெளியே எடுத்து தமது இனத்தின் பெயரையும் அந்த மட்டில் காட்பாற்றி கொண்டனர்.
பரமசிவம் தனது காரை இயக்க தொடங்க, எதிர்பாராதவிதமாக திடீரென்று எதிர்ப்பக்கத்தலிருந்து வேகமாக வந்த இன்னொரு கார் அவருடைய காரை ஒரு கணிப்பிலெடுக்காமல் பாக்கிங்கை ஆக்கிரமித்துக் கொண்டது. பாக்கிங் போராட்டத்தில் இதுபோன்ற சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் நேருக்கு நேர் சந்தித்தறியாத பரமசிவத்திற்கு இரத்த நாளங்கள் வெடிக்கத் தொடங்கின. அந்த காருக்கு உரியவர்கள் இந்திய நடுத்தர வயது தம்பதிகள் போல் தெரிந்தனர். இந்தியப் படைகள் தனது ஊரை துவம்சம் செய்தபோது கூட அவர் இவ்வளவு கொதிப்படைந்த தில்லை. லிட்டிக்ஸ்கும் நாகரிக உடையுமாய் ஒரு சராசரி இந்தியப் பெண் இறங்கி வந்தாள். லிட்டிக்ஸ் அவுஸ்திரேலியாவில் ஒட்டிக் கொண்டது. அப்படியே தெரிகிறது. ஆண் இறங்கி வரும்வரை பரமசிவத்தால் பொறுக்க முடியவில்லை. கண்ணாடியை இறக்கிவிட்டு கத்தத் தொடங்கினார்.
"இது பெரிய அநியாயம். நான் எவ்வளவு நேரமாய் இந்த இடத்துக் காய் காத்துக் கொண்டிருக்கிறன். ஒரு விதமான பண்பாடும் இல்லாமல் இடையிலை புகுந்துவிட்டியள்.” ஆங்கிலத்தில் சண்டை பிடிப்பது பரமசிவத்திற்கு புதியது. சற்றும் எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்த பெண்,
'நிதான் நாகரீகம் தெரியாமல் ஒரு பெண்ணோடை சண்டை பிடிக்கிறாய் என்னுடைய கணவர் வாறார். அவரோடை பேசு, முட்டாளே”
律5鲁 வசத்தம்

என்று ஒரே அடியாகப் போட்டாள் லிட்டிக்ஸ் பெண்ட முட்டாள் என்று அதுவும் ஒரு பெண் திட்டியது
கணவனைப் பார்த்து இன்னும் பெரிய குரலெடுத்து கத்தத் தொடங்கினாள்.
“ஐந்து நிமிடமாய் அவர்கள் கார் எடுக்கு மட்டும் நான் காத்துக் கொண்டிருக்கிறன். நீர் வலு சிமாட்டாய் அதுக்கை விடுகிறீர். உமக்கு கண் தெரியேல்லையே?”
“எனக்கு நல்லாய் கண் தெரியது. உமக்குத் தான் கண் தெரியேல்லை. அந்தப் பக்கத்திலிருந்து எப்பிடி இந்தப் பக்கத்திலை பாக் பண்ண வெளிக்கிடுவீ?” ஆணின் குரலில் பெண்ணிடமிருந்த போர்க்குணம் தெரியவில்லை.
"அந்தப் பக்கம் ஒரு காரும் வராததாலை இந்தப் பக்கமே நிண்டன். பண்பான சனங்கள் இன்னொருவர் காத்திருக்கிற இடத்திலை விட மாட்டினம். பண்பாடு தெரியாத சனங்களும் இந்த நாட்டிலை இருக்கிறதை மறந்து போனன். அதுதான் என்ரை பிழை.”
நீர் பண்பாட்டைப் பற்றிக் கதைக்கிறீர்” என்று இடையில் புகுந்தாள் பெண். பின்னர் தன் கணவனைப் பார்த்து, "அவற்றை சொத்தாம் இந்த
விடட்டும். ஏதோ போகேக்கை கொண்டுபோற மாதிரி கத்துது மனிசன்” என்று அசல் யாழ்ப்பான தமிழில் பேசினாள் பெண்.
பரமசிவத்திற்கு பெரிய அவமானமாய்ப் போய்விட்டது. தனது சொந்த ஊரவர் எண்டு தெரியாமல் சண்டை பிடித்துவிட்டோமே என்ற
கூறியபடி விறுவிறுவென காரை சுழட்டி எடுத்தபடி பறந்தார். உழுத்தம்பருப்பு வாங்காததற்கு கிடைக்கும் அர்ச்சனையையும் மறந்தார். சில நிமிட பாக்கிங் இடத்துக்காக தேவையில்லாத சண்டை எண்ட உண்மை நெஞ்சைப் பாரமாக்கியது. நடந்த சம்பவங்களை ப்ளாஸ் பாக்கில் ஓடவிட்டு அவுஸ்திரேலிய ஒட்டுனர் விதிகளுக்கு அமைய தவறு யாருடையது என ஆராயத் தொடங்கினார். விதிகள் எதிரிக்கு சாதகமாக இருப்பது போல் தோன்றினாலும், கனவான்களுக்குரிய பண்பில் எதிரி நடந்து கொள்ளாதது குற்றம் என வாதித்து கனக்கும தனது நெஞ்சை இலேசாக்க முனைந்தார் பரமசிவம்
盛、毅

Page 162
அவரும் வர டான்ஸ் முடிய சரியாக இருந்தது. சின்ன பெண்கள் கலர்கலரான சுரிதார் உடையில் கலகலப்பாக வருவது வடிவாகத்தான் இருந்தது. ஆனால் ரசிப்பதற்குரிய மனத்தைத்தான் பறிகொடுத்துவிட்டாரே. மகளை ஏற்றிக்கொண்டு கார் அசைந்தது. நினைவு கார்ப் பாக்கிலேயே தங்கிவிட்டது.
சிக்னல் ஒன்றில் பச்சை ஒளிக்காக காத்திருக்கையில் கதவை யாரோ தட்டினார்கள். கண்ணாடியினூடே ஒரு வயது முதிர்ந்த வெள்ளை முகம் தெரிந்தது. கண்ணாடியை இறக்கி என்ன என்று கேட்பதற்கிடையில் கதவை திறந்து ஏற முனைந்தார். வீட்டுக்கு போவதற்கு லிப்ட் கேட்கிறாராக்கும் என்று பரிதாபத்தில் கதவை அகலமாக திறந்து கிழவர் ஏற உதவினர் பரமசிவம் அவருடைய உயர்ந்த உடம்பு மிகவும் சிரமத்துடன் மடக்கி அந்த சின்ன காருள் அடைக்கப்பட்டது.
"எங்கே உங்களை இறக்க வேண்டும்?” ஒரு காரோட்டிக்குரிய பணிவோடு பரமசிவம் கேட்டார். பதிலில்லை. காது கேட்கவில்லையோ? கொஞ்சம் பலமாகவே கேட்டார். மீண்டும் மெளனம், பரமசிவம் தனது குரல் வளத்தை பலவகைகளிலே பரிசோதித்துப் பார்த்தார். கிழவர் தலையாட்டலுக்கு
தெரியாமல் இருக்கலாம் என மகள் அபிப்பிராயம் தெரிவித்தாள். அடுத்த சிக்னலும் வந்துவிட்டது. தான் போகவேண்டிய பக்கத்தை காட்டி பக்கமாக விடவா எனக் கேட்டர். ஆமாம் என பலமாக தலையாட்டினார். "அட்டாடி" ஒருவகையில் பதில் கிடைத்ததில் பரமசிவம் திருப்திப்பட்டார். அதுவும் தான் செல்லும் பாதை என்பதால் சிரமமும் ജൂേ
கிழவர் எதிர்புறத்தில் விரைந்து செல்லும் மரங்களை ரசித்துக் கொண்டே வந்தார். இடையிடையே தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். ஒவ்வொரு திருப்பத்திலும் பரமசிவம் செல்லும் பாதை சரியானதா என கேட்கப்படும்போது "ஆமாம்” என தலையாட்டி ஆமோதித்துக் Gebst60öILITT. sed6IC560)Lulu UT60)95uD g565123)(60)LuU பாதையும் ஒன்றாக அமைந்ததில் பரமசிவத்திற்கு பரம திருப்தி
வானில் சூரியன் பயணத்தை முடிக்கும் நேரம். இளைஞர்கள் வீதி ஓரங்களில் பியர் கான்களுடன் கதைக்கத் தொடங்கிவிட்டார்கள். எதிரே செவ்வானத்தின் பின்னணியில் மரங்கள் கரிய மலைகளைப் போல் அழகு காட்டுவதை சுட்டிக் காட்டிய கிழவர் "அழகாக இருக்கிறது" என அபிப்பிராயப்பட்டார். அவருடைய வாயிலிருந்து முதல் வார்த்தையை கேட்ட பரமசிவம் தனது மகள்
 
 

முதல் முதலில் பேசக் கேட்டதைவிட அதிக மகிழ்வடைந்தார். அவர் செவிடரோ ஊமையோ அல்ல என உறுதிப்படுத்தினார். மொழி பிரச்சினையும் தீர்ந்தது.
ஈஸ்ற்வுட் வந்துவிட்டது. வீடு கிட்டத் தொடங்கியது. கிழவருக்காக ஈஸ்ற்வுபூட்டிற்கும் அப்பாலும் போகவேண்டி வருமோ என்ற சந்தேகம் வர,
"எனது இடம் வந்து விட்டது. உங்களை எனது வீட்டடியில் இறக்கி விடுகிறேன்” என பரமசிவம் அவருடைய வீடு மட்டும் கொண்டு செல்லமுடியாததற்கு மன்னிப்பு கேட்கும் தோரணையில் மசிந்தார். அவருடைய நடவடிக்கைகளில் எந்த அசுமாத்தமும் தெரியவில்லை. செவ்வான பின்னணியில் மரங்களை விட்டு
கொண்டுபோ என கேட்காதவரை பரமசிவம் திருப்திப்பட்டார்.
வீடு வந்துவிட்டது. காரை விட்டிறங்கி அவரையும் இறங்க உதவி செய்தபடி "இதுதான் எங்கள் வீடு. நாங்கள் வருகிறோம்” என்றபடி பரமசிவம் நன்றியையும் எதிர்பார்க்காமல் நடந்தார். உழுத்தம்பருப்பு நி ந்து உலுக்கியது.
體: it,
"அப்பா இங்கை பாருங்கோ” என
ஆழைத்தான். திரும்பிப் பார்த்தார். கிழவர் பின்னால வந்து கொண்டிருந்தார்.
“என்ன வேண்டும்?" பரமசிவத்திற்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது. காசு ஏதாவது கேட்டால் கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானித்துக்
iந்தார். பரமசிவம்
நடந்தார். கிழவரும்
சொல்லிவிட்டு தானும் சென்று படாரென கதவைச் சாத்தினார். சாவித்துவாரத்தினூடாக பார்த்தாள். கிழவர் அசையவில்லை. பரமசிவமும் பார்த்துக் கொண்டேயிருத்தார். அதற்கிடையில் வரலாறு முழுவதும் மகள் தாய்க்கு ஒப்புவித்தாள்.
“உழுத்தம் பருப்பு வேண்டிக்கொண்டுவரச் சொன்னால் நீங்கள் என்ன உழவாரத்தை வேண்டிக் கொண்டு வந்திருக்கிறியள்” வசந்தியின் விசாரணை தொடங்கிவிட்டது.
“நானே வரச் சொல்லி கூட்டிக் கொண்டு வாறன் அந்த மனிசன் எனக்கு பின்னலை வருகுது”
- புது anari தம் 59

Page 163
“உங்களை விட்டால் சிட்னியிலை வேறை ஆர் இருக்கினம். றோட்டிலை நிக்கிற சனங்களை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வாறதுக்கு, கள்ளனோ காமுகனே ஆருக்குத் தெரியும். இப்ப என்ன செய்யப்போறியள்?
"அது எண்பதை தாண்டின கிழவன். ஏதோ மூளை தடுமாறி திரியுது. கதவுக்கு வெளியிலை நிக்கவிடுகிறது வடிவில்லை. கூப்பிட்டு ஒரு தேத்தண்ணியை குடுத்து அனுப்பிவிடுவோம்.” பரமசிவத்திற்கு அயலவரைப் பற்றிய பயம்.
"அந்த மனுசனுக்கில் லை உங்களுக்குத்தான் விசர். நான் அறைக்குள்ள போறன். நீங்களே தேத்தண்ணியை போட்டுக் குடுங்கோ.” வசந்தி சொன்னபடி செய்தாள். துஷானியும் தம்பி ஹிஷானும் நடக்கப்போகும் நாடகத்தை பார்க்க ஆவலாக இருந்தனர். பரமசிவம் மெதுவாக கதவைத் திறந்தார். கிழவர் ஏதும் நடக்காத மாதிரி மெதுவாக உள்ளே வந்தார். கதிரையை காட்டி இருக்கச் சொல்லி விட்டு பரமசிவம் பாத்ருமுக்குச் சென்றார்.
"அப்பா அவரும் பின்னாலை வாறார்” சொல்லி சிரித்தனர் பிள்ளைகள். அவரை கையை பிடித்து கதிரையில் இருத்தி, பிள்ளைகளை அவருடன் கதைக்குமாறு பணித்துவிட்டு பாத்றும் பயணத்தை தொடர்ந்தார். வெளியே வரும்போது பிள்ளைகளுடன் அவர் பாவனைகளால் விளையாடத் தொடங்கிவிட்டார். ஒருவேளை நாடகக்காரராக இருந்திருப்பாரோ? ஆறு அடி உயரம் இருக்கும். இளமையிலே ஒரு கதாநாயகனுக்குரிய தோற்றத்தைக் கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.
“உங்களுக்குத் தேனீரா கோப்பியா? பரமசிவம் கேட்டார்.
"ஆமாம்” பிள்ளைகள் சிரித்தனர். “சீனி எத்தனை கறண்டி? "ஆமாம்” இப்போது பிள்ளைகளுடன் கிழவரும் சேர்ந்து சிரித்தார்.
"அப்பா அவருக்கு ஆமாம் எண்டதுக்கு மேலை கதைக்கத் தெரியாது” மகன் தனது கண்டு பிடிப்பை வெளியிட்டான்.
"அந்த மனிசனுக்கு ஆமாம் எண்டதுக்கு மேலை யோசிக்கவே தெரியாது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போய் வேறை ஆரையும் கூட்டிக் கொண்டு வாருங்கோ. அவருக்கு துணையாயிருக்கும்"கதவிடுக்கால் நாடகத்தை எட்டிய் பர்த்துக் கொண்டிருந்த வசந்தி பொழிப்புரை வழங்கினாள்.
"வசந்தி, கிழவனுக்கு ஒரு தேத்தண்ணி (3UITG.”
(160 புது வசந்தம் H

