கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வைகுந்த திலகம்

Page 1
LJー、aoー、Lacm 字。 சுவாமிகள் திருவடிகு
 
 
 

III III s
60
●I○●● ー塾○ー
BS5 do G5 öODIL TIL 6OČILA

Page 2


Page 3


Page 4
9 VÚy பூரீமதே ரா ஓம் லக்ஷமீநாத ஸமாரம்பாம் நாத யாமுந அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு
ஓம் குருர் ப்ரம்மா குருர் விவ குருர் தேவோ மகேஸ்வரசு குரு சாக்ஷாத் பரப்ரம்மா தஸ்மை பூரீ குரவே நமக. ஒம் ப்ரஹலாத நாரத பராசர புண்டரீக வ்யாச ஸாம்பரீச ஸசக ஸெளநக பீஷ்ம ருக்மாங்கத அர்ஜுன வசிஷ்ட விபீஷன புண்யாநிமாந் பரம பாகவதாந் ஸ்மராமி
ஒம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தான மல்லாண்ட திணிதோள் மணிவண்ண
- ஆழ்வா ஓம் பொய்கை பூதன் பேயார் பொன்மகிழை செய்ய மதுரகவி சேரர் பிரான் - வைர பட்டர்பிரான் கோதை தொண்டர் பாத கட்டவிழ்த்தார் வாட்கலியன் காப்பு.
- ஆழ்வார் ம்
போதமிகும் பொய்கையார் பூதத்தார் வ
புகழ் பேயார் மழிசையர் கோன் நாதமுனி தொழும் குருகை நாவிறன் 6 நற்பாணன் கொல்லிநகர் நாதனா ஆதரிக்கும் 'தொண்டரடிப்பொடி தாள்க அருட்கலியன் மதுரகவி ஆண்ட ஏதமற்ற நாலாயிரப் பனுவல்களும் வாழி இவருதித்த நாள்மாதம் எழிற்பதி
ஓம் ஈழத்து ஆழ்வார் பூரீ ஆயர்பாடி மயில்

அரி tib bG DIT ாமஜெயம் ாமாநுஜாய நமக
மத்யமாம்
பரம்பராம்.
*ணு
தால்பயாந் னா திந்
காப்பு -
ண்டு - பல கோடி நூறாயிரம் ா - உன் சேவடி செவ்வித் திருக்காப்பு.
ர்கள் காப்பு -
க்கோன் மாறன் பகமென் ப்பொடி பாணன்
புத்தூரான் வாழியே வாழியே
ர் வாழியே கள் வாழியே டாளும் வாழியே
யே பும் வாழியே.
வாகனம் சுவாமிகளும் வாழி வாழி வாழியே.

Page 5


Page 6
ஓம் Այլ IIIլ Ր
M
W W W
MW
W I
W屿 W W
ஆயர்பாடி ஆழ்வார் மரீ வே.
 
 
 

TIL DELLA MULTETITETTITUUTTUTTI TILL
III.
IIIIIIII
ஜெயம் " .
M
W

Page 7


Page 8
Hindu Samaya 4
இந்து சமய அ
-SWAM TA
FOUNDER PRESIDENT-HINDU
PLEASE PERMIT ME TO EXPRESS
Condolence on the passing away of SRIMAL world where only a few, even among the Hind BHAGAVATHAM. AYARPADISWAMIGAL Se of the SRIMAD - BHAGAVATAM are all the mc VAISHNAVA SHRINES for personal favours devotees who listen to lectures on BHAGAVATA in Vaishnava Philosophy. There are 9 aspects.
SHRAVANA - HEARING STOR
KEER TANA - SINGINGPRAIS
SMARANA - REMEMBERNC
VANDANA - WORSHIPPING
PADASEVANA
DASYA - SERVICETOTH
PUJANA - PERFORMINGF
SAKHI JANA - CONSIDERING
AND SAKHIJANA - DEDICATINGO
Most people now are not spiritually advanced. F Bhakthi - SHIRAVANA
Ayarpadi Swamigal's lectures were very useful need a mature interpretation of Krishna Leela an example to all. May his soul rest in VAIKU
OM NAMO
SWAMI TANTRADEVA Trincomalee, Sri Lanka

Abhiivritti Sabha பிவிருத்தி சபை
NRADEVA -
SAMAYA ABHIVRITTI SABHA.
AYARPADI SWAMIGAL. In the present day us, are reading and benefiting from SRIMAD - tan example for others to follow. The teachings ore relevant today of the many who worship at . There are only a fraction as blessed as good M, GITA and UPANISHADS by learned scholars
ESOFVISHNU
ES OF THE LOR?
THELORD
ELORD
UJATO THE LORD'SDIVINE IMAGES
ONE SELFASKRISHNAS FRIEND
NES WHOLE LIFE TO THE LORD.
Hence, they need introduction to the first step in
for all devotees, especially the beginners who . Swamigal’s following of Atma Nivedana is JUNTAM.
ARAYANA

Page 9
ஹரே கிரு ஆயர்பா
- பூரீமதி. நந்தர
சர்வதேச கிருஷ்ண பக்திக்கழகம், 188
களைவாய் துயர களைகண் வளைவாய் நேமி குடந்தை தளராவுடலம் எ6 சரிந்து ே இளையாதுனதா போத இன
அன்றொரு நாள் பதினொரு வருடங்களு திருவாய்மொழியைப் புரட்டியபோது - மேற்கா ஆயர்பாடி ஐயா படிப்பது போன்றதொரு உ6 ஆயர்பாடி ஆச்சிரமத்தில் இருக்கின்றார். அது அவர் பாடக் கேட்பது போன்ற உணர்வு ஆம் பாடிக்காட்டி எமக்கு இந்த திருப்பாசுரத்தின் அவரை எப்படி மறப்போம்? அவர் ஆயிரத்தில்
மனுஷ்யாணாம் சகஸ்ரேசு க யததாம் அபி சித்தானாம் கச்
ஆயிரமாயிரம் மனிதர்களில் எவனோ ஒ அப்படிப் பக்குவமடைந்தவர்களிலும் அறிகின்றான்.
பஹுனாம் ஜன்மனாம் அந்தே வாசுதேவ: ஸர்வமிதி ஸ மக
பல பிறவிகளில் முயற்சித்த பின்னர்தான் சரணடைகின்றான். வாசுதேவனாகிய காரணன் என்பதை அறிந்து எல்ல அப்படிப்பட்ட மஹாத்மா மிக அரிதா
ய இதம் ப்ரமம் குஹ்யம் ம பக்திம் மயி பராம் கிறுத்வா
'பக்திஞானம் எனும் பரமரகசியத்தை ப
அவன் தூய பக்திசேவையைப் பெறுகி என்னை வந்தடைகிறான்'

ஷணா
9 32ULIT
ாணி தேவி -
, புதுச்செட்டித்தெரு, கொழும்பு. 13.
ம் களையா தொழிவாய்
மற்றிலேன்
ப் படையாய்!
i L5 LOTTLDTULIT
ன்ன தாவி
பாம் போது
ள் ஒருங்கப் பிடித்துப்
சை நீயே
ளுக்கு முன்னர் பூரீரங்கத்திவ்விய தேசத்தில்
ணும் பாசுரம் வந்தது. அதைப்படித்தபோது
ணர்வு - அப்பொழுது அவர் தெல்லிப்பளை எப்படி? இவ்வளவு தொலைவில் இருக்கும்
! அவர் நெக்கு உருகி திருப்பாசுரங்களைப் சுவையைக் காட்டியவர். எங்கள் தந்தை
) ஒருவர் இல்லை. பல்லாயிரத்தில் ஒருவர்.
ச்சித் யததி சித்தயே சித் மாம் வேத்தி தத்வத:
உருவன்தான் பக்குவநிலையை நாடுகின்றான். எவனோ ஒருவன்தான் அரிதாக என்னை
( J.J.7 - 3) ந ஞானவான் மாம் பிரபத்யதே ாத்மா சுதுர்லப;
r ஒருவன் என்னைப்பற்றி அறிந்து என்னிடம் நான்தான் காரணங்கள் எல்லாவற்றிற்கும் பாமாக நினைப்பவன்தான் மஹாத்மா. கவே உருவாகின்றான்.
(ப.கி.7 - 19) த்பக்தேக அபிதாஸ்யதி
மாமேவ ஜஷ்யதி அசம்சய:
க்தர்களுக்கு எடுத்துச் சொல்பவன் எவனோ ன்றான் என்பது நிச்சயம். அவன் முடிவில்
(ს 1.4მ!.18 — 68)

Page 10
ஆதி பரமபுருஷர் பகவான் கிருஷ்ணர் வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் பல்ல அதுமட்டுமல்ல எங்களையும் ஆன்மீகப் பாை என்றென்றும் வாழ்கின்றார்.
நானேது முன் மாய
நமன்றமர் பற்றி ஊனே புகேயென்று ே கேதும் நானுன் வானேய் வானவர் தங் மதுரைப் பிறந் என் ஆனாய் நீ என்ன அரங்கத் தரவல் ஆயர்பாடி ஐயா பகவானின் அடியவர் எப்படி எடுத்து விளக்குவது ஆனந்தக்கன உபசரிப்பதால் கண்டவர்கள் மனம் மாறி ட உருவாக்கி விடுவார் ஐயா.
தன்னை நாடி வந்தவர்கள் எவரோ அ மகிமையையும் கூறி “இப்போது நாங்கள் டே விடயம் என்று முக்கியத்துவத்தை வலியுறுத்தி எங்களுக்குத் தெரிந்தவரை அவர் பகவத் 6 தெரியவில்லை. அவருடன் கொஞ்சநேரம் இ ஏற்படுத்திவிடுவார். அச்சுவை மாறாத சுவை
உலகிற்கு இன்பமளிக்கும் ராம நா நாமத்தையுமே தன் வாழ்வின் மூச்சாகக் கெ எடுத்துக்காட்டாக என்றென்றும் எங்கள் எல்
பல்லாண்டு பல்லாண்
பலகோடி நூற
மல்லாண்ட திண்தோ
உன்சேவடி செ
அடியோமோடும் நின்ே
ஆயிரம் பல்லா
வடிவாய் நின் வலமா
மங்கையும் பல்
வாடிவார் சோதி வலத்
ஆழியும் பல்லா
படைபோர் புக்கு முழ
பாஞ்ஜசன்னியழு
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருவ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹி
பூரீமதி. நந்தராணி தேவி

கூறிய வார்த்தைகளையும் ஆயர்பாடி ஐயாவின் யிரத்தில் ஒருவரே. பகவானிடம் சென்றிருப்பார். 3யில் வழி நடத்துகின்றார். எங்கள் நினைவில்
மொன்றறியேன்
நலிந்திட்டு இந்த மாதும் போதங் னை நினைக்க மாட்டேன் களிசா
த மாமாயனே னைக் காக்கவேண்டும் ணைப் பள்ளியானே!
களைப் பார்த்துவிட்டால் அடையும் பூரிப்பை ர்ணிர் பொழிய உடல்நடுங்க அவர்களை கவானின் பக்தர்களாக மாறுகின்றநிலையை
வர்கள் அனைவருக்கும் பகவத் நாமத்தையும் சும் விடயம் பெரியவிடயம் கிடைக்கமுடியாத அவர்களை பகவானிடமே இழுத்துச்செல்வார். விடயத்தைத் தவிர வேறெதுவும் பேசியதாகத் }ருந்தாலும் அந்நேரத்தில் பகவத் சுவையை
என்றும் இன்பந் தரும் சுவை.
மத்தையும், விடுதலையளிக்கும் நாராயண ாண்ட ஆயர்பாடி ஐயா அனைவருக்கும் ஒரு லோர் இதயத்திலும் வாழ்கின்றார். டு பல்லாயிரத் தாண்டு
ாயிரம்
ள் மணிவண்ணா
வ்வி திருக்காப்பு
னாடும் பிரிவின்றி
ண்டு
பினில் வாழ்கின்ற
லாண்டு
துறையும் சுடர்
ண்டு YN
ங்கும் அப்
மும் பல்லாண்டே.
*ண கிருஷ்ண ஹரே ஹரே ரே

Page 11
ஓம் ரீரா
பிறவிப் பெருங்க
- வி.சத்தியநாராய மரீவிஷ்ணு கோவி
"பிறவிப் பெருங்கடல் இறைவன் அடி சேரா
பிறப்பு என்பது பெருங்கடல். இறைவ6 அவர் பாதங்களைப் பற்றியவர்கள் அக்கடை நின்று அமரர் ஆயர்பாடி ஐயா அவர்கள் க: விட்டார். புண்ணியங்கள் இரு பிரிவு என நோக்கிச் செய்யப்படும் நல்லசெயல்கள் ஒரு ட் செய்யப்படும் புண்ணியம் மறுபிரிவு. இவை ப பேறு எல்லோர்க்கும் கிடைப்பதில்லை. & செய்யப் பிறவி எடுத்தவர். இப்பிறவியிலேயே ஓர் ராமபக்தன். ஆயர்பாடி ஐயா அவர்கள் என்று அழைத்தவண்ணமே வருவார்கள். அவ திகழ்ந்தவர். அந்தணர் முதல் அடியார்கள் : ஐயா அவர்கள் தனக்கு எனத் தனிச்சிறப்ை வருந்தும் அவரது பாரியார், பிள்ளைகளுக் சாந்தியடைய வெங்கடாஜலபதியைப் பிரார்த்தி கண்ணனுக்குக் காணிக்கையாக்குவோம்.
துயரத்துடன்,
வி.சத்தியநாராயணக்குருக்கள்
கீதையும் சகஸ்ரநாமமும் பாராய
நல்லவர்களின் இணக்கத்தில் ே
ஏழை ஜனங்களுக்குத் தானம் ெ
ခြီ)ဒs.

மஜெயம் டல் நீந்தியவர்
பணக்குருக்கள் -
ல், தெஹிவளை.
நீந்துவார் நீந்தார்
நார்” - திருக்குறள்
ன் அதைக் கடக்க உதவும் ஒரு தெப்பம். ல எளிதாகக் கடப்பர். அவ்வாறே குறள்வழி Eண்ணன் பாதகமலங்களிடத்துச் சென்றடைந்து ஆகமங்கள் கூறுகின்றன. ஆன்மாக்களை ரிவு. கோயில்களில் இறை அடியார்களுக்காக தி புண்ணியங்கள். பதி புண்ணியம் செய்யும் பூயர்பாடி ஐயா அவர்கள் பதி புண்ணியம் இப்புண்ணியத்தையும் செய்து பேறுபெற்ற எமது ஆலயம் வரும்போதே ராமா! ராமா! பர் தம் வாழ்நாளில் நடமாடும் தெய்வமாகத் வரை தானதருமங்கள் செய்வதில் ஆயர்பாடி பக் கொண்டவர். இன்று அவரைப் பிரிந்து கு ஆறுதல் கூறுவதோடு அவரது ஆத்மா த்து இந்நினைவு மலரை அமரரைக் கவர்ந்த
பணம் செய்யவேண்டும். மனதை
சேர்ப்பிக்கவேண்டும். பொருளை
சய்யவேண்டும்.
- பஜகோவிந்தம் -
ബ
<ල ව්‍ය(!

Page 12
ஹரே கி
- கந்தையா ! தலைவர், சுவிற்சலாந்து
மனிதனாகப் பிறந்த எவருமே மரணிப் வாழ்நாளில் எப்படி வாழ்கிறான் என்பதுதான் முறைக்கேற்பவே எமக்கு அடுத்தபிறவி கிை எம்மில் ஒருசிலர் ஜடவாழ்க்கையில் ஆழ்ந்த உணர்வை மறந்து விடுகின்றனர்.
ஆனால் ஆயர்பாடி ஆழ்வார் ரீ.வே.த.ம இருந்தே கிருஷ்ண உணர்வில் ஊறியவர். அ தன் இல்லத்திற்கு வரும் அன்பர்களுக்கும் கிரு ஊட்டியவர். ஆச்சிரமம் ஒன்று கட்டி ‘ஆழ்வார் பகவானிடம் ஆழ்ந்த பக்திகொண்ட பன்னிரு நாளும் காலையிலும் மாலையிலும் பாராய6 ராமநாம சங்கீர்த்தனமும், பிரசாத விநியோ நடைபெறும். ரீ ராமநவமி, பூரீ கிருஷ்ண கொண்டாடப்படும். ஆச்சிரமத்தை விட்டு இடம்ெ தனது இல்லத்தில் விடாமல் தொடர்ந்தார். மக்களிடையே கிருஷ்ண உணர்வை ஊட்டிய
வேதேஷ யக்ஞேஷ தட தானே ஷ யத் புண்ய அத்யேதி தத் ஸர்வ மி யோகி பரம் ஸ்தான மு
'பக்திமயத் தொண்டின் பாதையை ஏ செய்தல். தானம் கொடுத்தல், தவம் செய்தல் இவற்றால் அடையப்படும் விளைவுகளை இழ (உயர்ந்த இடத்தை) அடைகிறான். கிருஷ்6 ஈடுபடுவதாலேயே பல படிகளையும் கடந்து
எனவே ஆயர் பாடி ஐயா அவர்கள் ஈடுபடுத்திக்கொண்டதன் மூலம் தன்னைத் தூய் விட உன்னதமான செயல் இவ்வுலகில் எது
புத்தாடை புனைந்து இப்புவியில் பாவவி ஏற்றிவிட நேரம் கருதி மீண்டும் ஒருநாள் அ6 ஹரிநாம சேவை தொடர்ந்துகொண்டே இருக்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹ கந்தையா தியாகராஜா

ருஷ்ணா
திலகம்
நியாகராஜா - கிருஷ்ணபக்தி கழகம்
பது நிச்சயம். ஆனால் ஒரு மனிதன் தன் முக்கியமானது. ஏனெனில் எமது வாழ்க்கை டக்கிறது. இது ஒரு விஞ்ஞானம். ஆனால் பற்றுக்கொண்டு செயற்படுகின்றனர். கிருஷ்ண
யில்வாகனம் அவர்கள் இளமைப் பிராயத்தில் அல்லும் பகலும் ராமநாமத்தை ஜெபித்தவர். ஷண உணர்வை, ராமநாமத்தின் மகிமையை கள் ஆச்சிரமம்' என்று பெயர் சூட்டினார்கள். ஆழ்வார்களுடைய திருப்பாசுரம் ஒவ்வொரு ணம் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் கமும் அவரது ஆச்சிரமத்தில் விசேடமாக ஜயந்தி உற்சவங்கள் வெகு சிறப்பாகக் பெயர்ந்த காலத்திலும்கூட, பகவத் சேவையை இச்செய்கையானது அவரைத் தேடிவரும் St.
6r 66
பலம் ப்ரதிஷ்டம்
தம் விதித்வா
பைதி சாத்யம் (u. 8.28)
ற்பவன், வேதக்கல்வி பயிலல், யாகங்கள் ல், கர்மஞானப் பாதைகளை மேற்கொள்ளல் ப்பதில்லை. இறுதியில் அவன் பரந்தாமத்தை ணபக்தியில் உள்ளவன் பக்தித் தொண்டில் பகவானின் பாதகமலங்களை அடைமுடியும்.
தன் வாழ்நாளை பகவத் சேவையில் |மைப்படுத்திக் கொண்டார். பகவத்சேவையை வுமில்லை.
னை நீங்க ஹரிநாமம் பாடி ஆன்மீக தீபம் *னார் திரும்பவும் உதயமாவார். அன்னாரின் கும்.
ண கிருஷ்ண ஹரே ஹரே ரே

Page 13
ஓம் ரீரா
‘சொல்லிச் ெ
- சட்டத்தரணி. கந்ை பொதுச்செயலாளர், அகில
இந்த உலகில் ஆறறிவுடன் பிறக்கு சுயநலனுடன் வாழ்க்கையை அனுபவித்துக் ம
தெய்வத்தன்மை அற்றவன்.
ஆனால் மனிதர்களில் மாணிக்கங்கள் நோக்குடன் வாழுகின்ற சிறப்பு ஒருசிலருக்
வேண்டும்.
அருளுடன் அன்பு பாராட்டி மற்றவர்க நின்ற ஆயர்பாடி ஐயா இன்று எங்களுடன் ஆனால் போகப்போகிறேன் என்று எங்களு சென்றடைந்துவிட்ட அந்த புனித ஆத்மா எ6
அவர் காட்டிய வழியில் வாழ்வதே அ பேரஞ்சலியாகும்.
சட்டத்தரணி. கந்தையா நீலகண்டன்
്വര്
குருவின் திருவடித் தாமரைகளில்
令
பிறவித்தளையினின்றும் விரை6 இந்திரியங்களுடனி கூட மன6
இருதயத்தில் உறையும் தெய்வத்
ଔ୯,

ாமஜெயம் சன்ற புனிதர்’
)தயா நீலகண்டன் -
இலங்கை இந்துமாமன்றம்.
ம் மனிதன் தான் - தன்குடும்பம்’ என்ற கிழ விரும்புகிறான். அவன் சாதாரண மனிதன்
மற்றவர் நலனே தன்னலன் என்று பொதுநல குத்தான் கிடைக்கின்றது. அதற்கும் அருள்
களை வாழவைக்கும் தெய்வமாக உயர்ந்து * இல்லை என்பது மிகவும் மனவேதனை. ளுக்கெல்லாம் சொல்லிவிட்டு வைகுண்டம்
ன்றும் உங்கள் உள்ளங்களில் வாழ்வார்.
ந்தப் பேருத்தமருக்கு நாங்கள் செய்யக்கூடிய
திடமான பக்தி உடையவனாகிப்
வில் விடுபடுவாயாக. இங்ங்னம்
தையும் அடங்கி? உனினுடைய
தைக் காணர்பாய்.
- பஜகோவிந்தம் -
●ジ《
S

Page 14
தோற்றம்
றிராமஜ்ெ பூரணமடைந்த
- ஆயர்பாடி மயில்வாகன
சகலவளங்களும் நிறைந்த இலா மாவட்டத்தில் சோழ இளவரசி மாரு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலி பதித்த தோணியில் வந்து சங்குவத் ஆச்சாரிய பரம்பரையில் வந்தவர்கள திரண்ட சொத்திற்கு அதிபதிக ஹரிஹரபுத்திரன் ஐயனாரை வே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தி தேதி திங்கட்கிழமை இரவு 1 ம பிறந்தது. குழந்தைக்கு மயில்வாக வந்தனர் பெற்றோர்.
குழந்தைப்பருவம்
சிதாழில்
குழந்தை இயல்பாகவே சுறுசுறுப் கருணை கூடியவனாகத் திகழ்ந் அமெரிக்கன் மிஷன் பாடசாலை காரணமாகப் பெற்றோரின் திரண்ட சிறுவனின் தோள்களில் விழுந்தது கடமைகளைச் செவ்வனே செய்துவ வேலையில் தலைமைதாங்கி சிறப் இளவாலை கன்னியர்மடத்துத் தாய மெச்சியதுடன் தனது கிறிஸ்தவம மறுத்த இளைஞனின் மதப்பற்று அத்துடன் ஜோதிடக்கலையைப் ப ஈடுபட்டு குறத்திவேடம், கள்வன்
தனக்கென ஓரிடத்தை ரசிகர்களிட
தொழில் விருத்தியாகி, கட்டட ஒப்ப நீர்ப்பாசனத் திணைக்களம், சு திணைக்களம் இவற்றில் சேவை 40 நீர்ப்பாசனக் குளங்களை புை கணக்கான விவசாயிகள் தமது
7

Ձաւք ஒரு சகாப்தம்
ம் கோபாலகிருஷ்ணா -
வ்காபுரியின் வடபால் திகழும் யாழ்ப்பாண நதப்புரவிகவல்லியின் குறைதீர்த்த அருள்மிகு ன்ெ அயலில், இந்தியாவிலிருந்து சங்குகள் தையில் இறங்கிய பூரீ தவண்டைக் குருக்கள் ர் வேலுப்பிள்ளை தம்பு-மாணிக்கம் தம்பதிகள். ள். நீண்டகாலம் குழந்தைப்பேறில்லாது பண்டி தவம் செய்ததன் பயனாக 1909ம் கதி செளமிய வருடம் ஆவணிமாதம் 01ம் ணி 45 நிமிடமளவில் ஒரு ஆண்குழந்தை னம் எனப் பெயரிட்டு ஆசையுடன் வளர்த்து
பு, விடாமுயற்சி, புத்திக்கூர்மை, ஆளுமை, தான். தனது கல்வியைத் தெல்லிப்பளை யில் கற்று வந்தான். ஊழ்வினைப்பயன் சொத்தும் கரைந்துபோயிற்று. குடும்பப்பாரம் 1. சிறிதும் சளைக்காது பொருளிட்டி தனது வந்தான். மற்றவர்களை ஈடுபடுத்திச் செய்யும் பாகத் தொழில் இயற்றிவந்தான். இவற்றில் பார் பிலோமினா இளைஞனின் சாதுரியத்தை தத்திற்கு மாறும்படி கேட்டபோது பணிவுடன் அம்மையாரை மெய்சிலிர்க்க வைத்தது. யின்றுவந்தான். கிராமியக் கூத்துக்கலையில் வேடம், விதூஷகன் வேடம் ஏற்று நடித்து டம் பெற்றுக்கொண்டான்.
ந்தக்காரராக பொது வேலைத் திணைக்களம், காதாரத் திணைக்களம், உள்ளுராட்சித் செய்து வரலானான். இவற்றில் ஏறக்குறைய எரமைத்து அவற்றினால் இன்றும் ஆயிரக்
ஜீவனோபாயத்தைப் பெறுவது அவரின்

Page 15
சமூகசேவைக்கு சான்று பகர்கி சனசஞ்சாரமற்ற காட்டினுடாகப் ப ளாகவே அமைந்தன. அவற்றைக் நேரத்துடன் செய்துமுடித்தமை கல் ஊண்உறக்கமின்றி அதனை ஒப்ே சிறப்பு அம்சமாகும்.
இல்லறவாழ்வு
சத்சங்கமும்
திருமணப்பருவம் வந்ததும் யா இளையதம்பி - மாரிமுத்து தம்ப செய்து 4 ஆண்கள், 4 பெண்களா பிள்ளைகளைத் தன்னால் இ ஆன்மீகவாழ்வின் பெருமைகளை
ஒப்பந்தவேலையை ஓரளவில் ை கலையை கைக்கொண்டு ஆயி நல்வழிகாட்டி சேவை செய்தார். சோதிட நிலையம்’ ஒன்றை ஸ்தா வெளியீடுசெய்து ஜோதிட உலகி
ஆண்மீகவாழ்வும்
ஒரு தடவை வண்ணார்பண்ணை பூஜையின் பின்னர் ஒதுவார் நாலா போது அதனால் கவரப்பட்டு இப்பா போது அக்காலம் தர்மகர்த்தாவா தன்னிடமிருந்த நாலாயிர திவ்விu பெற்று அன்றிலிருந்து பூரீ நாராய கொண்டு பூஜித்து வரலானார். அ மேலிட, கண்ணிர்சொரிய வணங் பக்தலீலைகளைப் பேசி மகிழ்வதா உள்ள புனித ஆலயங்களுக்கு அமுது படைப்பதும், அவர்களுடன் ஆனந்தம் அடைந்தார்.
குரு உபதேசமும் ஆண்மீகப் பணியும்
முன்செய்த தவப்பயன் காரணமா சிவயோக சுவாமிகளின் உபதே பயிற்சிகளைச் செய்ததுடன் தான் எடுத்துச்சொல்ல வேண்டி ஆt
8

ன்றது. அனேகமாக எல்லாக் குளங்களும் லமைல்கள் கடந்து சென்று செய்த வேலைக
காலநீடிப்பு பெறாமல், குற்றம் குறையின்றி பனிக்கற்பாலது. எந்தவேலையை எடுத்தாலும் பற்றிய பின்னரே ஒய்வு எடுப்பது அன்னாரின்
ழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த திகளின் புதல்வி இலட்சுமியைத் திருமணம் க எட்டுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார். யன்றவரை கல்வியில் முன்னேற்றியும், எடுத்துக்கூறி நல்வழிப்படுத்தியும் வந்தார்.
கவிட்டுத் தான் இளமையில் கற்ற சோதிடக் ரக்கணக்கான மக்களுக்கு துன்பம் நீக்கி இலங்கையில் முதன்முதலாக "ஆயர்பாடி பித்து ஜோதிட பலாபலன் வெளியீடுகளையும்
ன் முன்னோடியானார்.
ா றி வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் ாயிரத் திவ்விய பிரபந்தம் பாராயணம் செய்த டல்கள் எங்கே இருக்கின்றன என்று விசாரித்த க இருந்த பூரீ.சி.பொ.செல்லையா அவர்கள் ப பிரபந்தம் பிரதியை கொடுக்க அன்புடன் பணமூர்த்தி மேல் மாறாத பக்தியும் அன்பும் டியார்கள், பாகவதர்களைக் கண்டால் அன்பு கி உபசரிப்பதும், அவர்களிடம் பகவானின் ாலும் பக்திப் பயிர் வளர்ந்தது. இலங்கையில் * சென்று தரிசிப்பதுடன் அடியவர்களுக்கு
பகவானுடைய லீலைகளைக் கதைப்பதிலும்
க அவருக்குக் கொழும்புத்துறை தவத்திரு சம் கிடைத்தது. ஆன்ம ஈடேற்றத்திற்கான
பெற்ற இனிய அனுபவங்களை மக்களுக்கு பிரத்திற்கு மேற்பட்ட சைவ, வைணவப்

Page 16
பிரசங்கங்களை நாட்டின் பல பாக நிகழ்த்தி வந்தார். 1963ல் மேற் புனிதமான ஆலயங்களையும் பூஜ் மேம்படுத்திக் கொண்டார்.
இல்லநச்சிறப்பும் தவநிலையும்
குடும்பம் விருத்தியடைந்து, மரு உண்டாயினர். எல்லோருக்குட வாழவேண்டிய அவசியத்தினை இல்லறஞானியாகப் பற்றற்று,
நினைவாகவே வாழ்ந்து வந்தார் வசித்து வரலாயினர். ஆயர்பாடி இவற்றை ஸ்தாபித்து தெல்லிப்ப இலட்சம் ராமநாமங்கள் எழு யூரீராமபிரானைப் பிரதிஷ்டை செய் வந்தாலும் உபசரித்து, தங்கிச் (
துநாவு வாழ்க்கையும் தீர்க்கதரிசனமும்
1990ம் ஆண்டு தனது துணைவியா தனியே தங்கியிருந்து தனது து இறைவணக்கத்தையும், சாத அன்பர்களுக்கு நல் உபதேசமும் காலத்தினை முன்கூட்டியே அறிந் சார்ந்தவர்களையும் தயார்படுத்தி பூர்த்தியான எண் ஆகவே :ெ ஆரம்பித்ததும் விடுதலை கிடை அதற்கான சகல ஏற்பாடுகளையும் வியாழன் அதிகாலை 5.30 மணி பாயவும் சமாதிநிலை எய்தி எமது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கூறியிருந்தபடி பக்கத்தில் உறவி ஒருவர் அருகிலிருந்து ‘ராம ராம கழன்று வைகுந்தம் சென்றார். கருணைமிக்க வள்ளலாகவும் தி பூதவுடல் அழிந்தாலும் நீங்கள் வந்து என்னவென்று கேட்பேன் எ வழிநடத்திச் செல்வார் என்பதில்
ஆயர்பாடி மயில்வாகனம் கோபாலகிருஷன
9

ங்களிலும், நகரங்களிலும், பட்டிதொட்டிகளிலும் கொண்ட தென்னிந்திய யாத்திரையின்போது ஜ்யர்களையும் தரிசித்து ஆசிபெற்று தன்னை
நமக்கள் வந்துசேர்ந்து பேரப்பிள்ளைகளும் ம் சிறப்பாக உண்மை வைணவர்களாக ா எடுத்துக் கூறி நல் வழிகாட்டி வந்தார். பகவான் ஸ்மரணையுடன், இறைவனின் பிள்ளைகளில் மூவர் வெளிநாடு சென்று ஆழ்வார்கள் ஆச்சிரமம், ரீராம பக்திக்கழகம் ளையில் தமதில்லத்தில் ஒரு கோடியே 20 திவித்து அதனைப் பரப்பி அதன் மேல் து பூஜை வழிபாடு செய்து வரலானார். யார் செல்லும்படி அன்புடன் வேண்டினார்.
"ருடன் கொழும்பு வந்து யாருடனும் தங்காமல் றவு வாழ்க்கையை மேற்கொண்டார். தனது னையையும் மேற்கொண்டதுடன் வரும் செய்துவந்தார். தனது விடுதலைப்பேற்றிற்கான துகொண்டு அதற்குத் தன்னையும், தன்னைச் வந்தார். 89 குறைவான எண் ஆனால் 90 வகுதானிய வருடம் தனது 90வது வயது க்கும் என்று முன்கூட்டியே அறிவித்ததுடன் ) செய்து வைத்திருந்தார். 1998-08-20ம் திகதி யளவில் கபாலம் திறந்து ஆன்ம பேரொளி
கடமைப்படி வைத்தியசாலை கொண்டுசென்று சிகிச்சையளித்த போதும் அவர் ஏற்கனவே lனர் யாரும் இல்லாத வேளையில், நண்பர்
என்று நாமம் ஜெபிக்க, ஆன்மா மெதுவாகக்
கடும் உழைப்பும், ஆன்மீக சாதனையும், திகழ்ந்த ஒரு சகாப்தம் பூரணம் எய்தியது. எந்நேரம் எங்கிருந்து அழைத்தாலும் உடன் ன்று கூறிய குருநாதன் எந்நேரமும் எங்களை
ஐயமில்லை.

Page 17
ஒம் ரீரா ஆத்மீ
- ஆயர்பாடி மயில்வா
எங்கள் பிதா மற்றைய எல்லாப் பித நடை, உடை, பாவனை மட்டுமல்ல அவரின் ( தன்மையது. 5 அடி 09 அங்குல sed u JJJ (LpL கொண்டிருந்தார். அவர் எங்கு நின்றிருந்தாலும் பொலிவாகவும், கலகலப்பாகவும் காணப்படு ஒலிக்கும் குரல்வளம், தெளிவான சொல்லுறுதி அத்தகைய சிறப்புக்களால் ஆரம்பத்தில் சிற சொல்லக் கேட்டதுண்டு. அவரே தான் குறத் குடுகுடுக்கி குடுவை கையில் ஏந்தி, குனி நாங்கள்’ என்று மிக உற்சாகமாக இருக்குட இப்பவும் என் கண்முன்னே நிற்கிறது. அதுமI செய்வார். ஒருநாள் எம்மைக் கேணி வாய்க்க தான் கேணியினுள் குளிக்கப்போய்விட்டார். சிற வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. நாமும் சென் தலைக்குப் பின்புறம் அணையாகக் கட்டியப உடலில் அசைவேயில்லை. அவரது பேழை பயந்து அழுதுவிட்டோம். எமது அழுகுரல் ே தியானம் செய்யும்போது நிறைவான ஆத்மசுக! சரியாக விளங்கவில்லை.
எனக்கு உலக விடயங்கள் புரியத்
ஆன்மீகவாதியாகவே கண்டேன். எமது வீட அதில் மேசையிலே 4 x 3 அளவான ஒரு ெ களிமண்ணினால் செய்யப்பட்ட 2 உயரமான கையில் சுத்த வெள்ளியினாலான ஒரு புல் ஒரு வேலைப்பாடமைந்த பித்தளைத் தட்டி மாணிக்கத்தினாலான ஒரு பிள்ளையார், வெள்ளி சங்கு போன்றவை காணப்பட்டன. அதே அை பிரார்த்தனை செய்ததாக அம்மா கூறுவார். அழகை வேடிக்கை பார்ப்பதுண்டு.
எமது ஐயா மகாவிஷ்ணுவையே முழுமு அவர் இருபத்துநாலு மணிநேரமும் தியான சிறுவயதிலேயே பூரீமத் கம்பராமாயணத்தை ஆ அம்மாவின் கூற்றுப்படி திருமணத்திற்கு (
1.

