கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமிகோயில் புனரவர்த்தன மகா கும்பாபிஷேக மலர் 1999

Page 1
@S苓王之
زم_esenۓ کے Su-1 PA
ஆரையம்பதி நீ
புனராவர்த்தன மகா கும்
 

கந்தசுவாமிகோயில் பாபிஷேக மலர் -1999

Page 2


Page 3
முகப்பு
பக்கம்
38
49
53
53
15
59
59
60
60
62
62
62
81
பிழை தி
3வது பாடல் பின்வருமாறு அமைய
**நாள் என் செயும், வினைதூன் எ6 கோள் என்செயும், கொடுங்க்ள்ந்று எ தாளும், சிலம்பும் சதங்கையும்" தண்ை தோளும் கடம்பும் எனக்கு முன்னேவ
anus
வலம் - 1 இடம் - 6
இடம் 23/24
இடம் : 28/29
வலது 16
இடம் ; 30
6/6) ub ; 08
இடம் : 41
வலம் : 11
இடம் 10
இடம் 10
வலது 5152
வலம் 07/98
பிழை
1946 ஆரைப்பற்றைத் தெரு மச்
காசிநாத விதானை என்பன போரதீவிலிருந்து.
காசிநாத விதானையாரின் ! அவரது மருமகன் இளையத
காட்டுமாவடிப் புள்ளயன்
முதற் காலத்தில்
GOoput Lubu SM6)
உற்பத்திக் காலங்கின்
குடியரசன்
தவறிஸ்
வரக் தவறிஸ்

ருத்தம்
வேண்டும்
ன் செயும், எனை நாடி வந்த ன் செயும், குமரேசர் இரு டயும் , சண்முகமும் ந்து தோன்றிடிலே
கள்
பர்
பின் நம்பி
முத்து;-
திருத்தம்
卫949 விரமாணிக்கம் குடி மக்கள்
காசிநாத விதானையாரின் தந்தையார்பரிகாரி மாரிமுத்து (மாரியார்) என்பவர் அன்னமலை
யில் இருந்து.
பரிகாரி மாரிமுத்து (மாரியார்) வின் பின் அவரது மூத்த மகன் காசிநாத விதானையும் அவரைத் தொடர்ந்து அவரது சகோதரன் மா. இளையதம்பியும்
அங்காலப்பக்கத்துப் புள்ளாயஸ்
முற்காலத்தில்
ஆரையம்பதிக்
உற்பத்திக் காலங்களின்
வெடியரசன்
தவாரரீஸ்
ஹக் த வாரீஸ்
மண்ணின் மைந்தர்கள் அடங்கிய அட்டவணை
1815 தொடக்கம் 1870 வரையுள்ள காலப் பகுதியில் சித்த வைத்தியத்தில் பெயர் பெற்று விளங்கியவர். இவர் முஸ்லிம் மக்கள் மத்தியி லும். பிரபல்யம் பெற்றவர். இன்றும் காத் தான்குடி, காங்கேயனோடைப் பகுதி மக்களி னால் நினைவு கூரப்படுபவர். பத்திரகாளி அம்மன் கோயில் தாபகர். காசிநாத விதானை இளையதம்பி, சீனித்தம்பியர் ஆகியோரது தந்தையார். இவரது மறைவிற்குப் பின்னர் இவரது மந்திர வைத்திய ஏடுகளில் சில சின் னான் பரிகாரியார், பொன்னம் பரிகாரியார் தம்பிராசா ஆகியோர் வசம் போய் சேர்ந்து விட்டன. காலத்தால் முப்திய பரிகாரியாரும் இவரே.

Page 4


Page 5
ஆை ரீகந்தசுவாமி ஆலய
(19
ஆரையூர்
அருவமும் உருவமாகி அனா பிரமமாய் நின்றசோதி பிழம் கருணைகூர் முகங்கள் ஆறும் ஒருதிருமுருகன் வந்தாங்(கு)
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமு வெஞ்சமரில் அஞ்சேல் என ஒருக்கால் நினைக்கில் இருக் முருகா என்றோதுவார் முனர்
நாள்என் செயும் வினைதானர் கோள் எனர் செயும் கொடுங்கூ குமரேசர் இருதாளும் சிலம்பும் எனக்கு முனினே வந்து தோன
ଘdi{
ஆரையம்பதி பூாரீ றுநீ கண்ணகி அம்மன் கோயி
If IT6 ܫ
15.O

(IIIîII மஹாகும்பாபிஷேக மலர் 999)
க் கந்தன்
நியாய்ப் Uலவாய் ஒன்றாய் Uதோர் மேனியாகி
கரங்கள் பன்னிரண்டும் கொண்டு உதித்தனன் உலகம் உப்ய.
- கந்தபுராணம்.
ம் தோன்றும் வேல்தோன்றும். நெஞ்சில் காலும் தோன்றும்
- திருமுருகாற்றுப்படை
எனிசையும் எனை நாடிவந்த ற்று எனிசையும்
சதங்கையும் தண்டையும் fჩეწყ20869
- கந்தரலங்காரம்
ளியீடு
கந்தசுவாமி கோயில்,
ல், றுநீ காளி அம்மன் கோயில் D6F6D.
5.1999

Page 6
வெளியீடு ஆரையம்பதி நீ கந்தசுவாமி கோயில் ஜீ கண்ணகி அம்மன் கோயில் ஜீ காளியம்மன் கோயில் பரிபாலனசபை.
லேசர் அச்சமைப்பு மா.லோகநாதன், அக்கரைப்பற்று.
அச்சகம் மல்ட்ர் விப்செற் அச்சகம்,
அச்சகத் தொடர்பு வி.பி.சிவப்பிரகாசம்,அக்கரைப்பற்று
மலர்த் தொகுப்பு இரா.நாகலிங்கம் (அன்புமணி)
பக்கங்கள் ~ 120
jás, - I. ooo
வெளியீட்டுத்தேதி
S.O.5.99
fire spr 100
1.4.99ல் நடைபெற்ற ஆரையம்பதி நீ கந்தசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேக நினைவாக 10.05.99ல் இம்மலர் வெளியிடப்பட்டத.
O1
றுநீ கந்தசு6
திரு.சு.பரசுராம
02. திரு.ம.மகாலிங்
O3
O4
திரு.க.சிவனே திரு.சி.சந்திரே
05. திரு.சி.பொன்ன
06. திரு.த.தெட்சை உறுப்பினர்கள்
O7.
O8.
O9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
01.
O2.
O3.
O6.
O8.
10.
12.
14.
திரு.எம்.எஸ்.இ திரு.க.குகாநிதி திரு.சீ.சிவபாத திரு.இ.சிவசுந்த திரு.க.நடராசா
திரு.க.கதிர்காப டாக்டர்.என்.முரு திரு.கா.விநாய திரு.மு.தியாகர திரு.ஆ.பாஸ்கர திரு.ஐ.சிவசுந்த ஓய்வுபெற்ற டா திரு.செ.புள்ளந திரு.சா.கனகரெ திரு.க.சுப்பிரமணி திரு.கோ.இராம திரு.கு.கார்த்திே திரு.கா.மகேஸ் திரு.க.கந்தசாமி திரு.ஆ.பூரணகு திரு.கோ.யுகராக திரு.இ.பத்மநாத திரு.ந.வடிவேல் திரு.ஆ.நாகலிங் திரு.பூமுருகன்
திரு.க.பரமானந் திரு.பூ.புஸ்பராஜ திரு.த.அறிவழக திரு.இ.சோதிநா திரு.ஆசாமித்த
திரு.சு.பரசுராம6 திரு.ம.மகாலிங் திரு.க.சிவனேச
திரு.இரா.நாகலி
திரு.சி.க.பொன் திரு.க.சபாரெட6 திரு.த.மலர்ச்ெ திரு.வி.விவேகா திரு.க.செல்லத்

ஆரையம்பதி ாமி ஆலய நிர்வாக சபை உறுப்பினர்.
ர், தலைவர் -திருவிளங்குடி, மக்கள் பிரதிநிதி கசிவம், செயலாளர் -வீரமாணிக்கம்குடிமக்கள் பிரதிநிதி ாசா,பொருளாளர் -ஆறுகாட்டிகுடி,மக்கள் பிரதிநிதி கரம்,உபதலைவர் அலறித்தேவன்குடி,மக்கள் பிரதிநிதி ம்பலம்,உப-செயலாளர்-புலவனார்குடி, மக்கள் பிரதிநிதி ாமூர்த்தி,மேலதிகசெயலாளர் -பொன்னாச்சிகுடி, 9
ாமச்சந்திரன் -ஆறுகாட்டிகுடி, மக்கள் பிரதிநிதி
- திருவிளங்கு குடி,மக்கள் பிரதிநிதி
சகரம் - வீரமாணிக்கம்குடி, மக்கள் பிரதிநிதி
ரம் - அலறித்தேவன்குடி, மக்கள் பிரதிநிதி
- புலவனார்குடி, மக்கள் பிரதிநிதி
த்நாதன் - பொன்னாச்சிகுடி, மக்கள் பிரதிநிதி
கப்பன் - வங்காளக்குடி, மக்கள் பிரதிநிதி
மூர்த்தி - வங்காளக்குடி, மக்கள் பிரதிநிதி
T子町 - முதலித்தேவன்குடி,மக்கள் பிரதிநிதி
ன், - முதலித்தேவன்குடி, மக்கள் பிரதிநிதி
Jub, - மன்றுளாடிகுடி, மக்கள் பிரதிநிதி
க்டர்.சு.தங்கவடிவேல்- மன்றுளாடிகுடி,மக்கள் பிரதிநிதி
Tuu5tb - பத்தினாச்சிகுடி,மக்கள் பிரதிநிதி
ட்ணம் - பத்தினாச்சிகுடி, மக்கள் பிரதிநிதி
Eயம் - பாலவிக்கிரமசிங்ககுடி, மக்கள் பிரதிநிதி
தாசன் - பாலவிக்கிரமசிங்ககுடி, மக்கள் பிரதிநிதி
கேசு - சம்மானோட்டிகுடி, மக்கள் பிரதிநிதி
வரன் - சம்மானோட்டிகுடி, மக்கள் பிரதிநிதி
- சிறப்புனார்குடி, மக்கள் பிரதிநிதி
UDITÍ - சிறப்புனார்குடி, மக்கள் பிரதிநிதி
FT - குரவர்குடி,மக்கள் பிரதிநிதி
$ன் - குரவர்குடி, மக்கள் பிரதிநிதி
- அருமைத்தேவர்குடி,மக்கள் பிரதிநிதி
கம் - அருமைத்தேவர்குடி, மக்கள் பிரதிநிதி
- கணபதியார்குடி, மக்கள் பிரதிநிதி
தம் - கணபதியார்குடி, மக்கள் பிரதிநிதி
T - பேச்சியம்மன்ஆலயகுடி,மக்கள் பிரதிநிதி
ன் - பேச்சியம்மன்ஆலயகுடி,மக்கள் பிரதிநிதி
560T, - வேளாளர்குடி, மக்கள் பிரதிநிதி
bî - வேளாளர்குடி, மக்கள் பிரதிநிதி
மலர்க்குழு
ா, தலைவர், ஆலயபரிபாலனசபை.
கசிவம், செலயர், ஆலயபரிபாலனசபை. ாசா, பொருளாளர்,ஆலயபரிபாலனசபை.
ங்கம், 05. திரு.கா.நடசாரா ாம்பலம் 07. திரு.க.சொக்கலிங்கம் Itd. 09. திரு.க.அமரசிங்கம் ல்வன் 11. திரு.சி.வாமதேவன்
னந்தமுதலியார் 13. திரு.ஐ.சிவசுந்தரம் ம்பி 15. செல்வி.மா.நேசசவுந்தரி.

Page 7
சிவ அருள்மிகு ஆரையம்பதி முரீ கந்தசுவா
மகா கும்பாபிஷேக சுய
statiLJEKTIL,
கிழக்கு மாகாணத்தின் த:ைநகரமாகவும் சைவமும் தமிழு தெற்கே ஒன்பது 3 கிமீ.தொலைவில் அமைந்துள்ள திருகம் கல்வியும் சீராமத்தின் நடுநாயகமாக் கோயிஷ் கொண்டு எழுந்தருளிப் பக்தர்கள் இப்பிரதேசத்திலேயே அருள்முகர்த்தமாக விளங்கிவரும் பூர் கந்தசுவ வந்ததென்பதை நாம் அறிவோம். தற்போது ஆடியமைப்பிலான நிருவாகத் செங்வேள்பரமனின் அருள்நோக்கினாலும் அன்பர்கள் ஆதரவாளர்கள், L புனருத்தாரன பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளது. அத்தோடு ஏற்க: (வியாழமட்டம் மீது மூன்று தகங்களைக் கொண்ட சிந்திர ஸ்தூபியினையும் அனைவரும் செய்த புண்ணியமே
இவ்வாப்பத்தில் ஆண்டுதோறும் புரட்டாதித் தீங்களில் வர மகோற்சவம் ஆரம்பமாகி திர்த்தோற்சவத்துடன் முடிவடையும் மேலும்தே உற்சவ திருவிழாக்களும் கந்தசஷ்டியுடன் கூடிய சூரன்போர் யாவும் விமா பூசைகளும் திருவாதிரை முஆவியனவும் அதுபுேக்கப்பட்டு வருவது குறி
மூர்த்த ஆலம் ஆகிய விசேஷங்களைத் தன்னகத்தே கொன் நடராஜர், பைரவர், சண்டேசுவரர், நவக்கிரகநாயகர்கள் என்போருக்குத்த வசந்த மண்டபம், நிருத்தமண்டபம், பாகனசாகர் என்பE உட்பிர இங்யோபேத்தின் தொன்மையானது மன்முனை இராசதானியோடும் கோக் சம்பிரதாய சடங்குகள் நடைபெற்று வருவதன் மூலம் குளக்கோட்டன் க
இவ்வாலயத்தின் புண்ராவர்த்தன் பிரதிஷ்டா பகாகும்பாபி:ே அபரபக்தை பிரதம திதியும் அத்த நட்சத்திரமும் சித்தயோகமும் பொரு இடப ஐக்கின சுபமுகூர்த் வேளையில் முத்திறத்து ஆசார முறைகளின்பா நிறைபேற்றி அருள்வெண் எப்பெருமான் திருப்பாதங்களைப் பணிந்து அரியாகாலங்களிலும் அனைவரும் வந்து தரிசித்து இஷ்ட சித்திகளைப் ெ ffiTTiTiii
சாந்தி விழாவாரிய
பங்குனி ஆம் நாள்வெள்ளிக்கிழமை (த53.98 - பிபகல் 4, 00மரிக்கு ஆக
திரவிய கத்தி, திரவியபகப்
LTTTee uTT LMu LLeTTTeeTeuu SCL0SHu0L LLKS LLL LLTssG SLLLeeTTT KTK
இரதோக்கிறோமம்,
பங்குனி 14ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (E33)- காலை 200மணிக்கு ஜி.
கங்காபூசை, மாலை 5.
பரசன்னாபிஷேகம், பூஜை
குப்பயாகசாரப் பிரயே
பங்கு நம் நாள் தங்கட்கிழபுை:039) - கா6ை:00 மணிக்கு பாக
மந்திரஹோமம் மூலமந்த
பங்குனி 15ம் நாள் செவ்வாய்கிழமை (3.03:-காEை EDEரிக்கு பு
அகநோரோங், ரீ
Uigazi 17üJEITEi, L:sérefl:Ill3.I.C3.99) ELE
ஜீபண்தாபனம், 415- 101
பிம்பஸ்தாபனம், நேராமம்,
எண்ணெய்க்காட்பு சாத்து
திரவியதேறாமம், பிம்பகத்து
பங்குனி 15ம் நாள் வியாழக்கிழமை(p:- காலை 5ரமணிக்கு பாக
ஸ்தோந்திர பாராயணம், !
ஆபிரும்பங்கள் வீதிவலம்
நடைபெறும் மங்கதோச
பிஷேகம், மகாலுசுதியேக
pfజీg FTLILE= uణా
 
 

DIJLÈ ாமி ஆவய புனராவர்த்தனப் பிரதிஷ்டா ரசுடர்த்த விஞ்ஞாபனம்.
ம் தழைத்தோங்கி மிளிர்வதுமான மீன்பாடும் தோைடாம் மட்டக்களப்பிற்கு சீருந்தழைத்தோங்கும் ஆரையம்பதி என்றும் அழகிய தமிழ்ப் பழம் பெரும் சினதும் மற்றவர்களினதும் திராப் பழவினைகளையெல்லாம் தீர்த்தருளி ாமி ஆலயம் பல ஆண்டுகளாகத் திருத்தப்படாத நிலையிலே இருந்து ாதமேற்கொண்டுவரும் ஆயபரிபானசபையின் அபராதமுயற்சியினாலும் பக்தர்கள் என்ற முந்தரத்தாரது நிதிப் பங்களிப்பினாலும் இய்யாலயத்தின் வே நியூமானிக்கப்பட்டிருந்த முன்புற இராஜகோபுரத்துக்கான பீடத்தின் ம் நிருமானத்து அழகு பார்க்கவும் எப்பெருமானின் அருங் கூடியுள்ளது நான்
நம் பூரனைக்கு முந்திய பத்து நாட்களில் முதன் நாள் கோடியேற்றத்துடன் மாதம் முதல் மார்கழி மாதம் ககர ஒவ்வொரு பூரனை தினத்திலும் விடேச Fசையாகக் கொண்டாடப்பட்டு வருவதுடன் கார்த்திகை நட்சத்திர பிரத "பிடத்தக்கது
டு விளங்கும் இவ்வா:பத்தின் பரிவாரமூர்த்திகாக விநாயகர் மகாவிஷ்ணு, தனித்தி கோயில்கள் அமைத்தும் கொடித்தம்பம், பு:சீபிடம்,ார்த்தமrடபம், zYuuLLYLS SLuLLTTTLTT u uTuT u uu eLeK SeLeLLLTT TKTLTuTS கொட்டிச்சோலை பூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தோடும் தொடர்புபட்டு ாலத்திற்கு வரையறை வகுக்கமுடியும்
கம்வெருதான் வருஷம்பங்குனிந்திங்கள் 18ம்நாள்(104:பியாழக்கிழமை ந்தி வரும் புண்ணிய நன்நாளில்ே கார ஒத்த தொடக்கம் புரு வரையுள்ள ங் கீழுள்ள விதிமுறைப்படிகளில் இதழ்ட பிரதிஷ்ட மகாகுப்பாபிஷேகத்தி: தீர்மானித்துள்ளதால்கத்தருணமும் அதன் முன்னும் பின்னும் நிகழும் பற்றுய்யுமாறு அன்பாய் வேண்டுகின்றோம்
ால விபரம்
மகாரும்பாபிஷேகம் ாரியார் பேரனம் ஈேேபனிமுதல் கர்மாரம்பம், விநாயகர் வழிபாடு அணுக்கரு,
கணபதி ஹோமம், பேரீதாடனம் TTuTLLTTTTTTLLLl l GLSLLTeTTTu LLLLLLLLYLLLYSTS SaTLTLT LLkuS
சாஹோமம் பந்திரபூஜை வாஸ்ப்து சாந்த, ஆகத்தயக்ரீசம், சிநகரம், 10 மணிக்கு மீருத்தங்கிரதம்ை, அங்குரார்ப்பாணம், ரக்ஷா பந்தனம்,
கடஸ்தாபனம், கலாசுர்ஜனம், ஆண்ஹோமம், பாத்திராஜேநாமம், சம், புஷ்பாஞ்சாபி, தீபாராதனை
பூஜை, ஈக்கின விபசனம் யந்திரபூஜை மாலை 500மணிக்கு யாகபூஜை, ரதச திருநாமதோராமம், தீபாராதனை ாகபூஜை ஹோமம், யந்திரபூஜை மால்ை 500மEக்கு யாகபூஜை ஹோமம்,
LTT த யாகபூஜை, உதயத்தில் சிற்பசாமபாயம், ஆபிஸ்தாபனம்,கோவாசம்,
ரேயுள்ள புதன்கிழமை (310333) அபவேலையில் பந்திர ஸ்தாபனம், தீபாராதனை நண்பகல் 5.00 மணிமுதல் இரவு: மணிவரை பக்தர்கள் தல் தேரோப்பியங்கம் இரவு :மணிக்கு பாகபூஜை விசேட 8. பூர்வ பச்சிடி சந்தானம் தீபாராதனை பூஜை மஹாபூர்ணாகுதியாக விசேட தீபாராதனை நாதாந்சாரிஜேதுங்கா அந்தர்ப்பி வியாழக்கிழமை (0.043) பற்றிர்பாசி ஆானாதிகள் 400 மணிக்கு வருதல், காலை :-113 வரையுள்ன ஆப:ேபண்பிங் மகாரும்பாபிஷேகம் ம்ே, ஸ்தராகுதி எஜமான் அபிஷேகம் பரப்பிராந்தி 12.00 மணிக்கு மகா அ ம்ே, தீபாராதன்ை, பிபூதிப் பிரசாதம், மகாஜன சபா ஆசிர்வாதம், மாத Ecc பூ முருகப் பெருமான் திருக்கலிபானம் திருவிதி நடந்ா.

Page 8
Ol.
3.
O3.
O4.
36.
O6.
ov.
O8.
Զ9,
d.
O2.
O4.
ov.
குறிப்பு: பக்தர்களின் சாலையில் பெற்றுக்
பிரதிஷ்
கிளியாகலபமணி பிரதிஷ்டா பூஷணம் சிவறிதி
(யாழ்குரம்பசிட்டிமாரியம்மாள் , மட்- சித்தான
சிவறி முத்துக்கமார சுவாமிக் குருக்கள் (ஆல சிவறி.சி.ஆனந்தவிஜயக்குருக்கள் (கொத்துக்கு சிவறி. நாறிரங்கதாதக்குருக்கள்(றி பரமநயின
சிவறி.சதா.நித்தியானந்தக்குருக்கள் (யாழ் மன மட் - குருமண்வெளி பிள்ளையார் ஆலய பிரத
சிவறி.செ.பரமேஸ்வரக்குருக்கள் (புதுப்பிள்ளை
சிவறி, சமகேஸ்வரக்குருக்கள் (மாவடி கந்தசு சிவபூர் இ.இரத்தினேஸ்வரக்குருக்கள் (மாங்கள சிவறி. எஸ்.இராஜரத்தினக்குருக்கள் (கொத்து ஆலய பிரதமகுரு சிவரீ.எஸ்.வசந்தநாத ஐயர் (
சாத
30l. சிவறி. யோகராஜா குருக்கள் - கிரு 02. சிவறி. சி.ஆனந்தசிவ ஐயர் 03. சிவறிதிகேதீஸ்வரஐயர்
04. வே.குவெந்திரசர்மா
2-@6
சிவறி.ச.முருகதாஸ்சர்மா (புதநகர் சி; சிவழி.ச.செந்துர்செல்வஐயர்
சிவறி.பாஞானானந்தகுரு (கெருடா6 சிவறி.சா.தெய்வேந்திரக்குருக்கள் (க சிவறிசாந்தருபன் ஐயர் (கொத்துக்கு சிவரீஏகநாதஐயர் (ஏறாவூர் பிள்ளைய சிவறிகநந்தகோபாலன் ஐயர் சிவறித.கு.சோதிநாதஐயர் (செல்வாரு
01.04.99 பகல் அன்
எண்ணெய்க்காப்புக்குத் தேவையான சுத்த கொள்ளாலாம். பால், இளநீர், பழவை
கும்பாவிஷேகத்தினைத்தொடர்ந்து வரும் மண்டலாபிஷேகத்தின் இ உபயம் செய்ய விரும்பும் அடியார்கள் தயவுசெய்து ஆலய திடப்படுத்திக்கொள்ளலாம்.
டிரீகந்தசுவாமி தேவஸ்தானம்,
ஆரையம்பதி
los-22

g55LOTf
ணிக்கவாசகக்குருக்கள்
சித்திரவேலாயுத தேவஸ்தான பிரதமகுரு டிவிநாயகர் ஆலய பிரதம குரு -திருகோணமலை) ாம் மாரியம்மன் ஆலய பிரதமகுரு - மட்டக்காப்பு)
ஆலய பிரதமகுரு - ஆரையம்பதி) கும்பான் பிள்ளையார், aළ5N15)
ார் ஆலய பிரதமகுரு - சந்திவெளி ாமி ஆலய பிரதமகுரு - காரைதீவு) ய் மாரியம்மன் ஆலய பிரதமகுரு, சாம்பல்தீவு குளம் மாரியம்மன் ஆலயகுரு - மட்டக்களப்பு ரீகந்தசுவாமி ஆலயம், ஆரையம்பதி)
காசிரியர்
ஜ்னன் ஆலய பிரதம குரு - குருமன்வெளி வைரவர் ஆலய பிரதமகுரு - உவர்மல்ை பிள்ளையார் ஆலய பிரதம குரு - உவர்மலை மகாவிஷ்ணுகோவில் - களுவாஞ்சிக்குடி
விக்குருமார்
த்தி விநாயகர் ஆலயம்)
கர், சிவன்கோயில் ஆரையம்பதி)
னதானம் வழங்கப்படும்
மான நல்லெண்ணெய், கற்பூரம் முதலியன இவ்வாலய விற்பனைச் கள், பூக்கள், பூமாலைகளை ஆலயத்தில் ஒப்படைக்கலாம். டைப்பட்ட 45 நாட்களுக்குமான (முழுமண்டலம்) விசேட பூசைகளை
பரிபாலன சபையுடன் தொடர்பு கொண்டு பூசைத்தினத்தைத்
இவ்வண்ணம் AsArgay ArtuAsiravi, ugfølgebrausruß 4ěAsnu uđu TASAIT Faou.

Page 9

ர்க்கும் விநாயக

Page 10


Page 11
கவிபுக வரதன
 

ான கந்த முருகன்

Page 12


Page 13
செல்வம் வழங்
 


Page 14


Page 15
|-|- |- - ( )----|--|- |-) | () . - ----T-|----+ ||-|- |- | + = −). ) ----|-|-! . . . s = (__|-|-|-----|-_- ---- '"| |- |-|-|- ~|- | .. . . . . |-|- ( )|--|- - , !|-|-「-– !! !!■|- : |-|-|-|- ( ) |- ,| ()|--------|-i ----|- !!!!!!!| . . -! !! !!|-
朱祁山
தனாக அருள்புரியும்
f
ஆரையூர்க் க
 

திருச்செந்தூர் வேல்முருகன்

Page 16


Page 17
1.4.99ல் நடைபெற்ற ரும்பாபிஷேகக் IILFIST
கும்பங்கள் நிறைந்துள்ள
பிரதம குரு
சிவாதி. பாவிக்கவாசகக்குருக்கள், உதவியாளருடன்
கும்பங்களைச் சுற்றி நிபாராதனை செய்கின்றனர் Fil:ITETTIITLI Til
 

sae + ':)) |- ( )

Page 18


Page 19
ஆலயத்தின்
உட்புறம்,
விமான கோபுரம்
ஆலயத்தின் அருகாமையில் உள்ள ரு கண்ணகை அம்மன் ஆலயம்
 


Page 20


Page 21
விமான கோபுர கலசத்தில் கும்பம் சொரியப்படுகிறது.
விமான கோபுரத்தில் காட்சியளிக்கும் சிற்பங்கள்
LTi LIFFFILufgü விற்றிருக்கும் மகாவிஷ்ணு.
 


Page 22


Page 23
விமான கோபுரகலசத்தில் கும்பங்
 

கள் சொரியப்படும் காட்சிகள்

Page 24


Page 25
ii.
I - மலர்முகம்
ஆசியுரைகள்
(அ) காஞ்சி காமகோடி பீடாதிபதி
(ஆ) நல்லை ஆதீனம்
(இ) சுவாமி ஆத்மகனானந்தா
(ஈ) சுவாமி ஜீவனானந்தா
(உ) சிவழறி மாணிக்கவாசகக்குருக்கள்
(உ) சிவபூரி.எஸ்.வசந்தநாதக்குருக்கள்
ஆலய பரிபாலன சபைக் குறிப்புகள்
(அ) என்கடன் பணிசெய்து கிடப்பதே
திரு.சு.பரசுராமன் (தலைவர்)
(ஆ) கந்தக் கடம்பன் காட்டும் பாதை
ம.மகாலிங்சசிவம் (செயலாளர்)
(இ) நெஞ்சு நிறைந்த நிகழ்வு
க.சிவநேசராசா (பொருளாளர்)
(ஈ) மலர்த் தொகுப்பாசிரியரின் குறிப்பு -
அன்புமணி
(உ) மண்டலாபிஷேக உபயகாரர் -
பொருள
10
11
12
13
14
15

டக்கம்
I - வரலாற்றியல்
1. மட்டக்களப்பில் முருக வணக்கம்
(செல்வி.க.தங்கேஸ்வரி, பீ.ஏ.(தொல்) சிறப்பு) 16
2. தான்தோன்றீஸ்வரமும் ஆரையம்பதி முருகனும்
(புலவர் சி.க.பொன்னம்பலம்) 25
3. ஆரையம்பதி யூனி கந்தசுவாமி ஆலயம்
(அன்புமணி) 29
II -ஆலயவியல்
4. ஆரையம்பதி யூனி கந்தசுவாமி ஆலயவரலாறு
(க.இராசரெத்தினம்) 31
5. ஆலய பூசைகளும் உற்சவங்களும்
(க.சொக்கலிங்கம். கி.சே.உ) 43
6. ஆரையம்பதி கண்ணகை அம்மன் சடங்கு
(ப.பொன்னையா. கி.சே.உ) 47
7. ஆரையம்பதியின் ஆலயங்கள்
(EToug bLyT&T B.A.) 51
8. பரிபாலன சபையின் செயற்பாடுகள்
(கசிவநேசராசா - பொருளாளர்) 57

Page 26
10.
1.
12.
13.
14,
15.
16.
17.
18,
19.
20
21.
IV -வாழ்வியல்
ஆரையம்பதி மக்கள் வாழ்வியல்
(க.சபாரெத்தினம்) 59
வரலாற்றுப் பின்னணியும் கலை வளர்ச்சியும்
(ஆரையூர் இளவல்) 63
ஆரையம்பதியின் முக்கூட்டுக்கலை
(மு.கணபதிப்பிள்ளை) 75
கூத்துக்கலை (மூனாக்கானா) 83
பண்டிகைகளும் கொண்டாட்டங்களும்
(ஆதங்கராசா) 89
கிராமிய விளையாட்டுக்கள்
(ஐ.சிவசுந்தரம்) 93
ஸ்கந்த முருக ஆய்வு மாநாடு 97
VII - Ghafufu.6856
ஆரையம்பதி ழறி முருகன் திருப்பதிகம் ( அமரர். சிவ.சோமசுந்தரனார்) 99
ஆரையம்பதி யூனி கந்தசுவாமி கோயில் ஆரம்ப வரலாறு 102
ஆரையம்பதி யூனி கந்தசுவாமி திருவூஞ்சல் 103
கோயில்குளம் காசிலிங்கேஸ்வரர் கோயில் (தமிழ்மணி சிவ. விவேகானந்தமுதலி) 104
ஆரையம்பதி முருகனைக்கண்டேன்
(சி.க.பொன்னம்பலம்) 105
ஆரையூர் கோயில் கொண்ட கந்தசுவாமி (செ.தாமரைச்செல்வி) 106

22.
23.
24.
23.
26.
V - GhLITgö
எதைத் தேடவேண்டும் (சிவத்திரு.க.தங்கவடிவேல்)
ஒரு வாணமும் இரு தெருக்களும் (த.மலர்ச்செல்வன்)
ராஜகோபுரம் அமைத்துக் கொடுத்தவர்
இம்மலருக்கு மணம் சேர்த்தவர்கள்
நன்றிக்குரியவர்கள்
107
113
116
118
120
ஆக்கம் அளித்தவர்கள்
ஆரையம்பதியின் பாரம்பரியம், ஆலய நடைமுறைகள், வரலாறு முதலியவற்றுடன் நன்கு பரிச்சயம் உள்ளவர்களிடமிருந்தே முக்கியமான ஆக்கங்கள் பெறப்பட்டுள்ளன. இது சிறப்பு மலர்க்குழுவின்ரின் ஏகமனதான முடிவாகும்.
ஆக்கங்களில் உள்ள கருத்துக்களுக்கு அளித்தவர்களே உரிமையாளர். அவை ஆலய பரிபாலன சபையின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் என்ற கட்டாயம் இல்லை.
- சிறப்பு மலர் தொகுப்பாசிரியர்.

Page 27
அருளாசிச் செய்திகள்
றுநீ காஞ்சி கா
ஜகத்குரு றுநீ சங்கராச்சா ரு மடம் 6 காஞ்சிபுர
பழமையும் பெருமையும் மிக்க குமரக்கோட்டா மட்டக்களப்பு - ஆரையம்பதி ரீ கந்தசுவாமி ஆலயத்துக் நடத்தி மலரும் வெளியிடுவது அறிந்து மகிழ்கிறோம்.
ஞான சொரூபியான ரீ கந்தனது இன்னருளா? மலர் இறையருள் மனித வாழ்வின் நிறைவுக்கு ஆதாரப விளங்கவும் ஆசீர்வதிக்கிறோம் * நாராயண ஸ்ம்குத
சிவ
(350 நல்லை திருஞான
ஸ்தாபகர் பூரீலழறி சுவாமிநாத குருமஹா சந்நிதா
ஆதீன முதல்வர்: ழறிலழறீ சோமசுந் இரண்டாவது குரு முருகன் அடியார்களே,
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கோயில் ெ கும்பாபிஷேகம் நடைபெறுவதையிட்டு மனமகிழ்ச்சி அடை மகாகும்பாபிஷேகம் ஆலயம் புதுபொலிவு பெறவும் ஆ வழிவகுக்கிறது. பழமையும் பெருமையும் வாய்ந்த ஆரை இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் அருளை கலியுகம். இவ்யுகத்திற்கு தலைவர் முருகப்பெருமான்.
ப்ெ ம். (மத்தமிழுக்கம் * முருகன். சிவபெருமானுக்கே குருவாக இருந்து உபதேசத்தை ெ யாவர்க்கும் இன்றியமையாதது ஆகும்.
முருகன் ஆலயம் இராஜகோபுரத்தையும் பல மக்களுக்கு மன அமைதியும் சமாதானமும் கிடைக்கே செய்யவும் இக் கும்பாபிஷேகத்தை நடாத்திவைக்கும் ஆ மட்டக்களப்பு வாழ் சைவ மக்கள் ஆன்மீக பாதையில் ெ வளர்ச்சியடையவும் இறையருளைப் பிரார்த்திக்கின்றோம்
ஆலயம் பூசைகளோடு மட்டும் நின்று விடாது ச இன்று மனிதன் ஏதோ ஒரு உதவியை நாடி வாழ்கின்றான். கடமையாகும். மனிதன் ஒவ்வொருவரும் நடமாடும் தெய்வம பயன்படுத்தி வாழ்வதே தர்மமாகும். இத்தரும வழிகளை அமைப்புக்களாகும். இச்சமயப் பணிகளை செய்து இம்மல வாழ் சைவ மக்களையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.
“என்றும் வேண
பூனிலழறி சோ

மகோடி பீடாதிபதி "ரிய ஸ்வாமிகள் அவர்கள் மம்ஸ்தானம் b - 631502
ங்கள் பலப்பல உள ரீ லங்காவில். அவைகளுள் ஒன்றான கு ஜிர்னோத்தாரனப்பணி முடித்து மகா கும்பாபிஷேகத்தை
ல் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நிர்விக்னமாக நிறைவேறவும் Dாக அமைவதை விளக்கி, ஆலயம் தழைக்க வைப்பதாக
உ
LDub, பாதம்
ாசம்பந்தர் ஆதினம்
ந தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் னம் ஆதிமுதல்வர்
தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் மஹா சந்நிதானம்
காண்டு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானுக்கு மகா கின்றோம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ன்மீக வாழ்க்கை வாழும் மக்கள் நற்பாதையில் செல்லவும் யம்பதி முருகன் மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு மட்டுமன்றி ா கொடுப்பவராக அமர்ந்துள்ளார். நாங்கள் வாழ்கின்ற யுகம் அவரை வழிபடுவதன் மூலமாக இம்மைக்கும் மறுமைக்கும்
தமிழுக்கும் மக்களுக்கும் காவலாக உள்ளான் தந்தையாகிய சய்த முருகனுடைய "வழிபாடு மண்ணில் வாழும் மக்கள்
0 திருப்பணிகளையும் கொண்டு கும்பாபிஷேகம் செய்வது வேண்டும் என்றும், ஆலயம் பல சமய, சமூக, பணிகளை லய பரிபாலன சபையினரும், இப்பணியை சிறப்பாக ஆற்றவும் சல்வதற்கும் இந்த மண்ணில் தர்மமும் தெய்வ நம்பிக்கையும்
முகப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்துவது சமய கடமையாகும். அவ்வுதவியை செய்யவேண்டியது சைவமக்கள் யாவரினதும் ாக இறைவனால் படைக்கப்பட்ட கருவிகளாகும். இக்கருவிகளை ா வகுத்து தருவது ஆலய கிரியைகள், விழாக்கள், ஆலய ரை வெளியிடும் மலர்க்குழுவினர் அனைவரையும் மட்டக்களப்பு
ாடும் இன்ப அன்பு
இரண்டாவது குருமகாசந்நிதானம்
மசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்

Page 28
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் கோ கடந்த சில வருடங்களாக பாரிய திருப்பணிகள் மேற்கெ மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளதென அறிகிறோம்.
கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடந்தேறி, ந பிரார்த்திக்கிறோம்.
கும்பாவிஷேகத்தையொட்டி வெளியிடப்படும் சி கொள்கிறோம்.
கோயில் திருப்பணியிலும், கும்பாபிஷேக விழ அன்பர்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக!
கோயிலைத் தூய்மையாக வைத்திருந்து, அங்கு
RAMAKRISH
(Ceylon
ASHRAMA CHI RAMAKRISHNAPURAM, E
நமது ெ தனி மனிதனின் விஷயத்தில் எது உண்மையோ எனவே ஒவ்வோர் இனத்திற்கும் ஒரு தனிப்பண்பு 2 இந்த உலகத்தில் நடத்தி முழக்க அதற்கென்று : சாதிக்கவும் வேண்டும்”
இவ்வாறான நிகழ்வில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் 1 மரபுவழிக் கிராமங்களில் ஆரையம்பதியும் அங்குள்ள மக் சைவத்திற்கும் தமிழிற்கும் திருத்தலங்களும், பள்ளிக்கூட வளர்ச்சியும், கிராமியப் பண்பின் சிறப்புக்களையும் தன்ன
மேலும், இக்கிராமம் அபேதானந்தரின் நேசிஷயை மிஷன் துறவிகளினதும் ஞானிகளினதும் திருப்பாதங்களைப் கொண்டு விளங்குவது.
இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய திருவூரில் முருகப்பெருமானுக்கு புதியகோபுர கலசத்துடன் திருக்குட மலர் ஒன்றும் வெளிவரவிருப்பதும் என்னை மிகுந்த மகிழ்
நமக்குப் பெருமை சேர்ப்பவை நமது பண்பாடு.அத வளர்ச்சியைக் கொண்டு அதனைச் சூழவுள்ள மக்களி: இணைந்தவை. மக்கள் நிலை உயர ஆலயங்களும் வள சேவையும் வளரும். ஆரையம்பதி பூரீ கந்தசாமி கோயிலின் நிறைவதாக. இதற்குப் பல்வேறு வழிகளிலும் துணை ெ பொதுமக்கள் யாவரையும் மனதாரப் பாராட்டுகின்றேன்.
எம்பெருமான் திருவருள் எல்லா நிகழ்வினிலும் சிறப்பும் வளமும் பெருகப் பிரார்த்திக்கின்றேன்.

RAMAKRISHNAMISSION, (Ceylon Branch) 40, Ramakrishna Road, Colombo-6.
வில்களில் ஒன்றான ஆரையம்பதி கந்தசுவாமி கோயில், ள்ளப்பட்டு, புதிய ராஜகோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டு,
ட்டில் அமைதியும் சமாதானமும் பெருக இறையருளைப்
றப்பு மலருக்கு எங்கள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
ாவிலும் தம்மைப் பூரணமாக ஈடுபடுத்தி உழைத்துவரும்
நிலவும் இறை சூழலைப் பாதுகாத்துப் பயன்பெறுவோமாக!
சுவாமி ஆத்மகனாநந்தா.
NA MISSION.
Branch)
LDRENSHOMES, BATTICALOA. SRI LANKA.
LocalLD அது ஓர் இனத்தைப் பொறுத்தவரையிலும் உண்மை உள்ளது. அது இருப்பதற்குத் தனிக்காரணம் உள்ளது. தனிப்பணியும் உள்ளது.தன் லட்சியத்தை அந்த இனமே
. - கொழும்பில் சுவாமி விவேகானந்தர். மக்களில், பண்பாட்டு விழுமியங்களைப் பழுதறப் பேணிவரும் களும் குறிப்பிடத்தக்கவர்கள். நூற்றாண்டுகளுக்கு முன்பே ங்களும் உருவாக்கி பெருமை சேர்த்த ஊர் அது. நகர்சார் கத்தே கொண்டு சிறப்புற்ற வளர்ச்சி நிலைபேறுடையது.
யான சகோதரி அவாமி அம்மையாரினதும் றி இராமகிருஷ்ண பெற்றுதும் தலபதிகள் நிறைந்தும் பல்வேறு சிறப்புக்களையும்
கலியுகவரதனாகக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் முழுக்காடும் புனித நிகழ்ச்சியும் அதன் ஆவணப் பதிவாக ச்சியடையச் செய்கின்றது.
ன் நிலையை அளவிடலாம். இவைகள் ஒன்றோடொன்று ரும் ஆலயங்களின் வளர்ச்சியினால் ஆன்மீகமும், மக்கள் இந்தப் பெருவிழா நிகழ்ச்சிகள் யாவும் சிறப்புற இறையருள் சய்யும் நிருவாகத்தினர், தொண்டர்கள், கொடையாளிகள்,
) அனைவர் மேலும் நிறைந்து வெற்றியும் சமாதானமும்
இறைபணியில், சுவாமி ஜீவானந்தா,

Page 29
EGOITILIË
அருள்மிகு ஆரையம்பதி ரு கந்த சு மகா கும்பாபிே
கிரியாகலாபமணி ,
சிவறுநீ. தி. மானிக்
ஆரையம்பதி வாழ் பொதுமக்களை நா இறைவழிபாட்டிலும் கோயிலை அமைத்து அதனைப் பர ஆலயத்தில் பணிகளுக்கு பணத்தை அள்ளி வழங்குபவர் கொண்ட அசையாத பக்தியின் மேலீட்டாலும் காலத்துச் கிரியைகளின் பலனாலும் ஆலயம் வளர்ச்சிடைந்து ஆன்மீக கேட்ட வரத்தை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் எம்பெரு விழாவாகிய மகா கும்பாபிஷேகத்தினை நிறைவேற்றும் ஆ பெருமானுக்கு சிரம் தாழ்த்துகின்றேன்.
நான் அறிந்தவரையில் இதுவரை கா புனர்நிருமானப் பணிகளில் அவ்வளவு ஆர்வம் காட்டிய நிருவாகமுலமே இப்பகுதி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பொறுப்பேற்று புனர்நிருமானப் பணியினை நிறைே இராஜகோபுரத்தையும் ஏனைய புனர்நிருமானப் பணிகளையு காணும் வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்தனர், அறங்காவல்
இந்தத் தலத்தின் மகாகும்பாபிஷேகம்19 கருணையினாலே நடைபெறும் இம்மகாகும்பாபிஷேகம்"அ பெருமானின் திருவாக்குக்கமைய நிறைவுபெறும் இவ்வாலயத் பிரகாரங்களின் அமைப்பும் மக்கள் உள்ளங்களைக் கவர் களையும் எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியிலும் மு சபையினருக்கும் பொருள்கள் நல்கி தொண்டுகள் புரிந்த அடியார்களுக்கும் நன்றி. இந்த மகாகும்பாபிஷேகத்திை மக்கள் மனத்திலும் இல்லங்களிலும் பதிந்து வாடாத திகழவேண்டுமென இம்மலரை வெளியிடப்பாடுபடும் இம்மல பேரருள் வேண்டி எனது நல்லாசிகளை எம்பெருமானின் பாது
இப்பழம்பெரும்பதியில் எழுந்தருளி ஆ முதல் ஆண்டி வரையான அடியார்களைச் சோதிப்பதில் பு உண்மையினை அகமகிழ்ந்து குறிப்பிடுகின்றேன்.
"நாள் என்செயும் வினைதான கோள் என்செயும் கொடுங்க இருதாளும் சிலம்பும் சதங்ன எனக்கு முன்னேவந்து தோன்

துணை
வாமி ஆலய புனராவர்த்தன பிரதிஸ்டா வடிக ஆசியுரை
பிரதிஷ்டாபூஷணம் கவாசகக் குருக்கள்
ன் நன்கு அறிவேன். இவர்கள் ாமரிப்பதிலும் பெயர் பெற்றவர்கள். கள். இவர்கள் முருகப்பெருமானிடம் குக்காலம் செய்துவந்த பூசைகள், அருளும் பொலிவதோடு அடியார்கள் மான் குமரக்கடவுளின் பெருஞ்சாந்தி ருட்டாக்கியம் கிடைத்தமைக்கு எம்
லமும் இக்கோயிலைப் பரிபாலித்து வந்தவர்கள் ஆலய தாகத் தெரியவில்லை. 1996ம் ஆண்டு குடிமுறையமைப்பு அறங்காவல் சபையினர் இக்கோயிலின் பரிபாலனத்தைப் வற்றுவதக்ை குறிக்கோளாகக் கொண்டு ஆலயத்தின் ம் செவ்வனே நிறைவேற்றி புத்துயிருட்டி கம்ப்ரதோற்றத்தினைக் சபையினர் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்கள் ம்ே ஆண்டு பங்குனித் திங்கள் 18ம் நாள் (1499) திருவருளின் வனருளாலே அவன் தாள் வணங்கி' என்ற மாணிக்கவாசகப் தின் புதுப்பொலிவும் ஆகமமுறைப்படி அமைந்த மண்டபங்கள், நீது அருளினைப் பெற்றிட கும்பாபிஷேகத்தையும் திருப்பணி ன்னின்று மனத்தைரியத்துடன் நடாத்தும் ஆலய அறங்காவல் அன்பர்கள், தேவபராயனம், கூட்டுப்பிரார்த்தனை நடாத்திய னே ஒட்டி வெளியிட இருக்கும் "கும்பாபிஷேக" மலரானது 3 மலராக மக்களின் மேம்பாட்டுக்குதவும் கைநூலாகத் ர்க்குழுவுக்கும் ஆரையம்பதி பூர் சிவசுப்பிரமணிய சுவாமியின் ங்களை வாழ்த்தி ஆசியையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன். ருள்பாலித்துக்கொண்டிருக்கும் குழந்தைக் குமரன் அரசன் காவல்லவன் என்பதனை எனது அனுபவ வாயிலாக கண்ட
i என்செயும் எனைநாடிவந்த ற்று என்செயும் - குமரேசர் கயும் தண்டையும் 1றிடிலே."
இங்ஙனம், கிரியாகலாபமணி பிரதிஷ் டாபூஷணம் சிவபூறி தி.மாணிக்கவாசகக்குருக்கள்.

Page 30
ஆசி
சிவறுநீ எஸ். வச ஆரையம்பதி றரீ கந்தக
ஆரையம்பதி வாழ் மக்கள் அன்புக்கும் பணி
இறையன்பிலே அபார நம்பிக்கை கொண்டவர்கள் கல்வி, தன்னகத்தே ஒருங்கினைத்துக்கொண்ட பழம் பெரும் பதியி கொண்டிருக்கும் குழந்தைக் குமரனின் ஆலய பிரதம கு இங்குவந்துபோது இவ்வாலயம் வாலஸ்தாபனம் செய்யப்பட் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கட்டிட நிருமான வேலைகள் கொண்டிருந்தது.
இங்குள்ள படித்த மற்றும் பாமர இளை சிரமதானப் பணிகள் மூலம் தத்தரது பங்களிப்பினைச் என்னை எங்கேயோ கொண்டு சென்றது. அவர்கள் வாயி தகவல்களையும் அறிந்து கொண்டேன். இப்பகுதிவாழ் ம அமைப்பில் தெரிவு செய்யப்பட்ட ஆலய பரிபாலன சடை இவ்வாலய பரிபாலனத்தைப் பொறுப்பேற்றுள்ளதையும் இந் மேற்கோண்டு மிகவிரைவில் அதாவது 1999 முற்பகுதியில் என்பதனையும் அறிந்தேன்.
அப்போது கட்டிட நிருபாண் வேலைகளின் நிகழ்வதென்றால் கேள்விக்குறி என்றும் இது சாத்தியப்படு எனது மனம் கேட்கவில்லை. ஆலய பரிபாலன சபையை அச்சபையின் பொருளாளருடன் உரையாடினேன். பொருள இருந்தாலும் நான் அவரிடம் விடுத்த வினாக்களுக்கு அளித்
இறைவனோடு இரண்டறக் கலந்த மெ. அவரது பதில்களில் நான் திருப்தியடைந்தேன். ஆனாலும் 1998ம் ஆண்டு கார்த்திகை மாதம் நடந்தேறிய பிள்ளைய பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் உச்சக் கட்டத்தைய.ை
நிச்சயம் குறித்த காலத்தில் பெருமானிக உந்துதல் இங்கிருப்பதனை நான் அப்போதே உண்ர்ந்தேன் இங்கு குறுகிய காலப்பணியிலிடுபட்டிருந்தாலும் எனது அறி விரும்பாது அவர்களை ஒதுக்கித்தள்ளியும் சிலரை இப்ப நிறைவு செய்து இருப்பிடத்தைச் செளகரியமாக்கிக்கொடு பக்தர்களுக்கு வழங்கிய எம்பெருமானை வந்தித்திடுவோம்
எம்பெருமானின் பேரும் புகழும் உலக ஒழுங்கு செய்திருந்த மேளதாளக் கோஷ்டி இன்னும் வரம் மேளக் கோஷ்டி கும்பாபிஷேகத்தினைச் சிறப்பித்த அதிச திருவிளையாடல்களில் தன் தந்தையையும் வென்ற தனய
1999ம் ஆண்டு பங்குனித்திங்கள் 18 கும்பாபிஷேகத்துக்காகப் பாடுபட்ட ஆலயபரிபாலன சபை எனது ஆசியும் வாழ்த்துக்களும் உரியதாகுக.
O

.LGDJ
ந்தநாதக்குருக்கள் வாமி ஆலய பிரதம குரு
புக்கும் அடிமைப்பட்டவர்கள். செல்வம், வீரம் அனைத்தையும் ல் எழுந்தருளி அருள்பாவித்துக் ருவாக 1997ல் நியமிக்கப்பட்டு டு புனர்நிருமான வேலைகளும் துரிதவேகத்தில் நடைபெற்றுக்
ாஞர்கள் குழாம் ஒன்றிணைந்து செய்து கொண்டிருந்த காட்சி TITTEEG 35 GJITGVÖLLULĒ, GAFETLIŤ LITEIT க்களினால் புதிதாக குடிமுறை யானது 1996ம் ஆண்டு முதல் த ஆலயத்தின் கட்டிட நிருமானப் பணிகளைத் திறம்பட கும்பாபிஷேகத்தை நடத்துவதே அச்சபையின் குறிக்கோள்
நிலையை அறிந்த நான் குறித்த காலத்தில் கும்பாபிஷேகம் மோ? என்றும் எனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டேன். அணுகினேன். சலனங்களை வினாக்களாகத் தொடுத்து ாளரோ, இதுபோன்ற பணிகளில் அனுபவம் குறைந்தவராக த பதில்கள் அத்தனையும் முத்துக்கள் என்றே கூறவேண்டும்
ன்மையான பதில்களை அவர் என்கெடுத்து வழங்கினார். என் உள்மனம் கும்பாபிஷேகத்தை எதிர்பார்க்க மறுத்தது. ார் விரதத்தினைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நிருமானப் டந்தது. பெயின்ரிங் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
ன் குடமுழுக்கு நிகழ்ந்தே திரும் எம்பெருமானின் பேரருளின் 1. எனது மனநிலையையும் திடப்படுத்திக்கொண்டேன். நான் வுக்கெட்டியவரை இங்குள்ள பலரை இப்னியில் ஈடுபடுத்த வியிலீடுபட உள்ளிழுத்தும் தனது ஆலய நிருமானத்தை ஈண்டு குடமுழுக்கினைக் கண்ணாரக் காணும் வாய்ப்பினை
மெங்கும் பரவட்டும். கும்பாபிஷேக தினத்தன்று ஏற்கனவே பில்லையே என்று ஏங்கிநின்ற வேளை எங்கிருந்தோ வந்த பம் அந்தக் குழந்தைக் குமரனின் அருளேயன்றி வேறன்று. பன் இந்த ஆரையூர்க்கந்தன்.
ம் நாள் (1499) மிகவும் சிறப்பாக நடந்தேறிய மகா பினருக்கும் மற்றும் அன்பர்கள் அடியார்கள் அனைவருக்கும்

Page 31
Gleiről_Gi, LIGOLili
சுபரசுராமன், (ஆலய ப
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினள் தென்கடம்பை திருக்கரக் கோயிலான் தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே
எல்லாம் வல்ல முருகப் பெருமானை - நெஞ்சு நெகிழ்ந்து, மெய்சிலிர்த்து நெக்தருகி இருகரம் சுப்பி ஏத்துகின்றேன். கலியுகவரதனான கந்தப்பெருமான், கதிர்காமத்தைவிட்டு, மண்டூரைவிட்டு உகந்தையை விட்டு வெருகலைவிட்டு, சித்தாண்டியைவிட்டு, இந்தச் சிறு கிராமமாகிய ஆரையம்பதியில் வந்து அமர்ந்து அருள் பாலித்து வழிநடாத்துகிறான் என்றால் அது நாம் செய்த தவப்பயனே ஆகும்.
1802ல் இக்கோயில் முதன்முதல் சிறுகோயி ölöffjai, FELLULL(BL LilsőT55TT 1850, 1364, 1955, 1979Li. ஆண்டுகளில் குடமுழுக்கு விழாக்களைக் கண்டது. இத்தனை திருப்பணிகளுக்கும் எங்கிருந்தோ பணம் வந்து எவ்வித குறையுமின்றி கும்பாபிஷேகங்கள் நிறைவேறின.
அவ்வாறே இவ்வாண்டும் ஒரு பெரிய அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. நிர்வாகம் சீர்குலைந்து உட்பூசல்களால் இயல்புநிலை இல்லாதபோதும், இனக்கலவரப் பாதிப்பினால் எம் ஊரவர்கள் நிலைகுலைந்தபோதும், எம்பெருமான் எம்மைக் கைவிடவில்லை. யாரும் கற்பனை கூடச் செப்பமுடியாத அளவு பாரிய திருப்பணிகள் இவ்வாலயத்தில் நடந்தேறியுள்ளன. என்றுமில்லாத புதுப்பொலிவுடன் இவ்வாலயம் இன்று காட்சியளிக்கிறது.
எமது இளைஞர்களின் உள்ளங்களில் புகுந்து எம்பெருமான் நடாத்திய திருவிளையாடலே இது என் கருத்துக்கு ஆதாரமாக ஒன்றைக்கூறுவேன். ஆலயத்தின் முன்ராஜகோபுரம் இன்றி மொட்டையாகப் பலவருடங்கள் காட்சியளித்த எமது ஆலயத்தின் முன்வாசலில் இன்று கம்பீரமான ராஜகோபுரம் எழுந்து நிற்கின்றது. அதற்குக் காரணம் அகதியாகக் கனடா சென்று வாழும் எம் ஊர் இளைஞரான கணபதிப்பிள்ளை பரமானந்தம் என்னும் இளைஞரின் இதயத்திலே எம்பெருமான் புகுந்து புறப்பட்டது தான். இதை இன்று யாவரும் அறிவர்.
கடந்த காலங்களில் இவ்வாலய நிர்வாகம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. 1884 முதல் 1974 வரை இவ்வாலயத்தில் வண்ணக்கு முறையிலான நிர்வாகம் இடம் பெற்றிருந்தது.1891974 முதல் வண்ணக்கு நிர்வாகமுறை மாறி பரிபாலனசபை நிர்வாகம் ஏற்பட்டது. இப்பரிபாலன சபையின் தலைவராக 18974முதல் 15:175 வரை திரு.சி.ஐடஏரம்பமூர்த்தி பணியாற்றி இறைவனடி சேர்ந்தார்.

சய்து கிடப்பதே.
பாலனசபைத் தலைவர்)
27.195 முதல் 1996 வரை அன்னாரின் முத்த புதல்வர் ஏ.சுந்தரமூர்த்தி தலைவராகப் பணியாற் றினார்.
1998 முதலி இப்பரிபாலன சபையின் தலைமைப் பதவி, நான் சற்றும் எதிர்பாராத வகை யில் என் தலை மேல் சுமத்தப்பட்டது. என்னால் சுமக்க முடியாத சுமை இது கடந்த 50 ஆண்டுகள் வரை கந்தகவாமி ஆல பத்துடன் நான் தொடர்புபட்டிருந்தபோதும், பூசை புனஸ் காரம் செய்தல், தேவார திருவாசகம் ஓதல், புராபைடனம் செய்தல் போன்ற பணிகளிலேயே அதிகமாக நான் ஈடுபட் டுள்ளேன். சிலகாலம் இப்பரிபாலன சபையின் பொருளாள ராகவும் கடமையாற்றியுள்ளேன். அவ்வளவே.
இப்போது இவ்வாலயத்தில் நடைபெற்றுள்ள திருப்பணிகள், கும்பாபிஷேகம் மண்டலாபிஷேகம் முதலி யன எம்பெருமானின் திருவாருளாலேயே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகும். ஆனாலும் இறைவனின் திருக்குறிப்பை நிறைவேற்றும் , கருவிகளாக, இதன் செயலாளர் மகாலிங்கசிவம் , பொருளாளர் சிவநேசராசா, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முதலியோர் செயற்படுகின்றனர். அவர்களுக்கு என் நன்றி.
இக்கலவர காலத்திலும் எமது ஆரையூர்க் கந்தன், நமது ஊரில் குடிகொண்டு நமது மக்களை வழிநடாத்திச் செல்கிறான். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நம்மேல் கருனை மழையைப் பொழிகிறான். இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டிய மாபெரும் ஆலயத்தைப் புறக்கணித்து ஏழைப்பூசல நாயனார் தன் மனதிலே கட்டிய கற்பனை கோயிலின் கும்பாபிஷேகத் துக்கு எழுந்தருளியதைப் போன்று எம்பெருமான் இங்கே நமது கோயிலில் எழுந்தருளியிருக்கிறான்.
அவனருளாலே அவன் தாள் வனங்கி போட்டி, பெறாமைகளை மறந்து, புனிதமான உணர்வுடன் இறைபணி யில் ஈடுபடுவோம்!
"என்செயலாவது யாதொன்றுமில்லை - எல்லாம் நின்செயலே யென்றறிந்தேன் பெருமானே!"
l

Page 32
இந்தக் இடம்பன்
ம.மகாலிங்கசிவம் (ஆலய
கநீண்ட காலமாக வண்ணக்கு நிர்வாக முறையின் கீழ் இருந்துவந்த எமது ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயம் 1974முதல் பரிபாலன சடை நிர்வாகத்தின் கீழ் வந்தது. இப்பரிபாலன சபை நிர்வாகம் அப்போதைய மட் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பூசங்காரவேல், மண்முன்ை உதவி அரசாங்க அதிபர் கதருமலிங்கம் நமது ஊரைச்சேர்ந்த சிரேஷ்ட கிராமசேவை உத்தியோகத்தர் க.செல்லத்தம்பி ஆகியோரால் 1897 முதல் ஏற்படுத்தப்பட்டது.
இப்பரிபாலனசபை திருவிழாச் செய்வோரின் பாகையின் பிரதிநிதிகளைக் கொண்டதாக அமைந்தது 18974 - 3980 காலப்பகுதிக்குரிய (வேருடங்கள்) பரிபாலன் சபை அறிக்கையில் இதன் முழுவிபரங்களும் இடம் பெற்றுள்ளன. (பக்.22 - 26)
அதன் பின்னர், 1998ல் இப்பரிபாலன சபைக்கான புதிய யாப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த யாப்பின்படி ஆரையம்பதியில் உள்ள குடிகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இப்பர் பாலனசபை அமைகிறது. ஒரு குடிக்கு இருவர் வீதப் மொத்தம் 36 பிரதிநிதிகள் உள்ள இப்பரிபாலன சபையில் தலைவர் செயலாளர், பொருளாளர், வெவ்வேறு குடிகளை சேர்ந்தவர்களாக இருப்பர். அதன் பிரகாரம் தற்போதைய பரிபாலன சபையில் பின்வருவோர் தலைவர், செயலாளர் பொருளாளராகப் பதவி வகிக்கின்றனர்.
1 திருசுபரசுராமன் (திருவிளங்குடி) தலைவ
2. திரு.ம.மகாலிங்கசிவம் (விரமாணிக்கன்குடி
QFLIGUTFITÍ.
3. திரு.க.சிவநேசராசா (ஆநுகாட்டியார்குடி)
பொருளாளர்.
இப்புதிய நிர்வாகசபை மிகநீண்டகாலம் மந்த நிலையிலிருந்த ஆலயச் செயற்பாடுகளைத் துரிதப்படு: தியது. பெயருக்குப் பதவிகளைத் தாங்கிக் கொண்டிருக்காது ஆலயத்தின் தேவைகளை முன்னுரிமைப்படி மதிப்பி செய்து அவற்றைத் துரிதமாக நிறைவேற்றுவதற்காக திட்டங்களை வகுத்து அத்திட்டத்தைச் செயற்படுத்துவத கான திட்டங்களை வகுத்து அத்திட்டத்தைச் செயற்படுத்து வதற்கான பெருந்தொகைப் பனத்தைத் தேடி, மிகத்துரி மாக ஆலயத்தின் திருப்பணிகளைப் பூர்த்தி செய்தன அதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலு இவ்வாலயத்தின் மதறாகும்பாபிஷேகம் 149ல் நிறைவே
山,

இாட்டும்பாதை
பரிபாலனசபைச் செயலாளர்)
அன்றுமுதல் 45 நாள் Ligi L5 L ஷேகம் நடைபெற்று 15:59ல் சங்காபிஷேகத் தைக்கான்கிறது. இச்சங் காபிஷேக தினத்தில் "ஆரையூர்க்கந்தன்' என்ற சிறப்பு மலர் வெளிவரு கிறது. இது எம் முருகப் பெருமானின் திருவருளே என்பதில் சந்தேகமில்லை.
இச்சிறப்பு மல ரை வெளியிடுவதற்காக ஒரு மலர்க் குழுவும் தெரிவு செய்யப்பட்டது. மலரின் தொகுப்பாசிரியரான திரு.இரா. நாகலிங்கம் (அன்புமணி) தனது பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
ஒரு பாரிய செயற்பாடு நிறைவேறுகையில் யாவரும் அதில் பங்களிப்புச் செய்யவேண்டும்.எனவே வெறும் பார்வையாளர்களாக இருப்பவர்கள் பங்களிப்பாளர் களாக மாறவேண்டும்.
நமது ஊரில் நிலைகொண்டுள்ள முருகப் பெரு மான் அருளால் நமக்கு இவ்வாலயத்தின் குடமுழுக் கைக் காணும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இது நமது கோயில், இது நமது முதுசும் - சொத்து. இது நமது ஊருக்குப் பெருமை சேர்க்கும் பணி. இப்பணி சித்தித் தமைக்காக, அவன் திருவருட்கடாட்சத்தைப் போற்றுவோம். வேற்றுமை களை மறந்து ஒன்றாக ஒரு குடும்பமாகச் செயற் படுவோம்.
இச்சந்தர்ப்பத்தில் இவ்வாலயப் பணிகளைப் பூர்த்தி செய்வதில் முன்னின்றுழைத்த அனைவருக்கும் எம்பெருமான் திருவருள் சித்திக்கப் பிரார்த்திக்கிறேன். அவ்வாறே நிதி உதவி செய்தோர் அனைவரையும் இறை பக்தியோடு நினைவு கூர்கிறேன்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு இந்தச் சிறிய ஆரையம்பதிக் கிராமத்தில் நிறைவேறி யுள்ளது. நம் காலத்தில் இது நிறைவேறியுள்ளது என்பதே நமக்கப் பெருமை சேர்க்கும் விடயமாகும். இந்த நாள் முதல் நம்மைப் பிடித்த துரதிர்ஷ்டங்களெல்லாம் நீங்கிப் போகின்றன. "சுற்றி நில்லாதே போ பகையே துள்ளிவருகுது வேல்" என்ற ஒலி என்றும் நம் இதயத்தில் எதிரொவித்துக் கொண்டேயிருக்கும். புதிய நம்பிக்கையுனும் புதிய உத்வே கத்துடனும் எதிர்காலத்தை எதிர்கொள்வோம்,

Page 33
நெஞ்சு நிை
க.சிவநேசராசா, ஆலய ப
ஆரையம்பதியில் கோயில் கொண்டு அருள் பாலிக்கும் எம் பெருமான் குமரக்கடவுளின் மகா கும்பாபி ஷேக விஞ்ஞாபனத்தை யொட்டி வெளிவரும் இக்கும்பாபி ஷேக மலருக்கு இச்செய்தியை வழங்குவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நான் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
இந்த ஆலயத்தின் புனர்நிருமான்வேலைகள் முதல் மஹாகும்பாபிஷேகம் வரைந்தம் இப்பெரும்பதியாம் ஆரையம்பதியில் வாழும் சைவப் பெருங்குடி மக்களின் விடாமுயற்சியும் ஒற்றுமையும் காரணமாகவே ஒரு புதிய குடியமைப்பு நிருவாகத்தினை ஏற்படுத்தியதன் பயனாக இன்று இவ்வாலயம் இதுவரைகாலமும் கண்டிராத புதுப் பொலிவு பெற்று காட்சியளிக்கிற தென்றால் அது மிகை பில்லை.
எந்தவொரு நிதிவைப்புமின்றி இப்பாரிப பணியினை ஆரம்பித்தது முதல் எவ்வித இடையூறுமின்றிந் திறமையாகத் திருப்பணி வேலைகள் யாவும் குறிகிய காலத்தில் செவ்வனே நிறைவேற்றப்பட்டுள்ளறை எம் பெருமானின் அருட்கடாட்சமேயன்றி வேறில்லை.
இத்திருப்பணி வேலைகளுக்கான் நிதியின்ன வாரிவழங்கியும், சகல உதவி ஒத்தாசைகள் வழங்கியும் ஊக்கமளித்த அனைவருக்கும் எமது மனப்பூர்வமான் நன்றியினைத் தெரிவிப்பதுடன் இந்த ஆலய புனர்நிருமான வேலைகளைத் திட்டமிட்டு செயற்பட்ட எமது சபையின் சேவையைப் பாராட்டுகிறேன்.
இக்கும் பாபிஷேக மலர் மனம் பரப்பி நாடெங்கும் வலம்வர எல்லாம் வல்ல முருகப் பெருமாளின் திருவடியை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
ஆலயத்தின் புதுப்பொலிவு கண்டு பூரிக்கும் இவ்வேளையில் மேலும் பல எண்ணங்கள் என் இதயத்தில் விரிகின்றன. திருக்கோணேஸ்வரர் ஆலயம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் என்சிந்தையில் நிழலாடுகின்றன.
ஆலயங்கள் பூசை புனளிகாரங்களுடன் மட்டும் திருப்தியடைவது போதாது அதன் நேசக்கரம் சமுதா யத்தை நோக்கியும் நீளவேண்டும். சமுகப்பணிகளிலும் நமது ஆலயம் பங்களிப்புச் செய்யவேண்டும். நமது மேம் பாட்டுக்கான பலபணிகள் நம் ஊரில் காத்துக்கிடக்கின்றன. இதுவரை அவற்றில் Fம் ஆலயத்தின் பார்வைபடவில்லை. இனிமேலாவது நம்பார்வை அப்பக்கம் திரும்பவேண்டும்
ஏழைகள், திக்கற்றவர்கள், அனாதைகள் - இவர்களுக்கு உதவுவதே சிறந்த பிரார்த்தனை எனச் சுவாமி விவேகானந்தர் கூறியிருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது. "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்பதை நன்குனர்ந்து, நாம் செயற்படுவோம்.
அதற்கு என்ன வழி? நம் ஆலயத்தில் ஒரு

மந்த நிகழ்வு
பாலன சபைப் பொருளாளர்
நிரந்தரமான வைப்பு 邱虽 可函山函品岳 வேண்டும்.அதன் வாரு வாயிலிருந்து சில
LLET நிறைவேற்ற வேண் @lb @向ā g_山酶活 என்னம் நிறைவேற 堑uf吕Ef 昏活型 ழைக்கவேண்டும்.
இதற்காக, நிநிமிகுந்தவர் பொற் Այնն) ճll தாரீர்,நிதி குறைந்தவர் காசுகள் தார்.அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளிர், ஆன்மையாளர்கள் உழைப்பினை நல்கீர் என இந்த முருகப்பெருமானை முன்நிறுத்தி உங்களை வேண்டு கிறேன்.
அன்றும் இன்றும் என்றும் நம்மை வழி நடத்தி வரும் ஆரையூர்க்கந்தன் இப்பணியிலும் நம்மை வழி JELEFJ51||TFRITTEE.
ஆலயத் திருப்பணிகளைப் பூர்த்தி செய்து கும்பாபிஷேகமும் நிறைவேற்றுவதுடன் ஆலயத்தின் பணிகள் முடிந்து விடுவதில்லை. இனித்தான் ஆலயப் பணிகள் ஆரம்பமாகின்றன.
நமது ஊர்மக்களின் இதயங்களில் இறை சிந்தனையைப் பதிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு அவற்றைச் செயற்படுத்த வேண்டும்.
ஆலயத்துக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் மட்டுமல்லாது சாதாரன நாட்களிலும் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தரவேண்டும்.
இவ்வாலயத்தின் பூசை புனஸ்காரங்களில் இன்னும் அதிகமானோர் பங்களிப்புச் செய்யவேண்டும். பார்வையாளர்களாக இருப்போரெல்லாம் பங்களிப்பாளர் களாக மாறவேண்டும்.
ஆலயத்தில் மீதமுள்ள வேலைகள் நாளும் பொழுதும் நிறைவேற வேண்டும். நம் ஒவ்வொருவரது Lனமும் அதில் சேரவேண்டும்.
நாம் கடைத்தேற வழிகாட்டும் தெய்வம் நம் ஆரையூர்க்கந்தன், அவனே நம் ஒளிவிளக்கு அவனே நம் வழிகாட்டி அவனே நம் ஆபத்பாந்தவன். அவன் நாள்களை இறுகப்பற்றிக்கொள்வோம்.
փլի եյ6115.AILihill
13

Page 34
சிறப்புமலர் தொகு
ஆரையூர்க் கந்தன் திருவருளால் ஆலயம் புதுப்பொலிவு பெற்றதுடன் அதன் ஆவணப் பதிவாக ஒரு சிறப்புமலரும் வெளிவருகிறது.
ஒரு ஆலயத்தின் கும்பாபிஷேகமலரில் எத்த கைய விடயங்கள் இடம் பெற வேண்டும்?
குறித்த ஆலயத்தினதும், அவ்வாலயம் அமைந் துள்ள பிரதேசத்தினதும் வரலாற்றுப் பதிவாக மலர் அமைவது பொருத்தமானது. எனவே, அத்தகைய நோக்கு டனேயே இம்மலரில் கட்டுரை, கவிதைகள் இடம் பெறுகின்றன.
இவ்விடயங்கள் பின்வருமாறு வகுக்கப்பட் டுள்ளன. (1) மலர்முகம் (i) வரலாற்றியல் (ii)ஆலயவியல் (iv)வாழ்வியல் (V) செய்யுள்கள் (wi) பொது . அத்துடன் ஆலயக் கும்பாபிஷேகக் காட்சிகளும் இடம்பெறுகின்றன.
ஆரையம்பதிக் கிராமம் கிழக்குப் பிராந்தியத் திலுள்ள பல கிராமங்களின் ஒரு "Model ஆகும். இங்கு நிலவும் பாரம்பரியங்கள்,மரபுரீதியான பழக்கவழக்கங்கள், சட்ங்குகள், சம்பிரதாயங்கள் முதலியன இப்பிரதேசத்தி லுள்ள அனேகமான கிராமங்களுக்குப் பொதுவானவை եւIIT(Ցլb.
அந்தவகையில் ஆரையம்பதி மக்களின் வாழ் வியல் தொடர்பான தகவல்களை அறிய விரும்புவோருக்கும், அதுபற்றி ஆய்வு செய்ய விரும்புவோருக்கும் உதவும் வகையில் இம்மலரில் உள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன.
இவ்வாறே இப்பகுதி ஆலயங்கள் தொடர்பாகவும் சில கருத்துக்களைக் கூறவேண்டும். இறைநம்பிக்கையே இப்பிரதேச மக்களின் ஜீவநாடி. கிழக்குப் பிரதேசத்தில் உள்ள அனேகமான கிராமங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவையாகும். ஆனால் அத்தகைய ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் பதினைந்து அல்லது இருபது கோயில்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பட்டினி கிடந் தாலும் ஆலயக் கடமை களைச் செய்யத் தவற LDITILITfeB6i.
ஒரு காலத்தில் தற்போதைய சம்மாந்துறை வரை பரந்திருந்த மட்டக்களப்புப் பிரதேசத்துக்கு வடக்கே மண்முனை ஒரு முக்கிய இராசதானியாக விளங்கியது. இங்கே கோவில்குளம் ஆலயமும் கொக்கட்டிச்சோலை ஆலயமும் இரு முக்கிய ஆலயங்களாக விளங்கின. கோவில்குளம் ஆலயத்தின் அழிவுக்குப் பின் அந்த வெற்றிடத்தை ஆரையம்பதி யூரீ கந்தசுவாமி ஆலயம் நிரப்பியது.
ஆரையம்பதிக்கும் கொக்கட்டிச்சோலைக்கும் உள்ள தொடர்பு வரலாற்று ரீதியானது. இக்கால இளைஞர்
14

ப்பாசிரியர் குறிப்பு
தலைமுறை அறிந்திராத பல வரலாற்றுத் தகவல்கள் இம்மலரில் தெளிவுபடுத்தப்படுகின்றன.
மூன்றாவது முக்கிய விடயம், ஆரையூர்க் கந்தனின் தெய்வ சாந்நித்தியமாகும். எவ்வித வாய்ப்பு வசதிகளுமில்லாத, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய இச்சிறு கிராமத்தில் இவ்வாலயம் இவ்வளவு சிறப்பான திருப்பணிகள் செய்யப்பெற்றுக் குடமுழுக்குக் காண்பதே, ஆரையூர்க்கந்தனின் திருவருளுக்கு ஒரு சான்றாகும்.
கிழக்கிலங்கையில் ஆறுமுகன் கோயில்கள் மிகவும் பிரசித்தமானவை.அவை (அ) வெருகல் சித்திர வேலாயுதர் (ஆ) சித்தாண்டி சித்திரவேலாயுதர் (இ) கோயில்போரதீவு சிந்திரவேலாயுதர். (ஈ) மண்டுர் முருகன் (உ) திருக்கோயில் சித்திரவேலாயுதர். (ஊ) உகந்தை முருகன் இவ்வாறு கோயில்களும் கதிர்காமத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவை. தமிழகத்தில் உள்ள முருகனின் "அறுபடை வீடுகள்' போன்று இந்த ஆறு ஆலயங்களும் கிழக்கிலங்கையின் அறுபடை வீடுகள் எனக் கொள்ளத்தக்கவை ஆகும்.
அத்தகைய கோயில் போன்றதே ஆரையம்பதி பூரீகந்தசுவாமி ஆலயம். இதன் வரலாற்றுப் பாரம்பரியம் தெய்வசாந்நித்தயம், பக்தி வழிபாடு என்பவற்றை முடிந்த வரை இம்மலரில் பதிவு செய்ய முயன்றுள்ளோம். ஆக்கங்களை அளித்த அனைவருக்கும் என் நன்றி.
இக்காலத்தில் சிறப்பு மலர்கள் வெளியிடுவது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. ஆனால் அச்சிறப்பு மலர்களின் பயன்பாடுகள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. அப்பயன் பாடுகள் பற்றிய மீளாய்வு பற்றியும் சிந்திப்பதில்லை. இதற்கு என்ன வழி.
சிறப்பு மலர்கள் புத்தக அலுமாரிக்கு அழகு
சேர்ப்பதுடன் நின்றுவிடக்கூடாது. அதில் அடங்கியுள்ள கருவூலங்களை நாம் அறியவேண்டும்.
“The proof of the pudding is in the eating of it" என்பது ஆங்கில வாக்கியம்.
எனவே இம்மலரைப் பெறும் ஒவ்வொருவரும் அதில் உள்ள ஆக்கங்களைக் கருத்துான்றிப் படிக்க வேண்டும். முடிந்தால் தம் கருத்துக்களை ஆலய பரிபாலன சபைக்குத் தெரிவிக்க வேண்டும்.
இது ஒரு வரலாற்று ஆவணம். உங்கள் வீட்டில் உள்ள உசாத்துணை நூல்களில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்து கொள்ளட்டும்.
- அன்புமணி

Page 35
மணர்டலாபிலே
V , 1499 அன்று நிறைவுபெற்ற மகா கும்பாபிஷேகத்தினை விசேட பூசைகளை மனமுவந்து நிறைவேற்றிய உபயகா
1lb
3b
4|b 5tb 9D
10b
11b
12th 13b 14b
16b.
17b 18b 22b 23b
25b
26b
27
29b 30b 31b 32Lb
33b
34b
35D
36b
37)
38b. 39Lib
41b
42b
43b
45ub
நாள்
நாள்
நாள்நாள்நாள்நாள்நாள்நாள். நாள்நாள். நாள். நாள்.
நாள்
நாள்நாள்
ம் நாள்.
நாள்நாள்நாள்நாள்.
நாள்.
நாள். நாள். நாள்நாள்நாள்நாள்நாள். நாள். நாள்.
ம் நாள்.
நாள்நாள். நாள்
ம் நாள்.
நாள
முதலித்தேவன் குடி LTäLŤ (p.LDTflooľLC திரு .த.சடாச்சரலிங் திருமதி இராசம்மா திரு.ஆர்.துரைராசசி அருமைத்தேவர்குடி திருவிளங்கு குடிமக் திரு.வெ.குலசேகரம் திரு.க.சபாரெத்தினழு திரு.கு.கார்த்திகேசு திருமதி மகேஸ்வரி பரமேஸ்வரன் குடும்! திரு.ஏ.சுந்தரமூர்த்தி சேமன் சாமித்தம்பி பத்தினாச்சி குடி மக் திரு.ச.கிருபாகரன் அ
வங்காளக்குடிமக்கள்
டாக்டர் சு.தங்கவடிே திரு.எம்.எஸ்.புவனேந் வீரமாணிக்கன் குடிம வீரமாணிக்கன் குடிம திருமதி. அன்னநேச திருமதி பூமணி பொ செல்வன் பஜிந்தரா
திரு.க.காசித்தம்பி அ மண்முனைப்பற்று கூ திரு.பூசோமசுந்தரம்
திரு.ந.கோணாமலை பூரீ திருநீலகண்ட பில் டாக்டர் என்.முருகப்ட திரு.சீலன் அவர்கள், திருமதி வன்னமணி
திருமதி செல்லத்தங் திரு.இ.புனிதராசா அ திரு.ந.வடிவேல் அவ சங்காபிஷேகம் பொ
மேற்குறிப்பிட்ட அடியார்களுக்கு எம்பெருமானின் அருட்க பிரார்த்திப்பதுடன் ஆலய பரிபாலன சபையின் சார்பில் ம

டிக உபயகாரர்
த் தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற்ற மண்டலாபிஷேக ரர்களின் விபரம் வருமாறு
மக்கள் ஆரையம்பதி ணி அவர்கள், ஆரையம்பதி கம் அவர்கள், ஆரையம்பதி கார்த்திகேசு, ஆரையம்பதி வ்கம் அவர்கள், ஆரையம்பதி மக்கள், ஆரையம்பதி
கள், ஆரையம்பதி
அவர்களும் சகோதரர்களும், ஆரையம்பதி pம் சகோதர சகோதரிகளும், ஆரையம்பதி அவர்கள், ஆரையம்பதி சுந்தரலிங்கம், ஆரையம்பதி பம் சார்பில் திரு.க.சொக்கலிங்கம், ஆரையம்பதி அவர்கள், ஆரையம்பதி - குடும்பம் - திரு.சா.கோபாலபிள்ளை கள், ஆரையம்பதி
வர்கள், ஆரையம்பதி
, ஆரையம்பதி
வல், ஆரையம்பதி
திரராசா, ஆரையம்பதி
க்கள், ஆரையம்பதி
க்கள், ஆரையம்பதி ம் தம்பிராசா, ஆரையம்பதி ன்னுச்சாமி, ஆரையம்பதி சிவனேசராசா, ஆரையம்பதி வர்கள், ஆரையம்பதி ட்டுறவு ஊழியர் சங்கம், ஆரையம்பதி அவர்கள், ஆரையம்பதி அவர்கள், ஆரையம்பதி ர்ளையார் ஆலய பரிபாலனசைப, ஆரையம்பதி ன் அவர்கள், ஆரையம்பதி
ஆரையம்பதி
பொன்னம்பலம் , ஆரையம்பதி கம் குடும்பத்தினர் சார்பில் திரு மாதங்கவடிவேல் வர்கள், ஆரையம்பதி
ர்கள், ஆரையம்பதி
மக்கள், ஆரையம்பதி
ாட்சம் எப்போதும் துணைபுரியவேண்டுமென இறைவனைப் னமார்ந்த நன்றியினையும் தெரிவிக்கின்றேன்
இவ்வண்ணம்,
össdfa Gaoras Juras IT பொருளாளர்.
15

Page 36
LOLLtdüü56TILeb
செல்வி க.தங்கேஸ்வரி
1) வேதகாலத்துக்கு முந்திய முருகவழிபாடு:
முருகவழிபாடுபற்றி நாம் பெறும் முதல் தகவல் வேத காலத்தில் எழுந்த ஸ்கந்த புராணத்தில் கிடைக்கிறது.
ஆனாலும் அதற்கு முற்பட்ட காலங்களில் முருக வணக்கம் இருந்தது என்பதற்குப் பல்வேறு சான்றாதாரங்கள் உள. அவ்வணக்கம் வேல் வழிபாடு போன்று வெவ்வேறு வடிவங்களில் இருந்தது.
உலகம் தோன்றியபோது, முதலில் தோற்றம் பெற்றவை மலைகள். மலையக மக்கள் வழிபட்ட குறிஞ்சித் தெய்வம் முருகன் என்பர். கி.மு.4000 ஆண்டளவில் தோன்றிய சுமேரிய நாகரீகத்தில் முருகவணக்கம் இடம் பெற்றிருந்தது. சுமேரிய நாகரீகத்துக்கும், திராவிட நாகரீகத்துக்கும் உள்ள ஒற்றுமை பல் ஆய்வாளர்களால் நிறுவப்பட்டுள்ளது.
சுமேரியாவில் "சிகுறார்” என்னும் மலைகள் இருந்தன. இவர்கள் வணங்கிய மலைத்தெய்வம் முருகனே, சுமேரியர் உலகின் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த போது அவர்களுடன் சேர்ந்த முருகவழிபாடும் அவர்கள் சென்ற இடங்களில் பரவியது எனலாம்.
இம்முருகவணக்கம ஆதியில் லெமூரியாக்கண்ட மக்களிடையே இருந்து, சுமேரிய மக்களிடம் சென்றது என்பர். இந்த லெமூரியாக்கண்டமே தமிழ் இலக்கியங்களில் குமரிக்கண்டம் எனக்குறிப்பிடப்படுகிறது. எனவே முருக வணக்கம் குமரிக்கண்டக் காலத் தொன்மையுடையது எனக் கொள்ளலாம். இதற்கான சான்றுகள் பல உள. (2) தொல் பழங்கால வணக்கமுறைகள்:
தொல்பழங்காலத்தில் பொதுவாக பல இடங் களில் வேல்வழிபாடு, நாகவழிபாடு, சூரியவழிபாடு முதலியன இருந்தன. இவை ஆதிக்குடிகளின் வணக்க முறைகள் என்பது ஆய்வாளர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வணக்கமுறை இடைக்கற் காலத்தில் (Mesolithic) தோன்றியது என்பதற்கான ஆதாரங்கள்ை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். இடைக்கற்காலத்தைத் தொடர்ந்து வந்த புதியகற் காலத்திலும் (Neolithic) பெருங்கற்காலத்திலும் (Megalithic) முருகவழிபாடு தொடர்ந்து வந்துள்ளது.
இடைக்கற்காலத்தின் வேட்டுவ சமூகத்தினரும் அதன் பின்னர் வந்த புதிய கற்காலத்தின் விவசாய சமூகத்தினரும் அருகருகே வாழ்ந்த காரணத்தால், முருக வழிபாடு இரு சாராரிடையேயும் பரவியது. இதற்கான பல தொல்லியல் சான்றுகள் உள.
16

it. ஏ. (தொல் - சிறப்பு)
தென்னிந்தியாவில் தக்காணத்தில் உள்ள குறவர், குறும்பர், கொல்லர் முதலியோரது வாழ்க்கை முறையை ஆய்வு செய்தவர்கள் வேட்டை ஆடுதலையே தொழிலாகக் கொண்ட இச்சமூகத்தினரின் தொடர்பால் விவசாய சமூகத்திலும் (புதியகற்காலம்) தெய்வ மூர்த்தங்கள் இருமனைவியர்களைக் கொண்டவர்களாக இருந்தனர் என்றும் அவர்களில் ஒருத்தி வேட்டுவ சமுதாயப் பெண் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ( சி.க.சிற்றம்பலம் "பண்டைய தமிழகம். பக். 51)
மேற்கூறிய தெய்வமூர்த்தம் குறிஞ்சிக் கடவு ளான முருகனையே குறிக்கின்றது. முருகனின் ஒரு மனைவி வேட்டுவ குலத்தைச் சேர்ந்த "வள்ளி” என்பது ஸ்கந்த புராணத் தகவல் ஆகும். (9) இயற்கை வழிபாட்டில் இருந்து தோன்றிய
முருக வணக்கம்:
ஆதியில் உலகெங்கணும் இயற்கை வழிபாடு நிலவியது. இவ்வழிபாட்டுமுறை பின்னர் சிவன் முருக வழிபாடாகப் பரிணாமித்தது.இது பற்றிய விளக்கம் வருமாறு:
ஆதிகால மரவழிபாட்டில், ஆல், கடம்பு, வில்வம், கொன்றை, வேம்பு, போன்ற மரங்கள் முக்கிய இடம் பெற்றன. இம்மரவழிபாட்டு முறை (அ) கொடிநிலை (ஆ) கந்தழி (இ) வள்ளி என மருவி வந்தது.
கொடிநிலை- கொடியால் சூழப்பெற்ற கடவுள்மரம்.
கந்தழி - பட்டுப்போன மேற்படி மரத்தின் அடிப்பாகம்.
வள்ளி - மரம் பட்டுப்போன பின் தனியே நின்ற கொடி.
(கொடிநிலை, கந்தழி, வள்ளி மூன்றும் கடவுள் நிலையாகத் தொல்காப்பியரால் காட்டப்படுகின்றது).
பட்டமரத்தின் அடியும் அழியும்போது அந்த இடத்தில் ஒரு கல்வைக்கப்பட்டது. அக்கல் வணக்கம் பின்னர் லிங்கவழிபாடாக மாறியது என டாக்டர் க.ப. அறவாணன் குறிப்பிடுகிறார். (மரவழிபாடு. க.ப.அறவாணன். Luis: 104-105)
இம்மரத்தின் அடியில் சில சமயங்களில் ஒரு பலிபீடம் அமைத்து அதில் ஒரு வேல் நாட்டப்பட்டு, அதுவும் வணக்கத்துக்குரியதாகியது.
இவ்வகையான வழிபாடுகள், இடைக்கற்காலத் தில் ஏற்பட்டன. பிந்திய காலகட்டத்தில், மரவழிபாடு இல்லாமல், கற்களை மட்டும் (நடுகல்) வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் ஏற்பட்டது. பிற்காலத்தில் அக்கல் ஒரு

Page 37
உருவமாகச் செதுக்கப்பட்டு அதற்கு ஒரு கோயில் அமைத்து வழிபடும் முறை ஏற்பட்டது.
(4) உலகநாடுகளில் மரவழிபாடு:
எகிப்து, பபிலோனியா, சுமேரியா, பலஸ்தீனம் முதலிய நாடுகளில், நாகவணக்கம், சூரியவணக்கம், மரவணக்கம், நதிவணக்கம் என்பன இடம்பெற்றிருந்தன. இயற்கை நிகழ்வுகள் ஏற்படுத்திய அச்சத்தால் இவ்வழி பாடுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆல்,அரசு போன்ற பாரிய விருட்சங்கள் ஆதிமனிதனுக்கு வதிவிடங்களாகப் பயன் பட்டன. மரத்தின் பட்டையும், இலைகளும் அவனுக்கு உடைகளாகப் பயன்பட்டன. மரத்தடி குழுவினர் கூடும் பொது இடமாகப் பயன்பட்டது. எனவே மரவழிபாடே ஆதிமனிதனின் முதல் வழிபாடாக இருந்தது என்பதில் ஆச்சரியம் இல்லை.
வழிபாட்டு மரபில், மலையும், மலை சார்ந்த இடங்களிலும் வாழ்ந்த குறிஞ்சிக் குறவர்கள் கடம்ப மரவழிபாட்டினை கைக்கொண்டனர். அவ்வகையில் மலையும் மலைசார்ந்த இடமும் கடம்ப மரவழிபாட்டுத் தலங்களாகின. இவ்வணக்க முறை பின்வரும் வகையில் மாற்றம் பெற்றது.
(அ) கடம்பமரம் வழிபாடு செய்யப்பட்டது. (ஆ) கடம்பமர அடியில் வேல் ஒன்ற நடப்பட்டது. (இ) மரத்தின் அடிப்பாகத்தில் ஒரு பலிபீடம் அமைக்
&BUL-g5). (ஈ) இவ்வழிபாட்டில் பூசாரியின் (வேலன் ) ஆட்டம்
இடம் பெற்று, அது வெறியாட்டு எனப்பட்டது. (உ) பலிபீடத்தில் 'யந்திரம் வரைந்து பூசாரி (வேலன்) பூசை செய்தான். - (ஊ) வேல் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. (எ) காலக்கிரமத்தில் இவ்வணக்கமுறை முருக
வணக்கமாகியது.
இவை அனைத்தும் இடைக்கற்காலம் முதல் தொடர்ந்து வந்த நடைமுறைகள் ஆகும்.
(5) வேட இனத்தவர் ஆய்வு:
புதிய கற்கால மனிதன் இறந்தவர்களை ஈமத் தாழிகளில் வைத்து புதைத்து அடக்கம் செய்தான். இதற்கான சான்றுகள், வடஇந்தியாவிலே ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கிடைத்துள்ளன. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை மானிடவியலாளர்கள் “வேடொய்ட் (Verddoid) என இனம் கண்டுள்ளனர். (வேடஇனத்தவரின் எலும்புக் கூடுகள்) இவர்கள் பேசிய மொழி "ஒஸ்ரிக்' மொழி என்பர்.
மேற்குறித்த இடைக்கற்கால “வேடொயிட்” அல்லது "ஒஸ்ரலோயிட்” இனமக்களே ஈழத்தில் வாழ்ந்த வேடர்கள் என இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (பண்டையத் தமிழகம், சி.க.சிற்றம்பலம் பக்3)
தமிழக, கேரள, ஈழப்பிரதேசம் ஒரு காலத்தில்
ஒரே பிரதேசமாக இருந்தது என்பதையும் இவ்வாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இடைக்கற்காலத்தின் பிற்பகுதியில்

தொடங்கிய இறந்தோரைப் புதைக்கும் வழக்கமானது புதிய கற்காலத்திலும் தொடர்ந்தது.
புதிய கற்காலத்தில் இறந்தவர்களின் உடல் களை மிருகங்களுக்கு இரையாகக் கொடுத்து எஞ்சிய எலும்புகளையும் மேற்படி உடல்களையும் எரித்து எஞ்சிய எலும்புகளையும் புதைக்கும் வழக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த எலும்புகளுடன் பலவிதமான பொருட்களையும் சேர்த்துப் புதைத்தனர். இப்பொருட்களில் "வேல்" முக்கிய பொருளாக இடம்பெற்றது.( இவ்வேல் இறந்தவனைக் காக்கும் என்ற நம்பிக்கை போலும்)
இவ்வாறு புதைக்கும் வழக்கம் பெருங்கற் காலத்துக்குரியது என்றாலும் புதிய கற்காலத்திலிருந்தே இவ்வழக்கம் ஆரம்பித்துவிட்டது எனலாம். எகிப்து - சிரியா, பாலஸ்தீனம் போன்ற இடங்களிலும் இவ்வழக்கம் இருந்தது. (6) பெருங்கற்கால வேல்வழிபாடு:
வடஇந்திய, தென்னிந்திய பிரதேசங்களில் பெருங்கற்காலப் பண்பாடு பரந்து காணப்பட்டது. இதற்குச் சான்றாக, தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளில் ஆடு, வேல், எருமை, புலி வடிவங்கள் சேவற்கொடி, காவடிக்குரிய வாய் அலகு செடில், பொன், வெண்கலமணிகள், ஒருதலைச்சூலம், முத்தலைச்சூலம் முதலியன காணப்பட்டன. இவை முருக வணக்கத்தின் சின்னங்கள் என்பதை இலகுவாக ஊகிக் E6)Tib.
புதிய கற்காலத்தில் "எருது” சிவனது வாகன மாகக் கொள்ளப்பட்டதுபோல ஒருதலை , முத்தலை சூலங்கள், முருகன், கொற்றவை, சிவன் ஆகிய தெய்வ மூர்த்தங்களின் சின்னங்களாக கருதப்பட்டன. ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட காவடிச் செடில்கள். சூலம் (வேல்) என்பன பண்டைய பாலஸ்தீனத்தில் அகழ்ந்தெடுக் கப்பட்ட ஈமத்தாழிச் சின்னங்களை ஒத்திருந்தன. இவ்வழக் கத்துக்குரிய காலம் கி.மு. 1200 ஆண்டு ஆகும். எனவே இச் சின்னங்கள் அந்நாட்டில் தங்கியிருந்து இறந்துபோன இந்திய வணிகக்கூட்டத்தினரின் புதைகுழிகளுக்குரியவை களாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. அதற்குக் காரணம் பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழிச்சின்னங்களும் இவ்வாறே இருந்தன என்பதாம்.
தொகுத்து நோக்கில் பெருங்கற்காலத்திலும் புதிய கற்றாலத்திலும் ஆதிக்குடிகளிடம் முருகவணக்கம் வெவ்வேறு வடிவங்களில் இடம்பெற்றிருந்தது என்பது பெறப்படுகிறது.
(7) சங்ககாலத்தில் முருகவழிபாடு
(கி.மு.500- கி.பி.200)
சங்ககால இலக்கியங்களில் முருக வணக்கம் பற்றிப் பலகுறிப்புகள் காணப்படுகின்றன. பரிபாடல், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, முதலிய சங்க நூல்களில் இக்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
17

Page 38
இக்குறிப்புகளில் பின்வரும் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. முருகன் மலைப்பிரதேசத்தின் கடவுள். தேனையும் தினையையும் நைவேத்தியாக வைத்து வேடர் முருகனை வழிபட்டனர். வெறியாட்டு, குரவைக்கூத்து என்பன முருக்வணக்கத்தில் முக்கிய இடம் பெற்றன.
மலைப்பகுதியில் உள்ள வேட்டுவப் பெண் வள்ளியை முருகன் மணந்தான். பின்னர் திருப்பரங் குன்றத் தில் தெய்வானையை மணந்தான். முருகனுடைய வேல் ஞானசக்கியாக வணங்கப்படுகின்றது.
சங்க காலத்தில் முல்லை நிலத்தெய்வம் மாயோன், குறிஞ்சி நிலத்தெய்வம் சேயோன் (முருகன்) மருதமலைத் தெய்வம் வேந்தன் நெய்தல் நிலத் தெய்வம் வருணன் எனக்குறிக்கப்பட்டுள்ளது.
மிகப்பழம்பெரும் நூலான "தொல்காப்பியம்” பின்வரு மாறு குறிப்பிடுகின்றது.
“மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையால், சொல்லவும் படுமே.”
(8) சங்ககால வேல்வழிபாடு குறிக்கும்
முருகவணக்கம்:
முருக வழிபாட்டின் தோற்றமாக வேல் வணக்கம் கொள்ளப்படுகிறது. போர்களத்திலும் குரவைக் கூத்திலும் வேல் வழிபாடு இடம்பெறுகின்றது. "ஆடுகளம்” “வெறிக் களம்” எனச் சங்க இலக்கியங்கள் கூறும். போர்க்களத்தில் வேல் கொண்டு செல்லப்பட்டது. அவ்வேல் மயில் இறகு, பூமாலைகள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டது. (சி.க.சிற்றம்பலம் ஈழத்து இந்துசமய வரலாறு. பக். 184) நெடுநல்வாடை என்ற் சங்கநூலில் இவ்விபரம் காணப் படுகிறது.
செந்நிற ஆடைகளினாலும் செந்நிறப்பூக்களி னாலும் வேல் அலங்கரிக்கப்பட்டது.
இவ்வணங்கு (தெய்வம்) உறையும் இடங்களாக மலைகள், ஆறுகள் குறிக்கப்படுகின்றன. முருகன் உறையும் கருவியாக 'வேல் குறிப்பிடப்படுகின்றது.
சங்க காலத்தில் ஒரு இளம்பெண் நோயுற்ற போது பூசாரியாகிய வேலன் முருகனை அழைப்பதாகக் கூறப்படுகிறது. பூசாரி கடம்பு அணிந்து குறிஞ்சிமாலை சூடி, வாத்தியங்கள் முழங்க வெறியாட்டு ஆடுவான். இந்: வேலன் (பூசாரி) மேல் உருவேறும் தெய்வம் முருகு என குறிப்பிடப்பட்டது. (குறுந்தொகை 362) ("முருகு அயர்ந்து வந்த முதுவாய்வேல்")
இந்த முருகனின் மனைவி 'வள்ளி” எ6
நற்றிணை குறிப்பிடுகின்றது. (நற்றிணை 824 - முரு புணர்ந்தது இயன்ற வள்ளிபோல்”)
18.

சங்க காலத்தில பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. மேற்படி “வெறியாட்டு” நிகழ்வில் வேலன்(பூசாரி) சன்னதம் கொண்டு ஆடி, ஆட்டை,வெட்டி நோயுண்ட பெண்ணின் நெற்றியில் அதன் குருதியைத் தடவுவான். (குறுந்தொகை 111 - 1,2) (“மென் தோள் நெகிழ்ந்த செல்லல்வேலன்')
இதேநிகழ்வு மற்றொரு சங்கநூலான “மதுரைக் காஞ்சி” யிலும் காணப்படுகின்றது. (மதுரைக் காஞ்சி 613 - 615 “அருங்கடிவேலன் முருகொடு வளைஇ.)
“அகநானூறு பாடலும் (22:8-11) இந்நிகழ்வு பற்றிக் கூறுகிறது.
(9) கந்தக் கடம்பன்
கடம்பமரம் முருகன் உறையும் தலவிருட்சமாகக் குறிப்பிடப்படுகின்றது. கடம்பு மற்றும் வேலன், பூசாரி, ஆகியோர் முருக வணக்கத்துடன் தொடர்புபடுவதை “பரிபாடல்” கூறுகின்றது. (பாடல் 17: 1-6) பாடல் வருமாறு:
"தேம்படுமலர்குழை பூந்துகில வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைகி விடையரை யமைந்த வேலன் கடிமரம் பரவின நரையொடு பண்ணிய விசையினர் விரிமலர் மதுவின் மரதனை குன்றத்துக் கோலெரி கொலை நறை புகைக்கொடி யொருங்கெழ
இப்பாடலில் கடம்ப மரத்தினை நோக்கி கோல், விளக்குகள், இசைக்கருவிகள், சந்தனம், நறுமணம், தூபம், கொடிகள் என்பவற்றோடு, மலர், தளிர், பூந்துகில் மணி, வேல், ஆகியவற்றைச் சுமந்து வந்து கடம்ப மரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வழிபாடு பற்றிக் கூறுகிறது.
இதே கருத்து “திருமுருகாற்றுப் படை” யிலும் இடம் பெறுகிறது. (பாடல் 223 - 226)
“காடுங்காவுங் காவின் பெறுதுருத்தியும் யாறும் குளனும் வேறு பல்வைப்பு சதுக்கமும் சாந்தியும் புதுப்பூங்கடம்பு மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்” “பரிபாடலில் முருகன் பெயர் கடம்ப மரத்தொடு தொடர்புறும் பல பாடல்கள் உள:
"SLlbu& Gaf6)6.6ór (18:126) "புலவரை அறியா புகழ்பூத்த கடம்பமர்ந்து(192) “கடம்பர் அணிநிலை பகர்ந்தோம்(19; 104) “உருளிமைக் கடம்பின் நெடுவெட்டு (21: 50)
(10) கந்தழிவழிபாடும் முருகனும்:
கந்தழி வழிபாடுபற்றி ஏற்கனவே கூறப்பட்டது. கொடிநிலை - கந்தழி - வள்ளி என்ற வணக்கமுறையை நினைவூட்டும் வகையில் இன்றைய ஆலயங்களில் கொடித்தம்பம் அதைச் சுற்றிக் கொடிச் சீலை, கொடிமரத்தின் அடியில் பலிபீடம் என்பன அமைந் திருப்ப தைக் காணலாம்.

