கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முருகன் பாடல் 3

Page 1


Page 2


Page 3

T-- *
'r',***

Page 4

முருகன் பாடல்
மூன்றாம் பகுதி
தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட்
98, ஜிந்துப்பிட்டி தெரு கொழும்பு-11, இலங்கை.

Page 5
உரிமை பதிவு ஆங்கீரச ஆவணி திருவள்ளுவராண்டு 20 23 1992 ஆவணி
ஆறு பகுதிகள் கொண்ட ஒரு தொகுதியின் விலை. இலங்கையில் : ரூபா 2100|- இந்தியாவில் : ரூபா 900/- பிறநாடுகளில் அமெரிக்க டாலர் 50|-
மூன்றாம் பகுதி உருவாக அணி செய்தவர்: திரு. வி. சங்கர் அவர்கள், கொழும்பு.
ஒளிஅச்சுக்கோப்பு, அச்சிடல்: கிரந்தனகம், 4, முதல்மாடி, 834, அண்ணாசாலை, சென்னை-600 002. தொலைபேசி: 834505, 8250050.

பாட்டு முதற் குறிப்பு அகராதி பாட்டுடைக் கோவில் அகராதி பாட்டுத் தலைப்பு அகராதி ஆசிரியர் அகராதி
என்பன
ஆறாம் பகுதியில் இறுதிப் பக்கங்களாக உள. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும்
முன் பக்கங்களில் உள.
ROOBALASINGHAM BOOK DEPOT TRUST COMPLEX, 340, SEA STREET,
COLOMBO -

Page 6
நூலாக்கம்
பதிப்பாசிரியர்: சித்தாந்தச் செம்மல், சைவசித்தாந்த மாமணி வித்துவான் இரா. அம்பை சங்கரனார் ஆசிரியர், “சித்தாந்தம்' சென்னை. நூல் தொகுப்பு சேகரிப்பில் உதவி, ஆலோசனை: க. முத்துக்குமாரசுவாமி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்; புலவர் வெ.சா. ஏகாம்பரம், புலியூர், சென்னை; சி.என். சிங்காரவேல், சி.ஐ.டி. நகர், சென்னை; ந. ஜெயராமன், மேற்கு மாம்பலம், சென்னை; க. சோமசுந்தரம் பிள்ளை, இந்திரா நகர், சென்னை; சாது தங்கவேல் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் திருமடம்; புலவர் அ. வைத்தியநாதன், விழுப்புரம், புலவர் கோ. கதிர்வேல் முதலியார், ஆரணி, புலவர் ந. தண்டபாணி, புதுவண்டிப்பாளையம் சுப. ஆவுடையப்ப தேசிகர், அம்பாசமுத்திரம் மு.சு. சங்கர், திருநெல்வேலி, பீக்கே குமாரசாமிக்கவுண்டர், வெள்ளக்கோவில்; புலவர் வி. அண்ணாமலை முதலியார், பங்களூர் மயிலங்கூடலூர் க. நடராசன், யாழ்ப்பாணம்; க. சொக்கலிங்கம், நாயன்மார் கட்டு, யாழ்ப்பாணம்; க. சண்முகலிங்கம், சைவபரிபாலன சபை, யாழ்ப் பாணம்; முனைவர் நா. சுப்பிரமணியன், யாழ்ப்பாணம்; புலவர் த. கனகரத்தினம், வெள்ளவத்தை, கொழும்பு; க. கந்தசாமி, கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு; மு. கணபதிப்பிள்ளை, மறவன்புலவு, சாவகச்சேரி, வீரகேசரி, கொழும்பு; ஐ. குலவீரசிங்கம், கோலாலம்பூர், மலேசியா: க. ஆறுமுகம், கோலாலம்பூர், மலேசியா, ஈ.வி. சிங்கன், சிரங்கூன் தெரு, சிங்கப்பூர்; ப. படையாட்சி, ரோஸ்கில், மொரிசியசு, பீக்கே நாயுடு, தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம், நந்தி, பிஜி; ஐ.தி. சம்பந்தன், இலண்டன்; கே. எஸ். நடராசா, கனடா முனைவர் ஆ. கந்தையா, சிட்னி, ஆஸ்திரேலியா. நூலாக்கம், அகராதி, சுட்டி, குறிப்பு: முனைவர் நா. சுப்பிரமணியன், முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைகக் கழகம், யாழ்ப்பாணம். நூலாக்கம், மெய்ப்பு, மேற்பார்வை: புலவர் வெற்றியழகன், சென்னை. ஒளிஅச்சுக்கோப்பு, கணிப்பொறிப் பணி: க. இரவி, கோ. பார்த்தசாரதி, க. சாந்தி, ம. இராசப்பா, மூவை ந. சுந்தரராசன், அ. ஜெயராஜசிங்கம், சென்னை, பக்கமாக்கல்: ஒவியர்கள் சந்திரஹாசன், பூவரசு, சென்னை. படச்சுருள் எதிர்மறை: சக்தி வண்ண ஆய்வகம், சென்னை. அச்சிடல், கட்டுவேலை: பூரீ பாலாஜி கிளாசிக்ஸ், சென்னை. தங்க அச்சு, விநாய்கா டைஸ்டாம்பு, சென்னை, அலுவலக உதவி: செ. மணிமேகலை, அ. ஜெயராஜ சிங்கம், செ.ரா. ஷோபனா, அ. பூரீனிவாசன், பெ. ஜெகநாதன், சென்னை. நிதிக்கட்டுப்பாடு: தெ. அருணாசலம், சென்னை. பொதுத்தொடர்பு: இணைப்பு, மேற்பார்வை தெ. ஈஸ்வரன், கொழும்பு தயாரிப்பு: க. சச்சிதானந்தன், மறவன்புலவு, சாவகச்சேரி.

பொருளடக்கம்
வரிசை நூல் LJ355 எண் எண்
முதல்பகுதி
1. திருச்செந்தூர் அகவல் 2. கந்தரந்தாதி 3 3. திருச்செந்தூர் நிரோட்டகயமக
அந்தாதி 28 4. மருதமலை யமக அந்தாதி 33 5. கந்தரநுபூதி 4, 6 6 . கந்தரலங்காரம் 53 7. திருப்போரூர் அலங்காரம் 7 O 8. மருதமலை அலங்காரம் 84 9. திருமுருகாற்றுப்படை 9 8 10. திருத்தணிகையாற்றுப்படை 1 Ο 9 11. கதிரேசன்பேரில் ஆனந்தக் களிப்பு 2 12. ஆரணி ஞானியார் மடாலயத்துக்
கந்தருலா 44 13. கொடுமஞர் பூரீ சுப்பிரமணிய
சுவாமி ஞான உலா 66 14. திருஎழுகூற்றிருக்கை 7 4 15. கிளிக்கண்ணி 175 16. திருச்செந்திற் கலம்பகம் 85 17. மயிலாசலக் கலம்பகம் 212 18. கந்தர் கலித்துறை 2 4 6 19. பூரீ ஸ்கந்தகுரு கவசம் 26 20. கந்த ஷஷடிக் கவசம் 275 21. கதிர்காமத் திருமுருகன்
கீர்த்தனங்கள் 3 O 22. திருமலையாண்டவர் குறவஞ்சி 3 O 6 23. முருகக் கடவுள் மும்மணிக்கோவை 344 24. குமரகிரி மும்மணிக்கோவை 353 25. சங்கப் பாடல்களில் முருகன் 3 63

Page 7
பரிபாடல்
புறநானூறு சிலப்பதிகாரம் இன்னா நாற்பது ஐந்திணை ஐம்பது
இரண்டாம் பகுதி
26.
27.
28.
29.
3 O.
3 1.
குமரேச சதகம் செந்தினாயக சதகம் திருச்செந்தில் முருகன் சந்நிதிமுறை காவடிச்சிந்து
சஷ்டி காவடிச்சிந்து
திருப்புகழ்
மூன்றாம் பகுதி
திருப்புகழ் தொடர்ச்சி
நான்காம் பகுதி
32.
33.
34.
35. 36. 37.
38.
39.
4 O.
41。
42。
43。
4 4.
45.
46。
திருப்புகழ் தொடர்ச்சி நல்லூர்க் கந்தன் திருப்புகழ். திருமுறைகளில் முருகப்பெருமான் செந்திலாண்டவர் துதியமுது வண்டுவிடு தூது செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது திருச்செந்தூர் நொண்டி நாடகம் தணிகாசலப் பஞ்சரத்தினம் ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம் மருதமலைச் சந்தப் பதிகம் குமரகுரு பதிகம் இரத்தினகிரிப் பாலமுருகன்
உயிர் முதற் போற்றிப் பதிகம் திருமலை முருகன் பள்ளு வையாபுரிப் பள்ளு சண்முகப் பாமாலை s இரத்தினகிரிப் பாலமுருகன் பாமாலை
3 63
38
38
38
38 .
3 82
433
458 4 63
487
498
799
206
1345
350
359
372
375
384
卫429
丑432
1435
443
1449
I 452
5 O 9
I 5 89
6 O2

ஐந்தாம் பகுதி
47.
48.
49.
5 O.
5 .
52.
53.
54.
55.
56.
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் திருத்தணிகைப் பெருமான் பிள்ளைத்தமிழ் திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் திருவிலஞ்சிமுருகன் பிள்ளைத்தமிழ் பழனிப் பிள்ளைத்தமிழ்
ஆறாம் பகுதி
57.
58.
59.
6 0.
6.
62.
63.
6 4.
65.
66.
67. 68.
69.
7 O.
7 1.
72.
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் மாவைப் பிள்ளைத்தமிழ் வைத்தீசுவரன்கோவில்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கூேடித்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் திருச்செந்தூர் சுப்பிரமணிய
புஜங்கம்-1 திருச்செந்தூர் க்ப்பிரமணிய
புஜங்கம்-2 திருச்செந்தூர் சுப்பிரமணிய
புஜங்கம்-3 திருவகுப்பு வேல்விருத்தம் மயில்விருத்தம் சேவல்விருத்தம் தொட்டிக்கலை திருத்தணிகைத்
திருவிருத்தம் திருமயிலைச் சிங்காரவேலன்
திருவிருத்தம் திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா தணிகை வெண்பா கதிரைச் சிலேடை வெண்பா
6 O 8
I 6 35
686
737
7 88
79.5
847
9 OO
952
20 O 5
20 22
2O 69
2 2
217 3
22 25
223
2236
2244
2287 2.293
2 30 O
2307
23 2
23 7
2326
2 3 40

Page 8

அருணகிரிநாதர் 7.99
465
இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்
டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் சுவர்கோலி எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக் கெனக்குச்சற் றுணக்குச்சற் றெனுமாசைச் சிறைக்கொத்திப் பிறப்பிற்பட்
டுறக்கச்சொப் பனத்துற்றுத் திகைக்கப்பட் டவத்தைப்பட் டுழலாதுன் திருப்பத்மத் திறத்தைப்பற்
றுகைக்குச்சித் திரத்தைச்சொற் றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் திரிவேனோ பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச்
சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப் பிறக்குற்றத் திருப்பக்கச் சிவநாதர் பெருக்கப்புத் தடக்கைக்கற்
பகத்தொப்பைக் கணத்துக்குப் பிரச்சித்தக் கொடிக்குக்டக் கொடியோனே
பறைக்கொட்டிக் களைச்சுற்றக்
குறட்செக்கட் கணத்திற்குப் பலிக்குப்பச் சுடற்குத்திப் பகிர்வேலா பனப்பத்திக் கணத்துத்திப்
படுக்கைக்கச் சபத்திச்சைப படுக்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே:
466
கடத்தைப்பற் றெனப்பற்றிக்
கருத்துற்றுக் களித்திட்டுக் கயற்கட்பொற் பிணைச்சித்ரத் தனமாதர் கலைக்குட்பட் டறக்கத்திச்
சலித்துக்கட் டளைச்சொற்பொய்த் திரைக்குட்பட் டறச்செத்திட் டுயிர்போனால்
எடுத்துக்கொட் டிடக்கட்டைப்
படத்தெட்டத் தணற்றட்டக் கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் றவர்போமுன்

Page 9
800
இணக்கிப்பத் திமைச்செச்சைப்
பதத்தைப்பற் றுகைக்குச்சொற் றமிழ்க்கொற்றப் புகழ்ச்செப்பித் அடைத்திட்டுப் புடைத்துப்பொற்
பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட் டலைப்புப்பற் றெனச்சொற்றிட் அடித்துச்செற் றிடித்துப்பொட்
டெழப்பொர்ப்புப் படக்குத்திட் டலைத்துச்சுற் றலைத்தெற்றுக்
புடைத்திட்டுப் படிக்குட்செற்
றடப்புக்குக் கதத்துக்கக் கயிற்கொக்கைப் படக்குத்திப் புனத்திற்பொற் குறத்திக்குப்
புணர்க்கொத்தப் பசப்பெத்திப் புணர்க்கச்சிப் பதிச்சொக்கப்
4 67
கருப்பற்றிப் பருத்தொக்கத்
தரைக்குற்றிட் டுருப்பெற்றுக் கருத்திற்கட் பொருட்பட்டுப் கணக்கிட்டுப் பிணக்கிட்டுக்
கதித்திட்டுக் கொதித்திட்டுக் கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் பெருக்கப்புத் தியிற்பட்டுப்
புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப் பிணத்தைச்சுட் டகத்திற்புக் பிறத்தற்சுற் றமுற்றுற்றிட்
டழைத்துத்தொக் கறக்கத்துப் பிறப்புப்பற் றறச்செச்சைக்
பொருப்புக்கர்ப் புரக்கச்சுத்
தனப்பொற்புத் தினைப்பச்சைப் புணக்கொச்சைக் குறத்தத்தைக்
திருப்புகழ்
திரிவேனோ
டறுதுரை
கடல்மாயப்
பொருவோனே
பெருமாளே.
பயில்காலங்
சமனாவி
கனைவோரும்
கழல்தாராய்
கினியோனே

அருணகிரிநாதர் 8 O
புரத்தைச்சுட் டெரித்துப்பற்
றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப் புணர்த்தப்பித் தனைக்கற்பித் தருள்வோனே
செருக்கக்குக் கரைக்குத்திச்
செருப்புக்குப் பிடித்தெற்றிச் சினத்திட்டுச் சிதைத்திட்டுப் பொரும்வீரா திருத்தத்திற் புகற்சுத்தத்
தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத் திருக்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே. கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச்"
சிரித்துச்சற் றுறுக்கிக்கட் பிறக்கிட்டுப் படக்கற்பித் திளைஞோர்தங் கழுத்தைச்சிக் கெனக்கட்டித்
தனச் செப்புப் படக்குத்திட் டுருக்கிக்கற் பழிக்கப்பொற் பெழுகாதல் புறப்பட்டுக் களிக்கக்கற்
புரத்தைப்பிட் டரக்கிப்பொற் பணிக்கட்டிற் புறத்துற்றுப் புணர்மாதர் பொருத்தத்தைத் தவிர்த்துச்சற்
றிரகூSத்துப் புரப்பப்பொற் பதத்தைப்பெற் றிருக்கைக்குப் பெறுவேனோ
திறற்கொக்கைப் படக்குத்திச்
செருக்கிக்கொக் கரித்துச்சக் கரிக்குப்புத் திரற்குற்றுத் தளையூனச் சினத்துப்பொற் பொருப்பைப்பொட்
டெழுத்தித்திக் கரித்துப்புத் திரத்தத்திற் சிரித்துற்றுப் பலபேய்கள்
பறிக்கப்பச் சிறைச்சிக்கட்
கறிக்குப்பைச் சிரச்சிக்குப் பரப்பொய்க்கட் டறப்புக்குப் பொருதோனே பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப் படைக்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே.

Page 10
80s திருப்புகழ்
469
அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்
சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங் கணைதருஞ்செச்சைப் பொற்புயனத்தன் குறவாணர் அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்
றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண் டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் குமரேசன்
துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்
களைபவன் பச்சைப் பசுஷிந டத்துந் துணைவனென் றர்ச்சித் திச்சைத னித்துன் புகழ்பாடிச் சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந்
துரியமுந் தப்பித் தத்வம னைத்துந் தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் படிபாராய்
கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்
கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங் கடவுளும் பத்மத் தச்சனு முட்கும் படிமோதிக் கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்
சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங் கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன் றபிராமி பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்
பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன் பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன் செவிபோயப் பணவிபங் கப்பட் டப்படி வெட்கும்
படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும் பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும் பெருமாளே.
470 கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்
கடகசங் கத்துப் பொற்புய வெற்பன் கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும்
பொடியாகக் கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்
குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங் கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும்
புவியோர்போய்

அருணகிரிநாதர் 803
குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்
றனகனென் றிச்சைப் பட்டத ளரிக்குங் குமுனனென் றொப்பிட் டித்தனை பட்டிங் கிரவான
குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்
திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங் குலவியுங் கத்தப் பட்டக லக்கம் தெளியாதோ சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்
தனிபெருங் கற்புச் சக்ரந டத்துந் தகையிலங் கைச்சுற் றத்தைமு முத்துஞ்
சுடவேவெஞ் சமரசண்டக்கொற் றத்தவ ரக்கன்
கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந் தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங்
களைவோனும்
தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்
சசிதரன் திக்குக் கத்தர கத்யன் திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் திரள்வேதஞ்
செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்
செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும் சிவனும்வந் திக்கக் கச்சியில்நிற்கும் பெருமாளே.
47
செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்
செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ் சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந்-தவிகாரம் திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்
செனனபங் கத்துத் துக்கக டற்கண் திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் கரனாதி
குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்
குடிலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின் குகைகூமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் தடுமாறுங் குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்
சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங் குணமடைந் துட்பட் டொக்க இருக்கும் படிபாராய்

Page 11
804 திருப்புகழ்
படிதருங் கற்புக் கற்பக முக்கண்
கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம் பணிநிதம் பத்துச் சத்தி யுகக்குங் குமரேசா பரவசங் கெட்டெட் டக்கர நித்தம்
பரவுமன் பர்க்குச் சித்திய ஸ்ரிக்கும் பரமர்வந் திக்கத் தக்க பதத்தன் குருநாதா தொடியிடும் பத்மக் கைக்கு மிடைக்குஞ்
சுருள்படும் பத்திப் பட்ட குழற்குந் துகிர்கடைந் தொப்பித் திட்ட இதழ்க்குங் குறமானின் சுடர்படுங் கச்சுக் கட்டு முலைக்குந்
துவஞநெஞ் சத்தச் சுத்த இருக்கும் சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் பெருமாளே
472
கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்
றசுரர்தண் டத்தைச் செற்ற விதழ்ப்பங் கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் பரையாளுங் கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்
பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங் கரதலம் பற்றப் பெற்ற வொருத்தன் ஜகதாதை
புனவிளந் தத்தைக் கிச்சை யுரைக்கும்
புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும் புதியவன் செச்சைப் புட்ப மணக்கும் பலபாரப் புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும்
பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும் பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம்
பெறுவேனோ
அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும்
பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம் பணிதருஞ் சித்ரத் தொற்றை யுரத்தன் திடமாக அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்
றதுயிடுங் கப்புக் கப்பொழு தக்குன் றனைபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் டவனிடுந்

அருணகிரிநாதர் 805
தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்
சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன் தசமுகன் கைக்குக் கட்க மளிக்கும் பெரியோனுந் தலைவியும் பக்கத் தொக்க விருக்குஞ் சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந் தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே.
47 3
தெரியலஞ் செச்சைக் கொத்து முடிக்கும்
பரிதிகந் தத்தைச் சுற்ற நடத்துஞ் சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங்
கையில்வாழுஞ் சிறுவனென் றிச்சைப் பட்டு பஜிக்கும் படிபெரும் பத்திச் சித்ர கவித்வஞ் சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் பிறவாதே பரிகரஞ் சுற்றத் தக்கப்ர புத்வம்
பதறியங் கட்டப் பட்டனர் தத்வம் பலவையுங் கற்றுத் தர்க்க மதத்வம் பழியாதே
பரபதம் பற்றப் பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றிப் பற்றற நிற்கும் பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் துயர்போமோ
சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்
பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன் தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் திரிதலந் தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்
தரியரும் பிக்கப் பித்தத னத்தந் தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் தெரியாத
பெரிய பண்டத்தைச் சத்திய பித்தன்
பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும் ப்ரபையள்தண் டிற்கைப் பத்ம மடப்பெண்
கொடிவாழ்வே பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்
பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம் பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே.