“தனக்கு என்ன வேணுமெண்டே மனுசனுக்கு விளங்கேல்லை. போட்டு குடுத்தால் குடிக்குமோ தெரியாது. என்னாலை சும்மா மினைக்கெடேலாது. பேசாமல் எங்கையாவது கொண்டுபோய் விட்டுவிட்டு வாருங்கோ”
“எங்கை விடுகிறது. திரும்பிவரேக்கை பின்னாலை வரும் பரமசிவம் பரிதாபமாகக் கேட்டார்.
"அது சரிதான்” ஆமோதித்த பரமசிவம் அவரின் கையை பிடித்து வரும்படி அழைத்தார். கிழவன் ஒரு சின்ன பிள்ளை போல அவரை பின்தொடர்ந்து நடந்தார். பிள்ளைகள் bye.bve. சொன்னார்கள்.
பொலிஸ் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோது கிழவரின் முகத்தில் கவலை அப்பியது. அவரை ஒரு கதிரையில் இருத்திவிட்டு உள்ளே சென்று வரலாற்றை ஒப்புவித்தார். எல்லாவற்றையும் எழுத்திலே வாங்கிக் கொண்ட பொலிஸ்காரன் கிழவரை எழுப்பி அவருடைய பெயரை கேட்டான். பதிலில்லை. உறுக்கிக் கேட்டான். கிழவர் கலவரப்பட்டார். பொலிஸ்காரன் பயமுறுத்தினான். கிழவர் ஏதோ சொன்னார். அது அவருடைய பெயரா, ஊருட்ைய பெயரா, அல்லது அவர் பிறந்த ஊரின் பெயரா புரியவில்லை.
LJ JuD86) ud தான் போவதாக பொலிஸ்காரனிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார். கிழவரும் எழும்பி பின்னால் வந்தார்.
"நீ இங்கே நில்" என்று பொலிஸ் அதட்டியது. கிழவர் பரிதாபமாக பரமசிவத்தை பார்த்தார். விடுவிடுவென்று வீட்டை நோக்கி ஓடி வந்தார். குடும்பம் தமிழ் சினிமாவில் குளித்துக்
“பொலிசில் என்ன நடந்தது? சினிமாவை விட அதை அறிவதில் எல்லோருக்கும் ஆர்வம் இருந்தது. கதையை சொல்லிவிட்டு போய் கட்டிலில் சரணடைந்தார் பரமசிவம்.
பின்னால் வந்த வசந்தி, "என்ன கிழவனை விட்டுவிட்டு வந்த கவலையோ?” என கிண்டலாகக் கேட்டாள்.
"கிழவனிலை எங்கடை எதிர்காலம் தெரிஞ்சுது. வேர்களை விட்டுவிட்டு வந்த எங்களின்ரை முடிவும் இதுதானே.”
"என்ன வேரோ, என்ன கிளையோ அதை வாற நேரம் பார்ப்போம்" என்றபடி சினிமாவுள் புகுந்தாள் வசந்தி.

Page 164
என் நாடக உலக
01.
என்னை நாடகத்துறை சார்ந்த புதிய நண்பர் சிலர் நீங்கள் என்னென்ன நாடகங்களை எழுதியிருக்கிறீர்கள் என உரையாடல்களின் போது வினவுவதுண்டு. நான் கேட்டவர்களுக்குப்பதில் சொல்லியிருக்கிறேன். இனிமேல் எவரும் கேட்காதிருப்பதற்காக இதை எழுதுகிறேன்.
நானும் நண்பன் மு.கனகராசனும் இணைந்து 1966களில் ஒரு நாடகம் எழுதினோம். நாடகத்தின் பெயர் "எதிரொலி” நாடகத்தை மேடையேற்றுவதற். கான ஒழுங்குகளையும் செய்து கொண்டிருந்தோம்.
ஒருநாள் நான் யாழ்தேவி புகையிரத மூலம் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தேன். அவ்வேளை எனக்குத்தெரிந்த பல்கலைக்கழக விரிவரையாளரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். சந்தர்ப்பவசமாக இருவரும் எதிரெதிரே இருக்கைகள் கொண்டிருந்தோம்.
அவர் பல்கலைக்கழக மாணவனாயிருக்கும் பொழுது அன்னர் பங்கேற்று நடித்த நாடகங்கள் சிலவற்றை நான் பார்த்திருக்கிறேன். அவர் சிறந்த நடிகள் விமர்சகரும் கூட. எனவே நாங்கள் எழுதிய நாடகத்தைக்காட்டி அவரின் அபிப்பிராய்த்தைப் பெறவேண்டுமென என் மனம் அவாவுற்றது. உரையாடலின் ஊடே எனது எண்ணத்தை அவரிடம் வெளியிட்டு கைவசமிருந்த நாடகப் பிரதியை அவரிடம் நீட்டினேன். பிரதியை அவர் வாங்கிக்கொள்ளவில்லை. அவரின் தயக்கத்தைக் கண்ட நான் "நான் வாசிக்கட்டுமா” என்றேன். அதற்கு அவர் வேண்டாம் . நாடகக் கதையைச் சொல்லுங்கள்” என்றார்.
அன்னாரின் மனநிலையைப் புரிந்துகொண்ட நான் நீட்டிவளர்துக்கொண்டிராமல் கதையின் சாராம்சத்தை விரைவாகச்சொல்லத் தொடங்கினேன்.

அனுபவத் துளிகள்
திருநாவுக்கரசு (அரசையா)
அது பின்வருமாறு நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம். குடும்பத்தலைவனையிழந்து விட்டவிதவை மனைவி, முப்பத்தைந்து வயதிருக்கும் அவளுக்கு ஒரேமகன். பதினைந்து வயதிருக்கும். கணவனையிழந்து விதவையாயிருக்கும்போது கள்ப்பமுற்று பெண் குழந்தையைப் பெறுகிறாள். ஊராரின் இழிசொல்லுக்காளாகிறாள். காலம் உருண் டோடுகிறது. பையன் படித்துப் பட்டதாரியாகிறான். சிறுவயதிலிருந்தே வளர்ந்து வந்த அவனின் நீண்டகால ஆசை தான் ஒரு பொலீஸ் அதிகாரியாக வரவேண்டுமென்பதே. பொலீஸ் சேவையில் சேர்வதற்காக மனுச்செய்து அவர்களினால் நடாத்தப்பட்ட எல்லாப் பரீட்சைகளிலும் சித்தியடைகிறான். தான் பொலிஸ் சேவையில் நிச்சயமாகச் சேர்த்துக் கொள்ளப்படப் போவதாக தன் தாயிடமும் தெரிவித்து மகிழ்ச்சியடைகிறான். இந்நிலையில் ஒரு நாள் தன் தாயார் முன் தலைகவிழ்ந்து விம்மியவாறே வந்து நிற்கிறான். தாயார் என்ன நடந்தது என அவனை வினாவுகிறாள். தான் பொலீஸ் சேவையில் எடுபடவில்லை என்பதைத் தெரிவிக்கிறான். அதற்குத் தாயார் நீதானே எல்லாம் சரி என்றாயே என்று கேட்கிறாள். நான் ஒரு கெளரவமிழந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று என்னை எடுக்கவில்லை என்று கூறுகிறான். தாய் எதுவும் பேசாது தலைகவிழ்நது நிற்கிறாள். நாடகம் முடிகிறது என்றேன்.
கதையைக் கேட்டுக் கொண்டிருந்த விரிவுரையாளர் “அவள் தாய் செய்த காரியத்துக்கு அவனை ஏன் தண்டிக்க வேண்டும்” என்று கேட்டார். நான் சொன்னேன் “பொலிஸில் ஆட்களை எடுக்கும் பொழுது குடும்பக்கெளரவமும் பார்த்து எடுக்கும் வழக்கம் உண்டு என்றேன். அவர் எனதுரையை மறுத்துரைத்துவிட்டு நீங்கள் இந்த எழுத்துவேலைகளை எங்களோட விட்டுட்டுப் புறொடேக்ஷனோடே நில்லுங்கோ என்றார். சொன்னபடி புறொடெக்ஷனோடே நின்றேன். அவர் ஏதாவது நாடகம் எழுதுவார் என்று எதிர்பார்த்தேன்.
புது வசந் தம் 161

Page 165
கடைசிவைர அவரும் எழுதவில்லை. நானும் எழுதவில்லை. என்னோட சேர்ந்து எழுதின நண்பன் கனகராசன் ஒரு சில நாடகங்கள் எழுதிவிட்டார். அந்த விரிவுரையாளர் சொற்படிகேட்டு நடந்தது பிழையென்பது காலங் கடந்து தான் உணரக்கூடியதாகவிருந்தது.
02
கலைப் பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை அவர்களின் ஆக்கங்களில் ஒன்றே "இறுதிப்பரிசு” என்னும் நாடகம். கடையெழு வள்ளல்களில் ஒருவனே குமணன். இல்லையென்று இரந்து வருவோர்க் கெல்லாம் இல்லையென்னாது வாரிவழங்குபவன் குமணன். குமணனின் இச்செயல் அவனின் உடன் பிறப்பாகிய இளங்குமணனுக்கு ஆவேசத்தையும், ஆத்திரத்தையும் ஊட்டுகிறது. உடன் பிறப்பு என்றும் பாராது அரியாசனத்தினின்றும் அண்ணனை விரட் டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றுகிறான். இளங்குமணனால் நாட்டைவிட்டு விரட்டப்பட்ட குமணன் காடுபுகுந்து துறவியாகி பேரின்பப் பேரானந்தத்தை நாடுகிறான். குமணன் அந்நிலையெய்திய பின்பும் "அண்ணன் உயிரோடிருந்தால் என்றோ ஒரு நாள்
இவ்வுலகினின்றும் தீர்த்துக்கட்டிவிடு” என ஆலோசனை வழங்கிய தியோர் தம் அறிவுரைப்படி அண்ணன் குமணின் தலையைக் கொண்டு வருவோருக்கு பல்லாயிரம் பொன் பரிசளிப்பேன் என பறையறிவித்தான். இந்நிலையில் வறுமையில் வாடிய புலவனொருவன் நாட்டிற்குள் நுழைகிறான். முரசறைவோனின் செய்திகேட்டு நாட்டு நிலைமையைத் தெரிந்துகொண்ட புலவன் குமணனைத்தேடி காடுமேடுகளெல்லாம் அலைகிறான் அவ்வேளை காட்டில் ஒரு துறவியைச் சந்தித்து உரையாடுகின்றான். தான் குமண வள்ளலைத் தேடி அலைவதாகவும் தான் வறுமையில் வாடும் புலவனென்றும் வள்ளலைச் சந்தித்தால் தன் துயர் தீரும் எனவும் கூறுகிறான். புலவரின் நிலைமையைப் புரிந்து கொண்ட துறவி அவர்தம் துயரைத் துடைப்பதாகக் கூறிவிட்டு தன் கையிலிருந்த கோடரியைப் பற்றிக் கொள்ளுமாறு புலவர் வசம் கொடுக்கிறான். நிகழப்போவது இன்னதுதான் என்று ஏதுமறியாத புலவன் கோடரியை வாங்குகிறான். இளங்குமணனின் ஆணைப்படி பறையறைவோன் கூறிய செய்தியை புலவர்க்கு நினைவுபடுத்தி தாங்கள் தேடியலையும் குமணன் தானேயெனவும் என் தலையை வெட்டி தம்பியின் கைக் கொடுங்கள் அவன் தரும் பல்லாயிரம் பொன் மூலம் தங்கள் வறுமையைப் போக்குங்கள் என்று கூறி மண்டியிட்டு
62 வசந்தம்

