கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாவலர் பெருமான் 150வது ஜயந்தி விழா மலர்

Page 1


Page 2


Page 3
என். சே
மெய்கண்டான்
161, செட் | கொ

பெருமான்
யந்தி விழா லர்
fu u ni:
ாமகாந்தன்
K
6iհաց6):
முக நாவலர் சபை ாழும்பு.
அச்சகம் லிமிட்டெட்,
டியார் தெரு, Փւույ-11.

Page 4


Page 5
சமயமும் த.
T என்பதற்காக
Gle, Tsar L. GLITTI
சிலம் என்ற அ । ।।।। இருக்கு சிம்ம ே முகஞர். அத இவர் என்று
இத்தன மாரிங் 150 இந்த மலரை தது பெரும் ே தமிழும் தழை நிறைவேற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

畫
ਹੈ । து நாபொழிந்த செந்தமிழ் மொழியும் களிலுமிருந்து பாதுகாக்கப்படவேண்டும் தம்மை ஒரு தானேத் தளபதியாக்கிக்
고uf.
, ।।।।
றுமுகப் படைக்கலங்களையும் ஒருமுகமாகக்
வத்தையும் தமிழையும் அழிக்க வந்த சூரர்க சாப்பனமாக காட்சியளித்தவர் இந்த ஆறு ਹਨ। கொள்ளுதற்கும் இடமுண்டு அல்லவா?
கய பெற்றி வாய்ந்த நாவ வர் பெரு வது ஆண்டு ஜயந்தி விழாவையொட்டி 과 நல்வாய்ப்பு ਲਗபருகும். இந்த அரும் மலரை சைவமும் சுப் பனி புரிந்து, நாவலர் அபிலாஷ்ைகளே
னும் பணிவுடன் சமர்ப்பிக்கின்ருேம்,
நா. இரத்தினசபாபதி,
இயே பரி, நாவலர் ஜயந்தி விழாக் குழு
曲

Page 6


Page 7
சணுதிபதியின் அலுவலகம்
ජනාධිපති කතයනීතලය (
PRESIDENTS OFFICE
gards
g/ad/a/07
sijavi sop&si pigsser dirt and gpse eldő: Gáj fél a la és öt மசிடிறகிறேன்.
19தீ நுாற்ருள்
p5 m du cu f et a fado. et மரீஸ் சிறநீத கரீபிமாரு 25m 7。。anaデa でBaléó மான் ஆற்றியுள்ள சேவை அaரது புகழி இலங்கையி
such g5 6 5, enfa gas TD
குரியதாகுமீ. சைபே நாவலர் அவர்களது கல அவரது பிறப்பிடத்திலே Þt-sgjasssöGn G slésn í ps Latgangst of 65 nதில் மகிழ்ச்சியடைகிறே
g5 mt an (vs if . Qh LugG| நற்குகைனேடிமீ, இலட் அடிற்றே பிய நீது பாரா
உழைபியதற்கு பிசீவாதி
'g na (6
p, da CLuge di G ஒரு இலட்சிவிaாதியின் வ கொள்வதற்கு யேலுகான நிலேடி டிறரொன்றை ெ சபை எடுக்கு முயற்சிக Gpsinéessed Qagua

ජනාධිපති මන්දිරය,
කොළඹ, ශ්‍රී ලංකාව. சணுதிபதி மாளிகை
கொழும்பு இலங்கை. PRESIDENT'S HOUSE,
Colombo, Ceylon. .
1972 டிசமீபர் 11,
ா இலரி அவர்களது நுாற்றியை மீபதா துே SåG Qaddt du G sågq væG&G நீதர் பிபரீ கிடைத்ததையிட்டு நான் மிகடிமீ
4d a 7 ő táj áő epiát cáf G 

Page 8
fീime Win
SRI LANKA
(Ceylon)
I have great pleasure to be published on the occasion of th Srila, Sri Arunuga Navallar.
Srila Sri Arumuga Nava Ceylonese of the nineteenth century. outstanculing orator, a distinguished m a courageous religious and social ref far-seeing educationist. He adorned example to his fellow-men
ln 1971, the Governmen Head, honoured the memory of Srila Sr conmemorative stamp. Anu this year, hundred and fiftieth anniversary of h Affairs will initiate action to estab birth-place im Niallur, Jaffma.
lit is my earnest hope. only help perpetuate the memory of Sr strengthen and foster the noble ideal during his distinguished public life.
《
ܓܪ*
 

ster
Colombo, 6th December, 1972.
in sending a message for the Souvenir e 150th Birth Anniversary of
llar was one of the most dynamic He was a dedicated patriot, an an of letters, an erudite scholar, ormer, a fearless leader and a everything he touched and was an
t of which I have the honour to be the i Arumuga Navalar by issuing a on 18th Jecember, which marks the one is birth, the Ministry of Cultural lish a Cultural Centre at his
that the se commemorations will mot illa Sri Arumuga Navala ir but also s for which he laboured so tirelessly
------------------ 7
PRME MONSTER.

Page 9
இலங்கை
கெளரவ. சிறிமாவோ
செ
பூரீல பூரீ ஆறுமுக நாவலர் அவர் விழாவை முன்னிட்டு வெளிப்படுத்தப் தியை அனுப்புவதில் நான் மிகவும் மகி
பத்தொன்பதாம் நூற்றண்டில் களில் பூரிலயூரீ ஆறுமுக நாவலரும் மி கல்விமானகத் திகழ்ந்த இவர், நாட தன்னிகரில்லாப் பேச்சாளராகவும் 6 சமயத்தையும், வாழ்க்கை முறைை துணிவுள்ள தலைவனுகவும், பின்வருே திகழ்ந்தார். தன் கொள்கைகளில் ( பின்பற்றியோருக்கு ஒரு உதாரண
1971ஆம் ஆண்டு எனது அரச கார்த்த முத்திரை வெளியிடுவதன் டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி ெ பிறந்த தினத்தைக் கொண்டாடு முக் நகரிலே கலாசார நிலையம் ஒன்றை அமைச்சினுல் ஆரம்ப நடவடிக்கைகள் ருக்கு விழாவெடுப்பதன் மூலம் அ வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணி கொள்கைகள் மேலும் நிலைத்து நிற்க தாழ்மையான தம்பிக்கையாகும்.

ப் பிரதமர்
பண்டாரநாயகா அவர்களின்
ய்தி
„smeru7YYXYYNeYNeY3
கொழும்பு. 1972, டிசெம்பர் 6.
களது நூற்றியைம்பதாவது பிறந்த தின படும் நினைவு மலருக்கு எனது ஆசிச் செய் ழ்ச்சியடைகிறேன்.
இலங்கையில் வாழ்ந்த முன்னேடி வீரர் க முக்கியமானவர் ஒருவராவர். சிறந்த ட்டுப்பற்று மிக்க தேசிய வாதியாகவும், விளங்கியதோடு, தன் நாட்டு மக்களின் யயும் சீரமைத்த புரட்சிவாதியாகவும், வதை முன்னறியும் தீர்க்கதரிசியாகவும் வெற்றிகாண உழைத்ததோடு, தன்னைப் சீலராகவும் விளங்கினர்.
ாங்கம் பூரீலபூரி ஆறுமுக நாவலரை, ஞாப மூலம் நினைவு கூர்ந்தது. இந்த ஆண்டு வருகின்ற அவரது நூற்றியை ம்பதாவது ஈமாக, நாவலரது பிறப்பிடமாகிய நல்லை அமைப்பதற்கு கலாசார அலுவல்கள் ஸ் எடுக்கப்படும். பூரீலபூரீ ஆறுமுக நாவல வரை நினைவு கூர முடிவதோடு, தன் த்து உழைத்த அப்பெரியாரது உயர்ந்த வழிவகுக்கவும் முடியும் என்பதும் எனது
ாவோ ஆர். டி. பண்டாரநாயகா
பிரதம அமைச்சர்

Page 10
திருவாவடுதுை பூநீலபூரீ அம்பலவான
அவர்கள் அ
ஆ சி ச்
MZAZN4 - ö.
சைவவுலகம் செய்த தவப்பய தோன்றி இலக்கண இலக்கிய தருக்க முகமாகக் கற்றுணர்ந்து அவைகளைச் லொழுக்கத்துக்கொரு நாயகமாய் வா னடியார் பத்தி சிவாகம பத்தி முதலிய மின்றி யாவர்க்கு மிளையவராய் வித்துவ பானுவாய்த் திக்கெல்லாம் மெய்ப்புகழ் மும், சிவ மததாபனமும் செய்து அழியா பஞ்சாக்கர தேசிகர் ஆதீனத்திலே குரு நிதானமும் வீற்றிருக்கும் கொலுமண்ட மொழி தமிழ் மொழி வல்ல வித்துவ சன யிலே அதியற்புதமாக வேதாகமப் பிர ணங்களும் மெய்கண்ட சாத்திரப் பிரம ருந்து தாண்ட வஞ் செய்ய யாவரும் சொன் மழை பொழிந்து பெருமகிழ்வூட் இயற்பெயரொடு சார்த்தி ஆறுமுக நா சிறப்புக்களையும் செய்து பாராட்டிய ரது திருவுருவச் சிலையைப் பதிட்டித்து நெறியைப் பின்பற்றிச் செந்தண்டமிழ் யத்தையும் உண்மையாக வளர்த்துப் பர செய்யும் எல்லா வகையான முயற்சிகளே
நமது நாவலரவர்களை நினைவுகூர் ழர் கடமை; சைவசமயிகள் கடமையுமா

D ஆதீனகர்த்தா ன பண்டார சந்நிதி
புளித்துள்ள செ ய் தி
) NVANZAMZAN
பனுல் யாழ்ப்பாணத்து நல்லூரிலே நீதி நூல்க ளனைத்தையும் நல்லாசிரியர் செவ்வே சிந்தித்துத் தெளிந்து நல் ப்மையே நல்லுருவாய்ச் சிவ பத்தி, சிவ வைகளால் முதிர்ந்து ஒப்பாருமிக்காரு சிகாமணியாய் சைவசித்தாந்த ஞான பெற்று விளங்கிப் பரமத கண்டன த செயத் தம்பம் நிறுத்தி நம்முடைய மூர்த்தத்தின் திருமுன்னர் உபய சந் - பத்திலே தம்பிரான் கூட்டமும் வட ங்களும் கூடியிருந்த பெரும் பேரவை மாணங்களும், திருமுறைகளின் பிரமா ாணங்களும் கொழிக்க நாமகள் நாவிலி சிரக்கம்பம் செய்யுமாறு சைவசமயச் டிய சைவத் தமிழ் மகளுருக்கு அவர்கள் வலர் என்னும் பட்டம் வழங்கிப் பல மது ஆதீனம், இன்று அப்பெருமகன இக்கால மக்களும் அவர்களுடைய மொழியையும், சித்தாந்த சைவ சம ப்பித் தொண்டு செய்ய முற்படுமாறு பும் மிக மிகப் பாராட்டுகிறது.
வதற்கு ஆவனவெல்லாம் செய்தல் தமி ம். -

Page 11
நீலநீ ஆறுமுக நாவ மேன்முறையீட்டு
மாண்புமிகு வீ. சிவசுப்
செ
axerxasız : 6
நாவலர் பெருமான் எமது நாட்டு பெருமகன். சைவ சமயத்துக்கும் செந்: புரிந்த பணிகள் மிகப் பல. அந்நிய ச போது, அதைத் தனிமனிதராக நின்று போராடி வெற்றிபெற்ருர். அவர் அ. தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய தது. எனவேதான் அவர் விடுதலை இய போற்றப்படுகின்(ரர். சென்ற நூற்ரு எ விடில், ஈழமணிநாட்டின் வரலாறே திை
நாவலர் பெருமானின் தன்னலப நினைவஞ்சலியா , சிறிய காணிக்கைய பிறந்த பதியாகிய நல்லூரில் சில ஆண்( சபை நிறுவியுள்ளது. அவ்விடத்தில் அவ அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் எ( நூலகம் ஒன்றை அமைப்பதற்கு வேண் பட்டுள்ளன. இவை மட்டுமல்ல, இன்னு தமானவர் நாவலர் பெருமானே ஆவர்.
நாவலர் பெருமான் ஆற்றிய ப6 கெளரவித்து சென்ற ஆண்டில் தபால் வாழ்ந்த இல்லத்தை கையேற்று அதில் சைவ, தமிழ்க் கலாசார நிலையத்தையும் சிக்குரியதாகும்.
மகான்கள், மேதைகள், சரித் மறைந்தாலும், அவர்கள் காலத்தை ே தில் என்றுமே வாழ்வார்கள்; எனினு ஜயந்தி தினங்களையும் கொண்டாடுவ புத்துணர்ச்சியும் பெறுவதற்காகவே.
சரித்திர புருஷராகிய நாவலர் டாட்டங்கள் எமக்கு புத்துணர்ச்சியைய வதற்கு வேண்டிய உறுதியையும் ஏற்படு

லர் சபையின் தலைவர்,
நீதிமன்ற அரசர் பிரமணியம் அவர்களின்
ய் தி
' , Besar
தி மக்கள் செய்த தவப் பயனுல் பிறந்த தமிழுக்கும் எமது தேசத்துக்கும் அவர் லாசாரம் எமது நாட்டில் ஊடுருவிய அஞ்சா நெஞ்சத்துடன் அவர் எதிர்த்துப் ன்று எழுப்பிய குரலே பின்பு, எமது தேசபக்தர்களின் குரலாக எதிரொலித் க்கத்துக்கு வித் திட்ட முன்னுேடியாகப் ண்டில் ஈழத்தில் அவர் தோன்றியிருக்கா சைமாறிப் போயிருக்கும்!
மற்ற தொண்டுகளுக்கு தமிழ் மக்களின் ாக அவரின் திருவுருவச் சிலையை, அவர் டுகளுக்குமுன் பூணூரீலபூரீ ஆறுமுக நாவலர் பர் பெயரால் அழகிய மணிமண்டபமும் ழுதிய நூல்கள் அனேத்தையும் கொண்ட ாடிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் மும் எத்தனைய்ோ செய்வதற்கும் பொருத்
Eகளின் நினைவாக அரசாங்கம் அவரைக் முத்திரை வெளியிட்டு, இப்போது அவர் , நாவலர் அரும் பொருட்சாலையையும்,
நிறுவுவதற்கு முன்வந்துள்ளது மகிழ்ச்
திர புருஷர்கள் முதலியோரின் உடல் வன்ற புருஷர்களாக, மக்கள் உள்ளத் றும் அவர்களின் நினைவு நாட்களையும் து சமுதாயமும் தேசமும் நல் வாழ்வும்
பெருமானின் 150-வது ஜயந்திக் கொண் பும், முன்னேற்றப் பாதையில் நாம் செல் த்ெதுவதாக!

Page 12
பூநீலழநீ ஆறுமுக 15
பொதுச் .ெ
திரு. ம. பூநீகாந் செப
***NAMNSRAYAR
சென்ற நூற்றண்டில் வாழ்ந்: தொண்டு புரிந்தவரும் ஈழத் தமிழினத் விளங்கியவருமான நல்லூார் பூரீலபூரீ ஆ வைப் போற்றி அவர் ஆற்றுப்படுத்திவி முனைப்புகளை, பணிகளை முன் எடுத்துச் ஆரம்பிக்கப்பட்ட எமது சபை, கடந்த ளின் துணை கொண்டு பொது மக்களுை ஆண்டு ஜூன் மாதம் அவரின் திருவுருவச் களின் பின் முதற்தடவையாக நிறுவிய நாளைய கனவை நிறைவேற்றியுள்ளது.
சிலை நாட்டு விழாவையொட்டி நான்கு நாள் சிறப்பு மகாநாடும் நாடே காணு பெரு விழாவாக சபையால் நடாத
நாவலர் பெருமானின் நினைவுக் கோணத்தில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் யும் வெளியிட்டது.
கடந்த ஆண்டுகளில் நாவலர் கு லர் பெருமானைப் பற்றிப் புத்துணர்வு ஏ நாடெங்கும் கொண்டாட ஏற்பாடு செ முள்ள மாணவர்கள் கலந்து கொள்ள போட்டிகளும் சபையால் ஏற்பாடு செ
நல்லூர் நாவலர் நிலையத்தில் நவீன முறையில் நாவலர் மணிமண்டட
நாவலர் பெருமானைக் கெளரவி வெளியிட்டதற்காக எமது மகிழ்ச்சியை தெரிவிக்கின்ருேம்.
ஒரு நாட்டினதும் சமுகத்தினது பணி புரிந்த சரித்திர புருஷரின் 150-வ
எமது தேசத்துச்கும், சைவத்துச் மகா புருஷராக விளங்கும் நாவலர் .ெ கொண்டாடி, அன்னர் காட்டிய வழியி

ாவலர் சபையின்
சயலாளர்
J, T O. B. E. அவர்களின்
ப்தி
து, சைவத்துக்கும் தமிழுக்கும் சீரிய 1 தின் வரலாற்றுத் திருப்பு முனையாக ஆறுமுக நாவலர் பெருமானரின் நினை பிட்டுச் சென்ற நோக்கங்களை, ஊக்க செல்வதை இலட்சியமாகக் கொண்டு
நான்கு ஆண்டுக் காலத்துள் திருவரு டய பேருதவியுடன் சென்ற 1969-ம் ச் சிலையை நாவலர் மறைந்து 90 ஆண்டு தன் மூலம் ஈழத் தமிழர்களின் நீண்ட
ஒரு வார காலத்துக்கு சிலையூர்வலமும் கண்டுவியக்கும் வண்ணம் வரலாறு த்தப்பட்டது.
கருவூலமாக நாவலர் பற்றி பலவேறு கட்டுரைகள் கொண்ட நாவலர் மலரை
குரு பூசையை நாட்டு மக்களிடம் நா வ ரற்படும் வகையில் நாவலர் வாரமாக ய்யப்பட்துடன், அனைத்திலங்கையிலு க்கூடிய வகையில் கட்டுரை பேச்சுப் ப்து நடாத்தப்பட்டன.
சுமார் அரை லட்சம் ரூபா செலவில்
த்தையும் சபை கட்டி எழுப்பியுள்ளது.
த்து அஞ்சல் தலையை சென்ற ஆண்டு பயும் நன்றியையும் அரசாங்கத்திற்குத்
ம் வரலாற்றில், அம்மக்களுக்காக அரும்
து ஜயந்தி முக்கியமானதாகும்.
*கும் தமிழுக்கும் ஒப்பிலாப் பணி புரிந்த
பருமானின் 150-வது ஜய ந் தி யைக் சில் சென்று உய்வு பெறுவோமாக !

Page 13
தமிழ் மூதறிஞ
சி. கணபதிப்பில்
ஆசி
7ெல்லாச் சமயமும் இருப்பது நீதி என்பது சைவசமயத்தின் தலையாய அ டி ப் படை கி கொள்கை, சமயங்கள் அவ்வவர் தகுதிக்கேற்ட அமைந்தவை எந்த ஒரு சமயமும் புறக் கணிச் கத்தக்கதன்று.
நல்லாசிரியன் ஒருவன் பலவேறு வகைட் பட்ட மாணவர்களனைவருமாயிருப்பன் என்பர் அந்த நல்லாசிரியனை ஒத்தது சைவசமயம். ‘ஒது சமயங்கள் ஒன்ருேடொன் ருெவ்வாமல் இருந் தபோதிலும் இப் பரிசாஞ் சமயமுமாய் இருட் பது சைவம் என்கிருர் தாயுமானவர். சைவம் சமய மாற்றம் என்பதை அறியாது. அங்கனமா தல அதன் "மேன்மை கொள் நீதி சைவ நீதி.
சைவத்தின் அடிப்படைத் தத்துவம் நீதி, அதனுலே "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்" என்கிறது புராணம்,
சைவம் சிவசம்பந்தம். சைவரீதி சிவசப் பந்தி யாதற்குபகாரமான நீதி, நீதியே தெய் வம். பங்கயத் தயனுமாலறியா நீதியே என்கின றது திருவாசகம் தெய்வ சாந்நித்தியமான நீதி பின் நுண்மை எட்டுதற் கரியது. "நீதியால் வாழ மாட்டேன்!” என்கிருர் அப்பர்.
இத்துணைச் சிறந்த நீதி மந்திரத்தினுப் மிக்க வலியுடைத் தென்பதற்கு இதிகாசத்தி லும் புராணத்திலும் கதைகளுண்டு. தருமr இறந்து பட்ட தம்பிமார் நால்வருள் ஒருவன் மந்திரத்தாலும். ஏனையவரைத் தமது நீதிய

தர், பண்டிதமணி
ஸ்ளே அவர்களின்
யுரை
னலும் உயிர் பெற்றெழச் செய்தார் என்பது பாரத இதிகாசக் கதை. பெரிய புராணத்தில் எறிபத்தரும் புகழ்ச் சோழருஞ் சந்தித்த சந் திப்பு நீதிச் சந்திப்பு. அச் சந்திப்பால் இறந்த வர்கள் எழுந்த வரலாறு பிரசித்தம்.
புராணேதிகாசங்களாலும் தேவார திரு வாசகம் முதலிய அருட்பாக்களாலும் பாராட் டப்படுவதும் எட்டுதற்கரியதுமான நீதியை ஒரு சிறு அளவுக்காயினும் எட்டி போக்குவதொரு வாய்ப்பைச் சென்ற நூற்ருண்டில் சின்னஞ் சிறு வர் ஒருவருக்கு அருளிச் செய்தார் கடவுள்
ஆறுமுக நாவலருக்கு வயசு பன்னிரண்டு. 1834ம் ஆண்டில் பேர்சிவல் பாதிரியாரின் மத் திய கல்லூரியில் ஆங்கிலம் கற்கும்படி சேர்க்கப் பட்டார். அங்கே மத மாற்றத்திற்கென்றே காப்புக் கட்டிக்கொண்டிருப்பவர்களை உற்று நோக்கினர் சிறுவராகிய ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம் முழுவதிலும் அப்படியான தொரு நிலை தோன்றி இருப்பதை அங்கே இருந் துகொண்டே பார்த்தார். வட்டுக்கோட்டைச் செமினரியும் அவர் கண்முன் நின்றது.
**நல்ல வழிகாட்டுவோம் உடுபுடைவை சம்பளம்
நாளு நாளுந் தருகுவோம் நாஞ் சொல்வதைக் கேளும் என
மருட்டிச் சேர்த்து நானமுஞ் செய்து விட்டார்"
என்ற முத்துக்குமார கவிராயர் பாடலை அந்த
இளம் வயசில் நாவலர் அறியாதிருக்கலாம்.

Page 14
எப்படியோ அப்பாடலின் கருத்து நாவலர் உள் ளத்தில் உதயமானது.
"மதமாற்றம் நீதி தான?’ என்ற கேள்வி எழுந்தது. கண்ணிர் பெருகியது. இளமையில் என்ன செய்ய முடியும். பதினன்கு வருடம் அந் தச் சூழ்நிலயிற் கழிந்தது. மனம் புழுங்கிக் கொண்டேயிருந்தது.
ஐயையோ இதற்கு என்ன செய்வேன்." நெடுங்காலமாக இரவு பகலும் நினைந்து பெரு மூச்செறிதலும் பலருக்குப் பிதற்றலுமே தொழி லெனக் கொண்ட என் உண்மை. என்று ஓரிடத் தில் நாவலர் எழுதிய வசன பாகத்திலிருநது அவருடைய மன வேதனை அறியத்தக்கது.
இருபத்தாரும் வயசில் அநீதியைச் சகிக்க முடியாத நிலை குமுறிக்கொண்டெழுந்தது. இச் சரீரமாகிய சாதனம் இருந்தென்! ஒளிந்தென்! என்று முடிகிறதொரு உக்கிர வசனம் சைவ தூஷண பரிசார விக்கியாபனத்தில் வருகின்றது. நீதியின் அடிப்படையிற் றேன்றிய தமது சமயத் தைப் பாதுகாக்கத் தம்மை முழுதும் அர்ப் பணித்துவிட்டார் நாவலர் பெருமான் அதத இருபத்தாரும் வயசில்.
நீதி வழித வருது நிலைத்து நின்று நாவலர் தமது சமயத்தைப் பேணும் நீதி நெறிக்கு பாதி ரிமார் தலைவணங்கினர்கள். பெரிய படிப்பாளி யான பேர் சிவல் "எனது குரு" என்று பாராட்டு வதொரு நிலையும் கைகூடியது.
இராம இராவண யுத்தத்தில் இராமனது யுத்த நீதியை இராவணன் பாராட்டினன். அல்

வாறே பாதிரிமாரோடு நடத்திய சமய யுத்தத் தில் நாவலரின் சமய நீதியைப் பகைமுகத்தவர் களாகிய பாதிரிமாரே பாராட்டினர்.
பூர்வ காலத்திலே சைவசமய விருத்திப் பொருட்டு முயன்ற பெரியோர்களுக்குச் சுவ சமயிகளாலே நன்கு திப்பும் பரசமயிகளாலே இடையூறும் செய்யப்பட்டன. தற்காலத்தில் சைவசமய விருத் இப்பொருட்டு முயலும் சிறி யேனுக்குச் சுவசமயிகளாலேயே அவமதிப்பும் இடைஞ்சலும் செய்யப்படுகின்றன. பரசமயி " களோ எனக்கு இடையூறு செய்யவுமில்லை; என்னை அவமதிக்கவுமில்லே. இஃதென்னை யாச்
சரியம் என்கிறர் நாவலர் பெருமான்.
நம்முடைய சைவ சமயிகள் தங்கள் சமய மும் பாஷையும் விருத்தி யடையும் பொருட்டு நான் செய்யும் முயற்சிகளுக்கு உதவி செய் யாமை மாத்திரையின் அமையாது, பெரும் பான்மையும் அவமதிப்பும் இடையூறும் செய் கின் ருர்கள் என்று நம்மவர்களேயே நொத்து கொள்ளுகின்றர் ஆறுமுக நாவலர்.
நாவலர் அவதரித்து நூற்றைம்பது ஆண்டு நிறைவு பெறும் இச்சந்தர்ப்பத்தில் நாவலர் பெருமான் மனம் நொந்து நம்மவர் மேல் ஏற் றிய கதைகளை அப்பெருமான் காட்டிய நீதி நெறி நின்று துவரத் துடைத்து நாவலர் பெரு மானின் நல்லாசிக்குப் பாத்தி "மாவோ மாக
என்ற முறையில் என் ஆசியை வழங்குகின்றேன்.
数

Page 15
வணக்கம்
S S-Søv-ø"os"WS-ØS-ØNov-8-4"W-"
நல்லை நகர் தந்: மறைந்து சுமார் ஒரு நு செம்மலாக, தமிழ் உை பூமியாகிய இம் மரகத யாகவும், மக்கள் இயக் டப்படுகின் ருர்,
நாவலர் பெருமான் எம் ஈழமணி நாட்டின் மையை வரலாறு நிரூபி
எமது தாய்த்திருநா வைத்திருப்பதற்குத் தி தமது கலாசாரத்தை ஆ யில், நாவலர் அச்சூழ்ச் மலர்ச்சியுறச் செய்தார் லும், வரலாற்றுக் கட ராக, தேசியப் பெரியார
ஒரு நாட்டின் விடி 6 ரின் 150-வது ஜயந்தி, வைபவமே. நாஸ் லர் ( பொருத்தமான நிகழ்ச்! திருப்பெயரால் இயங் நோக்கத்தினைக் கொண் போதிலும், பெருமான பியது.
நாவலர் ஜயந்திக் லும் யாழ்ப்பாணத்திலு நாவலர் சிலைகள் அன்ப கள் இலக்கிய வளர்ச்சி, தைத் துறைகளில் போ! பெற வேண்டுமென வி( எம்மை எதிர்கொண்ட கொண்டிருந்த அருங்

த செல்வமாகிய நாவலர் பெருமான், அவர் ாற்ருண்டுக்குப் பின், இன்று சிவநெறி வளர்த்த ர நடையின் தந்தையாக மட்டுமல்ல, எம் அன்னை மணிநாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முன்னுேடி *க மூலவராகவும் மதித்துப் போற்றிக்கொண்டா
சென்ற நூற்ருண்டில் தோன்றியிருக்காவிட்டால்" சரித்திரமே திசைமாறிப்போயிருக்கும் என்ற உண் த்துவிட்டது.
ாட்டை என்றுமே அடிமையாக தமது ஆதிக்கத்தில் ட்டம் வகுத்து, அதை நிறைவேற்றும் கருவியாக ங்கிலேயர்கள் சுதேச மக்கள் மீது திணித்த வேளை சியை எதிர்த்துப் போராடி சைவசமயத்தை மறு அதனுல் சமய நாயகராக அவர் விளங்கியபோதி மையை நிறைவேற்றியதன் மூலம் சரித்திர புருஷ ாாக நாடு அவரை மதித்துப் போற்றுகின்றது.
வுக்கும், உயர்வுக்கும் மூலகாரணராக விளங்கியவ அந்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் முக்கிய பெருமானின் ஜயந்தியை தேச மக்கள் சிறப்பாக சிகளுடன் கொண்டாடும் இவ்வேளையில், அவரின் கி, அவரின் நினைவுப் பணிகளை நிறைவேற்றும் டுள்ள நாவலர் சபையும், பல சிரமங்கள் இருந்த ன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட விரும்
கொண்டாட்டத்தின் அம்சங்களாக கொழும்பி 1ம் நான்கு நாள் விழா; பொதுஸ்தாபனங்கட்கு ளிப்பு: மாணவர்க்கு கட்டுரை-பேச்சுப் போட்டி க்குத் தூண்டுகோலாக சிறுகதை, நாடகம், கவி ட்டிகள்; சிறப்பு மலர் வெளியீடு-முதலியன இடம் நம்பினுேம். எனினும் எதிர்பாராத இடுக் கண பல ன. அவ்வேளையில், நாவலர் பெரும்ானிடம் குடி தணங்களிலொன்ருகிய அஞ்சாமையே எமக்குத்

Page 16
தஞ்சம் அளித்தது. இரு வார கா பிட்ட திட்டங்களை நிறைவேற்றி
காரணத்தால், இவற்றை இங்கு வி
இனி; இம்மலரைப்பற்றியும் பதியில் நாவலரின் சிலையை நிறுவ பட்ட மாமலர்போல ஒரு மலரை கும் பொருத்தமாகும். எனினும் மின்மையும், வசதியீனங்களும் த
இம்மலர் அளவிற் சிறியதெனி மாய், அழகும் மணமும் நில நம்பிக்கை. இதில் இடம்பெற்று ெ ஞர்களுக்கு நாம் பத்து நாட்கள் எனினும் அவர்கள் தமது பணிை ளுக்கு எமது பாராட்டும் நன்றி வேறு பணிகளையும் எடுத்து விளக் காரணத்தால், முன்பே வெளியி மறுபிரசுரம் செய்ய வேண்டியத கும் பிரசுரங்களுக்கும் எங்கள் நன்
இம்மலரின் அச்சு வேலைகள் : இக்காரணத்தால், இடையிடை
பிழைகளுக்காக உங்களின் மன்னி
இனி, மலரை நுகருங்கள்.
ట్కి
ஜ்
・;
*
s
g

ல அவகாசத்தில் மட்டுமே மேற்குறிப் யுள்ளோம். விழாச் செயலாளன் என்ற பிபரித்தேன்.
சிலவார்த்தைகள். 1969-ல் நல்லையம் வி-மாநாடு நடத்தியபோது வெளியிடப்
வெளியிடுவதுதான் இச் சந்தர்ப்பத்துக் அவ்வாறு செய்ய இயலாதபடி அவகாச டையாக நின்றன.
னும், நாவலர்பற்றிப் புதியதும் அரியது றைந்து விளங்குகின்றதென்பது எமது ாள கட்டுரைகளை எழுதியுதவியுள்ள அறி அவகாசம்கூட கொடுக்க முடியவில்லை. யச் செவ்வனே செய்துள்ளனர். அவர்க யும் உரியன. இம்மலர் நாவலரின் பல் கேக்கூடியதாக அமைய வேண்டுமென்ற டப்பட்ட சில கட்டுரைகளையும் இங்கு ாயிற்று. சம்பந்தப்பட்ட அறிஞர்களுக் றியைத் தெரிவிக்கின் ருேம்.
ஒரு வார காலத்தில் முடிக்கப்பட்டவை:
யே எட்டிப் பார்க்கும் சில எழுத்துப் ப்பைக் கோருகின்ருேம்.
என். சோமகாந்தன்
ஆசிரியர்.

Page 17
10.
11.
2.
13
14.
15.
16.
7.
18.
19.
நாவலர் தாள் இறைஞ்சுது
ஆறுமுக நாவலர்
நாவலா சாதனை
ஈழநாட்டில் தமிழ் வளர்ச்சி
நாவலரும் தமிழகமும்
நாவலர் வழிவரும் இலக்கி
நாவலர் தமிழிசை
நாவலரின் சைவத் தொண்
நாவலரும் கீரிமலைப் புனரு
"பழியெனின் உலகுடன் பெ
நாவலரும் துவையினம் துை நாவலரும் மெதடிஸ்த F6
நாவலர் வரலாற்றசிரியர்களு
காலத்தை வென்று நிற்கும்
காலத்தின் பின்னணியில் ந
நாவலர் நடத்திய இயக்கம்
இலக்கியவாதிகளின் சொத்
தேசிய, ஜனநாயக, மக்கள்
நாவலர் பெருமான்

ш шDJ LЧ .................
டு .
த்தாரணமும் .
றினும் கொள்ளலர்".
ரையும் .
1 պՖ . ரும் நாவலரின் பதிப்புக்களும்
) நாவலர் .
ாவலர் .
து
இயக்க மூலவர்
16
17
28
30
35
39
48
49
51
54
56
62
65
72
77
80
82
85

Page 18
usår i
பூமணக்கும் பொழில் மணக்கும்
பாமணக்க உரை மணக்கப் பக
தேமணக்குந் தமிழணங்கு செய்
நாமணக்க அவதரித்த நாவலன்
 

on-A-Y \a-AAAA.
நாவலர் தாள் இறைஞ்சுதும்
டிதர் - கா. பொ. இரத்தினம்
புனித நல்லூர் தான் மணக்கப்
ர் சைவ நெறி மணக்கத்
த பெருந் தவப்பயனுல்
தாள் இறைஞ்சுதுமே.

Page 19
LITELLT
நீர் வன்மை படைத்த நாவலுர் எடுத்துக் கொண்ட பொருளேக் கேட்பார் நெஞ்சிற் பதியு மாறு மிக மிகத் தெளிவாக எடுத்தியம்பும் பேச்சுவல்லமை உடையவர் அவர். அத்தகைய நாவலருள் ஒப்பும் உயர்வும் இல்லாது திகழ்ந்த பெருநாவலர் ஆறுமுக நாவலர். இவர் யாழ்ப் பானத்து நல்லூரில் வள்ளுவர் பாண்டு 1853 மார்கழி ஐந்தாம் நாள் (18-12-1822) புதி என்று இரவு சிங்கவேளேயிற் பிறந்தார். இவரு டைய தந்தையார் கார்காத்த வேளாளர் கத் தப்பிள்ளை; தாயார் சிவகாமியம்மையார். இவ ருடைய முன்ஞேர் ஒருவர் ஞானப்பிரகாச முனி வர். அம்முனிவர் சிவஞானசித்தியாருக்கு ஒர் உரை எழுதியிருக்கிருர் அவர் வெட்டிய திருக் குளமே அவர் பெயரால் ஞானப்பிரகாசம் எனச் சிதம்பரத்தில் இன்றும் விளங்குகின்றது.
இவருடை தந்தையாராகிய சுத்தப்பிள்ளே பரம்பரைச் சித்த வைத்தியர்; நாடகப் பேராசி ரியர் நாடக நூல்களும், வைத்திய நூல்களும் எண்ணற்றன இயற்றியுள்ளார். அவர் ஒரு நாள் ஒரு நாடகத்தை எழுதிக்கொண்டிருந்த போது திடீரென்று கண்ணே மூடிப் பெருவாழ்வு பெற்ற னர். அரைகுறையாய் இருந்த அந்த நாடக துலே இவர் தொடர்ந்து எழுதி முடித்துவிட் டார். அப்போது இவருக்கு வயது ஒன்பது.
இவருக்கு ஆசிரியராயினர் சுப்பிரமணிய ஞர், வேலாயுதனுர், சரவணமுத்தஜர் என்னும் பெரும் புலவர்கள். அவர்களிடம் இவர் சங்க அல்களேயும், தொல்காப்பியம் முதலிய இலக்
 

ரும் புலவர் ப்பிரமணிய பிள்?ர
7
கன நூல்களே பும் பாடங்கேட்டார்.இவருடைய அறிவு மேன்மையைக் கண்ட இவர் தமையனுர் தியாகராயனுர் ஆங்கிலம் கற்கும் பொருட்டு இவரைப் பீற்றர் பார்சிவல் பள்ளிக்கு அனுப்பி ஞர். இவர் அப்பள்ளியில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் இணேயிலாப் புகழ்பெற்ருர் ஆங்கி வத்தைத் தமிழிலும், தமிழை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கும் பேராற்றல் இவரிடம் அமைந்து வளர்ந்தோங்கியது. தக்க வட நூற் புலவர் ஒருவரிடம் சற்று இவர் வடமொழியி லும் பெரும் புலவரானுர், சிறந்த புவவர்கள் விரிவுரையாற்றும் இடங்கட்கெல்லாம் தவறுது சென்று அவர்கள் பேச்சில் தடையானவற்றை யெல்லாம் பேச்சு முடிவில் அவர்களிடம் கேட் டுத் தெளிந்து கொள்வார்; அவர் விடைகூறத் தடைப்பட்டால் இவர் தம் கருத்துக்களேக் கூறி இனிது விளக்குவார். கி. பி. 1846 முதல் மான வர் பவரை உடன்கூட்டி வைத்துக்கொண்டு கைம்மாறு பெருமல் இவர் அவர்களுக்குக் கல்வி கற்பித்தார். இவர் புலமை வரவரத் திட்பமாகி மலே மேல் ஏற்றிய விளக்கேபோல் வளர்ந்தோங்கி நிெேபற்றது.
பார்சிவன் பாதிரியாருடைய வேண்டுதலின் பேரில் இவர் தாம் படித்து இங்கிவீசுப் பள்ளி பில் மேல் வகுப்புக்களுக்குத் தமிழும் கீழ் வகுப்புக்களுக்கு ஆங்கிலமும் கற்பித்து வந் தார். மேலும் பார்சிவல் பாதிரியால் தாம் பைபிளே மொழிபெயர்ப்பதற்குத் தமக்கு உதவி பாக 1841ல் இவரைத் தமிழாசிரியராய் அமர்த் நிஞர்,

Page 20
இவர் பாதிரியாரிடம் பின்வருமாறு ஒப்பந் தம் செய்துகொண்டுதான் பணிபுரிந்தார்: "என் உடம்பில் எப்போதும் திருநீறு பூசியிருப்பேன். தேவைப்பட்டபோது கிருத்துமத கண்டனம் செய்வேன். இவைகளைப் பற்றி என்னைக் குறை கூறுதல் கூடாது பார்சிவல் தாம் மொழி பெயர்த்துள்ள பைபிளை அச்சிடும் பொருட்டு இவரையும் உடன் அழைத்துக்கொண்டு சென் னைக்குச் சென்ருர்.
சென்னையிலும் சில புலவர்களால் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அவைகளைச் சரிபார்த்துச் சிறந்தது இது என்று கூறும்படி சென்னைக் கிருத்துவச் சங்கத்தார் பெரும் புல வர் மகாலிங்கையரை நடுவராக அமர்த்தினர் கள்: ஐயர் அவர்களை ஆராய்ந்து பார்த்துப் பார் சிவல் பாதிரியாருடைய மொழி பெயர்ப்பே மிகச் சிறந்தது என்று முடிவு கூறினர். அதனல் இம் மொழிபெயர்ப்பையே திருச்சபையார் பாராட்டி அச்சிட்டார்கள். அப்போது பார்சி வல் பாதிரியார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அம் மகிழ்ச்சி விளையக் காரணமாக இருந்த ஆறுமுக நாலவரிடம் அன்று தொடங்கி அவர் முன்னையிலும் மட்டில்லா மதிப்புடையவ ரானர்.
கந்தப்பபிள்ளை மகன் ஆறுமுகப் பிள்ளை. இவர் ஆறுமுக நாவலர் ஆனமை கூறுவோம். விரிவுரையாற்றுவதில் இவர் வல்லுநர். 1847 மார்கழித் திங்கள் 18வ. வெள்ளிக்கிழமையன்று வண்ணுர்பண்ணைச் சிவன் கோவிலில்இவருடைய முதற் பேச்சுத் தொடங்கிற்று. அது முதல் இவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அங்கேபேசி வந்தார். இவருடைய பேச்சுக்களெல்லாம் சைவ மும் தமிழும் தழைத்தோங்கத் துணைபுரிந்தன. சென்னை மாநகரத்தில் இவர் செய்தபேருரைகள் புலவர் பலராலும் போற்றப் பெற்றன.
இவர் ஒரு சமயம் சென்னை மாநகருக்குச் செல்லும் வழி யி ல் திருவாவடுதுறையினை அடைந்து அக்காலத்தில் ஞானதேசிகராக எழுந்தருளியிருந்த அம்பலவாண தேசிகரையும் சின்னப்பட்டத்திலிருந்த மேலகரம் சுப்பிரம
ணிய தேசிகரையும் கும் பிட்டு வழிபட்டார்.
தேசிகமூர்த்திகள் இருவரும் இவரை அன்புடன் வரவேற்று இவருடைய கல்வி அறிவு ஆற்றலை யும் ஒழுக்க நெறியினையும் பாராட்டித் திருடித் திற் சில நாட்கள் தங்கும்படி கட்டளையிட்டரு ளினர். அந் நாளில் இவர் பத்தாந் திருமுறையா கிய திருமந்திரத்தில் ஆங்காங்குப் பல திருப்பா சுரங்களில் தமக்கு உளவாகிய ஐயப்பாட்டினை

ஞானதேசிகரிடம் தெரிவித்து அவைகளின் நுண்பொருள்களை ஐயமறத் தெளிந்து கொண் டனர்; அன்றியும் சைவசித்தாந்த நூல்களின் நுண்பொருள்களையும் நாடோறும் ஞான தேசிக ருக்கு அருகிலிருந்து கேட்டுச் சிந்தித்துத்தெளிவு பெற்றனர்.
அக்காலத்தில் ஒரு நாள் இவர் ஞானதேசிக ருடைய திருவருள் ஆணையைச் சிரமேற்கொண்டு ஞானதேசிகர் திருமுன்பு, இளைய ஆசிரியர் சுப் பிரமணியதேசிகரும் அடியார்களும் தென்மொழி வடமொழிப் பெரும் புலவர்களும் பிறரும் குழு மிய பேரவைக்களத்தில் அமர்ந்து விரிவுரை யாற்றினர். இவர் செய்த பேருரை சைவ சித் தாந்தம் கூறும் மெய்ப்யொருள்களாகிய பதி, ப்சு, பாசம் என்பவை பற்றியது; அது அவற்றின் உண்மையும், இலக்கணமும், பிறவும் எளிதில் விளங்க உணர்த்துவதாகவும், சுருங்கச் சொல் ல ல் விளங் க உணர்த்துவ தா கவு ம்: சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் முதலிய பத்து அழகுகளும் பொதிந்து விளங்கும் செந்த மிழ் உரைநடையதாகவும், இலக்கண அமை திக்கு ஒரு சிறிதும் மாறுபாடில்லாததாகவும், தருக்கமுறை பிறழாததாகவும், செயற்கரியதா கவும் கடவுட் பற்றுடையதாகவும், அப்பற்று இல்லாதாரையும் ஒருங்கே உள்ளம் உருக்கிக் கண்களினின்று அருவிபோல இன்பநீர் சொரியச் செய்வதாகவும், கேட்டாரைப் பிணித்துக் கேளாதாரும் விரும்ப ஒப்புயர்வற்றுத் திகழ்ந் தது. ஞானதேசிகர் இவருடைய வாக்குப் பேராற்றலை நோக்கிப் பெருமகிழ்ச்சி தாங்கி இவர்களுக்குரிய இயற்பெயருக்குப் பின்னுல் 'நாவலர்" என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி யருளினர். அன்று முதல் ஆறுமுகப்பிள்ளை ஆறு முக நாவலர் எனச் சீரோங்கித் திகழ்வாராயி னர். இவர் இராமநாதபுரம் பொன்னுச்சாமித் தேவரும் மதுரைத் திருஞானசம்பந்தர் திரு மடத் தலைவரும், தருமபுர ஆதீனத் தலைவரும் இவரைப் போற்றிப் புகழப்பற்பல இடங்களி லும் சென்று பெருஞ் சொல்லமுதத்தை வாரி வாரி வழங்கித் தமிழ்த் தாயை அருமையுடன் வளர்த்து வந்தனர். இவ்ங்ணம் இவர் முப்பத்தி ரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றினர். கடைசியாக இவர் செய்த பேருரை 1879 ஆடி மாதம் சோதி நாள் சுந்தரமூர்த்தி நாயனர் குருபூசையன்று "பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை' என்னும் பொருள் பற்றியது.
ஊர்தோறும் நல்ல கல்விச் சாலைகள் தொடங்கித் தமிழைப் பரப்ப வேண்டும் என்

Page 21
னும்பேரவா இவரிடம் நிரம்பியிருந்தது. அத சூழல் இவர் கி. பி. 1848 ஆவணி 5ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணம் வண் ஞர் பண்ணையில் "சைவப்பிரகாச வித்தியா சாலை" என்னும் பெயரால் ஒரு கல்விச் சாலை யைத் தொடங்கிஞர். 1864 ஐப்பசி மாதம் 28ஆம் திகதி சிதம்பரத்தில் இவரால் சைவப் பிரகாச வித்தியாசாலை ஒன்று நிறுவப்பெற்றது; 1868இல் கோப்பாயில் ஒரு வித்தியாசாலை தொடங்கப்பெற்றது. மேலும் யாழ்ப்பாணத் திலே கொழும்புத் துறை, கந்த மடம், பருத்தித் துறை, மாதகல், இணுவில் முதலிய பற்பல இடங்களில் இவருடைய தூண்டுதலினுலே பல கல்விச் சாலைகள் தொடங்கப்பெற்றன. இவர் வண்ணுர் பண்ணையில் 1872இல் தொடங்கிய "சைவாங்கில வித்தியாசாலை’ நான்காண்டுகள் இனிது நடைபெற்று அரசாங்கத்தார் துணை மறுத்தமையினுல் நின்றது. இவர் 1868, 1870 ஆகிய ஆண்டுகளில் தம் கருத்துக்களை விளக்கித் தமிழ் மக்களுக்கு விண்ணப்பங்கள் விடுத்தார்; அவற்றுள் தாம் தொடங்கி நடத்தும் கல்விச் சால்களுக்குப் பொதுமக்கள் பொருட்கொடை தருதல் வேண்டும் என்பதை வற்புறுத்தும் வகையால் தம்முடைய கல்விச் சாலைகளால் விளையும் பயன்பற்றியும் கூறுகிருர், அது வரு
топт:
** "திருக்கோவில்கள் தோறும் மக்களுக்குச் சைவ சமயத்தை ஆங்காங்கே வழங்கும் நாட்டு கொழிகளிற் போதித்தல் வேண்டும்" என்பது சிவபெருமானுல் காமிகாமத்திலே விதிக்கப் பெற்றிருக்கின்றது. நான் தொடங்கியிருக்கும் கல்விச் சாலைகளிற்சேரும் பிள்ளைகள் உயர்வாகிய இலக்கண இலக்கியங்களை நன்ரு கக் கற்றுக் கொள்வார்கள். அம் மட்டோ, அவர் கள் சிவதீக்கை பெற்றுக் கொண்டு தம் ஆசிரியர்க குக்குக் கீழ்ப்படிந்து திருநீறணிதல், ஐந்தெழுத் திோதல், சிவபூசை, திருக்கோயில் வழிபாடு, த்ேவார திருவாசகம் ஒதுதல், சிவபுராணம் படித்தல், சைவ சித்தாந்த நூல்களைப் படித் தல், முதலிய சிவபுண்ணியங்களை நாடோறும் அவ்வவற்றிற்கு ஏற்படுத்தப்பட்ட நேரங்க விலேஒழுங்காகச் செய்துகொண்டு வருவார்கள். திருவிழாக் காலங்களிலே யாவருக்கும் சிவபத்தி தோன்றும்படி பெருந் திருக்கூட்டமாகிப் பெரு மானுக்குப் பின்னே தாளம் தட்டித் தேவாரத் தைப் பண்ணுடனே ஒதிக்கொண்டு வருவார் கள். “வித்தியாசாலையை விட்டு விலகும்போது ஆசிரியர்களாகவும் சமைய விரிவுரையாளர்க சாகவும் ஊர்தோறும் கல்விக்கூடங்களிலேகல்வி கற்பித்துக் கொண்டும் திருக்கோவில்களிலே

சைவ சமயத்தைப் பற்றி விரிவுரையாற்றிக் கொண்டும் வாழ்வார்கள்?’’
கல்விச் சாலைகள் அமைத்தும், விரிவுரைக ளாற்றியும் பெரும் புகழுடன் தமிழ் வளர்த்து வந்த நாவலர் பழம்பெரு நூல்களை அச்சியற்றி யும், கண்டனங்கள் வெளியிட்டும், புதுக்கலன் கள் புனைந்தும் தமிழ்த்தாய்க்கு நிலையான பணி கள் புரியத் துணையாவது அச்சுக்கூடமே என் பதை அறிந்தார். 1849இல் சென்னையிலிருந்து நல்ல அச்சுப் பொறியொன்று வாங்கிவந்து வண்ணுர் பண்ணையில் "வித்தியானுபாலனயந்தி ரம்" என்னும் பெயருடன் நிலைபெறுத்திஞர். அதிலே இவர் அச்சிட்டு வெளியிட்ட நூல்கள் பின்வருவன:
'தாம் இயற்றிய முதலாம் இரண்டாம் பாலபாடங்கள்; ஆத்திசூடி, கொன்றை வேந் தன் முதலிய நூல்களுக்குத் தாம் இயற்றிய உரைகள்; சிவன் கோவில் வழிபாடு செய்வோ ருக்கு முறை காட்டத் தாம் ஆக்கிய சிவாலயத் தெரிசன விதி; சைவ சமையாசாரம்; திருமுரு காற்றுப்படை, திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி என்னும் நூல்களுக்குத் தாம் இயற் றிய உரை தாம் எழுதிய பெரியபுராண வச னம், சைவதூடண பரிகாரம், வச்சிர தண்டம் சுப்பிரபோதம் என்னும் கிருத்து மத கண்டன நூல்கள், நன்னூல் விருத்தியுரை, கொலை மறுத் தல் என்னும் நூலுக்குத் திருப்போரூர்ச் சிதம் பர முனிவர் இயற்றிய உரை'.
வண்ணுர்பண்ணை அச்சுப் பொறி சிறிதாக இருந்ததால்சிலஆண்டுகளில் இவர் அதனைவிற்று விட்டுச் சென்னேயில் மிகப் பெரிய அச்சுப் பொறி ஒன்று வாங்கி 'வித்தியானுபாலன யந்திர சாலை' என்ற பெயருடன் நிறுவினர். இவர் இதில் அச்சிட்ட நூல்கள் பின்வருவன: திருக்குறள் பரிமேலழகர் உரை, திருச்சிற்றம் பலக் கோவையார் உரை, தருக்க சங்கிரக உரை, இலக்கணக் கொத்து, தொல்காப் பியச் சூத்திர விருத்தி என்பன இவர் இயற்றிய கோயிற் புராண உரை, ᎧᎼᎠᏯᏐ ᎧᏂᎥ சமய நெறி உரை, நன்னூற் காண்டிகை உரை, சிவதரும்ோத்தர உரை என்பன. இவர் புதிய னவாகச் செய்தன நான்காம் பாலபாடம், முதலாம் இரண்டாம் சைவ விஞவிடைகள் இலக்கண விஞவிடை, இலக்கணச் சுருக்கம், திருவிளையாடற் புரா ண வசனம், பெரிய புராண சூசனம் என்பன கந்தபுராணம், பெரியபுராணம் சூசனத்துடன், பாரதம் சூடா மணி நிகண்டு என்பன.

Page 22
'நாவலர் பதிப்பு" என்பது இன்றும் புக ழுரையாக விளங்குகின்றது. நாவலர் பதித்க நூல்களில் அச்சுப்பிழையும் காண்பது அரிது. இவர் 1879 கார்த்திகை மாதம் 21 திகதி வெள் ளிக்கிழமை மகநாளன்று தமது ஐம்பத்தேழா வது வயது நிறையும் போது பொன்னம்பலவர் திருவடி நீழலை அடைந்தார். சைவமும் தமி ழும் பரவவேண்டும் என்ற ஒரே கருத்துடன் இவர் தம் வாழ்நாள் முழுவதும் திருமணம செய்து கொள்ளாமல் மாசற்ற ஒழுக்கத்தில் தலைநின்று பணிபுரிந்து வந்தார். மதியாதார் தலைவாசல் மிதியாத பெருங்குணம் உடையவர்
இவர்.
இவர் எழுதிய உரைநடைகள் தலைசிறந் தவை. இவர் காலத்தவராகிய பேராசிரியர் பலரைப்போல இருவரும் வடசொற்களை உரை நடையில் மிகுதியாகக் கலந்து எழுதியிருக்கி ருர். இது மிகத் தவருனதொரு செயல் என்று அறிஞர் கருதுகின்றனர்.
இவர் மாணவருக்காக எழுதிய பால பாடங் கள் மிகச் சிறந்தன. இவரால் எழுதப் பெற் றன முதல், இரண்டாம், நான்காம் பால பாடங்கள். மூன்ரும் பாலபாடம் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தரும ஆட்சி யாளர் பொன்னம்பலபிள்ளை செய்தது. நாவ லர் எழுதியுதவிய பால பாடங்களை மாறுபாடு சிறிதும் செய்யாது அச்சிடுதலே பெருந்தன்மை யாகும். ஆனல் இக்காலத்து உரிமையாளர் பொருந்தாத சில மாறுபாடுகளைச் செய்து அவைகளை வெளியிட்டிருக்கின்றர்கள். எடுத் காட்டாக இரண்டொன்று கூறுவோம். இரண் டாம் பாலபாடம் தேசங்கள் என்ற பாடத்தில் (1954 இல் வந்த 18ம் பதிப்பு பக்கம் 31) * 'இலங்கைக்கும் இந்தியாவுக்கும்போக்குவரவு செய்பவர்கள் தோணி அல்லது கப்பல் ஏறிச் செல்லல் வேண்டும். இப்போது புகைவண்டி யிலும், ஆகாய விமானத்திலும் செல்லலாம்' என்ற பகுதி காணப்படுகிறது. இப்போது என் பது எப்போது? எண்பத்து மூன்ருண்டுகளுக்கு முன்னுல் கி. பி. 1879இல் காலமான நாவலர் எழுத்தாக இதனைக் காட்டுவது பொருந்துமா? இக்கூற்றைப் பதிப்பாளருடைய அடிக்குறிப் பாகக் கொடுத்திருந்தால் நேர்மை துலங்குமே!
நான்காம் பாலபாடம் 'த மிழ்' என்ற பாடத்தில் முதற் பத்தியில் 'திராவிடமென் னும் வடமொழி தமிழென்றயிற்று' என்பது காணப்படுகின்றது. இது தவறன கூற்று; இது நாவலரால் எழுதப்பெற்றதோ அல்லது பிற்
2.

