கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து நதி 1988-1989

Page 1
* × *)
多
露 ! ±
警
T
நது 1በD II6ÖÖI6) கிழக்குப் பல்கலைச் வந்தாறுமூலை, செங்கல
இ
ീ
 
 
 
 
 

彎巖* ' ) .
(م =ے غھريف فيa ** ** గ్ళeఆ #49 மிேழ்ச் சங், ": ്ട്രീ, பழங்கியதை 晕
- -- ) !,
f འག 3 ۔ ۔ ۔ ...'
a
raeos *۔-
- ”ܘܐ ?
le (is é ''' இல y is. 1968,
_- ̄
ார் மன்றம் " கேழகம்,

Page 2
~~~~~~~~~~~
நலமான வாழ் வி
நல்ல தோர் வழி
6) Ú (13
உங்கள் நிதியைப் பெ( எங்கள் முதலீட்டுத் தி நிலையான வைப்புத்
குறைந்த வைப்புத்தொகை மாதாந்த வட்டி பெற குறைந்த
காலம் மாதாந்த வட்
3 மாதங்கள்
6 9 9 ー 12 15% 24 , , 18% 36 , , 20%
* விை * மாதாந்த முத
C:
ஷப்ற யுனிக்கோ
61, நியூ புல்லர்ஸ் வீதி, கொழும்பு - 4.
589.31 O 50O576.. 9.

حمامه حصاسم حمسحیه حمام حصیحه حمامه حسمی حصحیحی حماسمی حسم حمسم
ற்கு
காட் டி
ருக்க ட்டங்களை நாடுங்கள் திட்டம்
Y e5. 1000/- வைப்புத்தொகை ரூ. 5000/-
ட்டி வீதம் முதிர்ச்சியில் வட்டி வீதம்
14%, 16%, 18%, 20%
)
)
)
பப்புச் சான்றிதழ் திட்டம் லீட்டுச் சேமிப்புத் திட்டம்
ம லு ம் வி ப ர ங் கள் பெற பினுன்ஸ் லிமிடெட்
யா ழ் முக வ ர், 207, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
R 243OS 22O78
r-MM MMM MMM MMM
8
R i
s
R
R
R
8 & 8

Page 3
விட சிவமயம்
16து
இதழாசிரிய
பரம். ஜெயக்கு
இந்து மாணவர் கிழக்குப் பல்கலே வந்தாறுமூே செங்கலடி 1988 | 89

கொழும்புத் தமிழ்ச் சங்து HT =###. சிற்கு அர்" விரிப்பாது இந்நூலே கிழங்கியவர்
(
1直:
குமார்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
வரை நிஃச் if
தி Eلاق 『 பதர் 10. 5, 1950
அறக்கட்டனே நிலயம்,
IET: GF. இஸ். , GF
மன்றம் LLSCSLSLSSLLLSL LSLSLSSLSLS க்கழகம்
והב

Page 4
INTH N
Editor :
Param. Jeyaku
The Publication of Hindu Students' Ass
Eastern University, Vantharumoolai, Chemkallady. 1988 89.

SIVAMAYAM
[ATHY
aft
the
sociation

Page 5
9F LD ñi ’ı
இந்து ந இவ்வாண் சித்தி விர பொற்பாத
நனைக்க

ப ண ம்
தியின் ாடு அலைகள் நாயகர் தம்
தங்களை
ட்டும்

Page 6


Page 7
சுவாமி ஜீவனுை
வாழ்த்
இந்து தர்மம் என்பது இய மனிதன் மகத்தானவன். அவ6 உணர்த்தும் 'தத்வமஸி’ என் பெருமையைச் சொல்லும். ஒவ துள்ளது தெய்வீகம். அதை உல அதுவரை அவனது ஆத்மாவில் ணத்தில் சமயத்தின் பணி எ6
மனிதனுள் உறைந்துள்ள அவனைப் புனிதனுக்குவதே சப
*உன்னுள் உறைந்திருக்குப் ஏனைய யாவும் அதைச் சுற்றி சுவாமி விவேகானந்தரின் வா. மும் இதுவே.
இந்து தர்மம் என்பது மன வழிகாட்டும் ஒரு புனித நதி “இந்து நதி’’ இரண்டறக் கலர் வழிகாட்ட வேண்டும்ென எல் திக்கின்றேன்.
இராமகிருஷ்ண மிஷன், கல்லடி - உப்போடை, மட்டக்களப்பு.
17 - O - 1990

to
ாந்த அவர்களின்
ந்துரை
பற்கையோடு இணைந்த ஒரு நெறி. ன் கடவுளின் அம்சம் என்பதை *ற சுலோகம் இந்து தர்மத்தின் வ்வொரு மனிதனுள்ளும் உறைந் ஈர்வதே மனிதனின் முக்தி நில. ன் பயணம் தொடரும். இப் பய ன்ன?
தெய்வீகத்தை விகCக்கச் செய்து 2யத்தின் பணியாகும்.
ம் தெய்வீகத்தை விகCக்கச் செய். ஒழுங்கமைதி பெறும் என்பது க்கு. சகல சாஸ்திரங்களின் சார
கித குலத்தின் விமோசனத்துக்கு . அந்த ந தி யு டன் இந்த ந்து மக்களின் ஆத்மீக வாழ்வுக்கு லாம் வல்ல இறைவனைப் பிரார்த்
சுவாமி ஜீவனுனந்த

Page 8


Page 9
கிழக்குப் பல்கலை
பேராசிரியர் எஸ். ச
ஆசிச்
இன்றைய இன்னல் நிறைந்த ச துவம் பெரும் பங்கு வகிக்கின்றது. எ. ஈடுபாட்டில் காண்பிக்கும் அக்கறையைய
இந்த வகையில் செயற்பட்டு வ மன்றத்தினரின் தொடர்ச்சியான வெ பூர்வமான வாழ்த்துக்கள். இந்த ஈடுப படுவதன் அவசியத்தை எடுத்துக் கூற வளர்ந்தோங்கிச் செல்ல என் மன கொள்ளுகிறேன்.
அன்பு, சகோதரத்துவம், புரிந்து களால் தான் வளர்க்கப்பட முடியும். அ புகட்டும் பாடநூலாகவும் இச்சஞ்சிை
அனைவரும் அக்கறையுடையவர்களாக முன்னேற்றத்திற்கான அடிக்கல்லாக நிச்
இந்து மாணவர் சங்கத்தின்ரின் கழகத்தில் கலை, கலாச்சார ரீதியான என்பதற்கு இச்சஞ்சிகையின் இரண்டா அளப்பரிய சேவைகள் தொடர்ந்து 6ெ பாடுகள் மென்மேலும் விஸ்தரிக்கப்பட
"இந்துநதி' பன்மடங்கு கிளைகளை தாகத்தைப்போக்கிட, ஆன்மீக வெள்ள துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கி

க்கழக உபவேந்தர்
ந்தானம் அவர்களின்
செய்தி
ாேலகட்டத்தில் ஆன்மீகத்தின் முக்கிய்த்
பிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ரும் எமது பல்கலைக்கழக இந்துமாணவர் ளியீடான இவ்விதழிற்கு ள்னது தப் ாடுகள் பரந்த நோக்கில் செயற்படுத்தீழ் த் தேவையில்லை. இந்தச் செயற்புர்டுகள்
மார்ந்த நல்லாசிகளைத் தெரிவித்துக்
புணர்வு என்பன இப்படிப்பட்ட அறநூல் அதுமட்டுமல்லாது மாணவர்களின் கல்வி ds விளங்குவது பாராட்டுதற்குரியது: ள் வெளிவரவேண்டும்' என்பதில் நர்ம் இருக்க வேண்டும். இது சமுதாய் சயம் அமையும் என்பதில் ஐயமே.இல்ல்ை
அயராத முயற்சியினல் எமது பல்கலைக் ா திறமைகளும் வளர்க்கப்ப்டுகின்றன் ம் இதழ் சர்ன்ருகும். இம்மன்றத்தின்ரின் பற்றி நடை ப்ோடவும், அத்ன்" தெர்ழிற் வும் எனது " நல்லாசிகள். m
ாப்பரப்பி மானிட உள்ளங்களின் அறிவுத்
3pair.
எஸ். சந்தானம்.

Page 10


Page 11
கிழக்குப் பல்கலைக்கழக இந்து ம பேராசிரியர் மனுே. சபா
வாழ்த
இந்து நதியின் இரண்டாவது
இந்து மாணவர் மன்றத்தின் பெ( படுத்தக் கிடைத்த வாய்ப்பினை ஒரு
பண்பாடுபற்றிய விழிப்புணர் பாடுபற்றிய அறிவும், அனுபவமும் றது. மதம் சார்ந்த ஒழுக்க விழுமி யை விடவும் அதிகமாக இன்று உ இந்துப் பண்பாட்டின் அர்த்தங்களை கொணர்ந்து பாய்கின்றது இந்து ந
இந்து நதியின் முதலாவது இ இரண்டாவது இதழின் பிறப்பின்
இந்து பண்பாட்டின் ஊற்று குவது கிழக்கிலங்கை. எங்கள் பல்ச பண்பாட்டுப் பீடத்திலே இந்து பணி டியதன் அவசியத்தை மீண்டும் இ கின்ருேம். இந்தத் துறையிலே பண் கள் பலவும் நிகழ்த்தப்பட வேண்ட வுச் செல்வங்களையெல்லாம் வெளிக் கின்றது. இந்து நதியைச் செழுமை அழைக்கின்ருேம்.
இந்த இதழுக்கான கட்டுரை சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றே சம்பந்தப்பட்ட என் அன்புக்குரிய
எங்கள் பண்பாட்டின் <毁@ வாழ்வினை வளம்படுத்த வருக! இ வரவேற்கின்றேன். w

)ாணவர் மன்றப் பெருந்தலைவர் ாரத்தினம் அவர்களின்
துரை
து ஊற்று பாய்ந்தோடி வருகின்றது. ருந்தலைவராகவிருந்து இதனை வழிப் 1 பேருகவே கருதுகின்றேன்.
வு ஏற்பட்டு வரும் வேளையிது. பண்
இன்று பெரிதும் வேண்டப்படுகின் யங்களின் தேவை முன் எப்போதை ணரப்படுகின்றது. இந்த வேளையில் ா ஆய்வுக் கருவூலங்களின் வழி வெளிக் தி.
}தழிலே நாம் கண்ட வெற்றி, இந்த அடிப்படையாகும்.
க்கள் பலவற்றையும் கொண்டு விளங் கலைக் கழகத்திலே இடம் பிடித்துள்ள ண்பாட்டுத்துறை இடம் பெற வேண் ந்த இடத்தில் வ்லியுறுத்த விரும்பு பாட்டு மானுடவியல் சார்ந்த ஆய்வு டியது இன்றியமையாதது. இந்த ஆய் க்கொணர இந்து நதி தயாராகப் பாய் யுடன் வளம்படுத்த ஆய்வறிஞர்களை
"களைத் தந்த அறிஞர்களுக்கு நன்றி ன். இந்து நதியின் உருவாக்கத்திலே மாணவர்களையும் பாராட்டுகின்றேன்.
மையாய், அர்த்தங்கள் பல தந்து ந்து நதியே வருக! என்று வாழ்த்தி
மனுே. சபாரத்தினம்

Page 12


Page 13
கிழக்குப் ப
இந்து ாைனவர் டின்ற
கலாநிதி க. சே
இவ்விதழுடாக நான் காண்க் கூடியதா
எமது இந்து மாணவர்களின் ஆலை, க
தோற்றுவித்த போதும் இச்சஞ்சிகை ஒளி
புல்லுேறு கோணங்களில் அலசி ஆர இவ்விதழ்கிங்களுக்த்ப் ப்ெருவிருந்தர்க் ப்ல்கிப் பெருகிட என்து மனமார்ந்த வ
இவ்விதழின் வெளியீட்டில், இந்து
தொடர்ந்து வெளிவரவும், இந்தும்ான இறைவன் ஆசி வேண்டுவதுடன் மன கொள்கிறேன்.
 

ல்கலைக்க ழக
ச் சிரேஸ்டி பொருளதிர்
பதன் அவர்களின்
துரை
தழ் வெளிவருவதில் பெருமகிழச்சி அடை செயற்ப்ாடுகள் மேன்ம்ை பெற்றுள்ளமை *க இருக்கிறது.
லாச்சாரத்திறன் வளர்வதற்கு இந்துநதி இன்றைய சூழ்நிலை மேகங்கன் இருளைத் விள்க்காகத் திகழும் என்பதில் ஐயமில்ல
ாயப்பட்ட கட்டுரைகளைத் தாங்கி வரும் அமையும் என நம்புகிறேன். இந்து நதி' ாழ்த்துக்கள் என்றும் இருக்கும்.
மாணவர் மன்றத்தின் சிரேஸ். பெச்கு ழ்ச்சியடைவதுடன், يعஇவ்வறிவுச் செல்வம் வரின் செயற்ப்ாடுக்ள்வன்ார்ந்தோங்கவும் மார்ந்த வாழ்த்துக்களையும் தேரிவித்துக்
க. சபேசன்

Page 14
இந்து மாணவர்
கிழக்கின் ஒளி விளக்கு ஒன்று "இந்து நதி இந்து சமயப் பண்பாட்டுக் வெளியீடு உண்மையிலேயே எமது மன வாய்ப்பேச்சை விட செயற்திறனே மு. எடுத்துக்காட்டு.
எமது இந்து மாணவர் மன்றம் சென்று வளரவேண்டிய நிலை.ஆயினும் மன்றத் தலைவர் என்ற வகையில், பெரு
"இந்து நதி என்ற இந்த அறி பரந்து கிடக்கும் உங்கள் அனைவர் கைக எதிர் காலத்திலும் இந்த ஒளி தொட எடுக்க வேண்டும்,
"இந்து நதியின் எல்லாவிதமான வேண்டுகிறேன்.

மன்றத் தலைவரின்
புரை
தொடர்ந்து ஏற்றிவைக்கப்படுகின்றது. கோலங்களின் பிரதிபலிப்பு. இவ்விதழின் ண்ணிற்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஆம், க்கியம் என்பதற்கு "இந்து நதி சிறந்த
பல வளைவு, நெளிவுகளூடாக ஊடுருவிச் அதன் வளர்ச்சி முனைப்படைந்ததையிட்டு மகிழ்ச்சி அடையாது இருக்க முடியவில்லை.
வுெப் பொக்கிஷம் மூலை முடுக்கெல்லாம் ளிலும் பிரகாசிக்கட்டும். அது மட்டுமல்ல ர்ந்து ஏற்றப்பட அனைவரும் முயற்சி
ஊடுருவல்களுக்கும் இறைவன் நல்லாசி
எஸ். வரதராஜன்

Page 15
இதழாசிரியரின் இதயத்தி
"இந்து நதி இன்று தனது இரண்டா இந்து மாணவர் மன்றத்தின் இலட்சிய வேட் வெளியீடு சான்று. ஆனல் இந்த இரண்டாம் மனவேதனைகள் தான் எத்தனை? எத்தனை? குழந்தையிவள் உங்கள் கைகளில் தவழ்வத விடாமுயற்சியும், நலன் விரும்பிகளின் ஒத்து இருந்தன. சூழற்காரணிகள் இருவருடங்களைத் இதயதாகம், இத்தடைகளையெல்லாம் முறிய
முதற்செல்வத்திலிருந்து சற்று வேறுப இந்து பண்பாட்டுக் கோலங்களின் ஆய்வுடன் களுடஞன ஒப்புமை நோக்குகளும் இடம் பெ. "இந்து நதி" புதுப்பொலிவுடன் நிறைவான பெரியோரால் சுட்டிக்காட்டப்பட்ட சென் பட்டமையால், இவள் நிறைவை அணுகுகிரு காய்கள்ாக இருக்கும் அறிவுப் பொக்கிஷங்ச பசிக்காக கொணரப்படுகின்றன. எமது பல்க! களும் உங்கள் முன் அணிவகுக்கின்றன.
தொடர்ச்சியான எமது முயற்சிகளுக்கு மட்டுநகர் இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஜி. பேராசிரியர் எஸ். சத்தானம் அவர்களுக்கும்
இந்து மாணவர் மன்றத்தின் உயிர்தா சபாரத்தினம் அவர்களே. 'இந்துநதி' யின் வ கனால் நாம் சோர்வடையும் போது எம்மைத் செயற்திறன்ே இவ்விதழின் பூவுலகப் பிரவேச அத்துடன் எமது செயற்பாடுகளுக்கு ஆக்க உ க. சபேசன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த
"தாம் பெற்ற அறிவுச் செல்வங்களைப் தமது ஆக்கங்களைத் தந்துதவிய அறிவு ஜீ. கீதம் பாடுகின்றது.
"இந்து நதி' யின் பசுமைச் செழிப்பு செம்மல்களின் பங்கும் அளப்பரியது. அந்த லொணுத் தடைகளின் மத்தியிலும் இவ்வி, அச்சகத்தினர் எம் நன்றிக்குரியவர்கள்.
"இந்து நதி" யின் இந்த நீர்த்திவலைக குறைக்கும் இவ்வேளையில், எனது பிரார்த்தன் கும் செல்வநதியாகத் தொடரும் காலங்களிலு
கைகளில் தான்!

$லிருந்து.
rவது செல்வத்தைப் பிரசவிக்கின்ருள். எமது கை உச்சம் பெற்று விட்டதற்கு இவ்விதழின் கருப்ப காலத்தில் ஏற்பட்ட இடையூறுகள் உண்மையில் கரு ச் சி  ைத வு ஏற்படாமல் ற்கு இறைவன் பேரருளும், மன்றத்தினரின் ழைப்பும் தான் தலையாய ஒளஷதங்களாகி * தள்ளிவிட்ட போதிலும் எம்மன்றத்தினரின் டித்து விட்டது.
ட்ட வடிவமாக இவள் உருவெடுத்துள்ளாள்
மட்டும் நின்றுவிடாது, ஏனைய இன, மதங் ற்றிருப்பது இவ்விதழுக்குரிய மகுடங்கள். ஆம்
ஆளுமையை நோக்கிப் பாய்கிருள். வாசகப் ற இதழுக்குரிய குறைகள் நெஞ்சிலமர்த்தப் ள். கிழக்கின் மூலைமுடுக்கெல்லாம் இலைமறை iளின் ஆய்வுப்படைப்புக்கள் உங்கள் அறிவுப் லக்கழக எழுத்தாளச் சிற்பிகளின் வடிவமைப்பு
5. இதய பூர்வமான ஆசிகளை அள்ளித்தந்த வளுளத்த அவர்களுக்கும், எமது உபவேந்தர் எமது நன்றிக்கடன் நிலைக்கும். டி எமது பெருந்தலைவர் பேராசிரியர் மனே. ாற்ருத ஊற்று இவரின் வழிகாட்டலே. எதிரலை ந் தட்டியெழுப்பிய "எங்கட Madam" இன் ம். அவரது ஊக்கம் இறைவன் காணிக்கை. ஊக்கமளித்த சிரேஷ்ட பொருளாளர் கலாநிதி
நன்றிகள். பெறுக இவ்வையகம்" என்றே இந்து நதிக்காக விகளுக்காக எமது இதயத்து சந்தம் 'நன்றி"
க்கு சேவையுள்ள ம் கொண்ட வர்த்தகச் நன்றிகள் எமது நெஞ்சை விட்டகலா. சொல் தழை அச்சுருவேற்றிய புனித செபஸ்தியார்
ள் ஒவ்வொன்றும் உங்கள் அறிவுத் தாகத்தை ா என்னவெனில் "இவள் அறிவு வளம் கொழிக் லும் திகழவேண்டுமென்பதே. அக்கணவு உங்கள்
பரம். ஜெயக்குமார்

Page 16
கிழக்குப் பல்கலைக்கழக
நிர்வாக
1988
பெருந் தலைவர்
சிரேஷ்ட பொருளாளர்
தலைவர்
உப - தலைவர்
செயலாளர்
இணைச் செயலாளர்
கனிஷ்ட பொருளாளர் இதழாசிரியர்
இணை - ஆசிரியர்
. (5C1 p.
திரு. வி , , வி. , , எள்
o Es செல்வி.
(
б1 酸 彰 G. g

இந்து மாணவர் மன்ற
5க் குழு
- 1989
பேராசிரியர் மனுே. சபாரத்தினம் கலாநிதி க. சபேசன் திரு. எஸ். வரதராஜன்
செல்வி எம். விக்னேஸ்வரி
திரு. வே. கேதீஸ்வரராஜா செல்வி. த. பவானி
திரு. வி. சிவசத்தியராஜா
திரு. பரம். ஜெயக்குமார்
செல்வி. சு. வாசந்தி
றுப்பினர்கள்
கrண்டீபன் பாக்கியராஜா ). கிருஸ்ணகுமார் கணேஸ்வரன் க. குமுதினி 1. புஸ்பலதா ஸ். சுனித்திரா Fா. பவானி ந்திரலட்சுமி ச. வாசுகி

Page 17
தமிழ், முஸ்லிம் கல பரியங்களின் ஒன்றித்
காணப்படுவதற்கான கா
இலங்கை வாழ் முஸ்லிம் சனத்தொகை யில் 67% சதவீதமானுேர் சிங்கள மொழி பேசும் பகுதிகளில்ேயே வாழ்கின்றனர். 33% சதவீதமானேர் மாத்திரமே தமிழ் மொழிப் பாரம்பரிய பிரதேசங்களில் வாழ்கின்றனர். பின்வரும் அட்டவணை தமிழ்மொழிப் பாரம் பரிய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் குடிசனப் புள்ளிவிபரத்தை நூற்று வீதத்தில் விளக்குகின்றது.
மாவட்டம் முஸ்லிம் தமிழர் சிங்கள
வர் கிளிநொச்சி யாழ்ப்பாணம் 1.7% 97.7% o.5% மன்னர் 26.6% 63.8% 8.1% Gay Gay Gofu unr 6.9% 76-3%. 16.5% முல்லைத்தீவு 4.8% 89.9%, 5.1% மட்டக்களப்பு 24.0% 72.0%, 5.2% அம்பாறை 41.5%. 21.5%. 37.7%
திருகோணமலை 29.0%. 36.4%. 33.6%
வட, கிழக்கு இணைந்த மகாணத்தில் முஸ்லிம் சனத்தொகை 17% வீதமாகும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சனத்தொகை 32.5% ஆகும். தமிழ்மொழி பாரம்பசிய் பிர தேசத்திற்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை, தமிழ்மொழி பாரம்பரிய பிர தேசத்துக்குள் வாழும் முஸ்லிம்களின் எண் னிக்கையை விட ஒரு மடங்கிற்கும் மேல் அதிகமாக இருந்தாலும் சிங்கள, பெளத்த கலாசார பாதிப்புக்கள் இவர்களிடம் அதிகம் இடம் பெறவில்லை. மாருக தமிழர்களிடமும்

TBFTU பாரம் ந்த தன்மைகள் - ாரணங்கள் - ஒருநோக்கு
மெளலவி எம். ஐ. அப்துர் ரஸ்ஸாக் கலாசார கற்கைகள் பீடாதிபதி, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
முஸ்லிம்களிடமும் கலாசார பாரம்பரியங் களைப் பொறுத்தவரையில் ஒன்றித்த தன்மை கள் பலவற்றை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இரு கலாசார பாரம்பரியங்களிலும் ஒன் றித்த தன்மைகள் பல காணப்படுவதற்குப் பின்வரும் காரணிகள் அளப்பற்றவகையில் பங்களிப்புச் செய்துள்ளது மறுக்கவோ மறைக் கவோ முடியாதன.
1. மொழி ஒருமைப்பாடு 2. சிறுபான்மை இனங்கள் எனும் உணர்வு
3. இந்திய கலாச்சாரத்தின் செல்வாக்கு
இம்மூன்று காரணிகளும் இரு கலாசார பாரம்பரியங்களிலும் ஒன்றித்த பல தன்மை கள் காணப்படுவதற்கு எவ்வகையில் பங்களிப் புச் செய்துள்ளன என்பது பற்றிச் சிறிது விளக்கமாக நோக்குவோம்.
மொழி ஒருமைப்பாடு:
இனரீதியாக இருபகுதியினரும் வேறுபட்ட வித்தியாசமான தனித்துவப் பண்புகளைத் தன்னகத்தே கொண்டோராக இருப்பினும் இரு இனத்தினரதும் தாய்மொழி தமிழ்தான். தெவுந்தரையில் இருந்து பருத்தித்துறை வரை வாழும் ஒரு மலாய் இனத்தினரைத் தவிர்த்து அனைத்து முஸ்லிம்களதும் தாய்மொழிதமிழ் தான். வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிவாயில் பிரசங்க மேடைகளில் வைத்து நிகழ்த்தப்படும்
15

Page 18
குத்பாப் பேருரையானது தமிழில் மாத்திரமே நடைபெற்று வருகின்றது. இவ் வொருமைப் பாடானது மொழிiரீதியான தேசிய வாதத்தில் தமிழர்களோடு முஸ்லிம்களை இணைத்து வைத் தது. இது பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது பின் வருமாறு குறிப்பிடுகின்றர்.
''There is an undeniable cultural unify between the Tamil and muslim groups through the use of the same language. The implications of linquistic Nationalism have aot allowed the muslims to emphasis adequatdy the significance of the use of Tamil as their mother tongue. This has to be appreciated in the context of the Sinhala - Budhist and Hindu Tamil Polarizations that were taking place in the evolution of Sinhala and Sri Lankan Tamil nationalism. However it is Significant that muslims have stressed the need of Tamil - medium education even in pre dominantly Sinhalese areas. Their substantial contribution to modern Sri Lankan Tamil Literature.
"ஒரே மொழியைப் பிரயோகிப்பதைக் கொண்டு தமிழர்களுக்கும் முஸ்லிம் குழுக் களுக்குமிடையே மறுச்க முடியாத ஒரு கலா சார ஒருமைப்பாடு இருந்து வருகின்றது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்க ளாக முஸ்லிம்கள் விளங்குவதால் மொழியியல் ரீதியான தனிப்பட்ட தேசிய வாதத்தை அவர் களால் அவ்வளவாக உறுதிப்படுத்த முடியாமற் போயிற்று. சிங்களவர்களின் எழுச்சியுடனும் தமிழ்த்தேசிய வாதத்துடனும் சம்பந்தப்பட்ட வகையில் தோன்றிய சிங்கள - பெளத்த, இந்து - தமிழ் பிரிவினைவாதங்கள் போன்றன இவர்களிடம் தோன்ருதது வரவேற்கப்பட
pos k stanby the si lai relationship, Inqilab muslim mayhs U
AZEEZ A. M. A. Ceylon muslims an Col. Sri Lanka, 10 - 02 - 1941.

வேண்டிய ஒரு விடயம். எவ்வாருயினும் சிங்கள வர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பகுதிகளில் கூட இவர்கள் தமிழ்மொழிப் போதனையின் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளனர். தற்கால தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பானது அவர் களது தமிழ் மொழி அர்ப்பணத்தை எடுத்துக் காட்டக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கை முஸ்லிம் களு க்கு ம் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்பு மிகத் தொன்மை வாய்ந்தது. தமிழ் எழுத்துக்கள் அவர்களிடம் பிரபல்யம் பெருத காலத்தில் தமிழில் சிந்தித்து அறபு எழுத்துக்களால் தமது சிந்தனைக்கும் கருத்துகளுக்கும் வடிவம் கொடுப் போராக அவர்கள் விளங்கினர். இ த ன ல் அறபுத் தமிழ் எனும் ஒருவகை எழுத்து வழக்கு உருவானது. இது பற்றி ஏ. எம். ஏ. அஸிஸ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்ருர்,
The Ceylon moors, frequently in the past and not frequently in the present have been using Arabic Script with neeessary modifications, to write their Tamil. This is called Arabic Tamil. Being. Tamil written in Arabic charectors, Arabic Tamil is something which neither the Arabs nor Tamils could understand. The Arabs being able to read but not understand while the Tamils could understand but for their inabilily to read the Scripts.
இலங்கைச் சோனகர், சென்ற காலத்தில் மிக அதிகமாகவும் சமகாலத்தில் குறைவாக வும் தங்களது தமிழை எழுதுவதற்கு அறபு லிபியைத் தேவையான திருத்தங்களுடன் பிர யோகித்து வந்துள்ளனர். இது அறபுத் தமிழ் என அழைக்கப்படுகின்றது. அறபு எழுத்துக்க ளால் தமிழ்மொழி எழுதப்படுவது தான் இது.
kan ethnic crisis and muslim - Tamil niversity of Jaffna, 1986/87 p. 22
| Their mother tongue, Ceylon Daily News,
6

Page 19
அறபுத் தமிழ் என்பது அராபியராலோ தமிழர்களாலோ விளங்கிக் கொள்ள முடியாத வொன்று. அராபியருக்கு வாசிக்க முடியுமாக இருந்தாலும் விளங்க முடியாது. தமிழர்களுக்கு விளங்க முடியுமாயிருப்பினும் வாசிக்க முடி யாத குறை அவர்களிடம் இருக்கின்றது.
தமிழ் மொழி மூலம் முஸ்லிம் சிருர்கள். தமது கல்வியைத் தொடர ஆரம்பித்ததுடன் தமிழ் - முஸ்லிம் உறவு வலுவடைந்ததுடன் முஸ்லிம் சிருர்கள் தமிழ் கலாசார பாரம் பரியங்களையும் தமிழ் சிறர்கள் முஸ்லிம் கலா சார பாரம்பரியங்களையும் விளங்கிக் கொள்ளும் வாய்ப்பேற்பட்டது. சர்வ சன வாக்குரிமை அமுலுக்கு வத்ததுடன் வகுக்கப்பட்ட சுய பாஷாத்திட்டத்தின் படி கல்வி நிர்வாக சபை யில் முஸ்லிம்கள் சார்பாக இடம் பெற்ற சேர் ராசிக் பரீட், டீ. பி. ஜாயா போன்றேர் முஸ்லிம்களுக்குத் தனியான பாடசாலைகள் வேண்டும் எனும் கொள்கையை அரசாங்கத் தின் கவனத்துக்குக் கொண்டுவர முஸ்லிம் பாடசாலைகள் உருவாயிற்று. எனினும் போத ணுசிரியர்களாக நியமிக்கத் தகுதி வாய்த்த ஆசிரியர்கள் அப்போது முஸ்லிம் சமூகத்தில் போதியளவு காணப்படாமல் இருக்தமையால் பெரும்பாலான வெற்றிடங்கள் தமிழ் சமூக சகோதரர்களைக் கொண்டே நிரப்பப்பட்டன. இக்க்ால கட்டங்களில் தோன்றிய பாடவிதா னத்துக்கு அமைவான நூற் களும் வேறும் உசாத்துணை நூற்களும் இந்துசமய கலாசார பாரம்பரியங்களையும், இலங்கைத் தமிழர்களின் கலாசார மரபுகளையும் அடிநாதமாக வைத்து எழுதப்பட்டதால் இவை முஸ்லிம் மாணவர் களிடம் செல்வாக்கைச் செலுத்தி நின்றன. இரு கலாசாரப் பாரம்பரியங்களும் முட்டி மோதும் வாய்ப்பேற்பட்டதால் கலாசாரப் புரிந்துணர்வும் பரிமாற்றமும் தோன்றலாயின.
சிறுபான்மை இரு இனங்கள் எனும் உணர்வு:
பெரும்பான்மைச் சிங் கள வர் களில் இருந்து கணிசமானவளவு வேறுபட்ட கலை,
மெளலவி அப்துர் ரஸ்ஸாக் எம். ஜ. დp தமிழ்க்கழகம், தொழிற்றிணைக்களம், கெr

கலாசார பாரம்பரியங்களைக் கொண்டவர் கள் எனும் உணர்வுதான் பேரினவாதத்துக் கெதிரான அகிம்சைப் போராட்ட காலத் திலும் பின்பு அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தகால கட்டங்களிலும் தமிழர்கள் முஸ்லிம்களைத் தம்மோடு இணைத்துக் கொள் வதற்கும் அவர்களது உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்தது. மற்றுமோர் சிறுபான்மை சமூகத்தை அர வணைத்து, அதன்மூலம் தமது விடுதலையுணர் வுகளில் அவர்களையும் பங்குதாரர்களாக்கி, தமது உணர்வுகளுக்கு உலக அரங்கில் பெறு மதிமிக்க அர்த்தத்தையேற்படுத்த முனைந்து வந்திருப்பதைக் கடந்தகால சம்பவங்கள், விடுதலையுணர்வின் பரிணுமம் என்பன தெட் டத் தெளிவாக ப் புலப்படுத்துகின்றன. தமிழ் பேசும் மக்கள், முஸ்லிம்களும் தமிழ ரும், இஸ்லாமியத் தமிழரும், தமிழரும் போன்ற சொற்பிரயோகங்கள் இவ்வுணர்வை வெளிப்படுத்துவதற்காகவென்றே முன்வைக் கப்பட்டன.
இவ்வுணர்வின் அடிப்படை யி லே யே சேர். டொன்னம்பலம் இராமநாதன் ஆரம் பத்தில் 1885 ல் இலங்கை சட்ட வாக்க சபையிலும் பின்பு முடிக்குரிய ஆசிய சமூகத்தின் இலங்கைக் கிளையிலும் பேசும்போது, ‘சோன கர் என்போர் இனத்தால் தமிழர்கள் மதத்தால் முஸ்லிம்கள், என எடுத்துக்கூறி தானே தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் தலைவர் எனக் கூற வைத்தது. இவரது இக்கருத்து முஸ்லிம்கள் மத்தியில் பல பாரிய எதிர் விளைவுகளையேற்படுத்தியது மட்டுமல்லாமல் "முஸ்லிம் நேசன்' ஆசிரியர் மறுமலர் ச் சித் தந்தை'எம். சி. சித்திலெப்பை, ஐ. எல். எம் அப்துல் அஸிஸ் என்போரின் கடுமையான் விமர்சனத்துக்கும் ஆளாகியது.
தமிழ் மக்களிடையே உரிமைப்போராட் டம் அகிம்சை வடிவத்திலிருந்து ஆயுதப் போராட்டமாகப் மரினுமம் பெற்ற போது தோன்றிய விடுதலை இயக்கங்கள் அனைத்தும்
ஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு, தமிழார, ாழும்பு 5, 1975.
7

Page 20
முஸ்லிம்களைத் தங்களுக்குள் ஒரு பகுதியினர் எனக்காட்டுவதற்கும் அவர்களைத் தங்களுடன் பங்குதாரர்களாக்கிக் கொள் வ த ந்கு ம் முயன்று வந்துள்ளன. அரசியல் வாதிகள் கூட பாராளுமன்றத்தில் முஸ்லிம் உரிமைகளுக் காகக் குரல் கொடுத்து ள் ளனர். முஸ்லிம் களிடம் தற்போது இவ் வாரு ன வோர் உணர்வு தோன்றியிருப்ப தோடு முஸ்லிம் தலைவர்கள் அரசியல் மேடைகளிலும், பகிரங்க மேடைகளிலும் பாாாளுமன்ற அமர்வுகளிலும் தமிழ் மக்களின் நியாயமான உணர்வுகளே மதித்துக் கருத்துத் தெரிவிக் து வருகின்றனர். இவையனைத்தும் நாம் இந்நாட்டின் சிறு பான்மை இனங்கள் எனும் உணர்வு வெர் களிடம் வேரூன்றியுள்ளதையே காட்டுவ தாக இருக்கிறது. இது இரு சமூகத்தினரும் மதிக்கும் கலாசார பாரம்பரிய அம்சங்களில் ஒன்றித்த பண்புகள் காணப்படுவதற்கு க் காரணங்களாக இருந்து வந்துள்ளன.
இந்திய கலாசாரச் செல்வாக்கு:
அறபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு கெளதம புத்தரு 6) காலத்தில் இருந்தே இருந்து வந் துள்ள தெனினும் இவ்வுறவானது உண்மை வடிவம் பெற்றது கி. பி. 8 ம் ஆண்டுக்கும் 12 ம் நூற்ருண்டுக்கும் இடைப்பட்ட காலத் தில் தான். கி. பி. 8 ம் நூற்ருண் டள வில் இந்துஸ்தான் வரை கைப்பற்றிய முஸ்லிம் வெற்றியாளர்களின் முயற்சியால் விஞ்ஞான கலாசாரப் பரிமாற்றங்களுடன் கருத்துப் பரிமாறல்களும் இருநாடுகளுக்குமிடையே தோன்றலாயின. இந்தியாவைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் ஆளமான முறை யில் இவர்களது மனதிலேற்பட்ட அன்பின தும் பாசத்தினதும் காரணமாக சிந்து, பஞ் சாப் மா கா ணங்களின் அதிகாரிகள் என்பதைக் கூட மறந்து இந்தியர் களு டன் ஒன்றிணைந்தனர்.

சமஸ்கிருத மொழியில் காணப்பட்ட பல புத்தகங்கள், அறிவுக் கருவூலங்கள் அ ற பு மொழியில் பெயர்க்கப்பட்டன. மெளரிய குப்த காலங்களைச் சேர்ந்த இவ்விந்தியக் டு வூலங்களை அறபு நாடுகளுக்கு எடுத்துச் சென் பரப்பும் பணியில் அபூஸைத் அல் - ஸைராபி' ஸிலைமான் தாகிர், அல் - மளிதி, இப்னு ஹோகல், அல் - ஜாஹிழ், அல் - இஸ்தக்ரி, அல் - மக்தீஸி, இப்னுஹஸம், இப்னு அல்நதீம், இப்னு அபீ உஸைபா, இப்னுல் கிபாரி, இப்னு ஷஹ்ரயார், அல் - மர்வாஸி, அபுல்பிதா, அல்-பிரூனி, இப்னு பதூதா போன்ருேரின் பணி இத்துறையில் குறிப்பிடத்தக்கது. இந்தி யாவுக்கும் அறபு நாடுகளுக்கும் இடையிலான வர்த்ககத் தொடர்பு இ. மு. 2800 -வது ஆண் டில் இருந்தே நிலவி வருகின்றது. அறபு - இந் திய கலாசாரத் தொடர்பார்ல் அறபு மொழி யில் பல இந்தியச் சொற்கள் புகுந்ததுடன் இந்திய மொழிகளில் அறபுச் சொற்களும் புகுத்தன, அரேபியர் 7-ம் 8-ம் நூற்றண்டு களில் இருந்து 16-ம் நூற்ருண்டு வரை இந்தி யாவுக்குள் வந்து குடியேறிய வண்ணம் காணப்பட்டனர்.
1258 - ம் ஆண்டில் அப்பாசில கிலாபத் தின் தலைநகரமாகவிருந்த பக்தாத்நகரம் மங் கோலியர்களின் தாக்குதல்களுக்கு ஆட்பட்டு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் அரேபியரின் ந ட மாட் டம் வெகுவாக்க் குறைந்தது. பக்தாதின் வீழ்ச் சியைத் தொடர்ந்து இலங்கைக்கும் அரேபி யருக்கும் இடையிலான நேரடித் தொடர்பு இல்லாமற் போய்விட்டது. இவர்களது பய ணம் இந்தியாவினூடாக அல்லது இந்தியாவில் ஏற்கனவே குடியேறியோர் மூலமாகவே மேற் கொள்ளப்பட்டதால் ஏற்கனவே இந்திய கலா சாரத் தாக்கங்களுக்குட்பட்ட அரேபியர் அவற்றை இலங்கையில் குடியேறிய வேளை யிலும் தொடர்ந்து அமுல்படுத்தியதுடன் கலாசார பாரம்பரியங்களாகப் பின்பற்றியும் வந்தனர்.

