கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2011.01

Page 1
T! 以
விலை ரூபா 20
 


Page 2
تمام
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
Je
Design
Manufactu
^ණ්ඛිණි. Sovereign c V V V\°,\\ JeUU
Ni 101, Colombo
Te: O81
@|CFN!
SUPPLIERS TO CONF
Dealers in all Hinc Food Colours, Food Chem
76 B, Kings Tel : 081-2224187, 081
 

AMS
uvellers
ers and
rers of 22T sold Quality ellery སྙི
Street, Kandy.
- 2232545
RAL ESSENCE
PPLIERS
ECTIONERS SA BAKERS
ls of Food Essences, icols, Coke ingredients etc.
Street, Kandy 1-2204480, 081-447.1563

Page 3
+
+ * محل
+
+
+
4. பகிர்தலின் மூலம்
விரிவும் {} ஆழமும் + பெறுவது +
em orib fluuii : + . ஞானசேகரன் + இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன் +
வியர் + காதமன்
தலைமை அலுவலகம கண்டி,
+ தொடர்புகளுக்கு. 器 ஞானசேகரன்
ான்ம் கிளை அலுவலகம் 3-B, 46*ச ஒழுங்கை, + கொழும்பு - 06. தொலைபேசி: 01 -2586013 +
O777-306506
+61 02 80077270 தொலைந்கல்: 011-2362862 + E-mail : editorQgnanam.info Web : www.gnanam.info + + வெளிநாட்டு, உள்நாட்டு வங்கித் தொடர்புக்ள் Swift Code:- HBLKLX + T. Gnanasekaran () Hatton National BankWellaWatte Branch AVCNo. 009010344631
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துக புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப்பெயர், முகவரி ஆகி கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

தழினுள்ளே .
புளியாதபார்வைகள் - எம். கே. முருகானந்தன்
05
திறனாய்வியல் மார்க்சியத்தின் தளமும் விரிவும்
- பேராசிரியர் சபா. ஜெயராசா ஓவியம் சிரித்தது - கல்கிதாசன்
பலஸ்தீனத்தாய் - எம். எச். முகம்மது நளிர்
காட்டிலிருந்து வந்தவன்-சுதாராஜ் ஊர் அவலம் அல்லது பணயம் - கல்வயல் வே. குமாரசாமி
அரசியலும் தமிழ்க் கவிதையும் - மு.பொ. மீண்டும்பனை முளைக்கும்? - மு.சிவலிங்கம்
வடமிழுக்கும் வண்ணத்தமிழ்
- கலாபூஷணம் கவிஞர் பதியதளாவ பாறுக்
கள மாற்றங்கள் - கே. ஆர். டேவிட் நஸ்ருல் என்றொரு எரிநட்சத்திரம் - தீரன். ஆர். எம். நெளஸாத் கொடுத்ததில் இதைவிடக்கூடியதில்லையே - கிண்ணியா ஏ. எம். எம். அலி கூறு நண்பனே கூறு - யாழ். அஸிம் துறக்கம், இடைக்கம், இறக்கம் . - அல் அஸமைத்
சொற்றொடர்கள்பற்றியஒருகுறிப்பு - மொழிவரதன் பிள்ளைமடுவத்தை நோக்கி. - பிரமிளா பிரதீபன்
uit&titut - கலாபூஷணம் மூதூர் கலைமேகம்' கடைசிப்பயணம் - புன்னியாமீன் வத்துக்குளம் - அகளங்கன் வாய்பேசாஊமைகளாய்வாழவிட்டார் - புசல்லாவை குறிஞ்சி நாடன் நாணயம் - வி. ஜீவகுமாரன் மெல்லத்தமிழினி.
iu:
10
12
13
16
30
31
38
39
40
42
53
56
58
59
64
70
71
75
கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பவற்றைவேறாக இணைத்தல் வேண்டும்.பிரசுரத்திற்கு ஏற்றுக்
ரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
உயிர்ப்பிற்கான துடிப்பும் கல்லறை நோக்கிய திசைதோறும் துலங்கிய நட்சத்திரம் - அஷ்ர வரலாற்றை மாற்றிய காதல் - கேணிப்பித்தல் பழைய பேய்களும் புதிய பிசாசுகளும் - ச. மு அரச மரமும் விழுதுகள் விடும் ! - கொற்றை சற்றே தள்ளியிரும் பிள்ளாய் - கொற்றை பி தமிழ் இணையம் - இன்றல்ல அன்றே - மான இகழ்ச்சிக்குரியோன் இவன்! - நியாஸ் ஏ ஸ! ஈழத்து தமிழ்இலக்கியம் - கா. தவபாலன் சுடாதேங்கோ ! - யோகேஸ்வரி சிவப்பிரகாச எங்கள் அன்புத் தம்பி - சமரபாகு, சீனா. உ என்னவள் நீதானே! - திருமலை வீ. என். ச பொட்டியெல்லாம் வந்திற்ராம்- எஸ். முத்துமீ ரோஸ்மேரி எஸ்டேட் அப்பர் டிவிசன் -மலரன் செவ்விதாக்கமும் தமிழ் இலக்கியமும் - தெளி விளம்பரம் - வேல் அமுதன்
2O 11 22 σΟΤ *ஞானம் ? புதிய உள்நாடு
தனிப்பிரதி : eUBLINIr 85/= ஆண்டுச் சந்தா : EBLIII 1000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/- ஆயுள் சந்தா : our 20000/- சந்தா காசோலை மூலமாகவோ,மணியோடர் மூலமாகவே அனுப்பலாம். மணியோடர் வெள்ளவத்தை தபால் நிலையத்தில் மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும் இலகுவாக மேலதிகச் செலவின்றி சந்தா அனுப்பும் வழ
உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank
Wellawatte நடைமுறைக் கணக்கு இலக்கம் 009010344631என்றகணக்கில் வைப்புசெய்துவங்கிரசீை
எமக்கு அனுப்புதல் வேண்டும்.
7ெவனிநாடு ஓராண்டு
A Australia (AUS) 40 Europe (e) 30 India (Indian Rs.) 500 Malaysia (RM) 60 Canada ($) 40 UK (£) 25 Other (USS) 35
மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களுக்
 
 

ாத்திரையும் - கே. விஜயன் 76
ஃப் சிஹாப்தீன் 78 ச. அருளானந்தம் 81 ருகானந்தன் 84 பி. கிருஷ்ணானந்தன் 85 . கிருஷ்ணானந்தன் 85 மக்கீன் 86
த் 90
91
ub 93 5யகுமார் 98 ந்திரகாந்தி 99 ரான் 104 பன் 107 வத்தை ஜோசப் 110
112
வரி முதல்
சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப ! Swift Code: HBLILKLX அனுப்ப வேண்டிய பெயர் முகவரி :
T. Gnanasekaran r Gnanam Branch Office ) 3-B, 46th Lane, Wellawatte.
ஞானம் விளம்பர விகிதம் பின் அட்டை : cosur 10000/ ) முன் உள் அட்டை : ரூபா 8000/= பின் உள் அட்டை : ரூபா 8000/= 5 உள் முழுப்பக்கம் : ரூபா 5000/= உள் அரைப்பக்கம் : ரூபா 3000/=
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு
80 110 60 80 950 1400 120 170 80 110 50 70 70 100
கு ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 5
சர்வதேச தமிழ் எழுத் “ஞானம் இலக்கிய
Əti ərazi தமிழ் எழுத்தாளர் மாநாடு முதன் முதலில் இல நாம் எல்லோருமே பெருமை கொள்ளலாம். இப்படியான ஒருசர்வதேச தமிழ்எழுத்தாளர் மாநாடுஒன்றிை முன்னரே தோன்றியது. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா வருடங்களாக எழுத்தாளர் விழாக்களை அந்நாட்டில் நடத்தி மல்லிகைப்பந்தலில் அவருக்கு ஒரு தேநீர் விருந்துபசாரம் ந அவர்கள் அவுஸ்திரேலியாவில் வருடாவருடம் எழுத்தாளர் எழுத்தாளர் விழாவை இலங்கையில் நடத்தக்கூடாது? என்ற நடைபெறும் சர்வதேச எழுத்தாளர் மாநாடுநடைபெறுவதற்கு இந்தச் சர்வதேச தமிழ்எழுத்தாளர் விழாவைநடத்துவத திகதிகொழும்புத்தமிழ்ச்சங்கத்தில்இடம்பெற்றது. அதில்நா ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள் கலந்துகொண்டுதத்தமது நடத்துவதற்கான ஒர்நிர்வாகக்குழுவும் அன்றுதெரிவுசெய்ய தெரிவுசெய்யப்பட்டனர்.
அந்தத் தெரிவில் திஞானசேகரனுக்கு இலங்கைஇணை இதுஞானசேகரன் என்ற தனிமனிதனுக்கு வழங்கப்பட்டபத ஞானம் சஞ்சிகை தொடங்கி பத்துவருடம் நிறைவுற் பெற்றிருக்கிறது. சர்வதேசரீதியில் அறிமுகம்பெற்றிருக்கிறது விளம்பரதாரர்கள், ஆர்வலர்கள்எனஒர் அணிஇருக்கிறது. இ உற்சாகத்துடன் இயங்க வைத்தது.
சர்வதேச ரீதியில் மாநாடு ஒன்றை நடத்துவதானால் லிகிதர் வேண்டும், தொடர்பாளர் வேண்டும். இது பற்றிய இயங்கவேண்டியிருந்தது. ஞானம்காரியாலயம் சர்வதேசஎ உலகெங்கிலும் உள்ள கலை இலக்கியவாதிகள் எந்நேரமு தொலைபேசி, மின்னஞ்சல், தொலைநகல், தொடர்புகள் அமைப்பாளருடன் எந்தநேரமும்தொடர்புகொள்ளக்கூடியவ தொலைபேசி வசதியும் ஒழுங்கு செய்யப்பட்டது. மாநா அமைக்கப்பட்டது. அதில் உலக இஸ்லாமியத் தமிழ் மாநாட் எழுத்தாளர்களான ஜின்னாஹ்ஷரிபுத்தீன், அஷ்ரப்சிஹாஃப் செயற்குழுக்கூட்டங்கள் ஞானம் காரியாலயத்தில் ஒவ்வொ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை. ஜனவரி 2011
 

ன்பெருக்கைப்போல்கலைப்பெருக்கும் ப்பெருக்கும் மேவு மாயின்,
வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் ழிபெற்றுப்பதவி கொள்வார்.
தாளர் மாநாடு 2011ல் இயக்கத்தின் பங்கு
பகையில் நடைபெறுவதையிட்டு இலங்கையர் என்ற வகையில்
னநடத்தவேண்டும் என்றனண்ணக்கருஜந்துவருடங்களுக்கு வில் வாழும் எழுத்தாளரான லெ. முருகபூபதி கடந்த பத்து வருபவர். அவர் இலங்கைக்கு வந்திருந்த ஒரு சந்தர்ப்பத்தில் டைபெற்றது. அப்போதுமல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா விழாக்களை நடத்திவரும் நீங்கள் ஏன் சர்வதேச ரீதியில் ஒர் கேள்வியைமுன்வைத்தார். அந்த எண்ணக்கருவேதற்போது க்காரணமாக அமைந்தது.
தற்கான முன்னோடிக் கலந்துரையாடல்2010 ஜனவரிமூன்றாம் 'டின் நாலாபுறத்திலிருந்தும்180ற்கும்மேற்பட்டஎழுத்தாளர்கள், கருத்துக்களை தெரிவித்தனர். சர்வதேசஎழுத்தாளர்விழாவை பட்டது. இந்தக்குழுவில்உலகளாவியரீதியிலும்பிரதிநிதிகள்
ாப்பாளர் என்றபதவிஏகமனதாக வழங்கப்பட்டது. உண்மையில் வியல்ல;ஞானம் சஞ்சிகை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட பதவி ற நிலையில் ஞானம் ஓர் இலக்கிய இயக்கமாக வளர்ச்சி ஞானத்தின் பின்னால் அதன் எழுத்தாளர்கள்,சந்தாதாரர்கள், வர்களின் ஒன்றிணைந்தபலம்ஞானம் ஆசிரியராகியஎன்னை
தற்கு ஒரு காரியாலயம் வேண்டும். அங்கு பணியாற்ற ஒரு எந்தவொரு ஒழுங்கும் செய்யப்படாத நிலையில்தான் நான் ழத்தாளர்மாநாட்டுக்காரியாலயமாக இயங்கத்தொடங்கியது. ம் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஞானத்தின் ாவிக்கப்பட்டன. அவுஸ்திரேலியாவில் இருக்கும் பிரதம கயில்ஞானம்காரியாலயத்திலிருந்துதணியானதொருநேரடித் டினை நடத்துவதற்கென ஒரு செயற்குழு கொழும்பில் ட ஏற்கனவே இலங்கையில் நடத்தி (2002) அநுபவம் பெற்ற ன் ஆகியோரையும்இணைத்துக்கொண்டேன்.மாநாட்டிற்கான வாரமும் இடம்பெற்றன.

Page 6
மாநாடு நடத்துவதற்கான இடமாக கொழும்புத் தமிழ்ச்ச செயற்குழு அங்கத்தவர்கள் பலர் மாநாட்டுச் செயற்குழுவிலு ஏற்பாடுசெய்தனர். தமிழ்ச்சங்கத்தில் ஆட்சிக்குழுஉறுப்பினர பணியின் தொடர்பில் தமிழ்சங்க ஆட்சிக்குழுவினர் பலரை இ வெளிநாட்டு பேராளர்களுக்கான தங்குமிட வசதி மா செய்யப்பட்டநிலையில் சில விஷமப்பிரசாரங்கள் தமிழகத்திலும் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிந் நடத்தியபெருமை ஏற்பாட்டாளரான முருகபூபதிக்கோ அல்லது ஞானசேகரனுக்கோ கிடைத்துவிடக்கூடாது என்ற எண்ண தடுத்துநிறுத்திவிடவேண்டும் என முயற்சிகளை மேற்கொன் இந்த மாநாட்டின் பின்னணியில் இலங்கை அரசு இரு மாநாடுநடக்கப்போகிறதுஎன இவர்கள் பொய்ப்பிரசாரம்செய்த பரந்தரீதியில் கையெழுத்து வேட்டை நடத்தினர். இந்த மாந போவதாகப் பயங்காட்டினர். இந்தப் பொய்ப்பிரசாரங்களை மு திரு.லெ. முருகபூபதிவெளிநாட்டு ஊடகங்களில் இப்பொய்பி இணைப்பாளர் என்ற முறையில் நானும் பொய்ப்பிரசாரங் இருபத்தைந்துக்குமேற்பட்ட இணையத்தளங்களில் எனது நே பொய்ப்பிரசாரங்களை முறியடிக்கப்பயன்படுத்தப்பட்டன.
தமிழக எழுத்தாளர்களிடையே நிலவிய எதிர்ப்பலைகள் இருக்கும் எழுத்தாளர் ஒருவராலேயே இது சாத்தியமாகும் 6 அவர்கள், எழுத்தாளர் கோவை ஞானியுடன் தொடர்பு கொன முறியடிக்கலாம் என ஆலோசனை வழங்கினார்.கோவைஞா தலைவராக விளங்குபவர். இந்த அமைப்பில் நூற்றுக்கணக்க கோவைஞானியுடன் தொடர்புகொண்டேன். அரைமணிநேர தேன். அவர் உண்மைநிலைமையைப் புரிந்துகொண்டு நடக்க நல்குவதாகவாக்களித்ததோடுநல்வாழ்த்தையும்தெரிவித்தார். அனுப்பிஇந்தமாநாட்டுக்கு ஆதரவு அளிக்கும்படி வேண்டின அலைகள் ஒய்ந்துபோயின.
இதுதொடர்பாக இங்கிலாந்தில்வாழும்பிரபலஎழுத்தாள வாரமஞ்சளியில்எழுதியகட்டுரையில்பின்வருமாறுதெரிவிக்கி கடிதத்திற்கு கையெழுத்திட்ட - இலக்கியத் துறையில் நா அவர்களைத் தொடர்புகொண்டபோது, அம்மாநான் இதுபற் சொன்ன பதில்கள் திருப்தியாக இருந்தன. பலநாடுகளிலுள் இந்த மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள் என்று சொன்னார் பொய்ப்பிரசாரங்களும் எதிர்ப் பிரசாரங்களும் சர்வதே அளித்தன. இந்த மாநாட்டை நடத்துவதற்குப்புலம்பெயர்ந்த முருகபூபதி முதற்கூட்டத்திலேயே அனுமானம் தெரிவித்திரு சேகரிக்க முடிந்தது. அந்த ஒரு விடயத்தில் மட்டும் பொய்ப்பி எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பலதரப்பட்ட பிரச்சினைச மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உறுதுணையாகநின்றசகலருக்கும்எனதுமனப்பூர்வமான ந பயன்படுத்துகிறேன். இந்த உரிமையை எனக்களித்தஞானம் தெரிவித்துத் தமிழன்னையின் பாதங்களில் இந்தச் சர் சமர்ப்பிக்கிறேன்.

ங்கம் தெரிவுசெய்யப்பட்டது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முக்கிய அங்கத்துவம் வகித்து மாநாட்டை சிறப்புற நடத்த ாகவும் நூலகச் செயலாளராகவும் இருந்துநான் ஆற்றிவரும் நில் இணைத்தல் சாத்தியமாக இருந்தது. நாட்டு ஆய்வரங்குகள், கலைநிகழ்ச்சிகள் யாவும் ஒழுங்கு புலம்பெயர்ந்த நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன. அதற்குக் தது. சர்வதேச ரீதியில் ஒரு தமிழ் எழுத்தாளர் விழாவினை களத்திலிருந்து இந்த மாநாட்டுஒழுங்குகளை மேற்கொண்ட த்துடன் சிலர் இயங்கினர். இந்த மாநாட்டை எப்படியாவது ாடனர். து இயங்குகின்றது. அரசு கொடுத்த பணத்திலேயே இந்த ர்ை. இந்தமாநாட்டைபகிஷ்கரிக்கும்படிஎழுத்தாளர்களிடையே ாட்டில் பங்குபற்றுவோரின் எழுத்துக்களைப் பகிஷ்கரிக்கப் றியடிப்பதிலும் நாம்முனைப்புடன் செயற்படவேண்டியிருந்தது. ரசாரத்தை முறியடிப்பதில் திறமையாகச் செயற்பட்டார். களை முறியடிக்க முயற்சிகளை மேற்கொண்டேன். ஏறத்தாழ ர்காணல்கள்"களத்திலிருந்துபேசுகிறோம்”என்றதலைப்பில்,
Iள முறியடிப்பது சற்றுக்கடினமாக இருந்தது. தமிழகத்தில் ான்பதனை உணர்ந்து கொண்டோம் யுகமாயினி சித்தன் ண்டு உண்மையை எடுத்தியம்பினால் பொய்ப் பிரசாரங்களை னிமுதுபெரும் எழுத்தாளர். “தமிழ்நேயம்”என்ற அமைப்புத் ான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நான் தொலைபேசியில் ம் அவருடன் பேசி அவருக்கிருந்த ஐயங்களைத்தீர்த்துவைத்" விருக்கும் தமிழ்எழுத்தாளர் மாநாட்டுக்குத் தனது ஆதரவை தனது'தமிழ்நேயம்'அமைப்பினர்கள் யாவருக்கும்சுற்றுநிருபம் ார். இந்தச் செயற்பாட்டால் தமிழக எழுத்தாளர்களின் எதிர்ப்பு
ரான இராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம் 19-12-2010 தினக்குரல் றார்."காழ்ப்புணர்ச்சிக்காரரின் இலங்கைஒன்றுகூடலுக்கான ன் மிகப்பெரிய மதிப்பு வைத்திருக்கும் கோவைஞானி ஐயா றிக்கலாநிதி ஞானசேகரத்திடம் விளக்கம் கேட்டேன். அவர் ாதமிழ் எழுத்தாளர்கள் முழுச் சுதந்திரத்துடனும்பங்குபற்றும் எனக் குறிப்பிட்டுள்ளார். ச ரீதியில் எழுத்தாளர் மாநாட்டுக்குப் பெரும் விளம்பரத்தை எழுத்தாள்ர்களிடையே50லட்சம் ரூபாய் சேகரிக்கமுடியும் என ந்தார். ஆனால் அத்தொகையில் ஐந்திலொரு பகுதியையே சாரகர்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்றே கூறவேண்டும். ளுக்கு மத்தியில் இந்தச் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இந்த ஏற்பாடுகளைக் களத்திலிருந்து மேற்கொள்ள எனக்கு ன்றியைத் தெரிவிக்க இந்த ஆசிரியர் பக்கத்தை உரிமையுடன் இலக்கிய இயக்கத்தினருக்குஎனதுஉளங்கனிந்த நன்றியைத் தேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுச் சிறப்பு மலரினைச்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 7
டக் டக். டக் டக் டக். டக் டக் டக் يص) இவ்வளவுதான்.தட்டியதுமூன்றே மூன்றுமுறைகள்
மட்டும்.
பட் எனக் கதவு திறந்தது. ஒரு நிமிடம் கூட அவன் காத்திருக்கவேண்டியிருக்கவில்லை.அது அப்படித்தான் எப்போதுமே நடக்கும். தட்டியதும் திறக்கும். அவன் வரும் நேரம் அவளுக்கு அத்துபடி தனது வீட்டு வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருப்பாள் போலும்,
காத்திருக்கிறாயா என அவன் கேட்டதும் இல்லை. அவளாகச் சொல்லியதும் இல்லை. ஆனால் எப்போதாவது ஒருநாள் கதவைத் திறக்க ஒரு நிமிடம் தாமதமானாலும் அவனது மனமானதுநிலைகொள்ளாது தவிக்கும். எதையோ இழந்ததுபோல ஏக்கம் கொள்ளும் திறந்த கதவின் ஊடாக தெரிந்த அவள் நின்ற கோலம் அவனை உலுப்பிப்போட்டது. அழியாத ஒவியமாய் மனதுள் உறைந்து கிடந்த இளமைக்கால நினைவுகள் தெள்ளிய நீரோடையாகத் தவழ்ந்து வரதனது வயதுக்கு ஏற்றவனாக அவனால் இருக்க முடியவில்லை.
எட்டி அவள் கன்னத்தில் முத்தம் இட்டான். கையிலிருந்த பிறீவ் கேசை கீழே வைக்க முதலே சடுதியில் இது நடந்தது. அவள் எதிர்பார்க்காத வேளையில் இது நடந்ததால் அவள் நிலை குலைந்து விட்டாள். சட்டென சுதாகரித்த அவளது கண்கள் பட்டென அடுத்த மாடிமனையின் பல்கனிகளை நோட்டமிட்டு மீண்டு வந்து திறந்து கிடந்த கதவின் ஊடாக தங்கள் மாடிப்படிகளைப் பார்த்தன.
யாரையும் காணவில்லை. ஆனாலும் அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. முகம் சிவக்க “அக்கம் பக்கம் மணிசர் இருக்கினம் என்ற நினைப்புக் கிடையாது. வெக்கம் கெட்ட மனிசன்”
அடுத்த வீட்டை எட்டாத சத்தமாக அடங்கிய தொனியில்இருந்த போதும் அவளது சீற்றம் சுளிரென சுடுமாப்போலிருந்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

அவள் எப்போதும் - s அப்படித்தான். உணர்வுகளை அடக்கி வாசிப்பவள். காதலா O 242 னாலும் சரி ாேே ரைgத07 வெறுப்பானாலும் சரி வார்த்தை களை அள்ளி
வீசமாட்டாள். மந்திரம் - Ο சொல்வது போல ஒரிரு வார்த்தை e களாக. ஆனால் அதனுள் அவளது
உணர்வுகள் செறிந்து கிடக்கும்.
அவன் எதிர்மாறு. உணர்வுகளை அடக்கியாளத் தெரியாதவன். சந்தோஷமெனில் ஆர்ப்பாட்டமாகத் துள்ளிக் குதிப்பான். கோபத்தில் வார்த்தைகளை அள்ளி வீசுவான். சின்னக்கவலை என்றாலும் அழுகை பொத்துக் கொண்டு வந்து விடும். பெண்கள் தோற்றுப்போவார்கள்.
“...எத்தினை தரம் சொன்னாலும் விளங்கிற தில்லையே”அவளது சீறல் சலிப்பாகத் தணிந்தது.
இவன்முகத்தில் மோகன வரிகள் படர்ந்தன. அவள் சொன்னது இவனது காதில் எங்கே விழுந்தது? இனித்தமான வாழ்வின் பழைய பக்கங்கள் அவனுள்ளே புரண்டுகொண்டிருந்தன.
கிட்டத்தட்ட இன்று கண்டது போன்ற ஒரு கோலத்தில் தான் முதன் முதலில் அவளை அவன் பார்த்தான்.
தனது வீட்டிலிருந்து பக்கத்து குறுக்கு ஒழுங்கையின் ஊடாக சைக்கிளில் வந்த அவன் அவர்களது வீட்டு வாசலில் கிறீச்சென பிறேக் போட்டு நின்ற உடனேயே, கிறீங் கிறிங் கிறீங் என தனது சைக்கிள் பெல்லை அடித்தான். யாரும் வரவில்லை. குனிந்து பார்த்தான். முகமறைப்புக்காக அடிக்கப்பட்ட தகரத்திற்கு கீழேயுள்ள கம்பி இடைவெளி ஊடாக கண்கள் ஊடுருவின.
பாலனின் அசமந்தம் தெரிகிறதா என நோட்டமிட்டான். பாலனைக் காணவில்லை. ஆனால் ஓடி வந்த அவள் மூச்சிரைக்க அங்கே நின்றதைக் கண்ணுற்றான். குளுகுளுவென குஷ்டியான வெள்ளைப் பொம்மைப்போல
மேற்சட்டை அணியாத அவளது மேலுடல் பால் வண்ணமாகப் பிரகாசித்தது. அவனது தங்கையும் வெள்ளை தான். ஆனால் இவளது வெள்ளை முற்றிலும் புதுமையாக இருந்தது. இவ்வாறான நிறத்தில் யாரையுமே அவன் தனது ஊரில் கண்டதே இல்லை. அம்மன் கோயிலில் பூசை செய்யும் வெள்ளைத்தெணி ஐயாவை மாத்திரமே ஒரளவு அந்த நிறத்தில் பார்த்ததாக நினைவு வந்தது.

Page 8
நல்ல அழகு. மொழுமொழுவென வாளிப்பான சொக்கு. அதற்குள் இருந்து இரு கருவண்டுகள் எட்டிப் பார்ப்பது போன்ற கண்கள். கூந்தலாக நீளமாக வளராத அடர்ந்த முடி, குத்திய கிளிப்புக்கு அடங்காமல் சிலிர்த்து எகிறிப் பரந்திருந்தது.
அவனைச் சுண்டி இழுத்தது அவளது அழகோ அல்லது வெள்ளை நிறமோ அல்ல. சட்டையில்லாத அவளது வெள்ளை உடலுமல்ல. விகார எண்ணங்களின் சாரல் அடிக்காத வயது. அவனது தங்கைகளும் அவ்வாறுதான் மேற்சட்டை இன்றித் திரிவார்கள். வெக்கை மெத்திய யூாழ்ப்பாணச் சுவாத்தியத்தில் மேற்சட்டை போடும் வழக்கம் குட்டிப் பெண்களுக்கும் வராத காலம் அது.
செவ்வரத்தம் பூப்போலிருந்தது. அதன் பளப்ளப்பு கண்களை வெட்டி மூடாது இழுத்தது. தண்ணீர்ச் செழிப்பான மரத்தில் மதாளித்துமலர்ந்த பூக்களைப்போல செழுமையாக. அந்தச் சிவந்த நிறம்தான் அவனது பார்வையை இழுத்துப்பிடித்தது.
அவள் அல்ல! அவளது சிவந்த ஜங்கி
அதன் பிறகு அவன் காத்திருப்பதில்லை. சைக்கிள் பெல்லை அடிக்கும்போதே குனிந்து பார்ப்பான் அவள் நிற்கிறாளா என்று. பெல் சத்தம் கேட்டதும் அவளும் ஓடிவருவாள். எப்போதும் என்று சொல்ல முடியாது. வாயில் விரலை வைத்து குறுகுறுப்புடன் பார்ப்பாள். O
ಜ್ಞ
 
 

கிங்கிணிகிணியென நாதத்தை எழுப்பும்பெல்சத்தம் அவளை ஈர்த்துவருமா. அந்த நாளில் அவர்கள் பகுதியில் அவனிடம் மட்டுமே இருந்த அந்தக் குட்டிச் சிவப்பு சைக்கிளைப் பார்க்க வருவாளா என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் சிவப்பு ஜங்கியைப் பார்த்ததால் குதூகலித்த மனது இப்பொழுதெல்லாம் அவளைக் கண்டாலே விண்ணென்று பொங்கி வழிய ஆரம்பித்தது. இவனது குட்டிச் சிவப்பு சைக்கிள் கறுத்த ரேசிங் சைக்கிள் ஆனது. முகத்திலும் உதடுகளுக்கு மேலே இவனுக்கும் சற்றுக் கருமை படரத் தொடங்கியது. ஆனாலும் இவன் தனது கிண்கிணி மணியைக் கைவிடவில்லை.
பாலனைக் காணப் போகும் சந்தர்ப்பங்களை நழுவ விடவும் இல்லை.
அவளைக் காணும் சந்தர்ப்பங்கள் தான் வரவர அரிதாகிக் கொண்டே போயின.
அவளும் பாவாடை சட்டைக்கு மாறி விட்டாள். சிவப்பு ஜங்கியுடன் காண்பது என்பது என்றோ கண்ட கனவாகி விட்டது.
அவனது அப்பாவுக்கு கொழும்பில் வேலை, இவனது படிப்பும் கொழும்புக்கு நகர, புறப்பட வேண்டியதாயிற்று.
கடற்கரையில் தீர்த்தமாடிவிட்டு பிள்ளையார் ஊர் சுத்தி வரும்போதுதான் கடைசியாகக் கண்டான். சகடை தள்ளும் கோஷ்டியில் இவனும் வலம் வரும்போது அவர்கள் வீட்டடில் நிறைகுடம் வைக்கப்பட்டிருந்தது. தனது அக்காவிற்குப் பின்னால் பட்டுப் பாவாடை தாவணியில் நின்றிருந்தவளில் இவன் கண் படர்ந்தது.
கண்மூடி, கைகூப்பித் தொழுதுகொண்டிருந்தாள். திறந்த அவளது கண் ஒரு கணம் தன்னைத் தழுவிச் சென்றது போலிருந்தது இவனுக்கு.
பிரமையா, நிஜமா?. புது வாழ்வு, புது நண்பர்கள். கொழும்பின் நகர வாழ்வுக்கு மாறிவிட்டான்.
“என்ன யோசிச்சுக்கொண்டு நிக்கிறியள்.மேலைக் கழுவிக் கொண்டு வந்தால் சாப்பிடலாமே”
பூப்போல இடியப்பம், அன்று அவள் போட்டிருந்த உடை போலச் சிவந்த நிறத்தில் தக்காளிப் பழம்போட்ட முருங்கைக்காய்க்குழம்புசப்புக்கட்டிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான் அவளும் கூடத்தான். "கள்ளிக் காட்டுப் பள்ளிக்கூடம்” விஜய் ரிவீயில் ஒடிக் கொண்டிருந்தது.
“சொதி இருக்கு.பிறகு வாருங்கோ” சாப்பாட்டு மேசையில் இருந்து சாப்பிடுற பழக்கம் விட்டுப்போய் பல காலமாகிவிட்டது.
“பாலண்ணா போன் பண்ணினர்”அவள் பேச்சை ஆரம்பித்தாள் ". மகனுக்கு கலியாணம் முற்றாக்கிப் போட்டினமாம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 9
“எப்பவாம்” திகதி முற்றாக்கிப் போட்டு அறிவிக்கிறன் எண்டவர். கட்டாயம் வந்து நிக்க வேணுமாம்”
பாலனின் மகனின் கலியாணம் கட்டாயம் போக வேண்டியதுதான் என எண்ணிக் கொண்டான்.
“என்ன கொட்டிலடிப்பழக்கம்போலை, ஒரேயடியாக் கதை நடக்குது’பாலன் சிரித்தபடிசொல்லிக் கொண்டே இவர்களைத் தாண்டிப் போனான்.
வீட்டு வாசலடியில் உட்புறமாகப் போட்டிருந்த சோபா கதிரையில் இவர்களை இருத்தியிருந்தார்கள். பன்னீர் தெளித்து நன்றி சொல்லி வெற்றிலைப்பை கொடுத்து அனுப்புவதற்காக, கலியாணத்திற்கு வந்தவர்கள் விடைபெற்றுச் சொல்லும் போது.
கொட்டிலடி என்று சொன்னது கள்ளுக் கொட்டிலை. அங்குதான் அர்த்தம் இல்லாமல் வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
பாலன் சொல்லியது புரிந்ததும் இவனுக்கு வெக்கமாகப் போயிற்று கல்யாணம் நடந்த உட்சாகத்தில் இவனது வாய்நீண்டுவிட்டது. எத்தனை வருடங்களாகக் காத்திருந்த நெருக்கம். வாசலில் உட்கார்ந்த நேரம் முதல் கதைகதையாகச் சொல்லிக் கொண்டே இருந்தான். அதைத்தான்மச்சான் கவனித்துவிட்டார்.
வேலை, தான் வேலைசெய்யும் இடம் நண்பர்கள் என்று தனது கதைகளைச் சொல்லச் சொல்ல அவளும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். ஏதோ நீண்ட நாள் பழகியவர்கள் போலப்பேசிக் கொண்டிருந்தார்கள்:
ஆனால் நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இவளுடன் பேசுவது இது தான் முதல் தடவை. எப்படி இத்தனை வார்த்தைகள் முதல் சந்திப்பிலேயே வந்து கொட்டின. ஆண்டாண்டு காலம் விட்டுப்பிரிந்தவளைக் கண்டதும் பேசுவதற்கு ஆயிரம் விடயங்கள் காத்திருக்கும். அதைப்போல் பேசத் தோன்றுகிறதே.வாய் ஓயாது பேசிக் கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு.
சின்ன வயதில் பார்த்தபோதுகதைக்கும் எண்ணமே இருந்ததில்லை. பார்த்தாலே போதும் என்றிருந்தது.
ஆனால் எப்பொழுது இவளில் காதல் பிறந்தது. உலக வர்த்தக எக்ஸிபிசன் பார்க்க அவள் தனது தகப்பன் தாயுடன் இவர்கள் வீட்டில் சிலநாட்கள் தங்கியிருந்தார்கள். இவனது தங்கைகளின் அறையில்தான் அவ்ஞம் முழுநேரமும் இருப்பாள்.
மென்மையாகப் பேசும் அவளது குரல் காதில் தேனாகப்பாயும். இன்னும் கொஞ்சம் பேசமாட்டாளா என மனம் ஏங்கித் தவிக்கும். சதங்கையின் முத்துக்கள் கிலுகிலுப்பது போல சிரிப்பொலி எழ ஆவல் மீறும், முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவாத் தோன்றும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

ஏதாவது கதைக்க வேண்டும் போலவும் இருக்கும். குட்டி போட்ட பூனையாக அறைவாசல் பக்கம் அடிக்கடி நடை பயில்வான். முகத்தைப் பார்க்கக் கிடைக்கும். அதில் தனக்கு சாதகமான சைகை ஏதாவது தென்படுமாவென ஆவலோடு பார்ப்பான். அவள் முகம் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாது.இவனைக் கண்டுகொள்ளாததுபோல கண்கள் பாவனை பண்ணும்.
தங்கைகளுடன் பேசுவது போல அறைக்குள் நுழையலாமா எனப் பார்த்தால் காவல் பூனையாகத் தகப்பன் காத்திருந்து ஏதாவது கதை சொல்லி அவனை வேறு வேலையில் மாட்டிவிடுவார்.
அவளது தகப்பன் சரியான கண்டிப்பானவர். வாய் திறக்காமல் கண் சாடைகாட்டினால் போதும்பிள்ளைகள் அடங்கி விடுவார்கள். திருப்பிக் கதைக்கவே பயப்படுவார்கள் இவளது அண்ணன்மார். இவள் மட்டும் கொஞ்சம் செல்லம். கடைக் குஞ்டியல்லா?
கடைசியாக அவர்கள் ஊருக்குப்புறப்படும் நாளும் வந்தது.
“பாய்க்குகள் கணக்கக் கிடக்கு. நீஒரு நடைபோய் ஏத்திப் போட்டு வாவன்.”
அம்மா சொன்னதும் இவனுக்கு வாய்பாகப் போய் விட்டது.
தகப்பனுடன் முன்னுக்கு நடந்துகொண்டிருந்தவள் திரும்பிப் பார்ப்பாளா என மனம் துடித்துக் கொண்டிருந்தது. அவள் திரும்பிப்பார்க்கவே இல்லை. பஸ் ஹோல்ட்டில் நின்ற போதும் இவன் பக்கம் அவளது கண்கள் திரும்பவே இல்லை.
ஏமாற்றத்தில் மனம் சோர்ந்து விட்ட பாறையாக மனம் அழுத்தியது. இவ்வளவு பக்கத்தில் இருந்தும் பேசமுடியவில்லையே அவலம் அலைக்கழித்தது.
பஸ் வந்து விட்டது. அவளின் அம்மா முதலில் ஏறினாள். அடுத்து இவள் ஏறப் போகிறாள்.
திரும்பிப் பார்ப்பாளா, கை அசைப்பாளா, போட்டு வாறன் சொல்லுவாளா? இதயம் படபடத்தது.
கைப்பிடியைப் பிடித்தவள் படிக்கட்டில் காலை வைத்தாள். இப்பொழுதாவது திரும்புவாளா? முகத்தில் வியர்வை சுரந்தது. லேஞ்சியை எடுத்து முகத்தைத் துடைக்கவும் மனதின்றி, கண் இமைக்காது, அவளிலிருந்துபார்வையை அகற்ற மனதின்றிநின்றான். தாவி ஏறிக் கொண்டாள். இவனுக்கு ஏமாற்றமாகிவிட்டது.
ஏறியவள் சட்டெனத் திரும்பினாள். சாமரம் வீசியதுபோல அவளது பார்வை ஒரு கணம் அவனைத் தழுவிச் சென்றது.
இவனது கண்களை ஊடுருவிச் சென்றது. இருதயத்தை வருடியது. அதிலிருந்துபாய்ந்து வந்த நேச

Page 10
உணர்வு அதிர்வலைகளாக இவனுள் பாய்ந்து மனம் லேசாகிற்று. அழுத்திய பாறை சுக்குநூறாக உடைந்து விலகியதும் சிறகடித்து பறக்க முடிந்தது.
அவள் பார்வையிலிருந்தது வெறும் அன்பா, நட்பா, காதலா? அல்லது வெறும் நன்றிக் கடன் மட்டும்தானா? தெளிவாகப் புரியவில்லை. ஆனால் மனதுக்கு இதமான ஏதோ ஒரு செய்தி அதற்குள் இருந்ததாக எண்ணிக் கொண்டான்.
பாலனின் கலியாணத்தின் போது இவன் ஊருக்குப் போயிருந்தான். களஞ்சியப் பொறுப்பு இவன் தலையில்.
சிட்டுக் குருவி சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. தாவணி சட்டையில்.
களஞ்சிய அறையிலிருந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். கையில் பலகாரத்தட்டுகளுடன் சுழன்று மண்டபத்தில் திரிந்தாள். அவளது கண்களைச் சந்திக்க முடியாத ஏக்கம் இவனைத் துயரில் ஆழ்த்தியது. “கொஞ்சம் பயித்தம் பணியாரம் வேணும்"தட்டை நீட்டியது அவள் தான். கையும் ஒடவில்லை; காலும் ஒடவில்லை அருகில் பார்த்ததும். அவசர அவசரமாக பாத்திரத்திலிருந்து அள்ளி அவளது தட்டில் போடும் போது அவளது கையில் இவனது கை பட்டுவிட்டது.
ஜில்லென ஐஸ் கொட்டியது போலிருந்தாலும் வெலவெலத்து விட்டான். எரிமலையாகச் சீறுவாளோ 6T6GT? -
நிமிர்ந்த இவனது கண்களுக்குள் அவளது கருவிழிகள் ஊடுருவிப்பாய்ந்தன ஒரு கணம்.
ஏசப்போகிறாளோ? மறுகணம் எதுவும் பேசாது நிரம்பிய தட்டோடு திருப்பிவிட்டாள்.
அன்று அவளது பார்வையில் இருந்தது கோபமா, நேசமா இன்றுவரை இவனுக்குப்புரியவேயில்லை.
எவ்வளவு காதல் வைத்திருந்தான் அவளின் மீது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லமுடிந்தது திருமணத்தின் பின்தான்.
அவளது உள்ளத்தில் என்ன இருந்தது என்பதைத் திருமணத்தின் பின்னும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவளுக்கு தன்னில் காதல் இருந்ததா? காதல் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஈர்ப்பாவது இருந்ததா? எதுவுமே இல்லாமல் தகப்பன் பார்த்த மாப்பிள்ளையான தனக்கு கழுத்தை மட்டும் நீட்டினாளா. எவ்வளவு கதைவிட்டும் அவளது வாயிலிருந்து என்றும் விடைகிடைத்ததில்லை
மகளும் சீண்டிப்பார்த்து தோத்ததுதான் மிச்சம். "மம்மி நீங்கள் எப்பவாவதுடடியைப் பார்த்து ஐலவ் யூசொல்லியிருக்கிறீங்களா?”

சிரித்து மழுப்பிவிடுவாள். மறுமொழி என்றுமே கிடைக்கவில்லை. வார்த்தைகளால் கிடைக்காது என்பது இவனுக்கு நன்றாகவே தெரியும். எத்தனை வருட அனுபவம். கண்களைப் பார்ப்பான். எந்த விடையும் அதில் ஒளிந்திருப்பதைக் கண்டு கொள்ள முடிவதில்லை.
தொண்டைக்குள் இடியப்பம் தடக்கியது போலிருந்தது. சற்றுக் குழைவாகச் சாப்பிட்டால் நல்லது. சொதி இருக்கோ எனக் கேட்டான்.
"ஐயோ இந்த மனுசனுக்கு எத்தினை முறை சொன்னாலும் மறதி
“...மேசையில சொதி இருக்கெண்டு சொன்னனான் தானே”குரலில் கோபம் இருக்கவில்லை சலிப்புக் கூட இருக்கவில்லை பகிடியாகத்தான் சொன்னாள்.
இவனது பிளேட்டை வாங்கிக் கொண்டு போய் சொதி விட்டுக் கொண்டு வந்தாள்.
மிகச் சந்தோசமான வாழ்க்கை வாய்த்திருந்தது. அவனில் நல்ல அக்கறை. அவனது ஒவ்வொரு தேவையையும் புரிந்து நடப்பாள். சமையல், சாப்பாடு, உணவு,உடை, அலங்காரம் ஒவ்வொன்றிலும் அவனது விருப்பங்கள் அவளுக்கு அத்துப்படி, அதே போல எந்த குறையையும் அவளுக்கும் இவன் வைத்ததில்லை.
வாசிப்பு, எழுத்து, சினிமா என இருவருக்கும் ஒத்த விருப்புகள் இருந்தன.
ஆனாலும் இந்தக் குறைமட்டும் எப்பொழுதும் அவனது மனதை அரித்துக் கொண்டிருக்கும்,
வேலை முடிந்து வந்த அவன் மாடிப்படிகளில் தாவி ஏறினான். லிவ்டில் ஏறுவதில்லை. அவன் எப்பொழுதும் அப்படித்தான். வேகமாக நடப்பான். வேகமாக படி ஏறுவான். சப்பாத்து அழுத்தமாகத் தரையில் ஊன்றும்.
கதவைத்தட்ட கையை உயர்த்தினான். கதவு திறந்தது. மடக்கிய கைவிரல்கள் கதவை முட்டவில்லை. ஒசை எழவில்லை.
ஆனால் திறந்தது. தட்ட முன் திறந்த இடைவெளியில் குளித்துநீறுகோடெனத்தரித்த அவள் முகம் மலர்ந்து சிரித்தது.
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கண்ணாடி யன்னலின் திரையை விலக்கிப் பார்க்காது தான் பாஸ் வேட்போல தட்டும் ஒசையின் லயத்தில் தான் கதவைத் திறக்கிறாள் என இதுவரை எண்ணியிருந்தான்.
“வாறது நான்தான் என்று எப்படி தெரியும்.”
உம்மடை நடைதெரியாதே. கிழட்டு யானை ஒடிவாற மாதிரி.”கிண்டலாகச் சிரித்தாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011 s

Page 11
இப்பொழுதுஅவளின் நடைமுறைகளில் சற்றுமாற்றம்" முன்னைய விட அதிகமாக தன்னில் அக்கறை எடுப்பதாக அவனுக்குப் பட்டது.
தனிமை அவளைத் தவிக்க வைக்கிறதா? வீட்டில் அவனும் அவளும்தானே அவனும் வேலைக்குப்போய்விட தனிமை வாட்டுகிறதா. பிளட்ஸ் வீடுதானே,வேலைகளும் அதிகம் இல்லை சினேகிதங்களும் குறைவு இருக்காது. பிள்ளைகள் இரண்டும் இரண்டு திக்கில் என்றாலும் அடிக்கடி போனிலும் ஸ்கைபிலும் பேசிக் கொள்வார்கள். Scopus). TéluTsir. Fox history, discovery, National geography என ரீவியில் நல்ல சனல்களை ஆர்வத்துடன் பார்ப்பாள். போதாக்குறைக்கு இணையத்தில் புலக் இடுகை, கருத்துரைகள் என நேரத்தைப் பயன்படுத்தவும் தெரிந்தவள்.
இருந்தாலும் ஏதோ ஒரு மாற்றம் அவளில். ஆனால் என்னவென்று பிடிபடாது இவனுக்கு ஏய்ப்புக் காட்டுறது. ஏதோ தன்னோடு சம்பந்தப்பட்டது என்பது தெரியும். எப்பொழுதும் போல மனதுக்குள் வைத்திருக்கிறாள். வெளிப்படையாகப் பேசவில்லை.
இப்பொழுது அவன் வரும் போது வாசல் கதவு திறந்தே இருக்கிறது.
டொக் டொக் என தட்டும் காலம் போய், காலடி ஓசை கேட்டுத் திறந்த காலமும் கடந்து இப்போது இவன் வரும் முன்னரே கதவு திறந்தே இருக்கிறது.
“உங்கடை ஒபிஸ் கார் நின்று கதவு சாத்திய பின் புறப்படும் ஓசை பழக்கமாகிவிட்டது”என்றாள்.
என்னதான் நடக்கிறது இவளின் மனத்திற்குள்? தனக்குள் கேட்டுக் கொண்டான்.
இன்று திறந்திருந்த கதவின் ஊடாகத் தெரிந்த அவள் வழமைபோல இல்லை. முகம் சோர்ந்து போயிருந்தது. குளித்து உடல் பிரஸ்சாக இருந்தாலும் முகத்தில் மலர்ச்சியைக் காணவில்லை. கண்களின் கீழ் சாம்பல் நிறமாக கருமை படர்ந்திருந்தது.
கண்கள் சிவந்திருந்ததுபோலிருந்தது. என்னவாயிற்று? அழுதிருப்பாளா? அவள் அழுதால்.இவனால் தாங்க - முடிவதில்லை. மனதிற்குள் கனம் ஏறிக் கொண்டேயிருந்தது.
“என்னடா என்னவாயிற்று' இவனது குரல் தழுதழுத்தது.
எதுவும் பேசாது படுக்கையறை நோக்கி நடந்தாள். கொண்டு வந்த பிறிவ்கேசை சோபாவில் வீசிவிட்டு, போட்டிருந்த சப்பாத்தையும் மறந்து அவளைத் தொடர்ந்தான்.
“என்னடா என்னடா? என்ன செய்யுது. ஏதும் சுகமில்லையே ஏன் இப்படி சோர்ந்து இருக்கிறாய்?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

“ஒன்றுமில்லை ஈனமான குரலில். அதில் தடுமாற்றம்.
ஆதூரம் மேலிட அவளது கைகளைப் பற்றிக் கொண்டு மறுகையால் கன்னத்தை தடவினான். விசும்பல் ஒலிஎழுந்தது. அடக்க முயன்றும் முடியாதுஈனக் குரலாய் எழுந்தது.
கலங்கியிருந்த கண்ணிலிருந்து கண்ணிர் பொலபொலவெனக் கொட்டியது.
விம்மல்களுக்கிடையில் அவளது வார்த்தைகள் ஒழுங்கின்றி தட்டுத்தடுமாறிஉதிர்ந்தன.
"விசா வந்திடுத்து” “வரும் எண்டு தெரியும்தானே! அதுக்கென்ன இப்ப.”
மகள் கலியாணமாகி கனடாவில் இருக்கிறாள். கர்ப்பமாகி இப்படெலிவரிக்குக் காலம் நெருங்கிவிட்டது. அதற்கு உதவிக்காக அம்மாவை கூப்பிட்டிருந்தாள்.
மூன்று மாதங்களாக அலைச்சல். போம் கொடுக்கிறது. மெடிக்கல் அது இதுவென்று அலைக்கழித்துவிட்டார்கள்.
இப்ப விசா வந்திடுத்தெண்டு சந்தோசப்படாமல் இவள் கண் கலங்குவது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"அப்படிக்கெட்டைபுக் பண்ணட்டோ” அவளது கண்கள் கலங்கின. நெஞ்சு விம்மித் தணிந்தது. s
“என்னென்டடா சமாளிப்பாய்' இவனது கைகளைப் பற்றிக் கொண்ட அவளது மிருதுவான உள்ளங்கைகளிலிருந்த நேசம் இவனை அருட்டியது.
மிக உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் தான் அவளிலிருந்து இப்படி நீ வாடா போடாவரும்.
“ஒரு நாளாவது நீயாகப் போட்டுச் சாப்பிட்டுத் தெரியாது. என்னெண்டு நீ.”
இவனுக்கும் அழுகை பொத்திக் கொண்டு வந்தது. கலியாணம் கட்டி 30 வருடங்களுக்கு மேலாகிறது. ஒரு நாளாவது விட்டுப்பிரிந்ததில்லை.”
இவனை இழுத்து தனது மடியில் கடத்தினாள். நிமிர்ந்து அவள் முகம் பார்க்கையில், அவளது கண்களில் நீர் திரையிட்டிருந்தது. மீறிய கண்ணீர் இவனது முகத்தில் பொத்துப் பொத்தென விழுந்தது.
இவனது கண்ணிர் கன்னம் வழியே வழிந்து அவளது ஸ்கேட்டை நனைத்தது.
இப்போது அந்தக் கண்ணில் இருந்த செய்தி இவனுக்கு தெளிவாகப் புரிந்தது.

Page 12
திறனா
மார்க்சியத்தின் த
றனாய்வுப் பரப்பில் பல்வேறு
வாயில்களைத்திறப்பதற்கு மார்க்சியம் வழியமைத்தது. நூலியத்தை (TEXT) மெய்யியல் வெளிச்சத்திலே பார்ப்பதற்குரியதளத்தை அதுவலிதாக்கியது. “மார்க்சியத் திறனாய்வு உயிரோட்டமுள்ளதும், பன்முகப்பட்டதும், தொடர்ந்து கூர்ப்படைந்து செல்வதும்” என்ற கருத்தைப் பிரித்தானிய திறனாய்வாளர் பெக் மற்றும் கொயில் (1993) முன்வைத்தமை அதன் வளர்ச்சியில் நிகழ்ந்த தரிசனமாகின்றது.
மத்தியதரத்து எழுத்தாளர் மத்தியதர வகுப்பினரின் பிரச்சினைகளையே எழுதித்தள்ளினர் என்ற மார்க்சிய நோக்கு குரூரமான எடுத்தாள்கையாக இருந்தாலும் கூட அவர்களின் கூர்மையற்றசமூக நோக்கைத்தகர்ப்பதற்குரிய விசையாகவும் அமைந்தது. அவர்களும் சமூகத்தின் அடித்தளத்து மக்களின் பிரச்சினைகளை நோக்கி நகர்வதற்குரிய அழுத்தத்தை அதுகொடுத்தது.
மார்க்சிய நோக்கு நடப்பியலையும் அதன் வழி எழும் உணர்ச்சிக் கோலங்களையும் இணைக்கும் புதிய அழகியலைத் தோற்றுவித்தது. சமூக இயல்புக்கும் அதன் வெளியீட்டு உணர்ச்சிக் கோலங்களுக்குமிடையே ஊடு தொடர்புகளை உண்டாக்கும் மொழிபற்றிய ஆய்வின் வழியாக "அமைப்பியல்” அறிகை எழுச்சிகொண்டது. அமைப்பியல் வாதத்துக்குரிய கருவை ரூசிய வரன்முறை வாதம் (FORMALISM) உருவாக்கியது. இலக்கிய மொழி என்பது பொது மொழியிலிருந்து வேறுபட்டு விநோதப்பட்டு நிற்றலை வரன்முறைவாதிகள் சுட்டிக்காட்டினர். நூலியம் மொழிவழியாகக் கட்டுமை செய்யப்படுதல் வழியாக எழும் விளைவுகள் தொடர்ந்து ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. கட்டுமானக்குலைப்பு அல்லது தகர்ப்பு மற்றும் புதிய வரலாற்றுநோக்கல் வாதம் முதலியவை எழுச்சிபெறுவதற்கு மார்க்சியச்சிந்தனைகள் உள்ளிடுகளாக அமைந்தமையை நிராகரித்துவிட முடியாது. அதாவது நாவலின் "பன்மைஒலிப்பையும்” (POLYPHONIC) நூலியத்தின் தளர்ச்சியும்பற்றிபக்தின் என்பார் முன்வைத்தகருத்துக்கள் நவீன திறனாய்வின் அணுகுமுறைகளுக்கு விசையூட்டின.
 

அனைத்துமொழிகளுக்கும் அடிப்படையாக அமைந்த அமைப்புக்களை ஆராய்ந்து சசூர் வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து மொழியியலில் அமைப்பியல்நோக்கு வளர்ச்சியடையத் தொடங்கியது. மானிடவியல் ஆய்வுகளுக்கு லெவிஸ்ராஸ் அமைப்பியலைப்பயன்படுத்தியமையைத் தொடர்ந்து அது மேலும் விரிவாக்கம் பெற்றது. அமைப்பியலையும் மார்க்சியத்தையும் மேலும் ஒன்றிணைத்து அல்துஸ்ஸர், கோல்டுமன்,மெச்செரிமுதலியோர் மார்க்சியத்திறனாய்வு மரபை மேலும் விரிவாக்கினர்.
கட்டமைப்பியல் செயற்கையான ஒழுங்கமைப்பை வலியுறுத்தியது என்று கருதிய பின் அமைப்பியலாளர் விரிந்தகருத்துக்களைமுன்மொழியலாயினர்.தெரிதாஎன்பர் “மாற்றெழுகை”(DIFFERENCE)என்றஎண்ணக்கருவை முன்வைத்தார். சொற்கள் மற்றைய சொற்களிலிருந்து வேறுபட்டு மாற்றெழுகை கொண்டிருக்கும். அவற்றை அடியொற்றிச் சொற்களின் கருத்துக்களும் முடிவற்ற
பின்கட்டமைப்பியலும் மார்க்சியமும் கலந்த இடைவினைகள் “கருத்துவினைப் பாடு” (DISCOURSE) என்ற பூக்கோவின் புதிய சிந்தனைகளுக்கு வலுவூட்டின. அந்த எண்ணக்கரு பலதேவைகளின் பொருட்டுப் பலவிதமாகப் பயன்படுத்தப்படுகின்றது நூலியம் எவ்வாறு ஆக்கப்பட்டுள்ளது என்பதையும் சொற்களின் கருத்துக்கள் எடுத்துரைப்பில் எவ்வாறு பிரயோகிக்கப் பட்டுள்ளன என்பதும் கருத்து வினைப்பாட்டில் உள்ளடங்குகின்றன. அறிவின் ஒவ்வொரு துறையிலும் குறித்துரைக்கப்பட்ட மொழியாள் கையை பூக்கே “கருத்து வினைப்பாடு” என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு துறையிலும் ஆள்வோர் தமக்குரிய நலன்களைப் பாதுகாக்கும்பொருட்டுக் கருத்து வினைப்பாடுகளைக் கட்டமைப்புச் செய்துள்ளனர். அதிகாரத்தையும் அந்தஸ்தையும்நிலைநிறுத்தும்பொருட்டு கருத்துவினைப்பாடுஉருவாக்கப்பட்டுள்ளது.
மார்க்சியத்திறனாய்வில் அதிகம் எடுத்தாளப்படும் எழுபொருளாகக் கருத்தியல் (IDEOLOGY) என்ற
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 13
எண்ணக்கரு விளங்குகின்றது. அதுவே மார்க்சியத் திறனாய்வின் மையப் பொருள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றது. அதிகாரம் மிக்கோரின் தேவை களை அடியொற்றிக் கருத்தியல் உருவாக்கப்படுகின்றது. சமூக இருப்பும்சமூகத்தொடர்புகளும்இயற்கையானவைஎன்பதை அதுகட்புலனாக வகையிலேஉருவாக்கிக்கொடுக்கின்றது. குறிப்பிட்டகாலகட்டத்தின் ஆளும் கருத்தியலின் அக்காலத்துஇலக்கியங்களில் வெளிப்பட்டுநிற்கும்.
கருத்தியலுக்கு அல்துஸ்ஸர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதுதனிநபரின் சிந்தனையைக் கட்டமைப்புச் செய்வதுடன் மட்டும் நின்றுவிடுதல் இல்லை. நாம் தனியாளாய் இருக்கும் அடையாளத்தை உருவாக்கி விடுகின்றது. எங்களால் கருத் தியலைத் தெரிவு செய்ய முடிவதில்லை. மாறாக அதுவே எங்களைத் தெரிவு செய்கின்றது. அது வெறுமனே அருவமான கருத்துக் களின் தொகுதியன்று. அது பொருண்மிய இருப்பைக் கொண்டதாக, அரசு மற்றும் சமூக நிறுவனங்களின் சாதனமாகவும், கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. அதனை அடியொற்றியே சமூகம் பற்றிய சித்திரிப்புகள் மேலெழுகின்றன.
6TGög6DJsisusi (NARRATOLOGY) GTsirp துறையிலும் மார்க்சியம் செல்வாக் குகளை ஏற்படுத்திவருகின்றது. ரூசிய வரன்முறை வாதியாகிய விலாடிமிர் புரொப்மேற்கொண்டநாட்டார் கதை ஆய்வுகள் எடுத்துரைப்பியலுக்குத்தளமிட்டன. கதை களில் உள்ளடங்கிய ஏழு அடிப்படைக் கோலங்கள் மீது அவர் கவனம் செலுத்தினார். அவரின் கருத்துக்கள் நாவலின் எடுத்துரைப் புக்கும் விரிவாக்கம் பெற்றது. அதனை அடியொற்றி நாவலின் பன்மைஒலிப்பை பக்தின் விளக்கினார். சமூகத்தினதும் பண்பாட் டினதும் சிக்கலாக்கிய தன்மைகளை அடியொற்றி பன்மைஒலிப்பு தவிர்க்க முடியாமல் நாவலில் இடம்பெற்றுவிடுகின்றது.
ரூசியத் திறனாய்வாளராகிய மிக்கைல் பக்தின் முன்வைத்த முக்கிய எண்ணக் கருக்களுள் “களியாட்டம்” (CARNIVAL) விளங்குகின்றது. நிறுவப்பட்ட சமூகநிரலமைப்பைத் தலைகீழாகச் சரித்துக் கவிழ்த்தலைகளியாட்டம்என்றளண்ணக்கருவினால் அவர் விளக்கினார். அதனால் மக்களாட்சி தழுவிய மாற்றுக் கலாசாரம் உருவாக்கப் படுகின்றது. ஒடுக்குமுறை அழுத்தங்கள் நகைப்புக்குரியதாக மாற்றம் பெறுகின்றன. தனிக்குரல் வீழ்த்தப்பட்டுப் பலகுரல்கள் எழுப்பப் படுகின்றன. ஒடுக்குமுறைத் தனிக் குரல் சவால் விடப்பட்டுத்தகர்க்கப்படுகின்றது.
அனைத்துக் குரல்களிலும் அனைத்துப் பேச்சுக்களிலும் உள்ளமைந்த கருத்தாடல் வாசகரை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

நோக்கித்திருப்பப்படுகின்றது. புனைவுகளிலே இடம்பெறும் அதிகாரக் குரலுக்கு எதிரான மாற்றுக்குரல்கள் பன்மை நிலையிலே தோற்றம் பெறுகின்றன. அவை அதிகாரக் குரலுக்குச் சவால்விடுகின்றன. மொழிக்குரிய கருத்தாக்கம் வர்க்க நிலையிலே மீள் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. கலைப்படைப்பு அல்லது நூலியம் மேலாதிக் கத்துக்கும் ஆதிக்க எதிர்ப்புக்குமான “போராட்டத்தின் தளமாக” அமைகின்றதென பக்தின் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து சமகாலத் திறனாய்வுகளில் நூலியம் “போராட்டத்தின் 56TLorra" (SITE OFSTRUGGLE) 6Tiggi) 6Tirp கருத்து அதிகமுக்கியத்துவம்பெறத்தொடங்கியுள்ளது.
முரண்பாடு என்ற மார்க்சிய எண்ணக் கருவும் அண்மைக்காலத்தையதிறனாய்வுகளிலே பலநிலைகளில் எடுத்தாளப்படுகின்றது. பெண்ணியத்திறனாய்வுகளில் இது மேலும் தனித்துவம்ான பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றது. வர்க்கநிலை, பெண் ணியநிலை முதலியவற்றிலே பயன்படுத்தப் பட்டுவந்த அந்த எண்ணக்கருவை கட்டுமானக்குலைப்பு அல்லது தகர்ப்புக் கோட்பாட்டாளர் தமது தேவைக்கேற்றவாறு மேலும் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றனர். மொழி என்பது முடிவடையாத தொடர்ச்சியைக் கொண்டுள்ள நிலையில் அதன் முடிவான கருத்து எப்பொழுதும் "மாற்றெழுகை” கொண்டதாகவே அமையும் என்றும் அது மேலும் பின்தள்ளப்படும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நூலியத்தின் உள்ளமைந்த முரண் பாட்டை விளக்க அவர்கள் பயன்படுத்தும் அப்போறியா (APORIA) என்ற எண்ணக்கரு தீர்க்கமுடியாத முரண்பாட்டுத் தொடர்ச் சியைச் சுட்டிக்காட்டுகின்றது. இணங்க முடியாத வினாக்களை அது உள்ளடக்கி நிற்கின்றது. அதன் அடிப்படையாகவே பொருள்கோடலின் தொடர்ச்சியான நகர்ச்சியை அவர்கள் முன்னெடுக்கின்றனர். சொல்லின் ஒற்றைநிலைப்பொருள் என்றபரிமாணத்தை உடைப்பதற்கு அது பயன்படுகின்றது.
உளப்பகுப்புத்திறனாய்வு மரபிலும் மார்க்சியம் வலுவான செல்வாக்குச் செலுத்தியுள்ளமை லகானுடைய ஆய்வுகளில் இருந்து வெளிப்படுகின்றது. தன்னிலை (SELF) என்ற கட்டுமானத்தை அவர் சமூகத் தொடர்புகளை அடியொற்றி விளக்கினார். உளப்பகுப்பு வாதம்ஆண்மைமேலோங்கலை அடிப்படையாகக்கொண்டு எழுந்தது என்று பெண்ணியவாதிகள் கூறிவந்த வேளை லகானுடைய கருத்துக்களை அவர்களால் ஏற்கவும் முடியவில்லை;நிராகரிக்கவும்முடியவில்லை.
சிக்மன் பிராய்ட்டினால் விளக்கப்பட்ட “நனவிலி' என்ற எண்ணக்கருவை ஒரு முதலாளிக்கட்டுமை என்று

Page 14
விளக்கும்டிலியுஸ் போன்றநவீன திறனாய்வாளரும் உளர். முதலாளியம் குடும்பத்தில்ஏற்படுத்திவரும் அழுத்தங்களின் காரணமாக ஆழ்மனக் கோலங்களில் நிகழும் சுமையாக “நனவிலி” என்ற எண்ணக்கரு உருவாக்கம் பெற்றதாக அவர்கள் விளக்குகின்றனர்.
பெண்ணியத்திறனாய்வில் இடம்பெற்ற மார்க்சியம் அதன் ஒற்றைநிலைக் கருத் தாடலைப் பன்மை நிலைகளுக்கு இட்டுச் சென்றது. மார்க்சியத்திலே வலிதாகப் பயன்படுத்தப்படும் பறிப்பு அல்லது சுரண்டல் என்ற எண்ணக்கருவை அவர்கள் பால் தொடர்பான Gijsi TLG) (SEXPLOITATION) 6Tsiro S606)LDTiph செய்தமை குறிப்பிடத்தக்கது. பால் நிலை என்பது “சமூகக்கட்டுமை” என்று அவர்கள் முன்மொழிதல் சமூகஇயல்பும் இயக்கமும் பற்றிய மார்க்சியக்கருத்துடன் ஆண்மை மேலோங்கல் சமூகத்தின் இயல்பையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது.
அண்மைக்காலமாக உருவாக்கம் பெற்றுவரும் பின் காலனியம் மற்றும் “கிழக்கியல்” (ORIENTALISM) (upg56) Tüh 6T 6öoT 60 Orăș85(56ĵ6iiT உருவாக்கத்தில் மார்க்சிய நோக்கின் பங்கு முக்கியமானது காலனித்துவ உருவாக்கம், காலனித்துவ எதிர்ப்பு முதலாம் கருத்தாடல்களின் வளப்பாட்டுக்கு மார்க்சியமே கைகொடுத்த வண்ணமுள்ளது. இலக்கியத்துக்கும் அரசியலுக்குமிடையே கட்டுமை செய்யப்பட்ட இடைவெளியை உடைக்கும் விசையை மார்க்சியம் வழங்கியது. கரிபியன் மற்றும் ஆபிரிக்க, அமெரிக்கர்களிடம் முகிழ்த்தெழுந்த “ஆற்றுகைக்
Sவியமொன் றொருதரந் சிரித் ஒரே நொடிதா னுள்ளம் மயங்கிய ஆவி யென்னுடல் விட்டோடிப்ே அங் கொரேயடியாய்த் தொலைந் பாவிநான் பட்டபாடு படாதபாடு படபடத்த தென்நெஞ்சங் கதை
காவியமானது; கண்கள் மூடின்
கல்யாண வைபோகங் கைகூடி நீ
12

assos" (PERFORMANCE POETRY) 6Tsarp வடிவம் கவிதையையும் அரசியலையும் நேரடியாக இணைப்புச் செய்தது. தென் ஆபிரிக்காவின் தொழிலாளர் கவிஞர்களிடம் இது சிறப்புப்பெற்ற வடிவமாக வுள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிரான தீவிர எழுச்சிகொண்ட பாடல்களாக அவை அமைகின்றன. இத்துறையில் அதிக அளவிலான பெண் கவிஞர்களும் ஈடுபாடுகொண்டுவருதல் குறிப்பிடத்தக்கது.
மார்க்சியத்தின் இயங்கியல் தருக்கம் "நடப்பியல்” என்பதிலும் படிமலர்ச்சியைத் தோற்று வித்தலை அடியொற்றி "நெகிழ்நடப்பியல்" (REALACITY) என்ற கோட்பாட்டாக்கம் திறனாய்வில் எழுந்துள்ளது. நடப்பியல் மற்றும் நெகிழ்ச்சியியல் ஆகிய இரண்டு எண்ணக்கருக்களையும் அடியொற்றி “நெகிழ்நடப்பியல்” உருவாக்கம் பெற்றுள்ளது. நடப்பியலுடன் விநோதங் களையும் விடு கற்பனை களையும் உள்ளடக்கி அழகியலாக்கத்தை மேலும் செழுமைப்படுத்த முடியுமென்பதை இக்கோட்பாடு வலியுறுத் துகின்றது.
நடப்பியல் என்பது அனுபவ ஒழுங்கை மட்டுமன்றி ஒழுங்கீனத்தையும் கற்பிக் கின்றது. சமூகத்தின் ஒழுங்கும் ஒழுங்கீனமும் கற்பனையாலும் விநோதங்களாலும் வலுவூட்டப்படுகின்றன. மார்க்சிய நடப்பியல் அவற்றைவளமாக உள்ளடக்கும் தருக்கத்தைக் கொண்டுள்ளது. அந்நிலையில் நடப்பியலிலிருந்து மேலும் கூர்ப்படைந்த நிலையில் நிகழும் நகர்ச்சியை “நெகிழ்நடப்பியல்” விளக்குகின்றது.
ந்தது.
து. დიfwwo
UITuiu
Yჭნჭjl
நித்தது
ன்ெறது ! = a(aൺ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 15
நெடுநாளாய் شعفاعومي 1و62
ஊற்றெடுத்த நொண்டிப் பாதமன
காற்றுப் புகுமிடமெலாம் வெறியோடு கடுை மேற்கினச்சாயுதமேந்தி தீதே சூழு சேற்று மணம் பூசிய உடும்புத்தோலோடு வீ தேற்றியமனமென மெளனத்தீன ( நூற்றநூலோடு நுரைத்த கடைவாய்க் கொ தோற்றுவாயோடழியும் பொருமிய
ரஷ்யாவோடு பிரிட்டன் ஐக்கியமிலாதமெ இஸ்டம்பருகிய அரக்கர்குழு கரு புஷ்ஷின்போர்க்கோரம் பீறிட்ட உணர்ச்சி துஷ்டஞ்சூடிய ஈருதடுகளும் விய நாஸ்திகவெளியோடுழன்று நெறிபிறழ்ந்து தூசியிலுந்துரும்பான மனநிலையூ இஸ்லாமியங்காத்து முளைத்தநாற்றுபோல் அஸ்தமனமிலா புண்ணியம்பூத்த (
uJübuíu விறோடு uyub U6OopTULJ6Boö856T pox போர்த்தந்திராழத்தூடு அனுபவங் இரத்தத்தோடூறிய யுத்ததந்திரங்கள் இயற் பாரீந்தவொன்றித்த மனதோடு ப அரணோடுகூடியெழுந்த மலைப்பாங்கள்
கூர்மதியோடுதேறி வலிமைகள் மீ உறங்காதுறுதிகள் ஊற்றெடுத்தெங்கும் ந பேர்பெற்றமனிதங் கண்டு ஈமாே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

தொக்குநிற்கும் நிஜமாகி ங்கள் உருண்டு திரண்டு மைகள் சுழன்று
ந் தோள்களொன்றாகி ம்பு வீறுகொண்டு
முகங்கள் காட்டி
டூரரக்கனின் முகத்தோடு புறமுதுகுகள்கண்டேன்.
ரிக்காவீறாக முகிலாகியபுனிததேசம் யுந்தணிய பர்வை கொட்டாவேசத்தோடு
தறியறுந்த டறுத்த இழிநிலைபடர் பூமியில் 0 வாழத்துடித்த தேசம்விழிக்கக் கண்டேன்.
டறுத்துப்புகுந்த களேயெங்கும் மிகைகொண்ட கையோடு பெற்று ஸ்தூன்கள் வாழுந்தேசம், நிமிரவீற்றிருக்க கெவேயூறிப் பெருகியாற்றலோடு ட்புரவாகி னாடின்னும் வாழுந்தேசம்.

Page 16
சிதைந்தசிசுமேனி சிதறுந்துண்டுவந்து தாய் அதைத்துவீங்கிய கண்ணுக்குள் ெ பதைத்தசல்லடையுடலில் ஆணபமறுத்து க உதைத்தறைந்து பாதகத்தூடுவேக இதயங்கான தாயிடுப்புப்பாலகன் இழுத்துப் கதைத்தவொலிபறித்து கழுத்தறுத்து உதயங்கொள் காலைவேளையேகியென் கு விதையறுத்து பால்குடிமடிபறித்து ெ பத்துமாதச்சுமைகழன்று சீம்பால்பருகியவயி பித்துப்பிடித்தவஞ்சகன் ஒருகரங்கெ சித்திரவதையென புவியீர்ப்பில்விழ மூளைெ முத்திரைக்காய் பச்சைவயிறெனை நித்திய வாழ்வீயவந்தோ மென்றோதியீனன் நித்திலங்காத்துக் கிடந்ததென்கண குத்தியகூர்குத்தியதுபோல் என்கரமீந்து புசி கத்தியார்ப்பரித்து வந்தோடியெனை
தூரத்தேநின்றபத்து வயதுப்பாலகியவள் இவ துரத்திக்கூவச் சிறுநீரோட குரல்வன ஈரத்தோடு பாலியல் வன்புணர்ந்து மாறிமாறி வீரத்தோடுகுற்றுயிராக தாய்மனமே கோரத்தோடென் பால்மடியொன்றறுத்து ம தீரங்கொள்ளப்பிஞ்சு காம்புகழன்று வீரத்தோடுமூச்சாகிய உடலேந்திநான்வரக் காரவுச்சமென பறித்ததைத்தீமூட்ட
பாரமனதோடு தூரமாகி நான்விழியீரம்வற்ற உருவிழந்து உளங்குலைந்த மனே கோரங்கள்கண்ட இதயமிழகி வீரங்குன்றா தீராதீமானோடு புனிதப்போரீந்தநா தீரங்காத்ததென் பரம்பரைவீரமரணத்தோடு
சூரத்தோடு புனித மொன்று கூடியி நேரங்காணாப்பாரிது வீரமுழங்கித்தேசங்கா
கோரமணந்திறந்து துரோகியழிந்து
(குறிப்பு : யுத்த பூமியில் நித்தமும் நடந்த அர யுத்தபூமியில் உமிழப்பட்ட ஒரு குடும்பத்தின் சே
4.

மடிகொள்ள :ங்கண்ணிருதிர்ந்துதெறிக்க ால்மிதித்து ாய் பிஞ்சுகளினுயிர்வாங்கி பறித்து
சாக்கடைக்கான்வீசவுயிர்துடிக்க டில்சூழ்ந்து வெந்தணல் வீசஎன்னுயிர்போச்சு று வற்றிப்போகமுன்னம் 5ாண்டு காலில் பிடித்துத்துக்கி |யன்பாதங்கான சிற்றின்ப
இச்சைதீர்த்துக்குதறி பற்றியகொடியாய்
வன் என்கண்முன்தோண்டி $கச்சொல்லி
ாச்சூழப்பயமுறுத்த மயக்கங்கண்டேன்.
பன்கண்பாயநடுங்கி ளை பிடித்து வீழ்த்திக்கீழே க்ெ காமந்தீர்க்கதிடுமென ாங்கித் தடுக்க ஈன்செயல் கள்வாய் திணிக்ககடுந்
என்மடிதுஞ்சியது கண்டகொடியன்கொடுமையின்
காமுகன் கண்முன்கருகியது.
ாது மொழிகளற்று தாடு குழிந்தமுகந்தாங்கி து நாளுமாழிபோல்
ன் நாளுங்காக்கிறேன், ஆதிமுதல் கேளிரே னிதே வென்றிட நாஸ்திகம் க்க நீ தாழிட்ட சுபனம்புக என்னோடுவாரீர்
ஜகத்தை வைத்து இக்கவியை ஆக்கியிருக்கிறேன். கத்துநிலையை வைத்து ஆக்கியிருக்கிறேன்.)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 17
P00BALASIN
IMPORTERS, EXPORTER
STATIONE
ea
Head (
202, Sea Street, Colombo 11, Sri Lanka. Tel. . .
Branches:
340, SeaStreet, 309A-23, Gall
Colombo - 11, Sri Lanka. Tel : 2395665 Colombo 06, S
பூபாசிைங்கம்
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இற
4x
கிளைகள்: 340,செட்டியார்தெரு,
கொழும்பு 1,இலங்கை,தொ.பே.2395665
புத்தகத்தின் பெயர் திருக்குறள் அங்கவியல் (புதிய பாடத்திட்டம் 2009) க்.பொ.த. உயர்தரம் பரீட்ச்ைவழி காட்டி (தரம் 6) கம்யூனிஸ்ட் கார்த்தி கேசன் நகைசசுவை ஆளுமை தீர்க்க தரிசனம் உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல் சூழல்சார் சுற்றுலாத்துறை
சமூகப் பிரச்சினைகள் பாகம் - ஒன் இவர்கள் நம்மவர்கள் LIT5lo - agpg இராமாயணத்தில் வரலாற்று நமபகததனமை சர்வதேச நினைவு தினங்கள் LTöıh - 1 சர்வதேச நினைவு தினங்கள் LITash - 2 சர்வதேச நினைவு தினங்கள் LT85 - 3 வேரோடி விழுதெறிந் கண்ணின் ஆர்த்தெழுந்தால் விடுதலையாம் மழ்ை நதி கடல் IIT8505 ILIL60. ஒப்பாரிக்கோச்சி
இழப்புக்கள் இனியும் தொடர வேண்டுமா?
He
L 35oooo
202செட்டியார்தெரு,கொழும்பு 1,இலங்கை.தொ.ே ہمجا
go),309 A-2/3,5s கொழும்பு06,இலங்
oggi gör 6
கிருஷ்ணபிள்
pBLPITèFIT
சண்முக சுப்பி
லெனின் மதி
வைத்தியரட்னி பத்மானந்தகு
பாத்திமா சிபா கலாபூஷணம் புன்னியாமீன்
அம்பலவான கலாபூஷணம் புன்னியாமீன் கலாபூஷணம் புன்னியாமீன் கலாபூஷணம் புன்னியாமீன் என். செல்வர அகில்
கவிஞர் எலிய goofluohuoir & பிரமிளா பிரதி மு. சிவலிங்க்
எஸ்.கே. தங்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

GHAMBOOKDEPOT
S, SELLERS & PUBLISHERS OF BOOKS, ERS AND NEWSAGENTS. a
Office:
2422321. Fax. 2337313, E-mail: pbdho@stnet.lk
e Road, - 4A, Hospital Road, Sri Lanka. Tel.: 4-515775,2504266 Bus Stand, Jaffna.
് ക്രിസ്ത്രഞ്ച് க்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
anın : F జిళ్ల 1, 2422321.தொ.நகல் 2337313,மின்னஞ்சல்:pbdhoடுsltnet.lk
லிவீதி, இல.4A,ஆஸ்பத்திரிவீதி, கை,தொ.பே.4-55775,2504266 பஸ்நிலையம்,யாழ்ப்பாணம்.
வெளியீடு/விற்பனையாளர் விலை
66 பூபாலசிங்கம் பதிப்பகம் 190/
பாலசிங்கம் பகிப்பகம் 150/- ரமணியம் ဒီ့နိဂုံး முற்போக்கு
கலை இலக்கிய மன்றம் 2OO/-
IITGOTh இலங்கை முற்போக்கு
கலை இலக்கிய மன்றம் 250OTh சிந்தனைவட்டம் 350/- mITür
of சிந்தனைவட்டம் 270/
சிந்தனைவட்டம் 3OO/=
ர் மயூரன் சிந்தனைவட்டம் 400/
சிந்தனைவட்டம் 350/=
சிந்தனவட்டம் 350/=
w சிந்தணைவட்டம் 350/ FITEIT ஞானம் பதிப்பகம் 450/.
ஞானம் பதிப்பகம் 200/
பரசன் சாரல் வெளியீட்டகம் 300/ இஸாறுதீன் எழுவான் வெளியீட்டகம் 400: பன் மல்லிகைப்பந்தல் 150/- h நாவல் நகர் தமிழ்ச்சங்க
6ിഖണhu്( 350s
கவடிவேல் நாவல் நகர் தமிழ்ச்சங்க
ရှိမျိုရှိ ဂြို 14.0/-

Page 18
6 2d ட்டுக்கேள்வி
பில்லாமல் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். அப்போது நான் வீட்டு முன் விறாந்தையி லிருந்தேன். மதியச் சாப்பாட்டின் பின்னர் சற்று ஒய்வாக சாய்வுக் கதிரையில் அமர்வது வழக்கம். அதை ஒய்வு என்றும் சொல்ல
ཟ
(փգաT Ցil. யோசனை. " 冬多2 கவிழ்ந்துகொண்டிருக்கும் t கப்பலை எப்படி மீட்டெடுப்பது என்ற யோசனை.
யோசனை தடைப்பட வருபவன் யாராக இருக்கும் என்று எண்ணம் ஓடியது. முன்பின் அறிமுகமானவன் போலத் தெரியவில்லை. மெலிந்ததேகம்,கறுப்புலோங்சும் வெள்ளை சேர்ட்டும் அணிந்திருந்தான். யாராவது சலுகை விலையில் பொருட்களை விற்பவர்களாக இருக்குமோ? ஆனால் அவனது கையில் ஏதும் பொருட்களுமில்லை. கழுத்துப்பட்டியுமில்லை! நடையில் ஒரு அவசரம் தெரிந்தது. விறுவிறு என வந்தான். பார்த்துக்கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள்ளும் நுழைந்தான். நானுண்டு என்பாடுண்டு என்றிருந்த என்னைப்பார்த்து உறுக்குவதுபோலக் கேட்டான். - “நீங்கதானே சுந்தரபாண்டியன்?” (அது தான் எனது பெயர்)
ஒரு வேளை ஊரிலிருந்து வருகிற யாராகவோ இருக்கலாம். இப்படி வருகிற யாரிடமாவது அம்மா கடிதமோ கற்கண்டோ கொடுத்துவிடுவாள். ஒரே ஒரு கடிதத்தைத் தருவதற்காக இவ்வளவுதூரம் வந்தவனுக்கு ஆத்திரம் ஏற்படுவது இயல்புதான். பயணக் களைப்பாயிருக்கும்.அதுதான் எரிந்து விழுகிறான்.நான் அவனைச் சமாதானப்படுத்தினேன்.
"அவசரப்படாமல் இதிலை இருங்கோ. தம்பி. (கதிரையைக் காட்டியவாறே.)மத்தியானம் சாப்பிட்டிட்டீங்களோ..?”
ஆளுக்குப் பசிபோலிருக்கிறது. எரிச்சலுக்கு அதுவும் ஒரு காரணம் தான். அவனது முகத்தோற்றமே அதைக் காட்டியது. எனினும் அவனுக்குச் சாப்பாடு போடும் உத்தேசம் எனக்கு இல்லை! சும்மா அப்படிக் கேட்டு அவனது சூட்டைக் கொஞ்சம் குறைக்கலாமே என்ற நோக்கம்தான்.
“நான் இங்கே சாப்பிட வரயில்ல." வெடித்துப் பேசினான்.
“தம்பி. நீங்கள். ஆர்.? எனக்குத் தெரியயில்ல. எங்கயிருந்துவாறிங்கள்?
 