மஜெயம் க பிதா
கனம் பூரீகிருஷ்ணா -
ாக்களையும் விட வித்தியாசமானவர். ஆம்! தோற்றமும் பார்ப்பவரைக் கைகூப்ப வைக்கும் ), கிட்டத்தட்ட 150 கிலோகிராம் நிறையும் பளிச்சென்று தெரிவதுடன் அவர் இருக்குமிடம் ம். ஒலிபெருக்கி இல்லாமலே கணிரென்று , கேட்போரைக் கவர்ந்திழுக்கும் தன்மையது. ந்த மேடைக்கலைஞனாகத் திகழ்ந்ததாகவும் தியாக வேடமிட்டு நடித்ததை “குண்டுடுக்கி ந்து நின்று பழம் பொறுக்கும் குறத்தியடி ம் நேரத்தில் எமக்குப் பாடி ஆடிக்காட்டியது ட்டுமல்ல கீரிமலைக்கேணியில் சாகசங்களும் ாலில் குளிக்கும்படி அம்மாவுடன் விட்டுவிட்டு நிது நேரத்தில் கேணியைச் சுற்றி சனக்கூட்டம் று பார்த்தபோது, ஐயா கைகள் இரண்டையும் டி மரக்கடைபோல் மிதந்துகொண்டிருந்தார். வயிறு மட்டும் பெரிதாகத் தெரிந்தது. நாம் கட்டுக் கண்விழித்த அவர் தான் நீரின்மேல் ம் தெரிகிறது எனக்கூறியது எமக்கு அப்போது
தொடங்கியபோது அவரை முற்றுமுழுதான ட்டில் தனியான சுவாமி அறை இருக்கும். பரிய கீதா சொரூப படமும் அதன் முன்னால் ா அழகான ஒரு கிருஷ்ணா சிலை, அவர் லாங்குழல், அக்கிருஷ்ணாவுக்கு முன்னால் னுள் 1 x 3/4 அளவிலமைந்த சிவப்புநிற யினாலான சக்கரம், அழகாக மெருகூட்டப்பட்ட றயினுள் ஐயா பலமணிநேரம் ஜெபம்செய்து
நாம் மிகச்சிறுவயதில் அப்பொருட்களின்
தற் கடவுளாக வணங்கினாலும் பூரீராமரையே ரித்தவண்ணம் வாழ்ந்தார். அதற்கு அவர் ழ்ந்து படித்து, அதில் ஊறியதே காரணமாகும். முன்பே, அவர் விஷ்ணு வழிபாட்டினைக்
)

Page 18
கைக்கொண்டு வந்துள்ளார். ஆயினும் அத பக்தராக இருந்துள்ளார். அவரது பரம்பரைே விலாட சங்கிலி தவண்டை குருக்கள் ஆச்சா இயல்பானதே. எமது ஐயா எதிலும் அதி செயற்படுபவர் ஆதலால் முருகபக்தியிலும் முருகப்பா என்பார் சிறந்த முருகபக்தர் என்று ஆத்மீகத்தினை ஊட்டினார் என்றும் அடிக்கடி : காரணமாக திருப்புகழ், திருமுருகாற்றுப்படை. முழுமையாக மனப்பாடம் செய்திருந்தார். கதாப்பிரசங்கங்களின்போது எடுகோள்களாக அது மட்டுமல்லாமல் தனது 89வது வயதிலு கண்டு அவரது ஞாபகசக்தியின் ஆழத்தை தாயுமானவர் பாடல்கள், பட்டினத்தார் பாட6 சிறுவயதிலேயே மனப்பாடம் செய்திருந்தார். கந்தசஷ்டி கவசம், தேவாரம், திருவாசகம் தெளிந்தவை.
நான் ஒருமுறை அவரிடம் இவ்வளவு
எவ்வாறு ராம பக்தரானிர்கள்?’ என்று கேட்ட வைத்தது. முருகபக்கி காரணமாக திருட் ச்ெய்யுட்களிலும் திருமுருகனின் நெடிய மாம மருகோனே என முருகனை விழிப்பதால் பக்திகொண்டதாகக் கூறினார். அத்துடன் அ தெய்வத்தை வணங்கினாலும் இறுதியில் கிரு கூறிவந்தது பொருள் பொதிந்தது.
ஐயா கம்பராமாயணத்தை கதாபிர செய்திருந்தால சில தெரிவுசெய்யப்பட்ட பா ரீராமாயண கதாப்பிரசங்கத்தினை ஒர் கம்பராமாயணத்தின் எல்லாச் செய்யுட்களுமே ‘வில்லிபாரதம்', ‘நாலாயிர திவ்விய பிரபந்த இவற்றுடன் பகவத் கீதை', 'யூரீமத் பாகவதம் கற்றுத் தெளிந்திருந்தார். அவரின் பக்தித் தொ கதைசொல்லும் ஆற்றல், சிரத்தை, தவம் ஞாபகசக்தியினைக் குறிப்பிடும்போது ஒரு சம் தெல்லிப்பளையிலுள்ள ஆயர்பாடி ஆழ்வார்க வெளியிலுள்ள வாங்கில் அமர்ந்திருக்கிறார். கோருகின்றார். ஐயாவிற்கோ அப்பொழுது கன்
1

ற்கு முன் சிறுவயதிலிருந்தே தீவிர முருக ய மாவை கந்தனுக்கு சேவை செய்துவந்த ரியார் வழிவந்தவர்கள் ஆதலால் முருகபக்தி தீவிர ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் சிறந்து விளங்கினார். அவரது பாட்டனார் ம் தனக்குப் பலவழிகளாலும் சிறுவயதிலேயே கூறுவார். ஐயாவின் இளமைக்கால முருகபக்தி , கந்தரலங்காரம், கந்தரனுபூதி போன்றவை இவற்றிலிருந்து சில செய்யுள்களை தமது எடுத்துக் கூறியதை நான் கேட்டிருக்கின்றேன். லும் அவற்றினை வரி பிசகாது பாடியதைக் வியந்திருக்கின்றேன். அவை மட்டுமல்ல ல்கள், சித்தர் பாடல்கள் போன்றவற்றையும் இவை மட்டுமல்லாது விநாயகர் அகவல், ஆகியவை எல்லாம் சிறுவயதிலேயே கற்றுத்
தூரம் ஆழமாக முருகபக்தி செய்த நீங்கள் தற்கு அவர் கூறிய பதில் என்னை வியக்க புகழில் ஊன்றியவேளை அதில் எல்லா )னாரைப் புகழ்ந்து, மகிமைகளை உரைத்து ல் மாமனாரின் பெருமையை உணர்ந்து |ண்மைக் காலத்தில் அவர் ‘ஒருவன் எந்த நஷ்ணபக்திக்கே வந்துசேர வேண்டும்” எனக்
சங்கம் செய்வதற்காக மட்டுமே மனனம் டல்களை மட்டுமே பயின்றிருப்பார். ஆனால் பக்திச் சேவையாகவே செய்துவந்ததால், அவருக்கு மனப்பாடம் ஆயின. அதுமட்டுமல்ல, 5ம் ஆகியனவும் மனப்பாடம் ஆகியிருந்தன. , 'பக்தவிஜயம், ஆகிய அரும் நூல்களையும் ண்டின் வெற்றிக்கு அவரது அபார ஞாபகசக்தி, என்பன முக்கிய காரணங்களாகும். அவரது பவத்தைக் குறிப்பிட்டேயாகவேண்டும். ஒருநாள் 5ள் ஆச்சிரமத்தில் காலைப் பூஜை முடித்து
ஒரு அன்பர் ஜாதகம் பார்க்கவேண்டுமென ண்பார்வை தெரியாது. (பின்னர் சத்திரசிகிச்சை
1

Page 19
மூலம் கண்பார்வை தெரியவந்தது.) நான் ெ வந்துள்ளேன் எனப் பதிலளித்தால்தான் தெரிய பார்க்கப் போகிறார் என எண்ணியவண்ணம் ஆ வாங்கினார். ருக்மணி! வா! என என் த என்கிறார். தங்கையும், கடகலக்கினம், 3ல் பன்னிரெண்டு வீட்டிலும் ஒன்பது கிரகங்களுட ஒருமுறைதான் படித்தார் ஆனால் அத்தை மனதில் பதிந்து அதனைத் திரையில் பார்ப்பு மணிநேரம் அவரது ஜாதகத்தை அலசி ஆ பலன் எழுதிக் கொடுத்ததைப் பார்த்து விய என்னென்ன நூல்களில் பரிச்சயம் இருந்த சோதிட வாரிசான ராமண்ணா கூறுவதே விட்டுவிடுகிறேன்.
ஐயா அவர்கள் 1944ற்குப் பின் தை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பின் பிறந்த நாமத்தையே இட்டார் அதுமட்டுமல்லாமல் { ஓர் சிறப்பு.
எனக்கு உலகம்தெரிந்த நாள்முதலாய காணப்பட்டார். அதற்கேற்பவே அவர் .ெ வந்தவர்களையெல்லாம் ஆத்மீக வழியில் சாதாரணமானதொன்றல்ல. இதற்கு சான்று லிகித ஜெப கொப்பிகளே ஆகும்.
நன்மையும் செல்வமு தின்மையும் பாவமும் சென்மமும் மரணமும் இம்மையே ராம என்ற
என்று எழுதி முதல் வரியினைத் தானே தொ சேர்ந்தன. ஒரு நாள், எழுதிச் சேர்க்கப்பட் எமக்குக் கட்டளையிட்டார். பத்து, பனிரெண் மொத்த எண்ணிக்கை 99 இலட்சத்தினைத் த விரும்பி மிகுதியைத் தானே எழுதத் தொடங்கி சேர்ந்து எழுதி ஒரு கோடி பூர்த்தியானதும் இ என்பதால் இதற்கென தனியான இடம் வேை ஆழ்வார்கள் ஆச்சிரமத்தை அமைத்து அன் அவ்வாச்சிரமத்திலேயே வசிக்கலானார். கணவு வந்த அம்மாவும் ஆச்சிரமத்திலேயே குடிபுகு
1

:ன்றால் கூட யார்? என்று கேட்பார். நான் றி |ம். அவ்வாறான நிலையில் எவ்வாறு ஜாதகம் வதானித்துக் கொண்டிருக்கிறேன். ஜாதகத்தை ங்கை ஒருவரை அழைத்து இதனைப் படி
சூரியன், 4ல் சந்திரனும் சுக்கிரனும் எனப் ) எவ்வாறு உள்ளன என்பதை வாசிக்கிறார். னயும் ஒரு கம்பியூட்டரில் பதிந்தது போல துபோல் மனதில் பார்த்துக் கிட்டத்தட்ட ஒரு ராய்ந்து அவர் சொல்லச் சொல்ல தங்கை ந்திருக்கிறேன். சோதிடத்துறையில் அவருக்கு து என்பதை நான் கூறுவதைவிட அவரது பொருந்தும் என்பதால் அதை அவரிடமே
ள்னை முழுமையாகவே விஷ்ணு பக்தியில் பிள்ளைகள் அனைவருக்கும் கிருஷ்ணாவின் பேரப்பிள்ளைகட்கும் அவ்வழி பெயரிட்டதுவும்
ப் ஐயா முழுமையான ஆன்மீகவாதியாகவே தாழிலும் அமைந்தது. சோதிடம் பார்க்க இழுத்து ராமபக்தர்களாகவே மாற்றிய பணி
பகர்வது அவர் எழுதிவந்த ‘பூரீராமஜெயம்’
ம் எந்நாளும் நல்குமே
சிதைந்து தேயுமே b இன்றி தீருமே ) இரண்டு எழுத்தினால்,
ாடக்கிக் கொடுப்பார். கொப்பிகள் மலைபோல் ட லிகித ஜெபங்களை கணக்கெடுக்கும்படி டு நாட்கள் தொடர் கணக்கெடுப்பின் பின்னர் ாண்டி இருந்தது. அதனை ஒரு கோடி ஆக்க னார். அப்போது நாம் பிள்ளைகள் அனைவரும் வை வீட்டில் வைத்திருக்கக்கூடியதொன்றல்ல ன்டுமென விரும்பி 1984இல் புதிய ஆயர்பாடி றிலிருந்து 1991ல் இடம்பெயரும் வரைக்கும் பனின் குடிலே தன் அரண்மனை என வாழ்ந்து நந்தார்.
2

Page 20
ஐயா திருமணம் செய்து பிள்ளைகுட்டி அவரது வாழ்க்கை மற்றவர்களைப்போல் ஆ அவரது பொழுதுபோக்கும் ராமநாமம்தான். ஆத் உற்றார், உறவினர், அயலவர், நண்பர்களின் கலந்துகொள்ள முடியாத நிலையில் அம்மாவுட சிலர் ஆரம்பத்தில் மனஸ்தாபப் பட்டதுண்டு. நன்கு உணர்ந்து ஏற்றுக்கொண்டார்கள். அவர் என்றால் அது இறைவனுக்குச் செய்யப்பட்ட மிகுதியால் விருந்துக்கு அழைத்தால் நீங்க பூஜைசெய்து உணவு அருந்துகிறேன் எனக் போஜனம் செய்து வந்திருக்கின்றார். 1993 ஏ ஐயாவும் அம்மாவுமாக இரண்டேயிரண்டு ஏற்றிருக்கின்றார்கள். அதுவும் அங்கு நடந்த
எங்கெல்லாம் விஷ்ணு பக்தர்கள் காண ஜெபிக்கின்றார்களோ அவர்களை எல்லாம் எமது வீட்டுக்கு அழைத்து உபசரித்து மகிழ்வி பிள்ளைகளாக இருந்த காலத்தில் இத்த.ை முதலில் எம்மையெல்லாம் அப்பெரியோர்களின் அவர்களும் எமது நெற்றியில் திருநாமம் இ அவர் பழகியவர்களில் தெல்லிப்பளை பான சுவாமி, காங்கேசன்துறை ஜோதி சுவாமி, பக்தர்களான பெருமாள் கோவில் தியாகராஜ யூரீராமஜெயம் நாகலிங்கம், கந்தர்மடம் வ.சி.சி பாலசுப்பிரமணியக் குருக்கள், ஆத்மஜோதி மு 50களில் இருந்து ஐயாவுடன் சேர்ந்து ஆத் தம்பிராஜா மாமா ஆவர். ஆரம்பத்தில் 6 கோயிலுக்கு இருவரும் சென்று வழிபட்டா கிழமைகளில் தத்தமது குடும்பத்தாருடன் படைத்து திருவாய்மொழி பாராயணம் செய்வ அன்னதானமும் செய்துவந்தது இப்போதும் எ எமது வீட்டில் நடக்கும் பூஜைகளிலும் தம்பிர தனது வீட்டிலும் அடிக்கடி பூஜைகளை ஒழுங் களையும் செய்விப்பார். அவ்வாறான பூஜை கலந்துகொண்டு பிரசாதம் உண்டு செல்வ கதாப்பிரசங்கங்கள் எங்கெல்லாம் நடைபெறு தம்பிராசா மாமாவும் கலந்துகொள்வார். 1962இ காளி அம்பாள் கோயிலில் 15 நாட்கள் ர ஒவசியருடன் சேர்ந்து நடாத்தி வைத்தார்.

களைப் பெற்று இல்லறத்திலே வாழ்ந்தாலும் அல்லாது வித்தியாசமானதாகவே இருந்தது மீக வாழ்க்கைமுறையினைக் கடைப்பிடித்ததால் சுப மற்றும் அசுப கிரியைகளில் அவரால் ன் எங்களையும் அனுப்பி வைப்பார். அதனால் ஆனால் பின் அவரின் ஆன்மீக நிலையை ஏதாவது சபைசந்தியில் உணவு அருந்தினார் பிரசாதமாகவே இருக்கும். யாராவது அன்பு 5ள் ஒரு பூஜை வையுங்கள் நான் வந்து கூறி, அவ்வாறே பூஜை செய்து ஆசீர்வதித்து ப்பிரலிற்குப் பின் கடந்த ஐந்து வருடங்களில் நாட்கள்தான் எனது வீட்டில் பிரசாதம் ராம பூஜையின்போதேதான்.
ப்படுகிறார்களோ, யாரெல்லாம் ராமநாமத்தை தேடி, நாடி உறவுகொள்வார். அவர்களை வார். நாமெல்லாம் அறியாப் பருவத்தில் சிறு கய அடியார்கள் எமது இல்லம் ஏகினால் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கச் செய்வார். Nட்டு ஆசிர்வதிப்பார்கள். இவ்வாறு 60களில் ண்டுரங்கன் சுவாமி, இணுவில் தியாகராஜா கோப்பாய் சுவாமி போன்றோருடன் சிறந்த ா, பொன்னாலை நாராயணதாசன், மட்டுவில் .கு.பிரம்மானந்தா, வட்டுக்கோட்டை கோகுலம் ழத்தையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மீகத் தொண்டாற்றிய ஒரே ஒரு உறவினர் சைக்கிளில் வண்ணார்பண்ணை பெருமாள் ர்கள். வாகனவசதி பெற்றபின் ஞாயிற்றுக் வல்லிபுரக்கோயிலுக்குச் சென்று பொங்கிப் துடன் இடைக்கிடை அங்குள்ள மடங்களில் னக்கு ஞாபகம் வருகின்றது. அதுமட்டுமின்றி ாஜா மாமா தவறாது கலந்து கொள்வதுடன் குசெய்து நாமாவளி பஜனை, பிரார்த்தனைகளிலெல்லாம் குறைந்தது 50 அடியார்கள் பார்கள். அத்துடன் ஐயாவின் ராமாயணக் கின்றதோ அங்கெல்லாம் அதிகமாக அமரர் ல் ஐயாவின் சொந்த ஊரான மாவிட்டபுரத்தில் ாமாயண கதாப்பிரசங்கத்தை திரு.ந.சிவகுரு
சில காரணங்களுக்காகத் தனது சொந்த

Page 21
ஊருக்குச் செல்லாதிருந்த ஐயா முதன்முதலா அவரை மாலை மரியாதைகளுடன், மேளத அழைத்துச் சென்றதை மறக்கமுடியாது என
திருப்பாசுரங்கள் மூலம் தென்னிந்தியா ஐயா அத்தலங்களுக்கு 1963 ல் சென்று த கூட தல யாத்திரை சென்று வந்தவர் அமரர் த லிருந்து கப்பலில் ராமேஸ்வரம் சென்று 6 பலாலி வந்து இறங்கினார்கள். ரீரங்கம், ! வந்ததால் அவரது ஆத்மீக வாழ்க்கையில் ஒ அவர் செய்த முதலும் கடைசியுமான இந்தி பித்தனைப்போல் திருவாய் மொழியினை பாடி ரீரங்கராஜ பட்டர் இவரது பக்திநிலையைக் கல் இரும்புச் சங்கிலியை விலக்கி இவரை உள்ளே செய் என்று கூறியது மட்டுமல்லாமல் இவன உபசரணை செய்து திரு அரங்கநாதருக்கு கு அடிக்கடி கூறுவார். இதனை 22 வருடங்களு யூரீரங்கத்திற்குப் போனபோது உணர்ந்துகொ ஐயா, ரீரங்கராஜ பட்டருக்கு ஒரு கடிதம் சித்திர வீதியிலுள்ள அவரது வீட்டில் சென்று சுகவீனமுற்று படுக்கையிலிருந்தார். கடிதத்ை ஆனந்தமடைந்தார். அத்துடன் தனது மூத்த திருஅரங்கன் அடியாரின் பிள்ளைகள் இவர்களை என்று கூறியதுடன் எம்மை தம் இல்லத்திே உபசரித்ததை மறக்கமுடியாது. அப்போதே நாம் மகிழ்ந்தோம். திரு. ரங்கராஜபட்டர் ரீஜியர் வைத்தபோது தனக்கு உபதேசம் செய்தரு காவிரிக் கரைக்கு வா எனக் குதிரை வண்டி என்றும் பாடு என்று ஆசிர்வதித்ததாக அடிக்க
1950களில் ஐயா ஆத்மீகத் தாகத்தில் சுவாமிகளிடமும் சென்று வருவதுண்டு. அப்ே இருந்தாலும் அவரின் ஆத்மீக ஞானத்தின் க கருணை வேண்டி சென்றதாயும் கூறுவார். ஒரு யாழ்ப்பாணம் செல்லும்போது 8ம் கட்டையடியில் தவத்திரு யோகர்சுவாமிகள் வேகமாக யாழ்ப் இந்த மகானைத் தனது காரில் ஏற்றிச் ெ சிறிதுதுாரம் முன்னே காரை நிறுத்திவிட்டு சுவாமிகளின் அருகில் கைகட்டி வாய்புதை
14

க் கதாப்பிரசங்கம் செய்யப்போன முதல்நாள் ாளத்துடன் தெல்லிப்பளை சந்தியிலிருந்து அம்மாவும் அக்காவும் கூறுவார்கள்.
பிலுள்ள விஷ்ணு தலங்களை அறிந்திருந்த ரிசிக்க விரும்பியபோது ஐயாவுடன் தானும் ம்பிராசா மாமா. போகும்போது தலைமன்னாரிபரும்போது விமானத்தில் திருச்சியிலிருந்து திருப்பதி ஆகிய சேத்திரங்களுக்கு சென்று ந திருப்பம் ஏற்பட்டதாகக் கூறுவார். இதுவே ப தல யாத்திரையாகும். ஐயா ரீரங்கத்தில் அரற்றியபோது யூரீரங்கத்தின் பிரதமகுருவாகிய ண்டு மனமுருகி அரங்கநாதருக்கு முன்னிருந்த அழைத்து நீ வேண்டிய மட்டும் வேண்டுதல் ரத் தன் இல்லம் அழைத்து தங்கவைத்து டிய பஞ்சரட்ண மாலையையும் அளித்ததாக க்கு பின் நானும் பெரியண்ணாவும் 1985ல் ாண்டோம். ஏனெனில் நாம் போகும்போது கொடுத்திருந்தார். அதனை நாம் மேலைச் கையளித்தோம். அப்போது ரீரங்கராஜபட்டர் தக் கண்டதும் விரைந்து எழுந்து படித்து
மகனான திரு.நரசிம்ம பட்டரை அழைத்து ா கோயிலுக்கு அழைத்துச்சென்று ஆவணசெய் லயே தங்க வைத்து போசனம் அளித்து ஐயாவுக்குப் பிள்ளைகளாக பிறந்ததையிட்டு சுவாமிகளை ஐயாவுக்கு அறிமுகம் செய்து ா வேண்டுமென ஜயா வேண்ட, ஜீயரும் பில் அழைத்துச்சென்று அரங்கன் நாமத்தை டி கூறுவார்.
அலைந்தபோது கொழும்புத்துறை சிவயோக பாது அவர் தம்மை ஏசி கலைத்ததாகவும், ாரணமாக தான் மீண்டும் மீண்டும் அவரின் நாள் ஐயா தெல்லிப்பளையிலிருந்து காரில் துர்க்கை அம்மன் கோயிலுக்கும் முன்னால் பாணம் நோக்கி நடந்து செல்வதைக்கண்டு சல்லக் கிடைக்காதா என ஏங்கியவராய் பின்னோக்கி நடந்துவந்து, திரு. யோகர் ந்து நடந்து வந்ததாயும் யாரும் யோகர்

Page 22
சுவாமிகளிடம் ஏதும் இலகுவில் கேட்கமுடியா சிலவேளைகளில் கண்டபடி ஏச்சுவாங்கவேண் பேசாமல் அவர் முகத்தையே பார்த்தவண்ண அண்மித்ததும் யோகர் சுவாமிகள் தானாக6ே ஏறி உட்கார்ந்துகொண்டு எங்கேயடா போக் எங்கே போக வேண்டும் எனக் கேட்கப் பட காரை எடு என அவர் கட்டளையிட, தான யாழ்ப்பாணம் போகும் வரைக்கும் எத்தனை பதில்சொல்லத் தெரியாமல் தயங்க; எத்த சொல்லுகிறேன் சொல்லடா என அவர் கட்டை போகிறாரோ எனப் பயந்து கொண்டிருக்க அமர்ந்திருந்த சாரதியின் ஆசனத்தின்மேல் கொடுத்தபோது தான் மெய்சிலித்தபடி பின் வந்து யாழ்ப்பாணம் சிவன்கோயிலடியில் கா அப்போது சுவாமிகள் நீ இப்போ என்னட பதில்சொல்லத் தவித்தபோது அதற்குப் பதில பதிலளித்து நல்லது செய்தால் என்னடா பதில்சொல்லத் தயங்கியபோது நில்லது கி அதன்பின் தான் மேலும் தீவிரமாக ராமந கூறுவார். இதனைத் தான் வைகுந்தம் ஏகுவத திரு. கந்தசாமி அண்ணருக்கும் கொஞ்சமும் ( யோகர் சுவாமிகளின் சந்திப்பும் தனது வாழ்
நாம் சிறுபிள்ளைகளாக இருக்கும்போது எமது வீட்டுக்கூடத்தில் பாய்போட்டு அமர்ந்து சொல்ல வேண்டும். கடினமான சொற்றொடை சிதைவில்லாமல் படிப்பது கடினம். அதிலும் சொல்லித்தரும் வரியில் அரைவாசியினை சிறுசிறு தொடராகப் பிரித்து எமக்குத் தெரி
யாழ்ப்பாணத்தில் மூன்று முக்கிய விஷ் நாலாயிர திவ்விய பிரபந்தங்களை ஒரு தாளக்கட்டையுடன் எமது ஒஸ்ரின் 8 (CE புறப்பட்டு, கீரிமலையில் தீர்த்தமாடி அங்குள் வழிபட்டு கடற்கரைப் பாதையூடாக பொன் சென்று, திருப்பாசுரங்களை ஒதினோம். ஒ: செய்யுள்கள் உள்ளன. குறைந்தது 4 அ6 அங்கிருந்து மானிப்பாய் ஊடாக வண்ணார் வழிபட்டு அங்கும் திருப்பாசுரங்களை ஒதி, பின்

து எனவும் தப்பித் தவறி ஏதும் கேட்டாலும் டிவரும் என்பதையும் அறிந்திருப்பதால் ஏதும் ம் நடந்து வந்ததாயும், இருவரும் காரினை காரின் கதவினைத் திறந்து முன் சீற்றில் றாய்? எனக் கேட்க, தானும் சுவாமிகளை பந்து யாழ்ப்பாணம் என விடையளிக்க, சரி காரை ஸ்ராட் பண்ணியதும் இங்கிருந்து நாமமடா சொல்வாய்? எனக் கேட்க, தான் னையென்றாலும் பரவாயில்லையடா நான் ளயிட, தனக்கு எந்த நாமத்தை சொல்லித்தரப் சுவாமிகள் தனது வலது கையைத் தான் வைத்தபடி பூரீராமநாமத்தைச் சொல்லிக் னால் சொல்ல, இடைவிடாது சொல்லியபடி ரை நிறுத்தச்சொல்லி இறங்கி நின்றதாகவும், T செய்திருக்கிறாய்? என்று கேட்க, தான் )ாகத் தானே நல்லது செய்திருக்கிறாய் என கிடைக்கும் எனக் கேட்க, அதற்கும் தான் டைக்கும் எனப் பதிலளித்து சென்றதாகவும் ாமஜெபம் செய்து வந்ததாகவும் அடிக்கடி ற்கு இரண்டு கிழமைகட்கு முன்பும் எனக்கும், வேறுபாடு இல்லாமல் கூறியிருந்தார். தவத்திரு வில் ஒரு திருப்பம் எனக் கூறுவார்.
மாலை 6.00 மணியளவில் நாம் அனைவரும் ஐயா சொல்லித்தரும் பாசுரங்களைப் பின்னால் ரக் கொண்ட பாசுரங்கள் தாளத்துடன் பொருட் நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் அவர்
மறந்துவிடுவோம். அப்படியிருந்தும் விடாது ப இலகுபடுத்திச் சொல்லுவார்.
ணு தலங்கள் உள்ளன. ஒருநாள் காலையில் பட்டுத்துணியால் சுற்றி எடுத்துக்கொண்டு 1145) காரில் எங்களையும் ஏற்றிக்கொண்டு ள விநாயகரையும் கீரிமலைப் பெருமாளையும் னாலை வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் வ்வொரு பாசுரத்திலும் காப்புடன் பதினொரு ஸ்லது 5 பாசுரங்களை ஒதியிருப்போம். பின் பண்ணை பெருமாள் கோயிலுக்குச் சென்று ர் அங்கிருந்து நேராக வல்லிபுரக்கோயிலுக்குச்

Page 23
சென்றோம். அங்கு செல்லும்போது இருட் கோயிலையும் பூட்டிவிட்டார்கள். வெளி மண் செய்துவிட்டு நன்றாக இருட்டியபின் வீடுவந்து திருப்பாசுரப் பாராயணமும் செய்தபடியினா நினைவில் பசுமையாக உள்ளது.
ஆவணியில் வரும் ஒவ்வொரு ஞாய சமையல் சாமான்களுடன் தெல்லிப்பளையிலி அமுதுபடைத்து அடியார்களுக்கு அளித்து தி வழக்கம். காலை 5.30 மணிக்கு வீட்டிலிரு போய்ச் சேரும்வரைக்கும் சாரதியின் ஆசன ஜெபத்தினை பின்னால் நாம் சொல்லவேண் கள்ளம் செய்தால் உடனடியாகவே கண்டுபி என கடிந்து கொள்வார். அந்தப்பயத்தில் ந ராமநாம ஜெபம் செய்வோம். நெல்லியடிச் நிறுத்திவிட்டு தான் திரும்பி வரும்வரைக்கும் எனக் கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டு சர இருந்தபடி அழுவாரைப்போல் ஜெபம் சொல யாவரும் எம்மை வினோதமாக வேடிக்கை மானம், வெட்கம் பாராது செய்த ஜெபம் இன்று ஐயாவின் ஆத்மீக கருணைக்கு நாம் என தவிக்கின்றோம். யாழ்ப்பாணத்திலிருக்கும் மூன் தேர்த்திருவிழா நடைபெற்றாலும் அங்கு ( பஜனை நடக்கும். அவருடன் சேர்ந்து நாமும் அவ்வாறு பஜனை செய்யக் கிடைக்கவில்ை ஐயாவின் உடல்நிலை இடங்கொடுக்கவில்ை முழு பக்திச்சேவையும் ஆச்சிரமத்தை மையமா 1984 வரைக்கும் வல்லிபுரக் கோயில் திரு மடத்திலேயே தங்கியிருந்து அன்னதானம் தொடங்கமுன் குறைந்தது 1 1/2 மணித்திய அன்னதானத்தில் பங்குகொள்ள வ்ருபவர்கள்: பாடியதை நினைக்கும்போது இப்போதும் ெ
ஐயாவின் ராம தொண்டில் முக்கியமா6 குறைந்தது பத்து நாட்களுக்குத் தொடராக பட்டாபிஷேகம் வரைக்கும் உபந்நியாசம் செய் மதிய போசனத்தின் பின் மரநிழலில் அடியா

டிவிட்டது. சாதாரணநாளாக இருந்தபடியால் பத்திலிருந்து திருப்பாசுரங்களைப் பாராயணம் சேர்ந்தோம். நாள் முழுக்க ஆலயதரிசனமும் ல் அன்றைய அனுபவம் இப்போதும் எமது
பிறும் தவறாமல் எமது காரில் தட்டுமுட்டு ருந்து வல்லிபுரக்கோயிலுக்குப் போய் பொங்கி நப்பாசுரம் படித்து மாலையில் வீடு திரும்புவது ந்து புறப்பட்ட நேரத்திலிருந்து கோயிலுக்குப் த்திலிருந்து ஐயா சொல்லித்தரும் ராமநாம டும். எம்மில் யாராவது நாமம் சொல்லாது டித்து பரீயா ஏன் சொல்லாமல் இருக்கிறாய்? ாம் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ சந்தையில் மரக்கறி வாங்குவதற்காக காரை
விடாது ராமநாம ஜெபம் சொல்லவேண்டும் ந்தைக்குள் சென்று விடுவார். நாம் காருக்குள் bலும்போது சந்தைக்கு வருவோர் போவோர் பார்ப்பர். அன்று ஐயாவின் கண்டிப்பால்
எமக்கு உரமாக இருப்பதை நினைக்கும்போது ர்ன கைமாறு செய்யப்போகின்றோம் எனத் 1று விஷ்ணு ஆலயங்களில் எந்த ஆலயத்தில் தேருக்குப் பின்னால் ஐயாவின் திருப்பாசுர பஜனை செய்வோம். நாம் நன்கு வளர்ந்தபின் ல. ஏனெனில், நிற்க, நடக்கக்கூடியளவிற்கு ல. 1984ல் ஆச்சிரமம் அமைத்தபின் அவரது கவே வைத்துக் காணப்பட்டது. 1970 இலிருந்து நவிழா நடைபெறும் 18 நாட்களும் அங்கு செய்துவந்தார். அந்நாட்களில் அன்னதானம் ாலமாவது திருப்பாசுர பஜனை நடைபெறும். வட பக்திமேலிடக் கைகளால் தாளம்போட்டுப் Dய்சிலிர்க்கின்றது.
ாது ராமாயண கதாப்பிரசங்கங்களாகும். இது தடைபெறும் இரவில் திரு அவதாரத்திலிருந்து வதுடன் பகலில் பூஜை, பஜனை என்பவற்றுடன் கள் சுற்றியிருக்க ஞானவிளக்கம் அளிப்பார்.

Page 24
ரீராமநவமி, ரீகிருஷ்ணஜயந்தி, வைகு அறிந்திராத காலத்திலேயே அவற்றின் மகிமை அத்தினங்களைப் பெருவிழாவாக எடுக்க ை பாடிய காலத்தில் அதற்குப் பதிலாக பாசுர ஆச்சிரமத்தில் நடந்துவந்த ரீராமநவமி விழா இடப்பெயர்விற்குப் பின் பல்வேறு இடங்களிலும் அங்கெல்லாம் உள்ள ஆலயத்தில் அது எ பிரசங்கத்தை செய்து பக்தி ஒளியைப் பரப்பி இப்போது சிறந்த ராம பக்தர்களாக விளங்கு
ஐயா எங்கும் ரீராமஜெயத்தினையே எ( கண்டாலும் உடனே அதை எடுத்து பத்தி உறை, ஊதுபத்தி பக்கற் போன்வற்றில் வரும் அவற்றினைச் சேகரித்து கத்தரிக்கோலால் மிகவும் கவனமாக பத்திரப்படுத்தி வைக்கும் சான்று.
ஐயா தீவிரமாக ஹரிநாம சங்கீர்த் ஆரம்பத்திலிருந்து தான். அக்காலத்தில் வ நிலையில் பெரும்பாலும் சைவத்திருத் கதாபிரசங்கங்களை நிகழ்த்தினார். அது அவ்வ அறங்காவலர் மற்றும் குருக்கள் ஆகியோ சிவனுக்கும் உள்ள உறவு, பார்வதி விஷ்ணு மணிக்கணக்காக அவர்களுக்கு தனிமையில் வி நாம் சிறுபிள்ளைகளாக ஐயாவுடன் காரி செவிமடுப்பதுண்டு. சைவர்களுக்குத் தான் அவ்வாலயங்களில் ‘அருச்சுனன் தபசுநிலை’ ‘ப நிகழ்த்துவார். அதிலும் இடையில் பெருப விளக்குவார். அப்படியிருந்தும் சிலர் வைஷ் அவர்களே இவரது பக்திநிலையைக் கண்டு சிவகாமி அம்மன் கோவிலில் முதன்முதல் சென்றபோது வித்துவான் இ.திருநாவுக்கரசு அளவிடும் நோக்கில் சென்றிருக்க அங்கு பிஷேகத்தினை பக்திப்பிரவாகத்துடன் கண்க நிகழ்த்தியதைக் கண்டு மனம் உருகி, இவரது கம்பராமாயணத்தில் இலக்கியச் சுவையைவி என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன் எ இயற்றி கெளரவித்தார்.

ண்ட ஏகாதசி போன்றவற்றை மக்கள் அதிகம் யைத் தனது அன்பர்களுக்கு விளங்கவைத்து வத்தார். விஷ்ணு ஆலயங்களில் தேவாரம் ம் பாடவைத்தார். 1980களிலிருந்து அவரது வும், ராமாயண கதாப்பிரசங்கங்களும் 1991ல் நடைபெற்றன. எங்கெல்லாம் தங்கியிருந்தாரோ ந்த ஆலயம் என்றாலும் ராமாயண கதாப்னார். அங்கெல்லாம் தொண்டு செய்தவர்கள் நகிறார்கள்.
ழதி வைத்திருப்பார். எங்கு பகவான் படத்தைக் ரப்படுத்திப் பேணுவார். அநேகமாக பப்பட கிருஷ்ணா, ராமர் படங்களை வீசவிடமாட்டார். கத்தரித்து நேராக்கி ஒரு கொப்பியினுள் பாங்கு அவரின் பக்தியின் உச்சநிலைக்குச்
தனம் செய்யத் தொடங்கியது 60களின் பிஷ்ணு வழிபாடு பிரபல்யம் பெற்றிருக்காத தலங்களில் தான் அவரது ராமாயண 1ளவு சுலபமானது அல்ல. முதலில அவை 1, 1 ரைச் சமாதானப்படுத்தி மகாவிஷ்ணுவுக்கும வின் தங்கை என்ற உறவு போன்றவற்றையும் பிளக்கி சம்மதிக்க வைப்பார். அப்போதெலலாம் ல் சென்று இத்தகைய உரையாடல்களை
முரண் இல்லை எனக் காட்டுவதற்காக ார்வதி கல்யாணம்’ போன்ற உபந்நியாசங்களை >பங்கு நாராயணனின் பெருமையைத்தான் hணவ பிரசங்கங்களை எதிர்த்ததுண்டு. பின் நெகிழ்ந்து அன்பு கொண்டதுண்டு. இணுவில் ஸ்ாக இராமாயண கதாபிரசங்கம் செய்யச் அவர்கள் ஐயாவின் இலக்கிய ஆழத்தை ஐயா அவர்கள் பரதனின் பாதுகாபட்டாளில் நீர்மல்க, தன்னை மறந்த நிலையில் பக்திக்கு முன் எமது இலக்கியம் எம்மாத்திரம்! ட பக்திச்சுவையே மேலோங்கி இருக்கிறது ான வியந்து, தானே ஒரு மங்கல வாழ்த்து

Page 25
ஐயா எந்த மதத்தவரையும் வெறுத்தது ஐயாவைக் கண்ட மாத்திரத்தே பயபக்திய மதத்திலுள்ள-வர்களுக்கும் தத்தமது மதத் பின்பற்றினால் இறுதியில் கிருஷ்ணாவின் ட கிருஷ்ண பக்தி கழகத்தினருடன் அன்புகொ
பாதாவினை, படுமோசமான லெளகீகப் ட் கடைத்தேற்றிய மகான் எனப் புகழ்வார்.
இறுதி ஏழு வருடங்களாக தனது மனக்குறையுடன் இருந்தாலும் ஒவ்வொரு வ பத்து நாட்களுக்கு யாகபூஜை, ததி ஆராதன பல்வேறு இடங்களிலும் நடாத்திவந்தார். இருந்தாலும் எனக்கு உங்களால் எனக்கு ே ஆனால் எனக்குத் தொண்டுசெய்ய எம்பிரான் 1997 ஆரம்பத்தில் கூறியிருந்தார். அதேபோ மதிப்புக்கும் உரிய கந்தசாமி அண்ணர் அ கட்டளைகளை நிறைவேற்றி வந்ததுடன், இ அமையவேண்டுமென ஐயா அவருக்குக் கூறி வருகிறார் என்பதை நினைத்து மனம் உரு
இந்த வருடம் பிறப்பதற்கு முன்பே எனக் கூறியிருந்தார். அப்போது பஞ்சாங்கமே பார்த்த போதுதான் தனது காலம் கிட்டிவிட்டது கெல்லாம் அதனைச் சொல்லியும் வைத்தார். மரணமில்லை எனக்கூறி அது ஒரு வீட்டிலிருந்: ஆகையால் அது துக்கப்படுவதற்கு உரியத வேள்வியாகத்தான் இருக்கும் எனவும் யாரு தேவகணங்கள் வந்து தன்னை அழைத்துச் ஜெபித்து வழியனுப்பவேண்டும் எனவும் கூறிே சாத்தவேண்டிய புடவை முதற்கொண்டு சகல எனக் கூறி வைத்தாரோ அதன்படி எல்லா நடைபெற்றன என்பதை எண்ணி ஆறுதலை எமக்கு வழிகாட்டுவதற்கு இல்லையே என நீ வேளை அறவழி தவறாமல் பக்தி செய்வீர் பேசுவேன் எனவும் கூறியமையால் மனதைத் ஏனையோரையும் அவ்வழி செல்ல அழைப்
ஓம் நீரா
ஆயர்பாடி மயில்வாகனம் பூரீகிருஷ்ணா.
1

கிடையாது. அதேபோன்று வேற்று மதத்தவரும் |டன் அன்பு காட்டியே வந்துள்ளனர். எந்த தினை உண்மையாகவும், நேர்மையாகவும் பக்தர்களாவர் எனக்கூறுவர். இவர் சர்வதேச ‘ண்டிருந்தார், அதன் ஸ்தாபகர் பூரீலழரீ பிரபு பிரியர்களான அமெரிக்கர்களையே திருத்தி
ஆச்சிரமத்தினை விட்டு இடம்பெயர்ந்த ருடமும் பூரீராம நவமி விழாவினை தொடர்ந்து னை, உபந்நியாசம், பஜனை போன்றவற்றுடன் அத்துடன் நீங்கள் எனக்குப் பிள்ளைகளாக வண்டிய நேரத்தில் தொண்டு செய்யமுடியாது. தன் அடியான் ஒருவனை அனுப்புவான் என ல 1997 இறுதியிலிருந்து எமது அன்புக்கும், வர்கள் ஐயாவுடனேயே இருந்து ஐயா இடும் இறுதி வைகுந்தமேகும் நிகழ்ச்சிகள் எவ்வாறு வைத்தாரோ அதன்படியே இன்றுவரை செய்து குகின்றோம்.
வெகுதானிய வருடத்தில் தனக்கு விடுதலை வெளிவந்திருக்கவில்லை. பின் பஞ்சாங்கத்தைப் என்பதை உணர்ந்து சொல்லவேண்டியவர்கட்அது மட்டுமல்ல இந்த ஆத்மா அழிவில்லாதது து இன்னொரு வீட்டுக்குப் போவது போலத்தான் ல்ல. அது ஒரு மரணவீடாக இருக்காது ஒரு நம் அழவோ, ஓலமிடவோ கூடாது எனவும்,
செல்லும்போது எல்லோரும் ராமநாமத்தை வைத்தார். அதுமட்டுமல்லாது தனது சரீரத்தில்
கருமங்களும் எவ்வாறு நடைபெற வேண்டும் க் காரியங்களும் அவரின் ஆசிர்வாதத்தால் டையும் நேரத்தில் ஐயா எம்முடன் இருந்து தினைக்கும்போது அளவிலாத் துன்பமடைகின்ற களாயின் வேண்டிய நேரத்தில் உங்களுடன் திடப்படுத்தி அவருடைய வழியில் செல்வதோடு But DITEB
ாம ஜெயம்

Page 26
ஒம் ரீர
விண்ணக
ஆயர்பாடி ஜோதிடர் அன்னாரின் ஜோதிடசே
- ஆயர்பாடி மயில்வா
கி.பி.1909 ஆகஸ்ட் 17ம் நாள் திங்க வானத்தில் இடி இடித்திருக்கவேண்டும். மி சங்கங்கள் முழங்கியிருக்க வேண்டும். ஆ வானம் அசாதாரணநிலையில் இருப்பது இ பொன்னாள் உம்பர் மயில்வாகனனை உல
தீர்க்கதரிசிகள் என்றால், பின்னே வி உணர்ந்தவர்கள் என்பது பொருள். ஜோதிடர் மட்டும் நான் இதை இங்கு கூறவில்லை. அ பெற்று முன்னுணர்ந்த மகான் என்பதாலுமே இ உபயோகிக்கிறேன். "ஆயர்பாடி ஐயா’ அவ என்ற வேறுபாடின்றி யாவர்க்கும் பயனளி சூரியபகவான், இவருக்கு மேலுள்ள கடவுளர்க என்பதால் சூரியபகவானை பிரத்தியட்ச தெய நவக்கிரகங்களுக்கும் தலைவர். இவரதும், செவ்வாய், புதன் வியாழன், சுக்கிரன், சனி, ராசி மண்டலங்கள் இவைகளது ஆட்சிய உயிரினங்களும் ஆளப்பட்டு, ஆட்டுவிக்கப்பட்( தத்துவமாகும். கிரகங்களின் அசைவுகள் இய பாதிப்பதால், நேரடியாகவே கிரகங்கள் மனி
விலாட சங்கிலித் தவண்டைக் குரு மயில்வாகனம் ஐயா அவர்களது பரம்பரை (அன்னாரது பூர்வீக காணி உறுதிகளில் விலாட தோம்பு என்றே காணக் கிடக்கின்றது) வி செய்பவர்களுக்கு பிறவியிலேயே ஆச்சாரிய என்றால் ஆச்சாரம் மிக்கவர்கள். தெய்வபக்தி மிக்க உயர்குணங்கள் உடையவர்கள் என்ப செய்யவேண்டும்.