Page 12
806 திருப்புகழ்
474
புனமடந் தைக்குத் தக்க புயத்தன்
குமரனென் றெத்திப் பத்தர் துதிக்கும் பொருளைநெஞ்சத்துக் கற்பனை முற்றும் பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந்
தனைநாளும் சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந் தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன்
செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந் திருவுளம் பற்றிச் செச்சைமணக்குஞ் சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென்
றருள்வாயே கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண் கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்குந்
திருவாயன் கவள துங் கக்கைக் கற்பக முக்கண்
திகழுநங் கொற்றத் தொற்றை மருப்பன் கரிமுகன் சித்ரப் பொற்புகள் வெற்பன் றனையினும்
பணவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண் பழையஅண் டத்தைப் பெற்றம டப்பெண்
பணிவாரைப் பவதரங் கத்தைத் தப்ப நிறுத்தும்
பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம் பயில்வரம் பெற்றுக் கச்சியில்நிற்கும் பெருமாளே.
475
கறையிலங் குக்ரச் சத்தி தரிக்குஞ்
சரவணன் சித்தத் துக்கு ளொளிக்குங் கரவடன் கொற்றக் குக்குட வத்தன் தனிவீரக்

அருணகிரிநாதர் 807
கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங் கடகவஞ் சிக்குக் கர்த்த னெனச்செந் தமிழ்பாடிக்
குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்
பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென் குணமடங் கக்கெட் டுக்குன மற்றொன் றிலதான குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங் குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங் குருபதஞ் சித்திக் கைக்கருள்சற்றுங் கிடையாதோ பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்
தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம் பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன்றையும்வேனிப் பிறவுநின் றொக்கத் தொக்கும னக்குஞ் சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண் பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் கயவாவி
திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்
பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந் த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் திருவான தெரிவையந் துர்க்கிச் சுத்தியெ வர்க்குந்
தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண் சிறுவதொண் டர்க்குச் சித்தியளிக்கும் பெருமாளே.
47 6
செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
பிறிதுமங் கத்தைக் குற்ற விருப்புஞ் சிகரிதுண் டிக்கக் கற்ற தனிச்செஞ் சுடர்வேலும்
திரள்புயங் கொத்துப் பட்ட வனைத்துந் தெளியநெஞ் சத்துப் புற்று மயக்கம் திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் படிநாடும்
அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன் பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும்
பெருமானென்

Page 13
808 திருப்புகழ்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டதனைச்சென்
றடைதகும்பக்வத்தைத்தமியெற்கென் றருள்வாயே
குறியவன் செப்பப் பட்ட எவர்க்கும்
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன் குலைகுலைந் துட்கச் சத்யமி ழற்றுஞ் சிறுபாலன் குதலையின் சொற்குத் தர்க்க முரைக்குங்
கனகனங் கத்திற் குத்தி நிணச்செங் குடர்பிடுங் கித்திக் குற்ற முகச்சிங் கமுராரி
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம் புயலெனும் பொற்புப் பெற்ற நிறத்தன் ஜகதாதை புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
பழையசந் தத்தைப் பெற்ற மடப்பெண் புகலுகொண் டற்குச் சித்தி யளிக்கும் பெருமாளே.
47 7 அற்றைக் கிரைதேடி -அத்தத் திலுமாசை பற்றித் தவியாத -பற்றைப் பெறுவேனோ வெற்றிக் கதிர்வேலா -வெற்பைத் தொளைசீலா கற்றுற் றுனர்போதா - கச்சிப் பெருமாளே.
478
முட்டுப்பட்டுக் கதிதோறும் முற்றச் சுற்றிப் பலநாளும் தட்டுப் பட்டுச் சுழல்வேனைச் சற்றுப் பற்றக் கருதாதோ வட்டப் புட்பத் தலமீதே வைக்கத் தக்கத் திருபாதா கட்டத் தற்றத் தருள்வோனே கச்சிச் சொக்கப் பெருமாளே.
479 அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
தத்தத் தத்தத் தருவோர்தாள் அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
தொக்குத் திக்குக் குடில்பேணிச்

அருணகிரிநாதர் '(ኦ 809
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
செத்துச் செத்துப் பிறவாதே செப்பச் செப்பப் பச்சைப பச்சைச்
செச்சைச் செச்சைக் கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்
துட்கத் திட்கப் பொரும்வேலா சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக் கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
கத்தக் கத்தக் களைவோனே கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் பெருமாளே.
48 0 சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
சுத்தப் பட்டிட் டமுறாதே தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
சொற்குற் றத்துத் துறைநாடி பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
றொத்துக் கித்திப் பினிமாதர் பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
பிற்பட் டிட்டுத் தளர்வேனோ
அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
தத்திக் கத்துப் பலமீவாய் அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
தைக்குச் செச்சைத் தொடைதழ்வாய் கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்
கைத்தச் சத்திப் படையேவுங் கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் பெருமாளே.
48 கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
கொத்துற் றுக்குப் பிணியுற் றவனாகிக்
குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
கொத்தைச் சொற்கற் றுலகிற் பலபாஷை

Page 14
80 திருப்புகழ்
திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச் சுமைபேணும் சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
திட்டத் துக்குப் புகலப் பெறுவேனோ அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
டத்ரத் தெற்றிக் கடுகப் பொருதுரன் அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
புக்குப் பட்டுத் துருமத் தடைவாகத் தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் கனமாடிச் சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
சத்திக் கச்சிக் குமரப் பெருமாளே
482 தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக் கடலாலே சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப் பிறையாலே
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற் றழியாதே செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் தரவேணும்
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப் பொரும்வேலா கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக் கினியோனே
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத் தையொழித் திடும்வீரா சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
சொக்கப் பதியிற் பெருமாளே.
483 பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத் தத்துக் குடில்பேனிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
பொற்சித்ரக் கச்சுக் கிரியார்தோய்

அருணகிரிநாதர்
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்
துக்கித்துக் கெய்த்துச் சுழலாதே சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
துச்சற்றர்ச் சிக்கப் பெறுவேனோ திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்
செற்பத்ரக் கொக்கைப் பொரும்வேலா செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்
செச்சைக்கொத் தொப்பித் தனிவோனே
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்
பெரியோனே
கட்கத்தத் தர்க்குப் கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்
கச்சிக்குட் சொக்கப் பெருமாளே.
484 அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்
கனுரத்தைக் கனவெற்புத் தனமேகம் அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித் திளகிக்கற் புளநெக்குத் தடுமாறித்
துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்
தொடியர்க்கிப் படியெய்த்துச் சுழலாதே சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித் தொழுசெச்சைக் கழல்பற்றிப் பணிவேனோ
புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்
புனமுத்தைப் புணர்சித்ரப் புயவிரா புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்
புகல்பொற்குக் குடவெற்றிக் கொடியோனே
கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்
கரணிச்சித் தருள்கச்சிப் பதியோனே கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்
பொருசத்திக் கரசொக்கப் பெருமாளே.
485 கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
மச்சக் கொடிமதன் மலராலுங்
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
அச்சப் படவெழு மதனாலும்

Page 15
82 திருப்புகழ்
பிச்சுற் றிவஞள மெய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரமல இனிதான பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடையது தரவேனும்
பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய
கச்சிப் பதிதனி லுறைவோனே பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
உற்றுப் பொரவல கதிர்வேலா
இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய திருமார்பா எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித் துணிசெய்த பெருமாளே.
486 கமலரு சோகாம்பர முடிநடு வேய்பூங்கனை
கலகமர் வாய்தோய்ந்தம ளியின்மீதே களையற மீதுார்ந்தெழ மதனவி டாய்போம்படி
கனவிய வாரேந்தின இளநீர்தோய்ந்
தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
இவளுடன் மால்கூர்ந்திடு மநுபோகம் இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய மருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
அதுலன நீலாம்பர மறியாத அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
அறமுறு சீகாஞ்சியி லுறைவோனே
விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
வெடிபடு தேவேந்திர னகர்வாழ விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
வினையற வேல்வாங்கிய பெருமாளே.
487 கரும மானபி றப்பற வொருகதி
கானா தெய்த்துத் தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக் கலைநூலின்

அருணகிரிநாதர் 83
வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக் கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
LDTUILJT LIDgb(55Ü புகல்வாயே தரும வீமஅ ருச்சுன நகுலச
காதே வர்க்குப் புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட் டினிலாளுங் குரும கீதல முட்பட வுளமது
கோடா மற்கூடித் ரியர்மாளக்
குலவு தேர்கட வச்சுதன் மருககு
மாரா கச்சிப் பெருமாளே.
4, 88
கலகலெ னப்பொற் சேந்த நூபுர
பரிபுர மொத்தித் தாந்த னாமென கரமல ரச்சிற் றாந்தொ மாடிய பொறியார்பைங் கடிதட முற்றுக் காந்த ளாமென
இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு வடமாடச்
சலசல சச்சச் சேங்கை பூண்வளை
பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி சுழலாடத் தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்
குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர் சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ருறவாமோ
திலதமு கப்பொற் காந்தி மாதுமை
யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி சிவகாமி திரிபுவ னத்தைக் காண்ட நாடகி
குமரிசு கத்தைப் பூண்ட காரணி சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை யருள்பாலா
அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர முடையோனே

Page 16
814 திருப்புகழ்
அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்
விபுதகு றத்திக் காண்ட வாதின
மழகுசி றக்கக் காஞ்சி மேவிய பெருமாளே.
489 கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற் செயல்மாறிக் கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப் புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
9 ege, D-D- எனவேகேள் செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக் கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
நிற்பாய் கச்சிக் குமரேசா நிட்டு ரச்துர் கெட்டோ டப்போர்
நெட்டோ தத்திற் பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
முட்டா திட்டத் தனிவோனே முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
490 கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் கொடியார்தங் கோலக் கச்சுக் கட்டிய முத்தத் தனமேவிப் பாவத் துக்குத் தக்கவை பற்றித் திரியாதே பாடப் பத்திச் சித்தமெ னக்குத் தரவேணும் மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் பொரும்வேலா மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் கினியோனே சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் பதியோனே தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே.
49
சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச் சீவன் முத்தியிற் கூட வேகளித் தநுபூதி

அருணகிரிநாதர் 85
சேர அற்புதக் கோல மாமெனச்
துரியப்புவிக் கேறி யாடுகச் சீலம் வைத்தருட் டேறி யேயிருக் கறியாமற்
பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
போது மிப்படிக் காகி லேனினிப் பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் தடியேனைப் பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப் பாத பத்மநற் போதை யேதரித் தருள்வாயே
தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
துரை வெட்டியெட் டாசை யேழபுவித் தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் தருள்வோனே சீர்ப டைத்தழற் துல மான்மழுப்
பாணி வித்துருப் பாத னோர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் குருநாதா
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் புலிவேளூர் காள அத்தியப் பால்சி ராமலைத் தேச முற்றுமுப் பூசை மேவிநற்
காம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே.
492 நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ்க ளங்க மதியாலும் நத்தொடுமு ழங்க னத்தொடு முழங்கு
நத்திரைவ ழங்கு கடலாலும் இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
இச்சிறுமி நொந்து மெலியாதே எத்தனையு நெஞ்சில் எத்தனமு யங்கி
இத்தனையி லஞ்ச லெனவேனும்
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
பச்சைமலை யெங்கு முறைவோனே பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
பத்திரம ணிந்த கழலோனே

Page 17
கச்சிவர்கு ரும்பை கச்சவர்வி ரும்பு
திருப்புகழ்
கச்சியில மர்ந்த கதிர்வேலா கற்பகவ னங்கொள் கற்பகவி சும்பர்
கைத்தளைக ளைந்த பெருமாளே.
493 படிறொ முக்கமு மடம னத்துள
படிப ரித்துட னொடிபேசும் பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்
பலகொ டுத்தற gd u'}\frojmLIT
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
விதன முற்றிட மிகவாழும் விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத மருள்வாயே கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
குமர கச்சியி லமர்வோனே குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி திருமார்பா பொடிப டப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர் குருநாதா பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
பொருது ழக்கிய பெருமாளே.
494 மகுடக்கொப்பு பாடக் காதினில்
நுதலிற்பொட் டூரக் கோதிய மயிரிற்சுற் றோலைப் பூவொடு வண்டுபாட வகைமுத்துச் சோரச் சேர்நகை
யிதழிற்சொற் சாதிப் பாரியல் மதனச்சொற் பாடுக் கோகில ரம்பைமாதர் பகடிச்சொற் கூறிப் போர்மயல்
முகவிச்சைப் பேசிச் சீரிடை பவளப்பட் டாடைத் தோளிரு கொங்கைமேலாப் பணமெத்தப் பேசித் தூதிடு
மிதயச்சுத் தீனச் சோலிகள் பலரெச்சிற் காசைக் காரிகள் சந்தமாமோ

அருணகிரிநாதர்
8.7
தகுடத்தத் தானத் தானன
திகுடத்தித் தீதித் தோதிமி தடுடுட்டுட் டாடப் பேரிகை தடமிட்டுப் பாவக் கார்கிரி
பொடிபட்டுப் போகச் சூரர்கள் தலையிற்றிட் டாடப் போர்புரி
திகிரிப்பொற் பாணிப் பாலனை
மறைகற்புத் தேளப் பூமனை சினமுற்றுச் சேடிற் சாடிய தினையுற்றுக் காவற் காரியை
மணமுற்றுத் தேவப் பூவொடு திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ்
495 மக்கட்குக் கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது மற்றொப்புக் கியாதுமொ வாதது மட்டிட்டுத் தேடவொ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது மத்தப்பொற் போதுப கீரதி முக்கட்பொற் பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது முத்திக்குக் காரண மானது முட்டர்க்கெட் டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு முற்பட்டப் பாலையி லாவது
செக்கட்சக் ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய திக்குப்பொற் பூதர மேமுதல் சிட்டித்துப் பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடம கோததி செற்றுக்ரச் சூரனை மார்பக
கக்கக்கைத் தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல கச்சுற்றப் பாரப யோதர
சங்குவீணை
கின்றவேலா
கந்தவேளே
தம்பிரானே.
மனதாலே
மதிதுடும்
பெறலாகா
புரிவாயே
வெகுரூபம்
முதுசோரி
முலையாள்முன்

Page 18
திருப்புகழ்
கற்புத்தப் பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய பெருமாளே.
49 6 மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
வசைபேசு கின்ற மொழியாலும் மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
மதிநேரு கின்ற நுதலாலும் அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
நடையாலும் அங்கை வளையாலும் அறிவேய பூழிந்து அயர்வாகி நைந்து
அடியேன்ம யங்கி விடலாமோ மயிலேறி யன்று நொடிபோதி லண்டம்
வலமாக வந்த குமரேசா மறிதாவு செங்கை அரனாரி டங்கொள்
மலைமாது தந்த முருகேசா நயவா னுயர்ந்த மணிமாட மும்பர்
நடுவேநி றைந்த மதிதழ நறைவிசு கும்ப குடமேவு கம்பை
நகர்மீத மர்ந்த பெருமாளே.
497 முத்து ரத்ந தத்ர மொத்த சித்ர மார்க்கர்
முற்செ மத்து மூர்க்கர் வெகுபாவர் முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
முச்சர் மெத்த சூட்சர் நகையாலே எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
இட்ட முற்ற கூட்டர் விலைமாதர் எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்
இப்ப டிக்கு மார்க்கம் உழல்வேனோ தித்தி மித்தி மீத்த னத்த மூட்டு
சிற்று டுக்கை சேட்டை தவில்பேரி
திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
செக்க டற்கு ளாழ்த்தி விடும்வேலா

அருணகிரிநாதர் 819
கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா கற்கு றிச்சி வாழ்ப்பெ னொக்க வெற்றி வேற்கொள்
கச்சி நத்தி நாட்கொள் பெருமாளே.
498 வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத் திரையாளர் வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற் றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக் கழல்சேர்வார் தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக் கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் படமாதுர் வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் திருமார்பா கம்ப ராய்ப்பணி மன்னுட யம்பெறு
கைக்குக் கற்புத் தவறாதே கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப் பெருமாளே.
499
வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய
நீந்திப்பது மாதியை மீதினி லூர்ந்துற்பல வோடையில் நீடிய உகள்சேலை வார்ந்துப்பக பூழியெதி ராகிமை
கூர்ந்துப்பரி யாவரி சேரவை சேர்ந்துக்குழை யோடுச லாடிய விழியாலே
சாய்ந்துப்பனை யூணவ ரானபொ
லாய்ந்துப்பணி னாரிரு தாளினில் வீழ்ந்திப்படி மீதினி லேசிறி தறிவாலே சாந்தப்பிய மாமலை நேர்முலை
சேர்ந்துப்படி வீணினி லேயுயிர் மாய்ந்திப்படி போகினு மோர்மொழி மறவேனே

Page 19
820 திருப்புகழ்
சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ
பாய்ந்தப்பொழு தாருமி லாமலே காந்தப்பெரு நாதனு மாகிய மதராலே தாந்தக்கிட தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கன சேகெனசேகென வெனதாளம்
காந்தப்பத மாறியு லாவுய
ராந்தற்குரு நாதனு மாகியெ போந்தப்பெரு மான்முரு காவொரு GourfNGSuunt CBGBT காந்தக்கலு மூசியு மேயென
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
காஞ்சிப்பதி மாநகர் மேவிய பெருமாளே.
500
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றி யறியாத அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு
கழ்ந்து அவரைவாழ்த் தித்தி ரிந்து பொருள்தேடிச்
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
தெரிவைமார்க் குச்சொ ரிந்து அவமேயான் திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ கூடித்தை யென்று அருள்வாயே
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற்றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த உமையாள்தன் இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
இறைவர்கேட் கத்த குஞ்சொ லுடையோனே
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட் டித்தி ரிந்த தவமானைக்
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
குமரகோட் டத்த மர்ந்த பெருமாளே.

அருணகிரிநாதர் 82.
2. திருவானைக்கா (அப்பு)
50
நாடித் தேடித் தொழுவார்பால் நானத் தாகத் திரிவேனோ மாடக் கூடற் பதிஞான வாழ்வைச் சேரத் தருவாயே பாடற் காதற் புரிவோனே பாலைத் தேனொத் தருள்வோனே ஆடற் றோகைக் கினியோனே ஆனைக் காவிற் பெருமாளே.
5 02
நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
மறந்த ரித்தக னாலால நேரென நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென நெஞ்சின்மேலே நெருங்கு பொற்றன மாமேரு நேரென
மருங்கு நிட்கள ஆகாச நேரென நிதம்ப முக்கணர் பூணார நேரென நைந்துசீவன்
குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
வழிந்த ழைத்தனை மேல்வீழு மாலொடு குமண்டை யிட்டுடை சோராவி டாயில மைந்துநாபி குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய குரங்கை யொத்துழல் வேனோம னோலய
மென்றுசேர்வேன்
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி யோராத தேதுசொல் மனங்க ளித்திட லாமோது ரோகித முன்புவாலி வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோ கெடாதினி வரும்ப டிக்குரை யாய்பார் பலாகவ மென்றுபேசி
அறந்த ழைத்தது மானோடு மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவன னரண்குலைத்தெதிர் போராடு நாரணன் மைந்தனான

Page 20
822 திருப்புகழ்
அனங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலா யுதாவிய னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள்
தம்பிரானே.
503
பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு முகில்போலே பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி வேண்டி யேவிய பணிவிடை களிலிறு மாந்த கூளனை
நெறிபேனா
விரகனை யசடனை வீம்பு பேசிய
விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு வெகுளியை யறிவது போங்க பாடனை DGULOT (DfT
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி கழலணி மலைமகள் காஞ்சி மாநக ருறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடலுடை யுலகினை யின்ற தாயுமை கரிவன முறையகி லாண்ட நாயகி யருள்பாலா
முரணிய சமாரினில் மூண்ட ராவன
னிடியென அலறிமு னேங்கி வாய்விட முடிபல திருகிய நீண்ட மாயவன் மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள்
பெருமாளே.