Page 39
“கந்தழி’ என்பதற்கு வேறொரு விளக்கம் கூறுகிறார் கோ.சுப்பிரமணியபிள்ளை. அவர்கூறுவது - கந்து என்றால் கட்டப்பட்ட அடிமரம். அடிமரம் அழிந்தபின்னர் அதற்குப் பதிலாக ஒரு கல் நடப்பட்டது. (மரவழிபாடு. பக்.06)
எவ்வாறாயினும் இது மரவழிபாடு, மருவியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
“கந்தழி” என்பது பல சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்றது. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:
கந்துடைப் பொதியல் (பட்டினப்பாலை - 249) கலிகெழ கடவுள் கந்தம் (புநநானூறு - 521) மாத்தாட் கந்து (அகநானூறு - 287) புதலியர் பொதியிற் கடவுட் போக்கிய கந்தாட் கந்து (அக:307) கொடிநிலை கந்தழி வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுள் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
(தொல்காப்பியம்)
இக்கூற்றுக்களிலிருந்து கந்தழி வழிபாடு, இடைக் கற்காலம், புதியகற்காலம், பெருங்கற்காலம், சிந்துவெளிக் காலம், வேதகாலம், சங்ககாலம் ஊடாகத் தொடர்ந்து இன்று வேல்வணக்கம் முருக வணக்கத்தின் ஆரம்பம் என்பதுடன் அவ்வணக்க முறையே பிற்காலத்தில் முருக வணக்கமாக மாறியது என்பதும் தெளிவாகிறது.
(11) வடஇந்தியாவில் முருக வணக்கம்:
கி.மு.4ம் 3ம நூற்றாண்டுகளில் அதாவது மெளரிய குஷாணர் காலத்தில் வட இந்தியாவில் முருக வணக்கம் இருந்தது என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு முருகன் ‘விசாகன் ஸ்கந்தன்' எனப் பெயர் பெற்றிருந்தான்.
குஷாண மன்னனது நாணயங்களில் விசாகன்,
ஸ்கந்தன், குமார, மகாசேன போன்ற பெயர்கள் ஒரு புறமும் மயிலின் மீது அமர்ந்திருக்கும் முருகக்கடவுளின் உருவம் மறுபுறத்திலும்பொறிக்கப்பட்டிருந்தன.
அயோத்தி அரசின் நாணயங்களில் சேவற் சின்னம் உச்சியில் பொறிக்கப்பட்ட ஸ்தம்பம் உள்ளது. யவன தேயத்தவர்களது நாணயத்தில் “பாகவதோ சுவாமினோ பிரமணிய தேவஸ்ய குமாரஸ்ய” என்ற வாசகம் உள்ளது.
வடஇந்தியாலில் முருகன் ஆலயங்கள் பல இருந்தன என்பதற்கும் சான்றுகள் உள்ளன. தற்போதைய பாகிஸ்தானின் "அப்பொதாபாட்” என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் “குமாரஸ்தான” (குமரக்கோட்டம்) பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. நாகார்ஜுன் கொண்டா கல்வெட்டிலும் “கார்த்திகேய பிரசாத்” பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இவ்வாறு தமிழ் நாட்டு முருகன் வடஇந்தியா விலும் செல்வாக்குப் பெற்று ஸ்கந்த, குமார, விசாக, மகாசேன, சுப்பிரமணிய, கார்த்திகேய எனப் பெயர் பெற்றிருந்தமை ஆழ்ந்து சிந்தித்தற்குரியதாகும்.
(12) தென்னிந்தியாலில் முருக வணக்கம்
சங்ககாலப் புலவராகிய நக்கீரர் பாடிய “திருமுருகாற்றுப்படை” தமிழகத்தில் நன்கு வேரூன்றிவிட்ட முருகவணக்கத்துக்குரிய ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். 'அறுபடைவீடு எனக் குறிப்பிடப்படும் பழநி, பழமுதிர் சோலை, சுவாமிமலை(திருவேரகம்) திருத்தணிகை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் என்ற ஆறுமுருகத் தலங்களும் பழம் பெரும் முருகத்தலங்கள் ஆகும். முருகன் குறிஞ்சித் தெய்வம் என்ற தொன்மைக் காலக் கோட் பாட்டுக்கு அமைய இத்தலங்கள் மலைகளில் அமைந் திருப்பதும் (திருச்செந்தூர் தவிர) படைவீடு என முருகனின் வேற்படையைக் கொண்டு இத்தலங்கள் அழைக்கப்படுவதும் இத்தலங்களின் தொன்மைக்குச் சான்றுகளாகின்றன.
முருகவணக்கம் தொடர்பான பக்தி இலக்கி யங்கள் தென்னிந்தியாவில் ஏராளமாகத் தோன்றியுள்ளன. அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம், திருவகுப்பு குமரகுருபரரின் முருகன் பிள்ளைத் தமிழ் பாம்பன் சுவாமிகள் பாடல்கள் முதலியன முருக தரிசனத்தின் பக்தி பரவசத்தை மெய்யுருகக் கூறுகின்றன.
இந்தவகையில் இலங்கையில் உள்ள பழம்பெரும் முருகத்தலமான கதிர்காமம் வரலாற்றுத் தொன்மை கொண்டதுடன் தென்னிந்தியாவில் உள்ள முருகத் தலங்களைப் போன்று தெய்வ சாந்நித்தியம் உடையது என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது. அருண கிரிநாதரின் திருப்புகழிலும் இப்பதி இடம் பெறுவது மனங்கொள்ளத்தக்கது.
ஸ்கந்தமுருக ஆய்வு
பல மேல்நாட்டவர் களைக் கவர்ந்த கதிர் காமத்தலம் "ஸ்கந்த - முருக" பற்றிய சர்வதேச ஆய்வுக் கருத்தரங்குகளுக்கும் வழிவகுத் துள்ளது . 1972ம் ஆண்டு முதல் வருடம் தோறும் கதிர்காம யாத்திரை மேற்கொண்ட அமெரிக்கரான பற்றிக் ஹரிகன் என்பர் கதிர்காமத் தலத்தின் பக்திநிலையால் ஈர்க்கப்பட்டு அண்மையில் சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் "ஸ்கழத - முருக” என்ற தலைப்பில் 4 நாட்கள் நீடித்த ஒரு சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கை நடாத்தியுள்ளார். இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் 1998ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. மாநாடு 28.12.98 முதல் 31.12.98 வரை சென்னை ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் பெறுபேறாக "ஸ்கந்த - முருக” அனைத்துலக ஆய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த சர்வதேச ஆய்வு மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
19

Page 40
13. கிழக்கிலங்கையின்
தொன்மைக்கான சான்றாதாரங்கள்
கிழக்கிலங்கையின் தொன்மைக்கான சான்றா தாரங்கள் ஏராளமாக இருப்பினும், முக்கியமான சிலவற்றை இக்கட்டுரையில் சேர்க்கவேண்டிது அவசியமாகிறது. அவை
வருமாறு:
(9) The Early History of Ceylon or the Indian Period of Ceylon History - Culcutta, 1946, Page40
(a) The Arya Kindom in North Ceylon - JRASCB. Vol. VII. Part II, 1961, Page 181-182
(S) The History and culture of Indian peopleBy Majumdar and Pusalkar. Page: 236
(FE) The Veddahs - By C.G. Seligman and Brenda. Z. Seligman. Cambridge 1911 Page: 419–420
− (d) Ancient Ceylon - An account of the Aboriginers and Part of the Eary Civilisation-London. 1909. Page: 15
(ea) Ancient Jaffna - By Mudliyar Rasanayagam. Page: 1 - 44
(6) Veddahs in Transition, Colombo, 1964 Page: 16, 22
மேற்கூறியவைதவிர கிழக்கிலங்கைப் பிதேசம், புவியியல், மண்ணியல், தாவரவியல், விலங்கியல் அடிப்படையிலும் தொன்மை வாய்ந்த பிரதேசம் என்பதந்கு சான்றாதாரகங்கள் உள்ளன.
இலங்கைத் தீவு கேம்பிரியனுக்கு முற்பட்ட தொல்காலப் பாறைகளைக் கொண்டது. இவற்றில் பெரும் பகுதி இலங்கையின் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்றன.
இப்பிரதேசத்தில் தமிழக, விந்திய, மலைப் பிரதேசத்தின் நெருங்கிய தொடர்புகள் தரைத்தோற்ற, தாவர அடிப்படையில் காணப்படுகின்றன என்பது ஆய்வாளர் கூற்று அதற்கு ஆதாரமாக இப்பிரதேசத்தின் பாறைப் போக்குகள், பாறைகள், மண்வளம், இயற்கைத் தாவரங்கள் விலங்கினங் கள் என்பன எடுத்துக்காட்டப்படுகின்றன.
14.பூர்வீக மட்டக்களப்பு பிரதேசம்:
1963ம் ஆண்டுக்குப் முன் மட்டக்களப்பு தற்போதைய அம்பாரை மாவட்டத்தையும் உள்ளடக்கி யிருந்தது. மட்டக்களப்பு மாவட்டம் வடக்கே வெருகல் முதல் தெற்கே கூமுனை (Kumana) வரை பரந்திருந்தது. 1963ல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பகுதி (கல்முனை முதல் குமண வரையுள்ள பிரதேசம்) அம்பாரை மாவட்டம் எனத் தனியாகப் பிரிக்கப்பட்டது. இப்பிரிவினைக்கு முந்திய
20

மட்டக்களப்பு மாவட்டமே இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.
திரு.எஸ்.பரணவிதான (தொல்லியல் ஆணை uTGTs) 1970so G6.6fulfill "Inscription of Ceylon' என்னும் நூலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களாக வெருகல் முதல் பாணமை (குமணை) வரை உள்ள இடங்களை குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நூலில் மட்டக்களப்பில் பிராமிக் கல்வெட் டுக்கள் காணப்படும் பிரதேசங்களாக பின்வரும் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கோறளைப்பற்று (வாழைச்சேனை) ஏறாவூர்பற்று (ஏறாவூர்) விந்தனைப்பற்று (மகாஒயா) மண்முனைப்பற்று (மண்முனை) வேவகம்பற்று (இக்கினியா கலை) சம்மாந்துறைப்பற்று , அக்கரைப்பற்று, பாணமைப் பற்று.
எனவே இக்கட்டுரையில் பூர்வீக மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் முருகன் கோயில்களாக வெருகல் முதல் திருக்கோயில் வரை உள்ள கோயில்கள் குறிப்பிட்டப்படுகின்றன. அவை வருமாறு:
(அ) வெருகல் சித்திரவேலாயுதர்
(ஆ) சித்தாண்டி சித்திரவேலாயுதர்
(இ) கோயில் போரதீவு சித்திரவேலாயுதர்
(ஈ) மண்டுர் முருகன்
(உ) திருக்கோயில் சித்திரவேலாயுதர்
(ஊ) உகந்தை முருகன்.
15. கிழக்கிலங்கையில் ஆதிக்குடிகளான வேடர் கள் வழிவந்த முருகவணக்கம்.
இலங்கையின் ஆதிக்குடிகள் " ஒஸ்ரலோயிட்” இனத்தைச் சேர்ந்த வேடர்கள் ஆவர். இவர்கள் கிழக் கிலங்கையில் செறிந்து வாழ்ந்துள்ளனர். இவர்கள் மூல மாகவே முருகவணக்கம் கிழக் கிலங்கையில் வேரூன்றி யுள்ளது. என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
இவைதவிர கிழக்கிலங்கை மிகவும் தொன்மை யான நிலப்பகுதி என்பதற்கும் பல சான்றுகள் கிடைத் துள்ளன. இங்கு பழங்கற்கால இடைக்கற்கால புதிய கற்கால பெருங்கற்காலச் சின்னங்கள் பல கண்டெடுக்கப் பட்டுள்ளன. கிழக்கிலங்கையில் உள்ள கதிரவெளி, மகியங்கனை, விந்தன, வெல்லச, தீகவாபி, உகனை, திச்மகறகம முதலிய இடங்களில் இச்சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன பெருங்கற்கால ஆதிக்குடிகளின் வணக்க முறையான லிங்க வணக்கம், முருகவணக்கம், கொற்றவை வணக்கம் முதலியவை இன்றும் மட்டக்களப்பு பிரசேத்தில் நிலைத்துள்ளன.
இலங்கையின் ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் இன மக்களை ராட்சசர்கள் எனவும் அமானுஷ்யர்கள்

Page 41
எனவும் “மகாவம்சம் குறிப்பிட்டாலும் உண்மையில் இவர்கள் நாகரிகம் மிக்க திராவிட இன மக்கள் என்பது ஏற்கனவே பல ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட உண்மை யாகும்.
கிழக்கிலங்கையில் உள்ள முருக ஆலயங்கள் பலவற்றில் இன்றும் வேடர் சம்பிரதாயங்கள் இடம் பெறுகின்றன. கதிர்காம ஆலயத்தில் வேட்டுவ இனப் பெண்கள் கன்னிப் பெண்களாக வருகின்றனர். மண்டுர் முருகன் கோயிலில் வேட்டுவ இனப் பெண்கள் கன்னிப் பெண்களாக வருவதுடன் வேடர்பூசையும் வேலன் வெறியாட்டும் இடம் பெறுகின்றன. சில முருகன் கோயில் களில் ஆதியில் இடம் பெற்றிருந்த வேடர் சம்பிரதாயங்கள் காலப்போக்கில் அருகி மறைந்துள்ளன.
16.மட்டக்களப்பின் பெருங்கற்கால (கி.மு. 10000 - 8000) சின்னங்களும் முருகவழிபாடும்
கதிர்காமம், திசமாறாமை (மாகம), உகந்தை, கதிரவெளி முதலிய இடங்களில் காணப்பட்ட பெருங்கற் காலச் சின்னங்கள் இடுகாடுகள், மற்றும் ஆதித்திராவிடர்க் குரிய வாழ்முறை என்பன முருக, லிங்க வழிபாட்டுக் காலத்துக்குரியனவாகும்.
தற்போது தீகவாபியில் உள்ள அரும்பொருள் காப்பகத்தில் (Museum) இப்பிரதேசங்களில் கண்டெடுக் கப்பட்ட சில பொருட்கள் உள்ளன. அவற்றில் முத்தலை சூலம், இருதலைச்சூலம், ஒரு தலைச்சூலம் முதலியனவும் காணப்படுகின்றன. சூலம், சிவவழிபாடு, லிங்கவழிபாடு, கொற்றவை வழிபாடு ஆகியவற்றின் சின்னங்கள் ஆகும் அவ்வாறே ஒரு தலைச்சூலம் (வேல்) வேல்வழிபாட்டின் சின்னமாகும்.
கதிரவெளி முதலிய இடங்களில் கண்டெடுக்கப் பட்ட பெருங்கற்காலச் சின்னங்களுள் ஒருதலை, இருதலை, முத்தலை சூலங்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் குறிப்பிடத்தக்கவை. இவை முருக வணக்கத்தையும் சிவ வணக்கத்தையும் குறிக்கும் சின்னங்களாகும். கதிரவெளி யில் பெருங்கற்காலத்துக்குரிய இடுகாடுகளும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு இப்பிரதேசத்தின் தொன்மைபற்றியும், தொன்மைக்கால வணக்கமான முருக வணக்கம் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
உலகெங்கும் காணப்பட்ட ஆதிக்குடிகளின் வழிபாட்டில் முதலில் மரவழிபாடும் , பின்பு லிங்கவழிபாடும், அதன் பின் வேல்வழிபாடு , சூலவழிபாடு என்பனவும் இடம் பெற்றன. இவ்வழிபாட்டு முறைகள் கொடிநிலை (கொடியும் மரமும்) கந்தழி (மரத்தின் அடிப் பகுதி. வள்ளி (கொடி) என்ற முறையில் ஆரம்பித்துப் பின்னர் மேற்கண்ட வாறு பரிணாம வளர்ச்சி பெற்றன என்பது தொல்லியலாய் வாளர் கூற்று ஆகும்.

17.கிழக்கிலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படும் முருகவணக்கம் பற்றிய தகவல்கள்:
கிழக்குப் பிதேசத்தில் பிராமிக் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள் ளோம். இக்கல்வெட்டுகளில் காணப்படும் பெயர்களில் , ஸ்கந்த, குக, குமார, மகாசேன, சாமிந்தக, விசாக, கார்த்தி கேய, வேல், வேலச, போன்ற சொல் மூலங்கள் காணப்படு கின்றன. இவை முருக வணக்கம் காரணமாக எழுந்த பெயர்கள் என்பதில் சந்தேகமில்லை.
அதிக அளவிலான பிராமிக் கல்வெட்டுகள், அம்பாரை உள்ளிட்ட கிழக்குப் பிரதேசத்திலும் இலங்கை யின் வடபகுதியில் உள்ள தமிழ்ப் பிரதேசமான வவுனியா மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“வெல' (வேல்) என்ற பதம் (வேலன்) என்ற பெயருடன் காணப்படும் நான்கு பிராமிக் கல்வெட்டுக்கள் சிங்களப் பிரதேசங்களான ஹந்தகல, (1125) ஒமுனுகம (403) ஹபிடகல்கே (447) நிலகம (880) ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.
அம்பாரை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளில் " பருமுக வேலனுடைய குகை” என்ற வாசகம் காணப்படுகிறது. பருமுக என்பதற்கு பிரமுகர் அல்லது பிராமணர் எனப் பெயர் கொள்வர்.
பொலனறுவையில் கண்டெடுக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளில் (i) 286 - ஸ்வஸ்திக், சக்கரம், சூலம், முதலியன கணாப்படுகின்றன.(i) 270 - சூலத்தின் சின்னம் காணப்படுகிறது. இவ்வாறு இன்னும் பற்பல சிவசின்னங்கள் 51T600TÜL(Baé6öAB6OT. 6B60DB Non Brahmi Symbols 676oT திரு.பரணவிதான குறிப்பிடுகிறார். பிராமிக் கல்வெட்டுகளில் பிரமி அல்லாத சின்னங்கள் இடம் பெறுவது சாத்திய மில்லை. உண்மையில் இவை சிவசின்னங்கள் என்பதை குறிப்பிட அவர் விரும்பவில்லை என்பதை நாம் இலகுவாக
ஊகிக்கலாம்.
18.மட்டக்களப்பின் திருப்படைக்கோயில்கள்
கிழக்கிலங்கையின் மிகத் தொன்மையானதும் புகழ்பெற்றதுமான கோயில்கள் திருப்படைக்கோயில்கள் அல்லது தேசக்கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. திருப்படைக்கோயில்கள் பெரும்பாலும் முருகன் கோயில் களையே குறிக்கின்றன. அந்தவகையில் மட்டக்களப்புப் பிரதேசததில் வெருகல் முதல் திருக்கோயில் வரை உள்ள திருப்படைக்கோயில்கள் (தான்தோன்றீஸ்வரம் என்ற சிவலிங் கக்கோயில் ஒன்றைத் தவிர) யாவும் முருகன் கோயில்களே.
முருகன் கோயிலைத் திருப்படைக்கோயில் என அழைப்பதற்கு மற்றொருகாரணம் இக்கோயிலில் முருகனு டைய ஆயுதமான வேல் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாகும்.
21

Page 42
பின்வரும் தொன்மை வாய்ந்த முருகன் கோயில் கள் “சித்திரவேலாயுதர் கோயில்” என அழைக்கப்படு கின்றன. அவை:
() வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம் (i) சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயம் (ii) கோயில் போரதீவு சித்திரவேலாயுதர்
(iv) மண்டுர் முருகன் கோயில் (விதிவிலக்கு) (v) gD lj560)g5 முருகன் கோயில் (விதிவிலக்கு)
(vi) திருக்கோயில் சித்திரவேலாயுதர் கோயில்
தமிழகத்தில் அறுபடைவீடு என ஆறு பிரபல முருகத்தலங்கள் அழைக்கப்படுவது போல மட்டக்களப்பில் முருகனின் திருப்படையான “வேல்” பிரதிஷ்டை செய்யப் பட்ட கோயில்கள் “திருப்படைக் கோயில்” ஆகின. இவற்றுள் வெருகல் முருகன் ஆலயத்தில் பிற்காலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை, விக்கிரகங்கள் மூலஸ்தானத் தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
திருக்கோயில், உகந்தை, மண்டூர் ஆகிய மூன்று கோயில்கள் பற்றிய புராணக் கதை ஒன்று பின்வரு மாறு கூறுகிறது. “சூரபத்மனைக் கொன்ற முருகனது வேல் வாகூரமலையை இரு கூறுகளாகப் பிளந்து, கடலில் மூழ்கிய போது மூன்று பொறிகள் தோன்றின என்றும் அவை முறையே உகந்தை மலை உச்சியிலும் திருக்கோயில் வெள்ளை நாவல் மரத்தின் மீதும், மண்டுரில் தில்லை மரத்தின் மீதும் தங்கின. அவற்றை ஆதாரமாக கொண்டு அவ்விடங்களில் முருகன் கோயில்கள் தோன்றின. 19. வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம்
இப்பிரதேசத்திலே இலங்கையின் ஆதிக் குடியைச் சேர்ந்த குவேனியின் வம்சத்து வேடர்கள் வாழ்ந்ததாகச் சொல்ப்படுகிறது. தற்போது இவ்வாலயம் இருக்குமிடத்திலே ஒரு ஆலமரம் இருந்தது எனவும் அம்மரப்பொந்திலே ஒருவேல் இருந்த தாகவும் அதனை வேடர் வழிபாடு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வழியே யாத்திரை செய்த செட்டியார் ஒருவர் இவ்விடத்தில் தங்கிய போது முருகன் கனவில் தோன்றி அவ்விடத்தில் ஒரு ஆலயம் அமைக்கும்படி கூற அதன் படியே செட்டியார் இவ்வாலயத்தை அமைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆலயம் அமைப்பதற்கான திரவியமும் இம்மலைக்குகையில் இருந்ததாயும் அதனைப் பெற்றே செட்டியார் ஆலயம் அமைத்தார் எனவும் இக்கதை கூறு கிறது.
குவேனியின் வம்சத்து வேடர் வாழ்ந்த தலம் என்பதில் ஓர் உண்மை இழையோடுவதைக் காணமுடிகிறது. வெருகலை அண்மிய சுற்றிவர உள்ள பிரதேசம் கதிரவெளி
போன்ற இடங்கள் பெருங்கற்கால சின்னங்கள் காணப்பட்ட
22

இடங்களாகும். இவை இன்றும் வேடர்களின் நிரந்தர இடங்களாகும்; பிராமிக்கல்வெட்டுக்கள் காணப்படுமிடங் களுமாகும். ஆகவே ஆதிதிராவிட வாரிசுகளான வேடர்கள் வழிபட்ட இடத்தில் பின்பு செட்டியாரால் ஆலயம் அமைக் கப்பட்டுள்ளது எனலாம்.
20. சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயம்
கிழக்கிலங்கையில் வெருகலம்பதிக்கு அடுத்த படியாக பிரசித்தி பெற்ற முருகத்தலமாக சித்தாண்டி உள்ளது. இதுவும் ஒரு திருப்படைக்கோயில் என்பதால் தேசத்துக்கோயிலாயிற்று. கடம்பு (வம்மி) போன்ற பாரிய விருட்சங்களின் 1ந்தியில் ஆலயம் உள்ளது. அழகான கோபுரவாயிலுடலும் நான்கு மூலையிலும் நான்கு கிணறு களுடனும் கோயிலின் தென்புறம் வள்ளியம்மன் கோயிலை யும் வடபுறம் தெய்வானை அம்மன் கோயிலையும் கொண்ட தாக அமைந்துள்ளது. ஆலயத்திற்கு அண்மையில் உப்பாறு என்னும் கங்கை ஓடுகிறது.
ஏனைய தலங்கள் போன்று இங்கும் வரலாறு பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் உலவுகின்றன. பழங் காலத்தில் இந்தியாவிலிருந்து கால்நடையாக யாத்திரை மேற்கொண்ட சிகண்டி என்ற முனிவர் இவ்விடத்திற்கு வந்ததும் அங்கிருந்த அத்திமரநிழலின் கீழ் அமர்ந்து தவம் செய்தார். அப்பகுதியில் வசித்த வேடர்கள் முனிவரைக் கண்டு தொழுது வந்தனர். அம்மரத் தடியில் வேல்ஒன்றினை நட்டு அம்முனிவர் வழிபட்டு வந்தார். சிகண்டி முனிவர் ஒரு சித்தர். அவர் ஆண்டியாக அவ்விடத்திற்கு வந்ததால் சித்து+ஆண்டி என்னும் பொருள் பட சித்தாண்டி என்னும் பெயர் தோன்றிற்று என்பர்.
மட்டக்களப்பில் வன்னிமை ஆட்சி நிலவிய காலத்தில் இவ்வாலய நிர்வாக நடைமுறைகள் நிர்ணயிக் கப்பட்டன என்பதை இப்போது ஆலயத்தில் உள்ள நடை முறைகளைக் கொண்டு அனுமானிக்க முடிகிறது.
21. கோயிற் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம்
மட்டக்களப்பிற்கு தெற்கே படுவான் கரையில் மட்டக்களப்பு வாவியின் மேற்குப்புறத்தில் வயல்கள் நிறைந்த மருத மரச்சூழலில் கடம்ப மரநிழலிடையே அமைந்துள்ளது இவ்வாலயம். இதனை “வெள்ளை நாவற்பதி” என சிலர் அழைப்பினும் இங்கு கடம்பும் ஆலமரமுமே காட்சியளிக்கின்றன.மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்பும் கொண்ட இத்தலம் மட்டக்களப்பின் திருப்படைக் கோயில்களில் ஒன்றாகும். இதன் பண்டைய வரலாறு பற்றி எதுவித கர்ணபரம்பரைக் கதைகளும் இல்லாவிட்டாலும் மட்டக்களப்பு மான்மியம் கூறும் ஒரு வரலாறு வருமாறு:
ஆதிகாலத்தில் “காலசேனன்” என்னும் அரசன் பெரிய படையோடு வந்து இப்பிரதேச மன்னன் மண்டு

Page 43
நாகனை வென்று ஆலயங்களை இடித்துத் தள்ளினான். பின்பு மதிசுதன் என்னும் மட்டக்களப்பு மன்னனின் காலத்தில் தொண்டை நாட்டு சிற்பிகளை வரவழைத்து அமைக்கப் பெற்றது என அறிகிறோம் (மட்டக்களப்பு மான்மியம் FXC. நடராசா பதிப்பு) போர்முடை நாடு என மட்டக்களப்பு மான்மியம் குறிப்பிடுவது போரதீவு ஆகும்.
பின்பு சோழர் ஆட்சிக் காலத்தில் பல ஆலயங் கள் புனரமைப்பு செய்யப்பட்டபோது இதுவும் புனரமைப்பு செய்யப்பட்டது. கர்ப்பக்கிருகம் இன்றும் பழைய கட்டட அமைப்பிலே காணப்படுவது.
பிற்காலத்தில் கலிங்க மாகோன் இலங்கையின் கிழக்கு பிரதேசத்தில் நிலையான ஆட்சியை நிறுவியபோது கொக்கட்டிச்சோலை, மண்டூர், போரதீவு போன்ற இடங்களில் திருப்பணிகள் இடம்பெற்றன. நிர்வாக நடைமுறையும் கட்டுக் கோப்பான முறையிலே ஏற்பட்டது. நாகன் வன்னிமையின் கீழ் இருந்தபோது தேசத்துக் கோயிலாக் கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படு கிறது. தீ மிதிப்பும் வேடர் தொடர்புறும் நிகழ்வுகளும் இங்கும் உள்ளன. - 22. மண்ரூர் முருகன் கோயில்
இவ்வாலயம் மட்டக்களப்பிலிருந்து 20 மைல் தெற்கே மட்டக் களப்பு வாவியின் தென்புறம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் அமைவுறப் பெற்று அமைந்துள்ளது.இத்தலம் தில்லை மண்டூர் எனப்பட்டாலும் இத்தலத்தைச் சுற்றி கடம்பு ஆல், அரசு, கொங்கு முதலிய விருட்சங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. பழைய காலத்தில் அமைக்கப் பெற்ற அதே தோற்றத்தில் ஒட்டுக் கூரை கொண்டதாக இன்றும் காட்சியளிக்கிறது இவ்வாலயம்.
இவ்வாலயம் உருவானது தொடர்பாக பிரசித்தி பெற்ற கர்ணபரம்பரைக்கதை ஒன்று உண்டு . அக்கதை வருமாறு:(ஏற்கனவே கூறப்பட்டது)
சூரபத்மனை நோக்கி முருகன் ஏவிய வேலானது அவனைக் அழித்த பின் வாகூரமலையை இரு கூறாகப் பிளந்து உக்கிரம் தணியாமல் கடலில் மூழ்கியபோது அவ்வேலிலிருந்து மூன்று பொறிகள் தோன்றி வேல்களாகின. அவற்றில் ஒன்று வெள்ளை நாவற்பதியர்ம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வெள்ளை நாவல்மரத்திலும் இன்னொன்று உகந்தையிலுள்ள மலைஉச்சியின் நாவல் மரத்திலும் மற்றொன்று மண்டுர் பதியிலே தில்லை மரத் திலும் தங்கியதென்பர்.
இவ்வேலை வேடர்கள் கண்டு எடுத்துக் கொத்துப் பந்தலிட்டு வழிபட்டு வந்தனர். பின்பு கோயில் எழுந்தது எனப் படுகிறது. இது ஒரு கற்பனைக் கதையாக இருந்தபோதிலும் கதிர்காமம், உகந்தை, திருக்கோயில், மண்டூர் ஆகிய நான்கு தலங்களுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது.

கதிர்காமத்தை ஒத்த வழிபாடே இங்கு நடை பெறுகிறது. கதிர்காம முருகன் கோயில் முகப்பு போல அமைந்துள்ள இவ்வாலயத்தின் இருபுறமும் வள்ளி , தெய்வானை கோயில்கள் உள்ளன. வைரவர், குமாரத்தன் கோயில்களும் உள்ளன.
23. திருக்கோயில் சித்திரவேலாயுதர் ஆலயம்
மட்டக்களப்புக்குத் தெற்கே 46மைல் தொலை வில் திருக்கோவில் பதி அமைந்துள்ளது. நாகர்முனை, உன்னரசுகிரி, கண்டபாணந்துறை எனப் பல பெயர் கொண்ட இத்தலம் திருக்கோயில் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது.
வரலாற்று சிறப்புப் பெற்ற இவ்வாலயம் ஏழு பாண்டிய இளவரசரால் கட்டப்பெற்றது என்பர். மாகோன் காலத்தில் பொறிக்கப்பெற்ற தூண் கல்வெட்டும், துண்டுக் கல்வெட்டும் இங்குள்ளன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் அமைந்த இக்கோயிலும் திருப்படைக்கோயி லாகவும் அமைந்துள்ளது.
கதிர்காமத்தோடு தொடர்புடைய இவ்வாலயத் தில் ஆண்டு தோறும் கால்நடையாகக் கதிர்காம யாத்திரை மேற்கொள்வோர் தங்கியிருந்து முருகனை தரிசித்து செல்வது வழக்கமாகும்.
திருக்கோவில் - திருக்கோணேஸ்வரம் இரண் டிலும் இதிகாச புருஷனாகிய இராவணன் சம்பந்தப்படுத்தப் படுகிறான். இவ்வாலயம் சோழ மன்னனாலும், மகோன் , குளக்கோட்டன் ஆகியோராலும் திருப்பணி செய்யப் பெற்றது. ஏர் பெருக பரதிகுலராசன் குளக்கோட்டன் திருப்பணி செய்தான் என கோணேசர் கல்வெட்டு கூறும்.
24. உகந்தை முருகன் ஆலயம்
தமிழகத்தின் குன்று தோறாடல் மலைக்கோயி லினை ஒத்த விதத்தில் குன்றும் பாறைகளும் கொண்டு அருகில் கடலும் தாலாட்ட அமைந்துள்ள பதி உகந்தை யாகும். இதுவும் திருப்படைக்கோயிலாகவும் தேசத்துக் கோயிலாகவும் பேர் பெற்றது. கதிர்காத்தோடு நெருங்கிய தொடர்புடைய இத்தலம் இரு பிரதான மலைகளை யுடையது. வள்ளிமலை, முருகன் மலை, எனப்பெயர் பெறும் இருமலைகளும் வற்றாத சுனைகளும் இத்தலத்தை அழகு செய்கின்றன்.
கதிர்காம யாத்திரை செய்வோர் இங்குள்ள முருகனை தரிசித்து செல்வர். கதிர்காமத்து முருகனுக்கு உகந்த மலை உகந்தை என்பர். அதனால் முருகன் இங்கு தங்கியிருந்து ஓய்வெடுப்பதாயும் ஐதிகம் உண்டு.
சூரியவழிபாடு நடந்த இடமாகவும் இத்தலம் கொள்ளப்படுகிறது. மட்டக்களப்பு பிரதேசத்திலே மூன்று
23

Page 44
மலைக்கோயில்கள் சங்கமன்கண்டி, உகந்தை, தாந்தாமலை முருகன் ஆலயங்களாகும்.
மட்டக்களப்பு மான்மியத்திலே இத்தலம் பற்றிய கர்ணபரம்பரைக்கதைகள் இடம்பெறுகின்றன.
இராவணன் தெட்சணாகிரி, உகந்தகிரி ஆகிய இடங்களில் ஆலயம் இயற்றி வழிபட்டதாகவும் பின் குருகுல நாகர் ஆண்டதாகவும் ஒரு கதை.
பின்பு சிங்ககுமாரன் பாழடைந்த ஆலயத்தை புனரமைத்ததாயும் மற்றொருகதை, ஆனால் இப்பகுதியில் எடுக்கப்பெற்ற புதிய கற்கால எச்சங்களை கொண்டு கதிர்காமத்தோடு தொடர்பான ஆதித்திராவிடர் வழிபட்ட முருகதலம் இது என்பதை அறிய முடிகிறது.
ஒலைக்குடிசையாய் இருந்த இவ்வாலயம் மார்க்கண்டு முதலாளியால் 1885ல் கட்டப்பெற்றது. என்றாலும் அதற்கு முன்பு வேல்மட்டுமே இருந்துள்ளது. ஆதித்திராவிட வழிபாட்டின்படி ஒரு திறந்தவெளிக் கோயிலாகவே இதுவும் காணப்பட்டு பின்பு கந்தழி வழிபாடாக மாறியுள்ளது எனலாம். இங்குள்ள பாரிய ஆல மரத்தின் கீழ் வேல் நடப்பட்டு மேடை காணப்படுகிறது.
25. கதிர்காமத்தொடர்புகள்
இதுவரை கூறியவற்றிலிருந்து மட்டக்களப்பின் பழம்பெரும் முருகன் ஆலயங்களுக்கும் கதிர்காமத்துக்கும் ஏதோ ஒரு வகையிலான தொடர்பு இருப்பதைக் காணலாம்.
தமிழகத்திலே முருகன் கோயில்கள் ஆறுபடை வீடுகள் என்று அழைக்கப்படுவது போல மட்டக்களப்பு பிரதேசத்திலும் ஆறுபடை வீடுகளாக மேற்குறித்த ஆறு ஆலயங்களும் அமைகின்றன. அத்தோடு கதிர்காமப்பதியே இவ்வாலங்களை இணைக்கும் மூலப்பதியாக திகழ்கின்றது. திரைமுடிப் பூசை செய்தல், வாய்மூடிப் பூசை செய்தல், வேடர் சம்பிரதாயங்கள், வேல்வணக்கம், போன்ற பல நடைமுறைகள் மட்டக்களப்பின் முருக ஆலயங்களில் இடம்பெறுவது கதிர்காமத் தொடர்பை நன்கு எடுத்துக் காட்டுகின்றது.
கதிர்காமம் அமைந்துள்ள இடம் சப்பிரகமுவா மாவட்டமாகும், ஊவா, சப்பிரகமுவா, விந்தன, வெலிசர பண்டு மட்டக்களப்பு இராச்சியத்தின் இராஜதானியாகிய ரோகனவில் அமைந்திருந்தன. இவை அனைத்தும் பண்டு ஆதித்திராவிடர் வாழ்ந்த இடங்களாகும். கதிர்காமம் தொடக்கம் திருகோணமலை வரையுள்ள பிரதேசம் ஆதிமனிதன் வாழ்ந்த இடமாகவும் லிங்கவழிபாடு வேல்வழிபாடு நிலவிய இடமாகவும் காணப்படுவதுடன் பிராமிக்கல்வெட்டும் கிடைக்கும் இடமாகவும் இவை உள்ளன.இங்கு முதலில் ஆதித்திராவிடர், ஆதி நாகர், பின்னர் இவர்களின் வழிவந்த வேடர் வாழ்ந்த
24

பிரதேசங்களாக இவை உள்ளன. அதற்கான எச்சங்கள் இன்றும் இப்பிரதேசங்களில் காணப்படுகின்றன.
கி.பி.4ம் 5ம் நூற்றாண்டுகளில் கதிர்காமப் பிரதேசம் கதிர்காம ஷத்திரியர்கள் என்ற தமிழ்மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. இம்மன்னர்கள் கதிர்காம ஆலயத்தைப் போஷித்து வந்துள்ளனர். கதிர்காமத்தில் பெளத்தமதம் தொடர்பான அரசு மரக்கிளை நடப்பட்ட போதும் இம்மன்னர்கள் அனுசரணை வழங்கினர். இது ஒரு முக்கியமான வரலாற்றுத் தகவல் ஆகும்.
14. முருக வணக்க நம்பிக்கையும் அனுஷ்டானங்களும்
இலங்கையில் உள்ள பெரும்பாலான முருகன்
கந்தபுராணம் தொடர்ச்சியாக ஆறுநாட்களும் விரிவுரை செய்யப்படும். இதனை “புராண படனம்” என்பர். இந்த ஆறுநாட்களும் முருகபக்தர் ஒருவேளை உணவுடன் (சிலவேளை அதுவும் இல்லாமல்) விரதம் அனுஷ்டித்து மேற்படி கந்தபுராண விரிவுரையை பக்தி சிரத்தையுடன் செவிமடுப்பர். 7ம் நாள் முருகன் சூரனை வதம் செய்த நிகழ்வு "சூரன்போர்” ஆக நிகழ்த்திக் காட்டப்படும். இவ்வகையில் தமிழகத்தில் உள்ள “திருச்செந்தூர்” ஆலயத்தில் நிகழும் வைபவங்களை ஒத்ததாக இது அமைகிறது.
இது தவிர ஆண்டு தோறும் வருடாந்த உற்சவம் நடைபெற்று தீர்த்தோற்சவம் அல்லது தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவு பெறும். இவ்வகையில் இவை கதிர்காம உற்சவ கால் நடவடிக்கையைப் பின்பற்றுபவதாக அமைந்துள்ளன.
ஆதிகால முருகவணக்கத்தில் Ա60ծ செய்பவரை வேலன் என அழைத்தனர். வேலன் வெறியாட்டு முதலியவை பழங்காலத்தில் முருகன் கோயில்களில் இடம் பெற்றதாக முருகவரலாற்று நூல்கள் கூறுகின்றன.
இதேமுறையைப் பின்பற்றி வேலன் வழிவந்த சமயப் பூசாரிகளே மட்டக்களப்பில் உள்ள முருகன் திருப்படைக் கோயில்களில் பூசை செய்கின்றனர்.
ஆனால் மேற்படி திருப்படைக்கோயில்களுள் உகந்தை முருகன் கோயிலிலும், மண்டுர் முருகன் கோயிலும் சூரன்போர் இடம்பெறுவதில்லை. இங்கு கதிர்காத்தின் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. மண்டுரில் "திரைதிறக்காது மெளன பூசை செய்வதும் உகந்தையில் பெட்டிக்குள் வைக்கப்பட்ட வேல் உலா வருவதும் கதிர்காமத்தைப் போன்றே நடைபெறுகின்றன.

Page 45
தான்தோன்றீஸ்வரமும்
புலவர் சி.க.
உலகுபுகழ் உத்தமியாம் உலகநாச்சி
ஓங்குபுகழ் இலங்கையைவந் தடைந்தவாறும் நிலவுபுகழ் புத்தபிரான் தசனந்தன்னை
நியதிமுறை வழுவாமல் ஈந்தவாறும் குலவுபுகழ் குணசிங்க மன்னனென்னும்
கோனிய மண்முனையைப் பெற்றவாறும் பலர்புகழும் படிகலிங்க மமைத்தவாறும்
பக்தியுடன் கோயில்குளம் சமைத்தவாறும் இலங்குபுகழ் தான்தோன்றி இலிங்கந்தன்னை
இயல்புடனே வழிபாடு செய்தவாறும் அலகில்புகழ் அம்பலத்தான் அமருந்தேரை
ஆரைநகர்க் குருகுலத்தார் பூட்டும் வல்ல நலமுயர்ந்த வடமதுவே நடத்திச் செல்லும்
நடைமுறையும் நாவினிக்க நவிலுவோமே!
1. படிகலிங்கம்:- உலகநாச்சி தன்னுடன் கொண்டுவந்த
காசிலிங்கம். 2. கோயிற்குளம்:- கோயிற்குளம் எனும் இடத்தில் காசிலிங்கேஸ்வரர் கோயிலமைத்துக் குளமும் உண்டாக்கியமை.
அன்பும் அருளும் கனிந்த இறைவழிபாட்டிலும் அறிவும் ஆற்றலும் பொலிந்த கல்விப் பண்பாட்டிலும் விருந்தோம்பலும் மனவளமும் செறிந்த மனிதநேயத்திலும் தம்மை மிகுதியும் ஈடுபடுத்தி சான்றோர் காட்டிய “வாழ் வாங்கு வாழும்” நெறிமுறையிலே தமது வாழ்க்கையை நடாத்திய ஆன்றோர்களாற் கட்டியெழுப்பப்பட்டது, மட்டக் களப்பு மாநிலம். இங்கே சைவமும் தமிழும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போன்று ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்தும் வாழ்ந்தும் அரசோச்சிய பாங்கு முந்திய கால வரலாற்றுண்மைகளை ஆராய்ந்தறிய வல்லார்க்கு நல்விருந்தாயமையும்.
தேன்பாய அதையுண்டு மீன்பாடும் நாடென்றும் கான்வாழும் மான்பாய அது கண்டு ஆன் பொழியும் திரு நாடென்றும் புலவோராற் போற்றப்பட்ட மட்டக்களப்பின் தென்மேற்குப் புறத்தே செஞ்சாலியின் விளைவும், தெங்கின் செறிவும் நிறைந்த பிரதேசம் கொக்கொட்டிச்சோலையாகும்.

ஆரையம்பதி முருகனும்
பொன்னம்பலம்
மட்டக்களப்பு நகருக்குத் தென்புறமாகவும் மண்முனைக்கு கீழ்ப் புறமாகவும் அமைந்து காணப்படுவது ஆரையம் பதி. தெய்வத் திருத்தலங்கள் மலிந்த ஊர்; கல்விச் செல்வமும் பல்தொழில் வளமும் மிகுந்த கிராமம். இவ்விரு கிராமங்களும் பழமையும் பெருமையும் வாய்ந்த கிராமங்கள் ஆகும். ஆதலால் இரண்டு கிராமங்களுக்குமிடையே பலநூறு வருடங்களுக்கு முற்பட்ட காலந்தொட்டே பல்வேறு வகையான தொடர்புகள் இருந்துவந்தன. அவற்றுள் ஆன்மீகத் தொடர்பு மிகவும் முக்கியமானதாகும்.
சரித்திரச் சான்றுகளோடு கூடிய இந்த உண்மை கள் வருங்காலச் சந்ததியினருக்கும் பயன்படவேண்டுமெனக் கருதுவதால் அவற்றை மிகச் சுருக்கமாக வெளிக்கொணரு வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கொக்கட்டிச்சோலை, ஆரையம்பதி ஆகிய இரண்டு கிராமங்களினதும் தோற்றத்தோடும் அக்கிராமங் களில் அமைக்கப்பட்ட முக்கிய ஆலயங்களின் தோற்றத் தோடும் உலகநாச்சி என்பாளின் வரவு பின்னிப் பிணைக்கப் பட்டுள்ளது. ஆதலால் அந்தப் பின்னணியைச் சிறிது ஆராய்தல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குணசிங்கன் என்ற பெயரையுடைய ஓர் அரசன் மட்டக்களப்பை ஆண்டு வந்தான் அக்காலத்தில் கலிங்க தேசத்தைச் சேர்ந்த உலக நாச்சி என்பாள் இலங்கைக்கு வந்தாள். இவள் குகசேனன் என்பவனது மகள் ஆவாள். இவள் வரும்பொழுது இரண்டு முக்கிய புனித சின்னங்களைத் தன்னுடன்கொண்டு வந்தான். ஒன்று, புத்தபிரானுடைய தசனம்; மற்றொன்று திருக்கயிலா யத்திலேயிருந்து பெறப்பட்ட படிகலிங்கமாகிய சிவலிங்கம் இந்தச் சிவலிங்கம் காசிலிங்கம் எனப் பேசப்படுகின்றது.
உலகநாச்சியுடன் அவளது சகோதரனான உலகநாதனும் சேர்ந்து வந்தான். இவர்கள் இலங்கைத் தீவை வந்தடைந் ததும், இங்கே அரசனாக்விருந்து ஆட்சிபுரிந்த மேகவர்ணனைச் சென்று கண்டனர். அவனிடம் தங்கள் விபரங்களைக் கூறிய உலகநாச்சி தன்னிடமிருந்த
25

Page 46
புத்த தசனத்தை அவனுக்குக் கையளிதாள். அவனும் மனமிக மகிழ்ந்து தசனத்தைப் பெற்றுக்கொண்டான். உலகநாச்சி யையும் உலகநாதனையும் பாராட்டிய மேகவர்ணன் அவர்களுக்கு ஏதாவது தேவைகள் உண்டோ என வினவினான். அப்போது உலகநாச்சி தனக்கு குடிமக்கள் 6Tpstgs காட்டுப்பிரதேசமொன்றை அன்பளிப்பாகக் கொடுக்குமாறு கேட்டாள்.
மேகவர்னனும் அதற்கு உடன்பட்டு தனது நண்பனும் மட்டக்களப்பை ஆண்டு வந்த அரசனுமாகிய குணசிங்கனுக்குத் திருமுகமொன்றெழு திக் கொடுத்து உலகநாச்சியை வழியனுப்பி வைத்தான். மேகவர்ணனின் கடிதத்துடன் வந்த உலகநாச்சி மட்டக்களப்பை வந்தடைந்தாள். குணசிங்க மன்னனைக் கண்டு கடிதத்தை ஒப்படைத்தாள். அதைப் படித்தறிந்த குணசிங்க மன்னன் உலகநாச்சிக்கும் அவளது கூட்டத்தாருக்குமெனக் காடுகளுடன் கூடிய மண்முனைப் பிரதேசத்தை நிந்தக மாகக் கொடுத்தான்.'. குணசிங்கன் அரசு புரிந்த காலமும் உலகநாச்சி இலங்கையை வந்தடைந்த காலமும் கி.பி. நான்காம் நூற்றாண்டு ஆகும்.
“உலகுள்ளோர் புகழ்ந்து வாழ்த்த உற்றவர் விழுந்து போற்றத் தலைவனாய் எழுந்து மட்டக் களப்பினில் இருந்த காலம் கலைவளர் கலியுதித்து மூவாயிரத்தைந்நூறு கடந்தகாலம் புலவர்கள் பாடச் செங்கோல் ஒச்சினான் புரவலன் றான்”
- மட்டக்களப்பு மான்மியம்.
என்ற பாடலால் குணசிங்க மன்னனின் காலம் புலனாகின்றது.
குணசிங்க மன்னனுடைய சகோதரனாகிய கிரசரன் என்பவனை உலகநாச்சி திருமணம் செய்தா ளென்றும், அதன் வாயிலாக அவர்களுக்கு கனகசேனன், வல்லி என்ற நாமங்களோடு கூடிய இரண்டு மக்கட் செல்வம் கிடைத்த தென்பதும் வரலாறு. 4.
உலகநாச்சியுடன் அவளது கூட்டத்தினரும் முதன் முதலில் குடியேறிய பிரதேசம் தற்போதைய கோயில்குளப் பகுதியாகும். அம்மாது நல்லாள் கோயிற்குளப் பிரதேசம் முழுவதையும் துப்பரவு செய்வித்து பொருத்தமான ஓரிடத்தே சிகர கோபுரங்களோடு கூடிய பெரிய கோயிலொன்றையும் கட்டுவித்தாள். அக்கோ யிலை அண்டிய இடத்தில் குளமொன்றையும் தோண்டுவித்தாள். இந்த ஆலயத்தில் தான் கொண்டு வந்திருந்த சிவலிங்கத் தை மூலமூர்த்தியாக அமைத்த காரணத்தினாலேயே இந்த ஆலயம் "காசிலிங்கேஸ்வரர்” ஆலயம் எனப்பெயர்
26

கொண்டது. கோயிலும் குளமும் அமைந்த கிராமம் ஆனகாரணத்தால் இக்கிராமம் “கோயிற்குளம்” ஆகிற்று. பெரிய அளவிலான ஆலயத்திற்கு உயரமான கோபுரம் இருந்திருக்கவேண்டும். அந்தச் சிகர கோபுரம் தென்பட்ட பகுதி "சிகரம்” என அழைக்கப்படுவது கண்கூடு. இந்த ஆலயத்திலே ஒழுங்கான முறையிலே தினப் பூசை களும் முக்கிய விழாக்களும் நடைபெற்று வந்தன.
உலகநாச்சி அவளது சகோதரனாகிய உலக நாதன் வாயிலாகப் பல குடும்பங்களை இங்கு வரவழைத்து இப்பிரதேசத்தில் குடியமர்த்தினாள். இதனால் கோயிற் கருமங்கள் யாவும் சீராகவும் சிறப்பாகவும் நடைபெற லாயிற்று.
இவ்வாறு குடியமர்ந்த மக்கட் கூட்டம் மண் முனையின் மேற்குப் பக்கத்தில் காணப்பட்ட அடர்த்தியான காடுகளை அழிக்கவும், அவ்விடப்பரப்பினைப் பண்படுத்தித் தானியங்களை விளைவிக்கவும் கருதினர். காடுகளை வெட்டிக்கொண்டிருக்கையில் திடகன் என்பவன் வெட்டிய கொக்குநெட்டி மரத்திலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அதனைக் கண்ட திடகன் அச்சமும் ஆச்சரியமும் அடைந் தான். உலகநாச்சியும் பிறரும் அங்கு சென்று பார்த்த பொழுது உண்மை தெரிந்தது. தெய்வ பக்தியிலும் நம்பிக் கையிலும் சிறந்தவளான உலகநாச்சியின் கண்களுக்கு வெட்டுண்ட மரத்தடியில் சிவலிங்கமொன்று தோன்றி யிருப்பது புலனாகிற்று. அதனைக் கண்ட உலகநாச்சியின் மேனி சிலிர்த்தது. உள்ளம் உருகியது. சிவபெருமானின் திருவருள் இனிமையை நினைத்து உள்ளுர ஆனந்தம் அடைந்தாள். தனது கூட்டத்தாரைக் கொண்டு அச்சுற்றுப் புறத்தைத் துப்பரவு செய்வித்தாள். தடிகளாற் கோயிலொன்றும் கட்டுவித்தாள். பூசைகளும் நடைபெற ஏற்பாடு செய்தாள். சில காலத்தின் பின் இக்கோயில் சிறப்பாகக் கட்டப்பட்டது. அக்கோயிலின் திருப்பணிகளும் தினப்பணி களும் செவ்வனே இடம்பெற ஏதுவாக அப்பிரதேசத்தில் சில குடிகளையும் குடியமர்த்தினாள்.
கொக்கட்டி மரங்கள் நிறைந்த இடமாதலால் அப்பகுதி “கொக்கட்டிச்சோலை” ஆகிற்று. தானே தோன்றிய சிவலிங்கமாகிய சுயம்புலிங்கம் மூலமூர்த்தியாக அமைந்த தால் அவ்வாலயம் "தான்தோன்றீஸ்வரர்” ஆலயம் எனப் பெயர் பெற்றது. கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெறுவும் ஒழுங்குகள் செய்த உலகநாச்சி, அந்தத் திருவிழாவின் போது கோயிற் குளம் காசிலிங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து பக்தர் கூட்ட மொன்றை அனுப்பவும் அவர்கள் பூசைக்குரிய பொருள்களுடன் சூலாயுதமொன்றை எடுத்துச் செல்லவும் விதிமுறை செய்தாள்.
தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் காசிலிங் கேஸ்வரர் ஆலயத்திலும் நித்திய பூசைகளை ஆற்றி

Page 47
வந்தோர் சங்கமர்களாவர். இவர்கள் இலிங்கதாரிகள் என்றும் வீரசைவர் என்றும் அழைக்கப்பட்டனர். முழுமுதற்பரம் பொருளான சிவபெருமானையே முற்றிலும் நம்பி வாழ்ந்தவர் களதலால் "நம்பிமார்” ஆக விளங்கியவர்களும் இவர்களே. தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கற்களினால் பெரிய அளவில் கட்டப்பட்ட சரியான காலம் புலனாகவில்லை. ஆனால் கோயிலின் கர்ப்பக்கிரக நிலையின் மேல் காணப்படும் பெரிய கல்லொன்று “வெங்கடராமன் சாமிசேகர் - வேலை முடிந்தது மு.ச.ச.” எனக் குறிப்பிடப்பட்டிருந்த தென்றும் மு.ச.ச. என்பது கி.பி.744ஆம் ஆண்டைக்குறிப்தாக கொள்ளப்படலாமென்றும் முதுபெரும் தமிழறிஞரும் ஊர்கள், ஆலயங்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பணியில் மிகுந்த ஆர்வமும் அனுபவமும் மிக்கவருமான ஆரையம்பதியைச் சேர்ந்த தமிழ்மணி சிவ. விவேகாநந்த முதலியார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
குணசிங்க மன்னனுடைய மகனான தருமசிங்கன் என்பவன் சோழவள நாட்டைச் சேர்ந்த சிற்பக்கலை வல்லுநர்களின் துணைகொண்டு கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துக்கு அழகிய வேலைப் பாடுகளமைந்த இரண்டு மரத்தேர்கள் அமைத்துக் கொடுத்தான். இப்பணி எக்காலத்தில் நடைபெற்ற தென்பது தெளிவாகத் தெரியவில்லை. தருமசிங்கனால் அமைக்கப் பட்ட தேர்கள் மூன்று என்றும் அதில் ஒருதேர் தானாகவே நகர்ந்து சென்று ஆலயத்துக்கு அண்மையிலுள்ள நீர் நிலையில் அமிழ்ந்து போயிற்று என்றும் ஒரு கதை கூறப்படுகின்றது. தருமசிங்கனால் தேர்கள் செய்யப்பட்ட காலம் கி.பி.958 ஆம் ஆண்டள விலாகும் எனச் சிலர் கூறுகின்றனர். அப்படிக் கொண்டால் தருமசிங்கன் குணசிங்கனின் மகனாக இருக்க முடியாது. இது ஆய்வுக் குரியது.
உலகநாச்சியால் கட்டி அமைக்கப்பட்ட கோயிற் குளம் காசிலிங்கேஸ்வரர் ஆலயமும் கொக்கொட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமும் கலிங்க தேசத்திலிருந்து இலங்கைக்கு வந்த கலிங்க அரசனான மாகோன் என்பவனால் செப்பமிடப்பட்டன. மாகோனின் வருகை கி.பி.1215ஆம் ஆண்டெனக் கொள்ளப்படுகின்றது.
கி.பி.1505 ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தீவைப் போத்துக்கீசர் ஆட்சி செய்தனர். இவர்கள் கி.பி.1627 ஆம் ஆண்டில் படைகளுடன் வந்து மட்டக்களப்பையும் பிடித்துக் கொண்டனர். இவர்களின் ஆட்சி கொடுங்கோலாட்சி யாக இருந்தது. மட்டக்களப்புப் பிரதேசத்திலிருந்த சைவக் கோயில்கள் அனைத்தையும் இடித்து அழித்த போர்த்துக் கீசர் அவற்றிலிருந்த விலையுயர்ந்த செல்வங்களையும் அபகரித்துக்கொண்டனர். பிரசித்தியும் மகிமையும் மிக்க கோயிற்குளம் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் அவர்களின் கண்களிற்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆம், காசிலிங்கேஸ்

வரர் ஆலயத்தைத் தரை மட்டமாக இடித்து அழித்ததில் அவர்கள் பூரிப்படைந்தனர்.
இந்தக் கொடியவர்களின் பிடியிலிருந்து தப்பிய பெருமை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமொன்றுக்கே உரித்தாகும். தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்த கல்மாடு புல்லுண்டு காட்டிய அற்புதத்தைத் தனது கண்களாற் கண்ட போர்த்துக்கீசப் படை அதிகாரி அக்கோயிலிற் கைவைக்கத் துணியவில்லை கோயிற் குளம் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கீச ரால் முற்றாக அழிக்கப்பட்டபின்னர் அப்பிரதேசத்தில் குடிவாழ்ந்த மக்கள் வெவ்வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர். அக்கால், அக்கோயிற் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்களான நம்பியார் சிலரும் குடிமக்கள் சிலரும் ஆரையம்பதியில் வந்து குடியமர்ந்தனர்.
இவ்வாறு குடியேறிய நம்பியார் பரம்பரையில் தோன்றியவர்களான கண்ணிநம்பியார், காத்தநம்பியார் என்போர் ஆரையம்பதிக் கந்தசுவாமி ஆலயத்தில் பூசகர்களாகத் தொண்டாற்றியதை இப்பொழுது இங்கு வாழும் வயது முதிர்ந்தவர்கள் உறுதிப் படுத்துகின்றனர். ஆரையம்பதிக் கந்தசுவாமி கோயில் ஆரம்பிக்கப்பட்ட சரியான காலம் தெளிவாகத் தெரியவில்லை. இருந்த போதிலும் அக்காலத்தை கோயிற்குளத்திலிருந்த காசிலிங் கேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கீசரால் இடித்து அழிக்கப்பட்ட கி.பி.1627 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட அதனை அண்டிய காலப்பகுதியாக இருத்தல் வேண்டுமெனத் துணிந்து கூறலாம். காசிலிங்கேஸ்வரர் ஆலய இடிபாடுகளுக் கிடையில் இருந்து வெள்ளைக்கல்லில் புடைப்பு வடிவ அமைப்பில் செதுக்கப்பட்டிருந்த உருவ மொன்று கண்டெடுக்கப்பட்டது. அதனைப் பிள்ளையார் எனக்கருதினர். அக்கல் தற்போது ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்தில் உள்ளது.
இற்றைக்குச் சுமார் நூற்றி ஐம்பது வருடங் களுக்கு முன்னர் ஆரையம்பதியில் வாழ்ந்த சிவநேசச் செல்வர்களான பிரசித்த நொத்தாரிசு காசிநாதர், சம்புநாத உடையார், விதானை கண்ணப்பர் முதலானவர்களை முக்கியத்தர்களாகக் கொண்ட ஒரு கூட்டத்தினர் பொது மக்களிடமிருந்து நிதி உதவி பெற்று இந்த ஆலயத்தைக் கற்களினால் கட்டிமுடித்தனர். இந்தக் கட்டிட வேலை களுக்கு இறைபக்தியிலும் சேவை உணர்விலும் சிறந்த நாகப்பர் என்பவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்ததாக அறியமுடிகிறது. இவர் கைக்கோளர் என்ற செங்குந்த பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அமைக்கப்பட்ட கற்கோயிலில் இடிக்கப்பட்ட காசிலிங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல்லினாலான நிலைகள், படிகள் தூண்கள் என்பன வைத்துக்கட்டப்பட்டன. ஆலயப் புனர
27

Page 48
மைப்பைத் தொடர்ந்து கந்தசுவாமி கோயிலில் கொடிமரம் நடப்பட்டு திருவிழாக்களும் நடைபெறத் தொடங்கின. இந்த ஆலயம் ஆரம்பம் தொடக்கம் பிள்ளையார் ஆலயமாகவே கருதப் பட்டது. கி.பி.1800 களில் தான் கந்தசுவாமி ஆலயமாகப் பிரசித்தி பெற்றது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்தத் திருவிழாவின்போது காசிலிங்கேஸ்வரர் ஆலயத் திலிருந்து சூலாயுதம் கொண்டு சென்ற வழக்கமானது, பின்னர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து வேலாயுதம் கொண்டு செல்லும் பாரம்பரியமாக உருமாறிற்று தான்தோன் றிஸ்வரர் ஆலயத்தில் வருடந்தம் திருவிழாக்கள் முடிவ டைந்த மறுநாள் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டம் நடைபெறும் தினத்தன்று ஆரையம்பதியைச் சேர்ந்த குருகுலத்தவர்கள் வேலாயுதம் சகிதம் கொக்கொட்டிச் சோலைக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அவர்களைத் தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டக் களப்பு வாவியில் மண்முனைத் துறைக்கு மறுகரையில் வைத்து வரவேற்று அழைத்துச் செல்வார்கள்.
அவ்வாறு அழைத்துச்செல்லப்படும் குருகுலத்த வர்களே தேருக்கு வடம் பூட்டும் உரித்தைப் பெறுகின்றனர். இப்பொழுதும் அந்தப் பாரம்பரிய நடைமுறை பின்பற்றப் பட்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. இந்த நற்செயலுக்குக் கைமாறாகக் கொக்கொட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தைச் சேர்ந்த கோயில் உதவியாளர்கள் ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாக்கள் நடைபெறும் பொழுது ஆரையம்பதிக்குவந்து கோயிலுக்கு மேற்குப் பக்கத்திலுள்ள வாவியோரத்தில் இறங்குவர். இறங்கியவர்கள் தங்கள் வாத்தியமொன்றை இசைத்து அறிவிப்புச் செய்வர். அவர்கள் அங்குவைத்து வரவேற்கப்பட்டு கெளரவமாக ஆலயத்துக்கு அழைத்து வரப்படுவர். அவர்கள் ஆலயத்தில் சில குறிப்பிட்ட பணிகளைச் செய்து கொண்டு திருவிழாக்கள் நிறைவுறும் வரை இங்கேயே தங்கியிருப்பார்கள். பண்டுதொட்டு வகுக்கப்பட்டுள்ள இந்த நியதிகள் காரணமாக இரண்டு ஆலயங்களுக்கிடையேயும் நல்லதோர் தொடர்பும் நிலை பெற்றுள்ளது.
ஆரையம்பதியில் அமைக்கப்பட்ட ஆலயம் கந்தசுவாமி ஆலயம் எனப் பிரபல்யம் அடைந்த போதிலும் அங்கு மூலமூர்த்தியாக இருந்து அருள் பாலித்தவர் வெள்ளைக் கல்லுருவிலான பிள்ளையாரே ஆவார். 1975 ஆம் ஆண்டு தொடக்கம் 1980 ஆம் ஆண்டுவரைக்கான கந்தசுவாமி கோயிலின் கணக்கறிக்கையிற் காணப்படும் குறிப்பு இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. குறித்த வெள்ளைக் கல்லானது சற்றுக் கூரான உச்சியையும் அதன் கீழ் அகன்றும் அதன் கீழ் நீண்டும் காட்சி கொடுக்கிறது. நுனிப் பகுதியின் கீழ் அகன்று காணப்படும்
28

பகுதி முன்னோக்கிப் புடைத்து இருப்ப தாகவும் தெரிகிறது. இந்த உருவத்தைக் கல்லினாலான ஒரு வேலாயுதத்தின் வடிவம் எனக் கொள்ளுவதும் பொருந்துமாம்.
ஆரையம்பதிக் கந்தசுவாமி ஆலயத்தில் கடைசி யாகப் பூசைசெய்த நம்பியார்கள் கண்ணிநம்பி யாரும், காத்தநம்பியாருமாவர். இவர்கள் பூசைப் பணிகளிலிருந்து விலகிக் கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் கெருடாவில்லைச் சேர்ந்த பூரீ சின்னத்துரைக் குருக்கள் பணிக்கமர்த்தப்பட்டார்.
பூரீ சின்னத்துரைக் குருக்களின் ஆலோசனையின் பிரகாரம் கந்தசுவாமி ஆலயம் புனரமைக்கப்பட்டு மூலஸ் தானத்தில் வேலாயுதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேலாயுதம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னரும் முன் குறிப்பிட்ட வெள்ளைக் கல்லிலாலான திருவுருவமும் கூடவே வைத்துப் பூசிக்கப்பட்டு வந்தது.
ஆரையம்பதி என்றழைக்கப்படும் இக்கிராமம் முன்னர் ஆரைப்பற்றை என்றே பெயர் பெற்றிருந்தது. “ஆரை” என்பது மழைக்காலத்தில் நீர் பரந்து செல்லும் பள்ளமான நிலப்பரப்பைக் குறிப்பதாகும்.
இந்நிலப்பரப்பில் நான்கு இலைகளைக் கொண்ட “ஆரைக்கீரை” பெருக்கமாக உண்டாகி வளரும். இவ்விரு பொருளும் இணைந்து பொருள் விளக்கம் தரத்தக்கவாறு “ஆரைப்பற்றை” என்ற பெயர் அமைந்துள்ளது.
கவியரசர் கம்பரும் ஒளவைப் பிராட்டியாரும் ஆரைக்கீரையை வைத்தே வித்துவப் போட்டியில் ஈடுபட்ட கதை இலக்கியத்தில் வருதல் காண்க.
செங்குந்தர் வீதியில் அமைந்துள்ள திருநீல கண்ட விநாயகர் ஆலயத்தின் 1907 ஆம் ஆண்டில் கட்டப் பட்டுள்ள மணித்தூணில் இவ்வூரின் பெயர் ‘ஆரையம்பதி” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வாலயத்தி லிருந்து அருள் பாலிக்கும் விநாயகப் பெருமான் மீது 1911ஆம்ஆண்டில் பாடப்பெற்ற பதிகத்திலும் "ஆரையம்பதி” எனும் பெயரே கூறப்பட்டுள்ளது.
ஆரையம்பதியில் வாழ்ந்த, வாழுகின்ற மக்கள் பல்வேறு குடிகளாக அடையாளங் காட்டப்பட்டுள்ளார்கள். அக் குடிகளாவன: பத்திநாச்சி, ஆறுகாட்டி, முதலித்தேவன், வயித்திவேலன், வங்காளர், வீரமாணிக்கன், திருவிழா, சம்மானோட்டியார், புலவனார், குரவர், பொன்னாச்சி, மன்றிலாடியார், அலரித்தேவன், அருமைத்தேவன், சிறப்பினா, விக்கிரமபாலசிங்கன், வேடவேளாளர் முதலா னவையென விரிந்து செல்கின்றன. ஒவ்வொரு குடியைச் சேர்ந்த மக்களும் பொதுத்தன்மையுடனும், முற்காலந் தொட்டு இக்காலம் வரை ஒற்றுமையும், ஒன்றிணைப்பும், மரியாதையுடன் கூடிய நல்லிணக்கமும் இருந்து வருவது மிகவும் போற்றுதற்கும் பாராட்டுதற்கும் உரிய விடயமாகும்.

Page 49
ஆரையம்பதி முரீ சுந்து ஒரு சுருக்க வரலாறு
1. அறிமுகம்
சுமார் 400 வருடப் பழமை கொண்ட ஆரையம் பதி பூரி கந்தசுவாமி ஆலயம், கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்துடனும் படிகலிங்கமான காசி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த கோவில்குளம் லிங்கேஸ்வரர் ஆலயத்துடனும் வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டது.
கோவில்குளம் லிங்கேஸ்வரர் ஆலயம் போத்துக் கேயர் காலத்தில் அழிக்கப்பட்டபின் அதன் இடிபாடுகளுக் குள் எஞ்சிநின்ற கருங்கற்றுண்களும் கருங்கல் நிலைப்படி யும் இக் கந்தசுவாமி ஆலயத்தில் பொருத்தப்பட்டன.
கலிங்க இளவரசியான உலகநாச்சியால் கி.பி.4ம் நூற்றாண்டில் கோயில்குளம் லிங்கேஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்ட தென்பதை, மட்டக்களப்பு மான்மியம் தரும் தகவல்களாலும் வேறு வரலாற்றுச் சான்றுகளாலும் நாம் அறியலாம்.(பார்க்க “மாகோன் வரலாறு - க.தங்கேஸ்வரி - us: 97-98)
அதன்பின்னரே கொக்கட்டிச்சோலை தான்தோன் றிஸ்வரம் ஆலயம் அமைக்கப்பட்டது. இரு ஆலயங்களும் உலகநாச்சி காலத்தில் அமைக்கப்பட்டதால் கோவில்குளம் ஆலயத்திலிருந்து கொக்கட்டிச்சோலைத் தான்தோன் றிஸ்வரர் ஆலயத்துக்கு வேல் கொண்டு செல்லும் வழக்கம் இருந்தது. பின்னர் இவ்வழக்கம் ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்தையும் கொக்கொட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தையும் இணைத்து வைத்தது. 2.ஆலயவரலாறு:
இவ்வாலயத்தின் ஆரம்பம் தொடர்பாக பல்வேறு கர்ணபரம்பரைக் கதைகள் கூறப்பட்டாலும் அவற்றினுடே ஓடும் வரலாற்று இழையைக்கொண்டு இவ்வாலயத்தின் வரலாற்றை ஓரளவு அனுமானிக்க முடிகிறது.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் கிழங்கிலங் கையில் இலங்கையின் பூர்வீக மக்களான இயக்கர் நாகர் என்போர் வாழ்ந்தனர். விஜயன் இலங்கைக்கு வந்தபோது (கி.மு.543) இவர்கள் வாழ்ந்திருந்ததை “மகாவம்சம்' குறிப்பிடுகிறது.
இவர்களது வழித்தோன்றல்களான வேடர்கள் கிழக்கிலங்கையில் பரந்து வாழ்ந்தனர். மட்டக்களப்பில் மஞ்சன், காங்கேயன், காத்தான் முதலிய வேடர்களின் குடியிருப்புகள் இருந்தன. இவ்விடங்கள் பின்னால் மஞ்சன் தொடுவாய், காத்தான்குடி, காங்கேயன்ஓடை என அழைக்கட் UL60T.
காத்தான் என்பவன் ஒரு முக்கோணக்கல்லை வைத்து வணங்கி வந்தான் என்றும் அக்கல் "வெள்ளைக் கல் பிள்ளையார்”எனக்குறிப்பிடப்பட்ட தென்றும் அறிகிறோம்

jíGuIIIf egonuluth
- அன்புமணி
(அக்கல் இன்றும் ஆரையம்பதி கந்தசுவாமி ஆலய மூலஸ்தானத்தில் உள்ளது)
பின்னர் கி.பி.1802ல் இக்கல்லை வைத்து ஒரு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. சிலவருடங்களின் பின் இக்கோயில் பெருப்பித்துக் கட்டப்பட்டது. திரு.கதிரவேற் பிள்ளை விதானை, கண்ணப்பன் ஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களுடன் திரு.காசிநாதர் (நொத்தாரிஸ்) சம்புநாதர் (உடையார்) தம்பாப்பிள்ளை (கொஸ்தப்பர்) சின்னத்தம்பி (உபாத்தியாயர்) முதலியோரும் இம்முயற் சிக்கு உதவினர். 1850 ல் இத்திருப்பணி நடைபெற்ற தென அறியமுடிகிறது. இத்திருப்பணியின் பயனாக கர்ப்பக் கிரக விமானம் அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் கொண்டதாக இக்கோயில் உருப்பெற்றது.
3.உற்சவங்கள்
1864ல் கொடித்தம்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதே ஆண்டில் ஆனிமாதம் இவ்வாலயத்தின் சம்புரோட்சண கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கும்பாபிஷேகத்தை நடாத்தி வைத்தவர்கள், கொக்கட்டிச்சோலை தான்தோன் றிஸ்வரர் ஆலயக்குருக்கள் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. (ஆதாரம்: கே.இராஜரத்தினம் எழுதியுள்ள கட்டுரை)
1922ம் ஆண்டுவரை திரை நீக்கம் செய்யாமலே இவ்வாலயத்தில் பூசை செய்யப்பட்டு வந்தது. (இவ்வழக்கம் கதிர்காமம், மண்டுர் முருகன் ஆலயங்களில் இன்றும் பின் பற்றப்பட்டு வருவது இங்கு நினைவு கூரத்தக்கது)
1922ம் ஆண்டு முதல் சைவக்குருக்களான சிவழறி சின்னத்துரைக்குருக்கள் பூசைப்பொறுப்பை ஏற்று திரை நீக்கிப் பூசை செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.
இவரே இவ்வாலயத்தில் இந்து விசேட தினப்பூசைகளையும்
ஆவணி ஞாயிறு, புரட்டாதிச்சனி, ஐப்பசி வெள்ளி, கார்த்திகைச் சோமவாரம் முதலிய விரதங்களையும் மகோற்சவத்தையும் ஏற்படுத்தினார். கந்த சஷ்டி - சூரன் போர் உற்சவங்களையும் இவரே அறிமுகப்படுத்தினார். கந்தசஷ்டி காலத்தில் கந்தபுராணம் படித்துப் பொருள் சொல்லும் வழக்கமும் (புராணபடனம்) ஆரம்பமாகியது. தோலன் சின்னவன் என்பவரே கந்தபுராணuடனம், காசி காண்டம், இராமாயணம், பாரதம் முதலியவற்றை ஆரம்ப காலம் முதல் படித்துப் பொருள் சொல்லி வந்தார். இத்தகைய சைவப்பணிகளால் இவ்வாலயம் மண்டூர் முருகன் கோயில் போலப் புகழ்பெற்று அயலில் உள்ள பல கிராமத்தவர்களையும் தன்பால் ஈர்த்தது.
இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம் புரட்டாதியில் நடைபெறுகிறது. பத்து நாட்கள் திரு விழாக்கள் நடைபெற்று புரட்டாதிப் பூரணையில் தீர்த் தோற்சவம் நடைபெறும். இத்திருவிழாக்கள், கொடியேற்றம்,
29

Page 50
குருக்கள்திருவிழா, பொற்கொல்லர்திருவிழா, சாண்டார் திருவிழா, ஆரைப்பற்றை தெருத்திருவிழா, நடுத்தெருத் திருவிழா, முகத்துவாரத் தெருத் திருவிழா, செங்குந்தர் திருவிழா, சம்மானோட்டியார் திருவிழா, வேளாளர் திருவிழா, தீர்த்தோற்சவம் என ஆரம்பகாலத்தில் நடைபெற்றன. இப்போது சில திருவிழாக்கள் நடைபெறுவதில்லை.
4 கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர்
ஆலயத்தொடர்பு
கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துக்கும் ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்துக்கும் இடையே வரலாற்று ரீதியான தொடர்புகள் இருந்ததால் ஆரம்பகாலம் முதல்சில சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு வந்தன. அவற்றின் விபரம் வருமாறு:
(i) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய உற்சவ காலத்தில் ஆரையம்பதி மக்கள் கோயில் முகப்பில் ஓர் மண்டபம் அமைப்பர். உற்சவத்தின் நிறைவு நாளான தேரோட்டத் தினத்தன்று தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகிகளும் குருக்களும் ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்திலிருந்து வரும் ஆலயநிர்வாகிகளை எதிர் கொண்டு வரவேற்பர். தேருக்கான வடத்தை (கயிற்றை) குருக்கள் எடுத்து இவர்களிடம் கொடுக்க இவர்களே தேரில் வடத்தைப் பூட்டுவர்.
(i) இவ்வாறே ஆரையம்பதி கந்தசுவாமி ஆலய உற்சகாலத்தில் மேற்படி கொக் கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர் ஆலய அதிகாரிகள் கோவிலார் முதலி யோர் ஆரையம்பதிக்கு வருவர். ஆரையம்பதி கந்த சுவாமி ஆலய நிர்வாகிகள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்று அழைத்து வருவர். கந்தசுவாமி ஆலய உற்சவங்கள் நடைபெறும் அத்தனை நாளும் இவர்கள் ஆலயத்தில் தங்கியிருந்து பூஜா கைங்கரியங்களில் பங்கு கொள்வர்.
மக்களிடையே நல்லெண்ணத்தையும் நல்லுற வையும் வளர்க்கும் இச்சம்பிரதாயம் இப்போது அருகி வருகிறது.
இச்சம்பிரதாயம் மாகோன் காலத்தில் முக்குலத் தோருக்கும் குருகுலத்தோருக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தென்பதை அறிய முடிகிறது. இதற்கு ஆதாரமான கல்வெட்டுப்பாடல் “மட்டக்களப்பு மான்மீயம்' என்ற நூலில் உள்ளது. (ஆசாரி கல்வெட்டு) 5. ஆலய நிர்வாகம்
கிழக்கிலங்கையில் உள்ள பெரும் பாலான ஆலயங்களில் வண்ணக்கு நிர்வாகமுறையே நடை முறையில் இருந்தது. இதற்கமைய இவ்வாலயத்திலும் கோயிலின் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்ற 1864 முதல் வண்ணக்கு நிர்வாகம் இருந்தது. இந்த வண்ணக்குத் தேர்வு முறையும் குடிகளின் அடிப்படையிலேயே பெரும் பாலான கோயில்களில் நடைமுறையில் இருந்தது.
வண்ணக்கர் (நிர்வாகம்) கணக்குப்பிள்ளை (நிதி) கங்காணி அல்லது கவுடாக்காரன் (பொருள்) ஆகிய மூவரும் கோயில் நிர்வாகத்தைக் கவனிப்பது மரபு. அவ்வகையில் மேற்படி நிர்வாகத்தில் செம்பக்குட்டி பத்தினியர் (வண்ணக்கர் - மன்றுளாகுடியைச் சேர்ந்தவர்) பரிகாரி கண்ணப்பன் (கணக்குப்பிள்ளை - திருவிளங்கு குடியைச் சேர்ந்தவர்) குஞ்சித்தம்பி (கங்காணி) ஆகியோர் பணிபுரிந்தனர்.
30

இவர்களுடன் ஆரையம்பதிக் கிராமத்தின் முக்கிய 3 தெருக்களான ஆரைப்பற்றைத் தெரு, நடுத்தெரு, முகத்துவாரத்தெரு ஆகியவற்றிலிருந்து தெருவுக்கு இரண்டு அதிகாரிகள் வீதம் அறுவர் தெரிவு செய்யப்பட்டனர் இக்குழுவே நீண்டகாலம் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வந்தது. அதன்பின் காலத்துக்குக் காலம் வெவ்வேறு வண்ணக்கர்கள் கடமை புரிந்துள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு
சம்புநாத வன்னியர், கணபதிப்பிள்ளை தோம்பு தோர், ப.க.வேலுப்பிள்ளை, ச.வ.தெய்வநாயகம் (19121940) த.சின்னத்தம்பி, சி.ஏரம்பமூர்த்தி இவர்களுள் சி.ஏரம்பமூர்த்தி அவர்கள் நீண்டகாலம் வண்ணக்கராகக் கடமீை ஆற்றினார்.
1974ம் ஆண்டு முதல் வண்ணக்கு முறை நீக்கப் பட்டு நிர்வாசபைமுறை ஏற்பட்டது. முதல் நிர்வாக சபையில் பின்வருவோர் கடமை ஆற்றினர். சி.ஏரம்பமூர்த்தி (தலைவர்) கா.சோமசுந்தரம் (செயலாளர்) ந.கோணாமலை (பொருளாளர்) இவர்களுடன் 8 பேர் உறுப்பினராகச் செயற் பட்டனர். சி.ஏரம்பமூர்த்தி காலமானபின் 21.5.1975 முதல் அவரது புதல்வர் ஏ.சுந்தரமூர்த்தி தலைவரானார். தற்போதைய நிர்வாகம்:
1996முதல் பின்வருவோர் இவ்வாலய நிர்வாக சபையில் கடமை புரிகின்றனர்.
திரு.சு.பரசுராமன் (தலைவர்)- திருவிளங்கு குடி திரு.ம.மகேஸ்வரன்(செயலாளர்) - வீரமாணிக்கன் குடி திரு.க.சிவநேசராசா(பொருளாளர்) - ஆறுகாட்டியார் குடி
இப்புதிய நிர்வாகசபையின் இடைவிடாத முயற்சி யால் கோயில் புதுப்பொலிவு பெற்று, ஏப்ரல் மாதம் முதலாம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.(14.99)
கோயில் திருப்பணிகளில், ஆரையம்பதியைச் சேர்ந்தவர்களே சிற்பாசிரியர்களாகக் கடமைபுரிந்துள்ளனர். (ஆரையம்பதியில் மேசன் தொழில்புரிவோர் கணிசமாக உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜகோபுரம் கனடாவில் தற்போது வதியும் கணபதிப் பிள்ளை பரமானந்தம் என்பவர் வழங்கிய நிநி உதவி கொண்டு சுமார் 5 லட்ச ரூபா செலவில் அமைக்கப்பட் டுள்ளது. இவ்வாறே ஆலயத்தினுள் பல்வேறு திருப்பணிகள் அன்பர்களின் நிதி உதவியுடன் அழகுற நிறைவேறியுள்ளன.
கும்பாபிஷேகக் கிரிகைகள் 26.3.99 வெள்ளிக் கிழமை ஆரம்பமாகி 1.4.99 வியாழக்கிழமை காலை 9.22 முதல் 11.13 வரையுள்ள சுபவேளையில் மஹாகும்பாபிஷே கம் நிறைவேறத் திருவருள் பாலித்துள்ளது.
கிரியா கலாபமணி பிரதிஷ்டா பூஷணம் சிவபூரி திமாணிக்கவாசகக்குருக்களைப் பிரதம குருவாகக்கொண்ட 22 குருக்கள்மார் இக்கும்பாபிஷேகப் பணியில் ஈடுபடுகின் றனர். இக்கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆரையம்பதி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நீண்ட காலம் இப் பகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந் நிகழ்வு அனைவரது உள்ளத்திலும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கும்பாபிஷேகத்துடன் கலியுகவரத னான கந்தப்பெருமான் அனைவருக்கும் அருள்புரிந்து நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படுத்துவான் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Page 51
ஆரையம்பதியூரீகந்த
க.இராஜ
(முன்னாள் செயலாளர், பரம
பசுவினுடைய உடம்பெங்கும் பரந்தோடும் குருதி பக்குவமடைந்து பாலாகப் பரிணமிப்பதை நாம் அதன் முலைவாயிலாகப் பெறுகிறோம். அதேபோல் அண்ட வஸ்துவாக உலகெங்கணும் வியாபித்து நிற்கும் பரம்பொரு 1ளின் அருளை ஆலயத்தின் மூலமாகத்தான் பெறமுடியும். எனவேதான் ஆன்றோர் நமக்கு கோயில்களைத் தந்துள்ளனர். ஆன்மா லயப்படும் இடம் ஆலயம். இறைவன் ஆன்ம ஈடேற்றங்கருதி கருணை மேலீட்டினால் உருவம் தாங்கி எழுந்திருக்கும் இடம் கோயில் என்றும் கூறலாம். கிராமங்கள், நகரங்கள், மாநகரங்களிலெல்லாம் கோயில்கள் இருப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறான ஆலயங்களில் ஆரையம்பதி யூரி கந்தசுவாமி கோயிலுமொன்றாகும்.
முருகன், கந்தன், வேலன், கார்த்திகேயன், காங்கேயன், சரவணபவன், குகன், குமரன் என்பனவெல்லாம் கந்தக்கடவுளைக் குறிக்கும் சொற்களாம். கந்தன் வழிபாடு அனாதியானது. மட்டக்களப்புப் பிரதேசத்திலும் ஆதியில் கந்தன் வழிபாடே இருந்ததாக அறிகிறோம். உகந்தை முருகன் கோயில், திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோயில், வெருகல் வேலாயுதசுவாமி கோயில், சித்தாண்டி வேலாயுத சுவாமி கோயில் ஆகியன இதற்குச் சான்று பகர்கின்றன. ஆதி நாகர் முருகக்கடவுளையே ஆராதித்து வந்துள்ளனர். காளசேனன் கிழக்குக் கரைக்கு வந்தபோது உகந்தையை இராசதானியாக வைத்து ஆண்டிருந்த நாகரைத் துரத்தும் போது அங்கு முருகன் ஆலயம் இருந்ததாக வரலாறு கூறிகின்றது. முருகன் வழிபாடு புராதனமானது என்பதை இதனால் அறிகிறோம். புராதன நூல்களான தொல்காப்பி யத்திலும் பரிபாடலிலும் ஸ்கந்த புராணத்திலும் கந்தன் வழிபாடு கூறப்படுகிறது.
ஆரையம்பதி கிராமம் மட்டக்களப்பின் தென்பால் நாலு கல் தொலைவில் அமைந்துள்ள புராதன தமிழ்க் கிராமமாகும். வடக்கே முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடி யென்னும் பட்டினமும் கிழக்கே வங்காள விரிகுடா கடலும் தெற்கே தாளங்குடா மண்முனை ஆகிய தமிழ்க்கிராமங் களும் மேற்கே மீன்பாடும் மட்டுநகர் வாவியும் இக்கிராமத் தின் எல்லைகளாகும். இன்சுவைக் கனிகள் தரும் மா பலா தென்னைகளும் தண்ணிழல் பரப்பும் ஆல், அரசு, கடம்பு, நாவல், வேம்பு, தேத்தா முதலான மரங்களும் இங்கே காணப்படுவன. நீருற்றுக்கள் நீர் ஓடைகள் கேணிகள் குளங்கள் இக்கிராமத்தை வளம் படுத்துகின்றன. இக்கிரா மத்தின் ஆதிக்குடிகள் குருகுலநாகர் ஆவார்கள்.

சுவாமி ஆலயவரலாறு ரெத்தினம்
யினார் ஆலய பரிபாலன சபை)
பிற்காலத்தில் போர்க்காரணங்களுக்காகவும் வேறுபல காரணங்களுக்காகவும் மலையாள தேசத்தவர் இலங்கை வந்து திரும்பிச் செல்லாது கிழக்கிலங்கையில் குடியமரலானார்கள் இக்கிராம மக்களிடையே நிலவும் கலை கலாசாரம், பண்பாடு, அணிகலன்கள் அனைத்தும் மலையாள தேசத்து மக்களது கலை, கலாசாரம், பண்பாடுகளை ஒத்ததாகவே காணப்படுகின்றன. இக்கிராம மக்கள் மந்திரம், மாந்திரிகம், வைத்தியம் ஆகிய துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்கு கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் சைவசமயிகளே. ஒரு சில கிறிஸ்தவர்களும் வாழ்கின்றார்கள். இவர்களது தொழில் கமச்செய்கை, தும்புத்தொழில், நெசவு, மீன்பிடித்தல், அரசாங்க உத்தியோகங்கள் ஆகியனவாகும்.
இக்கிராமத்தில் குருகுலத்தவர்களுடன் பொற் கொல்லர், செங்குந்தர், சாண்டார், பறையர், வண்ணார், நாவிதர் ஆகிய சாதியினர் தனித்தனி தெருவில் வாழ்கின் றார்கள். அக்காலத்தில் வாழ்ந்த திருவிளங்குகுடியைச் சேர்ந்த பூரீமான் கதிரவேற்பிள்ளை என்பவரே இக்கிராமத்தை நெறிப்படுத்தி ஒவ்வொரு சாதி மக்களையும் ஒவ்வொரு தெருவில் வாழ வழிப்படுத்திக் கொடுத்தவராவார். இவர் 18586) (BIT6)LDIT60TsTii.
ஆதிகாலத்தில் இக்கிராமத்தைச் சூழ வேடர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் வசித்த இடங்கள் இன்றும் அவர்களின் பெயராலே வழங்கப்படுகின்றன. இவை வெறியன்சேனை, சோளன்சேனை, காங்கேயனோடை, அலையன்குளம், ஆனைக்குளம் முதலியனவாகும். அக் காலத்தில் காத்தான்குடியும் ஆரையம்பதியும் ஒரே கிராம மாகவே இருந்து வந்தது. ஆங்கில அரசு 1872ல் இக்கிராமத் தின் முஸ்லிம் வாழ் பகுதியைக் காத்தான்குடியெனவும், தமிழர் வாழ் பகுதியை ஆரைப்பற்றையெனவும் பிரகடனப் படுத்தினர். இக்கிராமத்தின் பழமையை உலகநாச்சி வரலாற்றாலும் அறியக் கூடிய கதையயொன்றுமுண்டு. சிலபலவருடங்களுக்கு முன்பு இக்கிராமம் பற்றி ஆராய்ந்த குழுவில் அங்கம்வகித்த பண்டிதர் செ.பூபாலபிள்ளையின் தம்பி இளையதம்பி ஆசிரியர் தங்களது ஆய்வில் பின் வருமாறு கண்டறிந்ததாகச் சொன்னார். திரு பொன்னையா விதானை யாருக்கும் இது தெரியும்.
“கி.பி.3ம் நூற்றாண்டில் மண்முனையை ராசதானி யாகக்கொண்டு அரசு செலுத்திய உலகநாச்சியின் சகோதரன் உலகநாதன் அரசியின் பாதுகாப்புக்காரணமாக

Page 52
ஆரைப்பற்றை முகத்துவாரத் தெருவில் வாவிக்கரையில் காவல் அரண் ஒன்றமைத்து எதிரிகள் அந்நியர் பகைவர் யாரும் வாவியூடாக வருவரோ எனக் காவல் இருந்தான் தோணியில் வாவியில் உலாவிக்கொண்டு கண்காணித்து வந்தான்” என்பதாகும்.
இக்கிராமத்தின் நாமம் காத்தானது காலத்தைத் தழுவியதாகவிருந்த பொழுதும் அக்கிராமம் அவனது காலத்திற்கு முன்னரும் மக்கள் வசிக்கும் கிராமமாக விருந்தது. அப்பொழுது இக்கிராமம் ஆலஞ்சோலை யென அழைக்கப்பெற்றதாகவும் முன்னோர் அவர்களின் மூதாதையர் சொன்னதாக சொல்லியுள்ளனர்.
பூநொச்சிமுனை எனத் தற்காலம் பெயர் கொண்டிருக்கும் பொன்னாச்சிமுனையில் 1612ல் காத்தான் என்னும் வேடனொருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு பிரமிச்சாரி. வேட்டையாடல், மீன்பிடித்தல், சேனைப்பயிர் செய்தல், ஆகியன அவனது தொழில்களாகும். அவன் வேடர்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருந்தான். இவன் ஒரு முக்கோணக் கல்லை வைத்து வழிபாடு செய்து வந்தான். வேடர்கள் மூன்று கோணங்களையுடைய கல்லை வைத்து வழிபடுவது அவர்களது மரபாகும். இது ஆய்வாளர் கள் கண்ட முடிபு. இவன் இவ்வாறு வாழ்ந்து வருங்கால் மலபார்க்கரையலிருந்து வர்த்தகப்படகொன்றில் பிரயாணம் செய்து கொண்டிருந்த சோனகர்கள் குடிசைப் பக்கமாக புகை எழுவதைக்கண்டு அந்தஇடம் கரை தட்டினர். அவர்கள் சிலநாள் காத்தானுடனே வாழ்ந்தனர். தங்களது வியாபாரம் காரணமாக அந்த இடத்தையே தங்களது வசிப்பிடமாகக் கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து மேலும்முஸ்லிம்கள் அங்கு குடியேறலானார்கள்.
சோனகர் குடியேற்றம் காத்தானுக்குப் பிடிக்க வில்லை. எனவே அவன் உடமைகளையும் தான் வைத்து வழிபட்டுவந்த முக்கோணக் கல்லையும் எடுத்துக்கொண்டு தென்திசைநோக்கி வந்து தற்பொழுது கந்தசுவாமி கோயில் இருக்குமிடத்தையடைந்து அங்கு குடில் அமைத்து வாழ லானான். முக்கோணக் கல்லை ஒரு அரசமரத்தடியில் வைத்து ஆராதித்து வந்தான். இவன் இவ்வாறு வாழ்ந்து வருகையில் இக்கிராமத்தில் வைசூரி என்னும் பெருநோய் பரவிற்று. நோய் காரணமாகப் பலர் இறந்தனர். சிலர் துன்பப்பட்டனர். ஆனால் காத்தானையோ காத்தானைச் சூழவாந்தவர்களையோ இந்நோய் பிடிக்கவில்லை. இதனைக் கண்ணுற்றவர்கள் காத்தான் அது வைத்து வழிபடும் கல் விக்கிரகந்தின் கடாட்சம் என நம்பினர். காத்தானிடம் சென்று முறையிட்டினர். காத்தான் இவர்களுக்கு அவனால் எரிக்க பெற்ற மரக்கட்டைச் சாம்பலைக்கொடுத்து அவர்களது வீடு வாசல்களில் தூவி விடுமாறு சொல்லியனுப்பினான். அவர்கள் அவ்வாறே செய்ய அவர்களை நோய் அணுக வில்லை. நோயாளர்கள் குணமடைந்தனர். அன்று முதல் இக்கிராம மக்கள் வேடனது கல்விக்கிரகத்தை சிந்தை யிற் கொண்டு அக்கல் விக்கிரகத்திற்கு பொங்கல் பூசைகள் செய்துவரலானார்கள். சிலவருடங்களில் காத்தான் இறந்து போனான்.
32

வேடன் இறந்த பின்பு கிராம மக்கள் வேடனின் கல் விக்கிரகத்திற்கு பந்தலமைத்துப் பேணிவந்தனர். இது போர்த்துக்கீசர் அரசு நடத்திய காலம். பறங்கியர் சுதேச சமய வழிபாடுகள் சடங்குகளுக்குத் தடைவித்திருந்தனர். பறங்கியர்களின் பின்பு ஒல்லாந்தர் ஆட்சி புரிந்தனர். இவர்களும் பறங்கியரின் தடை உத்தரவுகளைத் தொடர்ந்த ரெனினும் 17ம் நூற்றாண்டில் இக் கடுங்கோட்பாடுகள் தளர்த்ப்பட்டன. இக்காலத்தில் இக்கிராமப் பெரியோர் ஒரு சிறுகோயிலைக் கட்டி 1802ல் கும்பாவிஷேகமும் செய்து வைத்தனர். இக் கோயிலில் வேடனின் கல் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப் பெற்றிருந்தது. ஆலயம் கந்தசுவாமி ஆலயமாகவே விளங்கிற்று.
சிலவருடங்கள் சென்றதும் இக்கோயிலைப் பெருப்பித்து ஆகமவிதிப்படி கட்டவேண்டுமென பெரி யோர்கள் தீர்மானித்தனர். திருவிளங்குகுடியைச் சேர்ந்த பூரீமான் கதிரவேற்பிள்ளையும் விதானை கண்ணப்பரும் முன்னின்று அரும்பாடுபட்டு இக்கோயிலை 1850ல் கட்ட ஆரம்பித்தனர். இவர்களுக்கு மன்றிலாடி (மன்றுளாடி) குடியைச் சேர்ந்தவர்கள் உறுதுணை புரிந்தனர். செம்பக் குட்டி பத்தினியரின் புத்திரியும் சம்புநாத வன்னியனின் மனைவியுமான பெரிய பிள்ளை நனி பொருளுதவி வழங்கி யுள்ளளாள்.
பெரியபிள்ளை ஒரு செல்வந்தர். அக்காலத்தில் செம்பு, வெள்ளியிலான நாணயங்களே புழக்கத்திலிருந்தன. இவள் தனது பணத்தை மூட்டைகளில் கட்டிவைத்திருந்தாள் ஆங்கில அரசு ஆரம்பமான காலம் அது. பெரிய பிள்யை யிடம் அதிக செல்வம் இருப்பதையறிந்து ஆங்கில அரச அதிகாரி இவளிடமிருந்த பணம் நகை முழுவதையும் பறிமுதல் செய்துவிட்டார். அரசுடன் வாதாடியும் முடிய வில்லை. அவள்தனது வழக்கை லண்டன் பிறிவிக் கெளண்சிலுக் கனுப்பினாள். பிறிவிக் கெளண்சலில் இவ்வழக்கு விசாரிக்கப்பெற்று பெரியபிள்ளை சார்பாக வழக்குத் தீர்ப்பு வழங்கப்பெற்றது. தீர்ப்பின் பிரகாரம் ஆங்கில அதிகாரி அவளிடமிருந்து சுவீகரித்த நகை களையும் லட்சக்கணக்கான ரூபாய்களையும் அவளிடம் திருப்பி ஒப்படைத்து விட்டார். இலங்கையிலிருந்து லண்டன் பிறிவிக் கெளன்ைசிலுக்கு அனுப்பிய முதலாவது வழக்கு இதுவாகும். இவ்வழக்கு நியூலோ றிப்போட் (NLR) 1815ல் இடம் பெற்றுள்ளது. சட்டத்தரணிகள் மூலம் இதனை அறிந்து கொள்ளமுடியும்.
கோயில் கட்டிக்கொண்டிருக்கையில் நிதி பற்றாக் குறை ஏற்பட்டது. அப்போது விதானை கண்ணப்பர் தனது இவழ்ட நண்பனான செங்குந்தர் வகுப்பைச் சேர்ந்த நாகப்பரிடம் ரூ 100 கடனாகப்பெற்று கோயில் வேலைகளை நிறைவு செய்தார்.
கோயில் முன்னர் இருந்த சிறுகோயில் கர்ப்பக் கிரகமாக மாற்றயமைக்கப்பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், தம்பமண்டபம், நிருத்தமண்டபங்கள் கட்டப்பெற்றன. முன் முகப்பு மண்டூர் முருகன் கோயில் முகப்பை ஒத்ததாக அமைக்கப்பெற்றது.