Page 21
இந்து - பெளத்த அ
திருமதி. தன
இந்து மதம் மிகப் பழை  ைம ய ர ன தோற்றுவாயை உடையது எனினும் இந்து மத வளர்ச்சியில் உண்மைத் தத்துவ ஆய்வு கள் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்கையில் மறுபுறத்திற் சமுதாயதேவைக் கப்பாற்பட்ட முறையில் இறைவனிடம் பக்திசிரத்தையை யேற்படுத்தாத சமயக்கி ரி யை கள் பெருகி வளர்ந்து கொண்டிருந்தன. இக்காலகட்டத் திலேதான் இந்துவாகப் பிறந்த சித்தாத்தர் இல்லற வாழ்க்கையினின்றும் தம்மை விடு வித்துக்கொண்டு, தம் சமுதாயத்திற் பெருகி வளர்த்திருக்கின்ற இந்துசமயக் கிரியைகள் இம்மைக்கோ அல்லது மறுமைக்கோ உதவ வல்லன அல்ல எனக் கருதிப் வல்லாண்டுகள் தவமிருந்து தமது அனுபவவாயிலாகக் கண்ட உண்மைகளை அடிப்படையாகிக் கொண்டு பெளத்த மதத்தினை உருவாக்கினர். இவ்வாறு தாம் உருவாக்கிய பெளத்த மதத்தின் அற நியமங்களைத் திரிபிடக எனும் நூலில் விரித் துரைத்ததோடு,தாம் எவ்வுயிர் களுக்கும் நன்மைபுரியும் பொருட்டுப் பல்பிறப்பெடுத்து எழுந்தருளுவர் என்றும் மக்களுக்கு உணர்த் தினர் அதனல் அவருடைய காலத்திலேயே பெளத்தமதம் மக்களுககுப் போதிக்கப்பட்டு, இந்திய மச்களும் தழுவ லா யி ன ர். அயல் நாடு சளிலும் பரப்பப்படலாயிற்று. அதனுலே பெளத்த மதம் இன்று உலகப்புகழ் வாய்ந்த மதமாகத் திகழ்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இதுகாறும் நடைபெற் றுள்ள தொல்லியல், வரலாற்று ஆய்வுகள் தமிழகத்திலும், ஈழத்திலும் பெளத் தம் தமிழ் மக்க ளி  ைட யே வகித்த உன்னத நிலையை எடுத்துக் காட்டியுள்ளன. சிறப் பாசுப் பல பெளத்தத் தமிழ்ப் பெரியார்கள் தமிழிலக்கண, இலக் கி யங் களை யாத்துத் தமிழ் மொழியை வளம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்றும் அறிகின்ருேம். அதும்ட்டுமன்றிக் கி. பி. 6ம் நூற்றண்டள

றநியமங்கள் . ஒப்புமை
ாக்கியம் குணபாலசிங்கம் எம். ஏ. ஏருவூர்
விற் களஞ்சி அரசபரம்பரையைச் சார்ந்த வரான போதி தம்மர் நெறிப்படுத்திய "தியான மார்க்கம்" என்ற பெளத் த நெறியே சீனவிற் 'சன்மதம்" என்வும் ஜப் பானில் "சென்மதம்" எனவும் புகழ்பெற லாயிற்று. எனவே இன்று பெளத்தம் உலக சமயங்களுள் ஒன்ருக விளங்குகின்றதெனில், அதன் இன்றைய நிலைக்குத் தமிழர் அன்று ஆற்றிய பங்களிப்புகளும் காரணிகளாகின் றன எனில் மிகையாகாது. பெளத்த மத வளர்ச் சி யிற் தமிழர் அன்று ஆற்றிய பணிகள் இவ்வாறு இருப்பினும், இன்று பெளத்தம் தமிழ் மக்கள் மத்தியில் வேரோ டற்றுப்போய்விட்டது. இதன் காரணத்தை ஆய்வதே இக்கட்டுரையாகும்.
உலகின் வேறெந்த மதங்களிலும் இல் லாதவாறு ஆன்மீகசிந்தனை பெருகி வளர்ந்த மதம் இந்து மதமாகும். இந்து மதத் தத்துவங் கள் காலத்துக்குக் காலம் தர்க்கரீதியான ஆய்வுகளுடன் வளர்ந்து வந்துள்ளன. இந்த இந்துமத தத்துவங்களின் மூலநூல்க ளா ன வேதாகமங்களை இறைவனே வகுத் தன ன் என்பர் எம்முன்னேர். இதற்குத் திருஞான சம்பந்தர்
"தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன்” என்றும்
.." தொன்மறை யாற்ங்கம் ஆய்ந்தவன்" என்றும் கூறுவதை, நாம் ஒரு மேற்கோளாகக் கொண்டு உய்த்துணரத்தக்க தாம். மேலும் இறைவனே இந் மெய்நெறியின் நுண்பொருளினை உணரத்தக்க ஞானம்மிக்க அகச்சந்தான குரவராகிய திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞானதரிசினிகர், பரஞ் சோதிமுனிவர் முதலான நால்வ ருக்கு ம் உபதேசித்து, அவர்கள் மூலமாக உயிர்கள்
9

Page 22
நால்வகை உறுதிப் பொருள்க ளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) அறிந்து ஒழுகி, உய்திபெற வழிவகுத்தனர் என்பதனையும் "பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப் பல்
லுலகினிலுயிர் வாழ்க்கை கண்ட நாதர்"
என்றும் திருஞானசம்பந்தர் கூறுவதிலி ருந்தும் நாம் கண்டுகொள்ளலாம்.
இவ்வாறு வேதசிவாகமங்களுள் இறை வனல் உரைக்கப்பட்ட பதி, பசு, பாசங் களின் உண்மை விளக்கத்தினைக் கிறித்துவிற் குப் பிற்பட்ட நூற்ருண்டுகளில் இந்துசமயக் குரவர்களும், புறச்சந்தான குரவர்களும் சங்கரர் வழிநின்ற தத்துவ ஆசிரியர்களும் உலகோர்க்கும், ஞானநெறி நிற்போர்க்கும் எடுத்துரைக்கலாயினர். (வேதசிவாகமங்களுள், வேதங்கள் உலகோர்க்கும், சிவாகமங்கள் இறைவனின் அருள்ச்சத்தி விழந்த சத்திநிபா தருக்கும் வகுக்கப்பட்டனவாம்) இச்சமயா சாரியர்களும், தத்துவாசிரியர்களுமே வேத சிவாகமங்களில் உரைக்கப்பட்ட அறநியமங் களைப் பிற மதவாதங்களுடன் தர்க்கரீதி பாக வாதிட்டு, இவையே ஒருவனின் வாழ்க் கையை ஈடேற்றவல்லன என்றும் நிலைநிறுத் த்லாயினர்.
ஏற்கனவே பெளத்தம் சிறந்ததொரு வாழ்க்கைத் தத்துவத்தினை, ஆன்ம ஈடேற்ற வழிகளை உலகோர்க்கு வகுத்திருந்தபொழுதி லும் பெளத்தத்தின் அறநியமக் கோட்பாடு கள் அத்திவாரமிடப்படாது எழுப்பப்பட்ட ஒரு வீட்டின் பகு தி களை நிகர்த்தனவாம்" அதாவது பெளத்தத்தின் அறநியமங்கள், அவ்வீட்டில் நம்பி வாழும் சாதகர்களுக்கு உறுதி யா ன பலனை அளிக்கவல்லனவல்ல. ஏனெனிற் பெளத்தம் உண்மைப்பொருள் களான பிரம்ம விசாரணை, ஆன்ம விசாரணை, பிரபஞ்ச விசாரணை என்பன குறித்து முன் பின் முரணன கருத்துக்களைக் கொண்டிருந்த தேயாம். அதனுற் பெளத்தம் பெளத்த, மதத்தினைச் சரணடைந்த ஆன்மசித்சக்தி மிக்க ஒரு சாதகனை வழிப்படுத்தத் தவறி விடுகின்றது எனலாம்.

சிறப்பாக இந்துமதம் கூறுகின்ற, கருமங் களின் பிணிப்பாற் தொடர்கின்ற சுழற்சி யான பிறப்பு வட்டத்திலிருந்து ஒருயிர் தன்னை விடுவித்துக்கொள்ள அருள் பாலிப்ப வரும், உயிர் மீது கழிவிரக்கம் கொண்டி ரங்கி, உயிருடன் ஒன்ருய், வேருய், உடனுய் நின்று இயங்குகின்றவருமான என்றும் உள்பொரு ளான இறைவனைப் பற்றிப் பெளத்தம் எது வும் கூறவில்லை. அதற்குப் பதிலாக எவ்வுயிரி டத்தும் அன்புடையவரான புத்தர் "பல்பிறப் பெடுத்து உயிர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டுக் குருவாக அரசமர நிழலில் உரு வத்திருமேனி கொண்டெளுந்தருளுவீர் என் கிறது. புத்தர் பல பிறவிகளை எடுப்பவர் என்பதனல், பெளத்தத்தில் உயிருக் கும், உடம்புக்கும் தோன்றுகின்ற கணபங்கவாதம் உலகோருக்கு அருள் புரிகின்ற கடவுளாகிய புத் தருக்கும் உரியதாகின்றது. (அறிவும், அறியப்படும் பொருளுங் கண ந் தோறு ம் தோன்றி அழிகின்றன என்பதே பெளத்தத் தின், கணபங்கவாதமாகும்) இவ் வித மே உயிரின் பிறப்பென்பதும் குற்றம், østlåst, வினைப்பயன் காரணமாக ஐவகைக் கந்தங் களின் (உருவம், வேதனை. குறிப்பு, பாவனை, விஞ்ஞானம்) கூட்டமாய் உடம்பின் கண் எழும் பலதிறப்பட்ட அறிவுகளே உடம் புடன் கூடி நிலையற்றதாய் அழிவுறுமேயன்றி, உயிரென்ற ஒரு நித்தியப் பொருள் இல்லை என்கிறது. மூப்பென்பது கணத்திற்குக்கணம் ஏற்படும் மாற்றத்தினுல் நிலையற்றவையான உயிரும், உடலும் மாற்றமடைகின்றனவே பன்றி வேறென்றுமல்ல என்று கூறும். பிறவித்துன்பம் அறுதலாவது கந்கங்களின் கூட்டம் அழிவுறுதலேயாம். ஐங்கத்தமும் முற்ருக அற்றுப்போதலே முத்தி என்ப தாம். மேலும் அறிவிலேதான் உலகந்தோன் றுவதென்றும், அறிவின் வேருய உலகம் என்ற நித்திய சடப்பொருள் எதுவும் இல்லை என்றும் பிரபஞ்சம் பற்றியும் சூனிய வாதமே கூறுகின்றது. இவ்வாறு கடவுள் - உயிர் - உலகம் பற்றிப் பெளத்தம் இத்தகைய விளக்கங்களைத் தந்ததற்கு அடிப்படையாக இருந்த காரணம், பெளத்தம் காட்சி, கருதல் எனும் இரு அளவைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டு இத்தத்துவங்களை ஆய்ந்தமையாம்.
20

Page 23
எனினும் பெளத்தம் குருஉண்மை, அறி வுண்மை, கன்மம், மறுபிறப்பு, நிருவான நில, விடுதலைக்கான சாதனங்கள் என்ப வற்றை ஏற்றுக்கொண்டுள்ளது. சிறப்பாகப் பெளத்தம் வாழ்க்கை பிறவித் துன்பத்தின் சுழற்சி என்று கருதியமையாற். கவனமான முறையில் ஒருவன் இத்துன்பக்கடலிலிருந்து விடுவித்துக் கொண்டு நிருவாண நிலையை யடைய வழிவகுக்கின்ற சாத்வீகமான சாத னங்களை அறநியமங்களாக நெறிப்படுத்தி புள்ளமை அவதானிக்கத்தக்கது. ஒருவன் துன்பம் தருகின்ற பிறப்பிற் சிக்காமல் நிரு வாண நிலையையடைவதற்குரிய சாதனங்க ளாகத் தானம், சீலம், பொறை வீரியம். தியானம், உணர்ச்சி, உபாயம், அருள், வலி, ஞானம் என்பன வகுக்கப்பட்டுள்ளன. இவற் றுள் உலகோர் தானமும், சீலமும் மேற் கொள்வர். சீலம் என்பது மனம் வாக்குக் காயங்களை அடக்கி அறவழி நிற்பதாகும். இந்த அறிநெறியானது கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, புறங்கூருமை வன்சொற் கூருமை, பயனற் றவை மொழியாமை, வெஃகாமை, வெகு ளாமை, நற் காட்சி என்பனவாம். இவற்றைக் கடைப் பிடிப்பதனுல் ஒருவன் மறுபிறப்பில் நல்ல பிறப்பை எடுக்கின்றன்.
மேலும் நிருவானநிலையையடைய முயல் லோருக்குப் பெளத்தம் நால்வகை ஒாய்மை களை வகுத்துள்ளது. அவையாவன துக்கம், துக்ககாரணம், துக்கநீக்கம், துக்கநீக்கநெறி என்பனவாம். இவற்றுள் துக் க மென்பது பிறப்பு, பிணி, மூப்பு, சாவு, நுகர்வு முத லான வழிகளில் ஒருவனை வந்தடையும். இத் துக்கத்திற்குக் காரணமாய் அமைபவை பற்று, அறியாமை, செயல், வேட்கை, வினைப்பயன் ஆதியனவாம். துக்கத்தை நிவா ரணம் செய்தல் என்பது ஒரு பொருளின் மீது வைக்கப்படுகின்ற பற்றனது துன்பத் திற்கும், பிறப்பிற்கும் காரணம் என்று அறி தலாம். துக்கநீக்கமாவது, பற்றற்ற நெறியே நிருவாணத்தையடைய வைக்கின்ற தெறி யெனக்கொண்டு அவ்வழி நிற்றலாம். இவ் வாறு துக்கநீக்கத்துக்குரிய பற்றறுத்தலைப் பெளத்தம் அசுபபாவனை என்கிறது. இப் பாவனையைத் தொடர்ந்து ஏற்படுகின்ற
حی 4.

மைத்திரி பாவனை (எல்லா உயிர்களிலும்
அன்பு செலுத்துதல்), கருனைப்பாவனை (பிற
உயிர்களின் துயரை நீக்க விரும்புதல்), முதி
தைப்பாவனை (பிற உயிர் இன்பம் கண்டு
அகமகிழ்தல்) முதலான பாவனைகளாற் திருத்
திய உணர்வுடன் அறிவுரை கேட்டல், கேட் டதைச் சிந்தித்தல், கேட்டவாறு நடத்தல்,
உண்மை தெளிதல் முதலான நான்கு நெறி
களின் வழிநின்று அஞ்ஞானமாகிய அக VK. இருளை அகற்றல்ே நிருவாணநிலையை அடைய
வைக்கும் என்கிறது.
எனவே ஒருவன் பிறப்பு வட்டத்திவி ருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குரிய சாதனமார்க்கமாகவே பெளத் தம் மேற் குறிப்பிட்ட அறநியமங்களை வகுத்துள்ளது. இது இயல்பாகவே இந்து மதம் கூறும் ஐம் பொறியடக்கமுடைய ஞானியர் நியமங்க ளாம். எனவே உலகஞானம் கைவரப்பெழுது பெளத்த சங்கத்தையணுகிய பிரம்மச்சரிய னுக்கு, இவை இலகுவிற் சாத்தியப்படுவதில்லை என்பதனைக் கடந்தகாலப் பெளத்த சங்க வரலாறுகள் எடுத்துக்காட்டியுள்ளன. ஆணுல் இந்துமதம் ஒருவன் வாழ்க்கையில் முழுமை யான அனுபவங்களைப் பெற்ற பின்னரே முற்றுணர்வுபெறும் நிலையையடைய முடியு மெனக் கொண்டு அறம், பொருள், இன்பம், விடு என்ற உறுதிப் பொருள்களையும், பிரம்ம சரியம் (சிட்ராய் நின்று கல்வி கற்கும் நி3) இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனும் நால்வகை வாழ்க்கைநிலைகளையும் வகுத்துள்ளமை சிறப்பாக அவதானிக்கத் தக்கதாகும்.
மேலும் பெளத்தத்தின் கருமம், மறு பிறப்பு. அறநியமங்கள், நிருவாணநிலை என்ற கோட்பாடுகளை ஆராயுமிடத்துக் கணபங்க வாதத்தினல் அறிவும், அறியப்படும் பொரு ளும் கணந்தோறும் தோன்றியழிகின்றன என்று பெளத்தம் கூறுவதனல், உயிர் உலகம் என்ற நிலையான பொருள்கள் எதுவும் இல்லை யென்று தெளிவாக்கப் படுகின்றது. அப்படி யானுல் நிலையற்ற (இல்பொருளான) பொரு ளான உயிர் மீது கருமத் தொடச்சிகளையும், பிறப்புச் சுழற்சிகளையும், அறநியமங்களையும், நிருவாணநிலைகளையும் பெளத்தம் ஏன் சுமத்

Page 24
துகின்றது என்ற வின இயல்பாகவே எழு கின்றது. எனவே இககோட்பாடுகள் யாவும் முன் பின் முரணித்து நிற்பதை நாம் அவ தானிக்கலாம். மற்று உயிர்களுக்கு உதவி செய்வதற்காகக் குருவாக எழுந்தருளுகின்ற புத் தரும் பலபிறப்புக்களை எடுக் கின் ரு ர் என்பதனுற் குருவாய் வருகின்ற புத்தரும் கணபங்க வாதத்திற்கு உட்பட்டு அழிந்து போகின்ற தன்மையுடை ய வ ரா த லா ல், இவருடைய பிறப்பினை அறுக்க இந்து மத ஆகமங்கள் கூறுகின்ற அருளே குரு வடிவம் கொண்டெழுந்தருளல் அவசியமாகின்றது. சிவாகமங்கள் சகலநிலையிலுள்ள மானிடர்க் குப் பக்குவமுதிர்ச்சி கண்டு பரம்பொருளே ழ்ானுடவடிவில் நின்று அருள்புரிவர் என்னும் இங்கு எழுந்தருளும் ஞானகுரவர் மானுட வடிவிற் தோன்றினும் அத்துவிதப் பரமுத்தி யின்பம் துய்ப்பிக்கும் தூய அருளே யா ம் என்றும் கூறுகின்றன. இந்த ஞானம் பேரறி வுக்குரிய ஞானகுரவருக்கு அல்லாமல் வேறெ வருக்கும் அமையப் பெ ரு த தாம், இந்த நியமத்தினை
"துன்னியவைம் புலவேடர் சுழலிற் பட்டுத் துணைவனையு மறியாது துயருறுந்தொல் லுயிரை மன்னுமருட் குருவாகி வந்தவரி னிக்கி மலமகற்றித்தானுக்கிமலரடிக்கீழ் வைப்பன் .ெ சி. கயக்கம் (செய். 253) எனும் சூத்திரத்தில் கண்டு நாம் தெளியலாம்.
இந்துமதத் தத்துவங்கள் இல்லறமே துறவறத்திற்குக் காரணம் என்றும், காரண காரியமுறைப்படி இல்லறம் முன்னும் துற வறம் பின்னுமாக மானுட வாழ்க்கையை இரண்டு பெரும்பகுதிகளாக்கித், தானமும் பூசையும் இல்லறத்தாருக்கும், தவ மும் விரதமும் துறந்தார் செய்யப்படவேண்டிய அறங்களெனவும் வகுத்துள்ளன. எனவே இந்து மதம் இல்லறம் என்பது துன்பம் விளைவிப்பதெனக் கண்டு துறந்துவிடும்படி கூறவில்லை. அதற்குப்பதிலாக வாழ்க்கையின் பல கட்டங்களிற் படிப்படியாக ஒருவன் அனுபவிக்கின்ற இன்பதுன்ப அனுபவங்களே அவனை வாழ்க்கையெனும் கடலை நீந்திச்

r
கரையேற உதவுகின்றன எனக்கூறும். இறை வனின் மூர்த்தங் :ளல் ஒன்ருன அர்த்தநாரி சுவர உருவத்திருமேனியும், உயிர் களைப் போகங்களை அனுபவித்து உவர்ப்ப  ைடய வேண்டுமென்கிறது. பெளத்தமோ வாழ்க் கையின் துன் பங்களைக் கண்டு கிலேசமுற்ற வரான கெளதமரால், ஒருவன் எவ்வாறு தன்னைத் துன்பங்களினின்றும் விடுவித்துக் கொள்ளலாம் என்ற தேடலினுல் உருவாக் கப்பட்டதாகும், எனவே பெளத்தம் உண் மைப்பொருள்கள் பற்றிய தேடலில் அதிக அக்கறை காட்டவில்லை என்பதும் தெளி வாகின்றது. அதனலே பெளத் த த் தின் கோட்பாடுகள் முரணுயின எனலாம். பெளத் தத்தின் முரண்பட்ட கோட்பாடுகளிலிருந்து, இந்துமத அறநியமங்களைப் பூரணமாக நாம் விளங்கிக் கொள்ள மு டிகின் றது எனில் மிகையாகாது. பெளத்தத்தின் குறைபாட்டினை அப்பர் சுவாமிகள்
"மெய்த்தவன் காண் மெய்தவத்தில் நிற்பார்க் கெல்லாம் 'பொய்த்தவன் காண் புத்தன்' “என்றும் மாணிக்கவாசக சுவாமிகள் "புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்” என்றும் எடுத்துரைப்பதனல் நாமும் உய்த் துணரக் கூடியதாக இருக்கின்றது.
இந்துமதத் தத் துவங்களிற் சிறப்பாக வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் பதி, உயிர் என்பன எமது ஊனக்கண் களாற் கண்டறியத்தக்கணவல்ல, ஆதலால் இவற்றினை ஆகமம் காட்சி, கருதல் முதலான அளவைகளாலும், ஆன்ம சிற்சக்தியாலும் "என்றும் உள்பொருள்கள் எனக்கூறும். இதன் பிரகாரம் இல்பொருள் தோன்றது. உள் பொருளே தோன்றும் என்று பிரபஞ்சத்தின் ஒடுக்கத்திலும் அது உள்பொருள் என்றும், உள்ள காரியம் உள்ள காரணத்தினின்றும் ஒரு கருத்தாவினுற்ருன் தோற்றுவிக்கப்படும் என்பதனுற் பிரபஞ்சத்தின் ஒடுக்கத்திற்கும். விரிவிற்கும் கருத்தா வேண்டும் என்றும் கூறுகின்றது. மற்று இறைவன் ஆணைப்படி தத்தம் கருமத்திற்கேற்கப் பிறப்பு வட்டத் திற் சுழல்கின்ற உயிர்களும் என்றும் நித்தி யத்தன்மையுடையனவாய், எண்ணிறந்தவை
22

Page 25
யாய் உள்ளன. அவை அருவத்தன்மையுடை யனவாயினும் எண்பத்து நான்கு நூருயிரம் யோனி பேதங்களையுடைய உடல்களில் வசித் திடவரும் வியாபகத் தன்மையுடையவை அறிவுப்பொருளாயினும் அனுதியே மூலமலத் தினுல் அறிவுமறைப்புண்டிருப்பதனற் சார்ந்த தன் வண்ணமாய் நிற்கும் இயல்புடையன. அதனுல் அவை முற்றறிவுடைய இறை, அறி வற்ற சடப்பொருளாலான உடற்கருவிகள் என்ற இரண்டையும் சார்ந்து, அது அது வாய் அறியும் சிற்ற்றிவுடையன என்பது சித்தாந்த நெறியாம்.
எமது இந்த உடலுடன் ஒரே காலத்திற் தோன்றி ஒன்ருகி, உடனுகி, வேருகி இயங் குகின்றதான உயிர் உளதா என்று நாமும் சிந்திப்போமானல், எம்முன்னே ஒரறிவுமுதல் எண்ணறிவுவரை அறிவு விளக்கமுடைய உயிர்ப்பொருள்சளும், அறிவுவிளக்கமற்ற சடப்பொருள்களும் இருப்பதை நாம் அறி வோம். எனவே இந்த உயிர்ப்பொருள்களை எடுத்து அவற்றின் உறுப்புகளில் உயிர் இருக் கின்றதா என்று நாம் ஆராயின், உயிரின் இருப்பிடத்தை எங்கே என்று கூறமுடியா திருக்கின்றது. எனவே "இங்கில்லை” "இங் கில்லை" என்று கழித்து விடுகின்ருேம். அவ் வாறு எம்மிடத்தில் எற்படுகின்ற அறிவே உயிராம். ஒருயிர் தன் பிறப்பு முதல் இறப்பு வரை நிலையான அறிவு வளர்ச்சியனுபவங்க ளைக் கொண்டதாய், உடற்கருவிகள் துணைக் கொண்டு மறந்து, மறந்து அறிவதும் எம் அனுபவமாம். இதன் காரணம் வினைப்பயனே வினைப்பயனுலே உயிர்கள் அறிவு வேறுபாடு டைய அச்சுக்களிற் பிறக்கின்றன என்பதனை
நிலத்தியல்பால் நீர்திரிந்தற்ருகும்
• மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு (குறள்: 452) நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும் (குறள்: 337) எனும் திருவள்ளுவரின் குறள்களுடன் ஒப்பிட்டுணர்தல் நன்று
மேலும், உயிர் உட்லில் ஆன்மதத்துவங்
கள் இருபத்துநான்குடனும் கூடி, அது அதுவாக அழுத்தி அறிவதே ஆன்மதுகர்ச்சி

w
யாம். எனவே உடம்பு, ஐம்பொறிகள், பிராணவாயு. அந்தக்கரணங்கள் என்பவற்றுள் ஒன்று குறைந்தாலும், உயிரின் அறிவு நிகழா மையால், உயிர் இத்தத்துவங்கள் யாவற்று டனும் ஒன்ருகியும், வேருகியும், உடனயும் நின்றே தொழிற்படுகின்றது என்பது தெளி வாம். மேலும இந்திரியங்கள் வாயிலாக வரும் விடயங்களைச் சடப்பொருளிற் (பிரகிருதியிற்) தோன்றியதான புத்திநிச்சயிக்கையில், ஆன்மா விற்கு அறிவை எழுப்பும் வித்தியாதத்துவம் வாயிலாக, அவ்வுயிர் செய்த புண்ணிய பாவங் களுக்கேற்ப விடயங்களை 'அது' 'இது” எனத் தீர்மானிக்கும். இவ்வாறு உயிர், புத்தி முத லான கருவிகளின் துணைக்கொண்டு அறிவது ஆராய்ச்சி அறிவாகும். ஆனல் உயிர் ஒன்றின அனுபவரீதியாக அறியும்பொழுது தானே அறிகின்றது. எனவே சடப்பொருளின் தோற்ற மான மூளையின் மாற்றுச் சிகிச்சையிஞ ல் உடல்வேறு, தலைவேருகப் பொருத்தப்பட்ட இரு குரங்குகளின் நடவடிக்கைகள் வழமை போல இருந்த்ன எனில், அவை புத்தியின் வழமையான செயற்பாடே எனலாம். எனவே உயிர், மூளையில் ஏகதேசியாக இருக்கின்றது என்றும், அதனல் மூளையை மாற்றினல் ஒரு உயிரை மாற்றினதற்குச் சமனனது என்னும் இன்றைய வைத்திய நிபுணர்கள் உயிருக்கு உருவைஏற்றி, ஓரிடத்திலே பதியவைப்பதனல் உயிர் அழிந்துவிடக் கூடிய பொருளாகின்றது. இதனை மறுத்துரைக்கின்ற
'உடலினி லேக தேசியுயிரெனினுருவாய் மாயும” (சி. சி. சுபக்கம். செய். 206) சிவீஞானசித்தியார் பாசுரத்திலிருந்து நாமும் உண்மையை உய்த்துணரலாம். இதே வழியில் உயிர் சரீரமெங்கும் நிறைந்து நின்று அறியும்
என்பதும் பொருந்தாது என்பதனை
உருவினி னிறைந்து நின்றங் குணர்ந்திடு முயிர தென்னின்
வருமுடற் குறைக்க வொக்கக் குறைந்து பின் மாயு மன்றே
(சி.சி. சுபக்கம், செய். 207)

Page 26
எனும் செயுளாலும் நாம் உணரலாம். எனவே உயிர் உடலில் ஆகாசம்போல் grīš கும் நிறைந்து வியாபியாமலும், உட வின் ஆன்மதத்துவங்களில் ஒரு த த்வத் தி &or L'ג பொருந்தினுல், அதிலேயே வியாபித்து அறியத் தக்கதாயும் , மற்றுந் தான் வசிக்கின்ற உடலில் வியாபிக்சத்தக்கதாயும் இருக்கும் 8 நிலையையேசைவசித்தாந்திகள்‘வசித்திடவரும் வியாபி" என்பர். எனவே துண்டமாக்கப் பட்ட உடலில் வேதனைக்குட்படுத்தப்பட்டு ஆணை தளர்ந்திருந்ததும், புத்தியின் வேருனதுமான உயிரின் வியாபகம் சிரசின் மேற்பரப்புவரை ஒடுங்கிப் பின் தன் அறிவுத் தொழிற் பாட்டிற்கு உதவாத உட லை விட்டு நீங்க லாயிற்று என்பதே சித்தாந்தத் திறனும்
மற்று, மறுபிறப்புக் கோட்பாடு பற்றிய நவீன கண்டு பிடிப்புகளும், ஆய்வுகளும் உயிர்கள் என்றும் உள்ள பொருள்கள் எனவும், கருமத்தின் பிணிப்பாற் பல்லாயிரக்சனக்கான ஆண்டுகளாகப் பிறப்பு வட்டத்திற் காற்ருடி போற் சுழன்று கொண்டிருக்கின்றன என்பதனை பும் உறுதிப்படுத்தியுள்ளன.
உயிர்களின் பிறப்புக்களில் மானுடப் பிறவி எடுத்தல் பெரிய சமுத்திரத்தைக் கை யினலே நீந்திக் கரையேறினதற்கு நிகராம். எனவே தான் இந்து மத அறநியமங்கள் மானுடவாழ்வில் ஒருவன் அறம் பொருள், இன்பம், வீடு எனும் உறுதிப்பொருள்களை யும், மாணுக்கன், இல்லறம், வானப்பிரஸ் தம், சந்நி யாசம் எனும் நால்வகை வாழ்க்கை நிலைகளையும். சரியை, திரியை, யோகம்
1. ச. தண்டபாணி தேசிகர், திருக்குறள்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம். s. Dr T B. Siddalingaiah, Origin and
century, 1979.
(பிரதிகள் கிடைக்குமிடம் பது கா. சுப்பிரமணியபிள்ளை, மாணிக்கவாச சிவஞானசித்தியார் சுபக்கம் மணிமேகலை, காதைகள் 29, 30. இரா. நாகசாமி, "தமிழகமும் பெள உலகத் தமிழ்க்கருத்தரங்கு மாநாடு, ே . ஜி. தனபாக்கியம் இலங்கையிற் தொல் இயல் 6 இலங்கையிற் தமிழர் வளர்த்
:
7

ஞானம் முதலான சாதனமார்க்கங்களையும் சாதகர்கள் சத்தம் பக் குவப் படி கைக் கொண்டு பிறவித்தளையை அறுக்க முயல வேண்டும் என்று வகுத்துள்ளது.
எமது நாயன்மார்களில் ஒரு வ ரா ன சாக்கிய நாயனர், w "ஈசர் அருள்கூட ஈறில் சிவநன்னெறியே பொருளாவதெனஉணர்வு நாட்டுவார்’ எனப் பெளத்தமதத்திலிருந்து சைவத் திற்கு மாறினர் என்பது நாயன்மார் சமய வரலாறு. மேலும் வாழ்வின் பிற்காலத்தில் இந்துமத அறவழி நின்ற அப்பரும், சம்பந் தர் முதலான சமய குரவர்களும் பெளத்தம் ஆன்ம ஈடேற்றத்திற்கும் போ திய தா கா தெனத் தமது பாசுரங்களில் எடுத்தியம்பி யுள்ளனர். மாணிக்கவாசக சுவாமிகள் பெளத் தருடன் வாதிட்டு, அவர் வினுக்களுக்கு விடைபகர்ந்தவையாகவே திருக்சாழல் எனும் திருவாசகம் காணப்படுகிறது.
எனவே நாம் மேலே அவதானித்தவாறு பெளத்தம் அடிப்படை உண்மைகளை நெறிப் படுத்தத் தவறிய விடத்தும் ஒருவனின் வாழ் விண் நெறிப்படுத்தும் தத்துவங்களை வகுத் துள்ளது என்பது உறுதியாம். பெளத்த தரு மத்தின்படி நெறிப்படுத்தப்பட்ட ஒருவனின் ஆன்ம ஈடேற்றம், புத்தரின் ஆன்ம சிற்சக்திக் குப் புலனுகாத மேலான உண்மைப் பொருளை இறுதியில் அவாவுகின்ற நிலையை எய்துவிக் கும் எனலாம்.
குணநாடிக் குற்றமு நாடி அவற்றுண் மிகைதாடி மிக்க கொனல். (குறள்:504)
உரைக்களஞ்சியம் அறத்துப்பால்பாயிரவியல், 98. -
development of Saiva Siedhanta upto 14 th
ரைக் காமராசர் பல்கலைக்கழகம்) த சுவாமிகள் சரித்திரம், கழகவெளியீடு, 1928
த்தமும்", கையேடு, கலைக்காட்சிக்குழு 2வது
gerakor 1968 Luri; . 2il 8. ஸ்லியல் ஆய்வுகளும் திராவிடர் கலாச்சாரமும், த பெளத்தம் 1988 பக்: 186 - 209
24

Page 27
மாணிக்கவாசகரும்
LDak
Dணிக்கவாசகர் மணிமணியாகத் திரு வாசகம் தந்தவர். திருவாசகம் பலராலும் போற்றப்பட்டு வருகிறது. பத் தி நெறி வளர்த்துப் பரவசம் ஆக்குகின்றது. பலர் எழுதியிருக்கிருர்கள். பதிப்புகளும் "ע (60_ם வந்துள்ளன.
திருவாசகம், திருக்கோவையார் என்ப வற்றை இவர் இயற்றியதாக அறிந்துள்ளோம். குவலயானந்தம் என்ருேர் இலக்கண நூல் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட தாக அறிந்திலேம்.
குவலயானந்தம் என்ற இலக்கண நூலை இயற்றிய ஆசிரியருடைய பெயரிலே மாருட் டம் உண்டு. வாதவூரன், மாணிக்கவாசகன், வரகுணபாண்டியன் என்ற தாமங்கள் குவ ல யான ந் தம் என்ற நூலிலே சிறப்புப் பாயிரத்திற் காண்டல் கூடும்.
நூலுக்குரிய 'குவலயானந்தம்' என்ற பெயர் குவலய + ஆனந்தம் என்று பிரிடடும் குவல்யம் என்ருல் உலகம். பெயர் பொருத்த முடைத்தே. 1979 வரை இலக்கிய நூல்கள் பலவற்றின் உரைகளில் குவலயானந்த ம் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிருேம். நேரிற்பார்க்கும் வாய்ப்பு இல்லை.
இந்நூலை(1) டாக்டர் ச. வே. சுப்பிரமணியம் 1979 ஆம் ஆண்டு அச்சிற்பதிப்பித்தார். தமிழ்ப் பதிப்பகம் சென்னை என்ற முகவரி யிற் பெறலாம். இப்பதிப்பிற் சந்திராலோகம் என்ற நூலும் அடங்கும். குவலயானந்தம் என்ற பெயர் இரண்டு இலக்கண நூல்களுக்கு வழங்குகிறது. அவற்றிற்கு முதலாம், இரண் டாம் என்று எண்கள் இடப்பட்டுண்டு.
(1)குவலயானந்தம் 1, 2 சந்திராலோகம்

குவலயானந்தமும்
ாவித்துவான் t, X, C, நடராசா மட்டுநகர்.
குவலயானந்தம் - மாணிக்க வாசகர் இயற்றிய நூல். இந்நூலை எடுத்தியம்பும் இ லக் கி ய உரைகளுண்டு என்று குறிப்பிட் டோம். அவற்றைக் கால வரிசைப்படுத்திக் காட்டுதல் சாலச்சிறந்தது.
i. சரவணப்பெருமாளையர் - நைடதம்
உரையில். 置84罗。
i. வேதகிரிமுதலியார் நைடதம்
உரையில். 1851.
i. சைமன்காசிச்செட்டி - Tamil
Plutarch...... 1859
iv சதாசிவம் பிள்ளை - _untonu Gavrif
சரித்திரதீபம் .1886, V. உ. வே. சாமிநாதையர் - சங்கத்
தமிழும், பிற்காலத்தமிழும். 1934. vi பொ. பூலோகசிங்கம் - தமிழ் இலக்கி,
யத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற். சிகள்.- 1979.
wi. ச. வே. சுப்பிரமணியன்குவலயானந்தம் சந்திரலோகம். 1979.
இவ்வண்ணம் எழுவரும் கூறியிருக் கிருரர்கள். இவர்கள் எவ்வாறு கூறியிருக் கிருர்கள் என்பனவற்றைக் கவனிப்போமாக.
சரவணப் பெருமாளேயர் நைடதத்திற்கு உரை எழுதியுள்ளார். இஃது 1842 இல் அச் சேற்றப்பட்டது. கைக்கிளைப்படலம் வரையும் உரை எழுதினர். மிகு தி க்கு அவர் மகன் கந்தசாமி ஐயர் உரை வகுத்தார். இருவரும் தங்கள் உரையில் குவலயானந்த மேற்கோள் காட்டினர். மற்றைய இலக்கண நூல்களிலிருந் தும் சான்றுகள் உரைத்தனர்.
டாக்டர். ச. வே. சுப்பிரமணியம்
} தமிழ்ப் பதிப்பகம் -
சென்னை 600 - 020, 1979
25

Page 28
முதலாஞ் செய்யுளில், அஃதாவது விநாய கர் வணக்கச் செய்யுளுக்கு உரையெழுதும் போது: 3
"மாணிக்கவாசகர் திரு வாய் மலர்ந் தருளிய குவலயானந்த சூத்திரம்” :-
"வழிபடு தெய்வ வணக்கஞ் செய்து
மங்கல மொழிமுதல் வழுவாது ரைக்கில்
எடுத்துக் கொண்ட இலக்கண விலக்கிய மிடுக்கணின்றி இனிது"
என்று விருத்தியுரையில் எடுத்தோதுகின்ருர் இவ்வாறு குவலயானந்தம் என்ற இலக்சிண நூல் இருபத்தைந்து இடங்களுக்குமேல் விளம் பப்படுகின்றது.
களத்தூர் வேதகிரி முதலியார் நைடதத் திற்கு உரை எழுதினர். 1851 ஆம் ஆண்டுப் பதிப் பில் பின்வருமாறு எழுதப்பட்டிருக் கிறது.
"வேதகிரி முதலியாரால் பதவுரையும், கருத்துரையும் செய்து, பல இலக்கண மேற் கோளுடன் பதிப்பித்த பிரதிக் கிணங்க" - என்று இயம்பப்பட்டுண்டு. ஆகவே 1851 க்கு முன்னர் வேதகிரி முதலியாராற் பதிப்பிக்கப் பட்டது புலனுகும். w
சுண்ணுகம் அ. குமாரசுவாமிப் புலவர் எழுதிய "தமிழ்ப் புலவர் சரித்திரம்” என்ற நூலிலே வேதகிரி முதலியார் சரித்திரத்தில் குவலயானத்தம் குறித்துச் சில சூத்திரங்கள் தருகிருரர். மூன்று சூத்திரங்கள் உதாரண மாகக் காட்டியிருக்கிருர். அவை அச்சேறிய குவலயானந்தத்தில் நிலைமாறிக் கிடக்கின்றன.