கால உரிமையாளர்களால் புகுத்தப்பெற்றதோ என்பது ஆராயற்பாலது. 'தமிழ்ச் சொன் முடிவு' என்ற தலைப்பில் 'திராவிடப் பிரகா சிகை’ என்னும் நூலில் அதன் ஆசிரியர் சபா பதி நாவலர் பின்வருமாறு எழுதுகின்ருர்: (கி. பி. 1899 இல் வெளியான முதற்பதிப்பு பக்கம்-7)
'தமிழ்ச்சொன் முடிபு??
*தமிழ் என்னும் சொல் இனிமைப் பண் புணர்த்தும். அது,
*தேனுறை தமிழும் திருவுறைகூடலும்
மணத்தலின் மதிக்குல மன்னணுகியும்’ என்னும் கல்லாடத்தினுலும்,
*தமிழ் தழிய சாயலவர் தங்குமலர்த்து நீர் உமிழ் கரக மேந்தவுர வோனமர்ந்து பூசி" என்னும் சிந்தாமணியினலும்,
தமிழ் மென் சாயலவளொடும்? என்னும் வாயவ்விய சங்கிதையினலும்,
*வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே’ என்னும் இராமாயணத்தினுலும், தெளிக.
*தமிழ்த்தழிய சாயலவர்' என்பதற்கு நச்சி னர்க்கினியர் ‘இனிமை தழுவிய சாயலையுடை யவர்" என்று பொருளுரைத்தார். தமிழ் என் னும் தருமவாசகம் தருமிமேல் நின்றது; முருகு என்னும் பண்பு முருகன் என்னும் பண்பிமேல் நின்றவாறு போல, ஈண்டுத் தருமி மொழி மொழி எனினும் பாடை எனினும் ஒக்கும். பிர யோக விவேக நூலார் *திரமிளம் என்னும் ஆரியச் சொல் தமிழ் எனத் திரிந்தது என்று கொண்டாரால் எனின், - முதன்மையுடைய இம் மொழியைத் தோற்றிய காலத்து இறை வன் தன் சொல்லால் இதனை வழங்க இதற்குக் குறியீடு தருதல் அன்றிப் பிறபாடைச் சொல் லால் இதற்கு அன்னதோர் பெயரினைத் திரித்து நிறுத்தினன் என்றல் பொருந்தாமையின், அது செல்லாது என மறுக்க. இன்னும் இனிமைப் பொருள் உணர்த்தும் தமிழென்னும் பண்புச் சொல் தன் சொல்லால் இதன் கண் நிலைபெறு வதாகவும் அதனை விலக்கி அவ்வாறு கோடல் செல்லாமை உணர்க. இதனலே, தமிழ், திராவிடம் என்னும் வடமொழித்திரிபு என்று கொண் டா ர் மதம் மறுக்கப்பட்டவாறும் அறிக. வடமொழிக் கடலும் தென்மொழிக் கடலும் நிலைகண்டுணர்ந்த ஆசிரியர் சிவஞான
O

Page 23
யோகிகள் எவ்வினையும் ஒப்புதலால் திராவிடம் என்று இயல்பாடை" என்று வடமொழியார் தென்மொழியை ஆளும் குறியீடு வேறு கூறி வைத்து, மூன்று உறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய் உனக்கு இனிதாய்த் தோன்றிடும் அத்தமிழ்ப்பாடை என்றுதென்மொழியார்தம் மொழியால் தென்மொழியை ஆளும் குறியீடு யாம் கூறியவாறே பொருள் தெரிந்து வேறு நிறுத்துதலின்,இச்சொன் முடிபே தொல்லாசிரி யர் வழக்காருப் பயின்றுபோதரும் இயன்முடிபு என்பது அப்பெரியார்க்கும் கருத்தாதல் பெற் ரும். இன்னும் அகத்தியம் தமிழ்ச் சுதந்திரஇலக் ண கமுதல் நூலாகவும்,அது வடமொழிப்'பரணி னிய வியாபரணத்தின் வழித்தோன்றியதோர் நூலாம்" என்றும், அகத்தியத்தின் வழித்தோன் றியது தொல் காப்பிய இலக்கண நூலாகவும், அது வடமொழி 'ஐந்திரவியாகரணத்தின் வழித் தோன்றியதோர் நூலாம்' என்றும், பிரயோக விவேக நூலார் முறை திறம்பி உரைத்தார். அவையெல்லாம் ஆரியாபிமானம் காரணமாக வரன்முறை திறம்பிக் கூறியனவேயாம்.”*
இதுவரையிற் கூறியன சபாபதி நாவலர் கூற்ரும்.
தமிழ் என்னும் இப்பாடத்தில் சிவஞான முனிவர் திருவாய் மலர்ந்தருளிய,
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி
அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை
உலகமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர் எனில் கடல் வரைப்பில் இதன் பெருமை
யாவரே கணித்தறிவார்?"
என்ற காஞ்சிப்புராணத் திருப்பாடலைப் பாடத்தின் ஈற்றில் நாவலர் குறித்திருக்கிறர். **தொடர்புடைய தென்மொழி’ என்றது ‘இம் மண்ணுலகம் தோன்றிய காலத்திலேயே அத னுடன் அதன் தென் பகுதியில் தோன்றிய புக ழினை உடையது தமிழ்; அதனுல் இது தென் மொழி எனப்பெயர் புெற்றது. மக்கள் இனம் முதன் முதல் தோன்றும் புகழ்ச் செல்வத்தை உடைமையினலே தமிழகம் திரு-இடம்-திரு விடம் எனவும் பெயர் பெற்றது. அத்திருவி டமே திராவிடம் என மருவிற்று; அது தான் திரமிளம் எனவும் சிலரால் சொல்லப் பெற் றது." என்பர் ஆராய்ச்சிப் பேரறிஞர். மேலும் 'தமிழைப்போல இலக்கண வரம்பு

டைய மொழி இம் மண்ணுலகில் வேறு எதுவும் இல்லை. ஆதலின் ஏனைய மொழிகளுக்கு இத னேடு ஒப்பிட்டுப் பேசும் தகுதியில்லை’ என்று கூறுவர் மொழியாராய்ச்சிப் பெரும்புலவர். இதனையே திகுவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் அப்புராணத்தில்,
**கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ
டமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த
இப்பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா
மொழிபோல் எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும்
u(6G DIT?”” என்று கட்டளையிட்டருள்கின்ருர். இப்பாடலை யும் நாவலர் தமிழ் என்ற பாடத்தின் ஈற்றில் எடுத்தெழுதியிருக்கின்ருர். இத்தகைய திருப் பாடல்களை மேற்கோளாக எழுதியுள்ள நாவ லர் 'திராவிடம் என்னும் வடமொழி தமிழ் என்முயிற்று' என்று குறித்திருப்பாரா? ஏன் பதை அறிஞர் ஆய்வாராக,
இவருடைய பால பாடங்கள் ஏணிபோல மாணவரைப் படிப்படியாக ஏற்றி அறிவுச் சிக ரத்திற்கொண்டு சேர்க்கும் வன்மையுடை யன. சத்திரம், மடம் முதலிய நான்காம் பால பாடப் பகுதிகள் சிறந்த அறிஞரும் படித்துப் படித்துப் பாராட்டும் பெருமைபெற்றன.
இவர் எழுதியிருக்கும் இலக்கண விஞவிடை முதலிய இலக்கண நூல்கள் மாணவர்க்குக் கற் பகம்போல அறிவு வழங்குவன. ஒரு பிழை கூடக் காண முடியாதபடி நூல்கனை எழுதி அச்சிட்ட ருளிய நாவலர் பெருமான் புகழை இக்காலம் அந்நூல்களை அச்சிடுவார் தவருக அச்சிட்டுக் கெடுத்து விடுதல் கூடாது. இலக்கண விஞ விடை 1956இல் அக்டோபரில் அச்சிட்ட இரு பத்தோராவது பதிப்புப் பக்கம் இரண்டில் இனவெழுத்துக்களைப் பற்றிக்கூறும் இடத்தில் 'ஏகாரத்திற்கு ஒகாரம் இனமாகும்' என்று அச்சிட்டிருப்பது மன்னிக்க முடியாத தவறு பெரியார் பலர் கருதி வருந்துகின்றனர். 'ஒக ரத்துக்கு" என்றிருக்க வேண்டுவது "ஏகாரத் துக்கு' என்று பிழைபட அச்சிடப்பட்டுள்ளது.
நாவலர் 'போலி அருட்பா மறுப்பு' என ஒரு நூலை முப்பத்திரண்டு பக்கங்களில் எழுதி மாமண்டூர் தியாககேச முதலியார் பெயரால் அச்சிட்டு வைளியிட்டார். இவர் எழுதிய கண் டன வன்மை படித்தறியற்பாலது. இது ஆறு

Page 24
முக நாவலர் பிரபந்தத் திரட்டு என்ற நூலின் முதற்பாகத்தில் பக்கம் 89-121 ஆக அச்சிடப் பட்டுள்ளது. அதில் பின் வரும் பகுதி ஆராயத் தக்கது:-
'பிரளயாகலராவார் இருமலமுடைய வ ராகிய உருத்திரர்களென்பதும், சகலராவார் மும்மல முடையராகிய பிரம விட்ணு முதற் கிருமி யீழுக உள்ள உயிர்களென்பதும், சாதா ரணமாகிய தத்துவக் கட்டளைகள் வாசித்தவ ருக்குந் தெரியுமே! அஃதறியாது பிரளயாகலர் மும்மலங்களுள் ஒரு மல நீத்தோர் அவர் பிர மன் முதலானேர்என்று ஒழுவிலொடுக்கவுரைப் புத்தக முதலிலே பதிப்பித்த இராரா லிங்க பிள் ளையா ஒதா துணர்ந்தவர்! பூரீ ஸ்திரி என்னுஞ் சொற்களுக்கும் வேற்றுமையறியாது, பூரீகண்ட பரம சிவனென்பதற்குப் பெண்ணைப் பாகத்து டைய பரமசிவனெனப் பொருள் கூறித் தமதறி யாமையை உலகறியப் புலப்படுத்திய இராம லிங்க பிள்ளையா ஒதாதுணர்ந்தவர்! அவர் தாம் பதிப்பித்த ஒழிவிலொடுக்கவுரையிலே சுழுமுனை யைச் சுழிமுனையென்றும், சொப்பனத்தைச் சொற்பனமென்றும், ஞா திருவை ஞாதுருவென் றும் கேட்க வென்பதைக் கேழ்க்க வென்றும், சரியையைச் சரிதை யென்றும், பிராரத்தத்தைப் பிராரத்துவ மென்றும், தோன்றிய விருது கால மென்பதைத் தோன்றப்பட்ட விருதுகால மென் றும் நூல் கேட்டலை நூற் கேட்டலென்றும், அழியுமித்தேகாதி யென்பதை அழயப்பட்ட வித் தேகாதியென்றும், மண்ணினின்றுங் கடகலசாதி காரியங்களென்பதில் மண்ணினின்றென்பதை மண்ணை யென்றும், நூல்களறிவிக்க மாட்டா என்பதை நூல்கள் அறிவிக்கமாட்டாதென்றும், மகேசுரனை மயேசுரனென்றும், இச்சா யத்தி னத்தை இச்சாயெத்தினமென்றும், அத்தமய னத்தை அத்தமான மென்றும், அவைகளறியா வென்பதை அவைகளறியாதென்றும், இச்சா ஞான முதலிய வருவிக்கப்பட்டன வென்பதிற் பட்டனவென்பதைப் பட்டதென்றும், )$Ljו חrנ விடத்தான்மா வென்பதைப் போயவிடத்து வான்மாவென்றும், பெத்த தசையைப் பெத்த திசையென்றும், வர்ணத்தை வர்ந்நமென்றும், கதிரவனுக்கு மசுத்தமுமின்ரு யதென்பதைக் கதி ரவனுக்குஞ் சுத்தமுமின்ருயதென்றும், சகமார்க் கத்தைச் சகச மார்க்க மென்றும், நேதிகளைதலை நியதிகளைதலென்றும், வெதுப்புதலை வெதிப்பு தல் என்றும், உற்பிச்சத்தை உற்பீச மென்றும், தொடையைத் துடையென்றும், மித்தியா ரூப த்தை மித்தியா ரூபமென்றும், ஆகவென்னும் வினையெச்சங்களை ஆயென்றும் பதிப்பித்திருக்
22

கின்(ஜரே. இன்னும் அப்புத்தகப் பிழை களை எ டு த் து ச் சொல்லப்புகின், மணற் சோற்றிற் கல்லா ராயப் புகுதல் போலும். அப் புத்தகத்திற் பல விடங்களிற் பெய ரெச்சங்களை முற்றெனக் கொண்டு முற்றுக்குறி கொடுத்து வரி முடிவு செய்து, அவை கொள்ளும் பெயர்களை வேற்றுவரிக்கு முதலாகக் கொண்டு தொடங்கியிருக்கின்ருரே. இவ்வியல்புடைய வரா ஒதாதுணர்ந்தவர் குமரகுருபர சுவாமி கள் ஐந்து பிராயம் வரையும் ஊமையாய்இருந்து திருச்செந்தூர் முருகக் கடவுளது திருவருளினல் ஒதாதுணர்ந்தவுடனே பாடியருளிய திருச்செந் தூர்க் கலிவெண்பா இலக்கணப் பிழைகளில்லா ததையும், சைவ சித்தாந்த சாத்திரத்துண்மைப் பொருளையுடையதாயும் இருக்கின்றதே. அவர் பின் பாடியருளிய பிரபந்தங்களும் அவ்வாறே இருக்கின்றன. அங்ங்னமாகவும், அவர் தாம் ஒதாதுணர்ந்தவர் என்று தம்மை எவ்விடத்தே னும் புகழ்ந்து கொள்ளவில்லையே. இராமலிங்க பிள்ளையோ சிறுவர்களுக்குள்கல்வியறிவுதானும் இல்லாதவராய் இருந்துகொண்டு தம்மைத் தாமே ஒதாதுணர்ந்தவரென்று புகழ்ந்துகொள் ளுதல் சாலவும் வியக்கற்பாலதாம்.”*
இவர் எழுதியுள்ள பெரிய புராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலிய உரை நடை நூல்கள் இணையற்றன. பெரிய புராணத் தைஇவர் தாம் எழுதியகுசனத்தோடு அச்சிட்டி ருக்கிருர். சூசனம் என்பது விளக்கக் குறிப்பு சூசனத்திற் சில பகுதிகளை ஆராய்வோம்.
அறுபத்து மூன்று நாயன் மார்களுள் பேரழ கியாகிய தம் திருமனையாளை அருகில் வைத்துக் கொண்டே காம இச்சையை வெல்லுவதாகிய செயற்கரும் பெருஞ்செயலைச் செய்த திருநீல கண்ட நாயனர் புராணம் முதலாவதாகவும், பெருந்திருவாகிய தம் திருமனைவியையேஅடியா ருக்கு அளித்த இயற்பகை நாயனர் புராணம் அதனை அடுத்தும் கூறப்பெறுகிறது. அந்நாயனர் களைப் பற்றி நாவலர் எழுதிய சூசனத்தை எடுத் தெழுதி ஆராய்ந்ததும்.
'இவ்விரு வரும், மிக்க இளமைப் பிராயத் தினராய் இராப்பகல் ஒரே இடத்தில் இருந்தும், தங்களுக்குள்ளே நிகழ்ந்த சபதம் சிறிதாயினும் வழுவாவண்ணம், காமத்தை முற்றும் ஒழித்து வாழ்ந்த பெருந்தகைமையை நினைக்குந்தோ றும் இவர்களிடத்துள்ள சிவபத்தியின் வலிமை விளங்குகின்றது. விட்டுணு, சலந்தராசுரன் இறந்துவிட, காம மிகுதியினல் அவனது சரீரத் திலே புகுந்து, அவனுடைய மனைவியைப் பல

Page 25
நாட் புணர்ந்து, பின்பு தம்மை விட்டுணு என்று உணர்ந்த அவளாலே சபிக்கப்பட்டு, வருத்த முற்ருர். பிரமா தம்மாலே படைக்கப்பட்ட திலோத் தமையினது அழகைக் கண்டு மயங்கி, அவளைப் புணரின் மகட் புணர்ச்சிக் குற்றமாம் என்பதும் பாராமல், அவளைத் தொடர்ந்தார். இந்திரன் கெளதம முனிவருடைய மனைவியா கிய அகலிகையைப் புணர்ந்து, தன்னுடம்பிலே ஆயிரம் யோனி உண்டாகும்படி அம்முனிவ ராலே சபிக்கப்பட்டான். சந்திரன் தன் குருவா கிய வியாழனுடைய மனைவியைப் புணர்ந்து, கயரோகம் அடைந்தான். இன்னும் முனிவர் கள் பலர் உண்டி முதலியவற்றை ஒழித்து, மலை களிலும் காடுகளிலும் தவஞ்செய்யும் பொழுது, தேவப் பெண்களையும் அசுரப் பெண்களையும் இராக்கதப் பெண்களையும் கண்டு மயங்கி, பாவம் என்பதும் பழியென்பதும் பாராமல், அவர்களைப் புணர்ந்து, தங்கள் தவத்தை இழந் தார்கள். தருமம் வளர்ந்தோங்கும் முன்னை யுகங்களிலே, தேவர்கள் முனிவர்கள் தாமும், காம மிகுதியினலேயே வேற்றுப் பெண் கமனம், புத்திரி கமனம், குருபன்னி கமனம் முதலிய பெருங்கொடும் பாவங்களைச் செய்தார் களே! இக்கலியுகத்திலே இந்நாயனரோ, தமது மனைவியார் சிவனைச் சுட்டி இட்ட ஆணைய கடத்தல் சிவத்துரோகமாம் என்பது பற்றி, மனைவியைத் தானும் புணராதொழிந்தார்! இத ஞல் இவரது பத்தி மகிமை எவ்வளவு வியததக் கது! இவ்வியப்பு நோக்கியன்ருே, பட்டினத் துப் பிள்ளையாரும் 'மாது சொன்ன குளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்' என்ருர்,
கற்புடைய மகளிரும், அழகிற் சிறந்த ஆட வரைக் காணில், அவர் தமக்குத் தந்தையராயி னும், உடன்பிறந்தோராயினும், பெற்ற பிள்ளை களாயினும், தமது நிலை கலங்கி, அவரையும் நிலை குலைப்பார்களே! இவ்வாரு கவும், இந்நாய னரும் மனைவியாரும், மிக்க இளமைப் பருவத்த ராய் இராப்பகல் ஒரே இடத்தில் இருந்தும், புணர்ச்சியின்றிச் சபதத்தைப் பேணியமையால் இவர்களது சிவ பக்தியின் பெருமை இவ்வளவு என்று சொல்லத்தக்கதன்று. இந்நாயனுர் பரம சிவன் சிவயோ கியராய்வந்துதம்மிடத்துவைத்த ஒட்டைத் தாம் கவராமைக்குத் தமது மனைவி யைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தி யம் பண்ணித் தரச்சொன்ன வழியும், சபதம் வழுவாமற் காத்தார்.'
இனி நாவலர் இயற்பகையாரைப் பற்றிக் கூறும் சூசனம் காண்பாம்.

'இவரிடத்துள்ள இம்மெய்யுன்பை, சர் வான்மாக்களும் உணர்ந்து உ ய் யு ம் படி, உணர்த்துதற்குத் திருவுளங்கொண்ட கிருபா சமுத்திரமாகிய சிவன், ஆன்மாக்களுக்கு உலகத் துப் பொருள்களுள் மனைவியினும் இனிய பொருள் பிறிது இல்லாமையால், சிவனடியார் வேடங்கொண்டு வந்து, இவரிடத்தே இவர் கற் பினிற் சிறந்து விளங்கும் அம் மனைவியையும் மாருது பெருமகிழ்ச்சியோடு கொடுத்தார். இதனல், இவர் ‘பனிமலர்க் குழற்பாவை நல் லாரிலும்’ சிவனே தமக்கு இனியர் என்று கொண்டார் என்பது துணியப்படும். அன்றியும் இவர் உயர்குடிப் பிறப்பினலும் பெருஞ் செல் வத்தினுலும் உலகத்தாராலே நன்கு மதிக்கப் படுவோராய் இருந்தும், தாம் பிறருக்கு மனைவி யைக் கொடுப்பின் உலகத்தாராலே பழிப்புரை உண்டாகுமென்பது நோக்கிற்றிலர். இதனல் இவர் மனத்த்ைச் சிவபத்தியே விழுங்கிற் றென்று துணிக. இவர் "நாடவர் பழித்துரை பூணதுவாகக் கொண்டமையும் தேர்க.
'இந் தாயனூர், பிறர் மனை நயத்தல் சிவாக மங்களில் விலக்கப்பட்ட பாவம் என்பது நோக் காது தமது மனைவியைத் தரும்படி கேட்டவ ரைச் சிவனடியார் என்று கொன்டமை குற்ற
மாகாதோ எனின், ஆகாது. காமக்கிழத்தியர்
வடிவிற் காணப்படும் ஆடை, சாந்து, ஆபரணம் முதலாயின, காமுகரைக் கவர்ந்து நினைக்குந் தோறும், காணுந்தோறும் இன்பம் தோற்றுவிக் கும். இது, சேலுங் கயலும் திளைக்குங் கண்ணு ரிளங்கொங்கையிற் செங்குங்குமம்-போலும் பொடியணி மார்பிலங்கும்" என்னுந் திருப் பல் லாண்டாலும் அறிக. அவ்வாறே இந் நாயன ரும், திருநீறு உருத்திராக்கம் முதலிய சிவ வேடத்தைக் கண்டவுடனே அதனல் உள்ளம் கவரப்பட்டு, இன்பமே லிடப்பெறுதலால் தம்
வயத்தரல்லராவர். ஆகவே அச் சிவவேடத்தை
உடையரிடத்துக் குணங்குற்றம் ஆராயும் ஆராய்ச்சி இவருக்கு எப்படிக் கூடும் என்க. மீதூர்ந்தெழுந்த பத்தி உடையாருக்கு அடியார் களிடத்தில் குணங்குற்றம் ஆராய்தல் கூடாமை.
'உருப்போலாதவ நிழிகுலத்தவர்
நல்லொழுக்கு மில்லவரென்று நம்மளவில் விருப்பிலாதவ ரெனினு மெய்ந்நீறு
மிக்க சாதன வேடமுங் கண்டாற் றரிப்பிலாது சென்றெதிருற வணங்கித் தக்க,
போனகமளித்தவர்க்கெளிதா விருப்பர் தாமவ ரடியவர்க் கூடியா
ரென்பர் யானென தெனுஞ்செருக்கறுப்பார்’

Page 26
என்னும் திருவாத பூரடிகள் புராணத்தில்சிவன் கூறிய பொருளை உடைய திருவாக்கிற்காண்க. அனைத்து ல க நாயகராகிய பரமசிவனுலே *செயற்கருஞ் செய்கை செய்த தீரனே" என்று வியக்கப்பட்ட இந்நாயனரது மிக்குயர்ந்த பெரும்பத்தியின் பெருமையைப் பத்தி என்பது சிறிதும் அறிகிலாச் சிறியேனு விரித்துரைக்க வல்லன்?'
இங்ங்னம் கூறுகிற நாவலர் பண்பாடு காண்க! உலக இயற்கைக்குப் பகையாகி நின்ற இந் நாயனர் இயற்பகைநாயனர் என்னப் பெற் (றர். ஒழுக்கம் என்பது இன்னது என அறியாத மாக்கள் போல நிலைகுலைந்து நடக்கும் சில போலிகள் இந்நாயனர" செயலைத் தம் அறி யாமையினுல் இகழ்ந்துவ ப்பர். இனி, நாவலர் எறிபத்த நாயனரைப்பற்றிக் கூறுவன காண் LI IT LI).
'சைவாசாரியருக்கும் சிவனடியாருக்கும் இடர் செய்தவனைக் கொல்லுதல் சிவ புண்ணிய மாம். இடர் செய்தவர் பிராமணராயேனும் தபோதனராயேனும் இருப்பின் அவரைக்கொல் லாமல், பிறவழியால் வெல்லல் வேண்டும். இதற்குப் பிரமாணம், சங்கற்ப நிராகரணம் ** தேசிகர்க்குந் நீங்குசெயுந் தீம்பரை வெல்ல வல்லது நீ - சாச முறுசேர்வாய்நலம்,' எ-ம். **அந்தணரை மாதவரைக் கொல்லல்லாதே வெல்லல்லார் - சிந்தவுஞ் செய் நீ செய்யாய் தீங்கு." எ - ம், வரும் களவு கொலை முதலி யன சமையத்தாரானும் உலகத்தாரானும் குற் றம் என்று விலக்கப்பட்டன அன்ருே; அவற் றுள் ஒன்முகிய கொலையை இங்கே புண்ணியம் என்றது என்ன எனின்; அறியாது கூறிஞய்: களவு என்னுஞ் சொற் கேட்டுக் களவு தீது என் றலும், கொலை என்னுஞ் சொற் கோட்டுக் கொலைதீது என்றலும் கூடாவாம். அவை நல் லன வாதலும் உண்டு. ஒருத்தி தன் சுற்றத்தா ரோடு கோபங்கொண்டு, நஞ்சுண்டு சாவேன் என்று துணிந்து, நஞ்சு கூட்டி வைத்து, விலக்கு வார் இல்லாதபோது உண்ண நினைந்து நின்ற வழி, இரக்கமுடையவன் அதனைக் கண்டு இவள் இதை உண்டு சாவாவண்ணம் கொண்டுபோய் உகுப்பேன் என்று அவள் காணுமே கொண்டு போய் உகுத்தான்: அவள் தன்னருகில் இருந்த வர் நீங்கியவுடனே நஞ்சுண்டு சாம்படி சென்று அதனைக் காணுமையால், மரணம் நீங்கினள். அவன் அக்களவினலே அவளை உய்வித்தமை யால், அது குற்றமாகாமல் அவனுக்கு நன்மை பயக்கும் அன்றே; அதுபோலவே, இக் கொலை யும் நன்மை பயக்கும்; சிவனடியார்களுக்கு
24

இடர் செய்வோர் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து பிறரும் சிவனடியாருக்கு இடர் செய்து கெடுவர்; சிவனுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்புவோர்களுள் தீவிர பத்தியுடையோரை யொழிந்த பிறர், தாம் செய்யும் திருத்தொண் டுகளுக்கு இப்படி இடையூறுகள் நிகழுமாயின், திருத்தொண்டுகள் செய்யாது தம் வ்ாணளை வீணுளாகக் கழிப்பர்; சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லுதல் இத் தீங்குகள் எல் லாவற்றையும் ஒழிக்கும்; ஆதலால் இக் கொலை பாவமாகாமல் அது செய்தாருக்குச் சிவபதம் பயக்கும் என்று துணிக’’.
"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட்டதணுெடு நேர்"
ஆறுமுக நாவலர் பெரியபுராணத்துக்கு எழு திய சூசனத்திற் சில பகுதிகளை மேலே எடுத்துக் காட்டாகக் காட்டினுேம். இவர் திருநீலகண்ட நாயனுர் புராணம் முதல் காரைக்காலம்மை யார் புராணம் முடிய இருபத்து மூன்று அடி யார்கள் வரலாற்றுக்கு மட்டும் சூசனம் எழுதி யிருக்கிருர் . இவருடைய குசனத்தில் வேறு சில இடங்களை ஆராய்வோம்.
கண்ணப்ப நாயனுர் புராணத்தில் புனித மானஅன்பின் தன்மையும், சிறப்பும் இவை என நாவலர் கூறுகிருர்:
**நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்களே
புக்கு நிற்கும் பொன்னுர் சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே’
என்ற திருநாவுக்கரசு நாயனர் தேவா ரத்தை எடுத்துக்காட்டி மெய்யன்பு இதுவென நிலை நாட்டுகின்றர். "எங்கும் உளன் ஒருவன கிய ஆண்டவன் நாம் செய்யும் ஏமர்ற்றங்களை அறிந்துவிடுவானே என்று அஞ்சி அங்கங் குலை யாமல் பூவும் நீரும் கொண்டு போலிப் பூசனை செய்து உலகத்தாரை ஏமாற்றுகிறவர்களுடைய பூசனையைக் கண்டு நக்கு நிற்பான் இறைவன்; நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து உவந்து உரு கிப் பூசனை புரிந்தார் கண்ணப்ப நாயனர் . அவர் புலாலைப் படைத்தார், தலையிற் செருவிய பூவைச் சூட்டினர். வாயிற் கொண்டுவந்த எச் சில் நீரால் முழுக்காட்டினர். இவை யாவும் பொக்கம் அற்ற செயல்கள். இவைகளெல்லாம் குற்றம் என்பதை அவர் அறியாராய் அன்புருவ மாக நின்று செய்தார். தம் கண்ணையும் பிடுங்கி

Page 27
இறைவன் கண்ணில் அப்பிக் கண்ணப்பர் ஆயி ஞர்,
சண்டேசுர நாயனர் புராணத்தில் தாம் பூசைக்கு வைத்திருந்த பாலைக் காலாற் கவிழ் த்த தம் தந்தையின் காலை வெட்டினமை மிக மிகப் புண் ணியமான செயல் ஆயிற்று என்ட தைத் தக்க காரணங்களைக் காட்டி நாவலர் நிலைநாட்டுகிருர், தாம் கூறும் காரணங்களுக்கு ஆதாரமாக நாவலர்,
**அரன் அடிக்கு அன்பர் செய்யும் பாவமும்
அறமதாகும் பரன் அடிக்கு அன்பிலாதார் புண்ணியம்
பாவமாகும் வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி
தீமையாகி நரரினில் பாலன் செய்த பாதகம்
நன்மையாய்த்தே."
என்ற சிவஞான கித்தியார்ச் செய்யுளை எடுத்துக் காட்டாகக் காட்டுகிருர்,
இங்ஙனமாகத் தருக்க முறை பிறழாமல் நாவலர் எடுத்துக்காட்டும் சூசனத்தின் பெருமை அதனைப் பலமுறை படித்துப் படித்து அறிந்து இன்புறத்தக்கது.
'நாவலருடைய திருமேனியில் தலையும் நெற்றியும் மிகப் பெரியன; காதுகள் கொஞ்சப் சிறியன; கைகளும் கால்களும் மெல்லியன உடல் கொஞ்சம் பெருத்தது; முகரோமங்கள் மிக்க பெலமுடையன; கழுத்துக்கு மேலே யுள்ள பெலமும், மனப்பெலமுமன்றி, சரீரம் ஒரு காலத்தும் வேலை செய்யாமையாற் பெல னற்றது; மிக மிருதுவானது; நிறம் பொது நிறம்; புருடா கிருதி நன்ருயிருக்கும்; உயரம் சாமானியமானது; ஆகாரம் அற்பம் " என்று இவருடைய வரலாற்ருசிரியரும் இவர் மாணவ ருமாகிய த. கைலாசபிள்ளை கூறுகிறர். கைலாச பிள்ளை இவருடனேயே நெடுங்காலம் வாழ்ந்தி ருந்த அறிஞர். இங்ங்னமாகிய திருமேனி யுடைய நாவலருடைய மாணவரிற் சிறந்த சில ரைக் காண்பாம்.
சதாசிவப்பிள்ளை என்பவர் இவரைட் போலவே திருமணம் முடித்துக்கொள்ளாமல் தம் ஆசிரியராகிய இவர் இருந்தவரைகூட இருந்தீ துணைபுரிந்து இவர் மறைந்த பின்னரும் முப்பது ஆண்டுகள் வித்தியாசாலைத் தலைவராக வாழ்ந்திருந்தார். சதாசிவப்பிள்ளை 1910 ஐட பசி எட்டாம் நாள் மறைந்தார்.

நடராசையர் என்பவர் வடமொழி தென் மொழிப் புலமை மிக்கவர்; மாணுக்கர் பலருக் குச் சைவசித்தாந்தத்தை விளக்கி 1903 மார் கழி மாதம் மறைந்தார்.
ஆறுமுகப்பிள்ளை என்பவர் சித்தாந்த நூல் களில் வல்லவர்; பெரிய புராணத்திற்குச் சிறந்த உரையொன்று வகுத்துள்ளார்.
பொன்னம்பலப்பிள்ளை என்பவர் தம் ஆசிரி யருக்கு அடுத்தபடியாக நாவன்மை பெற்று விளங்கினர். உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, பண்டிதர் வே. கனகசபாபதி ஐயர், திருவாவடு துறை ஆதீன வித்துவான் சபாபதி நாவலர் முதலான மாணவர் இவரிடம் கல்வி கற்றவர். இவர் 1899 மார்கழி மாதம் 5ஆம் நாள் திரு வடிப்பேறு பெற்றர்.
வி. சுப்பிரமணியபிள்ளை என்பவர் இவரி டம் மிக்க பற்றுடைய மாணவர். அவர் இவருக் குச் செய்துவந்த பணிவிடைகள் எண்ணற்றன. அவர் இளமையில் இறந்துபோயினர். அவரிட்ம் அடங்காப் பற்றுடைய நாவலர் இருபது பாடல் களில் ஒர் இரங்கற் பாமாலை பாடி இரங்கினர். அவற்றுள் மூன்று வருமாறு :-
'இரு நிலத்தோர் கோபியென எடுத்துரைக்கும்
என் சினத்துக்கு ஒரு பொழுதும் இலக்காகாது ஒழுகி எனது
உளம் முழுதும்
உருகிய காதலிற் கொள்ளை கொண்ட
- உறவினன்சீர் பெருகிய சுப்பிரமணிய பெருந்தகையோய்
நீயன்றே.
* பிறரிடத்துச் செல்லா எம்பெருமானுர்
தமியேன் மாட்டு
உறவின் எழுந்தருளல் கண்டோர் உளைந்து
புறம் பழிப்பரென
அற நினைந்து புலம்பிய மெய்அன்பஇனிப்
பிழைத்திடின் அப்
புறவுரை கேட்பரிது என்றே புவியினை
விட்டேகினையே.
* உன்பாதம் மிகவருந்த ஒருசிறியேன்
மனைக்கணியான் இன்பார இழுபொழுதும் எழுந்தருள்வ
தென்னை எனத் துன்பார ெ லின் நீ சொற்றனை
நருநலின் நீ "இன்றென்மீதின் அன்பாலோ யான் வருந்தாது அரனுலகம்
அடைந்தனையே."

Page 28
மேலே கண்ட மூன்று பாடல்களும், ஆறு முக நாவலர் பிரபந்தத் திரட்டு என்ற சுவடி யின் ஈற்றில் * தனிப்பாமாலை ' என்ற பகுதி யில் அச்சிடப்பட்டுள்ளன. இவை சிறப்பான நடையில்லாமையால் நாவலர் பாடியன ஆகா என அறிந்தவர் கூறுப.
இவர் பாடிய முதற்பாட்டுப் பின்வருவது :
* சீர்பூத்த கருவிநூல் உணர்ச்சி தூக்கச்
சிவம்பூத்த நிகமாக மங்கள் ஒங்கப்
பார்பூத்த புறச்சமைய இருள்கள் நீங்கப் பரம்பூத்த சைவநிலை பாரோர்தாங்கப்
பேர்பூத்த சிவானந்தத் தினிது துய்க்கப்
பிறைபூத்த சடைமெளலிப் பிராஞர் தந்த
வார்பூத்த அறிவிச்சை தொழிலென் ருேதும்
மதம்பூத்த விநாயகன்ருளை வணங்கி
வாழ்வாம்’
இவர் கதிர்காம வேலன்மீது கீர்த்தனங்கள் பாடியிருக்கிருர், அவை கனிந்த உள்ளத்தோடு பாடப்பெற்றன. பின்வருவது ஒரு சிறு எடுத் துக்காட்டு :
பல்லவி
இத்தனை கொடு வேதனைப்படல் கண்டும் உமக்கு இன்னும் இரக்கம் இல்லையா?
சரணம்
எள்ளின் நெய் போலெங்கும் நிறைவீரே-உமக்கு என்துயர் தெரியாதோ அறைவிரே
தெள்ளுந்தமிழால் வைதார் தமக்கும்
அருள்வீர்என்று தீதில் அருணகிரிதேவர் சொல் நம்பிவந்தேன் -(இத்)
மற்ருெரு பல்லவி வருமாறு :
* என்மேல் இரக்கம் இல்லையாசாமி
பகல்வணக்குக்கங்கை
இரங்காதிருந்தால் என் சொல்லும் பூமி."
ஆறுமுக நாவலரே முதல் முதலாக நூல் களை அச்சிடும் முறை கைவந்து திருக்குறள் முத லிய பெருநூல்களை அச்சிட்டு உதவினவர். பரி மேலழகர் உரைக்குச் சிறப்பான விளக்கங்களை அடிக்குறிப்பாக இவர் அச்சிட்டுள்ளார். உரை யிற் கண்ட மேற்கோள் இன்ன நூலில் இன்ன இடத்தில் உள்ளது என்று அடிக் குறிப்பிற் காட்
20

டியதே இவருடைய பெரும் புலமையை நிலை நாட்டுகின்றது. பரிமேலழகரை எவ்வாற்ருனும் ஒத்த புலவர் நாவலர் என்பது உண்மை. இங்கே ஒரு சிறு எடுத்துக்காட்டினைக் கூறு வோம். " மக்கட்பேறு" என்ற அதிகாரத்தில்
'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்'
என்பது திருக்குறள், கூழ் - சோறு. இதனை விளக்கவந்த பரிமேலழகர்
* சிறுகை அளாவலாவது இட்டுத் தொட்டும்
கெளவியும் துழந்து நெய்யுடைய அடிசில் மெய்பட
விதிர்த்தல் ??
என்று கூறுகிருர், நாவலரோ இதனை மேலும் விளக்க அடிக் குறிப்பில் பின்வருமாறு காட்டி ஞர் : புறநானூறு - 188.
* படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கெளவியும் துழந்து நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை இல்லோர் பயக்குறை இல்லை தாம் வாழுநாளே, ’
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய
மூவர்க்கு நல்லாற்றி னின்ற துணை,'
என்பது திருக்குறள். இக்குறளின் இலக்கண அமைதி விளக்கவந்த பரிமேலழகர்,
*" என்பானெனச் செயப்படு பொருள் வினை முதல் போலக் கூறப்பட்டது ' என்று குறித் துள்ளார்.
நாவலரோ இதனைத் தெளிவாக விளக்கு தற்கு " " எனப்படுவான் எனற்பாலது செயப் பாட்டு வினைப் பொருளுணர்த்தும் படு விகுதி தொக்கு என்பான் என நின்றது எனக் கொண் டார் பிரயோக விவேக நூலாரும் தொல் காப் பியச் சூத்திர விருத்திக்காரரும். இவ்வாறு வரு வனவற்றை வடநூலார் நயக்கு என்பர் " என அடிக்குறிப்புத் தந்துள்ளார். இஃது நாவலரு டைய இலக்கணப் புலமைக்கும் வடமொழிப் புலமைக்கும் சான்ரு கும்.

Page 29
:- இவரே உரையெழுதி வெளியிட் டு ஸ் ள கோயிற் புராணம் முதலியவற்றுள் இவருடைய நுண்ணறிவு புலப்படுகின்றது. அறிஞர் அவை களைப் படித்துத் துய்த்து இன்புறுவாராக!
இவர் பொய்ம்மை பேசாத புனிதர். எப் போதும் திருநீறு பூசிய திருமேனியுடனேயே இருப்பார். கிருத்தவரோடு கூடியிருந்து பணி புரிந்த காலத்திலும் தம் சமைய அடையாளங் களாகிய திருநீற்றையும், கண்மணி மாலையினை பும் அணிந்துகொண்டே யிருப்பார். கோப முடையவராயினும் இரக்கமும் ஈகையும் பெரி தும் உடையவர். நந்தனர் வரலாற்றைக் கீர்த் தனையாகப் பாடியிருக்கிற கோபாலகிருட்டின பாரதியாருக்கு இவர் பல பரிசுகள் வழங்கிப் பாராட்டியிருக்கிருர்.
சைவத் திருவேடத்துக்கு இவர் மிகுந்த மதிப்புத் தந்தவர். தம்மைப் பலவாறு இகழ்ந் துரைத்தவராகக் கருதிக் குற்ற நீதிமன்றத்தில் தாம் வழக்குத் தொடர்ந்திருந்த இராமலிங்க அடிகளாரை நீதிமன்றத்திற் கண்டபோது இவர் எழுத்து மரியாதை செய்தார் என்பது அறிந்தார் கூற்று. தம்முடைய திருமனைவியா ரைக் கேட்ட சிவனடியாரைச் சினந்துகொள் ளாமல் இயற்பகையார் பணிந்து அப்பெண் மணியாரை அடியாருடன் அனுப்பிய வரலாறு இங்கே ஒப்பு நோக்கத்தகுந்தது. சிவனடியார்
 

தம்முடைய கற்புக்கரசியாராகிய மனைவியாரை உடன் அழைத்துச் சென்று தகாத முறையில் நடக்கத் தொடங்கினுல் உடனே எரிந்து சாம்ப ராவார் என்பதனை இயற்பகையார் அறிந்தே அக் கற்புக்கரசியாரை உடன் அனுப்பி வைத்தார் என்பது அறிஞர் கண்ட உண்மை.
'தெய்வம் தொழாஅள் கொழுநற்
ருெழுதெழுவாள் * பெய் எனப் பெய்யும் மழை ??
(தெய்வப் புலவர்)
இவர் அறுபத்து மூன்று நாயன்மார் வர லாறு கூறும் பெரிய புராணம், மதுரைச் சொக்கலிங்கப் பெருமான் காட்டிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் கூறும் புராணம் முதலிய பெருநூல்களின் வரலாற்று உண்மை களைத் தமிழ் மக்களில் கற்ருரோடு கல்லாதா ரும் அறிந்து வழிப்படுமாறு உரைநடைகளில் அவைகளை எழுதினர். உலகத்தார் உண்மைகளை அறிந்து ஈடேற வேண்டும் என்ற இவருடைய பெருங்குணம் பெரிது, பெரிது.
தமிழுக்காகவே பிறந்து, தமிழுக் காகவே வாழ்ந்து, தமிழ்த் தாயை வளர்த்துப் போற்றித் திகழ்ந்த ஆறுமுக நாவலர் பெரும் புகழ் நீடு
வாழ்வதாக.

Page 30
நாவலர்
- பேராசிரியர் : சு.
தமிழ் மொழியையும் நல்லொழுக்கத்தை யும் சைவ சமயத்தையும் வளர்த்தவர் நாவல ரைப்போல் ஒருவருமில்லை. மொழிபெயர்ப்புக் கலையில் ஈழத்தவர் தலைசிறந்தவர் என்பதனை யும், யாழ்ப்பாணத் தமிழ் செந்தமிழ் என்பத னையும் பைபிள் மொழிபெயர்ப்பு அரங்கேற் றத்தின் மூலம் தமிழ் நாட்டிலே நிலைநாட்டி ஈழத்திற்கு வான்புகழ் தேடிக் கொடுத்தது அவர் செய்த முதற்ருெண்டாகும்.
ஈழத்திலும் தமிழகத்திலும் சைவம் வாழ அவதரித்த ஆறுமுக நாவலர் ஐந்தாம் குரவரா கக் கணிக்கப்படுகின்றர். பிரசங்கம் மூலமும், நூல்கள் வாயிலாகவும், துண்டுக் கட்டுரைகளா லும், தனது வாழ்க்கையாலும் சைவத்தை ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் நிலைநாட்டினர்.
1847 ஆம் ஆண்டு டிசெம்பர் மா தம் 31 ஆம் நாள் வண்ணுர்பண்ணை வைத்தீசுவரன் கோயிலிற் சைவ ஆகமங்கள்பற்றியும் சமயகுர வர்பற்றியும் முதன் முதற் பிரசங்கஞ் செய் ததிலிருந்து தமிழ் விரிவுரையாற்றும் முறை யைத் தொடக்கி வைத்தார். அவருக்கு முன், கோயில்களிற் படிக்கும் புர ரண இதிகாசங்க ளுக்கு விரிவுரை கூறுதலே வழக்கமாக இருந் தது. புறம்பான ஒரு பொருள்பற்றித் தமிழில் விரிவுரை நிகழ்த்துவதை அவரே தொடக்கி ஞர். தமிழகத்திலே அவர் நிகழ்த்திய விரிவுரை கள் அவருக்கு நாவலர் என்ற பட்டத்தைத் தேடி அளித்தன. இப்பிரசங்கங்கள் மூலம்

சாதனை
வித்தியானந்தன் -
சைவத்தையும் தமிழையும் ஈழத்திலும் தமி கத்திலும் வளர்த்தார்.
**தானம் எல்லாவற்றுள்ளும் தக்க வித் தியாதானமே மேல் ' என்று எடுத்துச் சொல்லி யாழ்ப்பாணத்திலும் சிதம்பரத்திலும் வித் தியாசாலைகளை நிறுவிச் சமயக் கல்வியை மாண வருக்குப் புகட்டினர். யாழ்ப்பாணத்தில் அவர் நிறுவிய வண்ணைச் சைவப்பிரகாச வித்தியா சாலை நூறு ஆண்டுகளுக்கு மேற் சைவத் தமிழ் மாணவருக்கு கல்வி அளித்து வந்திருக்கின்றது. சிதம்பரத்தில் அவர் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலை அங்கு பின்பு அண்ணுமலைப் பல் கலைக்கழகம் தோன்ற வழிகாட்டிற்று. குருகுல முறைப்படி வந்த தமிழ்க் கல்வி ஒரு சிலருக்கே பயனளித்தது. பாடசாலைகளைத் தாபித்ததன் மூலம் இம்முறையை மாற்றிப் பலர் கல்வி அறிவு பெற வழிவகுத்தார். அவரை இலவசக் கல்வியின் தந்தை என்றும் கூறலாம். மாணவர் செலவின்றிக் கற்க வைத்ததுமன்றி வழிவகை யில்லாத மாணவருக்கு உணவும் உடையும் அளித்தார். பாடசாலைகளில் இலக்கிய இலக் கணத்துடன் கணிதம், தருக்கம், வைத்தியம், வாணிக நூல், வேளாண்மை நூல், சிற்ப நூல் முதலியவற்றைப் படிப்பிக்க ஒழுங்கு செய்த மையும் கல்வித் திட்டத்தில் அவர் செய்த புரட் சியாகும்;
மாணவருக்கும் பொதுமக்களுக்கும் சைவ உண்மைகளை விளக்குவதற்குரிய நூல்களையும்
B

Page 31
துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட அச்சகம் நிறுவியதும் பெருந்தொண்டாகும். அதன் பய ஞகச் சமய அறிவு பலரிடம் பரவியது. மாண வருக்கும் ஏனையோருக்கும் பயன்படக்கூடிய பல நூல்கள் வெளிவந்தன. அவர் பரிசோதித் தும் புதிய உரை எழுதியும் புதிதாய் இயற்றியும் வெளியிட்ட நூல்கள் 59. அச்சிற் பதிப்பிக்கும் நோக்குடன் எழுதி முடித்தவை 10. எழுதத் தொடங்கியவை 9. அவரது 21 வயதிவிருந்து அவர் இறக்கும் வரையுள்ள காலப்பகுதியாகிய 35 ஆண்டுக்கிடையில் மற்றைய Lust fuu வேலைகளுடன் 59 நூல்களை எழுதி அச்சிட் டமை வியக்கத்தக்கது: அச்சுக் கூட வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்திலே இத இனச் செய்து முடித்தமை அரிய பெரிய சாதனை பாகும். மேலும் அவர் வெளியிட்ட 59 நூல்க கும் ஒர் எழுத்துப் பிழையோ அச்சுப் பிழையோ இலக்கணப் பிழையோ இல்லாதிருந் தமை வேறெவரும் இதுவரை சாதியாததொன் ஒகும். இதஞலேயே நாவலர் பதிப்பு என்றல் தன் ைபதிப்பு என்ற மதிப்பு அவர் பதிப்பு நூல் களுக்கு இன்றும் இருந்து வருகின்றது.
வசளதடை என்ருல் இஃது என்று எழுதிக் காட்டியமையாலேயே அவரை ‘வசன நடை கைவந்த வல்லாளர்" என்று பாராட்டினர். நாவலர் காலத்துக்குமுன் இலக்கியம் பெரும் பாலும் செய்யுள் வடிவிலேயே இருந்தது. நுண் னுண்ர்வு படைத்த புலமை வல்லார்க்கே அவை பயன்பட்டன. நாவலர் எழுத்தைப் பயன்படுத்தியது பொதுமக்க ளு க் கா க வே. தமது படைப்பினுல் பலர் பயனடைய வேண்டு
R

மாயின் அப்படைப்பு வ ச ண ந டை யி ல் அமைய வேண்டுமென உணர்ந்தார். எனவே, ஆறுமுக நாவலர் வசனநடையைக் கையாண் டதும் பொதுநலம் கருதியெனலாம். மேலும் அவ்வசனநடை உரையாசிரியர்கள் நடை போலவோ, தமக்குமுன் தோன்றிய உரைநடை எழுத்தாளரின் நடைபோன்ருே இருந்தாற் பய னில்லை என்பதனையும் உணர்ந்து, புதியதோர் உரைநடையினைத் தொடக்கி வைத்தார். சொல்லின் வளமும், தெள்ளிய நடையும், கருத் துச் செறிவும், இன்னேசையும், குறியீடுகளுங் கொண்ட நடையினைக் கையாண்டு இக்கால உரைநடையின் தந்தையாக விளங்கினர்.
மதச் சீர்திருத்த வாதியாகவும் நாவலர் விளங்கினர். கோயில்களில் நடக்கும் ஊழல் களையும், அக்கிரமங்களையும், அவற்றிற்கும் காலாகிய கோயில் தர்மகர்த்தாக்களையும் கார சாரமாக விமர்சனம் செய்து அம்பலத்திற்கு இழுத்துப் போராடினர். சிவ ஆகம நிந்தனை செய்யும் தீகழிதர்களையும் பிரசங்கங்கள் மூலம் தாக்கினர். இவற்றின்மூலம் ஓர் சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்தார்.
இவ்வாறு மிகச் சுருங்கிய கால எல்லையிற் பலதுறைகளிலே பெரும் பணி ஆற்றிய தனி யொரு மனிதர் வேறெவரும் இல்லையெனலாம்: ஒழுக்கம் நிறைந்த அவரது வாழ்க்கையே இவை யாவற்றினையும் சாதிக்க ஆற்றலளித்
தது.

Page 32
ஈழநாட்டில் த
பண்டைக் காலந்தொட்டு ஈழநாடு தமிழ் மொழிக்குச் சிறந்த இருப்பிடமாகத் திகழு கின்றது. சங்க காலத்தில் ஈழ நாட்டிலிருந்தும் பல புலவர்கள் தமிழகம் சென்று தமிழ் மொழியை அலங்கரித்துப் புகழ் பெற்று விளங் கினர். அவருள் ஒருவர் ஈழத்துப் பூதந்தேவ ஞர். அவரினது பாக்களுட் சில சங்க நூற் களிற் காணக்கிடக்கின்றன.
ஈழத்துத் தமிழரசர் காலத்தில் தமிழ் மொழி பல துறைகளிலும் உயர்ந்த நிலையில் இருந்ததென்பதற்குப் பலவித சான்றுகள் உள. இக்காலத்திற்ருன் தட்சணகைலாச புராண மும், திரிகோணுசல புராணமும், பரராச சேக ரம் என்னும் வைத்திய நூலும் செகராசசேக ரம் என்னும் சோதிட நூலும் அரசகேசரி இயற்றிய இரகுவம்சமும் ஆக்கப்பெற்றனவாக அறிகின்ருேம். அன்றியும் சரஸ்வதி மகாலயம் என்னும் நூல் நிலையத்தையும் ஸ்தாபித்து தமிழ் நூல்களை ஒருங்கு சேர்த்துப் பேணிக் காத்து வந்தனர். இத்தகைய காரணங்களால் தமிழ்மொழி அக் காலத்து ச் சிறப்புற்ருேங் கியது.
அதுமட்டுமன்றி அக்காலத்து ஈழநாட்டை ஆண்ட சிங்கள அரசரும் தமிழ் மொழியை யும் தமிழ்ப் புலவரையும் மிகவும் அதரித்து
's d * வந்தனர். தம்பதேனியாவில் இருந்து அர சாண்ட மூன்ரும் பராக்கிரமவாகு என்பான் முன்னிலையில் போசராச பண்டிதர் என்பவ
30

மிழ் வளர்ச்சி
கணபதிப்பிள்ளை)
ரால் இயற்றப்பெற்ற சரசோதி மாலை என் னும் நூல் ( கி. பி. 1310) அரங்கேற்றப் பெற்றது.
அதன் பின் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகிய ஐரோப்பியர் ஆட்சியிலும் ஈழநாட் டிலே தமிழ்மொழி வளர்ச்சி குன்றவில்லை. ஆஞல், தமிழ்மொழி த னது வளர்ச்சியில் பழைய முறையோடு புதிய முறையையுந் தழு விக்கொண்டது, கூழங்கைத் தம்பிரான் என் பவர் ஆக்கிய யோசேப்புப் புராணம் என்னும் நூல் பழைய புராண முறையில் புதிய கருத் துக்களோடு ஆ க் க ப்ப ட் டது. பி லிப் பு தேமெல்லோ என்னும் ஈழநாட்டுதித்த கிறிஸ் தவ பாதிரியரால் கிறிஸ்தவ வேதாகமத்து ஒரு பாகமாகிய புதிய ஏற்பாடு தமிழில் மொழி பெயர்த்து அச்சிடப்பெற்றது. இதுவே தமி ழில் கிறிஸ்தவ வேதாகமத்தினின்று மொழி பெயர்த்து வெளிவந்த முதன் முதல் நூலா கும் இது மாத்திரமின்றி பழைய ஏற்பாட்டின் சில பாகங்களும் மொழி பெயர்க்கப்பட்டன. அன்றியும் மருதப்பக்க குறவஞ்சி என்னும் நூலும் இயற்றப்பட்டது. இது அக்காலத்து யாழ்ப்பாணத்தில் இராசவாச முதலியாரா யிருந்த மருதப்பிள்ளை எ ன் ப வர் பே ரி ல் தேமெல்லோப் பாதிரியார் இயற்றியது. இவை மட்டுமன்றி அவர் ' சத்தியத்தில் ஜெயம்" என்னும் நூலையும் இயற்றியுள்ளார். இன்னும் கவுரியேல் பச்சேக்கோ என்னும் கத்தோலிக் கக் குருவானவர் ' தேவ ஆசி பெற்ற மாந்தர்

Page 33
சரிதை " என்னும் வ ச ன நூலும் இயற்றி யுள்ளார். இஃது இருபெரும் புத்தகங்களாக வெளியிடப்பட்டது. இவற்றைவிட போர்த் துக்கேய ஒல்லாந்த காலத்தில் வேறு பல நூல் களும் இயற் ற ப் பெ ற் ற ன, யாழ்ப்பாண வைபவமாலை என்னும் சரித்திர நூலைக் கூழங் கைத் தம்பிரானின் மாணவருளொருவராகிய மாதகல் மயில் வாகனப் புலவர் என்பார் இயற் றியுள்ளார். அதனேடு நில்லாது புலியூர்யம க அந்தாதி, காசி யாத்திரை என்னும் செய்யுள் நூல்களையும் ஞான லங்கார ரூபக நாடகம் என்னும் நாடக நூலையும் பாடினர்.
பின்னர் ஆங்கில ஆட்சி தொடங்குகின் றது. இக்காலத்து முதல் பகுதியில் சின்னத் தம்பிப் புலவர் என்னும் புலவர் சிகாமணி திகழ்ந்தனர். விரைவிற் கவிபாடும் வன்மை வாய்ந்தவர். மறைசையந்தாதி கல்வளையந் தாதி என்னும் பிரபந்தங்களை யாத்தனர். அக் காலத்து யாழ்ப் பாணத்துக் கர வெட் டி யென்னும் ஊரில் வாழ்ந்த வேலாயுதம்பிள்ளை என்பவரை பாட்டுடைத் த லை வ னு க் கி க் * கரவைவேலன் கோவை" என்னும் கோவை நூலையும் செய்தனர். பருளை விஞயகர் பள்ளு என்னும் பள்ளுப் பிரபந்தத்தையும் யாத்தனர்.
புலவர்களைக் குறித்துப் பேசுமிடத்து சேன திராய முதலியார் என்பவரைப் பற்றியும் குறிப்பிடல் வேண்டும். இவரும் கூழங்கைத் தம்பிரானிடம் கல்வி பயின்றவர். ஆங்கில மொழியோடு போர்த்துக்கேய மொழியையும் க்ற்றுணர்ந்தவர். அன்றியும் அவர் காலத் துள்ள வித்துவான்கட்கெல்லாம் ஒருசிரோமணி யாய் விளங்கியவர். இவரிடம் கற்ற மாணவர் பலர். அவருள் பூரீலபூரீ ஆறுமுக நாவலரும் ஒருவராவர். சுருங்கக் கூறுமிடத்து இப்பெரி பாரின் முயற்சிகளால் யாழ்ப்பாணத்தில் தமிழ் மிக விருத்தியடைந்தது. நல்லைவெண்பா, நல்லையந்தாதி, நல்லைக்குறவஞ்சி என்னும் பிரபந்தங்களை இயற்றியுள்ளார். தனிக் கவி களையும் யாத்துள்ளார்.
இக்காலத்துத் திறமை வாய்ந்து விளங்கிய புலவர்களுள் சிவசம்புப் புலவருமொருவரா வர். இவர் யாழ்ப்பாணத்து இளமை தொட் டுக் கவிபாடும் வன்மை படைத்தவர். ஈழ மண்டலத்தில் பி ர ப ந் த ம் பாடியவர்களுள் இவரிே தலைசிறந்தவர். பாஸ்கர சேதுபதி மீது ஒர் கல்லாடக் கலித்துறையும் நான்மணி மாலை யும் இட்ரடை மணிமாலையும் வேறு தனிக் கவிகளும் பாடியவர். அப்பாடல்களைச் சேது

f
பதி முன்னிலையில் அரங்கேற்றி மதிப்பும் பெற்றவர். அன்றியும் பண்டித்துரைத் தேவர் அவர்கள்மேல் ஒரு நான்மணி மாலை பாடிப் பரிசில் பெற்றர். அவர் காலத்திருந்த பிர புக்கள் மீதும் தனிப்பாடல்கள் இயற்றியுள் ளார். மறைசையந்தாதி யாப்ப ரு ங் க ல க் காரிகை என்னும் நூல்களுக்கு உரையுங் கண் டனர். பல மாணவரை ஒருங்கு கூ ட் டி ப் பாடஞ் சொல்லித் தமிழை வளர்த்தார்.
ஈழத்துப் புலவர்களைப் பற் றிப் பேசு மிடத்து யாழ்ப்பாணத்து ஏழாலை சுப்பையா யப் புலவர், என்பவரைப் பற்றி உரையா திருக்க முடியாது. இவர் யாழ்ப்பாணம் வண் ணுர்பண்ணை மேளகாரப் பகுதியைச் சேர்ந்த வர். அதஞல், இவரை நட்டுவச் சுப்பையர் என்று அக்காலத்து அழைத்தனர், இலக்கண இலக்கியங்களிற் பயின்றவரோ என்று ஒருவ ருக்கும் தெரியாது. ஆனல், இவரை ஒரு இயற் கைப் புலவன் என்றே கூறல் வேண்டும். இவர் இயற்றிய, ' கனகி சுயம்வரம் ' என்னும் நூல் இவரது இயற்கைப் புலமைத் திறமை யையும் வர்ணனைச் சிறப்பையும் புத்திசாதுரி யத்தையும் நன்கு தெரிவிக்கின்றது. இந்நூலில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பிர புக்களைப்பற்றியும் பல சுவையான செய்திகள் மலிந்துள்ளன. இவர் பாட்டுக்களில் சொல் லும் பொருளும் அழகாய் அமைந்துள்ளன. பாடல் மாதிரிக்கு அவர் நூலிலிருந்து ஒரு விருத்தம் தருவாம் :
காட்டுக் குயிலைக் கடி தோட்டி கனத்த
நாவி நெய் தடவி மாட்டு மினிய சொல்லா ளே மானே
தேனே கனக மின்னே ஒட்டைக் காதி னுடனிருந்திங் குவந்தே
புடவை விற்கின்ற நாட்டுக் கோட்டைச் செட்டிகளி னல்லாண்டப் பணிவன் காணே.
ஈழநாடானது ஆங்கிலேயரது கையில் சென்றதும் ஆங்கு இதுகாறும் வழங்கிவந்த தமிழ் மொழியும் ஒரு புத்தம் புதிய முறையில் வளரத் தொடங்கியது. புத்தம் புதிய கலை கள் தோன்றின. இதுகாறும் புலவர்கள் செய் யுள் நடையையே நூல் யாத்தற்குப் பெரிதும் கையாண்டு வந்தனர். ஆஞல், ஆங்கிலேய ருடன் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பி வந்த பாதிரிமார் தம் சமயக் கொள்கையைப் பரப்
புவதற்குச் செய்யுள் நடை ஓர் இடையூரு
3.