“காட்டிலையிருந்து.” .א ஒரு நிலையிலின்றி அந்தச் சுவருக்கும் இந்தச் சுவருக்கும் இடையில் வீச்சாக நடந்தான். கைத் தொலைபேசியை எடுத்து அதே விசையில் இலக்கங்களை அழுத். தி.னான்.
“சரி. ஸ்பொட்டுக்கு வந்தாச்சு. ஆள் இருக்கிறார்.”
அந்தப் பதில் என்னைச் சட்டெனக் கதிரையிலிருந்து எழுப்பியது.
பொக்கட்டிலிருந்து ஒரு அட்டையை எடுத்து அதில் இருந்த இலச்சினையைக் காட்டித் தன்னை அடையாளப்படுத்தினான். என்னையும் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டு. தொலைபேசியில் இன்னும் சிலரை எடுத்து, ஸ்பொட் அது இது என்று தகவல்கள் அனுப்பினான். உண்மையில் அப்படி யாருடனும் பேசுகிறானா அல்லது என்னை மிரட்டுகிற முயற்சியா என ஒரு கணம் யோசித்தேன். அந்த யோசனை நீடிக்கமுதலே. அவனது கையில் ஒரு கையடக்கத் துப்பாக்கி கண் இமைக்கும் நேரத்தில் தனது பொக்கட்டினுள்ளோ. சேர்ட் மறைவிலோ இருந்து அதை எப்படி எடுத்தான்?
அது ஒரு மந்திரவித்தை போலிருந்தது. சரியாகத் தெரியமுதலே. என்னை ஒரு உலுக்கு உலுக்கி விட்டு அவனது மறுகைக்கு மாறி மறைவிடத்துக்குப் போனது. நான் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். எனினும் அதைப் பெரிதுபடுத்தாமல். (சிறிய துப்பாக்கிதானே. என்ன செய்துவிடப்போகிறது என்ற அசட்டுத்துணிவுடன்.
“தம்பி அவசரப்படாமல் இதிலை இருங்கோ.” . கதிரையை அவனுக்கு அண்மையாக இழுத்து வைத்தேன்.
“நான் இங்க இருக்கிறதுக்கு வரயில்ல. வெளிக்கிடுங்க இப்ப. வெளியில வான் நிக்குது. உங்களைக் கொண்டுபோக வந்திருக்கிறம்”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 19
உள்ளே இரத்த ஓட்டம் ஒருமுறை நின்று விட்டது போன்ற உணர்வில் அதிர்ந்தேன். எனினும் நிதானிக்க முயன்றேன்.
“என்ன விஷயம். சொல்லுங்கோ.” “பல தடவை உங்களுக்குக் கடிதம் போட்டிருக்கிறம்.நீங்கள் வந்துசந்திக்கயில்ல.அதுதான் கொண்டுபோய் விசாரிக்க வேண்டியிருக்கு."
ஒரு சடப்பொருளைத் தூக்கிக் கொண்டுபோக வந்தவன் போன்ற ஸ்டைலில் அவனது பதில் இருந்தது. “எனக்கு அப்பிடி ஒரு கடிதமும் வரயில்ல. என்ன காரணம்?. ஏன் நான் வரவேணும்?”
“அதையெல்லாம் அங்கை போய்ப் பேசலாம். இப்ப நீங்க வரப்போlங்களா. இல்லையா? இல்லையென்றால் பைஃபோசாகக்கொண்டுபோக வேண்டியிருக்கும்.”
மீண்டும் ரெலிபோனை எடுத்து புரியும் பாஷையில் புரியாதமாதிரித் தகவல்கள் அனுப்பிக் கொண்டிருந்தான். நான் வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தேன். மனைவியோ பிள்ளைகளோ கிட்டநின்றால் இவன் பேசுவது அவர்கள் காதிலும் பட்டுவிடக்கூடும். அதனால் அவர்களும் குழம்பிப்போய்விடுவார்களே எனக் கவலையாயிருந்தது. அப்போது வீட்டுக்குள்ளிருந்து எனது தகப்பனாரின் செருமும் குரலும், நடந்து வரும் காலடிச் சத்தமும் கேட்டது. அவர் வயசானவரென்றாலும் கம்பீரமான மனுசன். இருமுவது செருமுவது கூட நாலு வீடுகளுக்கு கேட்கக்கூடியதாயிருக்கும். அதனால் அக்கம் பக்கத்து வீடுகள் கூட கொஞ்சம் அடக்கம் அப்படிப்பட்டவரின் குரல் அவனையும் அச்சுறுத்தியிருக்கவேண்டும்.செருமல்சத்தம் கேட்டதும் அவனது கை சட்டென றிவோல்வரை இழுத்.
“தம்பி. தம்பி. அது என்ர அப்பா. வயசானவர். வருத்தக்காரன்.”(அதனால் அவரை மன்னித்து விடுங்கோ எனக் கேளாமல் கேட்டுக்கொண்டேன்)அப்பா வயசானவராகவும் வருத்தக்காரனாகவும் இருந்தது நல்லதாகப் போய் விட்டது அவரை அவன் மன்னித்தருளினான்.
அப்பா இங்கிதம் தெரிந்தவர். வெளியில் காற்றோட்டமாக அமர்வதற்கு வந்தவர்.நான் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டதும்.திரும்பவும் உள்ளே போய்விட்டார். வீட்டில் யாரையும் குழப்பமடையச் செய்யாமல் இவனைச் சமாளிக்கவேண்டுமே என்ற கலக்கம் என் மனதை குழப்பிக் கொண்டிருந்தது.இவன் உண்மையில் யாராக இருக்கும் என்று உள்ளே மனம் கணக்குப் போட்டது. ஏதோ ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவனென்று அடையாளம் காட்டினான். அது உண்மையாகவும் இருக்கலாம். அல்லது வேறுயாராவது பணம் பறிக்கும் கோஷ்டியைச் சேர்ந்தவனாகவும் .
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

இருக்கலாம்.அப்படியுமில்லாமல் மக்களின் உளவியலைக் குழப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்படும் குழுக்களைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம். எப்படிப்பட்டவனாயிருந்தாலும் துப்பாக்கிவைத்திருக்கும் ஆளைத் தந்திரமாகத்தான் கையாளவேண்டும்.
“தம்பி.நானும் வருத்தக்காரன். நெஞ்சு நோவுக்கு குளிசை எடுக்கிறனான். அங்க. இஞ்ச ஒரு இடமும் வரேலாது. உங்களுக்கு என்ன வேணும். சொல்லுங்கோ.?”(வருத்தக்காரன் என்று சொன்னால் ஆள் மடங்கிவிடுவான் போலிருக்கு)
“நாங்கள் கேட்டு எழுதின தொகை காசை நீங்கள் கொண்டுவந்து தரயில்ல. அது தான் இப்ப வந்திருக்கிறம்.”
“காசா எவ்வளவு?”
"இருபது லட்சம்.?”
நான் அப்படியே பொத்தெனக் கதிரையில் அமர்ந்தேன். வாய்மூடிக்கொண்டது. மூச்சை அதிகமாக உள்ளிளுத்துமீண்டும் இயல்புநிலைக்கு வர முயன்றேன். நான் ஏதும் பேசாதிருக்க அவன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
“உங்களைப் பற்றின எல்லா விபரங்களும் எங்களுக்குத் தெரியும். உங்கட வருமானம் எவ்வளவு
7ן

Page 20
என்றும் தெரியும். புலனாய்வு மூலம் எல்லா விபரங்களும் எடுத்திருக்கிறம்.”
வங்கியிலிருந்து கடிதம் வந்திருந்தது அடகு வைத்திருந்த நகை நட்டுக்கள் காலம் கடந்தும் மீட்கப்படாமையால் ஏலம் விடப்போகிறார்களாம். அவற்றை மீட்பதற்கு பணத்தைப்புரட்டும் வழிதெரியாமல்,அப்படியே ஏலம் போக விட்டுவிடல்ாமா. அந்த முடிவை எந்த முகத்தை வைத்துக்கொண்டு மனைவியிடம் சொல்வது என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது தான் இவன் வந்தான். இப்போது இவனுக்குத் தேவையான பணத்தை எங்கே புரட்டுவது?
“தம்பி. நீங்கள் நினைக்கிறமாதிரி நான் காசுக்காரனில்லை. என்ரபிரச்சனைகள் எனக்குத்தான் தெரியும்.”
“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள். அவை படிக்கப்போய் வாற இடங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். சும்மா பேசி நேரத்தை மினக்கெடுத்தாமல். அங்க வந்து உங்கட பிரச்சனையைச் சொல்லுங்க. அதுதான் உங்கடபிள்ளையரூக்கும்பாதுகாப்பு.”
அடுத்த அடி! எனக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த மூச்சும் நின்றுவிடும் போலிருந்தது.
என் மனைவி ஓர் அப்பிராணி என்னை யாராவது காணவோ சந்திக்கவோ வந்தால். நான் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது நல்ல வகையில் தேநீர் தயாரித்துக்கொண்டு வந்துவிடுவாள். விருந்தோம்பல்
மனைவி அவ்வாறு தேநீர்த்தட்டுடன் வந்ததும் நான் அவசரப்பட்டு எழுந்து அவளிடமிருந்து அதை வாங்கினேன். “உள்ளுக்குப் போங்கோ. உள்ளுக்குப் போங்கோ." என கண் சமிக்ஞையில் தெரிவித்தேன். தேநீர்த்தட்டு உருக் கொண்டதுபோல என் கையில் படபடத்தது.
எனது வித்தியாசத்தை அவள் புரிந்திருக்க வேண்டும். "ஆராள். வந்திருக்கிறது?" என முகப்பாஷையில் கேட்டாள்.
"தெரிஞ்ச ஆள்த்தான். பிறகு சொல்லுறன். போங்கோ"என அதேபாஷையிற்தெரிவித்தேன்.
தேநீரைக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினேன். "வேண்டாம்.இப்படிப்போறஇடங்களிலை.நாங்க. ஒன்றும் குடிக்கக்கூடாது.
"ப்ரவாயில்லை. குடியுங்கோ அதிலை நஞ்சு கிஞ்சு ஒன்றும் போடயில்லை. வீட்டுக்கு வந்திருக்கிறீங்கள் கனைச்சுப் போயிருக்கிறீங்கள். முதலிலை ரீயைக் குடியுங்கோ"
புற்றினுள் இருக்கும் நச்சுப் பாம்பு போல அவனது பொக்கட்டினுள் இருக்கும் கைத்துப்பாக்கி எந்த நேரத்தில் சீறிக் கொண்டு வருமோ என்ற எச்சரிக்

கையுணர்வில் மிகவும் மரியாதையாகவே அவனிடத்தில் எனது நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
அவன் தேநீரைத்தன்கையில் வாங்கிக் கொண்டு, நான் சொல்லாமலே கதிரையில் அமர்ந்தான். உண்மையிலேயே பயல் களைத்துப்போயிருக்கிறான் போல்தான் தெரிகிறது. நானும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தேன். சில கருத்துக்களைக் கூறினேன். சில கேள்விகளைக் கேட்டேன். அவனும் அதற்கேற்றவாறு பேசினான்.
“என்ன . பிரதர். இப்பிடி நாங்கள் போற இடங்களிலை பயத்தில மூச்சே விடமாட்டாங்கள். நீங்க என்னென்டால் ஆற அமர்ந்திருந்து பேசிறீங்க?"
“பயந்து என்ன தம்பி செய்யிறது?. வாழும் வரைக்கும் இப்பிடி எத்தினை பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கு பார்க்கப்போனால். எல்லாம் உயிர் வாழிறத்துக்கான. ஒருத்தரை ஒருத்தர் ஈவிரக்கமின்றி அழிக்கிற போராட்டம் தான். எப்பவோ ஒருநாள் நானும் சாகத்தான்போறன். நீங்களும் சாகத்தான் போறிங்கள். அது இண்டைக்கு நடந்தாலென்ன?. பிறகு நடந்தாலென்ன."
ஒருவித எரிச்சலுடனும், விரக்தியுணர்வுடனும்தான் இவ்வாறு கூறினேன். என்றாலும் உள்ளே பயம்இருந்தது. கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. இவன் என்னைக் கொண்டு போய்த் தட்டிவிட்டால்..? என் பிள்ளைகளின் எதிர்காலம் அநாதரவாகப்போய்விடுமே. நானில்லாத நாட்களை எப்படி எதிர்கொள்வார்கள்.? ஆகவே எனது உயிரை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளவேண்டும். அப்பனே,அப்படி என்னை ஒரக்கண்ணால்பார்க்காதே.
அவன் தொலைபேசியில் எனக்குக் கேட்காத தொனியிற்பேசிக்கொண்டிருந்தான்.
அவனுடன் சற்று சமாதானமான முறையில் எனது கஷ்ட நஷ்டங்களை எடுத்துச் சொல்லிப் பார்த்தாலென்ன? சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கிறதா.தோல்வியில் முடியுமா என்பதுவேறு விடயம் அற்லீஸ்ட் முயன்றாவது பார்க்கலாமே..?
"என்னைப்பற்றின விபரங்களைச் சேகரித்த உங்கட ųRRIT Tlinės GT SOTėhe Gg5 TÓGTHEN) Thul', idir Liadir, siLidir litrihéilianaireasinsiriú uirfi (aigfluais SabaxLIT.?"
TRTg 95ğ TâtUTiyfg (886th Sisafifâ ebmıh மனம் தளராதிருந்த அவன் கொஞ்சம் தடுமாறினான். என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“சும்மா கதை விடாதையுங்கோ. பிரதர்." ஆழம் - பார்த்தான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 21
"அப்ப. உங்கட புலனாய்வுக்கு சரியான தகவல் கிடைக்கயில்ல. தம்பி. வெளியில கேட்டால், இந்த ஆளுக்கு என்ன குறை எண்டுதான் சொல்லுவாங்கள். என்ர கஷ்டங்களை நான் வெளிக் காட்டிறத்தில்லை. ஆனால் கடன் சுமையால் நாளும்பொழுதும் நான்படுகிற வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்.
ஒரு வேகத்தில் அல்லது கோபத்தில் நான் கூறிய வார்த்தைகள் என்னைக் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்தியது. கண்கள் பனித்தும் விட்டது. அதை அவன் கவனித்திருக்கவேண்டும்.
“இல்ல. இல்ல. அது. அது. எங்களுக்கு எல்லாம் தெரியும். கடனா?. எவ்வளவு?”
“தெரிஞ்சுகொண்டும் தானா இவ்வளவு தொகை காசு கேக்கிறீங்கள்?. எனக்கு ஏற்கனவே அம்பது லச்சதுக்கு மேல கடன் இருக்கு.
இதைக் கூறிவிட்டு அவனதுமுகத்தைப்பார்த்தேன். அவன் மெளனமாயிருந்தான். சற்று நேரத்தின் பின் கேட்டான்; “இவ்வளவு கடன் ஏறும் வரையும் என்ன செய்தனீங்க?"
நான் பதில் பேசாமலிருந்தேன். அதற்கு ஒரு காரணமா தேவைப்படுகிறது? பட்ட கடனைக் கட்ட வசதியில்லாவிட்டால் 9لزغإ தன்பாட்டில் ஏறிக்கொண்டுபோகிறது
எனது மகள் கையிற் புத்தகத்துடன் வெளியே வந்தாள். ரியூசனுக்குப் போகிறாள். அவளுக்கு இங்கு நடக்கும்கூத்துக்கள் ஒன்றும் தெரிந்திருக்கவில்லைஒரு பாபமும் அறியாமல். “போயிட்டு வாறன் அப்பா. என்றவாறே நடந்தாள். அது அவனுக்கும் கேட்டிருக்கும். மகள் வெளியேறும் வரை பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் ரெலிபோனை எடுத்து இலக்கங்களை அழுத்தி காதில் வைத்தான்.
ஐயையோ. மகள் வெளியே போகிறாளே. இவன் வாகனத்துடன் நிற்கும் தனது கூட்டாளிகளுக்கு ஏதாவது தகவல்கொடுக்கிறானோ..?
அவசரப்பட்டு எழுந்து பிள்ளையை நிறுத்துவதற்கு முற்பட்டேன்.
"பதறாமல் இருங்க. பிரதர். நான் வேற விஷயம் பேசிறன்."
மகளும் வெளியேறிப்போய்விட்டாள். TOT 5ė RDS GST dit SMT GDR), Saudir சொல்வதை நம்பமுடியாது. எப்படியாவது மகளைப் போகாமற்தடுத்திருக்கவேண்டும்.இப்போதுபிள்ளைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயம் மேலெழுந்து நெஞ்சை அழுத்தியது.
மேலும் நேரத்தைக் கடத்தக்கூடாது. இவனுக்கு ஏதாவது ஒரு தொகையைக் தருவதாகச் சம்மதித்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிவிடுவோம் என முடிவெடுத்தேன். காசை யாரிடமாவது மாறிக் கொடுக்கலாம்.
“தம்பி. நீங்கள் கேட்ட தொகையைத் தரக்கூடிய நிலமையில. நான் இல்ல. ஏதாவது கொஞ்சம் பார்த்துத் தாறன். பிரச்சனைப்படுத்தாதையுங்கோ.
“கொஞ்சக் காசென்றால் எவ்வளவு?” "அதை நீங்கள் தான் சொல்ல வேணும். என்ர நிலைமையை நான் சொல்லியிட்டன்.”அவனது தலை ஒரு பாவனையில் அசைந்தது. யோசிக்கிறான். போலிருக்கிற, இறங்கிவருவானோ..?
“. அதைப்பற்றி நான் முடிவுெடுக்கேலாது. மேலிடத்திலகேட்கவேணும். கொஞ்சம் பொறுங்க."
ரெலிபோனில் தொடர்பெடுத்தான். என்னுடனும் கதை கொடுத்து விசாரணை செய்துகொண்டு இடையிடையே தொலைபேசித் தொடர்புகளிலும் ஈடுபட்டான். தொழில் விபரங்கள். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதற்கான காரணகாரியங்கள். போன்ற விபரங்களை விடுத்து விடுத்துக் கேட்டான். (ஏற்கனவே புலனாய்வில் எல்லா விபரங்களும் தெரியும் என்று சொன்னானே.]நானும் இந்தமாதிரி எனது கஷ்ட நஷ்டங்களை யாருக்கும் எடுத்துச் சொன்னதில்லை. ஆனால் அந்த நிலைமையில் என்னையறியாமலேயே சொல்லப்பட்டு விட்டது.
“சரி. பிரதர்.விஷயத்துக்கு வருவம். உங்களாலை எவ்வளவுதரேலும்?. பத்துலட்சம்?"
அதைக்கேட்க ஒரு மெளனச் சிரிப்புத்தான் தோன்றியது என்னிடத்தில் இவனோடு இனி என்ன பேசுவது?
“என்ன பேசாமலிருக்கிறீங்க? சொல்லுங்க." சொன்னேன்."என்னால்தரக்கூடியது அவ்வளவு பெரியதொகையில்ல."
இருபது பத்தாகி. ஐந்தாகி பேச்சுவார்த்தை எவ்வளவு தொகை என்றுபொருந்திவராமல் இழுபட்டு இறுதியில் ஒரு லட்சத்தில் வந்து நின்றது
LJSOUTRO ULITfLLÁBig GlubgolsTrMTNYITh ETSIT ஏற்கனவே மனதிற்குள் திட்டமிட்டிருந்தேன். நண்பன் தாண்டவக்கோன்தான் அதற்கு சரியான ஆள் கேட்கும்போதெல்லாம். உதவக்கூடிய பசை உள்ளவன். உதவிக்கு வட்டியுமுண்டு வட்டிக்கு வட்டியுமுண்டு எவ்வாறாயினும் அவன்தான் இப்போதைக்கு ஆபத்பாந்தவன்
“கொஞ்சம் இருங்கோ தம்பி இன்னொரு ஆளிட்டையிருந்துதான் காசு எடுக்கவேணும். கோல் பண்ணி ஒழுங்கு பண்ணியிட்டு வாறன்.”

Page 22
இருக்கையை விட்டு எழுந்து வீட்டுக்குள் போக முற்பட்டேன்.
“ஏதாவது புத்திசாலித்தனமாய் செய்யலாமென்று நினைச்சு. வீணாய் வில்லங்கத்தில மாட்டிக் கொள்ள வேண்டாம்."எச்சரித்தான்.
(அப்பனே அந்தக் காரணத்துக் காகத்தான் ஆரம்பத்திலிருந்தே நான் ஏதும் புத்திசாலித்தனமாக செய்ய உத்தேசிக்கவில்லை.)
அவன் நினைத்துத் தயங்குவதுபோல, உள்ளே போய் போஃனில் பொலிஸிற்கும் முறையிடலாம். முன் வீட்டிலிருக்கும் யசாரிடம் சொன்னால் தனது நண்பர்களுடன் வந்தே ஆளை மடக்கிவிடுவான். ஆனால் தடி எடுத்தவனெல்லாம் இங்கு தண்ட(ல்) காரனாயிருக்கிறான். பின் விளைவுகளையும் யோசித்து இந்தமாதிரி சமயோசிதமாகத்தான் 9_ulff வாழவேண்டியிருக்கிறது.
உள்ளே சுவரின்மறுபக்கமாக நின்றமனைவி எனது கையைப் பிடித்துக் கொண்டாள். கண் கலங்கி நடுங்கினாள்.
“என்ன?. என்ன செய்யப் போறாங்கள்?’ - திரும்ப வெளியே போகவும் விடமாட்டாள் போலிருந்தது. "பயப்பிடாதையுங்கோ. நான் சமாளிக்கிறன்.”- மனைவியை ஆறுதற்படுத்தியவாறு தாண்டவக் கோனுக்குத் தொடர்பை எடுத்தேன். அவசரமாக ஒரு லட்சம் ரூபா தேவைப்படும் விஷயத்தை கூறி, பணம் உடனடியாக வேண்டும் எனக் கேட்டேன். இப்போது தன்னிடம் இல்லையென்றும், இரண்டொரு நாள் பொறுக்கமுடியுமானால் வேறு இடங்களில் எடுத்துத் தரலாமென்றும் வழக்கமான பதில்தான் அவனிடமிருந்து கிடைத்தது.
“காசு இப்பவே வேணும் இல்லையென்டால். என்னைக் கொண்டு போக வந்து நிக்கிறாங்கள்.”
“ஐயையோ.” - நண்பனின் குரல் பதறியது; கொஞ்சநேரம் பொறுங்கோ கொண்டுவாறன்.”
நண்பனின் பதற்றத்திற்கு என்மேற்கொண்டுள்ள பற்று பாசம் மட்டும் காரணமல்ல. என்னைக் கொண்டுபோய் விட்டால், ஏற்கனவே தன்னிடம் பெற்றிருந்த கடன் தொகையை அதோ கதியாகப் போய்விடுமே. என்பதும்தான்! எனவே நான் கேட்ட தொகையை எப்படியாவது தரவேண்டிய நிர்ப்பந்த நிலையிலிருந்தான் நண்பன்.
“வீட்டுக்குள்ள வரவேண்டாம். கேற்றுக்கு வெளியில. சந்திக்கலாம்.” என எச்சரிக்கையும் செய்துவைத்தேன். ع
மனைவியின் கையை விடுவித்துக் கொண்டு, வெளியே வந்து கதிரையில் பெருமூச்சுடன் அமர்ந்தேன்.
2

“காசு ஒழுங்கு பண்ணியாச்சு. இப்ப வந்திடும்.” இப்போது அவன் இருக்கை கொள்ளாமல், எழுவதும் கேற் பக்கமாக எட்டி எட்டிப் பார்ப்பதுமாக நின்றான்.
“யாரிட்டைக்காக கேட்டிருக்கிறீங்க?.கேட்டவுடன் இவ்வளவு தரக்கூடிய ஆள் ஆர்?"
எனக்கு தெரியாதா. இந்தக் கேள்வியெல்லாம் எதற்கென்று (புலனாய்வு) பிடி கொடுத்து நண்பனை மாட்டிவிடாமல், மிகச் சாதுர்யமாகச் சமாளித்துக் கொண்டிருந்தேன்.
தாண்டவக்கோன் தெருவில் அந்தப்பக்கம் போகிற யாரோ ஒருவரைப் போல சைக்கிளில் கேற்றைக் கடந்து அசுகை காட்டியதும், எழுந்து கேற்றுக்கு வெளியே போனேன்.
ஒரு என்வலப்பை கையிற் தந்தான் நண்பன், “எண்ணிப் பாருங்கோ.'சரி எனத் தலையசைத்து, தாண்டவக்கோனை அனுப்பிவிட்டுச் சற்றும் தாமதியாமல் உள்ளே வந்தேன்.
எதை எண்ணிப்பார்ப்பது.? அப்படியே பணத்தை அவனிடம் கொடுத்தேன். “எண்ணிப்பாருங்கோ.” "பரவாயில்ல. - அதை அப்படியே பொக்கட்டினுள் செலுத்தினான். ஃபோனைக் கையிலெடுத்துக் தகவல் கொடுத்தான்.
பிரச்சனை இந்த அளவிலாவது முடிந்ததே என நான் நினைக்க, அவன் வேறொன்று நினைத்தான்; “நீங்கள் உங்கட காரில. என்னைக் கொண்டு போய் எங்கட வான் நிக்கிற இடத்தில விடவேணும்.”
எனது தயக்கத்தைக் கவனித்து, "வானை அப்பவே போகச்சொல்லியிட்டன். ஒரே இடத்தில. கன நேரம் நிண்டால்.நோற்றட் ஆகியிடும்.”என்றான்.
பிரதான வீதிவரை நடந்து செல்வதற்குத் தயங்குகிறான் போலிருக்கிறது. போகவேண்டிய இடத்தைக் கேட்டேன். அவன் கூறிய இடம் பத்துப் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்தது.
என் மனைவி வெளியே வந்து. மீண்டும் என் கையைப்பிடித்தவாறு கலங்கிக்கொண்டு நின்றாள்.
“அவரை நாங்கள் ஒண்டும் செய்யமாட்டம் அம்மா. அழாதையுங்க”- மனைவியை அவன் தேற்றுகிறானா அல்லது கிண்டல் செய்கிறானா..?
மனைவியின் நிலையைப் பார்க்க, எனக்குக் கவலையாயிருந்தது;
“தம்பி குறை நினைக்கவேண்டாம். எனக்கு அவ்வளவுதூரம் வரேலாது.”
யோசனை செய்து விட்டு, இன்னொரு இடத்தைக் குறிப்பிட்டான். ஐந்து கிலோமீட்டர் வரை போகவேண்டியிருக்கும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 23
உள்ளே சென்று கைத்தொலைபேசியை எடுத்து ஒஃப் பண்ணி பொக்கட்டினுள் மறைத்து வைத்தேன். எதுவும் நடக்கலாம். அப்படி ஏதுமென்றால் யாருக்காவது தகவல் கொடுப்பதற்காவது உதவும். மனைவியிடம்; "பயப்பிடாதையுங்கோ.வந்திடுவன்.”எனக் கூறிவிட்டு வெளியே போய்க்காரை எடுத்தேன். எனக்குப்பக்கத்தில் முன் சீற்றில் அவன் அமர்ந்துகொண்டான்.
கார் ஒடிக்கொண்டிருந்தது. அவன் ரெலிஃபோனில் பேசினான்.
ஏற்கனவே அவன் குறிப்பிட்ட இடத்தை அடையமுன்னரே, சன சந்தடி குறைந்த. சற்று வெளியான பாதையிற் போகும்போது. திடுதிப்பென்று "நிப்பாட்டுங்க. நிப்பாட்டுங்க. என அவசரப்பட்டான். தட்டப்போகிறானோ? இப்படி எத்தனையோ கதைகள் நடந்திருக்கிறது! அவன் கேட்ட தொகையையும் நான் கொடுக்கவில்லை. சந்தேகத்துடன் பார்த்தேன்.
“பின்னுக்கு எங்கட வான் வருகுது.” என்றான். பாதை ஒரமாகக் காரை நிறுத்தினேன்.காரிலிருந்து இறங்கினான்.
அப்பாடா.தொல்லை விட்டதுபோ. கதவை இழுத்துப்பூட்டியவாறு நான் காரை எடுக்க, சட்டெனக் கதவைத் திறந்தான். பொக்கட்டினுள் கை விட்டு. அதை எடுத்து. முன் இருக்கையில் வைத்துவிட்டுக் கதவைச் சாத்தினான்.
அது, அவனிடம் நான் கொடுத்த என்வலப். பணத்துடன்!
ஆச்சரியத்துடன் பார்த்தேன், கையசைத்துவிட்டு விறுவிறு என நடந்து போனான்.
சமகால கலை இலக்கிய w நிகழ்வுகள்
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்களே
உங்கள் பகுதியில் இடம்பெறும் 566) இலக்கிய நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் செய்திகள் அடுத்துவரும் இதழில் இடம்பெறும். 200 சொற்களுக்கு மேற்படில் அச்செய்தி பிரசுரிக்கப்படமாட்டாது.
- கே. பொன்னுத்துரை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

ஊர் அவலம் அல்லது J601D
-aംബuൺ 6ഖം ക്രഗng-nb
ിത്രം தலை திருகும் காற்று தெரு ஓரச்
சன்னல் தெரியும் அணில் உதிர்த்த தீன்முருங்கைப்பு மணலில் பணிய விழும் குடங் கரையில் சேறு கிளறும் அடைக்கோழி வெடிவால் முளைக்காத சேவல் காலிலே போர்முள் அரும்பாப் பருவம் பிடிப்பதற்கு ஓடி கலைச்சே அலைக்கழியும் உச்சியிலே கொத்திப் பிடிச்சும்
இழுபட்டுச்
6860)L
நிலம் கோடு வரையும்
குநுகும் அடைக்கோழி அடைகட்டின கோழிக்குஞ்சை ஒரு செம்பருந்து இறாஞ்சிப் பிடிச்சுப் பனை உச்சி வைத்து கதறக் கதறக் கொத்தி
குதறிப்
பஞ்சுச் சிறகு உதிர்ந்து காற்றில் பறக்கக் கதறும் குரல் கரையும்
21

Page 24
த்தாயிரத்தின் இலக்கியம் தொடர்பாக காலச்சுவடு 121வ்து இதழில் சுகுமாரன் கவிதை பற்றி முன்வைத்த கருத்துக்கள் எதையும் விளக்குவதற்குப்பதில் வெறுமனே abstract ஆக, ஏதோ பல கருத்துக்களை முன்வைப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறதேயொழிய இன்று கவிதை எடுத்துள்ள புதிய பரிணாம - பரிமாணங்களைக் காட்டுவதாய் இல்லை. மாறாக ஏற்கனவே ஸ்தாபனமாகிவிட்ட இன்றைய புதுக்கவிதையியலுக்குள் நின்று சுழல்வதாகவே உள்ளது. இவ்வாறே அண்மையில் காலஞ் சென்ற கவிஞர் வில்வரத்தினம் தொடர்பாக ஜெயமோகன் எழுதிய 'அகமெரியும் சந்தம்'என்ற கட்டுரையில்(காலம் சஞ்சிகை)தமிழ்நாட்டுக் கவிஞர்கள் நவீனத்துவக் கவிதையை எழுதுகிறார்கள். ஆனால் ஈழத்துக் கவிதைகள் நவீனத்துவ கவிதைகள் அல்ல ஏறத்தாழ அனைத்துமே கற்பனாவாதக் கவிதைகள் - றோமாண்டிக் கவிதைகள் என்று கூறியபோதும் இதே வகை நிரூபணமற்ற வெற்றுவார்த்தைகளே சொல்லப்பட்டன.சுகுமாரன் கவிதை-கவிதையியல்பற்றி முன்வைத்தவை பற்றி பேசுவதற்கு முன் அவர் ஈழத்துக் கவிதைகள் தொடர்பாக கூறியவற்றை ஒட்டி சிலவற்றை கூறுவதன் மூலம் அவர் கவிதை பற்றிச்சொன்னவற்றின் போதாமைகளும் அவிழ்படலாம் என நினைக்கிறேன்.
“போருக்குள் நிகழும் வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தான் தமிழ்க்கவிதைக்குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப்படுத்தின” என்று சுகுமாரன் எழுதிய வாசகங்கள் என்னை வாய்விட்டு சிரிக்கவே வைத்தன.
“இந்தியாவே உலகில் ஆன்மா” என்று மகாயோகியும் மகாகவிஞருமான அரவிந்தர் கூறினார்.
அத்தகைய மானிடன் வாழ்ந்த இந்தியாவில், பாரதீய ஜனதா, சிவசேன இந்துத்துவம் காங்கிரஸ் ஆட்சி என்கிற பொம்மலாட்டம் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்கிற பாமரத்தனமான வெற்றுச் சுலோகங்களோடுதிமுக-அதிமுகனன்கிறகோமாளிகளின்
22
 

ஆட்சி, மோசமான சினிமா கலாசாரத்தின் கட்அவுட்டுகள் என்று ஆயிரக்கணக்கான அரசியல் நெடுங்கவிதைகளும் குறுங்கவிதைகளுமாக பிய்த்துக் கொண்டு எழுவதற்கான பசளையை, இந்த அபத்த நிலையை இந்திய அரசியல் கொண்டிருக்க இவை பற்றிய எந்தவித சுரணையுமற்று, போருக்குள் நிகழும்வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தான் தமிழ்க் க வி  ைத க் கு ள் அரசியலுக் கான இடத்தை உறுதிப்படுத்தின” என்ற சுலோகத்துக்குள் தீக்கோழிகள் போல் தலையை ஒட்டிக் கொண்டு தாம் செளகரியமாக மனித இருப்பின் கோணங்களைச் சுற்றி நவீனத்துவ பின்நவீனத்துவ கவிதைகள் எழுதுவதாகப் பாசாங்கு பண்ணும் இவர்களையிட்டு நாம் வாய்விட்டுச் சிரிக்காமல் என்ன செய்வது?
இவர்கள் இன்றுவரை இவை பற்றிவாய் திறக்காமல் இருக்க ஈழத்துக் கவிஞர்களாகிய நாம் எழுபதுகளிலேயே தமிழக அரசியல் பற்றிகாட்டமாக எழுதியுள்ளோம்.
"இந்தியச்சினிமாக்குப்பைகள் வேண்டாம் தென்னகச் சினிமா சஞ்சிகை வேண்டாம் ஈழத்தவரின் இலக்கியமெல்லாம் வாழாவெட்டியா போச்சுதே இவற்றால் சினிமாக்காரச்சிங்கிகள் தொடையேன்? செம்மல் எம்.ஜி.கொடுத்த கொடையேன்? சாண்டியல்யனாரின்சரித்திரக்கதையேன்? பாரதி, மெளனி, புதுமைப்பித்தன் போன்றவர் செய்யும் படைப்புகள் தாரும் சாரதி மாலதி என்றவர் பண்ணும் சரக்குகள் எல்லாம் நமகெதற்கிங்கே? அண்ணா பேசினார்.அடுக்கு வசனத்தில் அதனால் நாமும் வாயில் வந்ததை கன்னாபின்னாளன்றுகதைப்பதைவிடுவோம்” என்று தொடரும் இக்கவிதைகள் மரபுகவிதைவழி வந்தவை ஆயினும் அதன் அங்கதத்திற்காக இன்றும் நிலைத்துநிற்பவை.
(2) இன்றுள்ளதமிழகக் கவிஞர்களால் அரசியல்,சமூகம் சம்பந்தப்பட்ட நெடுங்கவிதைகள் அல்லது குறுங்கவிதைகள் எழுதப்படாமல் போவதற்குரிய காரணம் என்ன? கருத்தியல்வறுமையா? அப்படியாகத்தான் இருக்க வேண்டும்.எந்தவிதஇலட்சியவேட்கையுமற்றவன் அல்லது ஒரு சிறந்த கருத்தியலால் செப்பனிடப்படாதவன் அவ்வப்போது தனக்கு எட்டிய வழிகளில் சிறுசிறு வேலைகளில் நேரத்தைக் கழிப்பதுபோல், கருத்தியல் தேவையற்ற குறுங்கவிதைகளை இவர்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 25
எழுதுவதென்பது, சிறுசிறு பூஞ்செடிகளை , பூச்சட்டிகளுக்குள் “வளர்க்கின்ற” வேலையை ஒத்ததெனலாம். வீட்டை அலங்கரிக்கின்ற பூஞ்சாடிகளை விட்டு அவை வெளிவருவதில்லை. இத்தகைய கவிதைகளை எழுதிவிட்டு, “கவிதை ஓர் அனுபவத்தை காலத்தின் படிமமாக மாற்ற முற்படுகிறது. நிகழ்கால மொழியில் படிமமாக்கலை எந்தக் கவிதையியல் நிறைவேற்றுகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று அழைக்க விரும்புகிறேன்” என்று பெரிய பீடிகை வேறு. நாம் ஒன்று கேட்கிறோம். எந்தக் காலத்தில் ஒரு ஆழமானகவிதை அனுபவங்கள் காலத்தின்படிமமாக்காமல் விட்டது? அவ்வக் காலத்துக்குரிய அனுபவங்கள் அவ்வங்காலத்துக் குரிய அரசியல், சமூக, பொருளாதார, தத்துவார்த்தச் செயற்பாடுகளை கணக்கி லெடுத்த படிமமாக்கலைச் சந்தித்தே உள்ளன. ஆனால் இந்தப் படிமமாக்கல் ஸ்தாபிதமாகிவிட்ட புதுக்கவிதை மரபுக்குள் நின்றுகழலும் சுகுமாரன் நினைக்கும்கவிஞர்களிடமிருந்து வரப்போவதில்லை. அப்படி வருவதற்கு சாத்தியம் இல்லை என்பது, அவர் போருக்குள் நிகழும் வாழ்வுபற்றியஈழத்துக் கவிதைகள்தான் தமிழ்க் கவிதைக்குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப்படுத்தின” என்ற கூற்றுக்குள் தஞ்சம் புகுவதிலிருந்தே தெரிகிறது. ஆனால் மேலே கூறப்பட்ட படிமமாக்கலும் அதற்குமப்பாலான கவிதைப் பாய்ச்சலும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. அதைச் செய்தவர்யார், அது எப்படி நிகழ்ந்தது என்பதை அறிவதற்கு முதலில் இன்று கவிதை என்று அழைக்கப்படும் ஒன்று எடுத்துள்ள புதுப் பரிணாம பரிமாணங்களும் அதன் போக்குகளும் தெரிந்திருக்க வேண்டும். அது பற்றி சில சொல்லுவது அவசியம்
நான் எனது கவிதையியலும் தமிழ்க்கவிதையும் என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதினேன்.
“கவிதை என்பது மனிதன் தோன்றிய காலந்தொட்டுக் கனவாக அவனோடு மிதந்து வந்தது. அவன் மனக்குகைகளில் மிதந்த இக்கனவு, அவன் மலைக் குகைகளில் வாழ்ந்தபோது ஊமை ஒவியங்களாக குகைச் சுவர்களில் கண்சிமிட்டிற்று. அவன் பேச்சு மொழியை மிழற்றத் தொடங்கியபோது இக்கனவு வாய்மொழிக் கவிதைகளாய் (பாடல்களாய்) அவன் வாயிலிருந்து தத்தித்தத்தி ஒசையில் மிதந்தது. பின்னர் அவன் எழுத்தை அறிந்து எழுதத் தொடங்கியபோது, அவன் கனவு யாப்பமைவற்ற ஆதிப் “பொதுக்கவிதை” யாய் அல்லது ஆதிப்'புதுக்கவிதைகளாய்”சிறகடித்தன. இதன் பின்னர் இக்கவிதைகளின் உயிர்ப்பறிந்து இலக்கணம் வகுக்கப்ப்ட்டு அவற்றுக்கு யாப்பமைதியுடைய செய்யுள் வரம்புகள் என்ற அதிகாரம் போடப்பட்ட போது, கனவாக மிதந்த கவிதையின் சுதந்திரச் சிறகுகள் கொய்யப்பட்டு மண்ணோடு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

பிணிக்கப்பட்டது. அது இப்போ ஆண்டானுக்கு உட்பட்டுச் சேவகம் செய்யத் தொடங்கிற்று”
இந்தக் கட்டுப்பாட்டு நிலையிலிருந்து மீண்டும் கவிதை விடுதலை பெறவேண்டும். மரபுக் கவிதை மட்டுந்தான் செய்யுள் விதிக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கவில்லை. அதை உடைப்ப்தாக நினைத்துக் கொள்ளும் புதுக்கவிதையும் அது வகுத்துக் கொண்டிருக்கும் ஸ்தாபகமாகிவிட்ட புதுவிதிகளுள் பரிதாபகரமாகச் சிறைப்பட்டிருப்பது இன்று புதுக்கவிதை எழுதும் பலருக்குப் புரிவதில்லை. இந்தப் புரிதலே கவிதைக்கு நேர்ந்துள்ள சிறையை உடைத்தெறியும் ஆயுதமாகும்.இந்த உடைப்பே கவிதையை ஆதிப்பொதுக் கவிதையாக அதேநேரத்தில் இன்றைய விஞ்ஞான, தத்துவார்த்த, ஆத்மார்த்த ஊட்டம் பெற்றவோர் பெருஞ்சக்தியாக, புதுப்பரிணாம பரிமாணங்களைத் தோற்றுவிக்கும். சூறையாக மேலெழச் செய்யும். இந்த எழுச்சி இன்று கட்டிக்காக்கப்பட்டுக் கொண்டுவரும் ஏனைய இலக்கிய உருவங்களையும் தாமாகவே புதுவித உருவங்களுக்கும் உருவக் கலப்புகளுக்கும் தளமாற்றங்களுக்கும் இட்டுச்செல்லும்,
வானத்தில் பட்டமேற்றும் பருந்து, விட்டுவிட்டு இன்னிசைக்கும் குயில், மெளனித்து மெல்லலையால் மொழிபேசும் வாவி என்று எம்முன் விரியும் ஒவ்வொரு காட்சியும் ஏற்படுத்தும் கலைத்துவ உணர்வை, கவிதையில் எவராலும் பூரணமாக வெளிப்படுத்திவிட முடியாது. அது எப்பொழுதும் சொற்பதங் கடந்ததாகவே நிற்கிறது. இந்நிலையில் கவிதையில் ஏற்படும் கவிஞன், மொழிக்குள் அகப்படாது நழுவி நழுவி தப்பிச் செல்லும் கலை உணர்வை, மொழிக்குள் கொண்டுவர பல யுக்திகளைக் கையாள்கிறான். மரபுவழி வந்த பழைய யாப்போசை உத்திகள் பன்னூற்றாண்டு காலமாக பாவிக்கப்பட்டு பாவிக்கப்பட்டு செல்லாக் காசாகிவிட்டதால் முதலில் இவை அவனால் ஒதுக்கப்பட வேண்டியவை ஆகின்றன. அதனால்தான் இன்றைய ஈழத்துக் கவிஞன் பின்வருமாறுபாடுகிறான்.
தற்போதைக்கு உன்னைச் சூழ்ந்து விலங்கிடும் பழஞ்சொற்படைத்தளத்தை தகர்த்தெறி! ஒசை அவி பாசையின் பின்பதுங்கு
இதிலிருந்து புலப்படுவது என்னவெனில், சொற்பதங் கடந்து விரியும் கவிதை உணர்வின் ஒர் அற்பமாவது நமது கவிதைக்குள் அகப்பட வேண்டுமானால் சுரத்துக்கெட்ட பழஞ்சொற் கையாளுகையை, அதன் வழிவரும் மரபைத் தூக்கியெறிய வேண்டும் என்பதே.நம்மை விட்டு நழுவிஓடும் கவித்துவ
23

Page 26
உார்வ மொழியில் வீழ்த்த வேண்டுமாயின் புதிய கருத்தியல்கொண்டபோராளிச்சொற்களை பயன்படுத்த வேண்டும். இந்தப் பயன்படுத்தலானது நமது கவிதையியலிலும் பெருமாற்றத்தை ஏற்படுத்தும்.அதாவது பழைய செய்யுள் மரபைத் தூக்கியெறிவதோடு மட்டுமல்லாது அதற்கெதிராக எழுந்த புதுக்கவிதையையும் அது ஸ்தாபகமாக்கிவிட்ட புதுக்கவிதை மரபையும் தூக்கியெறிகிறது.இந்நிலையில் கவிதையானது பெரும் மாற்றத்துக்குரிய யுக சந்தியில் நிற்கிறது.
இப்படி இதை நான் வெறும் abstract ஆக சுகுமார் சொன்னதுபோல் விட்டுவிடப் போவதில்லை.
அப்படியானால் கவிதை ஓர் இலக்கிய ஊடகமாக எப்படி செயல்படுகிறது? கவிதை என்பது ஓர் ஊடகமாக இயங்கும் போது அது தன் கருப்பொருளாகக் கொள்வது எதனை? மனித உணர்வின் சிறுபொறி கவிதை என்ற ஊடகத்தைத் தரிக்கிறது. உதாரணமாக பாரதியின் அக்கினிக்குஞ்சுக்கவிதையைக்காட்டலாம்.அதேவேளை ஈழத்துக் கவிஞர் 'மஹாகவி” எழுதிய அகலிகை என்ற கவிதை அகலிகையின் கதையைகவிதைஎன்றஊடகத்தில் விபரிக்கிறது.அப்படியெனில் அதன் கவிதைப்பெறுமானம் என்பது படித்த பின்னர் வடிந்துவரும் அதன் உணர்வுக் குவிப்பா?இவ்வாறேயுதுமைப்பித்தன் அகலிகையைப்பற்றி சாபவிமோசனம்என்றசிறுகதையைஎழுதியுள்ளார்.அதில் கிளறப்படும் கவித்துவ உணர்வு, மஹாகவி கவிதையில் எழுதிய அகலிகையில் கிளறப்படும் கவித்துவ உணர்வைவிட மேலோங்கி நிற்கிறதென்றால் இதில் எது கவிதை? மஹாகவியின் செய்யுளில் எழுதப்பட்டது கவிதையா? புதுமைப்பித்தன் சிறுகதையில் எழுதியது கவிதையா? அப்படியெனில் எல்லா இலக்கிய ஊடகங்களின் மூலம் இறுதியில் வடிந்து வருவது கவிதையா? இதை இன்னும் ஆழமாகத் தொடர்ந்தால் கவிதை என்று நாம் கற்பனைபண்ணிக்கொண்டிருக்கும் ஒன்று இன்மைப் பொருளாகி மிதக்கத் தொடங்கிவிடும். எனவே இங்கே கவிதை என்றால் என்ன என்ற எனது ஆரம்பக் கேள்விக்கான பதில் ஒருவரைவுக்குட்படாத, விரிவுக்குரியதான (elastic) ஒன்றாக நீண்டுகொண்டே போகும்பாரதிஎன்றுதமிழில்யாப்புக்குப்பட்டகவிதையைக் கடந்துவசன கவிதை என்றஒன்றின் அறிமுகத்தின்மூலம் கவிதையை அதன் செய்யுள் விலங்குகளில் இருந்து விடுவித்தானே அன்றிலிருந்து கவிதை என்ற விடுதலை “ஊடகம்" தரிசனம் மிக்க கவிஞர்களிடம் ஏனைய ஊடகங்களின் உந்துசக்தியாகவும் ஊட்டப்பொருளாகவும் அதேவேளை ஏனைய ஊடகங்களேடான ஊடாடத்தால், மோதலால்இதுதன்மரபுக்கவிதை"புதுக்கவிதை”என்ற உருவங்களை விட்டெறிந்துஎல்லா ஊடகங்களுக்குள்ளும் தான் புகுந்துகொண்டு அவற்றையும் மாற்றி தன்னையும் மாற்றி விரிந்து கொண்டிருக்கிறது, இப்போ மேலை
24

STG156fi NOVELINPOETRY Firpg60Gulls' GL படைப்புகள் வந்துவிட்டன.
இச்சந்தர்ப்பத்தில் தான் நாம் மீண்டும் தமிழ் நாட்டுக்குத் திரும்பிவருகிறோம்.
அரசியலுக்கான இடத்தை உறுதிப்படுத்த ஈழத்துக் கவிதையை நோக்கி ஒடுவதற்கு முன்னரே 'சிவகாமி அம்மாள் தனது சபதத்தை நிறைவேற்றி விட்டாளா?” என்ற அதிரவைக்கும் கேள்வியோடு அரசியல், சமூகம், கலை, கலாசாரம் ஆகிய்வற்றையெல்லாம் கணக்கி லெடுத்த கவிதையாகவும் நாவலாகவும் அங்கத நாடகமாகவும் ஒரு நூல் தமிழ் நாட்டிலிருந்துதான் வெளிவந்தது. அதுசுராவின் “ஜே.ஜே சில குறிப்புகள்” என்று எவருக்கும் சொல்லாமலே தெரிந்துவிடும்.
பெரிய சங்கீதம் அண்டவெளியில் வெகுநேரம் கவிழ்ந்திருந்துகீழ்ஸ்தாயியில்தேய்ந்துதேய்ந்துமறைந்தபின் கிடைக்கும் அனுமதியின்பரவசம் இடையறாது நிரம்பிக் கொண்டிருக்க”என்றும்நம்மீதுஎவ்விதபிரயாசையும்இன்றி. சாபத்தின்ஏவல்போல்ஒட்டிக்கொள்ளும்பொய்மையைச்சதா நம் மூளையிலிருந்து பிடுங்கிவிட்டெறிந்த வண்ணம் யாத்திரைதொடருதல்,உண்மைதேடுதல்,என்றுஇதற்குத்தான்
பொய்தவிர்த்தலுமே பொய்மை இயற்கையாக நிரந்தரமாக நிரந்தரமா ஊடுருவச் சாத்தியமற்ற நிலை ஏற்படும் போது மனங்கொள்ளும் பரவசத்தின் பெயர்தான் கண்டடைதல் என்றும்பக்கத்துக்குப்பக்கம்கவிதையாகவும் விசாரமாகவும் விமர்சனமாகவும் அரசியலாகவும் விரிந்துகொண்டிருக்கும் இந்நூல் வகைதான் எழுத்து வகைதான் இனிவரும் இலக்கியமாக விரியும் ஒவ்வொரு படைப்புக்குள்ளும் கவித்துவத்தை ஊடாட விட்டு தன்னைப் போஷித்தவறே கவிதையாக விசாலிப்படையும் இவ்வகையே இனிவரும்
இத்தகைய நகர்வை நோக்கித்தான் பிரேதா பிரேதனின் கவிதைகளும் நிற்கின்றன. ஆனால் அவை தம் மூடுண்ட பின் நவீனத்துவத்தை விட்டு இன்றைய INTEGRAL பின் நவீனத்துவத்திற்கு வரவேண்டும். அது தான் அவர்களது அரசியலுக்குரிய இடமாகும். இதையே நான் இ. ரா. வெங்கடாசலபதியால் வெளியிடப்பட்ட புதுமைப்பித்தனின் அன்னையிட்ட தீ பற்றி சரிநிகளில் (apri07-1999) குறிப்பிட்டேன்:
கவிதை என்பதும் கலைச்சிந்தனை வடிவங்களில் ஒன்று. “எல்லாக்கலைச் சிந்தனை வடிவங்களிலும் கவிதை இருப்பதைக் காணலாம். அதுகதையாக நீளலாம் கட்டுரையாக விரியலாம் அல்லது கவிதை நாம் நினைக்கின்ற சிறிய வடிவினதாகவும் அமையலாம். அந்தவிதத்தில் புதுமைப்பித்தனின் கலைச்சிருஷ்டிகளில் கவிதை வழிவதைக் காணலாம்.சுந்தரராமசாமிபசுவையா என்ற பேரில் எழுதுகிற கவிதைகளைவிட அவரது கதைகளில்,கட்டுரைகளில் காணப்படும் கவிதையோட்டம் சிறப்பானது என்பதை விளங்கிக் கொண்டால் நான் கவிதைபற்றிக் கூறுவதை விளங்கிக்கொள்ளலாம்.”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 27
த்ெதளையிலிருந்து பஸ்ஸில் புறப்பட்ட புதுமை நாடன் அஞ்சுலாம்பு சந்தியில் இறங்கி நின்றார். செட்டித் தெருவுக்குள் நுழைய வேண்டும். அதற்காக சந்தியைக் கடக்க வேண்டும். சந்தி, இடக்கு, முடக்கு என்று வாகன நெரிசலில் நிறைந்து வழிகிறது. கொஞ்சம் குருட்டுத்தனமாகக் குறுக்கே நுழைந்தால், தவளை மாதிரி நசுக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடுவான்கள். நாடன் ரொம்பவும் முன் ஜாக்கிரதைக்காரர். இருந்தாலும், இவ்வளவு வாகனங்களும் என்றைக்குப்போய் முடிவது.? இவர் என்றைக்கு சந்தியைக் கடந்து, செட்டித்தெருவுக்குள் நுழைவது..?
“வாழ்க்கையில் நான் சகித்துக் கொள்ளாத பொறுமையா.?” புதுமை நாடன் தனது கைப்பையைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, வேட்டியைச் சரி செய்தபடி, பேவ்மன்டில் நின்றார். வீதியைக் கடக்கவிருக்கும் கூட்டம் இவரது பின்னால், நின்றது. அங்கே எவருக்குமே குறுக்கே நுழைவதற்குப் பயம். தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தார்கள். எங்கிருந்தோ வேகமாக வந்த ஒரு பெண் திடீரெனக் கையை நீட்டிக்கொண்டு சாரையைப் போல சரேலென்று வீதியில் குறுக்கே இறங்கி நடந்தாள். சீறி வந்த வாகனங்கள் கப்சிப் என நின்றன. அந்த தைரியசாலிப் பெண் தலைமை கொடுக்கவும், அவள் பின்னே மக்கள் கூட்டம் பாதுகாப்பாகப்பின் தொடர்ந்தது.
வாழ்க்கையில் - சமுதாயத்தில் யாரோ ஒரு தைரியசாலி வீதியைக் கடக்கக்கூடதலைமை கொடுக்க வேண்டும். அந்த "யாரோவை’ ‘முன்னுக்கு வர முடியாததுகள், தங்களது தேவைக்குக் கபடத்தனமாக உபயோகித்துக்கொள்ளவேண்டும். “என்ன உலகமடா.” புதுமை நாடன் அந்த நெருக்கடியிலும் சமுதாயத்தின் கபடத்தனத்தை வைது கொண்டே செட்டித்தெருவுக்குள் நுழைந்தார்.
நுழைவாயிலிருந்து தொங்கலில் இருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலை வரை எல்லாத் தெரிந்த கடைகளுக்கும் அழைப்பிதழ்கள் கொடுத்து முடிந்தது. புத்தகசாலையைத் திரும்பிப் பார்த்தார். "மகராசன் எப்போதும் இருபது, முப்பது பிரதிகள் வாங்குவார். தங்கமான மனுசன். இவர் மாதிரி நாலைஞ்சு புத்தகக் கடைக்காரர்கள் இருந்தால், தைரியமாகத் தொடர்ந்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

புத்தகம் போடலாம். புத்தகசாலை சந்தியிலிருந்து சென் அந்தனிஸ்தேவாலயம் வரை கொடுத்துமுடிந்தது. நாடன் சுறுசுறுப்பாக ஜெம்பட்டா வீதிக்குள் நுழைந்து, புதுச் செட்டித் தெருவைக் கடந்து, பாபர் வீதியில் இறங்கி, இளமையில் எம்.ஜியாரின் அடிமைப்பெண்பார்க்க வந்து அடிபட்ட கிங்ஸ்லி தியேட்டரின் இனிமை நினைவையும் மீட்டிக்கொண்டு ஆமர் வீதிசந்தியில் போய் நின்றார்.
அந்தச் சந்தியில் நின்றுகொண்டு, இந்த பக்கம் திரும்பி, கொட்டாஞ்சேனையைப் பார்ப்பதா.? அல்லது கிரேன்ட்பாஸ் வீதியை முடித்துக் கொண்டு மீண்டும் மெசெஞ்ஜர் வீதி, அப்துல் ஜபார் மாவத்தையைப் பார்த்த பிறகு பஞ்சிகாவத்தையைப் பார்ப்பதா..? என்று யோசித்தவர் “மெசெஞ்சர் வீதிக்கே போய் வாணி விலாசில் பகல் சாப்பாட்ட முடிச்சுக்கிட்டு. வேணா. வேணா. வயித்த நெறைச்சா நடக்க முடியாது.” என்று வாய்க்குள் பேசிக் கொண்டு, கிரேன்ட்பாஸ் வீதியை நோக்கினார். வீதி கொஞ்சம் ஏற்றம். சின்ன வயதில் நடந்த நடையை ஒப்பிட்டு, வயதுபோய்விட்டதை ஏற்றுக் கொண்டார். நாடனுக்கு 76.1
நெற்றியில் கொப்பளித்து வடிந்த உப்பு நீர் கண்களுக்குள் இறங்கி எரிவை உண்டாக்கியது. வேட்டிக்குள் செருகியிருந்த கை லேஞ்சியை உருவி முகத்தை நன்றாகத் தேய்த்துத் துடைத்தார். வீரகேசரிக்குள் நுழைந்து, விசயத்தை முடித்துக் கொண்டு, பலாமரத்துச் சந்தி வரை சென்று, மீண்டும் கிரேன்ட்பாஸ் வழியாக வந்து, மெசெஞ்சர் வீதிக்குள் நுழைந்தார். சும்மாயிருக்காத வாய் முணுமுணுத்தது. "இவர் ஆடாத ஆட்டமா? இவரும் ஆடி அடங்கிட்டாரு. என்று மோசம் போன ஜனாதிபதியின் நினைவுத் தூபியைக் கடந்து சென்றார்.
நேரம் பகல் ஒரு மணி. உச்சி வெய்யில். பாவம் புதுமை நாடன். ரொம்பவும் களைத்து விட்டார். வயது 76ஜத்தாண்டியிருந்தாலும்,26க்குள்ள இளமை முறுக்கு இன்னும் அப்படியே இருக்கிறது. வேகமாக நடந்தவர் தெம்பிலிவண்டிக்காரனைக் கண்டதும் நின்றார். பெரிய சைஸைக் காட்டி வெட்டச் சொன்னார். ஆடு, மாடுகள் முகம் அசையாமல் ஒரே மூச்சாக நீராகாரம் அருந்துவதே ஒரு அழகு. நாடனும் தெம்பிலியை வாயில் வைத்தவர் அண்ணாந்தபடி உறிஞ்சி முடித்தார். ஒரு ஏப்பத்தை
25

Page 28
விட்டவர்,தெம்பிலியை வெட்டித்தரும்படி கேட்க, அவனும் இரண்டாகப் பிளந்து, ஒரத்தில் தெம்பிலிகரண்டியையும் சீவிக்கொடுத்தான்.இரண்டு சிரட்டையிலும்பால் அப்பம் போல 'வழுக்கை இருந்தது. தெம்பிலி கரண்டியால் வழித்து. வழித்துத். தின்று இன்னுமொரு ஏப்பத்தை விட்டவர், காசை நீட்டினார். “முருகா. இந்த நாடு இன்னும் மோசம் போகல்ல. 25 ரூவாயில பசியாறிப் போச்சே."வாயைத் துடைத்துக்கொண்டு, மனதுக்குள் நகைத்தபடி நடந்தார்.
நாடன், அப்துல் ஜபார் மாவத்தையை முடித்துக் கொண்டு, பழைய சோனகத்தெருவழியாக டாம் வீதிக்கு வந்துவிட்டார். மீண்டும் அஞ்சு லாம்பு சந்தி வழியாக பீப்பள்ஸ் பார்க்கைக் கடந்து, புதிய சுயதொழில் சந்தைக்குள் நுழைந்து, ஒல்கொட்மாவத்தை வழியாகக் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் வந்து நின்றார். அவர் நின்ற இடம் இந்த நாட்டின் அதிபிரசித்தி பெற்ற பிக்கட்டிங் ஸ்தலம் என்று நினைவூட்டியது. பிக்கட்டிங் விவகாரங்களில் மனதை நுழைக்கும் முன்பு மொரட்டுவ பஸ் வந்து நின்றது. நாடன் வெள்ளவத்தையை நோக்கி பயணித்தார். விழா மண்டபத்துக்குரிய காசைக் கட்டிவிட்டு, "அப்பாட்ா.” என்று சாப்பாட்டுக் கடையை நோக்கி நடந்தார்.
“நாடா..? சம்பாவா..?”
“நாடு.”
'மீன்கோழி.?ரால்நண்டு.? கணவாய்ஆடு.?” கவிதை நடையில் ஜோடிக் கேள்விகள்.
“கணவாய்.
26
 

முதல் ரவுன்டை முடித்தவர்; இரண்டா வது ரவுன்டில் இறங்கினார். இரண்டாவது ரவுன்டில் எல்லாமே தாராளமாக இலையில் விழும். இரால் குழம்பு மட்டும் இரண்டொரு துண்டுகளோடு அளவுக் கிண்ணத்தில் வரும்.
கார சாரமான சாப்பாடு. மூக்கைச் சீந்தி தெருவில் போட்டுவிட்டு, விரல்களை வேட்டியில் துடைத்துக்கொண்டு நின்ற ஒரு சகபாடியை அருவருப்போடு பார்த்த நாடன், நண்பனின் வீட்டையடைந்தார். நாடன் இன்றைய ஒருநாள் பொழுதில் இன்விடேசன் வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில் நிம்மதியடைந்தார். “இன்விடேசன்கள ஆளைச் சந்திச்சு நேரடியாக் கையில குடுத்தாத்தான். நிகழ்ச்சிக்கு வருவாங்க. போஸ்ட்ல அனுப்புற சங்கதி சரிவராது.” இம்முறை புத்தக வெளியீட்டுக்கு முன்னூறு அழைப்பிதழ்கள் அச்சிட்டிருந்தார். அழகான கடதாசி, அலங்காரம் செய்த கவர், வசீகரமான புதிய எழுத்துக்களில் வரிகள்.
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார். பாரதியின் கவிதையை அழைப்பிதழின் மகுடமாக அச்சிட்டிருந்தார்.
“இன்விடேசன் எப்படியிருக்கு.?” என்று பெருமையோடு நேற்று மனைவியிடம் காட்டியபோது, பரமேஸ்வரிஒரு“லுக்கு”விட்டாள். அந்த லுக், "இதோட புத்தகம் வெளியிடுற வேலைய நிறுத்திக் கொள்ளுங்க." என்பதைப் போல் தெரிந்தது. மனைவியின் வார்த்தை மீண்டும் அவர் முதுகைத் தட்டியது. “பிறர் ஈன
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 29
நிலைகண்டு துள்ளித் துள்ளித்தான் குடும்பம் இந்த நெலைமைக்குப் போய்க்கெடக்குது.”
பாவம் மனைவி பரமேஸ்வரி. புதுமை நாடனின் பத்து புத்தக வெளியீடுகளுக்கும் நகைகளைக் கழற்றிக் கழற்றிக் கொடுத்தாள். “புத்தகம் விற்கும் பணத்தில் அடைவு வைத்த நகைகள் மீட்டுத் தரப்படும்.” என்று அவர் கொடுத்த பத்துவாக்குறுதிகளும் காற்றில் பறந்து போன கதைகளாய் முடிந்திருந்தன. இந்த பதினோராவது புத்தக வெளியீட்டிலும் பரமேஸ்வரி அம்மாளுக்கு நம்பிக்கை கிடையாது.
வர்த்தக நோக்கம் இல்லாத ஒரு எழுத்துச் சிந்தனையாளனின் குடும்பம் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொள்ளுவதுண்டு. சில புகழ் பூத்த படைப்பாளர்களின் குடும்பங்கள் எல்லாம் ஒன்றும் இல்லாது போன கதைகளையும் நாடன் நன்கு அறிவார். மனைவி, குடும்பம், பிள்ளைகள் என்ற பொறுப்புக்களில் தலையிடாமல், பிள்ளைகளின் கல்வி, கலியாணம் என்ற கடமைகள் பற்றி கவலைப்படாமல், எல்லா சுமைகளையும் மனைவியின் தலையில் கட்டிவிட்டு, இலக்கியம்,எழுத்து, புத்தகம், கூட்டம் என்று இன்றுவரை திரிந்து கொண்டிருக்கும் அவரது மனம் அடிக்கடி சுடும். பரமேஸ்வரியின் பாஷையில் “சமுதாயத்தை நிமிர்த்துவதற்காக வீட்டை மறந்து திரியும் மனுசன்.” சில வீடுகளில் சில இலக்கியவாதிகள் விளையாட்டுப் பிள்ளைகள் மாதிரி.
米 உள் வீட்டு விசயங்கள் எவ்வளவு ஒட்டையாக இருந்தாலும், புதுமை நாடன் இந்த நாட்டின் புகழ் பூத்த ஒரு படைப்பாளி. அவரது பதினோராவது வெளியீடான “மீண்டும் பனை முளைக்கும்.” என்ற நெடுங் கதை அடுத்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப் படவுள்ளது. இவரது இலக்கிய வாழ்க்கையில்,இந்த நெடுங் கதை ஒரு முத்திரைப்படைப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது.
புதுமை நாடனின் பெறுமதிமிக்க படைப்புக்கள் எவற்றுக்கும் ஏனோ இன்றுவரை தேசிய ரீதியில் இலக்கிய மண்டலத்தால் எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை. விருது பற்றி புதுமை நாடனும் எதிர்பார்த்த தில்லை. அலட்டிக் கொண்டதுமில்லை. ஆனால், ஒரு தேசிய மண்டலத்தின் அங்கீகாரம் கூட இந்த பெறுமதி நிறைந்த படைப்பாளனுக்கு கிடைக்கவில்லை என்பதுபற்றி அவரது மனதுக்குள் ஒரு சிறு வலி இருந்து வருவது மட்டும் உண்மை.
அவரைப் பொறுத்தமட்டில் இந்த விருதுக் குழு, தெரிவுக் குழு எல்லாம் மோசடிக் கும்பல்கள். ஊழல் இழிசனர்கள். குடிக் கூத்துக்கும், கமிசன், கைமாற்றுக்கும் கீழே கிடப்பவர்கள். ஆரம்ப காலத்து மண்டலக் குழு முதல் இன்று வரையிலுள்ள,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

எல்லா இலக்கியக் கொம்பன்களும் பாரபட்சம், கோஷ்டி உறவுகள் என்ற ஈனச் செயல்களைப் புரிந்து வருவதால், நாடன் தனது படைப்புக்களை இந்த மண்டலத்துக்கு அனுப்பி நட்டப்படுவதற்கு விரும்புவதில்லை.
நாடன் இந்த மண்டலக்காரர்களை கொஞ்சம்
ஏளனமாக நினைத்துப் பார்த்தார். இவர்கள் படைப்புக்களைத் தரப்படுத்துவதற் குக்கூட தகுதியற்றவர்கள். சென்ற வருடம் சாம்பார் செய்வது எப்படி? என்ற நூலுக்கு விருது வழங்கியிருந்தார்கள். அதற்கு முந்திய வருடத்தில் “வெங்காய சட்னி" என்ற நூலுக்கும் விருது வழங்கியிருந்தார்கள். சல சலப்பு கிளம்பியபோது, “மனிதனின் சாம்பாரும் சட்னியும், ஒருவகை உணவு பற்றிய ஆய்வு இலக்கியங்களாகும். அதற்காகவே மண்டலப்பரிசுகள் வழங்கப்ப்டுகின்றன.” என்று விருதுத் தெரிவுக் கோஷ்டிகள் நியாயப்படுத்தியிருந்தார்கள்.
இந்த "சாம்பார் செய்வது எப்படி..?” என்ற நூலுக்குக்கூட நமது பேராசிரியர்கள் ஆய்வுரைகள், நயவுரைகள் என வியந்துரைகள் ஆற்றி மேடையில் சக்கை போடு போட்டார்கள். அவர்களுக்கென்ன. ஒரு படைப்பாளியின் வெளியீட்டு நிகழ்ச்சியில் எத்தனை புத்தகங்கள் விற்பனையாகின என்பதை அறிந்து கொள்வதில் அக்கறைப் பட மாட்டார்கள். மேடையில் விளாசித்தள்ளுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலே அவர் களுக்குப்போதுமானது. பாவம். அவர்களும் இந்த படைப்பாளிகளைப் போன்று மேனியா பசி கொண்டவர்களே.
米
நாடன், அடுத்த வாரத்தில் நடக்கவிருக்கும் புத்தக வெளியீட்டு விழா சம்பந்தமாகவே நினைத்துக் கொண்டிருந்தார்.இன்றையடிவி,டிவிடி காலத்தில் எவர் புத்தகம் வாசிக்கின்றனர். புத்தகம் வாசிக்கும் கலாச்சாரம் அழிந்துபோய்விட்டது.
இலக்கியப் படைப்பாளிகளுக்கு கை கொடுக்க இன்று சமூகத்தில் எவரும் இல்லை. இந்தச் சூழலில் புத்தகம் எழுதி விற்பனை செய்ய முயல்வது பெரும் சவாலாகும். ஊர்க்காரனோ அல்லது சொந்த சமூகத்தில் ஒருவனோ புத்தகம் எழுதி வெளியீடு செய்தால், அதிலொரு ஐந்து புத்தகமாவது விற்று, ஊக்கமளிக்கும் பண்பாடு எவருக்கும் கிடையாது. நாடன் இந்தத் துயர நினைவுகளை பலவந்தமாக மறக்கடித்துவிட்டு, புத்தக வெளியீட்டுக்கான பட்ஜட்டை எழுதத் தொடங்கினார்.
விழா மண்டபத்துக்கு ஆறாயிரத்து ஐந்நூறு, . எதிர்பார்க்கும் கூட்டம் நூற்றைம்பது பேர். நூற்றைம்பது வடைக்கு இருபதுரூபாய்படிமூவாயிரம். கோப்பியோ, கூல் ட்ரிங்ஸோ முப்பது ரூபாய்போகும். அதற்கு நாலாயிரத்து ஐநூறு. அழைப்பிதழ், பஸ் பயணம், எல்லாமாக
27

Page 30
இரண்டாயிரத்தைந்நூறு. வரவேற்புரை, வெளியீட்டுரை, இரண்டு விமர்சன உரை, தலைமையுரை ஆகிய ஐந்து உறுப்பினர்களுக்கு, ஐந்து புத்தகங்கள் அன்பளிப்பு. முன்னூறு ரூபாய்படி அதிலும் ஆயிரத்து ஐநூறு ரூபாய். மொத்தம் பதினெட்டாயிரம் வெளியீட்டுச் செலவு.
a நாடனுக்கு தலைசுற்றியது. பட்ஜட்டை மீளாய்வு செய்தார். வடையை வெட்ட வேண்டும். வடையை வெட்டினால் மூவாயிரம் தேறும். கோப்பியை வெட்டிபால் பக்கெட் மாத்திரம் கொடுத்தால்.ஆயிரம்தேறும். அப்படிப் பார்த்தாலும் பதினாலாயிரம் செலவாகிறது. இந்த முறை நூறு புத்தகமாவது விற்கப்பட்டால், அன்பளிப்போடு ஐம்பதாயிரமாவது கிண்ட்க்கலாம். பரமேஸ்வரியின் pങ്ങള நட்டுக்கள் சிலவற்றை மீட்கலாம்.
மீண்டும் புத்தகம் வெளியிடும் செலவுகள் பற்றி
நாடன் மனதைப் போட்டு குடைந்தார். இருநூறு பக்கத்தில் ஐந்நூறு பிரதிகள் அடித்தால், எண்பத்தையாயிரம், தொண்ணுாறாயிரம் என்று அச்சக செலவு பயமுறுத்துகிறது. புத்தக வியாபாரிக்கு 35 வீதம் கமிஷன் கொடுக்க வேண்டும். வெளியீட்டுமேடையிலும் விபரீத விளையாட் டுக்கள் நடக்கின்றன. முன்னூறு ரூபாய் புத்தகத்தை வாங்க வரும் நண்பர்கள், நூறு ரூபாவையும் கவருக்குள் வைப்பதுண்டு. சில விஷமிகள் 50 ரூபாவையும் வைப்பதுண்டு. இதுவும் ஒரு வகை பகிடிவதை. சிறப்பு விருந்தினர்கள் கூட முன்னூறு ரூபாயோடு நின்று கொள்வதுண்டு. புத்தக வெளியீடு என்பது ஒரு விஷப்பரீட்சை, நடப்பது நடக்கட்டும். நான் வியாபாரி இல்லையே.? புத்தகத்தை விற்று அரிசி வாங்கவாபிழைப்பு நடத்துகிறேன்.? என்று பிதற்றியபடி புதுமை நாடன் பட்ஜட் புத்தகத்தை மூடிவிட்டு படுக்கைக்குச் சென்றார்.
-விழா மேடை.
இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி. கும்பம், குத்துவிளக்கு. வரவேற்பு.
ஐயாயிரமாவது கொடுக்கக்கூடியவர் கள் என்போரை விளக்கேற்றுவதற்கு தொகுப்பாளர் மிகவும் கெளரவமாகப் பெயர் கூறி அழைத்தார். விளக்கேற்றும் வைபவம் நிறைவேறியது. நிகழ்ச்சிநிரல்படி வரவேற்புரை, தலைமையுரை, வெளியீட்டுரை நடந்த பின்னர் ஒரு ஆய்வாளர் பேசி முடிக்க சிறப்புப் பிரதிகள் வழங்கும் வைபவம் நடைபெற்றது. அடுத்து வாழ்த்துரை அதற்கடுத்து கருத்துரையும் நிகழ்ந்து முடிந்தது.
சரியாக தேநீர் நிகழ்ச்சியின் போது திடீரென இருபது இருபத்தைந்து பேர் மண்டபத்துக்குள் நுழைந்தார்கள். மேடையில் இருக்கும் நாடனுக்கு மன மகிழ்ச்சி பொங்கியது. “இன்னும் இருபது புத்தகமாவது போகும்.”உள்மனம் சிரித்துக்கொண்டது. வந்த கூட்டம் வயலுக்குள் இறங்கும் கிளிக் கூட்டத்தைப் போன்றது
28

என்று நாடன் அறியார். கிளிகள் பசியிாறிபறந்துவிடும். வந்த கூட்டம் பால் பெக்கட்டுக்குப் பிறகு மெதுவாக வெளியேறி விட்டது. இது அந்த மண்டபத்தில் நடைபெறும் வழமையான ஒரு தாக்குதல்.
இரண்டாவது ஆய்வாளர் முன்னவரை விட மிகவும் சுவாரஷ்யமாகப் பேசி சபையைக் கலகலப்பாக்கினார். நாடனின் மனம் எவர் பேச்சையும் ரசிக்காமல் திக் திக் என்று அடித்துக்கொண்டிருந்தது. ஏற்புரை நேரமும் வந்தது. தனது படைப்பிலக்கிய நோக்கம் பற்றி விளக்கிய நாடன், ஆய்வாளர்களின் கருத்துக்குப் பதில் கூறி நன்றியுரையையும் அவரே முடித்துக் கைகூப்பினார். சபைகலைந்தது. தட்டில் கவர் கூடுகள், காசுகள் நிறைந்திருந்தன. நாடனின் மருமகப்பிள்ளை எல்லாவற்றையும் சேகரித்து உறைக்குள் நுழைத்தான்.
நாடன் மேடையை விட்டு இறங்கி சபையில் கலந்தார். சிலர் நாடனின் முதுகைத் தட்டினார்கள். சிலர் கை குலுக்கி “வாயாரம்” பாடினார்கள். மண்டபம் வெறுமையாகியது. பால் பெக்கெட் பரிமாறியவர்கள், பெனர் கட்டியவர்கள் யாவரும் ஒதுங்கி நின்றார்கள். அவர்களுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தனுப்பினார் நாடன். 'தம்பி. எத்தன புத்தகம் மிஞ்சியிருக்கு.?” “இருநூத்தி அறுவது.” "அப்போ நாப்பது புத்தகங்களே போயிருக்கு. பக்கத்து மண்டபத்திலும் புத்தக வெளியீடு நடந்திருக்கு. தேதி மாறியிருந்தா,ரெண்டு பேருக்கும் கலெக்ஷன் ஒருமாதிரி கெடைச்சிருக்கும்.” “பால் பெக்கெட் மிஞ்சி இருக்கு. ரிட்டன் எடுக்க மாட்டாங்களாம்.”
புதுமை நாடனும், மருமகனும் நண்பரின் வீட்டுக்கு ஆட்டோவைத்திருப்பினார்கள். மருமகன் ஆட்டோவுக்கு முன்னுறுகொடுத்தான்.
அறைக்குள் நுழைந்த நாடன், நண்பனின் கட்டிலில் காசைக் கொட்டி எண்ணிப்பார்த்தார். மொத்த கலெக்ஷன் பதினேழாயிரம். ஐந்து பேர்கள் மட்டுமே கவருக்குள் மயில் நோட்டு வைத்திருந்தார்கள். இந்த ஐயாயிரத்தோடு முன்னூறும். நூறு ரூபாய்க்காரர்களினதும் பன்னிரண்டாயிரம். யாரோ நாசமாப்போவான்கள் மூணு பேர் ஐம்பது ஐம்பது ரூபாய் வைத்திருந்தான்கள்.” “எனக்கு இப்படியான எதிரிகளா.." நாடன் மறு வழியிலும் யோசித்தார். “வசதியில் லாதவர்களும் புத்தகம் வாங்கியிருக் கலாம்தானே.” நாடன் அமைதியானார். இருந்தாலும் அவரது உடலும், மனமும் கொதித்துக் குமுறியது. பதினாலாயிரம் செலவு போக, மூவாயிரத்தைத் தலையில் மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்குப் போவதா.? எப்படி பரமேஸ்வரியின் முகத்தில் விழிப்பது.? எப்படி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 31
விசயத்தைப் போடுவது.? நாடன் தலைமயிரைப்போட்டு
பிய்த்துக் கொண்டிருந்தார். கூட இருந்தே குழி
தோண்டியது போல மருமகன் செல்போனைத் தட்டி
மாமியிடம் வந்த உடனேயே நியுஸ் அனுப்பிவிட்டான். Xk
. மறுநாள் விடிந்தது. "வீரமும் களத்தே போக்கி. வெறுங்கையோடிலங்கைப்புக்கான்.” என்ற ராவணன் நிலைமையோடு புதுமை நாடன் வீட்டுக்குச் சென்றார். அங்கே இதுவரை காலமும் நடந்திராத ஒரு சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாற்பது வருசமாக அவரது பிரத்தியேக காரியாலயமாகப் பாவித்து வந்த முன் அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளூர் பழைய பேப்பர்கடை வியாபாரிதராசும் கையுமாக நிறுவை வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். பரமேஸ்வரி கிலோ கணக்குகளை எழுதிக் கொண்டிருக்கிறாள். மாமியார் பக்கத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறாள். 'தூசி. தூசி. புஸ்தகத் தூசி. சுட்டவே கூடாது. இந்த ரூமுக்குள்ள நொழைஞ்சா தும்மல் தும்மலாத்தான் வருது.” என்கிறாள். “மொத்தம் முன்னூறுகிலோவா..?” "ஆமாம்மா.பொஸ்தகம் முன்னூறுகிலோ.நியுஸ் பேப்பர் முப்பது கிலோ.”
பழைய பேப்பர்காரனும், பரமேஸ்வரியும் நாடன் வந்திருப்பதை சட்டை செய்யாமல் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நாடன் அந்த வீட்டில் தனது சொந்த ராச்சியமாக ஆண்டு வந்த தனது அறையின் பக்கம் பார்க்காமலே, வீட்டின் பின்புறம் சென்று, மெளனமாக நின்றார். அவர் கண்கள் குளமாகியிருந்தன. இத்தனை வருசம் என்னோடு வாழ்ந்து, எனது எண்ணம். இலட்சியம், எழுத்து, ஆற்றல், அறிவு எல்லாவற்றையும் அறிந்து, எனது படைப்புலகத்துக்குப் பாதியாகத் துணை நின்ற மனைவியா இந்த முடிவுக்கு வரவேண்டும்.?
நாடனின் இரத்த நாளங்கள் கொதித்தன. அவரது மனதுக்குள் சில மறைந்து போன எழுத்தாள நண்பர்களின் நினைவுகள் வந்து நின்றன. அவரறிந்த சில எழுத்தாள நண்பர்கள் இறந்து போனதும், மனைவிமார்கள், இரக்கமே இல்லாது அவர்களுடைய புத்தகங்கள். ஏன் அந்தரங்கமாகப் பாவித்த டைரிகளைக்கூட கடலைக் கடைக்கும், பேப்பர் கடைக்கும் தூக்கிக் கொடுத்துவிட்ட சம்பவங்கள் நினைவிற்கு வந்தன. சில எழுத்துப் பிரதிகள் தேநீர் கடைகளிலும் போய்க் கிடந்தன. இந்தத் தகவல்களைப் பல இலக்கிய நண்பர்கள் அவரிடம் அடிக்கடி கூறி கவலைப்பட்டதும் உண்டு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

