கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாநிதி பதியுத்தீன்

Page 1


Page 2

கலாநிதி பதியுத்தீன்
ஆசிரியர்:
அல்ஹாஜ் 3. ( 4. ஹஸன்
விரிவுரையாளர், ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை பேராதன.
வெளியீடு:
இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கம் கண் டி.
大
அச்சுப்பதிவு:
மெய்கண்டான் அச்சகம் லிமிட்டெட் கொழும்பு-11.

Page 3
முதலாம் பதிப்பு: 1974
கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் & அவர்கள்து கல்வி, சமூக, அரசியல் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக விளக்கும் நூல் இது.


Page 4
றிஞர் எம். என். எம். சலாஹபத்தின்
ழிக்க
கலாநிதி பதிபுத்தீனின் மூத்த சகோதரர்
31
 

சமர்ப்பணம்
மாத்தறைப் பிறந்து கண்டியில் மணந்து நேர்த்தியாய்க் கொழும்பில் நிறைபணி புரிந்தவர் ஏத்திடும் பண்பார் எம்முயிர்த் தலைவரின் மூத்த சகோதரர்; முதுபெரும் புகழினர் வழக்கறிஞர்எம் என் எம் ஸலாஹ"பத்தின் ! இலங்கை அன்னையின் இன்தவப் புதில்வராய் இணையில் முஸ்லிம் சமுகத் தலைவராய் விளங்கும் அல்ஹாஜ் பதியுத் தினை புதுமுறைக் கல்வியின் புரட்சித் தந்தையை நிதியெனக் காத்து நிறைபண் பளித்து அறிவும், திருவும் அஞ்சா செஞ்சமும் செறியும் சீலராய்ச் சீர்பெற வளர்த்து தந்ததற் பணிக்காய்ச் சிந்தை கனிந்து இந்த நன் னுரலேச் சமர்ப்பணம் செய்கிறேன்; அன்ஞர்க் கல்லாஹ் அருள்கவே!

Page 5

10.
11.
12.
13.
14.
பொருளடக்கம்
சமர்ப்பணம்
அணிந்துரை Cas
மதிப்புரை
பதிப்புரை
அறிமுகம்
என்னுரை
துடிப்புள்ள இளைஞர்
எமது வரலாறு
புதுமைக்கு வித்திட்ட எழுத்தாளர்
ஆப்கானிஸ்தான் பயணம்
மலேசியாவில் சொற்போர்
அலிகார் வளர்ச்சியில்
அறிஞர் தொடர்பு
கல்வியும் தொண்டும்
13.
17
19
25
29
42
48
57
64
7 ዐ
76
30

Page 6
15. கிரிக்கட்டும் ஏகாதிபத்தியமும் A ... 88 l 6. grusë சிந்தனே ... 8 a v ... 94
17. கலையகத் தந்தை A a ... 101
18. மலையைக் குடைந்த மாவீரர் . ... I 09
19. சாஹிரா மலர்ந்த கதை . . . . ... l l 4
20. அரசியல் பிரவேசம் ... . . . ... l 21
21. துணிவு மிக்க செயல் வீரர் . . . . 125
22. முஸ்லிம் அரசியல் மாநாடு ... ... 133
23. பூgநகரில் உரை A ... ... 146 罗4。 வழிகாட்டும் திட்டம் O DI MO ... ... 157
25. குடி அரசு ஆதரவு மாநாடு ... ... 166 26. கவிஞர் கண்ட தலைவர் . ... ... 178 27. குடும்ப வரலாறு ess is a ... 189
28. என் மதிப்பீடு A ... 194
முகப்புப் படம், கல்வியமைச்சைச் சேர்ந்த எம். எஸ். முஹம்மத் அவர்களால் சித்தரிக்க்பீல்ட்ட்து

அணிந்துரை
அமிழ் தினுமினிய தமிழ் மொழி தன்னை தம் தாய் மொழியாகக் கொண்ட தமிழ்ப் பேசும் இனத்தவர் வெவ்வேறு மதங்களேச்சார்ந்தவர்களாயிருக்கும் வகையில் மதத்தால்வேறு பக்ட்வர்களாயிருப்பினும் இனத்தால் ஒன்றுபட்டவர்கள் என்பது மறக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையே. சைவம், வைணவம் இஸ்லாம்.கிறிஸ்தவம் ஆதியண் தமிழன்னையின் வளத்திலே பூத்துக்குழுங்கும் மலர்கள். தமிழ் அன்னை ஈன்றெடுத்த செல்வங்களிலே நாடும் நலனும் கர்த்த நில்லறிஞர் பலர் நம்ம்த்தியிலே தோன்றினிரி-தோன்றிக் கொண்டிருக்கின்றனர். தமிழுக்கும் சைவத்துக்கும் அளப்பரிய தொண்டுகள் புரிந்தவரும் தேசீய விடுதலைக்குவித்திட்டவரு மான நாவலர் பெருந்தகைக்கு அண்மையில் நாம் பெருவிழாக் கள் எடுத்தோம்-அன்னர் புகழ்பரப்பும் மலர்கள் பல அச் சிட்டோம். இந்த வரிசையிலே, நாட்டுக்கும் சமூகத்துக்கும் நற்பணி புரிந்து தேசீய விடுதலைக்காகத் தமது ஆயுளை அர்ப் பணித்த தலைவராக விளங்கும் கலாநிதி அல்ஹாஜ் பதியுத் தீன் மஹ்மூத் அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் மறந்துவிட முடியாது. எனவே, அன்னரைப்பற்றியும் ஒரு நூல் வெளியிட விழைந்தேன்.
கலாதிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களை பல காலமாக நன்கு அறிவேன்.அவ்ர் அறிஞர்: சிந்தனையானூர்; எதனையும் ஆராய்ந்து மதிநுட்பத்தோடு செய்து முடிப்பவர்; தமது சீரிய இலட்சியத்தைநிறைவேற்றுவதில்:ளத்திகையனதிர்ப் புக்களேயும் சமாளித்து:விரத்தேர்டு செயல் புரிபவர்; அஞ்சா
9

Page 7
செஞ்சம் படைத்தவர்; ஆஞல், அன்பின் இருப்பிடமாகவும் திகழ்பவர். இளமை ப் பருவத் திலிருந்தே அன்னர் மேற் கொண்டு வந்துள்ள நடவடிக்கைகள் இவற்றிற்கு ஓர் உதார ணமாகும்.
கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் அவர்கள் தமது சொந்த சமுக மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு மாத்திரம் உழைக்கவில்லை. சொந்தச் சமுகத்தினருக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்து முடித்த அதே நேரத்தில் இந்த நாட்டில் வாழும் எல்லா இன மக்களுக்கும் வழிகாட்டியாக அமைந்த ஒரு தேசீய வீரராகவும் விளங்குகிருர்,
சிறந்த கல்விமானுக விளங்கியதால் காலத்துக்கேற்ற நவீன கல்வி முறைகளை உருவாக்கினுர், கல்வித்துறையில் சகலருக் கும் சமமான சந்தர்ப்பமளிப்பதில் அவர் மேற்கொண்ட முன் னேற்றமான திட்டங்களை காலத்தால் மறந்துவிட முடியாது. 1961 ஆம் ஆண்டு இலங்கையின் கல்வியமைச்சர் என்ற முறை யில் இந்த நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும், அரசாங்கம் கையேற்பதற்காக அன்னர் மேற்கொண்ட தீரமிக்க்-துணி அான செயல்முறையை இந்த நாட்டின் வரலாற்று ஏடுகள் என்றைக்குமே மறந்து விடுவதற்கில்லை. அறிவு, சிந்தனை, என்பன ஒரு சிலரின் ஏகபோக உரிமையாக விளங்கியதை மாற்றியமைத்தார். அதனை மக்கள் உடைமையாக்கி எல்லோ ரும் தத்தமது ஆற்றலுக்கேற்ப அறிவை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தினுர்,
கல்வியின் மூலமாகவே ஒரு நாட்டின் அரசியல் சமூக கலா சார வாழ்க்கை முறைகளைப் பக்குவப்படுத்த முடியும் என்ற குறிக்கோளை சாதாரண மக்களும் உணரச்செய்தார். இவரது இத்தகைய செயல் வீரத்தினுல் இருமுறை கல்வியமைச்சராகக் கூடிய வாய்ப்பினைப் பெறலாஞர். பல்கலைக்கழகக் கல்விமுறை விலும் விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகளிலும் இவர்ல முற்போக்கு நடிவடிக்கைகளைக் கையாண்டார்:யாழ்ப்ஜோத் தில் ஒரு கலைக்கல்லுரரியையும்பல்கலைக்கழக். வளாகத்தையும் நிறுவினர்.வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இவ்ார் விஜயஞ்
O

செய்யும்போது மக்கள் அளிக்கும் வரவேற்புக்களும் பாராட் டுக்களும் இவர் தமிழ் பேசும் மக்களிடையே பெற்றுவந்துள்ள ம்கத்தான இடத்தைக் குறிப்பிடுகின்றன:
இலங்கையில் மாத்திரமன்றி இந்தியா,பர்மா, மலேசியா, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இவர் தமது வாலிபப் பருவத்தில் ஆற்றியுள்ள சொற்பொழிவுகளும் செய்துள்ள்சே வைகளும் அந்தநாடுக ளின் முன்னேற்றத்துக்கு எவ்வளவு உதவியுள்ளனவென்பதை அவர் கூருது விட்ட்ாலும் மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும். அந்தச் சேவைகளை நினைக்கும்போது கலாநிதி பதியுத்தீன் அவர்கள் தென்கிழக்காசியாவின் தலைசிறந்த தலவர் என்பதை உணர முடிகிறது. அந்த நாடுகளின் சுதந்திரப் போராட்டங்களில் அன்னர் காட்டி வந்துள்ள ஆர்வத்தை இந்நூலில் வாசகர் கர்கள் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த அறிஞர்களதும் தலைவர்களதும் நேரடித் தொடர்பு கொண்டவராக இருந்துவந்துள்ளார்.
இத்தனைக்கும் மத்தியில் சொந்த நாட்டு மக்களின் விடு தலைக்காக உழைக்க வேண்டுமென்ற ஆர்வத்துடன் இலங்கை திரும்பியதிலிருந்து அவர் சமுக அரசியல் பொருளாதாரத் துறைகளில் தமது முழுச் சக்தியையும் பயன்படுத்திஞர்.
அலிகாரில் பெற்றுக்கொண்ட கல்வியும் கலைஞானமும் அவரை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரசாரங்களுக்குத் தூண்டி யது. அது இந்த நாட்டினரையும் சுதந்திர விழிப்புணர்வு பெறச் செய்ததெனலாம். காலத்தையும்-தேவையையும் கருத் திற் கொண்டு அன்னர் மேற்கொண்ட முயற்சிகள் இன்று இந்த நாட்டுமக்கள் வெற்றிப் பாதையில் செல்ல வழிவகுத்துள்ளன. அத்தகைய ஒரு பெருந்தலைவரை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் என்னுள்ளத்திலே பல காலமாக இருந்து வந்தது. அவரது வாழ்க்கை நூல் ஒன்றை வெளியிட வேண்டுமென்ற ஆசையும் என்னுள் எழுந்தது.

Page 8
இந்த ஆவலை எனது நீண்டநாள் நண்பரும் பேராதனை ஆங்கில ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளருமான அல்ஹாஜ் எஸ். எம். ஏ. ஹஸன் அவர்களிடம் தெரிவித்தேன். எனது வேண்டுகோளுக்கு இசைந்த அவர், அல்ஹாஜ் பதியுத் தீன் அவர்களைப் பற்றி, திரட்டிவைத்திருந்த சம்பவங்களை ஒன்று சேர்த்து இந்த நூல் எழுதியுள்ளார். அவரது இயக்க மான இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கத்தின் ஆதர வில் வெளியிடும் இந்த நூலை அச்சிட்டு வெளியிடுவதில் நான் பெருமகிழ்வெய்துகின்றேன்.
arts. நா. இரத்தினசபாபதி
aloisairlfrir' leut
2.
 

மதிப்புரை
ருே நாட்டின் செல்வம் பெரும்பாலும் அந்நாட்டில் வாழும் மக்களினதும் தலைவர்களினதும் பண்பு நலன்களிற் தங்கியுள்ளது. இறைவனுக்கும் மனிதகுலத்துக்கும் தை tissir ஆற்றுகின்ற அரிய சேவைகளினலும் நாடு நலம் பெறுகின் றது. இந்தவகையில் நமது ஈழமணித் திருந்ாடும் அதிஸ்டம் பெற்றுள்ள தென்றே கூறுவேண்டும்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகிய :பல் வேறு இனத்தவரும் - சிறந்த சாதனைகளின் மூலமாக இணக் கத்துடனும், நல்லெண்ணத்துடனும், பரஸ்பர ஒற்றுமையுட னும் வாழுகின்றனர்.
நமது நாட்டின் பெருந்தலைவர்களுள் ஒருவராகக் கல்வி யமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் மதிக்கப்படுகின்ருர்கள். அவர், ஒரு சிறந்த அரசியல்வாதியும் தேசாபிமானியும், தேர்ச் சி பெற்ற கடடிை வீரருமான காலஞ்சென்ற ஸர். செய்யத் அஹ்மத்கான் அவர்களால் நிறு வப்பட்டி:அகிலஉலகப் புகழ்ப்பெற்ற அலிகார் சர்வகலாசாலை யில் கல்வியும் பயிற்சியும் பெற்றுக்கொள்ளும் பெரும்பாக் கியத்தைப் பெற்றுக்கொண்டார்.
அலிகாரில் அவர் பெற்றுக்கொண்ட பயிற்சியும், பாரதத் தின் பெருந் தலைவர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு களுமே கலாநிதிபதியுத்தீன் இந்த நாட்டின் கல்வி, அரசியல்
3

Page 9
சமூக,நிர்வாகத்துறைகளில் சிறப்புடன் மிளிரச் செய்வதற்குப் பெருமளவில் ஆதாரமாக அமைந்துவிட்டன.
அவரது கருத்துக்களும் செயல்களும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவை என்ருல் மிகைக்காது. மக்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. ஒருவரின் கருத்துக் களை மற்றவர்கள் பூரணமாக ஏற்றுக்கொள்வது மனித இயல் புக்கு அப்பாற்பட்டதாகும், அதிலும் குறிப்பாகத் தலைவர்களை யும் அரசியல் வாதிகளையும் பொறுத்தவரையில் இது மேலும் கடினமானதாகும். பாரபட்சமற்ற நடுவு நிலைமையைக் கைக் கொண்டு, சகல பிரஜைகளையும் நேர்மையாகவும் நீதியான கண்ஞ்ேட்ட்த்துட்னும் நடத்த முற்படும்போது"இத்தகைய சேர்த்னைகள் தோன்று வ ைத் த் தவிர்க்க முடியாததாகவ்ே
இருக்கும்
இத்தகைய சோதனைகளின் மத்தியிலேதான் கல்ாநிதி பதியுத்தீன் இந்த நாட்டின் வரலாற்றில்ே ஒரு முக்கியமான இடத்தையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொள்கின்ருர், ஒரு சிறந்த கல்விமாஞக-அரசியற் தலைவனக-சமூக சேவையாள குக.தேச்ர்பிமானியாக இருந்து, என்ற்ைக்கும் நிலைத்து நிற் கத்திக்கத்ான் அரும்பன்னிகள் பலவற்றை ஆற்றியுள்ளார். இது போன்ற சாதனைகளைப் புரியக்கூடியவர்கள் மிகச்சில்ர்ே என்று
கூறுவேன்.
- ஒருமூன்ற் அம்ை ச்சர்பதவியும் செனட்டர் பதவியும் அவரைத் தாஞகவே தேடிவந்தபோதும் அதனை ஏற்றுக் ெேகாள்ள மறுத்துவிட்டார். அப்போது அவர் தமது சொந்த் *மூகத்துக்குச் செய்யவேண்டியிருந்த கடமைகளைக் கருத் திற் கொண்.ே அவ்வாறு செய்தார். நமது நாட்டைப் பொறுத்த வ்ரையில் இப்படியான ஒருவரைச் சந்திப்பது மிகமிக அரும்ை யாகும். இந்தச் சம்பவத்தை நான் நேரடியாக்வே அறிந்திருந் தேன்.
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய நண்பரும், அன்மையிற் காலஞ்சென்றபெருத் தேசியவாதியுமான ஜனுப்.எம்.ஏ.ஜி.
4
 
 

எம். சாலிஹ், நீண்டகால நெருங்கிய நண்பர்களுள் ஒருவரா கும். அன்னருடன் நானும் கலாநிதி பதியுத்தீனின் வாழ்க்கை முறைகளை இளமையிலிருந்தே அவதானித்து வந்துள்ளேன்.
காலஞ்சென்ற எஸ்.டப்ள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா திருமதி பண்டாரநாயக்கா ஆகிய இரண்டு பிரதமர்களும் கலாநிதி பதியுத்தீனின் தேசாபிமானத்திலும் - கொள்கைகளி லும் பூரண நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இலங்கை வாழ் முஸ்லிங்கள், இந்த நாட்டில் வாழும் சிங்களவர்க்ளுக்கும் தமிழர்களுக்குமிடையே ஓர் இணைப்புப் பாலமாக விளங்குகின்ருர்கள் என்பதை நான் இந்தச் சந்தர்ப் பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த உண்மைன்ய எல்லோரும் உணரக்கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை. முஸ்லிம் சமுதாயத்தினரினதும் இந்த நாட்டினர்தும் தகலவ ரான கல்வி மந்திரியவர்கள், தமது தூரதிருஷ்டயான நோக்கத் தினலும் அநுபவத்தினுலும் இந்த வகையில் பெரியதொரு சேவையைச் செய்து கொண்ட்ே இருக்கின்றர்.
கஷ்டங்களும், நெருக்கடிகளும் ஏற்பட்டபோதிலும் தமது சலிப்பற்ற மனத்தினலும், அயராத ஆற்றலினலும், பூgரீலங்கா வின் தேசிய ஒற்றுமைக்காக தமது மாணவப் பருவத்திருந்தே உழைத்து:இந்துள்ளார் தமது அமைச்சில் தமிழ்ப் பகுதி யொன்றை நிறுவினர். சில சிங்கள இலக்கியங்களைத் தமிழிலும் தமிழ் இலக்கியங்களைச் சிங்களத்திலும் பெயர்ப்பதற்கான வழிவகைகளைச் செய்தார். இதுபோன்ற இன்னும் பல மும்ற்சி களால் இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்காக :eeந் கொண்ட முயற்சிகளையிட்டு நான் அவருக்கு நன்றி ச்ெலுத்து கின்றேன்.
கலாநிதிபதியுத்தீனின் சகோதரரும் வழக்கறிருமான காலஞ் சென்ற எம். என். எம். சலாஹ"த்தீன் எனது அண்டை வீட்டுக் காரராகப் பல ஆண்டுகாலம் வாழ்ந்து வந்துள்ளார். அன்னுரது அரியகுணநலங்களையும், நல்ல பழக்கவழக்கங்களையும், திறமை களையும் நான் எப்பொழுதுமே அன்புடனும் மரியாதையுடனும்
S

Page 10
நினேவுகூர்த்து வருகிறேன். ஒரு சிறந்த குடும்பத்துக்குரிய சீரிய பண்பை தான் அவர்களிடத்துக்கண்டேன்.
அத்தகைய குடும்ப நலன்களிற் பழகி பூரீலங்காவுக்கு சிறந்த சேவைகள் செய்துள்ள, கலாநிதி பதியுத்தீன் அவர்களை நான் ஒரு சிறந்த தலைவன கவே ஏற்றுக்கொள்வதோடு தொடர்ந்து அன்ஞரது சேவையை அதுபவிக்கக் கூடியதாக, ஆண்டவன் அவருக்குநீண்ட ஆயிலும் நித்திய சுகமும் வழங்க வேண்டுமென பிரார்திக்கின்றேன்.
நமது நாட்டுக்கு அணிகலன்களான தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதற்கு ஆர்வத்துடன் முன்
இந்த நாட்டின்-பிரஜை' என்ற முறையில் எனது நல்வாழ்த்துக் களிேத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு நாட்டின் வரலாறு அந்த நாட்டின் தலைவர்களின் வரல்ாற்றிலேயே தங்கியுள்ளது. எனவே இதுபோன்ற இன்னும் பல வெளியீடுகளையும் அல்ஹாஜ் ஹஸன், சமுதாயத்துக்குத் தந்துதவுவாரென நம்புகிறேன்.
| ள்ஸ். சிவசுப்பிரமணியம் வழக்கறிஞரும், பிரசித்த நெர்த்தாரிசும்
ஹல்ஸ்டப்
இகாழும்:
4台 1. مباسي
6

பதிப் புரை
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை விளக்கிக் கூறும் நூல் எதுவும் இதுவரை வெளிவந்ததாக வில்லை. அவ்வாறு ஒரு நூலை எழுதும் முயற்சியும் எடுக்கப்படுவதாகத் தெரிய வில்லை. அதே போல் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்காக முழு மூச்சுடன் உழைத்த தலைவர்களின் வரலாறும் அண்டிைக் காலம் வரை ஆரும் அறியாத தாகவே இருந்து வந்தது. இந்தத்தழை இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சிக்குப் பெரும் பாதகமாகவே அமைந்துளது என்பது இன்று ஓரளவுக்கு உணரப்பட்டு வருகிறது.
இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக் கம் இந்தக் குறையால் விளையும் பாதிப்பை நன்குணர்ந்து, தன்னுல் இயலு மான அளவு முயன்று, இந்நிலையை மாற்ற முயற்சிகள் மேற் கொண்டு வருகிறது.
இந்த வழியிலே, இலங்கை முஸ்லிம் பெரியார்களின் நினைவு தினங்களைக் கொண்டாடியும், வரலாற்று நூல்களை எழுதத் தூண்டியும், எழுதப்பட்ட நூல்களை வெளியிட்டும் பணிபுரிந்து வருகிறது நமது இயக்கம்.
சமூகத்தின் மலர்ச்சிக்கும், நாட்டு நலத்துக்கும் நற் பணி புரிந்து வாழும் தலைவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டுவது பண்பான செயலாகும். அவ்வகையில் நமது நாட்டு வளத்துக்கும், சமூக நலத்துக்கும் தியாக உளத்துடன் திட்டமிட்டுப்பணிபுரியும் தீரர் கலாநிதி அல்ஹாஜ் டதியுத்தீன்
7

Page 11
மஹ்மூத் அ வர் கிளை ம தித் துப் போற்றும் வகையில் அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன் அவர்கள் எழுதியுள்ள நூலை வெளியிடுவதில் எமது இயக்கம் பெருமிதமடைகிறது.
இன்று கல்வியமைச்சராகப் பணிபுரியும் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் மூச்சு ஒவ்வொன்றும் ஈழத்து முஸ்லிம்கள் எழுச்சிக்கு உரமூட்டுவது. ஏனைய முஸ்லிம்கள் வாழ்வுக்கு வளமூட்டுவது; இந்த நாட்டு ஏற்றத்துக்குத் துணை நிற்பது. பரந்த நோக்கும், பணியே அணியாகத் திகழும் அவர் தம் பண்பும் உறுதிபெற ஊக்கும் அவர்தம் உரைகளும் இந்த நூல் முழுவதும் விரவி உயர்பாதை நோக்கி நம்மை இட்டுச் செல்வதை நூலினுள் நுழைந்து நோக்கலாம்.
இந்த அரிய நூலை ஆக்கித் தந்த அல்ஹாஜ் எஸ். எம். ஏ. ஹஸன் அவர்களுக்கு நன்றி நவின்று இந்நூலை வெளியிட்டுத் தருவதிற் பெருமிதம் கொள்கிறது நமது இயக்கம்.
இல, இஸ். எழு. இயக்கத்தினர் l-1-74. இராஜ வீதி,
கண்டி,

அ றி மு க ம்
அகில இலங்கை முஸ்லிம் லீக் பிரதித் தலைவர் ஜனுப் எம். ஏ. சி. எம். சாலிஹ், கலாநிதி பதியுத்தீன் அவர்களுடன் நீண்டகாலமாகப் பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ள ஒருவ ராகும். ஜனுப் சாலிஹ், யுனெஸ்கோ தேசியக் கமிஷன் அங்கத்த வராகவும், அகில இலங்கை வை. எம். எம். ஏ. போஷகராகவும், உள்ளூர் ஆட்சிக் கமிஷன் அங்கத்தவராகவும், இலங்கைத் துறை முக வர்த்தக சங்க உதவித் தலைவராகவும், இலங்கைத் தொழி லாளர் சகாய நிதிச் சங்கச் செயலாளராகவும், கொழும்பு மாவட்ட வைத்தியசாலைகளின் ஆலோசகர் குழு உறுப்பினராகவும், வேறு பல இயக்கங்களின் பொறுப்புவாய்ந்த பதவிகளிலும் பணி புரிந்து வந்துள்ளார். கலாநிதி பதியுத்தீனைப்பற்றி அவர் தந் துள்ள அறிமுகம் ஈண்டு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.1
* கல்வியமைச்சர் அல்ஹாஜ் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் (M.A., LLD, D,1itt, M.P.) அவர்களது ஆயுட்காலத்திலேயே வெளிவருகின்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலொன்றுக்கு அறிமுகவுரையொன்று வழங்கக் கிடைத்த, அரிய வாய்ப்பினை எண்ணி நான் பெருமகிழ்வெய்துகின்றேன். ஐம்பது ஆண்டு க்ளுக்கும் அதிகமாக நான் அன்னருடன் நெருங்கிய தொடர் புடையவனக வாழ்ந்து வந்துள்ளேன். எனது மதிப்புக்கும் அன் புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராகத் திகழ்ந்த அன்னருடன் நானும் பல வகைப்பட்ட பொதுச் சேவைகளில் ஈடுபாடு கொண்டிருந்தேன். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் போற் றத்தக்க பலவகையான சமூக நலன்களில் கலாநிதி பதியுத்தீன்
9

Page 12
கொண்டிருந்த ஈடுபாடுகளை விளக்கிக் கூறுவதற்கு இத்தகைய தோர் அறிமுகம் போதுமானதல்ல.
காலத்தால் மறக்கவோ, மறைக்கவோ முடியாத அளவுக்கு அன்னர் ஆற்றியுள்ள அரும்பணிகளே அவரை ஒரு மாமேதை ஆக்கும் அளவுக்கு மாற்றிவிட்டது. இத்தனைக்கும் அவரிடத்துக் காணப்பட்ட தன்னலமற்ற சேவா மனப்பான்மை, துணிவு ஆழ்ந்த சிந்தனையுடன் எடுக்கப்படும் தீர்மானம், சேவையின் விருப்பு, என்பனவற்றை இலட்சியங்களாகக் கொண்டு எடுக் கப்பட்ட தீர்மானங்களே காரணமெனக் கூறின் மிகையாகாது.
கலாநிதி பதியுத்தீன், தென்னிலங்கையின் மதிப்புக்குரிய மகோன்னதமான குடும்பமொன்றிற் பிறந்தார். எ ன் து மூதாதையரும் அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்ற Q”令卤为 யில் நானும் பெருமைப்படுகின்றேன். அறிவும் ஆற்றலும் படைத்த ஒரு சிரேஷ்ட மாணவராக அன்ஞர் விளங்கிய காலத் தில் என்னை அடிக்கடி சந்திப்பதுண்டு. அக்காலத்திலும் அவர் வெளிக்காட்டிய ஆலோசனைகளும் கருத்துக்களும் நடவடிக்கை களும் அவரது திறமைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்
தன.
கலாநிதி பதிபுத்தீனின் வாழ்க்கையை நான்கு பிரிவுகளா கப் பிரித்து ஆராயலாம். முதலாவதாக, அலிகாருக்குச் செல்லு வதற்கு முன்னர் மாணவப் பருவத்திலே மேற்கொண்டிருந்த துணிவான நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். பின்னர் அலி காரில் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தபோது, "புவிஇயல் மாணவர் என்ற வகையில் பல நாடுகளுக்கும் பிரயாணங்களை மேற்கொண்டு தமது சொல், செயல் எழுத்து வன்மைகளைப் புலப்படுத்தியுள்ளதை நோக்கலாம். அடுத்து அலிகாசிலிருந்து திரும்பியதும், கல்வி கலாசாரத் துறைகளில் ஆர்வங்கொண்ட வராக இருந்து படிப்படியாக அரசியலில் அக்கறை காட்ட முற்பட்டுள்ளதைக் கூறலாம். அதன் பிறகு அவர் பொதுவாக இந்த நாட்டுக்கும், சிறப்பாகத் தமது சமுதாயத்தைச் சார்ந்த மக்களுக்கும் கல்வி அரசியல் துறைகளில் அளப்பரிய சாதனை களைச் செய்துள்ளதைக் கவனிக்கலாம்.
20

கலாநிதி பதியுத்தீன் தமது பட்டப் படிப்புக்காக அலிகா ருக்குச் செல்லுவதற்கு முன்னர், முஸ்லிம் சமுதாயத்தின் முற் போக்குத் திட்டங்களுக்கும், அன்றையத் தேவைகளுக்கும் அமைவாகப் பல சமுதாயப் பணிகளில் முன்னின்று உழைத்து வந்துள்ளார். "வாலிப முஸ்லிம் லீக்" என அன்று அழைக்கப்பட்ட இன்றைய முஸ்லிம் லீக் ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்புவதில் இவர் அதிக அக்கறை காட்டினர். எனது ஆலோசனையின்பேரி லும் வற்புறுத்தலின் பேரிலும், காலஞ்சென்ற எம். அப்துல் றஹமான் அவர்களுடன் சேர்ந்து, அந்த இயக்கத்தின் இணைச் செயலாளராகப் பொறுப்புக்களை மேற்கொண்டார். கலாநிதி பதியுத்தீன் தமது பெருமுயற்சியினலும், பேருழைப்பினலும், வியக்கத்தக்கதோர் உன்னத ஸ்தாபனமாக அந்த இயக்கத்தை மாற்றியமைப்பதில் ஆர்வம் காட்டினர். அதனல் முஸ்லிம் லீக் ஸ்தாபனம், முஸ்லிம் சமூகத்தினரால் பெரிதும் கவரப்படலா யிற்று. அந்த ஸ்தாபனத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற் காகப் பல இடங்களுக்குச்சென்று நிதி சேகரித்து அதன்நிலையை மேலும் உறுதிப்படுத்திர்ை. அவர் முஸ்லிம் இளைஞர்களுடன் சேர்ந்து, இலங்கையின் பலபாகங்களிலும்வாழ்ந்துவந்த முஸ்லிம் களின் முக்கியமான நிலையங்களுக்கெல்லாம் விஜயஞ் செய்து, ஒரே இலட்சியத்துக்காக அவர்களை ஒன்று சேரவலியுறுத்தியதன் காரணமாக, முஸ்லிம்களின் ஐக்கியம் பலப்படலாயிற்று.
சமுதாயத்தில் மேலும் ஒருபடி முன்னேற்றத்தை விரும்பிய கலாநிதி பதியுத்தீன், ஸ்க்காத் நிறுவனமொன்றையும் இன்னும் பல நிறுவனங்களையும் உருவாக்கினர். பிரசுரங்கள், சஞ்சிகை கள் என்பன் வற்றை அடிக்கடி வெளியிட்டு அவற்றின் மூலமாக முஸ்லிம்கள் உண்மையான இஸ்லாமிய வாழ்க்கை முறைகளைப் பேணி நடக்கக்கூடிய வழிமுறைகளை விளக்கி வைத்தார். இது போன்ற இன்னும் பல கைங்கரியங்களையும் மேற்கொண்டி ருந்து அலிகர்ருக்குச் செல்ல முற்பட்ட அவரது அக்காலச் சேவைகளை மேலும் விளக்க வாய்ப்பின்மையால் சுருங்கக் கூறி, அலிகாரில் பட்டதாரி மாணவராக இருந்தபோது மேற் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓரிரு நிகழ்ச்சி களேயும் குறிப்பிட விரும்புகின்றேன்.
2

Page 13
அலிகார் சர்வகலாசாலையின் சஞ்சிகை ஆசிரியராக இருந்து அதன் பொன்விழா மலரை மிகச் சிறப்புடன் வெளியிட்டுப் பெரும்புகழை நிலைநாட்டினர். அந்த மலரில் இடம்பெற்ற கட்டுரைகள், கவிதைகள் என்பனவற்றைச் சுவையுடனும் ரச னையுடனும் அநுபவிக்கும் பொரு ட்டு அவரது பேராசிரியர்களிட மிருந்தும், உலகின் புகழ்பூத்த பல பெரியார்களிடமிருந்தும், சஞ்சிகைக்கான ஆக்க இலக்கியப் படைப்புக்களைப் பெற்றுக் கொண்டார். அலிகார் சர்வகலாசாலை நிலைத்து நிற்கும் கால மெல்லாம் கலாநிதி பதியுத்தீனின் நாமமும் அழியாது ήξου பெற்று நிற்கத்தக்கதாக, எத்தனையோ அரும்பணிகளை அக் கலா நிலையத்துக்காக மேற்கொண்டார். அலிகார் சர்வகலா சாலையின், புவிஇயல் மாணவன் என்ற முறையில், உலகின் பல நாடுகளுக்கும் விஜயஞ் செய்து சர்வகலாசாலையின் பெயரை யும், புகழையும் நிலைநாட்டினர்.
அலிகார் சர்வகலாசாலையிலிருந்து இலங்கை திரும்பியதும், அன்னுரது பேராற்றலைப் புரிந்துகொண்ட பல பெரியார்கள், இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியில், புவிஇயல் பேராசான கப் பணியாற்றும்படி ஆலோசனை கூறினர். ஆணுல், அத்தகைய பணிகள் அவரை அவ்வளவாகக் கவரவில்லை. காலம் நகர்ந்து கொண்டிருந்த தற்கேற்ப இந்த நாட்டின் பொதுப் பணிகளிலே தான் அவரது எண்ணங்கள் ஈர்க்கப்படலாயின. முஸ்லிம்கள் சிங்களம் கற்க வேண்டுமென்று அன்னர் ஒரு காலத்திலே கூறி வந்துள்ள தீர்க்கதரிசனமான ஆலோசனைகளின் மகத்துவத் தைப் பிற்காலத்திலே காலஞ்சென்ற பிரதமர் எஸ். டப்ளியூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சிங்களத்தை அரசகரும மொழி யாக்கியதிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது. காலஞ்சென்ற திரு. பண்டாரநாயக்கா, கலாநிதி பதியுத்தீனிடம் அளவற்ற, நம்பிக்கையும் நன்மதிப்புங் கொண்டவராகக் காணப்பட்டார். திரு. பண்டாரநாயக்காவின் முற்போக்குத் திட்டங்களுக்குக் கலாநிதி பதியுத்தீன் எப்பொழுதும் பிரதம ஆல்ோசகராக இருந்து வந்துள்ளமையால், 1959ஆம் ஆண்டு திரு. பண்டார நாயக்கா காலஞ்சென்ற பின்னருங்கூட, அத்திட்டங்கள் வெற் றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை
22

நோக்கலாம். எனவேதான் திருமதி பூரீமாவோ பண்டார நாயக்காவும், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கா கக் கலாநிதி பதியுத்தீன்மீது நம்பிக்கை வைத்து, அன்னரின் ஒத்துழைப்பையும் பெற முன்வந்தார்.
1956ஆம் ஆண்டு திரு. பண்டாரநாயக்காவின் அமைச்ச ரவையில் அல்லது அப்போதைய செனற் சபையில் சேர்த்துக் கொள்ள முற்பட்டபோதும், கலாநிதி பதியுத்தீன் அத்தகைய பதவிகளை ஒரு பொருட்டாக மதிக்காது, அப்பதவிகளை ஏற்றுக் கொள்ளவும் மறுத்துவிட்டார். இத்தனைக்குங் காரணம், தாம் போற்றி வளர்த்து வந்த கல்விக் கழகமான, கம்பளை ஸாஹிராக் கல்லூரி, இந்த நாட்டின் எந்தக் கல்லூரிக்கும் இரண்டாந்தர மாக விளங்கக்கூடாது என்ற நோக்கமும் அதனைத் தமது தலை மையிலேயே முன்னணிக்குக் கொண்டுவர வேண்டுமென்ற மனப்பான்மையுமே! அவர் தமது எண்ணத்தைப் பூர்த்தியாக் கிக்கொண்டதன் பின்னர், தமது முழுக் கவனத்தையும் அரசி யல், சமுக முன்னேற்றத் துறைகளில் செலவிட முற்பட்டார்.
1960ஆம் ஆண்டு பூரீமாவோ பண்டாரநாயக்கா, விசுவா சம் நிறைந்த கலாநிதி பதியுத்தீனைக் கல்வி அமைச்சர்ாகத் தமது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்; அக்காலத் திலே, இலங்கையிலுள்ள பாடசாலைகளை அரசாங்க மயமாக்கு வதற்கு அன்னர் மேற்கொண்ட வீரம்மிக்க துணிச்சலான செயலை எவரும் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. *உலகிலே மிகச் சிலர்தான் அத்தகைய துணிவுட்ையவர்கள்" என்பது எனது கருத்தும், நம்பிக்கையுமாகும். இத்தகைய பெருமாற்றத்தைத் தொடர்ந்து சுகாதார அமைச்சராகப் பதவி யேற்றபோதும், அரசாங்க வைத்தியர்கள் பிரத்தியேகமாகத் தொழில் பார்ப்பதைத் தடுத்து "Channal Practice முறையை அமுலுக்குக் கொண்டு வந்தார். மீண்டும் இரண்டாம் முறை யாக 1970ஆம் ஆண்டு கல்வி அமைச்சராகப் பதவியேற்ற போது, புதிய கல்வித் திட்டமொன்றை அறிமுகஞ் செய்து வைத்துக் கல்வி முறையில் மகத்தான மாறுதலொன்றை ஏற். படுத்தினர். அதனல் இலங்கைக் கல்விமான்களும், அறிஞர்களும்
23

Page 14
ரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்கூட இவரது கல்விக் கோட்பாட்டு முறைகளைப் பாராட்டியுள்ளன.
இந்த நாட்டின் பொருளாதார சமூக முன்னேற்றத்துக் கமைவாக மாணவர்களை வழிநடத்தி, நாட்டின் சுயதேவை களைப் பூர்த்தி செய்துகொள்ளவும், படித்த வாலிபர்கள் தொழி வின்றி. விரக்தியடையாமல், சுயநம்பிக்கையுடன் வாழ வழி செய்யவும்,இந்தப் புதிய கல்வித் திட்டம் வழி வகுக்கவுள்ளது.
கலாநிதி பதியுத்தீன் தனது சுயமுயற்சியால் தன்ன்ைத் தானே ஆளாக்கிக்கொண்டவர். அவர் தமக்க்ே அன்மயப்பெற்ற விருப்புக்களால், இந்த நாட்டு இளைஞர்களையும் மனித் சமுத்ர் யத்தையும் நல்வழிப்படுத்த வேண்டுமென்ற் அவ்ர்து உயரிய நோக்கங்களும் பண்புகளும் எல்லாராலும் பார்ாட்டப்படும் ளின்பதில் ஐயமில்லை. இன்றுவரை அவரது வாழ்க்கையில் மேற் கொள்ளப்பட்ட உயரிய சேவைகளையும், கடன்ம உணர்வுகளை யும் நோக்கும்போது, ஒக்ஸ்போர்ட் புகழ்ப் பாணியிலமைந்த* எங்கும், எப்பொழுதும், எவ்வாருக இருப்பினும், உயரிய இலட்சியங்களால் உருவான எண்ணங்களைக் கடைப்பிடித்துக் கருமங்களை மேற்கொள்ளும்போது, வெற்றிகளின் உதாரணங் களும், தோல்விகளை தாங்கும் திடமும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அசைந்து கொடுக்காத மனப்பக்குவமும் பெற்றுக்கொண் டுள்ள ஒருவரது வாழ்க்கை, பூரணத்துவமும் நிறைவுடையதா கவும் அமைவுறும் " என்ற புகழுரைகளே மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
கலாநிதி பதியுத்தீன் தன்னைத்தான் தலைவராகக் கருதா விடினும், நிச்சயமாக அவர் இந்நாட்டு முஸ்லிம்களின் பெருந் தலைவர் என்பதிற் சந்தேகமே இல்லை.
எனது நீண்டகால நண்பரான கலாநிதி பதியுத்தீன் னில் லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருள் பெற்று நிலையர்ன் புகழ் பரப்பி வாழப் பிரார்த்திக்கின்றேன்.
எம். ஏ. சி. எம்.சாலிஹ்
25-12-1973, 55, நொரிஸ் கெனல் வீதி, கொழும்பு.
24

எ ன் னு ரை
ஒரு சமுதாயத்தின் தலைவர்கள் அந்தச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரண்களாகும். அவர்களைக் காலத்தால் மறந்து விட்டால் அல்லது மறைத்துவிட்டால், அதஞல் சமுதாயமே பாதுக்ாப்பற்ற நிலையில் பாதிக்கப்படுகின்றது. குறிப்பர்க், முஸ் லிம் சமுதாயத்தில் தோன்றிய எத்தனையோ பெரியார்களது வாழ்க்கை விவரங்களைப் பெற்றுக்கெர்ள்ள முடியான்மியிஞல் நமது சமுதாயத்தின் வரலாறே மங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டு முஸ்லிம்கள் தமக்கெனத் தனியர்னதொரு வர லாற்றைக் காண வேண்டுமாயின், முதலில் அந்தச் சமுதாயத் துக்காகப் பேரும் புகழும் பெற்றுத் தந்த பெரியார்களின் அரும்பெரும் பணிகளைப்பற்றித் தெரிந்துகொள்ளுதல் வேண் டும். சமூக, பொருளாதார, அரசியல் துறிைகளிலும், கலா சார்த்துறைகளிலும் நமது பெரியார்கள் ஆற்றியுள்ள சேவை களை வெளிக்கொணர்வத்ன் மூலம்தான் நமது தேசிய வீரர் களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் நாம் அறிமுகஞ் செய்துவைக்க முடியும். இந்த நாட்டின் தேசிய நலன்களில் முஸ்லிம்கள் பெற்றுவந்துள்ள பங்கையும் எடுத்துக்காட்ட முடியும்.
"முஸ்லிம் பெரியார்களைப்பற்றி முஸ்லிம் பெருமக்கள்ே அறிந்து ன்வக்கவில்லை" என்ற கருத்து ஓரள்வுக்கு உண்மை யென்ற்ே கூற வேண்டும். நமது ச்மூக்ம் : கல்வியிற் பின்தள்ளப் பட்ட வியாபர்ர சமுகமாக வாழ்ந்து வந்ததும், இதற்கெrரு கர்ரண்மெனக் கருதலாம். எனினும், சமீபக்ர்ஸ்மாகன்ற்பட்டு
25

Page 15
வருகின்ற கல்வியின் மறுமலர்ச்சியும் நமது சமூகத்தின் கல்வி மான்களும் எழுத்தாளர்களும், மேற்கொண்டுள்ள பெருமுயற் சிகளும் இத்துறையில் ஓரளவு புத்துக்கம் ஏற்படச் செய்துள் ளது. அதனல், வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது மாத்திரம் பெருமைப்படுத்திக் காரியஞ் சாதிக்கும், சுயநலமிகளாகவன்றிச் சமூகத்துக்காக வாழ்ந்து வந்த பெரியார்களே, என்றைக்குமே சமுதாயத்தின் நினைவில் வைத்துப் போற்றக்கூடியதாகவும் இருக்கும். இத்தகைய நன்னேக்கத்தைக் கருத்திற்கொண்டே அல்ஹாஜ் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களது வாழ்க் கையின் சில நிகழ்ச்சிகளை எழுத்துருவில் தர முனைந்துள்ளேன். இதுபோன்றே இன்னும் பல பெரியார்களது வாழ்க்கை விவரங் கள் வெளிவர வேண்டுமென்பது எனது வேணவாவாகும். எனது இந்த முயற்சி தொடர்வதற்கு இறைவனின் நல்லருளும் வாசக நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்குமென எண்ணுகிறேன்.
கலாநிதி, பதியுத்தீன் இந்த நாட்டுக்கும், முஸ்லிம் சமுதா யத்துக்கும் ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகளினல், இந்த நூற் ருண்டிலே தோன்றிய தேசியப் பெருந் தலைவர்களில் ஒருவராக விளங்குவார் என்பதிற் சந்தேகமில்லை. அண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அன்னர் மேற்கொண்டிருந்த விஜ யத்தின்போது மக்கள் அளித்த மகத்தான வரவேற்புகளும், வாழ்த்துக்களுமே அதற்குப் போதிய சான்ரு கும். அவரது ஆழ்ந்த சிந்தனைகள், தூரதிருஷ்டிவாய்ந்த நோக்கங்கள், துணிச்சல்மிக்க சேவைகள் என்பன இந்த நாட்டின் வரலாற் றில் ஒரு புதுப் பாதையை அமைத்துள்ளன. முஸ்லிம்களின் அரசியல், கலாசாரத் துறைகளில் புதிய உத்வேகத்தையும் உணர்வையும் உருவாக்கியுள்ளன.
கலாநிதி பதியுத்தீனின் பணிகளைச் சுருக்கமாக விளக்கிக் கூறும் நூலொன்று 1969ஆம் ஆண்டு, இஸ்லாமிய சோசலிச முன்னணியினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் ஆதார மாகக்கொண்டு மேலும் சில பணிகளை இந்நூலில் ஆராய்ந்துள் ளேன். கலாநிதி பதியுத்தீனுல் எழுதப்பட்ட கட்டுரைகள், சஞ் சிகைகள் என்பனவும் அவரைப்பற்றி இந்த நாட்டிலும் வெளி
26

நாடுகளிலும் வெளிவந்துள்ள பத்திரிகைக் குறிப்புக்களையும், இந்நூலை எழுதுவதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளேன். நூலை எழுதி முடிக்குந் தறுவாயில் மேலும் பல தகவல்கள் கிடைத் துள்ளன. இன்ஷா அல்லாஹ் அவற்றை இனிவரும் பதிப்புக் களிற் சேர்த்துக்கொள்ள எண்ணியுள்ளேன். எனவே, இவ்வளவு தான் கலாநிதி பதியுத்தீனின் சேவையெனக் கூறுவதற்கில்லை.
கலாநிதி பதியுத்தீனின் இலக்கிய ஆக்கங்களிற் பல ஆங்கில மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அவற்றுட் சிலவற்றை நமது வாசகர்கள் அறிந்துகொள்ளுமுகமாகத் தமிழ் மொழி யிற் பெயர்த்துள்ளேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அன்னுரைப்பற்றி வெளியான ஒருசில தமிழ் கட்டுரைகளை அப் படியே அன்றையத் தமிழ் நடையில் தந்துள்ளேன். மலேசியத் தமிழ்த் தினசரி ஒன்றில் வெளிவந்த அக்காலத்துத் தமிழ் நடை யிலான கட்டுரையொன்றும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நூலை எழுதுவதற்குத் தூண்டுகோளாக விளங்கிய எனது மாணவனும், அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலா சாலைப் போதஞசிரியருமான ஜனப் எம். ஏ. மொஹிதீன் இதனை எழுதுவதில் எ ன க் குத் துணை யாக நி ன் ற இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கத் தலைவர் கவிஞர் எம். ஸி. எம். ஸுபைர், எனது பாரியார் "" பேராதனை ஷர்புன் னிஸா' ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள் ளுகிறேன். நூலுக்குத் தேவையான புகைப் படங்கள் சிலவற் றைப் பெற்றுத் தந்த கல்வியமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் ஜனப் ஏ. எச். எம். பாறுாக் அவர்களுக்கும், நூலுக்கு முகவுரை வழங்கிய மூதறிஞர் ஜனப் எம். ஏ. ஸி. எம். சாலிஹ், வழக் கறிஞர் எஸ். சிவசுப்பிரமணியம், மொழிபெயர்ப்பில் ஒத் துழைத்த திருமதி நெய்மாடெய்ன் அச்சிடும்போது தேவை யான ஆலோசனைகளை வழங்கிய, எச். எம். பி. மொஹிதீன், எம். எஸ். முஹம்மது ஆகியோருக்கும் எனது நன்றிக் கடனைச் சமர்ப்பிக்கின்றேன்.
இந்நூலை அழகுற அச்சிட்டு உதவிய மெய்கண்டான் அச்சக உரிமையாளர் திரு. நா. இரத்தினசபாபதி அவர்களுக்கும், அவ
27

Page 16

安 கடிப்புள்ள இ2ளஞர்
பர்மியத் தினசரியின் பாராட்டு
66 ஆரணத்துவம் பிரதிபலிக்கும் முகபாவனையுடன், வண் ணக்கதராடை அணிந்த ஓர் உருவம், இளமையின் பொலி வோடும் புன்னகை பூத்த முகத்தோடும் “ரங்கூன் டெய்லி நியுஸ் ** பத்திரிகைக் காரியாலயத்தினுள் நுழைந்தது. ஒரு முஸ்லிம் பத்திராதிபரினல் நடத்தப்படும் ரங்கூன் டெய்லி நியுஸ் பற்றிக் கேள்விப்பட்டு, அதன் வளர்ச்சியையும் அப் போதைய நிலையையும் நேரிற்கண்டறியும் நோக்கத்துடனே தான் அந்த உருவம் பத்திரிகைக் காரியாலயத்தினுள் நுழைந் தது. அவ்விள உருவத்தினர்தான் ஈழத்து முஸ்லிம் லீக்கின் முன்னைநாள் பொதுக்காரியதரிசி.
அந்தப் பத்திரிகையின் ஆசிரியருக்கு, அவர் அளித்த விசேட செவ்வியிலிருந்து, அவர் ஆப்கானிஸ்தான், இந்தியா, பர்மா ஆகிய நாடுகளில் சுற்றுப்பிரயாணம் செய்யும் நோக் கத்துடனேயே இலங்கையை விட்டுப் புறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. முதலிரு நாடுகளிலும் பிரயாணத்தை முடித் துக் கொண்ட இளைஞர் இப்பொழுது பர்மாவில் தங்கியுள் ளார்; மேலும் பல முஸ்லிம் நாடுகளைத் தரிசிக்கவும் இவர் எண்ணியுள்ளார். அந்த நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வாழ்க்கை முறைகளை நேரடியாகக் கண்டறிவதில் இவர் பெரிதும் ஆர்வங்கொண்டுள்ளார்; இதுவே இவரது பயணத்தின் முக்கிய குறிக்கோளாக அமைந்
29

Page 17
துள்ளது. இவர், ஒர் அரசியல் வாதியல்ல. “பல்வேறு நாடு களையும் தரிசித்து அந்த நாடுகளில் வாழுகின்ற மக்களின் பழக் கவழக்கங்கள், வாழ்க்கை முறை, மனே நிலை ஆதியனவற்றை ஒன்று திரட்ட வேண்டும்' என்ற, உயரிய நோக்கத்துடன் வந்துள்ள ஒரு கல்வி நெறியாளரே இவர். இவ்வாறு, தான் பெற்றுக்கொள்ளும் அநுபவத்தின் மூலம் ஈழத்து முஸ்லிம் களின் கல்விமுறையில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்த ண்டுமென்ற ஆசையும் துடிப்பும் உள்ளவராக இவர்
காணப்படுகின்ருர்.
தமது பதினைந்தாவது வயதில் பொதுச்சேவையில் ஈடு பாடுகொண்ட இவர் இருபதாவது வயதில் இலங்கையின் பலம் வாய்ந்த ஓர் இயக்கமான முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலா ளராகத் தெரிவு செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகாலச் சேவையினல் அதனை ஒரு பலம்வாய்ந்த இயக்கமாக மாற்றிய மைத்தார். இவர் ஒரு தனிப்பட்ட ஆசிரியராகவும் இருந்து
வந்துள்ளார்.
இளமையின் துடிப்பும் தாய் நாட்டு முஸ்லிம்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆர்வமும் நிறையப்பெற்றவ ராக விளங்கும் இவர் தமது சுற்றுப்பயண அநுபவங்களைக் கொண்டு, சொந்த நாட்டு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக் காக வாழ்நாளையே அர்ப்பணிக்க முனைந்துள்ளார்.
*இலங்கை முஸ்லிம்களின் முன்னேற்றம் அவர்களது பொருளாதார அபிவிருத்தியிலும், உழைப்பிலும் தான் தங்கி யுள்ளது" என்று இவர் கருதுகின்றர். வகுப்புத்துவேசம் காட்டப்படாத ஈழ நாட்டில் வியாபார சமூகமாக வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் எந்த விதக் கஷ்டமோ தடையோ இருக்கமாட்டாதென்றும் இவர்
நம்புகின்றர்.’’
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவின் ஆங்கி லத் தினசரியொன்றின் பிரதம ஆசிரியர் ஒருவர் இவ்வாறு
30
 
 
 

குறிப்பிட்டுப் பெருமைப்படுத்திய ஈழத்து இஸ்லாமிய இளைஞன் யாராக இருக்கலாம்! இத்தகைய துடிப்பும், திடமும், புகழும் பூரணத்துவமும் கொண்ட அந்த இளைஞன்தான் , சமுதாயப் பற்று, சமூகநலன், சேவை மனப்பான்மை, தேசிய ஒற்றுமை என்பனவற்ருல் தம்மையே சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்து விட்ட மாமேதை கலாநிதி அல்ஹாஜ் பதியுத் தீன் மஹ்மூத் அவர்கள் ! அவர்களது வாலிபப்பருவத்தை நினைவு படுத்துவதாகவே, பர்மிய டெய்லி நியுஸ் பத்திரிகை ஆசிரியரின் இந்தக் கருத்துரை அமைந்துள்ளது.
அலிகார் சர்வகலாசாலையின் பட்டதாரி மாணவராக இருந்தபோது அல்ஹாஜ் பதியுத்தீன் தென்கிழக்காசிய நாடுக ளுக்கு அடிக்கடி விஜயஞ் செய்து வந்தார். தமது விடுமுறை காலத்திலுங்கூட இஸ்லாமியர் வசிக்கும் நாடுகளுக்குச் சென்று அவர்களது கல்விமுறையிலும் д56ртағтут வாழ்விலும் அரசியற் துறையிலும் மறுமலர்ச்சி காண்பதில் அவர் முக்கிய ஆர்வம் கொண்டவராகக் காணப்பட்டார். அவர் நிகழ்த் தி 4 ள் ள சொற்பொழிவுகளும் எழுதி யு ள்ள எழுத்தோவியங்களும் அந்த நாடுகளில் வாழ்ந்த மக்களைப் பெரிதும் கவருவனவாயின.
தமது இருபத்தைந்தாவது வயதில், இளமையின் பொலி வோடும் இதயப்பூரிப்போடும் பர்மிய டெய்லி நியுஸ் பத்திரி கையின் ஆசிரியருக்கு அவர் அளித்திருக்கும் செவ்வியிலிருந்தே அவரது நாட்டுப்பற்றையும் சமுதாயப் பற்றையும் நன்கு அறிந்து கொள்ள முடியும், முஸ்லிம் சமுதாயத்தை, விசேட மாக ஈழத்து முஸ்லிம் மக்களை முக்கிய குறிக்கோளாகக் கொண்ட உள்ளத்துணர்வுகளை அவரது பேட்டி விவரங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
1933 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10-ஆந் திகதி வெளியான ரங்கூன் டெய்லி நியுஸ் பத்திரிகையில் அதன் ஆசிரியருக்கும் ஜனப் பதியுத்தீனுக்கும். இடையிலான பேட்டி விவரங்களை அப்பத்திரிகை பின்வருமாறு பிரசுரித்துள்ளது.
3.