Page 34
யிருந்ததைக் கண்டு கற்ருேரும் கல்லாதோ ரும் தமது கொள்கையை இலகுவில் விளங்கிக் கொள்வதற்காக வேண்டிய வசன நடையைக் கையாளத் தொடங்கினர். அன்றியும் மேலைத் தேசத்து முன்னேறி வந்த வைத்தியம், விஞ் ஞானம், கணிதம், தருக்கம் முதலிய பகுதி யில் எழுந்த நூல்களைப் பின்பற்றி, தமிழிலும் நூல்களியற்றினர்.
இக்கலையாக்க முயற்சியில் பெரிதும் ஈடுபட் டிருந்தவர் யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த கிறீன் பாதிரி யார் ஆவர். அவருக்கு உதவியாக இருந்து பணியாற்றியவர் தான்போத்து, சாப் ம ன் உவில்லியம் போல், கருே?ல் விஸ்வநாதபிள்ளை, நெவின் சிதம்பரப்பிள்ளை முதலியோர் ஆவர். இவர்கள் மொழிபெயர்த்தும், தாமாக இயற் றியதுமாகிய நூல்கள் பல. அவை யாவும் வசன நடையில் எழுதப்பெற்றவை.
இந்நூல்கள் கவனிப்பாரின்றி அருகிவிட் டது, தமிழ்மொழியின் தவக் குறைவு போலும். இப்பெரியார்கள் 19 ஆம் நூற்றண்டிற் செய்த பணியைக் குன்றவிடாது மேலும் மே லும் தமிழ் மக்கள் இத்துறைகளில் உழைத் திருப் பரேல்,
* புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவுங் கூடுவதில்லை - அதைச்
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்
என்றந்தப் பேதை யுரைத்தான்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு
தந்தையருள் வலியா லும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும் இந்தப் பெரும் பழிதீரும் - புகழ்
ஏறிப் புவிழிசை என்றும் இருப்பேன்."
எ ன் று கூறி ப் பாரதியார் உ ள ம் நொந்து புலம்புவதற்கு இடம் வந்திராது. இந்த இரு பதாம் நூற்றண்டிலே, கலைச்சொற்கள் தேடற் பொருட்டு கலையாக்கக் கழகங்கள் முயலவேண் டியதில்லை. இக்கழகங்கள் வெறு ஞ சொற் களைத் தேடித் தேடி வாணுளை வீணுளாக்கு கின்றன. வட்டுக்கோட்டையில் அப்பெரியார்

செய்த பணியின் நூற்றிலொரு பங்கேனும் பெரும் பட்டதாரிகள் சேர்ந்த இக்கழகங்கள் இன்னும் செய்தில இனிமேலாவது செய்யுமோ? வெறும் சிலுசிலுப்பொழிய வேறென்றையும் காணுேம்.
எம்மொழிக்கும் முதற் கரு வியா யமை ந் தவை இலக்கணமும் நிகண்டுமாம். தமிழ் நாட் டில் மேனுட்டுப் பாதிரிமார் வந்து தமிழைப் படித்துப் பணியாற்றும் வரையும் நிகண்டுகளே தமிழ்மொழிப் பயிற்சிக்குத் துணைபுரிந்து வந் தன. இந்நிகண்டுகளெல்லாம் செய்யுள் வடி வமாக இயற்றப்பட்ட நூல்களானதால் அவை கற்ருேர்க்கே பெரிதும் பயன்பட்டன. த மி ழைப் படித்த மேனுட்டு முறையில் அகராதி ஒன்று இயற் றி  ைல் த மிழ் படித்தற்கு மிகவும் உதவி புரியும் என்று எண்ணினர், இதன் காரணமாக அக்காலத்துப் பா தி ரி மாருக்குள் சிறந்த தமிழ்ப் புலமையோடு விளங்கிய இத்தாலியா தேசத்துக் குருவான வர் வீரமாமுனிவர் என்பார் * சதுர் அகராதி" என்ருேர் அகராதியை வகுத்தனர். ஆனல், தமிழ்மொழியில் வழங்கிய முழுச் சொற்களும் இவ்வகராதியில் இடம்பெறவில்லை. யாழ்ப் பாணத்தில் வந்து பணியாற்றிய கிறிஸ்தவ பாதிரியார் இக்குறையைக் கண்டு அதை நீக்கு முகமாகத் தான் மேனுட்டு முறையில் ஓர் புதிய அகராதியை ஆக்கிவைக்க முயன்றனர். இவ்வெண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு, அக்காலத்து யாழ்ப்பாணத்தில் வி ள ங் கி ய தமிழ் அறிஞர் கொண்ட ஒரு குழு வை அமைத்து சொற்களைச் சேகரிக்கும் முயற்சி யிலீடுபட்டனர்.
இம்முயற்சியின் பலனுல், " மானிப்பாய் அகராதி' என்ற பெயரோடு ஒர் அகராதி வெளிவந்தது. இத்துடன் நில்லாது ஒரு தமிழ் ஆங்கில அகராதியையும் வெளியிட முயன்ற னர். இந்நோக்கத்தோடு பல்லாண்டு முயன்று தாம் சேர்த்த சொற்களையெல்லாம் அகர வரிசைப்படுத்தி உவின்சிலோ பாதிரியாரிடம் கொடுத்தனர். அவர்அதனைத் திருத்தி அமைத்து 1862 ஆம் ஆண்டு சென்னை பட்டி ணத் தில் அச்சேற்றி வெளியிட்டனர். இதுவே மேனுட்டு முறையில் தமிழ்ச் சொற்களைக் கோவைப் படுத்தி வெளிட்ட தமிழ்ப் பேரகராதி என லாம். பின்னெழுந்த அகராதியெல்லாம் இத னைப் பின்பற்றி எழுந்தவையாகும். எனினும் இவ்வகராதியில் காணும் சிறப்புகள் மற்றெல் வகராதியிலும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்
2

Page 35
கென்னே மாகாண ஆட்சியில் பெரும்தொகை ச்ெலவிட்டு பால்லாண்டு முயன்று வெளிவந்த 'தமிழ் அகராதி' தானும் இந்நூலை முன் மாதிரியாகக் கொண்டே எழுந்தது. உவின் சிலோ அகரதியிலும் பார்க்க இத்தமிழ் அக ராதியில் சொற்கள் அதிகமுண்டு. சொற்களின் பிறப்பைக் கூறுவதாக அந்நூலில் குறிக்கப் பட்டுள்ளது. தமிழில் வந்து வந்து வழங்கும் சங்கத மொழிச் சொற்களுக்கும், உருது, இத் துஸ்தானிச் சொற்களுக்கும் சரியொப்பாய் அந்தந்த மொழிகளிலுள்ள சொற்களைக் கூறு வதேயன்றி அச்சொற்கள் எவ்வெம்மாற்றங் களை யடைந்து தமிழ் ரூபம் அடைந்த ன வென்று கூறுவதில்லை. அதளுேடு உ ண் மை யான தமிழ்ச் சொற்களின் பிறப்பு முறை ஒன்றையுங் காளுேம். சுகுங்கக் கூறின் உவின் சிலோ செய்த அகராதியிலும் பார்க்க இங்கு எடுத்துப் பேசும் "தமிழ் அகராதி' அவ் வளவு சிறத்தது அல்ல எனல் மிகையாகாது. தமிழ்மொழியிலே வழங்குகின்ற சொற்களின் பிறப்பை ஆராயும் முயற்சியிலும் முனைந்து நின்ற பெருமை ஈழநாட்டிற்கே உரியது.
இக்கூற்றுக்குச் சான்ரு க நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ஆக்கி வெளியிட்ட சொற் பிறப்பு ஒப்பியல் அகராதியின் முதற்பகுதி யைக் கூறலாம். சொற்களைப் பற்றி அப்பெரி யார் செய்த ஆராய்ச்சி முழுதும் சரியென்று கூறுகின்றேமல்லோம். ஆனல், தமிழ் மொழிச் சொற் பிற ப் பு ஆராய்ச்சிக்கு வழிகோலிய பெருமை இப்பெரியார்க்கே உரியது. இந்த அகராதி முழுதும் எழுதி முடிந்ததாகக் கேள்வி, இந்நூல் முழுவதும் வெளிவரின் சொற்பிறப்பு ஆராய்ச்சித் துறை யி ல் ஈடுபடுவோருக்குப் பெரிதும் துணை புரியும்.
ஆங்கில அரசுடன் மேலைத் தே ச த் து க் கிறிஸ்துவப் பாதிரிமாரும் தமது சமயத்தைப் ப்ர்ப்ப அயராது உழைத்தனர் என்று முன்னே காட்டினுேம். அவரின் ஒயா உழைப்பி ஞ ல் சைவ சமயத்தவர் பலர் தமது பண்டைய மதம் இவ்வாறு அழிகின்றதே என்று கவன் றனர். சிலர் இம்மத மாற்றத்தைத் தடுக்க வேண்டுமென்று முன்வந்துழைத்தனர்.
இவ்வாறு உழைத்தவர்களுள் தலைசிறந்த வர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவ லர் அவ்ர்கள் ஆகும்; இப்பெரியார் இருபாலை சேனதிராயரிடம் த மிழை நன்கு கற்றவர். பாதிரிமார் நடத்திய பள்ளி க் கூட த் தி ற் சென்று ஆங்கிலமும் நன்கு கற்றவர். சங்கத
3.

மொழியிலும் சிறந்த வல்லுனர். கிறிஸ்தவப் பாதிரிமாருக்காக இளமையிலே விவிலிய நூலை தமிழிலே மொழிபெயர்த்துக் கொடுத்தவர். இங்கனம் சைவ சமயம் குன்றுவதைக் கண் ணுற்று பாதிரிமார் முயற்சியைப் பல வகை யாலும் தடுப்பதற்கு முயன்ருர், அதன் பய ஞப் சைவ சமயத்தை நிலைநாட்டும் பொருட்டு யாழ்ப்பாணம் எங்கணும் சைவப் பாடசாலை களை நிறுவி, சைவசமயக் கல்வியையும் தமிழ் மொழியையும் மக்களுக்குப் புகட்டிவந்தார். அன்றியும் அப்பள்ளிக்கூடங்களில் பாவிப்பதற் காக பல நூல்கள் தேவையெனக் கண்டார். அக்காரணத்தால் சென்னை பட்டணத்திலே ஓர் அச்சுக்கூடம் ஏற்படுத்தி ஏட்டு வடிவிலே இருந்த அரிய பெரிய தமிழ் நூல்களையெல்லாம் அச்சேற்றி வெளியிட்டார். பள்ளிக்கூடங்களிற் பயிலும் சிழுர்க்கென தெள்ளிய நடையில் பாலபாடங்களையும் தாமே வெளியிட்டார். சமய சம்பந்தமான புரா ன இதிகாசங்களை முதன்முதலாக அச்சேற்றி உலகுக்களித்த பெரி யார் ஆறுமுக நாவவர் பெருந்த கையே.
நிற்க, கிறிஸ்தவப் பாதிரி மா ரோடு எதிர்த்து சைவ சமய அறிவைப் பெருக்கும் வண்ணம் அப்பாதிரிமாரைப் போல் சைவ சமய உண்மைகளைத் துண்டு ப் பத்திரங்கள் மூலம் எழு தி வெளிட வேண்டியதாயிற்று. இது கா று ம் இப்படிப் பட்டவையெல்லாம் செய்யுள் நடையிலே எழுதி வெளியிடப்பட் டது. செய்யுள் நடை பொது மக்களுக்கு விளங் காது. ஆகையினுல் அப்படிச் செய்தால் தமது முயற்சி வீண் முயற்சியாய் முடிந்துவிடுமெனக் கண்டார். அதனுல் வசன நடையைக் கைய சண் டார். எனவே, அதனை யாவரும் விளங்கக் கூடிய செம்மை சான்ற தெள்ளிய முறையில் அமைத்தார். இவரியற்றிய பெரிய புராண வசனம் திருவிளையாடற் புராண வசனம் ஆகி யவை திருந்திய எளிய வசன நடைக்கு இலக் கியமாக அமைந்துள்ளன. இக்காரணத்தால் அன்ருே 'பரிதிமாற் கலைஞன்” என மறுபெயர் பூண்ட வி கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்களும் நமது நாவலர் பெருந்தகையை * வசனநடை கை வந்த வல்லாளர்' எ ன் று கூறிப்போந்தனர்.
நாவலர் த மிழ் மொழிக்காற்றிய பிறிது மொரு தொண்டு மிகவும் பா ரா ட் டு தற் குரியது. கிறிஸ்தவப் பாதிரிமார் தமது சம யத்தைப் பரப்புவதற்காக ஆங்காங்கு சென்று மேடைகளில் நின்று பிரசங்கம் செய்வதைக்
3

Page 36
கண்டார். கண்டதும் தாமும் அவ்விதம் செய் யப் பயின்றுகொண்டால் சைவ ச ம ய மென எண்ணிஞர். இதன் பயனுய் யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்ணையிலுள்ள மண் ட பத் தி லே வெள்ளிக்கிழமை தோறும் சைவப் பிரசங்கஞ் செய்யத்தொடங்கினர்.தான் செய்தது மின்றி வேறு பலரையும் இவ்வாறு செய்யப் பழக்கிக் கொண்டார். இதன் பயணுய் முன்னெருபோது மில்லாத வழக்கமாகிய மே .ை ப் பேச் சும் தமிழ்மொழிக்கு வந்தது. ஆகையால் தமிழில் மேடைப் பேச்சு என்பதற்கு நாவலர் அவர் களே தந்தை. இவர்கள் தாய்நாடு சென்ற போது இவரின் பேச்சு வன்மையின் காரண மாக நாவலர் எனும் பட்டம் வழங்கப்பட லாயிற்று.
நாவலர் பெருந்த கை சமயத்துறையில் பெரிதும் தொண்டு புரிய சி. வை. தாமோதரம் பிள்ளை யென்னும் பெரியார் தமிழ் ஆக்கத்திற் காக வேழுேர் துறையிலே உழை த் தா ர். செல்லுவாய்ப்பட்டு அழிந்தொழியும் தறுவா யிலிருந்த சங்க நூற்களை ஊ ர் ஊT ரா ய் த் திரிந்து சேகரித்து ஒப்பு நோக்கி அச்சுவாக னம் ஏற்றித் தமிழ் அன்னையைச் சிறப்பித்த னர். கலித்தொகை, களவியல், வீரசோழியம், சூளாமணி, இலக்கணவிளக்கம் ஆகிய இந் நூல்கள் இவரின் ஒயா உழைப் பின லேயே இன்று நிலவுகின்றன. தமிழரின் அருங்கல மாகிய தொ ல் கா ப் பி யம் என்னும் இலக் கணத்தை இவர் உழைப்பு இல்லாதுவிடின் தமிழ் மக்கள் கனவிலும் காண முடி யாது. சுருங்கக் கூறின் நவலர் பெருந்த கை தமிழோடு சம்பந்தமுடைய சைவசமய நூ ல் களை யு ம் புராண இதிகாசங்களையும் திருத்தி வெளியிட பிள்ளையவர்கள் சங்க நூல்களையும் தொல் காப்பியம், இலக்கண நூல்களையும் வெளியிட் டார். இப்பெரியார்களின் உழைப்பினலன்ருே? தமிழ்மொழியிலுள்ள நூல்கள் இறந்துபடாது புத்துயிர் பெற்றன. இவர்களுக்குத் தமிழ் மக் கள் செய்யக்கூடிய கைமாறு யாதோ ? இவர் களது அடிச் சுவட்டைப் பின்பற்றியே காலஞ் சென்ற உ. வே. சாமிநாதய்யரும் தமிழ் நூல் களை அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்ருர்,
இதுவரையும் இயற்றமிழினது வளர்ச்சி யையும் ஆக்கத்தையும் குறித்துக் கூறினுேம். ஈழத்திலே நாடகத் தமிழும் இசைத் தமிழும் எவ்வாறு வளர்ந்ததென ஒரு சிறிது ஆராய் سا

வோம். ஈழத்தில் இன்றும் தென்மோடி வட மோடி முறைப்படி பல நாடகங்கள் நாட்டுக் கூத்து முறையாக ஆடப்பெற்று வந் த து. இன்றும் வருகின்றன. அவற்றுள் ஒரு சிலவே அச்சில் வெளிவந்துள்ளன. பூதத்தம்பி விலா சம், மீகாமன் வெடியரசன் நாடகம் என்னு மிரு நாடக நூல்களையும் நாம் அச்சு உருவத் தில் கண்டுள்ளோம். பன்நாடகம், எம்பிறி தோர் நாடகம் முதலிய பல நாடக நூல் கள் இன்றும் ஏட்டு ரூபமாக நாட்டிலிருக் , கின்றன. மட்டக்களப்புப் பகுதியில் வசந்தன் பாடல்கள் என்பன உண்டு. அவற்றைப் பாடிக் கூத்தாடுவர். இப்பாடல்களிற் சில அச்சில்
உள்ளன.
இசைத் தமிழிலும் ஈழ நா டு உழைக்கா திருக்கவில்லை. நாடோடிப் பாட்டுக்கள் வன் னிப் பகுதியிலும் மட்டக்களப்புப் பகுதியி லும் ஒரு தொ கை யா ய் வழங்குகின்றன. அவற்றைத் திரட்டி வெளியிடாதது வருந்தத் தக்கது. இன்றும் கோயில்களில் ஊ ஞ் சற் பாட்டு, கப்பற்பாட்டு, குழுத் தி ப் பா ட் டு, தாலாட்டு, அம்மானை முதலியவை புதியதும் பழையதுமாய் வழக்கிலிருக்கின்றன.
நிற்க, இசைத் தமிழ் ஆராய்ச்சியிலும் ஈழ நா டு மறக் கற்பாலதன்று. பழந்தமிழர் இசைக்கலையை நுணுகி ஆராய்ந்த பெருமை யும், வழக்கற்று மறந்து போன தமிழ் மக் களின் யாழ் எத்தகைய எவ்வுருவின என்று காட்டிய சிறப்பும் ஈழநாட்டுப் பெரியார் ஒரு வருக்கே உரியது. விபுலானந்த அடிகளையே இங்கு குறித்துள்ளோம். தமிழ் நாட்டி ன் ஏனைய பாகங்களிலே தமிழிசையைப் பழைய முறைப்படி கேட்பது அரிது. காதில் விழுவ தெல்லாம் பிறநாட்டுக் கலப்பிசை. ஆனல், இன்னும் மட்டக்களப்புப் பகுதியில் ஆடப் படும் கூத்துக்களிலோ அல்லது ஏ ரு ழ வர் வாயிலா அல்லது அரிவிவெட்டும் அரிவையர் ஆடவரிடத்ல்லோ அதிலது நெற்குத்து வணி தையர் நாவிலோ இன்றும் கேட்பது ஆரியான தமிழிசை, அவ்விசை ஒலியின் நடுவில் பிறந்த தன் காரணத்தினுலேயோ அடிகள் தமிழிசைக் கலை ஆராய்ச்சியிலீடுபட்டது ?
4

Page 37
நாவலரும்
- சி. தில்லை
sa da soyu Tari, Goiası
தமது எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் மட்டுமன்றிக் கல்விச்சாலைகளாலும் சைவத் தோடு தமிழையும் அறிவையும் வளர்த்த ஆறு முக நாவலரின் புகழ், பரிதியின் ஒளிபோல் ஈழத் திலும் தமிழ் நாட்டிலும் பரவிய ஒன்ருகும். தமிழ் கற்கும் மக்கள் ஈழத்தில் இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் இருந்தாலும் சரி, மலேசி யாவிலிருந்தாலும் சரி, அல் லது உ ல கி ன் வேறெந்தப் பகுதியிலிருந்தாலும் சரி அவர்கள் ஏதோ வகையில் ஆறுமுக நாவலருக்கு நன்றி யுடையவராகவே இருப்பர்.
தமது இருபத்தைந்தாம் வயதிலே வண்ணுர் பண்ணை வைத்தீஸ்வரன் கோவிற் சொற்பொழி வோடு மக்கள் மன்றத்துக்கு வந்து பொதுப் பணியாற்றத் தொடங்கிய நாவலரின் சைவத், தமிழ்க் கல்வித் தொண்டு வாழ்விலே கிட்டத் தட்டப் பாதிக்காலம் தமிழ் நாட்டிற் பயன் பட்டதாகும்.
முதன் முதலில் 1848-ல் அவர் பெர்சிவல் பாதிரியாரோடு தமிழ்நாடு சென்றது தமது பைபிள் மொழிபெயர்ப்பினை அரங்கேற்றும் பொருட்டாகும். அவரது மொழிபெயர்ப்புத் தலைசிறந்து காணப்பட்டமை நா வல ரை ச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் தமிழறிஞ ராகவும் தமிழ் நாட்டவருக்கு அறிமுகப்படுத்தி யது. அடுத்த ஆண்டு பிறமத, கலாசார ஊடுரு வல்களைத் தடுத்துச் சைவத்தையும் தமிழையும் பேணும் சுதேச மக்கள் தொண்டனுக நாவலர்

தமிழகமும்
Q参云”
நாதன் M. A. --
L.
ல்கலைக்கழகம், பேராதனை,
தமிழ்நாடு சென்றபோது, வேதாரணியத்தில் அவர் மேளதாளத்தோடு வரவேற்கப்பட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திலே நிகழ்த்திய சொற்பெருக்கின் விளைவாக நாவலர் என்ற பட் டமும் சூட்டப்பட்டார். அதன்பின்னர் நாவ லர் யாழ்ப்பாணத்திலும் தமிழ் நாட்டிலுமாகத் தொண்டாற்றினர்.
‘நமது நாடு’ என்று உரிமையோடு கூறக் கூடிய வகையிலும், யாழ்ப்பாணத் தமிழையும் சி. வை. தாமோதரம்பிள்ளையையும் அவமதித்த நரசிங்கபுர வீராசாமி முதலியாருக்கு உறுதி மிகு தன்னம்பிக்கையோடு 'நல்லறிவுச் சுடர் கொழுத்தக்கூடிய வகையிலும், இராமலிங்கப் பிள்ளைக்குப் போலியருட்பா மறுப்புத் தெரி விக்கத் தக்க வகையிலும் நாவலரின் தமிழ் நாட்டு மதிப்பு ஓங்கி நிலைபெற்றிருந்தது. 1860-ல் தமது அண்ணனருக்கு நாவலர் எழுதிய கடிதத்திலே ‘*யாழ்ப்பாணத்திலே உவாந்திக் கப்பட்ட அசுசிப்பிராணியாகிய நான் இ ச் சென்ன பட்டணம் என் சென்ம பூமியிற் சிறந்த தென்று சொல்லும் வண்ணம் கிருபா சமுத்திர மாகிப் பன்றிக் குட்டிக்கும் முலையருத்தின சர்வ சீவதயாபரராகிய நடேசரது திருவருளினுலே, சற்றே செளக்கியமாயிருக்கிறேன்' என்று குறிப் பிட்டிருப்பதும் நோக்கற்பாலது.
கிறித்தவர்கள் தம்மதம் பரப்புதற்கு மக்க ளுக்கு இலகுவாகப் பொருள் விளங்கத்தக்க உரை நடையையும், கல்விக் கூடங்களையும்,
35

Page 38
அச்சு வாகனங்களையும் முக்கிய கருவிகளாகக் கொண்டமை தெளிந்த நாவலர் அக்கருவிகளைத் தாமும் பணிகொள்ளத் தொடங்கினர். அக்கரு விகளே சைவத்தையும் தமிழையும் மக்கள் மத் தியிலே வளர்க்க வல்லன என்பதை நாவலர் தாமதமின்றி உணர்ந்து கொண்டார்.
எளிமையான நடையிலே கேட்டாரைப் பிணிக்கும் வகையிற் சொற்பொழிவாற்றலா மென்பதையும், அதனுல் விளையக்கூடிய பலன் களையும் தமிழ்நாட்ட வருக்கு எடுத்துக்காட்டிய வர் நாவலர். அடுக்கடுக்காகப் பிரபந்தங்களை யும் தல புராணங்களையுமே பாடித் 'தமிழைக் கட்டுக் கிடையாகக் கிடத்திய தமிழ்ப் புலவர் கள் பலர் உரைநடையில் எழுதும் திறனற்றுக் காணப்பட்ட வேளையிலே, பொருள் மயக்கமற்ற தர்க்க ரீதியும் எளிமையோடு கூடிய வலிமையும் வாய்ந்த வசன நடையைக் கையாண்டு எடுத் துக்கொண்ட காரியத்தை அது எவ்வளவு சிறப் பாக நிறைவேற்றுமென்பதையும் எடுத்துக் காட்டியவர் நாவலர். பிழையின்றித் தெளிவா கத் தமிழ் வசனங்களை எழுதப் பழக்கும் பொருட்டே சூடாமணி நிகண்டுரை, இலக்க ணச் சுருக்கம், இலக்கண வின விடை முதலிய நூல்களை நாவலர் வெளியிட்டனரெனலாம்.
சைவச் சிறர் தமது சமயத்துக்கும் பண் பாட்டுக்கும் பொருந்திய வகையிற் கல்வி கற் றலவசியமென நினைந்து யாழ்ப்பாணத்திற் கல் விக் கூடங்களை நிறுவிய நாவலர், யாழ்ப்பா ணத்தவர் உதவிய பொருளைக் கொண்டு சிதம் பரத்திலும் சைவ வித்தியாசாலை கண்டார். இன்று தமிழ் நாட்டின் வேறெந்தப் பகுதியிலும் கிடைக்காதளவு மதிப்பு ஈழத்தவருக்குச் சிதம் பரத்திற் கிடைக்கிறதென்ருல், அம்மதிப்பு நாவலர் எமக்கு விட்டுச் சென்ற மற்ருெரு முது சொமாகும்.
சிதம்பரத்திற் சைவ வித்தியாசாலை நிறுவி யது போலவே வேறு இடங்களிலும் கல்விக் கூடங்கள் ஏற்படுத்த எண்ணிய நாவலர் அவற் றுக்கு வேண்டிய ஆசிரியர்களை உருவாக்கும் பொருட்டுச் சிதம்பரத்திலே பெரியதொரு கல்விச்சாலை நிறுவும் ஆசைகொண்டார். அதற் காக 1868, 1870 ஆகிய ஆண்டுகளில் இரு விக் கியாபனங்களை வெளியிட்டார். ஆனல். அவ் வாசை நிறைவேறுமுன் நாவலர் சிவபதமடைந் துவிட்டார். ஆயினும், சிதம்பரத்தில் முன்னைப் பல்லவ, சோழ, நாயக்க மன்னவராற்றிய பணி களையெல்லாம் மிஞ்சி நாவலர் கல்விப் பணி இன்று பலருக்கு வாழ்வு கொடுக்கிறதென்றல்,

அதற்கு நாவலரின் சமுகப் பிரக்ஞையும் தீர்க்க தரிசனமுமே காரணங்களாகும்.
1858-ல் சென்னையில் வித்தியாதுபாலன அச்சியந்திரசாலையை நிறுவிய நாவலர் சமயப் பிரசாரத்துக்கு மட்டுமன்றிச் சீராகத் தமிழ்க் கல்வியை வளர்க்கவும் அச்சுயந்திரத்தைப் பயன்படுத்தியவராவர். ‘இலக்கண இலக்கியப் பிழைகளும் அச்சுப் பிழை களு மி ல் லா ம ல் உயர்ந்த தமிழிலக்கண இலக்கிய நூல்களையும் சைவசமய நூல்களையும் பதிப்பித்து உதவுவார். அரியரான எமது இளமைக் காலத்தில் ஆறுமுக நாவலரவர்களே அந் நூல்களைப் பிழையறப் பதிப்பித்து உதவினவர்கள்’’ என்று மறைமலை அடிகள் நன்றி பாராட்டியிருப்பது அத்துறை யில் நாவலர் தமிழ் பேசும் அனேவருக்கும் ஆற் றிய சேவையின் சிறப்பினை உணர்த்துவதாகும்.
அச்சுப் பிழைகளற்ற அரிய பதிப்புக்களை வெளியிட்டவர் நாவலர். அவர் தானே பிரதி களை அதி சிரத்தையுடன் திருத்திக்கொடுப்பா ரென்றும், ஒருமுறை திருத்திய பிழையை மீண் டும் அச்சுக் கோர்ப்பவர் கவலை யீனமாக விட் டால் மனங்கொதிப்பாரென்றும், அச் சு க் கோர்ப்பவர்களும் அவரிடம் பெருமதிப்போடு பணியாற்றினரென்றும் நாவலரை அறிந்தோரி டம் தான் கேள்விப்பட்டதாகத் தமிழ் நாட்டி லுள்ள முதிர்ந்த ஒரு தமிழ்ப் புத்தக வெளியீட் டாளர் கூறக் கேட்டிருக்கிறேன்,
சைவச் சிறுவர் தங்கள் சமயத்திலும் நாட் டிலும் கலாசார மரபுகளிலும் இயற்கையிலும் பற்றும் ஈடுபாடும் கொண்டு முறையாகக் கற்க உதவும் வகையில் நாவலர் எழுதிய பாலபாடங் கள் அன்று சென்னைப் பாடநூற் சபையினர் வெளியிட்ட பாடப் புத்தகங்களைக் காட்டிலும் சிறந்தவை எனப் பாராட்டப்பட்டவை. அந்த வகையிலே தக்க சூழலிற் பாலருக்குத் தமிழ் புகட்டும் முறையினைத் தமிழ்நாட்டாருக்கு உணர்த்தியவரும் நாவலரே.
இவ்வாறு பலவழிகளிற் சுயநலந் துறந்து நாவலர் பணியாற் றிய மை யி ன லே தா ன், :* முன்னே பல காலங்களிலும் தமிழகத்திலி ருந்து தான் பெற்ற சில சிறு நன்மைகளை வட்டி யுடன் பெருக்கி, ஒரு காலத்து ஒருமுகமாய்ப் பழங்கடனைத் தீர்த்து, என்றுந் தீர்க்கொணுத வாறு தமிழகத்தை ஈழநாட்டுக்குக் கடமைப் படுத்திய பேருபகாரி நாவலர் என்ருல் அது மிகையாகாது' என்றனர் பேராசிரியர் சோம சுந்தர பாரதியார்.
6

Page 39
இப்பேருபகாரி சிதம்பரத்திலே 1864-ம் ஆண்டிலே தாபித்த சைவப்பிரகாச வித்தியா சாலை ஒரு தொடக்கப் பள்ளியாக இருந்து 1945-ம் ஆண்டில் உயர் தொடக்கப் பள்ளியாக வளர்ந்து 1949-ல் உயர்நிலைப் பள்ளியாகச் சிறந்து தவத்திரு ஆறுமுக நாவலர் உயர்நிலைப் பள்ளி என்ற பெயருடன் இன்று திகழ்கிறது. அத்துடன் புலவர் புகுமுக வகுப்பு மாணவர் களுக்குத் தமிழ் கற்பிக்கும் பள்ளி ஒன்றும், சித் தாந்தக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளன.
நாவலர் பெயரிலமைந்துள்ள உயர்நிலைப் பள்ளியில் ஏறக்குறைய முப்பது சிறந்த தகுதி கள் பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சாதிபேதங்களை ஒதுக்கிவிட்ட மாணவர்கள் ஒன் முயமர்ந்து காலத்துக்கேற்பக் கல்வி கற்கின்ற னர். நாவலர் குருபூசையும் நாவலர் பிறந்த நாளும் அங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படுகின்றன. குருபூசையின்போது நாவலர் பள் ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஊர்மக்களும் பின்தொடர நாதஸ்வர இசை புடன் நாவலர் திருவுருவப் படமும் சுவடிகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். மாலை யிலே மாணவிகள் நாவலர் அம்மானை, நாவலர் கும்மி ஆகியவை பாடியாடுவதும், நாவலர் வாழ்க்கையின் சில பகுதிகளை மாணவர்கள் நடிப்பதும் உண்டு.
அமிழிதீன்நற் சுவைதெரிவார் அச்சுவையின் இனிதென்னத் தமிழின்நற் சுவைதெரிந்த தமிழன்யார்?
அம்மானே! தமிழின்நற் சுவைதெரிந்த தமிழன்நம்
ge, Cl(gp as அமிழ்தென்சொல் நாவலர்என்
றறைந்திடுவாய், அம்மானை அவர்தம்நற் புகழ்பாடி ஆடுதுங்காண்
அம்மானே!"
என்று பாடி அம்மானை ஆடுவதும்,
* பெறலரும் குருவெனப் பேணிநாம்
போற்றிடப் பிறந்தெமை யாட்கொண்ட பெரியவன்
அரியவன் ’’
என நாவலரைத் துதிப்பதும், ஈழத்து நாவல ரைத் தமிழ்நாட்டோர் எமையாட்கொண்ட வர், நம் நாவலர் என உரிமை பாராட்டும் சிறப்புக்குச் சான்ரு கும். இன்று சென்னையில் அமைந்துள்ள ஆறுமுக நாவலர் அச்சகம்

கிடைத்தற் கரியவான நாவலர் வெளியீடுகளை மீண்டும் வெளியிடும் முயற்சியில் முனைந்திருப் பதும் மகிழ்ச்சிக்குரியதாகும்.
இராமலிங்கம்பிள்ளையின் அ ரு ட் பா த் தொடர்பாகச் சிதம்பரத்தில் நிகழ்ந்த சர்ச்சை கள் குறித்துத் தரப்படும் மாறுபட்ட விளக்கங் கள் நாவலரைப்பற்றிய தமிழ் நாட்டவர் சில ரின் மாறுபடமயங்கிய மதிப்பீடுகளை ஒரளவுக் குக் காட்டுவதோடமையாது நாவலர் பெரு மைக்குக் கரிபூசும் சிலரது முயற்சியையும் இனங் காட்டுவதாயுள்ளன.
சிதம்பரத்துக்கு அண்மையிலுள்ள கருங் குழியிற் பிறந்த இராமலிங்கம்பிள்ளை பாக்களை அருட்பாக்கள் என்று அவரது சீடர்கள் கொண் டாடியபோது அவ்வாறு அவற்றைப் போற்று தல் தகாது என்று கூறிய நாவலர் போலி யருட்பா மறுப்பு" என்ற பிரசுரத்தினை வெளி யிட்ட மை ஒப்ப முடிந்தது. சபாபதி நாவலரும், பரசமய கோளரி சதாவதானம் நா. கதிரவேற் பின்ளையும் கூட இராமலிங்கம்பிள்ளை பாக்கள் அருட்பா எனக் கொண்டாடப்படுவதைக் கண் டித்தனர்.
நாவலர் மீது குரோதங் கொண்ட சில தீட்சிதர்கள் இராம லிங்கம் பிள் ளை யோ டு 1869ல் சிதம்பரப் பேரம்பலத்திலே ஒரு கூட் டங்கூடி, தாவலரைத் தூவித்ததாகவும், அது சம்பந்தமான சில வழக்குகள் மஞ்சக்குப்ப நீதிமன்றத்திலே தொடுக்கப்பட்டதாகவும், தாம் நாவலரை அவமதித்துப் பேசவில்லை யென்று இராமலிங்கம் பிள்ளை மறுக்க அவர் மீதான வழக்கை நாவலர் கைவிட்டார் என் றும் நாவலர் சரித்திரம் எழுதிய த. கைலாய பிள்ளை கூறியுள்ளார்.
நாவலர் தாமெழுதிய மித்தியாவாத நிர
சனம் என்ற கட்டுரையிலே, ' சுக்கில ஞ்
37
ஆனி உத்திரத் தரிசனத் தினத்திலே, சிதம் பரத்துப் பேரம்பலத்திலே, வெகுசனக் கூட் டத்திலே, சுவாமி சன்னிதானத்திலே, சைவப் பிரசாரகரை அவதூருகப் பேசிய இராமலிங்க பிள்ளை, அடுத்த மார்கழித் திருவாதிரைத் தரிசன தினத்திலே, மஞ்சக்குப்பக் கோட் டிலே, வெகுசனக் கூட்டத்திலே, நியாயாதி பதியெதிரே, தாஞ்சைவப் பிரசாரகரை அவ தூருக ஒரு சிறிதும் பேச வில் லை யென்று மறுத்து, எல்லாராலும் நகைக்கப்பட்டது அவ்வழக்குப் புத்தகம் பேசும்" என்று தெளிவு படக் கூறியிருப்பது அதனை உறுதிப்படுத்தும்.

Page 40
சைவப்பிரசாரகர் என்ற புனை பெயர் நாவல ருடையதே.
சிதம்பரத்திலே சிவாகம நிந்தையும் சிவ தீட்சை நிந்தனையும் புரிந்த பூ சக ர்களை க் கண்டித்து நாவலர் பிரசங்கம் செய்தனராகை யால், அவர் பாற் தீட்சிதர்கள் குரோதங் கொண்டிருத்தல் கூடும். நாவலர் மீது தீட் சிதர்களும் ஒரு வழக்குத் கொடுத்ததாகவும் அவ்வழக்கில் வழக்காளிக்கே அபராதம் விதிக் கப்பட்டதாகவும் கைலாயபிள்ளை எழுதியிருக் 6მფ’ fir.
இது இவ்வாறிருக்க, அருட்பா-மருட்பா விவாதம் இராமலிங் வள்ளலார் வாழ்ந்த காலத்திலே நீதிமன்றம்வரை சென்றதாக வும், நீதிமன்றத்துக்கு வள் ள லா ர் வந்த போது குற்றம் சாட்டியவர் எழுந்து நின்ருர் என்றும், வள்ளலார் பாடல்கள் அருட்பாக் களே என்று நீதிபதி தீர்ப்பளித்தார் என் றும் 27-9-69 அன்று சென்னையில் நிகழ்ந்த ஒரு விழாவினைத் திறந்து வைத்தபோது தமிழ் நாட்டு முதலமைச்சரான திரு. மு. கருணநிதி பேசினர்.
இதனைத் தமிழக முதல்வர் டாக்டர் கலை ஞர் கருணுநிதியின் கண்டறிந்த கருத்தெனக் கொள்வதைக் காட்டிலும் சில தொழிலதிபர் களையும் பஞ்சாலை முதலாளிகளையும் அரசிய லாளர்களையும் சார்ந்த ஊ ன் றி ய நல ன் பேணும் சில ஜனரஞ்சகப் பேச்சாளர்களின தும் எழுத்தாளர்களினதும் கூற்றுக்களின் எதிரொளி எனக் கொள்வதே சாலும்.
திரு. கருணநிதி வெயிட்ட கருத்து ஆதார மற்றதென்பதை 1-12-69 அன்று சிதம்பரத் தில் நடைபெற்ற 90 ஆம் நாவலர் குருபூசை விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய நாவலர் அறநிலையக் குழு வின் நற் பொறுப் பா ளர் திரு. தி. க. இராசேசுவரன் விளக்கியுள்ளார். நாவலருக்கும் இராமலிங்க வள்ளலாருக்கும் மஞ்சக்குப்பத்தில் நடந்த மான நட்ட வழக் கில் நாவலர் மட்டும் இருப்பதற்கு ஆசனம் அளிக்கப்பட்டதென்று தாம் த க் கார் பா ற்
கேள்விப்பட்டதாகவும் திரு. இராசேசுவரன் கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் வ ழ க்கு கைலாய பிள்ளை குறித்துள்ள நாவலரை அவ மதித்தமை சம்பந்தமான வழக்காயிருக்க வேண்டும். ஏனெனில், ' நாவலர் வள்ளலார் பெருமக்கள் இரு வ ரு க் கும் இ டை யி ல் அருட்பா மறுப்பு வழக்கு நடக்கவில்லை" என்று திரு. இராசேசுவரன் அழுத்தமாகக் கூறியிருக் கிருர். அவர் கூற்றுக்கு ஆதாரமாக அமைந் திருப்பது திரு. வி. கலியாணசுந்தர முதலி
(s
38

யார் 1908ல் எழுதியுள்ள நா. கதிரவேற்பிள்
ளையின் வரலாருகும்.
சென்னை சிந்தாதிரிப் பேட்டை வேதாக மோக்த சைவசித்தாந்த சபையார் நா. கதிர வேற்பிள்ளை நிகழ்த் திய சொற்பொழிவுகளைத் திரட்டி, " இராமலிங்கபிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு' என்ற பெயரில் வெளியிட்டனரென்றும், அவ்வெளி யீட்டுக்கெதிராகவே இராமலிங்க வள்ளலா ரின் அண்ணன் மகஞன வ டி வே ற் பி ஸ் ளை வழக்குத் தொடுத்தனர் என்றும் அவ்வழக்கு ஆறுமாத விசாரணையின் பின் 21-11-1904ல் தள்ளுபடியாயிற்றென்றும் உயர் நீதிமன்றத் துக்குச் செய்யப்பட்ட அப்பீலும் தள்ளுபடி செய்யப்பட்டதென்றும் திரு. வி. க. எழுதி யுள்ளார். எனவே, முதிராச் சந்தர்ப்பவாத அரசியலோடு இலக்கியத்தையும் வரலாற்றை யும் குழப்புவோர் சிலரது நாவலர் பெரு மைக்குத் திரைபோடும் முயற்சி பூனை கண்ணை மூடிக்கொள்ளும் செயலுக்கே ஒப்பாகும்.
1967-ம் ஆண்டிற் சிதம்பரத்தில் நடந்த நாவலர் குருபூசையை முன்னிட்டு அ ன் று தமிழ் நாட்டு முதலமைச்சரின் சிறப்பாலோ சகராயிருந்த திரு. என். முருகேச முதலியார் அனுப்பிவைத்த செய்தியில் இரு முக்கிய கருத் துக்களை வெளியிட்டார். சென்னையில் இரண் டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற விருக்கும் வேளையில் நாவலர் பெயர் சிறப் பாக நினைவு கூறப்படவேண்டியதென்றும், இலங்கையையும் இந்தியாவையும் சேர்ந்த அவரது அபிமானிகள் அ வ ரு க் கு ச் சிலை யெடுது நன்றிக் கடன் பாராட்டக் கூடுமென் றும் அவர் கூறியிருந்தார்.
சிதம்பரத்தில் நாவலர் சிலை பஞ்சலோகத் தில் அமைந்ததோடு இலங்கையிலும் நாவ லருக்கு சிலையெடுக்கப்பட்டது. ஆனல் அதற்கு முன் சென்னையில் ந - ந் த உலகத் த மி பூழ் மாநாட்டின்போது, நாவலருக்கு உரிய கெளர வம் அளிக்கப்படாமை ஈழத்தவருக்கு மட்டு மன்றித் தமிழ் வரலாறறிந்த பல தமிழ் நாட்டவருக்கும் கவலை தந்தது. ஏனெனிற் பேராசிரியர் கலாநிதி சு. வித் தி யா னந்த ன் எடுத்துரைத் திருப்பது போலத், "தமிழகத் திலே யாழ்ப்பாணத் தமிழ் செந்தமிழ் என்று நிலைநாட்டியும், நாவலர் என்ற பட்டத்தைப் பெற்றும், சைவப் பிரசங்கமாரி பொழிந்து சைவப் பயிரை வளர்த்தும், சைவ ஆதீனங் களிற் பலருக்குச் சமய அறிவும் தமிழறிவும் ஊட்டியும், அவ்வாதீனங்களைத் சைவப்ப பிலும் தமிழ்த் தொண்டிலும் வழி நடத்தி பும், சிவநிந்தனையையும் போலிக் கொள்கை களையும் நீக்கியும், சிதம்பரச் சைவவித்தியா சாலை மூலம் தமிழ்க் கல்வியைச் சமய அடிப் படையில் வளர்த்தும், நாவலர் பதிப்பு என்று எவரும் மதிப்புக் கொடுக்கக்கூடிய முறையில் நூ ல் களை ப் பிரசுரித்தும் தமிழகத்தை ஈழ நாட்டி ற்கு க் கடமைப்படுத்தியிருக்கின்றர் பாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர்."

Page 41
நாவலர் வழி ெ இலக்கிய மரட
இருபதாம் நூற்ருண்டிலே 'இலக்கியம்’ என்ற சொல் வெகு பரவலாகப் பயன்படுத்தப் படுகின்ற அதே வேளையில் அதன் வரை விலக்கணத்திலும் பல பிரச்சினைகள் எழுந்துள் ளன. அதனுலேயே "எது இலக்கியம்?’ என் னும் விஞ முன்னெக்காலத்திலும் பார்க்க இந் நூற்றண்டிலே அடிக்கடி கேட்கப்படுகிறது. இலக்கியம் தோன்றிய காலமுதல் திறனய்வும், வாதங்களும் இருந்து வந்துள்ளபோதும் எமது நூற்ருண்டிலிருப்பதைப்போன்று பன்மு கப் பட்ட - காரசாரமான இலக்கிய சர்ச்சைகள் முற்காலங்களில் இருந்தன என்பதற்கில்லை பரந்துபட்ட பொதுக் கல்வி, வெகுசன சாதனங் கள், சனநாயக உரிமைகள் முதலியன இலக்கிய சர்ச்சைகளுக்குப் புதிய பரிமாணங்களை உண் டாக்கியுள்ளன எனலாம்.
இதிலொன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலக்கியத்தை உள்ளடக்கும் கல்வியை எடுத் துக்கொண்டால் அதனது பண்பு, பணி ஆகிய வற்றைப்பற்றிய கருத்துக்கள் காலத்துக்குச் காலம் மாற்றம் பெற்றிருப்பதைக் காண்கின் ருேம். ஆன்ம ஈடேற்றம், நல்லொழுக்கம், குடி யியல் உணர்வு, நாட்டு முன்னேற்றம் முதலிய பல்வேறு கருத்துப் படிவங்கள் காலத்துக்குச் காலம் கல்வியின் குறிக்கோளாகக் கூறப்பட்டு வந்துள்ளன. பிளேட்டோவிலிருந்து பியாஜே வரை கல்வியைப்பற்றி எழுதியோர் தத்தம் காலத்துச் சூழ்நிலைகளாற் பாதிக்கப்பட்டு வெவ்

O
Y^YYY. Y//***
- க. கைலாசபதி - சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர்
பல்கலைக்கழக வளாகம், கொழும்பு.
வேறு கோணங்களிலிருந்து கல்விக்கு வரை விலக்கணமும் விளக்கமும் கூறியிருக்கின்றனர்.
அறவியலை ஆதாரமாய்க் கொள்ளும் நோக் குக் கொள்கையாளர், ** தருமமும் அர்த்தமும் காமமும் மோட்சமடைதலுமாகிய நான்கும் நூலால் (இலக்கியத்தால்) எய்தும் பிரயோச னம் ' என்பர். ஆனல் அழகுச் சுவையையே இலக்கியத்தின் பிரதான நோக்கமாகக் கொள் வோர், ' இலக்கியத்துக்குப் புறநோக்கம் எது வும் இல்லை என்றும் , அது தன்னளவில் தானே நிறைவுடையதொன்று என்றும், கலை கலைக்கா கவே ** என்றும் உறுதியாகக் கூறுவர். ' உயிர் பெற்ற தமிழர் பாட்டு ' என்ற கவிதையில் புராணங்களைப்பற்றிக் கூறவந்த பாரதியார்,
ஒன்றுமற் றென்றைப் பழிக்கும்-ஒன்றில் உண்மையென் ருேதி மற் றென்றுபொய்
யென்னும்
எனக் கூறினர். இலக்கிய சர்ச்சைகளிலும் இத்
தகைய ஒரு நிலையைக் காணலாம். உதாரண
மாக, ஒர் இலக்கியப் படைப்புக்குரிய வாசகரின் எண்ணிக்கையைக் கொண்டே அதன் தரம் குறித்து மாறுபட்ட மதிப்பீடுகள் தோன்ற லாம். 'பல்லாயிரக்கணக்கான வாசகரைக் கவரக்கூடிய ஒரு நூல் இயல்பாகவே இலக்கியத் தரம் அற்றது; அது பாமர ரஞ்சகமானது, ஆகையால் அதிலே இலக்கிய "நயம் எதுவும் இருக்கவியலாது ' என்பர் ஒருசாரார். பல்லா யிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருந்த
39

Page 42
"கல்கி"யின் எழுத்துக்களைப்பற்றி, க. நா. சுப்ர மணியம் போன்ற விமர்சகர்கள் இவ்வாறுதான் கூறியிருக்கின்றனர். ஒருதாரணம் பார்க்கலாம். ** இன்று தமிழன் மூவரை இலக்கியாசிரி யர்கள் என்று ரஸிக்கிருன் துப்பறியும் நாவல் கள் எழுதுவதில் பூரீமான் துரைஸாமி ஐயங் கார்; சமூக சீர்திருத்த நாவல்கள் எழுதுவ தில் பூரீமதி வை. மு. கோதைநாயகி அம் மாள் சிறுகதைகள் கட்டுரைகள் முதலியன எழுதுவதில் பூருரீமான் கல்கி. பூஜீமான் கல்கி இந்த நாவலால் பொதுஜனத்தின் மனத்தைக் கவர்ந்துவிட்டார். இந்தக் கவர்ச்சிக்கு முக் கிய காரணம் அவருடைய வசன நடை. . அங்கங்கே திகழும் ஹாஸ் யப் பேச்சுக்களும், சம்பவங்களும் பொதுஜனத்துக்கு எளிதில் புரியக்கூடியதாக, பொதுஜனத்துக்கு அடிக் கடி பழக்கமானதாகவும் இருக்கின்றன. மனித சுபாவத்தை, தொடர்கதை படிக்கும் சுபாவம், தொடர்கதை படிக்காத சுபாவம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். "மேலே என்ன?”, “உம், உம் என்று கேட்டுக்கொண்டு போகக்கூடிய ‘குழந்தை" உள்ளங்களை உத்தே சித்தே தியாகபூமி எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.நாவல் கதையாக ரஸிக்கக்கூடிய தியாகபூமியை நாவல் இலக் கியமாக அங்கீகரிப்பது சிரமம்தான்."
ஏறத்தாழ முப்பத்து நான்கு வருடங்க ளுக்கு முன் கல்கியின் தியாகபூமி திரைப்படமாக் கப்பட்டிருந்த சமயம் சூறவளி என்னும் இலக் கிய சஞ்சிகையில் (11-6-1939) அதன் ஆசிரி யர் க. நா. சு. எழுதிய விமர்சனம் ஒன்றிலேயே மேற்காணும் பகுதிகள் இடம்பெற்றன. ஓரளவு இலக்கியப் பரிச்சயமுள்ளவர்க்கும் இப்பகுதி யிலே பொதிந்துள்ள குத்தலும் கிண்டலும் புல ஞகாமற் போகா. ** பொதுஜனத்துக்கு எளிதில் புரியக்கூடியதாக " இருந்த காரணத்தினு லேயே கல்கியின் ஆக்கத்தைக் கிண்டல் செய் செய்தார் விமர்சகர். அதாவது. ஜனரஞ்சகமும் இலக்கியத் தரமும் உடனெத்தியல முடியா தவை என்பது இத்தகையோரின் பிரதான வாதமாகும்,
இதற்கு நேர்மாறன கருத்தோட்டமும் உண்டு. உதாரணந் தேடி வெகுதூரம் போக வேண்டியதில்லை. பாஞ்சாலி சபதம் முகவுரையில் பரரதியார் எழுதினர்,
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம் பொதுஜனங் கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய
40

காவியமொன்று தற்காலத்திலே செய்து தரு வோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோணுகின்றன். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக் கும் நன்கு விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாம லும் நடத்துதல் வேண்டும் "
இக்கூற்று முந்தியதற்கு முரணிசைவானது என்பது வெளிப்படை. ஜனரஞ்சகத்தன்மையே இலக்கியத்தரத்தின் அடிப்படைகளில் ஒன்ரு ய்க் கொள்ளப்படுகிறது பாரதியார் கூற்றில். உண் மையில் இவ்விரண்டும், அதாவது இலக்கியச் சிறப்பும் ஜனரஞ்சகத்தன்மையும் ஒன்று க் கொன்று முரணுகவோ, ஒன்றையொன்று விலக் குவதாகவோ இருக்க வேண்டுவதில்லை. ஆனல் இலக்கிய உலகில் கடந்த சிலகாலமாக இப் பிளவு இருந்து வருகிறது. எமது சமுதாயத்தில் கைப்பணிக்கும் கலைக்கும், உடலுழைப்பாருக் கும் புத்திஜீவிகளுக்கும். பேதமும் ஏற்றத்தாழ் வுகளும் இருப்பதைப்போலவே இதுவும் சமு தாய அமைப்பிற் காணப்படும் சிற்சில முரண் பாடுகளின் பிரதிபலிப்பேயாகும்.
உலக இலக்கிய வரலாற்றை நோக்கினுல், இலக்கியம் என்பது உணர்ச்சியின் வெளிப் பாடே பயிற்சியிஞலன்றி இலக்கியகர்த்தா வினது பாவனையினுலும், அவனையும் மீறிய உள் ளார்ந்த உணர்ச்சி வேகத்தினுலுமே கவிதை முதலானவை படைக்கப்படுகின்றன என்னும் கோட்பாடு தோன்றியதையடுத்தே இப்பிளவு முனைப்பாகத் தென்படலாயிற்றென்பது புலஞ கும்.
இலக்கிய உலகில் நிலவும் இப்பாகுபாட் டையும் பிளவையும் சிற்சில விகற்பங்களுடன் வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வகையிற் கூறிப்போந்தனர். உதாரணமாக டி குயின்ஸி என்பவர் இலக்கியத்தை "ஆற்றல் இலக்கியம்” Literature of power, global gadi Suth Literature of knowledge என இருவகைப்படுத்திக் sinó 637 ff. Gount FFT i G35 (Bosanquet) GT Găruauit இலக்கியத்தில் காணும் சுவையையும் அழகை பும் வேருெரு விதத்திற் பாகுபடுத்துகிறர். upá appg5 (Easy beauty) audi app (5 (difficult }eauty) என்பது அவரது பகுப்பாகும். இப் பாகுபாட்டைப் பயன்படுத்தும் பேராசிரியர் வி. ஐ. சுப்பிரமணியம் மேல் வருமாறு எழுது
მცჯrf :

Page 43
' எளிதில் தென்படும் இன்னேசை, உவ மைப்பொலிவு, கதைப்பொருள் ஆகியவற்ருல் துலங்குவது மெல்லழகு. இது நூலைப் படித்த வுடன் மிக எளிதாகப் புலப்படும். ஆய்வோ சிந்தனையோ இதனை அறியத் தேவையில்லை. இதிலிருந்து சற்று வேருனது வல்லழகு. இது நூலில் மறைந்து கிடப்பது; எளிதில் விளங்கா தது. வெண்ணெயைக் கடைந்தெடுப்பது போல் அலசிப் பார்த்தபின் இலக்கியத்திலி ருந்து துலங்குவது. துன்பியல், அருவம். பொருத்த மின்மை இணைவு முதலியவற்ருல் உருவாவது. இலையால் மறைப்புண்ட கனி போன்றது. (இலக்கியப் பேழை, அறிமுகம், பக், 6.)
சற்று மேலே நாம் எடுத்தாண்ட மேற் கோளில் க. நா. சுப்ரமணியம், 'கல்கி'யில் மெல்லழகு மாத்திரம் உண்டென்று இளக்கார மாகப் பேசியதைப் பார்த்தோம். அவ்விடத் தில் வல்லழகுக் கொள்கையையே இலக்கியத் திற் சிறப்பம்சமாக அவர் வற்புறுத்துகிருர் என்று நாம் கருதலாம், "ஒன்று மற்றென்றைப் பழிக்கும் நிலைமை இது.
大
நாவலர் வழிவந்த இலக்கியப் பாரம்பரி யம் அல்லது மரபு என்னும் பொருள்பற்றிக் கட் டுரை எழுதத் தொடங்கிய எனக்கு முற்கூறிய சிந்தனைகளே முதலில் மனத்தில் எழுந்தன. ஏனெனில் மேலே எடுத்துக்காட்டியிருப்பன ஏமது காலத்து ‘இலக்கிய நிலைமையின் சிற்சில அம்சங்களாகும். ஆற்றலிலக்கியம்-அறிவிலக்கி யம், மெல்லழகு-வல்லழகு, ஜனரஞ்சகம்-சார் பற்ற கலையார்வம் என்பனபோன்ற பாகுபாடு களை நாவலர் எண்ணியுமிருக்கமாட்டார். என வேதான் நாவலர் மரபினை விளங்கிக்கொள்வ தற்கு எமது காலத்துப் பிரச்சினைகளைச் சுருக்க மாகவேனும் குறிப்பிட வேண்டியதாயிற்று.
ஒருதாரணங் காட்டுவோம். இருபதாம் நூற்றண்டிலே. குறிப்பாக 'மறுமலர்ச்சித் தமி ழிலக்கியம் வளர்ச்சியுற்ற காலப் பகுதியில், டி குயின்ஸியின் ஆறறல் இலக்கியம், அறிவிலக் கியம் என்னும் பாகுபாடு பலராற் கைக்கொள் ளப்பட்டு வந்துளது. இப்பாகுபாட்டினை முதன் முதலில் செய்த டி குயின்ஸி, 1848-ல் மேல்வரு மாறு ஒரு கட்டுரையில் எழுதினர் :
*அறிவிலக்கியத்தின் பணி போதிப்பதா கும். ஆற்றலிலக்கியத்தின் பணி உணர்ச்சியூட்
4

டுவதாகும், முன்னது ஒரு சுக்கான்; பின்னது ஒரு துடுப்பு அல்லது கப்பற் பாய் எனலாம்.'
அலெக்ஸாண்டர் போப் என்ற ஆங்கிலக் கவிஞன்பற்றி டி குயின்ஸி இவ்வாறு எழுதி யவை அதே காலத்தில் இந்நாட்டில் உயிர் வாழ்ந்த நாவலருக்குப் புதிராகவே தோன்றி யிருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. டி குயின்ஸி போன்ருேர் (இலக்கியத் திறனய் வாளர்) இத்தகைய "நுண்ணிய பாகுபாடுகளை வகுத் திருப்பினும், இன்றுகூட பொதுப்படை யாக நோக்குமிடத்து. எழுதப்பட்டதெல்லாம் ஆங்கிலத்தில் Literature என்றே வழங்கப்படும். p. 5 IT UT GODT LD nr 35. “Have you any literature on the Subject என்னும் விஞவில் இலக்கியம் என்னும் சொல் , ** பாட்டு, உரை எவையாயினும் ஒரு பொருள் பற்றி விரித்தெழுதப்படும் அனைத்தை யும்' (ச. சோமசுந்தர பாரதியார், நற்றமிழ், பக். 19.), குறிப்பதாகவேயுள்ளது. நாவலரைப் பொறுத்தவரையில், தேவாரத்தையும், திருக் குறளையும், அடிப்படையில் இலக்கியமாகவே கொண்டார். ஆனல் தற்கால இலக்கிய விமர்ச கர்களில் ஒருவரான க. நா. சு. சில காலத்திற்கு முன் திருக்குறன் இலக்கியமன்று அறநூலே என்று ஒரு வாதத்தைக் கிளப்பியிருந்தார். க. நா. சுப்ரமணியத்தை விதந்து கூற வேண்டிய அவசியமில்லை. நவீன இலக்கிய விமர்சகர்கள் பலர் இக்கருத்தை யுடைவவராகவே காணப் படுகின்றனர். உதாரணமாக, புதுமைப்பித்தன் கட்டுரைகள் என்னும் நூலிலே ‘சமயத்தையும் கடந்த கலை’ என்று மகுடமிடப்பட்ட கட்டுரை
**தற்காலத்திய பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல், எல்லாவற் றையும் புகழ்ந்துகொண்டு இடர்ப்படுவதற்கு காரணம், அவர்கள் இலக்கியம் என்ருல் என் னவென்று அறியாததுதான்.
இவர்கள் ஒழுக்கத்தையோ, தர்மத் தையோ, அல்லது மதத்தையோ பற்றிக் கூறு வது. அதாவது அணியலங்காரங்களுடன் கூறு வது எல்லாம் கவிதை என்று கூறி இடர்ப்படு வதின் காரணம் இதுதான். கவிதையைப் போதனைக்குரிய கருவியாக உபயோகப்படுத் தும்வரை அது கவிதையாக இருக்காது. அதன் ரசனை கெட்டுவிடுகிறது. ஒழுக்கமோ, தர்மமோ, அல்லது மோட்சமோ இவற்றிற் காக எழுதப்படும் கவிதை, கவிதையாகாது. ஒழுக்கமும், தர்மமும், மோட்சமும் கவிஞ னது உள்ளத்தில் ஊறி, இருதயத்தின் கனி