நாடன், விற்கப்படாது வீட்டில் முடங்கிக் கிடக்கும் புத்தகங்களைப் பற்றி அன்றொரு நாள் நினைத்துப் பார்த்தார்.
ஒருநாள் பஸ் ஸ்டேன்டில் மகிா வித்தியாலய பிரின்ஸிபல் அவரைக் கண்டு சிரித்த போது, அந்த மனுசனிடமும் கேட்டுப் பார்த்தார் “நான் வெளியிட்ட ஐந்நூறு புத்தகங்கள் இருக்கு. எல்லாமே பாடசாலை மாணவருக்கு உகந்தது. ஐந்நூறு மாணவருக்கும் அன்பளிப்பாகத் தரமுடியும். ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா..? என்று கேட்டார். "ஐயோ சேர், அதுக்கெல்லாம் எனக்கு நேரமேயில்லை. ஒங்களுக்கு முடிஞ்சா ஸ்கூல் ஆப்பீஸ்ல குடுத்துட்டுப் போங்க. நான் இல்லாட்டியும் பரவாயில்ல.” என்று நழுவினான். 'மயிராண்டி.புத்தகப்பெறும்தியைப் பற்றி ஒரு வாத்தியாரே புரியாமலிருக்கிறான். அவன் அன்னைக்கி கொண்டு போயிருந்தா, பிள்ளைகளுக்குப் பிரயோசனப்பட்டிருக்கும் தான்ே.? இப்படி பழைய பேப்பர் கடைக்காரன் ஒட்டலுக்குக் கை துடைப்பதற்கு-"அவருக்
குத்துக்கம் தொண்டையை அடைத்தது.
நாடன் மெதுவாகத் தனது அறையில் வந்து நின்றார். நூற்றுக்கணக்கான புத்தகங் கள்
பேப்பர்காரனின் மூட்டைக்குள் திணிக்கப்பட்டிருந்தன. அவை ஏழெட்டு வருசங்களாக விற்கப்படாது முடங்கிக் கிடந்தவைகள். V •
சுத்தம் செய்யப்பட்ட அறை, திறந்து விடப்பட்ட ஜன்னல்களோடு காற்றும், வெளிச்சமுமாக ஒரு புதிய சூழலை உருவாக்கிக்கொண்டிருந்தது.
அந்த அறையை மாமியார் யாரோ ஒரு வங்கி உத்தியோகத்தருக்கு வாடகைக்கு விடப் போகிறாளாம். பரமேஸ்வரி இன்னும் நாடனிடம் பேசவில்லை. பத்து வெளியீடு களிலும் பத்து. பத்து புத்தகங்களை மட்டும் ஞாபகத்துக்காக ஒதுக்கிவைத்திருந்தாள்.
பேப்பர்காரன் நாடனின் பொக்கிஷங்களை மூட்டை கட்டி ஆட்டோவில் ஏற்றினான். ஆட்டோ நகர்ந்தது. நாடன் வீதியில் சென்று ஆடாமல். அசையாமல் மரமாக நின்றார். ஆட்டோ ஒடி மறைந்தது. அவர் பைத்தியக்காரனைப் போல தனியாகப் பேசிக் கொண்டு வீதியிலே நின்றார்.
அவரது புதிய நெடுங்கதை மனதைக் குடைந்தது. “மீண்டும் பனை முளைக்கும்? இல்லை. இல்லை. இனி பனை முளைக்காது.”அந்த வரியையும் அவர் தன் வாய்க்குள்ளேயே திருத்தம் செய்து கொண்டார். "என் தோட்டத்தில் மட்டும்தான் அது முளைக்காது. இனி நான் எழுதப் போவதில்லை.”
புதுமை நாடன் மீண்டும் தனியாகப் பேசிக் கொண்டு ஆட்டோ சென்று மறைந்த பாதையைப் பார்த்துக்கொண்டே நின்றார்.
(யாவும் கற்பனையல்ல.)
29

Page 32
வLமுக்கு வண்ணத்த
2)மிழுக்கு வடமிழுக்கும் எங்கள் தேரில் தலையாக வீற்றிருக்கும் சக்தி என்னை அமுதுக்கு சுவைசேர்த்து அன்னம் படைத்து
அள்ளித் தருவதிலே பாரி யாகிக் குமுதத்தின் இதழாய் கரம் விரித்துக்
கொண்டு தரும் குணத்தாலே குடியமர்ந்து சமுதாயத் தெருவுக்கோர் விளக்காகி
சபையேறும் சரித்திரக்கால் எங்கள் தமிழ்!
தாய் விழியாம் எங்களது தமிழ் மொழியோ
தரத்திலுயர் கோபுரத்தின் உச்சியாகும் வாய் மொழியில் வந்தமர்ந்து இனிக்கும் போது வார்த்தைகள் தருங்கோடி இன்பமாகும் ஆய்ந்தொழுகும் அரசன் புலவர்க் கெல்லாம்
அணிகலனாய் அணைந்து அழகு பார்க்கும் தேய்ந்தோடும் தெருநிலவின் முன்னேயெங்கள்
தேயாத தமிழ்நிலவு திசை உதிக்கும் !
அம்மா என்றழைக்கும் குழந்தை வாயில்
அமர்ந்தழகு சொல்லுகின்ற அரிய தமிழ்
Mbudnisspölb endlä aL
சுரமிணைத்து அதுவுமோர் சுகத்தைச் சொல்லு
30

|լb
-கலாபூஷணம் கவிஞர் பதியதளாவ பாறுக்
சம்பிரதாயச் சடங்குகளை விளித்துமே
சம்மதம் சேர்க்கின்ற சரிதை வெல்லும்
மும்மொழி உறவுக்குள் முகத்தை வைக்கும்
மூத்த தமிழிங்கு முன்னுரை யாகும் !
எழுத்தாளன் எழுதுகோலில் எழுந் தருளி
ஏற்றங்கள் படைக்கின்ற இன்பத் தமிழ்
அழுத்தங்கள் பலதையும் ஆழமாக்கி
ஆற்றுகின்ற பணிக்குள்ளே அரசமைக்கும் வாழுகின்ற மனிதனை வையங் கண்டு
வரலாறு தொடர வரை படமாக்கி விழுந்த சமூகத்தின் விழிகளாய் அமைந்து
வீரத்தமிழோங்கி வெற்றி கொள்ளும் !
மண்தொட்டு வாழுகின்ற மறத் தமிழ் மணக்கின்ற பூவாகி வாசம் தந்து uGir65TLC UITGésirp uTeiti (ypré
udessD6DåšESTiu é96D6Juri UTSOLb (BUITGB b sokog:0 columb upšош Gundin
கண்பட்டுக் கருகாத கன்னித் தமிழ்
காசினியில் கண்கொண்டு வாழுமையா
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 33
CO2 årsta பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வந்த நாட் தொடக்கம் தம்பிமுத்து மாஸ்ரருக்கு மனம் சரியில்லை என்பதை அவரின் மனைவியான சிவமணி ஊகித்துக் கொண்டாள். ஆனால் அதுபற்றி அவரிடம் எதுவுமே அவள் கேட்டுக் கொள்ளவில்லை.
சஞ்சயன் - தம்பிமுத்து சிவமணிதம்பதிகளின் ஒரே மகன். இவனும் தந்தையின் மனனிலை பற்றி ஓரளவு ஊகித்திருந்தான்.அதற்கான காரணத்தைத்திட்டவட்டமாக சஞ்சயனாலும் தீர்மானிக்க முடியவில்லை.
கனகன்புளியடிச் சந்தி - ஐந்து வீதிகளின் முனைகள் சந்திக்கும் ஐந்து சந்தியிது. இந்தக் கனகன்புளியடிச் சந்தியிலிருந்து புத்தூர் சந்தியை நோக்கி நீண்டிருக்கும் வீதியில்,பனையடிப்பிள்ளையார் கோவிலுக்குச் செல்லும் கல்லுறோட்டில் முதலாவது வளைவில் சிறியதொரு கல்வீடு ; இதுதான் தம்பி முத்துமாஸ்ரரின் வீடு
தம்பிமுத்து மாஸ்ரர் இப்பகுதியில் மிகவும் பிரபலமானவர். மிகவும் நீதியானவர். கணிதபாட ஆசிரியராக நியமனம்பெற்றுபல ஆண்டுகள் கணிதபாட ஆசிரியராகவே கடமையாற்ற பிற்பட்ட காலத்தில் அதிபராகி. ஆறுமாதங்களுக்கு முன்புதான் ஓய்வுபெற்றார்.
பனையடிப் பிள்ளையார் கோவிலுக்குச் செல்லும் அந்தச் சிறிய கல்லுறோட்டு இந்தப் பகுதியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது. அதற்கு முக்கியமானதொரு
காரணம் இருந்தது.
dSV)2SOdS
父堡、
கசிப்பு மகேந்தியென்றால் சகலருக்குமே தெரியும், தம்பிமுத்து மாஸ்ாரின் வீட்டுக்கு இடதுபக்கத்திலுள்ள வீடுதான் கசிப்புமகேந்தியின் வீடு
கசிப்புக் காய்ச்சிவிற்பனை செய்வதுதான் இவனது
தொழில், அதையும் பகிரங்கமாகவே அவன் செய்கிறான். பொதுமக்களும் தினசரி பெட்டீசங்களும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் எந்த அதிகாரியும் உத்தியோக பூர்வமாக அவனிடம் வந்ததில்லை!
(
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 
 
 
 
 
 

வாட்டசாட்டமான கறுத்த உருவம் சைனாக் கோழியின் செட்டை போன்ற மிகவும் அடர்த்தியாகச் சுருண்ட கேசம் தடித்த மீசை. சிவந்த கண்கள். பெருந்தொடை தெரிய மடித்துக் கட்டப்பட்ட சாறம். நிமிர்ந்த அதிகாரம் மிக்க நடை. கரகரத்தகுரல். *
மகேந்தி திருமணமாகி இந்தக் கிராமத்துக்கு வந்த புதிதில். யாரோ ஒருவனை வெட்டிக் கொலை செய்து பிள்ளையார் கோவில் வளவுக்குள் போட்டதாகவும் ஒரு கதை உண்டு.
சூரிய அஸ்தமனத்தின் பின்பு பனையடிப் பிள்ளையார் கோவில் வீதி விழித்துக் கொள்ளும். சப்பாத்துப்போட்ட கால்கள் தொடக்கம் சேற்றுத்துகழ்கள் படிந்த கால்கள் வரை. இந்தக் கல்லுறோட்டுக்கு வந்துயோகும்.
மகேந்தியின் மனைவி மலர். அவள் ஒரு ஆண் மூச்சுக்காரி. இவள்தான் கசிப்பு விற்பனை செய்வாள். கையில் ஒரு சீலைப் பையைக் கொளுவியிருப்பாள். வியாபாரக் காசுகளை அதற்குள் போட்டுக் கொள்வாள். பெருந்தொடை தெரிய மடித்துக் கட்டிய சாறத்தோடு மகேந்திவாசலில் நிற்பான்.யாராவது முக்கியமானவர்கள் வந்து விட்டால் பின்னாலுள்ள கொட்டிலுக்குள் கூட்டிச் சென்று அவன்தான் அவர்களை உபசரிப்பான்.
மகேந்தியின் மூத்த மகன் கிச்சிலி. இவனது பிறப்புச் சாட்சிப்பத்திரத்தில் ரூபன் என்ற பெயர்தான் பதியப்பட்டிருந்தது. அதன் பின்பு குடும்ப அட்டையிலும் கடைசியாக பாடசாலை இடாப்பிலையும் மட்டும் ரூபன் என்ற பெயர் பதியப்பட்டது.
காணிக்குள்ளிருந்து ஒவ்வொரு சாராயப் போத்தலாக எடுத்துவந்து தாயிடம் கொடுப்பான், −V இரண்டாவது மகன் முட்டி இவனது உண்மைப் பெயர் முகுந்தன்.மூன்றாவது மகன் சுப்பிளி.இவனது உண்மைப் பெயர் சாந்தன். இவர்களுக்கும் ஏதாவது வேலைகள் இருக்கும்.
தம்பிமுத்துமாஸ்ரர் வீட்டுக்காரர்களுக்குத் தினசரி எழுமணிக்குப் பிறகு விடியும் வரை போடப்படாத
31

Page 34
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும். வீட்டுப் படலையையும் சாத்தி, வெளிபல்புகளையும் அணைத்து வீட்டுக்குள் மட்டும் பல்ப்புகள் எரியும்.
தம்பிமுத்து மாஸ்ரரின் படலையைத் தாண்டினால், அடுத்தது மகேந்தியின் வீட்டுப்படலை
தம்பிமுத்து மாஸ்ரரின் கிணற்றடியில் நின்றால், மகேந்தியின் வீட்டில் கதைப்பது கேட்கும். அவ்வளவு , நெருக்கமாக வீடுகள் அமைந்திருந்தன.
த ம் பி மு த் து மாஸ்ரரிடம் ஒட்டுக் கேட்கின்ற கீழ்த்தரமான பழக்கமில்லை. அவர் கிணற்றடியில் நிற்கும் போது மகேந்தி வீட்டில் நடக்கின்ற பேச்சொலிகள் அவருக்குக் கேட்டிருக்கும். ஆனால் கேட்கவேண்டும் என்றதற்காக அவர் என்றுமே கி ண ற் ற டி க் கு ப் போனதில்லை.
தம்பிமுத்து மாஸ்ரர் சராசரி மனி சரைவிட சிறிது வித்தியாசமானவர்.மகேந்தியும் II அவனது பிள்ளைகளும் செய்கின்ற அட்டாதுப்டிச் செயல்கள் பற்றியெல்லாம் தம்பிமுத்து மாஸ்ரருக்குப் M பூரணமாகத் தெரியும். ஆனால் ஒருநாட்கூடதம்பிமுத்துமாஸ்ரர் மகேந்தியோடு முரண்பட்டுக் கொண்டதில்லை.
தம்பிமுத்து Tលៃ . , மற்றவர்களுக்கு வழிவிட்டு *、默 έ. ஒதுங்கிக் கொள்வாரே தவிர દ્ર.િ மற்றவர்கள் தனக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென என்றுமே எதிர்பார்ப்பதில்லை.
ஒருமுறை மகேந்தி வீட்டுக்குக் கசிப்புக் குடிக்க வந்த ஒருவரைப் பார்த்து மாஸ்ரர் வீட்டு நாய் குலைத்துவிட்டது. மாஸ்ரர் வீட்டில் அடிப்பானைச் சோற்றைத்தின்று வாழ்கின்ற ஊர்நாய். கடிக்கின்ற பலங்கூட அந்த நாய்க்கில்லை. அந்த நாய் குலைத்து விட்டது.
மகேந்தியும் பிள்ளைகளும். மாஸ்ரரின் முற்றத்துக்கு வந்து விட்டனர்!
“நாயை வளக்கிறதெண்டால் கட்டிவளக்கவேணும் தெருவிலை போறவையைக் கடிச்சால். நாய்மட்டுமல்லை
g 器
32
 
 
 
 

நீயும் இருக்க முடியாமல் வரும். இப்ப்டித்தான் மகேந்தி எச்சரித்தான்.
“. இனிமேல் இப்படியொரு சம்பவம் நடக்காது. இந்த முறை மன்னிச்சுக் கொள்ளுங்கேர்”. மாஸ்ரர் இப்படித்தான் கூறினார்.
தம்பிமுத்து மாஸ்ரரின் மனைவி சிவமணியும், ஒரே மகன் சஞ்சயனும் கொதித்துப்போய்விட்டனர்.
“ நா  ைய விட க் கேவலமான ஒரு மனிசனிட்டை மன்னிப்புக் கேட்டுப் போட்டியளே.” ச ஞ் ச ய ன் வேத  ைன யோ டும் கோ பத் தோ டும் கூறினான்.
மகனின் பேச்சைக் கேட்டு, தம்பிமுத்து மாஸ்ரர் அடக்கமாகச் சிரித்தார். நிலாவரைக் கிணறுபோன்ற ஆழம் காணமுடியாத அந்த அனுபவச் சிரிப்பை சஞ்சயனால் புரிந்து  ெக |ா ள் ள முடிய வில்  ைல . கேள்விக்குறியோடு த க ப் ப  ைன ப் பார்த்தான்.
சஞ்சயன் நீங்கள் படிக்கிற புள்ளை. உங்களுக்கு உலக அ னு ப வ ம் போதாது.”
. மகேந்தி ஒரு பாறாங்கல்லு எண்டது எனக்குத் தெரியும். அந்தக் கல்லோடை முட்டிக்கொண்டால், சேதம் எனக்குத்தான். எனக்கு ஏற்படும் சேதம் உங்களையும் பாதிக்கும்.
. மகேந்திக்குப் போதனை செய்யிறது முட்டாள்த் தனமானது. உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்குடாது.
. சஞ்சயன் நான் சொல்லுறதை அவதானமாகக் கேளுங்கோ.
.புட்போல் விளையாட்டிலை ஒருதன் உங்களிட்டை பவுலாகவிளையாடிப்போட்டால்.நீங்களும் அவனிட்டை பவுலாக விளையாடினால் அதிலை எந்த அர்த்தமும், இல்லை. அதுக்குப்பதிலாக நீங்கள் அவனுக்குக்கோல்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 35
இறக்கிக் காட்டவேணும். அதிலை தான் அர்த்தம் இருக்கு.”யுத்தகளத்தில், அர்ச்சுனனுக்குக் கண்ணன் போதித்தது போல், தம்பிமுத்து மாஸ்ரர் சஞ்சயனைப் பார்த்துக் கூறினார்.
சஞ்சயன் விறைத்துப் போய் நின்றான்! சஞ்சயன் ஏ. எல் பரீட்சை எழுதிவிட்டு பரீட்சை முடிவை எதிர்பார்த்திருந்த காலத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. சஞ்சயன் ஏ.எல். சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று. தந்தையைப் போல் ஆசிரியர் நியமனம் பெற்று.
சஞ்சயன் மாஸ்ராகி. அதன் பின்பும் படித்து. ஒரு மாதத்திற்குமுன்புபல்கலைக்கழகத்தில் நடத்தபட்டமளிப் புவிழாவில் கலாநிதிப்பட்டத்தைப்பெற்றுக்கொண்டான். அவன் இப்போது சாதாரண சஞ்சயன் மாஸ்ரரல்ல, கலாநிதி சஞ்சயன்.இன்னும் நாகரிகமாகக் கூறினால்,
அவன் இப்போது டாக்டர் சஞ்சயன். பல்கலைக்கழக பட்டங்களில் மிகவும் உச்சமானது.
பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுபவர்கள் வரிசையில். கறுப்பு அங்கியுடன் சஞ்சயன் நின்றபோது. தம்பிமுத்துமாஸ்ரரும், சிவமணியும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
வாத்திச் சம்பளத்தோடு, தன்னை ஒறுத்து வாழ்ந்த கலக்கமான தனது கடந்த கால வாழ்க்கைக்குள் ஒரு கனதியான அர்த்தம் இருந்ததை அவர் இப்போதுதான் உணர்ந்தார்.
இப்போதெல்லாம் தம்பிமுத்து மாஸ்ரரின் நடையில் இலேசானதொரு மிடுக்கு இருந்தது.
என்ரை மகன் ஒரு கலாநிதி என்ற கர்வமிடுக்கு அவரை அறியாமலேயே அவரிடம் ஒட்டிக்கொண்டது என்று கூடச் சொல்லலாம்
இப்போது தம்பிமுத்துமாஸ்ரரின் மனதில் இரண்டு புதிய ஆசைகள் முளைவிட்டிருந்தன. முதலாவது, கலாநிதியான சஞ்சயன் பல்கலைக்கழக விரிவுரையாளராக வேண்டுமென்பது. தம்பிமுத்து மாஸ்ரருக்கு பல்கலைக்கழக அனுபவம் கிட்டவில்லை. அந்த பல்கலைக்கழக வாழ்க்கை தனது மகனுக்குக் கிடைக்கவேண்டுமென்ற ஆசை.
இரண்டாவது சஞ்சயனுக்கு அடக்கமான படித்த (5 பெண்ணை மணம் முடித்து வைக்கவேண்டுமென்பது, எனது மகன் கலாநிதி. கார் வேணும் காசுவேனும் , வீடு வேணும். நகைவேணும். இதையெல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை.
திருமணத்தைப் பொறுத்தவரையில், சராசரி பெற்றோருக்கிருப்பது போல் அவரது மனத்திலும் சில எதிர்பார்ப்புகள் இருந்தன.
நடராசரின், இரண்டாவது மகள் மங்களவனிதையை தனது மருமகளாகத் தனக்குள்
தானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

தீர்மானித்துவைத்திருந்தார்.இதுபற்றி சிவமணியிடமும் இலேசாகக் கூறியிருந்தார்.
நடராசர் -இக்கிராமத்துப்பாடசாலையில் அதிபராக இருந்து ஒய்வு பெற்றவர். மிகவும் அடக்கமானவர். அவருக்கும் இரண்டு பெண்பிள்ளைகள், இருவருமே பட்டம் பெற்றிருந்தனர். இளையவளான மங்களவனிதையைத்தான் தம்பிமுத்துமாஸ்ரர் தனக்குள், தனது மருமகளாகத் தீர்மானித்து வைத்திருந்தார்.
காலை பத்துமணியிருக்கும் கிணற்றடியிலுள்ள தூதுவளைச் செடிக்கு மாஸ்ரர் பாத்திகட்டிக்கொண்டு நின்றார். தம்பிமுத்துமாஸ்ரருக்கு இலேசான சளித்தன்மை இருந்தது. கிழமையில், இரண்டு தடவைகள் தூதுவளைச் சம்பலைச் சாப்பிட்டுக் கொள்வார்.
பக்கத்தில் மகேந்தி வீட்டில் ஏதோ புரியாததொரு மொழிப்பாடல். பத்து வீட்டுக்குக் கேட்கக் கூடிய வகையில் அலறிக் கொண்டிருந்தது.
"மலர். இண்டைக்கு என்ன மீன் வாங்கிறது.” மீன்வாங்கப்புறப்பட்டமகேந்திமனைவியிடம் கேட்கிறார். வெளிநாட்டிலிருந்து அவரது மூன்று பிள்ளைகளும் வந்ததிலிருந்து தினசரிபிள்ளைகளின் விருப்பப்படிதான் சமையல் நடக்கும்.
“இண்டைக்கு பாரைமீன் வாங்குங்கோ. புள்ளையள் புழுக்கொடியலக்கு ஆசைப்படுகிறான்கள். வாங்கிக் கொண்டு வாருங்கோ. 'மலர் தனது பிள்ளைகளின் பிரதிநிதியாக நின்று பதில் கூறுகிறாள்.
“பின்னேரம் புள்ளையஞக்குச் சாப்பிட ஏதாவது செய்ய வேணுமே. மகேந்தி கேட்கிறான்.
“. இண்டைக்குப்பனங்காய் பணியாரம் செய்வம். "மலர் பதில் கூறுகிறாள்.
மகேந்தி மோட்டார் சைக்கிளில் புறப்படுகின்றான். ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்பு. வெறும் மேலுடன், பெருந்தொடைதெரிய சாறத்தை மடித்துக் கட்டிக்கொண்டு. கசிப்பு விற்றமகேந்தி.
இன்று மகேந்திரராசாவாக அழைக்கப்படுகிறான். வீடு, கல் வீடாகி, வேலி, மதிலாகி படலை, கேற்றாகி. கசிப்பு மணத்த அவனது உடலில் இப்போது 'சென்ற் மணக்கிறது.
தம்பிமுத்து மாஸ்ரரின் மகன் சஞ்சயன், பல்கலைக்கழகம் சென்ற அதே வருஷம், மகேந்தியின் மூத்த மகன் கிச்சிலி எப்படியோ சுவிசுக்குப் போய்விட்டான்.அதற்காக மகேந்தி, அம்மன் கோவிலுக்கு ஆயிரம் தேங்காய்கள் உடைத்தான்.
அடுத்தடுத்த வருஷங்களில் இரண்டாவது மகன் முட்டியும், மூன்றாவது மகன் சுப்பிளியும் சுவிசுக்குச் சென்று விட்டனர்.

Page 36
அதன் பின்பு மகேந்தியால் தனித்து நின்று கசிப்பு வியாபாரம் செய்ய முடியவில்லை. போதியள்வு பணவசதியும் இருந்ததால் கசிப்பு விற்கவேண்டிய தேவையும் மகேந்திக்குஎற்படவில்லை. கசிப்பு தொழிலை முற்றாகவே நிறுத்திக்கொண்டான்.
இப்போது மகேந்திரராசா பெரியமனிசன். ஜே. பி. பதவிக்கு அவனது பெயர் சிபார்சு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி கசிந்து கொண்டிருக்கின்றது.
ஒரே நிலப்பரப்பில் இரண்டு வித மாற்றங்கள். முன்பெல்லாம் தம்பிமுத்து மாஸ்ரரின் வீடு என்றுதான் அழைப்பார்கள்.இப்போதுடொக்ரர்சஞ்சயன் வீடு என்று தெரிந்தவர்கள் அழைக்கிறார்கள்.
முன்பு கசிப்புக்கார மகேந்தியின் வீடு என்று அழைத்தவர்கள் இப்போது மகேந்திரராசாவின் வீடு என்று அழைக்கிறார்கள்.
ஏறத்தாழ பத்துவருடங்களுள் ஏற்பட்ட களமாற்றம். இயங்கியபின் நகர்விலுள்ள நுணுக்கம்!
ஒரு பாதி. கல்வி. மறுபாதி. பணம். மகேந்தியின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியெல்லாம் தம்பிமுத்துமாஸ்ரர் என்றுமே விமர்சனம் செய்ததில்லை சஞ்சயனுக்குப் பட்டமளிப்பு விழா நடந்த அன்று மகேந்தி மனைவியையும் அழைத்துக் கொண்டு மாஸ்ரரின் வீட்டுக்கு வந்திருந்தான்.
“எங்கடை ஊருக்கை இப்படி ஒரு படிப்பாளி இருக்கிறது எங்களுக்கும் பெருமைதானே என்றும் மகேந்தி கூறினான். மகேந்தியின் மூத்தமகன் கிச்சிளி மட்டும் எட்டாம் வகுப்பு வரை படித்தான். முட்டியும், சுப்பிளியும் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்தார்கள் அதுவும் நடராசா அதிபரின் பாடசாலையில் தான் படித்தவர்கள்.
தம்பிமுத்து மாஸ்ரரும், நடராசா அதிபரும் ஒரே தொழிலைச் செய்பவர்கள் என்ற காரணத்தால் மிகவும் நெருக்கமாகவே இருந்தனர்.
“. உங்கடை வீட்டுக்குப் பக்கத்திலை இருக்கிற கசிப்புக் கார மகேந்தியின்ரை மூண்டு பொடியளும் என்ரை பள்ளிக்குடத்திலைதான் படிக்கிறாங்கள். இந்த மூண்டு பேராலையும் பள்ளிக்குடத்திலை எப்பவும் பிரச்சினை தான். சோதினைக்கு கூட வரமாட்டங்கள். முறைப்படி பெயிலாக்கவேணும். பெயிலாக்கினால் மகேந்தி பாளைக்கத்தியோடை பள்ளிக்குடம் வந்திடுவான். என்ன செய்யிறது." இப்படி ஒருநாள் நடராசா அதிபர் தம்பிமுத்து மாஸ்ரரிடம் கூறிக் கவலைப்பட்டுக்கொண்டார்.
இதே நடராசா அதிபரின் இரண்டாவது மகள் மங்கள வனிதையைத் தனது மகன் சஞ்சயனுக்குத்
4.

திருமணம் செய்ய வேண்டுமென தீம்பிமுத்து மாஸ்ரா எண்ணியிருந்தாரே தவிர, ஒருநாளாவது இதுபற்றி அவரிடம்பேசிக்கொள்ளவில்லை!
மகன் சஞ்சயனின் படிப்பு முடியும் வரை அவர் காத்திருந்தார்,
தூதுவளைச் செடி செழித்து வளர்ந்து அழகாக நிற்கின்றது. அந்த அழகைக் கூட தம்பிமுத்துமாஸ்ரரால் இரசிக்க முடியவில்லை. அவரது மனத்தின் அடித்தளம் வெந்து கொண்டிருந்தது.
“. அப்பா. கிணற்றடியில் நின்ற மாஸ்ரரை நோக்கிச்சஞ்சயனும்,சிவமணியும் வருகின்றனர்.மாஸ்ரர் திரும்பிப்பார்க்கிறார்
". அப்பா. இந்த வீட்டோடை சேர்த்துசின்னனாய் ஒரு செற்போட்டு ரியுசன் குடுக்கலாமெண்டு நினைக்கிறன்."சஞ்சயன் ஆரம்பிக்கிறான்.
“.ஏன் இருந்தாப்போலை இந்தரியுசன் எண்ணம் "மாஸ்ரர் நெற்றியைச் சுருக்கிய படி கேட்கிறார்.
". நீங்கள் பென்சன் எடுத்து ஆறுமாதமாய்ப் போச்சு. கந்தோர் காரரின்ரை சீத்துவம் பற்றி எல்லாருக்கும் தெரியும் பென்சன் வர இன்னும் ஒரு வருஷமாவது எடுக்கும். என்ரை படிப்பும் முடிஞ்சிது. பின்னேரங்களிலை ரியுசன் கொடுத்தால் குடும்பச் சிலவைச் சமாளிக்கலாம்" சஞ்சயன் ஆறுதலாக விளக்குகிறான்.
". இவ்வளவு காலமாய் இல்லாத எண்ணம். இப்ப ஏன் வந்தது.மாஸ்ரர் தலையைக் குனிந்தபடிகேட்கிறார். “. நீங்கள் குடும்பத்தைப் பற்றி கடுமையாய் யோசிக்கிறியள். போலைகிடக்கு. கொஞ்ச நாளாய் உங்கடைமுகம் சரியில்லை. அதனால்தான் நான் இந்த முடிவுக்கு வந்தன்.” சஞ்சயன் பொறுப்போடு பதில் கூறுகிறான்.
“.நான்குடும்பத்தைப் பற்றியோசிக்கயில்லை.” “அப்ப என்னத்தைப் பற்றி யோசிக்கிறியள். உங்கடையோசினையைப்பாக்க எங்களுக்குப்பயமாய்க் கிடக்கு.” சிவமணி புருஷனிடம் வேதனையோடு கூறுகிறாள்.
“எனக்கொரு யோசினையும் இல்லை. நான் வழமைபோலத்தான் இருக்கிறன்."மாஸ்ரர் மழுப்புகிறார். “. அப்பா உங்கடை முகத்தை நான் எவளவு காலமாய் பாக்கிறன். யோசினை இல்லையெண்டு உங்கடை வாய் மட்டுந்தான் சொல்லுது. ஆனால் உங்கடைமுகம். அப்பிடிச் சொல்லயில்லை.”சஞ்சயன் தந்தை என்ற பாசத்தோடு பேசுகிறான்.
மாஸ்ரர் நீண்டதொரு பெருமூச்சை விட்டபடி மெளனமாக நிற்கிறார்.
மகேந்தி வீட்டுக் கேற்றடியில் மனித அரவம் கேட்கிறது. மூவரும் திரும்பிப்பார்க்கின்றனர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 37
இக்கிராமத்துச் சனமூக நிலையத் தலைவர், செயலாளர் உட்பட நாலோ ஐந்து பேர்மகேந்திவீட்டுக்குச் செல்கின்றனர். வீட்டு முன் மண்டபத்தில் பேச்சொலி. சிரிப்பொலி. பெரும் வரவேற்பு.
“. என்னப்பா சொல்லுங்கோ. என்ன யோசிக்கிறியள்.” சஞ்சயன் பிரச்சினையின் மையத்திலேயே நிற்கிறான்.
“. நான் பிறகு ஆறுதலாய் சொல்லுறன்.”மாஸ்ரர் நிலபரத்தைச் சமாளிக்கிறார். சஞ்சயனும் தந்தையைத் தெண்டிக்கவில்லை.
இரவு ஒன்பது மணியிருக்கும், மூவரும் குசுனிக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
தம்பிமுத்துமாஸ்ரருக்கும், சஞ்சயனுக்கும் குழல்புட்டில்த்தான் விருப்பம். சிவமணி எந்த நாளும் குழல் புட்டுத்தான் அவிப்பாள்.
GG
. என்னப்பா. பிறகு ஆறுதலாய் சொல்றன் எண்டியள் சொல்லுங்கோவன்.” சஞ்சயன் பேச்சை ஆரம்பிக்கிறான்.
மாஸ்ரர் குனிந்த தலை நிமிராமல் மெளனமாக இருக்கிறார். இன்று பகலோடு கறி முடிந்து விட்டது. சிவமணி நெத்தலிக் கருவாடு பொரித்திருந்தாள். கருவாட்டுப்பொரியலைப்பங்கிட்டு வைக்கிறாள்.
“. என்னப்பா. சொல்லுங்கோவன்.” சஞ்சயன் மீண்டும் கேட்கின்றான்.
தலைகுனிந்திருந்த மாஸ்ரர் தலையை நிமிர்த்தி சஞ்சயனைப்பார்க்கிறார். கண்களில் கவலையின் நிழல். உதடுகள் இலேசாகத் துடிக்கின்றன. மனவேக்காட்டின் கசிவு.
“என்னத்தை நான் சொல்றது. கலாநிதிப்பட்டம் வாங்கிற தெண்டால் லேசுப்பட்ட விஷயமா?. எத்தினை நாள் நித்திரை முழிச்சு.எத்தினை புத்தகங்களைத் தேடி எடுத்துப்படிச்சு. எத்தினை பேரைச் சந்திச்சுதகவல்கள் சேகரித்து. எத்தினை ஆய்வுகள் செய்து. எடுத்தபட்டம்.இந்த ஊரவங்களுக்கு இந்தப்பட்டத்தைப் பற்றி ஏதாவது தெரியுமா?.” இப்படிக் கூறிய மாஸ்ரர் மகனையும் மனைவியையும் பார்க்கிறார். அவரது பார்வைக் கோட்டில் வேதனை கசிகின்றது.
“. ஏனப்பா. ஆராவது உங்களை நக்கல் பண்ணினாங்களா.”
"அப்பிடி ஒண்டுமில்லை.” “பிறகேன் வேதனைப்படுகிறியள்.” “. மகேந்தியின்ரை பொடியள் என்ன வகுப்புப் படிச்சவங்கள். வெளிநாட்டுக்குப் போய் நாலுபணம் சம்பாரிச்சுக் கொண்டு வந்திருக்கிறாங்கள். பணமென்ன பணம்.பணத்தை ஆரும் சம்பாரிக்கலாம். கல்வியை இணைச்சமாதிரிச்சம்பாரிக்கலாமே."மாஸ்ரா கோபத்தோடு கூறுகிறார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

“. அதுக்கிப்ப என்னப்பா. சஞ்சயன் புரியாமல் கேட்கிறான்.
“. அதுக்கிப்ப என்னவோ. நீங்கள் பட்டமெடுத்து ஒரு மாதந்தான் ஆகிது. மகேந்தியின்ரை பொடியள் சுவிசாலை வந்து பதினைஞ்சு நாளாகிறது.
மகேந்தியின்ரை பொடியளைப் பாக்கவெண்டு தினசரி எத்தினை சனம் வந்து போகிது.
விளையாட்டுக்கழகக்காறர்வாறாங்கள். கோயில் காறர்வாறாங்கள். சனசமூக நிலையக் காறர்வாறாங்கள். பள்ளிக்குடக்காறர்வாறாங்கள். வைத்தியசாலைக் காறர்வாறாங்கள். நாவற்பழம் பழுத்துச் சொரியிறது போல. ஒவ்வொரு நாளும் சனம் சொரியிது.
இவங்களிலை ஒருத்தனாவது உங்களைத் தேடிவந்து பாராட்டியிருக் கிறானா?. நீங்கள் பட்டம் பெற்ற அண்டைக்கு நாலோ ஐஞ்சு பேர் வந்து உங்களைப் பாராட்டினாங்கள். அதுக்குப் பிறகு உங்களைத் தேடி ஆராவது வந்தாங்களா.
..எங்கையெங்கையோ வெல்லாம் இருந்து காரிலையும் மோட்டார் சைக்கிள்ளையும் வந்து போறாங்கள்.
. எங்கடை ஊரவங்கள். ஒருதன் தப்பாமல் வந்து போயிருக்கிறாங்கள். முன்னாலைதான் நீங்களும் இருக்கிறியள். கலாநிதிப்பட்ட மெடுத்து என்ன பிரயோசனம்.” சாக்கைத் தலைகீழாய் பிடித்து சாக்குக்குள் இருந்த பொருட்களைக் கொட்டுவதுபோல். மாஸ்ரர் தனது இதயத்தைத் தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி. இதயத்துக்குள்ளிருந்த அத்தனை கொதிப்புகளையும் கொட்டி விட்டார்.
சிவமணியும், சஞ்சயனும், கோப்பைக்குள் இருந்த புட்டைப் பிசைந்து கொண்டு இருக்கின்றனரே தவிர அவர்களால் சாப்பிடவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை
அண்டைக்குப் பல்கலைக்கழக மண்டபத்திலை நடந்தபட்டமளிப்புவிழா. இப்பவும் என்ரை கண்ணுக்கை தெரியுது. எத்தினை பெரியமணிசருக்கு முன்னாலை நீங்கள் பட்டம் வாங்கிறனிங்கள். இதிலை உள்ள சிறப்புப் பற்றி இவங்களுக்குத் தெரியுமா?.
மாஸ்ரர் இதயச் சாக்கை மீண்டும் ஊதிக்கொட்டுகிறார்.
சஞ்சயனும் சிவமணியும் எதுவுமே பேசவில்லை! “. இவன் நடராசன். அதிபராக இருந்தவன். இவன் நேற்றிரவு பொண்டிலோடை வந்து போனதை என்ட கண்ணாலை கண்டனான். படிச்சவன். எத்தினையோ பேரைப் படிப்பிச்சவன். அவன்ரை இரண்டு பொட்டையரும் பி.ஏ. பட்டம் எடுத்தவளவை.
35

Page 38
அவனுக்குக் கூட இஞ்சைவாறதுக்கு மனம் வரயில்லை. அவன்ரை இரண்டாவது பொட்டை கச்சேரியில் வேலை செய்யிறாள். அவளுக்கு மகேந்தியின்ரை இரண்டாவது பொடியனைச் சம்மந்தம் கேக்கிற நோக்கமாக இருக்கலாம்.”மாஸ்ரர் மீண்டும் தனது மனச் சாக்கை உதறுகிறார்.
நடராசா அதிபரின் இரண்டாவது மகள் மங்களவனிதையை சஞ்சயனுக்கு எடுக்க வேண்டுமென்று மாஸ்ரர் எண்ணியிருந்தது பற்றி மாஸ்ரரோடு சிவமணிக்கு மட்டுந்தான் தெரியுமே தவிர சஞ்சயனுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது.
இதுவரை மெளனமாக இருந்த சஞ்சயன் தந்தையைப் பார்க்கிறான். உதடுகள் பிரியாத நிலையில் குறைப்பிரசவமானதொரு சிரிப்பு.
சிவமணி எதுவுமே பேசாமல் மெளனமாக இருக்கிறாள். இன்றைய நிகழ்வுகள் பற்றி அனுபவமுள்ளவர்களாலேயே சரிவரப்புரிந்து கொள்ள முடிவதில்லை. அவள் என்ன செய்வாள்
“. அப்பா. உங்களுக்கேற்பட்ட மனக்கொதிப்பு நியாயமானது. இந்தக் கொதிப்பு. உங்களுக்கு மட்டுமில்லை. இன்றைய அரசியலைப் புரிந்து கொண்ட அனைவருக்குமே இந்த மனக் கொதிப்பு இருக்கு.
“உங்கடை அப்பா அம்மா வாழ்ந்த காலத்தை எடுத்துப் பாருங்கோ மனித உழைப்புத் தேவைப்பட்டது. சமூக ஐக்கியம் தேவைப்பட்டது.கல்விசமயம்,சமூகவியல் தேவைப்பட்டது கட்டுப்பாடு, ஒழுங்கு பண்பாடுகள் தேவைப்பட்டது.
*ஆனால் இன்று.?. மிக வேதனைக்குரியதொரு சமூக அரசியல் பின்னணியில் வாழ்ந்து கொண்டிருக்கிறம்.
இதுக்குப் பின்னாலை மிகப் பலமானதொரு அரசியல் சூத்திரம் இருக்கு.”சஞ்சயன் மிகவும் ஆறுதலாகவும், நிதானமாகவும் கூறுகிறான். தம்பி முத்துமாஸ்ரர் பாடசாலையும், குடும்பமும் என்று வாழ்ந்தவரே தவிர அவருக்கு அரசியல் தொடர்புகள் பெருமளவில் இருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.
சஞ்சயனின், பேச்சை மாஸ்ரரால் புரிந்து கொள்ளமுடியவில்லை. நெற்றித்தோலைச் சுருக்கி. கண்களை கூசி. கேள்விக் குறியோடு சஞ்சயனைப் பார்க்கிறார்.
தமிழ் ஆர்வலர்களே!
சர்வதேச எழுத்தாளர் விழாவிற்கு இ
B

“. இந்த உலக உருண்டையையே தங்கள் உள்ளங்கையில் வைத்திருக்கின்ற வல்லாதிக்க நாடுகள். தங்களின் வல்லாதிக்கத்தைத் தொடர்ந்தும் பேணுவதற்காக குளோபலை சேசன் எண்டு இங்கிலிசிலை சொல்லப்படுகிற 'உலகமயமாக்கல் என்றொரு திட்டத்தை ஆரம்பித்து. வாழைப்பழத்திலை ஊசி ஏற்றுவதுபோல தேசியத்திற்குள் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். இன்றைய களமாற்றங்கள் யாவுமே அந்த நச்சு ஊசியின் விளைவுகள் தான்.” சஞ்சயனின் பேச்சை மிக அவதானமாக உள்வாங்குகின்றார் தம்பிமுத்துமாஸ்ரர்.
“உலகமயாக்கல் திட்டமூலம் இந்த வல்லாதிக்க நாடுகள், தங்கள் வல்லாதிக்கத்தை எப்படிக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.”மாஸ்ரர் கேட்கிறார்.
“. மக்கள் பலத்துக்கு நிகராக இந்த உலகத்திலை எந்தப் பலமுமே இல்லை.
இந்த வல்லாதிக்க நாடுகளின் சூழ்ச்சித்தனங்களை மக்கள் சக்தி ஒன்றால்த்தான் தகர்க்க முடியும்.
. பொதுமக்களைச் சிந்திக்கவிடாமல். ஒரு மயக்க நிலையில் வைத்துக் கெள்வதன் மூலந்தான் அந்த நாட்டு அரசியலை தங்களால் அடிமைப்படுத்த முடியும் என்ற அரசியல் சூழ்ச்சியின் இன்னொரு வடிவந்தான் இந்த உலகமயமாக்கல்திட்டம்”சஞ்சயன் கூறுகிறான். மாஸ்ரர் ஆச்சரியத்தோடு சஞ்சயனைப் பார்க்கிறார்.
“. ஏன். மகன். இந்த அரசியல் சூழ்ச்சியை சாதாரண பொது மக்களால் புரிந்து கொள்ளமுடியுமா. சில விநாடிகள் மெளனமாக இருந்த மாஸ்ரா கேட்கிறார், “.மதமும். பதவியுந்தான் அரசியலாகிவிட்ட நமது சூழலில். புள்ளடி போடுவதுமட்டுந்தான் அரசியல் என்று விளங்கி வைத்திருக்கும் பொதுமக்களால் உலகமயமாக்கல் என்ற நச்சுக் கருத்தைச் சுலபமாக விளங்கிக் கொள்வார்களென்று எதிர்ப்பார்க்க முடியாது.”சஞ்சயன் நிதானமாகக் கூறுகிறான்.
"அப்பிடியெண்டால். இந்த நாட்டின்ரை முடிவு.? மாஸ்ரர் ஆச்சரியத்தோடும் வேதனையோடும் கேட்கிறார். “. நாடுகாடாகும். மக்களெல்லாம். மாக்களாவர். அரசியல் தலைவர்கள். சிங்கங்களாவர்.”
சஞ்சயன் எந்தச் சலனமுமின்றிக் கூறுகின்றான்
எனும் O5 நாட்களே இருக்கின்றன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 39
ஈழத்தில் தமிழ் இலக்கியம் -கார்த்தி m - இலங்கையின் தனித்துவத்தைய யையும் இணைத்து நிற்கும் ஓர் முறையினைச் சிறப்பாக இந்தி
முக்கிய நோக்கமாகும். இலங்ை தமிழகத்து இலக்கியங்களுடன் மட்டிடுவதற்குப் பதிலாக இல தோன்றுவதற்குக் காலாகவிருந் இந்நூல் இனங்காண்கிறது.
ISBN 978-955-659-243-6 விலை 6:
இலங்கையின் இனவரைவியலும் ம
প্র:&&
இலங்கையின் இனவரைவியலு கட்டுரைகளைக் கொண்டதாய் சமூகங்களின் சாதிக்கட்டமை விரிவாக எடுத்துரைக்கிறது. ெ முரண்பட்ட உள் அடுக்குகளை வருகிறார்.
பிறைஸ் றயான், நூர் யல்ம TTன்ஸ், ஒட்வார் ஹொலப் மைக்கேல் றொபர்ட்ஸ், ஏ.ஜே அறிஞர்களாலும் எழுதப்பட்ட இருந்தும் கருத்துக்களைத் தொ முக்கிய கோட்பாடுகளையும், கூறுகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள மூலநூல்களி நிலையில் நன்கு அறியப்பட்டவர்கள். அவ்வகையில், சார்ந்த அறிவிலக்கியத்துக்கு இந்நூல் ஒரு அரிய பங்க
ISBN 978-955-659-274-0 விலை 4
பிற்கால இலக்கண மாற்றங்கள் (எ இந்த நூல் வரலாற்று மொழியி நேமிநாதம், நன்னூல், இலக்க இலக்கணக்கொத்து, தொன்னு இலக்கணம் எனும் நூல்களை இந்நூலை எழுதியுள்ளார். இ6 இனி ஆசிரியர்களின் உதவியி கணத்தைக் கற்பதற்கானதொ( ஐயமில்லை.
ISBN 978-955-659-273-7 விலை 6
 
 
 
 

கேசு சிவத்தம்பி ம் தமிழ் இலக்கியத்தின் பொதுமை இலக்கிய மரபு இலங்கையில் தோன்றி வளர்ந்த ய வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதே இந்நூலின் கையிலே தோன்றிய தமிழ் இலக்கியங்களைத் ஒப்பு நோக்கி அவற்றின் இலக்கியத்தரத்தை ங்கையினுள் இத்தகைய இலக்கியங்கள் த சமூக பண்பாட்டு வரலாற்றுச் சக்திகளை
50.00 பக்கங்கள்: XXiv + 324
ானிடவியலும் - க. சண்முகலிங்கம் ம் மானிடவியலும் என்னும் பொதுத் தலைப்பில் 12 விளங்கும் இந்நூல் இலங்கையின் சிங்கள தமிழ்ச் ப்பு பற்றி சமூகவியல், மானிடவியல் அடிப்படையில் வவ்வேறு சமூகங்களின் உட்புறத்தையும், அவற்றின் ாயும் நூலாசிரியர் வெளிச்சத்திற்குக் கொண்டு
ன், மைக்கேல் பாங்ஸ், மக்ஜில்ஷ்ரே, ஜனிஸ் ஆகிய மேற்கு நாட்டு ஆய்வாளர்களாலும்,
வில்சன், நியுடன் குணசிங்க ஆகிய இலங்கையின் ஆய்வு நூல்களில் இருந்தும், கட்டுரைகளில் ாகுத்தும், சுருக்கியும், தழுவியும் தமிழில் தருவதோடு எண்ணக்கருக்களையும் இந்நூல் தெளிவுற எடுத்துக்
ன் ஆசிரியர்கள் இத்துறையில் உலகளாவிய தமிழில் சமூகவியல், மானிடவியல் துறைகள் ளிப்பு என்பதில் ஐயமில்லை.
00.00 பக்கங்கள்: xwi + 139
ழுத்து) - க. வீரகத்தி ரியலின் பாற்பட்டது. தொல்காப்பியம், வீரசோழியம், ண விளக்கம், பிரயோக விவேகம், ால் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை
மூலங்களாகக் கொண்டு ஆசிரியர் ஆராய்ந்து லக்கணத்தைச் சுருக்கமாகவேனும் பயின்றவர்கள் ன்றி புத்தம் புதிய பார்வையுடன் தமிழிலக் ந நல்ல வழிகாட்டியாக இது விளங்கு மென்பதில்
00.00 பக்கங்கள்: xwi+ 259

Page 40
வீரனே முழங்கு என்றும் நிமிர்ந்திருக்கும் என் சிரம் என்று. என் நிமிர்ந்த சிரம் கண்டு இமயமும்தலை தாழ்ந்தது காண்.
சிறையின் இரும்புக் கதவுகளை உடைத்துத் தூள்தூளாக்கிவிடு இரத்தக் கறைபடிந்த அக்கற்சிறைதான் அடிமைத்தனத்தின் பூஜா மேடை
இளம் மகேசனே. ஊது உன் பிரளயச் சங்கை கிழக்கின் சுவரைப்பிளந்துகொண்டு பறக்கட்டும் உன் அழிவுக் கொடி
என்று எழுத்து நெருப்புகளை அள்ளி வீசிய படைப்பாளி நஸ்ருல் இஸ்லாம் வங்காள தேசத்தின் பர்த்மான் மாவட்டத்தில் உள்ள அகுலி என்ற கிராமத்தில் தாஜியக்கிரிஅகமதுஜகேதாசாத்தூன் தம்பதியினருக்கு 1899 மே மாதம் 23ம் திகதி பிறந்தவர். முஸ்லிமாக இருந்தாலும் பிரமிளா என்ற இந்துப் பெண்ணைத் திருமணம்செய்திருந்தார்.
நஸ்ருல், பெரியளவில் பாடசாலைக்கல்வி கற்கவில்லை. எனினும் எழுத்துக் கடல் அவருக்குள் பீறிப் பாய்ந்தது. தன்னுடன் கல்விகற்ற ஒரு பொலிஸ்காரனின் மகளை உயிருக்குயிராகக் காதலித்து கவிதை விண்ணப்பம் செய்தார். எனினும் அவள் அதனை நிராகரித்ததால் அவளை கன்னத்தில் அறைந்துவிட்டார். என் காதலை நிராகரித்ததுபற்றிஎனக்கு கவலையில்லை. என் கவிதையை அவள் கவனமாகப் படிக்கவில்லை என்பதே என் ஆத்திரத்தின் காரணம் என்று அதற்குச் சமாதானம் கூறினார். ஆயினும் இச்சம்பவத்தின் பின்னர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். இதற்காக பிற்காலத்தில் அப்பெண்ணை நினைத்து மிகவும் பச்சாத்தாபப்பட்டார். தனது பிஎத்தார் தான் என்ற சிறுகதைத் தொகுதியை அவளுக்குச் சமர்ப்பணம் செய்து தன் பச்சாத்தாபத்தைத் தீர்த்துக்கொண்டார்.
38
 

-திறன். ஆW. எம். டுெnைஸnத்
தன் உக்கிரமான எழுத்துக்களால் வங்கமக்களுக்கு மட்டுமன்றி முழு உலகுக்கும் தன் நெஞ்சத்து நெருப்பை அள்ளி வீசியவர். நஸ்ருலின் 23ம் வயதிலேயே வங்கத்தின் மாகவி இரவீந்திரநாத் தாகூர் தனது கவிதைத் தொகுதி ஒன்றை இவருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்றால் நஸ்ருலின் திறமைக்கு வேறு சாட்சிகள் தேவை இல்லை.
லிச்சு சோர்(திருடன் லிச்சு),'குக்கிஒ காட்டோலி (குழந்தையும் அணிலும்), காந்து தாது (சப்பைமூக்குப் பாட்டன்) ஆகிய சிறுவர்களுக்கான நாவல்களையும், புத்து லேர்' (பொம்மைத் திருமணம்) என்ற சிறுவர் நாடகத்தினையும் தனது 27ம் வயதில் படைத்தார். மற்றும் எத்தார் தான்', 'ரிக்தேர் வேதன்','சிவுலிமாலா' ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அசுர வேகத்தில் படைத்தளித்தார். தவிரவும் பாந்தன் காரா', மிருத்சுலித்தா (பசியும் சாவும்) குகேகலிகா ஆகிய நாவல்களையும் 30 வயதில் கொணர்ந்தார்.
.படுத்திருந்த நிலவுமறுபக்கம் திரும்பிப்படுத்துக் கொண்டது. இறந்துவிட்ட நாளின் வெளுத்த முகத்தை இரவின் கறுப்புத் துணி மூடியது. நட்சத்திரமும் நிலவும் ஆயிரக்கணக்கான நோயாளிப் பெண்களின் படுக்கையருகில் அணையுவிருக் கும் அகல் விளக்குகள்.” என்பன போன்ற ஆயிரக்கணக்கான உவமைகளும், படிமக் குறியீடுகளும் அவரது எழுத்தில் விரவிக் காணப்படும்.
எழுத்துத்துறை தவிர கைரேகைக் கலையிலும் நஸ்ருல் வெகுதிறமைமிக்கவர். பஜிலத்துன்னிஸா என்ற கோடீஸ்வரப் பெண்ணின் கைரேகை பார்க்கச் சென்ற சமயம் அவள் மீது தீராக் காதல் கொண்டார். எனினும் அவரது காதல் நிராகரிக்கப்பட்டதால் வேதனையும் ஆத்திரமுமடைந்தார். சிறிது காலம் விரக்தி நிலையில் அலைந்து விட்டு பின்னர் குடும்பத்தாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது தீவிர இரசிகையும் இந்துப் பெண்ணுமான பிரமிளாவைத் திருமணம் செய்தார். எனினும் திருமண வாழ்வு அவருக்கு பெரிதாக சோபிக்கவில்லை. வாழ்வின் இறுதிவரை வேதனையும் புகழும் மாறிமாறி இவரை ஆட்கொண்டன. 1942ம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 41
ஆண்டு தனது 43ம் வயதில் திடீரென நோய்வாய்ப்பட்டார். வாய் பேச முடியாமல் சிரமப்பட்டார். மனைவிக்கும் வாத நோய் ஏற்பட்டு இடுப்புக்குக் கீழ் வழக்கமற்றுப்போய்விட்டது.
அடையாளம் காணமுடியாத நோய் தன்னைப் பீடித்திருந்த போதிலும் தன் நெருப்பு எழுத்துக்களை விடாமல் கொட்டித் தீர்த்தார். 'மிருத் கூலித்தா என்ற உலகப்புகழ்பெற்ற நாவல் உருவானது இக்காலப்பகுதியிலாகும். இந்த உன்னதமிக்க படைப்பாளி வறுமையில் வாடுவதைக் கண்ட மேற்குவங்க அரசாங்கம் மாதாமாதம் உதவித் தொகை அளித்து வந்தது. இந்தி, உருது மொழிகளில் கிடுகிடுவென அவரது எழுத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டன. அந்த எழுத்துக்களின் வீரியம் கண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் மேலும் உதவித் தொகைகளை அள்ளி வழங்கின. எனினும் அவரது நோய் தீரவில்லை.
ada. கடலே! அன்பின் பெருக்கே ! கற்பனைக் கெட்டாக் காரணப் பொருளே ! வருணனைக் குள்ளே வந்திடா தொருவனே ! வையகம் போற்றிடும் வணங்குதற் குரியனே ! பெருமனமுடைய பேரருளாளனே ! பிழைபொறுத் தருளும் பெருந்தய வாளனே ! ஒருமனத் துடனே உனையான் பணிந்தேன் உனைத்தினந் தொழுதிடச் சிரம்யான் குனிந்தேன்.
இழுத்துப் பிடித்து எனதிதயத்தை இயங்கிட வைத்திடு! ஏக நாயகனே! பழுத்த பழமாய்ப் பக்குவ மடைந்து பண்பினிலுயர்ந்திடப் பாலிப்பவனே ! வழுத்தி யுன்னை வணங்கி வாழ்ந்திட மனத்தி லுன்னை நிறுத்தினேன் இறைவா! எழுத்திலும் பேச்சிலும் எனதிறை வாரஉனை இருத்தியே துதித்திட எனக்கருள் வாயே!
விரும்பி னாலுமோ விரும்பா விடினுமோ வியனுல கை; நான் பிரிதல் சரதமே கரும்பு போல் நான் கருதிய வாழ்வும் கசந்து போதலும் கண்முன் நிகழலாம் ! அரும்பிய மொட்டுப் பூவென மாறும் அதன்பின் பூவுங் கருகியே வீழும் விரும்பிய வாழ்வும் இஃதென அறிவேன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

1945ல் கல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு ஜகத்தாரிணி என்ற உயர் விருதளித்துக் கெளரவித்தது. 1960ல் பாரத அரசு பத்மபூஷன் பட்டமளித்து தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டது. 1962ல் மனைவி பிரமிளா காலமானார். இதனால் விரக்தியின் எல்லைக்கே சென்ற நஸ்ருல் நிரந்தரமாக படுக்கையில் வீழ்ந்தார். 1969ல் இரவீந்திரபாரதிபல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது. 1972ல் வங்காள அரசாங்கம் இவரை அழைத்து நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்தளித்து அரச விருந் தினராகவும் ஆக்கியது. அரச இலக்கிய உயர் விருதான 21ம் நாள் பதக்கமும் அளித்து கெளரவப்படுத்தியது. 1975ல் இவரது 'சல்சல்' என்ற பாடல் வங்க இராணுவத்தின் தேசியப் பாடலாக ஆக்கப்பட்டது. 1976.08.29ல் அந்த எழுத்தின் எரிநட்சத்திரம் வீழ்ந்துவிட்டது.
கொடுத்ததில் இதைவிடக்கூடியதில்லையே!
-இண்ணிun ஏ. எம். எம். அலி
வேந்தே ! உந்தன் விந்தையும் தெளிவேன்! வானத் திருந்து மாமழை பொழிய வைப்பவன் நீயலால் வருமா அம்மழை ? தேனைத் தந்திடும் பூக்களிற் தீஞ்சுவைத் தேனை வைத்தவன் ஆரெனத் தெளிவரோ ? நானு மறிந்திடா வண்ணம் எனக்குள் நாளொரு கூத்து நடத்தியே காட்டுவாய்! “மானிட னாக' மண்ணிலே வாழ்ந்து மரித்திட விழைகிறேன்! மாபெரும் மன்னவ !
குறையெனக் கின்றிக் கொடுத்துள போதிலும் குறையுள தாகவே கூறியும் விடுகிறேன் ! குறைவெனக் கொள்ளல் அவயவக் குறைவே! குறை; அது வல்லால் வேறில! எனதைம் பொறிகளின் இயக்கம் பழுது படாது போஷித் தருளும் புவிமுதல் வோனே ! நேசித் தணுகும் எனைமுழு மனிதனாய்ப் படைத்ததே போதும் பண்ணவ னே! நீ கொடுத்ததில் இதைவிடக் கூடிய தில்லையே!
39

Page 42
தயத்தில் வாழும் - என் இனிய தமிழ் நீண்பனுக்கு ! ஆயிரமாயிரம் ஆண்டுகளாயினும் அழிந்திடா நட்பென இறுமாந்திருந்தோம். ஆனாலும் நண்பனே. தென்றல் வீசிடத் தெம்மாங்கு பாடிச் சுற்றித் திரிந்த - எம் சுந்தர மண்ணிலே ஒருநாள் புயலொன்று வந்தது பூகம்பம் வெடித்தது இருமணி நேரச்சூறாவளியில் எங்கள் கூடுகள் கலைந்து சிதறின.
கறுப்பு ஜூலைக்காய் கண்ணீர் சொரிந்த - எம் கண்களில் குத்திவிட்டு கறைபடிந்த வரலாற்றுக்கு முகவுரை எழுதினார்கள் கறுப்பு ஒக்டோபரில்.
ஆனாலும் நண்பனே. பண்பு நிறை மண்ணிலே பலநூறு வருடங்கள் பண்புடனே உம்போடு பகிர்ந்து நாம் வாழ்ந்த நட்பு பறிபட்டுக் போகவில்லை இதயத்தில் உமது இடம்
 

2- g|62
அடிபட்டுப் போகவில்லை. அன்புள்ள நண்பனே! அகங்குளிரும்
அந்த நாட்கள். நினைத்திடும் போதினில் இனித்திடும் நினைவுகள். மகிழ்ச்சி பொங்கும் அந்த நாட்கள் தைப்பொங்கல் சாதம்போல் மனதில் இன்றும் இனிக்கிறது !.
பொங்கல் திருநாளில் நண்பா உன் வீட்டு முற்றத்தில் ஒரு வாழையிலைதனிலே உண்டு நாம்
மகிழ்ந்திருப்போம் மீலாத் கொண்டாட்டவேளை என் வீட்டில் நீ இருப்பாய் நண்பர்கள் கூடிடுவோம் நாளெல்லாம் மகிழ்ந்திடுவோம் !
பேதங்கள் ஏதுமில்லை வேதங்களால் எமக்குள் வேற்றுமையும் இருந்ததில்லை. இன்பத்தில் துன்பத்தில் இரண்டிலுமே இணைந்திருந்தோம் ! போர்க்கால வேளைதனில் குண்டுமழை பொழிகையிலே நீ வேறு நான் வேறாய் பிரிந்தோமா ?.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 43
உயிர்காக்கும் வேளையிலும் ஒன்றாகவே நாமும் ஒரு பதுங்கு குழி தனிலே ஒளிந்திருந்தோம். இணைந்திருந்தோம். விடுதலைப் பாதையிலே வீறு கொண்டு நீங்கள் எழ மாறி நாம் சென்றோமா ? மாறேதும் செய்தோமா ? மரணித்து வாழ்ந்தோம். மரணத்துள் வாழ்ந்தோம்.
ஒன்றாய்க் கைபிடித்து உள்ளத்தால் நாமிணைந்து அரிச்சுவடி படித்த போதும் பல்கலைக்கழகமதில் பல்வேறு கலைதனிலே பயிற்சி பல பெற்ற போதும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றுதான் நண்பனே நாம் படித்தோம் ஏன் நண்பனே இந்த உண்மை மறுக்கப்பட்டது? ஏன் நண்பனே எங்கள் மண் பறிக்கப்பட்டது ? கூறு நண்பனே கூறு ! ஓரிலையில் உண்டு வாழ்ந்த எம் நட்பு கூறுகளாய் உடைக்கப்பட்டதும் ஏன் நண்பனே ! மண்சோறு சமைத்து மணல் வீடு கட்டி மகிழ்ந்து விளையாடிய காலம் மனக்கண்ணில் தோன்றுதடா ! மணல் வீடு கட்டி விளையாடும் வேளைதனில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

அலைவந்து அடித்துச் செல்ல கைகொட்டிச் சிரித்த காலம் நெஞ்சுக்குள் சிலிர்க்கிறது ! ஆனாலும் நண்பனே ஒக்டோபர் தொண்ணுறில் ஓங்கார அலையொன்றில் மண்வீடு சிதைவதுபோல் எம் வாழ்வு சிதைந்தபோது நிச்சயமாய் நீ கை கொட்டிச் சிரிக்கவில்லை வாய் பொத்தி அழுதிருப்பாய் ! இனிய என் நண்பனே இன்னல்கள் எத்தனை எதிர்வந்த போதிலும் இதயத்தில் இல்லையே எமக்குள்ளே இடைவெளி
இனிக்கும் தமிழ்த் தேனூற்றி இலக்கியப் பயிர் வளர்த்து மானிடத்தை வாழ வைக்கும் மனிதப் புனிதர்களும் வாழுகின்ற பூமியிது.
இனிய நண்பனே! உயிரோடிணைந்து உணர்வொடு கலந்து என் இதயத்தை இயக்கும் இனிய தமிழ் மொழியால் இணைந்திடுவோம் வா !
தூங்கிவிட்ட மானிடத்தை துயிலெழுப்ப இணைவோம் வா ! உணர்வொடு கலப்போம் வா ! உயிர் மொழியால் இணைவோம் வா! நட்பினைத் தொடர்வோம் வா ! நம் கைகளை இணைப்போம் வா !
41

Page 44
总
Negesešies Noa
臀
t
అప్యాక్టN
CA மணமற்ற மலைச்சரிவில் மெதுவாகப் போய்க்கொண்டிருந்தார் துறவி. விழிகள் மட்டும் திறந்திருந்த வெற்றுடல் நடப்பதைப் போலிருந்தது அவரது பயணம், ஏன், எங்கே போகிறோம் என்றில்லாத வெற்று நடை மரம் எவ்வாறு வாளாது நிலைத் திருக்கிறதோ அவ்வாறே இவருக்கும்மரத்துப்போன ஒரு வகை நடை
ஓரிடத்தில் அவர் நிற்கவேண்டியதாகியது. ஏனென்றால் பெரும் தாழ்வொன்று அவருக்கு முன்னால் வீழ்ந்திறங்கியது.
தாழ்வின் ஆழத்தை அளப்பதுபோல் பார்த்தார். இரண்டு மூன்று பைங்கல் அளவுக்கு ஆழமான தாழ்வு. நீர் வெளுக்கும் ஓர் ஆறு கீழே ஒடிக்கொண்டிருந்தது. பாறைகளில் மோதிக் குதித்து வெண்பனி எறிந்தும் வளைந்தும் வீழ்ந்தும் அழகாக அது தனது பயணத்தை மேற்கொண்டிருந்தது. ஆற்றின் அக்கரையில் மலை மேலெழுந்து பரந்து நீண்டு அகன்றது.
மலை வழியாகத் தனது பார்வையை உயர்த்திய துறவி, நடு வானில் எரிந்துகொண்டிருந்த வெய்யிலவனை உறுத்து விழித்தார். இமைகள் ஆடவில்லை. குளிர் நிலவைப் பார்ப்பதுபோல் சிறு பொழுது எரியோனைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு வானின் வேறொரு புறமாகத் திரும்பி அதைத் துளைப்பதுபோல் பார்க்கத் தொடங்கினார்.
“துறவியாரே!” என்றது வான்வெளி. “ஓரிடத்திலிருந்து விழிகளை மூடினிரானால் அந்நிலையிலேயே நாள்கள் பல இருந்துவிடும் நீர், நடந்தீரானால் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் நடந்து கொண்டே இருக்கின்றீரே, அப்படி எங்கேதான் அடிக்கடி போய்க்கொண்டிருக்கின்றீர்?"
நான் அதை இன்னும் முற்றுமுழுதாக அறிந்தேனல்லேன், வானே!" என்று, இதுநாள் வரையில்
42
 

a காத்தது தவறவில்லை என்ற உளநிறைவு ~ திடுமென்று உண்டாகியிருந்த போதிலும்
Z அதை வெளிக்காட்டிக்கொள்ளாது, இதழ்கள் மட்டும் அசைய மறுமொழி கூறிய துறவி,
4) தனது பார்வையை அதன் இடத்திலிருந்து ஜ மாற்றவேயில்லை. “நான் எங்கிருந்து S >○。 வந்தேனா அதுதான் நான் இறுதியாகப் போயடையும் எல்லை என்பதைமட்டும் இப்போதைக்கு அறிந்திருக்கிறேன். அதை 9 அடையும் வரையில் நான் நடந்து
கொண்டுதானே இருக்கவேண்டும்? எனது
கால்களும் உள்ளமும் எடுத்து வைக்கும்
ஒவ்வோர் அடியும் அவ்வெல்லையைக் محمSNS SSR குறிவைத்துத்தான் செல்கிறது”
“ள்ந்த இடத்தில் உமது எல்லை. இருக்கக்கூடும் என்றாவது ஒரு துணிபு உம்மிடம் இருக்கிறதா?”
“நீ எல்லாம் அறிவாய். ஆனால் எதையுமே உரையாய்! நான் இந்த மண்ணுக்குரியவன் அல்லன் என்பதில் எனக்குத் தெளிவிருக்கிறது. எனது உடலுக்குரியதுதான் மண். ஆனால் நான் இந்த மண்ணிலிருந்து வந்திருக்க முடியாது! நான் எங்கிருந்து வந்தேனோ அந்த இடம் உனக்குள் தான் எங்கோ ஒளித்துவைக்கப்பட்டிருக்கவேண்டும்நீ அதை அறிவாய் என்பதில் நம்பிக்கையுண்டு.
“அதனால்தான் நீர் என்னை அடிக்கடி உற்று உற்றுப்பார்க்கிறீரோ?”
“உடல் மண்ணுக்கு உயிர் விண்ணுக்கு என்ற வகையில் சொல்லத்தான் வேண்டும். அதைத் தேடும்படிக்கு வைத்துக் கொண்டதுதான் எனதிந்த நோன்பு வாழ்க்கை இவ்வாழ்க்கையின் எல்லைக்கும் வந்து விட்டேன்; ஆனால் இடம் தான் இன்னும் மறைவிடமாகவே உள்ளது உனக்குள்தான் அவ்விடம் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. என்பதில் எனக்கு உறுதி மிகுதி. அடிக்கடி நான் உன்னை ஊடுருவுவதன் பொருட்டாலாவது நீ என்மேல் இரக்கப்பட்டு அவ்விடத்தை எனக்குக் காட்டக்கூடும் என்றொரு வேணவாவும் உண்டுதான்!”
“உம்மீது இரக்கம் எனக்குமுண்டு! ஆனாலும் இயற்கையின் அமைப்பை மீறி நான் அவ்விடத்தைக் காட்டுவேன் அல்லது சொல்லுவேன் என்று நீர் நம்புகிறீரா?”
“நான் நம்பவில்லைதான்! ஆனாலும் நான் உன்னையே அடிக்கடி பார்ப்பதற்கு இன்னொரு பெரும் பொருட்டும் உண்டு. எனது எல்லை கடந்த நன்றி உணர்வுதான் அது என்றும் சொல்லலாம் உடலெடுத்த
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 45
உயிரினங்கள் வாழ நீதான் மண்ணைவிடவும் பேரளவு துணை செய்கிறாய். நிற்கும் போது எனது கால்களின் அடிப்பகுதி மட்டுந்தான் நிலத்தில் நிற்கிறது. மிகுதிப் பேரளவுப் பகுதியும் உன்னில் தானே நிற்கிறது? எண்ணிப்பார்க்கவோ நன்றிசெலுத்தவோ மறந்துவிட்ட அல்லது மறுக்கும் மனிதர்கள், வானுக்கும்மண்ணுக்கும் எண்ணிமாளாத் தொலைவிருக்கிறது என்று சொல்கிறார்களே, எவ்வளவு முரண்பாடு இது..? மண்ணோடு மண்ணாகப் பிரிக்க இயலாதவாறு ஒட்டி இருந்துகொண்டு நீ காற்றையும் ஒளியையும் நீரையும் ஈந்து உடலெடுத்த உயிரினங்களுக்கு எவ்வளவு துணை செய்துகொண்டிருக்கிறாய்! அப்படிப்பட்ட உன்னை நான் பார்த்துக் கொண்டும் நன்றி செலுத்திக்கொண்டும் இருப்பதில் எவ்வளவு தன்னிறைவு உண்டாகிறது என்பதை நீஅறிவாயா? இந்த நிலம்என்பது எனது உடல் இருக்கும் ஒரு கலன் மட்டுமே. பிற எல்லாமும் நீதானே, வானே?”
“நிலத்தை நீர் வெறுக்கிறீரா?”
“இல்லவே இல்லை என்னால் நீர் மேல் நடக்க
இயலும், வானில் ஓரளவு பறக்கவும் இயலும் என்றாலும் நிலத்தின் மீதுள்ள எனது நன்றிக்கடனுக்காக அதன்மீது நடக்கிறேன். எனது எல்லா வெற்றிகளுக்கும் நிலம் தானே வேர்”
“ இ ந் த அறிவெல் லா ம் உமக்குக் கிடைக்கத் து ற வு த ர ன் ஆசிரியமா?”
" அப் படியும் சொல்லிக் கொள்வதற் கில்லை! எதனைவும் துறவாமலே BL இவ்வறிவுகளைப் பெற்றுக் கொள்ள இயலும், எண்ணும் எதனையும் ஆழமாகவும் அதன் வழியிலும் எண்ணினால் அதன் உட்பொருள் மிக எளிதில் கிட்டிவிடுமே! எண்ணி கிடைத்த ஒரறிவை அதற்குரிய வழியில் பயிற்றுவித்தால் அல்லது பயிற்சி செய்து வந்தால், அது செயலறிவாகமாறி வெற்றியாகிவிடும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 
 

“நீர் ஏன் துறவியானீர்”?
“எண்பது ஆண்டுகளுக்கு முன்னரே நான் நம்பியதை இன்று நினைத்துப்பார்க்கும்போது எனக்கே நகைப்பாகத்தான் இருக்கிறது! பிறவிப் பயனை அடைய வேண்டுமானால், துறக்கம் பெற வேண்டுமானால் எல்லாவற்றையும் துறக்க வேண்டுமென்று நினைத்தேன்! பற்றுகளை அறுக்க வேண்டுமென்று நம்பினேன்!
அதனால் வந்த வாழ்வுதான் இது”
பற்றை அறுப்பதற்காகத் துறவில் பற்று
வைத்தீராக்கும்
“அதனால்தான் என்மீதே எனக்கு நகைப்பாக
இருக்கிறது என்றும் சொல்லுகிறேன்!
பிறருக்கு எவ்வகைப்பயனுமற்ற வாழ்வுதான் துறவு என்று சொல்லுகிறீI7"
“சொல்லலாம் போலும் தோன்றுகிறது. வழுவோ
என்று ஐயப்பாடாகவும் இருக்கிறது?”
“நீர் புதுமையான ஒரு துறவிதான்! உம்மிடம் பல வெற்றிகள், அறிவுகள் நிறைந்து கிடக்கின்றன. நீர்மேல் நடப்பதுவும் எனது வெளியில் மிதப்பவும் தவிர, வரும் நாள் குறித்தும் தெளிவாகக் கூறுகிறீர். உம்மோடு உரையாடுபவர் என்ன நினைக்கிறார் என்பதைக்கூட அறிகிறீர். ஊண் வேட்கையின் போது நீர் பார்க்கும் மரம் கூட தானே வளைந்து
உமது மடியில் 文二令 ப ழ ங் க  ைள க்
கொட்டுகிறது! நீர் சினந்து பார்க்கும் பொருள் உடனே சாம்பராகிவிடுகிறது! கு எளி ர் ந் து பார்த்தீரானால் வாடிய செடி கொடிகளும் பசுமை பெறுகின்றன! இ வ் வா ற ர ன அ றி வு க  ைள ப் பெற்றி ரு க் கும் உமக்கு இந்த வ T ழ் க்  ைக பயனற்றதாகத் தோன்றுகிறதா? உமது நிலையான g L- ú எதுவென்றுகூட உம்மால் அறிய இயலவில்லையா?” “எனது நோன்புவாழ்வினூடாக நான்
43

Page 46
பெற்றிருக்கும் பேறுகள் இவை. இவற்றை எவரும் நேர்மையான இறுக்க வழியில் பெற முடியும். இதில் புதுமைப்பட எதுவுமே இல்லை. என்றாலும் என்னுடையது பயனில்லா வாழ்வுதானோ என்ற ஐயமும் கூடவே எழுகின்றது.” 1
“இந்த இரண்டுங் கெட்டான் நிலை ஏன் உமக்கு வந்துள்ளது என்பதிலாவது தெளிவிருக்கிறதா?”
“எனக்கு வழி காட்டுவார் யாருமிலர் குரு இல்லாமற் கல்வி நிறைவுறுவதில்லை! நீயாக இன்று உரையாடிய பிறகுதான் இத்தனை உணர்வுகளும் எனக்குப் புதிதாகப் பிறக்கின்றன! என்னோடு உரையாடும் நீ நினைப்பவற்றை அறிவதன் ஊடாகவும் உரையாடலின் வலுவூடாகவும் பலவற்றுக்கான தெளிவுகள் பிறந்து கொண்டிருக்கின்றன! சொல்கிறேன்:- நான் இதுவரையில் உழைத்து உண்ணவில்லை இயற்கையானது தனது வளர்ச்சிக்காக உண்டாக்கிக்கொள்ளும் பழங்களையும் கிழங்குகளையும் இலைகளையும் தான் பறித்து உண்கின்றேன். மனித இனத்துக்குப் பயன்படும் எந்த வினையையும் நான் இயற்றவில்லை. என்னைமட்டும் ஈடேற்றிக் கொள்ளும் தன்னல எண்ணத்தில்தான் அலைந்து வந்திருக் கின்றேன். நான் ஆடையைத் துறக்கவில்லை; உணவைத் துறக்கவில்லை; உறையுள்ளைத் துறக்கவில்லை. ஐம்புலன்களின் செயற் பாடுகளைத் துறக்கவுமில்லை; காமத்தை விட்டும் நான் விலகியிருக்கிறேனே தவிர அதையும் துறக்கவில்லை! அதை நான் துய்க்காவிட்டாலும் அடக்கி வைத்திருக் கிறேன்! ஒன்றை அடக்குகிறோம் என்றால் அதை நாம் இன்னும்துறக்கவில்லை என்றுதானே பொருள்?.”
"துறப்பது என்பது ஒருவகைக் கற்பனைதான் என்பதை இப்போதாவது உணர்ந்து கொண்டீரே! இனி நீர் தேறிடுவீர்! இந்நிலையில் நீர் உமது உடலைத் துறந்து விட்டால் உமக்கு என்ன கிடைக்கும் என்று நம்பியிருக்கிறீர்?”
“அதுதான் என்னதும் இடர்ப்பாடு” "பற்றறுத்தல் என்பது குறித்து நீர் என்ன கொள்கையை வைத்திருக்கிறீர்?
“வானே! நீ நினைப்பதை என்னால் அறிய முடிகிறது! அது உண்மைதான். பற்றை அறுத்தெறிதல் பற்றறுத்தல் என்பதல்ல. எவராலும் எந்தப் பற்றையும் அறுத்தெறிந்துவிட இயலாது! ஏனென்றால் எந்த வாழ்வும் பற்றுகளின் அடிப்படையில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றது. வேண்டுமானால் பற்றடக்கல் என்று கொள்ளலாம். எந்தப் பற்றையும் வரையறுத்துக் கொள்ளல் தான் பற்றறுத்தல் என்பதன் உண்மைப் பொருளாகும்! ஊண் வேட்கையா? புலன்கள்
44