Page 18
ஆசிரியர்: ஈழத்து முஸ்லிம்களைப்பற்றியும் உங்களது அழகிய அற்புதமான தீ வைப் பற்றியும் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ?
ஜனுப் பதியுத்தீன்: சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த அராபியர்களின் வழித்தோன்றல்களே இல ங்கை முஸ்லிம்களாவர்.வியாபாரிகளாகவே அவர்கள் இங்கு வந் தார்கள். இப்பொழுதும் வியாபாரிகளாகவே வாழ்க்கை நடத் துகின்றனர். சனத்தொகையைப் பொறுத்த வரையில் ஆறு சத விகிதத்தினராக இருந்த போதிலும், இலங்கையரை ஒரு வர்த்தக சமூகத்தினராக மாற்றுவதில் அவர்கள் பெரும்பங்கு கொண்டுள்ளனர். ஏனைய முஸ்லிம் நாடுகளிற் போன்று நாங் களும் கல்வித்துறையில் பின்னணியிற்தான் இருக்கின்ருேம். எனினும் கல்வித்துறையில் இப்பொழுது ஒருவித புத் தூக்கம் ஏற்பட்டுள்ளது, ஏனைய சமூகத்தினரோடு சரிநிகர் சமானமாக வாழ்ந்து தாய் நாட்டுக்குச் சேவை செய்யக்கூடிய ஒருசூழ்நிலை இப்பொழுது உருவாகிக்கொண்டு வருகிறது. இலங்கை முஸ் லிம்களினதும் அரசாங்கத்தினதும் நன்மதிப்பைப் பெற்ற ஓர் இயக்கம் இயங்குகின்றது. அதுதான் 1924ஆம் ஆண்டு மூன்று முஸ்லிம் களால் ஆரம்பிக்கப்பட்ட முஸ் லிம் லீக் கா கும். இன்று பல மாகாணக் கிளைகளையும் உள்ளடக்கியதாய், இரண் டாயிரம் அங்கத்தவர்களையும் பெற்றுத் திகழ்கின்றது. இந்த அமைப்பின் நோக்கம் நமது சமூகத்தின் பொருளாதார முன் னேற்றம் மட்டுமல்ல, இலங்கை முஸ்லிம்களின் சன்மார்க்க, கல்வி, கலாசார முன்னேற்றத்தோடு அரசியல் முன்னேற்றத் திலும் அக்கறை காட்டுவதாகும். அதனுல் இவை இந்திய முஸ்லிம்லீக்கின் கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட் டுள்ளன, என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
"வியாபார வாழ்க்கையைத் தொடர்ந்தும் உத்வேகத்து டன் கடைப்பிடிக்காவிட்டால் நமது முன்ஞேர்கள் பெற்றி ருந்த அரும் பெருஞ்சிறப்புக்களைத் தாமும் பெற்றுக்கொள்ள முடியாமற் போகும்’ என்று இலங்கை முஸ்லிம்கள் கருதுகின் றனர். அந்த நோக்கத்தைக் கருத்திற்கொண்டே இப்பொழுது
32

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் வர்த்தகக் கல்வி யைப் போதிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் இலங்கையின் ஏனைய சமூகத்தினரோடு அன் பிாகவும், அன்னியோன்னிய மாகவும், சமாதானமாகவும் வாழ் கின்றனர். இந்த நிலையைத் தொடர்ந்தும் நீடிக்கச் செய்வதே எமது ஆவலாகும். எந்த விதமான சாதித்துவேசமோ, மதத் துவே சமோ அங்கு கிடையாது. இந்த வகையில் நாங்கள் இந்தியாவை விடவும் ஒருபடி முன்னேறியுள்ளோம், சமூக ஒற்றுமைக்காக இத்தகைய கொள்கைகளை மேற்கொண்டுள்ள்
பர்மிய நாட்டை நான் பாராட்டுகின்றேன்.
இலங்கையர் சாதித்துவேசம் உடையவர்களல்ல
இலங்கையில் பெரும்பான்மையினராக வாழ்கின்ற சிங்கள வர்கள் சாதித்துவேசமனப் பான்மையுடைவர்களல்ல; இயற் கையாகவே அவர்கள் சினேக மனப்பான்மை பூண்டவர்கள், இலங்கைக்கு வந்த எல்லாப் பிற நாட்டினரையும் அவர்கள் அன்புக்கரம் நீட்டி வரவேற்றுள்ளார்கள்; முஸ்லிம்களின் மூதா தையர் முதன் முதல் ஈழ நாட்டுக்கு வருகை தந்த போதும் அவ்வாறே வரவேற்ருர்கள்; உபசரித்து முள்ளார்கள், அத ஞல் முஸ்லிம்களும் சிங்கள மக்களுக்குக் கடமைப்பட்டுள் ளார்கள். அதே வேளையில் அங்கேயே பிறந்து-வளர்ந்துவாழ்ந்து வரும் முஸ்லிம்களும் தமது தாய் நாட்ான இலங் கையை மறந்து விடப் போவதுமில்லை !
எங்கள் மூதாதையர் அக்காலத்தைய சிங்கள அரசர்களது நிதி ஆலோசகர்களாகவும், அரச வைத்தியர்களாகவும், யுத் தத் தளபதிகளாகவும் இருந்து வந்துள்ளார்கள். நாட்டின் ஏனைய முன்னேற்றத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந் தார்கள், இன்று ஜன்னுயக உரிமைகளைப் பெறுவதற்காகவும் சுயாட்சியைக் கோருவதற்காகவும் முஸ்லிம்களும் ஏனைய சமுகத்தினரோடு தோளோடு தோள் நின்று போராடுகிருர் கள். இத்தகைய ஒருமைப்பாட்டினல் இந் தியர்களை விட
33

Page 19
இலங்கையரே விரைவில் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வார்களெனத் தெரியவருகிறது.
மேலை நாட்டினரைப் பின்பற்றுவதில் இலங்கை முஸ்லிம் கள் முன்னிற்கின்றனர். இதனைக் கண்மூடித்தனமான பின்பற் றல் எனச்சிலர் கருதுகின்றனர். இந்த விடயத்தில் எனது கருத் தையும் கூறிவைக்க விரும்புகிறேன். ' மேலை நாட்டினரை அவர்களுக்கே உரிய தா ன விளையாட்டுக்களின் மூலந்தான் தோல்வி காணச் செய்யலாம். அப்பொழுதுதான் அவர்களது பார்வையில் நாங்களும் உயர்ந்த வர் க ளாக - முன்னேற்ற மடைந்தவர்களாகத் தென்படுவோம்.'
ஆசிரியர் :- இந்தியாவின் அரசியல் நிலையைப் பற்றி நீங்கள்
என்ன நினைக்கின்றீர்கள் ?
ஜணுப் பதியுத்தீன் :- நான் இலங்கையில் இருக்கும் பொழு தே இந்திய அரசியலைப் பற்றியும் அரசியல் வாதிகளைப் பற்றி யும் கேள்வியுற்றும், வாசித்தும் அறிந்து கொண்டுள்ளேன், இந்திய அரசியல் வாதிகளிற் சிலரை இலங்கையில் வைத்து நேரடியா கவே கண்டு கதைத்துமுள்ளேன். எனினும், இலங்கையில் இருந்த பொழுது இந்தியாவின் அரசியலைப்பற் றியோ அந்த நாட்டு அரசியல் வாதிகளைப்பற்றியோ சரியான பூரணமான அபிப்பிராயத்தை என்னல் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. நான் முதலாவதாக இந்தியாவை வந்தடைந்த போது, பம்பாய் வட்டமேஜை மகா நாடொன்றிற் கலந்து கொண்ட இந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களிற் பலரைச் சந்தித்து அளவளாவினேன். 1931 ஆம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற பிரக்கியாதி பெற்ற ஜின்ன ஹால் கூட்டத்தின் அவதானிகளில் ஒருவராகவும் கலந்து கொண்டேன்.
இந்திய அரசியலைப்பற்றியும் அரசியல் வாதிகளைப்பற்றியும் நான் ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்டிருந்த கருத்துக்களைஅவர்களை நேரிற்கண்டபோது பெறமுடியாமற் போய்விட்டது. அவர்கள் இந்திய நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்னும் தீவிரமாக முயற்சி எடுக்கின்ருர்
34

களில்லை. அரசியல் போராட்டத்தை விட வாழ்க் கைப் போராட்டத்துக்கே கூடுதலான கவனத்தைச் செலுத்துகின் றனர். அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றுக்கொள்வதிலும் ஆட்சி மன்றங்களிற் பிரதிநிதித்துவம் பெறுவதிலும், ஒருவரை யொருவர் முந்திக்கொள்ளும் அளவிலேதான் இந்துக்களும், முஸ்லிம்களும் கவனஞ் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். தங்களை எதிர்நோக்கியுள்ள உண்மையானதும், மிக முக்கிய மானதுமான அரசியற் பிரச்சினைகளைப்பற்றி உதாசீனமாக இருப்பதைத் தான் நான் காண்கின்றேன்.
ஏதோ ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கொண்டு இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரையொருவர் சத்தேகக் கண்கொண்டு நோக்குகின்றனர். இப்படியான நிலையில் இருந்து கொண்டு தமது பொதுவான அரசியற் பிரச்சினைகளை அவர்க ளால் வெற்றிகரமாகத் தீர்த்துக் கொள்ள முடியாது. இந்தி யத் தலைவர்களுள் பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர் அன்சாரி ஆகியோரிடம் நான் பெருமதிப்பு வைத்துள்ளேன். மகாத்மா காந்தியை ஓர் அரசியல் தலைவர் என்பதைவிட ஆத் மீகத் தலைவராகக் கருதுவதே மேலானதாகும்.
seg9à fluff :- இந்திய முஸ்லிம்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்
கிறீர்கள் ?
ஜணுப் பதியுத்தீன்:- இந்திய முஸ்லிம்கள் தம்முள் பிளவு பட்டு ஒற்றுமையின்றி இருப்பதை மனவருத்தத்துடன் அவ தானிக்கிறேன். *அகில இந்திய முஸ்லிம் தலைவர் ' என்று கூறக்கூடிய எவராவது அங்கு இல்லை. ஒரு ஸ்தாபனத்தைப் பிரதிநிதித்துவம் வகிக்கும் காரணத்தினலோ, அல்லது ஒரு சிறிய கூட்டத்தினருக்குச் சொற்பொழிவாற்றி விட்ட எண் ணத்தினலோ ஒரு சமூகத்தையே பிரதி நிதித்துவம் வகிக்கும் தலைவராக ஒருசிலர் தம்மைக் கருதிக் கொள்ளுகின்றனர். அன்றியும், அங்கத்தவர்களிடையே ஒற்றுமை இன்மையால் எந்தவொரு முஸ்லிம் ஸ்தாபனமும் ஸ்திரமான நிலைக்கு முன் னேற முடியாமல் இருக்கிறது. இந்திய முஸ்லிம் தலைவர்கள்
35

Page 20
ால்லோரையும் கண்டு அளவளாவும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்திய முஸ்லிம்களுக்கு இன்று தேவையாக இருப்பது ஒரு ஜனநாயகத் தலைவரல்ல. மனிதாபிமா ன மும் எதேச்சாதிகாரமும் கொண்ட ஒரு தலைவரே! அவரால்தான் சிதறுண்டு கிடக்கும் மாபெரும் இந்திய முஸ்லிம் சமுதாயத்தை ஒன்றிணைத்து, அவர்களிடையே இணக்கத்தையும், நல்லெண் ணத்தையும் ஏற்படுத்த முடியும்,
பாரிசில், உல்லாசமாக அநுபவிக்கும் இராஜபோக வாழ்வை ஒதுக்கி விட்டு, மேன்மை தங்கிய ஆகாகான் போன்றவர்கள், சிதறுண்டு கிடக்கும் இந்தச் சமுதாயத்தின் தலைமைப் பீடத்தைக் கையேற்க முன்வரவேண்டும். கீழைத்தேயத்திலும் மேலைத்தே யத்திலும் ஆகாகானுக்குள்ள செல்வாக்கையும் செல்வத்தையும் இந்திய முஸ்லிம்களை ஒன்று படுத்துவதற்காகப் பயன் படுத்த முடியும்.
நான் ஒரு வகுப்புவாதியல்ல; வகுப்புவாதியாக இருக்கப் போவதும் இல்லை. எனது நாடு அப்படியான தொன்றை அங் கீகரிக்கவும் மாட்டாது. எனது நாட்டின் எதிர்கால நன்மை
யைக் கருத்திற்கொண்டு, ஒற்றுமை, சகோதரத்துவம், சமத்து வம் என்ற உயரிய நோக்கங்களைத் தைரியமாக மேற்கொண்ட ஒர் இள்ைளுஞகவே என்னை நான் மாற்றிக்கொள்ள முயற்சிக் கிறேன். இலங்கை அரசியல் சாசனத்திலும் சாதி அடிப்படை யில் அல்லாமல் சனத்தொகை அடிப்படையிலேயே பிரதி நிதித்துவம் அளிக்கப்பட வேண்டுமென்று இலங்கை முஸ்லிம் லீக் குரலெழுப்பிக் கொண்டிருக்கிறது. ፳
முஸ்லிம்கள் எப்பொழுதுமே சாதித்துவேச மற்றவர்கள். பிளவுகளை ஏற்படுத்த விரும்புகிறவர்களுமல்ல; வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டபோது முஸ்லிம்கள் அதனை வரவேற்றனர். எனினும் வியாபார சமூகத்தினரான முஸ்லிம்க ளுக்குச் சில தனிப்பட்ட விசேடமான அபிலாஷைகள் இருப்ப தால் நியாயமான அளவுக்கு எமக்கும் பிரதிநிதித்துவம் இருக் கவேண்டு மென்பதே முஸ்லிம் லீக்கின் தற்போதைய முக்கிய மான கோரிக்கையாக இருந்து வருகின்றது.
36

ஆசிரியர் : ஆப்கானிஸ்தானைப் பற்றியும் அங்குள்ள மக்களைப்
பற்றியும் என்ன கருதுகின்றீர்கள் ?
ஜஞங் பதியுத்தீன்:- வெளி உலகுக்கு ஆப்கானிஸ்தான் ஒரு பெரும்புதிராகவே இருந்து வருகின்றது. மத்தியகிழக்கிலுள்ள முக்கிமான சுதந்திர நாடுகளுள் ஆப்கானிஸ்தானும் ஒன்ரூ கும். மூன்ருவது ஆப்கான் யுத்தத்தின் பின்னரே உலக நாடுகள் ஆப்கானிஸ்தானின் சிறப்பை அறியத் தொடங்கியுள்ளன. “நாகரிகமற்ற பயங்கரமான மக்கள் வாழும், நாடு* என்று தான் தானும் அதைக் கருதியிருந்தேன். எனது கருத்து துப் பானதென்று இப்பொழுதான் உணர்ந்துள்ளேன்.
உன்னதமான கலாசாரம்
இஸ்லாமியக் கலாசாரத்தோடொட்டிய வாழ்க்கை முறை க3ளப் பின்பற்றி முற்போக்குப் பாதையில் ஏறு நடைபோட் டுக்கொண்டிருக்கும் ஏனைய உலக நாடுகளின் அணியிலே, உன் னதமானதோர் இடத்தைப் பெற முயலும் ஓர் அற்புதமான முஸ்லிம் நாடாகவே ஆப்கானிஸ்தான் எனக்குத் தென்படு கின்றது. நேர்மையான மக்கள் கூட்டத்தினர் அங்கு வாழ்கின் றனர். அவர்கள் உள்ளதை உள்ளவாறே ஒழிவு மறைவின்றி எடுத்துக் கூறுகின்றவர்கள், உபசரிப்பும் வாஞ்சையும் மிக்க வர்கள். அதே நேரத்தில் நாங்கள் எதிர்பார்த்ததுபோல் அந்த நாடு ஏனையப் பல துறைகளில் இன்னும் போதியளவு முன் னேறவில்லை. நாட்டின் நலத்தைக் கருத்திற்கொண்டு பல தீவி ரமான மாற்றங்களை ஏற்படுத்த முன்னைநாள் மன்னர் அமா னுல்லா முயன்று வந்துள்ளார். எனினும் முல்லாக்களின் கடும் எதிர்ப்பினல் அவரது ஆசைக்கனவுகளெல்லாம் அப்படியே தவிடுபொடியாகியுள்ளன. ஈற்றில் மன்னர் அமானுல்லா அன்னிய நாடொன்றில் தஞ்சம்புகுமளவுக்கு நிலைமை மோச மாகிவிட்டது.
மாமன்னர் அமானுல் லா வால் நிர்மாணிக்கப்பட்ட es தாருலமான்' என்ற தலைநகரை நான் தரிசித்தேன். மா மன்னர் அம்ானுல்லாவின் ஆசைகள் எப்படிச் சிதறுண்டு கிடக்
37

Page 21
கின்றன, என்பதைக் காண மனம் வருந்தினேன். பூர்த்தி செய் யப்படாத அழகிய பாதைகளும், வியக்கத்தக்க பாரிய கட்டி டங்களும் அங்கே காட்சிதந்தன "தாருலமான்' இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ள காபுல் சர்வகலாசாலைக்குக் கையளிக்கப் பட்டுள்ளது. அதன் முற்றுப்பெருத அரண்மனையில், மக்கள் சபையும், சர்வகலாசாலையின் செனற் சபையும், அரசாங்கக் காரியாலயங்களும் அமைக்கப்பட இருக்கின்றன. தமது சொந்த நாட்டு மக்களது நன்மதிப்பைப் பெற்ற ஒரு தலைவரை இப்பொழுது ஆப்கானிஸ்தான் பெற்றுக்கொண்டுள்ளது. இது அந்த நாட்டு மக்களின் அதிர்ஷ்டமென்றே கூறவேண்டும்.
மாமன்னர் அமானுல்லாவின் இலட்சியங்களையும் கோட் பாடுகளையும் செயல் திட்டங்களையும் இப்போதைய மன்னர் நாதிர் ஷா மறந்துவிடவில்லை. என்ருலும், சிறுசிறு மாற்றங்க ளுடன் மாமன்னர் அமானுல்லாவின் கொள்கைகள் செயல் பட்டு வருவதை நான் வரவேற்கின்றேன். திட்டவட்டமான அமைதியான முன்னேற்றத்தையே நாதிர்ஷாவும் விரும்பு கின்ருர். தமது தேசத்தின் தேவைகளை உணர்ந்து கொண்டு செயலாற்றும் செயல் வீரராகவே நான் அவரைக் கருதுகின் றேன். தகுதிவாய்ந்த அனுபவமும் செயல் திறமும் மிக்க அமைச்சர் களை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களுள் கல்வியமைச்சரும் யுத்த அமைச்சரும் எனது கவனத்தை வெகு surta; ĝi கவர்ந்துள்ளனர்.
அங்கு, திணைக்களங்கள் யாவும் ஒழுங்காகச் செயற்படு கின்றன. இராணுவப் பொருளாதார விடயங்களில் மன்னரே தமது தீவிர கவனத்தைச் செலுத்தி வருகின்றர். காபுல் நக ரம் பல புதிய தொழிற்சாலைகளால் நிறைவு பெற்றுக்காணப் படுகின்றது. அவற்றுள் தீப்பெட்டித் தொழிற்சாலைகளை விசேடமாகக் குறிப்பிடலாம். நாட்டின் நிலவளங்களான நிலக்கரி, இரும்பு, உலோகம் போன்றனவற்றைச் சொந்த நாட் டின் பொருளாதார வளத்துக்காகவே பயன் படுத்த முன்வந் துள்ளனர். வெளியார் சுரண்டலைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
38

கல்வி அபிவிருத்தி
கல்வித்துறையிலும் ஆப்கானிஸ்தான் முன்னேறிக் கொண் டிருக்கிறது. ஜேர்மனியர், பிரான்சியர், ஆப்கானிஸ்தானியர் ஆகியோர் முறையே மூன்று பெருமுக்கியமான கல்லூரிகளை அங்கு நடாத்துகின்றனர், பாரசீக மொழி சுதேசமொழியாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கான செலவினங்களை அர சாங்கமே பொறுப்பேற்றுள்ளது. கட்டடங்கள் மாத்திரமன்றி மாணவருக்கான புத்தகங்கள், கைப்பணம் என்பன வற்றையும் அரசாங்கம் வழங்குகின்றது. டெனிஸ், உதைப்பந்தாட்டம் போன்றவற்றில் விசேட கவனஞ் செலுத்தப்படுகின்றது. மாணவர்களும் விளையாட்டுத்துறைகளில் அதிகம் ஆர்வங்கா. டுகின்றனர். பல இடங்களில் அவர்களுக்கான விசேடவி%ள யாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சரே பல விளையாட்டுக்களிற் பங்கு கொள்வதைக் காபூலில் வைத்து நேரடியாகவே கண்டபோது, பெரும் மகிழ்ச்சியடைந்தேன். மாமன்னர் அமானுல் லா வின் காலத்தில் 8000 வீரர்களே இராணுவத்தில் இருந்தனர். ஆனல் இன்று பிரான்சிய பாணி யில் திடகாத்திரமான 55000 வீரர்கள் இராணுவத்தில் இருக் கின்றனர். பலம் பொருந்திய இராணுவ மொன்று இன்று ஆப் கானிஸ்தானில் இருக்கின்றது.
கம்பீரமான தோற்றத்தையுடைய போலீஸ் வீரர்கள் நகரெங்கிலும் வாகன ஒழுங்குகளைச் சிறப்பான் முறையில் மேற்கொள்ளுவதைக் காணமுடிந்தது. முல்லாக்களின் அதிகா Մւն இப்பொழுது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த புரட்சிக்குத் தூண்டுதலாக இருந்த இருவரில் ஒருவர், இப் பொழுது எகிப்தியத் தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். மற்றவர் காபூலின் பிரதம நீதியரசராகக் கடமைபார்க்கின் ருர். இந்தச் செயலிலிருந்தே நாதிர்ஷா மன்னரின் மதியூகம் நன்கு புலனுகின்றது. மாமன்னர் அமானுல்லா வுக்குச் சார் பாக இப்பொழுதுஞ் சில குழப்பங்கள் நடைபெறுவதாகப் பத்திரிகைச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இருந்தா
39

Page 22
லும் இன்றைய ஆட்சிக்கு எந்தவித இடைஞ்சலும் ஏற்படா தென்றே நம்புகின்றேன்.
* பர்மாவைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?’ என்ற ஆசிரியரின் கேள்விக்கும் ஜனப் பதியுத்தீன் பின் வருமாறு பதில் கூறினுர்;
* பர்மிய நாட்டை. முழுமையாகச் சுற்றிப்பார்க்கும் சந் தர்ப்பம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனல் இரங்கூன அவதானித்ததிலிருந்து இந்திய நகரங்களை விட இது புனித மானதாகக் காட்சி தருகின்றது. இந்த நகரத்திலே அசுத் தங்களை அகற்றும் முறை போற்றத்தக்கது. இரங்கூன் ஓர் அழ கான-ரம்மியமான நகரமாகவே எனக்குக் காட்சி தருகின்றது. இந்த நகரின் தூய்மையும் அழகும் இலங்கையின் தலைநகரான கொழும்பு மாநகருடன், ஒரளவு ஒத்ததாகவே காணப்படு கின்றது. இரங்கூன் நகர மக்களின் அன்பும் பரிவும் உபசரண் களும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டன. சில மதிப்புக் குரிய தலைவர்களையும் நான் இங்கு காண்கிறேன். அவர்களது அரசியற் கருத்துக்களையும் வரவேற்கின்றேன்.
** இரங்கூன் டெய்லி நியுஸ் ' பத்திரிகை, ஒரு முஸ்லிம் பத்திரிகையானலும் எந்த விதமான வகுப்புவாதக் கோஷமும் அதிற் காணப்படவில்லை. பத்திரிகா தர்மத்துக்கு அமைவாக நடத்தப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். முஸ் லிம்களைப்பற்றியும் முஸ்லிம் நாடுகளைப்பற்றியும் ஒருதலைப்பட் சமான கருத்துக்களைத் தெரிவிக்க முற்பட்டதனுல்தான் இந்தி யாவில் பல பத்திரிகைகள் மதிப்பிழந்து விட்டன. பத்திரிகை ஒரு நாட்டில் வசிக்கும் எல்லா இன மக்களுக்கும் பொதுவான தொன்ருகும். எல்லாருமே பயனடையக்கூடிய செய்திகளைப் பிரசுரித்து மக்களது அறிவு வளர்ச்சிக்கு உதவுவதே ஒரு தேசியத் தினசரியின் முதன்மையான கடமையாய் இருத்தல் வேண்டும்.”*
இவ்வாறு பர்மாவிலே பல கருத்துரைகளை வழங்கியவராக ஜனுப் பதியுத்தீன், அந்த நாட்டின் பல முக்கிய நகரங்களுக்
40

கெல்லாம் விஜயஞ் செய்தார். அன்னியரின் ஆதிக்கப்பிடியிலே அல்லலுற்ற அன்றைய பர்மிய மக்களுக்கு அரசியற் சுயாட்சி பற்றியும் விளக்கிக் கூறினர். இவரது விளக்க உரைகள், ஆங் கில ஆட்சியாளரின் கவனத்தையும் ஈர்த்து விட்டன. ஏகாதிபத் தியத்துக்கு எதிராகத் தூபமிடும் பேச்சுக்களினல், ஆட்சியா ளரே தலையிடலாயினர். அதனுல் 24 மணித்தியாலத்துக்குள் அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு கட்டளை பிறப்பிக்கப் பட்டது. எனினும் தனது இலட்சியத்தோடமைந்த பேச்சு வன்மையை நிலைநாட்டுவதிற் பின்னிற்கவில் லே ஜனப் பதியுத்தீன் அவர்கள்.
4.

Page 23
எமக வரலாறு
கல்கத்தாவில் பேச்சு
1933- ஆண்டு ஜூலை மாதம் ஜஞப். பதியுத்தீன் கல்கத்தா சென்றடைந்தார். கல்கத்தாவிலும் அதனைச் சூழ வுள்ள பகுதிகளிலும் பல இயக்கங்களால் ஒழுங்கு செய்யப் பட்ட கூட்டங்களிற் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். கீழைத்தேயங்களிலே படர்ந்திருந்த ஏகாதிபத்திய ஆதிக்கத் துக்கு எதிராக அந்த இயக்கங்கள் பலவகையான பிரச்சா ரங்களைச் செய்துகொண்டிருந்தன. இத்தகைய இயக்கங்களுக்கு ஜனப் பதியுத்தீன் போன்றவர்களது முற்போக்கான கருத்துக் கள் எருவூட்டுவனவாய்அமைந்திருந்தன. அதனல்பல இடங்களில் பிரசார வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்ட ஜனுப். பதியுத் தீன், அந்த நாட்டின் முற்போக்கு வாதிகளாற் பெரிதும் கவரப் பட்டார். இவரது பிரயாணத்தையும் சொற்பொழிவுகளையும் அங்குள்ள பத்திரிகைகள் பிரமாதமாகப் பிரசுரித்தன. அத் தனை முற்போக்குப் பிரசார்ங்களின் மத்தியிலும், ஈழத்து முஸ்லிம்களைப் பற்றிய கவலை அன்னரது சிந்தனையிலே அடிக்கடி நிழலாடின. ஈழத்து முஸ்லிம்களின் வரலாற்றையே ஜனுப் பதியுத்தீன் பல இடங்களில் எடுத்துக் காட்டியிருப்பதும் பத் திரிகைகள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளித் திருப்பதும் முக் கியமான சான்ருக அமைந்துள்ளது.
13-7-1933 இல் வெளியான, "ஸ்டார் ஒப் இன்டியா ? (Star of India) என்ற பத்திரிகை, ஜனப் பதியுத்தீன் நிகழ்த்
42
 
 

திய ஈழத்து முஸ்லிம்களின் வரலாற்றைப் பற்றிய ஒரு சொற் பொழிவின் சுருக்கத்தைக் கட்டுரையாகவே பிரசுரித்துள்ளது. இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாக அறிந்து கொள்ள இச் சொற்பொழிவு வாய்ப்பளிக்கின்றது.
*அராபியரின் வழித்தோன்றல்களாகிய முஸ்லிம்கள் மூன் றரை லட்சம் பேர் இலங்கையில் வாழ்கின்றனர். சரித்திர ஆராய்ச்சியாளரான திரு. டீ. சில்வாவின் கருத்துப்படி சிங்கள வர்களின் வருகைக்கு முன்பிருந்தே அராபியர்கள் இந்த நாட் டுடன் தொடர்பு கொண்டிருந்தார்களென்பதை அறிய முடி கிறது. இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர் கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகிறர்கள். அரசியலைப் பற்றிய தீர்க்க தரிசனம் அவர்களிடம் இப்பொழுது குறைவாகவே காணப்படுகிறது. எனினும் வந்தாரை வரவேற்று உபசரித்து வாழ வைக்கும் பண்புடையவர்கள். ஏனைய மக்களைப் பின்பற்றி முன்னேற முயற்சிக்கின்றனர். அனேகமானேர் விவசாயிகள். நிலச் சொந் தக்காரரும் அரசாங்க ஊழியரும் அவர்களிடையே காணப்படு கின்றனர். சிங்கள மக்களை அயலாளராகக் கொண்டு வாழ்வது மனத்துக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
"இலங்கைச் சோனகர்" என்றழைக்கப்படும் முஸ்லிம்கள் மாத்திரமே இலங்கைக்கு வியாபார நோக்கங் கொண்டு வந் தனர். போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேய்ர் உட்பட ஆதிக்குடிகளான சிங்கள, தமிழ் மக்களுங்கூட இலங்கையின் ஆதிக்கத்தைக் கைப்பற்றும் நோக்கமாகவே அந்தநாட்டுக்கு வந்துள்ளனர்.
முஸ்லிம்களும், சிங்களவரும் ஆரம்பகாலந் தொட்டே நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் ஐக்கிய மனப்பான் மையுடனும் வாழ்ந்து வந்துள்ளனர். இதனல் முஸ்லீம்கள் அந்த நாட்டின் நிதி, வைத்திய, இராணுவ ஆலோசகர்களா கவும் இருந்து வந்துள்ளனர்.
43

Page 24
‘போத்துக்கேயர் மாத்திரம் இலங்கைக்கு வராமலிருந் தால் இன்று அந்த நாடு ஒரு சுதந்திர முஸ்லிம் இராச்சிய மாகவே மாறியிருக்கும்’ என்று, சர். எமர்சன் இலங்கையைப் பற்றிய தமது வரலாற்று நூலில் எழுதியுள்ளார். அவரது கூற்றை முற்ரு க ஏற்றுக்கொள்ள முடியாவிடினும், சிங்களமன் னர்களது காலத்தில் முஸ்லிம்கள் எத்தகைய சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளனரென்பதை த பின் கு அறிய முடிகிறது. சிங்கள மக்களுக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளார்கள். அத னல் சிங்களவர்களும் முஸ்லிம்களுக்குரிய அந்தஸ்தை வழங்கி ஞர்கள். சிங்கள அரச குடும்பங்களும், முஸ்லிம்களுக்குரிய அந்தஸ்தை வழங்கின. சிங்கள அரச குடும்பங்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே விவாகத் தொடர்புகளும் இருந்து வந்துள்ளன. வதியகுமாரன் என்ற அரசனின் வரலாறு இதற்கோர் உதாரணமாகும். உலகச் சந்தையில் இலங்கை பிரபல்யம் அடைவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் களும் அராபிய முஸ்லிம்களேயாவர்.
அரசியல் புத்தூக்கம்
முதலாவது உலகமகாயுத்தத்தின் பின்னர் இலங்கை அரசி யலில் அமைதி காணப்பட்டது. அதன் பின்னர் அண்டை நாடு களில் ஏற்பட்டது போன்ற சுயாட்சி உணர்வு இலங்கையிலும் ஏற்படலாயிற்று, இலங்கைத் தேசிய காங்கிரஸ் 1919 - چىgib ஆண்டு ஆரம்பமாயிற்று. ஆனல் ஓரிருவரைத் தவிர ஏனைய முஸ்லிம்கள் 1921-ஆம் ஆண்டு வரை அதில் கலந்து கொள்ள வில்லை. 1921-ஆம் ஆண்டு ச்ர். ஜேம்ஸ் பீரிஸ் தலைமையில் கூடிய ஒரு காங்கிரஸ் மகாநாட்டில், சிறுபான்மையினரின் அர சியற் பிரதிநிதித்துவம் - அடிப்படை உரிமைகள், என்பன புதிய அரசியல் யாப்பில் வரையப்பட வேண்டுமென்ற தீர் மானமொன்று நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழர்களுடன் முஸ்லிம்களும் அந்தக் காங்கிரஸ் இயக்கத்திற் சேர்ந்து கொண்டனர். 1923 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்துக்காக முஸ்லீம்களும் முழு மூச்சுடன் பாடு
பட்டனர்.
44

புதிய சீர்திருத்தத்தின்படி மூன்று முஸ்லிம்களைச் சட்ட சபைக்கு அனுப்பும் வாய்ப்பு முஸ்லிம் சமுகத்தினருக்குக் கிடைத்தது. சாதி அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவு செய் யப்பட்டாலும், தாய் நாட்டின் அரசியல் சுதந்திரத்துக்காகப் போராடுவதில் முஸ்லிம்கள் எப்பொழுதுமே பின்னின்றதில்லை. இலங்கை மக்களின் இழந்த உரிமைகளைப் பெறுவதற்காக, பெரும்பான்மை இனத்தவரோடு முன்னணியிற் சேர்ந்து உழைத்துள்ளார்கள். இலங்கை தேசியத் காங்கிரசினதும் ஏனைய அரசியற் குழுக்களினதும் கோரிக்கைகளுக்குச் செவி மடுத்து, எமது நாட்டினருக்குக் கூடுதலான பிரதி நிதித்துவம் அளிக் கும் முகமாக ஒரு சிபார்சுக் குழுவை அரசாங்கம் நியமித்துள் ளது.
இது இவ்வாறிருக்க, டொனமூர் ஆணைக்குழு 1927-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இக்குழு இலங்கையின் எல்லா நக ரங்களுக்குஞ் சென்று விசாரணைகளை நடத்தியது. 'பொது மக்கள் எல்லோருமே வாக்களிக்கும் உரிமையை விரிவு படுத்த வேண்டும்'- என்ற கோரிக்கையும் ஆராயப்பட்டுள்ளது, 1921-ஆம் ஆண்டின் தீர்மானத்தைப் பொருட்படுத்தாத இலங்கைத் தேசிய காங்கிரஸ், 'இணைப்புத் தொகுதி" வேண்டு மென்ற கோரிக்கையையும் வலியுறுத்தியது. இதன் விளைவாகச் சட்ட சபையில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள முஸ்லிம் அங்கத் தவர்களின் தொகை குறைந்து விட்டது. ஐம்பது பேரைக் கொண்ட சட்ட சபைக்கு ஒரே ஒரு முஸ்லிம் அங்கத்தவர்தான் போட்டியின் போது பொதுமக்களால் தெரிவு செய்யப்பட் டுள்ளார். ஜனுப். te. (3. ஜாயா போன்ற திறமைசாலியும் கொழும்புத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந் துள்ளார். இலங்கையின் வேறெந்தத் தொகுதியிலும் முஸ்லிம் களால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனுல் சிறுபான்மையின ரான இந்து, முஸ்லிம், பறங்கியர் ஒன்று கூடி *அகில இலங்கை லிபரல் லீக்' என்ற பெயரில் புதியதோர் இயக்கத்தை ஆரம் பித்தனர். அதன் மூலமாகப் புதிய சட்டசபை அமைப்பிற் காணப்பட்ட சிறுபான்மை மக்களின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டன. ஆட்சேபனைகளும் எதிர்ப்புக்களும் எழுப்பப்
45

Page 25
பட்டன. அதன் பின்னரே, சாதி அடிப்படையிலான அங்கத்த வர் தெரிவு நீக்கப்படுதல் - வாக்குரிமை விஸ்தரிக்கப்படுதல்சிறுபான்மையினருக்கு அமைச்சர் பதவிகள் வழங்குதல், ஆகிய புதிய சீர்திருத்தங்களைத் தேசிய காங்கிரஸும் ஏற்றுக் கொண் டது. அதனல் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் அங் கத்தவரும் அமைச்சராக நியமனம் பெற்ருர், சர். முஹம்மது மாக்கான் மாக்கார் அவர்களே அந்த அமைச்சராகும். இந்த அமைச்சர் தெரிவுகூடச் சட்ட சபையில் உள்ள ஐரோப்பியரின் ஒத்துழைப்புடனே தான் நடைபெற்றது. எனினும் இப்பொழு துள்ள அரசியல் யாப்பு நடைமுறைக்கு உகந்ததல்ல. தேசிய காங்கிரசும் இந்த உண்மையை உணராமலில்லை. எ ல் லா மசோதாக்களையும் க வர் ன ரி ன் அங்கீகாரத்துக்கு விடுவது ஒர் அர்த்தமற்ற காரியமென்றே கூறுவேன். இந்த அரசியல் யாப்பானது சீனியால் மூடப்பட்ட ஒரு கசப்பு மாத்திரை (Sugar Coated pl) யாகும். வெளிப் பார்வைக்கு அழகாகத் தான் தோன்றுகிறது. யாப்பைக் கூர்ந்து கவனித்தால் நாங் கள் இருந்த சுதந்திரத்தையும் இழந்துள்ளோம் என்பது புல ஞகின்றது.
நமது எதிர்காலம்
இலங்கை முஸ்லிம் லீக் 1924-ஆம் ஆண்டு ஆரம்பமான லும், பல கஷ்டங்களுக்கு மத்தியிலேதான் அது இயங்கிக் கொண்டிருந்தது. 1928-ஆம் ஆண்டுதான் அரசாங்கத்தின தும் முஸ்லிம் சமூகத்தினதும் அறிமுகத்தைப் பெற்றது. கல் வித்துறையில் பின்தங்கியிருப்பதால் முஸ்லிம் சமூகம் தகுந்த தலைவர்களைப் பெற்றுக்கொள்ள (урцq штир6) இருக்கிறது. சாஹி ராக் கல்லூரியிலும் கிறிஸ்தவக் கல்லூரிகளிலும் உருவாகும்,ஒரு சில முஸ்லிம் இளைஞரை நம்பித்தான் நமது சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வயதில் இளைஞர்களானலும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார, அரசியல் முன் னேற்றத்துக்காக உழைத்த வண்ணம் இருக்கின்றர்கள்.
1928-ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் புனரமைப்புச் செய்யப் பட்டது. மாகாணக் கிளைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இலங்
46

கையிலுள்ள இந்திய முஸ்லிம்களையும் உள்ளடக்கிய ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக இயங்கிக் கொண்டு வருகிறது. இப்படி இருந்தும் இலங்கை அரசாங்கத்தின் பொதுவான முன்னேற் றத்திற்குத் தடையாக இருக்கும் எந்தவிதமான செயலையும் தாராள மனம் படைத்த முஸ்லிம் இளைஞர்கள் செய்வதற்கு முற்பட்டதில்லை. சாதி அடிப்படையிலேதான் பிரதிநிதித்துவம் வேண்டுமென்றுஅவர்கள் கோரவில்லை.அரசியல் யாப்பில் தமது சமூகத்துக்கு விசேட பாதுகாப்பளிக்க வேண்டுமென்பதே அவர் களது கோரிக்கையாகும். குடியேற்ற நாடுகளின் செயலாளர் அண்மையில் நமது தீவுக்கு விஜயஞ் செய்தார். அவரது விஜயம் எங்களது நம்பிக்கைகளுக்கு மேலும் வலுவூட்டுவதாய் அமைந்துள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கமும் முஸ்லிம் களின் தற்போதைய நிலையை நன்கு உணர்ந்து செயல்படு மென்றே நம்புகிறேன்.
இலங்கை முஸ்லிம்களைப்பற்றி மேலும் சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். கல்வித்துறையைப் பொறுத்தமட் டில் முஸ்லிம்கள் தங்களது குறைபாடுகளை உணர ஆரம்பித்து விட்டார்கள். ஒரு மகளிர் கல்லூரியைத் திறப்பதற்கான எண் ணமும் உருவாகியுள்ளது. மருதான மசூதிசபையும் முஸ்லிம் லீக்கும் ஒன்றிணைந்து அதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமென்று நம்புகிறேன். பர்தாவுக்குள் எமது மங்கை யர் இன்னும் அல்லலுற்ற வண்ணமாகவே இருக்கின்றனர். எனி னும் இந்தியாவிலுள்ள பர்தாக் கட்டுப்பாட்டுடன் ஒப்பிடுகை யில் இலங்கை முஸ்லிம் மாதர் ஓரளவு சுதந்திரமாகவே வாழ் கின்றனர்.
47

Page 26
புதுமைக்கு வித்திட்ட எழுத்தாளர்
ஐனப் பதியுத்தீன் தமது வாலிபப் பருவத்திலே வெளிநாடு களிற் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போதிலும், இலங்கையைப் பற்றிய சிந்தனையும், இலங்கை முஸ்லிம்களின் முன்னேற்றம் பற்றிய கவலையும் அவரிடம் இருந்து வந்துள் ளதை, அவரது பிரசாரங்கள் நிரூபிக்கின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில முஸ்லிம்கள் அன்று கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினலும், இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் அந்தஸ்தை வரலாற்று அடிப்படையிலும் அரசியல், பொருளா தார, சமூக-சேவைகளின் அடிப்படையிலும், விளக்கமாகப் பேசவும் எழுதவும் துணிவு கொண்டு முன்வந்தவர்கள் எத் தனைபேர் என்பதை நினைக்கும் போதுதான், ஜனப் பதியுத்தீன் அன்று மேற்கொண்ட துணிச்சலான பிரசாரங்களின் வலி மையை உணரமுடிகின்றது.
அவர் ஆங்கில ஏகாதிபத்திய வாதிகளின் அடக்குமுறைக ளுக்கு எவ்விதத்திலும் அஞ்சாதவராகக் கட்டுரைகள், சொற் பொழிவுகள் மூலமாக இந்த நாட்டு முஸ்லிம்களின் அரசியல் பொருளாதார உரிமைகளை விளக்கிக் காட்டியுள்ளார். அன்று உருவாக்கப் பட்டிருந்த இந்த நாட்டு வரலாற்று ஏடுகளில், முஸ்லிம்களைப்பற்றிய சரியான தகவல்கள் தரப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில், தவரு ன கருத்துக்கள் புகுத்தப்பட் டிருந்தன. அத்தகைய கருத்துக்களுக்குக் கண்டனந் தெரிவித் துப் பல கட்டுரைகளை ஜனுப் பதியுத்தீன் எழுதியுள்ளார். அக் கட்டுரைகளிலிருந்தே அவரது ஆய்வுத் திறன், சமூகப் பற்று தேசிய உணர்வு என்பன வற்றையும் நோக்கலாம்.
48

போத்துக்கேயர் இந்த நாட்டுக்கு வராமல் இருந்தால் இலங்கை, முஸ்லிம்களின் ஆதிக்கத்துக்குட்பட்டுச் சிங்கள சமு தாயமே அழிந்து போயிருக்கக் கூடுமென்றும்-முஸ்லிம்கள் ஆதிக்க வெறி பிடித்தவர்களென்றும்", படித்த சிங்கள மக்க Grifaðir மத்தியிலே ஈழத்து முஸ்லிம்களைப் பற்றிய தவருன, கருத் தைப் புகுத்த எண்ணிய ஒருவரால் எழுதப்பட்ட ஒரு கட்டு ரைத் தொடர் "இலங்கை டெய்லிநியுஸ்" பத்திரிகையில் பிரசுர மானது. அதற்குப் பதில் கொடுக்கு முகமாக ஜனப் பதியுத்தீன் * இலங்கைச் சோனகர்கள்' ' Ceylon Moors என்ற தலைப்பில் 19-6-30 ல் “ Would Sinhalese become Moor men,” GT Görp G3s6ör 667 யுடன் பலத்த கண்டனக் கட்டுரை ஒன்றை எழுதினர்.தனது ஒரே கட்டுரையின் மூலமாக அந்தப் பிரச்சினைக்கே முற்றுப் புள்ளி வைத் து விட் டார். இஸ் லா த் துடனும், முஸ் லிம்களது வரலாற்றுடனும் இலங்கை தொடர்பு பட்டிருந்த போதிலும் அதனைக்கைப்பற்றி ஆளவேண்டுமென்ற ஆசை இந்த நாட்டுக்குப் பல நூற்ருண்டுகளாக விஜயஞ் செய்தும் இந்தநாட் டில் வாழ்ந்தும் வந்துள்ள அராபிய முஸ்லிம்களுக்கு என்றுமே இருந்ததில்லை. இந்தியாவில் முஸ்லிம்கள் ஏக சக்கர வர்த்திக ளாக இருந்தனர். சுமாத்திரா, ஜவா போன்ற நாடுகள் வரை முஸ்லிம்களின் செல்வாக்குப் படர்ந்திருந்தது. ஆப்கானிஸ் தான், பாரசீகம் என்பனவற்ருேடும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுடனும் ஒப்பிடுகையில், இலங்கையைப் போன்ற ஒரு சிறிய நாட்டைக் கைப்பற்ற வேண்டு மென்ற ஆசை இருந் திருந்தால்-அது அன்றைய முஸ்லிம்களுக்கு ஒரு சிரமமான காரியமாக இருந்திருக்க மாட்டாது. ஆதம் மலை, சரந்தீப், செய்லான் போன்ற முக்கிய குறிப்புக்களையும் பூமிசாஸ்திர சரித்திர சான்றுகளையும் அரபு நாடுகளிற் காணப்படும் வரலாறு களையும் தொடர்பு படுத்தி-இந்த நாட்டை முஸ்லிம்கள் த மது ஏகாதிபத்தியத்துக்குட்படுத்தாத காரணத்தையும் விளக்கிக் காட்டியுள்ளார்.
சிங்களவர் தமிழர் உட்படப் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆகிய அனைவருமே இந்த நாட்டின் ஆதிக்கத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன்தான் வந்தனரென்றும் முஸ்லிம்க
49

Page 27
ளிடம் அத்தகைய நோக்கம் இருந்ததற்கான எத்தகைய சரித் திர ஆதாரமும் இதுவரை காட்டப்பட முடியாதென்றும் அவர் தமது வாதத்தின் போது, குறிப் பிட்டுள்ளார். ஜன ப் பதியுத்தீன், 1933-ஆம் ஆண்டு அந்நிய நாட்டிலே தமது உயர் கல்வியைப் பெற்றுக்கொண்டிருந்த போதிலும், ஈழநாட்டு முஸ்லிம்களது சமூக கலாசார வாழ்விலும் கல்வித்துறையிலும் மேற்கொள்ள வேண்டிய முற்போக்கான கருத்துக்களை அடிக் கடி ஈழத்துப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதி வந் துள்ளார்.
1933-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான 'சிலோன் (psissid silst siT Lift''' (Ceylon Muslim Standerd) 67 sit to F65.6 கையில் முஸ்லிம்களுக்கான ஒரு தனிப்பத்திரிகையின் அவசி யத்தை வலியுறுத்தி எழுதியுள்ள கடித உருவிலான கட்டுரை யின் சுருக்கம் இதுவாகும். பிரஸ்தாப பத்திரிகையின் ஆசிரியர் ஜனப் அப்துல்கப்பார் கான், ஜனப் பதியுத்தீனின் புரட்சிகர மான கருத்துக்களை வெகுவாகப் பாராட்டி அக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.
பத்திரிகை ஆசிரியர் அவர்களுக்கு . . . . .
தங்களது பத்திரிகையின் ஆறு பிரதிகளை எனது நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதற்காக நான் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈழநாட்டிலும் வெளி நாடுகளிலும் வாழுகின்ற ஆங்கிலங்கற்றமுஸ்லிம் இளைஞர்களின் மத்தியிலே இஸ்லாத்தைப்பற்றிய சரியான தகவல்களையும் அறிவையும் ஊட்டக்கூடிய அரியதொரு சாதனமாக உங்களது பத்திரிகை அமைந்துள்ளது. அதனல் உங்களை நான் பாராட் டாமல் இருக்க முடியாது.
கடந்த ஆறு மாத காலமாக எந்தத் தடையு மின்றி வெளி வருகின்ற இந்தப் பத்திரிகை எதிர்காலத்திலும் தங்கு தடை இன்றித் தொடர வேண்டுமென்பதே எனது பேரவாவாகும். எனது தாய்நாட்டைப் பொறுத்த வரையில், எத்தனையோ இயக்கங்களாலும் தனிப்பட்டவர்களாலும் இதுவரை வெளி
50

யிடப்பட்ட முஸ்லிம் சஞ்சிகைகளுக்கும், பத்திரிகைகளுக்கும் ஏற்பட்ட கதியை நான் சொல் லத்தேவையில்லை.
என்னேடு பல இடங்களில் ஒத்துழைத்த ஒரு நண்பரினல் ஆங்கிலத்தில் இத்தகைய உயர்ந்த ரகமான பத்திரிகை யொன்று, எனது சொந்த நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் கண்டு நான் பெருமைப் படாமல் இருக்க முடியாது. அதனல் இரட்டிப்பு மடங்கான நல்வாழ்த்துக்களை வழங்குகின்றேன்.
முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் எந்தச் செய லையும் ஆதரிப்பவன் நான். எனது சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் எந்தச் சமூக-கலாசார முன்னேற்றத்துக்காகவும் இதய சுத்தியுடன் சேவையாற்றும் ஒருவர். எந்தத் துறையைச் சார்ந்தவராய் இருப்பினும் நான் அவரை நன்கு மதிக்கிறேன். எனது வாழ் நாளில் சில முக்கியமான வருடங்களைப் பொதுப்பணிக் காகவும், எனது சமூக மக்களின் சன்மர்ாக்க வளர்ச்சிக்காகவும் அர்ப் பணித்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அத்தோடு நான் திருப்தி அடையமாட்டேன் 'எனது தாய் நாட்டுக்கும் அங்கு வாழும் மக்களின் முன்னேற்றத்துக்கும் மென் மேலும் சேவையாற்றச் சந்தர்ப்பம் இடைக்க வேண்டுமென்பதே எனது முழுமையான ஆர்வமும் அவாவு மாகும்". காருண்ய மனப்பான்மையுடன் ஏனையோரது கருத் துக்களைப் பக்க சார்பின்றி நோக்குந் தன்மை கொண்ட மனத்தினனக நான் என்னைப் பக்குவப் படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றேன். அப்பொழுதுதான் நானும், எனது சமூக மும், எனது நாடும் நலம் பெற்று வாழ முடியும்.
ஒருவரை ஒருவர் பொருமைக் கண்கொண்டு நோக்குவதே, இன்றைய நமது முஸ்லிம் சமூகத்திடம் காணப்படும் பெருங் குறைகளுள் ஒன்ருகும். ஒரு முஸ்லிமின் முன்னேற்றத்தை இன் ஞெரு முஸ்லிம் விரும்புகின்றனில்லை. முன்னேறும் ஒருவனைச் சொல்லாலும் செயலாலும் அவமதித்துத் தடைகளை உண்டு பண்ணி, அவனை வீழ்த்த வேண்டு மென்பதே பலரது நோக்க மாகும். இப்படியான இழிந்ததோர் அத் திவாரத்திலிருந்து பலம் பொருந்தியதொரு முஸ்லிம் சமுதாயத்தை நாம் எப்ப டிக் கட்டியெழுப்ப முடியும்?
5

Page 28
தேவையற்ற மனப்போக்குகளை முஸ்லிம்களிடமிருந்து நீக் குவதே உங்களது பத்திரிகையின் முக்கியமான-முதன்மையான குறிக்கோளாக இருத்தல் வேண்டும்.
உங்களது சஞ்சிகையில் மாறுபட்ட கருத்துக்களையும் அபிப்பிராயங்களையுங் கொண்ட கட்டுரைகளை வெளியிடுகின் lர்கள். அது உங்களின் பாரபட்சமற்ற-பக்கஞ்சாராக் கொள் கையைத் தெளிவாகக் காட்டுகின்றது. ஓர் உண்மை முஸ்லிம், மாற்ரு னின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவனுகவே இருப்பான். இஸ்லாத்தைப் பற்றி எழுந்துள்ள பல்வேறு வகை ப் பட் ட கொள்கைகளைப் பற்றியும் கருத்து வேறுபாடான குழுக்களைப் பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள். பெரியதோர் இஸ்லா மிய எழுச்சி எமது எதிர்காலத்தை நோக்கிக் காத்துக் கொண் டிருக்கிறது. அதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் தனது பங்கை, அது எத்தகைய சிறிய பங்காயினுஞ்சரியே, அதனைச் செய்தே ஆக வேண்டும். சிறு சிறு துளிகளான அத்தகைய பணிகள் தான் பெருஞ் சமுத்திரமாக மாற்றமடையும். முஸ்லிம் உல கையும், முஸ்லிம் அல்லாதார் உலகையும் இணைக்கக் கூடிய இப்படியான பிரமாண்டமான தொரு எழுச்சி எதிர்காலத்தில் ஏற்படத்தான்போகிறது. அதற்கான அறிகுறியே உங்களது சஞ்சிகை என்று கூடக் கூறலாம்.
பர்தாப் பிரச்சினையைத் தள்ளிவிட்டு, முஸ்லிம் பெண்களுக் கான கல்வியின் அவசியம் பற்றிய அறைகூவலே ஆரம்பியுங்கள். முஸ்லிம் அல்லாதார் எமது கருத்துக்களை ஏற்கச் செய்வதற்கு முன்னர், முஸ்லிம்களை உண்மையான முஸ்லிம்களாக வாழ வழிசெய்வதே மேலானதாகும். முஸ்லிம்களின் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டு பெயரளவில் இயங்கிக் கொண்டிருக்கும் எமது இயக்கங்களை நீக்கிவிட்டுச் சக்தி வாய்ந்த தனியானதொரு முஸ்லிம் இயக்கத் தைக் கட்டி எழுப்புதல் வேண்டும். அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை. நாம் கல்வியறிவு பெற்றவர்களாக-ஒற்றுமை உடையவர்க ளாக-பொருளாதாரத் துறையிற் பலம் பொருந்தியவர்க ளாக வாழ முற்படும் போது, அரசியல் பூரணத்துவம் எங்களைத் தானகவே தேடிக்கொண்டு வந்துவிடும்.
52.

தங்களுக்குள்ளே சச்சரவிட்டுக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் நமது சமூகத்துக்குத் தேவையில்லை. அதிகமான கல்வி மான்கள் தான் இன்று தேவைப்படுகின்றனர். அத்துடன் சமூக சீர்திருத்த வாதிகளும் தேவை. சரியான முறையில் கல்வி அளிக்கப்படாமையால் நல்ல தலைவர்களை உற்பத்தியாக்குவதில் நின்றும் நாம் தவறிவிட்டோம். ஆதலினல் கல்விதான் எமது மூச்சாகும். அதற்கான வசதியும் வாய்ப்பும் வேண்டுமென் பதே எமது முழுமையான கோரிக்கையாக இரு த் த ல் வேண்டும்.
ஒரு சில மாணவர்களையாவது அலிகாருக்கு அனுப்புங்கள். அவர்களுக்கு இந்தியாவையும் ஏனைய நாடுகளையும் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். அப்பொழுதுதான் அவர்களிடத்திலே கடமையுணர்ச்சி - தேசியப்பற்று - சேவை மனப்பான்மைதாய்நாட்டுப் பற்று என்பன ஏற்படவும் அவற்றை அறிந்து பயன் பெறக்கூடிய நல்லுணர்வைப் பெறவும் முடியும். வகுப்புத்
நல்ல விடயங்களை நாம் ஏற்றுக்கொள்வோம். நாமும் நல்லவர்க ளாக வாழ முற்படுவோம். ஈழமணித் திருநாட்டின் அன்புப் புதல்வர்கள் என்ற பெருமையைப் பெறுவோம்.
உங்கள் பத்திரிகையில் எனக்குள்ள கடமையுணர்ச்சியிஞ லும், பற்றுதல் காரணத்தினுலும் மேலும் பல சந்தாதாரர்களை அலிகர்ர் சர்வகலாசாலையிலிருந்து சேர்த்தனுப்ப முயற்சி எடுப் பேன். அத்துடன் சில கட்டுரைகளையும் அனுப்ப எண்ணியுள் ளேன். நான் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றபோது, அந்த நாடு மாமன்னர் நாதிர்ஷாவின் தலைமையில் அடைந்துள்ள முன்னேற் றத்தை நேரடியாகவே கண்டும், அவதானித்தும் உள்ளேன். அது சம்பந்தமாகக் கல்கத்தாவில் இருந்து வெளியாகும் ஸ்டார் ஒப் இண்டியா" (Star of India) என்ற பத்திரிகைக்கும் சில தகவல் க்ளைக் கொடுத்துள்ளேன். நீங்கள் விரும்பிஞல் நான் அனுப்பும் ஒரு சில புகைப்படங்களோடு கட்டுரைகளையும் உங்கள் பத்திரி கையில் பிரசுரியுங்கள்.
53

Page 29
ஆப்கானிஸ்தான் அரசாங்கதின் விருந்தினர்களாக நாம் ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்தோம். ஒரு முஸ்லிம் நாடு என்ற வகையில் அந்த நாடு அடைந்து வரும் முன்னேற்றத்தை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியம்.
முஸ்லிம்களுக்குரிய ஆங்கில சர்வகலாசாலையான அலிகார் சர்வகலாசாலையைப் பற்றியும் உங்களது பத்திரிகையில் முக்கியத் துவம் அளித்துப் பிரசுரியுங்கள். ஏனெனில் அலிகாரில் கல்வி பயில வரும் இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகும். சுருங்கக் கூறினல் இலங்கையிலிருந்து இங்கு கல்வி பயில வந்திருக்கும் ஒரேயொரு முஸ்லிம் நான் மட்டுந்தான். அதனல் அலிகார் சர்வகலாசாலையைப் பற்றியும் சில கட்டுரை களை அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளேன்.
அலிகார் சர்வகலாசாலை இஸ்லாமிய அன்பன்
அலிகார். எம். என். எம். பதியுத்தீன்
ஒரு சமுதாயத்தைச் சரியான வழியில் இயங்கச் செய்வ தற்குப் பத்திரிகைகளின் பங்கு மகத்தானதாகும். அதனை வலி யுறுத்துமாப் போன்று அமைந்துள்ளன. ஜனப் பதியுத்தீனின் கரு த் துரை க ள். அவரது கரு த் து ரை க ளின் அன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் மலிந்து காணப்பட்ட ஊழ ல் களை விளக்கிக் காட்டியுள்ளதோடு அவற்றை நிவர்த்திப்பதற்குச் செய்யப்படவேண்டிய ஆக்கப்பணிகளும் விளக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் மத்தியிலே எத்தனையோ பத்திரிகைகளும், சஞ் சிகைகளும் தோன்றத்தான் செய்தன. அவை அத்தனையும் முஸ் லிம்களது ஒத்துழைப் பின்றியே மறைந்து போயின. இன்று கூட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நம்மத்தியிலே இருந்து ம் நமது சமுதாயத்துக்கெனத் தனியானதொரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தி ச் செல்வதற்குச் சக்தியில்லையென்ருல் அன்னரது கருத்துக்களை இன்றையச் சமுதாயமும் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது. நம்மத்தியிலே கல்வி மான்கள் பெருகி வருவது உண்மையே. ஆனல் அவர்களுள் எத்தனைபேர்தான்
54

வாசகர்களாக இருக்கின்றனர். நவீன காலப் போக்குக்கு அமை வான சிந்தனைகளையும் புதுப்புதுக் கருத்துக்களையும் இஸ்லாமிய தத்துவத்தின் அடிப்படையிலே ஆராய்ந்து நமது சமுதாயம் பயனடைய வேண்டுமாயின் நம்மத்தியிலே , வாசகர்களின் தொகை பெருகி வளரவேண்டும். பத்திரிகைகளும் சஞ்சிகை களும் போதியளவு பிரசுரிக்கப்படவேண்டுமென்ற கருத்தை இன்றுங்கூட அன்னர் அடிக்கடி முஸ்லிம் சமுதாயத்தினரி டையே வற்புறுத்தி வருவதைக் காணலாம்.
"இஸ்லாமிய சன்மார்க்கத்தை முஸ்லிம்கள் சரியான முறை யில் புரிந்துகொண்டு, அதன் வழியிற் செயற்பட உலமாப் பெரு மக்களும் ஆசிரியர்களும், நூல்களையும் பத்திரிகைகளையும் சஞ் சிகைகளையும் நிறையக்கற்றுத் தங்களைப் பூரண அறிவுடையவர் களாகப் பக்குவப்படுத்திக்கொண்டு, அதனல் சமுதாயம் பயன டையக்கூடிய கருத்துச் செறிவுடைய புதுப்புது உருவாக்கங்களை யும் படைக்கவேண்டும்" என்று ஜனப் பதியுத்தீன் தாம் கலந்து கொண்ட முஸ்லிம் ஆசிரிய மாநாடுகளிலும் மெளலவிகளின் இயக்கங்களிலும் அடிக்கடி கூறிவந்துள்ளதையும் நாம் மறப் பதற்கில்லை.
'நமது பழம் பெருமைகளைப் பற்றிப் புகழ்ந்து பாராட்டிக் கொள்வதாலோ, அன்றேல், இன்றைய இழி நிலையைப் பற்றி உள்ள முருகி வருந்துவதாலோ எந்த விதப் பயனும் இல்லை. நாம் சிந்திப்பவர்களாகவும், செயற்படுபவர்களாகவும், திறமைமிக் கவர்களாகவும் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் மரணிப்பது ஒரே ஒரு தடவைதான். அவ்வாறு மரணிக் கும்போது? எலி பூனைகளைப் போலக் கோழைகளாக மரணிக்கா மல் சிங்கத்தைப் போன்ற வீர புருஷர்களாக மரணிக்க வேண் டும்.’’ என்றெல்லாம், தமது சொந்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் வகையிலான உணர்ச்சி மிக்க உரைகளை வழங்கி வந்துள்ளதையும் நாம் கண்டும் கேட்டும் வருகின் ருேம். இவ் வாறு, தாம் சொல்லியவண்ணம் செயலில் காட்டிய உதாரண குணங்கள் பலவற்றை அவரது வாழ்க்கையிலேயே கண்டு கொள்ள முடியும்.
S5

Page 30
ஜணுப் பதியுத்தீன், புவிஇயல், வரலாறு என்பனவற்றுடன் இஸ்லாமிய வரலாற்றையுங் கற்றுத்தேறியவர். பல்கலேக்கழகப் பரீட்சைக்கு நெட்டுருப் பண்ணுவதாக அவரது பாடங்கள் அமையவில்லே. னுபவ ரீதியா க = சா த குனு மு னற க ளேக் கையாண்டு கற்க அவர் முற்பட்டார். கல்வி பயிலுங்காலத்திலே முஸ்லிம் நாடுகளுக்கு அவர் மேற்கொண்டிருந்த சுற்றுப் பிர யாணங்கள், அனுபவ வாயிலான அறிவை வளர்க்க உதவின. தாம் பெற்றுக்கொண்ட அநுபவக் கல்வியினு லான பிரயாண அது பவங்களே, அன்றையப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பயணக் கட்டுரைகளாக வரைந்துள்ளார். அவர் தாம் பெற்றுக் கொண்டிருத்த புவிஇயல் வரலாற்று அனுபவங்களேக் கையாண்டு அன்றைய முஸ்லிம் நாடுகளுக்கிடையே காணப்பட்ட குறை பாடுகளேயும், ஏற்றத் தாழ்வுகளையும் அக்கட்டுரைகளின் வாயி லாக அறிய வைத்துள்ளார். முஸ்லிம் நாடுகளுக்கிடையிலான குறைபாடுகளே நீக்குவதற்கான ஆலேசனேகளேயும் அவற்றின் மூலமாக வழங்கியுள்ளார்.
அவர் எழுதியுள்ள பிரயானக் கட்டுரைகள் சுவை மிக்கன வாகவும், இஸ்லாமிய உணர்வைத் துரண்டுவனவாகவும், இலக் கிய நயமுடையவனுகவும் காணப்படுகின்றன. அன்றையத் தின சரிகளும் சஞ்சிகைகளும் அவரது கட்டுரைகளே விரும்பிப் பிர சுரித்துள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அவரது சுவைமிக்க கருத்தோவியங்கள் உருது, தமிழ், இந்தி, மலாப் ஆகிய பொழி களிலும் பெயர்க்கப்பட்டுப் பிரசுரமாகியுள்ளன.
அவரது கட்டுரையொன்றின் தமிழாக்கத்தின் 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை யி விருத்து வெளியான "சரந்திப் யரின் குறிப்புடனேயே அக்கட்டுரையையும் நோக்குவோம்.
என்ற சஞ்சிகையிற் காணலாம். பத்திரிகை ஆசிரி
56

1927-ல் உருவான வாலிப முஸ்லிம் லீக் இயக்கத்தின் இஃனக் காரியதரிசிகள் ஜனுப். எம். எம். பதியுத்தீன் ஜனுப். எம். சரிப் அப்துல் ரஹ்மான்

Page 31
3 3. 33.33.
. . . . . 體 1933-ஆம் ஆண்டு தடைபெற்ற அகில இந்திய பல் கஃக் கழகங்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டி யில் வெற்றிவாகைசூடி பெற்ற தங்கப் புதக்கத்துடன்
ஜணுப் எம். என். எம், பதிபுத்தீன்
 

ஆசிரியரின் குறிப்பு: இலங்கை முஸ்லிம் லீக்கின் முன்னேநாட் செயலாளர் ஜனுப். எம். என். எம். பதி யுத்தீன், தற்போது அலிகார் சர்வகலா சாலேயிற் கல்வி பயின்று வருகின்ருர், இவர் அலிகார் சர்வகலாசாலேத் தூது கோஷ்டியினருடன், ஆப்கானிஸ்தான் சென்றபோது பெற்ற தமது பிரயான அநுபவத்தையும் எழுதியுள்ளார்.அவரது கண்வமிக்க அநுபவங்களின் முக்கியமான சில பகுதிகளே ஈண்டு தருகிறேன்.
இந்தியாவின் மேற்கு எல்லேப்புறத்தின் கடைசிதான் ஆப் கானிஸ்தானிய நாட்டின் ஆரம்பமாகும். "இந்த இடத்தைக் கடந்து செல்லுகின்றவர்கள் " பாஸ்போர்ட்" நிபந்தனேகளேச் சரிவரப் பூர்த்தி செய்யாமல் செல்வக்கூடாது'-இதுதான் அந்த எல்லேப்புறத்திலே போடப்பட்டிருக்கும் அறிக்கை.
இந்தியாவிலிருந்து சென்ற நாம் இந்த எல்லேப் புறத்தை அடைந்ததும், புதியதொரு நாட்டுக்குள்ளே பிரவேசித்திருப் பதாக எண்ணிக்கொண்டோம். அறிக்கை போடப்பட்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் ஒரு காசியாலயம் இருந்தது. அங்கே ஓர் ஆப்கானிஸ்தான் அதிகாரியும் இருந்தார். அவரின் பார் வைக்கு எங்களது "பாஸ்போர்ட்டு'க்களேச் சமர்ப்பித்தோம். அவற்றைப் பார்வையிட்ட அதிகாரி, தமது கையெழுத்தை வைத்துவிட்டு, அவற்றை மீண்டும் எம்மிடமே தந்தார்.
57

Page 32
அங்கிருந்து டாக்கா " என்ற இடத்தைச் சென்றடைந் தோம். அங்கேதான் நாம் எடுத்துச் சென்ற பொருட்களைச் சோதனை செய்தார்கள். அந்தச் சோதனைகள் முடிந்தபோது மாலைப் பொழுதாகிவிட்டது. பின்னர் " சிம்ளா " என்ற இடத் தைச் சென்றடைந்தோம். அங்கு, எங்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த " முசாபர் பங்களாவில் இராப் பொழு தைக் கழித்தோம்.
அதிகாலையிலே எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தோம். அந்த இடத்தின் இயற்கைக் காட்சிகள் எம்மை வெகுவாகக் கவர்ந்து விட்டன. அழகிய ரம்மியமான அந்தக் காட்சிகளை எங்களால் மறக்கவே முடியவில்லை. எம்மைச் சுற்றிலும் பழத்தோட்டங் கள் நிறைந்து காணப்பட்டன. மொகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹானின் காலத்திற்ருன் இத்தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. இந்த அழகிய இயற்கை வனப்புக்களை அநுபவித்துக் கொண்டே அன்று காலை கலீலி” என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டோம். அங்கு சென்று அடைந்ததும் எங்களது காஆலச் சாப்பாடுகளை முடித்துக் கொண்டோம். அங்கே மன்னரின் நிர்வாக அதிகாரி ஒருவர் எங்களை வரவேற்ருர். அந்த இடம் விவசாயத்துக்குப் பேர்பெற்ற இடமாக இருந்தது. மன்னர் அமானுல்லாவின் விவசாய டைரக்டராக இருந்த ஒருவரை நாம் அங்கு சந்தித்தோம். அவர் மூலமாக ஆப்கானிஸ்தானின் விவசாய முறைகள் பலவற்றைத் தெரிந்து கொண்டோம்.
பிற்பகல் ஒரு மணி வரையும் நாம் அங்குள்ள விவசாய நிலையங்களையும் விவசாயஞ் செய்யும் முறைகளையும் பார்வை இட்டோம். அங்கிருந்து நாம் மீண்டும் " காபுல்" என்ற ஆப் கானிஸ்தான் தலைப்பட்டிணத்தை நோக்கி விரைந்தோம். இரவு எட்டு மணிக்கு அந்தக் காபுல் நகரைச் சென்றடைந் தோம்.
எங்களது ' பாஸ்போர்ட்டுக் களும், சாமான்களும் அங் குள்ள சுங்க அதிகாரிகளினல் மீண்டும் பரிசோதிக்கப்பட்டன. நாங்கள் காபுல் நகரை வந்தடைந்ததை அறிந்துகொண்ட ஆப்கானிஸ்தான் கல்வியமைச்சரின் அதிகாரி ஜனுப். ஜமாலுத்
58

தீன் எங்களை வந்து சந்தித்து- வரவேற்று அவரது மகிழ்ச்சியை யும் தெரிவித்துக் கொண்டார். அரசாங்கத்தால் எமக்காகப் பிரத்தியேகமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஜாகைக்கு எங்களை அழைத்துச் G Fair (př. அங்கு எமக்குத் தேவையான சகல வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
எங்களது ஜாகையிலிருந்து ஆறு மைல் தூரத்தில் " தாருல் அமான் " என்னும் நகரம் அமையப்பெற்றிருந்தது. அமானுல் லாஹ் கான்’ என்ற மன்னரால் ஸ்தாபிக்கப்பட்டதனல் அதற்கு " தாருல் அமான் " என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நகரின் வேலைகள் இன்னும் சரியான முறையில் பூர்த்தி யாகவில்லை. எனினும் காபுல் பகுதியின் மிகவும் அழகானதும், ரம்மியமானதுமான ஓர் இடத்தில் நவீன முறையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.
காபுல் நகரிலிருந்து தாருல் அமானுக்குச் செல்லும் சாலை யானது மிக வும் அழகானதாகவும் - விசாலமானதாகவும் தூய்மையானதாகவும் அமைந்துள்ளது. ஐந்து மைல் தூரத் துக்கு ஒரு நேர் கோட்டைப்போல அந்தச்சாலை அமைந்துள் ளது. சாலையின் இரு புறங்களிலும் பச்சைப் பசேலெனச் செழித்து வளர்ந்துள்ள மரங்களும், சோலைகளும் கண்ணைக்கவ
ரும் காட்சியாய் அமைந்துள்ளன.
விசாலமான இச்சாலை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது. ஒரு பகுதியிலே மோட்டார் வண்டிகளும், குதிரை வண்டிகளும் செல்லுகின்றன. பொதிகளை ஏற்றிச் செல்லும் பார வண்டிகளும் லொறிகளும் இன்னேர் புறத்தாற் செல்லு கின்றன. கால் நடையாகப் பயணஞ் செய்கிறவர்களுக்குத் தனிப்பிசிவொன்று உள்ளது. நான்காம் பிரிவிலே தான் "டிராம் வண்டிகள் செல்லுகின்றன. தாருல் அமானில் கட்டப் பட்டுள்ள அரசாங்க " செக்ரடேரியட் காரியாலயம்+ " பார்லி மென்ட்" கட்டடம்-பூர்த்தியாகாத அரண்மனைகள் - பொருட் காட்சிச்சாலைகள் என்பன இத்தாலிய நாட்டினதும் பிரான்ஸ் நாட்டினதும் அமைப்பு முறையில் கட்டப்பட்டுள்ளன.
59