Page 44
வாக வெளிப்படும் இசைதான் கவிதையா
கும
என்று அழுத்தம் திருத்தமாகக் கூறும்பொழுது திருக்குறள் போன்ற ஒரு நூல் இலக்கியமா என்ற ஐயம் இக்கூற்றைப் படிப்போருக்கு ஏற் படாமற் போகாது. ** இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசைதான் கவிதை " என்று புது மைப்பித்தன் முடிவாய்க் கூறுகையில், " ஆற்ற லிலக்கியத்தின் பணி உணர்ச்சியூட்டுவதாகும் " என்று டி குயின்ஸி கூறியதே எமக்கு நினைவுக்கு வரும். இவையெல்லாம் இலக்கியம்பற்றி இந் நூற்றண்டிலே எழுந்துள்ள சில முரண்பாடு களையே எமக்குணர்த்துகின்றன. திருக்குறள் போன்ற அறவியற் சார்புடைய நூல்தான் போகட்டும். ஆற்றலிலக்கியக் கொள்கையைப் பிடிவாதமாகவும் நெகிழ்வற்ற முறையிலும் பற்றிக்கொள்பவர்கள் சங்கமருவிய காலத்து நூல்களை மட்டுமன்றி, சான்ருேர் செய்யுள்களை யுமே உணர்ச்சியூட்டும் பண்பு அற்றன என நிராகரிப்பதைக் காணலாம். கவிதையில் மெல் லழகை வற்புறுத்தி வந்த டி. கே. சிதம்பரநாத முதலியார், "கவியும் உருவமும்" என்னும் கட் டுரையில் (இதய ஒலி, பக். 164.) எளிமை இல்லை என்ற காரணத்துக்காகப் புறநானூற்றுப் பாடல்களை அலட்சியப்படுத்துகிருர். இவ்வடிப் படை நோக்கிலேயே புதுமைப்பித்தன் (மேலே குறிப்பிட்ட கட்டுரையில்), இவ்வாறு கூறு கிருர்,
' கவிதையின் அமைப்பும், உணர்ச்சியும் தான் கவிதையின் உரைகல். தமிழ்க் கவி தையை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று, பழைய இலக்கியமான சங்க இலக்கி யங்கள் வெறும் யதார்த்த விஸ்தரிப்புக்கள்; புகைப்படக் கவிதை என்று கூறிவிடலாம். அதற்குப் பிறகுதான் கவிதையின் உண்மை யான வளர்ச்சி, கம்பன்வரை உள்ள பெருங் கனவுகள் " கட்டுரையாசிரியர் குறிப்பிடும் இரு பிரிவிலும் அவரது தனிப்பற்று எப்பிரிவின் மீதுள்ளது என்பது வெளிப்படை. இலக்கியத் துக்கு ஒருதலைச்சார்பான வரைவிலக்கணம் கூறு வதன் விளைவாகவே சான்றேர் செய்யுள் களையே கண்மூடித்தனமாகக் கைவிடும் பரிதாப கரமான நிலைமை ஏற்படுகிறது. எமது காலத்து இலக்கிய முரண்பாட்டுக்கு இவ்வவல நிலையை விட வேறு சிறந்த உதாரணம் தேவையில்லை.
★

இவற்றையெல்லாம் அவதா னிக் கும் போதுதான், நாவலர் வழிவரும் இலக்கிய நோக்கும் போக்கும் குறிப்பிடத்தக்கனவாய் எமக்குத் தோன்றுகின்றன. முதலில் ஆறுமுக நாவலரவர்கள் பிரபந்தத் திரட்டு முதல்பாகத் திலே இடம்பெற்றுப் பின்னர் பதிப்பாளர்க ளால் பால பாடம் நான்காம் புத்தகத்தில் சேர்க் கப்பட்டுள்ள "தமிழ்ப் புலமை என்னும் வியா சத்தில் மேல்வரும் பகுதிகள் இடம்பெற்றிருக் கின்றன.
திருவள்ளுவர் குறள், நாலடியார் முத லாகிய நீதி நூல்களைப் பதப்பொருளுடனே கற்றறிந்துகொள்க.
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா. திருப்பல்லாண்டு என்னும் அருட்பர்க்களைப் பண்ணுடன் ஒதவும், சுத் தாங்கமாக ஒதவும் பழகிக்கொள்க.
பெரிய புராணம், திருவிளையாடற் புரா ணம், திருவாதவூரடிகள் புராணம், கந்த புராணம். உபதேச காண்டம், கோயிற் புரா ணம், காசிகாண்டம், கூர்ம புராணம், சேது புராணம். காஞ்சிப் புராணம், திருத்தணி கைப் புராணம், பதினெராந் திருமுறையிற் பிரபந்தங்கள், குமரகுருபர சுவாமிகள் அரு ளிச் செய்த பிரபந்தங்கள் முதலாகிய இலக்கி யங்களை ஆராய்ந்தறிக.
திருவள்ளுவர் குறள் பரிமேலழகருரை, திருச்சிற்றம்பலக் கோவையார் நச்சிஞர்க் கினியருரை (திருக்கோவையாருக்கு உரை யெழுதியவர் பேராசிரியரே என்பது பெரும் பான்மை ஆய்வாளர் இன்று கூறும் முடிபா கும்.1, கல்லாடம் நச்சினர்க்கினியருரை என் பனவற்றைக் கற்று. இடைவிடாது பல காலும் உளங்கொளப் பயிலுக.
. இலக்கணங்களைக் கற்றறிந்து, தாம் கற்ற இலக்கியங்களில் இவ்விலக்கண விதி களை அமைத்துப் பழகுக.
நாவலரவர்களின் இலக்கிய நோக்கை மட் டுமன்றி, அவரது கல்விக்கொள்கையையும்தெளி வுபடுத்தும் வகையில் அமைந்த இவ்வியாசத் தில்முக்கியமான சில பந்திகளையே இங்கு எடுத் தாண்டுள்ளேன். புராணங்களைப்பற்றிக் கூறு கின்ற பகுதியில் அவற்றை இலக்கியங்கள்" எனச் சிறப்பித்திருப்பதும் கவனிக்கத்தக்கதே. சைவசமயச் சார்பு இருப்பினும், மதக்காழ்ப்

Page 45
புக்கு இடங்கொடாமல் நூல்களைக் குறிப்பிடுவ தும் குறிப்பிட வேண்டியதொன்றே. இலக்கி யத்தைக் கூறுபடுத்தாமல், முழுமையாக நோக் கும் தன்மையை இப்பகுதிகளிற் காணலாம்.
புராணங்களைத் தானே பெ ரு ம் பா லும் *இலக்கியங்களாய்க் கூறியுள்ளார் நாவலர் என்று சிலருக்குத் தோன்றலாம். அந்த ஐயம் நியாயமானதும் ஆகும். எனினிம் தேவாரம், திருவாசகம் முதலிய அருட்பாக்களுக்கும், புராண இலக்கியங்களுக்கும், உரைகளுக்கும் குறிப்பாக இலக்கியச் சிறப்புடைய உரைகளுக் கும் நுட்பமான வேறுபாடுகளை நாவலர் காட்டி யிருக்கிருர் என்பதும் நுணுகி நோக்குவோர்க் குப் புலனுகும். புராணங்களைப்பற்றி இவ்விடத் தில் ஒன்று கூறுதல் பொருத்தமாயிருக்கும். வர லாற்று அடிப்படையிலே பார்க்கும்போது நாவ லரவர்கள் புராணங்களைத் தனியே சமய நூல் களாக மாத்திரம் கருதினர் என்று கூறவிய லாது. தணிகைப்புராணம் பதிப் பா சி ரியர் (1959) த. ச. மீனுட்சிசுந்தரம் பிள்ளை கூறுவது சித்தனைக்குரியது :
''....... புராண இலக்கியங்கள் பெருங் காப்பிய வகையைச் சார்ந்தன. வடமொழி யில் உள்ள புராணநடை வேறு, தமிழ்மொழி யில் உள்ள புராணநடை வேறு. வடமொழி யிலே உள்ள புராணங்கள் வரலாற்றை மட் டும் அறிவிப்பன. தமிழ்ப் புராணங்கள் வர லாற்றுடன் காவிய இலக்கண ங் களை யும் பெற்று விளங்குவன. வடமொழியில் காவி யங்கள் தனியே பொருந்துவன. "
தமிழ்ப் புராணங்கள் அனைத்துக்கும் அபே தமாக இக்குறிப்புரை பொருந்தும் என நாம் கருத வேண்டியதில்லை. ஆயினும், "தமிழ்ப் புலமை என்னும் வியாசத்திலே நாவலர் குறிப் பிடும் புராணங்களில், பெரியபுராணம், கந்த புராணம், காஞ்சிப்புராணம், திருத்தணிகைட் புராணம் முதலியன "இலக்கிய'த்தரத்திலும் உயர்ந்து விளங்குகின்றன என்பதை மறுப்ப வர் இரார். அந்த வகையில் நாவலரவர்களின் அளவுகோல் இலக்கிய நயத்தையும் உள்ளடக் கியதாய் இருந்தது என்பது கூருமலே விளங் @LD。
நாவலரவர்கள் இலக்கியம்பற்றிக் கொண் டிருந்த இசைவிணக்கமுடைய நோக்கு, அவர் மாணக்கரிடத்தும் வெவ்வேறு அளவில் காணட் படுகிறது. உதாரணத்துக்கு, திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானுயிருந்தவரும், நா வலி

ரின் மாணவகரும் ஆகிய யாழ்ப்பாணத்து வட கோவை சபாபதி நாவலரையே எடுத்துக் கொள்வோம். இலக்கிய வரலாற்றின் திருந் தாத-முன்னே டிமாதிரி-என்று கருதத்தகும் வகையில் அமைந்த நூலொன்றை அவர் இயற்றினுர், திராவிடப்பிரகாசிகை, (1889) * தமிழ் இலக்கிய இலக்கண சாத்திர மெய்வர லாறுகளையெல்லாம் இனிதுபட எடுத் துப் போதிப்பது ' என்பர். தமிழின் தெய்வப் பழமை மரபியல், இலக்கண மரபியல், இலக் கிய மரபியல், சாத்திர மரபியல், ஒழிபியல் என ஐவகைப் பிரிவு பெற்று விளங்கும் அந் நூலில் தமிழிலக்கியத்தை விரிந்த மனப்பான் மையுடனே விவரித்திருக்கிருர் ஆசிரியர். திரு முறையிலக்கியம், சங்க இலக்கியம், காவிய இலக்கியம், புராண இலக்கியம், இதிகாச இலக் கியம், பலவகைப் பிரபந்த இலக்கியம் என பொருள் அடிப்படையிலும் வடிவத்தின் அடிப் படையிலும் வடிவத்தின் அடிப்படையிலும் இலக்கியங்களைப் பாகுபடுத்தியிருக்கிருர்.
சபாபதி நாவலர் வேதவழக்கைப் போற் றுபவர் என்ற முறையிலும், தேவாரம் வேதங் களின் சாரம் என்ற நம்பிக்கையின் அடிப்படை யிலும், " திருமுறையிலக்கியங்கள் திருவரு ளோத்துக்களாதற் சிறப்புப் பற்றியும் " அவற் றின் வரலாற்றை முதற்கண் சொன்னுர், இன்று பார்க்கும் எமது இது காலமுரணு கத் தோன்றுவது இயல்பே. எனினும் இலக்கிய "நயத்தின் பெயரில் சங்க இலக்கியங்களையோ, சங்கமருவிய காலத்து நூல்களையோ விலக்கி வைத்தார் அல்லர்.
தமது சமய நம்பிக்கையின் காரணமாக, தேவார திருவாசங்களை முதலிலே விவரித்த பின், ** திருமால் திருவடிப் பத்திஞான வான்பயிர் வளர்த்தற்கு இன்றியமையா' ஞானமிர்த மாம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை அடுத் துக் கூறினர். அதையடுத்து சங்க இலக்கியத் திற்கும் திருமுறை இலக்கியத்திற்கும் இடையே அமைந்த திருக்குறள் வரலாற்றைக் கூறினுர்,
* காவிய இலக்கியம்’ என்னும் மூன்ரும் பிரி வில் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, குளாமணி முதலிய பேரிலக்கியங்களைக் காழ்ப்பு எதுவுமின்றிக் குறிப்பிடுவதைக் காணலாம், ** இக்காவியங் கள் தொல்காப்பிய இயல் வழிபட்டு மேற்கூறிய சங்கத் தமிழ்ச் சொற் பிரயோகம் பெரும்பா லும் மருவி, நவரசங்களுட் சிலவும் பலவுந் தங்கண் அடங்கக் கொண்டு உலகவியல், நீதி,
43

Page 46
வைராக்கியம் முதலியவைகளை நன்று அறி வுறுத்துவன ' என்றும், சிந்தாமணிக் காப்பி யத்துக்கு நல்லுரை கண்ட நச்சிஞர்க்கினியர் உரையானது, ' செய்யுட்களின் பொழிப்புத் திரட்டிச் சொன்முடிபு விளக்கி மேற்கோள் காட்டிப் பொருள்நுட்பந் தெளித்துக் கவி இரு தயந் தோற்றிச் சிந்தாமணிக்கு நந்தா விளக் கம் ' என்றும், சிலப்பதிகாரம் * முத்தமிழ் இலக் கியமான ஒர் சைனகாவியம்.சிலம்பை முக் கிய விடயமாகக் கொண்டெழுந்த காவியமாக லின், சிலப்பதிகாரமெனப்பட்டது' என்றும் "பலவகைப் பிரபந்த இலக்கியம்’ என்னும் உப பிரிவில், * கலிங்கத்துப்பரணி, நளவெண்பாப் போலும் முன்னேர் பிரபந்தங்களும், குமரகுரு பர முனிவர் இயற்றிய பிரபந்தங்களும், சிவப் பிரகாச முனிவர் இயற்றிய பிரபந்தங்களும். இவைபோல் வன பிறவுஞ் செந்தமிழ்ப் பிரபந்த இலக்கியங்களாம்" என்றும், வேறுசில பிரபந் தங்கள், " சொல்லணி பொருளணி துறுமி விளங்கும் நல்ல தமிழ்ப் பிரபந்தங்கள்; கொழி தமிழ்க் கவிகள் ' என்றும் சபாபதி நாவலர் ஆங்காங்கு எழுதும்பொழுது, அடங்கிய ஆணுல் ஐயத்துக்கிடமில்லாத இலக்கிய ரசனையைக் காண முடிகிறதல்லவா?
சபாபதி நாவலர் மொழிபெயர்த்து இயற் றிய சிதம்பர சபாநாத புராணம் என்னும் நூலிலே காவிய நயங்கள் சிறப்பாகச் சொல்லு மளவிற்கு இல்லையென்பது எவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய செய்தியே. ஆனல் மேலே காட்டிய மேற்கோள் பகுதிகளில் அவரிடத்து இருந்த கவியுள்ளம் ஆங்காங்குப் பளிச்சிடுகி றது என்பது கண்கூடு. அறவியல், ஒழுக்கவியல். சமயம், இலக்கியம் ஆகியவற்றை வேறுபடுத்தி உணராமல் ஆற்றலையும் அறிவையும் இணைத் துணரும் பக்குவத்தை அவரது கூற்றுக்களிற் கண்டு தெளியலாம்.
இவ்வாறு அழுத்தமாகக் கூறுவதஞல் நாவ லர் மரபினர் இலக்கியத்தைப் பொறுத்தவரை யில் பன்னலத் திரட்டாளர் என்றே, பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் ஒருவாறு இணைத்துக்கொள்கிறவர்கள் என்ருே நாம் கருத வேண்டியதில்லை. தமக்கெனச் சிறப்பான நம்பிக்கைகள் சிலவற்றைக் கொண்டவராகவே இருந்தனர். எனினும் கண்மூடித்தனமாக இலக் கியத்தைத் தரம் பிரித்தவர் அல்லர் என்பதே மனங்கொள வேண்டியதாகும்.
இவ்விடத்திலே இன்னுமொரு குறிப்பை யும் கூறிவைத்தல் பொருத்தமாயிருக்கும் என
E.
4.

எண்ணுகிறேன். இலக்கியம் என்ற சொல் சில நூற்ருண்டுகளாகத் தமிழில் வழங்கி வந்திருப் பினும் மிகச் சமீப காலம் வரை அது பரந்த பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு ஸ் ள து. உரையாசிரியர்களே இலக்கியம் என்ற பதத் திற்குப் பொருட் செறிவை ஏற்றினர் எனக் கருத இடமுண்டு. தொல்காப்பியத்தில் "இலக் கியம்’ எனும் சொல் வழங்கப்படவில்லை. பா, பாடல், செய்யுள் முதலிய சொற்களே இலக் கிய வகைகள் அனைத்தையும் குறித்து நின்றன. அவ்விலக்கிய வகைகளுள் உரைநூல்களும் அடங்கின எனக் கருதுதல் தவருகாது. பாட் டுக்களால் இயன்ற நூல்களே மட்டுமன்றி உரை நூல்களும் இலக்கியமே என்னும் கருத்தைப் பலர் எற்றுக்கொள்ளாத "இருண்ட காலப் பகுதியில் உரைநடை நூல்கள் இயற்றி உய்யும் நெறிகாட்டியவர் நாவலர். அதனலே யே *" வசன நடை கைவந்த வல்லாளர் ' என்னும் தனிச் சிறப்பு அவருக்கு ஏற்படுவதாயிற்று. பொருளின் அடிப்படையில் நன்னுேக்கம் உடைய நூல்களே ‘இலக்கியம்" என்று நாவலர் கொண்டமையாலேயே தொல்காப்பிய நெறி யைப் பேணிய அதேவேளையில் நவீன கல்வி முறைக்கேற்ற இலக்கிய நூல்களையும் இயற்று வாராயினுர்,
இக்கண்ணுேட்ட த் தி லே பார் க் கும் பொழுது இந்நூற்ருண்டிலே, உரைநடையை ஆதாரமாகக் கொண்டு எழுந்த புனைகதை, நாடகம் முதலியன அப்பழுக்கற்ற இலக்கியங் களே என்பது போதரும். நாவலர் இருந்தால் இதனை உவந்தேற்றிருப்பார். எனினும், சில வருடங்களுக்கு முன் இந்நாட்டிலே இலக்கிய ஆக்கத்திற்கு உரிய மொழிபற்றிய சர்ச்சை எழுத்தாளர் மத்தியில் எழுந்தபோது, நாவலர் மரபு பேசும் சில செந்தமிழ்க் காவலர்கள் நவீன இலக்கியப் போக்கையும் நோக்கையும் நையாண்டி செய்து மறுத்துரைத்தது வேடிக் கையேயாகும். இவர்கள் இலக்கிய வரலாற் றையும் இலக்கியத்தின் பண்பையும் பணியை யும் தெளியாதவர்கள் என்று கூறுவதன்றி வேறென்ன கூற வேண்டும்? எத்தகைய நல்ல மரபிலும் காலப்போக்கிலே சிற்சில கோட்டங் களும் பிறழ்ச்சியும் ஏற்பட்டுவிடுகின்றன. முற் கூறிய வாதப் பிரதிவாதத்தின் போது ‘செந் தமிழ் வழக்குப்பற்றி நாவலிக்க உரைத்தோ ரது சிறுபிள்ளைத்தனமானதும், மட்டரகமா னதுமான பிரலாபம் நாவலர் வழிவந்த இலக் கிய மரபின் மறுதலிப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
4.

Page 47
* கல்வி கேள்விகள் இல்லாதவர்கள் கட வுளை அறிந்து வழிபட்டு உய்யமாட்டார்கள்’’ என்று கல்விக்குக் குறிக்கோள் கூறியவர் நாவ லர் என்பது நாமறிந்ததே. எனினும் அந்நோக் குக் கொள்கை இலக்கிய ரசனைக்குத் தடையா யிருக்கவில்லை என்பது இக்காலத்தவர் பலர் மனங்கொள்ள வேண்டியது ஒன்ரு கும். இதனை வேருெ?ரு வகையாகவும் நாம் எடுத்து விளக்க லாம்.
நாவலரவர்கள் தமது அடிப்படை. நம்பிக் கைகளுக்கியைய புராணக் கருத்துக்களை-சம யப் பொருளை-சிரமேற்கொண்டவர். எனி னும் சீவகசிந்தாமணி போன்ற சமணசயச் சார் புடைய காவியத்தைப் போற்றத் தவறவில்லை. அந்நூலை அவரே பதிப்பிக்க எண்ணியிருந்தார் என்பதும் தெரிந்ததே. ஆனல் இடைவிடாத சமயப் பணியில் ஆழ்ந்துபோயிருந்த அவருக்கு காவியரசனை இன்றியமையக்கூடிய ஒரு பொரு ளாகவே இருந்தது. அவ்வின்பத்தையும் தியா கஞ் செய்தார் என்றும் கூற இடமுண்டு. ஆனல் நாவலர் வழிவந்தவர்கள் பலர் சிறந்த ரசிகர் களாயிருந்திருக்கின்றனர். ‘வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை' என்னும் கட்டுரையில் (கந்தபுராண கலாசாரம், பக். 31) பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்கள் பின்வருமாறு எழு துகிருர் :
** நாவலர் அவர்களுக்குப் பெரியபுரா னம் , போலே, பொன்னம்பலபிள்ளைக்குக் கம்பராமாயணம் நர ம் புத் துய்களிலும் ஊறிக்கிடந்தது. சீவகசிந்தாமணியிலும் பிள் ளைக்கு விசேஷ பயிற்சி உண்டு.கம்பராமா யண ரசனைகளையும் சிந்தாமணி முதலிய காவிய ரசனைகளையும் கந்தபுராணத்துக்கு வியாக்கியானம் செய்யும்போது ஏற்ற ஏற்ற இடங்களில் பொன்னம்பலபிள்ளை அள்ளிச் சொரிவார். அது வித்துவான்களாகிய மது கரங்களுக்குப் புத்தம்புதிய அமிர்தமாய்ப் பொங்கிக்கொண்டிருக்கும் ??
ஒழுக்கத்திலும் சமயத்திலும் கடுங்கண்டிப் பானவராய் இருந்த நாவலர், காவிய ரசனையை உள்ளடங்கலான முறையில் மாணவர்க்குக் கற் பித்திருத்தல் கூடும். எனினும் நாவலர் அவர்க ளுக்கு மரும கரும் மாணுக் கருமான பொன்னம் பல பிள்ளையிடத்து அபாரமாக வாய்க்கப்பெற் றிருந்தி காவிய ரசனை நாவலர் வழிவந்தது என்றே கொள்ள வேண்டும். பொன்னம்பல பிள்ளையிடம் காவிய ரசனையைப் பெற்றவர் கள் பலர். பொன்னம்பலபிள்ளை காலத்திலி

குந்து வழிவழிவரும் கம்பராமாயண ரசனை இன்று ஜீவந்தர்களாயுள்ள பண்டித ம ணி சி. கணபதிப்பிள்ளை, புலவர் மணி ஏ. பெரியதம் பிப்பிள்ளை ஆசியோர் வரை பேணிப் போற்றப் பட்டு வந்துளது எனலாம். நாவலர் தென்னிந் தியாவுக்குப் போகிற காலங்களில் அவருடன் சென்ற பொன்னம்பலபிள்ளையிடம் காவியங் களைக் கற்றுணர்ந்து சுவைத்தோர் பலராவர். சபாபதிச் செட்டியார் என்பவர் வீட்டில் பிள்ளை யவர்கள் "நடாத்திய இலக்கிய வகுப்புக்கள் பிரசித்தம். அதுபோலவே காவியங்களைக் கற்ப தற்காகத் தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பா ணம் வந்தோரும் பலராவர். தணிகைப்புராணம் திருவாடுதுறை ஆதீனப் பதிப்பு முகவுரையில் த. ச. மீனுட்சிசுந்தரம்பிள்ளை பின்வருமாறு எழுதியுள்ளார் :
'இப்போது ஆதீன வெளியீடாக வரும் இப்புராணக் குறிப்புரை, என் தமிழாசிரியர் களில் ஒருவரும் இவ்வாதீன வித்துவானுமா கிய பூரீ பொன்னேது வா மூர் த் தி க ள் பூரீ சே. ரா. சுப்பிரமணியக் கவிராயர் அவர் களிடத்திலும், பூரீ ஆறுமுகத்தம் பிரான் சுவாமிகளிடத்திலும். பாடங் கேட்டபடியே எழுதி வைத்திருந்த பெறலரும் சரக்கறை யாகிய குறிப்புரைகளாம். . பூரீ பொன்னே துவாமூர்த்திகள் யாழ்ப்பாணத்து பூரீ ஆறு முக நாவலர் அவர்கள் மருகரும் மாணவக ரும் ஆகிய பூரீ பொன்னையாபிள்ளையவர்கள் பால் திருவாவடுதுறை மகாலிங்கம்பிள்ளை யுடன் கம்பராமாயணம் கேட்பதற்கு முன்ன ரேயே தணிகைப்புராணம் முதலியவற்றை நன்கு ஆராய்ந்து பாடங்கேட்டவர்கள். இக் குறிப்புரை எழுதி வைத்துள்ள காலம் பூரீமத், உ. வே. சாமிநாதையர் அவர்கள் முதன்முதலாக சீவகசிந்தாமணியைப் பதிப் பித்த கி. பி. 1887-ஆம் ஆண்டின் முன்ன ரென்று தெரிகிறது.இனி, இத்தணிகைப் புராணத்தை முதன்முதலாக யாழ்ப்பா ணத்து பூரீ சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் 1883-ஆம் ஆண்டிவே அச்சிட் டார்கள்.'"
நாவலர் வழிவரும் மரபு என்று நாம் கூறும் போது சி. வை. தாமோதரம்பிள்ளை, பொன் னம்பலபிள்ளை, குமா ர சுவா மி ப் புலவர், நா. கதிரைவேற்பிள்ளை முதலியோரது பங்க ளிப்பையும் அவர்போன்ற ஏனையோரின் பங்க ளிப்பையும் சேர்த்தே நாம் பொதுவாய்க் குறிப் பிடுகின்ருேம். இம்மரபு, காசிவாசி செந்தி நாதையர், மேலைப்புலோலி சைவசித்தாந்த
45

Page 48
மகாசரபம் நா. க திரைவேற்பிள்ளை, சங்கர பண்டிதர் போன்ற வைரம் பாய்ந்த சித்தாந்தி களை மட்டுமன்றி இலக்கியத்துறையிலே ஈடு பாடுடையராய் விளங்கிய தாமோதரம்பிள்ளை பொன்னம்பலபிள்ளை. அம்பலவாண நாவலர், சபாபதி நாவலர் முதலியோரையும் தன்னுள் அடக்குகிறது என்பது நினைந்துகொளத்தக்கதா கும். இவ்வாறு பாகுபடுத்துவதே அத்துணைப் பொருத்த மன்று எனத் தோன்றுகிறது. ஏனெ னில், காசிவாசி செந்திநாதையரின் கந்த புராண நவநீதம், தேவாரம் வேதசாரம் முதலி யன அடிப்படையில் சமயப் பொருள்பற்றியன வாயிருப்பினும், அவற்றில் உள்ளார்ந்த வகை யிலே இலக்கிய உணர்வு இழையோடுகிறது என்பதே பொருத்தமாகும். இவ்வாறு இலக்கி யத்தை, 'அறிவிலக்கியம்", "ஆற்றலிலக்கியம்’ என இருகூறுபடுத்தாமையே நாவலர் மரபின் பிரதான பண்புகளில் ஒன்று என்பது வற்புறுத் தப்பட வேண்டிய தொன்ருகும்.
இவ்விடத்திலேயே இலக்கியத்துக்கும் பண் பாட்டுக்கும் உள்ள பிரிக்கவியலாத பிணைப்பு துலக்கமடைகிறது. 'கந்தபுராண கலாசாரம்" என்ற தொடரை, பண்டிதமணியவர்கள் பயன் படுத்துவது இப்பொருளிலேயே எனலாம். இன்றைய யுகத்திலே கந்தபுராண உணர்வு மட் டும் வாழ்க்கைக்குப் போதாது. அது வேறு விஷ யம். ஆஞல் தத்துவத்தையும் பண்பாட்டை யும் இலக்கியத்துடன் இணைத்துக் காணும் நிலைக்குப் பொருத்தமான குறியீடாக, "கந்த புராண கலாசாரம்" என்னுந் தொடர் கச்சித மாக அமைந்துளது எனலாம்.
" ஒளவையாரிலும் திருவள்ளுவரிலும் பாரதத்திலும் இராமாயணத்திலும் முழு கித் திளைத் துத் திருமுறைகளும் சிவபுராணங் களும் பயிலும் ஆண்களையும் பெண்களையும் நாம் ஆக்கி வைத்திருக்க வேண்டாவா???
என்று சி. கணபதிப்பிள்ளை அவர்கள் கவலையுட னும் ஏக்கத்துடனும் வினவும்போது நாவலர் மரபின் குரலையல்லவா கேட்கின் முேம்?
நாவலர் மரபின் இன்னெரு குறிப்பிடத் தக்க அம்சம் மக்கட் சார்பு ஆகும். அதாவது பாரதியார் பாஞ்சாலிசபதம் முன்னுரையில் எழுதியதுபோல, அவருக்குப் பல்லாண்டுகள் முன்னதாகவே, ‘தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி” எழுத முனைந்த வர் நாவலர், சமய, தத்துவத்துறையில் அவர் வழிவந்தோர் இப்பண்பைத் தக்கவாறு வளர்த்

துப் பயன்படுத்தவில்லையெனினும், நா. கதிரை வேற்பிள்ளை போன்றேர் அப்பண்பைப் பேணி னர் எனலாம். நாவலர் சரித்திரம் எழுதிய த. கைலாசபிள்ளை அவர்களின் கூற்றென்று இவ் விடத்துப் பொருத்தமாயிருக்கிறது.
** முன்னிருந்த எங்கள் சமாயாசாரியர் கள் தாம் தரிசனஞ் செய்யப்போன தலங்க ளில் எல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார் கள். இவரோ தாம் போன இடங்களிலெல் லாம் லோகோபகாரமான சைவப் பிரசங்கங் கள் செய்து வந்தனர். வசனம் போல ப், பாட்டுக்கள் இக்காலத்திற் பிரயோசனமுடை வைகளல்ல என்று கருதியே பாட்டுப்பாடு தலை இவர் குறைத்துக்கொண்டார் '
இம்மேற்கோளில் இடம்பெறும் சொற்ருெ டர்கள் சில கூர்ந்து கவனிக்கத் த க் கன. 'லோகோ பகாரம்", "பிரயோசனம் என்ப னவே நாவலரது மக்கட்சார்புக்கு விளக்கஞ் செய்கின்றன. இப் பயன்பாட்டு நோக்கை, சி. கணபதிப்பிள்ளை அவர்கள் மேல் வருமாறு கூறியுள்ளார். " ஆறுமுக நாவலர் எல்லாருக்கும் விளங்கத்தக்க தெளிவான நடையில், படிப் படியே பயன்தரும் வகையில் புத்தகம் எழுத வும் பதிக்கவும் நேர்ந்தது '' நமது நாடும் மக் களும் நன்னிலை யடைதல் வேண்டும் என்பதற்
காகவே. மக்கட் சார்பினுலேயே, நாவலர் தமி ழிலே முதன்முதலாகப் பிரசங்கம் செய்ததும், நல்ல முறையில் கட்டுரைகளை எழுதியதும், பாடநூல்கள் எழுதி வழிகாட்டியதும், ஆங்கி லத்தில் உள்ள குறீயீட்டு முற்ையைத் தமிழ் தமிழ் வசன நடையிற் புகுத்தியதும். சைவஆங்கில பாடசாலையை முதன்முதல் ஆரம்பித் ததும் நிகழ்ந்தன எனலாம்.
இக்கட்டுரையின் முற்பகுதியிலே நான் விவ ரித்துள்ள இலக்கியப் பிளவுகளின் விளைவாக வும் தருக்கரீதியான வளர்ச்சியாகவும் இக் காலத்திலே சில எழுத்தாளர்கள் தமது சூழலி லிருந்து அந்நியப்பட்டு, புதுமுறைக் கவிதை, புதுமுறை நாவல்-New Wave-என்றெல்லாம் மக்களுக்குச் சிறிதும் விளங்காத வார்த்தை களைப் "படிமங்கள்" என்றும், ‘வசன கவிதை' என்றும் கூறி, தம்மையும் இலக்கிய உலகையும் ஏமாற்றிக்கொள்ளும் போதுதான், பிளவு படாத இலக்கிய மரபின் சிறப்பியல்பு நன்கு தெரிகிறது.
6

Page 49
நாவலர் அவர்கள் எந்த விஷயத்தையும் சிறப்பாகச் சமயநோக்கிலே சீர்தூக்கியவர். எனினும், மக்களிலே சமய அடிப்படையில் வேறுபாடு காட்டியவர் அல்லர். பொது விஷ யங்களில் - க த் தோ லி க் க ம க்க ளு ட ன் தோளோடு தோள்நின்று இயக்கங்களில் ஈடு பட்டவர் என்பது நன்கு அறியப்பட்ட செய்தி யேயாம். அதைப்போலவே கல்வித்துறையிலும் இலக்கியத் துறையிலும் நாவலர் வழிவந்த உழைப்பாளிகள் 'லோகோபகாரமான" வழியில் கருமங்கள் ஆற்றவே முயன்றனர். உதாரண மாக, ' நாவலர் அவர்களுக்குப் பின், நாவலர் அவர்களைப் போலவே நமது நிலையையும் நமது தேசத்தின் போக்கையும் நன்கு சிந்தித்தவரி பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை.' நாவி லர் வசன மூலம் தனது கருத்துக்களைப் பிரக ச னஞ் செய்தார். துரையப்பாபிள்ளை கவிதைகள் மூலம் தமது சிந்தனைகளை வெளியிட்டார். நாவ லர் கண்ணீரால் எழுதிய "யாழ்ப்பாணச் சமய நிலை" போன்றதே பாவலர் தேசபக்தியோடு இயற்றிய "யாழ்ப்பாண சுவதேசக் கும் மி" அதிலே அவையடக்கத்துக்கு முதற் செய்யுள் வருமாறு :
தேசோப காரங் கருதியிக் கும்மியைச்
செப்புகின் றேணுத லாலெவரும்
லேசாய் விளங்க இலகு தமிழில்
இயம்புவ தேநலம் சங்கமின்னே
எவரும் இலேசாய்-எ R தில்-விளங் கும் பொருட்டு இலகு தமிழில் பாடுவதாகப் பாவ லர் கூறும்பொழுது நாவலர், சுப்பிரமணிய ப்ாரதியார் ஆகிய இருவரது குரலையுங் கேட்கச் கூடியதாயுள்ளது. பின்வரும் செய்யுள் ஒன்றில்
கல்வித் திறனை யுலகோ ரறியக்
கழறிட வில்லையிக் கும்மியை யான்
நல்வித மாகநம் நாடு திருந்த
நவிலுகி றேனடி சங்கமின்னே

என்று பாடும்பொழுது, வித்துவச் செருக்கு எது வுமின்றி, பழகுதமிழில் செய்யுள் இயற்றியதன் நோக்கம் எமக்குப் புலஞகிவிடுகின்றது. நாவ லர் மரபில் சிறப்புவாய்ந்த பெருமக்களிலே ஒருவரான பாவலர் துரையப்பாபிள்ளையைப் போலவே கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுக ளுக்கு மேலாக, சமுதாய நோக்கும், தேசாபி மானமும், த்மிழிலக்கிய ஆர்வமும் கொண்டு ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் இயங்கி வருவ தும், நாவலர் மரபின் நவீன வெளிப்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது, ஏனெனில் உண்மையான-உயிர்த்துடிப்புள்ள-மரபு என் பது கடுமையான வரையறை அற்றது; அது புனி தமான பெயர்ப் பட்டியலில் தங்கியிருக்காதது. காலத்துக்குக் காலம் தன்னைத்தானே புதுப்பித் தும், தனக்கு வேண்டிய ஜீவசத்துப் பெற்றும் இயங்கிச் செல்வதே மரபு ஆகும்.
இவ்வாறு பார்க்கும்போது நாவலர் மரபு என ஒன்று இருப்பதன் உண்மையையும், அது தொடர்ந்து இந்நாட்டிலே இயங்கி வந்துள்ளது என்பதையும். அதற்குச் சில சிறப்பியல்புகள் உண்டு என்பதனையும், வெளித்தோற்றத்திற் சிற்சில மாற்றங்கள் தென்படினும், அம்மரபு இன்றைக்கும் வாய்ப்பாயுள்ள சில ஆக்கக் கூறு களைக் கொண்டிருக்கிறது என்பதையும், அவற் றில் ஒருமுகப்படுத்த இலக்கிய நோக்கு, மக்கட் சார்பு, நாட்டு நல நாட்டம், என்பன சிறப்பா னவை என்பதையும் அவை மறைமுகமாக வேனும் உள்ளார்ந்த சக்தியுடன் செயற்படுவ தஞலேயே தற்கால ஈழத்துத் தமிழிலக்கியம் சிற்சில அம்சங்களில் தென்னிந்திய இலக்கியப் போக்கிலிருந்து வேறுபட்டு விளங்குகிறது என் பதையும் நாம் ஐயத்துக்கிடமின்றி உணரக் கூடியதாயிருக்கிறது.
2

Page 50
நாவலர் தமிழிை
இப்போது தமிழிசை முழக்கம் எங்கும் ே நமது நாவலரே நாவலருக்கு முறையான இசை யாயிருக்கும்; அருட்பாடல்களை உருக்கமாக இன் யறிவு உண்டு; நாவலர் முருகனை உபாசன மூர்த்தி சென்று முருகனைத் தரிசித்து வருவது வழக்கம். இனிய கீர்த்தனங்களும் ஒரு மங்களமும் பாடிக் தனங்களில் சில வரிகளைச் சுவைப்போம் :
இராகம்: சாவேரி தாளம்: ஆதி
பல்லவி
உன்னிருபாதந் தெரிசனஞ் செய்த பின்னரே யுவகைக்கடலு லாழ்ந்ததேனே. (உன்)
அநுபல்லவி
தன்னிகரில் கதிரை - தணில்வாழும் போதனே சற்குண்ய பரிபூரண - சண்முக நாதனே. (உன்)
சரணம்
சனன மரணத்துயரந் தாழ்கின்றேன் - இன்னுஞ் சஞ்சலச் சாகரத்துள் வீழ்கின்றேன்
இன்னமும் பராமுகஞ் செய்யா தெனக்குருகுவாய் ஏதிலாத முத்தி யின்பந் தருகுவாய் (உன்)
இராகம்: சுருட்டி தாளம்: ஆதி பல் லவி
நிருமல பரசிவ சண்முகா - சுத்த நித்திய - சத்திய - வித்தக னுங்குக (நிரு)
அநு பல்லவி
திருவு லாவு மிலங்கையின் மேவிய சீர்திக முங்கதிர் காமத்துறைதரு சிற்பரா - அருள் தற்பரா - அன்பர் சிந்தையுகந்தம ருந்தனி வேலனே (நிரு)
சரணம்
அறிவுக்கறிவாய் நின்றவா - கிரெளஞ்சகிரியுடன் அவுணர்கிளையைக் கொன்றவா குறிகுண மிறந்திலகு முருகா கூரந்துளாயணி மருமன் மருகா கோலனே புரி நூலனே ஒற்றைக் கொம்பினன் பின்வரு தம்பியே யின்பருள். (நிரு)
4.

கவியோகி ) பூரீ சுத்தானந்த பாரதியார் صحيحة
கட்கிறது! தமிழிசைக்கு விதை போட்டவரும் ப்பயிற்சியில்லை; என்ருலும் அவர் குரல் இனிமை னிசையுடன் பாடுவார் இயற்கையான இசை யாகக் கொண்டவர். அவர் கதிர்காமத்திற்குச் ஒருமுறை நாவலர் கதிரை முருகன்மேல் ஆறு கதிர்காமத்திலேயே அரங்கேற்றினர். அக்கீர்த்
இராகம்: கல்யாணி தாளம்: ரூபகம்
பல்லவி என்மே லிரக்கமில்லையா சாமி - புதல்வனுக்குத்
தந்தை
இரங்காதிருந்தா லென்சொல்லும் பூமி
அநு பல் ல வி தன்னிகரில்லாக் கதிரைமலை வாழுந் தற்பரானந்த சாமிசு காரம்ப வுன்னுபய சரணும்புய மல்லாம லொன்றும்புக லிடமின் றினியாகுதல் (என்)
ச ர ண ம்
நித்தியபரி பூரணுனந்த நிருமலா முருகா பாம்பில் நிருத்தம் புரியும் பரந்தாமனுக்கு நிகரில்லாத நன்மருகா துத்தியவள்ளி மணுளா பலதொண்டர் வணங்கிடு
தாளா என்மேற் சூதை யெண்ணுதே என்னையிந்த வாதை பண்ணுதே கனமிகு துய்யா - மெய்யா - பொய்யா பன்னிருகையா - அய்யா - செய்யா - இன்னும்.
(என்)
இராகம்: அசாவேரி தாளம் ஆதி பல் ல வி
சிவகுரு நாதருக்குச் செய மங்களம் நல்ல செங்கமல பாதருக்குச் செய மங்களம்.
அநுபல்ல வி பவ மறுத் தெனையாளும் பன்னிரு தோளருக்கு தவமுனி வர்களுந் தங்கரு ளாளருக்குச் (சிவ)
சரண ம் சங்கரன் குமாரர்குல்லைத் தாரருக்கு மங்களம் தன்னிகரில்லாதநல் லூரருக்கு மங்களம் பொங்குசினத் தவுனரைப் போரில்வென்ற
வீரருக்குத்
துங்கவகத் தியர்க்கருள் தோமிலதி தீரருக்குச்
(சிவ)

Page 51
ད\ད་དུ་དད་དེ་
சிவத்தமிழ்ச் செல்வி ப செல்வி தங்கம்
** எவ்வழி நல்லவராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே'
என்பது ஒளவையாரின் வாக்கு. ஒரு நாட்டின் பெருமை அந்த நாட்டிலே தோன்றிய பெரிய வர்களாற்ருன் நிலை நாட்டப்படுகிறது. தான் வாழ்ந்த காலத்தையும் தமது சூழலையும் சிந் தித்துச் செயலாற்றியவர் நாவலர். அன்ன ரின் அயரா உழைப்பினுல் சைவத்துக்கும் தமி ழுக்கும் புத்துயிர் ஊட்டப்பட்டது. அவர் அவ தரித்த காலம் யாழ்ப்பாண மக்கள் உண்மை அறிவிழந்து போலியில் மயங்கி அந்நியராட் சிக்கு அடிமைப்பட்டிருந்த ஒரு காலமாகும். இந்தச் சூழ்நிலையில் அவரெண்ணம் விரிந்து தாய் நாட்டிற்கும் சேய் நாட்டிற்கும் இடை யில் பேரிணைப்பை ஏற்படுத் தி யது. இதன லேயே சைவ சமய மறு மலர்ச்சியும், தமிழ் வசன நடை ஆக்கமும், கலாசார விழிப்பும் ஏற்பட வழியுண்டாயது இத்தகைய மகத் தான பணிபுரிந்த பெருமானுக்கு நன்றிக் கடன் செலுத்தச் சைவத்தமிழுலகம் மறக்கவில்லை. மகா நாடுகள் கூட்டியும் உருவச் சிலையமைத் தும் மணிமண்டபம் கட்டியும் முத்திரை வெளி யிட்டும் நூற்றி ஐம்பதாவது ஜயந்தி விழாக் கொண்டாடியும் நன்றி பாராட்டுகின்றனர் ஈழத்துத் தமிழ் மக்கள்.
பெருமானரை ஐந்தாங் குரவர் 金了猛諡” உயர்ந்த குரு பீடத்திலே வைத்துப் போற்று கிறுேம். ' குரு' என் ரு ல் அறியாமையை

1ண்டிதை சைவப் புலவர்
மா அப்பாக்குட்டி
நீக்கி அறிவொளியைக் கொடுப்பவர் என்பது பொருள். நால்வர் பெருமக்கள் வழியிலே நின்று வேத நெறி தழைந்தோங்கவும் மிகு சைவத் துறை விளங்கவும் பூ த பரம்பரை பொலியவும் தமிழ் வழக்கின் துறைவெல்லவும் திருத்தொண்டின் நெறி வாழவும் தீதகன்று லகம் உய்யவும் ஞான நெறி தழை க்கவும் 1822-ம் ஆண்டு மார் கழித் திங்களில் அவதரித் தவர் நாவலர் பெருமான். கருவிலே திருவு டையவராக அவதரித்த அவர்களுக்கு இளமை யிலேயே சைவப் பற்றும் நல்லொழுக்கமும் சீவ காருண்யமும் தெளிந்த புலமையும் அமைந்து விளங்கியது.
தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும் வேதாகம புராணங்களையும், கசடறக் கற்ற சிறப்பினுல் பிழையற எழுதவும் நன்ருகப் பேச வும் ஆற்றலுடையவரானுர். இதன லேயே பேச்சாலும் எழுத்தாலும் தமது பணியை விரித்தார். ' என்கடன் பணிசெய்து கிடப் பதே ‘சிவனுண்டு பயமில்லை" என்பது அவரு டைய தாரக மந்திரம். "இந்தச் சரீரத்தை இறைவன் எனக்குத் தந்தது சைவசமயத்தை வளர்த்தற்குக் கருவியான கல்வியை வளர்த் தற் பொருட்டேயாம்' என்று கூறத்தொடங் கியவர் அப்பணியை நிறைவேற்றிய திருப்தி யில் 'இந்தச் சரீரம் எனக்குக் கிடைத்தது இறைவனை வழிபட்டு முத்தியடைவதற்கா கவே' என்றுமுடிக்கிறர். இது தான் மனித வாழ்க்கையின் அடிப்படைத்தத்துவம்.
g
49

Page 52
* உள்ளத்தாற் பொய்யா தொழுகின்
உலகத்தார்
உள்ளத் துளெல்லாம் உளன். '
என்ருர் வள்ளுவர். . இன்று எங்கள் ஒவ்வொரு வருடைய உள்ளங்களிலும் கோயில் கொண் டெழுந்தருளியிருக்கிருர் நாவலர் அவர்கள். மனிதன் என்ற நிலையிலேயிருந்து தெய்வம் என்ற பெருநிலைக்கு அவரை நாம் உயர்த்தி விட்டோம். அஞ்சாமையும் பக்தி வைராக்கிய மும் அவருள் ளத் துக்கு அரண் செய்தன. :* கடவுளுக்கு அஞ்சுபவன் உலகத்துக்கு அஞ்ச வேண்டிய தில் லே ' என்று ஆணித்தரமாகக் கூறிநின்றர். தான் மேற்கொண்ட பணிகளை இறைவன் நிறைவேற்றியே தரவேண்டும் என் றும் அன்றேல் தனது உயிரை இறைவன் முன் னிலையிலேயே விட்டுவிடுவது உறுதி யென்றும் கண்ணிர் வடித்துக்கொண்டு கூறினர். அவர் பூண்ட இத்தகைய உறுதிப்பாடுகளே சைவ உல கத்தின் பெருந்தொண்டனக அவரை ஆக்கி யது. இந்த மகத்தான வாழ்வைப் போற்றி மகா வித்துவான் மீனுட்சிசுந்தரம் பிள்ளையவர் கள் பின்வருமாறு பாடுகிறர்.
5.

* கருள் விரவுதலைக் கழிக்கும்
கண்மணியும் வெண்ணிறும்
பொருள் விரவும் ஐந் தெழுத்தும்
பொருளாகக் கொண்டுவப் போன்
தெருள் விரவு சுத்த சைவ
m சித்தாந்தப் பெருஞ் செல்வன்
அருள் விரவு பரவு புகழ்
ஆறுமுக நாவலனே. '
பெருமானருடைய 150 ஆவது ஜயந் தி விழாவை யொட்டி வெளிவரும் இந்த நினைவு மலரில் அவர்களின் அறிவுரைகள் சிலவற்றை யும் அறிய வைத்தல் நன்மை பயப்பனவாகும்.
1. ‘அறிவும் அதனுலாகிய நற்குண நற்செய் கைகளும் உள்ள சான்றேர்களாலே நன்கு
மதிக்கப்படுதற்கு யோக்கியணுய் இரு. ’’
2. நீ பிறர்க்கு ஒன்றை வாக்குத் தத்தம் செய் யுமுன் அது உன்னுல் இயலுமோ இயலாதோ என ஆராய்ந்துகொள்.
3. உள்ளது போது மென்று அமைந்த மனமே
குறைவற்ற களஞ்சியம்.

Page 53
- ச. அம்பிை
Fழ நாட்டில் சரித்திரச் சிறப்பும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய விசேடங்களும் பொருந் திய பல கோயில் கள் போர்த்துக்கேயரால் தரைமட்டமாக்கப்பட்டன. இவற்றுள் தி ரு க் கேதீச்சரமும் கீரிமலை ச் சிவன் கோயிலும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கன. இவற்றைப் புனருத்தாரணஞ் செய்வதில் நாவலர் அவர்கள் பெரும் முயற்சி எடுத்தார்கள். திருக்கேதீச்சரம் பற்றி ' யாழ்ப்பாணச் சமயநிலை", என்னும் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். கீரிமலைச் சிவன் கோயில் பற்றி, ஒரு விஞ்ஞாபனம் தமது கையொப்பத்தோடு 1878ம் ஆண்டில், அதாவது அவர்கள் சிவபதமடைய ஓராண்டுக்குமுன், வெளியிட்டார்கள். இதனை வெளியிட்டதுடன் தமது சைவப்பிரகாச வித்தியாசாலையில் கூட் டப்பட்ட சபையில் இது விஷயமாகப் பிரசங் கித்ததாகவும் தெரிகிறது. கீரிமலைச் சிவன் கோயில் பற்றி அவர்கள் வெளியிட்ட விஞ்ஞா பனம் வருமாறு:- யாழ்ப்பாணத்திலே மாவிட்ட புரத்துக்கு வடமேற்கே இரண்டு மைல் தூரத்தி லுள்ள கீரிமலையிலே, ஆதியில் ஒரு பெரிய சிவன் கோயில் இருந்தது. அது போர்த்துக்கேச ரால் இடிபட்டது. கீரிமலையின் அடியினின்றும் சுத்த ஜலம் ஊற்றெடுத்துக் கடலினுள்ளே பாய் கின்றது. அந்தச் சங்கமம் புண்ணிய தீர்த்த மென்று விசுவசித்தன்ருே யாழ்ப்பாணம் எங்கு முள்ள சைவசமயச் சனங்கள், விசேட தினங் களிலே அங்கே போய் ஸ்நானஞ் செய்கிருர்கள். அநேகர் சங்கற்பஞ்செய்து, ஒரு மண்டலம், அரை மண்டலம் ஸ்நானஞ் செய்துகொண்டிருக்
 

\றி%ர். Z/7///////Z)
35 Mjødur B. A. –
கிருர்கள். அநேகர் அந்தியேட்டி சிரார்த்தம் முதலிய கிரியைகள் அங்கே போய்ச் செய்கிருர் கள். அவர்களெல்லாம் ஸ்நானஞ் செய்தவுடனே சுவாமி தரிசனம் செய்யும் பொருட்டு அங்கே ஒரு கோயில் இல்லையே. யாழ்ப்பாணத்தில் எத்தனையோ இடங்களிலே கோயில்கள் சமீபத் திலிருக்கவும், புதிது புதிதாகக் கோயில் கட்டும் நம்மவர்கள், எல்லாச் சனங்களுக்கும் பொதுத் தலமாகிய கீரிமலையிலே ஒரு கோயில் கட்டுவிக்க இதுவரை நினையாதது என்னையோ?
கீரிமலையிலே ஒரு கோயில் கட்டுவித்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்து நித் தி ய பூசை நடத்துவிப்பது மேலாகிய சிவதருமம். பொருளுதவி செய்வார்களானல், இந்தச் சிவ தருமத்தைத் தொடங்கி நிறைவேற்றலாம்.
1. சனங்கள் இந்தச் சிவ தருமத்தின் பொரு ட்டு, பணமாகவேனும், மரம், கல், சுண் ளும்பு முதலிய உபகரணங்களாகவேனும் தங்களால் இயன்றது கொடுத்தல் வேண் டும்.
2. கீரிமலையிலே அந்தியேட்டி சிரார்த்தம் செய்யும் சனங்கள் தகுதியாகிய தானம் இரண்டு இந்தச் சிவ தருமத்தின் பொருட் டுக் கொடுத்தல் வேண்டும்.
3. கீரிமலையிலே அந்தியேட்டி செய்யும் குரு மார்கள் அந்தியேட்டி தட்சிணையிலே அந்தி யேட்டி ஒன்றுக்குக் கால் ரூபா வீதம்

Page 54
இந்தச் சிவ தருமத்தின் பொருட்டுக் கொடுத்தல் வேண்டும்.
4. கீரிமலையிலே விசேஷ தினங்களிலே போய் ஸ்நானஞ் செய்கிற சனங்கள் இந்தச் சிவ தருமத்தின் பொருட்டு அங்கே வைக்கப் பட்டிருக்கும் உண்டியல் பெட்டியிலே தங்கள் தங்களாலியன்ற பணத்தொகை போடல் வேண்டும்.
5. கீரிமல்ைக்குச் சமீபத்தில் உள்ள ஊர்களில் வசிக்குஞ் சனங்கள் இந்தச் சிவ தருமத்தின் பொருட்டுத் தங்கள் தங்கள் நிலங்களிலே நெல், சிறு தானியம், காய்கனி, வெற்றிலை புகையிலை முதலிய பலங்கள் உண்டாகும் பொழுது அவைகளிலே தங்களாலியன்றது இந்தச் சிவ தருமத்தின் பொருட்டுக் கொடுத்தல் வேண்டும்,
6 கீரிமலைக்குச் சமீபத்தில் உள்ள ஊர்களில் வசிக்கிற சைவ சமயச் சனங்கள், இந்தச் சிவதருமத்தின் பொருட்டுத் த ங் கள் தங்கள் வீடுகளிலே போடப்படுகிற குட் டான்களிலே நாளொன்றுக்கு ஒரு பிடி அரிசி போட்டு அந்த அரிசியை மாத முடி வில் வருந் தண்டலாளிடத்தில் ஒப்பித்தல் வேண்டும்.
7. காங்கேயன்துறையிலே அரிசி, நெல் இறக்கு மதி செய்கிற வியாபாரிகள் அரிசி, கரிசை ஒன்றுக்கு ரூபா அரை, நெல், கரிசை ஒன் றுக்கு ரூபா கால் வீதம் மகமை இந்தச் சிவதருமத்தின் பொருட்டுக் கொடுத்தல் வேண்டும்.
8. தகுதியாகிய பணத்தொகை வைத்துக் கொண்டு சிவதருமஞ் செய்ய விரும்புகிற வர்கள் கீரிமலைச் சிவன் கோயிலிலே தங்கள் தங்களாலியன்ற திருப்பணி செய்வித்துக் கொள்ளலாம். அவரவர் செய்வித்த திருப் பணியிலே அவரவர் பெயர் வெட்டப்படும்.
1878 வெகுதானிய வருடம் இங்ங்ணம்
வைகாசி மாதம் க. ஆறுமுக நாவலர் 24ம் தேதி வண்ணுர்பண்னை
மேற்படி விஞ்ஞாபனத்தில் ஏழை, பணக் காரர், விவசாயி, வியாபாரி போன்ற பல திறப் பட்டோரும் இக் கைங்கரியத்துக்கு உதவி செய் வதற்கு வழிகள் காட்டியுள்ளார்கள். இம்முறை கள் இப்பொழுதும் தர்ம கைங்கரியங்களுக்குப் பொருள் சேகரிப்போர் கைக்கொள்ளக்கூடிய
52

வையாகும். நாவலர் அவர்கள் பிரசங்கஞ் செய்வதோடும் பிரசுரம் வெளியிடுவதோடும் கின்றுவிடவில்லை. கோயிலுக்கு நிலையம் வகுப்ப நிலும், பொருள் சேகரிப்பதிலும் ஈடுபட்டிருந்த தாக, கீரிமலைச் சிவன் கோயில் ஆதீனகர்த்தர் வெளியிட்ட ஆவேதனத்திலிருந்து அறியக் கிடக்கிறது. இவ்வெளியீடு பற்றி பின்வரும் விபரம் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. " இது மேற்படி கோயில் ஆதீன கர்த்தராகிய கா. தியாகராசாக் குருக்களாற் செய்து, வண் ணு ர் பண்ணை வை. ஆறுமுகம்பிள்ளையாற் சைவப் பிரகாச யந்திர சாலையில் அச்சிடப்பட. -து. சித்திரா பானு டு ஐப்பசி மீ" 1882 ‘
இந்த ஆவேதனத்தில், நாவலர் அவர்கள் கோயில் புனருத்தாரணத்துக்குச் செய்த தொண்டுகள் பின்வருமாறு கூறப்படுகிறது:- * சில காலங்களுக்கு முன்னே இவ்வியாழ்ப்பா ணத்திலே கல்வி அறிவொழுக்கங்களிற் சிறந்து விளங்கிய, ந. க. ஆறுமுக நாவலர் அவர்கள் இக்கருத்தையெல்லாம் உற்றுநோக்கி அக் கீரி மலையிலே சிவன் கோயில் கட்டுவிக்க முயன்று, சென்ற வெகு தானிய ஞல வைகாசி மீ" கீரிமலைச் சிவன் கோயில் என்னும் பெயரிய பத்திரிகையை அச்சிற் பதிப்பித்துத் தம்முடைய சைவப்பிர காச வித்தியாசாலையில் வெகுசன சமூகத்திற் செய்த பிரசங்கத்திலே அதனுடைய மகிமையை இனிது விளக்கினர்கள்.
பின்பு தம்மிலே மிகுந்த அன்புடையரா பிருந்த வண்ணுர்பண்ணையிற் செல்வச் சிரஞ்சீவி வை. ஆறுமுகம்பிள்ளை முதலிய சில பிரபுக்களை இச் சிவ புண்ணியத்துக்குத் தகுந்த பொருளுதவி செய்யும்படி பிரேரித்து, அவர்கள் சிரத்தை யோடும் உடன்பட்டுக் கொண்டமை கண்டு பேராநந்தம் அடைந்தார்கள்.
அடுத்த பிரமாதி வருஷத்திலே நல்லூர்ச் சோதிட வித்துவான் ச. இரகுநாத சாஸ்திரி யார் அவர்களையும் அராலிச் சுவாமி நாதச் சிற் பாசாரியையுங் கொண்டு இங்கே வந்து, என் னுடைய தகப்பனர் கு. கார்த்திகேயக் குருக் கள் அவர்களோடும் தமையனர் கா. சபாபதிக் குருக்கள் அவர்களோடும் கலந்து, பலவாற்ரு னும் ஆராய்ந்து, சிவன் கோயில் கட்டுவதற்குத் தகுந்த நிலங் குறித்து விட்டு, தாம் பலவூர்ச் சைவ சமயிகளிடத்துச் சேர்த்துத் தரும் பொருள் கொண்டு திருப்பணியை நடத்தும் படி எங்களையே பிரேரித்து விட்டுப் போயினர்