வெறிகொள்ளா உணவுகள்! உறையுள்ளா? போதுமான அளவுக்கு காமமா? ஒரு திருமணம்! அது போதவில்லையா? தேவையான அளவுக்கு நேர்மைப்படியாக இன்னுமொன்று பற்றை அறுத்து எறிய வேண்டும் என்பதே இன்னொரு பற்றை வளர்ப்பதாகத்தானே முடிகிறது உடலையும் துறந்தபிறகுதானே துறவு என்பது முழுமைப்பட இயலும்?”
"துறவியாரே! நீர் மனித இனத்துக்கு நன்மை செய்யாததைப் போலவே கெடுதலும் செய்தீர் அல்லீர்! எனவே, நீர் இறந்துபோனால், உமக்கு மறுமையில் துறக்கம் கிடைக்கும் வாய்ப்பில்லை! அதேபோல் இறக்கம் கிடைக்கும் வாய்ப்புமில்லை! உமக்குக் கிடைக்கக் கூடியது, இரண்டுமில்லா நிலைப்பட்ட இடைக்கம்தான்! பயனற்ற ஒரு பலன் உமக்குக் கிடைப்பதைவிடப் பயனுள்ள ஒரு பலன் துறக்கம் உமக்குக் கிடைக்க வேண்டுமாயின், நீர் என்ன செய்ய வேண்டும் என்பதுவும் இப்போது உமக்கு விளங்கியிருக்க வேண்டுமே?”
“விளங்குகிறது. வானே! ஆயினும் ஓர் அச்சமும் ஓர் ஐயமும் எழுகின்றனவே! எதையும் இனிமேல் செயலாற்ற இயலாத வாழ்வின் ஈற்றுப்பகுதியில் இருக்கிறேனே என்பதனால் எழுகிறது அச்சம். செயலாற்றுதல் இல்லாதுபோனால் எனது இதுவரையிலான வாழ்வு வீணாகிவிட்டதோ என்பதனால் அவ்வச்சம் விரிகிறது துறக்கம் இறக்கம்பற்றிய ஐயப்பாடு மற்றையது.தனக்குக் கிடைக்காமற்போன இன்பங்கன் பற்றிய மனிதக் கற்பனையின் உயர்நிலை இறுதிதான் துறக்கம் எனப்படுகிறதா? அவன் துய்த்த இன்னல்களின் மிக்குயர் நிலைகளை அவனே தொகுத்தளித்த இறுதித் தோற்றம்தான் இறக்கம் எனப்படுகிறதா? உண்மையில் இவ்வாறாக எதுவுமே இல்லையா?”
உள்ளன, உள்ளுவன - எல்லாவற்றையும் கடந்ததுவும், பால் - எண் - தோற்றம் - முடிவு போன்ற எதுவுமே இல்லாததுவுமான ஒன்றின் மீது நம்பிக்கை தேவையாகவே இருக்கிறது. ஏதாவது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில்தான் படைப்புநிகழ்ந்துகொண்டிருக்கிறது. நம்பிக்கை வைப்பீராக! உமது அச்சத்தைப் பயனுள்ள அச்சமாக்கிவிடுவீராக! நன்மையின் பால் நாட்டமும், உண்மையை அறிந்துகொண்ட நிலையில் ஏற்பட்டிருக்கும் உளமகிழ்வும் உமக்கு அச்சத்தை விளைத்திருக்கின்றன! இவ்வச்சம் நல்ல அறிகுறியாகும்! உம்மிடமுள்ள அறிவாலும் வெற்றியாலும் நீர் இன்னும் நீணாள் உயிர்வாழ இயலும். இவ்விடைவெளியில் மனித இனத்தின் நன்மைகளுக்காக நீர் வாழும் மக்களிடம் செல்லும், சீரழிந்துகொண்டிருக்கும் பண்பாட்டைச் சீர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 47
செய்யும். உம்மிடம் கொழுத்துப்போய்க்கிடக்கும் அறிவை உம்முடனேயே புதைத்துவிடாமல் அதனை மனித இனத்துக்குப் பகிர்ந்தளியும். புதியனவற்றை மனித இனத்துக்கு அளியும். கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் எந்த ஆய்வறிவின் பயன்பாடும் அரைப்பகுதி நன்மையைத்தான் மக்களுக்கு அளித்து வருகிறது. நில நெய்யால் ஊர்தியை இயக்கக் கண்டுபிடித்தார்கள். ஆனால் அதன் கழிவுகளால் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களைய இன்னும் செம்மையான வழிவகைகள் கண்டுபிடிக்கப்பட வில்லையே! எல்லாத் துறையிலும் இந்தக் குறை நிலவுகிறது. அதற்கான ஆய்வறிவியலை நீர் மேற்கொள்ளலாம். மனிதரை மனிதரே கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றார்களே, அதற்கு நீர் மாற்றைத் தேடலாம்; ஒற்றுமையைக் கொண்டுவரலாம். துறக்கமோ இறக்கமோ, அவை-செய்வினைகளின் விளைவாகக் கிடைப்பவை. வினைகளற்ற உமக்கு விளைவற்ற இடைக்கம்தான் கிடைக்கவேண்டுமா? அமைப்பை மாற்றியமையும். என்னதான் உழன்றாலும் ஏலவே எழுதப்பட்டபடிதான் எவருக்கும் கிடைக்கும், என்ற பொய்யான ஒரு கொள்கை மனித இனத்துக்கிடையில் உலவுகிறது. நீ இப்படி வாழ்ந்தால் இது கிடைக்கும்; அப்படி வாழ்ந்தால் அது கிடைக்கும், என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது! எனவே உமக்கு இப்போது கிடைக்கவிருப்பதை நீர்மாற்றியமைக்க முடியும் பலனை முன்பாராது வினைகளை இயற்றுவீராக! தலையாய மூன்றை மறக்காதீர். அம்மூன்றுமே இயக்கம்தான்”
அதன் பிறகு வான் உரையாடவில்லை.
துறவியின் விழிகளில் ஒரே ஒரு மின்னலின் அசைவு காட்சியாகிறது.முன்னியில்-முகத்தில்-பிறந்த உயிர் உடலிலும் உள்ளத்திலும் பரவியது. வெற்றுடல் போலிருந்த உடல் பசுமை பெற்றது. காட்டிலிருந்து அவர் நாட்டுக்கு இறங்கத் தொடங்கினார்.ஒருபேரறிவாளனை இழந்த துன்பத்தில் இடைக்கம் அழுதது.
ぐ〉 ぐ〉 - ぐ〉
ஆட்சித்தலைவனும் போராளித் தலைவனும் உயிர் பிழைப்பதற்காக ஓர் உருளை மரக்கட்டையின் இரு புறத்தையும் இறுகப் பற்றியவர்களாகக் கடலில் மிதந்து கொண்டிருந்தார்கள். இருள் கரைந்துகொண்டிருந்தது.
தங்கள் மண்ணில் போரை நிறுத்தி ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக இவ்விருவரும் ஒரு நீரூர்தியில் நடக்கவிருந்த கலந்துரையாடலுக்காக இணைந்திருந்த போது, எதிர்பாரா வகையில் முதல் நாளிருளில் நீரூர்தி கவிழ்ந்துவிட்டது. யார் இறந்தார்கள். யார் உயிர் பிழைத்தார்கள் என்று அறியாத நிலையில் இருவரும் ஒரே கட்டையை நம்பிமிதக்க வேண்டியவர்களாகிவிட்டார்கள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

புதிய ஒளியில் ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பதுவும் பிறகு தலை தாழ்த்தி மிதப்பதுவுமாகப் பொழுது கழிந்து கொண்டிருந்தது.
எப்புறம்பார்ப்பினும் நீர் நீர் நீர்தான்! சிறிது தலையை உயர்த்திப் பார்த்தால் வான் வான் வான்தான்! வானினிடைப்பட்ட தனி நீர்க் கோள். நேற்றைய இருளிலிருந்து இவர்களின் முயற்சிகளை ஒன்று தவறாமல் பார்த்துக்கொண்டிருந்த கடல், ஒரு நகைப்புக்குப்பிறகு உரையாடத் தொடங்கியது.
"நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கொள்கைகளையுடையவர்கள். ஒருவரை மற்றையவர் அழித்துக்கொள்ள இயலாத நிலையில் நாட்டுப்பற்று, இனப்பற்று, நேர்மை, போர் என்ற பல பெயர்களில் எக்குற்றமும் அறியாத பொதுமக்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறீர்கள். இப்போதோ, உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள்’இயலாத நிலையில், ஒரே ஒரு மரக்கட்டையை நம்பி ஒரே இடத்திலேயே நிலைகொள்ளாமல் தவிக்கிறீர்கள்! நீங்கள் கனவிலும் எதிர்பார்த்திராத, புதுமையான திருப்பம் அல்லவா இது'
இருவருமே வாய்வாளாதிருந்தார்கள். "நீங்கள் இதுவரையில் செய்தவற்றுள் மிகப்பெருமளவானவை நேர்மையற்றவை, மன்னிப்புக்குட்படா வன்செயல்கள் என்பதை இந்தக் கடைசிப்பொழுதிலாவது ஒத்துக்கொள்கிறீர்களா?”
ஆட்சித் தலைவனுக்கு உடனடியாக எதை, எப்படிச் சொல்வதென்பதில் தெளிவு பிறக்காமலிருந்தது. உரையாடும் நிலையிலேயே அவன் இலன்! ஆனால் போராளித் தலைவன் தனது நிலைப்பாட்டை விளக்கத் தொடங்கினான்:-
“மக்கள் தலைவன் என்ற போர்வையில் இவன் தனது இல்லத் தலைவனாகவும் உறவுகளின் தலைவனாகவும் கழகத்தலைவனாகவும் வாய்ப்புகளுக்கு ஏற்றாற் போல் செயற்பட்டு வந்திருக்கிறான். இவனும் இவனோரும் நாட்டைக் கொள்ளையிடுவது தான் ஆட்சியாக இருக்கிறது. அச்சத்தினால் பொதுமக்கள் வாய்வாளாமையைக் கடைப்பிடிக்க வேண்டியதாக இருக்கிறது! நான்தான் முதலில் துணிந்து வாய் திறந்தேன். அறிவுரை கூறினேன்; கேட்டானல்லன். சினந்தேன், வைதேன்; பலனில்லை. அச்சுறுத்தினேன்; அதற்கும் கட்டுப் பட்டானிலன்! உண்ணா நோன்புகள் பலவிருந்தோம்; பணிப் புறக்கணிப்புகள் பல செய்தோம். எதற்குமே நன்மை விளையா மற்போனதால் தான் நான் எனது தலைமையில் போராட்டத்தைக்தொடக்கினேன். அதுவளர்ந்துபோராக மாறியிருக்கிறது. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும்தான் நான் போராளியாகினேன்.இதில் தன்னலத்துக்கே இடமில்லை எந்தக் குற்றமும் நான்
45

Page 48
செய்தவனும் அல்லேன். இப்போதுகூட, இவனை நான் கொல்ல விரும்பியிருந்தால் எளிதாகக் கொன்றிருக் கலாமே! எனது எண்ணம் இவனைக் கொல்வதல்ல. இவனைக் காப்பாற்றித் திருத்தி நாட்டை அவனிடமே ஒப்படைப்பதுதான்! இவனைப்போல் நானும் குற்றங்கள் செய்திருப்பதாகக் கடல்நீயே சொல்லலாமா?”
மறுபடியும் கடல் நகைத்தது. “அதைத்தான் நான் முதலிலேயே சொல்லி விட்டேனே, ஒருவரை மற்றவர் அழித்துக்கொள்ள இயலாத நிலையில், ஏதோ ஒர் உடன்படிக்கையின் அடிப்படையில் என்றுகூடச் சொல்லலாம். பொது மக்களைக்கொன்று குவிக்கிறீர்கள் என்று”
“எங்களுக்கிடையில் எவ்வகையான உடன் படிக்கையும் இல்லை”
“ஏனில்லாமல்?. தான்தான் ஆள வேண்டும் என்கிறான் அவன். நீதான் ஆள வேண்டும் என்று நினைக்கிறாய்நீஇது உடன்படிக்கை இல்லியா?. நீங்கள் நிலத்தில் வாழ்ந்தாலும் நான் நீராக ஒதுங்கிக் கிடந்தாலும் எல்லாவற்றையும் மிகமிகச் செம்மையாக அறிவேன்! உங்கள் நிலத்தினூடே ஓடிவரும் ஆறுகளும் வானினூடே ஓடிவரும் கொண்டல்களும் அறிவிப்பவற்றை விட மிகுதியாக நீங்கள் எனக்கு எதையும் அறிவிக்கப் போவதில்லை! போராளித் தலைவனே! நீ போராடத் தொடங்கியது வரையில் எல்லாமே அற வழியில் தான் நடந்திருக்கின்றன. போராட்டம் என்று கைக் கொண்டவுடனேயே அங்கே மறம் புகுந்துவிட்டது.அதை நீ உரிமையியக்கம், உரிமை வழக்கு என்றோ நேர்மை அவாவுதல் என்றோ வைத்து அதன்படியாகச் செயற்பட்டிருக்கலாம். போர் என்ற சொல்தான் உன்னை நேர்மையற்ற போர் வழிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. போர் இயற்கைக்கு முரணானது இயற்கைக்குமுரணான எதுவுமே இவ்வையத்தில் வெற்றி பெற்றுவிட முடியாது. வெற்றி கிடைத்ததாகக் காணப்படுவதெல்லாம் ஒருவகை அறிவுக் குழப்பமே இயற்கையின் அடிப்படையில் படைக்கப்பட்டவன்தான் மனிதன். அவன் ஆக்க வழியாகப் படைக்கப்பட்டுள்ளானே தவிர அழிவு வழியாகப்படைக்கப்படவில்லை.போர் என்ற போர்வையில நீகுற்றமற்றவர்களையும் சிறுவர், நோயாளர், பெண்டிர் களையும் நாற்கால் உயிர்களையும் பறவைகளையும் இயற்கையையுமே கொன்று நிமிர்கிறாய்! இன்னோர் உயிரை, ஏன் உனது உயிரையுமே அதன் உடலிலிருந்து வெளியேற்றும் உரிமை எந்த மனிதனுக்கும் இல்லை! உணவுக்காகவும் மனித இனத்தின் நலத்துக்கான ஒறுப்புக்களுக்காகவும் நோய்த் தடுப்புக்காகவுமே அல்லாது நீ கொல்வதை இயற்கை ஏற்காது உனக்கும் இந்த ஆட்சித் தலைவனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது"
46

“நான் அரசியல் கற்றுத் தேர்ந்தவன். அற நூல்களையும் பன்னாட்டு வரலாறுகளையும் பல்வகைக் கலை, பண்பாடுகளையும் மனித இன வளர்ச்சியையும் நன்கு கற்றவன். இந்த ஆட்சியாளனைப் போல போலியல்லன்.போரின் முறைகளையும் நான் செவ்வனே கற்றிருக்கிறேன். அடக்கப் படுபவர்கள் சீறி எழும்போது போர் என்பதுமுறையானதுதான், அறவழியிலானதுதான் என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்திருக் கிறேன்!”
“குறுகிய தேசத்துக்குள் நின்று நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, மறைப்பற்று என்று வழக்காடுபவர்கள் தங்களின் தன்னலத்துக்காக வரித்துக் கொண்ட வழுவான வழிதான் போர் எனப்படுவது அது எவ்வளவுதான் அறவழியென்று உன் போன்றவர்களால் கைக்கொள்ளப்பட்டாலும் இயற்கையால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது சில வேளைகளில் அது ஏற்றுக் கொள்ளவும் படுகிறதுதான். ஆனால் மிகுந்த வெறுப்போடும் ஒறுப்புகளை அளிக்கும் கடப்பாட்டோடும் தான் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை நீ அறிவாயா? நீ செய்வது கொலைதான் என்பதில் ஐயமில்லை! ஆட்சித் தலைவன் தனக்குப் பிடிக்காதவர் களைக் கொல்வதுபோல, நீயும் உனக்குப் பிடிக்காதவர் களைக் கொல்கிறாய்! ஆட்சித் தலைவன் நேர்மையற்றவனாக இருந்தால் அவனை மாற்றப் பல வழிகள் இருக்கின்றன. ஏன் உங்களுக்குத்தான் தேர்தல் என்றொரு முறை எளிதானதாக இருக்கின்றதே"
“தேர்தல் எவ்வளவுக்கு எளிதான தாகவும் நேர்மையானதாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கு இடர்ப்பாடுகள் உள்ளதாகவும் முறைகேடுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது எத்தனையோ தேர்தல்கள் வந்து போயின. இவனும் இவனது படையினரும் கையாட்களும் எல்லா வகையான வன்முறைகளையும் கடைப்பிடித்து ஒவ்வொருமுறையும் இவனையே ஆட்சிப் பொறுப்பில் இருத்துகிறார்கள்! அதற்குக் குறுக்கே நிற்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்! இவற்றையெல்லாம் பட்டறிந்து கசந்த பிறகுதான் நான் வேறு வழியில்லாமல் போரைத் தேர்ந்தெடுத்தேன்! முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்?”
"அணுகுமுறையில் தவறிருந்தால் எவராலும் எதிலும் வெற்றிகொள்ள முடியாது! நீ எதையும் செய்யலாம்-நேர்மையற்ற செயல்களைத் தவிர்த்துவிட்டு - ஆனால் நீயோ மறவழிக் கொலைக்கு விலைபோய் விட்டாய் திருத்தப்பட முடியாதவனை விட்டுவிட்டுக் குற்றமற்றவர்களைக் கொல்வது போரறமா?”
"குற்றமுடையவனையும் அவனுடையவர்களையும் திருத்த இயலாமற் போன பிறகுதான் நான்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 49
கொலைவாளை எடுத்தேன். அவர்களைக் கொல்ல ஆள்வினை செய்யும் போது, குற்றமற்றவர்களும் கொல்லப்பட்டு விடுகிறார்கள்! இது தவிர்க்கப் பட இயலாததாகிவிட்டது அறியாமற் செய்தவற்றுக்கு மன்னிப்பு இல்லையென்று நீ சொல்லலாம். ஆனால் மன்னிப்பு இருப்பதாக எல்லாக் கலைகளும் குறிப்பிடுவதால்தான் நான் அம்முறையைக் கைக் கொண்டேன்”
“நீ செய்யும் தவறுகளை ஒப்பேற்றுவதற்கான எண்பிப்புத்தான் இது கொலை என்றால் கொலைதான். உன்னவர்களை அழிப்பதாகக் கூறிக்கொண்ட அவன் நல்லவர்களையும் சேர்த்தே அழிப்பதைப்போல்தான் நீயும் செயற்படுகிறாய். உன் மக்களை நீயே அழித்துக்கொண்டு எவ்வாறு என் மக்களுக்காப்போராடுகிறேன்,என்றுநீயே மார்தட்டிக்கொள்ள முடிகிறது? மக்கள் அழிந்த பிறகு நீ யாருக்காக வாழப் போகிறாய்? வெறுப்பென்பது மனிதனிடம் எப்போது நுழையும் எனக் கூற இயலாது. ஆண்டு பல இப்போர் நீடிக்குமாகில், உனது புறமுள்ளவர்கள் உன்னை வெறுக்கத்தொடங்குவார்கள். பிறகு நீமட்டுந்தான் தனியனாகப் போகிறாய்”
“நீ சொல்வது உண்மை என்பது எனக்கு ஏலவே தெளிவாகியிருக்கிறது. என் மக்கள் என்று நம்பித்தான். நான் இந்தப் போராட்டத்தில் இறங்கினேன். ஆனால் அவர்களுள் ஒரு பகுதியினர் என்னோடு இருப்பதாகக் கூறிக்கொண்டே அச்சத்துக்கும் செல்வத்துக்கும் அவாப்பட்டு அவனுக்காக உழைக்கிறார்கள்! எனது போராட்டம் வெற்றிபெறத் தடையாக இருப்பவர்கள் இவர்கள் தாம்! எனது வழியிலான தடைகளை நீக்கிக்கொள்வதில் என்ன மறம் வந்து புகுந்து கொள்கிறது என்கிறாய்? அவர்களை என்னவர்கள் என்று எவ்வாறு உடைமை கோர முடியும்? அதனால்தான் அவர்களை வேட்டையாடுகின்றேன்!”
“தவறுகளை ஒத்துக்கொள்பவனாக இல்லாதவரையில் நீநேர்மையின் பாற்பட்டவனாக இருக்க முடியாது! எல்லாப் படைப்புகளும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டவை. உனது செயல்களில் நேர்மை தவறினால், அதற்குரிய ஒறுப்பு உறுதியாகவே உன்னை வந்தடையும் கலந்துரையாடலையும்போரையும் ஒரே வேளையில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் உனக்கோ இந்த ஆட்சியாளனுக்கோ என்றுமே வெற்றி கிடைக்கப் போவதில்லை! பழிக்குப் பழி என்ற கோழைமையில் நீ எவ்வளவுதான் உன்னை நீயே போராளியாக உயர்த்திப் பெருமைப்பட்டுக் கொண்ட போதிலும், மக்களாலும் இயற்கையாலும் நீ தூக்கியெறியப்படுதல் உறுதிநீசெய்திருக்கும் சில நல்ல செயல்களுக்காக உனக்குத் துறக்கத்தில் ஓரிடம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

உண்டுதான். ஆயினும் நீ செய்துள்ள பல கேடான செயற்பாடுகளுக்காக உனக்கு இறக்கமும் உறுதியே! உனது வரும்நாள் வரலாற்றில் இறக்கம்தான் பெரும்பங்கு வகிக்கிறது”
“உனதிந்தத் துறக்கம், இறக்கம் பற்றியதான கொள்கையில் எனக்கு நம்பிக்கையோ கவலையோ இல்லை எனக்கு எது கிடைக்கிறது என்பதல்ல எனது வேட்கை. என் இனத்துக்கு நன்மை விளைய வேண்டுமென்பதுதான்.” எனும்போதே போராளித் தலைவனின் வாய்க்குள் புகுந்த நீர் அவனை உரையர்ட விடாமல் தடுத்தது.
ஆட்சித் தலைவனின் புறமாக உரையாடலைத் திருப்பியது கடல்:-
“மக்கள் தலைவன் எனப் பெயரை வைத்துக் கொண்டு மனித இனத்துக்கே கேடனாக வேட்டையிடும் ஆட்சித் தலைவனே! நீயும் இவனைப் போல உனது குற்றங்களை ஒத்துக்கொள்ளப்போவதில்லை என்பதை நான் அறிவேன்.போராளித்தலைவனின் செயல்களுக்கு நூறு பலன்கள் கிடைக்கும் என்றால் உனது செயல்களுக்கு நூறாயிரம் பலன்களும் போதா!. உனது எல்லைக்குட்படாத நாடுகளுக்குள், திறந்த வீட்டுக்குள் நாய்போல நுழைந்து தலையிட்டு அங்குள்ள மக்களைக் கொன்று அவர்களின் குருதியில் நீ நீச்சலடிக்கிறாய்! அங்குள்ள வளங்களைத் கொள்ளையிடுவதற்காக உனது சொல்லுக்கு அஞ்சும் உன்னவன் ஒருவனை மக்கள் தலைவனாக்கு கின்றாய்! அந்நாட்டை அது வரையில் ஆண்டு கொண்டிருந்தவர்களை உன் கைக்கூலிகளை வைத்தே தூக்கிவிடுகிறாய்! இவனைப் போன்ற போராளிகள் தோன்றி மேலும் மேலும் தங்கள் இனத்தவரையே கொன்றழிக்க வழி வகை செய்கிறாய்! மிகவும் நுணுக்கமாக நீ வெறியாட்டம் ஆடுவதற்குரிய உண்மையான அடிப்படைதான் என்ன? இறைமைக் குரியவன் இறைஞனாக இருக்க வேண்டுமா,உன்னைப் போலும் வெறியனாக இருக்க வேண்டுமா?”
“பிற நாடுகளில் புகுந்து நான் வெறியாட்டம் போடுவதாக நீகுற்றம் கூறுகிறாய். ஆனால் உண்மையில் வெறியாட்டமிடுவது அந்நாட்டைச் சீரழிக்கும் அதன் தலைவன்தான்! நானாக எந்த நாட்டுக்குள்ளும் புகுந்த தில்லையே! அங்கே நடைபெறும் வன்செயலாட்சிக்கு உட்பட்டுத் துன்புறும் மக்கள் என்னிடம் வந்து முறையிட்டுத் தங்களின் துன்பங்களைக் களைந்து தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும்போதுநான் எவ்வாறு வாளாவிருக்க இயலும் தீய ஆட்சியை ஒழித்துக் கட்டிவிட்டு நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகத்தான் நான் அப்படிப்பட்ட நாடுகளுக்குள் காலடி எடுத்து வைக்க நேர்கிறது!
47

Page 50
ஏனென்றால் நான் எனது நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கே பணி செய்யப் பிறந்தவன்! எனது நாட்டின் கொள்கையும் அதுதானே! என்னுடைய இடத்தில் நீயிருந்தால் நீயும் இப்படித்தான் செய்வாய்! நான் இது வரையில் எனக்காக எதையுமே செய்த வனல்லன்! நிலத்தில் நடப்பவற்றை நன்றாக அறிந்திருப்பதாக என்னதான் நீ கூறினாலும் உண்மை நடப்புக்களை நீ அறியவே மாட்டாய், கடலே! எனக்கிருக்கும் கடமைகளையும் அவற்றை நிறைவேற்ற நான் உட்படும் துன்பங்களையும் இடர்களையும் நீஎங்கே அறியப்போகிறாய்? வன்முறையில் ஆட்சி நடத்தப்படும் எந்த நாடும் என்னைத்தான் நாடித் துணை தேடுகிறது அதனால்தான் நான் அங்கே படையெடுக்கிறேன்; அந்த இறைஞனை இறக்கிவிட்டு நல்லாட்சி செய்யக்கூடிய ஒருவனை இருத்துகிறேன். என்னால் வெல்லப்பட்ட தலைவன் நேர்மையற்ற பல கொலைகளைச் செய்து நாட்டு மக்களை மிகுதியாக துன்புறுத்தியிருந்தால் மட்டுமே அவனைத் தூக்கிலிடுகிறேன். அதிலும் முறையான வழக்கு நடத்தப்படுகிறது! அதில் அவன் குற்றமுள்ளவனாகக் காணப்பட்டால்தான் அவனுக்குரிய ஒறுப்பு நிறைவேற்றப்படுகிறது! அந்தத் தலைவனோடு சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் தாம் போராளிகள் என்ற புனைபெயரில் வன்செயல்களில் ஈடுபடுகிறார்கள்! நான் அவர்களை அடக்க வேண்டியிருக்கிறது. அடக்க இயலாமற் போகுமிடத்துக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லாமலாகிவிடுகிறது இது போர் முறையில் ஒன்று என்பதை நீ எங்கே அறியப்போகிறாய்..? எந்த நாட்டின் வளத்தையும் நான் கொள்ளையடித்ததாக இது வரையில் வரலாறே இல்லையே மாறாக நான் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டல்லவா இருக்கிறேன்! நான் படையெடுக்கும் நாட்டில் நல்வாழ்வை நிலைநாட்டுவதற்காக எவ்வளவு செலவழித்திருப்பேன். எத்தனை என்னாட்ட வரை இழந்திருப்பேன் என்பதையெல்லாம் நீ ஏன் எண்ணிப் பார்க்கத் தவறுகிறாய்? அதை நான் மீளப் பெறுவதில்லையே! ஆயினும் எனது நாட்டுக்குரிய தேவைப்பாடுகள் அந்நாட்டில் இருக்குமாகில், அதற்குரிய விலையைக் கொடுத்துவிட்டுத்தானே அவற்றை நான் வாங்குகிறேன்? இது எப்படிக் கொள்ளை யெனப்படலாம்?”
"உனது விளக்கம் எல்லாமே புனையப்பட்டவை என்பதை என்னைப்போற் பிற இயற்கைகளும் நன்கு அறியும் நேர்மையற்ற கொலைகளைச் செய்தான், நாட்டு மக்களைத் துன்புறுத்தினான் என்று நீ ஒரு நாட்டின் தலைவனைத் தூக்கிலிடுகிறாயே, ஆயிரம் பல்லயிரம் கொலைகளை நேர்மைதவறிக்கையாண்டிருக்கும்உன்னை
48

எத்தனை முறை தூக்கிலிட வேண்டும்?. சிறுபான்மை யினரை அடக்கி ஒடுக்கி அவர்களின் வாழ்வையும் வளங்களையும் நீயே கொள்ளையடித்திருக்கிறாய். உனது ஆட்சியைப்பார்க்கும்போது,நீஉனது இல்லத்தலைவனாக ஒருபோது இருக்கிறாய். சிலபோது உறவுகளின் தலைவனாகவும் இடைக்கிடை நீ பிறந்து வளர்ந்த பகுதியினரின் தலைவனாகவும் இருக்கிறாய்! உனது பிறப்பியத்தாரின் தலைவனாக அடிக்கடிமாறுகிறாய்!உனது மறைத் தலைவனாகவும் மொழித் தலைவனாகவும் கூத்தாட்டம் போடுகிறாய்!பொதுவாக நீஉனது கழகத்தின் தலைவனாக மட்டுமே ஆட்சி செய்கிறாய்! இந்தப் போராளியும் அதனை உறுதிசெய்கிறான்!ஆனால் உனது நாட்டிலுள்ள எல்லா மக்களினது தலைவனாக நீ இல்லவே இல்லை”
போராளித் தலைவனின் முகத்தில் ஒரு புன்னகை தோன்றி மறைந்தது 39
"இதை நீ எளிதாகச் சொல்லிவிட்டாய்' என்று முகத்திற்பளு நிறைத்தான் ஆட்சித்தலைவன்."ஆனால் ஆட்சியில் இருந்து பார்ப்பவனுக்குத்தானே அதன் பொறுப்பை அறியும் வாய்ப்பு உண்டாகும்?நீகுறிப்பிடும் குற்றங்களுக்கும் எனக்கும் எதுவகைத் தொடர்பும் இல்லை என்பது மட்டும் உறுதி! எப்படி என்று கேட்டுக்கொள்! தேர்தலில் நான் தெரிவாகுவதற்கு எனக்காக உழைத்தவர்கள் யார்? செல்வத்தாலும் உடலாலும் சொற்களாலும் உயிர் கொடுத்து உழைத்தவர்கள் எனது பகுதி மக்களும் உறவினர்களும் எனது பிறப்பியத்தாரும் மறையினரும் கழகத்தவரும் மொழியினரும் எனது மறையினரும் தாம் அவர்களுக்கு நான் வேறு எந்த வகையில் நன்றி செலுத்த முடியும்?. எனவேதான் நான் அவர்களைச் சிறப்பான இருப்புகள் சிலவற்றில் வைத்திருக்கிறேன். அவர்கள் இழந்ததை அவர்கள் உழைக்க வேண்டாமா? அவர்கள் நல் வாழ்வு பெற வேண்டாமா? அது மட்டுமல்ல, இந்தப் போராளி கூறியதைப்போல என்னுடனேயே இருந்துகொண்டு எனக்குக் குழி வெட்டுபவர்கள் மிகுந்த வையம் இது. எவரையும் நம்ப இயலவில்லை. அதனால்தான் நான் என் இல்லத்தார்,உறவினர்,நண்பர், கழகத்தார்,பிறப்பியத்தார், மொழியார், மறையார் என்பவர்களைத் தலையாய ப்ொறுப்புகளில் ஈடுபடுத்தியிருக்கிறேன்! இதில் என்ன தவறு இருக்கிறது? நான் என்ன வேற்று நாட்டவரையா ஈடுபடுத்தியிருக்கிறேன்.? நாட்டைச் செவ்வனே நடத்திச் செல்ல வேண்டாமா?
நீ சொல்வதைப் போல் நான் யாருடைய வாழ்க்கையையும் கொள்ளையடிக்கவில்லை! பெரும் பான்மை மக்களால்தான் நான் ஆட்சித் தலைவனாக வந்திருக்கிறேன். எனவே, அவர்களின் நன்மைக்காகத்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 51
தானே நான் ஆட்சி செலுத்த வேண்டும்? நீ சொல்கிறபடியாக நான் இவர்களை ஒதுக்கி வைத்து விட்டால் அடுத்த தேர்தலில் நான் எவ்வாறு வெற்றிபெற முடியும்?”
"அதைத்தான் நானும் கூறினேன்! என்றுநகைத்தது கடல். “சிறுபான்மையினர் குறித்து நீ ஒரு சொல்லாவது உரைக்காததுகொண்டே, நீ அவர்களைப் பற்றிச் சிறிதளவாவது கவலையில்லாதவன் என்பது வெளியாகி விட்டது! நல்லது, இப்பொழுதாவது அவர்களைப் பற்றி நீ என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறாய் என்று சொல்வாயா?”
"அவர்களைப் பற்றிப் புதிதாக என்ன நிலைப்படு கொள்ளப் போகிறேன்? பெரும்பான்மையினருடன் அவர்களும் இருந்துவிட்டுப் போவதில் எனக்கொரு முரண்பாடும் இல்லையே! அதற்காக அவர்கள் வேண்டுவதையெல்லாம் நான் கொடுத்துவிட இயலும் என்று சொல்கிறாயா? ஒருநாட்டுக்குள் இரண்டு மூன்று ஆட்சிகள் ஏற்படுமானால் நான் எவ்வாறு ஆட்சி நடத்துவது?”
“ம் ஆட்சி செய்யும் முறைகளை அறியாத நீயும் ஒரு மக்கள் தலைவன். ஆட்சி என்பது பெரும்பான்மை, சிறுபான்மை எனப் பிரித்து ஆள்வதல்ல என்பதுகூட உனக்கு விளங்கவில்லையே! உனது இறைமையின் கீழுள்ள எந்த உயிருக்குமே கெடுதல் வராத நிலையில் நீ ஆள அறிந்திருக்க வேண்டும்
நீர்வாழ் உயிர்களுக்கு நீர் இருக்கிறது. பறவைகளுக்கு வானும் நிலமும் இருக்கின்றன. நாற்காலிகளுக்குமண் இருக்கிறது. ஆனால் மண்ணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு மண்ணில் இடமில்லை! சிறுபான்மை எனப் பெயரிடப்பட்டு அவனுக்கு நீரும் நிலமும் இயற்கையும் மறுக்கப்படுகின்றன! இதற்குப் பெயர் ஆட்சியா இனக் கொலையா? அவர்களையும் அணைத்து ஆட்சி இயற்றத் திறனில்லாதவனை இறைஞன் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?. போகட்டும் நாட்டின் இளைஞர்கள் வரும் நாளின் இறைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் நீ, அந்த இளைஞர்களையும் கூடவே வாய்த்திறனுள்ள பெரியோரையும் திறனில்லாத வர்களாக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை உணர்ச்சியற்ற நிலைக்குத் தள்ள வேண்டும் என்பதற்காகப் பலவகையான வெறிப்பொருள்களை வெளிநாடுகளிலிருந்து தருவிக்க நீ மறைவாகச் செயற்படுகிறாய். உன்னைச் சார்ந்தவர்களே இதனைச் செய்வதால்தான் மறைவாக என்கிறேன். உள்நாட்டிலும் இது செய்கை பண்ணப்படுகிறது. இன்னும், மக்கள் சீரழிய வேண்டும், நீ உன்போக்கில் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதற்காக இழிந்த எழுத்துக்கள் உலவ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

வழிசெய்கிறாய் இழிவான எழினிக் காட்சிகளை மக்கள் பார்க்கவும் உரிமம் அளிக்கிறாய்! பண்பாடு சீரழிய என்னென்ன வழிவகைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் சிறப்பாக மேலெடுத்துச் செல்ல நீயே கால்கோள் இடுகிறாய். கண்டும் காணதவன் போல் இருப்பதனூடாக”
“இது என்மேல் நீ ஏற்றும் வீண் பழியாகும்! எனக்கும் இதற்கும் தொடர்பே யில்லை! இப்படிப் பட்டவர்களை ஒறுப்பதற்காக வென்றே நான் வலுவான நெறிமுறைகளை வகுத்திருக்கிறேன்! முரண் கழகத்தினரும் இவனைப் போன்ற போராளிகளும் என்னை ஒழிப்பதற்காக நடத்தும் கூத்துக்கள் இவை. மேலும் கலை, பண்பாடுகள் குறித்துச் செயலாற்ற வேண்டியவர்கள் எங்களை விட மறைக்காவலர்களும் மக்கள் தொகுதியும் தானே!"
“நீ நஞ்சை மட்டும் உணவில் கலப்பவனாக இல்லாய் நஞ்சிடப்பட்ட உணன்வ மக்களுக்கு ஊட்டவும் செய்கிறாய்; பிறகு அவர்களைக் காப்பாற்றுபவனாக மருத்துவம் அளிப்பவனாகவும் நடிக்கிறாய் அதை மட்டுமா செய்கிறாய்?ஆயறிவியல் என்ற போர்வையில் மக்களைக் கொன்றுகுவிக்கப்போர்க்கருவிகளை வகை வகையாகக் கண்டுபிடிக்கிறாய் பிற நாட்டவர்கள் கண்டுபிடிக்காமல் அவர்களைத் தடுக்கவும் செய்கிறாய்! நீ கண்டுபிடிக்கும் கருவிகளை விற்றுச் செல்வதைக் குவிப்பதற்காகப் பல நாடுகளில் பற்பல வகைகளிலும் போர்கள் ஏற்பட வழிவகை செய்கிறாய்! சிறுவர்களைப் படையில் சேர்க்கிறாய் தாய்நாடு, நாட்டுப்பற்று என்ற பெயர்களில் கல்விபயிலும் சிறுவர்களுக்கிடையிலும்போர் வெறியை ஊட்டுகிறாய்! நீ செய்யும் போர்க்கருவிகளில் நிறைவு பெறாவற்றையும் பயன்படுத்தி அப்புறப்படுத்திய வற்றையும் குறைந்த விலை என்ற வஞ்சகத்தில் ஏழை நாடுகளுக்கும் வஞ்சிக்கும் வணிகர்களு க்கும் விற்றுவிடுகிறாய் அவற்றை நம்பி வாங்கிய படைகள், அவற்றைத் தங்களின் பகைவர்களைக் குறிவைத்து அனுப்புகையில், அவை வலுவற்ற நிலையில் இடையில் விழுந்து குற்றமற்ற மக்களைக் கொல்கின்றன! போரினூடான மக்களின் அழிவுக்கு நீதான் முதல் மனிதன்கொலைகாரன்"
ஆட்சித்தலைவன் நகைச்சுவைகாட்டி நகைத்தான். "நீ இன்னும் ஆயறிவியல் தோன்றாத நாளிலேயே இருக்கிறாய் கடலே வையம் எவ்வாளவு முன்னேறியிருக்கிறது என்பதை நீ அறிகிலாய்! ஆயறிவியல் இந்த வையத்துக்கு எவ்வளவு நன்மைகளைச் செய்துகொண்டு வருகிறது என்று நீ அறிவாயா? அழிவுக்கும் அதில் பங்குண்டுதான். எந்தச் செயலிலும் நன்மையும் உண்டு;கெடுதலும் உண்டே இது
49

Page 52
படைப்பின் உட்பொருள் என்பதைக்கூட உன்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லையே. அதற்கு நான் என்ன செய்ய இயலும் என்கிறாய்? மக்கள் தலைவன் என்ற நிலையில் நான் என் மக்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் போர்க் கருவிகளைச் செய்ய வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறேன்! சிறு நாடுகளில் இவற்றைச் செய்ய நான் ஏன் இடம் கொடுப்பதில்லை என்றால், சிறு குழந்தைகளின் கையில் அரிவாளைக் கொடுப்பதில்லை என்ற முறையைப் பின்பற்றித்தான்! ஆனால் அவர்கள் தங்களின் பகைவர்களை அடக்குவதற்காகக் குறைந்த விலையில் நானேஷ் போர்க்கருவிகளை விற்றுத் துணைசெய்கின்றேன்! அவர்களின் வேண்டுகோள் நேர்மையாக இருந்ததால்தான் அவ்வணிகத்தை நான் மேற்கொள்கிறேன்! நான் பயன்படுத்திய கருவிகளை நான் அழித்துவிடுகிறேனே தவிர விற்பதில்லை! சிறுவர்களை நான் படையிற் சேர்ப்பதில்லை! அதற்காகத் தனியான நெறிமுறை ஒன்றையே வகுத்து வைத்திருக்கிறேன்! தாய்நாடு, நாட்டுப்பற்று போன்றவற்றைச் சிற்றகவையிலேயே பயிற்றுவித்தால் தானே நாட்டில் நல்ல மக்கள் தோற்றம் பெறமுடியும்?”
“கற்பிப்பது வேறு வெறியை ஊட்டுவது வேறு உனது வழி வெறியூட்டுவது அடுத்தடுத்த நாடுகளைப் பிடிக்கும் சில சிறு நாடுகளுக்கும் நீதான் பெருந்துணை செய்து போர்வெறியை ஊட்டுகிறாய்”
“அந்நாடுகள் எனது பிள்ளை நாடுகள்! சிறுசிறு குற்றங்களைச் செய்கிறார்கள் என்பதற்காக எங்கள் பிள்ளைகளையே நாங்கள் வெறுக்க முடியுமா? அவர்களும் வல்லவர்களாக வரத்தானே வேண்டும்? போர் தொடுக்கப்படும் மற்றைய நாடுகள் சிறிதளவு பொறுமை காத்து எனது பிள்ளைகளை வளரவிட்டால் என்ன குறைந்துவிடும்?”
“அடடா! என்னைவிட உனது குருதி வலுவானது என்கிறாய். ம். பொதுமக்கள் காவலற்ற நிலையில் கொல்லப்படுகிறார்கள். வெளிக்கொணரியலாளர்கள் கடத்தப்பட்டு உன்னால் கொல்லப்படுகிறார்கள். நல்வளர்ச்சி யுடைய மாணவர்களைக் கொல்கிறாய்! ஆனால் நீயோ மக்களின் செல்வத்தைக் கொண்டே பெருங்காவல் அமைத்துப்பெருநலவாழ்வுசுவைக்கிறாய் மக்களுக்காக நீயா உனக்காக மக்களா?”
"உறுதியாகவே நான் மக்களுக் கானவன்தான்! அதனால்தான் நான் என்னை அவர்களைக் கொண்டே காத்துக்கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன்! மக்களே எனக்குத் தந்த வாழ்வை நான் சிறப்பிக்க வேண்டாமா?”

“ஆயினும் படைத்தவன் தரப்போகும் வாழ்வு வேறு வகையில் அமையப் போகிறதே ஆட்சி என்பது ஒன்றேபோல்தான் அமைய வேண்டும். ஆனால் உனதாட்சியோ நிறம் மாறும் ஒணானைப்போல் இருக்கிறது! ஒருநாள் மக்கள் தலைமை என்கிறாய். மறுநாள் பொதுவுடைமை என்கிறாய். அப்புறம் மறைசார் ஆட்சி என்கிறாய்! எல்லா ஆட்சி முறையிலுமே மக்களைக் கொல்வதைத்தானே முற்படுத்து கிறாய்? அவர்கள் தாமே ஒன்றுமில்லாமல் போகிறார்கள் - உழைத்துழைத்தும்? நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் ஒரு பத்துப்பேர்கள் மேடையில் இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கீழே ஒர் ஆயிரம் பேர்வரையில் பொதுமக்கள் நிற்கிறார்கள் என்றும் கொள்வோம். தேர்தலுக்கு முன்பாகக் கொடிகளாக இருந்த நீங்கள், ஆட்சிக்கு வந்த சில நாள்களிலேயே அந்த ஆயிரம் பேர்களைவிடிவும் பெருத்த கூட்டம்போல் காட்சி தருகிறீர்களே, அதெப்படி?”
“நீ நகைச்சுவை மிகுந்த கடல் போ” என்று நகைத்தான் ஆட்சித் தலைவன். “மக்கள் தலைமை, பொதுவுடைமை, மறைசார் ஆட்சி என்பதெல்லாம் மக்களை நிறைவு படுத்தத்தான் என்பது கூட உனக்கு விளங்கவில்லையே!உன்னையே எடுத்துக் கொள்வோம் இது கடல், உனக்கு மழை என்றொரு தோற்றம் இருக்கிறது. ஆறு என்றொரு தோற்றம் இருக்கிறது. அகழி என்றொரு தோற்றம் இருக்கிறது! அதுபோல்தான் இதுவும்"
“போராளித் தலைவன் எனப்படும் இவனுக்குப் பல்லாயிரமாண்டு இறக்கத்தில் ஒறுப்பிக்கும் வாழ்வு நடந்து, பிறகுதான் துறக்க வாழ்வு கிடைக்க வழி அமைந்திருக்கிறது. ஆனால் உனக்கு என்றென்றும் இறக்கம் தான்! உனது மனைவியை மட்டும் நீ நாட்டின் முதற்பெண்மணி என்று உயர்த்தி வைத்துப் பெருமையடித்துப்பெண்களையே இழிவுபடுத்துகிறாயே. அதற்காக நாட்டின் பிற பெண்கள் எல்லாருமே உன்னைப் பழிமொழியில் தூற்றிவரும் செயல் ஒன்றே உன்னை இறக்கத்திலிருந்து மீள வைக்காது போராடும்” என்று வெகுண்டது கடல்,
எதிர்பார்ப்பில்லாது நடந்த கடலின் குமுறலில் அவர்கள் பற்றியிருந்த உருளைக்கட்டை மட்டும் விடுதலை பெற்ற மகிழ்வில் ஆடியாடி மிதந்தது.
இருபெரும் தலைவர்களை வரவேற்பதற்காக இறக்கமானது மகிழ்ச்சிக் கூத்தாடிக்கொண்டிருந்தது.
令 ぐ〉 - ぐ〉
இன்னும் ஒருமணிக் கூறுக்குள் இருள்
சூழ்ந்துவிடும். அதற்குள் ஆற்றுக்குள் இறங்கித் தனது வியர்ப்புடலைக் கழுவிவிட்டு அவன் வீட்டுக்கு விரைய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 53
வேண்டும். அதனால் சிறிது எட்டி நடை போட்டுக் கொண்டிருந்தான். அந்த உழைப்பாளி.
அழுக்குணர்வையூட்டும் அவனுக்கு அகவை அறுபதுக்குமேல் இருக்கும்.முகத்தை நிமிர்த்திநடந்தால் எங்கே நிலம் தன்னைச் சினந்துகொள்ளுமோ என்பதைப் போல் அவன் நிலத்தைப் பார்த்தவாறே நடந்துகொண்டி ருந்தான்.
நிலம் அவனைப் பார்த்து மகிழ்ச்சியோடு உரையாடியது
'அறுபதாண்டுகள் கடந்த நிலையிலும்நீ இன்னுமே உழைத்துக்கொண்டிருக்கிறாயே, யாருக்காக? உனக்கு ஒரு பிள்ளைதானே உள்ளான்? அவனும் நன்கு படித்த மேலான தொழில் செய்பவனாகத்தானே இருக்கிறான்? அவன் உன்னைக் காப்பாற்றமாட்டானா? உனக்கும் உன் மனைவிக்கும் அவன்தானே இனி உழைப்பாளி?”
“என்ன பூமாதேவி, நீயே இப்பிடிக் கேக்கலாமா?” என்று புன்னகைத்துக் கொண்டான் அவன். “இந்த லோகத்துக்கு வந்ததிலர்ந்து ஓம் மேலதானே இருக்கிறேன்? ஏங் கொள்க ஒனக்குத் தெரியாததா? ஆண்டவெங் குடுத்த இந்தக் கையுங்காலும் நல்லா இருக்கிற வரைக்கும் நான் ஒழைக்கணும், தாயே! இல்லாட்டிப் போனா இந்தக் கையயுங் காலயுங்குடுத்த ஆண்டவனெ நாங் கேவலமா நெனச்ச மாதிரி ஆய்ப்புடாதா? நான் அப்பிடி என்னா ஆய்ரக் கணக்கிலயா சம்பாதிக்கப்புட்டேன்? இது வரைக்குஞ் சம்பாதிச்சதில மிச்சம் மீதின்னா இருக்கு - கால நீட்டிக்கெடந்து சாப்புட? ஏதோ, சம்பாதிச்ச வரைக்கும் மூணு புள்ளைங்களக் காப்பாத்துனேன். பத்து வயஸ்லயே ஆண்டவென் ஒண்ண நோய்ல புடுங்கிக்கிட்டான்! பதினெட்டு வயஸ்ல தீவிரவாதின்னு சொல்லிக்கிட்டு ஒண்ணு மறியாத எங்க ரெண்டாவது புள்ளய ஆமிக்காரனுக சுட்டுக் கொன்னுப்புட்டாய்ங்க! அப்பறம் என்னா செய்ய, வாயைக்கட்டி வயித்தக்கட்டி, மூத்தவன மட்டும்படிக்க வச்சோம். அவரும்பதினெட்டோ இருவதோ படிச்சாரு இதெல்லாம் இதே ஒழைப்பால தானே தாயே நடந்திச்சி? புள்ள என்னமோ ஆண்டவெங்கிருபையால நல்லா சம்பாதிக்கிறாருங்கிறதுக்காகவேண்டி. இது வரைக்கும் சோறு போட்ட ஒழைப்ப எப்புடிக் கைவிட்டுர்றது? நன்டிகெட்ட பொழப்பில்ல அது?. அதுமில்லாம,இதுவரைக்கும் ஆடியோடி ஒழைச்சஓடம்பு எப்படி செவனேன்னு கெடக்கும்? இன்னொண்ணயும் மறந்துட்டியே,தாயே புள்ளைங்கபெருசாகிச்சம்பாதிச்சுப் போடும்னு நான் என்னைக்குமே எதிர்பார்த்தவனில்லியே அது பெரிய பாவமில்லியா? இன்னைக்கி இருக்கிறவெல வாசிங்கள்ல அதுக நாளைக்கிப் பின்ன சீவிக்க வேணாமா?.”
GBramb - sowesvädu Shanas- ஜனவரி 2011

“இந்தவையமே உன்னைப் போன்றவர்களால்தான் இயங்குகிறது. என்பதை நீ அறிவாயா?”
"அப்பிடித்தான் எல்லாருஞ் சொல்றாங்க! வருசத்துக்கு ஒருநாளைக்கிமேதெனக் கூட்டம் போட்டு எல்லாருமா சேந்து அப்பிடித்தாஞ் சொல்றாங்க! ஆனா அதயெல்லாம் நீ நம்மபிறாத, தாயே! ஏன்னா மத்த நாள்கள்ல அவுங்களே அவுங்க சொன்னத நம்பிற தில்லியே வருசத்துக்கு ஒருவாட்டியாச்சும் அப்புடிச் சொல்லிக் கிடணும்னு ஏதாச்சும் தர்ம நியாயம் இருக்கணும் போல அதுக்காக அப்பிடிச் சொல்லிட்டுப் போறாங்கஅடசொல்லிட்டுப்போகட்டும், அதுக்கென்னா இப்ப?”
"ஆனால் உனக்குச் சேர வேண்டியதை அவர்கள் கொடுப்பதே யில்லை! இது உனக்கு ந்ேர்மையாகப் படுகிறதா? தொழிலாளர்கள் நீங்கள் எல்லாருமே எத்தனையோ முறைகளைக் கையாண்டுவிட்டீர்கள். என்றாலும் ஒரு பலனுமில்லை. உங்களைக் காப்பதாகச் சொல்லிக்கொள்ளும் கழகங்கள் தாம் உங்களுக்கு அமரர்கள் என்பதை நீங்களும் அறிவதில்லை” "அமர்னாதேவர்கள்னுஅர்த்தாச்சே" “அமரர் என்றால் தமிழ் மொழியில் பகைவர் என்று பொருள்! நீங்கள் எல்லாரும் வேண்டுமானால் ஒன்றே ஒன்றை மட்டும் செய்து வெற்றி காணலாம். நீங்கள் உங்கள் கழகத்தார்களுக்குத்திங்கள்தோறும் கொடுக்கும் கொடுப்பனவை நிறுத்திவிடுங்கள்"
“ஐயையோ, சந்தாவச் சொல்றியா, ஆத்தா? பொறுமைக்குப் பேர்போன பூமாதேவியே இப்புடிக் கோவப்பட்டா எப்புடி? பாவம்மா! ஏதோ நாங்க போடுற பிச்சைலதானே அவுங்க காலம் போகுது? அதையேன் நீ கெடுக்கப்பாக்கிறே? எங்களுக்கெல்லாம் போற எடத்தில புண்ணியம்னா அது இதுகதாம்மாவேறேன்னா சொத்து, சொகத்தக் கொண்டுக்கிட்டுப் போப்போறோம்?. வாணாம்மா தாயே, அவுகவயித்தில அடிச்சுப்புடாத"
ஒரு நெடுமூச்சுக்குப்பிறகு நீதுறக்கத்தைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று வினவியது. நிலம்.
“தொறக்கம்னா என்னா தாயே?” “ஓ, நீதமிழறியாதவன் அல்லவா துறக்கம் என்பது நீயறிந்த மொழியில் சுவர்க்கம் என்றாகிறது. நரகம் என்பதற்கு இறக்கம் என்பதுவும், இவையிரண்டுக்கும் இடைப்பட்டதிரிசங்கு சொர்க்கம் என்பதற்கு இடைக்கம் என்பதுவும் தமிழ்ச்சொற்கள்.”
"சொருக்கத்தப்பத்திக் கேக்கிறியா! அது செத்த பொறகில்லகெடைக்கும்னு சொல்றாங்க அதயெல்லாம் நான் என்னாத்து க்கு நெனச்சிப் பாக்கப் போறேன் தாயே? வேலயத்தவுங்கவேலயில்லியா அது?"
51

Page 54
“உனக்கு அந்தக் துறக்கம் கிடைத்தால் ஏற்றுக்கொள்வாயா?”
“அட, அதெல்லாம் நமக்கெதுக்கும்மா? அங்கவேல வெட்டியொண்ணுஞ் செய்றதுக்கில்லேங்கிறாங்க நாம் பொறந்ததிலர்ந்து ஒழச்சே பழகினவன்! அங்க போய்ட்டு எப்புடித் தூங்கு மூஞ்சித்தனமா செவனேன்னு கெடக்கிறது? அந்தப் பொழப்பு யாருக்கு வேணும்? அப்பறம், அங்க தேவாமிருதந்தாங் கெடைக்குமாம்ல? நமக்கு இந்தப் பழைய சோறு, சம்பளு, உப்பு - இதுக இருந்தாப்போதும்ல? அதுக இல்லாம நமக்கு சரிப்பட்டும் வராதே! இந்த சொருக்கத்தவுட. நமக்கெல்லாம் நரகந்தாஞ்சரிப்பட்டுவருந்தாயே!என்னா நாங்கள்லாம் அதுக்குதாம் பழகியிருக்கிறோம் எங்க பொழப்பவுடவும் ஒசத்தியா ஒரு நரகம் இருக்கும்ங்கிறியா? நாம பழகிப்போன ஒண்ணுக்குத்தானே நாம ஆசப்படனும்? சொருக்கமெல்லாம் எனக்கு வேணாந்தாயே!”
“ஏழைகளுக்கு - அதிலும் உன்னைப்போன்ற வெள்ளையுள்ளத்து ஏழைகளுக்குத் துறக்கம்தான் நேரடியான வெற்றிக் கொடையாகும்! நீயும் உன்
ஓம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாந 来...
“இச்சகம் உள்ளவரை உங்கள் அச்சக உங்கள் உள்ளக் கருத்துக்க eggs) 6)IL சகல விதமான அச்சுத்தே
O O யுனி ஆர்ட்ஸ் டுரி
Quality Off-set P. + Offset Printing • Digitt + 1Digital Banner Printing + ( + Hot Stamp Printing Importers of Indian Wedd
யுனி ஆர்ட்ஸ் (பி. 48B, புளுமெண்டால்
தொலைபேசி: தொலைநகல்: 2330195 மீ gygfig5asŝuīhóio Fast Digital Print (Colour Pri
52

இல்லத்தவர்களும் அங்கே எல்லாம் பெற்று நீடூழி வாழப்போகிறீர்கள்”
"அம்மா, பெரிய மனசுபண்ணி சத்தம் போட்டு சொல்லீறாத தாயே, எந் தல உருளப் போகுது எங்க மூத்தவரு அடிக்கடி குமுறிக்கிட்டே இருப்பாரு-இந்தப் பணக்காரங்களும் பெரியமனுசங்களும் எங்களயெல்லாம் ஏழைங்களாவே வச்சிக்கிட்டு அவுங்க மட்டும் ஒசத்தியா சீவிக்கிறதுக்காக வேண்டி இப்பிடியாப்பட்ட அண்டப் புளுகுகள சொல்லி நம்பள நல்லா ஏமாத்திக்கிட்டு வாராய்ங்கன்னு என்னய உட்று புண்ணியவதி.எனக்கும் ஏம் பொம்புள புள்ளைங்களுக்கும் செத்துப் போன எங்க ஆத்தா, அப்பாருக்கும் எங்கயாச்சுங் கொஞ்சங் கஞ்சித்தண்ணி கெடைக்கிற எடங் கெடைக்காமயா போய்றும்? அந்த எடந்தாம்மா எங்களுக்கு சொருக்கம்”
ஆற்றில் இறங்கிய உழைப்பாளியைப்பெருமையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறதுநிலம்,
அதே மகிழ்ச்சியுடன், ஒரு தூய உயிரை வாழ்த்தி வரவேற்க ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறது துறக்கம்.
ר ாடு சிறப்புற எமது வாழ்த்துக்கள்!
来米 ம் நிலைக்கும்? - கவிப்பேரரசு வைரமுத்து ளை எல்லாம் எழுத்துருவில் உவமைத்தும் வைகளுக்கும் நாடுங்கள். றைவேட்) லிமிட்டட் inters er Publishers I Printing + Screen Printing 'raphic Designing + Typesetting
+ Carton Making ng Cards er Cultural Ornaments
றைவேட்) லிமிட்டட்
வீதி, கொழும்பு 13.
330195, 2334.194.
Görorderso: unieart Osltnet.lk
t) 23"x12 "அளவு வரை செய்து தரப்படும்.
الصر
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 55
Dardadu J85 Lugp6LDT
பற்றிய ஒ
CO. மக்களின் வாழ்வியலோடு இணைந்து புழங்கி, வாழ்ந்து தொடர்ந்து வரும் மலையகப் பழமொழிகள்,சிறுபாடல்கள் சில சொற்றொடர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இருநூறு (200) வருட கால வாழ்வை இந்த மலைகளின் மண்ணுக்குள் தொலைத்து விட்ட இச் சமூகத்தின் சிறப்பு, கலைகள் எனில் மறுப்பதற்கில்லை. என்றாலும் இன்று இப்பழமொழிகள், சிறுபாடல்கள், சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுகின்றனவா எனில் அது பெருமளவில் நிகழவில்லை என்றே கூற வேண்டி உள்ளது.
அச்சொட்டாகவும், மிக வெளிப்படையாகவும் வெளிப்படும் பல பல மொழிகள் கருத்தை சட்டென வெளிக்காட்டி புலப்படுத்த உதவுகிறது. பழமொழிகள் 1. நிற்க நிற்க நிலை பெருக்கும் செத்த ஆட்டுக்குமுழி
பெருக்கும் 2. வேசைக்கு காசுமேல ஆசை வெளையாட்டு
பிள்ளைக்குமண்ணுமேல ஆசை 3. எங்கோ போவுதாம் சண்டை அதை இழுத்துக்கிட்டு
வருதாம் கொண்டை 4. சாமப் பீ தட்டி எழுப்பும்
இருக்க இருக்கத்தான் தெரியும் புதுக் கணக்கன் செய்தி மழை பெஞ்சாதான் தெரியும் வரட்டுப் பீநாத்தம் தேங்காய் ஒடைச்சா மூடிரெண்டு நக்குறநாய் நக்கித்தான் குடிக்கனும் பத்து ஆத்தா இருந்தாலும் ஒரு பெத்த ஆத்தா வேணும் r 10. வேலை இல்லா அம்பட்டன் பூனையைப் புடிச்சி
செரச்சானாம் 11. மொசமுயல்) புடிக்கிற நாயமூக்க பாத்தா தெரியும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

56J, 3gy1.JTL6b856,
Փ5 (ՑՈ5)ւJւց
- 6lco^\ყმისეგარზl -
12. மெத்த படிச்ச நாயி வேட்டைக்கு
ஒதவாது 13. நடக்க முடியாதவன் அண்ணே வீட்டில்ல பெண் எடுத்தானாம் 14. கெட்டாலும்பட்டணம் சேர் 15. இருக்க எடங்கொடுத்தா படுக்க
பாய் கேட்கும். 16. இருக்கிறவன் ஒழுங்கா இருந்தா
செரக்கிறவன் ஒழுங்கா செரைப்பான் 17. தண்ணியில குசுவினாலும் அது
மேலதான் வரும். 18. அநியாயம் செஞ்சாமுனியாண்டி
கேட்பான் 19. வித்த மாட்டுக்கு விலை இல்லை 20. கோழிப்பீயும் மருந்துக்கு உதவும். 21. கரும்பானாலும் ஒரு மொளி வச்சுத்
தான் வெட்டனும் 22. ஆக்கப்பொறுத்தவன் ஆறப் பொறுக்கல்ல 23. வித்தடிக்கிற கோழிக்கு விலாவுல
இருக்குமாம்பித்து 24. பாடு பாடுன்னா பறையனும் பாட
மாட்டானாம். 25. ஆத்துலபோனாலும் செட்டி சும்மா
போக மாட்டான் 26. தாயைப் போல புள்ளை நூலைப்
போல சேலை 27. ஆரியக் கூத்தாடினாலும்
காரியத்தில் கண்ணாயிரு 28. சாதிக்கு ஏத்த புத்தி
சாப்பாட்டுக்கு ஏத்தலத்தி
53

Page 56
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
வேண்டாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால்பட்டாலும் குத்தம் மூளிக்கொரங்கானாலும் சாதிக்கொரங்கா வேணும் கொளத்தோட கோவிச்சிட்டு குண்டி கழுவ மறுத்தானாம் இக்கரைக்கு அக்கரை பச்சை ஒண்ணுந்தெரியாத பாப்பா ஒன்பது புள்ளைபெத்தாளாம். அகத்திஆயிரம் காய் காய்ச்சாலும் புறத்திபுறத்திதான் நல்ல மாடு உள்ளூருள்ள வெலை போகும் ஆடுறமாட்டை ஆடி கறக்கணும் பாடுறமாட்டை பாடி கறக்கணும் அந்தந்த கோயிலுக்கு அந்தந்த பூசாரி வேணும் r எளச்சவன் பொண்டாட்டிக்கு எல்லாரும் மச்சினன் மொற மாவும் மாவும் ஒண்ணு மாவை கரைச்ச சட்டி வேற இடிச்சகோயில்ல பூசவைக்க இழிச்ச வாய் பண்டாரம் ஊம ஊர கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும். வகை தெரியாம வண்ணான் வீட்டுக்கு போனால் விடிய விடிய பொதிசொமக்க வேண்டியதுதான் தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பான்? சோழியன் குடுமிசும்மா ஆடாது. சத்திரத்து சோத்துக்கு மொட்டைப் பாப்பாத்தி என்ன
தரகு? ஆளு எச்சாப் போல இருந்தா தோணி மெதந்தா போல போகுமாம். பாண்ட பணியாரம் சுட்டுச்சாம் வீங்க வெறிக்க பார்த்துச்சாம் கோத்திரம் அறிஞ்சு பெண்ணைக் கொடு பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடு
54

49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61
62.
63.
64.
வேலையில்லாத வெட்டியான் வெங்காயம் உரிச்சானாம் வீட்டுக்குள்ள திங்கிறது
சேமங்கீர வெளியில சொல்லுறது
கோழிக்கறி ஆத்தோரம் குடியிருந்தாலும் அகப்படியாரிடம் குடியிருக்க முடியாது. எடுக்கிறது பிச்சை ஏறுறது பல்லாக்கு ஒசின்னா உப்பில்லாட்டியும் பரவாயில்லை கட்டின வீட்டுக்குலக்கினம் சொல்லாதே தன் முதுகு தனக்குத் தெரியாது தாயைதண்ணியடியிலபார்த்தா பிள்ளையை வீட்டிலபார்க்க தேவையில்லை சுந்தரம் சுத்துறது சுந்தரியை கைப்பிடிக்க ஆத்துல போட்டாலும் அளந்து போடு மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் புதுத்தும்புக்கட்டை நல்லாத்தான் கூட்டும் சாராயத்தை கொடுத்து பூராயத்தைக் கேளு நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பாதே கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில சொருக ஏலுமா
உசாத்துணை நூல்கள் / வழங்கி உதவியவர்கள்
1.
கண்டி மாவட்டதமிழர்களின் வரலாற்றுப்பதிவுகள்
மத்திய மாகாண சாகித்திய விழா - 2002
மலையகத் தமிழர் நாட்டுப்புறப்பாடல்கள்
மு. சிவலிங்கம்
திருமதி மு.பழனிவேல்,
செல்வி பழனிவேல் சிவகாமி அம்மாள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 57
சிறு பாடல்கள் / சொற்றொடர்கள்
எட்டெட்டும் பதினாறு ஒங்கப்பன் கோணாறு ஆத்துக்கு போனாறு நண்டைப்புடிச்சாறு சுட்டுத்திண்ணாறு சுருங்கிப்போனாறு அடடா அடடா அண்ணாமலே அரைக்கட்டிசவர்க்காரம் என்னா
1.
வெலை
சுப்பிரமணியாகப்பரவாயா எப்படா கல்யாணம் பங்குனி மாசம் பத்தாந்திகதி பருப்புக் கல்யாணம்
ரேந்த பொலயில
மயிறுமுத்துகங்காணிமகள்" ஆளாயி இருக்கிறான் தப்பும் அடிக்கிறான் மேளம் அடிக்கிறான்
பீப்பி உளதுறான்
கொலே போட்டு ஆட்டுறான் மொட்டையும் மொட்டையும்
கூடுச்சாம்
முருங்கை மரத்தில
ஏறுச்சாம்
நாட்டுமொட்டைக்கு
சீட்டு விழுந்தா
நம்ம மொட்டைக்கு
திண்டாட்டம்
குப்பைய குப்பைய நோண்டினேன் கூனக் கையா போச்சு இராமசாமியை வேண்டினேன் நல்ல கையா வந்துருச்சு
பாட்டி நல்ல பாட்டி பழைய அரிசியைத் தீட்டி
ജ്
সুপ্রিল-> →
புரவலர்புத்தகப்பூங்க முன்பொருபோதும்நூல்வெளியிடாதனழுத் இத்திட்டத்தின்மூலம்பயன்பெறவிரும்பும் அணிந்துரைஆசிரியர்பற்றியவிபரம், இ உறுதிமொழி ஆகியவற்றை இணைத்து அட்டைப்படஒவியத்தையும் சேர்த்துஅனுப்
எழுத்தாளருக்கு 300 பிரதிகள் இலவசமாக வழங்கப்படுவே எழுத்தாளருக்கே வழங்கப்படும். இலங்கை எழுத்தாளர்கள் யாே ஏற்றுக்கொள்ளப்படாத பிரதிகள் எழுத்தாளருக்குத்திருப்பிஅனுப்ப தொடர்பு முகவரி : தேர்வுக்குழு, புரவலர் புத்தகப் பூங்க
ܢܬ
தொ. பேசி: 0774161616, (
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

கோணக்காலை நீட்டி குசு போடும்பாட்டி 8. மழையும்பேயுது
வெயிலும் அடிக்குது கிழவன் நாய் கொண்டோடுது 9. அரிசியிருக்குது பருப்பிருக்குது ஆக்க நேரமில்லை-நம்ம அடுத்த வீட்டு ஐயாவுக்கு .நேரமில்லை 10. அந்தத் தோட்டம் இந்தத் தோட்டம் பப்பாளித்தோட்ட்ம் - அவன் படுத்தப்பாய சுருட்டிக்கிட்டு எடுத்தாண்டி ஓட்டம் 1 ரோரோ ரொட்டட்டி
ரொட்டிக்காரன் பொண்டாட்டி வாழக்காதண்டட்டி வாத்தியாரு பொண்டாட்டி 12. ஆனா ரீனா அரி
வாத்தியார் வீட்லநரி ஒலக்கயதுக்கி அடி 13.கோச்சு ரோட்டுல கல்லுடைக்கிற
கட்டையா ஒங்க அக்காபோற சோக்கப் பாரு 3560)LUIT 14.கண்டிக்கும் கம்பளைக்கும்
பதினாறு கட்ட-நம்ம கண்பாக்கய்யா பொம்பளக்கி கள்ளுமுட்டி கொண்ட
உசாத்துணை நூல்கள் / உதவியோர்கள் 1. மலையக தமிழர் நாட்டுப்புறப்பாடல்கள்
மு. சிவலிங்கம் 2. செல்வி பழனிவேல் சிவகாமி அம்மாள் 3. திருமதி மு.பழனிவேல்
אהבהירוק= ாமிாதம் ஒருநூல் வெளியீட்டுத்திட்டம்
எழுத்தாளர்கள்தமதுபடைப்பின் இரண்டுபிரதிகளேடு என்னுரை ரண்டுபுகைப்படங்கள்,முன்னர்நூல்கள்வெளியிடவில்லைஎன்ற கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். எழுத்தாளர் LIGOrnih. w நாடு வெளியீட்டுவிழாநடத்தி அதில் கிடைக்கும்பணம் முழுவதும் பரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். நூல் ஆக்கத்திற்கு
ா, இல 25, அவ்வல் சாவியா ரோட் கொழும்பு - 14.
785318503
u)
55

Page 58
Oழை லேசாக தூற ஆரம்பித்தது. எல்லோரும் அவரவரது ரப்பர் சீட்டை உதறிகட்டிக்கொண்டார்கள்.
ஆங்காங்கே பேச்சுக்குரல்கள். சிரிப்பொலிகள் சொந்தக்கதைகள் . பாக்கியத்திற்கு எதுவுமே பேச முடியவில்லை. சிந்திக்கக் கூட முடியவில்லை அழுகை முட்டிக்கொண்டு வருமாப்போல் இருந்தது.
அனிச்சையாய் கைகள் இயங்கி கொழுந்தை பறித்துப் பறித்து கூடைக்குள் போட, அவள் முன்னால் வெறித்தபடியே நகர்ந்துகொண்டிருந்தாள்.
“என்னடியம்மா . ? புதுசா பவரு காட்டுற . கதையவே காணோம்'
பக்கத்து நிரை ராசாத்தியக்கா பாக்கியத்தைச் சீண்டினாள்.
“ஏண்டி ஒன்னயத்தான் கேக்குறேன் காதுல விழலயோ..?”
பாக்கியம் நிமிர்ந்துபார்த்தாள். கண்கள் நிறைந்து குளமாகி பரிதாபமாய் தெரிய . ராசாத்தியக்கா பதறிப்போனவளாய் சுற்றுமுற்றும் தேடினாள். கங்காணி கண்ணில்படவில்லை. பட்டென்றுபாக்கியத்தை இழுத்து தன் நிரைக்கு அருகாமையில் அமரசெய்து தானும் அமர்ந்துகொண்டாள்.
அவளின் அழுகைக்கான காரணத்தை ராசாத்தியால் ஊகிக்க முடிந்தது.
“புள்ள நெனவு வந்துருச்சா ..? அதெல்லாம்
si
ரிலை §දී
நலலாததான வெளையாண்டுகிட்டு இருக்கும். நீ ஒன்னுக்கும்பயப்பிடாத பாக்கியம்.”
பாக்கியம் தேம்பித்தேம்பி அழத்தொடங்கினாள். ஒரு மூன்று மாத இடைவெளிக்குப் பின் இன்றுதான் பாக்கியம் வேலைக்கு வரத் தொடங்கியிருக்கிறாள். தன் முதல் பிரசவத்திற்காய் வேலையினின்றும் நிற்கத் தொடங்கியவளுக்கு அத்தனை சீக்கிரமாய் மூன்று மாதங்கள் ஓடிவிட்டதை ஜீரணிக்க முடியவில்லை.
அந்த பிஞ்சு குழந்தையின் மென்மையான ஸ்பரிசம் . முலையை முட்டி முட்டி உறிஞ்சி தாயை கொண்டாடும்விதம்.மழலைச்சத்தங்கள் சிணுங்கல்கள்
56

பாக்கியம் சுவர்க்கத்தில் இருப்பதாய் உணர்ந்திருந்தாள்.
வீட்டு வேலை, சமையல் வேலை, குழந்தையின் வேலையென்று நாட்கள் வெகு சீக்கிரமாய் கரைந்து போயிருந்தன.
பாக்கியத்தின் கணவன்தான் சென்றகிழமையில்
ஒருநாள் ஞாபகப்படுத்தினான்.
“மூணு மாசம் முடிஞ்சிரிச்சில்ல . சின்னவன புள்ள மடுவத்துல விட்டுட்டு.” அ வ ன்
முடிக்க முடிக்க முன்னமேயே அவள் அதிர்ந்து நிமிர்ந்தாள்.
எதையென்று சொல்வது ? கணவன் சொல்வதில் தப்போதும் இல்லை. வீட்டின் பொருளாதார நிலமை கொஞ்சம் கொஞ்சமாய் மோசமாவதை பாக்கியமும் உணரத்தொடங்கியிருந்தாள்.
“எப்படிப்போகப் போகிறேன்.? என் செல்லமே உன்னை விட்டுவிட்டு எப்படி கண்ணே வேலை செய்ய முடியும்.?”
குழந்தையை அணைத்தபடி நெடு நேரமாய் கிடந்தாள். பின் ஏதோ நினைத்தவளாய் குழந்தைக்கு வடித்த கஞ்சியும், புட்டிப்பாலும் பருக்கிபழக்கினாள்.
விடிந்தால் வேலைக்குச் செல்ல வேண்டிய நாள். கையும் ஓடாமல் . காலும் ஓடாமல் ஒரே பதட்டம். கணவனின் ஆறுதல்வார்த்தை எதையுமே அவளால் ஏற்க
千 しジフ乙多乏シ?れ 1. 2%
27. 至、
w
முடியவில்லை. தன் சூழ்நிலையை எண்ணி. எண்ணி நொந்துபோயிருந்தாள்.
தன் தாய்கூட இப்படியெல்லாம் தான் சிரமப்பட்டிருக்கக் கூடுமோ ..! கோடி வீட்டு லெச்சுமி, குழந்தை பிறந்து இரண்டாவது கிழமையே வேலைக்குப் போனது ஏனோ மனதை அரித்தது.
புரண்டு புரண்டு படுத்தும் தூக்கமேயில்லை; தூங்கிப் போயிருந்த குழந்தையின் கால்களில் முகம் புதைத்துத் தேம்பினாள். முகமெல்லாம் வீங்கிவிட்டிருந் தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 59
அந்த தாயுணர்வை எவருக்குமே புரிய வைக்க முடியாமல் போனது அவளுக்கு.
துரிதமாய் விடிந்து. எல்லாம் முடிந்து பிள்ளை மடுவம் வரை வந்தாயிற்று கால்கள் பின்னிப் பின்னி நகர மறுத்தன. கையில் வைத்திருந்த பால் போத்தலை பைக்குள் போட்டு குழந்தையையும் சேர்த்துபிள்ளைமடுவ ஆயாவிடம் ஒப்படைத்தாள்.
மனது சுருக்கென்று வலித்தது. அங்கே அதே வயதையொத்த குழந்தைகள் சிலதும் நடமாடும் பிள்ளைகள் ஒன்றிரண்டுமாய் பிள்ளை மடுவம் கொஞ்சம் அசுத்தமாகவே இருந்தது.
தன் கையில் இருந்து விடுபட்ட குழந்தை லேசாக சிணுங்கத் தொடங்கியது. தலையை குனிந்து பல்லைக் கடித்துக் கொண்டு, மட்டக்கம்பையும் கையில் ஏந்தியவளாய் வேகமாய் நடந்தாள். மிக வேகமாய் நடந்துகொண்டேயிருந்தாள்.
தூரத்தில் குழந்தையின் அழுகை ஒலி பெரிதாகிக் கேட்பதாய் ஒரு உள்ளுணர்வு மட்டக்கம்பையும் தலையில் தொங்கிய கூடையையும் ஒரே விசாய் வீசிவிட்டு, ஒடிப்போய் குழந்தையை அணைத்துக் கொண்டாலென்ன .? e
அவளால் எதையுமே செய்யமுடியவில்லை. கொழுந்துக் கூடை பாதியளவேனும் நிறைந்திருக்க வில்லை. ராசத்தியக்கா என்ன கூடி நினைத்தாளோ தெரியவில்லை , தன் கூடையிலிருந்து கொஞ்சம் கொழுந்தை அப்படியே அள்ளி பாக்கியத்தின் கூடைக்குள் போட்டுவிட்டாள். , VN
கங்காணி அங்கும் இங்குமாய் நடமாடியபடியே பாக்கியத்தை கவனிக்கத்
தவறவில்லை.
- அவள் கொஞ்சம் சதைபோட்டு, ஓரளவு நிறம் கூடி வழமையை விட லட்சணமாகவே
தெரிந்தாள்.
வேணுமின்னா வேலை செய்யனும் தெரியுமில்ல.?”
பாக்கியம் ஒரு சிரிப்பை பொய்யாக வரவழைத்து முகத்தில் காட்டியபடி, வேகமாகக்  ெக T மு ந்  ைத ஆயத்தொடங்கினாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

கொழுந்து பறிப்பது லேசான காரியமா என்ன . பார்க்கும் போது ஏதோ நுனியை ஆய்ந்து ஆய்ந்து கூடைக்குள் போடுவதுபோல்தான் தோன்றும். ஆனால் எது கொழுந்தென்று கண்டுபிடிப்பதே ஒரு பெரிய ஆராய்ச்சிதான்.
பரந்து விரிந்த அந்த தேயிலைச் செடியில் ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் குருத்தற்ற இரட்டை இலை வங்கியென்றும், இரண்டு சிறிய இளம்பச்சை இலைகளுடன் குருத்தும் சேர்ந்திருக்கும் மெல்லிய தொகுதி கொழுந்தெனவும் இனங்காண்பதே ஒரு சாதனைதான்.
போதாக் குறைக்கு சிறிய அரும்பு வளர்ந்திருக்கும் பட்சத்தில் அதனை ஆயாமல், ஒரு கிழமை பிந்தி அது வளரும் வரை விட்டுவைக்க வேண்டும். கூடவே ஆங்காங்தே காணப்படும் பயனற்ற வங்கிப்பகுதியையும் வெட்டிக் கழித்துவிட வேண்டும்.
இத்தனையையும், நொடியும் தாமதிக்காமல் படபடவென செய்து ஒருநாளைக்கு பதினெட்டு இருபது கிலோ வரை கொழுந்து பறிப்பதென்றால் சும்மாவா பின்னே..!
நேரம் ஆமை வேகத்தில் நகர்வதாய் பாக்கியத்திற்குத் தெரிந்தது. பனிரெண்டு மணியாகும் வரை அவளால் நிம்மதியாய் மூச்சுக்கூட விட
முடியவில்லை. குழந்தை பால் --ܢܓܚ «` -= குடித்திருப்பானா . ? அசிங்கம் கிசிங்கம் பண்ணி விட்டிருப்பானோ..? ஆயா ( துடைத்திருப்பாளா ..? பிேள்ளை அழுதுகொண்டு இருக்கிறானோ என்னவோ
?
ليت 6IT ل6 إ9 முலையிரண்டிலும் பால் சுரந்துசாரிசட்டை நனைந்து போயிருந்தது.
மாருடன் சேர்த்து நெஞ்சும் வலிக்கத்தொடங்க
தன் கூடையை ராசாத்தியக் காவிடம் கொடுத்துநிறுத்துவிடும்படி சொல்லிவிட்டு.
சின்ன ரோட் வழியாய் வேகமாய் ஓடினாள் பிள்ளை மடுவத்தை நோக்கி.
57