Page 33
அரச மாளிகையையும் "பார்லிமென்ட்" கட்டடத்தையும் சுற்றி வளைத்தாற்போன்று இத்தாலிய முறையிலான அழகிய நந்தவனங்களும் - அந்த நாட்டுக்கே இயல்பான பூஞ்சோலை களும் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை அவதானித்த போது - " ஆப்கானிஸ்தானியர்கள் பூஞ்சோலை களால் ஆன நந்தவனங்களுக்கிடையிலேதான் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள் ' - என்று நினைக்கத் தோன் றியது.
அமானுல்லாஹ்வின் சிம்மாசனத்தில் இப்பொழுது அமீர் நாதிர்ஷா அமர்ந்துள்ளார். இவர் குடிமக்களின் பால் அதிகம் அன்பும் பாசமும் கொண்டவர். நல்ல ராஜதந்திரி. அரசியல் நிர்வாகத்தில் கைதேர்ந்தவர். அதனல் மக்கள் எல்லோரும் மன்னர் நாதிர்சாவின்மீது அளவிலாத அன்பும் பாசமும் கொண்டுள்ளார்கள்.
நாதிர்சா மன்னரைப் புகழாத மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டிலே இருக்கமாட்டார்களென்பதே எனது திடமான நம்பிக்கையாகும். அமீர் நாதிர்சாவும், அவரது சகோதரர் களுமே நாட்டின் நிர்வாகம் முழுவதையும் கவனித்து வருகின் றனர். “ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒரு நாட்டின் நிர்வாகம் முழுவதையும் நடத்துவது உலக சரித் திரத்தில் இதுவே முதற்தடவையாகும் ' என்பதே எனது திடமான நம்பிக்கையுமாகும்.
மூத்த சகோதரர்: நாட்டை ஆளும் அரசரும் நாட்டின் தலைவரு இரண்டாவது சகோதரர்:- நாட்டின் முதன் மந்திரி (மாகும் மூன்ருவது சகோதரர்:- யுத்த இலாகா மந்திரி நான்காவது சகோதரர்:- லண்டனில் ஆப்கானிஸ்தான் தூதுவர் ஐந்தாவது சகோதரர்:- மாஸ்கோவில் (ரஸ்யாவில்) ஆப்கானிஸ் தான் தூதுவர்
இத்தகைய ஆட்சி முறையினுல் ஆப்கானிஸ்தான், இங்கி லாந்திலும், ரஷ்யாவிலும், ஏனைய வடக்கு, கிழக்கு நாடுகளி லும் பெருஞ் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றது.
60

சகோதரர் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் - பூரண நம் பிக்கை வைத்தவர்களாக - நாட்டின் நன்மைக்காகவும் முன் னேற்றத்துக்காகவும் பாடுபட்டு உழைத்து வருவது பெரிதும் போற்றத்தக்க விஷயமாக அமைந்துள்ளது பாராட்டத் தக்கதே!
ஆப்கானிஸ்தானின் கல்வியமைச்சராக மேன்மை தங்கிய அலிமுஹம்மது ஜான் கடமையாற்றுகின்ருர். கல்வித்துறையில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றவர். ஐரோப்பிய நாடுகள் பல வற்றிற் சுற்றுப்பிரயாணமுஞ் செய்துள்ளார். இஸ்லாமியப் பற்றும் சமூக உணர்ச்சியும் கொண்டவர். இவரது செயல்களி லிருந்து, உண்மையான முஸ்லிம் ஒருவருக்கு இருக்கவேண்டிய உணர்ச்சிகளைக் காணமுடிந்தது.
1933ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாந் திகதி, பிரதம மந்திரி மாட்சிமைதங்கிய எச். ஆர். எச். சர்தார் முஹம்மது ஹாசிம் கான் அவர்களது தேநீர் விருந்தொன்றிற் கலந்து கொண்டோம். அங்கு நடந்த ஒரு சம்பவம், இஸ்லாமிய சன் மார்க்கத்திற் காணப்படும் சமத்துவத்தையும்-சகோதரத்து வத்தையும் எந்த அளவுக்கு நிலைநாட்டியதென்பதை உணர்ந்து கொண்டோம். ஒரு புதுமையான உணர்ச்சியைத்தான் அன்று நாங்கள் பெற்றுக்கொண்டோம்.
தேநீர் விருந்துக்குப் பின்னர் நாங்கள் பேசிக்கொண்டிருந் தோம். அப்பொழுது மஃரிபுத் தொழுகைக்காக முஅத்தின் பாங்கு சொல்லும் இனிய நாதத்தைக் கேட்டோம். உடனே பிரதமந்திரியுடன் நாங்களும் தொழுகைக்காக மஸ்ஜிதுக்குச் சென்ருேம். அங்கே மாமன்னர் நாதிர்ஷாவும் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கூடியிருந்தனர். அந்த மாமேதைகள் அங்கு வந்திருப்பதைக் கண்டதும் ஆச்சரியப்படாமல் இருக்க முடிய வில்லை. அதிலும், விசேடமாக அரண்மனைச் சேவகர்கள், மோட் டார் வண்டி ஒட்டுபவர்கள், பிரதமர் வீட்டு வேலைக்காரர்கள், சமையலறை ஊழியர்கள் உட்பட இதர சிப்பந்திகள், ஆகிய பல்வேறு தரத்தைச் சார்ந்தவர்களும் தொழுகைக்காக ஒன்று கூடி நின்றனர். " அல்லாஹ்வின் முன்னிலையிலே எல்லாரும்ாழ்க
6

Page 34
மாகவே கருதப்படுவார்கள்' என்ற உள்ளச்சத்துடனும், உண்மையான உணர்வோடும் எல்லாருமாகச் சேர்ந்து அந்த மாலை நேரத்துக் கூட்டுத் தொழுகையிற் கலந்து கொண்டோம்.
கல்விஇலாகாவின் அமைச்சர்தான் அங்கு கூடியிருந்தோரில், வயதில் முதிர்ந்தவராகக் காணப்பட்டார். அதனல் அவரே இமாமாக நின்று தொழுகையை நடத்தி வைத்தார்.
கல்வி இலாகா மந்திரி காரியாலயத்துக்கு நாங்கள் அழைத் துச் செல்லப்பட்டோம். அங்கிருந்த அதிகாரிகள், எங்களைச் சந்தோஷமாகவும் அன்பாகவும் வரவேற்ருர்கள். அவர்கள் எல்லோரும் கனமான கம்பளி ஆடைகளையே அணிந்திருந்தார்
ᏧᎦ5 ᎧfᎢ .
ஆப்கானிஸ்தான் மக்கள் சுதந்திரத்தாகமுடையவர்கள். மன்னர் அமீர் நாதிர்ஷாவும் மக்களின் சுயேச்சையான போக்கு க%ளப் போற்றுகின்றர். இந்தியர்கள் அடிமை வாழ்க்கையில் ஈடு பட்டிருப்பதை நாதிர்ஷா வன்மையாகக் கண்டிக்கிருர், ஆப் கானிஸ்தானத்தில் வெள்ளையரின் ஆதிக்கம் அல்லது செல்வாக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. நாதிர்ஷா இராணுவ அமைப்பில் அதிக ஊக்கமும் அக்கறையும் சிரத்தையும் கொண்டவர். ஆப் கானிஸ்தானத்திலே தற்போது ஒவ்வொருவரும் கட்டாய இராணுவப் பயிற்சி பெறவேண்டுமென்ற நிபந்தனை இருந்து வருகின்றது.
அங்கு மூன்று கலாநிலையங்கள் இருக்கின்றன. ஒன்று பிரான் சிய கலாசாலை. அங்கே பிரஞ்சுப் பாஷையிலேதான் கல்வி போதிக்கப்படுகின்றது. மற்றென்று ஜேர்மன் கலாசாலை. அங்கு ஜேர்மன் பாஷையில் கல்வி போதிக்கப்படுகின்றது. இன்னென்று பாரசீகக் கலாசாலை. அங்கு பார்சி, இங்கிலிஸ் ஆகிய மொழிகள் போதிக்கப்படுகின்றன. கிரிஸ்தவ மிசனரிமாரின் கலாசாலைகள் அங்கு கிடையாது. நாட்டின் பொதுவான மொழி பார்சி மொழி யாகும். அரசாங்க பாசையும் அதுதான். மாணவர்கள் அந்நிய நாடுகளுக்கு - விசேடமாக பிரான்ஸ் ஜேர்மனி போன்ற நாடு களுக்குத் தொழிற் கல்வியும், உயர்தரக் கல்வியும் பெறுவதற்
62

காக அனுப்பிவைக்கப்படுகின்றனர். பிரதி வருஷமும் அந்நிய நாடுகளுக்கு மாணவர்கள் நூற்றுக் கணக்காக அனுப்பிவைக்கப்
படுகின்றனர்.
ஆப்கானிஸ்தான் மக்கள் பொதுவாகப் புத்திசாலிகள். பிறருக்கு உபகாரஞ் செய்வதில் அதிகம் பிரீதி கொண்டவர்கள் அவர்களிடத்தில் நேசம், இரக்கம், நன்றி என்பன நிறைய உண்டு.
இவ்வாருக ஜனப் பதியுத்தீன் 1933-ஆம் ஆண்டு எழுதிய தமது பிரயாணக் கட்டுரையை, அன்றையச் சுற்முடலையும் சமூக வாழ்க்கையையும் இலக்கிய வளத்தையும்மையமாகக் கொண்டு எடைபோட்டுப் பார்க்கும்போது, எமது இன்றைய இலக்கிய வளத்துக்கு இதுவும் அடிகோலுகின்றது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அத்துடன் தாம்பெற்ற அநுபவத்தை மற்ற வர்களும் பகிர்ந்து அநுபவிக்கச் செய்யும் வகையில் அன்னரின் பிரயாண அநுபவம் அமைந்திருத்தலையும் காணலாம். இத்த கைய கட்டுரைகள் அவரது தன்னலமற்ற மனே நிலையினையும் தன்னுணர்வையும் வெளிப்படுத்துகின்றன.
ஆங்கிலத்தில் வரையப்பட்ட பிரயாண அநுபவமொன்று அன்றையப் பத்திரிகை ஆசிரியர்களினல் பல மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதென்றல், அன்றைய வாசகர் உலகுக்கு அது பயன்தரும் ஓர் இலக்கியப் பணியாகவே அமைந்தது என்று கருதுதல் வேண்டும்.
ஜனப் பதியுத்தீன், தமது வாலிபப் பருவத்தில் உயர் கல்வி யைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையிலும், வெளி நாடுகளுக்கு விஜயஞ் செய்து, தமது அநுபவத்தை மேலும் பலமுடையதாக அமைத்துக்கொண்டார் என்பதையும் இங்கு நோக்கலாம்.
63

Page 35
7 மலேசியாவில் சொற்போர்
1935-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜஞப். பதியுத்தீன் மலேசியா சென்ருர். இவரது வருகையைப் பற்றி அங்குள்ள பத்திரிகைகள் விசேட தலையங்கங்கள் தீட்டிச் செய்திகளை வெளியிட்டன. முஸ்லிம் சமூக இயக்கங்கள், கல்வி ஸ்தாபனங் கள் பலவற்றில் உரை நிகழ்த்துவதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைகளாக வாழ்ந்து வந்த மக்களுக்கு இவரது முற்போக்கான அரசியற் கருத்துக்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு மனப்பான்மையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டன. அதனல், சென்றவிடமெல்லாம் மக்கள் கூட்டங்கூட்டமாகக் குழுமிநின்று ஜனப் பதியுத்தீன வரவேற்கலாயினர். இவரது அரசியற் கருத்துக்கள் அன்றைய ஆட்சியாளருக்கு எதிராக அமைந்திருந்தன. எனினும் எதற்கும் அஞ்சாதவராகத் தமது கருத்துக்களை வெளியிட்ட வண்ண மாகவே இருந்தார் அவர், அதனல் இவரது நடமாட்டத்தை அன்றைய ஆட்சியின் உயர் பீடத்தில் இருந்தவர்கள் மிகக் கூர்மையாக அவதானிக்கத் தவறியதில்லை.
பர்மாவில், ஒருமுறை ஜனப் பதியுத்தீன் ஆற்றிய முற் போக்கான அரசியற் பிரச்சாரத்தைத் தொடர்ந்து 24 மணித் தியாலங்களில் அவரை அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதேபோன்று மலேசியாவிலும் 48 மணித்தியாலங்களில் வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக் கப்பட்டதென்ருல் - வாலிபப் பருவத்திலே அவர் பெற்றிருந்த அரசியல் தீர்க்க தரிசனத்தையும் - ஏகாதிபத்திய எதிர்ப்பு
64
 
 

fessi urī0@ Ufo@) £ € £ 603ra qo qofīqī (1911 ao usog)
orfox og *g.
*********ずり人*
らも ~^^.*?:/, o, aeg-4 so?, cs.-kso opeso, on yo 史**''국%;e^5ħ*マg。ーズa3ジり头ま*、* *** 人rog*ggat**3*らっogagマ*、* よりま己*5以*门5.6 %, 35%,șo*う
'peuulsy ņuļq qeļueluey! X}}, uox ,ɔųo Áq uəao pƏpỊsƏud Əq ||ļNA 6uņəəuu əų L
'unduunn elen X ‘II e H u^^0_L əų 1 se ou’d 0£"Z se 986 I ɔunp tụ0£ Áepuns uo „Á}\suɔaļu n tļue6ȚIV əų. 1,, uo ‘eļpus “səouļaou) pəļļun ‘Áļļsuɔaqutn uueồļļy əųļ ļo 'ubs3 uỊppnipeg 'W'N'IN Áq qsỊ15u3 us pədəA||əp əq ||ław əunŋɔɔ| oņqnd y
El 8 0 1 Q E T
1çoğș Hm.& rı oqT , e o go 19 - qı 19 si @ố3 qoaeng sẽ gì sự 1,9 uge (filoso)
得通信者恒温追9唱得温。温*~
•••• ș»sofavooooo*寶寶潛鄭*Q gaerwyse 'asseșwsiw rętrzne 量• yuringere日spg图 „øsựeko urwoyo ti·ęsso ezgcapaso o-nos 73
·雷恩省g自日本59日滑自占5はs „pe șosoɛ neɛ-ɛɛri ogle 'so'o 'oroqiiæ»
• nepriņ~~•eo og og søof. oe) voor G河g日e 0的-g品。*g** dgsgsgg『**て“3 —, ―) ș« »ns, æg so s mozof vooooooo安岛遭日s准n-伊
qı-ı-ā-wpgorïwr (g)
© plus usefuose, qofe ogse) o socce gore te lores)
ggも8 *ශු0ෂ•geශුෂ භුද්‍රිමේඝ”හී Qa@g
uønɔ ooşaga pagosa goso oposa sa gę c日召aga心好切egs?安*s?守好7守
@ゆゴの &gsgp QQ8注 Qs@sgQQ 幻母恩彤好c好g5
もゆgggegも% geお gggegめ
叡3Qcせg0ga gひggg e 08-g «oo (''E'තළ) ඥාඨ ග්‍රැලන 9 සෙ ඉලෙ
羽遭匈RQQ日 Qépagé日 Q幻心盼>
“S2Oලූදුපn>tලනcත Üශල P) *p召命s oefee èoe propeso,one

Page 36
All-Ceylon Meelad ShariĨ Gommittee,
its-k S.S. N. : .
HOLY PROPHET'S | 3 || RTHIDAY CELLE BRATION UN DER THE AUSPCES OF THE ABovE CoMNTrteF. Eleventh Year Mass Meeting WW!! ! ! B). Il lE( 1 ) YATT The Peer Sahibo Avuliya Dargha Ground on Wednesday, 3rd May, 1939, at 4 p. m.
Janab M. N. M. BADIUDIN, Esq. N1.A. (Hons.)
W1 frescoe X!.\ N Yo (. AMAS WWo 4 .H SPEAK
(ĉMumluç** A MUSLMS AR COROALLY NVT
1.59
திருநபி ஜயந்தி.
அகில இலங்கை மீலாத்ஷரீப் கமிட்டி, கொழும்பு.
Mr. M. N. M. ESAOUD)N a member of the Historical Excursion Party (1953) to Afghanistan under the leadership of Professor Habeeb of Aligarh Muslim University will deliver a talk on
Afghanistan Under Nadir Khan
On Thursday the 14th. September 1935 at 6-45 p.u.
at tlhe MUSLIM STUDENTS' SOCIETY
178, Barr Street;
Mr. S. C. Bhattacharjee, Editor, Rangoon Mail has kindly consented to preside. All are cordially invited to attend
S. E. Baggia, Hony, I.iterary Secretary,
1939 ஆம் ஆண்டு மீலாத் மேடையில் ஜனப். எம். என். எம். பதியுத்தீன் *நாதிர் கான்' ஆட்சியில் ஆப்கானிஸ்தான்
என்பது பற்றி உரை

மனப்பான்மையினையும் ஜஹாகித்துக் கொள்ளமுடியும். அவ்வாறு லுெளியேற்றப்பட்ட சந்தர்ப்பங்களிலுங்கூட தமது இலட்சியத் திலிருந்தும் அவர் விலகிக்கொள்ளவில்லை.
ஜனுப். புதியுத்தீன் பினங் சென்றடைந்தபோது, அங் குள்ள முக்கிய இயக்கங்கள் பலவற்றில் விசேட சொற்பொழிவு சுள் நிகழ்த்தவிருப்பதாக விளம்பரங்களும் சுவரொட்டிகளும் நகரெங்கிலும் காணப்பட்டன. அவரது அரசியற் சொற்பொழிவு களை அன்றையப் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்தாலும், சன்மார்க்க கலாசாரச் சொற்பொழிவுகளைப் பிரமாதமாகப் பிரசுரிக்கத் தவறியதில்லை. ஒருமுறை பினங்கிலே நடைபெற்ற "மீலாதுன்னபி விழாவொன்றிலும் ஜனுப் பதியுத்தீன் கலந்து கொண்டு சொற்பெருக்காற்றினுர். பினங்கின் தமிழ்த் தினசரி யான "தேச நேசன்" பத்திரிகையின் 1935-ஆம் ஆண்டின், ஜூன் மாதம் 7-ஆந் திகதி வெளியான இதழ், அவரது சொற்பொழி வைப் பின் வருமாறு பிரசுரித்துள்ளது.
* தமிழர் சீர்திருத்தச் சங்கத்தினுல் நடத்தப்பட்ட மாபெரும்
நபி ஜெயந்தி விழாவில் இலங்கையைச் சேர்ந்த ஜனுப் பூதியூத்தீனின் சொற்பொழிவு' என்ற தலையங்கத்தோடு அவரது பேச்சு பிரசுரமாகியது.
* தமிழர் சீர்திருத்தச் சங்கத்தினர் வெளியிட்ட விளம் பரத்தின் பிரகாரம் பினங் டவுன் ஹால்' மண்டபத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே ஜனங்கள் வந்து குழுமி விட்டனர். டவுன்ஹால் மண்டப மேடையில் பிரசங்கம் செய் பவர்களுக்கும், பொது மண்டபத்தில் அழைப்புக்கள் அனுப்பப் பட்டிருந்தவர்களுக்கும் ஆசனங்கள் "ரிசர்வ் செய்யப்பட்டிருந் தன.
'தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முப்பது தொண்டர்கள் தமது உடையில் பூச்சின்னங்களை அணிந்தவர்களாக விஜயஞ் செய்தவர்களை வரவேற்று, ஆசனங்கொள்ளச் செய்து உபசரித் தனர். கூட்டத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த * ஸ்டேட் எக்கோ " பத்திராதிபர் திரு. எம். சரவணமுத்து (முன்னைநாள் இலங்கைத் தேயிலைக் கட்டுப்பாட்டாளர் எம்.
65

Page 37
சரவணமுத்துவின் சகோதரர்) வந்ததும் பிரசங்கிகள் புடைசூழ பெருங்கரகோசத்தின் மத்தியிலே ஜனப் பதியுத்தீன் மேடை சென்று ஆசனம் எடுத்துக்கொண்டார்.
'தலைவர் தமது முன்னுரையில், பினங்குடியேற்றப் பகுதி மக்களுக்கு, இன்று ஓர் ஒப்பற்ற திருநாளாகுமென்றும் தமிழ் பேசும் அந்த நகர வாசிகளின், ஆர்வத்தையும் விளக்கினர். பின்னர் அலிகார் சர்வகலாசாலையின் பட்டதாரி மாணவரான ஜனப் எம். என். எம். பதியுத்தீன அறிமுகஞ் செய்து வைத்துப் பிரதம பேச்சாளரான அவரைப் பேசும்படி கேட்டுக்கொண் Lntti.
'சொற்பொழிவாளரான ஜனப் பதியுத்தீன், தமது பிரசங் கத்தில் பின்வருமாறு கூறினர்:
* சுமார் பதின்மூன்று நூற்ருண்டுகளுக்கு முன்னர் துயி லுற்றுக் கிடந்த ஆசியாவையும் ஐரோப்பாவையும் தூய நபிக ளாரின் ஜனனம் விழிப்புறச் செய்துவிட்டன. அத்தகைய பெரி யாரின் ஜனன தினத்தைக் கொண்டாடத் தமிழ் பேசும் முஸ்லிம்களும்-தமிழ் பேசும் முஸ்லிமல்லாதவர்களும் ஒன்முகக் கலந்திருப்பதைக் காண உண்மையாகவே பெரு மகிழ் வும் பெருமையும் அடைகின்றேன்.
** "பொதுஜனசேவை" என்ற ஒரு மாசற்ற கைங்கரியத்தில், உலகில் பல்வேறு மதங்களையும் வழிபடுகின்ற யாவரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும்-ஒன்றுபட்ட வாழ்க்கை முறை க3ள மேற்கொள்ளவும் ஏற்ற மனப்பான்மைகளை இத்தகைய கொள்கைகளால் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும். மதத் தால் வேறுபட்டாலும் எல்லோரும் ஒரே சமுதாயமாக வாழ வேண்டிய காலமும், மனப்பான்மையும் நம்மிடையே பெருகி வருகின்றது. அதிகமான இந்தியர்களின் மதமாகிய இந்து மதம் - இஸ்லாம் மதம் - கிறிஸ்தவ மதம் என்ற முப்பெரும் பிரிவு களிலுமுள்ள உண்மைத் தத்துவங்களையும், விளக்கங்களையும், புரிந்து கொண்டு மானிட ஒற்றுமையை நிலைநாட்டுவதே ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
66

'ஒவ்வொரு மதத்தலைவரினதும் போதன முறைகளை எவ் வளவுக்கெவ்வளவு அதிகமாக ஆழ்ந்து வாசிக்க முற்படுகின் ருேமோ, அவ்வளவுக்கவ்வளவு நாம் நெருங்கிய ஒற்றுமை உடையவர்களாகவும்- ஒருவர் மற்றவரின் விரோதியாக மாரு மல் சகோதர வாஞ்சையினல் முன்னேற்றப் பாதையிலே அணியணியாகச் செல்லவும் முற்படுவோம்.
'நான் கல்வி பயிலுகின்ற அலிகார் சர்வகலாசாலையில் ஒவ் வொரு நாளும் இஸ்லாத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ள, பிறர்மீது குற்றங்காணுத தன்மையைக் கற்பிக்கப்பட்டு வரு கின்றது. சுமார் பத்து மைல் விஸ்தீரணத்திலுள்ள இச்சர்வகலா சாலையில் ஒரு மசூதியும், கிறிஸ்தவ தேவாலயமும் இந்துக் கோயிலும் இருக்கின்றன. இவைகளை அலிகார் சர்வகலாசாலே யினர், தமது கலா நிலையத்தில் பயிலும் பலவகுப்பு மாணவர் களும்- அவரவர் மதமார்க்க வழிபாடுகளில் பிறழாது நிற்கவே உண்டாக்கியுள்ளனர்
"அச்சர்வகலாசாலையின் மாணவர்களாகிய நாங்கள் முஸ் லிம்களென்ருே?, கிறிஸ்தவர்களென் ருே இந்துக் களென்றே நம்மை எண்ணுது ஒரு பெரும் இந்திய மாணவர் சமுதாயத் தினராகவே கருதிக்கொண்டு வாழுகின்ருேம். இன்று நான் மக்கள்டையே தோஷ மின்மை யாகிய - குற் றங் காணுத தன்மையை விளக்க முற்பட்டுள்ளேன். நாம் ஒரு சமுகமாகவும் பெருஞ் சமுதாயமாகவும் வாழ்க்கை நடத்த வேண்டுமானுல், ஒருவரையொருவர் குறைகாணுத தன்மையை நம்மில் ஏற் படுத்திக் கொள்ளவேண்டும்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போதனையை ஒவ் வொரு நாட்டுக்கும் எடுத்தேகிஞர்கள். ஆனல் துரதிஷ்ட வச மாக நமது இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியுற்று இன்று நாமும் துரதிஷ்டத்திற் சிக்குண்டவர்களாக இருக்கின்ருேம். தம்மில் குற்றமும் குறையும் காணமுற்பட்டவர்கள், அத்தகைய குற்றங்களையும் குறைகளையும் எழுதினர்கள். அப்படி எழுதிய வர்கள் தம்மீதே தோஷங்களை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
67

Page 38
இப்படியான தப்பான அபிப்பிராயங்களெல்லாம் உலகத்திலே ஞானம் வளர முற்படும் காலத்தில் திருத்தப்பட்டுவிடும்.
*பதின்மூன்று நூற்றண்டுகளுக்கு முன்னர் ஜீவித்தவரும் நபிகள் நாயகமாகத் தோன்றியவருமான பெரியாரின் சரிதை களில், முஸ்லிம்களால் எழுதப்பட்டுள்ளவைகளையே பாரா யணஞ் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான
விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
'நமதுநபிகள் நாயகம் அவர்கள் மூடத்தனத்திலும்,விபரீத மான பக்திகளிலும் ஆழ்ந்து கொண்டிருந்த உலக மக்களுக்கு ஞான ஒளி விளக்கங்களைத் தந்துள்ளார்கள். எனினும் உலகின் பல நாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் கல்வியிலே பெரும்பாலும், பிற்போற்கான இழிவான நிலையை அடைந்துள்ளார்களென்ற ஒரு கசப்பான உண்மையைச் சொல்லாமல் இருக்கவும் முடி யாது. இந்தப் பிற்போக்கான - இழிவான நிலையை நமது பரிசுத்த நபிகள் நாயகம் அவர்கள் விரும்பவில்லை. நமது திருக்குர் ஆனும் கல்விக்கு முரண்பாடான எந்தப் போதனை களையும் குறிப்பிடவில்லை. நாம் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை மறந்துவிட்டதே இந்தப் பிற்போக்கிற்குக் காரணமாகும்.
*"நமது திவ்விய நபி (ஸல்) அவர்கள், எல்லாச்சந்தர்ப்பங் களிலும், பெருவாரியாகக் கல்விக்கே பெருமையளித்துப் போதித்துள்ளார்கள். அதில் ஒன்றை எடுத்துக் கவனியுங்கள். * சீனத்துக்குச் சென்றேனும் கல்வியைப் பயிலுங்கள்" என்று மிக ஆணித்தரமாகத் தமது போதனைகளில் திருவாக்கிட்டுள் ளார்கள். இத்திருவாக்கின் பரிணுமமே அரேபிய நாடு இருபத் தைந்து வருடங்களுக்குள் மூடத்தனத்தையும், சிசுவதை போன்ற துர்க்குணங்களையும், விட்டொழித்துக் கல்விக்கும், விஞ்ஞானத்துக்கும், கலைக்கும் இருப்பிடமாகத் திகழ்ந்தது. முஸ்லிம்கள் ஸ்பெயின் தேசத்திலிருந்து சீனத்தின் மதில் வரைக்கும், தமது அறிவொளியைப் பரப்பினர்கள். ஜேர்மனிய சீர்திருத்தத்துக்கும், பிரான்சிய சீர்திருத்தத்துக்கும் இது வழி காட்டியது. ஐரோப்பாவில் பல சர்வகலாசாலைகள் கட்டக்
68

காரணமாகவும் அமைந்தது. இஸ்லாத்தின் விளக்கங் காரண மாகக் கிரேக்கர் அளித்துவந்த ஞான விளக்கங்கள் எல்லாம் மறையத் தொடங்கின. முஸ்லிம்களின் அன்றைய அறிவு விளக் கங்களும் ஆராய்ச்சிகளும் மொழிபெயர்ப்புக்களுமே இத்த கைய முன்னேற்றத்துக்குக் காரணமாகும். இந்து மதச் சாயல் கள் ஐரோப்பாவில் பரவியதென்முல், அதற்குக் காரணமும் ஆராவியர்குளேயாகும். சுருக்கமாகக் கூறினுல் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் பெற்றுக்கொண்டிருந்த சிறப்புக்களுக்கெல்லாம் அத்திவாரமாகவும் முதன்மையாகவும் விளங்கியது நபிகள் நாய கம் (ஸல்) அவர்களின் போதனைகளாகும். இன்று இந்தியாவில் அமைந்துள்ள அலிகார் சர்வகலாசாலையும் அன்னரின் போதனை களின் அடிப்படையிலே தோன்றிய தொன்ருகும்.
**ஆகவே நான் இன்று உங்களுக்கு முக்கியமான வேண்டு கோள் ஒன்றை விடுக்கின்றேன். அது யாதெனில் தயவு செய்து கல்வியை மறந்துவிடாதீர்கள் ! சீரிய கல்விமான்களாகுங்கள் ! நல்லவர்களாகவும் கியாதி வாய்ந்த அறிவாளிகளாகவும் மாறி விடுங்கள்! நாளைக்கு இவ்வுலகில் நாம் ஒரு மனித சமுதாயமாக வாழவேண்டுமானுல், நாம் யாவரும் கல்வி கற்றவர்களாக மாறவேண்டும். நாம் கல்வி கற்கப் பின்னிற்போமானல், நாமே ாங்களது சகோதரர்களான முஸ்லிமல்லாதவர்களை அறிந்து உணரக்கூடியவர்களாக இருக்கமாட்டோம். கல்வியறிவில்லாத ஒருவனுல், கற்றறிந்த ஒருவனை எப்படி அறியமுடியும்? இத்த நிலே இன்று இருந்து வருவதனுல்தான் இந்து முஸ் விம் ஒற்று மையை ஏற்படுத்துவதற்குச் சாத்தியமில்லாமல் இகுக்கிறது. ஈனவே சமுகங்களுக்கிடையே ஒற்றுமையைப் பலப்படுத்திஆசியாவில் ஒற்றுமையை திலேதாட்டப் பாடுபடுவதற்கு, நான் கல்வியின் அவசியத்தையே வலியுறுத்த விரும்புகின்றேன்.
“நமது தபியவர்கள், எத்தகைய கஷ்டநஷ்டங்களின் மத்தி பிலும் "கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள்" என்பதை வற்புறுத்தி யுள்ளார்கள். அதனையே உங்கள் மத்தியில் கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்." ஆர்வத்துடன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டம், அதிகநேரம் கரகோஷம் செய்து அவர்தம் கருத்தை வரவேற்றது !
69

Page 39
GDGSET GDIGITsjófugo
இந்தி ய வரலாற்றிலேtஅலிகார்சர்வகலாசாலையின்தோற்ற மும், வளர்ச்சியும் முக்கியமானதோர் இடத்தை வகிப்பதைக் காணலாம். பத்தொன்பதாம் நூற்ருண்டிலே இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி மிகப்பலம் வாய்ந்த தொன்ருக அமையப் பெற்றிருந்தது. எனினும், மேலைநாட்டு நாகரிகம் இந்திய சுதேசி களின் கலாசாரத்தைப் பாதிக்குமோவென்ற ஐயப் பாடு தேசியப் பற்றுடையவர்களின் மத்தியிலே தோன்றலாயிற்று. இந்தக்காலத்திலே மேலைநாட்டுக் கல்விமுறை இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அவசியமாயிற்று. வசதிபடைத்த பலர் மேலை நாடுகளிலுள்ள சர்வகலாசாலைகளுக்குச் சென்று உயர்கல்வியும் பட்டப்பயிற்சிகளும் பெறலாயினர். அவ்வாறு பயின்று வந்தவர் கள் மேலைநாட்டுப் பாணியிலே தமது கருத்துக்களையும், கொள்கைகளையும் விளக்கலாயினர். சமூக அந்தஸ்து- அரசியல் அபிப்பிராயம். கலாசாரச் சார்புகள் என்பனவும் மேலைநாட் டின் போக்குகளைத் தழுவியனவாகவே அமைந்தன. இதனைக் கருத்திற் கொண்டுதான் மகாகவி அல்லாமா இக்பாலும் மேலை நாட்டின் விஞ்ஞானத்தையும் கீழைத்தேயத்தின் கலாசாரத்தை யும் ஒன்றிணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இந்தியாவிலே ஒருசில சர்வகலாசாலைகள் தோன்றியிருந்த போதிலும் இஸ்லாமியர்களது இலட்சியங்களையும், பண்பாடு களையும் பிரதிபலிக்கக் கூடியதாக அவை அமைந்திருக்கவில்லை. அன்றையச் சூழலில் இஸ்லாமியப் பின்னணியிலே முஸ்லிம் களைக் கல்வித்துறையில்,ஊக்குவிக்க வேண்டியதாக இருந்தது. இஸ்லாமிய கலாசாரத்தை மையமாகக் கொண்டு பலவேறு
70
 
 
 

வகையான கலாபீடங்களுடன் கீழைத்தேய மக்களின் தேவைக் கேற்ப, சகல வசதிகளையும் உள்ளடக்கியதான பல்கலைக்கழக மொன்று அவசியம் என்பதையும் பலர் உணர்ந்திருந்தனர்.
அதிலும் விசேடமாக, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக இஸ்லாமியரது மரபுவழிவந்த பல முற்போக்குத்திட்டங்கள் இந்தியாவில் நிலையாக அமைந்துவிட்டன. சுல்தானிய மன்னர்க ளதும், மொகலாய மன்னர்களதும் ஆட்சியின்போது இந்தியா கலையுலகில் மேலும் பொலிவும் புகழும் அடையலாயிற்று.அழகிய நந்தவனங்கள், மாளிகைகள், கோட்டை-கொத்தலங்கள், மசூதிகள், நூல்நிலையங்கள் ஆகிய அனைத்துமே அந்தநாட்டுக்கு அழகுதரும் அணிகலன்களாக அமைந்துவிட்டதை நோக்கலாம்.
மாமன்னர் அக்பர் பலகோட்டைகளையும் கோபுரங்களையும் இஸ்லாமியக்கலைகளோடொட்டிய இந்துப் பாணியிலே கட்டு வித்தார். குஜராத்தில் அவரால் கட்டப்பட்ட ஜாமிமசூதி" பாரசீக இந்தியக் கலைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப் பட்டது. அக்பரது மகன் ஜஹாங்கீர் இலக்கிய, சன்மார்க்கத் துறையில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார். அக்பர் ஞாப கார்த்தக் கட்டடமொன்றையும் அவர் கட்டுவித்தார். சாஜ ஹானின் ஆட்சிக்காலம் 'இந்தியாவில் இஸ்லாமியக் கலைகளின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகின்றது. இஸ்லாமிய இலக் கியம், சித்திரம் சிற்பம் என்பன இவரது காலத்திற்றன் சிறப் புற்று விளங்கின. ஆக்ராவின் முத்து மசூதி, ஜாமி மஸ்ஜித் என்பன இவரது நினைவை அழகுபடுத்துகின்றன. தமது அன்பு மனைவி மும்தாஜின் காதற்சின்னமாக எழுப்பப்பட்டுள்ள தாஜ் மஹால் உலக அதிசயங்களில் ஒன்ருகத் திகழ்கின்றது. மொக லாயரது நினைவுச்சின்னங்களை உலக மக்களின் நெஞ்சங்களிலே என்றைக்குமே அழகு வடிவமாக நிலைத்து நிற்கச் செய்வதில் சாஜஹான் முதன்மை பெற்று விளங்குகின்ருர். பதினேழாம் நூற்றண்டின் இறுதிக்காலத்திலே மாமன்னர் அவுரங்கசீபின் தலைமையில் அகில பாரதமே மொகலாய ஆட்சியின் செல் வாக்கைப்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமியரது எழுச்சி வீழ்ச்சியுற்றபோதிலும் அவர்களது ஆட்சியின் பலன் முற்றக நீங்கி விடவில்லை. ஆங்கிலேயரது ஆட்சியின்போதும்
7.

Page 40
மைசூர், ன்ஹதரபாத், காஷ்மீர் பேர்ன்ற மர்நிலங்கள் முஸ்லிம் மன்னர்களது ஆதிக்கத்திலேயே இருந்துவந்துள்ள்ன.
ஆங்கிலேயரது ஆட்சியின்போது புதிய உத்வேகத்துடன் தோற்றுவிக்கப்பட்ட க்ல்விமுறைகளில் முஸ்லிம்கள் பின்தள்ளப் பட்டுவருவ்தைப் பலர் அவதானிக்காமல் இருக்கவில்லை. முஸ் லிம்கள்து முன்னேர்கள் விட்டுச்சென்ற அரும்பெருங்கலப் பொக்கிஷங்களைப் பேணிக் காக்கவும் வேண்டியதாயிற்று. இந்தப் பெருநோக்கோடு உலக அரங்கில்ே ஏற்பட்டுவந்த நவீன் மாற்றங்களுக்கு அமைவாகவும், கல்வி கேள்விகளில் முன்னேற்றங்காண்பதற்காகவும் இஸ்லாமியப் பாணியிலான பல் கலைக் கழக மொன் றை அமைக்க முன்வந்தவர்தான் மாமேதை சர். செய்யத் அஹ்மத்கான் அவர்களாகும். சர். செய்யத் அஹ்மத்கானின் சேவையில் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஜனப் பதியுத்தீன், அன்னர் மீது அபாரப்பற்றும் வைத் திருந் தார். சர். செய்யதைத் தனக்கு முன்மாதிரி காட்டும் தலைவராக வும்-கல்விமானகவும் கருதத் தொடங்கினர். அன்றியும் சர் செய்யதின் சிந்தனையிலே உருவெடுத்து, முயற்சியிலே தோற்று விக்கப்பட்ட அலிகார் சர்வகலாசாலையின் வளர்ச்சியிலும் தனது வாலிபப்பருவத்தின் சில வருடங்களை ஜனப் பதியுத்தீன் அர்ப் பணித்துள்ளார். ஆறு ஆண்டுகள் அலிகாரிலே மாணவராக மாத்திரம் இயங்கவில்லை. அலிகாரின் தொடர்ச்சியான இயக் கத்துக்கும் உழைத்து வந்துள்ளார். அதனலேதான் இன்றும் அந்தச்சர்வகலாசாலை ஜனப் பதியுத்தீன 'அலிகாரின் வளர்ச் சிக்கள்க உழைத்த மகான்களின் பட்டியலில் சேர்த்துப் பெரு மைப் படுத்திக் கொண்டிருக்கிறது. ஜனப் பதியுத்தீனும் இதுபற்றிக் குறிப்பிடுகையில்,
, கீழைத்தேயத்தில் இஸ்லாமிய கலாசாரத்தின்'சின்ன
அத்தகைய கலா நிலையம் மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென்ற பெருநோக்கிஞ்லேதான் என்ஞ்லான சிறிய பண்ணியை அதற்குச் செய்துள்ளேன். அலிகா
72

ரைக் கர்ணும்போது அங்கே சர். செய்யத் அஹ்மத் காண்யே காணுகின்றேன்' ள்கின்று பல் சந்தர்ப்பங்களிற் கூறியுள்ள்தையும் நோக்கலாம்.
1875-glib -96.7G) Mohamedian Anglo Oriantal CollegeAligarah என்ற பெயரால், உயர் கல்லூரியாக ஆரம்பிக்கப் பட்டு, மிகவிரைவிலே உலகப்புகழ்பெற்ற ஒரு சர்வகலாசாலை யாக மாறிய அக்கலாநிலையம் தென்கிழக்காசியாவிலே எண் ணற்ற அறிஞர்களைத் தோற்றுவித்ததில் வியப்பில்லை. அதன்ே உருவாக்குவதில் சர். செய்யத் அஹ்மத்கான் மேற்கொண்ட அழியா முயற்சிகளையும் சமுதாயம் மறப்பதற்கில்லை. எனினும் அப்பெரியார் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்து முற்றுப் பெறச்செய்ததனுல்தான் இன்றும் அலிகார் இஸ்லாமிய நாக ரிகத்தின் முழுமையான சின்னமாக விள்ங்குகின்றது.
ஜனுப் பதியுத்தீன் 1931-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை தமது பட்டப்படிப்பை அலிகாரிலே மேற் கொள்ள முற்பட்டார். இஸ்ல்ாமிய சமூகப்பற்றும், கீழைத் தேயக் கலையர்ர்வமுமே அன்ஞரை அலிகாருக்கு இழுத்துச் சென்றுள்ளன். இலங்க்ைபிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்று பட்டப்படிப்பை மேற்கொள்ளுவதற்கான ச்கல் வாய்ப்புக் களும் அன்னுருக்கிருந்தது. இங்கிலாந்து சென்று கல்வி பயில் வதையே அன்றைய பண வசதி படைத்த தனவந்தர்கள் பெரும் கெளரவமாகவும் கருதினர். மேலைநாட்டுக் கல்வியினுல் கூடிய உழைப்பும் உயர்ந்த பதவியும் பெற்றுக்கொண்டு, கெள்ரவ ம்ாகவும் சொகுசாகவும் வாழ எண்ண்யவர்கள்ே அக்காலத்தில் அதிகமாகக் காணப்பட்டன்ர். ஜனப் பதியுத்தீனையும் மேல்ை நீாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துப் படிப்பித்து ஓர் உயர் தர வக்கீலாக விளங்கவைக்க வேண்டும்ென்பதே அன்ஞர்து குடும்பத்தாரின் விடாப்பிடியான நோக்கமாகவும் இருந்து வந்தது. ஆனல் பதியுத்தீனின் எண்ணமெல்லாம் வேறுவகை ய்ர்கிவே அமைந்திருந்தது.
தாய்தr:டின் எதிர்காலம், சுதேசிகள்ன் சுபீட்சம், செர்ந்த சமுதாய மக்களின் கல்வி, கலாசர் சமூகப்பொருளாதார
73

Page 41
வாழ்க்கையின் முன்னேற்றம் என்பவைகளே அன்ஞரது சிந்தனை யிலே சுழன்று கொண்டிருந்த பெரும் பிரச்சினைகளாகும், தமது எண்ணங்களைப் பக்குவப்படுத்துவதற்காக அலிகார் சர்வகலா சாலையே பொருத்தமானதென அவர் எண்ணினர். இந்தியத் தேசிய விடுதலைக்காக் உழைத்துத் தங்களது உயிரையே அர்ப் பணித்த மெளலான முஹம்மதலி, மெளலான செளக்கத்தலி ஆகிய இருவர் மீதும் ஜனப் பதியுத்தீனின் தந்தையார் ஆழ்ந்த பக்தியுடையவராகக் காணப்பட்டார். அடிக்கடி அவர்களது வீர வரலாற்றைப் புகழ்ந்து பாராட்டுவதுமுண்டு. அலிகாருக் குச் செல்ல விரும்பிய ஜனுப் பதியுத்தீன் தமது தந்தையை நோக்கிப் பின்வருமாறு கூறினர்.
"தந்தையே! நீங்கள் அடிக்கடி புகழ்ந்து பாராட்டுகின்ற மெளலான முஹம்மதவியும், செளக்கத்தலியும் அலிகார் சர்வகலாசாலையினல் உருவாக்கப்பட்டவர்கள்தானே அப்படி யான ஒரு கலாநிலையத்துக்கு உங்களது ஆறு ஆண்மக்களில் கடைசி மகனுன என்னையும் தியாகம் செய்யுங்கள்" என்று தமது ஆவலை வெளிக்காட்டியபோது, பதியுத்தீனின் தந்தை யாரின் கண்களிலிருந்து கண்ணிர் பெருக்கெடுத்துவிட்டது. அடுத்த நிமிடமே தனது மகனின் விருப்பத்துக்கு இணங்க லாஞர். "
ஜனப் பதியுத்தீன், பல தேசிய வீரர்களையும், தலைவர்களை պւն உருவாக்கிய அந்தச் சர்வகலாசாலையைக் கீழைத்தேய முஸ் லிம்களின் சொந்தச் சொத்தாகவும் தேசிய கலா நிலையமாக வும் கலாசாரப் புகலிடமாகவும் கருதத் தொடங்கினர். அன்றி யும் அக்கலா நிலையத்திலே போதிக்கப்படும் மேலைநாட்டு அறி வியற் துறையின் முற்போக்கான கொள்கைகளும், இஸ்லாமிய கலாசாரப் பின்னணியில் போற்றப்படுவதனல் அதன் பயனை யும் பண்பையும் ஒருங்கே உணரலானர். இவையனைத்தையும் சீர்தூக்கிச் சிந்தித்துச் செயலாற்றும் தன்மையை இளமைப் பருவத்திலேயே பழக்கிக் கொண்டதனல்தான் தமது பட்டப் படிப்பையும் தாமே தீர்மானிக்கலாயினர்.
74

அறிவையும் ஆற்றலையும் ஒருங்கே நிலைநாட்டும் துடிப்புள்ள ஓர் இளைஞனகப் பல்கலைக் கழகத்தைச் சென்றடைந்தாலும், இஸ்லாமிய சமுதாயத்தின் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட பலபெரியார்களுடன் தொடர்பு கொள்வதிலும் ஆவலுடையவராக இருந்தார் பதியுத்தீன்.
75

Page 42
DONATED IN MEMORY OF Late M5. W. A. STWAG NA NAM, W. A. SAD 'DCHARAM and W. A. MANCRATIA,
omるé。23
-ዽችኑg
ஜினப் பதியுத்தீன் தமது உயர் கல்விக்காக அலிகாருக்குச் சென்றபோதும், இந்தியாவின் முஸ்லிம் பேரறிஞர்களோடும், தஃலவர்களோடும் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டார். இங்கிலாந்தின் "வாக்கிங் மிசன்" (Working Mission) ஸ்தாபக கும், இஸ்லாமிய ஆராய்ச்சித் துறையில் பலநூல்களே எழுதிய வரும், சிறந்த பேச்சாளருமான குவாஜா கமாலுத்தீன் அவர்க ஒளது நெருங்கிய நட்புக்குரியவராகப் பலகாலம் அவருடனேயே வாழ்ந்தும் வந்துள்ளார். குவாஜா கமாலுத்தீன் அவர்களது அந்திய காலத்தில் அவரால் மொழியப்பட்ட "திருக்குர்ஆன் கருத்துரைகள்' என்ற பாரிய கிரந்தத்தை ஜனுப் பதியுத்தீன் ஆங்கிலத்தில் எழுதிமுடித்தார். அக்கிரந்தம் பிரசுரிக்கப்படா விட்டாலும், இங்கிலாந்திலிருந்து வெளிவரும் 'இஸ்லாமிக்
அறிஞர் தொடர்பு
ரிவியு" (Islamic Review) என்ற சஞ்சிகை அதனேப் பகுதி பகு தியாக வெளியிட்டுள்ளது.
குவாஜா சி மாலுத்தீன் அவர்கள், தளர்வுற்ற நியிேல் தமது படுக்கையில் சாய்ந்து கொண்டவாறே அக்கருத்துரைசு ளேக் கூறிக்கொண்டிருப்பார்கள். அவ்வாறு கூறும்போது, ஜனுப் பதியுத்தீன் நாளொன்றுக்கு இருபத்தைந்து பக்கங்க ஞக்குக் குறையாமல் எழுதுவார். அந்தியும் சந்தியும் அவரது ஆப்த நண்பராக விளங்கியதனுற்ருன்.
"......... I have taken the massage to the west, you must take
it to the east Lup to Japan,...„...„..
፶8
 
 

3.
மலேசியாவிலி:
i
அளிக ன் த லே
ற்ப பதி
கல்வி :
ஒத்து உப தரக்
Tչի LII եւ ի նil
தி
ff Eli, 3 fait. 37 à
தஃவ
சாரக குழுத்
அலிகாருக்கு வந்த மாணவர் கு

Page 43
¿ † 4 its o yıl s Iso svo lo ishússsols !! !! !! !! I l sự (co lae lloji) ! ! !! !! !! L T so so iz Isos"), wo sijos * LL 00YYSL0YYL0YLL YJYLL 0 KLSYK KLL SLLLK LYLYLLLL SLLLL S0LL K L- sistē
LLLKTY0YJK KKKYTTY TLLLLLSYY 0LSKJYYLLYYLL KKKKKSsự sữđĩ) sɛ}+c6ī sī£) singsstof, *wolae@f || Lopo lo
 

'.நான் மேற்கத்தைய நாடுகளுக்கு இஸ்லாத்தின் போதனைகளைத் தாங்கிச் சென்றேன். நீங்கள் கிழக்கே ஜப்பான் வரையும் அதனை எடுத்துச் செல்லுங்கள்." என்று குவாஜா கமாலுத்தீன் ஜனுப் பதியுத்தீனை நோக்கிக் கூறியுள்ளார்.
ஐணுப் பதியுத்தீனின் சகோதரரும், வழக்கறிஞரும் மார்க்கப் பற்றுடையவருமான ஜனப் எம். என். எம். சலா ஹ"த்தீன் 1982-ஆம் ஆண்டு எழுதிய கடிதமொன்றில் தமது சகோதரருக்கும் குவாஜா கமாலுத்தீன் அவர்களுக்கும் இடையி லான தொடர்பு குறித்துப் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"...உலகப் பேரறிஞர்களில் ஒருவராக இருந்து மேற்கத்திய உலகுக்கு இஸ்லாத்தைப் புரியவைத்தவரான குவாஜா கமாலுத்தீன் அவர்களோடு சேர்த்து வாழ்வது ஒரு பெரும் பாக்கியமாகும். அடைய முடியாத ஒரு பெரும் பேற் றைப் பெற்றுள்ளிர்கள். அன்னுரின் அடிக்சு வட்டிலிருந்து சேவையாற்றக் கிடைத்திருப்பது அல்லாஹ் அருளியிருக்கும் பேரருள் என்றே கருத்திற் கொள்ளுதல் வேண்டும். என்போன் றவர்களுக்கு அத்தகைய வாய்ப்புக்கிடைக்குமாயிருந்தால் நிச் சயமாக நானும் ஒர் அதிர்ஷ்டசாவியாகவே என்னேக் கருதிக் கொள்வேன். என்றைக்காவது அந்தப் பாக்கியம் கிடைக்கு மென்றுதான்நம்புகிறேன். அன்னூரின் பாதிங்களேத் தொட்டு சாஷ் டாங்கஞ் செய்வதும் பெருமை தரக் கூடியதாக இருக்கும். ஏனென்முல், இன்றைய உலகிலே இஸ்லாமிய சுலீபா ஒருவர் இருப்பாராளுல் அது குவாஜா * மாலுத்தீனுகத்தான் இருக்க வேண்டும். இதுவே எனது நம்பிக்கையுமாகும். எனது அன் பான சலாத்தையும் அன்னுருக்கு எத்திவையுங்கள்."
அன்புள்ள விாம். என்.என். சலாஹ"ாத்தின்
இன் வாமியப் பிரசாரத்தில் மிக மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த மாமேதை அப்துல் அலீம் சித்தீக் அவர்களு டனும் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். ஜனுப்பதியுத் தீன் அடிக்கடி அன்னூரைச் சந்தித்து உலக இஸ்லாமிய பிர
77

Page 44
சாரம் சம்பந்தமாகப் பலமுறை கலந்துரையாடினர். அப்துல் அலீம் சித்தீக் அவர்களின் மருகராகிய மெளலான பஸ்லுல் ரஹ்மான் அன்சர்ரி அவர்களும் ஜனுப் பதியுத்தீனின் இத்த கைய முயற்சிகளுக்குக் கைகொடுத்து உதவினர். இன்றைய உலகிலே இஸ்லாமியப் பிரச்சாரத்தில் மிகமும்முர மாக ஈடுபட் டுள்ள மெளலான பஸ்லுல் ரஹ்மான் அன்சாரியும் ஜனப் பதி யுத்தீனும், ஒரே காலத்தில் அலிகாரில் பயின்றவர்கள், ஒரே அறையில் வாழ்ந்தவர்கள். ஜனப் பதியுத்தீன் அலிகார் சஞ்சி கையின் பிரதம ஆசிரியராக க் கடமையாற்றியபோது மெளலான கலாநிதி பஸ்லுல் ரஹ்மான் அன்சாரி அவர்கள் அதன் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர். இந்த உண் மையை மெளலான பஸ்லுல் ரஹ்மான் அன்சாரி அவர்களே தமது இலங்கை விஜயத்தின் போது பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள்.
இவ்வாறே ஜனப் பதியுத்தீன் உலகமகாகவி அல்லாமா இக் பால்தேசிய விடுதலை வீரர்களான அலி சகோதரர்கள்,அரசியற் தலைவர்களான டாக்டர் அன்சாரி, காயிதே அஃலம் முஹம்ம தலி ஜின்ன, மெளலான அபுல்கலாம் ஆசாத் போன்றவர்களு டனும் நேரடித் தொடர்புகள் கொண்டிருந்தார். ஜனப் ஜின்ஞ அவர்கள், ஜனப் பதியுத்தீனின் உயரிய நோக்கக்களை நன்கு அறிந்தவராக இருந்தார். அலிகார்செர்வகலாசாலை இயக்கங்களிலும், ஏனையப் பிரசார இயக்கங்களிலும் ஜனுப் பதிதித்தீன் காட்டி வந்த அபாரத்திறமைகளே அத்தனைக்குங் காரணமாகும். இந்தியப் பத்திரிகை ஆசிரியர்களும் ஜனப் பதியுத்தீனின் முற்போக்குக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். ஜனப் பதியுத்தீன் இலங்கை திரும்பிய பின்னருங் கூடப் பல பெரியார்களின் தொடர்புகள் தொடர்வதாயிற்று. 1944-ஆம் ஆண்டு ஜனப் ஜின்ன அவர்களது கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் நோக்குவோம்.
4 194 س3 ج1
எனது அன்புள்ள ஜஞப் பதியுத்தீன் அவர்களுக்கு,
ஜனப் எம். சியா உல் இஸ்லாம் சித்தீக் அவர்கள் உங்க ளால் எழுதப்பட்ட இரண்டு சஞ்சிகைகளை என்னிடம் தந்தார்
78

கள். நீங்கள் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகளைப் பற்றியும் குறிப்பிட்டார்கள். இலங்கைக்கு வருமாறு நீங்கள் விடுத்தி ருந்த அழைப்பையும் என்னிடம் ஒப்படைத்தார்கள்.
நான் இலங்கைக்கு வரவிரும்பியபோதும் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அவ்வாறு செய்யமுடியாதவனக இருக்கின்றேன்.
உங்களால் முடிந்த எல்லா வகையாலும், இலங்கையில் முஸ்லிம்களுக்காகவும்-இஸ்லாமிய கலாசார வளர்ச்சிக்காக வும் உங்களது காலத்தை அர்ப்பணிக்க முன்வந்துள்ளதை, கேட்டறிந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உங்களது அழைப்புக்கிணங்க நான் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்த வண் ணம் இருக்கிறேன்.
உங்கள் அன்புள்ள , (ஒப்.) எம். ஏ. ஜின்ஞ இவ்வாறே பண்டித ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி ஆகியோருடனும் நெருங்கிய தொடர்பு வைத் திருந்த ஜனுப் பதியுத்தீன் அத்தகைய தொடர்புகளால் தன்னையொரு சமுதா யத் தொண்டனக மாற்றிக் கொள்ளவும் முற்பட்டார்.
79

Page 45
கல்வியும் தொண்டு
o
ஐனுப் பதியுத்தீன், அலிகார் சர்வகலாசாலைக்குச் சென்ற டைந்த முதலாவது ஆண்டிலேயே தமது திறமைகளை வெளிக் காட்டி இன்டர் ஆர்ட்ஸ் பரீட்சையில் முதலாவது பிரிவிலே சித்தியடைந்தார்.பேராசிரியர்களும்,சகமாணவர்களும் இவரது செயற்றிறனையும் பேச்சு வன்மையையும் கண்டுகொண்டனர். அதஞல் அலிகாரின் பிரசார இயக்கத்தின் தலைவராகவும் இவர் நியமனம் பெறலானர். பல நாடுகட்குச் சென்றர். அங்கெல்லாம் அலிகாரின் புகழைப்பரப்பினர். இத்தனைக்கும் மத்தியில் பீ. ஏ. பரீட்சையில் முதலாவதாகவும் சிறப்புச் சித்தி யும் (ஒணஸ்) எய்தினர். இவர் தொடர்ந்தும் எம். ஏ. பரீட் சைக்காகத் தம்மைத் தயார் செய்துகொண்டிருந்தார்.
அலிகார் சர்வகலாசாலையில் ஏழை மாணவர்களும் கல்வி பயில வாய்ப்பிருந்தது. சர்வகலாசாலையின் கடமை கண் காணிப்புச் சங்கம் (Duty Society) அத்தகைய மாணவர்களுக் கான நிதி உதவியை வழங்கியது. அந்தச் சங்கத்தின் பிரசா ரக் குழுத் தலைவராகவும் ஜனப் பதியுத்தீன் நியமனம் பெற் ருர். இந்த நிதிக்காக ஆண்டு தோறும் ஐம்பதினுயிரம் ரூபாய் தேவைப்பட்டது. ஜனப் பதியுத்தீன் தாம் மேற்கொண்ட பிரசாரத்தின் மூலமாக அவ்வளவு பணத்தையும் சேகரித்து உதவினர். பர்மா, சிங்கப்பூர், ஜாவா, சுமாத்ரா, ஆப்கா னிஸ்தான், சயாம் போன்ற நாடுகளுக்கெல்லாஞ் சென்று அலி காரின் சேவைகளையும் அதன் நவீன திட்டங்களையும் விளக்கிக் கூறினர். இவரது பிரசாரத்தின் நோக்கம் நிதி சேகரிப்ப
80
 
 

தோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. அண்மை நாடுகளில் உள்ள மக்கள் விசேடமாக முஸ்லிம்கள் அலிகாரின் பயன்களை அநுபவித்து-அந்தந்த நாடுகளின் சமூக, அரசியல், கலாசாரத் துறைகளிலே மறுமலர்ச்சியும் மேம்பாடும் காணவேண்டுமென் பதுமாகும்.
ஒவ்வொரு நாட்டினரும் இவரது பிரசாரத்தால் பெரி தும் கவரப்பட்டனர். இவரை ஒரு சிறந்த கல்விமானகவும் சமூகப் பணியாளனகவும் ஏற்றுக் கொண்டனர். அதஞல் இவர் சென்றடைந்த இடங்களிலெல்லாம் கூட்டங்கள், வர வேற்புக்கள், விருந்துகள் என்பன நடத்திப் பாராட்டினர்.
ஜனப் பதியுத்தீன் 1935-ஆம் ஆண்டு மலேசியாவில் சுற் றுப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்த போது, அந்த நாட் டிலே கல்வித் துறையில் பட்டம் பெற்ற சுதேச முஸ்லிம்களில் ஒருவராயினும் இருக்கவில்லை. இதனையறிந்த ஜனப் பதியுத் தீன் கவலை கொண்டார். அதனை நிவர்த்திப்பதற்கும் ஆவன செய்யத் துணிந்தார். அன்னியர் ஆட்சியிலே அடிமை வாழ்வு கொண்டிருந்த மலாய் முஸ்லிம்களின் சிந்தனையைக் கிளறத் தக்க வகையில், உணர்ச்சிகரமான உபந்நியாசங்களை நிகழ்த் தத் தொடங்கினர்.
சுதந்திர ஆட்சி மனப்பான்மையை வளர்ப்பதற்கு அவர்க ளது சிந்தனையைத் திருப்பவேண்டுமாயின் கல்வியின் மூலமா கவே அதனைச் செய்யமுடியுமென்பதையும் உணர்ப்பண்ணி ஞர். அவரது பிரசாரத்தால் ஈர்க்கப்பட்ட அந்த நாட்டு மக்கள் உயர் கல்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட தோடு அங்குள்ள மாணவர்கள் பலரை அலிகாருக்கு அனுப்ப வும் இணங்கினர். அந்த மாணவர் கோஷ்டியின் முதற் குழுவி னரை ஜனப் பதியுத்தீன் தன்னுடனேயே அழைத்து வந்து அலிகாரிற் சேர்ந்தார்.
"பட்டப்படிப்புக்குச் செல்லும் முதல் முஸ்லிம் மாணவர் கோஷ்டி" என்று தலையங்கம் தீட்டி ஜனப் பதியுத்தீனையும் அவருடன் பட்டப்படிப்புக்காக வருகின்ற மாணவர்களையும்
8

Page 46
புகைப்படங்களோடு, செய்திகளையும் அன்றைய மலேசியப பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. ஜனுப் பதீயுத்தீனின் இந் தச் சேவையை இன்றைய சுதந்திர மலேசியா மறந்துவிடுவதற் இல்லை.
அலிகார் சர்வகலாசாலையைப் பற்றியும் ஜனப் பதியுத்தீ னைப் பற்றியும் 1935-ஆம் ஆண்டு, மே மாதம், 8ஆந் திகதி வெளியான " " யினுங் கெஸட் அன்ட் ஸ்டேட் க்ரோணிக்கல் ' என்ற ஆங்கிலப் பத்திரிகை எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக் கத்தை ஈண்டு கவனிப்போம்:-
'அலிகார் சர்வகலாசாலையின் பிரசாரக் குழுத்தலைவர் ஜனப் பதியுத்தீன் "பினங்’ வந்துள்ளார். அச் சர்வகலாசாலை யின் நிதி உதவிச் சங்கம், ஏழை மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ஐம்பதினயிரம் ரூபாய்வரை நிதி உதவி வழங்குகின் றது. அந்த நிதிக்கான பணத் சைச் சேர்ப்பதற்கும், அலிகார் சர்வகலாசாலையின் உண்மையான தரத்தை விளக்குவதற்கும் ஜனுப் பதியுத்தீன் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணஞ் செய்து வருகின்ருர், அலிகார் சர்வகலாசாலையைப் பற்றி ஜனப் பதியுத்தீன் தெரிவித்த கருத்துக்களையும் ஈண்டு குறிப்பிடுகின் ருேம்.
* அலிகார் சர்வகலாசாலை உலகப் புகழ்பெற்றதொன் ருக முன்னேறிக்கொண்டு வருகின்றது. இது காலஞ்சென்ற ஸர். செய்யத் அஹ்மத் கான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்திய மக்கள்,விசேடமாக முஸ்லிம்கள் தங்களது அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொண்டு, சுயமரியாதையுடன் வாழவேண்டுமா யின் நவீன கல்வி முறைகளைக் கையாளவேண்டுமென்ற தீர்க்க தரிசனத்தோடு-செயல்முறையில் நிறைவேற்றிக் காட்டியவர் தான் ஸர் செய்யத் அஹ்மத் கான் அவர்களாகும். அவர் சமூக நலனைக் கருத்திற் கொண்டவர். தமது ஆயுளிற் பெரும் பகு தியைச் சமுதாயப் பணிக்காகவே அர்ப்பணித்தவர். பலநூல் களையும் பத்திரிகைகளையும் வெளியிட்டவர். நூற்றுக்கணக் கான மேடைகளிற் தோன்றிச் சமுதாய முற்போக்குக் கருத்துக் களை வழங்கியவர். ஆட்சிமன்றத்தில் சுதேசிகளுக்குத் தகுந்த
82.