புலவர் முன்னிலையில் தன் தலையை நீட்டுகிறான். துறவி வடிவில் தன்னோடு இதுவரை உரையாடியவன் குமணன் என்பதறிந்ததும் தன் கையிலிருந்த கோடரியை வீசி எறிந்து அவனைக் கட்டியணைத்து கதறி அழுகிறான். அதன்பின் எழுந்து குமணனை நோக்கி மன்னா என் வறுமையைப் போக்க உன் தலையை நீ எனக்கு அர்ப்பணித்துவிட்டாய். நீ உன் வாயால் கூறிய நேரம் தொடக்கம் உன் தலை என்னுடையது. நான் இவ்விடமிருந்து சென்று திரும்பி வந்து எடுத்துக் கொள்வேன். அதுவரை நானல்லாது பிறர் எவரும் என் தலையைக் கவராது காட்பாற்றி வைத்திருக்க வேண்டியது உன் பொறுப்பு எனக் கூறி அவ்விடத்தை விட்டுச் செல்கிறான். சென்ற புலவன் குமணனின் தலை இரத்தம் தோய்ந்த நிலையில் ஒரு கூடையில் வைக்கப்பட்டிருப்பது போன்று போலியாகக் காட்சிப்படுத்தி இளங்குமணனின் சபையை நோக்கிச் சென்றான். சென்ற புலவன் இளங்குமணன் முன் இதோ உங்கள் அண்ணனின் தலை என கூறியதுதான் தாமதம் அந்நேரம் வரை வன்மமே உருவாக இருந்த இளங்குமணன் சகோதரபாசம் மேலோங்க ஓவென்றலறி மூர்ச்சையடைகிறான். அடியற்ற மரம்போல் சாய்கிறான் சிறிதுநேரம் கழிந்து மயக்க நிலை தெளிந்து எழுந்த இளங்குமணனை நோக்கிப் புலவன் நடந்த கதைகளைக் கூறுகிறான். இளங்குமணனை கானகம் அழைத்துச் சென்று பிரிந்தவர்களை கூட்டி வைக்கிறான். கானகம் வாழ் அண்ணனை அழைத்துவந்து அரியணையில் மீண்டும் அமர்த்தி மகிழ்கிறான் தம்பி இளங்குமணன். புலவர் பொன்னும் பொருளும் பெற்றுச் செல்கிறான். இதுவே நாடகக் காட்சியாக விரிகிறது.
மேற்படி நாடகம் கலைப் பேரரசு அவர்களாலேயே நெறியாள்கை செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டது. குமணனாக ஏ.ரி.பொவும், g6Trigl D60060TT35 gigb.(3Luybu6). D (D.R.T.O) அவர்களும், புலவனாக திருவருள் (யாழ் கச்சேரியில் O.A) அவர்களும், இதர சிலரும் நடித்து வந்தனர். ஒரு தடவை மேடையேற்றுவதாக ஒப்புக்கொண்ட நிகழ்ச் சிக் குப் போக முடியாத அளவு ஏ.ரி.பொன்னுத்துரை அவர்கள் அம்மை நோய் கண்டிருந்தார். மேற்படி நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் தான் இடைவெளியிருந்தது. ஏரி.பொன்னுத்துரை, தான் நடித்த பாத்திரத்தை என்னை ஏற்று நடிக்கும்படி செய்தி அனுப்பினார். நான் சரியென ஒப்புக் கொண்டேன் ஒத்திகைகள் நாளுக்கு இரண்டு மூன்று முறைகள் நடைபெற்று முடிந்தன. அவ்வேளை தான் பேரம்பலம் திருவருள் இருவரையும் அணுகி “ஒப்பனை உடையலங்காரம் என்ன மாதிரி” என்று கேட்டேன். “அதுபற்றி நீங்கள் ஒன்றும் யோசிக்கத்

Page 166
தேவையில்லை ஒப்பனை செய்ய வருபவரே மன்னர்களாகிய உங்களிருவருக்கும் அரசர்கள் அணியும் உடைகளைக் கொண்டு வருவார். நான் புலவர். நான் எளிமையான முறையில் உடுப்பதற்கு ஏதாவது பார்த்துக் கொண்டு வருவேன்” என திருவருள் கூறினார். "தம்பியாகிய இளங்குமணனால் துரத்தப்பட்டு குமணன் காட்டில் வாழும்பொழுது என்னவிதமான உடை அணிய வேண்டும்" என்று கேட்டேன். பேரம்பலம் அவர்களும் "அது ஒரு பிரச்சினையுமில்லை. ஆரம்பத்தில் நாங்கள் செய்து கொள்ளும் ஒப்பனையும் உடையலங்காரமும் தான் நாடகம் முடியும் வரை இருக்கும், நாங்கள் இதற்கு முன் மேடையிட்ட போதெல்லாம் அவ்வாறே செய்தோம்” என்றனர்.
காட்டிலே புலவர் துறவியைச் சந்திக்கும்போது, தான் உரையாடுவது துறவியோடுதான் என்ற தோரணையில் தான் வசனங்களமைந்திருந்தன. குமணன் தன்னைத்தானே யாரென்று காட்டிக் கொண்ட பிறகுதான் கணிப்பீடு செய்ய முடியாத கோலத்தில் மன்னரிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அப்படியிருக்க நீங்கள் கூறுவதுபோல் அரச உடையில் இருக்கும் குமணனை புலவர் கண்டபின்பும், துறவியோடு பேசுவதுபோல் உரையாடுவது பொருந்தாது என்று வாதாடினேன். "இஞ்சை ஒண்டையும் குழப்பாதையுங்கோ. நாங்கள் பல தடவை போட்டு சனம் பாராட்டினவ. நீங்கள் ஒருக்கால் தமிழ்ச்செல்வம் என்ற கி.ஆ.பெ.எழுதிய புத்தகத்தை எடுத்துப பாருங்கோ. T.K.S. பிரதர்ஸ் குமணன் நாடகம் நடிச்சிருக்கினம். பகவதி குமணனாக அரச உடுட்போட வாளை புலவனுக்கு நீட்டியிடிச்சுக் கொண்டு நிக்கிறார்" என்றனர். "ஓ அவர் காட்டிலே இல்லே அரண்மனையிலே நிண்டு குடுக்கிறார்” என்றேன். " T.K.S. பிரதர்ஸ் நடித்த நாடகமெண்டால் அவை செய்யிற முடிவுதான் சரியா” என்றேன். "ஏன் நாங்கள் வித்தியாசமாகக் கற்பனை பண்ணினால் என்ன” என்றும் கேட்டேன். கடைசியில் சரி உங்களுக்கு சரியெண்டதைச் செய்யுங்கோ. ஆனால் நாடகம் சோபை இழக்காமல் இருக்க வேண்டும். அந்தப் பொறுப்பு உங்களேட என்றனர். சரியென ஒப்புக் கொண்டேன் நான்.
குமணன் காட்டில் காவியுடை தரித்து பரட்டைத்தலையும், தூசிபடிந்த தாடியும், ஒரு கையில் கண்ட கோடரியுடனும் புலவரோடு உரையாடுகிறான். ஈற்றில் 'தான் யாரென்பதை வெளிப்படுத்திபுலவரின் வறுமையைப் போக்க தன் தலையைத் தானமாகத் தருவதாகக் கூறி கண்ட கோடரியை புலவன் கைக்கொடுக்கப் புலவன் அலறி அழுகிறான். சபையிலிருந்தோர் நாடக நிகழ்வோடு

ஒன்றிக் கழிவிரக்கப்பட்டதானது நடிகர்களாகிய எம்மையும் ஆட்கொண்டது.
நாடகம் முடிந்து ஒரு வார காலத்துக்குள் ATP அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. உடல் நலமாகிய பின் சந்திக்கிறேன். எனது நாடகம் முன்பு மேடையேறிய தடவைகளை விட வித்தியாசமான புதிய மெருகேற்றி விட்டீர்கள் சக நாடக நடிகர்கள் மூலம் யாவுமறிந்தேன். என்ற சாரப்பட எழுதியிருந்தார்கள்.
08
1959ம் ஆண்டு வண்ணை கலைவாணர் நாடகமன்றம் "வீரமைந்தன்” என்னும் நாடகத்தை மேடையேற்றியது. இந்நாடகத்தை எமது மன்ற உறுப்பினரான து.சோமசுந்தரம் :லைமையிலான மன்ற உறுப்பினர் சிலரும் சேர்ந்து எழுத்துருவாக்கம் செய்திருந்தனர்.
நாடக பாத்திரங்களாக இரா.பற்குணம், க.துரைசிங்கம், க.நா.கணபதிப் பிள்ளை, S.மாசிலாமணி போன்ற முக்கிய நடிகர்களோடு எல்லாமாக இருபத்தொரு நடிக நடிகையரை உள்ளடக்கியதாகும்.
இந்நாடகம் அரங்கேறி இரு மாதங்களுக்குள் மக்களிடையே அமோக ஆதரவைப் பெற்ற பத்துத்தடவைகள் மேடையேறியது. மக்களிடையே காணப்பட்ட ஆதரவு கண்டு மன்ற உறுப்பினரிடை யேயும் உணர்வெழுச்சியேற்பட்டு பத்தாவது தடவை மேடையேறிய பொழுது அந்நாடகம் பற்றிய செய்திகளோடு வாழ்த்துச் செய்திகளும் பத்திரிகை விமரிசனங்களும் சேர்த்துத் தொகுத்து விசேட மலரொன்று வெளியிடப்பட்டது. விழாவிற்குத் தலைமை தாங்கிய கலையரசு க.சொர்ணலிங்கம் அவர்கள் நெறியாள்கை செய்த எனக்கு மலர் மாலையணிவித்து வாழ்த்துச் செய்தியும் நல்கினார்.
இவை நடந்து சில மாதங்களில் இலங்கைக் கலைக்கழக குழு உறுப்பினரான தமிழருவி த.சண்முகசுந்தரம் அவர்கள் நான் பணியாற்றிய செல்லம்ஸ் ஸ்தாபனத்திற்கு வந்து என்னைச் சந்தித்து இவ்வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள கலைக்கழக நாடக விழாவிற்கு உங்கள் மன்ற நாடகமான "வீரமைந்தன்” தெரிவு செய்யப்பட்டுள்ளது. உரிய முறையில் அழைப்பு அனுப்பு வார்கள். நான் இன்றுதான் கொழும்பிலிருந்து வந்தேன் என்று கூறிவிட்டுப் போய்விட்டார். இச்ச்ெய்தியை நான் மன்ற உறுப்பினர்
{புது வசந்தம் 163)

Page 167
களனைவருக்கும் அறிவித்துவிட்டேன். சில நாட்களாகக் கலைக்கழகத்திலிருந்து கடிதம் வரும் என்று எதிர்பார்திருந்தோம். ஏமாற்றமே எங்களுக்குக் கிடைத்தது. இந்நிலையில் எங்கள் நாடகம் தெரிவு செய்யப்படவில்லை. ஒறியன்ற் நுண்கலை மன்றத்தின் "தேரோட்டி மகன்’ நாடகமே செய்யப் பட்டிருக்கின்றது என்ற செய்திகள் பரவலாக கலையுலகம் சார்ந்தோரால் வெளிவரத் தொடங்கின. ஒறியன்ற் நுண்கலைமன்றத்தின் தலைவர் கலையரசு
நாடகம் கலைக்கழகத்தெளிவாக முன்பு ஒரு தடவை தெரிவாகிக் கொழும்பில் மேடையேற்றப்பட்டது. அப்படியிருக்க மீண்டுமொரு சந்தர்ப்பம் கொடுக்கக் காரணமென்னவென எமது மன்ற உறுப்பினர் வினாவெழுட்பத்தொடங்கினர். இம்மாற்றத்திற்குக் காரணமானவராக கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் மீது பார்வை திரும்பியது. அவர் மீது பழியைப்போட்டுப் பேசவும் ஆரம்பித்தனர். இச் செய்திகள் கலையரசின் காது வரையும் எட்டிவிட்டது.
ஒரு நாட்காலை பத்துமணியிருக்கும் கோபம் கொண்ட விசுவாமித்திர மகரிஷிபோல் ஆவேச நடையுடன் ஸ்ருடியோவுக்குள் ந்கர் வர் வராததுமாக "நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நான் அப்படியொரு அற்பனல்ல" நாங்கள் இடைமறித்து சாந்தப்படுத்தி "என்ன ஐயா நடந்தது" என்றோம். திடீரென
8 A ரிருந்து ஒரு கடிதத்தை எடுத்து ே மீது விட்டெறிந்து "இதைப்படியுங்கோ நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் திரும்பிவருவேன்” என்று கூறிவிட்டுத் திடீரெனத் திரும்பிப்போய் விட்டார். அவர் எம்மைத்தேடி வந்தவரத்தும் திரும்பிப்போன போக்கும் :-ண்மையிலே இப்பொழுது நினைத்தாலும் மயிர்க் கூச்செறிகிறது. இச் சம்பவம் நடைபெறுகையில் அன்னாருக்கு வயது எழுபத்தைந்தைத் தாண்டியிருக்கும். இளமைக்கால நடிப்பு எப்படியிருந்திருக்கும் எண்ணிப் பாருங்கள்.
நாங்கள் கடிதத்தை எடுத்துவாசித்தோம். கடிதம் கலைக் கழகத் தலைவரிடமிருந்து வந்திருந்தது. கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததின் சாராம்சம் பின்வருமாறு. அன்பார்ந்த கலையரசர் அவர் கட்கு, இவ்வாண்டு கொழும் பில் மேடையிடுவதற்கான நாடகம் தெரிவாகிவிட்டது. ஆயினும் நான் இவ்வருடத்தோடு கலைக்கழகத் தலைவர் பதவியிருந்து விலகுகிறேன். ஆகையால் தெரிவுசெய்யப்பட்ட நாடகத்தைவிடுத்து தங்களின் "தேரோட்டி மகன்" நாடகத்தையே மீண்டும் இங்கு மேடையேற்ற விரும்புகிறேன். எனது வேண்டுகோளை நிறைவேற்றவும்
164 வசந்தம்