Page 53
கிழக்கு வீதியில் வாகனசாலை ஒன்றும் கட்டப்பெற்றது. இது கிழக்கு முகக்கோயிலாகும். வாகன சாலை பிற்காலத்தில் அகற்றப்பட்டுவிட்டது.
கர்ப்பக்கிரகம் சட்கோணவிமானத்தைக் கொண்ட தாக கலசமட்டம் 18 அடி உயரமுடையதாகவும் கட்டப் பெற்றதாக இருந்தது. அர்த்த மண்டப உட்புறம் தெற்கு நோக்கி பீடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு. இதில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதரான கந்தசுவாமி சண்டேசுரர் சபையிருந்தனர். இவ் விக்கிரகங்கள் பித்தளை உலோகத்தி லானவை.
மண்டபங்களனைத்தும் செங்கல் சுண்ணாம்புக ளால் கட்டப்பெற்றன. மகாமண்டபத்தினுள் சதுரமான மரத் தூண்கள் கூரையைத் தாங்கி நின்றன. இந்த மண்டபத்தில் எழுந்தருளும் மூர்த்திகளை வைத்து சோடோபசார அலங் கார பூசைகள் நடைபெற்று வந்தன. இது உற்சவ காலங் களில் நடப்பது. தம்பமண்டபத்தில் பலிபீடம்,மயில் (நந்தி) கொடிஸ்தம்பம், தம்பப்பிள்ளையார் ஆகியன இடம் பெற்றன. வடகிழக்கில் காவற்கடவுள்வைரவ மூர்த்திக்குச் சிறு கோயில் எழுப்படப்பட்டிருந்தது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிவர அட்டமூர்த்திகளுக்கு பலிக்கல்கள் பதிக்கப்பெற்றிருந்தன. உட்பிரகாரதென்திசையில் மடப்பள்ளியும் அதனுடன் இணைந்தவாறு குருக்களுக்கு இரண்டு அறைகள் கொண்ட இல்லமும் கட்டப்பட்டிருந்தன.
கர்ப்பக்கிரகம், அர்த்மண்டபம் ஆகியவைகளின் நிலைகளும் படிகளும் 'முகப்புநிலை படிகளும் கருங்கல் தூண்களாலாக்கப் பெற்றன. இக்கருங்கற்தூண்கள் இக்கிராமத்தின் அயல்கிராமமான கோயில் குளத்திலிருந்து இயற்கை அழிவில் சிக்குண்டிருந்த ஒரு சிவாலயத் தினின்றும் பெறப்பட்டவைகளாகும்.
கோயில் குளம் இக்கிராமத்தின் தென்திசை யிலுள்ளது. இந்த இடத்தைச் சிகரம் எனவும் அழைப்ப துண்டு. இங்கே சிவாலயம் இருந்ததற்கான எச்சங்களும் தடயங்களும் காணப்படுகின்றன. பயிர்ச் செய்கைக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் நிலத்தை அகழ்ந்த போது சிவசின்னங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கி.பி.1726 ல் பெருமழையும் வெள்ளபபெருக்கும் உக்கிர புயலும் ஏற்பட்டது. வெள்ளப்பிரவாகத்தால் பயிர் களும் ஆடுமாடுகளும் அழந்தன. மனிதர்கள் பலர் இறந்தனர்.அதனை அடுத்த இரண்டு வருடங்களில் பஞ்சமும் நோய்பிணிகளும் ஏற்பட்டன. இதனால் மக்கள் உணவு கிடைக்காமலும் வறுமையில் வாடினர். இக்காலத்தில் மக்கள் காரை இலைபோன்ற இலைகளை அவித்தும் உண்டுள்ளனர். ஒல்லாந்தர் இவர்கள் மேல் இரக்கங் கொண்டு உணவுவகைகள் கொடுத்து இயன்றளவு அவர்களைக் காட்பாற்றியுள்ளர்.இந்த சோக நிலையிலிருந்து கோவிற்குளம் தட்பவில்லை. இங்கு வாழ்ந்தவர்கள் இறந்தும் நோய்வாய்ப்பட்டும் இந்த இடத்தை விட்டு புலம் பெயர்ந்துமுள்ளனர். எனவே கோவில் குளக் கோயில் பராமரிப்பின்றி இயற்கை அழிவுக்குள்ளாயிற்று. கோயில்கள் கட்டுவதற்கும் இக்கோயிலிருந்தே கருங்கல் முதலிய வைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு

இக்கோயிலிருந்து பெற்ற கருங்கல் தூண்கள் கந்தசுவாமி கோயில் கட்ட உதவிற்று.(சிலர் கோயில்குளம் கோயில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட தென்ற கருத்தைக் கொண்டுள்ளனர். அக்கருத்தை நான் ஏற்றுக்கொள்ள வில்லை)
V
கி.பி.1864ம் வருடம் கொடிஸ்தம்பம் பிரதிஷ்டை செய்யப்பெற்று அதே ஆண்டு ஆனித்திங்கள் முதலாம் திகதி இரவு சம்ரோட்சன கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கும்பாவிஷேகத்தை கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் குருக்களே செய்துவைத்தனர். இவரே வருடாந்த பிரமோற்சவத்தையும் செய்து வந்தார். அக் காலத்தில் இருகாலத்தினப்பூசையே நடைபெற்று வந்துள்ளது. இப் பூசைகள் உச்சிக்காலத்திலும் சாயங்காலத் திலும் நடந்து வந்துள்ளது. பூசைகள் திரை நீக்கம் செய்யாது நடைற்ெற வந்தது.
தினப் பூசை செய்வதற்கும் ஏனைய உற்சவங் களை நடத்துவதற்கும் தம்பலகமத்திலிருந்து ஒரு குருக்களை வரவழைத்த அவரைப் பூசகராக நியமித்தனர். இவர் சிலகாலம் பூசை செய்துவிட்டு விலகிச் செல்ல இக் கிராமத்தில் வசித்துவந்த காத்தான் நம்பி கண்ணி நம்பி ஆகியோர் பூசை செய்து வந்தனர். இவர்களுக்குப் பின் களுவாஞ்சிக்குடியிலிருந்து வந்த சிவறி குழந்தைவேல் சைவக்குருக்கள பூசகரானாா. இவர் சிலகாலத்தில் வலகிச் செல்ல கொக்கட்டிச்சோலை சிவன்கோயில் குருக்களும் கொடியேற்றத்திருவிழாவுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார்.
சிவபூரீ குழந்தைவேல் குருக்கள் விலகிச் செல்ல யாழ்ப்பாணம் கெருடாவில்லிலிருந்து 1922ம் வருடம் சிவபூரி சினத்தத்துரைக் குருக்களை அழைத்து வந்து அவரைக் கோயல் பூசகராக்கினர்.
சிவபூரி சின்னத்துரைக்குருக்கள் ஒரு சைவக் குருக்களாவர். இவர் பூசைப் பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து திரை நீக்கம் செய்து பூசைகளைச் செய்து வரலானார். இவரே மகோற்சவங்களையும் சிறப்பாகச் செய்து வந்தார். இவர் சைவ சமயத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவ ராவார். கிராம மக்களிடையே சமய ஆசாரங்களைப் புகுத்தினார். ஆவணி ஞாயிறு,புரட்டாதிச் சனி, ஐப்பசி வெள்ளி, கார்த்திகைச்சோமவார விரதங்களை மக்களுக்கு அறிமுகம்செய்துவைத்தார்.
இவரது காலத்தில் சூரன்போர் உற்சவமும் ஆரம்பமாயிற்று. மகோற்சவம் தவிர ஏற்படுத்தப்பெற்ற முதலாவது உற்சவம் இச்சூரன் போர் உற்சவமாகும்.
அக்காலத்தில் சூரன்போர் உற்சவ தரிசனத்திற் காக இவ்வூர் மக்கள் கல்லடி உப்போடைப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்வது வழக்கமாகவிருந்தது. இந்த நிலைமை மாற்றவேண்டுமெனவும் நமது கோயிலில் சூரன்போர் உற்சவம் நடைத்தப்படவேண்டுமெனவும் ஆறுகாட்டி குடியைச்சேர்ந்த சில நற்சிந்தனையாளர்கள் முன்வந்தனர். முகத்துவாரத்தெருவைச் சேர்ந்த கொழும்பார் என்றும் வைத்தியர் என்றும் அழைக்கப்பெற்ற ஆறுமுகம்

Page 54
என்பவரும் நெல் வியாபாரி சாமித்தம்பியும் வைகாளியார் இளையதம்பி யாகியோரும் முன்னின்று 1924ல் சூரன்போர் உற்சவத்தை ஆரம்பித்தனர். முதல் இரண்டு வருடங்களும் மரம், காட்போட்மட்டை ஆகியவற்றைக் கொண்டு செய்த கட்டுச் சூரனைக் கொண்டே இவ்வுற்சவத்தைச் செய்தனர். 1926ல் மரத்தாலான ஒரு சூரனைப் பெற்றுக்கொண்டனர். இச்சூரனிலும் திருப்தியடையாத ஆறுகாட்டி குடியினர் முகத் துவாரத் தெருவைச்சேர்ந்த க.காசிப்பிள்ளை (செல்லத் துரைப் போடியார்) யை அணுகி அவரிடம் ஆலோசனை கேட்டனர். அந்தப் பொறுப்பைத்தான் ஏற்பதாகக் கூறிய க.காசிப்பிள்ளையவர்கள் உரிய நன்கொடையை அவர்க ளக்கு வழங்கினார். வைகாளியார் பொருத்தமான மஞ்சள் வண்ணாமரம் ஒன்றை யாழ்ப்பாணத்து உருவத்தை மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி அங்கிருந்து தற்போதையச் சூரனை 1945ல் பெற்றுக்கொண்டனர்.
சூரன்போருக்கும் கந்தசஷ்டி விரதத்திற்கும் பொருத்தமான சண்முகவிக்கிரகம் அப்போதிருக்கவில்லை. இக்குறையை நிவர்த்தி செய்யுமுகமாக ஆறுகாட்டி குடியினரே வள்ளி தெய்வானை சமேத சண்முகப் பெருமானின் ஐம்பொன்னிலான மிகவும் அழகான விக்கிரகத் தையும் பெற்றுக் கோயிலுக்குக் கொடுத்தனர்.
அக்காலத்தில் கந்தர் சஷ்டி விரதத்தை ஒரு குறிப்பிட்ட தொகையினரே அனுஷ்டித்து வந்தனர். இவ்விரத காலத்தில் கந்தபுராணம் படிக்கப்பெற்று பொருளும் சொல்லப்படும். கந்தபுராணம் படித்துப் பொருள் சொல்பவர் தோலன் சின்னவர் என்பவராவார். மேலும் இக்கோயிலில் ஆரம்பகாலம் முதல் காசி கண்டம், இராமாயணம், பாரதம் முதலிய நூல்கள் படித்துப் பொருள் சொல்லும் வழக்கமும் இருந்தது. இதன் காரணமாகவே இக்கிராம மக்களுக்கு சைவபுராண இதிகாசக் கதைகள் நன்கு தெரிந்தது. இந்நூல் களெல்லாம் பனை ஓலை ஏடுகளாகவே இருந்தன.
V
சிவழறி சின்னத்துரைக்குருக்கள் முதுநிலை யடைந்ததன் காரணமாக தன்னகம் சென்றுவிட அவரது மருமகன் சிவபூரி குருசாமியவர்கள் பூசைப் பொறுப்பை ஏற்று நடத்தினார். இவர் பூசை செய்து கொண்டிருக்கையில் சிவபூரீ சின்னத்துரைக் குருக்களின் மகன் சிவபூர் சோம சுந்தரக்குருக்கள் தனது படிப்பை முடித்துக் கொண்டு வந்தார். இவர் திரும்பிவர சிவறி குருசாமிக் குருக்கள் கோயில் பூசை முதலியவைகளைச் சிவபூரி சோம சுந்தரக்குருக்களிடம் ஒப்படைத்து விட்டுத் தன்னுர் சென்று விட்டார். சிவபூரி சோமசுந்தரக்குருக்கள் ஒழுங்காகவும் சிறப் பாகவும் பூசை செய்து கொண்டிருக்கையில் 1975ம் வருடம் கார்த்திகை விநாயக சஷடி விரத நாளன்று சடுதியாக இறைபதமடைந்தார். குருக்களவர்களின் மறைவு இக்கிராம மக்களை ஆறாத் துயரில் ஆழத்தியது.
சிவபூரி சோமசுந்தரக் குருக்களின் பின் சிவபூரி பாலசுப்பிரமணியக் குருக்கள், சிவபூரீ ராதாக் கிருஷ்ணக் குருக்கள், சிவபூரி நித்தியானந்தக் குருக்கள், பிரம்மறி சந்திரசேகரக்குருக்கள், பிரம்மறி நடேசக்குருக்கள், சிவபூரி சண்முக சுந்தரக்குருக்கள் ஆகியோர் பூசகராக இருந்தனர்.
34

சிவறி சண்முகக்குருக்கள் பூசகராக விருந்த காலத்தில் கோயில் அதிகம் கீலமடைந்திருந்தது. கோயிலை திருத்தம் செய்து புனரமைக்க வேண்டியது இன்றியமையாத தாயிற்று. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கோயில் திருத்திக் கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது முறை. எனவே 1994ம் வருடம் கோயில் வாலஸ்தாபனம் செய்யப் பெற்றது. உடனே திருத்த வேலைகளும் ஆரம்பமாயிற்று.
1864ல் கோயில் கட்டிக்கும்பாவிஷேகம் நடந்து முடிந்ததும் வண்ணக்கர், கணக்கப்பிள்ளை, கங்காணியார், பாகை அதிகாரிகள் கூடி மகோற்சவ காலத்தை நிச்சயித் தனர். மட்டக்களப்பில் வேளாண்மைச் செய்கை சித்திரை வரையும் நீடிப்பதாலும் வைகாசி ஆனி மாதங்களில் கண்ணகை அம்மன் உற்சவங்கள் நடைபெறுவதாலும் ஆடியில் மாமாங்கேசுரர் பிரமோற்சவமும் ஆவணியில் கொக்கொட்டிச்சோலை சிவன்கோயில் உற்சவமும் நடை பெறுவதையும் கருத்திற்கொண்டு புரட்டாதிப் பூரணை தினத்தை தீர்த்தோற்சவ நாளாகக்கொண்டு முதல்பத்து நாட்கள் திருவிழாச் செய்யத் தீர்மானித்தனர். அந்தக் காலத்தில் சாதிக் கட்டுப்பாடுகள் இருந்தன. ஒவ்வொரு சாதியினரும் அவர்களுக்குரிய தொண்டுழியங்களை செய்ய வேண்டியவர்களானார்கள். இத்தொண்டுழியங்களை மாகோன் என்னும் மன்னன் வகுத்து உறுதிசெய்து கொடுத்தான். இக்கோயிலிலும் மாகோன் வகுத்த வழிமுறை களே நடந்து வரலாயிற்று. ஆனகாரணத்தினால் தொண்டு ழியம் செய்து வருபவர்க:ைான பொற்கொல்லர், சாண்டார், வேளாளர் ஆகியோருகளுக்கு மகோற்சவத்தில் இடம் கொடுக்கப் பட்டன. பொருளுதவி வழங்கிய சம்மானோட்டிக குடியாருக 'கும் பணஉதவி செய்த செங்குத்தருக்கும் திருவிழா வழங்கப்பெற்றன. அதே காலத்தில் விதானை கண்ணப்பர் நாகப்பரிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்தபொழுது தங்களுக்கு திருவிழா உபயம் கிடைத்த சந்தோஷ மிகுதியால் அவர் கொடுத்த கடனை கோயிலுக்கு நன்கொடை செய்தார். கடன்முறியையும் கிழித்து அழித்து விட்டார். இவர்கள் சிலகாலம் ஒழுங்காகத் தங்கள் திருவிழா வைச் செய்து வந்தனரெனினும் பின்னர் திருவிழாச் செய் வதை நிறுத்திக் கொண்டனர்.(அதற்கான காரணங்களை விரிப்பிற் பெருகும்)
திருவிழா உபயம் பின்வருமாறு வகுக்கப்பட் டிருந்தது.
கொடியேற்றம்
, குருக்கள்
பொற்கொல்லர்
FIT6airLITi ஆரைப்பற்றைத் தெரு நடுத்தெரு முகத்துவாரத்தெரு செங்குந்தர் . FibLDITG360TTigeisgsgustif 10.வேளாளர்தெரு 11.அதிகாலை தீர்த்தோற்சவம்.

Page 55
தீர்த்தோற்சவம் ஆலடித்துறையில் இடம் பெற்று வருகிறது. இதற்கும் ஒரு கதை கூறப்படுகிறது. "கோயில் கட்டுவதற்கு புலவனார்குடியைச் சேர்ந்தவரே நிலம் கொடுத் ததாகவும் அதற்காக அக்குடியார் அதிகமாக வசித்த இடத்தையண்டிய ஆலடித்துறையிலே தீர்த்தோற்சவம் நடத்தப்படவேண்டுமென அக்குடியார் கேட்டுக்கொண்ட தற்கிணங்கவே ஆலடித்துறையில் தீர்த் தோற்சவம் நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
மகோற்சவம் ஆரம்பமான(1864) காலமுதல் 1945 வரையும் நாளாந்தம் அந்தித் திருவிழா இரவுத்திருவிழா என இருதிருவிழாக்கள் நடந்துவந்தன. உபயகாரரின் திருவிழா இரவுத்திருவிழாவில் ஆரம்பித்து அடுத்தநாள் அந்தித்திருவிழாவுடன் முடிவடையும். அந்தித் திருவிழா மாலை எட்டுமணியளவில் முடிவடைய இரவுத்திருவிழா பின்னிரவில் நடைபெறும். இரவுத் திருவிழா முடிந்ததும் கோயிலின் முன் கிழக்கு வீதியில் நாட்டுக்கூத்துக்கள் நாடகங்கள் நடத்தப்படுவது முண்டு.
மகோற்சவம் ஆரம்பமாவதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் வண்ணக்கர் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டுவார். கூட்டம் தேத்தா மரநிழலில் நடை பெறும். கூட்டம் வண்ணக்கர் தலைமையில் நடக்கும். கணக்கப்பிள்ளை, கங்காணியார், பாகை அதிகாரிகள் உட்படப் பொதுமக்களும் கூட்டத்தில் சமுகமளிப்பர்.இக் கூட்டத்தில் திருவிழாக்களின் காலம் அதற்காக ஏற்படும் செலவுகள் உபயகாரர் கோயிலுக்குக் கொடுக்கவேண்டிய படிக்காசு இன்னோரன்ன விடயங்கள் ஆராயப்பெற்று நிச்சயிக்கப்படும்.
உபயகாரர் திருவிழாவன்று பிற்பகலில்
படிகொண்டுவருவார்கள். பூசைக்குரிய வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு, நெல் முதலியனவும் படிக்காசும் கொண்டுவந்து கணக்கப்பிள்ளை கங்காணியாரிடம் ஒப்படைப்பர். இதனையே படியெடுத்தல் என்பர். படியெடுத்து வருவது ஒரு கோலாகல நிகழ்ச்சியாக அமையும் படிக்காசு கொடுக்காத உபயகாரரின் பூசைப்படி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர்களுக்கு அன்று திருவிழாச் செய்ய அனுமதி கிடைக்காது. m
V
கொக்கட்டிச்சோலைச் சிவன்கோயிலுக்கும் இந்தக் கந்தசுவாமி கோயிலுக்குமிடையே சில தொடர்புகள் இருந்து வருகின்றன. கி.பி.13ல் மாகோன் மன்னன் கிழக்குக் கரைக்கு வந்து கொக்கட்டிச்சோலைச் சிவன் கோயில் சென்று அங்குள்ள நடைமுறைகளை அறிந்தும் அவதானித்தும் சாதி குடிவழமைகளை வகுத்து உறுதிப் படுத்தினான். முதலில் முக்குலத்தவர்களுக்கும் சாதி குடி வழமைகளை வகுத்துக் கொடுத்துவிட்டுக் குருகுலத் தவர்களை அழைத்து அவர்களது குலவரலாறு கேட்டான். அவர்கள்:
தாங்கள்
அத்தினாபுரத்தை அரசாண்ட தருமன் குருகுல மரபு வழி வந்தவர்களெனவும் அரசர்களின் வருவாய்க்கும்

பாதுகாப்பிற்கும் சேவையாற்றும் குடிகள் எனவும் கடற்படையில் பணிபுரிபவர்களெனவும் கடல்வழி வாணிபம் செய்வது தங்களது தலைாய தொழில் என்றும் தங்களுக் குப் பத்தொன்பது வரிசைகள் உண்டென்றும் கண்ணகி யிடம் வரம் பெற்றவர்கள் எனவும் விளம்பினர்.
இவைகளைச் செவிமடுத்த மன்னன் முக்குலத் தோருக்கும் குருகுலத்தவர்களுக்கும் இடையில் ஒற்றுமை உறவு சமாதானம் ஆகியவைகளை உறுதிப்படுத்து முகமாக இக்குலத்தவர்களுக்கு இடையில் கோயில் மூலமாக குலவிருது வழமைகளை ஏற்படுத்திக் கொடுத்தான் இரு குலத்தவரும் இதனை ஏற்று ஒழுகுவாராயினர். அவைகள்:
1. கொக்கட்டிச்சோலை சிவன்கோயில் மகோற் சவ காலத்தில் குருகுலத்தவர் அக்கோயில் முகப்பில் ஓர் மண்டபம் அமைக்கவேண்டுமெனவும் குருகுலத்தவர் களுக்கு கோயிலினால் உணவு ஆதியன கொடுக்க வேண்டு மெனவும்,
2. தேரோட்ட தினத்தன்று குருகுலத்தவரைச் சிவன்கோயில் அதிகரிகளும் குருக்களும் எதிர்கொண்டு வரவேற்கவேண்டுமெனவும் தேரோட்டநாளன்று குருக்கள் தேர்வடம் தூக்கிக் கொடுக்க குருகுலத்தவர் அவ்வடத்தை தினைப் பூட்டவேண்டு மெனவும்,
3.குருகுலத்தவரின் கோயில் மகோற்சவ காலத்தில் சிவன்கோயில் அதிகாரிகள், கோவிலார் சகிதம் இசை மேளவாத்தியங்களுடன் சென்று கோவில் திருத் தொண்டுகளான சந்தனமரைத்தல், பூக்கொய்தல், திருவிளக் கிடுதல், இசைமேளம் வாசித்தல் ஆகிய பணிகளைச் செய்ய வேண்டுமெனவும் பட்டயமும் வகுத்துக் கொடுத்தான் இவ்விபரம் "ஆசாரி” கல் வெட்டில் இடம் பெறுகின்றது.
“சொல்லரிய விளக்கேற்றல் பூவெடுத்தல் தூசகற்றல் சாணமிடல் அணிவிளக்கல் நல்ல மலர்மாலைகட்டல் மேளமீட்டல் நற்சந்தன மரைத்தல் நெல்லுக்குத்தல் துல்லியமாய் விழாச் சிவிகை யேந்திச் செல்லல் தாளிகட்டல் அமுதுவைத்தல் முதன்மை பார்ப்பான் வல்லபதம் நீர்வார்த்தல். புரியுமென்று மாகோன் வகுத்து.
இவை கோவிலார் பணிகளாகும்.
தங்கிவளர் தடமேவுலகுரு சித்திரகுரு அட்சநாதகுருவும் தேவகுருவும் திரு வாமதேவகுருவும் ஆசாரியார் என்று சாற்றி யொளி பெற்றிட்ட சித்திரம் திருப்பணி சகலதும் இயற்றிவரவும் ஏர்தங்கு வாழ்ஈழ வெள்ளி பொன் வங்கம் இலங்கு செம்பைந்து முடனே இட்டுண்டு வாழ மரவுதகுதி உலகுகள் ஏற்றிழ நகரமணுகி யெங்கெங்கு யாவும் கொடி யெழுதவும் சாற்றரிய இந்து மன்ற கண்டுபணிய இரதவடமெங்கள் குலமுன்பு தொடுமென்று அரசரிடு
35

Page 56
பட்டயமிது வதியவே பட்டய மொடுவள வெண் குடைகளும் பலிபீடம் பஞ்சகம் பரிதி குமுளம் பாலாடை மேற்தட்டு உத்தரம் தீவட்டி பறைமேளம் சங்கு வீணை பசதீமை பந்து சில தொங்குமலர் நான்கு வளிபந்தலும் பத்தெட்டுவரிசை பவுசும் பெற்றுலகிலு சாரானா வரிசையும் பகுதியே பகுத்தறிவீர்.
(ஆசாரி கல்வெட்டு).
இது குருகுலத்தவன் அரசன் முன்னிலையில் பேசுவது போல் அமைந்துள்ளது.
மாகோன் வகுத்த குலமரபு வழமைகள் இன்று வரை நடந்து வருகிறது.
கொக்கட்டிச்சோலைச் சிவன்கோயில் தேரோட்டத் தினத்தன்று குருகுலத்தவர் ஆசார சீலராக சிவசின்னங்கள் தாங்கிக்கொண்டு கொக்கட்டிச்சோலை செல்வர். இவர்கள் சிவசின்னமாக 'வேல்' கொண்டு செல்வர். மண்முனைத் துறையைக் கடந்து அப்பால் சென்றதும் சிவன்கோயில் அதிகாரிகள் கோயில் ஊழியர்சகிதம் குருகுலத்தவரை எதிர்கொண்டு அழைத்துச்செல்வதும் குருகுலத்தவர் வடம் பூட்டுவதும் இன்றும் நடந்து வருகிறது.
ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் மகோற்சவம் தொடங்கி மூன்றாம் நாள் சிவன்கோயிலிருந்து கோயில் அதிகாரிகளும் கோவிலார்களும் தோணியில் வாவியைக் கடந்து புளியடித் துறை வந்தடைந்து ராசமேளமிசைப்பர். அவ்வேளை கந்த சுவாமி கோயிலிருந்து கோயில் நிர்வாகிகளும் அவர்களைச் சேர்ந்த குருகுல மக்களும் மங்கள வாத்திங்களுடன் சென்று கோவிலாரையும் உடன் வந்திருப்பவர்களையும் அன்புபாராட்டி கோவிலுக்கு அழைத் துவருவார். குருக்கள் இவர்களுக்கு விபூதி சந்தனாதிகள் வழங்கி உபசரிப்பார். அன்றுமுதல் தீர்த்தோற்சவம் வரையும் கோவிலார் இக் கோயிலில் தங்கிநின்று அவர்களது திருத்தொண்டுகளைச் செய்வார்கள். பூசைக்குப் பூவெடுத் தல், சந்தணமரைத்தல், விளக்கேற்றல், ராசமேளம் இசைத்தல் ஆகியன இவர்களது சிவத்தொண்டுகளாகும்.
மாகோன் வகுத்துக்கொடுத்த இப் பட்டயமுறை இரு தடவைகள் உட்பூசல்களுக்குள்ளாகித் தவித்தது. தனி யுண்ணாப் பூபாலன் காலத்திலும் சோமநாதவன்னியன் காலத்திலும் இத்தடைகள் ஏற்பட்டன. தனியுண்ணாப் பூபாலன் காலத்தில் குருகுலத்தவரின் பட்டயமுறை அலட்சியப்படுத்தப்பெற்றது.இதனை தனியுண்ணாப் பூபாலன் விசாரித்தபோது கோயில் செப்பேடுகளும் ஏட்டுப்பிரதிகளும் வாசிக்கப்பெற்றன. செப்பேடுகளில்சொல்லப்பட்டவாறு இரு பகுதியினரும் நடந்து கொள்ளவேண்டுமென தனியுண்ணாப் பூபாலன் கட்டளையிட்டான்.அவ்வழியே இருபாலாரும் பின்னர் ஒழுகலாயினர். தனியுண்ணாப் பூபாலன் மாகோன் மன்ன னால் அரசனது இடத்துக்கு நியமிக்கப்பெற்றவனாவான்.
அக்காலத்தில் தேசத்து வன்னியன் என்னும் ஒரு உத்தியோகமிருந்தது. கோயில் பொதுக்கூட்டங்களுக்கு இவரே தலைமைதாங்குவார். தேர் வீதி வலம் வரும்போது
36

தேசத்து வன்னியனும் அவரது பரிவாரங்களும் முன்னே செல்லத் தேர் அசைந்த ஆடிக்கொண்டு பின்னே வரும்.
ஆங்கில அரசு தேசத்து வன்னிமை பதவியை நீக்கிவிட்டு அரசாங்கத்தினால் வன்னியன் நியமனம் செய்யப் பட்ட காலத்தில் ச.வ.சோமநாதனை கொக்கட்டிச்சோலைப் பகுதிக்கு வன்னியனாக நியமனம் செய்தது. சோமநாத வன்னியன் கடமையேற்றிருந்த காலத்தில் தேரோட்ட காலம் வந்தது. தேசத்து வன்னியனல்லாது வேறெவரும்தேரின் முன்பாகப் பவனிவரவியலாது எனக் கொக்கட்டிச்சோலைப் பகுதியிலிருந்து குரல் எழுப்பப்பெற்றது. இது ஒரு பிரச்சனை யாக உருவாகிற்று.
சோமநாதவன்னியர் ஆரையம்பதியைச் சேர்ந்த குருகுலத்தவராவார். பிரச்சனை முத்தவே வன்னிய னார் அவ்வருடம் தேரோட்டம் நடக்காதவாறு கட்டளை பிறப்பித் தார். தேரோட்டம் ஸ்தம்பிதநிலையடைந்தது. பிரச்சனை அப்போதிருந்த கிழக்குமாகாண அரசாங்க அதிபதிக்கு சென்றது. அரசாங்க அதிபர் பிறிமன்துரை அவர்கள் தகாராறுகளை நன்கு விசாரித்த பொழுது செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் வாசித்து விளங்கப்படுத்தப்பெற்றன. பிறிமன் துரையவர்கள் தேசத்து வன்னி மையும் அரசாங்க வன்னிமையும் ஒரே அந்தஸ்து அதிகாரமுடையவர்க ளென்றும் அரசாங்க வன்னியன் தேசத்து வன்னியனிடத்தை நிரப்புவதால் அரசாங்க வன்னியன் தேசத்துவன்னியனின் வழமைகள் கடமைகள் செய்வதில் தவறில்லை எனவும் தீர்ப்பளித்தான். அப்புறம் நிலைமைகள் வழமைக்குத் திரும்பின. சோமநாத வன்னியனும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.இவர் சூனியத்தின் காரணமாக நோய்வாய்பட்டி றந்தார் என்பது அக்கால மக்களது உள்ளக் கருத்தாக விருந்தது. இவரது இடத்திற்கு பொன்னுச்சாமி வன்னிய னானானர்.
அக்காலத்தில் மண்முனைத் துறையிலிருந்து மகிழடித்தீவுச் சந்திவரையும் ஒற்றையடிப்பாதையே இருந்தது. இந்தப்பாதையைத் துப்பரவு செய்து கிறவல் றோட்டுப் போட்டுக் கொடுத்தவர் சோமநாதவன்னியனாவார். அல்லாமல் தான் கந்தோர் நடத்திய வீட்டை ஆசுபத்திரி நடத்துவதற்கும் கையளித்துக் கொடுத்ததும் இவரேயாவார். கிராமக்கோடு கட்டுவதற்கும் நிலம் வழங்கியதும் இவராவார்.
மேற்படி கதை சொன்னது சோமநாதவன்னியன் காலத்தில் வாழ்ந்த அவரது குடும்ப அங்கத்தவர்களிலொரு வராவார்.
VIII
முன்னர் காலத்தில் சுவாமி வீதிவலம் வருவதற் காக கேடயங்கள் இருந்தன. இக்கேடயங்களுக்குச் சோடனைகளுமிருந்தன. ஆரைப்பற்றைத் தெருவார், நடுத் தெருவார், முகத்துவாரத்தெருவார், தங்களுக்கென தனிமையில் சோடனைகள் வைத்திருந்தனர். இக்கேடயங் களில் சுவாமிகள் ஆரோகணித்து வீதிவலம் வருவார்.
சுவாமி வடக்கு வீதிக்கு வந்ததும் வாணவேடிக் கைகள் இடம்பெறும். எலிவாணம், பொம்செல்வாணம், பூவாணம் முதலியன கொழுத்தப்படும். இவைகள் கண்

Page 57
கொள்ளாக்காட்சிகளைத் தருவன. ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வாணவிளையாட்டுக்களைக் கண்டு களித்து வருவர். ஆரைப்பற்றைத் தெரு, நடுத்தெரு, முகத்துவாரத் தெருவாரின் திருவிழாக்களும் வாணவேடிக்கைகளும் போட்டி மனப்பான்மையிலே நடந்துமுடியும்.
திருவிழா பூசைகள் யாவும் முடிந்ததும் முதலில் உபயகாரருக்கும் பின்னர் கோயில் வண்ணக்கர், கணக்குப்ப பிள்ளை, கங்காணியார், பாகை அதிகாரிகளுக்கும் காளாஞ்சி வழங்கப்படுவது ஒருவழக்கமாக விருந்து வந்தது. இதனைக் காளாஞ்சி கூறுதல் என்பர்.
மகோற்சவ காலங்களில் மக்கள் காவடி யெடுத் தல் தங்கம், வெள்ளி, பொன்னாலான பொருட்கள் நேர்த்திக் கடனாக கொடுத்தல், ஆடு மாடுகள் காணிக்கை செய்தல் ஆகியன நிகழும்.
தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரை வருடப்பிறப்பு, வைகாசிப் பொங்கல், ஆனி உத்தரம், திருவெம்பாவை ஆகிய உற்சவங்களும் சகல விரத பூசைகளும் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர பூசையும் சிறப்பாக நடக்கும்.
DX
ச.வ.தெய்வநாயகம் வண்ணக்கரும் ப.கண்ணப் பன் விதானையாரின் சந்ததியாரும் இன்னும் சிலரும் இக் கோயிலுக்கு வளவுகள் நன்கொடை செய்துள்ளனர்.
முகத்துவாரத் தெருவைச்சேர்ந்த திருவிளங்கு குடி முத்து என்னும் அம்மையார் மன்முனைப் பற்று கிளாக் கொடிச்சேனையில் ஆறு ஏக்கர் நெற்காணி நன்கொடை செய்துள்ளார். போரதீவு கெளடா தீவிலும் மூன்று ஏக்கர் காணி இக்கோயிலுக்குண்டு. இக்காணிகளின் வருமானத்துடன் இக்கோயிலின் இணைப்பு ஆலயங்களாக விளங்கும் கண்ணகை, காளியம்மன் கோயில்களிலிருந்தும் இக்கோயிலுக்குரிய சந்தைக் குத்தகை மூலமும் தனிநபர் களிடமிருந்தும் கிடைக்கும் வருமானமே இக்கோயிலின் வருமானங்களாகும். இவ்வருமானங்களைக் கொண்டே இக்கோயில் பராபரிக்கப்பட்டு வருகிறது.
மயில்வாகனம் நொத்தாசியார் ஒரு மயில் வாகனமும் சீனித்தம்பி நொத்தாரியர் ஒரு குதிரை வாகனமும் இக்கோயிலுக்கு காணிக்கை செய்துள்ளனர். குதிரை வாகனம் சேதமடைந்து விட்டது. மயில்வாகனம் இன்றும் இருந்து வருகிறது. முகத்துவாரத் தெருவைச் சேர்ந்த தபால் தந்தி பட்டுவாடா உத்தியோகத்தர் சீனித்தம்பி ஐம்பொன்னாலான 14’ உயரமுள்ள வள்ளி தெய்வானை 17” உயரமுள்ள முருக விக்கிரகங்களைக் கோயிலுக்கு காணிக்கை செய்துள்ளார்.திருவினங்கு குடியினர் மூஷிக வாகனம் உபகரித்துள்ளார்
இக்கோயிலுக்குத் தனிமையான ஊஞ்சல்பாட்டும் சிலகாவடிச் சிந்துப்பாட்டுக்களும் உள்ளன.

X
இக்கோயிலைக் கட்டிக் கும்பாவிஷேகம் செய்யப் பெற்ற 1864ம் வருடம் கோயிலைப் பராபரிப்பதற் காக ஒரு நிர்வாக அமைப்பை அப்போதிருந்தவர்கள் ஏற்படுத்தினார்கள். மட்டக்களப்புப் பகுதிக் கோயில்களில் அந்நாளில் வண்ணக்குமுறை நிர்வாகமே இருந்து வந்துள் ளது. எனவே இக்கோவிலுக்கும் வண்ணக்கு முறை நிர்வாகம் ஒன்றை ஆன்றோர் ஏற்படுத்தினர். கோயிலைக் கட்டித் தக்கநிலைக்குக் கொண்டுவந்தவர்கள் திருவிளங்கு குடியினராவர். அவர்களுக்கு உறுதுணை புரிந்தவர்கள் மன்றிலாடி குடியினர். இவைகளை அடிப்படையாகக் கொண்டு மன்றிலாடி குடியிலிருந்து செம்பாக்குட்டிப் பத்தினி யர் என்பவரை வண்ணக் கராகவும் திருவிளங்கு குடியிலிருந்து சி.பரிகாரிகண்ணபரைக் கணக்குப்பிள்ளை யாகவும் ஆரைப் பற்றைத்தெரு குஞ்சித்தம்பி என்பவரைக் கங்காணியாகவும் தெரிவு செய்தனர். ஆரப்பற்றைத் தெரு, நடுத்தெரு, முகத்துவாரத்தெருக்களிலிருந்து தலா இரண்டு அதிகாரி களையும் தெரிவு செய்தனர்.
பரிகாரி கண்ணப்பரின் ஏட்டில் இருந்ததான குறிப்பொன்றைச் சி.குலசேகரம் என்பவர் 14.10.1980 ல் வெளியான இக்கோயில் கணக்கறிக்கையில் காட்டியுள்ளார். அதனை ஈங்கு குறிப்பிடுதல் சாலும் எனக்கருதுகின்றேன்.
"திருவிளங்கு குடியாரும் மன்றுளாடியார் குடி யாருமே இக்கோயிலைத தக்கநிலைக்குத் கொண்டுவந்த தன் காரணமாக இந்த இரண்டு குடியாருக்குமே இக்கோயி லின் பராபரிப்புத்தத்துவம் உருத்துடையதாகும். (முறையே கணக்கப்பிள்ளை வண்ணக்கு என்னும் உத்தியோகங்கள்)
இக்கோயில் உண்டுபட்ட காலம் தொடக்கம் எனது காலபரியந்தம் இம்முறையாகவே இக்கோயிலின் பராபரிப்பு தத்துவம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இனிமேலும் தலைமுறைதலைமுறையாக இவ்விதமே நடை பெற்றுக்கொண்டுவர ஆதிமத்தியாந்தரகிதராகிய எம்பெரு மான் கிருபை பாலிப்பாராக.
ஒப்பம்: சி.ப.கண்ணப்பன்
பொ.த.ஆரைப்பற்றை
10.11, 1887
மேற்படி சி.பரிகாரி கண்ணப்பா விதானை யாராகவும் கடமையாற்றியவர். இதனால் இவரை விதானை கண்ணப்பர் எனவும் அழைப்பதுண்டு.
வண்ணக்கர் செம்பக்குட்டி பத்தினியர் ஒரு செல்வந்தர். இவர் தோம்புதோராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் காலமானதன் பின்பு சம்புநாத வன்னியனாரும் அவருக்குப்பின் தோம்புதோர் கணபதிப்பிள்ளையும் வண் ணக்கர்களாக விருந்தனர். அவருக்குப் பின்னர் வண்ணக்கா தெரிவில் சர்ச்சை ஏற்பட்டது. மன்றிலாடி குடியினர்

Page 58
பக.வேலுப்பிள்ளையை வண்ணக்கராக பிரேரிக்க அவருக் கெதிராக கந்தப்பர் என ஒருவர் அவருடன் போட்டியிட்டார். இந்த நிலையில் குழப்பநிலை உருவாக மன்றிலாடி குடியினர் ப.க.வேலுப்பிள்ளையை முன்னிறுததி வண்ணக்கர் பதவி தங்களுக்குரியதே என வழக்குத்தாக்கல்செய்தனர். ஆரம்பத்திலே இக்குடியார் மிகவும் ஆர்வமாக விருந்தா ரெனிலும் காலப்போக்கில் அவர்கள் தளர்ந்தனர்.
ப.க.வேலுப்பிள்ளை தனது சொந்தப் பணத் தையே செலவு செய்து வழக்காடினார். வழக்கு தனது சில நிலபுலன்களையும் விற்றுமுள்ளார். 1912ல் இவர் சார்பாக வழக்குத் தீர்ப்பாயிற்று. தான்கோயில் பாரமெடுத்து காளாஞ்சி வாங்கியகையோடு கோயில் குருக்கள் குழந்தை வேலிடம் திறப்புகளைக் கொடுத்துவிட்டு தனக்கேற்பட்ட விரக்தி காரணமாக வண்ணக்கர் பதவி யினின்றும் விலகிக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய த.சின்னத்தம்பி முதலானோர் ச.வ.தெய்வ நாயகத்தை வண்ணக்கராகத் தெரிவு செய்தனர். 1912 முதல் 1940 வரையும் இவர் வண்ணக்கராக விளங்கினார்.
சி.ப.கண்ணப்பன் கணக்கப்பிள்ளைக்குப்பின் க.சின்னத்தம்பி உபாத்தியார் கணக்கப்பிள்ளையாக கடமை புரிந்தார். இவர் 1914ல் காலமாக த.சின்னத்தம்பி (தானாச் சீனா) கணக்கப்பிள்ளையானார். இவர் 1943 வரையும் இப்பதவியில் இருந்தார்.
குஞ்சித்தம்பி, மாரிமுத்து, காசியர் என்பவர்கள் கங்காணியாக பணிபுரிந்தனர். இவர்களது கால எல்லை களை கண்டறிய முடியவில்லை.
வருடாந்தப் பொதுக்கூட்டம் கார்த்திகை விநாயக சஷ்டிவிரத தீர்த்தோற்சவத்தன்று காலைஆலய முன்வீதியில் தேத்தாமர நிழலில் நடைபெறும் வண்ணக்கர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் கணக்கப்பிள்ளை, கங்காணியார், பாகைஅதிகாரிகள், ஊரவர்களும் கூட்டத்தில்சமுகமளிப்பர். கணக்கப்பிள்ளை அவ்வருட வரவு செலவு மிகுதி விபரங்களை சபைக்கு அறிவிப்பார். அத்துடன் கோயிலுக்கு வேண்டிய தேவைகளம் ஆராயப்படும். அதேநேரத்தில் கோயில் காணிபூமி வளவுகள் ஏலத்தில் குத்தகைக்கு கொடுக்கப்படும். காணிக்கையாகக் கிடைத்த பொருட்கள் ஆடு, மாடுகளும் ஏலத்தில் விற்கப்படும்.
ச.வ.தெய்நாயகம் வண்ணக்கர் 1940ல் இறக்க அவரது இடத்திற்கு ஒருவரைத் தெரிவு செய்ய அப்போது வாரிசு இருக்கவில்லை. எனவே த.சின்னத்தம்பியவர்கள் தனது கணக்கப்பிள்ளை பதவியுடன் வண்ணக்கராகவும் செயல்பட்டார். இவரது காலத்தில் யாகசாலை, வசந்த மண்டபம், குருக்களுக்குத் தனிமையான வீடு ஆகியன கட்டிக்கொடுக்கப்பட்டன.
1942ல் வண்ணக்கர் ஒருவர் தனிமையாக தெரிவு செய்யப்படவேண்டுமெனக் குரல்கள் எழுப்பப்பெற்றன. இக்கேள்வி உக்கிரமடைந்த போது ஊரில் குழப்பநிலை உருவாகிற்று. இதன் காரணமாகவும் தனது சுகவீனங்கள் காரணமாகவும் த.சின்னத்தம்பியவர்கள் தனது வண்ணக்கர், கணக்கப்பிள்ளை பதவிகளினின்று 1943 கார்த்திகை மாதம்
38

விலக்கிக்கொண்டார். இவர் 1946 இயற்கையெய்தினார்.
த.சின்னத்தம்பி வண்ணக்கர் கணக்கப்பிள்ளை பதவிகளினின்றும் விலகியதும் சி.உஏரம்பமூர்த்தியவர்கள் வண்ணக்கரானார். கணக்கப்பிள்ளையாக முகத்துவாரத் தெருவிலிருந்து வே.நல்லதம்பியவர்கள் தெரிவுசெய்யப் பெற்றார்.எனினும் கருத்துவேற்றுமை காரணமாக அவர் அப்பதவியினின்றும் ஒதுங்கிக்கொண்டார்.
சி.உ.ஏரம்பமூர்த்தியவர்கள் வண்ணக்கரான காலம் முதல் கோயிலில் மூன்று காலப்பூசை ஆரம்ப மாகியிற்று. அந்தித்திருவிழா நீக்கப்பெற்று அத்திருவிழாப் பகலில் செய்யும் முறை ஏற்பட்டது. நவக்கிரக கோயில் கட்டப்பெற்றது. இதுகாலவரையும் ஊரவர் நவக்கிரக அருச்சனை செய்வதற்கு கல்லடி உப்போடை பிள்ளையார் கோயிலுக்கும் கொக்கட்டிச் சோலைச் சிவன் கோயிலுக்கும் செல்வது வழக்கமாக விருந்தது. இவர் கோயிலைப் புனரமைக்கும் வேளையில் ஈடுபட்டார். வாலஸ்தாபனம் நடந்தது. கோயில் திருத்தப் பெற்றது. சட்கோணவிமானம் மாற்றமடைந்தது. இறைவன ருளால் 1956ல் மகா கும் பாவிஷேகமும் நடந்தேறிற் று. வேடனது கல்விக்கிரகத்துடன் மூன்று வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பெற்றன. இப்புனராவர்த்தன மகாகும்பாவிஷேகத்தை நைனாதீவு பிரதம சிவாச்சாரியார் பிரம்மபூரீ கைலாசநாதக் குருக்கள் செய்து வைத்தர்கள்.
இதனிடையில் த.சின்னத்தம்பியவர்கள் கட்டிக் கொடுத்த வந்தமண்டபம் திருத்தம் செய்யவேண்டியிருந்த பொழுது அவரின் மூத்தமகள் திருமதி நேசம்மா துரை ராசசிங்கமவர்கள் சுபரசுராமனிடம் ரூ 25,000 கொடுத்து வசந்த மண்டபத்தை திருத்தம் செய்து கொடுத்தார்.
Χ
திரு.சி.உஏரம்பமூர்த்தி அவர்கள் ஏகப்பிரதிநிதி யாக கோயிலைப் பராபரித்து வருகையில், அவரது நிர்வாகத்தில் அதிருப்பதியடைந்த சிலர் அவருக்கெதிராக அராங்க அதிபருக்கு முறைப்பாடு செய்தனர். அரசாங்க அதிபர், அரசாங்க மேலதிக அதிபரான திரு.பூசங்கார வேலையும், அரசாங்க உதவி அதிபர் திரு.க.தருமலிங்கத் தையும், திரு.க.செல்லத்தம்பி கிராம உத்தியோகத்தரையும் கொண்ட ஒரு குழுவை நியமித்து கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்தக்குழு வண்ணக்கர் முறை நிர்வகத்தை நீக்கிவிட்டு ஒரு நிர்வாக சபையை 18.9.1974ல் உருவாக்கியது. அச்சபை பின்வருமாறு அமைந்தது.
திரு.சி.உ.ஏரம்பமூர்த்தி - தலைவர்
திரு.கா.சோமசுந்தரம் - செயலாளர் திரு. ந.கோணாமலை - பொருளாளர் திரு.க.சண்முகம் - உபதலைவர்
இவர்களுடன் எட்டுப்பேர் கொண்ட ஒரு நிர்வாக சபையையும் தெரிவு செய்தது. கணக்குப் பரிசோதகர்களாக இருவர் தெரிவு செய்யப்பெற்றனர்.

Page 59
இச்சபை கோயில் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பொழுது, சபைப் பிரதிநிதிகள் முற்பணம் செலுத்தித் தினப் பூசை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதாக 1980ம் வருடக் கணக்கறிக்கையில் சுட்டிக்காட்டப்பெற்றுள்ளது.
கோயில் சிறப்பாக நடந்துகொண்டிருக்கையில் தலைவர் திரு.சி.உஏரம்பமூர்த்தியவர்கள் 18.01.1975ல் காலமானர். 27.01.1975ல் கூடிய நிர்வாக சபைக் கூட்டத்தில் திரு.சி.கோணாமலை என்பவர் தற்காலிகமாகத் தலைவ ராகத் தெரிவு செய்யப்பெற்றார். இக்காலத்தில் கோயில் ஜீர்ணோத்தாரணம் செய்யவேண்டியிருந்தால் 1975ல் கோயில் வாலஸ்தாபனம் செய்யப்பெற்றது. இவ்வேளையில் ஒரு தலைவரைத் தெரிவு செய்யவேண்டியுமிருந்தது.
21.05.1975ல் திரு.ஏ.சுந்தரமூர்த்தியவர்கள் நிர்வாக சபையில் உறுப்புரிமை பெற்றுத் தலைவரானார். அக்காலக் கோயில் திருத்தவேலைகள் கும்பாபிஷேகம் ஆகியன இவரைச் சார்ந்திருந்தது. எனவே கோயில் புனருத் தாரண வேலைகளைத் துரிதப்படுத்தினார். தென்மேற்கில் விநாயகருக்கு ஒரு சிறு கோயிலும் வடமேற்கில் சந்தான கோபாலருக்கு ஒரு கோயிலும் கட்டப்பெற்றன.
1979க்கு முன்னர் வெளிப்பிரகாரம் வடக்கில் கிருஷ்ணருக்கு கோயில் ஒன்றிருந்தது. இதில் சந்தான கோபாலர் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருந்தார். இச் சிலா விக்கிரகத்தை முகத்துவாரத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து வைத்தியர் இளையதம்பியவர்கள். கணபதிப்பிள்ளை வண்ணக்கர் காலத்தில் நன்கொடை செய்திருந்தார். பிற்கா லத்தில் பூசா கருமங்களின் வசதி கருதி இக்கோயில் உட்பிரகாரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஜிர்ணோத்தாரண வேலைகள் சிறப்பாக பூரண மானதும் 15.07.1979ல் சம்ரோட்சன மகா கும்பாவிஷேகம் மிகவும் சிறப்பாக நடந்தேறிற்று. யாழ்ப்பாணம் நயினைதீவு பிரதம குரு பிரம்மபூரீ பரமேஸ்வரக்குருக்கள் இக் கும்பாபிஷேகத்தைச் செய்துவைத்தார். கர்ப்பக்கிரகத்தில் ஐம்பொன் உலோகத்திலான தனிவேல் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பெற்றது. இது வேடனின் வெள்ளைக் கல் அருகா மையில் வைக்கப்பெற்றது.
X
திரு.சுந்தரமூர்த்தியவர்களின் பிறந்த இடம் ஆரையம்பதியாகவிருந்த பொழுதும், கொழும்பையே தனது வசிப்பிடமாகக கொண்டிருந்தார். காலத்துக்குக் காலம் இவ்வூர்வந்து ஆலய அலுவல்களைக் கவனித்துச் செல்வார் 1990முதல் நம் நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஆரம்ட மாயிற்று. இனக்கலவரம் மேலோங்கிற்று. பிரயாணங்கள் செய்ய இயலாதநிலை. இதனால் சுந்தரமூர்த்தியவர்களின் வருகையும் நின்றுவிட்டது. உபதலைவர் திருபூபாலபிள்ளை தலைவரின் கடமைகளைச் செய்து வரலானார். துரதிஷ்ட வசமாக 1995ல் பூபாலபிள்ளையவர்கள் இவ்வுலகை நீத்தார் இவரின் இடத்திற்கு ஒருவரை அப்போதிருந்த நீர்வாக சபை தெரிவு செய்யத் தவறிற்று. நிர்வாகசபை தலைமைத் துவம் இல்லாது தவித்தது. இதன் காரணமாக கோயில் நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்தது. இக்காலத்தில் (1994

கோயில் திருத்தவேலைகள் காரணமாக வாலஸ்தாபனம் செய்யப்பெற்றிருந்தது. நிர்வாகம் இயங்காததன் காரணமாக திருத்தவேலைகளும் நின்று விட்டன.
கோயில் பராபரிப்புச் சீர்குலையவே பொதுச்சபை ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட்டி ஒரு தொண்டர் குழுவைத் தெரிவு செய்து கோயில் நிர்வாகத்தைத் தற்காலிகமாக அக்குழுவினிடம் கொடுத்தது.
இதுகாலவரை நிர்வாக சபைக்கு உறுப்பினர்கள்
பாகை ரீதியில் தெரிவு செய்யப்பெற்றனர். மகோற்சவத்
திருவிழாச் செய்துவரும் உபயகாரரைப் பாகை ரீதியாகக் கணித்து நிர்வாகசபைக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்து வந்தனர். இந்த நடைமுறை அவ்வளவு வெற்றியளிக்க வில்லை எனக்கருதிய பொதுச்சபை 'குடி ரீதியாக நிர்வாக சபைக்கு உறுப்பினர் தெரியும் முறையை 1996ல் ஏற்படுத்தினர். அதற்கான புதிய யாப்பு ஒன்றும் தயாரித்துப் பொதுச்சபையின் அங்கீகாரத்தையும 1996ல் பெற்றுக் கொண்டனர். இந்தப் புதிய யாப்பு முறைத் தெரிவின் படியே தற்பொழுது நிர்வாகம் நடந்துகொண்டிருக்கிறது. விபரம் வருமாறு:.
குடிவழி நிர்வாக உத்தியோகத்தர்:
தலைவர் - திரு.சு.பரசுராமன் (திருவிளங்குகுடி) செயலாளர் - திரு.ம.மகாலிங்கசிவம்.
(வீரமாணிக்கன் குடி) பொருளாளர் - திரு.க.சிவநேசராசா
(ஆறுகாட்டிகுடி)
இப்புதிய நிர்வாசபையில் 36 உறுப்பினர்கள் உள்ளனர்.ஒரு குடிக்கு இருவர் வீதம் இவர்கள் தெரிவு செய்யப்பெற்றுள்ளனர்.
ΧΙΙΙ
புதிய நிர்வாக சபை மிகவும் உற்சாகமாகவும் உன்னதமாகவும் செயல்பட ஆரம்பித்தது. கோயில் திருத்த வேலைகளைத் துரிதப்படுத்தியது. அர்த்தமண்டபம், மகா மண்டபங்கள் கொங்றிற் சுவர்களால் கட்டப்பெற்றன. மரத்துண்கள் அகற்றப்பட்டன. கொங்றிற்துண்கள் நிறுத்தப் பெற்றன. மகா மண்டப கூரை கொங்றிற்றாலாக்கப்பட்டது. சுவர்களும் தூண்களும் மிகவும் அழகாகவும் ஸ்திரமாகவும் நிறுவப்பெற்றன. உள்ளங் கவரும் வண்ணம் வண்ணங்கள்
பூசப்பெற்று அழகூட்டப்பெற்றன.
கர்ப்பக்கிருகம் புதுப்பிக்கப்பெற்றது. விமானம் மெருகூட்டப்பெற்று ஆக்மவிதிப்படி பொம்மைகள் (உருவங்கள்) பொருத்தப்பெற்றன.கிழக்கே கந்தக் கடவுளின் அஸ்திரதேவர் அருள் மழை பொழிந்து கொண்டிருக்க தெற்கே வியாக்கியான தட்சணாமூர்த்தி ஆலமர நிழலில் வீராசனத்திலமர்ந்து அகஸ்தியர், புலஸ்தியர் , விசுவா மித்திரர், அங்கிரசர் ஆகிய மகா ரிஷிகளுக்கு ஞானோப தேசம் செய்து கொண்டிருக்கிறார். மேற்கே கிருஷ்ண பகவான் அனந்த சயனத்தில் ஆழ்ந்திருந்து கொண்டு ஜீவராசிகளின் உற்பத்திகளையும் அவைகளைக் காப்ப தையும் சிந்தனை செய்து கொண்டு அழகாகக் காட்சி
39

Page 60
தருகின்றார். வடக்கே படைத்தற் கடவுள் பிரம்மா தன்தேவி மார் சாவித்திரி சரஸ்வதியுடன் கொலு வீற்றிருந்து பக்திப் பரவசத்தை யூட்டுகிறார்.
வசந்த மண்டப. வடக்குத் தூபியில் முருகப் பெருமானின் அவதாரம் காட்சிதர ஏனைய கோயில்களின் தூபிகளிலும் அழகொழுகு காட்சிகள் உள்ளங்களை உருக் கும் வண்ணம் அமைந்துள்ளன.
தம்பமண்டபத்தே தம்பப்பிள்ளையார் நெடிது யர்ந்த வெள்ளித் தகட்டால் போர்வை செய்யப்பெற்ற ஸ்தம்பம் மூலமூர்த்தியை இடைவிடாது நோக்கிக் கொண்டிருக்கும் மயில் ஆகியவற்றைக் காணலாம். ஸ்தம பத்திற்குப் போர்வை செய்து கொடுத்தவர் முகத்துவாரத் தெருவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளைப் போடியாரின் பாரியாராவார்.
விநாயகர், சந்தான கோபாலர், வைரவர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக விளங்குகின்றனர். உட் பிரகாரம் சுற்று மதில்களால் அரண்செய்யப்பெற்றுள்ளது. உட்பிரகார தெற்கில் மடப்பள்ளி, மடப்பள்ளிக்குரிய கிணறு, களஞ்சியவிடுகள் உள்ளன. தென்மேற்கில் வாகனங்கள் வைக்க இடமும் கோயில் பொருட்களுக்கான களஞ்சிய வீடும் உண்டு. தென்கிழக்கில் மேலுமொரு கண்டாமணித் தூண் உண்டு. பூசை காலங்களில் இது ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும். இவ்வொலி இக்கிராமம் அனைத்திலும் கேட்கக்கூடியதாக ஒலிக்கும். இத்தூணும் மணியும் ஆரைப்பற்றைத் தெருவைச்சேர்ந்த வேலுப்பிள்ளை என்சினியரின் மகள் சிவமணியின் உபயமாகும். வயிரவர் கோயிலுக்கு அருகாமையிலும் ஒரு கண்டாமணியும் துணுமுண்டு. இதிலுள்ள மணி தேவநாயகம் வன்னக்கரின் தம்பி தம்பிராசாவால் அன்பளிப்புச்செய்யப்பெற்றதாகும். தலவிருட்சம் அரசமரம் ஆகும்.
இக்கோயிலின் முகப்பு மண்டபம் கருங்கல் தூண் நிலைகளைக் கொண்டதாகும். படிக்கட்டுக்களும் கருங்கல்லால் ஆனவைகளாகும்.
இவ்வாலயம் மிகவும் பழமை வாய்ந்ததாக விருந்த பொழுதும் இதற்கு கோபுரம் இல்லாத குறை இருந்து வந்தது. சி.உஏரம்பமூர்த்தி வண்ணக்கர் தனது காலத்தில் இந்த முகப்பு கோபுரத்தைக் கட்ட முனைந்தும் முடியாத நிலை இருந்தது. இதனை உணர்ந்த தானாச் சீனாவின் முத்தமகள் திருமதி நேசம்மா துரைராசசிங்கம் தனது செலவில் கோபுரவாசல் மண்டபத்தைக் கட்டிக் கொடுத்தார். அதன் கூரையில் பாலமுருகன் சிலை ஒன்று வைக்கப்பெற்றிருந்தது.
தற்பொழுது ஆரையம்பதி நடுத்தெருவைப் பிறப் பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கருணை உள்ளம் படைத்த கணபதிப்பிள்ளையின் மகன் பரமானந்தம் தனது தந்தையின் ஞாபகார்த்தமாக இக்கோபுரத்தைக் கட்டிக்கொடுக்க முன்வந்தார். முப்பது அடி உயரத்தில் மூன்று தளங்களுடன் இக்கோபுரம் முன்னர் கட்டப்பட்டிருந்த முகப்பு மண்டப கூரைமேல் எழுப்பப்பட்டுள்ளது. தொலை
40

வில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது கந்த தரிசனம் கிடைத்தது போலாகிறது. கோபுரம் உயர உயர அடியார் களின் எண்ணம் சிந்தனை ஆகியவைகளும் உயர்ந்து கொண்டேபோகும் என்பது ஐதிகம்.
தற்பொழுது தேர் ஒன்றில்லாத குறையே உண்டு. இதனையும் அபிமானிகள் செய்து முடிப்பார்களென நினைக்கின்றேன். முருகன் அருள்புரிவானாகவும்.
XV
இக்கோயிலின் வடக்கு வீதியில் கிருஷ்ணன் கோயில் ஒன்றிருந்தது. வைகாசிப் பூர்வபக்கத்தில் இக் கிருஷ்ணன் கோயிலில் மூன்று நாள் விழா நடப்பதுண்டு. உருக்குமணி அம்மன் கும்பம் ஸ்தாபிக்கப்பெற்று பூசைகள் நடைபெறும் இரண்டாம் நாள் உருக்மணி திருமால் திருக் கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண தினத்திற்கு அடுத்த நாள் ‘கஞ்சன் கதை அமுது நடைபெறும். அன்னதானத்தில் பலர் கலந்து கொள்வர். சிலர் இந்நாள் களில் விரதமுமிருப்பதுண்டு. தற்பொழுது இவ்விழா உட் பிரகாரத்திலமைந்துள்ள சந்தான கோபாலர் சன்னிதானத்தில் நடந்துவருகிறது. இக்காலங்களில் கஞ்சன் அம்மானை படிக்கப்படுகிறது.
XV
பலவருடங்களுக்கு முன்பு இக்கிராமத்தை அடுத்து ஒரு கள்வன் இருந்தான். அவன் களவு செய்வ தில் வல்லவன். பல கோயில்களில் திருடியுள்ளான். வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் கூட இவன் கைவரிசையிலிருந்து தப்பவில்லை. ஓரிரவு சாம வேளையில் கந்தசுவாமி கோயிலினுள் கள்வன் புகுந்துவிட்டான். என்னே அதிசயம் கொடித்தம்பத்தின் அப்பால் இவனால் செல்ல முடியவில்லை. கண்கள் பார்வை இழந்தன. இதேவேளை கோயில் குருக்கள் கள்வன் கோயிலினுட் புகுந்துவிட்டதாக கனவுகண்டு நித்திரையினின்று எழுந்து வந்து பார்த்த பொழுது ஒருவன் தட்டுத் தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டார். அச்சத்தால் சத்தம் போட்டார். கள்வன் பின்வாங்கி ஓடிவிட்டான். அடுத்தநாள் காலையில் பார்த்தபோது கோயிலின் முன்நின்ற தேற்றாமர நிழலில் "நான் பல் கோயில்களில் களவு செய்துள்ளேன். ஆனால் இக்கோயி லில் மாத்திரம் களவெடுக்கமுடியவில்லை' என எழுதி வைத்திருந்தான். இவனைக் குரங்கோடாவி என அழைப்பர்.
முன்பொருபோது கோயிலின் உற்சவ பூசை நடந்து கொண்டிருக்கையில் கோயிலின் முன்பாக முஸ்லிம் ஒருவர் வண்டிலில் சென்று கொண்டிருந்தார். இவன் பூசையைக் கவனிக்கவில்லை. கோயில் முகப்பைத் தாண்டியதும் நுகம்முறிந்து வண்டியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவன் கால் முறிந்து விட்டது. வேதனை அடையும் போதுதான் தனது பிழையை உணர்ந்தான். தான் சுகமடைந்ததும் கோயிலுக்கு வந்து காணிக்கை செய்தான். பின் அவன் தன்காலம் வரையும் இக்கோயி லுக்கும் மரியாதை செய்துவந்தான். இக்கோயில் உற்சவ

Page 61
காலத்தில் வாய்மையாக மச்சம் மாமிசம் தவிர்த்து வெள்ளை வஸ்திரம் தரித்துக்கொள்வான். கந்தக்கடவுளின் அற்புதங்கள்தான் என்னே. இன்னோரன்ன அற்புதங்கள் பல இக்கோயிலில் இடம்பெற்றுள்ளது.
இக்கிராமமக்கள் இக்கோயிலிலே குடி கொண் டுள்ள கந்தக் கடவுள்மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அப்பெருமானும் இம்மக்களுக்கு நல்லருள் புரிந்து வருகிறார். அப்பெருமானை என்றும் நம் உள்ளத்தில் பிரதிஷ்டை செய்வோமாக.
பிற்குறிப்பு:
கொக்கட்டிச்சோலை சிவன் கோயிலுக்கும் ஆரையம்பதி கந்தசுவாமி கோயிலுக்குமுள்ள தொடர்பு பற்றி எமது கருத்து:
பல்வேறு குலங்களும் சாதிகளும் இருக்கும் பொழுது குருகுலத்தவருக்கு தேர் வடம் பூட்டும் முக்கிய இடத்தையும் இருகுலத்தாருக்குமிடையில் அன்னியோன்ய வளமைகளையும் எதற்காகக் கொடுத்தான் என ஆராயுங் கால் நமது முடிபு பின்வருமாறு:
கி.பி.10ல் தர்மசிங்கன் சோழநாட்டிலிருந்து மூன்று தேர்களைத் தருவித்து கொக்கட்டிச்சோலைச் சிவன் கோயிலுக்கு கொடுத்தான் என்று மட்டும் சொல்லப்பட்டிருக் கிறது. இந்தத்தேர்களை எவ்வாறு கொண்டுவந்தார்கள் எனச் சொல்லப்படவில்லை. இந்த விடயம் மறைக்கப் பட்டுவிட்டதென்பதே சிந்தனைக்குரியது.
குருகுலத்தவர் கடல்வாணிபம் செய்வதில் சிறந்தவர்கள். அவர்களிடம் வர்த்தகப் படகுகள் இருந்தன. இந்தப்படகுகளிலே தேரின் பாகங்களைக் குருகுல வாணிபர்கள் கொண்டுவந்து கொடுத்திருக்க வேண்டும். மற்றும் அவர்களே தேர்களையும் பூட்டிக் கொடுத்தும் பாதுகாத்துமிருக்கிறார்கள். ஆன காரணத்தினாலேதான் குருகுலத்தவர்களுக்கு இந்த முக்கிய இடம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
கட்டுரை எழுதுவதற்கு உதவியவை:
காத்தான் காலம் சோனகர் வருகை: அக்கரைப்பற்று வராறு ARMசலீம் பக்:37-38
கந்தசுவாமி கோயில் கணக்கறிக்கை 2.5.91 மட்டக்களப்பு மான்மியம் மட்டக்களப்பு மான்மியம் - ஒரு ஆராய்ச்சி மட்டக்களப்பு சைவக்கோயில்கள் பாகம்1&2 யாழ்ப்பாணச்சரிதம் S.S.ராசநாயகம் கும்பாபிஷேக மலர்கள் சில. முன்னோரிடம் கேட்டறிந்தவைகள் குறிப்பாக:
பறிஸ்ரர் வேலுப்பிள்ளையின் மூத்தமகன் மகேஸ்வரன் . காலஞ்சென்ற பண்டிதர் சந்திரசேகரம் பிள்ளை
த.பொன்னம்பலம், திருகோணமலை. சி.மாசிலாமணி ஆசிரியர்
ப.க.வே.தங்கப்பிள்ளை எமது காலத்தில் நாம் கண்டறிந்தவை

இத்துடன் மூன்று போட்டோப்படங்களும் உண்டு.
1. ச.வ.தெய்வநாயகம் (வண்ணக்கர்) 2. த.சின்னத்தம்பி (தானாச்சீனா) 3. சி.உஏரம்பமூர்த்தி (வண்ணக்கர்)
வரலாற்றுத்தொகுப்பு 1802 முதலாவது கும்பாவிஷேகம் - மடாலயம் 1864- இரண்டாவது கும்பாவிஷேகம் ஆலயம் 1956- புனராவர்த்தன மகா கும்பாவிஷேகம் 1979-07-15. புனராவர்த்தன மகா கும்பாவிஷேகம்.
1850 முதல் ஆகமவிதிப்படி கோயில் கட்ட ஆரம்பித்தது. முன்னின்றுழைத்தவர்கள் திருவிளங்கு குடியைச் சேர்ந்த பூரீமான் கதிரவேற்பிள்ளையும், சி.பரிகாரி கண்ணப்பருமாகும். இவர்களுக்கு உறுதுணை புரிந்தவர்கள் மன்றிலாடிகுடியினர். பொருள் வழங்கியவர் செம்பக்குட்டி பத்தினியர் மகள் பெரியபிள்ளை.
வண்ணக்கர்கள்
1864 - 1911 செம்பக்குட்டி பத்தினியர்
கா.சம்புநாதவன்னியர் கணபதிப்பிள்ளை தோம்புதோர் 1912 ப.க.வேலுப்பிள்ளை 1912 - 1940 ச.வ.தெய்வநாயகம் 1940 - 1943 தம்பிமுத்து சின்னத்தம்பி (தானாச்சீனா) 1943 - 1974,417 சி.உஏரம்பமூர்த்தி
கணக்கப்பிள்ளைகள்
1864 - 1887 சி.ப.கண்ணப்பர் 1887 - 1914 க.சின்னத்தம்பி உபாத்தியார் 1914 - 1943 த.சின்னத்தம்பி 1944 - 1974 சி.உஏரம்பமூர்த்தி
கங்கானிமார்
குஞ்சித்தம்பி மாரிமுத்து நல்லார் காசியர்
fuT6)6OIF6)
18.9.1974- 15.1.1975 தலைவர் சி.உஏரம்பமூர்த்தி 27.1.1975 -20.5.1975 தற்காலிக தலைவர்
சி.கோணாமலை 21.5.1975 - 1996 தலைவர் ஏ.சுந்தரமூர்த்தி 1996 தலைவர். சு.பரசுராமன்
செயலாளர். ம.மகாலிங்கசிவம் பொருளாளர்: கி.சிவநேசராசா
சிலகாலம் அருளம்பலம் செயலாளராகவும் கனகலிங்கம் செயலாளராகவும் தங்கவடிவேல் பொருளாள ராகவும் பணிபுரிந்துள்ளனர்.
41

Page 62
அரும்பதவிளக்கம்
அட்சநாதக்குரு - சிவபூசையின் போது
அர்ச்சனை செய்பவர்.
ஆலயங்களில் கடமையாற்றும்குருமார் -
தீட்சாகுரு.வேதகுரு, சித்திரகுரு, உலகுகுரு, பந்ததி நாமகுரு எனப்பலதிறத்தார்.
குருகுலநாகர் - குரு என்னும் பழங்குடியினர் வடஇந்தி
யாவில் கங்கை, யமுனை, நதிகள் பாயும் பிரதேசங்களை அண்டி வாழ்ந் தவர்கள். இக்குரு குலத்தார் வாழ்ந்த இடம் குருச்சேத்திரம் எனப்பட்டது. அவர்களை நாகர் என்றும் கூறுவர். இராவணனுக்குப் பின் இலங்கையைக் கைப்பற்றி யாண்டவர்கள் இக்குருகுல நாகர் ஆவார்கள்
கோவிலார்: கோவில்களில் பணிபுரியும் சாதியினர்.
குருக்கள்மார்:( ஆரையம்பதி யூரீ கந்தசுவாமி கோயில்)
. தம்பலகாமக்குருக்கள் . காத்தான் நம்பி (பெரியநம்பியார்) . கண்ணிநம்பி (சின்னநம்பியார்0
சிவழறி குழந்தைவேல்குருக்கள், களுவாஞ்சிக்குடி
ിഖ്യ சின்னத்துரைக்குருக்கள், யாழ்ப்பாணம் சிவபூரி குருசாமிக்குருக்கள் சிவழறி சி.சோமசுந்தரக்குருக்கள் . சிவழறி பாலசுப்பிரமணியக்குருக்கள்
சிவறி ராதாக் கிருஷ்ணக் குருக்கள் 10. சிவழறி நித்தியாநந்தக்குருக்கள் 11. பிரம்மழரீ சந்திரசேகரக்குருக்கள் 12. பிரம்மறி நடேசக்குருக்கள் 13. சிவழறி சண்முகசுந்தரக்குருக்கள்
குருகுலநாகரே கிழக்கிலங்கையின் ஆதிக் குடிகள் இவர்கள் உகந்தையைத் தலைநகராகக் கெண்டு ஆட்சி புரிந்தனர். இதனை மட்டக்களப்பு மான்மியம்:
கலிபிறந்தெண்ணுறாண்டில் கருதிய இலங்கை தன்னில் வலியவரியக் கரோடு கலந்தனர் மாவொன்றாகி ஓவிவளருகந்தமென்னும் நகரத்திலுறைந்து வாழ்ந்து வலியிரா யரசுசெய்து மறைமுறை வகுத்தார் நாகர்.
குறிப்பு இக்கட்டுரையில் காத்தான் பூநொச்சிமுனையில் இருந்ததும் அக்காலத்தில் சோனகர்கள் (முஸ்லீம்கள்) வர்த்தகப்படகில் வந்திறங்கியதும் "அக்கரைப்பற்று சின்னப்பள்ளி வாசல் கல்வெட்' டில் காணப்படுகிறது. இவ்விபரம் ஜனாப் ,ஏ.ஆர்.எம்.சலிம் எழுதிய "அக்கரைப்பற்று வரலாறு' என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
D கட்டுரையாசிரியர்
42

Rssssess
க.இராஜரெத்தினம், ஆரையம்பதி
மனிதர்கள் பிறக்கிறார்கள்; இறக்கிறார்கள். இது நியதி பிள்ளை பிறந்தவுடன் சோதிடரை நாடி அப்பிள்ளை பிறந்த நேரம் காலங்களை சோதிடரிடம் கூறி அப்பிள் ளைக்கும் அப்பிள்ளையின் உற்றார் உறவினர்களுக்கும் ஏற்பட விருக்கும் நன்மை தீமைகளை அவரிடம் கேட்டறிந்து கொள்கின்றோம். அதேபோல் ஒருவர் இறந்தபொழுதும் அவர் இறந்த நாள் அந்த வீட்டாருக்கு என்ன விதமான பலன்கள் ஏற்படும் என அறிவிக்கும் காரணி பஞ்சகமாகும். சோதிடர்கள் இதனை தனிஷ்டா பஞ்சகம் எனக்கூறுவர். ஒருவர் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டரதி, ரேவதி ஆகிய நட்சத்திரங் களில் இறந்தால் அந்த வீட்டுக்காரருக்கு தோஷமுண்டு அவிட்டம் - ஆறுமாதம் தோஷம் சதயம் - மூன்றுமாதம் தோஷம் பூரட்டாதி - ஒன்றரைமாதம் தோஷம் உத்தரட்டாதி - ஒருமாதம் தோஷம் ரேவதி - அரைமாதம் தோஷம் இவை தவிர திரிபுஷ்கரயோகம் எனப்படும் தோஷமும் உண்டு. கார்த்திகை, உத்தரம், உத்தராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, நட்சத்திரங்களும், துவிகை, சப்தமி, துவாதசி, திதிகளும், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, வாரங் களும் ஒரு சேரப் பொருந்திவருங்கால் திரிபுவடிகர தோஷம் ஏற்படும். மேற்படி தோஷங்கள் நீங்குவதற்கு கோயில் குருக்க ளைக் கொண்டு சாந்தி செய்து கொள்ள வேண்டும். கிராமங்களிலே 'பஞ்சகம்’ என்னும் சொல் மருவி மரபு வழுவாக மாறி பஞ்சமி என்னும் சொல்லால் பொருள் கொள்ளப்படுகிறது. இது ஒரு தவறான அர்த்தமாகும். பஞ்சமி என்பது பூர்வபக்க, அபரபக்கத் திதிகளில் வரும் ஐந்தாம் திகதியாகும். இதில் எவர் மரண மானாலும் தோஷம் இல்லை. அறியாமையின் காரண மாகச் சிலர் பஞ்சகத்தை பஞ்சமி என்ற கருத்தில் பிரேதத்துடன் கமுகம்பிள்ளை, கோழிமுட்டை, கோழிக் குஞ்சு இவைகளில் ஒன்றைச் சேர்த்துத் தகனம் அல்லது புதைத்துவிடுகின்றனர். பஞ்சமா பாதகங்களில் ஒன்று “கொலை'. இதனை சைவசமயிகளாகிய நாம் முட்டை கோழிக்குஞ்சுகளைத் தகனம் செய்வதாலோ புதைப்ப தாலோ விமோசனம் பெறலாமா? இச்செய்கை சாந்தி
கருமமுமாகாது.

Page 63
/"rی
கா.ச.வ.தெய்வநாயகம் (வண்ணக்கர் 1912-1940)
 
 

வண்ணக்கர்கள்
தம்பிமுத்து சின்னத்தம்பி (தானாச்சினா) கணக்கப்பிள்ளை (1914 -1943) வண்ணக்கர் (1940 - 1943)

Page 64


Page 65
வண்ணக்கர்கள்
இளமைத்தோற்றம்) . . திரு.ஏரம்பமூர்த்தி சுந்தரமூர்த்தி ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் பரிபாலனசபைத் தலைவர் (21.5.1975 - 1995)
 

சி.உஏரம்பமூர்த்தி வண்ணக்கர் தலைவர் (1943 - 1974) தலைவர் ஆலயபரிபாலனசபை (1971 - 1975)

Page 66


Page 67
EULL
i.efi in
1.குடிமரபு
ஆரையம்பதி பூரீ கந்தசுவாமி கோயில் நித்திய பூசைகள், விசேட பூசைகள் மாதாந்த பூரணைத் திரு விழாக்கள், புரட்டாதி மகோற்சவம் என்பன ஆரையம்பதி யைப் பிறப்பிடமாகக்கொண்ட குடிமரபினையும் பாகை முறையினையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகிறது. இக்குடிமரபு பண்டைய காலம் தொடக்கம் சமூக அமைப்பில் அடங்கியிருந்தது தமிழர் பண்பாட்டிற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் உதவியது என்றும் கூறலாம்.
சுமார். (18) பதினெட்டுகுடியைச் சேர்ந்தவர்கள்
இங்கு வசிப்பதைக்காணலாம்.
(1) புலவனார் குடி
(2) வங்காளக்குடி
(3) முதலித்தேவன் குடி
(4) வீரமாணிக்கம் குடி
(5) திருவிளங்கு குடி
(6) அலரித் தேவன் குடி
(7) மன்றுளாடி குடி
(8) ஆறுகாட்டி குடி
(9) சம்மான் ஒட்டி குடி
(10) பால விக்கிரமசிங்க குடி
(11) பத்தினாச்சி குடி
(12) பொன்னாச்சி குடி
(13) வேளாளர் குடி
(14) பொன் தொழிலாளர் குடி (வடபத்திரகாளி குடி)
(15) பேச்சியம்மன் குடி (பணிக்கர்)
(16) குரவர் குடி
(17)சிறப்பினாகுடி
(18)கணபதியார்குடி
இக்குடிகளைச் சேர்ந்தவர்களே ஆரையம்பதி ரீ கந்தசுவாமி கோயில் மாதாந்த பூரணைத் திருவிழாக் களையும் புரட்டாதி மகோற்சவங்களையும் ஏற்று நடாத்தும் உபயகாரர்களாக உள்ளனர்.
இவை தவிர நட்சத் திர பூசைகள் , திருவெம்பாவை பூசைகள், விநாயக விரத பூசைகள், விநாயக சதுர்த்தி பூசைகள், சிலதணிப்பட்ட குடும்பத்தினர் பொறுப்பாளிகளாக நின்று ஏற்று நடாத்து கின்றமையும்
 
 

്യജീണ്ടു ജ_fഖീണ്ടു
GLÖ (O.F.2 )
நோக்கற்பாலதாகும்.
2. பூரணைத் திருவிழாக்களும் உபயகாரர்களும்
தைமாதம் தைப்பூசத் திருவிழா -
புலவனார்குடிமக்கள் மாசி மாதம் மாசிமகத் திருவிழா -
வங்காளக்குடிமக்கள். பங்குனி மாதம் பங்குனி உத்தர திருவிழா -
~. முதலித்தேவன்குடி மக்கள் சித்திரை மாதம் வருடப்பிறப்புத் திருவிழா -
வீரமாணிக்கம்குடி மக்கள். வைகாசி மாதம் வைகாசி விசாகம் -
திரு.சா.இராமச்சந்திரன் ஆனி மாதம் ஆனி உத்தரத் திருவிழா -
திருவிளங்கு குடி மக்கள் ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா -
பத்திநாச்சி குடிமக்கள் ஆவணி மாதம் ஆவணி மூலத் திருவிழா -
அலரித்தேவன் குடி மக்கள் புரட்டாதி மாதம் மகோற்சவம்
குடியினரும் பாகையினரும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி சூரன்போர் -
ஆறுகாட்டி குடி மக்கள் கார்த்திகைமாதம் திருக்கார்த்திகை.
மன்றுளாடி குடி மக்கள் மார்கழி மாதம் திருவாதிரை
பாலவிக்கிரமசிங்ககுடி மக்கள
3.புரட்டாதி மகோற்சவமும் அதன் சிறப்பும்:
ஆரையம்பதி கந்தசுவாமி கோவில் விசேட உற்சவங்களில் சிறப்பான இடத்தைப் பெறுவது புரட்டாதி மகோற்சவம் ஆகும். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ் வரர் ஆலயத்தில் தேரோட்டத் திருவிழா எவ்வாறு சிறப்பான உற்சவமாக உள்ளதோ அவ்வாறே ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தில் புரட்டாதி மகோற்சவம் ஆரயம்பதி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான திருவிழா ஆகும். புரட்டாதி மாதத் திருவிழா புரட்டாதித் திங்களில் பூரணை தினத்திற்கு முந்திய 10 நாட்களும் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பூரணைதினத்தன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவுறுகிறது.
மகோற்சவம் ஆரம்பமாவதற்கு முன்பு மூப்பன்
43

Page 68
பறையறிவிப்பு மூலம் ஆரையம்பதி அனைத்து பொது மக்களும் பொதுக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு பரிபாலன சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாக உறுப்பினர்களும் மகோற்சவம், கொடியேற்றம் சம்பந்தமான பலவிடயங்கள் பற்றி ஆலோசனை நடாத்தி தீர்மானம் எடுத்து சம்பந்தப்பட்ட பாகையினருக்கும் குடியினருக்கும் திருவிழாச் சீட்டு அனுப்பி அறிவித்தல் கொடுப்பர். இவ்வறிவித்தல் மூலம் திருவிழாவிற்கான ஒழங்குகள் பற்றியும் மற்றும் கோயிலுக்கு வழங்கப்படும் (கொடுப்பனவுகள்) படிமுறைகள் பற்றியும் தெரிவிக்கப்படும்.
4. மகோற்சவ திருவிழாக்களும்
உபயகாரர்களும்:
1ம் நாள் கொடியேற்றத் திருவிழா - ஊர்மக்கள் 2ம் நாள் திருவிழா - குருக்கள் 3ம் நாள்திருவிழா - பொன்தொழிலாளர்
(வடபத்திகாளியம்மன் பரிபாலனசபை) 4ம் நாள் திருவிழா - பணிக்கர்
(பேச்சியம்மன் கோயில் பாகையினர்) 5ம் நாள் திருவிழா -
ஆரைப்பற்றைத் தெரு பாகையினர் 6ம் நாள் திருவிழா - நடுத்தெரு பாகையினர் 7ம் நாள் வேட்டை திருவிழா - முகத்துவாரத் தெரு
பாகையினர் 8ம் நாள் சப்புரத் திருவிழா - சம்மான் ஒட்டி குடியினர் 9ம் நாள் தேர்த் திருவிழா -
வேளாளர் தெரு பாகையினர் 10ம் நாள் தீர்த்தம் - ஊர்மக்கள்.
கொடியேற்றம் நடந்தேறி முருகப்பெருமானுக்கு நாளாந்தம் நைவேத்தியம் அபிஷேகமும் நடைபெற்று 4ம் நாள் வரை திருவிழா நடைபெறல் சாதாரண நிகழ்ச்சியாகும். 5ம்நாள் திருவிழா ஆரைப்பற்றை பாகையினருடன் ஆரம்ப மாகி தீர்த்தோற்சவம் நடைபெறும் வரை உள்ள திருவிழாக் கள் வாணவேடிக்கைகளுடன் மின்சார பல்புகள், அலங்கார வளைவுகள் தோரணங்களுடன் ஆரம்பமாகி நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். 5ம்நாள் திருவிழாவுடன் மற்றைய திருவிழாக்குழுவினருக்கு தமது பகுதியினரின் திருவிழா சிறப்புற வேண்டுமென்ற எண்ணமும் ஏற்பட்டு கோயிலின் நுழைவாயல் மற்றும் சுற்றுவட்டாரம் பல நிற மின்சார பல்புகளாலும் தோரணங்களாலும் அலங்கள்ர வளைவுகளால் சோடனை செய்யப்பட்டு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் உலாவருவது மனதை நெகிழவைக்கும் காட்சியுமாகும்.
திருவிழா ஆரம்பித்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் மயில்வாகனத்திலும் விநாயகர் எலிவாகனத்திலும் மற்றும் சிவனும் சக்தியும் பிள்ளை களுக்கு உறுதுணையாக இடபவாகனத்திலும் உலாவந்து காட்சி கொடுப்பதும் அடியார்களின் மனதை கொள்ளை கொள்ளும் காட்சியாகும்.
திருவிழா ஆரம்பித்து பெருமான் உலாவந்து மாமியார் மூலையில் வரும் சமயம் வாணவேடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெறுவது இத்திரு விழாக் காலத்தில்
44

ஒரு விசேட நிகழ்ச்சியாகும். இவ்வாண வேடிக்கைகளில் இளநீர் வாணம், மழைவாணம், குடை வாணம், வம்சல் வாணம் , எலிவாணம் என்பன இடம் பெறும் . இத்திருவிழாக்களுக்கு மட்டக்களப்பின் பல பாகங்களி லிருந்தும் மக்கள் திரளாக வருவது காண் கொள்ளாக் காட்சியாகும். திருவிழாத் தினத்தன்று மாலை உபயகாரர் அன்றைய பூசைக்குரிய பொருட்கள்ை மேளவாத்தியத்துடன் மேல்கட்டி பிடித்து ஊர்வலமாக எடுத்து வருவர். மேல் கட்டிகள் பல்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு உபய காரர்களால் கொண்டுவரப்படுவது அன்றைய தினம் நடை பெறவுள்ள திருவிழாவின் சிறப்பினையும் எடுத்துக் காட்டுவதாகும். இவை படியெடுத்தல் என அழைக்கப்படும்.
5.விசேட பூசைகள்
இக்கோயிலில் பல விசேடபூசைகள் நடை பெறுவது கவனிக்கற்பாலதாகும். விசேட பூசைகளும் உபயகாரர்களும் வருமாறு:
தைப்பொங்கல் - கோயிற்குருக்கள் மகா சிவராத்திரி - திரு.பீ.குலசேகரம் புதுவருடப்பிறப்பு - திரு.க.கார்த்திகேசு
இந்திர குப்த விரதம் - திருமதி த.அன்னப்பிள்ளை உருக்மணிஅம்மாள் கும்பம்
- திருமதி கணபதிப் பிள்ளை தெய்வானை கஞ்சன்கதைஅமுது - ஊர்மக்கள் கிருஷ்ண ஜயந்தி - பூரீ முருகன் இந்து மன்றம் மாணிக்கவாசகர் குருபூசை
- திரு.இளையதம்பி தம்பிராசா விநாயகர் சதுர்த்தி விரதம்
- திரு.பூபாலபிள்ளை சிவகுருநாதன் சுவர்க்கவாயில் ஏதாதர்சி விரத பூசை
- திரு.சின்னத்தம்பி பொன்னம்பலம்
6. கார்த்திகை நட்சத்திரப் பூசைகளும்
உபயகாரர்களும்:
தைமாதம் - திரு பூபாலபிள்ளை சோமசுந்தரம் மாசி மாதம் - திரு.குஞ்சித்தம்பி கார்த்திகேசு பங்குனி மாதம் - திரு. கந்தப்பர் செல்லத்தம்பி சித்திரை - திரு. ஏரம்பமூர்த்தி சுந்தரமூர்த்தி
வைகாசி - திரு நல்லதம்பி வடிவேல்
ஆனி - திரு சோமசுந்தரம் பிரியதர்சன திரு. கோணாமலை சுரேந்திரன் - لك ஆவணி - திரு. சிதம்பரப்பிள்ளை வாமதேவன் புரட்டாதி - திரு பூபாலபிள்ளை பொன்னுச்சாமி
ஐப்பசி-திருமதி மங்கையற்கரசி பூபாலரெத்தினம் திருக்கார்த்திகை - மன்றுளாடிகுடி மக்கள் மார்கழி - திரு. மு.மாசிலாமணி (டாக்டர்)
குறிப்பு: ஒரு மாதத்தில் இரண்டு கார்த்திகை நட்சத்திரங்கள் வரும் பட்சத்தில் 1வது பூசை திரு.சா. இராமச்சந்திரனுக்குரியதாகும்.
விநாயகர் சஷ்டி பூசையும் கார்த்திகை பூசையும்

Page 69
நிர்வாகக் குழுவினரால் நடாத்தப்படும்.
7. விநாயக விரத உபயகாரர்கள்:
1ம் பூசை - திரு கோபாலபிள்ளை பூபாலபிள்ளை 2ம் பூசை - திரு.இராசதுரை இரத்தினம் 3ம் பூசை - திரு.சிவசுந்தரம் சந்திரகுமார் 4ம் பூசை - திரு.சீனித்தம்பி சபாபதிப்பிள்ளை 5ம் பூசை - திரு.சீனித்தம்பி சாமித்தம்பி
6ம் பூசை - திரு கணபதிப்பிள்ளை சாமித்தம்பி 7ம் பூசை - திருமதி கார்த்திகேசு கனகம்மா 8ம் பூசை - திரு கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை
9ம் பூசை - திரு.பூபாலபிள்ளை புருஷோத்மன் 10ம் பூசை - விரதகாரர்கள் 11ம் பூசை - திரு தம்பியப்பா பூபாலபிள்ளை 12ம் பூசை - திரு காசுபதிப்பிள்ளை தங்கத்துரை 13.b 608 - 14ம் பூசை - திரு.காசிநாதபிள்ளை பாக்கியலெட்சுமி 15ம் பூசை - திரு.கணபதிப்பிள்ளை நல்லையா 16ம் பூசை - திரு மூத்ததம்பி அருளம்பலம் 17ம் பூசை - திரு கதிரவேலு இளையதம்பி 18ம் பூசை - திரு. சீனித்தம்பி தர்மலிங்கம் 19ம் பூசை - திருமதி பொன்னம்மா தேவநாயகம் 20ம் பூசை - பெரும் கதை நிர்வாகசபை 21ம் பூசை - ஊர்மக்கள்
குறிப்பு: 22 பூசைகள் வரும் காலங்களில் 20ம் பூசை விரதகாரர்கட்கும் 21ம் பூசை பெரும் கதைப் பூசை யாகவும் 22ம் பூஜை காப்பறுத்தல் ஊாமக்களுக்குரிய
608 usias6b 960)LDub.
இவ்வாலயத்தில் கந்தசஷ்டி விரதம் பல நூற் றுக் கணக்கான பக்தர்களால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. இவ்விரதம் சிறுவர் முதல் முதியோர்வரை பலராலும் அனுஷ்டிக்கப்படுவது இப்பகுதிமக்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது. கந்தசஷ்டி விரதத்தையடுத்து நடை பெறும் சூரன்போர் இக்கோயிலில் நிகழும் உற்சவங்களுள் மிகவும் விசேடமானதாகும்.
8. புராணபடலம்:
நமது பக்தி இலக்கியங்களில் இரு பெரும் புராணங்கள் இணையிலா சிறப்புடையன. அவை பெரிய புராணமும் கந்தப்புராணமும் அகும். இவற்றுள் அன்பால் நிறைந்த அமுதசுரபியாக விளங்குவது பெரிய புராணம். அறிவால் நிறைந்த அருட்சுரபியாகக் கருதப்படுவது கந்தபுராணமாகும். கந்தபுராணம் என்பது முருகப்பெருமா னின், வீரமும், அருளும், பிறவும் விபரித்துக் கூறும் பெரும் நூலாகும். கந்தபுராணம் படித்து பயன்சொல்வதில் இக் கோயில் பலவருடகாலம் வண்ணக்கராயிருந்து சிவபதம டைந்த திரு.சி.ஏரம்பமூர்த்தி அவர்கள் கிழக்கிலங்கையில் சைவப்புலவர்களால் பாராட்டுப்பெற்ற பெருந்தகையாகும். இவரது சிஷயர்களாக காலம்சென்ற திரு.வெ.தம்பிராசா ஆசிரியர். சைவப்புலவர் திரு.கா.சோமசுந்தரம் ஆசிரியர் திரு.சு.பரசுராமன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும். இவர்களுள் தற்போதைய பரிபாலன சபையின் தலைவராக கடமை யாற்றும் திரு.சு.பரசுராமன் இப்பணியைத் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

b0Junioniluilib தொட்டிலூஞ்சல்
ஆரையம்பதி முகத்துவாரத் தெருவில் தற்போது பரமன் சனசமூகநிலையம் அமைந்துள்ள வெளியில் இந்தத் தொட்டில் ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டது. ஆரையம்பதியிலிருந்த ஓடாவி மாரும், மேஸ்திரிமாரும் சேர்ந்து, சித்திரைப் புத்தாண்டு விழாவுக்காக 1930ம் ஆண்டளவில் அமைத்தார்கள். இது கண்டி தலதாமளிகையின் முகப்பில் அமைந்துள்ள எண்கோண மண்டபம் போன்று அமைப்பை உடையது. தென்னங் குற்றிகளாலும்,
கைமரங்களாலும், பலகை, சலாகைகளாலும் அமைக்கப்பட்டது. இதன் மேல் மாடியில் சுற்றிநின்று பார்க்கக் கூடியதாக அமைத்திருந்தார்கள். நாலு தொட்டில்கள் பூட்டப்பட்டு அவை மேலுங் கீழுமாக சுழன்று வருவதற்காக இருவர் கைகளாலும் சுற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆடியவர்கள் இறங்கியதும், ஆடுவதற்குக் காத்திருந்த வேறு நால்வர் ஏறியதும் திரும்பச் சுற்றுவார்கள்
மேல்மாடி அழகான சித்திரவேலைப் பாடுகளாலும் தோரணங் களாலும் அழகாக அலங் கரிக்கப்பட்டிருக்கும். வெளியே உள்ள ஒருவர் தொட்டிலாடுவதற்கு உள்ளே போக ஒரே ஒரு வாசல் வைத்து மேலே போக ஏணியும் அமைத்திருந்தார்கள். ஆரையம்பதியில் எங்கே என்ன விழா நடந்தாலும் வண்ணக்கர், கணக்குப்பிள்ளை, கங்காணி, அதிகாரி மார் ஆகியோரை வெள்ளை மேல்கட்டியின் கீழ், பறைமேளத்தோடு ஊர்வலமாக அழைத்துவந்து திறப்பு விழா நடத்துவது வழக்கம்.
இந்த வழக்கப்படி இதற்கும் இவர்களை அழைத்து வந்தார்கள். இத்தொட்டில் ஊஞ்சலில் ஆடுவதற்காக ஆரையம்பதி மக்கள் மட்டுமல்லாமல், காத்தான்குடி முஸ்லிம் மக்களும், பக்கத்துக் கிராமங் களின் தமிழ் மக்களும் ஏராளமாக வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு விழா முடிந்தும் பல நாட்கள் இது நடைபெற்றது. (தற்போது இது "காணிவெல் விழாக்களில் நடைபெறுவதைக் ET600T6)ITD.)
- (p.86.
LS SLS SSS SS SSLSLSS SS SS SSLLSSS SS SS SSLS S a u u aume au ni in
45

Page 70
சிலகாலத்திற்கு
முன் காத்தான் என்னும் SeC5 L I60) பெயரையுடைய வேடன் இப்பகுதியில் இருந்தான். இவனுடைய தொழில் மீன் பிடித்தலும் மிருகவேட்டையாடுதலுமேயாம். அக்காலத் திலிருந்த குடிசனங்களில் இவனே சற்று அதிகாரம் வாய்ந்தவன். இவன் வசித்திருந்த காலம் 1692ம் ஆண்டு, அதாவது கலியுகம் பிறந்து 4794ம் வருடத்தின் பின். இவனோர் வந்தேறு குடியைச் சேர்ந்தவன். இவனது பரம்பரையானோர் அக்காலத்தில் புத்தளப் பகுதியில் குடியேறியிருந்த தென் இந்தியராவர். இவன் வசித்திருந்த இடம் காத்தான்குடியென்னும் கிராமத்தின் மத்திய பகுதி. அங்கிருந்து இவன் வழக்கம்போல் வலை கொண்டு தெற்கு நோக்கிவரும் போது ஒரு நாள் ஆற்றங் கரையோரமாக ஒரு பற்றைக்குள் கல்லினாற் செதுக்கப்பட்ட ஒரு விக்கிரகங் கிடக்கக்கண்டு, அதையெடுத்துக் கிட்டடியாக வைத்து, அதை வணங்கிக் கொண்டு வந்தான். இவனோர் பிரமச்சாரி யாகலின், அன்றுதொட்டு இவன் தனது சொந்த இருப்பிடத் திற்குப் போகாமல் விக்கிரகமிருந்த இடத்தையே தனது பதியாகக்கொண்டு சீவித்துவந்தான்.
மழைக்காலம் வந்ததும் அவ்விக்கிரகமிருந்த இடத்தில் இலைகுழைகளினாலும் புல்லினாலும் வேயப்பட்ட ஒரு குடிசையை இயற்றி அவ்விக்கிரகத்தையும் காப்பாற்றி தனது தொழிலையும் வழமைபோற் செய்துகொண்டு வந்தான்.
காத்தான் விக்கிரகத்தை வைத்து வணங்கத் தொடங்கி இரண்டொரு வருட காலத்தின் பின் இவ்வூரில் பேதிநோய் தலைகாட்டினமையின் அதிகமானோர் மாண்டனர் ஆயின் இக்காத்தானுக்கு ஒரு சிறு நோயுமே உண்டாக வில்லை. சனங்கள் இதைக்கண்டு அதிசயித்து, இந்தக் கோதாரி கெதியில் நீங்கிவிட்டால் காத்தானது கல்லு விக்கிரகத்திற்கு பொங்கல், பூசை முதலியன செய்து நிவேதிப்போமென்று நேர்த்திக்கடன் பண்ணி வைத்தார்கள். அன்று தொடக்கம் கோதாரி நோய் படிப்படியாகக் குறைந்து இரண்டு மூன்று தினங்களில் முற்றாய் இல்லாது போய் விட்டது. கோதாரி நீங்கிய அடுத்த வெள்ளிக்கிழமை தொடக்கமாக, சனங்கள் அவ்விடத்தில் பொங்கல், பூசை முதலியன தவறாது செய்து கொண்டு வந்தார்கள்.
சில வருடங்களின் பின்னர் காத்தான் இறந்து விட்டான். பிறகு ஊரவர்கள் சேர்ந்து குடிசை இருந்த அவ்விடத்தை மூலஸ்தானமாக வைத்து கல்லினால் ஒரு சிறு கோயில் இயற்றி விக்கிரகத்தையும் வைத்து வணங்கிக் கொண்டு வந்தார்கள். (அதுவே இப்போதுள்ள கந்தசுவாமி கோயிலின் மூலஸ்தானமாகும்.)
இதிலிருந்து சில வருடங்களுக்குப்பின் அக் காலத்தில் ஆரைப்பற்றையைச் சேர்ந்த கைக்கோளர் பகுதியில் தனவானாயிருந்த "நாகப்பர்’ என்னுமொருவர், கொஞ்சப்பணம் செலவழித்து இக்கோயிலைப் பெருப்பித்துக் கட்டினார். இவரிறந்து போக திருவிளங்கு குடியாரில் ஒரு சிலர் சேர்ந்து இக்கோயிலின் வெளிமண்டபம், மதில் முதலியவற்றைத் தங்கள் பொருள் கொண்டும் , பிறரிடம் அறவிட்டும் பெருப்பித்துக் கட்டினார்கள். இந்தக் குடியா ருக்கு இது விடயத்தில் மன்றுளாடியார் குடியார், புலவனார் குடியார், சம்மானோட்டி குடியாராதியோர் பொருளுதவியுஞ்
46

● செய்தனர். இது நடைபெற்றது ய குறிப்பு 1850ம் ஆண்டில், இக்கோயி லின் வெளி மண்டபத்தில் 1864ம் ஆண்டு ஆனிமாதம் 1ம் தேதியன்று கொடித்தம்பம்
நாட்டப் பெற்றதென்க.
கடைசியாய் இக்கோயில் ஊர்ச்சன்ங்களின் அதிகாரத்திற்கு அடக்கமாய்வர, தம்பலகாமமிருந்து வந்த ஓர் பூசகரை இக்கோயிலுக்குப் பூசகராக வைத்தனர். அக் காலத்தில் இக்கோயிற் பராபரிப்பாளராய் பூரிமான் நொத் தாரிஸ் காசிநாதரென்பவர் வண்ணக்கராகவும், பூரீமான் கதிரவேற்பிள்ளை பெருக்குதோர் கணக்கப்பிள்ளையாகவும் இருந்தனர்.
திருவிளங்கு குடியாரும், மன்றுளாடியார் குடியா ருமே இக்கோயிலைத் தக்க நிலைமைக்குக் கொண்டு வந்தது காரணமாக இந்த இரண்டு குடியாருக்குமே இக்கோ யிலின் பராபரிப்புத் தத்துவம் உரித்துடையதாகும்.(முறையே கணக்கப்பிள்ளை, வண்ணக்கு என்னும் உத்தி யோகங்கள்)
இக்கோயில் உண்டுபட்ட காலம் தொடக்கம் எனது காலபரியந்தம் இம்முறையாகவே இக்கோயிலின் பாராபரிப்புத் தத்துவம் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இனிமேலும் தலைமுறை தலைமுறையாக இவ்விதமே நடை பெற்றுக்கொண்டு வர ஆதிமத்தியாந்தரகிதராகிய எம்பெருமான் கிருபை பாலிப்பாராக.
இக்கோயில், கட்டப்பெற்ற பின் முதன் முறை 1802ம் ஆண்டிலும் இரண்டாம்முறை 1864ம் ஆண்டிலும் கும்பாபிஷேகம் பண்ணப்பட்டது. இது ஆதியிற் பிள்ளை யார் கோயிலாக இருந்தது. சில காலத்தின் பின்பே கந்தசுவாமி கோயிலென வழங்கப்பட்டு வருகின்றது. காத்தான் என்னும் வேடனும் கண்டெடுக்கப்பட்ட கல்லு விக்கிரகம் ஒரு பிள்ளையார் சொரூபம். அதை இப்போது இக்கோயிலுட் காணமுடியும்.
அக்காலத்தில் இப்போதிருக்கும் ஆரைப்பற்றைக் கும் காத்தான்குடியிருப்பென்னும் ஒரே ஒரு நாமமே இருந்து வந்தது. கி.பி.1872ஆம் ஆண்டு வரையிற்றான் காத்தான் குடி, ஆரைப்பற்றையென அரசினரால் இரண்டாய் வகுக்கப் Ull-gil.
ஆரைப்பற்றையில் ஒவ்வோர் குடிமைகளையும் ஒவ்வோர் குடிமைகளின் இருப்பிடங்களையும் பூரீமான் கதிர வேற்பிள்ளை பெருக்குதோர் என்பவர் வேறுவேறாக ஆங் காங்கு பிரித்துவைத்துள்ளார். இவரிறந்தது 1858ம் ஆண்டில்.
இது ஒரு பழைய ஏட்டுப் பிரதியிலிருந்து என்னாற் பிரதி பண்ணப்பட்டது. ஒப்பம்: சி.ப.கண்ணப்பன். பொ.த.ஆரைப்பற்றை,10.11.1887
இது விதானை கண்ணப்பரின் ஏடு ஒன்றிலிருந்து எம்மாற்
பிரதி பண்ணப்பெற்றது.
சி.குலசேகரம்பிள்ளை
ஆரைப்பற்றை
14.10.1980
(இக்குறிப்பு ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேக வரவு செலவு அறிக்கை 1980 என்னும் பிரசுரத்தில் காணப்படுகிறது.)