அந்தஸ்தும் இடமும் அளிக்கப்படவேண்டுமென்று வாதாடிய வர். சுதேசிகளின் கலை, கலாசாரம், வாழ்க்கைமுறை என்பன வற்றிற்கு மதிப்பளிக்க வேண்டுமென்பதையும் விளக்கியவர். அவரது ஆலோசனைகளை ஆட்சியாளர் ஏற்றுக்கொண்டதனுற் ருன் 1857-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவிலே அணுவசிய மான கலவரங்கள் ஏற்படவில்லை.
ஸர். செய்யத் அஹ்மத் கான், தன்னை ஓர் அரசியல்வாதி யாக மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. ஒரு சிறந்த கல்விமா னகவே விளங்கியுள்ளார். எனினும், அவரது அரசியற் கருத் துக்களுக்கு ஆட்சியாளர் பெருமதிப்பளித்தனர். அவர் தேசிய கலாசார அமைப்பைக் கருத்திற்கொண்டு, தமது சொந்த சமு தாயத்தின் முன்னேற்றத்திலும் முக்கிய கவலைகொண்டவராக இருந்தார். அதற்காகக் கல்வித்துறையில் - விசேடமாக உயர் கல்வியில் முக்கிய கவனஞ் செலுத்தினர்.
சென்னை, அலஹபாத், பெங்களூர், பஞ்சாப், பம்பாய் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டிருந்த சர்வகலாசாலைகளினல் அவரது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாதெனக்கண்டார். அதனல் மேலை நாடுகளுக்குத் தமது சொத்தச் செலவிலே சென்று, அங்குள்ள உயர்தரமான சர்வகலாசாலைகளின் நவீன அமைப்பு முறைகளையும், பாட போதன முறைகளையும் அவதா னித்தார். பின்னர் தாயகம் திரும்பித் தமது சமுதாயத்தின் தேவைகளைக் கருத்திற் கொண்டவராக, 1875-ஆம் ஆண்டு ''Mohamedian Anglo Oriantal College' "என்றபெயரில் இப்போ தைய அலிகார் சர்வகலாசாலையை ஆரம்பித்தார்.
அங்கே ஆண் பெண் இருபாலாரும் கல்வி பயில்கின்றனர். இஸ்லாத்தின் போதனைகளுக்கமைவாக அவர்களது கல்வியும் வாழ்க்கை முறையும் அமைந்துள்ளன. முஸ்லிம் அல்லாதவர்க ளும் அங்கு பயில்கின்றனர். அவர்களது மத உரிமைகள் நன்கு பாதுகாக்கப்படுகின்றன. நாலாயிரம் மாணவர்கள் இப்பொ ழுது பயில்கின்றனர். அவர்களுள் பத்துச் சதவிகிதத்தினர் இந்துக்கள். கிறிஸ்தவர்களும் அங்கு பயில்கின்றனர்.
83

Page 47
அலிகார் சர்வகலாசாலை பத்துச் சதுர மைல் பரப்பில் அமைந்துள்ளது. நான்கு சதுர மைல் பர்ப்பில் கட்டிட்டங் கள் நிரம்பியுள்ளன. நவீன வசதிகள் பொருத்தப்பட்ட, சயன மண்டபங்கள், பயிற்சிக் கூடங்கள், போதஞபீடங்களுட்பட ஆரம்பப் பாடசாலைகளும் அமையப் பெற்றுள்ளன. மேலும் பல மண்டபங்கள் இப்பொழுது கட்டப்பட்டுவருகின்றன. கேம்பிரிஜ், ஒக்ஸ்போட், சர்வகலாசாலைகளைப்போன்றே அலி காரும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனல் அலிகார் அதன் தனித்துவத்தைப் பேணிக்காக்கும் இஸ்லாமியக் கலைச்சின்ன மாக நிலைத்து நிற்கின்றது. தனித்துவத்தைப் போன்றே அதன் சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதற்கெனத் தணி யாகவுே ப்ோலிஸ் நிலையம், தபாற் கந்தோர், ஆஸ்பத்திரி என் பனவும் இயங்குகின்றன. இவையெல்லாவற்றையும் நோக் கும் போது, அதனை ஒரு "சர்வகலாசாலை நகரம்’ என்றே சொல் லத் தோன்றுகின்றது.
நாட்டை ஆளும் மன்னர் அதன் ஆயுள் அங்கத்தவராக உள்ளார். பாரதநாட்டிலுள்ள அரசகுமாரர்கள்,ஆட்சியாளர் கள், சமூக சேவையாளர்கள், மருத்துவ,தொழில்நுட்ப விற்பன் னர்கள் ஆகியோரிற் பலர் அதன் அபிமானம் மிக்க பழைய மாணவர்களாக இருக்கின்றனர். ஏன் இன்றைய விடுதலை வீரர் கள் பலரையும் உருவாக்கியுள்ளது அலிகார்.
சர்வகலாசாலை நடவடிக்கைகளிலும் வாழ்க்கை முறைகளி லும், எந்தவிதமான "உயர்வு தாழ்வும் கற்பிக்கப்படுவதில்லை. அங்கு பயில்கின்ற அரசகுமாரர்களும், சாதாரண பிரஜைக ளின் மக்களும் ஒரே விதமான அந்தஸ்திலேயே மதிக்கப்படுகின் றனர். கலாசாலை உடையும் அவ்வாறே. இந்து சமய மாண வர்களுக்குச் சில விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களது 5F ) j கலாசார வாழ்வைப் பேணிக்காப்பதற்காகத் தனிப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிரத்தியேகமான மண்டபங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன
அலிகார் சர்வகலாசாலையின் மாணவ இயக்கம் (The UniversityUnion) பூரண சுதந்திரமுடையதாக இயங்குகின்றது,
84

மாணவர்கள் தங்களது சொந்த விவகாரங்களைக் கலந்துரை யாடித் தீர்த்துக்கொள்ள எல்லா வாய்ப்புக்களும் தரப்பட்டுள் ளன. இய்க்குணர்களை மாணவர்கள் தாமாகவே தெரிவு செய்து கொள்கின்றனர். தனிப்பட்டவிர்கள் செல்வாக் கையோ, வெளியார் தலையீட்டையோ இயக்கம் கெளரவிப்ப தில்லை. அங்கத்தவர்களது உரிமைகள் பாதிக்க்ப்படாதவாறு இயக்கம் முழுமூச்சுடன் இயங்குகின்றது. சமூக வாழ்க்கை, கட்டுப்பாடு,ஒழுங்கு என்பனவற்றைப் பாதுகாக்கிறது. எமது கட்டுப்பாட்டுத் திட்டங்களில் ஒன்றைக் குறிப்பிடுவது பொருத்தமானதென நினைக்கிறேன். எம்மை நாடிவரும் ஒரு வர் புதிய மாணவராக அல்லது பழைய மாணவராகவோ இருக்கலாம். வந்தவர் அமர்வதற்கு ஆசனம் வழங்கி, அவர் அமர்ந்து கொண்டதன் பின்னர்தான் நாம் அமர்ந்து கொள்ளு வோம். இது ஒரு மிகச் சிறிய உதாரணம். 'இது ' போன்ற ஒழுக்க முறைகள்தான் அங்கு கையாளப்படுகின்றன"
இவ்வாருக ஜனப் பதியுத்தீன் தமது நாவன்மையிஞலும் எழுத்து வன்மையினலும், ஆசியாவிலும் தூரகிழக்கு நாடுக ளிலும் சுற்றுப்பிரயாணஞ் செய்து அலிகாரின் புகழை நிலை நாட்டுவதில் முதன்மைபெற்று விளங்கினர். அலிகார் பல்க இலக் கழகத்தின் சிறந்த பேச்சாளராகத் தெரிவுசெய்யப்பட்ட இவர், இந்தியப் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற பேச் சுப் போட்டியிலும் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுக் கொண்டார். அகில இந்தியப் பேச்சுப் போட்டியில் முதல்வ ராகத் தெரிவு செய்யப்பட்டுத் தங்கப் பதக்கமொன்றையும் சுவீகரித்துக் கொண்டார்.
அலிகார் சர்வகலாசாலைச் சஞ்சிகையின் பிரதம ஆசிரிய ராக இரண்டாண்டுகள் பணிபுரிந்தார். இன்று உலக இஸ்லா மியப் பிரசாரத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மெளலான கல்ாநிதி பஸ்லுல் ரஹ்மான் அன்சாரி அவர்கள் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகக் கடமையாற்றினர். அலிகார் சர்வகலா சரலே தோற்றுவித்த சஞ்சிகைகளுள் மிகச் சிறந்த சஞ்சிகையாக இவர்களது காலத்துச் சஞ்சிகைகள் கருதப்படுகின்றன.
35

Page 48
1935-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐக்கிய மாகாண சர்வ asaj Tafrtaj Lorraor ai i guj, së 6 air (United Province University Student Fedaration) தலைவராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப் பட்டார் பதியுத்தீன். இந்தத் தலைமைப் பதவியைப் பயன் படுத்தி, 'அகில இந்திய மாணவர் சம்மேளனம்" ஒன்றை உருவாக்கினர். சம்மேளனத்தின் மாநாட்டைஆரம்பித்துவைத் தவர் அன்று பாரதத்தின் பெருந்தலைவராக விளங்கிய பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களாகும். தலைமை வகித்தவர் காயிதே ஆஸம் முஹம்மதலி ஜின்னு அவர்களாகும். இரண்டு மாபெருந் தலைவர்களுக்கும் மத்தியிலே மாநாட்டு மேடையில் நின்றவண்ணம் ஜனுப்பதியுத்தீன் தமது ஆரம்ப உரையை நிகழ்த்தினர். இந்தச் சம்பவம் இந்திய மாணவர்களது வர லாற்றிலே மகத்தான-மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். இந்தி யாவின் விடுதலைக்காக ஏகாதிபத்திய வாதத்தின் செல்வாக்கை நசுக்குவதில் அகில இந்திய பல்கலைக்கழக மாணவ சமுதாயத் தினது ஏகோபித்த ஒத்துழைப்பை நல்குவதற்காக அன்றைய தலைவர்களுடன் சேர்ந்த ஜனப் பதியுத்தீன் இந்திய விடுதலைப் போராட்ட அணியில் ஒன்றிணைந்து நின்றதையும்படித்த வாலி பர்களுக்குத் தலைமை தாங்கி அதனை இயக்குவித்துள்ளதையும், இச்சம்பவங்கள் நன்கு புலப்படுத்துகின்றன. அதற்காக அகில இந்திய மாணவர்களின் ஏகோபித்த நல்லெண்ணத்தைப் பெறு வதிலும் ஜனப் பதியுத்தீன் வெற்றிபெற்றுவிட்டார். இவ்வா ருகத் தன்னலான ஒத்துழைப்பைப் பல எதிர்ப்பியக்கங்களுக் காக வழங்கியுள்ளதை இன்றையப் பாரதப் பெருந்தலைவர்கள் மறந்து விடுவதற்கில்லை.
இக்காலத்திலே ஜனப் பதியுத்தீன் இந்தியாவிலும் இலங் கையிலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக் கெதிராகத் தோன் றிய பல சுதந்திரப் போராட்ட இயக்கங்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். ஆங்கிலேயரது திட்டமிடப்பட்ட சதிச் செயல்களால் இவ்வியக்கங்களுக்குப் பல தடைகள் தோன்ற லாயின. அதனுல் பொதுமக்கள் அவ்வியக்கங்களிற் பங்கு கொள்ளப் பயந்தனர். அத்தகைய மக்கள் மத்தியிலே சுதந் திர எழுச்சியையும், ஒற்றுமை மனப்பான்மையையும் ஏற்படுத்
86

துவதில் சர்வகலாசாலை மாணவர் சம்மேளனம் பூரண ஒத்து
ழைப்பு வழங்க முன்வந்ததை எவரும் மறுப்பதற்கில்லை.
ஓர் இலங்கையராக இருந்த போதிலுங்கூட இந்தியாவின் விடுதலையின் மூலமாகவே இலங்கையும் ஒரு சுதந்திர நாடாக மாறமுடியுமென்பதைத் தமது தீர்க்காலோசனைகளின் வன்மை களிஞல் உணர்ந்து கொண்டுதான் ஜனப் பதியுத்தீன் அவ்வ்ா றன செயல்களில் ஈடுபாடு கொண்டார். "வெள்ளையனே வெளியேறு" என்ற இயக்கத்துக்கு இவர் தமது சொந்த ஒத்து ழைப்பையும், மாணவ சம்மேளத்தின் ஒத்துழைப்பையும் நல் கியுள்ளார். அதற்காகத் த மது சொல்வன்மையையும், எழுத்து வன்மையையும் பயன்படுத்திப் பல சொற்பொழிவு களை நிகழ்த்தியும், கட்டுரைகளை எழுதியும் வந்துள்ளார். இந்தி யாவின் செய்தித் தாள்கள் இவரது கருத்துக்களை விதந்து பாராட்டின. ஆங்கிலேயரது நடத்தையிற் காணப்பட்ட ஒவ் வொரு நிகழ்ச்சியையும் மிகமிகக் கவனமாகவும் நுணுக்கமாக வும் அவதானித்து, அதனல் சுதேசிகள் எவ்வாறு பாதிக்கப்படு கின்றனர் என்பதை எவ்வித அச்சமுமின்றி மக்களுக்கு எடுத்து ரைக்கலாயினர். சில சந்தர்ப்பங்களில் ஆட்சியாளரின் சட் டங்களைக் கூடப் பொருட்படுத்தாமல், ஒழிவு மறைவின்றித் தமது கருத்துக்களை நேரடியாகவே விளக்கியும், விமர்சனம் செய்தும், வந்துள்ளதால் இந்தியத் தலைவர்கள் இவரைத் தங்களது மதிப்புக்குரியவராகக் கெளரவித்தனர்.
ஜனப் பதியுத்தீன் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட "கிரிக்கட் விளையாட்டை விரும்பி ரசிப்பவராக இருந்த போதி லும், அந்த விளையாட்டிலுள்ள திட்டமிடப்பட்ட ஏகாதிபத்தி யத் தந்திரோபாயங்களைக் கவனமாக அவதானித்து அது பற் றிய விமர்சனமொன்றை எழுதியபோது இந்தியாவின் சகல பத் திரிகைகளும் அதற்கு முக்கியத்துவமளித்துப் பிரசுரித்தன. *கிரிக்கட் விளையாட்டையே காரணமாகக் காட்டி ஆங்கிலேய ரது அடக்குமுறை ஆட்சியின் தந்திரங்களை வன்மையாகக் கண் டித்தார். அவர் எழுதிய கட்டுரையின் சுருக்கமே அதற்கு ஆதாரமாகும்.
87

Page 49
கிரிக்கட்டும் ஏகாதிபத்தியமும்
N
சிலிகார் சர்வகலாசால் இந்த நாட்டின் தலேசிறந்த கிரிக் கட் வீரர்களே உருவாக்குவதில் புகழ்பெற்று விளங்குகின்றது. அதனுல் கிரிக்கட் ரசிகர்களும் அரசாங்க ஊழியர்களும் உயர் அந்தஸ்தில் உள்ள கல்விமான்களும் அலிகாரி சர்வகலாசா லேயை வெகுவாகப் புகழ்கின்றனர். ஆங்கில வைஸ்ராய்கள் அலிகாருக்கு விஜயஞ் செய்யும்போது, அலிகாரின் ஆங்கிலப் பாணியிலமைந்த நடவடிக்கைகளேப் பெரிதும் பாராட்டிப் புகழ்கின்றனர். ஆனல் இப்பொழுது கல்வி பயில்கின்ற வாலி பர்கள் ஆங்கிலேயரது நடவடிக்கைகள் இந்த நாடுகளின் முன் னேற்றத்துக்குப் பாதகமானதென்பதை நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். இதுகாறும் பின்பற்றி வந்துள்ள ஆங்கில மோகத்தின் தன்மைகளே இப்பொழுது விட்டொழிக்கவும் முன் வந்துள்ளனர். இதனுல் அலிகார் மாணவர்கள் ஆங்கிலேயரின் செல்வாக்கி விருந்து விடுபட்டுத் தங்களது உண்மையான நிலே யையும் உணரத் தொடங்கிவிட்டார்கள்.
"கிரிக்கட்" ஒரு சிறந்த விளையாட்டு என்பதை நான் மறுக்க வில்லே. ஆணுல் அது ஆங்கிலேயரது சூழலுக்கு உகந்ததாக உருவாக்கப்பட்டதொன்றுகும். ஆங்கில ஆட்சி முறையானது அவர்களது சொந்த அரசியற் கோட்பாடுகளே உள்ளடக்கிய தானதொரு கலேதுட்பமாகும். அந்த நுணுக்கமான கல்கள் а гарай ஆட்சிமுறையிலும் விளேயாட்டுத் துறைகளிலும் தந்தி ரமான முறையில் புகுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். அவ் வாறு திட்டமிடப்பட்ட தந்திரமான நடவடிக்கைகளில் ஒன்ரு கவே கிரிக்கட் விளேயாட்டும் அமைந்துள்ளது,
88
 
 

sae.s., !|-sos.
|- sae
கொழும்பு ஸாஹிராக் கல்லூரி டெனிஸ் கோஷ்டியில், 1925-ம்
தவராக இருந்தபோது கலாநிதி பதிபுத்தின்
ஆண்டு அங்கத்
அவர்களின் தோற்ற

Page 50
கலாநிதி பதிபுத்தின் அவர்களின் சகோ
தரர் விழக்கறிஞர் எம் என். எம். சலாஹ"மத்தின்
 

இங்கிலாந்து "கிரிக்கட்"டின் தாயகமாக விளங்குகின்றது. எனினும் அவுஸ்திரேலியா, தென்னுபிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலும் அதன் புகழ் பரவிக் கொண்டிருக்கிறது. அதே தேரத்தில் தங்களது சுதந்திரத்தைப்பற்றி அக்கறை கொண் டுள்ள ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஐக்கிய அமெ ரிக்கா ஆகிய முன்னேற்றமடைந்த நாடுகளிலும் இந்த விளே யாட்டு பிரபல்யமடைந்துள்ளது. அந்த வட்டாரங்கள் கிரிக் கட்டை ஒரு முக்கியமான விளேயாட்டாகக் கருதினுலும் அத் துறையில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லே. எனி னும் ஆங்கிலேயர் அதற்கு முக்கியத்துவம் அளித்து, எல்லா நாட்டினரும் அதனேப் புகழிக்கூடிய வகையில் உற்சாக முறைக ளேக் கையாண்டு வருகின்றனர்.
கடந்த ஒருநூற்றுண்டாக பிரிட்டிஷார் விளேயாட்டுத்துறை யில் காட்டி வருகின்ற ஆர்வத்தை நாம் அறிவோம். வி3ளயாட் டுக்களின் முக்கியமான நோக்கம், மக்களேத் தேகாரோக்கியம் உடையவர்களாக வாழச் செய்வதாகும். எனினும் தேகா ரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக"கிரிக்கட்"டைத்தான் விகள் பாட வேண்டுமென்பதல்ல. அது நமது தேவைக்கு அதிகமான தொரு விளேயாட்டாகும். ஏனே ப விளேயாட்டுக்களான ஹாக்கி உதைபந்தாட்டிம், டெனிஸ் என்பனவற்றைவிட இதற்கு அதிகமான காலநேரமும், பணமும் உடற்பலமும் தேவைப்படுகின்றன. இந்தியர்களாகிய எமக்கு இத்தகைய விளேயாட்டுக்களில் அதிக நேரத்தைச் செலவிட முடியாது. பணம், சக்தி என்பனவற்றையும் அதிகமாக விரயஞ் செய்ய முடியாது. அதிஇல் கவலேயற்று வாழ்பவர்களுக்குத் தான் இத் தகைய விளேயாட்டு பொருத்தமானதாகும். அவர்களுக்குத் தான் பொருளயும் சக்தியையும் காலத்தையும் அதிகமாகச் செலவிடக் கூடியதாக இருக்கும்.
எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் எங்களது சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வழியில்லே. சுதந்திரமாகப் பேசவோ, திரியவோ வழியில்லே. கட்டுப்பட்டவர்களாகவே வாழ்கிறுேம், எங்களது சிந்தனேகளேப் பயன்படுத்திச் சொந்த
89

Page 51
விருப்பத்தின்படி வாழும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இவ்வாறன விளையாட்டுக்கள் எங்களது உள் ளத்தை எவ்வாறு ஒருமைப்படுத்த முடியும்? நாங்கள் ஏழ்மை யில், பொருளாதார உரிமைகளின்றி, ஏன்! நமது சொந்த நாடென்றுகூட உரிமைபாராட்ட முடியாதவர்களாக ஒடுக்கப் பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிருேம். எமது மக்களின் வருவாய் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது. அவ சரத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. மிகக் குறைவான சக்தியே எம்மிடம் எஞ்சியுள்ளது. அந்தச் சக்தியைத் தான் எமது சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன் படுத்த வேண்டியுள்ளது. எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச கால நேரத்தையும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எம்மைத் தயார் செய்து கொள்வதற்காகவே ஒதுக்க வேண்டி உள்ளது. அவ்வாறிருக்க, எமது காலத்தையும் பணத்தையும் பலத்தையும் "கிரிக்கட் விளையாட்டுக்களிலும் ஏனைய தமா ஷாக்களிலும் செலவு செய்வது எப்படி? அப்படியானல் எங்க ளது சுதந்திரத்தைப்பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவது எப்படி?
*கிரிக்கட்" என்ருல் இரண்டு கோஷ்டிகளுக்கிடையிலே மூன்று முழு நாட்களுக்கு நடத்தப்படும் போட்டியோடு நின்று விடுவதில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த நலன் களைத் துறந்துவிட்டு முழு விளையாட்டையும் அவதானிப்பதிற் காலத்தைச் செலவிடுகின்றனர். இதைவிட முக்கியம்ான நிகழ்ச் சிகள் இருப்பினும் அனைத்தையும் மறந்துவிடுகின்றனர். இதனல் எத்தனையோபேர் தமதுபொன்னன நேரத்தை அவமே கழித்து விட்டனர். கிரிக்கட் விளையாட்டு இன்பமான ரசனையை வரு விப்பதாகவே வைத்துக்கொள்வோம்.அதற்காக இந்தியர்களா கிய நாங்கள்,அதுவும் இன்றைய இக்கட்டானசூழ்நிலையில் எமது காலத்தையும் பொருளையும் உடற்பலத்தையும் இந்த அளவுக்கு விரயஞ் செய்வது அவசியந்தான?
இன்பத்தையும் ரசனையையும் அடைவதுதான் விளையாட் டுக்களின் இலட்சியமாக இருந்தாலும், அவற்றைக் கிரிக்கட்"
90

விளையாட்டின் மூலந்தான் பெறவேண்டுமென்பது எந்த அள வுக்குப் பொருந்தும்? “கிரிக்கட் விளையாட்டானது மக்களைப் பித்தர்களாக மாற்றிவிடுகின்றது. அதனல் ஏனைய முக்கிய பிரச்சனைகளை மறக்கடிக்கச் செய்து விடுகின்றது. மக்களின் சொல், செயல், சக்தி என்பன கிரிக்கட் பற்றிய பேச்சு, விவா தம் என்பனவற்ருல் போதையூட்டப்பட்டுப் போட்டி மனப் பான்மையினை உருவாக்கி ஒரே மயக்க சிந்தனையில் ஆழ்த்தி விடு கின்றன. பத்திரிகைகளும் பக்கம் பக்கமாக அதற்கு முக்கியத் துவம் அளித்துப் பிரசாரம் செய்கின்றன. விசேடமாக ஆங் கிலப் பத்திரிகைகள் இத்துறையில் மக்கள் மனதை வென்று விட்டன. ஆனல் இது ஏகாதிபத்திய வாதிகளின் திட்டமிடப் பட்ட தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்று என்பதை விளக்க மறுத்து விட்டன.
ஆங்கிலேயர், நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றி யும் சிந்திக்கவிடாமல் இத்தகைய இலகுவான விளையாட்டு ரச னைகளால், மக்களது மனதை ஈர்க்கச் செய்துவிடுகின்றனர். அதனல் எமக்குள்ளிருக்கும் உண்மையான தூரதிருஷ்டி வாய்ந்த முக்கியமான பிரச்சனைகளை மக்கள் மறந்து விடுகின்ற
soft.
இன்று நமது வாலிபர்களிற் பெரும்பாலோர் பத்திரிகைக ளின் விளையாட்டுப் பக்கங்களிற்ருன் தமது முழுக்கவனத்தை யுஞ் செலுத்தி வாசிக்கின்றனர். இதஞல் தேசாபிமான எண் ணங்கள் குறைந்துவிட்டன. விளையாட்டு வீரர் ‘பிராட்மனை" (Bradman) L'ů Lufib só நிறைய அறிந்திருப்பார்கள். ஆனல் ஜவ ஹர்லால் நேரு யார்? அவர் எங்கே இருக்கின்றர்? எப்படிப் பட்டவர்? என்னசெய்கிருர்? என்றுகேட்டால் மறுமொழிகூறத் தயங்குகிருர்கள். இதுதான் ஏகாதிபத்திய வாதிகளின் விளை யாட்டுத் தத்துவமும் தந்திரமுமாகும்.
பிரிட்டிஷார் இத்தகைய விளையாட்டுப் பொழுதுபோக்குக ளின் மூலமாகத்தான் இன்று தோன்றியுள்ள பிரித்தானிய-இந் திய நெருக்கடிகளையும், இந்திய மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை களையும் இலகுவாகத் தட்டிக்கழித்த வண்ணமாகவும் அசட்டை
9

Page 52
செய்தவண்ணமாகவும் இருக்கின்றனர். மக்களின் சிந்தனைக ளைத் தம்பாற் திருப்புவதற்கு இதனை ஓர் ஆயுதமாகப் பயன் படுத்துவதையும் நோக்கலாம்.
இவ்வாறு "கிரிக்கட்"டைப்பற்றி எதிர்வாதம் புரியும்போது என்னை மற்றவர்கள் நகைப்புக்காளாக்கிக் கொள்வார்கள் என் பதையும் நான் அறிவேன். அவ்வளவு தூரத்துக்கு "கிரிக்கட் ரசனையானது அவர்களது உள்ளங்களிலே ஊடுறுவிப் படர்ந்து கொண்டிருக்கிறது. கற்பனையும், சிந்தனையும் கிரிக்கட்"டில் ஒருவித பற்றுதலை ஏற்படுத்தியுள்ளன. எனினும், நான் எனது முடிவ்ைக் கூறிவைக்கத்தான் செய்வேன். என்னுல் காட்டப் பட்டுள்ள உண்மையான ஆதாரங்களைப் பன்முறை சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.
இங்கிலாந்தின் "கிரிக்கட்" போட்டிகள் - அந்த நாட்டில் தேகாரோக்கியமுள்ளவர்களையும், பண்பாளர்களையும், சிந்தனை யாளர்களையும் தோற்றுவித்திருந்தால் இன்று இந்திய விடுதலைக் காகப் போராடுகின்றவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் அளிக்கத் தவறியதேன்? அதே விளையாட்டு இந்தியாவில் வளர்ந்து வந்துள்ள சாதி, சமய, குல வேறுபாடுகளை-ஏன் கிரி கட் வீரர்களின் மத்தியிலாவது, நீக்கமுடியாமற் போய்விட்
- gil
இந்தியாவில் ஏனைய விளையாட்டுக்களைப் பார்க்கிலும் *கிரிக்கட் விளையாட்டுக்காக ஏராளமான பணம் செலவிட்ப் படுகின்றது. எனது சொந்த சர்வகலாசாலையான அலிகார் சர்வகலாசாலையிலும் ஆண்டொன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் வரை இதற்காகச் செலவிடப்படுகின்றது. ஏனைய சர்வகலா காலைகளும் இவ்வாறே ஏராளமான பணத்தைச் செலவிடுகின் றன. இது எந்த அளவுக்கு நமது தேசிய செல்வத்தைப் பாதிக் கின்றது என்பதையும் ஒவ்வொருவரும் சிந்தனை செய்து பார்த் தல் வேண்டும். இவ்வளவு பணத்தையும் நாட்டின் அபிவிருத் திக்கான நல்ல முயற்சிகளில் நாம் பயன்படுத்த முடியும்.
92

தேசியப் பத்திரிகைகளும் இத்தகைய அணுவசியப் பொழுது போக்கு முயற்சிகளுக்கு பிரசாரம் புரிவதைக் குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். அதே நேரத்தில் இந்திய தேசிய விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளித்துப் பிரசாரஞ் செய்ய முன்வருதல் வேண்டும்.
இந்திய விளையாட்டான 'ஹாக்கி இன்று உலக அரங்கில் நல்ல செல்வாக்கைப் பெற்று வருகின்றது. அதற்கு மிகக் குறை வான சக்தியும் பொருளும், காலநேரமுந்தான் தேவை. எங்க ளது தேவைக்கு இத்தகைய விளையாட்டுகளே போதுமானவை. இவற்றின் வளர்ச்சி, பெரிய விளையாட்டுக்களால், தடைப் ut nt po 6i) பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்நாட்டின் அரசியல பொருளாதார சுதந்திரப பிரச் சனைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கும் தேசிய சுதந்திரத் துக்கான எமது இலட்சியங்களை நடைமுறையில் நிறைவேற்று வதற்கும் நமது சிரத்தை, சிந்தனை என்பனவற்றைப் பயன் படுத்த முற்படுவோமாக.
எம். என். எம், பதியுத்தீன்
6-2-1937
அலிகார் சர்வகலாசாலை அலிகார்.
93

Page 53
‘என் கடன் பணிசெய்துகிடப்பதே" என்ற உயர்ந்த பண் பினை உறுதியாக உள்ளத்தே பதித்துக்கொண்டவராக, தன்ன லான பணிகளைத் தன்னை ஆளாக்கிய அலிகாருக்கு ஆற்றிய பெரு மதிப்பைப் பெற்றுக்கொண்டார் ஜஞப் பதியுத்தீன். அலிகா ரின் நல்லெண்ணத் தூதுவராக உலகின் பல நாடுகளுக்குஞ் சென்று அதன் புகழைப் பரப்பினர். காலத்தால் அழியாத அவ ரது சேவையால் அலிகார் மேலும் சிறப்புடன் விளங்குவதா யிற்று. இத்தனை சேவைகளுக்கும் மத்தியிலே ஜனப் பதியுத் தீன் 1937 ஆம் ஆண்டு எம். ஏ. பரீட்சையிலும் திறமையான சித்தியை எய்தினர்.
தேசாபிமானம் மிக்கவரான ஜனப் பதியுத்தீன் இந்திய தேசிய விடுதலைக்காகத் தமது நாவன்மையினுலும், எழுத்து வன்மையினுலும் மக்களின் தேசிய உணர்வுகளுக்கு உரம் ஊட் டுபவராக விளங்கினர். மக்களது சிந்தனைகளும் ஜனப் பதியுத் தீன் பக்கம் திரும்பலாயின. அதனுல் இந்திய நாட்டிலே தொழில் செய்து தேசாபிமானம் மிக்க தலைவராக வாழக்கூடிய நல்ல வாய்ப்பினையும் பெற்றுக்கொண்டார். இந்திய மக்களும் அறிஞர்களும் தலைவர்களும் ஜனப் பதியுத்தீன் அந்த நாட்டிலே தமது சேவையைத் தொடர்வதை விரும்பினர்கள். ஆனல் ஜனப் பதியுத்தீனின் சிந்தனையெல்லாம்," பெற்றதாயும் பிறந்த பொன்னுடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்ற நோக்கிலேயே திசை திரும்புவதாயிற்று.
94
 

ஈழத்து மக்கள் சுய உரிமையோடு-சுதந்திரமாக வாழ்வ தைக் காண அவர் விரும்பினர். விசேடமாக, தமது சொந்த சமு தாயத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஏனைய சமுகத்தினரோடு சரி நிகர் சமமான அந்தஸ்தைப் பெறவேண்டுமென்பதே அவரது பேரவா. இந்த நோக்கத்தைத் தமது பிறந்த நாட்டு மண்ணிலே நிறைவேற்றிவைக்க வேண்டுமென்பதைத் தீர்மானமாகக்
கொண்டார்.
**நான் எனது பிறந்தகத்துக்குச் செல்கிறேன், எனக்கு விடை தாருங்கள்" என்று ஜனப் பதியுத்தீன் கூறியபோது, எவ ருமே எதிர்பாராத இந்த வார்த்தைகளை ஜனுப் பதியுத்தீனின் பேராசிரியர்களும், நண்பர்களும், அபிமானிகளும், மாணவர் களும் நம்ப மறுத்துவிட்டனர். ஓர் உன்னதமான நண்பரைதயாள குணம் படைத்தவரை-பண்பாளரை-பிற்காலத்திலே சிறப்புமிகு தலைவராக்கக்கூடிய ஒருவரை-அதுவும் சுதந்திர பாரதத்துக்காகத் தன்னலமில்லாது உழைக்கக்கூடியவரை விட் டுப்பிரிய மனமில்லாதவர்களாகவே பிரிவுபசாரமளிக்க முன்
வந்தனர்.
அலிகார் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் ஜனுப் முஹம் ԼD5] இஸ்மாயில் கான் அளித்துள்ள புகழுரைகளே இவரது சிறப்பாற்றல்களுக்குச் சிறந்த உதாரணமாகும்.
* ஜனப் எம். என். எம். பதியுத்தீனின் நற்குணங்களையும் நன்னடத்தைகளையும் அறிந்து கொள்வதற்கு எனக்கு எண் ணற்ற வாய்ப்புக்கள் கிடைத்தன. இவரைப் போன்ற நேர்மையும் நற்குணமும் வாய்ந்த இளைஞர்களைக் காண் பதே அரிதாகும். என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். இவர் புத்திக் கூர்மையும், அழகுணர்ச்சியும், அன்பொழுகப் பழ கும் த ன் மை யும் பெற்ற வர். இவர் த மது ஆசிரியர்களினதும் சகமாணவர்களினதும் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.அன்னிய நாடொன் றிலிருந்து வந்த போதிலும் இந்நாட்டு மக்களது புகழுக் குரியவராகவும் வாழ்ந்தார். இப்படியாக ஒருவர் வாழ் வதைக் காண்பதே கடினமாகும்."
95

Page 54
இவரது வரலாற்றுப் பேராசிரியரும் அரசியற் பேராசிரியரு மான முஹ்ம்மது ஹபீப் சாஹிப் அவர்கள் வழங்கியுள்ள புக ழுரையாவது:-
"ஜனப் எம். என். எம். பதியுத்தீன், எனது பெருமதிப்பு வாய்ந்த மாணவராக மாத்திரம் விளங்கவில்லை. நண்பரா கவும் நல்ல பிமானியாகவும்; சகோதர பாசமுள்ளவராக வும் விளங்கினர். இவர் கல்வித்துறையில் அபாரத் திறமை பெற்றவர். g ரண்டு ஆண் டு களாக" என்னிடம் ஆட்சி இயல், வரலாறு ஆகிய பாடங்களைக் கற்றுக்கொண் டார். இவரைப் போன்ற ஆற்றல் படைத்தவர்களைக் காண்பதே அரிதென்பேன். இவருக்கு விளக்க உரைகள் கூறுவதில் தனியான இன்பத்தை அநுபவித்தேன். நேர்மை யும் நற்பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற இவரைப் போன்றவர்களால்தான் அலிகார் மேலும் சிறப்படைய முடியும். அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து கொள்ளத் தக்க அறிவும் ஆற்றலும் படைத்தவர்."
அலிகார் மாணவர் மன்றமும் மகத்தானதொரு பிரிவுபசா ரத்தை வழங்கியது. அறிஞர்கள் ஆதரவாளர்கள் உட்பட ஏனைய பல அரசியல், சமுக பொதுநல ஸ்தாபனங்களும் பல பிரியாவிடை வைபவங்களை நடத்தின. இதிலிருந்து அன்னிய நாடொன்றிற் கூட அவரது அரும் பணிகள் போற்றிப் பாராட் டப்பட்டுளதை நோக்கலாம். அதே பணியை அந்த நாட்டில் தொடர்தும் அன்றையத் தேவைகளுக்கு ஏற்பவும் முற்போக் குத் திட்டங்களுக்கு அமைவாகவும் நிறைவேற்றி யிருந்தால் இன்றையப் பாரதத்தின் பெருந் தலைவர்களுள் ஒருவராகவே விளங்கியிருப்பார். எனினும் அதனைத் தாயகத்திலே நிறை வேற்றி வைக்க எண்ணிவிட்டார்.
இலங்கை திரும்பினுர்
பாரத மக்கள் மத்தியிலே பெரும் புகழ் படைத்தவராக
விளங்கிய ஜனப் பதியுத்தீன் 1937-ம் ஆண்டு ஈழத்திரு நாட்டுக்கு மீண்டும் திரும்பினர். அவ்வாறு தமது தாய
96

கத்துக்கு வருகை தரும்போது ஈழத்து முஸ்லிம் பெரியார்கள் பலர் அவரை எதிர்கொண்டு வரவேற்றனர். முன்னள் அமைச் சர் சர். முஹம்மது மாக்கான் மாக்கார், ஜனப் டீ. பி. ஜாயா, ஜஞப் என். எச். எம். அப்துல் காதர், போன்ற பல பெரியார்கள் அன்னருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத் திலே கலந்துகொண்டனர்.
பாரதத்திலே தமது புகழைப் பரப்பியவராக இந்த நாட்டுக்குத் திரும்பிய ஜனப் பதியுத்தீன், இங்குள்ள மக் களின் நல்வாழ்வுக்காக உழைப்பதில் தனது முழுக் கவனத் தையும் திருப்பலாஞர். ஆரம்பத்தில் கல்வி-சமுக-கலாசாரத் துறைகளிலேதான் அத்தகைய கவனத்தைச் செலுத்தினர். விசேடமாக முஸ்லிம்கள் கல்வித்துறையில் அடைந்திருந்த பிற் போக்கான நிலைமையை அறிந்து உள்ளம் வருந்தினர். இத் தனக்கும் அன்றைய சமுதாய அமைப்பே காரணம் என்பதை պւհ உணர்ந்தார். சமுதாயத்திற் படர்ந்திருந்த அறிவீனத்தைப் படிப்படியாகவே நிவர்த்திக்க விரும்பினர். முஸ்லிம்கள் சகல துறைகளிலும் முன்னேற வேண்டுமாயின், அவர்களிடையே ஒரு மத்தியதர வகுப்பினரைத் தோற்றுவிக்க வேண்டு மென்பதை மனத்திற் கொண்டார். கல்வியை பரவலாக்கி முஸ்லிம் மாணவ மாணவிகளைக் கற்கத் தூண்டுவதாலும், உயர் கல்வியில், அதற்கான வசதியும் வாய்ப்யும் ஏற்படுத்து வதனலும் அந்த இலட்சியத்தை அடையலாம், என்பதையும் கருத்திற் கொண்டார், அதனல் தமது வாழ்நாளிற் பெரும் பகுதியைக் கல்விக்காகவே செலவிட்டுழைக்க முற்பட்டார்.
ஒரே முஸ்லிம் எம். ஏ. பட்டதாரியான அவருக்கு அரசாங் கத்திலும் பிரத்தியேக நிறுவனங்களிலும் அன்று, எத்தனையோ உயர்பதவிகளே இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. எனினும் அவரது இலட்சியமே வேறு வகையாக மாறிவிட்டது. சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னை ஓர் ஆசி ரியராக அமைத்துக் கொள்வதே சிறந்ததென எண்ணிஞர். அதனல், தமது மதிப்புக்குரிய நல்லாசான் ஜனப். டீ. பி. ஜாயா அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கி, ஆசிரியப் பணியை" அமைதியாக ஏற்றுக் கொண்டார்
97

Page 55
கொழும்பு சாஹிராக் கல்லூரி மட்டுமே அன்றைய முஸ் லிம்களுக்காக இயங்கிவந்த ஒரேயொரு முஸ்லிம் உயர்தரக் கல்லூரியாகும். 1892-ஆம் ஆண்டு அறிஞர் சித்தி லெப்பை அவர்களது முயற்சியால் ஏற்படுத்தப் பட்ட அல்மதுரசதுஸ் ஸாஹிரா, வாப்பிச்சி மரைக்கார், அரபி பாச்சா ஆகியோ ரின் உழைப்பினுல் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பேணிக்காக்கும் ஒர் உன்னதமான உயர்கல்லூரியாகப் பிற் காலத்தில் மாறலாயிற்று. ஜனப். டீ. பி. ஜாயா அதன் அதிப ராக இருந்த போது பல முற்போக்குத் திட்டங்களைக் கருத்திற் கொண்டவராக-ஏராளமான மாணவர்களைப் பலதுறைகளிலும் உருவாக்கியுள்ளதை எவரும் மறுக்க முடியாது.
ஜனப். பதியுத்தீனும் மாத்தறை சென்ற், தோமஸ் கல் லூரி, கொழும்பு உவெஸ்லி கல்லூரி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வி பயின்றபோதும் கொழும்பு சாஹிராக் கல்லூயில் தான் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சையைப் பூர்த்தி செய்து தமது திற மைகளனைத்தையும் மலரச் செய்து கொண்டார். இக்கல்லூரி யின் சிரேஷ்ட மாணவர் தலைவராகவும், இலக்கிய மன்றச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். சாஹிராக் கல்லூ ரியைப் பற்றி நிறைந்த அபிமான முடையவராக ஜனப் பதி யுத்தீன் விளங்கியிருப்பதை, இந்தியாவிலும் ஏனைய நாடுகளி லும் அவர் ஆற்றியுள்ள சொற் பொழிவுகளிலிருந்தும், எழுதி யுள்ள கட்டுரைகளிலிருந்தும் அறிந்து கொள்ளமுடியும்.
இந்த நாட்டின் அரசியல் பொருளாதார வாழ்க்கைத் துறையில் ஓரளவுக்காவது சிந்திக்கக் கூடிய ஒரு கூட்டத்தி னரை, இக்காலக்கட்டத்திலே சாஹிராக் கல்லூரி உருவாக்கிக் கொண்டிருந்தது. ஆகவே, இந்த நாட்டு முஸ்லிம்கள் தங்க ளது சொந்த வாழ்க்கை நிலையைப்பற்றி விழிப்புணர்ச்சி பெறு வதற்கு அக்கல்லூரியின் சாதனைகள் அமைந்த தென்பதை எவ ரும் மறுக்கமுடியாது.
ஆங்கிலேயரது ஆட்சியில், அன்றையக் கல்வி அமைப்பின் படி வசதிபடைத்த-குறிப்பிட்ட ஒரு சில முஸ்லிம்களே அங்கு
98

கல்வி பயிலும் பாக்கியத்தைப் பெற்றனர். அதனல் இலங்கை யின் பல பாகங்களிலிருந்தும் வந்த அத்தகைய முஸ்லிம் மாணவர்களால் வசதிபடைத்த மக்கள் மத்தியிலே தேக்க முற்றுக் காணப்பட்ட கல்வியார்வத்தை ஓரளவுக்குப் பூர்த்தி செய்யக் கூடியதாக இரு ந் த து. ஆனல் சா தா ரண முஸ்லிம் பொதுமக்கள் மத்தியிலே தோன்றி வளர்ந்த கல்வி ஆர்வத்தை வளர்ப்பதற்குப் போதிய வாய்ப்புகள் இருக்க வில்லை. முஸ்லிம்கள் வாழும் கிராமங்கள் தோறும் பாடசாலை கள் அமையப் பெற்றிருந்தாலும், அவை ஆரம்பப் பாடசாலை களாகவே அமைந்திருந்தன. உயர்கல்வியைப் பெறவேண்டு மென்ற ஆர்வம் கிராமப்புறத்து மாணவர்களிடத்திலும் பெற்றேர்களிடத்துங் காணப்படவில்லை. முஸ்லிம்களின் முழுக் கவனமும் வியாபாரத்திலும், வி வ ச |ா ய த் தி லு மே ஈர்க்கப் படலாயிற்று. இதனல் முஸ்லிம் சமுக த் தி ல் இரண்டு வர்க்கங்கள் உருவாகியிருந்தன. ஒன்று உயர்வகுப் பினர், இதில் முதலாளிமாரும், நிலச் சொந்தக்காரர்களும் உயர் உத்தியோகத்தர்களும் அடங்கியிருந்தனர். அடுத்த வர்க் கத்தில் சாதாரண தொழில்களில் ஈடுபட்டவர்களே அடங்கி யிருந்தனர். உயர்வகும்பினருக்கு, சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கவோ, நினைக்கவோ சந்தர்ப்பம் ஏற்படவில்லை. சாதா ரண உழைப்பாளிகள், தங்களது உழைப்பிலே முழுமூச்சாக ஈடுபடவேண்டியிருந்ததால், சமுகத்தின் பொதுவான நல உரிமைகளைப்பற்றி, நினைக்கவே அவகாசமிருக்கவில்லை. பெரும் பாலும் சமுதாயத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு, உயர்வகுப்பினரின் தீர்மானங்களில் தா ன் தங்கியிருந்தது. இத்தனைக்குங்காரணம் முஸ்லிம்கள் கல்வித்துறையிற் பின்தங் கியிருந்தமையேயாகும்.
சமுதாய அமைப்பில் அன்று நிலவிவந்த இத்தகைய மாற் றங்களைக் கருத்திற் கொண்ட, ஒரு சில தலைவர்கள், கல்வியின் அவசியத்தை உணரலாயினர். இஸ்லாமிய கலாசாரத்தின் அடிப்படையிலமைந்த கல்வியே தமது சமுகத்துக்கு உகந்த தென்பதையும் அறிந்து கொண்டனர்.
99

Page 56
இந்தத்துறையில் சர். ராசிக் பரீத், ஜனுப். டி.பி. ஜாயா, அல்ஹாஜ் எ. எம். எ. அசீஸ், போன்றவர்கள் அன்றைய ஆட்சியாளரின் ஒத்துழைப்புடன் சில தீவிர நடவடிக்கைகளே மேற்கொள்ளலாயினர், அக்காலத்தின் கல்வியமைச்சராக இருத்த திரு. சி.டப்ளியு.டப்ளியு கன்னங்கரா முஸ்லிம் சமு கத்தின் கல்விக் குறைபாடுகளே அறிந்ததனுல் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் பல ஆரம்பப் பாடசாலைகளேத் தொடக்கி வைப்பதில் உதவிஞர். அழுத்கமையிலும், அட்டா ாச்சேனையிலும் இரண்டு முஸ்லிம் ஆசிசியப் பயிற்சிக் கலா சால்கன் 1940-ஆம் ஆண்டு. ஆரம்பிக்கப்பட்டன.
இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில், கொழும்பி லும் அதற்கு அண்மையிலும் வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்கள் பல உள்நாட்டுப் பகுதிகளில் பரவலாகக் குடி பெயர்ந்து வாழ முற்பட்டன. கொழும்பு சாஹிராவின் கட்டடங்களும் அரசாங் கத்தின் அவசரகாலத் தேவைகளுக்காக உபயோகிக்கப்பட்டன மாணவர்கள் கல்லூரியை விட்டுச் சென்றதனுலும், ஆசிரியர் களின் வேதனங்களைத் தொடர்ந்தும் வழங்கவேண்டியேற்பட் டதஞலும், முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் ஒருசில பட்டி னங்களில், சாஹிராவின் பேரால் கல்லூரிகள் ஆரம்பமாயின. அதனுல் கொழும்பில் உயர் கல்வி பயின்று கொண்டிருந்த முஸ்லிம் மாணவர்களுக்குத் தொடர்ந்து படிப்பதற்கு வாய்ப் பளிக்கப்பட்டது. அத்துடன் அழுத்கமை, மாத்தளே, கம்பஃா, ஆகிய நகரங்களேச் சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களின் மான வர்களும் உயர்கல்வி பெறத்தூண்டப் படலாயினர். இவ்வாறு ஜனுப். டி. பி. ஜாயா அவர்களால் விஸ்தரிக்கப்பட்ட கல்லூ ரிகளில் ஒன்ரூகவே கம்பளை சாஹிராக் கல்லூரியும் 1942-ஆம் ஆண்டு ஆரம்பமாகியது.
OO

காயிதே ஆஸம் முஹம்மதலி ஜின்னு அவர்கள் ஜனுப் பதியுத் தீன் மஹ்மூத் அவர்களுக்கு அனுப்பிய பாராட்டுக் கடிதம்

Page 57
1938-ஆம் ஆண்டு 'சிகாமண்ணி" இதழில், ஈழத்து முஸ்லிம் தலைவர் கள் ஐ:ஜப் 12. பி. ஜாபா, டாக்டர். எம். சி. எம். கீல் ஐஜப். எம். என். எம். பதிபுத்தீன் ஜனுப். ஏ. ஆர். ஏ. ராசிக் ஆகிய நால்வரின் படங்களும பிரசுரிக்கப்பட்டிருந்தன.
 

“முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம் பெண்ணினத்திற் தான் தங்கியுள்ளது. ஆண்கள் கல்வி ப யில் வது போன்று பெண்களும் சம உரிமையுடன் கல்விபயில்வது அவசியமாகும். ஆண்பெண் இருபாலாரும் கல்வி பயில வேண்டியதன் அவசி யத்தை இஸ்லாம் வலியுறுத்துகின்றது, இஸ்லாத்தின் கலா சாரப் பண்புகளுக்கு அமைவாக இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் களுக்குக் கல்வி போதிப்பதற்கான சகல வசதிகளேயும் ஏற் படுவத்துவதே எனது முக்கிய நோக்கமாகும். எனவே உங்க ளது ஆண்பிள்ளைகளையும், பெண்பிள்ளைகளையும் கல்வி கற்க வசதி செய்யுங்கள். கல்வி கற்காததனுல் முஸ்லிம்கள் இந்த நாட்டிலே பெறக்கூடிய உயர் பதவிகளே இழந்துவருகின்றனர். அறியாமையும், பிற்போக்கு மனப்பான்மையும், மூடப் பழக்க வழக்கங்களும் குடி கொண்டுள்ளதால், "சீனு சென்ருயினுங் கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள்' என்ற பெருமாளுரின் உயரிய போதனைகளேயே முஸ்லிம்கள் புறக்கணித்து விட்டனர்" என்று சுட்டிக்காட்டிய நிலேயில் முஸ்லிம் மக்கள்வாழுகின்ற கிரா மங்கள்தோறுஞ் சென்று பிரசாரஞ் செய்ய வேண்டியதொரு சூழ்நிலையில் அன்றைய இஸ்லாமிய சமுதாயம் இருந்து வந்தது.
1944-ஆம் ஆண்டு கம்பஃா சாஹிராக் கல்லுரரியின் அதிப ராக ஜஞப் பதித்யுதீன் கடமையேற்றதைத் தொடர்ந்து ஒவ் வொரு வெள்ளிக்கிழமையும் ஜ"ம் ஆப் பிரார்த்தனேக்கு மலேய கத்திலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் கிராமப்புறப் பள்ளிவாசல் களுக்குஞ் சென்று தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்களின்
O

Page 58
கல்வி நிலையைப் பற்றி மேற்கண்டவாறு உபந்நியாசம் செய் வது வழக்கம். அவரது முற்போக்கான கருத்துக்களையும் விளக் கங்களையும் சிலர் ஏற்றுக் கொண்டனர். பழைமையில் ஊறித் திளைத்த பலர் அவற்றை ஏற்க மறுத்துவிட்டனர். எனினும், தமது முற்போக்கான கொள்கைகளையும் இலட்சியங்களையும், மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு ஜனப் பதியுத்தீன் எப்பொழு தும் பின்னிற்கவில்லை. நேரடியாகவும் மறைமுகமாகவும் அவரது கொள்கைகளுக்கு எதிர்ப்புக்களும் கஷ்டங்களும் விளைவிக்கப் பட்டபோதும்,அவற்றைச் சகிப்புத்தன்மையுடனும், தளராத உள்ளத் துறுதியுடனும் ஏற்றுக் கொண்டார். இத்தனை கஷ்டங் களுக்கும் மத்தியிலேதான், முஸ்லிம் சமுதாயத்தின் உயிர்நாடி யாக விளங்கக் கூடிய ஓர் உன்னதமான கலாநிலையத்தை உரு வாக்குவதில் ஜனப். பதியுத்தீன் தீவிரமாக முயன்றுள்ளார். அன்னர் ஏற்படுத்திக் கொண்டதிட சங்கற்பத்தின் வெற்றியே இன்றைய கம்பளை சாஹிராக் கல்லூரியாகும்.
கம்பளை நகருக்கு அருகாமையில் இயற்கையின் எழில் மிகு தோற்றத்துடன், அழகிய மலையடிவாரத்திலே, இஸ்லாமியக் கட்டிடக் கலைக்கு அணிசெய்யுமாப் போன்று, கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஸாஹிருக் கட்டடங்களில், இரண்ட்ாயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள்.தமக் கென ஏற்படுத்திக் கொண்டுள்ள இன்பமான சூழலில் பல்வேறு துறைகளிலும் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தியாவிலே அலிகார் சர்வகலாசாலையை உருவாக்குவ தில் ஸர். செய்யத் அஹ்மத்கான், கண்டுவந்த இன்பக் கனவுகள் எவ்வாறு நனவாகினவோ, அவ்வாறே "கம்பளை சாஹிரு' வெனுங்கலையகத்தைத் தமது இதயத் துக்குள்ளே கற்பனைவடிவில் எவ்வாறு அமைத்துக் கொண்டிருந்தாரோ அவ்வாறே நன வாக்கி வைத்துள்ளார் பதியுத்தீன் அவர்கள். அத்தகைய கலை யகத் தந்தையின் இன்ப நினைவுகளை உள்ளத்தே கொண்டு கவிதையாக வடித்துக் காட்டியுள்ளார், மலையகக் கவிஞர்,கல் ஹின்னை எம். எச். எம். ஹலீம்தீன் அவர்கள்--
02

மலையகத் தாயின் மடிமிசைத் தவழும் நிலையுற அமைந்து பொலிவுற் இலங்கும் மாவலி தவ்ழும் மாண்பெலாம் ம்லரும் மாமலை அரண்கள் மதிப்புற விளங்கும் கம்பளை என்னும் கவின்பெறு நகரில் நிம்மதி நல்கும் நிறைநலச் சூழலில், கலங்கரை விளக்கமாய்க் காட்சிதந் துயரும் கலையகம் ஸஹிற கருத்தினைக் கவரும் அறிவக மாகி அழகுடன் மிளிரும் நெறியினில் வளரும் நிலைக்கருந் தந்தையாம் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தின் மஹ்மூத் பலாபலன் கருதாப் பழுதறு பணியினைக் கண்டே நாமும் களிக்கலாம் நாளெலாம் கரும வீரர்" கலையகத் தந்தை கொள்கை யாலுயர் குணமிகு தலைவர் உள்ளத் தெழுந்த உயரிய நோக்கால் ஆற்றிய பணிதமை அளத்தலுங் கூடுமோ ! மலையகம் போன்று மனத்திடை உறுதியும் நிலையகம் கலங்கா நேர்மையுந் துணிவும் ஒழுங்குற அமைந்து உயர்வுறச் சமூகம் பெரும்பணி ஆற்றிடும் பெருந்தகையவரின் இன்பக் கனவாய் இலங்கும் ஸாஹிற பண்பினைக் காக்கும் பாசறை யாகும்! பல்கலைக் கழகமாய்ப் பரிமளித் தெங்கள் தனித்துவங் காத்துத் தரத்தினை உயர்த்தும் சிறப்பினை அடைந் தொளிர் திருநாள் விரைவில் வருக! நம் பெருமை விளக்கவே
இத்தகைய எழில்மிகு தோற்றத்தின் காட்சிகளைக் கற்பனை செய்து கொண்டுதான், அன்று மூன்று வகுப்பறைகளைக் கொண்ட ஓர் ஒலைக்குடிசையில் அறுபத்தியேழு மாணவர்களு டனும், ஐந்து ஆசிரியர்களுடனும், கலையகத்தின் தலைவரா
கடமையேற்ருர் ஜனப் பதியுத்தீன்.
O3

Page 59
1944 ஆம் ஆண்டு ஆரம்பமான கம்பளை ஸாஹிருக்கல்லூரி 1961 ஆம் ஆண்டு வரை அரசாங்க உதவிபெறும் கல்லூரி யாகவே இயங்கிவந்தது. இந்தக்குறுகிய காலத்தில் அரசாங்க உதவியின்றியே ஏராளமான கட்டிடங்களையும், வசதிகளையும், இக்கல்லூரிக்காகப் பெற்றுக்கொண்டார். இவர் தமது சொந்த முயற்சியினலும், ஒரு சில ஆதரவாளர்களின் ஒத்துழைப்பின லுமே அவ்வாறு பெற்றுக் கொள்ள முடிந்தது. அந் த ப் பதினேழு ஆண்டுகால வரலாற்றிலே கல்லூரி முழுமையான நிறைவைப் பெற்றுவிட்.ே தெனலாம். அக்காலப் பகுதியில் கல்லூரிக்காகச் செலவிடப்பட்ட ஒவ்வொரு சதத்தின் ишат պւb இன்று சமுதாயம் அநுபவித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அக்காலத்தில் ஜனப். பதியுத்தீன் தமது கல்லூரியைப் பற் றிப் பேசும் போதெல்லாம், ஸர். செய்யத் அஹ்மத் கானையும், அலிகார் சர்வகலாசாலையினையும் உதாரணமாகக் குறிப்பிடத் தவறியதில்லை. அன்னர், குறிப்பிட்ட ஒரு சம்பவம் ஈழத்து முஸ் லிம்கள் ஸர். செய்யத் அஹ்மத்கானைப் பற்றிப் பெருமதிப்புக் கொள்ளக் கூடியதாக அல்மந்து விட்டது
"ஸர்.செய்யத் அஹமத் கான் அவர்கள் அலிகார் சர்வகலா சாலையைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு முறை, பொதுமக்க ளிடம் இருந்து நிதிதிரட்டியவண்ணம் இருந்தார். அவரது முயற்சிக்குப் பலர் ஆதரவு வழங்கி வந்தபோதிலும், ஒருசிலர் அவரது முயற்சி தோல்வியில் முடியுமென்றே எதிர்பார்த்தனர். அதனற் பொருமை கொண்ட சிலர் இடையூறுகள் விளைவிக்கத் தவறியதும் இல்லை. ஒரு முறை ஸர். செய்யத் அஹ்மத் கான் அவர்களுக்குத் தபாலில் ஒரு பார்சல் வந்தது. அதற்குள்ளே ஒரு பழஞ் செருப்பு இருந்தது. செருப்போடு ஒரு குறிப்புங் காணப்பட்டது. "இதுதான் உங்களது நிதிக்கு நான்தரும் அன் பளிப்பு' என்று அந்தக் குறிப்பில் எழுப்பட்டிருந்தது. இதன. வர். செய்யந் அஹ்மத்கான் அவர்கள், ஓர் அவமானமாகச் கருதட்டுமென்றே அவ்வாறு செய்யப்பட்டது. ஆனல் ஸர், செய்யத் அஹ்மத்கான் என்ன செய்தார் தெரியுமா? அதனை ஒரு தோல் கடைக்காரனுக்கு ஒரு சிலபைசாக்களுக்கு விற்று
04

விட்டு அதனுல் கிடைத்த அந்த மிகச்சிறிய தொகையினையும் தமது நிதியில் சேர்த்துக்கொண்டார். அவ்வாறு அனுப்பிய வருக்கு நன்றி தெரிவித்து, ஏனையோரிடமும் இது பற்றிக் கூறித் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இதகுல் யார் அவ மானம் அடைந்தார் என்பதைக் கூறவும் வேண்டுமா?
இவ்வாறெல்லாம் ஒரு கலையகத்தை உருவாக்குவதில் பல பெரியார்கள் மேற்கொண்ட முயற்சிகளை உதாரணமாகக் காட்டியதிலிருந்து ஜனப். பதியுத்தீனும் எத்தகைய பெரியார் களின் முன்மாதிரிகளைக் கடைப்பிடித்துள்ளார் என்பதை ஊகித் துக் கொள்ள முடிகிறது.
அவர், தமது முயற்சிகளின் வெற்றி, தமது கலையகத்திலே தங்கியுள்ள தென்பதை உறுதியாக நம்பினர். இதனுல் கலை யகத்தை வளர்க்கும் பணியில் அல்லும் பகலும் உழைக்கலா ஞர். கலையக வருமானத்தையும் பொதுமக்களது ஒத்துழைப் பையும் பெற்று பல கட்டிடங்களைக் கட்டியதோடு, கலையகத் தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டார். 1961 ஆம் ஆண்டு. அரசாங்கம் கலையகத்தைக் கையேற்கும் போது, இரண்டாயிரம் மாணவர்களையும் நூறு ஆசிரியர்களையும் உள்ள டக்கியதாக-பல வசதிகளையும் கொண்ட கலாநிலையமாகஅகில இலங்கை அந்தஸ்தைப் பெற்ற உயர் கல்லூரியாகவிளங்கிய தென்முல், இத்தனைக்கும் ஜஞப் பதியுத்தீனின் முயற் சியால் விளைந்த முழுவெற்றியே காரணம் என்பதை எவராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஓர் உதவி நன்கொடை பெறும் பாடசாலை, பதினறு ஆண்டுகால வரலாற்றில் முழு நிறைவு பெற்று உயர்வடைவதென்முல்-அதனை அந்த நிலைக்கு உயர்த்தி விட்ட தலைவரை, "கலையகத்தந்தை” என்று மக்கள் போற்றிப் புகழ்வதிலும் வியப்பில்லையல்லவா !
இக்கால எல்லைக்குள் இதிற்பயின்ற நூற்றுக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் அரசாங்கத்தின் பல்வேறு துறை களிலும் உத்தியோகம் வகிக்கின்றனர். கலை, விஞ்ஞானம் தொழில் நுட்பத்துறைகளிலும் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர். பிரத்தியேக நிறுவனங்களிலும் சொந்தத் தொழில்
OS

Page 60
முறைகளிலும் இதன் பழைய மாணவர்கள் தாம் பெற்றுக் கொண்ட அறிவையும் ஆற்றல்களையும் நல்ல முறையிற் பயன் படுத்துகின்றனர். இத்தனைபேருக்கும் ஜீவனளிக்கின்ற அன்னை யாகத் திகழ்கின்றது இக்கலையகம். இதன் வெற்றியிலே இன்பங்கொள்ளும் இதயங்கள்தான் எத்தனை ?
இதே கலையகத்தின் தந்தையாக-அதிபராக இருந்தவர், கல்வி அமைச்சராக உயர்வு பெற்ருர், அதுவும், கல்வியமைச் சராகத் தொடர்ந்து இருமுறை இருந்துவந்ததால், இந்த நாட்டு மக்கள் அனைவருமே பயன் பெறலாயினர். அவர் அவ்வாறு அமைச்சர் பதவியில் ஏற்றம் பெற்ற போதும் தான் போற்றி வளர்த்த கலையகத்தின் வளர்ச்சியிலே கண்ணுங் கருத்து மாகவே இருந்து வந்துள்ளார். இது. ஆசிரிய சமுதாயத்துக் கும், கல்வி உலகுக்குங் காட்டப்பட்ட சிறந்ததொரு (ւք 6նr மாதரி யென்றே கூறவேண்டும். பதவியின் உச்சநிலையை அடைந்த ஒருவர், தமது ஆரம்ப முயற்சிகளின் பால் அக்கறை யின்றிக் காணப்படுவதைப் பலரது வாழ்க்கையிலும் கண்டுவந் துள்ளோம். ஆனல், அத்தகைய உயர் பதவியில் வீற்றிருந்த போதும், தன்னல் ஆரம்பிக்கப்பட்ட கலாநிலையத்தை மேலும் சிறப்புடன் திகழவைத்துள்ள ஜனப் பதியுத்தீனின் பண்பை அவர் வாழ்க்கையிற் காணமுடியும்.
தமது அரசியல் சமுதாயப் பிரச்சனைகளுடன், அமைச்சின் கடமைகளைச் சரிவர நிறைவேற்றவேண்டும், இத்தனைக்கும் மத்தியில் கலாநிலையத்தின் வளர்ச்சியிலும் கண்ணுங்கருத்து மாக இருப்பதென்றல் அது அவரது அபிமானம் மிக்க சமுதாய சேவையை நினைவு கூறுகின்றது. மிகக் குறுகிய காலத்தில் பல லட்ச ரூபா செலவில் உருவாகியுள்ள இக் கலாநிலையம் அவரது தூரதிருஷ்டி நோக்கினலே தான் உருவாகியுள்ளது.
கலாசார நிலையம்
பள்ளிவாசலையும் நூல் நிலையத்தையும் உள்ளடக்கியதோர் கலாசார நிலையம் இப்பொழுது இக்கலாநிலையத்தில் இயங்கிக் கொண்டு வருகின்றது. இங்கு பயில்கின்ற முஸ்லிம் மாண்வர்
O6