ாமஜெயம் ம் நண்ணிய
றிவேதமயில்வாகனம்
வை பற்றிய சிறு ஆய்வு
கனம் ராமகிருஷ்ணன் -
ட்கிழமை பின் இரவு செவ்வாய் அதிகாலை, lன்னல் மின்னியிருக்கவேண்டும். அதிர்குரல் ம், தீர்க்கதரிசிகளின் பிறப்பின்போது இப்படி யல்பு. 1909.08.17 அதிகாலைப்பொழுது ஒரு கிற்குத் தந்த நன்னாள்.
பர இருப்பவைகளையெல்லாம் முன்னரேயே களுக்கும் இது ஓரளவு பொருந்தும் என்பதால் ஆத்மீகத்துறையில் ஈடுபட்டு பகவத் அனுபவம் த்தீர்க்கதரிசி என்ற பெருமை மிகு வார்த்தையை ர்களது தீர்க்கதரிசனம், சிறியவர், பெரியவர் த்தது. மிகவும் உயர்நிலையில் உள்ளவர் ளை நாம் உணர்வினால் மட்டுமே காணமுடியும் ப்வம் என்று வேதங்கள் கூறுகின்றன. இவரே இவரது மந்திரி பிரதானிகளான சந்திரன், ராகு, கேது இதர நட்சத்திரக் கூட்டங்கள், பினால்தான் உலகமே உண்டாகி, உலக டு வருகின்றன. இதுவே ஜோதிட சாஸ்திரத்தின் 1ற்கையை உண்டாக்க, இயற்கை மனிதனைப் தனைப் பாதிக்கின்றன என்று கூறலாம்.
க்கள் ஆச்சாரிய மரபில் வந்த ஆயர்பாடி ச் சொத்து இவ்வரிய ஜோதிடக்கலையாகும். - சங்கிலித் தவண்டைக் குருக்கள் ஆச்சாரியார் ஸ்வப்பிரம்மாவின் ஐம்பெரும் தொழில்களைச் பட்டம் உண்டாகிவிடுகின்றது. ஆச்சாரியர்கள் ஒழுக்கம், தூய்மை கட்டுப்பாடு, கல்வியறிவு து பொருள். மனிதப்பண்புகளை மேலோங்கச்

Page 27
பண்டைய காலங்களில் பொதுவாக யாவருமே ஜோதிட சாஸ்திரங்களில் மிகுந் ஓர் உயர்கலை ஞானமாகும். இன்றும்கூட, அறிவால் உயர்ந்தவர்களிடமும், நல்ல ஜே இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. ஆ சட்டத்தரணிகள், அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம், நன்கு ஜோதிடம் தெரிந்திருந்தது தன்னுடன் ஐயா அவர்கள் கூறியுள்ளார்.
இலங்கைத் திருநாட்டின் சிரசாகிய மாவிட்டபுரத்தில் பிறந்த ஆயர்பாடி ஐயா மாவிட்டபுரத்தினது தபால் விநியோக அலுவல் என்பதைச் சற்றே குறைத்து தெல்லிப்பளை வந்தது. ஆனால், மாவிட்டபுரம் தெல்லிப்பை
மாவிட்டபுரத்தினது மிகநெருங்கிய அ கலையின் ஆரம்ப குரு தனது தகப்பனார் அமர் குரு கொல்லங்கலட்டி அமரர் சின்னக்குட்டி சாத் தனது பத்தாவது வயதில்தான், தகப்பனாரிடம் ஜாதகம் கணித்துக்கொடுத்ததைக் கூறி இக் எம்மை ஏசுவார். “பொடியா! சின்னப்பாவிற்கு போடு, நான் முகம் கழுவிக்கொண்டு வாறன் அவர் வருவதற்கிடையில் சிலேட் பலகையில் வேண்டுமாம். பழையகாலத்தில் குருசிஷ்ய மு பயபக்தியும் மிகுந்திருந்ததால், சிஷயர்கள் கு காலத்தில் ஒலைச்சுவடியில் இருந்த ஜாதக கலாச்சாரத்திற்கு மாறியது. முன்னர் ஏடும் என்று சொல்வார்கள். இவர்களது காலத்தில் குச்சியும்தான் எழுதுகோலாயின. இவற்றை நா கண்ணால் கண்டிருக்கிறேன்.
தெல்லிப்பளையில் அமெரிக்கன் மிஷனரி என்று நினைக்கின்றேன்) பெரிய பாடசாலை இது முழுக்கமுழுக்க கிறிஸ்தவ கல்லூரியாகவே ஆங்காங்கே சிறுசிறு அமெரிக்கமிஷன் தமிழ் மாவிட்டபுரத்தில் ஐயா அவர்களது வீட்டுக்கு அ ஆரம்பக்கல்வியையும் பின்னர், தெல்லிப்பளை
2

அறிவில் உயர்ந்து சமய ஆச்சாரம் மிகுந்த பாண்டித்தியம் பெற்றிருந்தனர். ஜோதிடம் உயர்துறையில் உள்ளவர்களிடமும் பொது ாதிட அறிவு இருப்பதைக் காணக்கூடியதாக பர்பாடி ஐயாவின் நெருங்கிய நண்பர்களான அமரர் கியூ.சீ.நவரட்ணராஜா போன்றோருக்கும்
பந்தயம் கூடப் பிடித்தனர் என்று எனக்கு
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் புகழ்மிக்க அவர்கள் அவ்வூரிலேயே வளரலானார்.
பகம் தெல்லிப்பளை என்பதால், மாவிட்டபுரம் ஆயர்பாடி ஜோதிடர் என்று வழங்கப்பட்டு
ள என்பதே சரியான முகவரியாகும்.
யலூர் கொல்லங்கலட்டியாகும். ஜோதிடக் ரர் வேலுப்பிள்ளை தம்பு என்றும், இரண்டாவது த்திரியார் என்றும் ஐயா அவர்கள் கூறுவார்கள். ) ஜோதிடம் கேட்க வருபவர்களுக்குத் தான் காலத்தில் எமது திறமை போதாது என்று ஒரு மேன் பிறந்திருக்கிறானாம். ஒரு குறிப்புப் ’ என்று தகப்பனார் சொல்லிவிட்டுப்போனால் ல் குறிப்புக் கணித்து, தாளில் எழுதிவைக்க றையும், தகப்பன் மகன் முறையும் கண்டிப்பும் ருவை மிஞ்சி வளர்ந்தனர். ஐயா அவர்களது
கலாச்சாரம் மெல்ல மெல்ல புத்தகத்தாள் எழுத்தாணியும்தான் கொப்பியும், பேனையும்
‘மை’க்குப்பியும், தொட்டு எழுதும் பேனை ான் தனது காலத்தில் பாவிக்காது விட்டாலும்
மார் வந்து (ஏறக்குறைய 1815ம் ஆண்டளவில் யாக யூனியன் கல்லூரியை ஆரம்பித்தனர். விளங்கியது. பின்னர் அமெரிக்க மிஷனரிமார் கலவன் பாடசாலைகளையும் ஆரம்பித்தனர். 1ண்மையாக இருந்த அ.மி.த.க பாடசாலையில் யூனியன் கல்லூரியில் 5ம் ஆண்டுவரையும்

Page 28
தான் கல்விகற்றதாகக் கூறியிருந்தார். தனக்கு பொருளாதார வசதியீனம் தன்னை மேற்கொன தான் கற்கவேண்டும் என்ற மனவைராக்கிய பூர்த்தியாகும் காலத்திலும்கூட சமய நூல்களை பத்திரிகைக் குறிப்புகளை வெட்டியெடுத்து கற்றுக்கொண்டே தனது உடலை நீத்திருக் கற்கிறானோ அக்கல்வி மறுபிறப்பில் ெ ‘ஒருமைக்கண்தான் பெற்ற கல்வி மறுமை கூறுகின்றது.
ஐயா அவர்கள் பகலில் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தார். இரவில் தென்ன விசுக்கி விசுக்கிக்கொண்டு சென்றால் அது எரி பாதையை அவதானித்து சின்னக்குட்டிச் சாத்தி ஐயாவின் வழக்கமாகும்.
வாக்கியமா திருக்கணிதமா சரியான ஆரம்பித்துவிட்டது. இரகுநாதரது கணிதமா? கt என்று ஐயா அவர்கள் தமது குருவைக் ே நாழிகை வட்டத்துடன் வா’ என்று கூறினா வட்டம் என்றே அழைக்கப்பட்டது. அக்காலத்தில் ஐயா, கந்தப்பா வாத்தியாரிடம் கெஞ்சிக்க பஞ்சாங்கங்களிலும் புதன் கிரகத்தினது உதய குறித்துக்கொண்டு, அந்த இரண்டுநாளிலும் உயரத்தில் சென்று குறித்த நாழிகைக்கு ‘மயில்வாகனம், பார்த்தியா கலட்டியான் பின் அவர்கள் தற்போது கூட திரும்பத்திரும்ப நி
கண்டியில் கார் பரிசுபெற்ற கதை6 பெரியப்பாவின் மகன் அமரர் வைத்திலிங்கப் பார்த்த காலத்தில் அடிக்கடி கண்டிசென்று வரு சாணையார் மகன் கந்தையாவும் (ஐயாவின் நன வந்தார். ஐயா இவர் வீட்டிலும் தங்குவது சற்று வளர்க்கலாம் என்ற எண்ணத்துடன் திரு.கந்தையா மயில்வாகனம் எனக்கும் ே சொல்கிறேன்’ என்று பகிடியும் உண்மையும் ஐயா ‘உணவுகூட பசியுள்ளவனுக்கு மட்டுே

5த் திறமை, விவேகம் இருந்தும் பெற்றோரது ண்டு கற்கவிடவில்லை என்று வருத்தப்படுவார். ம்தானோ என்னவோ, தனது 89வது வயது யும் ஜோதிடநூல்களையும் கூட, குறிப்பெடுத்து, பைல் பண்ணி, ஒரு ஆய்வாளன் போல கிறார். ஒரு பிறப்பிலே ஒருவன் எவ்வளவு தாடரும் என்று வேதங்கள் கூறுகின்றன. }க்கும் ஏமாப்புடைத்து’ என்று திருக்குறள்
கல்வியுடன் இரவில் தான் கற்ற ஜோதிடக் ம்பாழையில் சூழ்கட்டி, அதைக் கொளுத்தி ந்து வெளிச்சம் தருமாம். அந்த வெளிச்சத்தில் ரியாரின் வீட்டிற்குச்சென்று ஜோதிடம் படிப்பது
ாது என்ற பிரச்சனை அக்காலத்திலேயே லட்டி சுப்பிரமணியத்தினது கணிதமா சரியானது கட்டபோது, 'மயில்வாகனம் நாளைக்கு ஒரு ராம். தற்கால மணிக்கூடு முன்பு நாழிகை ல் நாழிகை வட்டம் எல்லோரிடமும் கிடையாது. கூத்தாடி வாங்கிக்கொண்டு போனார். இரு பம் வெவ்வேறு நாளில் போடப்பட்டிருப்பதைக் அதிகாலைப் பொழுதில் கீரிமலைக் கலட்டி வானத்தை நோக்கினார். அப்போது குரு, ழையடா’ என்று குரு புரியவைத்ததை ஐயா
னைவுகூர்வார்.
யையும் சுவாரசியமாகக் கூறுவார். தனது ம் அவர்கள் ஒவசியராக கண்டியில் வேலை வது ஐயாவின் வழக்கமாகும். கொல்லங்கலட்டி ண்பர்) அங்கு ‘கெமிஸ்ட் ஆகத் தொழில்பார்த்து
வழக்கம். ஒருமுறை ஜோதிடத்தொழிலைச் கண்டி சென்று இவரது வீட்டில் தங்கினார். ஜாதிடம் தெரியும். தேவையாகில் உனக்கும் கலந்த தோரணையில் கூறினார். அதற்கு ம பயன்படும். அதுபோலத்தான் ஜோதிடமும்

Page 29
தேவையில்லாதவனுக்கு எதுவுமே பயன்பட தங்குவேன்’ என்று கூறிவிட்டு விறாந்தையில் ஒ படுத்துவிட்டார். இரவு பத்துமணியளவில் மெல்ல பார்த்தால் கெமிஸ்ட் கந்தையருடன் யாரே டாக்டர்.ராமானுஜம். ஐயாவைக் கவனித்த அ கந்தையரும் அவர் தன்னை ஒரு ஜோதிட அப்படியா? நான் இப்பொழுதே அவரைப் பு கூறிக்கொண்டு கந்தையருடைய பதிலையும் ராமானுஜம். ஐயாவுக்குத் தூக்கமும் வராமல் ம ஐயா எழும்பி உட்கார்ந்தபோது, ராமானுஜம் எடுத்து தனக்கு முன்னே நீட்டினாராம். அது பையனுடையது. அந்த இந்திய டாக்டரைப் பா அமைதியும், பண்பும், தன்னிடம் தரும்போது இ வாங்காமல் இருக்கமுடியவில்லை என்பதால் கந்தையாவும் ஐயாவின் முன்னால் அமர்ந்து ெ சிந்தனை அதிகரித்தது. 10, 20, 30 நிமிட சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்க்கிறதா?’ என்ற உடனே அந்த ஜாதகத்தை இரு கைகளாலும் ஐயா கூறிய வார்த்தைகள் “செத்துப்போனவனு என்பது மட்டுந்தான். உடனே டாக்டர் ஐயா அழ ஆரம்பித்து விட்டார். ‘ஐயா, இவர் என் 1 கூறவில்லை. இவரது பிரிவால் நான் மிகவு வீட்டுக்கு வாருங்கள். உங்களைக் கண்டா6 ஆறுதலடைவார்கள்’ எனக் கூறிக்கொண்டே எல்லாவற்றையும் தானே தூக்கிவிட்டாராம். { வெரிசொறி டாக்டர், மிஸ்ரர் மயில்வாகன அவரை நாளைக்கு அனுப்புகின்றேன். என்ற கந்தையா நான் இவரை இப்போதே எனது 8 பார்த்தார். அருகில் இருக்கும்போது அருமை புரிய முடிகின்றது. இறைவா இப்பிழை நான் வேண்டிக்கொண்டு டாக்டரது காரில் ஐயா ஏறி முதற்படி என்று ஐயா கூறிக்கொள்வார்.
இப்படியிருக்கும் காலத்தில் கண்டி மாந கனகநாயகம் முதலியாரும், சொய்சாவும் பே கொண்டிருந்த ஜோதிடர் மயில்வாகனத்தை ‘ஐயா உங்களுக்குத்தான் வெற்றி. ஆனால்
2.

ாது இன்று மட்டுந்தான் உங்கள் வீட்டில் ஒரு ஓரத்தில் இருந்த சாய்மனைக் கதிரையில் யெ பேச்சுக்குரல் கேட்டது. ஐயா கண்விழித்துப் ா பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர் புவர் ‘ஹ? இஸ் தட் மான்? என்று கேட்க, டர் என்று சொல்கிறார்’ என்றார். "ஆஹா, பார்க்கலாமா?’ என்று மகிழ்ச்சி மேலிட்டால் எதிர்பாராமல் ஐயாவிடம் வந்தார் டாக்டர் >னப்போராட்டத்தில் பாரத்துடன் அலுத்துகிடந்த தனது பர்சிலிருந்து ஒரு பேப்பர் துண்டை ஒரு ஜாதகக்குறிப்பு. அதுவும் ஒரு இளம் ர்த்தால் கருணைவழியும் முகமும், சாந்தமும், Nருந்த மரியாதையும் பார்த்தபோது ஐயாவால் சலிப்புடன் வாங்கிக்கொண்டார். டாக்டரும், கொண்டனர். குறிப்பை நோட்டம் விட்டவருக்கு ங்கள் கடந்துவிட "மிஸ்டர் மயில்வாகனம் கந்தையரின் குரல் சிந்தனையை அறுத்தது. கசக்கி உருட்டி அவர் முகத்தில் எறியும்போது விடைய ஜாதகத்தை என்னிடம் ஏன் தந்தாய்? ாவின் கால்களைப் பிடித்துக்கொண்டு கதறி மகன், இவர் இறந்துபோவாரென்று ஒருவருமே ம் வேதனையடைகின்றேன். நீங்கள் எனது ல் எனது மனைவியும், மற்றப்பிள்ளைகளும் ஐயாவின் உடுப்புப் பைகள், புத்தகங்கள் இதைக்கண்ட கந்தையருக்கு ஒரே திகைப்பு. ம் இன்றுதான் எனது வீட்டிற்கு வந்தவர். )ார். அதற்கு டாக்டர் நோ, நோ, மிஸ்ரர் காரில் கூட்டிச்செல்கிறேன். என்று ஐயாவைப் தெரிவதில்லை. இல்லாமல் போனபின்னர்தான் விடாமல் என்னைக் காத்தருளவேண்டும் என |க்கொண்டார். இது தனது கண்டிச் சிறப்பினது
கர முதல்வர் பதவிக்கு தேர்தல் வந்தபோது ாட்டியிட்டனர். கண்டி மாநகரையே கலக்கிக , கனகநாயகத்தாரும் பிடித்துக்கொண்டார்.
தளம்பாமல் நிற்கவேண்டும் என்பது எனது

Page 30
கோரிக்கை' என்று ஐயா கூறிவிட்டார். கனகநாய காரணமாக இருவருக்கும் சமமான வாக்குகே அதிஷ்டம் பார்ப்பதுதான். கனகநாயகத்த அதிஷ்டமுள்ள சனிதான் ஆயினும் சனி ச ஏதாவது புலப்படுகின்றதா என்று ஐயா அவதான கந்தையா, சொய்ஸா இதர அதிகாரிகள் கூ ஒரு கூசாவைக் கொண்டுவந்தான். அதனுள் குலுக்கி எடுக்கப் போகிறார்கள். கழுத்து உடை சனிபகவானது பார்வையால் கனகநாயகத் புரிந்துகொண்டார். அருகிலிருந்த கந்தையா ரூபா 20 ஆயிரம் கொடுத்து ஒரு மெம்பரை வென்றிருப்பார். உம்முடைய சோதிடத்தால் 6 என்று முணுமுணுத்தார். இதில் ஒருவருக்கு துண்டு எடுக்கப்பட்டது. ஒருவருக்கும் பரிசு போனது. மூன்றாம்முறை சொய்ஸா எடுத்தா பரிசுத்துண்டு. கனகநாயகத்திற்கு ஜே என்ற கழுத்திற்கு வந்த மாலைகளைத் திருப்பி தன்னைத்தானே நம்பவில்லை. இப்படியா ஜே அன்றுதான் உணர்ந்து கொண்டதாகக் கூறியுள் நீண்டநேரம் பேசப்பட்ட நபர் ஜோசியர் மயி தனக்கு மனத்துணிவை அளித்ததற்கும் காரான ஒஸ்ரின் X மொடல் காரொன்றை ஐயா கார் ஒடப்பழகி, அக்காரிலேயே யாழ்ப்பாணம்
ஜோதிட சாஸ்திரத்தில் ஆரூடம் பார் நினைத்த காரியம் சொல்லல் என்று கூறுவ பொருட்களை இதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புளியங்குளம் சன்னாசிப் பரந்தனில் நீர்ப்பாசன எடுத்துச் செய்துகொண்டிருந்தார். அதன் சீே அறுத்தெடுக்கும்பொருட்டு தமது அயல்குறிச் அரிவதற்காக ஒப்பந்தம் செய்திருந்தார். என சிவகுருவின் மரம் அரியும் நீண்டவாளை, அ எங்கே தேடியும் வாள் அகப்படவில்லை. வீட்டிலிருந்து பஸ்ஸில்போய் சன்னாசிப் பரந்த6 சிவகுருவோ குய்யோ முறையோ என கதறிய பார்க்கலாம்’ என்று அவரை ஆறுதல்படு அச்செய்தியைக் கேட்ட பகல் 2 மணி 15 நி
2.

கம், சொய்ஸா இருவரிடையேயும் கடும்போட்டி ள கிடைத்தன. அடுத்தகட்டம் துண்டுகுலுக்கி ாருக்கு சனியினது தாக்கம் இருக்கிறது. னிதானே. எங்கே சனியினது அடையாளம் ரித்துக்கொண்டிருந்தார். ஐயா, கனகநாயகம், டியிருக்க, ஒரு சேவகன் கழுத்து உடைந்த ளேதான் பரிசுத்துண்டுகளை எழுதிப்போட்டு டந்த (குறைபாடுடைய) கூசாவைக் கண்டதுமே திற்கு வெற்றி நிச்சயம் என்பதை ஐயா ஐயாவைச் சுரண்டி, ‘என்ன மயில்வாகனம், விலைக்கு வாங்கியிருந்தால் கனகநாயகம் வீணாக அவரைத் தோற்கவைக்கப் போகிறீர்’ மே நம்பிக்கை வரவில்லை. முதல்முறை இல்லை. இரண்டாம் முறையும் அப்படியே ர். வெறும் துண்டு. கனகநாயகம் எடுத்தார் கோஷம் வானைப் பிளந்தது. அவர் தனது ஐயாவின் கழுத்துக்கு அனுப்பினார். ஐயா ாதிடம் இவ்வளவு மகிமை மிக்கது என்பதை ளார். அன்று கனகநாயகத்தின் நன்றியுரையில் பில்வாகனம்தானாம். தான் வென்றமைக்கும், நன்றிக்கடனாக அக்காலத்தின் புத்தம்புதிய வுக்குப் பரிசளித்தார். அங்கு இரண்டுநாட்களில் வந்ததாக ஐயா பெருமைப்பட்டுக்கொள்வார்.
த்தல் என்று ஒரு பிரிவு உள்ளது. இதை வார்கள். தொலைந்துபோன, திருட்டுப்போன து. ஐயா 1965, 66ம் ஆண்டுகாலப் பகுதியில் க் குளக்கட்டு வேலை ஒன்றை கொந்தராத்து மெந்து வேலைகளுக்கான மரப்பலகைகளை சியில் இருக்கும் சிவகுரு என்பவரை மரம் ள்ன ஆச்சரியம், முதல்நாள் வேலைசெய்த |டுத்தநாள் வைத்த இடத்தில் காணவில்லை. ஐயா அவர்கள் தெல்லிப்பளையில் தனது னில் இறங்க, இந்த முறைப்பாடும் கிடைத்தது. ழ ஆரம்பித்தார். ‘சரி, கொஞ்சம் பொறுங்கள் த்திவிட்டு பஞ்சாங்கத்தை எடுத்து தான் நிமிடத்திற்கு ஒரு ஜாதகம் போட்டார். அதை
3

Page 31
ஒருமணிநேரத்திற்கு மேலாக ஆராய்ந்தபோது
அது தண்ணிருக்குள் இருப்பதாக அனுமானித் எடுக்கவேண்டும். இதர கிரகங்களைக் கொ அனுமானித்துக்கொண்டு, ‘சண்முகம், (அவரது நிறைந்த இடம் உள்ளதா?’ என்று கேட்ட பரந்தன் குளம் இருக்கிறது. இப்போது அதி இருக்கிறது.’ என்று பதில் வந்தது. சுக்கிரனுடன்
உள்ளன என்று மனதைத் திடப்படுத்திக்கொ இரண்டுமைல் நீளமான குளத்தில் எவ்விடத் பார்த்தால் அங்கே ஒரு அரசமரம் காணப்பட்டது இருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டு அந்த
துலாம் ராசியைக் குறித்துக்கொண்டார். ‘சரி தேடவேண்டும்' எனத் தீர்மானித்துக்கொண்டா குளத்துள் இறங்கப் போகிறீர்கள்?’ என்று கே "உனது பெயர் என்ன?’ என்று கேட்டபோது
கேதுக்களால் மறைக்கப்பட்டபடியால் தாமரைக்ெ ஒருவரும் வந்தவுடன் அவரது நம்பிக்கை வெளிக்காட்டாமல், ‘சரி, நாகரத்தினம், கிழ 20அடி முன்னே போய் அரையளவு தண்ண அரையளவு தண்ணிர் என்று ஊகித்தமைக்கு (இடுப்பு) என்பதுதான். வடக்கே திருப்பி ந நிலத்தில் தேடு என்ற கட்டளை பிறந்தது.
வைத்த நாகரத்தினம் வாளின்மீதுதான் காலை அதன் பல்லுப்பட்டு காலில் இரத்தம்கூட வ அதைத்தொடர்ந்து குனிந்து தண்ணிரில் மூ அந்த நீண்ட மரமரியும் வாளைக் கண்ட எல்( சிவகுரு ஐயாவின் காலைப்பிடித்துக் கொண்
எந்த உயர்கலை ஞானத்தாலும், அதன் வித்தியாசம் இருக்கவேசெய்யும். வெறும் நூல் பிரயோகிக்கமுடியாது இந்த நுணுக்கத்தை கொடுக்கும்போது தான் அக்கலைஞானம் பரி: நன்குபொருந்தும். இன்றுள்ள ஜோதிடர்களில் விதிவிலக்குகளை உணர்வதில்லை. தோஷம் தோஷமான செவ்வாயை தோஷமில்லை என்று பெறுமதி மிக்கதாகையால், ஏன் வீணாகப் பொருத்தம் இல்லை என்றே கூறிவிடுகின்றனர்.
24

பொருள், சந்திரன், சுக்கிரனுடன் இருந்ததால் துக் கொண்டார். இனி பொருளை வெளியில் ண்டு ஒருவாறு அது இருக்கும் தூரத்தை உற்ற நண்பர்) இங்கே ஏதாவது தண்ணிர் ர். ‘ஏன் ஐயா அருகில்தானே சன்னாசிப் ல் நிறையத் தண்ணிரும் தாமரையும் கூட ராகுவும் கூடியிருப்பதால் தாமரைக்கொடிகளும் ண்டு எல்லோரும் குளத்தடிக்குச் சென்றனர். தில் தேடுவது என்று யோசித்துக்கொண்டு து. அரசு மரங்களின் தலைவன் சிங்கராசியாக மரத்திலிருந்து நாடாப்பெட்டியினால் அளந்து , இனி இவ்விடத்தில் குளத்துள் இறங்கித் ர். அங்கிருந்தவர்களைப் பார்த்து ‘யாரப்பா, ட்க, ஒருவர் நான் இறங்குகின்றேன் என்றார். ‘நாகரத்தினம்’ என்று பதில் வந்தது. ராகு காடிகளும், பாம்புடன் சம்பந்தப்பட்ட பெயருள்ள மேலும் வலுவடைந்தது. இதை யாருக்கும் க்கே பார்த்துக்கொண்டு குளத்தில் இறங்கி aர் வந்ததும் வடக்கே திரும்பு’ என்றார். குக் காரணம் சுக்கிரனது ஸ்தானம் அரை ாகரத்தினத்தை இனி மெதுவாகக் காலால் என்ன ஆச்சரியம்! முதல் காலைத்தூக்கி வைத்தார். வாள் நிமிர்ந்தபடியே கிடந்ததால் ந்துவிட்டது. ஐயா வாள் என்ற கூச்சலும், ழ்கி எழுந்த நாகரத்தினத்தின் கைகளிலே லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மறுகணம் டு ஆனந்தக்கண்ணிர் பெருக்கினார்.
கற்கை(படிப்பு)க்கும், செயல்(நடை)முறைக்கும் களை மட்டும் படித்துவிட்டு அதை அப்படியே உணர்ந்து அளவளவாக மக்களுக்குக் ணமிக்கின்றது. இது ஜோதிட சாஸ்திரத்திற்கு பலர், விதிகளை ஒரளவு படித்திருந்தாலும், இல்லாத செவ்வாயை தோஷம் என்றும், பம் கூறுவார்கள். மனிதவாழ்க்கை அதிகூடிய பொறுப்பேற்கவேண்டும் என்ற பயத்தினால் ானவே இவர்களைக் குறைகூறிப் பயனில்லை.

Page 32
மக்கள் தங்கள் விஷயங்களில் தாங்கள் 8 அறிவுள்ள ஜோதிடரையே மக்கள் அணுகே
இனி, இலங்கையின் தலைசிறந்த ஜே செம்மலுமாகிய ஐயா ஆயர்பாடி ஜோதிடர் மu சற்று ஆராய்வோம்.
ஜாதகத்தில் 5ம் இடத்தைப் பூர்வபுண் உயர் கலை ஞானங்களுக்குமுரியது, பூர் என்கிறார்களே அது இந்த 5ம் இடத்தினது பிற 5ம் இடமும் 5ம் அதிபனும் நல்லநிலையில் கலைகளில் “ஞானம்' என்ற ஒரு வார்த்தையை தருபவர் 5ம் இடத்து அதிபதிதான். ஜோதிடத் அதிபன், லக்ன அதிபன், சூரியன், சந்திரன், வியாழன் ஆகியோர் நன்கு பலமடைந்திருக்க ஜாதகத்தில் இவை யாவுமே நன்கு பலமை
ஐயாவின் ஜெனன லக்கினம் மிதுனம். புத்திக்கூர்மையும், அறிவு விவேகமும் இ( ஸ்தானமாகிய மூன்றில் ஆட்சிபெற்ற சூரிய அதிகரிக்கின்றது. லக்ன அதிபன் புதன் அதிபன் சுக்கிரனுடன் கூடி லட்சுமி யோகம் ஞான(அறிவு) காரகன் வியாழனுடனும் கூடி அறிவு கடல்அலையெனப் பெருக்கெடுத்தது. ஊரில், நகரத்தில், உலகில் தனிப்பெரும் புக ஜாதகர்கள் பிரபல்யம் மிக்கவர்களாக இரு முக்கியமானது. போட்டிகளில் பரிசுபெற 6ை பெற்றவன் தானே வெற்றிபெறுகின்றான். அது துன்பப்பாதைகளையும் கொடுத்து அவற்றை
ஐயாவினது ஜாதகம் இதுதான். லக்ல நட்சேத்திரம் மகம் 3ம் பாதம், சிங்கராசி, வியாழன், சுக்கிரன். 6ம் இடத்தில் கேது, இடத்தில் ராகு. பிறக்கும்போது கேது மகாதி
18.
லக்ன அதிபன் புதன் 3இல் இருந்தமைய கொடுத்து பிரச்சனைகளை வெற்றிகொள

கவனமாக இருக்கவேண்டும். நல்ல ஜோதிட வண்டும்.
ாதிடராகவும், ஆயிரம் பிறைகண்ட உத்தமச் பில்வாகம் அவர்களது ஜாதக கிரகநிலையைச்
ாணிய ஸ்தானம் எனக் கூறப்படும். இதுவே வீகக்கொடை அல்லது கடவுளின் அருள் |ப்பினால்தான் ஏற்படுகின்றது. ஒரு ஜாதகத்தில் இருந்தால் இத்தகைய சிறப்புக்கள் ஏற்படும். பப் பயன்படுத்துகிறார்களே அந்த ஞானத்தைத் ந்தில் ஒருவர் நிறை அறிவு பெறுவதற்கு 5ம் புத்திகாரகன், புதன், ஞான(அறிவு) காரகன் கவேண்டும். ஆம்! ஆயர்பாடி ஐயாவினுடைய டந்திருக்கின்றன.
லக்கின அதிபனே புதனாவதால் இயல்பாகவே ருக்கும். இவர் வீர்ய, தைர்ய, பராக்கிரம பனுடன் கூடுவதால் புதனது பலம் மேலும் வித்தைகளுக்குரிய 4ம் அதிபனுமாகி, 5ம் பெற்று, 3ம் இடத்தில் சூரிய சந்திரனுடனும்,
இருப்பதால் ஐயா அவர்களுக்கு ஜோதிட 5 கிரகங்கள் கூடி 3ல் இருப்பதனால் தனது கழ்பெற முடிந்தது. 3ம் இடம் பெலமடைகின்ற ப்பார்கள். இது அரசியல்வாதிகளுக்கும் மிக வப்பதும் இந்த 3ம் இடந்தான். கடினபயிற்சி போல இதுவும் வாழ்க்கையில் கரடுமுரடான
வெற்றிகொள்ளவும் வைக்கிறது.
னம் மிதுனம். நவாம்ச லக்னம் விருச்சிகம். 3ம் இடத்தில் சூரியன், சந்திரன், புதன், 10ம் இடத்தில் செவ்வாயும், சனியும். 12ம் சையில் இருப்பு வருடம் 01 மாதம் 09 நாள்
ால் வாழ்க்கையில் பொறுப்புக்கள் சுமைகளைக் ர்ள வைத்து பிரபல்யத்தைக் கொடுத்து,

Page 33
லக்கினாதிபன் புதனும் சூரியசந்திரர்களுடனு வாழ்க்கையில் ஈடுபடவைத்து மற்றவர்களு உயர்த்திவைத்தது. அசுரகுரு சுக்கிரனும்,
உலகாயத வாழ்க்கையும், ஆத்மீக வாழ்க்கை கிரகஸ்தாஸ்சிரமம்' என்று வேதங்கள் கூறு அடைதல் என்பது பொருளாகும். 12ம்
இருந்தமையாலும் ஞானத்தைக் கொடுத்திரு செவ்வாயும், சனியும் இருந்தமையால் அவை துன்பங்களையும் மறுபுறத்தில் 9ம், 11ம் அதிபன் இவை எல்லாவற்றிற்கும் மேலாக 3ம் இட புதன், சூரியன், சந்திரனும் குரு அந்தஸ்துப்ே ஐந்து கிரகங்கள் கூடி 3ல் இருந்தமையால்தான் உயர்நிலையையும் கொடுத்துள்ளது சந்திரனும் அமைந்தது. இப்படியானவர்களுக்கு மிகள் பசித்திருப்பதை, களைத்திருப்பதை இவர்கள என்னவோ ஐயா அவர்களது வீட்டில் எந்த நிறை உணவு காத்திருந்தது. குருசந்திரயோக மரம்போன்றவர்கள். இன்னுமொரு ஆன்மீகத்து சனி பார்ப்பதாகும். இதைக் காலசர்ப்பதோ ராஜரிஷிகளுக்குரிய கிரக அமைப்பாகும். காசியபர், அத்திரி, ஆங்கீரசர், பிருகு டே சேர்ந்திருக்கிறது அல்லது ராகுவை சனி ப தமது வாழ்க்கையை உலகாயதத்தில் அ வேண்டியிருக்கும். ஆத்மீகவழியில் வாழ்க்கை காலடியில் கிடைக்கும் என்று ஐயா அவர்கள் த மாத்திரமல்ல நவாம்சநிலையிலும் கிரகங்கள் ஐயா அவர்களுக்கு நவாம்சத்தில் ஐந்து உச்சம், செவ்வாய் ஆட்சி, புதன் ஆட்சி உச்ச தனித்துவமான வாழ்க்கைக்குத் துணைபோய
தமது தாய் தந்தையர்கள் நீண்டகா வருந்தினார்களாம். பிதா அமரர் வே.தம்பு 5ல் கேது இருக்க, 5ம் அதிபன் செவ்வாய் 6 குளம் எல்லாம் சென்று தீர்த்தமாடி வணங்கி வந்து சேர்ந்தனராம். இனி செல்ல இடம் இ சரணாகதி நிலையில், தனது தலையை சுன்: (இது வெறித்தனமா? முரட்டுத்தனமா? பக்திய
2