அருணகிரிநாதர் 823
5 04. வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள் வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் முலையானை மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள் வேளுக்காண்மைசெ லுத்துச மர்த்திகள் களிகூருஞ்
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள் தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் எவரேனும் தோயப் பாயல ழைக்கும வத்திகள்
மோகப் போகமு யக்கிம யக்கிகள் துறைக் காரிகள் துக்கவ லைப்பட
லொழிவேனோ
காலைக் கேமுழு கிக்குன திக்கினில்
ஆதித் யாயன் னப்பகர் தர்ப்பன காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு முனிவோர்கள் கானத் தாசிர மத்தினி லுத்தம
வேள்விச் சாலைய விரித்தல்பொ ருட்டெதிர் மாதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல்
மருகோனே
ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை பாயச் சாலித ழைத்திர தித்தமு தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி யுறைவேலா ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு பெருமாளே.
505 அஞ்சன வேல்விழி யிட்ட ழைக்கவு
மிங்கித மாகந கைத்து ருக்கவு மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் நகரேகை அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
மந்தர மாமுலை சற்றசைக்கவு மம்பரம் விணில விழ்த்துடுக் கவு மிளைஞோர்கள்

Page 21
824 திருப்புகழ்
நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
வம்புரை கூறிவ ளைத்தினக்கவு மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு மெவரேனும் நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற நின்பத சேவைய நுக்ரகிப்பது மொருநாளே
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர் கொம்பன்ம கோதரன் முக்கண் விக்ரம கணராஜன் கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
எங்கள் விநாயக னக்கர்பெற்றருள் குன்றைய ரூபக சற்பகப்பிளை யிளையோனே
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்தச டானன துஷ்டநிக்ரக தும்பிகள் துழவை யிற்றமிழ்த்ரய பரிபாலா துங்க கஜாரணி யத்திலுத்தம
சம்பு தடாகம டுத்ததசுஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை பெருமாளே.
5 O 6
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷன ரருள்பாலா அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி லிருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்டுகி லாடைச்
சேர்வையில்
மங்கியெ யேழைப் பாவியெ னழிவேனோ
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி யாலப் போசனி யபிராமி கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்றது வார்பொற் காரிகை யருள்பாலா

அருணகிரிநாதர் 825
செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புய மாரப் பூரண மருள்வோனே செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை பெருமாளே.
507
அணித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு வோடாத வகைசாதித் தவத்திலேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் LOGo) D fTG55)
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ னுடல்வேறு செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம னோதீத
சிவச்சொ ரூப மாயோகி யென ஆள்வாய் தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத மருகோனே சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர வயலுாரா மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானிய மலைமோதும் மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக
மாள்வாரு மதித்த சாமி யேதேவர் பெருமாளே:
508
ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
டாடவர்கள் வாடத் துறவோரை ஆசைமட லூார்வித் தாளுமதி பாரப்
பாளிதப டீரத் தனமானார்
காரளக நீழற் காதளவு மோடிக்
காதுமடபி ராமக் கயல்போலக் காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
காலைமற வாமற் புகல்வேனோ

Page 22
826
பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
&FTLD67T 35 Ga)TUL பாய்மதக போலத் தானொடிக லாமுற்
பாடிவரு மேழைச்
துரர்புர துறைக் காரசுரர் காவற்
காரஇள வேணற் தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
சோதிவளர் காவைப்
5 O 9
ஆலம் வைத்தவி பூழிச்சிகள் சித்தச
னாக மக்கலை கற்றச மர்த்திக ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ஆர வட்டமு லைக்குவி லைப்பன மாயி ரக்கல மொட்டிய ளப்பினு மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ
மேலி ளைப்புமு சிப்பும வத்தையு
மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி மேதி னிக்குள பத்தனெ னப்பல
பாடு பட்டுபு முக்கொள்ம லக்குகை வீடு கட்டியி ருக்குமெ னக்குநி
பீலி மிக்கம யிற்றுர கத்தினி
லேறி முட்டவ ளைத்துவ குத்துடல் பீற லுற்றவு யுத்தக ளத்திடை பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர் பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு
ஏலம் வைத்தபு யத்தி லனைத்தருள்
வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர் ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ஏழி சைத்தமி பூழிற்பய னுற்றவெ
னாவ லுற்றடி யிற்பயி லுத்தம ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள்
திருப்புகழ்
பரியேறிப்
சிறியோனே
புனமேவுந்
பெருமாளே.
தெருவூடே
ருடன்மாலாய்
யதனாலே
னருள்தாராய்
ԼDւգ-աn 5
குடனாட
யருள்வோனே
பெருமாளே.

அருணகிரிநாதர் 827
5 0 உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை யொன்றுபாட உழப்பா திபக்கோ டெழுத்தா னியைத்தே
டுனைப்பாரி லொப்பார்கள் கண்டிலேன்யான் குரைக்கான வித்யா கவிப்பூ பருக்கே
குடிக்காண் முடிப்போடு கொண்டுவாபொன் குலப்பூ னிரத்னா திபொற்று செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின் மங்குவேனோ
அரைக்காடை சுற்றார் தமிழ்க்கூட லிற்போய்
அனற்கே புனற்கேவ ரைந்தஏடிட் டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ மர்ந்தவேளே திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யான முற்றோர்சி லந்திநூல்செய் திருக்கா வனத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி தம்பிரானே.
5 ஒல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் ஒது சரியை க்ரியையும் புணர்ந்தவ ரெவராலும் ஒத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் ஊனு முயிரு முழுதுங் கலந்தது சிவஞானம் சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ னவியோமஞ் சாரு மனுப வரமைந்த மைந்தமெய்
விடு பரம சுகசிந்து இந்த்ரிய தாப சபல மறவந்து நின்கழல் பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் களைவோனே

Page 23
828
வாச களப வரதுங்க மங்கல வீர கடக புயசிங்க சுந்தர வாகை புனையும் ரணரங்க புங்கவ
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி நாளு மினிய கனியெங்க ளம்பிகை நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள்
5 2
கருமுகில்திர ளாகக் கூடிய
இருளெனமரு ளேறித் தேறிய கடிகமழள காயக் காரிகள் கனவியவிலை யோலைக் காதிகள் முழுமதிவத னேரப் பாவைகள் களவியமுழு மோசக் காரிகள்
பரநெறியுண ராவக் காமுகர்
உயிர்பலிகொளு மோகக் காரிகள் பகழியைவிழி யாகத் தேடிகள் பகடிகள்பொரு ளாசைப் பாடிக ளுருவியதன பாரக் கோடுகள் படவுளமழி வேனுக் கோரருள்
மரகதவித நேர்முத் தார்நகை
குறமகளதி பாரப் பூண்முலை மருவியமண வாளக் கோலமு வளைதருபெரு ஞாலத் தாழ்கடல் முறையிடநடு வாகப் போயிரு
வரைதொளைபட வேல்விட் டேவிய
அரவணைதனி லேறிச் சீருடன்
விழிதுயில்திரு மால்சக் ராயுதன் அடியிணைமுடி தேடிக் காணவும்
திருப்புகழ்
வயலுாரா
தரிபுராயி
பெருமாளே.
புவிமீதே
மயலாலே
முகமாயப்
புரிவாயே
முடையோனே
அதிதீரா
அரிதாய
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்
உடையதொர்மயில் வாசிச் சேவக அழகியதிரு வானைக் காவுறை
பெருமாளே

அருணகிரிநாதர்
5 3
காவிப் பூவை யேவை யிகல்வன
நீலத் தால கால நிகர்வன காதிப் போக மோக மருள்வன காதிற் காதி மோதி யுழல்கன
மாயத் தார்கள் தேக பரிசன காமக் ரோத லோப மதமிவை
பாவிக் காயு வாயு வலம்வர
லாலிப் பார்கள் போத கருமவு பாயத் தான ஞான நெறிதனை பாலெக் காக யோக ஜெபதப
நேசித் தார வார பரிபுர பாதத் தாளு மாறு திருவுள கூவிக் கோழி வாழி யெனமயி
லாலித் தால கால மெனவுயர் கூளிச் சேனை வான மிசைதனில் கோரத் தீர துர னுடைவினை
பாறச் சீற லேன பதிதனை கோலக் கால மாக அமர்செய்த
ஆவிச் சேல்கள் பூக மடலிள
பாளைத் தாறு கூறு படவுய ராலைச் சோலை மேலை வயலியி ஆசைத் தோகை மார்க ளிசையுட
னாடிப் பாடி நாடி வருதிரு ஆனைக் காவில் மேவி யருளிய
5 4
குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
829
இருதோடார்
சிதையாத
யினிமேலன்
நினையாதோ
விளையாடக்
வடிவேலா
லுறைவோனே
பெருமாளே.
குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன
குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
அடவியி லோடுந்து ராசை வஞ்சகர் கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய
பொதிகாயக்
அதனாலே

Page 24
830 திருப்புகழ்
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை துதியொடு நாடுந்தி யான மொன்றையு முயலாதே சுமடம தாய்வம்பு மால்கொ ஞந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும் உடைபட மோதுங்கு மார பங்கய கரவீரா உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள் உளமதில் நாளுங்கு லாவி யின்புற வுறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி யந்தனர்
அரிகாரி கோவிந்த கேச வென்றிரு கழல்தொழு சீரங்க ராச னண்புறு மருகோனே கமலனு மாகண்ட லாதி யண்டரு
மெமது பிரானென்று தாள்வ னங்கிய கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் பெருமாளே.
3. திருவருணை (தேயு)
5 5 இரவுபகற் பலகாலும் - இயலிசைமுத் தமிழ்கூறித் திரமதனைத் தெளிவாகத் - திருவருளைத் தருவாயே பரகருணைப் பெருவாழ்வே - பரசிவதத் துவஞானா அரனருள்சற் புதல்வோனே - அருணகிரிப் பெருமாளே.
5 6
இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ அணுகாத இருடி அயன்மா லமர ரடியா
ரிரையு மொலிதா னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் மொழிவாரோ உனது பததுாள் புவன கிரிதா
னுனது கிருபா கரமேதோ

அருணகிரிநாதர் 83
பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா கியபூதப் படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல் விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் பெருமாளே.
5 17
இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்த அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகி நடங்கொ டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட விடையேறிச் சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய் தெமையீன
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் பெருமாளே.
5 8
இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
யிடரடை பாழ்ம்பொ தும்ப கிதவாரி இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
மிரவிடை தூங்கு கின்ற பினநோவுக்

Page 25
832 திருப்புகழ்
குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
டுயிர்குடி போங்கு ரம்பை யழியாதென் றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
னுபயப தாம்பு யங்க ளடைவேனோ
அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
ளமரர் குழாங்கு விந்து தொழவாழும் அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே
கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
கடவுள்ந டேந்த்ரர் மைந்த வரைசாடுங்
கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
கரகுலி சேந்த்ரர் தங்கள் பெருமாளே.
5 19
இருளளக மவிழமதி போத முத்த ரும்ப
இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள் இளகஇடை துவளவளை பூச லிட்டிரங்க எவராலும்
எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி
யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து
முனிவாறி
முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து
முகவனச மலர்குவிய மோக முற்ற பூழிந்து மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து
விடுபோதும் முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த
பழுதில்மறை பயிலுவன் னாத ரித்து நின்று முனிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று
மறவேனே
ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து
கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து
சபையூடே

அருணகிரிநாதர் 8.33
ஒரு பழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று
உரமொடவ னதுவலிய வேகி பூழிக்க நின்று உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த
சிறியோனே அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ
டழகுவட மணிமுடிவி யாள மிட்ட முந்த அமரரொடு பலர்முடுகி ஆழியைக் கடைந்து அமுதாக
அருளுமரி திருமருக வார ணத்தை யன்று
அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த அருணகிரி நகரிலெழு கோபுரத் தமர்ந்த
பெருமாளே.
520 இறுகு மணிமுலை மருவு தரளமு
மொரியு முமிழ்மதி நிலவாலே இரவி யெனதுயிர் கவர வருகுழ
லிசையி லுறுகட லலையாலே
தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு
சரமி லெளியெனு மழியாதே தருண மணிபொழி லருணை நகருறை
சயில மிசையினில் வரவேணும் முறுகு திரிபுர மறுகு கனலெழ
முறுவ லுடையவர் குருநாதா முடிய கொடுமுடி யசுரர் பொடிபட
முடுகு மரகத மயில்வீரா
குறவர் மடமக ளமுத கனதன
குவடு படுமொரு திருமார்பா கொடிய சுடரிலை தனையு மெழுகடல்
குறுக விடவல பெருமாளே.
52 உலையிலன லொத்த வுடலினனல் பற்றி
யுடுபதியைழுட்டி யமுதுTற
லுருகிவர விட்ட பரமசுக முற்று
வுனதடியை நத்தி நினையாமற்

Page 26
834 திருப்புகழ்
சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
திகழ்முகவர் முத்து நகையாலே சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டு
திருடனென வெட்கி யலைவேனோ
கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
கனகமயில் விட்ட கதிர்வேலா கருதலாரின் முட்டி கருகிவரு துட்ட
கதவமன ருற்ற குலகாலா
அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
அருனைவளர் வெற்பி லுறைவோனே அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
அரசுநிலை யிட்ட
522
கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே கருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலே வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே வயலருணையில் வஞ்சி போதந லங்கலாமோ
இடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீரா எழுகிரிகள் பிளந்து வீழஎ றிந்தவேலா அடலசுரர் கலங்கி யோடமு னிந்தகோவே அரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.
5 23
கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற் கயலெனபொற் சுழலும்விழிக் குழல்கார்போல் கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்
கரகமலத் துகிர்விரலிற் கிளிசேருங்
குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக்
குவிமுலைசற் றசையமணிக் கலனாடக் கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற்
கெமனமெனக்
குனகிபொருட் பறிபவருக் குறவாமோ

அருணகிரிநாதர் 835
தமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்
டிமிடிமிடிட் டிகுர்திமிதித் தொலிதாளம் செககனசெக் கணகதறத்திடுதிடெனக் கொடிமுடியெட் டிகைசிலைபட் டுவரிபடச் சிலைகோடித்
துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்
தொகுதசைதொட் டலகையுணத் தொடும்வேலா துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்
சுகமொடனைத் தருணகிரிப் பெருமாளே.
524
கமல மொட்டைக் கட்ட பூழித்துக் குமிழியை
நிலைகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற இளநீரைக் கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப
சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத னபிஷேகம்
அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து
அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ டிருதாளம் அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய
சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக ளுறவாமோ
தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை
தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட எனவோதிச் சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ
விழிக ஞட்செக் கச்சி வத்துக் குறளிகள் தசைகள் பட்சித் துக்களித்துக் கழுதொடு கழுகாட
அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள
அகர ரத்தத் திற்கு ளரித்துத் திமியென அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு மயிலோனே அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி
னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள்
பெருமாளே.

Page 27
836 திருப்புகழ்
525
கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்
கஜமுகத் தவுனனைக் கடியானை கடலையெட் பயறுநற் கதலியிற் கணிபலக்
கனிவயிற் றினிலடக் கியவேழம்
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்
தமர்புரிக் கணபதிக் கிளையோனே அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்
றியைபமிகுத் தறுமுகக் குமரேசா
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக்க டிவளக்
கையில்பிடித் தெதிர்நடத் திடுமீசன் நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
கரியுரித் தணிபவற் கொருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
துரியமெய்த் தரளமொய்த் திடவிறீச் சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
சுடரயிற் சரவணப் பெருமாளே.
526
கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன
மதன தந்திரங் கடியன கொடியன கனக குண்டலம் பொருவன வருவன பரிதாவும் கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன
விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன
இளையோர்முன்
செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன
களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன தெனன தெந்தனந் தெனதென தெனதென எனநாதம் தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன
மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது திருகு கின்றமங் கையர்வச மழிதலை
யொழிவேனோ

அருணகிரிநாதர் 837
மருவு தண்டைகிண் கிணிபாரி புரமிவை
கலக லன்கலின் கலினென இருசரண் மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு மிகவேறாய்
வலிய சிங்கமுங் கரடியு முழுவையு
முறைசெ மும்புனந் தினைவிளை யிதண்மிசை மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு
வுளநாடி
அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக சதத ளம்பணிந் ததிவித கலவியு ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட னனைவோனே அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்
நிருதர் சங்கமும்பொடிபட அமர்செய்து அருணை வந்துதென் திசைதனி லுறைதரு
பெருமாளே.
527
காணாத தூர நீணாத வாரி
காதார வாரம தன்பினாலே காலாஞம் வேளும் ஆலால நாதர்
காலால் நிலாவுமு னிந்துபூமேல்
நானான தோகை நூலாடை சோர
நாடோர்க ளேசஅ ழிந்துதானே நானாப வாத மேலாக ஆக
நாடோறும் வாடிம யங்கலாமோ
சோணாச லேச பூணார நீடு
தோளாறு மாறும்வி ளங்குநாதா தோலாத வீர வேலால டாத
துராளன் மாளவெ குண்டகோவே
சேனாடர் லோகம் வாழ்மாதி யானை
தீராத காதல்சி றந்தமார்பா தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவாதி தேவர்கள் தம்பிரானே.

Page 28
838 திருப்புகழ்
528 காரா டக்குழ லாலா லக்கனை
கண்கள் சுழன்றிட வேமு கங்களி னாலா பச்சிலை யாலே மெற்புசி
மஞ்சள் கலந்தணி வாளி கொந்தள காதா டக்கலன் மேலா டக்குடி
யின்ப ரசங்குட மார்ப ளரிங்கொளி கொங்கைமாதர்
காசா சைச்செய லாலே சொக்கிடு
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் போலே நற்றெரு வூடா டித்துயல்
தொங்கல் நெகிழ்ந்திடை யேது வண்டிட
கால்தா விச்சதி யோடே சித்திர
மென்ப நடம்புரி வாரு டன்செயல் மிஞ்சலாகிச்
சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை வந்து கலந்துயி ரோட வங்கமொ டுடா டிப்பல நோயோ டுத்தடி
கொண்டு குரங்கென வேந டந்துசொல் சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய
டங்கி யழிந்துயி ரோடு ளைஞ்சொளி யுங்கண்மாறிச்
சேரா மற்பொறி கேளா மற்செவி
துன்பமொ டின்பமு மேம றந்துபின் ஊரார் சுற்றமு மாதோர் மக்களு
மண்டியு மண்டையு டேகு விந்திது சீசீ சிச்சிசி போகா நற்சனி
யன்கட வென்றிட வேகி டந்துடல் மங்குவேனோ
மாரோன் முப்புர நீறா யுற்றிட
அங்கி யுமிழ்ந்திடு வோரி பம்புலி தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை கங்கை யிளம்பிறை யார ணிந்தவர் மாடே றிக்கட லாலா லத்தையு
முண்டவ ரெந்தை சிவாநு பங்குறை யென்றன்மாதா
மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி
யம்பிகை சங்கரி மோக சுந்தரி வேதா மக்கலை ரூபாள் முக்கணி

அருணகிரிநாதர் 839
ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள் மாஞா னக்கும ராதோ கைப்பரி
யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் தொண்டுபாடச்
சூரார் மக்கிட மாமே ருக்கிட
அங்கட லெண்கிரி யோடி பங்கொடு தீபே ழற்றிட பாதா ளத்துறை
நஞ்சர வின்பன மாயி ரங்கெட தழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி
விண்கணி றைந்திட வேந டம்புரி கின்றவேலா
சோர்வே தத்தலை மேலா டிச்சுக
பங்கய செங்கர மோட கம்பெற வாகா னக்குற மாதோ டற்புத
மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல் தூணோ டிச்சுட ராகா சத்தைய
ணைந்துவி ளங்கரு னாச லந்திகழ் தம்பிரானே.
529
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
காகளம டங்கவுமு ழங்கு மதனாலே காலடர வம்பமளி மேலடரவந்துபொரு
காமன்விடு விஞ்சுகணை அஞ்சு மலராலே ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென
ஓரிரவு வந்தெனது சிந்தை யழியாதே ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு
லாவியக டம்பமலர் தந்த ருளுவாயே
ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய
ராதிபர வும்படிநி னைந்த குருநாதா ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி
யாளுமுர முந்திருவும் அன்பு முடையோனே
மேருமலை யும்பெரிய தருமலை யுங்கரிய
வேலையலை யும்பகையும் அஞ்ச விடும்வேலா மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு
வீதியிலெ முந்தருளி நின்ற பெருமாளே.