கள், சன்மார்க்க அடிப்படையிலான இஸ்லாமிய கலாசாரப் பயிற்சி முறைகளையும் பெற்றுக் கொள்ள இக்கலாசார நிலை யம் பெரிதும் பயன் படுகின்றது, மாணவர்கள் மாத்திரமன்றிப் பொதுமக்களும் இதனைப் பயன்படுத்த வகை செய்யப்பட்டுள் ளது. கம்பளை சாஹிராவின் உருவாக்கத்தின் இலட்சியத்தைத் தொடர்ந்தும் நிலைநாட்டவேண்டுமென்ற உயரிய நோக்கத் தின் முக்கியமான ஒர் அங்கமாகவே இக்கலாசார நிலை ய் ம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சமுதாயம் இ த ன் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
நுண்கலைப் பயிற்சி
முஸ்லிம்கள், தங்களுக்குரிய தனித்துவத்தைப் பேணிக் காக்கும் வகையில் இஸ்லாமிய நுண்கலைப் பயிற்சி முறைகளும், இக்கலாநிலையத்தில் அளிக்கப்படுகின்றன. இஸ்லாமிய மாண வரிடையே, இயல்பாகக் காணப்படும் நுண்கலைச் சுவைகளை விருத்திசெய்து, ஏனைய கலாசாரச் செல்வாக்கினல் முஸ்லிம் கள் பாதிக்கப்படாமல் தமக்கெனத் தனியான கலாசார அமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இசை, சித்திரம், எழுத்தணி என்பன வற்றுடன் இஸ்லாமியக் கருத்துக்கள் பொதிந்த பாவ கைகளும், சங்கீதங்களும் அறிமுகஞ் செய்யப்பட்டு வருகின் றன. இந்த நாட்டின் கலாசார விழாக்களின் போது இ த் தகைய நிகழ்ச்சிகள் பலமுறை அரங்கேற்றபட்டுள்ளதையும், இலங்கையின் முதலாவது குடியரசின் நினைவாக வெளியிடப் பட்ட அரசாங்க விசேட சஞ்சிகையில், முஸ்லிம் கலாசார நிகழ்ச்சிகளாக அவை அறிமுகஞ் செய்யப் பட்டுள்ளதும், சாஹிருவின் பெருமையை உலக அரங்கிலே நிலை நாட்டச் செய்துவிட்டது. இலங்கை எங்கிலும் பரந்துவாழும் முஸ்லிம் களின் பொதுவான கலாநிலையமாகத், தனது புகழை உலக அரங்கிலே நிலை நாட்டிவிட்ட ஸாஹிருவின் புகழால் கம்பளை நகரமும் குன்ருப்புகழுடன் சிறப்படைந்து கொண்டிருக் கின்றது.
07

Page 61
இணுப் பதியுத்தின் மஹ்மூத் அதிபராக இருந்தகாலத்தில் அவரது விசேட அழைப்பின் பேரில் வந்த-உலகப் பேரறிஞர் களில் ஒருவரான அலிகார் சர்வகலாசால்லயின் உபவேந்தர் கலாநிதி ஸ்ர், சியாவுத்தீன் அஹ்மத் அவர்களால் அஸ்தி வாரமிடப்பட்ட இடத்தில், இன்று சாஹிருக் கல்லூரி எழில் மிகு தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டி ருக்கிறது.
முஸ்லிம் மாணவிகளின் பஞ்சாபிய உடை
இன்று இலங்கையெங்கிலும் கல்விபயிலும் முஸ்லிம் மான விகள் பஞ்சாபிய உடையைப் பழக்கத்திற் கொண்டுள்ளனர். தமது கிலேயகத்தில் முதன் முதலாக ஜனுப்பதியுத்தீன் இந்த உடையை அறிமுகஞ் செய்து வைத்தார். தமது அன்புப் புதல் வியும் இதே உடைதான் அணிய வேண்டுமென்று முன்மாதரி காட்டினுர். ஆரம்பத்தில் இந்த உடை அணிவதைப் பல பெற் ரூேர் விரும்பவில்லை. எதிர்ப்புக்களும் தெரிவித்தனர். எனினும் இஸ்லாமிய மாணவிகளுக்கு அந்த உடை மிகப் பொருத்த முடைய தென்பதை விளக்கிக்காட்டினுர், அவரது அந்த ஆவல் இன்று பூர்த்தியானது. அந்த உடையானது இலங்கையெங் கிலும் வாழ்கின்ற முஸ்லிம் மாணவிகளது உடையாக மாறி
விட்டது.
08

シ“」も*Fコョf』増rョミ*g(F Qこa
** 『nggJ F&ss) yggaIĘoĝFho urīgs ' yno 'sidūTĒ lae q. Lợi sẽ - sẽ 'qi so 'lae # liri LTYSK L SLL L SY L SJL LLSK K KY LYJTYS000YSLLLLLLLSYSLL L SLL LSY9師
작的道家的Wr「T용 "역rter wnsu仁, 「7니TO,TJune 통례(定A에 的 事司制홍「r:#1니r* *w.u광國民軍 혁는uugw원umus u원rTTT력
* : T:|: : : %, }·|-的:激》
戦gagg ショ臨ュ コQ

Page 62
%%ვუუ-3*ებო???უშეჯუჯუჯუჯუჯუ
),
XXX
ww. i v A. Y. S. s"
8 . . .سه » ' مس س {్ళ్కస్లో # r్క్య భీళ్ళ్ళి " 蚤鬣 *ܣܛܘܼܟܼ الله& * از میباش
و في في أو إلا أنه ".
S SSLSSS LSSS Sll l l es SAAt Lttlss S LLL LLL L LLlLLLLLLL s LLL LLL LLLS S
X, X, il-ġdiċi wiri F':artiti fir-riħa .. '
938-ஆம் ஆண்டு. ஆங்கிலேயருக்கு எதிராகப் பாலஸ்தீன் வருதலை துய, கக கூட்டத்தில் ஜனுப் எம். என். எம். பதியுத்தீனின் தலைமை உரை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(தாருல் இஸ்லாம் ஜூன் 1954-ஆம் ஆண்டு இதழில் அதன் ஆசிரியர்
மறைந்த அறிஞர் பா. தாவூத்ஷா
அவர்களின் பார்வையில்)
ம2லயைக் குடைந்த மாவி
முந்நாற்றேர் அடிகளில், பெரும்பாலும் வஞ்சியடிகளால் புனேயப்பட்ட ஒரு சங்ககால இலக்கியத்துக்குப் "பட்டினப் பாலே" என்று பெயர். அந்தப் பாடலே இயற்றிய கடியலூர் உருத்திரக் கண்ணனூர் என்பவர், அக்காலத்து ஆட்சி செலுத் திய கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழமன்னனே வெகு வாகப் புகழ்ந்து துதித்துப் பாடியிருக்கிருர், அவருடைய இனி மையான கவிநயம் நோக்கி அந்த மன்னன் 16 லட்சம் பொன் இனும் கொடுத்தான். என்று "கலிங்கத்துப் பரணி" என்னும் நூலிலிருந்து தெரிகிறது.
கேவலம்,301 வரிப்பாட்டுக்கு 16,00,000 பொன் பரிசு கொடுப்பதென்ருல் அதற்கு அர்த்தத்தான் என்ன? சங்கமருவிய இவக்கியத் தொகுதிகளான "பத்துப்பாட்டு" என்னும் தொகுதி யில் இந்தப் பட்டினப்பாலேயும் இடம் பெறுவதேன்? என்ப வற்றை ஆராய நாம் இங்கு முற்படவில்லை. ஆணுல் பரிசு பெற் றதும்" கண்ணிய மிக்கதும், அழகு செறிந்ததுமான அந்தப் பாடலிலே கரிகால்வளவனேப் புகழும் கவிஞர், "அடேயப்பா" இந்த சோழமன்னன், எல்லா நாடுகளேயும்-சகல வேற்றரசர் களேயும் வென்றதுடன் திருப்தியடையாமல், மலேகளேயும் குடைந்து விடுவான் போன்றும், கடலேயும் தூர்த்துவிடுவான்
09

Page 63
போன்றும், வான ங் களை யும் இடித்துவிடுவான் போன்றும் காணப்படுகிறனே! என்று வி ய ந் து பாராட்டுகிருர்; அஃதாவது,
**மலையகழ்க் குவனே கட(ல்) தூர்க்குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவவ னென.' என்பன அந்தப் பட்டினப் பாலையின் 271, 272 ஆவது வரி
களில் காணப்படும் சொற்களாகும்.
மலையைக் குடைந்து நாட்டை விஸ்தரிப்பது ஒரு பெரிய வீரமிக்க செயலென்பது இதிலிருந்து தெளியக்கிடக்கிறது. மன்னர்களும், மன்னதி மன்னர்களும், ராணுவ வீரர்களும் இப்படி மலையைக் குடைவதில் அதிசயப்பட தேவை வில்லைதான். ஆனல் தற்காலத்திலே ஒரு மலைச்சாரலிலே, ஒரு சிறு பள்ளிக் கூடத்தை ஸ்தாபித்த ஒரு சாதாரண ஆசிரியர், அந்தப் பள்ளிக் கூடம் விரிவடைய விரிவடைய இ ட ம் பற் ரு மல் அந்த மலையையே துண்டு துண்டாகப் பேர்த்தெறிந்து சாதாரணப் பள்ளியைக் கலாசாலையை நிகர்த்த அளவுக்குப் பெருக்கிவிடு கிருரென்முல், அந்த ஆசிரியரை நவீனகாலச் சோழன் கரிகாலன் என்பீர்களா? அல்லது, மலையைக் கல்லும் மகாவீரன் என்பீர்களா?
இலங்கைத் தீவிலே மத்திய மாகாணத்தில் (மலைப்பிராந்தி யத்தில்) கம்பளை என்னும் ஓர் ஊர் (ஜில்லா நகர்) இருந்து வருகிறது. அங்கே ஜாஹிராக் காலேஜ் என்று ஒரு கல்வி ஸ்தாபனம் செயலாற்றி வருகிறது. இலங்கைத் தீவிலுள்ள மற்றக் கல்வி ஸ்தாபனங்களையெல்லாம்விட இந்தப் பள்ளிக் கூடம், மக்களிடையே கீர்த்தியையும் புகழையும் 8 ஆண்டு களுக்குள் பெற்றுக் கொண்டு விட்டதென்று கூறலாம். இவ் வளவு குறுகிய காலத்தில் கல்வியையும் அதன் ஸ்தாபனத்தை யும் வளர்த்துவிட்ட பேராசிரியரே அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் ஆவார். கல்விக்காக உயிர் கொடுத்தோர், உல கிலேயே மிகச் சிறந்த தியாகியாவார், என்பது சகலரும் ஒப் பிய உண்மையாகும். இந்தப் பேராசிரியர், அத்தகைய தியாகி களின் வரிசையில் வைத்துப் போற்றத் தக்கவராகவே மிளிர்ந்து வருகிருர் .
O

இலங்கையிலே முஸ்லிம்களிடையே கல்விஞானம் மிக வாகப் பெருகித்தான் இருக்கிறதென்முலும் அங்குள்ள மக்கள் உயர்தரப்படிப்புக்கும், கலாசாலைப் பட்டங்களைப் பெறுவதற் கும் இந்தியாவுக்கோ அன்றி மேல் நாட்டுக்கோ செல்ல வேண் டியவர்களாகவே விளங்கிவருன்றனர். வெள்ளையர் ஆட்சி நிலவியவரை இலங்கையில் ஒரு பல்கலைக் கழகமும் ஸ்தாபிக்கப் படவில்லை. (இப்போதுதான் கண்டியை அடுத்த பேராதனை யில் ஒரு பல்கலைக் கழகம் ஸ்தாபித்து முடிக்கப்பட்டிருக்கிறது) பல்கலைக் கழகக் கல்லூரிப் படிப்புக்கு வாய்ப்புக் கிடைக்கப் பெருத இலங்கை வாசிகள், உயர்தரக் கல்வியைத் தொடர்ந்து பயில்வதற்கு நிரம்பப் பொருள் வசதி படைக்கப் பெற்றிருந் தால் மட்டுமே வெளிநாடு செல்லமுடிந்தது. நடுத்தர மக்களின் பிள்ளைகள் பெருங்கவுடப்பட்டு வந்தனர்.
ஆனல் சுதந்திரத்துக்கு இப்பால், திரு. கன்னங்கரா, என்னும் கல்வி மந்திரியின் தீட்சன்ய புத்தியாலும் சிறந்த உழைப்பாலும் இலங்கைக் கல்வி முன்னேறியிருக்கிறது. அதில் சிறப்பாக மத்திய மாகாண முஸ்லிம் ஆண், பெண், சிருர்களின் கல்விப் போதனைக்காக நம் ஹாஜி ஷாஹிப், பேராசிரியர் எடுத்த முயற்சிகள் போற்றற்குரியன.
இன்று சரியாக, ஐம்பது வயது நிரம்பப் பெறவிருக்கும் அவர், இலங்கையின் தென்மாகாண, முக்கிய நகரமாகிய மாத் தறையிலே ஜனப். மஹ்மூத் நயினர் மரைக்காயர் என்னும் பெரியாருக்குப் பன்னிரண்டாவது புத் திரராக 23.6.1904ல் ஜனனமாயினர். சிறுவயதிலே சன்மார்க்கக் கல்வி பயின்று, பின்னர் ஆங்கிலத்தில் உயர்கல்வி கற்றுத் தேறினர். இலங்கை யில் கலாசாலைகள் அப்போது இல்லாமையாலும், சர்வகலா சாலைப் படிப்பை நாடி அலிகார் பல்கலைக் கழகத்துக்குச் சென்று திறமையுடன் பயின்று எம். ஏ. பட்டம் பெற்றர்.
அவர் பட்டப்படிப்பை மேற்கொண்ட காலத்தில் இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்டம் காங்கிரஸ் ஸ்தாபனத் தாலும் அலி சகோதரர்களாலும் நடத்தப்பட்டு வந்தது. வாலிப முறுக்குடனும் கம்பீரமான தோற்றத்துடனும் அரசிய

Page 64
லில் அளவற்ற பிரீதியுடனும் திகழ்ந்த அவர் இந்திய மக்களின் சுதந்திரத் தாக உணர்ச் சி யில் பெரிதும் அபிமானங் கொண்டுவிட்டார். கலாசாலைப் படிப்பும் நல்ல அரசியல் ஞான மும் அவரை ஊக்கிவிட்டதுடன் இந்திய மக்கட் சமூகம் சுபீட்ச மாய் வாழ அவர்களுக்குச் சுதந்திரம் இன்றியமையாதது. என்னும் உணர்ச்சியும் அவருக்கு மேலோங்கிவிட்டது. எனவே காந்திஜி, ஜின்னு சாஹிப் போ ன் ற அரசி ய ல் வாதிகளின் பாதையை அவரும் ஏற்றர். மலேயா முதலிய நாடுகளில் அவர் சுற்றுப் பிரயாணம் செய்ய தேர்ந்தபோதும் இக் கொள் கைக்காகப் பிரசாரம் புரிந்தார். உலகைச் சுற்றிவரத் திட்ட மிட்டுப்புறப்பட்ட அவர் மலேயாவுடன் தம் பிரயாணத்தை மூடித்துக் கொண்டு தாய்நாடாகிய இலங்கை திரும்பவேண்டிய வரானர்.
இலங்கை முஸ்லிம் லீக்கைத் தட்டியெழுப்பி உயிர் கொடுத்து மீண்டும் உருவாக்க முன்வந்தார். அவருடைய முயற்சியின் காரணமாகவே இலங்கையின் முஸ்லிம் லீக் புத் துருக் கொண்டு தொண்டாற்றத் தொடங்கிற்று. அதனல் மகத்தான வெற்றியும் பெற்றது. ஆரம்பத்தில் அந்த ஸ்தாப னத்தின் வாலிப கெளரவக் காரியதரிசியாக அவர் பணியாற்றி வந்தமையால் சகலரின் புகழுக்கும் போற்றுதலுக்கும் இலக் காஞர். பொது மக்கட்காகத் தொண்டூழியம் புரிவதையே கடனென அவர் உணரந்திருந்தார்.
அரசியற்துறையிற் பாடுபடுவதால் சமூகத்துக்கு, விளைக்கும் மேன்மையைவிட கல்வித்துறையில் பாடுபடுவதால் மட்டுமே அதிகமான நற்பலனை உண்டுபண்ண முடியும் என்பதை அவர் சீக்கிரம் கண்டு கொண்டார். எனவே 1944 ஆம் ஆண்டில் டீ. பி. ஜாயா அவர்களால் கம்பளையில் திறந்துவைத்த ஜாஹிரா வில் நம் அல்ஹாஜ் ஓர் ஆசிரியராகப் பதவியேற்ருர், சில மாதங் களுக்குள் இவரே அதன் பிரதம ஆசிரியராக உயர்ந்துவிட்டார். அந்தக் காலத்தில் மீ7 மாணவர்களே இருந்தார்கள். கம்பளை வாழ் முஸ்லிம் மக்களின் பிரேத அடக்க ஸ்தலமான கஹட பிடியா மலைச்சாரலிலே உள்ள மலைச்சரிவின் கீழே சிறு இடத் திலே அந்த சிறு பள்ளி செயலாற்றி வந்தது.
2.

பாருங்கள்! சென்ற எட்டாண்டுகட்குள் அந்த மலைச் சரிவு குடையப்பட்டது; விஸ்தாரமான இடம் உண்டுபண் ணப்பட்டது. 67 மாணவர் படித்த சிறு பள்ளிக்கூடம் இன்று 1200 மாணவர்கள் பயிலும் பெரும் கல்வி ஸ்தாபனமாகவும், அத்தனை மாணுக்கர்களுக்கும் பல துறைகளிலும் கல்வி போதிக் கத்தக்க வெற்றிவாய்ந்த 50க்கு மேற்பட்ட ஆங்கில, தமிழ், சிங் கள, அரபி ஆசிரியர்கள் நிரம்பிய சாரதா பீடமாகவும் உயர்ந்து விட்டது. அந்த பேராசிரியரின் முயற்சிகளின் காரணமாகவே மலைகள் உருண்டன, அவ்விடங்களில் கட்டிடங்கள் உயர்ந்தன, இன்னமும் அதனை மேலும் விஸ்தீரணமாக்கவே, அவர் முயன்று வருகிறர்.
பாலர் வகுப்பிலிருந்து சர்வகலாசாலைப் பரீட்சைக்குப் பயிலும் மாணவர் வகுப்பு வரையும் இந்தப்பள்ளியில் உண்டு . கம்பளைக்கு வெகுதூரத்திலிருந்து வந்து பயிலும் மாணவ மாணவிகளின் செளகரியத்துக்காகத் தனித்தனி விடுதிச்சாலை களும் (Hostels) நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனிப் பிரத்தியேக விடுதிச்சாலை களில் மிகத்திறமையான கண்காணிப்பும் நிர்வாகமும் நிலவி வருகின்றமையால், பெற்றேர்கள் மத்திய மாகாணத்தில் மட்டுமின்றி வேறு மாகாணங்களிலிருந்தும் தங்கள் குழந்தை களை இக்கல்லூரிக்கு அனுப்பிவருகின்றனர்.
கல்வியோடு சங்கீதமும் கற்பிக்கவேண்டுமென்று ஆர்வங் கொண்ட அவர் தம் சொந்தச் செலவிலேயே இசைக்கருவி க3ளத் தருவித்து தக்க சங்கீத ஆசிரியர்கள் மூலம் இசை ஞானத்தை விருத்தி செய்கிருர். ... "
தனக்கென வழாப் பிறர்க்குரியாளரான இவர் இன்னும் நீடுழிகாலம் உயிர்வாழ்ந்து வருங்கால வாலிப வீரர்களுக்கோர் ஒளிவிளக்காய்த் திகழ்வாராக ஆமீன்.
3

Page 65
"
".
பி-6-73-ல் வெளியான "சாஹிரா மலர்ந்த கதை" என்ற
சிறு நூலின் ஆசிரியரும், கொழும்பு அரசினர் சுதேச
வைத்திய கல்லூரியின் யூனுனி மருத்துவபீடத் தலைவர்
டாக்டர் எம். ஏ. எம். ஜலால்தீன்
அவர்கள் பார்வையில்
சாஹிரா மலர்ந்த கதை
அல்ஹாஜ் பதியுத்தீன் அவர்களின் குணசீலங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே கம்பளே சாஹிராக் கல்லூரியும் அமைந் துள்ளது. முகலாய சக்கரவர்த்தி சாஜஹான் தனது அன்பு மன வியின்பால் வைத்த மாறுக் காதலுக்காக எழுப்பப்பட்ட காதற் சின்னமே"தாஜ்மஹால்" அல்ஹாஜ் மஹ்மூத் தன் சமூகத்தின் பால் வைத்த காதலால் எழுந்த தியாகச் சின்னமே சும்பனே சாஹிரா என்பது எமது துணிபு. இதற்காகவே களுத்துறைக் கல்லூரியொன்றில் உயர்ந்த வேதனத்துடன் கடமையாற்றிய இஃாஞர் மஹ்மூத், தமது வருமானத்தையும் நகர வாழ்வையும் பொருட்படுத்தாது-சமுதாயத்தின் கல்வி நலனில் அக்கறை கொண்டவராக, கம்பளை சாஹிராக் கல்லூரி யைக் கட்டி
யெ ழுப்பப் புறப்பட்டார்.
இரண்டாவது உலக மகாயுத்தத்தால் அகிலமோ அல்ல லுற்ற காலம் அது. 1942 ஆம் ஆண்டில் ஜப்பானியரின் குண்டு மாரிக்கு இலங்கையும் இலக்காகியது. கொழும்பு நகரும் ஏனே யச் சில பகுதிகளும் தாக்கப்பட்டதை நம்மில் பலர் அறிவோம், குண்டு வீச்சால் கொழும்பு நகரும் கட்டடங்களும் சிதறுண்டது
14

セs*g*regagepfeシg5園ghgnguagfggbas モ*「」『g Wagg g『た』『 Eショtfesp mgセg『』g J」s」*g 『増e。地gbョgg g『Fg geFig guseg g」Qシ*に上ggEng JgF

Page 66
*ugu ggミgこg Leせ gg
4号—1哈恩哈ng岛与?将哈哈rn画stogēģ) so se ĝ Ĥosto uroFņi sae sỹ Tisoyo @ # * && (i slo
r.灣
 
 

போல், அங்கு வாழ்ந்த மக்களும் சிதறுண்டவர்களாக மலேநாடு களிற் சென்று தஞ்சம் புகுந்தனர். கம்பன், சுண்பு, மாத்தன் போன்ற பகுதிகளுக்கே அதிகமானுேர் செள்லலாயினர். இத ணுல் முஸ்லிம்களின் ஏகக்கஃக்கூடமாக விளங்கிய மருதானே சாஹிரா உட்பட மற்றும் கல்லுரரிகள் பலவும் மூடப்பட்டு விட் டன. கொழும்பிவிருந்த கல்லுரரிகளிற் பல முப்படை வீரர்
களின் இருக்கைகளாகவும் பயன்படுத்தப்பட்டன.
இந்த நியிேல் மருதானே சாஹிராக் கவ்லூரியின் அதிபர் அல்ஹாஜ் T. B. ஜாயா அவர்கள், சிதறுண்ட மாணவர்களின் நலன் கருதி கம்பன், கண்டி, மாத்தளே ஆகிய இடங்களிற் சாஹிராவின் கிண்களே ஸ்தாபிக்க முன்வந்தார். அதனுல் கம் பஃாப் பள்ளிக்குச் சொந்தமான சொற்ப நிலத்தில் தான்கு அறைகள் கொண்ட கொட்டிவில் நான்கு ஆசிரியர்களுடன் சாஹிராக் கல்லூரிக் கிளேயும் உருவாக்கப்பட்டது. இக் கிளேக் கல்லூரிக்குத் தலைவராக ஒரு ஆசிரியர்-எது வித உத்தியோக அந்தஸ்துமின்றி பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டிருத்தார்.
புத்தத்தின் தத்தளிப்பான நிலையில் உருவான இப்பாட சாஃ போதிய இடவசதியும் தளபாடங்களும் சீரான நிர்வாக மும் இன்றி எப்படியோ இயங்கிக் கொண்டிருந்தது. கம்பக்ாப் பட்டனத்தின் ஓரமாக - உயர்ந்த மேட்டு நிலத்தில் ஜூம்மாப் பள்ளிவாசலுக்கு அருகாமையில் இப்பாசாலே அமையப் பெற் றிருந்தது. இதன் தெற்கிலும் கிழக்கிலும் மலேயும் அடர்ந்த காடும் நிலைபெற்றுக்கொண்டிருந்தன. சுமார் நூற்றி எண்பத் தைந்து மானவர்கள் கல்வி பயின்துகொண்டிருந்தனர். கம்ப ளேச் சிருர்களும் இத்தொகையில் அடங்கினர். ஒழுங்கற்ற நிர் வாகம், ஆசிரியர்களின் அசிரத்தை, உல்லாச மனப்பான்மை என்பன நாளுக்குநாள் மாணவர்களின் தொகையைக் குறை யச் செய்து விட்டன. யுத்தம் முடிந்து சமாதான நிலே ஆரம் பித்ததும் கொழும்பு மக்கள் தலைநகரை நோக்கி நகர்ந்துவிட்ட ஒனர். அதனுள் மானவர் தொகையும் 67 ஆகக் குறைந்து விட் டது. தொடர்ந்தும் இப்பாடசாஃயை நடத்த வேண்டுபாது என்ற கேள்விக் குறியும் தோன்றலாயிற்று: "பாடசாலைக்கு மூடுவிழா ஏற்படலாம்', என்ற நிலேயும் உருவாயிற்று.
5

Page 67
ஆணுல் கொழும்பு சாஹிராக் கல்லூரி அதிபர் ஜஞப். டீ. பீ. ஜாயா அவர்களின் தூாதிருஷ்டி வாய்ந்த சமுதாய நன் னுேக்கும் தியாக மனப்பான்மையும் இப்பாடசாலையை மூடி விட இடங்கொடுக்கவில்லை. அதனை ஓர் ஆக்க பூர்வயான கலை யகமாக மாற்றக்கூடிய ஒரு தியாகச் செம்மலைத் தேடிக்கொண் டிருந்தார். தமது பழைய மாணவரான பதியுத்தீன் மஹ்மூத், தான் இப் பாரிய பொறுப்பை மேற்கொள்ளத் தகுதிவாய்ந் தவர் என்பதையும் உணரத் தொடங்கினர். ஜனுப். ஏ. எஸ். அப்துல் காதர், ஜனப். றவுப்பாஷா ஆகியோர் மூலமாகத் தமது கருத்தை ஜனப் பதியுத்தீன் மஹ்மூதுக்கு எத்தி வைத் தார். அவ்விருவரும் ஜனப் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களை நேரே சந்தித்து கம்பளை சாஹிராவின் நிலையை விளக்கமாகக் கூறினர். கல்லூரியாக உருவாகுவதற்கு ஆற்ற வேண்டியுள்ள பெரும் பணிகளையும் எடுத்துக் காட்டினர். தம்மை எதிர் நோக்கி வந்துள்ள மலையாய பொறுப்புக்களையும் கடல் போன்ற பிரச்சனைகளையும் ஜனப் பதியுத்தீன் நினைத் துப் பார் த் தார். அதே நேரத்தில் முஸ்லிம் சமூகம் கல்வித்துறையில் பின்தங்கி நிற்பதையும் கருத்திற் கொண்டார். "என் கடன் பணி செய்து கிடப்பதே ' என்பதற்கமைவாக, சமூக நலனைக் கருத்திற் கொண்டு, பொறுப்புக்களையும் பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராட முற்பட்ட வர் போல - கம்பளை சாஹிாரா வைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கான தமது சம்மதத்தை யும் தெரிவிக்கலானர். இதனை அறிந்த ஜனப் ஜாயா அக மகிழ்ந்தார். இதற்கிடையில் ஜனப் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் பாடசாலையைப் பார்ப்பதற்காகத் தன்னந்தனிய ஞய் கம்பளைக்குச் சென்றுவிட்டார்.
சுமார் ஐந்து மணியளவில் 'கம்பளை சாஹிரா அமைந் திருக்கும் பகுதியைச் சென்று பார்வையிட்டார். சன சஞ்சார மற்ற பாழடைந்த வள்வில் சின்னஞ் சிறியதொரு கொட்டிலில் அப்பாடசாலை அமையப் பெற்றிருந்தது. அப்பாடசாலை அமை யப் பெற்றிருந்த மலையடிவாரத்தைச் சுற்றிலும் அடர்ந்த காடு களும் அடக்கஸ்தலங்களும் காணப்பட்டன. இவற்றைக் கண்ட ஜனப். மஹ்மூத் அவர்களின் உள்ளம் இயற்கையிலேயே பின்ன
I6

டைந்த போதும் அன்னரிடத்துக் காணப்பட்ட பகுத்தறிவும் அயராத் துணிவும் ஒருவித புத்துணர்வ்ை ஊட்டியது. சகல அம்சங்களிலும் நிறைவு பெற்ற ஓர் ஸ்தாபனத்தை நடத்து வது இலகுவான காரியமாகும். எனினும் அதனை ஒரு சாதன்ை யாகக் கூறமுடியாது. அதனுல்தான் சீரழிந்து தேங்கி நிற்கும் அந்த நிலையத்தைக் கட்டியெழுப்பி வளர்க்க முற்பட்டார், ஜனப் பதியுத்தீன், இதனை ஒரு மாபெருங் கல்லூ ரி யாக்குவதே முஸ்லிம் சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய முதன்மையான பணி என்பதையும் சிந்தனையிற் கொண்டார்.
"ஈழத்தின் மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கும் கம்ப&ள நகரிலிருந்தே இலங்கை யெங்கிலும் கல்வியென்னும் ஒளியைப் பரப்பவேண்டும். அகில இலங்கையிலும் வாழும் இஸ்லாமிய ருக்காக கம்பளை சாகிராவை ஓர் உன்னதமான கலைக்கூடமாக வும் கலைக் களஞ்சியமாகவும் நிலைபெறச் செய்ய வேண்டும். கல்வியும், கலாசாரமும் சன்மார்க்கமும் அலசி ஆராயப் படும் நிலையமாக்கப்பட வேண்டும். கல்விமான்களையும், கலைஞர்களை யும், மார்க்க அறிஞர்களையும் உருவாக்கும் ஓர் ஸ்தாபனமாக மாற்றியமைக்க வேண்டும்" என்ற உயரிய ஆசைகளையும் அபி லாசைகளையும் உள்ளத்திலே ஏற்படுத்திக் கொண்டவராக, ஜனப் பதியுத்தீன், அவர்கள். ஜனப். ஐயா அவர்களை நேரிலே கண்டு பதவியை ஏற்றுக் கொள்ள சம் ம த ம் தெரிவித்துக் கொண்டார். அதே நேரத்தில் அதன் ஆக்கத்துக்கான அதிகா ரங்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் தெரிவித் தார். அதனல் அக்கல்லூரியின் துணை அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டு மீண்டும் கம்பளைக்குச் சென்று விட்டார்.
கம்ப8ளக்குச் சென்று பாடசாலைக்கு பொறுப்பாசிரியராக இருந்த கம்பளை வாசியானவரைக் கண்டு அன்புடன் அளவ ளாவி தமது நியமனத்தையும் அவரிடம் ஒப்படைத்தார். ஜனப். பதியுத்தீன் இயற்கையாகவே நேர்த்தியாக 2 - 6 - அணிந்து கம்பீரமாக காட்சி அளிப்பவர். ஒழுங்கும் கட்டுப் பாடும் ரசஞானமும் ஒருங்கே பெற்றவர். இவற்றுடன் எம்.ஏ. பட்டதாரியான ஜனப். பதியுத்தீனக் கண் டு கொண் ட
7

Page 68
பொறுப்பாசிரியருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் ஒருவித அலட்சிய மனப்பான்மை ஏற்பட்டதில் வியப்பில்லை. அத்துடன் பதவி பறிபோல விரக்தி மனப்பான்மையும் ஏற்பட்டிருக்க லாம்,
ஜனப் பதியுத்தீன் மஹ்மூத் பதவியேற்ற முதல்நாளன்றே தமக்கென ஓர் அலுவலகத்தை அமைத்துக் கொண்டார். புதிய அதிபர் என்ற முறையில் ஆசிரியரையும் மாணவரையும் ஒன்றி ணைத்த ஒரு கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். மாணவர் மேற் கொள்ளவேண்டிய ஒழுங்கு முறைகளையும், கல்லூரி வளர்ச்சிக் காக ஆற்ற வேண்டிய கடமைகளையும் விளக்கிக் கூறினர். தமது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நயமாக வேண்டிக் கொண்டார். மாணவருக்குப் பயன் தரக்கூடிய புதிய LIT - அட்டவணை ஒன்றை அறிமுகஞ் செய்தார். இவற்றையெல்லாங் கண்ட மாணவர்கள் தங்களது தலைவரின் புதிய - முற்போக் கான திட்டங்களை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டனர். தமது தலைவரின் பின்னல் அணிவகுக்கவும் அன்னருக்கு ஒத்துழைப்பு நல்கவும் முற்பட்டனர். ஆனல் அதே நேரத்தில் ஆசிரியர்களின் ஒத்துழையாமையும் வேலை நிறுத்தமும், இன்னேர் பக்கத்தி லிருந்து உருவாகின.
'அதிபரின் நேர அட்டவணையில் மாற்றம் வேண்டும், கல் லூரி வேலைநிறுத்தம்' இவ்வாறன. தந்தியொன்றும், ஒத் துழையாமைப் படலத்தின் இறுதிக்கட்டமாக, ஜனுப். டீ. பி' ஜாயா ஆவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் உண்மைநிலை வேறு விதமாகவே அமைந்திருந்தது. இரண்டு பேரைத் தவிர ஏனைய மாணவர்கள் வகுப்புகளுக்கு சமூக மளித்த வண்ணம் இருந்தனர். ஆசிரியர்கள் வகுப்புகளைப் பகிஸ்கரித்ததைத் தொடர்ந்து ஜனப் பதியுத்தீன் தனிமை யாகவே-தன்னல் இயற்றப்பட்ட கலாசாலைக் கீதத்தை மாண வர்க்ளுக்குப் பாடிக்காட்டி பயிற்சியளித்துக் கொண்டிருந்தார். (இன்று இதே கீதம் அக்கலாசாலையில் ஒலித்துக் கொண்டிருக் கிறது.)
8

. இதற்கிடையில் அவசரத் தந்திமூலம் கொழும்பு சட்டக்கல் லூரியில் பயின்று கொண்டிருந்த நான்கு பேரை வரவழதை தார். அவர்களைக் கொண்டு பாடங்களைக் கிரமமாக நடத்தத் தொடங்கினர். இந்த நான்கு சட்ட மாணவர்களில் ஒருவர் தான் இன்றைய உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராகிய ஜனுப். எம். எம். அப்துல்காதர் அவர்கள்.
ஜனுப். ஜாயா அவர்கள் அதே வார இறுதியில் டாக்டர். எம். ஸி. எம். கலீல் அவர்களுடன் கம்பளைக்குச் சென்று நேரடி யாகவே நிலைமைகளை அவதானிக்கலானர். ஜனுப். பதியுத்தீ னின் ஏற்றமுறும் பணிகளைக் கண்ட ஜனுப். ஜாயா அவர்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்களை எச்சரித்து விட்டு புதிய அதிபரின் சேவைகளைப் பாராட்டினர். ஜனப். பதியுத்தீனல் அறிமுகஞ் செய்யப்பட்ட பாட அட்டவணையை அங்கீகரித்து அதே நேர அட்வணையை, ஏனைய சாஹிராக் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தினர், ஜனப். ஜாயா அவர்கள்.
இதனைத் தொடர்ந்து ஜனப் பதியுத்தீன், கல்லூரிக்கு மேலும் மாணவர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபடலானர். கம்பளை ஜம்"ஆப் பள்ளிவாசலின் நிர்வாகியும் சமூக சேவையா ளருமான மர்ஹஜூம், உமர் பாச்சா அவர்களைப் பக்கபலமாகக் கொண்டு கம்பளை நகரிலும் சூழவுள்ள கிராமங்களிலும் சென்று கூட்டங்கள் நடத்தி, மாணவர்களைச் சேர்ப்பதில் முழுமூச் சுடன் ஈடுபட்டதனல் மாணவரின் வரவு வளர்ந்து பலநூருகப் பெருகலாயிற்று.
அடுக்த வேலையாக கல்லூரிக்குத் தேவையான கட்டடங் களை அமைப்பதில் முயற்சித்தார். எனினும் முன்பு பகிஸ் கரிப்பு நடத்திய ஆசிரியர்கள் பலவகையான பொய்ப் பிர சாரங்களையும் முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. எனவே அவர்களை அக்கலாசாலையிலிருந்தே அப்புறப்படுத்தி விட்டார்.
கம்பளை சாஹிராவின் கட்டட வேலைகளை விஸ்தரிக்குழ் நோக்கமாக "மத்திய இலங்கை முஸ்லிம், கல்விச்சன் என்ற
9

Page 69
பெயரில் ஒரு ஸ்தாபனத்தை அமைத்தார். அதில் ஜனப். டி. பி. ஜாயா அவர்களையும், டாக்டர், எம். ஸி. எம். கலீல் அவர்களை யும், கொழும்பு, கம்பளை, கண்டி போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம் பெரியார்களையும் உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டு சாஹிராவின் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களையும் உருவாக் கினர். இதனைத் தொடர்ந்து கம்பளை சாஹிரா மருதானை சாஹி ராவிலிருந்து பிரிந்து தனியாக இயங்க ஆரம்பித்தது.
முஸ்லிம் தனவந்தர்களைக் கொண்டும் தமது கல்லூரியில் நடத்திய இசை, நாடக நிகழ்ச்சிகளைக் கொண்டும் பல ஆயிரம் ரூபாக்களைச் சேர்த்து கல்லூரிக் கட்டடங்களை விஸ்தரித்தார்.
ஒரு சமயம் கம்பளையைச் சேர்ந்த பெரியார் உமர் பாச்சா அவர்களது இரத்தினக்கல்லொன்றை, விற்கும் தரகராகவும் ஜனுப். பதியுத்தீன் மாறினர். மூவாயிரம் ரூபாவுக்கு விற்கும் படி கூறிய அக்கல்லை முப்பத்தையாயிரம் ரூபாவுக்கு விற்றுச் சம்பாதித்த இலாபம் முப்பத்திரண்டாயிரத்தையும் கல்லூரி கட்டடங்களுக்காக செலவு செய்தாரென்றல் அன்னரின் பெரு முயற்சியை யார்தான் பாரட்டாமல் இருக்க முடியும்.
கட்டடங்கள் ஆரம்பமாகு முன்னரே ஜனுப். ஜாயா அவர்க ளின் புத்திமதிகளுக்கு ஏற்ப ஜனுப் உமர் பாச்சா அவர்களின் துணை கொண்டு கல்லூரிக்குச் சொந்தமாக நான்கு ஏக்கர் நிலத்தை கம்பளை ஜூம்ஆப் பள்ளி வாசல் நிலத்திலிருந்து சொந்தமாக எழுதிக்கொண்டார். சமுக விரோத சக்திகள் காரணமாக இதனை ஆரம்பத்தில் இரகசியமாகவே செய்து கொண்டார். எனினும் பிற்காலத்தில் இந்த உண்மையைக் கூரும்ல் இருக்கவில்லை. இவ்வாருகத் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தம்மால் உருவாக்கப்பட்ட கலாநிலைய?
g
துக்கே அர்ப்பணித்துள்ளார். . . .
20

SigefuGO G(8GlefD
ஆற்றலும் துடிப்பும்மிக்க இளைஞனக மாத்தறை சென்ற், தோமஸ் கல்லூரியிலே ஆரம்பக்கல்வி பயின்று வந்தார், இளை ஞர் பதியுத்தீன். பதினேராவது வயதில் ஐந்தாம் பருவத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள், கல்லூரி சாரண ஆசிரியருக்கும் பதியுத்தீனுக்கும் இடையிலே ஒரு வாக்குவாதம் நடைபெற்றது. சாரணப் பயிற்சிக்குச் சேர்த்துக்கொண்ட பதியுத்தீனுக்கு விசுவாசப் பிரமாணம் செய்யச் சொன்னமுறை பிடிக்கவில்லை. 'யூனியன்ஜெக்' எனப்படும் ஆங்கிலக் கொடிக் கும், சாரணக்கொடிக்கும் விசுவாசப் பிரமாணம் செய்ய வேண்டுமென ஆசிரியர் கட்டளையிட்டார். சாரணக் கொடிக்கு விசுவாசப்பிரமாணம் எடுப்பதாகவும், ஆங்கிலக் கொடிக்கு விசுவாசப்பிரமாணம் எ டுக்க முடியாதெனவும் பதியுத்தீன் கூறினர். ஆசிரியருக்கு ஆத்திரமும் கோபமும் ஒருங்கே பொத் து க் கொண்டு வந்தது. உடனே பதியுத்தீன, அதிபரிடம் அழைத்துச் சென்று முறைப்பாடு செய்தார். அதிபர், பதியுத் தீனின் அடங்காத்தன்மைக்காக ஆறு பிரம்படிகள் கொடுத் தார். வெள்ளையனின் கொடிக்குத் தலை வணங்குவதை விடத் தனது குருவின் ஆறு பிரம்படிகள் இளைஞன் பதியுத்தீனுக்குக் கேவலமாகத் தோன்றவில்லை. தமது இளமைப்பருவத்திலேயே விட்டுக்கொடுக்காத மனப்பான்மையும், ஆங்கில ஏகாதிபத் தியத்துக்குத் தலைவனங்காத் தன்மையும் உள்ளத்திலே வைர மாகப் பதிந்திருந்தமையினை இச்சம்பவம் நன்கு புலப்படுத்து கின்றது.
2.

Page 70
இதே உள்ளத்துறுதி அவரது பிற்கால வாழ்விலும் வளர்த்து உரம் பெற்றிருந்ததைக் காணலாம். வாலிபப் பரு வத்திலே தமது கல்வியை முடித்துக் கொண்டு தாய்நாடு திரும் பிய பதிபுத்தீன், ஈழத்து முஸ்லிம்களின் சமுகவாழ்வில் ஏற் பட்டிருத்த குறைபாடுகளேக் களவதில் தம்மை முழுமையைாக அர்ப்பணிக்கத் தொடங்கினூர். முஸ்லிம்களின் அரசியலில் ஏற் பட்டிருந்த குறைபாடுகளேயும் மிக உன்னிப்பாகவே கவனித்து வந்தார். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் இந்த நாட்டின் பொதுவான அரசியல் விவகாரங்களில் இவர் தம்மை ஈடுபடுத் திக் கொண்டு வந்துள்ளார். இலங்கை முஸ்லிம் லீக், சமுக கலா சாரத்துறைகளில் மாத்திரமின்றி, அரசியல் ரீதியாகவும் இயங் கக் கூடிய ஓர் ஸ்தாபனமாக இருந்ததஞல் தான் அதன் ஆரம்பகால இயக்குனர்களில் ஒருவராக இருந்து சொந்த சமுதாயத்தின் குறைபாடுகளே எடுத்துக்காட்ட முன்வந்தார். இந்தியாவிலே கல்விபயிலும் காலத்திலும் தமது அரசியற் கருத்துக்கன் மக்கள் மத்தியிலே பரப்பிவந்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாத எதிர்ப்பைத் தூண்டும் பிரச்சாரங்களே பர் மாவிலும் மலேசியாவிலும் நிகழ்த்தியதனுல் 1933 ஆம் ஆண்டு இவரை அந்த நாடுகளில் இருத்து முறையே இருபத்திநான்கு மணித்தியாலங்களிலும், நாற்பத்தெட்டு மணித்தியாலங்களி லும் வெளியேறுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்ட தென்றல், தமது வாலிபப் பருவத்தில் எத்தகைய அரசியற் புரட்சி மனப் பான்மையுடன் செயல்பட்டு வந்துள்ளார் என்பதை எவரும் இலகுவில் புரிந்து கொள்வர். அவ்வாறே அவர் இந்தியாவில் நிகழ்த்தியுள்ள சொற்பொழிவுகளும் எழுதியுள்ள எழுத்தோ வியங்களும் அவரது அடி மனதிலே துடிதுடித்துக் கொண்டி ருந்த அரசியல் உணர்ச்சிகளே நினைக்கச் செய்கின்றன. அதனுற் குன் இலங்கை திரும்பிய பின்னரும் முஸ்லிம்களின் கல்வித்துறை யிற் போன்றே அரசியல் துறையிலும் ஒரு புரட்சிவாதியாக மாறலானுர்,
இலங்கை திரும்பிய பின்னர் மீலாத் கூட்டங்களிலும் சமுகக் கூட்டங்களிலும் பேசும்போது தமது புரட்சிகரமான கருத்துக் களே வெளியிடலானுர், தமது கொள்கைகளே மக்கள் ஏற்றுக்
22

ョJュ kmgs 『Fコ L T TTLL LT KK KK LL LLL LLYYSYY KYYLYY LL0KK KTY LY YLTL 0KYYLLT YY LLK SZYLLLLLSLLLC SY SLLLL LLLCH SLL L SZL LY YKKKK KYTYYY KYYY L
* )
|-
|-邬臧 《藏 -シ
* T.sae|×sae

Page 71
---- ょ“gg シ
sĩfī sūšası ışoğĢIngingg** gg増「J**コg』シ戈唱颂“日与忌日w感官佩娜丁nqısı II; ■ ■ ■ ■+'FrılısıÍsır'ııççon (s. 7 sẽ-of 1,3,5-l omsorg"பிருT니?'Tr***wrT院, *uurnam환(高喻低寸塔‘g1h崎uene sĩ sĩ urnaeo sẽ sử nạn gyff, qofsăūn1çoğoẾhữrı sı, se ĝ ĝ Ĥaso'rosso logo? sae, os grī£57
「T義之島 河南rT55T면 2환, rm헌50%어,*『トシ」ggn』g上) #占与展g凯*寸片感n) 高w) 「T니7rTrT「Tr7.5%, **):Fr學;#)**コョb* megjs Fgェ七地道ce/%획 "정며A&홍= 역
" I ዛF [ኛ I
 

s
கொள்ளா விடினும் காலப்போக்கில் உண்மையை உணர்ந்து கொள்ளுவார்கள் என்ற உணர்வினுல் எத்தகைய எதிர்ப்புச் சக்திகளுக்கும் தயங்காதவராய்த் தமது ஒரே இலட்சியத்தை இறுதிவரை நிறைவேற்றி வைப் பதிலேயே கவலை கொண்ட வராக இருந்தார். அவரது தீர்க்கதரிசனமான கருத்துக்களே அன்றைய சமுதாயம் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும்-ஏள னம் செய்தாலும்-ஒரு சில முற்போக்கு வாதிகள் அக்கருத்துக் களேச் சிந்திக்காமலும் இருக்கவில்ஃல.
1938 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திலுள்ள அரேபியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளேக் கண்டிக்கும் முகமாக கொழும்பு கால்பேஸ் மைதானத்தில் ஒரு மாபெரும் கூட்டம் நடத்தப் பட்டது. அன்றைய பிரபல பேச்சாளரும், பத்திரிகை ஆசிரி பருமான ஜனுப். ஓ, கே. மொகிதீன் போன்ற முற்போக்கு வாதிகள் அக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். எனினும் அக்கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு அன்று தலைவர்க ளெனக் கருதப்பட்ட எவருமே முன்வரவில்லே. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரா க ப் பேசவோ. எழுதவோ அறிக்கை விடவோ துணிவற்றவர்களாகவே அவர்கள் காணப் பட்டனர். "சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம்' என வர் னிக்கப்பட்ட அன்றைய ஆட்சியாளரின் அடிவருடியாக இருப்
பதை பதியுத்தீன் எப்பொழுதோ கண்டிக்க முனேந்து விட்ட
காரணத்தினுலும், பாலஸ்தீனத்தில் உருவாகப் போகின்ற ஆபத்தான பிரச்சினையை வித்திலே கிள்ளி எறிய வேண்டு மென்ற எண்ணத்திஞலும் தாமே தலைமைவகித்துக் கூட் டத்தை நடத்த முன்வந்தார். அன்று கூடிய மாபெரும் கூட் டத்தில் தமது தஃமையுரையில் அரபு மக்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளே விளக்கமாகவும், உருக்கமாக வும் எடுத்துக்காட்டினுர், பிரிட்டிஷ் அரசாங்கம் பாலஸ்தீன் மக்களுக்களித்த வாக்குறுதிகளே உடனடியாக நிறைவேற்றி வைக்க வேண்டுமென்ற தீர்மான மொன்றை ஜனுப் பதியுத் தீனே அக்கூட்டத்தில் பிரேரித்து அங்கீகரித்துக் கொண்டார்.
Young Muslim League' Grsi. QL III rfa). QL ré a 5,5 வாலிப முஸ்லிம் லீக்கின் செயலாளராக 1927ஆம் ஆண்டு
23 26S 60

Page 72
தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதனே ஒரு பலம் பொருந்திய இயக்கமாக மாற்றியமைத்து-அகில இலங்கை லீக் ஆகவும் புனருத்தாரனம் செய்தார். அதுவரை அங்கத்தி வரிடையே இருந்துவத்த பிளவுகளைச் சுமுகமான நிலேக்கு மாற்றி ஒற்றுமையை நிலைநாட்டினுர், அதனுல் டி. பி. ஜாயா ஒனரபல் டபிள்யூ. எம். அப்துல் றகுமான், ஜனுப்.என். டி. எச். அப்துல் கபூர், பைர். முகம்மது மாக்கான் மாக்கார், ஜனுப்.என். எச். எம். அப்துல் காதர், மகுமூது ஹாஜியார் போன்ற முஸ்லிம் பெரியார்கள் ஒன்றிஃணந்து வீக்கில் செயல்படத் தொடங்கினர். அகில இலங்கையிலும் முஸ்லிம் லீக்கின் அங்கத்துவத்தைப் பரவலாக்குவதற்காகப் பல மாகாணக் கிளேகளே ஏற்படுத்தினுர், இராப்பாடசாலைகளே அமைத்து எழுத்தறிவில்லாத முஸ்லிம் களுக்குக் கல்வி வசதியை ஏற்படுத்தினர். பைத் துல்மால் நிதி ஒன்றையும் உருவாக்கினர். முஸ்லிம் சமுதாயத்தின் சமு சு கலாசார அரசியல் வாழ்வில் பல வேறு துறைகளிலும் முயற்சி க3ள மேற்கொண்டார். எனினும் பிற்காலத்தில் இந்த இயக் கம் ஆங்கிலம் படித்த ஒரு குறிப்பிட்டவர்களின் செல்வாக் கிற்கு உட்பட்டமையினுல் ஜனுப். பதியுத்தீன் லீக்கின் உத்தி யோகப் பதவியிலிருந்து வெளியேறினர்.
"படித்த காற்சட்டைக்காரர்கள் மாத்திரமின்றிச்சாரம் உடுத்திய சாதாரண மக்களுக்கும் லீக்கின் உயர்பதவிகள் வழங்கப்படல் வேண்டும்.' என்று ஐனுப் பதியுத்தீன் ஒரு முறை தனது கண்டனக் குரலே எழுப்பியுள்ளார். எனினும் அவர் லீக்கை விட்டும் முற்ருக விலகிக் கொள்ளவில்லே.
伊、 24

--- _T정T 대디 피=디----------------------─----------------------─. 'qi-in -- Trīņos Ģio Norgy Insự Lon
979T軍 津北七Jreng道成rTr히 七宮長官司)% 확통e府事 **rf랑* nermwegustry ©-off T-695 i 4. jogostorio quaesonings oặfūsiji 1çoğsin.gn iguaĚyle gge"*ミョgggbg ョgeきag コe* こョ・g Fessgg gggggs』

Page 73
''.
క్ల్లో
ஷ்யப் பனிக்காட்டில் கலாநிதி பதி யுத்தீன், T
 
 

3. துணிவுமிக்க செயல்வீரர்
1956ஆம் ஆண்டில் அமைச்சரவையில் சேர விரும்பாத ஜனுப் பதியுத்தீன், திரு. பண்டாரநாயக்காவின் வேண்டு கோளுக்கிணங்கத் தேசிய திட்டக் கவுன்விவில் ஓர் அங்கத்தவ ராக நியமனம் பெற்ருர், பின்னர் ஐ.நா. சபையின் இலங் கைப் பிரதிநிதியாகவும், துரதுக்குழு அங்கத்தி வராக வும் கடமையேற்ருர். ஐ. நா. சபையின் இலங்கையின் அங்கத்தவ ராக நியமனம் பெற்ற முதல் முஸ்லிம் ஜனுப் பதிபுத்தீன் என் பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். 1959-ஆம் ஆண்டின் ஐ. நா. சபையின் மூன்றுவது காரியக் குழுவுக்கு ஜனுப் பதிபுத் தீன் உபசபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் ஐ. நா. சபையின் அங்கத்தவராக இரு த்த போது தா ன் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொஃப் செய்யப்பட்டார். அதனுல் இலங்கை அரசியலில்" ஏற்பட் டிருந்த பரபரப்பான சூழ்நிலையை மனதிற்கொண்டு ஜனுப் பதியுத்தீன் இலங்கை திரும்பினுர். 1980ஆம் ஆண்டு நடை பெற்ற பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி பெரும்பான்மை ஸ்தானங்களேப் பெற முடியாமற்போனதால், திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களேக் கட்சியின் தலைவரா கக்கொண்டு சுதந்திரக் கட்சியை மேலும் பலமுடையதாகச் செய்ய ஜனுப் பதியுத்தின் தமது முழுச்சக்தியையும் உபயோ கித்தார். அதிலும் முக்கியமாக பூரீமாவோ பண்டாரநாயக்கா வைத்தலேமைப் பதவியை ஏற்கச் செய்வதில் பூரண வெற்றி கண்டார். அதனுல் அதே ஆண்டில் மீண்டும் நடைபெற்ற
25

Page 74
தேர்தளில் சுதந்திரக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப்பெற் துப் பதவிக்கு வரலாயிற்று. தொடர்ந்தும் ஜனுப் பதியுத்தீன் போன்றவர்களுடைய ஆலோசஃன்கள் ஆட்சியமைப்புக்குத் தேவைப்பட்டதனுல்தான் திருமதி பூஜீமாவோ பண்டாரநாயக் காவின் வற்புறுத்தலின் பேரில் ஜனுப் பதியுத்தீன் 1969ஆம் ஆண்டு அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும், ஒலிபரப்பு அமைச்சராகவும் பதவியேற்ருர்,
கல்விஅமைச்சர்
இந்த நாட்டின் கல்விச் சீர்திருத்தத்தின் புரட்சிகரமான மாற்றங்களே ஏற்படுத்திக்கல்வி வரலாற்றிலே மங்காப் புகழ் பெற்ற பெருமையை ஜஞப் பதிபுத்தின் கல்வியமைச்சராகச் செய்துள்ள சேவையின்மூலமாகப் பெற்றுக்கொண்டார், கல் வியில் ஒருசிலர் பெற்றிருந்த ஏகபோக உரிமைகளைச் சமமான முறையிற் சகலரும் பெற்றுக்கொள்வதற்கேற்ற புதிய திட் டங்களே உருவாக்கியதோடு நின்றுவிடாமல் அவற்றைத் திமதி தீரம்மிக்க செயல்களினுலும், நிரூபித்தும் நிலைநாட்டியும் வைத்தார். வேறு எவராலும் சாதிக்க முடியாத சுமையை அன்னுர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுச் சாதித்துக்
காட்டியுள்ளார்.
1945ஆம் ஆண்டு திரு ஸி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங் சுரா கல்வி அமைச்சராயிருந்தபோது இலவசக் கல்வித் திட் டம் அழிலுக்குக் கொண்டுவரப்பட்டது. எனினும் பணம் கொடுத்துப் படித்து வந்த வசதிபடைத்தவர்கள்தான் L33 கொடுக்காமல் இலவசமாகப் படிக்கும் வாய்ப்பினேப் பெற்ற னர். அதனுல் இலவசக் கல்வித் திட்டத்தின் பூரண பயனே சாதாரண மக்கள் பெற முடியாதவர்களாயிருந்தனர். 1981ஆம் ஆண்டு பாடசாஃகனே அரசாங்கம் கையேற்கும் புதிய சட்டத்தை ஜனுப் பதியுத்தீன் நிறைவேற்றிஞர். அச்சட் டத்தை அமுலுக்குக் கொண்டுவருவதற்கு முன்னரே ஒருசில விரோத மனம் படைத்தவர்கள் அன்னுரை அவமதிக்கவும் உயி ருக்கே உலேவைக்கவும் முற்பட்டனர். கூட்டங்களுக்கு வந்தால்
26

·gr→r, 1니rmrr康寧64 g(urT6월 T*3 gPr러 활형 홍將軍&國事的3 s」』」gg頃gg ggg止d* 『ggg g崎『「gュ撃」ggegggba"」も*gengg* 、Qシ g gs』 "WEシgmg『セも)*Juコ」g gF)、モ』ggdgシgd」シg増Fed

Page 75
ミシト上*」ns*gg』g guggs ggggr gg」ngg'ooste urso, s srm so 1, og, "sự - o 9 6 1
 

கொலே செய்வதாகவும், அநாமதேய கடிதங்களாலும், தொலே பேசிகள்மூலமாகவும் அச்சுறுத்தினர். அத்தகைய சந்தர்ப்பங் களிலெல்லாம் "நான் மரணத்துக்கு அஞ்சுபவனல்ல. நீதி நியாயத் துக்காக எடுக்கப்போகும் எந்த ஒரு செயலேயும் எவரும் தடுக்க முடி யாது" எனக் கூறியவராக அத்தனேக் கூட்டங்களுக்கும் சமு கமளித்துத் தமது புதிய திட்டத்தை விளக்கி வைத்தார்.
பாடசாலே கஃாக் கையேற்கும் திட்டத்தின்கீழ் தன்னல் ஆரம்பிக்கப்பட்ட கம்பளே ஸாஹிராக் கல்லூரியை முதன்முத லாக அரசாங்கத்துக்குக் கையளித்து, கையேற்பு விவபவத்தை ஆரம்பித்து வைத்தார். இவரது இந்தத் துனிச்சலான செய லேக் காலத்தால் மறந்துவிட முடியாது.
இவர் கிராமபுறப் பாடசாலேகளில் விஞ்ஞான தொழிற் கல்விக்கான வசதிகளே அதிகரித்தார். நாட்டின் கல்வி முறையை மேலும் வளமுறச் செய்வதற்காகத் தேசியக் கல்விக் கமிஷன் ஆகியவற்றை உருவாக்கினர். கல்விப் பகுதி நிருவா கத்திலும் பெரும் சீர்திருத்தங்களே ஏற்படுத்தினுர், நிர்வாக முறைகளே மாகாண ரீதியில் பரவலாக்கினூர். இதனுல் கிராமப் புற மக்கள் பல நன்மைகளேப் பெறலாயினர். கல்வியதிகாரி களின் தொகையையும் அதிகப்படுத்தினூர், கல்விப் பகுதியின் நிதி விநியோகத்தில் சிங்கள மக்களுக்கு 80%மும் தமிழ் மக் களுக்கு 12%மும் முஸ்லிம்களுக்கு 8%மும் சமுக ரீதியில் மக்கள் சனத் தொகைக்கு அமைவாகப் பகிர்ந்தனித்ததன்மூலம் சகல ருக்கும் நியாயபூர்வமான கல்வி உரிமைகளே வழங்க முன் வந்தார்.
முஸ்லிம் கல்வி
தமது பதவிகாலத்தில் முஸ்லிம்களது கல்வித் துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களே ஏற்படுத்தினூர். அதுவரை கால மும் இருந்துவந்த முஸ்லிம்களது கல்விக் குறைபாடுகளேத் தாமே முன்னின்று நிவர்த்தி செய்தார். பாடசாஃகள் இல்வா மலிருந்த முஸ்லிம் கிராமங்களுக்குப்பாடசாலே வசதிகளே உண்டாக்கிஞர். தேவையான அளவு முஸ்லிம் ஆசிரியர்களே
27

Page 76
யும், தலைமை ஆசிரியர்களையும், மெளலவிகளையும் நியமனஞ் செய்ததோடு, விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்வித்துறைகளில் விசேட பயிற்சி பெற்ற முஸ்லிம்களையும் நியமனஞ் செய்தார். முஸ்லிம் பட்டதாரிகளின் தொகையை அதிகரித்தார். முஸ் லிம் வித்தியாதரிசிகள், கல்வி நிர்வாகிகள் ஆகியோரும் நிய மனம் பெற்றனர். இதனுல் பிற்காலத்தில் முஸ்லிம்களின் கல் வித்துறையில் தங்குதடையற்ற முன்னேற்றத்தைத் தீர்க் காலோசனையுடன் ஏற்படுத்தினர். இவர்தமது காலத்தில் மத்ர ஸாக் கல்வி முறையிலும் மாற்றங்கள் செய்து 'அல் ஆலிம் பரீட்சையையும் ஆரம்பித்தார். இஸ்லாமிய கலாசார அடிப் படையிலான பாடப் புத்தகங்கள்ை உருவாக்குவதற்குப் பாடப் புத்தகக் குழுவொன்றை நியமனஞ் செய்தார். உயர் வகுப்பு முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாமிய இலக்கியங்களைப் பயில்வதற் கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தினர்.
இலங்கை வானெலியில் முஸ்லிம்களுக்கென விசேட பிரி வொன்றை உண்டாக்கி வைத்தார். அதனல் வார்த்துக்குப் பத் தொன்பதரை மணி நேரம் முஸ்லிம் நிகழ்ச்சிக்கென ஒதுக்கப் படலாயிற்று. இவ்வாருகக் கல்வித்துறையிலும், ஏனைய முஸ் லிம் கலாசாரத் துறைகளிலும் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்தார்.
கெளரவ கலாநிதியானுர்
இந்த நாட்டுக் கல்வித்துறையிலே மறுமலர்ச்சியை ஏற் படுத்தி, சகல இன மக்களும் சமமான கல்வியைப் பெறுவதற் கான வாய்ப்பை வழங்கியதனுலும் சிறந்த கல்விமானுக விளங்கி யதனுலும் புதுடில்லி, டோக்கியோபோன்ற நகரங்களில் நடை பெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு இலங்கைக்குப் புகழ் தேடித் தந்ததனுலும், ஜனப் பதியுத்தீனுக்கு இலங்கைப் பல் கலைக் கழகங்கள் கெளரவ கலாநிதிப் பட்டமளித்து கெளர வித்தன. வித்தியாலங்காரப் பல்கலைக் கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் (LL.D.) பட்டத்தை வழங்கிச் சிறப்பித் தது. வித்தியோதய பல்கலைக் கழகமும் அவருக்கு (D.Litt)
28