இவை இவ்வாறிருக்க 1859 இல் சைமன் காசிச் செட்டியால் வெளியிட ப் பட்ட ““The Tamil Plutarch” - “ og LóþL'iyavauri sait என்ற ஆங்கில நூலில்” திருவாசகம், திருக் கோவை என்னும் நூல்களைத் தந்த மாணிக்க வாசகரே குவலயானந்தம் என்ற நூலை யாத் தார் என்று எழுதியுள்ளார். இவ்வாறு எழுதி யமைக்கு சரவணப் பெருமாளையர், வேதகிரி மு த லி யார் ஆகிய இருவர் எழுதிய நைடத உரைகளை காசிச் செட்டியவர்கள் பார்த்திருந்தமை காரணமாகலாம்.

பாவலர் சரித்திரதீபகம் 1886 இல் அச் சேறியது. இதனை எழுதியவர். சதாசிவம் பிள்ளை. காசிச் செட்டி எழுதிய தமிழ்ப் புல்வர் நூஆல மொழி பெயர்த்தும், சேர்த்தும், திருத் தியும், விருத்தி செய்தும் எழுதப்பட்டது என் பது தெளிவாகின்றது. சதா சிவம் பிள்ளை எழுதியதாவது: -
"சைவர் சொல்லும் சமய குரவர் நால் வருள் ஒருவராகிய இவர் பதிசாத்திரங்களில் அன்றி இலக்கண நூற்சுடல் கடந்த வல்ல பண்டிதர் ஆகலிற் குவலயானந்தம் என்னும் இலக்கண நூலை இயற்றினர்." -
சதாசிவம் பிள்ளையும் ஏலவே வந்த நைடத உரைகளைப் பார்த்திருத்தல் கூடும். காசிச் செட்டியும், சதாசிவம்பிள்ளையும் எழுத்திற் காணுத விடயங்களை எழுதவே மாட்டார்கள். இனி சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் எழுதியவர் உ. வே. சாமிநாதையர். முதற் பதிப்பு 1929. இரண்டாம் பதிப்பு 1934. இரண்டாம் பதிப்பில் 27 ஆம் பக்கத்தில் குவலயானந்தம் பற்றி எழுதியிருக்கிருர்,
*குவலயானந்தம் என்ற அணியிலக்கணம் மாணிக்கவாசகர் என்னும் பெயருள்ள ஒரு புலவராற் செய்யப்பட்டது: சூத்தி ரங்களால் அமைந்தது. இந்நூ லுட் கூறப்பெற்ற அணிகள் நூறு. இதற்கு முதனூல் வடமொழி நூலே’ m இதிலே குவலயா ந்தம் - மாணிக்கவாசகர் என்னும் புலவர் செய்தனர் என்றும் அணி யிலக்கணம் என்றும் கூறியிருக்கிருர்,
குவலயானந்தம் என்றும் நூல் உறுப்பி யல், அணியியல் சித்திரவியல் என மூன்று பிரிவுகளையுடையது.
i. உறுப்பியல் . 150 சூத்திரங்கள் i. அணியியல் . 120 i. சித்திரவியல். 29 隸 》
மொத்தம் 309 சூத்திரங்கள். பூலோகசிங்கம் எழுதின எழுத் தினை நோக்குவோம். தமிழ் இலக்கியத்தில் ஈழத் தறிஞரின் பெருமுயற்சிகள் என்பது அவர் நூலாகும். அதில் எழுதிய கட்டுரைகள் ஆறு "சைமன் காசிச்செட்டி அவர் க ள் தந்த தமிழ்ப் புலவர் ச ரி தம்' - என்பதுதான் முதற்கட்டுரை. கு வல யா ன ந் த ம் பற்றி எழுந்த வசனங்கள் வருமாறு:-
26

Page 29
"திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார் என்பவற்றை இயற்றிய (1) மாணிக்கவாசக சுவாமிகள் குவலயானந்தம் என்னும் இலக் கண நூலையும் இயற்றியதாகக் காசிச்செட்டி யவர்கள் கருதுவர் சந்திராலோகம் என்னும் வட மொழி அணியிலக்கண நூலுக்கு எழுந்த வடமொழியுரை நூ லே குவலயானந்தம். இதனை 'அப்பைய தீட்சிதர் எழுதினர். அப் பைய தீட்சிதரின் உரையை மாணிக்கவாசகர் மொழி பெயர்த்தார். இவர் பத்தொன்ப தாம் நூற்ருண்டில் வாழ்ந்தவர். பெயரொற் றுமையை மட்டுமே ஆதாரமாகக் கொண்ட படியாற் காசிச் செட்டி பிழைவிட நேர்ந் தது" - பக் 29.
இவரது நூலின் 23ஆம் பக்கத்தில் சர வணப் பெருமாளையர், வேதகிரிமுதலியார் வெளியிட்ட நூல்களை சைமன் காசிச்செட்டி அறிந்திருந்தார் என்றும் எழுதியிருக்கிருர்,
பூலோகசிங்கம் உரைநடை நூலோடு எடுத்துக் காட்ட இருப்பது சோம. இளவரசு எழுதிய இலக்கண வரலாறு. அந்நூலில் குவலயானந்தம் பற்றி எழுதியிருப்பதாவது: "சந்திராலோகம் என்னும் வடமொழி அணியிலக்கண நூலுக்கு எழுந்த வட மொழியுரை குவலயானந்தம் ஆகும். இவ்வுரை இயற்றிய ஆசிரியர் அப்பைய தீட்சிதர் ஆவார். இவர் காலம் கி. பி. 1520 - 1593. இந்நூலினை மாணிக்க வாசகர் தமிழில் மொழி பெயர்த் துள்ளார்." இலக்கண வரலாறு என்ற நூலின்படி மாணிக்கவாசகர் மொழி பெயர்த்தது வட மொழி வசனநடையை. மொழி பெயர்த்து தமிழ் வ ச ண ந  ைடயி ல் மாணிக்கவாசகர் எழுதினர். இது அணியிலக்கணம். தமிழி லு எள குவலயானந்தம் சூத்திரங்களாலானது. அதனில் எழுத்திலக்கணம், சொல்லிலக்கண முண்டு. w
1979 இல் குவலயானந்தம் (1, 2) சந்திர லோகம் எனும் மூன்று இலக்கண நூல்களும் வெளிவந்தன. முதன்முறையாகக் குவலயா னந்தம் வெளி வந் த து. இதன் ஆசிரியர் மாணிக்கவாசகர் (திருவாதவூரர்) என்பது நூலின் பாயிரத்தாலும், சிறப்புப் பாயிரத் தாலும் அறியப்படுகிறது. வரகுண பாண்டி
(1)சோம. இளவரசு, இலக்கண வரலா எழுதியிருந்தார்.

யனும் சொல்லப்படுகிருன். திருக்கோவை யாரில் செய் - 306, 327 - சொல்லப்படுகிருன். வடமொழி அணி நூலாகிய மீமாங்கிசை யின் பொருளை அறிந்து "சிவவியாகரணம்’ எனும் நூலை அகத்தியர் இயற்றினர். அதனை மாணிக்கவாசக சுவாமிகள் குவலயானந்தம் என்ற பெயருடன் இலக்கணஞ் செய்தனர். அதற்கும் உரை செய்தனர். இதனைச் சிறப் புப் பாயிரங் கூறுகின்றது. குவலயானந்தம் - அணியிலுள்ள 87 வகையான அணிகள் தரப் பட்டுள்ளன. மற்றைய இலக்கண நூல்களு டன் ஒப்பிட்டு நோக்குமிடத்து
i. குவலயானந்தம். அணிகள் - 87 i. சந்திராலோகம். அணிகள் = 100 i. குவலயானந்தம். 2. அணிகள் - 120 iv. மாறனலங்காரம். அணிகள் - 64 v. தொன்னூல் விளக்கம். அணிகள் - 38 wi. முத்து வீரியம். அணிகள் - 58 wi. சுவாமிநாதம். அணிகள் - 31 wi. வீரசோழியம்
ix. தண்டியலங்காரம் 35
X. இலக்கண விளக்கம் )
சந்திராலோகம் - சந்திர + ஆலோகம், ஆலோகம் = ஒளி என்னும் அணியி ல க் கணத்தை இயற்றியவர் காளிதாசர். அதனை வடமொழியில் வசனவடிவத்தில் மொழி பெயர்த்தவர் அப்பைய தீட்சிதர். அதற்குப் பெயர் குவலயானந்தம் (குவலயானந்தம் அன்று) இதனில் 120 அணிகளுள் இதன் விபரம் 1895 இல் பதிப்பித்த குவலயானந்தம் நூலிற் கண்டு தெளிக. விசாகப் பெருமாளை யர் வசனத்தில் இயற்றிய அணியிலக்கணம் சந்திராலோகம் (குவலயானந்தம்) பின்பற்றி யதே. -
குவலயானந்தம் வேறு. சந்திராலோகம் வேறு. சந்திராலோகத்தின் மொழி பெயர்ப் பாகியகுவலயானந்தம் வேறு. குவலயானந்தம் இயற்றியவர் திருவாதவூரராகிய மாணிக்க வாசகர். இலக்கியங்களாகிய திருவாசகம், திருக்கோவையார் இயற்றியவர்; ஏன் குவல யானந்தம் என்ற இலக்கண நூலைச் செய் திருக்க மாட்டர் என்பது கேள்வி. இந்தக் கேள்விக்கு விடைகாணுதல் அறிஞர் கடன்.
று (முதற் பதிப்பு 1963) பக். 225 என்று குறிப்பு
27

Page 30
கிறீஸ்த்தாப்தத்திற்கு
கலாநிதி சி. க. சிற்றம்ப
கதிர்காமம் இன்று இந்து க் கள், பெளத்தர்கள், இஸ்லாமியர் ஆகியோரின் புனித ஸ்தலமாக விளங்கினலும் இப்பகுதி யில் கிறீஸ்தாப்தத்திற்கு முன் பி ரு ந் தே இந்துக்களின் வழி.ாடு தழைத்திருந்ததற்குப் பல சான்றுகள் உள. இச்சான்றுகளில் இப் பகுதியில் ஆட்சி செய்த கதிர்காமச் சத்திரி யர்கள் (கதிர்காம அரசர்கள்) பற்றி மகா வம்சத்தில் காணப்படும் குறிப்பு பிரதான மானது. (M. V xix. 54) இவர்கள் பற்றிய செய்தி இலங்சையின் வரலாற்றுக் காலத்து முதல் மன்னணுகிய தேவநம்பியதீஸன் ஆட்சி யின் சமகாலத்திலேயே காணப்படுகிறது. இத் தகைய வரலாற்றுக்கால நாகரீக வளர்ச் சிக்கு வித்திட்ட மையமாக வடக்கே கேவ நம்பிய தீஸன் ஆட்சி செய்த அநுராதபுரம் இருந்தது போன்று தென்கிழக்கே மாகம (திஸ்ஸமகாராம) இருந்தது. திஸ்ஸமகாராம விலிருந்து 12 மைலுக்கு அப்பால் உள்ளதே கதிர்காமமாகும். அநுராதபுர, மாகம கலா சார வளர்ச்சிக்கு வித்திட்ட கலாசாரம் பெருங்கற்காலக் கலாசாரம் என்பதும் இத் தகைய கலாசாரமே தென்னிந்தியத் திராவிட கலாசாரத்திற்கு வித்தி ட் ட தென் ப ைத அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன. (Sitrampalam, S. K. 1980) இதனுல் பெருங்கற்காலக் கலாசாரப் பின்னணியில் வளர்ச்சி பெற்ற தமிழக நாகரி கத்தைப் போன்றே ஈழத்து வரலாற்றுக் கால நாகரிகமும் காணப்பட்டதென்றல் மிகையா காது. எனினும் தமிழகத்தைப் போன்றல் லாது ஈழம தனித்தீவாக அமைந்திருந்ததும், பெளத்தத்தின் வருகையால் இப்பகுதியில் கலாசார ரீதியில் பெருமாற்றம் ஏற்பட்டது எனலாம் இருந்தும் பெளத்தத்திற்கு முத் திய நம்பிக்கைகள் பல பெளத்தத்தின் வரு கையால், தமிழகத்தில் வட இந்தியச் செல்

முந்திய கதிர்காமம்
0ம் வரலாற்றுத்துறை, யாழ். பல்கலைக்கழகம்
வாக்கால் உருமாறியது போன்று உரு மாருமல் பழைய நிலையில் சுப் படி யே இலங்கையில் பேணப்படவும் வாய்பிருந்தது. இத்தகைய நம்பிக்கைகளில் ஒன்ருகிய முருக வழிபாடு பண்டு தொட்டுத் திளைத் திருந்த இடமாகவே கதிர்காமம் விளங்கியதற்குப் பல் வகையான சான்றுகள் காணப்படுகின்றன.
கதிர்காமம் பற்றி முதல் முதலாகக் கிடைக்கும் செய்தி பெளத்த ம த த் தி ன் வருகையோடே காணப்படுவது பெளத்தம் பரவ முன்னர் இங்குள்ள அரசர்கள் இந் துக்களாகவே விளங்கினர் என்பதை உறுதி செய்வ்தாக அமைகின்றது. இச்செய்தியில் பெளத்கர்களின் வழிபாட்டுச் சின்னமாகிய அரசம்ரக் கிளையை வைபவ ரீதியா க நாட்டப்படும் வைபவம் நடைபெற்ற போது அதிற் கலந்து கொண்ட பிரமுகர்களாக சத்திரிய மனன்னர்களான க தி ர் காம ச் சத்திரியர், சண்டனுகமச் சத்திரியர் க ள் குறிக்கப்படுகின்றனர். இம்மன்னர்களுக்குரிய சத்திரியர்கள் என்ற ஆரிய வர்ணப் பெயர் கூட மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற் புகுத்தப்பட்ட ஒரு பெயராகவும் இருந்திருக்கலாம். இச் சத் திரியர்களோடு பிராமணனன , "திவக" குறிக்கப்படுவதும் பொதுவாகப் பிராமணர் இந்துக்களாக இக் கா லத் தி ல் விளங்கியதால் இச் சத்திரிய மன்னர்களும் பிராமணரைப் போல் இந்துக்களாகவே விளங்கினர் என்பதையும் உணர்த்துகின்றது எனலாம். இவற்ருேடு இச்சத்திரியர்கள் வாழ்ந்த கதிர்காமம், சண் டனகம, பிராமணத்திவக ஆகியோர் வாழ்ந்த இடங்களில் பெளத்தர்களின் வழிபாட்டுச் சின்னமாகிய அரச மரக்கிளை நடப்பட்ட தாக மகா வம்சம் குறிக்கும் செய்தியும் இன்னேர் வரலாற்று உண்மையை எடுத்துக்
8

Page 31
காட்டுகின்றது. பொதுவாகவே t'rg:rrir மதங்களின் வரிசையில் சேர்ந்துள்ள பெளத் தமதம், தமது மதம் பரப்பும் நடவடிக் கைகளில் ஒன்ருகப் பிறி மதங்கள் செழித்த இடங்களில் தமது மத வழிபாட்டிடங்களை அமைத் கல் அல்லது அவை இருக்கும் இடத் திற்கருகில் தமது வழி பாட் டி டங்களை அமைத்தல் மரபாகக் காணப்பட்டது. மகா வம்சத்தில் கூட ஆரம்பத்தில் அமைக்கப் பட்ட பெளத்த வழிபாட்டிடங்கள் பல. பழைய யக்ஷ வழிபாட்டிடங்களில் அமைக் கப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதால் அரசமரக் கிளையும் செல்வாக்குள்ள இந் துக்களின் வழிபாட் டி ட த் தி ற்கு அருகில் நடப்பட்டமை பெளத்தம் இங்கு பரவிய யமையை எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
பெளத்தத்தின் வழிபாட்டுச் சின்னமா கிய அரசமரகிளை நாட்டப்பட்டதைக் கூறும் மகாவம்சம் கதிர்காகச் சத்திரியர் இதற் களித்த ஆதரவு பற்றியோ அன்றி இவர்கள் பற்றிய மேலதிக விவரத்தையோ வேறெவ் விடத்திலும் குறிக்கவில்லை. . இவர்களின் ஆதரவு பெளத்தத்திற்கு ஆரம்பத்திலிருந்து கிடைத்திருந்தால் பெளத்த மத வரலாற்றை எழுதுவதையே தமது நோக்கமாகக் கொண் டிருந்த மகாவம்ச ஆசிரியர் அதுபற்றி நிச்சயமாகக் குறித்திருப்பார். இது பற்றிய செய்திகள் மகாவம்சத்தில் காணப்படாமை இவர்கள் இத்துக்களாக விளங்கியமையை எடுத்துக் காட்டுகின்றது எனலாம். மகா வம்ச ஆசிரியர் பொதுவாகவே பெளத்த சமய நம்பிக்கையல்லாத இந்துசமய நம் பிக்கைகள் ‘தவருண நம்பிக்கைகள்” என்ற கோ ட் பா ட் டில் இவை பற்றித் தமது நூலில் குறிப்பிடுவதையும், இவை பற்றிய விவரத்தைத் தவிர்த்திருந் த  ைத யும் இந் நூலினை நன்கு ஆராயும் போது தெளியலாம்.
பெளத்தத்தின் பரவல் அரச மரக்கிளை நாட்டு வைபவத்தோடு மட்டும் நிற்கவில்லை. கதிர்காமத்திற்குக் கிட்ட 112 மைல் தொலை வில் பெளத்தர்களின் வழிபாட்டுச் சின்னம் "கிரி விபாரை" என்ற பெயரில் கட்டப் பட்டது. தேவநம்பியதீஸனின் தம்பியாகிய மகாநாக மாகமத்தில் தனது அரசிருக் கையை அமைத்திருத்தபோதே இத்தகைய

வழிபாட்டிடம் கட்டப்பட்டதென்ற ஐதீகம் நிலவினலும் கூட இக் கட்டிடத்தின் கற்க களிற் பொறிக்கப்பட்ட பிராமி எழுத்துக்களை ஆராய்ந்த பரணவித்தான இதன் காலம் கி மு. 1ஆம் நூற்ருண்டாக இருக்கலாம்என்று augi 6Trti. (Paranavitana, S. 1928-33)
பெளத்த மதத்தின் பரம்பலின் அடுத்த கட்டம் மகாநாமவின் பேரனராகிய கோத்த பயாவின் காலத்ததாகும். கி.மு 2ஆம் நூற் முண்டில் முற்பகுதியில் மாகமவில் ஆட்சி செய்த இவன் கதிர்காமச் சத்திரியர்கனை அழித்து அப்பாவத்திற்குப் பிராயச்சித்தமாக இப்பிரதேசத்தில் 500 விகாரைகளைக் கட்டிய தாக ஓர் ஐதீகத்தை இன்னேர் நூலாகிய தாதுவம்சம் குறிப்பிடுகிறது. (D. V. 33 - 34) இதிலிருந்து துட்டகைமுனுவின் பேரஞராகிய இவன் காலத்தில் ருேகணைப் பிரதேசத்தில் பெளத்தம் மேலோங்கியது தெளிவாகின்றது. பெளத்தத்தின் மேலோங்கலை எடுத்தியம்புவ தாகவே கெளதம புத்தர் தரிசித்த இடங்க ளாக ஈழத்தில் பதினறு இடங்கள் குறிக்கப் படுகின்றன. இப் பதினறு இடங்களில் அட்ட வணையைப் பார்க்கும் போது பெளத்தம் இவ் விடங்களிற் செழிப்புற்ற காலத்தில் அதற்கு ஒரு பழைமையான பாரம்பரியத்தை எடுத்துக் காட்டவே இத்தகைய ஐதீகம் புகுத்தப்பட் டது போல் தெரிகிறது. இவ்வரிசையில் கதிர் காமம், திஸ்ஸமகாராம, கிழக்கே தீகவாபி ஆகிய பகுதிகள் குறிக்கப்படுகின்றன. அண் மைக்காலத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட் டுச் சான்றுகள் கதிர்காம அரசர்கள் ஆட்சி தீகவாபி வரை சென்றிருந்ததை எடுத்தியம் புவதும் ஈண்டு நினைவு கூ ர ற் பா லது. (Gunawardana, R. A. L. H. : 1982)
கதிர்காமத்தோடு தொடர்புடைய மன் னர்களை அழித்ததாகத் தாதுவம்சம் கூறின லும் இவர்களின் மூன்ரும், நான்காம் தலை முறையினர் பெளத்த மதத்திற்கு அளித்த தானம் பற்றிக் கிடைக்கும் செய்தியை உற்று நோக்கும்போது தொடர்ந்து இவர்கள் இப் பகுதியில் வாழ்ந்ததும் இவர்களில் பலர் பெளத்தர்களாக மாறியதும் தெளிவாகிறது. எனினும் இவர்களிற் சிலரது ஆதரவு தொடர்ந்தும் கதிர்காமத்திலுள்ள இந்து
29

Page 32
ஆலயத்துக்குக் கிடைத்திருக்கலாம். காரணம் “கந்த உபத" என்ற சிங்கள நூலில் துட்ட கைமுனு எல்லாளனுடன் சண்  ைட க் குச் செல்ல முன்னர் கதிர் காமக் கடவுளை வழி பட்டு ஆசிர்வாதம் பெற்றுச் சண்டைக்குச் சென்றதாகவும் எல்லாளனுடன் அடைந்த பெருவெற்றிக்குப் பின்னர் இங்கே கோயில மைத் தான் எனவும் குறிப்புண்டு, இத்தகைய குறிப்பு ராஜவலியா என்ற சிங்கள நூலிலும் உண்டு பெளத்த குருமார் பொதுவாகவே தாமெழுதிய பாளி நூல்சளாகிய மகாவம் சம், சூளவம்சம் ஆகியவற்றுள் பிற மத அநுஷ்டானங்களை ம  ைறப்பது வழக்கம். ஆனல் சிங்களமொழியில் அமைந்த நூல் களில் இவை குறிக்கப்படும் மரபை நோக்கும் போது கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் இங்கே முருகன் ஆலயம் ஒன்றிருந்ததையே இத் தகைய ஐதீகம் எடுத்துக் காட்டுகின்றது என்று எண்ணுவதிற் தவறில்லை. துரதிஷ்ட் வசமாக இந்துக்கள் இக்காலத்தில் சுருங்கற் களை உபயோகித்துக் கட்டிடங்களை ஆக்குவ தற்குப் பதிலாக அழியும் பொருட்களால் இவற்றை ஆக்கியதால் இவ்வாலயம் பற்றி விரிவான தகவல் நமக்குக் கிடைக்கவில்லை எனலாம்.
மேற்கூறிய யூகம் சரியானதே என்பதனை உறுதி செய்வதற்கு பல சான்றுகள் உள. ஈழத்திலும் முருக வணக்கம் தமிழகத்தைப் போன்று தொன்மையானதே. ஆதிச்சநல் லூரில் முருக்னது வேல், காவடிச் சின்னங்கள் காணப்படுவது போன்று இத்தாழிக்காட்டிற்கு நேரெதிரே உள்ள இலங்கையிலுள்ள தாழிக் காடாகிய பொம்பரிப்பிலும் வேல் கிடைத் g items. (Sitampalam), S. K. 1980) இதே போன்று அண்மைக் காலத்திற் கதிர்காமத் திற்குக் கிட்ட தாழிக் காடொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் பல புதிய செய்திகளைத் தரலாம். இவ்வாறே தான் கிறீஸ்தாப்தத்திற்கு முந்திய ஈழத்துப் பிரா மிக் கல்வெட்டுக்களில் முருக வணக்கத்தினைச் குறிக்கும் "குமார, "விசாக", வேல் போன்ற பெயர்களும் காணப்படுகின்றன. (சிற்றம் பலம் சி, க. 1976) கதிர்காமச் சத்திரியர் களின் பரம்பரையில் ஒருவர் “குமார" என்ற பெயரைத் தாங்கி நின்றதும் ஈண்டு குறிப் tl-55ádigi. (Paranavitana, S. 1970)

மேற்கூறிய செய்திகளோடு கதிர்காமத் தில் காணப்படும் வழிபாட்டு முறைகள் கூடக் கிறீஸ்தாப்தத்திற்கு முன்னரே இங்கு புகுந்த வழி பாட்டு முறை என்பதனை ஐதீகங்களும் பிற ஆதாரங்களும் எடுத்துக் காட்டுகின்றன. (வேலுப்பிள்ளை, ஆ. 1977). காரணம் இக் காலத்திற்குப் பின் பெளத்தம் இங்கு நன்கு வேரூன்றி விட்டதால் இவை இங்கே புகுவ தற்கான வாய்ப்பிருக்கவில்லை. அத்துடன் கதிர்காமத்தில் சாணப்படும் வழிபாட்டுமுறை சங்ககாலத்தில் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் தமிழகத்தில் நிலவிய வழிபாட்டு முறையினை ஒத்துக் காணப்படுவதும் இதன் பழமைக்குச் சிறந்த சான்ருகும். தமிழகத்திலும் சங்க காலத்திலே தான் முருக வணக்கம் மேன்மை பெற்றிருந்தது. முருகன் பற்றிய ஐதீகங்களில் தமிழகத்தில் முருகன் சூரனைக் கொல்லத் திருச்செந்தூரில் பாசறை அமைத்துப்பின்னர் திருப்பரங்குன்றத்தில் மணுளனகக் காட்சி கொடுத்த செய்தி இருப்பது போல, ஈழத்து ஐதீகங்களும் சூ ர னை க் கொல்ல முருகன் கதிர்காமத்தில் பாசறை அமைத்துப் பின்னர் வள்ளியை மணந்த இடமாகவும் இதனைக் குறிப்பதிலிருந்து இரு பிராந்தியங்களிலும் முருகனது போர், திருமணம் ஆகியன பற்றிய ஐதீகங்களைத் தத்தம் பி ர தே சத்துடன் இணைத்த மரபு பழைய மரபாகவே காணப் படுவது புலனுகின்றது. தமிழ் நாட்டிற் தோன்றிய முருகனின் போர், திருமணம் பற்றிய ஐதீகம் பின்னர் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னரே ஈழத்திற்கு எடுத்து வரப்பட்டு ஈழத்துக்குரிய மரபாகவும் பேணப்பட்ட ஒரு நிலையைக்கூட இவ்வைதீக மரபு எடுத்துக் காட்டுகின்றதெனலாம். சங்க இலக்கியங் களில் முருகன் பற்றிய வர்ணனைகளில் குறிஞ்சிக் குமரனுக அவனை வர்ணிக்கும் தன்மையை நோக்கும்போது இத்தகைய குறிஞ்சி நிலப்பிரதேசமாய க தி ர் காம ப் பிரதேசத்தில் இவ்வைதீகம் வளருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பும் இருந்தது எனலாம். படை வீடுகளின் வாடை கதிர்காமத்திற்கும் உண்டு என்ருல் மிகையாகாது. இத்தகைய மரபோடு கதிர்காமச் சத்திரியர்கள் பற்றிக் கூறும் பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழகத்தி லிருந்தே இவ் ஐதீகங்கள் பரவி இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன எனலாம்.
30

Page 33
இப் பிராமிக் கல்வெட்டுக்களில் இச்சத்தி ரியர் சந்ததியில் ஒருவன் ‘மஜ்ஜி மகாராஜ எனக் குறிக்கப்படுகின்ருன் இக் கல்வெட்டு மட்டக்களப்பு மாவட்ட த்திலுள்ள கென்னல ரில் உளது. (Paramavitana, S. 1970). இதனைப் பரணவித்தானு "மற்சய மகாராஜன்" என வாசித்து இம்" மற்சய" வ ம் சத்தினர் வட இந்தியாவிலிருந்து சிங்கள மக்களோடு கூடி வந்த மற்சய வம்சத்தினர் எனக் கொள் திருர், உண்மையிலே இதே கல்வெட்டில் கதிர்காமச் சத்திரியர்களில் கல்வெட்டுக்கள் எல்லாவற்றிலும் காணப்படுவது மீன் வடிவம் காணப்படுவது மீன் சின்னத்தையுடைய மசா ராஜன், "மீனவர்" எனப்பட்ட பாண்டியா ஆண்ட பிரதேசத்தினரே என்பதை உணர்த்து கின்றது. கதிர்காமச் சத்திரியர்கள் கல் வெட்டுக்களில் 10 சகோதரர்கள் கூட்டாட்சி பற்றி வரும் குறிப்புக்கூட பாண்டி நாட்டில் 5 சகோதரர்கள் கூடி ஆட்சி செய்த "பஞ்ச வர் "ஐவர்" ஆட்சி முறையையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம். (குணசிங்கம். செ. 1970) இக் கல்வெட்டுக்கள் குறிக்கும் "அய’ என்ற பதமும் பாண்டி நாட்டிலே குறுநில மன்னர்களாக விளங்கிய ஆயரைக் குறித்து நிற்கின்றதெனலாம். இதனுல் இக்காலத்தில் பாண்டிய பிரதேசத்தில் மேலோங்கியிருந்த முருக வழிபாடு ஈழத்துமுருகவழிபாட்டு முறை களோடு சங்கமித்தது எனக் கொண்டாலும் பிழையாகாது.
கதிர்காம வழிபாட்டுமுறை மிகப்பழைய ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்களில் வரும் குறிப் புக ளி லிருந்தும் அறியலாம். சங்க இலக்கியங்களிற் தலைவிக்குக் காதல் நோயால் மெய்ப்பாடு தோன்றும் போது தாயும் செவிலியும் அந் நோய் பற்றி அறிய முருக வணக்கத்தின் பூசாரியாகிய வேலனை அழைப்பதும் வேலன் வேல் தாங்கி, பலியிட்டு, வெறியாட்டமாடி அந்நோயைத் தீர்ப்பதும் பற்றிய குறிப்பு வருகிறது. இத்தகைய வழிபாட்டில் வேலன், கடம்பமரங்களின் கீழோ அன்றி ஆற்றேரங் களிலோ களம் அமைத்து மூங்கில் கீற்றுக் களால் அதனைப் பல பிரிவுகளாகப் பிரித்தல் கூறப்படுகின்றது. இப்பிரிவுகள் "பல்பிரம்பு" என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படு

கின்றன. ஏறத்காள 64 பிரிவுகள் களத்தில் இருந்தன. இக்களத்தில் தான் ஆட்டுக்கடா வின் பலியிற் பெறற குருதி ஊற்றப்பட்டுப் பிற நிவேசனப் பொருட்களும் படைக்கப் பட்டன இவ்வெறியாட்டத்தில் வேலன் மீது ஏறி அவனை இயக்கும் தெய்வமே முருகன் என் பகைச் சங்க இலக்கியங்கன் பகருகின்றன. குறுந்தொகையில் 362 ஆம் பாடலிலுள்ள “முருகையர் வந்த முதுவாய் வேல" என்ற குறிப்பு இதனையே உணர்த்துகின்றது. இதன் பொருள் முருகென்ற தெய்வம் உன் உடலில் ஏறப்பெற்று வெறியாடி வந்த வேலனே என்பது பொருளாகும். இது மட்டுமன்றி முருகன் உறையும் இடங்களாக "வேல் ஏத்தி ஆடும் வேலன் இழைத்த வெறியாடும் களத் திலும் அவன் உறைதற்குரியவன்' என்ற குறிப்பும் கூட 'களம் முருகன் உறையும் இடம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதுபற்றி ஆராய்ந்த அறிஞர் பிற்காலத்தில் யந்திரம் மூலம் தெய்வத்தை யாசிக்கும் மர பின் மூலத்தை வே ல ன் களம் வரையும் பழக்கத்திலிருந்தும் பழைய வழிபாட்டை யொட்டிய வேலன் பூசாரிகளின் வழிபாடு களிலிருந்தும் கண்டறியலாம் என்கின்றனர். (சாமி, பி. ல. 1971) கதிர்காமத்திலும் யந் திர பூசையே முக்கியம் பெறுவதை நோக் கும் போதும், இதனை இயற்றும் "கப்புருளை" என அழைக்கப்படும் பிராமணரல்லாத பூசாரி கள் “வேலன்' வழி வந்த பூசாரியினரே எனக் கொள்ளலாம். வேலன் பூசாரிகள் களத்திற்கு மந்திரமுரைத்து முருக னைத் தம்முள் வர வழைத்து வழிபாடு செய்தது போன்று கப் புருளையினரும் செய்கின்றனர் எனலாம். இத் தகைய பழைய வழிபாட்டு முறையைத்தான் தொல்காப்பியரும் "கந்தழி வழிபாடு" என அழைத்தார் எனலாம். கந்தழி என்பதன் முதற்பொருள் ஒரு மரத்தறி என அமைந் தாலும் முருகனை ஒரு குறிப்பிட்ட பொருளில் தோன்றி அருள் செய்யுமாறு வேண்டும் பண் டைய வழிபாட்டு முறையையே கந்துடை நிலை எனக் கொள்ளப்படுகின்றது. ஆயுதங் கள் தனியான வழிபாட்டுச் சின்னங்களா கவே பண்டைய வழிபா ட்டில் இயங்கின. வேல், சூலம் ஆகியன தெய்வமுறை வழி பாட்டுச் சின்னங்களே. காலக்கிரமத்தில் இவற்றின் தனியான முக்கியத்துவம் குறை
31

Page 34
தெய்வங்களின் ஆயுதங்களாக இவை மாறின.
வள்ளிதான் முருகனின் முதல் மனைவி. தேவசேன பின் வந்த மனைவி. கதிர்காமத் திற் கூட வட நாட்டுக் கலியாணகிரி பற்றிக் கூறும் மரபு - தேவசேனையிடம் கந்தனை அழைத்துச் செல்ல இவர் வந்ததாகக் கூறப் படும் மரபு - ஒருவகையில் தெய்வசேனை வழி பாடு கி. பி. 17 ஆம் நூற்றண்டின் ஆரம்பத் திலேதான் இங்கு புகுந்தது என்பதை எடுத் துக் காட்டுகிறது எனலாம். (சபாநாதன், குல. 1947) இக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களின் பெரியாரான கர்மநபிக்கு அமைக்கப்பட்ட மசூதியுடன் முஸ்லீம்களுக்கும் இவ் விட ழ் цвећ 5, 9t-иташ g. (Navaratnam. Ratna.
1973)
இதஞல் கதிர்காமத்தில் பெளத்த விகா ரையும் அரச மரமும் முக்கியம் பெற்ருலும் கூட ஆதியில் முருக வழிபாடு தழைத்திருந் ததை போர்க் கடவுளாகிய முருகன் பற்றிய ஐதீகங்கள், துட்ட காமினியை அவன் வணங் கிய தன்மை, வழிபாட்டு முறைகள் ஆகியன எடுத்துக் காட்டுகின்றன எனலாம். துரதிஷ்ட வசமாக ஈழத்து இந்து மதம் பற்றிய தக வல்களைத் தரும் இந்துமத நூல்கள் காணப் படாததால் இவை பற்றிய தொடர்ச்சியான வரலாற்றை நாம் அறிய முடியவில்லை. இக் கால இந்துமதம் பற்றிய தகவல்களைக்கூட பெளத்தமத வரலாறு பற்றிக் கூறும் நூல் களில் இருந்து தான் பெறவேண்டியுள்ளது. பெளத்தம் கிறிஸ்தாப்தத்திற்கு மு ன்ன ரே கதிர்காமப் பகுதியிற் கால் கொண்டாலுங் கூட கிறீஸ்தாப்தத்திற்கு முந்திய காலத்தில் இப்பகுதியில் இந்துமத நம்பிக்கைகள் நன்கு வேரூன்றியிருந்தன. இந்நம்பிக்கைகளில் வட இந்திய ஆசிய நம்பிக்கைகளும் சேர்ந்து பரவியிருந்தன. தமிழகத்திலும் சங்ககாலத்தி லேயே சுதேச திராவிட சமய நம்பிக்கை களுடன் வட இந்திய வேதநெறிச் சமய நம்பிக்கைகளும் சங்கமமாகிய நிலையை ஈழத் திலும் காணலாம். கதிர்காமத்திலும் வேத நெறிக் கலாசார நம்பிக்கைகள் பரவியிருந் தமைக்கும் சான்றுகள் உள. கதிர்காமத் திற்கு 5 மைல் தொலைவிலுள்ள சித் துல் பவுவவில் (செல்லக் கதிர்காமம்?) கிடைத் துள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் பல சான்று

களைத் தருகின்றன. இங்குள்ள கல்வெட் டொன்றில் ‘பமணவச" என்ற குறிப்பு வரு "கிறது. இங்கே வரும் "வச" என்பது "வற்சய’ கோத்திரத்தினைச் சேர்ந்த பிராமணரைக் குறிக்கும் எனலாம். இதே இடத்திலுள்ள இன்னேர் கல் வெட் டி ல் "பமண மருகுட கெளதமி" என வரும் குறிப்பு கெளத் தமி கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணரைக் குறிக்கிறது எனலாம். பிறிதோர் கல்வெட்டில் காணப்படும் "ஆசாரிய பராசரி சலேன” எனவரும் குறிப்பும் பராசர கோத்திரப் பிராமணரையே குறிக் கிற து எனலாம்.
Paranavitana, S. 1970: 601; 656) 6. (p. 1 gub
நூற்ருண்டில் ஆட்சி செய்த வட்ட காமினி
மன்னனுக்கெதிரான கிளர்ச்சியை ஆரம்பித்த பிராமண “திஸவும் இப்பகுதியைச் சேர்த்
திருந்ததை நோக்கும் போதும் சங்க இலக் கியங்கள் குறிப்பிடும் சுதேச திராவிட இந்து மத நம்பிக்கைகளோடு இக்காலத்தில் ஆரிய நம்பிக்கைளும் இப்பிரதேசத்தில் பரந்திருந் தமை புலனுகின்றது.
எப்படித்தான் பெளத்த மதப் படர்ச்சி
இங்க்ே காணப்பட்டாலுங் கூட கிறீஸ்தவ சகாப்த காலத்திலும் இந்துமத நம்பிக்கை கள் இங்கே வேரூன்றியிருந்ததை இரு பிரா மிக் கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. இவை முறையே திஸ்ஸமகாராம, கிரிண்ட ஆகிய இடங்களில் உள. திஸ்ஸமகாராம கதிர்காமத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் கிரிண்ட திஸ்ஸமகாராமா வுக்குத் தென் கிழக்கே 8 மைல் தொலைவிலும் உள்ளன. இதனுல் இவை கூறும் செய்திகள் கதிர்காமச் சுற்ருடலைப் பிரதிபலிப்பனவாக அமையுமா தலால் அவை பற்றி ஆராய்தல் பொருத்த முடையதாகும். முதலில் கிருண்டக் கல்
வெட்டை நோக்குவோம். அது பின்வருமாறு
அமைந்துள்ளது.
32
"இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் புத் தருக்குச் சமமாக ஒருவருமில்லை. எல் லாப் பொருள்களிலும் அவரது நிலையை அடைதல் மிகவும் எளிதன்று. சர்வஞ் ஞரான அவருக்கு மேலான ஆசிரியர் எவருமிலர். அவரே மேலான புகலிட மாவார்; அவரே உலகத்தின் 'கண்; அவரே உண்மை யாக வே சுயம்பு

Page 35
ஆகவும் உள்ளவர். இப் பாறையி லுள்ள விகாரையில் "நாக’ என்ற பெயருள்ள உபராஜா புத்த பெரு மானிடம் சரண் அ  ைட ந் தா ர். (இதனுல்) தவருண சமய நம்பிக்கை களைக கைவிட்டு நல்ல வழி யில்
ஈடுபட்டார்?