Page 55
மேலும் இச் சிவன் கோயிலுக்காகத் தம் பொருள் கொண்டு ஒரு கிட்டங்கி கட்டுவித்து விட வேண்டுமென்று, காங்கேயன் துறையிலேயே போதிய நிலம் விலைக்கு வாங்கி விட்டார்கள்.
பின்பு சில நாட்களிற் சைவ சமயிகளுடைய பாக்கியக் குறைவினலே அவர்கள் சிவபதம் அடைந்து விட்டார்கள். அவர்கள் இருப்பார்க ளாயின், இதுவரையிற் சிவலிங்கப் பிரதிட்டை செய்யப்பட்டு விடும்.”*
நாவலர் அவர்கள் கீரிமலைச் சிவன் கோயி லுக்குக் கிட்டங்கி கட்டுவதற்கு காங்கேசன் துறையில் நிலம் வாங்கிய விஷயம் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட நூல்களொன்றிலும் காணப் படவில்லை. இப்பொழுது கோயில் ஆதீன கர்த் தாவாக விருக்கும் சிவபூg நகுலேஸ்வரக் குருக் களைக் கேட்டபொழுது, அவர்களுக்கு இவ் விஷயம் புதினமாகவிருந்தது. வாங்கப் பட்ட நிலம் எங்குள்ளதென்பதும் ஒரு வரு க்கும்
 

தெரியாமலிருக்கிறது. இந்த நிலத்தைக் கண்டு பிடித்துக் கோயிலுக்குக் கிடைக்கும்படி செய் தால், மிகவும் புண் ணியமாயிருக்கும்.
நாவலர் அவர்கள் மறைந்த பின்னும் அவர் களின் பேரன்புக்குரியவராயிருந்த வண்ணுர் பண்ணை வை. ஆறுமுகம் பிள்ளை புனருத்தாரண வேலையில் ஊக்கங் காட்டி வந்தார். தம்முடைய பொருள் கொண்டு ஒரு திருமஞ்சனக் கிணறு வெட்டுவித்துச் செவ்வனே கட்டு வித்துக் கொடுத்தார், நீர்வேலி சிவ, சங், சிவப்பிரகாச பண்டிதரும் உதவி செய்தார்கள்.
நாவலர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி பல ஊரிலுள்ள குருக்கள் மாரும், பொதுச் சனங்களும், செல்வர்களும் உதவி செய்தார்கள். இதனுல் கோயில் அமைக்கப் பெற்று கும்பா பிஷேகமும் நடைபெற்றது. நாவலர் அவர்கள் எடுத்துக் கொண்ட ஒரு பெரும் தொண்டும் இனிது நிறைவேறியது.
53

Page 56
கி. லக்ஷ்மண (வித்தியாதிபதி,
(Pற்காலங்களில் வாழ்க் கை யின் குறிக் கோளை அறம் பொருள் இன்பம் வீடு என நான் காகப் பிரிப்பது வழக்கம். ஒரு காலத்தில் இவை நான்குமே முக்கியமாயிருந்தன. காலப் போக் கில் அறமும் வீடும் முதன்மை குன்றப் பொரு ளும் இன்பமும் மட்டும் முக்கியத்துவம் அடைத் துள்ளன என்று தோன்றுகின்றது. இன்று மக்க ளது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அதன் பெரும் பகுதியை இரண்டே இரண்டு பிரி வுள் அடக்கிவிடலாமென்பது புலனுகும். ஒன்று பொருளைத் தேடுவது. மற்றது தேடிய பொருளை அனுபவிப்பது.
பொருளைத் தேடுவதிலும் அதைப் பயன் படுத்துவதிலும் மக்கள் கொண்டுள்ள கருத்துக் களையொட்டி மக்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக் கலாம். பொருளைத் தேடுவதிலும் எதுவித நிய தியோ ஒழுங்கோ தேவையில்லை. நீதியின் படி யும் மனச்சாட்சியின் படியும் நமக்கு உரியதை மட்டுமே நமதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற நியதியும் தேவையில்லை. பொருளை எந்த வழியா கவும் தேடிக் கொள்ளலாம். அவ்வாறு தேடிய பொருளையும் நமது சுயதேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதிலும் நீதி நியாயம் எதற்கும் இடமில்லை எனத் தேடும்போதும் சரி அனுபவிக்கும்போதும் சரி நியதிக்கோ நீதிக்கோஇடமில்லை எனக் கருது வோர் ஒரு பிரிவினர்.
54
 

ன், எம். ஏ. கல்வி அமைச் சு)
தேடும்போது தர்மவழி அதர்மவழி என்று பார்க்கத் தேவையில்லை. எவ்வளவு சாமர்த்திய மாகத் தேட முடியுமோ அவ்வளவு சாமர்த்திய மாகத் தேடிக்கொள்ள வேண்டும். அவ்வாறு தேடியவற்றில் ஒரு பகுதியைப் பிறர் நலத்தின் பொருட்டும் பயன்படுத்தலாம் எனத் தேடுவ தில் நியதி தேவையில்லை; பயன்படுத்துவதில் மட்டும் நியதி இருந்தால் போதும் எனக் கருது வோர் இரண்டாம் பிரிவினர்.
தேடும்போது மட்டுமே நியதி தேவை. தேடி யவற்றைப் பயன்படுத்தும் போது நியதி எது வும் தேவையில்லை எனக் கருதுவோர் மூன்றம்
இரண்டிலும் நியதி தேவை எனக் கருது வோர் நான்காம் பிரிவினர். இப்பிரிவினர் கருத் துப்படி பொருளைத் தேடுவதிலும் தேடிய பொருளை அனுபவிப்பதிலும் ஒவ்வொருகணமும் சிந்தை, சொல், செயல் எதிலும் நீதியிலிருந்து அணு வளவேனும் பிசகலாகாது.
பொருளை எப்படித் தேடவேண்டும். தேடிய பொருளை எ ப் படி ப் பயன்படுத்தவேண்டும் என்ற இரு வினுக்களுக்கும் இரத்தினச் சுருக்க மாக இரண்டு வரிகளுள் விடை அளித்த பெரு மையை உடையவர் வள்ளுவர்.
பழியஞ்சிப் பாத்து ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றுமில்"

Page 57
என்பதே வள்ளுவர் அளித்த விடை. தேடு போது பழிக்கு அஞ்சித் தேட வேண்டும் என் பதே வள்ளுவர் கூற்று. பழிக்கு அஞ்சுதல் என்! இரண்டு சொற்களுள்எவ்வளவு கருத்து அடங்கி யுள்ளது என்பது ஊன்றிச் சிந்தித்தால் மட்டுே புலனுகும். தேடிய பொருளைப் பகிர்ந்து உண்ண வேண்டுமென்பதே வள்ளுவரது இரண்டாவது விடை. ‘பாத்து' என்ற சொல்லின் கருத்து பரி கிட்டு என்பதாகும்.
பெரியவர்களுக்கு வரைவிலக்கணம் சொ6 லும் ரீதியில் அமைந்துள்ளது மிகப்பழையதமிழ் நூலாகிய புறநானூற்றிலுள்ள ஒரு செய்யுள் மேலே வள்ளுவர் கூறியவற்றையே அரண் செய வது போன்றுள்ளது அச் செய்யுள். அச் செய யுளில் ஒரு அடி:
"பழியெனின் உலகுடன் பெறினும்கொள்ளலர் பழியோடு வருவதாயின் உலகமேகிடைப்பதாய னும் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள் என் பது இதன் பொருள். அச்செய்யுளில் இன்னெ( அடி: "இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இன தெனத் தமியர் உண்டலும் இலரே அமிழ்த கிடைத்தாலும் அதனைப் பிறருக்கும் பங்கிட்டே உண்பர் என்பது இதன் கருத்து.
இங்கு கூறிய குறளுக்கும் புறநானூற்று செய்யு ளு க் கும் இலக்கியமாகவுள்ளவர்களே மேலே குறிப்பிட்ட நான்காம் பிரிவினர். அ த கையோரை இலக்கியங்களில் மட்டுமே சந்தி கலாம். இன்றைய உலகில் அத்தகையோரை காண்பது மிக அருமை. இன்றைய மக்களுட

وم
பெருந்தொகையானேர் முதற் பிரிவினர் என்ப திற் சந்தேகமேயில்லை.
மேலே கூறப்பட்ட நான் கு பிரிவுகளுள் நான்காவது பிரிவுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவரே நாவலர் பெருமான். வள்ளுவர் கூறிய பழிக்கு அஞ்சியவர் அவர்.நாவலர் சிதம் பரத்தில் கிடைத்த நெல்லை இலாபத்துக்குவிற்க அஞ்சியவர். அதனல் வரும் பணத்தைப் பின் தருமத்துக்கே செலவிடலாமென்றபோதுகூடப் பழியோடுவரும் அப்பணத்தைச் சிந்திக்கவும் விரும்பாதவர். தமக்குக் கிடைத்தது எதுவாயி னும் அது தர்மவழியாக வந்ததா என்பதைத் தம் மனசாட்சியின் துணைகொண்டு விசாரித்துத் தர்மவழித வருது வந்தவற்றை மட்டுமே ஏற்ற வர். அவ்வாறு அறம் சிறிதும் பிறழாது தேடிய எதையும் தமது தேவைக்கென வைத்துக் கொள் ளாதவர். வித்தியாசாலைகள் நிறுவுவதன் மூல மும் அச்சுயந்திர சாலை அமைப்பதன் மூலமும் தமது தேட்டம் அனைத்தையும் பிறருக்குப்பயன் படுத்துவதையே இலக்காகக் கொண்டவர். நாவலர் பெருமானுடைய வாழ்க்கை வரலாற் றையும், அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒவ் வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு சமயத்தி லும் அவர் செய்த முடிவையும் கூர்ந்து நோக் கும்போது அன்று திருக்குறளும் புறநானூறும் இலட்சியமாகக் கூறியவற்றைத் தம் வாழ்க்கை யிலேயே அனுட்டித்தவர் நாவலர் பெருமான் என்பது புலனகும். நாவலர் பெருமான் நான் காம் பிரிவுக்குரியவராயிருந்தமையே அவரு டைய பெயரையும் புகழையும் நாம் பேசுவதற் கும் போற்றுவதற்கும் காரணமாகும்.
2
55

Page 58
శ్రీ 8 a2%2%ی
கலாநிதி ச. தன
aifia enwurart. Glaoi aosú i
நாவலராகிய வழக்காளி தாயகம் மீளல்
1869, ஆண்டு கடலூரில் நிகழ்ந்த வழக்கிலே ருெபேட்ஸ் (Roberts) என்னும் ஆங் கிலேய நீதிபதி நாவலர் சார்பாகப் பேசிய வழக்கறிஞர் சவுந்தரநாயகம் காட்டிய நியா யங்களையும் சான்றுகளையும் ஏற்று மார்கழித் திங்கள் 18ந் தேதி தில்லை தீட்சிதர் சபாநடேச ருக்கு ஐம்பது ரூபாய் குற்றம் இறுக்கும்படியும் அக் குற்றம் இறுக்காவிடின் ஒரு மாதச் சிறை வாசமும் தண்டனையாகத் தீர்ப்பு அளித்தார். இவ் வழக்கில் விளக்கத்துக்கு அழைக்கப்பட்ட நால்வரில் ஒருவராகிய வடலூர் இராமலிங்கம் தில்லைத் தீட்சிதருக்கு உதவியாகவிருக்க வில்லையென்றும் நாவலரைத் துரஷிக்கும் துண் டுப் பிரசுரத்தினை வெளியிட உடந்தையாக இருக்கவில்லை யென்றும் சுப்பராயர் என்னும் வழக்கறிஞர் மூலம் வாதாடி ஒரு வாறு விடுதலை பெற்ருர், நாவவர் தில்லைத் தீட்சிதர் தந்த தொல்லைகளுக்கு எல்லை கண்ட வெற்றியுடன் தம் தாயகமாகிய ஈழத்திற்கு மீண்டார்.
துவையினந் துரையின் ஆட்சியில் யாழ்ப்பாணம்
நாவலர் 1870ஆம் ஆண்டு தொடக்கம் தம் வாழ்நாளின் இறுதிவரையும் தம் பிறப்
سمر\
5
 

ாஞ்சயராசசிங்கம்
uisa is spa is, Guy resaur.
p D
பிடமாகிய யாழ் நகரிலே சமயத் தொண்ட ரா கவும் சமுதாயத் தொண்டராகவும் தமிழ் மக் களின் அன்ருட எதிர்கால்நலன்கருதிஉழைத்து வந்தார். பொதுமக்கள் தம் குறைகளை நீக்க நாவலரின் உதவியினைக் காலத்துக்குக் காலம் நாடி வந்தனர்.
இந் நிலையில் டயிக் துரைக்குப் பின் பதவி யேற்ற யாழ்ப்பாண அரசாங்க அதிபர் துவை யினந் துரையின் (W. C. TWynam) ஆட்சிமுறை நடுநிலைமைக்கும் நேர்மைக்கும் அஞ்சாமைக் கும் பிறப்பிடமாகியவரும் நீதியை நிலைநாட் டப் பல வழக்குகள் தொடுத்தவருமாகிய நாவ லரின் பார்வைக்குள் வெகு விரைவில் அகப்பட் டது. ஆங்கிலேயரின் ஆட்சி முறையில் சிறந்த வற்றை வியந்து பாரட்டுவதற்கு நாவலர் என் றுமே தயங்கவில்லை. நாவலர் யாழ்ப்பாண அ ர சா ங் க அதிபர்களாகத் துவையினந் துரைக்கு முன் கடமையாற்றிய நற சல், டயிக் ஆகியோரின் ஆட்சிச் சிறப்பினைப் பாராட்டி வந்தவர். முன்னைய அரசாங்க அதிபர்களின் ஆட்சிச் சிறப்பினைத் துவையினந் துரையின் ஆட்சிக் கேட்டுடன் ஒப்பிட்டு நோக்கினர். துவையினந் துரை ஆங்கில ஆட்சியாளருக்கு உரிய விவேகத்தினையும் தகுதியையும் உடைய வரெனினும் தம் கீழ் கச்சேரி உத்தியோகம் பார்த்து வந்த சுதேசிகள் சிலரின் உருட்டுப் புரட்டுகளை உண்மையென நம்பி அணுப்புப்

Page 59
படும் பெல யீ ன த் தை க் கொண்டவராகக் காணப்பட்டார். இவரின் முறையற்ற ஆட்சி பற்றி உதயதாரகை வொழிந்த பத்திரிகைக ளில் 1 எதிர்ப்புக் குரல்கள் தோன்றின. துரதிஷ் டவசமாகக் காலநிலையும் இவர் ஆட்சிக்குப்பா தகமாக அமைந்திருந்தது. 1875-1876 ஆம் ஆண்டுகளில் வான் பொய்த்தது. கோதாரி என்னும் நோய் மக்களைப் பெரிதும் வருத்தி யது. உணவுப் பொருள்களின் விலைஉயர்ந்தன. பஞ்சமும் கோதாரியும் மக்கள் பலரின் உயிர்க ளைப் பலி கொண்டன. துவையினந் துரையின் ஆட்சி முறையில் யாழ்ப்பாண மக்கள் எவ்வாறு துன்பமுற்றனர் என்பதை விளக்குமுகமாக இவரை முன்பு பெரிதும் ஆதரித்த கத்தோலிக்க பாதுகாவலனில் வெளிவந்த செய்தியொன்ற னைக் கீழே தருவாம்.
பாதுகாவலன் 1876, புரட்டாதி 30 திகதி யாழ்ப்பாணம்
கரையூரில் பேதி வியாதியினுல் ஒருவனி றந்தானென்ற செய்தி பிறக்கு முன் எங்கள் ஏசன்றர் (Mr. Twynam) துவைனம் துரையும் அவரைச் சேர்ந்தவுத் தியோக ஸ் த ர் களும் கரையூருக்கு வந்து செத்தவனையுடனே புதைப் பித்த பின் அவனிருந்த வீட்டு ஒலையையும் செத்தையையும் பிடுங்கி நெருப்பிலிட்டுப் புகையெழும்பச் செய்தனர். அன்றியும் கரை யார் தெருவைச் சுற்றுமுற்றுமிறுக மூடியிருந்த ஒலை வேலிகளையும் குச்சுகளையும் பிரித்தெரித்து சுத்த காற்றேட்டத்திற் கிடஞ் செய்தனர். அடுத் த டு த் த நாட்களிலிரு வீடுகளிலும் நோயுண்டாக அவ் வீடுகளுக்கும் முந்திய வீட்டிற்குச் செய்த பிரகாரஞ் செய்து அவ்வீட் டாரனவரையும் அம்மை ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போனவர்களிலிருவர் மரணித்தார் கள். முந்தியவனுடன் ஆக மரணம் . 8
துவையினத் துரையின் ஆட்சியில் மணியகா ரன், உடையார், விதானை முதலிய பொறுப்பு வாய்ந்த பதவிகள் தகுதியற்றேர்க்கு அளிக்கப் பட்டன. பொதுமக்களின் பெட்டிசங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. உத்தியோக நிய மனத்திற்குக் கைக்கூலி பெறும் வழக்கம் வர வேற்கப்பட்டது. விவசாயிகள், நோயாளிக ளுக்கென மத்திய அரசாங்கம் அளித்த விதை நெல், மருந்து முதலியன தனிப்பட்ட உத்தி யோகத்தரால் திருடப்பட்டன. பொலிஸ் அதி காரிகள் பொதுமக்களைக் காக்கும் கடமை யைத் துறந்து துன்புறுத்தும் கடமையைச் சிறப் புறச் செய்தனர்.

1872இல் நாவலர் முயன்ற முயற்சி
நாவலர் இந்தியாவிலிருந்து மீண்டஇரண்டு ஆண்டுகளுக்குள் துவையினந் துரையினுடைய அநீதியையும் வன்கண்மையையும் ஒர வஞ்சனை யையும் உணர்ந்தார். வில்லியம் கிறிகோறி என்னும் கவர்னர் 1872ஆம் ஆண்டு யாழ்ப்பா ணத்திற்கு வந்தபோது நாவலர் தம் சைவப் பிரகாச வித்தியாசாலையிலே அவருக்கு வர வேற்பு அளித்துத் துவையினந் துரையின் ஆட் சிக் கொடுமைபற்றி முறையிட எண்ணியிருந் தார்.ஆனல் நாவலர் எதிர்பார்த்தவாறு நடக்க வில்லை என்பதனை "சிறீ கிறிகோறி (Gregory) கவர்ணர் இங்கேவந்தபொழுது சுவாதீனப் பிர Li J, elbo) Lu (Independent Gentlemen) Luigi di களுக்கு அவர் போவாரானல் தம்முடைய கொடுமைகளைச் சனங்கள் அவருக்கு விண்ணப் பஞ் செய்வார்கள் என்று பயந்து, துவையினந் துரை அவர் அங்கே போகாமைக்கு வேண்டும் உபாயமெல்லாஞ் செய்து, தம் கீழ்ப்பட்ட கச் சேரி உத்தியோகத்தர்களைக் கொண்டும் தலை மைக்காரர்களைக் கொண்டும் அங்கங்கே பந் தல் போடுவித்து அங்கே மாத்திரம் அவரை அழைத்துக் கொண்டுபோய், தம்மிடத்தில்
உள்ள குற்றங்களெல்லாவற்றையும் மறைத்
57
தும், தம்மிடத்தில் ஒரு சிறிதாயினும் இல்லாத குணங்களை உண்டென்று கற்பித்தும், அவரெ திரே பிரசங்கம் (Address) எழுதி வாசிக்கும்படி செய்துவிட்டார்' என்று நாவலர் இலங்கை நேசனில் எழுதியவற்றலும் உதயதாரகை 1872ஆம் ஆண்டு சித் திரைத் திங்கள் 18ந் தேதி இதழினலும் அறிகிருேம்.
நாவலர் துவையினந்துரையினை எதிர்த்து எழுதியவை
நாவலர் துவையினந் துரையினுடைய அநீ தியையும் வன்கண்மையையும் கண்டித்து ‘சம யம்! சமயம்!!," "இது நல்ல சமயம்" முத லிய தலைப்புக்கள் கொண்ட கண்டனங்களை 1877ஆம் ஆண்டு இலங்கை நேசன் இதழ்களில் எழுதினர். 1876ஆம் ஆண்டு விளைவு இல்லாத படியால் 1877ஆம் ஆண்டுக்கு விதை நெல் இல்லாத வேளாளருக்கு விதை நெல்லுக் கொடுக்கும்படி அரசாங்கம் வடமாகாணத்து அரசாங்க அதிபராகிய து ைவனந் துரைக்குப் பணித்தது. ஆனல் அவ் விதைநெல் குறிப் பிட்ட வேளாளரிடம் கொடுக்கப்படவில்லை. நாவலர் விதை நெல்லினைப் பெரு தோர் பட்டி யலினை இலங்கை நேசனில் விளம்பரம் செய்து

Page 60
தயாரித்து சட்ட நிரூபண சபைத் தமிழ்ப் பிரதி நிதியாகிய முத்துக்குமாரசுவாமிக்கு அனுப்பி ஞர். முத்துக்குமாரசுவாமி சட்ட நிரூபன சபையிலே கேள்வி நேரத்தில் இதுபற்றிக் கேட்டதையும் அதற்குக் கவர்ணருக்குப்பதிலா கக் கடமையாற்றி வந்த பார்ச் சுத் துரை (A. N. Birch) Gest G5 g. LDgG unt A)6)uuyuh துவையினந் துரையின் கீழதிகாரிகள் தம் மேல் பழி வராதவாறு தப்ப எடுத்த முயற்சிகள் பற் றியும் நாவலர் இலங்கை நேசனில் 2 வருமாறு வருணித்துள்ளார்:-
'புதுக் கவர்ணரிடத்தே சிறி. குமார சுவாமி யாது செய்வார்! ஆயினும் அந்த மகா னுபாவர் ஒன்று செய் தா ர். என்னே! கொழும்புச் சட்ட நிரூபண சபையிலே ஒரு கேள்வி கேட்டார். அது என்னை!" போன வரு ஷம் விளைவில்லாததினுலே இந்த வருஷம் விதை நெல்லுக்கு முட்டுப்படுகிற சனங்க ளுக்கு விதை நெல்லுக் கொடுக்கும் பொருட் டுக் கவர்ண் மேண்டு கட்டளை செய்ததன்ருே! அந்தக் கட்டளைப்படியே விதை நெல்லுக் கொடுக்கப்பட்டதா? எங்கெங்கே கொடுக்கப் கப்பட்டது? அவ்விஷயத்திலே செய்துகொண்ட உடன்படிக்கை என்ன?’ என்றதுதான் அந்தக் கேள்வி. ஒகோ! இதல்லவோ கேள்வி! இந்தக் கேள்வி லக்ஷம் பொன் பெறுமே, எப்படி? விதை நெல்லுக் கொடுக்கப்படவில்லை என்ற உண்மையை நன்கறிந்த சிறீ, குமாரசுவாமி துவையினத் துரையுடைய அநீதியையும், வன் கண் மை யையும், பொய்யையும் புதுக் கவர்ண ருக்கு மெல்லென இனிது விளக்கித் திக்கற்ற ஏழைகளாகிய உங்களுடைய துன்பத்தை நீக் கும் உபாயம் இது என்று கண்டார். நல்லது. இந்தக் கேள்விக்கு கொலோனியல் சக்கிடுத் தார் கொடுத்த மறுமொழி என்னை அது-இது: **வடமாகாணத்து ஏசண்டு சந்தேகமில்லாமல் விதை, நெல்லுக் கொடுத்திருக்கிறர். விபரமா கிய அறிவிப்பு வேண்டுமானுல், வருவிக்கப்ப டும் என்பதுதான்.இங்கே தலைமைக்காரர்கள் சிலர், விதை நெல்லுப் பற்றிக்கொண்டோம் என்று சனங்களிடத்திலே பற்றுச்சீட்டு வாங் கித் தரும்படி, தாங்கள் வலிந்துஏவப்படுகிறர் கள் என்று புலம்பிக்கொண்டு திரிகிருர்கள். இதற்குமுன் எத்தனையோ விஷயங்களிலே சிலரை அச்சுறுத்தியும் சிலரைக் கைக்கூலி கொடுத்தும், தங்கள் வசப்படுத்திக்கொண்டு, துவையினந் துரையுடைய காரியங்களைமுடித்த தலைமைக்காரர்களும் கச்சேரி உத்தியோகத் தர்களும், இப்பொழுது விதை நெல்லுப் பற்

றிக் கொண்டோம் என்று பொய்ப்பற்றுச் சீட்டு வாங்கிக் கொடுக்கமாட்டார்களா! கொடுப்பார்கள், கொடுப்பார்கள். ஏன்! கொடுப்பார்கள் என்பதிலே சந்தே கமா !”
நாவலர் துவைனத்தை எதிர்த்து எழுதிய பெட்டிசம்
துவையினந் துரையின் ஆட்சியில் யாழ்ப் பாண உழவர்க்கு இழைக்கப்பட்ட அநீதிபற் றிச் சுட்டிக் காட்டுவதுடன் நாவலர் நின்று விடவில்லை. கிறிகோறிக்குப் பின் 1877ஆம் ஆண்டிறுதியில் ஜேம்ஸ் லோங்டன் என்பவர் இலங்கை கவர்னர் பதவியினையேற்றர். புதுக் கவர்ணர் யாழ்ப்பாணத்திற்கு 1878தைத் திங் களில் வருகிரு ரென நாவலர் அறிந்தார். கவர் ணர் கிறிகோறி காலத்தில் (1872) நாவலர் துவைனந் துரையின் ஆட்சிமுறை பற்றிக் கூற விரும்பியவை இக் காலத்தில் (1878) பன் மடங்காக அதிகரித்து விட்டன. யாழ்ப்பாணத் தில் நாவலர் தாம் கடந்த எட்டு ஆண்டுகளா கக் கூர்மையாக அவதானித்த வகையில்துவை யினந் துரையின் ஆட்சியில் மலிந்துள்ள ஊழல் களை ஒருங்கு சேர்த்துப் பெட்டிசமாகப் புதுக் கவர்ணரிடம் நேரிற் கொடுக்க விழைந்தார். சைவப் பிரகாச வித்தியாசாலையில் இதற்கு எனக் கூட்டமொன்றனைக் கூட்டித் துவையி னந் துரை இருபத்தொன்பது குற்றங்கள் செய்திருக்கிரு ரென்று பொதுமக்களுக்குநன்கு விளக்கினர். நாவலர் துவையினந் துரையிடம் கண்ட குற்றங்கள் நாவலரும் பிற ரும் கையொப்பமிட்டு 1878ஆம் ஆண்டு தைத் திங்கள் 15ந் தேதி க வர்ணர் ஜேம்ஸ் லோங்ட னுக்குச் சமர்ப்பித்த பெட்டிசத்தில் உள. இதன் பிரதியொன்றனை இன்றும் இலண்டன் ஆய்வேட்டுப் பதிப்பகத்தில் பார்வையிட லாம். நாவலர் துவையினந் துரை மீது சுமத் திய இருபத்தொன்பது குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமான முதற் பத்தினையும் கீழே 35TGö507 69FTLD :--------
(1) றசல், டயிக் ஆகிய அரசாங்க அதிபர் கள் பொதுமக்கள் அனுப்பும் பெட்டிசங்களில் சுட்டிக்காட்டப்படும் குறைகளை நிவிர்த்தி செய்து வந்தனர். பெட்டிசங்கள் மூலமே கிராமவாசிகள் அரசாங்கத்திடம் முறையிட் டுத் தம் குறைகளைப் போக்க முடியும். ஆனல் தற்பொழுது கடமையாற்றும் அரசாங்க அதி பர் பெட்டிசங்களை முற்ருகக் கவனிப்பதில்லை. இதனல் நெடுந் தொலைவிலிருந்து மக்கள்

Page 61
யாழ்ப்பாணக் கச்சேரிக்கு வந்து நாடோறும் அரசாங்க அதிபரைக் காண விழைந்தும். அவ் வாப்பினைப் பெருமல் தவிக்கின்றனர். கடந்த இரு கிழமைகளாகத் துவையினந்துரை கச் சேரி அலுவலகத்தில் மிகக் குறுகிய காலமே தங்கி அலுவல்களைக் கவனிப்பது உண்டு.
(2) அரசாங்க அதிபர் தமக்குப் பிரிய மான சில கீழதிகாரிகளின் சொல்லையே கேட்டு நடக்கிருர். இப் பிரியமான கீழதிகாரிகளா கிய சூத்திரதாரிக்கு ஏற்றமுறையில் அரசாங்க அதிபராகிய பாவை ஆடிவருகின்றது. இச் சூத்திர தாரிக் கூட்டத்தில் மிக முக்கியமான வர்கள் வலகாம மேற்கு மணியகாரணுன இரகு நாத முதலியார், கச்சேரியில் பிரதான முதலி யாராகிய சவிரிமுத்துப்பிள்ளை, யாழ்ப்பாண மணிய காரணுன கணபதிப்பிள்ளை, பண்டசா லைப் பொறுப்பாளராகிய குட்டித்தம்பி, சிறு தெருக்களின் மேற்பார்வையாளராகிய சந்திர சேகரம் ஆகியோராவர்.
(3) முன்னை நாட்களில் மணியகாரன், உடையார், விதானை முதலிய சுதேசத் தலை மைக் காரர் பதவி காலியான பொழுது அப் பதவி பற்றிக் கிராமங்களில் தக்க விளம்பரம் செய்யப்பட்டு தேர்வுக்கு உரிய நாளும் நிர்ண யிக்கப்பட்டு வந்தது. தே ர் வு க் கு உரிய நாளன்று குறிப்பிட்ட கிராமவாசிகள் ஒன்று கூடி விண்ணப்பஞ் செய்துள்ள அபேட்சகர்க ளில் தாம் விரும்பிய எவருக்காவது தம் வாக்கு களை அளித்துவந்தார்கள். கூடிய வாக்குகளை இவ் வாறு பெற்ற அபேட்சகரை நியமிப்பது றசல் முதலிய அரசாங்க அதிபர் காலத்தில் நிலவிய நல்வழக்கம் ஆகும். இப்போதோ இந் நல் வழக்கம் கைவிடப்பட்டுக் கச்சேரியில் அர சாங்க அதிபரின் அன்பிற்குப் பாத்திரமான கீழதிகாரிகள் சிபார்சு செய்த ஆட்களே இப் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.
(4) விதான மார் ஒவ்வொருவரும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட நிலங்களின் பெறு மதி, விஸ்தாரம் முதலியனபற்றியும் தேவை யெழின் தனிப்பட்ட ஒருவரின் தகுதி, குணம் ஆகியன பற்றியும் தெரிவிக்கும் கடமை உடை யவர். இத்தேவைக்கு ஏற்ப விதான பதவியி லிருப்பவர் தாம் விதான வேலைபார்க்கும் பகு தியில் விறந்து வளர்ந்தவராயிருத்தல் வேண் டும். றசல் அரசாங்க அதிபராயிருந்த காலத் தில் விதான பதவிக்குத் தெரிவு செய்யப்பட் டவர் நல்லொழுக்கமும் சுவாதீன வாழ்க்கை

நடத்தக்கூடிய சொத்து உடையவராயும் காணப்பட்டார். -
அரசாங்க அதிபரின் பொறுப்புள்ள கட மைகளில் யாழ்ப்பாண மணியகாரன் நியமன மும் ஒன்ருகும். இப்பதவி காலியான பொழுது மிக்க தகுதி வாய்ந்த யாழ்ப்பாணத்தவர் விண் ணப்பஞ் செய்தார்கள். இவர்களின் உரிமை யான விண்ணப்பங்களைப் புறக்கணித்ததுமல் லாமல் முன்பு நன்கு நிலைத்து நிலவிய வழக்கத் தினையும் உதாசீனஞ் செய்து அரசாங்க அதி பர் தம் முன்னைய பிரியருள் ஒருவரும் மன்னர் வாசியுமாகிய கணபதிப்பிள்ளையை நியமித் துள்ளார். இம் மணியகாரன் யாழ்ப்பாணத் தில் அடிக்கடி இல்லாமலும் தம் பதவிக்குச் சம்பந்தம் இல்லாத பிறவேலைகள் பலவற்றி னைக் கவனித்தும் வருகிருர், இச் சந்தர்ப்பங் களில் இவரின் மணியகாரக் கடமைகள் அனுப வமில்லாத இளைஞரும் இவர் மருகருமாகிய ஒருவரால் கவனிக்கப்பட்டு வருகின்றன.
(5) யாழ்ப்பாணக் குடா நா ட்  ைட ச் சார்ந்த தீவுகள் பத்தொன்பது அல்லது இருபது கிராமப் பகுதிகளைக் கொண்டன. இத்தீவுக ளின் மணியகாரன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பொழுது தகுதியுடையோர் இப் பதவிக்கு விண்ணப்பஞ் செய்தனர். அரசாங்க அதிபர் இவர்களில் ஒரு வரை இப்பதவிக்கு நிய மிப்பதை விட்டு வலிகாமம் மேற்கு மணியகார ஞன இரகுநாத முதலியாரைத் தம் கடமைக ளுடன் மேலதிகமாக இத் தீவுப் பகுதிகளுக்கும் மணியகாரணுகக் கடமையாற்றுமாறு பணித் தார். வலிகாமம் மேற்குப் பகுதியில் இருபத்தி ரண்டு கிராமங்கள் உள. யாழ்ப்பாணக் குடா நாட்டில் வலிகாமம் மேற்குப் பகுதியே கூடிய கிராமங்களைக் கொண்டது. இதனுல் வலிகாமம் மேற்கு மணியகாரனுக்குத் தன் பகுதி வேலை யைப் பார்ப்பதற்கே நேரம் போதியதாய் இருக்கிறது. இந்நிலையில் வெகு தொலைவில் கட லினல் பிரிக்கப்பட்டு உள்ள தீவுகளில் நடக்கும் காரியங்களைக் கவனிக்க அவரால் முடியாது. இது குறித்து அரசாங்க அதிபருக்குப் பெட்டி சங்கள் பல அனுப்பப்பட்டும் அவர் அவற்றி னைப் பொருட்படுத்தினரில்லை.
வலிகாமம் மேற்கிலிருந்து புங்குடுதீவினை இரண்டு அல்லது மூன்று நாள் பயணத்தினுல் அடையலாம். புங்குடுதீவில் தெருக்களுக்கு மேற்பார்வையாளராக இரகுநாத முதலியார் நியமிக்கப்பட்டு இவ்வேலைக் குத் தனி வேதனம்
9

Page 62
பெறுகிருர். இதே வேலைக்கென மாவட்டத் தெருக்கொமிட்டி வேருெருவரை நியமித்துள் ளது. பெரும்பாலும் முதலியார் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணக் கச்சேரியில் காணப்படுவ தால் புங்குடுதீவில் தெரு வேலைகளை மேற்பார் வையிட முடியாதவராய் இருக்கிருர்,
(6) அர சாங் க அதிபர், உடை யார், விதான ஆகிய பதவிகளுக்குப் பலரை நியமனஞ் செய்த போதிலும் ஒருவரையேனும் நிரந்தர மாக அவ் உத்தியோகங்களில் உறுதிப்படுத்த வில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் அரசாங்க அதிபரும் அவரின்கீழதிகாரிகளும்இத்தற்காலிக வேலைபார்க்கும் உத்தியோகத்தரை ஆட்டிப் படைக்க முடிகிறது. ஒவ்வொரு புது நியமனம் செய்யும் பொழுதெல்லாம் பெருந்தொகை யான பணம் அறவிடப்படுகிறது என்று தற்பொ ழுது தெரிவிக்கப்படுகிறது.
(7) சில கிராமங்களில் உடையார் வேலைக் குப் பலர் விண்ணப்பஞ் செய்தபோதும் அப் பதவிகளுக்கு எவரையும் நியமிப்பதில்லை. மணி யகாரர் தம் கடமைகளுடன் உடையார் வேலை களையும் பார்க்கிருர்கள். உடையார் வேலை யையும் பார்க்கும் மணியகாரனின் உறவினர் ஒருவர் நொத்தாரிசு வாய் இருந்தால் இவ்விரு வர் கூட்டு முயற்சியில் உறுதிகள் தயாரிப்பதில் அதிக தீமைகள் எழும். நொத்தாரிசு உள்ள கிராமம் ஒன்றில் அந் நொத்தாரிசுவின் சகோ தரியின் மகனுக்கு உடையார் பதவியினைத் துவையினந் துரை அளித்துள்ளார். இதனல் காணிகளின் உரிமைகளை வழங்குவதிலும் உறுதி கள் தயாரிப்பதிலும் தீவினைகள் பல எழக்கூடும்.
(8) புதிய தெருக்கள் அமைக்கப்படும் பொழுது அதிபர் சட்டத்தின் கூறுகளுக்கு மாரு கத் தம் பிரியமான கீழதிகாரிகளின் சுயநலப் புத்திமதிகளுக்கு அமைய சுவர்கள், வேலிகள், பயன்தரு மரங்கள் முதலியவற்றினை அழித்துச் சொல்லொணுச் சேதம் விளைவிக்கிருர். இவ் வாறு சேதம் விளைவித்து எடுத்த நிலப் பகுதி சில சமயங்களில் தெரு அமைப்பதற்கு உகந்த தல்ல என்று நிராகரிக்கப்படுவதும் உண்டு. இவ் வாறு அழிவுச் செயல்கள் பல யாழ்ப்பாணக் கடவத்தைக்குள்ளே நிகழ்ந்துள்ளன. விதானை மார் தெருவுக்கெனப் பொதுச் சொத்தாக்கப் பட்ட நிலங்களின் தொகை மிகக் குறைவுஎனத் தம் அறிக்கைகளில் குறிப்பிடுகின்றனர். தெரு வமைப்பதற்கென நிலங் கொடுத்தவர்கள் மிகக் குறைந்த பொருளீட்டைப் பெற்றுவருகின்ருர்
* é

கள். நிலங்கொடுத்தோர் பலர்க்குப் பொரு ளிடு வழங்காது காலந் தாழ்த்தியமையால் அர சாங்க அதிபர் மீது சிலர் வழக்குத் தொடர்ந் துள்ளனர். அரசாங்க அதிபர் தம் கீழதிகாரிக வளின் தலையீட்டினுல் சிலருடன் சமாதான மான முடிவுக்கு வந்துள்ளார். சட்டத்தின் உட் பிரிவுகளுக்கு அமைய நடந்திருப்பாராகில் சில ருக்கு அவர் கொடுத்த பொருளிட்டுத் தொகை யைவிடக் குறைந்த தொகை கொடுத்திருக்க லாம். 3487 இலக்கம் கொண்ட வழக்கில் மாவட்ட நீதிபதி தாமே நேரில் சென்று தெரு வமைப்பதற்காகச் சேதம் விளைவிக்கப்பட்ட இடத்தினைப் பரிசோதித்துப் பொருளிடு செய்யு மாறு தீர்ப்பளித்தார்.
(9) தெருக்கள் அமைப்பதற்கென ஒதுக் கப்பட்ட பணத்தினைச் செலவிடும் முறையில் ஒழுங்கீனமும் தடுமாற்றமும் காணப்படுகின் றன. ஒரு தெருவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் வேருெரு தெரு வமைப்பதற்குப் பயன்படுத் தப்படுகிறது. இதனுல் தெருவுக்கென நிலங் கொடுத்தோர் பொருளீடு பெறுவதற்கு நீண்ட நாட்கள் செல்கிறதும் அல்லாமல் வேறு தெரு வுக்கென ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்தும் இவர்க்குப் பணம் கொடுக்கப்படுகிறது.
(10) தங்கள் வயல்களுக்காக வாயிதாப் பணம், தலைவரிப் பணம் ஆகியன கொடுப் போர் இவ் வரிப்பணத்துடன் மதிப்பீட்டுவரிப் பணமும் இறுத்தல் வேண்டும். களவு, சண்ட்ை நிகழும் இடங்களில் பொலிஸ்மாரைக் காண் முடியாது. பொலிஸ் நிலையம் இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவில் இருக்கிறது. ஒருவர் பொலிஸ் நிலையத்தினை அடைந்து செய்தியை அறிவிக்குமுன் சண்டை முடிந்து குற்றவாளி தப்பிவிடுகிறன். பொதுவாக இங்கு ஸ் ள பொலிஸ்மார் மதுகுடிக்கிறவர்கள். கண்ணியமா ன வரைக் கூட முரட்டுத் தன்மையுடன் நடத்து கிறவர்கள். பிஸ்க்கால் அலுவலகத்திற்குச் செல்லும் நிறை மாந்தர் மரியாதையின்றி நடத் தப்படுகின்றனர். வெளியே பலவந்தமாகவும் துரத்தப்படுகின்றனர். மேலதிகாரிகளுக்கு இதுபற்றி முறையீடு செய்ய நுழைந்தால் சிவத் தைத் தொப்பி அணிந்த கச்சேரிப் பியோன் மார் அவர்களை வெளியே துரத்திவிடுகின்றனர். டயிக் துரை காலத்தில் ஏழை ஒருவனைத் துரத் திய பியோன் உடனே வேலையினின்றும் நீக்கப் பட்டான். துவைனந் துரை பொலிஸ்மாருக்கு எதிராக அனுப்பப்படும் பெட்டிசங்கள் எல்லா வற்றினையும் அலட்சியம் பண்ணுகிருர்,
O

Page 63
தீர்ப்பு
அநீதி, பொய், கோள் முதலியன கற்பிக் கும் கல்லூரியாகிய யாழ்ப்பாணக் கச்சேரிக்குத் தலைவராகிய துவைனந்துரை செய்த குற்றங் களை விசாரித்து நீதி வழங்கின் அவருக்கு பதவி நீக்கமும் உடற்றண்டமும் கிடைக்குமென நாவ லர் துணிந்து தம் கருத்தினை இலங்கை நேச னில் 3 வெளியிட்டார். கிறீஸ்தவர், கத்தோ லிக்கர், முகம்மதியர், எச்சமயத்துடனு மிணை யாதவர் ஆகிய பல்வேறுபட்ட யாழ்ப்பாணத் தமிழர் சமுதாயத்தினை ஒன்று கூட்டி முதலில் தமிழர் கூட்டணி ஒன்றன நிறுவி வடமாகாண ஆட்சியாளராகிய துைையினந்துரையினை மட்டு மன்றி அவரை நியமித்த கவர்ணரையும் எதிர்த் துப் போராடியவர் நாவலர்.
நாவலரும் ஏனையோரும் சமர்ப்பித்த பெட் டிசத்திற்குக் கவர்ணர் லோங்டன் தாம் துவை யினந் துரை விஷயத்தில் தலையிடமாட்டோம் என்று தெரிவித்தார். 4 அன்னியர் ஆட்சியில் சுயநலம் படைத்த சுதேச உத்தியோகத்தினர் சிலரின் சூழ்ச்சிகளால் விளைந்த தீவினைகளை அகற்ற முன்னணியில் நின்றவர் நாவலர். ஆட் சியாளரோ ஆங்கிலேயர். நாவலரோ சுவாதீ னப் பிரபுக்களில் ஒருவர். கொழும்பில் சட்ட நிரூபண சபையில் கடமையாற்றிவந்த தமிழ் மக்கட் பிரதிநிதி வேறு. தேசாதிபதியின் தேர் வில்லாமல் தமிழர் பிரதிநிதி என மக்களால் மதிப்பிடப்பட்டுவந்த நாவலர் வேறு. கொழும் புச் சட்ட சபைப் பிரதிநிதி ஆட்சியாளரின் நிர் வாகப் போக்கினைக் கண்டிக்க முடியாது அவர் களுக்கு முன் கை கட்டி வாய் புதைத்து நின்ற காலங்களிலும் நாவலர் என்னும் தமிழர் பிரதி நிதி கூட்டங்கள், பெட்டிசங்கள், சமாசாரப் பத்திரிகைகள் முதலிய சாதனங்களால் பொது மக்களின் விழிப்புணர்ச்சி க் கு ம் நீ தி யை நாடும் வேட்கைக்கும் புற வடிவம் கொடுத்து வந்தார். துவையினந் துரையின் துன்புறுத்த லுக்கும் அடக்குமுறைச் சட்டங்களுக்கும் அண வளவும் அஞ்சாது "வெள்ளையனே வெளியேறு"
1. (9) The Examiner, IIth September &
December 21st 877.
(ஆ) கத்தோலிக்க பாதுகாவலன், 1878
தை மீ" 12ந் திகதி.
(இ) இலங்கை நேசன், 1879 தை மீ" 2ந்
தகதி,

என்று ஆணித்தரமாக எதிர்த்துத் தமிழர் விடு தலைப் போரைத் தொடக்கி வைத்தவர் நல்லை நாவலர். வெள்ளையரின் நீதிமுறையினைக் கடைப்பிடித்து அதனை அவர்கள் வழங்கும் முறையில் நிறைந்துள்ள தவறுகளை வெள்ளை யாட்சியாளரே தம்முள் வெட்கமுற்று நாவூல ருக்கு அடிபணியுமாறு வெளியே பலரும் அறிய வெளியிட்டும் பிரசங்கித்தும் பெட்டிசங்களை எழுதியும் வந்தவர் புரட்சிவாதி நாவலர். கருணை, பிறர்நலம் காண விழைதல், நீதியை நிலைநாட்டல் முதலிய குணங்களின் மறுபிறப்பு நாவலர். அகிம்சை வழியில் இம்சைகளைப் போக்க முயன்ருர், அதற்கு வெள்ளைப் பாதிரி மார் கற்பித்த ஆங்கிலக் கல்வி துணை நின்றது. சனநாயக ஆடசியின் மேன்மையினை உணர்ந்த நிலையிலே நாவலர் போராடினர்.
நேர்மையின் உறைவிடமாகிய நாவலர் தாமே பல நீதிமன்றங்களை நடத்திவந்தார்.இந் நீதிமன்றங்களில் நாவலர் பல வேடங்களில் காட்சி அளித்தார். நாவலர் ஒருவரே இந் நீதி மன்றங்களில் குற்றஞ் செய்தவரைக் கண்டு பிடிக்கும் பொலிசாகவும், குற்றஞ் சாட்டப் பட்டவரைச் சிறை செய்யும் பிஸ்க்கால் அதிகா ரியாகவும் குற்றத்தினை நிரூபிக்க உதவும் சாட்சி யாகவும் வழக்கினைக் குற்றஞ் சுமத்தப்பட்ட வருக்கு எதிராக நடத்தும் வழக்கறிஞராகவும் ஈற்றில் தீர்ப்பளிக்கும் நீதிபதியாகவும் விளங் கினர். இப் பல் பாத்திர நீதிமன்றத்தினை நாவ லர் துவையினந் துரைக்கு மாருக எழுதிய பெட் டிசம், கண்டனங்கள் ஆகியவற்றில் நாம் காண லாம். நாவலர் தம் நேர்மை அகமாகிய நீதிமன் றத்திலே துவையினந் துரைமீது சாட்டப்பட்ட குங்றங்களை வழக்கு விசாரணை நடத்தித் துவை யினந் துரையினைக் குற்றவாளி என்று கண்டு அவருக்கு பதவி இழப்பும் உடற் றண்டனையும் விதித்தார்.
நிறைமாந்தர்க்கு நாவலர் பிரதிநிதி. துவை யினந் துரை போன்ற குறை மாந்தர்க்கு நாவ லர் நீதி வழங்கும் அதிகாரி.
2. இலங்கை நேசன் கார்த்திகை 28ந் திகதி
1877,
3. இலங்கை நேசன் 1877 தை மீ" 2ந் திகதி.
4. The Morning Star, 16th January 1879.
6

Page 64
- கா. மாணி pJT oA)asñt uu oTğb I
பநிலg ஆறுமுக நாவலரின் மெதடிஸ்த சபைத் தொடர்பை ஆராயுமிடத்து முதற்கண் எழும் சிந்தை வண டக்டர் பீற்ரர் பேர்சிவலைப் பற்றியதே. ஏனெனில் மெதடிஸ்த சபையின் தலைவர் பதவியில் பேர்சிவல் அமர்ந்திராவிடின் நல்லைநகர் நாவலரின் "" சொல்லுதமிழெங்கே சுருதியெங்கே யெல்லவருமேத்து புராணுகமங்க ளெங்கே ப்ரசங்கமெங்கே ' என்பது வினவாக இருந்திருக்குமேயன்றி விடை கிடைத்திராது.
கிறிஸ்தவர்களின் தொடர்பையாவது திருச் சபையின் தொடர்பையாவது நாவலர் என்றும் நாடியதில்லை. யாழ்ப்பாணத்தில் அந்நாளில் உயர்தரத்திலிருந்த உவெஸ்லியன் ஆங்கில பாட சாலையில் கந்தர் ஆறுமுகம் ஆங்கிலக் கல்வி கற் பதற்காக அவரது பன்னிரெண்டாவது வயதிற் சேர்க்கப்பட்டார். எட்டு வருடங்கள் வேறெவ ரையும் போலவே இவர் மாணவராயிருந்து கல்வி விருத்தியிற் கவனம் செலுத்தினர்.
1834ஆம் ஆண்டில் பேர்சிவல், சபைத்தலை வராகவும் பாடசாலையின் முதல்வராகவும் நிய மனம் பெற்றது நாவலருக்கு அநுகூலமாக அமைந்தது. பேர்சிவல் பாடத்திட்டத்தை விரிவு செய்தார். மெய்யியல், அட்சர, கேத்திர கணிதம்; வரலாறு முதலிய பாடங்கள் பாடத் திட்டத்திற் சேர்க்கப்பட்டன. பிற்காலத்தில் மிஷனரிமாருடன் தர்க்கித்துச் சைவ சமயத்தை மீட்க வேண்டிய ஆறுமுக நாவலருக்கு மெய்யிய லும் கேத்திர கணிதமும் பெருந்துணையாயிருந் திருக்கும் என்பதில் ஐயமில்லை.
 

ത്രര தச2ை
d56 su garai - மத்திய கல்லூரி
ஏனைய பாதி ரி மா ரை ப் போலல்லாமல் "பேர்சிவல் பாதிரியார் அறிவுடைமைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார். பாடசாலைகளை அரசினர் ஆரம்பிப்பதைக் கண்டு ஆனந்த மடைந்தார். தமது பாடசாலையில் மாணவர் தொகை குறைப நேரிடினும், பல பாடசாலை களால் அநேகம் இளைஞர்கள் வேதாகமத்தை ஏற்றுக்கொள்ளும் உயர்நிலைப் பக்குவத்தை அடைவார்கள் என்பது அவரது நம்பிக்கையா யிருந்தது. ' !
பேர்சிவல், சமய அறிவிலும் பார்க்க கல்வி யறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தமையாற் முன் கற்கும் வல்லமையிற் சிறந்திருந்த கந்தர் ஆறுமுகத்தை பேர்சிவல் ஆதரிக்க நேர்ந்தது. பேர்சிவலுடன் கொண்ட நட்புறவே நாவலரின் வாழ்நாளில் ஏற்பட்ட முதலாவது திருப்பு முனே யாகும்.
57 வருடங்கள் வாழ்ந்த நாவலரின் வாழ் நாளை நான்கு பருவங்களாகப் பிரிக்கலாம். முதற் பருவம், 19 வருடங்கள்-தமிழ் ஆங்கிலக் கல்வி கற்றமை, இரண்டாவது பருவம், 7 வரு டங்கள்-கிறிஸ்துமத வேத நூல் மொழிபெயர்ப் பால் ஏற்பட்ட மெதடிஸ்த சபைத் தொடர்பும், கிறிஸ்து சமயம் பரவுவதற்கான காரணிகளை அவதானித்தலும், மூன்ருவது பருவம், 6 வரு டங்கள் மிஷனரிமாரின் சைவ தூஷணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தமை. நான்காவது பருவம் - சைவத்தை மீட்டலும் சைவ, தமிழிலக்கண

Page 65
நூல்களை எழுதியும், உரையெழுதியும், பர் சோதித்துப் பதித்தமையும், சமூகத் தொண்டுப் ஆகும். ஆயினும், நாவலருக்குச் சிலையெடுத்த நாம் இப் பருவங்களை ஆராய்ந்துள்ளோம் அல் லர். 1918ஆம் ஆண்டு வரையில் கைலாசபிள்ளை யவர்களின் நூலே வேத வாக்காக இருந்து வந் தது. அதிர்ஷ்டவசமாக 1968ல் கனகரத்தின உபாத்தியாயரின் நாவலர் சரித்திரம் பலருக்கும் கிடைக்கக் கூடியதாக அச்சிடப்பட்டது. இதன் பின்னர் ஒருசில நல்லறிஞர்கள் நாவலர் எழுதிய வைகளைச் சேகரித்து விளக்கத்துடன் அச்சிட் டுத் தந்துள்ளனர். ஆகவே நாவலர் வரலாற் முராய்ச்சி இன்றும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிகின்றது.
நாவலரின் அறப்போருக்குக் களம் அமைத் துக் கொடுத்தவர் எல்லாம் வல்ல எம் பிரான், ஜோர்ஜ் என் பாரும் பேர்சிவலும் ஏககாலத்தில் பருத்தித் துறையை வந்தடைந்தார்கள். சபைத் தலைவராயிருந்த ருெ பேட்ஸ் இங்கிலாந்து செல்ல, ஜோர்ஜ் அப்பதவியை எதிர்பார்த் திருந்தார். ஆனல் நியமனம் பேர்சிவலுக்குக் கிடைத்தது. மாருக, ஜோர்ஜ் பாதிரியாரே சபைத் தலைவராக நேர்ந்திருப்பின் நாவலரின் வாழ்க்கை திசை திரும்பியிருக்கும் பேர்சிவல் பாதிரியார் ஆறுமுக நாவலருக்குக் கொடுத்த பெறுமதியும் மதிப்புமே சைவத் தமிழன்பர்களுக்கு ஒரு ஆறு முக நாவலரைக் கொடுத்தது. யாழ் மத்திய பாடசாலையில் ஆங்கிலக் கல்வி கற்ருர், உயர் வகுப்பில் தமிழ் கற்பித்தார், பின்னர் பேர்சிவ லுக்குத் தமிழ்ப் பண்டிதராயிருந்தார் என் பவை நாவலரது வரலாற்று நூலுண்மையாகும்.
பேர்சிவல் முதலான யாழ்ப்பாணத்து மிஷ னரிமார் வேத நூலின் புதியதொரு மொழி பெயர்ப்பைச் செய்ய முற்பட்டதாலேயே பேர் சிவலின் நண்பராயிருந்த நாவலருக்கு மெத டிஸ்த மிஷனரிமாரின் நடபடிக்கைகளை அவ தானிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேத புத்தகத்தின் ஐந்து மொழி பெயர்ப்புகள் ஏற் கெனவே உபயோகத்திலிருந்து வந்தன. அவை களுள் இரேனியஸ், பப்ரீசியஸ் ஆகியோரின் மொழி பெயர்ப்புகள் விரும்பப்பட்டு வந்தன. ஆஞல், ஒன்று மூலத்திலிருந்து வழுவியது, மற்ற தின் மொழிநடை திருப்தியுள்ளதாய் இருக்க வில்லை. ஆகவே புதியதொரு மொழிபெயர்ப்டை சென்னையிலிருந்த சங்கம் விரும்பியது. இதனைச் செய்யம் யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிமார் ஒப்புக் கொண்டனர். பேர்சிவலைத் தலைவராகக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதில் உவீன்ஸ்லோ, ஸ்பால்டிங், பிரதர்டன்

ஆகியோர் அங்கம் வகித்தனர். இவர்கள் யாவ ரும் தமிழ் நூல்களின் ஆசிரியர் ஆவர். இவர்க ளுடன் ஆறுமுக நாவலரும் சேர்த்துக் கொள் ளப்பட்டார்.
1839ல் குழு அமைக்கப்பட்டு 1850 ல் மொழி பெயர்ப்பு அச்சிடப்பட்டது. ஆயினும் இரண்டரை வருடங்களுக்குள்ளேயே எதிர்ப்பு வலுப்பெற்றது. பேர்சிவல்-நாவலர் மொழி பெயர்ப்பு கைவிடப்பட்டதற்கான காரணங் கள் பல. முதலாவதாக இவர்கள் இரேனியஸின் மொழிபெயர்ப்பை ஆதாரமாகக் கொண்டனர். ஆனல் 'கிறிஸ்தவ தமிழ்’ நடையை உருவாக் கியவர் பப்ரீசியஸ், இரண்டாவதாக, வேதிகை, நிவேதனம், கிரியைகள், தேவன், நைவேத்தியம் முதலிய சொற்பிரயோகம். நாவலரும் பேர்சிவ லும் பாரம்பரிய தமிழ்ச் சொற்களைப் பிர யோகஞ் செய்தனர். இதனை நிலை நாட்டவே பேர்சிவலும் நாவலரும் சென்னை செல்லவும் நேரிட்டது. கற்றவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனல் சாதாரண கிறிஸ்தவர்கள் "கிறிஸ்தவத் தமிழ் ** இதிலில்லையேயென கண்டனம் தெரி வித்தனர். ஆகவே 1871ல் முற்ருக அச்சிடப் பட்ட பவர் பாதிரியாரின் மொழி பெயர்ப்பு *" கிறிஸ்தவத் தமிழைக் * காப் பாற்றியது. இன்றும் உபயோகத்திலிருக்கின்ற, ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணுகமம், உபாகமம் ஆகிய ஆகமப் பெயர்கள் முதன் முதலில் பேர்சிவல் . நாவலர் மொழி பெயர்ப் பிலேயே குறிப்பிடப்பட்டன என்பது கவ னிக்கத் தக்கது.
வேதநூல் மொழி பெயர்ப்பு வேலை முடிந் தது. மெதடிஸ்த சபையின் நடபடிக்கைகளை முற்ற க அவதானித்து விட்டார் நாவலர். ஆகவே அநீதிக்கு ஆப்பிறுக்கும் தெய்வப் பணி யில் ஈடுபட்டார் ஆறுமுக நாவலர். மிஷனரி மாரின் கிறிஸ்து சமய நடபடிக்கைகளை ஒவ் வொன்ற கச் சைவ சமயத்தினுட் புகுத்தினர்,
மிஷனரி: ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்து கோவிலிற் பிரசங்கம் நாவலர்: வெள்ளிக்கிழமை தோறும் சிவன் கோவிலிற் பிரசங்கம் மிஷனரி: உவெஸ்லியன் ஆங்கில
עer fr&b_ן חנL
நாவலர்: சைவப் பிரகாச வித்தியாசாலை
மிஷனரி: ஆங்கில பாடசாலையில் நிவேத னம் பெருத ஆசிரியராயிருந்தமை

Page 66
நாவலர்:
மிஷனரி:
நாவலர்:
ണ്ടുങ്ങി;
நாவலர்:
மிஷனரி:
நாவலர்:
ിഖങ്ങrി:
நாவலர்:
மிஷனரி:
நாவலர்:
வித்தியா சாலையில் நிவேதனம் பெருத ஆசிரியர்களை அமர்த் தியமை அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடம் வித்தியாதுபாலன யந்திர சாலை ஆங்கில பாலபாடங்கள் தமிழ்ப் பாலபாடங்கள் வேதோபதேச விஞவிடை சைவ விஞவிடை வண்ணுர்பண்ணை ஆங்கில
unTL.F nrðav கோப்பாய், புலோலியில் வித்தியாசாலை
சுப்பிர தீபம்
சுப்பிர போதம்
64
 