பட்டமளித்துப் பாராட்டியது. 1970ஆம் ஆண்டு கொழும்பு வளாகப் பல்கலைக்கழகம் (D. Lit) பட்ட மளித்துள்ளது.
சுகாதார வீடமைப்பு மந்திரி
இதையடுத்து ஜனப் பதியுத்தீன் சுகாதார வீடமைப்பு மந் திரியாகப் பதவி வகித்தும் புரட்சிகரமான மாற்றங்கள் பலவற் றைச் செய்தார். அரசாங்கவைத்தியர்களின் பிரத்தியேகமான சிகிச்சை முறையை ஒழிக்கும் சட்டத்தைப் பல எதிர்ப் புக்களுக்கிடையே ஜனப் பதியுத்தீன் அமுலுக்குக் கொண்டு வந்தார். எல்லா வைத்தியர்களும் அரசாங்கத்தின் மூலம்ாகவே பிரத்தியேக வைத்தியம் செய்வதற்கான ஒரு திட்டத்தையும் (Chanelled System) அவர் ஏற்படுத்தி வைத்தார்.
நகர சபைப் பிரதேசங்களிலும், கிராமப்புறங்களிலும் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதில் அவர் விசேட கவனஞ் செலுத்தி வந்தார். இந்நாட்டு வைத்திய முறைகளான ஆயுள்வேத, சித்த, யூனணி வைத்தியங்களுக்குக் கெளரவமான இடமளித்து அவற்றின் வளர்ச்சிக்கான முயற்சிகளையும் மேற்
Gosnet L-frii.
பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் என்ற முறையில் ஜனப் பதியுத்தீன் தற்சமயம் இக்கட்சியின் முன் னேற்றத்திற்காக அயராது உழைத்து வருகின்றர். இந்நாட்டு முஸ்லிம் சமுகத்திலுள்ள முற்போக்குச் சக்திகளனைத்திற்கும் ஜ்ளுப் பதியுத்தீன் இணையற்ற தலைவராகத் திகழ்ந்து வருகிருர், முற்போக்குக் கொள்கைகளையுடைய முஸ்லிம்கள் அனைவரும் அவரது தலைமையின்கீழ் இஸ்லாமிய சோஷலிஸ முன்னணியில் திரண்டிருக்கிறர்கள். இந்நாட்டில் ஒருசிறந்த சோஷலிஸ சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஜனப் பதியுத்தீனுடைய முயற்சிகளுக்கு அவர் தமது அபிமானிகளிடையே பெற்றுள்ள செல்வாக்குப் பெரிதும் உதவி வருகின்றது.
இந்நாட்டின் முன்னேற்றச் சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி 1964ஆம் ஆண்டில் சோஷலிஸ் சமுதாயமொன்றை
29

Page 77
உருவாக்க உறுதிகொண்ட ஒரு சுட்டாட்சியை ஏற்படுத்து வதில் முக்கிய பங்கெடுத்துக்கொண்டவர்களுள் ஜனுப்பதியுத் தீனும் ஒருவராவர்.
1985ஆம் ஆண்டு தேர்தலில் சுதந்திரக் கட்சி ஆட்சிப் பலத்தைப் பெற முடியாமற் போனதைத் தொடர்ந்து ஜஞப் பதியுத்தீன் கட்சிப் பலத்தை மேலும் வலுவடையச் செய்வ தில் முழுமூச்சுடன் பாடுபடலாஞர். எனினும் முன்னிலும் பார்க்கக் கூடுதலான அளவு முஸ்லிம்கள் அந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களாக இருக்கக்கூடிய ஒரு நிலையை உருவாக்கிஞர். மூதூர்த் தொகுதியிலிருந்து ஜனுப் ஏ. எல்.ஏ. மஜீத் சுதந்திரக் கட்சி உறுப்பினராக எதிர்க் கட் சியில் இடம்பெற்றிருந்தார். அதன்ேத் தொடர்ந்து நடை பெற்ற கல்முனே இடைத் தேர்தவில் ஜகுப் ஏ. சீ. அஹ்மத் சுதந்திரக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றியீட்டி ஞர். முஸ்லிம்களுக்கெனத் தனியாசு இயங்கி வந்த அரசியற் as 'fit star இஸ்லாமிய சோஷலிச முன்னணியை இலங்கையில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களிற் பரவலாக்கிப் பல கிளே களும் ஸ்தாபிக்கப்பட்டன. இதன் காரணமாக 1970ஆம் ஆண்டுத் தேர்தலின்போது ஜனணுயக சோஷலிச அடிப்படை யிலான கொள்கைகளிற் பெரும் பகுதியினர் தமது கவனத் தைத் திருப்பலாயினர், அதனுல் 1970ஆம் ஆண்டுத் தேர்த வின்போது முஸ்லிமல்லாத சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் பலர் முஸ்லிம்களின் வாக்குப் பலத்தால் வெற்றியீட்டினர். மூதூர், கல்முனே, புத்தளம், பேருவனே ஆகிய தொகுதிகளி லிருந்து முறையே ஜஞப்கள் ஏ.எல்.ஏ. மஜீத். எம். சி. அஹ் மத், அசன் குத்தூஸ், ஐ. ஏ. காதர் ஆகியோரும் வெற்றிபெற லாயினர். இந்தத் தேர்தலில் ஐக்கிய முன்னணி பெரும்பான் மைப் பலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனுப் பதியுத்தீனின் தலைமையில் முஸ்லிம்கள் அளித்த ஒத்துழைப்பை ஐக்கிய முன் னணி அரசாங்கம் மதிக்கத் தவறியதில்லே, சுதந்திரக் கட்சியின் உபதஃலவராகவும் அக்கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராக வும் விளங்கிய ஜனுப் பதியுத்தீன் மீண்டும் நியமன அங்கத்தவ ராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டு கல்வி அமைச்சராகவும் நிய
மிக்கப்பட்டார்.
30

டில்லியில் நடைபெற்ற சாம்ராஜ்யக் கல்வி அமைச்சர்கள்
போது, இலங்கைக் கல்வியமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் பதிபுத்தின் மஹ்மூத் அவர்களே இந்திய ஜனதிபதி கலாநிதி சர். எஸ். ராதா
கிருஷ்ணன் ராஜ்யப3 னரில் வரவேற்கிருர்,
மாநாட்டின்

Page 78
Egg」se ショ傾ニ g Eas『たこgコミgg増たug シeb シggJQ ショ*5年egg g& bas e セシュ たョ*』g ョョg『Q gコggg pgg ggeQ『・g「コこョQJミg gg「h"上に3 KYKK LL LLLLLSYLLKL 00LYLYLL LLLLLLSZYJLL 0SZYY SLLLL L YY YYYJY **&m유g心理字3&g 'Ag ArT院)rm음력國的)道「Tig ggm&simp;#7民的rT "&u院는, *n 효용% 행ww高地uurign仁4 "황g/rg &A
*
:*)| || .
o ,,,*o
德후
「翼-*
 

கல்விச் சீர்திருத்தம்
ஜனுப்பதியுத்தீன் இந்த நாட்டின் கல்விமுறையைத் தேசிய மயமாக்கிச் சகலருக்கும் கல்வித்துறையில் சமசந்தர்ப் பம் வழங்கிய பெருமையை 1962ஆம் ஆண்டு கல்வியமைச்ச ராக இருந்தபோது பெற்றுக்கொண்டார். எனினும் அவர் பதவி வகித்த அந்தக் குறுகிய காலத்தில் கல்விச் சீர்திருத்தங் கண் நிறைவேற்றப் போதிய அவகாசமில்லாதவராக இருந் தார். தாம் மீண்டும் கல்வியமைச்சரானதும் அந்தச் சீர்திருத் தங்களில் முக்கிய கவனஞ் செலுத்தினுர், ஆங்கில ஆட்சி முறை யினுல் ஏற்பட்டு வந்த பயனில்லாக் கல்வி முறையையும் வேலே யில்லாத் திண்டாட்டத்தையும் நீக்க முன்வந்தார். படித்த வாலிபர்கள் மத்தியிலே அமைதி குன்றி கட்டுப்பாட்டை மீறுத் தன்மையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கும் நாட்டின் சமூக அமைப்பு, பொருளாதாரம், கலாசாரம், உள்நாட்டு மூலதனங்களேப் பயன்படுத்தும் சுயதேவைப் பூர்த்தி, விஞ் ஞான தொழில் நுட்ப வளர்ச்சி என்பனவற்றை மையமாகக் கொண்ட புதிய கல்வித் திட்டமொன்றை உருவாக்கலாஞர். வளர்ந்து வரும் புதிய சமுதாயத்தின் சிந்தனேகளேயும் உணர் வுகளையும் செயற்பாடுகளையும் நாட்டுக்கும் சமூகத்துக்கும் உருப்படியான முறையில் பயன்படுத்துவதே புதிய கல்வித் திட்டத்தின் முக்கியமான குறிக்கோளாக அமைந்துள்ளது. இதற்கு அமைவாகப் பாடங்களே ஒருமுகப்படுத்திய புதிய போதன முறையொன்றும் அமுல் நடத்தப்படுகின்றது. இத &னத் துரிதப்படுத்தும் நோக்கத்தினல் 1973ஆம் ஆண்டு முதல் ஆகும் வகுப்பிலும் முதலாம் வகுப்பிலும் புதுமுறைப் போத னேகள் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளன. 1975ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகவுள்ள தேசியப் பொதுக் கல்வித் தராதரப் பரீட்சைக்கு இத்திட்டங்கள் வழிவகுப்பதோடு மாணவரது ஆற்றலுக்கும் திறமைக்கும் ஏற்ப ஏதாவதொரு தொழிற்துறை யைப் பெற்றுக்கொள்ளவும் இக்கல்வி முறை பயன்படவுள் ளது. சூழலுக்கு இயைந்த தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்து கல்வி போதிக்கப்படுவதனுல் மானவர்கள் சுயமா கவே தங்களுக்கேற்ற தொழில்களில் ஈடுபாடு கொள்ளவும்
B

Page 79
வாய்ப்பேற்படுகின்றது. அதே நேரத்தில் பிரதேசஅடிப்படை யிலான கல்வி மாற்றங்களினுல் நகர்ப்புறங்களில் வசதி படைத்த மாணவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உயர்கல்வி வாய்ப்புக்களேக் கிராமப்புறத்து மாணவர்களும் பெற்றுக் கொள்ளக்கூடியதான சமவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இதனுல் கல்வி முறையில் இதுவரை காணப்பட்டு வந்த ஊழல் கள் நீக்கப்படுவதோடு, நாட்டின் தேவைக்கேற்பக் கல்வியைப் பயனுள்ளதாகவும் பரவலாகவும் கற்பிக்க வழிபிறக்கின்றது. தூரநோக்குடன் உருவாகியுள்ள ஜனுப் பதியுத்தீனின் புதிய கல்வித் திட்டத்தை உலகநாடுகள் பல பாராட்டியுள்ளன. இந்த நாட்டின் சமுகத்தின் தேவைகளுக்கு ஏற்ப புதியதொரு சமுதாயம் எதிர்காலத்தில் இந்தப் புதிய கல்வித் திட்டத்தால் உருவாகுமென்பதிற் சந்தேகமில்லே,
பல்கலைக்கழகச் சீர்திருத்தம்
ஆரம்ப உயர்கல்வி முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப் பதுபோல பல்கலைக்கழகக் கல்வி முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய பல்கலைக்கழக சீர்திருத்தச் சட்டத் தின்படி இந்த நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களையும் 伊@ முகப்படுத்தி போதனுபிடங்களும் திருத்தியமைக்கப்பட்டுள் ளன. இதஞல் அரசாங்கத்தின் அணுவசியமான செலவினங்கள் குறைக்கப்பட்டிருப்பதோடு உயர்மட்டக் கல்வித்துறையிலும் சீரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்டுப்பத்தையில் புதிய வளாகமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் பல பாகங்களிலும், புதிய தொழில் நுட்பக் கல்லூரிகள் பல ஆரம் பிக்கப்பட்டுள்ளன. மேலும் சில பல்கலைக்கழக வளாகங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனுல் உயர் கல்வி வாய்ப்புக்களே மேலும் பரவலாக்கினர்.
32

SL00LLY S S SLTT SYK KYK LLLYJSKY LLLLLSKKKSKK KKKK KYYTLLLLSYYYY KTLY 00 LY YYS LLK SKSK LLLK 0KKYLLL LLLLL YYLK SYYYK YZYK 寸项响唱g近崛me时g 44) huep-hupT;g 阿阿uu)与唱片后启图 SLLLLL SL SLL LSY SLLL YYYYSLLLLL YYLLKSKL L YYTTSZSKYYYYLLCKYY
乳劑n nuen。到「引g喻唱g雷增négé國唱白回。原唱了日g噸***Igne@ *T馬戶迴己匈
s|× # |- |- |
|-

Page 80
生き点gsgug」*g*g『ミョ』『s g&gg シミgュ範」Q ggこngF た「snシ „sose egg-, savo #1 diseg) leges so se lleođồ Isosssssssss sofisalego sisus op 'n sidorųoğ
 

டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் முங் விம்கள் அரசி யவில் பின்தள்ளப்பட்டனர். ஆட்சி மன்றத்திலே முஸ்லிம்களுக் குப் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லே. இலங்கையின் பல பாகங்களிலும் சிதறுண்டு வாழ்ந்த முஸ்லிம்களால் தனிப் பட்ட தேர்தற்தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற முடிய வில்ஃ. இதனே முஸ்லிம்கள் ஆட்சேபித்தனர். ஆணுல் பயன் கிட்டவில்ஃவ. அதனைத் தொடர்ந்து உருவானதுதான் அகில இலங்கை முஸ்லிம் அரசியல் மகாநாடாகும். 1939ஆம் ஆண்டு இந்த மகாநாட்டின் செயலாளராக ஜனுப்பதிபுத்தீன் பணி பாற்றினுர், இந்த மகாநாட்டின் மாபெரும் கூட்டமொன்றை ஜகுப் பதியுத்தீன் 1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு ஸ்ாஹிராக் கல்லூரியில் கூட்டினூர். ஈழத்து இ ஸ் லாமியரின் வரலாற்றிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தோர் மகாநாடாகவே அது அமையப்பெற்றது, அகில இலங்கையிலுமிருந்து ஏராளமான முல்விம் பிரதிநிதிகள் அர சாங்கத்துக்குத் தங்களது ஆட்சேபனைகளேத் தெரிவிப்பதற்காக அன்று கூடிவிட்டனர். இந்த மகாநாட்டின் மூலம் இலங்கையின் கவர்னர் முதல் இங்கிலாந்தின் குடியேற்ற நாட்டு மந்திரி, ஏன்! மன்னர் வரையும் முஸ்லிம்களின் உரிமைக் குரலே எத்தி வைத்தனர்,
முன்ஞ)ள் அமைச்சர் சர் மாக்கான் மாக்கார் தலேமை யில் ஜனுப்.டி.பி. ஜாயா, டாக்டர் எம். வி. எம். களில், ஏ. ஆர். ஏ. ராஸிக் ஆகியோரையும் மகாநாட்டில் பங்கு
33

Page 81
கொள்ளச் செய்து முஸ்லிம்களின் அரசியல் உரிமைப் பி ர ச் சனைகளைக் கிளப்பி, பிரேரணைகளைச் சமர்ப்பிக்கவும், அரசியல் உரிமைபற்றிப் பேசவும் வழிசெய்தார் ஜனப் பதியுத்தீன். அன் றைய தினத்தில் அவர் நிகழ்த்திய உரையானது, இந்த நாட்டு முஸ்லிம்களிட்ையே அரசியல் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுவதா கவே அமைந்து விட்டது.
இ
தனக்கும் காலாக இருந்து செயல்வீரம் புரிந்த பெருமை ஜனப் பதியுத்தீனுக்கே உரியதாகும். இந்த மகாநாட்டைப் பிரதிபலிக்கும் வரலாற்று நூலொன்றையே ஜனப் பதியுத்தீன் செயலாளர் என்ற முறையில் வெளியிட்டார். மகாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய அதன் பிரதிகளை; இங்கிலாந்தின் மன்னர், குடியேற்ற நாட்டு அமைச்சர், இலங் கையின் கவர்னர் ஆகியோருக்கும் அனுப்பிவைத்தார்.
Proceedings of the all Ceylon Muslim Political Conference, held at the Zahira College on 5th March 1939 on the
Reforms of the constitution compiled and published for and on behalf of the All Ceylon Muslim Political Conference Committee by.
M. N. M. Badiudin B. A. (Hon) M. A. (Alligarh) Hony Secretary, All Ceylon Political Conference Committec 1939 Colombo."
என்ற நூலின் முகவுரையில் ஜனுப். பதியுத்தீன எழுதியுள்ள பின்வரும் உரையையும் நோக்கலாம்.
*இலங்கையில் பிரிட்டிஷாரின் ஆட்சி தோன்றியதிலிருந்து இந்த நாட்டு அரசியல் திட்டத்தில் காலத்துக்குக் காலம் u a) மாற்றங்கள் தோன்றலாயின. 1931 ஆம் ஆண் டு டொனமூர்' அரசியல் திட்டம் அமுலாகும் வரையும் இன அடிப்படையிலேதான் அம்மாற்றங்கள் நிகழ்ந்துள்ளள.
34
 

இனவாரியான பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டதனுலும், பெரும் பாலான கல்வியறிவற்ற முஸ்லிம்களின் பிரதிநித்து வம் கேள்விக்குரிய தொன்முகவும், பரிதாபகரமானதாகவும் மாறிவிட்டது.
இந்த நாட்டிலே தனிப்பட்ட, தனித்துவம் மிக்க ஓர் இன மாகவாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் 1923 ஆம் ஆண்டின் அரசியல் சட்டப்படி அகில இலங்கைரீதியில் மூன்று முஸ்லிம் களைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து கொள்ளும் உரிமை யைப் பெற்றிருந்தனர். ஆனல் 1931 ஆம் ஆண்டு அவர்கள் அரசியல் அநாதைகளாகி விட்டார்கள்.
"தொகுதிவாரியாக நடைபெறும் தேர்தல் வெள்ளத் திலே நீந்துங்கள், போட்டியில் வெற்றியீட்டுங்கள். இன்றேல் மூழ்கிமடியுங்கள்" இதுதான் எமக்கு விடப்பட்டுள்ள இன்றை யச் சவாலாகும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியைக் கண்டித்து-அகில இலங்கை ரீதியில் தனது செல் வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம்களது ஆட்சேபனைக் குரலைத் தட்டியெழுப்புவதற்குச் சக்திவாய்ந்த ஒரேயொரு இயக்கமான முஸ்லிம்லீக், அகில இலங்கை அரசியல் மகாநாடு ஒன்றை உரு வாக்கியது. இதன் பயணுக 1931-ஆம் ஆண்டு, சக்திவாய்ந்த தூ துக் குழு வொன்றை இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்க முடிந்தது.
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அரசியல் அ நீ தியை இத் தூதுக்குழு இங்கிலாந்தின் உயர் அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறியுள்ளது. அந்தஸ்தும் செல்வாக்கும் படைத்த பத்தாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் கையெழுத்திட்ட மகஜரொன்றும் குடியேற்ற நாட்டு மந்திரியிடம் கையளிக்கப் பட்டது. இங்கிலாந்தின் உயர் அதிகாரிகளும் நமது சமுகத் துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை உணர்ந்து கொண்ட தனல் முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுப் பதாக உத்தரவாதம் அளித்தனர்.
பின்னர் சர், சாமுவேல் வில்சன் சிங்கப்பூருக்கு முக்கிய மான ஓர் அலுவலாகச் செல்லும் வழியில், இலங்கைக்கு
35

Page 82
வந்து, டொனமூர் திட்டத்தின் நடைமுறைகளைப் பற்றிய சாட்சியங்களைச் சேகரித்தார். அவ்வாறு நடைபெற்ருலும், முஸ்லிம் சமுகத்தின் இன்றைய நிலையில் எந்தவிதமான மாற்ற மும் ஏற்படவில்லை. என்ருலும், தாராள மனம் படைத்த சர். எட்வட் இஸ்டப் (Sir Edward Stubbs) முஸ்லிம்களின் மீது கருணை காட்டும் முகமாகத் தற்போதைய அரசாங்க சபைக்கு இரண்டு முஸ்லிம்களை அங்கத்தவர்களாக நியமனஞ் செய்தார்.
சர். அன்று கால்டிகட், கவர்னராக வந் த ைத த் தொடர்ந்து முஸ்லிம்களிடையே புதியதொரு நம்பிக்கை ஏற் படலாயிற்று. குடியேற்ற நாட்டு மந்திரியும், சர். அன்று விடம், அரசியல் திட்டத்தில் செய்யப்பட வேண்டிய புதிய மாற்றங்களை அங்கீகரித்து அனுப்புமாறு வேண்டினர். கவர் னரும், இந்த நாட்டைச் சேர்ந்த எல்லாச் சமுகங்களினதும் அபிப்பிராயத்தைப் பெற்றுக் குடியேற்ற நாட்டு மந்திரிக்கு ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். ஆனல், அந்த அறிக்கை பிரசுரமான போதுதான், முஸ்லிம்களாகிய நாங்கள் பலத்த ஏமாற்ற மடைந்தோம். எதிர்பார்த்த எந்த அம்சமும் அதிற். காணப்படவில்லை. அதனல், முஸ்லிம்களின் அரசியல்வாழ்வே இருள் சூழ்வதாயிற்று. கவர்னரின் அந்தச் செயல்தான் முஸ் லிம்களை மேலும் ஒருபடி செயலில் இறங்கத் தூண்டிவிட் டது. அதனல், பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு கொண்டி ருந்த முஸ்லிம் பிரமுகர்கள் ஒருமுகமாக ஒன்று கூடிச் சமு தாயத்தின் நிலையை ஆராயத் தொடங்கினர். அதன் பயன கவே அகில இலங்கை முஸ்லிம்களின் அரசியல் மகாநா டொன்று, கொழும்பு சாஹிரா க் கல்லூரியில் 1939 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் திகதி சர். மாக்கான் மாக்கார்
தலைமையில் ஒன்று கூடியது.
1905 ஆம் ஆண்டு நடந்தேறிய துருக்கித் தொப்பிப் பிரச்சனைக்குப் பின்னர், முஸ்லிம்கள் கலந்து கொண்ட இது போன்றதொரு பெருங் கூட்டத்தை எ வரும் கண்டிருக்க மாட்டார்கள். பல்வேறு தரப்பட்ட அபிப்பிராயங்கொண்ட வர்களும் இந்த மாநாட்டில் காட்டிய உணர்ச்சிமிக்க அரசி
36

யல் ஆர்வத்தை மறப்பதற்கில்லை. மக்கள் வெள்ளம் சாஹி ராக் கல்லூரியில் நிரம்பி வழிந்தது. கல்லூரி நடைபாதை மூலை முடுக்குகளிலெல்லாம் மக்கள் குழுமி நின்றனர்.
அன்று நடந்தேறிய த லைவர் உரை, பிரேரணைகள், பிரேரணைகளைச் சார்ந்த சொற்பொழிவுகள்; என்பன இந் நூலில் சுருக்கமாக அலசி ஆராயப்பட்டுள்ளன.
இந்த நாட்டு முஸ்லிம்களது அரசியலைப் பற்றி அக்க்றை யற்று இருக்கின்ற ஆட்சிபீடத்து மேலதிகாரிகளின் பார்வை களை எங்களது பக்கமாகத் திருப்பச் செய்யும் முயற்சியே இது எமது இந்த முயற்சியில் தோல்வி காணப்படமாட்டாது.
எம். என். எம். பதியுத்தீன்
GsFuavrrantri **ருபாளு” இலங்கை முஸ்லிம் அரசியல் வெள்ளவத்தை. மகர்ந்ாடு
37

Page 83
மாநாட்டில் ஜஞப். பதியுத்தீன் நிகழ்த்திய உரை
தலைவர் அவர்களே ! பிரதிநிதிகளே! பிரமுகர்களே!
நிகழ்ச்சி நிரலில் உள்ள நான்காவது பிரேரணையைச் சமர்ப் பித்துப் பேசுவதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் எவ்வளவு முக்கியமானவையோ அவற்றைவிட நான் சமர்ப்பிக்கும் பிரேரணையும் மிக முக்கியமானதாகும். அதனல் இந்தப் பிரேர ணையும் ஏகமனதாக நிறைவேறுமென நம்புகிறேன். 1905 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்காக ஒற்றுமை யுடன் ஒன்று கூடியிருப்பது இதுவே முதற்தடவையாகும். அரசாங்கசபையில் முஸ்லிம்களுக்குப் போதியளவு பிரதி நிதித்து வம் பெறுவதை வலியுறுத்து வதற்காகவே இந்த மாநாடு உரு வாக்கப் பட்டுள்ளது.
சகோதரப் பிரதிநிதிகளே! நீங்கள் ஈழத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வருகை தந்துள்ளிர்கள். உங்களது மாகாணத் தின் அல்லது பட்டிணத்தின் விஞ்ஞாபனத்துடன் இங்கு அமர்ந் துள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாகவே சமுதாயத்திற்கு நிறை வேற்றவேண்டிய மிக முக்கியமான கடமையை நிறைவேற்றி விட்டீர்கள். இந்தப் பலம் வாய்ந்த மகாநாட்டிலே மிகமுக்கிய மானதொரு பிரேரணையைச் சமர்ப்பிப்பதில் நானும் மகிழ்ச்சி யடைகின்றேன்.
இந்தப் பிரேரணையைச் சமர்ப்பிக்கும் அதே நேரத்தில் அண்மையில் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஓர் அறிக் கையை ஈண்டுகுறிப்பிட விரும்புகின்றேன். பிரஸ்தாப பத்தி
38

ரிகை என்னையும், சர். மாக்கான் மாக்காரையும் நாம் எடுத்து வருகின்ற சமுக நடவடிக்கைகளுக்காக " இருவரும் இனத்து வேசத்தைக் கிளப்புபவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளது. அந் தப் பத்திரிகை அதனை ஒரு குற்றச்சாட்டாகக் கூரு விட்டா லும், எனது அரசியற் கருத்துக்களும், நான் கூட்டிய இந்த மகாநாடு பெற்றுவரும் முக்கியத்துவமும் வெகுவாகப் பாதிக் கப்பட்டுள்ளது. இதனலேயே நான் இதனைச் சுருக்கமாக விளக்க முனைந்தேன்.
இரண்டு ஆண்டுகட்கு முன்னர் நான் அலிகாரிலிருந்து திரும்பியபோது, ஒரு பரந்த தேசியவாதி என்பதை வெளிப் படையாகவே காட்டிவந்துள்ளேன். இன்றைய இந்த மகத் தானதும் முக்கிய மானதுமான மகாநாட்டிலும் கூட. நான் ஒரு தெளித்து வடித்த தேசியவாதி யென்பதைத் தான் வலியுறுத்த விரும்புகின்றேன். அலிகார் சர்வகலாசாலையில் நான் பயிலும் போது அங்கு சர்வதேச தேசிய வாதத்தையன்றி வேறு எதனை யும் அனுமதிக்கவில்லை. அந்த மனப்பான்மையானது தேசிய வாதத்தைவிடவும் ஒரு படி முன்னேறியதாகும்.
தேசியமென்ருல், ஒருநாட்டின் அரசியல் சமுகத்துறைகளில் காணப்படும் குறைபாடுகளைக் கண்மூடித்தனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதல்ல. தேசியமென்ருல் ஒரு நாட்டில் வாழும் ஒரு பகுதியினர் இன்னெரு பகுதியினரது மூலாதாரமான உரிமைகளில் கைவைப்பதற்காக ஊக்கமூட்டுவதுமல்ல. சுயநல ஆதிக்க மனப்பாங்கு கொண்ட ஒருவித மயக்க வெறியினலே தான் அத்தகையவர்கள் தங்களை நினைத்துக் கொள்ளுகின்றனர். சிறுபான்மையினரின் செலவில் பெரும்பான்மையினர் செய்யும் குறை களை யும், நிறைகளையும் வெறுமனே பார் த் துக் கொண்டிருப்பதும், ஆமாம் போடுவதும் தேசியமல்ல. அவ் வாறு செயற்படுவது தவருண போலித்தனமான தேசப் பற் ருகவே அமையும். ஒரு குறிப்பிட்ட இனத்தாரின் உரிமைகளை மறுப்பதனல் தான் பெரும்பான்மையினர் வாழலாம் என்ற மனப்பான்மையினல் தேசிய மென்ற உயரியலட்சியத்தை அடையமுடியாது. அவ்வாறு செய்யும் போது, பின் தங்கிய வர்கள் தேசிய சங்கிலியில் பலமற்றவர்களாக இணைவதால்
39

Page 84
நமது நாடு அடையவேண்டிய தேசிய இல்க்கைச் சென்றடைய முடியாமற் போய்விடும். எனவே இந்த மகாநாட்டின் நோக் கங்களுக்கு அமைவாக நேர்மை, நியாயம், புத்திக் கூர்மை, ன்ன்பனவற்றைக் கையாண்டு எனது பூரண ஒத்துழைப்பை நல்குவதற்காக உங்களின் முன்னுல் நிற்கின்றேன்.
நான் இந்தியாவில் இருக்கும்போது எல்லாவிதமான வகுப்பு வாதச் சக்திகளுக்கும் எதிராகப் போரிட்டேன். ஏற்கனவே அங்கு ஸ்தாபிக்கப்பட்டிருந்த ** அகில இந்திய மாணவசம் மேளனத்திற்கு" எதிராக ஒரு முஸ்லிம் மாணவ சம்மேள னத்தை ஏற்படுத்தச் சிலர் முயன்றனர், அன்று நான். அதனை எதிர்த்து வெற்றியுடன் நடாத்திய போராட்டத்தைத் திருப்தி: யுடனும், மகிழ்ச்சியுடனும் இன்றும் நினைவு படுத்த விரும்பு கின்றேன்:
ஆகவே முழுமையான சுதந்திரத்திற்காக முயற்சிக்கும் எனது சிங்களக் குடி மக்களுக்கு நானும் அவர்களில் ஒருவன் என்பதை உறுதிப்படுத்தவிரும்புகின்றேன், ஆவலோடு உற்று நோக்குகின்றவர்கள் என்னை ஓர் சட்டபூர்வமான பிரசை யாகவும் கலாசார இலட்சியங் கொண்டவனுகவும். ஏற்றுக் கொள்ளலாம் இத்தீவிலுள்ள எமது சமுகத்திலும் என்னிலும் நம்பத்தகுந்த நண்பர்களையும், பண்புமிகு அயலவர்களையும் காணக்கூடியதாக உள்ளது என்பதை இவர்களுக்கு மேலும் தெரிவிக்க விரும்புகின்றேன், இத்தீவின்கண் வாழும் எ மது ஆண், பெண் மக்களில் நின்றும் நாட்டுப்பற்றும், அபிமானமும் கோரப்படும் போதும், இத்தீவு ஓர் உன்னதமான சுய கெளர வம் பெற்ற நாடாக உலக சம்மேளனத்தில் திகழவும், என் சமுகத்தவர்களிடமோ, என்னிலோ எந்தவித குறைபாடுகளை யும் காணக்கூடியதாக இருக்கமாட்டா தெனவும் உறுதிப் படுத்துகின்றேன். உலகில், இலங்கை ஒர் மகிழ்ச்சியுறும், சந் தோஷமிக்க விருத்திபெற்ற நாடாக அமைவதற்கு எடுக்கப் படும் முயற்சிக்கு ஒரு பகுதியினரால் மாத்திரம் உரிமைகோர முடியாது. சட்டபூர்வமாக ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அதில் இடமுண்டு. ஒளிமயமான எதிர்காலத்தையடைய நான் வேண்டிய தியாகங்களைச் செய்வேன் எனவும், எனது வலிமை
40

மிக்க சமுகத்தவர்களும் அதற்குப் பின் நிற்கமாட்டார்கள் என்பதையும் உறுதியாகக் கூறவிரும்புகின்றேன். தான் ஒரு தேசியவாதியாகவும், உண்மையான இலங்கைப் பிரஜையாக வும் திகழ்ந்தமையால் அலிகாரிலிருந்து நாடு திரும்பியதும், உதவியற்றுக்கிடக்கும் இந்த நாட்டின் ஒரு பகுதியினருக்கு உதவி நல்கவும், அவர்களை ஒரு சக்திவாய்ந்த அணியாக ஏனைய சமுகங் களுடன் திகழுமாறு அமைக்க வேண்டுமென்ற கடமையுணர்ச் சியுடன்" உணர்ந்து பல தடவை க ளி ல், பல மேடைகளில் காலத்திற்குக் காலம் பேச்சுகளை நிகழ்த்தியுள்ளமையை நேர்மையாக ஏற்றுக்கொள்கின்றேன். உதவியற்றுக்கிடக்கும் இப்பகுதியினருக்கு இப்போதே ஒரு தீர்க்கமான முடிவு காணு விடின் இது இலங்கையின் குறிக்கோள்களை அடிைவதற்கு ஒரு தடையாக விளங்கக் கூடும். எனவே இம்மகாநாட்டின் நோக் கத்திற்காகவும் குறிக்கோள்களுக்காகவும், மேலும் இதுவே சிறந்த, கெளரவமான, புத்திசாலித்தனமான முடிவு எனக் கருதி உங்களுக்குப் பூரண ஒத்துழைப்பை நல்குவேனென்று தீர்மானித்துள்ளேன்.
இந்தத்தீவில் முஸ்லிம்கள் மாத்திரமே மற்றெல்லா இனங் களை விடவும் மிகத்தாழ்வான முறையிற் கணிக்கப்பட்டுள்ள னர். கவர்னர்களின் அறிக்கைகளில் முஸ்லிம்களைப்பற்றி எது வும் குறிப்பிடப்படவில்லை. ஏகாதிபத்தியவாதிகளால் நன்கு கவனிக்கப்பட்டு வரும் ஐரோப்பிய இனத்தவர்கள், தேவைக் கும் அதிகமான அளவு உரிமைகளையும் சலுகைகளையும் அனு பவிக்கின்றனர். முஸ்லிம்களிலும் பத்திலொரு பங்காக வாழ் கின்ற பறங்கியமக்களுக்கு தேவைக்கும்.அதிகமான பிரதிநிதித் துவம் வழங்கப்பட்டுள்ளது. அங்குமிங்குமாக வாழுகின்ற இந்தி யர்கள் நிரந்தரக் குடிகளான எம்மைவிடவும் சந்தோஷமாக வாழ்கின்றனர். நாங்கள் ஐரோப்பியர்களை விடவோ, பறங் கியர்களை விடவோ எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்ல வர்த்தகத்திலும் ஐரோப்பியார்களைவிட நாமே உயர்ந்தவர் கள். இந்த நாட்டு வரலாற்றிலும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள், ஆன ல் இன்றைய அரசியலில் , நாங்கள் வேடர்களைப் போன்று பின்தள்ளப்பட்டுள்ளோம். ஒரு ச.மு
4.

Page 85
கம் நாட்டின் முன்னேற்றத்துக்கு அதன் பங்கை நிறைவேற்ற வேண்டுமானல் அந்தச் சமுகத்துக்குரிய அரசியல் உரிமைகள் வழங்கப்படுவது அவசியமாகும். ஒரு தனிப்பட்டவர் பெருமையு 6) யவராகவோ, திறமைசாலியாகவோ, தேசாபிமான் முடை யவராகவோ இருக்கலாம். ஆனல் அவர் வாழும் சமுகத்துக் குத் தரப்படவேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டால், அந்தச் சமுகத்தில் வாழும் ஒரு வர் எத்தகைய திறமைசாலியாக இருந்தபோதிலும் அவர் அதனல் திருப்தி காணமுடியாது. அரசாங்க சபையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சமூகம், ஏனையத் துறைகளில் எவ்வளவு செல்வாக்குப் பெற்றி ருந்த போதிலும் நாட்டின் ஏனைய மக்களோடு ஒன்றிணைந்து சமுகமாக வாழ முடியாது. இந்த நாட்டு வருமானத்துக்கு எமது சமுகம் அளித்துள்ள பங்கானது மற்றவர்களுடன் ஒப் பிடுகையில் எந்த விதத்திலும் குறைவானதல்ல. எமது மு ன் னேர் உலகச்சந்தையில் இலங்கையின் பெயரை அறிமுகப் படுத்தியதனுல் இந்த நாடு உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மற்ற வர் களைப் போலன்றி நாம் இந்த நாட்டிற்கு சமாதானமான முறையில் வர்த்தகர்களாகவே வந்தோம். இந்த நாட்டுக்கு நம்பிக்கையுடையவர்களாகவே வாழ்ந்தோம். ஏனைய சமுகங்களைவிட நாம் இந்த நாட்டுக்கு நட்பும், பணிவும் காட்டி சட்டத்திற்கு மதிப்பளித்து வந்துள் Gerrith.
நபிகள் பெருமாளுரின் காலத்துக்கு முன்னர் எமது அரா பிய முன்னுேடிகள் இலங்கையுடன் வியாபாரத்தொடர்பு கொண்டிருந்தனர். அதனல்- இந்த நாட்டுடனன எமது வர லாற்றுத் தொடர்பு சிங்கள மக்களைப் போன்றே மிகத் தொன் மையானதாகும். ஏனையோரைப் போலன்றி சிங்கள மக்களுடன் நாம் தோளொடு தோள் சேர்ந்து இந்த நாட்டின் மூ லை முடுக்குகளில் எல்லாம் தேசியப்பற்றுடனும் ஒற்றுமை மனப் பான்மையுடனும் வாழ்ந்து வந்துள்ளோம். நம் முன்னேர் அளித்துள்ள அரும்பெரும் கலாசாரப் பெருமைகளை நாம் எப்பொழுதும் காப்பாற்றியாகவேண்டும். உலக ஜனநாயக வளர்ச்சிக்கு இஸ்லாத்தின் பங்கு மகத்தானதாகும். இ ஸ்
42.

லாமிய ஜனநாயக அடிப்படையிலேதான், உலக ஜனநாயகமும் சகோதரத்துவமும் உருவாகியுள்ளது. எமது கலாசார மத நம் பிக்கைகளினல் நாம் இந்த நாட்டில் முக்கியமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளோம். அதனல், நாட்டின் அரசியலி லும் நாம் முக்கியத்துவம் பெறுவது அவசியமாகும். அதற் காக விசேட கவனிப்பும் மேலதிகப் பிரதிநிதித்துவமும் நாட் டின் அரசியல் அமைப்பில் எமக்குக்கிடைத்தேயாக வேண் டும். அப்பொழுதுதான் நாட்டின் எதிர்கால முன்னேற்றத் தில் எமது பங்கை உரியமுறையில் நிறைவேற்றி வைக்கமுடி պմ, இதுவே நமது நம்பிக்கையும் உணர்வும் ஆகும்.
இஸ்லாத்தின் தோற்றமும், வளர்ச்சியும் இந்த நாட்டின் சமுக அரசியல் பொருளாதார வளர்ச்சியிலும், விஷேடமாக வர்த்தகத் துறையிலும் முக்கிய பங்கைப் பெற்றுள்ளதால். அப்படியான ஓர் இனத்தின் உரிமையைப் பற்றிப் பேசு வதற்காக அரை டசின் அல்ல, அதற்கும் அதிகமான தொகை யினரைத் தூதுக்குழுவாக இங்கிலாந்துக்கு அனுப்பிவைப்பது எமக்குக் கஷ்டமானதொரு காரியமல்ல. எமது அரசியல் உரிமை பறிக்கப்பட்டதன் பின்னர் எமக்குச் செல்வமும், அந் தஸ்தும் இருந்து என்னபயன்?
சகோதரர்களே! இழந்துவரும் உரிமைகளை மீண்டும் பெற வேண்டுமாயின் இங்கிலாந்துக்கு ஒரு தூதுக்குழு அனுப்புவது முக்கியமானதாகும் - அப்பொழுதுதான் இம்மகாநாட்டின் நோக்கமும் பூர்த்தியடையும். இது நடைபெருவிட்டால் s7 udgi கோரிக்கைகளும் அர்த்த மற்றதாகி விடும். இன்று பதவி வெறியில் இருப்பவர்களும், மேலதிகாரிகளின் உத்தர வின்றேல் - எமது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கப் போவ தில்லை. நான் கூறுகின்ற அதிகாரிகள் இன்று இங்கிலாந்திலே இருக்கின்றர்கள்: இலங்கையில் அல்ல. எமது சிங்கள நண்பர் கள் எமது குறைகளைப்பற்றி அனுதாபங் காட்டினலும், இது வரை எமக்காக எங்கும் பரிந்து பேசியதைக் காணவில்லை. புதிய அரசியல் சட்டவிவாதங்கள் நடக்கின்றன. அதில் உள்ள வாறே யாவும் நடைபெறுகின்றன. ஆனல் முஸ்லிம்களின் போராட்டம் தனிமையாக நடந்து கொண்டிருக்கின்றது.
43

Page 86
ஜனுப்பதியுத்தீனின் பிரேரனே
" முஸ்லிம் அ ர"சி யல் மகாநாட்டின் தீர்மானங்களே இலங்கை கவர்னரின் மூலமாக குடியேற்ற நாட்டு மந்திரியின் கவனத்திற்கு க் கொண்டு வரும் அதே தே ரத் தி ல் கவர்னரைச் சந்தித்து எமது குறைகளே விளக்குவதற்காக ஒரு தூதுக்குழுவைத் தெரிவு செய்யவும் இந்தக் கோரிக் கையை மேலும் பலப் படுத்துவதவற்காக குடியேற்ற நாட்டு மத்திரியை நேரிற் கண்டு, இந்த நாட்டு முஸ்லிம்களின் குறை பாடுகளே விளக்கிக் கூற இன்னுெரு துர்துக்குழுவையும் தெரிவு செய்வது அவசியம்."
பிரேரனே ஏகமனதாக நிறை வேறியது. காவியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜஞப் ஏ.எம். சதிரீத் இந்தப் பிரேர ணேயை ஆமோதிக்ககக் கண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜனுப், ஏ. எம்.எஸ். மரிக்கார் தீர்மானத்தை ஆதரித் துப்பேசினுர்,
ஜனப் பதியுத்தீன் அவர்களின் பேச்சிலே தென்பட்ட உயர்வான கருத்துக்களிலிருந்தே அவரது அரசியல் உணர்வை அறியலாம். அத்துடன் முஸ்லிம்கள் எந்த அளவுக்கு அரசிய வில் மகத்துவம் பெறவேண்டும் என்பதையும் தெளிவு படுத் தியுள்ளார்.
அரசியல் ஆர்வம்
காலஞ்சென்ற திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டார நாயக்காவைத் தமது இளமைப் பருவத்திலிருந்தே மதித்து நடக்கமுற்பட்டார். 1935 ஆம் ஆண்டில் கொழும்பு ஸாஹி ராக்கல்லூரியில் மாணவத் தலைவராக இருந்தபோதே திரு. பண்டாரநாயக்காவை அழைத்துவந்து மாணவர்மன்றத்தில் பிரசங்கஞ் செய்யவைத்தார். அதிலிருந்து மலர்ந்த நட்பு இரு த&லவர்களிடத்திலும் வளர்ந்து வருவதாயிற்று.
1938 ஆம் ஆண்டில் காலியில் வைத்து இலங்கைக்குச் சுயாட்சிக்கிடைக்கப்போவதாகவும் சிங்களம் இந்த நாட்டின் ஆட்சிமொழியாக மாறிவிடும் என்றும் அதனுல் முஸ்லிம்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்றும் கூறியபோது இலங்கை
|牛4

1958-ஆம் ஆண்டு ஐ.நா. சபைக்கு இலங்கையின் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத்நியூயோர்க் நகரில் விமானத்தில் இருத்து இறங்கும்போது எடுக்கப்பட்ட படம். ஐ. நா. சபைக்கு இலங்கை அரசால் நியமிக்கப்பட
முதலாவது "ஸ்லி பிரதிநிதி.

Page 87
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அல்ஹாஜ் பதியுத்தின் மஹ்மூத்.
 

யர் அதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்ஃ. இலங்கைகுக் வந்த பின்னரும் தாம் கலந்து கொண்ட பல கூட்டங்களில் இதனேக் கூறிவந்துள்ளார். எனினும் பலர் அவரது பீற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது முண்டு.
முஸ்லிம்கள் தமது தனித்துவத்தைப் பேணிக் காப்பதில் மும்முரமாக உழைத்து வந்த போதிலும், இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களுடன் சேர்ந்தே தமது உரிமை கண்ப் பாதுகாக்க முன் வரவேண்டுமென்பதை இவர் ஆணித் தரமாக எடுத்துக் கூறியுள்ளார். இந்த நாடு சுதந்திரம் பெறு வதற்கு முன்னரும் இதனேயே வலியுறுத்தி வந்தார். ஸ ர். அன்று கால்டி சுற் இலங்கையின் கவர்னராக இருந்தகாலத் தில் அவர் இலங்கை மந்திரி சபையின் வரவு செலவு திட்ட மொன்றை ஏற்க மறுத்து விட்டார். அதன்னச் சிங்கள மக்கள் எதிர்க்க முற்பட்டனர். திருவாளர்கள் டி. எஸ். சேனநாயக்கா, C. W. W. கன்னங் க ர, D. B. ஐ பதிலக்கா, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆகியோர் உட் பட அமைச்சரவையிலிருந்த அங்கத்தவர்களும் தமது பதவி களே ராஜினுமாச் செய்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் ஐம்பதுக் கைம்பது கோரிக்கையும் வலுவடைந்து காணப்பட் டது. முஸ்லிம்களின் ஒருபகுதியினர் கவர்னரின் செயல் 呜点 ரிக்கும் நிலேயிலிருந்தனர். திரு. பண்டாரநாயக்கா முஸ்லிம் களின் ஆரதவைப் பெறுவதற்காக ஜனுப். பதியுத்தினின் உதவியையும் நாடிஞர். பெரும் பான்மையினர்" நடத்தும் பொதுக்கூட்டத்தில் பேசும் படியும் கேட்டுக் கொள்ளப்பட் டார். இதனுல் இரு சமுகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத் தும் ஆபத்தானதிலே உருவாகியது. இந்தப் பெரும் பிரச்சின் பில் த லேயிட்ட ஜனுப் பதிபுத்தீன் முஸ்லிம்களின் ந . வடிக்கைகளினுல் ஏற்படப் போகின்ற நிலேமையினே விளக்கிச் சமுக ஒற்றுமையை நிலேநாட்டும் பொருட்டு முஸ்லிம்கண்க் கட்சிச்சார்பற்ற நிலையில் இருக்கச் செய்தார். ஜனுப். பதியுத் தீனும் எந்தவிதமான பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லேயெனத் திரு. பண்டாரநாயக்காவிடம் கூறிஞர்.
45

Page 88
Uநீநகரில் உரை
1940 ஆம் ஆண்டு ஜூலைமாதம் இந்தியாவில் காஷ்மீர்பூரீநகரில் நடந்த சுயேற்சைச் சிந்தனையாளர் சங்கத்தின் அழைப்பின்பேரில் ஜனுப். பதியுத்தீன் அங்கு சென் று "இலங்கை வாழ் இந்தியர்கள்" என்ற தலைப்பில் ஒரு சொற் பொழிவாற்றினர். அதனல் இலங்கை வாழ் இந்திர்யகளின் உண்மையான பிரச்சனைகளை விளக்கிக்கூறிஞர். இந்தியர்கள் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ள முன் வராத காரணத் தினலே தான்; இலங்கையருக்கும் இந்தியர்களுக்கு மிடையே தப்பான அபிப்பிராயங்கள் உருவாகியுள்ளன என்பதை சில ஆதார பூர்வமான உண்மைகளுடன் விளக்கிக் காட்டினர். 'காஷ்மீர் டைம்ஸ்" என்ற பத்திரிகை வெளியிட்ட அவரது பேச்சின் சுருக்கத்தையும் நோக்குவோம்.
'ஒரு மகோன்னதமான கலாசாரத்தின் வாரிசுகளாகவே இந்தியர்கள் இலங்கையில் வாழ்கின்றனர். அந்தச் சிறப்புப் பொருந்திய கலாசாரத்தின் புனிதத்தன்மையைத் தாங்களும் பெற்றுக் கொள்ளவே இலங்கையரும் விரும்புகிறனர்."
செல்வி மஹ்மூதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற பூரீநகர் சுயேச்சையாளர் சங்கக் கூட்டத்தில் ஈழத்துத் த லை வர்களுள் ஒருவரான ஜனப்.எம். என் எம். பதியுத்தீன் மேற் கண்டவாறு கூறினர். சுமார் ஒரு மணித்தியாலமாக "இலங் கைவாழ் இந்தியர்கள்" என்ற தலைப்பில் ஜனுப். பதியுத்தீன் தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது-.
46
 

- - - - - "இந்த விடயத்தையிட்டுப் பல தவறன கருத்துக்கள் நிலவுகின்றன என்பதை நான் ஆரம்பத்திலேயே கூறிவைக்க விரும்புகின்றேன். சிங்களவர்கள் இந்தியர்களை வெறுக்கின்ருர் கள் என்று இங்கு பொதுவாகக் கூறப்படுகின்றது. உண்மை அதற்குமாரு னதாகும். இந்தியர்களை நாங்கள் ஒருபோதும் வெறுக்கவில்லை. ஆனல் அவர்களின் சில மனப் போக்குகளைத் தான் வெறுக்கின்ருே?ம். பொருளாதார குறிக்கோளே அதற்கு முக்கியகாரணமாகும். உங்கள் நாட்டின் செல்வங்களை வெளி நாட்டார் கைப்பற்றுவதை நீங்கள் எப்படி விரும்பமாட்டீர் களோ அவ்வாறே இலங்கையரும் தமது செல்வத்தை வெளி நாட்டார் கைப்பற்றிச் செல்வதை விரும்பமாட்டர்கள். இலங்கையின் முழுநிர்வாகமும் இலங்கையரின் கைக்கே மாற வேண்டும் என்று எண்ணுகின்ற இலங்கையர் அந்த நன்னளை ஆவலுடன் எதிர்பார்த்தவன்ண மிருக்கின்றனர். சிங்களவரின் மூதாதையர் மகத நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களது தாய்மொழி சமஸ்கிருதத்தைத் தழுவியுள்ளது. தமது அரசியல், கலாசார, சித்தனைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இந் தியர்களைப் போலவே இருக்கின்றனர்.
இந்தியர்களின் சில போக்குகள் இலங்கையரால் வெறுக் கப்படுகின்றன. தென்றல் அதற்குப் பல காரணங்கள் இருக் கின்றன. தமது சொந்த நாட்டவர்களை அல்லாது வேறு எவரை யும் இந்திய வியாபாரிகள் வேலைக்கு அமர்த்த விரும்புவ தில்லை. வியாபாரத் துறையில் இலங்கையர் பின்தள்ளப்படு கின்றர்கள். இது ஒருவகையான கழுத்தறுப்பு வேலையைப் போன்றதாகும். விசேட தினங்களில் சிங்கள வியாபாரிகள் தமது கடைகளை மூடும்போது இவர்கள் அவ்வாறு செய்வ தில்லை. மாருக நடுநிசிவரையில் வியாபாரஞ் செய்வார்கள். இந்திய வியாபாரிகள் பெரிய வருமானத்தைப் பெற்றலும் அந்த நாட்டின் தேசிய நலனுக்கான விடயங்களிற் செலவு செய்ய முன்வருவதில்லை.
ஹரப்பா, மொஹஞ்சதாரோபோன்ற சிறப்புவாய்ந்தகலா சாரப் பாரம்பரியப் பொக்கிஷங்களைக்கொண்ட நாடு இந்தியா. அகில உலகுக்கும் பயனளிக்கக்கூடிய தார்மீகத் தத்துவங்களை
[47

Page 89
இந்தியர்கள் பெற்றுள்ளார்கள். ஒரு நாட்டிலிருந்து இன்னுெரு நாட்டுக்குச் சென்று வாழும் மக்கள் அந்த நாட்டுச் சூழ லுக்கு ஏற்ற முறையில் தங்கள் போக்குகள் சிலவற்றையாவது மாற்றிக்கொள்ள வேண்டியேற்படும். இதைச் செய்வதற்கு இலங்கையிலுள்ள இந்தியர்கள் தவறிவிட்டார்கள். தம்மைத் தாமே குறைவாக மதிப்பிட்டுக்கொண்டு அதற்கேற்ப நடக்கின் றனர். "கால்பேஸ் பெரமவுண்ட்’ பூங்காவில் உலவும் இந்தியர் கள் தமது உடைகளைத் தக்கமுறையில் அணிந்து வராத காரணத்தினுல், மாலைமயங்கும் வேளையிலே காற்று வாங்க வரும் இலங்கையின் நங்கையர்கள் அந்தப் பூங்காவில் இந்தி யர்கள் நுழைவதைத் தடைசெய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதை நாம் அறிவோம்.
பிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஏனைய நாடுகளிலும் இந் யர்கள் சரியானமுறையில் வழிநடத்தப் படவில்லை. மலேயா, தென்னபிரிக்கா போன்ற நாடுகளிலுள்ள இந்தியர்களின் நிலைமை எங்களுக்குத் தெரியும். தாம் சென்றடையும் சூழலுக் கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளாததே அவர்களின் தற்போதைய நிலைக்குக் காரணமாகும்.
இலங்கையிலுள்ள இந்தியத் தொழிலாளரின் பிரச்சினை
இலங்கைக்குத் தேவையான தொழிலாளர்கள் தென் இந் தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்றனர். இலங்கைத் தொழி லாளரை கூலிக்கு அமர்த்துவதைவிட இந்தியத் தொழிலாளரை வருவித்து வேலைக்கமர்த்துவது இலாபகரமானது என்பதை ஐரோப்பியத் தேயிலைத்தோட்டச் சொந்தக்காரர்கள் நன்கு அறிந்துள்ளனர். குறைந்த சம்பளத்தில் கூடிய அளவு வேலை செய்யக் கூடியதாகவும்-மலிவாகவும் இந்தியர்கள் தருவிக் கப்படும் வரையில், சிங்களவரிடையே வேலையில்லாப் பிரச் சினை இருக்கத்தான் செய்யும். எங்கள் தேயிலை, றப்பர், தோட்டங்களைச் செழுமையாக்க இந்தியத் தொழிலாளர் பாடுபட்டு உழைத்துள்ளனர். எனினும் சிங்களத் தொழிலா ளர்கள் தங்களது உரிமைகளை விட்டுக் கொடுப்பார்களென்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்தியத் தொழிலாளர்
i48

கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவது நிறுத்தப்படவேண்டு மென இலங்கை அரசியல் வாதிகள் விரும்புகின்றனர். அப் பொழுதுதான் இலங்கையரை வேலைக்கமர்த்த ஐரோப்பியத் தோட்டச் சொந்தக்காரர்களும் முன்வருவார்கள்.
"இந்தியர்களுக்கு வாக்குரிமையளித்தால் அவர்களைக் கைப் பொம்மையாக்கிக் கொண்டு-அவர்களது வாக்குப் பலத் தால் ஐரோப்பியத் தோட்டச் சொந்தக்காரர்கள் சட்டசபை யில் இடம் பிடித்துக் கொள்வார்கள்’ என்ற பயத்தினல்தான் இந்தியர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகின்றது. அப்படி யானதொரு நிலமை உருவாகினல் அது இலங்கையின் நலனுக் குப் பாதகமாய் அமையும். எங்கள் சொந்தநாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள இந்த முடிவுகளைவிட வேறு எந்தப் பிணக்கும் இலங்கை இந்தியர்களுக்கிடையே கிடை uLu Tg.
"தங்களது மனப்போக்குகளை மாற்றிக் கொள்ளும்படி இலங்கையிலிருக்கும் இந்தியர்களை நான் வேண்டிக்கொள்ளு கின்றேன். ஏதோ ஒரு நாட்டுக்கு-இலங்கைக்கோ இந்தியா வுக்கோ விசுவாசமுடையவர்களாய் இருக்கவேண்டும். இரண்டு நாட்டிலும் கால்வைத்துக் கொண்டிருக்கக்கூடாது. எங்களைச் சகோதரர்களாகப் பாவிக்கவேண்டும். எங்கள் வாழ்க்கையின் சுக துக்கங்களோடு அவர்களும் இணைந்துவிட்டால் அன்பும் பாசமும் நிச்சயமாக அவர்களுக்குக் கிடைக்கும்."
இவ்வாமுக இந்த நாட்டு அரசியலில் பல துறைகளிலும் ஜனுப். பதியுத்தீன் தமது கருத்துக்களை எடுத்துக்காட்டியும், விளக்கியும் வந்துள்ளதைக் காணலாம்.
1951 ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதியதொரு திருப்பம் ஆரம்பமானது. திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறிப் புதியதொரு கட்சியை அமைக்க முன்வந்தார். திரு. பண்டாரநாயக்கா, ஜனுப். பதியுத்தீன், பூணி நிஸ்ஸங்கா, திரு. ஜயசூரியா ஆகியோர் ஒன்று கூடி புதிய கட்சிக்கான
49

Page 90
கொள்கைத் திட்டங்களை வகுக்க முற்பட்டனர். நீண்டநாள் நண்பரான திரு. பண்டாரநாயக்கா அரசியலிற் புதியதோர் திருப்புமுனையை உருவாக்குவதற்காக முதன்முதலில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் ஜஞப்.பதியுத்தீன் என்பதை எவரும் மறுப் பதற்கில்லை. நாட்டு மக்களினதும், விசேடமாக முஸ்லிம்களின தும் முக்கியமான பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டே புதிய அரசியல் உருவாக்கத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க ஜனுப் பதியுத்தீன் முன் வந்தார்.
இந்தச் சூழ்நிலையில் தான் ஐ. தே. கட்சியின் அமைச்சர வையின் ஓர் அங்கத்தவராக இருந்த ஜனப். டி. பி. ஜாயா பாக்கிஸ்தானுக்கு இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்ருர், ஜனப். ஜாயா பாக்கிஸ்தானுக்குச் செல்வதற்கு முன்ன்ர்: ஜனப் பதியுத்தீனைச் சந்தித்து தமது நியமனம் பற்றிக் கூறினர். ஆணுல் ஜஞப். பதியுத்தீன், ஜாயா அவர்கள் பாக்கிஸ்தான் செல்வதை விரும்பவில்லை. 'வெளிநாட்டுக்கு உயர் ஸ்தானிக grit së சென்று அரசாங்க ஊழியம் புரிவதைவிட சொந்த நாட்டு முஸ்லிம்களுக்கே உங்களது சேவை; இன்றையச் சூழ் நிலையில் அவசியமாகத் தேவைப்படுகின்றது." என்ருர். அவர் அவ்வாறு கூறியதற்கான காரணத்தையும் பின்வருமாறு விளக் கினர். 'முஸ்லிம்களின் உரிமைகளைப்பற்றிப் பேசுவதற்கு அமைச்சரவையில் இருக்கின்ற ஒரே ஒரு முஸ்லிம் பிரதிநிதியா கிய நீங்கள் வெளிநாடு சென்று விட்டால் இலங்கை முஸ்லிம் கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்படுவார்கள். அதனல் அரசி யற் பலமற்ற ஒரு சமுதாயமாக முஸ்லிம் சமுகம் மாறிவிடும்." இவ்வாறு தமது கருத்தைத் தெரிவித்த ஜனப். பதியுத்தீன் ஜனுப். ஜாயா எடுக்கப்போகும் முடிவையும் எதிர்பார்த்தார். அப்பொழுதான் ஜனுப். ஜாயா அவர்கள் கூறிய பின்வரும் கருத்துக்கள் ஜனுப் பதியுத்தீனுக்கு ஆறுதலை அளித்தது. 'திரு. டி. எஸ். சேனநாயக்கா அவர்கள், நான் பாக்கிஸ் தான் சென்ற தும் டாக்டர் எம். ஸி. எம். கலீல் அவர்களை அமைச்சராக்குவதாக எனக்கு வாக்குறுதி தந்துள் ளார்" அதன் பின்னர்தான் ஜனுப். பதியுத்தீன், ஜனுப். ஜாயா அவர்களின் விருப்பத்துக்கு இணங்கலாஞர். எனினும் ஜனப்.
ISO

ஜாயா, பாக்கிஸ்தான் சென்றதன் பின்னர் அவரால் காலியான அமைச்சர் பதவிக்கு டாக்டர் கலீல் உடனடியாக நியமிக்கப் படவில்லை. ஜனுப். ஜாயாவினுல் காலியான தொழிலமைச்சு திரு. எம்.டி. பண்டாவுக்கு வழங்கப்பட்டது. ஆறுமாதங் களின் பின்னர் திரு. சி. சுந்தரலிங்கம் அமைச்சர் பதவிலிருந்து வெளியேறினர். அப்போதாவது டாக்டர் கலீல் அமைச்சராக் கப்படலாமென்று முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனல் அந்தப் பதவியும் திரு. எச். டபிள்யூ. அமரசூரியாவுக்கு வழங்கப்பட்டது. இதனல் 1952 ஆம் ஆண்டுவரை அமைச்சர வையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாமலிருந்தது. இதற்கிடையில் பொதுத்தேர்தலும் நெருங்கலாயிற்று. ஐக்கிய தேசியக் கட்சி குறைந்த அளவான பெரும்பான்மையுடன் இருந்ததனல்; எப்பொழுதும் முஸ்லிம்களது ஆதரவுடன் கட் சிப் பலத்தை வலுப்படுத்திக் கொள்வது இயல்பு. இதனல் செல்வாக்குப் படைத்த பலர் முஸ்லிம் லீக்கின் ஒத்துழைப்பி ஞல் முஸ்லிம்களைத் தம்பக்கமாக இழுத்துக்கொள்ளவும் அத ஞல் அன்றைய ஆட்சியாளருக்கு ஒத்துழைப்பை அளிக்கவும் முன்வந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் லீக்கின் கூட் டங்களும் அடிக்கடி இயங்க ஆரம்பித்தன. ஒரு முறை அழைப் பில்லாமலே ஜனப் பதியுத்தீன் லீக்கின் ஒரு கூட்டத்துக்கு சமுகமளித்தார். தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கம்பளை நகரிலிருந்து அழைப்பின் பேரில் சென்றிருந்த அன்பர்களைக் கண்டபோது அவருக்கு வியப்பாக இருந்தது. தமக்கு அழைப் புக்கிட்டாதபோதும் தமக்குரிய உரிமையைப் பயன் படுத்தி கூட்டத்துக்குச் சமுகமளித்தார். அன்றைய நிகழ்ச்சி நிரலைப் பார்வையிட்டார். முஸ்லிங்களின் முக்கிய பிரச்சனையாக விருந்த அமைச்சர் நியமனம் பற்றி எதுவுமே காணப்பட வில்லை. அதுபற்றி ஆட்சேபனையொன்றை ஜனப் பதியுத்தீன் கிள்ப்பினர். டாக்டர் கலீலை அமைச்சராக நியமிக்க வேண்டு மென்ற பிரேரணையொன்றைச் சமர்ப்பித்துப் பேசிய ஜனப். பதியுத்தீன் 'அரசாங்கம் இந்த இயக்கத்தை ஆதரிக்குமாயின் இந்த நாட்டின் முஸ்லிம்களின் முக்கிய குறைபாடான அமைச் சர் நியமனத்தை உடனடியாக நிறைவேற்றி வைக்கவேண் டும், இன்றேல் இந்த இயக்கம் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஒத்
5.

Page 91
துழைப்பை வாபஸ் பெற வே ண் டு ம்' என்ருர்; அவரது கோரிக்கை அங்கீகரிக்கப்படாததால் தாம் புதிதாகச் சேர்ந் துள்ள கட்சியின் கொள்கைகளை விளக்கியவராக - "நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து உங்களது சொந்த நன்மைக்காக ஒரு பக்கமாகச் சுழற்றிக் கொண்டிருக்கும் அரசியற் சக்கரத்தை நான் மறுபக்கமாகச் சுற்றத வரையில் மெளத்தாக மாட்டேன்" என்று கூறி அவ்விடத்தை விட்டும் வெளியேறினர்.
அவர் சுற்றிய அரசியற் சக்கரம்
முஸ்லிம் இயக்கங்கள் தம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய கட்சிக்கு ஒத்துழைப்புத்தர முன் வராததையிட்டு ஜஞப். பதியுத்தீன் கவலை கொண்டார். எனினும் தனிமையாகவேனும் அந்தஅரசியல் போராட்டத்தில் ஈடுபாடு கொள்ளத் துணிந்தார். ‘எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடவேண்டாம். கூடை பலம் வாந்ததாக இருந்தாலும் கீழே விழுந்து விட்டால் முட்டை கள் நொருங்கிவிடும். பல கூடைகளில் போடுவதே பாதுகாப்பாக இருக்கும்"என்று கூறிய வண்ணம் தமது கட்சிக்கான பிரசா ரத்தை ஆரம்பித்தார்.
முஸ்லிம்களைப் புதிய கட்சிக்கு இழுப்பதற்கு முன்பே திரு. பண்டாரநாயக்காவுடன் தமது சமுகத்தின் குறைபாடுகளை விளக்கி, அவற்றை நிவர்த்திப்பதற்கான வாக்குறுதிகளையும் பெற்றுக்கொண்டார். அதன்பின்னரே புதிய அரசியற் கட்சியின் கொள்கைத் திட்டத்திற்கு தாமே முதலாவதாகக் கையெழுத் திட்டபோது 'உங்களை விடப் பெரிய சினேகிதன் எனக்கு வேறு யாருமே இல் லை. எமது வெற்றியின் முதற்படியே உங்கள் கையெழுத்தாகும்." என்று கூறிய வண்ணம் திரு. பண்டார நாயக்கா உள்ளப் புளகாங்கிதமடைந்தார். பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்ப மகாநாடு கொழும்பு மாநகரசபை மண்டபத் தில் நடந்தேறியபோது, பூணிலங்கா சுதந்திரகட்சி அமைப்புப் பிரேரணையை பூரீ நிஸ் லங்கா முன்மொழிய ஜனுப். பதியுத்தீன் வழிமொழிந்தார். அன்றே பிரஸ்தாப கட்சியின் இணைச்செயலா ளர்களில் ஒருவராக ஜனப் பதியுத்தீன் தெரிவு செய்யப்பட் டார்.
52.