Page 71
ஆரையம்பதி கண்ண
ப.பொன்னை
இறைவன் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு சொரூப இலட்சணத்தில் இருந்து தடத்த இலட்சணத்தற்கு படியிறங்கி வந்து பஞ்ச கிருத்தியங்களை இயக்குகின்றான். சிவ சக்தியே அவரின் அருள்பெற்று சிவன் முன்னிலையில் இக்கிருத்தியங்களை நிகழ்த்து கின்றார். அன்னையாகிய சக்தியே எமக்கு ஞானத்தை நல்கி சிவனிடம் அழைத்துசெல்கின்றாள். எனவே நாம் முதலிலே சக்தியை வணங்கியே சிவனை வணங்க வேண்டும். "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே’ எனும் மணிவாசகம் இதனை உணர்த்துகின்றது. சக்தி வழிபாட்டு ஆகமங்கள் 27 தந்திரங்களை கொண்டு சிறந்து விளங்குகின்றது. எமது இந்துமதம் சிவவழிபாட்டையும் சக்தி வழிபாட்டையும் உள்ளடக்கிய வேதாகமங்களை கொண்டுள்ளது.
இந்துக்களாகிய நாம் எமது அரும்பெரும் செல்வமான இந்து மதத்தைப் பற்றி சிறிது சிந்தித்துப் பார்ப்பது பயனுடைத்தாகும். உலகில் தோன்றிய சமயங்கள் எல்லாவற்றிற்கும் ஆதியானது இந்து சமயமே. ஏனைய சமயங்கள் தோன்றிய காலமும் அதை தோற்றுவித்த பெரியாரின் பெயர்களும் கணிக்கப்பெற்றுள்ளன. இந்துசமய வேத ஆகமங்கள் இறைவனாலேயே அருளப்பெற்றதனால் அதற்கு சுருதி, அபெளர்சேயம், எழுதாமறை எனும் சிறப்பு நாமங்கள் உள்ளன.
வேதாகமங்களில் உள்ள "அறுவகை சமயங்கள்” எனப்படும் தரிசன இலக்கியங்களான 1. நியாயம், 2. வைஷேடிகம், 3. சாங்கியம், 4. யோகம், 5.மீமாம்சை, 6 வேதாந்தம் என்னும் ஆறுமே மிகப்பழமை வாய்ந்தவை. இவற்றின் தத்துவங்களையும் கொள்கைகளையும் விளக்க முறையே கெளதமர்,

ாகையம்மன் சடங்கு யா கி.சே.உ
கன்னாடர், கபிலர், பதஞ்சலி, ஜைமினி, வாநராயணர் என்னும் பெரு முனிவர்கள் நூல்கள் இயற்றி உள்ளனர்.
தரிசன இலக்கியங்களான இத்தத்துவ நூல்கனை ஆராய்ந்துணர்ந்து வியந்த, கிரேக்க உரோம மேலைநாட்டு பேரறிஞர்களான வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இந்திய தத்துவ நூல்களுள் நியாயம்: "பெரிபட்ெடிக் கொள்கைகளையும், வைஷேடிகம்; "ஐயோனிக் கொள்கை யையும்; மீமாம்சை: பிளேட்டோ’ வின் கொள்கையையும்; சாங்கியம்: 'இட்டாலிக் கொள்கையையும்; யோகம்: 'இஸ்டாயிக் கொள்கைளையும் பெரிதும் ஒத்துள்ளன என்றும் இவ்வாற்றால் கெளதமர் என்னும் அக்கபாதர் அரிஸ்டாட்டிலையும் கணாதர் என்னும் கன்னாடர் தேல்ஸையும், ஜைமினி சாக்கிரமஸ் ஐயும், வியாசர் எனப்படும் வாதராயணர் பிளேட்டோவையும் கபிலர் பித்தாகரையும் பதஞ்சலி ஜெனோவையும் போன்றவர்களாக காணப்படுகின்றனர் என்றும் ஆராய்ந்து ஒப்பபிட்டு மகிழ்கின்றார்.
கண்ணகை அம்மன் வழிபாடு
காப்பு.
“வீசுகரமேகநிற வேதமுதலாழ்கருணை மேவுமத
வாரண விநாயக விநோதா
சேசுருதி மேருவினிற் பாரதமிழ் கோடுகொடு சேமமுறவே
யெழுது சேர்கருணையோனே
கூசுமதி சேர்நுதலி கோமளவல்லிக்கு கொஞ்சுமதலை
குதவு குஞ்சர முகத்தோன்
பேசுதமிழின் கதைகளே பாடுதற்கொரு பிழைகள் வாராமலே
கார் பேழைவயிறோனே'
47

Page 72
தமிழ் மக்களிடையே தொன்மை சான்று பன்னெடுங்காலமாக பத்தினி தெய்வமென கண்ணகை அம்மன் வணங்கப்பட்டு வருகின்றார். சோழ மண்டலத்து கண்ணகி, பாண்டிய மண்டலத்தில் வீரக்கற்பரசியாகி, சேர மண்டலத்திலே பத்தினி தெய்வ படிமம் சார்ந்து விளங்கு கின்றார். சிங்கள மக்களால் "பத்தினித்தெய்யோ” என்றும் தமிழ் மக்களால் மட்டக்களப்பு தமிழகம் எங்கும் கண்ணகை அம்மன் என்றும் வணங்கப்படுகிறாள்
ஆரையம்பதியில் ஆண்டுதோறும் வைகாசி மாதப் பூரணையினைக் கண்ணகை அம்மன் குளுத்தி நாளாகக் கொண்டு அதற்கு நேர்முந்திய எட்டு நாட்களுக்கு முன் திருக்கதவு திறக்கும் வைபவம் இடம் பெறும். சடங்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை நடைபெற்று இறுதிநாள் குளுத்தியாடப்பட்டு அன்றிரவு அம்மன் திருக்கதவு தாழிடும் வைபவத்துடன் நிறைவு பெறும்.
1. திருக்கதவு திறத்தல்:
கண்ணகை அம்மன் ஆலய வீதிகள் எங்கும் முதல்நாள் பக்தர்களால் கூட்டிப்பெருக்கப்படும் பந்தலிட்டுப் புதுமணல் பரப்பிப் பொலிவும் அழகும் நிறைந்ததாகக் காட்சியளிக்கும். ஆலயமண்டபங்கள் அழகுபடுத்தப்பட்டு திருவலகிடப்பட்டு நீராஞ்சனம் செய்து புனிதமாக்கப்படும்.
திருக்கதவு திறக்கப்படும் அன்று இரவு பக்தர்கள் ஆலய வீதியில் எங்கும் பொங்கலிடுவார்கள். ஆலயத் தலைமைக் கட்டாடியார் மந்திர பூசையோடு முறைப்படி அம்மனுக்கு மடைவைத்து LuT6) அமிர்தங்களைப் படைத்துப் பக்தி பூர்வமாகத தீபதூப நிவேதனங்களை நிகழ்த்துவார். அப்போது உடுக்குகள் அடித்து அம்மன் காவியம், அகவல், உடுக்குச்சிந்து என்பன மிகவும் பக்தியோடு பாடப்பட்டு அம்மனை எழுந்தருளி வருமாறு அழைப்பார்கள். தேங்காய் உடைத்து அம்மனை வணங்கிக் கட்டாடியார் மூலஸ்தானத்துத் திருக்கதவினுக்கு திறப்பிட்டுத் திறப்பார். திறக்கும் போது ஏற்படும் ஒலியி லிருந்து பல உண்மைகள் புலப்படும். கதவு திறப்பதற்கு முதல்நாள் இரவிலே உடுக்குஒலி, சிலம்பொலி ஆகிய வற்றை கோட்கலாம் என பக்தர்கள் கூறியிருக் கின்றார்கள். இது முழுவதும் உண்மையே. (இது அம்மாள் குடிவந்து விட்டார் என்பதைக் குறிக்கும்)
மூலஸ்தான அறைக்குத் திருவலகிட்டு மெழுகி, நீராஞ்சனம் செய்து திருவிளக்கிட்டுத் தீபதூபம் காட்டிய பின் மீண்டும் கட்டாடியார் நீராடிப் புதிய வஸ்திரம் தரித்து திருநீறணிந்து உருத்திராக்கம் பூண்டு மெய்மறந்த
48

நிலையில் அம்மனை எழுந்தருளப் பண்ணுவதற்கு கந்த சுவாமி ஆலயத்திற்குப் பிரவேசிப்பார்.
கந்தசுவாமி கோவிலில் பூசை நடைபெற்று தீபாராதனை செய்யப்படும். அதன்பின் பிரதம கட்டாடியார் பட்டுச் சீலை உடுத்து ஆபரணம் பூண்டு அம்மாளை எழுந்தருளப்பண்ணுவார். அப்போது அம்மனுக்கு முத்துக்குடை நிழற்ற, வெண்சாமரமிரட்ட கட்டாடிமார் உடுக்கடித்து பேரொலி எழும்பக்காவியம் உடுகுச் சிந்து என்பன பாடி வரப் பக்தர்கள் வெள்ளம்போற் புடைசூழ பெண்கள் குரவை ஒலியும் ஆண்களின் அரோகரா ஒலியும் வானைப் பிளக்கக் காரிகையர் கற்பூர ஆராத்தி ஏந்தி இரு மருங்கும் புடைசூழ மேளவாத்தியம் முழங்க அம்மனின் பாதங்களை மஞ்சனமாட்டிப் பெண்கள் பக்தி பூர்வமாக மன்றாட அம்மன் பாவாடை மீது பவனிவரும் காட்சி பக்தி பரவசத்தை அளித்து மனத்தைக் கண்ணகை அம்மனிடம் பதிய வைக்கும் ஓர்அற்புதக் காட்சியாக இடம்பெறும்.
பின்னர் நாள் தோறும் மதியம் இரவு ஆகிய இருவேளைகளிலும் சடங்கு நடைபெறும்.
2. கலியாணச் சடங்கு:
கதவு திறந்து ஐந்தாம் நாள் கலியாணக்கால் வெட்டுவதற்கு மடைப்பெட்டி யெடுத்து மேற்கட்டியுடன் மங்கல வாத்தியம் முழங்க, தேவாதிகள் உருவேறி ஆட ஊர் சுற்றுக்காவியம் படித்து உடுகடித்துக் கட்டாடியார் சகிதம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு வடக்குநோக்கி வருவார்கள். வழிநெடுகிலும் மக்கள் தூய்மைப்படுத்தி நீர் தெளித்து குத்து விளக்கேற்றி நீர்க்குடம் மஞ்சள் வேப்பம்பத்திரம் ஆகியனவைத்து வரவேற்பார்கள்.
தூய இடத்திலுள்ள வளர்ந்த பூவரசங்கம்பை மரத்தடியில் மடைவைத்து தூபதீபம் காட்டி ஆராதனை செய்து காப்புக்கட்டிக் கலியாணக்கால் கம்பத்தைக் காட்டாடியார் வெட்டுவார். நிலத்தில் விழாமல் தேவாதிகள் கம்பத்தைத் தாங்கிப் பிடிக்க அளவுடன் வெட்டித் துப்பரவு செய்து நீராட்டி திருநீறு, மஞ்சள் சாத்தி வெண்துகில் புனைந்து மேளவாத்தியத்துடன் காவியம்பாடி உடுகடித்து அம்மன் ஆலயம் நோக்கிச் செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
கலியாணச்சடங்கு அன்று ஆலய வீதிகள் எங்கும் விசேட பந்தலிட்டு அலங்கரிக்கப்படும். மின்னொளி பூட்டி மணவாட்டியின் ஆலயம் கோல மின்குமிழ்களாலும் குத்துவிளக்குகளாலும் ஒளியூட்டப்பட்டு இந்திரலோகம் போற் காட்சியளிக்கும்.

Page 73
அன்றிரவு ஆலய மண்டபத்தின் நடுவில் கலியாணக்கால் நடப்பட்டுப் பட்டுச்சீலைகளினால் அடுக்கச் சாத்திக்கட்டி அணிகலன் பூட்டி அலங்கரித்து ஒரு பெண்போற் கோலஞ்செய்வார்கள்.
அன்றிரவு கலியாணக்கூறை தாலியுடன் ஆரைப்பற்றைத்தெரு மக்கள் பலகாரப்பெட்டிகள் சகிதம் வயிரவர் கோவிலிலிருந்து ஊர்வலமாக வந்து கண்ணகை அம்மன் ஆலயத்தில் கையளிப்பார்கள்.
நடுநிசி முகூர்த்தத்தில் ஆரம்பமாகும் கலியாணச் சடங்கு அன்று அதிகாலையில் நிறைவு பெறும். கலியாணச் சடங்கின்போது விசேட கும்பங்கள் மடைகள் முறைப்படி மந்திர பூர்வமாக வைக்கப்படும். செந்தாமரைப்பூ கமுகம் பூக்கள் சிறப்பாக வைக்கப்படும். நிவேதனப் பொருட்களான பலகாரவகைகள் பழவர்க்கம், பாணக்கம், இளநீர், கரும்பு என்பன வைக்கப்பட்டு விதிமுறைப்படி பொன்னாச்சி குடி மரபுக்கட்டாடியார் விசேட தீபாராதனை செய்து நிவேதனச்
சடங்கை நிகழ்த்துவார்.
கலியாணச் சடங்கின்போது கலியாணக்கால் சுற்றும் காவியம் விசேடமாகப் பாடப்பட்டு உடுகு, பம்பை ஆகிய முரசொலி அதிர தேவாதிகள் உருவேறிஆட, கன்னிமார் ஆரத்தி எடுக்க, சிறுமியர் அம்மானைக் காய் கிலுக்க, சிலம்பொலி அலம்ப, அரிவையரின் குரவையோடு பேரொலி எழும்ப ஆலயவீதியில் மேளவாத்தியம் முழங்க நடைபெறும் சடங்குக்காட்சி பக்திபரவசத்தில் ஆழ்த்தி மெய்சிலிர்த்து உளம் பூரித்த இச்சடங்கு பெருவிழாவாக நடைபெறும்
ஆறாம்நாள் கப்பல் சடங்கும் ஏழாம்நாள் பச்ச கட்டி சடங்கும் நடைபெற்று நிறைவு நாளான எட்டாம்நாள் குளுத்திச் சடங்கு நடைபெறும். 5. குளுத்திச் சடங்கு:
குளுத்தி நாளன்று ஆலயத்தைச் சுற்றி விசேட பந்தலிட்டு விமானம் அமைத்து வீதியில் மகரதோரணமிட்டு மின்அலங்காரஞ்செய்து அழகும் கவர்ச்சியம் ததும்ப சோடிக்கப்பட்டிருக்கும் பிரதான வாயிலில் கோபுரம் போல் தளம்அமைத்து சப்ரத் தோரணமிட்டு இருமருங்கும் யாழிகள் புடைசூழச் சித்திர வேலைப்பாடுகளுடனான அழகிய சோடனைகள் மின்னொளி பெற்று வனப்புடன் திகழும் காட்சி கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியதாயிருக்கும்.
அன்று பின்னேரம் தொடர்ந்து பக்தர்களின் காவடி ஆட்டங்களும் அங்கப்பிரதட்சணைகளும் அதிகமாக

இடம்பெறும். நேர்த்திக்கடன் காணிக்கைகளும் மடைப் பெட்டிகளும் வந்துகுவிந்த வண்ணமிருக்கும். அன்றிரவு நடக்கும் சடங்கிலே பக்தர்கள் பொங்கலிடுதல் முக்கிய மானதாக இடம்பெறும். நடுநிசி நேரத்தில் விநாயகப் பானை அடுப்பேற்றப்பட்டதும் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதியில் அனைவரும் தங்கள் பொங்கலைத் தொடங்குவார்கள் விநாயகப்பானை பொங்கி ஆலயத்தைச் சுற்றி எழுந் தருளப்பட்டபின் பூசை ஆரம்பமாகும்.
குளுத்தி: பாலுடன் சர்க்கரை, இளநீர் தோடம்பழம் மாதுளம்பழம், வாழைப்பழம் மாம்பழம், பலாப்பழம், கருப்பஞ்சாறு, தேன், பசுநெய் முதலான பூசைத் திரவியங்கள் கலக்கப்பெற்று இனிமையும் குளிர்மையும் நிறைந்த அமிர்தம் போன்ற பாணக்கம் பெரிய கலயத்தில் இட்டு வெண்துகிலால் மூடிக் குளுத்தி ஆடுவதற்கான விசேட பந்தலில் வைக்கப்படும்.
விசேட தீபாராதனையின் பின் திருக்குளுத்தி யாடத் தலைமைக் கட்டாடியார் பட்டாடை புனைந்து அணிகலன் அணிந்து உருத்திராக்கம் பூண்டு விபூதி தரித்து வேப்பந்திருக்குழையும் வெள்ளிப் பிரம்பும் கைப்பிடித்து அம்மானை ஏந்தி மெய்மறந்து நின்று தேவாதிகள் உருவேறிச் சிலம்பொலிக்க நடனமாட பாவாணர்காவியம் பாட உடுக்கு, மத்தளம், தவில் பேரிகை முழங்க பக்தர் குழாம் புடைசூழ பெண்கள் குரவையிட கன்னிமார் ஆலத்தி எடுக்க சிறுமிகள் அம்மானைக்காய் கிலுக்க, கர்ப்பூரச்சட்டி ஏந்திக்காரிகையார் பவனிவர செங்கோல் நடாத்தச் சாமர மிரட்ட முத்துக்குடை நிழற்றத் தளப்பத்துக் கவிக்க நில பாவாடை மீது அம்மன் படியிறங்கிக் குளுத்தியாட வரும் காட்சியானது பார்ப்போரை பரவசத்திலாழ்த்தி உள்ளம் உருகி மெய்நடுங்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி அம்மனின் அருள் அமுதத்தைப் பருக்கி நிலை நிறுத்தும்.
கட்டாடியார் திருக்குளுத்தி ஏட்டைப் பாடும் பக்தர்களிடம் கொடுக்க அவர்கள் பக்தியோடு பெற்று காப்புப் பாடியபின்:
"காரணியுங்கொடை வாழ்வணிகர் காதல் மிகுந்த
தோர் கோவலனார் சீரணியுந்திருமாமணிநங்கை செல்வி உலகுய்யத்
தோன்றினளே’ என்று தொடங்கி கண்ணகி வரலாற்றினை மாறிமாறி இருவருமாக இனிய ஓசையுடன் இதமாகப்பாடுவார்கள்.
அதன்பின் பாடுவோர் அம்மனைக் குளிர்ந் தருளும்படி இரங்கி விண்ணப்பம் செய்து கீழ் வருமாறு
49

Page 74
UITGB6if:
“மீகாமனுக்கு மிகுந்த வரந்தான் கொடுத்து நாகமணி வாங்க நயந்தாய் குளிர்ந்தருள்வாய்” "சொற்பெரிய மானாகர் துய்யகுலத்தேயுதித்த சற்பமணித் தாளினைக்குத் தாயே குளிர்ந்தருள்வாய்” "தென்னம் பழஞ்சொரியத் தேன்மாங்கனியுதிர வன்னிவழிநடந்த மாதே குளிர்ந்தருள்வாய்”
என அம்மனைக் குளிர்ந்தருளும் படிவேண்டிப் பாடுவர். வேண்டுதல் முடிய எல்லோருக்கும் தீர்த்தம் தெளித்துக் குளிர்ந்தருள் பரப்பி ஆலயத்தை வலம் வந்து மீண்டும் பக்தர்களுக்குத் தீர்த்தம் தெளித்து அருள்பரப்பி ஆலயத்துள் பிரவேசிப்பர். வாழிபாடி முடிந்ததும் பக்தர்களுக்கு (பாணக்கம்) குளுத்திப் பிரசாதம் வழங்கப் படும். நன்றாக விடிந்ததும பக்தர்கள் ஆலயத்திலிருந்து தங்கள் இல்லம் ஏகுவர்.
அன்று இரவு அம்மன் கந்தசுவாமி கோவிலுக்கு எழுந்தருளச் செல்லும் வைபவம் இடம்பெறும்.கதவு திறக்கும் முதல்நாள் நிகழ்ச்சி போன்றே இதுவும் இடம பெறும். பக்தர்கள் ஆலய வீதிகள் எங்கும் பொங்கலிடு வார்கள். அம்மன் எழுந்தருளப் பக்தர்கள் பாதங்களுக்கு மஞ்சனமாட்ட மேளவாத்தியத்துடன் காவியம் பாடி உடுகடிக்க கற்பூர ஆலத்தி எடுக்க பாவாடை மீது முத்துக் குடை நிழற்றப் பவனி வந்து கந்தசுவாமி ஆலயத் தில் சென்ற வீற்றிருப்பார். --
அதன் பின் கட்டாடியார் அம்மன் ஆலயத்துக்கு வந்து பொங்கல் மடைவைத்து காவியம் பாடி உடுகடித்து தூபதீபம் காட்டி அம்மனை வணங்கி எல்லாக்குறைகளை யும் பொருத்தருளும்படி அம்மனை மன்றாடிய பின் பக்தி பூர்மாகத் திருத்தாழிடுவார். அத்துடன் சடங்கு நிறைவு பெறும்.
“காட்சி தந்தாலன்றிக் கைகுவித்துப் பாட மாட் டேன்” என்ற புலவனைப் பாடவைத்து மந்திரம் தெரியாது மடைவைக்க நானறியேன் என்றழுத கட்டாடியாரின் நாவிலே எழுதி அருள்பரப்பிய அம்மனே ஆரையம்பதியில் வீற்றிருக் கின்றார்.
G . மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே” என ஊர் சுற்றுக்
காவியத்தில் பாடப்பட்டவரும் இவ்வம்மனேயாவார்.
முற்காலத்தில் மண்முனைத் துறையிலிருந்து
50

ஆரயம்பதி உட்பட்ட பெருநிலப்பரப்புக்கு மண்முனை என்ற பெயரே வழங்கியது. இதன் காரணமாக ஆரையம்பதி மண்முனை என்ற சிறப்புப் பெயராலே அக்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கலாம் . தற்போதும் மண்முனைப்பற்று பிரதேச செயலகம் ஆரையம்பதியில் இருப்பதால் இதன்
உண்மை புலனாகிறது. m
எது எப்படி இருப்பினும் ஆராய்வதை விடுத்து ஆராதனை செய்வதே மேல் எனக்கொள்வோம்.
கண்டி நகருக்கும் கண்ணகை அம்மனுக்கும் தொடாபு உள்ளது. கண்டி பெரஹரா ஆரம்பமானது இத்தொடர்பில் என்பது. பண்டைக்காலத்தில் காரைதீவி லிருந்து சம்மாந்துறை வீரமுனை வழியாகக் கண்டிக்குச் செல்லும் பாதையும் மண்டுர் பழுகாமம் ஊடாக கண்டிக்குச் செல்லும் இன்னொரு பாதையும் இருந்ததாகவும் இவ்விரு பாதையும் “கண்டியக் கட்டு” என்னும் இடத்தில் ஒன்று சேர்ந்து கண்டிக்கு ஒரேபாதையாக இருந்ததாகவும் அறியக் கூடிய தாயுள்ளது. கண்ணகை அம்மன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிடி வந்ததாகவும் அதன் காரணமாகவே வடக்கு நோக்கிச் சென்று கலியாணக் கால் வெட்டும் விதிமுறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அறியக் கிடக் கின்றது.
பண்டைக் காலத்தில் களிமண்ணினாற் கட்டப்பட் டிருந்த கண்ணகை அம்மன் கோவிலை, 1912 ம் ஆண்டு பழைய மூலஸ்தான மேடையை அழியாமல் வைத்துக் கற்கோவிலாகக் கட்டியதாக அறியக் கிடைத்துள்ளது. அம்மன் கோவிலுக்கும் வயிரவர் கோவிலுக்கும் இடையில் போடப்பட்டுவந்த பந்தல்; தற்போது பலமான கொங்கிறீட் தூண்கள் அமைக்கப்பட்டுக் கொங்கிறீட்விட்டம் போட்டு அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பலமான பிளேற் போடப்பட்டுள்ளது. இம்மண்டபம் 16.05.1986ம் ஆண்டில் நிருமாணிக் கப்பட்டிருக்கிறது.
சீரிதான பணியார மவலெள்ளுருண்டை
செந்தேனுடன் பயறு செவ்விளநீரும் வாரியேகுடவயிறு தன்னிலே வைக்கின்ற
வள்ளலேயானை முக வரதநற்பயனே நாரிபாகன் திருக்கொம்பனைய நம்பியே
நாளுமடியார்க்கள் வினைபோயகலவேணும் பாரிதாயெனைப் பரிந் தெம்மை ஆள்வாய்
பாரதங் கோடதனி னாலெழுதுவோனே.

Page 75
ஆரையம்பதிப்
காசுபதி நட
1.மண்முனைப்பற்று
கிழக்கிலங்கையின் புவியியல் சமூக பொருளா தார அரசியல் வரலாற்றில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தி லிருந்து மட்டக்களப்பு வாவி அதனைச் சூழ்ந்துள்ள மக்கள் வாழ்வியலில் தாக்கம் மிக்கதாயிருந்திருக்கிறது. மண் முனைப் பற்றின் எழுச்சி இந்த வாவியை மையப் படுத்தியே நிகழ்ந் திருக் கிறதை உய்த்துணரமுடிகிறது. ''FFpp, T L Goi E
மட்டக்களப்பு மாவட்டத்தில் ம
LDLLö56TÜL நான்கு மைல் தொலைவில் முகத்துவாரத்திலிருந்து | என்றழைக்கப்படும் ஆரை தென் திசை நோக்கிய திருக்கோயில்கள் நிறைந்த தி நகர்வில் ஆரையம்பதி தாளங் குடாக் கிராமங் களுக்கிடையில் மண் | -— முனைநகர் அமைந்துள் ளது. இதன் தலைமைத் துவம், ஆள்புலவல்லமை போன்றவற்றில் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட தளர்வில் மண்முனை செயலிழந்து அதனை ஆரையம்பதி நிரப்பிக் கொண்டது. காத்தான்குடியின் முஸ்லீம் மக்களின் குடி யேற்றம் ஆரையம்பதியின் தமிழ் மக்களின் செறிவினையும் செயற்பாட்டையும் வலுவூட்டியது எனலாம்.
(இந்து கலை ©j351 51Du
மீன்பிடித் தொழிலையும் ஒரு சீவனோபாய மாகக் கொண்ட மக்கள் மலிந்து வாழ்ந்த இடமாக ஆரையம்பதி இருந்துள்ளது. ஆயினும் இதன் தளக் கட்டமைப்பு பல்வேறு தொழில்சார் சமூகக்குழுக்களையும் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்ட பண்பைக் கொண்ட தாக அமைக்கப்பட்டிருந்தது.
2.ஆலயங்களும் அமைவிடங்களும்
தொழில்சார் சமூகக்குழுக்களைப் பாகைகளா கவும் அவற்றுள் குடிவழியாகவும் கொண்டு கோயில்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதில் குடமுழுக்குக்காணும் பூரீ கந்தசாமி கோயில் மையப்பட்டு வடக்கெல்லையில் பூரீ பரமநயினார் கோயிலும், தெற்கெல்லையில் ஆலடிவைரவர் கோயிலும் கிழக்கெல்லையில் பத்திரகாளியம்மன் கோயிலும் அமைக் கப்பட்டு வழிபாடியற்றி வந்தனர் மக்கள்.

ன் ஆலயங்கள்
ராசா பி.ஏ.
தொழில்சார் சமூகக்குழுக்கள் கோயில் கடமை களையும் சமூகக்கடமைகளையும் தத்தம் வசதிக்கும் வாழ்வுக்கும் ஏற்றவகையில் நிறைவேற்றி வந்தன.
19ம், 20ம் நூற்றாண்டுகளில் இலங்கையிலும் குறிப்பாக கல்வித்துறையிலும் ஏற்பட்ட மாற்றங்களில் ஆரையம்பதியின் சகலதுறை மக்களும் ஏதோ ஒரு
வகையில் தாக்கங்களுக் ழகி கு மாகாணதி தல்
ட்டக்களப்பு நகரின் தெற்கே உள்ளது ஆரையம்பதி
ப்பற்றை, ஆரையம்பதி
ருத்தலமாகும்’
குள்ளாயினர். இதன் விளை வாக ஏற்பட்ட விழிப் புணர்வில் சமூகவளர்ச்சி துரிதமாக ஏற்படத் தொடங்
கியது. இவ்வளர்நிலையில் புதிய கல்விக் கூடங்கள் ஆரம்பம், போக்குவரத்து அபிவிருத்தி போன்றவற்றி னாலும் மரபு வழித் தொழில்சா குழுக்கள் கல்வியறிவுள்ள அரச உத்தியோகம் பார்க்கும் நிலையடைந்த மக்களைக் கொண்ட வளர்முக கிராமமாக உருமாறத் தொடங்கியது ஆரையம்பதி.
மக்களஞ்சியம்- தொகுதி !
கலாசார திணைக்களம்)
தான், தமது சமூகக்குழு, பிரதேசம் என்ற விழிப்புணர்வின் வெளிப் பாடாக தமது வழிபாட்டுத் தலங்களைத் தனியாக அமைத்துக்கொள்ளும் பண்பு நிலையொன்றும் உருவாகி கிராமிய வணக்க முறை யிலிருந்து ஆகமவழி பாட்டு முறைவளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது. மக்களின் வசதிக்கும் பொருளாதாரச் சிறப்பிற்கும் உகந்த வகையில் கோயில்கள் உருவாகத் தொடங்கின.
மக்களின் பொருளாதார நிலை மாற்றமடைய பெருந்தோட்டச் செய்கையில் தென்னைப் பயிரின் அறிமுகம் மக்களுக்கு புதிய வாழ்நிலை வசதிகளைக் கொடுக்க லாயிற்று. கொப்பறா வர்த்தகம், நெசவுத்தொழில், தும்புத்தொழில், நெல்லரிசி வர்த்தகம் போன்ற ஏற்றுமதியும், சீமெந்து, ஒடு முதலியன இறக்குமதியுமான கட்டமைப்பு உருவாகத்தொடங்கியது. ஆரையம்பதி முகத்துவாரத் தெருவில் கிட்டங்கி (களஞ்சிய சாலை)கள் தோன்றியமை உதாரணமாகக் கொள்ளலாம்.
இந்த நிலைமை சாதிக் குழுக்களுள் பொருளா
Sl

Page 76
தார வசதியையும் கல்வி வசதியையும் தோற்று விக்க வணக்கத்தலங்களும் படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கின. இத்தகைய பின்னணியில் இன்றுள்ள ஆலயங் களின் சுருக்கவரலாற்றை நோக்குவோம்.
3. ஆரையம்பதியிலுள்ள முக்கியமான சில
ஆலயங்கள்
(அ) பூரீ கந்தசுவாமி ஆலயம் (ஆ) பூரீ கண்ணகை அம்மன் ஆலயம் (இ) பூரி பத்திரகாளி அம்மன் ஆலயம் (ஈ) பூரி பரமநயினார் ஆலயம் (உ) பூரீ நீலகண்டவிநாயகர் ஆலயம் (ஊ) பூரீ மாரியம்மன் ஆலயம் (எ) பூரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயம் (ஏ) பூரீ எள்ளுச்சேனைப் பிள்ளையார் ஆலயம் (ஐ) பூரீ பேச்சியம்மன் ஆலயம் (ஒ) பூரி செல்வாநகர் சிவனேஸ்வரர் ஆலயம் (ஓ) வம்மிக்கேணி சிவன் கோயில் (ஒள) வம்மிக்கேணி மாரியம்மன் கோயில் (க) ஆலடி பூரீ ஆதிவயிரவர் ஆலயம் (கா) ஆலடி பரமநயினார் ஆலயம் (கி) வேடர்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலயம் (கி) மதுரைவிரன் கோயில் (கு) சமாதுப்பிள்ளையார் கோயில் (கூ) திருநீற்றுக்கேணிப்பிள்ளையார் ஆலயம் (கெ) வைத்தியசாலைப் பிள்ளையார் ஆலயம் (கே) சித்திரவேலாயுதர்சுவாமி கோயில் (கை) கிருஷ்ணன் கோயில்
இவற்றுள் பூரீ கந்தசுவாமி, பூரீ பரமநயினார், பூரீ நீலகண்ட விநாயகர், செல்வாநகர் சிவனேஸ்வரர் ஆலயங்களில் தினசரி பூசைகள் நடைபெறுகின்றன. ஏனைய கோயில்களில் வருடாந்த உற்சவமும் இந்துவிசேட தினப் பூசையும் நடைபெறுகின்றன. பலகோயில்களில் வெள்ளிக் கிழமைப் பூசைகள் நடைபெறுகின்றன்.
4. பூநீ கந்தசுவாமி கோயில்
இக்கோயில் கல்முனை பழைய வீதியின் இ.கி.மிசன் பாடசாலைக்குத் தென்மேற்கில் அமைந்துள்ளது. இவ்வாலயம் இக்கிராமத்தின் முதலாவது பிரதான கோயி லாகும். காத்தான் என்னும் வேடனே இக்கோயிலின் மூலகர்த்தா, இவன் அரசமர நிழலின் ஒரு முக்கோ ணக் கல்லை வைத்து வழிபாடு செய்துவந்தான்.16ம் நூற்றாண்டில் பேதிநோய் பரவி அநேகர் இறந்தனர். ஆனால் வேடன் வழிபாடு செய்த இடத்தை சூழ வாழ்ந்த மக்கள் தாக்கப்படவில்லை. இதன் காரணமாகவே வேடனது பந்தலுக்கு மக்கள் வந்து பொங்கல் பூசைகள் செய்ய ஆரம்பித்தனர். சிலவருடங்களில் வேடன் இறந்துவிட்டான். பறங்கியரும் சுதேச வழிபாடுகளில் விதித்திருந்த கட்டுப் பாட்டைத் தளர்த்தினர். இத்தருணத்திலே இக்கிராமத்து
52

பெரியோர் களான சின்னத்தம்பி பரிகாரி, கண்ணப்பன் விதானையார், கதிரவேற்பிள்ளை பெருக்கிலாசியார், முதலியவர்கள் முன்னின்று இக்கோயிலைச் செங்கல்லால் கட்டி முடித்தனர். கோயில் சட்கோண துவிதள விமானத்தை யுடையதாக கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், தம்பமண்டபங்களுடன் பரிவார மூர்த்திகளான விநாயகர், விஷ்ணு, வைரவர்களுக்கும் கோயில்கள் கட்டப்பெற்றன. 1864ம் வருடம் கொடித்தம்பமும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் நடந்தேறியது. ஆரம்பத்தில் மூலமூர்த்தி யாக வேடன் வைத்து வணங்கிய திரிகோணக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. பஞ்ச உலோகத்தினாலான கந்தசுவாமி, பிள்ளையார், சண்டேசுவரர், எழுந்தருளி மூர்த்திகளாக இருந்தனர். பூசைகள் கதிர்காமம், மண்டுர், கொக்கட்டிச்சோலையில் நடைபெறுவது போல திரை திறவாமல் நடந்து வந்தன. கொடியேற்றம் கொக்கட்டிச் சோலை சிவன்கோயில் குருக்கள்மார் செய்து வந்தனர்.
1922ம் ஆண்டளவில் யாழ். கெருடாவிலிலிருந்து சிவபூர் சின்னத்துரைக்குருக்கள் கோயில் குருக்களானார். இவர் ஆகமமுறைப்படி பூசைகளை ஆரம்பித்தவர். திரை திறந்து விடப் பெற்றது. இவரே சைவ அனுஷ்ட்ானம், விரத அனுஷ்டானங்களை இக்கிராமத்தில் அறிமுகம் செய்தவர். கொடியேற்றம் திருவிழாக்களை இவரே செய்து வந்தார். இவரது சேவை மறக்கற்பாலதன்று.
1864D ஆண்டுக்குப்பின் இதுவரையும் மூன்று கும்பாபிஷேகங்கள் நடந்தேறியுள்ளன. தற்பொழுது மூலமூர்த்தியாக வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சந்தான கோபாலர், நவக்கிரகம்,வைரவர் பரிவார மூர்த்திகளாகவுள்ளனர். மகோற்சவம் புரட்டாதி மாதப் பூரணை தினத்தைத் தீர்த்தோற்சவமாக கொண்டு பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருகிறது. மாதந்தோறும் புண்ணிய தினங்களில் விசேட அபிஷேகங்கள் திருவிழாக் களும் நடைபெறுகின்றன. சூரன்போர் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. கந்தசஷ்டிவிரதம், விநாயக சஷ்டிவிரதம், திருவெம்பாவை, கெளரிநோன்பு ஆகியன தவறாது நடைபெறுகிறது. தினமும் மூன்று நேரப்பூசை நடை பெறுகிறது. தலவிருட்சம் அரசு. ஆரம்பத்திலிருந்து வண்ணக்கர், கணக்கப்பிள்ளை, கங்காணியார் நிர்வாகம் இருந்தது. 18.10.1974 முதல் வண்ணக்கு முறை நிறுத்தப் பெற்று தலைவர், செயலாளர், பொருளாளர்களைக் கொண்ட ஒரு நிர்வாக சபை ஆலய நிர்வாகம் செய்து வருகிறது.
5.கண்ணகி அம்மன் கோயில்
இக்கோயில் ஆரையம்பதியின் மூன்றாம் குறிச்சியில் கந்தசுவாமி கோயிலுக்கு தெற்குப் புறமாக வடக்கு நோக்கி அமைந்துள்ளது. அனாதியில் தாளங்குடா விலிருந்து அம்மாள் விக்கிரகம் கொண்டு வந்து சடங்கு நடந்தது என்றும் சிறிது காலத்தின் பின் சின்னத்தம்பி உபாத்தியாயர் மண்முனையிலுள்ள ஒருவயோதிப மாதுவிடமிருந்து அரிய ஓர் அம்மாளை பெற்றுக்கொண்டு

Page 77
Gurras வந்து இக்கோயிலில் வைத்து சடங்குசெய்யப்படுவதாவும் (905 கருத்தை திரு.க.இராஜரெத்தினம் என்பரின் குறிப்பி லிருந்து அறிய
இந்த அம்மாளை கந்தசாமி கோயிலில் வைப்பதுண்டு. சடங்கு காலத்தில் கண்ணகியம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்று சடங்கு முடிந்ததும் திரும்பவும் கந்தசுவாமி கோயிலுக்குள் கொண்டுவந்து வைத்து விடுவார்.
மூலமூர்த்தி கண்ணகி அம்மாள், பரிவார மூர்த்திகள் மாரியம்மன், காளி, வீரபத்திரன், இராமர், நாகதம்பிரான், வைரவர் ஆவர். தலவிருட்சம் அரசு. இதன் நிருவாகம் கந்தசுவாமி கோயில் நிருவாகத்தில் உள்ளது.
இங்கு வருடந்தோறும் வைகாசிப்பூரணை தினத்தை குளிர்த்தி நாளாகக் கொண்டு முன்ஏழுநாட்க ளுக்குச் சடங்கு நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாள் கலியாணச் சடங்கும் ஏழாம்நாள் பச்சகட்டிச் சடங்கும் அடுத்தநாள் திருக்குளிர்த்தியும் நடைபெறும் இங்கு பத்ததி முறைப்படி கட்டாடி மார்களால் பூசை செய்யப்படுகிறது. 6. பத்திரகாளியம்மன் கோயில்
இக்கோயில் ஆரையம்பதி பழைய சவக்காலை வீதியில் அமைந்துள்ளது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் காசிநாத விதானை என்பவர் போரதீவிலிருந்து பூசாரிமார்களையும் தெய்வக்காரர்களையும் கொண்டு வந்து இந்த இடத்தில் பலிச்சடங்கு செய்து வந்தார்.
சடங்கு ஆனிமாத அபரபட்ச திரியோதசியில் இரவு நேரத்தில் ஒரு நாள் சடங்காக நடைபெற்றுவந்தது.
காசிநாத விதானையாரின் பின் அவரது மருமகன் இளையதம்பி இச்சடங்கைச் செய்து வந்தார். சில காலத்தின் பின் இவரால் இச்சடங்கைத் தொடர முடியாதிருந்தது. எனவே ஊரவர்கள் திரு.த.பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் கூடி ஊர்மக்களின் பெயரால் இச்சடங்கு செய்யப்பட்டுவந்தது. இதுகாலம் 1930 எனலாம். 1935ம் ஆண்டளவில் திரு.த.பொன்னம்பலம் அவர்கள் திருகோணமலையிலிருந்து தனது தம்பி த.தம்பிராசா சாத்திரியார் அவர்களுக்கு அனுப்பிய ரூபாய் முப்பத்தைந் தையும் கொடுத்து அந்தவளவைச் சொந்தக்காரரிடமிருந்து திரு. த.தம்பிராசா அவர்களின் பெயரில் வாங்கிக் கொண்டார். அவரே கோயில் பூசாரியாருமானார். அப்பொழுது ஒரு சிறு பந்தலே இருந்தது. சிலகாலத்தின் பின் இவர் இக்கோயிலையும் அதன் வளவையும் கந்தசுவாமி கோயிலுக்கு நன்கொடையாக செய்து விட்டார். இவர்கால மாகிவிட வேறு பூசாரிமார் சடங்கு செய்து வருகின்றனர். தற்பொழுது உயிர்ப்பலியிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இப்பொழுது இக்கோயில் செங்கல்லினால் கட்டப் பட்டுள்ளது. மூலமூர்த்தி பத்திரகாளி. பரிவார மூர்த்திகள் மாரியம்மன், வீரபத்திரன், வைரவர் 86ITÍ.

இதன் அயலில் நாகதம்பிரான் கோயிலும் உள்ளது. ஐந்து நாட்கள் சடங்கு நடக்கிறது. கந்தசாமி கோயில் பரிபாலனசபையே இதையும் நடத்துகிறது. தலவிருட்சம் அரசு. திங்கள், செவ்வாய், வெள்ளியில் பொங்கல் நடைபெறும்.
7. மரீ பரமநயினார் ஆலயம்
“இவ்வாலயத்தின் ஆரம்பகாலம் அறியமுடியா துள்ளது. பறங்கியர் காலத்தில் அழிபாடுற்று மறைந்திருந்த ஆலயம் பிரித்தானியர் ஆட்சியில் மீண்டும் உயிர் பெறலா யிற்று. இக்கோய்யிலை மீளக்கொண்டுவந்தவர். 1766ல் ஒல்லாந்தரால் மட்டக்களப்பு (பழையநகர்) வடபகுதிக்கு நிலைமைப்போடியாராக நியமனம் பெற்ற அருமைக்குட்டிப் போடியார் என S.பரணவிதானையும் G.C. மெண்டிசும் அவர்களது இலங்கைச் சரித்திரம் (பக்கம் 79, 80) புராதன இலங்கைச் சரித்திர்ம் (பக்கம் 26) ஆகியவற்றில் கூறியுள்ளார்." என்னும் குறிப்பை திரு.க.இராஜரெத்தினம் அவர்கள் தருகிறார்கள்.
இக்கோயில் இவ்வூர் மக்களிடையே ஏற்பட்ட உட்பூசலின் தாக்கத்தின் விளைவாக விரைந்த வளர்ச்சி கண்டது. அதற்கு முன் வருடந்தோறும் ஆனிமாத பூர்வ பட்ச சதுர்த்தியில் பரமநயினார் சடங்கு பூசாரி முறையில் நடைபெற்றது.1955 வரையும் விசேட தீபாராதனை நடைபெற்று வந்தது. 1955ல் ஆகமவிதிப்படி இக்கோயிலை அமைக்க இக்கிராம மக்கள் ஆரம்பித்தனர். 1970ம் வருடம் ஏகதளதுாபியுடனான கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முதலான மண்டபங்களுடன் கட்டி முடிக்கப்பெற்றது. 23.08.1970ல் முதலாவது கும்பாபிஷேகம் நடைந்தேறியது.மேலும் பரிவார மூர்த்திகளுக்குச் சிறுகோயில்களும் வசந்தமண்டபம், மடப்பள்ளி முதலியனவும் கட்டப்பெற்று 19820908ல் இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தேறியது. 19941207ல் திருப்பணி வேலைகள் செய்யப் பெற்று மூன்றாவது கும்பாபிஷேகமும நடந்துமுடிந்துள்ளது.
ஆண்டுச் சடங்கிலிருந்து உற்சவகாலப் பூசைகளாக மாறி தினப்பூசையாக வளர்ந்தவேளையில் அலங்காரத்திருவிழாவாக நடைபெற்ற நிகழ்வுகள் 1989ல் கொடிஸ்தம்பம் நடப்பெற்று ஆனி உத்தர தீர்த்தோற்சவ மாகக் கொண்டு பத்து நாட்களுக்கு பிரமோற்சவம் நடைபெற்றது.
மூலமூர்த்தி பூரணை புட்கலைசமேத பரமநயினார் (ஐயனார்). விநாயகர், நாகலிங்கேஸ்வரர், நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்குத் தனித்தனிக் கோயில்கள் உள்ளன. லிங்கேஸ்வரருக்கும், உமாதேவியாருக்கும் உள் மண்டபத்தில் தனிக்கோல்கள் உள்ளன. கோயில் வடக்கு நோக்கியது. தினமும் மூன்றுகாலப் பூசைகள் நடைபெற்று வருகின்றன. வைகாசி மாதத்தில் ஏழுநாட்கள் கண்ணகியம் மனுக்கு திருவிழா நடைபெறுகிறது. மரபுவழிச் சைவாகம்
53

Page 78
விரதங்களும்,பூசைகளும் நடைபெற்று வருகின்றன. இதன் நிருவாகத்தை மக்கள் பிரதிநிதிகள் கொண்ட பரிபாலன சபை மேற்கொண்டு வருகிறது.
8.திருநீலகண்ட விநாயகர் ஆலயம்
இவ்வாலயம் ஆரையம்பதியின் வடக்கு எல்லை வீதியில் அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டில் நாகப்பர் என்னும் செங்குந்த மரபினர் ஒருசிறு கோவிலை இக்கிராமத்தின் வடமேற்குப்பக்கம், ஓர்வில்வமர நிழலில் அரசாங்கப் பூமியில் கட்டிக்கொடுத்தார்.வெள்ளைச் சலவைக் கல்லினால் ஒரு விநாயக விக்கிரகத்தையும் பிரதிஷ்டை செய்து வைத்தார். 18ம் 19ம் நூற்றாண்டில் உலக நாதப் பட்டங்கட்டியாரும் சோமசுந்தர பட்டங்கட்டியாரும் ஏனைய ஊர்மக்களின் உதவியுடன் இக்கோவிலை கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் தம்ப மண்டபங்களுடன் சுற்றுவர மதிலும் கொண்டதாக செங்கற்களால் கட்டிக் கொடுத்தனர். இப்பெரியார்களின் காலத்திலேயே முதலாவது கும்பா பிஷேகம் நடந்தேறியது.
மூலமூர்த்தி திருநீலகண்ட விநாயகர், நாக தம்பிரான், மகாவிஷ்ணு, வைரவர் ஆகயோர் பரிவார மூர்த்திகளாவார்கள்.
சித்திரைவருடப்பிறப்பு:தீபாவளி, சிவராத்திரி ஆகிய காலங்களில் விசேட தீபாராதனைகள் நடைபெறுகின்றன. அசையா மணித்தூண் தெற்கு வீதியிலுண்டு.
இக்கோயிலுக்கு தனிமையான பொன்னூஞ்சல் பாட்டுக்களும் சதோதய முனிவரால் பாடப்பெற்ற திருநீல கண்ட விநாயகர் மாலை பிரணவா அட்டகம் பதிகம் முதலியன உள. தலவிருட்சம் வில்வம் ஆகும்.
9.மாரியம்மன் கோவில்
இவ்வாலயம் திருநீலகண்ட விநாயகர் ஆலயத தின் அருகாமையில் வடகிழக்குத் திசையில் அமைந் துள்ளது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொத்தரிஸ் மூத்ததம்பி முதலியாரும் சிவஞானமுத்து விதானையாரும் பரிகாரி குஞ்சித்தம்பியும் முன்னின்று செங்கல்லால் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும். மூலமூர்த்தி மகாமாரி அம்மன். பரிவார மூர்த்திகளாக காளி, வீரபத்திரர், வைரவர் உள்ளனர். ஆனிமாத பூரணை தினத்தைக் குளிர்த்தி தினமாக வைத்து ஐந்து நாள் சடங்கு நடக்கிறது. பூசாரியர் பூசை செய்து வருகிறார். மூன்றாம் நாள் தேர்த்திருவிழாவும் நான்காம் நாள் கப்பல் சடங்கும் நடைபெறுகிறது. பூரணை தினத்தன்று சர்க்கரை அமுதும் திருக்குளிர்த்தியும் நடை பெற்று வருடாந்த உற்சவம் முடிவடைகிறது. வருடத்தில் ஒரு முறையே கதவு திறந்து சடங்கு செய்யப்படுகிறது. திருநீலகண்ட விநாயகர் ஆலய பரிபாலன சபையே இக் கோயிலை பராபரித்து வருகின்றது.
10. வடபத்திரகாளி கோயில்
இக்கோயில் செங்குந்தர் வீதியில் அமைந் துள்ளது. பொற்கொல்லர்கள் காளிதேவியை இவழ்ட
54

தெய்வமாக வழிபட்டுவருபவர்கள். அவர்களே இக்கோயி லுக்கு அடிகோலியவர்கள். ஆரம்பத்திலே தடிகளாலும் கிடுகுகளாலும் ஒரு பந்தல் அமைந்து அதில் ஒரு பீடம் கட்டிச் சூலஸ்தாபனம் செய்து வழிபட்டு வரலானார்கள். இப்பகுதியில் வாழ்ந்த அன்பர்கள் சிலர்கூடி இக்கோயிலை 1953ம் வருடம் ஆவணிமாதம் அமரபக்க வெள்ளிகிழமையில் சங்குஸ்தாபனம் செய்து கட்டத்தொடங்கி 1979ம் ஆண்டில் பூர்த்திசெய்து கும்பாபிஷேகமும் நடத்தி முடித்தனர். பின்னர் வெள்ளிக்கிழமையில் பொங்கல் பூசைகளும் வருட மொருமுறை ஐந்து நாட்களுக்குச் சடங்குகளும் நடை பெற்று வருகிறது. ஆனிமாதம் பூர்வபக்க அட்டமி பின் இரவில் மதுப்பலி கொடுக்கப்படுகிறது. தீப்பாய்தல் என்னும் பெரும் பலி அதிகாலையில் இடம் பெறுகிறது. அத்துடன் மகோற்சவம் நிறைவு பெறுகிறது.
பூசைகள் பூசாரி முறையில் நடைபெறுகிறது.
இக்கோயில் வடக்குத் திசை நோக்கி உள்ளது. அன்பர்களி டமிருந்து சேர்க்கும் நிதியைக் கொண்டு கோயில் பரிபாலனம் நடைபெறுகிறது. மூலமூர்த்தி வடபத்திரகாளி பரிவாரமூர்த்திகள் வீரபத்திரர், மாரியம்மன், வைரவர் ஆவார்கள். தலவிருட்சம் அரசு.
11. எள்ளுச்சேனை பிள்ளையார்
இக்கோயில் செங்குந்தர் வீதிக்கும் வம்மிக்கேணி வீதிக்கும் மத்தியில் உள்ளது. இது காலத்தால் பழமையான சிறுகோயிலாகும். தற்பொழுது செங்கல்லால் கட்டப்பெற்றுள்ளது. :ோயில் ஏகதள விமானத்துடனான கர்ப்பக்கிருகமும் அர்த்த மண்டபம், மகாமண்டபம் கொண்ட தாகவுள்ளது. மூலமூர்த்தி விநாயகப் பெருமான். பரிவார மூர்த்தி வைரவர். தலவிருட்சம் அரசு.
இக்கோயிலமைந்துள்ள விடத்தில் வசிக்கின்ற மக்கள் தங்களுள் சேர்க்கும் பணத்தைக் கொண்டு ஆலயத்தைப் பாரிபாலித்து வருகிறார்கள். நன்கொடைகளும் கிடைக்கின்றன.
விநாயகசஷடி விரத அனுஷடானமும் திருவெம் பாவை பூசைகளும் சிறப்பாக நடைபெறுகின்றது. தினமும் ஒரு காலப்பூசை நடைபெற்று வருகிறது.
12. பேச்சியம்மன் கோயில்
இக்கோயில் முன்னர் கூறிய பிள்ளையார் கோயி லின் கிழக்கு வீதியிலமைந்துள்ளது. முன்னொரு பொழு இந்த இடத்தை அகழ்ந்த பொழுது தீபதூபங்க', கற்பூரத்தட்டு முதலியன கிடைத்தன. பின்னர் ஒரு கால் குமாரசாமி வைத்தியரும் அவரின் துணைவரும் மாந்திரீகத் தொழிலுக்குச் சென்று திரும்பி இந்த இடத்திற்குத் தங்க வந்தபொழுது இரவு நடுநிசியில் குழலூதும் கண்ணனின் காட்சியைக் கண்டனர். இவைகளை முன்னிட்டு இவ்விடத்தில் நடந்த ஆராதனையின் பொழுது ஒரு பெண் பிள்ளை உருக்கொண்டு ஆடி இடமும் குறித்து அந்த இடத்தில் பேச்சியம்மன் ஆலயம் கட்டி வழிபாடு செய்து வருமாறு கூறினாள். இந்நிகழ்ச்சியின் அடிப்படையில் இந்த இடத்தில் செங்கல்லாலான அம்மன் கோயில் 1944ம்

Page 79
ஆண்டில் கட்டப்பெற்றது. கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபங்களுடன் கோயில் நிர்மாணிக்கப்பெற்றுள்ளது. மூலமூர்த்தி பேச்சி அம்மன் (மனோன்மணி) பரிவாரமூர்த்தி களாக கிருஷ்ணர், மாரியம்மன், காளிதேவி, வீரபத்திரன், வைரவர் ஆகியோர் விளங்குகின்றனர். தலவிருட்சம் வம்மி (85LibL)
ஆடிப்பூரணையை அடுத்து வரும் திங்கள் இரவு நடுநிசி நேரத்தில் கதவு திறக்கும் வைபவத்துடன் ஐந்து நாள் சடங்கு நடைபெறுகிறது. ஐந்தாம்நாள் வெள்ளிக் கிழமை பிற்பகல் தீப்பாய்தலும் அன்றைய பின்னிரவில் பள்ளயமும் நடைபெறுகிறது. பொழுது விடிந்ததும் அதிகாலையில் சமுத்திரத்தில் கும்பவிசர்ஜனம் நடைபெறு வதுடன் வருடாந்த உற்சவம் நடைபெறுகிறது. வெள்ளிக் கிழமைகள் தோறும் பொங்கல் வழிபாடுகள் நடைபெறு கின்றது. உயிர்ப்பலி இடம்பெறுவதில்லை.
நேர்த்திக் கடனாகக் கிடைக்கும் ஆடு, கோழி, பொருட்களை விற்பதனாலும் உண்டியல் மூலமும் அன்பர் களிடமிருந்து கிடைக்கும் பணத்தையும் கொண்டு கோயில் நிர்வாகம் நடைபெறுகிறது.
13. வம்மிக்கேணி சிவன் கோயில்
இக்கோயில் கல்முனை புதிய பிரதான வீதிக்கும் வம்மிக்கேணிக்கும் இடைப்பட்ட செம்மணல் நிலப்பரப்பில் உள்ளது. இக்கோயில் 1930 அளவில் கந்தக்குட்டி என்னும் சிவநெறியாளரினால் உருவாக்கப் பெற்றதாகும். மூலமூர்த்தி நடேசர். தினமும் ஒரு நேரப் பூசை நடைபெறுகிறது. சித்திரைக்கஞ்சி, ஆனியுத்தர அபிஷேகம், திருவெம்பாவைப் பூசை முதலியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
14. Diffu ibup65 (35|Tus)
இக்கோயில் வம்மிக்கேணியிலுள்ள ஒரு பெரிய விசாலமான வம்மி (கடம்பு) மர நிழலில் அமைந்துள்ளது. ஓரிரவு இந்த மரத்தின் கீழ் ஒரு பெண்தெய்வம் சஞ்சரிப் பதைக் கந்தக்குட்டி என்னும் சிவநெறியாளர் கண்டார். அவ்விடத்தில் மக்களுடன் ஆலோசித்துப் பந்தல் ஒன்றை அமைத்து மாரியம்மனுக்குப் பூசைகள் செய்துவரலானார். ஆனிமாதப் பூரணை தினத்தைக் குளிர்த்தி தினமாகக் கொண்டு ஐந்துநாள் சடங்கு நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை தோறும் பொங்கல் பூசைகள் நடை பெற்றுவருகின்றன.
தற்பொழுது இக்கோயில் செங்கல்லால் கட்டப் பெற்றுள்ளது. கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபங் களைக்கொண்டதாகவுள்ளது.
இக்கோயிலுக்கு கிடைக்கும் நேர்த்திக்கடன் பொருட்களை விற்றுப்பெறும் நிதியுடன் அன்பர்களிட மிருந்து சேகரிக்கும் பணத்தையும் கொண்டு இக்கோயில் பராயரிக்கப்பெற்று வருகிறது.
மூலமூர்த்தி மகாமாரியம்மன், பரிவார தெய்வங்

களான வீரபத்திரர் பேச்சியம்மன், காத்தவராயன், பெரிய தம்பிரான் வைரவர் ஆகியோராவர். தலவிருட்ஷம் வம்மி மரம் ஆகும்.
15. செல்வாநகர் சிவனேஸ்வரர் ஆலயம்
இவ்வாலயம் கல்முனைப் புதிய பிரதான வீதி யருகே மகாவித்தியாலயத்திற்குச் சற்றுத் தூரத்தில் தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அடிகோலியவர் கதிர்காமர் என்னும் பெரியாராவார். 1960 அளவில் இவ்விடத்தில் புதிதாக குடியேறிய மக்கள் தங்களது வழிபாட்டுக்காக இந்த இடத்தில் இருந்த பந்தலை அகற்றிச் செங்கல்லால் ஒரு கோயில் ஆகமவிதிப்படி எழுப்பி யுள்ளனர். தூபியுடனான கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபங்களும் பரிவாரமூர்த்திகளுக்குச் சிறு கோயில் களும் கட்டப்பெற்றுள்ளன. 1992ல் கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது.
மூலமூர்த்தி சிவலிங்கம். பரிவாரமூர்த்திகளாக விநாயகர், கந்தக்கடவுள், கெளரியம்மாள், வைரவர் உள்ளனர். செல்வாநகர் மக்கள் தங்களுக்குள் சேர்க்கும் நிதியுடன் உண்டியல் வருமானத்தையும் கொண்டு கோயில் பரிபாலிக்கப்பெற்று வருகிறது. பரிபாலனசபை ஒன்றுண்டு.
சிவராத்திரி தினத்தை இறுதி நாளாகக் கொண்டு ஐந்து நாள் அலங்கார உறசவம் நடைபெறுகிறது. தினமும் மூன்று நேரப் பூசை நடைபெறுகிறது! தலவிருட்சம் அரசு.
15. சமாதுப்பிள்லை யார் கோயில்
இக்கோயிலை உருவாக்கியவர் யாழ். வண்ணார் பண்ணையைச் சேர்ந்த அருளம்பலச்சாமி என்பவர். இவர் தான் கண்ட கனவின் காரணமாக ஆரையம்பதிக்கு வந்து கொஸ்தாப்பர் தம்பாப்பிள்ளை முதலான பெரியார்கள் முன்னிலையில் கோயில் இருக்கும் இடத்தை அகழ்ந்த போது ஒரு சித்தரின் சமாதியைக் கண்டனர். இது ஒரு பிள்ளையார் வடிவத்தை ஒத்ததாக இருந்தது. அந்த இடத்தை முடிவிட்டு தடிகளினாலான ஒரு பந்தலை அமைத்து திருநீலகண்டப்பிள்ளையார் எனவும் பெயரிட்டனர். காலப்போக்கில் இப்பெயர் மறைந்து சமாதுப்பிள்ளையார் என்னும் பெயர் வழக்கில் வந்துவிட்டது.
இக்கோயில் 1916ல் ஆரம்பமானதாக அறிய முடிகிறது. சிலவருடங்களின் பின் பாணங்கியரின் இளைய மகன் வீரக்குட்டி என்பவர் இக்கோயிலையும் பரிவாரமூர்த்தி களின் கோயிலையும் சுற்றிவர மதிலும் செங்கல்லால் கட்டிக்கொடுத்தார்.கோயில் கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் கொண்டதாக உள்ளது.
மூலமுர்த்தி விநாயகர். பரிவராமூர்த்திகள் நாக தம்பிரான், வைரவர். 1978 சூறாவளியில் கோயில் கீலமாயிற்று. தற்போது புனரமைக்கப்பட்டு பூரீ முருகன் ஆலய கும்பாபிஷேகதினத்தில் இதுவும் குடமுழுக்கிடப்
JL-gil.
55

Page 80
முன்பு அருளம்பலச்சாமியாரே இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர் கதிரவேற் फITLpuJITां பூசை செய்து வந்தார். வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் பூசை நடந்து வந்தது. கதிரவேற்சாமியாரின் பின்னர் தகுமாரசாமி (மூத்ததம்பி பாரிகாரியார்) வைத்தியர் பூசை செய்துவந்தார். அவரின் பின் கோயில் பராமரிப்பை இழந்து இப்போது புதுப்பொலிவு பெறுகிறது. பழம் பெருங்கட்டிடக்கலை அம்சங்கள் இதில் உள்ளது குறிப் பிடத்தக்கது. -
16. திருநீற்றுக்கேணிப் பிள்ளையார் (6fugi)
இக்கோயில் ஆரையம்பதி 02ம் குறிச்சியின் கிழக்கு எல்லை - கடற்கரையை அண்மித்து உண்டு. ஆதி காலத்தில் துரும்பர் என்னும் சாதியினர் இக்கேணியின் பாங்கர் வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் இக்கேணியை துரும்பன் கேணியெனவும் அழைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பொடுதலை என்னும் பூண்டு இக்கேணியில் காணப்படுவதால் பொடுதலைக் கேணியெனவும் இக் கேணிக்கு ஒரு பெயர் உண்டு. வெண்ணிறமான ஒருவகை களி இக்கேணியில் காணப்படுகிறது. இக்களியைத் துப்பரவு செய்து வடித்து உருண்டை செய்து உலர்த்தி திருநீற்றுருண்டை என இவ்விடத்துப் பெண்கள் விற்பனை செய்வர். இதனால் திருநீற்றுக்கேணி என்னும் பெயர் வழக்கி லிருந்து வருகிறது. இந்த இடத்தில் குடியிருப்போர் அநேக வருடங்களுக்கு முன்னர் ஒரு பிள்ளையார் கோயிலைத் தங்கள் வழிபாட்டுக்காக உண்டாக்கினர். 1985ல் ஏற்பட்ட இனக்கலவரங்களின் காரணமாக இவ்விடத்து மக்கள் புலம் பெயரலானார்கள். இதனால் கோயில் பராபரிப்பற்றுச் சேதத் திற்குள்ளானது. தற்பொழுது இந்த இடத்தில் மக்கள் மீளக்குடியேறத் தொடங்கிவிட்டனர். இவர்கள் இக்கோயிலின் பராபரிப்பை ஏற்று வேண்டிய திருத்தவேலைகள் செய்து கோயிலை வழமைக்குக் கொண்டுவந்துள்ளனர். இங்கே ஒரு நேரப்பூசை நடைபெற்று வருகிறது.
17. செல்வாநகர் வேடர் குடியிருப்பு பத்திரகாளி கோயில்
இக்கோயில் செல்வாநகருக்கு தென்கிழக்குத் திசையில் பாலமுனைக்கு அணித்தாய் அமைந்துள்ளது. 1953ம் ஆண்டளவில் இந்த இடத்திற்கு புதிதாகக் குடியே றிய வர்கள் நிலத்தை அகழ்ந்தபோது மரத்திலாலான கோயில் ஒன்றிருந்த தடயத்தையும் வெள்ளியிலான அம்மன் முகக்களை ஒன்றையும் இன்னும் சில பொருட்களையும் கண்டனர். பின்னர் இந்த இடத்தில் அவர்களால் இக்காளி கோயில் கட்டப்பெற்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கோயில் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபங் E6061T65 கொண்டதாகும். பரிவாரமூர்த்திகளாக வீரபத்திரர், மாரி, வைரவர் உள்ளனர். ஆவணி மாதப் பூரணை தினத்தை இறுதி நாளாகக் கொண்டு ஐந்துநாள் சடங்கு நடைபெறுகிறது. அன்பர்களிடமிருந்து பெறும் நன்கொடை களும் உண்டியல் பணமும் கோயில் பராமரிப்புக்கு
56

உதவுகிறது. தலவிருட்சம் வம்மி ஆகும். 18. ஆலடி வைரவர் கோயில்
இது காட்டுமாவடியில் புளியடித்துறை வீதியி லுள்ளது. கண்ணகையம்மன் சடங்கு காலத்தில் அம்மன் கும்பத்தைக்கொண்டு ஊர் சுற்றுவது வழக்கம். அக்காலத் தில் தெருக்களிலும் சந்திகளிலும் பந்தல்கள் அமைத்து அம்பாளைப் பூசிப்பது வழக்கமாக விருந்தது. அவ்வாறு உண்டாக்கப்பட்ட பந்தலை அழிந்து விடாமல் பேணிவரும் வயிரவர் பந்தல்தான் இதுவாகும். வெள்ளிக் கிழமைகளில் ஆராதனைகள் நடைபெறுகின்றன.
19. சித்திரவேலாயுதர் சுவாமி கோயில்
இக்கோயில் கந்தசுவாமி கோயிலுக்கு நேரே கிழக்குத்திசையில் சற்றுத் தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னர் வட்டவிதானை செல்லத்துரை என்பவரால் ஆரம்பிக்கப்பெற்றது. மூலமூர்த்தி வேல், பாரிவாரமூர்த்தி விஷ்ணு, வைரவர். தைப்பூசம் சிவராத்திரி உற்சவங்கள் நடைபெறுகின்றன.
20. ஆதிவைரவர் ஆலயம்
இக்கோயில் கல்முனை பழைய வீதியில் ஆரையம்பதியின் தென்கோடியில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இது வீரபத்திரன் கோயிலாக இருந்தது. சுமார் பதினைந்து வருடங்களின் முன் இது செங்கல்லால் கட்டப்பெற்றது. விமானத்துடனான கர்ப்பக்கிருகம் மகாமண்டபம் கொண்டது. ஆடி மாதத்தின் வருடாந்த சடங்கு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் பூசைகள் நடைபெறுகின்றன. மூலமூர்த்தி ஆதி வைரவர் (திரிசூலம்) பரிவாரமூர்த்தி நாகதம்பிரான். தலவிருட்சம் ஆல் ஆகும். 21.வைத்தியசாலைப் பிள்ளையார்
இக்கோயில் வைத்தியசாலை வளவுக்குள் வடமேற்கில் அமைந்துள்ளது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பெற்றது. விநாயக விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது. வைத்தியசாலை ஊழியர்கள் இதனைப் பராபரித்து வருகின்றனர். தினமும் பூசை நடை பெறுகிறது.
22. கிருஷ்ணன் கோயில்
இக்கோயில் ஆரையம்பதி காங்கேயனோடை வீதியிலுள்ள சிறுகோயிலாகும். இக்கோயில் இருபது வருடமளவு பழமையானது . ஒரு ஆலமரத்தின் கீழ் இக்கோயிலுண்டு. இங்கு சித்திரைக்கஞ்சி, சிவராத்திரி பூசைகள் சிறப்பாக நடந்துவருகிறது. இது கிழக்கு நோக்கிய கோயிலாகும். தலவிருட்சம் ஆல்.
(குறிப்பு: நன்றி . இக்கட்டுரைக்கான தகவல்களை
வழங்கியவர்: திரு.க.இராசரெத்தினம்.)

Page 81
UILILIrfurtuar ermLII (க.சிவநேசராசா
1. ஆரையம்பதி முறி கந்தசுவாமி ஆலய
புனராவர்த்தனப் பணியும் கும்பாபிடேகமும்
1999.O4. O1
“கோயில்தலம் வேண்டுமெங்கள் குறைகள் தீர கோயில்தனை அமைத்தவர்கள் குன்றுபோல கோயிலினை அடிபணியும் பக்தரெல்லாம் கோயில் வந்து வணங்குகையில் போற்றுவரே!
ஆரைநகர் பதியிலுறை வேலன் கையில் அருள்கொண்ட வேலுண்டு வினையகற்ற ஊரவரின் பிதி, பிணிகளுமழிந்து ஊரிலுள்ள மக்களது குறையகலுமே.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நிகழும் ஆலயமகாகும்பாபிடேகமென்னும் குடமுழுக்கினைக் கண்டு தரிசிப்பதென்பது மானிடப்பிறவியில் பெறுதற்கரிய பெரும் பேறென பெரியோர் கூறுகின்றனர். சென்ற 1999ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி (99.4.01) ஆரையம்பதி பூரீ கந்த சுவாமி ஆலய பிரதிஷ்ட மஹா கும்பாபிடேகமூலம் எமக்கு இந்தப் புண்ணிய தரிசனம் கிடைத்திருக்கிற தென்றால் நாம் செய்த பூர்வ புண்ணிய மாதவத்தின் பயனேயன்றி வேறொன்றுமில்லை. இந்தப் பாக்கியம் எளிதில் எவருக்கும் கிடைத்விடுவதில்லை.
2. ஆலயச்சிறப்பு
w கிழக்கிலங்கையிலே தனக்கென ஒரு தனியி டத்தை வகித்துக் கொண்டு கல்வி, செல்வம், வீரம், ஈகை என்ற பண்டைய தமிழரின் ஒப்பற்ற சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்டு 15ம் நூற்றாண்டு காலம் தொடக்கம் இப்பிரதேசத்தில் செழித்தோங்கி வரும் தனிப்பெரும் தமிழ்க் கிராமம் ஆரையம்பதியாகும். இம்மகத்தான பதியிலே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருமுருகன் ஆலயம் அக்காலத்தே செழிப்புற்றிருந்த மண்முனை இராசதானியில் கொக்கொட்டிச்சோலை தான் தோன்றீசுவரர் ஆலத்துடன் பிரிக்கமுடியாக பாரம்பரிய உறவுமுறைகளை இன்னும் கொண்டு இலங்கி வருவதனால் இதன் தொன்மையும் மகத்துவமும் நன்கு புலனாகின்றன. தொடரும் அத்தியாயங்களிலே ஆற்றல் மிக்கவர்கள் இதன் தாத்பரியங்களை விளக்கமாகச் செல்லிப் புரிய வைத்துள் ளதை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு நகரத்திற்கு தெற்கே ஒன்பது கி.மீ. தொலைவில் தோற்றம் பெற்றுள்ள இம்முருகன் ஆலயம் அமைவுற்றிருக்கும் தலச்சிறப்பை போற்றி வியக்காத சைவஅறிஞர் இல்லை எனலாம். மட்டக்களப்பு வாவியும் வங்காளவிரிகுடா பெருங்கடலும் அரண் செய்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் நிலப்பரப்பின் மீது கிழக்குக் கடல் திசையை நோக்கி கம்பீரமாகக் காட்சியளிக்கும் எம் பெருமானின் திருக்கோயி லின் வலப்புறமாக தலவிருட்சமென இயல்பாகவே தோன்றி வளர்ந்து நிற்கும் அரசு, வேம்பும் இணைந்த பழம்பெரும் விருட்சா சேர்க்கையானது சாட்சாத் சிவபெருமானும் உமையம்மனும் மகிழ்ந்து அருள் பாலித்து வருவதாக பக்தர்கள் மனதில் ஒரு பிரமையைத் தோற்றுவித்துள்ளது.

ിൽ ധ്വനിമജ് பொருளாளர்)
3. மூலமூர்த்தியாக 'வேல்"
இந்த ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்திலே மூல மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஐம்பொன்னி லான வேலாகும். இந்த வெற்றிவேலானது. அன்பர்கள் அடியார்களின் வேண்டுதல்களுக்கு இரங்கி அருளினைப் பாலித்துவருகின்ற தென்பதற்குச் சான்றாக பல அனுபவக் கதைகளை பக்தர்கள் வாயிலாக கேட்டறிந்து கொள்ள முடியும். இந்தகைய பெருமைகளும் சிறப்புக்களும் கொண்ட ஆலயத்தில் 1996ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிருவாகங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளின் அதிக அக்கறை கொண்டிந்ததாகத் தெரியவில்லை. இறைபணியில் உண்மையான நம்பிக்கையும் விசுவாசமும் மக்களின் பங்களிப்புமின்றி சரியான முறையில் இப்பணியினை திட்டமிட்டுச் செயல்படுத்தத் தவறியதனாலோ என்னவோ இவ்வாலய பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பலவருடங் களுக்கு மேல் மகோற்சவமின்றி இருந்தமை பக்தர்களின் மனங்களில் பெருங்குறையாகவே கொள்ளப் பட்டு வந்தது.
4. காலம் மாறும் போது கருத்துக்களும் மாறும்.
மாறவும் வேண்டும். அதுவும் இன்றைய விஞ்ஞான முற்போக்கு உலகில் ஏற்புடைய புதியன புகுத்து தலும் தாழ்வுடைய பழையன கழிதலும் மானிட வாழ்வுக்கு இன்றியமையாதனவாகும். பகுத்தறிவு ரீதியில் அமைந்த பொருத்தமான தீர்மானங்களை விடுத்து, பழமை, பழமையென்று பாவனை பேசுதல் ஆக்கத்துக்கு மட்டுமல்ல அறிவுக்கும் சவக்குழி தோண்டும் ஒரு முயற்சியே ஆகும்.
பொதுமக்களின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம் இவ்வாலய நிருவாக நடைமுறைக்கென பலராலும் ஏற்கப்பட்டதும் இவ்வூர்மக்கள் அனைவரும் ஆலய
நிருவாகத்தில் பங்குகொள்ளத்தக்கதுமான தோர் வழி
முறையில் அமைந்த பதிய யாப்பொன்றை உருவாக்கி 1996ம் ஆண்டு சித்திரை மூன்றாம் திகதி (1996.04.03) தொடக்கம் குடியமைப்பு முறையிலமைந்த நிருவாகம் செயல்பட ஆரம்பித்தது. இந்த நிருவாக சபையில் இவ்வூரிலுள்ள அனைத்துக் குடிகளுக்குமான பதினெட்டு (18) வகுத்துவார்களிலிருந்து குடிமை ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு உறுப்பினர்கள் வீதம் மொத்தம் (36) முப்பத்தாறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்புதிய நிருவாக சபையின் பொருளாளராக பணிபுரியும் சந்தர்ப்பத்தை மக்கள் எனக்களித்தார்கள். இச்சந்தர்ப்பம் கிடைத்த மைக்கு முதற்கண் எம்பெருமானின் திருவடியை வணங்கி அவன் ஆசியினைப் பெற்றுக் கொண்டதோடு என்மீது அசையாத நம்பிக்கை கொண்டு திருப்பணி வேலைகளிைல் இணைந்து ஈடுபட்ட ஆரையம்பதி வாழ் மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பொறுப்புள்ள பதவியினை பாரமேற்ற வேளையிலே நிதி சிறுஅளவிலேனும்
57

Page 82
ஆலயக்கணக்கில் இருக்கவில்லை. நண்பர் ஒருவரை அணுகி அவரிடமிருந்து கடனாகப் பெற்ற சிறு தொகையினைக் கொண்டே எழுதும் தாள்கள் (Letter Heads ) என்பன அச்சிட்டும் ஏனைய காகிதங்களைக் கொள்வனவு செய்தும் புனர்நிருமான வேலைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டேன்.
5. நிதிப்பங்களிப்பும் செயல்திட்டமும்
ஆலயத்தில் நிறைவேற்றப்படவேண்டிய புனர் நிருமான வேலை அலகுகளை வரிசைப்படுத்தி அதற்கான செலவின மதிப்பீட்டையும் பொருத்தமானவர்களைக் கொண்டு தயாரித்து மகாசபைக் கூட்டத்தின்போது பொது மக்களின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பித்தேன். பாரிய திட்டத் தொகையைப் பார்த்து மக்கள் தன்னம்பிக்கையிழந்தார்கள். எமது எண்ணப்படி,அவர்கள் இத்திட்டத்தினை ஆதரித்த தாகத் தெரியவில்லை. அவர்களது முகபாவனையிலிருந்து பல்வேறு கருத்துக்களை அவதானிக்கமுடிந்தது. சிலர் முன்னைய நிருவாகத்தினையும் அதில் சம்பந்தப்பட்ட சிலரையும் பற்றி விமர்சித்தார்கள். இன்னும் சிலர் புதிய தும்புத்தடியை உதாரணமாகக் காட்டத் தவறவில்லை. ஏன்? அக்கருத்துக் களை ஆலய அறங்காவலர் சபையினர் கூட பார்த்து நம்பிக்கையிழந்திருந்தனர். செய்வதறியாது திகைத்தேன். எம்பெருமானே! இது என்ன சோதனை. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாமென்று ஆன்றோர் மொழிந் துள்ளனரே பூரண அமைப்புப் பெற்ற உன் ஆலயமோ இன்று நித்திய, நைமித்திய பூசைகள் இழந்து உற்சவங்கள் காணா பெருங்குறைக்கு உள்ளானதே. இதற்கு ஒரு முடிவு இல்லையா? ஐந்தாண்டுகள் உறக்கநிலையிலிருந்தது போதாதா? என 6I 60of LD 60T Lô வேதனைப் பட்டது. பெருமான் கைவிட்டுவிடவில்லை. வேண்டியார்க்கு வேண்டியதை வேண்டும் போது வழங்கும் வள்ளலல்லவா அவன். எங்கிருந்தோ ஒரு உந்துசக்தி என்னைத் திடம் கூறி வழிநடத்த விழைந்ததை உணர்ந்து தைரியமடைந்தேன். சென்ற காலத்தினையும் முன்னைய நிருவாகத்தினையும் ஆக்கமின்றி குறைகூறுவதை மறந்துவிட்டு எம்முடன் சுயமாக இணைந்து உண்மையாகவும் விசுவாசமாகவும் திருப்பணியில் ஈடுபட வருமாறு மக்களைக் கேட்டுக் கொண்டேன்.
எனது நடவடிக் கைகள் ஈடுபாடுகள் ஆகியவற்றில் மக்கள் நம்பிக்கை கொண்டனர் போலும். செயல்திட்டத்தினை ஆதரித்தார்கள்; அங்கீகரித்தார்கள். புனருத்தான வேலைகளை உடன் ஆரம்பிக்குமாறு கோரிக்கையும் விடுத்தார்கள். இதற்கு இளைஞர்களும் தமது தெளிவான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தினார்கள். மக்கள் நிதியுதவியினை வாரிவழங்க ஆரம்பித்தார்கள். நிருமாணவேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கட்டிடவேலைகள் யாவும் சுறுசுறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. பொதுமக்கள் பலர் ஆலயத்துக்கு வருகைதந்து நடை பெற்றுக் கொண்டிருந்த வேலைகளின் நேர்த்தியையும் செவ்வைமுறைகளையும் பார்வையிட்டுத் திருப்பதிப்பட்டுக் கொண்டனர். குறைந்த நிதிஉதவி செய்தோரும் தாம் ஒப்புக்கொண்ட தொகையினை இரட்டிப்பாக வழங்க முன்வந்தார்கள் . குறித்த நிருமாணப் பணிகள் யாவும் இடையூறின்றி நடைபெற்றன.
கருப்பக்கிரகம் முதல் இராஜகோபுரம் வரை (சுற்றுமண்டபங்கள் உள்ளிட்ட) நிருமாண வேலைகள் குறுகிய மூன்று ஆண்டுகாலத்துள் நிறைவுற்று மகாகும்பாபி டேகமும் நிகழ்ந்த தென்றால் இறைவனின் கருணையே யன்றி வேறல்ல. இந்நிருமான கும்பாபிடேக நிதியுதவிகள் யாவும் முற்று முழுதாக ஆரைய்ம்பதி மக்களாலேயே
58

வழங்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
தன் ஜீவனோபாயத்துக்காக அன்றாடம் அப்பம் சுட்டு விற்பனை செய்யும் ஒரு தாயின் நிதிப்பங்களிப்பும் சுயமாக இப்பணியில் சேர்ந்திருப்தபையிட்டு பெருமைப்படு கின்றேன். இந்தப் புனர்நிருமான வேலைகள் யாவும் பல இலட்ச ரூபாய்கள் செலவில் செய்யப்பட்டன. இன்றைய நிலையில் இவ்வாலயத்தின் தோற்றமும் அமைப்பும் வசீகரமும் மட்டக்களப்பு மாவட்டத்திலே விரல்விட்டு எண்ணத்தக்க சிலஅலயங்களுள் இதுவும் ஒன்றானதாக இடம் பெற்று இராஜ கோபுரத்துடன் தலைநிமிர்ந்து நிற்பதைக் காண எம்பெருமானின் அருளை வியந்து போற்றாமலிருக்க இயலவில்லை.
6.மனமுவந்த நன்றி
நிதி கேட்கும் போதெல்லாம் மனம் கோணாது முகம் சுளிக்காது நிதியினை அள்ளி வழங்கிய ஆரையம் பதி வாழ் மக்கள் அனைவருக்கும் சகல விதத்திலும் திருப்பணி வேைைலகளில் உதவிய நிருவாக சபை உறுப்பினர்களுக்கும் பழைய கட்டிட இடிபாடுகளைத் துப்பரவு செய்ததுமுதல், கொங்கிறீற், வர்ண அமைப்பு (பகுதி) வேலைகள் மற்றும் கும்பாபிஷேகப் பணிகள் வரை உற்சாகத்துடனும் சிரமதானப் பணிமூலம் நிறை வேற்றித் தந்த ஆரையூர் இளைஞர்கள் அனைவருக்கும், அன்பர்கள் அடியார்கள், சகோதர, சகோதரிகள், மற்றும் ஆலய வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் அக்கறை கொண்டு அவ்வப்போது வேண்டிய உதவிகளை நல்கிய அனை வருக்கும் சிறப்பாக பின்வருவோருக்கும் எமது நன்றி
அ) செல்வன் தர்மசிறி செல்லத்தம்பி அவர்களும் குழுவினரும் (வர்ணஅமைப்பு - சிரமதானம்)
ஆ) இராஜகோபுரம் மற்றும் ஆலய நிருமான உபயமளித்த அனைவருக்கும் (தனித்தனியான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.)
இ) உழவு இயந்திரங்கள் தந்துதவிய உரிமை யாளர்களும்
ஈ) வடக்கு கிழக்கு மாகாண வீதிகள் அபி விருத்தி அதிகாரசபையின் மாகாணப்பணிப்பாளர்ரும் உத்தி யோகத்தர்களுக்கும்
உ) புளியந்தீவு ஆணைப்பந்தி பிள்ளையார் ஆலய பரிபாலனசபையினருக்கும் உருவமைப்பு ஆச்சாரி திரு.ச.சந்திரன் அவர்களுக்கும்.
ஊ) ஆரையம்பதி ரேயி மரக்காலை உரிமை யாளருக்கும்
எ) மண்முனைப் பிரதேச சபை, தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும்
ஏ) ஆலய கட்டிட நிருமான ஆச்சாரி திரு. தம்பிராசா சிறிகரன் மற்றும் குழுவினர்களுக்கும்
ஐ) சிற்பாசாரியர் திரு.மா.காண்டிபன் அவர் களுக்கும்.
ஒ) வர்ணஅமைப்பு ஜெயா குழுவினர் (ஆரையம் பதி) அராலி அவர்களுக்கும்.
ஓ) மகாகும்பாபிடேகத்தை நடத்தி வைத்த சிவாச்சாரியார் குழுவினருக்கும்
மேலும் தமது பெயர் குறிப்பிடாது பல விதத்திலும் உதவி நல்கிய ஏனையோருக்கும் நன்று கூறி. இச்செய்தியினை நிறைவுசெய்கின்றேன்.

Page 83
ஆரையம்பதி ம
ஆரையம்பதி க
1.அறிமுகம்
மானிடவியல் என்ற பெரியதோர் தொகுதியினுள் அடங்கும் சிறப்பு அம்சமே வாழ்வியலாகும். பண்பாடு, நாகரீக முதிர்ச்சி என்பவற்றோடு அனுபவம் கலந்து இணையும் போது ஆரோக்கியமானதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான வாழ்வியல் அமைப்பு ஒன்று உருவாகின்றது. இதனை நாம் பரந்துபட்ட இவ்வுலகின் பல பாகங்களிலும் கண்டுணரமுடியும் கிரேக்க, உரோமபாபிலோனிய எகிப்திய, சிந்துவெளி நாகரீகங்கள் என வழங்கும் பண்டைய மானிட வாழ்வியல் களங்கள் யாவும் இதற்குச்சான்று பகர்கின்றன. ஆரையம்பதி என்ற கிராம மட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களது வாழ்க்கை முறைமையும் பண்டைத் தமிழர் நாகரீகத்திற்கு சற்றும் குறையாத வகையில் “விரலுக்குத் தக்க வீக்க”மாக பண்பு, பணிவு,வீரம், மேன்மை, ஒழுக்கம் கல்வி என்ற பல்வகை அம்சங்களிலும் சிறப்புற்று நல்லதோர் வாழ்வியற் தொகுதியாக வளர்ந்து வருகின்ற தென்றால் மிகையில்லை.
முதற்கண் இங்கு வாழ்ந்து வரும் மக்கள் மரபு அல்லது குல அடிப்படையினையும் பாகை அல்லது தெரு முறைமைகளையும் நோக்கி ஆராய்வதே பொருத்தமானது. பண்டைத் தமிழகத்தின் பிரபல்யம் மிக்க வாணிப நகரமான பூம்புகாரின் அமைப்புப்போன்று ஒவ்வொரு குலத்து மக்களும் தனித்தனி வீதிகளாக அல்லது தெருக்களாக இங்கு வாழ்ந்து வருதல் தெளிவாகும். கைக்கோளர் தெரு, சாணார் (பணிக்கர்) தெரு, வண்ணார் தெரு, வள்ளுவர் (சாம்பான்) தெரு, பொற்கொல்லர் தெரு, வேளாளர் தெரு என்று ஒவ்வொன்றும் பிரத்தியேகமாக அமைந்து அவரவர் சீரிய வாழ்வினில் திளைத்து வர ஏற்ற சூழல்கள் தோற்று விக்கப்பட்டுள்ளன.
முதற்காலத்தில் இவை யாவும் ஊரின் பெரிய கோயில் என அழைக்கப்பட்டு வந்த பூரீ கந்த சுவாமி ஆலயத்தினை நடுநாயகமாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பாக திருப்பணி வேலைகளையும் கோயிற் தொண்டினையும் தங்குதடையின்றி ஆற்றி வரவென்றே அமைக்கப்பட்டதாம். இதனால் இவ்வாலயத்தின் புராதனம் குளக்கோட்டன் காலம் இருந்து எண்ணிப் பார்க்கத் தகுந்தது. இன்று குலமரபுகள் சுவடழிந்து 'எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் என்ற கோஷம் எழுகின்ற காலத்திலும் இங்கு பாகை முறையிலமைந்து மஹோற் சவங்கள் நிகழ்ந்து வருதல் கண்கூடு.

க்கள் வாழ்வியல்
சபாரெத்தினம்
2.பூர்வீகமும் பிரதேச எல்லைகளும்:
ஒரு சமுதாயத்தின் வாழ்வியல் பற்றிக் கூறப் புகுங்கால் அச்சமுதாயத்தின் தோற்றம், பூர்வீகம், பிரதேச எல்லைகள் என்பவை வரையறை செய்யப்படாது போயின் அது முழுமையாகா என்பதனால் ஆரையம்பதிக் கிராமத் தின் பழமையினையும் அதன் வியாபக எல்லைகளையும் சிறிது விளக்கவேண்டியது இங்கு அவசியமாகின்றது. ஆரையம்பதிகி கிராமத்தின் தோற்றம் 16ம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் காலவரையறை செய்யக்கூடியதற்கான சான்றுகள்வருமாறு:
(1) கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயங் களுள்ஒன்றான கொக்கட்டிச்சோலை பூரீ தான்றோன்றீசுவரர் ஆலய பரிபாலன முறைமை 16ம் நூற்றாண்டில் ஆரம்பிக் கப்பட்டு வளம் பெற்றிருந்ததென்பது ஆய்வாளர் கூற்று. அப்பரிபாலன அமைப்டோடு தொடர்புகொண்ட அக்கோயி லின் சித்திரத்தேருக்கு “வடம் பூட்டும்’ சிறப்பு நிகழ்ச்சியை ஆரையம்பதி பூரீ கந்தசுவாமி ஆலய முக்கியஸ்தர்களே முறைப்படி மரியாதைகளுடன் சென்று முடித்து வைக்கின் றனர். ஆகவே பூரீ தான்தோன்றீசுரர் ஆலய காலம் தொட்டே ஆரையம்பதி பூரீ கந்தசுவாமி ஆலயமும் ஓர் அபிவிருத்தி அடைந்த தலமாக இருந்திருக்க வேண்டும்.
(i) இலங்கையிலேயே சிறந்த கல்விமான்களில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்டத்திலே பிறந்து வளர்ந்த வருமான வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா பி.ஓ.எல். அவர்களால் ஆக்கிய "மட்டக்களப்புத் திருக்கோயில்கள்” என்ற நூலில் இடம்பெற்றுள்ள ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயம் என்ற கட்டுரை இக்கிராம மக்கள் மண்முனை முற்காலத்தில் இராசதானியாக இருந்த சமயம் படை யெடுப்பின் காரணமாக புலம்பெயர்ந்து பின்னோக்கி நகர்ந்து தற்போதைய இடத்தில் குடியேறியவர்கள் என்ற கருத்தை முன்வைப்பதனால் இங்கு வாழும் மக்கள் முன்னாளில் அரசபணிபுரிந்து வந்த ஒரு சமூகம் என்ற உண்மையும் அதனால் அவர்களது பூர்வீகமும் தெளிவாகின்றது.
(ii) ஆரையம் பதியை அடுத்துள்ள (தென்புறமாக) நிலப்பரப்பு "சிகரம்” “கோயிற்குளம்” என்ற இரு குக்கிராமங்கள் ஆகும். இங்கே இன்றும் சிற்றரசன் ஒருவரின் கோட்டைத் தலைவாயில் அமைந்திருந்த கற்றுண்களும்,ஆலயம் அமைந்திருந்ததற்கான தடயங் களும் கிடைத்துள்ளன. தற்போதைய ஆரையம்பதிக் கிராமத்தின் எல்லைகள்: வடக்கே காத்தான்குடிப் பட்டினம்;
59

Page 84
கிழக்கே வங்காள விரிகுடாக் கடல்; தென்கிழக்கே பாலமுனைக் கிராமம்; தெற்கே 5ம் கட்டைச் சந்தி; தென்மேற்கே மாவிலங்கை முனை, காங்கேயனோடைக் கிராமங்கள்; மேற்கே மட்டுநகர் வாவி ஆகும். இவற்றிற் கிடைப்பட்ட மணற்பாங்கான தாழ் சமவெளி ஏறத்தாள 10 ச.கிலோமீற்றர் பரப்பினைக் கொண்டது. இங்கே வாழ்ந்து வரும் மக்கள் தொகை அண்ணளவாக சுமார் 10,000 பேர். இவர்கள் அனைவரும் பண்டைச் சைவத் தமிழர்களே.
3. தொழில் முயற்சியும் சாதி அமைப்பும்:
ஆரையம்பதி மக்களின் மூதாதையர் மண் முனைப் பிரதேசத்தை ஆண்ட சிற்றரசனின் அரசசேவை யாளராக இந்தியாவிலிருந்து வருகை தந்தோர் என்பதற்கு இவர்களிடையே வழங்கி வரும் குடிமுறை மரபு சான்று பகரும் திருவிளங்கு குடி, ஆறுகாட்டிகுடி (ஆர்க்காட்டுக்குடி) வங்காளக்குடி, பத்திநாச்சியார்குடி, வீரமாணிக்கன்குடி, பொன்னாச்சிகுடி, மன்றுளாடியார்குடி, என்பன இங்குள்ள குடிமரபுகளில் சிலவாகும்.
மண்முனையில் அமைந்திருந்த பண்டைய இராசதானி படையெடுப்பின் மூலம் அழிக்கப்பட்டு விட அங்கு சேவகம் புரியவென வாழ்ந்திருந்த மக்கள் புலம்பெயர்ந்து தற்போதைய ஆரையம்பதியில் குடியேறி தமது சீவனோபாயத் தொழிலாக விவசாயம், மீன்பிடி, தச்சுவேலை, கட்டடவேலை மற்றும் கூலித்தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். ஆரையம்பதி வாழ் மக்கள் நேர்மை, உண்மை, உறுதியுடன் உழைத்து வருபவர்கள் ஆனபடியால் மரபுவழி சார்ந்த இவர்களது கோத்திரம் அரசசேவகமே என்பதை தெளிந்து ஏற்றுக்கொள்ளமுடியும்.
நீர் தேங்கி நிற்க முடியாத வரண்ட மணல் பரப்பைக் கொண்ட இவ்வூரின் நிலவளம் நெல்விவசாய உற்பத்திக்கு உகந்ததல்ல. தென்னை, மா, பலா, முந்திரிகை, பனை போன்ற பயிர்வகைகளே இங்கு வளரமுடியும் என்பதாலும் மட்டக்களப்பு வாவியாகிய உப்பு நீர் நிலைக்குச் சேய்மையாக இவர்கள் வாழ்ந்து வந்ததனாலும் காலப்போக்கில் மீன்பிடி தொழிலையும் ஏற்றிருக்கவேண்டும். ஆயினும் நெல்விவசாயக் காணிகள் பலவற்றிற்கு நிலச்சுவாந்தர்களாக படுவான்கரைப் பிரதேசங்களிலும், கரைவாகுப் பற்றிலும் இன்றும் பலர் இருந்து வருவதனால் விவசாயத் திலும் இவர்கள் ஊக்கம் காட்டத் தவறவில்லை என்பது வெளிப்படை. அது மட்டுமல்ல; கார்காலம் என்றழைக்கப் படும். இப்பிரதேச விவசாய உற்பத்திக்காலங்கின் போது இங்குள்ள மக்கள் பிறவிவசாய மாவட்டங்களுக்குக் கூட்டம் கூட்டமாக அரிவாள்களுடன் நெல் அறுவடைத் தொழில் புரியச் செல்வதையும் அவதானிக்க முடியும்.
எது எவ்வாறிருப்பினும் காலமாற்றம், சிந்தனை
மாற்றம் ,சமூக மாற்றம் என்பன அவ்வப்போது மக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி விடுவது வரலாற்று உண்மை. இதன் அடிப்படையிலேயே
ஆரையம்பதி மக்கள் 'மீனவர் என்ற தப்பான எண்ணக் கரு ஏனைய குலத்தினர் மத்தியில் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். பரம்பரை மீனவர்களாக இவர்கள் இருந்திருப்பின் ஆழ்கடலுக்கு அண்மையில் குடியிருந்தும் இன்னும் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்கத் தெரியாமலும் மீன்
60

பிடித்தொழிலில் அபிவிருத்தி அடைய விருப்பின்றிருப்பதும் முடியாது அல்லவா?
4. கரையார் என்பது ஒரு வகுப்பினரைக் குறிப்பதல்ல.
மட்டக்களப்பு பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் தமிழர்கள் மத்தியில் வேளாளர், கரையார் (குருகுலத்தோர்) முக்குகர், சீர்பாதகுலத்தவர் என்ற வருணத்தார்களே பெரும் பான்மையானவர்கள். இவர்களுள் வேளாளர் என்போர் விவசாய உற்பத்தித் துறையில் பண்ணையாளராக இருந்து தொழில்புரிவோர் என்ற கருத்தினையும் முக்குகர் என்போர் மலையரசன், குடியரசன், திருஅரசன் என்ற மூன்று குக சகோதர அரசர்களையும் ஒன்றாக இணைத்துப் பேசப்பட்ட முக்குகர் களின் வழித்தோன்றல்களே என்ற கருத்தினையும் சீர்பாத குலத்தவர் என்போர் சீர்பாததேவியார் என்ற அம்மை யாரின் வழித்தோன்றல்கள் என்றும் கொள்ளப்பட்டபோதிலும் கரையார்’ என்ற பதம் மட்டும் எந்த ஒரு சந்ததியையும் குறித்து நிற்காமல் நீர் நிலைகளை அண்மிய நிலப் பரப்பில் வாழ்ந்து வருபவர்கள் என்ற கருத்தை மட்டும் பிரதிபலிப் பதைக் காணலாம்.
இந்தக் கரையார் எதற்கும் முற்போக்குக் குணமும், நேர்மையுடன் விடயங்களை நுணுகி ஆராயும் பக்குவமும் வீரமும் கல்வியில் மேம்பாடும், காரியத்திறமை யும் கொண்டவர்களாயுள்ளனர். இவர்களது நடை, உடை, பாவனை என்பவற்றைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் பண்டைக் காலத்தில் இந்தியாவிலிருந்து கடலோடி களாக அல்லது அரசசேவையாளராக இங்கு வந்தவர்களே என்பது நன்கு புரியும். அது மட்டுமல்ல; முக்குகர், வேளாளர் என்ற குலமரபினர் கண்ணகி காதையில் கூறப்படும் இரு வருணத்தாராகையினால் அக்காவியத்தில் பிரதானமாகக் குறிப்பிடப்படும் மீகாமன் என்ற கப்பலோட்டி வம்சத்தாரான குருகுலத்தோரே இங்கு குலமரபு குறித்துக் காட்டப்படாது வெறுமனே "கரையார்” என்றழைக்கப்பட்டு வரும் இம் மூன்றாம் மரபினர் என்று துணிந்து கூறலாம்.
5. இயல்பு வாழ்க்கையும் விருந்தோம்பலும்:
ஆரையம்பதிக் கிராமத்தை மேலோட்டமாகப் பார்த்தால் இங்கே நிறையப் படித்தவர்கள், அரசாங்க ஊழியர்கள், வேளாண்மை வயல் நிலச் சுவாந்தர்கள், பணம் படைத் தனவந்தர்கள், வர்த்தகர்கள், தொழில்நுட்ப வியலாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கலைஞர்கள் என்ற பலதிறத்தாரையும் ஒருங்கே கொண்ட ஒரு தனிப்பிரதேசமாக மிளர்வதைப் பார்க்கலாம். இக்கிராமம் ஏனைய அயல் கிராமங்கள் சிலவற்றையும் உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகம், பிரதேச சபை, மாவட்ட வைத்தியசாலை, இரண்டு மகா வித்தியாலயங்கள், நான்கு ஆரம்ப பாடசாலைகள். பலநோக்கு கூட்டுறவுச் சங்க சமாசம், தபாற்கந்தோர். பகிரங்க சந்தை, சில அரச நிறுவனங்கள் என்பவற்றைக் கொண்டியங்கி வருகிறது.
ஒரு சிறு நகரத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சகல அடிப்படை வசதிகளும் இங்கு காணப்படுவதனால் இங்கு மக்களின் வாழ்க்கைத் தரமும் கிராமிய மட்டத்தை விடஉயர்வானதாகவே இருந்து வருகிறது. நவீன தொழில் நுட்ப வசதிகளைப் போதியளவு உபயோகித்தும் அவற்றை

Page 85
அனுபவித்து உணரும் ஆர்வத்துடனும் அறிவுடனும் மக்கள்
இருப்பதனால் தற்கால உலக சமூகத்துடன் இணைந்த வாழ்க்கையினை வாழ்ந்து வருபவர்களாகவே இவர்களைக்
கருதவேண்டும். மேலும் விருந்தோம்பல், ஈகை, பரஸ்பர பரிமாற்ற சிந்தனைகளில் பண்டையத் தமிழர் மரபு மாறா மலேயே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். வீட்டுக்கு வந்த விருந்தாளியை அகமும் முகமும் மலர வரவேற்று ஆசுவாசப்படுத்தி அவர் நலன் பேணி மகிழும் தன்மை நிரம்பியவர்களாகவே இருந்து வருகின்றனர்.
திருநாட்கள், பெருநாட்களில்,அவ்வச் சமய சட்டங்களுக்கேற்ப நடைமுறைகளைப் பேணி வருதல், ஆலய தரிசனம் செய்தல், உற்றார் உறவினருடன் அன்பைப் பகிர்ந்து கொளல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை தந்து முடிந்த வரையில் அவர்களை மகிழ்விக்க இவர்கள் பின்நிற்பதில்லை.
இங்கு பிறந்து வாழ்ந்து வரும் மக்கள் கருவிலே வீரம் செறிந்தவர்கள். வீரம் என்பது தெருச்சண்டையல்ல. கொண்ட கொள்கையே சரியென இறுதிவரை வாதிடும் இயல்புமல்ல. நீதி, நேர்மை, மதிநுட்பம் என்னும் அருங் குணங்களால் கருத்துான்றிப் பெறப்படும் சரியான தீர்மானத்தை பொதுநன்மை கருதி தாபிக்க முற்படும் விடாமுயற்சியே வீரம் எனலாம். இதற்கு உடற்பலத்தைவிட உள வலிமையும் நுண்மதியும் கொள்கைப் பற்றுமே பிரதானமான்வை. இவ்வியல்பினைக் கொண்டு இவர்களை சண்டைக்காரர் அல்லது மூர்க்கர்கள் என்று தன்னிச்சையாக முடிவெடுப்பது பொருத்தமற்றது.
வாழ்வில் இடம்பெறும் சாவு, வாழ்வு, மற்றும் இன்பதுன்ப காரியங்களில் மனிதாபிமானத்தோடும் மன மொருமித்தும் சகல உதவி ஒத்தாசைகளையும் பரஸ்பரம் வழங்கி வருவதனால் முழுக்கிராமமுமே ஒரு குடும்பமாகப் பேணிவரும் ஒரு ஒற்றுமை இயல்பினை அவதானிக்க (Լplգեւյլb.
பண்டைய நாட்களில் தேவைப்படும்போது வீட்டுக்கு வீடு ஒலைவேய்தல், குடிசை அமைத்தல், சுவருக்கு களிகுத்துதல், கிணறுவெட்டுதல், துலா போடுதல், சாமிக்குச் செய்தல், விவாக நிச்சயார்த்தம் செய்தல், மணவினை முடித்தல், ருதுசாந்தி வைபவம் என்ற அனைத் துக் காரியங்களிலும் இன பந்துக்களும் அயலவர்களும் முழு அளவில் கலந்து கொண்டு வேண்டிய உதவி ஒத்தாசைகளை நல்கி, அனைவரும் அதில் பங்கேற்றுக் கொள்ளும் பக்குவ உணர்ச்சி செறிந்து இருந்தது. காலப் போக்கில் அவை நலிந்து குறைந்து போனாலும் இன்னும் முற்றாக அவை நீங்கிவிடவில்லை.
6. கலை, கலாசார உணர்வும் முதிர்ச்சியும்:
நினைவுக் கெட்டாத நீண்ட காலமிருந்தே ஆரையம்பதி மக்கள் கலை, கலாசார அறிவும் உணர்வும் நிரம்பப் பெற்றவர்கள் என்பது இப்பிரதேச மக்கள் நன்கறிவர் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே தென் இந்தியக் கலைஞர்களின் வருகையினால் இவர்களிடம் இலைமறை காயாயிருந்து வந்த கலைத்திறன் பரிணமிக்கத் தொடங்கியது. அக்காலத்திலே இந்த ஆரையம்பதி யூரி கந்தசுவாமி ஆலயத்தில் அரங்கேறாத நாட்டுக்கூத்தில்லை.