னும் வியாழன் கூடி இருப்பதால், ஆத்மீக நக்கு ஒரு வழிகாட்டியாக முழுநிலைக்கு தேவகுரு வியாழனும் கூடியிருந்தமையால், கயும் சமாந்தரமாகவே சென்றது. இதைத்தான் ம் இல்லறத்தில் இருந்தபடியே இறைவனை இடமாகிய மோட்ச ஸ்தானத்திலே ராகு க்கின்றது. தொழில் கர்மஸ்தானமாகிய 10ல் 6ம், 8ம் அதிபனாகி ஒருபுறத்தில் கஷ்டங்கள், ாாகி சிறப்புகள், நன்மைகளையும் கொடுத்தது. த்தில் உயிர்க்கிரகங்களான லக்ன அதிபன் பெற்ற வியாழனும் சுக்கிரனும் கூடி, அதாவது ஐயா அவர்களுக்கு இத்தகைய சிறப்புக்களும் , குருவும் கூடியிருப்பதனால் குருசந்திரயோகம் பும் மென்மையான இதயம். மற்றவர்கள் ால் பார்த்திருக்கமுடியாது. இதனால்தானோ தநேரமும் வருவோர் போவோருக்கெல்லாம் ம் உடையவர்கள் மற்றவர்களுக்கு நிழல்தரும் |றைக்கான சிறப்புக் கிரக அமைப்பு ராகுவை ஷம் என்று நாங்கள் கூறுகின்றோம். இது தலைசிறந்த முனிவர்களான விசுவாமித்திரர், ான்றோர்களுக்கெல்லாம் சனியும் ராகுவும் ார்க்கிறது. இப்படியான அமைப்புடையவர்கள் பூழவிட்டால் துன்பங்களையே அனுபவிக்க
அமைத்துக்கொண்டால் நிம்மதியும் நிறைவும் திரும்பத் திரும்பக் கூறுவார்கள். கிரகநிலையில் பெலமடையவேண்டும் என்று கூறுவார்கள்.
கிரகங்கள் பெலமடைந்திருந்தன. சூரியன் ம், சனி ஆட்சி இவைகளும் ஐயா அவர்களது பின.
"லமாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் அவர்களது ஜாதகத்தில் புத்திரஸ்தானமாகிய ல் மறைந்து போய் இருக்கிறது. பலகோவில்
இறுதியில் சுன்னாகம் ஐயனார் கோவிலுக்கு ல்லை நீயே தஞ்சம் நாம் ஆற்றோம், என்ற னாகம் ஐயனாரது வாசற்படியில் அடித்தாராம். பின் உயர்நிலையா? என்பதை யாமறியோம்)
6

Page 34
அன்றுமுதல் அவரது நெற்றியில் சிறிய உருவாகிவிட்டது. இது பின்னர் மாறவேயில் கை மணிக்கட்டிலும் வந்திருந்தது. அது மட்டும இது ஐயப்பனின் ஒரு முத்திரையோ என்று
இன்னுமொரு ஆச்சரியமான விடயம். புலனாகியது. ஐயனார் சுவாமிகள் ஹரிஹரபுத் புத்திரன் என்று வேதங்கள் கூறுகின்றது. ஐயா பரப்பிரம்மமாகவும் முழுமுதற்கடவுளாகவும் கெ தனது நெற்றியில் பூசுகின்ற சிவசின்னமாகிய விபூதிப் பூச்சும் அதன் மேலாக சந்தன ( காட்சியளிக்கும். பலர் ஐயாவைக் கேட்டிருக்க உங்களுக்கு, ஏன் விபூதிப் பூச்சு? இது தே இதுதான் எனது பூர்வீகம், இதை மாற்றமாட்டே புரிகின்றது. உள்ளத்தில் நிறை வைஷ்ணவ6 விஷ்ணு சின்னங்களுடன் வாழ்ந்திருக்கிறா உணர்வைக் காட்டவா? என்பதும் விளங்கவி
ஐயா அவர்கள் முருகபக்தியில் திை கந்தனுக்கு குடிகுடியாட்பட்டவர்கள். அதன் கார் அவருக்குச் சாத்தப்பட்டது. ‘ஐயா! எப்படி நீ கேட்டதற்கு, தான் வாழ்க்கையில் படமுடிய தான் வழிபட்ட தெய்வங்களும் தன்னுடன் & காப்பாற்றமுடியவில் லையென்றும் , பின் விஷ்ணுபகவானைக் காட்டித்தந்தார் என்றும் தொடங்கும்போது ‘சீதக்களபச் செந்தாமை ஆரம்பிப்பார். விநாயகரது முதல் மந்திரமா விஷ்ணுபகவானையே தனக்கு ஞாபகமூட்டுவ திருப்புகழில் நெடிய மாமன் விஷ்ணுபகவானி: ணுடைய மருகோனே என்றுதான் பாடியுள்ளா
யாழ்ப்பாணத்து அருள்வல்லார் யோகர் தெல்லிப்பளை துர்க்கையம்பாள் கோயிலடியிலி காரின் இடதுபக்க முன்சீற்றில் ஏறிய சுவாமி ரீராமநாமத்தை உபதேசித்ததாகப் பெருமை! சொல்லிக்கொடுத்த சுவாமி தனக்கு பூரீரா ஆச்சரியப்பட்டார். எல்லாம் கடந்த உயர் பிரம்
2

பாக்களவிலான கட்டியொன்று தளும்பாக லை. இதே கட்டி ஐயா அவர்களின் வலது ல்ல அவர் பரம்பரைக்கும் இது தொடர்கின்றது.
எண்ணத்தோன்றுகின்றது.
ஐயாவின் மறைவிற்குப் பின்னர்தான் எனக்குப் திரன். அதாவது விஷ்ணுவினதும், சிவனினதும் அவர்கள் முற்றுமுழுதாக விஷ்ணுபகவானையே ாண்டு ரீ ராமபிரானையே வணங்கி வந்தாலும், விபூதியை விடவில்லை. எந்நேரமும் முக்குறி குங்குமத்தினாலான திருநாமமும் கம்பீரமாக கிறார்கள். "ஐயா! விஷ்ணுபகவானை வழிபடும் வைதானா?” என்று அதற்கு ஐயா அவர்கள் ன் என்று கூறிவிட்டார். காரணம் இப்போதுதான் னாகவும், உடலில் ஹரிஹர புத்திரனாக சிவ ர். அல்லது சமயங்களுக்கிடையில் சமரச பில்லை.
1ளத்த குடும்பத்தின் வழிவந்தவர். மாவைக் ரணமாகவே ‘மயில்வாகனம்' என்ற திருநாமமும் ங்கள் விஷ்ணுபகவானிடம் வந்தீர்கள்?’ என்று ாத துன்பதுயரங்களை அனுபவிக்கும்போது, கூட அழுதனவேயன்றிஅவைகளால் என்னைக் னர் விநாயகப் பெருமான் தான் தனக்கு கூறுவார். இன்றும் தனது வழிபாட்டினைத் ர விநாயகர் அகவல் படித்தே பூஜையை ான 'சுக்லாம் பரதரம் விஷ்ணும்’ என்பதும் பதாகக் கூறுவார். அருணகிரிநாதர்கூட அவர் ன் புகழ்பாடி இறுதியில் மட்டும் இப்படிப்பட்டவர் என்பதையும் ஞாபகமூட்டுவார்.
சுவாமிகள் ஐயா அவர்களின் தீட்சாகுருவாவர். ருந்து யாழ்ப்பாணம் சிவன்கோவில் வாசல்வரை அவர்கள் சாரதி ஆசனத்தில் இருந்த தமக்கு ப்பட்டுக்கொள்வார். எல்லோருக்கும் சிவநாமம் ாமநாமத்தை உபதேசித்ததையிட்டு மிகவும் மநிலையில் எல்லா நாமங்களும், ஒருவனையே
7

Page 35
குறிக்கின்றன. இவற்றை ஞானிகள் அறிவர்.
பாதை தேவைப்படுகின்றது என்று ஐயா ! பொல்லாப்பும் இல்லை! முழுவதும் உண்பை அருள்மொழிகளைத் திரும்பத் திரும்பக் கூறு
மட்டக்களப்பில் (1976 என்று நினைக்கிே சிறிய ஜோதிடராகிய நானும் உரை நிகழ்த்து சந்திரன் இரண்டு என்றும் அவை சோமனும், தேய்பிறைச் சந்திரன் என்பவை இருவேறு பலை மட்டக்களப்பில் ஜோதிடர் குழாமே மலைத்து படித்தேன். அனைவரும் நண்பர்களாயினர். முடிந்து வரும்போதும் ஜோதிடர்கள் பயபக்திய தெளிந்துகொண்டமை என்னை ஆச்சரியப்பட எனக்கு பரம்பரை என்ற வழி வந்துள்ளது. வைத்துப் புகழடையச் செய்ய குருநாதர்தான் என்று கூறியுள்ளமையால் சற்று ஆறுதலடை
ஆயர்பாடி மயில்வாகனம் ராமகிருஷ்ணன
r
உன்னிடத்தும் என்னிடத்தும் பிற
எண்னிடம் சகிப்பின்றி வீணாக
டத்தும் ஆத்மாவையே காணிப7
எங்கும் விட்டுவிடுவாயாக.
கோவிந்தனை வழிபடு, கோவி,
வழிபடு. பிறவிக்கடலைக் கடப்ப
வேறு உபாயத்தை நாங்கள் கா
ဗြူး)၊ss.
2

ஆனால் வாழும்வரைக்கும் ஒரு உறுதியான கூறுவார். எப்பவோ முடிந்த காரியம்! ஒரு D! யாமறியோம்! என்ற யோகர் பெருமானது றுவார்.
றேன்) பெரிய ஆயர்பாடி ஜோதிடர் ஐயாவுடன், ம் வாய்ப்புப் பெற்றேன். அங்கு ஜோதிடத்தில் இந்துவும், அதாவது வளர்பிறைச் சந்திரன், ர்களைத் தரும் என்றும் ஆற்றிய பேருரையால், விட்டது. நானும் அன்றுதான் அப்பாடத்தைப் ஐயா ஆய்வுமனிடபத்திற்குப் போகும்போதும், புடன் சுற்றிநின்று தமது ஐயங்களைக் கேட்டுத் வைத்தது. ஆயர்பாடி ஜோதிடர் என்ற பெயர் ஆனால் அதன் சிறப்பை, மகிமையைத் தக்க
வழிவிடவேண்டும். இவனுக்கு இது வருகிறது கிறேன்.
ரிடத்தும் விஷ்ணுவே இருக்கிறார்.
க் கோபிக்கின்றாய். எல்லோரி
ாயாக. வேற்றுமை எண்ணத்தை *
ந்தனை வழிபடு, கோவிந்தனை
தற்கு நாமஸ்மரணையைத் தவிர
ணவில்லை.
பஜகோவிந்தம் -
అడో
8

Page 36
ஒம் ரீ ரா வைஷ்ண
- புலோலியூர் விஸ்வலிங்கம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ் ஹரே ராம ஹரே ராம ராம ரா
“ஓம் நமோ நாராயணாய நம “ஓம் பூரீதேவி பூதேவி சமேத பூரீமன் நாராயணாய நமஹ'
'ஓம் நமோ பகவதே வாஸுே
நாம் எமது வாழ்க்கைப் பாதையில் பழகுகின்றோம். ஆனால் ஒரு சிலரே நம்மன: இடத்தைப் பிடித்துக் கொள்கின்றார்கள். இ விதத்திலே எமக்குத் தேவையான அதி சி போதனைகளும் வாரிவாரி வழங்கிய வள்ளல் தம்பு மயில் வாகனம் அவர்களுடன் பழகிய மறக்கமாட்டார்கள். அவர்களுடன் மனம்விட்டுச் அனைத்தும் சூரியனைக் கண்ட பணிபோல மன ஆனந்தப் பரவசத்தை அடையும்.
ஐயா அவர்கள் தமிழ் அட்சரங்களை ஆழ்வார் பாசுரங்களையும் பாராயணம் செய்ய எம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு தத்துவங்களையும் அவற்றிற்கான விளக்கங்க தொகுத்து, அனந்தசயனனை, நாராயணனை. கேசவனை, புருஷோத்தமனை, பத்மநாபனை, கோவிந்தனை, மாதவனை எம் மனக்கண்மு:
நெற்றியில் கம்பீரமாக வீற்றிருக்கும் நாமத் ஆஜானுபாகுவான தோற்றத்துடனும் சற் பக்கவாத்தியங்களுடன் பாட்டும், பொருளும் மகிமைகளை உபந்நியாசம் செய்வார்கள். ‘இந்த ஆன்மா அழியாதது ஆனால் உட போன்ற உயரிய தத்துவங்களை எவரும் வி விளக்குவார்கள்.
இலங்கையில் வைஷ்ணவ சமயத் கூறக் கூடியவர்களுள் ஐயா அவர்களும் தமிழ்மொழியையும் தமது இருகண்கள் எனப்
2.

ாமஜெயம் வ திலகம்
கணபதிப்பிள்ளை ஜெயம் -
ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ம ஹரே ஹரே.
ஹ'
தவாய'
பல பெரியோர்களைக் காண்கின்றோம், த்தில் ஆழமாகப் பதிந்து ஒரு தனித்துவமான |ப்படியாக நம் உள்ளத்தைக் கவரக்கூடிய றந்த அறிவுரைகளும் பொருள் பொதிந்த உயர்திரு. ரீமான். ஆயர்பாடி வேலுப்பிள்ளை எவரும் அவர்களைத் தம் வாழ்நாளில் சம்பாஷித்தாலே எம் மனத்திலுள்ள துயர்கள் றந்து, இதயம் நிறைகுடம் போன்று நிறைந்த
முறைப்படி உச்சரித்து ராமநாமங்களையும், பும் பாணி அலாதியானது. அவை இப்போதும்
இருக்கின்றன. அதிநுட்பமான ஆன்மீகத் ளையும் தூய செந்தமிழில் அலங்காரமாகத் , மாயவனை, மதுசூதனன், விஷ்ணுபிரானை, கிருஷ்ணனை, வாமதேவனை, ரீநிவாஸனை, ன் கொண்டுவந்து விடுவார்கள்.
ந்துடனும், மலர்ந்து ஜொலிக்கும் முகத்துடனும், ]றேனும் சளைக் காது மணிக் கணக்கில் கலந்து பஞ்சாமிருதம்போல் விஷ்ணுவின் அவர்களின் விளக்கங்களை நோக்கினால் ல் அழியும் தன்மை கொண்டது” என்பன |ளங்கக்கூடிய முறையில் உதாரணங்களுடன்
திலே முதல் வரிசையிலே குறிப்பிட்டுக் ஒருவராகும். வைஷ்ணவ சமயத்தையும் போற்றிப் பேணிக் காத்து வாழ்ந்தவர்கள்
9

Page 37
ஆயர்பாடி ஐயா அவர்கள். காலை, மாை காலமும் நாராயணனின் நாமத்தை இயம்பி
வாக்குத் தூய்மையுடன் உளத்தூய்ை செயல்கள் யாவும் ஆத்மீக ரீதியில் மேம் வாழ்விலும் ஐயா அவர்கள் கொண்ட ஆர்வ துறையில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்
அழிந்துவிடக்கூடிய உடலுக்கு ஏற் ஒளஷதங்களால் குணப்படுத்துவதிலும் பார்க்க என்று வாழ்ந்து காட்டிய உயரிய மகா ஆத்மீகப்போதனைகளை வழங்கும் ஐயா அ ஆச்சிரமத்திலும், மற்றும் வசித்த இடங்களிலும்
வல்லிபுரக்கோவில் திருவிழாக்காலங்க செய்து வந்ததோடு அங்கே இருக்கும் இலு ஆன்மீக சொற்பொழிவுகளும், உபந்நியாசங்க அடியார் கூட்டத்துடன் பஜனை பாடிக்கொண்
ஐயா அவர்களின் ஆன்மீக உரைகளி எமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச் கூடியதாக இருக்கின்றன. ஐயா அவர்களின் 6 பல்வேறு பாகங்களிலும் இடம்பெற்றிருக்கின்
இல்லறத்திலிருந்தவாறே துறவறத்தை தம் வாழ்க்கையைத் தூய அறவழியிலே ஐய துன்பம் என்று வருவோர்க்குத் துயர் துடைத் போதனைமூலம் அளித்தார்கள்.
அறத்தைப் பேண நல் மனைவி, பிள்ை ஐயா அவர்களுக்கு எப்படி நாராயணனுக்கு பண்புகளுடன் குறிப்பறிந்து நடக்கும் மனைவி மக்கட் செல்வங்களும் கிடைத்திருக்கிறார்கள் அறிந்து அதற்கேற்ப உரிய காலத்தில் ஐயா கடமைகளிலும் முழுமனத்துடன் ஒரு தெய்வ போல் செய்தார்கள். அவர்களின் கடமைகள்
ஐயா அவர்களின் மக்கட்செல்வங்களு
குளிரும்படி நடந்து தந்தையின் உயர்குண என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
ஓம் ஹிரா
விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை ஜெயம்
بحجة

ல நேரங்களில் மாத்திரம் அல்ல சதாசர்வ க்கொண்டிருப்பார்கள்.
மையும் உள்ள ஐயா அவர்களின் சொல், பட்டன. ஆத்மீக தத்துவங்களிலும், ஆத்மீக மும் ஆதங்கமும் ஐயா அவர்களை ஆத்மீகத் திவிட்டது.
படக்கூடிய சிறுசிறு சுகயினங்களைக்கூட * ஆத்மீக நம்பிக்கையால் சொஸ்தப்படுத்தலாம் ான் ஐயா அவர்கள் ஆகும். அறிவுக்கு அவர்கள் தங்களது தெல்லிப்பளை ஆயர்பாடி ) தானங்களில் சிறந்த அன்னதானம் செய்தார்.
ளில் அங்கேயே தங்கியிருந்து அன்னதானம் ப்பை மரநிழலில் அமர்ந்து பக்தர்குழாமுக்கு 5ளும் செய்வார்கள். தேர்த்திருவிழாவின்போது டு தேருடன் செல்வார்கள்.
ர், பொருள் பொதிந்தவை மாத்திரமல்லாது சனைகளை ஆன்மீக ரீதியில் தீர்த்துவைக்கக் விளக்கங்கள், உபந்நியாசங்கள் இலங்கையில்
O60.
மேற்கொள்ளலாம் என்ற பழமொழிக்கேற்ப பா அவர்கள் கொண்டார்கள் ஐயா அவர்கள் து பேரின்பத்தைத் தமது பொருள் பொதிந்த
ளைகள் அவசியம். நாராணயணன் புகழ்பாடும் த லட்சுமிதேவியோ அதேபோல் அதிசிறந்த பியும், அறிவும், பண்பும், ஞானமும் நிறைந்த தமது கணவனின் விருப்பு, வெறுப்புக்களை
அவர்களின் ஆத்மீக வாழ்விலும் நாளாந்தக் த்திற்கு ஒரு பக்தன் செய்யும் பணிவிடைகள்
போற்றுதற்குரியது.
ம் ஐயாவின் குறிப்பறிந்து ஐயாவின் மனம் ங்களுக்குச் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல
மஜெயம்

Page 38
ஒம் ரீரா சொல்லின் செல்வன்
- கு.பொ.வி. மாவட்ட நீதிபதி, மாவட்ட நீத
24.08.98ல் வைகுந்த பதம் எய்திய ஈழ ஆயர்பாடி ரீ.வே.த.மயில்வாகனம் அவர்களை இல்லையென்றே கூறலாம். புராதனப் பெருை குடும்பத்தில் அவர் அவதரித்தார். பொதுவா சொன்னால்தான் இலங்கையில் உள்ள அ மகாபாரதம், ராமாயணம், மற்றும் வைஷ்வி அவர்களுக்குரிய புலமையும், ஆட்சியும் சொல்லு அவருடைய கீதைப்பேருரையோ அல்லது ராப இல்லையென்று சொல்லலாம். பன்னிரு ஆழ்வ பிரபந்தத்தில் அவருக்குள்ள ஆட்சி இலங்கைய என்று கூறமுடியாது. எந்தத் திருப்பாசுரத்தையு இயம்பமுடியும். ராமகாவியத்தையும், மகாபார பிரபந்தத்தையும் ஒதியும், ஒதுவித்தும் மக்கள் ஜோதிட சாஸ்திரத்தில் அவருக்குள்ள பாணி இல்லை. ஜோதிட சாஸ்திரத்திற்குப் புறம்பாக
ஆழ்வார் அவர்களுடன் எமது குடும் நெருங்கிப்பழகும் பாக்கியம் பெற்றது. அவருை மனம் கவலையுற்றிருக்கும் வேளையில் அ 1994ம் ஆண்டு நான் கடுமையாக நோய்வாய்ப்ட அவருடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல 'உனக்கு பாரதூரமான நோய் எதுவுமில கண்டமாதிரியாகவும் குளிசைகளைத் தருவார்க் “றி ராம லிகித ஜெபம் செய்” என்று சொல் ரீ ராம லிகித ஜெபத்தை ஆழ்வார் அவர்களி எனக்குச் சிகிச்சை அளித்த வைத்திய நிபு தர வைத்திய நிபுணர்களாக இருந்தமையா பாவித்தே வந்திருந்தேன். ஆயினும் பலன் எ அவர்களை இடையிடையே சந்தித்த போதெ6 கூறிவந்தார். நான் அவசரமாக இந்தியா ெ
3

மஜெயம் றுக்கு என் அஞ்சலி
வரதராஜா - மேன்றம்,திருகோணமலை,
மணித்திருநாட்டின் புகழ்பெற்ற தெல்லிப்பழை த் தெரியாதவர்கள் இலங்கையில் அனேகமாக மமிக்க பழமைவாய்ந்த பின்னணி கொண்ட கவே அவரது பெயரைவிட ஆழ்வார் என்று னைவரும் அவரை அறிந்துகொள்வார்கள். னவ கிரந்தங்கள் ஆகியவற்றில் ஆழ்வார் லும் தரமன்று. இலங்கையில் நாலாபக்கத்திலும் )ாயண சொற்பொழிவோ நடைபெறாத இடமே ார்களினால் அருளப்பெற்ற நாலாயிரத்திவ்விய பில் சமகாலத்தில் வேறு யாருக்கும் இருக்கும் ம் எந்நேரத்திலும் எவர் கேட்டாலும் அவரால் தத்தையும் குறிப்பாக கீதையையும், திவ்விய ளை மேன்மையடையச் செய்தார். இதைவிட ாடித்தியத்தை இலங்கையில் அறியாதவர்கள் 5 அவர் கூறும் வாக்குப் பலிக்கும்.
பம் எனது வாலிபப் பராயத்தில் இருந்தே டைய இன்சொல்லும், விருந்தோம்பல் பண்பும், வர் சொல்லும் ஆறுதலும் மறக்கமுடியாது. Iட்டபோது ஒரு கட்டத்தில் தெஹிவளையிலுள்ள oப்பட்டேன். என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே bலை. இங்குள்ள வைத்திய நிபுணர்கள் கள். நீ அதை வைத்து விழுங்காதே. ஆயினும் லி அன்றே அதனை ஆரம்பித்தும் வைத்தார். lன் கட்டளைப்படி நான் தொடர்ந்து வந்தாலும் ணர்கள் இலங்கையில் புகழ்பெற்ற முதலாம் ல் அவர்கள் தந்த மருந்துகளையும் நான் துவும் கிட்டவில்லை. இதனிடையே ஆழ்வார் ல்லாம் மேற்சொன்னவாறே திரும்பத் திரும்பக் சல்ல நேரிட்டபோது 04.07.98இல் அவரைச்
1

Page 39
சந்தித்தபோது மீண்டும் தான் சொன்னதையே அத்துடன் ரீ ரங்க மஹிமையையும் கூறி எதேச்சையாக இந்தியாவில் மருத்துவ பரிே அவர்கள் கூறிய கூற்று உண்மையாகியது. ே வேறு வைத்தியம் இங்கு அளிக்கப்பட்டது. நம்மிடையே இல்லை என்பது தான் எனது
90 வயது வரை ஒருவர் வாழ்வது
கவனத்தில் எடுக்கும்போது மிகவும் அரிதான அவர்களுடைய ஞாபகசக்தி சற்றும் பிசகவில்ை அவருடைய இல்லத்தில் அவரைச் சந்தித்தபோ அந்தச் சமயம் தான் இவ்வுலக வாழ்க்கையை என்பதைத் தெளிவாகவும், திடமாகவும் கூறின ஏனெனில் அவ்வளவு தெம்புடனும், ஆரோ அவரிடமிருந்து அன்றைய தினம் நாங்கள் வி சிறிது மாற்றமும், சற்று உணர்ச்சியும் தென்பட் அறிந்துகொண்டேன்.
1997ம் ஆண்டு ரீராமநவமியின்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவும் இன்றும் இங் உள்ளது. தொடர்ந்தும் 1997ம் ஆண்டு மீ அந்தச் சம்பவமும் யாவரின் மனத்திலும் பசும நிகழ்த்தும் போதெல்லாம் ரீ ஆஞ்சநேயரை வரிஷடம்” என்ற சொற்பதம் ஞாபகத்தில் வ
ஆழ்வார் அவர்களுடைய பூவுலகவா! பழக்கமுடையவர்களுக்கே அதை ஜீரணிப்பது ஏறக்குறைய 55 ஆண்டுகள் இல்லற தரும பார்யைக்கும், புத்திரர்களுக்கும் இந்நிகழ்வ என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆயினும் முடிவு என்கின்ற சம்பவத்துடன்தான் பூரணம அதிலும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன?
கு.பொ.வி.வரதராஜா.
O7. O9.98

ய எனது நோய் தொடர்பில் கூறியிருந்தார்.
அங்கு சென்று வருமாறும் கூறியிருந்தார். சாதனைக்கு நான் உட்பட்டபோது ஆழ்வார் நோய்க்குக் காரணி ஒன்றாக இருக்க எனக்கு ஆயினும் அதைச்சொல்ல தற்போது அவர் வருத்தம்.
இன்றைய காலகட்டத்தின் களநிலவரத்தை ா ஒன்று. 90வது வயதிலும் கூட ஆழ்வார் ல. 04.07.98ல் நானும் எனது குடும்பத்தார்களும் து எங்கள் எல்லோரையும் அவர் வாழ்த்தினார்.
விட்டு நீங்கவேண்டிய தருணம் வந்துவிட்டது ார். என்னால் அதை ஜீரணிக்கமுடியவில்லை. க்கியத்துடனும் காணப்பட்டார். இருப்பினும் டைபெற்றபோது அவருடைய வாழ்த்துரையில் டது. அதன் காரணம் யாது என்று பின்னர்தான்
திருகோணமலையில் நடைபெற்ற யாகமும் பகு வாழும் மக்களிடையே நன்கு ஞாபகத்தில் ண்டும் ஒருமுறை விஜயம் செய்திருந்தார். ]ரத்தாணி போல் இருக்கிறது. அவர் பேருரை க் குறிப்பிட்டுச் சொல்லப்படும் ‘புத்தி மதாம்
(bLD.
ழ்வு முற்றுப்பெற்றது. அவருடன் சாதாரண கஷ்டமாக உள்ளது. அப்படியிருக்க அவருடன் த்தை செவ்வனே ஆற்றிவந்த அவருடைய ானது எவ்வளவு பரிதவிப்பைக் கொடுக்கும் ஆரம்பம் என்கின்ற நிகழ்வு ஒவ்வொன்றும் ாகும். இது தவிர்க்கமுடியாத இறை நியதி. து வைகுந்த பரமபதம் எய்தும் பாக்கியம்

Page 40
ஓம் ரீ ரா
ஆயர்பாடி
- சி. இரங் பிரதிப் பிரதம செயலாளர், வட
கண்டோங் கண்டோங் கண் தொண்டீர் எல்லீரும் வாரீர்
வண்டார் தண்ணந் துழாய பண்டான் பாடிநின் றாடிப்பர
ஆயர்பாடி ஆழ்வார் என்றே நாம் அவன பிரபந்தங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டை பின்பற்றி எடுத்துக்காட்டாக வாழ்ந்தமையாலோ கடைப்பிடித்தமையாலோ அழைக்கப்பட்டிருக்கலி தோறும் பொன்னாலை வரதராஜப்பெருமாள் பிரசங்கத்தினை அவர் நிகழ்த்தினார். பிரசங்கம் அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளும் சேர்ந்தேய அவர் எமது வீட்டில் தங்குகின்றமையும், எ6 போய்வருகின்ற சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன. திருக்கேதீச்சரத்திலும் திருக்கோணேஸ்வரத்திலு இந்நிகழ்ச்சிகளை அவர் அடிக்கடி நினைவுகூர்ர வீட்டில் அவர்களைப் பலமுறை தரிசித்து ஆ சம்பாஷணையின்போது அவர் கூறிய எத்தனை மனதில் நிலைநிறுத்திப் பின்பற்றமுடியாது ே
ஆழ்வார் அவர்கள் ஞானமார்க்கமும் ட வாழ்க்கையை நடாத்தினார். ராமகாதை முத6 JLDTuu600T பிரசங்கங்களின்போது அவர் பாத் உயிரோட்டத்துடனும் சம்பவங்களை விளக் கண்ணிர் விடுவதும், உணர்ச்சிவசப்படுவதும் பகவத்கீதை போன்ற ஞானக் கருவூலங்க எடுத்துக்காட்டித் தனது ஆத்மானுபவத்தையு விளங்கவைப்பது ஞானமார்க்கத்தில் அவரது
அவர் தனது வாழ்க்கை அனுபவங்கை அவர் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆற்ற உதவிய முறைகள், யாகபூசைகள், பஜனை

மஜெயம் ஆழ்வார்
கராசா -
க்கு கிழக்கு மாகாணசபை.
டோங் கண்ணுக்கினியன கண்டோம் தொழுது தொழுது நின்றார்த்தும் ான் மாதவன் பூதங்கள் மண்மேல் ந்து திரிகின்றனவே.
(5ம்பத்து 2ம் திருவாய்மொழி)
ரை அழைப்பது வழக்கமாகும். ஆழ்வார்களின் மயாலோ, அவர்களது வாழ்க்கைநெறியைப்
அல்லது வைஷ்ணவனுக்குரிய சீரியநெறியை ாம். 1970களின் ஆரம்பத்தில் இருந்து ஆண்டு
ஆலயத்தில் பல ஆண்டுகளாகத் தொடர் ) என்றால் அத்துடன் பட்டாபிஷேக வைபவம், பிருக்கும். அவரின் பொன்னாலை வருகையுடன் எது குடும்பத்தார் அவரது ஆச்சிரமத்திற்குப்
பூர்வபுண்ணியத்தால் ஆழ்வார் அவர்களை ம் வரவேற்று உபசரிக்கும் வாய்ப்புக் கிட்டியது. ந்து பேசுவார். ஆழ்வார் அவர்களின் கொழும்பு சிபெறும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடனான யோ விடயங்களை எனது தகுதிக்குறைவினால் பாயிற்று.
பக்திமார்க்கமும் கலந்த ஒருவித பாதையிலே ல் பல தத்துவ நூல்கள் வரை கற்றிருந்தார். திரங்களாகவே மாறி உணர்ச்சிபூர்வமாகவும், கும்போது பக்தர்களும் அவருடன் சேர்ந்து சிரிப்பதும் சர்வசாதாரணம். அதேபோன்று ளிலிருந்து அநாயாசமாக மேற்கோள்களை ம் சேர்த்து ஆன்மா பற்றிய கருத்துக்களை
தகுதியைக் காட்டுவதாக இருக்கும்.
ளப் பற்றி அவ்வப்போது கூறுவார். அவற்றில் நிய தொடர் பிரசங்கங்கள், திருப்பணிகளுக்கு வழிபாடுகள் என்பன முக்கியமானவையாகும்.
3

Page 41
ஒவ்வோர் பிரசங்கங்களின்போதும், யாகபூசைக அன்பர்கள் பெற்ற எதிர்பாராத அனுபவங்கள் கூறுவார். ஆறுதல் வேண்டியும் தனது பிர மட்டத்தினரும் அவரிடம் அணுகுகின்றமை, குறிப்பிடுவார். அவரது முக்கியமானதொ பொருத்தமானதாகும்.
ஒருமுறை யோகர்சுவாமிகள் ஆழ்வார் வரக்கூடாது' எனக் கடுமையாக ஏசிக் கலைத் ராமஸ்மரணையில் ஈடுபட்டவராக வாழ்ந்துவந்த தமது காரில் வந்துகொண்டிருக்கும்போது தெ அவரிக் காரை மறிததார். ‘நீ ஏன் அந்த ஆழ்வார் அவர்கள் ‘என்னை நீங்கள் அந்தப் நான் அங்கு வருவதில்லை’ என ரோஷத்து அறிந்து ஆட்கொள்ளும் சித்தர்தானே! காருக் என்று சொல்லிக் கலைத்தவன் உன்னுள் { வரலாம்.’ என்று ஆட்கொண்டார். யோகர்சுவாப ஆழ்வார் சென்றார். அவர்களிடையே இ உரையாடல்கள் மிகவும் அந்தரங்கமானவைய
ஆழ்வார் அவர்கள் மிகவும் இறுக்கம ஆனால், அன்பு, தயவு, இலக்கிய ரசனை, இருந்தார் என்பதற்கு இல்லை. அவரது பிர வெளிப்பட்டது. அன்றாட வாழ்க்கையில் அன்பு அருகில் உள்ள மூதூர்’ என்ற ஊருக்கு அ அருணகிரிநாதர் திருப்புகழில் முருகனைட் நாராயணனைப் பாடிவிட்டு கடைசியில் ‘திருமா என்பன போன்ற தகவல்களை சுவைபடக்கூறுவ விடயத்தைக் கூறுவார். உலகியல் ஹாஸ்யங் உள்ளிற்றெல்லாம் உடன் இருந்து அறுதி என் சிரித்திட்டேனே' என்று தொண்டரடிப் பொடி நான் கனவு நினைக்கிறது, அவன் பார்த் போன்ற செய்திகள் கூறுவர்.
மற்றவர்கள் மனதில் உள்ளதை அ கருத்துக்களை இடித்துக் கூறுவதிலும் அவ இறுதியில் ‘நான் உனக்கு ஏசுவன்’, ‘உன் இல்லாட்டி உங்களுக்கு உறைக்காது; ‘ஏறா செய்யலாம் தெரியுமே என்றெல்லாம் இடித்து
3

ளின்போதும் நிகழும் அற்புதமான நிகழ்ச்சிகள், ா, ஆறுதல்கள் என்பன பற்றி அவ்வப்போது ச்சனைகளுக்குப் பரிகாரம் வேண்டியும் பல அவர் செய்த பேருதவிகள் என்பன பற்றியும் ரு அனுபவத்தைக் குறிப்பிடுதல் இங்கு
ர் அவர்களை "நீ இந்தப்பக்கம் இனிமேல் ந்துவிட்டார். ஆழ்வார் அவர்கள் வழமைபோல ார். சிறிதுகாலம் சென்றபின் ஆழ்வார் அவர்கள் ருவில் வந்துகொண்டிருந்த யோகர்சுவாமிகள் ப்பக்கம் வருவதில்லை?” எனக் கேட்டதற்கு பக்கம் வரக்கூடாது என்று கூறியபடியால்தான் துடன் கூறினார். யோகர்சுவாமிகள் பக்குவம் க்குள் ஏறி அமர்ந்தபடி, ‘நான் வரவேண்டாம் இப்போது இல்லை, போய்விட்டான்; இனி நீ லிகளை ஏற்றிக்கொண்டு அவரின் இல்லத்திற்கு டம்பெற்ற கார்ப்பயணங்களின் போதான பாகவும் ஆழமானவையாகவும் இருந்தனவாம்.
ான நியமங்களை உடையவராக இருந்தார்.
ஹாஸ்யம் போன்ற இயல்புகள் இல்லாது சங்கங்களின்போது அவரது இலக்கியரசனை ம், தயவும் பிரதிபலித்தன. திருகோணமலைக்கு னுமான் வந்தான் என்று கம்பர் கூறியுள்ளார்; பாடவில்லை. அப்படி இப்படியெல்லாம் ல் பருகோனே’ என்று முருகனைப் பாடுகின்றார் ார். சிலவேளைகளில் சிரிசிரியென்று சிரித்தபின் களாக அவை இருக்கமாட்டாது. ‘உள்ளுவார், று வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவறச் பாழ்வாரின் திருப்பாசுரத்தைக் கூறி, ‘எப்படி துக்கொண்டெல்லோ இருக்கிறான்' என்பது
றிவதிலும் அவர்கள் மனதிலே பதியும்படி ரது பாணி தனியானது. சம்பாஷணைகளின் னுடைய உத்தியோகம் எனக்குப் பெரிசே'; து', ‘நான் சொல்லுறன் கேள்'; 'நீ எவ்வளவு துக் கூறுவார். அதன் பின் மங்கள ஆசிகள்
4.