Page 29
840 திருப்புகழ்
530 கீத விநோத மெச்சு குரலாலே கீறு மையார் முடித்த குழலாலே நீதி யிலாத பூழித்து முழலாதே நீமயி லேறி யுற்று வரவேணும் குதமர் துர ருட்க பொருதுரா சோண கிரீயி லுற்ற குமரேசா ஆதியர் காதொ ருச்சொ லருள்வோனே ஆனை முகார்க னரிட்ட பெருமாளே
53
குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ
குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ
குழையாத குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ
குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ
கொடியேன்யான்
பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய
புலையணிவ னெனவுலக மேசப் போக்கென பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள்
பெருகாதே புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ
பொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாத்தென புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட
நினையாதோ
அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு
மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ அறிவாரிய வொருபொருளை போதத் தேற்றிய
அறிவோனே அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்
தருமமுது சரவணையில் வாவித் தேக்கியெ அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய
இளையோனே

அருணகிரிநாதர் - 84
சுரருலவ அசுரர்கள மாளத் துாடபட
துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட
முனிவோனே துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்
துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை கரியகுழல் குறமகளை வேளைக் காத்தனை
பெருமாளே.
532
குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்விடு காதலி
குலவனு மாய்நாடு காடொடு தடுமாறிக் குனிகொடு கூனிடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட
விறகுட னேதுாளி யாவது மறியாதாய்ப் பழயச டாதார மேனிகழ் கழியுடல் காணா நிராதர
பரிவிலி வானாலை நாடொறு மடைமாறிப் பலபல வாம்யோக சாதக வுடல்கொடு
மாயாதபோதக பதியழி யாவீடு போயினி யடைவேனோ எழுகடல் தீமுள மேருவு மிடிபட வேதாவும் வேதமு
மிரவியும் வாய்பாறி யோடிட முதுசேடன் இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக
வாள்கிரி யிருபிள வாய்விழ மாதிர )6)GDF
அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்
அவுணர்த மாசேனை தூளெழ விளையாடி அமரினை மேவாத துரரை அமர்செயும்
வேலாயு தாவுயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே.
533
கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
கேவலம தான அற்ப நினைவாலே கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
கேடுறுக வேநினைக்கும் வினையாலே

Page 30
842 திருப்புகழ்
வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
மேதினியெ லாமுழற்று மடியேனை விடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
வீறுமயில் மீதிலுற்று வருவாயே
நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
நீடுபுகழ் தேவரிற்கள் குடியேற நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
நீலநிற மால்தனக்கு மருகோனே
சோதியன லாவுதித்த சோனகிரி மாமலைக்குள்
சோபைவட கோபுரத்தி லுறைவோனே சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி தோளின்மிசை வாளெடுத்த பெருமாளே.
534
கோடான மடவார்கள் முலைமீதே கூர்வேலை யினையான விழியூடே ஊடாடி யவரோடு முழலாதே ஊராக திகழ்பாத மருள்வாயே
நீடாழி சுழல்தேசம் GJGDDT 3's நீடோடி மயில்மீது வருவோனே துடான தொருசோதி மலைமேவு சோனாடு புகழ்தேவர் பெருமாளே.
535
கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
கூறுசெய்த பூழித்து ரித்து நடைமானார் கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ஞத்தி விட்ட
கோபநுத லத்த ரத்தர் குருதாதா
நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு
நீறெழமி தித்த நித்த மனதாலே நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த
நீலமயில் தத்த விட்டு வரவேணும்

அருணகிரிநாதர் 843
ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி
ஆரமது மெத்து சித்ர முலைமீதே ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி
ஆறிருதி ருப்பு யத்தில் அணைவீரா தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி
சீருறவு ளத்தெ ரித்த சிவவேளே தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த
தேவர்சிறை வெட்டி விட்ட பெருமாளே.
536
சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
திலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் தனிலேறிச்
செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக விழிசீறிப்
புலவிமீ குத்திட் டிருந்த வஞ்சியர்
பதமல ருக்குட் பணிந்த னிந்தணி புரிவளை கைக்குட் கலின்க லென்றிட அநுராகம் புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி
லுருகிய னைத்துப் பெரும்ப்ரி யங்கொடு புனரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள்
மறவேனே கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை
மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட கணகன கட்கட் கணின்க ணென்றிட நடமாடுங் கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு
முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் புயவிரா
அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை
யவுனரை வெட்டிக் களைந்து வென்றுயர் அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட
வருவோனே

Page 31
84.4 திருப்புகழ்
அடியவரச்சத் தழுங்கி டுந்துயர்
தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் பெருமாளே.
537 சிவமா துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே பசியாறித் திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
திகைலோ கமெலா மநுபோகி இவனே யெனமா லயனோ டமரோ
ரிளையோ னெனவே மறையோத இறையோ னிடமாய் விளையா டுகவே
யியல்வே லுடன்மா அருள்வாயே
தவலோ கமெலா முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோ யசுராரைத்
தலைதுாள் படஏழ் கடல்துாள் படமா
தவம்வாழ் வுறவே விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
கடனா மெனவே அனைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
கனல்மால் வரைசேர் பெருமாளே.
538
சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்
கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ் செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந்
துன்பமேவு செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்
தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ் சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந்
தொன்றுநாயேன்
கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்
குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன் கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டு கொண்
டன்பரோடே

அருணகிரிநாதர் 845
கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம்
புணர்கரன மயில்புறமொ டின்புகொண் டண்டருங் கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன்
சிந்தியாதோ
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந் தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந்
தண்டர்போரி
தடுடு(டுடு டுடுடு(டுடு டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண் கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ்
சிந்திமாளச்
சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்
திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன் செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண்
டஞ்சல்பாடத்
திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங்
கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந் திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந்
தம்பிரானே.
539
சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றுநளி
னத்தி லப்புவென ரத்த முற்றிசுக சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகைவந்துகோலத்
தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக வட்ட மிட்டுடல வெப்ப முற்றுமதி சொற்ற பத்தின்மறி யக்ஷ ரத்தினுடை
விஞ்சையாலே
கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை
யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர் கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை அந்தமேவிக்

Page 32
846 திருப்புகழ்
கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயி
லொத்த மக்கள்மய லிற்கு விரித்துநெறி கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல மங்குவேனோ
தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட
ணற்கு நத்தரச ளரித்து முத்திகொடு சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் மருகோனே
செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி
யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு சித்த னைத்தையும்வி பூழித்த சத்தியுமை தந்தபாலா
தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை
யுக்கெ முக்கடல்கொ ரூத்தி அட்டதிசை தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின்
மண்டும்வேலா தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு
றத்தி கற்பகவ னத்தி சித்தமவை தக்கு நத்தஅரு னைக்கி ரிக்குள் மகிழ் தம்பிரானே.
540
செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை கும்பத் தந்திக் குவடென வாலிய தெந்தப் பந்தித் தரளம தாமென விடராவி சிந்திக் கந்தித் திடுகளை யாமுன
தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ திண்டுப் புந்தித் திடுகனி தானுமு னிதழாமோ மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள வஞ்சிக் கொம்பொப் பெனுமயிலேயென முறையேய வந்தித் திந்தப் படிமட வாரொடு
கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு மந்தப் புந்திக் கசடனெ நாளுன தடிசேர்வேன் நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு
திங்கட் பிஞ்சக் கரவனி வேனியர் நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை யுகிராலே

அருணகிரிநாதர் 847
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
நந்திக் கம்பத் தெழுநர கேசரி நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென மிகநாடி
வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்
பங்கிற் பெண்கற் புடையபெ னாயகி விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் புனமீதே வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி
துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய பெருமாளே.
54
தமரகு ரங்களுங் காரி ருட்பி ழம்பு
\மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ஞந்து தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு
முளகதக் கடமாமேல் தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து தமரழ மைந்தருஞ் சோக முற்றிரங்க
மரணபக் குவமாநாள்
கமலமு கங்களுங் கோம ளத்தி லங்கு
நகையு நெடுங்கனுங் காதி னிற்று லங்கு கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க
தமுமடற் சுடர்வேலுங் கடிதுல கெங்கனுந் தாடி யிட்டு வந்த
மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து
வரமெனக் கருள்கூர்வாய்
இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை யிளமுலை யின்செழும் பால்கு டித்தி லங்கு
மியல்நிமிர்த் திடுவோனே இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க
முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற ரனமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த
அயிலுடைக் கதிர்வேலா

Page 33
848 திருப்புகழ்
அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு
கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த அடியவர்க்
கெளியோனே அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை
தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த
அறுமுகப் பெருமாளே.
542
தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந் தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின்
சுவைசேருந் தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்
திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை
மாந்துளிரின் சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின்
LTT
குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்
சரிதோடினை செவியாடுச லாங்கள பூங்கமுகங் கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர்
மாண்புரிமின் கொடிமாதர் குணமோடம ஸ்ரியினாடினு மோங்கிய பூங்கமலஞ்
சரனுாபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின் கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய
பாங்கையுமன் தகையேனே
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென்
றியல்பேரி திசைமூடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்
கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின் சிரமீள்பட குவடோதுகள் வான்பெற
வாங்கியவண் கதிர்வேலா

அருணகிரிநாதர் 849
கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்
தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி
தாங்கியவண் கரர் மாடரு ஞமையாளெமை யீன்றவ
ளின்றருள்மென் குரவோனே
கடையேனிரு வினைநோய்மல மாண்டிட
தீண்டியவொண் சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின் கலைநூலுடை முருகாவழ லோங்கிய
வோங்கலின் வண் பெருமாளே.
5 4 3
தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து
சடையை வளர்த்துப் புரிந்து புலியாடை சதிரொ டுவப்பப் புனைந்து விரகொ டுகற்கப் புகுந்து தவமொ ருசத்தத் தறிந்து திருநீறு
கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து
கதறு நிலைக்கைக் கமர்ந்த எழிலோடே கனக மியற்றித் திரிந்து துவஞ மெனைச்சற் றறிந்து
கவலை யொழித்தற் கிரங்கி யருள்வாயே
அலைக டலிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட்
டெறிந்து
மமரு லகத்திற் புகுந்து முயரானை அருளொ டுகைப்பற் றிவந்து மருண கிரிப்புக் கிருந்து மறிவு ளபத்தர்க் கிரங்கு மிளையோனே
மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
வறிது நகைத்திட் டிருந்த சிவனார்தம் மதலை புனத்திற் புகுந்து நரவ டிவுற்றுத் திரிந்து
மறம யிலைச்சுற் றிவந்த பெருமாளே.

Page 34
850 திருப்புகழ்
544
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் மிகநானார் சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள் சிரித்து மானுடர் சித்தமு ருக்கிகள் விழியாலே
வெருட்டி மேல்விழு பப்பற மட்டைகள்
மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி மிகநீறால் விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை விடுத்து நானொரு மித்திரு பொற்கழல்
பணிவேனோ
தரித்த தோகன தக்கன செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு எனதாளந் தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென கனபூதம்
அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண அறவேதான் அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
திருக்கை வேல்தனை விட்டரு ளரிப்பொரும் அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள் பெருமாளே.
545
தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
தேனளி துழ மொய்த்த மலராலே சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட
சீத நிலாவெ றிக்கு மனலாலே

அருணகிரிநாதர் 85
போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
போர்மத ராஜ னுக்கு மழியாதே போகமெ லாநி றைத்து மோக விடாய்மி குத்த
பூவையை நீய ணைக்க வரவேணும் மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை
மாயனு மாத ரிக்கு மயில்வீரா வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்
வாரன மான தத்தை Ogg for
மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து
வீதியின் மேவி நிற்கு முருகோனே மேருவை நீறெ முப்பி நான்முக னார்ப தத்தில்
வேலடை யாள மிட்ட பெருமாளே.
546 தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
தோகை யர்க்கு நெஞ்ச மழியாதே தலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
தழ்டபி னிக்க ணங்க ளனுகாதே பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
பாசம் விட்டெ ஹிந்து பிடியாதே பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
பாடல் மிக்க செஞ்சொல் தரவேணும் வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
வீர பத்ர கந்த முருகோனே மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
வேலை யிற்றொ ளைந்த கதிர்வேலா கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச னிந்த
கோம ளக்கு ரும்பை புணர்வோனே கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
கோபு ரத்த மர்ந்த பெருமாளே.
547 பாண மலரது தைக்கும் படியாலே பாவி யிளமதி கக்குங் கனலாலே நாண மழிய வுரைக்குங் குயிலாலே
நானு மயலி லிளைக்குந் தரமோதான்

Page 35
852
திருப்புகழ்
சேணி லரிவை யனைக்குந்
தேவர் மகுட மணக்குங்
காண அருணையில் நிற்குங்
காலன் முதுகை விரிக்கும்
548
பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்சொற் பாடா வாடா வேடா வாலே
Lu TLT ufu-sib
தோலா லேகா லாலே யூனா
லேதுழி பாசக் தோயா மாயா வோயா நோயால்
சோர்வாய் மாளக்
ஞா லா மேலா வேதா போதா
நாதா சோதிக் ஞானா சாரா வானாள் கோனே
நானா வேதப்
வேலா பாலா சீலா காரா
வேளே வேடக் வீரா தாரா ஆறா தாரா
வீரா வீரப்
549
திருமார்பா கழல்வீரா கதிர்வேலா பெருமாளே
கொடியார்தாம்
றிடைபீறுந்
குடில்மாசு
கடவேனோ
கிரியோனே
பொருளோனே
கொடிகோவே
பெருமாளே.
புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக
பொறியுட லிறந்து போன
தளவேதுன்
புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி
பொருளென நினைந்து நாயெ
னிடர்தீர
மணமுனர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு
மணிகிரி யிடங்கொள் பாது
வெயிலாசை
வரிபர வநந்த கோடி முனிவர்கள் புகழ்ந்து போத
மயில்மிசை மகிழ்ந்து நாடி
வரவேணும்

அருணகிரிநாதர் 853
பனைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள்போல
பரிவுகொ டுகந்து வேத மதுகூறப் பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்
படை கட லிறந்து போக விடும்வேலா
அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல
அமளியில் களங்க ளோசை வளர்மாது அரிமகள் மனங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக
அருணையின் விலங்கல் மேவு பெருமாளே.
55 O புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
பொறையி லாத கோபீகன் (p(peup-air புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
பொறிக ளோடு போய்விழு மதிததன் நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியி லாத வேமாளி குலபாதன் நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி யருள்வாயே சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
சிதையு மாறு போராடி யொருசீதை சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
திறமி யான மாமாயன் மருகோனே
அலைய மேரு மாதுரர் பொடிய தாக வேலேவி
அமர தாடி யேதோகை மயிலேறி அதிக தேவ ரேதுழ உலக மீதி லேகூறும்
அருணை மீதி லேமேவு பெருமாளே
55 போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
பாரியைப் பொற்குவையுச் சிப்பொ முதிலியும் போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்
தோரைமெச் சிப்பிரியப் பட்டு மிடிபோகத்
த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்
தாரமுட் பட்டதிருட் டுக்க விகள் பாடித் தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்
சேல்வலைப் பட்டடிமைப் பட்டுவிடலாமோ

Page 36
854
திருப்புகழ்
ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்
றாதரிக் கைக்கருணைத் துப்பு மதில்தழும்
ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்
காகவெற் றிக்கலபக் கற்கி யமர்வோனே
தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்
தூணிமுட் டச்சுவறத் திக்கி லெழுபாரச் சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்
துரனைப் பட்டுருவத் தொட்ட
552
மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்
மீனை நிரப்பிக் குனித்து விட்டனை வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை வாளை வனத்துற் பலத்தி னைச்செல
மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர் மாய வலைப்பட் டிலைத் துடக்குழல்
ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு
வூறு முபத்தக் கருத்த டத்தினை யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு ஊசலை நித்தத் த்வமற்ற செத்தையு
பாதியை யொப்பித் துணிப்ப வத்தற வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை
சானகி கற்புத் தனைச்சு டத்தன
சோக வனத்திற் சிறைப்ப டுத்திய தானை யரக்கற் குலத்த ரத்தனை
சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்
வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன்
சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி
லானை மதத்துக் கிடக்கு மற்புத சோன கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ
பெருமாளே.
வடிவேலை
மணநாறும்
தடுமாறும்
தெளியாதோ
வருமாளச்
மருகோனே
மணிநீபத்
தோள்கொடு சக்ரப் பொருப்பி னைப்பொடி
யாகநெ ருக்கிச் செருக்க ளத்தெதிர் துரனை வெட்டித் துணித்த டக்கிய
பெருமாளே.

அருணகிரிநாதர் 855
553
முகத்து லக்கிக ளாசா ரவினிகள்
விலைச்சி நுக்கிகள் நேரா வசடிகள் முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் முந்துதது
மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை
பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ முயற்று பொட்டிகள் மோகா வலமுறு கின்றமூடர்
செகத்தி லெத்திகள் சார்வாய் மயக்கிகள்
திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள் சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை சிந்தைமாயத்
திரட்பொ றிச்சிகள் மாபா விகளப
கடத்த சட்டைகள் மூதே விகளொடு திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி யென்றுசேர்வேன்
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
செகுச்செ குச்செகு சேசே செககன தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
தொந்ததீதோ துடுட்டு டுட்டுடு டுடு டுடுருடு
திகுத்தி குத்திகு தீதோ எனவொரு துவக்க நிர்த்தன மாடா வுறைபவர்
தொண்டர்பேனும்
அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்
வளர்த்த கற்பக மாஞா லியுமகி ழவுற்ற நித்தபி ரானே அருணையில் நின்றகோவே அமர்க்க ளத்தொரு துரே சனைவிழ முறித்து ழக்கிய வானோர் குடிபுக அமர்த்தி விட்டசு வாமி அடியவர் தம்பிரானே.
554
மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
வாளி யொத்தவிழி யார்மு கக்கமல மீது பொட்டிடழகார்க ளத்திலனி SL LDs TL

Page 37
856 திருப்புகழ்
மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென
மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம் வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை யுடைமாதர்
தோகை பசுஷிநடை யார்ப தத்திலிடு
நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள் சோர நற்றெருவு டேந டித்துமுலை விலைகூறிச் துத கச்சரச மோடெ யெத்திவரு
வோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல் தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ளுறவாமோ
சேக ணச்செகண தோதி மித்திகுட
டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி தீத கத்திமித தோவு டுக்கைமணி முரசோதை தேச முட்கவர ஆயி ரச்சிரமு
மூளி பட்டுமக மேரு வுக்கவுணர் தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற விடும்வேலா
ஆக மத்திபல கார ணத்தியெனை யீன சத்தியரி ஆச னத்திசிவ னாக முற்றசிவ காமி பத்தினியின் முருகோனே ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு
மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் பெருமாளே
555 மொழிய நிறங்கறுத்து மகர வினங்கலக்கி
முடிய வளைந்தரற்று கடலாலும் முதிர விடம்பரப்பி வடவை முகந்தழற்குள்
முழுகி யெழுந்திருக்கு நிலவாலும் மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
மயல்தணி யும்படிக்கு நினைவாயே மரகத துங்கவெற்றி விகட நடங்கொள்சித்ர
மயிலினில் வந்துமுத்தி தரவேணும்
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி
னமுத தனம்படைத்த திருமார்பா அமரர் புரந்தனக்கு மழகிய செந்திலுக்கு
மருணை வளம்பதிக்கு மிறையோனே

அருணகிரிநாதர் 857
எழுபுவ னம்பிழைக்க அசுரர் சிரந்தெறிக்க
எழுசயி லந்தொளைத்த சுடர்வேலா இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த
ரிவர்கள் பயந்தவிர்த்த பெருமாளே.
556 வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
வறள்துலை குட்டமொடு குளிர்தாகம் மலிநீ ரிழிச்சல்பெரு வயிறிளை கக்குகளை
வருநீ ரடைப்பினுடன் வெகுகோடி
சிலைநோ யடைத்தவுடல் புவிமீ தெடுத்துழல்கை
தெளியா வெனக்குமினி முடியாதே சிவமார் திருப்புகழை எனுநா வினிற்புகழ
சிவஞான சித்திதனை யருள்வாயே தொலையாத பத்தியுள திருமால் களிக்கவொரு
சுடர்வீசு சக்ரமதை யருள்ஞான துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி சித்தனருள் முருகோனே
அலைதுரன் வெற்புமரி முகனானை வத்திரனோ
டசுரா ரிறக்கவிடு மழல்வேலா அமுதா சனத்திகுற மடவாள் கரிப்பெனொடும்
அருணா சலத்திலுறை பெருமாளே.
557 விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
விழிகொடு வாபோவென வுரையாடும் விரகுட னுாறாயிர மனமுடை மாபாவிகள்
ம்ருகமத கோலாகல முலைதோய
அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
அவனியு மாகாசமும் வசைபேசும் அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
அடியவ ரோடாள்வது மொருநாளே
வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்
வனிதையர் தோள்தோய்தரு மயிராம மரகத நாராயணன் மருமக சோணாசல
மகிபச தாகாலமு மிளையோனே

Page 38
858
திருப்புகழ்
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
உலகுய வாரார்கலி உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
ஒருதனி வேலேவிய
558 விதிய தாகவெ பருவ மாதரார்
விரகி லேமனந் விவர மானதொ ரறிவு மாறியே
வினையி லேஅலைந்
முதிய மாதமி பூழிசைய தாகவே
மொழிசெய் தேநினைந் முறைமை யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந் சதிய தாகிய அசுரர் மாமுடீ
தரணி மீதுகுஞ் சகல லோகமும் வலம தாகியே
தழைய வேவருங்
அதிக வானவர் கவரி வீசவே
அரிய கோபுரந் அருணை மீதிலெ மயிலி லேறியே
அழக தாய்வரும்
559 விந்துப் புளசித இன்புற் றுருகிட சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி
வறிதாக
பெருமாளே.
தடுமாறி
திடுமூடன்
திடுமாறு
தருள்வாயே
சமராடிச்
குமரேசா
தனில்மேவி
பெருமாளே.
விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு
மெழுக்கி லுருவென வலித்து எழுமதி கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில் விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி வந்துப் புவியிசை பண்டைச் செயல்கொடு
விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு
கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு மருள்கூர

அருணகிரிநாதர் :5 a -- 859
மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலை யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர்
வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு
விதித்த முறைபடி படித்து மயல்கொள தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி
விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு வழியேபோய்ச்
சந்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசை கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ
டனைத்து மலரிதழ் கடித்து இருகர மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர் சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர் சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட
சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல் வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை
சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் நரைமேவித் தன்கைத் தடிகொடு குந்திக் கவியென உந்திக் கசனம றந்திட் டுளமிக
சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி விழிப்பு மறைபட கிடத்தி மனையவள் சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில் சண்டக் கருநம னண்டிக் கொளுகயி
றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல

Page 39
860 திருப்புகழ்
சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ ரங்கப் பினமெடு மென்றிட்டறைபறை
தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு
முடலாமோ
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுருடு டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு செம்பொற் குடமுழ வுந்தப் புடன்மணி பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை
செழித்த மறைசிலர் துதிப்ப முனிவர்கள் களித்து வகைமணி முழக்க அசுரர்கள் களமீதே சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம் ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள் சிரத்தொ டிரதமு மிதப்ப நினமொடு செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த தும்பக் கருடன டங்கொட் டிடகொடி மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள் நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல் செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட
சிமக்கு முரகனு முழக்கி விடபட மடைத்த சதமுடி நடுக்கி யலைபட விடும்வேலா
தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி
சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி கரத்த ராகரி யுரித்த கடவுள்மெய்

அருணகிரிநாதர் 861
தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளனி கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர் தொடுத்த மதனுரு பொடித்த விழியினர் மிகுத்த புரமதை யொரித்த நகையினர் தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர் தொந்திக் கடவுளை தந்திட் டவரிட
சுகத்தி மழுவுழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை ரம்பைக் கரசியெ னும்பற் றருமகள்
சுகிப்ப மணவறை களிக்க அணையறு முகத்தொ டுறமயல் செழித்த திருபுய செம்பொற் கரகம லம்பத் திருதல மம்பொற் சசியெழ சந்தப் பலபடை
செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள் தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில்
தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய பெருமாளே.
5 60
வீறுபுழு காணபனி நீர்கள்மல தோயல்விடு
மேருகிரி யானகொடு தனபார மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
மேகமனு காடுகட லிருள்மேவி
நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள
நாணமழி வார்களுட SDJ Dod T – நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
ஞானசிவ மானபத மருள்வாயே
கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
கோலமயி லாண்பத மருள்வோனே கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
கூருசிவ காமியுமை யருள்பாலா

Page 40
862 திருப்புகழ்
ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
மாரவிளை யாடிமன மருள்வோனே ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
ஆதியரு ணாபுரியில் பெருமாளே.
5 6
குமர குருபர குணதர நிசிசர
திமிர தினகர சரவண பவகிரி குமரி சுதபதி ரதிசுத சுரபதி குலமானுங் குறவர் சிறுமியு மருவிய திரள் புய
முருக சரனென வுருகுதல் சிறிதுமில் கொடிய வினையனை யவலனை யசடனை
யதிமோகக்
கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
களவி னொடுபொரு ளளவள வருளிய கலவி யளறிடை துவஞறும் வெளிறனை யினிதாளக் கருணை யடியரொ டருணையி லொருவிசை
சுருதி புடைதர வருமிரு பரிபுர கமல மலரடி கனவிலு நனவிலு
மறவேனே
தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல் மறுகி யலைபட விடநதி யுமிழ்வன சமுக முககன பணபணி பதிநெடு வடமாகச் சகல வுலகமு நிலைபெற நிறுவிய கனக கிரிதிரி தரவெகு கரமலர் தளர வினியதொ ரமுதினை யொருதனி
கடையாநின்
றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
அகில புவனமு மளவிடு குறியவன் அளவு நெடியவ னளவிட அரியவன் மருகோனே அரவு புனைதரு புனிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ் அறிவை யறிவது பொருளென அருளிய
பெருமாளே.