திஸ்ஸமகாராமக் கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது. "சித்தம்!
பேராசையே பயத்தின் மூலமாகும். பற்று அதிகரித்தல் உண்மையாகவே ஒரு தவருண நம்பிக்கையில்லையா? பற்று, ஆசை ஆகியவற்றி விரு ந் து மக்களைத் திசைதிருப்ப முடியாதா? இவ்வாறு சிந்தித்துக் கொண்டும் அரசருக்குரிய கிராமத்தில் தவருன நம்பிக்கைகளை நீக்கும் நோக்கத்து, டனும் மதிநுட்பம் வாய்ந்தவனும் நாக என்ற பெயர் உடையவனுமா கிய உபராஜ பதவியை வகித்த நான் புத்த பெருமானைச் சரணடைந்து இதைச் செய்தேன்!.
மேற்கூறிய இரு கல்வெட் டு க்க ளு ம் 1945 இல் பேராசிரியர் பரணவித்தானுவினல் Gavailal-lit ul. Lanau. (Paranavitana, S. 1945) இக் கல்வெட்டுக்கள் இரண்டும் தவறன சமய நம்பிக்கைகள் பற்றிக் கூறுகின்றன. பொதுவாகவே பாளி நூல்களில் இந்து மத நம்பிக்கைகளைக் கூறும் போதெல்லாம் இவை தவருண சமய நம்பிக்கைகள் என்ற சொற் ருெடர் பயன்படுத்தப்படுவதை நோக்கும் போது இவை கூறும் தவருண சமய நம்பிக் கைகள் இந்துமத நம்பிக்கைகளே என்பதில் ஐயமில்லை. கிருண்டிக் கல்வெட்டு "தவருன சமய நம்பிக்கைகள்" என்று வெறுமனே கூற, திஸ்ஸமகாராமக் கல்வெட்டு "அரச னுக்குரிய கிராமத்திலுள்ள தவருண சமய நம்பிக்கைகள்" எனக் கூறுகிறது. திஸ்ஸம காராம ரோகண இராட்சியத்தின் தலை நகர். புத்தர் கால்பட்ட இடங்களில் ஒன்று என்ற ஐதீகமுடைய இடம். இக் கிராமத்தில் இந்துமத நம்பிக்கைகள் தளைத்திருந்தன
1.
AW

என்ருல் நீண்ட ஒரு வழிகாட்டு மரபை உடைய கதிர் காமத்தில் இவை தழைத் திருக்கவில்லை என்று கூற முடியுமா? கந்தன் சிங்கள மக்களின் நாற்திசைக் கடவுளரில் ஒருவன் அத்துடன் முருகன் பற்றிக் கூறும் போது எந்த இடத்திலுள்ள முருகனென் ருலும் அவனை "கதிர்காமத்தெய்யோ" என அவர்கள் அழைப்பது கூட இக் கடவுளின் பழமைக்கும் பாரம்பரியத்துக்குச் சிறந்த உரைக்கல்லாகும். இத்தகைய வழிபாட்டுடன் ஆரிய சமய நம்பிக்கைகளும் இப்பகுதியில் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் பரவியிருந்த தைப் பிராமிக் கல்வெட்டுகளும் எடுத்தியம்பு கின்றன எனலாம்.
இத்தகைய பின்னணி தமிழகத்தில் குறிப்பாகத் திருப்பரம்குன்றம் போன்ற முருகனது படை வீடுகளில் அருகருகே நடைபெற்ற வேதநெறி வழி வந்த வழிபாட் டையும், சுதேச வேலன் வழிபாட்டு முறை யும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது எனலாம். இதனுல் கதிர்காமம் என்ற சொற்பிரயோகம் வடமொழி வழியான சொற்பிறப்பைக் கொடுத்தாலும் தவறன்று. இதனுல் கார்த் திகேய கிராமம், கதிர்காமமாகவும் மருவி யிருக்க லாம். அல்லது ஒளியும் (கதிர்) அன்பும் (காமமும்) கலந்து விளங்குமிடமா கவும் இஃது விளங்கலாம். சிலர் இதற்கு யானை (கஜா) வாழ் கிராமம் எனவும் பொருள் கொள்வர். இன்னும் சிலர் கதிரு மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது இவ்வாறு பெயர் பெற்றதென்பார். எவ் வாருயினும் செவ்வேளான முருகன் ஒளிபடர் மேனியணுக உறையும் பகுதியே இஃதென் பதில் ஐயமில்லை. இம்மலையிலிருந்து காலை யிலும் மாலையிலும் செவ்வொளியைக் காணும் வாய்ப்பிருந்ததால் வனமாகக் காட்சி தரும் இப்பகுதி கதிர் + காமன் (வனம்) எனவும் பெயர் பெற்றிருக்கலாம். காரணம் கொண்டி போன்ற திராவிட மொழிகளில் சுமன், கம்ம என்பவை வனத்தைக் குறிக்கும் சொற்களே. காலகதியில் கம, என மருவிக் கதிர்கம, கதிர்காமமாகவும் விரிவு பெற்றிருக்கலாம். இதனுல் ஒளிக் காடே பின்னர் ஒளிக் கிராமம் எனவும் மருவியிருக்கலாம்.

Page 36
Gunawardana, R . A . IL . H.
D. V . Dathavamsa 1925
M . V . Mahavamsa 1960 Navaratnam, Ratna 1973
Paranavitana 1928 - 33:
Sitrampalam, S. K. 1980
குணசிங்கம், செ. 1970
சபாநாதன், குல. 1847
afntuf, L. brai 1971.
சிற்றம்பலம் சி. க. 1976
வேலுப்பிள்ளை, ஆ. 1977
உசாத்துனே
1982. “Prelu of the Hu
(ed.) B. C.
(ed. Trans.)
Karttikeya,
“Katarágama pp. 212 - 2
1945 Brahmi (C. B. ) Vo inscriptions
The Megal Ph. D. Thesi
"unrelarlyuri மலர். 3 இ.
கதிர்காமம்,
“வேலன் வழி
"இலங்கையின்
மதம் சிந்தனை
"ஈழத்தில் மு
சங்கம், பேர

ா நூல்கள்
de to the State' in The Sri Lanka Journai manities. Vol. Vill. Nos. - 2.
Law. (Lahote)
3eiger. W (Colombo) The Divine Child (Bombay).
Inscriptions” Epigraphia Zeylanica. Vol. II. 25.
inscriptions in Sinhalese Verse J. R. A. S.
1. XXXVI. Part II pp. 58 - 66, 1970. Brahmi
of Ceylon (Colombo).
iteic Culture of Sri Lanka, Unpublished s, University of Poona, Poona.
வரலாற்றில் பஞ்சவர் ஆட்சிமுறை சிந்தன தழ் பக். 58 - 71.
சுன்னுகம்.
பாடு ஆராய்ச்சி மலர் 3. இதழ் 2, பக் 294 - 302
ன் ஆதிப் பிராமிக்கல்வெட்டுக்கள் காட்டும் இந்து ாத் தொகுதி 1. இதழ் 2. பக் 29 - 36.
ருக வழிபாடு இந்து தர்மம், இந்து மாணவர் rாதனை, பக். 13 - 18.
索

Page 37
விஞ்ஞானமும் மெய்
சுவாமி செல்ல
விஞ்ஞானம் ஐம்பொறிகளுக்குள் அகப் படும் புறப்பொருள்களையும் பருப்பொருள் களையும் (Phenomena) மட்டுமே ஆராய்ந்தறிய முயலுகின்றது. கல்வி கேள்விகளால் பெறும் உணர்ச்சியுடன் உலகத்தோடொப்ப நிற்றலைக் குறிக்கும் பாசஞானமென்பதும் இதுவே. மனவுலகில் நடைபெறும் சகல கலைஞானங் களும் இதுவேயாகும்.
மெய்ஞ்ஞானமோ ஐம்புலன்களுக்கும் எட்டாமல் அப்பாற்பட்டு விளங்கும் அகப் பொருள்களையும், நுண்பொருள் களை யும் (Neumena) ஆழ்ந்துணர்ந்தனுபவிக்க வழி வகுக்கின்றது. கல்வி கேள்விகளாலும் உலகி ய ல னு பவ த் தாலும் வரும் அறிவைத் துணையாகக் கொண்டு, நிலை, நிலையாமை களையும், நன்மை தீமைகளையும் ஆராய்ந்து, காணப்படுவனவெல்லாம் அழியப்படுவன வாதலைக் கண்டு, துறவுநாட்டம் கொண்டு, பொறிபுலனடக்க மெய்யுணர்ந்து, அவா வறுத்து வீடுபேறடையச் செய்தலைக் குறிக்கும் பசு, பதி, ஞானம் எனப்படும் சமய ஞானம் என்பதும் இதுவேயாம்.
இந்தக் காலம் விஞ்ஞானகாலம். எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் பெரிதும் ஊடுருவி வருகின்றது. கடந்த நூற்றைம்பதாண்டு களுக்குட்பட்ட விஞ்ஞான வளர்ச்சி, அதற்கு முற்பட்ட பல நூற்ருண்டுகளின் காலத்துக் குரிய பண்பாட்டைத் தகர்த்தெறிந்துவிட்டு, மேலும் வேகமாக வளர்ந்து வருகின்றது. இதன் கிளைகளும் பலப்பலவாக விரிகின்றன. பழைய கூற்ருகிய 'ஆயகலைகள் அறுபத்து நான்கு" என்பது தற்போது வழக்கொழிந்து விட்டது. நாளுக்கு நாள் விஞ்ஞானக்கலைக் கூறுகள் அளவிறந்தனவாக விரிகின்றன .சிறிய நுண்ணிய பொருள்களைப் பற்றி நிரம்பிய அறிவுடையானே"சிறந்த விஞ்ஞானி’ எனப்படு

ஞ்ஞானமும்
த்துரை சிவதொண்டன் நிலையம், செங்கலடி,
கிருன். இக்கால மனித அறிவு சமாளிக்கமுடி யாதபடி விரிவாகி விட்டது. பழையஒவ்வொரு கலையும் மேலும் பற்பலவாக விரிந்துவிட்டது. தொலை நோக்காடி யானது (Telescope)
வானத்திலுள்ள விண்மீன்களையும் அவற்றின் இயக்கங்களையும் பற்றி எமது மூளைக் கெட் டாத பல செய்திகளை வெளியாக்கிவிட்டது. இது போலவே பெளதிக நூல் (Physics) நில நூல் (Geology) உயிர் நூல் (Biology) உடலிய ல் நூல் (Physiology) உள நூல் (Psychology) Loafs pitái) (Anthropology) முதலான அளவற்ற புதியனவற்றை எமக் கறிவிக்கின்றன.
இவற்ருலும், வளர்ச்சியடையும் புதிய கண்டுபிடிப்புக்களாலும், சாமானிய மக்களி டையே தெய்வ நம்பிக்கையும், சீரான பழைய பண்பாடும் நிலை குலைகின்றன. முன்னர் எல் லாக் கலைகளும் இறைவனையடைதலே குறிக் கோளாகக் கொண்டு (மெய்ப் பொருள் காண்பதே அறிவு) அதற்கமைய நெறிகளை அமைத்து வளர்ந்து வந்தன. இன்று இந்நிலை மாறி, முடிந்த முடி பா கி ய த த் துவக் கொள்கை (Philosophy) கீழே தள்ளப்பட்டு, உண்மையை உணர வேண்டும் என்னும் போர் முனையிலிருந்து ஒதுங்கி விட்டது. இதன் பேருக மனித மூளை தாங்க முடியாது தின றித் தடுமாறுகின்றது.
பழைய கொள்கைகள் பல பொய்யென வும், மூடநம்பிக்கை எனவும் இக்கால மக் களால் ஒதுக்கப்பட்டு விட்டன. விஞ்ஞானம் வளர வளர மெய்ஞ்ஞானமும் (இறையுணர்வு) தெய்வ நம்பிக்கைகளும் தாமே மறைந்து விடும் என்பது ஒரு சாரார் கொள்கை. தெய்வ நம்பிக்கையும் தெய்வக் கோட்பாடு களும் உள்ளவர்கள் குருட்டு நம்பிக்கையும் பிற்போக்கும் உடையவரென்றே இன்றுள்ள பலரால் இகழப்படுகிறர்கள். அன்றி யும் வேறு சிலர் தமக்கு இறையுணர்வும் நம்பிக்
35

Page 38
கையும் இல்லை என்று கூறு வ ைத யே முற் போக்கு நெறியாகவும், நாகரீகமாகவும் கடைப்பிடித்து வருகிருர்கள்.
மேற்கூறியவற்றிலிருந்து விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் ஏதோ பெரும் வேறு பாடுளது போல் பலர் பேசுவதும் நினைப்பதும் உண்டு. நன்முகச் சிந்தித்துப் பார்ப்போமாயின் இவ்விரண்டிற்கும் எத்தகைய இகலும் முரண் பாடும் இருக்கவில்லை என்பது தெற்றெனத் தெளியலாகும். ஐம்புலன்களுக்குள் அகப்படும் புறப் பொருள்களையும், பருப் பொருள்களை யும் மட்டுமே ஆராய்ந்தறியும் விஞ்ஞானத் துக்கும், ஐம்புலன்களுக்கு எட்டாமல் அப்பாற் பட்டு விளங்கும் அகப் பொருள்களையும், நுண் பொருள்களையும் ஆழ்ந்துணர்ந்தறிய வழி காட்டும் மெய்ஞ்ஞானத்தும் முரணுறவோ இகலுறவோ ஒரு காரணமும் இல்லை. இரண் டினதும் எல்லையும், குறிக்கோளும், செயல் முறைகளும் தனித்தனி வேருக விளங்கக் காணலாம். இத ஞ ல் இவற்றிற்கிடையே போட்டியும் பூசலும் எழுதற்கு வாய்ப்பே யில்லை.
எந்த இடத்தில் விஞ்ஞானம் செயலிழந்து முடிவுறுகிறதோ அந்த இடத்திலிருந்துதான் மெய்ஞ்ஞானம் தொடங்குகின்றது. விஞ்ஞா னம் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு கலையே. இது இன்னும் குழவியாகவேயுளது. அதன் வளர்ச்சி, ஆராய்ச்சி முறைகளில் எத்தனையோ இடையீடுகளும் மாறுபாடுகளும் எழலாம். ஆகவே இவையிரண்டும் ஒன்றுக்கொன்று முரணுணவையென யாம் முடிவு கட்டுதல் சரியாகாது.
அன்றியும் விஞ்ஞானம் இயற் ைகப் பொருள்களின் இயல்புகளை விளக்கிக் கூறுமே யன்றி, அவற்றின் காரணங்களையும் அடிப் படைகளையும் விளக்கவல்லதன்று. (Science cannot tell the ultimate 'why' of things anc events) விஞ்ஞானம் என்பது வெறும் அறிவே மெய்ஞ்ஞானமாகிய சமயமோ அதன் பயணு கிய சிறந்த அநுபவமாக அமைகிறது.

மெய்ஞ்ஞானம் கல வாத விஞ்ஞானம் முடத்தன்மையுடையது. விஞ்ஞானம்கலவாத, மெய்ஞ்ஞானம் குருட்டுத்தனமை வாய்ந்தது சிறந்த விஞ்ஞானி ஒருவன் நாத் தி கனக இருக்கமுடியாது. இயற்கைப் பொருள்களை prin Lu i s-Usatu • இறைவனின் அருமை பெருமைகள அவனுக்குத்தான் நன்கினிது விளங்கும் என்று பேரறிஞர் அல்பேட் ஐன்ஸ் டைன் கூறியுள்ளார்.
மெய்ஞ்ஞானத்தோடு இயைபில்லாத விஞ்ஞானம் அகந்தை மிக்கது. விஞ்ஞானம் சேராத மெய்ஞ்ஞானம் மூடநம்பிக்கை பொருந்தியது என்பது தத்துவ வித்தகர் இராதாக்கிருஷ்ணன் கூற்ருகும்
வெறும் அரை குறை அறிவே மெய்ஞ் ஞானத்தை மறுக்கும். ஆழ்ந்து நிறைவுற்ற அறிவோ சமயவுணர்வில் தலைப்பட்டுத் தழைத்து நிற்கும் என்பர் பிரான்ஸிஸ் பேக்கர்.
கற்றதகஞ லாய பயனென்கொல் வாலறிவன் நற்ருள் தொழார் எனின்.
- திருவள்ளுவர்
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவ தெல்லாம்- கல கல கம்துகின பல்லால் கொண்டு தடுமா ற்றம் போம்துணை பறிவார் இல். w
A: நாலடியார்.
எனவே இருவகை ஞானமும் ஒன்றை யொன்று தழுவிப் பிணைந்து நிறைவுறுவன வேயன்றி மாறுபடுவன அல்ல என்பது யாவர்க்கும் எளிதில் விளங்கும்.
(பிறவித் துன்பத்தைக் கடந்து விடுதலை . பெறுவதற்கு உதவியாக இருக்கும் மெய் புணர்வு புகட்டும் மெய்ஞ்ஞான நூல்களையே மிகுதியாகக் கற்கவேண்டும்.)
36

Page 39
VM I W 'திருமூலர் காட்
சைவப்புலவர் பண்டிதர் விரி. ச்ெ
சாத்திரமும் கோத்திரமுமாக உள் ள நூல்களிலே சைவசித் காந்தக் கருத்துக்கள் காணப்படுகின்றன. சாத்திர நூல்கள வரிசை யிலே பதினன்கு மெய்கண்ட சாத்திரங்கள் அடங்கும். தோத்திர நூல்கள் நிரலிலே பன்னிரு திருமுறைகள் நிற்கும். இத்திரு முறை ஞ ளே பத் தாம் திருமுறையாக விளங்குவதே திருமூலர் திருமந்திரமாகும். இத் திருமந்திரத்திலே சாத்திரக் கருத்துக் களும், கோத்திரக் கருத்துக்களும் விரவிக் காணப்படுகின்றன. இதன் பெருமை கருதியே 'திருமந்திரத்தில் இல்லாதது ஒரு மந்திரத்தி லுமில்லை" என்று நமது மு ன் னே ர் கூறி வைத்துள்ளனர்.
திருமந்திரம் திருமூலர் என்ற சித்தரால் கி.பி 9ஆம் நூற்றண்டளவில் அருளிச் செய் யப்பட்டதாகக் கூறப்படுகின்றது கி.பி.3ஆம் நூற்ருண்டளவில் தோன்றியது என்றும் குறிப்பிடுவர் ஒரு சிலர். எக் காலத்தில் எச் சந்கர்ப்பத்தில் தோன்றியதாயினும் அந் நூலில் கூறப்படும் கருத்துக்கள் மனித வாழ் வுக்கு-அதாவது மனித முன்னேற்றத்துக்குச் சாத்தியமான பல கருத்துக்களாய் உள்ளன. சித்தனக்கு விருந்தளிக்கக் கூடியதும் நுண் ணுணர்வைத் தூண்டி விடக் கூடியதுமான பல எண்ணக் கோல்ங்களாய் விளங்குகின்றன. "மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்” என் றும் போற்றத்தக்கதாகவும் உள்ளன.
மானிட உடம்பின் மகிமை, அன்பின் பெருமை. உடம்பைப் பேணும் முறைமை, வாழ்வின் அநித்தியம், நல்லொழுக்கங்கள், நீதிவழுவாநெறிமுறைகள் எல்லாம் எடுத்துக் கூறப்படுவனவாய் உள்ளன. உலகியல் வாழ் வுக்கான வழிகாட்டி நூலாகவும் விளங்குவ துடன், வையத்து வாழ்வாங்கு வாழ்வதற் கான விதி முறைகள் எல்லாம் தெளிவாக எடுத்துக் கூறும் நூலாகவும் உள்ளது.
நமது உடம்பினை "மலம் சோரும் ஒன்பது வாயிற்குடில்" என்றும், வெறும் "காற்ற டைத்த பை' என்றும், 'ஒன்பது வாயில் கோட்டையடா உற்றுப் பார்த்தால் ஓட்டை யடா’ என்றும், "பொல்லாப் புழுமலிநோய்ப்
3

ட்டும் திருநெறி"
Fல்லத்துரை, பிரசித்த நொத்தாரிஸ், ச்ாரைதீவு.
புன் குரம்பிை என்றும் சித்தர்சளும் ஞானி களும் எள்ளி நகையாடிய வேளையில் உடம் பின் பெருமையை எடுத்துரைத்து, உடம் பைப் பேணினல் மட்டுமே உயிரைப் பேன லாம் என்ற கருத்தினைத் திருமூலர் வலி யுறுத்தி உள்ளார். "உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திறம்பட ஞானமும் சேர்ந்திடல் ஒட்டார்’ எனக் கூறி உடம்பை நீண்ட காலம் நிலையாய் வைத்திருக்க வழிவகையும் கூறிய மெருமையால் திரு ம ந் தி ர ம் ஒரு தனித் தன்மை வாய்ந்ததாய் விளங்குகின்றது.
"அன்பே சிவம்", "சிவமே அன்பு "அன் பும் சிவமும் வேறல்ல" என்பது திருமூலர் கண்ட முடிவு. У “என்பில்லதனை வெய்யில் போலக்காயுமே
அன்பில்லதனை அறம்" என்பது வள்ளுவர் கூற்று. இவையிரண் டிற்கும் உள்ள தொடர்பினை உற்று நோக்கும் பொழுது இருவர் நோக்கும் ஒரே நோக்கா கக் காணப்படுவதை நாம் உணரலாம். திரு மூலர் தனது திருமந்திரத்தில், "அன்புஞ் சிவமு மிரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே'
என்று அன்பின் மெருமையை எடுத்துக் கூறுகின்ருர், வாழ்க்கையின் அ நி த் தி யம், பேரும், புகழும் நிலையற்றவை என்பதனை வலியுறுத்த முன்வந்த திருமூலர் நேரடி அனு பவங்கள் வாயிலாகப் பல்வகைப்பட்ட எடுத் துக் காட்டுகள் மூலமாக நம்மை நல்வழிப் படுத்த முயலுகின்றர்.
இல்லத்துத் தலைவன் ஒருவன், அறுசுவை உணவுப் பொருட்களை ஆங்காங்கு தேடித் தனது அகமுடையாளிடத்துக் கொடுத்துச் சமைக்கச் செய்கின்றன். பின்னர் அதனைச் சுவைத்துச் சாப்பிடுகின்முன். சுவைத்த உணர் வோடு உணர்வாக மனையாளுடன் மந்தணத் தில் (கட்டிலில்) ஒருமித்துத் துயில் கொள்ளு

Page 40
கின்றன். திடீரென்று அவனது உடம்பின் இடது பக்கத்தில் ஒரு வலி ஏற்படுகின்றது. நின்றது மூச்சு, பிரிந்தது உயிர். அவ்வளவு தான் தமது வ்ாழ்வு என்று நமது அநீத்திய மான வாழ்வைப் படம் பிடித்துக் காட்டு
கின்றர்.
"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடியாளொடு மந்தணங்கொண்டார் இடப் பக்கம் இறை நொந்தது என்ருர் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே'
என்பதுவே அப்பாடல். அத்தோடு அவர் விடவில்லை. மேலும், தொடர்ந்து செல்கின் முர். மரணச் செய்தி கேட்டு ஊரெல்லாம் ஒரே அழுகை. பட்டம், பதவி, புகழ் இணைந்த பெயரெல்லாம் மறைக்கின்றது சிவம் சவம் என்று அழைக்கப்படுகின்றது என எடுத்துக் காட்டுகின்ருர், அத்தோடு நாட்கள் நகர நகரப் பற்றும் பாசமும் மறைந்து நினைவ கன்று போவதை நினைவுறுத்துகின்றர்.
'ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டார் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டார்
சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டார் நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தாரே'
என்றும்
"நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை ஒன்றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை メ 10. கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்றவாறே
S. என்றும் கூறுகின்ருர்,
அத்தோடு நில்லாமல் நல்லொ முக் கங்களைக் கடைப்பிடித்து வாழவேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றர். பயனற்ற வழி களிலே செல்லும் நமது போக்கைச் சாடி நல்வழிகளிலே நெறிப்படுத்த முனைகின்ருர். மனம்போன போக்கெல்லாம் போ கா து புலன்களைத் தீய வழிகளில் செல்லவிடாது பொறிகளைக் கட்டுப் படுத்தி வாழ வழி காட்டுகின்ருர், அவரது வழிகாட்டல்கள் நல்லொழுக்க வாழ்வுக்கு வித்திடுகின்றது.

"காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டு கரும்பை விட்டுக் கடு விரைத்துக் களிக் xico கின்ற உலகீர்! கூடுவிட்டுப் போயின பின் எது புரிவீர்? ?எங்கே - • . . . ۔ ۔ ۔ ۔ ........... குடியிருப்பீர் ஐகோ நீ குறித்தறியீரிங்கே? என்றும்,
"அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும் கொத்திக் கிளறிக் கூட்டில் அடைத்தது அத்திப் பழத்தின் அமுதம் அறிந்த பின் கத்திக் கொண்ட்ைவரும் காடடைந் தாரே, என்றும் கூறுகின்ருர்,
இவற்றினைவிடப் பின்வரும் திருமந்திரப் பாடல்கள் பேரின்பத்தை நாடாமல் சிற்றின் பத்தையே நாடி மகிழும் மக்களைப் பற்றி எடுத்துக் கூறி நல்வழிப் படுத்த முயல்வதைக் காட்டுகின்றது. இது போதாமல் மேலும் மேற்படி கருத்தினை நிலைநாட்ட நல்ல உதாரணங்களும் முன்வைக்கப் படுகின்றது. அவ்ையாவன,
'வாழை பழுத்துக் கிடக்குது. வையகம் வாழையைச் சூழத் தாழ் கோத்து நிற்குது தாழைத் திறந்து கனியுண்ண் மாட்டாதார். தாழம் பழத்துக்குத் தள்ளுண்டவாறே? "கள்ள வழியில் விழுந்த விளாங்கனி கொள்ளச் சென்றவரும் குழியில் விழுந்தனர் தெள்ளிய ஞானி தெளிவுறக் கண்ட பின் பிள்ளைகளைவரும் பிதற்ருெழிந் தாரே! என்பனவாகும். இவை அனைத்தும் திருமதி திரப் பாடல்களே. XV
எனவே, மேற் கூறப்பட்ட உதாரணப் பாடல்களில் இருந்து நாம் அறியக் கூடியவை யாதெனில் திருமூலர் அவர்கள் சைவசித் தாந்த அடிப்படைக் கருத்துகளை மட்டும் கூறுவதோடு நின்றுவிடாது, வாழ்க்கையை நல்வழிப் படுத்தக் கூடிய உயர்ந்த கருத்துக் களையும், திருநெறிகளையும் எடுத்துக் கூறி உலகில் வாழும் மக்கள் யாவரும் உய்தி பெறுவதற்கும் வழியமைத்துக் கொடுத்துள் ளார்என்பதுவே அறிஞர் தம் கருத்தாகும்.
38

Page 41
இலங்கைப் பூர்வ குடி
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமிழ்த்
திருமூலர் திருமந்திரம் 2701 ஆம் பாட லிலே இலங்கையைச் சிவ பூமிக்குள் அடக்கி புள்ளார்.
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ் சாருந் திலேஷனத் தன்மா மலயத்தூ
டேறுஞ் சுமுனை இவை சிவ பூமியே.
தில்லைச் சிதம்பரத்துக்கும் பொதிகை மலைக் கும் இடைப்பட்ட தமிழகம் சிவபூமியென்றும் மேருமலைக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதி சிவபூமியென்றும் பெயருக்கு ஓரளவு உரிமையுடையதென்றும் கூறப்பட்டுள்ளது. பெளராணிக இலக்கியங்களுள்ளே பயின்று வரும் மேருமலை பூமியிலுள்ள எந்த மலையை யும் குறிக்கின்றதா என்பது இன்னும் தெளி வாகவில்லை. சிவ புராணங்களிலே கயிலாய மலே பற்றிப் பரவலான குறிப்புகள் இடம் பெறுகின்றன. இமயமலைக்கு வடக்கிலே திபெத்திலே கயிலாயமலை அ டை யா ள ங் காணப்பட்டுள்ளது. வங்காளத்துக்கு வட திசையிலே கயிலாயம் அமைந்துள்ளது. ←ቌ*ሠዕ வழிபாடு வங்காளத்தின் வடபகுதியிலேயே தோற்றம் பெற்றதாக இன்றைய ஆய்வாளர் கருதுகின்றனர்.
இலங்கையின் வரலாறு கி. மு. மூன்ரும் நூற்ருண்டிலே பெளத்தமத வருகையுடன் தெளிவடைகின்றது. பெளத்தமதம் இன்றைய பீகார் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு வந் தது. அசோகப் பேரரசன் அனுப்பிய மகிந்தன் தலைமையிலான பெளத்த குருமார் ஆகாய மார்க்கமாக இலங்கையிலுள்ள மிகிந்தலைக்கு வந்ததாக மகாவம்மிசம் கூறுகிறது. ஆகாய மார்க்கமாக வந்தனரென்பதை ஏற்கமறுக்கும் இன்றைய அறிஞர், தென்னிந்தியாவினூடாக அன்றி, ஒரிஸ்ஸா, வங்காளம் என்னும் மாநிலங்களிலுள்ள துறைமுகங்களூடாக வந் திருக்க வேண்டும் என்று கொள்வர்.

களும் சிவவழிபாடும்
துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
மகாவம் மிசம் இலங்கைக்குச் சிங்களவர் வருகையை முந்நூறு ஆண்டுகள் முன்னெடுத் துச் செல்கிறது. வங்காளம், ஒரிஸ்ஸா என் னும் மாநிலங்களிலுள்ள பகுதிகளிலேயே சிங் களவரின் முன்னேர் வாழ்ந்ததாகவும். விஜய னும் தோழர்களும் அப்பிரதேசங்களிருந்து கடல்மார்க்கமாக இலங்கை வந்ததாகவும் கூறப்படுகிது. மகாவம்மிசத்தின்படி, விஜயன் இங்கு வந்தபோது, இலங்கையிலே நாகர்களும் இயக்கர்களும் வசித்தனர். கௌதம புத்தர் தம்முடைய மதத்தை இலங்கையிலே நிலை நிறுத்துவதற்காக மூன்றுமுறை ஆகாயமார்க் கமாக நேரிலே வந்தாரென்றும் இலங்கையின் மேற்குத் திசையிலுள்ளதும் இன்று களனி என்று சொல்லப்படுவதுமான கல்யாணிக்கு வந்த அவர் அண்மையிலிருந்த மலைச்சிகரத் திலே தம்முடைய திருவடியின் அடையாளத் தைப் பொறித்துச் சென்ரு ரென்றும் கூறப் படுகிறது. இலங்கையின் வடதிசையிலுள்ள் நாகதீபத்துக்கு வந்த புத்தர் ஓர் இரத்தினச் சிம்மாசனம் தொடர்பாக, நாக அரசர்களுக் கிடையே ஏற்பட்ட தகராறைத் தீர்த்து வைத்து, அந்தச் சிம்மாசனத்தைத் தமக்குரிய புனித சின்னமாக்கினர். இலங்கையிலே மேற் குத் திசையிலும் வடமேற்குத் திசையிலும் நாகர் ஆதிக்கம் செலுத்தி வந்ததனுல், நாகத் திசை என்ற பெயர் அத்திசைகளைக் குறிக்க வழங்கியதைச் சென்னைத்தமிழ்ப் பேரகராதி, யாழ்ப்பாணத்திலே தொகுக்கப்பட்ட அகரா திகளிலிருந்து எடுத்துக்காட்டுகிறது.
கெளதம புத்தர் இயக்கர்கள் வாழ்ந்த மகியங்கனைப்பகுதிக்கும் வந்திருந்தார். இயக் கர்களிடம் எதிர்ப்பைக்கண்ட அவர், இயக் கர்களை அவ்விடத்திலிருந்து விரட்டி, தம்மு - டைய மதத்தை அவ்விடத்திலே நிலைநிறுத் தினரென்று கூறப்படுகிறது. சிவவழிபாட்டுக் காரர்களாக இருந்த இயக்கர்கள் பெளத் தத்தை ஏற்கமறுத்திருக்கக் கூடும் என்று நம்ப இடமிருக்கிறது.
39

Page 42
நாகர்கள், இயக்கர்கள் என்பவர் பருர் என்பதுபற்றி அறிஞர்களிடையே ஒருமைப்பாடு இன்னும் ஏற்பட வில்லை. தென்னிந்தியாவிலே திராவிட இனப்பண் பாட்டோடு தொடர்புடைய பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் இலங்கையின் பல பகுதி விலும் கண்டெக்கப்பட்டு வருகின்றன. நாகர்களும், இயக்கர்களும் திராவிடர்களாகதமிழர்களாக - இருக்கவேண்டும் என்ற கருது கோள் சிலரால் முன்வைக்கப்படுகிறது.
இந்தியாவின் வடகீழ் எல்லைப்புறத்திலே, நாகர்கள் என்ற மங்கோலியத் தொடர்புள்ள இனத்துக்கு நாகலாந்து என்று தனி மாநிலம் காணப்படுகிறது. வரலாற்றுக் காலத்துக்கு முன்பும் வரலாற்றுக் காலத்திலும் நாகர் களைப் பற்றிய பல குறிப்புகள் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் கிடைக்கின்றன. நாகமன்னர்கள் ஆரியமன்னர் களே (ா டு ம் , திராவிட மன்னர்களோடும் வேறுபாடு காட் டாது கலப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். சங்ககாலப் புலவர்களுள்ளே நாகர் என்று பெயருள்ளவர் சிலர் காணப்படுகின்றனர்.
பண்டைக்காலத் தமிழகத்திலே சேரநாடு என்று பெயர் பெற்றிருந்த பிரதேசத்தின் பெரும்பகுதியாக அமைந்து, இன்றும் தமி ழோடு ஒப்புமைகள் பல வற்றைக் கொண்டு விளங்கும் மலையாளமொழி வழங்கும் கேரளா மானில்த்திலே நாயர் என்னும் சமூகத்தினர் வாழுகின்றன்ர். நாகபாம்பு வழிபாட்டின் எச்சசொச்சங்கள் அவர்களிடையே இன்றும் காணப்படுகின்றன. நாகர் என்ற சொல் நாயர் என்று திரிந்து வழங்குகிறதெனக் கொள்ளலாம். கேரளமும் தமிழ்நாட்டுக்கு மேற்குத்திசையில் அமைந்திருக்கிறது. நாகர் வடகீழ் இந்தியாவிலிருந்து வந்தவர்களானல், பண்டைக்காலத் தமிழகத்திலும் பண்டைக் கால இலங்கையிலும் மேற்குத்திசையிலே குடியேறியது ஏன், எப்படி என்ற விஞக்கள் எழுகின்றன.
தமிழகத்தின் தென்மேற்கிலே நாகர் கோயில் என்ற துறைமுகமும் தென்கிழக்கிலே நாகபட்டினம் என்ற துறைமுகமும் காணப் படுகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டின்

கிழக்குக்கரையிலே நாகர் கோவில் என்ருெரு துறை உண்டு. நாகதம்பிரான் வழிபாட்டுச் சின்னங்கள் வடஇலங்கையிலே ஆங்காங்கு காணப்படுகின்றன. இலங்கை யின் வட மேற்குத் திசையிலே பாடல் பெற்ற சிவத் தலமான திருக்கேதீச்சரம் காணப்படுகிறது. கேதுவழிபட்ட தலமாதலால் திருக்கேதீஸ் வரமென்ற பெயரேற்பட்டதாக க் கூறப் படுவது நாகர்கள் வழிபட்ட சிவத்தலம் என்பதையே குறிப்பதாக இருக்கவேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர் கோவிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாகபட்டினமும இலங்கைக்கு நாகர் கள் வந்த வழிகளா அல்லது இலங்கையிலிருந்த நாகர்கள் தமிழகத்துக்குச் சென்ற வழிகளா என்பது ஆராய்ச்சிக்கு உரியது.
கெளதம புத்தர் காலத்திலேயே பெளத்த சமயத்தை விரும்பி ஏற்றுவிட்டார்களாகக் கூறப்படும் நாகர்கள் அநுராதபுரத்திலிருந்த சிங்களமன்னர்கள் பெளத்தசமயத்தை ஏற் றுக் கொண்டதும் அவர்களுடன் நெருங்கிக் கலந்தனர். மகாவம்மிசம் குறிப்பிடும் சிங்கள மன்னர் வரிசையிலே, தேவநம்பிய தீசனின் தம்பியாக ஒரு நாகன் குறிப்பிடப்படுகிருன். அவனுடைய தாய் நாகர்குலத்தவளாக இருந் திருக்க வேண்டும். கி. பி. இரண்டாம் நூற்ருண்டு நடுப்பகுதியிலிருந்து மூன்ரும் நூற்ருண்டு நடுப்பகுதிவரையிலே, மன்னர்கள் பலர் நாகர்களாக விளங்குவதைக் காணலாம். திருமணத் தொடர்புகள் மூலமாக, நாகர் குலத்தவர்கள் அதுராதபுரச்சிம்மாசனத்தைக் கைப்பற்றியிருந்தனர் என்றே இந்த நிலை மைக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.
மகாவம்மிசம் முதலிய பாளி நூல்களும் மணிமேகலை முதலிய தமிழ் நூல்களும் குறிப் பிடும் நாகத்தீவு அல்லது மணி பல் ல வ ம் எது என்பது ஒரு காலத்திலே ஆராய்ச்சிக் குரிய விடயமாக இருந்தது. இ ன  ைற ய நயினுதீவே அந்த இடம் என்று ஒருகாலத் திலே கருதப்பட்டது. அதனல், அங்கே நாக தீவு விகாரைகட்டியெழுப்பப்பட்டு, அது சிங்கள பெளத்தர்களின் யாத்திரைத்தலமாக மாறி யுள்ளது. 1936 இல் வல்லிபுரத்திலே கண்டெ டுக்கப்பட்ட பொன்னேட்டுச் சாசனம் யாழ்ப்
40

Page 43
பாணக் குடாநாடு முழுவதும் நாகத்தீவெனப் பெயர்பெற்றிருக்க வேண்டும் என்ற விளக் கத்தைத் தந்துள்ளது.
கொழும்பிலிருந்து யாழ் ப் பாண க்,
குடாநாடுவரை, மாதோட்டம் உட்பட, இலங்கையின் வடமேற்குப் பிரதேசம் நாகர் கள் குடியிருப்பாக ஒரு காலத்திலே விளங்கி யிருக்க வேண்டும். வரலாற்றுக் காலத்திலே, இலங்கையின் ஏனைய சில பகுதிகளிலும் நாகர் ஆட்சி ஏற்பட்டது மகாவம்மிசத்திலி ருந்து தெரியவருகிறது. இலங்கை யின் தென்கீழ்த் திசையிலுள்ள மகாகமம், வட கீழ்த்திசையிலுள்ள கொட்டியாரம், மத்தி யிலுள்ள மாத்தளை முதலிய இடங்களும் நாகர் குடியிருப்புக்களாக மாறின.