மேடை நாடகங்கள் இல்லை. ஆனால் மலினமான சின்ன மேளக் கச்சேரி, பாவைக்கூத்து, சர்க்கஸ் எதுவும் இங்கே இடம் பெறுதில்லை.
கலை அறிவு நிரம்பப் பெற்றவர்களால்தான் சீரிய கலைஞனை இனங்கண்டு வாழ்த்தவும் வரவேற்கவும் முடியும். கலை ஆர்வமும் அறிவும் இயல்பாகவே நிரம்பி இருந்தமையினால்தான் இந்தியக் கலைஞர்களை இம் மக்கள் அக்காலத்திலிருந்தே விரும்பி வரவழைத்தனர். ரசித்து மகிழ்ந்தனர். அதுமட்டுமல்ல இந்தியக் கலைஞர் களுடன் இணைந்து மேடையில் நாடகம் நடித்துப் பெருமை பெற்றவர்கள் கூட இங்கு இருந்திருக்கிறார்கள். அக்கால மேடை நாடகங்களில் நடிப்பவரே அவரது கதாபாத்திரத் திற்கான பாடலையும் பாடிநடிக்கவேண்டும். இதற்கு நல்ல குரல்வளமும் இசைஞானமும் வேண்டும். இத்தகைய பலப்பரீட்சை ஒன்றிலே இலக்கணச் சுத்தமின்றி கேள்வி ஞானத்தால் வந்த ஒருவரை இணைத்து நடித் தார்கள் என்றால் நமது கலைஞர்களின் திறமையை எவ்வாறு புகழ்வது?
கூத்தைப் பொறுத்தவரையில் இவ்வூர் மக்கள் முன்னணியில் நின்றவர்கள். இராமநாடகம், வாளவீமன் நாடகம், அலங்காரரூபன். அல்லிநாடகம், பப்பிரவாகன் நாடகம், வைகுந்தம், வள்ளி திருமணம், இலட்சுமி கல்யாணம் என்ற கூத்துக்கள் இன்றும் எம் ஊருக்கு நிறைந்த புகழை ஏற்படுத்தித் தருபவை.
1950க்குப் பிற்பட்ட காலப் பகுதியில் தான் இவ்வூர்க் கலைஞர்கள் மேடைநாடகங்கள், மெல்லிசைத் துறையில் புகழ்பெற்றனர். இங்குள்ள எழுத்தாளர் பலரது நாடகங்கள் ,கூத்துக்கள், இலக்கியப் படைப்புக்கள், தேசிய விருதுகளைப் பெற்று இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபனம் என்பவற்றாலும் பிரபல்யப்படுத்தப்பட்டன.
இவை தவிர “மகிடி’ என்ற ஒரு கேளிக்கை நிகழ்ச்சி, கோலாட்டம், கும்மி, குரவை, ஊஞ்சல், காடுகட்டி, கோடுகச்சேரி என்பனவும் சாதாரண கலைஞர்களின் கற்பனை, கலைநுட்பத்தினால் அவ்வப்போது மேடையேற்றப் பட்டு வருகின்றன.
இங்கு இடம் பெற்றுவந்த விளையாட்டுக்கள் என்ற வரிசையில் வார்அடித்தல், சில்லுக்கட்டைப் பந்து, சட்டிக்கோடு, கயிறுஇழுத்தல், சறுக்கு மரமேறல், தலை யணை அடித்தல் என்பவை முக்கியம் பெற்றவை. ஆனால் இன்று அவை கைவிடப்பட்டநிலையில் இளைஞர்களின் கவனம் கிரிக்கட், கைப்பந்தாட்டம், கால்பத்தாட்டம், போன்ற அந்நிய விளையாட்டுகளில் இலயித்து வட்ட மிட்டு வருகின்றது . இது காலத்தின் மாற்றம். இதில் தவறொன்றுமில்லை.
7.அருகிவரும் சில தனித்துவமான பழக்க வழக்கங்கள்.
இடத்திற்கிடம் ஊருக்கூர் மனிதர்கள் கடைப் பிடித்துவரும் அல்லது வெளிக்காட்டும் பழக்க வழக்கங்கள் சில வினோதமானவையாகவும் வேடிக்கையாகவும் கூட அமைந்து விடும். அவை அவர்கள் வாழந்து வரும் சூழலில் இயல்பாக ஏற்பட்டவை; அர்த்தமுள்ளவை!
61

Page 86
ஆரையம்பதியில் ஒருவரை இன்னொருவர் (உறவினர் அல்லாதவர்) நட்பு ரீதியில் விளித்து அழைக்கும் போது பொதுவாக "ஆளே” அல்லது “என்ன ஆளே” என்று குறிப்பிடுவதும் பதிலுக்கு மற்றயவரும் "என்ன ஆளே” என்று அழைப்பதுவும் உண்டு. இது அவ்வூரைச் சாராத பிறருக்கு வேடிக்கையாக இருக்கும். இதில் ஆழந்த அர்த்தம் உள்ளது. உலக வல்லரசுகளுள் ஒன்றாக இருந்த சோவியத் ருஸ்யாவின் சோசலிசமக்கள் அமைப்பில் ஒருவர் இன்னொருவரை அழைக்கும் பாணி இவ்வாறானது தான். "தவறிஸ்" என்பார் முதலவர். பதில் கூறுபவரும் "வரக் தவறிஸ்' என்று மொழிவர். “தவறிஸ்” என்றால் தோழர் என்ற பதம், ஆளே' என்பதும் அதே பான்மையில் அமைந்த உயர்மதிப்புச் சொற்பிரயோகம்தான்.
பாதையில் செல்லும் போது மற்றொருவர் எதிர் எதிராகச் சந்திக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். இருவருக்கும் இடையே அதிக நெருக்கமான உறவென்று இல்லை; அறிமுகம் அவ்வளவுதான். பேசுவதற்கும் வார்த்தைகள் இல்லை; அவசியமும் அவ்வளவாக இல்லை. கண்டதற்கு ஒரு மரியாதை செய்து கண்ணியப்படுத்தவும் வேண்டும். இதற்கு ஆரையம்பதி மக்கள் கண்டு பிடித்த யுக்தி. இருவரும் தமது தோளில் போட்டுக்கொண்டு செல்லும் சால்லை அல்லது சேட் கலரை சிறிது கைகளால் தூக்கி உயர்த்திப் பிடித்துவிட்டு செல்வார்கள். அது இருவருக்கும் ஒருவர் மற்றவரை கண்ணியப்படுத்தியதற்கான அடையாளச் செய்கையாக அமைந்துவிடும்.
பிள்ளை பிறந்துவிட்டது. அது ஒரு ஆண்குழவி. அப்பப்பா வீடே மகிழ்ச்சிக் கொண்டாட்டம், இனம் புரியாத ஒரு பூரிப்பு. அதன் எதிரொலி மூலையிலே சாய்த்து வைக்கப்பட்டிருந்த உலக்கையைத் தூக்கி மகவைப் பெற்ற தந்தையார் வீட்டுக்கு மேலால் வீசி எறிவார். வீரத்தின் வழிவந்த தமிழ் மகனல்லவா? அதனை விளக்க இப்படி ஒரு சம்பிரதாய வீரவேடிக்கை!
குழந்தை பிறந்த 31ம் நாள் முடிஇறக்கும் வைபவம். சைவசமயத்தின் இரண்டு பிரதான அம்சங்கள் ஆசௌசம் (துடக்கு) காப்பதும் அக்கினி பகவானுக்கு முதன்மை நிலை அளித்தலுமல்லவா? வீட்டைக் கழுவித் துடைத்து சுத்தம் செய்து இறை தரிசனம் பண்ணி முடி இறக்கியவுடன் இனபந்துக்கள் நண்பர்கள் சூழ்ந்து குழந்தையை அள்ளி அணைத்து முகமலர்ந்து பரிசளித்து மகிழும் அந்நாள் குடும்பத்தின் ஒரு இனிய நன்நாள். அன்று அன்புடன் அமுது சமைத்து அனைவருக்கும் அளித்து மகிழ்வர் குடும்பத்தினர். இதனை “மருங்கை” என அழைப்பர்.
விவாக சம்பந்தம் செய்வதில் கூட அதிக பாரம்பரிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை தற்போது வழக்கொழிந்து செல்கின்றனவெனினும் இன்னும் சில இடங்களில் ஜீவகளை பெற்றே வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல இழவு வீடு, ருதுவான சம்பவங்கள் என்று வேறும் பற்பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஆரையம்பதிக்கே இயல்பானவை யாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொதுவானவை யாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
62

8.சிறப்பான தமிழ் சொற்பிரயோகங்கள் சில
மொழிவளர்ச்சி என்பது அறிஞர்கள் எழுத்தா ளர்கள், புலவர்கள் என்ற குறிப்பிட்ட திறத்தாரால் இலக்கண இலக்கிய நோக்கில் மட்டுமல்ல; வாழ்வியலோடு இறுக்க மாகப் பின்னிப் பிணைந்து அனுபவரீதியாக ஏற்படும் உணர் வலைகளினாலும் புதிது புதிதான அர்த்த புஷ்டி நிறைந்த சொல்வளம் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுகிறது. இது கிராமிய மட்டத்தில் இருந்தாலும் சரி இலக்கிய மட்டத்தில் தோன்றினாலும் சரி பொருத்தமானதாக இருப்பின் அனுசரிக் கப்படவேண்டியதே.
ஆரையம்பதி மக்களும் நிறைந்த தமிழ் அபி மானம் கொண்டவர்கள். பேச்சிலும் மூச்சிலும் தாழ்விலும் வாழ்விலும் இன்பத்தமிழை இரசித்து மகிழ்பவர்கள். அவ்வப் போது இம்மக்களால் உபயோகப்படுத்தப்படும் சில தமிழ்ச் சொற்பதங்கள், பழமொழிகளை கீழே தருகிறேன்:
1. LDIT6) - மரம் அறுக்கும் இடம் நாவாய்கள்
வாடகைக்கு விடப்படும் இடம்.
2. பண் - உபகரணம் (தொழில்)
3. உவடு - நீரலைகள்
4. வெள்ளி - நட்சத்திரம்
5. கொல்லா - தோணிமிதந்து ஓடுவதற்காகஇணை
யாகக் கட்டப்படும் மரக்குற்றி.
6. விசாள் - கொல்லாவையும் தோணியையும்
இணைக்கும் இரு கம்புகள். 7. தப்புத்தண்ணிர்- ஆழமற்ற நீர் மட்டம் 8. அணியம் - முன்ஆசனம். இருப்பிடம் 9. நிலவுகிளம்புதல்- சந்திரன் உதயமாதல் 10. பாடுபோடுதல் - வீசுதல் 11. ஊடு - வீடு 12. உடுதல் - விடுதல் 13. ஊத்துக்குப் புறப்படுதல்
- காலைநேரத்தோடு வெளிக்கிடுதல் 14. எழுவான் வெளித்தல்
- கிழக்கு வெளித்தல்
15. வலித்தல் - ஒட்டுதல் (தோணிமுதலியன) 16. பாரணிக்கம் - மனதிற்குப் பிடித்த பெரியபொருள் 17. ஆனம் - சொதி
18. கந்தல் பார்த்ல்- ஆராய்தல் 19. வலைபொத்துதல்-அறுந்துபோனவற்றை முடிதல் 20. பம்பல் தீர்த்தல்- சரக்கை விற்று முடிவாக்கல் 21. குடல்கொதிச்சஆள்-இரக்க சிந்தை உடையவர் 22. 91(OBig Lib - splif QLib (Under Stream)
23. சவுப்பு - களைப்பு - மந்தநிலை 24. தத்தி - Ball Lib (Team) 25. வள்ளிசா - கறாராக - கண்ணியமாக 26. கெறு - LDLD605.
ஆரையம்பதி மக்கள் வாழ்வியல் பற்றி எழுதப்புகுந்தால் இங்கு வெளியிடப்படும் மலரில் இடம் போதாமல் இருக்கும். விடயங்கள் ஒரு தனிநூலாக வெளியிடப்படவேண்டிய அளவிற்கு தகவல்கள் விரியும். ஆகவே எனது அறிவிற்கும் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கும் அமைவாக இக்கட்டுரை யினைச் சுருக்கி இங்கு சமர்ப்பிக்கின்றேன். மண்ணின் மைந்தர்கள் தொகுதியில் இன்னும் எத்தனையோ பிரபல்யமுள்ளவர்களது பெயர்களை அடக்கமுடியாமல் போயிருப்பின் அதற்காக வருந்துவதோடு அத்தகைய தவறு கள் ஏதாவது நிகழ்ந்திருந்தால் வாசகர்களைப் பொறுத்து மன்னிக்கும்படியும் விநயமாகக் கேட்டுக்கொள்கிறேன்

Page 87
1.முன்னுரை
கலை என்னும் சொல்லுக்கு உடல், மொழி, மூச்சு, கல்வியறிவு என்றெல்லாம் பொருள் உண்டு. உடல் என்பது பிறப்பு, இருப்பிடம் என்பதையும், மொழி என்பது ରଥFIT6), பொருள், பாஷை என்பதையும் மூச்சு என்பது உயிர்ப்பு, பலம் என்பதையும் கல்வியறிவு என்பது கலை, வித்தை, அறிவு, உறுதி என்பதையும் குறிப்பிடுகின்றன.
ஒரு சமூகத்தின் நாகரீக (ஒழுக்கநெறி) வளர்ச்சியை வெளிப்படுத்தும் அற்புத சாதனமாகக் கலை அமைந்திருப்பதால் அச்சமூகத்தின் வேர்களைப் பற்றியும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது அவசியமெனக் கருதுகி றேன்.
மலர்களைப் பற்றியே சிந்திக்கமுடியாது கிளை கள் தறிந்து போகின்ற இன்றைய நிலையில் வேர்கள் பற்றிய அறிவு மிகமிக அவசியமாக - அதிகமாக இருக்க வேண்டுமென அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே அனைத்து உலகையும் ஒரே கிராமமாக நோக்கும் இன்றைய உலகில் இத்தகைய தேடல் அவசியமாகின்றது.
2. வேர்களுக்கான வேள்வி.
பிரித்தானிய சங்கம் என்னும் ஆராய்சிக்கழகத்
த. வரல கலைவலி ஆரையூர்
தலைவரான ஸர்ஜான் எலன்ஸ் என்னும் பெரியார் தமது தலைமையுரையிலே பின்வருமாறு கூறுகின்றார். “மனித சாதியாரின் தொட்டில் தென்னிந்தியாவாக இருக்கலாம். வடதிசை மக்களின் முன் னோரும் மத்தியதரைக் கடற் கரையிலுள்ள நாடுகளில் வாழ்ந்து வந்த மக்களின் முன்னோரும் முதலிலே இருந்து சென்ற இடம் தென்னிந்தியாவாக இருக்க லாம் என்று ஆராய்ச்சித் துறைகள் காட்டுகின்றன.
தமிழரது நாகரீகம் மிகமிகப்பழைமை வாய்ந்தது. உலக சரித்தி ரத்திலே தமிழரே முதன் முதலில் நாகரீக வாழ்க்கையெய்திய சாதியாரென்பதற்கும், கடல்கடந்து சென்று தமது நாகரீகத்தை பலப்பல நாடுகளிலும் பரப்பினார்கள் என்பதற்கும் வாணிகத் துறையிலும், கணித நூல் முதலிய நூற்றுறையிலும் வல்லுநராயிருந்தாரென் பதற்கும் பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
"இருக்கு வேத இந்தியா” எனும் நூலாசரியரிய ராகிய அவிநாஸ் சந்திரதாஸ் “சோழதேயம்" எனும் மொழிச் சிதைவே "சாலதேயம்" என்றும் அந்நாட்டில் சோழ குலத்தார் குடியேறியது இற்றைக்குப் பதினாயிரம்ஆண்டு
 

களுக்கு முன்னாதல் வேண்டும் என்றும் பல காரணங்காட்டி விளக்குகிறார். சாலதேய நாட்டுத் தலைநகர் ஊர் என்பதாகும். சாலதேயத்தார் சிரியஸ் விண்மீன் (SIRTUS) சூரியனோடு ஒருங்கு உதிப்பது 1480 ஆண்டுகளுக்கு ஒரு முறையாகு மென அறிந்து அக்கால எல்லையினை “ஒரு சோதி வட்டம்” என வழங்கினர். சோதிவட்டத்தினால் காலத்தைக் கணித்தறியும் முறையானது தமிழர் வேற்று நாட்டிற்குடியேறுவதற்கு முன்னே அவர்தம்மால் அறியப் பட்டிருந்த தென்பதற்கு சங்க மிருந்த கால எல்லைகளே சான்றுபகருகின்றன.
3. சிந்துவெளி நாகரீகம்
கத்தோலிக்க கிறிஸ்தவ சமயக் குரவரும் பம்பாய் நகர்ப் பல்கலைக்கழகத்துச் சரித்திர ஆராய்ச்சித் துறைத் தலைவருமாகிய வண.எச.ஹிராஸ் சுவாமியார் பழந்தமிழரது வரலாற்றினை நன்கு ஆராய்ந்து வெளியிட் டிருக்கிறார். சிந்து நதி தீரத்திலே முகிஞ்சதரோ (Mohenjadaro)என்னும் இடத்திலே பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன் நிலை பெற்றிருந்த நாகரீகத்தைக் குறித்து அவர் கூறும் முடிவு களில் ஒரு சிலவற்றை இங்கு தருவாம்.
முகிஞ்சதாரோ விளக்கமுற்றிருந்த காலத் திலே சிந்துநாடு (இந்தியா) ஆனது மீனாடு, பறவை நாடு, மரங்
கொத்திநாடு, ஏழ்நாடுஎனும் நாற்பிரிவு களாக இருந்தது. சிந்து நதியின் வலபுறத்திலிருந்த மீனாட்டிலே வாழ்ந்தோரது கொடியிலே இணை மீன்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந் நாட்டுத்தலைநகராகிய நண்ருர் என்பதே இப்பொழுது நிலத்தை யகழ்ந்து காணப்பட்ட முகிஞ்சதரோ (இறந்தோர் தரை) என்னும் இடமாகும். உடையூர், ஊரிலூர், எய்கையூர், மூணுர், (வடமொழியார் கூறும் திரிபுரம்) என்னும் நகர்களும் மீனாட்டிலிருந்தன. இங்கு வாழ்ந்தோர் சிவலிங்கத்தையும் மூவிலை வேலையும் வழிபட்டனர்.
சிந்து நதிக்கரையிலிருந்து மீனாட்டு நண்டுராகிய முகிஞ்சதரோவின் வரலாற்றையும் பழைய சுமேரிய வரலாற்றினையும் “குமரிக் கோடுங்கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயம்முதல் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன் வாழி’ எனும் சிலப்பதிகாரக் கூற்றையும் நாம் படிக்கும் போது தலைச்சங்கத்தின் இறுதிக் கடல் கோளின் பின் பாண்டியனது ஆட்டிசியிலிருந்த தமிழ் மக்களுள் ஒரு பகுதியார் கடல் கடந்து உலகின் பல பாகங்களுக்கும் சென்று குடியேறியிருக்கலாம் என எண்ண முடிகிறது.
63

Page 88
கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளும் அவற்றை வழங்கும் மக்களும் தமிழிலும், தமிழரிலும் இருந்து தோன்றிய காரணத்தினாலே பண்டையச் சரித்திரத் திலேயே திராவிட மென்பது தமிழையேயாம். ஆரியர் வருமுன் இந்தியா முழுவரும் பரவியிருந்தவர் தமிழரே. பலுச்சிஸ்தானத்தின் தெற்கே தமிழரின் கிளை மொழியாகிய பிராகு (BRAHU) இன்றும் நிலைத்திருக்கின்றது. பாரசீகத் தின் தென்பாகம் மெசொப்பொட்டேமியா, அராபியா, சீரியா, எகிப்து, ஆபிரிக்காவின் வடபாகம், கிரீட் (CRETE) கிரேக்க நாடு (யவனபுரம்) இத்தாலிய நாடு (உரோமபுரம்) ஸ்பெயின் நாடு, பிரித்தானியா நாடுகளிலெல்லாம் பழந்தமிழர் குடியேறி நாகரீகத்தைப் பரப்பி னார்கள். காடுகெடுத்து நாடாக்கலும் குளம் தொட்டு வளம் பெருக்கலும் தொன்று தொட்டுத் தமிழர்களுக்கு இயல் பாகிய செயல்களாகும். செங்கற் கட்டிடங்களை முதலிலே அமைத்தார்கள். கணித நூல், வானநூல், இணைநூல் என்னும் இவற்றிலே விசேஷத் திறமை படைத்திருந்தார்கள்.
4. சங்ககாலம்
பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கங்கள் நிறுவப்பட்டுத் தமிழ் வளம் பெற்றது. தலைச்சங்கம் (3 சோதி வட்டம் 3 x 1480) 4440 ஆண்டுகளும் இடைச் சங்கம் (2% சோதிவட்டம் 2%x1480) 3700 ஆண்டுகளும் கடைச்சங்கம் (1% சோதிவட்டம் 1%x 1480)1850 ஆண்டுகளும் நிலைபெற்றிருந்தன. தலைச்சங்கம் கடல் கோளினாலே அழிந்தது கி.மு.7000 ஆண்டளவில் இருக்கலாம். கடல் கோளுக்குப் பன்னூறாண்டுகளுக்குப் பின் கபாடபுரத்திலே இடைச்சங்கம் தொடங்கப்பட்டிருத்தல் வேண்டும். தலைச்சங்கம் இரீஇய பாண்டியர்கள் காய்சின வழுதி முதற்கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர், இடைச்சங்கம். இரீஇயனார் வெண்டேர்ச்செழியன் முதற் முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் இடைச் சங்கத்தின் இறுதியிலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது. கடல் கொள்ளப்பட்டுப் போதிருந்த முடத் திருமாறன் கடைச்சங்கத்தைத் தொடங்கினான். உக்கிரப் பெருவழுதி கால்திலே கடைச்சங்கம் ஒழிந்தது. இது கிறிஸ்துவின் பிறப்பிற்கு அணித்தான காலத்திலே நிகழ்ந்த தென எண்ண இடமுண்டு.
ஆங்கில மொழியினை “வேந்தன்மொழி” என அம்மொழிப்புலவர் விதந்து கூறுவர். யாமும் தமிழினை "பாண்டியன் தமிழ்" என்போம். எது தமிழ் என வினவுவாருக குப் "பாண்டியன் தமிழே தமிழ்” என்பதே விடையாகும். அதுவே நிலைபேறுடையது. அறிஞர் போற்றுதற்குரிய தமிழாகும்.
முத்தமிழுள் இயற்றமிழானது உண்மையினை
யும் இசைத்தமிழானது அழகினையும் நாடகத்தமிழானது செம்மை (நன்மை) யினையும் சிறப்புற வெளிப்படுத்திக் காட்டுவன.
பேருண்மையும், பேரழகும், வரம்பு கடந்த செம் மையும் இறைவனுக்குரிய குணங்களாகச் சமய நூல்களில்
64

கூறப்பட்டுள்ளன. இவைதம்மை வெளிப்படுத்தும் ஆற்ற லுள்ளமையினாலேதான் மொழிகள் தெய்வத்தன்மையுடை யனவாகக் கருதப்படுகின்றன. 5. கலைகள்
ஆயகலைகள் அறுபத்துநான்கு எனக் கூறப் பட்டுள்ளது. அறுபத்து நான்கு கலைகள் அகர இலக்கணம் (ஊர் அமைப்பு) முதல் அவித்தை (மாயை) ப் பிரயோகம் வர்ை உள்ளதாகும். மன்னருக்குரிய கலைகள் இவை, அந்தணருக்குரிய கலைகள் இவை, வணிகருக்குரிய கலைகள் இவை, வேளாளருக்குரிய கலைகள் இவை, மகளிருக்குரிய கலைகள் இவை, பொதுக்கலைகள் இவை என இவற்றுள் வேறுபாடுகள் உண்டு. இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், அணிகள் பற்றிய கலை, நவமணி இலக்கணம், நெய்யும்கலை, மாலை தொடுப்பது, சமையற் கலை, சோதிடம், நிமித்தம் (சகுனம், குறி பார்த்தல்) வானசாஸ்திரம், மருத்துவம், ஊர்அமைப்பு, கட்டிடக்கல்ை, கூபம் (கிணறு) அமைத்தல், காவல், கவடல் (தந்திரம்), கப்பல் தொழில் (வர்த்தகம்) அளவை முதலியவை இவை களில் முக்கியமானவை.
இவ்வுலகில் வழங்கும் கலைகளை பயன் கலை கள் என்றும் கவின் கலைகள் என்றும் பகுத்துக் கூறுவ துண்டு.
பயன்கன்லகளில் முதன்மை பெறுவது அகர இலக்கணம் (ஊர் அமைப்பு) ஆகும்.
6. ஆரையூர் ஆகிய ஆரையம்பதி எனும் பழம் பெரும்பதி.
ஆரையூரின் அகர இலக்கணத்தை நோக்கும் போது இவ்வூரின் தமிழறிஞருள் ஒருவரான பண்டிதர் செ.பூபாலபிள்ளை அவர்கள் அடிக்கடி பாடி மகிழும் Q905 செய்யுள் இங்கு முதற்கண் நோக்கற்பாலது.அந்தச் செய்யுள் இதோ: "ஆரையூர் மதுரை போலாம்
ஆனந்தக் கலையின் கூடல் -தேன் சோலையாம் உலக நாச்சி சோதியா யமைந்த மாட்சி”
இச்செய்யுளைப் படிக்கும்போது நமது கவனம் மதுரையம்பதியை நோக்கி விரைகின்றது. “இந்நிலவுலகு முழுவதையும் ஒரு குடைக்கீழ் அரசாண்ட்வன் பாண்டியன் என்று 'கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் பாடின்வத்துள்ளார் சேரநாட்டு இளவல் இளங்கோவடிகள்.
“கயல்ஸ்முதிய இமய நெற்றியின் அயல் எழுதிய புலியும் வில்லும் நாவலம் தண்பொழில் மன்னர் ஏவல் கேட்டிப் பார் அரசு ஆண்ட மாலை வெண்குடைப் பாண்டியன்.” (சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம்)
பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையம்பதி என்று சிறப்பித்துக் கூறப்படும் மதுரை.
கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் கிழக்கிலங்கையில்

Page 89
மண்முனைப் பிரதேசத்தை ஆட்சி செய்தவர் கலிங்கதேச மன்னர் குகசேனன் மகள் உலகநாச்சி. அக்காலத்தில் (இன்றும்) மண்முனைப் பிரதேசத்தின் தலைநகராக அமைந்திருந்தது ஆரையூர் எனும் ஆரையம்பதி.
மதுரையம்பதி தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், வளம் நிறைந்த முக்கிய வர்த்தக கேந்திரமாகவும் அமைந்திருந்ததாலும் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் நகரின் மத்தியில் அமைந்திருந்த தாலும் ஆரையம்பதியில் வாழ்ந்த முன்னோருக்கும், மதுரையைம்பதிக்கும் இடையே நெருங்கிய வர்த்தக கலாச்ாரத் தொடர்புகள் இருந்துள்ளன.
7.ஆரையம்பதி நகர அமைப்பும்,
வணிகத் தொடர்புகளும்:
கிழக்கே வங்காள விரிகுடாக்கடல் , மேற்கே கடல்ஏரி(வாவி) வடக்கே (தற்போது) காத்தான்குடி (ஆனால் ஆதியில் தற்போதுள்ள முகத்துவராம் வரை மண்முனைப் பிரதேச உலகநாச்சியின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாயிருந் ததென முன்னோர் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கின்றது) ஆரையம்பதி முகத்துவாரத் தெருவின் அந்தம் மண்முனைப் பிரதேசத்தின் முகப்பு ஆக இருந்திருக் கின்றது. இங்கு தீர்வைத்துறை என்றும் கிட்டங்கித் துறை என்றும் அழைக்கப்படும் கப்பல்துறை உளது. அக்காலத்தில் "உருக்கள்” என்று அழைக்கப்பட்ட பாய்க் கப்பல்கள் இந்தியாவிலும் பர்மாவிலும் இருந்து இத்தீர்வைத் துறைக்கு வந்து பொருட்கள் ஏற்றி இறக்கியுள்ளன. முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக தேங்காய், கொப்பறா, அரிசி, தவிடு, கயிறு என்பனவும் இறக்குமதிப் பொருட்களாக கொழுக்கிஒடு, வெங்கலச் சாமான் முதலி யனவும் இருந்துள்ளன. இறக்குமதிப் பொருட்களுக்கு இத்துறையில் வைத்து தர்வை (வரி) வசூலிக்கப்பட்டதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. இது கல்லடிப்பாலம் அமைக்கப்படுவதற்கு முன்னர் உள்ள நிலை. கல்லடிப் பாலம் 1924ல் அமைக்கப்பட்டது.
தீர்வைத்துறை அமைந்திருந்த பகுதிகளில் பல கிட்டங்கிகளும் (களஞ்சியம், பண்டகசாலை) கடைத் தொடர்களும் செயல்பட்டுள்ளன. தீர்வைத்துறையின் முன்னால் ஓர் பிரசித்த சந்தை அமைந்திருந்தது. நாள் முழுவதும் இயங்கக் கூடியதாக பிரபல்யம் பெற்றிருந்த இச்சந்தையிலும் கடைகளிலும் பலரகப் பாவனைப் பொருட்களும் பெறக்கூடியதாக இருந்தது. இக்கடைத் தெருவில் இருந்த "அன்னராசன்” புத்தநிலையம் புகழ் பெற்றது. இங்கிருந்த கிட்டங்கிகளில் தேங்காயும் நெல்லும் சேமித்து வைக்கப்பட்டு வருடம் பூராவும் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டன. தேங்காயும் கொப்பறாவும் அரிசிமுடைகளும் தவிடு மூடைகளும் கப்பல்களில் இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல்வயல் களுக்கும் தென்னந்தோட்டங்களுக்கும் சொந்தக்காரரான பெருஞ்செல்வந்தர்கள் இங்கு வாழ்ந்தனர். கரைவாகுப் பகுதியிலுமம் (கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்

சேனை முதலிய பிரதேசங்கள்) படுவான்கரையிலும் இருந்த இவர்களின் நெற்காணிகளிலும் தென்னந்தோட்டங்களிலு மிருந்து எராளமான நெல்மூடைகளும் தேங்காய்களும் பதினைந்து இருபது இரட்டை மாட்டு வண்டிகளில் இரவும் பகலும் சாரி சாரியாக இப்பகுதிக்கு வந்து சேரும், படுவான் கரையிலிருந்து வள்ளங்களில் நூற்றுக்கணக்கான நெல் மூடைகள் இங்கு வந்து சேரும். புகழ் பெற்ற செல்வந்தர் களாக க. கணபதிப்பிள்ளை போடியார் (புள்ளார்) தசின்னத் தம்பி போடியார்(த.சி) முன்னாள் கிராமசபை அக்கிராசனர் ப.க.சுப்பிரமணியம் (பூபாலபிள்ளைப் போடியார்) இவரால் நன்கொடை செய்யப்பட்ட காணயில் நிறுவப்பட் டிருக்கும் ப.க.சுப்பிரமணியம் வித்தியாலயம் நினைவு கூரத்தக்கது) சி.கணபதிப்பிள்ளை போடியார். நொத்தாரிஸ் மூத்ததம்பி (இவரால் நன்கொடை செய்யப்பட்ட காணியில் நிறுவப்பட்டிருக்கும் நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயம் நினைவு கூரத்தக்கது) அடுத்து குறிப்பிடத்தக்கது சிவமணி வித்தியாலயம். இவ்வித்தியாலய அமைவிடத்தை நன்கொடை செய்தவர் செல்லத்தம்பி சிவமணி என்பவர். அவர் பெரும் செல்வந்தர் அல்லாவிடினும் அவர் செய்த சீரினால் ஆரையூர் சிறப்புப் பெறுகின்றது. மற்றவருக்கு முன்மாதிரியான இவர்செயல் இங்கு வாழ்வோர் அனை வரதும் போற்றுதற்குரியதாகும்.வ.இளையதம்பிப்போடியார், சின்னத்தம்பி (சின்னவாத்தியார்) காசிநாத உடையார் மாரிமுத்துப் போடியார், அருணகிரி, சுப்பிரிண்டன் வேலுப் பிள்ளை, போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேற்படி முகத்துவாரத்தெருத் தீர்வை துறையின் மாட்சியை பண்டைய காலங்களில் இப்பிரதேசத்தில் பாடப் பட்டுவந்த ஓர் ஊஞ்சல்பாடல் ஞாபகமூட்டுகின்றது.
இதோ பாடல்:
“அதிமுருகு திரிகயிறு கொப்பரை தேங்காய் அரிவேம்பு அரிசிதவிடெண்ணெய்யாம் பொருட்கள் ஆறுமுகச் சாமியார் அருள்கொண்டு வாழ்த்த பன்னிரெண்டு கப்பலிலும் பாய்மரம் கட்டி போகுதாம் கப்பல்கள் பெரியதுறை பார்க்க பொங்கிப்படைத்திங்கு பூசனைகள் செய்வோம்” தனன தன தனன தன தனன தன தனனா தனனா தனா தந்தநா தந்த நானா (அதிமுருகு - அதிகதேன், திரிகயிறு -முறுக்குக் கயிறு, அரிவேம்பு- வேப்பமரப் பலகை, பெரியதுறை - தமிழ்த்துறை முகம் (கொற்கை)
8. சிறுதொழில்கள்.
அக்கால ஆரையம்பதியில் தும்புத்தொழில் ஓர் குடிசைக்கைத்தொழிலாக வீடுகளில் பேணப்பட்டு வந்தது. 1930ம் ஆண்டளவில் ஆரையம்பதி 4ம் கட்டையடியில் ஒரு தென்னம்தும்பு ஆலையும் பயிற்சிப் பாடசாலையும் இயங்கியுள்ளது. ஜோர்ஜ் எனும் மலையாளத்து ஆசிரியர் ஒருவர் தும்புத் தொழில் நவீன முறைப்பயிற்சிகள் அளித்துள்ளார். பிற்காலத்தில் நாட்டின் பல பாகங்களிலும் இயங்கிய தும்புத்தொழில் பயிற்சி பாடசாலைகளில்
65

Page 90
ஆசிரியர் களாகப் பணியாற்றிய கணபதிப்பிள்ளை சாமித்தம்பி, காத்தமுத்து தம்பிப்பிள்ளை போன்றோர் இப் unless)6) DIT600T6fesortsT6).
தேங்காய் எண்ணெய் தயாரித்தலும்இங்கு முக்கிய வர்த்தகத் தொழிலாக இருந்துள்ளது. ஆரையம் பதியில் ஐந்து செக்குகள் (எண்ணெய் ஆட்டும் எந்திரம்) இயங்கியுள்ளது. நாகப்பர் சீனித்தம்பி, சாமித்தம்பி காத்த முத்து என்போர் இந்த எண்ணெய் நிலையங்களை நிர்வகித்தனர். சின்னச்சாமி என்பவர் இவைகளை மேற்பார்வை செய்து இயக்குவித்தார் (1925ன் முன்னால்)
ஆற்றங்கரையில் இரண்டு பிரசித்தி பெற்ற மரமால்கள் இருந்துள்ளன. இவற்றிலிருந்து ஏராளமான பலரக மரப்பலகைகளும் கட்டடப்பொருட்களும் வீட்டுப் பாவனை பொருட்களும் தயாரிக்கப்பட்டன. இங்கு வைத்து தோணிகளும் வள்ளங்களும் அமைக்கப்பட்டன.
மோட்டார் போக்குவரத்து இல்லாத அக்காலத் தில் கடல்ஏரி (வாவி) வழியாகத்தான் மக்கள் பிற இடங் களுக்குப் பிரயாணம் செய்தனர். இப்படியாக பிரயாணம் செய்வதற்கும் பொருட்கள் கொண்டு வருவதற்கும் கடல் படு திரவியங்களை எடுப்பதற்கும் தோணிகளும் வள்ளங் களும் பயன்படுத்தப்பட்டன. இதற்காக இங்கு புளியடித் தோணித்துறை, ஆலடித் தோணித்துறை, தீர்வைத்துறை எனும் துறைகள் பயன்படுத்தப்பட்டன.
தீர்வைத் துறையின் தென்பால் ஆற்றங்கரையை அடுத்து"கல்வீட்டுத்திண்ணையடி" என்னும் பெயரில் ஒரு சாலை செல்கின்றது. இச்சாலையின் இருமருங்கிலும் சுற்று மதிலால் சூழப்பட்ட பல பாரிய வீடுகள் அமைந்திருந்தன. அவ்வீடுகளில் இப்பகுதியில் வாழ்ந்த செல்வந்தர்களும் அறிஞர்களும் சான்றோர்களும் வாசஞ்செய்தனர். இங்கு "ஆரை” எனும் சொல்லுக்கு "மதில்” என்றும் பொருள் கூறப்படுவது கவனிக்கத்தக்கதாகும்.
9.எட்டுப்பிரிவுகள்:
. பெரும்நிலப்பரப்பையுடைய ஆரையம்பதியில் கடல்ஏரியை (வாவி) அடுத்துள்ள பெரும்நிலப்பரப்பு எட்டுப் பிரிவுகளாக வகுக்கப்பட்டு எட்டு வகுப்பார் இங்கு வாசஞ் செய்தனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள். இவர்கள் அனைவரும் இங்கு ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் வளமோடும் வாழந்ததால் ‘ஆரையூர் அஷ்டலட்சுமிகள் உறையூர் எனச்சிறப்புற்றிருந்தது. இந்த எட்டுப் பிரிவுகளில்பெரும் பிரிவு முகத்துவாரத்தெரு, நடுத்தெரு, ஆரைப்பற்றைத் தெரு என மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகள் மூன்றிலும் குருகுலத் தைச் சார்ந்தவர்கள் (குருகுலம்- பாரதர். கெளரவ பாண்ட வர்கள் குலம்) வாசஞ்செய்தனர்.
வடக்கிலிருந்து தெற்குநோக்கி குருகுலத் தவர்கள் வாசஞ்செய்த பகுதியின் கிழக்கு எல்லையில் பொற்தொழிலாளரும் அதற்கு அணித்தாக பணிக்கரும் (இவர்கள் வாசஞ்செய்த பகுதியை அடுத்து “ஆனைக்
66

குளம்" என்று அழைக்கப்பட்ட ஒரு பெரிய குளம் இருந்தது. தற்போது தூர்ந்து போயுள்ளது. இக்குளத்தில் யானைகள் குளிப்பாட்டப்பட்டதாகவும் பணிக்கரின் முன்னோரில் சிலர் யானைப்பாகர்களாகவும் சிலர் கூத்துக்கலை பயிற்றுனர் களாகவும் சிலர் வைத்தியர்களாகவும் பணிபுரிந்ததாக அறியக்கூடியதாக இருக்கின்றது) அடுத்து செங்குந்தரும் (நெசவுத்தொழில் புரிவோர்) அடுத்து வண்ணாரும் (ஏகாலி) அடுத்து நாவிதரும் அடுத்து பறையரும் (இவர்களில் சிலர் செய்தி அறிவிப்பாளர் களாகவும் சிலர் நிலத்தில் பெரும் குழியமைத்து (மர அரிவைத் தொழிலாளர் பயன்படுத்தும் மடுவம் போல்) அதற்குள்ளிருந்து நெசவு செய்ததாக அறியக்கூடியதாக இருக்கின்றது) அடுத்து வேளாளரும் ஒரு ஒழுங்கமைப்பில் வாசஞ்செய்தனர். ஒவ்வொரு பிரிவாரும் வாசஞ்செய்த பகுதிகள் அப்பிரிவாரின் பெருடன் "தெரு’ எனும் சொல்லும் சேர்ந்ததாக அழைக்கப்பட்டது. (உ-ம்) வேளாளர் தெரு.
"சிலப்பதிகாரம்’ ஒரு வரலாற்று இலக்கியம் எனக் கொள்ளப்படுவதால் சிலப்பதிகாரத்தில் சொல்லப் படுகின்ற மதுரையம்பதியின் வீதியமைப்புகளான அங்காடி வீதி (கடைத்தெருவீதி) பொன்கடைத்தெரு (பொன்தொழி லாளர் வீதி - தட்டாரதெரு) அறுவை வீதி (சீலை, ஆடை தயாரிப்போர் வாழும் வீதி - செங்குந்தர் வீதி) கூலவீதி (கூலம் - ஆற்றங்கரை - ஆற்றங்கரை வீதி) போன்ற வீதியமைப்பு ஒழுங்கை ஆரையம்பதியிலும் காணக் கூடியதாக இருக்கின்றது.
10. ஆலயங்கள்
ஒவ்வொரு பிரிவிலும் வதிவோரின் வழிபாட்டுக் காக அவ்வப் பிரிவுகளில் அவ்வப்பிரிவு மக்களால் தனித் தனியாக ஆலயங்கள் நிறுவப்பட்டன. வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. ஆரையூரில் மத்தியில் அமைந்துள்ள புராதன ஆலயங்களாக றி கந்தசுவாமி ஆலயமும் பூரீ கண்ணகை அம்மன் ஆலயமும் பண்டைய பெருஞ்சிறப் போடு விளங்குகின்றன. இவ்வாலயங்களில் இவ்வூரில் வாழ்கின்ற அனைத்து பிரிவு மக்களும் வெளியூர்களிலிருந்து வருகின்ற மக்களும் எவ்விதத்தடைகளுமின்றி வழிபாடு செய்கின்றனர்.
அதேபோன்று இப்பிரிவுகளிலுள்ள ஆலயங்களின் விசேட வருடாந்த உற்சவங்களில் போதும் இங்குவதியும் அனைத்துப் பிரிவுகளிலுள்ள மக்களும் சென்று வழிபாடுகள் செய்கின்றனர். ஆரையம்பதி ரீ மாரியம்மன் வீதி ஆரம்பத் திலுள்ள 'மதுரைவிரன் ஆலயம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரையம்பதி பிரதான நெடுஞ்சாலையின் கிழக்கே கடற்கரை வரை பரந்துள்ள செல்வா நகர் குடியேற்றப் பகுதியில் இருக்கும் சிவன் ஆலயம் പ്രങ്ങഥ வாய்ந்த ஆலயமாகும். ஆரம்பத்தில் சிறுகோயிலான இருந்து பின்னர் புனருத்தாரணம் செய்யப்பட்டு பிரகாசமாக விளங்குகின்றது. அதே போன்று செல்வாநகர் கிழக்கில் அமைந்துள்ள பூரீ பத்திரகாளியம்மன் ஆலயமும் கவர்ச்சி கரமான கட்டட அமைப்புகளுடன் பக்தர்களை ஈர்க்கின்றது.
தற்போது ஆரையம்பதியிலுள்ள ஆலயங்களின்

Page 91
எண்ணிக்கை 27 ஆகும். ஒவ்வொரு ஆலயத்திலும் ஒழுங்காக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தெய்வ நம்பிக்கையில் அசைக்கமுடியாத பற்றுவைத்திருக்கின்ற இவ்வூர்மக்களின் வாழ்வுக்கும் வளத்துக்கும் இவ்வரிலயங் களின் வழிபாடு தெய்வங்கள் பேரருள் புரிகின்ற பாங்கு நம் நெஞ்சத்தை நெகிழவைக்கின்றன.
“ஒருவனே தேவன்” என்றிருந்தாலும் உலகினர் தத்தம் கொள்கைகளுக்கும் மனநிலைகளுக்கும் ஏற்ப அவனைப் பற்பல உருவிலும் வடிவிலும் சுட்டிப் பேசுவது போல் ஒரே சிலப்பதிகாரப்பெருநூலும் காலத்தையும் கணக்கிற்ற வாதப் பிரதிவாதங்களையும் கடந்து அனைவர் உள்ள்ங்களிலும் அவரவர் விரும்பி ஏற்கும் செவ்வியுடன் அமைவது இன்பம் நல்கின்றது என்று சிலப்பதிகார உரை யாசிரியருள் ஒருவரான புலியூர் கேசிகன் கூறியது போல மதுரையம்பதியின் வடபால் அமைந்து வளம் பெருக்கும் வற்றாத ஜீவநதியான காவேரி நதியை இளங்கோவடிகள் வாழ்த்தியது போல் ஆரையம்பதிக்கு அணிசேர்க்கும் கடல் ஏரியை (வாவி) நாமும் இப்படி வாழ்த்தி மகிழலாம்.
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை - அதுபோர்த்துக் கருங்கயல் கண்விழித்து - ஒல்லி நடந்தாய் வாழி கடலேரி கருங்கயல் கண்விழித்து - ஒல்லி நடந்த எல்லாம் நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி கடலேரி.
பொய்யாமொழிப்புலவர் திருவண்ணாமலை நாட்டிற்குக் கூறிய இலக்கணத்துள்
“தள்ளா விளையுளுந் தக்காருங் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு” "பிணியின்மை, செல்வம், விளைவின்ப மேமம் அணியென்ப நாட்டிறகிவ்வைந்து"
என்பவையும் ஐந்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியில் ஆசிரியர் நாட்டு வளம் கூறும்போது “காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகினெற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடை கீறி வருக்கை போழ்ந்து தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும் ஏமாங்கத மென்றிசையாற்றிசை போய துண்டே'
சங்க இலக்கியப் பாடல்கள் பண்டைய ஆரையூருக்கு (ஆரையம்பதி) மிகமிகப் பொருத்தமாக அமைந்திருப்பது இங்கு நினைவு கூரத்தக்கதாகும். 11. மற்றும் பயன் கலைகள்
பயன்கலைகளில் ஊர் அமைப்பு, வர்த்தகம் என்பவை மேலே விளக்கப்பட்டுள்ளன. அடுத்து கட்டடக்கலை கூபம் (கிணறு) அமைத்தல், நெய்யுங்கலை,
தச்சுத்தொழிற்கலை, தையற்கலை, தும்புத் தொழிற் கைப்பணியகம், வலைபின்னல், சணல் கயிறு திரித்தல்,

மாலை தொடுத்தல், சமையற்கலை, சோதிடக்கலை, நிமித்தம் (சகுனம், குறி) பார்த்தல், மருத்துவம், கவடல் (தந்திரம்) கலை, அளவை, பிரம்புக்கைத்தொழிற்கலை, மனையடி சாஸ்திரக்கலை, உடற்பயிற்சிக்கலை (சாண்டோ) என்பன ஆரையம்பதிப் பிரதேச பிரசித்த கலைகளாக இருந்த பயன்கலைகளாகும். இக்கட்டுரையின் சுருக்கம் கருதி அவற்றுள் சிலவற்றை இங்கு தருகின்றோம்.
“மண்ணைத்தோண்டித் தண்ணிர் எடுப்பதுதான் உலகவழக்கு ஆனால் இங்கு மரத்தைத் தோண்டித் தண்ணீர் எடுக்கும் அதிசயத்தைக் கண்டேன்”என்று வியந்தாராம் போத்துக்கீச அதிகாரி ஒருவர். ஆம் அக் காலத்தில் இப்பகுதியில் மரக்கொட்டுக் கிணறுகள் பாவனை யில் இருந்துள்ளன. தேத்தா மரத்தைக் குடைந்து செய்யப் பட்ட கொட்டுகள் பதிக்கப்பட்டு கிணறுகள் அமைக்கப் பட்டன. இவற்றில் இருந்து பெறும் நீர் எப்பொழுதும் குளிர்மையாக இருக்கும். தேத்தா மரத்தினாலான கொட்டுக் களும் நீண்ட காலம் பாவிக்கக் கூடியதாக இருக்கும். 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில தேத்தா மரத்தினாலான கொட்டுக் கிணறுகள் சிலவற்றை இன்றும் இப்பகுதியில் காணலாம். அதுபோல் தண்ணீர் அள்ளுவதற்கு பாவிக்கும் கிணற்று வாளி மதுரை மரத்தைக் குடைந்து செய்யப் பட்டதாக இருக்கும். இத்தகைய வாளியைப் "பட்டை” என்று அழைப்பர்.
12. மந்தரக்கலை
"மட்டக்களப்பார் மந்திரத்தால் மாங்காய் விழச் செய்வர்” என்று இன்றும் சிலர் கூறுவர். இதை வெறும் புழுகுப் புராணம் என நாம் நினைத்திருந்தோம். ஆனால் அக்காலத்தில் (1920 க்கு முன்னர்) ஆரையம்பதி ரீ கந்த சுவாமி கோயில் வீதியில் சித்திரை வருடக் கொண்டாட்ட காலங்களில் பெருந்திரளான மக்கள் மத்தியில் மாங்கொட்டையை நட்டு அதற்கு நீர் ஊற்றி சில மணித்தியாலங்களில் அது மரமாக வளர்ந்து பூத்துக் காய்த்து பழுத்து அந்தப் பழத்தை பறித்துப் பார்வையாளர் களுக்குச் சுவைக்கக் கொடுத்த விந்தை செய்துள்ளனர். இவ்வித்தையில் கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை (சின்னம்மா கந்தர்) வயிரமுத்து இராசையா (மேசன்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1972.07.18ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் கிராமிய இசை ஆராய்ச்சிப் பிரிவால் மட். அரச அதிபரின் தலைமையில் மட். பிரதேச கலாமன்றத் தின் அனுசரணையுடன் ஆரையம்பதி மகாவித்தியாலய மண்டபத்தில் வைத்து வடமோடி தென்மோடிக் கூத்துப் பாடல்கள், வசந்தன், கரகம், கொம்புமுறி, காவடி, ஊஞ்சல், தாலாட்டு, கும்மி, பொலி, கவி, காவியம் முதலிய கிராமிய பாரம்பரிய இசைவடிவங்கள் தாள வாத்திய இசையுடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஆரையம்பதியின் புகழ் பூத்த கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். "அன்புமணி’, "ஆரையூர் இளவல்", "ஆரையூர் அமரன்", "மூனாக்கானா” ஆகியோர் மேற்படி நிகழ்வுகளை நெறிப்படுத்தினர்.
67

Page 92
13.கவின்கலைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூத்து, நாடகம், கிராமியக் கலைகள் முதலியவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு கிராமம் ஆரையம்பதி ஆகும்.
கூத்துக்கலையின் தொட்டிலான இவ்வூரில் பார்ஸிகள் மூலம் மட்டக்களப்புக்கு அறிமுகமான விலாச நாடகங்கள் ஆரை யம்பதியிலேயே தொடர்ந்து இடம் பெற்றன.
மட்டக்களப்பில் பல நாடகசபாக்கள் தோன்றி விலாச நாடகங்களை அரங்கேற்றியதைத் தொடர்ந்து ஆரையம்பதி யிலும் இவ்வகை நாடகங்கள் அரங்கேறின. அவற்றுக்குச் சமாந்தரமாக கூத்துக்களும் அரங்கேறின. அந்தவகையில் கூத்துக்கலையையும் நாடக்கலையும் ஒருங்கே பேணிய பெருமை ஆரையம்பதிக்குரியதாகும்.
14. கூத்துக்கலை
கவின்கலைகளில் பாரம்பரிய பிரதேசக் கலை யாக கூத்துக்கலை முதலிடம் வகிக்கின்றது. வடமோடி, தென்மோடி எனும் இருவகைப பாங்குகளில் ஆடப்பட்டுவரும் இக்கலையில் பன்னூறு ஆண்டுகளாக இப்பிரதேசம் சிறப் புற்று விளங்குகின்றது. மனித வாழ்வியலிலே பண்பாட்டுச் சிறப்பு இயல்புகளை வளர்த்த பெருமை இக்கூத்துக் கலைக்கே உரியதாகும். பண்டைய இசை மரபுகளுடனும் தாளலயத்துடனும் இனிமையான குரல் வளமுடைய கூத்துப் பாத்திரங்கள் பாடி ஆடும் போது மக்கள் தங்களை மறந்த நிலையில் ஆனந்தக் களிப்பில் ஆழ்ந்துவிடுகின்றனர்.' இதனால் கூத்துக்கலைஞர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கினர். கூத்துக் கலைஞர்கள் அவர்கள் ஆடிய கூத்துப்பாத்திரத்தின் பெயரிலேயே மக்களால் அழைக்கப்பட்டனர். அந்த வகையில் இன்றும் மக்கள் மனதில் பசுமையாகப்பதிந்திருக்கின்ற சில பெயர் களை இங்கு நினைவு கூர்வது சிறப்புடையதாகும்.
இராமர் காசுபதி,அல்லி சீனித்தம்பி, அல்லி நல்லதம்பி, சயிந்தவன் கதிராமத்தம்பி, வீமன் சீனித்தம்பி, சீதை தம்பியப்பா, அருச்சுனன் குழந்தை வேல், சுபத்திரை செல்லத்தம்பி, சுபத்திரை இளையதம்பி, கடோத்கஜன் பொன்னையா, திரெளபதி வெள்ளத்தம்பி, மதனன் தம்பியப்பா, பப்பரவாகன் நல்லதம்பி, விறகு தலையன் தம்பிராசா, கிருஷ்ணர் கந்தப்பர், அழகவல்லி, சங்கரப் பிள்ளை, அலங்காரரூபி தம்பிராசா, அலங்காரரூபன் தம்பிப் பிள்ளை, ஜெகதனையாளி கோபாலன், செட்டி கணபதிப் பிள்ளை, குருநாதர் காசுபதி, இவர்களால் கூத்துக" கலை சிறப்படைந்தது என்பது உண்மை. வெறும் புகழ்சியல்ல. மட்டக்களப்பு நாட்டுக் கூத்தின் மகிமையை நாடளாவிய ரீதியில் உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர் களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கலாமேதை பண்டிதர் செல்லப்பா பூபாலபிள்ளை (ஆரையம்பதி) அவர்களையே சார்ந்ததாகும். 1949.02.04ல் கொழும்பு மாநகரில் இடம் பெற்ற இலங்கை சுதந்திரதின ஓராண்டுப் பூர்த்தி விழாவின போது ஆரையம்பதி கலைஞர்களால் ஆடப்பட்ட "சுபத்திரா
68

கல்யாணம்" வடமோடி நாட்டுக் கூத்து கிழக்கிலங்கைத் தமிழ் மக்களின் புராதன பாரம்பரியக் கலைவடிவமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்விழாக் கலைநிகழ்ச்சிகளின் போது இடம் பெற்றுப் பாராட்டுப்பெற்றது. அவ்வாறே ஆரையம்பதி கலைஞர்களால் ஆடப்பட்ட புகழ்பெற்ற தென்மோடிக் கூத்தான ‘அலங்கார ரூபன்’ எனும் கூத்து 1952ல் கொழும்பு மாநகரில் பண்டிதர் செ.பூபாலபிள்ளை அவர்கள் தலைமையல் மேடையேற்றப்பட்டுபாராட்டுப் பெற்றது.
மட்டுநகர் இளங்கதிர் நாடகமன்றத்தினாலும் (கட்டுரை ஆசிரியர் மேற்படி மன்றின் ஸ்தாபகராக இருந்து செயலாற்றியவர்) ஆரையம்பதிக் கவின்கலை மன்றத்தி னாலும்("அன்புமணி இம்மன்றத்தின் ஸ்தாபகராகவிருந்து செயலாற்றியவர்) ஆடப்பட்ட "அலங்கார ரூபன் தென்மோடி நாட்டுக் கூத்து 1972.10.17, 1980.10.04 ஆகிய தினங்களில் மட்டுநகரில் நடைபெற்ற கூத்துப் போட்டிகளில் பங்கு பற்றி முதற்பரிசுகள் பெற்றன. இக்கூத்தில் ‘அலங்கார ரூபி' பாத்திரத்தில் ஆடி ஆரையம்பதிக்கு பெருமை சேர்த்த முதற்பெண்மணி திருமதி தங்கம்மா சந்திரசேகரம் ஆசிரியை
ஆவார்.
1987.08.03ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினால் எமது இல்லத்தில் (தவபதி) வைத்து "அலங்கர ரூபன்’ தென்மோடி, ‘சுபத்திரா கல்யாணம்" வடமோடிக் கூத்துப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. மு.கணபதிப்பிள்ளை (கவிஞர் மூனாக்கானா), ஆரையூர் இளவல், அன்புமணி, திருமதி தங்கம்மா சந்திரசேகரம், திருமதி தவமணிதேவி செல்லத்தம்பி, செல்வி.கீதாஞ்சலி ஆறுமுகம் ஆகியோரால் பாடப்பட்ட ‘சுபத்திரா கல்யாணம்” வடமோடி நாட்டுக்கூத்து 1987,09,05, 1987.09.12, 1987.10.10, 1987.10.17, 1989.09.09, 1989.09.16 ஆகிய தினங்களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு அறிஞர் களின் பாராட்டுப்பெற்றது. “அலங்கார ரூபன்’, ‘சுபத்திரா கல்யாணம்’ ஆகிய இரு மோடிக் கூத்துக்களுக்கும் மத்தளக் கலைஞர் அமரர்.காசுபதி சாமித்தம்பி மத்தளம் வாசித்தார். சிறந்த கூத்துக்கலைஞரான இவர் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களுக்கு மத்தளம் வாசிப்பதில் புகழ் பெற்றவர்.
அன்புமணி, ஆரையூர் இளவல், மூனாக்கானா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட "அலங்கார ரூபன்’ தென்மோடிக் கூத்துப் பாடல் ஒலிப்பேழை கனடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இலக்கியமணி கதா.செல்வ ராஜகோபால் அவர்களால் மட்டுநகர் கலைஞர்களைக் கொண்டு ஆடப்பட்டுக் கசெற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரையம்பதியின் புகழ்பெற்ற வடமோடிக்கூத்துக் கலைஞர் எஸ்.குழந்தைவேல் (அருச்சுனன் . சுபத்திரா கல்யாணம்) அவர்கள் ஆரையூர் இளவலின் தலைமையில் இயங்கிய ஆரையம்பதி 1ம் பிரிவுக் கிராமோதய சபையால் 1982.1231ல் "வெள்ளிக்கமல விருது’ வழங்கிக் கெளரவிக் கப்பட்டுள்ளார்.

Page 93
15.கூத்துக்கலை அண்ணாவிமாரும் மத்தளக் கலைஞர்களும் பிறரும்
பத்னெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ஆரையம்பதியில் ஆடப் பட்ட வடமோடிக் கூத்துக்களை அண்ணாவிமார்களான வைத்தியரும் ரீமாரியம்மன் ஆலய பூசகரும், மந்திரவாதியு மான ஆரையம்பதியைச் சேர்ந்த க.பொன்னம்பலம் அவர்களும் ஆரையம்பதியைச் சேர்ந்தவர்களான நா.நல்லதம்பி, இராமர் காசுபதி, மு.கணபதிப்பிள்ளை (அதிபர்) த.நல்லலிங்கம், (அதிபர்) ஆகியோரும் இன்னும் சிலரும், மத்தளக்கலைஞர்களான சீசெல்லையா ஜே.பி. கா.சாமித்தம்பி, க.இராசையா ஆசிரியர், ந.இராசரெத்தினம் ஆசிரியர், க.கோணலிங்கம், க.பூபாலபிள்ளை மேலும் சிலரின் உதவியுடனும் தென்மோடிக் கூத்துக்களை
க.கணபதிப்பிள்ளை(விசிறி), சீபொன்னையா, ப.தம்பிராசா,
நா.கோபாலன் ஜே.பி.மு.கணபதிப்பிள்ளை (அதிபர்) ஆகியோரும் மேலும் சிலரும் மத்தளக் கலைஞர்களான மு.இளையதம்பி, கா.சாமித்தம்பி, சி.இரத்தினசிங்கம், க.செல்லத்தம்பி, க.கோணலிங்கம், கதம்பிராசா (ஒவசியர்) மேலும் சிலரின் உதவியுடன் பழக்கி மேடையேற்றினர்.
கூத்து பாத்திரங்களுக்குப் பொருத்தமான ஆடை அணிகள் தயாரிப்பவர்களை "மேஸ்திரி' என அழைப்பர். இவர்கள் தலைக்கிரீடம், மார்புக்கவசம், கைப்பட்டிகள், கத்தாக்கு உடை, கரப்புஉடை (தென்மோடிக் கூத்தர்கள் அணிவது) பூமுடி, வில்,வாள், கட்டாரி, தண்டாயுதம், தேர், யானை, குதிரை, மயில் முதலியவைகளை மிக அழகாக வடிவமைப்பர். இவ்வாறு புகழ்பெற்ற மேஸ்திரியான ஆரையம்பதியைச் சேர்ந்த க.சின்னத்தம்பி (இவரால் நச்சு மரத்தினாலும் கண்ணாடித் துண்டுகளாலும் வடிவமைக்கப் பட்ட கிரீடம் ஒன்று தற்போதும் அன்னாரின் அன்பு மகள் திருமதி அன்னனேசம் தம்பிராசா ஆசிரியையின் பாதுகாப்பில் இருக்கின்றது. சுமார் 75 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தகைய கிரீடத்தினை தற்போது நாட்டில் எப்பகுதியிலும் காண்பது அபூர்வமானதாகும்) க.நல்லதம்பி, சீ.கந்தையா, க.சாமரித்தம்பி, கா.கண்ணப்பர், ஐ.சிவானந்தராஜா, செ.அரசரெத்தினம், க.கார்த்திகேசு ஆகியோர் இக்கலையில் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆரையம்பதி கிராமாட்சி மன்றின் ஆரம்பகால தலைமை இலிகிதராயிருந்து பணியாற்றிய கொஸ்தாப்பர் தம்பாப்பிள்ளை தம்பிராசா அவர்கள் கூத்துக்கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்தவர். ஆரையம்பதியில் ஆடப்பட்ட கூத்துக்கதை ஏடுகள் இவர்வசம் இருந்தன. அத்துடன் ஏராளமான மந்திர, வைத்திய, ஏடுகளும் இவர்பால் இருந்தன. பெரும்பாலும் கூத்தாடு களரியில் அவர் ஏடுபார்ப்பவராகவும் வழி நடாத்துபவராகவும் இருந்து கூத்துக்கலை வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற் றியுள்ளார். 16. பறைமேளம், மகிடிக்கலை
பண்டைக்காலத்தில் பறைமேளக் கூத்துக்

கலையும் ஆரையம்பதியில் பிரசித்தி பெற்றிருந்தது. முத்தர் கதிராமர் என்பவரின் முன்னோரும் அவரும் அவரின் பின் னோர்களும் இக்கூத்தில் பிரசித்தி பெற்றிருந்தனர். இவர்கள் பதினெண்வகையான தாளங்களுக்குப் பறைமேளம் வாசித்து ஆடக் கூடியவர்களாக இருந்தனரென அறிகின்றோம். பத்தன் நாகன், தம்பிமுத்து பத்தினியன் என்பவர்களும் அவர்தம் முன்னோரும் பறைமேளக் குழல் வாசிப்பதில் வித்தகர்களாக இருந்தனர். பறைமேளக் கூத்து நிகழ்ச்சியில் கொட்டுமேளம், உறுமிமேளம், போன்ற இசைக்கருவிகளும் பக்கவாத்தியங்களாக வாசிக்கப்பட்டன. உறுமிமேளம் வாசிப்பவர்களை உறுமர் என அழைத்தனர்.
இக்கலைவடிவம் ஆதியில் ஆரையம்பதியில் இருந்துதான் கழுதாவளை, அக்கரைப்பற்று, தம்பலகாமம் போன்ற இடங்களுக்குப் பரவியதாக அறிகின்றோம்.
மகிடிக்கலையும் ஆரையம்பதியில் பிரசித்தி பெற்றிருந்த ஒரு கவர்ச்சிகரமான நகைச்சுவைக் கலை யாகும் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட காலங்களில் சிறப்பாக நடைபெறும். இக்கூத்து சில ஆண்டுகளில் ஆரையம்பதி யிலுள்ள நடுத்தெரு, முகத்துவாரத்தெரு, ஆரைப்பற்றைத் தெரு, வண்ணார் தெரு, செங்குந்தர் தெரு ஆகிய பிரிவு களில் ஒரே நாளில் நடைபெற்று அலை அலையாகத் திரண்டு வரும் மக்கள் வெள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளன.
"மெய்மறந்து சிரித்து மகிழ்வதால் மெய்வாழ்வின் ஆயுள் பெருகும்.’ எனும் வாக்கியத்துக்கமையவே பண்டைய மக்கள் இந்நிகழ்வை ஆரம்பித்தனர் போலும், தற்போது இக்கலை அருகிவருவது கவலைக்குரியது.
17. மேடை நாடகங்கள்
(“விலாசம்” நாடகங்கள்)
விலாச நாடகங்கள் "மரபுவழி” நாடகங்களாகவே கருதப்படுகின்றன. நாடகப்பாத்திரங்கள் வாத்திய இசையின் பின்னணியுடன் தாங்களாகவே பாடி நடிக்கும் ஆற்றலுள் ளவர்களாகவும் இனிமையான குரல்வளம் நிறைந்தவர் களாகவும் இருப்பர். இத்தகைய நாடகங்கள் பலவற்றை ஆரையம்பதியின் “ சகலகலாவல்லவர்” எனப்போற்றப்படும் சங்கீத ஆசிரியர் சீனித்தம்பி கந்தையா அவர்கள்இசை யமைத்து நெறிப்படுத்தித் தயாரித்து மேடையேற்றியுள்ளார். கதாபாத்திரங்களின் உடையமைப்பும், காட்சிக்குப் பொருத்தமான பல்வேறு வகைத் திரைகளும், தேர்யானை குதிரை, போன்ற பொம்மை வாகனங்களும் மேற்படி கந்தையா ஆசிரியர் அவர்களாலேயே அமைக்கப்பட்டன. இன்றும் அவர் இல்லத்தில் பலவித மேடைக் காட்சித் திரைச்சீலைகளைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இவரால் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்ட நாடகங்களில் புகழ்பூத்த "அல்லி அர்ஜுனா” (1940) “பவளக்கொடி’ (1942) துருவன் (1944) குறிப்பிடத்தக்கவை.
இந்நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற சில கலைஞர்கள் இன்றும் நம்மத்தியில் வாழ்கின்றனர். அவர்களில் கிருஷ்ணர் பாத்திரமேற்று நடித்துப் புகழ்பெற்ற
69

Page 94
ஒவசியர் கதம்பிராசா பவளக்கொடி நாடகத்தில் “அல்லி” பத்திரமேற்று நடித்துப் பாரதக் கதையில் விபரிக்கப்படும் அல்லியை ரசிகர்கள் மனக்கண் முன்நிறுத்திய அதிபர் சு.பரசுராமன், “அல்லி அர்ஜுனா’ நாடகத்தில்அல்லி பாத்திரத்தில் புகழ் பெற்ற நாகமணி மாஸ்ரர் ,அர்ச்சுனன் பாத்திரத்தால் புகழ் பெற்ற நொத்தாரிஸ் தபூபாலபிள்ளை (ஒய்வுபெற்ற கிராம சேவையாளர்) “பவளக்கொடி நாடகத்தில் அர்ச்சுனன் பாத்திரமேற்ற (அமரர்) சின்னவர் கணபதிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆசிரியர் திரு.சீ.கந்தையா அவர்கள் அன்புமணி யின் "திரைகடல்தீபம்’ வரலாற்று நாடகம் 30.06.1962ல் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் மேடை யேற்றப்பட்டபோது பொன்னாடை போர்த்திக்கெளரவிக்கப்பட்டார்.
18.நவீன மேடை நாடகங்கள்
இத்துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி தலைமைக் கலையகமாகத் திகழ்கின்றது. அன்புமணி இரா.நாகலிங்கம், ஆரையூர் இளவல் க. செல்லத்தம்பி, ஐ.சிவசுந்தரம், ஆரையூர் அமரன். க.அமரசிங்கம்.நவம் சீ.ஆறுமுகம், இரா. நல்லரெத்தினம் (நல்லையா) மு.கணபதிப்பிள்ளை (மூனாக்கான) ப.ஜீவானந்தம், சிவ. விவேகானந்த முதலியார், சி.சந்திரசேகரம். த.தங்கவடிவேல், சீசெல்வநாயகம், க.சபாரெத்தினம், சீசெல்லத்தம்பி போன்றோர் ஆரையம்பதி நவீன நாடகக்கலை வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்புச் செய்தவர்களாவர்.
(அ) அன்புமணி இரா. நாகலிங்கம்
இவரது “திரை கடல் தீபம்’ (வரலாறு) புகழ்பெற்ற நாடகமாகும். இந்நாடகம் இலங்கைக் கலைக்கழக நாடக எழுத்துப் போட்டியில் (1962) முதற் ப்ரிசு பெற்ற நாடகமாகும். இந்நாடகத்தில் கதாநாயகனாக நடித்த மண்வள ஆய்வு அறிஞர் ததங்வடிவேல் அவர்கள் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் சினிமாப்படமான “நிர்மலா”வில்கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர். அன்புமணியின் "ஆத்மதிருப்தி" (சமூகம்) புகழ்பெற்ற நாடக மாகும். வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலரும் மட்டக்களப்பு மாநகரமன்ற முன்னாள் மேயருமான திரு.க.தியாகராசா அவர்கள் இந்நாடகத்தின் கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கதாகும். "மனோ கரா', சூழ்ச்சிவலை, குகைக்கோயில், கலை உள்ளம் முதலிய நாடகங்களை இவர் எழுதித் தயாரித்து நடித்து மேடை யேற்றி உள்ளார். பல நாடகங்கள் வானொலியில் ஒலிப் பரப்பாயுள்ளன.
ஆ. ‘ஆரையூர் இளவல்’ க.செல்லத்தம்பி
நவீன நாடக வரிசையில் ஆரையூர் இளவல் மகத்தான பணியாற்றியுள்ளார். புராணம், இதிகாசம், இலக்கியம், வரலாறு, சமூகம், நகைச்சுவை என 75க்கும் மேற்பட்ட நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு நெறிப்
70

படுத்தப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன. (சில நாடகங்களில் நடித்தும் புகழ்பெற்றுள்ளார்) கிழக் கிலங்கையில் பல ஊர்களிலும் மேடையேறிய இவரது நாடகங்களில் சில, சில ஊர்களிலுள்ள மன்றங்களினாலும் பாடசாலை களினாலும் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன.
ஆரையம்பதி இந்து சமய இலக்கிய அபிவிருத் திச் சங்கம் ஆரையம்பதி ஜோதி கலைக்கழகம் (மேற்படி கலைக்கழகத்தினால் அதிபர் சி.கிருஷ்ணபிள்ளை அவர்கள் தலைமையில் தயாரிக்கப்பட்ட “கலிகொண்ட காவலன்' (ஆரையூர் இளவலின் இலக்கிய நாடகம்) ஜோதி கலைக்கழகத்தின் வெற்றித் தயாரிப்பாகும். (26-08-1972) அமரர் அருளம்பலம் அரங்கில் நடைபெற்ற மேற்படி நாடக மேடையேற்ற விழாவின்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி திரு.எம். சண்முகலிங்கம் அவர்களினால் இந்நாடகம் பெரிதும் பாராட்டுப் பெற்றது) ஆரையம்பதி இளைஞர் நாடக மன்றம், ஆரையம்பதி கல்வீட்டுத் திண்ணையடி கலைக்கழகம் ஆரையம்பதி நெசவுப் பயிற்சிப் பாடசாலை முத்தமிழ் மன்றம், மஞ்சந்தொடுவாய் இந்து இளைஞர் கலைக்கழகம், கல்லடி உப்போடை வளர்மதி இலக்கிய மன்றம், கல்லடி தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மட்டுநகர் இளங்கதிர் நாடக மன்றம் (கட்டுரையாசிரியர் இம்மன்றத்தின் தாபக ராவர்) கன்னன்குடா இந்து இளைஞர் மன்றம், கன்னன்குடா மகாவித்தியாலய முத்தமிழ் மன்றம், தேத்தாத்தீவு பாரதி தாசன் நாடகமன்றம் ஆகிய கலாவிருத்திக் கழகங்கள் மூலம் ஆரையூர் இளவலின் நாடக இலக்கியப்பணி தொடர்கின்றது. இவரது நாடகங்கள் பல இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
1981ல் கல்லடி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தயாரித்து மேடையேற்றப்பட்ட இவரது "சேவை செய்தாலே வாழலாம்” எனும் சமூக நாடகத்துக்கு அதிஉத்தம ஜனாதிபதி அவர்களின் "தங்கமயில் விருது' வழங்கப்பட்டது. “கண்கள்செய்த குற்றம்' (சமூகம் 1963) “சிங்களத்துச் சிங்காரி" (வரலாறு-1969) “தர்மம் காத்த தலைவன்’ (வரலாறு-1976) “வெற்றித்திருமன்’ (வரலாறு -1976) “மானம் காத்த மாவீரன்’ (இதிகாசம் -1972) “நிலவறையிலே' (வரலாறு -1969) “இதுதான்முடிவா?” (வரலாறு -1967) “நீறுபூத்த நெருப்பு” (இதிகாசம்-1972) “போர்ப்புயல்"(வரலாறு-1968), "குடும்பம் ஒரு கோயில்” (சமூகம் -1977), “தெய்வங்கள் வாழும் பூமி” (சமூகம்1982), “கொடைவள்ளல் குமணன்” (இலக்கியம் - 1970), "மாமியார் வீடு" (சமூகம்- நகைச்சுவை-1970) (இந்நாடகம் இருதடவைகள் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப் பட்டுள்ளது) மேற்படி நாடகங்கள் தேசிய மட்டத்திலும் கிழக்கிலங்கை மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் பரிசுகள் பெற்ற நாடகங்களாகும்.
இவரது “நீறு பூத்த நெருப்பு’ நாடகநூல் 1996ல் வெளிவந்துள்ளது. "வினை நீக்கும் விநாயகன்" (புராணம்) "நீறுபூத்த நெருப்பு"(இதிகாசம்) "ஆனந்தக்கூத்தன்'(சமூகம்) எனும் மூன்று நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

Page 95
இவரது மற்றுமோர் நாடகநூல் விரைவில் வெளிவரவுள்ளது. "இறைகாக்கும்' எனும் தலைப்பையுடைய இந்நாடக நூலில் "தர்மம் காத்த தலைவன்’ (வரலாறு),“மானம் காத்த மாவீரன்’ (இதிகாசம்), “கண்கள் செய்த குற்றம்' (சமூகம்) "இறைகாக்கும் ” (சமூகம்) எனும் நான்கு நாடகங்கள் இடம்பெறுகின்றன.
19. சில நாடக்க கலைஞர்கள்
(அ) ஐ.சிவசுந்தரம்
"தாதுகோபுரம்” (வரலாறு). “சாளுவப்புயல்” (வரலாறு), "குந்தியின் மடியில்” (இதிகாசம்) "பார் கொண்ட பகடை” (இதிகாசம்) இவரது பரிசில்பெற்ற நாடகங்களாகும். மேலும் சில நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு நெறிப்படுத் தப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன.
(ஆ).‘ஆரையூர் அமரன்” க.அமரசிங்கம்
“மட்டுநகர் மன்னன்’ (வரலாறு) இவரது புகழ் பெற்ற நாடகமாகும். மேலும் சில நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன.
(இ) “நவம்” சீ.ஆறுமுகம்
“தூக்கு மேடை’ (சமூகம்) இவரது புகழ்பெற்ற நாடகமாகும். மேலும் சில நகைச்சுவை நாடகங்கள் இவரால தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன.
(HF) “மூனாக்கானா” மு.கணபதிப்பிள்ளை
"இருரேகா’ (சமூகம்) இவரது புகழ்பெற்ற நகைச்சுவை நாடகமாகும். மேலும் “சம்பந்தி’ (சமூகம்) போன்ற சில நகைச்சுவை நாடகங்கள் இவரால் எழுதித் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ன.
(உ) இரா- நல்லரெத்தினம் (நல்லையா)
இவரால் எழுதித் தயாரிக்கப்பட்டு இலங்கேஸ் வரன் இன்னிசைக்குழுவினரால் மேடையேற்றப்பட்ட "எதிர் பார்த்தது” “இவர் இப்படித்தான்" சமூக நகைச்சுவை நாடகங்கள் புகழ்பெற்றதாகும். மேலும் சில நகைச்சுவை நாடகங்கள் இவரால் எழுதித் தயாரிக்கப்பட்டு, மேடையேற்றப்பட்டுள்ளன. இவரது நாடகங்களில் பிரதான பாத்திரங்களில் இவரே நடித்துப் புகழ்பெற்றுள்ளார்.
(ஊ) சிவ.விவேகானந்த முதலியார்.
இவரது “தருமர் பொய்சொன்னாரா?” (இதிகாசம்) நாடகமும் இன்னும் சில இலக்கிய நாடகங்களும் வானொலி யில் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
(எ) சீசெல்லத்தம்பி (ஆங்கில ஆசிரியர்)
இவரால் சில நாடகங்கள் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன. "சோக்கிரட்டீஸ்’ நாடகத்தில் சோக்கிரட்டீஸ் பாத்திரமேற்றும் “முதல்முழக்கம்”
நாடகத்தில் எல்லாளன் பாத்தரம் ஏற்றும் நடித்து நடிப்புக் கலைக்கு உயிருட்டியவர் இவர்.

(ஏ) கநல்லரெத்தினம்
இவர் ஆரையம்பதி பூரீ முருகன் கிராமாபி விருத்திச் சங்கத்தின் மூலம் சில நாடகங்கள் தயாரித்து நடித்து மேடையேற்றிப் பாராட்டுப் பெற்றுள்ளார். (ஐ) மா.கனகரெத்தினம்
ஆரையம்பதி கலைமகள் கலாமன்றத்தின் தலைவராயிருந்து "அதே உருவம்'(சமூகம்), “மாமிக்கேற்ற மருமகள்' (சமூகம்-நகைச்சுவை -1974) போன்ற சில நாடகங்களைத் தயாரித்தளித்துப் புகழ் பெற்றவர் இவர்.
(ஒ) ப.ஜீவானந்தம்.
ஆரையம்பதிக் கூழாவடி இளைஞர் நாடக மன்றத்தின் மூலம் சில நாடகங்கள் எழுதித் தயாரித்து மேடையேற்றிப் பாராட்டுப்பெற்றவர். இவரது தந்தை ஐ.பரமானந்தம் (முன்னாள்ஆரையம்பதி மாவித்தியாலய அதிபர்) 1940.50 களில் பல இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகளும் பத்திரிகைகளில் ‘ஆரையம்பதி- பரமானந்தம்” எனும் பெயரில் எழுதி ஆரையம்பதிக்குப் புகழ்சேர்த்தவர்.
(ஓ) க.சபாரெத்தினம்
இவரது “சிலவேளைகளில் சில அதிகாரிகள்” (சமூகம்) தற்கால அலுவலக நடைமுறைகளைப் படம்பிடித்துக் காட்டும் நாடகமாகும். மேலும்சில நாடகங்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன.
(ஒள) “சிப்பாய்” குழந்தைவேல்
சிறுவயது முதல் நாடகநடிப்பில் ஈடுபட்ட இவர்
"காதலா பாசமா’ என்னும் நாடகத்தை எழுதித் தயாரித்து நடித்து மேடையேற்றி உள்ளார்.
(க) சில புகழ்பெற்ற நடிகர்கள்
1960,1970 களில் ஏராளமான நவீன (சினிமா பாணி) நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற இளைஞர்கள் பலர் இங்கு உள்ளனர். க.தங்கராசா (வில்லன்), சுதர்ம லிங்கம் (வில்லன்), க.மயில்வாகனம் (குணசித்திரம்) எஸ்.பாக்கியராசா (நகைச்சுவை)
20. சின்னத்திரை
ஒரு தமிழ் நாடகம் கிழக்கு இலங்கையிலே முதல் முதலாக வெளிப்புறக்காட்சியமைப்புகளுடன் “சின் னத்திரை’ (வீடியோ) வடிவம் பெற்றது ஆரையம் பதியில்தான் என்று சொல்லப்படுகின்றது. ஆரையம்பதியின் நாடகக்கலைஞர் சீனிதம்பி செல்வநாயகம் அவர்களின் வீடியோ கமரா உதவியுடன் ஆரையம்பதி இந்து FLDuu இலக்கிய அபிவிருத்திச் சங்கத்தினால் மாணிக்கவாசக சுவாமி குருபூசை தினமான 2706.1980ல் ஆரையம்பதியிலும் மண்முனையிலும் வைத்து “சின்னத்திரை”(வீடியோ) வடிவம் பெற்றது. ஆரையூர் இளவலின் “மண்சுமந்த மகேசன்’ (மாணிக்கவாசகர் சுவாமிகள் வரலாறு) நாடகம். சி.சந்திரசேகரம் (ஆசிரியர்) திருமதிதங்கம்மா சந்திரசேகரம்
71

Page 96
(ஆசிரியை) திரு, தபரமங்குட்டி (ஆசிரியர்)இவர்கள் மூவரும் குணசித்திர பாகத்தில் சிறப்பாகச் சொந்தக்குரலில் பாடி நடித்துள்ளனர். மற்றும் மு.கணபதிப்பிள்ளை (அதிபர்) காசோமசுந்தரம ’ (அதிபர்), செ.அரசரெத்தினம் (கி.சே) கா.கார்த்திகேசு, அ.அரிச்சந்திரகுமார், சா.கனகசுந்தரம், கதம்பிராசா, செல்விகள் கலாதேவி கோணாமலை, தயாராணி சாமித்தம்பி, புனிதமலர் சாமித்தம்பி ஆகியோரும் இப்படத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றனர். இப்படத்தின் ஒலி, ஒளியமைப்பு கமறா கலைஞ்ர் சீசெல்வநாயகம், அரங்கஅமைப்பு - நல்லதம்பி கோணாமலை (ஆசிரியர்) ஒப்பனை - செ.அரசரெத்தினம். செ.அம்பலவாணன், திருமதி நகோணாமலை, இசையமைப்பு திரு.க.சுந்தரலிங்கம் கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை: "ஆரையூர் இளவல்’ உதவி "அன்புமணி"
ஆரையம்பதியிலும் மட்டக்களப்பு மாவட்டத் திலும் பல்வேறு இடங்களிலும் மேடையேற்றப்பட்டு பெரும்பான்மை நாடகங்கள் நவீன ஒலி, ஒளியமைப்பின் மூலம் ஒளிரச் செய்தவர்கள் ஆரையம்பதி "சுந்தரம்ஸ்” தாபனத்தாரும் ஆரையம்பதி “கங்கா’ தாபனத்தாரும். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 21. பாரம்பரிய இசைக்கலை வடிவங்கள்.
இப்பிரதேசத்தின் பாரம்பரிய இசைக்கலை வடிவங்கள் புகழ்பெற்றவையாகும். அவ்விசை வடிவங்க 6TT66. எண்ணெய்சிந்து, ஊஞ்சல்பாடல்கள், அம்மானை, கம்சன் காவியம், காத்தவராயன் பாடல்கள், மாரியம்மன் காவியம், பேச்சியம்மன் காவியம், வயிரவர் காவியம், கண்ணகையம்மன் திருக்குளிர்த்திப் பாடல்கள், கண்ணகை யம்மன் உடுக்குச்சிந்து, பிள்ளையார் கதைப்படிப்பு, கந்த புராணப் படிப்பும் பயன்கூறலும், திருவிளையாடல், புராணப் படிப்பும் பயன்கூறலும் சிவராத்திரி புராணப்படிப்பும் பயன் கூறலும் வைகுந்த அம்மானை முதலியன.
இவைகள் திருவாளர்கள் சி.ஏரம்பமூர்த்தி வெ.தம்பிராசா, பண்டிதர் செ.பூபாலபிள்ளை, நா.கணபதிப் பிள்ளை, சுபரசுராமன், சி.சந்திரசேகரம், காசோமசுந்தரம், இதம்பிராசா, த.பரமக்குட்டி, பூசோமசுந்தரம், இதட்சணா மூர்த்தி, கா.சிதம்பரப்பிள்ளை, க.இளையதம்பி, சி.க.பொன் னம்பலம், க.நல்லதம்பி, செ.சிவஞானம், க.இராசரெத்தினம், கசுப்பிரமணியம், நல்அழகேசமுதலியார் சிவவிவேகானந்த முதலியார், ஆசிரியமணி தசெல்வநாயகம் போன்ற இனிய குரல்வளம் மிக்க பெரியோர்களால் பாடப்பட்டுப் பயன் சொல்லப்பட்டன. இவர்களில் சிலர் வெளியூர்களிலுமுள்ள ஆலயங்களுக்கும் அழைக்கப்பட்டு அங்கு சென்று பாடிப்பயன் சொல்லி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆரையம்பதியின் கிராமியக் கலைகளை வளர்ப் பதில் அன்றுமுதல் இன்றுவரை ஈடுபட்டுவரும் இருவர் பற்றி விசேஷமாகக் குறிப்பிடவேண்டும். அவர்கள்
(அ) திருமதி தங்கம்மா - இவர் கொம்புமுறி, வசந்தன், தாலாட்டு, கும்மிப்பாட்டு, ஊஞ்சல்பாடல் முதலி யவற்றில் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து மேடையேற்றி
72

யும், ஒலிப்பதிவு செய்தும் புகழ்பெற்றவர்.
(ஆ) திரு.த.நல்லலிங்கம் - இவர் வாகரையில் பிறந்து நாவலடியில் வளர்ந்து ஆரையம்பதியில் மணம் புரிந்து அதையே தன் தாயகம் ஆக்கிக்கொண்டவர். பத்து வயது முதல் கூத்துக்கலையில் நடிகராகி கற்பலங்காரி, கன்னன் போர், முதலிய 10 கூத்துக்களில் ஆடியவர். பல கூத்துக்களைப் பழக்கி பரிசு பெற்றவர். அண்மையில் இவரது கிராமியப் பாடல்கள் "தெய்வகானம்" என்ற தலைப் பிலே நூலாக வெளிவந்துள்ளது.
திருவாளர்கள் க.மாசிலாமணி (அம்மன் கோயில் பூசகர்)காதம்பிராசாபோன்றோர் உடுக்கடித்து காத்தவராயன் காவியம் பாடுவதில் புகழ் பெற்றவர்களாவர்.
எண்ணெய்ச்சிந்து, வைகுந்த அம்மானை தவிர்ந்த ஏனைய பாடல்கள் ஆலய உற்சவங்களின் போதும் விரத காலங்களிலும் பாடப்பட்டு ஆன்மீக சிந்தனையை வளப்படுத்தி மக்களை நெறிப்படுத்துவதில் பேருதவி புரிகின்றன.
22. மெல்லிசை வார்ப்புகள்
ஆரையம்பதியின் “இங்கேஸ்வரன் இன்னி சைக்குழு" 01.03.1963ல் ஆரம்பிக்கப்பட்டது. திரு.குகைலாய நாதன் போஷகராகவும், திரு.ஐ.மகேசானந்தம் தலைவ ராகவும் திரு.நா.அழகுராசா செயலாளராகவும் இருந்து இயக்கிய இவ்விசைக்குழவில் க.மயில்வாகனம், ந.வீரசிங்கம், க.முத்துலிங்கம், தயோகேந் திரன் ஆகியோர் பாடகர்களாக இருந்தனர். திருமதி. புவநேச நாயகி மகேசானந்தம் பாடகியாகவும் நடனராணியாகவும் விளங்கினார். நவீன இசைக்கருவிகளுடன் மிகவும் சிறப்பாக இயங்கிய இவ்விசைக்குழு நாடளாவிய ரீதியில் ஆரையம்பதிக்குப் பெரும் புகழீட்டித் தந்தது. 1967ல் இவ்விசைக்குழுவினர் ஆரையம்பதி ரீ கந்தசுவாமி ஆலய வீதியில் நடாத்திய மாபெரும் கலைக்கதம்ப நிகழ்ச்சியான “இனிவரும் இரவு" மட்டக்களப்பு மாவட்டக் கலாரசிகர்களின் கவனத்தைப்பெரிதும் ஈர்த்தது. ‘நிர்மலா” தமிழ் சினிமாப் பட நடிகையான மணிமேகலையும் வானொலிப் பாடகரான “ரொனிகசன்’ என்பவரும் இந்நிகழ்வுகளில் பாடி நடித்துச் சிறப்பித்தனர்.
ஈழத்துச் செளந்தரராசா எனப் புகழ்பெற்ற பிரபல மெல்லிசைப் பாடகர் க.மயில்வாகனம் அவர்களாலும் அவரது சகோதரன் (எக்கோடியன், கிளரிநெற்) க.சுந்தர லிங்கம் அவர்களாலும் 1971ல் ஆரையம்பதியில் தாபிக்கப் பட்டது "உதயசூரியன்" இன்னிசைக் குழு . இக்குழுவினர் கிழக்கிலங்கையில் பல பாகங்களிலும் இசை விருந் தளித்துப் புகழ் பெற்றனர். ரூபவாகினி மெல்லிசைப் பாடகர் விசதானந்தன், விபத்மசிறி, பரணித்தா, திருமதி தங்கம்மா சந்திரசேகரம் ஆகியோர் மெல்லிசைப்பாடல்கள் மூலம் ஆரையம்பதிக்கு பெருமை சேர்த்தவர்களாவர்.
56 களில் கவிஞர் ஆரையூர் அமரனால் இயற்றப் பட்ட "திருமலைக்குரல்’ எழுச்சிப் பாடல்களைப் பாடித்

Page 97
தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்தவர் ஆரையூர் அரசன். இவர் ஒரு சிறந்த நடிகருமாவர். ஆரையூர் இளவலின் "தெய்வங்கள் வாழும் பூமி” எனும் சமூக நாடகத்தில் பட்டமரம் தழைக்க வேண்டும்' எனும் பாடல்பாடி நடித்துப் புகழ்பெற்றவர்.இவரது இயற்பெயர் ந.தங்கராசா.
23. கொன்சேர்ட் (Concert)
ஆரையம்பதியில் சித்திரைப் புத்தாண்டிலும் ஆலய விழாக் காலங்களிலும் இடம்பெற்ற மற்றொரு நிகழ்வு "கொன்சேட்" என்பதாகும். இந்நிகழ்ச்சி பல்வகையான நகைச் சுவைத் துணுக்குகளை கொண்ட ஒரு கதம்ப நிகழ்ச்சி போன்றது. கதை என்று ஒன்று இல்லாமல் பல்வகையான துணுக்குத் தோரணங்களைக் கொண்ட இந்நிகழ்ச்சி பார்வையாளரைச் சிரிக்க வைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது.
இந்நிகழ்ச்சியில் வரும் “பயூன்” பாத்திரம் தான் கதாநாயகன். இவர் அடிக்கடி மேடையில் தோன்றி பார்வை யாளரிடம் பேசுவார். பகிடிகன் விடுவார். வித்தை காட்டுவார். விடுகதைகள் சொல்லுவார்.
உதாரணமாக "நான் இப்போது உங்கள் ஒவ் வொருவருக்குமு ஒரு கண்ணாடி தரப்போகிறேன். கண்ணை மூடுங்கள். நான்சொன்ன பின்பே கண்களைத் திறக்க வேண்டும்” என்பார். கண்களைத்திறந்ததும். "இப்போது உங்கள் ஒவ்வொருவர் முகத்திலும் கண்ணாடி இருக்கிறது. தொட்டுப்பாருங்கள். “கண்+ நாடி (மோவாய்)என்று அசத்துவார்.
இவ்வாறான பபூன் பாத்திரங்களில் பலர் புகழ் பெற்றிருந்தனர். இவர்களுள் வைரமுத்து இராசையா என்பவர் முன்னோடி எனலாம். இவர் இளமையில் பல வெளியூர்களுக்குச் சென்று பல்வேறு அனுபவங்களை பெற்றவர். சிங்களம் பேசத் தெரிந்தவர். எப்போதும் மிகவும் சமத்காரமாகவும் நகைச்சுவையாகவும் பேசுவார். மிகவும் கலகலப்பான பேர்வழி,
இவர் மேடையில் தோன்றி "அசிக்! வந்தசனம், சங்கீத கோலகாரயா" என தமிழும் சிங்களமும் கலந்து பேசிப் பாடுவார். மாஜிக் வித்தை காட்டுவதிலும் இவர் வல்லவர் வாயிலிருந்து நெருப்பு ஊதுவது, சிகரட் டின்னில் சோறு சமைப்பது, மாங்கொட்டை நாட்டி உடனே மாங்கன்று முளைக்கச் செய்வது இவரது சில மாஜிக் வித்தைகளாகும். மேசன் தொழில்செய்த இவர் மீன்பிடி, வேளாண்மை வெட்டு முதலிய பல தொழில்களும் தெரிந்தவர். ஆரையம்பதியில் ஆடப்பட்ட பலகூத்துக்களிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
"கொன்சேர்ட்” மேடைகளில் பல தமாஷான சம்பவங்கள் இடம் பெறும். நகைச்சுவைக்காட்சிகள் இடம் பெறும். பிற்காலத்தில் (1960) இளைஞர் இவ்வுத்தியைப் பின்பிற்றி நகைச்சுவைக் கதம்ப நிகழ்ச்சிகளை (சினிமா பாணியில்) திடீர் தயாரிப்புகளாக ஆலயவிழாக்காலங்களில் மேடையேற்றினர். "Impromptu” என்னும் முன் ஆயத்த மில்லாத சாமர்த்தியமான தயாரிப்புகளே இவை.

24. GasTel EditGayff (Mock Court)
1960 வரை ஆரையம்பதியில் “கோடுகச்சேரி” என்னும் நிகழ்ச்சி பிரபலம் பெற்றிருந்தது. சித்திரைப் புத்தாண்டு காலங்களில் இந்நிகழ்ச்சி இடம்பெறும். இக்கோடு களில் கற்பனையாக உருவாக்கப்பட்ட வழக்குகளை அசல் நீதிமன்றத்தில் விசாரிப்பது போல் விசாரணை செய்வார்கள். இதில் பங்குபெறும் பாத்திரங்கள் (சாட்சிகள், வழக்காளி, குற்றஞ்சாட்டப்பட்டவர், சட்டத்தரணிகள், நீதிபதி முதலியோர்) பறைமேளம் சகிதம், கோர்ட் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இங்கு விசாரணை செய்யப்படும் வழக்குகள். பலசந்தர்ப்பங்களில் நிஜமாக நடைபெற்ற வழங்குகளின் சாயலில் அமைந்துவிடும். அதனால் வழக்கு (கற்பனை) விசாரணைகளின் போது, பிரச்சினைகள் ஏற்படுவதும் உண்டு.
இத்தகைய கோடு கச்சேரிகளில் பாத்திரத்திற் கேற்ற திறமை பெற்றவர்களே தேர்ந்தெடுக்கப்படுவர். எவ்வித முன்ஆயத்தமோ ஒத்திகையோ இல்லாமல்தான் வழக்கு விசாரணை நடைபெறும். இவ்வகையில் முக்கியத துவம் பெற்ற ஒரு சிலர் பெயர்கள் வருமாறு: ஏ.சுந்தரமூர்த்தி (நீதிபதி), சீ.சிவராசா (நீதிபதி) ததங்கவடிவேல் (நீதிபதி க.சீனித்தம்பி ஆசிரியர் (சாட்சி), சீதியாகராசா(சட்டத்தரணி)
25. ஓவியக்கலைஞர்கள்
முறையான பயிற்சி இல்லாமலே ஏகலைவன் பாணியில் ஓவியராகவும் சிற்பக்கலைஞராகவும் சிலர் இங்கு உருவாகினர். 1930 களில் இந்தியாவிலிருந்து மட்டக்களப புக்கு வந்த நாடகக்குழுவில் திரைச்சீலைகளை வரையும் ஒவியர்களும் இருந்தனர். இவர்களுள் “கொண்டையா ராஜ”என்பவர் மிகவும் புகழ் பெற்றவர். இவர் குறுகிய நேரத்தில் அனாயாசமாக நாடகக் காட்சிக்கான திரைச் சீலைகளை வரைந்து முடிப்பார். இவரது திறமையால் கவரப்பட்டு பொன்னர் காத்தமுத்து என்பவர் ஏகலைவ பாணியில் ஓவியரானார்.
இவர் ஒருவரைப் பார்த்து அப்படியே தத்ரூப மாக வரைந்துவிடுவார். இவ்வாறே பல தெய்வப் படங்களை யும் வரைவார். ஊக்குவிப்பார் இன்மையில் இவரது ஓவியத் திறன் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டது.
சங்கீத ஆசிரியரான கந்தையா அவர்களே ஆரையம்பதியின் மிகச்சிறந்த ஓவியர் எனலாம். இவர் தான் கற்பித்த பாடசாலைகளில் ஓவிய ஆசிரியராக இருந்ததுடன் தனிப்பட்ட முறையில் பல பெரியார்களின் Portrait ஒவியங்களையும் ஆலயங்களுக்கான திரைச் சீலைகளையும் வரைந்து புகழ்பெற்றவர்.
கணபதிப்பிள்ளை கோணாமலை என்பவர். இலை, பூ, காய், பழம், மரப்பட்டை என்பவற்றிலிருந்து இயற்கை வர்ணங்களைத் தயாரித்து சித்திரம் வரைவார்.
73

Page 98
பிற்காலத்தில் இவர் சாமியார் ஆகி (கோணாமலை சுவாமியார்) தாந்தாமலையில் ஒரு மடம் அமைத்தார்.
சு.அருளம்பலம், க.சுப்பிரமணியம் முதலிய ஆசிரியர்களும் ஓவியத்திறமை பெற்றிருந்தனர். ஆனால் இத்திறமையை வளர்த்தெடுக்க இவர்கள்முயற்சி செய்ய வில்லை.
பிற்காலத்தில் அன்புமணி (மணி) ஐ.சிவானந்த ராசா, ஐமகேசானந்தம், ககார்த்திகேசு, செதாமரைச்செல்வி, தமது ஓவியத்திறமையை பல்வேறு வகையில் வெளிப் படுத்தினர். இவர்களும் இத்திறமையை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தவில்லை.
26. ஆரையம்பதி எனும் கலைச்சோலை.
1978 சூறாவளிப் பேரழிவின் முன்னர் ஆரையம் பதியில் சித்திரைப் புத்தாண்டுப் பிறப்பைத் தொடர்ந்து பூரீ கந்தசுவாமி ஆலயத் தீர்த்தத் திருவிழா (புரட்டாதி மாதம்) வரை தொடர்ந்து ஆறுமாதங்கள் ஆரையம்பதி எனும் பழம்பெரும்பதி ஒரு இன்னறுங் கலைச்சோலை யாகக் காட்சி தரும். சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங் களின் போதும் தொடர்ந்துஇடம்பெறும் வைகாசி கண்ணகையம்மன் சடங்கு ஆனிமாதத்து பூரீ பரமநயினார் ஆலயச் சடங்கு, திருவிழா, ஆலடி பூரீ ஆதி வயிரவர் ஆலயச் சடங்கு ஆடிமாதத்தில் வம்மிக்கேணி பூரீ முத்துமாரியம்மன் ஆலய சடங்கு பூரீ பேச்சியம்மன் ஆலயச் சடங்கு, ஹி வட பத்திரகாளியம்மன் ஆலயச் சடங்கு, செங்குந்தர் வீதி பூரீ முத்துமாரியம்மன் ஆலய சடங்கு செல்வாநகர் கிழக்கு முறி காளியம்மன் ஆலய சடங்கு, ஆவணி மாதத்தில் பூரீ திரு நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்திருவிழா, வேளாளர் தெரு ஹிரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்திருவிழா, செல்வாநகர்ச் சிவன் ஆலய விசேட உற்சவங்கள், புரட்டாதி மாதத்தில் ஆரையம்பதி புராதன காளியம்மன் ஆலயச் சடங்கு, பூரீ கந்தசுவாமி ஆலய புகழ் பெற்ற பத்துநாள் திருவிழாக்கள்.
இக்காலங்களில் வாணவேடிக்கை, காவடியாட டங்கள், மயிலாட்டங்கள், வசந்தன் ஆட்டங்கள், கும்மியாட் டங்கள், கரகாட்டங்கள், கொம்புமுறிப்பாடல் ஆட்டங்கள். ஊஞ்சல் ஆட்டங்கள், தொட்டில் ஊஞ்சலாட்டங்கள், கிறுக்கு ஊஞ்சலாட்டங்கள், மகிடிக்கூத்துக்கள், காடுகயடி யாட்டங்கள், வழக்காடுமன்றங்கள், கூத்துக்கள் போன்ற கவின்கலைகளின் அழகுக் கோலம் பூண்டு ஆரையம்பதி அன்னை இன்பத் தேன் சுனையில் ஆடி மகிழ்வாள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி ஆரையம்பதியில் கூத்தில் களைகட்டிய காலப்பகுதியாகும்.
1950 ம் ஆண்டில் சித்திரைப் பிறப்பை அடுத்து வந்த மூன்றாம் நாளில் ஆரைப்பற்றைத் தெருவில் "வள்ளியம்மன்” கூத்தும், நடுத்தெருவில் ‘அலங்கா ரூபன்” கூத்தும் முகத்துவாரத் தெருவில் "இராமர் நாடகக் கூத்தும்' வேளாளர்தெருவில் “சுபத்திரா கல்யாணம் கூத்தும் வண்ணார் தெருவில் “திருத்தொண்டர்’நாடகம்
74

கூத்தும், பணிக்கர் தெருவில் "சந்திரகாசன் நாடகம்" கூத்துமாக ஒரே தினத்தில் விடியவிடிய ஆடப்பட்டு ஊர் மக்களையும் பிறவூர்களிலிருந்து தமிழரின் பாரம்பரியக் கலைத்தேனைப் பருகுவதற்காக சாரிசாரியாக வந்திருந்த மக்கள் வெள்ளத்தையும் ஆனந்தக்கடலில் ஆழ்த்திய அந்த இனிய நினைவை இன்றும் மக்கள் நினைவு கூர்வதைக் கேட்கக்கூடியதாக இருக்கின்றது.
27.முடிவுரை
1978ல் இப்பகுதியைச் சூறையாடிச் சிதைத்த இயற்கையன்னையின் இறுமாப்பு வீச்சும் (சூறாவளி) தொடர்ந்து நிகழ்ந்த இன உரிமைப்போராட்ட அலைகளின் வீச்சும் மக்களின் கலையுணர்வுகளையும் கலை வளர்ச்சியையும் மிக மோசமாகச்சிதைத்துள்ளன.
கலைகள் என்பவை ஒரு மாபெரும் ஜீவ அமிர்தமாக மனித வாழ்வின் மாண்புறு அம்சங்கள் அனைத்தையும் அரவணைத்துச் செல்கின்ற சக்திவாய்ந்த ஒளிக்கதிராகும். அந்தவகையில் ஆரையம்பதியின் கலைப் பணியை விபரிக்கப் புகுந்தால் இவ்வேடு கொள்ளாது. ஆதலால் பல விபரங்கள் இங்கு விடுபட்டுள்ளமை தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இளைய தலைமுறையினரின் கலைப்பணிகள் பிறிதோர் கட்டுரையில் இடம் பெறவுள்ளன.
உசாத்துணை
1. இலங்கை இந்திய வரலாற்று நூல்கள்
2. சிலப்பதிகாரம்
3. மதுரைக்காஞ்சி
4 சீவக சிந்தாமணி
5. திருக்குறள் 6 சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர் ரா.பி. சேதுப் பிள்ளை தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர்
கட்டுரைகள்.
7. இந்தியச் சுற்றுலா - ஆசிரியர் எஸ். சங்கரன்
8. இரும்பு அரசன் புறபசர். கே.எஸ். சங்கரதாஸ் வாழ்க்கை வரலாறு நூலாசிரியர். க.தா.செல்வ ராஜகோபால்
9. கலைக்களஞ்சியம்
10. "மருதநிலா" வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய
விழா மலர். 96.
11. மட்டக்களப்பு மான்மியம்
12. தமிழறிஞர் பண்டிதர் செபூபாலபிள்ளை அவர்
களிடம் கற்றுத்தெளிந்தவை.
13. அடியேனின் நீண்டகால அனுபவத்தில் கண்டும்
கேட்டும் ஆராய்ந்தும் அறிந்தவை.