அருணகிரிநாதர் 863
5 62 அருவ மிடையென வருபவர் துவரிதழ்
அமுது பருகியு முருகியு ம்ருகமத அளக மலையவு மணிதுகி லகலவு மதிபார அசல முலைபுள கிதமெழ அமளியில்
அமளி படஅந வரதமு மவசமொ டணையு மழகிய கலவியு மலமல முலகோரைத்
தருவை நிகரிடு புலமையு மலமல
முருவு மிளமையு மலமலம் விபரித சமய கலைகளு மலமல மலமரும் வினைவாழ்வுஞ்
சலில லிபியன சனனமு மலமல
மினியு னடியரொ டொருவழி படஇரு தமர பரிபுர சரணமு மவுனமு மருள்வாயே
உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
யிருகு தையுமுடி தமனிய தநுவுட னுருளை யிருசுடர் வலவனு மயனென மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை யடியிட
நெறுநெ றென்முறி தலுநிலை பெறுதவம் உடைய வொருவரு மிருவரு மருள்பெற வொருகோடி
தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன புகைவன திகுதி கெனஎரி வன அனல் நகைகொடு
முனிவார்தஞ் சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
பெரும அருணையி லெழுநிலை திகழ்வன சிகாரி மிசையொரு கலபியி லுலவிய பெருமாளே.
563 கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
பிசித அசனம றவரிவர் முதலிய கலக விபரித வெகுபர சமயிகள் பலர் கூடிக் கலக லெனநெறி கெடமுறை முறைமுறை
கதறி வதறிய குதறிய கலைகொடு கருத அரியதை விழிபுனல் வரமொழி குழறாவன்

Page 41
864 ܖ திருப்புகழ்
புருகியுணதருள் பரவுகை வரில்விர
கொழியி லுலகியில் பிணைவிடி லுரைசெய லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள றதுபோக உதறி லெனதெனு மலமறி லறவினி
லெளிது பெறலென மறைபறை யறைவதொ ருதய மரணமில் பொருளினை யருளுவ தொருநாளே
தருண சததள பரிமள பரிபுர
சரணி தமனிய தநுதரி திரிபுர தகனி கவுரிப வதிபக வதிபயி ரவிதுலி சடில தரியது பவையுமை திரிபுரை
சகல புவனமு முதவிய பதிவ்ருதை சமய முதல்வித னயபகி ரதிசுத சதகோடி
அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு
கருணை வருணித தனுபர குருபர அருணை நகருறை சரவண குரவணி புயவேளே அடவி சரர்குல மரகத வனிதையு மமரர் குமரியு மனவர தமுமரு கழகு பெறநிலை பெறவர மருளிய பெருமாளே.
564
துகிலு ம்ருகமத பரிமள அளகமு
நெகிழ இருதன கிரியசை தரஇடை துவள மனிதரு மமரரு முனிவரு முடனோடித் தொடர வனமணி மகரமி லகுகுழை யடரு வனவிட மிளிர்வன ரதிபதி சுருதி மொழிவன கயல்விழி புரள்தர நடுவாக
வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர
வனச பதயுக பரிபுர மொலிபட மறுகு தொறுமுல வியினிய கலவியை விலைகூறும் வரைவி லாரிவையர் தருசுக சலதியி
லலையு மெனதுயி ரநுதின நெறிதரு மவுன சிவசுக சலதியில் முழுகுவ தொருநாளே
முகிலு மதியமும் ரவியெழு புரவியு
நெடிய குலைமிட ஹிடறமு துககன முகிடு கிழிபட வளர்வன கமுகின மிசைவாளை

அருணகிரிநாதர் 865
முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்
தடமு முளரிய அகழியு மதில்களு முழுது முடையதொரருணையிலுறைதருமிளையோனே
அகிலு மருதமு முகுளித வகுளமு
மமுத கதலியும் அருணமும் வருடையு மபரி மிதமத கரிகளு மாரிகளு முடனேகொண் டருவி யிழிதரு மருவரை தனிலொரு
சவர வனிதையை முனிதரு புனிதையை அவச முடன்மல ரடிதொழு துருகிய பெருமாளே.
5 65
மகர மெறிகடல் விழியினு மொழியினு
மதுப முரல்குழல் வகையினு நகையினும் வளமை யினுமுக நிலவினு மிலவினு நிறமூசும் மதுர இதழினு மிடையினு நடையினு
மகளிர் முகுளித முலையினு நிலையினும் வனச பரிபுர மலரினு முலரினு மவர்நாமம்
பகரு கினுமவர் பணிவிடை திரிகினு
முருகி நெறிமுறை தவறினு மவரொடு பகடி யிடுகினு மமளியி லவர்தரு மநுராகப் பரவை படியினும் வசமழி யினுமுத
லருணை நகர்மிசை கருணையொ டருளிய பரம வொருவச னமுமிரு சரணமு மறவேனே
ககன சுரபதி வழிபட எழுகிரி
கடக கிரியொடு மிதிபட வடகுல கனக கனகுவ டடியொடு முறிபட முதுகுதங் கதறு சுழிகட லிடைகிழி படமிகு
கலக நிசிசரர் பொடிபட நடவிய கலப மரகத துரகத ந்குபகிரி மயில்வாழ்வே
தகன கரதல சிவசுத கணபதி
சகச சரவண பரிமள சததள சயன வனசரர் கதிபெற முனிபெறு புனமானின் தரள முகபட நெறிபட நிமிர்வன தருண புளசித ம்ருகமத தனகிரி தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய பெருமாளே.

Page 42
866 திருப்புகழ்
566
முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
முதிய மதியது முகமென நுதலிணை முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி யெனமூவா முளரி தனின்முகு ளரிதமலர் முலையென
முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை மொழிய வரியதொர் தெரிவையர் வினையென
மொழிகூறிப் பகலு மிரவினு மிகமன மருள்கொடு
பதியி லவர்வடி வுளதழ கெனவொரு பழுது மறஅவர் பரிவுற இதமது பகராதே
பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட
விகட முடனடை பயில்மயில் மிசைவரு பவனி தனையது தினநினை யெனஅருள் பகர்வாயே
புகல வாரியது பொருளிது எனவொரு
புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு பொதுவை யிதுவென தவமுடை முனிவர்கள்
புடைதழப் புரமு மெரியெழ நகையது புரிபவர்
புனலும் வளர்மதி புனைசடை யினரவர் புடவி வழிபட புதைபொருள் விரகொடு
புகல்வோனே
அகில கலைகளு மறநெறி முறைமையு
மகில மொழிதரு புலவரு முலகினி லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை யதனாலே
அறுவர் முலையுணு மறுமுக னரிவனென
அரிய நடமிடு மடியவ ரடிதொழ அருணை நகர்தனி லழகுடன் மருவிய பெருமாளே.
5 67
முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
முலைக ளளவிடு முகபட பகடிகள் முதலு முயிர்களு மளவிடு களவியர் முழுநீல

அருணகிரிநாதர் 867
முழுகு புழுககில் குழைவடி வழகியர் முதிர வளர்கனி யதுகவ ரிதழியர் முனைகொ ளயிலென விழியெறி கடைசிய
ரநுராகம் மருவி யமளியி னலமிடு கலவியர்
மனது திரவிய மளவள வளவியர் வசன மொருநொடி நிலைமையில் கபடியர்
வழியேநான் மருளு மறிவின னடிமுடி யறிகிலன்
அருணை நகர்மிசை கருணையொ டருளிய மவுன வசனமு மிருபெரு சரணமு மறவேனே
கருதி யிருபது கரமுடி யொருபது
கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது கடிய வியனகர் புகவரு கணபதி கனல்மூழ்கக்
கவச அநுமனோ டெழுபது கவிவிழ
அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு களரி தனிலொரு கணைவிடு மடலரி மருகோனே
சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி
யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து தரும னவர்பதி குடிவிடு பதனிசை மயில்வீரா
தருண மணியவை பலபல செருகிய
தலையள் துகிலிடை யழகிய குறமகள் தனது தனமது பரிவொடு தழுவிய பெருமாளே.
568
விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி
வனச மலதழல் முழுகிய சரமென விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல வொருஞான
விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென மொழியு மமுதல வுயிர்கவர் வலையென விழையு மிளநகை தளவல களவென வியனாபித்

Page 43
868 திருப்புகழ்
தடமு மடுவல படுகுழி யெனஇடை
துடியு மலமத னுருவென வனமுலை சயில மலகொலை யமனென முலைமிசை
புரள்கோவை தரள மணியல யமன்விடு கயிறென
மகளிர் மகளிரு மலபல வினைகொடு சமையு முருவென வுணர்வொடு புணர்வது
மொருநாளே அடவி வனிதையர் தனதிரு பரிபுர
சரண மலரடி மலர்கொடு வழிபட அசல மிசைவிளை புனமதி லினிதுறை தனிமானும்
அமர ராவையு மிருபுடை யினும்வர
முகர முகபட கவளத வளகர அசல மிசைவரு மபிநவ கலவியும் விளையாடும்
கடக புளசித புயகிரி சமுகவி
கடக கசரத துரகத நிசிசரர் கடக பயிரவ கயிரவ மலர்களும் எரிதீயுங்
கருக வொளிவிடு தனுவர கவுதம
புனித முனிதொழ அருணையி லறம்வளர் கருணை யுமைதரு சரவண சுரபதி பெருமாளே.
569
கமரி மலர்குழல் சரிய புளசித
கனக தனகிரி யசைய பொருவிழி கனைக ளெனநுதல் புரள துகிலதை நெகிழ்மாதர் கரிய மணிபுர ளரிய கதிரொளி
பரவ இணைகுழை யசைய நகைகதிர் கனக வளைகல நடைகள் பழகிகள் மயில்போலத்
திமிரு மதபுழு கொழுக தெருவினி
லலைய விலைமுலை தெரிய மயல்கொடு திலத மணிமுக அழகு சுழலிக ளிதழுறல் திரையி லமுதென கழைகள் பலசுளை யெனவு மவர்மயல் தழுவு மசடனை திருகு புலைகொலை கலிகள் சிதறிட அருள்தாராய்

அருணகிரிநாதர் 869
குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர எனதாளங் குரைசெய் முரசமொ டரிய விருதொலி
டமட டமடம டமட டமவென
அமரர் முனிவரு மயனு மனைவரு
மதுகை மலர்கொடு தொழுது பதமுற அசுரர் பரிகாரி யிரத முடைபட விடும்வேலா அகில புவனமொ டடைய வொளிபெற அழகு சரண்மயில் புறம தருளியொ
ரருண கிரிகுற மகளை மருவிய பெருமாளே.
57 0 கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
கனவகெட் டேனெனப் பெறுமாது கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்
கதறிடப் பாடையிற் றலைமீதே பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்
பறைகள்கொட் டாவரச் சமனாரும் பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்
பரிகரித் தாவியைத் தரவேணும் அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்
றருணையிற் கோபுரத் துறைவோனே அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்
தரியசொற் பாவலர்க் கெளியோனே புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்
புனமறப் பாவையைப் புணர்வோனே பொடிபடப் பூதரத் தொடுகடற் துரனைப்
பொருமுழுச் சேவகப் பெருமாளே.
57 கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்
திலகுகட் சேல்களிப் புடனாடக்
கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்
களவினிற் காசினுக் குறவாலுற்

Page 44
870 திருப்புகழ்
றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் துாடலுற்
றுயர்பொருட் கோதியுட் படுமாதர் ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்
புனையிணைத் தாள்தனைத் தொழுவேனோ மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்
செறிதிருக் கோலமுற் றனைவானும் மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்
றிடஅடற் சூரனைப் பொரும்வேலா அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்
றருணையிற் கோபுரத் துறைவோனே அடவியிற் றோகைபொற் றடமுலைக காசையுற்
றயருமச் சேவகப் பெருமாளே.
57 2 பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
பயனுயிர்ப் போயகப் படமோகப் படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
படரெரிக் கூடுவிட் டலைநீரிற்
பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
பிணிகளுக் கேயிளைத் துழல்நாயேன் பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
பிரியமுற் றோதிடப் பெறுவேனோ கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
கமைவபற் றாசையக் கழலோர்முன் கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
கடவுள்செச் சேவல்கைக் கொடியோனென் றரியநற் பாடலைத் தெரியுமுற் றோர்கிளைக்
கருணையிற் கோபுரத் துறைவோனே அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப் பெருமாளே.
57 3 தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
தழலமளி மீதெ றிக்கு நிலவாலே
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த தறுகண் மத வேள்தொ டுத்த கணையாலே

அருணகிரிநாதர் 87
வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று
மருவுமென தாவி சற்று மழியாதே மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
மயிலின்மிசை யேறி நித்தம் வரவேணும் கருணையக லாவி பூழிச்சி களபமழி யாமு லைச்சி
கலவிதொலை யாம றத்தி LOGO GATGTT கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
கடியமல ராத ரித்த கழல்வீரா அருணமணி யால மைத்த கிரணமணி தழும் வெற்றி
அருணைநகர் கோபு ரத்தி லுறைவோனே அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
அமரர்சிறை மீள விட்ட பெருமாளே.
57 4 முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
முழுமதிநி லாவி னுக்கும் வசையாலும் மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
முதியமத ராஜ னுக்கு மழியாதே புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
புதுமையினி லாறி ரட்டி புயமிதே புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
பொருமயிலி லேறி நித்தம் வரவேணும் எழுமகர வாவி சுற்று பொழிலருனை மாந கர்க்கு
ளெழுதரிய கோபு ரத்தி லுறைவோனே இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
இளமுலைவி டாத சித்ர மணிமார்பா செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
சிவனைமுத லோது வித்த குருநாதா திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற
சிறையடைய மீள விட்ட பெருமாளே.
575 வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு
மதுரமொழி யாழி சைக்கு மிருநாலு
வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு
மடியருவ வேள்க னைக்கு மறவாடி

Page 45
872 திருப்புகழ்
நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு
நிறையுமிகு காத லுற்ற மயல்தீர நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர
நிலவுமயி லேறி யுற்று வரவேணும் மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
மவுலியற வாளி தொட்ட அரிராமன் மருகபல வான வர்க்கு மரியசிவ னார்படிக்க
மவுனமறை யோது வித்த குருநாதா இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு
ளினியகுண கோபு ரத்தி லுறைவோனே எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு
மிடையுருவ வேலை விட்ட பெருமாளே.
576 ஆலவிழி நீலத் தாலதர பானத்
தாலளக பாரக் கொண்டலாலே ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
தாரநடை யால்நற் கொங்கையாலே சாலமய லாகிக் காலதிரி துலத்
தாலிறுகு பாசத் துன்பமூழ்கித் தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
சாவதன்மு னேவற் கொண்டிடாயோ சோலைதரு கானிற் கோலமற மானைத்
தோளிலுற வாகக் கொண்டவாழ்வே சோதிமுரு காநித் தாபழய ஞானச்
சோனகிரி வீதிக் கந்தவேளே பாலகக லாபக் கோமளம யூரப்
பாகவுமை பாகத் தன்குமாரா பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் தம்பிரானே.
577 பேதகவி ரோதத் தோதகவி நோதப்
பேதையர்கு லாவைக் கண்டுமாலின்
பேதைமையு றாமற் றேதமக லாமற்
பேதவுடல் பேணித் தென்படாதே

அருணகிரிநாதர் 873
சாதகவி காரச் சாதலவை போகத்
தாழ்விலுயி ராகச் சிந்தையாலுன்
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
சாரல்மற மானைச் சிந்தியேனோ போதகம யூரப் போதகக டாமற்
போதருணை வீதிக் கந்தவேளே
போதகக லாபக் கோதைமுது வானிற்
போனசிறை மீளச் சென்றவேலா பாதகப தாதிச் சூரன்முதல் விழப்
பாருலகு வாழக் கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் தம்பிரானே.
578
அமுத மூறுசொ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னானையு னானையெ னருகு வீடிது தானதில் வாருமெ னுரைகூறும் அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள் தெருவின் மீதுகு லாவியு லாவிகள் அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி னருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேஸ்வரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி கொடிய துலிசு டாரணி யாமளி மகமாயி குறளு ரூபமு ராரிச கோதரி யுலக தாரிஉ தாரி பராபரி குருப ராரிவி காரி நமோகரி அபிராமி
சமர நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரணி சலில மாரிசி வாயம னோகரி பரையோகி சவுரி வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு சகல வேதமு மாயின தாயுமை யருள்பாலா
திமித மாடுசு ராரிநி சாசரர்
முடிக டோறுக டாவியி டேயொரு சிலப சாசுகு னாலிநி னாமுன விடும்வேலா

Page 46
874 திருப்புகழ்
திருவு லாவுசொ ணேசர ணாமலை முகிலு லாவுவி மானந வோநிலை சிகர மீதுகு லாவியு லாவிய பெருமாளே
579
உருகு மாமெழு காகவு மேமயல்
பெருகு மாசையு ளாகிய பேர்வரி லுரிய மேடையில் வார்குழல் நீவிய வொளிமானார் உடைகொள் மேகலை யால்முலை மூடியும்
நெகிழ நாடிய தோதக மாடியு முவமை மாமயில் போல்நிற மேனிய ருரையாடுங்
கரவ தாமன மாதர்கள் நீள்வலை
கலக வாரியில் வீழடி யேனெறி கருதொ னாவதி பாதக னேசம தறியாத கசட மூடனை யாளவு மேயருள்
கருணை வாரிதி யேயிரு நாயகி கணவ னேயுன தாளினை மாமலர் தருவாயே
சுருதி மாமொழி வேதியன் வானவர் பரவு கேசனை யாயுத பாணிநல் துளப மாலையை மார்பணி மாயவன் மருகோனே தொலைவி லாவசு ரேசர்க ளானவர்
துகள தாகவு மேயெதி ராடிடு சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் வருவோனே
அருணர் கோடியி னாரொளி வீசிய
தருண வாண்முக மேனிய னேயர னனையு நாயகி பாலக னேநிறை கலையோனே அணிபொன் மேருயர் கோபுர மாமதி
ளதிரு மாரண வாரன வீதியு ளருணை மாநகர் மேவியு லாவிய பெருமாளே
58 O
கரியுரி அரவ மணிந்த மேனியர்
கலைமதி சலமு நிறைந்த வேணியர் கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் கஞ்சமாதின்