வரலாற்று ஆய்வுக்கு, இலக்கியச்சான்று களிலும் பார்க்க, சாதனச்சான்றுகள் வலு மிக்கனவாகக் கொளளப்படுகின்றன. தமிழ கத்துச் சங்ககாலத்துக்குச் சமமான சாலத் தைச் சேர்ந்தவஞன ஆதிப்பிரமிச் சாசனங் களிலே நாகர் அ ர சு கள் குறிப்பிடப்படும் இடங்களை நோக்க வேண்டும். நாகர்கள் நாடு முழுவதும் பரவி வாழ்ந்தமை அச்சாசனங் களிலே வரும் ஆட்பெயர்களிலிருந்து புலப்படு கிறது. வடமாகாணத்தின் தென்னெல்லையி லுள்ள வவுனியாவுக்கு அண்மை யிலுள்ள பெரிய புளியங்குளத்துக் குகைச்சாசனங் களிலே நாகமன்னன் குறிப்பிடப் படுகிருன். நாகத்தீவிலிருந்த மக்க ள் வவுனியாவரை பரவி, அப்பிரதேசத்தில் அரச உரிமையும் பெற்றிருந்திருக்கின்றனர்.
வடமேற்கு மாகாணத்திலே, நாகமன்னர் கள் பற்றி இரண்டு சர்சனங்கள் குறிப்பிடு கின்றன. அவற்றுள் ஒன்று பழைய பிராமிச் சாசனகாலத்தையும் மற்றது சிறிது பிந்திய காலத்தையும் சேர்ந்தது. இலங்கையிலுள்ள மிகப்பழைய சிவன் கோவில்களுள் ஒன்ருகக் கருதப்படும் முன்னேசுவரம் வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்தது. அனுராதபுர மாவட்டத்திலும் ஒரு சாசனம் நாகமன்னனைக் குறிப்பிடுகிறது. அந்தச்சாசனம் காணப்படும் இடம் வடமாகாண எல்லைக்கு அண்மையிலே, மேற்குத் திசையில்ே அமைந்துள்ளது.

மத்திய மலை நாட்டிலே, கண்டி மாவட் டத்திலே, இருவேறு இடங்களிலுள்ள சாச னங்கள் ஒவ்வொன்று நாகமன்னரைக் குறிப் பிடுவது வியப்பாக உள்ளது. நாகமன்னர் ஆட்சி கண்டி மாவட்டத்திலே பரவியிருந் தமைக்கு இலக்கியச்சான்று கிடைக்கவில்லை; இச்சாசனங்கள் மட்டுமே சான்றுபகருகின்றன.
வடக்குமாகாணம், வடமேற்குமாகா ணம், மத்தியமாகாணம் முதலிய பிரதேசங் களிலே, நாக அரசு ஒன்ரு பலவா, பலவா ஞல் எத்தனை இருந்தன என்பதைத் தீர் மாணிக்கத் தேவையான சான்று இதுவரை கிடைக்கவில்லை. நாக அரசு கிழக்கு இலங் கையிலும் தன்னுடைய ஆதிக்கத்தை ஏற் படுத்திக் கொண்டுள்ளமைக்குச் சான்று கிடைத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத் திலுள்ள குசலங்கந்தக் குகைச்சாசனத்திலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள மொட்டைக் கல்லுக் குகைச்சாசனத்திலும் நாக உபரா சர்கள் குறிப்பிடப்படுகின்றனர். யுவராசா என்ற வட சொல்லே உபராசா என்று பாகதத்திரிபு பெற்றுள்ளது. கிழக்கிலே இள மைப் பருவத்திலே இளவரசராக முடிசூடி அனுபவம் பெற்றபின் வடக்கிலே முழு அரச ராகப் பதவி உயர்வுபெற்றுப்போகும் வழக் கம், நாகமன்னர்களுக்குள் இருந்திருக்குமா வென்பது ஆராயத்தக்கது.
நாகர்கள் இலங்கையின் வடகரையி லிருந்தும் மேற்குக்கரையிலிருந்தும் சிறிது சிறிதாக இலங்சைமுழுவதும் பரவியிருக்கின் றனரென்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ் நாட்டுக் கடற்கரைக்கு எதிர்க்கடற்கரையிலே நாகர்குடியிருப்புகள் இலங்கையிலே அமைத் திருந்ததனல், இலங்கை நாகர்கள் தமிழர்
கள்ாக அல்லது தமிழர்களோடு உறவுகளை
வளர்த்துக் கொண்டவர்களாக இருக்கவேண் டும். இயக்கர்கள் என்போர் யார் என்பது
இன்னும் சிக்கலான விஞவாகக் காணப்படு
கிறது. மகாவம்மிசத்தின்படி, இயக்கப்பெண் ணுண குவேனியை மணம்முடித்த விஜயன், அவளின் உதவியுடன் இயக்கர்களைக் கொன் ருெழித்து, இலங்கை மன்னன் ஆகின்ருன். பின்பு, குவேனியையும் இரண்டு பிள்ளைகளை யும் காட்டுக்கு விரட்டிவிடுகிறன். அப்பிள்ளை

Page 44
க்ளின் பரம்பரையே இன்றுள்ள வேடர்கள் என்று கூறப்படுகிறது. இது எவ்வாருயினும் இயக்கர்களின் பரம்பரையில் வந்தவர்களே வேடர்கள் என்ற கருத்து இன்று பொது வாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது வேடர்களின் முன்னேர் நாகர்களுக்கும் முன்பு இலங் கைக்கு வந்தவர்களாக இருக்கவேண்டும். நாகர்கள் காலப்போச்கிலே தமது தனித்து வத்தை இழந்து, தமிழர் சிங்களவர் என் போருடன் இரண்டறக் கலந்துவிட்டனர். இயக்கரும் பெரும் பகுதியினர் இவ்வாறே மாறிவிட்டனர், இயக்கருள் ஒரு பகுதியினர் இன்றும் தமது தனித்துவத்தைப் பேணும் வேட ராக வாழ்ந்துவருகின்றனர்.
“ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகளுக்கு முற் பட்ட தமிழர்” என்னும் முன்னேடித் தமிழர் வரலாற்று நூலை எழுதிப் புகழ் கொண்ட கனகசபைப்பிள்ளை, இயக்கர்களும் மத்திய ஆசியாவிலிருந்து இமயமலையூடாக இந்தியா வுக்குட் புகுந்த மங்கோலியத் தொடர்புள்ள இனத்தவரேயென்பர். இவர்கள் ஒரு காலத் திலே ஆரியமயமாக்குதலைத் தீ விர மாக எதிர்த்து நின்றவர்களாக இருந்திருக்க வேண் டும். இராமாயணப் புகழ்பெற்ற இராவணன், இலங்கை இயக்கர் குல மன்னர் ஆவான். ஆரிய - திராவிடப்பூசல் கூர்மையடைந்துள்ள நிலையிலே, தமிழ்நாட்டிலே, வட இந்திய இராமனை எதிர்த்துப் போராடிய இராவணன் திராவிட மன்னனுகவும் தமிழ் மன்னஞகவும் போற்றப்படுவதைக் காணலாம். தமிழ் நாட்டு மக்கள் இராவணன் மேல் உரிமை பாராட்டு வது இருபதாம் நூற்ருண்டு நிகழ்ச்சியாகும்.
இயக்கர்களைக் கயி லாய மலையோ டு தொடர்புபடுத்தும் மரபு, அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வங்காளம் ஊடாக வந்தவர் களாகலாம் என்ற நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கூடும். இராவணனுடைய உறவினனும் மூத்த வனுமான குபேரன் இலங்கையரசை இரா வணனுக்கு விட்டுவிட்டுக் கயிலைக்குச் சென் ருர்ன் என்று கூறப்படுகிறது. கயிலாயநாதன் என்ற பெயர் சிவபெருமானை மட்டுமல்லாது குபேரனையும் குறிக்கின்றது. குபேரசைலம் என்பது கயிலாமலையே என்று அகராதி கூறும். இராவணன் கயிலாய மலையைத் தூக்கிக்

கொண்டு இலங்கைக்கு வரமுயன்ருன் எனப் படுகிறது. தன் இனத்தவர்களான இயக்கர் களுக்குக் கயிலாய மலைமேல் இருந்த உரிமை யையே அவன் நிலைநாட்ட முய ன் மு ன் போலும்.
வங்காளத்தின் வடபகுதியே தாந்திரிக வழிபாடு அல்லது ஆகம வழிபாட்டு வளர்ப் புப் பண்ணை என்று கூறப்படுகிறது. கயிலா யத்தைத் தலைமைத் தானமாகக் கொண்ட சைவாகம முறையிலான வழிபாடு வங்காளத் திலே காலத்தால் மிகப்பண்ழயது. இராவணன் முதலிய இயக்கர் சிவ வழிபாட்டுச்காரர் என் பது இராமாயணத்திலே அழுத்திக் கூறப் பட்டுள்ளது. சைவசமய குரவர்களுள் முதல் இருவரான திருஞானசம்பந்தரும் திருநாவுக் கரசரும் தங்களுடைய தேவாரப்பதிகங்களிலே இராவணனுக்குப் பெருமுக்கியத்துவம் வழங் கியுள்ளனர் சிவசின்னமான திருநீற்றின் சிறப்பு களை வரிசைப்படுத்தும் சம்பந்தர் "இரா வணன்மேலது நீறு" என்று கூறும்போது, மானிடப்பிறவி யெடுத்தவர் எவருமே இவ் வாறு உயர்த்திக் கூறப்படவில்லை என்பது உற்றுக் கவனிக்கப்பட வேண்டும்.
சைவசமய குரவர்களுள் நான்காமவ ரான மாணிக்கவாசகர் சிவபெருமான் மண் டோதரிக்கு அருள் செய்தமையைப் பாடியுள் ளார். இராவணன் தேவியான மண்டோதரி தேவதச்சன் மயனின் புதல்வியெனப்படுகிருள். மாதோட்டமே மண்டோதரியின் சொந்த இடம் என்ருெரு கருத்து நிலவுகிறது. மகா துவட்டா என்பவன் சிவபிரான வழிபட்ட இடமே மாதோட்டமாக மருவிய தென்ற கருத்து சிலராலே முன் வைக்கப்படுகிறது. கம்மாளர்களுடைய குடியேற்ற நகராக மாதோட்டம் விளங்கியதென்ற கருத்தினை முதலியார் இராசநாயகம் முன்வைத்துள்ளர். நாகர்களும் ஒரு பிரிவினரே இந்தக் கம்மா ளர் என்று அவர் கருதுகிருர், நாகர்களும் ஒரு காலத்திலே சிவ வழிபாட்டுக்காரராக இருந்துள்ளனர்.
வங்காளத்திலே சிவ வழிபா ட் டோடு குமார வழிபாடும் ஒரு காலத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கியது. குமார வழிபாடு தமிழகத்து முருக வழிபாட்டோடு
42

Page 45
இணைந்து நிற்பது வேடர்கள் இலங்கையில் முருக வழிபாட்டை "குமரக் கடவுளுக்கே நிகழ்த்துகின்றனர். கதிர்காமத்திலிருந்து முல்லைத்தீவு வரை, "குமார' வழிபாட்டுச் சான்றுகள் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை யிலுள்ள படைக் கோவில்கள் பல வேடரா லேயே தொடக்கி வைக்கப்பட்டவையாகக் கூறப்படுகின்றன.
இலங்கையிலுள்ள ஆதிப்பிராமிச்சாசனங் கள், மக்கள் பெளத்தத்துக்கு மதம் மாறிய நிலையிலே தோன்றியவை. அச்சாசனங்களி லும் பெரும்பாலானவை பெளத்தகுருமாரின் பெயர்களையும் அக்குருமாருக்கான குகைகளை ஏற்படுத்தியவரின் பெயர்களையும் கூறுகின் றன. பெளத்தம் பரவுவதற்கு முன்பு மக்களி டையே வழங்கிய ஆட்பெயர்கள் அற்றுப் போகாத நிலை அது. "சிவா? என்ற பெயர் இலங்கை முழுவதும் பயின்று காணப்படு கிறது. பெளத்தம் இலங்கைக்கு வரமுன்பு, இலங்கை சிவபூமியாக விளங்கிருக்கவேண்டும்.
இலங்கையெங்கும் சிவா என்ற பெயர் பயின்று காணப்பட்ட போதும் "மிகவும் அதிக மாகப் டயின்று காண ப் பட்ட பிரதேசம் இலங்கையின் தென்கீழ்த் திசையாகும். அம் பாந்தோட்டை மாவட்டத்திலே கதிர்காமத் தைச் சுற்றியுள்ள மகா க ம ப்பற்றி லே யே *சிவா”, “குமார" முதலிய பெயர்கள் செறிந்து காணப்படுகின்றன. தென்கீழ் இலங்கை யிலுள்ள திருக்கோவிலுக்கு எதிரிலே கடலுக்
தேர்ந்தெடுத்த உ
கந்தையா, வி: சி. - மட்டக்களப்புத் தமிழக மன்றம், யாழ்ப்பாணம் - மட்டக்களப்புச் சைவச்
அபிவிருத்தி அமைச்சு,
வடிவேல், இ: - திருகோணமலை மாவட் பிரதேச அபிவிருத்தி அ
Paranvitana,S. - Iriscriptions of Ceylon, W
Survey of Ceylon, 1970.
Rasanayagam, Mudaliyar C. - Ancient Jafi யாழ்ப்பாண

குள் இராவணன் கோட்டை இருந்து அழித் ததாக வரும் செவிவழிச்செய்தி இவ்விடம் நினைவு கூரத்தக்கது.
இலங்கையின் வடகிழக்குத் தி  ைசயி ல் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டமும் இராவணனேடு தொடர்பு படுத்தப்படுகின் றது. கோணமலைக்குன்றை வாளால் வெட்டிய வனெனவும் கன்னியா வெந்நீர் ஊற்றுகளை அமைத் கவனெனவும் கோணேசுவரத்தை வழி பட்டவனெனவும் இராவணன் கூறப்படுகிருன்.
திருகோணமலை முதல் திருக்கோவில் வரை, இயக்கர் பூர்வகுடிகளாக வாழ்ந்த தென்கீழ்த்திசையிலே கிழக்குப் பகு தி யில் அமைந்திருத்தல் கவனிக்கத்தக்கது. கொக் கட்டிச்சோலை தான்தோன்றீசுவரர் கோவி லெனப் பெயர்பெற்ற மட்டக்களப்புப் பிர தேசத்திலே பிரசித்திபெற்ற சிவன்கோவில் வழிபாடும் வேடர்களாலேயே தொடக்கி  ைவ க் கப் பட்ட தாக வித்து வான் வி. சீ. கந்தையா கூறுவர்.
இராவணன் முதலியோர் புலஸ்தியமுனி வர் பரம்பரையிலே வந்தவரென இராமாய ணம் கூறும். சைவசமயத்தவரான சோழப் பெருமன்னர் இலங்கையைக் கைப்பற்றிய போது, இராவணனை நினைவுகூரும் வகையிலே, புலஸ்திய நகர் என்ற புதிய தலைநகரை அமைத்தனர். அதுவே பொலனருவை என்று மருவியது.
Fாத்துணை நூல்கள்.
ம், ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு ,1964。 Y கோவில்கள், இந்துசமயத்திணைக்களம், பிரதேச கொழும்பு, 1983. ட திருத்தலங்கள். இந்துசமயத் திணைக்களம், மைச்சு, கொழும்பு, 1982.
ol.I, Early Bramhi Inscriptions, Archaeological
na, 1926; MurrybůLimrGardë சரித்திரம், b, 1933.
43

Page 46
இந்து
இமயம் தொடக்கம் கு எங்கும் வாழ்ந்தது சமயநெறியில் தவருமல் தத்துவம் சொன்ன நமனுக்கும் அஞ்சா நெ
நல்லதைச் சொன்
உலகம் சுற்றம் என்ற
உணர்த்தி நிற்பது
பாதகம் நீக்கி நிறையு பக்குவம் கொடுப்ட வேதம் ஓதி மேன்மை விவரம் தருவது இ நாதம் கடந்த வெளிய ஞானம் ஈவது இ பேதம் தீர்த்து சமரச பேணி நிற்பது இந்
தியாகம் யாகம் எல்ல சேர்த்து வாழ்வது தியானம் செய்து சிவ செகத்தில் மிளிர்வ உயர்வும் பணிவும் சப
உலகைக் காப்பது செயல்கள் அனைத்தும்
சிற்றத்தைக் காப்
44
 

மதம்
திரு. சோமலிங்கம் - வந்தாறுமூலை.
iமரி வரை
இந்து மதம் ) நல்ல து இந்து மதம் றியில் வாழ்ந்து னது இந்து மதம்
2 6ör6opuno இந்து மதம்
டன் விாழ து இந்து மதம்
உணர்ந்து ந்து மதம் பில் நின்று ந்து மதம் :ம் காண து மதம்!
ாம் ஒன்ருய்
இந்து மதம் த்தை அடைய து இந்து மதம் Duonruiu a T6ðar Goof
இந்து மதம் சிவனுக்கு ஈந்து பது இந்து மதம்

Page 47
சைவசித்தாந்த தத்து
ଅର୍ଦ) {
சைவ சித்தாந்தம் என்பது சைவம், சித்தாந்தம் என்னும் இரு சொற்களால் ஆன தொடர். சைவம் சிவசம்பந்தமுடை புது சித்தாந்தம் முடிந்த முடிவு. ஆகவே சைவ சித்தாந்தம் என்ருல் சைவசமயத்தின் முடிந்த முடிபு எனப் பொருள்படும். சைவ சித்தாந்தம் என்னும் பெயரை முதன் முதற் கூறியவர் திருமூலநாபஞர். அவர் செய்த பாடல் ஒன்றில் சைவசித்தாந்தர் குறிப்பிடப் படுகிருர்கள்.
கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோக முற்பத. ஞான முறைமுறை நண்ணியே சொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே.
சிவநெறிச் சார்பான மிகவும் நுட்பமான முடிபுகள் சைவசித்தாந்தம் எனப்பட்டன. சைவசித்தாந்தத்தில் கடவுள், உயிர், உலகம் என்னும் மூன்றும் ஆராயப்படுவன. சைவர் எனப்படுவோர் நித்திய அநுட்டானம், சிவ பூசை, சிவாலய ைபூழிபாடு, சைவ ஆசா ர நியமனங்கள் என்பன வழுவாமல் மேற் கொண்டு வாழ்பவர். அவர்கள் கற்பன கற்றுக் கற்றவழியிலே நிற்பவராவர். சைவ சமயத்திற் பிறந்தவர்கள்  ைச வத் திறம் என்று சிவாகமங்களிலே விதிக்கப்பட்ட சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன வற்றில் முதன் மூன்றினையும் மெய்யன்போடு அதுட்டித்தால், அவர்களுக்குச் சிவபெருமான் ஞானபிரியர் மூலம் அருள் செய்து முத்தி கொடுத்தருளுவர். சைவசித்தாந்த முத்தி, ஆணவம் முதலிய மலபந்தம் நீக்கி, பிறப்பு, இறப்பு இல்லாத சிவபெருமானின் திருவடி களைக் கூடிச் சிவானந்த அநுபூதியில் இகுத் தலாம். நீரிற் கலந்த உப்பு அந்நீரின் ஒவ் வொரு திவலையிலும் காணப்படுதல் போல, சிவத்தினுடைய குணமெல்லாம் சிவத்தை யடைந்த உயிரிடத்தே காணப்படும்.

6. ங்கள்
வி. கு. குமுதினி 1ம் வருடம் வர்த்தகபீடம்.
இராசாங்கத்தமர்ந்த சைவம் எனவும், வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் எனவும் போற்றப்பட்டது எங்கள் சைவ சித் காந்தம். இதன் கோட்பாடுகள் திருவருட் பயனில் ஒரு திருக்குறளில் அழகாக வும் அமைதியாகவும் கூறப்பட்டுள்ளன. ஒருவ ஞகிய இறைவனும், அளவில்லாதவனகிய உயிர்களும், இருள்வுடிவாகிய ஆணவமலமும் கன்மமலமும், சுத்தமாயை, அசுத்தமாயை என்னும் இரு மா யை களு ம் ஆகிய இப் பொருட்கள் ஆறும் அநாதியானவை.
ஏகன் அனேகன் இருள்கருமம் மாயை யிரண்டாகவிவை ஆருதி யில்,
இவற்றை மூன்று பொருள்களாக க் கூறுவர். முதலாவது அறிவிக்காமலே எதனை யும் அறியும் பொருள். இரண்டாவது அறிவித் தால் அறியும் பொருள். மூன்ருவது அறி வித்தாலும் அறியாத பொருள். இம் மூன் றையும் முறையே பதி, பசு, பாசம் எனப் பெரியோர் பகருவர். இவை என்றுமுள்ள பொருள்கள்.
முப் பொருள்களும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தனவாய் இருப்பினும், ஒன்ருேடொன்று தொடர்புள்ளனவாகவே இருக்கின்றன. இத் தொடர்பை வியாபகம், வியா ப் பியம். வியாத்தி என்று சைவசித்தாந்தம் கூறும். இதனை ஓர் உதாரண மூலம் விளக்கலாம். ஒரு குவளை நிரம்பப் பால்கலந்த தேநீர் இருப் பதாக வைத்துக் கொள்வோம். குவளை யிலுள்ள இடம் வியாபகத்துக்கு உவமை; குவளையிலுள்ள தேநீர் வியாப்பியத்துக்கு உவமை, தேநீரில் உள்ள பால், தேயிலைச் சாரம், வெல்லம் ஆகிய மூன்றும் வியாத் திக்கு உவமை. இடத்தின் வியாபகம் தேநீருக்கும் பால் முதலிய மூன்றுக்கும் தனக்குள்னே அடங்கியிருக்க ஆதாரமாயி
45

Page 48
ருப்பதோடு இவற்றுள்ளும் விரவியிருக்கின்றது. இவ்வாறே பதியின் வியா பகத் துன் பசு வர்க்கமாகிய உயிர்களும், பாசவர்க்கமாகிய மும்ழலங்களும் உலகமும் அடங்கியிருப்பதோடு இவ்வியாபகமும் இப் பொருட்கள் எல்லா வற்றுள்ளும் ஊடுருவி நீக்கமற நிறைந்திருக் கின்றது. தேநீராகிய வியாப்பியத்துள் பால், தேயிலைச் சாரம், வெல்லம் ஆகிய மூன்றும் முழுமையுங்கலந்து நீக்கமற நிறைந்துள்ளன. அதுபோல உயிர் வர்க்கமாகிய வியாப்பியத் துள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் - வியா த் தி யாய் உள்ளன. இந்த வியாபக வியாப்பிய வியா த் தி த் தொடர்பை விளக்குவதற்கே இறைவன் உலகெலாமாகி, வேருய், உடனு மாய் நிற்பன் என்று சொல்லுவர்.
சைவ சித்தாந்தம் கடவுளுக்கு இரண்டு நிலைகள் உண்டு என்று கூறும் ஒன்று சொருபலக்கதையும் எனப்படும் சிறப்பியல் பாகும். மற்றது தடத்தலக்கதையும் எனப் படும் பொதுவியல்பாகும். சொருபலக்கதை பும் என்பது கடவுளின் உண்மைத் தன்மை யைக் காண்பிப்பது. இந்த நிலையிலுள்ள கடவுளுக்குப் பெயர், குணம், குறி முதலியன ஒன்றும் இல்லை. உருவம், அருவம், அருவுரு என்னும் மூன்றும் இல்லை. மனம் வாக்கு காயம் ஆகிய மூன்ருலும் அறியப்படாத அனுதி மூத்த சித்தாயிருக்கும். இந்த நிலையி லுள்ள கடவுளைச் சித்தாந்திகள் "பரமசிவம்” என்றும் 'சிவம்” என்றும் குறிப்பிடுவர். இக்கடவுளே வேதாந்த நூல்களிற் குறிப் பிடப் படும் "பிரமம்” ஆகும். பெயர் இல் லாத கடவுளுக்கு பெயர் கொடுக்கப்படும். இத் த கைய சொரூபலக்கணத்தையுடைய சாவம், உயிர்களுடைய துன்பங்களைப் போக்கி, அவைகளுக்கு அருள் செய்தற்காக இரக்கங் கொண்டு, தானகவே பலபடிகள் இறங்கி வந்து, பல நிலைகளிலுள்ள கடவுளரை அதிட் டித்து நின்று, அவர்கள் மூலமாக ஆணை செலுத்திப் படைத்தல் முதலிய தொழில் களைச் செய்கின்றது. இந்த நிலை கடவுளின் தடத்தலக்கணம் என்று சொல்லப்படும். '
い இறைவன் படைத்தல், காத்தல், அழித் தல், மறைதல், அருளல் என்னும் ஐந்தொ
4

ழில்களைச் செய்கின்ருர். உயிர்களுக்கு நிலைக் களஞன உடமடி, உணர்வதற்கு வேண்டிய கருவி கரணங்கள், வாழ்க்கை நடத்துதற் கான இடங்கள், நுகர்ச்சிக்கு வேண்டிய பொருட்கள் என்னும் இவற்றையே இறை வன் படைக்கின்ருள். இந்நான்கும் "தனு கரண புவன போகங்கள்” என ப் படும். ஒரு செயலுக்கு முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என மூன்று காரணங்கள் உண்டு. சிப்பி சிலையை உருவாக் கினன் என்னும் போது சிலைக்கு முதற் காரணம் கல்; துணைக்காரனம் உளி முதலிய கருவிகள் நிமித்த காரணம் சிற்பி. கடவு ளின் படைப்புக்கு முதற்காரணம் மாயை துணைக்காரணம் சக்தி இறைவனே நிமித்த காரணம். இறைவனே முதற்காரணம் என்ற கொள்கை சைவசித்தாந்தத் தத்துவத்துக்கு உடன்பாடில்லை. உலகம் ஒடுங்குவதற்கும் தோன்றுவதற்கும் இடமாயிருப்பது மாயை என்ற சைவர் பொருள் விரிப்பர். தோன் றிய உலகங்கள்ையும் உடம்பெடுத்த உயிர் களையும் உரிய கால எல்லை வரையிற்காப் பாற்றிக் கன்ம நுகர்ச்சிகளுக்குத் துணை செய்தலே காத்தல் எனப்படும். அழித்தல் என்பது பல பிறவிகளிற் பிறந்தி ற ந் து உழலும் உயிர்களை இளைப்பாற வைத்தல் ஆகும். ஆகவே இதுவும் ஓர் அருட் செயலேயாம். மறைத்தல் என்பது இருவினை யொப்பு வருவித்து மலங்களை முதிர்விக்கும் அருட் செயலாம். அருளல் என்பது உயிர் களின் பக்குவ நிலையில் அவற்றின் மல வந்தத்தை ஒழித்து. வீடுபேறு எனப்படும் முத்தியை அருளுதலாகும்.
மலங்கள் உடைமை பற்றிச் சைவ சித் தாந்திகள் உயிர்களை மூவகையாகப் பிரிப்பர். ஆணவமலம் ஒன்றே உடையோர் விஞ்ஞான கலர் என்றும், ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களை உடையோர் பிரளயாகலர் என் றும், ஆணவம், கன்மம், மாபுை ஆகிய மும் மலங்களும் உடையோர் சகலர் என்றும் கூறப்படுவர். எல்லா உயிர்களும் கடவுளுக்கு அடிமைகளே. சகலர் தாம் மலங்களினுற் கட்டுற்றதை உணர மாட்டார். பிரளயாகல ரும் விஞ்ஞானகலருந் தாம் கட்டுற்றிருப்பதை a_coartfalif, .
46

Page 49
உயிர், அறியும் ஆற்றல் உடையதாயினும் அறிவித்த வழியே அறியவல்லது. அது ஆண வ மலததோடு அத்துவிதமாய்க் கலந்திருக்கும் கேவல நிலையில் ஒன்றையும் அறியாது சட மாகவே கிடக்கும். ஆணவப் பிணிப்பிலிருந்து விடுவித்து உயிருக்குப் பேரின்பம் அருளுதற் பொருட்டே இன்றவன் அதற்கு உடம்பு முதலியவற்றைக் கொடுக்கின்றன். உயிர் உடம்போடு கூடுவதே அதற்குப் பிறப்பு ஆகும். பிறவிப் பெருங்கடலைத் தாண்டி முத்திக்கரை சேருவதற்கு வழி உண்டு எனறு சைவ சித் தாந்தம் உறுதியாய்க் கூறுகின்றது. சில ஒழுக் கங்களை மேற்கொண்டால் வினைகளை ஒழிக் லாம். பிறவியை நிறுத்தலாம்; பேரின்பத்தை அடையலாம் என்று சித்தாந்திகள் நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். இதற்கு வழி இறைவனை அடைந்து வழிபடுதலேயாம். இறைவழிபாட்டிற்கு மசகட் பிறவியே சிறந் தது. உயிர்முத்தி பெறுவதற்கென்றே மனிதப் பிறவியை இறைவன் கொடுத்துள்ளான் என் பது சித்தாந்த முடிபுகளுள் ஒன்று.
மலங்கள் அறிவித்தாலும் அறிய மாட் டாத சடப் பொருள்கள். ஆதலால் அவை அசத்து என்றும் அவித்து என்றும் சொல்லப் படும். அவை உயிரை மாசுபடுத்துவதால் மலம் என்றும், கட்டுவதனல் பாசம், பந்தம், களை, கட்டு என்றும் சொல்லப் படும். "ஆணவம்” என்பதற்கு அணுவின் தன்மை உடையது என்பது பொருள். மிக்க நுண்ணிய தாய் உயிரை ச் சிறுமைப்படுத்துவதனல் இம்மலம் ஆணவம் எனப்படும். இது, உயிரை மறைத்திருப்பதோடு தன்னை உயிர் காண, வொட்டாமலும் மறைத் து க் கொள்ளும் “பலரைப் புணர்ந்தும் இருட்பாவைக்குன் டென்றும் கணவர்க்கும் தோன்ருத கற்பு’ என்ற அழகான உருவகத்தால் உமாபதி சிவனர் இதை விளக்குகின்ருர். உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கெல்லாம் இதுவே மூலகாரணமாயுள்ளது எனலாம்.
கன்மம் என்ருல் வினை என்பது பொருள். அது நல்வினை, தீவினை ஸ்ன இருவகைப்படும். அவை மனத்திற் செய்யப்படுவனவும், வாக் கினற் செய்யப்படுவனவும், சரீரத்தாற் செய் யபபடுவனவும் என ஒவ்வொன்றும் மூவகைப்

படும். உயிரானது முற்பிறப்புக்களில் செய்த வினைத் தொகுதியின் ஒரு பகுதியை மட்டுமே. இப்பிறப்பில் அனுபவிக்கின்றது. அவ்வாறு அனுபவிக்கப்படும் வினைப்பகுதிக்குப் பிராாத் தம என்பது பெயர். "அனுபவிக்கப்படாமற் பின் வரும் பிறப்புக்களில் அனுபவிப்பதன் டெர்ருட்டு எஞ்சியிருக்கும் பழவினைக்குச் சஞ் சிதம் என்பது பேயர். பிராரத்த வினையை இப் பிறப்பில் அனுபவிக்கும் போது புதிதாகச் சேரும் வினைக்கு ஆகாமியம் என்பது பெயர். உயிர் உடம்போடு கூடியவழியே இருவினை யும் உண்டாகின்றமையாற் கன்மமலம் ஆகத் துக் மலம் எனப்படும். உயிர் அநாதியாதலால் அதன் வினையாகிய கன்மமும் அநாதியாம்.
சைவ சித்தாந்திகள் மாயை அநாதியே யுள்ள நித்தியப் பொருள் என்று விளக்குவர். மாயா காரியங்களான உடம்பும் கருவி கர ணங்களும் உயிர்களன் அறிவை ஓரளவு விளக் குவதால் இதனை விளக்குப் போன்றது என்பர் உமாபதி சிவனர். ‘விடிவாமளவும் வளக் கனைய மாயை வடிவாதி கன்மத்து வந்து'; கன்மத்தைப் போலவே மாயையும் உயிரை வந்தடைவதால் ஆகந்துக மலம் எனப்படும்.
மூலமலம்ாகிய ஆணவம் உயிரோ டு இயைந்திருக்கும் வரையும் பிறப்பு உண்டு பிறப்புண்டானுற் கன்ம மும் உண்டாம்; மாயா மலமும் உண்டாம்; பிறப்பை ஒழிப் பதற்கு மலங்கள் மூன்றையும் அறுத்தல் வேண்டும். இதற்குச் சைவ சித்தாந்தம் வழி களைக் கூறுகின்றது. முதலில் அறுவது மாயா மலம்; இரண்டாவதாக அறுவது கன்மமலம். இறுதியில் அறுவது ஆணவமலம். முதற்படி காகப் பெற வேண்டியது தீட்சை, ஆணவ மலம் இறைவனுடைய ஞானசக்தியால் ஒழிக் கப்படும். வாதனை பற்றி நிகழும் ஆகாமிய கன்மமும் இந்த ஞானசக்தியினலே ஒழிக்கப் படும். சஞ்சிதகன்மம் கிரியா சக்தியினல் ஒழிக் கப்படும் பிராரத் தகன்மம் அனுபவித்தே ஒழித் தற்குரியது. இந்த மலங்கள் அறுவதற்காக உயிர், படிமுறையாக ஏறிச் செல்வதற்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களைச் சைவ நூல்கள் கூறு கின்றன. மனிதப்பிறவி எடுத்த உயிர், மேற் கொள்ள வேண்டிய ஒழுக்கத்தை "இறைபணி நிற்றல்" என்று பொதுவாகக் கூறலாம்.
阿

Page 50
அகப்பூசை, புறப்பூசை, தியானம், திருக் கோயில் வழிபாடு, அடியார் வழிபாடு சமூகத் தொண்டு ஆகிய இவை எல்லாம் "இறைபணி நிற்றல்" என்பதில் அடங்கும். ஏழைகள், நோயாளிகள், அங்கவீனர்கள் ஆகியோருக்கு உதவி செய்யும் போதும், வெள்ள நிவார ணம், பஞ்ச நிவாரணம் முதலிய தொண்டு கள் செய்யும் போதும், கீழ் நிலையிலுள்ள ஓர் உயிருக்குத் தான் மேல் நிலையிலிருந்து இறங்கி, இரங்கி உதவி செய்வதாக எண்ணு கின்ற மனப்பான்மை எள்ளளவேனும் இருத்த லாகாது. இறைவன் கொடுத்த பொருளைக் கொண்டு, இறைவன் கட்டளையிட்டு அறிவு றுத்தும் இவ்வழியில் இறைவனுடைய கருவி யால் நின்று இதை செய்யும்பேறு பெற்றேன் என்ற உணர்வோடே ஒருவர் இப்பணிகளைச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்யும் போது இவ்வுயிரின் பக்குவம் படிப்படியாக முதிர்ச்சி பெறும். இப்படிகளை இருவினை ஒப்பு, மலபரிபாகம் சக்தி நிபாதம் என்பது சித்தாந்த முடிபு.

முத்தி என்பதற்கு விடுவதலை என்பது பொருள். உயிரானது பிறப்பு, இறப்பு என் னும் தொடர்ச்சியிலிருந்து விடுபட்டு, இறை வன் திருவடியில் இரண்டறக் கலந்து, அவ னுடைய ஐந்தொழிற்களிற் கலவாது. என் றென்றும் பேரின்பம் அனுபவித்துக் கொண் டிருக்கும் நிலையே முத்தி நிலை என்று சைவ சித்தாந்திகள் கூறுவர். முத்தி நிலையிலும் இறைவன் தலைவனுகவும் உயிர் அவனது அடிமையாகவும் இருக்கும் என்பது சைவ சித்தாந்தம் கூறும் உண்மைகளுள் ஒன்று. இறைவனும் உயிரும் இரண்டறக் கலந்து ஒன்ருய் நிற்பினும் உயிரின் அழியாத நிலை இங்கும் வற்புறுத் தப்படுகிறது. இதனை "தாடலை போற் கூடியவை தானிகழா வேற் றின்பக் கூடலை நீ ஏகமெனக்கொள்" என்று திருவருட்பயன் கூறுகின்றது. தாள். தலை என்னும் இரு சொற்களும் தாடலை எனச் சேர்ந்தாற் போல், சிவமும் உயிரும் பிரிப் பின்றி நிற்கும் நிலை அத்துவிதம்.

Page 51
இந்து மதம் கூறும்
பி. ஆர். செல்வகு
விஞ்ஞானிகளுக்கு மதத்தில் நம்பிக்கை இராது என்பது இன்றைய பகுத்தறிவு வாதிகளின் பேச்சு. ஆளுல் சமீபத்தில் உலகப் புகழ் பெற்று விளங்கிய, ஐன்ஸ்டீன் என்னி சொல்லுகிருர்? “மதத்தை ஒட்டிச் செல்லாத விஞ்ஞானம், நடக்க முடியாத நொண்டியைப் போல, விஞ்ஞான ரீதியாக அமையாத மதம் பார்க்க முடியாத குருடனைப்போல’ என்று சொல்லுகிருர், மருத்துவக் கலையில் நோபல் பரிசு பெற்றவர் அலெக்ஸ்கோரல் என்ன சொல்லுகிருர்? மனிதனின் புதிய கண்டு பிடிப்புக்கள் அவனுடைய நல்வாழ்வுக்கு வகை செய்திருக்கலாம். ஆளுரல் அவனுடைய உறுதியான வாழ்க்கை உறுதியாள் உடலேப் போல, சீரான உள்ளப்பாங்குடன் அமைங் வேண்டுமானல் அவன் மதம், க்ாட்டும்: வழியையும் ஒட்டி நடக்க் வேண்டும் என்று கூறுகின்றர். இஹா உபநிடதம் இதைத்தான் சொல்கிறது. மனிதனுக்கு மெய்ஞ்ஞான அறிவு வித்தியா) உலகியல் சார்ந்த அறிவு (அவித்யா) இரண்டுமே தேவை. கடவுளின் அருளை உணர்ந்து வாழ்வில் மேன்மையை அடைய வித்தியா உதவிபுரியும். வாழ்க்கையை எல்லா வசதிசளுடனும் அமைத்துக் கொள்ள அவித்யா உதவுகிறது என்று அது கூறுகிறது:
உலகத்தில் எந்தப் பொருளும் ஒரு குறிப்பிட்ட நியதியிலேயே இயங்குகிறது. அதேபோல எந்தக் காரியமும் அதற்குரிய மறுபலனைத் தராமல் போவதில்லை. இத்த இரண்டையும் மனிதன் விஞ்ஞான சோதனை களின் மூலம் தெரிந்து கொண்டான். இந்து மதம் அன்று முதல் நமக்கு மெய்ஞ்ஞான அறிவாகப் புகட்டி வந்திருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அதற்கு, முன்பே அமைந்து விட்ட ஒரு காரணத்தை ஒட்டியே நடக் கிறது. இந்த நிகழ்ச்சியில் எதைச் செய்கி ருேமோ, அதைப் பொறுத்தே அடுத்த நிகழ்ச்சி அமைகிறது என்று விஞ்ஞான்ம்
4

இக்கால விஞ்ஞானம்
மார், உயிரியல் விஞ்ஞானம், இறுதியாண்டு.
கூறுகிறது. இந்து மத வேதாந்தம் இதையே முற்பிறவியில் செய்த நல்வினைகளை ஒட்டியே இந்தப் பிறவியின் நல்வாழ்வு அமைகின்றது இந்தப் பிறவியில் செய்யும் நல்ல காரியங் களை ஒட்டியே அடுத்த பிறவியில் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறுகிறது. இது Law of Kama அல்லது கர்மவிதி என்று சொல்வார்கள். இது வேறு மதங்க வில் இல்க்ல.