சிறிது நேரம் கழித்து கலையரசவள்கள் வந்தார்கள். நான் இதுவரைகாலமும் கலைத்துறையிலும் சரி வேறெந்த வகையிலும் சரி தில்லு முல்லுகள் செய்தது கிடையாது. இனிமேலும் சரி செய்யமாட்டேன் நான் கலைக்கழகத்துக்கு கடிதம், எழுதுகிறேன். நீங்கள் உங்களுடைய நாடகத்தைக் கொண்டுபோய் மேடையேற்றுங்கள் என்று வேண்டினார். நாங்கள் அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையிட்டு கலைக்கழகத் தலைவர் மேல் நாங்கள் கோபப்படவும் இல்லை. ஏனெனில் தமிழ் நாடக உலகுக்கு அவர்கள் ஆற்றிய ஆற்றிக்கொண்டிருந்த சேவைகள் எம் அனைவரினதும் கண்முன் தெரிந்த வண்ணமிருந்தன.
0.
1959ம் ஆண்டு என ஞாபகம். நாட்டில் ஐம்பத்தெட்டுக் கலவரம் நடந்து ஓய்ந்திருந்தகாலம் ஒரு நாட்காலை ஒருவர் என்னைத்தேடி நான் தொழில் பார்க்கும் செல்லம்ஸ் ஸ்ருடியோவிற்கு வந்தார். அவர் தான் மாத்தளை சென்தோமஸ் கல்லூரியில் இருந்து வருகிறேன். நான் மேற்படி கல்லூரியின் ஒரு ஆசிரியன் பெயன் விஸ்வலிங்கம். காரைநகள் சொந்த இடம் எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
நான் உங்களிடம் பொதுப்பணி ஒன்றுக்கு உதவி நாடி வந்திருக்கிறேன். எங்கள் கல்லூரிக்கு நிதிசேகரிப்பதற்காகக் கலைநிகழ்ச்சி ஒன்று நடாத்தத் தீர்மானித்திருக்கிறோம் நிகழ்ச்சி இரண்டு மணிநேரம் நடைபெற்றால் போதுமானது. நிகழ்ச்சி தரும் பொறுப்பைத் தயவுசெய்து தாங்களே ஏற்று ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அன்றியும் பெருஞ்செலவினங்கள் இல்லாமல் நிகழ்ச்சி அமையக்கூடியதாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் வேண்டிக்கொண்டார். நான் எல்லாவற்றையும் எனது மற்ற நண்பர்களுடன் கூடி ஆலோசித்து முடிவுசொல்லவதற்கு மாலைநேரம் வரும்படி கூறி அனுப்பிவிட்டேன்.
நான் எனது நண்பர்களான மறைந்த வானொலி மேடை நாடகக்கலைஞர் துஇராஜேஸ்வரன் மறைந்த மெல்லிசை நாடகக்கலைஞள் இராறிகிருஷ்ணமூர்த்தி, கலாவிநோதன் க.நா.கணபதிப் பிள்ளை ஆகியோருடன் கல்ந்தாலோசித்துச் சிக்கனச் செலவைக் கருத்திற் கொண்டு "சக்கரவர்த்தி அசோகன் என்ற நாடகத்தை ஒரு மணிநேரத்திற்கும் மீதி ஒரு மணிநேரத்திற்கு "நகைச்சுவைவிருந்து" எனும் நிகழ்ச்சியையும் கொடுப்பதாகவும் தீர்மானித்தோம்.

Page 168
மாலைநேரம் குறிப்பிட்டபடி ஆசிரியரவர்கள் வந்தார்கள். நாங்கள் எடுத்தமுடிவை அவரிடம் கூறினோம். அவரும் தம் திருப்த்தியைத் தெரிவித்தர்கள் அத்தோடு அவரிடம் நாடகத்துக்குத் தேவையான மேடையமைப்பு முறையும் , பொருள்களும், பத்துப்பதினைந்து மேல்வகுப்பு மாணவர்களையும் தந்துதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டோம். மாணவர்கள் நாடகத்தன்று காலை ஏழு மணிக்கே மேடைக்கு வரவேண்டும் அவர்களுக்கும் நாடக ஒத்திகை உண்டு என்று கூறினோம். ஆசிரியரவர்களும் ஒப்புக்கொண்டு சென்றார்கள்.
நாங்கள் அன்றிரவே கைவசமிருந்த "சக்கரவர்த்தி அசோகனின்" நாடகப்பிரதியை எடுத்துக்கொண்டு மறைந்த நாடக ஆசான் சட்டத்தரணி பின்னாள் பாராளுமன்ற உறுப்பினரு மான மு.ஆலாலசுந்தரம் அவர்களைத்தேடிப்பிடித்து அன்றைய நாடு இருந்த நிலையைக் கருத்திற்கொண்டு வசனங்கள் சில சேர்த்து ஒத்திகையை ஆரம்பித்தோம். நாடகம் பத்துநாள் இடைவெளியில் மேடையேறவேண்டும்.
இராஜேஸ்வரன் அசோகனாகவும் , றரீகிருஷ்ணமூர்த்தி அமைச் சராகவும் , கணபதிப்பிள்ளை தளபதியாகவும், நான் பெளத்தத்துறவியாகவும் பாத்திரமேற்றோம். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவைகள் ஒத்திகையில்
ஈடுபட்டோம்.
விழாவுக்கு முதல்நாள் மாலை மெயில் புகையிரதமெடுத்து புறப்பட்டோம். நடுநிசியைத் தாண்டியதும் குருநாகல் புகையிரத நிலையத்தில் இறங்கினோம். ஆசியரவர்கள் எமது வருகையை எதிர்பார்த்து நிலையத்தில் காத்து நின்றார்கள் அவர் எம்மை தான் கொண்டுவந்திருந்த வாகனத்தில் அழைத்துக்கொண்டு மாத்தளையை அடைந்தோம். இரவு ஓய்வெடுத்த பின் காலை ஏழு மணியளவில் விழா மண்டபம் சென்றடைந்தோம்.
நாங்கள் முதல்வேலையாக மேடையமைப்புப் பற்றிய காட்சியமைப்பை பார்வையிடச்சென்றோம். அங்கு போனதும் அங்கு வைக்கப்பட்டிருந்தவை களைக் கண்டதும் எமக்கு ஏற்பட்ட ஆனந்தமும் ஆச்சரியமும் சொல்லில் அடங்காது. அபயக்கரம் காட்டி சாந்தமே தவழும் வதனத்துடன் புத்தபகவானின் திருவுருவம் பத்து அடி உயரமிருக்கும். போர்க்களக்காட்சி இலகுவாக மேடையில் அமைந்துவிடக் கூடிய வகையில் துண்டு துண்டாக விந்தாரிக்கப்பட்டிருந்த காட்சிப்படிமங்கள்

அக்கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் கைவண்ணமென அறிந்து அவரையும் சந்தித்து அன்பையும் நன்றியையும் பகிர்ந்துகொண்டோம். அடுத்து மாணவர்களில் ஒருவரை தாயாக நடிக்க பயிற்சியளித் தோம் . ஏனையோரையும் தேவைக்கேற்றபடி பயன்படுத்த பயிற்சியளித்தோம்.
மாலைநேரம் குறிப்பிட்ட நேரத்துககு நிகழ்ச்சி தொடங்க வேண்டியிருப்பதால் அதற்கேற்றாற்போல் ஒப்பனை செய்து மேடையேறத் தயாரானோம்.
நாடகம் ஆரம்பமானது. முதற்காட்சி சக்கரவர்த்தி அசோகனும், அமைச்சரும், தளபதியும் தோன்றி போருக்குப் புறப்படும் காட்சி. அடுத்து போர்க்களக்காட்சி. களத்தில் மாண்டும் மடியாமல் குற்றுயிரோடும் கிடக்கும் காட்சி. அவலக்குரல் ஒலிகள் எழும்பும் களத்தில் ஒரு :ய் மடிந்த தன் மகனை மடிமீது வைத்து அழுது புலம்புகிறாள். அவளைநோக்கித் தன் கொடுரபாதங்களைத் துக்கித் துக்கி அடியெடுத்து வைத்து வருகிறான் அசோகன் கால்களைத்துக்கி நிலத்தில் வைக்கும் ஒவ்வொருதரமும் கொடூரத்தன்மையை உணர்த்த வேண்டி "பம்" "பம்” என்ற பயங்கரத்தை விளக்கும் ஓசை கேட்டவண்ணமிருந்தன. அதைத்தொடர்ந்து நடைபெறும் உணர்வுகளுக்கேற்பவும் பின்னணி இசை வந்தவண்ணமிருந்தது. காட்சி
வருகிறது என்பதை அந்நேரம் எங்களுக்கு ஊகிக்க முடியவில்லை. நாடகம் முடிந்து திரையும் மூடிக்கொண்டது. நான் மேடையின் மறுபுறம் நின்ற சின்ன மணியை நெருங்கி நாடகத்திற்கு பின்னணி அழுத்தம் கொடுப்பது போல் ஓசைகள் வந்து கொண்டிருந்தனவே அவை எங்கிருந்துவந்தன? ஒசைதர ஒப்புக் கொண்டவர் தான் காலைவாரிவிட்டாரே என்றேன். சின்னமணி சிரித்தவாறே அது நான் தான் கொடுத்தனான் என்று சொல்லியவாறே உள்ளேயிருந்த பியானோப்பெட்டியைக் காட்டினார். உனக்கு எட்படி வாசிக்கத் தெரியும் என்று கேட்டேன். காலையில் நீங்கள் மேடையில் இல்லாத நேரம் அகஸ்த்மாத்தாக சும்மா தட்டிப்பார்த்தனான். அவை தரும் ஒசைகளை நினைவில் வைத்துச்செய்து பார்த்தனான் என்றார். யார்கைவிட்டாலும் கலாதேவி கைவிடவில்லை
என்றேன்.
போர்க்களக் காட்சி நடைபெறும் பொழுது மகனை மடிமேல் வைத்திருக்கும் தாய் தாகத்தால் வாடியபொழுது தண்ணிர் கொடுக்கச்சென்ற அசோகனை இன்னார் என்று தெரிந்தவுடன் ஆ! நீயா உன் கையால் நீரருந்தி உயிர்வாழ்வதிலும்
புது வசந்தம் 165

Page 169
பார்க்க இறப்பதுமேல் என இறந்துவிடுவதும் அந்நேரம் அங்கு பெளத்தத்துறவி அசோகனுக்குத் தர்மோபதேசம் செய்வதும் அந்நிலையில் அசோகனின் மனம் சிதைவடைந்து தான் செய்த கொடுரச்செயல்களுக்குப் பிராயச்சித்தமாகத் துறவியை நோக்கி மனம் குழம்பிய நிலையில் "பூஜ்யரே பற்றும் பாசமும் அறுத்து வையத்து மக்களை வாழவைக்கும் வழுவாநெறிகளைத் தெற்றெனத் தெளிந்த தாங்களே இப்பூடாரத்தை ஏற்றுங்கள்" என அழாக் குறையாகக் கெஞ்சிக்கேட்பதும் மிக உச்சக்கட்டமான இராஜேஸ்வரனின் நடிப்பு, அதற்குத் துறவி பதிலாக அசோகவர்த்னா அரசனென்ற நிலைதுறந்து துறவியாகி அல்லற்படும் மக்களுக்குப் பகவான் புத்தர் பாடுபட்டார். அவர் வெறுத்துத்துறந்த பாரத்தை அவர் வழிசெல்லும் நாங்கள் சுமப்பதா? வேண்டாம். மக்களைப் பண்பாளர்களாகவும், அன்பாளர்களாகவும் , மனித (8|5u LĎ மிக் கவர்களாகவும் ஆக்கித் தருகிறோம். பயன்படுத்திக்கொள் நீ எனக் கூறிமுடித்ததும் சபையிலிருந்து எழுந்த கரவொலி அடங்க சிறிது நேரமாயிற்று. சபையில் பலமதத் துறவிகளும் வந்திருந்தனர். வெள்ளைநிற உடையில் வந்த துறவிகள் மக்களோடு மக்களாய் கைகொட்டினர். மற்றைய துறவிகள் மலாரடித்துப்போயிருந்தனர். 1959ம் ஆண்டுக்கலவரம் முடிந்து நாடு நீறுபூத்த நெருப்பாக இருந்த காலம். நாம் சொல்ல
சென்று உரத்துமுழங்கினோம். ஆனால் இன்று மெளனமாகச் சொல்லமுனைத்திருக்கிறோம். கொசுவுக்கு கும்பபிளவை, அதிலே வேறு நீரிழிவு வியாதி, மேல்பூச்சு மருந்து உதவுமோ?
OS
நாடகப் பேராசான் கதிரேசர்பிள்ளை ஆசிரியரவர்கள் தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியின் நாடக அரங்கை ஆளுமை செய்த காலம் ஆண்டுதோறும் பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் நாடகப் போட்டிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது மகாஜனாக்கல்லூரி.
புராண இதிகாசக் கதைகளில் நிறைந்த ஈடுபாடுள்ள ஆசிரியரவர்கள் மகாபாரதக் கதையிலிருந்து உணர்ச்சி பூர்வமான பகுதிகளான காங்கேயூன் சபதம், ஜீவமணி, அம்பையின்
ஆகிய நாடகங்களை சகல விதத்திலும் நயம்பட
166 புது வசந்தம் ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔

நல்கினார். நாடக மாந்தர்களாக வயதுவந்த பருவ மாணவ மாணவியரும் ஏற்று நடித்தனர். பருவ மாணவ மாணவியர் என நான் குறிப்பாக எழுத முற்படுவது ஏனெனில் அக்காலச் சூழ்நிலையில் நகள்சார்ந்த கல்விக் கூடங்கள் தானும் கனவிற் கூட நினைக்காது நின்ற ஒரு காரியத்தை அறுபத்தைந்துகளிலேயே மகாஜனாக்கல்லூரி சாதித்து வெற்றி கண்டது. அத்தகைய பொறுப்பான விடையத்தை ஏற்றுச் சாதனை படைத்த பெருமை
அதிபர் தெதுெ ஆசிரியர்களையுமே சாரும்
அந்நாட்களில் குறிப்பிட்ட ஒரு சில பாடசாலைகள் தவிர அநேகமான பாடசாலைகளில் நாடகப்பயிற்சி அளிக்கக் கூடிய ஆசிரியர்கள் அருந்தலாகவே காணப்பட்டனர். தேவையேற்படும் காலங்களில் பாடசாலைகளுக்கு வெளியேயுள்ள நாடக நெறியாள்கை செய்பவர்களை அழைத்து மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதுண்டு. பள்ளிக்கூட இல்லப் போட்டிகள் நடைபெறும்
நெறியாளர் அழைக்கப்படுவதுமுண்டு.
அந்நாளில் என்னையும் நாடகப் பயிற்சியளிக்க வேண்டி சில பாடசாலைகள் iC சிப்பாக யாழ் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி, பரமேஸ்வராக்கல்லூரி,
1965 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையேயான மாவட்டப் போட்டிகள் முடிந்து தேசிய ரீதியிலான போட்டிக் குத் தம்மை
இடமாக தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி அமைந்தது. போட்டிகள் இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற ஏற்பாடாகி இருந்தது. இரண்டாவது நாள் நிகழ்வாக நான் நெறியாள்கை செய்த யாழ் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி, பரமேஸ்வராக்கல்லூரி ஆகியவற்றின் நாடகங்கள் அமைந்திருந்தன. குறிப்பிட்ட தினத்தன்று மூன்று கல்லூரிகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் நானும் மகாஜனாக்கல்லுரி சென்றடைந்தோம் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். அவ்வேளையில் ஆசிரியர்கள் என்னை நோக்கி தேசிய மட்டப் போட்டியில் எங்களில் யாருடைய நாடகத்திற்கு முதலாமிடம் கிடைக்குமென்பதைக் கூறமுடியுமா? என்று கேட்டனர். இம்முறை முதலாமிடம் கிடைக்கும்
இடங்கள் நீங்கள் பெறுவீர்கள் என்றேன். அவர்கள் எனது இந்தப்பதிலை எதிர்பார்க்கவே இல்லை.