Page 60
ரவெல்லாம் கண் விழித்து ஏராளம் கதை கவிதை
தரமிட்டு எழுதியதை தன் செலவில் இதழ்களுக்கு கரம் வலிக்க அனுப்புகிறான் ಹಯೆLUGಖಖೆ: @ಖೆnಲಿಮೀಖ !
வாசிப்போர் ஒரு சிலரே வாங்க மாட்டர் பத்திரிகை ஒசியிலே ஏப்பம் விட்டு ஒதுங்கிடுவார் தன் பாட்டில் காசுக்கு பெறுவதென்றால் கஷ்டமுறும் எழுத்தாளனே !
புற்றீசல் போல் நூல்கள் பொழுதெல்லாம் வெளிவந்தும் பற்றுதலாய் கொள்ளமாட்டார் பgப்பறிவு உள்ளோர்கள் விற்றெடுக்க எழுத்தாளன் விதிதோறும் அலைகின்றான் !
இலக்கியத்தின் ஏற்றமெல்லாம் ஏடுதனில் பரிணமிக்க காலமெல்லாம் எழுத்தாயும் േഴ്സ് (IL uഞ്ഞ്' விலை கொடுத்து நூல்வாங்கா வாசகரே இது தகுமோ !
SB
 

a qaoxửb துர் 5విutoEb
எத்தனையோ ஆக்கங்கள் ஏடுதோறும் எழுதுபவன் பத்து மாதச் சிசுதன்னை பெற்றெடுத்தல் சமமாகும். இத்தன்மை சிரம முறும் எழுத்தாளன் உயர்வானோ !
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உவகையுறு கருத்தெல்லாம் வெள்ளம்போல் இதழ்களிலே 6f6ffuJTŮ UGDLådfiðởTADTỏT எள்ளளவும் வாசகனோ இதை ஏனோ வெறுக்கின்றான் !
நூலகத்தின் பெருக்கங்கள் நாடெல்லாம் நிறைந்திருந்தும் நூலதுவோ அடுக்கடுக்காய் நகராது நலிகிறது பாலியல் படைப்பென்றால் பட்டாளம் படை கழும் !
ஆபாச நாற்றங்கள் அயல் நாட்டு கவர்ச்சிகள் சோபிக்கும் இதழ் மதிப்பு சொற்பளவும் தரமாட்டார் தீபமாய் சுடர் ஒளிரும் தமிழ் நூலை யார் காப்பார் !
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 61
ச்சிறுகதை 1988, 1989 காலகட்டங்களில் இலங்கையில் நிலவிய
அசாதாரண சூழ்நிலையை மையமாக வைத்து எழுதப்பட்டது. "அம்.மா.”
மண் நிரப்பப்பட்ட இறப்பர் குழாயினால் முதுகில் விழுந்த அந்த'அடி,
- என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
முதுகுத் தோல் பிளந்து, சதை வெடித்திருக்கும்
கைகள் பின்னோக்கிக் கட்டப்பட்டிருந்தன. அசைக்கக்கூடமுடியவில்லை. த  ைல நிலத்தை நோக்கித்தாழ்ந்திருந்தது
பூட்ஸ் காலொன்று எகிறிஉதைத்தது. "அம்.மா.” - நான் எப்படி மல்லாந்து விழுந்தேன்? எனக்கே தெரியாது.
'உண்மையைச் சொல்லு.”
KK
“சொல்லுடாநாயே. எங்கே உன்ர கூட்டாளிங்க. யார் அவங்க? எங்கே இருக்காங்க..?
“தெரியாது.”
“தெரியாது.”
பூட்ஸ் கால் என் வயிற்றை மீண்டும்பதம்பார்த்தது.
"அம்மா."
என் நா வரண்டிருந்தது.
"தண்ணீ.தண்.தண்ணி.”
அந்த அறைக்குள் இருந்த எல்லோருமே தலைகீழாக நின்று கொண்டிருப்பதைப்போல. எல்லோருக்குமே ஒன்றுக்கு மேற்பட்டமுகங்களைக் கொண்டிருப்பதைப்போல.
எல்லாம் கோரமாக விகாரமாக.
மல்லாந்து விழுந்திருந்த என்கால்களை ஒன்றாகக்
கட்டி தொங்கிக் கொண்டிருந்த கயிற்றின் முனையில் இறுக்கிப்பிணைத்தான் ஒருவன். சற்றைக்கு முன்பு என் உள்ளங்கால்களில்
ஏற்படுத்தப்பட்டிருந்த ரணங்கள். தாளமுடியவில்லை எனககு.
கயிற்றின் அடுத்த முனை, கூரைக் கம்பொன்றில் சொருகப்பட்டுகழுமரத்துக் காவலன் போல நின்றிருந்த ஒருவனின் கைகளில் சுழன்று கொண்டிருந்தது.
“உண்மையைச் சொல்லிடு உன்ன நாங்க ஒன்றும் செய்யமாட்டோம். உன்ர கூட்டாளிங்க இருக்கிற இடத்த மட்டும் சொல்லிடு.”
“யா.யா. யாரும் இல்ல.ம்.ஆ.” கயிறு கொஞ்சம் கொஞ்சமாக மேலே இழுக்கப்பட்டது.
“உண்மையைச் சொல்லப் போறியா.இல்ல.?”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

கயிறு மேலும் இழுக்கப்பட்டது. என் கால்களும் முதுகுமாகத் தூக்குப்பட கழுத்து என் உடல் பாரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டது.
“இப்பவாவது உண்மையைச் சொல்லிடு.”
என்ன உண்மையைத் தான் நான் சொல்ல? “தெ.ரி.யா.” என் வயிற்றில் ஓங்கி ஒரு உதை. "அம்.மா.” தொங்கிக் கொண்டிருந்த கயிறுடன் என் உடலும் சுழன்றது.
நான் என்ன செய்தேன்? தேசத்தின் நாதமாக இருக்கும் என் பாட்டாளி நண்பர்களுக்கு மறுக்கப்பட்ட சம்பளத்தைப் பெற, உரிமைக்குரல் கொடுத்ததுதான் நான் செய்த தவறா?
“உண்மையைச் சொல்லிடு. உன்னக் கஷ்டப்படுத்தமாட்டோம். உன்னக் காட்டிக் கொடுத்திடவும் மாட்டோம். எங்களோடு சேர்ந்து அந்த இராஜதுரோகிகளைக் காட்டிக்கொடுத்திடு, உனக்குப் புனர்வாழ்வு கொடுப்பது எங்க பொறுப்பு.”
- புனர்வாழ்வு.? - யாருக்கு? - என் ராசாவெல்ல. உண்மையைச் சொல்லிடு. தம்பி.”
தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த என் முகத்தை நிமிர்த்தியமற்றொருவன் சொன்னான்.
"உன்ன நாங்க எந்தக் கொடுமையும் செய்ய மாட்டோம். தேசத்துரோகம் செய்யிற கும்பல மட்டும் காட்டித்தந்திடு. யேஸ். உன்ரநண்பர்கள். நல்லபிள்ள மாதிரிசொல்லிடு.”
இன்னும் என்னென்னவோ. வார்த்தைகள் என் காதுகளுக்குள் சன்னமாக மிகச் சன்னமாக.
கல்லுக்குள் ஈரமோ..? கல்லுக்குள்ளேயே சங்கமித்துவிடுமோ?
59

Page 62
“எனக்கு.எ.எ.எதுவும் தெரி.யா.” "அப்போ. உனக்கு எதுவும் தெரியாது.ம்.? கோடை வெயில் பட்டதும், கல்லின் ஈரம் காய்ந்து விடுவதைப் போல அவன் வார்த்தைகள் கடூரமாகின.
“தெரியா. து”
s
"அம்.மா.” காற்பந்தாட்ட வீரர்கள் பெலோ, மரடோனா. இவர்கள் தோற்றுப்போவார்கள். "அம்மா.தண்.ணி.” எல்லாமே மங்கிக்கொண்டுவந்தது. என்னை அறியாமலேயே தலைகீழாகத் தொங்கிய என் முகத்தைச் சிறுநீர் நனைத்துக் கொண்டிருந்தது.
கண்விழித்தபோது. என்னைச் சூழ இருள் படர்ந்திருந்தது. ஆம் காற்றுக்கூட புகமுடியாத அந்த அறைக்குள் நான் அடைக்கப் பட்டிருந்ததை உணர்ந்தேன். என் கைகளை அசைக்கப்பார்த்தேன்.முடியவில்லை.
பின்னோக்கிக் கட்டப்பட்ட கட்டுகள் அவிழ்க்கப்படவில்லை போலும். சற்றுத் திரும்பினேன். "அம்மா.” உடல் பூராகவும் தாளமுடியாத வேதனை பற்களை இறுகக் கடித்துக் கொண்டேன்.
மயான அமைதி. - மயானத்தில் கூட வண்டுகளின் ரீங்காரம், ஜிவ ஜந்துகளின் ஒலிகள் கேட்கும். இந்த அறைக்குள் ஒன்றுமில்லை. போதாக்குறைக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வரும் துர்வாடை.
சகிக்க வேண்டும் - தாங்கியாக வேண்டும். “ம்.ம.”-ஒரு முனங்கல் சத்தம். “யா. ர. து..?” - என் வார்த்தைகள் வெளிவரவில்லை.
யாரோ இருக்கின்றார்கள் - என்னைப் போலவே இங்கு யாரோ இருக்கின்றார்கள்
இந்தத் தனிமைப்படுத்தப்பட்ட நேரத்திலும், பக்கத்தில் ஒருவன் இருந்தும். என்னால் பேசமுடியவில்லை. இதயம் வெடித்துவிடுவதைப் போல இருந்தது.
பேச முடியவில்லை. நகர முடியவில்லை. “சே.” நான் இருக்கின்றேனா? எனக்கே சந்தேகம். "அம்மா." - அம்மா - பாவம் அவள். நேற்று என்னமாய்க் கதறினாள். “என்ட மகன விட்டுடுங்க. ஐயா அவன் ஒன்னுந் தெரியாதவன். உங்கள கையெடுத்துக்கும்பிடுறன் சாமி.
SO

அவன விட்டுடுங்க.”அந்தக் கதறல்கள் இன்னும் என் செவிகளுக்குள் ரீங்காரித்துக் கொண்டிருந்தன. அவள் பத்துமாதம் என்னைச் சுமந்து பெற்றவள் அல்லவா? நாட்டின் நிகழ்வுகள் அவளுக்குத் தெரியாதா என்ன?
றுே இரவு நான் படுக்கைக்குப் போகும்போது இப்படியெல்லாம் நடக்குமென நினைத்துக்கூடப் பார்க்கவில்லையே.
இரவு ஆகாரத்தை எடுத்துவிட்டு - கடந்த வாரம் தொழிற்சாலையில் நாங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தின் அறிக்கை யொன்றைத் தயாரிக்க முனைந்தேன். ஏனோ - மனதில் ஒருவித சலனம். மறுபுறமாக கரண்டும் இல்லை. எழுதச் சோம்பலாக இருந்தது. இரண்டு, மூன்று வாரங்களாகவே இப்படித்தான். அடிக்கடிகரண்ட்போகும், வரும்.அதைப் பற்றியாருக்குமே கவலையில்லை.
கதிரையை விட்டு எழ மனமில்லை. அந்த குப்பி விளக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மழைத் தூறல்களுக்கு அகப்பட்டு வீசிக் கொண்டிருந்த இளம் குளிர்காற்றில் விளக்கின் தீபம் நின்று பிடிக்க முடியாமல் அசைந்தாடிக் கொண்டிருந்தது.
ஒளியைப் பரப்புவது தீபம். அந்தத் தீபம் எத்தனை சக்திகளை எதிர்கொண்டு வளைந்து கொடுக்க வேண்டியிருக்கின்றது.
நான் வேலை செய்யும் தொழிற்சாலை வீடுகட்ட சீமெந்து புளொக்கல், வேலியடிக்க கங்ரீட் தூண்கள்,மின்சாரக்கம்பங்கள், புகையிரத தண்டவாளத் துக்கு இணைக்கப்படும் கங்ரீட் பொருத்திகள் என்பவற்றைத் தயாரிக்கும் ஒரு தொழிற் சாலையாகும். காலை முதல் மாலை வரை கற்களையும், மணலையும், சீமெந்தையும் கலவையாக்கி. என்னைப் போல சுமார் இருநூறு தொழிலாளர் மட்டில் வியர்வைத்துளிகளைக் கூலியாக்கிக் கொண்டிருந்தோம். எமக்கு வெய்யிலும் ஒன்றுதான். மழையும் ஒன்றுதான்.
அங்கிருந்த சுமார் இருநூறு ஜீவன்களும், முதலாளியால் மாதமுடிவில் வழங்கப்படும் வேதனத்தைக் கொண்டே தமது குடும்ப ஜீவியங்களை நடத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையைப் பயன்படுத்தி கடந்தமாத சம்பளத்தை முதலாளி வழங்க மறுத்தபோது.
நொந்த நெஞ்சங்களின் ரணங்களை - என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பாட்டாளி வர்க்கத்தைப் பணயம் வைத்து நாட்டில் பொதுச் சொத்துக்களை சேதமாக்கும் கொள்கையில்லாத் தீவிரவாதிகளுக்கும், எமக்கும் தொடர்பில்லை.
அரசாங்கத்தைக் கவிழ்க்கவோநீதிமன்றங்களை எரிக்கவோபொதுப்பேருந்துகளைத் தீக்கிரையாக்கவோதொழிற்சாலைகளை அழிக்கவோ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 63
பாடசாலைகளைத் தரைமடடமாக்கவோ - எமக்குத் தேவையில்லை. எமது போராட்டம் தூய்மையானது. அந்தத் தூய்மையை சுயநலப் போக்கில் களங்கப்படுத்தும் கும்பலை மனதார நானும் எதிர்த்த சந்தர்ப்பங்கள் உண்டு. பொதுவுடமை வாதம் - வரவேற்கத்தக்கது. அதற்காக பொதுவுடமையை அழித்துவிட்டு - பொதுவுடமை வாதத்தினூடான பொதுவுடமையாருக்குத் தேவை?
பாட்டாளி வர்க்கத்தின் வயிற்றிலடித்துவிட்டு 'சொகுசு காண விழையும் நவீனகால ஏகாதிபத்திய
நிலையை நான் வரவேற்கவில்லை.
- எமது போராட்டம் v - எமது உரிமைக்கானது. எமது சம்பள மறுப்புக்கானது.
தென்பகுதியில் தலைதூக்கியிருந்த மேற்படி நிலையை அடக்குவதற்காக அரசாங்கம் மனிதஉரிமை மீறல்களைப் புரிந்து வந்தநேரத்தில். எமது சம்பளப் போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் சென்றது சரியா - தப்போ. அது உரிமை
வியர்வை சிந்திஅந்த வியர்வையால் எமது குடும்பங்களின் பட்டினியினைப் போக்க விளைந்த என் பாட்டாளித் தோழர்களின் உரிமை அது.
“தம்பி. இன்னும் நீ படுக்கைக்குப் போகவில்லையா.” அம்மாவின் குரல் அது. பாவம் அவள். தந்தையற்ற என்னை வளர்த்து ஆளாக்க என்ன பாடுபட்டிருப்பாள்?
நீண்ட பெருமூச்சொன்று விடைபெற்றுக் கொண்டது.
“நீ. போய்த்தூங்கம்மா. நானும் தூங்கப் போறேன்.”
வாசலோரமாக நான் படுக்கும் ஒலைப் பாயை விரித்தேன்.
மூட்டைப் பூச்சிதலையணையிலும், பாயிலும் மூட்டைப்பூச்சி. இரவிரவாக தூக்கத்தில் இரத்தத்தை உறிஞ்சி குடித்துக்குடித்து. கொழுகொழுவென கொழுத்திருந்தது.
ஒரு மூட்டைப்பூச்சியை நசுக்கினேன். அடுத்த மூட்டைப்பூச்சிகள் ஒடி ஒளிந்து கொண்டன. காணவில்லை.
போர்வையால் போர்த்திக்கொண்டு விளக்கை அணைத்தேன்.
தூக்கம் மெல்ல. மெல்ல. என் விழிகளைத் தவழ ஆரம்பித்தது .
"தடதடதட."
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

- திடுக்கிட்டு விழித்தேன். கதவில் யாரோ பலமாகத்தட்டும் சப்தம். யாராக இருக்குமோ? மீண்டும்"தடதடதட." என் மூளையில் ஓராயிரம் இடிகள் ஒரே நேரத்தில் தாக்கியதைப் போல ஒர் உணர்வு
இந்த நள்ளிரவு நேரத்தில் இப்படித் தட்டுவதென்றால்.
ஒருவேளை - கலகக்காரர்களை கைதுசெய்வதற்கு இரவோடிரவாக வரும் மனித உரிமை மீறல் படையோ?
“தடதடதட'சப்தம்பல்மானது.
“கதவை திறக்கப் போறியா. இல்ல உடைக்கட்டுமோ?”
அம்மாவின் குரல்தழுதழுத்தது. “யாரு.நீங்.க.
“நாங்க போலிஸால.”
“திற கதவ.
அம்மாவின் கரங்கள் நடுங்கின. மெல்ல கதவு தாழ்ப்பாளை எடுத்தாள். “எங்க உன்டமகன்.?”
என் கால்கள் நடுங்கின.
“நா.நான்.இருக்கேன்.”
கையிலிருந்த டோர்ச் வெளிச்சம் என் முகத்தில் பாய்ந்தது.
“ஓ..நீயா..?
“எங்களோட வா. உன்ன விசாரிக்கணும்.”
"ஏன்.நா.நான்.”
“நேரா. ஸ்டேஷனுக்குப்போய்பேசிக்குவோம்.”
ஒருவன் என்னைப் பிடித்துக் கொண்டான்.
நான் ஷார்ட் அணிந்திருக்கவில்லை.
"ஷார்ட்”
"அது தேவைப்படாது.”
என்னைத் தரதரவென இழுத்துவந்தவன் - வீட்டுமுன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் முன்னால் நிறுத்தினான்.
"அவன ஒன்றும் செஞ்சிடாதீங்க. சாமி.”அம்மா கதறினாள்.
ஒருவன் குனிந்து நான் அணிந்திருந்த சாரத்தின் (லுங்கி) ஒரு பகுதியைக் கிழித்தெடுத்து என் கரங்களைப் பின்னால் சேர்த்துக்கட்ட
அம்மா - கதறினாள்.
- கெஞ்சினாள்.
- நான் வாகனத்தில் ஏற்றப்பட்டேன்.
வாகனம் விர்ர். ரென்று விரைந்தது.
கழுத்து வலித்தது.
நெஞ்சும் வலித்தது.
வலி - நோவு - இந்த ஒரு நாளுக்குள் எனக்கு இசைவாக்கப்பட்டுவிட்டது. எனக்கு நடக்கப் போவதை நான் தெரிந்துகொண்டேன். தெரிந்தபின் மனதைக் கல்லாக்கிக் கொள்ளாமல் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால்.
S1

Page 64
என் அம்மாவின் மனவலி. அதை நினைக்கும்போது என்னால் தாங்கமுடியவில்லை. ஒரு கல் கூட என் காலில் திருகினாலும் தாங்கிக் கொள்ளாத என் அம்மா. இன்று நான் படும் வேதனைகளைத் தெரிந்துகொண்டால்.
அவள் நெஞ்சம் வெடித்து - செத்துவிடுவாள். பசித்தது. என் வயிற்றிலிருக்கும் புழுக்களுக்கு என் நிலை தெரிந்திருக்க நியாயமில்லை. பெருங்குடலையும், சிறுகுடலையும் அவை மாறிமாறிக் கடிக்கின்றன போலும்,
கூடாது - பசிக்கக்கூடாது. * கண்களை மூடிக்கொண்டேன். அப்போதுபூட்டப்பட்டிருந்த அந்த இருட்டறைக் கதவு திறக்கப்படும் ஒலி கிரீச். என்றிருந்தது.
வெளியே எரிந்துகொண்டிருந்த மின்சார விளக்கு -இரவுதான் இது என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது.
“இழுத்துப்போடு. அந்த நாய்களை வெளியே. கணிரென ஒலித்த குரலுக்குரியவன் ஓர் அதிகாரியாக இருக்க வேண்டும். S.
இருளைத் துளாவிய ஓர் இரும்புக்கரத்துக்கு என் தலைமயிர்கள் தான்.அகப்பட்டன. தலைமயிரைப்பிடித்து உலுப்பியவன் தலைமயிரால் தூக்கி இருட்டறைக்கு முன்பாக இருந்த மற்றுமொரு அறைக்குள் என்னை இழுத்துச் சென்றான். ܝ
“அடுத்த ரெண்டுநாய்களையும் இழுத்துவா." அந்த அறையில் பரவியிருந்த மங்கலான வெளிச்சத்தில் ஆணையிட்ட வனின் முகத்தைப் பார்க்கின்றேன்.
தடித்த மீசை, கருத்த பெருத்த உடல், ஓ. எமனின் வடிவமா? என்னைப் போலவே கைகள் கட்டப்பட்ட இரண்டு இளைஞர்களை இரண்டு முரட்டுக்கரங்கள் இழுத்துவந்தன. அந்த இளைஞர்களின் முகத்தில் களையில்லை. ஜீவனில்லை. முகம்பூரா விகாரமாக - மேனிபூராகவும் இரத்தக் கசிவுகளாக.
“டக்.டக்.டக்.” w மீசைக்காரனின் பூட்ஸ் சப்தம் என்னை நெருங்கிவந்தது.
என் கழுத்தைப் பிடித்து சுவரோடு அழுத்திக் கொண்ட மீசைக்காரன் “இதுதான் உன்ட கடைசி சந்தர்ப்பம்.உண்மையை சொல்லிடு.”
"ம்.ஆஆஆ." அவன் பிடி மேலும் இறுகியது. என் மூச்சுத் திணறுவதைப்போல. “என்ன திமிர்டா உனக்கு. நாயே உண்மையைச் சொல்லப் போறியா? இல்லையா. மின்னல் வேகத்தில்
62

மாறிமாறி அவன் கைகள் என் முகத்தைப்பதம் பார்த்தன.
- நான் சுருண்டு விழுந்தேன். - மீசைக்காரனின் பார்வை அடுத்த இளைஞர்கள் பக்கம் திரும்பியிருக்க வேண்டும்.
“அடிக்காதேங்க.சாமி.” “ஐயோ.” பரிதாபக் குரல்களைக் கேட்க. அங்கே யாருமே இல்லை.
மீண்டும் அமைதி, மீசைக்காரனின் குரல் அந்த அமைதியைக் குலைத்தது. அறையே அதிர்ந்தது.
“இனிபலனில்ல. கதையமுடிச்சிடுங்க.” கதையை முடிச்சிடுங்க. செவிப்பறையில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போல
“டக்.டக்.டக்.” மீசைக்காரன் அறையை விட்டும் போயிருக்க வேண்டும்.
அவனோடு இருந்த சகாக்கள் எம் விழிகளை புடவைப்பட்டியால் இறுகக்கட்டி - எம்மை எங்கோ இழுத்துச் சென்றனர். "அம்மா. "அம்.மா. “கடவுளே.எம்மைக் காப்பாற்றுங்கள்.” ‘சாமி.” தோய்ந்து போன அழுகுரல்கள் - அடுத்த இளைஞர்களுடையன.
s
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 65
நான் - மனதைக் கல்லாக்கிக் கொண்டேன்.
米米米
சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றப்பட்டோம்.
வண்டி - உறுமியது.
எனக்குத் தெரியும் -
இது எமது கடைசிப் பயணம்.
ஆம் - எல்லோரினதும் கடைசிப் பயணங்கள் உயிரற்ற பூதவுடல்களை மலர் தூவி தூக்கிச் செல்வார்கள். ஆனால். உயிருடனே எமது கடைசிப் பயணம் ஆரம்பித்துவிட்டது.
கடந்த சில வாரங்களாக பாதையோரங்களில் கண்ட சடலங்கள் என் மனக்கண்ணில் நிழலாடின. கலகக்காரர்களை அடக்க அந்த மனிதஉரிமைமீறல்கள்.
-விழிகள் கட்டப்பட்டு,கரங்கள்கட்டப்பட்டுகுருதியில் துவண்டு பாதையோரமாகவும், ஆறுகளில் மிதந்தும், நாய்களுக்குதீனியாகியும்,மீன்களுக்குத்தீனியாகியும்.
- சுதந்திரமாக சாவதற்குக்கூட வக்கில்லாத அந்த ஜீவன்கள்.
அந்த வரிசையில்
நான் கலகக்காரனல்ல. ஒருவனின் அழுகுரல் என்னை உலுப்பியது.
நோ
அழக்கூடாது
அழுவதால் ஒன்றும் ஆகிவிடமாட்டாது.
உண்மையான மானுநேயங்கள் சாவுக்காக அஞ்சக்கூடாது. என்னைப் பொறுத்தமட்டில் என்போராட்டம் நியாயமானது. தேசதுக்காகவும், சமூகத்துக்காகவும் உழைத்து, உழைத்து எலும்பும் தோலுமாக - வயிற்றுக்காகப் போராடும் அந்த ஜீவன்களுக்காக - என்னால் நடத்தப்பட்ட போராட்டம், ஒரு உரிமைப் போராட்டம் தான்.
மனசாட்சி என்னை ஆசிர்வதித்தது.
யேஸ். சாவுக்காக நான் அஞ்சத்தேவையில்லை.
என் மனசாட்சி அந்த அச்சத்தைக் கலைத்துவிட்டது.
வாகனம் நிறுத்தப்பட்டது.
என் கதை முடியப்போகின்றது.
இது எந்த மயானமோ?
எந்த வெளியோ?
எந்தக் காடோ?
எந்த ஆற்றங்கரையோ?
எந்த முச்சந்தியோ?
வாகனக் கதவைத் திறந்த சிலர் எம்மை இழுத்துப் போட்டனர். புண்ணாயிருந்த என் பாதங்களை மணல்கூட முரட்டுத்தனமாக முத்தமிட்டது. “அ.ம்.மா.'இதுதான் என் இறுதிவார்த்தையா?
என்னால் Sy: முடியவில்லை.
‘ம்.ஒடு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

இப்படித்தான் இரவோடிரவாகக் கொண்டுவந்து ஒடவிட்டுத்தான் சுடுவதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். “ம். ஒடி. உயிரக்காப்பாதிக்கோ.” முரட்டுக்குரலொன்றின் உறுமல்,
கடைசிநேரத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்த இருவரும் ஒட எத்தனித்திருக்க வேண்டும். "ஐயோ. என்ன ஒன்டும் செஞ்சுடாதே.” "ஐயோ. என்னக் கொன்றுடாதே.” ‘ஹஹ்ஹா."- ஏளனச் சிரிப்பு “டுமில்.டுமில்.” அந்த வெடிச் சப்தங்கள் என் இதயத்தின் இயக்கத்தை கன செக்கன்களுக்கு ஸ்தம்பிதமடையச் செய்தது. நிரந்தர ஸ்தம்பிதத்திற்கான ஒத்திகை போலும்
"அம்மா. அம். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. நிலத்தில் உதைத்தேன். ‘ஹஹ்ஹா. ஆணவச் சிரிப்பு."என்டா நாயே நீ. ஒடிதப்பிக்கப்பார்க்கவில்லையா..? ஹஹ்ஹா.”
இப்போது குறி என் பக்கம் திரும்பியிருக்க வேண்டும்.
நோ.நோ. சாவுக்குப்பயப்படக்கூடாது. “உன்னைப் பார்த்தா. பாவமாயிருக்குது. பரவாயில்ல. கடைசியாக உன்ட கடவுள நெனச்சிக்கோ.”
- கடவுள். -ஒ. கடவுள். எலும்பும் தோலுமாக என்னோடு உழைத்துவரும் என்பாட்டாளித் தோழர்கள் என் கண்முன் வந்தனர்.
நீங்கள் தான் கடவுள். என் இதயக் கடவுளே நீங்கள் தான். தோழர்களே உங்கள் வியர்வை வெள்ளத்தின் மத்தியில் என் உடலில் இருந்து பாயப்போகும் உதிரவெள்ளம் - ஒரு துளிமட்டும் தான் -
உதடுகளை இறுக்கக் கடித்துக் கொண்டேன். நான் நகரக்கூடாதுதுணிவோடு என் மார்பை முன்னோக்கி நிமிர்த்துகின்றேன்.
எனக்கு வேதனை புலப்படவில்லை. தோழர்களே. என் இரத்தவெள்ளத்தில் வரலாற்றைப் படைக்க எத்தனிக்காதீர்கள். உங்கள் உணர்வுகளுக்கு உரமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் சிரித்தேன். கடைசிச் சிரிப்பு “திமிர் பிடித்த நாயே. உனக்கு இன்னும் திமிர் அடங்கவில்லியா?”
நெஞ்சை மேலும் நிமிர்த்தினேன்.
“டுமில்.டுமில்.” "அ.ம்.”
63

Page 66
2to\ பொழுது, கதிர்காமர்முகாம்பரபரப்பாக
இருந்தது. செட்டிகுளம் பகுதியிலுள்ள மெனிக்பாம் (மாணிக்கம் பண்ணை) பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களில் கதிர்காமர் நலன்புரிநிலையமும் ஒன்று. என்னதான் நலன்புரிநிலையம் என்றுபெயர்வைத்தாலும் அகதிமுகாம் என்பதுதான் வழக்கிலுள்ள பெயர்.
காலையிலே பலபேருந்துகள் முகாமிலிருந்து புறப்பட்டு வவுனியாவிற்குச் செல்லும்.
முகாமிலுள்ள மக்கள் தங்களுக்குக் கிடைத்த நிவாரணப் பொருள்களில் விற்கக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு பேருந்துகளில் வவுனியாவிற்குச் செல்வார்கள். பொருட்களை மிகக் குறைந்த் விலைக்கு வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விற்றுவிட்டுத் தமக்குத் தேவையான வேறு பொருட்களை வாங்கிக் கொண்டு பேருந்துகளில் திரும்புவார்கள்.
அப்படிப்போய்வருவதற்கு பேருந்துகளிற்குரிக்கற் எடுக்கத் தேவையில்லை. இலவசமாகவே சென்று வரலாம்.
அன்று காலையும் அந்தமுகாம் பரபரப்பாகவே காணப்பட்டது.
இந்தப் பரபரப்புகளோடு சம்பந்தப்படாதவராக ஓரிடத்தில் இருந்தார் கந்தப்பர்.
பெருமளவுக்கு மெளனமாகவே இருப்பார் கந்தப்பர். ஆனால் திடீரென ஏசத்தொடங்கிவிடுவார்.
ஆர் எவர் என்று இல்லை. பொலீஸ்காரர், ஆமிக்காரர் உட்பட அவரிடம் ஏச்சு வாங்குவார்கள்.
சிலவேளை தன் பாட்டுக்கு ஏசிக்கொண்டிருப்பார். யாரை ஏசுகிறார், ஏன் ஏசுகிறார் என்று யாருக்கும் தெரியாது. கொஞ்சம் பக்கத்தில் நின்று கேட்டால் அவர் ஏசுவதில் சில வாக்கியங்கள் விளங்கும்.
"நாசமாப்போவாங்களே! போதுமடா வேசமக்களே விட்டிட்டுப் போங்கடா. இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாதிடா.பாழ்படுவாங்களே இனிக் காணுமிடா.”
64
 

முதலான சில வாக்கியங்கிள் தான் அவரின் ஏச்சில் இடம்பெறும்.
தூஷணப் பேச்சுக் கிடையாது
அடிதடி அட்டகாசம்
எதுவும் இல்லை.
யாருக்கும் அவரால் தொல்லையில்லை.
ஆனால் அவருக்குப் பக்கத்தில் செல்ல எல்லோருக்கும் பயம். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற முத்திரையோடு அந்த முகாமில் அவர் இருக்கிறார்.
அரச சார்பற்ற நிறுவனமொன்றில் உளவளத் துணையாளராகப் பணிபுரியும் பிரதாபனிடம் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பிரதாபன் அவரோடு பேச்சுக் கொடுத்தார். "அப்பு.” தொடங்க முதலே கந்தப்பர் ஏசத் தொடங்கிவிட்டார்.
“நாசமாப்போவாங்களே. அவரது அடி மனதிலே பதிந்திருந்த சோகவடுக்களை வெளியே கொண்டு வர வேண்டும். அவரை நன்றாகக் கதைக்கவிட்டுக் கேட்க வேண்டுமென்று விரும்பினார் பிரதாபன்.
நீண்டநேர முயற்சியின் பின், கந்தப்பருக்கு பிரதாபனில் ஏதோ ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.
கொஞ்சங் கொஞ்சமாகக் கதைக்கத் தொடங்கிவிட்டார்.
"ஐயா! எனக்கு இப்ப எத்தின வயசிருக்கும் சொல்லுங்கோ பாப்பம்”
“ஒரு ஐம்பது ஐம்பத்தைஞ்சு.” அவரை மகிழ்ச்சிப் படுத்த நினைத்து பிரதாபன் சொன்னார். “எனக்கு. எழுபத்தைஞ்சு எண்பது வயசிருக்கும்.”
"பாத்தாத் தெரியேல்ல அப்பு” கந்தப்பரின் முகத்தில் சிறுமாறுதல் தெரிந்தது. அவர் கதைக்கத்தொடங்கினார்.
எங்கட ஊரில ஒரு இருபத்தைஞ்சு முப்பது குடும்பங்கள்தான் அந்த நாளில இருந்தது. எல்லாம் விவசாயக் குடும்பங்கள். எனக்கு அப்ப எத்தின வயசிருக்குமெண்டா. கோமணங்கட்டிக் குளிக்கத்துடங்கீற்றன். என்னொட்டப் பொடியங்கள் கோமணங்கட்டத் துடங்கேல்ல. நான் கொஞ்சம் வளத்தி
நான்தான் என்னொட்டப்பொடியளில முதல் முதல் கோமணங்கட்டிக்குளிக்கத் தொடங்கினனான்.
s
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 67
நல்லா விளையாடிப் போட்டுக் குளத்துக்கு ஓடுவம். குளிக்க, குளக்கட்டில போய் ஏறின உடன அரக்காச்சட்டயக் கழட்டி எறிஞ்சு போட்டு குளக்கட்டில நிண்டமருதமரத்தில தொத்திகுளத்துக்ககுதிச்சு நீந்தி 6.36061TLITG6).h.
மத்தியான வெயிலுக்கு குளத்தில முழுகிறது எவளவு சுகம் தெரியுமே.
கோமணங்கட்டிக்குளிக்கத்துடங்கினாப்போலஒரு சங்கடம்.மற்றப்பொடியள் இறுமாணமாக்குளிப்பாங்கள். நான் அது வழிய ஆரும் கழட்டிப்போட்டகோமணத் துண்டு கிடந்தா தேடி எடுத்து அறுநாக்கொடில கட்டிக் கொண்டுதான் குளிப்பன்.
சிலநேரம் ஆக்களில்லாட்டி இறுமாணத்தோடயும் குதிச்சிருவன். கோமணத்தோட குளிச்சாலும் சிலநேரம் பொடியள் தண்ணிக்குள்ள வைச்சு கோமணத்த உருவீருவாங்கள். கையால பொத்திக்கொண்டு கரைக்கு வருவன்.
ஆரும் ஆக்கள் நிண்டாத்தான் அப்பிடி இல்லாட்டி மற்றப்பொடியளப்போல இறுமாணக் குண்டியாத்தான்.
சிறிது நேரம் யோசித்துக் கொண்டு எங்கேயோ வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தார் கந்தப்பர்.
பிரதாபன் அவரை மீண்டும் தன் வசப்படுத்த நினைத்தார்.
"அப்பு உங்கட ஊரின்ரபேரென்ன அப்பு” "ஆ.நறுவிலிக்குளம். குளத்துக்ககுதிச்சு நீந்திப் புடிச்சு விளையாடிப் போட்டு வெளிக்கிடேக்க ஆரும் பொட்டையள்,பொம்பிளையஸ் குளிக்கவந்திற்றா பெரிய சங்கடமாப் போடும். எல்லாரும் பொத்திப் புடிச்சுக் கொண்டு வெளிக்கிட்டு ஒடீருவம்.காச்சட்டபோட்டபாதி போடாத பாதியா வீட்ட போடுவம். சிலவேள அப்பு புடிச்சாரெண்டாத் தோல உரிச்சுப் போடுவார். ஆனா அப்பு நல்ல மனிசன்.
இருந்தாப்போல எப்பவுந்தான் அடிப்பார். மற்றும்படி என்னில அவருக்கு நல்ல பாசம்.
மாப்புக் கட்டுறா எண்டு சொன்னா ரெண்டு கையையும் நெஞ்சோடசேத்துக் கட்டி அப்பிடியே நிப்பன். "அப்பு உங்கட மனிசி பிள்ள குட்டியள் எல்லாம் எங்க”ஒன்றும் சொல்லாமல் கையை விரித்தார். அவரது கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தோடியது.
அவரைச் சமாதானப் படுத்துவது பெரும்பாடாகிவிட்டது. அவரது நிலையை விளங்கிக் கொண்ட பிரதாபன் அதற்கு மேல் அவரது குடும்ப நிலையை விசாரிக்கவில்லை.
"அப்புகுளத்தில குளிச்சகத சொன்னியள். பிறகு என்னண்டு சொல்லேல்ல.”
பிரதாபன் அவரைக் குளத்து நினைவுக்கு மீண்டும் அழைத்துச்சென்றார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

எங்கட குளத்தில நிறைய மீன் இருந்தது. எங்கட குளம் சின்னக்குளந்தான். ஆனா லேசில வத்தாது. வயலுக்குத்தண்ணிபாயிறபீலிக்குப்பக்கத்தில உழுவாங்கட்டி கிடக்கிற இடமாப்பாத்துமண்வெட்டியால வெட்டினமெண்டா நாக்கிளிப்புழுக்கள் கிடக்கும்.
ஒரு பத்துப் பதினஞ்சு நாக்கிளிப்புழுக்கள எடுத்து தேங்காச் சிறட்டேக்க போட்டு ஈரமண்ண மேலபோட்டு மூடீருவம் தூண்டில எடுத்துக் கொண்டு மீன்பிடிக்கப் போவம். அண்ண, அம்மா, நான் மூண்டு பேரும்போவம்.
ஊர்ச்சனங்களும் வரும் காலம, பின்னேரத்திலபோவம். தூண்டில்ல புழுவக் கொத்திப் போட்டு தண்ணிக்க எறிஞ்சா மீன்வந்து கொத்தும்.
நல்ல தறணி வரிச்சில சங்கூசியக் கிட்டி, மயிலிறகு மிதப்புப் போட்டு தூண்டில் ஊசியக் கட்டி.
யப்பான், கெளிறு, விரால்,ஒட்டிமயறி, உழுவஎண்டு மீனுக்குக் குறைவில்ல. உழுவ மீன் புடிச்சுச் சுண்டிச் சாப்பிட்டா எப்பிடி இருக்கும் தெரியுமே. நல்ல திப்பிலிக் கொச்சிக்காய்போட்டுச் சுண்டோணும்.
இஞ்சே! நாங்கள் விரால்புடிக்கிறது எப்பிடியெண்டு தெரியுமே. ஒரு குழந்தையைப் போல ஆர்வத்தோடு கேட்டுத்தானே சொல்லத் தொடங்கினார் கந்தப்பர்.
நான் சின்னத் தூண்டில்ல மாங்கன் மீன் பிடிச்சுக் குடுப்பன். மாங்கன் மீன் பிடிக்கிறதில நான் பெரிய விண்ணன்.தெரியுமே அம்மாமாங்கன ஊசியிலகுத்திப் போட்டு கயித்துத் தூண்டில தண்ணில எறிவா. கயித்த மரவேரிலகட்டிப்போட்டுதண்ணிக்குள்ள கண்டிப்போட்டு வந்திருவா.
மாங்கன் மீன்சும்மாதுள்ளி விளையாடும். திடீரெண்டு விரால் மீன் வந்து மர்ங்கன றாஞ்சிக் கொண்டு போகும். விராலின்ர வாயில மாங்கனோட தூண்டில் ஊசியும்மாட்டீரும்.அப்பிடியே கயித்தக்கரைக்கு இழுத்தா பெரிய விரால் மீன்வரும். விரால் மீன் என்ன ருசி தெரியுமே.
நல்லாப் பொத்தமுளகாயும் போட்டுபுளிமாங்காய்த் துண்டுகளும் போட்டு, தூளும் கொஞ்சம் கூடப்போட்டு தேங்காப்பாலும் விட்டுநீளக்குளம்பாவைச்சா.
அம்மாசோக்காச் சமைப்பா, கந்தப்பரின் வாயிலிருந்து எச்சில் வடியத் தொடங்கியது. தண்ணிக்குள்ள மரநிழலுக்குள்ள விரால்மீன் சின பீச்சியிருக்கும். நிறையக் குஞ்சுகள் பொரிச்சு சிவப்புநிறமாத்திரளாக் குஞ்சுகள் நிக்கும்.
தாய் விராலும் தகப்பான் விராலும் மாறிமாறிக் குஞ்சுகளுக்குக் காவலா நிக்கும்.
குஞ்சுகள் நிக்கிற இடமாப் பாத்து தடித்தூண்டிலப் போட்டா விரால் பாய்ஞ்சு வந்து மாங்கனறாஞ்சீரும்.
'65

Page 68
பிறகென்ன தூண்டில இழுத்தா பெரிய விரால்தான். "அப்பு:உங்களுக்கு உதுபாவமாத் தெரியேல்லயே.” இடைமறித்துக் கேட்டார் பிரதாபன். அதெல்லாம் ஆர்பாத்தது. ஐயா! உங்களுக்குக் கொக்கச்சான் மீன் தெரியுமே. கொக்கச்சான். நாங்கள் சின்னத் தூண்டில்ல நரிக்கெளிறு, ஒலவாலன் கெளிறு,மாங்கன், பொட்டியன் தான் பிடிப்பம்.
பெரிய மீன் பிடிக்க எங்களால ஏலுமே. வாளமீன் கொத்தீச்சுதெண்டா எங்களயும் இழுத்துக் கொண்டு போடும்.
விலாங்கும் எங்க்ட குளத்தில இருந்தது. ஆரல்மீன் நாங்கள் சாப்பிடுறேல்ல. பாலாமை. அதையும் சாப்பிடுவம். செல்லப்புக் குஞ்சி பாலாமைக் கறியச் சோக்கா வைப்பார். பீயாமை தெரியுமே. பறையாமையெண்டு சொல்லிறது. அத நாங்கள் சாப்பிடுறேல்ல.
மடுத்திருவிழாவுக்குப்போற சிங்கள ஆக்கள் வந்து மோட்டையக் கலக்கிப் பீயாமையளப் புடிச்சுக் கொண்டு போவாங்கள். அவங்கள் சாப்பிடுவாங்கள்.
கந்தப்பரின் முகத்தில் அருவருப்புத் தெரிகிறது. "அப்பு. கொக்கச்சான் மீன் பிடிக்கிறதப் பற்றித் துடங்கீற்றுவிட்டிட்டியளே.
பிரதாபன் நினைவுபடுத்தினார் ஒம். ஓம். அத இரவில போய்த்தான். பிடிக்கிற நாங்கள். நல்ல நிலவுகாலத்தில் அப்பரும், பெரியப்பரும், செல்லத்தம்பிமாமாவும். வேற. வேற. ஆக்களும் வருவினம். நான் அப்புவோட ஒட்டிக்கொண்டு போயிருவன். கொக்கச்சான். மீன் சோக்கா இருக்கும். செதில் இல்லாத மீன். வாளமீன் மாதிரித்தான். ஆனா கொஞ்சம் சின்னன். இரவு ஏழு எட்டு மணிவரைக்கும் இருந்து தூண்டில் போட்டா ஆளுக்கு எட்டுப்பத்தெண்டு கொத்தும்.
ஐயா! குளத்தில மீனடிக்கிறது தெரியுமே உங்களுக்கு. குளம் நிறம்பியிருக்கேக்க இரவில டோச் லயிற் கொண்டு அப்புவோட நானும்போவன்.
அப்பு அண்ணய விட்டிட்டு என்னத்தான் கூட்டிப் போறவர்.
SS
 

அலகரையில தப்புத் தண்ணில விரால் மீன்கள் நித்திர கொள்ளும்,
அப்பு லயிற் அடிச்சுப் பாத்து சுட்டிப்பா வாளால வெட்டீருவார்.நான் புறக்கிக் கோர்வையில கோப்பன்.
சின்ன அசுமாத்துக் கேட்டாலும் விரால் முழிச்சிரும். கலைவு கண்டிட்டா பிறகு விராலக் காணேலாது. சத்தம்போடாமல் தண்ணிக்குள்ள கால மெள்ள மெள்ள வைச்சு நடக்கோணும்.
ஒருக்கா சின்னண்ணய அப்பர் கூட்டிப்போய். சின்னண்ண நடக்கத் தெரியாமல் கலைவு காட்டீற்றார். அதுக்குப் பிறகு அவரக் கூட்டிப் போறேல்ல. கலிங்கு பாயேக்கயும் மீன் அடிக்கிறநாங்கள். பக்கத்துக் குளங்களில இருந்து எங்கட குளத்துக்குத் தண்ணிவாற நேரத்தில எங்கட குளத்து மீனெல்லாம் தண்ணீல எதிர்த்திசையில போகும்.
அப்பகெர்ஞ்சம் தப்புத் தண்ணில வைச்சு வாளால வெட்டுவம்,பனையறிபொட்டியன், கணையன், ஏன் விரால் மீனும்தான்.எங்கடஊரிலவலைகிலைஒண்டும் கிடையாது. வலை போட்டு மீன் பிடிக்கிறதுமில்ல. மீன் பிடிச்சு விக்கிறதுமில்ல. -
எல்லாம் 66). Frud, குடும்பங்கள். அண்டையண்டைக்கு கறிக்கு மீனிருந்தாப் போதும். கொஞ்சம் கூடப்புடிச்சா கருவாடு போட்டுவைச்சிருப்பம் முருங்கக் காயோட விரால்க் கருவாடு போட்டுக் கறிவைச்சா எப்பிடி இருக்கும் தெரியுமே.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 69
இறைச்சியும் மீனும் தானே எங்கடசாப்பாடு பால், தயிர் நெய், தேன், இறைச்சி, மீன், முட்டை எண்டு எங்களுக்குச் சாப்பாட்டுக்கு என்ன குற.இந்தக் கூப்பன் மா. கோதம்பமாவ நாங்கள் கண்டதெப்ப தெரியுமே.
செத்த வீட்டில பாட கட்டேக்க கடுதாசியள ஒட்டுறதுக்கு வவுனியாவில இருந்து வாங்கிவருவினம். சுடுதண்ணில குழச்சு தடியால எடுத்துப் பூசி, ஒட்டி முடிச்சாப்பிறகு கவனமாகக் கொண்டுபோய் காட்டுக்குள்ள எறிஞ்சு போடுவினம்.
ஆரும்பிள்ளையன் அள்ளிவாயிலபோட்டிட்டாகுடல் ஒட்டிப் போடுமெண்டு பயம்.
எங்களுக்கு அரிசிக்குப் பஞ்சமில்ல. ஐயா! உங்களுக்குக் கரப்புக் குத்தி மீன்பிடிக்கிறது தெரியுமே. நீங்கள் யாழ்ப்பாணமோ,
யாழ்ப்பாணமெண்டா கரப்புக்குத்திமீன்பிடிக்கிறது தெரிஞ்சிருக்காது. என, “இல்ல அப்பு நான் வன்னி தான்.கேள்விப்பட்டிருக்கிறன்.சொல்லுங்கோ அப்பு”
1956 இலும், 1977 இலும் 1983 இலும் என மூன்று தடவைகள் இடம்பெயர்ந்துபின் 1989ல்முற்றாகவேதங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து வெளியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரதாபன். 1989 இன் பின் இன்று வரை மீள் குடியேற்றம் செய்யப்படாத கள்ளிக்குளம் என்ற அழகிய சிறிய கிராமத்தில் பிறந்தவர் பிரதாபன்.
வவுனியா நகரிலிருந்து வடகிழக்குத் திசையில் ஏழுமைல் தூரத்தில் தான் கள்ளிக்குளம் இருக்கிறது. இருப்பினும் பக்கத்தில் இருக்கும் மாமடு, காட்டு மாங்குளம்,பிரப்பமடு முதலான சிங்களக் கிராமங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் இன்றுவரை கள்ளிக்குளம் காடாகவே கிடக்கிறது.
1977ல் கறுபுளியங்குளம், வீமன் கல்லு கிராமங்கள் பறிபோயின. அவற்றோடு சேர்ந்து அடுத்ததாகக் கள்ளிக்குளம் தான் பறிபோகுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரதாபன். கந்தப்பர் சொல்வதைக் கேட்பதில் பிரதாபனுக்கும் மிகுந்த ஆவல் இருந்தது.
கந்தப்பர் தொடர்ந்தார். நல்ல தறணி வரிச்சை இந்த விரல்த்தடிப்பமா வெட்டி. கவனமாக் கேளுங்கோ.
இந்த நடுவிரல்த் தடிப்பமாப் பாத்து வெட்டிச் சீவி வளைச்சு வரிஞ்சு கீழ மட்டமா வெட்டிக் கூராக்கி, மேல திருகண மாதிரிப்பின்னிநடுவில ஒட்டவிட்டு இறுக்கிக் கட்டி. அது விளங்குதே ஐயா.
“ஓம். ஓம்.சொல்லுங்கோ அப்பு.” ஒரு ஒண்டர ரெண்டு முழ உயரத்துக்கு இருக்கு. கரப்புக் குத்தியெண்டு ஒரு ஊரும் வன்னில இருக்கும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

கரப்புகளக் கொண்டுநாலஞ்சுபேர்குளம் கொஞ்சம் வத்திற காலங்களிலமீன்பிடிப்பம்.
கரப்பச் சேத்துக்குள்ளகுத்தினா கரப்புக்குள்ள ஆப்பிட்டமீன்கள் ஒடஏலாமல் அடபட்டுக் கிடக்கும்.
கைய வைச்சுப்புடிச்சிருவம். ஒருக்கா. அதுஎப்பஎண்டா என்ரசின்னம்மானின்ர கலியாணவீட்டு வருசம்.
என்னொட்டப்பொடியளெல்லாம் கோமணங்கட்டிக் குளிக்கத்தொடங்கிற்றாங்கள்.
அப்ப எங்கட பெரியப்பர்,பெரியம்மான்,செல்லப்பரப்பு எல்லாரும் சேந்து பின்னேரம் போல பாலேங்கத்தான்ர மாலுக்க ஒரு கூட்டம் போட்டினம்.
ஆரோ மன்னார் வலகாறருக்கு குளத்தக் குடுக்கிறதாம்.
அவங்கள் வலபோட்டுமீனப்புடிப்பாங்களாம் 500ரூபாக்ாசு குடுப்பாங்களாம். அந்தக் காச குளக்கட்டடிக் கந்தசாமிகோயில் கட்டுறதுக்கு எடுக்கிறதாம்
பெரியப்பருக்கு குளத்தக் குத்தகைக்கு விடுறதில பெரிய விருப்பமில்ல. கோயில் கட்டுறேக்காக எண்டபடியாலதான் ஒமிண்டவர். மீன் காறர் வந்து வலபோட்டாங்கள்.
முதல்லபாசிய வலிச்சு எடுத்தாங்கள். நாங்கள் பொடியள் எல்லாம் ஒடிப்போய்பாசிக்குள்ள கிடந்த கெளிறுகள், மாங்கன், உழுவை, மன்றால், பொட்டியன் எல்லாம் பொறுக்கினம்.
ஐயா. அயிரமீன்பிடிக்கிறது.தெரியுமே உங்களுக்கு. நல்ல பனிக் காலத்தில அயிரமீன் திரள் திரளாச் அலுசுக்குள்ள இருந்து பீலிக்க வந்து நிக்கும்.
குளிக்கப் போற பொம்பிளையள் சீலயளப் புடிச்சு வாரிக்கொண்டுவருங்கள்.
ஆச்சியும் அக்காவும் மத்தியானம்போல போச்சினமெண்டா உடுப்புத்தோச்சுக்குளிச்சுப் போட்டு சீலயப்புடிச்சு அயிரை கச்சல் மீன்கள் வாரி வருவினம்.
ஆச்சி வலு கிெட்டிக்காறி சீலயமடிச்சு இடுப்பில கட்டிக்கொண்டு தனியாளா மீன்வாரிக் கொண்டுவருவா.
அயிர மீன் தேசிக்காப்புளி விட்டுத் தீச்சா எப்பிடி இருக்கும் தெரியுமே. நீங்கள் சாப்பிட்டுப்பாத்தனிங்களே ஐயா,
“ஓம் அப்பு. நான் சாப்பிட்டிருக்கிmள். கச்சல்மீன் பொரியல், குழம்பு எல்லாம் சாப்பிட்டிருக்கறன்”
இப்போது பிரதாபனது வாயிலிருந்தும் நீர் வடியத் தொடங்கிவிட்டது.
"அப்பு வல காறரப் பற்றிச்சொன்னியள். பிறகு. கதை கொடுத்தார்பிரதாபன்.
67

Page 70
அவங்கள் நாளாந்தம் ஊராக்கள் எல்லாருக்கும் சாப்பாட்டுக்குமீன் குடுப்பாங்கள்.
ஆளுக்கொருவிரால்ரெண்டுவிரால்குடுப்பாங்கள். நானும் அண்ணரும் போனமிண்டா வேற வேற குடும்பம் எண்டு சொல்ல ரெண்டு ரெண்டு விரால் வாங்கீருவம்
விரால்ச்சினயும் தருவாங்கள் ஊராக்கள் மீன் பிடிக்கேலாது. அவங்கள் பெரிய பெரிய வலயளப் போட்டு மீன்பிடிச்சு வெட்டி உப்புப் போட்டுக் காயவைச்சு லொறியளிலஏத்திக்கொண்டு போவாங்கள்
“உங்கட குளத்தில முதலயள் இல்லயோ'ரெண்டு மூன்று கிடந்தது. அதுகள் காடுகளுக்கயும் பளையஞக்கயும் ஒளிஞ்சு கிடக்கும்.
எல்லா மீனயும் புடிச்சிற்றாங்களெண்டா பிறகு எங்களுக்கு ஒண்டும் மிஞ்சாதென்டு எங்களுக்குக்
ტiნ6)|6l).
ஆனா சின்னம்மான் சொன்னார் முழு மீனயும் புடிக்கேலாது.சேத்துக்குள்ள ஒளிச்சுக் கிடக்கும்.
பனையறி மீன் மழைபெய்ய வானத்தில இருந்து விழும் எண்டார் ஒம் நான் கண்டிருக்கிறன். மழ பெய்யேக்க முத்தத்தில பணயறிமீன் விழுந்தது.
திடீரெண்டு மழைபெய்யத் துடங்கீற்று. நல்ல வரத்துள்ள குளமிண்டபடியால குளம் நிறம்பீற்று.
அவங்கள் விட்டிட்டுப்போட்டாங்கள். பழையபடி மீன்கள் பெருகீற்று.
குஞ்சு விரால் பிடிக்கிறது தெரியுமே ஐயா உங்களுக்கு விரால் சினப் பீச்சி குஞ்சு பொரிச்சிருக்கும்.
கந்தப்பர் இப்படி ஒரேகதைகளை மீண்டும் மீண்டும் சொல்வர்ர். பிரதாபன் புதிதாகக் கேட்பது போல ஆர்வமாகக் கேட்பார் ஒருக்கா எங்கட குளம் கொஞ்சம் வத்தீற்று பக்கத்து ஊரக்குளங்கள் சொட்டறவத்தீற்று மாடு, மிருகங்கள், குடிக்கவும் தண்ணியில்ல. அவங்களுக்கு மீன் தின்ன ஆச. ஐயா! உங்களுக்குத் தெரியுமே
எங்கட குளத்திலசுங்கான் எண்டு ஒருமீன் இருக்கு அதுகுத்தீச்சுதெண்டா உடன காய்ச்சல் வரும். சரியாக் கடுக்கும் வலகாறர் கனபேருக்கு சுங்கான்மீன் குத்திக் காய்ச்சல் வந்தது.
அவங்களுக்கு எங்கட குளத்தில மீன் பிடிக்கிறதே பெரும்பாடாப்போட்டுது.
சுலுசுக்குள்ள சாக்கால மீன்பிடிக்கிறது தெரியுமே உங்களுக்கு. பெரியப்பர்தான் எங்கட குளத்துக்கு கமவிதான அவரிட்டத்தான். சுலுசுத் துறப்பு இருக்கும். தண்ணிப்பாச்சல் முடிஞ்சு பூட்டிக்கிடக்கிற சுலுசுக்குள்ள மீன்கள் நிறையச் சேந்து நிக்கும்.

பெரியப்பரும் அப்புவும் அண்ணனும் நானும் கருகுமாலப்பொழுதில குளத்துக்குப் போவம்.
அப்புவும் அண்ணயும் கயித்துச் சாக்கின்ர வாய சுலுசி தண்ணிவாற வாயிலவைச்சுப்புடிப்பினம். பெரியப்பர் சுலுசமெள்ளத் துறப்பார். தண்ணி மீன்களத் தள்ளிக் கொண்டு வரும். அப்பிடியே சாக்கத் தூக்கினா எவளவு மீன் இருக்கும் தெரியுமே.இடையில் பிரதாபன் கந்தப்பரிடம் கேட்டார்.
"அப்பு பக்கத்து ஊர்க் குளங்களெல்லாம் தண்ணிவத்தீற்று. அந்த ஊர்க்காறகுக்கு மீன் தின்ன ஆச எண்டு தொடங்கீற்று விட்டிட்டியள்”
சிறிதுநேரம் மெளனமாக இருந்தார் கந்தப்பர். கந்தப்பரை அவர் போக்கிலேயே சொல்ல விட்டிருக்கலாமோ என்று நினைத்தார் பிரதாபன். இருப்பினும் கிறிது நேர மெளனத்தின் பின் கந்தப்பர் தொடர்ந்தார். பக்கத்து ஊருகளில இருந்து எங்கட குளத்தில குறையாக் கிடக்கிற கோயிலக் கட்ட அந்தக் காச வாங்கிறதாச் சொல்லிச்சினம்
எங்கடஊர்க்காறரும்மீன்பிடிக்கவிடோணும் எண்டு கதைச்சுப் பேசி 200ரூபா அச்சவாரமும் வாங்கீற்றினம்.
அவேநினைச்சது அவங்கள் கொஞ்சம் கொஞ்சமா சாப்பாட்டுக்குத் தான் மீன் பிடிப்பாங்களெண்டு. ஆனா அவங்கள் நாலஞ்சு ஊர்க்காறர் ரெண்டு மூண்டு வலையள் 10, 15 கரப்புகளோட ஒரு 25, 30 பேர் வந்தாங்கள்.
குளத்தில முலமார்பளவு தண்ணி, வத்துக்குளந்தானே. வலயளக் கட்டினாங்கள். ஒரு கரையில இருந்து தண்ணிக்க இறங்கிக் கலைச்சுக்கொண்டு போனாங்கள்.
யப்பான்மீன்கள்சேத்துக்க புதையமேலகுமிழிவரும். கலங்கலாத்தெரியும்.அதிலகையைவைச்சுப்புடிச்சாங்கள். கொஞ்சப்பேர் கரப்புக்குத்திக் கலைச்சு விரால் புடிச்சாங்கள். மீன்களெல்லாம்தறிகெட்டு மற்றப்பக்கமா ஒடத்துடங்கீற்று. ஒரு மீனும் தப்பேலாதமாதிரி குளம் முழுவதையும் அடக்கமாவளைச்சுக் கலைச்சாங்கள்.
ஓடின மீனெல்லாம் வலேக்க அம்பிட்டிட்டுது. இப்பிடியே கலைச்சுச் கலைச்சு தப்புத் தண்ணியுள்ள பக்கமா மீனெல்லாத்தயும் கலைச்சுப்புடிச்சாங்கள்.
மீன்களுக்குத் தப்ப வழியில்ல. முள்ளு மீன்கள் மற்ற மீன்களக் குத்த மீன்கள் சாகத்துடங் கீற்று. செத்து மிதக்கிறதுகளயும் அள்ளுணாங்கள்.
கரைவழியமீன்கள் குதிச்சுப்பாயதடியளால அடிச்சு அடிச்சு கரையிலகுவிச்சாங்கள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 71
ஊரே திரண்டு வந்து வேடிக்க பாக்கத் துடங்கீற்று. மீன்கொத்திப் பறவையஞம், பருந்துகளும், காகங்களும் வந்து மொய்க்கத் துடங்கீற்று.
ஊராக்கள் நினைச்சது சாப்பாட்டுக்குத்தானே மீன் பிடிப்பாங்களெண்டு
பாழ்படுவாங்கள் யாவாரத்துக்காகத் தான் வந்தவங்களெண்டு ஆருக்குத் தெரியும்.
கொஞ்சநேரத்திலமழமேகம் திரண்டுது. எங்களுக்கெல்லாம் நல்ல சந்தோசம், மழ பெஞ்சா பிறகு மீன்பிடிக்கேலாது. நல்ல தண்ணிவரத்துள்ள குளம். அவங்கள் அவசர அவசரமா வலையிலபட்டதுகளயும் கரப்பில புடிச்சதுகளயும், கரைல அடிச்சதுகளயும் அள்ளி அள்ளிச் செத்தது பாதி சாகாதது பாதியா சாக்குச் சாக்காக் கட்டி வண்டில் களில ஏத்தினாங்கள். மீன்கள பெரிசு சின்னனாப் பிரச்சு ஏத்தினாங்கள். மழையெங்க வந்தது. நாங்கள் வானத்தப் பாத்ததுதான் மிச்சம். பெய்யும் பெய்யுமெண்டுதான் பெரியாக்கள் சொல்லிச்சினம்.பெய்யும் போல தான் கிடந்தது. ஆனாப் பெய்யேல்ல.
முழு மீனயும் குஞ்சு குருமன் எண்டில்ல புடிச்சிற்றாங்கள். சுங்கான் மீன் குத்தினா சரியாக் கடுக்கும். உடன காய்ச்சல் வரும். எங்களுக்கெல்லாம் எத்தினதரம் எத்தின பேருக்குக் குத்தீருக்கு, ஆனா அவங்களுக்கு சுங்கான் மீன்கள் குத்தேல்ல, ஏனெண்டு தெரியாது. நினைச்சா அதிசயமாத்தான் இருச்கு. உங்களுக்கு விலாங்குமீன் தெரியுமே.தலை விரால்மீன் மாதிரி, வால்பாம்புமாதிரி விலாங்குமீன் சாப்பிடுறேல்ல, அதுகள மட்டும் புடிச்சு திரும்பத் தண்ணிக்கயே எறிஞ்சாங்கள்.
ஏனிண்டா அதவைச்சு மற்ற மீன்களப் பிடிக்கலாமில்லே.
திடீரெண்டு பாத்தா பெரிய அமளியாயிருந்தது. பெரியப்பர் வந்தார். ஒரு பன அளவுக்கு சூரியன் நிக்குது. பெரியப்பருக்கு குளங்கிடக்கிற கிடயயும், அவங்கள் மீன் பிடிக்கிற முறையயும் மீன்கள் படுற பாட்டையும் பாக்கப் பொறுக்கேல்ல."டேய் டேய்போதுமிடா.நிப்பாட்டுங்கடா நாசமாப் போவாங்களே! காணுமிடா. பாழ்படுவாங்களே நிப்பாட்டுங்கடா உந்தப் பாவம் உங்களச் சும்மா விடாதிடா.”
எண்டு கத்தத் துடங்கீற்றார். எல்லாரும் ஆச்சரியமா அவரையே பாத்தினம். எனக்கும் பெரியப்பர் ஏன் அப்பிடிப்பேசினவர் எண்டு விளங்கேல்ல. பெரியப்பர்பேசினதக் கேட்டுமீன்பிடிச்சுக் கொண்டு நிண்ட ரெத்தினம் எண்டவன் சொன்னான்.
"நாங்கள் சும்மாமீன்பிடிக்கேல்ல. அச்சவாரம் தந்து போட்டுத்தான் மீன் பிடிக்கிறம். இப்பகுறையில குழப்புறது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

முறயில்ல” எண்டு பெரியப்பரோ விடுறபாடா இல்ல. உங்கட அச்சவாரமும்மசிரும் இப்ப கொணந்து முஞ்சேல வீசுறன் காணும். ஏறுங்கோ குளத்தால. இவன் ஆர் இவன், உவன். உவங்கள் உங்கட ஊர்க்காரரில்லயே.” மாமாவும் மற்றாக்களும் பெரியப்பரோடு சண்ட “எல்லாம் பேசிக்குடுத்துப்போட்டு இப்ப வந்துமீன்பிடிக்க வேண்டாம் குளத்தவிட்டு வெளியேறுங்கோ எண்டாச் சரியே” எண்டு அவே கதைச்சினம். பெரியப்பருக்கு உடம்பு நடுங்கத் துடங்கிற்று. அவரச் சமாதானப்படுத்த முடியாமல் வீட்ட கூட்டிப்போகப்பாத்தினம்.
குளத்தில மீன் பிடி மும்முரமா நடந்திது. பெரியப்பர் வீட்ட வரமாட்டண்டிட்டார். புறக்கட்டில பாலமரத்துக்குக் கீழ சூலமடிச்சபடி இருந்த வைரவர் கோயிலுக்கு கூட்டிப் போகச் சொன்னார். ரெண்டுநாளைக்குமுதல்தான் பெரியப்பற்ற மூத்த மகன் ராசண்ண கால்தூக்கி ஆடினவர். வைரவர் எங்களுக்குக் குலதெய்வம். பெரியப்பர்தான் பூசகட்டிறவர். கொஞ்சக் காலமா பெரியப்பற்ற மூத்தவர் ராசண்ணதான்பூச கட்டிவாறார்.
ஆனா கோயில்ல பூச கட்டேக்க பெரியப்பர்தான் ஆடுவார். பிரம்பு அவற்ற கையிலதான் இருக்கும்.
ராசண்ணையும் இப்ப இப்ப ஆடுறவர்தான். ஆனாக் காலத்தூக்கி ஆடுறேல்ல.
அண்டைக்குப் பூச நேரத்தில பெரியப்பர் ஆடிக் கூவிண்டு பிரம்ப உயத்திப் பிடிக்க ராசண்ணயும் ஆடிக் கொண்டு வந்து பிரம்ப வாங்கிக் கால்தூக்கி ஆடிக் கூடவெண்டவர்.
அப்பவே ஊரில கத இனிப் பெரியப்பர் அடுத்த பூசைக்கு இருக்கமாட்டாரெண்டு.
வயிரவர் கோயிலடிக்கு வந்த பெரியப்பர் ஆடத் துடங்கீற்றார். நல்ல ஆட்டம்.
ஆடி ஆடி ஏதேதோ சொல்றார் ஒண்டும் விளங்கேல்ல. நான் பக்கத்தில தான் நிண்டனான். எனக்குப்பெரியப்பரிண்டாச் சரியான பாசம். அவருக்கும் என்னிலஉயிர். குளக்கட்டில நிண்ட ஊர்ச்சனம் முழுக்க ஓடிவந்திற்று. கொஞ்ச நேரத்தில ஆடிக் களைச்சு கீழ விழுந்தார். எழும்பேல்ல
"நாசமாப் போவாங்களே. இந்தப் பாவம் உங்களச் சும்மா விடாது. பாழ்படுவாங்களே நீங்கள் நல்லா இருக்க மாட்டியள்.” எண்டுபேசிக்கொண்டேபோய்ச்சேந்திட்டங்கள். என்ர பெரியப்பரக்கொண்டு போட்டார்.என்ர பெரியப்பரக் கொண்டு போட்டாங்கள் கந்தப்பர் பழையபடி ஏசத் தொடங்கிவிட்டார். நாசமாப் போவாங்களே. இந்தப் பாவம் உங்களச் சும்மா விடாது.
69

Page 72
KM
QTuéJST 2616)D3.
(Pப்பாட்டள் காலத்தில் புலம்பெயர்ந்தார்
முறுக்கோடுகொடுங்காட்டைப்பார்த்தபின்னர் கொப்போடும் குழையோடும் அழித்து இங்கே
கோப்பியொடுதேயிலையை நட்டவர்கள் தொப்புள்கொடி உறவினையும் மண்ணுக்காக
உரமாக்கிப்பொன்விளையும் பூமியாக்கி எப்போதும் இரத்தத்தை நீராய்ப்பாய்ச்சி
உழைத்தவர்கள் ஒரு பயனும் காணவில்லை
i கடுங்காற்றில் பறந்தோடும் லயத்தின் SunGany
70
காப்பதற்குமண்மூடைஅடுக்கிவைப்பார் கடும் மழையில் வீடெல்லாம் வெள்ளம் பாயும்
கடுங்குளில்படுப்பதற்கு வழியுமின்றி படுந்துயரைநீக்கிடவே எவரும் இல்லை
பகலிரவுஎப்போதும் கருமைசூழ விடும்மூச்சின் வெப்பத்தால் உடைகள் காயும்
விதிமாற்றித்துயர்போக்க எவரும் இல்லை
சொந்தமென வீடில்லை காணி இல்லை
சுத்தமாய் அரசாங்க உதவி இல்லை
கந்தலுடைதானுடுத்திவாழுங்கோலம்
- கண்டவரின் கண்களிலே கனலைப்பாய்ச்சும்
சொந்தமெனப்பாராட்டிவாக்குக்கேட்டு
தேர்தலிலே தெரிவாகி அரசில் சேர்ந்தார்
எந்தவொருமீட்பினையும்செய்திடாமல்
அடிமைகளாய் அநாதைகளாய் வாழ விட்டார்

6TTu QTyp61 Tf
u:ിങ്ങിങ്ങ്ബ് - ക്രG?'\_ർ
அடையாள அட்டைபெறதோட்டமக்கள்
அவதியுறும் காட்சியினை என்னவென்போம்
அடைமழையில் கிராமத்துச்சேவையாளர்
பணிமனையில்தவங்கிடந்தும் பயனும் இல்லை
நடைமெலிந்துதிரிந்தவர்கள் பிறப்புச்சான்று
பெற்றவரும்பள்ளியிலே பிள்வை சேர்க்க கொடை கொடுக்கும் கூட்டத்தார் மட்டும் இங்கே
குறிப்பறிந்து காரியத்தைச்சாதிப்பார்கள்
குன்றுகளும் குழிகளுமே நிறைந்தரோட்டில்
குறிப்பிட்டநேரத்தில் பஸ்ஸும் இல்லை நின்றங்கு எதிர்பார்த்துச் சிறுவரெல்லாம்
நெடுந்தூரம் கால்நடையில் பள்ளிசெல்வார் மண்வெட்டும் தொழிலாளி நோயில் வீழ்ந்தால்
மருந்தில்லை மருந்தகத்தில் டாக்டரில்லை சென்றுவர‘அம்புலன்ஸ் வண்டி இல்லை
செத்தாலும் சோதனைகள் தொடருதையா
சங்கங்கள் பலவுண்டுமலையகத்தில்
சரியான வழிகாட்டும் தலைமை இல்லை சிங்கத்தைப்போலவர்கள் கர்ச்சிப்பார்கள்
சொகுசாகத் தான்வாழ சிந்திப்பார்கள்
எங்களது உரிமைக்குக்குரல்கொடுத்து
ஏக்கத்தைப்போக்கிடவே எதுவும் செய்யார் வங்கிகளில் கணக்குகளை வளர்த்துக்கொண்டு
GJITitus.T SIGMD6STij Gurg shliri.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 73
(உலோக நாணயங்களின் இரண்டு பக்கங்களுட6 என்று இந்த சிறுகதைக்கும் எனக்குதலை, வால்
“என்னை உனக்குப்பிடிச்சிருக்கா?” "ஆமாம்” "நீயாரையாவது காதலித்து இருக்கிறியா" “இல்லை” வழமையான இந்த முதலிரவு சம்பாஷணையுடன் வாழ்க்கை இனிதே ஆரம்பமாகியது.
அவள் மூன்றாம் மாதம் முழுகாமல் இருந்தபொழுது கணவனுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது.
"திருமணத்துக்கு முன்பே உனது மனைவி தனது வயிற்றைக் கழுவிப்போட்டு வந்தவள்”
தனது அதிர்ச்சியை முற்றுமுழுதாக வெளிக்காட்டாது நேராக கடிதத்தை மனைவியிடம் கடிதத்தை நீட்டியடி, "ஏன் நீஇதனை முதலிரவில் எனக்கு மறைத்தாய்?"எனக் கேட்டான்.
“இதுவா. நீங்கள் இதுபற்றி என்னிடம் கேட்கவில்லையே” எனச் சாதாரணமாக சொன்னபடி அவள் பாத்திரம் கழுவுவதில் மும்முரமானாள்.
“எத்தனை நாள் சொன்னனான். இந்த சோப் தண்ணி வேண்டி வராதையுங்கோ எண்டு கை எல்லாம் ஒரே எரிவு”
மொட்டைக் கடிதம் வந்ததை விட இந்தப் பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
“நீ தான் யாரையும் விரும்பவே இல்லை எனச் சொன்னாயே?”
"ஆமாம் நான் யாரையும் விரும்பவில்லை” "அப்போ எப்பிடிகற்பமானாய்?"
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

ன் பரீட்சயப்பட்டதாலோ என்னவோ. நாணயம் என இரண்டு உப்கதைகள் தேவைப்படுகிறது)
“ஓ. அதுவா. ரியூசனுக்கு வந்த ஒரு வாத்தியார். அன்று வீட்டில் வேறு யாரும் இருக்கவில்லை. அது நடந்து விட்டது. அம்மா அதனை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்கச் சொல்லி விட்டா. நானும் மறந்து உங்களோடை சந்தோஷமாக வாழுறன்”
அதற்குமேல் கணவன் ஏதும் பேசவில்லை. அல்லது அவனால் பேச முடியவில்லை.
4.
660 மனிதர்களுக்கு எப்பொழுதுமே சிலசமயங்களில் விசித்திரமான ஆசைகள் தோன்றுவதுண்டு.
அவ்வாறே என் இளமைக்காலங்கள் இலங்கையில் கழிந்து கொண்டிருந்த பொழுது இந்தியாவில் ஒரு பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்து இந்தியாவிலேயே என்பிற்கால் வாழ்வு அமையவேண்டும் என விருப்பம் இருந்தது.
இந்த நியாயமான அல்லது பைத்தியக்கார யோசனைகளுக்கு ஐயராத்துச் சூழல்களில் எடுக்கப்பட்ட தென்னிந்தியதமிழ்ப்படங்களில்வந்துபோனகதாநாயகிகளும் அவர்களதுதோழிகளும்காரணமாய்இருக்கலாம்
சமாதான ஒப்பந்தங்கள் போல என் இளவயதுக் கற்பனைகளும் கசக்கி எறியப்பட என் தகுதி, படிப்பு என் மூதாதையரின் பரம்பரைகள் அனைத்தையும் கருத்திற் கொண்டு எனக்கு ஒரு வாழ்வு அமைத்து தரப்பட்டது.
சின்ன சின்ன கோபங்கள். சின்ன சின்ன அழுகைகள். மனைவியின் கோபத்தை சாப்பாட்டில் காட்டுதல் என சின்ன சின்ன பகிஷ்கரிப்புகள் என்பதைத்
71

Page 74
தாண்டி அடுத்த இருபது ஆண்டுகள் வாழ்க்கையும் இதே சின்ன சின்ன விடயங்களுடன் இனிதேதான் சென்றது. எனக்கு பென்ஷன் வயதுக்கு இன்னும் பத்து ஆண்டுகள் இருந்த பொழுது அந்த தென்னிந்தியக் கனவுகள் மீண்டும் வரத் தொடங்கின.
தற்பொழுதைய கனவு தென்னிந்தியப்பெண்களாய் இருக்கவில்லை - மாறாக காணி நிலத்துடன் ஒரு வீடு. அங்கே என் அந்திமக் கால வாழ்வு. கோயில்கள். குளங்கள். எக்ஸ்செற்றா. எக்ஸ்செற்றா.
பிள்ளைகள் இரண்டு பேரும் திருமணமாகி வெளிநாட்டுக்குச் சென்ற பின்பு இலங்கையில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது என்ற பயங்கர அமைதியில் யாழ்ப்பாண வாழ்வு எனக்குப் பெரிதாக சுவைக்கவில்லை.
காலையிலும் மாலையிலும் குறைந்தது இருதடவை யாராவது இரண்டு தென்னிலங்கை வியாபாரிகள் எங்கள் வீட்டின் வாசலில் ஏதோ ஒரு பொருளை விற்பதற்காக வந்து நிற்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி அவர்களை அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். கொழும்புக் கோட்டையின் அழகுக்கு “லாபாய். லாபாய்." என்ற குரலும் சேர்த்தே மெருகூட்டுகிறது என்று சொல்லிவந்த எனக்கு யாழ்ப்பாண வீதிகளிலும், நல்லூர் வெளிவீதிகளிலும் இதனைக் கேட்ட பொழுது ஏனோ ஜீரணிக்க கஷ்டமாய் இருந்தது.
இந்திய இடம் பெயர்வு பற்றி ஆலோசனை செய்ய இவையுமே காரணங்களாய் இருந்தன.
1.18 பில்லியன் சனத்தொகை கொண்ட இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இந்தக் கிழமும் மனுஷியும் கரை ஒதுங்க எனக்கு இந்தியாவில் யாரோ ஒருவரின் உதவி தேவைப்பட்டது. எனக்குத் தெரிந்தவர்கள், இடம்பெயர்ந்து அங்கு நிரந்தரமாக வாழ்பவர்கள்.மண்டபத்தில் குடியிருப்பவர்கள் என சுமார் நூறுபேரைத் தெரிந்திருந்தாலும்மாணிக்கவாசகர்தான் என் கண்முன் நின்றார்.
மாணிக்கவாசகர் பழுத்த சைவர். நல்லூர் தேர்த்திருவிழா ஒன்றில் தான் அவர் அறிமுகமானார். பின்பு அவரின் பழக்கம் எனக்கு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியிலும் தொடர்ந்தது. சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாது சைவப் பணி செய்பவர் என அனேகமானோரிடம் அறிமுகமாகி இருந்தார்.
அவரையே தொலைபேசியில் தொடர்புகொண்டேன். “வணக்கம். சொல்லுங்கள்” என ஆரம்பித்து “எனது இளைய மகனுக்கும் விசா கிடைத்து விட்டது. அவர் மனைவி பிள்ளைகளுடன் மார்கழியில் போக
72