மனிதர்களது படைப்புப் பற்றி மத்ங்கள் கூறும் கொள்கைகளில் கடவுள் பூமண் டலத்தைச் சிருஷ்டித்தார் என்றும் அப்படித் தோன்றிய ஆருவது நாளிலே மனிதனும் கடவுளரில் உற்பத்தி செய்ய ப் புட் டான் னின்றும் சில மதங்கள் கூறுகின்றன ஆளுல் இந்து மதம் கூறும் தத்துவம் அது வல்ல. கடவுளின் விம்பமாக அவரிடி மிருந்து தோன்றியதே உலகம், அதன் உயிர்கள் அக்சத்தும் அந்தக் கடவுளின் வடிவமே. படிப்படியாகத்தான் நீரில் வாழ்ந்து, நிலத் தில் வாழ்ந்து, மிருகமாக வாழ்ந்து மனித ணுக அவன் உருவானன். இப்படி அவனைப் படிப்படியாக வளர்ச்சி பெற வைத் தே கடவுள் அவனை முன்னேறச் செய்தார் என்று கூறுகிறது இந்து மதம். இதுவே விஞ்ஞான ரீதியிலான கூற்றிற்கு அமைவா னதாகக் காணப்படுகின்றது. எத்தப் பொரு ளும் படிப்படியாக த் தா ன் ஒரு நிலயில் இருந்து இன்னேர் நிலைக்கு மாறி அதன் மூலம் மேம்பாடான உருவத்தை அடைகிறது என்பதே விஞ்ஞான தத்துவமாகும். உலகிைே தோன்றிய மனிதர்களை இந்து மதம் வன்க களாகப் பிரித்தது. விஞ்ஞானிகளுக்கு இது பெரும் வியப்பாகவே அமைந்திருக்கலாம்; மனிதனின் காலப்போக்கை ஆராய்பவர்கள் கற்கால மனிதனிலிருந்து இக்கால மனிதன் வரை தரம் பிரித்துக் கூறக்கூடும். ஆயினும் அவர்களால் அந்த மனிதர்களைக் குணங்களின்
9

Page 52
அடிப்படையில் வகைப்படுத்த இயலாது. மருத்துவ நிபுணர்கள் உடற்கூற்றை ஆராய் கிருர்கள். ஆனல் அவர்களால் உறுப்புக்களைப் பொதுவாக ஆண், பெண் என்று இனம் பிரிக்க முடியுமே தவிர, வேறு விதமாகச் சு பா வத் தை ஒட்டிப் பிரித்துச் சொல்ல ՓՔւգաn 5l.
ஆனல், இந்து மதம் அப்படி விட்டுவிட வில்லை. மனித இனத்தை மற்ற உயிரினங் களுடன் ஒப்பிடுகின்றது. அவனுடைய குணங் களின் அடிப்படையில் அவனை மற்ற உயிரினங் களுடைய பண்புகளுடன் ஒப்பிடுகின்றது. மனிதனின் உடலைப் பொறுத்தமட்டில் அல்லா மல் உள்ளப்பாங்கை வைத்தும் அவனை வெவ் வேறு நிலைகளில் பிரித்துக் காட்டுகிறது. இது எவ்வாறு அமைகின்றது எனப் பார்ப்போம். உலகத்தில் மண் ணு ம், க ந் களும் சடப் பொருட்களாக அமைகின்றன. அவை தம் மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை மழை, வெயில், காற்று போன்ற இயற்கையின் சக்திசளே அவற்றைச் சிறிதளவு பாதிக்கின்றன. இவற்றுக்குத் தம்மைச் சுற்றி யுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மை மாற் றிக் கொள்ளத் தெரியாது. இயற்  ைக  ைய ஒட்டி அவை எந்த நேரமும் அசையாது வீழ்ந்து கிடக்கின்றன. இதே போல் தம்மைச் சுற்றி யுள்ள சமூகம், உலக அமைப்பு, உயிர்கள் எதைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் இருந்த இடத்திலேயே அசையாமல் விழுந்து கிடக்கும் மனிதர்களும் உண்டு. இவர்கள் .. &isita) udafi 5 fascit (Stone age menj szerü படுகிரு ர் கள். இதற்கு அடுத்த படியாக உயர்ந்த உயிரினம் தாவரங்கள். இவை ஒரே இடத்தில் இருந்தாலும் உயரமாகவும், அகல மாசவும் வளர்ந்து தமக்கென்று ஒரு சூழ் நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றன. தமது நன்மைக்காக நீரையும், காற்றையும் ஒளியை யும் நாடுகின்றன. பிறர் தம்மை அணுகாத வாறும் ஓரளவு தடுக்க முயலுகின்றன. இதே போல முழுவதும் தனக்காக வாழும் மனிதர் களும் இருக்கின்றர்கள். இப்படி முழுவதும் சுயநலம் என்ற ஒரே நோக்கத்துடன் வாழ் ப வர்களை த் தாவர இன ம னித ர் க ள் (Plant men) என்று வகைப்படுத்தினர்கள். மிரு கங்கள் தாவர இனத்தை விட உயர்ந்தவை.

அவை ஓரளவு உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப வாழ நினைத்து அவை இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லு கின்றன. பசி வ ந் தாலும் அவை தமது இனத்தைச் சேர்ந்த உயிர்களைக் கொல்லு வதில்லை. தமக்கு பிறக்கும் குட்டிகளை கண் னெனப் பாதுகாக்கின்றன. சில சமயங்களில் நன்றி உணர்வுடனும், விசுவாசத்துடனும் வாழ்வதுண்டு. ஆனல் இவற்றிற்கு உயர்ந்த உள் ள ப் பாங் கு கிடையாது. சாதாரண உணர்ச்சிகளே அதிகமாதலால் அதற்காக எதையும் செய்து தம்மைத் திருப்தி செய்து கொள்ளும். இகைப் போல உயிர்வாழும் மனிதர்கள் இருக்கிருர்கள். இவர்கள் தமது உடைமைகளையும், குடும்பத்தையும் காத்துக் கொள்ளப் பிறரை அழிக்கவும் துணிவார்கள். தமது பசி, கோபம், தாகம், காமம் போன்ற உணர்ச்சிகளைத் தணித்துக் கொள்ள எதை யும் செய்ய முற்படுவார்கள். உணர்ச்சி அடிப் படையைத் தவிர இவர்களுக்கு பண் பின் நயம் முக்கியமாகத் தெரிவதில்லை. இப்படிப் பட்ட வர் களை மிரு க ம னித ர் க ள் (Animal men) GTGår nyth sprub 19íhö35T třS6it.
மனித உயிர் மேற்குறிப்பிடப்பட்ட மூன்று வகை உயிரினங்களைக் காட்டிலும் மேன்மை யான படைப்பாகும். ஏனென்ருல் அவனுக்கு இந்த உயிர் உள்ள உடம்பைத்தவிர உள்ளம் என்று ஒன்று இருக்கின்றது. அவனுடைய பகுத்தறிவு அவனுக்கு நல்லவை, தீயவை எவை என்று அடையாளம் காட்டுகிறது, உடம்பைப் பற்றிய உணர்வுகள் மட்டும் இன்றி உள்ளத்தைப் பொறுத்தவரை நல்ல இயல்புகளைப் பெற வும் வழிகாட்டுகிறது. இந்த ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் சாதா rGooT LD6afsiri & Gir (Ordinary men). GuLGB6v குறிப்பிட்ட மூன்று வகையிலும் அவர்கள் உட்படுகின்றர்கள். இந்தச் சாதாரண மணி தர்களே வாழும் விதத்தைப் பொறுத்தவரை யில் சடமாகவும், தாவரமாகவும், மிருகமாக வும் அமைந்து விடுகின்ருர்கள். இப்படிப்பட்ட வர்களைச் சற்று உயர்த்தி மேலே உயர்ந்த நிலைக்கு நமது மதம் அழைத்துச் செல்கிறது. அந்த வகையில் அது விஞ்ஞான சாதனையை விட ஒருபடி மேலே போகின்றது. சாதாரண வாழ்க்கை வசதிகள் மூலம் இந்த மூன்று
50

Page 53
வன்கி மன்தர்களும் வாழ்க்ஸ்கயின் அடிப் படையானநன்மைகளைப் பெறமுடியும்.ஆஞ்றல் மத்மோ ஆன்மீகப் பாதையின் மூலம் அவர் க்ளை அதைவிட உயர்ந்த நிலக்கு அழைத் துச் சிெல்கிறது. அதாவது எல்ல்ோருக்கும் உடம்பு,மனம்:புத்தி ஆகியவை"மூன்றும் இருக் கின்றன.ஆனல் சாதாரண் உலகளிள்ழ்க்கையில் இருந்து சற்று உயர்ந்த, மேலான உணர்வு ளைப் பெற இவற்றை ஓர் உன்னரின் தூண்டி விட வேண்டியிருக்கிறது. அதுதான் ஆன்மீக உண்ர்ச்சியின் விழிப்பு. இது தின்னலேயே வந்து விடுவதில்லை. இறைவனைப் பற்றிய உணர்வு அல்லது பரம்பொருளைப் பற்றிய உணர்வு வந்ததும் தான் இந்து விழிப்பு ஏற் படுகின்றது. சாதார்ண் நிலையில் குள்ர்சாத னப்ட்ெடி குள்ர்ச்சி தருவதில்லை. மின்விசிறி காற்றைச் சுழற்றி விடுவதில்லை. ஆஞ்ல் மின் சாரம் அவற்றுக்குச் செலுத்தப்பட்டதும் அவை இயங்கத் தொடங்குகின்றன. அதே போல ஆன்மீக விழிப்பு ஏற்பட்டதும் மணி தர் சீளது உடம்பு, மனம், புததி ஆகிய மூன்று சாதனங்களையும் அவற்றின் சாதாரண இயக் கத்தைக் காட்டிலும் மேம்பட்ட நிலைக்குக் கொண்டு போகக் கூடிய உயர்வை அடைந்து விடுகின்ருன். அவன் தன்னுள்ளேயே இறைவ னைக் காண்கின்ஞ்ன். 'எல்லாக ஒன்றே - எல்லாம் இறைவனே ஆன்ன்ற உயர்ந்ததுண் மையை உண்ர்கின்ருரன். இப்ப்டி மனிதன் உயர்த்துவது மதம். இது காட்டும் மெய்ஞ் ஞானப் பாதையானது, தத்துவ் அடிப்பீல்ட யில் விஞ்ஞானத்தைக் காட்டிலும் உயர்ந் தோங்குகின்றது. மனிதனை வேறு பி ரித்து நெறிப்படுத்தக் கூடிய வகையில் வழிப்படுத்தி மனிதனை உயர்ந்த நிலைக்குக்கொண்டுபோகும். ஞான மார்க்கத்தை இந்து மதம் நமக்கு எளிமையாகக் கற்றுக் கொடுக்கின்றது. உல கம் நமக்கு கொடுக்கக் கூடியதை விஞ்ஞானம் கண்டு பிடித்துக் காட்டுகிறது. உலகத்துக்கு நாம் கொடுக்கக் கூடியதை மெய்ஞ்ஞானம் நமக்கு உணர்த்தி அது நமக்குள்ளேயே இருப் பதையும் எடுத்துக் காட்டுகிறது.
எந்தக் கொள்சையையும், ஒவ்வொரு விஞ்ஞானியும் தனக்குரிய புதிய கோணத்தில் பார்த்து அதற்கு பொருள் கூறும் விதமாக அமைப்பதுவும் இயல்பு. அத ஞ ல் தான்

நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டிற்ஜ் இன்திNமூகு" னேற்றமடைந்து வேறு :: கின்றது இந்து மதத்தின் ஞானிகளும் இது போன்ற"விஞ்ஞானிகளே. அதனுல் தான் சிலர் சடவுளை வெளியே ஒரு வடிவமாக வைத்துத் துதித்தார்கள். வேறு சிலர் கடவுளை நமக்குள்ளேயே தேடிக் காணும் பாதையை யும் பக்குவமாகக் காண்பித்தார்கள். கடவுளைப் பிரார்த்திக்க வெவ்வேறு ஒலி வடிவங்களை யும் அமைத்துத் தந்தார்கள். மெளனத்தில் மூழ்கியே இறைவனை உணர்ந்தும் கொள்ள லாம் என்றும் கற்றுக் கொடுத்தார்கள்.
ஆலயங்களுக்கு வழிபடச் செல்லும் மணி தர்களில் அங்கு நடைபெறும் தீபாராதன்ை கள், அர்ச்சனைகள் என்பவைகளால் ஏற்படும் உடல் உள ரீதியிலான நன்மைகளை நோக்கி ஞல் அதில் அடங்கியுள்ள விஞ்ஞானப் பின் னணியை நாம் காணலாம். அபிஷேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை செய்கின்ற வேள்ை யில் காற்று மண்டலத்தில் என்னென்ன மாறு தல் ஏற்படுகின்றன. அப்போது காற்று மண் டலத்தில் ஒரு மின் தேக்கியை வைத்து மின் னுளட்டத்தை (charge) அளத்தால் தூபம், தீபம் காட்டும் மாறுபாட்டால் மின்னூட்டம் மாறுப்டுவது தெரியும். எதிர் மின்னூட்ட மும், ஈரப்பதமும் 2ெஉள்ள காற்று மண்டலம் கருப்பக் கிரகத்துள் அமைந்துள்ளது. அந்தக் காற்று மண்டலத்துள் "ஓம்" என்ற பிரண்வ மந்திரஷலியுடன் அர்ச்சனைசெய்யும்போதுஅந்த ஒலி விக்கிரகத்தில் பட்டு எதிரொலிக்கிறது. இதனல் அந்தக் காற்று மண்டலத்தில் பெரும் Joy Sri Gayub, (ypš 5 6rf Gayub (Maximum Amplitude at Resonance) கிடைக்கிறது. இந்நிலையில் ஏற் படும் காற்றுவீச்சு எதிரே உள்ள பக்தர்களின் மேல் விழும்போது. அவர்களுக்கு உள்ளவள மும், உடல்வளமும் கிடைக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையை அன்றே அறிந்திருந்த நமது முன்னேர்கள் இத்தகைய ஆலயங்களை மலைகள் மீதும், கடற்கரைகளிலும், மூலிகை கள் அடர்ந்த சோலைப் பகுதிகளிலும், நதிக் கரையோரங்களிலும் அமைத்திருக்கின்ருர் கள். இந்த இடங்களில் உடல், உள்ளத் தூய் மைகளும், நலங்களும் பெறுவதற்கான சூழ் நிலைகளும் உருவாக்க்ப் பட்டிருக்கிறது. ஆலயங் களுக்கு செல்பவர்களுக்கு மேலே சொன்ன
51

Page 54
பலன்கள் தவருமல் கிடைப்பதற்காகத்தான் ஆலயங்களில் ஆறுகால அபிஷேகங்கள் நடத் தப்பட வேண்டும் என்கிருர்கள். தொடர்ந்து நடைபெறுகின்ற அர்ச்சனைகளினதும் ஆரா தனகளினதும் விளைவுகளால் கருப்பக் கிரகத் தில் உள்ள விக்கிரகத்தில் தொடர்ந்து அதிர் வுகள் நிலைத்திருக்கும். ஆலயத்திலுள்ள கருப் பக் கிரகத்தின் அமைப்பு இதை சேமித்துப் பாதுகாக்கக் கூடியதாக உள்ளது! மூல விக் கிரகம் ஒலி அலைகளின் எதிரொலியை எழுப்ப வல்ல விதத்தில் அமைந்துள்ளது. இதற்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரத் தகடு சேமிப்புக் கலமாகவும், காற்று மண்ட லம் அந்தச் சக்தியைப் பெற்றுக் கடத்தும் முறையிலும் அமைந்துள்ளது.
இதன் முழ்ப்பலனும் வழிபட வரும் பக்தர்களுக்குப் போய்ச்சேருகின்றது. அவர்கள் இவற்றைப் பெறுபவர்களாக விளங்குகின்ருர் கள். கருப்பக் கிரகத்தில் உள்ள காற்று மண்ட லத்தில் பிராணவாயு அல்லது ஒட்சிசனுடைய அழுத்தம் அதிகரிக்கிறது. அதே வேளையில் அந்தக் காற்றும்ன்டலம் ஒட்சிசன் மூலக் கூறுகளை அதிகமாகப் பெறுவதால் பக்தர் களின் உடல் நலம் சீர்பெற உதவும். ஒலியின் திசைவேகம் ஈரப்பதத்தில் அதிகமாக இருக் கும். ஆகையால் எப்போதும் அபிஷேக நீரீனல் ஈரமாகவே உள்ள கருப்பக் கிரகம் இந்த நிலையை ஊக்குவிக்கும் விதமாக அமைத்துள்ளது. ༨

பண்டைய காலம் தொட்டு இன்று வரை இந்து மத வழிபாட்டு முறைகளிலே யாகம் முக்கிய ஒரு இடத்தை வகிக்கிறது. பண்டைய காலங்களிலே ஆற்றங்கரைகளிலே பெரிய பந்தல் போட்டு மக்கள் இதில் கலந்து கொண்டார்கள். இதில் பெரிய கூட்டுறவுத் தத்துவம் உண்டு. ஒரு சிலர் பந்தல் போட வருவார்கள். வேறுசிலர் யாக சாலை யை உருவாக்குவார்கள். வேறு சிலர் யாகத்துக் கான பொருட்களைத் தயார் செய்வார்கள். சிறந்த ஞானமும் தகுதியும் உடைய பண்டி தர்கள் மட்டுமே யாகத்தை நடத்துவார்கள். ஒரு சமூகத்தில் உள்ள பெரும்பாலும் எல்லா மட்டங்களிலுள்ள எல்லாமக்களும் கலந்து கொள்ளக் கூடிய தன்  ைம இந்து மத பண்டைய சமூக அமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தது. இது பலன்தரும் பக்தியுடன் கூடிய உயர்ந்த கூட்டுறவுத் தன்மையைப் பிரதி பலிக்கக் கூ டி யதாக அமைந்திருந்தது.
இந்து மதத்தில் காணப்படும் அனைத்து அம்சங்களும் விஞ்ஞானக் கருத்துக்களுடன் பின்னிப் பிணைந்தவையாகவே காணப்படு கின்ற்ன. இவற்றை விளங்காத தன்மையாலும் தவருகப் புரிந்து கொள்வதாலும் நடை முறையில் இன்று போலிகளும் அஞ்ஞானமும் மலிந்துவிட்டன. இதற்கு விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒருங்கே அமையப் பெற்ற இந்து மதம் பொறுப்பல்ல என்பதை இந்து சமூகம் உணர வேண்டும்.

Page 55
இந்து மதத்தில்
கிரியைகள் பற்
எஸ்
கிரியை எனும்போது செயலாற்றுதல் அல்லது தொழிலாற்றுதல் அல்லது வினை ாாற்றுதல் எனப் பொருள்படும். அது சமயத் துடன் தொடர்பு கொள்ளும் பொழுது சடங்குக் கொள்கை என அழைக்கப்படும் வட சொல்லாகிய "கிறு" என்ற வினையடியி லிருந்து கிரியை எனத் தோற்றம் பெற்றது. சமயம் தொழிலைக் கிரியா மார்கத்துட்ன்
தொடர்புறுத்துகின்றது.
சரியை மார்க்கம், கிரியை மார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், தியான மார்க்கம் என ஆறு வகை மார்க்கங்கள் உண்டு இந்த ஆறுவகை மார்கங்களையும் இரு பிரிவினுள் அடக்கலாம் அறிவில் முதிர்த்தவர்களுக்கு போக, தியான மார்க்கங்கள் உகந்தன. ஏனையவர்களுக்கு அது பொருந்தாது. இந்த இரண்டையுமே ஞான மார்க்கத்தில் அடக்கலாம். கிரியை, பக்தி மார்க்கங்களை கிரியை மார்கத்தினுள் அடக்கலாம். கிரியை, மார்க்கமானது சமயத் துறையினை உள்ளடக்கியது. சமயம் நம் பிக்கையினை அடிப்படையாகக் கொண்டது. நம பிக்கை அற்றவர்களுக்குச் ச ம ய மும் இல்லை கிரியையும் இல்லை எனலாம்.
மனிதன் இவ்வாழ்க்கையினை நெறிப்படுத் தவும், சீர்படுத்தவும் கிரிகைகள் வழி வகுக்கின் றன அவன் வாழ்க்கையில், அறிவுவழி மூலமும் செயல்வழி மூலமும் முன்னேற முடிகின்றது அறிவுவழி மார்க்கம் சைவ சித்தாந்தமாகவும் செயல்வழி மார்க்கம் கோயிற் கிரியை நெறி யாகவும் வகுக்கப்பட்டுள்ளது. வேதமும் ஆகப மும் கிரியை நெறிபற்றிப் பல்வேறு விதமான செயல்களையும், பொருட்களையும் கொண் டுள்ளன. வேதங்களில் கிரியை பற்றி அறிக் முடிகின்றது. கிரியையின்றி வேதமில்லை

ற்றி ஒரு கண்ணுேட்டம்
பகீரதன், பெளதீக விஞ்ஞான்ம் 2th வருடம்
இவை மரபு வழிக்குட்பட்டி வேதாகம்க் கிரிசை
கள் ஆகும். விஞ்ஞான அறிவிஞல் கிரின்க்
முறைகள் நடைமுறை வாழ்வில்ே குறைந்து
வருகின்றன, எனினும் அடியோடு மாறவில்லை
எனலாம்.
இந்துக்களின் வாழ்க்கையோடு கிரியைகள், சடங்குகள் என்பன பிணைக்கப்பட்டுள்ளன. கிரியைகனை கோயிற்கிரியை, வீட்டுக்கிரியை என இரு வகைப் படுத்தலாம். மிேலும் கோயிற்கிரியைகளை நித்தியகிரியை, நைமித் திய கிரியை எனவும் வீட்டுக்கிரியையினை பூர்வகிரியை, அபரக்கிரியை எனவும் பிரிக் கலாம். இக்கிரியைகள் எல்லாம் ஆன்மீக ஈடேற்றத்தினை அடிப்படையாகக் கொண்ட வையாகும். கோவில்கள் பாரதக் கிரியைக் காகவே உருவாக்கிப்பட்டவை. இங்கு சமூக நலன் கருதியே பூசைகள் நடைபெறுகின்றன. கோவில்களில் தினந்தோறும் உசங்காலம், காலாசந்தி, இச்சிக்காலம், சாயரட்டை இரண்டாங்காலம், அர்த்த சாமம் ஆகிய ஆறு பூசைகளும் நித்திய கிரியைகள் ஆகும். பெரிய கோவில்களில் பன்னிரண்டு காலப் பூசை நடைபெறுவதுமுண்டு. சில ஆலயங் களில் விசேட தினங்களில் மாத்திரம் வழிபாடு இடம்பெறும் இத்தினங்களில் விசேட அபி ஜேகமும் ஆராதனைகளும் வழிபாடுகளும் நடைபெறும். பிரதோஷம் திருத் தி கை, சதுர்த்தி, ஆனி உத்தரம், ஆடிப்பூரம், ஆவ்ன்
மூலம், நவராத்திரி, கார்த்திகை,சோமவாரம், தைச்சங்கராந்தி, தைப்பூசம், மாசிமகம்,மீள மகம், பங்குனி உத்தரம், ன்வகசி விசாகக் போன்ற விசேட திண்ாங்களில் செய்யப்படும் கிரியைகள் நைமித்திய கிரியை" எனப்படும். நித்திய கிசியைகளும் நைமித்திய கிரியைகளும் பலன் கருதிச் செய்யப்படும் பொழுது அவை காமிய கிரியைகள் ஆகின்றன. பொதுவிரிக ஆலயங்களில் சங்கற்பம். விக்னேஸ்வரர் பூசை
S3

Page 56
பண்ணியாகாவர்சனம், பஞ்சகெளவியம், பஞ் சாமிர்த பூசை முதலியவற்றேடு அலங்காரம், அபிடேகம், நைவேத்தியம், தீபாராதனை, அர்ச்சனை, தோத்திரம் போன்ற கிரியைசளும் நிகழ்கின்றன. -
சமூக வாழ்க்கையே கிரியையின் அடிப் படையாகும். துதிபாடுதல் முறையும் கிரியை யில் குறிப்பிடப்படுகின்றது. தேவாரம் திருவா சகம் பாடும் முறை இவ்வாறே வெளிவந்தன. கிரியை முறைகள் இல்லறத்தானுக்கு மட்டுமே சொல்லப்படுகின்றன. வாழ்வினை உயர்த்து வதும் தாழ்த்துவதும் அவனவன் செய்த செயலே ஆகும். இந்து சமயம் தழைத் தோங்கிய காலத்தில் அவற்றிற்கேற்ப வழி பாட்டு முறையும் அதாவது பல்வகைக் கிரியை களும் அக்கால வழிபாட்டில் இடம் பெற்றிருக் கலாம். வேதத்தில் அரைவாசி செயல்வழிக்கு முக்கியம் கொடுக்கின்றது. இவை பழமை யினைப் பேணுவன. வேதக்கிரியையின் முக்கிய நோக்கம் தானம் சொடுப்பதாகும். கொடுத் துப் பெறுவதே முக்கிய வழிபாடாகும். இருக்கு வே த ப் பாடல் களி ல் பெரும் பாலானவை தெய்வத்தினை விழித்து "நான் நெய், கேன், பால் முதலியவற்றினை உனக் குத் தருகிறேன். நீர் பெருவீரர்களான புத்திரர் களையும் மாடு முதலிய செல்வங்களையும் நோயற்ற நீண்ட வாழ்வினையும் தா” என வேண்டும் வகையில் அமைந்திருப்பது குறிப் பிடத்தக்கது. இவ்வாறு இருக்குவேதப்பாடல் கள் பயனை அவாவிச் செய்யப்படும் நிலை யினையே தெளிவுறுத்துகின்றது.
இந்திரன், அக்கினி, வர்ணன், விஷ்ணு, உருத்திரன் முதலிய தெய்வங்களை விளித்துப் பாடப்பட்ட பாடல்கள் இருக்கு வேதத்தில் அதிகமுண்டு. இத்தெய்வங்கள் எ ல் லா ம் விளித்தழைக்கப் படுகின்றன. இவ்வாறு கூவி யழைத்தல் ஒரு கிரியையாக அமைந்துவிடும். எண் ஆகமங்களும் ஏனைய துணைநூல்களும் கிரியை வழிபாட்டினல் ஏற்படும் பயன்கள் பற்றி எடுத்தியம்புகின்றன. அக்கினி, வீட் டிற்கும் நாட்டு மக்களுக்கும் தலைவனுக விளங்குகிருன். இவன் மக்களையும் தேவர் களையும் தொடுக்கும் பிணைப்பாகவுள்ளான். இவ்வாறு முக்கியம் பெறும் அக்கினியைப் பல முறை விழிந்து நாம் அளிக்கின்ற அவியினை
d

ஏற்று ஏனைய தேவர்களிடம் சேர்ப்பிப்பாய் எனவும் அவர்களை யாகத்திற்கு அழைத்து வா எனக் கேட்பவன் பலவாறு வேண்டுவதை இருக்குவேதப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன. துதிப்பாட்ல்களும் பிரார்த்தனைகளும் இருக்கு வேதத்தில் முக்கியம் பெறுகின்றன. செல்வம் பெருக மக்களின் கிரியை முறைகளும் அதிகரிக் கத் தொடங்கின.
தேவர்களுக்கு யாகங்களில் அவிகொடுக் கும் முறையினை யசூர் வேதம் விளங்கு கின்றது. தீயினை வளர்த்து அத்தீயினுள் பலபொருட்களை முறையாகச் சொரியும் முறைபற்றியும் அக்கினி வளர்ப்பதற்கு வேண் டிய குண்டங்கள் யாகவேத முதலியவற்றை அமைக்கும் முறையினையும் பசூர் வேதம் விளக்குகின்றது. அத்தோடு பலவகையாகங் களையும் யகுர் வேதம் குறிப்பிடுகின்றது. வேதகாலங்களில் ஒதப்பட்ட மந்திரங்கள் பண்ணுடன் அமைந்திருப்பதைக் காண்கிருேம். வழிபாடுகளில் சாம வேதம் இசைப்பது அன்ருட கிரிகைக்காக இடம் பெறுகிறது. நைமித்திய கிரிகைகளில் சாம வேத இச்ைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது இசை யின் மூலம் மனிதனையும் கடவுளையும் இணைக்க முடிகின்றது. ረ
அதர்வ வேதத்தில் மாந்திரிகம் பேரிடம் பெறுகிறது. நன்மை தீமை ஆகிய இரு வினைகளை விளைவிக்கும் கிரிகைகளைப் பற்றி இருக்கு வேதப் பாடல்கள் எடுத் தியம்புகின்றன. தானும் தன்னைச் சார்ந்த உறவினர்களும் நன்மை பெறுவதற்காகச் செய்யப்படும் கிரியை பெளஷ்டிகாளி" எனப் பெயர் பெறுகின்றது. தன் பகைவன் வேரு டன் அழிய மேற் கொள்ளும் கிரிகை "அபிசாரணி” எனப்படும் அதர்வவேதப்பாடல் கள் மந்திர சக்தி வாய்ந்தவை. இச் சக்தி ஆக்கல் அழித்தல் என்னும் இரு தொழில்
களையும் செய்யும்.
மேற்கூறப்பட்டவற்றில் இருந்து இந்து சமயக் கிரியைகள் ஆங்காங்கே முக்கியம் பெறுவதோடு சமய நம்பிக்கையினை யும் ஆன்மீக ஈடேற்றத்திற்குரிய வழிவகைகள்ை யும். காட்டி நிற்கின்றன என்பது புலனு கின்றது. கலைகளும், பண்பாடுகளும் இருக் கும் வரை கிரியை நெறிகளும் இருக்கவே செய்யும் எனலாம்.
54

Page 57
சௌந்தர்யலகரியும்
- சா. தவமணிதேவி, உதவி நூ
தமிழ் பத்தி இலக்கிய வரலாற்றில் திரி" மூர்த்திகளையும் அவரது சத்திகளையும் வழி பாடு செய்தமையைக் காணமுடிகிறது. இத ஞல் சைவசமயம் பல்கிப் பெருகிவிட்டது. இப்பெருகிய சமயங்களைக் குறிப்பாக ஆறு பிரிவுகளில் அடக்கலாம். செளரம் (சூரியக் கடவுள்) காண பத் தி யம் (கணபதி) கெளமாரம் (முருகன்), வைணவம் (திருமால்), சைவம் (சிவன்), சாக்தம் (சத்தி) என்பன அவை. இவை தத்தி, தாத்த சொற்கள். அவ்வக்காலப் பகுதிகளில் பாடப்பட்ட தேவா ரம், திரு வாசகம், கந்த புராணம், செள ந் த ர் ய ல கரி, பிரபந்தம், அபிராமி அந்தாதி போன்ற பாராயண நூல்கள் இப் பிரிவுகளைப் பறைசாற்றுகின்றன. சாக்த சம யத்தில் சாக்த சித்தாந்தம், சைவசித்தாந்தம் போன்று ஆழ்ந்து அகன்றது. இச்சாக்த சித் தாந்தம் சொரூபியின் மீது பாடப்பட்ட நூல் களாக வட மொ ழி செளந்தர்யலகரியும் தமிழ் அபிராமி அந்தாதியும் உள்ளன.
செளந்தர்யலகரி வடமொழியில் ஆக்கப் பட்டாலும் அது தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இதனுல் தமிழ் அபிராமி அத் தாதியுடன் ஒப்பிட்டு நோக்க முடிகிறது. எனினும் வடமொழி கலந்து சொற்கள், கருத்துக்கள் காணல் தவிர்க்க முடியாதது. இவ்விரு நூல்களையும் அவற்றின் பெயர்க் காரணம், நூல் செய்யப்பட்ட காரணம், ஆசிரியர், காலம், பாடல்தொகை, உரை யாசிரியர்கள், பதிப்புக்கள், தலப்பெருமிை, பாடப்பட்ட விடயங்கள் போன்ற சில முக்கிய அமிசங்களில் நோக்கின் இச்சிறிய ஒப்பீட் டாய்வின் பயன் தெளிவாம்.
பாடல்களில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எனும்போது அம்பிகையே மேலே கறப்பட்ட மூர்த்திகளிலும் மேலானவள் என்ற பொது
5

அபிராமி அந்தாதியும்
லகர், கிழக்குப் பல்கலைக்கழகம். --
வான கருத்து மேலோங்கி நிற்கிறது. இத் துடன் சத்தியின் அழகு. பெருமை, வ்ல்லமை, கருணை, பாதப்பெருமை, வேதங்களுக்கு சத்தி யின் துணை, சத்தியின் பல்வகைப்பட்ட பெயர் asesit வரலாற்றுச் செய் தி யு டன் தொடர் புடைய புராண நிகழ்ச்சிகளில் சிவசத்தியின் பங்கு, சிவத்தின் பாதிப்பாகம், சத்தியிடம் சிவ அடக்கம், அவளை வணங்குவதால், அல் லது வணங்காவிட்டால் கிடைக்கும் நிலைகள், மூன்று நிலைகள், இருபாடல் தொகைகளில் காணப்பட்ட மிக நெருக்கமான பாடல்கள் என்ப் பல்வகைப்பட்ட சாக்த சித்தாந்தக் கருத்துக்களை ஆசிரியர் இருவ்ரும் கூறுகின்ற னர். சாக்தத்தில் விளக்கப்பட்டிருக்கும் உரு வம், சக்கரம் மந்திரம் போன்ற தத்துவங் கள் விபரிக்கப்பட்டுள்ளன.
பெயர்க் காரணம்:
செளந்தர்யலகரி தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நூல். இதன் மூலம் நாகர எழுத்தில் எழுதப்பட்டது என்பர். செளந்தர் யலகரியில் இரண்டு பகுதிகள் காணப்படுகின் றன. ஒன்று ஆனந்தலகரி. அடுத்தது செளந் தர்யலகரி. ஆனந்தம் என்ருல் மகிழ்ச்சி. இன்பம். லகரி என்ருல் மிகுதி, பெருக்கு. செளந்தரியம் என்ருல் சுந்தரம். இது திரிந்து செளந்தரியம். இதனைத் தத்தி தாந்தம் என்பர். ஆகவே தேவியின் தன்மைகளை எடுத்துக் கூறும்போது ஆனந்தம் ஏற்படுகின்றது என் றும் அவள் அழகைப் பாதாதிகேசம் வரை வர்ணிப்பதில் அழகு சுந்தரம்) வெளிக்கொண ரப்படுகிறது என்பது தெளிவாக உளது. இதன் முதற்பகுதி ஆனந்தலகரியாக இருந்த போது பிற்பகுதியால் நூல் பெயர் பெறுவது இங்கு சிந்திக்கத் தக்கது ஆன ந் த ல காரி கையிலைமலையில் எழுதப்பட்டு, செளந்தர்ய் லகரி எழுதிய ஆசிரியரால் உலகிற்குக்
5

Page 58
கொண்டுவரப்பட்டது. இதனல் ஆசிரியர் தான் இயற்றிய பகுதியை இந்நூல் முழுமைக் கும் பெயரிட்டுள்ளார்.
ாமி அந்தாதி தமிழ் நூல். ஆசிரியர் *திருக்கடவூர் பெண் தெய் வத்தின்றேன்: கடல்கள் பாடினர். இங்கும் அபிராமி என்ருல் அழகுடையவள். அந்தாதி யாப்பில் பாடப்பட்டது. அந்தாதி என்ருல் ஒரு பாடலின் முடிவு அடுத்த பாடலின் தொடக்கமாக அமைவது. அபிராமி அந்தாதி சத்தி வழிபாட்டில் இடம்பெறுவது போல் ஏனைய சமயங்களிலும் அந்தாதி இலக்கியங் கள் தோன்றின. அழகர் அந்தாதி - வைணவம், தேவமாதா அந்தாதி - கிறித்துவ சமயம் மெதீனத்தந்தாதி - இசுலாமிய சமயம், நூற் றைந்தாதி - சமண சமயம் என்பன ஈண்டு நினைவு கூரத்தக்கன. ஆசிரியர், நூல் செய்யப்பட்ட காரணம்: செளந்தர்யலகரியின் ஆசிரியர் ஆதிசங்கரர் இது பற்றிப் பலவித கருத்துக்கள் இன்றும் நிலவுகின்றன. இலிங்க புராணத்தில் · sólgnu கர் வாழ்த்தில் இது மகாமேருமலையில் விநா யகரால் எழுதப்பட்டதென்று கூறப்பட்டுள் ளது. மேருமலையில் எழுதிவைத்தவர் புட்பதந் தர் என்றும் ஆனல் அதற்கு முன்பே அது கைலாயமலையில் சிவாலயத்தின், மதிற்கவரில் எழுதப்பட்டிருந்தது என்று ஒரு வரலாறு உண்டு. மேருமலையில் இருந்ததை கெளட் பாதர் கிரகித்துப் பின்பு ஆதிசங்கரருக்கு அதை உபதேசம் செய்ததாக Goravšstřu லகரியைத் தமிழ்ப் பாடலாக்கிய வீரைகவி ராயபண்டிதர் கூறுகிமுர். மற்றும் சிலர் ஆதி சங்கீரரே கைலாயமலையிலிருந்து இதைக் கொணர்ந்தவர் என்றும், ஆனல் அவருக்குக் கிடைத்தது ஆனத் த லகரி எனப் பெயர் பெற்ற பகுதியில் அடங்கிய 41 சுலோகங்கள் மட்டுமே என்றும் பிற்பகுதியில் உள்ள 59 சுலோகங்களையும் சங்கரர் தாமே எழுதிப் பூர்த்தி செய்தார் என்றும் கூறுவர். பொது வாகச் செளந்தர்யலகரி என்றும் நூலின் SO
1. செளந்தர்ய்லகரி * பாஷயம்: முகவுரை 1 2
2. செந்தமிழ்: ஒரு தமிழ்ப் பத்திரிகை June °, செளந்தர்யலகரி: 75ம் பாடல் குறிப்பு:
 
 

பகுதி சங்கராச்சாரியரால் எழுதப்பட்டது என்பதிலும் முதன் முதலில் அவரால்ேயே அது உலகிற்கு அளிக்கப்பட்டது என்பதிலும் ஐயமில்லை. (1)
இன்னும் திராவிடசிசு" என்னும் கவிஞ னுடன் இந் நூல் இணைத்துக் கூறப்படுகிறது. இக்கவிஞர் கைலாயமலையில் அழுதபோது தேவி பால் கொடுத்ததாயும் . இத்தக் கவி தேவி மேல் 100 பாடல்கள் கைலாயசுவரில் எழுதி வைப்பு. ஒரு நாள் சங்கராச்சாரியர் கயிலாயத்திற்கு வர தேவி விருப்பப்படி அப் பாடல்கள் திராவிடகிசுவினல் அழிக்க, அழிந் தது போக மிகுதி 41 பாடல்களை ஆதிசங்க ரர் பார்வையால் கற்றுத் தேர்ந்தார் என் றும் இவ்விபரங்கள் வடமொழி உரைகளிலும் உள்ளது என்றும் ஏனைய 59 பாடல்கள் சங்கரர் இயற்றியவை என்பர். (?) திராவிட சிசுவைப் பற்றி ச்ெளந்தர்யலகரி 75ம் பாடல் சிறப்பித்துக் கூறுகின்றது. இவ் 'திராவிட்சிசு’ என்றவர் திருஞானசமபந்தரைக் குறிக்கும் எனக் காமகோடி ஆசிரியரும் பிறரும் கூறு கிருர்கள். (3) W
அபிராமி அந்தாதி ஆசிரியர், அது பாடப் பட்ட வரலாறு பற்றித் தெளிவான கருத்துக் கள் உள. ஆசிரியர் அபிராமிபட்டர். ஒரு சாக்தர். இவரது அபரிதமான அபிராமிப் பத்தி நிலையை உணராத திருக்கடவூர் பத்தர் கள் எள்ளிநகையாடினர். திருக்கடவூர் வந்த சரபோசிமகாராசா அவரைச் சோ தி க்க விரும்பி இன்று என்ன நாள் என விண்வ, சத்தி நினைப்பில் இருந்த பட்டர் வாய்தடு” மாறி இன்று பெளர்ணமி என்று கூறுகிருர், மன்னரும் இவர் பற்றி மற்றவர்கள் கூறியது உண்மையா என ஐயுற்றுப் போந்தார். பின் தவற்றை உணர்ந்த அபிராமிப்பட்டர் யாவற் றுக்கும் இவ் அபிராமியே பொறுப்பு என வேண்டி இவ் நூறு பாடல்களையும் பாடினர். *விழிக்கேயருளுண்டு’ எனும் 79ம் பாடல் முடிய அபிராமி அவர்முன் தோன்றி தமது ஒரு திருத்தோட்டில் ஒன்றைக் கழற்றி வீசித் தன் பத்தனின் வாக்கை மெய்யாக்கிஞர்.