Page 170
ஏனெனில் மாவட்டப் போட்டிகளில் பலரதும் கணிப்பீட்டில் தங்களுக்கு தான் முதலாமிடம் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்ததில் தவறில்லை. ஏன் எங்களுக்குள் இல்லையென்று கூறுகிறீர்கள் என்று கேட்டனர். எனக்கு நேற்றையதினம் நடந்த போட்டியை பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனது கணிப்பீட் டில் நேற்று நடந்த நாடகமொன்றுதான் மனப்பதிவாகியுள்ளது என்றேன். அவர்கள் என்னை நோக்கி "தான் நெறியாள்கை செய்த நாடகம் வராது; மற்றவர்கள் நெறியாள்கை செய்த நாடகம் தான்வரும்” என்று சொல்லுகிற ஒரு நெறியாளரை இட்பத்தான் சந்திக்கிறோம் என்று சொல்லிச் சிரித்தனர். அவர்கள் வேறுயாருமல்லர் யா/இந்து ஆசிரியர் க.சொக்கலிங்கம், மானி. இந்து ஆசிரியர் சாரி, பரமேஸ்வரா ஆசிரியர் நாகலிங்கம் ஆகியோராவர்.
அன்றைய தினம் போட்டிகள் முடிந்து நடுவர்கள் தீர்ப்பு வழங்கினர். நான் எதிர்பார்த்தபடி மகாஜனாக்கல்லூரி முதலாமிடத்தைப்பெற்றது. அது "காங்கேயன் சபதம். அடுத்து வந்த இடங்களை மானிப்பாய் இந்து. யாழ் இந்து பெற்றன.
1970களில் பாடப்புத்தகத்தில் வந்தவையான அனுமன் கண்டபிராட்டி, கவுரிவீசிய காவலன், வில்லியம் தெல் ஆகியவையே நாடகப்போட்டிக்காக
அனுமதிக்கப்பட்டன.
மாவட்டப்போட்டி யாழ் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆசிரியர் க.சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்களால் நாடகப்பிரதியாக்கம் செய்யப்பட்டு என்னால் நெறியாள்கை செய்யப்பட்ட "கவுரிவீசிய காவலன்" நாடகப்போட்டி நடைபெறும் தினத்தன்று ஆயத்தங்கள் நடைபெற்றக்கொண்டிருந்தன. போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன. நான் ஒப்பனை, வேடம் யாவற்றையும் செய்துகொண்டிருந்கேன் is3 ன்பர் ஒருவர் விரைந்து வந்து கதிரேசர்பிள்ளை மாஸ்ரரின் நாடகம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. "வில்லியம்தெல்", எல்லாமே உச்சக் கட்டம் , ஒருக் கால் போய்ப்பாத்துவிட்டு வந்து நில்லுங்கள் என்றார். அவருடைய நாடகத்திற்கு அடுத்தது எங்கள் நாடகம், பார்க்க விரும்பம் தான் என்ன செய்வது என்று சொன்னேன். அடுத்து "கவுரிவீசிய காவலன்” மேடையேறியது. நாடகம் நிறைவுபெறும் தறுவாயை அடைந்து கொண்டிருக்கும் வேளை கதிரேசர்பிள்ளை ஆசிரியரவர்கள் மண்டபத்தின் உள்ஒரமாக நின்றுகொண்டிருந்த என் அருகில் வந்து எனது

கையை இறுக்கட்டற்றினார். நான் “என்ன மாஸ்ரர்" என்றேன். “ஐந்து பத்துக் கூடத்தான்” ஏன்றார். சொன்னதிலும் ஒருவிசேஷம் நிறைந்த புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்தது. நடுவர்களின் தீட்பு வருமுன்னரே அன்னாரின் உளமார்ந்த அங்கீகாரம், யாழ் இந்துவின் "கவுரிவீசிய காவலன்" முதலாமிடத்தைப் பெற்றது.
மாவட்டப்போட்டியில் முதலாமிடத்தைப்பெற்ற "கவுரிவீசிய காவலன்" தேசிய போட்டியில் கலந்து கொள்ள திருகோணமலை சென்றது. திருகோணமலையில் சென்சேவியர் கல்லூரியில் தங்கியிருக்க கல்விப் பகுதியினர் ஒழுங்கு
யாரோ தெரியாது ஒரு சிலர் நாம் இருக்கும் இடம் தேடி வந்தனர். வந்தவர்கள் எம்மை நோக்கி எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என வினாவினார்கள். பதிலாக நாங்கள் யாழ் இந்துக்கல்லூரியில் இருந்து வந்திருக்கிறோம் எனக் கூறினோம். எங்களெல்லோரையும் சுற்றிச்சுழன்ற ஏளனப்பார்வையை வீசிய பின்னர் இவ்வளவுதூரம் இருந்து வந்திருக்கிறியள் கடைசி ஏதாவதொரு பரிசு கிடைக்கத்தானே வேண்டும் என ஏளனத்தன்மையுடன் சொல்லிச் சென்றனர்.
அடுத்தநாள் பகல் போட்டிகளெல்லாம் முடிவடைந்தன. இயல், இசை போட்டிகளின் பெறுபேறுகள் விளம்பரப்பலகையில் எழுதப்பட்டன. ஆனால் நாடகப்போட்டியின் பெறுபேறுகள் எழுதப்படவில்லை. எனவே போட்டியிட்டோர் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். நாங்கள் விழாவுக்குப் பொறுப்பானவர்களைத் தேடிப்பிடித்து விசாரித்தோம். அதற்கு அவர்கள் உங்களுக்குத்தான் முதலாமிடம் ,இரவு நடைபெறப் போகும் விழாவில் பங்குபற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள் என்றனர். விளம்பரப்பலகையில் எழுதவில்லையே ബ്ബ് ബ ஆதாரத்தை வைத் து நாங்கள் ஆயத்தப்படுத்துவது என்று கேட்டோம். அது எழுதினால் கரைச்சல். எங்களின்ரை சொல்லை நம்பலாம் என்றனர். சரியென ஒப்புக்கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்கு நாடகம் ஆரம்பமானது. நாடகம் பாதியிடத்தைத் தாண்டிக்கொண்டிருக்கும் போது திடீரென மேடை விளக்குகள் அணைந்தன. மீண்டும் நாடகம் முடியும் வரை வரவேஇல்லை.
வெளிச்சத்திலேயே பாதி நாடகம் நடந்து முடிந்தது.
s ★女★
g வசந்தம் 67

Page 171
'ltilfi “?3est °éапрüments 3am -
St CrOSS Street, VoivuniyO, Sri LCinkC,
"புது வசத்தம்" புதுப்பொ
 
 

T. Phones : O24-22047 O24-226.30

Page 172
‘புது வசந்தம்” மலர் சிறப்புற
வன்னி மாநகரில் "பாயர்" எ
விநியோகம் செய்யும்
குளோப் டிரேடர்ஸ் 19. Ug Tir 6ig5,
வவுனியா.
With Best Compliments From:
K.P.K. CENTER
NO, 24, New Bustond, VOvuniyC.
Te : O24-22504
 
 

எமது மனமார்ந்த வாழ்த்தக்கள்
விவசாய கிருமிநாசினிகளை தனியொரு நிறுவனம்.
தொலைபேசி : 024-22345
‘புத வசந்தம்" புதுப்பொலிவு பெற வாழ்த்துகின்றோம்.
சகலவிதமான டிராக்டர்களும் திருத்திக்கொடுக்கப்படும்
வெல்டிங், கடைச்சல் வேலைகளும் செய்து கொடுக்கப்படும்.
குணம் மோட்டோர்ளில்
234. கண்டி வீதி, வவுனியா.

Page 173
điојЈ to. சிந்துகின்
அடையாளம் அலசும் பட்டாளத்தான் சாவடியில் வருந்தியமும் நோயாளிக்கும் வயதான மனிதனுக்கும் வழிவிடா மனிதநேயம் வாலிப வயதுக்கும் வடிவான பெண்ணுக்கும் சலுகைகள் வழங்கி வழிந்து வழிவிடும்போது
எழுந்து போராட எண்ணுகிற நெஞ்சமே கொஞ்சம் பொறு கொண்டு வந்த தடைச் சட்டம் கொண்டு வரும் சிறைவாசம்
இந்த மண்ணுக்குச் சொந்தமானவரை இங்கே கிட - அங்கே படு எங்கும் போகாதே - திரியாதே என்று இயற்றா சட்டங்கள் போட்டு வேலிக்குள் சிறை வைப்பதை வேதனையுடன் - வெட்கத்துடன் தினந் தினமும் பார்க்கிறேன்
வேப்பங்குள அகதிமுகாம் நாஜிகளின் வதைமுகாமை ஞாபகத்தில் கொண்டுவர நெஞ்சக் குழிக்குள் நெருப்புத் தணலேறும் - நெஞ்சமே கொஞ்சம் பொறு கொண்டு வந்த கடைச் சட்டம் கொண்டு வரும் சிறைவாசம்
அரை லட்சம் படையாலும் அடைய முடியா வெற்றியை நோயுற்ற பெண்ணொருத்தி போராடி வென்றார் செஞ்சிலுவை துணையோடு வந்தவளை கண்ணுக்குக் கண்ணாடி வாங்குமாறு கட்டளை இட்டனர் கண்ணாடி வாங்க காசு கேட்டு கனடா மகனுடன் கதைக்கவும் வெளியில் போக முடியா வைத்திய சிறையவலம் கண்டு கொதிக்கும் நெஞ்சமே கொஞ்சம் பொறு கொண்டு வந்த தடைச் சட்டம் கொண்டு வரும் சிறைவாசம்
168 வசந்

ரீதத்திலிருந்து கண்ணர்
து. வி. துளசிதாசன் ஏட்டு அனுமதி 3O.O3.98 மட்டை அனுமதி
மாத அனுமதி
மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி “மட்”டை வெட்டிய அனுமதி வண்ண வண்ண அனுமதியை
கொண்டு திரியும்
மனித அவலம் இங்கிருக்க
பந்தி பந்தியாய் பத்திரிகை மனித நேயம் பாராளு மன்றத்தில் பகட்டாய் உரை நிகழ்த்தும் மனித நேயம் அரசியல் வாழ்வை தக்க வைக்க அறிக்கைகளில் மனித நேயம்
பொய்யும் புரட்டும்
தலைவிரித்தாட
தாங்கிகளும் - போர் ஊர்திகளும் புதுப்புது சுடுகலனோடு அணியணியாய் போய்க்கொண்டிருக்கும் மனிதநேயம் கண்டு மணங் கொதித்தே இரண்டுவரி எழுத நினைக்கும் மனமே கொஞ்சம் பொறு
கொண்டு வந்த தடைச் சட்டம் கொண்டு வரும் சிறையுனக்கு
அழுபவனைக் கண்டு அழுவதற்கு சிரிப்பவனோடு சேர்ந்து சிரிப்பதற்கு வல்லான் வலிமையால் நல்லான் அழிவை தடுப்பதற்கு அதிகார வெறியின் ஆணிவேரை வெட்டுவதற்கு சுதந்திர கரங்களில் விலங்கை பூட்டி தடைச்சட்ட புது மனிதர்கள் புதை குழி தோண்டி நீண்ட தடைகளோடு நின்று கொண்டு இருப்பதால் நானும் என் வீட்டில் நல்லதைப் பார்க்காதே நல்லதைக் கேட்காதே நல்லதைப் பேசாதே பொம்மையைக் காட்சிக்கு வைத்து கதைப்பதை - கேட்பதை - பார்ப்பதை கண்டிப்பாய் தடை செய்யப் போகின்றேன்
ஏனென்றால். கொண்டு வந்த தடைச் சட்டம் கொண்டு வரும் சிறையோடு கொன்றுவிடும் ஆன்மாவையும்.