*" யாழ்ப்பாணத்திலுள்ள சைவ சமயிகளே, உங்களிடத்துள்ள அன்பு மிகுதியினலே நாஞ் சால்பவைகளைக் கேளுங்கள்" 2 என்று நாவலர் தறிக் கதறி அறிவுறுத்தியமையாற் கிடைத்த லன் யாது? த. பொன்னம்பலம் பிள்ளையவர் ள் சொல்லியவாறு மிஷனரிமாருக்கு நாவலர் ரு முட்டுக்கட்டையாயிருந்தார். நாவலர் ருந்திராவிடின் அவர்களுடைய பாதை மிக ம் இலேசானதாயிருந்திருக்கும். இலங்கையில் ாத்திரமன்றி தென் இந்தியாவின் சைவசமய ரலாற்றின் ஒரு இக்கட்டான கால கட்டத் ல் நாவலர் தோன்றிஞர். ** 3
The History of the Wesleyan Methodist Missionary
Society W. 5 யாழ்ப்பாணச் சமய நிலை Hindu Organ June 1915

Page 67
கலாநிதி பொ. (dáhajov u TeTř, aleulasů
ஆறுமுக நாவலர் பிரமாதி டு கார்த் திகை மீ" 21-ம் தேதி ( 5-12-1879 ) சிவபரி பூரணமடைந்தார். வண்ணுர்பண்ணை வே. கனக ரத்தின உபாத்தியாயர் எழுதிய "பூரீலபூரீ நல் லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம் சித் திர பானு இல் ஐப்பசி மீ (1882) யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திர சாலையிற் பதிப்பிக்கப் பட்டது. எனவே நாவலரவர்கள் பரிபூரண மடைந்து மூன்று ஆண்டுகள் முடியும் முன்னர் வெளிவந்தது கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய நூலாகும்.
சிவகாசி இ. அரு ஞ சலக் கவிராயரின் * யாழ்ப்பாணத்து நல்லூர் பூரீல பூரீ ஆறுமுக நாவலர் சரித்திரம் கனகரத்தின உபாத்தி யாயர் கூறிய சரித்திரத்தைப் புலனெறி வழக் கிற்கமையப் பாட எடுத்துக்கொண்ட முயற் சியேயாகும்.
* தண்ணிய சீர்தரு சைவந் தழைத்தோங்கித் தலையெடுப்ப வெண்ணியதற் கேற்ற நூலெனைத்தும்
வெளியேற்ற் யெங்கள் புண்ணியமே யெதிர்வந்தாற் போல வந்து போதிக்கு நண்ணிய மெய் யாறுமுக நாவலர்
நற்சரிதம்." வசனநடையிற் சிறிதும் வழுவாது
வரைந்தறிவா
லுசனன் பொன்னிரவி முதலோரனைய
வுயர்கவிக
 

4, G o Ar as fou as ab பல்கலைக் கழகம், கொழும்பு)
ணிசமிகும் யாழ்ப்பாணத்தினின் றனுப்ப
நேர்ந்தெவரும்
விசனமற வாங்கியிது மெய்யென்ன
மிகவியந்தார்."
கனகரத்தின உபாத்தியாயரின் நூலைக் கண்டு வியந்த தமிழ்நாட்டவருள் ஒருவரான சேற் றுரர் சிதம்பர தேசிக சுவாமிகள்,
** இருமையு நற்பயனுதவு மிவ்வசன
மென்றருளி'
சேற்றுாரர் சமஸ்தான வித்துவான் இராம சாமிக் கவிராயரின் குமாரரான அருணுசலக் கவிராயரைச் செய்யுளாகப் பாடும்படி வேண் டிக்கொண்டார். அவர் வேண் டு கோளுக்கு இணங்கப் பாடப்பட்டதே அருணுசலக் கவிரா யரின் நூலாகும்.
அருணசலக் கவிராயர், ஆறுமுக நாவல ரின் சரித்திரத்தைச் செய்யுளாகப் பாடிய மைக்குச் சேற்றுார் சிதம்பர தேசிகர் மட்டும் காரணம் என்று கூறுவது பொருந்தாது. ஏனெ னில் அருணுசலக் கவிராயர் தாம் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டவரின் பெருமை யை ஏலவே தமது ஆசிரியர் மூலம் தெளிவாக உணர்ந்த வராதல் வேண்டும். அருணுசலக் கவி ராயரின் ஆசிரியர் திருவாவடுதுறை யாதீனத் துச் சின்னப்பண்டார சந்நிதிகளான பூரீலபூரீ நமச்சிவாய தேசிக சுவாமிகள். அவர் திருவா
v)

Page 68
வடுதுறை யாதீனத்தாராற் சென்னைக்கு அனுப் பப்பட்டு நாவலரவர்களிடம் சித்தாந்த பாடம் கேட்டவர். அருணசலக் கவிராயர் பாடிய நூல் சென்னையிலிருந்த " அல் பீனியன் அச்சுக் கூடத்தில் 1898-ம் ஆண்டிலே பதிப் பிக் கப் பெற்றது.
அருணுசலக் கவிராயர் தந்த சரித்திரம் கன கரத்தின உபாத்தியாயர் எழுதிய நூலை அடி யொற்றிச் செல்லுகின்றது. கனகரத்தின உபாத்தியாயரின் நூலைப் பின்பற்றி நா வ லரவர்களின் வரலாற்று நிகழ்ச்சிகளைக் காலக் கிரமப்படி கூறினலும் அந்நிகழ்ச்சிகளுக்குரிய ஆண்டுகளைப் பொதுவாகத் தவிர்த்து, நாவல ரவர்களின் நிகழ்ச்சிகளிற் சில நடந்த காலத்து, அவர் வயது இன்னவென்று மட்டும் சுட்டிச் செல்கிருர். இம்முறையும் கனகரத்தின உபாத் தியாயரின் நூ லி லி ரு ந் து பெறப்பட்டதே.
யாகும்.
* ஆறுமுக நாவலர் அவர்கள் சரித்திரச் சுருக்கமும் அவர்கள் இயற்றியருளிய தனிப் பாமாலையும் ' என்னும் நூல் சி. செல்லையா பிள்ளையால் எழுதப்பட்டு 1914-ம் ஆண்டிலே பதிப்பிக்கப்பெற்றது. செல்லையாபிள்ளை தனிப் பாடல்களைத் தொகுப்பதிலே செலுத்திய கவ னத்தை வரலாறு எழுதுவதிற் செலுத்த வில்லை. ஆயினும் நாவலரவர்களின் மனித உள் ளத்தைக் காட்டும் வி. சுப்பிரமணியபிள்ளை ( 1873) மீது பாடப்பட்ட ச ர ம க விகளை யும் அழியவிடாமற் பதிப்பித்த மைக்குச் செல் லையாபிள்ளைக்கு நன்றி கூறவேண்டும். எனவே 1916-ம் ஆண்டு வரையில் நாவலரவர்களின் வரலாற்றிற்குக் கனகரத்தின உபாத்தியாய ரின் நூலே மூலாதாரமாக விளங்கியது.
* பேரேறு சைவப் பெரும்பயிர் வளர்த்திடும்
பெட்புடைக் காரையடியார் பெயராத மலவிருள்க ளருகவிரி
பரிதியைப்
பிறைசூடி யேபரனெணு நாரேற வழிபட்டு நாமெலா முய்யவரு
ணங்குருவை நாவலப்பேர்
நவில்யோக ரூடியாப் பெற்றபெரு
மானையடி
நளினமலர் போற்றிசெய்வாம்"
என்ற குருவணக்கச் செய்யுட் பகுதியாலும்
**நம்மையுமொரு பொருட்படுத்தித் தமது சந்நிதானத்திலே நிற்கு மொரு வணு கச் சேர்த்த நமது குருமூர்த்தியினுடைய திரு வடிகளைத் துதித்து.'
66

என்ற முகவுரை வசனப் பகுதியாலும் கணக ரத்தின உபாத்தியாயர் தமது குருவின் வர லாற்றினைப் பத்திபாவத்துடன் அணுகிய வர் என்பது புலணுகும். அத்தகையவருக்கு,
* உத்தமநல் லிலக்கியலக்
கணந்தேர்ந்தோன்
பரம்பரைசே ருபாத்தி யாயன்
சத்தியவா சகவேத வனநாதன் றவவலியிற் றந்த பாலன்
அத்தகைய நாவலர்கோன் சீடருண்மா ணிக்கமென வறையப் பட்டோன்
புத்திமிகுந் தொளிர்கனக ரத்தினநா
மகசுகுண பூபன் றனே"
என்பது சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர் தந்த தகவுரைப் பத்திரம். இவ்வாறிருப்பினும்,
* கனகரத்தினப்பிள்ளை எழுதியது கொஞ்சம் சுருக்கமானது மாத்திரமன்றிச் சில கதை மாறுபாடுகளையும் உடையது ??
என்று நாவலரவர்களின் தமையனர் ஐவரில் ஒரு வ ரான தம்பு ஆராச்சியின் புதல் வர் கைலாசபிள்ளை நள uெ) மார்கழி மீ" ( 1916) தாம் எழுதிப் பதிப்பித்த ஆறுமுக நாவலர் சரித்திரத்தின் முகவுரையிலே குற்றஞ்சாட்டி யுள்ளார்.
இவ்வாறு பாரிய குற்றத்தைச் சுமத்திய கைலாசபிள்ளை அக் கதை மாறுபாடுகளை எடுத் துக் காட்டியிருப்பார் என்று எதிர்பார்ப்பவர் கள் அந்நம்பிக்கை விரக்தியாவதையே 2. Grf வார்கள். மேலும் நாவலரவர்களின் இளமை வாழ்க் கை யையும் அவர் உறவினரோடு கொண்டிருந்த தொடர்புகளையும் கூட " அவர் களுடைய சரித்திரம் அதிகம் அறிந்தவன் ?? என்று கூறிக்கொள்ளும் கைலாசபிள்ளையே விரிவாக எழுதித் தரவில்லை. அவ்வாறு எழுதித் தராமல் விட்டதோடு சிற்சில மாறுபாடுகளை யும் புகுத்திவிட்டார் என்று கருத இடமேற் படுத்திவிட்டார். உதாரணமாக,
இவருக்கு ஒன்பதாம் வயசாகும்போது, ஆணித் திருமஞ்சன உற்சவ காலத்தில் இவ ருடைய தந்தையார், ஒரு நாடகம் பாடிக் கொண்டிருந்த சமயத்தில், கையில் எழுத் தாணியும் சட்டமும் பிடித்தபடியே கடிதியிற் சிவபதமடைந்துவிட்டார். அந்த நாடகத் தின் குறையை அப்போதே இவர் பாடி முடித்தார். அவர் தமையன்மாரனைவருக்

Page 69
கும் மிக்க பிரீதியையுண்டாக்கினபடியால், அவர்கள் இவரைச் சரவணமுத்துப் புலவர், சேணுதிராய முதலியார் முதலான வித்து வான்களிடத்திலே தமிழ்க்கல்வி கற்குமாறு அனுப்பினுர்கள் "
என்று கைலாசபிள்ளை எழுதியிருக்கிருர் (ஆறு முக நாவலர் சரித்திரம், 1919. பக். 5). நாவ லரவர்களின் மரபினை ஈழத்திலே தனியாக நின்று துலங்கவைத்து வந்த பெரியார்களின் பார்வையிலே நாவலர் சரித்திர ஆராய்ச்சி எழுதியவர்களே முற்கிளந்த கைலாசபிள்ளை யின் கூற்றைப் பொன்னே போலப் போற்றி எழுதியிருக்கிறர்கள். இவ்வாறு எழுது வது நாவலரவர்களின் வ ர லா று திசை கெட்டுச் செல்வதற்குக் காலாகும் என்பதை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஆராச்சி கந்தர் 1766-ம் ஆண்டு பிறந்து, 1842-ம் ஆண்டு ஆனி மாதம் இரண்டாம் தேதி புதன்கிழமை வியோ க ம டைந்தார் என்று அ. சதாசிவம் பிள்ளை கூறியிருக்கிருர் (பாவலர் சரித்திர தீபகம், 1886, பக். 75 ); அப்பொழுது நாவலரவர்களுக்கு இருபது வயது. இருபாலை சேனதிராய முதலியார் 1840-ம் ஆண்டிலும் நல்லூர் சரவணமுத்துப் புலவர் 1845-ம் ஆண்டிலும் வியோகமடைந் தனர் என்பதைத் ‘தமிழ் புளூராக் ', பாவலர் சரித்திர தீபகம் ஆகியனவற்றை நோக்கினர் அறிவர். தந்தையின் குறை நாடகத்தை நாவ லரவர்கள் பாடியதினுல் ஏற்பட்ட மகிழ்ச்சி யிற் சேஞதிராய முதலியாரிடம் அனுப்பியிருக் கலாமா ? நாவலரவர்கள் இருபது வயது நடக் கும் போதா சரவணமுத்துப் புல வரிடம் பாடங் கேட்கச் சென்ருர் ? கைலாசபிள்ளை முற்கிளந்த செய்திகளை மறந்துவிட்டு எழுதி யிருக்கிருர். உத்தமதானபுரம் வே. சாமிநாத தையரின் மீனட்சிசுந்தரம் பிள்ளை ச ரி தம் என்னும் நூலைக் கண்டித்த கைலாசபிள்ளையா இவ்வாறு எழுதினர் ?
கைலாசபிள்ளையின் நூலினல் நாவலரவர் களின் வரலாறு கனகரத்தின உபாத்தியாரின் நூலிலும் தெளிவு பெற்றது என்பதை ஏற்பது கடினமாகும். கனகரத்தின உபாத்தியாயர் காலக்கிரமப்படி எழுதக் கைலாசபிள்ளை விஷ யக் கிரமப்படி எழுதியுள்ளமையே முக்கிய வேறுபிாடாகும்.  ைக லா ச பிள் ளை தமது நூலிலே கனகரத்தின உபாத்தியாயர் கூறிய விஷயங்கள் சிலவற்றை விரித்தெழுதியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.

அறிவியலடிப்படையில் நாவலரவர்களின் வரலாறு விரிவாகவும் தெளிவாகவும் எழுதப் படவேண்டிய இன்றியமையாமை நிலவுகின் றது. நமக்குக் கிடைக்கின்ற நாவலர் வர லாற்று நூல்களைப் பரிசீலனை செய்வதன் மூலம் இத்தேவை சிறிதளவாவது பூர்த்தியடிைய லாம். அப்பரிசீலனைக்கு நாவலர் பதிப்புகள் உதவுமாற்றைக் குறைத்து மதிப்பிடல் சாலாது.
கனகரத்தின உபாத்தியாயர் விரோதி கிருது டு) ஐப்பசி மீ" நாவலரவர்கள் திருச் செந்தினிரோட்டக யமக அந்தாதிக்கும் திரு முருகாற்றுப்படைக்கும் உரையெழுதி அச்சிடு வித்தார் என்று கூறியுள்ளார் (யாழ்ப்பாணம் நாவலர் நூற்ருண்டு விழாச் சபையினரின் பிர சுரம், 1968, பக். 32). அருணுசலக் கவிராய ரின் நூலின் இரண்டாம் பதிப்பிற்கு முகவுரை யெழுதியவர் (பக். 9) இவ் விரு நூல்களின் உரைகள் விரோதிகிருது டு எழுதப்பட்டன என்று கூறியிருக்கிருர், நா வல ர வர் களின் திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை யாழ்ப்பாணம் வித்தியாதுபாலனயந்திர சாலை யிற் சாதாரண ஞல் பங்குனி மீ" பதிப்பிக்கப் பெற்றது. கனகரத்ன உபாத்தியாயர் கூறும் காலத்திற்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் அப் பதிப்பு வெளிவந்தது. அருணுசலக் கவிராயர் பாடிய நூலின் முகவுரையை எழுதியவர் அந் நூல் ப தி ப் பி க் க ப் பெற்ற ஆண்டினத் தொடர்ந்து வரும் வருடத்திலே எழுதப்பட்ட தாகக் கூறியிருக்கிருர், திருமுருகாற்றுப்படை யுரையின் முதற் பதிப்பு எம் பார்வைக்கு அகப் படாமையாற் கனகரத்தின உபாத்தியாயரின் கூற்றை ஆய்ந்துரைக்க முடியவில்லை. ஆயினும் திருமுருகாற்றுப்படையுரையின் ப தி னெ ட் டாம் பதிப்பினைச் சார்வரி ஞ) சித்திரை மீ” ( 1960) வெளியிட்ட தி. க. இராசேசுவரன் தமது பதிப்புரையிலே நாவலரவர்களின் முதற் பதிப்பு பிரமாதீச டு) (1853) வெளிவந்த, தாகக் கூறியிருக்கிருர் என்பதை ஈண்டு குறிப் பிடுதல் பொருத்தமாகலாம். இராசேசுவர னின் கூற்றினுற் கனகரத்தின உபாத்தியாய ரின் கூற்றினை ஆராய வேண்டிய நிலைமை ஏற் படுகின்றது.
திருக்கோவையாருரையும் திருக்குறளுரை யும் பதிப்பிக்கப்பெற்ற காலத்தினைப் பற்றிக் கனகரத்தின உபாத்தியாயர் தரும் விபரங் களும் த வருனவையேயாம். கனகரத்தின உபாத்தியாயர் திருக்கோவையார் துன் மதி டு வைகாசி மீ" த்திலும் திருக்குறள் ரெளத் திரி டு ஐப்பசி மீ" த்திலும் மதிப்பிக்கப்பட்
éÓ
7

Page 70
டன என்பர் (பக். 42). அருணுசலக் கவிராய ரின் நூலிற்கெழுத்த முகவுரையிலே (பக். 7) அத் தவறுகள் திருத்த மெய்தியுள்ளன. திருக் கோவையார் சென்னை முத்தமிழ் விளக்க வச் சுக்கூடத்திலே ரெளத்திரி டு ஐப்பசி மீ" (1860) பதிப்பிக்கப்பெற்றது. திருக்குறள் சென்னை வாணி நிகேதன வச்சுக்கூடத்திலே துன்மதி வூடு வைகாசி மீ" (1861) பதிப்பிக்கப் பெற்றது. Y
கந்தபுராணத்தை நாவலரவர்கள் அக்ஷய (Uநி) கார்த் தி கை மீ" ( 1866) பரிசோதித்து வெளிப்படுத்தினர் என்பர் கன க ரத் தி ன உபாத்தியாயர் (பக். 72). சுக்கில டு) சித் திரை மீ (1869) சென்னை வர்த்தமான தரங் கிணி சாகை ய ச் சு க் கூடத்திலே அச்சிடப் பெற்ற கந்தபுராணப் பதிப்பிலே இரண்டாம் பதிப்பு என்ற குறிப்பில்லை. மேலும் அக்ஷய ளு) கார்த்திகை மீ"ஒரு பதிப்பு வெளிவந்திருப் பின் முப்பதாவது மாதத்தில் ( சுக்கில ஞல் சித் திரை மீ") மீண்டுமொரு பதிப்பு வெளிவந் திருக்கலாமா? மேலும் விகிர்தி டு புரட்டாதி மீ (1890) வெளிவந்த பதிப்பிலே இரண் டாம் பதிப்பு என்ற குறிப்புக் காணப்படு கின்றது.
கனகரத்தின உ பாத் தியாயர் தமது நூலிலே நாவலர வர்களுக்கு 42 வயது நிகழ்ந்த காலத்திலே மூன்ரும் பாலபாடம் அச்சிடப் பெற்றதாகக் கூறியிருக்கிருர் (பக். 71). அவ் வாரு யின் மூன்ரும் பாலபாடம் 1864-ம் ஆண் டிலோ அல்லது 1865-ம் ஆண்டிலோ அச்சிடப் பெற்றதாதல் வேண்டும். அருஞசலக் கவிரா யரின் நூலுக்கெழுந்த முகவுரையிலே (பக். 9) நான்காம் பாலபாடம் (மூன்ரும் பாலபாடம்) செய்தது 28-ம் வயசாகிய சாதாரண இG) (1850-51) என்று கூறப்பட்டுள்ளது. "நாவ லர் பணிகள்" என்ற நூலின் ஆசிரியர் ச. தனஞ் சயராசசிங்கம் பதிப்பித்திருக்கும் அன்டர்சன் பிரபுக்கு நாவலரவர்கள் சமர்ப்பித்த விண் ணப்பம் மூல ம் மூ மண் ரு ம் பா ல பா ட ம் 11-8-1852க்கு முன்னர் பதிப்பிக்கப்பெற்றது என்பது தெளிவாகின்றது.
நாவலரவர்களுக்கு 42-ம் வயது நிகழ்ந்த் காலத்தை யொட்டி, அக்ஷய இu) (1866) சேது புராணம் பதிப்பிப்பதற்கு முன்னர், பெரிய யுராண சூசனத்தை நாவலரவர்கள் பதிப்பிக் கத் தொடங்கினர் எ ன் பர் கனகரத்தின உபாத்தியாயர் (பக். 71-72). அருளுசலக் கவிராயரின் நூலுக்கெழுந்த முகவுரையிலே
'6

* பெரியபுராண வசனம், சூசனம் எழுதி அச்
சிட்டது 30-ம் வயசாகிய பரிதாபி ஞல’’
(பக். 9-10) என்று கூ ற ப் ப ட் டு ள் ளது.
த. கைலாசபிள்ளையின் ஆறுமுக நாவலர் சரித்
திரம் என்னும் நூலின் நான்காம் பதிப்பிலே (1955, பக். 73) பெரியபுராண வசனம் அச் சிடும்போதே சூசனமும் எழுத ஆரம்பிக்கப்
பட்டது என்று கூறப்பட்டுள்ளது (இக்கூற்றினை
கால யுத்தி ஞ) தை மீ" -1919-வெளிவந்த பதிப்
பிலே காண முடியவில்லை).
பெரியபுராண சூசனம் அச்சிடத் தொடங்” கிய காலத்திலேயே கந்தபுரண வசனத்தையும் நாவலரவர்கள் அச்சிடத் தொடங்கினர் என் பது கனகரத்தின உபாத்தியாயரின் கூற்று கும் (பக் 71-72). சிதம்பரம் சைவப் பிரகாச வித் தியாசாலை தருமபரிபாலகர் ச. பொன்னம்பல பிள்ளை சாதாரண டு பங்குனி மீ" ( 1911) வெளியிட்ட, கந்தபுராண வசனப் பதிப்பிலே,
* யூனிலழறீ ஆறுமுக நாவலர் அவர்கள் இற் றைக்கு ஐம்பது வருஷங்களுக்கு முன்னே இக்கந்தபுராண வசனத்தை அசுரகாண்டம் அசுரயாகப் படலம் வரையும் எழுதிச் சஞ் சிகையாக வெளிப்படுத்திஞர்கள். எஞ்சிய பாகம் அவர்களால் எழுதப்படாமையால் நான் அதனை நூதனமாக எழுதி, அவர்கள் எழுதியதையும் சேர்த்து அச்சிட்டேன்’
என்று கூறியிருக்கிருர், அவர் கூற்றை ஆதரிப் பதாக அமைந்துள்ளது தி. க. இராசேசுவர னின் மேல் வரும் கூற்று:
*" கந்தபுராண வசனம் துன்மதி வூடு ஆவணி மீ (1861) சென்னபட்டணம் வாணி நிகே தன அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது"
(இந்துசாதனம், 24-12-1971)
நாவலரவர்கள் பதிப்பித்தனவாகக் கூறப் படும் நூல்களிலே சில அவருடைய பரிசோத னையைப் பெற்றனவேயன்றி அவராற் பதிப்பிக் கப்படவில்லை என்று கருத இடமுண்டு. வீரை கவிராச பண்டிதர் இயற்றிய செளந்த ரியலகரி மூலத்தினையும் சைவ எல்லப்ப நாவலர் இயற் றிய உரையினையும் நாவலரவர்கள் பதிப்பித்த தாகக் கனகரத்தின உபாத்தியாயர் கூறுவர் (பக். 30), ஆயினும் செள மிய டு) கார்த்திகை மீ" ( 1849) சதுரங்க பட்டணம் ச ரஸ் வதீ விலாச வச்சுக்கூடத்திலே அச் சி ட ப் பெற்ற பதிப்பிலே அந்நூல் ஆறுமுக நாவலராற் பரி
8

Page 71
சோதிக்கப்பெற்றதென்றும் சதுரங்க பட்ட ண்ம் அண்ணுமலை முதலியாராற் பதிப்பிக்கப் வெற்றதென்றும் கூறப்பட்டுள்ளது. நாவலர வர்கள் விபவ டுல் புரட்டாதி மீ" (1868) தொல்காப்பியம் சேனவரையருரையைப் பரி சோதித்து வெளிப்படுத்தினர் என்று கனகரத் தின உபாத்தியாயர் கூறுவர் (பக். 93). விபவ ளுல் புரட்டாதி மீ" சென்னையிலிருந்த கலாரத் நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப் பெற்று வெளிவந்த பதிப்பிலே அந்நூல் ஆறு முக நாவலராற் பரிசோதிக்கப்பட்டதென்றும் சி. வை. தாமோதரம்பிள்ளையாற் பதிப்பிக்கப் பெற்றதென்றும் கூறப்பட்டுள்ளது.
செளந்தரியலகரி, சூடாமணி, மருதூரந் தாதி என்பனவற்றின் உரையாசிரியர்கள் இன் ஞர் என்பதையோ உடநிடத வுரை, நன்னூற் காண்டிகையுரை ஆகியனவற்றின் ஆசிரியர் இன்னர் என்பதையோ கனகரத்தின உபாத்தி யாயர் கூறவில்லை. செளந்தரியலகரியின் உரை யாசிரியர் சைவ எல்லப்ப நாவலர் என்பது சௌமிய டு பதிப்பினுற் புலனுகின்றது. மரு தூரந்தாதியின் உரையாசிரியர் ஆறுமுக நாவ லர் என்பது கைலாசபிள்ளை கூற்ருற் புலணுகும் (ஆறுமுக நாவலர் சரித்திரம், 1919, பக். 64). நன்னூற் காண்டிகையுரை நாவலரவர்களால் எழுதப்பட்டது என்பதே கைலாசபிள்ளை கருத் தாகும் (மேற்படி நூல், பக். 64). கனகரத்தின உபாத்தியாயர்,
* அடுத்த யுவ தாது ஈசுர வெகுதானிய வரு ஷங்களிலே நன்னூல் விருத்தியுரை, நைடத வுரை, திருவிளையாடற் புராணம், நன்னூற் கண்டிகையுரை முதலிய நூல்களைத் திருத்து வதிலும்,. புதிதாய் எழுதுவதிலும், சைவப் பிரசங்கங்கள் செய்தலிலுந் தங் காலத்தைப் போக்கினுர்’
என்பர் (பக். 112). கனகரத்தின உபாத்தியா யர் கூறுகின்ற காலம் 1875-ம் ஆண்டு முதல் 1879-ம் ஆண்டுவரையிலுள்ள பிரிவாகும். நைடதத்திற்கு ஆறுமுக நாவலர் ஒரு ரை இயற்றியுள்ளார் எனவும் அவ்வுரை வண்ணுர் பண்ணை சி. சுவாமிநாத பண்டிதரால் வெளி யிடப்படவிருக்கிறது எனவும் மேலைப் புலோலி நா. க திரை வேற் பிள் ளை கூறி இருக் கி ரு ர் (நைடத மூலமும் விருத்தியுரையும். சென்னை: வித் தி பாரத் நா கர அச்சுக்கூடம் , 1 9 3 0, நாத்தியுரை). அவ்வுரை வெளிவந்தமை அறியு மாறில்லை. திருவிளையாடற் புராணம் நல்லூர் க. சதாசிவப்பிள்ளையால் சென்னை வித்தியாரு

பாலன யந்திர சாலையிற் பில வங்க இல் ஐப்பசி மீ (1907) பதிப்பிக்கப்பெற்றது. நன்னூ ல் விருத்தியுரையின் முதற் பதிப்பு யாழ்ப்பாணம் வித்தியாதுபாலன யந்திர சாலையில் விரோதி கிருது டு ஐப்பசி மீ" (1851) அச்சிடப்பெற் றது. எனவே நாவலரவர்கள் அப் பதிப் பினையே திருத்தி இரண்டாம் பதிப்பாக வெளி யிடும் முயற்சியில் ஈடுபட்டார். எஞ்சிய நன் னுாற் காண்டிகை யுரை யுவ ஹில் முன்னர் வெளி வந்தமை அறியுமாறில்லை. விக் கிர ம டு) (1880) நன்னூற் காண்டிகையுரைப் பதிப் பொன்று நாவலர் பேரால்-வெளிவந்துள்ளது. கனகரத்தின உபாத்தியாயர் முன்னர் பதிப் பிக்கப்பெற்ற நன்னூல் விருத்தியுரையையும் பதிப்பிக்கப்பெருத நைடதவுரை, திருவிளை யாடற் புராணம் ஆகியனவற்றையும் சேர்த் துக் கூறுவதனல் விக்கிர (ளுல் வெளி வந் த பதிப்பே முதற்பதிப்பு என்று துணிந்து கூறு மாறில்லை. மா. பீதாம்பரன்,
விசாகப் பெருமாளையர் உரை அச்சுவாகன மேறிய பின், ஐயர் அவர்களின் காண்டிகை உரையே பெரிதும் பயிலப்படலாயிற்று. இத னைக் கூட்டியும் திருத்தியும் புதுக்கியும் விளுக்களுடன் வெளியிட்டவர்களுள் ஒருவர் ழரீலழறீ ஆறுமுக நாவலர். இதுவே “நாவ லர் நன்னூற் காண்டிகை உரை" என யாவ ராலும் போற்றப்பட்டு இன்றும் பெரு வழக் கிலிருப்பது ??
என்பர் (கணேசையர் நினைவு மலர், 1960,பக். 57). விசாகப் பெருமாளையரின் காண்டிகை யுரை 1875-ம் ஆண்டில் வெளிவந்தது என்பர் (மயிலை சீனி வேங்கடசாமி பத்தொன்பதாம் நூற்றண்டில் தமிழ் இலக்கியம், 1962, பக். 296). எனவே விக்கிரம டு வெளிவந்த காண்டிகையுரைப் பதிப்பு முதலாம் பதிப்பாக இருக்கலாம் என்று கொள்ளவும் இடமுண்டு.
கைலாசபிள்ளை சிவதருமோத்தரத்திற்கு நாவலரவர்கள் உரையியற்றி இருப்பதாகக் கூறுவர் ( 1919-ம் ஆண்டுப் பதிப்பு, பக். 64). இக்கூற்றுத் தவறுதலாக ஏற்பட்டது போலும்.
நாவலரவர்கள் விரோதி கிருது டு) சித் திரை மீ (1851) கொலைமறுத்தலைப் பதிப்பித் தார் என்று கூறும் உபாத்தியாயர், அவர் உரை யுடன் பதிப்பித்தார் என்று கூரு தொழிந்தார் (பக். 32). அவ்வாறு கூற மல் விடுத்ததோடு அமையாது பிறிதோரிடத்து நல்லூர் க. சதா
69

Page 72
சிவப்பிள்ளை கொலை மறுத்தலை நாவலரவர்கள் முன்னிலையிற் பரிசோதித்து வெளிப்படுத்திய தாகவும் கூறுவர் (பக். 93), கைலாசபிள்ளை கொலை மறுத்தல் திருப்போரூர் சிதம்பரசுவாமி கள் இயற்றிய உரையுடன் நாவலரவர்களாற் பதிப்பிக்கப்பெற்றது என்பர் (1919-ம் ஆண் டுப் பதிப்பு, 63). ச. தனஞ்சயராசசிங்கம் எழுதிய நாவலர் பணிகள் என்னும் நூலிலிடம் பெறும் நாவலரவர்கள் அன்டர் சன் பிரபுக்கு விடுத்த விண்ணப்பத்தின் மூலம் கொலை மறுத் தல் உரையுடன் நாவலரவர்களாற் பதிப்பிக் கப்பெற்றமை புலஞகும்.
கனகரத்தின உபாத்தியாயர் நால்வர் நான்மணி மாலையையும் ஞானக்கும்மியையும் நாவலரவர்கள் பதிப்பித்ததாகக் கூறு வர் (பக். 153, 33); ஆயினும் இவ்விரு பதிப்பு களிலும் வேறு நூல்களும் இடம்பெற்றிருந்த தைக் குறிப்பிடவில்லை. ஆங்கீரச D) பங்குனி மீ" (1873) சென்னை வித்தியாறுபாலன யந்திர சாலையிற் பதிப்பிக்கப்பெற்ற நால்வர் நான் மணி மாலை இடம்பெறும் இரண்டாம் பிரசுரத் திலே பெரியநாயகி விருத்தம், பெரியநாயகி கலித்துறை, பிக்ஷாடண நவமணி மாலை ஆகிய பிரபந்தங்களும் காணப்படுகின்றன. ஆங்கீரச டு) ஆனிமீ (1872) நாவலரவர்கள் பதிப்பித்த ஞானக்கும்மி இடம்பெறும் இரண்டாம் பிர சுரத்திலே யேசுமத பரிகாரம் என்னும் நூலும் காணப்படுகின்றது.
அகத்தியர் தேவாரத் திரட்டு, திருவாச கம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணச் செய்யுட்டிரட்டு ஆகிய ஐந்தையும் "அருட்பா' என்னும் தொகுப்பாக நாவலரவர் கள் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பு 1866-ம் ஆண்டிலே வெளிவந்தது (தி. க. இராசேசு வரன், இந்து சாதனம், 24-12-71). இப்பதிப் பினை நாவலர் வரலாற்ருசிரியர் மறந்துவிட் டனர் போலும்,
நல்லூர் க. சதாசிவப்பிள்ளை பாரதத்தினை 1868-ம் ஆண்டு நாவலரவர்கள் முன்னிலையிற் பரிசோதித்து வெளிப்படுத்தியதாகக் கண்க ரத்தின உபாத்தியாயர் கூறுவர் (பக். 93). கைலாசபிள்ளை நாவலர வர்கள் அச்சிட்ட நூல் களிற் பாரதம், சூடாமணி நிகண்டு என்னு மிரண்டனையும் நாம் மிகவும் மெச்சிக்கொள்ள வேண்டும் என்பர் (பக். 65). மித்தியா வாத நிரசனத்திலே சுந்தர சிவாசாரிய சுவாமிகளின் சிவாதிக்ய ரத்நாவளி, கூடலூர் குமரகுருபர சுவாமிகளின் பாத்மோத்தர ரசாபாச தருப்
7 نه

பணம் ஆகியனவற்றிலிருந்து நாவலர்வ்ரிக் ளின் பாரதப் பதிப்பின் சிறப்பைக் கூறும் பகு திகள் எடுத்தாளப்பட்டுள்ளன (ஆறுமுக நால் லர் பிரபந்தத் திரட்டு, இரண்டாம் பாகம், 1955, பக். 133-134). மித்தியாவாத நிரச் னம் 1876-ம் ஆண்டிலே வெளிவந்ததாகும். நாவலரவர்களின் பாரதப் பதிப்பு 1874-ம் ஆண்டிலே வெளிவந்ததென்றும் சதாசிவப் பிள்ளையின் பதிப்பு 1884-ம் ஆண்டில் வெளி வந்ததென்றும் ம யிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார். (பத்தொன்பதாம் நூற் ருண்டில் தமிழ் இலக்கியம், பக். 3861.
பெரிய புராண வசனம் எ மு தி ய வ ரு ம் பெரியபுராண சூசனம் எழுதத் தொடங்கிய வருமான நாவலரவர்கள் தம் வாணுளிலே பெரிய புராணத்தினைப் பதிப்பிக்கவில்லையா?
* பெரிய புராணத்தின் ஒரு பகுதியை முதல் முதல் அச்சில் பதிப்பித்தவர், மழவை. வீரசைவப் புலவர்-மகாலிங்க ஐயர். அப் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1843. காஞ்சி புரம்-மகா வித்வான் - சபாபதி முதலி யார் பெரிய புராணப் பதிப்பில் இரு முறை ஈடுபட்டனர். அவை முறையே 1859-ம் ஆண் டிலும், 1870 ம் ஆண்டிலும் நிகழ்ந்தன. சிதம்பரம்-உபாத்தியாயர்-பே, இராமலிங் கம்பிள்ளைப் பதிப்பு 1879-ம் ஆண்டில் வெளியாயிற்று. ஆறுமுக நாவலர் முதற் பதிப்பு 1884 ம் ஆண்டில் வெளியிடப் பட்டது '
இவை திருவாரூர் வி. கலியாணசுந்தர முத லியாரின் பெரிய புராணவுரைப் பதிப்பின் முன்னுரையிலிருந்து பெறப்பட்ட வசனங்க ளாம் (சென்னை சாது அச்சுக்கூடம், 1934). 1884-ம் ஆண்டில் வெளிவந்த பெரிய புரா ணப் பதிப்பு நல்லூர் க. சதாசிவப்பிள்ளையால் வெளியிடப்பெற்றதாகும். மயிலை சீனி வேங் கடசாமி பெரிய புராணம் 1873-ம் ஆண்டில் நாவலரவர்களால் பதிப்பிக்கப்பெற்றது என்று கூறியிருக்கிருர் ( பத்தொன்பதாம் நூற்ருண் டில் தமிழ் இலக்கியம், பக். 386). அவர் கூற்று ஆராயப்படவேண்டியது. கனகரத்தின உபாத்தியாயர் நா வ ல ர வர் கள் பெரிய புராண மூலத்தினைப் பரிசோதனை செய்தார் கள் என்று கூடக் குறிப்பிடவில்லை.
கனகரத்தின உபாத்தியாயரின் நூலிலே * பூரீலபூரீ நாவலரவர்களால் அச்சிற் பதிப் பித்து வெளிப்படுத்தப்பட்ட புத்தகங்கள்"
)

Page 73
என்ற பட்டியல் ஒன்று இடம்பெறுகின்றது. உபாத்தியாயர் தாம் கூறிய சரித்திரத்திலே விதந்து கூருத நூல்கள் பல ஈண்டு இடம்பெறு வன. இவை யாவும் பரிசீலனை செய்யப்பட வேண்டியனவாம்.
உவமான சங்கிரகமும் இரத்தினச் சுருக்க மும் சென்னை கலாரத்நாகரம் என்னும் அச்சுக் கூடத்திலிருந்து அக்ஷய டு) ஐப்பசி மீ" (1866) ஒரே பதிப்பாக வெளிவந்தன. சிதம்பரமும் மணிக்கோவையும் அருணகிரிநாதர் திருவகுப் பும் அதே அச்சகத்திலிருந்து முறையே பிரபவ ஞ) ஆனி மீ (1867) மும் பிரபவ விநி) ஐப்பசி மீ" (1867) மும் வெளிவந்தன. பதினேராம் திருமுறை சென்னை வர்த்தமான தரங்கிணி சாகை யச்சுக்கூடத்திலே சுக்கில வூடு வைகாசி மீ (1869) பதிப்பிக்கப்பெற்றது. சென்னை வித்தியாதுபாலன ய ந் திர சாலை யிலிருந்து 1874-ம் ஆண்டிலே இலங்கைப் பூமி சாத் திரம் " என்னும் பதிப்பொன்று வெளிப்போந் தி.தி. இப்பிரசுரத்தின் மேலட்டையிலோ அல் லது உள்ளட்டையிலோ நூலாசிரியர், பதிப் பாசிரியர் ஆகியோர் பற்றிய விபரங்கள் இடம் பெறவில்லை. ஆங்கீரச (Uல் பங்குனி மீ (1873) சென்னை வித்தியா நுபாலன யந்திர சாலையிலே சைவ விஞவிடை, முதற் புத்தகம் பதிப்பிக்கப் பெற்றுள்ளது; அப்பதிப்பு, முதலாம் பதிப்பு என்று ஒருதலையாகத் துணிந்து கூறமுடிய வில்லை. புட்பவிதியின் மூன்றும் பதிப்பு சென் னையிலிருந்த கலா ரத்நாகரம் என்னும் அச்சுக் கூடத்திற் பிரபவ டு கார்த்திகை மீ (1867) அச்சிடப்பெற்றது. உபநிடதவுரையின் இரண் டாம் பதிப்பு 1873-ம் ஆண்டிலே வெளிவந் தது. பட்டணத்துப் பிள்ளையார் திருப்பாடற் றிரட்டின் இரண்டாம் பதிப்பு 1873-ம் ஆண் டிலே வெளிவந்ததாக எஸ். அனவரதவிநாய கம் பிள்ளை கூறுவர் (தமிழ்ப் பெருமக்கள் வர லாறு, மாணிக்கவாசகர் பட்டினத்துப்பிள்ளை
(rri, 1934, i. 225).
சிவாலயதரிசன வி தி ப் பதிப் பொ ன் று சென் னை வாணி நிகேதன வச்சுக்கூடத்திலே துன்மதி இu) ஆனி மீ (1861) அச்சிடப்பெற் றது. இப்பதிப்பு முதலாம் பதிப்பாக இருக்க முடியாது. சிவாலய தரிசன விதி யாழ்ப்பாணம் வித்தியாதுபாலன யந்திரசாலையிற் பதிப்பிக்கப் பெற்ற, முற்பட்ட நூல்களிலொன் ரு கும் (த. கைலாசபிள்ளை ஆறுமுகநாவலர் சரித் திரம், 1919, பக். 62). அருணுசலக் கவிராய ரின் நூலுக்கெழுந்த முகவுரையில் அந் நூல் விரோதி கிருது டு) (1851) எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (பக். 9).
7

செளந்தரியல கரியுரை, பெரிய புராண வசனம், சைவதூஷண பரிகாரம், யாழ்ப்பா ணச் சமயநிலை, சுப்பிரபோதம், முதலாம் பால பாடம், இரண்டாம் பாலபாடம், சூடா மணி நிகண்டுரை ஆகியன பதிப்பிக்கப்பெற்ற காலம் பற்றிக் கனகரத்தின உபாத்தியாயர் தரும் செய்திகள் சரியானவை என்று கரு லாம். செளந்த ரியலகரியுரையும் சூடாமண் நிகண்டுரையும் செளமிய-சாதாரண ஆண்டுக் காலகட்டத்திற் பதிப்பிக்கப்பெற்றன என் பது உபாத்தியாயர் கூற்று (பக். 30-32). செளந்தரியல கரியுரை செளமிய டு) கார்த் திகை மீ (1849) பதிப்பிக்கப்பட்டது. சூடா மணி நிகண்டுரை 11-8-1852 க்கு மு ன் ன ர் பதிப்பிக்கப்பட்டது (நாவலர் பணி க ள் காண்க). பெரிய புராண வசனம் யாழ்ப்பா ணம் வித்தியாருபாலன யந்திர சாலையிற் பரி தாபி டு) சித் திரை மீ (1852) பதிப்பிக்கப் பெற்றது. சைவதூஷண பரிகாரமும் யாழ்ப் பாணச் சமயநிலையும் முறையே ஆனந்த வூல், ஆங்கீரச டு) பதிப்பிக்கப்பெற்றன எ ன் பர் உபாத்தியாயர்; அவை முறையே ஆனந்த இல் வைகாசி மீ" (1854), ஆங்கீரச டு) ஐப்பசி மீ" (1872) பதிப்பிக்கப் பெற்றன. சுப்பிரபோதம் பதிப்பு நாவலரவர்களின் 30 - 31-ம் வயதிற் குரிய நிகழ்ச்சியாகக் கனகரத்தின உபாத்தி யாயராலே தரப்பட்டுள்ளது (பக். 33-36). அருணுசலக் கவிராயருடைய நூலின் முகவுரை யிலே " சுப்பிரபோதம் முதலிய துண்டுப்புத்த கங்களெழுதி அச்சிட்டது 31-ம் வயசாகிய பிர மாதி டு ' என்று கூறப்பட்டுள்ளது (பிரமா தீச (u) என்றிருத்தல் வேண்டும்). பாலபாடம் முதலிரு புத்தகங்களும் விரோதி கிருது ஞ) (1851) க்கு முன்னரும் செளமிய ஞல் (1849) இந்தியா சென்று மீண்ட பின்னரும் பதிப் பிக்கப்பெற்றன என்பர் உபாத்தியாயர் (பக். 28-32). அருணுசலக் கவிராயருடைய நூலின் முகவுரையிலே அவை சாதாரண ஞல் (185051) செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது (பக். 9). நாவலர் பணிகளில் இடம்பெறும் அன்டர்சன் பிரபுவுக்கு அனுப்பிய விண்ணப் பத்தின் மூலம் அவை 11-8-1852க்கு முன்னர் வெளிவந்துவிட்டன என்பது தெளிவாகும்.
கனகரத்தின உபாத்தியாயர் தருக்க சங் கிரகவுரை (பக். 42), சேதுபுராணம்(பக். 72), இலக்கணக் கொத்து (பக். 72), இலக்கண விளக்கச் சூரு வளி (பக்.72), தொல் காப்பியச் சூத்திர விருத்தி (பக். 72), சைவ சமய தெறி யுரை (பக். 93), நன்னூல் விருத் தி யுரை (பக். 32) ஆகியன பதிப்பிக்கப்பெற்ற கால வரையறை பற்றித் தரும் விபரங்கள் சரியா னவை என்பது நாவலர வர்கள் பதிப்புகள் மூலம் உறுதிப்படுகின்றன. கோயிற்புராண வுரையின் 1868-ம் ஆண்டுப் பதிப்பு கிடைக்கப் Rெழுமையால் உபாத்தியாயரின் கூற்றினைப் பற்றி யாதும் கூறமுடியவில்லை.

Page 74
காலத்தை வென்று
நாவலர் இயக்
"ஈழத்து
நாவலர் பெருமானின் நூற்றைம்பதா வது ஜயந்தி விழா நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இவ்வேளையிலே, நாவல ரைத் தேசியப் பெரியாராக எமது அரசாங்கம் கெளரவித்து, அவர் வாழ் ந் த மனயைப் பொறுப்பேற்று, அதில் நாவலர் பாவித்த பொருட்களை, பொக்கிஷமாகப் போற்றிப் பாது காப்பதற்கான அரும் பொருட்சாலையையும், கலாசார நிலையத்தையும் அமைப்பதற்கான முயற்சியை அங்குரார்ப்பணம் செய் கி ன் ற இச்சந்தர்ப்பத்தில், பல காலமாகச் சமய வீர ராகக் கொண்டாடப்பட்டு வந்த ஆறு மு க நாவலர், எவ்வாறு தேசிய வீரராக ஏற்றுக் கொள்ளப்படும் நிலைக்கு உயர்ந்தார் என்பதை இங்கு ஆராய்வது பொருத்தமாகும்.
எமது தாய்த் திருநாடாகிய இலங்கையில், சென்ற நூற்ருண்டில் ஆங்கிலேய அரசு ஆதிக் கம் செலுத்திக்கொண்டிருந்த வேளையில் ஆட் சியின் பக்கபலத்துடன் பாதிரிமார்கள் எம் நாட்டின் சுதேச கலாசாரத்தைச் சீர்குலைத்து, எம்மை நிரந்தர அடிமைகளாக்கும் முயற்சி களில் மும்முரமாக ஈடுபட்டனர். எம்நாட்டு மக்களின் பண்பாடு, பாரம்பரியம், கலைகள் முதலியவை மதத்தைத் தழுவியனவாக அமைந் திருப்பதால், பாதிரிமார்களின் மத மாற் ற முயற்சிகள் வெற்றிபெற்றிருந்தால், இவை யாவும் இன்று நம் சொந்தமாக இருந்திருக்க முடியாது. எனவேதான் அக்கால கட்டத்தின் தேவை எம் சுதேச மதக் கோட்பாடுகளைப்
7.

நிற்கும் நாவலர்
கப் பரிணுமம்
F Go p"
பாதுகாக்க வேண்டியதாயிருந்தது. அதஞலே தான் அக்காலகட்டப் புருஷர்களாகிய ஆறுமுக நாவலரும், அதகாரிக தர்மபாலரும் முறையே சைவத்தையும், பெளத்தத்தையும் பிற மத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டிய பணியை - தேசியக் கடமையை நிறைவேற் றும் பொறுப்பை ஏற்கவேண்டியவர்களாயினர்.
அக்காலப் பாதிரிமார்களின் போலிப் பிர சாரத்தால் மனம் மயங்கிய தமிழ் மக்களின் நிலையைக் கண்டு, மனம் தொந்த நாவலர், சுதேச மதமாகிய சைவத்தின் தொன்மையை யும், பெருமையையும் மக்களிடம் பரப்புவ தையே முதற் கடமையாக, முக்கிய இலட்சி uLu Dimrisë Gossnit Giov mr tř.
அக்காலகட்டத்தில் வாழக்கூடிய சுதேசப் பற்றுமிக்க ஒரு பெரியார், உண்மையாகவே தாய்நாட்டை விசுவாசிக்கும் ஒரு தலைவன், செய்யவேண்டிய கடமையை, உறுதியாகவும், வெற்றிகரமாகவும் நாவலர் நிறைவேற்றியுள் 6Titfit.
சமூகம், மொழி, க லா சா ர ம் முதலிய துறைகளிலும் அவர் பணி வி ர வி யிருந்த போதும் இவற்றிலும் பார்க்க சைவங்காத் தளித்தவராகவும், சமய சீர்திருத்தவாதியாக வும் அவர் கருதப்படுவது, அக்கால கட்டத்தின் கடமையை நிறைவேற்றிய சமய நாயகராக விளங்கியதனுலேயாம்.
★

Page 75
நாவலரின் மறைவையடுத்து, சைவ மக்கள் அவரை ஐந்தாம் சமய குரவராகப் போற்றத் துவங்கினர். அவரின் இறுதிக் காலத்திலேயே அவர்மீது அதீத பற்றுக்கொ6ண்டவர்களும், அபிமான மாணவரிற் சிலரும் இப்படிப் போற்ற முற்பட்டனர். ஆனல் நாவலர் அதை விரும் பாதது மட்டுமல்ல, தமது மாணவர் ஒருவர் இப்படி எழுதியதை அறிந்தபோது அம்மாண வர்மீது கோபாவேசங் கொண்டு தாக்கியதுடன் அவ்வெழுத்தையும் கிழித்தெறிந்து அழித்தா ரெனக் கூறப்படுகிறது. ஆனல், நாவலர் வாழ் நாளிலே எதை விரும்பவில்லையோ அதே வார்த் தையைக் கொண்டே, அவர் மறைந்த பின், ஒரு தலைமுறைவரை, சுமார் அரை நூற்றண் டாக சைவர்கள் அவரைப் போற்றினர். அவர் மறைவை ஈடுசெய்யக்கூடியவராக எவருமில் லாததும், அவரின் மாணவர்களின் அசைக்க முடியாத குருபக்தியினுலும், உறுதியான நம் பிக்கையினுலும் அவர் புரிந்த பணிகளை மக் கள் ஒப்புவமை சொல்வதற்கு நான்கு குரவர் களின் தோற்றமே நா வலரேற்படுத்திய சமய மறுமலர்ச்சிப் பிரசாரங் காரணமாக சைவ மக் களிடம் பளிச்செனப் பிரசித்தமாயிருந்ததா லும் அவர் மறைவையடுத்து ஐந்தாங் குரவ ரென அவர் போற்றப்பட்டு வந்தார். மேலும், நாவலர் காலத்திலேயே பாதிரிமார்களின் மத மாற்ற முயற்சி வெளிப்பார்வைக்கு தோல்வி கண்டுவிட்ட போதும், அது பூரணமாக அழிந்து விடாது, மறைமுகமாக ஓரளவு இ யங் கி க் கொண்டிருந்தது. கிறிஸ்தவ பாடசாலைகளுக் குப் போடடியாகப் பல புதிய சைவப் பாட சாலைகள் தொடர்ந்தும் பல ஊர்களில் ஆரம் பிக்கப்பட்டன. இப்பா - சாலை கள் சைவ போதனைக்காக நாவலரின் சைவ வினவிடை முதலிய சமய நூல்களைப் பயிற் றுவித் தன. தவிர, இப்பாடசாலைகளில் ஆண்டுதோறும் நாவலர் மறைவுத் திதியன்று ஐந்தாங் குரவ ராக அவருக்குக் குருபூசைகளும் நடாத்தப் பட்டன. நாவலரை உயர்ந்த நிலையில் வைத் துப் போற்றுவதாக விசுவாசமாக நம்பிக் கொண்டு இப்படிச் செய்யப்பட்டபோதும், சாதிச் சைவர்களைத் தவிர மற்றவர்கள் நாவ லரைத் தீண்டமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு இது இட்டுச் சென்றது என்பது உண்மையே.
大
1930 ஆம் ஆண்டுக்கு முன் பின்னக ஈழத் தில் தனிப்பட்டவர்கள் மத்தியிலும் நிறுவனங் களிலும் உயர் தமிழ்க் கல்வி பற்றிய ஆர்வ
三卿 s

மும், ஊக்கமும் அதிகரித்தன. இதற்குக் கார ணங்கள் பல. அவற்றை இங்கு எடுத்து விப ரித்தல் இயலாது. சென்னையில் லெக்சிக்கன் பேரகராதி முயற்சிகள் ந டை பெ ற் றதும், யாழ்ப்பாணத்தில் ஈழகேசரி' நிறுவபபட்டி தும், இந்த ஆர்வத்துக்கு உந்து சக்திகளாய் அ மை ந் த ன. 1922 ஆம் வருஷத்திலிருந்து யாழ்ப்பாணத்தில், ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம் வித்தியா பகுதியாரின் அங் கீகாரத்துடன் இயங்கி வந்தது. இத்தகைய சூழ்நிலையில், மரபுவழித் தமிழ்க் கல்வி புத்தூக் கம் பெற்றது. அக்காலத்தில் இலங்கை வித் தியா பகுதியார் ஆசிரியத் தொழிலில் ஈடு பட்ட பாலபண்டித, பண்டித பரீட்ஷை சித்தி யெய்தியவர்களுக்குச் சில சலுகைகள் கொடுத் திருந்தனர். இவையாவற்றின் விளைவாகவும் பாலபண்டித, பண்டித பரீட்ஷைகளுக்கான பாடத்திட்டங்களும் அறிஞரின் கவனத்தை ஈர்த்தன. இச்சங்கப் பரீட்சைகளுக்குத் தோற் றுபவர்களுக்குப் படிப்பிப்பதற்காக அரசினர் நன்கொடையுடனும் சுன்னகத்தில் பிராகீன பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பின்னுளில் ' பரமேசுவர பண்டித ஆசிரிய கலாசாலை 'யும் திருநெல் வெலியில் தொடங் கப்பெற்ற காவிய பாடசாலை'யும் இப்பரீட்சை களுக்கே மாணவரைத் தோற்றுவித்தன. பூரீ சி. கணேசையர், பண்டித நவநீதக்கிருஷ்ண பார தியார், பூரீ. தி. சதாசிவஐயர், பண்டித சி கணபதிப்பிள்ளை, வித்துவான் ந. சுப் பை யா பிள்ளை, பண்டிதர் நாகலிங்கம், பண்டிதர் சி. நடராசா மு த லி யோர் இம்முயற்சிகளில்
உழைத்தவர்கள்.
இத்தேர்வுகளுக்கான கல்வியில் நாவலர் பதிப்பித்த நன்நூல், தொல்காப்பியம், சொல் லதிகாரம், நிகண்டுகள் முதலியனவும், புராண இலக்கியங்களும் சிறப்பிடம் பெற்றமை குறிப் பிடத்தக்கது. நல்ல பதிப்புக்களாக இருந்த நா வ ல ர் நூ ல் க ள் பயன்படுத்தப்பட்டமை
இயல்பே.
73
இதனல், பண்டிதர்களிடம், நாவலர் சைவ மும் தமிழும் வளர்த்தாரென்ற கருத்து தலை யெடுத்தது. அவர்கள், நாவலரின் தமிழ் ப் பணியென்னும் போது பிரதானமாக அவரின் இலக்கண நூல்களையும் அவர் பதிப்பித்த புரா ணங்களையுமே கருதினர். அக்காலப் பண்டித பரீட்ஷைகளுக்குக் கூட, வியாசம், ரசனை முத லியவை எழுதவேண்டியிருந்ததால், நாவலரின்

Page 76
நடையையொட்டி எழுதுவதின் மூலமே நல்ல சித்தியடையலாம் எனக் கருதினர்.
நாவலர் பெருமான் எழுதிய பாலபாடங் களும், பெரிய புராண வசனம், கந்ாப் புராண வசனம், ஆகியனவும், பெரிய புராண சூசனமும், தமிழ் வசன நடைக்குச் சிறந்த இலக்கியங்களாகும்."
என, யாழ் ஆரிய திராவிட பாஷாபிவிருத் திச் சங்கத்தின் காரியதரிசியாகவிருந்த பண்டி தர் அ. சரவணமுத்து தமது கட்டுரையொன் றில் கூறியிருப்பதை பண்டிதர்களின் கருத் துக்கு உதாரணமாக க் கொள்ளலாம். எனவே, சூழ்நிலையின் தேவையால், நாவலரை, சைவமும் தமிழும் வளர்த்தவராக ஒரு சிறிய வட்டத்தி னர் மட்டுமாவது ( பண்டிதர்கள் ) இதய சுத் தியுடன் ஒப்புக்கொள்ளத்துவங்கினர்.
★
1940- - 50 காலகட்டத்திலேதான் நாவ லரின் உரைநடையில் உயர்வை மேலும் ஒப்பு நோக்கிப் பார்த்தறியக் கூடிய வாய்ப்பு ஏற் பட்டதெனலாம். அக்காலத்தில் தமிழாசிரியர் பயிற்சிக்கலாசாலைகளின் ஆசிரிய மாணவர்க ளின் பாடத்திட்டங்களில் உரைநடை நூல்கள் வெவ்வேறு பாடங்கட்கென சேர்க்கப்பட்டிருந் தன. உரைநடையிலமைந்த இலக்கிய நூல் களும் பிரதான பங்குவகித்தன. பாடவிதா னத்துக்குள் மட்டும் அடங்கி நிற்காமல் திரு நெல்வேலி சைவாசிரிய கலாசாலை மாணவர்கள் தமிழிலக்கியங்களை நன்கு சுவைத்து அறிவதற்கு நல்லதொரு வாய்ப்பும் அக்காலத்திலிருந்தது. நாவலர் வழிவந்த பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள் அங்கு பணியாற்றிக்கொண் டிருந்தார். அவர் பரீட்சைக்குரியனவற்றை மட்டுமன்றி பரந்துபட்ட தமிழிலக்கியப் பரப் பையும் ஆசிரிய மாணவர்கள் பயமின்றி எட் டிப்பார்க்கச் செய்தார். அவரின் முயற்சியால் பலர் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாக மாறினர். வித்துவக்காய்ச்சல் கொண்டவர் களின் உரைநடைகளை ஒப்பு நோக்கி மாண வர்களே உயர்வானது எது என்பதை உணர்ந்து கொள்ளுமாறு செய்தவர் பண்டிதமணி,
நாவலர்காலத்திலேயே தமிழ் நா ட் டி ல் நாவலருக்கெதிராக மூண்ட பொருமைத் தீ இன்னும் முற்ருக நூர்ந்து விடவில்லை. புறத்தே சாம்பல்போலத் தோற்றமளித்தாலும் உள்ளே அதன் உஷ்ணமிருந்தே வருகின்றது. அங்கு
7 ن

வித்துவக்காற்று வீசுகின்ற பேர்தெல்லாம், நாவலருடைய திறமையை குறைக்க, மறைக்க, அவர் ஏற்படுத்திய பாரம்பரியத்தை மட்டம் தட்ட ம. பொ. சி.கள், ரா. பி. சேதுப்பிள்ளை கள், சுத்தாநந்தர்கள், மு. வ.கள் முயன்ற போது அவற்றை நேருக்கு நேர் எதிர்த் து சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியதில் பண் டி த மணிக்குப் பெரும் பங்குண்டு. ஆசிரிய கலாசாலை மாணவர்களிடம் மட்டுமல்ல, வெளியிலும் இம் முயற்சி நாவலர் பற்றிச் சிந்திக்க, ஆராய தூண்டுகோலாயிருந்ததுஎனலாம். இதனல் ஈழத் தில் நவீன இலக்கியத்துறையை இளம்பயிராக வளர்க்க முயன்றுகொண்டிருந்த எழுத்தாளர் களிடமும் புதிய எண்ணம் ஒன்று பிறந்தது. இதற்கு உதாரணமாக நாவலரின் நடையை மறுமலர்ச்சியாளர்களும் பின்பற்றலாம் என்ற கருத்துப்பட ஈழத்துச் சிறுகதை இலக்கிய முன் னேடிகளில் ஒரு வ ரான இலங்கையர்கோன் 1947 இல் மறுமலர்ச்சி இதழொன்றில் எழுதிய தைக் குறிப்பிடலாம்.
大
1950 - 60 காலகட்டத்திலேதான் நாவலர் இயக்கம் புதுத்தோற்றமும் வளர்ச்சியும் கம் பீரமும் பெற்றுப் புதியதொரு பாதையில் காலெடுத்து வைத்தது. நாவலரின் பன்முகப் பட்ட பணிகளையும் மக்கள் எண்ணிப் பார்க்கக் கூடிய திருப்புமுனை ஏற்பட்டது. இந்த தசாப் தத்தின் நடுக்கூறில், நாட்டிலேற்பட்ட அரசி யல் விழிப்புணர்ச்சி சமூக மாற்றங்கள் பலவற் றையும்-சில பிரச்சினைகளையும் ஏற்படுத்தியது. இலக்கியம் காலத்தின் குரலாகவும் தேசத்தின் பிரச்சனைகளு. ன் ஐக்கியப்பட்டு தேசியப் பணி களை நிறைவேற்றும் சாதனமாகவுமிருப்பதால், அக்கால கட்டத்தின் உடனடித் தேவையாகத் தேசிய இலக்கியம் சிருஷ்டிக்கப்பட்டவேண்டும் என்ற குரல், சிந்தனைத் தெளிவும், தீர்க்கதரிச னமும் மிக்க எழுத்தாளர்களிடமிருந்து எழுந் தது. எமது மரபு வழிநின்று, எம் மண்ணின் வாசனையுடன், எம்தேசத்து மக்களின் பிரச் சினைகளை, ஆசாபாசங்கள், அபிலாஷைகள் முத லியவற்றை எமது இலக்கியம் பி ர தி ப லி க் க வேண்டுமென்ற கருத்தை முன் வைத்ததுடன் எம் தேசிய இலக்கிபத்தின் பிதாவாக நாவலரை எமது எழுத்தாளர்கள் கைக்கொள்ளத் துவங் கினர்.
* அந்நிய ஆதிக்கம் ஏற்பட்ட நாட்தொட்டு அதற்கு ஆதரவாக அதன் பாதாரவிந்தம் தழுவிநின்ற நம்மவரும் ', அதன் அர.