அருணகிரிநாதர் 875
கனமுலை பருகி வளர்ந்த காமனை
முனிபவர் கயிலை யமர்ந்த காரணர் கதிர்விரி மணிபொ னிறைந்ததோளினர் கண்டகாள
விரிவென வுனது ஞகந்த வேலென
மிகவிரு குழையு மடர்ந்து வேளினை யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ குண்டுநாடும் வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற
விதமிகு கலவிபொருந்தி மேனியு மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ
ழிந்திடாதோ எரிசொரி விழியு மிரண்டு வாளெயி
றிருபிறை சயில மிரண்டு தோள்முகி லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ டிந்துவிழ்வ தெனவிழ முதுகு பிளந்து காளிக
ளிடுபல யெனவு நடந்து தாள்தொழ எதிர்பொரு துதிர முகந்த வேகமு கைந்தவேலா
அரிகாரி யுழுவை யடர்ந்த வாண்மலை
அருணையி லறவு முயர்ந்த கோபுர மதினுறை குமர அநந்த வேதமொ ழிந்துவாழும் அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள் அடவியி லாரிவை குயங்கள் தோய்புய அரியர பிரம புரந்த ராதியர் தம்பிரானே.
58 கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
வடதம னியகிரி கம்ப மாய்நட கனபன விபரித கந்த காளபு யங்கராஜன் கயிறென அமரர நந்த கோடியு
முறைமுறை யமுதுக டைந்த நாளொரு கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ழுங்குபோல
வினைமத காரிகளு மெண்டி சாமுக
கிரிகளு முறுகிட அண்ட கோளகை வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு நஞ்சுபோல விடுகுழை யளவும ளந்து காமுக
ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ழிந்திடாதோ

Page 47
876 திருப்புகழ்
முனைபெற வளையஅ னைந்த மோகர நிசிசரர் கடகமு றிந்து தூளெழ முகிலென வுருவமி ருண்ட தாருக னஞ்சமீன முழுகிய திமிரத ரங்க சாகர
முறையிட இமையவர் தங்க ளூர்புக முதுகிரி யுருவமு னிந்த சேவக செம்பொன்மேரு
அனையன கனவித சண்ட கோபுர
அருணையி லுறையும ருந்து ணாமுலை அபிநவ வனிதைத ருங்கு மாரநெ ருங்குமால்கொண் டடவியில் வடிவுக ரந்து போயொரு
குறமகள் பிறகுதி ரிந்த காமுக
அரியர பிரமபு ரந்த ராதியர் தம்பிரானே.
582 இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
புவிதனி லினமொன் றிடுமாதும் எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
மிடர்கொடு நடலம் பலகூறக்
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
டுயிரினை நமனுங் கருதாமுன் கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
கழலினை கருதும் படிபாராய் திருமரு வியதிண் புயனயன் விரியெண்
டிசைகிடு கிடவந் திடுதரன் திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
சிடவலி யொடுகன் றிடும்வேலா
அருமறை யவரந் தரமுறை பவரன்
புடையவ ருயஅன் றறமேவும் அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையி லுறையும் பெருமாளே.
583 விரகொடு வளைசங் கடமது தருவெம்
பிணிகொடு விழிவெங் கனல்போல
வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
றெனவிதி வழிவந் திடுபோதிற்

அருணகிரிநாதர் 877
கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
கையருற வினர்கண் புனல்பாயுங் கலகமும் வருமுன் குலவினை களையுங்
கழல்தொழு மியல்தந் தருள்வாயே
பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
படவர வணைகண் டுயில்மாலம் பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
பயமற விடமுண் டெருதேறி
அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
கையுமுற அனலங் கையில்மேவ அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையில் மருவும் பெருமாளே.
584 இடமடு சுறவை முடுகிய மகர
மெறிகட லிடையெழு திங்களாலே இருவினை மகளிர் மருவிய தெருவி
லெரியென வருசிறு தென்றலாலே
தடநடு வுடைய கடிபடு கொடிய
சரம்விடு தறுகண நங்கனாலே சரிவளை கழல மயல்கொளு மரிவை
தனிமல ரனையின லங்கலாமோ
வடகுல சயில நெடுவுட லசுரர்
மணிமுடி சிதறள றிந்தவேலா மறமக ளமுத புளசித களப
வளரிள முலையைம னந்தமார்பா
அடலணி விகட மரகத மயிலி
லழகுட னருணையி னின்றகோவே அருமறை விததி முறைமுறை பகரு
மரியர பிரமர்கள் தம்பிரானே.
585 கெஜநடை மடவார் வசமதி லுருகா
கிலெசம துறுபாழ் வினையாலே
கெதிபெற நினையா துதிதனை யறியா
கெடுசுக மதிலாழ் மதியாலே

Page 48
878 திருப்புகழ்
தசையது மருவி வசையுட லுடனே
தரணியில் மிகவே யுலைவேனோ சததள மலர்வார் புணைநின கழலார்
தருநிழல் புகவே தருவாயே
திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
திருநெடு கருமால் மருகோனே திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
திரிபுரை யருள்சீர் முருகோனே
நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
நிறையயவில் முடுகா விடுவோனே நிலமிசை புகழார் தலமெனு மருணா
நெடுமதில் வடசார் பெருமாளே.
586 அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
கடுத்தாசை பற்றித் தளராதே அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
டறப்பே தகப்பட் டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
கலிச்சா கரத்திற் பிறவாதே கருத்தா லெனக்குத்திருத்தா ளளித்துக்
கலைப்போ தகத்தைப் புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
டுரைப்பார்கள் சித்தத் துறைவோனே உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
டொளித்தோடும் வெற்றிக் குமரேசா
செருக்கா தருக்கிச் சுரச்துர் நெருக்கச்
செருச்சூர் மரிக்கப் பொரும்வேலா திறப்பூ தலத்திற் றிரட்சோன வெற்பிற்
றிருக்கோ புரத்திற் பெருமாளே.
587 அருமா மதனைப் பிரியா தசரக்
கயலார் நயனக் கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்
தனையா வலிகெட் டுடல்தாழ

அருணகிரிநாதர் 87 9
இருமா நடைபுக் குரையோ யுணர்வற்
றிளையா வுளமுக் குயிர்சோர எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக் கருள்வாயே
ஒருமால் வரையைச் சிறுதுாள் படவிட்
டுரமோ டெறிபொற் கதிர்வேலா உறைமா னடவிக் குறமா மகளுக்
குருகா றிருபொற் புயவீரா திருமால் கமலப் பிரமா விழியிற்
றெரியா வரனுக் கரியோனே செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
றிருவீ தியினிற் பெருமாளே.
588 அழுதுமா வாவெனத் தொழுதுமூ டூடுநெக்
கவசமா யாதரக் கடலூாடுற் றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
கறியொனா மோனமுத் திரைநாடிப் பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்
பெரிய ஆதேசபுற் Lg5LDstuu பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
பெறுவதோ நாணினிப் புகல்வாயே பழைய பாகீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
படியுமா றாயினத் தனசாரம் பருகுமா றானனச் சிறுவசோ னாசலப்
பரமமா யூரவித் தகவேளே பொழுதுதழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
பொடிபடா வோடமுத் தெறிமீனப் புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
பொருதவே லாயுதப் பெருமாளே
589 ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
டாடைமறைத் தாடுமலர்க் குழலார்கள்
ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்
டாரைபுமெத் தாகமயக் கிடுமோகர்

Page 49
880 திருப்புகழ்
சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்
தூதுவிடுத் தேபொருளைப் பறிமாதர் தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
சோதியொளிப் பாதமளித் தருள்வாயே
தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்
சாயகடற் துரைவதைத் திடுவோனே தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்
தாபரம்வைத் தாடுபவர்க் கொருசேயே தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்
தேயுருகிச் சேருமனிக் கதிர்வேலா சீரருணைக் கோபுரமுற் றாண்புனத் தோகையுமெய்த்
தேவமகட் கோர்கருனைப் பெருமாளே.
590 இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
மிறுதிச் சிறுகால்வரு மதனாலே இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
லெரியைத் தருமாமதி நிலவாலே தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
தொலையத் தனிவீசிய கடலாலே துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
துவளத் தகுமோ துயர் தொலையாதோ வடபொற் குலமேருவின் முடுகிப் பொருதுரனை
மடியச் சுடஏவிய வடிவேலா மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புனமேவிய மயில்வீரா அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
லருணைத் திருவீதியி லுறைவோனே அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
அமரர்க் கரசாகிய பெருமாளே.
59 இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலே இளவாடையு மூருமொ றுக்கும் படியாலே சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே
தனிமானுயிர் சோருமதற்கொன் றருள்வாயே

அருணகிரிநாதர் 881
குமராமுரு காசடி லத்தன் குருநாதா
குறமாமக ளாசைத னிக்குந் திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனே
அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே.
5 9 2
இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப
அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல்
விளங்க இசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க
வுளமகிழ்ச் சியினோடே
இருவ ருடலுமொரு வுருவாய் நயக்க முகமே லழுந்த அளக மவிழவளை களுமே கலிக்க நயனார விந்த லகரி பெருகஅத ரமுமே யருத்தி முறையே யருந்த
உரையெழப் பரிவாலே
புருவ நிமிரஇரு கணவாள் நிமைக்க வுபசார மிஞ்ச
அவச கவசமள வியலே தரிக்க அதிலே யநந்த புதுமை விளையஅது பரமா பரிக்க இணைதோளு
மொன்றி அதிசுகக் கலையாலே
புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க
மனமு மனமுமுரு கியெயாதரிக்க வுயிர்போலுகந்து
பொருளதளவுமரு வுறுமாய வித்தை விலைமாதர்
சிங்கி விடஅருட் புரிவாயே
பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த
தமர திமிரபிர பலமோக ரத்ன சலராசி கொண்ட படியை முழுதுமொரு நொடியே மதித்து வலமாக
வந்து சிவனிடத் தமர்சேயே
பழநி மிசையிலிசை யிசையே ரகத்தில் திருவாவினன்கு
டியினில் பிரமபுர மதில்வாழ் திருத்த னிகையூடு
LDGööTL-fr பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவாகி நின்று
கவிதையைப் புனைவோனே

Page 50
882 திருப்புகழ்
அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபால னன்ப
ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகார
ரென்ற அசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிராம
செந்தி லுரகவெற் புடையோனே
அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த
இரண கரணமுர ணுறுதுர னுட்க மயிலேறு கந்த அருணை யிறையவர்பெ ரியகோ புரத்தில் வடபா
லமர்ந்த அறுமுகப் பெருமாளே.
4. திருக்காளத்தி (வாயு)
593
சிரத்தா னத்திற் பணியாதே செகத்தோர் பற்றைக் குறியாதே வருத்தா மற்றொப் பிலதான மலர்த்தாள் வைத்தெத் தனையாள்வாய் நிருத்தா கர்த்தத் துவநேசா நினைத்தார் சித்தத் துறைவோனே திருத்தாள் முத்தர்க் கருள்வோனே திருக்கா ளத்திப் பெருமாளே.
594
சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச் சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் செயல்மேவிச் சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
சுகித்தே சுற்றத் தவரோ டின்பத் தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் குடிபேணிக்
குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனைக் குறித்தே முத்திக் குமறா வின்பத்
தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க் குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் கழல்தாராய்

அருணகிரிநாதர் 883
புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
கழைச்சா பத்தைச் சடலா னுங்கப் புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் றருள்வோனே புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
தனிக்கோ லத்துப் புகுதுர் மங்கப் புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் தருள்வோனே
திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத் திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் புணர்வோனே சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற் றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் பெருமாளே.
595 பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர
அண்டம தாயுற் றிருந்த பார்மிசை பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர உருவாயே பந்தம தாகப் பிணிந்த ஆசையில்
இங்கித மாகத் திரிந்து மாதர்கள் பண்பொழி துதைக் கடந்தி டாதுழல் படிறாயே
சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை
வந்துடல் மூடக் கலங்கி டாமதி தந்தடி யேனைப் புரந்தி டாயுன தருளாலே சங்கரர் வாமத் திருந்த நூபுர
சுந்தரி யாதித் தருஞ்சு தாபத தண்டைய னேகுக் குடம்ப தாகையின் முருகோனே
திங்களு லாவப் பணிந்த வேணியர்
பொங்கர வாடப் புனைந்த மார்பினர் திண்சிலை சூலத் தழுந்து பாணியர் நெடிதாழ்வார் சிந்துவி லேயுற் றெழுந்த காளவி
டங்கள மீதிற் சிறந்த சோதியர் திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய குருநாதா
சிங்கம தாகத் திரிந்த மால்கெரு
வம்பொடி யாகப் பறந்து சீறிய சிம்புள தாகச் சிறந்த காவென வருகோமுன்

Page 51
884 திருப்புகழ்
செங்கதி ரோனைக் கடிந்த தீவினை
துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் பெருமாளே
5. சிதம்பரம் (ஆகாயம்)
59 6
எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி அவதாரம் இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக (UDq-LusT35
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு மயர்வானார் கடனுன தடய மடிமையு னடிமை
கடுகியு னடிகள் தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு முருகோனே விரிதல மொரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை யுடையோனே இமையவர் முனிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு பெருமாளே
597
தறுகணன் மறலி முறுகிய கயிறு
தலைகொடு விசிறிக் கொடுபோகுஞ் சளமது தவிர அளவிடு சுருதி
தலைகொடு பலசாத் திரமோதி
அறுவகை சமய முறைமுறை சருவி
யலைபடு தலைமூச் சினையாகும் அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற் கருள்வாயே

அருணகிரிநாதர் 885
நறுமல ரிறைவி யாரிதிரு மருக
நகமுத வியபார்ப் பதிவாழ்வே நதிமதி யிதழி பணியணி கடவுள்
நடமிடு புலியூர்க் குமரேசா
கறுவிய நிருதர் எறிதிரை பரவு
கடலிடை பொடியாப் பொருதோனே கழலிணை பணியு மவருடன் முனிவு
கனவிலு மறியாப் பெருமாளே.
598
இரசபா கொத்தமொழி யமுர்தமா னிக்கநகை
யினையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர் எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க
ளெழுதொனா தப்பிறையி னாரரும் புருவர் எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக
ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு
திங்கள்மேவும்
இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தனழி
லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி யினைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி
னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட
ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச
தங்கமார்பின்
வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின் வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய மடுவுரோ மக்கொடியென் அளிகள்துருழ் வுற்றநிரை மருவுநூலொத்தஇடை யாரசம் பையல்குல் மனமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென் வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை
ரம்பைமாதர்
மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு மதனபா னத்தினுடன் மேவிமஞ் சமிசை வதனம்வேர் வுற்றவிர முலைகள்யூ ரிக்கமிடர்

Page 52
886. திருப்புகழ்
மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்
வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை
தந்துஆள்வாய் முரசுபே ரித்திமிலை துடிகள்யூ ரித்தவில்கள்
முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை
முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர் முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பினமொ
டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசையெங்குமோட
முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர் முனிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள் முழவுவி னைக்கினரி யமுர்தசீ தத்தொனிகள்
முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள் முலைகள்பா ரிக்கவுட னடணமா டிற்றுவர
முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு கந்தவேளே
அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி
ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன் அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க
ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க
ளடையுமே ரக்கனக நாடெனும்புலியுர் சந்தவேலா
அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி
யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி
யாரியவே டச்சிறுமி யாளனைந் தபுகழ் அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ
டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர்
தம்பிரானே.
59 9 இருளு மோர்கதி ரணுகொ னாதபொ
னிடம தேறியெ னிருநோயும் எரிய வேமல மொழிய வேசுட
ரிலகு மூலக வொளிமேவி

அருணகிரிநாதர்
887
அருவி பாயஇ னமுத மூறவுன்
அருளெ லாமென
அருளி யேசிவ மகிழ வேபெற
அருளி யேயினை
பரம தேசிகர் குருவி லாதவர்
பரவை வான்மதி பவள மேனியர் எனது தாதையர்
பரம ராசியர்
மருவி நாயெனை யடிமை யாமென
மகிழ்மெய் ஞானமு மறைகு லாவிய புலியுர் வாழ்குற
மகள்மெ லாசைகொள்
60 0 காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
காடுகள் புக்குந் காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
காசினி முற்றுந்
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
தேற வுதிக்கும் தீப விளக்கங் காண எனக்குன்
சீதள பத்மந்
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரந் பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சுங்
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
சோலை சிறக்கும் துரர் மிகக்கொண் டாட நடிக்குந்
தோகை நடத்தும்
60 கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்
பாவித் தாகச் சாந்தணி வார்முலை
தளவாக
யடிதாராய்
தவழ்வேனிப்
அருள்பாலா
மருள்வோனே
பெருமாளே.
தடுமாறிக்
திரியாதே
பரஞான
தருவாயே
தருவீரா
கதிர்வேலா
புலியூரா
பெருமாளே.
கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி
குயில்போலக்

Page 53
888 திருப்புகழ்
கூவிக் கூவிக் காண்டிசை போலவெ
நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர் கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள்
வருமோவென்
றோதித் தோளிற் பூந்துகி லால்முலை
மூடிச் சூதிற் றுாங்கமி லார்தெரு வோடித் தேடிச் சோம்பிடு வார்சில விலைமாதர்
ஒருச் சேரச் சேர்ந்திடு வார்கலி
துளைக் காரச் சாங்கமி லார்சில வோரைச் சாகத் தீம்பிடு வார்செய லுறவாமோ
வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை
மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல் விடும்வேலா
வேளைச் சீறித் தூங்கலொ டேவய
மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை தருசேயே
நாதத் தோசைக் காண்டுனை யேசுடர்
மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர் நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் Sir J.LorgoGöT
ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி
மாதைக் கானிற் சேர்ந்தனை வாய்சிவ
ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ் பெருமாளே.
602
சகசம்பக் குடைதழ் சிவிகைமெல் மதவின்பத் துடனே பலபணி தனிதம்பட் டுடையோ டிகல்முர சொலிவினை தவளந்தப் புடனே கிடுகிடு
நடைதம்பட் டமிடோல் பலவொலி சதளம்பொற் றடிகா ரருமிவை -6s-gbp
வெகுகும்பத் துடனே பலபடை
கரகஞ்சுற் றிடவே வரஇசை வெகுசம்பத் துடனே யழகுட னிதமேவும்

அருணகிரிநாதர் 889
விருமஞ்சித் திரமா மிதுநொடி
மறையும்பொய்ப் பவுஷோ டுழல்வது விடவும்பர்க் கரிதா மிணையடி தருவாயே
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககன எனபோரி திமிர்தங்கற் குவடோ டெழுகட
லொலிகொண்டற் றுருவோ டலறிட திரள்சண்டத் தவுனோர் பொடிபட விடும்வேலா
அகரம்பச் சுருவோ டொளியுறை
படிகம்பொற் செயலா ளரனரி அயனண்டர்க் கரியா ஞமையருள் முருகோனே அமுர்தம்பொற் குவடோ டினைமுலை
மதிதுண்டப் புகழ்மான் மகளொடும் அருள்செம்பொற் புலியூர் மருவிய பெருமாளே.
603 சகுடமுந்துங் கடலடைந்துங்
குளமகிழ்ந்துந் தோய்சங்கங் கமுகடைந்தண் டமுதகன்டந்
தரளகந்தந் தேர்களுசஞ் சரமெனுங்கண் குமிழதுண்டம்
புருவெனுஞ்செஞ் சாபம்பொன் திகழ்மாதர்
சலசகெந்தம் புழுகுடன்சண்
பகமனங்கொண் டேய்ரண்டந்
தனகனம்பொன் கிரிவணங்கும்
பொறிபடுஞ்செம் பேர்வந்தண்
சலனசம்பொன் றிடைபணங்கின்
கடிதடங்கொண் டாரம்பொன் தொடர்பார்வை
புகலல்கண்டஞ் சரிகரம்பொன்
சரணபந்தந் தோதிந்தம் புரமுடன்கிண் கினிசிலம்பும்
பொலியலம்புந் தாள்ரங்கம் புணர்வணைந்தண் டுவரொடுந்தொண்
டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் கடைநாயேன்

Page 54
890 திருப்புகழ்
புகழடைந்துன் கழல்பணிந்தொண் பொடியணிந்தங் காநந்தம்
புனல்படிந்துண் டவசமிஞ்சுந்
தவசர்சந்தம் போலுந்திண்
புவனிகண்டின் றடிவணங்குஞ்
செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் கழல்தாராய்
திகுடதிந்திந் தகுடதந்தந்
திகுடதிந்திந் தோதிந்தம் டகுடடண்டண் டிகுடடிண்டிண் டகுடடண்டண் டோடிண்டிண் டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்
டமுடடிண்டென் றேசங்கம் பலபேரி செககணஞ்சஞ் சலிகைபஞ்சம்
பறைமுழங்கும் போரண்டஞ் சிலையிடிந்துங் கடல்வடிந்தும்
பொடிபறந்துண் டோர்சங்கஞ் சிரமுடைந்தண் டவுணரங்கம்
பிணமலைந்தன் றாடுஞ்செங் கதிர்வேலா அகில அண்டஞ் சுழலளங்கும்
பவுரிகொண்டங் காடுங்கொன் புகழ்விளங்குங் கவுரிபங்கன்
குருவெனுஞ்சிங் காரங்கொண் டறுமுகம்பொன் சதிதுலங்குந்
திருபதங்கந் தாஎன்றென் றமரோர்பால் அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண்
சரணமுங்கொண் டோதந்தம் புனைகுறம்பெண் சிறுமியங்கம்
புணர்செயங்கொண் டேயம்பொன் அமைவிளங்கும் புலிசரம்பொன்
திருநடங்கொண் டார்கந்தம் பெருமாளே.
604
சாந்துட னேயுழுகு தோய்ந்தழ கார்குழலை
மோந்துப யோதரம தனையாகச்
சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தது ராகசுக
காந்தமொ டுசியென மடவார்பால்