Page 174
அன்று திங்கட்கிழமை. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் நித்திரைவிட்டு எழுந்த சாந்தி அவசர அவசரமாக அந்த இடத்தில் குடியிருக்கும் குடும்பங்களுக்கென அமைக்கப்பட்ட தண்ணிர் குழாயடிக்கு விரைந்தாள். யாரும் இருக்கிறார்களா? என்று கூர்ந்து பர்த்தாள் ஒருவரும் இல்லை. ஆகவே மளமளவென்று குளித்து முடித்து தண்ணிரையும் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள் அந்த இடத்தில் குடி வந்த நாட்களில் அவர்கள் எல்லோருக்கும் குளியல் என்பது ஐந்து மணி தான். பொழுது விடிந்து விட்டால் குழாயடி நிறைந்து வளியும். ஒரு வாளி தண்ணி கூட எடுக்க முடியாது. அப்படி போனாலும் வீண் பிரச்சினைதான். அதனால் அந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து மிகவும் ஜாக்கிரதையாக காலத்தை ஒட்டினர்கள் சாந்தி குளித்ததும் சிவமும் எழும்பி குளித்து முடித்து வேலைக்கு போக ஆயத்தமானார். காலை வேலை எல்லாம் முடித்து கணவரையும் பிள்ளைகளையும் வேலைக்கும் பாடசாலை ரியூசன் என்று அவரவர் அலுவல்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டு, சமையல் செய்யத் தொடங்கினாள். உலையை வைத்து அரிசியை போட்டுவிட்டு நிமிர்ந்த சாந்தி கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள். தபால்காரன்
கண்டதும் யாரிடம் இருந்து வந்ததென்று ஆவலோடு பார்த்தாள். அது அவள் தந்தையின் கடிதம். தந்தையிடம் இருந்து எட்ப கடிதம் வந்தாலும் அவள் மனம் பரபரப்படையும் என்னவோ ஏதோவென்று ஏங்குவாள். அன்றும் அட்படித்தான். கை படபடக்க கடிதத்தை பிரித்துப் படித்தாள். வழக்கமான வரிதான். உன்னையும் பிள்ளைகளையும பார்க்க ஆசை, உடனே வா என்பது தான். ஆனால் இதில் கடைசியில் எழுதிய வரிகள் அவள் மனதை உலுக்கியது. இனிமேல் என்னால் கனகாலம் வாழும் சக்தியில்லை. ஆகவே இனிமேல் உனக்கு என் மரணக்கடிதம் தான் வரும் என்பது தான். சாந்தி இடிந்து போனாள். ஓர் இடத்தில் போய் உட்கார்ந்தாள். ஊரைப்பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள்.
 

ళ్లభళ్ల
55,5
சந்திரா
எத்தனையோ கடிதங்கள் அவள் தகப்பனரிடம் இருந்து வந்தது. ஆனால் இந்தக் கடிதம் அவள் மனதை வாட்டியது. அவள் குடும்பம் கொழும்பு வந்து இரண்டு வருடம் முடிகிறது. சாந்தி வந்த நாட்களிலிருந்து தன் ஊர் உறவினர் எல்லோர் பற்றிய நினைவுதான் தங்கள் சனசமூக நிலையத்தை எண்ணிக் கவலைப்படுவாள் தான் அங்கு இருந்தால் தன் அயல் மக்களுக்கு எவ்வளவு சேவைகள் செய்திருக்கலாம். இங்கு வந்து மாட்டிக் கொண்டோமே என்று எண்ணுவாள். அந்த மக்கள் சாந்தியயையும் சிவத்தையும் எவ்வளவு அன்பாய் மரியாதையாய் நடத்தினார்கள். அவள் நிலைய மாதர் சங்கத் தலைவியாய் இருந்தபொழுது நடத்திய பாலர் பாடசாலை, கயிற்றுத் தொழிற்சாலை, போன்றன எவ்வளவு கண்ணியமாக நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அதில் எவ்வளவு பிள்ளைகள் வேலை செய்து பிழைத்தார்கள். ஆனால் அதை எல்லாம் இப்ப நினைத்து நினைத்து வேதனைப்படுவாள். என்ன செய்வது. அவள் கொழும்பு வர வேண்டிய நிலைதான். ஏன் என்றால் அவள் கணவருக்கு கட்டிடவேலை. நாட்டுப் பிரச்சினையால் பல வருடங்கள் கொழும்பில் தான். ஆகவே பிள்ளைகள் படிப்பு, மகளின் வைத்தியம் போன்றவைக்காக கணவர் பிள்ளைகளோடு கொழும்பில் இருக்க வேண்டிய நிலையாய் போயிற்று.
சிவம் ஒரு சாதாரண மேசன் தொழிலாளி. அன்றாடம் உழைப்பால் தான் அவள் வாழ்க்கை ஒட்டினாள். சாந்தி அவனை கைபிடித்த காலத்தில் இருந்து இன்று வரை அவன் வருமானத்துக்கு தகுந்தமாதிரி குடும்ப வண்டியை ஒட்டி வருகிறாள். நாட்டில் போர் பிரச்சனை தொடங்கிய சில ஆண்டுகள் அங்குள்ள சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டது. அதனால் அந்த ஊரில் இருக்கும்கட்டிட தொழிலாளிகள் எவர்க்குமே வேலைப்பிரச்ச்னை. அதில் சிவம் குடும்பமும் ஒன்று. அன்றாடம் தொழில் செய்து வாழும் ஏழைத் தொழிலாளர்கள்
புது வசந்தம் 169

Page 175
வேலையின்மையால் வாடி வதங்கினர்கள். நாட்கள் செல்லச் செல்ல நலிவடைந்தார்கள். எந்த சுகபோகங்களையும் இழந்து வாழலாம். ஆனால் உணவில்லாமல் வயிற்றின் கொதிப்பை எத்தனை நாள் தாங்க முடியும். சிலர் தேங்காய், மாங்காய் விற்று குடும்ப பாரத்தை கொஞ்சம் குறைத்தார்கள். இன்னும் பலர் சைக்கிளில் விறகு கட்டி இழுத்தார். கள். அன்று அந்த கட்டிடத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அடி இன்றும் பிரதிபலித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த ஊரில் பிரச்சனை தீர்வடைந்து விட்டதென்பது ஒரு மாயை. அங்கு இன்று வரை கட்டிட வேலையோ வேறு சாதாரண வேலைகளோ இல்லை. அங்குள்ள மக்கள் நிவாரணத்தை நம்பினார்கள். அதுவும் இப்போ இல்லை. அந்த சாதாரண மக்கள் எப்போ எங்கள்
இரவு விடியுமென்று காத்திருக்கிறார்கள்.
சாந்தியின் குடும்பமும் ஊரிலிருந்த காலத்தில் இரண்டு வருடமாக எவ்வளவோ கஷ்டப்பட்டார்கள். சிவத்துக்கு மேசன் வேலை தவிர வேறு வேலை செய்து பிழைக்கும் யூகம் இல்லை. அதனால் அவன் குடும்பம் பெரும் சோதனைக்குள்ளாகியது. அவன் குடும்ப நிலையைப் பார்த்து அவனுடைய பால்ய தோழன் செல்வம் தன் கடையில் ஒரு வேலை போட்டுக் கொடுத்தான் குறைந்த ஊதியமென்றாலும் அப்போதைக்கு அரை வயிற்றுக்கு கஞ்சி குடிப்பதற்கு உதவியாய் இருந்தது. பிள்ளைகள் படிப்புக்குத்தான் கடன்பட்டார்கள். கடன்களும் கூடிக்கொண்டு போகலாயிற்று. சாந்தி என்ன செய்வதென்றறியாமல் திணறினாள். இரவில் எத்தனையோ நாட்கள் உணவின்றி உறக்கமின்றி கண்ணிரோடு போராடியது கணவருக்கோ, பிள்ளைகளுக்கோ தெரியாது. எப்படியும் தன் பிள்ளைகளை நல்ல மாதிரி வளர்த்து படிக்கவைத்து இந்த நாட்டில் ஒரு நல்லவர்களாக வாழவைக்க வேண்டுமென்று தான் அவள் ஏக்கம். அவள் கணவனும் ஒரு முற்போக்குவாதி. பிறர்நலம் கருதி வாழ்பவன். அவனுடைய கொள்கை அவளுக்கும் பிள்ளைகளுக்கும் பிடித்திருந்தது. கணவன் எவ்வழியோ மனைவி அவ்வழி; தாய் தந்தை எவ்வழியோ பிள்ளைகள் அவ்வழியாக மிகவும் சந்தோஷமாக சாந்தியான குடும்பமாய் வாழ்ந்தார்கள். சாந்தி எதிலும் எதிர்நீச்சல் போட்டு வாழ்பவள். வாழ்க்கையில் எதிலுமே தோல்வி அடையக் கூடாதென்று மனஉறுதி. தன் பிள்ளைகளையும் அதே போல் வளர்க்க வேண்டுமென்று வறுமை என்றாலும் செழுமையாக வளர்த்தரள். அவர்களும் எல்லாத்துறைகளிலும் கெட்டித்தனம் உள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள்.
170 வசந்தம்

போன்ற ஆண்களும் மூன்று பேருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காதவர்களாக படிப்போ விளையாட்டோ இயல் இசை நாடகமோ எல்லாம் வல்லவர்களாகத் திகழ்ந்தார்கள்.
ஒருநாள் நீண்ட நேரம் ஆகியும் சிவம் வீடு வரவில்லை. இருந்த உணவை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்து அதில் கொஞ்சம் சிவத்துக்கும் எடுத்து வைத்துவிட்டு கணவனுக்காக காத்திருந்தாள். பிள்ளைகள் படுத்துவிட்டார்கள். வெகு நேரத்துக்குப் பின் சிவம் வீடுவந்து சேர்ந்தான் முகத்தில் சந்தோஷம் இல்லாமல் வாடி இருந்தது. சாந்தி ஏன் என வினாவினாள். சிவம் சொன்னான் நாளையிலிருந்து கடையில் வேலை இல்லை. அவர்கள் மகள் படிப்புக்காக இந்தியா போகப் போகிறார்கள். அதனால் என்னை கொழும்புக்கு போய் வேலை செய்யும்படி சொல்கிறார்கள். அதற்கான செலவும் தருகிறார்களாம் என்று மிகவும் கவலையுடன் சொன்னான். அவன் இதுவரை தன் குடும்பத்தை விட்டோ ஊரை விட்டோ வெளிஇடத்துக்குட் போனது கிடையாது. அவன் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வேலை வாய்ப்புத்தேடி வெளிநாடு போனபோது கூட தானும் போக நினைக்கவில்லை. என்ன கஸ்ரம் வந்தாலும் பிறந்த நாட்டைவிட்டுப் போவதில்லை என்ற நோக்கம் தான். சில வேளைகளில் சாந்திகூட வெளிநாடு போகும்படி கேட்பாள். ஆனால் அவனே அதற்கு தகுந்த நியாங்கள் சொல்லிவிடுவான்சாந்திக்கு தன் கணவன் ஒரு கொள்கைவாதி தெரிந்திருந்தாலும் வெளிநாட்டுக்காரரின் சலசலப்புகளைப் பார்த்து ஒரு அங்கலாய்ப்புத்தான். என்ன இருந்தாலும் அனுபவிப்புகளை எதிர் பார்க்கும் வயது அவளைக் குறைகூற முடியாது. சிவம் சொன்ன சேதியைக் கேட்டு சாந்திக்கு ஒருபுறம் சந்தோஷம் மறுபுறம்
வரை பிள்ளைகளோடு என்ன செய்வதென்ற ஏக்கம் இரவு முழுவதும் வெறும் வயிற்றுடனும், நித்திரை இல்லாத கண்களுடனும் போராடி கண்ணி சிந்திக் கொண்டாள். சிவம் மனமும் மனமில்லாமலும் கெர்மும்பு போய் சேர்ந்தான்.
சாந்தி சிவத்தின் கடிதத்தை எதிர்பார்த்த வண்ணம் இருந்தாள். கடிதமும் வந்தது. அதில் தான் வேலை செய்வதாகவும், சீக்கிரம் பணம் அனுப்புவதாகவும் எழுதியிருந்தது. அவர் முதலில் பட்டகடன்கள் கொடுபடாமலே இருந்து இனியும் கடன்பட முடியாத நிலை. அவள் சிநேகிதி அவளுக்கு பண உதவி செய்ய முன்வந்தாள். சிவம் கொழும்பு போனபடியால் எப்படியும் காசு வரும் என்ற நம்பிக்கையில் பணத்தை மாறி