Page 42
சொல்லி விபூதி பிரசாதம், தீர்த்தம் முதலில் ஜவ்வாது, புனுகு போன்ற வாசனைப் பொரு
ஒரு சந்தேகத்தைக் கேட்டால், உடனே கூறினால் ‘உதுதான் உங்கடை படிப்பு'; 'நீ 2 என்பார் பின்பு மகாபாரதம், இராமாயணம், போன்ற ஒன்றில் இருந்து சந்தர்ப்பம் ஒன்றைக்
அவருக்குத் தீர்க்கமான சமூகப் பார்ன தவம் குறைந்துவிட்டது, ஆன்மீகம் இல்லை, ! காரணம். பூசைகள், வழிபாடுகள் எல்லோரு எல்லாமே வியாபாரமாகப் போய்விட்டது. செய்தால்தானே பிரச்சனை தீரும். இதை ய என்பார். ‘ஒரு பெண் தலைவிரித்தாள் பாரதப்( பெண்பிள்ளைகள் தலைவிரிச்சுப்போட்டுத் திரிகி என்று கவலைப்படுவார். ஒழுக்கத்தின் அவச்
இடக்கான கேள்விகளுக்கு மிக உறுதி மூன்றினாலும் ஒன்றி ஈடுபட்டு பக்தி செலுத் முக்கியம் என்பார். ‘மனம், வாக்கு, காய ஸ்தம்பித்துவிடும். எடுத்த தீபத்தை வைத்துக்ெ நிற்கவேண்டியது தானே எப்படி வழிபடமுடியும் ஏன் கூடிக்குறையச் செய்யக்கூடாது? 108 வ அல்லது மாலையை உருட்டிக்கொண்டிருப்பதி மனதை வைத்திருப்பது? என்பன போன்ற இ கொடுப்பார்.
அவரது நித்திய காலைப் பூசைகள் எல் அவரது மதிய ஆகாரம் காலை 11.30 மணிக வந்திருந்தால் அவருக்கும் கட்டாயச் சாப்பாடு பின்பற்றத்தக்கன. அவரது புனிதப் பொருட்: ஜெபமாலை, தீர்த்தம் வைக்கும் வலம்புரி நியமங்களைக் கொண்ட வாழ்க்கைமுறைக்கு இருந்து கடமைகளையும் தொண்டுகளையும் ெ செய்த பாக்கியமாகும்.
அவர் மீண்டும் மீண்டும் கூறிய கரு ‘நீங்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும். அ உங்களது கவலையால் கடந்தகால நிகழ்வுக விட்டுவிட்டுக் கடமையைச் செய்யுங்கள். எல்லா
3.

வை தந்து ஆசீர்வதிப்பார். சிலவேளைகளில் ட்களும் இதில் அடங்கும்.
திருப்பி ஒரு கேள்வி கேட்பார். மறுமொழி டவங்கள் இலக்கியகாரர் மாதிரிப் பேசுகிறாய்'
ஆழ்வார்கள் சரிதை அல்லது பாகவதம் கூறி சந்தேகத்திற்கும் விளக்கம் கொடுப்பார்.
வயும் இருந்தது. சில சமயங்களில் இங்கு இதுதான் இங்குள்ள பிரச்சனைகளுக்கெல்லாம் மாகச் சேர்ந்து செய்யவேண்டும். இப்போது சனங்கள் கடவுளிடம் இரந்து பிரார்த்தனை ார் இப்போது விசுவாசமாகச் செய்கிறார்கள்? போர் மூண்டது, பேரழிவு ஏற்பட்டது. இப்பத்தே றார்கள், இதனால் நாட்டில் என்ன நடக்குமோ? சியத்தைக் கடுமையாக வலியுறுத்தினார்.
யாகப் பதிலளிப்பார். மனம், வாக்கு, காயம் தவேண்டும் என்பர். இயமம், நியமம் வெகு ம் மூன்றினாலும் ஒன்றிவிட்டால் இயக்கம் காண்டு மந்திரத்தையும் விட்டுவிட்டு அப்படியே ?’ ‘அதென்ன 108தரம் உச்சாடனம் செய்தல் ரை மனக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தால் ல் கவனம் போனால் எப்படி இறைவனிடத்தில் டக்கான கேள்விகளுக்குச் சடக்கென்று பதில்
லாம் முடிந்த பின்னர் தான் நீர் அருந்துவார். க்கு முன்னர் முடியும். யாராவது அவ்வேளை }. அவரது நியமங்கள் மற்றவர்கள் பார்த்துப் களில் அவர் வழிபட்ட படங்கள், நூல்கள், ச்சங்கு என்பன முக்கியமானவை. அவரது அவரது மனைவி, மக்கள் மிக்க ஒத்தாசையாக
சய்துவந்தார்கள். இது அவர்களும், ஆழ்வாரும்
ந்துக்கள் சில நினைவுகூரத் தக்கனவாகும். பூத்மாவின் இயல்பு மகிழ்ச்சியாக இருத்தலே, ள் மாறப்போவதில்லை. ஆகவே கவலையை ாம் வல்ல கருணையுள்ள கடவுள் உங்களோடு
5

Page 43
இருக்கின்றார். பிறகு ஏன் எல்லோரும் பிச்சைக் அலைகிறீர்கள்? எதற்கும் ஆசைப்படக்கூடாது அடைய ஆசைப்பட்டாலும் துன்பம் வரத்தான் பிரசாதமாக ஏற்றுக்கொண்டுவிட்டால் கவன இழக்கின்ற அளவுக்குத் துன்பம் வருகின்ற கருணையாகும். திரெளபதை தன் நம்பிக்ை சரணாகதியடைய முடிந்தது. பூரணசரணாகதிய எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான். என்
ஆத்மாவை அறிய முயற்சிசெய்யவே6 அறிவீர்கள்; ஏனென்றால் ஆத்மாதான் அந்த சாதகனுக்குத்தான் அது முடியும். அது சும்ம ‘அதற்கு இறுக்கமான சாதனை வேண்டும்; ஒரு பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என என்றும் கூறுவார். இவைகளை இலேசில் ெ இதிலிருந்து விடுபட ராமநாமந்தான் வழி. ரா ஆகாமியம் ஆகிய வினைகளையும் அழித்து
ஆழ்வார் அவர்கள் இறுதிநாட்களில் நெடுநேரம் யோசித்துவிட்டு ஒரு கருத்தை சொல்லுறத்திற்கு யார்? நான் அப்படிச் சொல்லி மங்கள ஆசிகள் தெரிவித்து சைகை காட் அடுத்தமுறை இறுதியாகச் சந்தித்தபோது அவர் நீண்டநாட்கள் இருக்கப்போவதில்லை பின் நான் கடுமையாகச் சுகவீனமுற்று மரு விபூதிப் பிரசாதம் அனுப்பி, அதை நான் எவ் அறிந்து திருப்தி கொண்டார் என்று பின்னர்த
ஆழ்வார் அவர்களின் பக்திநெறியும், ஞ நாம் அவரிடமிருந்து பின்பற்ற வேண்டியது.
வலம் வந்துகொண்டிருக்கும் என்பதே என்
பொலிக பொலிக பொலிக பே
நலியும் நரகமும் நைந்த நம கலியும் கெடுங்கண்டு கொன மலியப் புகுந்திசை பாடியாடி
அன்பன்
சி. இரங்கராசா

காரர் மாதிரி ஏங்கிஏங்கிப் பயப்பட்டுக்கொண்டு 1. அதனால்தான் துன்பம் வரும். கடவுளை செய்யும். எல்லாத் துன்பங்களையும் கடவுளின் லயில்லை. ஒருவனுக்குத் தன்னம்பிக்கை து என்றால் அது ஆண்டவனின் பெருங் கையை இழந்த பின்னர்தான் கண்ணனிடம் பின் பின் எமக்கு என்ன பொறுப்பு? அவனே ார.
ண்டும்; அதை அறிந்தால் எல்லாவற்றையும் ப் பரம்பொருள்; அதுதான் இந்த உலகம். ா இலேசுப்பட்ட அலுவல் இல்லை’ என்பார். வன் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ர்ற படிமுறைகளைக் கடந்துசெல்ல வேண்டும்.’ சய்யமுடியாது. வினை உன்னைத் தடுக்கும்; ாமநாமம் பிராப்தத்தை மட்டுமின்றி சஞ்சிதம்,
உன்னை விடுவிக்கும்’ என்பர்.
மிகவும் உள்முகமாகத் திரும்பியிருந்தார். க் கூறுவார். கடைசியில் ‘அதுவும் நான் 0க்கூடாது' என்றார். தனது கை அசைவினால் டி வாயைப் பொத்திக்கொண்டார். இதற்கு எதுவுமே அதிகம் பேசவில்லை. அப்போது
என்ற செய்தியை அறிந்திருந்தேன். அதன் த்துவமனையில் இருந்தபோது பூசைசெய்து வாறு பத்திரப்படுத்தினேன் என்பதைக் கேட்டு ான் நான் அறிந்துகொண்டேன்.
நான நெறியும் கலந்த வாழ்க்கைமுறைதான் அவரது ஆத்மா சூட்சுமமாக எங்களிடையே துணிவு.
ாயிற்று வல்லுயிர்ச் சாபம் னுக்கிங் கியாதொன்று மில்லை ர்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
புழிதரக் கண்டோம்.
(5ம்பத்து 2ம் திருவாய்மொழி)

Page 44
ரீ ராம அரி ஓம் நமோ நா ஆயர்பாடி றி மயில்வாகன
- நாகராஜா கண 148/4, உவர்மலை வி
ரீ ஹரியின் சேவகனாக வாழ்ந்து, பெ என்ற தாரக மந்திரத்தோடு, தானும் வாழ் 90வது வயதிலே ஹரியின் பாதாரவிந்த கமலங் வாழ்வு பூரணமானதாகும்.
பூரணமில்லா வாழ்வு கானல்நீருக்கு ஒப்ப தண்ணிர் அருந்துவதற்குச் சென்று ஏமாற்றமடை அலையும் பக்குவப்படாத ஆன்மாக்கள், இை மயக்கமுற்ற நிலையிலேயே அழிந்துபடுவதே வாழ்கின்ற ஆன்மாக்களுக்கு வழிகாட்ட பக்( எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ராமனாகவ களின் அநுக்கிரகத்தைப் பெற்றுக்கொண்டு உ உலகநன்மைக்காக அல்லும் பகலும் உழை
ரீராமா, ரீகிருஷ்ணா என்ற நாமங்களை கிருஷ்ணமயமாக வாழ்ந்து மற்றவர்களையும் வ காண்பதற்கும், பழகுவதற்கும் பயனடைவதற் என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த ஒரு ெ பணம் கிடைக்கும் கிடைக்காமலும் போகும். போவதென்ற சொல்லுக்கே இடமில்லை. நிச்சய பிரத்யட்சண்யமாகவே அனுபவித்தேன்.
அந்த பூரணமனிதன் திருகோணமலை வருகை தந்தார். உடல்நலம் குன்றிய இறுதி இங்கிருந்து கவனித்துக்கொள்கின்றேன் என தெரியாத அடியவன், அவர் பக்கத்திலிருந்து செய்தேன். இறுதிநாள் பூரண ஆகுதியை முடித் கோயில் கொண்டிருக்கும் ருக்மணி சத்திய கும்பாபிஷேகம் 22.06.1998ல் நடைபெற்றது. வரையுள்ள 48 நாட்களிலும் தொடர்ந்து, மகிமைகளும் அடங்கிய ரீமத் பாகவதத்தை 2
3.

ஜெயம்
ரா அணாய நமக ம் ஆழ்வார்களே சரணம் பதிப்பிள்ளை -
தி,திருகோணமலை,
ாலிக, பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் ந்து மற்றவர்களையும் வாழவைத்து தனது களையடைந்த மயில்வாகனம் ஆழ்வார்களின்
ானது. கானல்நீரென அறியாத மான்கூட்டங்கள் வதுபோல் புலன்களின் வயப்பட்டு மயக்கமுற்று பத்தினைத் தேடி அலைந்து கிடைக்காமல், மாந்தர்களின் வாழ்வாகின்றது. மயக்கமுற்று குவப்பட்ட ஆன்மாக்கள் யுகந்தோறும் பிறவி ம், கிருஷ்ணனாகவும் வந்த அவதாரபுருஷர்லகில் தோன்றிய எத்தனையோ ஆன்மாக்கள் த்துவிட்டு பூரணநிலை எய்துகின்றார்கள்.
T ஒவ்வொரு மூச்சுடனும் கலந்து, ராமமயமாக ாழவைத்துவிட்டுச் சென்ற ஒரு பூரணமனிதனை தம் அடியவனுக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது தய்வீகப்பேறாகும். சுவீப் ரிக்கற் வாங்கினால் ஆனால் அருளை வேண்டினால் கிடைக்காமல் Iம் அருள் கிடைக்கும். இதை என் வாழ்நாளில்
யில் பூரணயாகம் ஒன்றைச் செய்வதற்காக திநாட்களில் நீ சென்று யாகம் செய். நான் க் கட்டளையிட்டார். யாகமே என்னவென்று
நடாத்துகின்றார் என்ற உணர்வுடன் யாகம் துவைத்தார். அதன் பின், திருகோணமலையில் பாமா சமேத ரீகிருஷ்ணபகவான் ஆலய நம்பாபிஷேகம் தொடக்கம் மண்டலாபிஷேகம்
பகவான் நாராயணனின் அவதாரங்களும் உலகமக்கள் அறியும்பொருட்டு தொடர்ச்சியாக
7

Page 45
உபந்நியாசம் செய். நாராயணன் அருள்புரிவ அடியவன் அவரது அன்புக்கட்டளையை நிை பார்க்கமுடியாத ஒரு திருச்செயல். இப்படிப் நிறைவேற்றி வைக்கக்கூடிய ஆற்றல் இறை மனிதர்களைத் தவிர வேறு யாராலுமே முடிய ஆழ்வார்களுள் ஒருவராக, ஆயர்பாடி மய அடியார்கள்.
அன்னாரது உலகியல் வாழ்விலே நட பணி இதுவென நினைத்துச் செய்யும் தொழி:ே காரராக, நல்ல சோதிடராக நல்லது, தீயது கடந்து, ஒவ்வொருவருடைய வாழ்விலும் செயல்களை கிரகங்கள் மேல் பழியைப் ே செய்யும் எல்லாவற்றிற்கும் மேலாக எம்பெரு பின்பற்றி, தெய்வீக உணர்வுடன் சாதகங்க தீயனவும், நல்லனவாக முடியும் என்ற விள முடியாது, நடக்காது என்ற கூற்றுக்களைக் ச குறையும் வராது, கட்டாயம் நடக்கும் என பாதிப்பு ஏற்படும் என்ற நிலைப்பாட்டினையே குடும்பங்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்து ெ அவரது சோதிட அறிவுகூட வெறும் ஏட்டுச்சுரை புரியும்படி வாழ்ந்தார்.
அன்னாரின் இறைசேவை இளமையிலி கந்தபுராணம் சொல்லும் முருகவேளாக, விவ பூரீமத் பாகவதத்தையும், கிருஷ்ணனின் பகவ கேட்கும்படியான மழலைச் சொற்களாலும், பாணியிலும் பிரசங்கம் செய்து எத்தனையோ கிருஷ்ணமயமாக ஆக்கி எந்தப் பற்றுதலும் இ மயில்வாகனனார்.
கண்ணன் கீதையிலே கூறியதுபோல், அர்ப்பணித்து வாழ்ந்த ஆழ்வார், உயிர்பிரியு ஆதிமுதலாகிய எல்லாவற்றையும் ஆள்பவனாக அறியாமை எனும் இருளுக்கு அப்பாற்பட்ட6 உள்ளவனுடைய எந்த சொரூபத்தை, ஒரு பக்த மனத்தோடும், இறுதிக் காலத்தில் தான் வாழ்

ார் எனக் கட்டளையிட்டார். சிரமேற்கொண்டு ரவேற்றினேன். அடியவனால் நினைத்துக்கூடப் பட்ட ஒரு உறுதியான கட்டளையை இட்டு வனின் பூரணஅருள் பெற்று செயற்படுகின்ற ாததொன்றாகும். அதனால்தானோ அன்னாரை ல்வாகனம் ஆழ்வாராக ஆக்கிவிட்டார்கள்
.டம், நயம் எனப் பொருட்படுத்தாது, தனது ஸ் தெய்வம் எனச் செயற்பட்ட கொந்துராத்துக்செய்யும் கிர்கங்கள் என்ற நிலைப்பாட்டினைக் அவர்களது அறியாமையினால் நடைபெறும் பாடாமல் ‘நாள் என் செய்யும் கோள் என் மான் இருக்கையில் என்ற நிலைப்பாட்டினைப் ளை நன்றாக ஆராய்ந்து இறையருளினால் க்கங்களைத் தருவதோடு, பல சோதிடர்கள் வட முடியும், இத் திருமணத்தைச் செய். ஒரு ா ஆணித்தரமாகக் கூறி தோஷங்களினால் மாற்றிக் கொடுத்தவர்களில் எத்தனையோ காண்டிருக்கின்றார்கள் எனக் கேட்கும்போது க்காயல்ல, தெய்வீகச்செயல் எனத் தெளிவாகப்
ருந்தே ராமகாதை சொல்லும் ராமதாசராக, இணுவின் அவதார மகிமைகளைச் சொல்லும் த்கீதையையும் சிறிய குழந்தைகூட ரசித்துக் அறிஞர்கள் கேட்டு ரசித்துத் திளைக்கும் ஆன்மாக்களை பூரணப்படுத்தி, ராமமயமாக, ல்லாமல் வாழ்ந்து, வைகுண்டம் எய்திவிட்டார்
மனத்தையும் புத்தியையும் பகவானிடத்தில் ம் போதும் “முற்றும் உணர்ந்த சூட்சுமமான , தாங்குபவனாக, சிந்தனைக்கு எட்டாதவனாக, பனாக, சூரியனைப்போன்று பிரகாசிப்பவனாக ன், பக்தியோடும், சஞ்சலமில்லாத உறுதியான ந்துகொண்டிருக்கும்போதே அப்பியாசித்துவந்த

Page 46
யோகபலத்தோடும், தன் பிராணனை புருவங் துறக்கிறானோ அவன் அத்திவ்ய பரமபுருஷனுட மயில்வாகனம் ஆழ்வார் அடைந்தார் என்பதில் வாழ்வுமூலம் அறியக்கிடக்கிறது.
ஒரு புனித ஆத்மா நாராயண பக்தன், பூ பக்குவப்பட்ட பல ஆத்மாக்களையும் தன்னுட வாழ்வும் குடும்பமும் எடுத்துக்காட்டுகின்றது. அ தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்ற நாமத்துடனேயே, கணவனுக்கு சேன பரிவாரங்களாக பிள்ளைகள் என்ற ரூபங்கள் ராமகிருஷ்ணனும், ரீகிருஷ்ணாவும், ராதாதே6 பூரிஆண்டாளுமாக மற்றும் அவர்களோடு விஷ்ணுமயமாகவே விளங்கும் . ஆழ்வார் மL திகழ்வதைப் பார்க்கும்போது அவருடன் வைத்தவர்கள்.
அன்னாரோடு பழகிய குறுகிய காலத்தில் நாராயணனைப் பற்றிய சூட்சுமமான எந்த ஏடு செய்திகளை குழந்தைகளுக்குப் பாடம் ெ பாகவதம், ராமாயணம், கீதை படிக்கின்றோம் 6 விடுவார். மழலைக் கண்ணன் சிரிப்பதுபோல தொடங்கிவிடுவார். பல மணித்தியாலங்கள் விடுவோம். எம்மை அறிதுயிலில் ஆழ்த்திவி கானத்தில் மயங்கிய கோபியர்கள் போலவும் அ
இப்படிப்பட்ட ஆத்மாவை எப்படி மறப்ப கோபியர்களைப் பிரிந்து வந்த கிருஷ்ணன், உத்தவரைத் தூதனுப்பினான். எவ்வளவோ மு படுத்தவே முடியவில்லை. அந்த கோபியர்களை நட்டாற்றில் விட்டுச்சென்ற அந்தக் கிருஷ்ணை அவனை மறந்து விடுங்களேன்’ என்று கூ மறப்பதற்கு எங்களால் முடியவில்லையே. உதாரமான சிரிபபிலும், விளையாட்டுப் பார்வை பறிகொடுத்த நாங்கள் அவரை எங்ங்ணம் மற ஞானிகளும் பகவானை நிலையாக நினைக் இந்தக் கோபிகைகள் பகவானை மற்ககமுடிய

களுக்கு மத்தியில் நிலைப்படுத்தி, உடலைத் ன் இரண்டறக்கலக்கிறான்” என்ற நிலையினை ) சந்தேகத்திற்கிடமின்றி அவரது இறுதிக்கால
மியில் பிறந்தான், வாழ்ந்தான், தனக்குதவியாக ன் அழைத்துவந்தான் என்பதனை ஆழ்வாரின் புல்லும் பகலும் "தெய்வம் தொழாஅள் கொழுநற் என்ற வள்ளுவன் வாக்கிற்கமைய இலட்சுமி வ செய்யவே பிறந்த அன்பு மனைவியும், ரிலே சரோஜினியும், கோபாலகிருஷ்ணனும், வியும், கிருஷ்ணதாசனும், ருக்குமணிதேவியும், சேர்ந்த எல்லாக் குடும்பவிளக்குகளுமே பில்வாகனனாரின் குடும்பமே வைகுண்டமாகத் தொடர்புள்ளவர்கள் யாவருமே கொடுத்து
அடியவனும், எனது நண்பர்களும் பெற்றபேறு, களிலும் படித்தறியமுடியாத ஆழ்ந்த தெய்வீகச் சால்லித்தருவது போல் சொல்லித்தந்தார். ான்று சொன்னாலே போதும் ஆனந்தக்கண்ணிர் oச் சிரிப்பார். உடனே விளக்கம் சொல்லத்
எப்படிப் போனதென்றே தெரியாமல் மூழ்கி டுவார். நாமும் குழல் ஊதும் கண்ணனின் ஆவினங்களைப்போலவும் மயக்கத்திலிருப்போம்.
து? என்பதை நினைக்கவே முடியாமலுள்ளது. கோபியர்களுக்குச் சமாதானம் சொல்லும்படி யற்சித்தும் உத்தவரால் அவரைச் சமாதானப் ப் பார்த்து உத்தவர் கேட்கின்றார், “உங்களை ன நினைத்து ஏன் வீணாக வருந்துகின்றிர்கள்? றியதும், கோபியர்கள், “அந்தோ! அவரை உத்தவரே! அவரது அழகான நடையிலும், யிலும், இனிமையான பேச்சிலும் உள்ளத்தைப் போம்” என்று கூறுகின்றார்கள். யோகிகளும், கவே முடியவில்லை என்கிறார்கள். ஆனால் வில்லையே எனக்கூறுகின்றார்கள் (பாகவதம்)

Page 47
இதே கோபிகைகளின் நிலைமைதா இரண்டறக்கலந்து பழகியவர்களாகிய நாங் வருந்துகின்றோம்.
கங்கையும் வழிபாட்டுத்தலங்களும், 6 பஜனைகளும் காலம் செல்லச்செல்ல பக்கு தரும். சாதுக்களோ தரிசித்த மாத்திரத்திலே
சாதுக்கள் எனது இருதயம். சாதுக்களு மற்றொன்றை அறியமாட்டார்கள். நானும் அ கூறுகின்றார் (பாகவதம்)
நாம் தரிசித்துப் பயன்பெற்ற சாது மயில்வாக
சமர்ப்பணம் கண்ணனி
நாகராஜா கணபதிப்பிள்ளை.
(
Aj JITLE
LDIT60D6)I Jbd
கந்தையா ட முன்னைநாள் சிரேஷ் விஞ்ஞான தொழிநு
63FIIC3.36|TFGBLIT LIDII
“நலம் தரும் சொல்லை நான் கணி “பொலிக, பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாப ஒலித்துக்கொண்டே இருக்கும்படி தான் ஆய கலாநிதி. வே.த.ம அவர்கள் ஈழத்து ஆழ்வார் ஆழ்வார்கள் வே.த.ம அவர்கள் வைஷ்ணவத்த அறிவை எம்மவர் அளக்கவோ மதிப்பிடவோ மு இமயத்திலும் சிறந்தவர். நான் கண்ட குரு, நினைத்து அவர் காட்டிய வழியில் செல்ல எம் அவர்கள் பாதகமலங்களைத் தியானத்தில்
கந்தையா பாலசுந்தரம் 2512 Hemns Sq., Mississauga On, L5C3X4, Canada.

ன் ஆழ்வார் மயில் வாகனம் ஐயாவோடு கள், அவரினது பிரிவை மறக்கமுடியாமல்
விக்கிரக வணக்கங்களும், யாத்திரைகளும், தவம் வர, நாளடைவில்தான் புனிதத்தைத் யே பலனளிக்கின்றார்கள்.
க்கு நான் இருதயம். என்னையன்றி அவர்கள் வர்களையன்றி சிறிதுமறியேன். என பகவான்
sனம் ஐயாவை எப்படி மறப்பது?
ன் திருவடிகளுக்கே.
{ } {
ஜெயம் 5ர் வாசன்
பாலசுந்தரம் - விஞ்ஞான ஆசிரியர், ட்பத்திணைக்களம்,
நிலம், நைஜீரியா.
ாடுகொண்டேன் நாராயணா எனும் நாமம்’ ம்” என்னும் ஆழ்வார்கள் பாசுரங்கள் தினமும் ர்பாடி, இங்கு வசித்தார் ஆயர்பாடி. சோதிட கள் என்று பெருமையோடு அழைக்கப்படுவர். தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்கள். அவர்கள் டியாதளவு விசாலமானது. ஆத்மீக வளர்ச்சியில் வழிகாட்டி தெய்வத்தின் விம்பம் இவர்களை குருநாதர் அவர்களே வழிவிட வேண்டுமென கொண்டு இதனைச் சமர்ப்பிக்கின்றேன்.

Page 48
ஒம் ரீ ர LIDIT LIDSofösör
திருமலை
ஆயர்பாடி ஐயா அவர்கள் ஆவணி 2 டெல்மன் ஆஸ்பத்திரியில் இகலோக விடுதை விடுதலை கிடைக்குமென பல ஆண்டுகளுக் தனது 90வது பிறந்த தினத்தை தெஹிவளை பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து கழித்தார். 20 ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கேயே நான
ஆயர்பாடி ஆழ்வார் என்று போற்றப்ட மட்டுமே எமக்குத் தொடர்பேற்பட்டு இருந்தது ஏற்பட்ட தொடர்பு விடுபட்டது போன்ற உண
ஒரு சில நிமிடநேரம் மட்டுமே அவன எளிதில் மறந்துவிடமாட்டார்கள் அவரது உ புன்சிரிப்பும் எவரையும் அவர்பால் இழுக்கும்
அதேநேரத்தில் அவரிடம் ஏச்சுவாங்க மிக நுணுக்கமாகவும், அவதானமாகவும் எல்லா சுட்டிக்காட்டத் தவறமாட்டார். அறிவுரை தரவு
உலககதை நிறுத்தப்பட்டால் இறைவ சோதிடம் கேட்க வந்தாலும் சரி, குசலம் வி வேண்டி வந்தாலும் சரி, கடவுள்ன் கதை
நனையாது சாப்பாட்டுவேளையானால் உண
பத்தாவது வயதில் ராமாயணம் படிக் பதினெட்டு வயதில் தனது முதல் ராமாய தொழிலாளர்களுக்கு இரவு பொழுதுபோவதற் விளக்கொளியில் தன்னோடு வேலைசெய்ய சொல்ல ஆரம்பிக்க அதை வீட்டிலிருந்த முத தேனீர் எல்லோருக்கும் பரிமாறினார்கள். ம அனுப்பப்படவில்லை. தொடர்ந்து பத்து நா கதாப்பிரசங்கம் நடைபெற்றது. ராமபட்டாபிவே ஐயாவுடன் வேலைசெய்த அனைவருக்கு கொடுக்கப்பட்டது. ஐயாவுக்கு வேட்டி சா தட்சணையாகக் கொடுக்கப்பட்டது.

TuDGgu tö
- ஆயர்பாடி
ராமஜெயம் -
4ந் திகதி இரவு 9 மணிக்கு வெள்ளவத்தை லபெற்றார். வெகுதானிய வருடத்தில் தனக்கு ங்கு முன்னரே தெரிவித்திருந்தார். 17.08.98ல் ா அப்போன்சோ மாவத்தையில் பிள்ளைகள், ம் திகதி சுகயினமுற்ற அவரை 21ந் திகதி ர்கு நாட்களின் பின் இறைபதம் அடைந்தார்.
டும் ஐயா அவர்களுடன் சுமார் 16 LDT.g5tb தும் அவரைப் பிரிந்தபோது பல பிறவிகளாக ர்வு ஏற்பட்டது.
ரைச் சந்தித்து உரையாடிய எவரும் அவரை ரையாடலும் உள்ளத்தைத்தொடும் மோகனப்
ாதவர்களும் இல்லையென்றே சொல்லலாம். ாவற்றையும் அவதானிக்கும் அவர் தவறுகளைச் பும் தவறமாட்டார்.
ன் கதை ஆரம்பமாகும் என்பார். அவரிடம் சாரித்துச்செல்ல வந்தாலும் சரி ஆசிர்வாதம் கேட்காது ஆத்மீக அறிவுரை மழையில் வருந்தாது போகமுடியாது.
கத்தொடங்கிய ஆயர்பாடி ஐயா அவர்கள் ண பாராயணத்தை வேலைக்கு வந்த சக காக ஆரம்பித்தார். விறாந்தையில் அரிக்கன் வந்த பத்துப்பேருக்கும் ராமாயணக்கதை லாளியும், வீட்டுக்காரரும் கேட்டு மகிழ்ந்தனர். றுநாள் ஏனையோருடன் அவர் வேலைக்கு ட்களுக்கும் இரவு வேளைகளில் ராமாயண ஒகமும் வேலையும் ஒரே நாளில் முடிவுற்றன. கும் வேட்டிசாலி வையும் அன்பளிப்பாகக் ல்வையுடன் அந்தக்காலத்து 101 ரூபாவும்

Page 49
அப்போது ஆரம்பித்த ராமாயணக் க நிகழ்த்தினார். கடந்த இரண்டு வருடங்கள சக்கரநாற்காலி பாவிக்க ஆரம்பித்தார். அந் ஆற்றினார். 1992ல் யாழ்நகர் விட்டு வர இலங்கையின் பல பாகங்களிலும் நிகழ்த்திவ திருகோணமலையில் உட்துறைமுக வீதியில் நடைபெற்றது. காலையில் யாகமும், மாலையி 16ம் திகதி ரீ சீதாராம பட்டாபிஷேக நிக்ழச் உள்ளத்திலும் பெருநிறைவு ஏற்பட்டது.
மீண்டும் அதே வருடம் ஆவணியில் யாகபூசை ஆரம்பித்தார். சுகயினம் காரண முடியாது போய்விட்டது. எனினும் ஆவணி 25ம் கலந்து எல்லோரையும் ஆசீர்வதித்து ஆனர
பலவருடங்களாக நிரம்பாத கந்தள கிருஷ்ணஜயந்தியன்று கிருஷ்ணன் கோயிலுக் ஜயந்திக்குள் 98 ஜூன் 22ம் திகதி மஹாகு
யோகர் சுவாமிகள் எவருக்குமே தீட்சை ஐயா-விற்குக் கிடைத்த அனுபவம் அபூர்வமா வீதியால் செல்வதைக்கண்டு தமது காரை நிறுத்தினார். ‘எங்கே போகிறாய்? என்று யோக செல்வதாகக் கூறினார் தானும் வருவதாகக் “யாழ்ப்பாணம் போகும்வரை உன்னால் எத்த கேட்டதற்கு, ‘தெரியாது, எண்ணிப்பார்த்துத் ஐயா. முன் சீற்றில் இடப்பக்கமாக இருந் போட்டுக்கொண்டு ‘நான் சொல்லித்தாறேன் சொல்லிக்கொண்டே போனார். தெல்லிப்பளை ராமநாம ஜெபம் வண்ணார்பண்ணை சிவன்கே அடிக்கடி சொல்வதில் ஐயாவுக்கு மிகவும்
ஞானமும், பக்தியும் ஒருங்கிணைந்த மா ஆன்மீகப் போதனை செய்து உயர்வித்த உ நடந்து நாம் உய்வதுதான் நாம் செய்யும் ே
திருமலை ராமஜெயம் 57, பிரதான வீதி,திருகோணமலை,

தாப்பிரசங்கத்தை தனது 89வது வயதிலும் ாக நடப்பதற்குக் கஷ்டமாக இருந்ததனால் த நாற்காலியிலிருந்தவாறே கதாப்பிரசங்கம் ந்தபின் ஆண்டுதோறும் ரீராமநவமியினை ந்தார். 1997 ஏப்ரல் 14, 15, 16ம் திகதிகளில்
அமைந்திருக்கும் ‘திருவள்ளுவர் அகத்தில் ல் ராமாயண கதாகாலேட்சபமும் நிகழ்த்தினார். சி சிறப்பாக நிகழ்ந்து வந்திருந்த அனைவரின்
16ம் திகதி திருமலை வந்து 17இலிருந்து மாக அவரால் தொடர்ந்து யாகம் செய்ய திகதி நடைபெற்ற கிருஷ்ணஜயந்தியின்போது ந்தப்படுத்தினார்.
ாய்க் குளம் 1997 மாரிக்கு நிறைந்தது. $குப் பூஜை செய்வித்தார். அடுத்த கிருஷ்ண ம்பாபிஷேகம் நடைபெற்றது.
என்று கொடுத்ததில்லை. ஆனால் ஆயர்பாடி னது. தெல்லிப்பளையில் யோகர் சுவாமிகள் அவரைத் தாண்டிச்சென்று சிறிது தூரத்தில் ர்சுவாமிகள் விசாரித்தபோது தாம் யாழ்ப்பாணம் க் கூறி, காரில் ஏறிய யோகர் சுவாமிகள், னை ராமநாமங்கள் ஜெபிக்கமுடியும்?' என்று தான் சொல்லவேண்டும்’ என பதிலளித்தார் த யோகர் சுவாமிகள் தோளில் கையைப்
நீ சொல்லு' என்று கூறி, ராமநாமத்தைச் துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆரம்பித்த காவிலடியில் நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சியை பிரியமுண்டு.
மனிதனாக வாழ்ந்து சென்றவர்களுக்கெல்லாம்
உத்தம ஆத்மாவிற்கு அவரின் அறிவுரைப்படி பரும் சேவை

Page 50
ஓம் ரீர ஆத்ம
- ராம் பாலசு
பல இலட்சக்கணக்கான மக்களுக்கு, வாழ்க்கையில் ஈடுபட்டு, என்றும் ஆனந்தம வழிகாட்டி, வாழ்ந்துகாட்டி, எல்லோர் உள் ஆயர்பாடி மயில்வாகனம் ஐயா தனது எறிந்துவிட்டு இறைவனுடன் இரண்டறக் கலந்து தவிப்பவர்களில் யானும் ஒருவன்.
அன்னாருடன் எனக்கு ஏற்பட்ட முத சம்பந்தமாக அவருடன் தொடர்பு வைத்த ய கவரப்பட்டு அவருடன் அளவளாவுவதில் பாக்கியசாலியாகவிருந்தேன். அவரது வாழ்க் கலந்திருக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே என்ப ஆரம்பக்கல்வியிலும் சரி, தொழில்முறைய சமயவாழ்க்கையிலும் சரி, இல்வாழ்க்கையிலு
அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் நன்குை
சோதிடம் ஓர் கணித சாஸ்திர முறையல் தியானமும், ஆன்மீக சிந்தனையும் அதன் உ கேட்டவர்கள் நன்கறிவார்கள். 1976ஆம் ஆ விசாரிக்கப்பட்ட ட்ரயல் அட் பார்’ வழக்க அவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவருக்கு வியந்தார். இராமாயணக் கதாப்பிரசங்கத்தில் பக்திக்கோர் எல்லையே இல்லை. அதனா ஆயர்பாடி ராமகதை கூறினால் இராம பட் வாரி வழங்கும் காட்சியைக் காணாதவர்களே ! ராமகதை கூறப்படவேண்டுமென்பது மக்கள் க நேரிற் காணும் வாய்ப்புப் பெற்றவர்களில் ந
‘ஆன்மாவுடன் பழகு - ஆனந்தமாய் தாரக மந்திரம். அதனால் பல இன்னல்கலை பெற்றேன். உள்நோக்கிப் பார்த்தால் அண்மதி பார்த்தால் குழப்பமும், அமைதியின்மையும்
4

மஜெயம் ஜோதி
பிரமணியம் -
ஆன்மீகக் கோட்பாட்டுக்கமைய, உலகியல் பத்தில் லயித்திருக்கும் வாழ்க்கைமுறைக்கு ாத்திலும் குடிகொண்டுள்ள ஞானி உயர்திரு பஞ்சபூதங்களாலான ஆடையைக் களைந்து துள்ளார். இம்மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கத்தால்
ற்தொடர்பு 1969ம் ஆண்டிலாகும். சோதிடம் ான், அவரது ஆன்மீகச் சொற்பொழிவுகளால்
அமைதியும், ஆனந்தமும் பெறும் ஒரு கையில் ஒவ்வொரு கோணத்திலும் ஆன்மீகம் தை வலியுறுத்தியது அவரது வாழ்க்கைமுறை. பிலும் சரி, சோதிட ஆராய்ச்சியிலும் சரி, ம் சரி ஆன்மீகம் இரண்டறக்கலந்திருந்ததை னர்வார்கள்.
ல. பலன் கூறப் புத்தக அறிவு போதுமானதல்ல. யிர்நாடிகள். இதனை அவரின் ஆருடங்களைக் பூண்டு தமிழ்த்தலைவர்களை நிறுத்திவைத்து கைப் பற்றி ஆறு மாதங்களுக்கு முன்பாக, க் கூறியதை, அந்நீதிபதியே என்னிடம் கூறி
அன்னார் ஒரு சமுத்திரம். அவ்வேளைகளில் ல் ஏற்படும் பலன்களோ எண்ணிலடங்கா. -ாபிஷேக நாளில் வர்ணபகவான் மழையை இல்லை. மழை வேண்டுமானால் ஆயர்பாடியின் ருத்தாக மலர்ந்தது. இக்காட்சியைப் பலமுறை ானும் ஒருவன்.
இருப்பாய்’ என்பது அடியேனுக்குக் கூறப்பட்ட இலகுவாக எதிர்நோக்கக்கூடிய சக்தியைப் பும், சாந்தியும், சமாதானமும், வெளிநோக்கிப்
என்பதை அதற்கேற்ப உதாரணங்களுடன்