உள்ளார்.அவ்வாறாயின் அவரின் வீட்டையே வாங்குவது பற்றி பரிசீலிக்கலாம். அது நல்ல முடிவு என உங்கள் பாரியாருக்கும் தோன்றினால் நீங்கள் அவருடனேயே பேசிக்கொள்ளலாம்” என்பதுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்தது.
வளர்ந்த மகனை அவர் என விளித்துப் பேசிய மாணிக்கவாசகத்தாரின் பண்பு எனக்குப்பிடித்திருந்தது. பின்பு அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அவரின் மகன் சத்தியசீலனுடனேயே நடைபெற்றது. சத்தியசீலன் பேசுவது மிகவும் இனிமையாக இருக்கும். அங்கிள் என்றும், 'மாமா என்றும், சிலவேளை 'அண்ணா என்றும் தன்னை என்னுடன் அவனாக இணைத்துக் கொண்ட பொழுது வீட்டின் விலையில் பெரிதாக பேரம் பேச முடியவில்லை. தொலைபேசியில் இந்தியவிலையில் இருபத்தி ஐந்து இலட்சத்துக்கு ஒத்துக் கொண்டு முதலில் நான் தனியே சென்னை அண்ணா விமானநிலையத்தில் போய் இறங்கினேன்.
சத்தியசீலன் எனக்காக விமான நிலையத்தில் காத்திருந்தான்.
கார் சென்னை வீதிகளில் மிதந்து சென்றது - சென்னை அழகாய்த்தான் இருந்தது.
ரொம்பவும் மாறியிருந்தது. கூவப்பகுதியில் குடியிருந்த மக்களை காணவில்லை. அதிக இடங்களில் கலைஞரும் மகனும் கைகாட்டிக்கொண்டு நின்றார்கள்.
சத்தியசீலனின் வீடு சின்ன அளவான வீடு வெளி முற்றத்தில் துளசி, ரோஜா, நந்தியாவட்டைப் பூக்கள். பெரிய ஒரு மாமரம். செவ்விளணி மரங்கள் வேறு.
வாசலில் சத்தியசாயிபாபா கைகூப்பி வரவேற்றுக் கொண்டு நின்றார்.
இந்த கிழவனுக்கும் கிழவிக்கும் ஏன் பெரிய மாடமாளிகை.
அக்கம் பக்கம் மலையாள, தெலுங்கு வீடுகள். ஆனால் அனைவரும் நன்கு தமிழ்பேசுவார்களாம்.
சத்தியசீலனின் மனைவி நன்கு சமைத்து உணவு பரிமாறினாள்.
வெய்யிலின் வெட்காரம் குறையத் தொடங்கிய பொழுதுமனைவியுடன் மாணிக்கவாசகர் வந்திருந்தார். கொஞ்சம் இளைத்திருந்தார். ஆனால் அவரின் குரலில் கம்பீரம் குறையவில்லை.
வெளியே நின்ற மாமரத்தில் கீழ் இரண்டு கதிரைகளைப் போட்டுக் கொண்டு இருந்து பேசிக்கொண்டு இருந்தோம்
எனக்கு யாழ்ப்பாண வீட்டின் முற்றமும் மாமரமும் தான் நினைவுக்கு வந்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 75
மனைவிக்கு, வீட்டை விற்று விட்டு இந்தியாவுக்கு போவதை விட எங்கள் முற்றத்து மாமரத்தை விட்டுச் செல்வதுதான் பெரிய கவலையாக இருந்தது. அடிக்கடி சொல்லுவாள்,"நோர்வேயிலும் டென்மார்க்கிலும் எங்கை அதுகள் மாமரத்தைக் கண்டதுகள். லீவுக்கு வரக்கை அந்த மூன்றையும் மாறிமாறிஉந்த ஊஞ்சலிலை வைச்சு ஆட்டவேணும்" மூத்தவளின் இரண்டுபிள்ளையையும் இளையவளின் சின்னவனையும் பற்றித்தான் எப்பவுமே கதை. நான் போய் இங்கும் பெரிய மாமரம் நிற்குது என்னும் பொழுது நிச்சயமாக அவள் சந்தோஷப்படுவாள். ரொம்ப நேரம் கோயில்கள், வெளிநாடுகளில் மதமாற்றங்கள் பற்றி நாங்கள் இருவரும் கதைத்துக் கொண்டே இருந்தோம். இலங்கைப் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடினோம். கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி இருவருமே சாடினோம். பக்தி என்பது வியாபாரமாக் கப்பட்டு விட்டது என்பதில் இருவருக்குமே மாற்றுக் கருத்துஇருக்கவில்லை.
நேரம் போவது தெரியாமல் போய்க் கொண்டு இருந்தது.
திடீரென பள்ளிவாசல் ஒன்றில் இருந்து “அல்லாகு. அக்பர்” என்று ஒலிபெருக்கியின் அவர்களது வழிபாட்டுக்கான அழைப்புக் குரல் ஒலித்தது. “இது எனக்குரிய இடம் இல்லையோ”என மனதுள் ஒரு தயக்கம்.
“மசூதி ஏதாவது பக்கத்தில் உண்டா”என கேட்க. வழமையான புன்சிரிப்புடன்,"பயப்பிடாதீர்கள். மாலையில் இங்கு பாங்கும் கேட்கும். காலையில் சுப்பிரபாதமும் கேட்கும்” என்றார் மாணிக்கவாசகர்.
மனது கொஞ்சம் சமாதானப்பட்டது. “பாங்கு” என்பது என்றோ நான் கேட்டு மறந்த சொல்லு. மாணிக்கவாசகர் இன்னமும் மறக்காமல் இருக்கின்றார் என அவரை என் மனம் வியந்தது.
மீண்டும் திருக்கேதீஸ்வரம், திருவானைக்கா, திருக்கோணேஸ்வரத்துள், திருக்கழுங்குன்றத்துள் சென்றோம். இரவு பத்துமணிவரை பேசிக் கொண்டே இருந்தோம். இடைக்கிடை சத்தியசீலனும் எங்கள் சம்பாசணையில் கலந்து கொண்டான்.
“பெருமைக்காக சொல்லவில்லை. அவருக்குச் சத்தியசீலன் என பெயர் வைத்தாற்போல அவர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்" அதனை பெருமையாகவே சொல்லிக் கொண்டார். மேலும், “அவராக கட்டி வாழ்ந்த இந்த வீட்டின் சத்தியத்தையும் பெருமையையும் நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் முப்பது இலட்சம் பெறுமதியான இந்த வீட்டை உங்களுக்கு இருபத்தைந்து இலட்சத்துக்கு தந்தவர்"
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

மனத்தினுள் மாணிக்கவாசகர் இன்னும் ஒருபடி உயர்ந்து சென்றார்.
நான் எனது நன்றியைத் தெரிவிக்க வழிதெரியாமல் சங்கடத்தில் நெளிந்தேன்.
米米米米米 அடுத்தநாள் வெள்ளிக்கிழமை, மிகச் சுருக்கமாக இந்திய முத்திரையிடப்பட்ட தாளில் வீடு கைமாறியது.
நானும் சத்தியசீலனும் வாங்குப வராயும் விற்பவராயும் கைஎழுத்து இட்டுக்கொண்டோம். சாட்சிக் கை எழுத்தாக சத்தியசீலனின் சத்தியபாபா பஜனைக் குழுவில் இருந்த ஒருவர் “ஓம் சாய்ராம்" எனபாபாவை வேண்டியபடியே கையெழுத்து இட்டுக் கொண்டார். இன்னொருவர் சபரிமலைக்குச் செல்ல மாலை அணிந்திருந்தார். “சரணம் ஐயப்பா” என நாடியிலும் நெஞ்சிலும் தனது வலக்கரத்தால் தொட்டுக் கொண்டு கை எழுத்திட்டார்.
என் மனம் புட்டபத்தியையும் சபரிமலையையும் ஒன்றாக வணங்கியது.
அன்று மாணிக்கவாசகர் ஊரில் இருக்கவில்லை. அவர் கனடாவில் இருந்து வந்த ஒரு குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். வரும் பொழுது எனக்கு திருப்பதியில் இருந்து லட்டு வேண்டி வந்திருந்தார்.
அன்று பின்னேரம் அனைவரையும் அழைத்துக் கொண்டு சரவணபவானுக்கு இரவு உணவுக்குச் சென்றேன்-எனதுநன்றியறிதலைத்தெரிவிக்கவும் அடுத்த தடவை வரும் பொழுது சத்தியசீலன் குடும்பம் பயணம் செய்து விடுவார்கள் என்பதாலும் நான் ஏற்பாடு செய்த பிரியாவிடை விருந்துபசாரம் என அதனைச் சொல்லலாம்.
மிக மகிழ்ச்சியாக கழிந்த வாழ்நாட்களில் ஒன்றாக அதனை எண்ணிக் கொண்டேன்.
அன்று நடுநிசியே எயர்லங்காவில் என் இலங்கைப் Lш60Th.
அனைவருமே விமானநிலையத் துக்கு வந்து என்னை வழியனுப்பிவைத்தார்கள்.
சத்தியசீலனையும்மாணிக்கவாசகரையும் இறுகவே தழுவிவிடைபெற்றுக்கொண்டேன்.
என் அந்திமகால வாழ்வுக்கு கடவுள் நல்ல வழியைக் காட்டி விட்டார்கள் என எண்ணிக் கொண்டு இருந்த பொழுது விமானம் மெதுவாக ஒடு பாதையில் ஒடத் தொடங்கி மேல் எழுந்தது.
米米米米米 இன்று வெள்ளிக்கிழமை. அதிகாலை விமானத்தில் நானும் மனைவியும் சென்னைக்கு வந்திருந்தோம்.
73

Page 76
குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகள் இருபகுதியினருமே ஒரேயொரு கேள்வியைத் தான் கேட்டார்கள்.
“அடிக்கடி வருகிறீர்கள். என்ன வியாபாரமா?” “இல்லை"எனத் தலையாட்டமுதல், “எங்களையும் கவனியுங்கப்பா” என்ற தொனியில் ஒரு மிரட்டல் இருந்தது எனக்கு ஆரோக்கியமாகப்படவில்லை.
“தமிழ் மட்டும்தான் இங்கு செம்மொழி ஆகியிருக்கிறது' மனம் சொல்லிக் கொண்டது. இனி சென்னைதான் எல்லாமே எமக்கு என்றபடியால் தேவையான எல்லாவற்றையும் கையுடன் எடுத்து வந்திருந்தோம். அதனினுள் எந்த வியாபாரச் சாமான்களும் இல்லாதபடியால், “சரி. சரி. போங்கள்” என்று விட்டு இலண்டனில் இருந்து வந்திருக்கும் ஒரு குடும்பத்தை நோக்கிப் போனார்கள்.
மூன்று வாகனச் சாரதிகளிடம் பேரம் பேசிக் களைத்து நாலாவது வந்தவனின் வாகனத்தில் ஏறினோம்.
“பார்த்தியா. சூளைமேட்டுக் காரன்களுள்ளை ஒற்றுமையில்லை எண்டு சிலோன்காரன்களுக்கு காட்டிட்டாய். பின்னேரம் உன்னை பார்த்துக் கொள்ளுறம் மச்சி” என்ற அவர்களின் சண்டைக்கான இழுப்பை பெரிது பண்ணாமல் எமது வாகனம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தது.
அடுத்தமாத முற்பகுதியில் மற்றைய சாமான்கள் கடற்கப்பலில் வந்து விடும். நாங்கள் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்த பின்பு மூத்தவளும் இளையவளும் நோர்வேயில் இருந்தும் டென்மார்க்கில் இருந்தும் தங்கள் குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க வருவதாக சொல்லியிருந்தார்கள்.
மனைவி காரின் கண்ணாடியில் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டு சென்னையை ரசித்துக் கொண்டு வந்தாள்.
வடபழனியை காரில் இருந்தபடியே சுற்றிவந்தாள். கோடம்பாக்க மேம்பாலத்தில் கார் ஏறி இறங்கும் பொழுது குழந்தை போல குதூகலித்தாள்.
“பொறு. பொறு. எல்லாம் ஆறுதலாக பார்க்கலாம். பிள்ளைகள் வர எல்லா கோயில்களுக்கும்போய்வரலாம்” எங்கள் சந்துக்குள் கார் நுழைந்த பொழுது அங்கு பெரிய பிரச்சினை நடந்து கொண்டு இருப்பது போலத் தெரிந்தது.
போன மாதம் வந்த போது இருந்த தெருபோல அது தெரியவில்லை.
74

ஒரே புழுதியாக இருந்தது. எங்கள் வீட்டுக்கு முன்னால் கார் சென்று நின்ற பொழுது முற்றத்தில் நின்ற மாமரமும் இரண்டு செவ்விளணியும் தறித்து விழுத்தப்பட்டிருந்தது.
எனக்குதிக் என்று இருந்தது. பக்கத்து வீட்டு மலையாள வீட்டின் அரைவாசிக்கு மேல் இடிக்கப்பட்டிருந்தது.
தெலுங்கு வீட்டின் கூரையை கழற்றிக் கொண்டு நின்றார்கள்.
பரபரப்புடன் என்ன என்று விசாரித்தேன். “கோட்டின் தீர்ப்பு மசூதிக்கு சார்பாக தீர்ந்துவிட்டதாம்’யாரோ சொன்னார்கள். "அயோத்தி தீர்ப்பு இருபக்கத்துக்கும் சார்பாக தானே தீர்ந்தது’ நான் சொல்லி முடிக்க முதல்.
“ஒரு நூவு சிங்களன்னுட்டாவு. இதி மசூதி ஜகா. தீனி தொங்கதனங்கா பத்திராலு சூமெச்சி. இகஇகட இலஇலு கட்டி உண்டாரு. நீ ஊருக்காரு நின்னி ஏமாறிச்சினாடு.நன்னிஏமாறிச்சினாடு'தெலுங்குகாரி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு இருந்தாள்.
(என்னையா சிறிலங்காகாரன் நீ. . இந்த நிலம் மசூதியின்ரை.கள்ளப்பத்திரம் காட்டிகட்டியிருக்கிறான். உன்ரை ஊர்க்காரன் உனக்கு நாமம் போட்டுட்டான். எங்களுக்கும் தான்)
“அவ்வட அடிக்கிறா எண்டு இவ்விட இடம் கொடுத்தா இவ்விட அநியாயம் செஞ்சி ஒடிட்டான்” -
இது மலையாளக்காரியின் புருஷன்.
எனக்குகொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விளங்கத் தொடங்கியது.
மனைவிக்காரி, “என்னப்பா. என்னப்பா' என குடையத் தொடங்கினாள்.
“கொஞ்சம் பொறுக்குறியா?” என அவளின் மீது எனது எரிச்சலை கொட்டியபடி காரை மாணிக்கவாசகர் வீட்டைதிருப்பினோம்.
மாணிக்கவாசகர் முன்விறாந்தையில் இருந்தார். அவரின் முகம் கொஞ்சம் கறுத்திருந்தது. “உங்கடை மகன் என்ன செய்தவர் எண்டு பார்த்துக் கொண்டுதானே இருந்தனீங்கள்”
தந்தை, மகன் இருவர் மீதான என் குற்றச்சாட்டு இது.
“அவசரப்படாதையுங்கோ. தம்பி வீட்டைத் தானே விற்றவர். மசூதியினரை காணியை உங்களுக்கு விற்கேல்லைத் தானே'திருமதி மாணிக்கவாசகர் வந்து சொல்லமாணிக்கவாசகர் மெளனமாக அமர்ந்திருந்தார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 77
جمعی-سمی فهمیموفس2)l மொழிந்ததாய்ப்புகன்றனன்கவிப்பெருமான்-அவன்
சான்றோடுகூறுதல்சாலுமன்றோ
அகரமுதலஎழுத்தனைத்தும்-அன்று
ப்பினில்கற்றறிந்தோம்-தமிழ் நிகரமொழியொன்றுஇல்லையெனும்-மன
கள்ஊன்றிடமொழிபயின்றோம்
கம்பனைஒளவையைவள்ளுவனை-நாம் காணாதபோதிலும்பாரதியைத்-தமிழ் வெம்பசிபோக்கிடக்கற்றறிந்தோம்-அவர் வழங்கியதமிழினில்ஆழ்ந்திருந்தோம்
அருகியேபோயினர்புதுப்புதிதாய்-நல்ல ஆக்க இலக்கியம்படைப்பதற்கு-ஒரு ஆளுமேதேறியாநிலையுணர்வோம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

கடல்போல்தமிழினில்சொல்லிருக்கத்-தேடிக் காணாதுவெவ்வேறு மொழிகளிலே - 6lਸਜ60 கடன்பெறுகீழ்நிலை வந்ததையோ-இந்தக்
கொச்சைமொழிபேசக்கூசும்மொழி-கவி கோப்பவர்காதைபடைப்பவர்கள்-இன்று பச்சையாய்த்தத்தம்படைப்புக்களில்-சேரப் படுகின்றார்எடுத்தாளுகின்றார்.
பேச்சிலுந்தனித்தமிழ்இல்லையென்று-கலப் படமாகப்போனதுபள்ளிகளில்-மொழித் தேர்ச்சிக்கும்தமிழில்லைமுன்னரைப்போல்-இன்று
மிழ்கற்போர்அருகிடும்நி ர்வோம்
தமிழிணைஅறிந்தவர்இலாதொழியும்-பெரும் சோகத்தைஎண்ணிடில்துயரமன்றோ.
சாகாதுதமிழ்வாழவேண்டுமெனில்-நம்
75

Page 78
உயிர்ப்பிற்க கல்லறைநோக்
லங்கை, தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கும்போதுநம்நாட்டில் ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு அவசியம்தானா? என்ற கேள்வி கொஞ்சம் சினத்துடன் எழுப்பப்படுகின்றன. எழுத்தாளர் மாநாடு என்றால் வாணவேடிக்கைகளுடன் நடனமும் கூத்தும் பிரமாதமான விருந்துபசாரம் இடம்பெறும் சமாச்சாரம் என்று இந்த எதிர்ப்பாளர்கள் நினைத்துவிட்டர்களோ என்று எண்ணந்தோன்றுகிறது. சும்மா வாய்ச்சவடாலும் கேலியும் கூத்தும்தான் வாணவேடிக்கைகாக நிகழப்போகின்றன என்ற எண்ணக்கரு எதிர்ப்பாளர் களிடம் தோன்றுவதிலும் பிழையில்லை. ஏனென்றால் அப்படி சில மாநாடுகள் சக்கைப்போடு போட்டன. அவற்றின் எதிர்வினைகளாக இவை இருக்கலாம். நாட்டிற்குள் படையெடுத்து நடனமாடும் தொலைக்காட்சி, அலைவரிசைகளும் போதுமடா சாமி என்று தலையை பிய்த்துக் கொள்கின்ற அளவுக்கு களியாட்டக் கூத்துக் களையும், திகிலுடன் நடுங்கச் செய்யும் வன்முறைகாட்சிகளையுமே அலையலையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்மக்களின் இரட்சகர்களாக முகமூடியணிந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் தமிழ் செய்தி ஊடகங்களும் சளைத்தவைகளாக இல்லை. இன்னல் படும் மக்களின் கண்ணிருக்கு கால்பக்கம் என்றால் துகிலுரி நடனமாடும் நடிகைகளின் பென்னாம் பெரிய படங்களுக்கு பல பக்கங்கள் இவை அனைத்தும் தமிழ் மக்கள் இன்னலுற்றிருக்கும் இவ்வேளையில் தான் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
“ஐயா" எதிர்ப்புக் கனவான்களே! உங்கள் கண்டனக் கூச்சல்களையும், எரிச்சலையும் இவற்றின் மீது கொஞ்சம் காட்டக்கூடாதா? மனித சமூகத்தின் தோன்றுதல் யுகத்திலிருந்தே இன்னல்களும், அழிவுகளும், போராட்டங்களும், தொடர்கதைகள் தான். ஒரு திசையில் மக்கள் பசியும், பட்டினியும், நோயும் நொடியுமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற போது இன்னொரு திசையில் எதிர்மறையான வாழ்வியலைக் காண்கிறோம். எனினும் மனித சமூகம்போராடிப்போராடி
76
 

ானதுடிப்பும்
- d. 596 -
வெல்கிறது. இந்த நீண்ட கால போராட்டத்தில் அழிவுகளும் இன்னல்களும் தவிர்க்க முடியாத அம்சங்களாகின்றன. போராட்டமயமான வாழ்வியலின் இலக்கண மரபு இதுதான். இயங்கியல் எதார்த்தத்தின் விதி இது.
இலங்கையில் சிறுபான்மை இனத்தவர் தமிழ் மக்கள். வளமான மொழியும். உன்னதமான தனித்துவ கலாசாரமும் தொன்மையான இலக்கணமும் இலக்கியமும் தமிழ்மக்களுக்கு உரியவை. அவற்றைப் பாதுகாப்பதும் பேணி வளர்ப்பதும் அவர் வாழ்வியலை பாதுகாத்துக் கொள்வதற்கான ஜீவிதபோராட்டமானது உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் சிறுபான்மை இனங்கள் தமது நிலைநிறுத்தல்களுக்காக இவ்வாறு போராடியே உயிர்ப்புடன் திகழ்கின்றன. அழிவு, இன்னல், துன்பம் என்ற சுனாமிகளின் கொடூர தாக்குதல் களினூடே போராடி போராடியே உயிர்த்தெழுகின்றன. முழுமையான அழிவிலிருந்து மீண்டும் துளிர்விட்டு பீனிக்ஸ் பறவைகளாக மீட்சி பெறுகின்றன.
முழுமையானதோர் அழிவின் பின்னரும் சாம்பல் குவியலிலிருந்து இந்த உயிர்த்தெழுதல் எவ்வாறு வளர்ச்சி காண்கின்றது? இனமரபை காத்தல், கலாசாரத்தைக் காத்தல், மொழியைக் காத்தல் எனும் உளத்தீயின் வேட்கைகளாகும் இலக்கியம் அதன் ஆயுதமாகிறது. ஈழத்தமிழர் இதற்கு விதிவிலக்காக முடியுமா? தமிழர் மத்தியில் உருவான 30 வருடகால பயங்கரவாத ஆயுதப் போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது என்று சொல்லப்படுகின்றது. நகைப்பிற்கிடமான இதே வார்த்தை பிரயோகத்தை நாமும் சொல்கிறோம். இது நமது இயலாமையின் வெளிப்பாடு.
வரலாற்றுக்கண்ணோட்டத்தின் பிறழ்வான அம்சம் இது. ஈழத்தமிழர்களுக்கென ஒரு நீண்ட வரலாறு உண்டு. தமது மீட்சிக்கும் நிலைநிறுத்தல்களுக்குமான வரலாற்று நிகழ்வுகள் அதன் பதிவுகளாகும். ஆயுதம் தூக்கியவர்களின் முழுமையான அழிவும், அப்பின்னணியில் வாழ்ந்த மக்களின் அவலங்களும் இன்றைய பதிவுகளாகும். தொடர் கதையாகிக் கொண்டிருக்கும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 79
ஓர் இனத்தின் இன்றைய நிலை இது. போராட்ட வரலாறுமுப்பது வருடங்கள் அல்ல. பல நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டது. வரலாற்றை ஒரு தொடர் சங்கிலியான ஆய்வுடன் நோக்காதுஎமதுகோட்பாட்டின் பலஹினம் போராட்டம் பல வடிவம் எடுத்துள்ளது. இந்த நீண்ட கால உயிர்த்தெழல் முயற்சியில் 30 வருடகால அவதாரமே ஆயுதப்போராட்டம். அது அழிந்தொழிந்தது. ஆனால் உயிர்த்தெழுதல் அழியாதது. வாழ்வியலின் வரலாற்றுச் சக்கரத்தின் சுழற்சி இவ்வாறே அமைகின்றது,
அழிவுகளும் இன்னல்களும் உயிர்த்தெழல் முயற்சிகளும் முடிவுறாத மெகா சீரியல்களே. இயங்கியல் எதார்த்தத்தின் சக்கரசுழற்சி இதுவே.
ஒர் இனத்தின் உயிர்த்தெழல் முயற்சியின் ஆணிவேராக இலக்கியமே அமைகிறது. ஈழத்தின் நவீன இலக்கியத்திற்கும் அந்த சிறப்புள்ளது.இங்கே ஜனரஞ்சக இலக்கியம் ஆழமாக வேரோடவில்லை. இலக்கியம் என்பது மக்களின் யதார்த்தமான வாழ்வியலின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்று அதன் தளிர்ப்பருவமே போர்க்குரல் எழுப்பி கொண்டு தான் துளிர்த்தது.
90 களில் யாழ். நூலகம் திகுதிகுவென தீப்பற்றியெரிந்து சாம்பல் குவியலானது ஒரு காலகட்டத்தின் நிலை. தொலைந்தது நீங்களும் உங்கள் இலக்கியமும் இப்படிச் சில இனவாத சிங்கள ஏடுகள் அன்று கைகொட்டிநையாண்டி செய்தன.
ஆனால் இன்று இத்தனை அவலங்களுக்கும் கண்ணிருக்கும் மத்தியில் யாழ். நூலகம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பெரும்பான்மை இனத்தின் ஒரு பகுதி உளமார தனது மகிழ்ச்சியை தெரிவிக்கின்றது. இதுவே எழுது கோலுக்குள்ள வல்லமை எழுத்தாளனுக்குள்ள ஆற்றல். ஈழ எழுத்தாளனின் எழுத்து வடிவ போராட்டத்தின் மூர்க்கமே இந்த வெற்றிக்கு ஆணிவேர். நமது இலக்கியம் பல தடைகளை மெல்ல மெல்ல வேனும் கடந்து வளர்ச்சி கண்டு வருகிறது. குறைபாடுகளும் போலித்தன்மையும் பலஹினங்களும் இந்த இலக்கிய வயற்பரப்பில் “களைகளாக வேரூன்றி கிடக்கின்றன என்ற போதும் பயிரின் வளர்ச்சி கூரிய கூர்ப்புடன் திகழ்கிறது என்பதே உண்மை அது மழுங்கிவிடக்கூடாது.
சிறுகதை, கவிதை, நாவல் என படைப்புத் தொழிலின் ஈடுபட்டிருக்கும் நம் எழுத்து பிரமாக்கள் இருவேறு கருத்து முரண்பாடான கோட்பாடுகளை உள்வாங்கியவர்களாக எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இத்தகைய நிலை இயல்பானது. இவர்களிடையேயான வெளிப்படையான மோதல் பல
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றது. இன்று இந்த முரண்பாடு நீறுபூத்த நெருப்பாக உயிர்ப்புட்னே இருக்கின்றது . எனினும் தேடல் அதன் உள்ளடக்கம். 'எதுக்கப்பா சண்டை சச்சரவு சைலன்சாக இருங்கோ சைலன்ஸ் இஸ் கோல்ட்' என்ற ஞானோபதேசமும் அவ்வவ் காலகட்டங்களில் தலைதூக்கியது. எனினும் கருத்து மோதல்கள் ஏதோ ஒரு வடிவில் நீறுபூத்த நெருப்பாகவே உயிர்ப்புடன் கனன்றது.
இயக்கவியலின் நியதிப்படி சைலன்சாக இருப்பது. சடலம் என்பதன் உட்கருத்தாகும். இயங்குதல் என்பது உயிர்ப்பாகும்.
அவலங்கள் நிறைந்த வேளையில் சைலன்சாக இருங்கள் என்பது சடலமாகவிருங்கள் என்பதுதான். இந்த நிலை புதிய முயற்சிகளுக்கு வழிகர்ட்டாது. நமது இலக்கியத்தின் அடிநாதம் இனி என்னவென்பதை ஏதோ ஒரு வகையில் இயங்குவுதன் மூலமே எட்டக் கூடியதாகவிருக்கும். மாநாடுகள் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றோம், உயிர்ப்புடன் இருக்கிறோம் என்பதன் வெளிப்பாடன்றி வேறென்ன?
“என்னப்பா சாதிக்கப் போகிறீர்கள்?’ என்ற கிண்டல் மொழி எழலாம். இதுவும் இயல்பானதுதான். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு விதத்தில் இயங்குதலை தரித்துவிடாமல் தொடர்ந்தமை நமது இலக்கியத்தின் சில வெளிச்சப்பகுதிகளை, மக்கள் இலக்கியத்திற்குரிய அம்சங்களை பிரகாசிக்கச் செய்வதை அவதானிக்கலாம். மறுமலர்ச்சிக் காலம் முதல் முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம், தேசியஇலக்கியம் இக்காலகட்டங்களில் இடம்பெற்ற எழுத்து மோதல்கள், உரையாடல் சச்சரவுகள், கருத்துக் களங்கள், மாநாடுகள் என்பனவற்றை தேடி சல்லடை போட்டு சலித்துப்பார்த்தால் கிடைக்கும் பெறுபேறுகளை அவதானிக்கலாம். இயங்குதல் எதார்த்தம் எதையாவது வெளிக்கொணரும்.
இங்கும் ஒரு சர்வதேச எழுத்தாளர் மாநாடு இடம் பெற போகிறது. பல கோட்பாடுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. இவை வாத பிரதி வாதங்களுக் குரியவை. அவற்றை செயற்படுத்துவதற்கு முன்னதாக அவை குறித்து பேசுவதற்கான வாயிற்கதவுகளை மாநாடு திறந்து வைத்திருக்கின்றது.
அவலங்கள் நிறைந்த காலத்தில் இயங்குதல் பிழையில்லை. சைலன்சாக இருப்பதே பிழை Silence is not Gold, it is Corpse.
இயங்குதல் செய்வோம் புதிய விதிகள் காண்போம் சரியானவை நிலைத்து வளரும், பிழையானவை மரணிக்கும் இயங்குதல் உயிர்ப்புக்கான துடிப்பு. சைல்ன்ஸ் கல்லறை நோக்கிய யாத்திரையாகும்.
77

Page 80
ԴշԴ: பேராசிரியர் பதவி வகித்த நாட்களில் 6
நிதவொரு குப்பையையும் ஆய்வு என ஏற்பதற்கு
என்னிடமிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாள்வதே போதுமானதாயிருந்தது.”
கேலிக்குரியதும் கேவலத்துக்குரியதும் அவ்வப்போது நடப்பதுமான மேற்குறிப்பிடப்பட்ட பல்கலைக் கழகப் பின்னணியைப் பகிரங்கச் சொற்பொழிவில் தைரியமாகச் சொல்ல அண்மையில் மறைந்த காஸி அல் குஸைபியைப் போல் வேறு ஒருவரை நாம் காணமுடியாது. -
பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த போது மட்டுமல்ல, பிரிட்டனுக்கான சவூதி அரேபியத் தூதுவராகப் பணியாற்றிய போதும் அந்தப் பதவியைத் தாண்டி அவர் இப்படித்தான் நடந்துகொண்டார். அயாத் அக்ராஸ் என்ற பலஸ்தீனியத் தற்கொலைதாரி இளைஞன் இஸ்ரேலிய பல்பொருளங்காடியில் தன்னை வெடிக்க வைத்த போது “நீ ஓர் உயிர்த்தியாகி” என்று அவனுக்கு இரங்கல் கவிதை எழுதினார் அவர். அந்தக் கவிதை பிரிட்டனின் சீற்றத்தைக் கிளறியது. முழு மத்திய கிழக்கு அரசியல் அரங்கிலும் அரிர்வை ஏற்படுத்தியது. அந்த இளைஞனை 'சுவர்க்கத்தின் மணவாளன்'கிரிமினல்களுக்கு எதிராக எழுந்தவன், புன்னகையுடன் மரணத்தை முத்தமிட்டவன்’ என்றெல்லாம் அக்கவிதையில் போற்றியிருந்தார் குஸைபி. அதேவேளை செப்டம்பர் tஅமெரிக்க வர்த்தக மையத் தாக்குதலை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. வரம்பு மீறிய கொடுமை என்று அதை வர்ணித்தார். அதுதான் குஸைபி.
காஸி அல் குஸைபி சவூதி அரேபியாவின் அல் அஹ்ஸாவில் 1940ல் பிறந்தார். தந்தையார் ஒரு வணிகர். தாயார் மக்காவில் காத்திப் குடும்பத்தைச் சேர்ந்தவர். குஸைபி ஒன்பது மாதக் குழந்தையாக
78
 

-அஷ்ரஃ ப் சிஹா ப்தீன்
இருந்த போது தனது தாயை இழந்தவர். பிறகு பாட்டியின் வளர்ப்பில் விடப்பட்டார். அவரது முதல் ஐந்து வருடங்கள் ஹஜீஃபுஃப் நகரில் கழிந்தது. அவரது கல்வி நலன் கருதி பஹ்ரெய்னுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து 1961ல் கெய்ரோ சென்று சட்டக் கல்வி பயின்றார். பின்னர் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்திலும் சர்வதேச உறவுகளிலும் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றபின் லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப்பட்டம்பெற்றார்.
"இளம்பராயத்திலிருந்து அல் குஸைபியிடம் ஒரு கனவு இருந்தது. உலகத்தின் கண்ணீர் துடைப்பதும் அதைப் புன்னகைகளால் நிரப்புவதுமே அது. அதற்காகத்தான் அவர் இயங்கினார். இதற்காக நான்கு படிகளை அவர் வைத்திருந்தார். திட்டமிடல், ஏற்பாடு செய்தல், செயற்படுதல், அதைத் தொடர்தல் ஆகியனவே அந்த நான்காகும். இதற்காக அவர் ஒரு திறவுச் சொல்லை வைத்திருந்தார். அந்தச் சொல் - ஹோம்வேர்க்' எந்த ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டாலும் அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதிலும் அது குறித்து விசாலமாகத் தெரிந்து கொள்வதிலும் அந்த வீட்டு வேலை - ஹோம் வேர்க் அவருக்கு உதவிற்று” என்கிறார் முகம்மத் அல் அலி ஜிப்ரி "
1984 முதல் 1992 வரை பஹ்ரெய்னிலும் 1992லிருந்து 2002 வரையில் பிரிட்டனிலும் சவூதி அரேபியாவின் தூதுவராகப் பணிசெய்த குஸைபி மரணிக்கும் வரை தொழிற்றுறை அமைச்சராகக் கடமை செய்தார். சவூதி இளைஞர்கள் இலகுவானதும் அதிக பணம் கிடைக்கக் கூடியதுமான தொழில்களையே நாடுவதாகச் சொன்ன குஸைபி, 2008ம் ஆண்டு ஜித்தாவில் ஒரு பாஸ்ட் ஃபூட் கடையில் மூன்று
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 81
மணிநேரம் வேலை செய்து காட்டினார். பொதுவாக சவூதியில் இவ்வாறான தொழில்களில் வெளிநாட்டவரே ஈடுபட்டு வந்திருந்தனர். அவரது இவ்வாறான நடவடிக்கைகளில் தடாலடிச் செயற்பாடோ அரசியல் ஸ்டன்டோ இருப்பதில்லை என்பதுதான் சிறப்பு
இறுக்கம் கொண்ட அரச ஆட்சியில் உள்ள சவூதி மக்களது பிரச்சினைகள் எண்ணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசும் தன்மை அவரிடம் இருந்தது. இதனால் பரந்த அளவில் சிந்திப்பவர்களாலும் படித்தவர்களாலும்மிகவும்விரும்பப்பட்டமனிதராகஇருந்தார். அமைச்சராக, அரச நிறுவனங்களின் தலைவராக, இராஜதந்திரியாக, பேராசிரியராக என்றெல்லாம் அவரது வாழ்நாளில் பெரும் பகுதி நிர்வாகம் செய்வதிலேயே கழிந்து போயிருக்கிறது. இந்த அனுபவங்கள் குறித்து 300 பக்கங்களில் அவர் எழுதிய நூல்தான் “வாழ்நாளெல்லாம் நிர்வாகம்” நிர்வாகத்தை இரண்டு விதமாக அவர் வகைப்படுத்தினார். ஒன்று சார்புப் பார்வையுடன் கூடியது. மற்றையது, எதிர்ப் பார்வை கொண்டது. அவர் எதிர்ப்பார்வை கொண்ட நிர்வாக முறையையே தேர்ந்தெடுத்தார். அதாவது எதிரிகளை உருவாக்குவதன் மூலம் தன்னைக் கூர்மைப் படுத்திச் செயலூக்கத்தில் தள்ளுவது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம்.
முடிவெடுப்பது, நேரக்கட்டுப்பாடு ஆகியவற்றில் அவர் மிகவும் கறாரானவராக இருந்தார். “உங்கள் பிள்ளை வெளியே சென்று விளையாடுவதற்கு அனுமதி கேட்டால் ஆம் அல்லது இல்லை என்று சொல்வதற்கு ஐந்து நிமிடங்கள் கூட நீங்கள் தாமதிக்கக் கூடாது” என்கிறார் குஸைபி அவர் அமைச்சராக இருந்த வேளை அவரைச் சந்திப்பதற்கு வழங்கப்பட்ட நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாக வந்த ராஜரீக மட்ட முக்கியஸ்தர் ஒருவர் அதற்காக மன்னிப்புக் கேட்கும் மனநிலையில் கூட இல்லாததை அவதானித்தார் குஸைபி. கடைசியில் அவரது நோக்கம் நிறைவேறாமலேயே திரும்பிச் செல்ல நேர்ந்தது.
1965ல் ரியாதிலுள்ள கிங் சவூத் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் கற்பிப்பதற்கு குஸைபி அழைக்கப்பட்டார். பொறுப்பேற்பதற்கு முன்னர் பீடாதிபதியிடம் அவர் வைத்த வேண்டுகோள்,பாடத்தை ஒன்று நீங்கள் எடுக்கவேண்டும் அல்லது நான் எடுக்கவேண்டும் என்பதுதான். நிர்வாகம் என்பது ஒரு நாட்டின் நாடி நரம்பு ஆளுக்காள் ஒவ்வொரு கருத்தைத் திணித்து மாணவர்களைத் திணறடித்தால் அது நாட்டுக்குக் கேடு என்பதை உணர்ந்தே அவர் இவ்வாறு சொல்லியிருக்க வேண்டும். கடைசியில் 'நீங்களே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

படிப்பிடியுங்கள் என்று புன்சிரிப்புடன் பீடாதிபதி அனுமதி கொடுத்தார்.
1974 சவூதி ரயில்வேயின் பணியாளராக அவர் நியமிக்கப்பட்டவுடன் அவர் செய்த முதற் காரியம் ஏற்கனவே அப்பதவி வகித்த பணிப்பாளர்களைச் சந்தித்து விபரங்களைப் பெற்றுக் கொண்டதுதான். காரியாலயத்தில் ஏற்கனவே கூட்டங்களில் எடுக்கப்பட்ட அனைத்துத் தீர்மானங்கள், குறிப்புகள் அனைத்தையும் அள்ளிக் கொண்டு வீட்டுக்குச் சென்று ஹோம் வேர்க் செய்தார்.தனிப்பட்டயாருடைய நலன் குறித்தும் கவனம் செலுத்தப்படக்கூடாது என்பதே அவரது பணிப்புரையாக இருந்தது.
தொழிற்றுறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக 1975ல் பதவியேற்றார் அல்குஸைபி. இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை அவர் வகித்துக் கொண்டிருக்கும் போதே 1982ல் பதில் சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப் பட்டமையானது அவரது செயற்றிறமைக்கும் நேர்மைக்கும் நல்ல எடுத்துக்காட்டாகும். 1984ல் வாங்கி விற்கப்பட்ட ஒரு பேனை என்ற அவரது கவிதையொன்று நேரடியாக அரச மட்டத்தின் ஊழல்களை உடைத்தெறிந்தது. அது சவூதியில் ஒரு தீயைக் கிளப்பி விட்டது. அந்த வேளை அவரிடம் மூன்று அமைச்சுக்கள் இருந்தன என்பது குறித்துக் கொள்ளப்பட்ட வேண்டியது.
சவூதி பாதுகாப்புத் துறையிலும் அவர் ஒர் ஆலோசகராக விளங்கினார். 1965ம் ஆண்டில் யெமனில் நிலை கொண்டிருந்த எகிப்தியப் படையினரோடு சுமுகப் பேச்சுவார்த்தை நடத்திய சவூதி அரேபியக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் குஸைபி. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ரியாத், கெய்ரோ, சன்ஆ ஆகிய நகரங்களுக் கிடையில் ஒய்வில்லாமல் ஒடித்திரிந்துள்ளார். எகிப்துக்கும் ஏமனுக்கு மிடையிலான போர்ச் சூழலுக்குள் துப்பாக்கிரவை களூடாக சமாதானத்தை ஏந்திச் சென்று பெரும் பணியாற்றினார்.
இவை எல்லாவற்றையும் விட மேலாக அரபுலகம் காஸி புல் குஸைபியைக் கொண்டாடுவதற்குக் காரணம் அவர் தன்னிகரற்ற கவிஞராகத் திகழ்ந்தார் என்பதுதான். அவர் எழுதி வெளியிட்ட நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களில் அநேகமானவை கவிதை நூல்கள். அவர் மத்திய கிழக்கின் சிறந்த கவிஞராகவும் நாவலா சிரியராகவும் உலகம் முழுதும் அறியப்பட்டிருந்தார். எந்தப் பதவியை வகித்த போதும் அவ்வப்போது இலக்கியச் சொற்பொழிவுகளுக்காகப் பல்கலைக் கழகங்கள் அவரை அழைத்துப் பயன்படுத்திவந்தன.
79

Page 82
குஸைபி ஒரு பதவியிலிருந்து இன்னொரு பதவிக்கு மாறி மாறி அனுப்பப்பட்டதையும் அந்தக் கால கட்டங்களையும் பார்க்கும் போது அவர் ஒரு நேர்மையாளராக, மக்களினதும் தேசத்தினதும் பக்கம் நின்று சிந்திப்பவராக இருந்திருக்கிறார் என்பது புலனாகின்றது. அவரது எழுத்தினாலோ பேச்சினாலோ செயற்பாடுகளினாலோ உயர் மட்டத்தின் கருத்துக்கு மாற்றமான கருத்துடன் இருக்கிறார் என்று தெரிய வருகையில் வேறு ஒரு பதவிக்கு மாற்றப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் அவரை ஒழிக்கவோ தவிர்க்கவோ உயர் மட்டத்தினால் முடியவில்லை. இதுதான் குஸைபியின் வெற்றி என்று சொல்லவேண்டும். மன்னராட்சி நிலவும் ஒரு தேசத்தின் அரசியலைப் பொறுத்த வரை அரச குடும்பத்தில் பிறக்காத ஒரு தனிமனிதன் தவிர்க்க முடியாத சக்தியாக ஆளுமை கொண்டிருப்பது அவ்வளவு எளிதான விடயமும் அல்ல.
சவூதியின் அரசின் அங்கமாக அவர் இயங்கிய போதும் அவரது குரல் அவ்வப்போது தனித்துக் கேட்டது. அது நான் சுதந்திரமானவன், நான் கட்டுப்பாடுகளுக்குள் இல்லாதவன் என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தது. அவரது கவிதைகளும் நாவல்களும் இதைத்தான் பேசின. அதற்கு மேலாய் ஒரு படைப்பாளியாக மட்டும் நின்று மத்திய கிழக்கின் அரசியல், மேற்குலகின் கபடத்தனங்கள், மத்திய கிழக்கு ஆட்சியாளர்களின் நாடகங்கள், பலஸ்தீனத்தின் துயர், சாதாரண மக்களின் வாழ்வு என்பவற்றையும் உரத்த குரலில் பேசின. “ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவரை விட ஒரு மரக்கறிவியாபாரிதன்னைச் சிறப்பானவனாக உணர வேண்டும். ஏனெனில் தொழிலாளர்கள்தான் தம் தேசத்தின் மிகப் பெரிய நம்பிக்கை. ஊடகங்கள் அவர்களுக்கு அழுத்தங்களை வழங்காமல் ஆதரவாகச் செயற்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அதிகார மட்டத்தில் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்த போதும் அவரது கவிதை நூல்களில் ஒன்றிரண்டு அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது என்பது எத்தகைய வேடிக்கை. காஸி அல் குஸைபியின் நூல்கள் மீதான தடை அவர் மரணிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் நீக்கப்பட்டது. என்று bgry frao news Service gö (g ig GuuGOTTSufu
BO

அமெரிக்கரான கலாநிதி அஸத் அபூகலில் சொல்கிறார். அதாவது தடை நீக்கப்படும் போது குஸைபி மரணப்படுக்கையில் இருந்தார்.
குஸைபி இவ்வருடத்தின் 32ம் வாரம் அதாவது ஆகஸ்ட் பதினைந்தாம் திகதி ரியாத் - கிங் ஃபைஸல் விசேட வைத்தியசாலையில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது எழுபது. இந்த இழப்பானது அவரது மனைவிக்கும் அவரது ஒரே ஒரு மகளுக்கும் மூன்று ஆண்பிள்ளைகளுக்கும் சவூதி மக்களுக்கும் மாத்திரமேயானது அல்ல. -
உலகத்தின் பார்வையில் செல்வம் கொழிக்கும் தேசத்தில் களிப்பும் படாடோபமுமாய் வாழும் மனிதர்களுள் அறிவும் ஆழ் புலமையும் பெற்றுச் சர்வதேச ராஜ தந்திரங்களை எதிர்கொள்ளும் வலிமையுடன் செயற்பட்டு வாழ்ந்து மறைந்த குஸைபி உண்மையில் ஒரு மகானுபவர்தான். எந்தத் துறையில் அவர் காலடி எடுத்து வைத்தாலும் அங்கு தேசத்தின் நலன், மக்களின் நலன், உலகத்தின் நலன் என்கிற தனது முத்திரைகளைப் பதிப்பதில் அவர் வெற்றி கண்டவர். சவூதி அரேபியாவைப் பொறுத்த வரை காஸி அல் குஸைபியின் மரணத்துக்கும் இன்னொரு குஸைபி உருவாவதற்குமான காலம் மிக நீண்டதாக இருக்கப் போகிறது. புதிதாக உருவாகும் குஸைபிகளுக்குமத்திய கிழக்கின் நலன், அங்கு அகதிகளாக அல்லல் படும் மனிதர்களது நலன் குறித்துச் சிந்திக்கவும் செயற்படவும் மேற்கத்தேய நாடுகளுக்கு விலை போகாதிருக்கவுமான இதயத்தை வழங்குமாறு அவர்கள் பிரார்த்திக்க வேண்டும்.
அவரது மரணச் செய்திக்குப்பிறகு இணையத்தில் பலர் இரங்கல் குறிப்புக்களைத் தெரிவித்திருந்தார்கள். எங்களது பரம்பரைக்கு அரபுலகில் ஒரு நல்ல உண்மையான ரோல் மொடல் இல்லையென்றுநேற்றிரவு நான் எனது நண்பனிடம் சொன்னேன். அது ரொம்பத் தப்பு. அந்தப்பெருமைக்குரியவர் இன்று நம்மை விட்டுச் சென்று விட்டார்”என்று பஹ்ரெய்னிலிருந்து யாக்கூப் அல் சிலைஸி என்ற நபர் குறிப்பிட்டிருந்தார்.
காஸி அல் குஸைபியின் வெளிப்படையான பேச்சில் எப்போதும் உண்மையும் கிண்டலும் தொனிக்கும். “ஒரு நூலில் திருடினால் அதற்குப் பெயர் திருட்டு. பல நூல்களில் திருடினால் அதற்குப் பெயர் ஆய்வு” என்று அவர் ஒருமுறை சொல்வியிருக்கிறார்.
ஞானம் - கலை-இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 83
67 வ்வளவுதான் முரடனாக இருந்தாலும் அவனுக்கும் மனச்சாட்சி இருக்கத்தான் செய்தது. மாதித்த ஆற்றுக்கும், அனுராதபுரம், புத்தளத்துக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தம்பபன்னிநகரின் அரசனாகி முப்பத்தேழு வருடங்கள் ஒடிமறைந்து விட்டன. ஆட்சியைக் கைப்பற்றிய பின் முப்பத்தெட்டாவது அந்திம காலத்தில் அவனது உள்ளம் வெதும்பியது. முதுமையும் பிணியும் வாட்டியது. படுக்கையில் சாய்ந்து கிடந்தான். அவன் நிகழ்த்திய நாடகங்கள் நினைவுத் திரையில் அவிழ்ந்தன. இந்திய லாலா நாட்டின் சிங்கபுரத்தில் இளவர்சனான விஜயன் தனது தகாத செயல்களினால் தலையை அரைவாசி மழித்து, அசிங்கப்படுத்தி தந்தையினால் நாடு கடத்தப்பட்டதை எண்ணிக் கொண்டான். மும்பாயின் வடக்கே சோபராவை அடைந்ததையும், தனது காடைத்தனங்களைத் தொடங்க, அங்குள்ள மக்கள் அன்றே அடித்து விரட்டியதையும், மரக்கலங்களில் ஏறி கடலில் அலைந்து மரக்கலங்கள் சிதைவுற்ற நிலையில் ஒரு கரையை அடைந்ததை மனங்கொண்டான். எந்த இடமென்று தெரியாது வந்தவனை ஆதரித்து அரவணைத்துத் தன் மேல் கொண்ட காதலால் ஒரு இராசதானியையும் கொடுத்தவளுக்கு தான் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது என்பதை நினைந்து வருந்திக் கொண்டான். "எனக்குப்பின் நான் கட்டியெழுப்பிய இந்த ராச்சியத்தை யார் ஆளுவது"மனதில் பெரிய போராட்டம் எழுந்தது.
“எனது அரசபோகப் பேராசையும்,இன்பம் துய்க்கும் மயக்கமும் என்னை வழிதவறச் செய்தது. குவேனி இயக்க இளவரசி என்று தெரிந்தும் அவளை மனதார விரும்பி இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையானேன். அரச குலத்துக்கே உரிய பரம்பரை மோகத்தினால் குவேனியின் காதலைக் குழிதோண்டிப் புதைத்து விட்டேன்.பட்டஞ்சூடுவதற்காக பாண்டிய இளவரசியைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் குவேனியைத் துறந்தேன். எனக்காக என்மேல் கொண்ட காதலால்குவேனிதனது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

இனத்தையே அழிக்க முன்வந்தாள். தன்னையே :அழித்துக் கொண்டாள். அவள் கடைசியாக கண்ணிர் சிந்திக்கெஞ்சும்போது எனது மனதில் 3 கொஞ்சமாவது இரக்கம் பிறந்திருந்தால் 3. அவளுக்கு இந்த நிலை வந்திருக்காது. அவள் என்மேல் கொண்ட காதல் போல் நான் அவள் மேல் அன்புவைக்கவில்லை.ஒருபெண்ணுக்கு இதுரோகம் செய்த பாவியாகிவிட்டேன்”
அவனைச் சூழ்ந்து அவனது முதலமைச்சர் உபதிஸ்சயுடன் ஏனைய அமைச்சர்களும் நின்றனர். மதுரையில் பாண்டியகுலத்தில் இருந்து அழைத்துப் பட்டதரசியாக்கிய அவனது தர்மபத்தினியான பாண்டிய நாட்டின் புதல்வியும் அழுதவண்ணம் இருந்தாள். "அரசியாரே நமது அன்பானி'இல்லற வாழ்வில் ஒன்றை இழந்து விட்டோம். நமக்கென்று ஒரு வாரிசைப் பெறமுடியாது போய்விட்டது. இந்த நாட்டை ஆளுவதற்கு யாருமில்லை” அவனது முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. அரசியின் முகத்தில் ஈயாடவில்லை. தன்னால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது போய்விட்டதை எண்ணி எண்ணி ஏங்காத நாட்கள் இல்லை. அரசனின் இந்தக் கொடுஞ்சொல் அவளது உள்ளத்தில் ஈட்டியாய்ப் பாய்ந்தது. இப்படி எத்தனை நாட்கள் சொல்லக் கேட்டிருப்பாள். அவள் கண்ணிர் வெள்ளத்தில் மூழ்கியிருப்பாள். அமைச்சர்களைப் பார்த்தான்'அமைச்சரேlஉடனடியாக இந்தியாவில் உள்ள எனது சிங்கபுரம் நாட்டுக்குத் தூதனுப்பி எனது தம்பி சுமித்தயை அழைப்பியுங்கள். அவனிடம் ஆட்சியை ஒப்படைப்போம். உடனே செயற்படுங்கள்" மன்னன் கட்டளையிட்டான். அமைச்சர்கள் விரைந்து செயற் பட்டனர். Z
விஜயன்களைத்துப்படுக்கையில் கிடந்தான்.அவன் கண்களை மூடும்போதெல்லாம் அந்தக் காட்சி நிழலாக ஓடியது. கண்ணிராடிய கண்களோடு குவேனி நின்றிருந்தாள். அவளது அவல ஒலி காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவனது முகம் வரண்டு பயங்கரமாக இருந்தது. "குவேனி நான் சொல்வதைக் கவனமாகக் கேள், என்னை இந்த நாட்டு அரசனாக முடிசூடும்படிவற்புறுத்துகிறார்கள். ஆனால் அதற்கு ஏற்ற ஒரு அரசி வேண்டும். அவள் அரசகுடும்பத்தில் பிறந்தவளாக இருக்க வேண்டும். அதனால் நீஎன்னைப் பிரிந்து போகவேண்டும்” பார்வையை வேறுதிசையில் திருப்பியவாறே கூறினான். குவேனி இடியேறுண்ட நாகம்போலானாள். நடுநடுங்கிவெயர்த்துநின்றாள்.
“கப்பல் உடைந்து உங்களது நண்பர்களுடன் அல்லல்பட்டு அபயந்தேடி வந்தபோது நான் தானே உணவு, உறைவிடம் கொடுத்துக் காப்பாற்றினேன்.
B1

Page 84
அபயமளித்தேன். கண்டதுமுதல் உங்களை எனது மணாளனாக வரித்துக் கொண்டேன். உங்கள்மேல் கொண்ட காதலுக்காக எனது இனத்தவரை யெல்லாம் உங்களுக்காக பலிதந்தேன். எதுவந்தபோதும் என்னைப் பிரியமாட்டேன் என்று சொன்னதை ஏற்றேன். எனது இளமையைகாணிக்கை ஆக்கினேன்.இரண்டு குழந்தை களைப் பெற்றெடுத்தோம். இன்று பிரிந்து போகும்படி கூறுவதை என்னால் எப்படி தாங்கமுடியும். அவளது கெஞ்சும் ஒலி காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவனதுதலை அசைகிறது. வேகமாக மூச்சுப் பறக்கிறது. அன்றுதான் குவேனியை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.குவேனிஅழகுச் சிலையாகக் காட்சி தந்தாள். குவேனி இயக்க குலத்தின் இளவரசி. அவளொரு அழகரசி. “உங்களுக்கு என்ன வேண்டுமோ அவற்றைத் தருவேன். வேண்டு மாயின் என்னையும் எனது இராசதானி யையும் தருவேன்’ குவேனி கூறியிருந்தாள். அழகாய் அலங்கரித்த அமளியிலே இளமையை ருசித்தவனது காதுகளில் ஏதோ சத்தங்கள் கேட்கின்றன. அவனது அணைப்பில் குவேனிகிடந்தாள். "குவேனி என்ன ஆட்டம் பாட்டம்? ஏதும் விஷேசம் நடக்கிறதோ? வேடிக்கையாக இருக்கிறது. விஜயன் அவளது காதுகளில் இனித்தான். கலவி மயக்கத்தில் “என்னையும் தருவேன். ஒரு இராசதானியையும் தருவேன்.” முணுமுணுத்தாள். அவனது பிடிக்குள் அவள் இருந்தாள். அவன் மீண்டும் குவேனியை உலுப்பினான். "குவேனி என்ன சத்தமது”? கேட்டான். அவள் வெருண்டு வெருண்டெழுந்தாள். அந்த நேரத்தில் அவளது உள்ளம் உறுத்தியது. முன்பின்தெரியாத வேற்றுமனிதருக்கு அடைக்கலம் 7. கொடுத்து அவர்களை ஆதரித்து / ".مسیeج
6óT LI ) fó (C5 ů u 60 g /AAAMAS என்னினத்தவர்கள் அறிந்தால் I კ8, என்னைக் கொன்று போடு Asiá வார்கள். அவர்களுக்கு முன் நான் உசாரடைய வேண்டும்.” குவேனிவிழித்துக் கொண்டாள்.
“அன்பே என்னையும் V தருவேன் ஒரு இராசதானியையும் தருவேன் என்றே னல்லவா? அதற்கான தருணம் வந்து | | விட்டது. இன்று போனால் இப்படி யான சந்தர்ப்பம் நமக்கு வராது.
லங்காபுர மன்னன் மகாகல இ ○ சேனனின் மகள் இளவரசி பொலமித்தாவுக்கும் லக்கலயில்
இருக்கும் அவர்களது
82
 

உறவினர்களில் ஒருவருக்கும் சிறசவத்து நகரில் இன்றிரவு திருமணம் நடக்கிறது. திருமணவிழா தொடர்ந்து ஏழுநாட்களுக்கு நடைபெறும். நாம் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும் சொல்லிவிட்டு விஜயனை அரசனாக கற்பனையில் பார்த்தாள். அவன் அவளது அழகில் மயங்கி நின்றான். “என்ன செய்ய வேண்டும் சொல்லு’விஜயன் அவளைத் தழுவியபடியே கேட்டான்.
எனது இனத்தவர்கள் எல்லோரும்மது மயக்கத்தில் இருப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கி அழிக்க வேண்டும். அழித்தபின் இந்நாட்டின் அரசன் நீங்கள்.அரசிஇந்த குவேனி அதனை நான் கண்குளிரக் காணவேண்டும். உடனே கிளம்பவேண்டும். நான் வழி காட்டுகிறேன் பாருங்கள்.” அழைத்தாள். இன்றா? இப்போதோ?.என்றான். ஆம் இப்போது தவறவிட்டால் எப்போதும் சந்தர்ப்பம் கிடைக்காது.” விஜயன் உசாரானான்.தனது தோழர்களுக்கு விளக்கமளித்தான். ஆயுதங்களோடு புறப்பட்டார்கள். இயக்கர்கள் இந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. நிராயுதபாணிகளைத் தாக்கத் தொடங்கினார்கள். இயக்கர்கள் அனைவரும் விஜயனதும், அவனது தோழர்களினதும் ஆயுதங்களுக்கு இரையானார்கள். அவல ஒலியோடு இரத்த வெள்ளம் ஆறாய் ஓடியது.ஒருசிலர் லங்காபுரம் نتس. تضضض ممتع நோக்கி ஒடித்தப்பினார்கள். விஜயன் ஒரு S கபடத்தனமான செயலினால் பெரியحسی C வெற்றியைத் தழுவிக்கொண்டான். எஞ்சிய பழங்குடி இயக்கர்கள் லங்காபுரத்துக் காடுகளில்
தஞ்சமானார்கள். ፩ \\\ மன்னன் மகாகல W சேனனின் ஆடைகளை அணிந்த
வாறு விஜயன் கூத்தாடினான்.
அதனைப் பார்த்து குவேனி - மகிழ்ந்து “இதனைத்தான் நான் 4 எதிர்பார்த்தேன் உங்களுக்காக எதையும் செய்வேன். என்னையும் தருவேன். ஒரு இராசதானி யையும் தருவேன்.” அவளைத் தழுவியதைநினைந்துகொண்பான். அவனது கண்களில் கண்ணிர் பெருகியது. “பெரிய தவறினைச் செய்து விட்டேன்” மெல்ல உடலை அசைத்துப் புரண்டுப் படுக்கிறான். அவன் மனதில் அமைதியில்லாது தவித்தான். பாண்டிய மன்னன் மகள் வந்து பார்த்து கண்களிலுள்ள கண்ணிரைத் துடைத்து விட்டுச்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 85
சென்றாள். அமைச்சர்கள் சிலர் அருகிலேயே. இருந்தார்கள்.
மதுரையில் இருந்து பாண்டியன் மகள் மாதோட்டத்துக்கு வந்து கொண்டிருக்கும் செய்தி விஜயனுக்குக் கிடைக்கிறது. அவளோடு விஜயனின் தோழர்களுக்கும் மனைவிமார்களாக கன்னியர்கள் வந்து கொண்டிருந்தனர். அத்துடன் அவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்வதற்குமான குடும்பங்களும் வருவதை அறிந்திருந்தான். அவர்கள் அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் படி பணித்திருந்தான். தம்பபன்னிநகர் குதூகலிக்கத் தொடங்கியது. "குவேனி இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே புறப்படு. உனது பிள்ளைகளை விட்டுச் செல் நான் அவர்களுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொள்வேன். நீ உடனே போய்விடு’அவசரப்படுத்தினான். “நான் போய்த்தான் ஆகவேண்டுமா? எப்படி உங்களைப் பிரிந்து செல்வேன்? உயிருக்குயிராய் உங்களைக் காதலித்தேனே. உங்களை விட்டு எப்படித் தனியே செல்வேன்.? நான் எங்கே போவேன் எவ்வாறு வாழ்க்கையை ஒட்டுவேன்?” குவேனி கண்ணிர் வடிக்கிறாள். “ எனது நாட்டில் எங்காவது இருக்கலாம். உனக்கு ஆயிரம் பொற்காககள் தருகிறேன். எடுத்துப்பிழைத்துக்கொள்”அதிகாரமான குரலில் விஜயன் ஆணையிடுகிறான்.
“மன்னா" அமைச்சர் உபதிஸ்சவின் குரல் கேட்டு விஜயன் கண்களை மெல்லத்திறக்கிறான்."சிங்கபுரத்துக்கு தூது அனுப்பியாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் தங்கள் தம்பி வந்து விடுவார்.” செய்தியை அமைச்சர் கூறினார். மீண்டும். விஜயனின் விழிகள் மூடிக் கொண்டன. குவேனி மீண்டும் அவன் முன் கண்ணிரோடு நிற்கிறாள். அவளை முதல்முதல் சந்தித்தபோது அவளது அழகில் மயங்கி நின்றான். பதினாறு வயதுப்பருவத்துக்கே சொந்தமான அழகோடு கட்டுக் குலையாத கன்னியாக நின்றாள். அவள் முதல் நாள் அணிந்திருந்த ஆடையில் எடுப்பாக இருந்தாள். அவள் காட்டிய அன்பையும் நினைத்துக்கொண்டான்.
“எனக்காக ஒரு இராசதானியையே தந்தாளே. அவளைத் துரத்திவிட்டேனே!நான் பாவி, எனக்கு எனது கெளரவம்தான் முக்கியமாகி விட்டது.” மனதில் ஈனக்கவலைகள் புகுந்துகொண்டன. "நான் எங்காவது இங்கு ஒரு மூலையில் உங்களுக்குச் சேவை செய்து கொண்டிருக்க விடுங்கள்”அவள் கெஞ்சினாள்."அது எப்படி முடியும், ஒரு இடத்தில் இருவர் இருக்க முடியாது, நாம் பிரியத்தான் வேண்டும். பிள்ளைகள் அரச வம்சத்துக்குரியவர்களாக இல்லை. அவலட்சணமாக இருக்கின்றனர். நீ போவதுதான் நல்லது. இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை நீபோகலாம்'குவேனியை நேருக்கு நேர்பார்த்தவாறே கூறினான்.
“மன்னா! உனக்காக வாழ்ந்தேன். நீ இல்லாமல் நானில்லை என்றல்லவா இருந்தேன். நீ விட்டுப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - gaur surf 2011

பிரியமாட்டேன் என்று சொன்னதெல்லாம் பொய்யா? அன்று அந்த நிலவும் தென்றலும், தேனாய் இருந்ததாய் சொன்னீர்கள். இன்று அவை எல்லாம் எனக்கு தீயாய் சுடுகின்றன. குயிலிசை என் காதுகளில் பாயும் ஈட்டிகளாகி விட்டன. எனது இதயத்தை எப்படி தேற்றுவேன்?நான் யாரிடம் போவேன்.எங்கள் இனத்தை அழித்தவள் என்று என்னை எனது உறவினர்கள் தாக்கிக் கொன்றழிப்பார்கள். இது உறுதி” அழுதவண்ணம் கூக்குரலிட்டாள். "நீ என்ன சொன்னாலும் எனது மனம் மாறப் போவதில்லை. பாண்டியன் மகள் மென்மையானவள் அவள் அரசிளம்குமாரி. நீ ஒரு இயக்கி. உனக்கு அபாரசக்தியுள்ளது. உன்னை எப்படி எனது பட்டத்து அரசியாக்குவது? உனக்கு என்ன அந்தஸ்து இருக்கிறது? ஏளனமாக விஜயன் கேட்டான்.
அந்தஸ்து வேண்டுமா? எனது இளமையை அனுபவிக்கும் போது அந்தஸ்து விளங்கியிருக்குமே? நானும் இயக்ககுலத்து இளவரசிதான். நானும் ஒரு பெண்தான். இது உங்களுக்கு முதலிலேயே தெரிந்ததுதானே. இந்த மண்ணில் பிறந்த முதற்குடி மக்களின் மகள். கல்வி அறிவில் சிறந்த மனிதகுலத்தவர்கள், நாங்கள். மன்னா நானில்லா விட்டால் இந்த அரச சுக போகங்கள் உங்களுக்கு கிடைத்திருக்குமா? எங்கிருந்தோ நாடுகடத்தப்பட்டு வந்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்து நாட்டைப்பறிகொடுத்து ஏமாந்து நிற்கின்றேன். இந்த நாட்டை அந்நியரிடம்பறிகொடுப்பதற்கு நான்தான் முதற் காரணகர்த்தாவாகி விட்டேன். எனது பிள்ளைகள் ஆளவேண்டிய நாட்டை அந்நியனுக்கு தாரைவார்த்துக் கொடுக்க உடந்தையாக இருந்தேன். நான் பாவி” பொருமினாள். படுக்கையில் இருந்த விஜயனின் உடல் அசைந்தது.
குவேனி மீண்டும் தோன்றினாள் “இன்னுமேன் நிற்கிறாய்? இதோ ஆயிரம் பொற்காசுகள். எடுத்துக் கொண்டு போய்விடு” உரத்துச் சத்தமிட்டான். குவேனியின் விழிகள் சிவந்து தீப்பொறிகளாகின. அவளது உடல் விறுவிறுத்தது. தனது பிள்ளைகளைப் பார்த்தாள்.
“போகத்தானே வேண்டும். போகிறோம். நான் இந்த நாட்டுக்கும் என் இனத்துக்கும் செய்த துரோகத்துக்கு பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். ஜிவகத்தா, டிசலாவாருங்கள் போவோம்”அவளது ஒரு கைப்பிடியில் மகன் ஜிவகத்தாவின் கை இருந்தது. மறுகையில் மகள் டிசலாவின் கை இருந்தது. கண்ணிர் ஆறாய் பொலபொலத்துவடிய நடந்தாள்.
தனது சொந்த இரத்த உறவில் பிறந்த பிள்ளைகள் இருவரும் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றான். அவனது வாய் " ஜிவகத்தா, டிசலா" என முணுமுணுத்ததை உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு
83

Page 86
உள்ளூர சந்தோசம். குவேனி போனதும் பாண்டியன் மகளைப் பட்டத்து ராணியாக் கொண்டான். தோழர்களுக்குப் பாண்டியகுலத்துக் கன்னியரை மணமுடித்துவைத்தான். மதுரைக்கும் தம்பபன்னைக்கும் நெருக்கமான உறவினைப் பேணிக் கொண்டான்.
குவேனி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு லங்காபுரத்துக்குச் சென்றாள். பிள்ளைகளை லங்காபுரத்து எல்லையில் நிறுத்தி விட்டு நகரினுள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் ஊர்மக்கள் சூழ்ந்து கொண்டனர். “இனத்தைக் காட்டிக் கொடுத்த துரோகி உளவு பார்க்கவா வந்தாய். உன்னை உயிரோடு விடமாட்டோம்” அடித்தார்கள். ஒருவன் ஓங்கி உதைத்தான். அந்த உதையோடு குவேனியின் உயிர் பிரிந்தது.
குவேனியின் மாமன் மயிலவளனன் விரைந்து நகரின் எல்லைக்குச் சென்றான். இரண்டு பிள்ளை களையும் கண்டு விசாரித்தான்.
யார் நீங்கள்?
“நான் ஜிவகத்தா, இவள் எனது தங்கை டிசலா.
குவேனியின் பிள்ளைகள்” கூறினான்.
"தம்பி இங்கே நிற்க வேண்டாம். குவேனியை இப்போதுதான் அடித்துக் கொன்றுவிட்டார்கள்.
துப்பாக்கிகளைச் சுமந்தபடி சிற்றெறும்பு ஊர்வலங்கள்
skeie
ffotoreshfrasesir இல்லாத கடலில்
ΙδούτεδοΤ துள்ளி விளையாடுகின்றன வலைகளின் அச்சமின்றி
skake
B4
 

இங்கிருந்தால் உங்களையும் கொன்று விடுவார்கள். நீங்கள் ஒடித் தப்புங்கள்” கூறிவிட்டு அவன் சென்று விட்டான். இந்த நாட்டை ஆளவேண்டிய ஜிவகத்தாவும், டிசலாவும் சிவனொளிபாத மலைக் காடுகளில் ஒடத்தொடங்கினார்கள். விஜயன் குவேனியின் முடிவை அறிந்திருந்தான்.
“ஐயையோ’ விஜயன் அலறினான். இருமிப் புரண்டான். அமைச்சர்கள் உசாரானார்கள். “மன்னா என்ன வேண்டும்” கேட்டார்கள். விஜயனின் வாயிலிருந்து சத்தம் வரவில்லை. கையசைத்து “ஒன்றுமில்லை” எனத் தெரிவித்தான். அமைச்சர்களுக்கு விளங்கிவிட்டது. ஆளுக்காள் கண்களால் பேசிக் கொண்டார்கள். விஜயனின் இறுதி நெருங்கிவிட்டதை உணர்ந்தார்கள். அவனது உள்ளமெங்கும் நிறைந்து இந்நாட்டின் மன்னனாக வேண்டிய ஜிவகத்தாநின்றான்.ஜிவகத்தாவும் டிசலாவும் சிவனொளிபாத மலைக் காடுகளில் ஒடிக்கொண்டிருந்தார்கள். அவனது ஆவி பிரிந்தது. மீண்டும் சிங்கபுரியில் இருந்து தம்பபன்னிக்கு ஒரு இளவரசன் பாண்டுவாசுதேவ ஆட்சிசெய்ய வந்துவிட்டான்.
அச்சமும் சோகமும்
* t് @gup A ஃகுத் தான்
s ※※岑
அடர்ந்து
செழித்திருந்த புதர்கள் O இடிந்த வீடுகளின்
சிதிலங்களை மறைத்திருக்கின்றன. தன் 柬掉嫩
மீள் குடியேற வந்திறங்கியவர்கள் குடியேற வீடுகளின்றி ff(b படங்கு முகாம்களில்
網雍縱 பேய்களை விரட்டியதாக eabharrirassir 马鳕rü连l季ü母函6拉 குடிகொண்டிருக்கின்றன
※※※ பேய்களைவிடவும் பிசாசுகளுக்கே பயப்படுகிறார்கள் மீள்குடியேற வந்தவர்கள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 87
கொற்றைபி.கிருஷ்ணானந்தன்
எங்கிருந்தோ வந்த ஒருவன் எஜமானாகினான் ஏக அதிகாரம் செய்தான் ஏற்றால் “சேர்’பட்டம் எதிர்த்தால் தாக்குத் தண்டனை எல்லாமே இயைபாயிற்று.
பக்கத்து வீட்டான் இறைமைக்காக அடிபட்டான் - கூடவே இவனுக்கும் அது ஈசியாய்க் கிடைத்தது. அவனும் வெளிக்கிட ஆபத்தும் தன்னை அகலித்துக் கொண்டது.
சற்றே தள்ளிரும் féironmf
கெற்றை பிஇடுஷ்ணனந்தன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

எழுவான் திசையெங்கும் அரசு கைகள்தர அரசுகள் முளைத்தன. "வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது” அங்கு அண்ணா சொன்னது.
"வடக்கிலும் வளர்கிறது.
தெற்கு திரள்கிறது” இங்கு தம்பி சொல்லாதது
ஆலமரம் மட்டுந்தான் விசாலித்துநின்று விழுதுகள் விடும் என்றில்லை அரசமரமும் வேர்பாய்ச்சி விழுதுகள் விடும்
ஆம். ஆம் ஆமாம்!
பதவி - மற்றும் பதவி உயர்வுக் கடவுளரின் தரிசனங்களை மறைந்து குந்தியிருக்கும் நந்தீஸ்வரர்கள்
சற்றே தள்ளியிரும் பிள்ளாய்
எனச் சொல்லச் சக்தியற்றவராய் இளம் கந்தனார்கள்
85

Page 88
LLLL S SSY S SL SLL SLL S SLLSSYSLSSYSS LLLLSLLLLLSLLL I'.....","..."...'...'...'..."...".
స్త్రీ மின்னியல் காலம் இதில் இணையம் (இன்டர்நெட்) என்பது நேற்றோ, அதற்கு முன்தினமோ ஏற்பட்ட சங்கதி. (20,21 ஆம் நூற்றாண்டுகள்) ஒர் எழுதுகோல் அவசியமில்லை-இதைத் தெரிவிக்க
ஆனால் இன்னொன்றைத் தெரிவிப்பது அவசியம். அது 'தமிழ் இணையம் இதற்கு ஒரு பெருமதிப்பையும், செல்வாக்கையும் கணினிவழி பெற்றுக்கொடுக்க (தமிழைத்தம் தலையில் சுமந்திருப்பதாகக் காட்டும்) கலைஞர் கருணாநிதி முதற்கொண்டு கற்றுக்குட்டிக் கவிஞர்கள் வரை வேட்டியை வரிந்து கட்டி நிற்கிறார்கள். அதிலொரு குற்றமுமில்லை. இணையம் என்று பெயர்சூட்டி அதில் தமிழை இணைத்து 'தமிழ் இணையம் என்ற சொல்லாக்கம் ரொம்பதித்திப்புதான்.
என்றாலும் அதுவொன்றும் சென்ற நூற்றாண்டிலோ இந்த நூற்றாண்டிலோ கணினிக்காக உருவானதன்று.
கந்தர், அலங்காரம் பாடல்திரட்டு முருகப் பெருமானை மாமயில், ஏறும் இராவுத்தனே என்று வர்ணிக்கிறது.
கந்தர், கலிவெண்பா, சூர் கொன்ற இராவுத்தனே எனக் களிப்படைகிறது.
திருப்பெருந்துறைப் புராணமோ, கோட்டம் இல்லா மாணிக்கவாசகர் முன் குதிரை இராவுத்தனாய் நின்றவர் என்று சிவபெருமானைச் சொல்கிறது
திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம், துய்ய பேருலகுக்கெல்லாம் துலங்கிய 'இராவுத்தராயன்' என்கிறது.
இவையனைத்தும் மிகத் தெளிவாக, 'இராவுத்தர் என்ற முஸ்லிம் பெயரையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
மரக்காயர் - லெப்பை - சாகிபு என்பவையும் அவ்வாறே
BS
 
 
 

zee
pngOIn coa2S61
தமிழர் தங்களுடன் இரண்டறக் கலந்திருந்த முஸ்லிம்களை அவர்கள்தம் பெயர்களுடன் மேற்கண்ட ஏதாவதொன்றுடன் இணைத்தே அழைத்தார்கள்.
அதிலும் விசேடமாக, தங்கள் பக்தி இலக்கியங்களில் தயக்கமெதுவுமில்லாமல்'இராவுத்தரைமேற்காட்டியவாறு இணைத்தார்கள்.
உண்மையில்'இராவுத்தர் என்பதன் கருத்துத்தான் என்ன?
அது குதிரையுடன் சம்பந்தம் புன்னகைத்துக் கொண்டே தொடர்ந்து வாசியுங்கள்.
கறவைப்பசு இன்றைக்கு எவ்வாறு எமக்குப்பயன்படுகிறதோ அவ்வாறே அன்று குதிரை அடுத்து யானை h
உயர் (அரச) மட்டத்தில், வணிக வட்டத்தில் அவற்றின் செல்வாக்கை அழகாக வரலாறும் இலக்கியங்களும் பதித்து வைத்துள்ளன.
அன்றைக்கு சிறந்த குதிரை வீரர்களாக இருந்தோரையும் அதை வைத்து செல்வம் கொழித்தோரையும் இராவுத்தர்கள் என்றார்கள். ஏனென்றால், “இராவுத்தம்” என்பதை 'குதிரை என்கிறது தமிழ் (அகராதி)
இந்தக் குதிரையோ தமிழகப்பிராணியன்று “நீரின் வந்த நிமிர் பரிப் புரவி' என்ற பட்டினப்பாலைப் பாடல் ஒன்றே போதும் - அது புலம் பெயர்ந்த வந்த ஒன்று என்பதற்கு
ரொம்பச்சரி நாடு எது? தேசம் எங்கே? எந்தச் சந்தேகமுமில்லாமல் அறபுப் பிரதேசமே
ஏன்? எதற்கு? அங்கிருந்து இங்கே? அகநானூற்றின் 149ஆம் பாடலிது!
“சுள்ளியம் பேரியாற்றுவெண்ணரை கலங்க யவனர் தந்தவினைமாணன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வணங்கெழுமுசிறி.”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 89
யவனர் என்ற அறபுமக்கள் கிழக்கு மேற்கு வணிகத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு, இஸ்லாம் என்றதொருமார்க்கம் தமிழகத்தில் வேரூன்ற முன்பேயே தமிழருடன் இணைந்து விட்டனர் என்பதற்குச் சான்று தான் மேலே காண்பது.
மலபார் கேரள பிரதேசங்களைத்தொட்டுவந்தவர்கள் முசிறிபோன்ற பண்டைத்தமிழ்த்துறைமுகத்தில் இறங்கிய பொழுது கூட்டங் கூட்டமாகக் குதிரைகளுடனும் இறங்கி வணிக முயற்சிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதோடு மன்னர்களின் படைப் பிரிவிற்கும் பல்லாயிரமாக வழங்கி உதவினர்.
பதிற்றுப் பத்து - என்ற பண்டைய இலக்கிய மொன்றில் “பந்தர்” எனுமொரு சொல் இடம் பெற்றுள்ளது. தமிழுக்கே புதியவொன்று.
“இன்னிசைப் புணரி இரங்கும் பெளவந்து நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” 53:4 சந்த அலைகள் கடலிலே அவ்வினிய ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தன. அவ்வோசைகளின் மத்தியில் கப்பல்கள் வர அவை கொண்டு வந்த செல்வங்கள் இறக்கப்பட்டு ஒழுங்காக அடுக்கப்பட்டு குவியலாகக் காட்சிதருகிறது பந்தர்!
பாடலையாத்தவர் துறைமுகம் என்றோ பண்டகசாலை என்றோ தூய தமிழில்முடித்திருக்கலாம். ஆனால் தமிழ் - முஸ்லிம் இணையம் விரும்பி'பந்தர் என்ற அரபிச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அதன் கருத்து துறைமுகம் அல்லது துறைமுகப் பொருட்களஞ்சியம் என்பதே
இவ்வாறான இணையம் ஒரு புறம் நடக்க நன்னடத்தை, நாணயம், நிர்வகிப்பு, தமிழ் மொழிப்பற்று அனைத்தும் அவர்களை அர்ச, அத்தாணி மண்டபத்திற்குள்ளும் அழைத்துச் சென்றது
ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் ஒரு அமைச்சராக தளபதியாக அறபு நாட்டு சையித் தகிப்யுத்தீன் செயல்பட்டிருக்கிறார். அவர் இலங்கை யாப்பஹ9வ இராஜதானி வரை வந்து சிங்கள அரசனோடு மோதி வெற்றிவாகைசூடியிருக்கிறார்.
இந்தத் தகியுத்தீனுடைய தம்பியை (சையித் ஜமாலுத்தீன்) சீனமன்னன் குப்ளாய்கான் அரசவைக்குப் பாண்டியன் தூதுவராகவும் அனுப்பியுள்ளான்.
அந்த ஆரம்ப காலங்களில் அரசியலில் இப்படி இணையம்' என்றால் தமிழைப் போற்றவும் தமிழை உயர்த்தவும் அவர்கள் எவ்வாறு நடந்திருப்பார்கள் என்பதை, மனக்கண்களாலேயே கண்டு மகிழ்ந்திட (փգեւլն.
பக்க இடநெருக்கடியைக் கருத்தில் கொண்டு நான் சில துளிகளைத் தெளித்தால்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

“சைவரும் வைணவரும் பாடிய பிரபந்தங்களைப் பாடுவதோடு,முஸ்லிம்கள் நின்று விடவில்லை. அவர்கள் புதிய பிரபந்த வகைகளைத் தமிழில் புகுத்தித் தமிழன் னையைப் பொலிவுடன் வாழச் செய்திருக்கின்றனர்”- என்கிறார் ஒரு பிறை அன்பன்
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரைக் கோவை ud. 154 – 155) S.
இவர் எம்மவரே! யாழ். துணை வேந்தராகச் சிறப்புற்றிருந்த கலாநிதிசு.வித்தியானந்தன் அவர்களே! 16-17-18-19 ஆகிய மொத்தம் 400 ஆண்டுகளில் தமிழிலக்கியங்கள் அவ்வளவாகத் தோன்றாததால் "இருண்டகாலம்” எனப்பட்டது. அக்காலக் கட்டத்திலே திசைமாறிப் போய்க்கொண்டிருந்த தமிழிலக்கியப் போக்கினைக் கட்டுப்படுத்திப் பேரிலக்கியங்களையும், சிற்றிலக்கியங்களையும், புதிய இலக்கிய வகைகளையும் ஏராளமாக எழுதித் தமிழின் ம்றுமலர்ச்சி உயர்ச்சிக்கு வித்திட்டவர்கள் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.
தமிழுக்கேயுரிய இலக்கண இலக்கியப் பண்பு களைப் போற்றி அவற்றை நிலைபெறச் செய்யவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அறிவியல் கால வளர்ச்சிக்கேற்ப புதிய இலக்கியங்கள் பலவற்றையும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் எழுதியுள்ளனர்”என்று தமிழக அறிவியல் அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் கூறுவது இங்கு எண்ணத்தக்கது.
அவ்வாறு அவர்கள் அறிமுகப்படுத்திய சிற்றிலக்கியங்கள் கிஸ்ஸா -நாமா-படைப்போர்-மசலாமுனாஜாத்துஎன்னும் பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. எனினும் ஆரம்பகாலத்தில் இலக்கியம் படைக்க அவர்கள் கையாண்ட மொழிதமிழ் அல்ல!
ஆனால் தமிழ் தான்! ஒரு நகைச்சுவை நடிகரின் பாணியில் நான் சொல்லும் பொழுது நகைப்பே வரும். ஆனால் யதார்த்தம் அதுதான்!
அக்காலத்தில் அறபுத்தமிழ் என்றொரு மொழிவடிவம். அதாவது, தமிழை வரிவடிவத்தில் அறபு எழுத்துக்களில் எழுதி அதனை அறபுத் தமிழ் என முஸ்லிம்கள் அழைத்தன்ர். வலமிருந்து இடமாக வாசித்தனர். •
இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அவர்களது இறைவேதமான அல்-குர்ஆன் அறபில் இருந்ததும், சிறுவயது ஆரம்பக்கல்வியானது மதரஸா என்கிற அறபுப் பாடசாலைகளில் அமைந்ததுமாகும். தமிழ், பேசும் மொழியாக, அன்னை மொழியாக வழக்கிலிருந்தது. தமிழை எழுதப்படிக்கத் தெரியாத பலர் இருந்தனர். ஆனால் ஒவ்வொருவரும் அறபை வாசிக்கக் சுற்றிருந்தனர்.
B7