Page 176
பிள்ளைகளை நன்றாகப் பார்த்தாள். சாப்பாட்டிலும் பார்க்க மூன்று ஆண்பிள்ளைகள் படிப்பிற்குத்தான் நிறைய செலவாகியது. சிவம் மூன்று நான்கு மாதத்துக்கு ஒரு தடவை கிடைக்கும் பணத்தை அனுப்பி விடுவான். அது சாட்பாட்டிற்கே போய்விடும் மாதம் முடிவு என்றால் சாந்திக்கு பல சோதனைகள் கடைக்காரன் ஒருபுறம், பிள்ளைகள் ரியூசன் காசு, நோயாளியான மகளின் மருந்துச் செலவு எல்லாம் அவளை அல்லல் படுத்தும். மனிதனாகப் பிறந்தவர்கள் யாருமே தாங்கள் வாழும் காலத்தில் தங்கள் பரம்பரைக்கு சொத்து பத்து காணி பூமி என்று எவ்வளவோ தேடி வைப்பதைத்தான் தங்கள் குறிக்கோளக நினைப்பார்கள். ஆனால் சிவத்தைப் பொறுத்தவரை அவன் தேடிய செல்வம் மனைவி பிள்ளைகள்தான். மனைவி பிள்ளைகளுக்கோ அவன் களங்கமில்லாத அன்பு பாசம்தான் சொத்தாக நினைத்து வாழ்ந்தர்கள். ஆனால் அவர்கள் பெரிதும் மேலாக நேசித்தது பொதுநலச் சமூக சேவை போன்ற நல்நோக்கங்கங்கள்தான் அப்படியான சமூக சீர்திருத்தவாதி, அவன். ஊரில் உள்ளவர்கள் கூட “பெரியவர்” என்று அன்பும் மரியாதையாயும் அழைப்பார்கள். அப்படி அந்த பேருக்குத் தகுந்த நடப்பால் மக்களிடம் பழகுவான் சிவம். தான் சீர்சிறப்போடு வாழாவிட்டாலும் அப்படியான கணவனுடன் பேரும் புகழோடும் வாழ்வதை நினைத்து பெருமைப்படுவாள் சாந்தி. கணவன் அனுப்பும் பணத்தைக் கொண்டு பிள்ளைகள் படிப்பு பார்க்க முடியாதென்ற நிலையில் தானும் வேலை செய்ய முடிவு செய்தாள்.
பிள்ளைகள் நல் வாழ்க்கைக்காக வாசல்படி தாண்டினாள். வேலைக்கு போய்ச் சேர்ந்தாள். ஒவ்வொரு மாதமும் எடுக்கும் சம்பளத்தைக் கொண்டு பிள்ளைகளின் படிப்பு மற்றும் பள்ளிக்கூடச் செலவுகளை நிவர்த்தி செய்தாள். வேலைக்குட் போய் வந்ததால் சிவத்தின் பிரிவும் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. பொழுதுபோக்காகவும் இருந்தது. அவள் மனச்சுமை ஓரளவு குறைந்த மாதிரி இருந்தது. அவள் வேலைக்குப் போனாலும் தன் சனசமூக நிலைய விடயங்கள், மாதர்சங்க விடயங்கள் எல்லாம் விடவில்லை. அதையும் நல்லபடி செய்து வந்தாள். தன் கணவன் பிள்ளைகள் எப்படியோ அதேபோல் தன் அயல் மக்களுக்கும் சேவை செய்யத் தவறவில்லை கணவரைப்போல் தானும் அவர்களிடம் நல்ல பெய பெற்று இடம் பிடித்திருந்தாள். கணவன் போகும் பாதை எல்லாம் தானும் போனாள். கணவனுக்கேற் நல்ல மனைவியாக விளங்கினாள்.
சிவம் இரண்டு வருடம் கொழும்பில் வே6ை செய்துவிட்டு மனைவி பிள்ளைகளைப் பார்க்

ஆவலோடு ஊர்வந்து சேர்ந்தான். அவன் வரும் வேளைதான் போர் உச்சக்கட்டம் நடந்து கொண்டிருந்தது. இன்றோ நாளையோ ஊர் மத்திக்கு இராணுவம் புகுந்து விடலாம். எல்லா மக்களும் பயப்பீதியுடன் உலாவினார்கள். ஆங்காங்கே விமானம் குண்டு போடுவதும் செல் வந்து நாலுயுறமும் விழுவதுமாக அரை மீற்றர் தூரத்தில் துவக்கு வெடிச் சத்தங்களும் கேட்ட வண்ணம் இருந்தது. கரைப் பக்கமாக இருந்த ஊர்மக்களெல்லாம் தத்தம் பிள்ளைகுட்டிகளோடும் உடமைகளோடும் வந்து வந்து பாடசாலை, கோயில், சனசமூகநிலையம் என்று நிறைந்து வாழ்ந்தார்கள். சாந்தியின் ஊர் அருகே பெரிய பெண்கள் பாடசாலையிலும் நாலாயிரம் ஐயாயிரம் மக்கள் வந்து கூடினார்கள். அவர்களை சனசமூக நிலையம் மூலமாக நிர்வாகிகள் அங்கத்தவர்கள் எல்லோரும் சேர்ந்து உணவு, உடை சேகரித்துக் கொடுத்து ஆதரித்தார்கள். இரவும் பகலுமாக அவர்கள் தேவைகளைக் கவனித்து அவர்களுக்கு
நீடிக்கவில்லை. ஊரோடு வெளியேறுகிற நிலைமை வந்துவிட்டது. திடீரென ஒலிபெருக்கி ஒன்று அலறும் சத்தம் கேட்டு எல்லோரும் தெருவுக்கு ஓடிப்போனபோது அதிலே சொன்ன வாசகங்கள் மக்களே இனிமேல் உங்கள் யாரையும் எங்களால் காப்பாற்ற முடியாது. தயவு செய்து நீங்கள் எல்லோரும் இன்றிரவுக்குள் வெளியேறுங்கள் என்பதுதான். எல்லா மக்களும் பேரிடி விழுந்தது போல் என்ன செய்வதென்றறியாமல் திகைத்தனர். செத்தாலும் எங்கள் பிறந்த ஊரைவிட்டு வெளியேற மாட்டோம் என்று வீராப்பு பேசியவர்கள் கூட ஒரு நிமிசம் தாமதிக்காமல் வெளியேற ஆயத்தமானார்கள். நடக்க முடியாத வயோதிபர்கள்கூட விரட்டியடிக்கப்பட்டனர்.
மனதிலே பல சுமைகளைத் தாங்கிக்கொண்டு தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு வெளியேறினார்கள். கூண்டில் இருந்து திறந்து விரட்டப்பட்ட மந்தைக் கூட்டம்போல் நான் முதல் நீ முதல் என்று முண்டியடித்துக் கொண்டு போனார்கள். காலைக் கதிரவன் உதிக்குமுன் தாங்கள் அடுத்த ஊரில் உதிக்க வேண்டும் என்பதுதான், அவர்கள் எல்லோர் நோக்கமும், விடிந்து விட்டால் விமானங்கள் வந்து தாக்கிவிடும் என்ற பயம். பீதியடைந்தவர்களாக மரண ஒலங்களுடன் அந்த பாலத்தில் நகர்ந்து கொண்டிருந்தர்கள் இல்லை, எறும்புபோல் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். அதில் சாந்தி குடும்பமும் நடைபயின்றது. சிவத்தின் வயதான தாய், நோயாளி மகள், கைகளிலே துணிபொட்டலங்கள். இவை
வசந்தம் 17

Page 177
எல்லாவற்றையும்விட மனதிலே பெரிய பாறாங்கல் எல்லாவற்றையுமே சுமந்தாள். ஏனோ இயற்கைக்குக்கூட இந்த மக்களிடம் அவ்வளவு வெறுப்பு இரவிரவாக நீலிக்கண்ணின் வடித்தது இயற்கையின் கண்ணிரால் மக்கள் நனைந்து தோய்ந்து விறைத்தார்கள். நோயாளிகள் பலர் அதே இடத்தில் இறந்தாள்கள் இறந்தவர்களைக் கூட எடுத்து ஒரு பக்குவம் பண்ணாமல் மிஞ்சி இருந்த உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தங்கள் மனங்களைக் கல்லாக்கிக் கொண்டு நடந்தார்கள். கொடுமை, கொடுமையிலும் கொடுமை. பசிக்கழுத பச்சைக் குழந்தைக்குக்கூட ஓர் இடத்தில் இருந்து பால் குடுக்க முடியாமல் குழந்தைகள் கதறி அழும் சத்தங்கள் நடந்த களைக்கு நாக்கு வரண்டவர்கள் தலையிலே விழுந்து முகத்தில் ஓடின மழைநீரை உமிந்தார்கள். இரவு ஆறு மணிக்கு அந்தப் பாலத்தில் கால்வைத்தவர்கள் பதின்மூன்று மணித்தியாலங்களாக நடந்து அடுத்த ஊரை பிடித்தாள்கள். அந்த ஒருநாள் இரவுப் பயணத்தை எந்த மக்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. ஊரைக் கடந்தாலும் மக்கள் நிம்மதியாய் வாழ முடிந்ததா? பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை.
சாந்தி குடும்பம் வன்னிக்கு போப் வவுனியாவுக்குள் நுழைந்து கொழும்பு வந்து சேர்ந்தது. எத்தனையோ பூக்கள், பிஞ்சுகள், காய்கள், பழங்கள் எல்லாம் அழிந்து சாம்பலாகியது. காலம் காலமாக வாழ வேண்டிய மக்கள் போர் என்னும் சூறாவளியால் அழித்தொழிக்கப்பட்டர்கள். சாந்தி குடும்பம் கொழும்பு வந்து சேர்ந்தாலும் தான் பிறந்து வளர்ந்த ஊர், உற்றார், உறவினர்கள் பற்றிய ஏக்கம்தான். பிறந்த ஊரை விட்டு கூடுகலைந்த குருவிகளாக திசைக்கொருவராகிவிட்டோமே என்று மனம் புழுங்கினாள். தகப்பனை விட்டு வந்த ஏக்கம்தான் அவளை வாட்டியது. வயதான காலத்தில் அவர் ஊள் போய் விட்டார். பிறந்த மண்ணில் தான் நான் சாவேன் என்று சொல்லிவிட்டுப் போப் விட்டார். அவளின்
 

இரண்டாவது மகனும் போர் அச்சுறுத்தல்களால், மனம் மாறி பாதைமாறி விட்டான். மூன்று முத்தில் ஒரு முத்தை பிரிந்த சாந்தி நடைப்பிணமானாள். தத்துவம் பேசிய மகனா நிலையில்லாத தள்க்கம் புரிய புறப்பட்டான் என்று மனம் வெம்பினாள்.
எத்தனையோ டபிள்ளைகள் தாய் தந்தையரைவிட்டு வெளிநாடு போய்விட்டார்கள். பெற்றுப்பேனிக்காத்து வளர்த்த பிள்ளைகள் இல்லாமல் அடுத்தவள் துணைகளோடு வாழும் பெற்றோர்களுக்கு சாந்தி எவ்வளவு ஆறுதல் சொல்லியிருப்பாள். அப்போதெல்லாம் விட்டுப் போன பிள்ளைகளைப் பற்றி குற்றம் கூறுவாள். ஆனால் அதேநிலை தன் தகப்பனுக்கும் வந்துவிட்டது என்பதுதான் அவளால் தாங்கமுடியாமல் இருந்தது. அவளுக்கு மட்டுமா இந்தநிலை? எத்தனை தாய் தந்தையைப் பிரிந்த பிள்ளைகள், பிள்ளைகளைப் பிரிந்த தாய் தந்தைகள், கணவனைப் பிரிந்த மனைவி, மனைவியைப் பிரிந்த கணவன் இன்னும் எத்தனையோ சோகங்கள் என்ன சோகம் வந்தாலும் சாந்தியைப் பொறுத்தவரை எதிர்நீச்சல் போட்டு வாழ்வது தான் அவள் இலட்சியம். அவள் வாழ்க்கையில் தோல்வியே காணக்கூடாது என்பது தான் கொள்கை, எப்படியும் வாழ்வை எதிர்நீச்சல்போட்டு வாழ்ந்து காட்டுவாள்.
உலையில் அரிசியைப் போட்டு விட்டு யோசனையில் ஆழ்ந்தவளை மகள் தட்டினாள். அம்மா என்ன யோசனை. அரிசி அவிந்து விட்டது. கறி வைக்க ஏதும் அடுக்குப் பண்ணுங்கள் என்று சொன்னதைக்கேட்டு திடுக்கிட்டு எழும்பிய சாந்தியின் மனமும் அரிசி கொதிப்பது போல் கொதித்துக் கொண்டிருப்பது அவள் மகள் அறிவாளா என்ன? ஒரு பெரு மூச்சுடன் எழுந்து சமயலைக் கவனிக்கலானாள். சாந்தியின் மனம் சாந்தியடைவதற்கு காலம் தான் பதில் சொல்ல
வேண்டும்
二革二革

Page 178
சில நினைவுகளும்
1971ல் யாழ் பிரதான வீதியில் உள்ள கொமேஷல் அச்சகத்தில் அச்சுக்கோட்பாளராக பணிபுரிகின்ற பொழுது நாம் இருவர் இடையறாது அரசியல் வாக்குவாதம் புரிவோம். குறிப்பாக “தனித்தமிழ் நாடு” தமிழரசுக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு சம்மந்தமாகவே வாதப் போர் நடைபெறும் இவ்விவாதப் போரில் மற்றவர் என்னை கருத்து ரீதியாகவென்று விடுவார். அச்சமயம் நான் கடும் கோபம் அடைவேன். மற்றவர் கோபம் அடையாமல் நிதானமாக கருத்துக்களைமுன் வைத்து என்னை வென்றவர். என்னை இடது சாரி இயக்கத்திற்கு வென்றெடுத்தவர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் க.தணிகாசலம் அவர்கள் ஆவார்.
1972ம் ஆண்டு நடுப்பகுதியென நினைக்கிறேன் வடபிரதேசத்தில் உள்ள யாழ்ப்பான அச்சகத்திற்கு ஊழியராக பணியாற்ற சென்றேன். ஓராண்டிற்கு மேலாக புத்தக வெளியீடுகள், பிரசுரங்கள் பல பிரசுரிக்கப்பட்டன. 1974ல் தேசிய கலை இலக்கியப் பேரவை ஆரம்பிக்கப்பட்டது.
கலை இலக்கியப் பேரவையை ஆரம்பித்து அதில் முன்னின்று உழைத்த பலர் நம்மிடையே இல்லை. பேராசிரியர் கைலாசபதி, கே.சுப்பிமணியம், கேடானியல், முருகு கந்தராசா செல்வ பத்மநாதன், சில்லையூர் செல்வராசன் போன்றவர்கள் நினைவு கூறத்தக்கவர்கள்.
தாயகம் பத்திரிகையின் வளர்ச்சிக்கு பல பல விதங்களில் பாடு பட்டனர். அச்சகம் பழைய
அச்சுக் கலையோடு , அழகான சஞ்சிகையாக வெளிவர பணியாற்றியவர்களில் என்.கே.ரகுநாதன் அவர்களை என்னால் மறக்க முடியாது. அவர் தமது ஓய்வு நேரங்களில் பெரும் பகுதியை சஞசிகை வெளியீட்டிற்காக செலவளித்தார். எழுத்துட் பிழைகளைப் பார்ப்பதிலும் பக்க அமைப்புகளை அமைப்பதிலும் அவரோடு சண்டை போடுவது உண்டு.நான் ஒரு விதமாக பக்கங்களை அமைப்பேன். அவர் வெறோரு விதத்தில் அமைய