Page 51
உள்ளங்கை நெல்லிக்கனிபோல எடுத்துரைப்பா உட்கொள்ளப்பட வேண்டுமென்பதையும், அதன்
அறியமுடிந்தது. அவருக்கு அருகில் இருந்தா: தேவையில்லை என்று தோன்றும். சுருங்கக்
“கற்க கசடற கற்க க
நிற்க அதற்குத் தக”
எனனும் வள்ளுவர் வாக்கை அணுகியே அவ ஆன்மீகக் கல்வியைத் தெளிவாகக் கற்று, த6 மக்களை ஈடேற்றிப் பேரப் பிள்ளைகளுக்கு குறைவின்றி நிறைவுடன் தொண்ணுாறு ஆ6 ஞானக்கண்ணால் அறிந்து, அதற்கு எல்ே குறைவில்லாமல் நிறைவுடனே இவ்வுலக வா சாதனையின் பெருமையை மேலும் உயர்த்த
அன்னாரின் தகைமைக்குச் சான்றாக மயில்வாகன சுவாமி” என்று தினமும் 6 அத்துடன் அவரது மனைவி, மக்கள், மரு பார்க்கையில்
“தக்கார் தகவிலார் எ எச்சத்தாற் காணப்பரு
என்னும் வள்ளுவர் வாக்கிற்கமைய வாழ்ந்து
என்றுமே ஆத்மஜோதியாகத் திகழும் ஆ பூரணப்படுத்துமுன் அவர் அடிக்கடி எமக்கு நினைவுகூர விரும்புகின்றேன்.
‘நன்மையும் ெ fisörGoo Duqub LITT ஜென்மமும் மர இம்மையே ரா
இ. பாலசுப்பிரமணியம். Solicitor, (England & Wales) Attony - at - Law & Notary Public (Sri Lanka

ர். நண்பகல் உணவு உச்சிப்பொழுது சாயுமுன் பலனையும் அவரது வாழ்க்கைமுறையிலிருந்து b யாத்திரையும் தேவையில்லை. சாதனையும் கூறின் அவர் ஒரு ஆத்மஜோதி.
பவை . கற்றபின்
ாது வாழ்க்கைமுறை அமைந்தது. இளவயதில் எது வாழ்க்கைமூலம் வாழ்ந்துகாட்டி, மனைவி ம் ஆன்மீக வாழ்க்கைமுறைக்கு வித்திட்டு, ண்டுகள் வாழ்ந்து, தனது இறுதிக்காலத்தை லாரையும் தயார்செய்து ஒருவருக்கும் ஒரு ழ்விலிருந்து நீங்கிய முறை அவரது ஆன்மீக தியுள்ளது.
அவரது குடும்பம் மட்டுமல்ல அனைவருமே வழிபடும் ஒரு உன்னதநிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆகியோரின் வாழ்க்கைமுறையைப்
ன்பது அவரவர்
lib'
பள்ளார் என்பது வெளிப்படை.
ஆத்மஞானிக்கு அளிக்கும் இக்காணிக்கையைப் எடுத்துரைக்கும் பூரீராம நாம மகிமையை
சல்வமும் நாளும் நல்குமே வமும் சிதைந்து தேயுமே ணமும் இன்றித் திருமே ம என்ற இரண்டெழுத்தினால்”
ம் சாந்தி
44

Page 52
ஓம் ரீராப ஆயர்பாடி மயில்வ - பொ. க
காந்தி அ
யூரீ கிருஷ்ண பரமாத்மா பிறந்து சுவாமிகள் தான் வாழ்ந்த பகுதியை ஆயர்பா தானும் அங்கு வாழ்ந்து வந்தார். இதனால் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
சுவாமிகள் 1909ம் ஆண்டு ஆவணிமாத மாவிட்டபுரத்தில் பிறந்தார். தகப்பன் பெயர் ( மாணிக்கம். கற்பனவெல்லாங் கற்று பிரவல உரிய கரலத்தில் திருநெல்வேலியைச் செய்து திருக்குறள் வழியில் இல்லற தர்மத்ை பெண்பிள்ளைகளையும் பெற்றார். அவர்களை நாட்டுக்குப் பயனுள்ளவர்களாகவும செய்தார்கள் ஐயாவின் சமய சமூகப்பணிகளை அவர்களுட மாவிட்டபுரத்திலுள்ள ஊரிவத்தைக் குறிச்சி ஆச்சிரமத்தையும் 1976ல் ஸ்தாபித்தார்கள். 19 களை வைத்து அதன்மேல் ஆச்சிரமக்கோயில் நடைபெற்றது. ஊரிவத்தைக் குறிச்சியே இப்ே 'பசித்தோர் முகம் பார்’, ‘உண்டிகொடு பத்தும் பறந்துபோம்'; 'அன்னமயம் பிராணம தினமும் அடியார்கள் சாப்பிட்டுப் பசியாறிப் போ கொள்கை. ஆச்சிரமத்தில் தங்குமிடம், கிை பிரார்த்தனை, நூல்நிலையம் ஆகிய சேவைக சுவாமிகள் எல்லா மூர்த்திகளையும் வழி யையே காண்பார். தனக்குள்ளேயே கிருஷ்ணப8 இப்படி எல்லோரும் இருக்கவேண்டுமென விரும் பற்றிப் பக்திப்பிரசங்கம் செய்வார். பாரத, ராமாய வில்லிபாரதக்காப்பு, நாலாயிரத் திவ்வி வெளியிட்டார். ஆஞ்சநேய சுவாமிகளின் மகிமை வெளியிட்டு மக்களுக்கு இலவசமாகக் கொடு ‘அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி எய்துங்காண் பராபரமே “தாமின்புறுவது உலகி உதாரணபுருஷராக வாழ்ந்தார். மக்களுக்கு மனிதருக்குள் மாணிக்கமாக விளங்கினார்.
வன்செயல் காரணமாக யாழ்ப்பாணத்திலி இல.28A, அப்பொன்சோ வீதியில் சோதிடநி ஆச்சிரமத்தையும் அமைத்து தொண்டுகளைத்
45

ஜெயம் ாகனம் சுவாமிகள்
56oogbu ITசிரியர்.
வளர்ந்த இடம் "ஆயர்பாடி'. மயில்வாகனம் டியாக்கி கிருஷ்ணபரமாத்மா வாழ்ந்ததுபோல ஆயர்பாடி மயில்வாகனம் சுவாமிகள் என்று
ம் 17ந் திகதி தெல்லிப்பளையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தம்பு. தாய் பெயர் வீரகத்தி
சோதிடராக விளங்கினார்.
சேர்ந்த இலட்சுமி அம்மாளைத் திருமணம் த நடாத்தி நாலு ஆண்பிள்ளைகளையும், 4 கல்வி ஒழுக்கங்களில் சிறந்தவர்களாக்கி, அவர்கள் எல்லோரும் நல்லாயிருக்கிறார்கள். ம் தொடர்கிறார்கள்.
சியில் சோதிடநிலையத்தையும் பூரீ ஆழ்வார்கள் 84 பங்குனிமாதம் ஒரு கோடி ரீராமஜெபங்கட்டப்பட்டு ஆனி 22ம் திகதி கும்பாபிஷேகம் பாது ஆயர்பாடி என வழங்கப்படுகின்றது. த்தோர் உயிர் கொடுத்தோர்; பசி வந்திடப் யம்’ என்பன பழமொழிகள். ஆச்சிரமத்தில் கவேண்டும் என்பது சுவாமிகளின் கண்டிப்பான எறு. பூந்தோட்டம், கறவைப்பசு, வழிபாடு, ளும் உள.
படுவார். அவற்றிலெல்லாம் கிருஷ்ணமூர்த்தி கவானைக் கண்டார் தரிசித்தார், வணங்கினார். பினார். கிருஷ்ணபரமாத்மாவின் லீலைகளைப் ணயக்கதைகளைக் கதாப்பிரசங்கம் செய்வார். யபிரபந்தத் தொகுப்பு என்னும் நூல்களை கள்,ராமமந்திரம் ஆகிய துண்டுப்பிரசுரங்களை த்து கிருஷ்ணபக்தியை வளர்த்தார்.
விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து ன்புறக்கண்டு' என்னும் மகாவாக்கியங்களுக்கு வழிகாட்டி, வாழ்ந்துகாட்டி மாமனிதராக,
ருந்து புறப்பட்டு கொழும்பில் தெஹிவளையில் லையத்தையும் ஆயர்பாடி ரீ ஆழ்வார்கள் தொடர்ந்தார். திருகோணமலையில் இருந்தும்

Page 53
சில அடியார்கள் அடிக்கடி ஆயர்பாடிக்குச் நற்பேறும் பெற்று வந்தார்கள்.
திருக்கோணேஸ்வரத்தில் சுவாமிகளுக்கு முன்னிட்டு 1997 சித்திரை 14 - 16 திகதிகளில் மண்டபத்தில் பெரிய யாகம் ஒன்றை நிகழ் பட்டாபிஷேகமும் நடந்தன. ஆவணி 17 - விழாவும் அதே மண்டபத்தில் நடைபெற்றன. கணக்கான அடியார்கள் சுவாமிகளின் விருப்பு வோடும் மன மகிழ்ச்சியோடும் சென்றார்கள்
சுவாமிகள் எனக்கு அனுப்பிய கடிதங்களில்
“சாதுக்களின் தரிசனம் சேவை பணிவிடைகளால் ே
“அசத்துக்களிடம் அறிவின்மையால் வைக்கும் பற்றுச வைத்தால் பற்று நீங்கி ஆத்மலாபம் பெறவும் காரண “இவ்வுலகம் முழுவதும் எவனால் வியாபிக்கப்பெற்று5 உள்ளவனோ, எல்லா உலகங்களிலும் வேறு ஒளி இ இறுதியுமில்லையோ அவனே ஆத்மா. அல்லது பரம “நன்கு திடமாகவே வேரூன்றிய சம்சாரவிருட்சத் வெட்டிவிட்டு பிரம்ம சொரூபமான ஆதிபுருஷனை ஜென்மத்தின் மாபெரும் பாக்கியமாகும்.” “அறியாத நாங்கள் அறிந்த அறிவுடையோரின் பேச்சு பேசும் வேதவாதங்கள் மிகுந்த இடத்தில் தத்துவ வி நிகரான மனித வாழ்க்கைச் சுகம் தள்ளத்தக்கது. எ6 அவனுக்கு தத்துவஞானம் வெளிவராது.” “போதமிகும் பரமாத்மாவின் லீலைகளையும் அடிய உத்தம சுலோகனான பரமாத்மாவின் லீலைகள் அடியார்களின் உறவுமே மேலான பிறவிக்குரிய கிடைத்தற்கரிய மனிதப்பிறவிவீணாகாமல் சிறப்புப்பெழ இடமும் றிபரமாத்மாவினால் கிடைக்கவேண்டும்’
“முகளில்துதி சொல்லாமல் பிறரின் மதிப்பைப் பெர நன்மைக்கு வழிகாட்டக் கூடியவரும் ஆவார்’ “தருணமறிந்து செய்யும் சேவை வானுலகத்திற்கு வி “நல்லாரை நாவிலுரை. பொன்னைக் கல்லிலுரை. தர் நல்ல பயன் தரும்.”
தொண்ணுாறாவது வயதை முடித்து பாதாரவிந்தங்களைப் போய்ச்சேருவேன்.என்று 24.8.98 திங்கள் இரவு 9.00 மணியளவில் கிரு பணிகளை நாம் தொடருவோம். சுவாமிகளில்
பொ. கந்தையா முத்துக்குமாரசுவாமி கோவிலடி, திருக்கோணமலை,

சென்று சுவாமிகளைத் தரிசித்து நல்லருளும்
அதிகவிருப்பம். அதிக ஈடுபாடு. ராமநவமியை உள்துறைமுக வீதியில் உள்ள திருவள்ளுவர் த்தினார்கள். ராமாயணப் பிரசங்கமும் ராமர் 25 திகதிகளில் யாகமும், கிருஷ்ணஜயந்தி யாகம் நடந்த நாட்களிலெல்லாம் நூற்றுக் பப்படி அன்னதானத்தில் பங்குபற்றி மனநிறை
எழுதிய அருளுரைகள்:-
யோகசித்திகள் எய்தப்பெறும்.”
ம்சாரத்திற்குக் காரணமாகும். அவற்றை சாதுக்களிடம் OTIDITgö5iib.ʼ
ஸ்ளதோ, எவன் நிர்க்குணனாய் பிரகிருதிக்கும் அய்பால் }ன்றி பிரகாசிப்பவனோ, எவனுக்கு ஆதி இல்லையோ புருஷன் எனப் பெறுவான்’ தை திடமான பற்றின்மை என்னும் ஆயுதத்தால் னயே சரணடைய வேண்டுவதே கிடைத்த மனித
சைப் பேசி, கருமங்களை விளக்கி விபரித்து புகழ்ந்து சாரம் செம்மையாய் க்ததமாய் விளங்காது கனவுக்கு வனுக்கு ஆன்மசுகம் தானாக உண்டாகவில்லையோ
ார்களின் அன்புரசத்தையும் பெற விரும்புகின்றோம். போற்றப்பெறுகின்ற இடமும், போற்றி வாழும் பலன், எல்லா இடத்திலும் அவை இருக்காது. ற அடியார்களின் உறவு முக்கியம். அவை பெறக்கூடிய
றுபவரே உண்மைவழியில் செல்பவரும் மக்களின்
வழி திறந்துவிடும் என்பது பெரியோர் வாக்கு” மம் யாவினும் மேலானது மனோதர்மம்.நல்லநினைவு
சில நாடக்ளுள் கிருஷ்ணபரமாத்மாவின் கூறிக்கொண்டிருந்த ஆயர்பாடி சுவாமிகள் ஷணபதம் எய்தினார். சுவாமிகளின் தெய்வீகப் ன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

Page 54
ஓம் ரீர
66
ஓயாது ஒலித்த
- காரையூர் நா. (Diploma in English, Diploma in M தலைவர், பகவான் றிச
நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே நிறையப்பெற்று சைவமும் தமிழும் தழைத செல்வப்பெருமை கொண்ட வணிகர்களை தன்னகத்தே கொண்ட யாழ்ப்பாணத்தில் இக்கிராமத்தின் காவல் தெய்வமாக அமைந்த அன்னையின் அருட்பெருக்கினால் பிறந்து பூரீ.வே.த.மயில்வாகனம் என்னும் இப்பெரிய வாழ் மக்கள் இல்லை.
“வளரும் பயிரை முளையிலே தெரியு காத்தற்கடவுளாம் ரீமந் நாராயணப் பெ அத்தெய்வத்தைப் பக்திசெய்ததன் விளைவாக ஆச்சிரமம் அமைந்தது. தவறாது ஒவ்வொ மகிமையைப் பெற்றார். இதன் வாயிலாக வ நோய்நொடிகளால் பீடிக்கப் பட்டவர்களும் தவறாது சென்று நாராயணன் புகழ் பாt குறிப்பிடவேண்டியதொன்றாகும்.
பல்கலைகளிலும் பட்டம்பெற்ற தந்தை
பல்கலைக்கழகத்தில் படித்தப் பட்டம்பெ படிக்கவுமில்லை. தமக்குக் குருவாகிய ரீநா அம்மூர்த்தியின் அருட்கருணையால் கலை மேற்கொள்ளத் துணிந்தவர் அமரர் மயில்வா இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற வை தொகுப்புச்செய்தார். ஏறக்குறைய பத்து நூ8 இவைகளில் ரீ ஆழ்வார்கள் பன்னிருவர்களு தொகுப்பும்’ ஒன்றாகும் என்பதை நாம் அறி
பெரியோர் உறவும் தென் இந்திய யாத்திரை
1963ல் தென் இந்திய யாத்திரையை பலவற்றையும் தரிசித்துள்ளார். ஆன்மீக

மஜெயம் குரல் ஓய்ந்தது’
பொன்னையா -
ass Media, Diploma in Journalism) த்யசாயிசேவா மண்டலி,
அமையப்பெற்று கன்னலும் செந்நெல்லும் து ஓங்கச்செய்யும் சான்றோர் பலரையும், பும், விவசாயப் பெருங்குடி மக்களையும், திகழ்வது திருவளரும் தெல்லிப்பளையூர். து துர்க்கைஅம்பாள் ஆலயம். அருள்சொரியும் , வளர்ந்து சீரும் சிறப்புடனும் வாழ்ந்த ாரின் மறைவு கேட்டுப் புலம்பாதோர் இலங்கை
ம்' என்ற கூற்றிற்கிணங்க அமரர் அவர்கள் ருமான்மீது பேரன்பு கொண்டவர். எனவே 1976ம் ஆண்டு ஆயர்பாடி பூரீ ஆழ்வார்கள் ாரு ஞாயிறுதோறும் ராமநாம ஜெபம்செய்து ாழ்க்கையில் துன்பத்தைத் தழுவியவர்களும், ஞாயிறு தினங்களில் இவ்வாச்சிரமத்திற்குத் டி நிவிர்த்திபெற்றுச் சென்றமை இங்கு
றவில்லை. மற்றவர்களிடமிருந்து கலைகளைப் ராயணமூர்த்தியின்மேல் கொண்ட அன்பினால் களைக் கற்று அக்கலைகளில் ஆய்வுகள் கனம் என்றால் மிகையில்லை. ‘நாம் பெற்ற கயில் தேங்கிக்கிடந்த பல சமயநூல்களை ல்களின் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். ம் அருளிய ‘நாலாயிரத் திவ்விய பிரபந்தத் (66).IIIb.
பும்
மேற்கொண்டார். அங்குள்ள கோவில்கள் வளர்ச்சிபெற்ற அமரர் மயில் வாகனம்

Page 55
யோகர்சுவாமிகளின் சீடருமானார். இணுவை ரீ. தியாகராசா சுவாமிகள், காங்கேசன்துறை யூரீ கணேசானந்த சுவாமிகள், தெல்லிப்பளை தான் பெற்ற ஆன்மீக வளர்ச்சி ஊடாக உறவுெ
நாட்டின் பல பாகங்களிலும் சமயச் சொற்ெ
1961ம் ஆண்டு தொடக்கம் இற்றைவ6 சென்று அங்குள்ள கோயில்களிலும் சமய உபந்நியாசங்கள் நிகழ்த்தியுள்ளார். ‘ஈழத்துச் சிவன் கோவிலில் 15.02.1969ல் ‘சிவராத்திரியு சொற்பொழிவு ஆற்றியுள்ளார் என்பதை இந்ந குளமாகின்றன. சமய வரலாற்றை யாவரும் மிகவும் திறமைபடைத்தவர். யூரீராமநாம ம என்றால் மிகையில்லை. இவருக்கு நிகர் ய
திறமை மிக்க சோதிடர்
இறைவனின் பணியாளராக விளங்கு அக்கிரகங்களின் குணாதிசையங்களையும் நுட்ப கொண்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நம்பிக்கை கொண்ட இப்பெரியார் ஈடு இணை அனுபவங்களை ஆதாரமாக்வும், மையமாகவும் தீமைகளை மக்கள் இலகுவாகத் தவிர்க்கும் கிரக வழிபாட்டு முறைகளையும் அமைத்துள்ள அமைகின்றது என்பது எமது நோக்காகும்.
அமரர் பெற்ற மகத்தான செல்வம்
“பெறுமவற்றுள் யாமறிவதில்லை
அளவறிந்த மக்கட்பேறல்ல பிற”
மனிதன் தான் பெறக்கூடிய செல்வங்க இச்செல்வத்தை அன்னார் சிறப்பாகவே பெற் எட்டுப் பிள்ளைகளும் அவர் முன் பணிவா உணர்வுடன் வாழ்ந்துகொண்டேயிருக்கிறார் அணிந்துள்ள வகையில் அமைந்தமை போ புதல்வர் திரு.ம.கோபாலகிருஷ்ணன் அவர்க அருட் கருணையையும் பெற்றுள்ளார் என்பை

திவ்விய ஜீவன சத்ய சன்மார்க்கத்தலைவர் ஜோதி சுவாமிகள், கிளிநொச்சி குருகுலம் சாது பாண்டுரங்கன் ஆகிய சுவாமிகளுடன் காண்டு ஆன்மீக வளர்ச்சிக்கு மெருகூட்டினார்.
பாழிவுகள்
ரை ஈழத்திரு நாட்டின் பல பாகங்களுக்குச் நிறுவனங்களிலும் சமயச் சொற்பொழிவுகள் சிதம்பரம்' என்று அழைக்கப்படும் காரைநகர் ம் தவநிலையும்' என்னும் பொருளில் சிறப்புச் ாளில் நினைவுகூரும்பொழுது நமது கண்கள் விளங்கும் வகையில் எடுத்து ஆளுவதில் கிமை பேசுவதில் பாண்டித்தியம் பெற்றவர் ாருமில்லை.
கும் நவக்கிரகங்களின் வரலாறுகளையும் பமாகக் கற்று தமது கூர்மையான அறிவுத்திறன் ள்ளார். அங்கு அவர்கள் கண்ட பலன்களில் யற்ற சோதிட ஆராய்ச்சி மூலம் தாம் பெற்ற கொண்டு நவக்கிரகங்களினால் ஏற்படக்கூடிய வகையில் தெய்வ வழிபாட்டு முறைகளையும், மை அன்னாரின் சோதிடமகிமைக்கு மகுடமாக
ளில் மக்கள் செல்வமே மிகச் சிறந்ததாகும். றிருந்தார். சுருங்கச்சொன்னால் அவர் பெற்ற ன பிள்ளைகளாகவும் தாய், தந்தை என்ற கள். இந்நிலை செல்வத்திற்கு ஆபரணம் ற்றத்தக்கதொன்றாகும். மேலும் தமது மூத்த ளை எங்கள் மண்டலிக்குச் தந்து பகவானின்
ந இங்கு குறிப்பிடுவது சாலப் பொருத்தமாகும்.

Page 56
எல்லோருக்கும் நல்லவராக வாழ்ந்தவர்
எல்லோருக்கும் நண்பனாய், நல்லாசிரிய மடத்தடி மயில்வாகனம். அலுக்காது உழைக் அவரது அகராதியில் இல்லை. அன்னார் ஆற்றி உள்ளங்களில் என்றும் நிலைத்து நிற்கும் என் மனிதத்திற்கும் பாலமாகிவிட்ட இப்பெரியார் ை அன்னாரின் ஆன்மா சாந்தியடைய தில்லை
வாழ்க அன்னா வளர்க அவரது
வாழ்க்கை என் வாசல்தோறும் எதையும் தாங்கு
இறுதிவரையும்
எல்லாத் தருமங்களை விட்டொழித்து, எண் ஒ
நான் உன்னை எல்லா
விடுவிப்பேன், வருந்தா
அவரவர் தமதமது அறிவு அவரவர் இறையவர் என அவரவர் இறையவர் குை அவரவர் விதிவழி அடை

னுமாய் பார்வையிலே சேவகனாய் வாழ்ந்தவர் கும் ஆற்றல் கொண்டவர். அலுப்பு என்பது ய அளப்பரிய சேவை என்றும் எல்லோரினதும் பது எமது அசையாத நம்பிக்கை. மனிதற்கும் சவத்தமிழ் உலகின் பாரிசாத மலராகிவிட்டார். பிற் கூத்தனை இறைஞ்சுவோமாக!
ரின் நாமம்
பணிகள்!
பதில் பலவகை உண்டு வேதனை உண்டு நம் இதயம் காண்பீர் உயர்வு காண்பீர்.
காரையூர் - நா.பொன்னையா.
அன்டர்சன் தொடர்மாடி, கூடலூர்,
கொழும்பு - 05.
(செயல்களை)யும், பற்றற ருவனையே சரணர்புகுவாய்.
ப் பாவங்களினின்றும்
rò
மீத.
- பகவத்கீதை- சுலோகம் 66
அறிவகை
ா அடி அடைவார்கள்
ரறவிலர் இறையவர்
ய நின்றனரே.
- பரீ நம்மாழ்வார் s

Page 57
ஒம் ரீரா
“சமய சமரச
ஆத்மீக
- நெளஷ
-LILuuds 356
இறையடியெய்திய எமது மதிப்புக்குரிய ஐயாவை இற்றைக்கு ஒரு தசாப்த காலமா பழகிய ஒவ்வொரு கணமும் எனது வாழ்வின் ெ ஐயாவுடன் தொடர்பேற்பட காலாக இருந்தவ இருந்த ஐயாவின் புதல்வர் திரு. சிறீகிருஷ்:
அறிமுக நாட்தொட்டு ஐயாவின் ஆ வெகுவிருப்புக்கொண்டு அவரை நாடிச் ெ என்னை மிகவும் கவர்ந்தன. "துறவு பூண்டு உள்ளத்தைப் பண்படுத்தி உலகில் வாழ்ந்திடு செய் பலனை எதிர்பாராதே’ என்று கிருஷ்ண உபதேசத்தை பல்வேறு பாணியில் ஐயா ! சிலிர்க்கும்.
ஐயாவிடம் நான் கற்ற இன்னொரு வி ஒற்றுமையைக் காண்பது. எந்தச் சமயமாயினும் உட்பொருளறிதல் வேண்டும் அவ்வுட்பொருள் ந - என்பது அவரது நோக்கு. இந்த நோக்குடன் அவர். பல்லின மக்கள் இவ்வாறு பண்படு நிலவுமென்பது உண்மை. ஐயாவுக்கு நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கர்மயோகியாக
அன்னாரது ஆத்மா இறைவனடி சேர பிரார்த்தித்தவனாக நெளஷாட் காதர்
ஸ்ர்வ தேவ நமஸ்கார“ گے۔ எல்லா இறைவழிபாடுகளும் இறுதி

மஜெயம் ம் கண்டவர்”
Drtó00T66 "ட் காதர் -
னக்கறிஞன்
பெரியார் - ஆசான் ஆயர்பாடி மயில்வாகனம் க அறிவேன். இக்காலகட்டத்தில் அவருடன் பாற்காலமென்றே எண்ணுகின்றேன். ஆயர்பாடி கணக்கியலில் எனக்கு ஆரம்ப ஆசானாக னா அவர்கள்.
ஆத்மீக உபசாரங்களைக் கேட்டறிவதில் Fல்வேன். அவரது ஆத்மீகக் கருத்துக்கள் காட்டுக்கு ஓடாதே ஆனால் துறவுநிலைக்கு அவரிடமிருந்து பெற்ற பதில் இது. “கர்மத்தைச்
பகவான் அருச்சுனனுக்குச் சொன்ன கீதோ எனக்குச் சொல்லும் போதெல்லாம் உடல்
டயம் சகல மத நம்பிக்கைகளிலும் பொது ) என்ன கோட்பாடாயினும் வெளிப்பொருளன்றி தன்மையையன்றி வேறு எதனையும் விளம்பாது அணுகினால் எதிலும் பிழைவராது என்பார் த்தப்பட்டால் பூமியில் அமைதியும் அன்பும் } செய்யவேண்டிய நன்றிக்கடன் யாதெனில் * எமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே.
ம் கேசவம் பிரகச்சதி” ”2-ܔ
யில் கேசவனையே சேருகின்றன.

Page 58
ஓம் ரீ
ஈழதது
நாராய
கண்ண நண்ணு எனணு திண்ண மேற்குறித்த திருவாய்மொழிப் பாசுரத்தி எனது மானசீக குருநாதரும் "ஆயர்பாடி அழைக்கப்பட்டவரும் பிரபல சோதிடரும், தெல்லிப்பளை பூரி.வே.த.மயில்வாகனம் ஐயா அ ஞாபகார்த்த மலருக்கு அடியேனும் சிலவார் மேற்குறித்த பாசுரத்தின் நினைவுதான் முதல் பாசுரத்திற்கு இசையமைத்துப் பாடியபோது அ பெருமையைக் கூறினார்கள். அதாவது 6ை இருந்த கருத்துவேற்றுமை காரணமாகப் எழுதப்பட்ட ஏடு ஆற்றுநீரைக் கிழித்துக்ெ முன்னோடியாகக் கொண்டே இதனை எழுது ஆழ்வார் அவர்களைப்பற்றி ‘ஈழத்து ஆ காரணம் பாரததேசத்தில் வைணவத்தின் ஆ! வைக்கத்தக்கதாக நமது நாட்டில் வைணவத்த அவர் நமது ஆழ்வார் அவர்களாகும். ஆரம்பக வராயிருந்து கம்பராமாயணத்தை அறிந்தபின் திவ்வியபிரபந்தம், கம்பராமாயணம், பாகவதம், சொல்லத்தக்கதாக அறிந்தும் மற்றுமுள்ள ை பக்தியை வளர்க்கக்கூடியதாக மிகச்சாதாரண உபந்நியாசம் செய்யும் ஆற்றல் பெற்றிருந் இயமநியமங்களுடன் கூடிய ஒரு சீரிய வாழ் அறிஞர்கள் முத்தியில் மாநாடுகளில் தன் உண்மைக் கருத்தை நிறுவித்தாபித்ததை அ இருளிலே வழிதடுமாறி அலைந்த என்னைக் ஆழ்வாரவர்கள். நான் மட்டுமல்ல பலரும் அ ஆண்டில் ஆழ்வாரவர்களின் தொடர்பு ஏற்பட்ட உபந்நியாசங்களைக் கேட்கவும் அடியேன் 6 உன்னதமான இடத்தைச் சென்றடைந்து விட் வேண்டியவர்களுக்கெல்லாம் இது பேரிழப்பு ஆழ்வார் தோன்றினால்தான் உண்டு.

ாமஜெயம்
ஆழ்வார்
ணதாசனி
ள் கழலினை
b மனமுடையீர்
ம் திருநாமம்
ம் நாரணமே. -திருவாய்மொழி
ன் சிறப்பினை அடியேனுக்கு எடுத்துரைத்தவர ஆழ்வார்’ என்று எல்லோராலும் பக்தியுடன் ஆன்மீக உபந்நியாசகரும் அறிஞருமாகிய புவர்கள் ஆகும். அவர் பரமபதம் அடைந்துவிட்ட த்தை எழுதும் பேறு கிடைத்தபோது எனக்கு மில் வந்தது. ஒரு சமயம் அடியேன் இந்தப் அதைக்கேட்டு மகிழ்ந்த ஆழ்வாரவர்கள் அதன் வணவத்திற்கும் மாற்றுமதங்களுக்குமிடையில் புனல்வாதம் செய்யப்பபட்டபோது இப்பாசுரம் காண்டு எதிராக முன்னேறியதாம். அதனை கின்றேன்.
ழ்வார் என்னும் தலைப்பில் அடியேன் எழுதக் pம் கண்ட பன்னிரு ஆழ்வார்கள் வரிசையில் தின் ஆழம் கண்ட ஒருவர் இருந்தார் என்றால் காலத்தில். கந்தபுராணத்தில் மிக ஈடுபாடுடையதீவிரமாக வைணவத்தை ஏற்று நாலாயிரத் மகாபாரதம் முதலிய நூல்களை மனப்பாடமாகச் வணவநுால்களையும் படித்து மக்கள்மத்தியில் எமான எளிமையான உதாரணங்கள் மூலம் ததோடு தமது வாழ்க்கை நடைமுறையில் க்கையை வாழ்ந்து காட்டிய பெருமகன்.
து அறிவாற்றலாலும் விவாதத் திறமையாலும் டியேன் பலவிடங்களில் நேரில் கண்டவன்.
சிறிது வெளிச்சத்திற்கு அழைத்துவந்தவர் வர்களால் நெறிப்படுத்தப்பட்டுள்ளனர். 1965ம் பின் சிலகாலம் அவரது தாசனாக இருக்கவும் ாய்ப்புப் பெற்றவன். ஆழ்வாரவர்கள் மிகமிக .ார்கள். அவரின் உபதேசத்தால் பயனடைய ாகும். இந்த இடத்தை நிரப்ப இன்னொரு

Page 59
ஆழ்வாரவர்களின் சிறப்பியல்புகளை நாே அறிந்தவர்களுக்கெல்லாம் இது தெரியும். அ எல்லோரையும் போல அவரின் ஆத்மசாந்தி அவரின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவி அவர் நிறை வாழ்வு வாழ்ந்து குடும்பத்தான தானும் இம்மையிலேயே ஆத்மசாந்தி அை காத்திருந்தவர் அனுமதி கிடைத்ததும் செ அப்புனிதரின் ஆத்மா எங்கேயிருந்தாலும் வணங்குகின்றேன்.
“ஓம் நமோ நாராயணதாசன் (பொ.சிவகுருநாதன்) 6LIIIsroomsoso.
to
ஓம் ரீரா இதயத்திலிருந்து சின்
- திருமதி.நா
மாவை ஆழ்வார் மாவைநகர் வாசன் நெருங்கிய உறவினராக இருந்தும் அன்னா இருந்த பிணைப்பு சொந்தம் என்பதைவிட அ எமது குடும்பத்தலைவர் ரீ.நா.தம்பிராஜா அ6 காலம் தொடக்கம், அவர் திருமணம் புரிந்து செல்வங்கள் பெற்று அவர்கள் வளர்ந்தது, நி6ை அன்னாரின் பங்களிப்பும், ஆலோசனையும் இ பாசத்துடன் ரீ கிருஷ்ண பரமாத்மாவிற்கும் அ எமது குடும்பத்தலைவர் ரீ.நா.தம்பிராஜாவுட என்னும் நாமத்தின் பெருமையை எமக்கு அ ஆளாக்கிய பெருந்தகை அவர். எமது த6ை தோறும் அழைத்துச்சென்று தரிசனம் செய் எம்மை உய்வித்த அருளாளன் அவர். கு குடும்பத்தலைவருடன் செய்தி இந்திய யாத்தில் அங்குள்ள ஐயங்கார், ஜியர்களிடம் ஆசிெ ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்தியது. எமது எம்மைப் பாசமிகு தந்தைபோல அரவனை வழிநடத்தியது நாம் என்றும் மறக்கமுடியாத என்றும் ஆசீர்வதிக்க வேண்டும் எனப் பிரா
திருமதிநாதம்பிராசா குடும்பத்தினர்
5

ளெல்லாம் எழுதினாலும் எழுதிமாளாது. அவரை ஆகவே இத்துடன் முடிக்குமுன் சிலவார்த்தை க்கு இறைவனை வேண்டுகின்றேன் என்றோ விக்கவோ நான் முன்வரவில்லை. ஏனென்றால் ரயும் நிறைந்த நிலையில் அமைத்துவிட்டுத் டந்தநிலையில் பகவானின் அனுமதிக்காகக் ன்றுவிட்டார். இது அடியேனுடைய கருத்து. அடியேங்களை ஆசீர்வதிக்க வேண்டுமாய்
நாராயணா”
(
ாமஜெயம்
ல வார்த்தைகள்.
தம்பிராசா -
ரீ.வே.த.மயில்வாகனம் சுவாமிகள் எமது ாருக்கும் எமது குடும்பத்தார்க்கும் இடையே ஆன்மீக உறவிலேயே அபரிதமாக இருந்தது. வர்கள் வீரகேசரி ஸ்தாபனத்தில் தொழில்புரிந்த இல்லறத்தில் ஈடுபட்டது முதல், குழந்தைச் லபெற்றது, எமது தொழில்சிறப்பு எல்லாவற்றிலும் ருந்துவந்தது. சுருங்கக்கூறின் தோழமைகலந்த ர்ச்சுனனிற்கும் இருந்த உறவுபோல சுவாமிகள் ன் கலந்து உறவாடி இருந்தார். 'நாராயணா' அறிமுகம் செய்து பக்தி உணர்வூட்டி எம்மை லவரையும் எம்மையும் வைணவ ஆலயங்கள் பயவைத்து பாகவத சேவையும் செய்வித்து றிப்பாக 1963ம் ஆண்டு சுவாமிகள் எமது ரை அருள்மிகு வைணவத்தலங்ளைத் தரிசித்து பறவைத்து எமது குடும்பத்தினரிடையே ஒரு குடும்பத்தலைவரின் மறைவின் பின்னரும் னத்து, ஆலோசனைகள் வழங்கி, ஆசிகூறி தது. வைகுந்தம் சென்ற சுவாமிகள் எம்மை ர்த்திக்கின்றோம்.