Page 99
மட்டக்களப்பிலேயே நாடக ஸ்ரன்ட் கன
ஐ.சிவானந்தராச
ஐ.சிவானந்தராக
 
 

ா (இருவேடங்களில்)

Page 100


Page 101
Bస్తా
F"EEFF
क्या - t
பிரபல நாடக நடிகராகவும் பாடகராவும் விள தம்பிராசா(பெண்) ஆகியோர் "சூழ்ச்சி
சூழ்ச்சிவலை நடக நடிகர்கள். நாடகத்தை எ
(பின்வரிசையில்
 
 
 
 

ה, 7ܩ
اپنے سے ங்கிய நதங்கராசா (ஆரையூர் அரசன்) மற்றும் வலை" நடகத்தில் இப்படித் தோன்றினர்.
ழுதித் தயாரித்து நெறிப்படுத்தியவர்."அன்புமணி" வலது புறம் நிற்பவர்)

Page 102


Page 103
ஆரையம்பதியின்
“முனா
1.வைத்தியக்கலை
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதன் தன் வாழ்வை நல்வாழ்வாக அமைத்துக் கொள்வதற்காக ஆன்றோர் அறுபத்து நான்கு கலைகளைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். இவற்றில் உடலோம்பி உயிர் வாழ்வதற்கான கலை வைத்தியம் ஆகும். இதை இங்கு “பரிசாரம்” என்றும் - இதைக் கையாள்பவர்களை “பரிசாரி மார்” என்றும் அழைப்பார்கள். இதற்கு அனுசரணையானது மாந்திரிகமும், சோதிடமும் ஆகும். இந்த முக்கூட்டுக்
கலைகள் ஆரையம்பதியில் அன்று நன்கு வளர்ச்சி
பெற்றிருந்தன. இன்று இவை அருகிவிட்டன. சூறாவளிக்குத் தட்பிய சில மரங்கள் போல ஒரு சிலர் இருந்தாலும், இவர்கள் முக்கியத்துவம் பெற்றவர்களா இல்லை. இதற்குக் காரணம் மேல்நாட்டு மோகமும் நமது பாரம்பரியச் சிறப்பை மக்கள் மறந்ததுமாகும்.
2. ஆயுர் வேதமும் சித்தவைத்தியமும்
இந்த முக்கூட்டுக்கலைகளில் முதன்மையானது வைத்தியமாகும். ஆயுர்வேதம் உபவேதங்களில் ஒன்று. இது மிகவும் தொன்மையானது. இதேபோல சித்தர்களும் முனிவர்களும் நமது நாட்டில் வளரும் மூலிகைகளைக் கொண்டு செய்யும் வைத்தியமே சித்த வைத்தியம். சித்தர்களில் மகாசித்தரான அகத்தியரே இதன் முன்னோடி ஆவார். இவர் பல வைத்திய முறைகளைத் தந்துள்ளார். இவருக்குப்பின் புலிப்பாணி, தேரையர், போகர், தன்வந்திரி, கோரக்கர், நாகமுனி போன்ற புகழ்பெற்ற சித்த வைத்திய மேதைகளும் பலவைத்திய ஏடுகளைத் தந்துள்ளனர். இந்த ஏட்டுப் பிரதிகளுக்கு வாகடம் என்று பெயர். சிறு குழந்தை களுக்கான நோய்களையும் மருந்துகளையும் கூறுவது பால வாகடம். எலும்பு உடைவு, வளைவு, பிரிவுக்கான வைத்தியம் முறிவு வைத்தியம், கண் ரோகங்கள் 96க்குமான வைத்தியம், "கண் வைத்தியம்' எனப் பல விசேடபிரிவுகளும் சித்தவைத்தியத்தில் உண்டு. இதை நாம் அறியும் போது நம்முன் னோரின் பெருமைகளையும் அறியக்கூடியதாக இருக்கிறது. தொந்நூல்களின் பொருள்களை இலகுவாக அறிந்து கொள்வதற்கு நிகண்டு என்னும் நூல் உதவுவது போல் வைத்தியத்துக்கும் "அங்காதிபாதம்” என்னும் நூல் உண்டு. சிரசுமுதல் பாதம் வரையிலான அங்கங்களின் தத்துவங்களை இந்நூல் விளக்குகிறது. இதைத் தெரிந்து கொள்ளாமல் வைத்தியம் செய்வது யாப்பிலக்கணம் தெரியாமல் பாக்கள் இயற்றுவது போலாகும்.

முக்கூட்டுக்கலை
க்கானா’
3. வைத்திய முறைகள்
நம் காட்டுச் சூழலில் வளரும் மரம், செடி, கொடிகளின் வேர், பட்டை, தண்டு, இலை, பூ, பிஞ்சு, காய், கனி, விதை, பிசின் போன்றவற்றையும், எண்ணெய் வகைகள், நெய், தேன், பால், சிறுநீர் போன்றவைகளையும் மருந்துக்கடைகளில் வாங்கும் மூலிகைச் சரக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் குளிசை, சூரணம், தைலம், குழம்பு ஊறல், புகை, நசியம், பற்று, காரச்சீலை போன்றவையுமே இவ்வைத்தியத்தில் பயன்படுத்தப்படு கின்றன. இவை தயாரிக்கப்பயன்படும் சில மூலிகைகளை சோதிட முறைப்படி நல்லநாள், நேரம் பார்த்து மடைவைத்து மந்திரங்களை உச்சாடனம் பண்ணி, காப்புக் கட்டியே பிடுங்குவார்கள். சிலபொருட்களிலுள்ள நச்சுத் தன்மைகளை அகற்றவதற்காக புடம் போட்டும், நீற்றியும், அவித்தும், வறுத்தும் பயன் படுத்துவார்கள். இவை காரணமாக இம்மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. இம்மருந்துகளை நோய் களுக்கேற்ற அநுபானங்களுடன் கொடுப்பதால் மருந்துகளின் சக்தியும் பயனும் அதிகரிக்கிறது.
வைத்திய நூல்களில் நோய்கள், மருந்துகள் மட்டுமல்லாமல், நோய்தீர்க்கும் பரிகாரிமார் எப்படிப்பட்டவர் களாக இருக்கவேண்டும்மூலிகைகளைச் சேகரிப்பது மருந்து களைத் தயாரிப்பது, மருந்துகளை கியாளத்தில் போடுவது நோயாளிகளக்கு மருந்துகளைக் கொடுப்பது எந்தெந்த நாட்களில் செய்யவேண்டும் என்பன போன்ற விபரங்களும் வைத்தியநூல்களில் கூறப்பட்டுள்ளன. இதுபற்றி ஒரு பாடல் வருமாறு:
"காரியும் புதனும் திங்கள் கருதிடில் மருந்து தீதாம் வீரியவெள்ளி நோயாம் வியாழன்சேய் பிணிகள் தீரும் பாரிலுள்ளபேர்க்கு பரிகாரம் செய்யவேண்டில் ஆரிய னருளினாலே அருக்கனில் மருந்து செய்யே”
என்று வைத்தியம் முதன்முதல் தொடங்கும் நாள் பற்றிக்கூறப்பட்டுள்ளது. ஞாயிறு உத்தமம். வியாழன் செவ்வாய் மத்திமம், ஏனைய நாட்களில் செய்யக்கூடாது என்பதை அறியலாம். யாருக்கு மருந்து செய்யக்கூடாது, யாருக்கு நோய் தீராது, யாருக்கு வைத்தியம் கற்றுக் கொடுக்கக்கூடாது என்ற விபரங்களும் உண்டு. தகுதியில்லா தவர்கள் பரிகாரம் செய்தால் உயிராபத்து ஏற்படும் என்பதை அறிந்து ஆன்றோர் சில மருந்துகளுக்கு பயன்படும் பொருட்களின் பெயர்களை குறிப்பால் அறிந்து கொள்ளும் பொருட்டு குழுக்குறியாகப் பெயரிட்டுள்ளனர். கூனன் முது
75

Page 104
கெலும்பு - ஆமை, இராவறிவான் - சேவல், கானக்குறத்தி - முலைப்பால், கன்றெறிந்தோன் பிசின் - விளாம்பிசின், மோகினி - கஞ்சா, சிங்கப் பெருமாள் - துளசி போன்ற வார்த்தைகள் பல உள்ளன.
4. அனுபானங்கள்
அக்காலத்தில் நம்ஊரில் ஒழுங்கைக்கு ஒழுங்கை பரிகாரிமாரும் வீட்டுக்கு வீடு பெத்தா (பாட்டி) வைத்தியர்களும் இருந்தார்கள். ஒவ்வொரு விட்டிலுமுள்ள பானை அடுக்குகளில் சில பானைகளில் நன்றாய் முற்றிப் பழுத்த சுரைக்காயின் காம்பு, மாதுளம்பழத்தின் காய்ந்த தோல், காய்ந்த சேனை இலைத்துளிரை இடித்த தூள், காய்ந்த மாங்கொட்டை, இரும்புத்துண்டு, சித்தரத்தை, வசம்பு, அயமதாகம், வேர்க்கொம்பு, பெருங்காயம், தேத்தாக்கொட்டை, காஞ்சூரங்கொட்டை, செஞ்சந்தணக் கட்டை, கடுக்காய் போன்ற பொருட்களும் கறிச்சரக்குகளான உள்ளி, கடுகு, மிளகு, இருசீரகம் போன்றவற்றையும் வைத் திருப்பார்கள். திடீரென ஏற்படும் சில உடல் கோளாறுகளுக்கு இவற்றைப் பெத்தாமார் பயன்படுத்துவார்கள். பலன் கிடைக்கா விட்டால்தான் பரிகாரிமாரிடம் செல்வார்கள்.
ஆங்கிலேயர் நம்நாட்டை ஆளத்தொடங்கிய பின்னர்தான் ஆங்கில வைத்தியமுறை (அலோபதியும், அதைத்தொடர்ந்து கோமியோபதி, யூனானி, அக்யுபஞ்சர் போன்ற முறைகளும் வந்தன. இருந்தாலும் இப்போ ஆங்கி வைத்தியமே அதிகம் புளக்கத்திலுள்ளது. இந்த வைத்தி யர்களிடம் ஒரு நோயாளி சென்றால், உங்களுக்கு என்ன . செய்கிறது என்பதைக் கேட்டறிந்துகொண்டு அவர்கள் மார்பில் இதயத்துடிப்பறியும் கருவியை (Stathascope) வைத்துப் பார்த்து மருந்தெழுதிக் கொடுப்பார்கள். ஆனால் நமது பரிகாரிமாரிடம் சென்றால் மணிக்கட்டுக்குக் கீழே மூன்று நடுவிரல்களையும் வைத்து அழுத்தி, வாதம் - பித்தம் - சிலேத்துமங்களின் நிலைகளை நாடித்துடிப்பால் அறிந்து கொள்வர். பின்பும் நோயாளியின் உடல் வெப்ப தட்ப நிலையை, உடலின் நிறம், குரல்ஒலி, கண், நாக்கு, மலம், சலம் என எட்டுவித பரீட்சைகளையும் செய்து பார்த்துவிட்டு நோய்களையும் நோய்க் குறிகளையும் அவர்களே கண்டுபிடித்து நோயாளர்களிடம் கூறுவார்கள். பின்பு உரிய மருந்துகளைக் கொடுத்து அனுபானங்களையும் பத்தியங்களையும் கூறுவார்கள். இதனால் இவர்கள் மீது நோயாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. 5. சித்தவைத்தியம்
சித்தர்களின் பெருமைக்கும் அவர்களது ஆராய்ச்சித் திறமைக்கும் அனுபவங்களுக்கும் எடுத்துக் காட்டாக ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதமாக கண்வைத்தியம் பற்றி அகத்தியர் நயனவிதி என்ற நூலி லிருந்து சில விளக்கங்களைக் கூறவிரும்புகிறேன். கண்ணின் அளவுகளைப்பற்றிக் கூறும்போது, கண்விழியின் நீளம் இரண்டங்குலம், அகலம் அரையங்குலம், ஆழம் ஒரு அங்குலம் - கருவிழியானது முழுக்கண்ணின் மூன்றிலொரு பங்கு என்றும், கண்சோதி(பாவை)யானது கருவிழியின் ஏழில் ஒரு பங்கு என்றும் கூறப்பட்டுள்ளது. கண்ணிலட்நோய்கள் உண்டாவதற்குக் கிட்டத்தட்ட முப்பது காரணங்கள்
76

கூறப்பட்டுள்ளன. சோதியில் இருபத்தேழு, கருவிழியில் பத்து, வெண்விழியில் பதின் மூன்று, கருவிழி வெண்விழி களுக்கிடையில் உள்ள சந்தியில் ஒன்பது. கீழ் மேல் இமைகளில் இருப்பத்துநாலும் கண்முழுவதிலும் பதின் மூன்றுமாக மொத்தம் தொண்ணுற்றாறு என்றும் கூறப் பட்டுள்ளது.
இந்த நோய்களில் வாதகோபத்தால் இருபதும் உண்டாகுமெனவும் கூறப்பட்டுள்ளது. நாற்பத்தைந்து 6யளவில் ஒருவித புகைச்சலும் ஐம்பத் தேழுவயதளவில் தூரத்துப் பார்வை மங்கலும் உண்டாகு மென்றும் குறிப்புண்டு. கைவிரல்கள் எட்டையும் குறுக்கு நெடுக்காக யன்னல்போல் அமைத்து சந்திரன் தெளிவாயிருக்குங்காலங்களில் அதனூடாகச் சிறிது நேரம் பார்த்து விட்டு சிலநீர்த்துளிகளைக் கண்ணில் விட்டுக் கசக்கி விடுவதும் இரவில் படுக்கப்போகும் போது உள்ளங்காலை சுத்தமாக கழுவிவிட்டு நீரில்லாமல் துடைத்து விட்டு பசு நெய்யைப்பூசி தவிட்டை அப்பிவைத்துப் படுப்பதும் கண்ணுக்கு நல்லது. சிறுகீரை பொன்னாங்கண்ணி அடிக்கடி சாப்பிடவேண்டும் - ஆறுமாதத்துக்கு ஒரு தடவை வாந்தி எடுக்கவைப்பதும் இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை பேதிக் குக் குடிப்பதும், மாதத்துக்கு ஒரு தடவை மூக்கில் நசியம் விடுவதும் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கண்மையும் இட்டு வருவது நல்லது. இவற்றால் வாதபித்த சிலேத்து மங்கள் கட்டுப்படும். பேதி வாதத்தையும் வாந்தி பித்தத் தையும் நசியம் சிலேத்துமத்தையும் கட்டுப்படுத்துகிறது. 6. சத்திரசிகிக்சை.
அடுத்ததாகச் சித்த வைத்தியத்திலே சத்திர சிகிச்சை பற்றியும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ரணசிகிக்சையிலும் அகத்தியரே முதன்மையானவர். அகத்தியர் ’ நயனவிதி ஐந்நூறு என்ற நூலில் சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட இருபத்தாறு விதமான ஆயுதங்களின் பெயர்களும் நீள, அகல, எடை, அமைப்பு போன்ற விபரங்களும் கூறப்பட்டுள்ளன. கத்தி, சத்திரம், குறும்பிவாங்கி, முக்கவாதனன், முள்ளுவாங்கி, ஆழிக்கோல், பிறைக்கோல், கத்தரிக்கை, பரகரைவாங்கி, முச்சலாகை, முனிமொழி, ஒட்டுக்கோல், அட்டக்கோல், ஊசி, செப்புக் குழை, சலாகை, வட்டகை, பஞ்சமுகம், செப்புச்சலாகை, கொம்பு, குடோரி, வெண்கலக்குழல், ஈயச் சலாகை, காயக்கோல், கண்கத்தி, தெண்டுசலாகை என இருபத்தாறாம். சந்திரசிகிச்சையில் வெட்டிய பாகங்களைத் தைப்பதற்குப்பதிலாக, அதில் கட்டெறும்புகளைக் கடிக்க விட்டு அதன் வயிற்றுப்பகுதியை நோண்டுவார்கள் என்பதும் அறியக்கிடக்கிறது. கட்டெறும்பு கடித்தால் விடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இன்னுமொரு வியப்பூட்டும் சிகிச்சை முறையும் தமிழ் வைத்தியத்தில் இருந்ததையும் அகத்தியர் கூறுகிறார். ‘அட்டை விதி' என்ற பகுதியில் இது கூறப்பட்டுள்ளது. பாலும் நீரும் கலந்திருந்தால் அன்னம் பாலை மட்டும் பிரித்தெடுப்பது போல, அட்டைகளும் இரத்தத்திலுள்ள விசநீரையும் கிருமிகளையும் பிரித்து எடுத்துவிடுமாம். பாடல்இதோ:

Page 105
முன்னேகேளட்டையின் குணந்தான் மொய்குழல் மாதேகேளாய் அன்னனன்னம் பால்பருகும் அதுபோல் வாங்கும் விசநீரை நன்நாள் பார்த்து நோயறிந்து நயனந் தன்னில் விடுவாயால் சொன்னோம் சொன்னோம் நாற்றிசையும் துலங்கச்சொன்னோம்
சொன்னோமே.
இப்பாடல் மூலம் கண்ணிலும் அட்டைவிட்டு வைத்தியம் செய்ததை அறியக்கூடியதாக இருக்கிறது. அட்டைகளைப் பற்றியும் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளது. அட்டைக்கு மூன்று பல்லும் ஐந்தடுக்குத் தோலும் பச்சை முகமும், இரண்டு பக்கமும் பெருத்த நரம்புகளுமுண்டாம். மனிதரில் நாலு வர்ணம் (சாதிகள்) கூறப்பட்டுள்ளது போல இவற்றிலுமுண்டு. பிராமணசாதி வெள்ளை நிறமும், சத்திரிய சாதி செங்கழுநீர் நிறமும், வைசிய சாதி பவள நிறமும் (சிவப்பு) சூத்திரசாதி எலுமிச்சம் பழநிறமும் (மஞ்சள்) உள்ளன. இத்துடன் ஆண்பெண் சாதியை அறியும் முறையும் கூறப்பட்டுள்ளது. கொட்டியும், தாமரையும் உள்ள தடாகத்தில் அட்டைகளைவிட்டால், ஆண்அட்டை தாமரை யிலும் பெண்அட்டை கொட்டியிலும் போய்ச்சேரும். அட்டையைக் கடிக்க விட்டு அதைவிழவைப்பதற்கு புளியை விட வேண்டுமாம். இன்னும் பலவுண்டு விரிவஞ்சிவிடுகிறேன். 7. பணம் முக்கியமல்ல
இறுதியாகச் சில வார்க்தைகள் கூறவிரும்பு கிறேன். அக்காலத்துப் பரிகாரிகள் இவ்வளவு பணம் தா என்று கேட்பதில்லை. நோயாளர்கள் மனமுவந்து கொடுப் பதையே பெற்றுக்கொள்ளும் வழக்கம் உண்டு. விஷக்கடி வைத்தியர்கள் எவ்வித பணமும் வாங்கமாட்டார்கள். நோயாளி வீட்டில் வெற்றிலை பாக்குக்கூட அருந்த மாட்டார்கள். இவை குருவுக்கு கொடுத்த சத்தியப் பிரமாணத்திலடங்குவன. இப்படிப்பட்ட பெருந்தன்மையுள்ள வைத்தியர்களுக்கு சமூகத்திலே நல்லமதிப்பும் இருந்தது. இவர்களின் பெருந்தன்மைகளையும், ஆராய்ச்சித் திறமை களையும் அனுபவங்களையும் நினைத்து நினைத்துப் பெருமைப்படவேண்டும். விஞ்ஞானத்தைத் தலையில் சுமந்து கொண்டு திரியும் மேல்நாட்டு மோகன சுந்தரர்களின் அஞ்ஞானம் இந்த மெய்ஞானச் சித்தர்களின் அற்புதமான ஆராய்ச்சிகளைக் கண்டாவது விலகுமா?
ப.சோதிடக்கலை
மக்களின் வாழ்வோடு தொடர்புடைய கலைகளில் சோதிடமும் ஒன்று. இதை நம்ஊரில் சாத்திரம் என்றும் இதில் ஈடுபடுபவர்களை சாத்திரியார் என்றும் அழைப்பார்கள். ஆரையம்பதியைப் பொறுத்தவரையில் சோதிடர்களின் தொகை மிகமிகக் குறைவு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அன்றும் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள். அக்காலத்தில் ஆசிரியர்களே படித்தவர்களாக இருந்ததால் சில ஆலோசனைகளைக் கேட்பதற்கு மக்கள் அவர்களை அணுகுவது வழக்கம். "ஐயா என் இரண்டாவது பிள்ளை பெரியபிள்ளை ஆகிவிட்டாள். தண்ணீர் வார்க்க ஒரு நாள்பாருங்க. - தம்பிக்குத் தலை வழிக்க ஒருநாள் பாருங்க” என்று கூறியவுடன் அவரும் பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்லிவிடுவார். இது ஓரளவு படித்தவர்கள் செய்யக்கூடியது. ஆனால், நாம் சாத்திரம் என்று கூறுவது, நினைத்த காரியம்,

கெடுதி, சாதகம் கணித்தல் போன்ற முக்கியமானவற்றையே குறிக்கும். இவர்களையே நாம் சாத்திரியார் என்று அழைக்கிறோம்.
1. நல்லநேரம்
தமிழர்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கு வதற்கும் நல்ல நாள் நேரம் பார்ப்பது வழக்கம். இது அவர்களது வாழ்வோடு ஒன்றிணைந்த பழக்கம். கலியாணம், வீடுகட்டல் குடிபுகல், கிணறுதோண்டுதல், புதிர் எடுத்தல் - உண்ணல், தொழில் தொடங்குதல், புதிய பொருட்களை வாங்குதல் - கொண்டுவருதல், காதுகுத்துதல், பூப்புநீராட்டல் போன்ற சகல செயல்களுக்கும் நாள் பார்ப்பது வழக்கம். இவற்றில் பெரும்பாலானவற்றை பஞ்சாங்கம் பார்த்துக் கூறிவிடலாம்.ஆனால் சாதகக்குறிப்பு எழுதுதல், கெடுதி கூறுதல், நினைத்தகாரியம் கூறுதல் போன்றவற்றுக்கு அதற்கென விசேடமாகப் படித்த அனுபவசாலிகளிடமே நாம் போகிறோம்.
புவியியல் பாடம் படிக்கும் மாணவர்களின் விளக்கத்துக்காக பூமியில் வடக்குத் தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் கற்பனைக் கோடுகள் அமைக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். இதேபோல சோதிட முறைப்படி வானமண்டலத்தை மேடம், இடபம், மிதுனம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சியம், தனு, மகரம், கும்பம், மீனம் என பன்னரண்டு ராசிகளாகப் பிரித்திருக்கிறார்கள். கிரகங்கள் சூரியனைச் சுற்றி வித்தியாசம் வித்தியாசமான சுற்றுவட்டப் பாதையில் சுழன்று கொண்டிருப்பது விஞ்ஞானத்தால் நிரூபிக் ககப் பட்டுள்ளது. இதை சோதிடமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இருபத்தேழு வித நட்சத்திரக் கூட்டங்களும் வானவெளியில் நிற்கின்றன. இந்த நிலையில் பூமியில் எங்கோ ஓர் இடத்தில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அந்த நேரத்தில் நின்ற இராசியை அமைத்து அதனால் அக்குழுந்தைக்கு ஏற்படப்போகும் நன்மை தீமைகளைக் கூறுவதே சோதிடமாகும். இதை அனுபவசாலிகளே துல்லியமாகக் கணிப்பார்கள்.
நம்ஊர் வழக்கப்படி, ஒரு குழந்தை பிறந்ததும் ஆண் குழந்தையானால் உலக்கையையும் பெண் குழந்தை யானால் வாருகோலையும் எடுத்து விட்டுமுன் கூரையிலே, தாய்க்கும் பிள்ளைக்கும் சுகமா? என்று மூன்று தரம் கேட்டு தட்டிவிட்டு வீட்டுக்கு மேலால் எறிவார்கள். வேறு சிலர் அடியளந்து நேரத்தைக் கணிப்பார்கள். (மணிக்கூடு இல்லாத காலத்தில்) இரவு நேரமானால் சேவல்கள் கூவுவதையும் வளர்பிறை தேய்பிறைகளைக் கொண்டும், நட்சத்திரங்கள் நிற்கின்ற திசை உயரம் முதலியவற்றைக் கொண்டும் நேரத்தைக் கணிப்பிடுவார்கள். பின்பு நல்ல ஒரு நாளில் சோதிடரிடம் வெற்றலை, பாக்குக் கொண்டு போய் கொடுத்து நினைத்த காரியம் சொல்லுங்க என்று வெற்றிலைத் ட்டத்தை வைப்பார்கள். அவர், அவர்கள் வந்த திசை, நின்ற நிலை நேரம் இவற்றையும் அவதானித்து வெற்றிலை பாக்குகளை மும்மூன்றாக எண்ணி, வெற்றி லையில் உதித்த இராசி கிரகத்தைக் கொண்டு குழந்தை பிறந்தது, அல்லது நோய் நொடி பற்றியது, அல்லது பேய், பிசாசு பற்றியது என்பவற்றில் ஒன்றைக் கூறுவார். பின்.அவர்களது விடையைக்
77

Page 106
கொண்டு சோதிடம் கூறத் தொடங்குவார். வேறு சிலர் ஒரு கெடுதி சொல்லுங்க என்று வெற்றிலையை வைத்ததும் முன்போலவே கணக்கிட்டு ஒரு நாலுகாலுள்ளது - அல்லது இரண்டு காலுள்ளது, அல்லது மஞ்சள் நிறமான ஒரு பொருள் காணவில்லை என்று ஏதாவது ஒன்றைக் கூறுவார். கேட்போர் திருப்தியுடன் திரும்புவார்கள்.
2. ஜாதக்குறிப்பு
குழந்தை பிறந்ததாயிருந்தால் அதற்கு ஒரு விதக்குறிப்பு தயாரித்துக் கொடுப்பது சோதிடரின் கடமை. பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டங்கள் அமைத்து அதில் லக்கினத்தை முதலாவது பாகமாகக் கொண்டு பன்னிரண்டு வீடுகளையும் அமைப்பார்கள். அதில் எந்தெந்தக் கிரகம் எத்தனையாம் பாவத்தில் நிற்கிறது என்றும் குறிப்பார்கள். சந்திரன் நிற்கும் ராசி சந்திரலக்கினமாகும். இதேபோல இன்னுமொரு கட்டம் அமைத்து ஒவ்வொரு ராசியையும் பின்னர் ஒன்பது பாகமாகப் பிரித்து நவாம்சம் அமைப்பார்கள் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டு மகாதெசை கணிப்பார்கள். பின்னர் பலனைக் கூறுவார்கள். நட்சத்திர பாகத்தைக் கொண்டு பெயர்வைக்கவேண்டிய எழுத்தையும் கூறுவார்கள். இதைப் பத்திரமாக வைத்திருந்து தேவையான நேரங்களில், சந்திரன் நின்ற சந்திர ராசியை முதலாவது பாகமாகக் கொண்டு அவ்வப்போது ஏற்படும் பலாபலன்களையும் அறிந்து கொள்வார்கள். சாதகன் இறந்ததும் சாதகத்தையும் ஒரு விசேட தீர்த்தத்தில் சேர்த்துவிடு வார்கள். இதில் நேரம் சரியாக இருந்தால்தான் (கிரகநிலைகளும் சரியாக அமையும்போது) பலனும் சரியாக இருக்கும். இதற்கு ஒரு சிறிய கதையை கூறவிரும்புகிறேன்.
பராசரமுனிவர் ஒரு மாலைவேளையில் யமுனை நதியைக் கடக்கவேண்டி ஏற்பட்டது. "மச்சகந்தி என்னும் செம்படவப்பெண்ணின் படகில் ஏறிக்கொண்டு ஆற்றில் சென்றுகொண்டிருந்தார்.அவ்வேளையில் வானத்தில் தென் பட்ட கிரகங்கள் நட்சத்திரங்களின் சேர்க்கைகளையும் நிலைகளையும் கண்ட முனிவர், இந்நேரம் ஒரு ஆண் குழந்தை கருவில் உற்பத்தியானால் அக்குழந்தை எக்கால மும் உலகம் நினைத்து நினைத்து பெருமைப்படும் படியான ஒரு அற்புத ஆற்றல் படைத்தவனாக வருவான் என்பதை அறிந்தார். உடனே மச்சகந்தியிடம் விசயத்தை சொல்லி அவளின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டார். அந்தப்பிள்ளைதான் வேதங்களையே வகுத்த வேதவியாச பகவான். எனவே சோதிடத்தில் நேரம் மிகமுக்கியமான தாகும். 3. எண்சோதிடம்
தொன்மைக்காலத்தில் வராஹிமிரர், பாஸ்கராச் சாரியார். வாத்ஸாயனர், ஆரியபட்டர் போன்ற வானசாத் திரிகள் பலர் இருந்தனர். இவர்கள் வான்வெளியின் அற்புதங்களை நன்கு ஆராய்ந்து பல நூல்களை வடமொழி யில் எழுதியுள்ளனர். இதைப் பின்பற்றி தமிழிலும் பல நூல்கள் வந்துள்ளன. சாதகலங்காரம், சாதகபாஸ்கரன், சப்தரிஷிவாக்கியம் போன்ற பல நூல்கள் உள்ளன. இன்று ஏராளமான நூல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இராசிகள் கிரகங்கள் மகாதெசைகளைக் கொண்டு சோதிடம்
78

சொல்வது கணிப்பீட்டு முறைகொண்டு சொல்வது. கணிப்பீடு சரியாக இருந்தால் பலனும் சரியாக இருக்கும். இதைவிட வேறுசில முறைகளைக் கொண்டும் சோதிடம் கூறுகிறார்கள். குறிபார்த்தல், சோகிஉருட்டுதல், தேங்காய் உருட்டுதல், வில்லில் பாக்குவெட்டி வைத்துப்பார்த்தல், குடுகுடுப்பை, தொடுகுறி, கிளிஜோசியம் எனப்பல விதங்களில் பலன் கூறுகிறார்கள்.ஆனால் இவை சாஸ்திரிய ரீதியானவை அல்ல. சிலர் கைகளிலுள்ள ரேகைகள், மேடுகள் கொண்டும் சோதிடம் கூறுவார்கள். சிலர் சாமுத்திரிகா லெட்சணங்களைக் கொண்டும் கூறுவார்கள். ஆனால் தற்காலம் எண்சோதிடம் பிரபல்யமடைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். கிரகநிலை கண்டு கணிப்பிடும் சோதிடத்துக்கு அடுத்தபடியாக கைரேகைகள், மேடுகள் கொண்டு பார்ப்பதும் நல்லபலனைத் தருவதாகும். குருமேடு, சனிமேடு, சூரியமேடு, புதன்மேடு, மேல்செவ்வாய் மேடு, கீழ்ச்செவ்வாய் மேடு, சுக்கிரமேடு, சந்திரமேடு, செவ்வாய்ச்சமவெளி போன்றவற்றையும் இவற்றின் அமைப்புக்களையும் அதில் படர்ந்துள்ள இருதயரேகை, புத்திரேகை, ஆயுள்ரேகை, திருமணரேகை, சனிவளையம், சுக்கிரவளையம், அதிஷ்டரேகை போன்றவற்றின் தன்மைகளையும் கொண்டு கூறுவதே கைரேகை சாத்திரம். பொதுவாகச் சோதிடம் என்று கூறும்போது கிரக நிலைகொண்டு கணிப்பிடுவதையே சிறப்பானதாக அறிஞர்கள் ஏற்றுள்ளனர். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றைப்பற்றி சரியான முறையில் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டால் பலனும் சரியாக இருக்கும்.
(1) பன்னிரண்டு ராசிகளிலும் நிற்கும் கிரகங்கள்
உச்சம், ஆட்சி, நட்பு, பகை, நீசம்,
(2) ஒவ்வொரு பாவத்திற்குமுரிய (1தொடக்கம்
12 வரை) காரகங்கள்.
(3) ஒவ்வொரு கிரகத்துக்குமுரிய காரகங்கள்.
(4) கேந்திரம் அதிலுள்ள கிரகங்கள் (5) திரிகோணம் அதிலுள்ள கிரகங்கள் (6) கிரகங்களின் பார்வைகள் (7) பகை, நட்புக் கிரகங்கள் (8) கிரகங்கள் தரும் கோசாரபலன்கள்
(9) நல்ல கெட்ட கிரகங்களின் சேர்க்கைகள் (10) மகாதெசை, புத்தி, அந்தரங்கள்.
இவற்றைப்பற்றிய தெளிவான அறிவு ஒரு சோதிடனுக்கு இருக்கவேண்டியது அவசியமாகும். மேற்குறிப் பிட்ட பத்து குறிப்புகளையும் விரிவாகக் கூறுவதானால் அது வேறு கட்டுரையாகிவிடும். இறுதியாக ஒன்று கூறவிரும்புகிறேன். சோதிடம் பார்ப்பதாயிருந்தால், இதில் நம்பிக்கை ஏற்படவேண்டும். அனுபவமுள்ளசோதிடர்களை அணுகவேண்டும். சரியான நேரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவே நல்ல பலனைக்கொடுக்கும்.

Page 107
I.மாந்திரிகம்
மந்திரம் என்பது இந்துமத வேதங்களிலும் முக்கிய இடம் பெறுகிறது. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வணவேதம் முழுக்க முழுக்க மந்திரங்களையும், கிரியைகளையுமே கருப்பொருகாகக்கொண்டது. கோயில்விழாக்கள், கும்பா பிஷேகம் போன்ற சகல கிரியைகளிலும் மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் ரிஷிகள் செய் யும் வேள்விகளிலும் இதுவே முக்கிய இடம் பெறுகிறது. அருணகிரிநாதர் கூட "வேதமந்திர சொரூபா நமோ நமோ” என்று இறைவனையே மந்திரவடிவமாகப் பாடியுள்ளார். திருமூலநாயனார் கூட யோக நிலையிலே தூங்காமல் தூங்கி வருடத்துக் கொன்றாக வெளிப்படுத்திய பாடல் களுக்கும் திருமந்திரம் என்றே பெயர்.ஆனால் இக்கட்டு ரையில் கூறப்படும் மந்திரங்கள் வேறுவகையானது. இவை கிராமங்களில் பரவி நிலைபெற்றுவிட்ட மந்திரமுறை யாகும்.
1.நிறைமொழி
'மந்ரம்' என்ற வடமொழிச்சொல்லுக்கு நினைப்ப வனைக் காப்பது என்பது பொருளாகும்.
நிறைமொழி மாந்தர் நெஞ்சினில் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரமாகும்.
என்று தமிழ்மொழி வரைவிலக்கணம் கூறி யுள்ளது. நெஞ்சினில் கிளர்ந்த மறைமொழி என்றிருப்பதால் மந்திரம் வெளிப்படும் வாயைவிட இது உற்பத்தியாகும் உள்ளமே முக்கியமானது. அடுத்து நிறைமொழி மாந்தர் என்றிருப்பதால் அந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரன் பரிசுத்தானவனாக இருக்கவேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட உள்ளங்களி லிருந்து கிளர்ந்து எழுகின்ற எண்ணஅலைகள் ஒலிவடிவம் பெற்று, சக்திமிக்க மந்திரச் சொற்களாக வெளியேறி, உயிர்களிலும், உயிரற்ற பொருட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக மந்திரத்திலே நெட்டை சொல்லி அடித்தலுக்கு ஒரு மந்திரம் இருக்கிறது. ஒருவன் எவ்வித குற்றமும் செய்யாத ஒருவனைச் சித்திரவதை செய்யும்போது பொறுத்துப் பொறுத்து பொறுமையிழந்து மிக்க மனவேதனையோடு இருக்கும் நேரம் அடிபட்டவனது உள்ளத்திலிருந்து இந்த நெட்டையடி’மந்திரம் புறப்படுமா னால் அதற்குத்தான் வலிமையும், சக்கியும் உண்டு. எனவே இப்படிப்பட்ட மந்திரங்கள் நிறைமொழி மாந்தர்களின் நெஞ்சிலிருந்து கிளர்ந்து எழவேண்டும். எல்லாச் சந்தர்ப் பங்களிலும் இதைப் பாவிக்கக்கூடாது. ஆரம்பத்தில் எழுதாக்கிழவிகளாக இருந்த இம்மந்திங்களும், யந்திரங்க ளும், அட்சரங்களும் பின்னர் ஏட்டுச்சுவடிகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன.
எத்தனையோ இருடிகளும், ஞானிகளும், சித்தர் களும் தோன்றிய பாரத நாட்டில், மலையாள மாநிலமே மந்திரங்களின் தாயகமாகும். இந்த மலையாள மக்களின் பரம்பரையில் வந்தவர்களே மட்டக்களப்பில் அதிகம் குடியேறிப் பரவிவாழ்வதால், இலங்கையில் மட்டக்களப்பே மாந்திரிகத்தின் விளைநிலமாகும். சிறப்பாக அக்கரைப்பற்று,

மண்முனைப்பற்று, தம்பான்கடவை (தம்மன்கடுவ) பகுதிகளைச் சொல்லலாம். மந்திரவாதிகள் இல்லாத ஊருமில்லை. மந்திரங்களைப் பயன்படுத்தாத மக்களு மில்லை என்று சொன்னாலும் மிகையாகாது. மண்முனைப் பற்றிலே நமது ஆரையம்பதியே மந்திரத்தில் முன்னிலை யில் இருந்தது. அக்காலத்தில் யாராவது ஒருவர் மூன்று குறியாக திருநீறணிந்து புருவமத்தியிலே வட்டவடிவமாக திருநீற்றிலே பெரிய பொட்டும் வைத்திருந்தால் அவர் ஒரு மந்திவாதி என்று துணிந்து கூறலாம். முகத்துவாரத் தெரு வில் வாழ்ந்து மறைந்த ப.க.சுப்பிரமணியத்தின் தந்தையார் பரமக்குட்டி கண்ணப்பர் (இவரை விதானை கண்ணப்பர் என்று அழைப்பார்கள்) வேளாளர் தெருவில் வாழ்ந்து மறைந்த மாரியார் இளையதம்பி முதலியோர் பிரபலமான மந்திரவாதிகள். (மந்திரத்தை தீமைக்காகப் பயன்படுத்தாத மந்திரவாதிகள்) அக்கரைப்பற்றிலே கோளாவில் இன்றும் மந்திரத்துக்குப் புகழ்பெற்ற இடமாக இருக்கிறது. இப் பொழுது தமிழ் வைத்தியத்தைப் போல இதுவும் மெல்ல மெல்ல இறங்குமுகமாகி உள்ளது. ஆனால் சமயத்தோடு தொடர்புடைய மந்திரங்கள் இன்னும் நிலைபெற்றுள்ளன.
2. தெய்வ சங்கல்பம்
இம்மந்திரங்களை தெய்வங்களுக்குரியன,
உயிரினங்களுக்குரியன, உயிரற்ற சடப்பொருட்களுக் குரியன என மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.
முதலில் தெய்வங்களுக்குரியவற்றைப் பார்ப் போம். சில தலங்களில் பிராமணர்கள் ஆகமமுறைப்படி செய்யும் கிரியைகளுக்கு சமஸ்கிருத சுலோகங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கண்ணகை அம்மன், மாரி அம்மன் போன்ற தெய்வ மூர்த்தங்களதும், வீரபத்திரன், பெரியதம்பிரான், பரமநயினார், வதனமார் போன்ற ஆண் தெய்வமூர்த்தங்களினதும் கோயில் களிலே பத்ததி முறை யிலான கிரியைகைகளையும் நமது தமிழ் மந்திரங்களையும் பயன்படுத்துவார்கள். மடை வைத்தல், கும்பம் வைத்தல், கும்பம் எழுப்புதல் , ஆடும் தெய்வங் களுக்கு உருவேற்றுதல், உருத்தணித்தல், பலிகொடுத்தல், தெய்வங்களை கட்டுதல், வெட்டுதல், படுகளம் போடுதல், படுகளம் எழுப்புதல், வாக்குத்திறத்தல் போன்ற கிரியை களுக்கெல்லாம் மந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் மந்திரங்களோடு யந்திரங்களும் அட்சரங்களும் பெரும்பாலும் தேவைப்படும். பலிகொடுத்தல் போன்ற சந்தர்ப் பங்களில் யந்திரம் கீறி, அதன் கட்டங்களில் அட்சரங்கள் எழுதி அதன் மேல் தேங்காய் வைத்து முக்கண்ணன் பெலி போன்ற பலிகளைக் கொடுக்கும்போது உச்சாடனம் பண்ணும் மந்திரங்கள் சக்திபெறுகின்றன. கோயில் களில் இவற்றைச் செய்பவர்களை கட்டாடிமார் என்று அழைப் பார்கள். இவர்களுக்கு ஏனைய மந்திரங்களும் தெரியும் ஆனால் தீமையான செயல்களுக்குப் பயன்படுத்த மாட்டார்கள். திருநீறுபோடுதல், தண்ணிர் ஓதிக்கொடுத்தல், போன்ற வற்றையே செய்வார்கள். நானறிந்த வரையில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த பத்தக்குட்டிக் கட்டாடியார் நல்ல மதிப்புள்ளவர். இவருடன் கண்ணகை அம்மன் கனவில் பேசியதாகக் கூறுகின்றார்கள். மந்திரங்
79

Page 108
களில் நல்லதேர்ச்சியும் அனுபவமும் உள்ளவர்களையே கட்டாடிமார்களாக நியமிப்பார்கள்.
சிவாச்சாரியார் அபி ஷேகம் பெற்றவர்களே சிவதலங்களில் பூசை செய்வது போல பத்ததிமுறைகளும், மந்திர வித்தாண்மைகளும் உள்ளவர்களை படிகடக்க விட்டே கட்டாடியார் ஆக்குவார்கள்.
3. சக்தி உபாசனை
கோயில்களிலே அம்மனுக்குப் பூசை, சடங்கு செய்வது போல செல்வந்தர் வீடுகளிலும் மாரி அம்மனுக்குப் பூசையும் சடங்கும் செய்வது வழக்கம். இது மலை யாளத்தில் நாயர்மார் வீடுகளில் செய்துவந்தமுறையாகும். அம்மன் கோயில்களில் கட்டாடியார்களாக இருப்பவர் களையே இதற்கும் கட்டாடியார்களாக அழைப்பார்கள். இதில் அம்மன் சிலைகளுக்குப் பதிலாக வெள்ளியாலான அம்மன் முகத்தை மட்டும் வைத்துப் பூசை செய்வார்கள். இதற்கு முகக்களை' என்று பெயர். முகக்களையோடு, வெள்ளிப்பிரம்பு அம்மானைக்காய் சிலம்பு மணி, தீபக்கால் போன்றவற்றையும் கொண்டுவருவார்கள்.
மதியத்தில் அம்மனுக்கும் இரவில் வயிர வருக்கும் பூசைநடத்தி அதிகாலை நடைபெறும் காத்தான் பள்ளயத்துடன் கிரியைகள் நடைபெறும். இதை தண்ணீர்ச் சோற்றுப் பள்ளயம் என்றும்.கூறுவார்கள். மதியப் பூசையில் ஏழு சிறுமிகளை சப்த கன்னியராக வைத்துப் பூசை செய்வார்கள். இச்சடங்கு நடக்கும் வீட்டில் யாருக்காவது தெய்வம் பிடித்திருந்தால் அவர்களும் பூசையில் தலைசுற்றி ஆடுவார்கள். இது ஒரு தனிக் கட்டுரைக்கு உரிய விடய மாகும். 4. பிணி நீக்குதல்:
இனி உயிரினங்களுக்குரிய மந்திரங்களைப் பார்ப்போம். இது இருவகைப்படும். மனிதர்களுக்குரியனவும், மற்ற உயிரினங்களுக்குரியனவுமாகும். இவை நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்தலாம்.
நன்மைக்குரியன:
திருநீறுபோடுதல் தண்ணிர் ஓதுதல் சுகப்பிரசவம் ஆக, துவாலை இறைத்தல் மறித்தல் கண்ணுறுகளுக்கு பலவித விஷ முறிவுக்கு துவக்குவெடி தடுத்தல் மரித்த பிள்ளை விழ முள்ளு முறிய பட்டிகாவல் (ஆடுமாடு) தாய்ப்பால் சுரக்க புழு உதிர உழுக்கு சுளுக்குக்கு சிறுநோய்கள் தடுக்க முறைக்காய்ச்சில் தீர. உடல் கட்டு குறிபார்த்தல்
80

செய்வினை எடுத்தல் பிரிந்தவரைச் சேர்த்தல் வளவுகள் காவல் பண்ணல் வழக்குகளில் வெற்றியடைய காட்டுவழிப்பாதுகாப்பு
இருளன், மருளன், கரையாக்கன், காடேறி போன்ற கெட்ட பசாசுகள் விலக்கல், பில்லி, சூனியம், ஏவல், பூதப்பசாசுகள் விலக்குதல். இவ்விதம் ஏரளாமான நன்மைகளுக்குப் பயன்படும்.
தீமைகளுக்கு
சேர்ந்தாரைப் பிரித்தல் மனிதர்களுக்கு துப்பி உறுக்குதல் தொண்டை கட்டுதல் காலை அழுகவிடல் தம்பணம் மாரணம் பண்ணல் படுகளம் போடுதல் விருப்பமில்லாத பெண்ணை வசியம் செய்தல் பில்லி சூனியம் ஏவல் விடுதல் கெட்ட பசாசுகளைச் சேர்த்து வைத்தல் தண்டு கட்டுதல் குடும்பத்தில் சண்டை உண்டாக்கல் இன்னும் பல உண்டு. வேறு உயிரினங்களுக்கு செய்யும் மந்திரங்கள்:
மாடு, நாய், பன்றி, யானை, கரடி, முதலை இவைகளுக்கு உறுக்க, வாய்கட்ட மீன் ஏராளம் பட திருக்கை, முதலை விசம் விலக பாம்புகள் விலகிப்போக மண் ஓதி எறிதல் காட்டு மிருகங்கள் கலைந்து ஓட தேள், கொடுக்கான், கடித்த கடுப்பு நீங்க போன்றவைகள் அடங்கும்.
5. சடப்பொருள்களுக்கான மந்திரங்கள்
மூன்றாவது பிரிவான மந்திரங்கள் சடப் பொருட் கள் மேல் செலுத்தப்படுவன. இவை பெரும்பாலும் தங்கள் மந்திர வித்தாண்மைத் திறமைகளைக் காட்டுவதும் வேடிக் கைகளுக்குமாகவே பயன்படுத்தப்படுகின்றன. இவை, மத்தளம் உடைத்தல், பாயில் ஒட்டவைத்தல், பெண்களின் சேலைகளை உரிந்துவிழ வைத்தல், சால்வையைக் குடை ய்ாய்ப் பிடித்தல், சோறுவேகாமல் தடுத்தல், வீடுகளுக்கு கல்எறியவைத்தல், சோற்றில் மண்விழ வைத்தல், மகுடி தடுத்தல், வித்தைகள் தடுத்தல், வெற்றிலைகள் அழுக வைத்தல் போன்றவையாகும். முகத்துவாரத்தெருவில் வாழ்ந்த விதானை கண்ணப்பர் சால்வை குடையாக மேல் கட்டிவரச் செய்ததாகவும் வேளாளர் வீதியில் வாழ்ந்த மாரியார் இளையதம்பி என்பவர், கண்கட்டி, மாயாசால வித்தைகள், பலிக்காமல் தடுக்கக்கூடியவர் என்றும் நான் கேள்வியுற்றிருக்கிறேன்.
பெரும்பாலான மந்திரங்ளுக்கு சிறப்பான யந்தி ரங்களும் கிறி அவற்றில் அட்சரங்களையும் எழுதுவது வழக்கம். மந்திரங்கள் நூற்றிஎட்டுத் தரம் உச்சாடனம்

Page 109
பண்ணினால் நல்ல பலன் கிடைக்கும். அறுகோணச்சக்கரம், சக்திக்குரிய பிரதான சக்கரம். இது இஸ்ரவேல் நாட்டுக் கொடியில் அமைந்துள்ளதைக் கவனியுங்கள். இதேபோல சிவனுக்குரிய ஸ்வஸ்திகா சின்னத்தில் அமைந்த யந்திர மும் உள்ளன. இந்தச் சின்னம் பழைய ஜேர்மனியின் சின்னமாகும். இவ்விரு நாடுகளும் மிகச்சிறந்த சக்தி வாய்ந்த நாடுகள். பெரும்பாலும் எல்லா யந்திரங்களிலும் சிவனின் ஆயுதமான திரிசூலம் பொறிக்கப்பட்டு அட்சரங்கள் எழுதப்பட்டிருக்கும்.
கோன ஸ்வஸ்திகா திரிசூலம் யந்திரம்
இவைபோன்று நூற்றுக்கணக்கான யந்திரங்கள் உண்டு. மந்திரங்களின் அமைப்பு
மந்திரங்களின் அமைப்பைப் பற்றியும் சிந்திப்பது நல்லது. பெரும்பாலும் எல்லா மந்திங்களும் ஓம்என்ற பிரணவ மந்திரத்துடன் ஆரம்பித்து ‘சுவாகா' என்று முடிவடையும். சுவாகா என்பது அக்கினி தேவனின் மனைவியின் பெயர். யாகங்கள் எல்லாவற்றிலும் அக்கினி வளர்த்து முனிவர்கள் சுற்றியிருந்து, உலகமேன்மைக்கும் நாட்டு மேன்மைக்குமாக அக்கினி தேவனை முன்னிறுத்தி வேதமந்திரங்களை ஒதுவது வழக்கம். நமது மந்தரங்களில் சுவாகதேவியின் பெயர் கடைசியாக வருவது ஆராய்சிக் குரிய விடயமாகும்.
மந்திரங்களில் பிரம்மா, விஷ்ணு, சிவன், வீரபத்திரன், வயிரவர், போன்ற ஆண்தெய்வங்களின் பெயர்களும் பெண்தெய்வமான சக்தியின் பெயர்களும் வருகின்றன. இவர்களைக் குறிக்கும் வேறு நாமங்களும் வருகின்றன. உதாரணமாக அந்தி வயிரவன், சந்திவயிரவன், மாலை வயிரவன், காலைவயிரவன், சுடலைவயிரவன், கங்கைவயிரவன் எனப் பல பெயர்கள் வருகின்றன. இவர்கள் செய்த செயல்களும் வருகின்றன. உதாரணமாக தக்கன் தலை அறுத்தது , திருப்பாற்கடலை கடைந்தது,
காளியின் வீரச் செயல்கள் பல வருகின்றன. இவர்களைவிட பரசுராமர் சிவத்தக்கமாமுனி, மலையாள பகவதி, காளமாமுனி, மம்மக்காதேவி போன்ற பெயர்களும் இந்திரன், சந்திரன், சூரியன் போன்ற தேவர்களின் பெயர்களும் வருகின்றன. பாம்புக்கு கருடன் பகையாதலால், பாம்புவிஷம் இறக்குவதற்காக குழை அடித்தல், தண்ணீர் ஓதல் போன்ற கிரியைகளின் போது உச்சாடனம் பண்ணும் மந்திரங்களில் கருடன் பெயர் அடிக்கடி வருகின்றது.
கடவுளில் கூட நம்பிக்கை இல்லாத இக் காலத்தில், இது ஒரு மூடநம்பிக்கை எனச் சிலர் நினைக் கின்றனர். ஆனால் அக்காலத்தில் மக்கள் இதை நம்பி னார்கள் பலனும் பெற்றார்கள். இன்றும் நம்புகிறார்கள் பலனும் பெறுகிறார்கள். பல மந்திர ஏடுகள் மந்திரவாதி களுடன் உடன்கட்டை ஏறிவிட்டன. மந்திரவாதிகள் இறந்தால் மந்திர ஏடுகளையும் அவர்களுடன் புதைப்பது, எரிப்பது வழக்கம், இதனால் ஒரு சில மந்திரவாதிகளே நம்மத்தியில் உள்ளனர். ஆனால் சமயசம்பந்தமான கிரியைகள் செய்யும் கட்டாடிமார்களும், மந்திரவாதிகளுமே இன்று இருக்கின்றனர்.

இந்த மூன்று கலைகளையும், இவை நம்மூரில் வளர்ந்திருந்த விபரங்களையும் ஓரளவு கூறியுள்ளேன். இந்த மூன்று கலைகளிலும்ை நம்மூரில் (ஆரையம்பதியில்) ஈடுபட்டிருந்தோர் விபரங்களை (எனது ஞாபகத்துக்கு எட்டிய வரை) இங்கு தருகிறேன். ஆரையம்பதியில் இருந்த முககூட்டுக் கலைஞாகள.
பொன்னம் பரிசாரியார்: இவர் பெயர் கந்தப்பர் பொன்னம் பலம். எல்லா நோய்களுக்கும் பொது வைத்தியம், மந்திர வித்தாண்மையும் உள்ளவர். வம்மிக்கேணி மாரியம்மன் கோயிலுக்கு ஆரம்பகாலப் பூசரியார். சிறந்த அண்ணாவி யார். இவர் பழக்கிய இராமநாடகம் மிகப்பிரபல்யமானது.
விதானை கண்ணப்பர். இவர்சிறந்த மந்திவைாதி. 6ig5T60601u IT ராகவும் இருந்திருக்கிறார். தோளில் போட்டுள்ள சால்வை யைக் கொண்டே பல மந்திரவித்தாண்மை காட்டியவர்கந்தசுவாமி கோயிலை உருவாக்கியவர்களுள் ஒருவர்.
திருமதி தங்கம்மா அக்கா: இவர் ஒர் ஆசிரியை. கண் வைத் தியத்தில் சிறந்தவர். காத்தான்குடி காங்கேயனோடையிலிருந்தும் முஸ்லிம்கள் இவரிடம் மருந்து செய்யவருவதுண்டு. (கண் நோய்க்கு)
தம்பிமுத்துப் பரிசாரியார்: தம்பாப்பிள்ளை தம்பிமுத்து இவரது முழுப்பெயர். பேச்சியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர். இவரது மக்கள் குடும்பம் அனைவரும் வைத்தி யர்களே.இவர்களில் மந்திரவாதிகளும் உண்டு. தியாகராசா, பூபாலபிள்ளை, குமாரசுவாமி இவரின் குடும்பத்தினர்.
திருமதி தாந்திப்பிள்ளை; இவர் பிரபலமான ரணவைத்தி யர்வாதம், பித்தம், முதலியவற்றுக்கு சூரணம், லேகியம், வழங்கி சுகமாக்குவார்.
குஞ்சித்தம்பி கந்தையா: பிரபல கட்டு வைத்தியர். எள்ளுச் சேனை பிள்ளையார்கோயிலுக்கு பூசாரியாகவும் இருந்தவர். மந்திவாதி.சோதிடமும் சொல்வார்.
மு.கண்ணப்பர். இவர் செங்குந்தர் பகுதியைச் சேர்ந்தவர். எல்லாநோய்களுக்கும் பொதுவான வைத்தியர், மந்திரவாதி, மாரியம்மன் கோயில் பூசாரியாகவும் இருந்தவர்.
கந்தப்பர். இவர் வம்மிக்கேணியைச் சேர்ந்தவர். வம்மிக் கேணி மாரியம்மன் கோயிலின் ஆரம்பகால பூசாரி, சிறந்த மந்திரவாதி. இவரது மகள் நாகமணியும் ஒரு மத்திரவாதி. முத்தர் சின்னாச்சி இவர் மூலவைத்தியத்தில் கை தேர்ந்வர். சிறப்பாக பெண்களுக்கு வைத்தியம் செய்பவர். சில அநாதைப்பிள்ளைகளையும் வளர்த்த பரோபகாரி
தம்பாப்பிள்ளை தம்பிராசா. கொஸ்தாப்பர் தம்பாப்பிள்ளை யின் இளையமகன். சாதகம் கணிப்பதில் வல்லவர். சிறந்த மந்திரவாதி. காளியம்மன் கோயிலை ஆரம்பித்து முதலா வது கட்டாடியாராகவும் இருந்தவர். நாட்டுக்கூத்தில் நல்ல ஈடுபாடு இவரது மகன் தங்கவடிவேல் மருமகன் நவரெத் தினம் என்போரும் மந்திரவாதிகள்.
81

Page 110
பரிசாரி சின்னத்தம்பி. இவரும் எல்லா நோய்க்கும் பொது வான வைத்தியர், மந்திரவாதி. இவரது மகன் குலசேகரம் பிள்ளையும் வைத்தியரும் மந்திரவாதியுமாவார்.
கெந்தப்பர் தம்பிப்பிள்ளை; இவர் பொதுவைத்தியரும் மந்திரவாதியுமாவார். குழந்தை வைத்தியம் செய்பவர்.
கந்தப்பர் நல்லதம்பி; இவரும் இவரது தம்பிமார், நாகமணி, சின்னத்தம்பி ஆகியோரும் வைத்தியம் மந்திரம் தெரிந்தவர்கள்.
கதிரமலை கந்தப்பர்: மூலவைத்தியர். ாசின்னத்தம்பி ஏரம்பமூர்த்தி சோதிடம் கணிப்பவர், வீடு கிணறுகளுக்கு நிலம் எடுப்பவர்.கந்தசாதி கோயில் வண்ணக்கராகவும் இருந்தவர்.
சின்னத்தம்பி சந்திரசேகரம் பிள்ளை; வீடு, கிணறுகளுக்கு நிலம் எடுப்பவர். ஓய்வுபெற்ற ஆசிரியர்.
ாசின்னான் பரிசாரியார்: சிறந்த குழந்தை நோய் வைத்தியர். (பாலவாகடம்) சிறந்த மந்திரவாதி. வீடுகளில் மாரியம்மன் பூசை செய்பவர்.
பத்தக்கட்டாடியார்: படிப்பறிவு இல்லாதவர். அம்மன் கனவில் தோன்றி அருள்கொடுத்த பின்பு பத்ததி முறைப்படி பூசை களும் மந்திரங்களும் காவியங்களும் படித்தவர். இவர் ஆரம்பத்தில் மண்முனை கண்ணகை அம்மன் கோயில் கட்டாடியாயிருந்து அதே அம்மாளுடன் ஆரையம்பதிக்கு வந்தவர். ஆரம்பகாலக் கட்டாடியார் இவர். சின்னம்மை பெரியம்மை போன்ற நோய்களுக்கும் மருந்து செய்பவர்.
கிட்ணன் கட்டாடியார்: இவரும் 1930ம் ஆண்டு காலப் பகுதியில் ஆரையம்பதி கண்ணகை அம்மன் கோயிலுக்குக் கட்டாடியாராக இருந்தவர். சிறந்த மந்திவாதி. அம்மன் நோய்களுக்கும் வைத்தியம் பார்ப்பவர். இவரது மருமகன் சின்னத்துரையும் இவரைப்போலவே கட்டாடியாராக இருந்தவர்.
கதிரவேலி சீனித்தம்பி இவரும் மந்திரவாதி. சிலகாலம் கண்ணகை அம்மன் கோயிலுக்குக் கட்டாடியாராக இருந்தவர். இவரது தமயிதான் தற்போது கட்டாடியாராக இருக்கிறார். ாகணபதிப்பிள்ளை; இவர் மந் திரவாதியும் மூளைக்கோளாறு களுக்கான வைத்தியருமாவார். ாவையக்குட்டி இவரும் சோதிடத்தில் வல்லவர் மந்திவாதி யுமாவார்.வள்ளுவர் குலத்தவர். மதிப்பு மிக்கவர்.
வடிவேல். . 'ர் வைத்தியர். மந்திரவாதி. காளிகோயில் பூசாரிமுக்கூட்டுக்கலையில் பரிச்சயமுள்ளவர்.
மாரியார் இளையதம்பி; சிறந்த மந்திவாதி. ஆரை யம்பதிக்கு யாராவது குறளிவித்தைகள், நடனம் நாடகம் முதலிய வற்றை கொண்டுவந்து அரங்கேற்றமுன்னர் இவரிடம் அனுமதி பெறவேண்டும் இல்லையெனில் மந்திரவித் தாண்மையால் அதைத் தடுத்து விடக்கூடியவர். பகாத்தான்பரிகாரி. இவர் ஒரு விஷ வைத்தியர். மந்திரவாதி.
82

அல்லி சீனியர் இவரும் விஷவைத்தியர் மந்திரவாதி கூத்தில் அல்லி பாத்திரத்தில் புகழ்பெற்றவர். ாகணபதிப்பிள்ளை; இவர் வேளாளர் தெருவில் இருந்தவர். சிறந்த வைத்தியர். சிறந்த மந்திரவாதி. கூத்து
அர்ச்சுனன் குழந்தைவேல் சிறந்த மந்திரவாதி சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞர்அர்ச்சுனன் பாத்திரத்தில் புகழ்
கணபதிப்பிள்ளை கந்தப்பர் வைத்தியம், மந்திரம், குறி பார்த்தல், இவரின்மகன் சீனித்தம்பியும் ஒரு வைத்தியர். மந்திரவாதி, கோயில்குளம் கிராமம். பரமக்குட்டி கணபதிப்பிள்ளை; மந்திரவாதி. விஷவைத்தியர் கோயில் குளத்தைச் சேர்ந்தவர்.
குறிப்பு நானறிந்தவரையில் இப்பட்டியலைத் தயாரித்துள் ளேன். சிலர் விடுபட்டிருக்கலாம். உயிருடன் உள்ளவர்கள் இதில் குறிப்பிடப்படவில்லை.
தெய்வங்களும் மூலிகைகளும்
அறுகு, இது விநாயகருக்குரியது உடற்சூட்டைத்
தணிப்பது. இரத்தமூலத்தில் பயன்படுவது.
வில்வை சிவபெருமானுக்குரியது.வயிற்று நோவைச்
சுகப்படுத்தக்கூடியதுகுளிர்ச்சியை உண்டாக் குவது
துளசி, விஷ்ணுவுக்குரியது. சீதளசம்பந்தமான நோய் களைத் தீர்க்கக்கூடியது. உஷ்ணத்தன்மை கொண்டது
அகத்தி. பிரம்மாவுக்குரியது. குடல்புண்ணைச் சுகப்
படுத்தக் கூடியது. .
கடம்பு முருகனுக்குரியது. இதுவும் பரவலாக நோய்
களைத் தணிக்கக்கூடியது.
வேம்பு இது சக்திக்குரியது. கிரந்திகள், தோல் நோய் களைக் குணப்படுத்துவது. தொற்றுநீக்கி. அம்மைநோய் கண்ட வீடுகளில் இதை தொங்க விடுவது வழக்கம்
தெய்வங்களும் பிரியங்களும்.
சிவபெருமான் : அபிஷேகப்பிரியர் விஷ்ணு ஆடை அலங்காரப்பிரியர் (பட்டாடை) முருகன் : காவடிபோன்ற களியாட்டப்பிரியர் விநாயகர் மோதகம், அப்பம், போன்ற போசனப் பிரியர். அம்பாள்: சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தப் பிரியை.

Page 111
ஆரையம்பதியின்
1.முகவுரை
கூத்து என்றவுடன் நம்மனக்கண்முன் முதலில் தோன்றுவது ஆட்டம். கணவனுக்கு ஏற்ற மனைவிபோல, ஆட்டத்தை அரவணைத்துப் பூரணப்படுத்துவது மத்தள ஓசை. தில்லையில் சிவனாடியது முதல் கூத்து. இதற்கு தாளநயத்தைக் கொடுத்தது நந்திதேவரின் மத்தளம். எனவே கூத்தும் மத்தளமும் மனிதனின் முதலாவது கலை வடிவமாகும். கூத்து இலங்கையிலே மட்டக்களப்பு, யாழ்ப் பாணம், மன்னார், வன்னி, மலைநாடு போன்ற பகுதிகளில் ஆடப்பட் டாலும் நாவலர் என்றால் ஆறுமுகநாவலரையும் பாரதி என்றால் சுப்பிரமணிய பாரதியையும் சிறப்பாகக் குறிப்பிடுவது போல கூத்து என்றவுடன் அது மட்டக்களப்புக் கூத்தையே சுட்டிக் காட்டுகின்றது. காரணம் கவர்ச்சிகரமான ஆட்டத்தையும் சுவைமிக்க மெட்டமைந்த பாடல்களையும் பொருத்தமான மத்தள ஓசையையும் கொண்டு மரபு முறை தவறாது இக்கூதுது ஆடப்படுவதுதான். ஆடலுக்கும் பாடலுக்கும் சமமான பங்குண்டு. ஏனைய இடங்களில் பயன்படுவதுபோல ஹார்மோனியம், வயலின், மிருதங்கம், தபோலா போன்ற வாத்தியங்களை மட்டக்களப்புக் கூத்தில் பயன்படுத்துவதில்லை.
2. கூத்தின் பிறப்பிடம்
மட்டக்களப்புக் கூத்தின் பிறப்பிடம் இந்தியாவா? அல்லது இலங்கைதானா? என்ற ஐயம் பலருக்கு உண்டு. மட்டக்களப்பு மக்கள் மலையாளத்துப் பரம்பரையினர் என்ற காரணத்தினால் கதகளியை இதனோடு ஒப்பிட்டு மலை யாளத்திலிருந்து இக்கூத்து வந்திருக்கக்கூடுமென சிலர் கூறிகிறார்கள். இது தவறு ஒப்பனை அலங்காரங்களிலுள்ள சில ஒற்றுமைகளைத்தவிர ஏனைய அம்சங்கள் யாவும் இரண்டிலும் மாறுபட்டவை. அதுமட்டுமல்லாமல் கதகளியில் கர்நாடக சாஸ்திரிய சங்கீதம் பயன்படுத்தப்படுகிறது. தோல் வாத்தியங்களும் இரண்டிலும் மாறுபடுகின்றன. இவ்வாறே தென்னிந்தியாவில் பலபகுதிகளிலும் ஆடப்படுகின்ற தெருக் கூத்துக்களும் மட்டக்களப்புக் கூத்திலிருந்து மாறுபட்டவை. எனவே, நேபாளத்தில் சாக்கியர் கூத்து, ஆந்திராவில் குச்சுப்பிடி, வடஇந்தியாவில் மணிப்புரி, தமிழ் நாட்டிலே பரதநாட்டிய், மலையாளத்தில் கதகளி போல இலங்கைத் தமிழர்களின் தேசிய நடனம் நமது நாட்டுக்கூத்துத்தான் என்று கூறலாம்.

உத்தக்கலை
மு.கணபதிப்பிள்ளை
3. வடமோடி - தென்மோடி
கூத்திலே ஆராய்சிக்குரிய இன்னுமொரு விடயம் வடமோடி - தென்மோடி என்ற பிரிவு தான். இதுவும் நமது சிந்தனைக்குரியது. கூத்து இந்தியாவிலிருந்து வந்தது என்ற ஊகத்தைக்கொண்டு வட இந்தியாவில் ஆடப்பட்டது வடமோடி, தென்னிந்தியாவில் ஆடப்பட்டது தென்மோடி என்றும் சிலர் கூறுகிறார்கள். இதுவும் தவறானதாகும். மோடி என்பது சாயல்(style) என்றும் பொருள்படும். இருமோடி களிலும் வசனம், பாடல், ஆட்டம், ஒப்பனை அலங்காரம், பிற்பாட்டு முதலியன வேறுபாட்டைக் காட்டி நிற்கின்றன. இவை மட்டுமல்லாமல் தென்மோடி நாட்டுக் கூத்துக்களிலே சங்கம் மருவிய காலத்தில் இலக்கியங்களில் காணப்பட்ட சொற்கள் அதிகம் காணப்படுவததோடு அகத்துறை சார்ந்த நிகழ்வுகள் கொஞ்சம் வெளிப்படையாகவே காணப்படுகின் றன. ஆனால் வடமோடியில் இதற்குப் பிற்பட்ட காலத்து இலகுநடைச் சொற்களே அதிகம் காணப்படுகின்றன. வட மோடிக் கூத்துக்களிலும் தென்மோடிக்கூத்துக்கள் காலத்தால் முற்பட்டவை என்று கொள்ளலாம். ஆனால் வடமோடி தென்மோடி என்ற பிரிவு எப்படி ஏற்பட்டது என்பதற்கு இதுவரை திட்டவட்டமான ஆதாரம் எதுவும் இல்லை. 4. புதிய கருத்து ஒன்று:
நான் உங்கள் முன் புதிய கருத்து ஒன்றை சமர்ப்பிக்கின்றேன். மிகப்பழைய காலத்தில் கிழக் கிலங்கையின் தென்பகுதியிலேயே குடிசனநெருக்கமுள்ள பேரூர்களும், நகரங்களும் அமைந்து ஆட்சி அதிகாரங் களும் நடைபெற்றிருந்தன. இப்பகுதியே மட்டக்களப்பு என்னும் பெயரையும் பெற்றிருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் புளியந்தீவு கோட்டை கட்டி ஆட்சி ஏற்பட்ட பின்னரே தற்போதைய மட்டக்களப்பில் மக்கள் குடியேறிப் பரவி வாழத் தொடங்கினர். பண்டைய மட்டக்களப்பு தற்போது அம்பாரை மாவட்டத்துள் அடங்கிவிட்டது. பட்டிப்பளையாறு, தம்பட்டை, திருக்கோவில், சங்கமன்கண்டி, உகந்தமலை, வாகூரமலை, வீரமுனை, மணல்புட்டி, நாப்புட்டிமுனை, மண்முனை என்பன தென்பகுதியிலிருந்த பெரிய ஊர்கள். இதை கல்வெட்டுப்பாடல்களாலும் மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூலாலும் அறியலாம். இப்பகுதியில் பல பண்டிதர்களும் , புலவர்களும் வாழ்ந்தார்கள். இயலிசைநாடகம் செழித்து வளர்ந்தது. இதை
83

Page 112
இயலிசை நாடகம் எங்கும் வழங்க பலநூலாய்ந்த பணிடிதர் சிலரே கவிபல விளங்கக் காசினியோர்க்கு
என்னும் போடிகல்வெட்டின் மூலம் அறியலாம். எனவே, நமது கூத்துக்கள் மட்டக்களப்பு மண்ணுக்கே சொந்தமானவை என்பதை நாம் ஏற்றுகுகொள்ளவேண்டும். மட்டக்களப்பு தென்பகுதியில் தென்மோடிக்கூத்தும் வடபகுதியில் வடமோடிக்கூத்தும் தோன்றின என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் தென்மோடி பழக்கக்கூடிய அண்ணாவிமாரில் அதிகம் பேர் அக்கரைப்பற்று, கோளாவில் போன்ற ஊர்களில் இருந்திருக்கிறார்கள். ஆரையம்பதிக்கு வந்து வாளபிமன்னன், அலங்காரரூபன் போன்ற தென்மோடிக் கூத்துக்களை பழக்கியவர் கோளாவிலைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அண்ணாவியார்.
5.கூத்துக்களரி
கிராமத்து மக்கள் கூடி கூத்து ஆடுவதென்று தீர்மானித்ததும் ஒரு செயற்குழுவைத் தெரிவு செய்வார்கள். இவர்கள் ஒரு நல்ல சுபதினத்தில் பொங்கல் வைத்து களரிக்கு கால் நாட்டுவார்கள். இசை முகடுவைத்து சதுர வடிவில் கட்டுவார்கள். கொலுக்குத்தியும நாட்டுவார்கள். கலைகளைப் பயிற்றுமிடத்துக்கு மலையாளத்தில் களரி என்றே பெயர்.
களரி கட்டி முடிந்ததும் வேறோர் நாளில் நடிகர்களுக்கு சில பரீட்சைகள் வைத்து கதாபாத்திங்களை அண்ணாவியார் தெரிவு செய்து அவர்களுக்கு ஊர்மக்கள் முன்பாக சட்டங்கொருப்பார். இதனை பழங்காலத்தில் ஒலைச்சுவடிகளிலும் இக்கலத்தில் கொப்பியிலும் எழுதிக் கொடுப்பார்கள்.
இதன் பின்பு கூத்து ஒத்திகை ஒவ்வொரு நாளும் நடைபெறும் இதைத் தினக்கூத்து என்பர். இப்படியாடி பூரண பயிற்சி பெற்றதும் இன்னுமொரு நாளில் ‘சதங்கை கட்டல்' நடை பெறும். இதன் பின்னர் வாரத்தில் ஒரு நாள் ஆடுவார்கள். இதை "கிழமைக்கூத்து' என்பார்கள்.
இவ்வாறு பயிற்சி பூரணமாக நடைபெற்று முடிந்ததும் வேறொரு தினத்தில் "அடுக்குப்பார்த்தல் நடைபெறும். இதை ஒரு பூரண ஒத்திகையாக எடுத்துக் கொள்ளலாம். அடுக்குப் பார்த்தல் இரவு முழுவதும் நடைபெறும். கிழமைக கூத்தில் முழுக்கூத்தின் ஒவ்வொரு பகுதியை ஆடி அடுக்குப பார்த்தலில் முழுக்கூத்தையும் ஆடுவார்கள்.
இதன்பின்பு தான் எல்லோருக்கும் வசதியான ஒருநாளில் "அரங்கேற்றம்' நடைபெறும். களரிகட்டல், சட்டங்கொருத்தல், சதங்கை கட்டல், அடுக்கப்பார்த்தல், அரங்கேற்றம் இவைகளெல்லாம் சுபதினங்களில் தெய்வ வழிபாட்டோடு நடைபெறும்.
இதுவரை சதுரக் களரியில் நடைபெற்றுவந்த கூத்து அரங்கேற்றத்தில் வட்டக்களரி கட்டி நடைபெறும்.
84

இந்நிகழ்ச்சிகளெல்லாம் வண்ணக்கர், கணக்குப்பிள்ளை, கங்காணி, அதிகாரிகள், மேஸ் திரிமார், மற்றும் ஊர்ப்பிரமுகர்களையும் வரிசைகளோடு பறை தட்டிக் கூட்டிவந்து அவர்கள் முன்னிலையிலேயே நடைபெறும். பிரமுகர்களும் நடிகர்களுக்கும் அண்ணாவி யார்க்கும் மத்தளகாரருக்கும் சால்வை அணிவித்து மோதிரம் போன்ற பரிசுப்பொருட்களும் கொடுப்பார்கள்.
அரங்கேற்றத்தின் போது ஒப்பனை செய்து, உடுப்புக்கள் அணிந்து அணிகலன்கள் பூண்டு, முடிகள் அணிந்து ஆடுவார்கள். களரியைச் சுற்றி கொப்பறாவில் தேங்கா யெண்ணெய் ஊற்றி எரிக்கும் பந்த வெளிச்சங்கள் வைப் பார்கள். இந்த வெளிச்சங்களில் இவர்கள் அணியும் உடுப்புக்கள் மிகவும் பிரகாசமாக இருக்கும். இரவு முழுவதும் அரங்கேற்றம் நடைபெற்று முடிந்ததும் காலையில் கோயில் முன்றலில் ஆடி, பின்னர் ஊர்ப் பிரமுகர்களின் வீடுகளிலும் சொற்பநேரம் ஆடுவார்கள்.
6. ஆட்டமுறைகள்
இனி ஆட்டங்களைக் கவனிப்போம். அண்ணாவி யாரும், மத்தளகாரரும் கதாபாத்திரங்களுக்கு இரு கண்கள் போன்றவர்கள். தங்களை அந்தப் பாத்திரமாகவே நினைத்துக் கொண்டு மெய்மறந்து ஆடுகின்ற அந்த நடிகர்களை இந்த இருகண்களும் எந்த நேரமும் பார்த்துக்கொண்டேயிருக்கும். மத்தளகாரரின் முக்கியத்துவம் காரணமாக இவரையும் அண்ணாவியர் என்றே 'ஆர் விகுதி கொடுத்து அழைக்கும் மரபு மட்டக்களப்பிலுண்டு. மத்தளத்தைத் தூய்மையான வெள்ளைத்துணியால் சுற்றி, அதற்கு திருநீறு, சந்தணம் பூசி, பூவும் வைத்து அதைத் தொட்டுக் கும்பிட்டு விட்டே அடிக்கத் தொடங்குவார்கள். மத்தளம் பெரும்பாலும் பலா மரத்தில் தயாரிப்பார்கள். இதில் முத்திரை வைத்த பகு திக்கு குரங்குத்தோலும் மற்றப்பகுதிக்கு ஆட்டுத்தோலும் போடுவார்கள். அரங்கேற்றம் ஆரம்பிப்பதற்கு முன்னர். மத்தளகாரர் சபைத் தாளக்கட்டு அடிப்பார். இதன் பின்னர் கொலுத்தாளக்கட்டு நடைபெறும். இத்தாளக்கட்டுக் களை கொண்டு தான் மத்தளகாரரின் திறமையை மக்கள் எடை போடுவார்கள்.
வரவுத்தாளக்கட்டு கதாபாத்திரங்களுக்கு கேற்ப வேறுபடும். சக்கரவர்த்திகள், சாந்தகுணமுள்ள கதாபாத் திரங்களுக்கு எற்ப சாந்தமான தாளக்கட்டுகள் வைப்பார்கள்.
உ+ம்: (1) தக திக தாம் தெய்யா தெய் தெய்
தா தெய்யத் தோம் தகதிக தாம்-தெய்யா தெய்
(2) தக்கச்சணு தக்கத் திமி
தத்தித்தாம் தரிகிட தெய்.
வீரமுள்ள பாத்திரங்களான சேனாதிபதி போன றவர்களுக்கு விறுவிறுப்ாப வேகம் கூடிய தாளக்கட்டு வைப்பார்கள். so to:
(1) தத்தித் தாம் தரிகிட
தித்தித் தெய்யா தெய்தெய் தத்தித் தாம்.

Page 113
(2) தாந்தெய்யத்தோம் தரிகிட
தெய்யத்தாம் - தெய் தெய்
குதிரையில் வரும் வீரர்களுக்கு, குதிரைப் பாய்ச்சல் வேகத் தில் தாளக்கட்டு அமையும் உ+ம்.
(1) சேகணம் சேகணம் தத்தா
ததிந்தத்தா தெய் தெய் -
இதந்குக் குதிரைத்தாளம் என்றே பெயர். பெண்பத்திரங்களுக்கு,
(1) கமல மலரிலுறை வேணி - என்னை
காத்திடுவாய் கலைவாணி தாயே மனமிரங்கி நீயே அருள்புரிவாய் (கமல)
(2) திரிபுர மகுட சங்காரி - அம்மா
சிறிமகா லெட்சுமி தேவி - தாயே மனமிரங்கி நீயேஅருள்புரிவாய்(திரிபுர)
இவை வடமோடிக்குரிய தாளக்கட்டுக்களாகும். தென்மோடிக் கூத்துக்களில் வரும் ஆண்பாத்திரங்களில் சாந்த குணமுள்ளவர்களுக்கு,
ததித்துளா தக திமி திமிதக தாதிமி தெத்தா தெய்யே - தாதெய்யே.
வீரமுள்ளவர்களுக்கு
தாதாம் தாதெய்ய தாதாம் தாதெய்ய
இவ்வாறு தாளக்கட்டு முடிந்ததும் தரு தொடங்கும். தரு என்பது சபையோர், கதாபாத்திரங்கள், பிற்பாட்டுக்காரர் பாடுவதையே குறிக்கும். இதில் சபையோர் பாடுவது சபைத்தரு, கதாபாத்திரங்கள் பாடுவது கொலுத்தரு, ஆட்டத்தரு எனப்படும் இத்தருக்களுக்கு ஏற்ற விதமாக மத்தளகாரர் மத்தளம் அடிப்பார்.
7. பாடல்கள் (தரு விருத்தம்)
பாடல்களைப் பொறுத்தவரை இருமோடிகளுக் கும் வெவ்வோறு மெட்டுக்கள் உள்ளன. தென்மோடியில் விசேடமாக கொச்சகத்தரு உண்டு. கொச்சகத்தரு என்பது பாடல்களின் முதல் மூன்று அடிகளும் விருத்தம் போல இயற்றமிழாகவும் மற்றைய அடிகள் தாளத்தோடு சேர்ந்து இசைத்தமிழாகவும் பாடப்படுவது.
தென்மோடிப்பாடல்களை கதாபாத்திரங்கள் பாடி முடிந்ததும் பிற்பாட்டுக்காரர்கள் பாடலுக்கேற்றபடி பாடல் முடிவில் தருவும் பாடுவார்கள். வடமோடியில் தரு பாடுவதில்லை. பாத்திரங்கள் பாடும் அதே பாடலையே திரும்பப்பாடுவார்கள். வரவு வேளையிலும் வேறுசில சந்தர்ப்பங்களிலும் விருத்தம் படிப்பார்கள். விருத்தங்கள் யாப்பு முறைப்படியான கவி. ஆசிரியப்பா, கழிநெடில், வெண்பா, விருத்தப்பா போன்றவை.
விருத்தம் பாடுவதும் வடமோடியிலும் தென் மோடியிலும் வெவ்வேறு விதமாகவே இருக்கும். வடமோடிட்

பாடல் களைவிட தென்மோடிப்பாடல்கள் நிரம்பிய தமிழறிவும் யாப்பு முறையும் தெரிந்த புலவர்களாலேயே பாடப்பட்டவை என்பது இவற்றின் கருத்தாழங்களைக் கொண்டு அறியலாம். பெரும்பாலான தென்மோடிப் பாடல்களில்,சொல்லடுக்கு, சந்தம், எதுகை மோனை முதலியன மிகஅழகாக அமைந் துள்ளன. இதனால் வடமோடிப் பாடல்களையும் விட தென்மோடிப் பாடல்கள் நல்ல சுவையும் கவிநயமுமுள்ளன. வடமோடிப் பாடல் களிலும் நல்ல இசை நயமுள்ள பாடல்கள் இருக்கின்றன. வடமோடிப்பாடல்களில் வரும் சொற்கள் இலகுவில் விளங்கக்கூடிய நடையிலமைந்துள்ளன. பாடல்களிடையே கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும் வெவ்வேறு விதமாகவே பேசுவார்கள். வடமோடியில் சாதாரணமாக நிறுத்திப் பேசுவார்கள். தென்மோடியில் இழுத்து அசைத்துப் பேசுவார்கள்.
8.ஆடைஅணிகள்
ஒப்பனையை எடுத்துக்கொண்டால் வடமோடியில் வரும் சக்கரவர்த்திகள் போன்ற பெரிய அரசர்கள் பெரிய கிரீடம் அணிவார்கள். சிற்றரசர்கள், இளவரசர்கள் சிறிய கிரீடங்களை அணிவார்கள். அரசர்கள் இடையிலிருந்து கணுக்கால் வரை தொங்கும் நீண்ட கரப்புடுப்பு அணி வார்கள். இது கரப்புப்போல் இருப்பதால் இதற்குக் கரப்பு உடுப்பு என்றே பெயர். யுத்த வீரர்கள் வட்டுடை எனப்படும் முழங்கால் வரை உயரமுள்ள உடையணிவார்கள். இது பெரும்பாலும் எட்டுத்தட்டுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தட்டும் கத்தாக்கு இலைபோல அமைந்திருப்பதால் இதற்குக் கத்தாக்கு உடுப்பென்றே பெயர் வரலாயிற்று.
உடைகளெல்லாம். டாங்காத்தாள் எனப்படும் பளபளக்கும் பல நிறத்தாள் களால் செய்யப்படும். இதே தாள்களினாலும் கண்ணாடித் துண்டுகளாலும் செய்யப்பட்ட நெஞ்சுப்பட்டயம் இரு மோடியிலும் அணிவார்கள். மேலங்கியும. டாங்காத் தாள்களினாலேயே செய்யப்படும். பெரிய அரசர்கள் கழுத்திலிருந்து கால்வரை தொங்கக்கூடிய ஏகாவடம் அணிவார்கள். ஒற்றர் தூதுவர்கள் தலையில் தலைப்பாகை அணிவார்கள்.
தென்மோடி அரசர்கள் தலையில் பூமுடியும் கையில் நீண்ட வீச்சுவாளும் வைத்திருப்பார்கள். வடமோடி மன்னர்கள் கையில் ‘கட்டாரி" எனப்படும் குத்துவாள் வைத்திருப்பார்கள். இத்தோடு கதாபாத்திரங்களுக்கு ஏற்ப வில், தண்டாயுதம், சங்கு, சக்கரம், திரிசூலம், வேல் போன்ற ஆயுதங்களை கையில் வைத்திருப்பார்கள். யுத்தம் செய்யும் அரசர்கள் தேர், குதிரை, போன்று பிரம்பினால் செய்து நிறத்தாள்கள் ஒட்டிய வாகனங்களிலும் வருவார்கள்.
பெண்களில் ராணிகள் இரண்டு அல்லது மூன்று திருவாசித்தட்டமைந்த முடி அணிந்து கூந்தலைப் பின்னி முடிந்து அதில் நாகபடம் அணிவார்கள். கழுத்தில் நெஞ்சுப்பதக்கமும் மேற் கையில் கைக் கிளியும் அணிவார்கள். இத்துடன் காப்பு, தோடு போன்ற ஏனைய நகைகளும் அணிவார்கள். ஒரு கையில் வட்ட விசிறியும் மற்றக்கையில் சவுக்கம் எனப்படும் கைக் குட்டையும் வைத்திருப்பார்கள். பெண்களின் உடையில் முன்பக்கம்
85

Page 114
(முகதலை) டாங்காத்தாள் கொண்டு மாம்பிஞ்சு, பூ போன்ற உருவங்கள் அமைத்த கவர்ச்சியான சேலை அணிவார்கள். ஏனைய பெண்பாத்திரங்கள் அவர்களுக்கேற்ற உடைகளை அணிவார்கள். -
எல்லாப் பெண்களும் ஒட்டியாணம் அணிவார்கள். ஏனைய பெண்பாத்திரங்கள் அவர்களுக்கேற்ற உடைகளை அணிவார்கள். முடி, வாள், போன்ற ஒரு சில வேறுபாட்டைத் தவிர ஏனையவை இரு மோடிக்கும் ஒன்றே.
9.நாட்டுக்கூத்தை நவீனப்படுத்தல்
இனி இக்கூத்துக்களை காலத்துக்கேற்ப மக்களின் சுவைத்தலுக்கேற்ப மாற்றம் செய்து புதுமைப்படுத்த வேண்டுமா? என்பது பற்றிச் சிந்திப்போம். இந்த விடயத்தில் மிகவும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும் . மரபுவழிமாறாமல்,பாரம்பரியத்தைப் பாதிக்காமல் சில திருத்தங்களைச் செய்யலாம். ஆனால் அதன் சுயத்தை மாற்றும் அளவுக்குச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் மரபுவடிவம் எது என்பது தெரியாமல்போய்விடும்.
சிங்கள நடனங்கள் பாடல்களிலும் தென்மோடிக் கூத்தில் பாடுகின்ற தருக்களின் சாயல்கள் தெரிகின்றன. பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரா அவர்கள் தமிழ்க்கூத்தி லிருந்துதான் சிங்கள நாடகங்கள் தோன்றின என்ற உண்மையை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். இந்தக் கூற்று நமக்கு ஒரு உந்து சக்தியாக அமையவேண்டும். நமது மொழி, நமதுவிடு, நமது நாடு என்பது போல நமது கூத்து என்ற பற்று ஏற்படவேண்டும். இக்கலை மறைந்து போகாமல் காப்பாற்றுவது நமது முக்கிய கடமையாகும்.
இந்தவகையில் மட்டக்களப்புக் கூத்திலே சில மாற்றங்கில்ள சிலர் செய்திருக்கிறார்கள். 1948ம் ஆண்டு நான் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் பயிலும்போது லெச்சுமி கலியாணம் என்னும் பெயரில் ஒரு நவீன நாட்டுக்கூத்தைப் படைத்து ஆசிரிய மாணவர்களைக் கொண்டே அரங்கேற்றினேன். இதில் நான் செய்த திருத்தங்கள் என்னவென்றால், இதிகாசம், புராணங்களிலுள்ள கதை களையே கூத்தாக ஆடியதை மாற்றி, சாதாரண போடியார், கிளாக்கர், விதானையார் போன்ற சமூகப் பாத்திரங்களை உண்டாக்கி பன்னிரண்டு மணித்தியாலங்கள் ஆடிய கூத்தை ஒரு மணித் தியாலமளவுக்கு குறைத்து நகைச்சுவிையுடன் தயாரித்தேன். இதேபோல 'பரிசாரிமகன் என்ற இரண்டாவது கூத்தையும் பாரித்தேன். இக்கூத்து கொழும்பு லயனல்வென்ற் தியேட்டரிலும் மேடையேற்றப்பட்டு பேரறிஞர் களின் பாராட்டைப் பெற்றது. இவ்விரு கூத்துக்களும் கிழக்கு மாகாணத்திலே பல ஊர்களிலே மேடையேற்றப்பட்டது. இவற்றில் நான் மரபைமீறவில்லை.
மேலும் போராசிரியரான எதிரிவீர சரத் சந்திரா வின் மனமே போன்ற சிங்கள நாடகங்களைப் பின்பற்றி பேராசிரியர் சுவித்தியானந்தனால் சில கூத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களைக்கொண்டு மேடையேற்றப்பட்டன. இதிலே அவர் ஒளி அமைப்பிலும் காட்சி அமைப்பிலும் கதாபாத்திரங்களின் வருகையின் போதும்
86

சில நவீன உத்திகளைக் கையாண்டார். இதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மரபுவழியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே எதைச் செய்தாலும் மரபுவழிமாறாமல் நவீன உத்திகளைக் கையாளலாம்.
எனவே நீங்கள் இக்கலையை அழியவிடாது பாதுகாத்து வருங்காலச் சந்ததியனரிடம் ஒப்படைப்பது உங்கள் கடமை. அண்ணாவிமார், மத்தளகாரர், உடுப்புகள் முடிகள் செய்யும் மேத்திரிமார் இவர்களின் பரம்பரை அழிந்து கொண்டே வருகிறது. எனவே நமது கூத்து குற்றுயிராகக் கிடந்து தவிக்கிறது. இதைப்பாதுகாத்து வளர்ப்பது உங்கள்
BL6OD.
பின்னுரை
நாட்டுக்கூத்தைப் பார்க்கும் சிங்கள அன்பர்கள் அதற்கும் கண்டிய நடனத்துக்குமுள்ள சில ஒற்றுமைகள் பற்றிப் பிரஸ்தாபிப்பதுண்டு. நீங்களும் அவற்றை அவதானித் திருப்பீர்கள். ஆனால் இரண்டும் தனித்துவமானவை. எனினும் கண்டிய நடனம் தேசிய மட்டத்தில் வளர்ச்சி பெற்றது போல நாட்டுக்கூத்து வளர்ச்சி பெறவில்லை. இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அரசாங்க மட்டத்தில் உதவி கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். ஆனால் மக்கள் மட்டத்தில் செய்யவேண்டிய கடமைகளை நாம் செய்தோமா என்று எண்ணிப்பார்க்வேண்டும்.
பழைய தலைமுறை அண்ணாவிமாரிடமிருந்து இக்கலையைக் கற்றுக்கொள்ள இளையதலைமுறை தவறிவிட்டது என்பது மிகவும் விசனத்துக்குரிய உண்மை. பிரச்சினையான காலம் என்பது நமது பல்லவி. ஆனால் இப்பிரச்சினையான காலத்துக்குள் எத்தனையோ கலை இலக்கிய நிகழ்வுகள் இடம் பெறத்தானே செய்கின்றன. எனவே இனிமேலாவது நாம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். பின்வரும் நடவடிக்கைகளத் துரிதப் படுத்தவேண்டும்.
(1) பல்கலைக்கழக மட்டத்தில் கவின்கலைத் துறையில் நாட்டுக்கூத்து ஒரு ITLDTE இடம்பெறவேண்டும்.
(2) விபுலாநந்த இசை நடனக் கல்லூரியில் நாட்டுக்கூத்து ஒரு பாடமாக இடம் பெற வேண்டும்.
(3) பாடசாலைகளில் நடனத்தைப்போல நாட்டுக் கூத்தும் ஒரு பாடமாக இடம் பெறவேண்டும்.
(4) நாட்டுக்கூத்துக்கலையில் பயிற்சிபெறவும் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூத்து நிகழ்ச்சிகளைக் காண்பிக்கவும் ஒரு பயிற்சி நின்லயம் வேண்டும்.
(5) பொதுமக்களும் முன்போல் நாட்டுக்கூத்துக் களை அரங்கேற்றம் செய்யவேண்டும்.
சம்பந்தப்பட்டவர்கள் இவற்றைச் GFišņu 6 பெற்றவர்கள் இவற்றைச் ଗ . 6 -K மட்டும் போடுவது பயனற்றது. இதற்கான அழுத்தம் கொடுகக் வேண்டியது பொதுமக்கள் கடமையாகும்.

Page 115
ஆரையம்பதியின் கூத்துப்பற்றிய விபரங்கள் 1925க்குப் பின்
இங்கு ஆடப்பட்ட கூத்துக்கள் பற்றிய விபரங்கள்
இங்கு ஆறு இடங்களில் காலத்துக்குக் காலம் கூத்துக்கள் ஆடப்பட்டு வந்துள்ளன. 1925ம் ஆண்டுக்கு முந்திய விபரங்களை என்னால் அறியமுடியாமல்போய் விட்டது. அறிந்தவர்களும் கிடைக்கவில்லை.
முகத்துவாரத்தெரு: இராம நாடகம் பப்பரவாகன் நாடகம் குசலவ நாடகம்
நடுத்தெரு:
சந்திரகள்ச நாடகம் வாளபீமன் நாடகம் அலங்கார ரூபான் நாடகம் பப்பரவாகன் நாடகம்
ஆரைப்பற்றைத்தெரு:
அல்லி நாடகம். சயிந்தவன் நாடகம் குருக்கேத்திரன் போர் தருமபுத்திரார் நாடகம் வள்ளியம்மை நாடகம் பவளேந்திரன் நாடகம்
வேளாளர் தெரு:
சுபத்திரா கலியாணம்
· 17ub 18ub GöLIIIff மார்க்கண்டேயர் (ஆசிரியர்இளையதம்பி ஆக்கியது)
பேச்சியம்மன் கோயிலடி:
சிறுத்தொண்டர் நாடகம்
வம்மிக்கேணியடி:
பவளக்கொடி நாடகம்.
இக்கூத்துக்களிலே மக்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டவர்களின் பெயர்களுடன் அவர்கள் ஆடிய பாத்திரங்களையும் சேர்த்து அழைப்பது வழக்கம் அதன்படி நில்ைது நிற்பவர்கள் இராமர் காசுபதி, அநுமார் மாசிலார், சீதை தம்பியப்பா. வாளபீமன் மூத்ததம்பி, விறகுதலையன தம்பிராசா, சுந்தரி கணபதியா, துரியோதனன் கணபதி, வீமன் சீனியர், துரோபதை வெள்ளையன், சயிந்தவன் கதிரன். அர்ச்சுனன் குழந்தைவேல். சீராளன் பூபாலபிள்ளை. அல்லி சீனியர், மதனன் தம்பியப்பா, அலங்கார ரூபன் தம்பிராசா, அருச்சுனன் சின்னத்தம்பி, அலங்காரரூபன் தம்பிப்பிள்ளை, றசிவிந்தர் இளையதம்பி.
கூத்துக்கலைஞர்களுக்குரிய உடைகள்,
தண்டாயுதம்,முடிகிரீடம், விசிறி, சக்கரம், கைக் கிளி, பெண்களுக்கான உடைகள், முடிகள், ஒட்டியாணம், ஏகாவடம், நாகபடம் நெஞ்சுப்பட்டயம், வில், வேல், சக்கரம், தேர், குதிரை போன்றவைகளையும் கோயில்களுக்குத் தேவையான தேர்கள், சப்புறம், மண்டப அலங்காரப் பொருட் கள் கொடிகள் போன்றவற்றையும் செய்வதற்கு முன்பு இங்கு மேஸ்திரிமார்கள் இருந்தார்கள் இன்று எவருமே

இல்லை.
மேஸ்திரிமார்கள் சிலரது பெயர்கள் வருமாறு:
வெள்ளையர் - முகத்துவாரத்தெரு வயிரவன் o a- - முத்துப்பிள்ளையர் பொற்கொல்லர் வீதி இ.சின்னத்தம்பி
கண்ணப்பர் (கோடாலி)} நடுத்தெரு நல்லதம்பி ஆரைப்பற்றைத்தெரு
பரிசாரி கணபதியர் } வேளாளர் தெரு
இவர்களில் கண்ணப்பர் முடிகள் செய்வதில்
சிறந்தவர். முகத் துவாரத் தெருவில் அமைத்த தொட்டிலூஞ்சல் அமைப் பிலும் இவர் பங்குபற்றியவர். முடிகள் செதுக்குவதற்கான சிறிய கோடாலி ஒன்று இவர்கையில் எப்போதும் இருக்கும். இவர்மற்றவர்களுடன் கதைத்துக்கொண்டே முடிகளைச் செதுக்குவார்.
குறிப்புகள்: (கூத்துக்கலை பற்றியவை)
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
உடுப்புக்கள் செய்வதில் போட்டி நிலவியதால் ஒருவருக்கு உடுப்பு செய்யும் இடத்திற்கு மற்றவர் களை அனுமதிக்க மாட்டார்கள். சிலவேளை சண்டையும் நடக்கும். கலைக்காக ஏராளமாகச் செலவிட்டு விடுவளவு களையும் இழந்த பலர் இருந்தார்கள். சிலர் ஒப்பனை பண்ணுமிடத்திலிருந்து அரங்கேற்றம் நடைபெறும் களரிக்கு வரும் வழியில் அவர்களுக்கு மேலாலே ஒடுபந்தல் அமைத்து அதன் கீழேயே வருவார். சூளியக் கயிற்றில் பந்தல் தொங்க விடப்பட்டு சிலர் பின்னிருந்து இழுப்பார்கள் கூத்துக்களில் போட்டி காரணமாக, மந்திர வித்தாண் மையைப் பயன்படுத்தி, பாத்திரங்களின் குரலைக் கட்டுதல், மத்தளத்தை உடைத்தல் போன்ற செயல்களையும் செய்வார்கள். கூத்துக்கள் அரங்கேற்றுவதற்காக வட்டக்களரி கட்டி முடிந்ததும் அரங்கேற்றம் முடியும் வரை அதை காவல் பண்ணுவார்கள். சிலர் ஏதாவது மந்திரம் ஒதிப் புதைத்துவிடக்கூடும் என்பதால் கவனமாக இருப்பார்கள். கூத்துக்களை ஆடிமுடிந்ததும் ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் வீடுகளில் ஆராத்தி எடுத்து பலகாரம் சொரிந்து கண்ணுாறு கழிப்பார்கள் கூத்தர்கள் அனைவரும் தட்டுமிளகுதண்ணிர் என்னும் பானத்தையே ஆடிமுடியுமட்டும் குடிப்பார்கள். குரலைய்ை பாதுகாப்பதற்காகவே இச்செயல்
இங்கிருந்த அண்ணாவிமார் சிலர்:
கோவிந்தன் அண்ணாவியார் - ஆரையம்பதி பரிசாரி பொன்னன் அண்ணாவியார் - ஆரையம்பதி பாலியப்பா அண்ணாவியார் - கிரான்குளம்
தாமோதரம்பிள்ளை அண்ணாவியார் - கோளாவில் விசிறி கணபதியர் அண்ணாவியார் - கல்முனை செல்லத்தம்பி அண்ணாவியார் - ஆரையம்பதி
மத்தளகாரர்கள் சிலர்:
gQ60D6TuJ'UT - தென்மோடி அடிகாரர் அண்ணாவி நல்லதம்பி - வடமோடி அடிகாரர் அண்ணாவி செல்லத்தம்பி - வடமோடி அடிகாரர்.
87

Page 116
ஆலய வழக்குச் செ
வண்ணக்கர்: கோயிலைப் பரிபாலிக்கும் குழுவின் தலைவர்.கோயில் நிர்வாகத்துக்கு இவரே பொறுப்பானவர். குழுவின் தலைவராக இருந்து சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் தலைவரே வண்ணக்கர்
கணக்குப்பிள்ளை; பரிபாலனக்குழுவின் செயலா ளராகவும் பொருளாளராகவும் செயலாற்று பவர். தலைவர் ஒரு பாகையைச் சேர்ந்தவராக இருந்தால் இவர் வேறுபாகையைச் சேர்ந்த வராக இருப்பார்.
கங்காணி இவர் கோயில் பூசை ஒழுங்குகளையும் திருவிழா ஒழுங்குகளையும் கண்காணிப்பவ ராக இருப்பார். இவற்றுக்கான ஏற்பாடுகள் இவரது பொறுப்பாகும்.
அதிகாரி: ஒவ்வொரு பாகைக்கும் ஒருவர் இருப்பார். இவர் பாகைக்கும் பரிபாலனக் குழுவுக்கும் தொடர்பு அதிகாரியாக இருப்பார். இவர்களை அவ்வப் பாகையினரே தெரிவு செய்வர். அதிகாரிகள் முறை தற்போது இல்லை. கடைசியாக இருந்தவர்கள். முகத்துவாரத்தெரு வுக்கு ஆறுமுகமும், நடுத்தெருவுக்கு கறுவல் தம்பியும்.ஆரைப்பற்றைப் தெருவுக்கு வயிரமுத் துவுமாவா.
மேஸ்திரிமார்; இவர்கள் கோயிலுக்குத் தேவையான தேர், சப்பறம், பந்தல்கள், தோரணங்களின் அலங்காரங்கள், கூத்துக்குத் தேவையான உடுப்புகள், ஆயுதங்கள், உபகரணங்கள், முடிகள் செய்பவர்கள். ஊரிலே பல மேஸ் திரிமார் இருந்தாலும் ஒவ்வொரு பாகைக்கும் சிறப்பாக ஒருவர் இருப்பார். இதன்படி கடைசி யாக இருந்தவர்கள் முகத்துவாரத்தெருவுக்கு வெள்ளையரும், நடுத்தெருவுக்கு சின்னத் தம்பியும், ஆரைப்பற்றைத் தெருவுக்கு நல்ல தம்பியும் ஆவர். பாகை மேஸ்திரிமாரை விட கண்ணப்பர், பரிசாரிகணபதியர் என்போர் பிரபலமானவர்கள்.
கட்டாடியார்: பத்ததி முறைப்படி சடங்கு நடைபெறும் கோயில்களில் பூசைகள், கிரியைகள், செய்ட வர்கள். இவர்கள் பெரும்பாலும் மந்திரவித் தாண்மைகள் தெரிந்தவர்களாகவே இருட் பார்கள். தற்பொழுதும் இம்முறை நடை முறை யிலுண்டு.
கட்டாடி: சலவைத் தொழிலாளிகளைக் குறிக்கும் ஒரு
பெயர்.எல்லோருக்கும் பொதுவான பெயர்.
88

ாற்கள் (ஆரையம்பத)
குடிவிட்டு வண்ணான்: இவர்கள் ஒவ்வொருவருக்கும் பல வீடுகள் பொறுப்பாக இருக்கும். இவ்வீடு களில் நடைபெறும் மங்கல அமங்கல நிகழ்வு களில் மரபுவழிக் கடமைகளைச் செய்பவர்கள்.
தண்டக்காறன்; சலவைத் தொழிலாளர்களின் தலை வன். இவரை ஊர்மக்களே தெரிவு செய்வர்.
மூப்பன்: பறைமேளம் கொட்டுபவர்களின் தலைவன். இவரும் ஊர்மக்களால்தெரிவு செய்யப்படுபவர்.
சீட்டுக்காரர்: ஒவ்வொரு பாகையாலும் தெரிவு செய்யப் படும் பிரதிநிதிகளுக்கு சீட்டுக்காரர் என்று பெயர். திருவிழாப் போன்றவற்றில் முன்னின்று உழைப்பவர்கள். பாகைக்கும் நிருவாகத் துக்கும் தொடர்பாளர்.
மட்டத்தரவளி: ஊரிலுள்ள வாலிபவயதினர். ஊர் நிகழ்ச்சி களில் முன்னின்று உழைப்பவர்கள்
நம்பிமார்; மிகப்பழைய காலத்தில் ஆகமமுறைப்படி கோயில்களில் பூசை செய்பவர்கள். மலையா ளத்து நம்பூதிரிகளின் பரம்பரையில் வந்த வர்கள். இவர்களுக்கு மந்திரமும் தெரியும். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பெரியநம்பி யார், காத்தநம்பியார், இறதக்கண்நம்பியார் (இவர் கண்ணில் குறைபாடுள்ளவர் போலும்)
பட்டங்கட்டியார்: மட்டக்களப்பு வாவியில் மீன்களின் இனப்பெருக்க காலங்களில் அவற்றின் இனப் பெருக்கங்களுக்குத் தடையானவை எனக் கருதப்படும் வலைகளைப் போட்டு மீன் பிடிப் பவர்களைப் பிடித்து வழக்கு வைப்பவர். இவர் அரசாங்க அதிபரால் நியமிக்கப்படுபவர். கடைசியாக இருந்தவர் நாகப்பர் சீனித்தம்பி.
கொஸ்தாப்பர்: தற்போதைய கிராமசேவை உத்தியோகத் தர்களினதும் பொலிஸ்காரர் களதும் கடமைகளை செய்பவர். அரசாங்க அதிபரால் நியமிக்கப்படுபவர். 'கொன்ஸரபின் என்ற வார்த்தை கலப்பு இருப்பதை அவதானிக்கவும் கடைசியாக இருந்தவர் தம்பாப்பிள்ளை கொஸ்தாப்பர்.
விட்டுவரி: ஊரில் நடைபெறும் திருவிழாக்களுக்கும் ஏனைய விழாக்களுக்கும் ஒவ்வொரு வீட்டாரிட மும் அறவிடப்படும் வரிப்பணம்.
மட்டவரி: விட்டுவரியை விட திருமணமாகாத இளந்தாரி களிடம் விழாக்களுக்காக அறவிடப்படும் வரி.