சில குறிப்புக்களும்
வை. வன்னியசிங்கம்
வேண்டும் என்பர். இதில் இருவரும் வாக்குவாதங்கள் கடைசியில் அவருடைய எண்ணப்படியே பக்கங்கள் அமையும் அதில் அழகும் உண்டு. என்னுயை வேலை இருமடங்காகி விட்டதையிட்டே நான் கோபம் அடைவதுண்டு. இவ்வாறாக மகிழ்ச்சிகரமான சண்டைகள் ஊடே தாயகம் ஓராண்டு காலமே தொடர்ந்து வர முடிந்தது. நிதிப் பற்றாக்குறை
காரணமாக தாயகம் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளில் த்ாயகம் தொடர்ந்து வெளிவராவிட்டாலும், தேசிய கலை இலக்கியப் பேரவையும், தாயகம் சஞ்சிகையும், தனது கலை இயக்கியப் பணியிலும் அதன் இலட்சியப் பயணத்திலும் இருந்து அடிபிசகவில்லை.
நடைமுறைச் சமுதாயத்தில் ஏகப்பெரும்பான்மையான அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை, ஜனநாயக வாழ்வை, நாகரிகத்தை பிரதிபலிக் காத பழைய சமுதாயத்தை தூக்கியெறிந்து (அது பிரதேச - தேசிய ரீதியாக இருந்தாலும்) புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு, புதியநாகரிகத்தை உள்ளடக்கிய சீரிய வாழ்வு கொண்ட புத்தொளிச் சமுதாயத்தை உருவாக்கும் தன் இலக்கில் தாயகம் உறுதியாக உள்ளது.
சமுதாய மாற்றத்தை மார்க்சிச அரசியல் இயக்கப் போராட்டங்கள் மூலமே அடைய முடியும். சோவியத்யூனியன் உடைவின் பின்பும், சீனாவில் ஏற்பட்ட மாற்றங்களலும், மார்க்சிசம் காலவாதியாகி விட்டது. என்ற கதையாடல்களையும் கேட்க முடிகின்றது. சமகால உதிரிப்புத்தி ஜீவிகளின் உரையாடல்கள் நமது உரத்த சிந்தனைக்குரியன.
மார்க்கிசம் "ஒரு பொருளாதார வாதத் தத்துவம்'. "பன்முகப்பார்வை அற்றது” எனச்சுருக்கி சற்று அப்பாவித்தனமாக, விக்கிரமாதித்தன் கதைப்பாணியிலும், கோவில்களில், பிள்ளையார். கதை கேட்பது போலவும் சொல்கின்றர்கள். இதற்கு வீணான நேரங்களையும், கட்டுக்கணக்கில் காகிதத்தையும் செலவழிக்கின்றார்கள். சமுதாய
புது வசந் தம் 173

Page 179
மாற்றத்திற்கு ஒவ்வாத மார்க்சிச தத்துவத்தை நிராகரிப்போம். சமுதாய மாற்றத்திற்கான உங்கள் தத்துவக் கதையாடல்களை முன் வையுங்கள் என்றால், அப்படி எதுவும் இல்லை. எங்கள் வேலை மார்க்சிசத்தை செழுமைப்படுத்துவதே என மீண்டும் வேதாளம் மரத்தில் ஏறும் விக்கிரமாதித்தன் கதைகளையே ஒரு சிலர் சொல்கிறார்கள்.
வேறு சிலர் “பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் ஏற்படும் அரசின் மூலம் எல்லாப் பிரச்சனைகளும் தீந்துவிடும் எல்லாக்காலங்களிலும், எல்லாப் பிரச்சனைகளும் இதையே தீர்வாக மார்க்சிச லெனினிச வாதிகள் சொல்கின்றார்கள்” என்றும் , வர்க் கத்திற்குள் இன-மொழி வேறுபாடுகளையும், தேசிய இனத்திற்குள் சாதிய வேறுபாடுகளையும், புரட்சி வெல்லும் வரை கவனத்தில் கொள்ளத்வேவையில்லை. (அப்படி மார்க் சிசம் சொல்லவில்லை. இவர்கள் சொல்கிறார்கள்) என்ற கதையாடல்களையும் தமிழ் நாட்டில் கேட்கமுடிகின்றது. இதன் மூலம் தமிழகத்தில் மார்க்சிசத்தை தமிழ் மக்களின் பிரதான எதிரியாக சித்தரிக்கின்றார்கள். பெண்நிலை வாதத்திற்கு, சுற்றுப்புறச்சூழல் போன்றவற்றிற்கு எதிராக காட்ட முற்படுகின்றார்கள்.
நீங்கள் நிராகரிக்கும் "மார்க்சிசத்தையே” எங்கள் நாட்டின் நிலமைக்கேற்ப பிரயோகித்து, இலங்கையில் 1966ல் கம்யூனிஸ்ட்கட்சி (உங்கள் பாஷையில் சொன்னால் துர்மரபுவழிக் கட்சி) நடத்திய சாதிப் போராட்டத்தையும், அதன் வரலாற்றுப் போராட்ட அனுபவங்களையும்,
74 eðfé síð
 

வெற்றிகளையும் ஏன் தமிழகத்தில் தமிழ் மக்களிடம் வெளியிட்டார்களே எனக்கேட்டால் நாங்கள் இலங்கையில் இடது சாரிப்பற்றி சொல்லவில்லை. தமிழ் நாட்டின் இடது சாரிக் கட்சிகளையே சொல்கின்றோம் என்கின்றார்கள்.
தமிழகத்தில் இன்று பின் நவீனத்துவக் கோட்பாளர்கள் மத்தியில் மிகக்குழப்பமான போக்குகளையே காணமுடிகின்றது. கடந்த வருடங்களில் பின் நவீனத்துவக் கோட்பாடுகளை # [[16ीu J60ा வாதிட்டார்கள். தற்போது மார்க்சிசத்திற்கான கதையாடல்களை செய்கின்ற பரிதாபகரமான போக்குகளையும் காண முடிகின்றது. இதன் மூலம் மார்க்சிசம் - பின் நவீனத்துவம் பற்றிய புதிய விடயங்களை ஆய்வுகளை படிக்க விவாதிக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
உலகம் 21 ம் நூற்றாண்டிற்குள் பிரவேசிக்கின்றது. இன்றைய முதலாளித்துவ உலகின் சமூக - அரசியல் - பொருளாதாரப் போக்குகள் - நடவடிக்கைகள் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வகையிலேயே சென்றும் அதே போல் எதிர்கால புரட்சிகர அமைப்புக்கள், அதன் அரசியல் போராட்ட மார்க்கங்களும், மாறுபட்ட வகையிலேயே செல்லும் சுருங்கக்கூறின் "மார்க்சிசத்தை எதிர்காலத்திற்கு ஏற்ப பிரயோகிக்க பயில வேண்டும்.” இதை சரியாக சொல்வதன் மூலமே தாயகமும் தன் இலக்கை S960L-u (ypọUD.

Page 180
Ο
நை
இந்த வெள்ளிவிழா மலர் சிறப்புறும் வண்ணப்
இதனை அச்சிட்டு உதவிய ஒன்லைன் பிறின்
இதன் வடிவமைப்பில் உதவிய க. ரணேஷ், வி ஆகியோர்க்கும்,
வெள்ளிவிழா ஆய்வரங்கு சிறப்புறும் வண்ண
வெள்ளிவிழா கலையரங்கிற்கான படைப்புகள்
வெள்ளிவிழா நிகழ்வுகளுக்கு மண்டபம் தந்து குறிப்பாக சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்க இந்தியாவிலிருந்து விழா சிறப்புற வருகை நிர்வாகி எம்பாலாஜிநாடகவியலாளர் பிரளய தேசிய கலை இலக்கியப் பேரவையின் புத் புத்தகப் பண்பாட்டுப் புரவலர்களான - 01. அறங்காவலர் கலாநிதி திரு.தி.செந்தில் 02. திரு.எஸ்.சின்னத்துரை (சின்னத்துரை அ 03. திரு.துரை.விஸ்வநாதன் 04. திரு.எஸ்.தியாகராஜா (எஸ்.ரி.ஆர்) 05. திருவேலணை வீரசிங்கம் 06. சட்டத்தரணி திரு.எல்.ஜோதிக்குமார் 07. திரு.எஸ்.நேசேந்திரன் (பீ.எஸ்.என்றேடே 08. திரு.சு.இ.அசோகன் 09. திருதம்பிராஜா குழந்தைவேல்(சிவசண்மு 10. வைத்திய கலாநிதி திரு.எம்.கே.முருகா 11. திரு.கே.ஏ.திருஞானம் (சமாதான நீதவா
பிறைவேற் லிமிடெட்) 12. திருசின்னத்துரை தனபாலா (சமாதான 13. திரு.எம்.அமிர்தநாயகம்(அதிபர், சீடிஐகு 14. திரு.முருகேசு புஷ்பராஜா (சாஜி ட்ரவல் 15. திரு.எஸ்.தியாகராஜா (வனித்தா ஜூவல் 16. திரு.ஆர்.பிறிதரசிங் (அதிபர்,பூபாலசிங் 17. திரு.குமாரசாமி ரீகாந்தராசா (அதிபர், 18. திரு.பி.எஸ்.பஞ்சாட்சரம் (அதிர், விஜே 19. திரு.பர்ம்நாதன் ஜெயக்குமார் (அதிபர், 20. திரு.கந்தையா மனோகரன் (கடல்சார் 21. திரு.அகுலேந்திரன் (சுங்க உதவிப் ப6 இன்னுமொரு காலடி, இனியும் சூல்கொள் (L ஆதவன் அச்சகத்தாருக்கும், மற்றும், தேசிய கலை இலக்கியப் பேரவை வளி இம் மலரின் பரவுகைக்கு உதவிய உங்கள்
நன்றிகள்

றி
) ஆக்கங்கள் தந்துதவிய அனைவர்க்கும்,
ரோஸ் நிர்வாகஸ்த்தர், ஊழியர்கட்கும்,
ளம்பர நிர்வாகஸ்த்தராக இயங்கிய கனக ரவீந்திரன்
எம் ஆய்வுக்கட்டுரைகள் நல்கியோர்க்கும்,
வழங்கியோர்க்கும்,
தவிய இராமகிருஷ்ணமிஷன் மண்டத்தினர்க்கும், 5ட்கும்,
நல்கிய பாரதியியலறிஞர் பெ.சு.மணி,சவுத்விஷன் ன் ஆகியோர்க்கும், ததக விரும்பிகள், புத்தகப் பண்பாட்டுப் பேராளர்,
ഖണ് }ன் பிரதர்ஸ் - கல்கி)
fronto)
முகராஜா அன் கோ) னந்தம் (எம்.பீ.பீ.எஸ்) ன், சீகன் ட்ரவல்ஸ் அன் ரூர்ஸ்
நீதவான், லீலா குறுப்) தறுப் ஒவ் கொம்பனிஸ்) 0ஸ் அன் ஃபிலிம்ஸ்)
ഇഖൺ) கம் புத்தகசாலை) மக்மிலன் புத்தகசாலை)
பி. இன்ரநஷனல் புத்தகசாலை) அவ்கோ லங்கள் பிறைவேற் லிமிற்றெட்) பொறியியல்ாளர்) Eட்பாளர்) டங்கள்)
ர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கிய அனைவர்க்கும்,
அனைவர்க்கும்,
மலர்க்குழு
உரித்தாகுக
புது வசந்தம் 175

Page 181
‘புது வசந்தம் சி
சகலவிதமான மரத்தளபாடங்களும் கூரை மரங்கள் கிடுகு முதலியவையும் கடைச்சல் வேலைகளும் செய்து கொள்ளலாம்
இல, 23, 24, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, ഖഖങ്ങിut.
‘புது வசந்தம் சிற
கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் முன்பாக, 74, பஜார் வீதி, வவுனியா.
 
 
 
 
 

ப்புற வாழ்த்துகிறோம்!
ר
ஸ்ரீல் அலுமாரிகள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் கதிரைகள் என்பனவற்றையும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
&ჯ
No.23, 24, w SOOSolipillolyOrkulom ROOC, VOVuniyO,
ப்புற வாழ்த்துகிறோம்!
Tel: O24 - 22687 22929

Page 182
GHEERTHIEKAS
உங்கள் திருமண வைபவம்
அனைத்து வைபவங்களிற் நாடவேண்டிய ஒரிடம்.
· 194 කස්තූරියා පාර, 194, Kasthur
○○○○○○○
Jaffri
 
 
 
 
 

திகாவில் தர்மலிங்கம் விதி, வரனியா
BáJéWelleries
ಹGಖ'ಆT J56)čbjčSD
Street 23 பலர் விதி Iya. ഖഖങ്ങിult.
yar Road, 194 கஸ்தூரியார் வீதி, a. 「 LT2 LT600 lb -