Page 90
செம்மொழி தமிழ், அறபு லிபியில் அறிமுகமான பொழுது பற்றும் பாசமும் மிகுதியானது.
அதே காலகட்டத்தில் தமிழகத்தில் தலையெடுத்து கரகாட்டம் ஆடிக்கொண்டிருந்த சமணர்கள், சீவகசிந்தாமணி, வளையாபதி, பெருங்கதை என்னும் மூன்று பெருங்காப்பியங்களையும், சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாக குமார காவியம், உதயண குமார காவியம் என்னும் ஐஞ்சிறு காப்பியங்களையும் மட்டுமே பாடியுள்ளனர். எல்லாம் சேர்ந்து எட்டுக் காப்பியங்களே சமணர்கள் தமிழுக்குத் தந்தவையாகும். ஆனால் முஸ்லிம்கள் படைத்துள்ள பெருங்காப்பியங்களின் எண்ணிக்கையோ 18
அதே நேரத்தில், அறபு, பாரசீக, உருதுச் சொற்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இதன் தாக்கத்தை அருணகிரிநாதரிடமும் குமரகுருபரிடமும் கூடக் காணக்கூடியதாக உள்ளது
‘விஞ்சையர் மாதர் சபாஷ்' என என்கிறார் அருணகிரியார். குறவர் மகட்குச் சலாம் இடற்கு ஏக்கறு குமரனை' - என்பது குமரகுருபரரின் வணக்கம்.
இந்த இடத்தில் இன, மத, பேதம் கடந்த ஒரு சிறப்பு நிலையை நாம் காண்கிறோம்.
சரியாக 421 (1590) ஆண்டுகளுக்கு முன் ஒரு நெகிழ்வான நிகழ்வு.
கண் பார்வையற்ற பாவாடைச் செட்டியாரும் கவியேறு ஆலிப் புலவரும் தமிழ் இணையம் உருவாக்கினர்.
இடம் கோட்டார். இது, தென்குமரி மாவட்ட நாகர் கோவிலுக்கு நான்கு கி.மீ. தொலைவு
16ஆம்நூற்றாண்டின் பிற்பகுதியில் அங்கே வாழ்ந்த ஆலிப்புலவர், நபிகள் நாயகம் அவர்களின் விண்ணேற்றப் பயணம் பற்றிக் கூறும் மிகுராசு மாலையை பிறசமயத்தமிழ்க் காப்பியங்களைப்பின்பற்றி இயற்றிப்பூர்த்தி செய்துவிட்டு அரங்கேற்ற (வெளியிட) அரங்கமும் ஏற்பாட்டாளரும் இல்லாமல் அசந்து போயிருந்தசமயத்தில் பாவாடைச் செட்டியார் முன்வந்து அயர்ந்து விடாதீர்கள் ஆலிப் புலவரே! அந்தகன் நான் இருக்கிறேன்!”எனக் கைகொடுத்தார்.
இவ்வாறு மொழிப்பற்றின் முன் மதப்பாகுபாடு களைக் கடந்து நின்ற பான்மைக்கு சாமான்யர்கள் மட்டுமல்லாமல் உயர் மட்டத்திலும் உதாரண புருசர்கள் உள்ளனர்.
எட்டயபுர சமஸ்தானத்தின் அதிபதி ஒரு இந்துப் பெருமகன். அவரது ஆஸ்தானக் கவிஞரான கடிகை முத்துப்புலவர் ஓர் இந்து. அவரிடம் கற்ற பல சைவ சிஷ்யர்கள் மத்தியில் ஒரேயொருமுஸ்லிம் உமருப்புலவர்
8B

பிற்காலத்தில் அந்த ஒரே முஸ்லிமுக்கே ஆஸ்தானக் கவிஞர் பதவி.
அவர்கள் அவரை மதக்கண் கொண்டு பார்க்கவில்லை. மொழிக்கண் கொண்டும் தமிழ்க் கண் கொண்டும்பார்த்தார்கள்.
உமர்ப் புலவரைப் போன்ற மற்றொருவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சவ்வாதுப் புலவர். இவர் காலத்தில் தமிழகத்தின் தென்கோடி இராமேஸ்வரம். இராமநாதபுரத்தை ஆண்டான் ரகுநாத சேதுபதி. சுத்த சைவம், பூசைகள் தவறாதவர். சவ்வாதுப்புலவரோ ஐவேளை தொழுகை விடாதவர். அவரையே ஆஸ்தானப் புலவராக்கினான் மன்னன். பல சைவப்புலவர்கள் வெகுண்டெழுந்தனர். இருந்தாலும் தமிழ்ப்புலமை என்ற இணைப்புக் கயிறு இருவரையும் இறுகப் பிணைத்தது. மதமென்ற இரும்புத்திரை நீக்கப்பட்டது.
இதுபோல் இன்னொருவர், இலக்கணக் கோடறி' என்ற பிச்சை இபுராஹிம் புலவர் மதுரைத் தமிழ்ச் சங்கப் பேராசானாகத் துலங்கினார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த நிகழ்வு இது இவர் தமிழ் கற்றுத் தந்த மாணவருள் பெரும்பாலானோர் இந்து மக்களே. பிற்காலத்தில் பிரபலமான சந்தக்கவி சாமிநாதபிள்ளை, மதுரை முத்துப்பண்டிதர், நாவலர் வெங்கடசாமி நாட்டார், வித்துவான் அமிர்த சுந்தர நாதபிள்ளை, விஜயரங்கப்பிள்ளை ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
தாயுமான சுவாமிக்ளிடம் அதிக ஈடுபாட்டினைக் கொண்டிருந்தார்.
குணங்குடி மஸ்தான சாகிபு சமயப் போராட்டத்தினைக் கடந்த சமரச சன்மார்க்கம் காண விழைந்த தாயுமானவரை சாகிபுதன் முன்னோடியாகக் கொண்டிருந்தார்.அவரைப்போன்றேபராபரக்கண்ணியும் ஆனந்தக் களிப்பும் பாடினார். சரவணப் பெருமாள் அய்யர் என்பவரே அவரது அருமந்த சிஷ்யர்.
எண்சீர்க் குணங்குடியா னென்னுங் குருமணி மேல்
வண்சீர்த் தமிழ்நான் மணிமாலை பன்சீர் கொள்' என குருநாதர் மீது நான்மணிமாலை தொகுத் திருக்கிறார் சரவணப் பெருமாள் அய்யர். அத்தோடு குணங்குடி மஸ்தானின் தீஞ்சுவைத் தமிழ்ப்பாக்களைக் காத்து வளர்த்து, வையமெல்லாம் பரவச் செய்ய பூரீ விநாயகப் பெருமானின் திருவடிகளில் ‘தாள்காப்பு பொழிந்து இறைஞ்சவும் செய்துள்ளார்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 91
இவரைப் போல் இன்னொருவர் சதாவதானி கா.ப. செய்குத் தம்பிப் பாவலர். இவர் பெற்றிருந்த தமிழ் அறிவைப்தமிழ்ப் பேரறிஞர்களே ஏற்றனர்.சென்னையில் பெருந்தொகைப் பண்டிதமணிகள் இருந்த போதிலும் பிரபல நூல் பதிப்பகம் ஒன்று, தான் வெளியிட்டு வந்த பல தமிழறிஞர்களின் நூல்களின் பதிப்புக்குப் பொறுப்பாளராக நியமித்திருந்தது.
அவரும் அறிஞர்களின் நூல்களை மேற்பார்வை செய்து இலக்கணப் பிழைகள் திருத்தி வசன கோர்வை சீராக்கி யாப்பு வழுக்களை நேராக்கி தமது திருத்தங்களைச் சரிகாணச் செய்து தமிழுக்குப் பெருந்தொண்டாற்றினார். தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார் அவரது தலைமாணாக்கர். தன் காலத்தில் சதாவதானியாகவும் விளங்கி பெரும் பெரும் கடின சதாவதானப் போட்டிகளிலும் கலந்து பல வெற்றிகளைக் குவித்தவரும் கூட
இன்றையபொழுதில்பலருக்கும்ஒருசொர்க்கபுரியாக உள்ள ‘சிங்கப்பூரில் முதல் தமிழ் இதழாக சிங்கை வர்த்தமானி 1875இல் வெளியானது. ஓர் அச்சுக் கூடம் நிறுவி ஆசிரியராக அமர்ந்து தமிழுலகுக்கு வழங்கியவர் ஒரு சி.கு. மகுதூம் சாயபு பின்னர் ‘சிங்கை நேசன்' ஞான சூரியன்' என்ற இதழ்களையும் வெளியிட்டார்.அவரது ஆசான் ஒருயாழ்வாசிஅவரேநமது சதாசிவப்பண்டிதர்.
1887களில் சாயபு வெளியிட்டமுதல்நூல் சதாசிவப் பண்டிதரின் ‘சிங்கை நகர் அந்தாதி அப்புறம் 'வண்ணை நகர் அந்தாதி', 'வண்ணை நகர் ஊஞ்சல் மற்றது ‘சித்திரக்கவிகள்’ இதில் இரண்டு காஞ்சி காமாட்சியைப் பற்றியதும் மற்றிரண்டு சிங்கப்பூர் சுப்பிரமண்ய சுவாமியைப்பற்றியதுமாகும்.
மதுதும் சாயபு இசுலாமிய நெறியினராயினும் தம் அச்சகத்தில் இந்துச் சமயக் கடவுளான முருகனைப் பற்றிய நூல்களை தமது யாழ்ப்பாண நண்பர் மூலம் வெளியிட்டதானது அவரது மொழிப்பற்றினையும், சமய நல்லிணக்க உணர்வினையும் வெளிப்படுத்துகின்றது" என்கிறார். மலேசியக் கலாநிதி சுப. திண்ணைப்பன் ஓர் ஆய்வில்.
இப்படிமகுதூம் சாயபு சதாசிவப்பண்டிதர்தொடர்பு போன்று, மேலைப் புலோலியூர் மகா வித்துவான் நா. கதிரைவேற்பிள்ளை அவர்களுக்கும் தமிழ்நாட்டின் செந்தமிழ்ச் செல்வர் சிந்துக் களஞ்சியப் புலவருக்கும் அவரது புதல்வர் அட்டாவதானி அபூபக்கர் நெயினார்ப் புலவர் ஆகிய மூவருக்கும் பெரும் நட்பு நிலவியது.
ஒரு முறை வண்ணார்பண்ணை புலவர்கள் மண்டபத்தில், வித்துவான் கதிரைவேற்பிள்ளை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

ஏற்பாட்டில் நெயினார்ப் புலவரின் அட்டாவதானப் பரீட்சைக்கு ஏற்பாடு. யாழ்த் தமிழறிஞர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்ட அவ்விழாவில் தமிழிலக்கிய இலக்கணக் கேள்விகளுக்கு முப்பதே விநாடி கால எல்லைக்குள் பதிலிறுத்த வரலாறு உண்டு. அதே விழா இறுதியில், தமிழ்ப் பெருந்தகை ஆறுமுகநாவலரின் மருமகன் பொன்னம்பலம் பிள்ளையவர்கள் பக்கமறை தேர்ந்தோர் பலரிருக்கச் சீருறுரபு பக்கர்நய் னாப்புலவன் பண்ணிய - மிக்க நல் அட்டாவ தானமெனும் அற்புதத்தைப் பார்க்கிலவன் இட்டம் பெறாதார் எவர் என வெண்பா பாடிப்புகழ்மாலை சூட்டினார்.
மற்றொரு தமிழக வித்துவான் புனிதமிகு நாகூர் என்ற தமிழக ஊரில் பிறந்து மலேசியா - பினாங்கில் - வாழ்ந்து இலங்கையிலும் புகழ் பரப்பிப் குலாம் காதிறு நாவலர் என்ற பெருந்தகையின் நூலொன்றின் அரங்கேற்றத்தை யாழ் மண்ணே செய்து மகிழ்ந்தது. இவரே மறைமலை அடிகளாரை தமிழிலக்கிய வானின் ஒரு தாரகையாக ஒளிரச் செய்தவர்
இரசிகமணி கனக செந்திநாதன் தமது ஈழத்து இலக்கிய வளர்ச்சி ஆய்வு நூலின் புதிய பதிப்பு:167-168ஆம் பக்கங்களில்:
“ஈழத்து முஸ்லிம் மக்களுடைய இலக்கிய முயற்சிகளின் கொடுமுடியாக, கண்டிதர்ஹாவித்துவான், மெய்ஞ்ஞான அருள்வாக்கியர் அப்துல்காதிர் புலவரே துலங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழிலக்கிய மரபிலே திளைத்த அணியும், யாப்பும் சீர்மையுடன் அலங்கரிக்கும் செய்யுள் நடையையே அவர்தம் இலக்கிய நடையாக வரித்துக் கொண்டார். தமது 52 வயதிற்குள் 30க்கு மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார். அவர் யாழ்ப்பாணத்துப் பொன்னம்பலக் கவிராயருடனும். மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் தொடர்புடைய தமிழறிஞராவார். இராமாயணம், சீறாப்புராணம் ஆகிய நூல்களுக்கு அவர் ஆற்றிய இரசனைப்பிரசங்கங்களைப் கேட்டு மகிழ்ந்து யாழ். மக்கள் அவருக்கு 'வித்துவ தீபம்’ என மகுடம் சூட்டி பரிசில்களை வழங்கினர் என்று பதித்துள்ளார் இரசிகமணி.
முகிய்யதீன் ஆண்டகை என்ற ஒரு பெரும் இறையடியாரின் அற்புதச் செயல்களை தமிழில் நான்காயிரம் கவிதைகளில் வழங்கி முகிய்யதீன் புராணம்’ (1811) படைத்திட்ட பதுறுத்தீன் புலவர் யாழ்வாசியே! ஈழ நாட்டிலே எழுந்த முதல் தமிழ்ப் பெருங்காப்பியமாகவும், மூன்றாவது இஸ்லாமியக் காப்பியம் என்ற சிறப்பினையும் கொண்டதாக யாழ்.
B9

Page 92
மண்ணின் சொல் வளத்தைக் கொண்டு விளங்குவது பெரும் பெருமை.
மற்றும், யாழ். மண்ணில் தமிழ் - இணையம் கொண்டவர்களாக, புலவர் மணிகளானசு.மு. சுலைமான் லெப்பை, சு.மு. அசனார் லெப்பை ஹக்கீம் ந. மீரான் முகிய்யதீன், சா. சேகுத்தம்பி, முஹம்மது அப்துல்லா லெப்பை கல்தான் தம்பிப் பாவலர், அப்துல்லா புலவர் முய்யி அல்தீன் கற்புடையார், ஷைகு மஹ்ரூபு லெப்பை, சீனித்தம்பி முகம்மது அப்துல்லத்தீப் ஆலிம், தைக்காப்புலவர் (முகியித்தீன் அப்துல்காதர்) ஆகியோர் 9.6T66OTT.
இந்தக் 'தைக்காப்புலவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (கல்லடி வேலன்)யிடம் தமிழ் கற்றவர் (பக். 107 - எம்.எஸ். அப்துல் ரஹீம் நூல்)
இறுதியாக - புகழ்வாய்ந்த இருநாட்டு இலக்கியக்காரர்களின் ஆயிரத்திலொரு வார்த்தைகளை அன்பர்களுக்குச் சமர்ப்பித்து விடைபெறுகின்றேன்.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் தமிழார்வமும் தமிழ்ப்பற்றும் கொண்டு விளங்குகின்றனர். இந்நாடுகளில் வாழும் பிற தமிழர்களோடு (முஸ்லிம் அல்லாதார்) ஒப்பு நோக்குகையில் தமிழ் முஸ்லிம்களின் வீடுகளில் தமிழ்ப்புழக்கம் அதிகமாக உள்ளது. மற்ற தமிழர்களின் வீடுகளில் ஆங்கிலமே ஆட்சி செய்துவருகிறது. மொழிப் புழக்கம் தமிழ் முஸ்லிம்களிடம் அதிகமாக உள்ள காரணத்தால் தமிழ் கல்வியில் தமிழ்முஸ்லிம்களின் தரம் உயர்ந்தும் காணப்படுகிறது.
கலாநிதி எம்.எஸ்.ழரீலட்சுமி (அம்பை) சிங்கப்பூர் தமிழ்ப் பேராசிரியை (ஆய்வரங்கக் கோவை - 1999)
“தமிழ் எங்கள் தாய்மொழி.அது எங்கள் உயிர். யார் புறக்கணித்தாலும் உதாசீனம் செய்தாலும், உதறித் தள்ளினாலும் நாங்கள் எங்கள் சக்திக்கு ஏற்ற தொண்டினை செய்து கொண்டே இருப்போம். இதில் நாங்கள் ஒருபோதும் ஓய்ந்திடமாட்டோம் எங்கள் தமிழ்த் தொண்டு நாளுக்கு நாள் பல்கிப் பெருகுமே தவிர, கூனிக் குறுகி விடாது”
தமிழகக் காப்பியக்கவிஞர், காலஞ்சென்ற சாரண பாஸ்கரன் (ஜனாப் டி.எம். அகமது) ஒர் ஆய்வுரையில் மொழிந்தது)
90

இகழ்ச்சிக்குரியோன்
இவன் !
-இunஸ் ஏ ஸ்மத்
2\, ணர்வே மற்றோர் கதையளக்கக் காலாகும்
தாழ்த்தும், அவரைத் தகுஅவையும் - வீழ்த்தி நகைக்கும், தனித்த நிலைக்காக்கும் என்றும்
நகைக்காகும் அற்பர் நிலை
மற்றோர் குறைகாண் மதிகுறை அற்பரைக் கற்றோர் கறையாய்க் கணிப்பரே - சற்றுமே நம்பார் தமக்குள்ளே நேசந் தனைக்கொள்ளார்
வம்பே இவரது வாழ்வு
தன்புலமை மட்டெனத் தானுணர்ந்தும் மற்றோரைத் தன்புலமைக் கொப்பத் தரங்காண்பர் - என்றும் பிறராக்கந் தன்னிற் பிழைகாண்பர் கற்றோர் நிறைவுக்கே ஆகார் நிலை.
பிறர்குறை கண்டு புகழ்நிறை கொள்ளும் சிறியருக் கில்லை சிறப்பு - அறிவிலார் என்றறிவர் மற்றோர் எதற்கும் முதற்காணார்
புன்மைக்கே ஆவார் புவி.
காணின் குறையே கடுகளவும் நல்வார்த்தை காணக் கிடைக்கா கடையனிடம் - வீணாய்
இகழ்வான், மதியான் இழிசொல்வான். மற்றோர் இகழ்ச்சிக் குரியோன் இவன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 93
O P-přijl jisi
லங்கைத் தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் விதமாக, இலங்கையில் உருவான இலக்கியம் ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றது. ஈழத்து தமிழ் இலக்கியத்தை வளர்த்து வரும் திறமையான இலக்கிய கர்த்தாக்கள் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, மலையகம், மேற்குக் கரையோரம், கொழும்பு ஆகிய பிரதேசங்களிற் பரவலாக வாழ்ந்துவருவதைக் காண்கின்றோம்.கல்விகேள்விகளில் முன்னேறிய தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே ஈழத்துத் தமிழிலக்கியம் தோன்றி வளர்ந்து இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் கிளை பரப்பியது எனலாம். மூத்த தலைமுறையைச் சேர்ந்தஈழத்துஇலக்கிய கர்த்தாக்களாக பேராசிரியர்கா.சிவத்தம்பிகாலஞ்சென்ற பேராசிரியர் க.கைலாசபதி ஆகியோரைக்குறிப்பிடலாம்.
மலையக இலக்கியம்
கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக இலங்கை நாட்டின் முன்னேற்றத்துக்காக இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்து வரும் மலையகத் தமிழ் மக்களின் கண்ணிர்க்காவியம் மலையகத் தமிழிலக்கியமாக உருப் பெற்றது. பூகோளரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வாழ்க்கைமுறையாலும் ஏனையபிரதேசத்தமிழர்களைவிட வேறுபட்ட நிலையில் வாழும் மலையக மக்களின் பிரச்சனைகள் இலக்கிய வாதிகளால் வெளிக் கொணரப்படும்போது அதனை மலையகத் தமிழலக்கியம் என்றுஅழைக்கும்மரபுஏற்பட்டது.சமகாலமூத்தமலையகத் தமிழிலக்கிய வாதியாக திரு. தெளிவத்தை ஜோசப் அவர்களை நாம் அடையாளம் காண்கின்றோம். மலையகத்தில் கல்வி, கலை, கலாசாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு நுண் கலைப் பீடத்துடனான மலையகப் பல்கலைக்கழகம் அவசியமென்று பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் பேசியும் எழுதியும் பெரு முயற்சி எடுத்துவருவதை அவதானிக்கின்றோம். மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொள்ளாத போதிலும், மலையகத்தில் நீண்டகாலம்வாழ்ந்துமலையக இலக்கியத்துக்குபங்களிப்பு வழங்கிய இரு இலக்கிய கர்த்தாக்களின் பெயர்களை இவ்விடத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். முதலாமவர் டாக்டர்தி. ஞானசேகரன் அவர்கள் மற்றவர்காலம் சென்ற டாக்டர்புலோலியூர் க.சதாசிவம் அவர்கள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

ழ் இலக்கியம்
கா. தவபாலன்
மட்டக்களப்பு இலக்கியம்
மட்டக்களப்பு மக்களின் தனித்துவங்களை வெளிக்கொணரும் வகையில் உருவான இலக்கியம் மட்டக்களப்புத்தமிழிலக்கியம் என அழைக்கப்படலாயிற்று. மட்டக்களப்பு நாட்டார் பாடல்களும், தென்மோடி நாட்டுக்கூத்துக்களும் தனித்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. போர் நடைபெற்ற காலங்களில் அங்கு போர்க்கால இலக்கியம் தோன்றி வளர்ச்சி பெற்றது. இனப்பிரச்சினை,வேற்றினக்குடியேற்றங்கள் மற்றும் கல்வி வேலை வாய்ப்புப் பிரச்சினைகளாலும் அம்மக்கள் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டு வந்தமையால் இத்தகைய பாதிப்புகள் இலக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றே கூறவேண்டும். சுவாமி விபுலானந்தர் அவர்களால் சைவத்தமிழ்வளர்க்கப்பட்டமண்,மட்டக்களப்புமண் ஆகும். விபுலாநந்தர் இசை, நடனக் கல்லூரி, நீண்ட காலமாக மட்டக்களப்பு மண்ணில் நுண்கலைகளை வளர்த்து வந்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியன அமைக்கப்பட்டமை கிழக்கு மாகாணம் முழுவதற்குமேஒருவரப்பிரசாதமாக அமைந்தது.
வன்னி இலக்கியம்
1800ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில் ஆங்கிலப் படைகளை எதிர்த்து வன்னியில் நடைபெற்ற பல்வேறு போராட்ட வரலாறுகள் இலக்கிய வடிவில் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் முள்ளியவளையைச் சேர்ந்தவரான மூத்த எழுத்தாளரும், புத்திஜீவியுமானகலாநிதிமுல்லைமணிவே.சுப்பிரமணியம் அவர்களும்,வற்றாப்பளையைச் சேர்ந்தவரான, வானொலி, தொலைக்காட்சி கலைஞரூம், எழுத்தாளருமான அருணா செல்லத்துரை அவர்களும் செய்த சேவை அளப்பரியதாகும். 1995 ஆம் ஆண்டு யாழ் குடாநாடு அரசின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் போராளிஇயக்கங்களின் செயற்பாடுகள்வன்னிப்பெருநிலப்பரப்பில்மையம்கொள்ள ஆரம்பித்தன. போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்த பின்னர், போர்க்கால இலக்கியங்கள் உருவாகின. கல்வி பொருளாதாரம்,தொழில்வாய்ப்புக்கள்போன்றன தொடர்பில் தொடர்ந்தும் வன்னிபின்னுக்குத்தள்ளப்பட்டதால்பிரதேச மக்களின் தனித்துவமான பிரச்சனைகளை வெளிக் கொணரும் விதமாக இலக்கியம் படைக்கும் அவசியம்
9

Page 94
ஏற்பட்டது.போர்க்காலச் செய்திகள் சமகால இலக்கியமாக ஞானம் போன்ற சஞ்சிகைகளின் மூலம் வெளிக் கொணரப்பட்டன. ஆகவே வன்னிப் பிரதேச மக்கள் தொடர்பிலான இலக்கியத்தை வன்னித் தமிழிலக்கியம் என அழைப்பதே பொருத்தமானது எனலாம். வன்னி இலக்கியத்துக்குப்பங்களிப்புச்செய்தயாழ்குடாநாட்டைச் சேர்ந்த மூத்த இலக்கியவாதிகள் இருவரின் பெயர்களை இவ்விடத்திற் குறிப்பிட்டுக் கூற வேண்டும். முதலாவது இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து வன்னிப்பகுதியில் நீண்ட காலம் பணியாற்றிய இலக்கியகர்த்தா செங்கை ஆழியான் அவர்கள். மற்றவர் வன்னிப்பகுதியில் நீண்டகாலம் வைத்திய சேவை செய்தவரான பல்துறை எழுத்தாளர் டாக்டர் ச. முருகானந்தன் அவர்கள். தமிழிலக்கிய திறனாய் வியலுக்குச் உயரிய பங்களிப்பைச் செய்துவரும் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் வன்னிப்பகுதியைச் சேர்ந்த முள்ளியவளைக் கிராமத்தின் மூத்த இலக்கியகர்த்தா என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்த மானது யுத்தத்தால் அழிந்துபோயுள்ள வன்னிப்பெருநிலப் பரப்பில் கல்வி,கலை,கலாசாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கு தனியான பல்கலைக் கழகமொன்று அமைக்கப்பட வேண்டுமென்பது தமிழ்ப்புத்திஜிவிகள் பலரின் அபிப்பிராயமாக உள்ளது.
இஸ்லாமியத் தமிழிலக்கியம்
இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த தமிழிலக்கிய கர்த்தாக்கள் ஈழத்துத் தமிழிலக்கியத்துக்கு பொதுவான முறையிலும், தமது மதம், கலாசாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றைமையமாக வைத்துவிசேடமானமுறையிலும் இலக்கியம் படைத்து வருகின்றனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களும் நிறையவே இருக்கின்றன. ஆகவே இஸ்லாம் சார்ந்த தமிழ் இலக்கியத்தை இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்று அழைக்கும் வழக்கம் உருவாயிற்று. தமிழகத்தின் உமறுப்புலவர் எழுதிய சிறாப்புராணம் இலங்கையில் இஸ்லாமியத் தமிழிலக்கிய மாணவர்களுக்கு ஒரு பாடப்புத்தகமாக அமைந்துள்ளதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தமிழிலக்கிய வாதிகள் சிங்களப் பிரதேசங்களிலும் கொடி கட்டிப் பறப்பதற்கு உதாரணமாகப் பன்முக எழுத்தாளர் திக்குவல்லைகமால் அவர்களைக் கூறமுடியும் பல்கலைக் கழக மட்டத்திலும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களும், இலக்கிய கர்த்தாக்களும் அதிகம் பேர் உள்ளதைக் காணமுடிகின்றது.உதாரணமாகப்பேராசிரியர் நுஃமான் போன்றவர்களைக் கூறமுடியும். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட பின் இஸ்லாமியத்
92

தமிழிலக்கியம் மென்மேலும் வளர்ச்சி பெற்று வருகின்றது எனலாம்.
தலித் இலக்கியம்
தலித் மக்களின் எழுச்சிக்காக இந்தியாவில் உருவானதுதலித் இலக்கியம்.இலங்கையிலும் குறிப்பிட்டுக் கூறக் கூடிய திறமையான மூத்த படைப்பாளிகள் தலித் இலக்கிய கர்த்தாக்களாக பலர் இருக்கின்றனர். இவர்கள் ஈழத்துத் தமிழிலக்கியத்துக்குப் பொதுவான முறையில் பங்களிப்புச் செய்துவரும் அதேவேளை தலித் மக்களின் எழுச்சிக்கான இலக்கியத்தையும் படைத்துவருகின்றனர். தலித்மக்களிடையேகல்வி,கலை,கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்த தலித் இலக்கியம் மிகவும் அவசியமானதொன்று என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
புலம் பெயர்ந்தோர் இலக்கியம்
இனப் பிரச்சனையாற் பாதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களால் முன்னெடுக்கப்படும் இலக்கியம் புலம் பெயர்ந்தோர் இலக்கியமாகும். எழுத்துச் சுதந்திரம், பணபலம், அச்சுத்துறையில் நவீன தொழில்நுட்பம், இணையத்தளம் ஆகியவைகாரணமாகப்புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கின்றது. புலம்பெயர்ந்ததமிழிலக்கியகர்த்தாக்கள் தமிழிலக்கியத்தை வளர்ப்பதில் எவ்வளவு அக்கறையாகச் செயற்படுகின்றார்கள் என்பதற்கு அவுஸ்திரேலியாவிற் குடியேறி வாழும் மூத்த இலக்கியவாதியான திரு. லெ. முருகபூபதி அவர்களால் ஒழுங்கமைக்கப்படும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தக்க சான்றாக அமையும்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த நுண்கலைகளான பரதம், கர்நாடக சங்கீதம் என்பன இலங்கையிலும் பரவலாகப் கற்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணப்பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் என்பனவற்றில் நுண்கலைக் கற்கை நெறிகள் கற்பிக்கப்படுகின்றன. வட இலங்கைச் சங்கீத சபைநுண்கலைகளிற்பரீட்சைகளை நடாத்தி,இளம் கலைஞர்களை ஊக்குவித்துவருகின்றது.
ஞானம் (டாக்டர் தி. ஞானசேகரன்), மல்லிகை (திரு. பொமினிக்ஜீவா),செங்கதிர்(திரு.த.கோபாலகிருஷ்ணன்) ஜீவநதி(திரு.க.பரணிதரன்),சுவைத்திரள் (திருதிக்கவயல் தர்மகுலசிங்கம்), கொழுந்து (திரு அந்தனி ஜீவா) போன்ற கலை இலக்கிய சஞ்சிகைகளும் தினக்குரல் ஞாயிறு தினக்குரல்,வீரகேசரி,வீரகேசரிவாரவெளியீடுசுடரொளி தினகரன்,தினகரன்வாரமஞ்சரிஉதயன்,நவமணிபோன்ற செய்திப் பத்திரிகைகளும் வானொலி, தொலைக்காட்சி போன்றஊடகங்களும்ஈழத்துத்தமிழிலக்கியவளர்ச்சிக்குப் பாரியபங்களிப்பை நல்கிவருகின்றன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 95
U படவென வெடித்த பட்டாசு வெடிச்சத்தம் கலாதரனைக் கண்விழித்தெழ வைத்தது. எழுந்து உட்காரும்போதே தலைவலியின் வேதனைதான் உறைத்தது.
“காலையில் எழும்பும்போதே ஏணிப்படித் தலையிடிக்கிறது? மனம் ஆராய்ந்தது.
இரவுவெகு நேரம் அவன் உறங்கவில்லை. வெடிச்சத்தங்கள் h அவனை உறங்கவிடவில்லை. அந்தச் சத்தங்கள் கேட்காத இடத்திற்குப் போனால் தான் நிம்மதியாக இருக்கலாம் போலத்தோன்றியது. எங்காவது ஒடிப்போ ஓடிப்போ என ஓர் உந்துதல்
ஒவ்வொரு வெடியோசையும் கண் முன்னே விரித்துவிட்ட கோரக் காட்சிகள்!
அலையலையாக அந்த நினைவுகள், உறங்க முடியவில்லை; அவனால் உறங்க முடியவில்லை,
எப்படி உறங்குவது? தீபாவளிக்கு மூன்று நான்கு நாட்கள் இருக்கும் போதே சிலரால் இப்படியெல்லாம் கொண்டாட முடிகிறது. ஆனால் அவனுக்குப் பட்டாசு வெடியும் இதயத்தைப் படபடக்க வைக்கிறது
இந்த ஆராவாரத்தின் நடுவே எங்கோ அழுகுரலும் கேட்கிறது. அந்த நினைவுகளின் கூக்குரலோ?
இல்லை எங்கோ அழுகுரல் கேட்கிறதுதான். அவன் எழுந்து வெளியே வந்தான் சங்கரமூர்த்தியண்ணை முற்றத்திலிருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்தார். சங்கரமூர்த்தி கிட்டிய உறவினன் எனக் கூறமுடியாது. கலாதரனின் அண்ணன் முரளிதரனுடன் படித்தவர். முரளியின் உற்ற நண்பர். இப்போது முரளியின் குடும்பத்தினரையும் கலாதரனின் குடும்பத்தினரையும் அவர் தான் பொறுப்பு நின்று அகதிமுகாமிலிருந்து அழைத்து வந்து தனது வீட்டில் தங்கவைத்திருக்கிறார்.
“என்னண்ணை எங்கையோ அழுதுகேட்குது.” ஒமோம், உவர் சிதம்பரப்பிள்ளை அம்மான் மோசம் போட்டாராம்"
கலாதரனின் கேள்விக்குச் சங்கர மூர்த்தியண்ணை பதில் கூறுகிறார்.
'சிதம்பரப்பிள்ளை அம்மானோ? நேற்று கலாதரன் போய்ப்பார்த்த போது அவரது நிலை மோசமாகத்தானிருந்தது, இரண்டுவாரமாக எந்த உணவுமில்லையாம், வைத்தியசாலையில் வைத்து சேலைன் ஏற்றினார்களாம். பின்னர் வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.
முந்தின காலமென்றால் ஐயாவை அழைத்து ஒரு பசுக்கன்றை அதற்கான கிரியைகள் செய்து தானம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

癸 27C2a (aCS Vy O.
O கொடுத்திருப்பார்கள்.பொன்னாசைமண்ணாசை தீர்க்க வென்று பவுனை உரைத்து மண்ணும் கலந்து வாயிலே புகட்டியிருப்பார்கள். உறவினர்கள் எல்லோரும் வந்து வாயிலே பாலைப் புகட்டுவார்கள். இப்போது இவை கைவிடப்பட்டு வைத்திய சிகிச்சைகளும் வைத்திய ஆலோசனைப்படியான பராமரிப்புகளும் செய்கிறார்கள். கால முன்னேற்றம்.
சிதம்பரப்பிள்ளை அம்மான் அப்பாவுடைய உறவினர். அப்பாவுடைய வயதுதான் அவருக்கிருக்கும். உறக்கத்தோடு தணிந்திருந்த அப்பாவின் நினைவு குபீரிடுகிறது. எவருக்கும் கிடைக்காத அருமையான அப்பா, எங்கள் தெய்வம்; அவனைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தெய்வம். அவனை மட்டுமல்ல; நான்கு பிள்ளைகளைப் பெற்று, எல்லோரையுமே பேணிவளர்த்து அவர்கள் சிறப்பாக வாழ வழிவகுத்தவர். மூன்று ஆண்கள் ஒரு பெண். கலாதரன் கடைக்குட்டி, அக்கா கமலேஸ்வரியும் அண்ணா சந்திரபாலனும் நேரகாலத்துடன் மேலே போய்விட்டார்கள்.
அண்ணா திட காத்திரமாகத்தானிருந்தார். தொண்டையில் ஒரு நோ. உஷ்ணங்காரணமாக என எண்ணினார்கள். அது புற்று நோயாகி அவரைத் தின்றுவிட்டது. -
அப்பாவுக்குப்பெருங்கவலை "எனக்குக் கொள்ளி வைக்க வேண்டியபிள்ளை.என்னை முந்திப்போட்டான்” என்று சொல்லிச்சொல்லி கவலைப்படுவார். கொள்ளிவைக்கவியலாது போகும் மரணம் பற்றி அவர் சிந்திக்கவில்லை.
புத்தூரில் அவர்கள் பிறந்து வளர்ந்த வீடு அக்கா கமலேஸ்வரிக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. அப்பாவும் அம்மாவும் அவளுடன் தானிருந்தார்கள். அது அம்மாவுக்குச் சீதனமாகக் கொடுத்த வீடு. அங்கேயே அவளுடைய இறுதிக்கிரியைகளும் நடக்கும் பேறு அவளுக்குக் கிட்டியது.
அந்த மஹாலட்சுமி போய் ஒரு வருடமாகுமுன்பே போர் அந்த ஊரில் அடிவைத்தது. அங்கிருந்து ஓடியவர்கள் ஏழு மாதங்களின் பின்பு வந்து பார்த்தபோது அங்கு வீடிருக்கவில்லை. அவர்களுடைய வீடுமட்டுமல்ல; அக்கம் பக்கமிருந்த எல்லா வீடுகளும் தரைமட்டமாகி அந்த இடம்
93

Page 96
காவலரண் நீண்டுகிடக்கும் இடமாகக் கிடந்தது. அக்கா சில காலம் காண்பவர்கள் எல்லோருடனும் வீட்டைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தாள். அந்தக் கதை அநீதமாகியது. மற்றவையெல்லாம் மறந்து அழிந்துவிட்ட வீடே அவளை வியாபித்தது. அவளுக்கு மனநலச் சிகிச்சை அளித்தார்கள்.
அவள் படிப்படியாக ஓய்ந்து, ஒருநாள் முழுமையாக ஓய்ந்து விட்டாள்.
சாருமதி - கலாதரனின் மனைவி தேநீருடன் வந்தாள்.
பல்துலக்க மறந்துபோய் உட்காந்திருந் தவன் அவசர அவசரமாகப் பல்துலக்கி, முகம் கழுவி, சுவாமி படத்தின் முன் நின்று “சிவசிவா' என்று நெற்றியில் திருநீற்றைப்பூசும்போது கண்ணிர் பொலுபொலுவென்று சிந்தியது, அவன் அப்பாவின் நினைவிலே கரைந்தான்.
அப்பா ஒரு சிறந்த விவசாயி உரமேறிய உடல், எப்பொழுதுமே வேட்டிதான் கட்டுவார். தேவைக்கேற்ப நான்கு முழமாகவோ எட்டுமுழமாகவோ இருக்கும். மேலே சட்டை போடுவது ஏதோ உடலுக்கு ஒவ்வாத ஒன்றுபோல தவிர்க்கப்பார்ப்பார். எங்காவது போகவரமட்டும் மேற்சட்டை போடுவதுண்டு. அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவர் அளவான ஒரு மீசை வைத்திருந்தார். முகத்திலே ஒரு கண்டிப்பு அரசோச்சிக்கொண்டிருக்கும். இந்த முகத் தோற்றமும், அதிகாரத் தொனியில் ஒலிக்கும் அவரது குரலும் அவரது சொல்லுக்கு அனைவரும் பணிவதற்குக் காரணமென அவன் சிந்தித்ததுண்டு.
ஆனால் அவரது தலை நரைகண்டு, நடு மண்டை வழுக்கையாகிவரும் கால மாறுதலின் போது முகத்திலிருந்த கண்டிப்பும் குரலின் அதிகாரமும் படிப்படியாக அவரிடமிருந்து விடைபெறத் தொடங்கின. பின்னர் அவரது முகத்தில் சூழத்தொடங்கிய சோகம் அவரது மாற்றத்திற்கு வயோதிபம் காரணமல்ல எனக் கூறியது.
அவர் மனம் மகிழ என்னதான் இருந்தது? அப்பா எத்தனையோ வேதனைகளைத் தாங்கினார். அத்தனை வேதனைகளோடு மாபெரும் சோகச் சுமையொன்றையும் அவன் மீது சுமத்திவிட்டு நிம்மதியாகப் போய்ச் சேர்ந்து விட்டார்.
நிம்மதியாகவா போய்ச்சேர்ந்தார்?
போய்த்தான் சேர்ந்துவிட்டாரா? எப்படிச் சொல்ல முடியும்? “தேத்தண்ணீர் குடிச்சிட்டீங்களே?
சாப்பிடப்போlங்களே?”சாருமதியின் குரல் நினைவூட்ட அவன் தேநீர்குவளையை எடுத்து மடமடவென குடித்தான். y “சாப்பிட்டிட்டுச் செத்தவீட்டை போகவேனும் சிதம்பரப்பிள்ளை அம்மான் அப்பாவை நினைவூட்டியதனால் அவரது அந்திமக் கிரியைகளில் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆத்மதாகம் அவனுள் கொழுந்துவிட்டுக்கொண்டிருந்தது.
94

அக்காவின் மரணத்தின்பின் அப்பா அவனுடன்தான் வந்திருந்தார்.பேரப்பிள்ளைகளுடன் பொழுதுகள் கழிந்தது அவரது மனதிற்கு மருந்திட்டது. விவசாயம், ஆடுமாடு என ஈடுபாடுகாட்டத்தொடங்கமணக்காயம் ஆறத்தொடங்கியது. கலாதரனின் இரண்டு பிள்ளைகளிலுமே அவர் பாசத்தைப்பொழிந்தார். மூத்தவள் அம்பிகை பாடசாலை சென்று விடுவாள். இளையவன் தமிழ்வேளுக்கு மூன்று வயது. வீட்டிலேயே இருந்ததால் அப்பப்பாவின் வால் போலத்திரிவான். அவரது செல்லம்.
அம்பிகை கோப்பையில் நான்கு இட்லிகளுடன் சட்ணியும் வைத்துக் கொண்டு வந்து கலாதரனின் கையிலே கொடுத்தாள்.
நீண்டகால இடைவெளியின் பின் இட்லி. அப்பாவுக்குப்பிடித்தமான இட்லி.
இன்று இப்படிச் சாப்பிடக் கிடைக்கிறது. அந்த யுத்தத்தின்பிடியிலே,விளைவித்தநெல்லைவிட்டுவிட்டோடி வந்து,உணவுக்காக உயிரும் உடலும் தவித்த தவிப்பு
நிரையிலே நீண்ட நேரம் காத்து நின்றால் ஒரு குவளை கஞ்சி கிடைக்கும். அப்பாவும் நின்றார், கால்கள் கடுக்க, இருப்பதும் எழுவதுமாக, ஊரும் வரிசையில் அசைந்து அசைந்து. வரிசை வளைந்து வளைந்து முன்னே நீண்டு கிடக்கிறது.
இடையே வந்து புகுவோர், அதுகண்டுகுமுறுவோர் கஞ்சி கிடைக்கும் இடத்தை அண்மித்த போது முந்திவிடும் பரபரப்பு, இவற்றின் நடுவே கலாதரனுக்கு முன்னே ஒரு குவளை கஞ்சிக்காக தடுமாறி தள்ளாடி இதுவரை நெல் குவித்த கரம் நீண்டு நிற்கிறது.
கிடைக்கும் கஞ்சியை வடிகட்டி சோற்றுப் பருக்கையைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, மிகுதிக் கஞ்சியில் நீர் கலந்து பெரியவர்கள் குடிப்போம். அப்பாகஞ்சியைச் சாருமதியிடம் நீட்டுகிறார். “நீங்க குடிங்கோமாமா” "அப்பா நீங்கள் குடியுங்கோ நல்ல பலவீனமாய்ப் போய்விட்டீங்கள்”
அவர் எதுவும் பேசவில்லை பதறும் கைகளில் குவளை நடுங்கி நடுங்கி கஞ்சி தழும்ப சாருமதிமுன் பிடிவாதமாய் நீண்ட படி இருக்கிறது. மறுக்கவியலாமல் சாருமதி அதை வாங்கிக் கொள்கிறாள்.
அப்பா எங்களுடன் சேர்ந்துபட்டனி கிடந்தீர்களே. இப்போது எங்களுடன் சேர்ந்து சாப்பிட நீங்கள் எங்கே? இட்லி தொண்டையுள் விக்கியது. அம்பிகை ஒடிச் சென்று நீர் கொண்டு வந்தாள். எதைக் குடித்தென்ன? உண்ண முடியவில்லை; நெஞ்சை அடைத்தது.
“என்னாலை சாப்பிட ஏலேல்லை. நீ தம்பிக்கு இதைக்குடு, சாப்பாட்டை வீணாக்கிப்போடாதை”
மகளிடம் கோப்பையைக் கொடுத்து விட்டு எழுந்து கைகழுவினான்.கைக்கட்டுடன்படுக்கையில்கிடந்ததமிழ் வேள் எழுந்து எட்டிப்பார்த்தான். கையை இழந்து விட்ட அந்தப்பிஞ்சு அப்பப்பாவை தேடிக்கொண்டிருக்கிறது.
"சிதம்பரப்பிள்ளை அம்மானின் செத்தவீட்டுக்குக் போட்டுவாறன்"
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 97
“கொஞ்சம் ஆறியிருந்திட்டு, சாப்பிட்டிட்டுப்போங் . கோவன்” உள்ளேயிருந்து சாருமதி குரல் கொடுத்தாள்,
“என்னாலை சாப்பிடேலாது” அவன் உடைமாற்றி வந்து வாசலில் காலடி வைக்கவும் முத்துக்குமாரு அண்ணை ஈருருளியில் வந்திறங்கினார்.
“வாங்கோ அண்ணை இப்பிடி இருங்கோ’ “இல்லை உள்ளுக்கு வரேலாது. நான் செத்தவீட்டிலை நிண்டு வாறன். இரண்டு மூண்டு வீடுகளுக்குச் சொல்லப் போகோணும்”
“செத்த வீடெண்டு அறிவிச்சால் தான் போறதெண்டு முந்தின காலத்திலை சிலபேரிருந்தவை. இப்பவும் அப்பிடியோ? கலாதரன் அதிசயப்பட்டான்.
“இல்லையில்லை அறிஞ்சால் வருவினம், பத்திரிகை யிலை மரண அறிவித்தல் போடுகினம். முச்சக்கர வண்டி யிலை ஒலிபெருக்கி பூட்டி ஊருக்குள்ளை அறிவிக்கிறவையும் இருக்கினம், சொந்தபந்தம் இப்படி அறியாமல் போனால் குறைதானே, அதுதான் சிலருக்குச் சொல்லச் சொன்னவை'
"இங்கையும் சொல்லச் சொன்னவையோ" “இல்லையில்லை ஃபோன் வந்தது அதுதான் சொல்லிப்போட்டு போவமெண்டு வந்தனான்”
முத்துக்குமாரு அண்ணையின் குரல் ஒரு மாதிரித் தட்டித்தடவி வந்தது. கலாதரனின் உள்ளுணர்வு அருட்ட, நிமிர்ந்து அவரது முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவர் அவனை நேரே பார்ப்பதைத் தவிர்த்தார்.
"அ. வயசுபோனவையைப் பராமரிக்கிற எல்லா இடமும் 6ll q m fl é a т é a т th ஓரிடமுமில்லையாம்”
தயங்கியவர் படபடவெனக் கூறிமுடித்தார்.
எதிர்பார்த்த பதில் தான், அதே சமயம் மனம் இன்னும் அதை நம்பத் தயங்கியது."எங்கேயாவது இருந்தால் .?' என்ற நப்பாசை நம்பிக்கை கதவை மூடவிடாது தடுத்தது. x y9 “நிச்சயமாயோ அண்ணை? குரல் அடைத்தது o முததுககுமாரு அணணை அவனைப் பரிவுடன் பார்த்தார்.
"இனி யோசிச்சென்ன? உனக்கு மட்டும் நடந்த தெண்டில்லை. எத்தினையாயிரம் பேருக்கு நடந்திருக்குமனதைத்தேற்றப்பார் நான் போட்டு வரட்டே
அவர் புறப்பட்டார். கலாதரனும் தெருவிற்கு வந்தான்.
"செத்த வீட்டுக்கோ? நானும் அங்கைதான் போறன்"
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

பத்மநாதனும் கலாதரனுடன் நடந்தான்.
"சங்கரமூர்த்தி அண்ணை வீட்டிலை இருக்கிறீங்கள் போலை”
அறிந்த விடயத்தையே அசைபோட்டான் பத்மநாதன்.
“ஒமோம்” "அப்பாவைக் காணேல்லையாம்” “ஒமோம்” “எல்லாமுகாங்களிலுந் தேடிப்பார்க்கலாமேயாரோடையும் போயிருந்தாலும்”
“எல்லாம் விசாரிச் சிட்டம்” “சரியா விவரந்தெரியாமலும் சொல்லியிருப்பங்கள்” அவனுக்கும் ஒரு சந்தேகம் அப்படியிருக்கிறது தான்.திடீரென யாராவது அப்பாதங்களுடன் இருப்பதாக அறிவிக்கக்கூடும் என்ற ஓர் எதிர்பார்ப்பு உள்ளே ஒரு மூலையிலிருந்து துருதுருக்கவே செய்கிறது.
“முதலிலை சரியான விவரங்களில்லாததாலை அறியமுடியாதென் @ தான் சொன்னவை. பிறகு அறியக் கூடியதாயிருந்தது. يج
“அறியிறது சரியான கஷ்டமா மெண்டினம். “உண்மைதான் எத்தினையோ நடைமுறையள் மாறி, மாறி எழுதி கடைசியாய்ச்சொல்லிக்கினம்”
யார் எந்த முகாமிலென்று விசாரிப்பது சுலபமாயிருக்கவில்லை, எழுதிக் கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் எழுதிக் கொடுத்து சில மாதங்களின் பின் பெற்ற பதில் ஏமாற்றந் தந்தது.
இப்போது முத்துக்குமாரு
| CO V A அண்ணையின்பதிலும்.
/ கலாதரன முகததை சாலவையால />ウ/ துடைத்துக் கொண்டான், நடக்க
^©ಣ್ಣಿಟ್ಟಿ வியர்வையில் உடல் 2 'ஊறிவிட்டது.
ベ?〜 இதைவிட பலவீனமாக அப்பா 7 இருந்தார். அன்று அவர்கள் இருந்த இடத்திலிருந்து வேறிடம் ஒட்டபூ போய்க்கொண்டிருந்தார்கள் அப்பா ~) தள்ளாடினார். ஆனால் சமாளித்துக் கொண்டார். அதுமட் டுமல்ல செல்லப்பேரனை தோளில்
&B , ra
G
།
)
്യൂ
s ང་༽ சுமந்து கொண்டு நடந்தார். ーふ \ தமிழ்வேள் அப்பப்பாவின் தள்ளாட்டத்தை உணர்ந்து ފާeك<ހރިރ!
N
கொண்டானோ என்னவோ கீழே இறங்க முயன்றான். அவரும் அவனை இறக்கி விட்டு. கையில் பிடித்தபடி நடந்தார். கூட்டங்கூட்டமாக எல்லோரும் நடந்து கொண்டிருந் தார்கள். சனத்திரளுள் மகன் நழுவி விட்டால் கண்டுபிடிக்கவே முடியாது. கலாதரன் பயந்தான்.
95

Page 98
“சாருதம்பியைக் கையிலை பிடியுங்கோ” அவன் கூறியதும் சாருமதிமகனின் கையைப் பற்றி நடந்தாள். பேரனின் கரத்தைப் பிடித்த அப்பாவின் பிடி மேலும் இறுகியது. சிறிது நேரத்தில் சாருமதிதான் தன் பிடியை விட வேண்டி இருந்தது.
வீதியின் இருமருங்கும் தோரணங்கள் கட்டப்பட் டிருந்ததிலிருந்து மரணவீடு அண்மித்துவிட்டதென்பது தெரிந்தது. வீதியின் இடதுபக்கமிருந்த ஒழுங்கை வழியாகச் செல்வதற்கு. அத்தோரணங்கள் வழிகாட்டின, தென்னங் குருத்தில் தோரணஞ் செய்யும் போதே அங்கு அமங்கல நிகழ்வொன்று நடைபெறுவதை குறிக்கும் வகையில் அவை செய்யப்பட்டிருந்தன.
மேளச் சத்தமும் மரணவீட்டை அறிவித்தது. ஆனால் அது சாவீட்டில் அடிக்கப்படும்பறையொலியல்ல வெனச் செவி கூறியது அதே தாளலயத்தில் அடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அந்த காலத்தில் மரணத்தை ஊராருக்கு அறிவிக்கும் ஊடக மொன்றாக இந்தப் பறைமேளம் விளங்கியது. கோவில்களிலும் இவ்வாத்தியம் அடிக்கப் பட்டாலும் அதுவேறுபட்ட தாளலயத்தில் அடிக்கப்படும்.
மரண வீட்டில் பறையறைவோர் வந்ததும் வீட்டுப் பெண்கள் வந்திருந்து ஒப்பாரி வைப்பார்கள். அதைத்தொடர்ந்து பறையதிரத்தொடங்கும்.
மரணத்தின் பயங்கரத்தையும் வேதனையையும் அது நினைவுபடுத்துவதைத் தவிர்த்து விட்டு இரசித்தால் அற்புதமான வாத்தியம். நாம் அதையும் இப்போது இழந்து வருவது வேதனைதான்.
எங்கள் மரணங்கள் எப்படியெல்லாமோ அமைந்து முடிந்ததை விடவா இது வேதனை?
மரணத்தின் வருகையை அறிவிக்கும் வாத்தியங்களாக குண்டுவீச்சு, விமான ரீங்காரம், குண்டுகளும் ஷெல்களும் வீழ்ந்து வெடிக்கும் ஓசை படபடக்கும் வேட்டொலிகள்.
இவ்வெடிப்புகளால் எழும் மருந்து வாடை தொடர்ந்து குருதிமணம், பின்னர் பிண வாடை அந்தப் பூமியையே மரண பூமியாக பிணக்குவியல்களுடன் காட்சியளித்ததை கண்ணெதிரே கண்ட வேதனை உள்ளேயே உறைந்துவிட்டதே.
அவன் நிமிர்கிறான், எதிரே இரு மொந்தன் வாழைமரங்கள் குலைகளுடன் வாசலில் நின்று சாவீட்டை அடையாளமிடுகின்றன.
உள்ளே சீருடையில் பாண்ட் வாத்தியக் குழுவினர் ஒரு பக்கத்தில் காணப்படுகின்றனர். தகரப்பந்தல் போடப்பட்டு பிளாஸ்ரிக் கதிரைகள் அடுக்கப்பட்டு வந்தவர்கள் அவற்றில் அமர்ந்திருக்கின்றனர்.
அந்தக் காலத்தில் அமங்கல காரியத்திற்குத் தட்டுப்பந்தல் கிடுகினால் வேய்ந்து போடுவார்கள். சமயக்கிரியை நடைபெறுமிடத்தை சுமங்கலிப் பெண்ணொருவர் சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஆயத்தப்படுத்தி வைப்பாள். மறுபுறம் பூதவுடலை மயானத்திற்குக் காரில் கொண்டுசெல்வதற்காக பாடை
96

கட்ட கமுகு தறித்து ஆகவேண்டியவற்றைச் செய்வார்கள். பின்வந்த காலத்தில் தள்ளிச் செல்லக் கூடிய வண்டில் செய்து வைத்திருந்து பெட்டியில் வைக்கப்பட்ட உடலை அதில் வைத்து மயானத்திற்குத் தள்ளிச் சென்றார்கள். இப்போது அந்தியகாலச் சேவையில் மோட்டார் வாகனத்தில் கொண்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது.
உள்ளே சென்ற கலாதரனையும் பத்மநாதனையும் அம்மானின் மகன் கருணா, தந்தையின் பூதவுடல் இருந்த இடத்திற்குச் அழைத்துச் சென்றான்.
மேலே வெள்ளைச் சட்டி கீழே அந்தியகாலச் சேவையினரின் பிரேதப்பெட்டி தாங்கியின் மேல் வைத்திருந்த அழகியபெட்டியினுள் அம்மான் பட்டுவேட்டி மேலங்கி அணிந்து மலர்கள் தூவப்பட்டு இறுதித்துயில் கொள்கிறார்.
தலைமாட்டில் குத்து விளக்கு சுடர்விட ஊது பத்தி கமழ. வேலுப்பிள்ளை மாமாவின் நினைவு வர அதைத் தொடர்ந்து அப்பா கருணா தந்தையின் முகத்தை மூடியிருந்த மெல்லிய வெள்ளைத் துணியை விலக்குகின்றான்.
ஒரு முறுவலுடன் நீறணிந்து அமைதியான உறககம.
வேலுப்பிள்ளைமாமாவின் வெறித்த விழியும் வீங்கிய முகமும் திறந்த வாயும். கல்லிலும் முள்ளிலும் அவ்வுடல் கிடந்த கோரம்.
அப்பா இல்லையென்றால் அவர். அவர். அவரும். கலாதரன் விம்முகிறான். இருக்கையில் சென்றமர்ந்த அவர்களுக்கு முன் வெற்றிலைபாக்குத்தட்டைநீட்டி உபசரித்தசேனாதிராசா "அப்பாவைப் பற்றி ஏதும் தெரியுமோ?” என்ற வினாவையே முதலிலே கேட்கிறான்.
"சரியாய் ஒண்டும் தெரியேல்லை” “வேலுப்பிள்ளை பெரியப்பாவையும் தேடுகினம்” சேனாதி கூறியதுமே அதுபற்றிச் சொல்ல நாமுயன்றாலும், "அது வேலுப்பிள்ளை மாமாதானா?” சந்தேகம் வாய்திறவாது செய்துவிட்டது.
அன்று அவர்களும் வெளியேறி இராணுவமிருந்த பக்கம் போவதென்று தீர்மானித்துவிட்டார்கள்.
நடந்து கொண்டிருந்தார்கள். தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் பகுதி, பிணவாடையைச் சகித்துக் கொண்டு நடக்கவேண்டியுமிருந்தது. உடல்களைப் பார்ப்பதை அவன் தவிர்க்க முயன்றான். சற்று அருகாகக் கிடந்தது வேலுப்பிள்ளை மாமாவா? ஐயம் வரும் முன்பே “வேலுப்பிள்ளை மாமா” என உரத்துக் கூறிவிட்டான். அருகே போய்ப் பார்க்க வென அடியெடுத்து வைக்க "அம்பிகைக்குக்காட்டாதேங்கோ'
சாருமதி தடுத்தாள். அதே கணத்தில் ஷெல் வீசப்படும் ஒலிகாதுகளிற்பட்டது.
"குத்துறாங்கள் ஷெல் வரப் போகுது'
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 99
நடந்து கொண்டிருந்த எல்லோரும் ஒடிச் சென்று ஒவ்வோரிடத்தில் பதுங்கினார்கள். ஷெல்கள் விழுந்து வெடிக்கத் தொடங்கின.அவர்கள் ஒரிடத்தில் விழுந்து படுத்திருந்தார்கள்.
ஷெல் விழுந்து வெடிக்கவெடிக்க எங்கும் மரண ஒலமும் அவலக்குரல்களும்.
ஷெல் வீச்சு ஓய்வுநிலைக்கு வந்த பின் எழுந்து, பார்த்தால் அப்பாவையும் தமிழ்வேளையும் காணவில்லை.
அப்பா, வேள், எங்கு எப்படித் தேடுவது? மூளை வேலை செய்ய மறுத்தது. அந்த வேளை அவர்கள் இருவரில் ஒருவர் மரத்தின் பின்னிருந்து எழுந்து வந்தார்.
கடவுள் கைவிடவில்லை. வேலுப்பிள்ளை மாமாவின் எண்ணங்களை இந்த அல்லோலகல்லோலங்கள் விரட்டிவிட்டதால் அவர்கள் அந்த இடத்தைவிட்டு அவசர அவசரமாக நடக்கத்தொடங்கிவிட்டார்கள்.
"ஐயோ,ஐயோ, அப்பா, அப்பா போட்டாரே” சிதம்பரப்பிள்ளை அம்மானின் இரு புதல்விகளும் யாரோ உறவினரைக் கண்டதும் கதறி அழுதார்கள்.
அந்தக் காலத்தில் வீட்டிற்கு வரும் பெண்களும் வீட்டிலிருக்கும் பெண்களும் கைகளால் அணைத்துக் கொண்டு கூடியிருந்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். அந்தியேஷ்டிவரை அந்தி சந்தியில் உறவுகள் கூடி ஒப்பாரிவைப்பது வழமை. ஒரு வருடம் முடியும் வரை புது வருடம், தீபாவளி போன்ற தினங்களிலும் இறந்தவரை நினைத்து ஒப்பாரி படிப்பார்கள்.
ஒப்பாரி ஓர் இராகத்திலிருக்கும். அந்தப்பெண்கள் புலவர்கள் போல் சந்தர்ப்பத்திற்கேற்ப எதுகை மோனையுடன் இயற்றிப்பாடும் ஒப்பாரிமனதை உருக்கும். இப்போது பெரும் பாலும் அவ்வழக்கம் மறைந்து வருகிறது. சிலர் இப்படி அழுகிறார்கள். மற்றவர்கள் மெளனாஞ்சலிசெய்கிறார்கள்.
சிந்தனைகளும் அவனுமாக கலாதரன் மெளனமாக அமர்ந்திருந்தான். ஒருவருடனும் கதைக்க விருப்ப மில்லாமலிருக்கிறது. கதைத்தால் அப்பாவை ஏன் விட்டுவிட்டு வந்தாய்? என்ற வினாவில் அது போய் நிற்கும்.அதனால் அவன் பட்டவேதனை,படும் வேதனை அவனுக்கல்லவா தெரியும்.
அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். அதோ அந்ததடுப்பணையைக் கடந்தால் அவர்களின்பகுதிக்குப் போய்விடலாம்.
அப்போதுதான் அது நடந்தது. துப்பாக்கிகள் கடகடத்தன. குண்டுகள் விர்விர்ரெனச் செல்லும் ஓசையைக் காதுகள் உணர்ந்தன.
கீழே விழுந்து படுத்த அவர்களுக்கு எழுந்து பார்க்கப் பயம். சுடுகின்ற கரங்களுக்குரிய கண்கள் தம்மைத் துளாவுவதான பயவுணர்வு எழவிடாது அழுந்திக்கிடந்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

நீண்ட பொழுதின் பின் ஒவ்வொருவராக எழுந்த போது “கையிலை எரியுதப்பா” என்றான் தமிழ்வேள், பிஞ்சுக்கரத்தில் முழங்கைக்கு மேல் பிளந்து குருதி கொட்டிக்கொண்டிருந்தது.
அதைப்பார்த்ததும் சாருமயங்கி விட்டாள். அப்பா இருந்த படியே கைப்பையிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்துத்தந்தார். முகத்தில் நீர் தெளிக்க, அவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள். துணி ஒன்றை எடுத்து மகனின் கையில் கட்டும்போட உதவினாள்.
கட்டுப்போட்டாலும்வேள் கதறிக்கொண்டிருந்தான். கலாதரன் அவனைத் தூக்கிக் கொண்டு “வாங்கோ, கெதியாய்ப்போய்ச்சேருவம்” என்றான்.
“நீங்கள் போங்கோ நான் மெல்லவாறன்” இருந்தபடியே மெல்ல அப்பா கூறினார். "ஏனப்பா நடக்கேலாமலிருக்கோ?
“சன்னம்பட்டுட்டுதுபோல” “உங்களுக்குமோ அப்பா?”அவன் பதறினான். பெரிய காயம் கட்டுப் போட்ட பின்னரும் அவரால் எழுந்திருக்க இயலவில்லை.
மகனைத் தூக்க வேண்டும். அவரையுந் தூக்க வேண்டும். அவன் திகைத்தபோது சாரு முன்வந்து மகனைத் தூக்கிக் கொண்டாள். அவன் அப்பாவைத் தூக்கினான்.
என்னை விட்டுட்டுப் போங்கோ அப்பா மீண்டும் மீண்டும் அதையே கூறிக்கொண்டிருந்தார். அவர்களால் விரைந்து நடக்கமுடியவில்லை. இவர்களுக்குப் பின்னே வந்து காயப்பட்ட இரு குடும்பத்தினர் முன்னே செல்லத் தொடங்கிவிட்டனர். பின்னே எவருமில்லை. சாரு மகனைத் தூக்கிக் கொண்டுச் செல்ல சிரமப்பட்டாள். அணையில் ஏறிச் செல்ல வேண்டும்.
“கொஞ்சம் இருந்திட்டு போவாமே” சாரு கேட்டாள்.
“முன்னுக்குப் போறவையை விட்டால் நாங்கள் போகேலாது. பின்னாலும் ஒருதரையும் காணேல்லை. கொஞ்சதூரம் நடப்பம்"
“நீங்கள்என்னை விட்டுட்டுப்போங்கோ.என்னைப் பற்றிக் கவலைப் படாதேங்கோ. இந்தப் பிள்ளையஞம் நீங்களும் வாழ வேணும் சொல்லுறதைக் கேளுங்கோ” அப்பா முனகி முனகிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“என்னாலை ஏலாது. அவனையும் விழுத்திப் போடப்போறன்”சாரு கீழே இருந்து விட்டாள். பின்னே ஷெல்கள் விழும் சத்தம். முன்னே சென்றவர்கள் கையசைத்து அழைத்தார்கள்.
“என்னாலை ஏலேல்லை, கீழை கொஞ்சம் விடு” அப்பா கூற அவன் அவரையும் படுக்க வைத்தான்.
"ஷெல் விழுகுது, இவையைக் கொண்டுபோய் விட்டிட்டு வந்து என்னைக் கொண்டு போ.
அப்பா அவனைத் தூக்கவிடாது முரண்டு கொண்டிருந்தார். அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை.
97

Page 100
"அப்பா’ அவனது கரம் அப்பாவின் கரத்தைப் பற்றிக் கொண்டு பேசாது பேசியது.
கவனம் அப்பா
திரும்பிவந்துகொண்டுசெல்லும் எண்ணத்துடன் அவர்கள் எழுந்து நடக்க் நேர்ந்தது.
கணகணவெனமணியொலிகேட்டது. ஐயா வந்து இறுதிக்கிரியைகளெல்லாம் ஆரம்பித்து விட்டன. கும்பங்கள் வைத்து சுண்ணமிடித்து ஒரு தெய்வத்திற்கு அபிஷேகிப்பது போலக் குளிப்பாட்டி, அந்த உடலைத் தெய்வமாகக் கருதிக்கிளியைகள் நடைபெறுகின்றன.
வேலுப்பிள்ளை மாமா, அதேபோல் அப்பா, அதே போல் ஆயிரமாயிரம்பேர் எடுப்பாரின்றி அழுகி.
அப்பா இப்படிப்போய்கைதிபோல்மாட்டுப்படுவேன் என்று சத்தியமாய் நினைக் கேல்லை அப்பா. நீங்கள் இறுதிநேரத்தில்.
சால்வையால் அவன் வாயைப் பொத்திக் கொண்டான்.
0கள் உயிரிலும் மேலானவன்தம்பி! அவன் இருந்தால்
என்வீட்டிலுள்ே க்கமென் என் அயல் ஊருக்கும் பெரும்பலம் அவன்!
தம்பிஉள்ளவன் சண்டைக்கு அஞ்சான்!-என்பது
ண்மைதான்போலும்
அவன்எம்மோடு இருக்கும் காலங்களில். 8ങ്ങണു. 1860ണുബ. ! அது தப்பு
அவனோடு
நான்நாங்கள் என் அயல் என் ஊர் இருக்கும் காலங்களில் எங்களுக்கென்னகுறை !
தம்பி
ஒழுக்கத்தில் மேலானவன் ! தம்பி
 

“இங்கே நேற்றுப்பால் கொடுத்தார்கள். இப்போது வாய்க்கரிசி போடுகிறார்கள். உங்களுக்கு ஒரு துளி நீர் கிடைத்திருக்காதே அப்பா" - அவன்முகத்தைத் துடைப்பதுபோல் கண்களையும் துடைத்துக்கொள்கிறான்.
உறவுகள் ஒலமிட பெட்டியை மூடி பிரேத சாவு வண்டிக்கு கொண்டு செல்கிறார்கள். அதனுள் வைத்ததும் சாவு வண்டியை மூன்று தடவை பெண்கள் அழுதுகொண்டேசுற்றிவருகின்றார்கள்.
அந்த காலத்தில் மார்பிலடித்து அழுவார்களே அப்படி மாரடித்து அழுதால் சற்றுக் கவலை தீரும் போல் அவனுக்கிருக்கிறது.
அதிரும்பான்ட் வாத்தியத்தை மேவி படபடவென பட்டாசு வெடிக்கிறது.
"ஐயோசுடாதேங்கோசுடாதேங்கோ” கலாதரன்வாய்விட்டுக் கதறுகிறான்.
:
ன. உதயகுமார்
ரோசக்காரன்பொல்லாதவன் என்றெல்லாம் எங் க்குத் தெரியும் ஆனாலும்அவனை
Sisoir 666 நன்குபிடித்திருந்தது.
னென்ால்
அவன் பொய்பேசமாட்டான்.
அன்றொருநாள்
ங்களின் கூட்டத்தோடுகூட்டமாக தம்பிகாணாமல் போயிருந்தான்! ஆதலால் இன்று எழுந்து நடக்க இயலாதவனும் இருந்துகொண்டே-எங்களை உதைக்கிறான் மிதிக்கிறான்!
எப்பவருவன் எங்கள் அன்புத்தம்பி.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை. ஜனவரி 2011

Page 101
ன்றுவயதே நிரம்பிய அழகுபிரகாசிக்கும் எனது சின்ன்ஞ்சிறுமருமகனை"லிட்டில் கிங்நேசரிக்குகூட்டிச் செல்வதும் திரும்ப அவனை அழைத்து வருவதும் எனது பொறுப்பு மெல்லிய உடல்வாகு கொண்ட எனக்கு அந்த மழலைபேசும் குண்டுப்பயலை உந்திருளியில் ஏற்றுவதும் இறக்குவதும் சற்று சிரம சாத்தியமான கருமமாகத்தான் இருந்தது.
நேசரியை நெருங்கியதும் அவன் ஒரு மரநிழலை எனக்குக் காட்டி, தான் வரும் வரையில் அங்கு காத்து நிற்கும்படி என்னை வேண்டிக் கொள்வான்.
அவனது வகுப்பில் இருந்து பார்த்தால் அவனுக்கு அந்த இடம் பார்வையில் படும்படி இல்லை. ஆனால் மதியம் தான் திரும்பி வரும் வரையில் மாமா தன்னை எதிர்பார்த்து அங்கு காத்திருப்பார் என்ற அவனது நம்பிக்கை இருக்கின்றதே. அதற்கு கோடி கொடுத்தாலும் தகும்
அவன் தனது வகுப்பை நெருங்கியதும் அவனது ஆசிரியை. "நிரஞ்சன் வந்து விட்டார்’ என்று கூறி ஆர்வத்துடன் அவனை கஷ்டப்பட்டு அணைத்து தூக்கிச் செல்வதைப் பார்க்கும்போது எனக்கு அலாதியான ஒரு மகிழ்ச்சி உள்ளத்தில் பிரவாகிக்கும்
அந்த “நேசரி”யில் நூறு சிறார்கள் இணைக்கப் பட்டிருக்கிறார்கள். பத்து ஆசிரியைகள் பத்து சிறுவர்கள் வீதம் பொறுப்1 பேற்று ஒரு தாயின் ஸ்தானத் திலிருந்து பாதுகாத்தும். ஆசிரியர் என்ற ஸ்தானத்தில் இருந்து கல்வி புகட்டியும் தாதியாக சேவை செய்தும். பெண்ணுக்கும் பெண் மைக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனது சகோதரி சிறிது கறார் பேர்வழி
அதனால் T60 / என்னவோ எனது மருமகன் அந்த ஆசிரியை மேல் அளவற்றபாசம் காட்டுவான். ஒடிச் சென்று அணைத்துக் கொள்வான். பின் ஆர்வத்துடன் அவளை நிமிர்ந்து பார்ப்பான். அதன் பின் அவள் கண்களில் ஆனந்தக் கண்ணிர் அருவியிட அவனை வாரித் தூக்கி கொள்வதைப்பார்க்க எனதுமெய்சிலிர்க்கும்
ஆரம்ப நாட்களில் அவளது அழகை நான் எதேச்சையாகவே எடைபோட்டேன்.
செக்கச் சிவந்த நிறம். வாளிப்பான உடல்வாகு. சிரிக்கும் தோறும் மின்னலை வீசும் பரந்த முகம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2O
 

வளமான அடர்ந்த கேசம். முயலிரண்டைப் பிடித்தோர் முடிச்சிட்டமார்பழகு.
நேர்சரியும் ஒழுங்காக நடை பெற்றது. எனது உள்ளத்து உணர்வுகளும் ஆசை என்ற உரத்தின் மீது செழித்து வளர்ந்தது. அவள் நினைவுடனே தூங்கினேன். துயலெலுழும் பேர்தும் அவளையே நினைத்திருந்தேன். அவளை மீண்டும் மீண்டும் பார்ப்பதனால் அவள்மேலான கவர்ச்சியும் அதன் காரணமான அன்பும் மேலோங்கி. எனது எதிர்கால திட்டங்களுக்கு அத்திவாரமாயின.
நிர்மலா! எவ்வளவு அழகான பெயர். அந்தப் பெயருக்கு ஒரு கவர்ச்சி ஏற்பட்டதென்றால் அதற்கு காரணமானவள் அவளே! Mov
நாளாவட்டத்தில் அவளுடன் கதைக்கும் ஆர்வத்தில் மருமகனின் முன்னேற்றம் பற்றி விசாரிப்பேன். அவளும் பதில் தருவதில் ஆர்வம் காட்டினாள்.
அதனைச் சாட்டாக வைத்து ஒருவர் பற்றி மற்றவர் ஒரளவு விசாரித்து அறிந்து கொண்டோம். அவள் மனதைத் தெரிந்து கொள்வதற்காக பிறர் அறியாமல் அவளுக்கு ஒரு அன்பளிப்பை வழங்கினேன். அதனை அவள்மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதுமட்டுமல்லாமல் எவருக்கும் அது பற்றி மூச்சும் விடவில்லை. அது எனக்கு நம்பிக்கை
அளித்தது.
அன்றைய தினம் நான் உறுதியாக இருந்தேன். அவளை வற்புறுத்தினேன்.
நிர்மலா. உம்மை நான் தனிமையிலை சந்திக்க வேணும்.
நான் அடம்பிடித்தேன். அவளையோ பயம் பிடித்துக் கொண்டது. அவளது தேகம் நடுங்கியது.
'எனக்கு அப்படி பழக்கம் இல்லை அப்படி தனிமையிலை உங்களைச் சந்திக்கிறதெண்டு
99

Page 102
நினைச்சாலே உடம்பு வெலவெலத்துப் போயிடுது, என்னாலை ஏலவே ஏலாது. ஏதாவது அவசர செய்தியெண்டால் கடிதம் எழுதித்தாங்கோ.
பல காதல் விவகாரங்கள் கடிதங்கள் பிடிப்பட்டதனால் தான் சிக்கல்ஞக்குள் மாட்டுப்பட்டு இருக்கின்றன. அந்தத் தவறை நானும் விட முடியாது.
அன்று அவளை எப்படியும் சந்திப்பதென முடிவு செய்து கொண்டேன்.
மதியம் அவசர அவசரமாக மருமகனை வீட்டில் ஒப்படைத்துவிட்டுநேர்சறிவாசலுக்கு வந்துவிட்டேன். நிர்மலாவை அழைத்துச் செல்லும் முச்சக்கர வண்டிச் சாரதியிடம் நிர்மலா ரீச்சர் நேரத்துடனேயே சென்று விட்டதாக கூறி அவனைத் திருப்பி அனுப்பிவிட்டேன்.
அனைத்து ஆசிரியைகளும் சென்று விட நிர்மலா மட்டும் தயங்கி தயங்கி பாதைக்கு வந்தாள். அந்த ஒரு சில வினாடியில் அவளை நாடி பிடித்துபார்த்தேன்.
அவள் கூறினாள். என்னைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது. அதேபோல் உங்களைப் பற்றியும் நான் அறிஞ்சு கொள்ள சந்தர்ப்பம் இருக்கேல்லை. எங்கடை கலாச்சாரம் பற்றி உங்களுக்கு தெரியும் தானே. சாதி சனம் எண்டு சொல்லி வாளைத் தூக்கினாங்கள் எண்டால் எல்லாம் பிரச்சனையாய் போயிடும். உங்களுக்கும் எனக்கும் சின்ன வயது. உணர்ச்சி வசப்படுகிறது வேறை, யதார்த்தம் வேறை,
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சின்னப் பெட்டையாய் இருக்கிறாள். பொறுப்பாய் கதைக்கிறாள்.
நிர்மலா. நீர் காலத்துக்கு ஒவ்வாத விசர்க்கதை கதைக்கிறீர். எனக்கு மனச்சாட்சி இருக்குது. போக கடவுள் நம்பிக்கை இருக்குது. இது இரண்டும் உமக்கும் இருக்குமெண்டு நினைக்கிறன். அப்படி இருந்தால் நாங்கள் சேர்வதிலை எந்த பிரச்சினையும் இல்லை. அடுத்த முறை உம்மை தனிமையிலை சந்திக்கேக்கை நீர் முடிவு சொல்லித்தான் ஆக வேணும்.
அவள் செல்வதற்காக ஒரு முச்சக்கர வண்டியை ஒழுங்கு செய்துவிட்டு கவலையுடன் வீடு திரும்பினேன். எனக்கு இப்போது இருபத்தியாறு வயதுதான். நோர்சரிக்கு மருமகனை தினமும் அழைத்துச் செல்வதானது நான் தினமும் ஒரே பெண்ணை நேரில் அருகருகாக சந்திப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதுதான் என்னைக் காதலில் மாட்டி விட்டது. இச் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காவிட்டால், மற்றொரு சந்தர்ப்பம் இலகுவில் ஏற்பட்டிருக்காமலும் போயிருக்கலாம். வருடங்களும் வயதும் சென்றிருக்கலாம்
ஒரிரு கிழமைகள் நேர்த்தியாக போய்க் கொண்டிருந்தன.
O