1952 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ஜனுப். பதி யுத்தீன் முஸ்லிம்கள் மத்தியில் தமது பிரசாரத்தை ஆரம்பித்த போதிலும், முஸ்லிம்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் அவர் பூரண வெற்றிகாணவில்லை. எனினும் சுதந்திரக்கட்சி ஒன்பது ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டதால் பாராளுமன்றத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக மாறித் திரு. பண்டாரநாயக்கா எதிர்க்கட்சித்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். ஜனுப் பதியுத்தீன் தமது கட்சியின் பிரசார இயக்கத்துக்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். அப்போது கட்சிக் காகத் தனியான வசதிபடைத்த காரியாலயம் எதுவும் இருக்க வில்லை. தமது சொந்த இல்லத்திலிருந்தே சகல திட்டங்களையும் வகுக்கலானர். கட்சிப் பிரமுகர்கள் அடிக்கடி அவரது இல்லத்துக் கோடினர். திட்டங்களையும் வகுத்தனர். இந்த உண்மையை 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ந் திகதி கம்பளை ஸாஹிராக் கல்லூரி யில் நடந்தேறிய அகில இலங்கை பூரீலங்கா சுதந்திரதோட்டத் தொழிலாளர் யூனியனின் 14வது வருடாந்த மகாநாட்டில் உரை யாற்றியபோது உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் திரு. டி. பி. இலங்கரத்தின பின்வருமாறு குறிப்பிட்டார்.
'கம்பளை ஸாஹிராக்கல்லூரி அமைந்துள்ள இந்தப் பூமியை ஒரு புனித பூமியென்றே நான் கூறுவேன். இதே பூமியில்தான் பூரீலங்கா சுதந்திரக் கட்சி வித்திடப்பட்டுச் செடியாகி, மரமாகி இன்று பயன்தரு தருவாகக் காட்சிதருகின்றது. சமுதாயத்தை உருவாக்கும் திட்டங்கள் இந்த இடத்திலிருந்து உருவாக்கப்படா மலிருந்தால் சுதந்திரக் கட்சியின் சேவை இந்த நாட்டுக்குக் கிடைத்திருக்க மாட்டாது. நாங்கள் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இங்கு வந்திருக்கமாட் டோம். சோஷலிஸத்தின் புதுமையான முன்னேற்றங்களையும் இந்த நாடு அடைந்திருக்கமாட்டாது. சுதந்திரக் கட்சியின் புதிய அங்கத்தவர்களுக்கு நான் இதனை இன்று ஞாபகமூட்ட விரும்பு கின்றேன். இத்தனைக்கும் காலாக விளங்கியவர் நமது மதிப்புக் குரிய கல்வியமைச்சர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் என்பதை அவர் இந்தக் கூட்டத்தில் இல்லாமலிருந்தபோதிலும் நான் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்." பிரதமர் பூரீமாவோ பண்
S3

Page 92
டாரநாயக்காவின் தலைமையில் பல அமைச்சர்களும், நாடாளு மன்ற உறுப்பினர்களும், தொழிற்சங்கவாதிகளும் கலந்து கொண்ட அந்த மகாநாட்டில் அமைச்சர் இலங்கரத்தினு அவ் வாறு பேசியபோது பலத்தகரகோஷத்தின் மத்தியிலே அதனை அனைவரும் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர். பிரதமர் தமது அன்றைய பேச்சின் போது இந்த உண்மைகளை வலியு றுத்தி அவற்றை மேலும் விளக்கிக்கறிஞர்.
இவ்வாறெல்லாம் கட்சியின் நலனுக்காக உழைத்ததனல் தான் 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது பூரீலங்கா சுதந்திரக் கட்சி எவருமே எதிர்பார்ாத அளவுக்குப் பெரும்பா லான ஆசனங்களைக் கைப்பற்றி, இந்த நாட்டின் அரசியல்துறை யிலே புதியதொரு சகாப்தத்தை உருவாக்கியது.
1956-ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக ஜனப் பதியுத்தீன் நியமன அங்கத்தவராக அழைக்கப்பட்டார். அதனே ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட அவர் அமைச்சர் தெரிவுக் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராகமட்டும் கலந்து கொண்டார். "எனது சமுகத்தின் நலனை முன்னிட்டே அன்று நான் அமைச்சர் பதவியை குர் பான் கொடுத்தேன்." என்று அவர் அடிக்கடி கூறிவந்துள்ளதும் நினைக்கதக்கதே. தாம் போற்றி வளர்த்துவரும் ஸாஹிராக் கல்லூரியை மேலும் ஒருபடி உயர்த்தவும், தமது சமுதாயத்தின் உரிமைகளைக் கெளரவமாக அரசாங்கத்துக்கு வெளியேயிருந்து பெற்றுக்கொள்ள உழைப்பதுமே மேலானதென அவர் எண்ணி னர். அதனல் அவரது ஆலோசனையின் பேரில் அப்போதைய பாரளுமன்றத்தின் சபாநாயகராக ஜனப். எச் எஸ். இஸ்மாயி லும் தபால் வானெலி அமைச்சராக ஜனப். சீ. ஏ. எஸ். மரிக்கா ரும் நியமனம் பெற்றனர்.
முஸ்லிம்களின் கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவ தற்காகக் கல்வியமைச்சர். திரு. டபிள்யூ. தஹநாயக்காவின் மூலமாகத் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முன்வந்
தார். இவரது சுயநலமற்ற பண்பு இங்கு பிரதிபலிப்பதைக் காணலாம்.
54

முஸ்லிம்களின் கல்வித்துறையில் ஏற்படுத்தவேண்டிய மாற் றம் தொடர்பாக இருபத்தாறு கோரிக்கைகளடங்கிய மகஜர் ஒன்றை திரு. டபிள்யூ. தகநாயக்கா கல்வியமைச்சராகப் பதவியேற்ற இரு வாரகாலத்தில் சமர்ப்பித்தார். அந்த மகஜர் சம்பந்தமாக விளக்கம் கூறுவதற்கு ஜனப்கள். எம். எம். அகமது எஸ். எம். ஏ. ஹஸன், எம். ஸி. எம். ஸாலிஹ் ஆகியோரையும் தம்முடன் கல்வியமைச்சுக்கு அழைத்துச் சென்ருர், மகஜர் சமர்ப்பித்த அன்றே கோரிக்கைகளிற் பெரும்பாலனவற்றை கல்யியமைச்சர் தகநாயக்கா நிறைவேற்றிவைத்தார். அவற் றுள் சிலவற்றை ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
(1) ஐம்பது வீதத்துக்கு அதிகமான முஸ்லிம்கள் கல்வி பயிலும் பாடசாலைகளை' முஸ்லிம் பாடசாலைகளென அழைக்கப்படல் வேண்டும். (ஸர். ராசிக் பரீத் அவர் களுடைய முயற்சியால் ஒரு காலத்தில் ஐம்பது வீதத் துக்கதிகமான முஸ்லிம்கள் பயின்ற பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளாக மாற்றியமைக்கப்பட்டி ருந்தன. எனினும், 1956 ஆம் ஆண்டுக்கு முந்திய அரசாங்க காலத்தில் அத்திட்டம் எழுபத்தைந்து வீதமாக உயர்த்தப்பட்டிருந்ததும், அதனை ஸர். ராசிக் பரீத் அவர்களும், ஆசிரிய சங்கங்களும் ஆட் சேபித்துவந்திருந்ததும் ஈண்டுகுறிப்பிடத்தக்கது.)
(2) முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம்களையே தலைமை
யாசிரியர்களாக நியமித்தல்.
(3) முஸ்லிம் அதிகாரி ஒருவரின் பராமரிப்பில் முஸ்லிம் பாடசாலைக்கான தனிப்பிரிவொன்றை உருவாக்கல்
(4) முஸ்லிம் வித்தியா தரிசிகளின் தொகையை அதிகரித்
தல்.
(5) கூடுதலான முஸ்லிம்களை ஆசிரியர் பயிற்சிக்குத்
தெரிவு செய்தல்.
SS

Page 93
(6) முஸ்லிம் பெண் ஆசிரியைகள் நியமனத்தில் விசேட
சலுகைகள் வழங்குதல்.
(7) மூன்று மாத சேவையுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்
சியின் போது முழுச்சம்பளம் வழங்குதல்.
(8) முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயங்களுக்கு அதிக அளவிலான மாண வ மாணவிகளைச் சேர்த்துக் கொள்ளல்.
(9) பெரிய முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றுக்கு மேற்
பட்ட மவுலவிகளை நியமித்தல்.
(10) முஸ்லிம் பாடசாலைகளுக்கான கட்டட வசதிகளை
அதிகரித்தல்.
இவைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டதோடு, ஏனைய கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றிவைப்பதாக
திரு. தகநாயக்கா ஜனப் பதியுத்தீனுக்கு அன்றுவாக்குறுதி யளித்தார்.
S6

இலங்கை முஸ்லிம்களின் சமூக சன்மார்க்க கலாசாரப் புனருத்தாரண வளர்ச்சியைக் கருத்திற் கொண்டி ஜனுப். பதி யுத்தீன் 22-1-1957ல் பத்தாண்டுத் திட்டமொன்றை வெளி யிட்டார். அத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.
இலங்கையில் இஸ்லாமிய சமுகம் சிறுபான்மையிலும் சிறு பான்மைச் சமுகமாய் அமைந்துள்ளமையை எவரும் அறிவர். முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டின் பல பாகங்களிலும் சிங்களவர், தமிழர் ஆகியோர் மத்தியிலே சிதறுண்டுகிடக்கின் ருேம். எனினும். ஏனைய சமுகங்களோடு சென்ற பலநூற்ருண் டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளதோடு எங்களது மதக் கட்டுப்பாட்டையும் கலாசாரத்தையும் சீர்குலையாமல் காத்தும் வளர்த்தும் வந்துள்ளோம். ஆனல் இன்று சுதந்திர இலங்கையிலே மற்றும் சமுகத்தார் மின்னல் வேகத்தில் முன் னேறுகையில், நம் சமுகம் ஆதரவற்ற அணுதைபோல் வீழ்ச் சியை எதிர்பார்ப்பதா? நாம் மதச்சட்டதிட்டங்களை மதியாது சமூகக் கட்டுப்பாட்டைப் பேணுது வாழ்க்கை நடத்துவோ ராக இருப்பதா?
இனியாவது பேச்சளவில் மட்டும் நிற்பதைவிட்டு, நிலை யான பயன்தரும் செய்கையளவில் திரும்பி, உண்மையை உணர்ந்து, திட்டம் வகுத்து எமது சமுகம் ஏனைய சமுகங்களைப் போன்று கெளரமாக உயர்நிலையிலிருக்க ஆவன செய்யவேண்டி பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
57

Page 94
இலங்கை முஸ்லிம்களின் பரிதாப நிலே
அறிவுபடைத்த எந்த முஸ்லிமும், சமூகம் எல்லாத் துறைகளிலும் பிற்போக்கடைந்து போகிறதென்பதை மறுக்க முடியாது. ஏகத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் இஸ்லாம் ஏஃனய மத அறிஞர்களாற் சுடப் பகுத்தறிவுக்கேற்ற மார்க்கம், புத்திக்கும் யுக்திக்கும் தகுந்த மார்க்கம், என்றெல்லாம் போற் றப்பட்ட சன்மார்க்கம்-இன்று அறியாமையாலும், அணுச்சா ரத்தாலும், மூடநம்பிக்கையாலும் ஆழ்த்தப்பட்டதுபோல் காட்சியளிக்கவில்லேயா?
உலகிற்கே ஒரு நாகரிகத்தை புதுக்கலாசார அடிப் படையில் புகுத்தி ஓர் உன்னதமாஸ் வாழ்க்கை முறையையும் வகுத்துக் கொடுத்த எமது சமூகம் இன்று பிற்போக்கான சமுக் மென்று ஏனேயோர் நகைத்துச் சிரிக்கும் நிலக்கு வத்துவிட் டது. அன்பின் ஆசனமாகவும், அறிவுச் சுடர் பரப்பி மக்களேப் பண்படுத்திய மத்தியஸ்தலமாகவும் இருந்த எமது மஸ்ஜிதுகள், இன்று சண்டை சச்சரவு மவிந்த இடமாகவும், சுயநலம் குடி யிருக்கும் சுகஸ்தலங்களாகவும் மாறிக்கொண்டே போகின்றன. இஸ்லாத்தை அமானிதப் பொருளாகக் காப்பாற்றும் அரும் பெரும் பொறுப்புடைய உலமாக்கள் இன்று சமுகத்தினல் இழிவாகக் கருதப்படும் ஒரு கூட்டமாகவும் வேறுவழியின்றி பாசகம் கேட்கும் நிலேயை அடைந்துவிட்ட கும்பலாக அம் மாறிக்கொண்டேபோகின்றனர்.
இஸ்லாத்தின் இளஞ்சிருர்களோ, வழிகாட்டி வளம்படுத் தவும் உணர்ச்சியூட்டி ஊக்குவிக்கவும் ஆளின்றி மனம்போன போக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். இவை தம் சமுகத் தினுள் தஃவிரித்தாடும் குறைகளிற் சில. இப்போதாவது நமது குறைகளே நீக்கி முஸ்லிம்களேத் தட்டியெழுப்பித் தீவிரமாக ஆவன செய்யத் தவறிவிடுவோமாயின் மிகக்குறுகிய காலத்தில் நாம் சமுகக்கட்டுப்பாடற்ற அனுஷ்டானமற்ற அெனுதைச் சமுகமாக ஆகிவிடுவோம் என்பதில் சந்தேகமில்லே"
58

- - .
அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் 1950-ஆம் ஆண்டு புனித மக்காவில் வைத் து

Page 95
tAA S S SASALLLSS StS S ჯჯზეზი " புது லங்கா சுதந்திரக் கட்சி உருவான இல்லம் இதுதான். கலாநிதி அல்ஹஜ் பதிபுத்தீன் அவர்களின் கம்பஃ இல்ல மிது.
 
 

தலைவர்களும் சமுதாயமும்
எமது சமுகத்தின் இன்றையத் தல்வர்களோ, அரசியற்தலே வர்களாகத் திகழ்கின்று ர்களேயன்றி மதத்தலைவர்களாகத் நிகழவில்லே. இவர்களும் அரசாங்கத்திடமிருந்து ஏதோ ஒருசில தன்மைகளைப் பெறுவதிலே கவனஞ்செலுத்தி வருகிருர்களே தவிர நமது சமுகத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதா கவோ அல்லது சமூக முன்னேற்றத்துக்கான ஒரு திட்டத்தை வகுக்க முற்படுவதாகவோ தெரியவில்ஃப், இஸ்லாம், சமுக அடிப்படையில் அமைந்த ஒரு சமயம், சமூகம் சீரழியாதவண் னம் பாதுகாப்பது தஃவர்களின் கடமை, இப்பொழுதுதாவது நமது தஃவர்கள் இஸ்லாமிய சமுக உடம்பினுள் புதைந்துள்ள புற்றுநோயை அறுத்தெறிந்து சமுகத்துக்கு விழிப்புணர்ச்சி ஊட்டி இஸ்லாமிய நெறிமுறைகளே நிலைநாட்ட முன்வருவார்க னென சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
சமுகமும் உலமாக்களின் பங்கும்
சமுகத்தின் முதுகெலும்பு போன்ற உலமாக்களின் நில் யைச் சிற்று ஆராய்வோம். ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு அல்லும் பகலுமாக மதுரசாக்களிலே குர்ஆன்,ஹதீஸ், பிக்ஹஇ போன்ற பாடங்களேப் படித்து "ஆவிம்'மவுலவி" பட்டங் கிளுடன் திரும்புகிறர்கள். ஆளுல் இவர்களுக்குரிய அந்தஸ்தை யும் ஆதரவையும் நம் சமுகம் கொடுக்கிறதா? இல்லை. அதற்குக் காரணம் என்னவென்று நாம் சிந்திக்கவேண்டும். '
இக்காலத்துக்கு ஏற்றவாறு மதத் தத்துவங்களே மக்களுக்கு எடுத்தோதும் தகுதியோ சமுகத்துக்குத்தக்க வழிகாட்டத் தேவையான ஆற்றலோ, உலகியலறிவோ இவர்களுட் பலருக் குப் போதியளவு இல்லாமலிருக்கின்றது. பாடசாலைகளிற் சேவையாற்றிவரும் மவுலவிகளோ மாணவர்கள் கேட்கும் மத சம்பந்தமான கேள்விகளுக்குச் சாஸ்திரரீதியான ஆதார பூர்வமான பதில்களேக் கொடுத்து அவர்களின் சந்தேகங் தீர்க்கவும் சக்தியற்றவர்களாக இருக்கிருர்தள். :ே களிலோ பேஷஇமாம்களாலும், கதீபுகள் கங்த்ேதப்படும்
59 击 ہے Higآn(گا تھا للا
appslf f 卧

Page 96
கொத்பாப் பிரசங்கங்கள் காலநிலைக்கேற்பனவாகவோ அல் லது உணர்ச்சியூட்டத்தக்கனவாகவோ அமையவில்லை. இவர் களது பொருளாதரநிலை மிகவும் பரிதாபகரமாக இருப்பதால் வாழ்க்கையை நடாத்துவதற்கு, "பாத்திஹா' "கத்தம் போன் றவைகளை ஓதி இருபத்தைந்து, அல்லது ஐம்பது சதம் சம்பா திக்கவேண்டியிருக்கின்றது. இந்நிலையில் இவர்கள் சமுகத்தின் கெளரவத்தையும், செல்வாக்கையும் பெறமுடியாதவர்களாய் இருக்கின்றனர். எனவே இந்த நிலைமாறவேண்டும் சமுகத்தின் உயர்ச்சியும், வீழ்ச்சியும், வாழ்வும், தாழ்வும், இவர்களைப் பொறுத்தே நிற்கின்றன. இவர்களுக்குத் தேவையான பயிற் சியை அளிப்பதும் சமுக சேவையைத் திறம்படச் செய்யப் பக்கு
வப் படுத்துவதும் சமுகத்தின் கடமையல்லவா?
மாணவர்களும் மதக் கல்வியும்
இக்கால முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாமிய மதப்பண் பாட்டை விட்டு வெகுதூரம் விரைந்து செல்லக்கூடிய சூழ்நிலை யில் இருக்கின்றனர். முஸ்லிம்களின் வீடுகளிலும், மாணவர் களுக்கு முற்காலத்தைப்போன்று மதக்கல்வியும் இஸ்லாமிய நெறிமுறைகளும் புகட்டப்படுவதும் இல்லை. பாடசாலைகளும், கல்லூரிகளும் இஸ்லாமியக் கொள்கைகளும் கோட்பாடுகளும் கலைகளும், பண்பாடுகளும் பயிலத்தக்க வசதிகள் அளிப்பதும் அருமை. எம்மிடையே தோன்றியுள்ள சிற்சில ஸ்தாபனங் களும், சங்கங்களும் இவ்விளைஞர்களுக்குப் பேருணர்வை ஊட்டி எழுச்சியுறச் செய்யும் அரும்பணியில் தக்க கவனம் செலுத்து வதாகவும் தெரியவில்லை. அறிவு வளர்ச்சியின் காரணமாக இவர்களின் உள்ளங்களிலே புரட்சிகளுடன் எழும் சந்தேகங் களைத் தக்க ஆதாரத்துடன் பகுத்தறிவுக்கு ஏற்றவாறும் தீர்க்க ஆற்றலுடைய உலமாக்களும் நம்மிடையே குறைவாக உள்ள னர். இந் நிலையில் இம்மாணவர்கள், ஒழுக்கமற்ற சந்தேகப்பேர் வழிகளாக, நாஸ்திகப் புயற்காற்றில் சிக் குண்டு நசிந்து மலைக் கின்றனர். இவர்கள் நேர்வழி தவறிப்போகாமல் பாதுகாப்ப தும், உண்மை முஸ்லிம்களாக வாழவேண்டியன செய்து உதவு வதும் சமுகத்தின் பொறுப்பன்ருே,
60

எமது பெண்மணிகள்
சமீபகாலம்வரை முஸ்லிம் பெண்மணிகள் பிள்ளை பெறும் இயந்திரங்களாகமட்டும் கருதப்பட்டு, வீடுகளிலே அறியாமை யின் சின்னங்களாகக் காட்சியளித்து வந்தனர். பெண்கள் கெளரவமாகவும் கண்ணியமாகவும் வாழக் கல்வி அத்தியாவசி யம் என்பதை, இன்று உணரத் தொடங்கியதோடு, முஸ்லிம் பெண்களும் ஏ னை ய ப் பெண்களோடு கல்வித்துறையிலே போட்டியிட முன்வந்து கொண்டிருக்கின்றனர். இதனைக்கண்டு நான் சந்தோஷப்படுகின்றேன். ஆனல் வருங்கால இஸ்லாமிய சமுகத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் இவர்களில்தான் தங்கியிருக்கின்றன. "பெண்ணின் மடியிலே இறையன்பு வளர் கின்றது" என்று அறைகூவுகின்றர் கவிஞர் அல்லாமா இக்பால், எதிர்கால முஸ்லிம் இளைஞர்களைப் பண்புபடைத்த மதப் பற்றுள்ள முஸ்லிம்களாக்கும் பொறுப்பு இவர்களுடையதே. ஆதலின் முஸ்லிம் பெண்மணிகளை இஸ்லாமிய புத்துணர்ச்சி ததும்பச்செய்து, பெண்ணின் பெருமையையும், தாய்மையின் உயர்வையும் நன்கு உணர்ந்த விலைமதியா மாணிக்கங்களாய் ஜொளிக்கச் செய்ய்வேண்டிய வசதியளிப்பதும் சமுகத்தின்
கடமையன்ருே?
முஸ்லிம்களும் அரசாங்க பாஷையும்
இலங்கையில் சிங்களம் அரசாங்க பாஷையாக இடம் பெற்றுவிட்டது. பெரும்பாலான மாணவ மாணவிகள் தங்களது பாடங்களனைத்தையும் சிங்களப் பாஷையில் கற்கவேண்டிய நாள் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இற்றைவரை பாட சாலைகளிலும் கல்லூரிகளிலும் மதப் போதனைகள், தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தான் நிகழ்த்தப்பட்டுவந்தன. ஆனல் வெகுசீக்கிரத்தில் சிங்களப் பாஷையிலும் மதப் பாடங்கள் கற்பிக்கப்பட நேரிடலாம். இதுவரை, இதற்குத்தேவையான புத்தகங்களை நாம் வெளியிடவும் இல்லை. வெளியிட எந்த முயற் சியும் எடுத்ததாகவும் ெ தரியவில்லை. மேலும் சென்ற ஆயிரம் வருடங்களுக்கு மேல் இலங்க்ையிலே சிங்களவர். மத்தியிலே
6

Page 97
வாழ்ந்து வந்தும், நமது மார்க்கத்தையும் கலாசாரத்தையும் அவர்களுக்கு எடுத்துக்காட்ட ஏதேனும் ஒருசில இஸ்லாமியப் புத்தகங்களையாவது அப்பாஷையில் வெளியிட் முன்வராதது மிகமிக விசித்திரமாகவே இருக்கிறது. இந்தப் பிரச்சனையும் நமது சிந்தனையில் இடம் பெறவேண்டும்.
நாம் செய்ய வேண்டியன:-
இலங்கையில் நாம் சுயமரியாதையுடனும் கண்ணியத்துட னும் வாழவேண்டுமானல், நம் வாழ்க்கையிலே சமயப்பற்றும் ஒழுங்கும் ஏற்படவேண்டும். "தெள ஹீதின் ஒளிவீசும் உள்ளங் களுடன் நம் சமூகத்தைத் தட்டியெழுப்பிக் கட்டுபாடுள்ள சமுகமாய் அமைக்கப்பேருணர்வுடன் சமூகப்பற்றுள்ள முஸ் லிம்கள் அனைவரும் முன்வரவேண்டும். எங்கள் மத்தியிலே மதவுணர்ச்சியுள்ள இளைஞர் சமுகப் புனருத்தாரணத்திற்காகத் திரள் திரளாக வீறுகொண்டு முன்வந்து பங்கெடுக்க வேண்டும். முஸ்லிம் இல்லங்களிலே அறிவுடனும் மதப் பண்பாட்டுடனும் எமது பெண்மணிகள் திகழவேண்டும். மஸ்ஜிதுகளெல்லாம் எம்பிரான்(ஸல்) காலத்திலும், குலபாயேராஷிதீன்கள் காலத் திலும் அறிவின் பீடமாகவும், கலை, கலாசாரப் பண்புகளின் இருப்பிடமாகவும் இருந்தது போன்று மாற்றியமைக்கப்படல் வேண்டும். நமது கலாசார நோக்கிலும் நம்பிக்கை நடைமுறை களிலும் உணர்ச்சி ததும்பச்செய்யும் திருத் தொண்டர்களாக எமது உலகமக்கள் எங்கும் மிளிரவேண்டும். சமுக எழுச்சியும் மலர்ச்சியும் தங்களிலும் த ங் கி யிருக்கின்றன என்ற உண்மையை எங்களது பணக்காரப் பெரியார்கள் உணர்ந்து சமுக முன்னேற்றத்துக்கான சேவைகளைச் செய்யத் தாராள மாகப் பண உதவி செய்ய முன்வரவேண்டும். நமது சமுகம் அன்பும், ஆற்றலும் படைத்த பெருந்தலைவர்களோடு ஏனைய சமுகத்தினருக்கு முன் மாதிரியாகத் திகழவேண்டும்.
எமது திட்டம்
எங்களது இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின் இன்றே நாம் ஓர் உருப்படியான, உயரிய திட்டமொன்றை வகுத்துச்
62

செயலாற்ற வேண்டும். ? ? என் மார்க்கத்தைப் பிரமுகர்களுடை யவும், உலமாக்களுடையவும் பொறுப்பில் விட்டுச் செல்கி றேன்" என்பது நபிபெருமானரின் திருவாக்காகும். சமுக உணர்ச்சியும், தியாக குணமும் உடைய பல பணக்காரர்கள் சமுகச் சீர்திருத்த அமைப்புத் திட்டத்தில் பங்கெடுக்கத் தயா grT85 இருக்கிறர்கள். ஆனல், அந்த மகத்தான திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர நம்மிடையே மத அறிவுடன், உலக அறிவும் கொண்டு திறம்படச் செயலாற்றும் திறமை யுடைய உலமாக்கள் தேவை. இப்பணியைத் திறம்படச் செய்து முடிக்க முன்வருவதே சமுகத்தின் முதற்கடமை. முதலில் இதற் காக உலமாக்கள் மத்திய பயிற்சிக் கலாசாலை (Central Training Colcge for Ulama) 15tub Giogrti Qias Gau6iwGub. (காலஞ்சென்ற அல்ஹாஜ் என். டீ. எச். அப்துல் கபூர் அவர்களால் ஸ்தாபிக் கப்பட்ட கபூரிய்யா மதுரஸாவின் அருகிலே இந்த ஸ்தாபனத் தையும் அமைக்க, ஒரு நிலத்தை அப்துல் கபூர் அவர்களின் குடும் பத்தார் இடமளித்தால் பேருதவியாக இருக்கும்.) மவுலவிப் பட்டம் பெற்று வருவோருக்கு மத்திய கலாசாலையில் மூன்று வருட காலத்துக்குப் பயிற்சியளிக்க வேண்டும். அங்கு இஸ்லா மிய சரித்திரம், கலாசாரம், உலகியலறிவு, பலமத ஒப்பு நேர்க்கு, பேச்சுவன்மை, பேச்சுப் போட்டி ஆகியவைகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறச் செய்தல் வேண்டும். பயிற்சி முடி வில் நடைபெறும் பரீட்சையில் வெற்றி பெறுவோருக்குத் தரா தரப் பத்திரம் (Diplomas) வழங்கப்படல் வேண்டும். இக்கலா சாலையில் பட்டம் பெற்றவர்களையே வருங்காலத்தில் பாட சாலைகளிலும், கல்லூரிகளிலும், மத போதகர்களாகவும், Luar ளிகளிலே பேஷ் இமாம்களாகவும், சன்மார்க்கப் பிரசாரர் களாகவும் நியமிக்க வேண்டும்,
பெரிய மஸ்ஜிதுகளில் கடமையாற்றும் பேஷ் இமாம்களுக் கும், கதீபுகளுக்கும் ரூபாய் 300க்குக் குறையாத மாதச் சம் பளமும், சிறிய மஸ்ஜிதுகளிலுள்ளோருக்கு ரூபாய் 200க்குக் குறையாத மாதச் சம்பளமும் கொடுத்து, அவர்களுடைய பொருளாதார நிலையை உயரச் செய்தல் வேண்டும், "பாத் திஹா', 'கத்தம் ஓதி வாழ்க்கை வருவாயைப் பெற்று வரும்
63

Page 98
நிலை மாறினலொழிய, அவர்களின் அந்தஸ்து மேம்பாடு அடைய வழியில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
நமது பள்ளி முஅஸ்லின்’கள் க்ோழியறுத்துப் பிழைக்கும் நிலை மாற வேண்டும். வருங்கால முஅஸ் ஸ்ன்கள் எஸ். எஸ். ஸி. பரீட்சையில் சித்தியடைந்தவர்களாகவும், மேற்சொன்ன் கல் லூரியில் இரு வருட கால பயிற்சி பெற்றவர்களர்கவுமிருக்க வேண்டும். இவர்களுக்கு ஏனைய பாடங்கள் கற்பிக்கப்படுவ தோடு, மஸ்ஜிதுகளைத் திறம்பட பரிப்ால்னஞ் செய்யப் புது முன்ற நிர்வாகமும் கற்பிக்கப்படல் வேண்டும். இவர்களே ரூபாய் 150க்குக் குறையாத மாதச் சம்பளம் பெறும் நிர்வா கக் குமாஸ்தாக்களாகப் பள்ளிவாசல்களில் நியமித்தல் வேண் டும்.
மேலும் இக்கலாசாலையில் பயிற்சிபெற்ற உலமாக்களை மதப் பிரசாரத்திற்காக இலங்கையின் எல்லாப் பாகங்கட்கும் அனுப்ப ஆவன செய்தல் வேண்டும். இவர்கள் தப்லீக் கோஷ் டியினருடன் ஒத்துழைத்துத் தனி மனித வாழ்விலும், பொது வாழ்விலும் இஸ்லாமிய நெறிமுறைகள் வேரூன்றி நிலைக்கத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். இவை மட்டுமின்றிக் காலஞ்சென்ற "அட்வகேட்" ஜனப் எம். எச்.ஏ. அப்துல் அளிஸ் அவர்களால் நிறுவப்பட்ட அஹதிய்யாப் பாடிசாலை களுக்குப்புத்துயிரளித்து, உயர்நிலையடையச் செய்யும் வேலை யில் இவர்களிற் சிலர்ை நியமித்தல் வேண்டும்.
முஸ்லிம் சமுகப் புனருத்தாரண நிதி
மேற்சொன்ன திட்டத்திற்கான ஒரு நிதியைத் திரட்டி வேண்டும். "ஸகாத் முதல்" இதற்கு உதவியாய் இருப்பதோடு, தற்போதைய வக்புச் சட்டமும் பக்கபலமாக இருக்கும். மேலும் அரசாங்கத்திடமிருந்து கலாச்சார மந்திரி வாயிலாக வும் உதவிபெற முடியுமென்பது எமது திடமான நம்பிக்கை.
அகில இலங்கை முஸ்லிம் மகாநாடு
முஸ்லிம் சமுக புனருததார்ண்த்திற்காக முதற் பத்து வரு டத் திட்டம் வகுத்து, மேற்சொன்ன் உலமாக்கள், பயிற்சிக்
64

கலாசாலையை நிறுவ, அகில இலங்கையிலுள்ள எல்லா முஸ்லிம் மக்களின் ஆதரவையும் கொண்ட ஒரு மகாநாட்டைக் கொழும் பில் அதிக தாமதமின்றிக் கூட்ட வேண்டும். இம் மகாநாட்டில் எம் சமூகத்தில் எதிர்நோக்கியிருக்கும் எல்லாப் பிரச்சினைகளை யும் பரிசீலனை செய்து செயலாற்றும் தீர்மானங்களை நிறை வேற்றி, நடைமுறைக்குக் கொண்டுவர வழியையும் தேட வேண்டும்.
அல்லாஹ், எங்களது இலட்சியத்தை வெற்றிகரமாக நிறை வேற்ற நல்லருள்புரிவானுக.ஆமீன்.
65

Page 99
ggi (5quUgi e,5UOLD5TGò
இலங்கைவாழ் முஸ்விம் மக்கள், பூரிலங்கா குடியரசாகப் பிரகடனப்படுத்துவதை முன்னிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரி விக்கும்பொருட்டும், பூரீலங்கா குடியரசின் முதலாவது பிரதம மந்திரி திருமதி பூணூரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கு வர வேற்பு நல்குவதற்கும் கூடிய வைபவத்தில் 1972-ஆம் ஆண்டு செப்டம்பர் மீ" 30-ஆம் தேதியன்று கல்வியமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் கொழும்பு மருதா ஃனப் பள்ளிவாசல் மைதானத்தில் நிகழ்ந்த மாபெருங் கூட்டத் தில் ஆற்றிய உரை. இக்கூட்டத்தில் இலங்கையின் நாலா பாகத்திலிருந்தும் அரை லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் கள் கலந்துகொண்டார்கள்.
தலமையுரை
பூரீலங்கா குடியரசின் முதலாவது பிரதம மந்திரி அவர்களே கெளரவ அமைச்சர்களே மாண்புமிக்க வெளிநாட்டுத் துர்துவர் களே! கெளரவ விருந்தினர்களே முஸ்லிம் சகோதர சகோதரி களே! பெரியோர்களே!
நமது நாட்டின் சரித்திரத்திலேயே முதற்தடவையாக நாட் டின் பல பகுதிகளிலும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள். பூரிலங்கா குடியரசாகப் பிரகடனப்படுத்துவதற்காக தமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காகவும், பூரீலங்கா குடியரசின் முதற் பிரதமரா கிய திருமதி பூஞரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கு
66
 
 
 
 
 
 
 

· į svogs soug@rısı kɛɛ lae glum ɛyʊgs- oặułưų$1$3'); 國都三國un과 역r:#Fury 府城w武 :城』u國 上官國府副司制uum홍七長官民ur rmu&U像)'통ulue-Pf &官府事g KK K SYTTLL LLYYLLLK ZY LL Y SLL LLL KKKK KKK SYLTT HCz *un on昭日(耶增%&&唱卡塔n 屬「1匈)"白匈唱「Tn 因噶&QL *Iggs 函咀mq爵增 Fsこgg *ggeせ***ョug』」コgコ 『ミコQF gsg gョシg 『トシg モョd 頃EterQ gg QEng de*「Je』Qg "g*セd f』ョ ショgョggbag

Page 100
! 1's 117 'syris) is '|' + 'qo,reno,中たシMae sg)rg 4 AA &4 g|7혁si , , , , , l’un SLL J00YJK L L YKYJ00 LL KKSJJJJ LJYJLLLSZY000T LLLL LLL 0K LL KKYJK Y L L LYL YTLL LLL YYLYYSK KSLLLL LSYY S Y S LY Y LLKC LLTYLTLL LTYLLL g明道u民院, 명동역g"은 5u官 월u Q3 u &A** MTA官w7成部rT義)&행어7% 땅을력&uug.JA8 Age:We%21&uguT) #83(道n8&행
 

ཚེ་
s
பாராட்டுக் கூறவும் கூடியுள்ள இத்தருணத்திலே உங்கண் வர வேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் வரலாற்றிலே இன்று மிக முக்கியமான ஒருநாள். இன்று இலங்கை முழுவதும் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்கள் சமுதாயத்தின் சொந்த நலன் கருதி மட்டும் கூடியிருக்கவில்லே. ஒரு தேசிய வைபவத்திற்காகக் கூடி யிருக்கிருர்கள். இன்று நாங்கள் சுதந்திர தன்ணுதிக்கமுள்ள குடியரசு மக்களாக கூடியிருக்கிலுேம், எங்கள் விவகாரங்களேச் சுதந்திர குடிமக்களாய், நாமே ஒழுங்கு செய்யக்கூடியவர்களாய் இருக்கின்ருேம். அந்நிய ஆட்சியின்கீழ் நசுக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட இனமாக நாங்கள் இனி ஒருபோதும் இருக்கமாட்டோம். இந்த அடிமைச் சங்கிலிகளே நாம் அறுத்துவிட்டோம். எனது மார்க்கமான இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளும், அமரதத்துவங்களுமே எனது சிந்தனையைத் தூண்டி, வளப் படுத்தி வளர்த்து வந்திருக்கின்றன. நபிகள் நாயகம் (Rல்) அவர்கள், "ஹ"ப்புல்வதன் மினல்ரீமான்' என்ருர்கள். தன் நாட்டை நேசிப்பது ஒருவரின் மார்க்கக் கடமைகளில் ஒன்ரு கும் என்பது இதன் கருத்து. ஆகவே தேசப்பற்று சமயத்தின் கோட்பாடுகளில் ஒன்றினேப்போல் இஸ்லாத்தில் கருதப்படு கிறது.
இஸ்லாத்தில் தேசியம்
ஒவ்வொருவரின் தேசியமும், அவர்களின் புவிஇயல், சமுக, வரலாற்றுப் பொருளாதார தனித்துவங்களுக்கு ஏற்பவே அமை யும், தேசிய உணர்வின் முதலாவது அடிப்படை அந்நிய ஆட் சியை அகற்றுவதாகும் இது இஸ்லாத்தின் கோட்பாடுகளுக் கும், பண்பாட்டு சமுதாய உணர்வுகளுக்கும் ஏற்றதாகும். இஸ் லாத்தின் நவீன மறுமலர்ச்சிக்கு ஏற்றதுமாகும். தற்கால உல கிலே, முஸ்லிம்கள் தங்களுடைய தேசிய தனித்துவத்தை நிலை நாட்டியதற்கு உதாரணங்களாக, ஒல்லாந்தரை விரட்ட இந் தோனேஷிய முஸ்லிம்களும், பிரான்ஸியரை விரட்ட சிரியா, மகாரிப் முஸ்லிம்களும், ஆங்கிலேயரை விரட்ட இந்திய முஸ் லிம்களும் பாடுபட்டதைக் கூறலாம். இவைகளேப்போன்றே
67

Page 101
கிரேக்கரைப் பின்னடையச் செய்ய துருக்கியர்களின் தாக்குத லும், ஏகாதிபத்திய நட்பு வட்டாரங்களை முறியடிக்க ஈரானிய மக்களின் முயற்சியும், தேசியத்துக்கு புத்துயிரூட்டும் முயற்சி களாகும். சில தேசிய இயக்கங்களின் ஆரம்பக் கட்டங்களில் மார்க்கத் தலைவர்கள் முக்கியமான வழிகாட்டிகளாய் இருந் திருக்கிருக்கள். ஜமால்உத்தீன் ஆப்கானி ஒவ்வொரு நாட்டி னதும் தேசிய உணர்வுகளைத் துரண்டிஞர்.எகிப்தில் ஷேக் முகம் மத் அப்துர அவர்களும், இந்தியாவில் மெளலான அபுல்கலாம் ஆஸாத் அவர்களும், இந்தோனேஷியாவில் அகமத்த ஹலான் அவர்களும் தேசிய உணர்வுகளை வளர்த் தார்கள், ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் எழுச்சியும், அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலையடைவதற்காக அவர்கள் புரிந்த மகத் தான முயற்சியும், நம் நாட்டைப் பாதிக்காமல் விடவில்லை. பூரீலங்கா முஸ்லிம்கள் தமது குடியரசுக்கு விசுவாசமும், கடமை உணர்வும் காட்டுவதில் எவருக்கும் சற்றும் குறைந்தவர் களல்லர். பிறந்த நாட்டின் மீதுமுஸ்லிம்கள் பற்று வைத்தல் அரசியலில் புதுமையான சம்பவமல்ல. முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டி வரலாற்றில் அது எல்லாக் காலங்களிலும் கrணக் கூடியதாய் இருக்கின்றது:
வரலாறு
ஆதலின் சற்றே வரலாற்று நினைவுகளைத் தூண்டலாமெனறு நினைக்கின்றேன். பூரீலங்காவில் வாழும் முஸ்லிம்களின் வரலாற் றுப் பின்னணியைக் கூறுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களென நம்புகிறேன். நமது நாட்டை அந்நிய ஆட்சிப்பிடியிலிருந்து விடு விப்பதற்காக நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டத்தில் 16ஆம் நூற்றண்டு முதலே போர்த்துக்கேயருக்கு எதிராக முன் னின்று போராடியதன்மூலம் முஸ்லிம்கள் பங்குபற்ற ஆரம்பித் தார்கள்; இலங்கை முஸ்லிம்கள் துணிவோடும், வீரத்தோடும். உறுதியோடும், ஒற்றுமையோடும், போர்த்துக்கேயருக்கு எதி ராகப் போராடி ரூர்கள். கோட்டை மன்னனுண் ஏழாம் புவ னேகு பாகு போர்த்துக்கேயரிடம் சுமுகமாக நடந்துகொண்ட தினல் முஸ்லிம்கள், மன்னனின் தம்பியும் மாபெரும் போர் வீர
68

னுமான மாயதுன்னையின் படையில் சேர்ந்து அந்நிய ஆட்சியை ஒழிப்பதற்காகப் போராடினர்கள். யுத்தகளத்திலே உருவான இந்தச் சிங்கள முஸ்லிம் ஒற்றுடிை வரலாற்றின் சிறந்ததோர் இடத்தை வகிக்கின்றது. இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கலாநிதி கே. டபிள்யூ. குணவர்தன அவர்கள் சிங் களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நிலவிவந்த நல்லுடிவு போர்த்துக்கேயரின் கொடுமையினுல் மேலும் புலப்படுத்தப் பட்டதெனக் கூறுகிருர். சிங்கள மன்னர்கள் பலம்வாய்ந்த அந் நியர்களோடு நட்பாக நடிப்பது நல்லதெனக் கருதியபொழுதும் கட, நாட்டு மக்கள் முஸ்லிம்கள் இட்பட, அந்நியர்களை எதிர்த்தே நின்ருர்கள். தன்னுடைய அதிகாரத்தை ஏற்க மறுத்த போர்த்துக்கே யரோடு போர் தொடுக்க ஏழாம் விஜய பாகு மன்னன் முடிவு செய்தபொழுதுமுஸ்லிம்களின் உதவியை நாடிஞன்.
முஸ்லிம்களால் தரப்பெற்ற உதவி போர்த்துக்கேயர்களின் கவனத்தை சிங்களப் படைகளிடமிருந்து திசைதிருப்பியது. முஸ்லிம் துப்பாக்கி வீரர்கள் சிங்களப்பன் டகளிடம் இல்லாத ஒரு குறையை நிவர்த்தி செய்தார்கள். இலங்கை தேசியப் பொருட்காட்சிசாலைக்ளின் அரசாங்க இனநூல் ஆய்வாளரான திரு.எம். டி. இராகவன் அவர்களும், இலங்கை முஸ்லிம்கள் போர்த்துக்கேயருக்கு எதிராகக் காட்டிய பகைமையையும், எதிர்ப்பையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அக்கால இலங்கை முஸ்லிம்கள் காட்டிய ஒற்றுமை உணர்வும், ஒரே நோக்கும் நாட்டுப் பணியில் ஒரு முக்கிய அம்சமாய் அமைந் துள்ளது. போர்த்துக்கேயர்களை வெளிப்படையாய் எதிர்த்த வர்கள் இலங்கை முஸ்லிம்கள் மட்டும்ே. 163 6ஆம் ஆண்டு கண்டி இராசசிங்கனின் பலமும், ஒல்லாந்தரின் பலமும் ஒன்று சேர்ந்து போர்த்துக்கேயரை நாட்டைவிட்டுத் துரத்தியபோது முஸ்லிம்களும் அதில் பெரும் பங்கு கொண்டனர். முஸ்லிம் களின் ஒற்றுமையைப் பாராட்டிய இராசசிங்க மன்னன் கண்டி யிலே முஸ்லிம்கள் குடியேறுவதற்காக அக்குறணை உடுநுவரைப் பகுதிகளில் நிலங்கள் கொடுத்தான். இலங்கை வாழ் முஸ்லிம் களுக்கு வேற்றுநாட்டுப்புற்று கிடிையாது. அவர்கள் தங்களது
69

Page 102
ஒத்துழைப்பைத் தருவதற்கு வேற்று நாட்டின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை. நாட்டின் மீது பற்றில்லாததாலோ, அல் லது நாட்டு மக்களோடு ஒன்றிணையாமையாலோ எந்தவொரு இலங்கை முஸ்லிமாவது நாட்டைவிட்டு வெளியேறியதாக எனக்கு நினைவில்லை. போர்த்துக்கேயரைத் திருப்திப்படுத்துவ தற்காக ஏழாம் புவனேகுபாகு முஸ்லிம்களைத் துன்புறுத்திய வேளையிலும், அவர்கள் எந்தவொரு அந்நிய நாட்டிலிருந்தா வது உதவி கோரவில்லை.
இது உலக முஸ்லிம்கள் வலிமையற்ற நிலையிலிருந்த கார ணத்தினுலல்ல. அதற்கு மாருக இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சி நிலவிய காலத்தில், இந்தியாவில் மொகலாய சக்கர வர்த்தியின் ஆட்சி பலம்பொருந்தியதொன்ருக விளங்கியது. அக்பர், ஜெஹாங்கீர், ஷாஜஹான் போன்ற சக்கரவர்த்திகள் ஆண்டனர். இந்த சக்கரவர்த்திகள் இந்தியாவில் முஸ்லிம் ஆட் சியைப் பலப்படுத்தி ஏறக்குறைய இந்திய உபகண்டம். முழு வதையும் ஆட்சிபுரிந்தார்கள். இந்தியாவில் மட்டும் முஸ்லிம் கள் பலம்பொருந்தியவர்களாக இருக்கவில்லை. முஸ்லிம்களின் வரலாற்றில் 16ஆம் நூற்ருண்டு மிகப் பெரிய யுகமாகும். முஸ் லிம்களின் அதிகாரம் உச்சநிலை எய்தியிருந்த காலகட்டம் அது. ஒட்டோமன் துருக்கியர்கள், ஐரோப்பிய, ஆபிரிக்க, ஆசிய நாடுகளை உள்ளடக்கியதொரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந் தார்கள். தவிர்க்க முடியாத துருக்கியர்களின் வெற்றிவேகங் கண்டு, ஐரோப்பாவே நடுநடுங்கிக்கொண்டிருந்தது.
முஸ்லிம்கள் தங்கள் தாய்நாட்டின்மீது காட்டும் அன்பை யும், விசுவாசத்தைப்பற்றி ஐயமேற்பட இடமேயில்லை. ஆகவே
பூரீலங்கா முஸ்லிம்கள் குடியரசுப் பிரகடனத்தைக் கொண்டா டுவதற்காக இங்கு கூடியிருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை.
நல்லுறவின் வரலாறு
நெடுங்காலமாகத் தொடர்ந்து நமது விசுவாசத்தை நமது நாட்டிற்குக் காட்டி வந்திருக்கிருேம். இக்கூட்டம் நட்பும் தாராள மனப்பான்மையுடையவர்களான சிங்கள மக்களுக்கு முஸ்லிம்
70

களின் நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. சிங்கள-முஸ்லிம் நல்லுறவு ஏறக்குறைய 1400 ஆண்டுகளாக நிலவி வருகிறது. சிங்கள-இலங்கை சோனகர்களின் நல்லுறவு 2600 ஆண்டுகளாக, கி. மு. ஆரும் நூற்ருண்டில் இலங்கை சோனகர்களின் மூதாதையர்களான சேபிய அராபியர்களும் ஃபினிஷிய அராபியர்களும் வர்த்தகர்களாக வந்த காலந் தொட்டு நீடிக்கிறது. காலஞ்சென்ற பிரதமர் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. புண்டாரநாயக்கா அவர்கள் "சிங்களவர்களாகிய நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்துள்ளோமோ, அத்தனை ஆண்டு கள் இலங்கைச் சோனகர்களும் இந்த நாட்டில் வாழ்ந்துள்ளார் கள். இந்த இரு சமுகத்தினரிடையே நெருங்கிய நட்பு நீடிக்கி றது" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
1939ஆம் ஆண்டளவிலேயே. அரசாங்க சபையில் உரை யாற்றும்பொழுது காலஞ்சென்ற பிரதமர் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் முஸ்லிம்கள் நிலைபற்றி அக்கறை காட்டியுள்ளார். "எந்த இரு சமுகங்களுக்காவது உண் மையான குறைபாடு இருக்குமென்ருல், அது கண்டிச் சிங்களவ ருக்கும். முஸ்லிம்களுக்குமே எனக் கூறியுள்ளார். மேலும் இன்று நிலவுகின்ற பிரதிநிதித்துவ முறைப்படி ஐந்தரை இலட் சம் இலங்கைத் தமிழர்களோடு ஒப்பிடும்போது. 4 இலட்சம் இலங்கை முஸ்லிம்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை எனலாம். அரசாங்க சபையிலே இலங்கைத் தமிழர்க களுக்கு ஏழு பிரதிநிதிகள் இருக்கிறர்கள். ஏறக்குறைய தமிழர் களுடைய எண்ணிக்கை அளவுள்ள முஸ்லிம்களால் ஒரு பிரதிநிதி யாவது, எந்தத் தொகுதியிலும் தேர்ந்தெடுக்க முடியாது. ஓரிரு பிரதிநிதிகளை நியமனஞ் செய்வதற்காக வேண்டி அவர்கள் தேசாதிபதியின் கருணையை நம்பியிருக்க வேண்டியதாகிறது" என்று குறிப்பிட்டார்.
இலங்கை முஸ்லிம்கள்
இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு இனப் பிரிவுகளால் உரு வாக்கப்பட்டவர்கள். பெரும்பான்மையானவர்கள் அராபிய வர்த்தகர்களின் சந்ததியினரான இலங்கைச் சோனகர்கள்
7

Page 103
ஆவார்கள். இரண்டாவதாக ஒல்லாந்தர் காலத்தில் இலங்கை வந்த மலாயர்கள் ஆவார்கள். அவர்கள் ஒரு விர சமுதாயத்தி னர். போலீஸ், இராணுவம், தீயணைக்கும் படை ஆகிய சேவை களில், நாட்டின் சட்டித்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பெரும் பணியாற்றியிருக்கிறர்கள். பூஜீலங்காவில் மிகச் சிறந்த இருவரான நீதியூரசர் எம். ரீ. அக்பர் அவர்களும், முஸ்லிம் தலை வர் டி.பி. ஜாயா அவர்களும் இந்தச் சிறிய ஆணுல் சீரான சமு கத்தைச் சார்ந்தவர்களாவர். அடுத்த இனப் பிரிவு பிரித்தா னிய காலத்தில் வந்து இப்பொழுது இலங்கைக் குடியுரிமை பெற்றுள்ள இந்திய பாகிஸ்தானிய முஸ்லிம்களாவர்.
இலங்கைச் சோனகர் இந்நாட்டில் பழங்குடி மக்கள். இத் நாட்டின் இயற்கைத் தாவரங்களையும், உயிரினங்களையும் போன்று இந்நாட்டில் ஒரு முக்கிய அங்கமாவார்கள். கலாநிதி போல் ஏ. பீரிஸ் அவர்கள் பூரீபாதமலையை தரிசிப்பதற்காக நபிகள் நாயகம் உயிரோடிருக்கும் காலத்திலேயே, ஓர் அராபிய சஞ்சாரி வந்ததாக உறுதியான ஓர் பரம்பரைக் கதை இருப்ப தாகக் கூறுகிருர், சோனக் வைத்தியர்கள்மீது சிங்கள மன்னர் கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் rosari. இலங்கைச் சோனகர் இந்த நாட்டு மக்களோடு இரண்டறக் கலந்துவிட்டார்கள். அவர்கள் தமது சுயமார்க்கத்தைத் தழுவி யதைத் தவிர மற்றெல்லா வகைகளிலும் இலங்கையர்களா கவே விளங்கினர்கள். சர். எமர்ஸன் டெனன்ட்டின் கோட் பாட்டை ஆதரித்து கலாநிதி பர்லேந்திரா அவர்கள் இலங்கைச் சோனகர் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று கூறுகிருர், G3Fr 6orsi சிங்களவர்களை அல்லது வேடர்களைப்போல இந்நாட் டின் பூரீவீகக் குடிகள் எனலாம். ஏன்ெனில் அவர்கள் 2000 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிருர்கள் மத்திய காலத்தில் வாழ்ந்த அராபிய நூலாசிரியர் ஒரு வரைப்பற்றித் திரு. டி. டொனல்ட் ஒபயசேகரா குறிப்பிடுகிறர் 1154ஆம் ஆண் டில் எழுதிய இதிரிஸி என்பவராகிய அவர் பூரீலங்காவின் மன்ன னுக்கு ஆலோசனை கூறிய மந்திரி ச4ையில் 16 மந்திரிகள் இருந் தனரென்றும் அவர்களில் நால்வர் முஸ்லிம்கள் என்றும் குறிப் பிடுகிளுர், திரு. எம்.டி.இராகவன் அவர்கள் 5 ஆம் விஜயபாகு
72

வின் மந்திரியாகிய மீரா லெவ்வையைப்பற்றிக் குறிப்பிடுகிருர், 15ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் செங்-ஹோவின் தூதுக்குழு வந்தபோது சீன அரசாங்கம், பூஜீலங்காவில் பெளத்த ஆலயங் களோடு, ஒரு முஸ்லிம் தர்காவுக்கும் வெகுமதிகளை அனுப்பி வைத்தது. மேற்கத்திய சக்திகளில் ஆட்சிக்குட்பட்ட பகுதி களைத் த்விர்த்து. கண்டிப்பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு வழிபாட்டுச் சுதந்திரமும், பொருளாதார்ச் சுதந்திரமும் இருந்தது:
பூரீலங்காவின் முஸ்லிம்கள் சமாதானமுள்ளவர்கள். சட் டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் வியாபாரிகளாக இந்நாட்டுக்கு வந்தார்கள், வியாபாரிகளாகவே வாழ்ந்தார் கள் துப்பாக்கிகளை ஏந்தி நாட்டை அடக்கியாள எப்பொழு துமே எண்ணுதவர்கள். அதனுல் முஸ்லிம்களுக்கும். சிங்களவர் களுக்குமிடையில் கசப்போ, பகைமையோ இல்லை, வரலாற்று பூர்வமாக சண்டையோ, விரோதமோ இல்லை, சிங்கள மக்க ளுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே நிலவிவரும் அமைதியும், இணக்கமும், ஒற்றுமையும் உலகத்தில் வேறெந்த நாட்டிலும், வேறெந்த காலத்திலும் உவமை காண முடியாததொன்ரு கும். பூரீலங்காவின் முஸ்லிம்கள் அவர்களது அரசியல் உரிமைகளை கட்டுப்பாட்டோடும், அடக்கத்தோடும், அமைதியோடும் கோரியுள்ளார்கள். அவர்கள் அளவுக்கு மிஞ்சிய கோரிக்கை களையோ, கற்பனைக் கோரிக்கைகளையோ முன்வைக்கவில்லை. இந்நாட்டில் பிரிவினையையோ, கற்பனைக் கோரிக்கைகளேயோ அன்றி பிரிவினைப்போக்குகளையோ அவர்கள் ஆதரிக்கவுமில்லை. ஊக்கப்படுத்தவுமில்லை,
முஸ்லிம்களும் நாட்டு விடுதலையும்
அண்மைக்கால அரசியல் சீர்திருத்தங்களில் இந்நாட்டின் விடுதலையை முஸ்லிம்கள் உற்சாகத்தோடு ஆதரித் திருக்கிருர் கள். 1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ந் திகதி நடைபெற்ற இலங்கை'முஸ்லிம்களின் அரசியல் மகாநாட்டில் ஸர் முகம்மது மாக்கான் மாக்கார் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
f73

Page 104
* பெரும்பான்மை சமுதாயம் சிறுபான்மைச் சமுதாய நிலைக் குத் தாழ்த்தப்பட வேண்டுமென்று நான் அப்பொழுது விரும் பவுமில்லை. இப்பெர்ழுது விரும்பவுமில்லை. அதற்கு மாருக, என் னுடைய நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டுமுகமாக இந்நாட் டில் சிங்கள ஆட்சி நடைபெறுவதற்கு எனக்கு எவ்வித ஆட் சேபனையுமில்லை என்று குறிப்பிட்டுள்ளேன். இதிலிருந்து என் உள்ளத்தில் வகுப்புவாதத்திற்கு இடமில்லை என்பது நன்கு தெரி கிறது" அதே மகாநாட்டில் அனுபவம் குறைந்திருந்தாலும், மிக இளைஞனக இருந்தபொழுதிலும் நான் கூறினேன், ‘என்னு டைய சிங்களச் சகோதரர்களுக்கு நான் நிச்சயமாகக் கூற விரும்புவதென்னவென்முல், இந்நாட்டிற்கு பூரண விடுதலை கோருவதில் நான் அவர்களோடு ஒருவனப் இருக்கிறேன். அவர்களுடைய தேசிய கலாசார அபிலாஷைகளை நான் வெகு வாகப் போற்றுபவன் என்று அவர்கள் என்னைக் கணிக்கலாம். அவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நானும், எனது சமுதாயமும் என்றும் இந்நாட்டில் நம்பிக்கைக்குப் பாத் திர்மான நண்பர்களாகவே வாழுவோம். என்னிலோ அல்லது எனது சமுதாயத்திலோ இந்நாட்டிற்கு அதன் குழந்தைகள் காட்ட வேண்டிய பற்றிலோ, அல்லது அசைக்க முடியாத விசு வாசத்தாலோ, சற்றேனும் குறைகாண முடியாது"
1945ஆம் ஆண்டு ஸர் ராஸிக் பரீத் அவர்கள் அரசாங்க சீர்திருத்தங்களைப்பற்றிய அறிக்கைய்ை ஏற்க வேண்டுமென அரசாங்க சபையில் உரையாற்றியபொழுது இவ்வாறு குறிப் பிட்டார். "எங்களுடைய அரசியல் ஞானமும், நியாயசிந்தை யுமே இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து பெறும் போராட் டத்தில் சிங்கள மக்களோடு எங்களைத் தோளோடு தோள் சேர்ந்து போராட வைத்தன சோல்பரி சீர்திருத்தங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய ஜனப் டி. பி. ஜாயா அவர் கள் பின்வருமாறு கூறினர்கள்: 'முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் நாட்டின் பூரண விடு தலையைப் பெறுவதற்கான எந்த இயக்கத்திலும் முதலிடம் வகிப்பது ஒரு வழக்கமாக மட்டுமல்ல ஒரு கடமையாகவும் கரு தப்படுகிறது. போராட்டம் பூரண விடுதலைக்கென்ருல், எவ்
74

வித பாதுகாப்புகளும் கோராமல் அதற்காக உழைக்க முஸ் லிம்கள் ஆயத்தமாக இருக்கிருர்கள். ஏனென்றல் சுதந்திரத் தின் சக்தியால் வேறுபாடுகள் அழிக்கப்பட்டுவிடும்."
எங்கள் எதிர்காலம்
சிறுபான்மைச் சமுகத்தைச் சார்ந்த ஒருவர், அவரது நாட் டிலே பூரண இயக்கமுடையோராய் இருக்க வேண்டும். அவரது வாழ்க்கையிலே கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது. ஒரு சுதந்திர சமுதாயத்தில், பூரண மலர்ச்சியடைய வேண்டிய அவனது ஆற் றல் தடைப்படுத்தப்படக்கூடாது. இன்றைக்கு எதிர்காலத்துக் கேற்றவகையில் முஸ்லிம்களின் சமுதாய, ஆத்மீகப் பெருமை புதிய வேற்றுருவங்கள் பூண வேண்டும். இலங்கை வாழ் முஸ்லிம் களின் எதிர்காலத்தை கடந்த காலத்தை நினைந்து கண்ணிர் வடிப்பவர்களால் உருவாக்க முடியாது. தற்காலத்துக்கேற்ற வகையில் நமது சமயத்தின் உயரிய அமரத்துவமான உண்மை களை நிலைநாட்டுபவர்களால் மட்டுமே எதிர்காலத்தை உரு வாக்க முடியும். மறைந்துவரும் முதலாளித்துவ யுகத்தின் பெரு மைகளை எண்ணி வருந்துவதிலில்லை, அதேபோன்று வணிக இள வரசர்கள் வாழ்ந்த காலத்தை எண்ணி ஆசைப் பெருமூச்சு விடுவதும் அர்த்தமற்ற செயலாகும். இஸ்லாம் நம் நாட்டின் தற்கால வாழ்க்கை மாற்றங்களுக்கும், புதிய சூழலுக்கும் ஏற்ப செயற்பட வேண்டும் என்னுடைய முழுமையான நம்பிக்கை என்னவென்ருல், பூரீலங்கா வாழ் முஸ்லிம்களின் நல்வாழ்வுக்கா கச் செய்ய வேண்டிய முக்கிய பணி, புதிய குடியரசின் வாழ்க்கை யில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், ஆக்கபூர்வமாகவும் ஈடுபடுவதாகும். சிறுபான்மை மக்களின் நல்வாழ்வுக்கு பெரும் பான்மை மக்களின் நல்லெண்ணம் மிக முக்கியமானதாகும். நல்லெண்ணம். வருமென்று எதிர்பார்த்துக்கொண்டும், நம் பிக்கை கொண்டும் நாம் சும்மா இருத்தல் கூடாது. நம் நாட்டு பல்வேறு இன மக்களிடையே துவேஷம் பரப்பும் மனிதர்களை அகற்றி. நல்லெண்ணம் உருவாக்கும் நல்ல சக்திகளை பலப்படுத் துவதற்காக நாம் தீவிரமாக பாடுபடல் வேண்டும். முந்திய நூற் முண்டுகளில் முஸ்லிம்கள் இஜ்-ஹாத்ஐ (கலந்துரையாடலும்,
75