அருணகிரிநாதர் 89
கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி
ஒர்ந்துண ராவுணர்வி லடிநாயேன் கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
பூண்டுற வாடுதின முளதோதான் பாந்தளின் மீதினிதி னோங்குக னேதுயில்கொள்
நீண்டிடு மாலொடய னறியாது பாம்புரு வானமுனி வாம்புலி யானபதன்
ஏய்ந்தெதிர் கானநட மிடுபாதர்
பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட
மாங்கன காபுரியி லமர்வாழ்வே பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை
தழ்ம்புலி யூரிலுறை பெருமாளே.
6 O 5 சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
சொருபகிரி யிடமேவு முகமாறும் சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய
துகிரிதழின் மொழிவேத மனம்விச
அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட
அயில்கரமொ டெழில்தோகை மயிலேறி அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை
அதிசயமெ னருள்பாட வரவேணும் விடைபரவி அயன்மாலொ டமரர்முனி கணமோட
மிடறடைய விடம்வாரி யருள்நாதன் மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
மிகமகிழ அநுபூதி யருள்வோனே இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி
னிணையிளநிர் முலைமார்பி னனை மார்பா இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி
யிருடியர்கள் புகழ்ஞான பெருமாளே.
6 0 6
தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
யிட்டுமுட னானிமுலை மீதுதுகில் மூடியவர் சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி பிடிபோல

Page 55
892 திருப்புகழ்
தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ
யெத்தியனை மீதிலிது காலமெனிர் போவதென தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ
ருடல்பூசி
வைத்துமுக மோடிரச வாயிதழி னுாறல்பெரு
கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி
யுடைசோர மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட
னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம் வைத்தடகு தேடுபொருள் துறைகொளு வார்கலவி
செயலாமோ
சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை தற்பரனொ டாடுமடபி ராமிசிவ காமியுமை
யருள்பாலா சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
ரத்னமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட
மிடுவோனே
துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர
மணிமார்பா சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்
சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர் புகழ்
பெருமாளே. 607 துத்தி பொற்றன மேரு வாமென
வொத்தி பத்திரள் வாகு வாயவிர் துப்பு முத்தொடு மார்பி னாடிட மயில்போலே சுக்கை மைக்குழ லாட நூலிடை
பட்டு விட்டவிர் காம னாரல்குல் சுற்று வித்துறு வாழை சேர்தொடை விலைமாதர்

அருணகிரிநாதர் 89.3
தத்தை புட்குர லோசை நூபுர
மொத்த நட்டமொ டாடி மார்முலை சற்ற சைத்துகு லாவும் வேசிய ரவரோடே தர்க்க மிட்டுற வாடி யிளைநொய்
கக்கல் விக்கல்கொ ரூளை நாயென சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட வுழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி திக்கு முக்கிட மூரி பேரிகை தவில்போடச் சித்ர வித்தைய ராட வானவர்
பொற்பு விட்டிடு சேசெ சேயென செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட விடும்வேலா
செத்தி டச்சம னார்க டாபட
அற்று தைத்தசு வாமி யாரிட சித்தி ரச்சிவ காமி யாரருள் முருகோனே தெற்க ரக்கர்கள் தீவு நீறிட
விட்ட அச்சுத ரீன மானொடு
சித்தி ரப்புலி யூரில் மேவிய பெருமாளே.
608
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி வினையாயின் நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுன தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை யருள்கூர வாராய் மனக்கவலை தீராய் எனத்தொழுது
வாரே னெனக்கெதிர்முன் வரவேனும்
துடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை யருள்பாலா தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
தோழா கடப்பமல ரணிவோனே

Page 56
894 திருப்புகழ்
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
மேராள் குறத்திதிரு LDasar GAJITGATT ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ் பெருமாளே.
6 09
நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
நாடியின டத்தி மந்திர பந்தியாலே நாரண புரத்தி லிந்துவி னுாடுற இணக்கி நன்சுடர்
நாறிசை நடத்தி மண்டல சந்தியாறிற் கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு
கோவென முழக்கு சங்கொலி விந்துநாதங் கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு
கோடிநட னப்ப தஞ்சபை யென்றுசேர்வேன்
ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ முந்திலி
ஆரணர் தலைக்க லங்கொளி செம்பொன்வாசி ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை
ஆளுமை டாரத்தி சுந்தரி தந்தசேயே வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர் வீடெரி கொளுத்தி யெண்கட லுண்டவேலா வேதச துரத்தர் தென்புலி யூருறை யொருத்தி
பங்கினர் வீறுநட னர்க்கி சைந்தருள் தம்பிரானே.
6 0
நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை
நீளச்சசி யார்பொட்டனி நுதல்மாதர் நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி
நேமித்தெழு தாசித்திர வடிவார்தோள்
ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை
யாகத்தமி யேனித்தமு முழல்வேனோ
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
மாகக்கொள வேமுத்தியை யருள்வாயே

அருணகிரிநாதர் 895
மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி
மார்பிற்பிர காசக்கிரி தனபார வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி
மாணிக்கமி னாள்நிஷ்கள உமைபாகர்
துலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு
சோதிப்பொருள் கேள்விக்கிடு முருகோனே சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புனர் சோதிப்புலி யூர்நத்திய பெருமாளே.
6
பணிபோ லத்துளி சலவா யுட்கரு
பதின்மா தத்திடை தலைகீழாய்ப் படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி
பயில்வா ருத்தியில் சிலநாள்போய்த்
தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்
சதிகா ரச்சமன் வருநாளிற் றரியா ரிற்சடம் விடுவா ரிப்படி
தளர்மா யத்துய ரொழியாதோ
வினைமா யக்கிரி பொடியா கக்கடல்
விகடா ருக்கிட விடும்வேலா விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ
மிகவே குட்டிய குருநாதா
நினைவோர் சித்தமொ டகலா மற்புகு
நிழலாள் பத்தினி oSongs நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு
நிறைவே பத்தர்கள் பெருமாளே.
6 2
மகரமொ டுறுகுழை யோலை காட்டியு
மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும் வரவர வரஇத மூற லூட்டியும் வலைவீசும் மகரவி பூழிமகளிர் பாடல் வார்த்தையில்
வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்
வளமையிலிளமையில் மாடை வேட்கையில் மறுகாதே

Page 57
896 திருப்புகழ்
இகலிய பிரமக பால பாத்திர
மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற மிதழியை யழகிய வேணி யார்த்ததும் விருதாக எழில்பட மழுவுடன் மானு மேற்றது மிசைபட இசைதரு ஆதி தோற்றமு மிவையிவை யெனவுப தேச மேற்றுவ தொருநாளே.
ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு
தலைபறி யமனர்ச மூக மாற்றிய தவமுனி சகமுளர் பாடு பாட்டென மறைபாடி தரிகிட தரிகிட தாகு டாத்திரி
கிடதாரி கிடதாரி தாவெ னாச்சில சபதமொ டெழுவன தாள வாச்சிய முடனேநீள்
அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
அலகைக ளடைவுட னாடு மாட்டமு மரனவ னுடனெழு காளி கூட்டமு மகலாதே அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு
மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு மரிதென முறைமுறை யாடல்காட்டிய பெருமாளே.
6 3
மச்சுமெச்சு தத்ரம் ரத்த பித்த மூத்ரம்
வைச்சி றைச்ச பாத்ர மநுபோகம் மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை
மட்கு லப்ப தார்த்த மிடிபாறை
எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு
மெய்ச்சி ளைச்ச ஈக்கு மிரையாகும் இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
இப்ப டிக்கு மோக்ஷ மருள்வாயே
பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி
பொற்ப தத்து ளாக்கு புலியூரா பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு
புத்தி மெத்த காட்டு புனவேடன்

அருணகிரிநாதர் 897
பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு
பைச்சி லைக்கு மாட்கொ ளரன்வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட
பத்த ருக்கு வாய்த்த பெருமாளே.
6 4.
மதிய மண்குண மஞ்சு நால்முக
நகர முன்கலை கங்கை நால்குன மகர முன்சிக ரங்கி மூனிடை தங்குகோண மதன முன்தரி சண்ட மாருத
மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு வகர மிஞ்சிய கன்ப டாகமொ ரொன்றுசேருங்
கதிர டங்கிய அண்ட கோளகை
யகர நின்றிடும் ரண்டு கால்மிசை ககன மின்சுழி ரண்டு கால்பரி கந்துபாயுங் கருணை யிந்திரி யங்கள் சோதிய
அருண சந்திர மண்ட லீகரர் கதிகொள் யந்திர விந்துநாதமொ டென்றுசேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக
முதிர அண்டமொ டைந்து பேரிகை டகுட டண்டட தொந்த தோதக என்றுதாளம் அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரொ
டிதவி தம்பெறு சிந்து பாடிட அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்கவூடு உதிர மண்டல மெங்கு மாயொளி
யெழகு மண்டியெ முந்து தரரை உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி சிந்திவீழ உறுசி னங்கொடெ திர்ந்த சேவக
மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற வுரக லும்புலி கண்ட வூர்மகிழ் தம்பிரானே.
65 மருவு கடல்முகி லனைய குழல்மதி வதன நுதல்சிலை பிறைய தெனும்விழி
மச்சப் பொற்கனை முக்குப் பொற்குமி ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி

Page 58
898 திருப்புகழ்
குமுத மலரித ழமுத மொழிநிரை தரள மெனுநகை மிடறு கமுகென
வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர்
வகைய விரலொடு கிளிகள் முகநக
மெனவு மிகலிய குவடு மிணையென
வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம் வைத்தப் பொற்குடமொத்திட்டுத்திகழ்முலைமேவும்
வடமு நிரைநிரை தரள பவளமொ
டசைய பழுமர இலைவ யிறுமயி
ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும் அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி
மதன னுருதுடி யிடையு மினலென
அரிய கடிதட மயிர்த கழைரச
மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை
மருவு தொடையினை கதலி பரடுகொள்
கணையு முழவென கமட மெழுதிய
வட்டப் புத்தக மொத்துப் பொற்சர ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் மயில்போலே
தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர்
மயல்கொ டனைவர மருள்செய் தொழில்கொடு
தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள் பற்றிக் கட்டில னைக்கொப் பிப்புணர்
திலத மழிபட விழிகள் சுழலிட மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட
தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட திரையி லமுதென கழையில் ரசமென பலவில் சுளையென வுருக வுயர்மயல்
சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும் வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென நரைமேவிச்

அருணகிரிநாதர் 899
செவியொ டொளிர்விழி மறைய மலசல மொழுக பலவுரை குழற தடிகொடு
தெத்திப் பித்தமு முற்றித் தற்செய லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி லுவரி நிறமுடை நமனு முயிர்கொள
செப்பற் றுப்பின மொப்பித் துப்பெய ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு
செனன மிதுவென அழுது முகமிசை
அறைய அணைபவ ரெடென சுடலையில்
சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட முழல்வேனோ
குருவி னுருவென அருள்செய் துறையினில் குதிரை கொளவரு நிறைத வசிதலை
கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத மெற்றிப் பொற்பொரு ளரிட்டுக் கைக்கொளு முதல்வ ரிளகலை மதியமடைசடை அருண வுழைமழு மருவு திருபுயர்
கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ விட்டத் திக்கனை நக்கர்க் கற்புத
குமர னெனவிரு தொலியு முரசொடு
வளையு மெழுகட லதிர முழவொடு
கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட லொப்பத் திக்கும டுத்துத் தத்திட அமர்மேவிக்
குருகு கொடிசிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட
கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல்
குமர குருபர குமர குருபர குமர குருபர எனவொ தமரர்கள்
கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர னத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட

Page 59
900 திருப்புகழ்
குலவு நரிசிறை கழுகு கொடிபல
கருட னடமிட குருதி பருகிட
கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக னத்தைச் சித்தமி ரகூரித் துக்கொளு மயில்வீரா
சிரமொ டிரனிய லுடல்கி ழியவொரு பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு
சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன் அரிய விழிகெட இருப தமுமுல கடைய நெடியவர் திருவு மழகியர்
தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர
செயழு மனவலி சிலைகை கொடுகர
மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ
திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர மருகோனே
திலத மதிமுக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர்பத
சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர சிவைகொள் திருசர சுவதி வெகுவித சொருபி முதுவிய கிழவி யியல்கொடு
செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு
திரையி லமுதென மொழிசெய் கவுரியி
னரிய மகனென புகழ்பு லிநகரில்
செப்புப் பொற்றன முற்றப் பொற்குற தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய பெருமாளே.
6 6
முத்த மோகன தத்தையி னார்குர
லொத்த வாயித சர்க்கரை யார்நகை முத்து வாரணி பொற்குவ டார்முலை விலைமாதர்

அருணகிரிநாதர் 90
மொக்கை போகசெ குத்திடு வார்பொருள் பற்றி வேறும ழைத்திடு வார்சிலர் முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் கலிதழச்
சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ
டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர் மடமீதே
சித்தெ லாமொரு மித்துன தாறினம்
வைத்து நாயென ருட்பெற வேபொருள் செப்பி யாறுமு கப்பரி வோடுனர் வருள்வாயே
தத்த னானத னத்தன தானெனு
டுக்கை பேரிமு ழக்கிட வேகடல் சத்த தீவுத யித்தியர் மாளிட விடும்வேலா
சத்தி லோகப ரப்பர மேசுர
நிர்த்த மாடுக ழற்கரு ணாகர தற்ப ராபர நித்தனொர் பாலுறை யுமைபாலா
துத்தி மார்முலை முத்தணி மோகன
பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள் துப்பு வாயிதழ் வைத்தனை சோதிபொன்
மணிமார்பா சுட்டி நீலஇ ரத்தின மாமயி
லுற்று மேவிய ருட்புலி பூர்வளர் சுத்த னேசசி பெற்றபெ ணாயகி பெருமாளே.
6 17
கனகசபை மேவு மெனதுகுரு நாத
கருணைமுரு கேசப் பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப் பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப் பெருமாள்காண் விதிமுனிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப் பெருமாள்காண்

Page 60
902 திருப்புகழ்
சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப் பெருமாள்காண் சரணசிவ காமி யிரணகுல காரி
தருமுருக நாமப் பெருமாள்காண் இனிதுவன மேவு மயிர்தகுற மாதொ
டியல்பரவு காதற் பெருமாள்காண் இணையிலிப தோகை மதியின்மக ளோடு
மியல்புலியுர் வாழ்பொற் பெருமாளே.
6 8 கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப் பெருமாள்காண் கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப் பெருமாள்காண் வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றியயில் பாணிப் பெருமாள்காண் வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப் பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கினினி லாதப் பெருமாள்காண் தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப் பெருமாள்காண் சுத்தவிர தரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப் பெருமாள்காண் துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் பெருமாளே.
6 9 இருவினையின் மதிம யங்கித் திரியாதே எழுநரகி லுழலு நெஞ்சுற் றலையாதே பரமகுரு அருள்நி னைந்திட் டுனர்வாலே பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே சிவனருளு முருக செம்பொற் கழலோனே கருணைநெறி புரியு மன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே.

அருணகிரிநாதர் 90.3
620
குகனெ குருபர னேயென நெஞ்சிற்
புகழ அருள்கொடு நாவினி லின்பக் குமுளி சிவவமு தூறுக வுந்திப் பசியாறிக் கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் குலைய நமசிவ யோமென கொஞ்சிக் களிகூரப்
பகலு மிரவுமி லாவெளி யின்புக்
குறுகி யினையிலி நாடக செம்பொற் பரம கதியிது வாமென சிந்தித் தழகாகப் பவள மனதிரு மேனியு டன்பொற்
சரண அடியவ ரார்மன வம்பொற் றருண சரண்மயி லேறியு னம்பொற் கழல்தாராய்
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடு(டுடு டாடக டிங்குட் டியல்தாளம் தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வினைகள் பொங்கத் தடிய ழனவுக மாருத சண்டச் சமரேறிக்
ககன மறைபட ஆடிய செம்புட்
பசிகள் தணிவுற துரர்கள் மங்கக் கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் தொடும்வேலா கயிலை மலைதனி லாடிய தந்தைக்
குருக மனமுன நாடியெ கொஞ்சிக் கனக சபைதனில் மேவிய கந்தப் பெருமாளே.
62 வண்டையொத் துக்கயல் கண் சுழற் றுப்புரு
வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு
கென்பக்ரீவம் மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பனை
கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு
ளன்பினாலே

Page 61
904 திருப்புகழ்
கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்
கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில்
மங்குறாமல் கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துணி
னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ் குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை
யென்றுசேர்வேன்
அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு
டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட
லென்பதாளம் அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்
கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் வந்ததுரர் கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச
னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர் கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி
லங்குவேலால் கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக
ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை தம்பிரானே.
622
கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி
மஞ்ச ளரின்புயத் தார்ச ரம்பெறு கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக
செம்பொனாரம் கந்த ரந்தரித் தாடு கொங்கைக
ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி கந்த முஞ்சிறுத் தேம லும்பட சம்பைபோல
அங்க மைந்திடைப் பாளி தங்கொடு
குந்தி யின்குறைக் கால்ம றைந்திட அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி கொஞ்சமேவும்

அருணகிரிநாதர் 905
அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல்
அங்கை பொன்பறிக் கார பெண்களொ டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ
தென்றுபோமோ
சங்கு பொன் தவிற் காள முந்துரி
யங்கள் துந்துமிக் காட திர்ந்திட சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட அண்டகோசம் சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட
இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட வந்ததுரைச் செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ
அந்த கன்புரத் தேற வஞ்சகர் செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி கந்தவேளே
திங்க ளொண்முகக் காமர் கொண்டவன்
கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு செம்பொ னம்பலத் தேசி றந்தருள் தம்பிரானே
623
கொந்த ளம்புழு கெந்த வண்பனி
ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர கொங்கை வெண்கரி கொம்பி னங்கிய LDLLDT.g5ff கொந்த ணங்குழ லின்ப மஞ்சள
னிந்து சண்பக வஞ்சி ளங்கொடி கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் மயில்போலே
வந்து பஞ்சணை யின்ப முங்கொடு
கொங்கை யும்புய முந்த ழும்புற மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ மயல்மேலாய் வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த வஞ்சி னங்களு டன்கி டந்துட லழிவேனோ
தந்த னந்தன தந்த னந்தன
திந்தி மிந்திமி திந்தி மிந்திமி சங்கு வெண்கல கொம்பு துந்துமி Lu@voCèLurf

Page 62
906 திருப்புகழ்
சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டு டன்பல சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் களமீதே
சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு
செம்பு ளங்கரு டன்ப ருந்துகள் செங்க ளந்திகை யெங்கு மண்டிட விடும்வேலா திங்க ளிந்திர னும்ப ரந்தர
ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் பெருமாளே.
624
மந்தர மென்குவ டார்த னங்களி
லாரம முந்திட வேம ணம்பெறு சந்தன குங்கும சேறு டன்பணி
நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்
வாள்விழி செங்கழு நீர்த தும்பிய கொந்தளோலை
வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை
வாடந டம்புரி வார்ம ருந்திடு விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
மோகன வஞ்சியர் போல கம்பெற வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்
போல இருந்ததெ னாம யங்கிட இன்சொல்கூறிச்
சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்
வாருமெ லும்படி யால கங்கொடு பண்சர சங்கொள வேணு மென்றவர்
சேம வளந்துறு தேன ருந்திட துன்றுபொ னங்கையின் மீது கண்டவ
ரோடு விழைந்துமெ கூடி யின்புறு மங்கையோரால்
துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு
சீபுழு வுஞ்சல மோடி றங்கிய புண்குட வன்கடி யோடி ளஞ்சனி துலைமி குந்திட வேப றந்துடல் துஞ்சிய மன்பதி யேபு குந்துய
ராழிவி டும்படி சீர்ப தம்பெறு விஞ்சைதாராய்