எனது மருமகன் சிலதினங்களில் தன்னை தூக்கிச் செல்லுமாறு அடம் பிடிப்பான். அப்படியான நாட்களில் நிர்மலா என்னை உரசியபடி அவனை வாரி அணைத்துத் தூக்குவது எனது இதயத்தின் திக் திக் ஓசையை அதிகரிக்கச் செய்யும்,
நேர்சரியில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தத்தம்பிறந்தநாள் விழாவிற்கு ஏனைய சிறுவர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்க வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்து வரும் வாரத்தில் ஒரு நாள் எனது மருமகனின் பிறந்த நாள் விழா வந்தது. எனது சகோதரி நூற்றுக்கு மேற்பட்ட பரிசுப் பொருட்களைப் பொதி செய்து என்னிடம் கொடுத்திருந்தாள்.
ஆசிரியைகள் அன்றைய தினத்தை பெரும் விழாவாகவே ஏற்பாடு செய்திருத்தார்கள். சிறுவர்கள் வாழ்த்துப் பாடினார்கள். மருமகன் தனது கையாலேயே பரிசுப் பொருட்களை வழங்கினான். நிர்மலா அந்த வைபவத்தில் என்னையும் இணைத்துக் கொண்டாள். இடையிடையே கேலியும் கிண்டலும் செய்தாள். இப்படியான தன்மை அவளிடம் எங்கு ஒளிந்து, கொண்டிருந்தது என்று ஆச்சரியப்பட்டேன்.
மறுவாரம் நிர்மலாவின் வருகை திடீரென நின்று விட்டது. ஏனைய ஆசிரியைகளை விசாரித்ததேன். அவளது விலாசத்தை வழங்கினார்கள். அங்கு சென்று பார்த்தபோது கிடுகிலானான வீடொன்று எறிந்த நிலையில் காட்சியளித்தது. நிர்மலா அயல் வீட்டிலிருந்து ஒடி வந்து என்னை அங்கு வரும் படி சைகை செய்தாள். ஒரு வீட்டின் வராந்தாவில் வீட்டு தளபாடங்கள் சில குவிக்கப்படிருந்தன. வயதான மூதாட்டி ஒருவர் கதிரையொன்றில் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார். நிர்மலா என்னை அமரச் செய்து உபசரித்தாள். அவளது முகம் வாடியிருந்தது. எதையோ நினைத்தவளாக விம்மி விம்மி அழுதாள். நான் அவளைத் துணையாக ஏற்க முன்வந்த நாளையும் இன்றைய அவளது பரிதாப நிலையையும் அவள் ஒப்பிட்டு நோக்கியிருக்கக்கூடும்.
நான் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றினேன்.
பார்த்தீர்களா எனது நிலையை நான் பேராசைக்காரியாக இருக்க விரும்பாமல் தான் உங்களோடு ஒத்துப்போக மறுத்தேன்.
ஏழையாக இருந்தாலும் கூட எனக்கும் எதிரிகள் இருக்கிறார்கள். தங்கள் விருப்பங்களை சாதிப்பதற்காக என்னை வாழ்க்கையின் அடிமட்டத்திற்கு கொண்டு செல்லும் அவர்களின் நோக்கமே எங்கள் வீடு தீப்பற்றியமைக்குரிய காரணம்.
மகள் அழுவதைப் பார்த்து வயது போன அந்த மூதாட்டி தலையில் அடித்து அடித்து ஒப்பாரி வைத்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 103
அழுதாள். அவளது ஏழ்மை நிலையைப் பார்த்தப் போது சமூகத்தில் அவர்களது அந்தஸ்து நன்கு விளங்கியது.
எனது அனுதாபங்களை அவர்கள் இருவருக்குமே தெரிவித்தேன். பின்னர் எனது மனவேக்காட்டை நிர்மலாவுக்கு உணர்த்தும் முகமாக கூறினேன்.
நிர்மலா உமது வீடு எரிந்ததைப் பற்றி கவலைப்பட எனக்கு அவகாசம் இல்லை. வாழ்க்கை என்பது சக்கரம் போன்றது. உமது பொருளாதார நிலை, அந்தஸ்து ஆகியன நாளையும் மாற்றமடையலாம். அன்றைய எமது கேள்விக்கான உமது பதிலை இன்றைய நிலையிலும் உம்மிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன்
எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருந்தேன். எனது பிடிவாதம் அவளுக்கு ஆ ச் ச ரி ய த்  ைத க்
என்ன நினைத்தாளோ தாயை நிமிர்ந்து பார்த்தாள்.
அந்த மூதாட்டியும் எனது வார்த்தைகளைப் புரிந்து கொண்டிருக்கக் கூடும். அல்லது ஒரு இளைஞன் தனது இளம், அழகான மகளைத் தேடிவந்தால் அதற்கான அர்த்தம் 'விவாகம் என்பதே ' அவள் தேர்ந்த பொருளாகவும் இருந்திருக்கக் கூடும்.
தனது இருக்கையில் པ་. நிமிர்ந்து அமர்ந்தாள்.கேசத்தை ட ஒதுக்கிக் கொண்டாள். அழுதழுது களைத்த முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.
நிர்மலா என்னை அவளுக்கு அறிமுகம் செய்ய வேண்டி சில வார்த்தைகள் கூறினாள்.
அம்மா இவர் பெயர் ரஞ்சித் அரச தொழில் புரிகிறார். சில மாதங்களாகநேர்சரிக்கு வந்துபோவதால்பழக்கம். தம்பி. நீங்கள் எனது மகளுக்கு அனுதாபம் காட்டுகிறது எனக்கு விளங்குது. ஆனால் நீங்கள் தான் அவாவை காப்பாற்றவேண்டும் என்று ஒரு நிலை இல்லை. என்ரை சொந்தத்துக்குள்ளேயே அவளுக்கு மாப்பிள்ளைமார் இருக்கினம்.
இப்படிக் கூறி அவள் தனது முன்னைய குடும்பமட்ட அந்தஸ்துகளை மெச்சிக் கொண்டிருந்தாள்.
நான் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். நிர்மலா பின் தொடர்ந்தாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

கவலையிலும் அவள் அழகாக இருந்தாள். அழகு சாதனங்களைப் பயன்படுத்தாத நிலையிலும் அவளது கவர்ச்சி சிறிது கூட குன்றவில்லை!
அவளது கனிந்த பார்வை என்னிடம் எதையோ இறைஞ்சுவதை நான் ஆத்மார்த்தமாக உணர்ந்தேன். அவளிடமிருந்து விடை பெறும் போது மீண்டும் அந்த வார்த்தையை அடித்துக் கூறினேன்.
அடுத்த முறை உம்மை தனிமையிலை சந்திக்கேக்கை நீர் உம்மைப் பற்றிய முடிவை சொல்லித்தான் ஆக வேணும்.
எனது உந்துருளி ஆவேசத்துடன் விரைந்து பாய்ந்தது.
தன்னை சமாதானப்
படுத்திக்கொண்டு நேர்சரிக்கு வர, நிர்மலாவுக்கு சில தினங்கள் எடுத்தன.
அவள் வந்த பின்னர் 'நேர்சரி” மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது போல எனக்குத் தோன்றியது. அன்று s)ífuoas எனக்கு ஒரு தகவலை வழங்கினாள்.
அடுத்து வரும் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பெற்றோருடன் ஒரு க ல ந் து  ைர யா ட ல் இருப்பதாகவும் தவறாமல் கலந்து கொள்ளும் படியும் :... x வேண்டிக் கொண்டாள்.
இத் தகவலை எனது ககோதரிக்குத் தெரிவித்துபோது, தான் அக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதாக உறுதியளித்தாள். எதற்கெடுத்தாலும் அவர்கள் டொனேஷன் என்றும் கொன்ரிபியூஷன் என்றும் கேட்பதால் தான் அவள் தானே கலந்து கொள்வதாக கூறினாள் போலும்,
மறுகிழமை நான் அவளைச் சந்தித்த போது விபரம் கேட்டேன். எனக்கு இந்த அக்கறையெல்லாம் எப்போதிருந்து எதன் பொருட்டு ஏற்பட்டதென்பது பற்றி அவளுக்கு எந்த சிந்தனையும் கிடையாது என்பதை நன்கு தெரிந்து கொண்டு நிர்மலா ரீச்சர் பற்றி விசாரித்தேன்.
'எனக்கு அவாவைப்பிடிக்காது தம்பி வடிவான பெண்கள் ஆண்களை அதிகம் கவர்வதால், சாதாரண பெண்களுக்கு அவர்கள் மேல் வழமையாகவே ஒரு புகைச்சல்
们售

Page 104
ஏன் அவா நல்லவாதானே அக்கா? நான் அப்படி வினாவவும் அக்காவின் முக பாவம் மாறிவிட்டது.
நல்லவாதான்.அநியாயமாக அங்கைபகுதிநேரமாக வேலைசெய்த"கிளார்க்”பெடியனுக்குவேலை இல்லாமல் செய்து போட்டா'
எனக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. ஏன் அக்கா? - அந்த பெடியன் இவளை விரும்பியிருக்கிறான், இவாவின்ற எடுப்புச் சாய்ப்புக்கு அவன்ரை வடிவும் நிறமும் போதாது போலை. இவள் மறுத்துப் போட்டாள். அவனோ விடேல்லை, பின்னாலை பின்னாலை திரிஞ்சு இருக்கிறான். அது இரண்டு பேருக்கும் இடையிலை சண்டை சச்சரவாய் வளர்ந்திட்டுது.
அக்கா கதைசொல்வதை நிறுத்திவிட்டுவேறுஏதோ யோசனையில் ஆழ்ந்து விட்டாள்.
நான் விடவில்லை. பிறகு என்ன அக்கா நடந்தது? இவள் ஏதோ அபாண்டமாய் சொல்லித்தான் மடம் அவனை வேலையாலை நிப்பாட்டினவவாம்'
எனக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. எதுவாக இருந்தாலும் நிர்மலாவை நான் அவளது வீட்டில் சந்திக்கச் சென்ற போது கூறியிருக்க வேண்டுமே தனது தகுதிக்கு அந்த நிகழ்ச்சிபாதிப்பாக இருக்கலாம் என்று நினைத்தாளா? அல்லது என்னுடனான உறவுக்கு முக்கியதுவம் கொடுத்தாளா? அல்லது அவளது தாயார் கூறியதுபோல அவளுக்கென ஒருவரன் ஏற்கனவே அமைந்து விட்டதா?
எனது மனத்தில் சலனங்கள் அதிகரித்துக் கொண்டே வந்தன.
சில நாட்களாக தொடர்ந்து வற்புறுத்தியதில் அன்றையதினம்என்னை கடற்கரையில் சில நிமிட நேரம் சந்திக்க உடன்பட்டாள்.
மாலை வானமும். பரந்த அலைகடலும். குளுகுளு என்ற காற்றும் மனதுக்கு இதமாக இருந்தன. இள மஞ்சள் நிற நைலோன்’ சேலையில் அவள் அழகு பார்ப்பவர்களை கொள்ளையிடுவதாக இருந்தது. ஒரு கொங்கிரிட் பெஞ்சில்' என் அருகாக அமர்ந்தாள். பல மணிநேரம்மொபைல் போனில் கதைக்கும் காதலர்கள் அந்த ஒரு பொழுதை அனுபவித்துப்பார்க்க வேண்டுமே இளைஞனான எனக்கே அந்த அனுபவம் உடல் புல்லரிக்க வைத்தது. ஒரு இளம் பெண்ணின் பதட்டத்தையும் மனோ நிலையையும் எப்படி வர்ணிக்கக் கூடும்.
நிர்மலா.என்ரைசொல்லைக்கேட்டுநீர்வந்ததுக்கு நான் நன்றி சொல்லித்தான் ஆக வேணும். நான் முக்கியமாய் விரும்புகிறதென்னவெண்டால்,
102

உம்மைப் பற்றிய எந்த விஷயமும் எனக்கு மறை பொருளாய் இருக்கக் கூடாது. இப்ப உமக்கு நான் தாற இந்த சந்தர்ப்பம் நீர் உம்மை என்னிடம் ஒப்படைப்பதற்கான ஓர் வாய்ப்பே தவிர வேறில்லை
கடற்கரைக்குப் போவதில் ஒரு வசதி. முகத்தைப் பார்த்துக் கதைக்கத் தேவையில்லை ஆழ்கடலின் அலைகளைப்பார்த்தபடியே பேசலாம்.
நிர்மலா இப்போ வினாவினாள். ஏன் நிரஞ்சனைக் கூட்டி வரேல்லை? பெண்களுடைய சாகசத்திற்கு எல்லை இல்லை என கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது தான் நேரில் அனுபவிக்கத்தொடங்கியிருக்கிறேன் போலும்,
நானும் விட்டுவிடவில்லை நிரஞ்சனுக்கு கடற்கரைக் காத்து ஒத்துவராது. ஒரு முக்கியமான விடயத்தைப் பேசி தீர்மானித்து விட்டவள் போல அமைதியாக இருந்தாள்.'
நிர்மலா நான் உம்மை மனதார விரும்புறன்.உம்மை மறக்க என்னாலை (փlգեւյTՑj]. உம்மை கைப்பிடிக்கிறதுக்காக என்ன விலை கொடுக்கிறதுக்கும் நான் தயாராக இருக்கிறன். உம்முடைய முடிவை மட்டும் நீர் சொல்லும், அதுவும் இப்பவே சொல்லும்;
நான் அழுத்தம் திருத்தமாக எனது முடிவை கூறினேன். நிர்மலாவின் கண்களிலிருந்து நீர் பொலபொலவென ஊற்றெடுத்தது. நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து எழும் விம்மல்களுக்கு மத்தியில் அவள் பேசினாள்.
ரஞ்சித். என்னை உங்களிடம் ஒப்படைப்பதில் உள்ள பிரச்சினைகள் பற்றி கருத்துக்கெடுக்காமலே நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறியள்.எனது சாதி, சமயம், ஏழ்மை நிலை, குறைந்த கல்வி, குறைந்த அந்தஸ்து இவையெல்லாமே உங்கடை தகுதிக்கு பொருத்தமில்லாமல் இருக்கிறதை நீங்கள் நேரிலையே பார்த்தும் ஏன் புரிஞ்சு கொள்ள மாட்டாமல் இருக்கிறியள். இதுக்கு மேலாலை என்ரை அழகு கூட உங்களுக்கு ஆபத்தாக முடியலாம்.உண்மையிலேயே இதையெல்லாம் நீங்கள் யோசிக்கிறியளாஎண்டது எனக்குப்புரியேல்லை இப்போது அவள் விழிகள் என் மீது நேரடியாக மோதின. தொடர்ந்து பேசினாள்.
ரஞ்சித். என்னுடைய அழகில் கொண்ட மயக்கம் தான் ஒரு இளைஞனை எனது வீட்டிற்கு தீ வைக்கிறதுக்கு தூண்டினது. நான் ஏழைஎதிரிகளின்ரை பகைமைக்கு இலகுவிலை இலக்காக கூடியவள். என்னிலை உள்ள உங்கள் காதல்தான் உங்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுறதாயும் முடியும், இதையெல்லாம் ஏன் சிந்திக்க மறுக்கிறீங்கள்.?
அப்படிக் கூறிவிட்டு அவள் ஒரு நிமிடம் நிற்கவில்லை அவள் போன வேகத்தில் நான் அவளைப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 105
பின் தொடர்ந்தால் மற்றவர்கள் கண்களுக்கு அது சரியாகப்படாது −
நிர்மலா.நீ-போ-இந்த உலகத்தின் அந்தலைக்கே போவதாயினும் போ. எனது முடிவையிட்டு நான் பயந்து ஒதுங்கப்போகிறதில்லை.
சில நாட்கள் எனது மனதில் சஞ்சலமும் பீதியும் மாறி மாறி பிரதிபலித்தன.
நாள்தோறும் நேர்சரியில் நிர்மலாவை சந்திப்பது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
ஒரு நாள் மடம் - அந்த ஆரம்ப பாடசாலையின் ஸ்தாபகர் என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தாள்.
நான் அவளைச் சந்தித்த போது அவள் நீங்கள் நிரஞ்சனின் மாமா தானே? என வினவி என்னைத்திகைக்கடித்தாள்.
சிறந்த நிர்வாகம் என்பது ஞாபக சக்தியுடனும் தந்திரோபாயத்துடனும் அதிகம் இணைந்திருக்கின்றது
'நீங்கள் சொல்லுறது சரிதான் மடம் நான் உங்களுக்காக என்ன செய்ய வேணும்? நான் வினவினேன்.
எங்களுடைய நேர்சரியில் பகுதி நேர நிதி நிர்வாக அலுவலர் பதவி ஒன்று வெற்றிடமாக இருக்கிறது. சிறிய சம்பளத்துடனான இந்த வெற்றிடத்தை சேவை மனப்பான்மை உள்ள எவரெண்டாலும் தான் நிரப்ப முன் வருவார்கள். நிர்மலா உங்களை விதந்துரைத்ததால் கேட்கிறன். கோவிக்கமாட்டியள் எண்டு நம்புறன்.
பதில் கூறுவதற்கு இரண்டு நாள் அவகாசம் பெற்று வெளியேறினேன்.
அந்த இடைவேளையில் முன்னர் பதவி வகித்த இளைஞனை சந்தித்தேன்.
அவனது பெயர் மதன். பார்ப்பதற்கு சுமாரான தோற்றத்தைக் கொண்டவனாக இருந்தான். எனது சகோதரி கிளாக் என்று குறிப்பிட்டுக் கதைத்தது இவனைத்தான். நிர்மலா காரணமாக வேலையை இழந்த அந்த இளைஞனும் இவன் தான்.
அவனுக்கு கதை கொடுத்துப்பார்த்தேன். அவனது முகம் விகாரமாக மாறியது. மடம் தனக்கு தவறிழைத்து விட்டதாக அடித்துக் கூறினான்."
ரஞ்சித் உங்களை நான் அதிகம் அறியமாட்டேன். ஆனாலும் உங்கள் முகத்தையும் பண்பான வார்த்தைகளையும்பார்த்துஉண்மையைகூறுகிறன்.ஒரு பெண் நான் தன்னை விவாகம் செய்யவற்புறுத்துவதாக கூறுவதாலை மட்டும் நான் பிழைகாரன் எண்டு எப்படி தீர்மானிக்க ஏலும் V
தான் சாய்ந்து நின்ற சுவரினை தனது பலமான முஷ்டியால் வேகமாக தாக்கினான்.பின்னர்.
அந்த மடம் ஒருமுட்டாள் என உரக்க சத்தமிட்டான் பின்னர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

விவாகம் செய்த எந்தப் பெண்ணையும் ஒரு இளைஞன் தன்னை மணம்முடிக்க சொல்லி வற்புறுத்த மாட்டான்.அதைக்கூடபுரிந்துகொள்ளமுடியாத முட்டாள் அவள்
அவன் கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அவன் அமைதி அடைவதற்கு சில நிமிட நேரம் தேவைப்பட்டது. அவனது தோள்களை அன்பாக அரவணைத்தபடி கேட்டேன்.
"உன்னைப்பற்றியார் முறைப்பாடு செய்தார்கள்?”
மதன் எனதுமுகத்தை முறைத்துப்பார்ப்பது எனக்கு பயமாக கூட இருந்தது
அவள்தான்! அந்த நிர்மலா என்ற கழுதை தான்! அவளைப் பற்றி எவருக்குமே தெரியாது. அவள் அப்படி நடிக்கிறாள். ஆனால் தனது பாடசாலை வாழ்க்கையின் போதே அவள் ஒரு இளைஞனை இரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டாள். கொஞ்ச நாள் அவனுடன் தங்கியும் இருந்தாள். பெற்றோர் இதனை அறிஞ்ச உடனை குறைஞ்சவயதை காரணமாகக் காட்டி நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுவிட்டாள். அவள் ஒரு கன்னியல்ல;கலியாணம் முடித்தவள்.
அவனது ஒலம் எங்கெல்லாமோ சுவர்களில் பட்டு
எனது செவிகளில் எதிரொலித்தது.
“அவள் கன்னியல்ல. கன்னியல்ல.
கன்னியல்ல."
நான் சிறிதும் எதிர்பாராத அந்த செய்தியை
என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
அவளை அடைவதற்காக என்ன விலை கொடுக்கவும் தயார் என்ற எனது உறுதிமொழிகாற்றில் தள்ளாடியது. சாதிமதம், ஏழ்மை, குறைந்த கல்வி,கீழான அந்தஸ்து அனைத்தையும் துச்சமென தூக்கி எறிந்த எனது மனதுக்கு என்ன நேர்ந்தது.
ஒரு கணம். ஒரே ஒரு கணம்தான். இரண்டுகண்களையும் இறுகமூடிக்கொண்டேன். செக்கச் சிவந்த நிறம். வாளிப்பான உடல் வாகு. சிரிக்கும் தோறும் மின்னலை வீசும் பரந்த முகம். வளமான அடர்ந்த கேசம். முயலிரண்டைப் பிடிச்சோர் முடிச்சிட்டமார்பழகு.
நிர்மலாவின் அழகு தோற்றம் என் கண்முன் விரிந்தது. அவளது உள்ளத்தின் குழந்தைத் தன்மை முகத்தில் தெரிந்தது. விபரம் அறியாத சிறு வயதில் எவருமே தவறுவதில்லையா?
அவளுக்கு மட்டும் தண்டனையா? ஆயிரம் மதன்மார் என்ன. இந்த சமூகமே என் முன்னால் விசுவரூபம் எடுக்கட்டும்.
நிர்மலா நீ மட்டும் உன் முடிவைக் கூறிவிடு
103

Page 106
|
報
க்கிம் என் வீட்டு வாசல் கதவைத் திறந்து கொண்டு உரிமையோடு வீட்டிற்குள் வருவதைப்பார்த்து, வாசலில் நிற்கும் வாழைப்பாத்திக்குள்படுத்துக் கிடந்த நாய் பொட்டு, அனுகி விட்டு மீண்டும்படுக்கிறது.வழமை போல் என்னிடம் அவன் மச்சானுக்கு கடிதம் எழுதிக்கேட்டு, விடியலிலேயே வந்து நிற்கிறான். இரவெல்லாம் பெய்த பனியை, சூரியன் மூச்சுப்பிடித்து விழுங்கிக்கொண்டிருக்கிறான். வெள்ளாப்பு விலகி ஒடுவதைப் பார்த்து என் புற வளவிற்குள் நிற்கும் மாமரத்திலிருந்து குயிலொன்று, தனிமையில் கூவிக்கொண்டிருக்கிறது, செய்யதிர நங்கிண வாயன் அகமது 'புள்ளேய்கரவலச் சூடல் பாரக்குட்டி இரிக்கு வேணுமாகா.?” இப்பதான், நம்முட வடிவன் தோணிலுக்குபட்டமய்யறுக் கிழங்கு போட்டுபாலாணங் காச்ச சோக்காரிக்கும். நூறு ரூபாக்கு தரயா? நானும் நாலிடத்துக்கு போகணும். வேணுமென்டா வாகா.” என்று என் வீட்டுக் கடவலடியில் நின்று, என் மனைவியைக் சுப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.
அப்பொழுது, கடிதத்திற்காக தலையைச் சொறிந்து கொண்டிருக்கும் அக்கிம் “ கப்பல்ல பொட்டியெல்லாம் கொழும்புக்கு வந்திற்ராம். எங்கிடமய்யதின் காக்காவும் தறதறத்தாண்ட மகன் அலியாரும் லாவைக்கு கொழும்புக்கு போறயாம். எல்லாம் மூணு பொட்டிகள் வந்திரிக்காம் .ஒருபொட்டிக்குள்ள நெறய உடுப்புகளாம். மத்த ரெண்டி பொட்டிகள் நெறய ரீவியாம், டெக்காம், சின்னச்சைக்கிளாம், எனக்கு மொட்டச் சைக்கிளாம் படுக்கிற கட்டிலாம் கதிரச்செட்டுகளாம், அப்பிளாம் சொக்லெற்ராம் என்ற வாப்பாகனக்கச் சாமானெல்லாம் வருகிரதாம். எல்லாத்தயிம் எங்கிட சலாமா லாத்தா சொன்னா.” என்று அவன் விருப்பப்படியெல்லாம்
*
 
 
 

See GFIS சொல்லிச்
9 as
as
o o *88 சிரிக்கிறான்.
R விபரிக்க முடியாத si ஆசையில் மூழ்கித் தவிக்கும் அக்கிமுக்கு at 6.Jug, goir பகக் 賦蠶"醬 எதையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் , இவனுடைய குடும்பம் வசதியற்ற பெரிய குடும்பம், ep ன் பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ள இவன் குடும்பத்தில் இவன் தான் கடைசிப்பையன். மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த இவன் பெற்றோர்கள் இவனின் மூத்த சகோதரியை ஒரு சாரதிக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமணம் முடித்து ஆறு மாதத்தால் இவனுடைய மச்சான் கட்டார் நாட்டிற்கு சாரதி வேலைக்குப்போய்,அங்கு வாகனவிபத்தொன்றில் சிக்கி இறந்துவிட்டான்.சுமார் அக்கிம் ஐந்து வயதாக இருக்கும் போது தான் இவன் மச்சான் கட்டார் நாட்டிற்கு வேலைக்குப் போனான். இவன் கட்டார் நாட்டில் மரணித்து, அங்கேயே அடக்கம் செய்த விபரங்கள் எதுவுமே அக்கிமுக்கு தெரியாது. பாவம் இன்று வரை இவன்தன்மச்சான் கட்டார்தேசத்தில்சாரதியாக வேலை செய்து கொண்டிருப்பதாகவே எண்ணிக் கொண்டிருக் கிறான். சிறுவனாக இருக்கும் போதே அக்கிம், மூளைக் குறைபாடுள்ளவனாகவே இருந்தான். இன்று அதே நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஊரில் இவன் யாரைக் கண்டாலும் இந்தப் பொட்டிக் கதைகளைச் சொல்லிச் சொல்லி திருப்தியடைவான். இதில், இவனுக்கு ஒருவித மகிழ்ச்சியும் பெருமையும்.
அக்கிம், யார் வேலைக்குக் கூப்பிட்டாலும் போய்ச் செய்து கொடுப்பான். எவர் எதைச் சொன்னாலும் கோபப்பட மாட்டான். இதனால், இவன் மேல் எல்லாருக்கும் பாசம்.அக்கிம் என்னிடம் கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது என் மனைவி வருகிறாள். இவள் அக்கிமைக் கண்டு அக்கிம்" என்ன மச்சான்டபொட்டியெல்லாம் வந்திற்ரா?ஒனக்குமச்சான் என்ன அனுப்பிரிக்கிறாராம்?” என்று சிரித்துக்கொண்டு கேட்கிறாள். அக்கிம் என் மனைவியின் கேள்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் போல் “வா லாத்தா.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 107
பொட்டியெல்லாம் கொழும்புக்கு வந்திற்ராம் பறவக் கப்பல்ல ஒரு பொட்டியாம் தண்ணிக்கப்பல நாலு பொட்டியளாம் எல்லாப் பொட்டிக்குள்ளயிம் கனக்கச் சாமான் வருகிதாம். சின்னச் சைக்கிளாம், ஒரு வெள்ளக்காறாம், ஒரு மொட்டச் சைக்கிளாம், எனக்கு ரெண்டு கறுத்தலோங்கிசிம், அஞ்சிவெள்ள லோங்கிசும், பத்து சட்டயிம் வருகிதாம் எங்கு லாத்தாக்கு காப்பாம், நெக்கிள்சாம், பட்டுப் பொடவயளாம், செருப்பாம், பாவாடயாம், நெறயச் சாமான் எல்லாம் அனுப்பிரிக்காம் என்று அவன் சொல்லி முடிப்பதற்குள். “அப்ப ஒனக்கு திங்கிறதுக்கு ஒண்டும் அனுப்பல்லியாமா” என்று என் மனைவி கேட்கிறாள். அதற்கு அக்கிம் தன் காவி படிந்த பற்களையெல்லாம் வெளியில் காட்டிச் சிரித்துக் கொண்டு “என்ர வாப்பா நெறயச் சொக்கிலட்டு, டொபி, விஸ்கோத்து, ஜூசுப் போத்தல், அப்பிள் எல்லாம் வருகிதாம், எனன்டு டெலிபோனில லாத்தாட்டச் சொன்னயாம். பொட்டி வந்தா ஒனக்கும் எங்கிட சேறுக்கு டொபி, சொக்கிலெட்டெல்லாம் கொண்டாந்து தருவாங்க. எங்கிட தங்கச் சேறு எழுதித்தாற கடிதத்த மச்சான் வாசிச்சிப் போட்டுத்தான், இவளவு சாமானெல்லாம் அனுப்பிரிக்காரு” என்று எங்கள் மேல் அவனுக்குள்ள அன்பையும், பாசத்தையும் புடம் போட்டுக் கொண்டிருக்கிறான்.
இன்று அக்கிமின் சகோதரி தன் கணவன் கட்டாரில் இறந்து, இரண்டு வருடங்களின் பின் வேறு ஒருவரைத் திருமணம் முடித்து வாழ்கிறாள். அக்கிம் தற்பொழுது இவளுடைய வீட்டில் தான் இருக்கிறான். பாவம் சின்ன வயதிலேயே மனநோயாளியாகிப் போன இவன் வாழ்க்கையில் இவனுக்கு தெரிந்ததெல்லாம் இந்தப் பொட்டிக் கதையும், சிரிப்பும் தான். அக்கிம் பள்ளிகளில் பாங்கு சொன்னால் போதும், உடனே கை கால்களைக் கழுவிக் கொண்டு போய்த் தொழுவான். எத்தனை தரம் தொழ வேண்டுமென்ற கட்டுப்பாடே இல்லாமல் அவன் விரும்பியபடி தொழுது கொண்டே இருப்பான். இவன் தொழும் பொழுது இவனை யாருமே கட்டுப்படுத்துவதில்லை. அப்படி மீறி இவனை யாராவது கட்டுப்படுத்த முயற்சித்தால், இவனுக்கு உடனே கோபம் வந்து வாய்க்கு வந்த படியெல்லாம் பேசுவான். இதனால், இவன் தொழுகையை இறைவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டு விடுவார்கள். அக்கிமின் தலையில் எப்பொழுதும் தொப்பி இருக்கும். தொப்பி இல்லாமல் இவன் எங்குமே போவதில்லை.
அப்பொழுது வாழைப்பாத்திக்குள்படுத்துக் கிடந்த நாய் பொட்டு அணுகிக்குரைக்கிறது.“ங்.ஒனக்குசும்மா படுக்கேலா. எப்பயிம் என்னக் கண்டா ஒனக்கு நரி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

வெரட்ற.” என்று சொல்லிக் கொண்டு என் ஆமவட்ட வயற்காரன் கபூர் வருகிறான். வந்தவன் என்னோடு நின்ற அக்கிமைப் பார்த்து “ அக்கிம் என்ன மச்சான் கடிதம்போட்டாயா?பொட்டியெல்லாம்வருகிதாமா'என்று கேட்டுகிறான். அதற்கு அக்கிம் சந்தோஷமாக “ஓம் காக்காலாவுமச்சான்டெலிபோன் பேசி எல்லாத்தையிம் லாத்தாட்ட சொல்லிற்ராரு.இன்டைக்கும் கடிதம் எழுதிப் போடப்போறன்’அதுக்குத் தான் சேரிட்ட வந்த. சேறு கடிதம் எழுதித்தான் இந்த பெட்டியெல்லாம் வருகிது. சேறு நல்ல செப்பமா கடிதம் எழுதி தாற. போன கடிதத்திலநம்முடதோட்டத்துப்பள்ளிக்கு, அஞ்சாறுபேன் வாங்கி அனுப்பச் செல்லி எழுதிப் போட்ட இப்ப வாற பொட்டிக்குள்ள அஞ்சிபேனும், ஒரு தண்ணிப் பம்மும் வருகிதாம்” என்று சொல்லி தன் காவி நிறப்பற்களைக் காட்டிச் சிரிக்கிறான். இவன் அடிக்கடி என்னிடம் வந்து, எழுதிக் கேட்கும் கடிதத்தின் ரகசியம் எனக்கு மட்டும் தான் தெரியும்.மனநோயாளியான அக்கிம் நான், எழுதிக் கொடுக்கும் கடிதத்தின் மூலம், மன அமைதி பெற்று மகிழ்ச்சியடைகிறான். இதற்காகவே, நான் கேட்கும் போதெல்லாம் அவனுக்கு கடிதம் எழுதிக்கொடுக்கிறேன்
இதில் எனக்கு மன ஆறுதல்.
105

Page 108
அப்பொழுது மீண்டும் என் நாய் பொட்டு குரைக்கிறது.
“புள்ளேய் என்னயிம் அதியாத்தாங்கம்மா.போன வரிசம், என்ர புரிசனும் ரெண்டுபுள்ளயஞம் சொனாமில மவுத்தாப்பெயித்தாங்க. எங்கிடஊட்டில நாங்க ரெண்டு பேரும்தான் மிஞ்சின. இப்ப எங்களப் பாக்கக் கேட்க ஒருவருமில்ல. எங்கிட ஊரு பள்ளி ஆக்களும் கடிதம் தந்திருக்காங்க. இந்தக் கொமருப் புள்ளைக்கு ஒரு ஊட்டுக் குஞ்ச வெச்சிக் குடுக்கணும். வளவு மட்டும் தான் கெடக்கு” என்று கெஞ்சிக் கொண்டு என் வாசல் கடப்படியில் பெண்ணொருத்திதன் குமருப்பிள்ளையோடு வந்து நிற்கிறாள். வானமும் ஒரு மாதிரிக் கேரிக் v கொண்டிருக்கிறது. நெல் எறிந்த என் ஆமவட்டை வயலுக்கு, மழையில்லாமல் எறிந்த நெல்லை குருவிகளும் எறும்புகளும் சாப்பிட்டுக் கொண்டி ருப்பதாக அடிக்கடி வயக்காரன் சொல்லிச் சொல்லி வேதனைப்பட்டு கொண்டிருக்கிறான். அப்பொழுது என் மனைவி நூறு ரூபாய் காசைக் கொண்டு வந்து பெண்ணிடம் கொடுத்து விட்டு பெருமூச்சு விடுகிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்கிம், “லெக்கோ நளைக்கு நீங்க ரெண்டு பேரும் எங்க லத்தாட ஊட்ட வாங்ககா. எங்க மச்சான் அனுப்பின பொட்டியெல்லாம் கொழும்பில இருந்து வருகிது. அதுக்குள்ளவாற பொடவயில ஒனக்கும் ஒன்ட புள்ளைக்கும் எடுத்துத் தாறன்"அதுக்குக்கூடஒருடேப்பும்டெக்கும் லாத்தாட்ட வாங்கித் தாறன்’ என்று சொல்லி வேதனையோடு நிற்கிறான். மறைந்து போன மனித நேயம் உலகில் உண்டு. உயிர் பெற்றுச் சிரிக்கிறது. “சேர் மச்சானுக்கு அனுப்புறகடிதத்த ஒழுப்புளம் நல்லா எழுதித்தாங்க.அதில எனக்கு ஒரு ஜப்பான் மணிக்கூடும் வாங்கி அனுப்பச் செல்லுங்க மணிக் கூடு இல்லாம கை கொளறிது ஒருதரம்மச்சானையும் ஊருக்கு வந்துபோகச்சொல்லி எழுதுங்க. மச்சான்டமொகத்தப்பாத்து எவளவு காலமாய் போச்சி, என்ர சின்ன வயசில அவரப் பாத்த லாத்தாவும் வேற கலியாணம் முடிச்சி ரெண்டு புள்ளயஞம் பெத்துப் போட்டா மச்சான் ஊருக்கு வந்தாலாத்தாவ கலியாணம் முடிச்சிக்கிரிக்கிற வெல்லடிச்சான்ட மகன அடிச்சி வெரசிருவன். லத்தாட்டயிம் இதச் செல்லிற்ரன்” என்று சொல்லிக் கொண்டு அக்கிம் கடிதத்தை எழுதிக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
“பாவம் அவன்ர கடிதத்த எழுதிக் குடுங்களன். ஒங்களுக்கு இப்படி அரலூசி, கால் லூசிகள் வந்தாப்
16

போதுமே.சோத்தயிம்மறந்துகதச்சிக்கிருப்பீங்க ஓங்கள ஒரு நாளும் திருத்தேலா. கபூரு மொள எறிஞ்சவன்ட காசிகேட்டுக்கு நிக்கிகான். டக்கொண்டு எழும்பிக்கி வாங்க” என்று மனைவி கோபப்படுகிறாள். பாவம்' என் மனைவியின் அவசரத்தைக் கண்டு அக்கிம் ஒடுங்கிப் போய் நிற்கிறான். நான் அவளின் பொய்க்கோபத்தைக் கண்டு கொள்ளாமல் அக்கிமின் கடிதத்தை எழுதுகிறேன். அவனின் ஆசையை நிறைவேற்றி வைப்பதில் எனக்கு பரமதிருப்தி, கள்ளம் கபடமில்லா இந்த இளம் மனநோயாளியின் மேல் என் மனைவிக்கும் அன்புதான். இந்த உலகத்தில் என்னை உயிருக்குயிராக நேசிக்கின்ற சீவன்களில், அக்கிமும் ஒருவன். ஏன் என் நாய் பொட்டுக்கும் அவன் மேல் அன்புதான். என் வீட்டிற்கு யார் வந்தாலும் சப்தம் போட்டுக் குரைக்கும் பொட்டு, அவனைக் கண்டால் போதும். அன்போடு அனுகி அவனிடம் போய் தன் விருப்பத்தை வெளிக்காட்டிநிற்கும் “சேர்வெலாசத்த ஒழுங்கா எழுதுங்க”என்று கூற நான் அவனிடம் “நீதான் செல்லு”என்று கூறுகிறேன். அதற்கு அக்கிம். “ஓங்களுக்கு தெரியாத வெலாசமா? இந்த அஞ்சாறு வரிசமா நீங்க தானே எனக்கு கடிதம் எழுதித் தாற. எதுக்கும் வெலாசத்த செல்றன் எழுதுங்க. தங்க மச்சான் சவுக்கம் கட்டார் ராசா மேல்பாத்து, கட்டார்” என்று கூறிக் கடிதத்தை எதிர்ப்பார்த்து நிற்கிறான். வாழ்வியலில் எதையுமே சரியாகப் புரிந்துக் கொள்ள முடியாமல். இன்னும் சிறுவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அக்கிம், நான் எழுதிக் கொடுக்கும் கடிதம் மரணமடைந்து மண்ணோடு மண்ணாப் போன அவன் மச்சானுக்கு, கிடைத்து விடுமென்று பூரணமாக எண்ணிக் கொண்டிருக்கும் அப்பாவி. எனக்கு இந்த அப்பாவி எப்பொழுதும் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழவேண்டும். அவனுக்கு எதிலும் மனத்தாக்கம் ஏற்படக் கூடாது. அவன் எண்ணங்களில் என்றுமே கீறல் விழாமல் இருப்பதற்காகவே நான் என் எத்தனையோ வேலைப் பளுக்களுக்கிடையிலும் அவனுக்கு முகம் சுழியாமல் இக் கடிதத்தை எழுதிக் கொடுக்கிறேன். இந்த உண்மை இறைவனுக்குப்புரியும்.
அக்கிம் நான் எழுதிக் கொடுத்த கடிதத்தை, மனநிறைவோடு வாங்கிக் கொண்டு எங்களூர் தபால் நிலையத்தை நோக்கிப் போகிறான். அவன் போகும் அவசரத்தைப் பார்த்து, என் நாய் பொட்டு அணுகிக் கொண்டிருக்கிறது. வானம், மழைக்காக கேரிக் கொண்டிருக்கிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 109
doa
VV யணத்தின் நடுவழியில் இவனே வாகனத்தை செலுத்தும் படியாயிற்று. செல்போனுக்கு செவிமடுத்த நிமால் வேனை ஒரத்தில் நிறுத்தினான்.
“சேர் நீங்க தான் இனி ட்ரைவ் பண்ணனும்” “என்ன விசயம்?”இவனும் சிங்களத்தில், லேசான கலவரம் இருவ முகங்களிலும்,
நிமாலின் மனைவி மாலினியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கின்றார்களாம்.நிமால்போயாகவே வேண்டும். உறவினர்களெல்லாம் தூரம் தொலைவில், மாலினியைப் பார்த்துக் கொள்வதற்காக வந்துள்ள அவள்து தங்கை காஞ்சனா தான் கோல் கொடுத்தது.
“தலைச்சன் புள்ள சேர். அடுத்த வாரம் வார்ட்ல நிப்பாட்டுனா போதுமின்னுடொக்டர்சொல்லியிருந்தார்.”
“செலவுக்கு காசு இருக்கா?” “இருக்குது சேர், நேற்று பொஸ் குடுத்தாரு” நிமால் வேனை விட்டிறங்க, சொல்லி வைத்தாற்போல எதிரே வந்த பஸ்ஸுக்கு கைகாட்டி தொத்திக்கொண்ட்ான்.
இவன் ட்ரைவர் ஆசனத்தில் அமர,ஜகத் - சமுர்தி உத்தியோகத்தவரின் தம்பி - முன் சீட்டைப் பிடித்துக் கொண்டான்.
ரோஸ்மேரி தோட்டத்திலுள்ளவர்களை அறிமுகம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவன் ஜகத்.
இவன் வேனைக் கிளப்பினான் எகிறிப்பாய்ந்தது. “ என்னா மச்சான் குதிரை ஒட்டுறியா?” பின்னாலிருந்து தேவா. நுவரெலியாகாரன் கொழும்பில் வேலை.
இலக்ஷனில் நிற்கிற இவனுடைய பொஸ்ஸுக்கு ரொம்பவும் வேண்டிய ஒருத்தருக்கு சப்போட்டா இவனை இரண்டு வாரங்கள் ரிலீஸ் பண்ணியிருப்பதைக் குறிப்பிட்டு ரெண்டு மூனுநாளைக்குதங்கிறமாதிரிவரப் பாரு' - அழைப்பிற்கிணங்க, தேவா தனது ஆபிஸ் நண்பன் மூர்த்தியோடு வந்துசேர்ந்த மூன்று நாட்களும் ஒரே பண்டிகை கொண்டாட்டம்தான்.
கிளட்ச் அப்செட்டா இருக்கு. கண்டவன் நிண்டவன் எல்லாம் ஒட்டிநாசமாக்கிட்டானுக.இலக்சன் நேரம் ஒன்னும் சொல்லவும் ஏலாது. எல்லாம் முடிஞ்சோடனதான் புல் ரிப்பேர் பண்ணனும்
வழிநெடுக நிமால் முணுமுணுப்புடன் வந்தது ஞாபகத்துக்கு வருகின்றது.
செக்கன் கியறுக்கு மாற்றும் போது இரண்டுமுறை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011
 

கிளட்சை பம்ப் பண்ணி பூப்போல இடது பாதத்தை மெ.து. வா. க மேலெடுக்க வண்டி சீராக ஒடத்தொடங்கியது.
ஈரவாடைவீசமப்பும் மந்தாரமுமாக வானம.
ஒரு சிற்றாற்றின் பாலத்துக்கடியில் நிறைய பேர் குளித்துக் கொண்டிருக் க கின்றார்கள். பள்ளத்தாக்கில் கண்ணுக் സ്ത്രീ- கெட்டிய தூரம் வரை பசிய வயல்கள்.
தென்னை பாக்கு என மரங்களடர்ந்த தோப்புக்குள்ளே மாடிக்கட்டடங்கள் - சிங்கள மகாவித்தியாலயம் - தலைச்சுமையாய் கணக்கும் கருமுகில் கூட்டங்களை இறக்கிவைக்கும் எத்தனிப்புகளுடன் சிறுசிறு குன்றுகள் கடும்பச்சை நிறத்தில் சாலையின் மறுபுறம்.
கூடவே கலகலப்போடு ஓடிவந்த ஆறுவெடுக்கென முகத்தை திருப்பிபள்ளத்தில் புரய்ந்து வேறொரு திசையில் மறைகின்றது கல்லூரிகாதலர் போல.
ஒரு சின்னப்பட்டணத்தில் அரச மரமுச்சந்தியில் வலதுபுறமாக திருப்பச் சொல்கிறான் ஜகத்.
மதுபானக் கடை வாசலில் குழுமியிருந்தவர்கள் மெய்பொருள் ஆவி மறப்பதற்காய் பக்கத்து ஹோட்டலிலிருந்து சத்தமாக பைலா பாட்டு போனஸ் கிக்காக
“மச்சான் கொஞ்சம் நிப்பாட்டுபொட்ல்ஸ் ஏதாவது” தேவா.
“வரும்போது பாத்துக் கொள்ளலாம்” “வார நேரம் எத்தன மணியாகுமோ மூடுனாலும் மூடிருவான். கூதலா வேற இருக்கு”
இரண்டு சாராயப் போத்தல்களை வாஞ்சையோடு நெஞ்சிலணைத்தவாறு தூறலில் நனைந்தபடி ஒடி வருகிறான் தேவா.மெகாகொக்கோகோலா,சோர்ட்ஈட்ஸ் சிகரெட் பிளாஸ்டிக்குவளைகள் மூர்த்தியின் பேக்கில்.
அபேட்சகளின் தேர்தல் சின்னம், விருப்பு இலக்கம் பொறிக்கப்பட்ட டீ சேர்ட்டும் தொப்பியும் அணிந்திருந்த கடைசி சீட்டு இளைஞர்கள் மூவரும் போஸ்டரை ஒட்டிவிட்டு ஓடி வருகின்றார்கள். அந்தச் சின்ன இடைவெளியில் பசைவாளி புரஸ்ஸும் கையுமாக.
தேவா மூர்த்திஜகத் மூவரும் குவளைகளை நிரப்பி ச்சியர்ஸ்சொல்லி, முதல் ரவுண்டில் வாயை நனைத்துக் கொண்டார்கள்.
“தம்பிமாரே இது உங்களுக்கு" போத்தலொன்றை பின்புறம் அனுப்பினான் தேவா பெட்டிஸை கடித்தவாறு,
'வின்ட்ஸ்கிறினில் வைப்பர் நீர்கோலம் வரைய வண்டி ஒடிக் கொண்டிருக்கின்றது. உள்ளே ஒரே கலகலப்பு
"மச்சான் ஒரு ஷொட் அடிக்கிறியா?”தேவா. “ஸொரி தேவா. ட்ரைவ் பண்ணுற நேரம் எடுக்க மாட்டேன்.நைட்லபாத்திக்கிருவோம்”
"Tsir Gorm ஓங்க ஆளுவெத்துவாரா. நீங்க எல்லாம் அவர் கச்சியா?
O7

Page 110
இரண்டாவது குவளையைக் காலிபண்ணிவாயைத் துடைத்தபடி பின்புறம் திரும்பிக் கேட்கிறான் மூர்த்தி. சோர்ட் ஈட்ஸ் பொட்டலத்தை நீட்டியவனாய்
"நாங்க சம்பளத்துக்கு வேல செய்யுறங்க தோட்டத்தில வேல கொறவுங்க.”
“நிமாலின் மனைவிக்கு எப்படியோ' இவன் கவலையோடு.
“கவலப்படாதே சகோதரா. கவலைப் படாதே." மூர்த்தி சொந்த மெட்டில்.
“கவலப்படாத ஒய். மாலினிக்கு கஷ்டம் இல்லாம புள்ள கெடைக்கும். பிரசவ வார்ட்லதொணக்கியாரையும் நிப்பாட்ட மாட்டாங்க. மாலினி வரும் வரைக்கும் காஞ்சனாவ நிமால் நல்லா கவனிச்சிக்கிருவான்.
தேவாவின் வார்த்தைகளை ரசித்து சத்தமாக சிரிக்கின்றான் மூர்த்தி
போதையில்வாய், கதவில்லாத வீடு. தார் ரோடிலிருந்து வலதுபுற கொங்கிறீட் ரோட்டுக்குத் திருப்பச் சொன்னான் ஜகத் தோட்டம் பார்த்து திரும்பும் சந்தியில் புது மெதுறவில் - (புத்தராலயம்) நிஷ்டையில் புத்த பெருமான்.
“நாட்டாளுக்குப்பிரிச்சிக்குடுத்த பழைய ரோஸ்மேரி தோட்டம் இதுதான்'ஜகத்.
கொங்கிறீட் ரோட்டின் இருமருங்கிலும் கிளிசீடியா மரங்களில் செழித்துப் படர்ந்திருக்கும் மிளகுக் கொடிகளில் சரஞ்சரமாக மிளகு கொப்புகள். துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டு வேலிகள் போடப்பட்ட காணிகளில் அழகழகான வண்ணங்களில் கச்சிதமான வீடுகள்.
'இன்னும் அரைகிலோ மீற்றர்தான் ஜகத் சொன்னாலும் பாதை என்னவோ நீண்டு கொண்டேயிருக்கின்றது.
ஆண்களும் பெண்களுமாகச் சிலர் ரோட்டோரத்தில் பொலித்தீன் ரெட்டுகளைப் போர்த்தியபடி, கான் வெட்டுவதும், பிளாஸ்டிக் பைப்புகளைப் பொருத்தி கானில் பதித்து மண் நிரப்புவதுமாக.
“கொலனிக்கி வீட்டுக்கு வீடு தண்ணி குடுக்கப் போறாங்க.எலக்சனுக்கு மொத தண்ணி வந்திரும். லைட் போன வருசமே குடுத்தாச்சி”
ஒடி மறையும் மின் கம்பங்களைப் பார்த்தவனாய் ஜகத்.
“தேர்தல் முடிஞ்சோடன ஜகத்தும் சமுர்திமாத்தியாதான்”
தேவா அரைகுறை சிங்களத்தில் சொன்னதை ஆமோதித்து சிரித்துக் கொள்கிறான் ஜகத்.
“தோட்டம் வந்தாச்சி.” கொலனி பவுன்டரியில் கொங்கிறீட் பாதைமுடிய, மண்ரோடு நீண்டு கிடக்கின்றது. குண்டும் குழியுமாக சலிப்போடு.
வேனை நிறுத்துகிறான் இவன். மலைச்சரிவில் முதலாவது லயம், மற்ற மூன்று லயங்களினதும் கூரைகள் தெரிய வெள்ளைக்காரன் கொம்பெனி காலத்துப் பிறவிகள்.
B

தகரஒட்டைகளுக்கு பொலித்தீன் போர்த்தி கற்கள் வைக்கப்பட்டுள்ள கூரைகள். காரை பெயர்ந்து பல்லைக்காட்டும் சுவர். மூங்கில் வரிச்சுகளை நீட்டிக் கொண்டு கைமண் அரைச்சுவர் கால் சுவராக இடிந்து போன திண்ணைகள்.
திட்டமிட்ட தாக்குதலுக்குத் தயாரானது போல இடியோசை பேரிகை முழங்க மின்னல் கண்களை பொட்டையாக்கும் விதத்தில், சுழற்றியடிக்கும் காற்றுக் கேற்ப தலைவிரித்து பேயாட்டம் ஆடுகின்றன மரக்கிளைகள். வானம் பொத்துக் கொள்கிறது. மொத்தக்குத்தகைக்கு வாங்கிக் கொண்டது போல சண்டித்தனம் காட்டுகிறது மழை, மரக்கிளையொன்று முறிந்து விழும் சப்தத்தோடுவேன்மெல்ல அதிர்கின்றது. பறவைகள் கிறீச்சிடும் ஒலி. கிண்ணென்று காதுகள் அடைத்துக் கொள்கின்றன. வெளியில் சொல்ல முடியாத அச்சத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் மெளனம் கடவுள் நினைவுக்கு வரும் தருணம்.
அரைமணித்தியாலத்தில் இப்போதைக்கு இதுபோதும். வேறொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம் என்பதுப்ோல மழை சன்னஞ்சன்னமாக குறைய வானம் வெளுக்கின்றது.
ஜகத் முன்னால் நடக்க பொடியன்மார் சகிதம் பின் தொடர்கிறான் இவன் தொங்கல் காம்பராவை நோக்கி, வெள்ளம் இறைத்திருந்த சிரட்டைகள், சுண்டுகள், பிளாஸ்டிக் ஒட்டை ஒடிசல்கள்,குப்பை கூழங்கள்,லொட்டு லொசுக்குகளில் பாதம் படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சகதியில் கால் பதித்து.
கூரை பொலித்தீன் சீட்டுகள் தரையில் வீசியெறியப்படகற்கள் சிதறிக்கிடக்கின்றன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 111
காம்ப்ராவின் சுவரோரம் ஒண்டிக் கொண்டிருந்த கிழவி ஜகத்தோடு வந்திருப்பவர்கள் இன்னாரென்று நிதானித்துக்கொள்கிறாள்.தீவாளிபொங்கமாதிரிவருசா வருசம் இது ஒன்னு?
சாணி மெழுகிய தரை சொதசொத வென்று உப்பிப் போய் கிடக்கின்றது புழுங்கல்மணத்துடன்,ஒழுக்குக்காக வைக்கப்பட்டுள்ளவாளிமண்சட்டிகோப்பைகள் சுண்டுகள் நிரம்பி வழிகின்றன.
கிழவியைக் கட்டிப்பிடித்தவளாய் சேலை தலைப்பை பல்லில் கடித்தவாறு நடுங்கிக் கொண்டிருந்த பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும் சிறுமியின் உடலில் ஒட்டாமல் தொங்கியது கவுன். பறட்டைத் தலையில் மொய்க்கும் ஈக்களை விரட்டுவதற்கான தலையை ஆட்டும் சிரமம் வேறு. ۔
“சொகமா இருக்கிறீங்களா?” அர்த்தமில்லாமல், என்ன பேசுவதென்றறியாச் சங்கடத்தில் இவன்.
“பாக்குறீங்க தானே ஜயாவு எங்க ஈனப்பொழப்ப, அரியோமின்னு தோட்டத்த என்னக்கி கொலனிக்கு பிரிச்சி குடுத்தாங்களோ அன்னக்கி புடிச்சிச்சி தோட்டத்து ஆளுகளுக்கு சனியன்”
புகை மண்டி பழுப்பேறிய சுவரில இன்னும் காயாமலிருக்கும்மழைத்தாரைகளையும் கூரையிலிருந்து ஒழுகும் நீர் சொட்டுகளையும் வெறித்தவளாய்
“தாயில்லாத புள்ள பொழச்ச தோட்டங்க. அதொருகாலம் போங்க. விடிஞ்சிச்சா விடியலியான்னு கொட பாத்தும் பாக்காம ஆம்பளயும் பொம்பளயுமா பறிபட்டு ஆளா பறக்குதுங்க, எங்கடா வேல கெடைக்கு மின்னு, நாட்டுக்கும் சேனைக்கும் வயற் காட்டுக்குமா. வேலகெடச்சா தாங்க அடுப்பெரியும். அதும் கெலமக்கி மூனோ நாலோ, சொச்சம் வீட்லதான். நம்மதான் பச்சத்தண்ணியயோ சாயத்தயோ குடிச்சிட்டு மொடக்கிகிறோம். சின்னஞ்சிறுசுகவவுறு கேக்குமா. சொல்லுங்க பாப்பம்.” எங்கே கொட்டுவதென இருந்தவளாய்.
“இது யாருங்க”இவன். "அந்த வவுத்தெரிச்சல ஏஞ்சாமி கேக்குறீங்க. மகவுட்டுபுள்ளங்க.பேத்திங்க, மகவெளிநாடு போயிமூனு வருசமாச்சி.ஒரு கடுதாசியா கிடுதாசியா. விசாரிக்காத கந்தோரில்ல. போவாத கோயில் பாவஞ்செஞ்சதுங்க. போடாதநேத்திக்கடனா”பெருமூச்சுவிடுகின்றாள். “ஏஜென்சி காரர் கிட்டபோய் சொல்லலியா?” 'மிச்ச நாளைக்கிமொத நின்டது நின்ட வாக்கில நெஞ்சடப்பு வந்து செத்துப் போனாரே தங்கப்பல்லு பொட்டனிகாரரு, துணிமணி யெல்லாம் கடனுக்கு குடுப்பாருங்க. ஒரு சொல்காரரு. அவரு மகென்தான் கொழும்பு ஏசன்டு மூலியமா அனுப்பிவைச்சாரு நானும் எத்தன் வாட்டி நடயா நடக்குகிறது” வெளியே எட்டிப் பார்க்கின்றாள்.
“காசு பணம் வேணாம். ஏங் புள்ளய மாரியாத்தா உசுரோட கொண்டாந்து சேத்தா போதுங்க. நாளக்கி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

பின்ன நான் செத்துக் கெட்டுப் போயிட்டா இந்த புள்ள கெதி என்னா ஆகிறது. சொல்லுங்க பாப்பம். குடிக்கிற கஞ்சி ஒடம்புல ஒட்டுதில்ல அந்தா மானத்தில ஒருத்தன் எரிஞ்சிகிட்டு போறானே அவனுக்குத்தான் தெரியும் ஏன் நெஞ்சி எரியிறது. மகவெளிநாடு போனதுனால சமுதி சல்லியையும் நிப்பாட்டிட்டாருங்க, இந்தா நிக்கிறாரேசகத் மாத்தியா இவருட்டு அண்ணன் சமுதிமாத்தியாங்க.”
ஒரு கணத்தில் அசரீரியாகும் சூட்சுமத்தை ஜகத் எங்கு கற்றானோ,
“ஊர் ஒலகமின்னா ஒரு நாயம் இருக்கனும். கோடியபுடிச்சிவேலி, பொண்ணு பொறசுங்க ஒதுங்க எடமில்ல. ராவையில வாய வவுத்த வலிச்சாலும் தெப்பக்கொளத்துக்கு அங்கிட்டு தெரியுதே மானாக்காடு, அங்கிட்டுதான் ஒடனும்”
கிழவிசிறிது அமைதியாகின்றாள். “வெத்தல சருகில்லாம வாயெல்லாம் புளிச்சி கெடக்குது. சும்மா சொல்லக்கொடாது கொலனி ஆளுக அம்புட்டும் சிங்களம்தான்.ஒருசாவுவாவுன்னா அம்புட்டு பேரும் வந்திருவாங்க திமுதிமுன்னு. சீனின்னும் தேத்தூளுன்னும்பானுன்னும் இசுகோத்துபொட்டின்னும் ஊடு ரொம்பிரும். ஆத்தர அவுசரத்துக்கு ஒடுனா இல்லன்னு கைய விரிக்கமாட்டங்க. தங்கமான ஆளுக, அதுக்கொசரம் நெதம் கோப்பய தூக்கிட்டு ஒட முடியுமா மானம் ரோசம் வேணாமா. சொல்லுங்க பாப்பம். தொண்டைக்கி கீழபோன நரகலு. சீயின்னதுக்குதானே நாயிசீலகட்டாம திரியுது.”
மனசும் முகமும் இறுக குறுகிப் போனான் இவன். “ஒங்க மருமகன் “தங்ககம்பிங்க. குடியா கூத்தியாளாம்.ம்..ம். ஒன்னுமே கெடயாது. அது ஒரு ஆள் ஒழப்பில தான் வவுறு கழுவுறோம்.
'பசிக்கிதுபாட்டி.”சிறுமி “பாத்துக்கிட்டு தானே இருக்கிற. அடுப்பு வெறகெல்லாம் தொப்ப தொப்பயா நனைஞ்சி கெடக்குறத?”
'பசிக்குதுதூங்கிறேன்”சிணுங்குகிறாள். கிழவியின் கண்களிலும் நீர்திரள இவனைப்பார்க்கின்றாள். இவன் தலைகுனிகிறான்.
“ஒங்கப்பா அந்திக்கி பாண் கொண்டாரும் திங்கலாம். கொஞ்சம் பொறுதாயி. சாயத்தண்ணி வச்சித்தாரேன்.?
கந்தல்கள் தொங்கிய கொடிகயிற்றில் முடிச்சி போட்டுவைத்திருந்த ஷொப்பிங் பேக்கை எடுக்கின்றாள். பொட்டலம் கட்டி வந்த பழைய பத்திரிகைகள், விதவிதமான வண்ணங்களில் சின்னங்கள், படங்கள், இலக்கங்கள் கொண்ட ஏராளமான துண்டு பிரசுரங்கள் கத்தைகத்தையாக
“புண்ணியவானுக நல்லா இருக்கனும்” தண்ணீர் நிரப்பிய கேத்தலை ஏற்றி ஒரு கத்தை காகிதத்தை திணித்தவள் அடுப்பு மூட்டுகிறாள்.
109

Page 112
ந்த செவ்விதாக்கம் என்னும் சொல்லாடல் தமிழ் லக்கிய உலகில் ஒருபரபரப்புடன் பேசப்படுவதற்கும் அதுபற்றியவாதப்பிரதிவாதங்களுக்கும் காரணமானதும், களமமைத்ததும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தான்!
இது சர்வதேச எழுத்தாளர் மாநாடு என்பதால் மேலைநாடுகளில் நூலாக்கம் நடைபெறுகின்ற போது கடைப்பிடிக்கப்படும் செவ்விதாக்கம்பற்றியதான ஆய்வும் இடம்பெறுவது முக்கியமானது என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது.
ஜனவரி 2010ல் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிய முன்னோட்ட நிகழ்வில் கலந்துகொண்டுகருத்துப் பரிமாறிய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் மேல் நாட்டுப்பதிப்பகங்களின் நடைமுறையில் இருக்கும்EDITORS Lubóluyuh g6JřG5656OLLU EDITING LIGOof பற்றியும் விவரித்தபோது எடிட்டர் என்பவர் பதிப்பாசிரியர் அல்ல படைப்பைச் செம்மைப்படுத்துபவர் என்றும் விளக்கம் கூறியதுடன் செவ்விதாக்கம் என்பதே EDT ING என்பதற்கான சரியான மொழிபெயர்ப்பு என்றும் கூறினார்.
செவ்விதாக்கம் என்னும் மேலைத்தேச இலக்கியச் செயற்பாடு தமிழ் இலக்கியத்துக்குச் சரிவருமா! தமிழில் ஒரு தனியான துறையாக அது வளருமா, வளரவிடலாமா! வளர்த்தெடுப்பதால் பலனுண்டா என்பது பற்றிய கலந்துரையாடல்கள் அவசியப்படுகின்றன. அதற்கான ஒரு களத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது இந்த எழுத்தாளர் மாநாடு.
ஒரு படைப்பாளியின் படைப்பைத் திருத்துவதாவது? அது அவனுடைய கழுத்தைத் திருகுவது போன்ற செயலல்லவா என்று அந்த ஆரம்பக்கூட்டத்திலேயே எதிர்ப்புக்குரல்களும் கிளம்பினதான்.
குறிப்பாக விஜயன் தன்து எதிர்கருத்தை முன்வைத்தார். அவரை ஒட்டி சில் எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டன. நூல் வெளியீட்டின் போது இந்த செவ்விதாக்கம் என்பதன் முக்கியத்துவம் பற்றி கணேசலிங்கன் குமரன் குறிப்பிட்டார். விளக்கம் கூறினார்.
110
 

செவ்விதா க் கம் பற்றியதான கருத்தினை ஒட்டியும் வெட்டியும் க ரு த் து க் க ள் அன்றேகிளம்பிவிட்டன. இன்னும் நீடிக்கின்றன.
மலையகச் சிறுகதை வரலாறு' என்னும் எனது நூல் துரைவிஸ்வநாதன் அவர்களுடைய துரைவி பதிப்பகத்தால் 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அந்த ஆண்டுக்கான அரசசாகித்திய விருதினையும் சம்பந்தன் விருதினையும் பெற்றுக் கொண்ட நூல் இது.
இந்த நூலே இரண்டாம் பதிப்பாக வெளியிட அவாவுற்ற குமரன் அவர்கள் என்னிடம் வினயமாகக் கூறினார். 'அவசரமில்லை கொஞ்சகாலம் எடுத்துக் கொள்ளுங்கள் சற்று இறுக்கமாக எடிட் செய்து தாருங்கள் என்று.
என்னுடைய நூலை என்னையே செவ்விதாக்கம் செய்து தருமாறு கோரிக்கை விடுகின்றார் குமரன்.
மீண்டும் மீண்டும் படிக்கவும், சிலதை எடுத்துவிடவும், சிலதை செம்மையாக்கவும், சிலதை சேர்த்துக் கொள்ளவும் என்று நூலை இறுக்கமாக்கிக் கொடுக்கன்னக்கு அளிக்கப்பட்ட அவகாசம் அது.
அதை இன்னும் நான் செய்யவில்லை என்பது என்னுடைய அவகாசமின்மை பற்றியது. செவ்விதாக்கம் பற்றியதல்ல.
இது ஒரு ஆய்வு நூல் என்பதால், வரலாற்று நூல் என்பதால் செவ்விதாக்கம் ஒத்து வரலாம். ஒரு புனைவிலக்கியம் படைப்புக்கு நாவலுக்கு, சிறுகதைக்கு இது ஒத்து வருமா? வராது என்பதுதான் எதிர்வினை.
நாவலும் சிறுகதையும் மேலைத் தேசங்களில் இருந்துதமிழுக்கு வந்தவைதான்.தனக்கென தனியான இலக்கணங்களுடன் தமிழில் தழைத்துநிற்கும் துறைகள் இவை.
தமிழுக்குச் சிறுகதை வந்த போதும் எதிர்ப்புக்கள் கிளம்பினதான். -
விமர்சனம் விசைகொண்டபோதும் அப்படியேதான். எதிர்ப்புக்கள் ஏராளம்.
புதுக்கவிதை வந்தபோது அதற்குக் கிடைக்காத ஏச்சா பேச்சா,
புதுக்க விதைக்க வந்திருக்கின்றார் கள் என்று சொல்லுடைத்து சோகம் காட்டியவர்கள் எத்தனை.
குளியலறை முணுமுணுப்புக்கள் என்று குதர்க்கம் கூறியவர்கள் குமுறியவர்கள் எத்தனை.
இவைகளை எல்லாம் மீறிமேவிக் கொண்டுதான் தமிழின் தனித்தனித் துறைகளாக அவைகள் செழித்து நிற்கின்றன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 113
இப்போது செவ்விதாக்கம் என்று ஒன்று. வந்திருக்கிறது.
ஒருநாவல், ஒரு சிறுகதை போன்றபடைப்புகளுக்கு இந்த செவ்விதாக்கம் சரிபட்டுவருமா.
தன்னுடைய படைப்பின் ஒரு வரியைத் தானும் இன்னொருவன் மாற்றுவதற்கு ஒரு படைப்பாளி ஒத்துக்கொள்ள மாட்டான் என்பதே நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான கே. விஜயன் அன்று முன்வைத்த எதிர்வினை. எல்லா படைப்பாளிகளும் இதே கருத்துடையவர்களாகவே இருப்பர்; இருக்கவேண்டும் ஆனாலும் அந்த இன்னொருவன் என்பவன் யார் எனக்குள் இருக்கும் நானாகவும் அந்த இன்னொருவர் ஏன் இருந்துவிடக் கூடாது
உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர் முலக்ராஜ் ஆனந்த் தன்னுடைய UNTOUCHABLES நாவலை எழுதிமுடித்துதட்டச்சு செய்துகொண்டபோது 500 பக்க நாவலாக உருவாகியிருந்தது.
இது ஒரு தோட்டிப்பையன் பற்றிய நாவல் என்பதாலும் தீண்டத்தகாதவர்கள் பற்றிய கதை என்பதாலும் காந்திஜியிடம் வாசித்துக்காட்டி அபிப்பிராயம் கேட்க எண்ணினாராம். லண்டனில் இருந்து மகாத்மாவுக்கு எழுதி அனுமதி பெற்று பயணம் மேற்கொண்டு காந்திஜியின் ஆஸ்ரமத்தை அடைந்து ஒரு மாதம் போல் ஆஸ்ரமத்தில் தங்கி நாவலை வாசித்துக்காட்டி ஒவ்வொரு நாளும் ஒதுக்கப்பட்டிருந்த அந்த இரண்டு மணித்தியாலத்தில் வாசிப்பதும் அது பற்றிப்பேசுவதுமாக இருந்து பின் லண்டன் திரும்பினாராம்.
கலந்துரையாடலுக்குப்பின் தனக்கே சில தெளிவுகள் பிறந்தன என்றும் 500 பக்கமாகத் தூக்கிச் சென்ற நாவல் 300 பக்க நூலாக வெளிவந்தது என்றும் குறிக்கின்றார் அமரர்முல்க்ராஜ்
ஒரு படைப்புநூலாக வெளிவருவதற்கு முன்பு அந்த படைப்பைப்பற்றிய கலந்துரையாடல்; அபிப்பிராயம்கோரல் போன்ற விஷயங்கள் தமிழில் இடம்பெறுவதில்லைதான். அண்மையில் வெளியான (கார்த்திகை 2009) நீ.பி. அருளானந்தம் அவர்களின் துயரம் சுமப்பவர்கள் நாவலுக்கான மதிப்புரையில் பேராசிரியர் St. சிவத்தம்பிஇப்படிக்குறிக்கின்றார்.
இலக்கிய விமர்சகன் என்ற வகையில் ஒரு குறிப்பினை மிக்க அழுத்தத்துடன் இங்கு பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
எந்த ஒரு படைப்பிலக்கியக்காரரும் தனது படைப்பினை மீள மீள வாசித்து வேண்டுமான இடங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம். அத்துடன் தான் மதிப்பு வைத்திருக்கும் இலக்கிய நண்பர்களிடம் அதனை வாசிக்கக்கொடுத்து வாசித்துச் சொல்லுமாறு வேண்டுதலும் வேண்டும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

மேல்நாட்டுப் பதிப்பகங்களில் நூல்கள் வெளியிடப் படும் போது அவை முதலில் அப்பதிப்பகத்தோடு சம்பந்தப்பட்ட EDTORS ஆல் வாசிக்கப்படும். EDITORS என்ற இச்சொல்லை பதிப்பாசிரியர் என்று மொழிபெயர்த்துவிடக்கூடாது. அது தவறு அதன் உண்மையான மொழிபெயர்ப்பு செம்மை யாக்குனர் அல்லது செவ்விதாக்குனரே ஆகும்.
துயரம் சுமப்பவர்கள் நாவல் 450 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் என்பது குறிப்பிடக்கூடியதே.
பேராசிரியர் சிவத்தம்பியின் இந்தக்குறிப்பிற்கும் முல்க்ராஜ் ஆனந்த் தன்னுடைய தட்டச்சுப் பிரதியை தூக்கிக்கொண்டு காந்திஜீயிடம் ஒடிச் சென்றதற்கும் நிறையத்தொடர்பிருக்கிறது.
தனக்குப் பிடித்தமான, தான் விரும்பும், தான் மதிக்கும் ஒருவரிடம் அல்லது சிலரிடம் தனது படைப்புப்பற்றி அளவளாவுதல், மிகமுக்கியமானது அதை நாம் செய்வதில்லை. r
நகுலன் வெளியிட்ட 'குருஷேத்திரம் தொகுதிக்கு சுஜாதாவிடமும் ஒரு சிறுகதை கேட்டிருந்தாராம். நகுலன் எத்தனை பெரிய படைப்பாளி. அவர் வெளியிடப்போகும் தொகுதிக்கு என்னிடம் ஒரு கதை கேட்கின்றாரே என்று மகிழ்ந்துபோன சுஜாதாவும் ஒரு கதை எழுதி அனுப்பினாராம். சில நாட்களின் பிறகு சுஜாதாவிற்கு நகுலனிடம் இருந்து ஒரு கடிதம் வந்ததாம். அதில் அவர் அனுப்பிய கதையின் சில பகுதிகள் குறிப்பாக இறுதிப்பகுதிகள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தன.
'கதை முடிந்த பிறகும் நீ எழுதிக்கொண்டு போகின்றாய் அவைகளையே திருப்பி அனுப்பியுள்ளேன். உன்னுடைய கதை நூலில் வருகிறது. நகுலன் என்று குறிப்புவைத்திருந்தாராம்.
சுஜாதாவிற்கு எரிச்சலும் கோபமும் தாங்க முடியவில்லையாம் என்னுடையஎழுத்தில்கைவைக்க இவர் யார் என்னும் தார் மீகக்கோபம், ஆனாலும் நகுலனிடம் என்ன சொல்லகுமுறிவிட்டு அமைதியாகிவிட்டாராம்.
குருஷேத்திரம் தொகுதி வந்து விட்டது. சுஜாதாவின் சிறுகதையும் அதற்குள் இருக்கிறது. நூலை விமர்சித்த விமர்சகர்கள் அனைவருமே சுஜாதாவின் கதை பற்றியும் பேசாமல் விடவில்லை. சுஜாதாவை ஒரு சிறுகதைக்காரராக கண்டுகொள்ளாத கண்டுகொள்ள மறுத்த ஒரு சில விமர்சகர்கள் கூட இந்தக் கதை பற்றிப்பேசினார்களாம். தன்னாலும் நல்ல கதை எழுதமுடியும் என்பதை சுஜாதா இந்தக்கதை மூலம் நிரூபிக்கின்றார் என்று அந்த சுஜாதாவை கண்டுகொள்ளாத விமர்சகர் குறிப்பிட்டிருந்தாராம்
நகுலன் அமரரானபோது அவர் பற்றிய நினைவுகளை ஆனந்தவிகடனில் பதிந்துகொண்ட சுஜாதாவின் குறிப்புக்கள் இவை,
இந்த இரண்டு விஷயங்களும் நமக்குச் சில உண்மைகளை விளக்குகின்றன.
11

Page 114
முல்க்ராஜ்- மகாத்மா கலந்துரையாடலில் காந்திஜி செவ்விதாக்கம் ஒன்றும் செய்யவில்லை. படைப்பாளிக் குள்ளிருந்த படைப்பாளியே அதைச் செய்கின்றான். அந்த நாவல் உலகப் புகழ்பெற்ற நாவலாகின்றது.
நகுலன் சுஜாதா விஷயத்தில் அந்த செவ்விதாக்கம் வேறு விதமாக நடைபெறுகிறது. படைப்பும் கவனத்திற் குள்ளாகிறது.
தமிழின் நவீன இலக்கியத்தில் மிகவும் பேசப்படுகின்ற இலக்கியவாதியான ஜெயமோகன் அவர்கள் திருமணத்துக்குப் பின்னான அவருடைய நாவல்களை பேசிப்பேசி, கருத்தாடல் செய்து செய்து செவ்விதாக்கம் செய்து தருபவர் தனது காதல் மனைவி அருண்மொழி நங்கை என்று பெருமையுடன் கூறினார்.
எங்களுக்குள் நிறையவே சண்டைகள் வரும். நிறைய இடங்களில் அவரும் சில இடங்களில் நானும் ஜெயிப்பதுண்டு என்று எடிட்டிங் பற்றிய உரையாடலின் போது குறிப்பிட்டார் திருமதி அருண்மொழி நங்கை ஜெயமோகன்.
6 வெய்க்கிழமை தோறும் நான் பத்திரிகை அலு திருமண சேவை பற்றி விளம்பரம் கொடுப்பதும் உங்களுக்கு அன்று அந்தப்பத்திரிகை அலுவலகத்திற்கு நா பக்கத்தில் அமர்ந்திருந்த பிரமுகர்கொடுத்திருந்த விளம்பரத் இருந்தது.பத்திரிகையின் முழுப்பக்க அளவுகலர் கண்ணிர். அவர் செலுத்திய தொகையைச் சொன்னால் நீங்கள் நம் இரண்டு இலட்சத்து நாப்பத்தறாயிரத்து நாநூறு ரூபாய்
எனது வேலையை நான் முடிப்பதும், பிரமுக கிளம்புவதும் சரியாக இருந்தது. அவர் எனக்கு முன்பாக அவரைப்பின்தொடர்ந்து வீதியால் போய்க்கொண்டிருந்தே ஒரு கால் சூம்பல், மற்றது முற்றாக இழந்த நிலை யாசிகன். "ஐயா தருமம் நான் கால் வழங்காப்பாவி ஐயா" "கால் வழங்காவிட்டால், அனாதை மடத் போறவாறவர்களுக்கு வீண் அரிகண்டம்’பிரமுகர் முடம் என சற்று அப்பால். இன்னொரு இளம் யாசிகன். ெ துண்டு விரிப்பு மேல் கிடந்தபடி “ரண்டு கைகளும் இழந்த பசிக்குதுவிடியத் தொடங்கிப்பட்டினி ஏதாவது பாத்துப்பே கெஞ்சினான்.
“இப்பயுத்தம் இல்லைத்தானே!மீள்குடியேற்றமல் திரும்பிப் போகலாம் தானே' எனச் சீறிச் சினந்தபடி-எடு "கண்முன் கஷ்டப்பட்டு மாளும் நம்மவரை விட6 இரங்காது விட்டாலும் - ஈயாது விட்டாலும் குத்தற் பேச்ை வாய் தன் பாட்டிற்புறுபுறுத்தது.
竹2

நமக்குத் தெரிந்தோ " தெரியாமலோ, விருப்பத்துடனோ விருப்பமின்றியோ செவ்விதாக்கச் செயற்பாடுகள் தமிழில் ஊடாடியே வந்துள்ளன.
என்னுடைய படைப்பொன்றை ஏதாவதொரு பெரிய பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, இடத்தினிமித்தம் அவர்கள் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று வெட்டிக்கொள்(ல்)வது சத்தியமாகவே செவ்விதாக்கம் அல்ல. அது ஒரு பிரதியின் கொலை அவர்கள் எடிட்டர்கள் அல்லர்; டெயிலர்கள். கைகளில் கத்தரிக்கோல் வைத்திருக்க உரிமை பெற்றவர்கள். உரிமை கொண்டவர்கள்.
எடிட்டர் என்பதனை சிங்களத்தில் அழகாகச் சொல்கிறார்கள் கத்துறு என்று. 'கத்துறு என்றால் கத்தரிக்கோல். டெயிலர்களின் ஆயுதம்,
செவ்விதாக்கம் என்பது ஒருகலை வெட்டுவதோ: குறைப்பதோ, பதிப்பதோ, அல்ல.
அது ஒரு தனிக்கலையாக தனித்துவமான செயற்பாடாக தமிழ் இலக்கிய உலகில் வளர்ச்சி பெறும்ா என்பதை காலமே நிர்ணயம் செய்யும்.
வலகங்களுக்குப் போவதும், எமது த நல்லாகத் தெரிந்த விடயம்.
ண் போனபோது, அங்கே எனக்குப் தை நான்றகப்பார்க்கக்கூடியதாக அஞ்சலி அது. அவ்விளம்பரத்திற்கு பமாட்டீர்கள்; ஆனால் உண்மை
ர் தனது வேலையை முடித்துக் வும், நான் அவரின் நிழல் போல Ph.
அந்தப்பரிதாபக்கோலத்தில் ஒரு - அவன் மன்றடினான். தில் போய்க் கிடப்பது ஏன் ாவும் இரங்காது, எரிந்து விழுந்தார். தருவோரம் சுடுநிலத்தில் சீலைத் பன் ஐயா! இது யுத்தக் கொடுமை ாடுங்க ஐயா"அழாக் குறையாகக்
O
S.
&S
லே நடக்குது உங்கடை ஊருக்குத் த்தெறிந்து பேசியபடி நடந்தார்.
பா என்றோ மரணித்தவர் பெரிது? சத் தவிர்த்திருக்கலாமே!” - என்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2011

Page 115
வேல் முேதன் பாரிய சேவைக் :
ப விவரம்
விவரங்களுக்குத் தனிம புகழ்பூத்த சர்வதேச, ச குரும்பசிட்டியூர், மாயெழு சனி, ஞாயிறு நண்பகலி
0 தொலைபேசி 23EDB82BO9A B
0 சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்கு
0 முகவரி 8-3-3 மெற்றோ மாடிமன் 33ஆம் ஒழுங்கை ஊடா கொழும்பு-06
蚤
பூபாலசிங்கம் புத்தகசாலை - 202,
கா தவபாலச்சந்திரன் - பேராதை
பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A பூபாலசிங்கம் புத்தகசாலை - 4. ஆ புக் லாப் - யாழ். பல்கலைக்கழக
துர்க்கா - சுன்னாகம்,
ப, நோ.கூ. சங்கம் - கரவெட்டி, ெ லங்கா சென்றல் புத்தகசாலை - 8
மாரிமுத்து சிவகுமார் - பூரீகிருஷ்ண
 
 
 

២០០០ ប្រា២២ ட்டணக் குறைப்பு
னித நிறுவநர், "சுய தெரிவுமுறை முன்னோடி' மூத்த, பலருக்குமான திருமன ஆலோசகர் ஆற்றுப்படுத்துநர் வேல் அமுதனுடன் திங்கள், புதன், வெள்ளிமாலையிலோ, லோ தயங்காது தொடர்புகொள்ளலாம்!
3929
முறை
னை வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராகவுள்ள கி55ஆம் ஒழுங்கை,
தெரிவு முறையே மகோன்ன மணவாழ்வுக்குக் லப மணமக்கள் தெரிவுக்குச் சுயதெளிவுமுறையே
கிடைக்கும் இடங்கள் ཡོད༽
340, செட்டியார் தெரு, கொழும்பு - 11 TIT. G5IITSONGu Guill: 077 926880B \, 23 காலி வீதி, வெள்ளவத்தை பூஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
பளாக அருகாமை, யாழ்ப்பாணம்,
நல்லியடி
கொழும்பு வீதி, கண்டி
ாாஸ், இல 86, சைட் வீதி, ஹட்டன்.

Page 116
Departmení8CỨ GPOS
(2/6 ദ്ര6്യ ര,
உலகதரைஏரி
*Oes
LUCKYLAN MANUFAC
NATTARAN POTHA, KUN TEL: 0.094-081-2420574, 24202 Email: luckyla
 
 
 
 
 
 

Escía Silanika tumater No, GD2BNews2004
விருரரிேடு தேரகி0
ID BISCUT CTURERS
DASALE, SRI LANKA. 17. FAX: 0094-081-2.420.740 ad(a).sltnet.lk