Page 105
முடிவு செய்தலும் கதவடைத்துவிட்டதால், முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படாமல் போய்விட்டது. புதிதாக உருவாகி வரும் தற்கால் உலகிற்கு ஏற்றவாறு நமது மார்க்க ஆசாரங்கள்ே புனரமைப்பு செய்யும் முயற்சிகள் தொடர்பற்றனவாகவும் பயனற்றனவாகவும் அமைந்துவிட்டன.
உலக அரங்கில் முஸ்லிம்கள் கெளரவமான இடம்பெற ஒரே வழிதான் உண்டு. இஸ்லாம் காட்டிய வழியில் நின்று. இன்றைய சமுதாய வாழ்க்கைக்கேற்ற நடைமுறைக்கோட் பாடுகளே வகுத்தலாகும், மனித அறிவு, பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றின் எல்லேகள் பரந்து விரிந்துகொண்டிருக்கும் வேளே யில், முஸ்லிம்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளே இந்த வளர்ச் சிக்கேற்ப விளங்கிக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் என்ற அடிப்படையில், நாம் மனிதனின் அடிப் படைச் சுதந்திரத்திலும், அடிப்படைச் சமத்துவத்திலும் அடிப் படைச் சகோதரத்வத்திலும் நம்பிக்கையுடையவர்கள். நமது பரிசுத்த குர்ஆன், நம்முடைய அலுவல்கன் நாம் கலந்து பேசித் நீர்த்துக்கொள்ள வேண்டுமென்று கூறுவதால் அது ஜனநாயகத் துக்கு வழிகாட்டுகின்றது. இஸ்லாமிய சோஷலிஸ்ம் என்பது இஸ்லாமிய் வரலாற்றில் சீர்திருத்த தேசிய சக்திகளின் மற் ருெருபடியான வளர்ச்சியேயாகும்.
முஸ்லிம்களின் கடமை'
நாங்கள் முஸ்லிம்கள், இதில் நாம் பெருமையடைகிருேம். 1400 ஆண்டுகளாக இஸ்லாத்தின் அரவ&ணப்பில் வளர்ந்தவில் மதிப்பற்ற ஓவியக் கிலேக்கும், கட்டிடக் கலேக்கும், கவிதைக் கும் உரிய வாரிசுகள் நாம் என்பதில் பெருமையடைகிருேம். அதேசமயத்தில் நமது தாய்நாடTஸ்தும், நம்முடைய மூதாதை யர்கள் 2600 ஆண்டுகள் வாழ்ந்ததுமான இலங்கைக்குடியர சில் குடிமக்களாய் இருப்பதிலும் நாம் பெருமையடைகிருேம். பூரீலங்காவின் தேசிய தனித்துவத்தின் பிரிக்க முடியாத ஒற்று மையின் ஓர் அங்கம் நாம். ஒவ்வொரு முஸ்லிமின் சீரிய உன்னத
76


Page 106
ஜணுப் எம். ஜே. எம். லாயிர் குடும்பத்துடன் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன்
 

கடமையென்னவென்ருல் பூரீலங்காக் குடியரசின் ஒற்றுமைக் கும், வலிமைக்கும், இறைமைக்கும், அச்சமின்றி, சுயநலமின்றி நேர்மையாக உழைத்தலாகும்,
கெளரவ பிரதம மந்திரி பூரீமாவோ பண்டாரநாயக்கா
அவர்களே! இலங்கைக் குடியரசின் முதலாவது பிரதம மந்திரி யாக நீங்கள் பதவியேற்றதைப் பாராட்டி, எங்கள் அன்பான வாழ்த்துக்களேக்கூறிக்கொள்ளுகிருேம், எங்களின் பூரண விசு வாசம் உங்களுக்கென்று த திகூறி, ரீலங்கா குடியரசுக்கு எங் களின் உளமார்ந்த விசுவாசத்தை எனது மக்களின் சார்பில் அர்ப்பணிக்கிறேன். வஸ்ஸலாம்.
।
في حجم " خير
"◌"
.
క్సన్లో A} :
" 3
Q: -- ར་ Till "LITT A བའི་ * (A
o'
i
77

Page 107
ag 21R,
மாத்தறை தந்த மணிமுத்து, அல்ஹாஜ். பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள், இன்று ஈழம் முழு தும் வாழும் முஸ்லிம்களாகிய எங்கள் நன்மைக்கு உழைக்கும் பெரும கனக இதயங் கவர்ந்து விளங்குகிருர்,
്രിബ്ര கண்ட குஆலவர்
கற்று, கற்றவழி நின்று, கல்வியில்லாதேங்கிய முஸ்லிம் சமுகம், கல்வி கற்றுக் காசினி புகழ வாழ வைக்கத், தம் வாழ்நாளையே தியாகம் செய்து வரும் அவர்தம் பண்பையும், பணியையும், பாட் டிற் தீட்டிப் பரவசம் எய்துகின்றனர், நம் நாட் டின் தலைமைக் கவிஞர் பெருமக்கள்.
*பதியுத்தீன் மஹ்மூத் பஞ்சகம்" பாடிப் புக ழும் நமது காத்தான்குடிக் கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பையவர்களின் கவிதைக் கருத்துப் புகழ் மாலையை முதலிற் காண்போம்!
பதியுத்தீன் மஹ்மூத் பஞ்சகம்
முத்து ரத்தினம் சூழும் இலங்கையில்
முந்தையோர் புகழ் தாங்க ஒருமகன்,
இத்தி னத்தில் நமக்குள் இருப்பவன்,
எங்கள் நன்மைக் குழைக்கும் பெருமகன்,
78
 
 

வித்தை கற்றவன் மூத்த சகோதரர்.
விரும்பிடப் பணிசெய்து தம் மக்களைப் பத்தி யோடுமுன் காத்திட நிற்பவன்,
பதியுத் தீன்மகு மூது தயாளனே
கல்வியிற் கருத் தின்றி யொதுங்கியும்
காலப் போக்கினக் கண்டு கலங்கியும் பல்வகை யிடுக் கண்களின் மத்தியில்
பற்று விட்டொரு மூலையிற் குந்தியும் தொல்லை வாழ்வென்று சோர்ந்த இம்மக்களிற் தோன்றி குஞெரு காரிய வீரனே பல்வளம் பெறும் லங்கையின் மாமகன்
பதியுத்தீன் மகுமூது தயாளனே,
துணிவுடன் செயல் ஆற்றுஞ் சிலரிலே
தூக்கிப் பேசத்தகைகொண்ட பண்பினன் பணிவுடன் சுய நாட்டுக் குழைத்ததால் ,
பற்பல இடையூறுகள் தாங்கியோன் அணியெனப் பெரும் பான்மைச்சகோதரர் y ・ "
அன்பு வைத்திட முன்னின்றுழைத்தவன் பணிபுரிந்து தம் மக்களை யூக்கியோன்
பதியுத்தின்மகுமூது தயாளனே,
கல்வி மந்திரியாக இருந்தொரு
காலப் போக்கினை மாற்றி யமைத்தவன். செல்வரும் ஏழை மக்களும் ஒன்றுபோல்
சேர்ந்து கல்வியைப் பெற்றிடச் செய்தவன், தொல் பெருங் குடிச் சிங்கள மக்களின்
தோளொடு நின்று நாட்டுக் குழைத்தவன். பல்வகைப் பகை யாவும் களைந்தவன்,
பதியுத் தின்மகுமூது தயாளனே. தேசிய மொழி சிங்கள மாக்கினுன்
தேவை ய்ாவையுந் தான்தலே ஏற்றன்ன், ஏச நின்றவர் ஆயிரம் ஆயிரம்
என்று சோர்ந்திலன், தன்கடன் யாவையும்
79

Page 108
கூசமின் றித்தின் தடுமுன்னேறிக்
கொள்கைவில் நின்று சேவைபுரிந்தவன்,
பாசமுற்றவன்; எங்கள் சகோதரன்
பதியுத் தின்மகு ஆழுதுதானே.
ஆம் பற்பல இடையூறுகளைத் தாங்கிப் பல்வளம் பெரு கும் பார்புகழ் இலங்கை நன்நாட்டின் கல்வியுயரத் துணி
* '-' ९० } : *. * *$'' வுடன் பணிபுரியும் கல்வியமைச்சர் அவர்கள்.
எல்லா இனத்தையும் தன்னினமாக மதித்துக் கல்விப் பணி புரியும் அவர்களைக் கர்ம வீரராக காணுகிருர் கவிஞர்.
செல்வரும், ஏழையும் சேர்ந்து ஒன்றுபோற் ர்ேகல்வி பெற்ருேங்கக் கல்விப்பிற் புதுமுறை கண்ட புரங்கிக் கல்வி யமைச்சகாப்புகழ்பெற்றுத்திகழ்கிறர் நமிது கல்வியமைச்சர் என்று இறும் பூத்ெய்துகிறார் ஆவர்.
தாய்நாட்டுப்,வற்றும், தனித்துவம்ஃயேறும்மூைகப் பற் றும் நிரல்பியவரஈழத் திகழும்தலேமகன் புதியுத்தீன் அவர்கள் என்று பாடும் கவிஞர் ஏற்றதொரு கொண்வகை இனிது முடிக்கும் "கொன்சுைவீரராகவும்" அவரைகிபோற்றுகிருர் அந்தப் பெருந்த கை "எங்கள் சகோதரன்' என்று உரிமை யோடு கவிஞர் பாடும்போது எங்கள் இதயத்தில் பாசம் அலை யாகப் பொங்கிப்பிரவாகிக்கிறதல்ல்வா!
அவரைத் தவிர நமது சமூகம் வாழ நல்லெண்ணத்துடன் பணி புரியும் தலைமகன் வேறு umጽ? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்கிரூேம்
நமது நம்பிக்கையை ‘நலக் பேற“உணர்ந்து கொள்கிருர் நமது தலைவர்! தம்மீது தாளாத நம்பிக்கை கொண்டி சமூகச் சகோதரர்களைச் சரியான துறையிற் சிந்திக்க வைத்துச் சரி யான பாதை யில் நடாத்திச் செல்லவேண்டியது, தமது பொறுப்பு என்பதை உணருகிறர் அவர்,
。其80

ஏழையும் செல்வரும் இனி:சகிோதரராக இணைந்து முன் னேற ஓர் இயக்கம் தேவை? என்று உணருகிருர் அவர். அந்த உணர்வு செயல் வடிவம் வெற்ற்து.
'இஸ்லாமிய சோஷலிஸ முன்னணி உருவாகியது! அந்த முன்னணியின் அருமைத் தலைவராக அவர்கள்-அல்ஹாஜ் பதியுத்தீன் அவர்கள்-அடக்கத்துடன் பொறுப்பேற்றர்கள்!
அவர்கள் தலைமையில் அணி திரளுமாறு கன்னியனரயும், காளையரையும் அறைகூவிஅன்ழத்து ஆதரவு நல்கிப் பாடுகிருர். கல்ஹின்னைக் கவிஞர் ர்ோஷ்ன்"
"எங்கள்'வதி’யின் அணியில் சார்ந்து வாழ்வும் வளமும் காணுவோம்" என்ற அவருை டய பாடலிலே,
பிறந்த நாட்டுப் பெருமை தன்னைப் பேணிப் பேதம் நீக்கியே
சிறந்த சேவையாற்றும் தூய
சிந்தையாளர் நாங்களே!
என்று நமது பண்பினை முதற்கண்‘விளக்குகிருர் அவ்ர். ஏடு புகழ அரசவையில் இருந்தும்தி தந்து நாடு"புகழ்பெற நன் றுழைத்தவர் நாம். இந்த நிலையை அன்று நாடுகர்த்தவிர் அறி யாதவர் போல நமக்குக் கேடு வின்க்க எண்ணினர்/
அவர்களைக் கண்டு கவிஞர் உள்ஹாம்நொதித்தது.
"அறிவுயர்த்தி நெறி வகுத்து
அறம் வளர்த்த எங்க்ள்ை உரிமையற்று வலுமையுற்று `ዄ
உழலச் செய்தல்" ஏற்குமோ”
என்று குமுறுகிறது அவருள்ளம்! இந்த நிலையில் நமதுரிமை காத்து, இந்த நாட்டில்ததுே. நிைேய எடுத்துரைத்து நிலை நாட்ட ஒரு தலைவர் இல்லேன் என்றங்குதல் எழுகிறது! அதே வேளையில், நமது வரலாற்றைத் தெரியாதும்:நசுக்கமுனைந் தோரைக் கவியுள்ளம் ஈச்சுனிந்தவும் கெழ்கிறது:
8

Page 109
*உரிமை காக்க உயிரையிதல்
assistal ST kassir uruguom übl.
சிறுமை நீக்கத் தியாகம் செய்தல்
தெரிக! எங்கள் சிலமாம்!
என்று வெளிவருகிறது, அந்த எச்சரிக்கை" அப்பொழுது தான், அவல நிலையில் தயங்கிய சமூகத்தைக் காக்க, அர வணைத்து ஆறுதல் தந்து உயர்வழி சேர்க்க, உறுதி பெற்ற உள் ளத்தினராம் உத்தமத் தலைவர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் நெஞ்சுயர்த்தி முன்வந்தார்கள்
அவர்களைக் கவியுள்ளம் இவ்வாறு காண்கிறது! அவர்கள் அமைத்த இஸ்லாமிய சோஷலிஸ முன்னணியில் ஆனந்தமாகக் சேர்ந்து பணிபுரியக், கன்னியரையும்-காளையரையும் கடமை யுணர்வோடு அழைக்கிறது:
தருணம் வந்து பணி புரிந்து
சமூகம் காக்கும் தளபதி மரணம் வந்த போதும் எங்கள்
மானம் காக்கும் மகிபதி இஸ்லாமிய சோஷலிஷ
முன்னணியமைத்தனர் விஸ்வாசமாய்ப் பெருமை காக்கும்
'வீரராக நின்றனர்!
அஞ்சியஞ்சி ஆட்சியாளர்க்
கடிமையாவோர் ஆகட்டும்
வஞ்சம் செய்து நம்மைவிற்போர்
மாய்ந்து மண்ணில் மூழ்கட்டும்!
வருக:ளங்கள்."பதியின் அணியில்
வாழ்வு வளம் காணுவோம் வருக ஈழநாட்டிலெங்கள்
பழம்பெருமை தர்ட்டுவோம்

சிங்க இளம் காளையர்காள்!
திரள்க, ஒன்றய அணியிலே! ...:)** • حا ل ”خص .ء۔۔۔۔۔ பொங்குமெலிற் பூவைய்ர்கள்
புறப்படுங்கள் பணியிலே!
கவிஞர் பாடுமாப்போல முன்னணியமைத்து, இஸ்லாமிய இகளஞர்களையும், ஏந்திழையர்களையும் இணைந்து பணியாற்ற உணர்வூட்டி வழிநடாத்தினர் நம் தலைவர் ני
அவர்கள் தலைமை, அன்று ஆட்சி புரிந்தவர்களையே அகம் கலங்கச் செய்தது!
இன்று இஸ்லாமியகமூகத்தின் இணையற்ற, இரும்புள்ளத் தலைவராக-உதவுவதில் மட்டுமல்ல, உரிமையைக் காப்பதி
கல்வியமைச்சராக, எல்லோரும் விரும்பும் நல்ல நடு நிலைப் பணியாளராக அவர்கள் விளங்குகிார்கள்.
அவர்கள் முஸ்லிம்களும், தமிழ் மக்களும் கலந்து வாழும் பெரும் பகுதியாகிய கிழக்கு மாகாணத்திற்குச் சென்று வந்தார்கள்.
ஈழநாட்டின் எழுச்சிக்கு அத்திவாரமிட்டுப் புது மை ப் பாதையில் அழைத்த்ேகும் அவ்ர்களை "எங்கள் தவப் பெரும் பயனக இத்ய்ம் ததும்பப் பாடி வரவேற்கிருர் ஈழத்தின் முதன்மைக் கவிஞரு ள் ஒருவ்ராகி ய "புரட்சிக்கமால்' '
ஒன்றுபட உருவடையாழ நாட்டில்
ஒப்ப்ரிய் நிலசமையச் சமுதாயத்தை நன்றளந்து, நாடிகண்டு கொள்கை சூழ்ந்த
நாயகரே: பதியுத்தீன் மஹ்மூ தென்று இன்றெழுந்த ஜமாலுத்தீனுப்கானி அண்ணுல்!
எங்கள் தவப் பெரும்பயனே வருக! உன்றன் குன்றனந்த தோள் கண்டு, கொள்கை கண்டு;
கொழுத்திய திச் சுட்ரானுேம் வருக, மன்ன!
33

Page 110
தாய் நாட்டின் பற்றுக்கும, சமுதாயத்தின்
தணியாத காதலுக்கும்; ன்வரம் பாய்ந்த தூய தனிக் கொள்கைக்கும், கொள்கை கொண்ட்
துணிவாண்மைப் பண்புக்கும் பதியுத்தீனே ஆயதனிச் சான் றென்று அறையுமாறு
அரும்புகின்ற புத்துலகின் அணியே! எங்கள்
வருகையினல் தருக்குற்ருேம் தல்வா, இங்குநீயெழுக: நின்மாதம் ஏறலுரின்
நிலந்தழுவி நலந் திகழ வருக, மன்னு!
நல்லறிஞர் கலா நிதியே! தாது சேனன்
நயந்த கலை வித்தகளும் தர்ம பாலன் வல்ல கவி முனிதாஸ முதலோர் தம்மை
வழங்கிய தென் னிலங்கை நக்ர் மாத்தறைக்கு. வ்ெல்லமென்ச் சுவையிந்த முகத்தம் வீட்டில்
விளங்கு மரீ லங்காவின் வித்தை காக்கும்கல்விக்கு அமைச்சரெனப் பிறந்த வேறே
கண்ணுண அறபியப்பா கனியே வருக!
அரசியலில் முஸ்லிம்கள் ஆட்டக்காய்கள்!
அவர் தலைவர் மண் குதிரை கட்சி-கொள்கை வரிசையென ஒன்றறியார்!’ என்று தாடே
வாய்கிழியப் பழியளந்வேளை: கொள்கை முரசொலித்து, மூகங் கொடுத்து; சமுதாயத்தின்
மூச்சாகிச் சோஷலிஸ அணியில் எம்மைக் கரஞ் சேர்த்த பெருந் தலைவா, வுருக! எங்கள் காலத்தின் சேர் ஸையித், வருக, மன்கு
சோஷலில் ஆணியில் rம்ல்ம்க் கர்ஞ் 岛母f岛战 பெருந்
தலைவர்; எங்கிள் க்ர்லத்தீன் சேரி செய்யித் அரும்புகின்ற புத்
முனை'க்க்ள் శీ##赫函加海勒argahó湖伊. "மிருதுரீர்க்கொத்தன்" 山T击岛 வர்வ்ேற்புக் “齿 விதை பகுதிக்பர் இங்கு நோக்குவோம்' --
84

அலிகார் கலைக்கூடம் அன்பளிப்புச் செய்த 6Typsums அறிஞன்; இலங்கை வாழ் முஸ்லிம்கள் கீழ் நிலைமை கண்டு, கிளர்ந்தெழுந்து, முஸ்லிம் லீக் வாலிபக் கழகம் வளர்த்துச் சமுகத்தைத் தட்டி எழுப்பித் தலை நிமிர்த்தி, கல்வி ஒளி ஊட்டும் கலைக்கூடம் கம்பகயில் ஆக்கி, சுதந்திரக் கட்சியை தாபித்த சிற்பி அதை வெற்றிப் பாதைக்கு ஆக்கிய மாமேதை முஸ்லிம் சமுகத்தின் முன்னேற்றம் நோக்கி இஸ்லாமிய சோஷலிஸ முன்னணியைத் தாபித்து ஆற்றல் மிகுந்த தலைமை அளித்த மகான்; ஏற்றம் மிகவுடைய கல்வியை மச்சராய். ஆகி இலங்கை வாழ், முஸ்லிம்கன் கண்ணியத்தை மேக மலை முகட்டின் மேலே உயர்த்தியகோ; கல்வியில் ஏற்ற இறக்கங்கள் நீக்குதற்கு Affrinfaskrš5 GS5S ALLMES GPS i DráFerår, வேலைப் பிரச்சினிைச்ழை நீக்கி இலங்வைச் சில உயர்த்தும் த்ன்கமை மிகவுடையை தேசியக் கீல்வித்திட்டம்'ஷ்ணிரத்தனித்த தேசிய'வீரர் தன்" வழியில் வாழ்கின்ற திண்மைத் தலைவரே! உம்மை மருதமுண் என்னு மிந்த ஏழைக் கிராமத்துமுஸ்லிம்கன் பன்னிப் புகழ்ந்து சர்வசத்தில் ஆழ்ந்திதயம் உன்னி வரவேற் பளிக்கின்ருேம்;. 魏
"அலிக்ார் கலைக்கூடம் அன்பளிப்புச் செய்த எழிலார் அறி ஞன் ஆற்றல் மிகுந்த தலைமையளித்த மகான் தேசியக் கன் வித் திட்டம் வகுத்த தேசிய வீரர் அவர்களை நிந்தவூர் மக்கள் நெஞ்சங் கனிந்து வரவேற்ற நீர்மையை இனி நோக்குவோம்.
"பதிபுகழ் அல்ஹாஜ் பதியுதீன் மஃமூத்
பண்புறு அமைச்சரே வருக-வருக, க்ருக், வருக. ரீலங்கா சுதந்திரம் சிறப்புற உழைத்தே
Dமர்வின் வலதுகைiமர்ந்தாய்.

Page 111
சிங்கள மக்களின் அன்பினில் இணைந்தே
தேசத்தில் ஐக்கியம் வளர்த்தாய்
கல்வியில் புரட்சி கண்டாயே
கடமையில் நிறைவு கொண்டாயே.
சமதர்மம் தழைத்திடலாமே
ஜயமே, ஜயமே, ஜயமே
சமுதாய வளர்ச்சியில் சமத்துவ உரிமையில்
தாழ்ந்திட்ட எம்முஸ்லிம் சமூகம் , தலை நிமிர்ந்தோங்கிட் கல்வியில் உய்ர்ந்திட
சகலதும் தந்தெமைக் காத்தாய் தயாளனே உமை மறவோமே
சரித்திரம் பொறித்திடுவோமே. தலைமையில் அணி திரள்வோமே
தலைவா, தலைவா. தலைவா.
ஆம்! சிங்கள மக்கள் அன்பினில் இணைந்து, செந்தமிழ் மக் கள் தம் சிந்தையும் கவர்ந்து, தேசத்தில் ஐக்கியம் வளர்த்த சிலர் கலாநிதி பதியுத்தீன் அவர்கள் தாழ்ந்திட்ட முஸ்லிம் சமுகம் தலைநிமிர்ந்தோங்கிடச் சகல வழியிலும் சலியாதுழைக் கும், சான்ருேர் சமுகத்துக்கும் அதன் உரிமையைக் காத்துத் தரும் அதே வேளையில், சகோதரர்களாக வாழும் சிங்களவர், தமிழர், ஆகியோரின் நலவுரிமைகளையும் நயமாகக் காத்தளிக் கும் நல்லமைச்சராக அவர்கள் விளங்குகிறர்கள்
அம்பாறை மாவட்டம்-காரைதீவிற்கு அவர்கள் வருகை தந்தனர். அப்பொழுது அவ்வூர் மக்களின் அன்புள்ளம் அருந் தமிழ்க் கவிதை பாடி வாழ்த்துப் பாமாலை சூடியது.
"கல்விக் களஞ்சியமே கலையுலகப் பேரமைச்சே
நல்விந்தை தந்தருளும் நாயகமே . பல்லினத்துச் செந்தாமரைக் கபூத்தைச் சேர்ந்திடுவெள்ளோதிமமே. வந்தாய் உவந்தோம்,மனம்
ஆம் கல்விக்களஞ்சியமாய், கலையுலகப் பேரழைச்சாய் நம் தலைவரைக் காணும் அவ்வூர் மக்கள், சாதி மதமெனும் பூச
86.

லைப் பகையாகக் கடிந்தோட்டிய பண்பாளராக, நாட்டின் பிளவை வெறுத்த ஒற்றுமையாளராக, சமரசம் கண்ட தத்துவ ஞானியாகக் கண்டு வாழ்த்தும் சீர்மையை நோக்குவோம்,
ALLLLLLLL S A LLLLLL LLLL AAAAA SS LLA AAAAALLL iLLLLLLL LLLLLE LLLLLLLLiLi Li iLLL kLAt AALL LLLLLLLAAAAA AALLLL AS
ஆளுகைக் குடைய அரசவை அமைச்சென எம்மிடைக் கண்டு இறும்பூ தெய்தினுேம் நீதான், -- சாதி மதம் எனும் தனிப்பெரும் பூசலைப் பகை தடிந்தோட்டிய பண்புள நெறியால் தரம்பிரித்தாளும் தன்மையை வெறுத்து இந்து முசல்மான் இதமுடைச் சிங்களர் சொந்த எம் நாட்டுச் சோதர ரென்னச் - சமரசம் கண்ட் தத்துவ ஞானி.”
இவ்வாறு, இனத்தால் வேறுபட்டிாலும், இத்யத்தால் ஒன்றுபட்ட ஈழ அன்னையின் புதல்வராக விளங்கும் சிங்கள, தமிழ், இஸ்லாமியர் யாவரும் சிந்தை கனிந்த அன்பிற்பிணைந்த சோதரராக வாருங்கள்! நமக்கு அந்த உணர்வ்ைத் தந்து நல் வாழ்வுக்குவழிகாட்டும் தலைவரைப் பாருங்கள் என்று அழைக் கின்றனர்.
'தங்கம் எனத்திரை வங்கக் கடலினைச் சார்ந்தொக்கச்
சிங்களஞ் செந்தமிழ் சேருமிஸ்லாமியர் சேர்ந்தொருங்கே மங்கள மாயொரு மாதாவளர்த்திட்ட மைந்தரெனப் பங்கமில்லாப்பதியுத்தின் மகுமூது பார்க்குகவே'
இத்தகைய மக்கள் தம் இதயபூர்வமான அன்பில் திளைத்து, அடக்கமாகப் பணியாற்றும் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள், அகில இலங்கை அரசினர் பாடசாலைத் தமிழர் ஆசிரி கர் சங்க இருபத்தியோராம் ஆண்டு வருடாந்தத கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டனர்; அப்பொழுது அவர் களுக்களிக்கப்பட்ட வரவேற்புப் பாமாலை இங்கு கவனிக்கத் தக்கது.
媒8震

Page 112
நல்லவர்கள் உலகத்தில் மிகவுஞ்சொற்றம் நடிப்பவரிகள் பெருகிவருங்கலிக்ாலத்தில் எல்லையின்றி நீடிரிந்த சேவை மாண்பை இதயமுவந் தெடுத்துரைக்க மனிதருண்டோ? இல்லையென்று சொல்லாமல்-உன்னைப் போலும் எடுத்துரைக்கும் ஆசிர்வீர் கூட்டம் ஒன்று' முல்லை மலர் மால்குடி உண்மை அன்பின் மோகனமே! வாழ்கவென வாழ்த்துக் கண்டாய் உண்மையன்புடன் உவகை பொங்க வாழ்த்துகிறது.
அத்துடன் திருப்தியுறவில்லை அது? கலாநிதியவர்களின் உள்ளத்துறுதியையும், செயல் திறமையையும் எடுத்ததை எழில் பெற முடிக்கும் ஏற்றத்தை պմ. எல்லா ஆற்றலும் அமைந்து எதிரியையும், இனியராக்கும் பண்பாற்றலையும் அழகுறப் பாடு கிறது அச்சங்கம். . . . .' '
SS LLgTTTT LTTTTLLLLSLLLTTtlES MMMLLGTT S பாரதத்தாய் பெற்றெடுத்தநேருவாக ரகரம்பொருளிந்த நகையாக
பாக்டம் மதியுத்தின் நீ என்றும் வாழ்க!”
இவ்வாறு இதயம் மகிழ் வாழ்த்துகிறது தமிழர் ஆசிரியர் சங்கம். இதன் கவிதையை மிருசுவில் "ஞானம்" இயற்றியுள் SyrsTsi.
இண்ையற்ற பண்பாலும் ஏற்றமுறும் பணியாலும். ஈழம் வாழ் மக்கள் அனைவரினதும் இதயம் கவர்ந்த கல்வியமைச்சர்: ஈழத்து முஸ்லிம் மக்களின் இதயத்தில் வாழும் இணையற்ற தலை வர் கலாநிதி "அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள், கவி ஞர் உள்ளங்களைக் கவர்ந்து அவர்தம் கவிதையிலும் வாழு கின்ற மாண்பு வியக்கத்தக்கதே'
அவர்கள்தம் பண்பாலும் புணியாலும் பரிசி போற்றும்
நீல்பெற்று, எல்லோரும் வாழ்த்தோத, இறையகுளும்; சுகள் நிலமும், நிறைவாழ்வும் மிகப்:ெற்று நீடூழிவாழ்ந்துகிறக்கத் திருவருள் புரிய, அல்லாஹ்வை வேண்டுவோம். அல்ஹம்துல் லில்லாஹ்.
KB

இலங்கைக்கு வந்த ஆரம்பகால அராபிய முஸ்லிம்கள், இந்த நாட்டை செய்லான்' *சரன்தீப்" என்னும் பெயர்களால் அழைத்து இந்துள்ளனர். பண்டைய அராபிய ஏடுகளிலும் இப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. " பாவா ஆதம் (அலை) அவர்களின் புனிதப் பாதம் பதிந்துள்ள புண்ணிய பூமி’ என்ற நம்பிக்கையினலும், வர்த்தகத் தொடர்புகளினுலும் அராபிய முஸ்லிம்கள் இந்த நாட்டுடன் எப்பொழுதும் நெருங் கிய தொடர்புகொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இந்த உண்மையை ஈழத்து வரலாற்று ஏடுகளும், அரபு நாட்டு ல்வரலாறுகளும்; நன்கு விளக்கிக்கொண்டிருக்கின்றன. அராபிய இலங்கை உறவுமுறைகளை இந்து சமுத்திரத்திலே குழப்புவ தற்குமேற்கொள்ளப்பட்ட சதி காரணத்திஞலேதான் கி.வி. 1814ஆம் ஆண்டுமூஸ்லிம்கள்.இந்தியாவுக்குப்பன்டயெடுத்து tல்த்ததாகவும்.அதன். காரணமாக சிந்துநதிப்பிரதேகத்திற் புகுந்த 'முஸ்லிம்கள் படிப்படியாக இந்தியாவின் ஆதிக்கத் ஆதயே துகைப்பற்றியதாகவும் சில வரலாற்று ஆசிரியர்கள்
குறிப்பிடுகின்றனர்.
இவ்வாருக இலங்கைக்கு வந்துபோய்க்கொண்டிருந்த அரா ஈ.பியர்கள் இந்த நாட்டின் கடற்கரைப்பட்ணடிங்களிற்குடியேறி செல்வாக்கையும் பரப்பி வந்தனர். இந்த நாட்டு மன்னர் لقبيلتقييم களதும் மக்களதும் மதிப்பிற்குரிய ஒரு சுமுகமாக வாழ்ந்து வந்தனர். அதனல் சிங்கள மக்கள் மத்தியிலே சிறந்தவியாபார
189

Page 113
சமுகமாகவும் தமது கலாசாரத்தை நன்கு பேணிக் காக்கும் ஓர் இனமாகவும் வாழ்ந்து வந்துள்ளனர்.
தென்னிலங்கையின் சரித்திரப் பெருமைவாய்ந்த தலமாக மாத்தறை நகர் விளங்குகின்றது. 1500 ஆண்டுகளுக்கு முன் னர் தாதுசேனன்
குடிஞன். கள் அங்கே தோன்றலாயினர். இன்றும் போற்றப்படுகின்ற பெளத்த கலாசார வித்தகரான அநகாரிக தர்மபாலா, கவிஞர் முனிதாச குமாரதுங்க ஆகிய தேசியப் பெருந் தலைவர்களின் பிறப்பிடமாகவும் அந்த நகரம் பெருமை பெற்றுள்ளது. அத் தகைய வீரபுருஷர்களில் ஒருவர்ாகவும், தேசிய முற்போக்குத் திட்டங்களை உருவாக்கும் சிந்தனைச் சிற்பியாகவும் மாமேதை பதியுத்தீன் அவர்களும் மாத்தறை நகரைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ளதால், அந்த நகர் மேலும் சிறப்புப் பெறுவதா 'யிற்று.
மாத்தறையிலே பலநூற்ருண்டுகளாக வாழ்ந்து வந்த முஸ் லிம் பெருங்குடியொன்றில் ஜனப் பதியுத்தீன் தோன்றினர். முஸ்லிம் மக்களது இன்பதுன்பங்களிலும் பெரும்பான்மைச்சமு கத்தினரின் பொதுப் பணிகளிலும் ஒன்றிணைந்த அந்தக் குடும் பத்தினர் வகித்து வந்துள்ள, பல்வேறு வகைப்பட்டபதவிகளே தக்கசான்ருய் அமைந்துள்ளன. தர்மகர்த்தாக்களாகவும், நொத்தாரிசுகளாகவும், வழக்கறிஞர்களாகவும் அக்குடும்பத்தி னர் பதவி வகித்து வந்துள்ளனர். அத்தகைய சிறப்புப் பொருந் திய குடும்பத்தினர் 'முகத்தம் வீட்டார்" என அழைக்கப்படுவ துண்டு. இவரது தந்தை வழிப்பாட்டனர் சுலைமான் லெவ்வை மரைக்கார் என்ப் வாாகும். நில ச்சுவாந்தாராகவும், பள்ளி வாசல் பரிபால்கராகவும் இருந்து வந்துள்ளார். மாத்தறை பிரவுன்ஸ் ஹில் (BrownsHi) எனப்படும் பிரதேசம் இவருக்குச் சொந்தமாக இருந்தது. M
90
 
 
 

இவரது தாய்வழிப் பாட்டனர் வலிகாமத்தைச் சேர்ந்த செய்யது முஸ்தபா நொத்தாரிஸ் ஹாஜியாராகும். இவர் சிங்கள மொழியிலும், அரபு தமிழ் மொழிகளிலும் சிறந்த பாண் டித்தியம் பெற்றிருந்தார். கவிஞராகவும் விளங்கினர். இவர் 'நொத்தாரிஸ் ஆகப் பணிபுரிந்ததஞல் இவருக்கு வெலிகம கோறல மகா நொத்தாரிஸ் ராலஹாமி என்ற சிறப்புப் பெயரும் வழங்கி வந்தது. புகழ்வாய்ந்த நொத்தாரிஸாக்ப் பணி புரிந்தமையினல் 49 ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 49 ஆயி ரம் உறுதிகளை சிங்களத்திலும், தமிழிலும் எழுதிப் பதிவு செய் திருப்பதாகக் கூறப்படுகிறது. 114 ஆண்டுகள் வாழ்ந்த இவர் சிங்களத்திலும் பாடல்கள் பலவற்றைப் பாடி இலக்கியத் துறையிலும் உயரிய பணிபுரிந்துள்ளார். அரபு நாட்டிலிருந்து வருகை தந்த அரபி அப்பாவும் அன்னரின் புதல்வர் ஹாஜியார் அப்பாவும் மாத்தறை மக்கள் மத்தியிலே பெரும் புகழும் செல் வாக்கும் பெற்றிருந்தனர். அவர்களது இஸ்லாமிய சன்மார்க்க சேவைகளினல் அப்பகுதி மக்கள் பெரும் பயன் பெற்று வந்த னர். அத்தகைய பெரியார்களின் குடும்பத்தார்களுக்கும் முகத் தம் வீட்டாருக்குமிடையே குடும்பத் தொடர்புளும் சம்பந்தங் களும் இருத்து வந்தன. இஸ்லாத்தின் முதலாவது கலீபா ஹச ፱`ፏ அபூபக்கர் (ரலி) அவர்களது வழிவந்த வாரிசுகளாகவே ‘முகத்தம் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது. அந்தத் தொடர்பு காரணமாகவும் அரபு நாட்டிலிருந்து வந்த பல பெரி யார்கள் "முகத்தம்" வீட்டாரைத் தேடி வரலாயினர். அவ்வாறு வந்த பலர் அக்குடும்பத்தினருடன் விவாகத் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொண்டனர். மெளலானக்கள், சேகுமார்கள் உட் படப் பல பெரியார்கள் அடிக்கடி அக்குடும்பத்தினரின் விருந் தினர்களாகவும் தங்கியிருந்தனர். . . . . .
அரபியப்பாவின் பேரனரே, கலாநிதி பதியுத்தீனின் தந் தையாரான ஜனப் எஸ். எல். எம், மஹ்மூது நெய் ைமரைக்கா ராகும். *மாத்தறை மகத்தயர் என அழைக்கப்பட்ட் அன்னர், தமது முன்னேரைப்போன்றே நிலச்சுவாந்தாராக வாழ்ந்து வந் தார். மாத்தறை முஹிய்யத்தீன் பள்ளிவாசலின் தர்மகர்த்தா வாகவும் இருந்து வந்தார். இவரது தந்தை வழியைச் சேர்ந்த
19

Page 114
வர்கள் நிலச்சொந்தக்காரர்களாகவும் இரத்தின வியாபாரி களாகவும் ஆலிம்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். தாய்வழி யைச் சேர்ந்தவர்கள் கல்விமான்களாக விளங்கி வந்தனர்.
இத்தகைய புகழ்பூத்த குடும்பத்திலே, தந்தை எஸ். எல்.
எம். மஹ்மூது நெய்னு மரைக்கார்.அவர்களுக்கும் அன்னே பாத் தும்மா நாச்சியார் அவர்களுக்கும் பதியுத்தீன் 1904ம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் நாள்,அருந்தவப் புதல்வராய்ப்பிறந்தார். குடும்பத்தின் இளேய மகன், கடைசிக் குழந்தை, அப்படியென் ருல் அதன் வாழ்க்கை குறும்புத்தனமாகத்தானே இருக்கும். செல்லத்திலும் செல்வத்திலும் மிதந்த வண்ணம் வாழ்க்கைப் படகு ஆரம்பமாயிற்று. பயமறியாத பச்சிளங்கன்ருனதால்துணி ம்ெ பிடிவாதத்தன்மையும் இளமையிலேயே தொற்றிவிட்டது. குடும்பத்தின் மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும் பாச மும் கலந்துவிட்டன. பாரம்பரியத்துடன் சுற்ருடல் அநுபவங் களும் தமது பால்பப் பருவத்தின் வளம்பெறச் செய்து விட்டன.
சகோதரர்கள் அறுவர். அவர்களில் இருவர் இளவயதிலே இறையடி சேர்ந்துவிட்டனர். வழக்கறிஞர் சலாஹுத்தின் இரத்தின வர்த்தகர், சிஹாபுத்தீன், அல்ஆலிம் ஜலாலுத்தீன், அல்ஆலிம் லியாவுத்தீன் ஆகிய சகோதரர்கள் பிற்காலத்தில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து, சமூக சன்மார்க்கப் பணி களில் சேவையாற்றியுள்ளனர். அபீரத்தும்மா, பத்தீவுத் தும்மா, பளீலா உம்மா கதீஜாதிடம்மா, ரபீஆஉம்மா, ஆகிய சகோதரிகளின் அணையாத அன்புக்கு இலக்கானவராகவும் பதி யுத்தீன் வளர்ந்து வந்தார். குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டிருந்த ஷெய்குமார்கள், மெளலானுக்களின் அறவுரை களும் இளேஞனின் இதயத்தைத் தொட்டுவிட்டன. அத்துடன், உலக முஸ்லிம் நாடுகளின் முன்னேற்றத்துக்குத் தடையாக ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டிருந்த அடக்குமுறைகளைப் பற்றிய அறிவுரைகளே அப்பெரியார்கள் கூறிக்கொண்டிருந்த போது, இளைஞன் பதியுத்தீனின் இதயத்திலே தனியாத ஒரு வகை வெறுப்புணர்ச்சி தோன்றலாயிற்று. இந்த உணர்வுதான்
192

*g場ミgュgbd ggbas JgEngg*シ&こ』「D コg は eggg begb***gag*eトgsggfg*ミQ『fgggsag gsteg ショ* ggg Isosseo preko 4 luosoggi so Issoort qılo , Is 'aso so ' + s (Nosso Fțării ureg șigaegi吗心电心电闻e晚us恩眼h
额:%%%%%|-- 鹽

Page 115
973-ஆம் ஆண்டு கல்வியமைச்சராக வடபகுதிக்கு கலாநிதி
அல்ஹாஜ் பதியுத்தின் மஹ்மூத் விஜயஞ் செய்தபோது, தமிழ் மக்களுக்கு ஆற்றிய அகும் பெரும் கல்விப் பணி1ை ப் பாராட்டி தமிழ் பக்கிளாலும் யாழ் நகர சபையா MT TOTT TTOET TTT TTS SLLL LLLL LlLLLlLLLLLLLLSS TTTTDT t 0SS ஈகயில் எடுக்கிப்பட்ட டச்,
 

ற்காலத்தில் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் வழிகோலி யது. அதன் பயனே அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளே நிரூபித்துவிட்டன.
ஜனுப் பதியுத்தீன் அளிகாரில் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய பின்னர், புத்தளத்தைச் சேர்ந்த பிரபல தன வந்தரான ஈ. எஸ். ஏ. எம். பல்லு மரைக்காரின் ஏகபுத்திரியான "சம் சுன் நிஹார்’ என்ற நங்கையை 1937ஆம் ஆண்டு திருமணஞ் செய்துகொண்டார். இவர்களுக்குப் பிறந்த ஒரே புதல்வியான செல்வி காமிலாவை பிற்காலத்தில் ஜஞப் ஏ. ஏ. லத்தீப் (Charted Accountant) திருமணஞ் செய்து கொண்டார்.
டில்வியைச் சேர்ந்த அமீர் முஹல்லாவான ஹபீபுல்லாவின் புதல்வி செல்வி பத்திமாகான் அவர்களே ஜனுப் பதியுத்தீன் 1946ஆம் ஆண்டு இரண்டாந்தாரமாகத் திருமணஞ் செய்து கொண்டார். இந்தியப் பிரிவிக்னயைத் தொடர்ந்து திரு மதி பாத்திமா மஹ்மூதின் குடும்பத்தினர் பாகிஸ்தானியர் களாக மாறினர். திருமதி மஹ்மூத் இலங்கைப் பிரஜையாகி விட்டார். இந்தத் திருமணத்தினலும் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் பிறந்தனர். மூத்த மகன் ஜலாலுத்தீன் இர்ஷாத், இளைய மகன் ஜமாலுத்தீன் தாரிக், மூத்த மகள் வசீமா மஹ்மூத் இன்ாய மகள் நுஷ்ரத் மஹ்மூத்.
93

Page 116
கலாநிதி பதியுத்தீன் அவர்களின் வாழ்கையில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களை இதுவரை நோக்கினேம். அச்சம்பவங் களே அன்னரின் அரியசேவைகளை ஒரளவுக்கு உணர்த்துகின்றன. இந்த நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றில் புதியதொரு திருப் பத்தை ஏற்படுத்துமளவுக்கு அன்னரது வாழ்வு அமைந்துவிட் டதையும்.நோக்கலாம். பல நூற்றண்டுகளாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நாட்டின் அரசியல், சமுக பொருளாதாரத் துறைகளில் முஸ்லிம்க்ளும் ஏனையச் சமுகத்தினருடன் முன்னின்று உழைத்து வந்துள்ளனர். எனினும் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களது அத்தகைய சேவை கள் மறைக்கப்பட்டே வந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றண் டின் இறுதிக்காலத்தில் மறுமலர்ச்சித் தந்தையாக விளங்கிய அறிஞர் சித்திலெப்பையின் சமுதாய முற்போக்குப் பணிகளைத் தொடர்ந்து விழிப்புணர்ச்சி கொண்ட புதியதொரு சகாப் தத்தை உருவாக்குவதில் க்லாநிதி பதியுத்தீனின் வாழ்க்கை விசேடமாக முஸ்லிம் சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக அமைந்து விட்டது, நம்முன்னேரது வரலாறுகளை எடுத்துக் காட்டியுள் ளார். இந்த நாட்டில் நமக்குரிய பங்கை ஆணித்தரமாக விளக் கியுள்ளார், முஸ்லிம்களும் இந்த நாட்டின் ஆதிக்குடிமக்களே என்பதையும் நாட்டு வளத்துக்காக உழைத்தவர்கள் என்பதை யும் ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார். அதனல் மறைந்து போன முஸ்லிம்களின் வரலாற்றை மீண்டும் எழுதுவதற்குப் பல தகவல்களைத் தந்துள்ளார்.அன்னரின் சொற்பொழிவுகள், எழுத்
94
 

தோவியங்கள், விடாமுயற்சி ஆகியன 'பாரம்பரிய்த்தையும் புதுமைகளையும் உள்ளடக்கிய - பண்பும் பயனும் மிக்கதோர் புதிய சமுதாயமொன்றை உருவாக்குவதற்கு வழிகாட்டிகளாக அமைந்து விட்டன.
கலாநிதி பதியுத்தீனின் பணிகளை மேலாட்டமாக நோக்கு கின்றவர்கள் அன்னரை "ஒரு தலைவர்" என்று குறிப்பிடுகின் றனர். சற்று ஆழ்ந்து-அகழ்ந்து-ஆய்ந்து நோக்குகின்றவர்கள் "இந்த நூற்ருண்டின் இணையற்ற தலைவர்" என்றே குறிப்பீடு கின்றனர். ஒருவரது நிறைவான சாதனைகள், குறைகளுக்கும் எதிர்ப்புக்களுக்கும் மத்தியிலே தான் நிறைவு பெறுகின்றன். அவ்வாறு குறைகாண்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். எதிர்ப்புக்களுக்கு மத்தியிலே எதிர் நீச்சலடித்த இண்யற்ற வீரப்பெருமக்களினற்ருன் ஒவ்வொரு சமுதாயமும் கால்த்து குக்காலம் மறுமலர்ச்சியடைந்து வந்துள்ளது. இந்த உண் மையை வரலாறு மெய்ப்பிக்கின்றது. எனவே கலாநிதி பதியுத்தீனின் சேவையை மக்கள் காலத்தால் உணர்ந்துகொள் ளத் தவறமாட்டார்கள்.
தாம் சென்றடைந்த நாடுகளிலெல்லாம் தம்மாலான பணி களை அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்காகச் செய்து வந்துள் ளார். இந்தியாவின் தேச விடுதலைக்காகப் பல பெரியார்க ளுடன் தொடர்பு கொண்டு தன்னலான பணிகளைப் புரிந்துள் ளார். சிங்கப்பூர், பர்மா, மே LL S SSS S 00 S S S L S S SS சென்று ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மனப்பான்மையை உருவாக்குவதில் தமது வாழ்வின் சில பகுதிகளை அர்ப்பணித் துள்ளார். மலேசியாவின் உயர்தரக் கல்விக்காக அந்த நாட்டுச் சுதேசிகளைத் தயார் படுத்திய காரணகர்த்தாவாக விளங்கி ஞர். கீழைத்தேய, மத்தியகிழக்கு நாடுகளில் ஏகாதிபத்திய வாதிகளின் அடக்கு முறைகளைக் கண்டிப்பதில் எப்பொழுதும் பின்னின்றதில்லை, அதே நேரத்தில் எந்த நாட்டில் பணிபுரிந்த பொழுதிலும் சொந்த நாட்டு மக்களை மறந்துவிட வில்லை, இந்த நாட்டிலும் தாம் மேற்கொண்ட தன்னலமற்ற சேவை யால் தன்னிகரற்ற தலைவரானுர், இவையனைத்தையும் ஒன்றி
95
பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்குச்

Page 117
இனத்து நோக்கினுல் பல நாடுகளுக்கும் வழிகாட்டியாகவும் மகோன்னத தஃவராகவும் விளங்குகின்ருர் என்பதில் ஐய
5. ॥
ஏகாதிபத்திய எதிர்ப்பு:-
இளமைப் பருவத்திலிருந்தே ஆங்கில ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு மனப்பான்மை கலாநிதி பதியுத்தீனின் இதயத்தில் உருவெடுக்கலாயிற்று. அன்னுரின் குடும்பத்தினருடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்த முஸ்லிம் பெரியார்களினல் அந்த உணர்வு உருவெடுக்கலாயிற்று. 'ஏகாதிபத்திய வாதிகள் முஸ் லிம் நாடுகளேப் பாழாக்குகின்ற னர். இஸ்லாமியப் பண் பாட்டை அழிக்கின்றனர். முஸ்லிம் நாடுகளின் முன்னேற் தத்துக்குத் தடையாக உள்ளனர்." என்பனபோன்ற உரை களைக் கலாநிதி பதியுத்தின் கவனமாகக் கேட்டுக்கொண்டி ருந்தார். இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட உணர்வு, கலாநிதி பதிபுத்தீனின் இளநெஞ்சத்தில் ஒரு கரும்புள்ளியாக உருவெடுத்து வளரத் தொடங்கியது. பள்ளிக்கூட வாழ்க்கை யிலும் அந்த உணர்வு பிரத்திபட்சமாகத் தோன்றலாயிற்று.
| அவர் மாத்தறை செயின்ற் தோமஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்விபயின்றுகொண்டிருந்தார்.அப்போது வயது பதினென்று, சார்னியப் பயிற்சிக்காக பதியுத்தின் தெரிவு செய்யப் பட்டார். அன்றுதான் முதன் முதலாக அவரது ஏகாதிபத் தியவைராக்கிய மனப்பான்மை வெளிக்கிளம்பலாயிற்று. 'சார fué கொடிக்கு விசுவாசப்பிரமாணஞ் செய்து கொண்ட அவர் அன்றைய ஆட்சியின் சின்னமான பிரிட்டிஷ் கொடிக்கு விசுவாசப்பிரமாணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இந்த அடங்காத்தன்மைக்காக அதிபரின் ஆறு பிரம்படிகள் பதியுத்தீனின் உள்ளங்கைகளைப் பதம் பார்த்தன், அந்த இள நெஞ்சமோ அதனைப்பற்றிக் கவலை கொள்ளவில்லே தந்தையா ருக்கும் விஷயம் எட்டியது, மகனே விசாரிக்கலாஞர்.
ா 'வெள்ளேக் காரன் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்வதாக நீங்களும்தானே சொன்னிகள், அப்படிப்பட்டவனுடைய கொடியை
96.

அரபு மக்களின் புரட்சித் தலைவரும், எகிப்திய ஜணுதிபதியுமான கமால் அப்துல் நளார் அவர்களுடன் 1982-ம் ஆண்டு கைரோ நகரில் கலாநிதி அல்ஹாஜ் பதிபுத்தீன் மஹ்மூத் கலந்துரையாடிய தன் பின் எடுக்கப்பட்ட படம்.

Page 118
1963-ஆம் ஆண்டு, அரசாங்க விருந்தினராக இலங்கைக்கு விஜ பஞ் செய்த, பாக்கிஸ்தான் ஜனுதிபதி பீல்ட் மார்ஷல் ஐயூப்கான் கல்வியமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தின் மஹ்மூத் அவர்களு டன் கலந்துரையாடியதன் பின்னர் எடுத்துக்கொள்ட படம்.
 

வனங்கலாமா?" மகனின் கேள்வி இது தந்தையின் இதயம் பூசித்தது, மகனின் இந்த  ைவ ராக்கியத் தை மெச்சிஞர். பலரிடத்தும் கூறி தனது மக அணின் வீரத்தைப் புகழ்ந்தார். இதிலிருந்து ஆரம்பித்த அந்த உணர்வு படிப்படியாகவே வளரத் தொடங்கிவிட்டது.
1921 ஆம் ஆண்டு கொழும்பு வெஸ்லி கல்லூரியில் ஆரம்ப உயர்தரக் கல்வி பயின்து கொண்டிருந்தார் பதியுத்தின், அப்போது வேல்ஸ் குமாரனுள் "குலஸ் டர் கோ மகன்" இலங்கைக்கு விஜயஞ் செய்தார். கோமகனின் விஜயத்தை யிட்டு அன்று கொழும்பில் பாடசாலைகள் மூடப்பட்டன. கோம கனுக்காக விசேட விதிப்பவனியொன்று ஒழுங்கு செய்யப்பட்ட டிருந்தது. பிரஸ்தாப பவனியின் போது மாணவர்கள் வெர் ணிற உடையில் வீதியின் இருமருங்கிலும் அணிவகுத்து நிற்க வேண்டும் என்ற கட்டளே பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோமத னின் சொந்த வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் அவர்மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தார் பதியுத்தீன், தான் காதலித்த பெண்னேயே மணப்பதற்காக பிரிட்டிஷ் சாம்ராஜ் ஜியத்தையும் துறக்க முற்பட்ட கோமகனின் மகாப்பான் மையை வெகுவாகப் பாராட்டினர். எனினும் பிரித்தானிய ஏகாதிபத்திய வைராக்கியம் பதியுத்தீனின் எண்ணத்திலே புரையோடி இருந்தது. அதனுல் கோமகனுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எந்தவொரு வைபவத்திலும் கலந்து கொள்ள மறுத்துவிட்டார், அவரது பகிஷ்கரிப்பு மனப்பான் மையைப் பலர் கண்டித்தனர். சட்டவிரோத நடவடிக்கை யென்றனர், எனினும் தனது மனுேபாவத்தை மாற்றிக்கொள் னாத பதியுத்தீன் அன்றைய நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்ளா மல் வீட்டிலேயே இருந்து விட்டார்.
*
1938 ஆம் ஆண்டு பர்மாவுக்குச் சென்சூர். அக்காலத்தில் கீழைத்தேய நாடுகள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டி குந்தன. பிரிட்டிசாரின் ஏகாதிபத்தியப் போக்கை பர்மா விலும் கண்டிக்கத் தொடங்கினர். அதஞல் அந்த நாட்டின் பிரிட்டிஷ் ஆட்சியாளர், பதியுத்தீன 24 மணி நேரத்துக்குள்
197

Page 119
வெளியேறுமாறு: கட்டளை பிறப்பித்தனர், இவ்வாறே மலேசி பாவிலும் 1935 ஆம் ஆண்டு 48 மணி நேரத்தில் வெளியேற் ற்ப்பட்ட சிம்பவத்தையும் மறப்பத ற்கில்லை. மலேசிய மக்க னின் சுதந்திர உணர்வைத்தூண்டும் அளவுக்கு பதியுத்தீனின் கல்விப் பிரசாரம் அமைவுற்றதஞலேதான் அவ்வாறு வெளி யேற்றப்பட்டார். அன்று அந்த நாட்டிலிருந்த போலீஸ் கமி ஷனர் ஓர் ஆங்கிலேயர், பதியுத்தீனின் நடமாட்டத்தை நன்கு கவ்னித்த கமிஷனர் பதியுத்தீனத் கமது காரியாலயத்துக்கு
த்துப் பின்வருமாறு கூறினர்.
"We have learnt a bitter lesson by teaching Indians. Now they ask for Independence. We would not commit the same blunder in Malasiya'
(நாம் இந்தியர்களுக்குக் கல்வி போதித்த தனுல் கசப்பான தொரு பாடத்தைக் கற்றுக் கொண்iோம். இப்பொழுது அவர்கள் சுதந்திரம் கோருகின்றனர். அதே திவை ற மலே சியாவிலும் செய்யப் போவதில்லை) கமிஷனரின் இந்தக் கருத் துக்குமாருகப் பிரசாரஞ் செய்ய முற்பட்டதனலே தான் 48 மணித்தியாலத்திற்குள் வெளியேற்றப்பட்டார்.
1938 ஆம் ஆணடு அகில இந்திய மாணவ சம்மேளனத்தை உருவாக்கினர். மாணவர்களைச் சுதந்திர இயக்கத்துக்காகத் தூண்டக் கூடிய நிலை உருவாகுமென பிரிட்டிஷார் கவலை கொண்டனர். இந்தியாவின் அன்றைய வைஸ்ராயாகவிருந்த வெலிங்கடன் பிரபு ஆதரவாளர் பல்ருட்ன் சேர்ந்து மாண வர்ல்சம்மேள்னத்தில் சாதி அடிப்படையிலான பிளவு ஒன்றை ஏற்படுத்த முயற்சித்தார். அதனல் முஸ்லிம் மாணவர் சம் மேளனம் தனியாக-அலிகாரின் தலைமையில் இயங்கவேண்டு மென்ற கருத்தும் பரவலாயிற்று. பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் பிரிட்டிஷாரின் இக்கொள்கையை, பதியுத்தீன்வன் ம்ையாகிக் க்ண்டித்தார். இதனல் பல பிரச்சனைகளுக்கு ஆளாக முற்பட்டபோதும் தமது கொள்கையைக் கிட்ைசி வரைவிட்டுக் கொடுக்கவில்லை, N
98
 

பிரிட்டிஷாரின் பாலஸ்தீனக் கொள்கையை ஆரம்பமுதலே கண்டிக்கலாஞர். இலங்கையரிடத்திலும் எதிர்ப்பு:மனப் பான்மையை உருவாக்குவதில் முன்னின்றுழைத்தார். 1988 ஆம் ஆண்டு கொழும்பு' கோல்பேஸ் மைதானத்தில் நடை பெற்ற மாபெரும் எதிர்ப்புக் கூட்டத்துக்குத் தாமே தலைமை தாங்கினர். பிரிட்டிஷாரின் கொள்கையைக் கண்டிக்கும் பிர்ே ரணையொன்றையும் நிறைவேற்றினர்.
1940ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் முகமாக இலங்கைத் தேசிய கெளன்சில் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் ஒரு அங்கத்தவராக கலா நீதி பதியுத்தீன், காலஞ் சென்ற பண்டாரநாயக்காவினல் நியமிக் கப்பட்டார். பிரித்தானியருக்கு உதவக்கூடிய எந்தத்திட்டத் துக்கும் தாம் பங்குகொள்ள முடியாதென.தமது அங்கத்துவப் பதவியை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
1951 ஆம் ஆண்டு ' சுதந்திரக்கட்சி அமைக்கப்பட்டது.
இந்த நாடு பூரண சுதந்திர நாடாக விளங்குவற்கு பிரிட்டி ஷாரின் சகல் தொடர்புகளையும் இந்த நாட்டிலிருந்து பூரன் மாக அகற்றவேண்டும்" என்று கலாநிதி பதியுத்தீன் வலியுறுத் திஞர். இதஞலேயே திருக்கோணமலை கட்டுநாயக்கா ஆகிய இடங்களிலிருத்து பிரிட்டிஷ் படைகள் பிற்காலத்தில் வோபஸ் பெறவேண்டியதாயிற்று
1960ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் கலாநிதி பதியுத் தீன் கல்வியமைச்சராகப் பணியேற்றபோதும் கல்வி முறையில் காணப்பட்ட ஆங்கிலேயச் செல்வாக்கை அடியோடு அகற் றினர், பாடசாலைகளைத் தேசிய ம்யமாக்கியதோடு இந்தி நாட் டுக்கு உகந்த வகையில் கல்வியின் தத்துவங்களையும் கொள்கை முறைகளையும் மாற்றியமைத்தார். இவ்வாருகப் பலதுறைக ளிலும் தமது ஏகாதிபத்திய எதிர்ப்புக்களைப் பலப்படுத்கிஉள் ள்தை நோக்கலாம்.
எழுத்துலகிலே:
கலாநிதி பதியுத்தீன் தன்னை ஓர் எழுத்தாளஞகக் காட் டிக் கொள்ளவில்லை, இலக்கிய விற்பண்ணராக விளங்காத
599

Page 120
போதும் வல:அரிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் அடிக்க்டி எழுதி வித்துள்ளார். ஆராய்ச்சிக் கட்டுரைகளேயும் வரலாற்றுக்கட்டு ரைகளையும்:னழுதி ' சமுதாயத்தின் இலக்கியத் தேவைகளை விளக்கியுள்ளார். முஸ்லிம் சமுதாயத்தின் வரலாற்றை நிரூ ஃபிக்கும் வகையின் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். முஸ் "விம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு பத்திரிகைகள் சஞ்சிகை கள் என்பனவற்றின் தேவைகளையும் காலத்துக்கேற்ப அமைய வேண்டிய முறைகளையும் விளக்கியுள்ளார். பலவேறு வகைப் ப்ட்ட் கடமைகளின் மத்தியிலும் சமூகத்தின் தேவ்ைகளைக் கருத்திற்கொண்டு, சஞ்சிகைகள் பலவற்றை வெளியிட்டுள் ளார். அவையனைத்தும் பிற்காலத்தில் நூலுருக் கொள்ளுதல் அவசிய மீாகும்.
கல்வியும் கலாசாரமும்:
சிந்திக்கக்கடிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு தல்வியின் அவரியத்தை உணர்த்தி வைத்தார், ஆண் பெண் இருபூாலுகளும் கல்வி பயில வேண்டியதன் அவசியத்தை வற் ஆறுத்தினர். தாமே ஒரு கல்வி திலேயத்தை:இகுவாக்கி மிகக் குறுகிய கால எல்லைக்குள் அதனை அகில இலங்கை ரீதியிலான டியூர் நிலேக் கலசத்திலைகமாக மாற்றியமைத்தார், கலரசாரத் தோடிணைந்த கல்வி முறையையும் அறிமுகஞ் செய்து வைத்தார். முஸ்லிம் மாணவிகளுக்கு இஸ்லாமிய ஒழுக்க (பைஜாமா வும் கமிசும் உடையை அறிமுகஞ் செய்தார். அதனுல் இலங்கை எங்கிலும் உள்ள முஸ்லிம் மாணவிகள் அதனைப் பழக்கத்திற் கொள்ளச் செய்தார், தம்மால் உருவாக்கப்பட்ட கம்பளை சாஹிராக் கல்லூரியோடு இணைத்து இஸ்லாமிய கலாசார நிலை யும் ஒன்றையும் உருவாக்கினர். அன்னர் மேற்கொண்ட இத் ததைய பணிகள் தான் அன்னுரை,ஒரு கல்வியமைச்சராகுமள வுக்கு உயர்த்திவிட்ட தென்றல் மிகையாகாது, இரண்டு தட வைகள் கல்வியமைச்சராகப் பணியை மேற்கொண்டு இந்த நாட்டுப் பாடசாலைகளைத் தேசீய மயமாக்கியும் நாடுேக்கு கல்வி முறையை உருவாக்கியும், சமுதாயத்தில் ஆதியதொரு சிறுமலர்ச்சியை ஈற்கடுத்திவைத்தாக்
20
 
 
 


Page 121

பக்கம் வரி
10
13
16
16
35
45
49
so
56
56
73
76
7s
87
92
96
98
99
101
104.
104
104
12
盘】3
115
16
117
119
119
141
144
147
147
152
152
154
155 157
183
92
193
193
93
193
193
99
6
:
19
11
15
22
23
15
26
23
14.
19
20
28
29
29
22
26
21
20
14
24
30
2
14
17
10
13
20
2.
10
10
12
13
3.
பிழை புதில்வராய் செஞ்சம் கூறுவேண்டும் ஆயிலும் பிரார்திக்கின்றேன் சத்தேகக் தேசியத்
gaur Standerd ஆலேசனை பொழி Mohammodina Anglo Oriantal Working பதிதித்தின் நுணுக்கமாக காலைகளும் தொடர்தும் கல்லூயில் seursausiosTTSid பதித்யுதீன் எழுப்பட்டிருந்தது செய்யந் அவமானமாகச் 12-699FJj5 வழாப் இப்பாசாலை பூர்வயான
RT அட்வணையை அடுக்த ஐரோப்பியார்களை ஆமோதிக்ககக் பார்த்தவன்ன சித்தனை தனிமையாகவேனும் வாந்ததாக நினைக்கதக்கதே கல்யி கெளரமாக கமூகத்தின் நாச்சியார் ற்காலத்தில் பல்லு Chartad ஹபீபுல்லா பாத்திமாகான் விற்பண்ணராக
திருத்தம் Lig5dtia gTulo நெஞ்சம் கூறவேண்டும் ஆயுளும் பிரார்த்திக்இன்றேன் சந்தேகக் தேசியக் grar Standard
Gsvarsaw மொழி
Mehaandaa Angio 0riantal
Woking பதியுத்தின் நுணுக்கமாக சாலைகளும் தொடர்ந்தும் கல்லூரியில் seu fitas5ůsorOrigid பதியுத்தின் எழுதப்பட்டிருந்தது செய்யத்
en DrawTLDTsåk alariffs a Typ Tů இப்பாடசாலை பூர்வமான glän
si Lasm sinui அடுத்த ஐரோப்பியர்களை ஆமோதிக்கக் பார்த்தவண்ண இந்தன தனிமையாகவேனும் வாய்ந்ததாக நினைக்கத்தக்கதே கல்வி கெளரவமாக சமூகத்தின் நாச்சியா பிற்காலத்தில் பளலுான் Chartered ஹபீபுர்ரஹ்மான் பாத்திமாகாணம் விற்பன்னராக

Page 122


Page 123
'
- بخ>-محمحمحمد
கொழு
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
 
 
 
 
 
 

*...! ở · 女俩 函历 통 C%
· * *
as to
ਸੰ
"חזחug_tu
It D --