P. W - V; 4th Lugal, 1974. ; - July 1954. Vol. 50, N8; P. 243. 4ம் பதிப்பு: பக். 134. −
6

Page 59
அபிராமிபட்டர் இந்நூலுடன் கள்ளல. ராணப்பிள்ளையார் பதிகம், அமுதகடேசுவரர் பதிகம், காலசங்கார மூர்த்திப் பதிகம், அபி ராமியம்மைப் பதிகம் போன்றவற்றையும் untig alsit snorth.
காலம்:-
செளந்தர்யலகரி மகாமேருமலையில் விநா யகரால் எழதப்பட்டது என இலிங்கபுராணத் தில் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே இது இலிங்க புராணத்திற்கும் முற்பட்டது எனக் கூறலாம். திருஞானசம்பந்தருடன் திரவிட சிசு என்றவர் தொடர்புபடுத்திக் கூறப்படுவதால் இதன் காலம் சம்பந்தர் காலம் எனவும் கருத்துளது. செளந்தர்யலகரின் 2ம் பாகத்தை ஆதிசங்கரர் இயற்றினர் அல்லது உலகுக்குக் கொணர்ந் தார் எனும்போது ஆதிசங்கரர் காலம் இந் நூலுக்குரிய காலம் என ஒரு பொது முடிவுக்கு வரலாம். அபிராமி அந்தாதியை நோக்கும் போது இது இதில் கூறப்பட்டிள்ள சரபேர்சி மன்னன் காலத்தது எனலாம். தஞ்சையில் ஆண்ட சரபோசி மன்னர் இருவர் காலமும் 18ம் நூற்ருண்டுக்கும் 19ம் நூற்ருண்டு நடுப்பகுதி வரை குறிக்கப்படுவதால் பட்டர் இக் காலப் பகுதியில் வாழ்ந்தவராகக் கொள்ளலாம்.
பாடல் தொகை:-
இரு பாடல் தொகுதிகளும் காப்பும் நூற்பயனும் போக நூறுபாடல்களைக் கொண் டன. செளந்தர்யலகரியில் முதல் 41 பாடல் களும் 1ம் பாகம். ஆனந்தல்கரி கைலாசத்தி விருந்து கிடைத்தது. நாற்பத்தியொன்றிலி ருந்து'நூரும் பாடல் வரை செளந்தர்யலகரி சங்கராச்சாரியரால் அருளிச் செய்யப்பட்டது. இவ் நூறு சுலோகங்களைப் பற்றி காமகோடி சங்கராசாரியார் பின் வருமாறு குறிப்பிடு கிருர். "நூறு சுலோகங்களும் கைலாசத்திலி குந்து வந்திருந்தால் நமக்கும் கஷ்டந் தான். அப்பொழுது பூரீ ஆசார் யாளுடைய வாக்கின் மகிமையை நாம் அநுபவிக்க முடி யாது ஆசார்யாள் செய்தவைகளை விடக் கைலாயத்திலிருந்து வந்தவைகள் உயர்வாகத்
4. செளந்தர்யலகரி - பாஷ்யம் 1974,

தோன்றவில்லை. அவையெல்லாம் மந்திரங்கள் -தான்'(4) செளந்தர்யலகரியின் சில பாடல்களில் * சுலோதங்கள் (94, 99, 102) அதிகமாக வந்துள்ளதைக் காணக்கூடியதாக உளது. அபிராமி அந்தாதியில் காப்பும் நூற்ப்யனும் சேர்த்து 102 பாடல்கள் உள்ளன. உரையாசிரியர்கள்:
இரண்டு நூல்களுக்கும் உரைகள் எழுதப் பட்டுள்ளன. செளந்தர்யலகரி முழுமையும் வடமொழியாலானது. அதைத் தமிழில் படித் துப் பாராயணம் செய்வதற்காக மொழி பெயர்க்கப்பட்டது. தமிழில் செளந்தர்யல கரியை மொழிபெயர்த்தவர் வீரைக்கவிராச பண்டிதர் என்பர். செளந்தர்யல்கரியைச் செய்யுள் வடிவில் ஆக்கியமை இவரது அரும் புலமைக்குச் சான்ருகும். இவர் காலம் 700 ஆண்டுகட்கு முன்பாகும். இத் தமிழ் செய்யுள் களுக்கு உரையெழுதியவர் திவ்வியகவி சைவ எல்லப்ப நாவலர். இவர் கலம்பகம், புரானங் கள் பாடுவதில் வல்லவர். இவர் காலம் 17ம் நூற்ருண்டு என்பர். கவிராசபண்டிதரும் செயந்தர்யலகரியைத் தமிழில் யாத்தார் என்பது பாயிரத்தால் அறியலாம். இவர் வட மொழிவடிவிலேயே சில சொற்களை அமைத் துள்ளார். ப்ரபந்தம், ப்ரபை, மாதா, த்யா கம், த்ரிகோணம் என்பன சில உதாரணங்கள். கமலை, அம்பிகை, இந்திரை, விமலை முதலிய சொற்கள் ஆசிரியரால் கருத்துடன் கையாளப் பட்டுள்ளன. இன்று உரையாசிரியர் அண்ணு வினல் எழுதப்பட்டு பூரீராமகிருஷ்ணமட வெளியீட்டுப் பதிப்புக்கள் பல விளக்கங் களுடன் தமிழ் மக்கள் கையில் உள்ளது. அபிராமிஅந்தாதியின் 1ம் பதிப்பு யாழ்ப் பாணத்தில் 1913ல் உரையுடன் வெளியிடப் பட்டுள்ளது. இதன் உரையாசிரியர் மட்டுவில் க. வேற்பிள்ளை.இவர் ஆறுமுகநாவலர் பெரு மானின் மாணவருள் ஒருவர். இவரைத் தவிர இந்நூலுக்கு கி. வா. ஜகந்நாதன் (மாலை பூண்ட மலர் 1, 11) தருமையாதீனப்புலவர் முத்துமாணிக்கவாசக முதலியார், திண்டுக்கல் பெ. கா. சண்முக நா தன் ஆகியோரின் உரையுடன் கூடிய நூல்கள் வெளிவந்துள்ளன.
Liġi : 85
7

Page 60
புதிப்புக்கள்:-
ஆறுமுகநாவலர் 1849ல் பதிப்பித்த முதல் நூல் செளந்தர்யலகரியாகும். அவர் பதிப்பில் சிவமென்னும் கவி முதல் நீநந்துமென்னும் கவி வளரதேவியின் இன்பப் பெருக்கைச் சொல்லு தல் செளந்தரியலகரியென்றும் அறிக. லகரி என்பது பெருக்கு இப்பதிப்பில் உரையாசிரியர் பெயர் கவிராசபண்டிதர் என்பது அறிய வரு கிறது (*) பிரஹ்மபூரீ தி. பூரீனிவாசசாஸ்திரி களால் தொகுத்த நூறு சுலோகங்கள் மட்டும் உள்ள நூல் ஒன்று 1971ல் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. பின் பூரீராமகிருஷ்ண மடத்தினுல் 1963ல் முதல் பதிப்பு உரையுடன் வெளியானது.
அபிச்ாமிஅந்தாதி மீண்டும் உரையுடன் 1970ல் 5ம் பதிப்பு வெளியாகியது. இதன் 2ம் பதிப்பை 1923ல் விசுவநாதபிள்ளை பதிப் பித்தார் (9) 1974ல் திலிட்டில் ப்ளவர் கம்பெனி (The Little Flower Company) plou upl.-6ir கூடிய அபிராமி அந்தாதியை வெளியிட்டு உள்ளது. இதன் பயன்பாடு கருதி தனிப் பாடல்கள் மட்டும் அடங்கிய பதிப்புக்கள் வெளிவந்துள்ளமை கண்கூடு.
தலப் பெருமை:-
செளந்தர்ய்லகரியின் முதல் பாகம் கையிலைமலேயில் எழுதப்பட்டிருந்தது என்பது தெளிவு. ஆகவே இது சிறப்புற்றது.அபிராமி அம்மை எழுந்தருளியிருக்கும் இடம் திருக் கடவூர். இறைவனின் பெயர் அமுதகடே சுவரர்: தேவர்கள் பாற்கடலைக் கிடைந்து கொணர்ந்த அமுதத்தை இங்கு வைத்து நீராடச் சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது அமுத கடம் சிவலிங்க உருவமாக இருக்கக் கண்டனர். பின் சிவன், விநாயகரை வணங்கி அமுதத்தைப் பெற்றனர். இதனல் இத்தலத்திற்குக் கடவூர் என்றும் இறைவனுக்கு அமுதகடேசுவரர் என்றும் பெயர் ஏற் பட்டது.
5. ஆறுமுகநாவலர் பதிப்பு, 1849. ட 6. Lexicon i Vol. I Part II gjö35 ? Que

மேலும் மார்க்கண்டேயரது உயிரைக் கவர வந்த இயமன இறைவன் இவ்விலிங் கத்தினின்றும் தோன்றிக் காப்பாற்றிஞர். ஆகவே திருக்கடவூர் அட்ட வீரத் தலங்களுள் ஒன்ருகும். இத்தலம் குங்கிலயக்கலைய நாயன ருக்கும் காரிநாயனருக்கும் பிறப்பு, முத்தி தலமாகவும் இருந்த சிறப்பினை உடையது. இவற்றுடன் பட்டரின் வாக்கை மெய்ப்பித்த அபிராமித் தலமாகச் சிறப்புப் பெற்றது.
பாடப்பட்ட விடயங்கள்:-
இரண்டு நூல்களும் சத்தியைப் பாட்டு டைத் தலைவியாகக் கொண்டவை. எனினும் தலைவியை வணங்கும் முறை; அணுகு முறை போன்றவற்றில் பொதுவாக இரண்டிற்கும் வேறுபாடு உண்டு இதற்குக் காரணம் செளந் தீர்யலகரியில் உள்ள பாடல்கள் கடவுளைப் பாராயணம் செய்யும் மந்திரங்களாகவே உள் ளன. அபிராமிஅந்தாதிப் பாடல்களில் அம்மை யைப் பலவாறு ஏற்றிப் புகழ்ந்து தன்னக் காப்பாற்றும்படி, கருணை புரியும்படி இரங்கி வேண்டுகிருர். அதாவது "இன்று பெளர்ணமி நாள்" எனத் தவறிக் கூறிய நிலையிலிருந்து காப்பாற்றப்படுவதே அவரது முழுமூச்சாகும்.
சத்தி மயம், சிவமயம்:
இரண்டு நூல்களிலும் சத்திமயம், சிவ மயம் ஆழமாகக் கூறப்பட்டுள்ளன. செளந்
தர்லசரியில் சத்தியிடம் சிவாம்சத்தின் அடக்
சும் பற்றி சுலோகம்23ல்பாவானி தவம்'எனக் கூறப்பட்டுள்ளது. சிவனின் உட்லில் பாதிப் பாகத்தை இறைவி இடம் பிடித்ததுடன் திருப்த்தியடையாது தன் சிவப்பு நிறத்தால் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளமை தெளிவு. அர்த்த நாரீசுவர மூர்த்தி (செள : 37) வடி வம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அக்கினியும் பிரகாசமும் போல இறைவியும் இறைவனும் பிரிக்க முடியாத நிலையில் உள்ளனர். இறை
வியைச் சிவயுவதி என விளித்து (செள : 35)
நீயே மண், நீர், நெருப்பு, காற்று போன்ற
க்:
163
பங்குனி Ludi : I2
58

Page 61
வற்றுக்கும் சத்தியாகவும் ஆனந்த பைரவ ராகவும் இருக்கிருய் என்கிறர். இதே கருத்து அபிராமியிலும், . --
"பாரும் புனலும் கனலும் வெங்
காலும் படர் விசும்பும் ஊரும் முருகு சுவையொளி
யூருெலி ஒன்றுபடச்.(7) என உளது. அபிராமி அந்தாதியில் பலவிடங்களில் சிவ சத்திப் பாதிப்பாகம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. உதாரணங்கள் சில வார்சடையோன் (அபி: 5) வாமபாகம் (அபி: 17) உமையும் உமையொரு பாகனும் (அபி ; 31) ஈசன் பாகத்து நேரி ழையே (அபி 32) செம்பாகத்து இருந்தவளை (அபி: 48) இட்ப்பாகம் கலந்த பொன்னே (அபி: 41) எங்கள் பெம்மானிடையாளை (அபி ; 84) பாகம் கொண்டாஞ்ம் (அபி.87 இடப்பாகம் சிறந்தவளே (அபி : 88)
சத்தியின் அழகு;
செளந்தர்யலகரியின் இரு . பகு தி யும் சத்தியின் அழகை வருணிப்பதில் முன்னிற் கின்றது._நூலின் பெயரே இதற்குச் afirebro கும். சத்தியின் பாதாதிகேசம் வரை வருணிக் கப்படுகிறது. இப்பகுதியே நூலின் பிற்பகுதி யான் செளந்தர்யலகரியாகும். சத்தியை வணங்க விருப்பம் கொண்ட பன்னிரண்டு ஆதித்தர்களும் அவள் கிரீடத்திலுள்ள இரத் தினங்களாக உள்ளனர் என கிரீட வருணனை உளது. சத்தியை வருணிக்கும்போது அவள் அழகுடன் ஒப்பிட்டுக் éhsIDAD.I dnt g5 26 aouto யற்ற அழகே வருணிப்பு. கிரீடத்தில் தொடங்கிய அழகு வருணனை தொடர்ந்து சத்தியின் வகிட்டின் வருணனை (செள ; 44), முன்நெற்றி மயிர் வருணனை (செள ; 45) பாதிச்சந்திரன் போன்ற நெற்றியின் வருணனை (செள : 46) புருவங்களின் அழகு (செள47) கண்களின் அழகு (செவி : 48) பின் அவளின் ஆடை, ஆபரணங்கள் வருணனை கூறல்; தேவியின் கடைக் கண்ணின் அழகு மட்டும் ஏறக்குறைய பதினெரு பாடல்களில் க்கூறப் பட்டுள்ளது. இவள் கண்கள் மீன் க ளின் அழகையும் நீலோத்பவத்தின் அழகையும்
அபிராமி அந்தாதி மூலமும் உரையும். 8. செளந்தர்யலகரி சுபோசம் . 86 பக்: 149
4

வெல்லும். இவள் கண்களைமூடித்திறப்பதால் புவனங்களை ஆக்கி அழிக் கி ருள். ஆகவே மும்மூர்த்திகளுக்கும் இவளே தலைவியாகிழுள். மீன்களைப் போன்ற கண்ணழகு படைத்த மூர்த்தி விசேடம் மதுரையில் உள்ளது. இத னல் தான் அங்குள்ள பெர்ற்ருமரைக் குளத் தில் மீன்கள் வாழ்வதில்லை என்பர்.
அபிராமி அந்தாதியில் அவள் அழகு மெரு கூட்டப்படுகிறது. இவ்வழகு வருணனையில் இரு நூல்களுக்கும் அதிக வேறுபாடு காணப்பட வில்லை. இந்நூலில் பட்டரைக் காப்பாற்றிய அம்பிகையின் தோடு வருணனை (அபி: 10 செள : 28) மதுரமான .ெ க்ா ல்லோ சை (அபி : 69 : செள, 60) மெல்லிய இடையழகு (அபி : 53 : செள : 79) நாவின் வருணனை (அபி: 88 : செள : 64) எனப் பல்கிப் பெருகி யுள. . பாதப் பெருமை;
அழகு வருணிப்பில் பாத வருணனை குறிப் பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது. தீம் மனம் இயைந்தவாறு போற்றுகின்றன. உப நிடதங்களின் உச்சியில் விளங்கும் பாதார விந்தம் (செள : 84), மும்மூர்த் திகளின் கிரீடங்களில் இவள் பாதம் (செள : 25) அழகு குன்ருத பாதம் (செள : 87) பரம சிவ ன் வணங்க விரும்பும் பர்தாரவிந்தம் (செள்:85) எனப் போற்றல். இங்கு உபநிடதங்க்ளின் உச்சியில் 瀝 °àಸಳೆ மூர்த் g களுக்கு மட்டுமல்ல, வேதம் போன்றவற்றுக் கும் இவளே அதிபதி என்பது தெளிவு. சிவ்ன் ஊடலின் போது சத் தி யின் பாதத்தை வணங்குவது சிவன் பகைவனகிய மன்மதனுர் க்கு வெற்றி உண்டாகிறது எனல். இது சத்தி யின் மேம்பாட்டை உணர்த்துகிறது. (8)
அபிராமியில் அவள் பாதங்களே தன்னக் காப்பாற்றும் என அழுதழுது வேண்டுகின்றர். இரு பா தாம் (அபி ; 12), நின்பத்மபாதம் (அபி: 24), பத்மபதயுகம் (அபி ; 27), புது, மலர்த்தாள் (அபி: 28), திங் க.ப. த லின் மணம் நாறும் சிற்படி (அபி : 35), fratruh புயம் (அபி 58) சேமம் திருவடி (அபி:73), நின்னடித்தாமரை (அபி ; 98) ன் ன்பன அவற்றுட் சில. -
安。 வேற்பிள்ளை
68th LJIT l-lb Lă: - 67 - 68.
9.

Page 62
வேதங்களின் துணை:
'செளந்தர்யலகரியில் உபநிடதங்களின் தலவி, துணைவி என்கிறர். அ பிராமி யில் எழுதா மறை (அபி 10) மறைநான்கு (அபி 11). நான் மறை (அபி : 20, 70) மறையின் வரிமளம் (அபி: 2), அருமறை (அபி ; 55) வேதம் (அபி ; 71, 74) மறை தேட (அபி ; 86), புகழ்ந்து மறை சொல்லிய வண்ண்ம் (அபி ; 91) என அவளைப் போற் றும் அவளுடன் பழகும், துதிக்கும் வேதங்கள் எனல்,
வரலாற்றுச் செய்தி:
இரு நூல்களிலும் புல்வகைப்பட்ட வர லாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. அபி ராமி அந்தாதியில் கூறியவை, செளந்தர்ய லகரியில் அதிகம் எனலாம். பட்டரின் நிலை இதற்குக் காரணம். அபிராமி முன்பு பல திருவிளையாடல்களைச் செய்து பத்தர்களைக் கர்த்ாற்றியவள். இப்போது தனக்கும் அத் தன்க் கருணை காட்டிக் காப்பாற்றும்படி வேண்டுதல் இயல்பே.
மன்மதன் எரிப்பு, நஞ்சுண்ட கதை, முப்புரம் எரிப்பு. அடிமுடிதேடிய கதை இயமன உதைத்த கதை இரு நூல்களிலும் கூறல், ஆளுல் செளந்தர்யலகரியில் உள்ள அம்பிகையின் கூந்தல் மணம் பற்றி வாதிட்ட நக்கீரர் கதையும் (சென; 44) அபிராமியில் உள்ள அம்பிகை இருநாழி கொண்டு அறம் செய்த கதையும் (அபி ; 57) இரு நூல்வி லும் கூறப்படாதவை
செளந்தர்யலகரியில் மன்மதனச் சிவன் தெற்றிக் கண்ணுல் எரிக்கப்பட்ட வரலாறு உளது. (செள ; 23) தேவியின் பாதிப்பாகம் சிவனில் உளது. ஆகவே இதனல் ஏற்பட்ட புகழில் பாதி சத்திக்கும் உரியது. ஆனல் சிவனுக்கே அப்பெருமை சேருகிறது. ஆனல் இயமன உதைத்த கால் இடக்கால் அதாவது இறைவியின் கால், ஆகவே இதில் எங்கே சிவனுக்குப் பெருமை என நாகுக்காக வினவு வது நினைத்து இன்புறத்தக்கது. இதன் மூலம் சித் தியிலேயே சிவன் ஐக்கியம் என்பது மேலும்வலிமை பெறல்,
 

சத்தியினை விளித்து அழைக்கும் பெயர்கள்.
ஒப்பிட்டளவில் நோக்கும்போது அபிராமி அந்தாதியில் அழைக்கும் பெயர்கள் அதிகம். ஒவ்வொரு பாடலிலும் அவள் பலவாறு விளிக்கப்படுகிருள். செளந்தர் ய லகரியில் பவானி, பார்வதி (செள : 3), மாதா (செள :98), தாயே (செள : 83) தேவியே (செள : 88) என்றும் அபிராமியில் சுந்தரி(5) பெண்ணே (6), நீலி (8), கந்தரி (8), அந்தரி(8) கள்ளே, கனியே, களியே (23), மணியே, ஒளியே, பிணியே, மருந்தே, விருந்தே (24) மாலினி, சூவி, வராகி (77), பயிரவி (76.77) பூங்குயிலே (98) தைவ%ல (97) என வேண்டு கின்றர். பாடல் 24ல் பிணியே அதற்கு மருந்தே என முரண்பட்ட அழகுடன் விளிக் கிருர், ஒரு சில பாடல்கள் முழு வதுமே
சக்தியை அழைப்பதாக உளது. (அபி:50;7 7)
மும்மூர்த்திகள் நிலை:.
*த்திமும்மூர்த்திகளுக்கும் மேம்பட்டவள். சிவர்களைப் படைக்கும். முக்குணம் உடைய கண்களையுடையவள். செள :59) தேவியின் இருக்கைக் கட்டில்களின் நான்கு கால் ாக பிரம்மா, ஈசுவரன் உருத்திரன், 'னு ஆகியோர் உள்ளனர். (ளெ 92)
r 9ம்மூர்த்திகள் வணங்க வரும்போது, சிவன்
சிறப்பாகச் சத்தியைக் காண வருகின்றன். பக்தர்களின் வணக்கத்தை ஏற்றுத் கொள்வது -ன் நின்றுவிடாது பிரம்மா விட்ணுவின் கிரீடங்களை விலக்கிச் சிவன வரவேற்கிருள் (செள 29) இக் நிலை சத்தி யாவருக்கும் மேம்பட்டவள் என்பது தெளிவு.
படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்
களைச் செய்பவள் நீயே (அபி 13, 14, 26,
34) ஆகவே உன்னை வணங்கவே பொருத்தம். நாராயணனும் அயனும் உன்னை வணங்குகின் றனர். (அபி : 74) ஆதித்தன், அம்புலி, குபே
ரன், கணபதி, காமன் போன்றேர் சத்தியை
வணங்குவர். (அபி : 97) ஆகவே நீ எல்லோ ருக்கும் மேலானவள் என்கிறது அபிராமி அந்தாதி.
60

Page 63
தியை வழிபடுவதால் ஏற்படும் நிலைகள்:
சத்தி மும்மூர்த்திக்ளால் வணங்கப்ப கின்ருள். அப்படியாயின் எனதுநிலை எங்ே எனப்பட்டர் அங்கலாய்க்கிருர், தவிக்கிருர்.தன் கையற நிலையை அடிக்கடி கூறி அரற்றுகிறர் தீவினை மிக்க, கரும நெஞ்சம் (அபி ; 3) த யுறு மத்திற் சுழலும் என் ஆவி (அபி : ? வஞ்சப்பிறவி, நெஞ்சத்து அழுக்கு (அபி : 27 நாயேன் (அபி: ), அறிவொன்றிலேன் (அபி 81) எனத் grడిr குறைத்துக் கூறி இரக்கம் ஏற்பட வழிவகுக்கிழுர், உன் அருள் உள்ள விழியும், வேதம் சொன்ன வழியும் இருக்கக் கயவரோடு கூடி த்திரிந்தது என் பிழை நின் குறையன்று என அரற்றுகிறர்.
பட்டரும் விடாப்பிடியாக இனங்குகிறர்.
அம்பிகை அருள் புரிகிருள். எத்தகைய அருள்? எவருக்கும் கிடைக்காத மற்றவர்களால் உணர முடியாத அனுபூதி நிலையை ஆடைகின்றர். அவளை அடைகின்றர்.அவரை அடைந்தவர்க்கு அடையாத தனமில்லையே எனல்.(9) ஆன்மா இறைவனத் தேடுவது வழமை. “நம் கார ணத்தால் நண்ணி இங்கே வந்து” ன்ன்பது லம் இறைவன் (10) ஆன்மாவைத் தேடும் சீரிய கருத்து தெளிவாகிறது. இவளை வணங் குவதால் பரவும், டிசமும், அயிராவதமும், பகிரதியும் உரவும், இசழும், கற்பக்காவும் நிலைகளை அடைவர் இல்வுலக இன்பத்தையும் வான் உலக இந்திரப் புதவியையும் saiu-auri.
தற்கும். மொழிக்கும், நிஷத்துT Ellis நின்மூர்த்தி என் விழிக்கு எட்டியதால் இனி பொருந்த ஒரு பொருள் இல்லை எனப் பட்டர் தன் அமைதி, ஆறு ஆல் நிலையைக் கூறுகிருர்,
* 10 அபிராமி அந்தாதி பாடல் : 69 |
6ქ

இரு நூல்களிலும் உள்ள கருத்து ஒற்றுமைப் பாடல்கள்:
சீத்தியுைவனங்கப் புண்ணியம் செய்தி ருக்க வேண்டும். (செள : , அபி:12), பரி பூரண அருள் இன்டிக்கும் (செ:, அபி: 149 தோட்டின் மகிமை (செள் : 28, அபி 10) ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி (செள 35, அபி *68), அவள் குங்குமம், அழகு (செள :44, அபி: 1) மதுரழான சொல் ஓசை (செள : 60. அபி:69) பழுத்த செவ் வாய் (செள : 4ே, 65, அபி : 38) மெல்லிய இடையின் அழகு (செள 79, அபி : 53) எல்லாம் சித்தியாகத் தெரிதல் (செள : 81, அபி. 85),
இரு நூல்களும் சாத்த சம y வங்களை எடுத்துர்ைப்பதில் முன்னிற்கின்றன். ஆனல் ஒப்பீட்டளவில் அபிராமிஅந்தாதியின் பயன்பாடு அதிகம் எனலாம். சௌந்தர்யூலகரி வெறும் மந்திரங்களாக இருப்பது இதற்குக் காரணம் எனினும் சத்தியை வழிபடுவதால் தனம், கல்வி, தளர்வறியாமை, தெய்வ வடி வம், வஞ்சமில்லா இனம், நல்லுன எல்லாம் தரும் என்பதில் இரு நூல்களுக்கும்வேறுபாடு இல்லை. (செள : 99. அபி ; 69) இசளந்தர்யல கரியின் முழுமையான விபரம் இன்னும் ஆராய்ச்சிக்குரியதாகவே உள து. அபிராமி ஆந்தாதி பற்றிய விடயங்களில் - நிறைவு *Tங்டுவது தவிர்க முடியாதது. இது வாறிருப்பினும் சாக்தசமயம், அபிராபி சமயம் என்னும் வரலாற்றில் இவ்விரு நூல்களும் முக்கிய இடம் பெற்றுள்ளமை குறிப்பிட்த் தக்கது.
முடிபு
பத்தின் தத்து
4

Page 64
உசாத்து
1. ஆறுமுகநாவலர் (பதிப்பு) . செளந்தர் கவிராச ப்ண்டிதர் அருளிச்செய்தது.
2. செந்தமிழ்: ஒரு தமிழ்ப்பத்திரிகை,
3. ஆதிசங்கரர் - சிவானந்தலகரி נrra{ש.
உரையாசிரியர் அண்ணு
4. ஆதிசங்கரர். செளந்தர்யலகரி பாஷ்
உரையாசிரியர் அண்ணு.
5. ஆதிசங்கரர் - செளந்தர்யலகரி பாஷ்யம்
உர்ையாசிரியர் அண்ணு .ே பூரீதேவிஸ்தோத்திரங்கள்
உரையாசிரியர் அண்ணு.
7. அபிராமிபட்டர் - அபிராமி அந்தாதி
2-6pT : Lo. as. வேற்பிள்ளை.
8. அபிராமிபட்டர் - Syuurtró அந்தாதி
உரை : சேக்கிழார் அடிமை,
9. அபிராமிபட்டர் - அபிராமி அந்தாதி
10,G. வா. ஜகந்நாதன் -- uDråby Går
(அபிராமி அந்தாதி விளக்கம் பகுதி:
11. கவிஞர் கண்ணதாசன் - அம்பிகை
தரிசனம் 3ம் பதிப்பு
12. காந்தளகம் - அபிராமி மகிமை
18. Dr. ஆ. வேலுப்பிள்ளை. தமிழர் சமய
வரலாறு விம் பதிப்பு.
14 • Lexicon Vol: I Part II Uuiversity
Madras:

ணை நூல்கள்
"யலகரி
Th
Lib
5ம் பதிப்பு
цо6vrѓ
... 2) -
կք35
of
62
சென்னை: அண்ணுமலை முதலியார்
1849 - பக் 166 ல்
தொகுதி : 50
பகுதி Nov - Decem.
1953
சென்னை: பூரீ ராமகிருஷ்ண மடம் 1965 - uă : , 158 1975 - மறுபதிப்பு சென்னை: பூரீ ர்ாமகிருஷ்ண மடம்
1974 - பக் 223
l984 o uš : 22S
சென்னை: பூரீ ராமகிருஷ்ண மடம் 1970 - uáš : 91
சென்னை: சைவப்பிரகாச வித்தியாசாலை 1970 - u& : 102 கு. காசிவிசுவநாதன் செட்டியார் திண்டுக்கல் I974 - Liá : 248 The Little Flower Company 1975 - திருச்சி
சென்னை: - அமுத நிலையம் 1970 - Luis Is I
சென்னை வானதி பதிப்பகம் 1985 - பக்: 108 காங்கேசன்துறை காந்தமை 1982 ano uš : 5
சென்னை: பாரி புத்தகப் பண்ணை 1985 - uá : 240
Cofirar வித்தியானு பாலன யந்திரசால் 1923 - uš : 632

Page 65
ஆங்கில
க. கணபதிப்பு
வந்தான் வரத்தான் பாட்டினைச் சுவைக்கப் பழகிக்கொண்டான்,
அஃதெவ்வாறு என்பதை இக்கட்டுரை விளக்கிக் காட்டுகின்றது.
பாட்டானது சுவைக்க வேண்டியதொரு கலை, எனவே பாட்டுச் சுவைத்தல் ஒரு தனிக் கலை, அதை விமரிசனம் எனவும் கூறுவர். சுவை தராதவிடத்துப் பாட்டானது பாட் டாக மாட்டாது. பாட்டின் பொருளினை எடுத்துரைப்போர் பெரும்பாலும் அதன் இலக்கண அமைவு, பொருள் நிறைவு, சொல் விணக்கம்: ஓசை நயம், சிந்தனைச் சிறப்பு, கற்பனை நிறைவு, யதார்த்தத் திறன் ஆகிய வற்றினை மாத்திரம் விளக்கிக் காட்டுவதுடன் நின்றுவிடுகின்றனர்.
பாட்டினை - அது எம்மொழியில் எழுதப் பட்டுள்ள பாட்டாயிருந்தாலும் சரி; தமிழ் பாட்டாயிருக்கலாம் , ஆங்கிலமொழி பாட்டா யிருக்கலாம், வடமொழியிலுள்ள உபநிடதக் கிரந்தங்களாயிருக்கலாம் - இரசிப்பதில்பூரண அனுபவத்தினையும் இன்பத்தினையும் பெற் றுள்ள வேறு ஒருவர் விபுலாநந்தரை விஞ்சியவ ராக இருந்ததாக நாம் அறிந்திலம். இலக்கிய பனுவல்சளில் சரி, பாட்டில் சரி, திளைத்து கரந் துறைபொருள் கண்டவர் விபுலாநந்தராவார்.
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என நினைக்கிறேன். அரியதொரு சந்தர்ப்பம் நிகழ்ந்தது. அதில் "பட்டினத்துக்கு வந்தான் வர்த்தான"யிருந்த நான் கலந்து கொண்டேன். அது ஒரு தனி வாய்ப்பு : இலக்கிய இரசணை யினை பெறுதற்கு. அக்கூட்டத்தில் விபுலாநந் தரவர்கள் "ஆங்கில வாணி’ என்னும் தமது தமிழாக்கக் காவியத்தினை படித்துக் காட்டி னுர், ஒரளவு விமர்சனங்கூடச் செய்தனர்.

வாணி IsiT 2m, B. A, F, R, G, S, மட்டக்களப்பு
அவரது விமரிசனத்தினைத் தழுவியதாகவே இவ்வியாசம் எழுதப் பெற்றுள்ளது.
பாட் ட்ெ ன ப் படுவது அழகு நிரம்பப் பெற்றுள்ளது; சத்தியம் நிரம்பப் பெற்றுள்ளது. எனவே தான்:
"Beauty is truth, truth beauty' that is all ye know on earth, and all ye need to know' என ஜோண் கீற்ஸ் (John Keats) என்னும் கவிஞன் கூறிப் போந்தான். கவிதை அழகு நிரம்பியுள்ளது; நவின்றேர்க்கு இனிய நன் மொழி பயப்பது படிக்கப் படிக்கத் தெவிட் டாத இன்பந்தருவது. வையகத்தின்மாட்டு மண்டிக்கிடக்கும் பலபக்க உண்மைகளையெல் லாம் எடுத்து இயம்புவது. இவ்வுண்மையினை உணர்ந்திருந்தான் இக்கால ஆங்கிலக் கவியர சாகிய T. S. எலியட் (T. S. Eliot) என்னும், பெருந்தகை. பாட்டின் பாங்கினைக் குறித்து இவ்வாறு விளம்பியுள்ளான்.
—Thé natural language of the drama should be verse, not prose.-
நாடகத்திற்குகந்த இலக்கிய அமைவு செய்யுளாகவே இருத்தல் வேண்டும். இதற்குக் காரணம் உளது. மக்களின் உளப் "பாவங்களை" அதாவது உணர்ச்சி வேகங்களை எடுத்தோதும் திறத்தினைப் பெற்றுள்ளது பாட்டு; உரை நடை யாகாது. ஆகையினல் தான் மகா கவி சேக்ஸ் பியரவர்கள் தமது நாடகங்களனைத்தினையும் பாவிலமைத்துத் தந்துள்ளார். மக்களினது உள் உணர்ச்சிகள், உணர்ச்சி வேகங்கள், ஆசைகள், அபிலாசைகள், விருப்பு வெறுப் புக்கள், உளக்குமுறல்களனைத்தினையும் எடுத் தோதுவதற்குகந்த மொழி நடை பாநடை யாகும் எனவே தான் சிலப்பதிகாரத்தினைப் படைத்துத் தந்துள்ள இளங்கோவடிகளார் அதைப் பாட்டும் உரை நடையும் கலந்துள்ள

Page 66
இயல், இசை, நாடகக் காப்பியமாக ஆக் யமைத்துள்ளனர் போலும்.
சுவைத்து சுவைத்துத்தான், LX இசைத்து இசைத்துத்தான் பாட்டினை உற் ணர்ந்து கொள்ள வேண்டியதாக மக்கள் உ மானது இசைக்கப்பட்டுள்ளது. இயற்கையில் விதி அதுவேயாம். உளம் ஒரு அற்பு இசைக் கருவியாய் அமைந்துள்ளது. உல
நோக்கு இதுவாகும். உளத்தினை ஊட்ட வளர்ப்பது இசை, இசையமையாத உள்ள கபடம் நிறைந்த சிந்தையாகிவிடும். அந் நிை யில் கொலை, களவு, காமம், குரோதம் பொருமையாகிய கப்டம் நிறைந்த உணர்வு கள் உளத்தில் குடிபுகுந்து விடும். எனவே பேருண்மைகளை உணர்த்தி நிற்பன pavas o sin காவியங்களெனக் கருதப்பட்டு வரும் காப்பி யங்களாகும். உளத்தினை தூய்மையாக்கும் lysår (Catharsis) காப்பியங்களிலுளது.
ஆங்கில மொழியில் சாலச் சிறந்த காப்பி ப், ஆதியாகக் கருதப்பட்டு வருவது Gagrar islábl där (John Milton) Desir saluar "சுவர்க்க நீக்கம் "Paradise Lost ஆகும். இச் சிறந்த காப்பியத்திலுள்ள ஒரு சில வரிகளை விபுலாநந்தர் தமது "ஆங்கில வாணி" என்னும் தலைப்பினைக் கொண்டுள்ள ஒப்பற்ற சிறப்பு வாய்ந்த ஒரு தனிப் பாடலாக தமிழாக்கம் செய்து தந்துள்ளார். அப்பாட்டினை இங்கு தருவTம்,
நித்திலத்தை நிலத்தில் உகுத்தது போற் காலைப்பருதி கதிர் காலும் வேளையிலே
உள்ளக் கவலையின்றி உணவுடலிற்
சேர்தலினல் நன்கு துயின் றெழுந்த நல்லோர் புகழ் அத்தன் ر இளங் காற்றிசை யொலியும் இன்பவிலை ༄། யொலியும் வளஞ்சான்ற நீரருவி வாய் நின்றெழு
மொலியும். பள்ளி யெழுச்சிப்பண் பாடுகின்ற புள் ளொலியும்
6

g
i
ஆரா உவகை தர, அன்பு இதயத்துள் ளூரச் சீரார் இளமான், திருமகள் போல்வாள் அவ்வை காதற் கனியனைய கட்டழகி, எந் நாளும் வைகறையில் முன் னெழுவாள் மலர்ச் சயனம் விட்டகலாச் செய்கையினை நோக்கியவள் செந்தாமரை வதனம் ஏறச் சிவந்த இயல்பும், மலர்க் கூந்தல் சீர் சிதைந்து சோர்ந்த செயலுங் கண்டுள் ளுருகி எழிலார் மடநல்லார் இன்றுயிலும் சீரிதே என்ன உளத்தெண்ணி இளந்தென்றல் மென்ம்லர் மேற்
சென்று வருடுத் திறமனைய மெல்
லொலியில் "என் ஆருயிர்த் "துணையே ஈசனெனக் களித்த செல்வ நிதியே செழுத்துயில் நீத்தே எழுவாய், Hத்தமிழ்தே அன்பே ւյ6vhւն
பொழுதினிலே வாச மலர்க் கொடியில் வண்டினங்கள் தேனருந்தும்
விந்தையினைக் காண்போம் விழிதுயில்
· நீத்தே எழுவாய், வண்ண வண்ணப் பூக்கள் மலர்ந்தன காண்!. என்றுரைத்தான் ஆங்கு அவளும் இன் துயில் நீத்து அன்பன் முக நோக்கி "மேதகவு செம்மை தெறி மேவிய என் அன்பரே! காதலரே! நூம் முகமுங் காலையிளம் பொழுதும் கண்டேன், கவலையற்றேன் கங்குற்
பொழுதினிலே கனவோ நனவோ . நான் கண்ட தொரு காட்சியின விண்டுரைப்பேன் Gasseff.