Page 77
சியல் கலாசார ஆதிக்கத்தை எதிர்த்துப் போர்க்கொடியுயர்த்திய நம்மவரும் ஏக காலத்தில் தொடர்ந்து வந்தேயிருக்கின் றனர். இந்த இரு முரண்பட்ட சக்திகளுக் கிடையில் நடந்த போராட்டத்தில் இயக் கத்தில் தேசிய உணர்வின் கொடுமுடியா கத் தோன்றியவர் நாவலர்.
சங்சம் வைத்து தமிழ் வளர்த்த, தமிழ னின் தாய்ப்பூமி தந்த பண்டைப் பெரும் இலக்கிய ஏடுகளைப் புதுக்கியும் திருத்தியும் வெளியிட்டு தமிழ் இலக்கியத்தின் பொதுப் பரப்பைத் தனது அந்நிய ஆதிக்க எதிர்ப்புப் போரில் ஒரு ஆயுதமாக உபயோகித்த நாவ லர், அதே வேளையில் ஈழத்து இலக்கியப் படைப்புகளை அவமதித்த, ஈழத்து தமிழறி ஞர்களை அவமதித்த, யாழ்ப்பாணத் தமிழை அவமதித்த சென்னை மாகாணச் செருக்கர் களை எதிர்த்துக் கடும் போர் தொடுத்தார். ஈழத்திற்கென ஒரு இலக்கிய மரபும், தனித் துவம் பெற்ற ஈழத்துப் பாரம்பரியமும் இருக்கிறது என்பதை அறைந்து கூறி, ஈழத்து தமிழ் இலக்கியத்தின் வெற்றிக் கொடியை உயரப் பிடித்தார்.
நாவலர் பரதேச மொழி, பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழுக்காகவும் தமிழ்ப் பண்பாட்டிற்காகவும் நடத்திய போராட்டம், தமிழகத்தின் செருக்கையும் செல்வாக்கையும் எதிர்த்து யாழ்ப்பாணத் தமிழின் சிறப்புக்காகவும் ந ட த் தி ய போராட்டம் சரித்திரத்தின் தேவையாக வும், வரலாற்றின் இயக்க நியதியாகவும் இருந்த அதே வேளையில், தேசிய இலக் கியத்தின், ஈழத்து மரபின் அடி நாத மாக வும் அமைந்தது.'
இக்காரணங்களினலேயே ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் தமது தேசிய இலக்கிய பிதா வாக நாவலர் பெருமான ஏற்றுக்கொண்டனர்.
இக்காலகட்டத்தில் சமுதாயப் பிரக்ஞை கொண்ட எழுத்தாளர்கள் நாவலர் தேசிய இலக்கிய பிதா என்ற கருத்தை விளக்கி ஆணித் தரமான பல கட்டுரைகளை எழுதினர். இதே இலக்கிய அணியைச் சேர்ந்த கவிஞர்கள், கவி யரங்குகளில் இக்கருத்துக்களை முழக்கமிட்ட னர். சமயாசாரியாரின் குருபூசையாக மட்டும் கொண்டாடப்பெற்று வந்த நாவலர் தினம்,
7

அர்த்தமும் பொருத்தமும் நிறைந்த நாவலர் விழாக்களாக நாட்டின் பல இடங்களிலும் கொண்டாடப்படத் தொடங்கி யது. முற் போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்டு வந்த * புதுமை இலக்கியம் ' என்ற சஞ்சிகையிலும் சில கட்டுரைகள் எழுதப்பட்டன.
大
எனவே, ஆரம்பகட்டத்தில் சாதிச் சைவர் களால், சமயகுரவராக மட்டும் பொத்திப் பூசை செய்யப்பட்டு, அடுத்த கட்டத்தில் சைவ மும் தமிழும் வளர்த்தவராகப் பண்டித வட் டத்தால் போற்றப்பட்டு, மூன்ரு வது கட்டத் தில் தமிழ் இலக்கிய ஆர்வமிக்க ஆசிரியர்களி டத்தில் தவழ்ந்து எழுந்து, நான்காவது கட்டத் தில் ஈழத்து எழுத்தாளர்களின் பிதாமகராக மாறிய பின்பே வெகுஜன மத்தியில் நாவலர் இயக்கம் வேரூன்றத் துவங்கியது.
வரலாற்றில் நாவலர் வகுத்த சரியான பாத்திரத்தை தெள்ளத்தெளிவாக எழுத்தா ளர்கள் எடுத்துக்காட்டியபின் அவரின் நினைவுக் கொண்டாட்டங்கள் சமயஞ் சார்ந்தனவாக வன்றிப் பொது விழாக்களாக சென்ற தசாப் தத்தில் அமைந்திருந்தன. 1965 இல் கொழும் பில் அரசாங்க ஊழியர்களால் கொண்டாடப் பட்ட நாவலர் விழா, தமிழர்களல்லாதவரும் நாவலரைப் பற்றி கேள்விப்படச் செய்த துடன், முதற் த ட வையாக சக ல இனத் தைச் சார்ந்த பெரியார்கள், தலைவர்கள், மகா தேசாதிபதி ஆகியோர் நாவலரைத் தேசியப் பெரியாராகப் போற்றி அஞ்சலி செலுத்திய முதல் நிகழ்ச்சியாகவும் அமைந்தது.
1968 இல் சென்னையில் நடைபெற்ற தமி ழாராய்ச்சி மகாநாட்டின் போது தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியோர்களுக்குச் சிலை நிறு வப்பட்ட போது, நாவலர் பெருமான் புறக் கணிக்கப்பட்ட நிகழ்ச்சியே, ஈழத்தின் சகல தமிழ் மக்களையும் நாவலரியக்கத்துடன் சங்க மிக்கச் செய்தது என்பது ஏற்கப்படவேண்டிய உண்மையே, ஈழத்தில் உடனேயே நாவலருக் குச் சிலை நிறுவப்படவேண்டுமென்ற உணர்ச்சி இங்கு பொங்கி எழுந்தபோது அந்த உணர்ச்சிக் குச் செயலுருவம் கொடுக்க அமைக்கப்பட்ட நாவலர் சபை, 1969 ஜூன் 29 அன்று நல்லூ ரில் நாவலரின் சிலையை நிறுவியது. சிலை நிறுவப் பட்டதையொட்டி நடை பெற்ற மாநாடு, பவனி முதலியவற்ருல் சாதாரண பாமர மக் கள் கூட நாவலர் நமது நாட்டுப் பெரியார்;

Page 78
ஏதோ பெரிய பணியாற்றியிருக்கிருர் என்றள வில் மட்டுமாவது அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. சிலை தாட்டு விழாவைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நாவலர் விழாக் கள், சிறப்பு மலர்கள் வெளியீடு, வானெலிப் பேச்சுகள், மாணவர் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்று வந்ததால், நாவலர் பற்றிய உணர்வு மேலும் மேலும் மக்களிடம் வளர்ந்து கொண்டிருந்தது.
தமது ஈடிணையற்ற தலைவனக தமது கலா சாரத்தை, மொழியைப் பாதுகாத்தளித்த தங் 'களின் தலைவராக நாவலரை இலங்கைத் தமிழ் மீக்கள் ஏற்றனர்.
நாவலர் அன்று ஆற்றிய பணிகள் சுதேச கலாசாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளாக அமைந்து இருந்ததால், மக்கள் அரசாங்கம் நாவலரைத் தேசியப் பெரியாராக அங்கீ கரித்து தபால் தலை வெளியிட்டு அ வரை க் கிெளர்வித்தது.
' நாவலரவர்கள் பத்தொன்பதாம் நூற் ருண்டுப் பிரமுகர்களில் ஆற்றல் வாய்ந்த வருள் ஒருவராவர், அவர் தேச சேவைக்குத் தம்மை அர்ப்பணித்த தலைசிறந்த தலைவரும், புகழ்பெற்ற பேச்சாளியும், சிறந்த எழுத்தா *ளரும், அஞ்சா நெஞ்சம் படைத்த சமய சமூக சீர்திருத்தவாதியும், ஆற்றல் வாய்ந்த வழிகாட்டியும், தீர்க்கதரிசனமுள்ள கல்வி மானும்ஈ வர்.
ང་c
v, . 7

நாட்டை ஆக்கிரமித்த அதிகாரத்தைத் தடுத்து நாட்டின் தேசிய கலாசாரத்தை நிலைநாட்டுவதற்கும் பல்வேறு சமுகங்கள் முனைந்த காலத்தில் ஆறுமுக நாவலர் தமிழர் சார்பில் இந்துமதத்துக்காகத் தம்மை அர்ப் பணித்து உபகரித்தார்.
அவர் வட இலங்கையில் வெற்றிகரமாக ஆரம்பித்த சீர்திருத்த இயக்கம் தென்னிலங் கையில் வணக்கத்துக்குரிய குணுநந்த தேர ரும், அனகாரிக தர்மபாலாவும் ஆரம்பித்த இயக்கங்களுக் வழிகாட்டியாயிருந்தது. உண் மையில் அவர் அந்நியராட்சிக்கு மறுப்புத் தெரிவிக்கும் இயக்கத்துக்கு வித்திட்டார். அதுவே பிற்காலத் தலைவர்கள், சுதந்திரம் பெறுவதற்கு உழைப்பதற்கு மூலவித்தா யிற்று.
(இலங்கை முத்திரைப்பணியகம் 29-1071ல் இல் வெளியிட்ட ஆறுமுகநாவலர் ஞாப கார்த்த வெளியீடு - இலங்கை முத்திரைச் செய்தித்தாள் இல. 30 வ)
நாவலர் நாமம், இன்று தமிழ் மக்களிடம் பலவற்றைச் சாதிக்க வல்ல பேரியக்கமாக ட பெருமந்திரமாக விளங்குகின்றது. அவர் பெயர் இன்று தேசவியாபிதமாவிட்ட தேசியச் சொல்லாக மிளிர்கின்றது !

Page 79
காலத்தின் பின் 6
ჭნ;
sܠܸܦ݂ܘ݂
ஆ. சிவதேசச்செல்
விரிவுரையாளர், யாழ்ப்பாண
சென்ற நூற்ருண்டின் முற்பகுதியிலே தோன்றி ஐம்பத்தேழு ஆண்டுகள் உயிர் வாழ்ந்து காலத்தின் தேவைக்கேற்ப இயங்கிய ஆறுமுக நாவலரை இந்த நூற்ருண்டின் வீர புருஷராகவும் முன்னுேடியாகவும் இன்றைய சமுகம் வகைந்து கொள்ள முயல்கின்றது. சுதேச கலாசாரத்தின் சீர்குலைவைப் பேணிய நாவலர் சமுகம, கல்வி. மொழி, கலாச்சாரம் போன்ற பல் துறைகளிலும் பன்முகப்பட்ட நோக்கோ டு பணியாற்றியிருந்தும் சைவம் காத்த மகானுகவும் ஐந்தாம் குரவராகவும் மட்டும் அவாைப் போற்றும் போக்குச் செவ் வனே மறையவில்லை. நாவலருடைய வாழ்க்கை யையும் பணிகளையும் காலத்தின் ஒளியில் நன்கு மதிப்பீடு செய்யும்போது நாவலரது நோக்கும் போக்கும் விசாவித்திருக்கும் பரப்பை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
நாவலர் பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. நாவலரை அவதார புருஷ ராக வழிபாடு செய்வது ஒருபுறமிருக்க, வீர புருஷராகக் காலம் தேர்வு செய்யும் போக் கைச் சிந்திப்பது பயனுடையது. " ஒவ்வொரு காலமும் தனக்கு வேண்டிய வீர புருஷர்களையும் சரித்தர நாயகர்களையும் தனக்கு முந்திய காலங்களில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள் கின்றது. இது ம னித வ ர லா று கண்ட உண்மை. சென்ற நூற்றண்டிலே தோன்றி மறைந்து இந்த நூற்றண்டுக்குத் தோன்ருத் துணையாக நின்று வழிகாட்டும் நாவலரின் சிந் தனைகளும், செயல்களும் பல்வேறு துறைகளி லும் விடுதலைக்கு வித்திட்ட நிலையில் அமைவது அவதானிக்கத்தக்கது. அவர் சுதேசப் பற்று மிக்க ஒரு மேலவராகத் ( ) தமது வாழ்க்கைக் காலத்திலே காலத்தின் தேவைக் கேற்பச் செயலாற்றினூர். இம்மேலுவர் குழாத்

னணியில் நாவலர்
:قی e
au för B. A. (Hons)
ாக் கல்லூரி, வட்டுக்கோட்டை.
தின் தோற்றம் இலங்கையின் சமுதாயவியல் வரலாற்றிற் குறிப்பாக அவதானிக்க வேண் டியவொரு பண்பாகும். பத்தொன்பதாம் நூற் முண்டில் தோன்றிய மேலவர் குழாம், தேசிய மேலவர் குழாம் என இருவகைப்பட்டதாக விளங்கியது. கலாநிதி க. கைலாசபதி இதனைப் பின்வருமாறு விளக்குவர் :
** நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தோன்றியிருப்பினும் தலைநகருடன் தொடர்பு கொண்டு அதனைத் தமது பிரதான இருப்பிட மாகக் கொண்ட தேசிய உயர்ந்தோர் குழாத் தினர் இன, மொழி, மத வித்தியாசங்களைக் கடந்து வுர்க்க அடிப்படையில் கூடுதலான ஒருமைப்பாடு உடையவராக விளங்கினர். உள்ளூர் உயர்ந்தோர் குழாமோ அத்தகைய ஒருமைப்பாடும் ஒன்றிணைப்பும் கொண்டிருக் கவில்லை. அதன் காரணமாக அதனைச் சார்ந்தோர் சிலவேளைகளில் முரண்பட்ட யருத்தோட்டங்களையும் நல நாட்டங்களையும் பிரதிபலிப்பவராயிருந்தனர். இல, மொழி, மத அக்கறைகள் இவர்களைக் கூடுதலாகப் பாதித்தன. கலாசாரப் பிரச்சினைகளில் இவர் கள் தவிர்க்க முடியாதவாறு ஆழ்ந்த ஈடுபா டும் சிரத்தையும் கொண்டு இயங்கினர்".
(பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றண்டு விழா மலர்-பக். 38)
ஆறுமுக நாவலரை உள்ளூர் மேலவர் குழாத்தினரிலே மூலமானவராகக் கூறலாம். அவர் ஆங்கில அறிவு நிரம்பப்பெற்றிருந்ததும் தாய்மொழியைப் பயன்படுத்தித் தமது ஆக்கப் பணியில் ஈடுபட்டார். ஒரு வட்டத்துக்குள் இயங்கித் தமது பணிகளைப் புரிந்திருப்பினும் அது புரந்த அளவிலான வளர்ச்சிப் பண்புகளைக் கொண்டு சமுதாயத்திற் பரவலான தாக்கத்
77.

Page 80
தினை ஏற்படுத்தியது. இந்த மறைமுகமான வளர்ச்சியும், செல்வாக்கும் சமகாலத்திலும் இருபதாம் நூற்ருண்டு ஆரம்பத்திலும் நாவலர் வழிவந்த பலரைத் தோன்றச் செய்தது; சுருங் கக்கூறின் ஆறுமுக நாவலர் தமது பிறந்த நாட் டினை நேசிக்கும் தலைவன் ஆற்ற வேண்டிய செய லூர்க்கங்களைக் கடமையாகக் கருதி நிதானமாக வும், உறுதியாகவும் பணி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.
அன்னியர் ஆட்சி எமது நாட்டிலே பல் வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. ஏறக்குறை யக் கடந்த நான்கு நூற்ருண்டுகளில் எமது நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார நிலை களைத் தொகுத்து நோக்கும்போது பல்வேறு துறைகளிலும் சமூகத்தின் தேவை பல இயக்க சக்திகளை உருவாக்கியமை ஒரு சமுதாயவியல் மாணவனுக்குப் புலப்படாமற் போகாது. பிற மதத் திணிப்பும், கலாசார மாற்றங்களும், அர சியல் மாற்றங்களும் சமுதாயத்திற் படிப்படி யாகப் பல மாற்றங்களை உருவாக்கி வந்தன: போத்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆட்சியைத் தொடர்ந்து ஆங்கிலேயர் காலத்தில் ஸ்திர மடைந்த சமயச் சூழலும் பிரசாரப் போக்குக ளும் ஏற்படுத்திய மாற்றங்கள் தோற்றுவித்த குழாத்தினரில் தலையாயவர் ஆறுமுக நாவலர் GT 6T6)sT ) .
ஒல்லாந்தர் காலத்திலேயே இலங்கையை ஒல்லாந்த மயமாக்கும் பணிமுளைவிட ஆரம் பித்திருந்தது. இதற்கு அவர்கள் சமயப்பணி யையே உயிர்நாடியாகக் கொள்ள முனைந்த னர், தொடர்ந்து ஆங்கில அரசு ஆதிக்கம் நடாத்திய காலத்திற் பாதிரிமார்கள் சுதேச கலாசாரத்தைச் சீர்குலைத்து இலங்கையை நிரந்தர அடிமை நாடாக ஆக்கும் பணியிலும் ஈடுபட்டனர்,
** பறங்கியர் ஒல்லாந்தர் காலத்திலே சைவ சமயத்திற்கு வந்த வருத்தம் சிரங்கு வருத்தம் போன்றது. அது வெளித்தோல் வருத்தம் உள்ளுற சமயம் உயிரைப் பற்றி நின்றது. ஆங்கிலேயர் காலத்திலே சமயத் திற்கு வந்த வருத்தம் கச வருத்தம் போன்ற உயிரைக் கொல்லுகின்ற வருத்தம்; அது உட்பகையான வருத்தம்; புறப்பகையில் உட் பகை பொல்லாதது:"
எனப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கூறி யிருப்பது காலப்போக்கின் வளர்ச் சித் தன் மையை விளங்கிக்கொள்ளப் போதுமானதா கும்.
(7.

ஒரு நாட்டின் பண்பாடு, பாரம்பரியம்: கலைகள் இன்னுேரன்ன பலவும் மதத்தைத் தழு வியன. ஒரு சமூகத்தில் பல்வேறு வழிகளிலே மதம் வெளிப்படுகின்றது. குறிப்பாகக் குடும்ப பொருளாதார அரசியல் நிறுவ ன ங் கள் மதத்தை உருவாக்குவதைவிட மதம் அவைக ளுக்கு நல்ல உருவத்தினை மனித வர்க்கத்தின் வரலாறு முழுவதிலும் சிறப்பாக ஆதிவாகிச் சமூகப் பணிகளிற் பல நிகழ்ச்சிகளின் போதும் மதச் சடங்குகள் பின்பற்றப்படு கி ன் ற ன. பிறப்பு முதலான பல்வேறு சமூக நிலைகளிலும், மக்களுடைய வெளிப்படையான ஆர்வங்களி லும் மதச் சடங்குகள் இடம் பெறுகின்றன. சுருங்கக்கூறின் அரசியல் நிறுவனங்ளுகடனும் சமூக நிறுவனங்களின் ஆர்வங்களுடனும் மதம் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றது. நாகரிகத்தின் வரலாற்றில் மதம் முக்கியமான வொன்று மதம் அழிந்தால் நாகரிகமும் நிலை குலையும். மதப் பின்னணியிலே அமைந்த இலங் கையின் பண்பாடு, பாரம்பரியம், கலைகள் யாவும் பாதிரிமார்களின் மதமாற்ற முயற்சி யால் நலிவடைந்தன. இரவற் பண்புகளோடு கலப்பு நிலை உருவாகி வந்தது. இவ்வெதிர் முனைத் தாக்குதல்களுக்குக் குரல் கொடுக்கும் பண்பினராகவே ஆறுமுக நாவலர் விளங்கினர்.
* தென்னிலங்கையிலே சிங்கள மக்களி டையே மெரஹெத்திவத்த குணநந்த தேரோ, கேர்ணல் எச். எஸ். ஒல்போல்ட், அநகாரிக தர்மபாலா முதலான பெளத்த அறிஞர்களும் முஸ்லிம் அறிஞர்களிடையே அறிஞர் சித்தி வெப்பை, ஐ. எல். எம். அப்துல் அஸிஸ், வாப் பிச்சி மரைக்காயர் போன்ற இஸ்லாமிய ஊழி யர்களும் தத்தம் சமூகங்களிடையே முதன்மை யாகக் கல்வி வளர்ச்சியையும் அதோடு இணைந்து சமய கலாசார, மறுமலர்ச்சியையும் இக்காலப் பிரிவில் ஏற்படுத்தி வந்தார்கள் ',
(நாவலர் மகாநாட்டு மலர் பக். 81.)
என எஸ். எம். கமாலுதீன் சமகாலத்தில் ஈழத் திலே நாவலர்போன்று தொண்டாற்றியவர் களைத் தொகுத்துக் காட்டியுள்ளார்கள். நாவ லரின் பணிகளை மேற்குறிப்பிட்ட பலருடைய பணிகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வது இன் றைய நிலையில் அவசியமாகும்.
நாவலர் போன்ருேர் எதிரியக்கக் \ குரல் கொடுத்தது வெறுமனே கிறிஸ்தவ கோட்பாடு களுக்கு எதிரான இயக்கம் என்ற சித்தாந்தப் பின்னணியில் மட்டுமன்று. உண்மைகளை மறுத்

Page 81
துரைத்த பாதிரி மார்களின் போலிப் பிரசாரங் களுக்கும், சமயத்தின் தொன்மையையும் பெரு மையையும் அறியாது மனம்மயங்கிய தமிழ் மக் களுக்கும் நல்லறிவுச் சுடர் கொளுத்துவதும் அவசியமாகியது. மேலும் தேசியச் சமயங்களின் கோட்பாடுகளைக் கேலிக்கிடமாக் கி ய போ து உண்மைகளை உணர்த்த வேண்டியது தலையாய பணியாகவும் அமைந்தது. பிறநாட்டுத் தாக்கு தல்கள் சமய வடிவிலேயே எம்நாட்டிற் புகுந் தன. எமது சமூகத்தின் குறைபாடுகளை உள்ளும் புறமும் அறிந்த நாவலர் எமது சமூக சமய நிறு வனங்களையே கண்டித்தார். அன்றைய தமிழ் மக்களைக் குழப்பிய அத்தனை பிரச்சினைகளையும் நாவலர் சிந்தித்துள்ளார். நாவலரின் வாழ்க் கையையும் எழுத்துக்களையும் ஆழ்ந்து பார்க்கும் போது, தம்மைச் சூழ்ந்து காணப்பட்ட போலி வாழ்க்கையைக் கண்டு மனம் கொ தி த் து மாற்று வடிவங்களை உருவாக்க முனைந்தமை யையே காண முடிகி ன் ற து. " " உ ண் மை யதார்த்த வாழ்க்கையிலே சிதைந்து போவ தைப் பொறுக்காமல் சமூகத்தை ஏமாற்றிய கிறிஸ்தவர்களைக் கண்டித்ததோடு நடிப்புச் சைவசமயிகளையும் கண்டித்தார்.” (க. கை.) நாவலரின் ஆளுமை வளர்ச்சி சமயப் பணியில் இருந்து ஆரம்பமானது காலத்தின் ஒளியிலே தவிர்க்க முடியாததாயிற்று.
நாவலரைச் சைவத்திற்கும் தமிழிற்கும் தொண்டாற்றிய மகானுகவும். ஐந்தாம் குர வராகவும் ஒரு வட்டத்தினுள் நின்று நோக்கிய வர்கள் நாவலரின் பரந்த பாதையை உணர முடியாது போயினர். அன்னிய ஆதிக்கத்தில் உருவாகிய சகல முரண்பாடுகளையும், குறை பாடுகளையும் நாவலர் உணர்ந்து செயலாற்றி ர்ை. தமது தலையாய உயிர்த் தொண்டாகச் சமயப் பணியையே கொண்டு செயலாற்றிய நாவலர் தமிழ்க் கல்வியையும், சைவத் தமிழ் இலக்கியப் பணியையும் கருவியாகக் கொண் டது உண்மையாகும்.
* கன்னியை நாயகனிடத்து ஒரு துட்டா யினும் வாங்காது வீடு, விளை நிலம், தோட் டம், ஆபரணம் முதலியவற்றேடு விவாகம் செய்து கொடுக்கும் வழக்கமே உடையது எனது சென்ம தேசமாகவும் நான் இல் வாழ்க் கையிலே புகவில்லை. இவைகள் எல்லாவற்றிற் கும் காரணம் சைவசமயத்தையு ' அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையு மேயாகும்.

மேற்கூறிய வாசகங்கள் நாவலரது ஒரு நோக்கினையே காட்டுவன. எனினும இந்த எல் லைக்கு அப்பால் நாவலரது பரந்த சிந்தனைகளைச் சிந்திக்கவிடாமல் நாவலர் மறைந்த மறைக்கப் பட்ட நிலை 1968 ஆம் ஆண்டு தமிழ் ராய்ச்சி மகாநாட்டுச் சிலை வைப்புச் சம்பவம் வரை நிலவியது. குறிப்பாகச் சுதந்திரம் பெற்ற ஈழத்தின் தேசியச் சிந்தனை 50-60 ஆண்டு காலத்தில் உணரப்பட்ட பின்னர் நாவலரது பன்முகப்படுத்தப்பட்ட போக்குகள் விளக்கப் பட்டுத் தேசிய புருஷராகச் சிந்திக்க மக்கள் தலைப்பட்டனர். 1969 ஆம் ஆண்டில் உருவா கிய நாவலர் சிலை வைப்பு வைபவம் நாவல ரைப்பற்றி மேலும் சிந்திக்கத் தூண்டியது. நாவலரைக் குறுகிய வட்டத்தின் வெளியே சுதேச கலாசார பாதுகாப்புப் பணியாற்றியவ ராகவும் தேசியப் பெரியாராகவும் அரசு தப்ால் தலை வெளியிட்டுக் கெளரவிக்கும் நிலைமை ஏற் பட்டது.
பத்தொன்பதாம் நூற்றண்டிலே தமிழ்ச் சமுதாயத்திற்குத் தேவையான கருமங்களை ஆற் றிய நாவவர் பணிகள் பிறருக்கு ஆதர்சமாக மட்டுமன்றிப் பின்தோன்றியவர்களுக்கு வழி காட்டிய முன்னேடியாகவும் அவரை விளங்க வைத்துள்ளன. தமது வாழ்க்கையை வெறும் உண்டிருந்து வாழும் வாழ்க்கையாகக்கொள் ளாது, " மற்றவர்க்காக வாழ்தல்" என்ற உன னதமான பாதையிலே தம்மை இட்டுச் சென்ற தும் முக்கியமானதாகும். நாவலரின் தோற்றம் பற்றிப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர் கள் கூறுவது அவதானிக்கத்தக்கது.
* பதினன்கு வருடக் கிறிஸ்தவச் சூழலே நாவலரை நமக்குத் தந்தது. ஆபிரிக்க தேசமே காந்தியை மகாத்மாவாக ஆக்கியது. பதிஞன்கு வருடக் கிறிஸ்தவ சூழல் அமையா திருந்தால் ஆறுமுக நாவலர் என்ருெருவர் யாழ்ப்பாணத்தில் இல்லை.”*
(நாவலர்-பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளைu ud. 6)
நாவலர் தென்னகத்திலும் ஈழத்திலும் சைவத்தின் மறுமலர்ச்சிக்காக ஆற்றிய தொண் டுகளைச் சமகாலத்தில் இந்துமத மறுமலர்ச்சிக் குத் தொண்டாற்றியவர்களோடு ஒப்பிட்டு நோக்கும்போது அவரது பணிகளின் பரந்த தன்மை நன்கு புலனுகும். ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் பணிகள் பல்வேறு சூழல்களில் இந்துமத மறுமலர்ச்சியை ஏற்படுத் தியது போல நாவலரும் இயங்கியிருக்கின் ருர். தயானந்த சாஸ்வதி வேதாந்த சைவத்தை நிலை நாட்ட முயன்றதபோல நாவலர் சித்தாந்த சை வ த்  ைத நிலை நா ட் ட முயன்ருர், நாவலரை அனைத்திந்திய பின்னணியிலே ஆய்வு செய்து நோக்கும்போதுதான் நாவலரது வர லாற்றுப் பின்னணியையும், அவரது பன் மகப் பட்ட போக்குகளையும் பூரணமாக விளங்கிக் கொள்ள முடியும்.
79

Page 82
நாவலர் நடத்
கலாநிதி 'க்ா.
சரித்திர விரிவுரையாளர், இலங்
நாவலர் நடத்திய இயக்கத்தின் நன்மை அக்காலத்துத் தென்னசியச் சூழ்நிலையினலே கட்டுப்படுதப்பட்டிருந்தது. நாவலருடைய இயக்கம் குறிப்பாகப் பத்தொன்பதாம் நூற் ருண்டின் மூன்ரும் காலிலே நடைபெற்றது. அப்பொழுது அது போன்ற இயக்கங்கள் இந் தியாவிலும் இலங்கை யிலும் குறைவாகவே காணப்பட்டன. அத்துடன், இந்தியாவிலோ இலங்கையிலோ தேசிய இயக்கமே ஆரம்பித் திருக்கவில்லை. பிரித் தானியப் பேரரசுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் ப்த்தொன்ப தாம் நூற்ருண்டின் திருப்பத்திலேதான் தோன் றின. அப்படியான இயக் கங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கிய காலமாகிய இருபதாம் நூற்ருண்டின் முதற்காலிலே நாவலர் தனது இயக்கத்தை நடத்தியிருந்தால் அதன் தன் மையை வேருகி இருந்திருக்கும். அவருடைய இயக்கம் பொதுப்பட்ட தேசீய இயக்கத்தின் ஓர் அம்சமாக, வலிமை வாய்ந்த ஓர் இயக் கமாகப் பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணியிருக்கும்.
நாவலருடைய இயக்கம் தேசீயவாதத்தின் எழுச்சிக்கு முன்னரே தோன்றியிருந்த கார ணத்தினலே, அது பிரித்தானிய ஏகாதிபத்திய அமைப்பிற்கு உட்பட்ட ஒரு சமய இயக்கமாக மட்டுமே நடைபெற்றது அதாவது, நாவலரு டைய இயக்கத்தின் நோக்கம் சைவ மறுமலர்ச் சியை ஏற்படுத்துவதாக மட்டுமே அமைந்தது. இதனல் அறு கிறிஸ்தவப் பாதிரிமாருடைய

பக்கம்
இந்திரபாலா கைப்பல்கலைக்கழகம், பேராதனை,
இயக் கத்திற்கு எதிரான ஒன்ருக நடை பெற்றது. ஆங்கில எதிர்ப் போ. விடுதலை பெறுவதோ அதன் நே.க்கங்களாக அமைய வில்லை. அதற்கு மாருக. அது பிரித்தானியர் ஆட்சி யை ஒரு நன்மைபயக்கும் ஆட்சியாக ஏற்ற, ஓர் ஆங்கில வளர்ப்பு இயக்கமாகவும் காணப்பட்டது. நாலவர் சைவ மறுமலர்ச் சிக்காக முயற்சிகள் எடுத்ததினுலும் பாதிரிமார் களுக்கு எதிராகப் பிரசாரத்தில் ஈடுபட்ட தி னலும் அவருடைய இயக்கம் தமிழையும் வளர்ப்பதற்கு உதவியது.
நாவலர் நடத்திய சமய இயக்கம் அவரு டைய காலத்திலே வெற்றிகரமாக நடைபெற் றிருந்தாலும் அவருக்குப் பின்பு தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்றதென்று கூறமுடி யாது. இதனை உணர்வதற்கு யாழ்ப்பாணத் திலே கல்வித்துறையின் வரலாற்றை நோக்க வேண்டும் இந்து மாணவர்கள் கிறீஸ் த வப் பாட்சாலைகளுக்குச் சென்று கிறீஸ்தவர்களா கவோ கிறிஸ்தவச் செல்வாக்குக்கு உட்பட்ட வர்களாவோ மாறு வ ைத த் தடுப்பதற் காகவோ நாவலர் இந் துப் பாடசாலைகளை அமைத்துக் கொள்வதற்கான சைவ பரிபாலன சபைபோன்ற நிறுவனங்கள் தொடர்ந்து நடத்தி, யாழ்ப்பாணத்தின் பலவேறு பாகங் களிலும் பல இந்துப் பாடசாலைகளைத் தாபித் தன. ஆனலும், யாழ்ப்பாணச் சமூகத்திலே, சிறப்பாகக் கல்வித்துறையிலே, கிறிஸ்தவப் பாடசாலைகள் தங்கள் செல்வாக்கை இழக்கவே இல்லை புதிய இந்துப் பாடசாலைகளுட் பெரும்

Page 83
பாலானவை கிறீஸ் தவப் பாடசாலைகளைப் போன்று செல்வாக்குப் பெற்ற நிறுவனங்க ளாக மாறவுமில்லை. கிறிஸ்தவர்களுடைய மத மாற்ற இயக்கம் வலிகுன்றியது, ஆனல் அவர்களுடைய பாடசாலைகளின் செல்வாக்கு மேலும் வளர்ந்தது.
இதற்குக் காரணம் யாழ்ப்பாணச் சமூகத் திலே ஓரளவு பணப் படைத்த இந்துக்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருட்பட பெரும் பாலனவர்கள் நாவலருடைய இயக்கத்துக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுக் கத் தவறிய மையே ஆகும். இவர்கள் இந்துக் கல்வியில் அவ்வளவு அக்கறை கொண்டிருக்கவில்லை. மதமாற்றஞ் செய்யாது. சிறந்த ஆங்சிலக் கல்வியைப் பெற்று அரசாங்கப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதே இவர்களுடைய நோக்க மாக இருந்தது. நாவலருடைய இயக்கத்தின் பின்பு, கிறீஸ்தவ மிஷனரிமார் மத மாற்றக் கொள்கையைப் பெருமளவுக்குக் கைவிட்டு, இந்துக்களுக்கும் தங்க ளு  ைடய பாடசாலை களிலே சம இடம் அளித்துக் கல்வி புகட்டத் தொடங்கியதும், செல்வாக்குப் பெற்ற இந்துக்
 

கள் கிறிஸ்தவப் பாடசாலைகளையே பெரிதும் ஆதரித்தனர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி யைத் தவிர வேறு இந்துப் பாடசாலைகளை இவர்கள் ஆதரித்தனர் என்று கூறுவதற்கில்லை; நாவவர் காலத்திற்குப் பின்பு செல்வாக் பெற்ற இந்துக்கள் எங்கு கல்வி பயின்றிருந் தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் இத னைக் கண்டுகொள்ளலாம். இந்துப்பாடசாலை களை ஆதரித்தவர்களாகச் சாதாரண குடும்பேங் களைச் சேர்ந்தவர்களை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
எனினும் நாவலருடைய பெயர் நிலைப்ப தற்கு அவருடைய தமிழ்த்தொண்டு உதவி நின்றது. நாவலருடைய சமய இயக்கத்துக்கு ஆத ர வு கொடுக்காது வந்த வர்க்கத்தினர் இன்று நாவலர் தமிழ்த் தொண்டை மட்டு மின்றி மதத்தொண்டையும் போற்றிக் காக்க முற்படுகின்றனர். ஆனல், அவர்கள் தாமே இந்துப் பாடசாலைகளுக்குச் செல்லாதவர்கள்: தங்கள் பிள்ளைகளைக்கூட இந்துப் பாடசாலைக ளுக்கு அனுப்ப விரும்பாதவர்கள்.

Page 84
யக்கவாதிக சொத்து
ܡ
ளெர்ந்து வரும் இன்றைய எமது இலக் கிய ஆக்கத்தின் பாரம்பரியத்தின் தோற்றத் தையும் வளர்ச்சியையும் அறிய வேண்டுவது அவசியம். ஈழத்து எழுத்தாளராகிய நாம் நமக்கென ஓர் இலக்கிய வழியை எவ்வாறு வகுக்கவேண்டும் என்று சர்ச்சிக்கும் இவ்வேளை யில், நாம் வந்த வழியைப் பார்த்தல் நல்லது. பழைமையின் அடிப்படையில் தோன்றி மிளி ரும் புதுமை தான் வளர்ச்சியின் சின் ன ம். எனவே இக்கட்டுரை இன்று பலர் கண்டு திடுக் கிடும் புதுமையின் பழைமையைக் காட்டுவது டன், இன்று பல எரிச்சல் குரல்களுக்கிடையே யும், இலக்கிய வேலையில் ஈடுபட்டிருக்கும் ஈழத்து எழுத்தாளன் இலக்கிய அணுதையல் லன் என்பதையும் உணர்த்துவதற்கே எழுதப் படுகின்றது.
வாழ்க்கை வரலாறு
18-12-1822 தோற்றம். கந்தப்பர் அவர்களுக் கும் சிவகாமியம்மையாருக்கும் ஆடுவது குழந்தையாக ஆறு முகம் பிறந்தது.
ஆசிரியர்கள்: சுப்பிரமணியப் பிள்ளை, சேனதி ராய முதலியார், சரவணமுத் துப் புலவர், பீற்றர் பார்சிவல்.

ளின்
கிறித்தவத் தொடர்பும் இயக்கத் தோற்றமும்
84.5
31-12-1847
1848
1849-ஆடி
கலாநிதி : கா. சிவத் தம் பி தமிழ்த்துறைத் தலைவர், வித்தியோதய வளாகம், இலங்கைப் பல்கலைக் கழகம்,
பீற்றர் பர்சிவலுடன் சேர்ந்து கிறித்துவ வேதத்தைத் தமிழில் மொழிபெயர்க்கின்ற பொழுது தான் கிறித்தவப் பா தி ரி க ள் தமது மதத்தை எவ்வாறு பரப்பு கின் ருர்கள் என்பதை நன்கு அறிந்தார். முஸ்லிம் ஆட்சியா ளருக்குக் கீழ் வேலை செய்த ஹரி ஹரன், புக்கன் விஜயநகர சாம் ராஜ்யம் நிறு வி யது போலக் கிறித்தவர்களுடன் சேர்ந்து பழ கியதால் இந்து சமயப்பாதுகாப் பிற்காக இயக்கம் ஆரம்பித்த
வர் நாவலர்.
தமிழ்ப் போதனை ஆரம்பம்.
வண்ணுர்பண்ணைச் சிவன்கோவி லில் சைவப் பிரசங்கத் தொடர் தொடங்கப்பெற்றமை.
பர்சிவல் பா தி ரி யா ரு டை ய பாடசாலை வேலையிலிருந்து வில கிக் கொண்டமை.
இந் திய விஜயம். திருவாவடு ' துறையில் நாவலர் பட்டம் பெற் ற  ைம. இ வ் விஜய த் தி ன் பொழுது அச் சுய ந் தி ரத் தை வாங்கி வந் த மை குறிப்பிடத் தக்கது.

Page 85
1854-தை சைவப்பிரகாச வித்தியாசாலை ஆரம்பம். "சைவ தூஷண பரி காரம்" வெளியிடப்பட்டமை.
1869-ஆடி 13 வண்ணுர்பண்ணையில் ஆங்கிலப்
பாடசாலை நிறுவியமை.
1876-ஐப். 21 யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி ஆரம்பம். ஆ ட் சி யா ள ரி ன் அடக்குமுறைகள் இக்காலத்தில் அதிகமாகிக்கொண்டு சென்றன. நோயும் குறையாதுதொடர்ந்து பல பாகங்களுக்கும் பரவிற்று. ஒரு வருட கால எ ல் லை க் கு ஸ் 20,000 பேர் இறந்துவிட்டதா கத் தகவல் வெளிவந்தது. தீவுப் பகுதியில் நோயுடன் பஞ்சமும் சேர்ந்து கொண்டது. பஞ்சத் தால் பலர் இறந்ததாகத் தக வல் வெளியாகியது.
இவ்வாருன சூழ்நிலையில் ஆறுமுக நாவலர் மக்கள் துயர் களையவும் யாழ்ப் பாண த் தி லுள்ள ஆட்சியூழல்களை ஒழிக் கவுமென பெரியதோர் இயக்கம் தொடங்கினர். தேசாதிபதியை நேரில் சந்தித்தும், விசாரணைக் குழு வேண்டியும், வழக்கு வைத் தும் ஆட்சியினரின் சர்வாதிகா ரப் போக்கினைக் களைய முனைந்
தார்.
1879 இ ல ங் கை ச் சட்டசபையில் சேர். முத்துக் குமார சுவாமி வகித்த இடத்திற்குப் பொன் னம்பலம்இராமநாதனே செல்ல வேண்டுமென விரும்பியுழைத் g5 Gð) LD.
5-I. 2.- I 879 ஈழத்தமிழரின் முதல் இயக்க
வீரன் மறைவு.
நா வல ரு டைய வாழ்க் கை யை நாம் ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அவருடைய வாழ்வு இயக்க வீரனுெருவனது வாழ்வாகவே இருந்தது என்பதை உணர முடியும். நிலையூன் றிப் போன நிறுவனங்களுக்கெதிராகப் போர் தொடுத்து இயக்கம் நடத்தும் எவனும் எதிர் நோக்கவேண்டிய பிரச்சினைகளை நாவலரும் எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இவற்றுள் சிறப்பானதாகக் கொள்ளப்பட வேண்டுவது கருத்துப் பரிமாற்றமே. எதிரான கருத்தை வெளிவர விடாது தடுப்பது, நிலை யூன்றிய நிறுவனங்களது பண்பு, அக்காலத்தில் கிறித்துவ மிஷனரிகளிடமே அச்சுயந்திரமிருந் தமையால் அவர்கள் தங்கள் பிரசாரத்தைச் சிறப்பாக நடத்த முடிந்தது. மேலும் அது அவர்கள் கையில் தனியுரிமையாக இருந்தமை யால் நாவலரது கருத்துக்களை பரவலாக்வும் தடுக்க முனைந்தனர். நாவலருக்கு இத்துறை யில் ஏற்பட்ட இன்னல்களையும், அச்சுயந்திரம் பெறுவதற்கு நாவலரும் அவரது நண்பர்களும் பட்ட பாட்டினையும் இ. ஜே. ருெ பின்சன் என் பார் எழுதிய நூலிற் காணலாம். **ஆறுமுக நாவலரும் அவரது நண்பர்களும் அச்சு யந்திர மொன்றை வாங்குவதற்குப் பல காலமாகப் பாடுபட்டனர். சில பறங்கியருடன் சேர்ந்தா வது ஒன்றை வாங்கலாமா என்று யோசித்து அது பற்றிப் பேச்சு வார்த்தை நடத்தினர். முடி வில் அச்சுயந்திரம் வேண்டுமென்ற அவர்கள் அவா அதிகமாகி, உதவுங் குணமற்ற அயலா ரின் உதவியின்றியே அவர் கள் அச்சுயந்திர மொன்றினை வாங்கினர். மானிப்பாயிலுள்ள அமெரிக்க நிறுவனத்தில் வேலை கற்றுக்கொண் டவர்களே நாவலரது அச் சுயந்திரசாலையில் வேலைக்கமர்ந்தனர். பின்னர் நாவலர் பல நூல் களைப் பிரசுரித்தார், என்று அந்நூலில் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்தியா சென்று இயந் திரம் வாங்கவேண்டியிருந்த மையும், இங்கு நிறுவப்படும் இயக்க நிலையத்துக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டாலும் அங்கும் ஒரு ஸ்தா பனம் இருப்பது நல்லதென ச் சிதம்பரத்தில் பாடசாலை நிறுவியதும் அவரது இயக்க நுண் மை யைப் புலப்படுத்தும்.
ஆங்கில ஏகாதிபத்தியம், கிறித்துவ மதத் தைப் பிரயோகித்து ஆங்கிலக் கல் வி யை ப் புகட்டி, இலங்கையரை வெறும் அரசாங்க ஊழியராக மாற் று வ தி ல் முனைந்திருந்தது. இலங்கையில் 19 ஆம் நூற்ருண்டிலிருந்த கல்வி முறைமை இதனை நன்கு விளங்கவைக்கின்றது. இவ்வுண்மையை நன்குணர்ந்த நாவலர், முத வில் பேணப்படவேண்டியது மரபு வழி வாழ்க் கையையே என்று துணிந்து, நாட்டின் பண் டைய மரபுவழியில் நின்று கல்வி புகட்டுவதற் கான நிலையங்களைத் தோற்றுவித்தார். இதனைக் கிறித்தவர்களும் ஏற்றனர் என்பதற்கு அத் தாட்சியாா விளங்குகின்றது 1872 ஆம் ஆண்டு தை மாதம் கத்தோலிக் பாதுகாவலன் வெளி யிட்ட குறிப்பு.

Page 86
எந்த ஒரு நாட்டின் மீது தனது அதி கார்த்தை ஏகாதிபத்திய நாடு திணிக்க விரும்பு கின்றதோ, அந்நாட்டின் அடிப்படை வாழ்க்கை மரபைச் சிதைத் தெறிந்து, சமூக நிலையில் குழப் பம் ஏற்படுத்தி, தான் விரும்பிய ஆட்சி முறை யினையும். வாழ்க்கை முறையினையும் நிறுவ முனைவது அதன் முக்கிய பண்பாகும். இலங்கை யிலும் இந்தியாவிலும் இம் மு றை யினை க் கையாண்டே ஆங்கில ஏகாதிபத்தியம் நிறுவப் பட்டது. அவ்வாறு ஏகாதிபத்திய முறைமை நிறுவப்படும் காலத்து அதனை எதிர்ப்பவர்கள், வந்துகொண்டிருக்கும் சமூக முறையினை எதிர்ப் பதற்காக பாரம்பரியமாக இருந்து வ ரு ம் சமூக முறையினைப் பேண விரும்புவது இயற் கையே. இந்திய விடுதலை இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் ஆரிய பிரம்ப சாமாஜனத்தினர். இந்தியச் சமுதாயத்தில் காணப்பட்ட குறை களையும் போற்றத் தொடங்கினர். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஆபிரிக்க மக் கள் தமது பண்டைய இன மரபுகளை நாடுவதற் கும் இதுவே காரணமாகும். இ வ. ற் றை ப் போன்றே நாவலரும், பண்பாட்டு வழிபுகுந்த ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக, தாம் வாழ்ந்த சமூகத்தின் அமைப்பை அப்படியே பேண விரும்பினர். இதனுலேயே அவர் சைவ முறைப்படி வாழவேண்டுமென்றும், சைவ வாழ்க்கையில் இரண்டறக் க ல ந்து நிற்க வேண்டுமென்றும் வாதாடினர். பல சாதிப் பாகுபாட்டையும் அவர் பேண நினைத்தது இத ஞற்ருன் என்பது ம் இக்கண்ணுேட்டத்தின் மூலம் புலணுகும்.
இன்னும் ஏகாதிபத்திய நாடும் அதன் நிறு வனங்களும் தமது கொள்கையை நாட்டில் பரப்புவதற்குக் கையாளும் முறைகளை அடிப் படையாக வைத்துக்கொண்டே ஏகாதிபத்திய எதிர்ப்புத் தோன்றுவதை நாம் காணலாம். ஆங்கில ஆட்சியை எதிர்த்தபொழுதும், ஆங் கில ஆட்சியால் அளிக்கப்பட்ட சனநாயக வழி, பாராளுமன்ற சனநாயக முறைமை முதலிய வற்றையே ஆதாரமாகக் கொண்டு போராட் டங்கள் நடத்தப் பெற்றதை நாம் அறிவோம்; இன்றும் காண்கிருேம். எனவே நாவலரும் த ம து இயக்கத்திலும், கிறித் த வர் க ள் கையாண்ட சில முறைகளைக் கையாண்டே அவர்களை எதிர்க்கவேண்டியேற்பட்டது. அவ ரது சைவ ஆர்வமே பைபிள் மொழிபெயர்த் ததன் பின்னர்தான் சுடர் விட்டெரிந்ததென் பதைப் பார்த்தோம். ஆனல் தனது இயக்கத்

தில் அவர் கையாண்ட சாதனங்கள் இதனை மேலும் விளக்குகின்றன.
கிறித்தவர்கள் துண்டுப் பிரசுரங்கள் வெளி யிட்டனர், நாவலரது பல பிரசுரங்கள் அவற் றிற்கு மறுப்பாக எழுந்தவையே. கிறித்தவர் களிடமிருந்து கற்றுக்கொண்ட இதே முறைமை யைக் கொண்டு தனது கொள்கையைப் பரப்ப முயன்ருர், "நல்லூர்க் கந்தசுவாமி கோயில்", "மித்தியாவாத நிரசனம்’ என்பவற்ருல் இது தெரியவருகின்றது.
கிறித்தவர்கள் தங்கள் மதத்தினை வின விடையாகப் படிப்பிப்பது வழக்கம். அம்முறை யைப் பின்பற்றியே நாவலர் தமது சைவ விஞ லிடைகளினை இயற்றினர். கிறித்தவர்கள் பாடப் புத்த கங்கள் மூலம் மதக்கருத்துக்களைப் பரப்புவதைப் பின்பற்றியே பால பாடங்களினை எழுதினர். வண்ணுர்பண்ணைச் சிவன் கோயி வில் பூசை வேளையின் பின்னர் நடத்தப்பெற்ற சைவப் பிரசங்கங்கள் கிறித்தவ தேவாலயங் ளில் நடத்தப்பெறும் போதனை முறையைப் பின்பற்றியதே.
அடுத்து, நாவலர் வாழ்வினை நாம் கூர்ந்து அவதானிப்போமானல் அ வ ர து இ ய க் க உணர்வு பண்பாட்டுத் துறையில் ஆரம்பித்து தர்க்க ரீதியாக வளர்ந்து, அரசியல் துறையில் முடிவுறுவதைக் காண்கிருேம். பண் பாட்டு முறையில் வாழவேண்டுமென்று தொடங்கிய நாவலர், அவ்வாரு ன வாழ்விற்கு முக்கிய தடையாக இருப்பது ஆட்சிமுறை என்பதை உணர்ந்து ஆட்சி பீடத்திற்கெதிராகவே கிளம் பியதை நாம் காணலாம். வாந்திபேதி வந்து மக்கள் இறந்த பொழுதும் தடிகொண்ட டி தத பொலிசாருக்கெதிராகவும் அ வ ர் க ரூ க் கு ப் பொறுப்பாக இருந்த ஏசண்டாருக்கெதிராக வும், அவர் தேசாதிபதிவரை சென் ருர் . சிறப் பான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது அர சியல் மாற்றம் என்பதை உணரும் ஆரம்ப நிலை யில் நாவலர் மறைந்துவிட்டார். அது நாம் செய்த பாவம். ஆனல் அவர் தொட்ட வழி சென்று அரசியல் மாற்றங் கண்டு அதன்மேல் பொருளியல் மாற்றம் ஏற்படுத்த முனைந்திருக் கும் இந்நாட்களில், சுதந்திர இயக்கத்தின் உதய ராகமாக அமைந்த அவரை நினைத்தல், மதித்தல் நமது கடன், நாவலர் இயக்கவாதி களின் சொத்து.
(1951-"புதுமை இலக்கிய'த்திலிருந்து)

Page 87
தேசிய, ஐ
மக்கள் இய
£10 نے
கல்வியின் வரம்புகண்டோன். சிவநெறி செழிக்க வந்தோன், சொல்லுதமிழ் பொழிந் தோன் , ஆத்தனநிவைக் காத்தோன் எனச் சைவப் பெரு மக்களால், தமிழ் பேசும் நல் மக் களால் போற்றிப் பூஜிக்கப்பட்ட நல்லைநகர் ஆறுமுக நாவலர் இன்று இந்த நாட்டினது தேசிய இயக்கத்தின் மூத்த முதல்வராக. முன் னேடி மூலவராக முழு நாட்டாலுமே ஏற்றிட் போற்றப்படுகிறர்.
சிவ நெறிச் செம்மல், மதம் காத்த சான் ருேன்? தவக்கோலம் பூண்ட சீலா, சைவம் வளர்த்த ஐந்தாங் குரவர் எனக் கணிக்கப்பட்ட நாவலர் பெருமான், அந்த மதத்தினது இனத் தினதும் எல்லைகளைத் தாண்டி முழுத் தேசத்தி னதும் பொதுத் தலைவராக அனைத்து மக்களா லும் ஏற்கப்பட்டுள்ள இந்த அற்புதத்தின் விருத் தாந்தம் என்ன?
நல்ல தமிழ் உள்ளங்கள், தூய சைவ இத யங்கள் இறும் பூதெய்தும் இந்த நிலை உருவாo0 தற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று, வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட் டத்தில் தேசத் தினதும் சமூகத்தினதும் தேவை யையும், வரலாற்றின் தேவையையும் பிரதி பலித்து ஒரு சரித்திரத் தூதை நாவலர் பிரான் நிறைவேற்றியமையும், இந்த வரலாற்றுப் பாத் திரத்தின் மூலம் தனக்குப் பின்னலுள்ள வர லாற்றின் வளர்ச்சிப் போக்கில் தனது வலு

ஜனநாய A JJ
பக்க மூலவர்
°乙酉乙*乙苓垒
ரேம்ஜி -
வான ஆளுமை முத்திரையை ஆழமாகப் பதித் தமையுமாம்.
இரண்டாவது, நாவலர் பிரான் சரித்திரத் தில் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தைச் சுளு வாக இனம் கண்டு, வரையறுத்து, அந்தப் பாத் திரத்தின் பாரம்பர்யப் பிதுரார்ஜிதத்தைக் கையேற்று, அது கோடிகாட்டி நிற்கும் பழு தற்ற பாதையில் பிரக்ஞைபூர்வமாக இந்த நாட் டின் தேசியப் பற்றும் சமூக உணர்வுள்ள எழுத் தாளர்.
இந்த நாட்டின் ஒரு சிறுபான்மை இனத் தைச் சேர்ந்தவரை, ஒரு சிறுபான்மை மதத் தைச் சேர்ந்தவரை, திருநீறும் உத்திராட்சம் காயுமாக காட்சி தந்த ஒரு சிவச்சீலரை முழு நாடும், நாடாளும் அரசும் புகழ்ந்து போற்றுவ தற்கும், முத் திரை வெளியிட்டுக் கெளரவித்த துடன் அவர் வாழ்ந்த இடிபாடுற்ற இல்லத் தைத் தேசியச் சொத்தாக்கி இந்த மண்ணில் பிறந்த எந்த ஒரு மாபெரும் தலைவனுக்கும் மகோன்னதமான மேதைக்கும் இது வரை கிடைக்காத தனிச் சிறப்பை அளிப்பதன் தார்ப் பரியம் என்ன?
நாவலரின் வரலாற்றுப் பாத்திரம் என்ன? இதை இனங் கண்டறிய அவர் வாழ்ந்த காலத் தின் வரலாற்றுப் பகைப்புலத்தை ஆய்த்தறிய வேண்டும். நாவலர் இந்த நாடு விடுதலை தவறி, பாழ்பட்டுக் கிடந்த ஒரு காலப் பகுதியில் பிறந் தவர். சுமார் இரண்டு தசாப்த காலமாக நாடு
85