Page 60
ஒம் ரீராமஜெ சற்குரு பாதற் ஹரி ஓம் நமோ நா திவ்விய பாகவத பக்த திலக
திரு.வே.த. மயில்வா
இணுவை தியாக சத்திய ஜீவன சன்மார்
இணுவில் 5-1- 1963
மங்கல வாழ்
LI.6goITGOL 6
திருவிளங்கு மார்பன் சீரரங்கள் உருவிளங்கு சோலைமலை யூ வேங்கடவன் வெண்ணைதிரு பாங்கர் மருதிடந்த பண்பினான ஈரடியால் மூவுலகும் எண்புகழ் சீரடியர் வாழ்த் திறை கொணி பொன்றக் கடல் கடைந்து பெ நின்றடிகழ்க் கோசலைபால் ரே தன்னு ளடங்கித் தனதுதரத் த மன்னி ஒடுக்கும் மலிபுகழான் சீதைக்கு விற்குனித்துத் தேவ ராதைக் கருள்ராமனி நற்புகழே ஒல்கா துயரகுளில் ஒன்றிக் கி மல்கா வளஞ்சுரந்து மாதவர்ே பயிலண்பர் வேண்டப் பகவன் குயிலின் குரலோசை கோட்ப மங்கையர் மைந்தர் மகிழ்தூங் சங்கையில், லாண்மை தனைக் ஆழ்வார் திருமழிசை அன்பார் ராழ்வார் முதலோர் அடைந்தெ ஒருபான் தினத்திலுணர் வித்த திருவாரும் தெல்லிநகர்ச் செல் ஆழ்வார் பெருமாள் மயில்வா வாழ்வாங்கு செஞ்சோன் மழை செல்வம் பழுத்துத் திசையாவு கல்வி சுரந்து கலைவாழ்வில் பல்லாண்டு பல்லாண்டு பல்ல பல கோடி நூறாயிரம்.
சுபம். பாடியவர்: வித்துவான் 6
53

யம்
துணை
ராயணாய நம ம் ஆழ்வார் பெருமாள்
66OTID test866O)6IT
ாக்க இயக்கத்தார் வாழ்த்தியளித்த
வெண்பா
ர் தென்பால் ராணி - மருவிளங்கு : உரலுருளப் ள் - ஓங்கிவளர்ந்து)
மாவலிபால் டான் - போரவுணர் ான்னாடு வாழ்வித்து நயமாய் - அன்புதரம்
ண்டமெல்லாம்
- பன்னியசீர்ச் ர் சிறைமீட்ட
- உளதைக்கும் டந்தின்பம் சர் - பல்கால்
கருணைக் - மயிலனிைய
கச் பூரீராமன் கம்பன் - மங்கை
குலசேக நறி - வழக்கென்று செம்மல் சீர்த் வணி - குருவான கனன் மனம் மகிழ்ந்து pபொழிந்தான் - வாழ்கவே ம் சீர்வளர - மல்கி ாயிரத்தாண்டு
இ. திருநாவுக்கரசு
இங்ங்ணம், தியாக சத்தியஜீவன சன்மார்க்க இயக்கத்தார்

Page 61
ஓம்
சற்குரு ப
ஹரி ஓம் நமோ இணுவை தியாக சத்திய ஜீவ:
வழங்க
Il LD6Infi
இணுவை தியாக சத்திய இணுவில் சிவகாமசுந்தரி அம்மன் சந்நிதி நடைபெற்ற பூரீமத் கம்பராமாயண கத (5-1-1963) முரீ ராம பட்டாபிஷேக வைபவத்
தெல்லிப்பளை ெ
திரு.வே.த. மயில்வி
அவர்களைப் பாராட்டு
x திவ்விய பாகவ
என்னும் கெளரவப் பட்டம் பக்தே கெள்ரவிக்
எமது வாழ்த்துக்கள்
இணுவில் 5- 1 - 1963

த சக்தி தந்துணை
நாராயணாய நம
ன சன்மார்க்க இயக்கத்தாரால்
ப்பெற்ற
ப்பு இதழ்
ஜீவன சன்மார்க்க இயக்கத்தார் ஆதரவில் யில் சுபகிருது வருஷம் மார்கழி மாதம் ா காலகூேடிய வைபவப் பூர்த்தி நாளாகிய தில், அதனை வழமையாக நடாத்திவரும்
பருமாள் ஆழ்வார் வாகனம் சோதிடர்
முகமாக அன்னாருக்கு
த பக்த திலகம் x
காடிகளால் அன்பளிப்புச் செய்து கப்பட்டது
அவர்களுக்குரியன.
இங்ங்ணம் தியாக சத்திய ஜீவன சன்மார்க்க இயக்கத்தார

Page 62
ஓம் ஓம் சுத்தசக் ஹரி ஓம் நமோ நாரா இணுவை தியாக சத்திய ஜீவன பாகவதன் பெ திரு.வே.த. மயில்வாக பாடி அளித்
4KOA MKOA 6) T55
G6)IGBof Lun திருவளர் மார்பன் தெளிட குருவென லாகுங் குணத்ே வேற்பிள்ளை தம்பு மயில சூற்கொண்டால் 1 வாழ்க
eIai56).If III பூதல மாதின் பொட்டென ஈழத்துயர் சிர மிலகுயாழ் காங்கேச னெனுங் கவியி மாவை நகரதில் மனுமுை பஞ்சசிற்பா சாரியர் பரவும் கரும்பொன் வினைஞர் க வேற்பிள்ளை தம்புவேன மாதவன் சீர்நிறை வணிப பாகவத னாயும் பக்திப் ட உறவுரை கதாப் பிரசங்கி சோதிட விற்பனன் சொற் ஆழ்வா ராகியும் அடியார் அணையு மிடத்தே அடிய வாழ் மயில்வாகன மதிநல நாலாயிரத் திவ்ய பிரபந்த திளைத்தமை நாமுந் தி6ை நாரா யணனவ தாரநற் டெ சீரா யோதச் சிந்தை செய் தியாக சத்திய சீவனசன் இயக்கத் தாரின் இனிய ( ஏற்றுத் தசதினம் இராமா ஆற்றி யெம்மை அவச ப தாசரதி புகழ் தங்கித் திை நேசமுடன் சொல் நேய! கிரிதிருப் புகழ்முரு கின் ப விரிவுரை செய்ய விளங்கு அன்பனுணர் டோ! அவனி மாடுமனை மக்கள் நீடுநா பீடு பெற நின்று பெற்றுக நாடு மீக்கூற நாவல் லவ கங்கா திரங் காணிமணல் என்று வாழ்த்துவாம் யாம் ஏற்று நண்குறுக இந்நில ப விருத்தம் வேதநெறி தழைத்தோங்க மாதவன்றணி புகழ்பாடும் மாதமூன்றுமழை பெய்க! சாதனைசெய் அடியர்குழா
55

தி
uj600TTuu plp சன்மார்க்க இயக்கத்தார் ருமாள் னம் அவர்களை
LJILJT
கழ் பேசுங்
தோய் - பெருமலையே
5 வாகனவேளே ! நல்
சுகம்.
லாகும்
ப் பாணம்
ண்முரு கிருக்கும்
ற வழுவாப்
ணிணிய மரபு
ர்டிப் பெறுமகன்
ாப் பாடும்
ரவசம்
ஒதும்
பருமாள் புகழ் கூட்டம்
ா னாகியும்
த் தோன்றால் 1
நாற்பாத்
ளக்கச் சொல்வை !
பருமை
இணுவை
D/IT3535
வேண்டுதல்
யணமுரை
ாக்கியே
ளக்க
அருண
ாதுலன்சீர்
முன்போல்
யில் மிகுசுகம்
ள் வாழ்ந்து
கீர்த்தியொடு
பலவினும் நீடுழி வாழ்க! தே
மிகு சைவத்துறை விளங்க! மயில்வாகனம் வாழ்க! மனுநீதி மகிதலத்துச் ம் தரணிமேல் வாழுகவே!!

Page 63
29.11.1961ல் வீரகேசரி'ஊர்க்குருவி
N ‘ஊர்க்குருவி' Ο
எந்த ஒரு மனிதனையும் அவனுடைய வெளித்தோற்றத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு மதிப்பிடுவது மிகப்பெரிய அறிவீனம் என்று பெரியோர்கள் சொல்லு வார்கள். அது எவ்வளவு தூரம் நூற்றுக்கு நூறு உணர்மையென்பதை அனுபவத்தில் கண்ட ஹிந்து சொல்லும் வாய்ப்பு நேற்று எனக்கு ஏற்பட்டது. O
தெல்லிப்பளையைச் சேர்ந்த ஒரு சோதிடர் தற்செயலாக என்னைப் பார்க்க வந்திருந்தார். எல்லாச் சோதிடரையும்போல அவரும் சோதிட சாஸ்திரத்தை மட்டும் பயின்றவராக இருப்பார் என்று எண்ணி சில சோதிட சந்தேகங்களை அவரிடம் வினவி னேன். அவர் பேசவாரம்பித்துச் சில நிமிடங் களுக்கெல்லாம் அவர் ஒரு சோதிடர் என்பதும் அவரிடம் நான் கேட்ட கேள்வி களும் அறவே மறந்துபோயின. அவருடைய இலக்கியமேதாவிலாசம் என்னைமெய்மறந்து போகச் செய்துவிட்டது. கம்பனும், வள்ளுவனும், நாயன்மார்களும், ஆழ்வார் களும் இயற்றிய இலக்கியங்களையெல்லாம் அக்கு வேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து கரைத்துக் குடித்தவரைப் போல அந்த சோதிடர் செவிக்கினிமையாகப் பேசியதைக் கேட்டதும் இவர் எப்படி இனிமையாகப் பேசுகின்றார்?’ என்றெண்ணி பிரமித்துப் போனேன். சாதாரணமாக அவரை நேரில் பார்ப்பவர்களுக்கு அந்த மனிதருக்குள் சாட்சாத் சரஸ்வதிதேவியே வாசம் செய்கின் றாள் என்பதை ஒருபோதும் உணர்ந்து கொள்ளமுடியாது.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், சோதிட சாஸ்திரத்துக்கே அவர் திருமுறை
ராமநாம அரு (சாவகச்சேரி நி
உசண் பகுதியில் மழையின்மையினா பூgராமாயண கதாப்பிரசங்கம் செய்த பூரீமயி செய்தும் மழைபெய்யவில்லையே என்று கேட் நிச்சயம் மழையைக் கொண்டுவருமென்று அ நாள் மழைபெய்தது எல்லாரையும் ஆச்சரியத்

K.V.S. வாஸ் அவர்கள் எழுதிய செய்தி
களிலிருந்தும், திவ்விய பிரபந்தங்களி லிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியதுதான். இலங்கையில் சைவநுால் களைப் படித்தவர்களையாவது நாம் அதிகம்
பார்க்கமுடியும். வைணவ ஆழ்வார்களின்
திவ்விய பிரபந்தங்களை மனப்பாடம்
செய்திட்டதோடு மட்டுமின்றி அவற்றை
உருக்கமாகவும், சொல்நயம், பொருள்
நயத்துடன் சொல்லக் கூடியவர்களும்
இருக்கிறார்களென்பதை அறிந்ததும் என்னை
அறியாமலே அந்த அன்பரிடம் ஒரு பக்தி
ஏற்பட்டது.நமக்குத் தெரியாமல் குடத்தினுள் வைத்த விளக்கைப் போல நம்மிடையில் பல
அறிஞர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அவர்களை நாம் அறிந்துகொள்ளாதது
நம்முடைய குறையே தவிர அவர்களுடைய
குறையல்ல. இத்தைய அறிஞர்களுக்கும் நான்
ஒரு வார்த்தை சொல்ல விரும்புகின்றேன்.
இறைவன் ஒருவருக்கு விசேஷ ஞானத்தைக்
கொடுப்பது அதைக்கொண்டு மற்றவர்களும்
பயனடையவேண்டும் என்பதற்காக.பிறருக்குப்
பயன்படாமல் ஞானத்தை ஒருவன் தனக்கு
ள்ளேயே வளர்ப்பது ஆண்டவனுக்குநிச்சயம்
திருப்தி அளிக்க மாட்டாது. இத்தகைய
பெரியோர்கள் பத்திரிகை வாயிலாகவும்,
நூல்கள் வாயிலாகவும் தங்களுடைய விசேஷ
அறிவு உலகத்துக்கும் பயன்படுமாறு
செய்யவேண்டும். இதை என்னைச் சந்திக்க
வந்த அன்பரிடம் சொல்லி ‘கேசரிக்கு
அடிக்கடி எழுதி மக்கள் பயனடையச்
செய்யவேண்டும்’ என்று கேட்டுக்
கொண்டேன்.அவரும் சம்மதிக்கிறார். கூடிய
சீக்கிரம் அவரது தத்துவார்த்த இலக்கியக்
கட்டுரைகளை கேசரியில் வாசகநேயர்கள்
படிக்க ஒருவாய்ப்பு ஏற்படும்.
ள் பலித்தது
ருபர்) (வீரகேசரி) ல் அவதி கொண்ட கமக்காரர்கள் அங்கு ல்வாகன சோதிடரிடம் ராமநாம சங்கீர்த்தனம் டார்கள்.இரண்டுநாட்களுக்குள் பூரிராமநாமம் ந்தச் சோதிடர் பதிலளித்தபடி இரண்டாவது திற்குள்ளாக்கியது.
6

Page 64
ஓம் ரீரா வைகுந்தமெய்திய சுவா ஆயர்பாடி ஆழ்வார் பற்
- வெங்கையா சுந்தரல பிரதி அதிபர் தொழில்நுட்பக் 1962ம் ஆண்டு எமது ஊரான மாவிட் நாட்கள் இராமாயணப் பிரசங்கத்தின்போது ஆ கிடைத்தது. அவரது கொலுவான தோற்றத்துட குரலில் ஆற்றிய பிரசங்கள் இன்றுகூட எனக்கு அபிநயத்துடன் தெளிவான மொழிநடையில் விளங்கிக்கொள்ளும் வகையில் மிகவும் சிற என்று இந்த மங்களப் பாடல்பாடுகின்றபோது 6 முன்னுக்கு இருப்பதுபோன்று தெரிகின்றது. ந அடிக்கடி பாடுவதும் உண்டு.
ஆழ்வார் அவர்கள் சைவசமயத்தில் கடவுளான விஷ்ணுவையே தனது குலதெய்வ எய்தியுள்ளார். பொன்னாலை வரதராஜப்பெரு ஆலயம், தெஹிவளையில் வெங்கடேசர், இந் ஆலங்களை வணங்கி வந்ததுடன் அங்கு ராம இல்லை. பத்துப்பேராக இருந்தாலும் சரி, பத்தி அற்புதங்களை இடைவிடாது எதுவித சலிப்பும் ! வன்மை அவர் ஒருவருக்கே உண்டு. பக எளியமுறையில் மக்கள் வாழ்க்கையுடன் ஒத் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பல அழகாகவும் விளங்கவைப்பார்.
ஆழ்வார் அவர்கள் தனது பரமனதிரியா அல்லது பெரிய பதவி வகிப்பவனாக இருந்த மதித்துவந்தார். யாராவது அவரிடத்தில் த ஆறுதல் கேட்கப் போகும்போது அவர்களின் வார்த்தைகளினால் அரவணைத்து மிகவும் பு
ஆழ்வார் அவர்கள் தானம் வழங்குவதி விசேஷ தினங்களின்போது அன்னதானம் வழங் இவரது அன்னதானத்தின்போது உளம்குளிர பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவில், வளவில் அமைத்த ஆச்சிரமம் போன்றவற்றி கூடியதாக இருந்தது. தனது வீட்டுக்கு வரு
5

மஜெயம் மி வேதமயில்வாகனம்
றிய நினைவலைகள்.
Sub - B.A. SILTES II
கல்லூரி, திருகோணமலை.
டபுரத்தில் யூரீகாளியம்பாள் ஆலயத்தில் 10 ழ்வாரின் தரிசனம் எனக்கு முதன்முறையாகக் ன் கையிலே சிப்பிளக்கட்டை ஏந்தி, கனிவான மிக ஞாபகமாக இருக்கின்றது. உட்பொருளை 0 சிறுவர் முதல் பெரியோர் வரை நன்கு ப்பாக எடுத்துரைப்பார். ‘மங்களம் . 99 எனக்கு இப்பொழுதுகூட அவரின் அந்தக்காட்சி ான் சிறுவனாக இருக்கும்போது இப்பாடலை
பிறந்தாலும் வைணவசமயத்தின் முழுமுதற் மாகக் கொண்டு வழிபட்டுப் பல வெற்றிகளை நமாள், வல்லிபுர ஆழ்வார், யாழ் விஷ்ணு தியாவில் உள்ள பூரீரங்கம், திருப்பதி போன்ற பிரானைப்பற்றி பிரசங்கம் செய்யத் தவறியதும் தாயிரம் பேராக இருந்தாலும் சரி, பகவானின் இன்றி மணித்தியாலக்கணக்கில் உரையாற்றும் வத்கீதையின் உட்கருத்துக்களை மிகவும் துப்போகக்கூடிய தன்மையில் இணைவுபடுத்தி உதாரணங்களுடன் மிகவும் ஆழமாகவும்,
க இருந்தாலும் சரி, படித்தவன், படியாதவன் ாலும் சரி தனது முன்னிலையில் சமமாகவே மது கஷ்டம் துன்பங்களை எடுத்துரைத்து மனப்பாரங்களைக் குறைத்து தமது அருள் பூரிப்பானநிலையில் வழியனுப்பிவைப்பார். ல்ெ தலைசிறந்தவர். விஷ்ணு ஆலயங்களில் குவதில் முன்னிற்பார். எத்தனையோ ஏழைகள் உணவு உட்கொண்டதை நான் அறிவேன். வல்லிபுர ஆழ்வார் கோவில், தனது சொந்த Iல் இவ்வன்னதான வைபவங்களைக் காணக் கின்றவர்கள் யாராயிருப்பினும் அவர்களுக்கு
7

Page 65
அறிவுரை வழங்குவது மட்டுமல்ல உணவும் வகையில் அவர்களை வழியனுப்புவார்.
இலங்கையில் யாழ்ப்பாணம் மாத்திரமின் திருகோணமலை போன்ற இடங்களுக்கு பகவானின் அற்புதங்களை மக்களுக்கு எடு செய்யும் பொருட்டும் ம்ககளின் அவலங்கள், ! ஈடேறும் பொருட்டு பகவத் கீதையிலுள்ள அர லெளகீக வாழ்க்கையில் இருந்து ஈடேறும் குறிப்பிடத்தக்கது.
நாங்கள் அறியாமை காரணமாக ஆல போது சுவாமி அவர்கள் கூறுவார் ‘நீங்கள் இறைவன் உங்கள் உள்ளத்தில்தான் குடிய இறைவனைவிட்டு அங்குள்ள கருங்கற்களை இங்கு இல்லையா?” என்று மறைமுகமாக உணர்த்தியுள்ளார். அவரிடம் ஆசீர்வாதம் பெற் தோல்வியடைந்தது கிடையாது. எண்பது வ கடவுளுக்குச் சமமானவர்கள் என்பதை அடிக் துதிக்கவேண்டும் என்று தன்னிடம் செல்பவர்
தனது சொந்தப் பிள்ளைகளைப் போ: எல்லோருக்கும் ஒரேவிதமான அறிவுரைகளை பதவி உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன் பே நான் அவரிடத்தில் செல்லும்போது என்னை அ பல வகையிலான கருத்துக்களை எடுத்துரைப்ட எவ்வாறு வளர்க்கவேண்டும் என்பதனை த6 அறிவுரைகளைக் கூறுவார். உண்மையிலேயே சீரும் சிறப்புடன் பிள்ளைகள் அத்தனைபேரும் சுவாமி அவர்களின் அறிவுரையைக் கடைப்பி அவரது அறிவுரைகளை வாழ்க்கையில் பின்ட ஆட்டிப்படைக்கும் சிற்றின்பங்களிலிருந்து விடு
ஆயர்பாடி ஆழ்வார் அவர்கள் இறைவன சுவாமி ஆகிவிட்டார். தனது வாழ்க்கையி: அனுபவித்து வாழ்க்கையின் உண்மையான நம்பிவந்தவர்களுக்கும் புரியவைத்து தனக் இறைவனுடன் இரண்டறக்கலந்துவிட்டார். தெய்வமாக மதித்து எமது இல்லங்களில் வணங்குவோமாக. வெங்கையா சுந்தரலிங்கம் B.A. SLTESI பிரதி அதிபர், தொழில்நுட்பக் கல்லூரி, திருகோணமலை
A. بخ۹

பரிமாறி மிகக் குளிர்மையாக மெய்சிலிர்க்கும்
றி கொழும்பு, வவுனியா, மாத்தளை இறுதியாக தனது தள்ளாடும் வயதில் கூட கிருஷ்ண த்துக்கூறும் பொருட்டும் பல யாகங்களைச் துன்பங்கள் போன்றவற்றை அழித்து ஆன்மீகம் ரிய கருத்துக்களை வெளிக்கொணர்ந்து இந்த பொருட்டு தன்னை அர்ப்பணித்தார் என்பது
யங்கள்தோறும் ஆண்டவனைத் தேடியோடும். ர் ஏன் பேய், பிசாசு போல அலைகிறீர்கள் விருக்கின்றார். உங்கள் உள்ளத்தில் உள்ள யா கும்பிடப் போகிறீர்கள்? ஏன் இறைவன் உள்ளத்தில்தான் கடவுள் எனப் பலதடவை றுச் சென்ற எந்த விடயமும் உண்மையிலேயே பயதிற்கு மேலுள்ள பெரியவர்கள் யாவரும் கடி உணர்த்துவதுடன் அவர்களை வணங்கித் ரகளுக்கு அடிக்கடி உணர்த்துவார்.
ன்றே ஏனையோரையும் சமமாக நடத்துவார். வழங்குவார். சமயப்பாகுபாடு, சாதிப்பாகுபாடு, ான்ற பாகுபாடு அவரிடத்தில் அறவேயில்லை. அழைத்துத் தன் முன்னிலையில் இருக்கவைத்து ார். குடும்பத்தில் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தி னது குடும்பத்தினை எடுத்துக்காட்டி எனக்கு அவரது குடும்பம் தலைசிறந்ததோர் குடும்பமாக நல்ல ஒளிமயமான வாழ்வினை அடைவதற்கு டித்தமையே காரணமாகும். நாமும் அவ்வாறு பற்றி வாழ்வோமேயாயின் இவ்வுலகில் எம்மை பட்டு பேரின்பப் பெருவாழ்வுதனை எய்தலாம்.
டி சேர்ந்துள்ளார். அவர்கள் வணக்கத்திற்குரிய ல் நீண்டதுாரம் சென்று இன்பதுன்பங்களை தத்துவத்தைப் புரிந்து, அவற்றைத் தன்னை கு மறுபிறவியே இல்லை என்ற வகையில் அவரை நாம் யாவரும் வணக்கத்திற்குரிய ஏனைய தெய்வங்களுடன் சமமாக வைத்து
8

Page 66
ஓம் ரீரா ஆதர்ச
- ஆயர்பாடி சரோஜின்
ஆஜானுபாகுவான தோறறம், தீட்சணி கவனிக்கும் அஷ்ட அவதானம், தான் செ ஆளுமையும் ஆனால் இவற்றினிடையே இதய இவையே எனது தந்தையார். குடும்பத்திற்குத் சகோதர சகோதரிகளைவிட அவருடன் கூடிய
எனது பிதா சாதாரணமான ஒரு தர இருக்கவில்லை. கடுமையான ஒழுக்கக்கட்டுப்ட அத்துடன் மற்றவர்களுடன் பழகுதல் என்பவர் இடமேயில்லை. நாம் என்ன செய்யவேண்டும் தீர்மானிக்கப்பட்டது. அதனைக் கடைப்பிடிப்பதிலு எங்கள்மீது பாசம் சொரியவும் எங்களைப் பா ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்ற பாகுபா( சக்தி படைத்தவள். செல்வம் தருபவள் என்ற
சிறுவயதிலேயே எம்மை ஆலயங்களு செய்யவிைப்பது மட்டுமல்லாது பஜனை பிரசா அமுதுபடைத்து சேவை செய்யும் சேவையி அடிக்கடி பூஜை வணக்கங்களும் ததியாரா; கண்டிப்பும் ஊக்கமும் தருபவராக இருந்து ஒவ் முன்னேற்றிவிட்டார். எங்களுக்கு நேர்முகப் இடங்களுக்குத் தனியே விடாமல் தானும் கூ இல்லம் அழைத்துச்செல்வார். பாடசாலை ெ நாமம் இருக்கவேண்டும் என்பதில் கண்டிப்பா செல்வதற்கோ, சினிமா, களியாட்டங்களுக்குக் உறவினர்களிடம் நினைத்தபடி போகவரமுடியா: பெறமுடியாது.
இப்பழக்கங்கள் ஆரம்பகாலத்தில் எனக் காரணமாகவும் அவர்மீது இருந்த பயம் காரண வித்தியாசமான பழக்கவழக்கங்கள் காரண விலகினர். மறைவில் பூசாரி குடும்பம் என்ற வாழ்க்கையும் தொடர்ந்தது.
5.

மஜெயம்
தநதை
ரிதேவி தியாகராஜா -
யமான கண்கள், எதையும் கூர்மையாகக் ால்பவற்றை அடித்துச்சொல்லும் உறுதியும் பத்தில் நிரம்பிவழியும் கருணையும், பாசமும். தலைப்பிள்ளை என்ற முறையில் மற்றைய காலம் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ந்தையாகவோ, குடும்பத் தலைவனாகவோ ாடு, சட்டதிட்டங்கள், நடையுடை பாவனைகள் ற்றில் எமது விருப்பம், ஆசை என்பவற்றிற்கு எப்படி செய்யவேண்டும் என்பது அவராலேயே ம் கண்டிப்புடன் நடந்துகொண்டார். அதேநேரம் ாதுகாக்கவும் அவர் தவறவில்லை. அவருக்கு
டு கிடையாது. மகளும் மகனைப் போலவே ) சமநோக்குக் கொண்டவராகவே இருந்தார்.
நக்கு அழைத்துச்சென்று சுவாமி தரிசனம் ங்கங்களைக் கேட்கவைத்து, அடியார்களுக்கு ல் எங்களை ஈடுபடுத்தினார். இல்லத்திலும் தனைகளும் இடம்பெறும். எமது கல்வியில் வொரு பிள்ளையையும் கூடியவரை கல்வியில்
பரீட்சை, எழுத்துப் பரீட்சை நடைபெறும் டவேவந்து முடியும்வரை காத்திருந்து எம்மை சல்லும்போதுகூட எங்கள் நெற்றியில் விபூதி, க இருந்தார். தனிப்பட்ட சுற்றுலாக்களுக்குச் ச் செல்வதற்கோ எமக்கு அனுமதி இல்லை. து. எந்தவிதமான உதவியும் அவர்களிடமிருந்து
கு வெறுப்பாக இருந்தது. ஆனால் கண்டிப்பு மாகவும் அதன்படி நடந்துவந்தேன். எம்முடைய மாக உறவினர்கள் கொஞ்சம்கொஞ்சமாக
பெயரும் கிடைத்தது. எமது கட்டுப்பாடான

Page 67
தந்தையார் தனக்கு என்ன கஷடம் ஞாயிறு பூஜையும் அடியார்கள் சேவையும் கொட்டிலாகவும் மண் தரையாகவுமிருந்த ரீ சீமெந்தாலான கோவிலாக மாறியது. எல்ே பொருள் பண்டம் தேடி வைப்பார்கள். எனது நேரத்தில் நான் யோசித்ததுண்டு. மார்கழி எழுச்சி, திருப்பாவை படிக்கும்போது மனவ பிதா இயமம், நியமம், ஆசனம் என்பவற்றை
இயமம் :- நல்லவற்றைத் தெரிவு செய்வது
நியமம் :- நல்லவற்றைச் செய்யும்போது
நேரத்திற்குத் தவறாமல் செய் ஒவ்வொரு நாளும் அதே நேரத்
ஆசனம :- மேற்கூறிய இரண்டையும் செய்தா கிடைக்கும் என்பார்.
அவர் பாடிய திருப்பாசுரங்கள், திருவா விருப்பத்தைக் கேட்காமலே காதுவழியே உ
எமது குடும்பம் வளர்ந்தது. இர எங்களைப்போலவே பாவித்து பாசம் நிை வயதினறென்றாலும், எந்தக் கெட்டிக்காரனெ6
இச்சந்தர்ப்பத்தில் 1970ம் ஆண்டு ந6 வருகின்றது. ஒரு லீவு நாள். பிள்ளைகளில் எல்லோரையும் நிற்கவைத்து கண்டித்துக்கெ வந்த வெளியார் ஒருவரும் எம்முடன் வ மணித்தியாலங்கள் 90 நிமிடம். கண்டிப்பு, பின்னரே எங்களை உள்ளே போகச் சொல்ல என்று கேட்க, அவர் விஷயத்தைக் கூறி இவற்றைக் கேட்டதால் உன்னுடைய கஷ்டம் கொடுத்தார். அவர் மறுநாள் வந்து தன் கவ நான் எனது பிதாவின் பெருமையை உணர
எமது இல்லறவாழ்வில் குழந்தைகள் என்ன பிள்ளை பிறக்கும் என்ன பெயர் வை இதில் பிள்ளைகளுக்கோ மருமக்களுக்கோ த உயிரினும் மேலாகக் கொஞ்சி மகிழ்ந்து விை

வந்தாலும் அடியார் சேவை செய்துவந்தார்.
செய்துவரலானார். ஆரம்பத்தில் சாதாரண ஆயர்பாடி ஆழ்வார்கள் ஆச்சிரமம் நாளடைவில் லாரும் தங்கள் பிள்ளைகட்கு வீடு வாசல்
பிதா கோவில் கட்டுகின்றாரே என்று அந்த அதிகாலை கடுங்குளிரில் எழுந்து திருப்பள்ளி ருத்தப்பட்டதுண்டு. அந்த ந்ேரங்களில் எனது ) அடிக்கடி கூறுவார்.
அதனை ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வது அதாவது ஜெபம் செய்வது என்றால் த்திற்குச் செய்தல். இது சிரத்தை எனப்படும்.
ல் அதற்கு தகுந்த ஆசனம் (பதவி) தவறாமல்
ாய்மொழிகள், ராம, கிருஷ்ணலீலைகள் எமது ட்புகுந்து எமதுள்ளத்தில் உறைந்துகொண்டன.
ண்டறக் கலந்துகொண்ட மருமக்களையும் றந்த கண்டிப்புடன் வளர்த்துவந்தார். எந்த ன்றாலும் அவர் சொற்படியே நடக்கவேண்டும்.
டைபெற்ற சம்பவம் ஒன்று எனக்கு ஞாபகம்
ஒருவர் செய்த தவறுக்காக அம்மா உட்பட ாண்டிருக்கிறார். அந்நேரம் ஜாதகம் பார்க்க ந்து சேர்ந்து கூட நிற்கின்றார். ஒன்றரை ஆலோசனை, அறிவுறுத்தல் நடந்து முடிவுற்ற லிவிட்டு, வெளியாரை நோக்கி என்ன விஷயம் னார். இவ்வளவு நேரமும் இங்கு நின்று
தீர்ந்தது சென்று வா என்று தந்தை உத்தரவு டம் அன்றே தீர்ந்துவிட்டதாகக் கூறியபோதும் வில்லை.
கருவில் உருவாகியதுமே என்ன திகதியில் க்கவேண்டுமென்று முன்கூட்டியே கூறிவிடுவார். லையிட உரிமையில்லை. பேரப்பிள்ளைகளை ளையாடுவார். பிள்ளைகளைப் பிரிவது என்பது
30

Page 68
அவரால் தாங்கமுடியாத ஒன்று. தவிர்க்கமு அவரை விட்டுப் பிரிந்து வெளிநாடு செல்ல
நான் சுவிற்சலாந்து சென்று 8 வருடங்க மிகவும் மகிழ்ச்சியுடன் கண்ணிர் விட்டார். ஏ மிகவும் மகிழ்ச்சி. ஆனால் திரும்பச் செல அதைவிடப் பலமடங்கு துக்கமாக இருக்கிறது. என்றார். அதைக் கேட்டு நானும் அழுதே வாளால் துக்கத்தை அறுத்து நான் திரும்பிச் படலத்தை எனக்குத் தந்து என்னைப் படி சொரிந்தார். பூர்த்தியாகி மங்களம் படித்தபோது மாநகர் சென்று அரசோச்சிய யூரீ சீதாராம திரும்பப் போகிறேன். அடுத்தமுறை என்6ை சொல்லியது என் சிறுமூளைக்கு எட்டவில்ை
ஆனால் அவருடைய வைகுந்தப் பிர போர்த்தி பட்டாபிஷேகம் செய்து அவரை சமர்ப்பித்ததில் ஒரு சிறு ஆறுதல் எனக்கு :
வேலி இட்டு, வாய்க்கால் கட்டி, விதை ந் எனது பிதா எமது குடும்பத்தில் தற்போது நன்கு செழித்து வளர்ந்து பயன்தரும் மரங்க நிற்கின்றன. லெளகீக, ஆன்மீக வழிகள் இர நிற்கின்றது என்றால் அப்பெருமை என் பித வெளியூர்களிலும் எனது பிதாவின் பெயரை காட்டுவது அவரின் மகிமை, ஏங்களுக்குச் சி சர்வதேச புகழ்பெற்ற ஸ்தாபனத்தில் உள்ள பின் உயர்பட்டங்களும் பெற்ற அறிஞர்கள் கூறு
நான் இங்கு வந்ததும், வரும் அன்பர்க கருணையும், பாசமும், மேதாவிலாசமும், பக் என்பதை அறிந்து புளகாங்கிதம் அடைகின்றே தந்தை அல்ல. யார் யார் அவரைத் தந்தைய தந்தையாக, ஆசானாக, குருநாதனாக இருக்கி அருமையான பிதாவை எனக்குத் தந்த கூறிக்கொள்ளுகின்றேன்.
ஆயர்பாடி சரோஜினிதேவி தியாகராஜா

டியாத காரணங்களால் மூன்று பிள்ளைகள் வேண்டியதாயிற்று.
ளின் பின் திரும்பிவந்து அவரைப் பார்த்தபோது னென்று கேட்டபோது உன்னைப் பார்த்ததில் bலப்போகிறாய் என்பதை நினைக்கும்போது
இதற்கு நீ இங்கு வராமலே இருந்திருக்கலாம் ன். உடனடியாக தனது ஞானம் என்னும் செல்லும் அன்று பரீ ஸிதாராம பட்டாபிஷேக க்கச் சொல்லிக் கேட்டு ஆனந்தக்கண்ணிர் து 14 வருடம் கானகவாசம் செய்து அயோத்தி ச்சந்திரமூர்த்தி போல நானும் வைகுந்தம் ன நீ பார்க்கமாட்டாய் என்று சொல்லாமல்
6).
ாப்திக்கு வந்து அவருக்குப் பொன்னாடை
பூரீ சீதாராமச்சந்திரமூர்த்தியின் திருவடியில் D 605 (6.
ாட்டி, நீர் பாய்ச்சி, களைபிடுங்கி, பயிர்விளைத்த இல்லை. ஆனால் அவர் வளர்த்த பயிர்கள் களாக கண்ணுக்குச் சாட்சியாக கண்முன்னே ‘ண்டிலும் ஆயர்பாடி குடும்பம் தலைநிமிர்ந்து ாவையே சாரும். இலங்கையில் மட்டுமின்றி க் கேட்ட மாத்திரத்தில் அடியவர்கள் அன்பு றுவயதில் அவர் கூறிய அதே கருத்துக்களை கலாசாலைப் படிப்பும், கடினமான பரீட்சையின் ம்போது அவரை நினைந்து நான் வியக்கிறேன்.
5ள் கூறும் வார்த்தைகளிலிருந்து அவருடைய தியும் எவ்வண்ணம் அவர்களை ஆகர்ஷித்தது ]ன். எமது பிதா எமது குடும்பத்திற்கு மட்டும் பாக நினைத்திருக்கிறார்களோ அவர்களுக்கும் றார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இத்தகைய தற்காக இறைவனுக்கு மீண்டும் நன்றி

Page 69
ஒம் ரீர என் அண்
- தி. ய
தாத்தா என் அருமைத் தாத்தா எங்கே சென்றீர்கள்? எட்டு வருடங்களின் பின்னர் உங்களைக் காண ஓடோடி வந்தபோது பாசத்துடன் தலைதொட்டு ஆசி தந்தீர்களே! எங்கே சென்றீர்கள் தாத்தா?
நான் பிறந்தது முதல் கிருஷ்ணலீலைகளை என் மனதில் பதிய வைத்து பக்தி ரசம் ஊட்டினீர்களே! தரணியில் வாழும் வழியிதுவென இடித்துரைத்தீர்களே தாத்தா உலகளந்தானின் அன்னை யசோதை என்று எனக்கும் யசோதை என்று நாமம் சூட்டினீர் எங்கே சென்றீர்கள் தாத்தா?
சொல்லச் சொல்லத் தித்திக்குமே சுந்தரனின் எல்லையில்லா இன்பந்தந்து எங்கும் தானாய் நின்ற ரசம் அந்த ரசம் ராமநாம ரசம் என்று நிதர்சனமாய் வாழ்ந்து காட்டினீர்களே எங்கே சென்றீர்கள் தாத்தா?
வெள்ளைச் சுரிசங்கோடாழி ஏந்தி தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே என்று நித்தம் பாடுவீர்களே அத் தாமரைக் கண்ணனின் பாதங்களை அடைந்து விட்டீர்களா தாத்தா? என் அன்புத் தாத்தா
அன்புப் பேத்தி தி. யசோதா

ராமஜெயம் புத் தாத்தா
சோதா -
களே!
நாமரசம்

Page 70
ஓம் ரீர ggшп өнц2(8uш6јї Р
- ஆயர்பாடி ராதாே
ஐயா உங்களுக்கு
ஐந்தாவது பெண் குழந்தையாய் பிறந்த பெண்ணாகப் பிறந்தால் குடும்பத்தில் செல் வளர்த்தீர்கள். நீங்கள் வணங்கும் கிருஷ்ண வேண்டும் என்று ராதாதேவி என்று பெயரி கூப்பிட்டு மகிழ்வீர்கள். எல்லோரிலும் பார்ச் ஆசீர்வதித்தார்கள். அத்துடன் உங்களுடைய தெய்வசிந்தனையும், இயமநியமங்களும் கை தொடக்கம் எனது கையால் உங்களுக்கு உ உடல் தளர்ந்த காலத்திலும், உங்களை ம பாதுகாப்பு விஷயங்களிலும், கடமை செய் பாராயணம் செய்யும் பேற்றையும் அளித்தீர் தூதனாக பூரீமத் ஆஞ்சனேய ஸ்வாமியாகே உய்யா உடலு
6) அனும மையாற் கழன ஐயா அடியேனு என்றும் எந்நேரமும் நானும், எனது குடும்ப ஆயர்பாடி ராதாதேவி அன்னலிங்கம்
(နွာ☎
ஆன்மாவிற்கு ஒர் செ யாவும் உடல் தானி ( ஒதுவதே ஞானம் என தேறுவதே தீ வினை

ாமஜெயம்
டன் அடைக்கலமே.
தவி அன்னலிங்கம் -
திருக்கும் பேறு பெற்றேன். ஐந்தாவது குழந்தை வம் சிறக்கும் என்று பெருமையுடன் என்னை Tபரமாத்மாவின் ஞாபகம் எந்நேரமும் இருக்க ட்டு அடிக்கடி ராதை, ராதை என அன்புடன் க்க மகிழ்ச்சியுடன் இருப்பாய் என்று என்னை மேலான ஆன்மீகஉணர்வை எனக்கு ஊட்டி க்கொள்ள பயிற்சி அளித்தீர்கள். இளம்பிராயம் உணவு படைக்கும் பெருமையை அளித்தீர்கள். ருத்துவரிடம் அழைத்துச் செல்லவும், உணவு யக் கிடைத்ததுடன், யூரீமத் கம்பராமாயணம் கள். சர்வேஸ்வரனான பூரீராமசந்திரமூர்த்தியின் வ உங்களைக் காண்கிறேன். |ய்யு மருத்துமலைக்
ந்தகலா நிதியே
ாகிய வானவனே
லுன் அடைக்கலமே. மும் உங்கள் அடைக்கலம்.
ବଞ୍ଚି
*யலும் இல்லை இவை
0ருவும் தகைமை தனை
உற்று இறைவன் கூறியதை க்குத் தீ.
- கீதை வெண்பா
ہے۔
63

Page 71
ஓம் ரீரா தசரத நால்வி
- ஆயர்பாடி கி
எனது பிதாவிற்கு ஆண்மகவுகளில் சகோதரர்களுக்கு கோபாலகிருஷ்ணண், ராம அவர் எனக்கு கிருஷ்ணதாசன் எனறு பெu செய்யவே என்று அடிக்கடி கூறுவார். நீங்கள் கர்களைப்போல இருக்கவேண்டும் என்று அடிக் மாறாத பக்தியைக் காட்டுகின்றது. தொழில் என்னுடன் அடிக்கடி தொடர்புகொண்டு எனது ஆசிசுவறி வந்தார். எனக்கு குழந்தை கிடைத்த தான் வைகுந்தம் ஏகுவதற்கு ஒரு கிழமை அழைத்து, 'இப்பிறப்பில் என்னை நீ காணமா உன்னை ஆசீர்வதித்துக்கொண்டே இருப்பேன்’ வைத்தது. என் அண்ணன்மார்களுக்கு கூட எனக்குக் கிடைக்கவில்லை என்று நினைக் இருந்தாலும், அவர் வீடுபேறு பெற்று ரீ ஸி: அடைந்தது ஆறுதலடையற்பாலது.
ஆயர்பாடி கிருஷ்ணதாசன் (சுவிஸ்)
ஓம் ரீரா சிவயோக சுவாமிகள் . நற்க
ஓம் நமோ
ие.
ஓம் நமோ நாரா உத்தமனே யூரீர
அநூம
நாம் வேறோ நீ நல்ல வாக்குத்
arya
ஏங்குவதே நான தாங்குவா யினி
அசோதை குல
தசாவ தாரனே
எந்தவேளை பு
சிந்திக்கவரம்

மஜெயம் வரும் நாமும்
ருஷ்ணதாசன் -
கடைசிமகனாக 1958ல் பிறந்தேன். எனது கிருஷ்ணன், யூரீகிருஷ்ணன் என்று பெயரிட்ட பர்வைத்தது அவர்களுக்கு என்றும் சேவை
நால்வரும் ராம, லட்சுமண, பரத சத்துருக்கடி கூறுவது அவருக்கு ராமபிரான் மேலிருந்த
நிமித்தம் நான் சுவிற்சலாந்து வந்தபோதும் தொழில் இல்லறவாழ்வு பற்றி விசாரித்து தும் ஆசிகூறி அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். }க்கு முன்னர் என்னைத் தொலைபேசியில் ட்டாய், கவலைப்பட வேண்டாம். எங்கிருந்தும்
என்று கூறிய பாங்கு என்னை மெய்சிலிர்க்க இருந்து அவருக்குக் கடமை செய்யும் பேறு கும்போது எவ்வளவு மனதிற்குக் கஷ்டமாக தாராமசந்திர மூர்த்தியின் பாதாரவிந்தங்களை
மஜெயம்
சிந்தனைப் பாடல் - பக் 304
[bITUTITuIGIOOTIT
லவி
6
T
ல்லவி
வேறா
தாராயோ ஒம்
orub
மையா எழில்சேரும் ராமையா ராமச் சந்திரனே தருணமிது ஒம்
பாலனே யசுரர் குல காலனே
தமியேனுக் காதரவே ஒம்
முன்னை ஏத்தி நீதானேயென்று நாராய் சீமானே பூரீராமா ஓம்
4.