Page 117
பண்டிகைகளும் ெ
ஆரையம்பதி
1.அறிமுகம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் “கல்விக் களஞ் சியமாக" விளங்கும் பழம்பெரும் கிராமமான ஆரையம்பதி; இயற்கை அழகு மிளிரும் "பாடும் மீன் வாவிக்" கரையோரம் எழில் கொஞ்சக்காட்சி தரும் மரபுவழி பேணும் பண்பாட்டுக் கிராமமாகும். வடக்கே முஸ்லீம்கள் பரந்து வாழும் காத்தான்குடிப் பட்டினமும், தெற்கே பழமை மரபுபேணும் தாழங்குடாக் கிராமமும் , கிழக்கே வங்காள விரி குடாக்கடலும் மேற்கே பாடும் மீன் வாவியும் எல்லைகளாக அமைந்துள்ளன. ஆரைப்பற்றை என அந்நாளில் அழைக் கப்பட்ட ஆரையம்பதி , பண்டுதொட்டு, இன்றுவரை தமிழர்களின் மரபுவழி வாழ்க்கையைக் கைக்கொண்டு வருவதோடு அர்த்தமுள்ள பண்டிகை களையும் கொண்டாட் டங்களையும் பேணிப்பாதுகாத்து வரும் சிறப்புக் கண்டு எமது நெஞ்ச மெல்லாம் புளகாங்கித உணர்வால் பெருமை யுறுகிறது.
தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்துவரும் மரபுவழி பண்டிகைகளையும் அதனை ஒட்டிய கொண் டாட்டங்களையும் இன்றும் ஆரையம்பதி மண் பழமை மாறாமலே பின்பற்றிக்கொண்டு வருகிறது.
தைப்பொங்கல் பண்டிகை, சித்திரைப் புது வருஷப்பண்டிகை, தீபாவளிப் பண்டிகை என்னும் மூன்று பண்டிகைகளையும் இதனை ஒட்டிய இன்னும் சில கொண் டாட்டங்களையும் ஆரையம்பதிமண், பண்டுதொட்டு இன்றுவரை "மரபுவழி” ஊடாக மண்ணின் சிறப்புக்கமையக் கொண்டாடிவருகிறது.
2.பொங்கல் பண்டிகை
உழவர் திருநாள் என்று அழைக்கப்படுகிற பொங்கல் பண்டிகை ஒவ்வொரு தமிழ் இல்லத்திலும் மங்களப்பண்டிகையாகும். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் எம்தமிழர் அதன் உயர்வுக்குத் தலைவணங்கி நடத்தும் விழாதான் பொங்கல் பண்டிகையாகும். எம்வாழ்வு ஊட்டத்துக்கு உணவு தரும் செந்நெல் வயல்களுக்கும் அந்தச் செந்நெல் வயல்கள் ஓங்கி உயர்ந்து வளர்வதற்கும் ஆதாரசுருதியாக மிளிரும் சூரியபகவானுக்கு உழுது பண்படுத்த உதவி செய்யும் மாட்டுச் செல்வங்களுக்கும் நன்றிப்பெருக்கோடு கொண்டாடும் விசுவாசப்பண்டிகைதான் தைப்பொங்கல் திரு நாளாகும்.

காண்டாட்டங்களும்
ஆதங்கராசா
ஆரையம்பதியில் வாழும் தமிழர்கள் உழவுத் தொழிலிலும் ஊக்கமாக அன்று தொட்டு இன்றுவரை ஈடுபட்டு வருகிறவர்கள். தெற்கே வயல்சூழ் மண்ணாக விளங்கும் மருதநிலப் பகுதியான “மாட்டுப்பளை” எனும் செந்நெல் விளையும் பகுதிகளிலும் நெற்களஞ்சியம் என்று கூறப் படுகிற கரவாகுப் பற்றிலும் படுவான்கரை எனக் கூறப்படும் மணி முனைக் கண் டத் தரிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்கள் பண்டு தொண்டு இருந்து வரும் செழுமையை எவர்தான் மறந்து வாழமுடியும்.
அந்த நாளில் "புதிர்க்கோட்டை'களும் தயிர்ப் பானைகளும், பறங்கி வாழைக்குலைகளுமாக வயல்வேலை செய்த முல்லைக்காரர்கள்'கா'விலே சுமந்து கொண்டு வருகிற அழகுக் காட்சியும் நெல்லுமுட்டைகளை ஏற்றிக் கொண்டு சாரிசாரி யாக மாட்டுவண்டிகள் ஆரையம் பதியை முற்றுகை இடும் காட்சியும் இன்று பழங்கதையாகிப் போய்விட்டாலும் அதன் மகத்துவம் குறையவில்லை.
“புதிர்’ எடுக்கும் மரபுவழிச்சிறப்பு இந்த மண்ணுக்குச் சொந்தமாகவே விளங்கியது. வேளாண்மை வயல்களுக்குச் சொந்தக்காரர்களாக ஆரையம்பதி மண்ணின் மைந்தர்கள் இருந்த காரணத்தினால் ஆரம்ப காலந்தொட்டு உழவுக்கும் சூரியனுக்கும் நன்றியுள்ள மாடுகளுக்கும் நடத்திவரும் நன்றி மறவாத விசுவாசப் பண்டிகையான “தைப்பொங்கல்" ஆரையம்பதி மக்களின் வாழ்க்கையோடு ஒட்டி உறவாடும் பண்டிகையாகவே விளங்கியது. மீன்பிடிக்கும் தொழிலைப் பிரதானமாகக் கொண்ட ஆரையம்பதி மக்களுக்கும் “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்ற நம்பிக்கையை ஊட்டுகிற தைப் பொங்கல் மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நாளில் வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு பொங்கலுக்கு ஆயத்தம் செய்வார்கள். பொங்கலுக்கு முதல்நாள் ஆரையம்பதி இளைஞர்கள் இயற்கை அழகு கொலுவிருக்கும் ஆரையம்பதி மண்ணை அண்டிய பகுதிகளுக்குச்சென்று தனித்துவ மணத்தைப் பரப்பிக்கொண்டிருக்கும் "கோடைப்பூக்களை" கொய்து கொண்டு வந்து வீட்டிலே சேர்ப்பார்கள். “கம கம” என்ற வாசம் எல்லோர் வீட்டிலும் “பொங்கல், பொங்கல்' என வாழ்த்துக் கூறுவது போலிருக்கும். ஊரையே கூவி அழைக்கும் மலர்வாசனைகளோடு உதயசூரியன் உதிக்கும் காலை நேரமே பலவீடுகளில் பொங்கல்பானை அடுப்பிலே ஏற்றிவைக்கப்படும். புதுப்பானை, புதுச்சட்டி, புது அகப்பை, கொண்டு பச்சரிசியும் பயறும் கலந்து சர்க்கரையும்
89

Page 118
முக்கனியும் இட்டு கரும்புச் சாறும், நெய்தேன், பசும்பாலும் கலந்து இஞ்சிச்சாறுவிட்டு ஏலக்காய் தூவி, இனிதான சுவைப்பொங்கலை பொங்கி சூரிய பகவானின் வருகை யோடு பொங்கலைப்படைத்து வழிபடுவர். எங்கும் அழகுக் கோலம் போட்டுச் சிற்பாக வைத்திருப்பார்கள்.
இந்நாளில் போல் பயங்கரம் தலைவிரித்தாடிய யுத்தயுகமல்ல அது. ஊரெங்கும் ஜப்பான் மணிவெடிகளும், சீனாதேசத்து பெரு வெடிகளும் ஓசை குறையாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த இனிய தைப்பொங்கல் நாளில் புத்தாடை அணிந்து புத்துணர்ச்சி பெருக ஆண்களும், பெண்களும் இளம்பிஞ்சுகளும் கோயில்தலம் சென்று தைபிறந்தால் வழிபிறக்க ஆண்டவனைப் பிரார்த்தித் துத்தங்கள் இல்லங்கள் திரும்புவார்கள். ஒவ்வோரு விட்டிலும் சுவைப் பொங்கல் கண்டாலும் எல்லாவீடுகளிலும் பொங்கிய பொங்கலைப் பகிர்ந்து ஒற்றுமைப்பொங்கலுக்கு வழிசமைக் கும் பண்பாட்டுச்சிறப்பு இந்த மண்ணுக்குச் சொந்தமான விருந்தோம்பல் சிறப்பாகும்.
சூரிய உதயம் தொடக்கம், மாலைபடும் வரைக்கும் ஊரில் தைப்பொங்கல் பொங்கும் மணம் தனித்துவமாக மணத்துக்கொண்டே இருக்கும். ஏழை வீட்டில்கூட இன்பப்பொங்கல் கொலுவிருக்கும் காட்சி இந்தத் தைப் பொங்கல் நாளில் கண்டுமகிழலாம். சகல கோயில் களிலும் பொங்கல் கண்டு தைப்பொங்கலை வாழ்த்தி வரவேற்பார்கள். இந்தத் தைப்பொங்கல் மகத்துவம் இந்தப் பயங்கர யுத்தநாளிலும் மங்கிமறையாமல் பழைய மரபுக் கோலத்தோடு தனித்துவச்சிறப்போடு ஏறுநடை போட்டு எங்கள் ஆரையம்தபி மண்ணிலே சிறப்புறத்திகழ்கிறது.
3. சித்திரைப் புத்தாண்டு
செந்நெல் விளைந்து ஊரெல்லாம் புதுநெல் புகுந்து விளையாடும் காசுபணம் புழக்கத்தில் உலாவரும் வளப்பமான காலத்திலே சித்திரைப் பண்டிகை எங்கள் பகுதியில் பிறக்கிறது. சித்திரைப் பிறப்பு காலத்திலே பாடும் மீன் வாவியாளும் “இறால்ச் செல்வத்தை' மீன்பிடிக்கும் நம்மவர் களுக்கு அள்ளி அள்ளிக் கொட்டிக் கொண்டிருப்பாள். நெல்லுப் புழக்கம் பரவலாக இருப்பது போல “இறால் பிடியால்” பணப் புழக்கமும் எங்கள் ஆரையம்பதி மண்ணிலே நிறை செல்வமாக விளங்கும். இதனால் சித்திரை வருஷம் மிகச்சிறப்பாகவே கொண்டா டப்படும். "வருஷப் புறப்பு வருகுது வருகுது” என்று ஒரு மாதத்துக்கு முன்பே ஊர்மக்கள் வருஷப் பண்டிகையின் தேவைகளைப் படிப்படியாகச் சேகரித்துக்கொண்டு வருவார்கள். சித்திரைப் பிறப்பு நெருங்க வானிலே பரவலாக வெடிமுழக்கம் கேட்கும். பெரியோரும் குழந்தைகளும் “வருவடிக்காரன்” வருகிறான் என்று குதூகலிப்பார்கள்.
வீடுகளுக்கு ஒட்டறை அடித்து கழுவித்துப்பரவு செய்து புதிதாக வெள்ளை அடித்து பளிச்சென சிறப்பாக இல்லங்களை அழகுற வைக்கத்தொடங்குவார்கள். வீட்டு மூலைகளுக்குள் இருக்கும் “பெட்டகம்” என்றழைக்கப்படும் பாரிய மரப்பெட்டிகளில் குவியல் குவியலாக அடைத்து வைத்திருக்கும் பழைய வெண்கலப்பாத்திரங்களை எடுத்து கிணற்றோரம் கொண்டுவந்து போட்டு புளி கொண்டு
90

துலக்கித்துப்பரவு செய்யும் காட்சி புதுவருஷப் பண்டிகை யைக் கட்டியம் கூறி அழைக்கின்ற மங்கலக் காட்சியாக ஆரையம்பதி மண்ணின் சிறப்பான வருஷத்துக்கு இலக்கணம் வகுப்பதாக அமையும். மா இடிப்பதும், பலகாரங்கள் சுடுவதும் ஊரையே புதுவருவடிக் கலகலப்புக்குள் மூழ்கவைக்கும் சீனிப்பலகாரம், சர்க்கரைப் பலகாரம், பயத்தம் பலகாரம், முந்திரியங்கொட்டைப் பலகாரம், கரத்தைப்பலகாரம், முறுக்குப்பலகாரம், சோகிப் பலகாரம் என்று பல வகையான பலகாரங்கள் சித்திரை வருஷப்பண்டிகையின் சிறப்புக் கொண்டாட்டத்திற்குக் கை கொடுத்து உதவும்.
வருஷப்பிறப்பன்று கோயிலிலே மருத்துநீர் காய்ச்சிக் கொடுக்கப்படும்; பலழக்கள், மரப்பட்டைகள், இலைகுழைகள், மாட்டு மூத்திரம், பசுப்பால் போன்ற மருந்துப் பொருட்களைக் கொண்டு காய்ச்சி ஊர்மக்களுக்கு கொடுக்கும் “மருந்துநீர்” எனும் மருத்துநீரைக் குழந்தைகள் செம்பு, சட்டி கொண்டு வாங்கிக்கொண்டு வந்து வருஷம் பிறந்ததும் பழைய வாகடப்படி மரபுபேணி வீட்டுத்தலை வனால் தலையிலே தேய்த்து மூழ்கி, தூய்மைகண்டு, புதுவருஷத்துக்காக வாங்கிய புது ஆடைகளை அணிந்து கோயிலுக்குச் சென்று இனிதான வாழ்க்கை தொடர்ந்து காண இறைவனை வணங்கி வழிபடுவர். பின்பு “கைமுழுத்தம்’ சுபநேரத்தில் பெற்று சம்பலோடு பிட்டுச்சாப்பிட்டு தங்களது உறவினர் இல்லங்களுக்குச் சென்று இன்புற்று சிற்றுண்டி உண்டு புதுவருஷத்தைக் கொண்டாடுவார்கள்.
அந்தநாளிலே ஆரையம்பதிக் கடை பசாரில் பலவகையான சீனவெடிகளும் மத்தாப்புகளும் பரப்பி வைக்கப்பட்டு வியாபாரம் செய்யும் அழகு இன்றும் கண் களுக்குள் படம் காட்டுகிறது. அந்த இனிய நாள் மீண்டும வந்திடாதோ? இன்றையப் பயங்கரம் இல்லாத அன்றையப் பொற்காலத்தில் ஓயாத சீனவெடிகள் ஊரையே கதிகலங்கி மக்கள் காதுகளையே அடைக்கவைக்கும் வெடிச்சிறப்புக்
B60ör(BLITIb.
4. ஊஞ்சல் ஆட்டம்
ஊரின் வீதி ஓரங்களில் முழுத்தென்னை மரங்களை வெட்டிநாட்டி, பென்னம் பெரிய கயிறுகளால் ஊஞ்சல் பலகைபோட்டு வருவடிக் கொண்டாட்டத்துக்கு “ஊஞ்சல்"ஆடும். மறக்கமுடியாத அற்புதமான இனிய காட்சி இன்று அழிந்தகலையாகிவிட்டது. ஊரே திரண்டு நிற்கும் எழில்கோலத்தின் மத்தியிலே “தன தனா தந்தோம்” என்று அடிஎடுத்து முருகன் மீதும் அம்பாள் மேலும் மற்றும் கடவுளார் சார்பாகவும் பாடிக்களித்தாடும் “ஊஞ்சல்” அழகு ஆரையம்பதி மண்ணின் தனித்துவச் சிறப்பாகும். வாலிப முறுக்குள்ள காளையர் பம்பரமாக உத்திஆட, வயது வந்த பெரிய வர்கள் இனிமையாக ஓசை நயத்தோடு பாட அந்த ஊஞ்சல் காட்சி ஆரையம்பதி மண்ணின் புதுவருவடிக் கொண்டாட்டத் தின் தனித்துவக் காட்சியாக விளங்கும்.
சித்திரைப்புதுவருஷக் கொண்டாட்டம் பிறந்து விட்டால் எங்கள் ஆரையம்பதி மண் திருமணக் கோலம்

Page 119
பூண்டு காட்சி தரும். பாடும் மீன் வாவிக்கரையோரம் தென்னை மரங்களின் சூழலில் அழகுக்கோலம் விரித்தாற் போல் காட்சிதரும் கந்தட்டி வளவுக்குள் நின்று ஆற்றுக் காற்றிலே ஆடி அசைய பட்டங்கள் விடும் அழகுக்காட்சி காண்பவர் கண்களை கெளவிக்கொள்ளும். கப்பல்பட்டம், மீன்பட்டம், தோணி போன்ற பட்டம், ஆலாப்பறவைபோன்ற பட்டம் என்று விதம் விதமான பட்டங்களை பெரியவர்களும் சிறுவர்களும் பறக்கவிட்டு மகிழ்வதே சித்திரைப் பண்டிகைக் கொண்டாட்டத்தின் மேன்மைக்கு உயிர்கொடுக்கும் காவியமாக விளங்கும். பெரிய படகுபோல் காட்சிதரும் பட்டங்களைக் கட்டிவிடுவதில் வல்லவராய்த் துலங்கிய "கட்டாடியாரின்’ மருமகன் பிரபல மந்திரவாதியும் பூசாரி யுமாக விளங்கிய கதிராமர் தனது மக்களோடு சேர்ந்து ஏற்றி ஊரைக்கலகலப்பாக்கும் இனிய பட்டமிடும் அற்புதக் காட்சி புதுவருஷக்கொண்டாட்டத்தின் உச்சகட்டமாகும்.
5.கூத்தாட்டம்
சித்திரைப் புதுவருஷப் பண்டிகைக் கொண்டாட் டம் வந்தால், ஆடி ஒத்திகை பார்த்த கூத்துக்கள் அரங்கேறும் இனிய காட்சிகளைக் காணலாம். புதுவருஷத் துக்குள் கூத்தை அரங்கேற்றி ஆடி, கூத்துமுடிந்த காலைப் பொழுதில் ஊர்ப்பெரியவர்களின் இல்லங்களுக்கு வந்து ஆடிக்காட்டி பரவசப்படுத்தும் இனிய காட்சியும் நம் கண்களில் நிழல் காட்டுகிறது. சித்திரை வருவடிக் கொண்டாட்டங்கள் எட்டு நாளைக்கு மிகவும் சிறப்பாக நடைபெறும். ஊரிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று புதுவருஷப் பலகாரங்கள் சாப்பிட்டுமகிழ, விருந்துண்ண உறவினர்களும், சொந்தக்காரர்களும் போய் வரும் காட்சி சித்திரைப் பண்டிகையின் சிறப்புக்கு அழகுக் கோலமாக மிளிரும் காட்சியாகும்.
புதுவருஷம் பிறந்த மூன்றாம் நாள் வீடு வீடாகச் சென்று பறையடிக்கும் பறை ஓசை ஊரையே கலகலப் பாக்கும்.இன்று அந்த பறை அடிக்கும் வருஷச் சம்பிரதாயம் ஒதுங்கி மறைந்துவிட்டது. காலமாற்றம் இந்தப் பழைய சம்பிரதாயங்களை எல்லாம் ஒதுக்கி எறிந்துவிட்டு நவீன உத்திகளைப் புகுத்திக் கொண்டு வருகிறது. வருஷத்தின் மூன்றாம் நாள் சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் கலைஞர்கள் போன்ற ஊர்த்தொண்டு செய்யும் அன்பர்கள் வீடு வீடாகச் சென்று தங்களது வருஷப் பண்டிகையின் “கைமுழுத்தம்’ வருமானங்களைப் பெறும் பழைய மரபுவழிப்பழக்கம் இன்றும் மங்கர்மல் நடந்துகொண் டிருக்கிறது.
சித்திரைப் பண்டிகையின் எட்டு நாள் கொண்டாட் டத்துக்குள் பல நிகழ்ச்கிகள் ஊரில் நடைபெறும். வெளியூரில் இருந்துவந்து கும்பத்தைத் தலையில் வைத்தாடும் கலைஞர்களின் சிறப்பாட்டம் வருஷப் பண்டி கையின் மரபுவழிச் சிறப்பாகும். இன்று அந்தக் கிராமியக் கலை அழிந்த கோலமாகிவிட்டது. ஊரிலே வருஷக் கொண்டாட்ட நாளில் றாம்மாக்களும், நாடகங்களும், மகுடி நிகழ்ச்சியும், கோடுகச்சேரிக் காட்சியும், நடத்தும் வருஷப் பண்டிகையின் சிறப்பு இந்த நாளில் அருகி மறைந்து போய்விட்டது.

6.மகிடி
மலையாள நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட "மகுடி” எனும் கலை நிகழ்ச்சி சித்திரை வருஷத்தில் ஆரையம்பதி மக்களை கொள்ளை கொள்ளும் அற்புத நகைச்சுவைக்கோலமாகும். ஊரின் விளையாட்டு மைதானத் திலோ அல்லது கோயில் வெட்டைகளிலோ இந்த “மகுடி” நடைபெறும். அழகாகச் சோடனை செய்து பந்தல்கள் போட்டு 'மகுடி' விழாவைச் சிறப்பிப்பார்கள். நகைச்சுவை உணர்வை மக்களுக்கு ஊட்டி, மக்கள் உள்ளங்களைச் சிரிப்பாக்கும் கலைக்காட்சியே மகுடியாகும்.
நகைச்சுவை காட்டும் "சாம்பல் ஆண்டிகள்' என்று அழைக் கப்படும் "கட்டியகாரர்கள்” முதலிலே வந்து சாம்பல் ஊதி, விளையாட்டுக்காட்டி மகுடியை ஆரம்பித்து வைக்க முனிகளும், பிராமணச்சாமிகளும் கூடாரத்தின் ஒரு மூலை யில் வந்து இருக்க, தொடர்ந்து வேடுவன், வேடுவிச்சி, வில்லு, அம்பு, சுளகு சகிதம் ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி, "மகுடி' அரங்கிலே கால் ஒய ஆடி, களைப்புவர "அம்மாடி’ என்று கூவிக்கொண்டு ஒரு ஓரமாக குந்திக் கொள்வார்கள். பறங்கி, பறங்கிச்சி வேடம் புனைந்து “வைலா” ஆடி கொச்சைத் தமிழில் பேசிச் சிரிப்புக்காட்ட, பொலிஸ் கார வேஷம் பூண்டவர்கள் அதட்டிப் பொல்லுகளைச் சுழற்றிக் கொண்டு 'மகுடி" அரங்கை அதிர வைப்பார்கள். இந்த வேடிக்கைக் காட்சிகளின் உச்சகட்டமாக "புலி’ வேஷம் போட்டு வந்து ஆடும் இனிய நிகழ்வோடு மகுடியின் சிறப்பு நிறைவுறும்.
7.கோருகச்சேரி
கோடு கச்சேரி எனும் நிகழ்ச்சியும் ஆரையம்பதி மண்ணின் கொண்டாட்டமாகவே இருந்து வந்தது. கோடு மாதிரி மேடை அமைத்து நீதிபதி, வழக்கறிஞர்கள் இருக்கும் இடங்களை உருவாக்கி எதிரி, வழக்காளி, சாட்சிகள் நிற்கும் கூண்டுகளை அமைத்து கொலை வழக்கு, பிள்ளைச் செலவு வழக்கு, சாராயம் விற்ற வழக்கு, களவு செய்த வழக்கு என்று பலவகையான வழக்கு களையும் உண்டாக்கி நிஜக்கோடுபோல் செய்து காட்டும் சிறப்புக்கு ஆரையம்பதி மண்ணைத் தவிர வேறு எங்கே உண்டு. இப்பொழுதெல்லாம் இந்தக் கலை நிகழ்ச்சிகள் மறைந்து வெறும் “வீடியோ’ படங்களை வீட்டிலே பார்த்த மகிழும் போலிச் சம்பிரதாயப் பண்டிகை யாகவே சித்திரை வருவடிக் கொண்டாட்டம் மாறி விட்டது.
குழந்தைகளும், வாலிபர்களும் "கிறுக்குஞ்சில்" ஆடுவதும், கிட்டிப்புள் அடிப்பதும், சில்லுக்கட்டை விளை யாடுவதும், வார் அடிப்பதும், குமர்ப்பெண்கள் குடு குடு ஆடிப் பிடித்து விளையாடுவதும், "சடுகுடு” ஆட்டம் போடுவ தும் சித்திரைப்ை பண்டிகையின் சிறப்பாக அமையும் 'முடிதும்பி”செடிகளிலே மொய்த்துப் பறந்து திரியும் வண்ணாத்திப் பூச்சிகளைப் பிடித்து நூலிலே கட்டி விளையாடித் திரியும் குழந்தைக்காட்சியும், கோலிக்குண்டு அடித்து விளையாடும் துடுக்குத்தனமான விளையாட்டுக் களும் அன்றைய நாளின் புதுவருஷப் பண்டிகைக் கொண்டாட்டத்தின் சிறப்பாகக் கண்டோம்.
91

Page 120
8.தீபாவளிக் கொண்டாட்டம்
ஆரையம்பதி மண்ணிலே மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து கொண்டுவரும் நமது உறவினர்கள் அந்தநாளில் “தத்தி தத்தியாக” வலைத்தொழில் செய்து வந்தார்கள். ஒவ்வொரு தத்தியும் தீபாவளிக் கொண்டாட் டத்துக்காக ஒவ்வொரு நாளும் ஆற்றுக்குப் போய்வந்து உழைத்த காசைப் பகிர்ந்து எடுக்கும் பொழுது பெரிய உண்டியலிலே ஒரு தொகைப் பணத்தைப் போட்டுக் கொண்டு வருவார்கள். தீபாவளி பிறக்கப் போகும் நாளைக்கு முதல்நாள் உண்டியலை உடைத்து, அந்தப் பணத்தை அப்படியே எடுத்து தத்திக்காரர்கள் தத்தி யிலுள்ள அத்தனை பேருக்கும் வேட்டிசால்வைகள் என்று புது உடுப்புக்கள் வாங்கி, பின்பு பரமனையினார், முருகன் கோவில்களிலே தீபாவளிக்கு முதல்நாள் வரும் இரவில் அவல், கடலை, மோதகம், புக்கை என்று பெரிய பூசை நடத்தி, அடுத்தநாள் தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சிறப்பாக ஆரம்பிப்பார்கள்.
தீபாவளிக்காக அரிசிமா ரொட்டிகள் சுட்டு, ஆட்டு இறைச்சியும், மட்டு இறால் பொரியலும் போத்தல் போத்த லாக சாராயமும் நரகாசூரனை முன்நிறுத்தி குடிவெறிப் போதையில் தீபாவளி கொண்டாடி தலைகெட்ட வெறியில் ஆளுக்காள் அடித்துக் கொண்டு, ஆடிப்பாடிக் கொம்பிக் கூத்தாடி, தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி ஆட்டம் போட்ட அசிங்க நிகழ்ச்சி இன்று மறைந்து விட்டாலும் ஆடுகள் வெட்டுவதும் கோழிகள் உரிப்பதும் வீடியோப் படம் பார்ப்பதும் இன்று தீபாவளிப் பண்டிகையாக உருமாறி யுள்ளது. அநீதிகள்அழிந்து நீதி எனும் அறம் பூத்த பண்பாட்டு விழா எங்கள் ஊராம் ஆரையம்பதியைப் பொறுத்தளவில் நரகாசூரன் நடமாடும் விழாவாகவே காட்சி தருவது இன்று மறைந்துவிட்டது.
9.சமயவிழாக்கள்
இப்படிப்பலபல பண்டிகைகளாலும், கொண்டாட் டங்களாலும் சிறப்புட்பெற்ற ஆரையம்பதி மண், சமயசம்பந்த மான விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும், சடங்கு களிலும், திருவிழாக்களிலும் சிறப்புற விளங்கிவரும் பான்மைகண்டு அயல்க்கிராமங்களில் வாழும் மக்கள் கூட ஆரையம்பதி மண்ணின் தனித்துவச் சிறப்புக்களுக்குத் தலைவணங்குவர். இங்கு திருவிழாக்களும் சடங்குகளும் மிகச் சிறப்பாக நடைபெறும் கொண்டாட்டங்களாகும். ஆரையம்பதியின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முருகன் கோயிலில் நடைபெறும் திருவிழா அன்று தொட்டு இன்றுவரை சோடை போகாமல் சிறப்புற நடந்து வருவததை நாம் அறிவோம். ஊர் இரண்டுபட்டு நடுத்தெரு, முகத்துவாரத் தெரு எனப் பாகப்பிரிவினைப் பட்ட துரதிஷ்ட காலச் சிதைவால் எமது சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள் முடங்கிப் போய் சீர்குலைந்து போனது உண்மைதான். அண்ணன் தம்பிகளாக ஒரு வயிற்றிலிருந்து புறப்பட்ட நமக்குள்ளே இந்த நச்சுவிதையை விதைத்தவர் எவரோ தெரியாது? அந்த நாட்களில் நடைபெற்ற ஆரையம்பதித் திருவிழாக் களில் சிற்பான சோடனைகளும், தேர். சப்புறங்கள், யானை, குதிரை, மாடு போன்ற வாகனங்களாலும் சிறப்புப்பொங்க நடத்தப் பட்ட அழகுத்திருவிழா மறக்க முடியாதது. மூங்கில்
92

மரங்களை எங்கிலும் நாட்டி நிறவிளக்குகளை அதிலே மாட்டி பளிச்சென்ற அழகுக்காட்சியை உருவாக்கிக் காட்டியது ஆரையம்பதி மண்தான். வாணவேடிக்கைகளும் மேளச் சமாவும் அமர்களப்படும் திருவிழாவிலே சுவாமி ஊர்வலம் வரும் பொழுது "மேளச்சமா"நடைபெறும் வேளை, அதிரடி மேளப் போட்டியிலே திருவிழாக் கோலம் சிறப்பின் உச்சகட்டத் துக்கேதாவும் திருவிழாக்கள் மேலும் களைகட்ட நாடகங்கள் றாமாக்கள், நாட்டியங்கள், கூத்துக்கள், கும்மிகள், கரகாட்டங்கள் நடைபெறும். கலைஅழகும் அந்தநாளில் தனிஅழகாகும். அயல் கிராமங்களிலும் தூர இடங்களிலும் அந்த நாளில் வாகனப்போக்குவரத்துக் குறைந்த காலங்களில் வண்டிகள் கட்டி திருவிழாப்பார்க்க வந்த காட்சியை பழைய தலைமுறையினர் இன்றும் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். இந்தச் சிறப்புத்திருவிழாக் கொண்டாட் டங்கள் இன்று “வீடியோ’ படக்காட்சி காட்டும் திருவிழா வாக மாறிப் போனது துரதிர்ஷ்டமே.
கண்ணகை அம்மன் சடங்கு ஆரையம்பதி மணி னுக் கே உரித் தான, தனிச் சிறப்பான கொண்டாட்டமாகும். கண்ணகை அம்மன் கதவு திறந்ததும் ஆரையம்பதி மண் தூய்மையும் துப்பரவும் பெற்று “கம கம’ பூவாசனைகளால் மங்களம் பெற்று பக்திநிலை பரவசம் கண்டு, தெய்வீக நிலையை எல்லோர் நெஞ்சங்களிலும் ஊட்டிவிடும் பவித்திரகாலமாக விளங்கும். பெண்களும் குழந்தைகளும் இந்தக் கண்ணகை அம்மன் கொண்டாட்டத்திலே மிகவும் ஈடுபாடாகக் கலந்து கொள்வார்கள். இந்த எட்டுநாள் சடங்குகளிலும் ஊரே பயபக்தியைக் கடைப்பிடித்து மச்சமே எடுக்காமல் மரக்கறியே சாப்பிடுவார்கள். மா இடிக்கும் ஓசைகளும் அம்மிகளில் தட்டும் ஓசைகளும் அந்தநாளில் சடங்கு காலங்களில் தவிர்க்கப்பட்டிருந்ததாம்.
வீட்டுக்குத் தூரமானவர்களும் குழந்தைகள் பெற்ற பெண்களும் தூரக் கொண்டு செல்லப்பட்டார்களாம். தேங்காயெண்ணெய் விளக்குகள் மட்டுந் தான் கொளுத்தப்பட்டதாம். ஆடம்பரங்கள் தவிர்க்கப்பட்டதாம். விடியும் முன்பே சென்று அம்மன் வீதியை விளக்குமாறு களால் கூட்டித் துப்பரவு செய்யும் அழகுக்கோலம் இன்றும் மங்கி அழியாமல் மரபு செப்பனிட நடந்து கொண்டிருப்பது இந்த மண்ணக்கு உரித்தான பராசக்தியை வழிபடும் தனிச் சிறப்பாகும். கதவு திறக்கும் நாள் பெண்கள் துப்பரவாக முழுகித் தூய்மை கண்டு, மங்கல அழகோடு மஞ்சள்த் தண்ணிரால் கால்கழுவ மஞ்சள் நீர்ச்சட்டிகளோடு கோவிலுக்குச் சென்று கால்கழுவும் படலத்தை ஆரம்பித்து வைப்பார்கள். பின்பு அம்மன் கதவு திறந்ததும் நூறு நூறு பொங்கல் பானைகள் பொங்கிப் படைக்கப்படுவதும் கலியாணக்கால் வெட்டும்சிறப்பும், பலகாரப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கொண்டு போய்க் கொடுக்கும் சிறப்பும் மறக்கமுடியாதது. இச்சடங்கில் கல்யாணச்சடங்கு குளிர்த்தி என்பன நிறைவு நிகழ்ச்சிகளாகும். இவ்வாறே காளிகோயில் சடங்கு மாரியம்மன் சடங்கு பேச்சியம்மன் சடங்கு முதலியனவும் ஊரில் பயபக்தியை வளர்க்கும் நிகழ்வுகளாகும்.

Page 121
கிராமிய விை
ஐ. சிவ
பண்டு புகழ் கொண்ட பழம்பதி ஆரையம்பதி. கலைமணமும், கவிமணமும், நிலவளமும், நீர்வளமும் தெய்வ பக்தியும் நிரம்பிய அழகுடை கிராமம் இது. நீரர மகளிர் இசைபாடும் வாவி சூழ் மட்டு நகரின் தென்பால் அமைந்துள்ளது இக்கிராமம். இன்னுஞ் சிறப்பாகச் செல்வ தானால் நெய்தல் நிலப் பகுதிக்கு உரித்தான ஊர் என்று கூறமுடியும். இவ்வூரின் நடுநாயகமாக விளங்குவது அருள் மிகு கந்தசுவாமி ஆலயம். மண்முனை சிற்றரசாக உலக நாச்சியாரின் ஆட்சியின் கீழ் இருந்தகாலை இந்த ஆலையம் ஆண்டு தொடர்பு பட்டும் கொக்கட்டுச்சோலை அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தோடு தொடர்பு கொண்டு மிருந்ததென்பதையும் சான்றாகக்கொண்டு நோக்குங்கால், குளக்கோட்டன் மன்னன் காலத்தை இவ்வாலய ஆரம்பத் தின் வரையறையாகக் கொள்ள முடியும். இத்தகு சிறப்பும் தொன்மையும் உடைய இவ்வாலயத்தில் குடிகொண்டி ருக்கும் எம். முருகப் பெருமானின் பாதாரவிந்தம் பணிந்து அருள்வேண்டி ஆரம்பிக்க விளைகிறேன்.
இன்றைய நிலையில் பல கிராமங்களில் கிராமங்களுக்குச் சொந்தமாக இருந்த அல்லது கிராமத்து இளைஞர்களாலே விளையாடப்பட்டு வந்த கிராமிய விளையாட்டுக்கள் வழக்கொழிந்து அருகி, ஏன் அடியோடு மறைந்து விட்ட நிலையைப் பார்க்க முடிகிறது. இதற்கு ஆரையம்பதி கிராமம் மட்டும் விதிவிலக்கல்லவே. இவ்வூரில் அன்று வழக்கிலிருந்த காளையர்கள் களிப்போடு விளையாடிய பல விளையாட்டுக்கள் இன்று இல்லை.
இக்கால இளசுகளுக்கு அந்த விளையாட்டுக் களின் பெயர்களைத் தெரியுமோ என்று சந்தேகப்பட வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனகாரணத்தினால் அந்தக் கிராமிய - ஆரையம்பதிக்கே உரித்தாய் இருந்துவந்த - மக்களால் விரும்பி இரசிக்கப்பட்ட விளையாட்டுக்களை - அவற்றின் பெயருடன் விளையாடும் முறை ஆகியவற்றை ஈண்டு சுருக்கமாகத் தருவது பொருத்த முடைத்தெனக் கண்டேன்.
இக்கிராமத்து விளையாட்டுக்களை நினைவு கூருகின்ற வேளை கீழே காட்டப்பட்டுள்ள விளையாட்டுக்கள என்ஞாபகத்துக்கு வருவனவாம். அவை புள்ளுக்கிட்டி, உத்துக்கிட்டி, பிள்ளையார்கட்டை, அல்லது சில்லுக்கட்டை, பூப்பந்து, வாராபோரா, வட்டக்கோடு, கிளித்தட்டு, மகுடி, மரமுந்திரிகை விதை அடித்தல், (முந்திரிகை விதை அடித்தல் இரண்டுவகை உண்டு. ஒன்று வட்டக்கோட்டுக்கள் வைத்துப் படிக்கல்லால் அடித்தல். அடுத்தது பூச்சான் அடித்தல்)

ளயாட்டுக்கள் சுந்தரம்
இனி இந்த விளையாட்டுக்களைத் தனித்தனியே நோக்குவோம். (1) புள்ளுக்கிட்டி
ஒரு அடி அல்லது ஒன்றரை அடி நீளமான ஒரு மரக்குத்தி உருண்டையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் புள் பந்து போன்ற உருண்டை வடிவத்தில் ஆக்கப்பட்டி ருக்கும். இரண்டு பகுதியார் கன்னையாகப் பிரிந்து விளையாடுவார்கள். விளையாடும் முறை கிட்டியை வைத்து அதனை ஒட்டியதாக ஒரு சிறு குளி அமைத்து அதில் புள்ளை வைத்து எத்துவார்கள் (உந்துதல்) எதிர் கன்னையில் உள்ளவர்கள் அந்தப் புள்ளை உயர்ந்து வந்தால் பிடித்து விடுவார்கள். அப்படிப் பிடித்தால் உந்தியவர் ஆட்டமிழப்பார். ஆனகாரணத்தினால் கூடியளவு நிலத்தில் உருண்டு போகத் தக்கவாறே புள்ளை எத்துவார்கள். புள்ளை எடுத்து கிட்டியில் எறிய எறிதவறு மானால் உந்திய கன்னைக்கு பாட்டம் அதாவது அவர்கள் கிட்டி போட்டுப் போவார்கள். அதாவது கிட்டியை ஓரளவு தூரத்துக்கு எறிந்து அதற்குப் புள்ளால் எறிந்து கொண்டு செல்வார்கள். எறிதவறினால் அடுத்தவர் கிட்டி போடுவார்.
இவ்வாறு கிட்டி போட்டுப் போகும் பொழுது கிட்டியில் பட்ட புள் உயரக் கிளம்பினால் அதை எதிர்கன்னை பிடித்துப் பின்நோக்கி எறிந்து விடுவர். அப்படி எறிபட்டால் கிட்டி போடும் கன்னை அந்தப்புள் விழுந்த இடத்தில் இருந்து (பின்னே சென்று கிட்டி போட்டுவர வேண்டும்) கன்னையில் உள்ள அத்தனைபேரும் கிட்டி போட்டு முடிந்ததும் எதிர்க் கன்னையில் உள்ளவர்கள் அந்த இடத்திலிருந்து மூச்சுவிடாமல் 'ப்பூ என்ற சத்தத் துடன் ஓடிவிளையாட்டு ஆரமபிப்த இடத்தை அடைய வேண்டும். ஒருவர் மூச்சு விட்ட இத்திலிருந்து மற்றவர் தொடருவார். இது மிகவும் சுவாரசியமான உடல் பயிற்சிக்கும் நல்லதோர் விளையாட்டாகக் கருதமுடியும். 2. கிட்டிப்புள்ளு
இந்த விளையாட்டானது ஒன்றரை அடி நீளமான சிறு உருண்டை வடிவான தடியை ஒரு முனையில் சீவிக் கிட்டியாகவும் 4 அங்குல அளவான ஒரு சிறு கம்பை உருண்டை வடிவமாக்கி இருமுனையையும் கூராக்கி அதை ஒரு குளியில் வைத்து உத்துவார்கள். உந்தப்பட்டு போற புள்ளை எதிர் கன்னையில் உள்ள ஒருவர் தடக்கி குழியை நோக்கி எறிவார் அவ்வாறு வருகின்ற புள்ளை உத்தியவர் அடிப்பார் ஏனெனில் அப்புள் குழியிலோ அல்லது குழியில் கிட்டியை வைத்து அந்தப் புள் கிடந்த இடத்திலிருந்து
93

Page 122
புள்ளைக் கிட்டியை நோக்கித் திருப்புகின்றவேளை கிட்டியின் முனையில் படுமேயானால் உந்தியவர் ஆட்டம் இழப்பார்.
மேலும் அவர் உந்துகின்றபோது அந்தப் புள் உயர்ந்து போனால் அதை எதிர்தரப்பில் ஒருவர் பிடித்து விட்டாலும் அவர் ஆட்டமிழப்பார். குழியில் நின்று இவர் அடித்துத் தடுத்த புள்ளை மீண்டும் அதன் ஒரு முனையை அடித்து அது உயர்ந்ததும் மீண்டும் அடிப்பார். மூன்று தரம் அடிக்கமுடியும். அதுவிழுந்த இடத்தில் குழிவரைக்கும் இடையிலான தூரம் கிட்டியால் அளக்கப்படும். ஒரு கன்னை யிலுள்ள அனைவரும் உத்தி முடித்ததும் பாட்டம் அதாவது அவர்களுக்கு வெற்றி நூறு இரு நூறு என்ற ஒரு எண்ணிக் கையைத் தீர்மானித்து இந்தப்பாட்டம் இடம் பெறும். அவர்கள் எங்கு புள்ளை அடித்துக் கொண்டு போய் முடித்தார்களோ அந்த இடத்திலிருந்து மறு கன்னையில் உள்ளவர்கள் விளையாட்டு ஆரம்பித்த இடத்துக்குப் பாடி வரவேண்டும் (மூச்சுப்பிடித்து)அவர்கள் பாடவேண்டிய பாடல்
"ஆலையிலே சோலையிலே ஆலம்பாடி சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகி அடிக்கப் பாலாறு பாலாறு பாலாறு.
ஒருவர் மூச்சுவிட்டால் மற்றவர் தொடர்வார்.
3. பிள்ளையார்கட்டை அல்லது
சில்லுக்கட்டை
இந்த விளையாட்டு பெரும்பாலும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் விளையாடப்படும். இரு கன்னையாகப் பிரிந்து நின்று விளையாடுவார்கள் ஒரு செங்கல்லை செங்குத்தாக நிறுத்தி அதன்மேல் ஒட்டுத்துண்டுகளை வட்ட வட்டமாக உராய்ந்து எடுத்து ஏழு அல்லது ஒன்பது சில்லு அடுக்குவார்கள். அந்தச் சில்லுக்கு முதலில் எறிந்து கலைப் பதற்கு தெரிவான குழுவில் இருந்து ஒருவர் தீர்மானிக்கப் பட்ட இலந்தையில் நின்று சுமார் 20 அடி தூரம் பந்தால் எறிவார். அடுக்கியுள்ள சில்லுகள் விழுந்தவுடன் மறுகன்னை யில் உள்ளவர்கள் அந்தச் சில்லுகளை இருந்தபடி அடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அடுக்கும் பொழுது அவர்களுக்கு பந்தால் எறிவார்கள் அடுக்கி முடிந்ததும் கைதட்டி தங்கள் பணியை நிறைவேற்றி விட்டதை வெளிப் படுத்துவார்கள் அடுக்கி முடியும் வரை எறிவிளையாட்டு நடந்து கொண்டே இருக்கும். ஒருவரை நோக்கி எறிகின்ற பந்தை அந்த நபர் பிடித்துவிட்டால் அது அடுக்குவதற்கு சமம் அவர்கள் கலைக்கும் வேலையை மேற்கொள்ளுவர்.
4. பூப்பந்து
Bat மட்டை என்றும் சொல்வர். இரண்டு கன்னை யாகப் பிரிந்து விளையாடுகின்ற ஒரு விளையாட்டு அடிமட்டை ஒன்றை அளவாக வெட்டி யெடுத்துப் பந்தை அடிக்கக்கூடியவாறு வடிவமைத்தெடுப்பார்கள். ஒரு பகுதியில் ஒருவர் அடிப்பதற்கு பந்தை மாத்துவார்கள்.
94

ஏனைய உறுப்பினர்கள் அப்பந்தை அடிப்பதற்கு பந்தைப் போடுவர். ஏனைய உறுப்பினர்கள் அப்பந்தை பிடிப்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ மைதானத்தின் பல இடங்களில் ஆயத்தமாயிருப்பர். ஒரு ஆளுக்கு மூன்று முறைதான் பந்து போடப்படும். அவர் பந்தை அடித்துவிட்டு ஓடுவார். வட்டவடிவில் மூன்று தரிப்பிடங்கள் இருக்கும் பந்தை அடித்தவர் ஓடிச்சென்று முதலாவது தரிப்பிடத்தில் நிற்பார். அவர் கன்னையைச் சேர்ந்த இன்னொருவர் பந்தை அடிப்பார் அவர் அடித்ததும் அவர் அடுத்து நிற்கும் இடத்திற்கோ அன்றேல் தனது தரிப்பிடங்கள் இல்லாது இடைநடுவில் வைத்து (ஓடும்பொழுது) அவருக்கு எறிவார்கள். எறிபட்டால் அவர் ஆட்டம் இழப்பார்.
தரிப்பிடங்களில் நில்லாது ஒரேவட்டமாய் ஒடவும் முடியும் அது அவர் பந்தை அடிக்கும் வேகத்தையும் பந்தை தடுப்பவர்களின் நிலையையும் பொறுத்தது. இந்த விளையாட்டு ஓரளவு மேலை நாட்டில் ஆரம்பித்த Cricket விளையாட்டுடன் ஒப்பிட முடியும். வட்டமாக ஓடுவதால் இதை Rounders என்றும் சொல்வதுண்டு.
5. 6.GJITGuTGJIT:
பத்தோ இருபது பேரோ என்ற தங்களுக்குள் இரண்டு பிரிவாகப் பிரித்து இரண்டு கன்னைக்காரரும் எதிரும் புதிருமாக நிற்பர். இடைவெளி ஏறக்குறைய 75 - 100 யார் வரை இருக்கலாம். இதை விடக் கூடலாம் குறையலாம். தங்கள் தங்கள் இலந்தையில் வரிசைக் கோட்டில் நிற்பர். விளையாட்டை தொடருவதற்கு வரோபோரோ என்ற ஒரு பகுதியினர் கேட்பர். அதற்கு அடுத்த பகுதியினர் போர் என்றால் விளையாட்டுத் தொடங்கும். வார் என்றால் ஒரு கன்னையில் உள்ள ஒருவர் எதிர்க்கன்னைக்குச் சென்று தான் விரும்பிய ஒருவரின் கையை நீட்டச்சொல்லி விரலைத் தொட்டுவிட்டு ஓடுவார் (இது மண்வேண்டுதல் எனப்படும்) மண் கொடுத்தவர் அதாவது விரலைத் தொடுவதற்குக் கொடுத் தவர் அவரைத் துரத்திச் செல்வார். அவர் இலத்தைக்குப் போவதற்கு முன்னர் அடித்து விட்டால் அவரை மறியல் என்று கொண்டு தங்கள் கன்னையில் நிறுத்திவிடுவார். அவரை அடுத்த கன்னையில் உள்ளவர் ஓடிவந்து தொட்டு விட்டால் அவர் சிறைமீள்வார். ஆனால் தொட வாறவருக்கும் அடிவிழுந்தால் அவரும் மறியலாகி விடுவார். ஒரு கன்னை யில் உள்ள எல்லோரையும் மறியல் படுத்திவிட்டால் அவர் களுக்கு வெற்றி இவ்வாறு ஓடி அடிப்பதும் மறியல் வைப்பதும் மறியல் வைத்தவர்களைக் கிளப்புவதற்காகவும் இந்த விளையாட்டு நடைபெறும் எல்லோரையும் மறியலாக்கி விட்டால் அவர்களுக்கு வெற்றி.
6. வட்டக்கோடு:
இருகன்னையாகப்பிரிந்து ஒரு கன்னையில் உள்ளவர்கள் அங்கு கீறியுள்ள பெரிய வட்டத்துள் நிற்பார்கள். வெளியில் உள்ள குழுவினரில் ஒருவர் வட்டத் தினுள் சென்று அங்குள்ளவர்களுக்கு அடிப்பார் அச்சமயத் தில் அவர்கள் இவரைப் பிடித்து வட்டத்துள் அமுக்க

Page 123
முயலுவார்கள். இவர் அடித்துவிட்டு வெளியேறினால் அடி பட்டவர்கள் Out இவர் அமுக்குப்பட்டால் இவர் பட்டார். இந்த விளையாட்டு இன்று நாம் சில திரைப்படங்களில் பார்க்கின்ற 'கபடி என்ற விளையாட்டுக்குச் சமாமானது என்று கருதமுடியும்.
8.கிளித்தட்டு
இந்த விளையாட்டு கோடுகளில் நின்றே விளை யாடுவது. இரண்டு பிரிவாகப் பிரிந்து (கன்னை) நின்று விளையாடுவர். குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகளை வரைவர் நடுக்கோட்டில் இரு பிரிவினரின் தலைவர் நிற்பார். அவர்தான் கிளி. மறுதரப்பினர் முதலாவது கோட்டுக்கு வெளியே நிற்பர். விளையாட்டுத் தொடங்கியதும் வெளியே நிற்பவர்கள் ஓடிக்கிளிக் கூட்டுக்குள்ளே போக எத்தனிப்பர். மற்றவர்கள் தடுப்பர். எப்படியோ முயன்று உள்ளே பாயும் சந்தர்ப்பத்தில் தடுப்பவன் அடித்துவிட்டால் அவர்கள் ஆட்டமிழப்பர். மற்றப் பகுதியினர் தடுப் பார்கள் (மறித்தல்)பின்புறமாகஇருந்து முன்னோக்கி வந்து கிளியைத் தாண்டிவிட்டால் அவர்கள் கன்னைக்கு ஒரு வெற்றி. இந்த விளையாட்டிலே காயும் பழமும் என்ற பதங்கள் பாவிக்கப் படும். முன்னிருந்து பின்பறம் செல்லுவோர் காய், பின்புற மிருந்து முன்னோக்கி வருவோர் பழம். உட்கோடொன்றில் இந்த இரு தரப்பினரும் கலத்தல் விளையாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை தட்டுக்கோடு மறித்தல் என்றும் அழைப்பதுண்டு.
9.மரமுந்திரிகை விதை அடித்தல்
இதனை முந்திரிகைக்கொட்டை அடித்தல் என்று சொல்லுவர். சில இளைஞர்கள் சேர்ந்து விளையாடுவார்கள். ஆளுக்கு ஐம்பதோ நூறோ என்று தீர்மானித்து எண்ணிக்கை கூடலாம் குறையலாம் ஒரு வட்டம் கீறி எல்லோரதும் பங்கையும் அந்த வட்டத்தினுள் வைப்பர். ஒரு குறிப்பிட்ட தூரம் இவற்றைப் போட்டு அதில் நின்று படிக்கல்லால் அடிப்பர் குவியலில் பட்டு சில விதைகள் வட்டத்தை விட்டு வெளிளே பறந்துவிட்டால் அங்கு வைக்கப்பட்டு இருந்த அவ்வளவு விதைகளையும் அவர் எடுத்துக்கொள்வார். இலக்குத் தவறி விட்டதென்றால் அந்தப் படிக்கல் விழுந்த இடத்தில் ஒரு கோடு கீறப்பட அது அவரின் கட்டியாகக் கருதப்படும். இலந்தையில் நின்று எவரும் அடிக்கவில்லை என்றால் அவரவர்க்குரிய கட்டியில் அடிப்பார்கள் . எவருடைய கட்டி முந்திரியக் கொட்டை வைக்கப்பட்டுள்ள வட்டத்தின் மிக அண்மையில் உள்ளதோ அவரே முதலாவதாக அடிப்பதற்கு தகுதியுடையவராவர். இந்த விளையாட்டுத் திடலிலேதான் விளையாடப்படும்.
அடுத்து முந்திரிகை கொட்டையில் பூச்சா அல்லது பூச்சான் அடித்தல் என்றும் ஒரு விளையாட்டு உண்டு. இரண்டு பெரிய (மோக்கான் என்றும் சொல்வர்) முந்திரிக் கொட்டையை எடுத்து அதன் கீழ்ப்பகுதியில் ஒரு துவாரம் இட்டு நூலின் இரண்டு முனையில் இரண்டும் கட்டப்பட்ட ஆளுக்கொரு விதையெடுத்து மண்ணைச் சிறுகுவியலாக்கி ஒவ்வொருவரின் முந்திக்கொட்டையும்

அந்தக் குவியலின் மீது தலைகீழாக வைக்கப்படும் முதலாவது நபராகத் தெரிவானர் நூலின் ஒருமுனையில் உள்ள விதையைத் தனது நூலுடன் சுேர்த்துப் படித்துக் கொண்டு மறுமுனையில் உள்ள விதையைப் பூமி நோக்கித் தொங்கிவிட்டு நூலைச் சுழட்டி அந்த மண்ணில் படாது அங்கு வைக்கப்பட்டுள்ள விதையை அடித்து அந்த மண் குவியலினின்றும் பறக்கச் செய்யவேண்டும். முதலாவது விதையை அடித்துவிட்டால் இரண்டாவது விதையையும் அதே இடத்தில் நின்றவாறு அடிக்கவேண்டும். விதைகள் எல்லாம் ஒரே கோட்டில் நேராக சிறிது இடைவெளிவிட்டு வைக்கப்பட்டிருக்கும்.
9. மகிடி
மகுடி என்ற விளையாட்டை நினைவுகூருவோம். இதை ஒரு நகைச்சுவை அல்லது கோமாளி விளையாட்டு என்று கூறமுடியும். இது சித் திரைப் புத்தாண்டு நாட்களில்தான் நடைபெறும். ஒரு பரந்த இடத்தைத் தேர்ந் தெடுத்து அதில் ஒரு பகுதியை வட்டமாக தற்காலிக எல்லை இட்டு வர்ணக் கடதாசிகளால் கொடியும் ஆர்கையும் வெட்டி அலங்கரிப்பர். அங்கே முனிவருக்கு ஒரு பர்ண சாலை அமைக்கப்படும். வேடுவாரின் குறவர் களின் இருப்பிடங்கள் இலை குழைகளால் அமைக்கப்படும். மத்தியில் ஒரு பப்பாசிமரம் நட்டு அதில் துவாரம் வைத்து அதனுள் சக்கரை வைக்கப்படும்.இந் நிகழ்வில் இடம் பெறும் பாத்திரங்கள் சாம்பலாசண்டிகள், வேடர், குறவர், முனிவர்,பறங்கியர், புலி. இந்தப் பாத்திரங்கள் எல்லாம் ஒரு இடத்திலிருந்து பறை அறைந்து வெடி கொழுத்தி அவர்களின் வரவு முறைப்படி மைதானத்துள் அழைத்து வரப்படுவர். முதலில் சாம்பபாண்டிகள் வரவு. பின்னர் வேடர் அவர்களைத் தொடர்நது குறவர் வருவர். பின்னர் முனிவர் தண்டு கமண்டலத்தோடு வருவார்.பின்னர் பறங்கியர் வருவர். இறுதியில் புலி வரும் இங்கே பலவிதமான பார்வையாளர்களைச் சிரிக்கவைக்கும் செயல்கள் உரையா டல்கள் இடம் பெறும். இறுதியில் புலியினால் பிடிக்கப்பட்ட வேடரையும் குறவரையும் தனது கமண்டல நீரினால் முனிவர் எழுப்பி விடுவார். புலியையும் அதே சக்தியினால் கொன்றுவிடுவார். இறுதியில் வேடர் பப்பாசி மரத்திலிருந்து தேனை எடுத்துச் செல்வார். இதில் குறவர் பாட்டு வேடர் பாட்டு எல்லாம் இடம் பெறும்,
மேலே காட்டியுள்ள விளையாட்டுக்களில் மறைந்துள்ள அல்லது அவைகளில் அவதானிக்கக்கூடிய சிறப்பியல்புகைள தனித்தனி சுட்டிக் காட்டியுரைத்தலின் இட அளவஞ்சிப் பொதுவாகச் சில பண்புகளை ஈண்டு சுட்டுவது ஏற்புடைத்தெனக்கண்டேன். இவ்விளையாட்டுக்கள் இளைஞர்களிடையே கூட்டுப் பொறுப்புணர்ச்சியை ஒற்றுமையை, விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தை, சகிப்புத் தன்மையை, வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்றல், விடாமுயற்சி போன்ற சிறந்த பண்புகளை வளர்க்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக உடலுக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அத்திவாரம் அமைத்துக் கொடுக்கிறது என்று கூறலாம்.
95

Page 124
ஆலய பரிபா
சுபரசுராமன் լք, լr:Tճն է:
நிர்வாகசபை உ
சா.கண்கே
குறிப்பு: இம்மலர் போகும்
டாக்டர்சுதங்கவடிவேல் ந.வடிவேல்
96
 
 
 

TETTi
கசிவம் |
உறுப்பினர்கள்
செபுள்ளநாயகம் ஏ.சுந்தரமூர்த்தி
ரட்னம்
அச்சுக்குப் வரை எமக் ந்த படங்கள்
உறுப்பினர்:
க.சுப்பிரமணியம் சிவசந்தரம்"

Page 125
அமெரிக்கர் ஒருவரால் சென்னை ஆசிய ‘ஸ்கந்த - முருக’ அனைத்துலக
1. அனைத்துலக ஸ்கந்த - முருக ஆய்வு
Dfbs (b:
முருகவணக்கம் மிகத்தொன்மையானது. வேதகாலத்திற்கு முன்பே முருகவணக்கத்தின் ஆரம்ப நிலையான வேல்வணக்கம் இருந்தது. வேதசாஸ்திர நூல்களிலும் சங்க இலக்கிய நூல்களிலும் முருக வணக்கம் பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன. பிற்காலத்தில் முருகவணக்கமும் அதுதொடர்பான பக்தி இலக்கியங்களும் பல்கிப் பெருகியுள்ளன. ஆனாலும் முருகவணக்கம் தொடர்பாக ஒரு சர்வதேச ஆய்வரங்கு நடைபெறுவது வியப்புக்குரியது. அதிலும் இந்த ஆய்வரங்கை ஏற்பாடு செய்தவர் ஒரு அமெரிக்கர் என்பது இன்னும் ஆச்சரியத்துக்குரியது.
இந்த ஆய்வு மாநாடு சென்னையில் உள்ள sefugiugi) isgj61601,556) (Institute of Asian Studies) கடந்த வருடம் 28.12.98 - 31.12.98 வரை 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. 39 நாடுகளில் இருந்து சுமார் 165 ஆய்வாளர்கள் இம்மாநாட்டில் பங்குபற்றினர். 3 நாட்கள் ஒவ்வொருநாளும் - 3 மண்டபங்களில்- ஒவ்வொரு மண்டபத்திலும் 9 அமர்வுகள் வீதம் மொத்தம் 27 அமர்வுகளில் இம்மாநாடு நடைபெற்றது.
இதை எண்ணிப்பார்க்கும் போது 1893ல் சிகாகோ நகரில் நடைபெற்ற அனைத்துலக சமய மாநாடு நினைவுக்கு வருகிறது. பலவருடங்களுக்கு முன் வெவ்வேறு நாடுகளில் இடம் பெற்ற அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடுகளையும் இதற்கு ஒப்பிடலாம்.
2.ஆண்டு தோறும் கதிர்காம யாத்திரை:
ஒரு அமெரிக்கர் முருகபத்தியினால் ஆட்கொள் ளப்பட்டு “ஸ்கந்த- முருக’ என்னும் பொருளில் அனைத்துலக ஆய்வு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு காரணமாக அமைந்த சூழ்நிலை எது? காரணிகள் எவை' பல சுவராஸ்யமான சம்பவங்கள் இதன் பின்னிணியில் அமைந்துள்ளன.
1942ம் ஆண்டு முதல் யோக சுவாமியின் சீடரான ஜேர்மன் சுவாமி, கெளரிபாலா, கதிர்காம யாத்திரை மேற்கொண்டு வந்தார். 1971ல் திரு.பற்றிக் ஹரிகன் இந்த சுவாமி யோடு சேர்ந்தார். அவர் உபதேசத்தால் 1972ல் அவருடன் சேர்ந்து கதிர்காம யாத்திரை மேற்கொண்டார் 1972ல் சுவாமி கெளரிபாலா இலங்கையை விட்டுச் சென்றுவிட்டார்.

வியல் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆய்வு மாநாடு - 28.12.98 - 31.12.98
திரு பற்றிக் ஹரிகன் 1972முதல் ஆண்டு தோறும் கால்நடையாகவே கதிர்காமத்துக்குப் பாதயாத்திரை செய்து வருகிறார்.அவர் தன்னோடு ஒரு பக்தர் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பாதயாத்திரை செய்வார். முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகும் இப்பாதயாத்திரை அங்குள்ள போர்ச்சூழல் காரணமாக கடந்த சில வருடங்களாகத் திருகோணமலையிலிருந்து ஆரம்பமாகிறது. சுமார் 50 யாத்திரீகர்வரை அவரது குழுவில் சேர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு ஊராகத் சென்று ஆலயங்களில் தரித்து நின்று மரநிழலில் ஒய்வெடுத்து இவர்கள் யாத்திரை மேற்கொள்வார்கள். கதிர்காமம் உற்சவம் நடைபெறுததற்குக் பலவாரங்களுக்கு முன்பே யாத்திரை ஆரம்பமாகிவிடும். ஆனால் உற்சவதினத்தில் இவர்கள் கதிர்காமத்தில் நிற்பார்கள்
இந்த யாத்திரையின் போது இவர்கள் மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயிலில் தரித்து நிற்பார்கள். அவரை நேரில் சந்திப்பவர்களுடன் தமது அனுபவங்களைத் திரு பற்றிக் ஹரிகன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த யாத்திரை வெறும் பயணம் மட்டுமல்ல. அது ஒரு தவம் என அவர்கூறுகிறார். பயணத்தின் போது அவர் பெற்ற அனுபங்கள் கதிர்காமக்கந்தனின் அருட்கடாட்சத்தை அவருக்கு உணர்த்தியது. இந்த உண்மையை சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
அதன்பயனாக "அனைத்துலக ஸ்தந்த - முருக” ஆய்வு மாநாட்டை சென்னையில் ஆசியவியல் நிறுவனத்தில் நடாத்தும் திட்டம் உருவானது. 1998 டிசம்பரில் நடைபெற வேண்டிய மாநாட்டுக்கான ஏற்பாடுகள் 1997 ஜனவரியில் ஆரம்பமாகியது.
3.மாநாட்டு ஏற்பாடுகள்:
முருகன் பற்றிப் பொதுவாக ஈடுபாடுகொண்ட உலகளாவிய பல்துறை அறிஞர்களையும் இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் ஆங்கிலம் அறிந்த பிறநாட்டு முருக பக்தர்களையும் ஒன்று சேர்க்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகவும் - முருகவணக்கம் பற்றியஅறிவு பூர்வமான அனைத்துலக ஆய்வரங்காகவும் அமையும் வகையில் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சென்னை sfulGiu6) 5,6160556) (Institute of Asian studies) மேற்கொள்ளப்பட்டன.
97

Page 126
முருகன் பற்றிய முதல் உலக ஆராய்ச்சிக் கருத்தரங்கின் சர்வதேச அமைப்புக்குழுவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர் பலரும் இடம்பெற்றனர். அக்குழுவின் விபரம் வருமாறு: (i)அருட்செல்வர்.டாக்டர்.நா.மகாலிங்கம்(கெளரவ தலைவர்) (i)மாண்புமிகு கதிரேசசிதம்பரப்பிள்ளை -
(கல்வி அமைச்சர், மொரீயஸ்.) (i)டாக்டர். பிரட் டபிள்யூ.குளோதே(பிட்ஸ்பார்க்,யூஎஸ்.ஏ.) (iv)டாக்டர். கமில சுவலபில (பிரான்ஸ்) (w)டாக்டர்.எம்.அலெக்சான்டர் டுபியான்ஸ்கி -
(மாஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகம்)
(vi)டாக்டர் ஷ"ஹிகோசகா -
(ஆசியவியல் நிறுவனம், ஜப்பான்) (wi)டாக்டர் ஆறுமுகம் பரசுராமன் -
(உலக வங்கி,வாஷிங்டன்)
(wi)திரு.ஏ.சச்சிதானந்த வீராசாமி (மொரீஷியஸ்) (ix)டாக்டர். டி.செந்தில்வேல் (பூரிலங்கா) (x)டாக்டர். என்.கணேசன் (என்.எஸ்.ஏ.யூ.எஸ்.ஏ) (xi)திரு.கார்ல் வடிவெல்ல பெல் (ஆஸ்திரேலியா) (Xi)டாக்டர். ஏ.கே.சேத் (தில்லிப்பல்கலைக்கழகம்) (xi)டாக்டர். எம்.வி.ஜே.மோகன் (பெங்களுர்) (xiw)டாக்டர். நல்லி குப்புசாமிச்செட்டி (சென்னை)
4.செயற்திட்டம்
வேதகாலத்திற்குப்பின் வடமொழி மரபிலும் அதற்கு முற்பட்ட தென்னிந்திய மூலத்திராவிடர் மக்களின் முன்னோர்கள் மற்றும் பழங்குடி மக்கள் மரபிலும் நிலவிய முருகவணக்கம் இந்திய இலக்கியத்திலும் இந்திய சமயச் சிந்தனைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதன் பின்னணியில் அமைந்துள்ள விஞ்ஞான தத்துவத்தை வெளிப்படுத்துவது பயனுள்ளது. அதற்கு ஏதுவாக (அ) முருகபக்கதர்கள் (ஆ) முருக ஆய்வாளர்கள் ஆகிய இருசாராருக்குமிடையே கருத்துப்பரிமாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம்.
இதற்கு ஏற்ற வகையில் இம்மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் பின்வரும் நோக்கில் அமைய வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. (1) வரலாறு, (2) இலக்கியம், (3) புராணவரலாறு. (4) தத்துவம், (5) சமூகவியல் (6)கலைவரலாறு (7) சமயம் (8) நாட்டுப்புறவியல் (9)மானிட ബിu ബ
இவ்வாறான ஒரு திட்டத்தின் கீழ் முருக வணக்கம் தொடர்பான பல்வேறு ஆய்வுப்போக்குகளும் வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை. இதன் ஒட்டு மொத்தமான பெறுபேறாக (அ) முருகவணக்கத்தின் தொன்மை (ஆ) அதன் உலகாளாவிய தன்மை (இ) அதற்கு ஆதாரமாக உள்ள தத்துவ உண்மை என்பன வெளியாகும் என்பதே இம்மாநாட்டின் முழுமையான நோக்கமாகும்.
இத்திட்டத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் நிறைவேற்றுவதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் செயற்குழுவில் இடம்பெற்றனர். அவர்கள் விபரம் வருமாறு: (1) பேராசிரியர் டாக்டர் முத்துச் சண்முகம் பிள்ளை
(ஆலோசகர்)
(i) டாக்டர். ஜி.ஜான் சாமுவேல் (தலைவர்) (i) திரு பற்றிக் ஹரிகன் (செயலாளர்)
98

(iv) டாக்டர் எம்.எஸ்.நாகராஜன் (திட்ட ஒருங்கிணைப்பு) (w) டாக்டர். பி.தியாகராஜன் (தமிழ்ப்பகுதி மற்றும் திட்டம்)
இவர்கள் அனைவரும் சென்னை ஆசியவியல் நிறுவனத்தைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
5. மாநாட்டு நடவடிக்கைகள்
மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் பின்வரும் வகையில் அமைந்திருந்தது. 28.12.98- அங்குரார்ப்பண வைபவம் (மு.ப.10.00 -பி.ப.100)
முதலாவது அமர்வு(பி.ப.2.00 - 3.30) 2வது அமர்வு (பி.ப.3.45 - 5.15) 29.12.98- மூன்றாவது அமர்வு (மு.ப.930- 11.00)
4வது அமர்வு ( 11.15. 1245) 5வது அமர்வு (பி.ப.2.00 - 3.30) 6வது அமர்வு (3.45- 5.15) 30.12.98- 7வது அமர்வு (பி.ப.930- 11.00)
8வது அமர்வு (11.15 - 1245) 9வது அமர்வு (பி.ப.2.00 - 3.30) நிறைவு (பி.ப.345-5.00) 31.12.98-(அ) அனைத்துலக ஸ்கந்த முருக ஆய்வு
நிறுவனம் அமைத்தல் (மு.ப.930 - 11.30) (ஆ) அறுபடை வீடு சுற்றுலா ஆரம்பம் (பி.ப1.30)
ஒவ்வொரு அமர்விலும் 3 மண்டபங்களில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. ஒவ்வொரு மண்டபத்திலும் சராசரியாக 5 உரைகள் இடம்பெற்றன. எனவே தினமும் 40 கட்டுரைகள் வரை வாசிக்கப்பட்டன எனக் கொள்ளலாம்.
இது தவிர முதல் 3 நாட்களிலும் மாலை 6.30 - 9.30 வரை கலைநிகழ்ச்சிகள் தனியாக இடம்பெற்றன.
மேற்குறித்த நிகழ்ச்சி நிரலின்படி 31.12.98 காலை ஸ்கந்த - முருக ஆய்வு மாநாட்டை தொடர்ந்து நடித்துவதற்கு நிரந்தரமான ஒரு அமைப்புத் தோற்றுவிக்கப் பட்டது. அன்றைய தினமே அடுத்து இந்த ஆய்வு மாநாடு நடைபெறும் நாடுபற்றி தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி அடுத்து வரும் ஆண்டு (2000) இம்மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்மொழிவைச்செய்தவர் அமைச்சர் கெளரவ தொண்டமான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முருகவணக்கம் பற்றிய ஒரு சர்வதேச நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் ஒரு இந்து அல்லாதவர் - அதுவும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் ஆழந்த சிந்தனைக் குரியது. 6.மாநாட்டில் பங்களிப்புச் செய்த இலங்கையர்கள்:
இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பதற்கு இலங்கையைச் சேர்ந்த பதின்மர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் இருவர்மட்டுமே மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் ஒருவர் பிரபல தொல்லியல் ஆய்வாளரான செல்வி .க.தங்கேஸ்வரி மற்றவர் மட். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சண்முகம் அவர்கள் வாசித்த கட்டுரைகள் மாநாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

Page 127
செய்யு
மட்டக்களப்பு
நீ முருகன்
அமரர் சிவ.சோம
கடவுள் வணக்கம் விநாயகர்
(நேரிசை வெண்பா)
கங்கைதரு மைந்தனைமுன் கார்த்திகையா நாண்மீன்கள் மங்கையுரு வாகியவர் மார்பகத்தே - பொங்குமருட் பாலூட்டி யேவளர்த்த பாலகனைத் தன்கரத்தில் வேலீட்டி கொண்டவனை வேண்டி,
பாடும் பொழுதெனக்குப் பக்கதுணை யிருந்து வீடுபேறு நல்லருணி வேதிக்கும் - மேடுயரு மாமலையிற் கொம்பொடித்து மாபாரதம் வரைந்த காமருசீர்க் கற்பகத்தின் கை.
பரமசிவன் - பார்வதி (கலிவிருத்தம்)
ஆதியாகிய வம்பிகை பாகனைப் பாதியாகிய பார்பதி யம்மையைச் சோதியாகித் துலங்கி யுலகெலாம் நீதியாகி நிறைந்தவர்ப் போற்றுவாம்.
நாகைள்
வெள்ளைத் தாமரை மீதிவர் நாயகி யுள்ளத் தாமரை யுள்ளிருந் தேயெனை பிள்ளைப் புன்கவி பேசுவித் தாடல்செய் கொள்ளைக் கூத்தெனக் கூறிடலாமரோ.
அவையடக்கம்
அந்தமி லருட்கவிக ளாயிர மீராறுங் கந்தனி னருஞ்செயல் களிப்புட னுரைக்கும் முந்தையர் மொழிந்ததமிழ் முற்றுமுணராதே சுந்தர னிசைப்பனுவல் சொற்றொடர்க ளாமால்.

~ ஆரையம்பதி
திருப்பதிகம்
சுந்தரனார் அவர்கள்
பதிகம் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1 சீருலவு மீழவள நாட்டினிற் செல்வஞ் f சிறந்தமா மட்டு நகரின்
தெட்சிண திசைக் கரையி லுற்றபல வுர்களுட்
தென்னயந் தோப்பு மிளிர நீருலவு மோங்கல் பல நின்றுலவு வாவியினில் நித்தில நிறைந்த சங்கம் நிலவெளியி லிசைபாடி யர்ச்சனை புரிந்தோடி
நின்மல னடிப் பரவிடும் - பேருலவு மூரெலாங் கோவில்கொண் டருள்கின்ற
பெரியமா வேழ முகவன் பிள்ளையா ரென்னவரு வள்ளலா ருக்கிளைய
பேரெழிலருட் குமரனே தாருலவு மார்பினாய் தண்டமிட் பாசுரந்
தந்திட விரைந்து வருவாய் தரணிதனி லாரையம் பதியிலுறை யெம்பிரான்
சாமியே கந்தவேளே.
2 பங்கய மலர்ப்பொய்கை பொங்குநீ ரோடைபல
பாய்ந்துசேர் வாவி யதனில் பலமீ னினம் பொலிய வருகின்ற சிறுதோணி
ப.'றிக ணெருங்கி யதிரக் கங்கைக் கரைக்குள் வளர் நுங்கம் பனைக்குள்வதி காக்கையுங் குருகு மிரையக் கதிர்வே லவன்றுவச நிரைவா ரணங்கூறு
கட்டியம் போது புலர வெங்கணும் புகழ்பெற்ற சங்கையுறு மகரயா
ழின்னிசை யெழுப்பி முரல வெழினாக சுரவோசை தவில் மேளவாத்திய
மியம்பிடும் பேரொலியெழத் திங்களொடு கங்கையணி மங்கையுமை பங்கனருள்
தேவசேனாதி பதியுன் சினகரங் கொண்டழகு செறியா ரையம்பதி
செம்மலே கந்தவேளே.
99

Page 128
3 எந்தவினை வந்திடினு முந்தனடி தஞ்சமென்
றெண்ணிநா னிங்கு வந்தேன் இமையகுல வரையரச வுரிமைபெறு முமையவ
ளெடுத்தசிறு மதலை முருகா வந்தெனை யணைத்துனது தந்தைவிடை யேறியருள்
மந்திர கலத்தி லமரும் வலிமையுட னிளமையும் வண்மைசே ராகமும்,
வாக்குமா றாத சொல்லுந் தந்துனது சேவைதனி லெந்தனை யிருத்துமுயர்
சங்கர, னளித்த குமரா சச்சிதா னந்தபர மெய்சிவா னந்தசுக
ஷண்முகா னந்த வடிவேல் இந்துமதி சந்திர னிளம்பிறை தரிததவ
னியற்பெயரி னேற்ற முடையா னினியதமிழழகுமொழி பொழியாரையம்பதியி
னேந்தலே கந்தவேளே.
4. உண்டுசிவ னுண்டுமையு முண்டருளு முண்டுநீ
யுண்டுண் டெனக் கருதியே ܫ
யுண்மைநெறி தவறாத திண்மையுட னென்றுமுனை
யுன்னித் துதிக்க வருவாய் பண்டுதமிழ் விண்டிடுக வென்றுகனி தந்தவ்வை
பாட்டிற் குகந்த முருகா பழமுதிரு சோலையிற் பரவையலை வாயிலிற்
பரன்றிருக் குன்ற மதனில் வண்டுலவு தாரசைய நின்றுசமர் நீசெய்து
வானவர் தெய்வானை வேட்டாய் வனமெலாஞ் சுற்றியொரு புனிதநற் கிழவனாய்
வள்ளியைக் கைப்பிடித்தே கண்டுகதிர் காமத்தி லன்றெனக் கருள்செய்த
காட்சிதனை யென்று மறவேன் கதிசேரு மாரையம் பதிசேரு மெம்பிரான்
கருணைசேர் கந்தவேளே.
5. பண்டார மாய்வந்து பாலமுத னியுண்டு
பழனியங் கிரியமர்ந்தாய் படுகாடு தனினின்று பாவலனை யேவென்று
பாடவருள் செய்த முருகா! அண்டபுவ னங்களுஞ் சென்றுகக னத்தில்வந்
தவுணைைர யழித்த தனிவேல் ஆறுபடை வீடுகளி லேறுமயி லேறிநின்
றாட்கொண்ட பால முருகா கண்டோர்கள் னின்றுதொழ மண்டுரி லேவந்து
கானக மடைந்த வடிவேற் கதிரேறு தில்லைமர மதிலேறி நின்றுநற் காட்சிதந் தாண்ட முருகா தொண்டரா மடியவர்கள் கொண்டாடி நின்றுன்னைத்
தோத்தரித் தேத்த வருவாய் துதிபாடு மாரையம் பதிநாடு மெம்பிரான்
தூயனே கந்தவேளே.
100

6 ஆறுவிழி யாறுபொறி யாறுமுக மாகவன
லாறிவரு மாறுதனிலே அண்டியுள பொய்கையிற் தண்டுவளர் தாமரையி
லன்றுருவ மாகி நின்றே நீறணியு நின்மவற் கூறுகொளு மம்பிகையி
னிழ்கரத் தேறி யணையும் நின்னையொரு பாலனா யன்னைதந் திட்டபின்
நின்றநி யெங்கு சென்றாய் மாறுபடு சூரருயிர் மாய்த்திட மகேந்திரம்
மாவீர வாகு சென்றான் வலிகொண்ட பதுமனைக் கிலிகொண் டிடச்செய்த
மகிமை சேர்வே லுண்டுகாண் சோறுகண் டறியாத வேடர்தினை மாவுண்டு
சுனைநீ ரருந்தி நின்றாய் துயர்தீர வந்தருளு மாரயம் பதிமேவு
சுந்தர சுகந்தவேளே.
7 ஏழேழு பிறவியினு மென்னைநீ கைவிடா
திருப்பதை மறந்திடுவனோ எங்கெங் கிருந்தாலு மங்குவந் தேயெனக்
கிதமளித் தருளு முருகா பாழான வோரால யத்தினிலே கண்டதைப்
பார்த்திருப் பதுவு மேனோ பாங்கான காங்கேய னோடைவழி வந்தவுன்
பழையபெயர் மாறி விடுமோ மாளா வரங்கொண்ட சூரனுட லங்கீறி
வந்துமுசு குந்த னுக்கு மழவிடை நிகர்த்தநின் துணைவரைக் கையிந்து
வளவர்குல மாட்சி பெற்றாய் கோழையோ நீயுமுன் குடிகொண்ட கோபுரங்
குலவிளக் கேற்ற விலையோ குளிர்சோலை யழகாக மிளிராரையம்பதிக்
கோவிலுறை கந்தவேளே.
8. எட்டாத தூரத்தி லெனைவிடுத் தேசென் றிருப்பது முனக்கு முறையோ இசைத்திடு திருப்புக ழருட்டமிழ் மொழிப்பனுவல்
ஏற்றருள் சுரந்த முருகா &LLTu|DITæ, 6)]gæIIL (66)|Tu! ÉGu J60é
காத்திருக் கின்ற வென்னைக் காணாம லோடிலுன் பாதச் சிலம்பினொலி
கலகலென வேயரற்றும் பட்டாடை யோடுமணி மாலையணி மார்பனாக பவளவாய் சங்கரிக்கும் பதுமமல ரதனில்வரு திருமகளவட்கு மொரு
பழகுதமிழ் மருகனானாய் மட்டுறு மலர்தொங்க வளர்கின்ற மடல்பூக
மகிழ்தாழை கொன்றை புன்னை மா, வன்னி மந்தாரை மலராரையம் பதியில்
மணமேவு கந்தவேளே.

Page 129
9. ஒன்றுகுறை பத்தெணு முடம்பிலுறு வாய்களுட
னொன்றி நிறை கின்றவுயிரை உதவுகை கால்களையு மொண்விரல்க ளைனான்கை
புள்ளுறை யுறுப்பு களையும் என்றென்று மன்றுமுத லின்றுவரை குறைவிலா வென்புதசை யிருயிரியும் எண்ணினா லென்னையே நானெனு மகந்தைநிலை
எங்கணுள தென்று புகல்வேன் குன்றுதொறு மாடிவரு கோலா கலக்குமர
குஞ்சரி மணாள முருகா கொந்தலர்கள் சிந்துமது கொண்டுவரு வண்டருறை
கூடுகளி லோடுபிரசம் உண்டாடு மந்தியின னின்றாடு னிழல்மரத்
துயர்கொம்பர் தனிலிருந்தே ஒதுகுயில் கூவுமெழி லூராரையம்பதியி லுறைகின்ற கந்தவேளே.
10. பத்தராய்ப் பணிகின்ற பாவலர்கள் தமிழோடு
பாட்டிசைத் தோடி வந்தாற் பாவையர்கள் காவடியொ டாடுகதிர்காமம்
பறந்து நீ செல்வதேனோ சுத்தசற் குணநாத நித்திய சுகாதீத
சுந்தர மதிக் குமரவேள் சோமசே கரனருளு பாலகுரு வானவா
சோதிமயி லேறி வருவாய் சத்திய மறைத்தரும சுந்தசன் மார்க்கநெறி
தாபித்த ஞான வள்ளல் சாகா வரம்பெற்ற யோகாசனக் குரிசில்
தாம்பரவு சிவசோதியே நித்திய முனைத் தொழுது பத்திசெய் தடியவர்க
னின்றுபதி கம்பாடவே நேராக வந்தருண லூராரையம்பதியி
னிறைகின்ற கந்தவேளே.
வாழி (எண்சீர் விருத்தம்) தேவர்சிறை மீட்டருளும் முருகன் வாழி
செந்தமிழை யோதுமடி யாரும் வாழி பாவவினை நீக்கியருள் பரமன் வாழி
பாங்கிலுறை பார்வதியம் பிகையும் வாழி காவடிக ளாடிவருங் கதிரை மண்டுர்க்
கந்தனுறை கோவில்களும் வாழி வாழி நாவலர்கள் பாடுபுகழாரை யூராம்
நலங்குலவு பெரும் பதியும் வாழி வாழி.
மங்களம் முந்துகின்ற தொந்தியானை மூர்த்தியர்க்கு மங்களம்
மூவர் தேவராகி நின்ற முன்னவர்க்கு மங்களம் அந்திசந்தி வந்தனைசெய் யடியவர்க்கு மங்களம் ஆரையூரை யாளவந்த வேலவர்க்கு மங்களம் சொந்தமுள்ள தெய்வயானை துணைவியர்க்கு மங்களம்
சூரரைச்சம் மாரமாடும் வீரருக்கு மங்களம் சுந்தரக் குறத்தி வள்ளி தோகையர்க்கு மங்களம்
துதிகள் பாட வருளுகந்த மலர்மகட்கு மங்களம்
மங்களம் மங்களம் மங்களம்.

சமாதடி
சமாதியடி என்பது சமாதடியாகி விட்டது. இவ்விடம், கந்தசுவாமி கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ளது. இது ஒரு சித்தரின் சமாதி. இவர் யார்? எவ்வூர்? எப்போ சமாதியடைந்தார் என்ற விபரம் தெரியவில்லை. கதிரவேலிச் சாமியார் என்பவர் கடைசியாக இதில் தங்கி இருந்து இச் சித்தரின் குருபூசையைச் செய்து கொண்டிருந்தார். 1935ம் ஆண்டளவில் இவரும் சிவபதமடைந்திருக்க வேண்டும். பின்னர் இது கவனிப்பாரில்லாமல் இருந்து இப்பொழுது திருத்தப்பட்டு சமாதடிப் பிள்ளையார் என்ற பெயருடன் இருக்கிறது.
(တ္တိဋ္ဌိ
வாசன சாலை இப்பொழுது கோயில் உட்பிரகாரத்துக் குள்ளே இருக்கிறது. ஆனால் முன்னர் கோயிலுக்கு முன்னே சற்று வடக்குப் பக்கமாக இருந்தது. பின் கவனிப் பாரின்றி இடிந்துவிட்டது. இது பெரிய மண்டபம். 50x20 அளவு கொண்டதாக இருந்தது. அக்காலத்தில் வாகனங்கள் அதிகம் இருந்தபடியால் இவ்வாறு வெளியே ஒரு தனி மண்டபத்தில் அவற்றை வைக்கவேண்டியிருந்தது.
(స్టీ
(விட்டுணு சாமி கோயில்)
இப்பொழுது விஷ்ணு கோயில் முருகன் கோயில் உள் பிரகாரத்துக்குள்ளே வடமேற்கு மூலையில் உள்ளது. இது முன்னர் இக்கோயிலின் கோயில் வடக்குப் பக்கமாக வெளி வீதியில் தனிக்கோயிலாக இருந்தது. பின்னர் இடிக்கப்பட்டது. இதில் தினப் பூசை நடந்து வந்தது.
(ဋ္ဌိဋ္ဌိ)
(வள்ளியம்மன் கோயில்)
இது கந்தசுவாமி கோயிலுக்கு தென் கிழக்கு மூலையில் கட்டப்பட்டிருந்தது. தெய்வானை அம்மன் கோயில் கட்டுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இக்கோயில் கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை. பின்னர் பலநோக்குக் கூட்டுறவுக் கடைக்காகவும் பயன்படுத்தப்பட்டு கடைசியில் இடிந்து தரைமட்டமாகிவிட்டது.
O

Page 130
ஆரையம்பதி நீ கந்தசுவாமி கோயில் ஆரம்ப வரலாற
கடவுள் வணக்கம்
பாராளு மீழவள நாடு தன்னில்
பழுதில்லாப் பலதேசப் பதியின் மிக்க தாராருங் கொன்றைமலர் தனையணிந்த
தத்துவத்தோ டருந்தனஞ்சேர் தன்மையுற்ற நேராருஞ் சிவபக்தர் செல்வர் பாலர்
நெருங்கியுறைந் தேஉலவு நேர்மை தக்க ஆராரு மாரைநக ரன்பு சேர்ந்த
அரியவர லாறுரைக்க அருள்செய் வாயே
வரலாறு
சென்றதொரு ஆயிரத்து ஆறாம் நூறின்
திறமான தொண்ணுாற்று இரண்டா மாண்டில் நின்றனனாம் காத்தானின் நாமம் பூண்டு
நெடுகவே மீன்மிருக வேட்டை யாடி கன்றியதோ ரதிகாரம் செலுத்தி இந்தக்
காத்தானின் குடியென்ற ஊர்த னக்கு ஒன்றியபுத் தளமதனி லிருந்து வந்து
ஊரறிய வைத்த உபகாரி மாதோ. 1
வேறு
வெளியில் வந்து மீன்வேட்டை
வெகுவாய் ஆடி விளங்குங்கால் களிசேர் மனத்துக் காத்தாற்குக்
காட்சி யளித்த கல்உருவம் ஒளியாய்க் கிடக்க வதையெடுத்து
உயர்ச்சி சேர்ந்த மண்மேட்டில் அளியாம் விருட்சத் தடியதனில்
அமர்த்தி அங்கு தங்கினனே,
2
ஆண்டங் கந்த விநாயகனின்
அளிசேர் உருவம் அகல்வானம் தீண்ட நிமிர்ந்த பெருவிருட்சத்
திறல்சேர் அடியில் குடிசையொன்றை மாண்ட தாக அமைத்தங்கு
மகிழ்வாய் வணக்கஞ் செய்தவந்நான் தூண்டல் செய்யா வைசூரி
சுற்றி யூரைத் தாக்கினதே
பெருந்திண்ணெடிய கோதாரி
பிணித்துப் பரப்பி யிருக்குங்கால் விரிந்த திவலை யாற்றருகில்
விளங்குங் காத்தாற் கிலையென்று வருந்து முரார் வகையறிந்து
வணக்கஞ் செய்வோம் சிலைதனக்கு இருந்து நேர்த்தி செய்தவந்நாள்
எங்கு முளநோய் ஏகினதே. Z
வண்டாய நான்மறை பாடும்
மலர்சேர் காத்தான் குடியதனில் பண்டு உள்ள ஊர்ச்சனங்கள்
பரிவாய்ச் சேர்ந்தோ ராலயத்தைக் கண்டு களித்து வணங்கிவரக்
கதிர்செங் குந்த சாதியினில் உண்டு எனவே நாகப்பர்
உயரால யத்தைப் பருப்பித்தார்.
இப்பாடல் ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் வரவு
இயற்றியவர் ெ
102

5
பதினெண் நூற்று ஐம்பதனில்
பரிவா யிலங்கு திருக்குடியார் பதிசேர் மன்று ளாடியுடன்
மறைசேர் புலவ னார்குடியும் கதிகூர் சம்பா னோட்டியரின்
கனநல் உதவி தனைப்பெற்று பதியாய் மகாமண் டபத்தினொடு
பழிப்பில் மாட மாக்கினரே
ஆக்கிப் பதினா லாண்டின்பின்
ஆனி மாத முதற்திகதி சேய்க்கு தம்பமது நாட்டித்
திகழ்கும்ப பிடேகங் செய்து தாய்க்குத் தகுதம் பலகாமத்
தகைசேர் குருக்கள் தனைஅழைத்து பாய்க்கில் பூசை செயும் பொருட்டுப்
பரிவாய்க் கதிர வேலுரைத்தார்
ஏங்கா திவைகள் செய்ததென
எடுத்து உரைத்த முதலிருவர் நீங்கா திரண்டு தலைமைகளை
நெடுகக் கொண்டு நடத்துதற்கு பாங்காய் ஊரார் பழிப்பின்றிப்
பரிவாய்க் காசி நாதருடன் வீங்காக் கதிரவேற் பிள்ளை
விரும்பிக் கொடுக்கப் பெற்றனரே
சாதி சமயத் திருமுறையைத்
ததியாங் கதிர வேற்பிள்ளை ஆதி யாக வமைந்திங்கு
அடுத்தார் அருகில்லா உடம்பை நீதி யாக நிலைத்ததென
நினைத் தெல்லோரும் நின்றிலங்கிப் போதி யென்போ ரிலையென்னப்
புகன்றோ மந்த நாளினிலும்
அக்கா லத்தின் பின்வந்த
ஆரைப் பற்றை அரசினரால் எக்காலத்தும் பரித்திலங்கி
இகல்சே ராட்சி செய்ததுடன் முற்கா லத்தி லிருந்ததொரு
முதல்விக் கிரக மதைநீக்கி , இக்கா லத்தி லுள்ளவர்கள்
இட்டார் கந்தர் கோயிலென்றே
வண்ணக் காகப் பத்தினியர்
வகுத்தார் கந்தர் கோயிலுக்கு எண்ணுங் கணக்கராய்க் கதிர
இயல்வேற் பிள்ளை யவரிருந்தார் பண்ணுஞ் செம்பக் குட்டியரின்
பரிவை காளி தன்னுடனே நண்ணும் விதானை கண்ணப்பர்
நயஞ்சேர் முறையாய் இயற்றினரே
அதன் பின் சம்பு நாதனுடன்
அளிசேர் விதானை கண்ணப்பர் இதநற் குருவாங் கந்தப்பர்
இனிய சின்னத் தம்பியொடு மதமில் பதிலாய்க் கதிராமர்
மகிழத் தெய்வ நாயகத்தார் துதிசேர் சின்னத் தம்பியென்போர்
தொகுத்தார் ரேயத் தலைமைகளை.
10.
11
12.
செலவு அறிக்கை 1980 பிரசுரத்தில் காணப்படுகிறது
பயர் தெரியவில்லை

Page 131
ஆரையம்பதி நீ க
விநாயகர் காப்பு
மட்டுமா நகரின் தெற்கே வகுத்தகல் ஈரிரண்டில்
விந்தைகள் பலவு மோங்கி விளங்கிடு திருவூரார யம்பதி வாழும் கந்த அருள்மிகு சுவாமிமீது
மன்குலம் சிறக்க வென்று வாழ்த்தியே ஊஞ்சல்பாட தம்பியின் ஒலம் கேட்டு தண்புனம் கடிது சென்ற
வெம்பியே வாடி நின்ற வேலனை இரங்கிநோக்கி நம்பியின் தங்கை வள்ளி நாயகி தனையிணைந்த
தந்தியின் உபய பாதம் தலைமிசை சூடுவோமே.
ஊஞ்சல்
சீரார் பவளம்கால் சிவாகமம் கயிறதாக
மேலார் புகன்ற வியன்வேதம் விட்டமாக தாரா பதியும் ரவியும் குடையாக
ஏராரும் அண்டம் பலகை இனிதமர்ந்து ஊரார் துதிகூவ உம்பர் மலர்தூவ
பேராரும் சேவல் பெரிதும் உவகையுற தேரார் படைதேய்ந்த நெடுவேல் கரமேந்தி
ஆரையம் பதிவாழ்கந்த சாமிநீயா மருஞ்சல். 1.
மேளம் ஒலிக்க விண்ணோர் புகழ்பரவ
தாளம் ஒலிக்க தபனர் துதிபரவ நாதம் ஒலிக்க நக்கார் முறுவலிக்க
பாதம் ஒலிக்க பாணர் இசைபரவ வேதம் ஒலிக்க வீரர் புடைசூழ
கீதம் ஒலிக்க கின்னரர் யாழிசைக்க ஆரம் ஒலிக்க அறுகால் அளிமுரல
ஆரையம் பதிவாழ்கந்த சாமிநீயா டீரூஞ்சல். 2
சேவற் கொடியாட செங்காந்தட் பூவாட
தேவர் சிறைமீட்ட திண்டோள் திகழ்ந்தாட காதிற் குழையாட கனகமணிப் பூணாட
கோதில் சிலம்பாட கொல்சீர் அயிலாட தோகை துணையாட தொண்டர் மகிழ்ந்தாட ஆகம் கடம்பம் அணிமாலை தானாட சூர்மூலம் வென்றணிந்த சுடர்வாகை மீதாட
ஆரையம் பதிவாழ்கந்த சாமிநீயா மருஞ்சல். 3.
கோதில் முடியயொளிர கோழிக் கொடிமிளிர
தோளில் தொடையொளிர தூங்கும் மணிமிளிர காதில் குழையொளிர கண்ணில் ஒளிமிளிர
காலில் சிலம்பொளிர கையில் அயில்மிளிர ஆகம் அளியொளிர அன்பா ஒலிமிளிர
தேகம் நிறைந்த திருநீற் றொளிமிளிர ஆரம் வணங்க அகமுவந்து வாழ்பவனே
ஆரையம் பதிவாழ்கந்த சாமிநீயா டீரூஞ்சல். 4
பாலென நிறத்தசங்கம் பாங்களில் சிலம்பிநிற்ப
தூநிலா நிகர்த்தவெண்சா மரைபுடை யிரட்டிநிற்ப மாலொடு வயனும்மாறி மாறியே நோக்காநிற்ப
தோலுடை தரித்தானோடு துணைவியும் ஆசிகூறி காலொடு கோள்கள்பூதம் கட்டளை ஏற்றுநிற்ப
மேலுறை தேவகூட்டம் விருப்பொடு வாழ்த்துக்கூற தாரொடும் வேலினோடும் சந்தனத் தண்மையோடும்
ஆரையம் பதிவாழ்கந்த சாமிநீயா டீரூஞ்சல். 5
இப்பாடல் ஆரையம்பதி கந்தசுவாமி கோயில்
காணப்படுகிறது. இயற்றி

ந்தசுவாமி திருவுபூஞ்சல்
காலனும் நிருதிகூடி கனிவுடன் புகழேபாட
கோலமும் தரித்தவீர வாகுவாள் ஏந்திநிற்ப வானவர் தலைவன் வாழ்த்தி மங்கலவாசிகூற
காசறுமு னிவர்கூட்டம் கருணையே வேண்டாநிற்ப தேசுறுமங் கைநல்லார் தேன்மலர்சொ ரிந்துவாழ்த்த
பாசமேய றுப்பாயென்னா பத்தர்கை ஏந்திநிற்ப கானவர் தோகையோடும் கன்னிதெய் வானையோடும்
ஆரையம் பதிவாழ்கந்த சாமிநீயா மரூஞ்சல். 6
ஆதிமகா மேருமலை அசைந்தே யாட
அட்டகுல பருவதங்கள் அசைந்தே யாட சோதிபெறு சேடனும்வா சுகியு மாட
சுடர்மிகு கோளெலா அசைந்தே யாட நீதிவளர் கூருமமும் அசைந்தே யாட
நின்றநில வண்டமுமற் றசைந்தே யாட ஆதிபரா சக்தியவள் அசைந்தே யாட
ஆரையம் பதிவாழ்கந்த சாமிநீயா மருஞ்சல், 7
நாரணனும் மகிழ்வொடொரு வடந் தொட்டாட்ட
நான்முகனும் நலமுடனோர் வடந் தொட்டாட்ட காரணனும் நந்தியுமோர் வடந் தொட்டாட்ட
கனஞ்செறியும் குபேரனுமோர் வடந் தொட்டாட்ட பூரணனும் நாரதரோர் வடந் தொட்டாட்ட
பூமிசை கன்னியர்கள் வடந் தொட்டாட்ட தோரண வழகினோடு சுனைகளும் பொலிந்து காணும்
ஆரையம் பதிவாழ்கந்த சாமிநீயா மருஞ்சல். 8
பாவன மனமுண்டாக பக்தர்கை சிரமேலாக
பூமிசை பிறவிநீங்க புண்ணிய நினைவுண்டாக நேரலார் கயமைதீர நெஞ்சிடை வைரமோங்க
தீயன தீய்ந்துமாழ செம்மைமே லோங்கிவாழ தாமரைத் தேவியோடு சரஸ்வதி முறுவலிக்க
காவிடை கனிகளோடு கதலியும் மலிந்துதூங்க தாரையாய் மாரிபெய்ய தாழ்வுகள் அகன்றுபோக
ஆரையம் பதிவாழ்கந்த சாமிநீயா மருஞ்சல். 9
ஆறுவர் பயந்த செல்வவா டிரூஞ்சல்
அங்கயற் கண்ணி மைந்தவா மருஞ்சல் தேவரை மீட்ட செம்மலா மருஞ்சல்
தேவ குஞ்சரி தலைவவா மருஞ்சல் மாலையங் கடம்ப மார்பவா (உருஞ்சல்
வள்ளியை மணந்த செல்வவா டிரூஞ்சல் ஆறணி சடையோன் மைந்தவா டிரூஞ்சல்
ஆரயம் பதிவாழ்கந்த சாமிநீயா மருஞ்சல் 10.
வாழி
ஆதிகுகன் வாழி அடியார் துணைவாழி
ஆறுமுகம் வாழி ஆறிரண்டு கைவாழி சேவற்கொ டிவாழி செறிந்த நகர்வாழி
தோகைம யில்வாழி தொண்டர்கு ழாம்வாழி கார்நிற வள்ளிவாழி கன்னிதெய்வா னைவாழி ஆரணம் வாழிசைவ வாகமநி திவாழி சீரியர் வாழிசெந்நாப் பாவலர் சிறந்துவாழி
ஆரையம் பதிவாழ்கந்த சாமியும் வாழிவாழி.
வரவு செலவு அறிக்கை 1980 என்னும் பிரசுரத்தில் யவர் பெயர் தெரியவில்லை.
103