Page 88
அந்நியராட்சியின் கீழ் அடிமைப்பட்டு, நைந்து நலிந்து, இத்து இடுக் கணுற்று, செததுச் சித ல மாகும் தறுவாயில் வாழ்ந்தவர்.
பாரார் இந்த மண்ணை அபகரித்து தமது பாதங்களால் மிதித்து விளக்கி அதன் ஜீவனைத் தமது காலடியில் மண்டியிட வைத்தனர். அதை அரசியல் அடிமைத் திட்டாக்கினர். இந்த தேசத்தின் செல்வங்களைச் சூறை யா டி ன ர். அதன் ஐஸ்வரியங்களை கொள்ளை கொண்டு போயினர்.
நானிலத்திற்கு நல்ல முத்தையும் வலம்புரி &யையும் வைடூரியத்தையும் வாரிவாரி வழங்கிய இந்த மரகத மணித் தீவு, வற்ருத இயற்கைச் செல்வங்களின் பொய்யாத பொற் குகையான எமது பொன்னிலங்கை, வையகத்தோர் வாழ நெல்லையும் தினமணியையும் இல்லையெனது அள்ளி அள்ளிக் கொடுத்து கிழக்குலகின் நெற் களஞ்சியமாகத் திகழ்ந்த எமது ஈழத் திருநாடு பொல்லாத வறுமையில், கொடிய பஞ்சத்தில் கோரப் பிணியில் சிக்குண்டு தவித்து, இதன் நிஷடூரம் தாங்காது வெஞ்சாக்காட்டுச் சுடலை யாக மாற்றப்பட்டது.
அந்நிய ஆட்சி உழுது விதைத் தறுத்து உல கத்தார்க்கு உண்டி கொடுத்து உயிர்கொடுத்த உழவர் பெருமக்களின் நிலங்களைப் பறித்தது. இரும்பைக் காய்ச்சி உருக்கியதோடு ஊருக்கு ஊர் இருந்த எண்ணற்ற ஏனைய குடிசைத் தொழில் கிளை அடைத்து மூடிவிட்டு அந்தக் கைவினைஞர்களை அநாதைகளாக்கி நடுத்தெரு வில் திண்டாட வைத்தது. எல்லா மக்களும் பஞ்சையராய். பாமரராய் பாழும் வறுமையின் படுகுழியில் சரிக்கப்பட்டனர்.
பழைய நிலப் பிரபுத்துவ அடிமப்பின் மீதும், அதன் உறவுகள், சமுதாய வெளிப்பாடு கள் மீதும் ஏகாதிபத்தியம் கடும் தாக்குதலைத் தொடுத்து, புதிய சுரண்டல் முறைகளைப் புகுத் தியது.
பொருளாதார ரீதியில் நடந்த இந்த ஈவி ரக்க மற்ற சூறையாடலுடன். அரசியல் துறை யிலும் நெஞ்சீரமற்ற நிஷ்டூரங்கள் நிகழ்த்தப் பட்டன. வடக்கே புவிராய பண்டாரம் முதல் தெற்கே புரண் அப்புவரை தாய்நாட்டை, பிறந்த மண்ணை நேசித்த எண்ணிறந்த தேசபக் தர்கள் கொடிய அடக்குமுறைகளுக்கு ஆளாக் கப்பட்ட கலோனியலிஸ்க் கொடுமை நீடித் தது. ஏகாதிபத்திய ஆட்சிகளின் அட்டூழியங்க
s
86

ளும், அட்டகாசங்களும் பொருளாதார சூறை பாடலுடனும், அரசியல் அடக்குமுறையுடனும் மட்டும் நிற்கவில்லை.
எமது மக்களின் உயிரனைய மொழிகள் அழிக்கப்பட்டன. எமது பண்பாட்டின் மையங் களான கோயில்கள் இடித்து நொறுக்கித் தரை மட்டமாக்கப்பட்டன. எமது ஆத்மாவின் வெளிப்பாடுகளான இலக்கியங்களும் கவின் கலை களும் கரு வழிக்கப்பட்டன. மதம், கலாசாரம், பழக்க வழக்கங்கள் உட்பட நமது பண்பாட் டுச் சம்பத்துக்கள் அனைத்தும் அழித்தொழித்து சம்ஹாரிக்கப்பட்டன.
இதனுடன், இந்த மண்ணைத் தமது நிரந் தர தொழு தடிமைத் தளமாக வைத்திருக்க கலோனியலாதிக்கக்காரர்கள் புதிய தந்திரங் களையும், நயவஞ்சக உபாயங்களையும் கையாண் டனர். மக்களை நித்திய அடிமைகளாக்க அடி மைப்புத் தி புகுத்தப்பட்டது. அந்நிய கலாசார மோகம் வளர்க்கப்பட்டது. அந்நிய மொழி மேல் மையல் ஏற்படுத்தப்பட்டது. அந்நிய பழக்க வழக்கங்களை பா வனை பண் ணு ம் * பரத்தை உணர்வு ஊட்டப்பட்டது. நமது நம்பிக்கைகளை, ஆசார அனுஷ்டானங்களை, மொழிகளை, கலைகளை, இலக்கியங்களை, பண் பாட்டு நெறிகளை, வாழ்க்கை முறைகளை இகழ்ந்து ஒதுக்கும் நீசத்தனம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது.
இந்த நாட்டை காலமெல்லாம் கட்டியாள, அதன் செல்வங்களை கொள்ளை கொண்டு போக உள்ள ஒரே நிலையான மார்க்கம் இந்த நாட் டின் புதல்வர்களை இந்த நாட்டில் வைத்தே இந்த நாட்டுக்கு அந்நிய மாணவர்களாக்குவது என்று ஏகாதிபத்திய வாதிகள் திட்டமிட்ட னர். தேசிய உணர்வோ, தேசிய விழிப்போ, தேசியப்பற்றே அற்ற வாழும் சடலங்களாக, மரக்கட்டைகளாக, மிருகங்களாக மக்களை மாற்ற அவர்களை ஆத்மீக அடிமைகளாக்குவது தான் சாலச்சிறந்த வழி என்பதை உணர்ந்த * அறங்கொன்ற பறங்கிய 'ராட்சியினர் இந் தக் கழிசடைக் கைங்கரியத்தை நிறைவேற்ற வாள் தூக்கிய தமக்குப் பக்கபலமாகச் சிலுவை தூக்கிய ஒரு பாதிரிக் கூட்டத்தைக் கொண்டு வந்தனர். இந்தக் கூட்டம் நமது நாட் டின் ஆத்மாவைக் கொல்லும் “திருத்தொண் டில், முடுக்கிவிடப்பட்டது.
சொந்த மண்ணில் வேர் விட்டிராத, சொந்த கலாசாரத்தில் காலூன்றி நிற்காத,

Page 89
சொந்தப் பண்பாட்டை நேசிக்காத ஒரு அடி மைகள் கூட்டத்தை உருவாக்க, இந்த நாட் டின் விடுதலை இயக்கத்திற்கு இரண்டகம் செய் யக் கூடிய ஒரு ஐந்தாம்படையினரை நம்மவர் களுக்குள்ளேயே சிருஷ்டிக்க "ஆத்மீக அடிமை" கள் திரட்டப்பட்டனர்.
இந்த கலோனியலிஸ் சித்தாந்தத்தின் பிர காரம் பரதேசி மதம் பரப்பப்பட்டது. மத மாற்றம் பல்வேறு உத்திகளையும் நயவஞ்சகத் தந்திரங்களையும் கையாண்டு அசுர வேகத்தில் நிகழ்த்தப்பட்டது. கைலஞ்சம் கொடுப்பது முதல், ஊணும் உடையும் வழங்குவதுவரை கல்வி போதிப்பது முதல் "உத்தியோக’ அனுக் கிரகம் அளிப்பது வரை பல தந்திர வழிகள்
68) ág ti IIT Glf i. 1 - L– oőT.
இந்த நாட்டு மக்களை என்றென்றைக்கு மான தொழு தடிமைகளாக்க, நித்திய ஆன்மீக அடிமைகளாக்க ஏகாதிபத்திய வாதிகள் நடத் திய ஆன்மீக ஆக்கிரமிப்பு அவர்களுக்கு ஒரு தற்காலிக பல னை அளித்தது. அவர்களின் எதிர்ப்பு ஒரு இடைக்கால ‘நிறைவை க் கொடுத் தது. அந்நிய ஆத்மீக ஆளுமைக்கு உட்பட்டவர் கள் தமது சொந்தப் பண்பாடுகளை பேயாக வெறுத்தனர். கலை கலாசாரங்களை இகழ்ந்த னர். தேசிய அபிலாஷைகளையும், தேசிய உணர் வுகளையும் எதிர்த்தனர். தேசப்பற்றை இழந்த னர். ஆத்மார்த்த சோரம்போன இவர்கள ஏகா திபத்தியத்திற்குத் தா சானு தாசித்தனம் செய் தனர். இதன் மூலம் நம் நாட்டின் ஆத்மாவை அழிக்க, மதங்களை அழிக்க, கலைகளை அழிக்க கலோனியலிஸ் ட்டுகளுக்கு ஒத்தாசை செய்து இந்த மண்ணின் துரோகிகளாக, பகைவர் களாக மாறினர்.
ஏகாதிபத்தியத்தின் கடும் தாக்குதலுக்கு மத்தியிலும், ஆன்மீக ஊடுருவலுக்கு மத்தியி லும், நமது மண்ணில் வளர்ந்த மதமே, அந்த மண்ணில் தோன்றிய கோயில்களே தேசிய உணர்வின், தேசியப் பற்றின் கலாசார ப் பிடிப் பின் இறுதிப் பற்றுக் கோடாக, எஞ்சிய நிலைக் களனக இருந்தன. இதையும் அறுக்கவும் தகர்க் கவும் ஏகாதிபத்திய வாதிகள் முயன்றபோது ஆழ்ந்து மத நம்பிக்கைகளின், ஆசார அனுட் டானங்களின் நீண்ட நெடுங்கால ஆளுமைக்கு உட்பட்டிருந்த மக்கள் எதிர்ப்புக் காட்ட ஆரம் பித்தனர். இவ்வாறு தான் மதமும், மத உணர் வும், அதன் ஆசாரங்களும் வரலாற்றின் ஒரு

குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத்தின் வித்தாகவும், விளை நில மாகவும் இருந்தன. நாடு காக்கும் போரின் கேடயமாக மதம் ஒரு காலத்தில் மாறியது. இதனுல்தான் இந்திய தேசிய இயக்கத்தின் மூலக் கருவாக, முதல் வித்தாக மதக் காப்பு இயக்கம் இருந்தது என இந்த யுகத்தின் அர சியல் ஞானி ஒருவர் வரலாற் 7ய்வோடு, இயக்க வியல் தெளிவோடு இனம் கண்டு சுட்டிக்கர்ட்டி ஞா.
இதைத்தான் இந்தியாவிலே இந்து மதம் காக்கத் தோள் தட்டிக் கிளம்பிய தயானந்தரி லும் இலங்கையில் சைவம் காக்கக் கிளர்நீ தெழுந்த நாவலரிலும் நாம் காண்கிருேம்.
மற்றெல்லா தேசிய வீ ர ர் க ளி லு ம் போலவே, வரலாற்றின் திசை திருப்பிகளாக விளங்கிய சமுதாயத்தின் துருவ நட்சத்திரங் களிலும் போலவே நாவலரிலும் அவர் காலத்து சமுதாயத்தின் வளர்ச்சி நிகழ்வுகள் முழுமை யாக வெளிப்பாடு பெற்றன. தனக்கு முன்னல் உ ள் ள மரை பயயும், பாரம்பரியத்தையும் கையேற்று தனது காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப அவற்றை அவர் மு ன் னெ டு த் து ச் சென்ருர்,
அந்நியப் படையெடுப்பாளர்களை எதிர்த்த ாேரில் தம்மின்னுயிர்களை ஈந்த புவிராச பண் டாரம், வீதிராயன் போன்ற வீரதேச பக்தர் கள் பிறந்த அதே நல்லை நகரில் நாவலர் அவ தரித்தார். வெள்ளையராட்சியின் வெஞ்சாக் உடுக் கொடுமைகளை எதிர்த்துப் போரிட்ட ஞானப் பிரகாச சுவாமிகள் வாழ்ந்த அதே நல் லுரில் நாவலர் பிறந்தார், தமிழ் கற்ற குடும் பத்தில் பிறந்து, தமிழைத் துறைபோக அறிந்த தமிழறிஞர்களிடம் தமிழை முறையாகக் கற்ற ஆறுமுகனர் நல்லை நகரின் இந்த விழுமிய தேசி யப் பாரம்பரியத்தின் ஆளுமைச் செல்வாக்கின் கீழ் வளர்ந்தார். அன்றைய நிலக்கிழார் குடும் பத்தினர் ஆங்கிலம் கற்று அந்நிய மோகம் பிடித்தலைந்த காலத்தில், சாதாரணத் தமிழ் மக்கள், உழுது விதைத் தறுக்கும் கமக்கார வர்க்கத்தினர் மட்டுமே தமிழைக் கற்று வந்த னர். தமிழ் பண்பாட்டின் கடைசிக் கொழு கொம்புகளாகத் திகழ்ந்தனர். இந்த வர்க்கத் தினர் மத்தியிலிருந்தே தமிழ் போதிக்கும் ஆசான்கள் வந்தனர். தமிழைப் படிக்கும் மாணவர்களும் இதே வர்க்கத்தைச் சார்ந்தவர் கள். தமிழை இந்த வர்க்கத்தின் சூழலில் கற்ற ஆறுமுகநாவலரின் உள்ளத்தில் தமிழார்வமும்,
87.

Page 90
சைவப்பற்றும், பண்பாட்டு வேட்கையும் சுடர் விட்டு கனல் வீச ஆரம்பித்தமை இந்த வர்க் கச் சூழ்நிலையின் இயல்பான வெளிப்பாடாகும்.
தமிழ் கற்ற நாவலர் ஆங்கிலமும் கற்ருர் . பாதிரிமார் ந டத் தி ய பாடசாலையிலேயே இதைப் பயின் ருர். பின்னர் இதே பாடசாலை யில் ஆசிரியராகப் பொறுப்பேற்றர்.
குரு சிஷ்ய கல்வி வட்டத்தை ஒட்டி நின்று, அதே நேரத்தில் புதிய கல்விப் பரப்புடன் நா வ லருக்கு ஏற்பட்ட பரிச்சயம் அவரை ஒரு விசா லமான உலகுக்கு எடுத்துச் சென்றது.
மேற்கத்திய நாகரீகத்துடன் - அதாவது தொழில் பிரட்சியால ஜனித்த முதலாளித்துவ சமுதாயத்தின் நாகரீகத்துடன் அவருக்கு ஏற் பட்ட தொடர்பு சமுதாயப் பிரச்சினைகளை, அதன் தோற்றப்பாடுகளை புதிய கோணத்தி லிருந்து அணுகவும், கையாளவும், உதவியது. புதிய வாய்ப்புகளே. புதிய சாதனங்களை, புதிய உத்திகளை உபயோகிக்க மரபு காத்த அவருக்கு உதவியது.
அதே நேரத்தில் ஏகாதிப்த்திய வாதிகளின் ஆன்மீகத் தரகர்களாகச் செயல்மட்ட பாதிரி மாருடன் நாவலருக்கு ஏற்பட்ட பரிச்சயம் மூலம், அந்நிய ஆதிக்க வாதிகள் நமது கலா சாரத்தை, பண்பாட்டை, கலை இலக்கியத்தை, மதத்தை எவ்வாறு திட்டமிட்டு அழிக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிருர்கள் என் பதை அனுபவ பூர்வமாக கண்டார்.
தமிழ் வளர்த்த ஆசிரியர்களின் மரபில் வந்த அவர் தனது சமூகத்திற்கும், தனது மக் களுக்கும், தனது பண்பாட்டுக்கும் எதிராக ஏகாதிபத்தியம் இழைக்கும் இந்தக் கொடு மையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்வால் உந்தப்பட்டார்.
இந்தப் பிரக்ஞை, இந்த உணர்வு, இந்த வேட்கை அவரை அந்நியரை எதிர்த்த போரா ளியாக மாற்றியது. சிவத்தொண்டர், தமிழ் ஆசான் அறம் காக்கும், தே சி ய ம் காக்கும் போராட்டக்காரராக முகிழ்ந்தார். A.
நாவலர் ஏகாதிபத்தியத்தின் தாக்குத லுக்கு இலக்கான மதத்தையும் மொழியையும் பாதுகாப்பது அன்றைய கட்டத்தின் முதல் கடமை என்பதை கண்டார். இதன் மூலம்தான் மக்களை வழிப்படையச் செய்ய முடியும் என் பதையும் உணர்ந்தார்.

இந்தப் பிரக்ஞையுடன் சைவப் பிரசாரம் செய்தார். கோயில்கள் தோறும் பிரசங்கங்கள் நிகழ்த்தினர். சிவநெறிகளை விளக்கி அவற்றைக் கடைப்பிடித்தொழுகுமாறு சைவ ம க் களை அறைகூவி அழைத்தா. தமிழ்ப் பண்பாட்டு, வாழ்க்கை முறையைக் கைக்கொள்ளுமாறும், அந்நிய போகத்தைத் தவிர் குமாறும், பரதேசி மதத்தில் சேராதிருக்குமாறும் அவர் மத்கள் மத்தியில் இயக்கம் நடத்தினர்.
பைபிளைப் படிப்பதைக் கட்டாயமாக்கி சைவர்களை மதமாற்றவும், அவர்கள் மத்தி பில் அந்நிய வாழ்க்கை முறைகளைத் திணிக்கவும் வெள்ளையராட்சி தனது முழு அதிகார பலத் தையும், அரச எந்திரத்தையும் பயன்படுத்த முனைந்த வேளை யில் ஆட்சியாளர்களின் எத் தனிப்புகளுக்கு எதிராக நேருக்கு நேர் முகம் கொடுத்து நாவலர் பெருமான் போராடினர்.
மறுபுறம் தமிழ் இலக்கியத்தைக் காக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். நமது பழம்பெரும் இலக்கியப் படைப்புகளை புதுக்கி வெளியிட் டார். தனது பண்பாடு காக்கும் போரில் இலக் கியத்தை ஒரு வலுவுள்ள போராயுதமாக உபயோகித்தார்.
கல்வி அறிவு பெற்ற ஒரு மக்களால்தான், சொந்தப் பண்பாட்டையும், ஆன்மீக சம்பத்துக் களையும், தேசத்தின் சுயாதீனத்தையும், தேசிய கலாசாரத்தையும் காத்துப் பேணமுடியும் என் பதை உணர்ந்த நாவலர், பாடசாலைகள் நிறு விக் கல்விப் பணிபுரிந்தார். இதிலும் கல்வியைக் கலோனியலிஸ் ஆதிக்கக் கருவியாகப் பயன்
படுத்திய ஏகாதிபத்திய ஆட்சியாளரின் முனைப் பைச் சாடிஞர்.
ஏகாதிபத்தியம் நம்மவரை மீளா அடிமை களாக்க ஆன்மீக, கலாசாரத் துறைகளை தமது ஊடுருவலின் நச்சா யுதங்களாக உபயோகித்த தால் அதை எதிர்த்துப் போராடுவது, மதத்தை யும் பண்பாட்டையும், மொழியையும் காக்கப் போராடுவது ஒரு வரலாற்றுக் கடமையாகவும் தேவையாகவும் இருந்த ஒரு காலகட்டத்தில் இந்த வரலாற்றுப்பணியைச்செய்ததன் மூலமே நாவலர் ஒரு சரித்திர புருஷரானர்.
இவ்வாறு ஈழத் தேசியத்தின் காவல்ராக, மூலவராக நாவலர் பெருமான் வரலாற்றில் ஐக்கியமுற்றதுடன், அதன் தன்னிகரற்ற கருவி யும் ஆனர்.
3

Page 91
ஈழத்தில் தேசியத்தின் வித்தை, கருவைச் செறியச் செய்த நல்லைநகர்க் கோமானனின் இந்த மகோன்னதமான பணியின் தாக்கத்தின் பின்னர் இதே பணியை தென் இலங்கையில் அனகாரிக தர்மபாலா ஆரம்பித்தார்.
முதலில் நமது ஆறுமுக நாவலரும் பின்னர் அனகாரிகரும் துவக்கி வைத்த இந்த தேசிய விழிப்பு, எழுச்சி, இயக்கம் தான் பின்னர் நாட் டின் விடுதலை இயக்கமாக முகிழ்ந்து தேசிய சுதந்திரத்திற்கும், அடுத்து குடியரசாக நாடு மலர்வதற்கும் கால்கோளாகியது.
நாவலரின் இந்தப் பாத் திர த்தை முழு நாடும் இன்று ஏற்றுள்ளது. நாவலர் பிரானுக் கும் மற்றும் நான்கு தேசிய வீரர்களுக்கும் தபிால்தலை வெளியிட்டுக் கெளரவித்த அரசு அதன் வெளியீட்டில் இந்த வரலாற்று உண் , மைக்குப் பின்வருமாறு முத்திரை குத்தியது:
** இவர் வட இலங்கையில் வெற்றிகரமாக ஆரம்பித்த சீர்திருத்த இயக்கம் தென் இலங்கையில் வணக்கத்துக்குரிய குணுனந்த தேரரும், அனகாரிக தர்மபாலாவும் ஆரம் பித்த இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இருந் தன. உண்மையில் அவர் அந்நிய ஆட்சிக்கு மறுப்புத் தெரிவிக்கும் இயக்கத்திற்கு வி த் டார். அதுவே பிற்காலத் தலைவர்கள் சுதந் திரம் பெற உழைப்பதற்கு மூல வித்தாயிற்று.??
நாவலரின் பாத்திரம் தேசியத்திற்கு, விடு தலை இயக்கத்திற்கு வித் திட்டவர் என்பதுடன் முற்றுப்பெறவில்லை. அதற்கப்பாலும் அது செறிந்து பின்னர் முகிழ்ந்த ஜனநாயக இயக்கத் திற்கும் சமூக மாற்ற இயக்கத்திற்கும் அடி கோலிய முதல் புருஷர் என்ற வெளிப்பாட் டைப் பெற்று நிற்கிறது.
ஒரு வரலாற்றுப் புருஷர், முன்னேடி மேதா விலாசம் தனது காலத்தின் முக்கிய தேவைகளை, உடனடிப்பணிகளை பிரதிபலிப்பதுடன் மட்டுப் நின்றுவிடுவதில்லை. அவர் காலத்தைக் கடந்து காலத்தை வென்று தனது காலத்திற்கும், எதிா காலத்திற்குமான திசைகாட்டியாக, வரலாற் றின் முன்போதலுக்கு அடியெடுத்துக் கொடுப்பு வராகத் திகழ்வார். இந்த வரலாற்றுப்பாத்திர முழுமையை நாவலரின் இயக்கங்களில், பண களில், கருத்துருவங்களில் பரக்கக் காணலாம்.
ஒரு மா பெரும் வரலாற்று நாயகனுக்கு உள்ள பெரும் இலட்சணம், சிறப்பம்சம் மக்களை

நேசிப்பதும், மக்களுக்காகச் செயல்படுவதும், மக்களில் நம்பிக்கை வைப்பதுமாகும்.
சைவத்தை நேசித்த, தமிழை நேசித்த, தமிழர் பண்பாட்டை நேசித்த நாவலர் மக்களை நேசித்தார். மக்களுக்குப் பணிசெய்தார். மக் களை தம்பினர். தனது பணிகள், இயக்கங்கள் அனைத்திலும் மக்களையே மூலமாகவும் ஆதார மாகவும் கொண்டார். மக்களின் வாழ்வு சிறக்க, செழிக்க, செம்மையுற சதாசர்வமும் உழைத்த அவர் ஜனங்களுக்காக மக்கள் இயக்கத்தை நடத்தினர், மக்களுக்கான ஜனநாயகக் கருத் துருவங்களை முன்வைத்தார்.
மக்களை நாடும், மக்களைத் திரட்டும் இந்தப்9 பண்பை அவரது சகல நடவடிக்கைகளிலும் அவதானிக்கலாம்.
சிவத் தொண்டுக்கு,  ைச வம் காக்கும் பணிக்கு அவர் சைவ மக்களைத் திரட்டினர். மக்களின் கூட்டங்களைக் கூட்டி ஊர் ஊராகப் பிரசங்கங்கள் செய்தார். இவற்றின் மூலம் உறங்கிக் கிடந்த மக்களைத் தட்டியெழுப்பி அவர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தினர். மக்களைத் திரட்டும் மக்கள் இயக்கப் பண்பை முதன் முத லில் பிரக்ஞை பூர்வமாகத் துவக்கிவைத்தார்.
அவர் பிரபுக்களிடமும் மேல்தட்டு ஐஸ்வரிய வான்களிடமும் தனது பணிக்கு ஆதரவு திரட்ட வில்லை. மாருக சாதாரண மக்களிடமேயே போனுர்,
* சனங்கள் இந்த சிவ தர்மத்தின் பொருட்டுப் பணமாகவேனும், மரம், கல், சுண்ணும்பு முதலிய உபகரணங்காகவேனும் தங்களால் இயன்றது கொடுத்தல் வேண் டும் ** என்று மக்களிடமே தான் உதவி கேட்டார்.
" தங்கள் வீடுகளிலே போடப்படுகிற குட்டான்களிலே நாளொன்றுக்கு ஒரு பிடி அரிசி போட்டு* தமிழ்த் தொண்டுக்கு, மதப் பணிக்கு உபகாரம் செய்யுமாறு மக்க ளிடம், அன்ருடம் காய்ச்சியான ஏழை மக்களிடம் வேண்டிக்கொண்டார்.
பொதுப் பணிக்கு ஆதரவு திரட்டும் இயக் கத்திற்குக் கூட வெகுஜனத்தன்மையை அளித் தார். எந்தப் பணியும், எந்த இயக்கமும் மக் களையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என் பதையும், மக்களைத் துறந்து ஒரு சில பணம் படைத்தவர்களை ஆதாரமாகக் கொள்ளும்

Page 92
எந்த இயக்கமும் தர்மத்தின்பாற்பட்டதாக இருக்க முடியாது. என்பதையும் உணர்ந்த நாவ லர் மக்களையே மகேஸ்வரனுகக் கொண்டார்.
சிவநெறி பரப்பத் தொண்டர்களைத் திரட் டியபோதும் நாவலர் இவர்களை ஏழைகளான மக்கள் மத்தியிலிருந்துதான் தெரிவு செய்தார். இலவச உடையும், இலவச உணவும் இலவசக் கல்வியும் அளிக்கப்பட வேண்டிய நிலையிலிருந்த பஞ்சையர்கள் மத் தி யிலிருந்தே தமிழ்த் தொண்டர்களைத் திரட்டினர்.
தமிழை, பண்பாட்டை, ஆன்மீக நெறியை மேற்தட்டினர் புறக்கணித்து ஆத்ம சோரம் Nபோனதையும், நலிந்துபட்ட மக்கள் வெயர்வை சிந்தி உழைக்கும் மக்கள் நமது பண்பாட்டின் பரம விசுவாசிகளாக, மெய்க்கா வர்களாக இருப்பதையும், அவர்களின் வாழ்வு சோரம் போகாதிருப்பதையும் கண்ட நாவலர் இந்த உழைத்து வாழும் ஏழ்மைப்பட்ட மக்களால் தான் நமது பண்பையும் பனபாட்டையும் தேசத்தின் தன்மானத்தையும் காக்க முடியும் என்பதை உணர்ந்தார்.
நாவலர் குரு குல கல்வி மரபில் வந்தவர். தனக்குப் பின்னல் ஒரு சிஷ்யப் பரம்பரையையே விட்டுச் சென்றவர். ஆனல் இந்தச் சிறிய குரு குல வட்டத்திற்குள் கல்வி முடங்கி நிற்பதை அவர் விரும்பவில்லை. மாரு க கல்வி பரந்துபட்ட மக்கள் பகுதியினரை அடைய வேண்டும் என விரும்பினர். இந்த நோக்கம் ஈடேற தானே முன்னின்று பாடசாலைகளை நிறுவினர்.
" ஊர் தோறும் பள்ளிக்கூடங்களைத் தாவித்து உங்களுக்குள்ள்ேயே கல்வி அறி வொழுக்கங்களிற் சிறந்த மேலோர்களைக் கொண்டு அவற்றை நடத்துவியுங்கள் ‘’ என்று அவர் மக்களை வேண்டினர்.
இவ்வாறு கல்வியை மக்க%ரி. ம் கொண்டு சென்றதுடன், மக்கள் மத்தியில் கல்வியைப் பரப்ப ஒரு வெகுஜன இயக்கத்தையே நடத்தி ஞர். கல்விக்கு வெகுஜனத் தன்மை அளித்த நாவலர் அதை ஏழை மக்களுக்கு வழங்குவதற் காக இலவசக் கல்வித் திட்டத்தை சொல் லொணு இடுக்கண்களுக்கு மத்தியில் ஆரம்பித்து நடத்தினுர். பாதிரிகள் கல்வியை ஒரு கலோ னிய லிஸ் ஆயுதமாக பணம்படை த்த வர்க்கத் தினர்க்கு பணத்திற்கு ஊட்டிய அதே வேளையில் நாவலர் அதே கல்வியை தனது விழிப்பியக்கத் திற்கு ஒரு கருவியாக உபயோகித்து, நலிந்து
8.

பட்ட வர்க்கத்திற்கு அளித்தார். ஏழைகளே கல்விக்குரியவர்கள் என்பதைக் கண்டார். அத் துடன் பின்னர் வத்த இலவசக் கல்வியின் மூலபிதாவானுர்,
இலக்கியத் துறையிலும் கூட மக்களை நாடும் மக்களிலக்கியப் பண்பு நாவலரில் முளை யிட்டு முகிழ்த்த தைக் காணலாம்.
ஒரு சிறு கூட்டம் பண்டிதர்களின் வட்டத் திற்குள் அடைபட்டுக்கிடந்த இலக்கியத்தை அச்சிறையிலிருந்து விடுவித்து அதைப் பரந்த மக்களிடம் எடுத்துச் சென் முர். சுவடி உருவி லிருந்த பழம் பெரும் இலக்கியங்களைப் பதிப் பித்து பல்லாயிரம் மக்களுக்கு அளித்த அவர் யாவரும் எளிதில் அறிந்து உய்யும் படி?
சாகித்தியங்கள் படைக்கப்பட வேண்டு ம் எ ன் று வலியுறுத் தினர். ** யா வருக்கும் எளிதில் ' என்பதன் மூலம் இலக்கியம்
நலிந்துபட்ட பாமர மக்களுக்குப் புரிந்துகொள் ளத்தக்கதாக இருக்க வேண்டும் என்றும், அது அந்த யாவருக்கும் ' உய்வை" விடுதலையை, விமோசனத்தை அளிக்க க் கூடியாதாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியதன் மூலம் இலக்கியத்தின் சமுதாயப் பாத்திரத்தை, மக்க ளியக்கப்பண்பை நாவலர் பவ்வியமாக எடுத்து
நிறுவினர்.
இலக்கியத்தைத் தமது போராட்டத்தில் ஒரு சாதனமாகக் கொண்ட நாவலர் இலக்கி யத்தையும், பிரசுரங்களையும், பத்திரிகைகளே யும் மக்கள் மத்தியில் பரப்பவும், இவற்றின் மூலம் மக்களைத் திரட்டவும் அச்சகம் நிறுவி வெளியீட்டு முயற்சிகளை மேற்கொண்டார்.
வசன நடை கைவந்த நாவலர் தனது கனல் பறக்கும் எழுத்துக்கள் மூலம், காட் டாற் று வெள்ளமாகப் பெ ரு க் கெடுத்த சொன்மாரி மூலம் த மிழை யும் சைவத்தோடு சேர்த்து தனது இயக்கத்தின் கருவியாக, கேடயமாகப் பாவித்தார்.
தமிழ் வெறுமனே பூஜிக்கப்பட வேண்டிய பொருள், மாருக் காதலுக்குரிய வஸ்து அல்ல, மாருக அது மக்கள் இயக்கத் தேவைக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதம் என்பதை நடைமுறையில் நாவலர் காட்டினர். இவ் வாறு தமிழுக்கும் தமிழின் எழுத்து நடைக்கும் ஒரு புதிய அர்த்தத்தையும் வீறையும் அளித் தார். இலக்கிய நயத்தைச் சுவைத்து மதித்த அதே வேளையில் சொல்லின் , கருத்தின் காத்
20

Page 93
திரத்திற்கும் கனத்திற்கும் கூடுதல் அழுத்தம் கொடுத்ததன் மூலம் அவர் எழுத்து நடைக்குப் புதுப் பண் பினை, வெகுஜ த் தன்மையினை, போர்க்குணத்தினை அளித்தார்.
மதத்தையும் தமிழையும் தனது மக்களி யக்கத் தேவைக்குப் பயன்படுத்திய ஆறுமுக ஞர் தனது உணர்வுகளுக்கும் போராட்டத் தேவைகளுக்கும் உணர்வு வடிவம் மட்டுமல்ல ஸ்தாபன உருவமும் கொடுக்கும் வகையில் சைவ சமாஜத்தைத் தோற்றுவித்தார்.
இதன் மூலம் மக்கள் விழிப்பு, எழுச்சி. இயக்கம் என்ற நிலையிலிருந்து மக்கள் ஸ்தாபன அமைப்பு என்ற மக்களிய கத்தின் உயர் கட்டத்திற்குச் சென் ருர்,
இவை அனைத்தும் சிவ சக்தியில் நம்பிக்கை வைத்து தனது வரலாற்றுக் கடனை, கைங் கரியத்தை ஆரம்பித்த நாவலர் மக்களை நாடி அந்த மக்களின் ஜனசக்தியிலேயே முழு நம்பிக்கையை வைக்கவும், அதையே தனது இயக்கத்தின் ஆதார விசையாகக் கொள்ளவும் ஆரம்பித்தார் என்பதைக் காட்டுகின்றன.
தனது இயக்கப் பணிகளுக்கு மக்கள் சக் தியை ஆதாரமாகக் கொள்ள ஆரபித்ததும் நாவலர் சமய எல்லையைக் கடந்து வாழ்வைப் பாதிக்கும் ஏனைய பிரச்னைகளிலும் சித்தம் செலுத்தினர். சிவச் சீலர் ஆக்ரோ ஷம் நிறைந்த, தர்மாவேசம் கொண்ட கிளர்ச்சிக் காரராக மாறினர்.
இவரது இந்த சமூகப் போராளித் தோற் றப்பாடு மூன்று நிலைகளில் வெளிப்பாடு பெற்றது.
கோயில்களில் மலிந்துகிடந்த ஊழல்களை எதிர்த்தும், நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் சீர் கேட்டை எதிர்த் தும், அந்நியராட்சியினது கொடுமையையும் எதிர்த்தும் அவர் எரிசர மாகப் போராடினர்.
கோயிலைதிகாரிகளையும், கோயில தி பர் களாக இருந்த நிலைப்பிரபுக்களையும் எதிர்த்து. போராடிய நாவலர் மக்களின் பிரசனைகளைத் தட்டிக்கழித்து, மக்கள் குறை தீர்க்க முனையாது லஞ்சத்திலும், ஊழலிலும், ஊதாரித்தனத் திலும் தர்மத்தை மீறித் தமது குலாமிகளுக்கு உபகாரம் செய்வதிலும் ஈடுபட்டிருந்த அதி சார வர்க்கதினரை எதிர்து மக்கள் சார்பில் நெஞ்சுரத்துடன் போராடினர்.

1876-ம் ஆண்டுகளில் கொடிய பஞ்சமும் வாந்தி பேதியும் யாழ்ப்பாணத்து மக்களை வதைத்தது. நோயாளிகளுக்கு ச் சிகிச்சை அளிக்கவும், கஞ்சித் தொட்டி வைத்துக் கஞ்சி உஊற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதி லும் இவை உத்தியோகஸ்தர்களால் முறையா நடத்தப்பட வில்லை, அன்று வெள்ளையராட் சியின் பிரதிநிதியாக யாழ்ப்ப்ாணத்திலிருந்த து ைவனந் துரை வீடுகளில் புகுந்து துணிமணி களைக் கொழுத்தி மக்களை இம்சைப்படுத்திஞ்ன்.
அன்றைய ஆட்சியாளரும் அவர்களின் அடிவருடிகளும் மக்களுக்கு எதிராக இழைத்த இக்கொடுமைகளைக் கண்டு நாவலர் பிரான் அடலேழுகச் சீறிப் பொங்கினர். மக்களின் கூட்டங்களைக் கூட்டினர். துவைனம் துரையை யும் அவரது உத்தியோகப் பரிவாரத்தினரை யும் கண்டித்தார். யாழ்ப் பாண ம் வந்த கவர்னர் லாங்டனிடம் மக்கள் சார்பில் ஒரு வின்ணப்பத்தைக் கையளித்தார்.
*" சென்ற சில ஆண்டுகளாக பஞ்ச மும் பேதியும் யாழ்ப்பாணத்தைக் கடுமை யாகப் பிடித்து வருகிறன. இப்போதுள்ள ஏஜண்டு துவை ன ந் துரை வந்தது முதல் சென்ற மூன்று ஆண்டுகளாக நாங்க ள் படுந்துயரம் சொல்லி முடியாது ' என்று அந்த விண் ணப் பதில் மக்கள் துயரை நெஞ்சு நெக்குருக வர்ணித்தார்.
அதிகாரிகளின் அட்டூழியங்களை அவர் சீற் றத்துடன் சித்தரித்தார்:-
**குலாமிகளின் உறவினர்க்கெல்லாம் வேட்டைதான், வேலைதான். சில இடங்க ளில் உறவினரே உடையாரும் நொத்தேரிசு மாகி அட்டூழியம் செய்கிருர்கள். பத்திரப் பதிவுகளில் படுமோசம் நடக்கிறது,
* பாதை போடுவதற்கென்று ஏஜண்டு தன் குலாமிகளின் பேச்சையே கேட்டு நல்ல கனிமரங்களை வெட்டிச் சாய்க்கிருர்; வேலி களைப் பிரிக்கிருர்; வீடுகளை இடிக்கிருர்; நிலங்களை ஆக்ரமிக்கிருர்!!
ஏழை விவசாயிகள் மீது கடு வரி விதிக்கப் பட்டதை நாவலர் கடுமையாகக் கண்டித்தார்.
'நெல் விளைவில்லாது கொடிய பஞ்சம் எம்மைச் சூறையாடுகிறது. இப்போது இரக்
கமில்லாது கடு வரி வசூலிக்கப்படுகிறது. சர்க்கார் உத்தரவின்படி விதை நெல் கூட

Page 94
எங்களுக்குக் கிடைக்கவில்லை. இதனுல் பல விளை நிலங்கள் த ரிசாக க் கிடக்கின்றன. நஷ்டம் ஏராளம். இப்போது நல்ல மழை பெய்தும் விதைப்பில்லாமல் விவசாயிகள் பாடு திண்டாடுகிறது.
"பஞ்சமும் பேதியும் மக்களைக் கொல் கின்றன. நிலமை அறிந்தும் ஏசன்டுத் துரை ஒரு பரிகாரமும் செய்யாமல், எ ல் லாம் செய்துவிட்டதாக வெளிக்குக் காட்டுகிறர்'
இவ்வாறு ஆளவந்தோரை எதிர்த்து விவ சாயப் பெரு மக்கள் சார்பில் நாவலர் இடி யேருகக் கர்ஜித்தார்.
ஆணுல் வெள்ளைக்கார கவர்னர் நயமாகப் பேசி ஆளை அனுப்பி விட்டார். அதிகாரிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்தது. இதனுல் மனம் குமுறிய நாவலர் போராட்டத்தைக் கைசோர விடவில்லை, அவர் தொடர்ந்து கிளர்ச்சி செய்தார். மக்களைத் திரட்டி இயக் கம் நடத்தினர். இதன் பயணுக ஒரு விசார ணைக் கமிஷன் வந்தது.
அப்போது **யாழ்ப்பாணிகளே விழித்துக் கொள்ளுங்கள் இது சமயம். கிறிகோறி வந்த பொழுது, து ைவனந்துரை தந்திர வேலை செய்து தாகீழ்ப்பட்ட உத்தியோகத் தர்களைக் கொண்டு நாடகம் நடத்தி தமது குற்றங்களை மறைத்துவிட்டார். தம்மீது வந்த வழக்குகளையெல்லாம் தந்திர மாக விலகச் செய்து அநியாய ராச்சியம் நடத்து கிருர்’ என்று நாவலர் வெள்ளைக்கார ஆட்சியாளரின் அநியாய ராச்சியத்தை எதிர்க்க மக்களைத் தர்மாவேசத்துடன் தட்டி எழுப்பினுர்,
**சனங்களே உங்கள் மேல் வைத்த இரக்கத்தினுலே சொல்லுகிறேன்; கேழுங் கள்: உங்களுக்கு இது நல்ல சமயம், தப்பி ஞல் வேறு சமயம் வாய்க்காது. நீங்கள் திரண்டு நின்று கமிஷனர் முன் து ைவனந் துரையின் தீமைகளையும் அட்டூழியங்களை யும தைரியமாக மறைப்பின்றி வெளிப்படுத் துங்கள்.
** மாபாவிகளாகிய உத்தியோகஸ்தர்க ளுக்குப் பயத்து, உங்கள் தலையிலே மண்னே வாரிப்போட்டுக் கொள்ளாதீர்கள்' என்று மக்களைத் தைரியமாகப் போராடத் தூண்டி ஞர்.
e 9

யாழ்ப்பாணத்திலே அதிகார வர்க்கம் நடத்திய அட்டகாசங்களை, மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளை பூரீ குமாரசாமி மூலம் சட்ட நிரூபண சபையில் நாவலர் அம்ப லப் படுத்துவித்தார். சட்ட நிரூபண சபையில் நடத்துவித்த போராட்டத்திற்குப் பக்கடல மாக வெளியே மக்களைத் திரட்டி நாவலர் வெகுஜன இயக்கம் நடத்தினுர்,
**இது நிர்வாக நிலைக்களமல்ல. இங்கு நீதி யும் நியாயமும் இல்லை. இது கள்ளரின் ஆட்சிக் குகை! என்று யாழ் கச்சேரியைச் சுட்டிக் காட்டி அதிகாரத் தன த்தை நாவலர் சாடினுர்.
இவ்வாறு எங்கும், எப்போதும் நாவலர் மக்களை நேசித்தார், மக்களின் நலனுக்காதப் போராடினர். விதை நெல் மு த ல் கஞ்சித் தொட்டி வரை மக்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்தார். மக்களின் சார்பில் நீதிக் கும் நியாயத்திற்குமாக உயிரைத் துச்சமாக மதித்துப் போரிட்டார். இந்தப் போராட்டம் அதர்மத்தை எதிர்த்து நீதிக்காக அவர் நடத் திய போராட்டம் நாவலரை ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எ தி ரா க த் திருப்பி விட்டது.
ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து மக்களின் நலன் காக்க நாவலர் நடத்திய இயக்கமும் போராட்டமும் அ வ ரை மக்களொருமைப் பாட்டு நிலைக்கு உயர்த்தியது.
பாதிரிகளையும் பரதேசி/ஆன்மீக ஊடுரு வலையும் எதிர்த்து மதம் காக்கும் இயக்கத்தில் துவங்கிய நாவலர் மக்களுக்காக அவர்களின் நலன்களுக்காகப் போராடிய போது மத, இன வேறுபாடுகளையும் தாண்டி அனைத்து மதங்களை யும் இனங்களையும் சே ர் ந் த மக்களையும் பொதுப் போராட்டத்தில் ஒன்று திரட்டி ஞர். இவர்கள் அனைவரினதும் நலன்களுக்கி டையில் ஒரு ஒருமைப் பாட்டைக் கண்டார், *யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக்கள், கிறிஸ்தவர் கள், முகம்மதியர்கள் என்கின்ற சனங்கள் இப் பொழுது இரண்டு மூன்ற வருஷ் காலம் என்ன நிலையில் இருக்கிறர்கள். துவைனந்துரையின் சிநே கிதர்களான சில உத்தியோகஸ்தர்கள் தவிர மற்ற வர்கள் துன்பமே அனுபவிக்கிறர்கள்’ என்று கூறி துன்பப்படும் எல்லா மக்களினதும் துய ரம் துடைக்க அவர் அந்த அனைத்து மக்களை யும் பொதுப் பி ர ச் ச னை க ளி ல், பொதுப் போராட்டங்களில் ஒன்று திரட்டினர்.
2.

Page 95
*சனங்களே, குமாரசாமி உங்கள் பொருட்டுப் பிரயாசைப்படுகிறர். இது நல்ல சமயம்; வைணவர் கிறிஸ்துவர், முகம்மதியர் அனைவருக்குமே நல்ல з шош шо. 95 சமயமும் இல்லாதவருக்கும் நல்ல சமயம்" என்று எல்லாச் சமயத்தவர்களை மட்டுமல்ல, சமயமற்றவர்களைக் கூட ஒன்று திரண்டு போராடுமாறு சமயம் காத்த நாவ லர், சைவம் வளர்த்த நாவலர் அறைகூவி அழைத்தார். மக்களின் பிரச்சனைகள் வரும்
து எல்லா வேறுபாடுகளையும் கடந்து அந் தப் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மக்களை ஓரணி திரட்டுவதன் அவசியத்தை அவர் உணர்த்தினர்.
* சைவத்திற்காக, தமிழுக்காக, இவற்றின் தனித்துவத்தைப் பேணுவதற்காக உழைத்த ஒப்பற்ற சிவச் சீலர் மக்களின் பொதுப் பிரச் னையில் எல்லா இன, மதமக்களையும் ஒன்று திரட்டியதன் மூலம் தேசிய ஒருமைப்பாட் டிற்கான நேர் வழி காட்டினர். இத்தகைய ஒற்றுமை மக்கள் நலனிலும், அதற்கான போராட்டத்திலும்தான் ஜனிக்கிறது என்ப தையும் நடைமுறையில் மெய்ப்பித்தார்,
 

மக்களை நேசித்து பின்னர் மக்களின் நலன் காக்கப் போராடிய நாவலர் இறுதியில் தீவிர அரசியலிலும் குதித்தார். பொன்னம்பலம் ராமநாதனை சட்ட சபைக்கு அனுப்பப் பேரி யக்கம் நடத்தினர். 'எங்கள் உள்ளமறிந்த நண்பர்; எங்கள் குறையறிந்து நிறைவு செய்யத் தக்க ஒருவர் இவரே" என்று இராமநாதனுக்காக வாதிட்டார். இதிலும் ‘மக்களின் உள்ளம் அறிந்து", அவர் தம் * குறைதீர்க்கும் ஒருவ ரையே மக்கள் பிரதிநிதியாக்க முனைந்தார். இதில் வெற்றியும் கண்டார். மக்களின் பிரதி நிதி மக்களின் அபிலாஷைகளைப் பிரதி பலிக்க வேண்டும் என்பதற்காகவே அந்நிய செல் வாக்கின் கீழ் இருந்த பிரிட்டோவை எதிர்த்து ராமநாதனுக்கு வெற்றி சேர்க்க இமை சோராது போரிட்டார்,
ஹிந்துக்களின் சீர்திருத்தச் செம்மல்" என சட்டசபையில் நாவலரை வர்ணித்த பொன் ராமநாதன் இவரது ஆழுமை வீச்சுக் குட்பட்டு தேசிய ஒருமைப்பாட்டின், தேசிய உணர்வின் ஒப்பற்ற பிரதிநிதியானமை ஒன் றும் தற்செயலானதல்ல.
93

Page 96
நாவலர்
జ్యోల్లోTజోడ2
நாவன் மை யு டை ய வ ர் நா வ ல ர். நாவன்மை: சொல்வன்மை. நாவுக்கரசு சொல் லாளுமரசு, அரசியல், பொருளியல், ஆராய்ச்சி யியல் என்பன முதலாகிய கல்வித் துறை தோறும் அவ்வவற்றை அறிஞர் கூட்டங்களில் எடுத்து விளக்கிச் சொல்லவல்ல நாவலர் உளர்.
பல்வேறு தமிழ் நூற் கடலிலே திளைத் தவ ராய் அதன் உள்ளுறைகளையும் தம் ஆய்வு நுட் பங்களையும் மக்கட்கு நலனும் நயமும் பயக்கும் அரிய செய்திகளையும் மன்றுதொறும் எடுத்துக் காட்டிக் கேட்டாருள்ளங் கிளர் விக் குஞ் சொன் மழை பெய்து அறிவுப் பயிர் வளர்த்த பெருமுகிலாகி மக்களிடை வாழ்ந்து வந்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகம் என்னும் புலவர் பெருமகளுர்,
அச்சான்ருேரைத் தேடிவந்தது நாவல ரென்னுஞ் சிறப்புப் பெயர். அத்தகுதிப் பெயரை அவர்க்களித்துப் பெருமைபடுத்திப் போற்றிய பெரியார் தமிழகத்திலே திருவாவடு துறைச் சைவாதீனப் பாழித் தலைமையடிகள் அடிகளது மரபு திருக்கயிலாய பரம்பரை. அம் மரபின் முதல்வர் திருக்கயிலாய மலையில் வீற் றிருந்தருளுஞ் சீகண்ட உருத்திர வடிவமான சிவபெருமான். அதனுல் யாழ்ப்பாணத்து நல் லூர்ப் பெரும் புலவர் ஆறுமுகனுர்க்கு நாவல ரென்னும் புகழ்ப் பெயர் சூட்டி வாழ்த் தின வர் முற்றுமுணரு முதற் கடவுளாகிய சிவபெரு மானே யாவர். திருவாவடுதுறை யாதீனத் தலை வருஞ் சிவபெருமானே யாவர்.
el 9

பெருமான்
ண்டியனுர்
سمینامی همهی میسه الاسم
இக்காலத்திற் போலத் தகுதியில்லாதவர்க் குத் தகுதியில்லாதவர் அளிக்கும் வரிசைப் பெயர் போன்றதன்று நாவலரென்னும் வரி சைப் பெயர். வரிசையளித்தாரது பெருத்தகு திக் கேற்ற பெருந்த குதி சிறந்தார்; வரிசை பெற்ருரும். இவ்விரு சாராரைக்காட்டிலும் வரிசை யளித்தற்கும் வரிசை பெறுதற்குந் தகு தியுடையவர் எங்குமில்லை.
** சிவனெனு நாம ந் தனக்கே யுரிய செம் மேனி யெம்மான்' போல நல்லூர்ப் பெருந் தகையும் நாவல ரென்னும் வரிசைப் பெயரைத் தமக்கே யுரியதாக்கிக்கொண்டார்.
நாவலர் புலவரும் வணங்கும் புலமையா ளர். பகைவரும் வணங்கும் பண்பாட்டாளர். கூற்றும் வணங்கும் ஆற்றலாளர். இமையவரும் வணங்கும் இறையடிமையாளர். கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டாளர்: பிறர் நலம் பேணும் பெகுந்த கையாளர்; தொல் குடி பேணும் நல்லறிவாளர்; வழுவின் றிச் சொல் லும் வாய்மையாளர் துறவாது பேணுந் தூய் மையாளர்; வறியார்க்கீயும் வண்மையாளர்; நெறியாரைச் சாரு நீர்மையாளர்; உள்பொருள் காட்டும் உரைவல்லாளர்; காமங் கடியும் நேர் மையாளர்; ஒழுக்கம் காத்த லிற் பழிப்பிலாளர். * கூடுமன் பினிற் கும் பிடலேயன்றி வீ டும் வேண்டா வென்றியாளர் ' த ன க் கெ ன வாழாப் பிறர்க்குரியாளர்.
இன்ன பல நலனெலாம், இயற்கையாகவே நல்லூர் நாவலர் பால் ஒருங்கு குடிபுகுதற்குத்” தம்முள் இகலிக்கொண்டு விரைந்தெய்தின.
4.

Page 97
இவ்வாற்ருனே நல்லூர் நாவலர் பெரு மான் வையத்து வானுறையுந் தெய்வத்துள் வைத்துத் தொழப்படுந் தெய்வத்தன்மை யுடையரென்பது தெளியப்படும்.
இந் நல்லார் தமது ஈழ வள நாட்டிலே தம் அரு மருந்தன்ன தமிழுந் சைவமும் நலிவுற்று நைந்து சார்பு காணுது கலங்கிய நேரத்திலே அவற்றை ப் பாதுகாத்து நிலைபெறுத்துவது தமக்குக் கடமையும் உரிமையுமாமென முனைந் துந்து இடுக்கணழியாது முயன்று ஈழத் தமி ழினத் தின்னல் களைந்தார்.
இப்பெருந்தகைமையினுலே நாவலர் தாம் இல் வாழ்க்கை மேற்கொண்டின் பந் துய்த்தலை யும் இன்னதென இகழ்ந்தொருவினர்.
இவர் தமிழுஞ் சைவமுந் தழைப்பித்தற்குப் பட்டபாடும் இட்ட திட்டமும் அளப்பில.
நாவலர் தாமிட்ட திட்டங்களை நிறைவேற் றுதற்குத் தம் வாழ்நாள் இருக்குமோ? என்ற கவலையுள்ள மன்றி வேறு கவலையுள்ளமில்லாத வர் என்பது அவர் ஒரு தெய்வப் பிறப்பென் பதனை வலியுறுத்துவதாகும்.
இத்திருவாளரை யீ வெதற்கு ஈழம் எ வ் வளவு காலம் எ ன் ன தவஞ் செய்திருத்தல் வேண்டுமோ ?
இவர் கிரைத்த மதத்தினின்றுஞ் சைவமும் ஆங்கிலத்தினின்று தமிழுமீட்ட அரும்பெருஞ் செயல் தமது நாடாட்சியை மீட்டற்கு முதற் படியென்பது தானே விளங்கும். அதனுல் இவர் தமது நாடாட்சியுரிமை மீட்புப் போர்க்குக் கால்கோள் செய்த முதல்வரெனப் போற்றத் தருவர்.
அந்நாவலர் இன்றிருந்தால் பெளத்தத் தினின்று சைவத்தையுஞ் சிங்களத்தினின்று தமிழையு மீட்டுப் பாதுகாத்தற்குப் பொங்கி யெழாது வாளா விருப்பரோ ? என்ன செய் ολι Π Π Ρ
வேறு எ வ் வி ன த் துக் குங் கிடையாது கிடைத்த தமிழினத் தலைவராகிய நல்லூர் நாவ

லர்க்கு விழாக் கொண்டாடுதலும் நடு கல் வைத்துக் கோயிலெடுத்தலும் அவரது வரலாற் றுப் புகழை யெழுதிப் பரப்புதலும் அவர் வழி கடைப்பிடித்தலும் தமிழினத்துக்கின்றியமை யாக்கடமையும் செய்ந்நன்றி மறவாமையுமாம்.
நாவலர் பெருந்தகைக்குச் செய்யும் விழாக் கொண்டாட்டம் தமிழுக்குஞ் சைவத்துக்கும் தமிழ்ப் புலவரெல்லார் கும் புலவர் முதல்வனுகிய இறைவற்கும் நாயன்மார் நால்வர்க்குஞ் செய் யும் விழாக் கொண்டாட்ட மாம்.
நாவலர் நாயனருமாயினர்.
இனிப் பிறரை நாவலரென்பாரது நாவலு ருடையதாம். (நா அலருடையதாம்) அலர்: பழிச் சொல்.
ஆயிரம் இடம் புரிச் சங்குகளுக் கிடையில் ஒரு வலம்புரிச் சங்குண்டாகுமென்பர். அது போல மக்கள் பன்னுாருயிரவர்க்கிடையில் நல் லூர் நாவலர் பெருமான் போல ஒருவர் தோன்றி வாழ்வர். அவர் வலம்புரிச் சங்கு போல நன்மக்களா னன்கு மதிக்கப் பெற்றுப் பொலிவுறுவர்.
நாவலரும் வலம்புரிச் சங்குபோலத் திரு நீற்றுப் பூச்சினல் உடம் பெங்கும் வெளுத்துத் தோன்றித் திருக்கோயில்களிற் பெருஞ் சொன் முழக்கஞ் செய்து கடவுளன்பரை யழைக்குந் திருப்பணி செய்துபோந்தார்.
நாவலர் தமிமுஞ் சைவமுங் காக்குமுகத் தான் மக்கட்குச் செய்த தொண்டே உண்மை யிற் கடவுட்குச் செய்த வழிபாடாம்,
* விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்
நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் " என்ற திருக்குறளின் பொருட்கு எடுத்துக்காட்டாகித் திகழ்ந்த சொற்செல்வர் திருபெருந் திருவாளர் நல்லூர் ஆறுமுக நாவலரது புகழுடம்பு நீடூழி
வாழ்க.

Page 98


Page 99


Page 100
s 9ਰੰਗ தொழிலே 弱 ஆக்கத் தொ! வழுவிலாத் தமிழ் நூல்களே ஃழங்கியவர் "அவர் அடிச்சீட்டைப் பின்பற்றி எழுந்த ஜயந்தியின் போது அவருக்கு அஞ்சலி ே
|-
втона. திருவுருவத்தை so தீட்டுவித்தவர் மெய்கண்டான் ஸ்தாபகர்
முன் வெளியிடப்பட்ட அந்தப் படத்தின்
நாலர் சி saiši பற்றமைெ மய்க 齡
நாவலர் மாநாட்டு மலர், நாவலர் மா
நாவலர் சில நாட்டு விழாவிலும்,
நாவலர் விழா அச்சு வேலைகளேயும் செ துக்கே கிடைத்தது. இது மெய்கண்டான் ஸ்
சம்பந்தமான ogógiáo
பனத்துக்கே சந்தர்ப்பம் ssionڑتي{
நல்லூரில் உள்ள JIbi I 5Ai au)ʻi மணி பாடசாலையை ஸ்த பகர் கமாக அமைத்து, 1973 ஆவணியில், நில்லு செய்யத் திருவருள் பாலித்திருப்பது
பெருமாவின் 50-வது
துண்செய்யுமுகமாக s قيا IT நெறிச் சங்கங்களுக்கு அன்பளிப்புச்
கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் இணயற்
நாவலர் 150வது ஜயந்தி விழாவி
திவ்வியமான விழா டிலரை அச்சிட்டு சகல வைபவங்களிலும் மு ன் நின்று பெரும்பேருகக் கருதி நெய்கண்டான் ஸ்
 
 
 
 
 
 
 

மிலாக ஈழத்தில் முதன் முதல்
நா வல ர் பெ ருமி 1 ன்.
೩೧: A lšŪajās
சலுத்துகிறது.
வண்ண ടി. மாக தன் முதல் | Զրոյի: وجھہ கந்தையா 43 வருடங்களுக்கு மூவர்ண அச்சுப் ügou அடியொற்றியே டான் ஸ்தாபனம் பெற்ற பெரும்போகும்
நாவலர் மாநாட்டு விழாவிலும் ஈடுபட்டு,
5 (6. விழாக் காட்சி மலர் உட்பட, சகல. பயும் திருப்பணி மெய்கண்டான் ஸ்தாபனத் தாபனம் பெற்ற அரும்பெரும் பாக்கியமே 8
5)අැග්‍රි. 6ենաօրն மெய்கண்ட மற்ருெ தற்பேருகும்
ఎత్తే
ண்டபத்தின் அருகில் நாவலர் வேதாகமப்
அமரர் ஆ. கந்தையா அவர்கள் ஞாப ாரான் உற்சவத்தின் போது திறப்பு விழாச் மய்கண்டான் செய்த தவப் பயனுகும்.
*
இயந்தி விழா para േ எங்கனும் நாவலர் சில்களத் தயாரித்து சம
செய்ய மெய்கண்டான் ஸ்தாபனத்துக்குக்
இன்போது உங்கள் கையில் தவழும் இந்த வளியிடவும், விழாவையொட்டிய ƯDj)_m) tử.
உழைக்க வும் கிடைத்த நல்வநய்ப்பினே
Li போற்றி H#jä)ಿಶ್ರಿ!