Page 72
ஓம் ரீ அரங்கன்
- ஆயர்பாடி ரு
மண்ணை இருந்து துழாவி வாட விண்ணை தொழுது அவன் மேலி கண்ணையும் நீர் மல்க நின்று க பெண்ணை பெருமையல் செய்தா மேற்கண்ட நம்மாழ்வார் பாசுரப் பதிக போதும் பிறந்த சமயமும் அடிக்கடி பாராயண கேட்டிருக்கிறேன். எனது அம்மா எனது பிர இருந்தசமயம், அம்மாவுக்கும், குழந்தையாகி தரக்கூடிய கஷ்டம் வந்ததாகவும் அதனை ! கூறக் கேட்டிருக்கிறேன். ஐயாவும் நானும் இருந்தார்.
'உனக்கு எது வேண்டுமானாலும் அத பெறு ஆனால் பிறரிடம் கேட்காதே’ என்று அ இருந்தபோது ஒரு தடவை ஐயா தனக்கு கூறிக்கொண்டிருக்க அதைக் கேட்ட நான், கேட்டு வேண்டித் தருகிறேன’ என்று சொல்லில் கேட்டுவிட்டு, மீண்டும் ஓடிவரும் வழியில் 6 அவரிடம் வந்து ஐயா கடவுளிடம் உங்களு ஆகவே, காசு கிடைக்கும் என்று சொல்லி வந்து ரூபா இரண்டாயிரம் நாம் எதிர்பாராத வ என்று அம்மா கூறுவார். அவரது இறை வி
சென்றமாதம் நானும் எனது குடும்பமு புறப்பட்ட போது பார்க்கவேண்டிய இடங் வணங்கவேண்டும் என்று கூறி, ஆசீர்வதித்து பக்தியுடன் வணங்கும் அரங்கன் திருமுற்றத்
அணியார் பொழில் சூழ் அரங்க ந துணையேன் இனி நின் அருளெ மணியே மணிமாணிக்கமே மதுகு பணியா யெனக்கும் வகை பரஞ்ே
என்று பாடும்போது எமக்கு முன் உள்ள அ
மாறிமாறி வந்துகொண்டேயிருந்தது. அதன்
அவர் காட்டித்தந்த ஆத்மீக வழியைப் பு
பாசுரங்களைப் பாடி தூய்மையான அறநெறி
ஆயர்பாடி ருக்குமணிதேவிந

ராமஜெயம்
Энцguшп6јї நக்குமணிதேவி -
மனன் மண்ணிது வெள்னும்
வும் வைகுந்தம் என்று கைகாட்டும் டல்வண்ணன் என்னும் அன்னே- என் ர்க்கு என் செய்வேன் பெய்வளையிரே.
த்தை ஐயா அவர்கள் நான் கருவில் இருந்த ாம் செய்வார் என அம்மா அடிக்கடி சொல்லக் சவத்திற்காக இணுவில் வைத்திய சாலையில் ய எனக்கும், ஐயாவுக்கும் உயிர் ஆபத்தைத் பகவான் அருளால் நீக்கினார் என்றும் அம்மா ஒரே ராசி என்று என்னுடன் மிகவும் அன்பாக
னை கருணாமூர்த்தியான கடவுளிடம் கேட்டுப் டிக்கடி கூறுவார். நான் 5 வயது குழந்தையாக தற்சமயம் சிறிது பணம் தேவைப்படுவதாக 'ஐயா நீங்கள் சொல்லித்தந்தபடி கடவுளிடம் விட்டு, பூஜை அறைக்கு ஓடிச்சென்று கடவுளிடம் ானது அண்ணன் அடித்துவிட அழுதுகொண்டு ருக்குக் காசு கொடுக்கும்படி கேட்டுவிட்டேன் வாய்மூட முன்னர், யாரோ ஒருவர் எம்முன் கையில் கொடுத்ததை இன்றும் மறக்கமுடியாது சுவாசத்தை இன்றும் எண்ணி வியக்கிறேன்.
ம் தென்னிந்திய திருத்தல யாத்திரை செய்யப் களை குறித்துத் தந்து என்ன முறையில் அனுப்பிவைத்தார். 20.08.98ல் அவர் மாறாத ந்தில் நின்று,
கரப்பா ఫ్ట్నే
ல்ல தெனக்கு
தா
சாதீ.
ரங்கனின் திருமுகமும் ஐயாவின் திருமுகமும்
அர்த்தம் அன்று எனக்குப் புரியவில்லை.
பின்பற்றி ரீராமபிரானதும் பூரீ ஆழ்வார்களினதும் வாழ்ந்து அன்னாரை மேலும் மகிழ்விப்போமாக!
S5

Page 73
ஓம் ரீரா றி ஆண்டா
- ஆயர்பாடி பூ
எனது தந்தையார் 1963ம் ஆண்டு தெ6 ஆலயத்தில் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தமாடி சந்நிதியைச் சேவித்ததாகவும், அடுத்தவருட எனக்கு ரீஆண்டாள் எனப் பெயர் வைத் ஆண்டாள்’ என்று என்னை அவர் கூப்பிடு ஞாபகம் வரும் போலும். தந்தையார் மாறாத ப பெண் ஆழ்வாரான பூரீ ஆண்டாள் பெயரை ஒ அவருக்கிருந்த பக்தியை எடுத்துக்காட்டுகின்
கடைக்குட்டியானபடியால் மிகவும் செலி நியமங்களில் எதுவித சலுகையும் கிடையாது. பூர்த்திய்ானது. தாய்நாட்டிலே தொழில் கிடைத் கனடா செல்லவேண்டிய சந்தர்ப்பம், ஏற்பட்டது. சந்தர்ப்பம் கிட்டாவிட்டாலும், கடிதமூலமும், ெ என் குழந்தைகள் கருவில் உருவானதும். முன் பிறக்கும் என்றும் என்ன பெயர் வைக்கவேண்( கருவிலிருக்கும்போதே ரீரங்கனி, றிரங்கன் என என்னை என்றுமே அரங்கனையும், தன்னையுட கருவுற்ற காலத்தில் நோயால் அவஸ்தை ஜெபம்செய்து அந்நோயை உடனடியாகக் குண இ.தென்ன கடும் வருத்தம் சடுதியில் குண என்றென்றும் மறக்கமுடியாதது. என் வாழ்வின் உருகவேண்டியதாகவே இருக்கின்றேன். அவ காட்டிய ஆன்மீக வழி ஒழுகி, நான் இருக்கும் செய்வதே என இந்நூலில் திடசங்கல்ப்பம் ெ
ஆயர்பாடி பூரீஆண்டாள்.பா
S60 LT.
ତ୍ରିଂ அருமறை முதல்வன
dò
கருமுகில் வண்ணன்
திருமகள் தலைவை 9 இருபத முளரிகள்
Q ܛܰܔܡܕ݇ இNஅ. — 6)))6ს6]
)

மஜெயம் 6ir siL96OLD
நீஆணர்டாள் -
ர் இந்திய யாத்திரை செய்தபோது ரீரங்கன் எழுந்ததும் முன்னால் உள்ள பூரீ ஆண்டாள் ம் நான் பிறந்தபோது அதன் நினைவாக தாகவும் அடிக்கடி கூறுவார். ‘ஆண்டாள் ம்போதெல்லாம் அந்நிகழ்ச்சியே அவருக்கு க்தி செய்துவந்த பன்னிரு ஆழ்வார்களுள்ளும் ரு பிள்ளைக்குச் சூட்டியது ஆழ்வார்கள்மேல் Dġbl.
)லமாக வளர்க்கப்பட்டேன். ஆனால் இயம, கல்விவாழ்க்கை, சர்வகலாசாலைப் படிப்புடன் தும், அதைவிட்டு திருமணபந்தம் காரணமாக
அதன்பின்னர் நேரடியாக அவருடன் பழகும் தாலைபேசி மூலமும் தொடர்பு கொள்வோம். கூட்டியே என்ன குழந்தை என்றும், எப்போது டும் எனவும் கூறிவிடுவார். எனது பிள்ளைகள் ாபன அவர் இட்ட பெயர்களாகும். இதன்மூலம் ம் மறக்கமுடியாதவாறு செய்துவிட்டார். நான் ப்பட்டபோது அதனைக் கேள்விப்பட்டதும் ாப்படுத்தியதும், வைத்தியசாலை டாக்டர்களே மாகிய அதிசயம் என்று வியந்ததும் நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவரை நினைத்து ருக்கு செய்யக்கூடிய ஒரே கைமாறு அவர்
இடத்தில் எனது தந்தையாரின் பணிகளைச் சய்கின்றேன்.
ன ஆழிமாயனை “ଓ୯();
ரனக் கமலக் கண்ணனை
ன தேவ தேவனை இறைஞ்சி ஏத்துவாம். ரிபாரதக் கடவுள் வாழ்த்து <මෙ_\(!

Page 74
− ஒம் ரீ
மறைந்த மேதை
அன்னார், ஆயர்பாடியென நாமம் பூண்டார் அறவழிநின் றெமையெலாம் ஆதரித்தா கறையினை அகற்றவே, கலியினைத் து உலகினைத் துறக்காது உயர்வினை ஆ வழி வகுத்தார். நூறினை எய்துவார் நூலினைப் பெய் நுட்பமெலாம் சொல்லுவார் என்றெலாம் எண்ணினோம்
ஒன்பது பத்திலே உயர்வெலாம் பெற்று மன்பதை வாழ வழியெலாம் வகுத்தென துன்பத்தை அறுக்கவே துணைசெய்த
ஜெபமெலாம் ராம நாமம் நினைவெலாம் ராம காதை உளமெலாம் உயர்வுச் சிந்தை உயிர்மூச்செலாம் அவனே என்றும். இத்தனை வாழ்வுக் கோலம் இணையற வாழ்ந்து காட்டி இயம்புக இறைவன் நாமம் என்றெமை வாழ வைத்தார்.
உற்றோரும் மற்றோரும் உளம் வெது உயர்பண்பு உலகநீதி அத்தனையும் த அனைவரையும் அதைப்போல ஒழுகச் சென்றாரே என்தந்தை சீர்கொண்ட ம
அவர் வாழ்ந்த நெடுங்காலம் எமை வாழ வைத்தார் உவர் உப்பு இலாத உயர் மண்ணில் எமையெலாம் ஊற வைத்தார் கறைகொண்ட நெஞ்சமெலாம் களைந் கமலேசன் எண்ணத்தில் கனிந்து நின் காலனின் வருகைக்கு காத்திருந்த மா ஒலம் வேண்டாம் என்று உயிர்பிரிந்த அன்னாரின் வாழ் ஓர் அணைக்கட்டு ஆத்மபலம் அறிவுச்சோலை
"நல்லோர் சொல்லாலும் அன்னாரின் ஆத்மா சாந்திெ
- கனகரத்தினம் தவபாலன் - (சிற்றமச

ராமஜெயம்
என் பெரியதந்தை
ரத்தவே அடையவே
குவார்
Frj.
ம்ப நான்காத்து சொல்லி மேதை.
Sl
ர்றார்
மேதை ார் அன்றொருநாள்
ருவர் மடிந்தால் நாம் அவரை
சிந்தையாலும் தொழுதெழுவோம்”
பற எல்லோரும் பிரார்த்திப்போமாக.
கன்)
67

Page 75
UNDERSTAND
- S. M. M.
Rtrd. Statio
The demise of my respected frien Mylvaganam has not only taken away fr mystic who constituted the musical hand symphony in such a way that the WHC wonderful. The residents of Alponso Avenu when he took residence here from 1993. Alponso Avenue, Dehiwela and it was a g his and his spirituality.
He made us to understand that a cult is found sweetness and truth. He exposed showed us the way to be 'IN AND OUT'. and still be "OUT" with ALMIGHTY GOD.
I remember very well his of repeate THE PARCHMENT IS NOT SWEET, BUT tell us that his mystical experience cons. awareness into the region of super conscio a sense of expansion.
All of us are thankful to Almighty Go to live up to a ripe old age 90 years, thus im with him. He was an institution rarely fou others who understood him should be in good men and women.
Almighty God in his wisdom has ta experience in this worldly life and in his necessary to all us today.
He took away from us the misery of ou He showed us by his practice that Go He expressed in unmistaken terms th His life was a beacon light to all of us our minds. He showed us how to live a family life correct path to reach God. Let Almighty grant him MODCHAM.
S. M. M. Mohideen Aponso Avenue, Dehiwela.

NG OF A FRIEND
Mohideen —
Suptd., CGR
d, philosopher and guide Ayarpadi V. T. om our midst a rare personality but also a of God and contributed his note in such a LE* becomes a harmony and a symphony e, Dehiwela came under his unique influence He shifted his Ashramam from Tellipalai to reat opportunity for all of us to understand
ured soul is felt when met and in that person to all of us his unique experience in life. He Dne could live in the turmoil of a family life
d saying that, 'SUGAR WHEN WRITE ON WHEN TASTED IS IT SWEET. He used to sts in the penetration of consciousness of usness of cosmic awareness and brings with
bd for having permitted our respected friend parting us the great opportunity to associate nd these days in our midst. His friends and a position to make him live in the hearts of
ken away from us a good soul, whose rich pursuits in the religious field are absolutely
Lr minds.
loves a man who smiles always. ut enimity develops enmity. o cast away all immoral thoughts from
in this world and still how to be on the

Page 76
திவ்விய பாகவத பக் றிவேதமயில்வாக கதாப்பீரசங்க நிகழ்ச்சி
குறிப்பு : ஐயா அவர்களின் கோவையாய்க்
மட்டுமே இதுவாகும். இதற்கு { அறிய வருகிறது. அவை பற்றிய
1961 - 16.04.61 - 30.04.61 வரை 15 நாட்க
சந்நிதிதானத்தில்
பூரீமத் கம்பராமாயண
1962 - 05.02.62 மாவிட்டபுரம் மடத்தடி, பூ ‘பூரீமந் நாராயண அவ
- 12.12.62--21.12.62 வரை 10 நாட்க 'திரு அவதாரம் தொட
பூரீராமாயண கதாப்பிர
1964 - 10.05.64 - 21.05.64 வரை 10 நாட்
கோயிலில்
'திரு அவதாரம் தொட
பூரீராமாயண கதாகால
1967 - 18.08.67 புதுவிளாங்குளம் அரசடி, ‘சிறுத்தொண்ட நாயன
1968 - 09.08.68 வவுனியா பேயாடிகூழாங்
திரெளபதை சபதம்’ - 27.06.68 யாழ் கோட்டை, பூரீ முன
‘சிவனும் சீவனும்
- 09.09.68 - 18.09.68 வரை 10 நாட்
'திரு அவதாரம் தொட
பூரீராமாயண கதாகால
69

ந திலகம் ஆழ்வார் னம் சுவாமிகளின் அட்டவணைச் சுருக்கம்
ாணப்படும் துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பு மேலும் பல நிகழ்ச்சிகளை செய்ததாகவும்
விபரங்கள் கிடைக்கவில்லை.
கள் மாவிட்டபுரம் மடத்தடி, பூரீகாளியம்பாள்
கதாப்பிரசங்கம்’
ரீகாளியம்பாள் சந்நிதிதானத்தில்
தார பெருமைகள்’
கள் இணுவில் சிவகாமியம்மன் ஆலயத்தில் டக்கம் பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான சங்கம்’
கள் முரசுமோட்டை பூநீசுப்பிரமணியசுவாமி
டக்கம் பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான ட்சேபம்
சித்திவிநாயகர் சிவன்கோவில் ார் சரித்திரம்"
குளம் பூரீ நாகபூசணி அம்மாள் கோயில்
ரீஸ்வரன் தேவஸ்தானம்
கள் கொடிகாமம் உசண் கந்தசாமி கோவிலில்
டக்கம் பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான ட்சேபம்

Page 77
1969
1973
1974
24.01.69 - 26.01.69 வரை 03 நாட் * யூரீ பார்வதி தவநிலையும், * ‘அடியார் வேண்டுதலும் பூரீ
* “அரிதிருமுருகன் அருள்த
மகிமைகளும்
27.04.69 முளாய் சித்திவிநாயகர் அ “அருள்தரும் விநாயகர் திரு 25.05.69 உசன் கந்தசாமி கோவில 'திருக்கைலாசமும் இராவே 24.05.69 சுழிபுரம் பறாளாய் முருக "வள்ளி திருமண திருவி6ை 02.07.69 - 11.07.69 வரை 10 நாட்க
'திருவவதாரம் தொடக்கம் 26.08.69 புது விளங்குளம் சிவன் 'நந்தனார் சரித்திரம்’ 29.10.69-07.169 வரை 10 நாட் "பன்னிரு ஆழ்வார் திருப்பூ 24.11.69 - 05.12.69 வரை 12 நாட சிவானந்த நிலையத்தில்
பூரீமத் பாகவத உபந்நியாச
03.07.73 மற்றும் 04.03.1973 யாழ் ( * மார்க்கண்டேயர் தபசுநிலை * எண்ணுவார் நெஞ்சில் நண 28.12.73 வண்ணார்பண்ணை சாந்
கணபதி கடாட்சம்'
04.01.74 வண்ணை பூரீ வெங்கே "ஓங்கி உலகளந்த உத்தமன் 25.02.74.06.03.1974, 10 நாட்கள் ெ
பூரீ ராமாயணம்

கள் கொடிகாமம் உசன் கந்தசாமி கோவிலில் திருக்கல்யாணமும்’
முருகன் திருஅவதாரமும்
ரும் முருகன் கல்யாண வைபவங்களும்
பூலயத்தில்
வருள் மகிமை
'ଗାଁନ୍ତି।
ணஸ்வரன் தவவலிமையும்’ முர்த்தி கோவிலில்
Tuum 6'
பூரீசீதாராம சர்வயோக பட்டாபிஷேகம் வரை கோவில்
கள் இல. 01, 57வது ஒழுங்கையில் சை செய்து வழிபடல்
ட்கள் வெள்ளவத்தை சைவமங்கையர் கழக
b'
ர்ணுவான் ஈசன்’
தையர் மடம் பூரீ கற்பக விநாயகர் கோவில்
உச வரதராஜப் பெருமாள் கோயில்
பான்னாலை பூரீ வரதராஜப்பெருமாள் ஆலயம்

Page 78
1975
1978
1980
1984
1987
1992
1993
25.1274 கீரிமலை பூரீமந் நாராயன
"கிருஷ்ண பரமாத்மா6 25.12.74 வண்ணை பூநீவெங்கடே ‘யூரீ ஆழ்வார்கள் அரு
15.05.75 -24.05.75, 10 நாட்கள் இ
ஆலயம்
'திரு அவதாரம் தொடக்கம் பூரீராமாயண கதாகாலட்சபம்
06.04.78 - 16.04.78 வரை 11 நாட்
'திரு அவதாரம் தொடக்கம் பூரீராமாயண கதாகாலேட்சே
20.02.80 - 01.03.80 வரை 11 நா
ஆலயத்தில்
'திரு அவதாரம் தொடக்கம் பூரீராமாயண கதாகாலேட்சே
17.02.84 மாவிட்டபுரம் ஆயர்பாடி
23.09.87 - 02.10.87 வரை 10 நாட்க
தேவஸ்தானம்
'திரு அவதாரம் தொடக்கம் பூரீராமாயண கதாகாலட்சேப
21.06.92 - 01.08.92 வரை 40 நா ஆலயம்
திரு அவதாரம் தொடக்கம் பூரீராமாயண் கதாகாலட்சேப
15.06.93 -03.07.93 வரை 19 நாட்க
தேவஸ்தானம்
'திரு அவதாரம் தொடக்கம் பூரீராமாயண கதாகாலட்சேப
74

ண சுவாமி தேவஸ்தானம் வின் திருஅவதாரம் ச வரதராஜப்பெருமாள் தேவஸ்தானம்
ளிய திருப்பாசுர ராமாயண மகிமைகள்’
யக்கச்சி பூரீ வெங்கடேச வரதராஜபெருமாள்
பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான
கள் மாவிட்டபுரம் மடத்தடி, பூரீகாளியம்பாள்
g பட்டாபிஷேகம் வரைக்குமான ui”
ட்கள் ஓமந்தை பூரீ வீரகத்தி பிள்ளையார்
பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான ui”
பூரீ ஆழ்வார்கள் ஆச்சிரமத் திறப்புவிழா
கள் கோண்டாவில் கிழக்கு பூரீவல்லிபுரநாதன்
பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான is'
ாட்கள் கொட்டாஞ்சேனை ஹரேகிருஷ்ணா
பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான
கள் தெஹிவளை, நெடுமால் பூரீ மகாவிஷ்ணு
பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான is'

Page 79
1994
1995
1996
1997
1998
20.04.94 நாரகெண்பிட்டி, தொடர்
பூரீராம திரு அவதாரம்
29.03.95 --- 09.04.95 வரை 10 நா சித்திவிநாயகப் பெருமான் ஆல
'திரு அவதாரம் தொடக்க பூரீராமாயண கதாகாலட்சே
19.03.96 --- 28.03.96 6) J68oy 10 j5
தேவஸ்தானம்
திரு அவதாரம் தொடக்க பூரீராமாயண கதாகாலட்சே
13.04.97 - 16.04.97 வரை 10 நாட் 'திரு அவதாரம் தொடக்க பூரீராமாயண கதாகாலட்சே
17.08.97 - 25.08.97 வரை 09 நாட்
* பூரீமத் பாகவதம்’ * யூரீமத் பகவத்கீதை' * பூரீஆழ்வார்களின் தி * ‘கிருஷ்ணா அவதார
26.04.98 தெஹிவளை, நெடுமால் 米 பூரீராம அவதாரம் உ * பூரீ மஹாவிஷ்ணுவிற் * அடியார்களுக்குத் தி
20.08.98 -24.0898 வரை 05 நாட் அவசர சிகிச்சை பிரிவு
"வைகுந்தம் ஏகும் தவநில இரவுபகல் பூரீராமநாம ஜெ 25.08.98 கல்கிசை பூரீ உருத்தி பஞ்சபூதங்களுடன் இரண்டறக் 23.09.98 அப்போன்சா அவன்யூ 31ம் நாள் திருப்பாசுராஞ்ச
Idiri i

மாடி நலன்புரி சங்க மண்டபம்
ட்கள் வவுனியா உக்கிழாங்குளம் அருள்மிகு யம்
ம் பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான பம்’
ாட்கள் மாத்தளை பூரீகதிர்வேலாயுத சுவாமி
ம் பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான
ħ'
கள் திருகோணமலை திருவள்ளுவர் மண்டபம் ம் பூரீ பட்டாபிஷேகம் வரைக்குமான
Y
கள் திருகோணமலை திருவள்ளுவர் மண்டபம்
ருவாய்மொழி
) பூரீ மகாவிஷ்ணு தேவஸ்தானம் -பந்நியாசம்’
கு திரு அபிஷேகம்
ருஅன்னம்
கள் வெள்ளவத்தை டெல்மன் வைத்தியசாலை
*டை அடியார்கள் வெளியிலிருந்து
Lh.
ாண் அகம் விஷ்ணுகணங்கள் அழைத்துவர

Page 80
1984ல் தெல்லிப்பளை ஆயர்பாடி ஆழ்வா அதிகாலை 8.00 மணி அடியார்க ஈடுபட்டுக்கொண்
W. * ஆச்சிரமத்தில் பூரீராம நவமி திருநாளில் முடி சூட்டுபவர் அன்னாரின் மூன்றாவது
 

ர்கள் ஆ :ள் முன் ஆயத்த வேலைகளில் டிருக்கிறார்கள். 'E
பூரீராம பட்டாபிஷேகம் செய்வித்தல்.
புதல்வன் பூரீ கிருஷ்ணன் அவர்கள்.

Page 81
மில்க்வைற் அதிபர் திரு.கனகராசா, சட்டத்
கற்பூராஞ்சலி
醬 திறப்பு விழாவிற்கு வருகைதந்த தெல்லி வழிபாடு செ
 
 

ܩܠܵܐ ܙ
தரணி திரு. பாலசுப்பிரமணியம் ஆகியோர் பெறுகிறார்கள்.
ப்பளை துர்க்கா துரந்தரி அம்மையார்
ய்கிறார்கள்.

Page 82
முரசுமோட்டை பூரீ சுப்பிரமணிய சுவாமி
பூர்த்தி நாளி
ஆச்சிரம திறப்புவிழா முடிவுற்றதும் ஆயர்
 
 

-
கோயிலில் பூரீ ராமாயண கதாப்பிரசங்க ன் போது.
பாடி ஆழ்வார் ஆசியுரை வழங்குகிறார்கள்.

Page 83
1997 ல் அம்மாவும் ஐயாவும்.1992 ல் கொட்டாஞ்சேனை சர்வதேச கிருஷ்ண பக்தி
கழகத்தில் ராமாயண கதாப்பிரசங்கம் செய்தபோது,
 


Page 84
1974 ல் பொன்னாலை பூரீ வரதராஜ
கதாப்பிரசங்கம்
ஆயர்பாடி ஆழ்வார்கள் ஆச்சிரமத்தி பட்டாபிஷேகம் செய்தபின் திரு. பொன்னாலை திரு. நாராய
 
 

பெருமாள் ஆலயத்தில் பூரீராமாயண
செய்தபோது,
ல் பூரீராம நவமி திருநாளில் பூரீராம
M.K மயில்வாகனம் முதலாளி ணதாசன் ஆகியோருடன்.

Page 85
1997 ல் உடல்நலம் குன்றியபோதும் இ தீருவேன் என்ற பிரயாசத்துடன் திருகோ
செய்
 

றுதிமூச்சுவரை பூரீராமசேவை செய்தே
ணமலையில் பூரீராமாயண கதாப்பிரசங்கம்
தல்,

Page 86
1998 ல் ஏப்பிரல் இந்த உடலுடன் பங்குகொ கூறி இயலாத நிலையிலும் பூரீராம பட்டா
i
1992 ல் கொழும்பில் முன்னாள் அமைச்சர்ச திரு. சாம்பசிவ சரவணபவி
 
 

"ள்ளும் இறுதி பூரீராம நவமி இதுவே என பிஷேகம் செய்து அருளுரை நிகழ்த்தல்.
ள் திரு. PP தேவராஜ் M. S செல்லச்சாமி, குருக்கள் ஆகியோருடன்.

Page 87
1997 ல் உடல் நலம் குன்றிய நிலையில் அவர்களு
ஆச்சிரமத்தில் யாக பூஜையின் போ சோதிட வாரிசான திரு.த. ம.
 

ட திதி
திருகோணமலை மாவ
நடன்.
ாரின்
ம் ஒதுபவர் அன்ன
து மந்திர ராமகிரு
விழ்னன் அவர்கள்.

Page 88

Tsungsoffisies, powoğrī£30 uiiis sĩ (Follo slogooooo sosasun sowosoɛ ɖoɖoɖɩŋŋŋŋŋ ŋuɖe '''Fırıs) qilmines) qu'offen sırılsae lucsmıdııııısılossmınıúsi mti Tumoistos@gift, wuŋ sƆŋg 1@ung sysobĩ sửsofis ympossui stopus susțiisis prise,${off}& ollastīılae Isī£ qıvımışșos, pieņıstofsso sĩ tını mae

Page 89
ஆச்சிரமத்தில் வலம்புரி சங்குகளுக்கு பூசை செய்தல்,
அன்னதான மடத்துக்கு அப்பால் இருந்து பூரீராமஜெபம் செய்தல்,
 
 


Page 90
ஜசே
தெகிவளை விஷ்ணு ஆலய ஒதுக்குப் பூரீ ராம தியான
தெகிவளை மகாவிஷ்ணு ஆலயத்தில் கோ
பூரீ ராமாயண கதாப்பிரச
 
 

புறத்தில் அடியார்களுடன் சேர்ந்து ம் செய்தல்.
வில் பாலஸ்தாபனம் செய்திருந்தபோது ங்கம் செய்யும் காட்சி,

Page 91
1998 ல் ஏப்பிரல் தெகிவளை விஷ்ணு கோவிலில் எனது இறுதி ே
பிரசங்கம் இது என தான் அன்பர்களுக்கு அறிவித்து இயலாத நிலையிலும் பூரீராம திருஅவதாரம் சொல்லும் போதுஅருகில் நிற்பவர் மூத்த மகன் திரு. கோபாலகிருஷ்ணன்,
ஆயர்பாடி ஆழ்வார்கள் ஆச்சிரமத்தில் பெற்றோல்மக்ஸ் வெளிச்சத்தில் பூரீராம நவமி திருநாளில்பூரீராம பட்டாபிஷேகம் செய்து திருமுடியை எல்லோர் தலையிலும் சூட்ட முன் தன்
தலையிலும் சூட்டுதல்,
 
 
 
 
 


Page 92
ரீரா
ஆயர்பாடி கு
வேலுப்பிள்ளை - தம்பு தம்பு - மாணிக்கம்
இளையதம்பி இளையதம்பி - மாரிமுத்து
தம்பு . மயில்வாகனம் மயில்வாகனம் - இலட்சுமி
கந்தையா தியாகராசா தியாகராசா சறோஜினிதேவி
மயில்வாகனம் கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் நவமணி
மயில்வாகனம் ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன் கமலாதேவி
மயில்வாகனம் பூரீ கிருஷ்ணன் பூரீகிருஷ்ணன் கலாவதி

மஜெயம் ரும்ப விருட்சம்
மயில்வாகனம்
கதிராசிப்பிள்ளை கந்தையா
சரஸ்வதி
வீரசிங்கம் வைத்தியலிங்கம் இலட்சுமி தெய்வானைப்பிள்ளை வேலாயுதம்
ஈறோஜினிதேவி கோபாலகிருஷ்ணன் ாமகிருஷ்ணன் ரீ கிருஷ்ணன் ாதாதேவி கிருஷ்ணதாசன் ருக்குமணிதேவி ரீ ஆண்டாள்
சோதை
மைதிலி ாரணி
ஜயராமன்
கிருஷ்ணி
ந்தகுமாரன் ாருஹாசினி
73

Page 93
மாணிக்கம் அன்னலிங்கம் 60Ꭰ!
அன்னலிங்கம் ராதாதேவி ஜா
விஜயரட்ணம் நடராசா வே நடராசா ருக்குமணிதேவி பூரீ
மயில்வாகனம் கிருஷ்ணதாசன் JT
கிருஷ்ணதாசன் சுசீலா
இரத்தினம் பாஸ்கரன் பூரீ பாஸ்கரன் பூரீஆண்டாள் பூரி
3ද 3ද 3:
ரீராமெ
மங்க
பல்
பூரீராமச்சந்திரனுக்கு ஐ திவ்விய முகச்சந்திரனு
அணுப மாரா பிராமனுக்கு ம6 ஈராறு நாமனுக்கு இர о-те
கொண்டல் மணிவன கோசலை குமாரனுக்கு புண்டரீகத் தாளனுக்கு தண்டுளவத் தோளனு
கோவை மணிவாயனு கோதண்டக்கையனுக் தாவுகுண சீலனுக்குச் தேவர் அநுகூலனுக்கு
பகிரண்ட நாதனுக்கு பரதனாம் அன்பனுக்கு சகல உல்லாசனுக்குத் அகிலவிலாசனுக்கு அ

வதேகி ானகி
வங்கடரமணன்
ரங்கரமணன்
மதாசன்
ரங்கனி
ரங்கராஜன்
k >k
ஜெயம்
களம்
லவி
ஐயமங்களம் - நல்ல
லுக்கு சுபமங்களம்
ல்லவி
ர்ணுபரந்தாமனுக்கு
விகுல சோமனுக்கு (யூரீராம) prub
ர்ணனுக்குக் கண்ணனுக்கு மங்களம் த வீரனுக்கு மங்களம் கு பூச்சக்கிர தாளனுக்குத் க்கு சானகிம ணாளனுக்கு. (யூரீராம)
க்கு மாயனுக்கு மங்களம் கு மெய்யனுக்கு மங்களம்
சத்திய விலாசனுக்குத் தத் தசரதன் பாலணுக்கு (யூரீராம)
வேதனுக்கு மங்களம் த முன்பணுக்கு மங்களம்
தருமந்தகாசனுக்கு
யோத்தியா வாசனுக்கு (யூரீராம)
4.

Page 94
ஓம் ரீ
நன்றி ந
எங்கள் குடும்பத்தலைவர் ஆயர்பாடி எம்மைவிட்டுப் பிரிந்து வானகம் ஏகியபோ உற்றார், உறவினர், நண்பர்கள், தொலைபே போன்ற சகல அன்பு உள்ளங்களுக்கும்,
ஐயாவின் இறுதிக்காலத்தில் அவருடன் அடியார்கள், வாகன உதவி அளித்த சீமா காத்திருக்கிறோம் என்று திரண்டுவந்து உ
ஐயாவின் வைகுந்ததிலகம் நூலுக்கு அளித்தோர்க்கும், அந்நூலை திறம்பட கண ஐயாவின் நிழற்பிரதியை வர்ணத்தில் அை ஆக்கிய அச்சாலையினருக்கும்,
மற்றும் இதனுடன் தொடர்புடைய யா
எமது உளங்கனிந்த மனப்பூர்வமான நன் அவர்கள் சொல்வதுபோன்று ரீசீதாராம
யாவரையும் இரட்சித்துக் காப்பாற்றும். எங் யாவுமே ரீ சீதாராம திருப்பாதங்களுக்கு
ஓம் பூர்
28 A, Aponso Avenue, Dehiwela
Sri Lanka
நிரந்தர முகவரி :- "ஆயர்பாடி, மாவிட்ட
ரகுபதி ராகவ ராஜாராம் - ராம ராம ஜெய ராஜாராம் - ஓம் ரீராம் ஜெயராம் ஜெய
 

ராமஜெயம்
வில்கின்றோம்
ஆழ்வார். பரீ.வே.த.மயில்வாகனம் அவர்கள் து பல வழிகளாலும் எமக்குதவிய அயலார், சிமூலமும், தந்திமூலமாகவும் ஆறுதல் கூறியோர்
இருந்து சேவை செய்த அன்பர்கள், சிஷயர்கள், ன்கள், எது தேவையோ அதைச் செய்து தரக் தவிபுரிந்த பெருந்தகைகளுக்கும்,
சிறந்த பல கட்டுரைகளை உளமகிழ்வுடன் னி வடிவமைப்புச் செய்த அன்புள்ளங்களுக்கும், மத்த திறனாளற்கும், அச்சேற்றி புத்தக உரு
Tவருக்கும்,
1றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ஐயா திருப்பாதங்கள் உங்களையும், எங்களையும், பகள் எண்ணங்கள் செயல்கள், உடைமைகள்
அர்ப்பணமாகட்டும். -
TITLDGOggu JLD
இங்ங்னம்
திருமதி லட்சுமி மயில்வாகனம் பிள்ளைகள் - மருமக்கள்
பேரப்பிள்ளைகள்
|
பதீதபாவன சீதாராம்
புரம், தெல்லிப்பளை P0
-
ராம ராம ஜெய சீதாராம் உ ஜெயராம்.