Page 132
மட்டக்களப்பு ~ மன காசிலிங்கேச
V ઠી.tી.312 தமிழ்மணி சிவ.வி
ஆதியிலே மண்முனையில் உலகநாச்சி
அமைத்துவைத்த கோவிலெ தென்றாய்ந்தகாலை பாதியிலே போத்துக்கீஸ் கொள்ளையிட்டுப்
பலகிலமா யுடைத்தெறிந்த சிகரக்கோவில் சாதியிலே கலிங்கரா லியற்றப் பட்ட
சரியான காசிலிங்கக் கோவிலல்லால் மேதினியில் தான்தோன்றி ஈசனென்று
மெய்ப்பிக்கக் கூறுமொழி பொய்யதாமே. 1
மகதமொடு கலிங்கமெல்லாம் மகேசன்கோவில்
மலிந்து சிவமணங்கமழ்ந்து வாழும் நாளில் சகம்புகழும் அசோக மன்னன் கலிங்க நாட்டில்
சமரிலேபல லட்சம் உயிரைக் கொன்று அகங்குழைந்து மனம்வருந்தி ஐயோநானும்
அநியாயமாயுயிரைக் கொன்று நாட்டின் சுகபோக மனுபவித்தல் தகுதியல்லச்
சுத்தமுறும் புத்தமதம் சேர்வேன் நானே. 2
என்று முதற்சபதமிட்டுக் கொல்லா மேன்மை
அகிம்சையுறு புத்தமதம் அகிலமெங்கும் நன்றுயர்ந்து பரவும் வகை செய்ததாலே
நாடெங்கம் சைவமொடு புத்தம் சேர்ந்து இன்றிலங்கைத் தீவினிலும் பரவி மக்கள்
இருமதமும் பொருந்த வழிபட்டார் தாமே வென்றெடுத்த கலிங்கமொடு மகதம் சீனம்
வெவ்வேறு தேசமெலாம் பரந்ததன்றே. 3.
கலிங்க மதில் தந்தபுரத் தூரில் வைத்துக்
காத்த புத்த தந்தமதைக் கள்வர் நோக்க கலிங்கமன்னன் குகசேனன் கருத்திற்கொண்டு
காசிலிங்கம் கையேந்திப் புத்தர் பல்லை பொலிவான கூந்தலிலே மறைத்து வைத்து
பொற்போடு பெற்றமகள் உலகநாச்சி மலிவான உடையணிந்து தம்பியோடு
மரக்கலத்தில் இலங்கைக்கு அனுப்பிவைத்தான்.4
அநுராத புரியில் பூரீமேக வண்ணன்
ஆட்சிசெய்த முன்னுாற்றுப் பன்னிராண்டில் கணவரிசை யொடு மன்னன் கைக் கொடுத்தாள்
கண்டவர்கள் புத்த தந்தம் ஏற்றுவந்தார் மனமகிழ்ந்த மன்னமுபகாரமெது வேண்டும்
மாதரசே சொல்வாயென மறுமொழியா யவளும் சனமதிக மற்றவிடம் சம்மதமாமென்ன
சார்ந்து மட்டக் களப்படைந்தா ளுலகநாச்சி 5.
மட்டமுறு களப்பூரை ஆட்சிசெய்யும்
மன்னனென் அண்ணன் மகன் குணசிங்கற்கு தட்டாமல் ஒருகடிதம் தந்ததோடு
தனம், தானை, உதவியாள் பலவுஞ்சேர்த்து கட்டாயம் சுகமாகப்போய்வாவென்று
கணவரிசை செய்துவழி அனுப்பிவைத்தாள் பட்டாளம் சூழவந்த உலகநாச்சிப்
பாவை குண சிங்கன்பால் சேர்ந்தாளன்றே, 6.
104

ர்முனை கோவிற்குளம் வரர் கோவில்
. கி.பி.1627 வேகானந்தமுதலியார்
மண்முனையாம் ஊரையன்று ஆட்சிசெய்த
மன்னன்குண சிங்கனுமே நாச்சியார்க்கு தண்ணிர்வளம் உள்ள தொரு ஊரையிந்தான்
தையல்நல்லாள் கற்கோயில் கட்டினாளே வண்ணஞ்செய் மேஸ்திரிமார் கொத்தர்கூட்டம்
வடிவமைத்துக் கல்பொழிந்து அழகுசெய்து கண்ணான காசிலிங்கத் தெய்வந்தன்னைக்
கருவறையிற் பிரதிஷ்டை செய்தாரன்பாய் 7
பூசைசெய்ய வீரசைவக் குருமாரோடு
புனிதமுறும் மாலைகட்டத் திருவோலக்கர் ஒசையொடு பாவிசைக்க ஒதுவார்கள்
ஒளிபெறவே பொருள் விளக்க கோவிலாரும் ஆசையொடு பணிகள் செய்ய அநேகம் பேர்கள்
அமைத்தாரே உலகநாச்சி அரசியாரும் இசைபரவத் தேசமெங்கும் ஈசன்நாமம்
இயம்பிவழிபட்டனரேமக்களெல்லாம். 8.
காடுவெட்டி நாடாக்கி கழனிசெய்த
காலமதில் திடகனெனும் கானவன்றான் கோடுவிரிகொக்கட்டி மரமொன்றைத்தன்
கோடரியால் வெட்டியபோ தவ்விடத்தில் ஓடுகின்ற நல்லிரத்தம் கண்டே யஞ்சி
ஒருகணமும் தரியாது உலகநாச்சி தேடுகின்ற அதிசயத்தைத் தெரிவித்தானே
தேவியரும் சூலங்கொண்டங்கே சென்றார் 9
குருமாரும் தொண்டர்களும் குடைப்பிடித்து
கூட்டமாய் வரத்திடகன் முன்னே செல்ல கருமம் செய் பொருட்களொடு சூலங்கொண்டு
கால்நடையாய்க் கொக்கட்டி மரத்தடிக்கு அருகே சென்றரசியரும் பார்த்தபோது
அவர்கண்ணுக் கொருலிங்கம் தோன்றிற்றம்மா தருவான மரத்தடியில் பந்தலிட்டுத்
தாம்பூசை செய்வித்தாள் உலகநாச்சி O
வருடமொருமுறை சூலங்கொண்டு சென்று
வழிபாட்டு விழாவெடுக்கும் முறையை யன்று திருவாட்டி உலகநாச்சி செய்துவைத்தார்
திரும்பவுமம் முறையிப்போ ஆரையூரின் பெருமானாம் முருகனது ஆலயத்தின்
பெயர்விளங்க வேல்கொண்டு செல்லுகின்றார் உருவான காசிலிங்கர் கோவிற்குளத்
தூரிருந்து குடிபெயர்ந்து வந்த மக்கள் 11
ஆயிரத்து அறுநூற்றி இருபத்தேழில்
அநியாய மாய்ப் பறங்கி இடித்த கோவில் சேயர்களாம் நம்முன்னோர் வணங்கிவந்த
தெய்வதலம் காசிலிங்கக் கோயில் தன்னில் ஆயபல தடயங்கள் அன்பர் கையில்
அதிசயமாய்க் காண்கின்றோம் எங்குமில்லா தூயவொளிப் படிகலிங்கம் துயரந் தீர்க்கத்
துரிதமாய்க் கோவிலொன்றைத் தொடங்குவோமே.
12

Page 133
ஆரையம்பதியில் மு
புலவர் சி.க.ெ
கங்கையைத் தாங்கும் சென்னி
காமனை எரித்த கண்கள் மங்கையைத் தாங்கும் மார்பு
மான்மழுத் தரித்த கைகள் பங்கயன் மாலுங் காணாப்
பரமனார் உவந்து தந்த எங்கள்நா யகனாம் கந்த
ஏந்தலைக் கண்டு கொண்டேன் O1
திங்களைத் தாங்கும் சென்னி
திரிபுரம் எரித்த கண்கள் பொங்கர வேந்தும் மேனி
புலியத னாடை யாளன் தங்கழல் தொழுவார் ஊழும்
தடுப்பவர் அருளால் வந்த
எங்கள்நா யகனாம் கந்த
ஏந்தலைக் கண்டு கொண்டேன் O2
பங்கய வதன மேந்திப்
பரமனின் பாதி யாகி அங்கயற் பார்வை காட்டி
அருள்மழை பொழியா நிற்கும்
எங்கள்நா யகியா மன்னை
ஏந்திள முலையாள் நல்கும்
செங்கதிர் வேலோன் தன்னைச்
செகதலத் தினிலே கண்டேன்! O3
முருகலர் முகங்கள் ஆறும்
மொழிபுகல் மணிவா யாறும்
கருதிடு மடியர் காணும்
கருணையின் விழியி ராறும் பொருதிடு பகைமை மாற்றும்
புயங்கள் பன் னிரண்டு மாக,
அருள் வடிவான அண்ணல்
ஆடமா மயில்மே லுற்றான் O4.
மட்டுறு வாவி சூழ
மாண்புறு தலங்கள் ஓங்க கட்டுறு மாழி கீழ்பா
லாகநற் கவின் பெருக்க பட்டுறு மேனி மாந்தர்
பரவுறு மாரை யூரில் ஒட்டுறு முனர்வி னுாடே
ஒருவனாய் கந்தன் நின்றான்! O5

ருகனைக் கணிடேன் பான்னம்பலம்
மாயையின் கொடுமை மாற்றி
மறைநவில் மாண்பு சாற்றி 6Tuf GOLDushair (SLD660)LD 85Tig
வளரெழில் அறிவு கூட்டி தாய்மையின் அன்பு சேர்த்துச்
சார்ந்தவர்க் கருள் வோனாகி ஆய்ந்தசெந் தமிழின் வள்ளல்
அறுமுகச் செவ்வேள் நின்றான்!
ஞானவேல் ஏந்தும் கையும்
ஞாயிற்றைப் பழிக்கும் மெய்யும் மோனமா முனிவர் போற்ற
முத்தமிழ் மொழிந்த சீரும் கானமா தான வன்னிக்
கனி தெய்வ யானை நட்பும் &5TGOTLDT LD560IDS u BB
கந்தவே எளிடத்தே கண்டேன்!
திருவினைத் தாங்கும் மாலின்
திருமரு கோனைக் கண்டேன் பெருவினை நீக்கும் ஞான
கணேசரின் இளவல் கண்டேன் கருநிறத் தமல னான
காரியின் துணையைக் கண்டேன் கருணையங் கடவுளான
கந்தனைக் கண்டு கொண்டேன்!
செந்தமிழ்க் காப்பி யத்துச்
செல்விகண் ணகையின் பாங்கர் வந்துறு விநாய சேகர்
வலப்புற மிருந்து காக்கச் சொந்தமாம் திருவின் நாதர்
சூழவந் தினிது வாழ்த்தக் கந்தவேல் மூல மூர்த்தி
கனிந்தருள் செய்யக் கண்டேன்
பண்தவழ் பனுவல் வாழ்க!
பன்னிரு புயத்தர் வாழ்க மண்மிசை வாழு மாந்தர்
மாசில் சீர் பெற்று வாழ்க விண்ணவர் சிறையை மீட்ட
வீரவேல் வாழ்க! என்றும் அண்டிய அடியர் வாழ்க
ஆரையம் பதியும் வாழ்க.
(காரி - ஐயனார் சுவாமி)
O8
10.
105

Page 134
ஆரையூர் கோயில் (
செ.தாமை
அம்மையும் அப்பனும் ஆனவன் நீ - எங்கள் அன்பனாய் நண்பனாய் வந்தவன் நீ - தூய அருளுமாய் ஒளியுமாய் இருப்பவன் நீ எங்கும் அடியார்கள் போற்றிடும் கந்தனும் நீ
(O1)
ஆரையூர் கோயிலின் கந்தசுவாமி மன ஆறுதல் தரவாராய் எங்கள் சுவாமி - உயர் ஆறுபடை விடுடைய பாலனே - என்றும் ஆதரித்து தெமைக் காப்பாய் கந்தனே.
(O2)
இன்னல்கள் எமைத்தேடி வரும்போது - எம்முள் இருந்துமே காப்பாற்றும் கந்தசுவாமி - உந்தன் இணையடி என்றும் நாம் தொழுதுநின்றோம் - இங்கு இன்பமாய் வாழ்ந்திட அருள் செய்குவாய்.
(03)
ஈடில்லாப் பெருமையைப் பெற்றகந்தா! - தந்தை ஈசனுக்குகே ஞானம் சொன்னகந்தா - அன்னை ஈஸ்வரி மகாசக்தி பெற்றதாலே - உலகில் ஈடிணையற்றவன் ஆன கந்தா.
(04)
உதயத்தின் முன்னே நாம் எழுந்திருப்போம் - எங்கள் உள்ளம் உருகிடப் பாடி நிற்போம் - நாம் உயர்ந்த நிலைபெற அருள்வாய் கந்தா - இந்த உலகின் துன்பங்கள் ஒழிப்பாய் கந்தா.
(05)
ஊமைகள் பேசிட வைத்திடுவான் . கந்தன் ஊரெல்லாம் வாழ்ந்திடச் செய்திடுவான் - நம்மை ஊட்டத்தில் என்றென்றும் காத்திடுவான் - அவனை ஊக்கமுடன் நாளும் வணங்கிடுவோம்.
(06)
ஒகரம் - மயில், ஓமம் - யாகம் ஒள
106

கொண்ட கந்தசுவாமி
ரச்செல்வி
எமன் தன்னைக் கண்டாலும் அஞ்சமாட்டோம் - என்றும் எந்தை முருகனைப் பாடிடுவோம் - அவன் எங்கள் வினைகளைப் போக்கிடுவான் - என்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்திடுவான்.
(07)
ஏழிரு உலகமும் காக்கும் தெய்வம் - எம்மான் ஏழிசைப் பாடலை விரும்பும் தெய்வம் - அந்த ஏந்தல் திருவடி என்றும் போற்றி - இந்த ஏழைகள் மண்ணிலே வாழ்ந்திடுவோம்.
(08)
ஐயமும் அச்சமும் எமக்கில்லை என்போம் - எங்கள் ஐயன் அருள் துணை காத்திடும் என்போம் - அவன் ஜம்புலன் வென்றெமைக் காத்திடுவான் - என்றும் ஐசுவரியம் தந்தெமை ஏற்றிடுவான்.
(09)
ஒகரத்தில் ஒய்யார மாகநிற்பான் - வேலன் ஒழுக்கத்தில் எங்களை ஓம்பிடுவான் - என்றும் ஒரு குறைவராது காத்திடுவான் - அவன் ஒருபோதும் எங்களைக் கைவிட்டிடான்.
(10)
ஓம் சரவணபவ என்று நிற்போம் - எம்முள் ஓடியே கந்தனும் வந்திடுவான் - நாம் ஓமம் செய்யாமலே தோன்றிடுவான் - உண்மை ஓதியே எந்நாளும் வாழ்ந்திடுவோம்.
(11)
ஒளவைக்குத் தமிழ்தந்த ஆறுமுகன் - உயிர் ஒளடதமாய் நிற்கும் வேல்முருகன் - என்றும் ஒளதாரி யமளித் தாட்கொள்ளுவான்-எம்மை ஒளவியம் சேராமல் காத்திடுவான்.
(12)
தாரியம் - கொடை ஒளவியம் - பொறாமை,

Page 135
எதைத் தே உலகத்தையா? உலகைப்
சிவத்திரு. த.தங்கள்
1. மனம்:
இறைவனின் படைப்பிலுள்ள ஜீவராசிகள் மத்தியில் உயர்ந்த நிலையைப்பெற்றவன் மனிதன், ஆறறிவு படைத்தவன். ஆனால் இன்று மனிதன் மனிதனாக வாழ்கின்றானா? என்ற கேள்வி எழுகிறது. மனம் படைத்தவன் தான் மனிதன் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. மனிதனை ஆட்டிப்படைப்பது மனம் என்று மனிதனால் உணரமுடியவில்லை. இதனையே மாயை என்று கொள்ளலாம். மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன வென்று பார்க்கில் மனமாகிய நான்' “எனது' என்னும் 'அகங்காரம்' என்பதை உணரவேண்டும்.
இந்த நான்', 'எனது என்னும் தன்மை முளைத் தவுடன் மனிதன் மனித நிலையிலிருந்து வேறுபடுகின்றான். நாம் விழிப்பு நிலையில் காணும் காட்சிகள் அனைத்தும் மனத்தினால் ஏற்கப்பட்ட காலம், இடம், காரணி என்ற கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருக்கின்றன. இதனை இன்று விஞ்ஞானியாகிய Einstein மூலமாக அறிய முடிகிறது. இதனால் மனிதன் தான் வேறு மற்றவர்களும் வேறு மற்ற வைகளும் வேறு என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றான். வேறுபாடுகாணும் மனிதன் வேதனைக் குள்ளாகின்றான். அவனது மனமானது பல கேள்விகளை எழுப்புகின்றது. கோழி முந்தியதா, முட்டை முந்தியதா? வித்து முந்தியதா? மரம் முந்தியதா? என்ற கேள்வியை மனம் எழுப்புகின்றது. கேள்விகளைக் கேட்பதே மனதின் தன்மை, மனம் எழுப்பும் கேள்விகட்கு மனதினால் மட்டும் தான் பதில் கூறமுடியும். அது சிற்றறிவுக்குட்பட்டது.
2.விஞ்ஞானம்.
விஞ்ஞானம் மனிதனுடைய மனதிற்குள் கட்டுப் பட்டதொன்று. விஞ்ஞானிகளால் மனதின் உள்நின்றுதான் செயல்படமுடியும். ஆனால் விதிவிலக்காக ஐன்ஸ்ரன் என்னும் விஞ்ஞானி அணுவின் எல்லையைக் காணப் புகுந்து அங்கே ஒரு பரவெளியை மட்டும் காண முடிந்தது என்றும் அதற்குமேல் தம்மால் செல்லமுடியாத தன்மையை உணர்ந்து அந்த பேரொளிப்பெருவெளியை வணங்கி நிற்கின்றேன் என்றும் கூறினார். இவ்வாறு மனிதனுடைய அறிவிற்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு, அதை எம்மால் உணரமுடிவதில்லை என்று எடுத்துரைத்தார் அணு விஞ்ஞானி ஐன்ஸ்ரன்.
விஞ்ஞானம் இன்று வளர்ந்து இருக்கின்ற நிலை யில் புறஉலக வாழ்க்கையில் ஈடுபடும் மனிதனுக்கு எல்லாமே சாதகமாக அமைந்துவிடுகின்றது.

டவேண்டும்?
படைத்த இறைவனையா?
படிவேல், ஆரையம்பதி
தூரத்திலிருக்கும் உறவினரோடு ஒரு நொடியில் தொடர்பு கொள்ள முடிகிறது. பத்துப் பதினைந்து மணித்தி யாலங்களில் பல ஆயிரம் மைல்களை வான் ஊர்தி மூலமாக கடக்க முடிகின்றது. மனிதனுக்குஏற்படும் பலவியாதிகளை குணமடையச் செய்ய முடிகிறது.
குளிரூட்டி, சினிமா, கட்டிடநிபுணத்துவம் முதலிய வசதிகள் உள்ளன. பல ஆராய்ச்சிகளும் அதனூடாக பல அற்புதங்களையும் மனிதன் கண்டு கொள்ளாமலில்லை. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மூலப் பொருளாகத் தேவைப்படுவது "பணம்' என்று உணர்கின்றான் மனிதன். இப்பணத்தை எவ்வகையிலும் பெறவேண்டுமென்னும் பொல்லாத நோக்குடன் செயல் படுகின்றான். ஏனெனில் பணம் ஒன்றினால்தான் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியுமென்று அவன் மனம் சொல்கிறது.
குளிரூட்டிய விடுவசதி, தொலைக்காட்சி சாத னங்கள், தொலைத் தொடர்பு வசதிகள், சுகாதார வளங்கள் வாகன விருத்தி, உதவிக்கு ஆட்கள், இவை இருந்தும் போதாமையால் சமூகத்தில் அதிகாரம் பெறவேண்டு மென்னும் நினைவில் அரசியலில் ஈடுபடநினைக்கின்றான் மனிதன். இவை அனைத்து எதற்கு தேவையென்று அவன் எண்ணிப்பார்ப்பதில்லை. இவை புறத்தே உள்ள உடலையும் மனதையும் திருப்திப்படுத்தும் என்ற எண்ணத் தில் இவைகளில் ஈடுபடுகின்றான்.
ஆனால் இவன் திருப்திப்படுத்த நினைக்கும் உடலும் மனமும் நிரந்ரமானதா என்று அவனுக்கு எண்ணத் தோன்றுவதில்லை.
“ஐந்து வகையாகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர்மேல் அமழ்கின்ற குமிழி.”
அதாவது பஞ்ச பூதத்தினால் ஆன இந்த உடல் நீரின்மேல் இருக்கின்ற குமிழி எந்த நேரமும் வெடித்து சிதறலாம். எனவே அது நிரந்தரமானதல்ல. எனவே அதனோடு இணைந்த இன்பங்களும் நிரந்தரமானதல்ல.
தாகத்தால் தவிக்கின்ற ஒருவனிடம் பணம் உள்ளது. ஆனால் இந்தப் பணத்தினால் அவனது தாகத்தைத் தணிக்கமுடியுமா? சாந்தமும் செளபாக்கியமும் அமைதியும் காண முடியுமா? எவ்வாறு ஓடித்திரிந்தும் அவனால் இவைகளை அடைய முடிவதில்லை.
பணத்தினால் சாந்தமும்அமைதியும் பெறமுடியு மென்றால் இன்று அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும்
107

Page 136
உயர்ந்த நிலையிலல்லவா இருக்கவேண்டும். ஆனால் அப்படி ஆகவில்லையே.
4. இந்து சமயம் காட்டும் பாதை
அமெரிக்காவில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திலும் ஒரு கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற தீய சம்பவங் கள் நடந்துகொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர் புள்ளிவிபரத் தோடு கூறுகின்றார்கள். இதே நிலைதான் ஜப்பானிலும் பணம் படைத்த ஏனைய நாடுகளிலும் என்பதை நாம் காணமுடிகிறது. ஹிப்பிகளையும் விரக்தியில் மரண தேவ தையை நாடும் பலவிதமான மனிதர்களைக் காணமுடிகிறது. இதனாலே தானோ என்னவோ இன்று வெளிநாடுகளில் அமைதியையும் சாந்தியை எடுத்துக் கொடுக்கும் இந்து சமயம் முதன்மையானதாக முன்னணியில் ஏற்றுக்கொள்ளப் பட்டதாக இருக்கின்றது.
இந்துசமயம் இந்த வாழ்க்கையின் உண்மை நிலையை எடுத்துக் காட்டுகின்றது. அதன் நிலையற்ற தன்மையைக் கூறுகிறது. இது ஒரு மாயாஜாலம், கனவு, கானல்நீர் என எடுத்துக் காட்டுகின்றது. நிலையற்ற இந்த வாழ்க்கை வெறும் பொய்யாகும். இன்பதின் பின்னால் துன்பமும், துன்பத்தின் பின் இன்பமுமாக மாறுபட்டு வந்து வாழ்க்கையில் மாறுபடும் தன்மையை நிரூபித்துவிடுகிறது.
குழந்தையாக இருந்த ஒருவன் நாளடைவில் கிழவனாகி விடுகின்றான். பருவங்களுக்கேற்ப மனமும் முதிர்ச்சி பெற்று மாறுபடுகின்றது. எனவே இந்த உடலும் மனமும் நிலையற்றதாகின்றன.
மாறுபடுகின்ற இந்தப் பிரபஞ்சத்தில் மாறுபடாது நித்தியமாய் நிலையாய் இருக்கின்ற பொருள் ஒன்று இருக்க வேண்டுமே என்று நம் ஞானிகளும், யோகிகளும் உணர்ந் தார்கள். அவர்கள் கண்டது மெஞ்ஞானம் ஆகும்.
விஞ்ஞானம் புறத்தே செல்ல இந்த மெஞ்ஞான மானது நம்முள்ளே செல்கின்றது. நமக்குள்ளே இறைவன் இருக்கின்றான் என்று உண்மையை நிரூபித்து, அதன் மூலம் கடவுள் உண்டு, (கட + உள்) என்று எடுத்துரைத் தார்கள். நமது மெஞ்ஞானிகள்
5. “தத்துவமஸி’
கட்டிடக்காரனால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கல்லை சிற்பி, செதுக்கி ஒரு முருகன்சிலையை ஆக்குகின்றான். தேவையற்றவைகளை செதுக்கித்தள்ளி அதன் உள்ளே இருக்கும் முருகனைக் காண்கின்றான்.
இதேபோன்றுதான் நமது ரிஷிபுங்கவர்கள் நமது உடலுக்குள்ளே புகுந்து தேவையற்றவைகளை நீக்கி தேவையானபரம்பொருளை தேடிக் கண்டறிந்தார்கள். எதைத் தேடினார்கள் என்று பார்த்தால் நம்முள்ளே நின்று நம்மை இயக்கும் சக்தியைக் கண்டார்கள். உயிருக்கு உயிராக இருக்குமு இறைவன் உள்ளிருப்பதை உணர்ந்தார்கள்.
அணுவைத் துளைத்துக் கண்டவர்கள் ஏதும் தெரியாக பெருவெளியைக் கண்டதுபோல நம்மூதாதை யர்கள் நம்முள்ளே இருப்பது எல்லையற்ற பேரறிவுப்பெரு வெளி என்று கண்டார்கள்.
108

இதுவே சிதம்பர ரகசியமாக இன்றும் எவருக்கும் எட்டாத நிலையில் இருக்கின்றது. அதாவது இறைவன் அறிவுப்பெருவெளியாய் இருந்து அனைத்து பிரபஞ்சத்தை யும் தோற்றுவித்து அவைக்குள்ளே உயிருக்குயிராகி எள் ளில் எண்ணெய்யாக, மலரில் மணம் போல் இருக்கின்றான். அவனைத் தேடுவதே நாம் மனிதப் பிறப்பெடுத்ததின் நோக்கமாக இருக்கவேண்டுமென்று எடுத்துரைத்தார்கள்.
அந்த ரிஷிபெருமான்கள் கண்ட உண்மையை உணரமுடியாத மனிதர்கட்கு இறைவன் உன் உடலிலே அமைந்துள்ள அன்னமயகோசம், மனமயகோசம்,விஞ்ஞான மயகோசம், ஆனந்தமய கோசம், பிராணமயகோசம் எனும் ஐந்து கோசங்களையும் கடந்து போனால் அங்கு "நீ" மட்டும் தான் இருக்கின்றாய் என்று வேத தத்துவத்தை எடுத்துக் கூறினார்கள்.
மனித உடலானது இறைவனை உள்ளடக் கியதாக ஐந்து உறைகளை உடையது. உறையென்பது வாளினை உள்ளடக்கி வாளுக்கும் உறைக்கும் தொடர் பில்லாமலிருக்கும் தன்மை என்பதாகும். எனவேதான் மனிதனது உடலில் உள்ள ஐந்து உறைகட்கும் இறைவ னுக்கும் எந்தத் தொடர்பில்லை யெனினும் அவன் மட்டுமே உள்ளிருந்து அனைத்தையும் இயக்குகிறான் என்றும் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
6. காயமே கோயில்
இந்தத் தத்துவத்தை எல்லோராலும் உணர முடியாது என்ற காரணத்தால் அதை உணரக்கூடிய வகை யில் ஐந்து மண்டபங்களைக் கொண்ட கோயிலமைத் தார்கள். இந்த ஐந்து மண்டபங்களும் நமது உடலின் ஐந்து கோசங்களையும் பிரதிபலிக்கின்றன.
நமது ஐந்து கோசங்களின் (உறைகளில்) வெளிப் புறக்கோசம் அன்னமயகோசம் ஆகும். இதுவே முதற்கோசமான மனிதஉடல் ஆகும். இதை நாம் கண்களால் காணமுடியும்.
இந்த மனித உடலுக்குள் தான் நமது அனுப வத்துக்குள்ளான ஐம்புலன்களாகிய கண், காது, மூக்கு, நாக்கு, தோலும் 'செயற்பாடுடைய இந்திரியங்களான கை, கால், வாக்கு,அத்தோடு உடலுக்குத் தேவையற்றவைகளை வெளிப்படுத்தும் கருவிகளும் அமைந்திருக்கின்றன. இதனையே ஒன்பது வாயில் கோட்டை இந்த உடம்பு என்றழைத்தார்கள்.
கோயிலுக்குச்செல்லும்போது நாம் புறத்தூய்மை உட்துாய்மை படைத்தவர்களாக செல்லவேண்டும். குளித்து தூயஆடை அணிந்து, நெற்றியிலே திருநீறு, சந்தனம் திலகமிட்டு எம்பெருமான் வீற்றிருக்கும் சன்னதிக்குச் செல்கின்றோம். அங்கு நடந்து வந்த கால்களிலே எச்சம் இருக்கக்கூடாது என்பதற்காக கால் கழுவுகின்றோம்.
முதல்மண்டபமான அன்னமயக்கோசத்துக்கு ஏன் அன்னமயக்கோசம் என்று பெயர் வைத்தார்கள் என்று நாம் அறியவேண்டாமா? அன்னத்தை உண்டு அதனால் ஏற்படுகின்ற சக்தி மூலமாக தாய் தந்தையர் இணைந்து அதனூடாக குழந்தையைத் தாய் தாங்கி, தாயின் ஊடாக

Page 137
கிடைக்கின்றஉணவை குழந்தை உண்டு, பின்னரும் உணவிலே வாழ்ந்து ஒரு நாள் மரணநிலையை அடையும் போது அந்த பெரிய உடம்பு மற்றும் புளுபூச்சி போன்றவை கட்கு உணவாகிப் போகின்றது.
அன்னத்திலே பிறந்து பின்னர் அன்னத்திலே வளர்ந்து பின்னர் பிறருக்கு அன்னமாகிப்போகும் இந்த உடலைக்கடந்து உன்னைநோக்கி வருகின்றேன் என்ற பாவனையில் அந்த அன்னமயக்கோசமான கோயிலின் முதல் மண்டபத்துள் நாம் செல்லுகின்றோம்.
கோயிலில் நாம் முதற்காண்பது கொடித்தம்பம் இந்த கொடித்தம்பம் நமது உடலைத் தாங்கிநிற்கும் முதுகு எலும்பை நினைவுபடுத்துவதாகும். இது 33 முள் எலும்பு களால் ஆக்கப்பட்டது. விழா உற்சவக் காலங்களிலே கொடியேற்றம் செய்கின்றோமே எதற்கென்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
7.குண்டலினி : கொடித்தம்பம்
அண்டத்திலுள்ள அனைத்தும் பிண்டத்தி லுள்ளது. நாம் பல பிறப்புகளிலே உயர்த்த முடியாமல் தவித்த எல்லாச் சக்திளையும் தன்னுள் அடக்கிய சக்தி ஒன்று சிறுபாம்பு ரூபத்தில் குண்டலினி என்ற பெயரில் நம் மூலாதாரத்தின் அடியிலே அடங்கிக் கிடக்கின்றது. மனதை ஒருமுகப்படுத்தித் தியானிப்பதன் மூலம் இந்தக் குண்டலினியை எழுப்பமுடியும்.
இந்த சக்தி இடகலை, பிங்கலை, சுளுமுனை ஆகிய ஊடகங்கள் மூலமாக எழுப்பப்படவேண்டும். இவை ஆறு இடங்களில் அமைந்திருக்கின்றன. மூலாதாரத்திலிருக் கும் குண்டலினியை, யோனியின் பின்பக்கமாயுள்ள ‘சுவஸ்தி' என்ற இடத்துக்கு எழுப்பி அதன்பின் தொப்பு ளுக்கு நேரிலுள்ள ‘மணிபுரி மூலமாக "ஆக்ஞா (நெஞ்சுக் குழிக்கும்) சக்கரத்துக்கு வரவேண்டும்.
அடுத்படியான ஞானக்கண் எனஅழைக்கப்படும் நெற்றிக்கு கொணர்ந்தபின்னர், உச்சம் தலையிலே ஆயிரம் தாமரை இதழ்களைக் கொண்ட சகஸ்ரத்துக்கு உயர்த்தி யவுடன், நாம் பிறப்பற்ற அமுதப் பெருநிலையை அடைய 6ùTLD.
இந்த நிலையை எட்டுவதற்குத்தான் நம் சாத்திரங்கள், கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று இறைவனோடு ஒன்றாகக்கலக்கும் முறைகளை எடுத்து இயம்பி உள்ளன.
கோயிலின் கொடிக்கம்பத்தில் கொடியைத் தாங்கி நிற்கும் இரு கயிறுகளும் இடகலை, பிங்கலை களைக் காட்ட நடுக்கயிறான சுளுமுனை நம்மை உயர்ந்த நிலையாகிய இறைநிலையை எட்டவைக்கின்றது.
அருமறையின் கருப்பொருளாய் விளங்கும் அந்த ஒரேயொரு தத்துவமான பரம்பிரம்மத்தை எட்டிய மாமுனிவர் சித்தர்களை யெல்லாம் அழைத்து அவர்களின் ஆசீர்வாதத் தைப் பெறுகின்றோம். இவர்களே சிதம்பர ரகசியத்தை உணர்ந்தவர்களாகின்றனர். சிதம்பரம் என்பது பேரறிவுப் பெருவெளிஅது சித்தாகாச மெனவும் அழைக்கப்படுகின்றது.

எப்பொழுதும் தன்மயமாயிருப்பது இந்த சித்தாகாசம் எனப்படும் பேரறிவுப் பெருவெளியின் தன்மை ஆகும்.
அது உருவத்தோடு கூடிய பிரபஞ்சமாகவிளங் கிக்கொண்டிருக்கின்றது. பிரபஞ்சம் மக்களுக்குப் புலனாகின்றது. தவத்தின் வாயிலாக அறிவைத் தீட்டி ஞானம் பெற்றவர்களுக்கு சித்தாகாசமே உலகமாக இலங் கிக்கொண்டிருக்கிறது. ஏனையோருக்கு இவ்வுண்மை விளங்காமையினால் அது சிதம்பர ரகசியமாகின்றது. 8உள்மண்டபங்கள்
நமது உடலின் இரண்டாவதான மனமயகோசம் தான் நம்மை ஆட்டிப்படைக்கும் ஆசாபாசங்களைக் கொண்டது. ஆலயத்துள் நாம் சென்றதும் எதிரே இருக்கும் பலிபீடத்தைப் பார்க்கின்றோம். “எம்பெருமானே என்னுள்ளே இருக்கும் ஆசாபாசங்களான காமம், குரோதம், லோபமோகம், மதம், மற்சாரியம் என்னும் ஆறுவகையான அழுக்குகளையெல்லாம் இந்தப் பலிபீடத்திலே பலி கொடுத்துவிட்டு மனத்துாய்மையுடன் உன் முன்னே வருகின்றேன் என்ற பாவனை இந்தப் பலி பீடத்தின் முன் நம்முள் எழவேண்டும்.
பலிபீடத்தின் முன்னே எம்பெருமானின் அருள் கொண்டு அவனைத்தாங்கும் வாகனத்தை வணங்கி அதன் அருள்பெற்று இறைவன் சன்னிதியை நோக்கிப் போகின றோம். மனோமய கோசம் இவ்வாறு மறைக்கப்படுகின்றது.
மூன்றாவது உறை ‘பிராணமய கோசம்' ஆயலத்தின் அர்த்தமண்டபம். ஆலயத்தின் அர்த்தமண்டபம் இந்த பிராணமயகோசததைப் பிரதிபலிக்கிறது. இங்கே உற்சவமூர்த்தி அருள்பாலிக்கும் பொருட்டு எழுந்தருளியாக இருக்கிறார். பூசை புனஸ்காரங்கள் எல்லாம் இங்கே நடை பெறுகின்றன. உடல்தரும் மனித வடிவம்தான் மனிதன் என்று நினைப்பவர்களுக்கு "நான் உங்கள் உள்ளே நின்று அனைத்தையும் இயக்குகின்றேன்” என்றும் பிராணனுடன் இல்லையேல் உடலில்லை என்ற எண்ணத்தைஏற்படுத்தும் பொருட்டு இந்த ஐந்து பிராணனையுமே நான்தான் இயக்கு கின்றேன்’ என்றும் இம்மண்டபம் எடுத்துக்காட்டுகின்றது. நம் ஐம்புலன்களையும் செயல்படுத்தும் பிராணவாயு (Prana) நமது உடம்புக்குத் தேவையற்றவைகளை (வியர்வை, ஜலம், மலம், விந்து முதலியவையூடாக) அகற்றும் அபானா(Apana) நாம் உண்ணும் உணவையெல் லாம் ஜீரணிக்கச்செய்யும் சமானா (Samana) நாம் உண்ட உணவை எல்லாப்பகுதிகட்கும் வினியோகம் பண்ணும் வியானா (Vyana) நமது பிராணனான உதானா (Udana) நம்நினைவுகள், கற்பனைகள், மறுஉற்பத்தி எல்லாவற் றையும் தன்னுள் அடக்கியது.
9.L55 (Intellect)
நான்காவதாகிய விஞ்ஞானமயகோசமும் நமது எண்ணங்களையும் அதனை ஆராயும் அறிவையும் பிரதி பலிப்பதாக உள்ளன. அதாவது ஐம்புலன்களால் ஏற்படு கின்ற தாக்கத்தை ஏற்று அவற்றைப் பகுத்தறிந்து அதற் கேற்ப உரிய செயற்பாடுகளை மனம் செலுத்த உதவு கிறது.இவைகளை பகுத்தறிவு மூலம் கறுப்போ, சிகப்போ,
109

Page 138
உயர்ந்ததோ, தாழ்ந்ததோ, நல்லதோ, கெட்டதோ என்றெல் லாம் ஆராய்ந்து மனதுக்குள் தனது தீர்க்கமான முடிவை செலுத்துவதாகவும் விஞ்ஞானமயக் கோசம் அமைகின்றது.
இந்த விஞ்ஞானமயக்கோசத்தில் நமது பாவனை எப்படி இருக்கவேண்டும்? எம்பெருமானே என்னுடைய சிற்றறிவுக்கேற்ப, உன்னைத்தவிர வேறு பொருளில்லை. நீ பேரறிவுப் பெருவெளி. அனைத்து ஜீவராசிகளும் உன்னி லிருந்துதானே உற்பத்தியாகின.
“பொருளாகக் கண்ட பொருளெவைக்கும் முதற் பொருளாகி போதமாகி தெருளாகி படுமன்பர் மிடிதிரப் பருகவந்த செழுந்தேனாகி அருளாகினார்க்கு அகம் புறமென்றுன்னாத ஆனந்த மயமதாகி இருள்திர வந்த பொருள்யாது அதனை இறைஞ்சி நிற்பாம்”
எல்லாப் பொருள்கட்கும் முதற்பொருள் நீ.எனவே கோழிமுந்தியதா முட்டை முந்தியதா? விதை முந்தியதா மரம் முந்தியதா என்ற கேள்விகளெல்லாம் வீணே மனதி னால் கேட்கப்பட்டவை. இந்தப் பொய்மனதைக் கடந்து உன்னைப் பேணவேண்டும் என்ற பாவனையில் தீபாரதனை நடைபெறு கின்றது.
10.தீபங்கள்
பூசையின் போது ஐயர் காட்டும் தீபங்களுக்கும் அர்த்தமுண்டு. அடுக்குத் தீபம் என்பது இறைவனிலிருந்து தோன்றிய அனைத்து ஜீவராசிகளையும் எடுத்துக் காட்டு கின்றது. மூன்று தீபவிளக்கு, முக்குணங்களையும் (அதாவது சத்துவ, ரஜஸ்,தமஸ்) எடுத்துக்காட்டுகிறது. ஐந்து தீபவிளக்கு ஐம்பூதங்களில் தோன்றி ஐம்பூதங் களையும் அடக்கிய தன்மையை எடுத்துக் காட்டுகிறது. இறுதியில் ஒற்றைத்தீபம் எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் ஒரே கடவுளை எடுத்துக் காட்டுகிறது. இறுதியில் கற்பூர தீபம் உன்னோடு நான் ஒன்றாகக் கலக்கவேண்டுமென்னும் தன்மைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
ஐயரின் மந்திர ஒலி கேட்கின்றது. சும்மாயிருந்த அந்தப்பரம்பொருள், இந்தப் பிரபஞ்சத்தை தோற்றுவிக்கும் பொருட்டு முதல் அசைவிலே ஏற்படுத்திய ஒலிதான் 'ஓம்' என்னும் நாதவொலி. இவற்றைக் கடந்து ஐந்தாவது கோயில் மண்டபத்துக்குள் நுழைகின்றோம்.
11. ஆனந்தமயகோசம்
உடலின் ஐந்தாவது கோசம் ஆனந்தமயக் கோசம். கோயிலிலிருக்கும் இந்த ஐந்தாவது மண்டபம், ஏனைய மண்டபங்களை யெல்லாம் உள்ளடக்கியதாகும். இதனுள்தான் நாம் எத்தனையோ பிறப்பில் செய்த பாப புண்ணியங்கள், எண்ணங்கள், நினைப்பு மறப்புக்கள் எல்லாம்' சமஸ்காரம் என்ற முறையில் அடங்கியிருக் கின்றன.
ஐந்தாவது கோசமண்டபத்துக்குள்தான் மூல மூர்த்தியான ஓம்காரம் அல்லது பிரம்மம், இறைவன், நிர்வாணம், பரமமண்டலத்திலிருக்கும் பிதா, அல்லா,
110

முக்திநிலை, என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற பரவெளி யாகிய ஒரே ஒரு வஸ்து , ஆதிமூலமூர்த்தி அமர்ந்திருக்கின்றார். இதனை ஆனந்தமயக்கோசம் என்று அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது.
பணம் படைத்தவனோ அல்லது ஏழையோ சுகஜவனோ அல்லது நோயாளியோ இளையவனோ, முதிர்ந்தவனோ எவராயினும் தனது ஆழ்ந்த நித்திரையில் அனுபவிக்கும் இன்பம் தனிப்பட்ட ஒரு இன்பமாக இருக கின்றது. அந்த ஆனந்தமே இதனுள் அடங்கியுள்ளது.
படுக்கையைத் தட்டிப்போட்டு நித்திரை வேண்டு மென்று நினைத்காத மனிதனில்லை. இங்குதான் நம்மை ஆட்டிப் படைக்கும்’மனம் ஒடுங்கி நிற்கின்றது. ஏனைய விழிப்பு, கனவு, நிலைகளில் மனம் செயல்படுகின்ற ஒரு காரணத்தால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றது. மனம் ஒடுங்கி - இல்லாமல் போன நிலையில் இவை எதுவும் இல்லை என்பதை அறிகிறோம். எனவேதான் இந்த மனதை இல்லாதாக்கவேண்டும் என்கின்றனர் மெய்ஞானிகள்.
“நானெனவும் நீயெனவும் நடுவேமுளைத்த மனதை தானே கிள்ளத் தெரிய்ாது தவித்தேனே பராபரமே” எனத் தாயுமானசுவாமிகள் பாடுவார். இவ்வாறே ஏனைய ஞானிகள், யோகிகள், எல்லாம் அழுது புலம்பியிருக் கிறார்கள்.
மனதற்றநிலையில் நாம் மெளனியாகின்றோம். எல்லாக்கோசங்களையும் மண்டபங்களையும் கடந்து சென்ற பின் நாம் காண்பது விக்கிரக வடிவாக வீற்றிருக்கும் பரம்பொருளே. அங்கே பக்தி பாவனையோடு தீப ஆராதனை யூடாக அவரைக்கண்டு கண்ணிர் மல்கி நிற்கின்றோம்
12.ஞானிகள்
நம்முள் இருக்கின்ற ஜோதியை அங்கு வீற்றிருக்கும் ஜோதிமயமான இறைவனில் கண்டு களிக்கும் தன்மையை நாம் அடையவேண்டும். அங்கு வீற்றிருக்கும் மூலமூர்த்தி நம்முன்னேயே இருக்கின்றார் என்று உணர்ந்து ஆனந்தக்களிப்படையும் வரைக்கும் நம்இறப்பும் பிறப்பும் இருந்துகொண்டே இருக்கும்.
"ஞானமலது கதிகூட்டுமோ சித்தாந்த முக்தி முதலே' என்பதின் உண்மை புலனாகவேண்டும். இந்த ஞானநிலையை அடைவதற்கு வழியுண்டு. அதுதான் கேட்டல் (சாத்திரங்களையும் படித்தல்) கேட்டவைகளை யிட்டு சிந்தித்தல், அந்தச் சிந்தனையூடாக தெளிவு பெறல். இந்தத்தெளிவு தியானமூலமாகத்தான் ஏற்பட வாய்ப்புண்டு.
(Meditationis the only gateway to God Realization)
கற்பூரம் எரிந்ததும் அங்கு எதுவும் மிஞ்சியிருப் பதில்லை. அதே போன்று தியானநிலையில், நம்மனம் ஒடுங்கி, இல்லாதொழியும் பொழுது நிர்விகல்பசமாதி ஏற்படுகின்றது. இதுவே இறைநிலை முக்திநிலை.

Page 139
“. போனாலும் கற்பூர தீபம் போல போய் ஒழிப்ப தல்லாது புலன் வேறின்றாம் ஞானாகாரத் தினொடு ஜெயமற்றயாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்.”
காண்பவன், காட்சி, காணும் செயல் எல்லாம் மறைந்த “நிர்விகல்பசமாதி” இதுவேதான் உயர்ந்த பக்தி நிலையும். ஞானிகளால் மட்டுமே உயர்ந்த பக்தியை எட்ட முடியும்.
இந்தநிலையில் எல்லாம் வெறும் வெளியே. அதுதான் பரவெளியாகிய இறைவெளி. சித்தாகசம. இதனைக் கருத்திற்கொண்டே “கண்டனவெல்லாம் மெளன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலி செய்குவாம்” என்றார்கள் கண்டவர்கள்.
13. ஞானவிலக்கம்
“What is that, by knowing which, everything isknown’ எதனைத் தெரிந்துகொண்டால், ஏனைய எல்லா வற்றையும் தெரிந்து கொள்ளமுடியும்' என்று நமது உப நிடதம் கேட்கின்றது. இதுவே ஆன்மாவின் நிலை. ஆன்மா அழிவற்றது, நிலையானது, நித்தியமானது. எங்கும் வியாபித் திருப்பது. இந்த ஆன்மா நாமேதான். இதனை மறந்து நான் இந்த உடம்பு என்ற எண்ணத்தால், ஆன்மாவாகிய கடவுள் நிலையிலிருந்து அதிக தூரம் அப்பால் நாம் சென்றுள்ளோம்.
இதனை மாயையின் மயக்கம் என்று மகான்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஞானநிலை எட்டியவர்கட்கு
"ஜாதி, குலம், பிறப்பு, இறப்பு, பந்தம், முக்தி அருவுருவத்தன்மை, நாமம் ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரவற நின்றியக்கும் ஜோதியை மாதூ வெளியை மனதவிழ நிறைவான துரியவாழ்வை தீதில் பரமாம் பொருளை திருவருளே நினைவாக சிந்தை செய்வாம்” என்று எடுத்துரைத்தார்கள்.
14.முருகன்அவதாரம்
மேற்கூறிய தத்துவங்களை உள்ளடக்கியதாக நம்முருகப்பெருமானின் அவதாரம் அமைகின்றது. பரமனை மதித்திடாத தக்கனின் யாகத்தில் பங்கு கொண்ட காரணத் தால் பரம்பொருளின் சாபத்துக்குள்ளான தேவர்கள், முனிவர்களெல்லாம் சூரபத்மனின் கொடுமைக்குள்ளாகி வேதனையடைந்து இறுதியில் கைலாயத்தில் தியானமூர்த்தி யான சிவனை வரம்வேண்டி வணங்கி நின்றார்கள்.
மூலமுதற் பொருளான பரப்பிரம்மம் இவர்கட்கு அனுக்கிரகம் பண்ண எண்ணுகின்றது. எண்ணத்துக்கு உருவமில்லை.
முருகப்பெருமானைத் தோற்றவைக்கவேண்டு மென்ற எண்ணமே அருவமாகி அமைகின்றது. நெற்றிக் கண்ணாகிய ஞானக்கண்களைத் திறந்தார் சிவன். ஆறு

பொரிகள் தோன்றுகின்றன. பொரிகளுக்குத் தோற்றமுண்டெ னினும் உண்மையான உருவமில்லை. எனவே ஆறுபொ ரிகளும் அருவுருவமாக ஆகின்றன. உருவமுமில்லை. அருவமுமில்லை. இந்தப் பொரிகள் உருவம் பெறவேண்டும் அதற்கு ஏதுவாக ஆகாயம் இம்பொரிகளைத் தாங்க முடியாமல் வாயுவிடம் ஒப்படைக்க வாயுவினால் தாங்க முடியாமல் பொரிகளை அக்கினியிடம் ஒப்படைக்கின்றது. தீக்குள் தீயாயிருப்பது ஆத்மம் என்னும் பரம்பொருளாகிய தோற்றம், தீயினாலும் தாங்கமுடியாமல் அவற்றைக் கங்கை நதியிடம் ஒப்படைக்க கங்கை பரம்பொருளை தாங்க முடியாமல் நீராவியாகும் நில்ையில் சரவணப்பொய்கையில் விட்டு விடுகிறது. இங்குதான் உருவமில்லாத அந்தப் பரம்பொருள் உருவம் பெறுகின்றது. எனவே சிவன்வேறு முருகன் வேறு அல்ல. இருதோற்றங்களும் ஒரே பரப்பிரம்மத்துக்குரியனவையே.
உருவமற்ற ஒன்று உருவம் பெறுகின்றது. ஆகாயம், காற்று, நீர், நிலம் முதலியவைகளுடாக உடல் பெறும் மனிதன் இருக்க பரம்பொருள் மட்டுமே உடலெடுத்து அருவமும் உருவமாகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற ஜோதி பிளம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பண்னிரண்டும் கொண்டு ஒரு திரு முருகண் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய’
என்ற பாடல் மூலம் இதை நாம் உணரலாம்.
ஒளவையார், நக்கீரர், அருணகிரிநாதர், ராம லிங்கர், பாம்பன்சுவாமிகள், குமரகுருபரசுவாமிகள் போன்ற பல சித்தர்கள், யோகிகள், ஞானிகட்கெல்லாம் அருள்பாலித்துக் காத்த கந்தனை கந்தக்கடம்பனை, வேலவனை, சண்முகனை, சரவணபவனை, கலியுக வரதனாக சைவஉலகம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. ஆரையம்பதி முருகனின் அருட் கடாட்சத்தின் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.
குறுகி இருக்கவேண்டிய சில பக்கங்களுக்குள் இந்த ஆழ்ந்த கருத்துக்களை பூரணமாக விளக்கமுடியாத நிலை. இருப்பினும் இந்தத் தத்துவங்களை ஓரளவு உணரமுடி கின்றது என்று நினைப்பவர்கள் இருப்பின் அவர்கள் அதற்கான பூரண விளக்கங்களை நேரிலும் என்னிடம் பெற்றுக்கொள்ளலாம்.
எதைத்தேடவேண்டும் என்று இதனைப் படிப் போருக்குள் ஒரு வினா எழுமாயின் அது திருமுருகனின் அருள் என்று கொள்வோம்.
"லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்று கூறுவது நம் இந்து மதம்.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதல்லால் வேறொன்றறியேன் பராபரமே”
என்ற தாயுமானவர் வழியில் நின்று எல்லாம் வல்ல கலியுகக்கடவுளை வணங்கி நிற்போம்.
111

Page 140
DIரியம்மனே ஆரையம்பதிக்கு பழமையான பெண் தெய்வம். காளி அம்மன், பேச்சி அம்மன், கண்ணகி அம்மன் கோயில்களெல்லாம் பின்னர் வந்தவைகள். இதற்கு நாம் மலையாளப் பரம்பரையைச் சேர்ந்த மக்களாக இருப்பது ஒரு காரணமாகும். மலையாளத்தில் கண்ண னுாரில் இருப்பது ஒரு பிரபலமான மாரியம்மன் கோயில். இக்கோயிலைப் பற்றி இங்கு காவியங்களில் வருகிறது.
“கண்ணனுார் வந்த நீ
கம்பயில் வளந்த நீ
கரகம தெடுத்த நீ
குழையது பிடித்த நீ” என்று பாடுவது வழக்கம்
சித்திரை வருடப் பிறப்புக் காலங்களில் குறுமணன் வெளி, செட்டிபாளையம் போன்ற இடங்களிலிருந்து சிலர் இங்கு வந்து ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் முத்து மாரி யம்மன் ஆடி திருநீறு, குங்குமம், வேப்பம்பத்திரம், கொடுத் துச்செல்வது வழக்கம்,இப்போது இப்பழக்கம் நின்று விட்டது. மாரியம்மனை முன்னிட்டு வீடுகளில் பூசை “சர்க்கரை அமுது” என ஆரையம்பதியில் அழைக்கப்படுகிறது.
மலையாளத்தில் நாயர் வீடுகளில் சர்க்கரை அமுதுகொடுக்கும் வழக்கம் இருந்தது. இதைப் பின்பற்றியே நம்மூரிலும் பணவசதி உள்ளவர்கள் வீடுகளில் சர்க்கரை அமுது கொடுத்தல் வழக்கம். அந்தவிட்டில் தெய்வம் பிடித்தவர்கள் யாராவது இருந்தால் அந்தப் பூசையில் தலைசுற்றி ஆடுவதும் வழக்கம். இதனால் இந்தச் சர்க்கரை
கோயில்களில் சடங்கு செய்யும் கட்டாடிமாரையும் அழைத்தே இந்தப் பூசையையும் செய்வார்கள்.
முதலில் முன்னேற்பாடாக ஒரு வாரத்துக்கு மச்சம் மாமிசம் சாப்பிடாமலும் வாசல்வளவுகளைக் கூட்டித் துப்பரவு செய்தும் புனிதப்படுத்துவார்கள். இந்தச் சடங்கில் பூசைவேளையில் இருப்பதற்காக ஏழு கன்னிமாரை (பெரிய பிள்ளையாகாத சிறுமிகள்) ஒழுங்கு செய்து அவர்களையும் பரிசுத்தமாக இருக்கும்படி கூறிவிடுவார்கள். சொந்தக்காரர் களிடம் எங்கள் வீட்டில் இன்ன நாளைக்குச் சர்க்ரை அமுதுச் சடங்கு அதற்கு நெல்குற்ற, மாவிடிக்க வாருங்கள் என்று அழைப்பு விடுப்பார்கள். அவர்களும் குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாள் வந்து சகல வேலைகளையும் செய்வார்கள். கட்டாடியாருக்கும் இதேபோல் செய்தி அனுப்புவார்கள். இது முடிந்தபின்னர் சடங்குக்குத் தேவையான பாக்கு, வெற்றிலை, பழம், தாமரைப்பூ கமுகம்பாளை, சர்க்கரை, பனங்குட்டான், இளநீர், கரும்பு, பழவகை, வயிரவர் பூசைக்குத்தேவையான கஞ்சா போன்ற வற்றையும் தேடிச்சேமித்து வைப்பார்கள். குறிப்பிட்ட நாள் வந்ததும் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் வளவுகளைக் கூட்டிப்பெருக்கி மஞ்சள் கலந்த நீர் தெளித்துப் பரிசுத்தப் படுத்துவார்கள். வீட்டின் சாமி அறைக்கு (நடுஅறை) முன்பாக நாலுகம்பு நட்டு அதில் மேல் வெள்ளை மேல் கட்டி கட்டுவார்கள். அதன் கீழ் பெரிய பானை வைத்து அதில் சர்க்கரைப் பொங்கல் பொங்குவார்கள். பொங்கி முடியும் தறுவாயில் பூசைசெய்யும் கட்டாடியார் வந்து
112
 

பூசைக்குரிய ஏற்பாடுகளைச் செய்வார்.பின்னர் கன்னிப் பிள்ளைகளாக வரும்படி அழைப்பு விடுத்த ஏழுசிறுமிகளும் முழுகி, கண்ணுக்கு மையிட்டு, திருநீறு திலகம் அணிந்து முக்காடு போட்டு பாவாடை சட்டையுடன் உரிய வீட்டுக்கு வந்து சேர்வார்கள். பூசாரியார் அவர்களுக்கு நீர் தெளித்து ஒரு பக்கத்தில் வரிசையாக அமரவைத்து தனது பூசையை தொடங்குவார். வீட்டார் அனைவரும் பயபக்தியோடு நின்று வணங்கி பூசாரியார் கொடுக்கும் திருநீறு, மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களைப் பெற்று அம்மாளின் அருளைப் பெற்றதாகவே எண்ணி மகிழ்வார்கள். பின்னர் ஏழு கன்னிமாரையும் அவர்களுக்கு முன் தனித்தனியாக படைத்திருந்த சர்க்கரை அமுதில் கன்னிமார் ஒரு பகுதியை உண்டபின் மிகுதியை அவர்களைக் கொண்டு துணியில் கட்டி அவர்களிடம் கொடுத்து அவர்களை தங்களது வளவுக் கடப்பு வரை கூட்டிவந்து தெருவில் வைத்து நீர் தெளித்து வீட்டுக்காரத் தலைவி கன்னிமாரிடம் ‘சுகம்தந்தயள' என்று கேட்பார். அவர்கள் ஓம்' என்று சொல்லுவார்கள். இவ்விதம் மூன்று முறை கேட்டு முடிந்ததும் அவர்களை அனுப்பிவிட்டு தீர்த்தக்கிண்ணத் திலுள்ள மிகுதி நீரை வெளியில் ஊற்றிவிட்டு உள்ளே சென்று விடுவார்கள். இத்துடன் மாரியம்மன் பொங்கல் முடிந்து அடுத்ததாக இரவில் வயிரவர் பூசைக்கு ஏற்ற ஒழுங்குகளை செய்வார்கள். பெரும்பாரும் இதில் உறொட்டி முக்கிய அவிபாகமாக இருக்கும். சாமி அறைக்கு முன்பாக வெளியில் சிறுபந்தல்போட்டு அதில் வயிரவர் கும்பம் வைத்து அதற்கு வடைமாலை , கரும்பு, மற்றும் பழவகை
களைப் பரப்பி இளநீரும் வெட்டி வைப்பார்கள். பூசை முடிந்ததும் வயிரவர் காவியம் பாடுவார்கள். வீட்டிலுள்ள வர்கள் யாருக்காவது வயிரவர் காவல் நூல் போட விரும்பினால் கட்டாடியார் போடுவார். அதன் பின் வயிரவர் பூசை முடிந்துவிடும். அடுத்ததாக தண்ணிர்ச் சோற்றுப் பள்ளயப் பூசை நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் நடை பெறும். சோறு சமைத்து அதில் தண்ணிர் ஊற்றிவைப் பார்கள். பின் அதிகாலையில் ஏழு கன்னிமாரும் வந்து பூசை அறையில் அமர்ந்ததும் கட்டாடியார் பூசையில் மடை வைத்து தண்ணிர்ச்சோறும் அதில் தயிர் பால், பழம், பனங்குட்டான், சர்க்கரை, தேன், பழங்கள் முதலிய வற்றையும் வைப்பார்கள். இதேபோல ஏழுகன்னிமார் களுக்கும் தலைவாழை இலைகளில் தண்ணீர்ச் சோறு படைப்பார்கள். பின்னர் பூசை நடக்கும். கன்னியர் கொஞ்சம் சாப்பிட்டு முடிந்ததும் பூசையை முடித்து அவர்களை முன்போலவே வெளிகடப்புக்கு கொண்டுவந்து முன்போல ‘சுகம் தந்தயள' என்று மூன்றுதரம் கேட்க, அவர்களும் 'ஓம்' என்று மூன்றுதரம் கூறுவார்கள். பின்னர் அவர்களை வழியனுப்பி வைப்பதுடன் சர்க்கரை அமுது விழாவின் மூன்று பாகங்களும் நிறைவுபெறும். மதியம் செய்வது மாரியம்மன் பூசை, இரவு செய்வது வயிரவர் பூசை, அதிகாலை செய்வது மாரியம்மனின் மகன் காத்தானுக்குரிய பள்ளயப்பூசை. இதற்கு காத்தான் பள்ளயம் என்றும் பெயர். இப்போது இப்பூசை நம் ஊரில் அருகிவிட்டது. காரணம் இதற்கு ஏற்படும் பெரிய செலவாகும். இதை வருடா வருடம் செய்யவேண்டும்.அதுவும் இப்போது சாத்தியமில்லை.

Page 141
"கூட்டித்துப் போங்களனப்பா, சாமி சுத்திறாங்க கூட்டித்துப் போங்களனப்பா"
எத்தனையாவது தடவையென்று தெரியவில்லை. ரிஷி அடம் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் உடல்தான் வீட்டில் இருந்ததே தவிர உயிர்முழுவதும் திருவிழாக் கலகலப்பில் மூழ்கியிருந்த கந்தசுவாமி கோயிலிடியிலேயே குடியிருந்தது.
பாவம் சின்னப்பையன் - என் இதயத்தில் ஒரு மூலை கரைந்தது.
இந்த வயதில், நான் இந்தக்கோவில் வெட்டையில எப்படிக் குதுமம் குத்தித்திரிந்தனான். ரிஷியை இப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது எனக்கே பொறுக்கவில்லை. ஆனாலும் என் வைராக்கியம் சிறிதும் தளரவில்லை. அப்பா அன்று எனக்குக் கூறிய வார்த்தைகள் அப்பாவை யும் அவருடைய வார்த்தைகளையும் என்னால் மீறமுடி யாது. அவரின் முகம் என்னில் விழுகின்றது. இந்தஜென் மத்தில் இதுபற்றி என்னால் தீர்மானிக்க முடியாது. மகனின் கெஞ்சல் ஒரு பக்கம். அப்பாவின் உறுமல் ஒரு பக்கம். அவருடைய வார்த்தைகளை உதறித்தள்ளிவிட்டு மகனுக்காக இறங்கிவர என்னால் முடியவில்லை.
ஒரு வாணமும்
ஆரையம்பதி
இருபத்தைந்து முப்பது வயதுவரை கட்டிக்காத்து வந்த வாக்குறுதி 'அப்பனே மகனாகப் பிறந்து விட்டான்" என்ற மகாகவியின் வார்த்தைகளை நிதர்சனமாகக் கொண்ட என் கொள்கை இவற்றை மாற்றுவது என்பது கனவிலும் நடக்கமுடியாத ஒன்று.
“என்னப்பா புள்ளையக் கூட்டித்துப் போங்கவன். கிடந்து தவிக்கிறான்.” மனைவியின் வக்காலத்து. நான் அசைய வில்லை. இவளுக்கு என்நிலை எப்படிப்புரியும். இருதலைக் கொள்ளி எறும்பானேன்.
ரிஷியின் மனம் புண்பட்டிருக்கவேண்டும். என்பக்கமே அவன் வரவில்லை. கூம்பிய மலராய்ச் சுருண்டு ஒரு மூலையில் கிடந்தான்.
சுமுகமாக இருந்திருந்தால் என் மடியைத் தெட்டிலாக்கிக் கொண்டு ஆயிரம் மழலைக் கேள்விகளை அவன் கேட்டிருப்பான்.
“ஒளவைப்பாட்டி எப்படியப்பா சந்திரனுக்குள்ள
இருக்கிறா?”
“இந்த வானத்திற்கு எப்படியப்பா ஆயிரம் கண் முளைத்தது?”
 

செத்தாக்களெல்லாம் எப்படியப்பா வானத்துக்குள்ள இருக்காங்க.”
“நம்மட அப்பப்பாவும் இதுக்குள்ளதானா இருப்பாரு?"
அப்பய்யா, என் அப்பா வானத்துக்குள்ளேயிருந்து எட்டிப் பார்க்கிறார். மேகங்களினூடாக நீந்தி என்னை நோக்கி வருகிறார். அவர் முகத்தில் புன்முறுவல். அது எனது வைரக்கியத்துக்கு அவர் கொடுக்கும் அங்கீகாரம்.
சனம் சரமாரியாக சரிந்து போகின்றார்கள். வீட்டு முற்றத்தில் கொட்டியிருந்த கடற்கரை மணலின் சொரு சொருப்பு சுகமாக இருந்தது. இதயம்தான் ஏதோ ஊர்ந்து ஊர்ந்து வெடித்துச் சிதறுகின்றது. மெதுவாக கையைக் குத்தி மல்லாக்கச் சாய்கின்றேன்.
‘இஞ்சாருங்க, என்ன இப்பிடி இருக்கியள்?” மீண்டும் சிந்துவின் குரல்தான் எனை உசுப்புகின்றது. 'ரிஷியை நீங்க கூட்டித்துப் போறியளோ இல்லை, நான் கூட்டித்துப் போகவா"
சிந்து சற்று சூடாகிப்போனாள். அவளுக்கென்ன. அவளுக்கு அப்பாவின் தன்மானம் பற்றியோ எனது வைராக்கியம் பற்றியோ எதுவும் தெரியாதே.
தெருக்களும்
5லர்ச்செல்வன்
சிந்து அருகில் வந்து என் தலையை நீவினாள்.
“சிந்து நீ ரிஷியைக் கூட்டித்துப்போ’
‘அப்பநீங்க?”
‘வரல்ல'
“ஊர்ச்சனம் என்னத்தக் கதைக்குமப்பா. புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் பிரச்சனபோல. அதுதான் அவளும் பொடியனும் வந்திருக்காங்க எண்டுதானே நினைப்பாங்க"
“ஊர்ச்சனம் எதவேண்டுமானாலும் கதைக்கட்டும் உனக்கு விருப்பமெண்டா ரிஷியைக் கூட்டித்துப்போ. இதுக்குமேலே ஒண்டும் கதைக்காத.”
“சீய். உங்களுக்கு எப்பதான் இந்த ஒத்தக்கால் புத்தி மாறப்போகுதோ’ அலுத்துக்கொண்ட சிந்து ஒரு வேகத்துடன் கிளம்பி ரிஷியை இழுத்துக் கொண்டு போகிறாள்.
இன்னும் நான் எழும்ப முடியாமல் வீட்டு முற்றத்தின் கடற்கரை மணலில் மல்லாந்து கிடக்கிறேன். உடல் சிறுக்கிறது. அப்பா கண்ணினுள் ஊர்ந்து எழுகின்றார். நான் ரிஷியாகி அவர் முன் நிற்கின்றேன்.
13

Page 142
“இண்டைக்கு நீ கோவிலுக்குப் போறல்ல”
“ஏன் அப்பா?”
‘'நீ அவன்ட இவன்ட வளவுக்குள்ள பூந்து அது ஆஞ்ச இது ஆஞ்ச . எண்டு முறைப்பாடு நாளைக்கு வராம இருக்கத்தான் ”
ஒரு நாளும் நான் அப்பிடிச்செய்யல்ல.
“இல்லப்பா, அம்மம்மா பொய் சொல்லுறா"
“டேய் வாயப்பொத்துடா" “அவ. சொன்னத்தக் கேட்டுத்து நீங்க”
‘அப்பநீ அவங்களோட போகவில்லையா?”
“இல்லப்பா'
'உண்மையாத்தான் சொல்லுகிறாயா?”
“ஓமப்பா'
“சரி. சரி . கெதியா வெளிக்கிடு கோயிலுக்கு நான் உன்னக் கூட்டித்துப்போறன். அப்பா என்னை இழுத்துத்துப் போனார். இண்டைக்கு முகத்துவாரத் தெரு வாரிட திருவிழா. நேத்து நடுத்தெருவாரிட திருவிழா. முந்தநாள் ஆரைப்பத்தைத் தெருவாரிட திருவிழா.
நான் அப்பாவுடன் கோயிலடிக்கு வந்தபோது ஜன சமுத்திரம் அலை அலையாகச் சரிய அந்தச் சமுத்திர அலைகள் மேல் கப்பல்போல் மூன்று சப்பரங்கள் ஆடி அசைந்து மிதந்துவர எங்கும் கண்ணைப் பறிக்கும் மின் விளக்குகள் ஜாஜ்வல்யமாக ஒளிவீச மேளவாத்தியம் உச்சஸ்தாயியில் முழங்க பல்லாயிரம் குரல்கள் ஒன்றுசேர்ந்து ஒரே இரைச்சலாக - அந்த இடம் எனக்குச் சொர்க்கபுரியாகத் தோன்றியது.
திருவிழா ஊர்வலம் வடக்கு வாசலுக்கு வந்து சேர்ந்ததும் மக்கள் வெள்ளத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. மேளச் சமாவைப் புறக்கணித்து வாணவேடிக்கையைக் காண மக்கள் முன்புறம் திரண்டனர்.
சனங்கள் மாமியார் மூலையில் இடம்பிடிக்க முண்டி யடித்தனர். அப்பா என்னை பள்ளி மூலைக்கு அழைத்துச் சென்றார். நல்ல இடம் எல்லாப்புதுனமும் நல்லாத் தெரியும் இடம். சாமி ஊர்வலம் மாமியார் மூலையை வந்தடைந்தது. ஈக்கில் வாணமும், எலிவாணமும், வவுஞ்சலும் வானத்தை இடித்துத்தரைமட்டமாக்க விரைந்தன. ஆண்டியப்பா போதைவெறியில் தலையை ஆட்டி ஆட்டி மேளத்தை உருட்டினார். நாதஸ்வரக்காரன் பீப்பி. பீப்பி யென எச்சிலை துப்பினான். அப்பரும் கணாவும் கதிரும் தீவட்டியைக் கம்பீரமாகப் பிடித்து நிற்கின்றார்கள். தற்செயலாகத் திரும்பிய என் பார்வையில் அந்த எலிவாணம் இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டிருப்பது என் கண்ணில் பட்டது.
‘அப்பா. அங்க பாருங்க எலிவாணம். நூராமல் எரிஞ்சி
114

போகுது. அங்க பாருங்க அங்க. அங்க பாருங்க. அப்பா பார்த்தார். திடுக்கிட்டார். பரபரத்தார். பதைபதைத்தார். அவருக்கு சந்தேகம் வந்திருக்கவேண்டும். அப்பா அந்த வெளிச்சத்தை நோக்கி ஓடிப்போனார். நானும் அப்பாவின் பின்னால் ஓடினேன்.
கோவிலுக்கு சற்றுத்தூரத்தில் கட்டியிருந்த பந்தல் எரிஞ்சி கொண்டிருந்தது. அப்பா சந்தம் போட்டு கூவி அழைத்தும் ஒரு சனமும் கவனிக்கவில்லை. ஆண்டியப்பா மேளச் சமாவில் அப்பாவின் குரல் அமுங்கிப்போனது. எரியும் பந்தலை அணைக்க வேண்டுமென்று எவருக்கும் தோன்ற வில்லை. அப்பா தவியாய்த் தவித்தார்.
அப்பா எவ்வளவு சொல்லியும் யாரும் ஏத்துக்கல்ல. அவருக்கு அந்த இருளில் ஓடிமறைந்த முகங்கள் மின்னி மின்னி மறைந்தன. நிர்வாகத்திடம் எவ்வளவு அப்பா சொல்லியும் யாரும் ஏத்துக்கல. இல்ல எலிவாணம் விழுந்து எரிந்திருக்கவேண்டும். இஞ்ச ஆரு பந்தலுக்கு நெருப்பு வைக்கப்போறா? கணபதிக்குப் பைத்தியமாக்கும். வீணாப் பிரச்சினையைக் கிளப்புறான்.
கோவில் தலைவர் அப்பாவை மூளைபிசகியவன் என ஏதோ வெல்லாம் பொரிந்து தள்ளினார். அப்பா அவரில் பாய்ந்து விழுந்தார். முகத்துவாரத்தெருவாக்கள் முறுகி னார்கள். பின் கோவிலுக்குள் சாமியை வைத்துவிட்டு புறப்பட்டுப்போனார்கள். கந்தப்பர் சமாதானம் பிடித்தார். கையைப் பிடித்தார். காலைப்பிடித்தார். எதுவும் சரிப்பட்டு வரவில்லை.
அடுத்தநாள் ஊரே திமிலோகப்பட்டது. ஒரே கலவரம். காற்றுக்கூட வெட்கித்தது தலைகுனிந்து ஓடி மறைந்தது. ஒரு தெருவார் மற்றத்தெருவுக்குள் போகவில்லை. சாரனை மடித்துக்கட்டி எல்லைக்காவல் காத்தனர். முழங்கால் தெரிய சாரன் கட்டிய யார்யாரோ வெல்லாம் வீரம் பேசினார்கள்.
வண்டிக்காரச் சிவத்திக்கும் கடும் மப்பு. கோயில் வெட்டையில் அவனும் வீரம்பேசினான். போத்தல் வாயிலாக அவன் வயிற்றுக்குள்ளே போனவீரம்தான் அது.
"எவன்டா என்னைத் தடுக்கிற? கவுன்மென்ட றோட்டுல நான் போவன். எந்தத் தெருவெண்டாலும் எனக்குப் பயமில்ல. நான்போவன். ஒ!”
சிவத்தி ஒரு உசார்மடையன் அவன் உள்ளுக்குள்ள போட்ட சாமான்தான் அவனைச் சண்டியன் ஆக்கிவிட்டது. ஏதோவெல்லாம் உளறிக்கொண்டு போனான். நடுத்தெரு வைக் கடந்து போனான். அவன் போன சிறிது நேரத்தில் மரண ஒலமும் கூக்குரலும் எழுந்தன. ஆனால் தெரு வைத் தாண்டி அங்கே போக யாரும் துணியவில்லை. போலிஸ் உதவியுடன் சிவத்தியின் பிணம் எடுக்கப்பட்டது.
ஊர் இரண்டுபட்டது. இரவில் என்ன நடக்குமோ என்ற பயங்கரம். பகலிலும் பயம். ஊர்மக்களின் நிம்மதி போய்விட்டது.

Page 143
கோவில் வெட்டையில் கதிர் அப்பர், கனா நெஞ்சை நிமிர்த்தி வீரம் பேசினார்கள்.
‘பயித்தியம் இவனுகளுக்கு கோயில் பேரால இப்பிடிச் சண்டை பிடிக்கிறானுகளே. முருகன் எப்பிடி இந்தக் கண்றாவியப் பார்த்துக்கொண்டு கோவிலுக்குள்ள இருப்பான், ஒருவரும் இதப்பத்தி யோசிக்கிறானுகளில் லையே” அப்பா எரிஞ்சு விழுந்தார்.
தெரு, பாகை, குடியென்று அடிபடுவது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை." கோவில் மக்களுக்கு எவ்வளவோ செய்ய இருக்கு இவனுகள் எண்டா அடிபடுறானுகள்சே!”
அப்பா சொன்னமாதிரி பந்தலுக்கு நெருப்பு வைச்சவன துரத்திப் பிடிச்சிருந்தா இப்படி ஆகியிருக்காது
சிவத்தி மாண்டுபோய் ஆறுமாதம் கழிந்துவிட்டது. கொஞ்சம் வெறி ஏற்றிய கதிரும், அப்பரும், கணாவும் ஏதோ குசுகுசுத்தார்கள்.
“இண்டைக்கு ரெண்டில ஒண்டு பார்க்கத்தான் வேணும்” எங்கட ரோட்டாலதான் சத்தம் போட்டுக்கொண்டு அவர்கள் போனார்கள். அம்மாவுக்கும் சரியான பயம்.
'ஏன் இந்த மனிசன் இதில் தலையை நுழைச்சவரு. நமக்கென்ன லாபம் இதில. அம்மா அங்கலாய்த்துக் கொண்டே குட்டி போட்ட பூனை மாதிரிச் சுற்றிச் சுற்றி வந்தாள். அவளுக்குக் கையும் ஒடல்ல காலும் ஒடல்ல. அவங்க போய்க் கொஞ்சநேரத்திலே அப்பா இளைச்சி இளைச்சி ஒடிவந்து
‘‘வைத்தியக் குத்திப்போட்டானுகள். அப்பா மூச்சு வாங்கினர். வைத்தி அப்பாட ஒன்றுவிட்ட சொந்தம். அவருக்கு உதறல் எடுத்தது. அம்மாக்கும் பயம் உலுக்கியது.
“அவனுகள் பொல்லாத ஆக்களப்பா. இந்த மனிசனும் போய் இதுக்குள்ள மாட்டிட்டாரே.
ஹாய். ஹோய். கூய். யோ. கூய்.
தூரத்தில் அலை பொங்கி வருவதுபோல பேரிரைச்சல் கேட்டது. அந்த இரைச்சல் பெரிதாகி எங்கள் வீதி முனை யைத் தொட்டது.
அம்மா கடப்பை அடைத்து யாரும் வளவுக்குள் வராமல் தடுத்திருந்தா. அப்பாவைக் காணவில்லை. எங்கபோய் ஒளித்தாரோ தெரியல்ல.
“தடார். தடார் .”
வெளிக்கடப்பில்தான் ரெண்டு மூன்று உதை.
“டேய் கணபதி. உன்னையும் விடமாட்டம்டா.”
“டேய் அந்த மனிசன் என்னடா செய்தவர்”
“இல்லடா. இவன்தான்டா இதுக்குக்கால்” செல்லம்மாச் சிட சத்தம் ஓங்கி ஒலித்தது. எப்படியோ சமாளித்து

அந்தக் கூட்டத்தை அனுப்பி விட்டார் போல.
பேய்க்கூச்சல் போட்ட கூட்டம் கோவிலடி வெட்டையை நோக்கி நகர்ந்து போகின்றது.
அப்பா பாவம். சாய்மனைக்கதிரையில சாய்ந்துகிடந்தார். கண்களிரண்டும் சிவந்திருந்தன. பெரிய புயல் ஒன்று அடித்து ஓய்ந்து போன மாதிரி சற்று நிம்மதி.
அம்மா,அப்பாவுக்கு எதிரேயுள்ள தூணில் சாய்ந்து தனக்குள் ஏதோ தேடுகிறா. பாவம் அம்மா நல்லாப் பயந்துபோனா.
அப்பாவும் தனிமனுஷன் அப்போது நான் சிறுவன். எங்களால் எதுவுமே செய்யமுடியவில்லை. சிலையாகச் சாய்ந்திருந்த அப்பா வெகு நேரத்திற்குப் பின் வாய் திறந்தார்.
“மகன் சுதா’
** என்னப்பா’
‘‘ காட்டுமாவடிப் புள்ளையளிர் உனக்கு ஏதும் செய்வானுகள் நீ இனிமேல் அந்தப்பக்கம் போகப்படாது LD(36GT ...'
'8futuro
அதுமட்டுமில்ல. நீ இனிமேல் இந்தக் கோவில் அது இது எண்டு ஒண்டுக்கும் போயிடாத.
என் தயக்கம் அவரைக் கலவரப்படுத்தியிருக்க வேண்டும். சற்றுக் கடினமானார்.
‘மகன் அங்காலப்பக்கம் மறந்தும் நீ போயிடாத. இது சத்தியவாக்கு. அப்பா கதிரைக்கையில் ஓங்கி அடித்தார்.
சிந்து கோவிலிலிருந்து திரும்பிவிட்டாள். ரிஷி அம்மாக்
குழலுடனுமு நிறைய முட்டாசி சாமானுடனும் என் அருகில் ஓடிவந்தான்.
‘அப்பா நிறைய நிறைய எலிக்குஞ்சிவாணம் விட்டவங் கப்பா. அந்த வாணம் சனங்களுக்குள்ள சீறிப் பாஞ்சி வெடிச்சிது அப்பா.”
‘அப்பா அங்க பாருங்க அங்கபாருங்க எலிக்குஞ்சி வாணம் நூராமல் பத்திப் பத்தி போகுது. அங்க பா. ருங்க.
(யாவும் கற்பனை)
115

Page 144
ராஜகோபுரம் அமைத்துக் கொடுத்
திரு.கணபதிப்பிள்ளை பரமான
கொக்கட்டிச்சோலை தான் தோன்றிவிப் வர ஆலயத்துக்கும் ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை யாவரும் அறிவர் நீண்ட காலமாகத் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகப்பில் ஒரு ராஜகோபுரம் இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்தவர் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த மயிலிப்போடி என்பவராகும். (அவரது பெயர்ப்பட்டயம் அவ்வாலயக் கோபுர வாசவில் இன்று இடம் பெற்றுள்ளது)
அது போன்ற ஒரு நிகழ்வு ஆரையம்பதி பூர் கந்தசுவாமி ஆலயத்திலும் நடைபெற்றுள்ளது.
ஆரையம்பதி ரீ கந்தசுவாமி ஆலயத்திற்கு ஒரு ராஜகோபுரம் அமைக்கப்படவேண்டும் என்பது இவ்வூா மக்களின் நீண்ட காலக்கனவாக இருந்தது. கோபுரம் அமைப்பதற்கான முன் மண்டபத்தை "தானச்சினா' அவர்களின் முத்தமகள் திருமதி நேசம்மா துரைராசசிங்கம் அமைத்துக்கொடுத்தார். ஆனாலும் அதன்மேல் ஒரு ராஜ கோபுரம் அமைக்க வழியின்றிப் பலவருடங்கள் அம்மண்ட பம் மொட்டையாகவே காட்சியளித்தது.
தற்போதைய ஆலயபரிபாலனசபை, ஆலயத்தின் திருப்பணிகளை மேற்கொண்டிருந்த சமயம் ராஜகோபுரம்
116
 

த கணபதிப்பிள்ளை பரமானந்தம்.
ந்தமும் அவரது குடும்பத்தினரும்
அமைப்பதில் ஏற்படக்கூடிய பெரும் செலவை எண்ணிச் செய்வதறியாது திகைத்து நின்றது.
இந்தநிலையில் கனடாவில் வதியும் ஒரு இளைஞர் ராஜகோபுரத்தைக் கட்டிக் கொடுக்க முன்வந்தார். அவர் வேறுயாருமல்ல ஆரையம்பதியில் பிறந்து வளர்ந்து, இங்கு ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாகப் புலம் பெயர்ந்து கனடா சென்ற ஒரு இளைஞர்தான் ஆவர். பெயர் கணபதிப்பிள்ளை பரமானந்தம் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும் தனது சுயமுயற்சிசினால் முன்னேறி கனடா சென்று அங்கும் தனது தனித்திறமையினால் வாழ்க் கையில் முன்னேறிப் பலருக்கும் உதவி வருகிறார். ராஜ கோபுரம் அமைக்கும் முழுச்செலவையும் அவர் ஏற்கமுன் வந்தது முருகப் பெருமானின் திருவருளேயாகும்.
இக்கோபுரத்தை அமைப்பதற்குச் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. அவர் வழங்கிய நிதி உதவியுடன் ராஜகோபுரத்துக்கான அடிக்கல் 3498 அன்று ரீமத் சுவாமி ஜீவனானந்தாஜி மகராஜ் அவர்களால் நாட்டப்பட்டது. சுமார் ஒரு வருடத்தின் பின் அதாவது 1499 அன்று மேற்படி ராஜகோபுரத்துடன் கூடிய ரீ கந்தசுவாமி ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நிறை வேறியது.

Page 145
பழம் பெரும் ஆரையம்ப இராஜகோபுரம் இல்லையே
முருகன் “திரு
ճ to all tւք լք: தமிழும் தழைத்தோங்கி யுள்ள மீன்பாடும் தேன் நாடாம் மட்டு மாநகருக்கு ே தெற்கே 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந் துள்ளது பழம்பெருமை மிக்க அருள்மிகு ஆரை யம்பதி ரீ கந்தசுவாமி ஆலயம் இவ்வாலயத் துக்கு நீண்டகாலமாக இராஜகோபுரம் ஒன்று இல்லாதிருக்கின்றதோன்ற இறைபக்தர்களின் பெரும் குறையை நக் கும் வகையில் இவ்வாலயத் ' தில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் அண்மையில் புரிந்துள்ள அற்புத திரு விளையாடல் ஒன்று பாவ ரையும் மெயப்சிலிர்க்க வைப்பதாக அமைந் துள்ளது.
நிருவாக எல்லையின் - கேந்திர ஸ்தானத்தில் . تغیی ܬܐ அமைந்துள்ள இவ்வால '
தற்போது ராஜகோபுரத்து, ஆரையம்பதிபுர
யம் கடந்த சில தசாப்தங் களாக புனருத்தாபன பணிகள் எதுவும் இன்றி சீர் குலைந்த நிலையில் காணப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவ்வாயல அறங்காவல் சபையினர் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டு பல அன்டர்கள் மற்றும் பொது மக்களிடம் நிதிசேகரித்து இவ்வாலயத்தின் திருப்பணி வேலைகள் பலவற்றையும் திறம்படச் செய்து முடித்துள்ளனர்.
ஆனால் நீண்ட காலத்திற்கு முன் இவ் வாலயத்தின் முன்புற இராஜகோபுரத்தை எழுப்புவதற் TLTTLkO S LLLLLeeuTTLTT LLLL L0S a TLTT aaTTTLTTS0 இராஜ கோபுரம் எழுப்பப்படாத நிலையில் இவ்வாலய முன்புறம் மொட்டையாக காட்சியளித்து வருவது
 
 
 
 

தி முருகன் ஆலயத்துக்கு என்ற பக்தர்களின் குறை நீங்க நவிளையாடல்’
பக்தர்களுக்கு பெரும் கவலையை அளித்து வந்துள்ளது.இவ்வாலயத் துக்கு ஒரு இராஜ கோபுரம் அமையப் பெற்றால் எத்துணை சிறப்பாக அமைவுறும் ! ୩ ବର୍ଯ [l] பல வேறு பக்தர்களும் உளம் வெதும்பி உருகிய போதிலும் அதிக பொருட்செலவிலான இத் தனை பெரிய ஆக்கப்பணியினை முன் வின்று நடத்தி வைக்க அவர்களது பொரு எாதார நிலைமைகள் இடம் தரவில்லை.
இந்நிலையி லேயே முருகப்பெரு மான் அன்ைமையில் அற்புத திருவிளை யாடல் ஒன்றைப் புரிந் துள்ளான். ஆரையம் U-5157)||| Լիրյւն է ՈւLDIEEETEiS EEILIT வில் வசித்துவரும் வசதி படைத் த அடியார் ஒருவரின் கனவில் காட்சி தந்த முருகப் பெருமான் இவ்வாலயத்துக்கான இராஜகோபுரம் அமைப் பதற்கான நிதி யத்தை வழங்குகின்ற விருப்பினை அவரிடம் இருந்து இலகுவாகவே பெற்றுத் தந்துவிட்டான். இராஜ கோபுரம் நிறுவுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
LEர் கம்பீரமாகக் காட்சியளி *கந்த சுவாமிஆலயம்.
கலியுகக் கந்தனின் திருவுளத்துக்கு அமைய கடந்த 3498ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சம்பிர தாயப்படியும் சமய அனுஷ்டானவிதிமுறைப்படியும் தவத் திரு பூர்மத் சுவாமி ஜீவனானந்தாஜி மகராஜ் அடிக்கல் நாட்டிவைக்க பக்தர்கள் அரோகரா கோஷம் இசைக்க இராஜகோபுர நிருமான அங்குரார்ப்பன வைபவம் நிகழ்ந் தேறியது.
(நன்றி வீரகேசரி 02.05.1998)
117

Page 146
இம்மலருக்கு மன
க.இராஜரெத்தினம்; முன்னாள் அரச பணி யாளர். முன்னாள் ஆரை யம் பதி பரமநயினார் ஆலய பரிபாலனசபைச் செயலாளர். பல ஆய்வுக் கட்டுரைகளை சிறப்பு மலர்களில் எழுதியவர். ஆரையம் பதி ஆலய வரலாறுகளை நன்கு அறிந்தவர். தமிழறிவும் சமய அறிவும் மிக்கவர்.
இரா.நாகலிங்கம் (அன்புமணி) முன்னாள் உதவி அரசாங்க அதிபர். மட்டக்களப்பு வாழ்வியல் தொடர்பாகப் பல கதை, கட்டுரை, நாடகங்களை எழுதியவர். மட். பிரதேச இலக்கிய வளர்ச்சியிலும், வரலாற்றுப் பதிவிலும் ஈடுபாடு கொண்டவர். பல நூல்களை "அன்பு வெளி யீடு மூலம்" வெளி யிட்டவர்.
க. தநர் கேளப் வரி: தொல்லியல் பட்டதாரி. மட் மாவட்ட கலாசார உத்தியோகத்தர், ஆய் வக்கட்டுரைகள், ஆய்வு நூல்கள் எழுதியவர். சர்வதேச மட்ட ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப் பித்துள்ளவர்,
மு.கனபதிப்பிள்ளை. (முனாக்கானா): கவிமணி, கலைமணி, கலாபூஷணம் பட்டங்கள் பெற்றவர், கூத்துக்கலை,நாட்டார் இயல் முதலியவற்றில் தீவிரஈடுபாடு கொண்டவர். கவிஞர், நாடகாசிரியர். கூத்துக்கலைஞர், நகைச்
di GI GL FLI JITT ĠTT T.
118
 
 
 

எம் சேர்த்தவர்கள்
க.சபாரெத்தினம்;
"ஆரையம்பதி மக்கள் வாழ்வியல் கட்டுரை ஆசிரியர். மொஸ்கோவில் கடமைஆற்றிய காலத்தில் மட்டக்களப்பு வாழ்வியல் தொடர்பாகப் பல கட்டுரை களை வெளிநாட்டுச் சஞ்சி கைகளில் எழுதியவர். தற்போது மட் கச்சேரியில் நிர்வாக உதவியாளராகக் கடமை ஆற்றுகிறார்.
ஐ.சிவசுந்தரம்: பயிற்றப்பட்ட ஆசிரியர், 1960களில் பல மேடை நாடகங்களை எழுதித் தயாரித் து (BLD GTL ஏற்றியவர். நாடகப் பரிசுகள் பெற்றவர். அமைதியான போக்குடன் ஆழமாகச் சிந்திப்பவர்.
சி.க.பொன்னம்பலம்: முன்னாள் உள்ளுராட்சித் திணைக்கள உத்தியோ கத்தர்.(தற்போது நிர்வாக உத்தியோகத்தர் "சரீரம்" ரீலங்கா நிறுவனம்) செய்யுள் இயற்றுவதில் திறமைமிக்கவர். "தெய் வப் பாமாலை" நூலாசி ரியர்.சமயம், இலக்கியம், சமுகப்பணி ஆகியவற்றில் முழுமையான பங்களிப்புச் GTLILIfusi.
தமிழ்மனி சிவ. விவேகானந்தமுதலியார்: அன்றுமுதல் இன்றுவரை தமிழ்பணி, சைவப்பணி புரிந்துவருபவர். செய்யுள் யாப்பதில் வல்லவர். இலக் கிய அறிவுமிக்கவர்.ஆய்வு நோக்கில் கட்டுரைகள் எழுதி வருபவர். தமிழ் அறிவும் சமய அறிவும் கொண்டவர்.

Page 147
சிவசோமசுந்தர்னார் (அமரர்) வைத்தியமும், இலக்கிய மும் இவரது இரு கண்கள் அற்புதமான செய்யுள்களை யாத்தவர். பதிகங்கள் பாடியவர். ஆரையம்பதியின் முன்னோடித் தமிழறிஞர் களில் ஒருவர். ஆழந்த புலமை உள்ளவர்.
ப.பொன்னையா:
கிராமசேவை உத்தியோ கத்தர், ஆரையம்பதியின் பாரம்பரியங்களில் ஆழந்த ஈடுபாடு உள்ளவர், சமயச் சடங்குகள் பற்றி அறிந்தவர் அமைதியும், அடக்கமும் இவரது தனித்துவம்.
த.தங்கவடிவேல்:
முன்னாள் மணினியல் அதிகாரி மகாவலித்திட்ட உத்தியோகத்தர். இந்து சமயதத்துவங்களில் ஊறித் திளைத்தவர். ரீ ராமகிருஷ் னதேவரின் போதனைகளில் ஈடுபாடு கொண்டு சமய வழியில் தன்னை அர்ட் பணித்தவர். கல்லடி திருச் செந் துTர் ஆலயத்தில் உதவிப் பூசகர். ஆங்கில அறிவு மிக்கவர்.
ஆதங்கராசா: முன்னாள் இ.போ.ச அலுவலர். புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் மட்டக் களப்பு பிரதேச மக்கள் வாழ்வியலைத் தனது ஆக்கங்களில் பிரதி பலிப்பவர்.
 

க. சொக் கலிங்கம் : கிராமசேவை உத்தியோ கத்தர் ஆரையம்பதி மக் கள் வாழ்விலும் ஆலய நட வடிக்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கலை இலக்கிய முயற்சி களுக்கு உதவுபவர்.
த.மலர்ச்செல்வன்: கலைப்பட்டதாரி, ஆழ்ந்த சமுகநோக்கு உள்ளவர், சிறுகதை, கட்டுரை, கவிதை எழுத்தாளர், மணி முனைப் பிரதேச சாகரித்தரிய விழாப் போட்டியில் சிறுகதை, கவிதைக்கான பரிசுகள் பெற்றவர்.
ஆரையூர் இளவல்: முன்னாள் சிரேஷ்ட கிராம சேவை உத்தியோகத்தர். புகழ்பெற்ற நாடகாசிரியர். சிறந்த பேச்சாளர். 75 நாடகங்களை வரை எழுதித் தயாரித்து மேடை யேற்றியவர். பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.
காசுபதி நடசாசா:
சிரேஷ்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர். மட்டக் களப்பு மக்கள் வாழ்வின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பாடு பட்டு உழைப்பவர். சிறந்த பங்களிப்பு செய்பவர்.
செதாமரைச்செல்வி եւ 5it Լելք எழுத்தாள மானவி. கவிதையில் மிகுந்த ஆர்வம் கொண்ட வர். பாடசாலை கலை நிகழ்ச்சிகளில் முக்கிய பங்களிப்பு செய்பவர்.
119

Page 148
--E4,6 ou I நிருமானப் பணிக
1. இராஜகோபுரம் நிருமான உபயம்; வ.கணபதிப்பி
2. மூலஸ்தான, வசந்த மண்டப உருவ அமைப்பு
3. சுற்றுமண்டப தளமிடல் உபயம்: திருதம்பியப்ப
4. மகா, சபா, கொடித்தம்ப மண்டபங்களுக்கான த
திரு.பீ. குலசேகரமுட
5. விஷ்ணுகோயில் நிருமாண உபயம்: திரு.சோ.பூ
6. பிள்ளையார் - விஷ்ணு இணைப்பு மண்டப நிரு
தெய்வானை குடும்பத்தின் சா தூண்களும் முழுவதும்.)
7. மகா மண்டபம் வர்ண அமைப்பு உபயம்: டாக்
8. கொடிஸ்தம்ப மண்டபத்திற்கான “சீலிங்சீற்” உ
9. வயிரவர் ஆலய வர்ண உபயம்; திரு இளையத
0. வசந்த மண்டப ஸ்துபிக்கான பெயிண்ட் மட்டும்
11. மணித்தூண்கள் வர்ண உபயம்; திருமதி மங்
திரு.திருமதி
2. பிள்ளையார், பிள்ளையார் ஆலய மண்டப வர்ல்
13. நடராஜர் ஆலயத்துக்கான (பெயிண்ட் மட்டும்) உ
14. சண்டேசுவரர் ஆலயத்துக்கான (பெயிண்ட் மட்டு
15. கொடிஸ்தம்பத்திற்கான சில்வர் முலாம் பூசித்தந் 16. தெற்குவாசல் கதவு உபயம்: திரு.சா.கோ 17. சுற்றுமதில்கள் 66 9 Jub: திரு.செ.சோ
18. பிள்ளையார் ஆலய முன்கதவு உபயம் செல்வ
9. விஷ்ணு - வசந்த மண்டப இணைப்புச் சுற்ற
அ. வங்காளக் குடிமக்கள் இ. வீரமாணிக்கம் குடிமக்கள் உ. திருவிளங்கு குடிமக்கள் எ. அலறித்தேவன் குடிமக்கள் ஐ. புலவனார் குடிமக்கள்
56.
குறிப்பு: ஏனைய ஆரையம்பதி வாழ் மக்கள் அனைவரும் இவ்வறிக்கையில் பெயர்ப்பட்டியலை பிரசுரிக்கமுடியா ஆரையூர்க்கந்தன் அருள் சித்திக்கப் பிரார்த்திக்கிறோம்.
120

mflesü உதவி வழங்கியோர்
ள்ளை குடும்பம் திரு.க.பரமானந்தம் அவர்கள்
ஆரையம்பதி
22 UULIfb: திருமதிதம்பிராசா,"ராஜாஸ் லிக்கர் சொப",
ஆரையம்பதி.
ா, இளைப்பாறிய ஆசிரியர், ஆரையம்பதி.
தளமிடலும் மாபிள் பதித்தலுக்குமான உபயம்: b அவரது சகோதர சகோதரரிகளும் மைத்துனர்களும்.
ரணபவான், ஆரையம்பதி (லண்டன்)
மாணிப்பு உபயம்; திருமதி நேசம்மாதங்கராசா அவர்களும் ர்பில் திருமதி கமலாம்பிகை. பரசுராமன் (அத்திவாரமும்
டர் மு.மாசிலாமணி அவர்கள். ஆரையம்பதி.
பயம்: திருமதி இராசம்மா தம்பியப்பா
குமாரநிசந்தன் இளையதம்பி.
நம்பி (லண்டன்)
உபயம்: டாக்டர் ச.பாஸ்கரன். ஆரையம்பதி
வ்கையர்க்கரசி பூபாலரெட்ணம், ஆரையம்பதி
ஞானரெட்ணம், ஆரையம்பதி
ண உபயம்; திரு. ஆர்.துரைராசசிங்கம் குடும்பத்தினர்.
ஆரையம்பதி
LLIb: திரு.மு.தியாகராசா. ஆரையம்பதி
ம்) உபயம்: திரு.பூமுருகன், ஆரையம்பதி த உபயம்: திருநவடிவேல், ஆரையம்பதி
பாலபிள்ளை, ஆரையம்பதி
ாமசுந்தரமூர்த்தி, ஆரையம்பதி
ன் சாயிசங்கர் - சிவனேசராசா
மண்டப நிருமாண உதவிவழங்கிய குடிமக்கள்:
ஆ. ஆறுகாட்டி குடிமக்கள் ஈ. முதலித்தேவன் குடிமக்கள் ஊ. பத்தினாட்சி குடிமக்கள் ஏ. பாலவிக்கிரமசிங்க குடிமக்கள் ஒ. மன்றுளாடி குடிமக்கள்
Frg.
நிதிப்பங்கு நல்கியவர்கள் பட்டியல் நீளமாக உள்ளபடியால் மைக்கு வருந்துகின்றோம். இவர்கள் அனைவருக்கும்

Page 149
திருப்பணிகளில் உதவியோருட
. வர்ண அமைப்பு (பகுதி வேலைகள்) சிரமதான
(அ) செல்வன் தர்மசிறி செல்லத்த
(ஆ) ஜெயா அவர்களும் குழுவின
(இ) ரவி குழவினர், ஆரையம்பதி
만. ஆலய நிருமான ஆச்சாரியார் திரு.கதம்பிராசா
3. ஆலய எய்துபிக்கான உருவ அமைப்பு ஆச்சரி
4. இராஜகோபுர உருவஅமைப்பு ஆச்சாரியார்: திரு
5. கும்பாபிஷேகத்தை நிறைவேற்றிய சிவாச்சாரியார்
t}, பிறவழிகளில் உதவியோர்:
(அ) ஆரையம்பதி விளையாட்டுக்க
(3.b) ஆரையம்பதி கி.மு.சங்கங்கள்
(இ) ரேயி மரக்காலை உரிமையா
(FFF) வீதிகள் அபிவிருத்தி அதிகார
அவரது உத்தியோகத்தர்கள்.
(22 மண்முனைப் பிரதேச சபையி
அவரது உத்தியோகத்தர்கள்
(ஊ) மண்முனைப் பிரதேச செலயர்
(GT) ஆரையம்பதியில் கடமைபுரியு
(ஏ) உழவு இயந்திரங்கள் தந்துத
மகாகும்பாபிஷேக மலர் குழு
 

ம் பிறவழிகளில் உதவியோரும்
ப் பனிமூலம் நிறைவேற்றியவர்கள்
ம்பி குழுவினரும், ஆரையம்பதி நம் ஆரையம்பதி (அராலி)
சிறிகரன், ஆரையம்பதி
பார்: திரு.மா.காண்டீபன்
உசந்திரன், யாழ்நகர்,
கள் சிவறி மாணிக்கவாசகக்குருக்களும் குழுவினரும்
цріѣЕliѣбїї
அனைத்துக்கும்
னர் திரு.சுதாகரன் அவர்கட்கும்
சபையினர் மாகாணப்பணிப்பாளர் திரு.வி.நவரெத்தினம்
ன் தவிசாளர் திரு.க.நவரட்ணராசா
திரு.மா.உதயகுமார் அவரது உத்தியோகத்தர்கள் ம் சகல கிராமசேவை உத்தியோகத்தர்கள் விய உரிமையாளர்கள்
வினர்
15.7.1979ல் நடைபெற்ற மகா கும்பாபிஷேக தினத்தன்று
நயினை பிரதிஷ்டா பூஷணம் சிவபூTநீ சுவாமிநாத பரமேஸ்வரக்குருக்கள் அவர்கள
ஆசியுரை வழங்குகின்றார்கள்.
121

Page 150


Page 151


Page 152

ரப்பற்று
ற் அச்சகம், அக்கை
TG)JF
LIQ 339L
(மல்