Page 67
இப்பாட்டினைச் சுவைப்பது எவ்வாறு? ஆரம்பத்தில் பாட்டினைப் பொருள் ததும்பப் பன்முறையும் படித்துப் பார்த்தல் வேண்டும். இசைத்தும் பார்த்தல் வேண்டும். பொருளினை அறிந்து கொள்ள வேண்டும். பொழிப்பான பொருளினைத் திட்ட வட்டமர்ய் உணர்ந்து கொள்வது அத்தியாவசியம்.
காலை வேளையினைப் படம்பிடித்துக் காட்டு கின்ற இவ்வரிகளை நோக்குவோம்.
"நித்திலத்தை நிலத்தில் உகுத்தது போல்" காட்சியளிக்கின்றன காலைக் கதிரவனின் கிரணங்கள். இளம் வெய்யில் புற்களிலும் செடிகளிலும் கொடிசளிலும் பூக்களிலும் படிந்திருக்கும் பணித்துளிகளில் படுவதால் ஆங்குள்ள பனித்துளிகள் பல்வேறு வானவில் நிறத்தில் மினுமினுக்கின்றன. அவை முத்தக் களெனப் பிரகாசிக்கின்றன. பலவ்ர்ணக் கிர ணங்களை பிரித்துப் பிரித்து காட்டுகின்றன. இத்தனை காட்சியும் பூத இணக்கத்தினை எடுத்து எழில் பெறக் காட்டுகின்றது. இது புறப் பூதச் செறிவு; புறப்பூத இ ண க்க் முமாகும். தொடர்ந்து உள்ளிணக்கம், அதாவது உள இணக்கம், எடுத்தியம்பப்படுகின்றது.
"உள்ளக் கவலையின்றி, உணவு உட்லிற் சேர்தலினல், அத்தனது உள்ளம் களங்க மில்லாதது; பளிங்கனையது; கவலை ஏதேனும் இல்லாதது. இத்தகைய சீரான உடலியைபு ஒரு தனி உள்ளூறலான, அளக்கொணு இன்பத் தினை விளைக்கின்றது. இதற்குக் காரணமுண்டு. "உணவு உடலிற் சேர்வதினுல்" உள்ளமானது ஒப்புவமையில்லா இன்பத்தினை - செளக்கியத் தினை - அ னு ப விக் கும் வாய்ப் பி னை ப் பெற்றுள்ளது.
விபுலாநந்தர் இடைக்கிடை "உணவு உட்லிற் சேராத" உடல் நிலையினுல் வருந்துவ துண்டு. இதற்குக் காரணம் உளது. அவர் ஓரிடத்தில் தங்கித் தாமதித்து இருப்பதில்லை. சாதாரணமாய் அவள் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பயணம் செய்து கொண்டே இருப்பார். இதஞல் அவர் மலச்சிக்

கலினல் வருந்துவதுண்டு. இவ்வனுபவத்தினை முன் வைத்துத்தான் இப் பொருளினை அவர் உணர்ந்திருத்தல் கூடும்.
உயிர் விஞ்ஞானியாகத் 5alpig (T. H. Huxley) டீ.எச். ஹக்ஸ்லி அவர்கள் ஓரிடத்தில் இதே பொருளினைக் கூறியுள்ளனர். அவர் தமது ஆய்வுகூடத்தில் தினமும் பதினெட்டு மணித்தியாலங்கள் வேலை செய்வாராம். இதனல் அவருக்கு உணவு, உடலிற் சேராக் குறை ஏற்பட்டிருந்ததாம். அவரை ஒரு பெரியார் இவ்வாறு உசாவினுராம்.
பெரியார்: உங்களிடத்தில் ஒரு தேவதூதன்
வந்து தரிசனங் கொடுத்து: “உங்களுக்கு ஒரு குழந்தை வருவதாகவிருந்தால் அது எத்தகைய உடலியல்பினைப் பெற்றிருத்தல் வேண்டு மென விரும்புகின்றீர்கள்?
ஹக்ஸ்லி: அது உணவினைச் சீரணிக்கும் திறத் தினைப் பெற்றுள்ள உணவுச் சமிபாட்டு குடர், இரைப்பையாகிய உள் ளு று ப் புக் களை ப் பெற்றுள்ளதாயிருத்தல் வேண்டும்.
எனவே உணவு உடலிற் சேர்தல் SRCO வரது ஆரோக்கியத்தினைப் பேணிக் கொள் வதற்கு எத்தகைய வாய்ப்பினையுடைய தாயிருத்தல் வேண்டுமென்பது இங்கு எடுத் தாளப் பெற்றுள்ளது.
உணவு உடலிற் சேர்தலினல் உள்ளக் கவலையின்றி வாழ முடிகிறது. நன்கு துயின் றெழும் பாக்கியத் திணை யும் பெற்று விடுகின்ருேம்.
எனவே "நல்லோர் புகழ் அத்தன்’ (Adam) நன்கு துயின்று எழுந்துள்ளவனுயிருந்தான். அவனது உறவுகள், இயற்கை இயைபுகள் பலப்பல.
காதுக்கிணிமை தரும் ஓசைகள்: "இளங்காற்றினிசை யொலியும் இன்பவிலை யொலியும்,

Page 68
வளம் சான்ற நீரருவி வாய் நின் றெழு மொலியும், பள்ளி யெழுச்சிப்பண் பாடுகின்ற புள் ளொலியும் - அத்தனுக்கு
*ஆரா உவகையினை வாரி வாரி வழங்கு கின்றன.
இளங்காற்றின் ஒலி உடலுக்கு இன்ப மூட்டுவது; காதுக்கு இன்னிசை தருவது.
இளங்காற்றினேசையிலும், இன்ப இலை யொலியிலும் ஒரு தனி மெல்லோசை ஒமென் ருெலிக்கின்றது. இயற்கை அன்னையின் மேனி மினுக்கிலும், உடலின் சாயையிலும் ஒய்யாரம் மிளிர்கின்றது. அவளது நடை மடவன்னத்தின் மென்மையிலும், மலர்களின் ஒளியிலும் தவழ்கிறது.
இம்மென்மையினை ஆங்கிலக் கவிவான னுெருவன் (Tennyson) இவ்வாறு எழில்பெற வருணிக்கின்றன்: '
Even the slight harebell raised its head Elastic from her airy tread.
மோப்பக் குழையும் அனிச்ச மலரின் மென்மையினை உடையவள் அத்தை.
பன்முறையும் படிக்கப் படிக்க இவ்வரி களில் நிறைந்துள்ள இன்னுேசை நம் காதினைத் தழுவித் தழுவி இன்பஞ் சேர்க்கின்றது.
எனவே மீண்டும் மீண்டும் படித்துப்படித்து மகிழ்வதற்குரிய ஒலிகள் நிரம்பி ஓசை விம்மும் வரிகள் இவை. நமது உள்ளத்தில் அன்பு உள்ளூருகின்றது. அத்தையின் உள்ளத்திலும் உவகை ஊற்றெடுத்துப் பொங்கி வழிகின்றது.
அத்தை தான் எத்திறத்தினள்? "காதற் கிளியனைய கட்டழகி") மெல்லிய குரலினள், எழில் நிரம்ப்ப் பெற்றவள். பின்வரும் வரிகளில் அவளது குணதிசயங்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன.

அவள் "எந் நாளும் வைகறையில் மூன் னெழுவாள்' "மலர்ச்சயனம் விட்டகலாச் செய்கையினை நோக்கி அவள் செந்தாமரை வதனம் ஏறச்சிவந்த இயலும் மலர்க் கூந்தல் சீர் சிதைந்து சோர்ந்த செயலுங்
கண்டுள்ளுருகி, "எழிலார் மட நல்லார் இன்துயிலும்
· ᎦifiᏩ5."
உளந்தெளிந்து கொள்வதற்கான பாங் கினதாகிய செந்தாமரையன்ன அம்மெல்லிய லாள் வதனம் ஏறச் சிவந்திருப்பதும், அழகிய வாசமலர்க் கூந்தல் சீர் சிதைந்து சோர்ந் திருப்பதும் அத் தனி ன் பார்வையினைக் கவர்ந்தன.
அதனுல் அவனுந் தான் உளம் நெகிழ்வுற் முன். எழில் நிறைந்த மட நல்லார் இன் துயில் கொள்ளும் சீர் இதுவே என்பதை உ ண, ர் ந் து கொண்டான். அத்தையின் அழகினைக் கண்டு கண்டு துய்த்தான்.
இளம் தென்றல் மென் மலர் மேல் வீசும் பொழுது மெல்லிய குரலில் இத்தகை வார்த்தைகளை விளம்பலானுள் அத்தை,
எத்துணை மென்மையினைத் தான், அழகி னைத்தான் இச் சொற்பிரயோகங்கள் வழங்கு கின்றன. கவனிப் போமாக:
'மலர்க் கூந்தல் *சீர் சிதைந்து சோர்ந்த செயல்" *எழிலார் மட நல்லார்’ "இன் துயிலும் சீர்" *இளந் தென்றல்”
"சென்று வருடும் திறமனைய மெல் ஒலி
மென்மையும் அழகும் நொய்மையும் துவண்டு துவண்டு பின்னிப்பிணைந்து தோன்று கின்றன. அவை வளம்மிகுந்த சொற் சித்திரத் தினை நம் கண்முன் கொண்டு வந்து விட்டன.
66

Page 69
இத்தகைய கொடையினை வழங்குந் தகை மையர் யார்? எனவே அத்தன் கூறுகின்ருன்:
"என் ஆருயிர்த்துணை நீ ஈசன் எனக்களித்த செல்வ நிதி நீ! அன்பே உனது துயில் செழுமையானது, ஆழமுடையது. எனினும் அத்துயிலினைக் கூட நீ நீத்து எழுவாயாக".
மேலும் மேலும் அழகு வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகின்ருன், அத்தன்.
"புத்தமிழ்தே! அன்பே'
புலர்ந்து கொண்டேயிருக்கும் வைகறைப் பொழுதினிலே
வாசமலர்க் கொடிகளில் வண்டினங்கள் தேனருத்தும் விந்தையினைக் காண்ப்ோம் வாரிச்சீஇயற்கையுடன் இருவரும் உறவாட எத்தனம் செய்கின்றனர். இதுவ்ே காலைப் Muntrfisar 1 இறைவணக்கம் வேறேது? எனவே இவ்வின்ப அனுபவத்தில் கலந்து கொள்வாயாக,
வண்ண, வண்ணப் பூக்கள் மலர்ந்தன, வந்து காண்பாயாக!
அத்தனது முகத்தில் இளம் சோபை மிளிர்கிறது. அதனைக் கண்டு சண்டு அதில் சொக்கிவிட்டாள் அத்தை.இது இறைப்பாசம் He for God; She for God in him- sysos உறக்கம் தெளிந்தாள். இவ்வாறு கூறுகின்முள்.
“மேதகவு செம்மை நெறி மேவிய என் அன்பரே!!" மெல்லிய ஒலி மிதந்து செல்கின்றது. அத்தை தன் வார்த்தையில் செழுமையான மொழிகளினல் சொற்சித்திரம் தீட்டுகின்ருள்.
"காதலரே! நும் முகங்காலை இளம் பொழுதும் கண்டேன்."

காலைப் பொழுதின் அழகினைக் கண்ணுற் றேன். அதைத்துய்த்தேன். காலைப் பொழுதிற் கிணையான நும்முகங்கண்டேன்,உளம் நெகிழ்ந் தேன். நுமது முகமலரின் செம்மையில் உளந் தோய்ந்தேன். உள இணக்கம்; உள இணைவு: அஃது இடையருத உள்ளப் பிணைப்பு. எனவே "அவ்வெழிலினைக் கண்டேன்! கவலையற்றேன்!
"நான் கங்குல் பொழுதினிலே கண்டேன் ஓர் அரிய காட்சி. அது கனவோ நனவோ அறியேன். அதை விண்டுரைக்கின்றேன் கேட்டருள்வாயாக."
லிபுலாநந்தருடைய "ஆங்கில வாணி” என்னும் இப் பாடலில் நாம் கண்டு கொண் டது யாது? நாம் பெற்றுள்ள உள நிதியம் யாது? நாம் துய்ப்பது யாது? அஃது அளப் பரிய செல்வம். சாலவும் பெருகியநிதி, ஒசை நயமும், சொல் நயமும், பொருள் நயமும், இயற்கை ஒலிகளின் நலனும், வண் ணக் காட்சிகளின் தெளிவும், நமது காதுக்கு அளிக்கப்பட்ட ஒலிவிருந்தும், கண்களுக்கு நல்கப்பட்ட காட்சிகளின் சிறப்பும் நமது ஊனினை உருக்கி உளத்தினைக் குழைத்து இன்ப ஆருக பெருக்கெடுக்க வழிவகுத்துவிடுகின்றன.
இப் பாட்டினைப் பன்முறையும் விபுலா நந்தர் தமது உளம் நிறைந்த குரலில் பாடக் கேட்ட நாம்: "நாம் எங்கே! பனுவல் எங்கே" என்பதை உணரவொட்டாத நிலையில் பாட் டின் கசிவும் நமது உளத்தின் கசிவும் ஒன்றித்து விடுந்தறுவாயில், பாட்டினை ரசிக்கின்ருேம்: துய்க்கின்ருேம் எனக் கூறக் கூடியதாகி விடு கின்றது.
பன் முறையும் உள ஒருமைப்பாட்டுடன், சித்தம் நெகிழப் படித்துப் படித்து சுவைக்க
வேண்டிய திறத்தினதாய இத் தமிழாக்கப் பாடல் ஜோண் மில்டனினது ஆதிப் பிரபந்
தத்தின் அற்புத அமைவுகளனைத்தையும் ஒருங்கே திரட்டிக் காட்டுவது போல மிளிர் கின்றது.

Page 70
இந்து DT6
செயலாளர்
இந்து நதி,தனது பிரதான கிளையாக என்ற முறையில் நானும் இணைந்து கொண்டு வருட நிகழ்வின் நிரலில் இட்டுச் செல்கிறேன்
தொடர்ந்தும் புதுப்பொலிவுபெற்றுப் நதிச் சஞ்சிசையின் வளர்ச்சிப் பாதையில் ஊக்கமளித்த எமது மன்றப் பெருந்தலைவி டே பெரும் பொருளாளர் கலாநிதி க. சபேசன் அ
கடந்த வருடத்தில் இந்து மாணவர் மன் ஆசாரமுறைப்படியும் கொண்டாடியுள்ளது. அ ஆகியோரையும் இதில் அழைத்துவந்து அவர் அளித்துள்ளோம். -
மேலும் எமது மன்றத்தினரால் ஒழுங்கு ஆச்சிரமம், சாரதா இல்லம், இசை நடன விரிவுரையாளர்கள் ஒன்று சேர்ந்து விஜயம் நாள் முழுதாகப் பல்வேறு இந்து சமய நிகழ்
மேலும், எமது மன்ற உறுப்பி ன மகாவித்தியாலயத்தில் க. பொ. த. (சா I த நடாத்தப்பட்டன. இதில் பங்குபற்றிய எமது சார்பில் நன்றி கூறக் கடமைப்பாடுடையேன் தேவி கோயில் கட்டிட நிதிக்கென இத்து மா கொடுக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி இளைஞர் மன்றத்தினர் கேட்டுக் கொண்டதற் முன்னிட்டு கொடி விற்பனவு செய்து பணம்
இவை மட்டுமல்லாது, எமது மன்றத்தி நதியானது மட்டக்களப்பு இந்துக் கல்லூரி வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் பல கல் கொண்டு, இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்புற
மேலும் எமது மன்றத் தலைவர் செல்வி செல்வன். ப, ஜெயக்குமார் அவர்களும் ஏனே ஊற்றெடுப்பதற்குப் பெரிதும் உறுதுணையாக
இந்து நதியுடன் சங்கமமாகும் உங்கை இந்து நதியை தொடர்ந்தும் வற்ருது பெருக்க இந்து நதியுடன் சிற்றுாற்றக இணைந்து கொ

лт6nшfї மன்றச்
அறிக்கை
ஊற்றெடுத்து ஒடும் இன்னேரத்தில் செயலாளர் இந்த நதியின் சலசலப்பில் உங்களையும் கடந்த " என்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
பல கட்டுரைசளைத் தாங்கி வெளிவரும் 'இந்து அக்கறை கொண்டு அதனை வெளியிடுவதற்கு ராசிரியர் மனே சபாரெத்தினம் அவர்களையும், வர்களையும் நினைவு கூராமல் இருக்க முடியாது.
மமானது இந்து சமய நிகழ்ச்சிகளை ஒழுங்காகவும் புத்துடன் சமயப் பெரியார்கள் கல்விமான்கள் ர்களின் பங்களிப்பையும் எமது மன்றத்திற்கு
செய்யப்பட்டு கல்லடியிலுள்ள இராமகிருஷ்ண க் கல்லூரி போன்றவற்றிற்கு மாணவர்கள் செய்து, அங்குள்ள மாணவர்களுடன் ஒரு பகல் ழ்ச்சிகளில் பங்கு கொண்டோம்.
ர் களால் கடந்த வருடத்தில் செங்கலடி ) மாணவர்களுக்கு இலவச பாட வகுப்புகள் மன்ற உறுப்பினர்களுக்கு நான் மன்றத்தின்
மேலும் எம்மால் கொம்மாதுறையிலுள்ள ண வர் களிட மிருந்து பணம் வசூலித்துக் எமது மன்றத்தினரால் மட்டக்களப்பு இந்து கு இணங்க இந்து இளைஞர் கொடிதினத்தை வசூலித்துக் கொடுக்கப்பட்டது. னெல் முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்து மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் விமான்களும், சமயப் பெரியார்களும் கலந்து மெருகூட்டிஞர்கள். பன். ச. வரதராஜன் அவர்களும், பத்திராதிபர் 'ய எமது மன்ற உறுப்பினர்களும் இந்து நதி நின்று உழைத்துள்ளார்கள். ா நான் கேட்டுக் கொள்வது என்னவென்ருல், "கப் பாயச்செய்வதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ள்ள வேண்டுமென்பதே
வே. கேதீஸ்வரரர்சா.

Page 71
எம் சிரம் தாழ்வது இவர்
"இந்து நதி இவள் வளர்ச்சியி அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி
கண்ணனின் உபதேசம் அருச்சு6 முக்கியம் என்னவெனில் அது மானிட பெரும் பொக்கிஷத்தையே தந்தமைதா ஆசிகளும் வாழ்த்துக்களும் தந்துதவிய க ருக்கும் என்றும் கடமைப்பட்டுள்வோட் தந்துதவிய அறிவு ஜீவிகள், விரிவுரைய
மண்ணின் மணத்தைப் பரப்பக் 6 கள், வள்ளல்கள் இவர்களுக்கும், விள
வதில் தம் சிரமங்களைப்பாராது முனைப்ட
தமக்குரிய வேலைகளில் மட்டுமல்ல அழகான முறையில் இவ்விதழை அச் அச்சகத்தினருக்கும்,
வாசகப் பெரியோராகிய உங்கள்
шо60

களுக்கு:-
ல் பங்கெடுத்த பெரியவர்கள் உங்கள் செலுத்துகிருேம்.
னனை வழி நடத்தியது என்பதை விட, உலகிற்கு "பகவத் கீதை' என்ற அரும் ன். இவ் வகையில் எமக்குக் களத்திலேயே :மயப் பெரியோருக்கும் எமது பெரியோ ). அத்துடன் தமது கைவண்ணங்களைத் ாளர்கள், மாணவர்கள் அனைவருக்கும்,
கைகொடுத்து உதவிய வர்த்தகச் செம்மல் ம்பரங்களையும், ஆக்கங்களையும் திரட்டு ாக ஈடுபட்ட நண்பர்களுக்கும்.
ாது எமக்குரிய வேலைகளிலும் பங்கேற்று சிட்ட மட்டுநகர், புனித செபஸ்தியார்
அனைவருக்கும்,
ாமார்ந்த நன்றிகள் என்றும் நிலைக்கும்.
இந்து மாணவர் மன்றம், , கிழக்குப் பல்கலைக்கழகம்.

Page 72
0.9th the ßest
6ệ མོ་
VASANID
Proprietor:- M
SE 戰
Dealer in:- ELEPHANT
PE P S I &
5s, Sea View Road
TPhone (Resi
BY THE BEST
BUH A THE ONLY QUALITY TEXT
BUHARY 109, N. C. Road,
ജ (
 

0ompliments frem
r
OIRES
BRAND SOFT DRINKS M I R IN D A
H S
. VELUPPILLAI
l, - TRINCOMALEE. dence) 026-2585.
BUY IT AT
A R Y ' S ILE SHOP IN TRINCOMALEE.
TEXTLE
- TRINCOMALEE.
)26-2321.

Page 73
"இந்து நதி’ பாய்ே நம்பிக்கைக்கும் 2 நவ நாகரீக வைர S. ஆபரணங்கை
சிறந்த
|எஸ். கே. எஸ் 10, மூன்றம் கு திருகோ
G.R. 22:19
For
Fash
$z í6ø $/
10, 3rd, CR( TRINCO
 
 

தாட வாழ்த்துக்கள் த்தரவாதத்திற்கும் த்திற்கேற்ப ாத் தெரிவு செய்ய
இடம்
游
) அன் சன்ஸ் ಸಿಹಿதெரு,
ionable Jewellers
DMALE

Page 74
‘Uits 5Best
*и
- 'િ,
Radio Spares, Rad
CONTACT:
“ S U PER
No. 223,
BAD

eampliments
2.
so
io Sales & Service
S O NIC”
ower Street,
ULLA.

Page 75
9ith (ßest eompliments
NA A D A I MWA 5 ܕ ܗܝ
DEALERS IN
UEW 182, N. C. Road; TI மங்கையரின்- மனத் தங்க, வைர, தன்னிகரற்ற
அம்பிகா
182. என். சி. ருேட்
N.
சைக்கிள் ரயர்கள், ரியூப் தேய்ந்த கார், லொறி,
மீள நிரப்
டு நீடித்த பாவிப்பு நோர்தேண் தொழிற்சாலை;-
69; பிரவுண் வீதி, கொக்குவில்,

EWELLERY
ELLERY & GEMS RINCOMALBE.
தைக் கவரும் அழகிய
நகைகளுக்குத்
ஸ்தாபனம்
ஜவல்லறி
திருகோணமலை.
என். ஐ|
புகள் தயாரிப்பாளர்களும் உழவு இயந்திர ரயர்கள் புனர்களும்
கு சொகுசான ஒட்டம்
இன்டஸ்றிஸ்|
காட்சியறை:- 112. வீதி, யாழ்ப்பாணம்
e S 23158

Page 76
Uits tse 6eøt comptim
Dilka Cre
AGENTS FOR:
- ELEPHANT HO FAESTA ICE ( k NEWS PAPI
256, Thirugnanasa
RCC
SV RQ 026 - 2709
* பாட நூல்களா?
* பாடசாலை உபகரண * இலங்கை இந்தி * ஆங்கில ஏடுகளா? * எழுது கருவிகளா?
உங்கள் தேவைகள் எதுவா
மயூரனஸ் 101A, வித்தியாலயம்
தேசிய கடதாசிக் கூட்டுத்தா வினியோ

ents fuen:
am House
USE PRODUCTS
CREAM ERS & BAKERS
impanthar Street,
DMALEE.
னங்களா?
ய சஞ்சிகைகளா?
rஞலும் எம்மிடம் வாருங்கள்
புத்தகசாலை வீதி, திருகோணமலை பன உற்பத்திப் பொருட்களின்
கஸ்தர்கள்.

Page 77
LSu 9lu ஆரிய குளம் சந் B. A san) Dmoof
ஆகிய வகுப்புக்கள் மிகச் சிற
va ° கொண்டு A/Lல் மூன்று பாடம் சித்தி அடை களும் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்ப சகலபதிவுகளும் எமது நிறு என்பதையும் அறியத்தருகி A/L கலை வர்த்தகம் ஆகிய வகு இருக்கி விபரங்களுக்கு, பதி
ஆரி
OLD PARK C
CATERERS FOR SPECIAL C
Ideal place to enic family & friends Ideal p
* Soups Rice
Chop Saey
Our Old F TAKE AWAY L
207, Old Park Rd,
6.R 2
Plus

ர் கல்லூரி தி, யாழ்ப்பாணம் 3. Com வர்த்தகமாணி ந்த முறையில் நடைபெற்றுக் இருக்கிறது. ந்தவர்களும், பயிற்றப்பட்ட ஆசிரியர் டுவர். வனத்தால் செய்து கொடுக்கப்படும் ருேம். -
ப்புகளும் நடைபெற்றுக் கொண்டு ன்றன. - வாளர், புதிய உயர் கல்லூரி யகுளம் சந்தி, யாழ்ப்பாணம்.
- ܥܠ HINESE RESTAURANT DCCASIONS ly meals with your lace for wedding reception
Ai Noodles
Sweet & Sour
ark Specials
JNCH PARCELs.
Chundikuli JAFFNA.
3028

Page 78
RAJAH
HARDVV
HARDWARE & TIM
76, Seavie v
TRINCOl
R O2(
GENERAL MERCHANTS, WHC Regd GOVT. TE
AGENTS
LANKA MLK FOO
SHAW WALLACE & DARLEY BUTLER 4 RECKITT & COLMA B. C. C. PRODUCTS
80, Main TRINCO
 

ARE
STORES
BER MERCHANTS
v Road.
MALEE.
5-2552(
GENCIL§
DLESAILE & RETAL DE ALERS RANSPORTERS.
DS (C. W. E.) LTD , HEDGES LTD
CO LTD N OF CEYLON LTD
Street, MALEE
9 R 026 / 2716 - 2253

Page 79
அழகிற்கு அழகு செய்யு
தங்க வைர ஆபரணங்களு சிறந்த ஸ்
அஜந்தா
fljantha Sjeverellery 190 M. (Aanavan saa
Лиüncoтаfeе.
JEEVAN
VIDEC
(VIDEO FILMI
51, Thirugnanasa
TRINCO.

ருக்கு
தாபனம்
ஜவல்லர்ஸ் : விதி,
D MOVIES
NG CENTRE)
女
panthar Street,
MALEE.

Page 80
தரமான 22 கரெட்
இன்றைய நவீன டிசை
ଗରାରିଥi) ?" WELCOME JEW
121, என். சி. வீதி, திருகோணமலை,
OZ o26 - 248
llits camptiments Auam:
Samuel, Sol
HEAD OFFICE;
164, Mess
COLOMBC
AFFNA BRANCa:
206, 208 H
JAFFN
KILINOCNCHI BRANCH,
. Kandy
KLNC

ாகள். .
llaf 666 ELLERY PALACE
TRINCOMALEE.
2673,
ns & Co. Ltd
enger Street,
- 12,
A.
&oad, CHCH.

Page 81
இந்துநதிக்கு எமது
- நல்வாழ் யாழ்நகரில்
G. C. E. (O/L
* 5ம் ஆண்டிற்க
போட்டிப்பரீட்ை
பொது அறிவு
brܗܨܳܦܼ 6ib. 7ib ܥ
பயிற்சிகள். முன்னணி வெளியீட்டாளர்கள்,
916) JGI
166/1, ஆஸ்பத்திரி வி
AU
Qubitñ 58eot eomptimento 3
Paramjoth Sto WHOL ESALE
194, Ehambi TRINCO
ജ 2419

இதயம் நிறைந்த ந்துக்கள்.
), A/L வினவிடைப்பயிற்சிகள் ான புலமைப்பரிசில் பயிற்சி விஞக்கள் சயில் தொழில் தேடுவோருக்கான
ம், உளச்சார்பும்.
டு மாணவர்களுக்கான கணிதப்
IIßÜIIhÜ
தி, யாழ்ப்பாணம்.
isem: y Medical res
& RETAIL aram Road,
MALEE.
GRAMs: PARAMJOTHY'

Page 82
- திருகோணமலை நகரில்
நவீன அழகிய தங்கி
சிறந்த ஸ்
95 LITT Ġù
With Best kwishes
| MAJESTA
MAN STREET | AKKARAIPATTU.

ஆபரணங்களுக்குச்
ஸ்தாபனம்
"66)TIGD
கரை வீதி,
'ങ്ങ്ഥ.
(3est 09:shes to
“/INTHU NATH'
2
Ambal
Stores
Sagama Road,
AKKARAIPATTU.

Page 83
ஓம் நட * இந்து நதி ' க்கு எ சிறந்த ரக,
எவர்சில்வர் பொ. * அலுமினியப் * அழகிய
* பரிசு
ஆகியன குறைந்த விை
சர வ
சாகமம் வீதி .
‘Uits 8est
3.
Vikna Tra
01, Cash S TRINCOM

вантиј ம் நல்வ ாழ்த்துக்கள்
ருட்கள்
பொருட்கள்
பாதணிகள்
ப் பொருட்கள்
அழகு சாதனப் பொருட்கள்
லயில் பெற்றுக்கொள்ள
அக்கரைப்பற்று.
Comptimento
de Centre
trèet, ALEE.

Page 84
litfi the dest camplimen
MA • S» INDU
MANUFACTURERS OF BOLT w HHNGES
ADDRESS: Irupalai Roe
HEAD OFFICE; 54, 3/3 Y
P. O. Box: COLOM
T. Phone 24591 24596
VICTOR The Leading Music
- Electrical
நீங்கள் விரும்பும் . நவீன எலெக்முேனி ஸ்ரீறியோ முறையில் எக்கோ ஒலி அமைப்பில் விளம்ட 15n (
விக்ரர் அ
(வி இல, 100, ஸ்ரான்லி கிளை ஸ்தாபனம்;
விக்ரேஸ் மி இல 887, ஆஸ்பத்தி

t6 fлот:
STRES LTD)
'S & NUTS, WIRE NAILS, & OTHER ALLED PRODUCTS
id, KONDAVIL
T. Phone: 02 - 224
ork Street,
1693 3O - l.
Telex; - 21381 Combamilcey.
(2) SONS
- T. V. Video Centre Engineers மதுரகான பாடல்களை க் ஈக்குவலைசர் மூலமும் பதிவு செய்துகொள்ளவும், ரங்களை பதிவு செய்துகொள்ளவும் டுங்கள் புன் சன்ஸ் கரேஸ் )
வீதி, யாழ்ப்பாணம்
பூசிக் சென்ரர் ரி வீதி, சுண்டிக்குழி.

Page 85
இந்து நதி’க்கு 6
ஒடர் நகைகள் 22 கர வேண்டிய டிசைன்களில் நய
குறித்த தவணையில் ெ நவநாகரிக டிசைன்களிலான
- சிறந்த ஸ்
:
நியூ அ னு ஜா
181, ஏகாம்பரம் வீ!
WITH THE BEST
A MARKA 1 76, CEN' TRINCC
FOR LICENCED TE, LA WY TRANSPOR
COLOMEBO
N.
Head Office :
1 7 3 , K E Y Z E C O LO M. O.UQ O1 -
 

கள் வாழ்த்துக்கள்
ட் சுத்தமான பவுணில் ம், நம்பிக்கை நாணயத்துடன் சய்து கொடுக்கப்படும். தங்க வைர ஆபரணங்களுக்கு
தாபன ம் amat
A
ா ஜா வ ல ர் ஸ் தி, திருகோணமலை,
COMPLIMENTS OF
NINDU 59 BROS TRAL ROAD, DMALEE.
A DEALER D. T. II6 T SERVICE FROM
TO TRNCO
R STREET, 3 O - 1 1. -25577。

Page 86
The Leading Farm Centre in Jaffna.
Dealers in 1. Prima Poultry Feed & Cattle Feed. 2. Issue of day old chicks. 3. Wetzyme Dog Products. 4. Sausages.
5. Broiler Chicken &
Other Items relating to . Animal Husbandry.
སྙི
NALLUR FARM CENTRE
19, Murugesar Lane, NALLUR - JAFFNA.
BEST WISHES TO IN THU NATH
FOR ALL YOUR
O TRAVEL
O PHOTO COLOUR PRINTING O TRAVEL DOCUMENTS O TELEX AND CABLE
CONTACT
THE PIONEERS IN THE DOMESTIC FLIGHT TO AND FROM COLOMBO | JAFFNA.
MACK TRAVELS
8, FIRST LANF, PT. PEDRO ROAD, J A F F NA ;

சுவை, தரம் உயர்ந்த, உங்கள் விருப்பத்திற்கு அமைய
தரமான உணவுகளை ܡ இன்று களிப்புற, உண்டு களிப்புற,
நாளை வலுப்பெற்
nത്ത தினமும் நாடு ங்க ள் -
STANLEY RESTAURINT (Chinese)
60, Stanley Road, J A F FN A.
Best Wishes to
66 I N T H U N A T H I
V M M M. M. M. A QMJ QM V V V M. M. M. V M V M MU
M
SAMROCK ACADEMY
274, HOSPITAL ROAD, CHUN DIKULI, JAFFNA.

Page 87
“இந்து நதி"க்கு எம் வா
சகல விதமான பலசர மொத்தமாகவும், சில் வேண்டிய ஸ்தாபனம்
கிருபா ( 108, பஜார் வீதி வவுனியா,
வாழ்க இந்து மாணவர் 1 வளங்கொழித்து வருக விவசாயிகளே, உங்கள் பயிர்களு பேயர் (BAYER) விவச * கிருமி நாசினிகள்
* களை கொல்லிகள்
* பங்கசு கொல்லி மற்றும் விவாசய உபகரண
நம்பிக்கை, நான பெற்ற ஒரே ஸ்தாபனம் -
குளோப் றே
BAZ €7-VQ O24 - 2345 WA

ாழ்த்துக்கள்
க்குச் சாமான்கள் லறையாகவும் பெற்றுக்கொள்ள
ஜென்சி
மன்றம்! இந்து நதி’! ருக்கு வேண்டிய
ாய இரசாயனங்கள்
5ள் -
ங்களுக்கும் நாடவேண்டிய
யம், நன்மதிப்பு
உங்கள் ஸ்தாபனமான
டர்ஸ் பஜார் வீதி,
- வவுனியா OS TRA DERSS
AAR STREET, WUNYA.
ܚܕ

Page 88
நாடு செழிக்க, நானிலம் புரக் − இந்து ந: வவுனியா தெற்
பலநோக்குக் கூ ங்களிடம்: வவுன்
வீட்டுப்பாவனைக்கேற்ற சகலவி மின்சார உபகரணங்கள் மட்பாண்ட கூட்டுத்தாபன உ அலுவலக/பாடசாலை மாணவி மற்றும், பலவிதமான ெ
பொற்றுக்ே கூட்டுறவு மக்கள்
மொத்த/சில்லறை விற்
பஜார் வீ
w
:
இந்து மாணவர் மன்றமளித்தி "இந்து நதி'யே இந்த மானிலம் எங்குஞ் செழ
ஏற்றதாய்ப் புகழ் சேர்த்துப் ப
சிவசக்தி
சகலவிதமான சாய்ப்புச் சாமான்ச உள்ளுர் வி மொத்தமாகவும், சில்லறையா
Sipasakihu -
Bazaar Street,
WAWUNIYA. − SØR O2

க ஓடிவரும் தியே; வாழ்க! வளர்க! கு தமிழ்ப்பிரிவு
IGpai afi னியா.
உற்பத்திப் பொருட்கள் பர்களுக்கான காகிதாதி வகைகள் பாருட்களை மலிவு விலையில் கொள்ளலாம்
விற்பனை நிலையம் பனை நிலையக் கட்டிடம் , வவுனியா,
O24 - 2384
டும் இணையிலாததோர்
sள், பலசரக்கு, மருந்து வகைகள் ளபொருட்கள் கவும் பெற்றுக்கொள்ள வேண்டிய
6.

Page 89
Our Hearty
T
“INHU
ARUNA J.
“Our motto is Hon
18 (A) Third TRINCC

Congratulation
о
NATHI'
I
WELLERY
esty & Promptness'
Cross Street, DMALEE.
ஜவலறி
குறுக்குத் தெரு, ணமலை,

Page 90
'இந்து நதி"க்கு
எமது இதயம் நிறைந்த அழகிய தங்க வைர நகைகள்
தங்கள் மனதிற்குகந்த நவீன முறையில் கிடைக்குமிடம்
வி. எஸ்.இ நகை மாளிகை 8, காசுக் கடைத் தெரு,
திருகோணமலை.
olito est comptimento
CITY MI
K
DISTRIBUTORS FOR;
PFIZER CEYLON NU. MULLER & . HOECHST CI STATE PHAR UNION TIRAI

வா ழ்த்துக்கள்
V, S, E,
JEWEL, HOUSE
No. 8 Cash Street, TRINCOMALEE.
FOR
FASHONABLE
JeWELLERIES &
DAMONDS I
6 R 599
its.
EDICALS spital Road, N A.
RITIONAL FOODS LTD HIPPS (CEYLON) LTD
YLON LTD MACEUTICALS CORPORATION ERS, i

Page 91
Our Best Complimen
எழில் மிகு கண்கவர் டிசைன் களிலான நகைகளையும் அதிக உத்தரவாதத்துடன் ஒடர் நகை களையும் பெற்றுக்கொள்ள
நாடுங்கள் இல, 101. என். சி, றேட், திருமலையில்.
| COLD HOUSE
"கற்க கசடறக் கற்பவை கற்ற
நிற்க அதற்குத் தக"
மில்க்வைற் நீல சோப் மேலுன திருக்குறள்களைச் சேகரித்துக்கெ திருவள்ளுவர் படத்தையும், திரு யுடன்கூடிய புத்தகத்தையும், ! ஸ்ரிக்கரையும் பெற்றுக்கொள்
"நாளும் நற்பணி செய்திட
* மில்க்
525/2, காங்கேசன்துை

ts To INTHU NATHY”
A Tradition of Fine Quality Jewelleries Orders Promptly Executed
VRST
No. 101 N. C. Road, TRINCOMALEE.
கோல்ட்ஹவுஸ்
பின்
றகளில் உள்ள
ாடுத்துமூவர்ண க்குறள் உரை 3
கிருக்குறள் ۹ - - ருங்கள்,
உங்கள் ஆதரவை நாடும்"
99
வைற
) வீதி, யாழ்ப்பாணம்,

Page 92
l
"இந்து நதி' பைந்தமிழ் இத
өп p த் நவநாகரீக டி
தங்க HL D
சிறந்த
ஒடர்
குறித்த தவணயில் அபிராமி 29-,ே காசுத்தெரு 9 o
 

பெருக்கெடுத்து பங்களை வளமாக்க Sl * கள்
சைன்களிலான
ணங்களுக்கு
ஸ்தாபனம்
நகைகள்
செய்து தரப்படும். ஜுவலலாஸ ), திருகோணமலை.
26 - 2044.

Page 93
* இந்து ந தி ' க்கு
WM X
% y
முருகன் இல: 14, பஜார் வி
6ze 0é
WITH BEST CON
VN
NEW GOPAL,
Authorised Dealers for: C. I. C. Pain Fittings (Maharaja Organisation,) Centı (Jinasena Ltd.), Kelani Cables Ltd. Deal
Sawn Timbers, Spare Parts. Gener
Grams: GOPAL
No. 28, Sea View R

எமது வாழ்த்துக்கள்
WM YMX
WK Z
% W.
WK WKWAK
W
ஸ்டோர்ஸ்
tதி, - மட்டக்களப்பு.
5 - 2636.
iPL SETS FROM
然
AN COMPANY
ts (shemical Industries) S-lon Pipes & ic & Robin Water Pumps & Generators 2rs in Building Materials, Electrical Goods, al Hardware and Transport Agents.
Telephone: O26-2619.
oad, - TRINCOMALEE.

Page 94