அருணகிரிநாதர் 907
அந்தர துந்துமி யோடு டன்கண
நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய ரிந்திர சந்திரர் துரி யன்கவி
வாணர்த வம்புலி யோர்ப தஞ்சலி அம்புய னந்திரு மாலொ டிந்திரை
வானிய னங்கவ ளோட ருந்தவர் தங்கள்மாதர்
அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்
மாவுர கன்புவி யோர்கள் மங்கையர் அம்புவி மங்கைய ரோட ருந்ததி மாதர் புகழ்ந்திட வேந டம்புரி அம்புய செம்பதர் மாட கஞ்சிவ
காம சவுந்தரி யாள்ப யந்தருள் கந்தவேளே
திந்திமி திந்திமி தோதி மிந்திமி
தீததி திந்தித தீதி திந்தித தந்தன தந்தன னாத னந்தன
தானத னந்தன னாவெ னும்பறை செந்தவில் சங்குட னேமு ழங்கசு
ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் கண்டவேலா
செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்
வாழுமி ளங்கொடி யாள்ப தங்களில் வந்துவ ணங்கிநி னேமு கம்பெறு
தாளழ கங்கையின் வேலு டன்புவி செம்பொனி னம்பல மேல கம்பிர
காரச மந்திர மீத மர்ந்தருள் தம்பிரானே.
625 வந்து வந்துவித் தூறி யென்றனுடல்
வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும் வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி வங்களாலே மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது
சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள வந்து சிந்துரத் தேறி யண்டரொடு தொணடர்துழ
எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர மந்திமேவும்

Page 63
908 திருப்புகழ்
எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
சுந்த ரந்திருப் பாத பங்கயமும் என்றன் முந்துறத் தோணி யுன்றனது சிந்தைதாராய் அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத் தோட கெந்தருவ ரம்பு யன்சலித் தோட எண்டிசையை யுண்டமாயோன் அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ அங்கி யின்குனக் கோலை யுந்திவிடு செங்கைவேலா
சிந்து ரம்பனைக் கோடு கொங்கைகுற
மங்கை யின்புறத் தோள ணைந்துருக சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் கந்தவேளே சிந்தி முன்புரக் காடு மங்கநகை
கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ் செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் தம்பிரானே.
626 கதித்துப்பொங் கலுக்கொத்துப்
பனைத்துக்கொம் பெனத்தெற்றிக் கவித்துச்செம் பொனைத்துற்றுக் குழலார்பின் கழுத்தைப்பண் புறக்கட்டிச்
சிரித்துத்தொங் கலைப்பற்றிக் கலைத்துச்செங் குணத்திற்பித் திடுமாதர் பதித்துத்தந் தனத்தொக்கப்
பிணித்துப்பண் புறக்கட்டிப் பசப்பிப்பொன் தரப்பற்றிப் பொருள்மாளப் பறித்துப்பின் துரத்துச்சொற்
கபட்டுப்பெண் களுக்கிச்சைப் பலித்துப்பின் கசுத்திப்பட் டுழல்வேனோ
கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்
கொதித்துச்சங் கரித்துப்பற் கடித்துச்சென் றுழக்கித்துக் கசுரோரைக் கழித்துப்பண் டமர்க்குச்செப்
பதத்தைத்தந் தளித்துக்கைக் கணிக்குச்சந் தரத்தைச்சுத் தொளிர்வேலா

அருணகிரிநாதர் 9 O 9
சிதைத்திட்டம் புரத்தைச்சொற்
கயத்தைச்சென் றுரித்துத்தற் சினத்தக்கன் சிரத்தைத்தட் சிவனார்தஞ் செவிக்குச்செம் பொருட்கற்கப்
புகட்டிச்செம் பரத்திற்செய்த் திருச்சிற்றம் பலச்சொக்கப் பெருமாளே.
627
சிரித்துச் சங்கொளி யாமின லாமென
வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு செனத்திற் சம்பள மேபறி காரிகள் சிலபேரைச்
சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல்
புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய மயில்போலே
அருக்கிப் பண்புற வேகலை யால்முலை
மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் மிடறோதை
அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி மினுக்கிச் சந்தன வாசனை சேறுட னமைத்துப் பஞ்சணை மீதனை மாதர்களுறவாமோ
இரைத்துப் பண்டம ராவதி வானவ
ரொளித்துக் கந்தசு வாமிப ராபர மெனப்பட்டெண் கிரி ஏழ்கடல் தூள்பட அசுரார்கள்
இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ
டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு மயில்வீரா
சிரித்திட் டம்புர மேமத னாருட
லொரித்துக் கண்டக பாலியர் பாலுறை திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் கியசேயே
திருச்சித் தந்தனி லேகுற மானதை
யிருத்திக் கண்களி கூர்திக ழாடக திருச்சிற் றம்பல மேவியு லாவிய பெருமாளே.

Page 64
9 O திருப்புகழ்
628
தத்தையென் றொப்பிடுந் தோகைநட் டங்கொளுவர் பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள் சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை
யென்பநீலச்
சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ
டொற்றிநன் சித்திரம் போலனத் தும்பறியர் சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர்
சங்கமாதர்
சுத்திடும் பித்திடும் துதுகற் குஞ்சதியர்
முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர் சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும்
விஞ்சையோர்பால் தொக்கிடுங் கக்கலுஞ் தலைபக் கம்பிளவை
விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி
யெந்தநாளோ
குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு
பொட்டெழுந் திட்டுநின் றாடண்ட் டந்திகையர் கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி
கொண்டவேலா
கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி
பத்தரன் புற்றளந் தாயெழிற் கொஞ்சுகிளி கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி
மங்கைபாலா
சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர
செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு
மெங்கள்கோவே
சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்
ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில் தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர்
தம்பிரானே.

அருணகிரிநாதர் 9 1
629 தனத்திற்குங் குமத்தைச்சந்
தனத்தைக்கொண் டனைத்துச்சங் கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன்
தனிற்கொத்துந் தரித்துச்சுந் தரத்திற்பண் பழித்துக்கண்
சுழற்றிச்சண் பகப்புட்பங் குழல்மேவித்
தரத்தைக்கொண் டசைத்துப்பொன் தகைப்பட்டுந் தரித்துப்பின் சிரித்துக்கொண் டழைத்துக்கொந்
தளத்தைத்தண் குலுக்கிச்சங் கலப்புத்தன் கரத்துக்கொண்
டனைத்துச்சம் ப்ரமித்துக்கொண் டுறவாடிப்
புனித்தப்பஞ் சனைக்கட்டிண்
படுத்துச்சந் தனப்பொட்டுங் குலைத்துப்பின் புயத்தைக்கொண் டனைத்துப்பின் சுகித்திட்டின் புகட்டிப்பொன் சரக்கொத்துஞ்
சிதைப்பப் பொன்தரப்பற்றும் பொதுமாதர்
புணர்ப்பித்தும் பிடித்துப்பொன்
கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன் திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண் சிறுப்பப்புண் பிடித்தப்புண் புடைத்துக்கண் பழுத்துக்கண்
டவர்க்குக்கண் புதைப்பச்சென் றுழல்வேனோ
சினத்துக்கண் சிவப்பச்சங்
கொலிப்பத்திண் கவட்டுச்செங் குவட்டைச்சென் றிடித்துச்செண்
டரைத்துக்கம் பிடிக்கப்பண் சிரத்தைப்பந் தடித்துக்கொண்
டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் கொளைபோகச்
செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங்
களித்துக்கொண் டளிப்புட்பஞ் சிறக்கப்பண் சிரத்திற்கொண்

Page 65
92 திருப்புகழ்
டிறைத்துச்செம் பதத்திற்கண் திளைப்பத்தந் தலைத்தழ்த்தம்
புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் புயவேளே
பனித்துட்கங் கசற்குக்கண்
பரப்பித்தன் சினத்திற்றிண் புரத்தைக்கண் டெரித்துப்பண்
கயத்தைப்பண் டுரித்துப்பன் பகைத்தக்கன் தவத்தைச்சென்
றழித்துக்கொன் றடற்பித்தன் தருவாழ்வே
படைத்துப்பொன் றுடைத்திட்பன்
தனைக்குட்டும் படுத்திப்பண் கடிப்புட்பங் கலைச்சுற்றும் பதத்தப்பண் புறச்சிற்றம் பலத்திற்கண் களித்தப்பைம்
புனத்திற்செங் குறத்திப்பெண் பெருமாளே
630 திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி
நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள் சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் சதிகாரர் செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்
அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள் செழுமிக ளழைத்திச் சங்கொ ஞஞ்செயர்
வெகுமோகக் குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக
ளுதடிகள் கணக்கிட் டும்பி னங்கிகள் குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குனர் விழியாலே கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்
நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள் குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ஞறவாமோ
இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு
மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட வருதுரர் இபமொடு வெதித்தச் சிங்க மும்பல
இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட இவுளியி ரதத்துற் றங்க மங்கிட விடும்வேலா

அருணகிரிநாதர் 9 3
அரிகாரி யுரித்திட் டங்க சன்புர
மொரிதர நகைத்துப் பங்க யன்சிர மளவொடு மறுத்துப் பண்டணிந்தவ ரருள்கோனே அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல்
குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற அழகிய திருச்சிற் றம்ப லம்புகு பெருமாளே.
63
கொந்த ரங்குழ லிந்து வண்புரு
வங்கள் கண்கய லுஞ்ச ரங்கனை கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி துண்டமாதர் கொந்த ளங்கதி ரின்கு லங்களி
னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி கொண்ட நண்பித பூழின்சுகங்குயி
லின்சொல்மேவுந்
தந்த வந்தர ளஞ்சி றந்தெழு
கந்த ரங்கமு கென்ப பைங்கழை தண்பு யந்தளி ரின்கு டங்கைய ரம்பொனாரந் தந்தி யின்குவ டின்த ஒனங்களி
ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர் தங்க டம்படி யுங்க வண்டிய சிந்தையாமோ
மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்
தங்க டைந்தவ னஞ்சு மங்குலி மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற எந்தவாழ்வும் வந்த ரம்பையெ னும்ப கிர்ந்துந
டங்கொ ஞந்திரு மங்கை பங்கினன் வண்டர் லங்கை யுளன்சி ரம்பொடி
கண்டமாயோன
உந்தி யின்புவ னங்க ளெங்கும
டங்க வுண்டகு டங்கை யன்புக ழொண்புரம்பொடி கண்டஎந்தையர் பங்கின்மேவும் உம்ப லின்கலை மங்கை சங்கரி
மைந்த னென்றய னும்பு கழ்ந்திட வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் தம்பிரானே.

Page 66
632 தியங்குஞ்சஞ் சலந்துன்பங்
கடந்தொந்தஞ் செறிந்தைந்திந் த்ரியம்பந்தந் தருந்துன்பம் திதம்பண்பொன் றிலன்பண்டன்
தலன்குண்டன் சலன்கண்டன் தெளிந்துன்றன் பழந்தொண்டென் புயங்கந்திங் களின்துண்டங்
குருந்தின்கொந் தயன்றன்கம் பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் புகழ்ந்துங்கண் டுகந்துங்கும்
பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும் புலம்பும்பங் கயந்தந்தென்
இயம்புஞ்சம் புகந்துன்றுஞ்
சுணங்கன்செம் பருந்தங்கங் கிணங்குஞ்செந் தடங்கண்டுங் இடும்பைங்கண் சிரங்கண்டம்
பதந்தந்தங் கரஞ்சந்தொன் றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் தயங்கும்பைஞ் சுரும்பெங்குந்
தனந்தந்தந் தனந்தந்தந் தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ்
சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந் தலந்துன்றம் பலந்தங்கும்
633
திருப்புகழ்
படுமேழை
றுயர்வாகப்
சடைதடி
குறைதீராய்
களிகூர
செயும்வேலா
சிறுகூரா
பெருமாளே.
பருவம் பனைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு
பவளம் பதித்த செம்பொ
னிறமார்பிற்
படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த
பலவிஞ் சையைப் புலம்பி
யழகான
புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று
புளகஞ் செலுத்தி ரண்டு
கயல்மேவும்
பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
பொடிகொண் டழிக்கும் வஞ்ச
ருறவாமோ

அருணகிரிநாதர் 95
உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து
உறவும் பிடித்த ணங்கை வனமிதே ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த மணிமார்பா
செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
சிவமஞ் செழுத்தை முந்த விடுவோனே தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு
திருவம் பலத்த மர்ந்த பெருமாளே
634 மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு
வளருந் தனத்த னிந்த மணியாரம் வளைசெங் கையிற்சி றந்த வொளிகண்டு நித்தி லங்கு வரருந் திகைத்தி ரங்க வருமானார் விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு னங்கள்
மிகைகண் டுறக்க லங்கி மருளாதே விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைட்டபுகழ்ந்து
மிகவிஞ்சு பொற்ப தங்கள் தருவாயே
நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணந்த
நடநம் பருற்றி ருந்த கயிலாய நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
நவதுங்க ரத்ன முந்து திரடோளுஞ் சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்
திறல்செங்க ணச்சு தன்றன் மருகோனே தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப னிந்த
திருவம் பலத்த மர்ந்த பெருமாளே.
635 முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல
முகிலங்குழலொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற்
குழையாட முழவங்கர சமுகம்பரி மளகுங்கும வாச முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில்
முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக்
கொடிபோலத்

Page 67
9 16 திருப்புகழ்
துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச்
செயல்மேவித் தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண் டனை
கீனுஞ் சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் கருள்வாயே அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி
உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக்
கொருசேயே அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு
சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர்
போலத் திகழ்வோனே
மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை
மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு
மாழைக் கதிர்வேலா வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக
சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில் மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப்
பெருமாளே.
636
சந்திர வோலைகு லாவ கொங்கைகள் மந்தர மாலந னிர்த தும்பநல் சண்பக மாலைகு லாவி ளங்குழல் மஞ்சுபோலத் தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை
விண்புரு வாரிதழ் கோவை யின்கனி தன்செய லார்நகை சோதி யின்கதிர் சங்குமேவுங்
கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்
சந்தன சேறுட னார்க வின்பெறு கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய ரம்பையாரைக்

அருணகிரிநாதர் 917
கண்களி கூரவெ காசை கொண்டவர்
பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு கண்களி ராறுமி ராறு திண்புய முங்கொள்வேனே
இந்திர லோகமு ளாரி தம்பெற
சந்திர துரியர் தேர்ந டந்திட எண்கிரி தரர்கு ழாமி றந்திட கண்டவேலா இந்திரை கேள்வர்பி தாம கன்கதி
ரிந்துச டாதரன் வாச வன்தொழு தின்புற வேமனு நூல்வி ளம்பிய கந்தவேளே
சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு
பெண்கள்சி காமணி மோக வஞ்சியர் செந்தினை வாழ்வளி நாய கொண்குக அன்பரோது செந்தமிழ் ஞானத டாக மென்சிவ
கங்கைய ளாவும காசி தம்பர
திண்சபை மேவும னாச வுந்தர தம்பிரானே.
637
காய மாய வீடு மீறிய கூடு நந்து
புற்பு தந்த னிற்கு ரம்பை கொண்டுநாளுங் காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி
யப்ர மந்த டித்த லைந்து சிந்தைவேறாய் வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
யத்து கொங்கை யுற்றி ணங்கி நொந்திடாதே வேத கீத போத மோனமெய் ஞான நந்த
முற்றி டின்ப முத்தி யொன்று தந்திடாயோ மாய வீர தீர துரர்கள் பாற நின்ற
விக்ர மங்கொள் வெற்பி டந்த செங்கைவேலா வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
யைப்பு னர்ந்த வெற்ப கந்த செந்தில்வேளே
ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ
ழுத்த ழங்க முட்ட நின்று துன்றுசோதீ ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப
லச்சி தம்ப ரத்த மர்ந்த தம்பிரானே.

Page 68
918 திருப்புகழ்
638
அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீனனை அழுகலை யவிசலை ஆறான வூணனை அன்பிலாத
கவடனை விகடனை நானாவி காரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை
வெம்பிவிழுங் களியனை யறிவுரை பேணாத மாநுட கசனியை யசனியை மாபாத னாகிய கதியிலி தனையடி நாயேனை யாளுவ தெந்தநாளோ
மவுலியி லழகிய பாதாள லோகனு
மரகத முழுகிய காகோத ராஜனு மதுநெறி யுடன்வளர் சோனாடர் கோனுட
னும்பர்சேரும் மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென மலைமக ஞமைதரு வாழ்வேம னோகர
மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம திசையினு மிசையினும் வாழ்வே நமோநம
செஞ்சொல்சேருந் திருதரு கலவிம ணாளா நமோநம
திரிபுர மொரிசெய்த கோவே நமோநம ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் தம்பிரானே.
639
கட்டி முண்டகர பாலி யங்கிதனை
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி கத்த மந்திரவ தான வெண்புரவி மிசையேறிக்

அருணகிரிநாதர்
கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர் பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ
டசையாமற்
சுட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு
தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர் சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத முறமேவித்
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்
வச்சி ரங்களென மேனி தங்கமுற சுத்த கம்புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ
எட்டி ரண்டுமறி யாத என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு முருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில்
விடுவோனே செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட சித்த முங்குளிர நாதி வண்பொருளை
நவில்வோனே
செட்டி யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் பெருமாளே.
640
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதற் றிதெனநி னைந்துநாயேன் நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
நங்களப் பாசரன மென்றுகூறல்

Page 69
920 திருப்புகழ்
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மேற் பார்வையை
கொல் உன்சொலைத் தாழ்வுசெய்து மிஞ்சுவாரார் உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்
உம்பருக் காவதினின் வந்துதோணாய்
கஞ்சனைத் தாவிழுடி முன்புகுட் டேயமிகு
கண்களிப் பாகவிடு செங்கையோனே கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
கஞ்சுகப் பான்மைபுனை பொன்செய்தோளாய்
அஞ்சவெற் பேமுகடல் மங்கநிட் டூரர்குலம்
அந்தரத் தேறவிடு கந்தவேளே அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
அம்பலத் தாடுமவர் தம்பிரானே.
64
செங்கலச முலையார்பால் சிந்தைபல தடுமாறி
அங்கமிக மெலியாதே அன்புருக அருள்வாயே
செங்கைபிடி கொடியோனே செஞ்சொல்தெரி
புலவோனே
மங்கையுமை தருசேயே மன்றுள்வளர் பெருமாளே.
642
கரிய மேக மெனுங்குழ லார்பிறை
சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி துண்டமாதர் கமுக க்ரிவர் புயங்கழை யார்தன
மலைக ளாஇனை யுங்குவ டார்கர கமல வாழை மனுந்தொடை யார்சர சுங்கமாடை
வரிய பாளித முந்துடை யாரிடை
துடிகள் நூலிய லுங்கவி னாரல்குல் மணமு லாவிய ரம்பையி னார்பொருள் சங்கமாதர் மயில்கள் போல நடம்புரி வாரியல்
குணமி லாத வியன்செய லார்வலை மசகி நாயெ னழிந்திட வோவுன தன்புதாராய்

அருணகிரிநாதர் 92
சரியி லாத சயம்பவி யார்முகி
லளக பார பொனின்சடை யாள்சிவை சருவ லோக சவுந்தரி யாளருள் கந்தவேளே சதப னாம குடம்பொடி யாய்விட
அவுனர் சேனை மடிந்திட வேயொரு தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக
செம்பொன்வாகா
அரிய மேனி யிலங்கை யிராவணன்
முடிகள் வீழ சரந்தொடு மாயவன் அகில மீரெழு முண்டவன் மாமரு கண்டரோதும் அழகு சோபித அங்கொளு மானன
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி அருள்கொ டாடிசி தம்பர மேவிய தம்பிரானே.
643
கூந்த லாழவி ரிந்து சரிந்திட
காந்து மாலைகு லைந்து பளிங்கிட கூர்ந்த வாள்விழி கெண்டைக லங்கிட
கொங்கைதானுங் கூண்க ளாமென பொங்கந லம்பெறு காந்தள் மேனிம ருங்குது வண்டிட கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர சங்கள் பாயச்
சாந்து வேர்வின பூழிந்து மனந்தப
வோங்க வாவில்க லந்துமு கங்கொடு தான்ப லாசுளை யின்சுவை கண்டித ழுண்டுமோகந்
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு சார்ந்து நாயென பூழிந்துவி ழுந்துடல் மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு சேர்ந்த பூரிகை பம்பைத வண்டைகள்
பொங்குதுரைச் சேண்சு லாமகு டம்பொடி தம்பட
வோங்க வேழகட லுஞ்சுவ றங்கையில் சேந்த வேலது கொண்டுந டம்பயில் கந்தவேளே

Page 70
922 திருப்புகழ்
மாந்த னாருவ னங்குயில் கொஞ்சிட
தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் செங்கைவேலா
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன் வார்ந்த ரூபிகு றம்பெண்வ ணங்கிய தம்பிரானே.
644
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வ ருடனாகி அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
லற்று நின்னை வல்ல U qu nTமுத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
முத்த னென்ன வுள்ள முனராதே முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
முட்ட நிங்ங் னைவ தொழியாதோ தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
தித்து மன்னு பிள்ளை முருகோனே சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
சித்ர வண்ண வல்லி யலர்துடும் பத்த ருண்மை சொல்லு ஞற்ற செம்மல் வெள்ளி
பத்தர் கன்னி புல்லு மணிமார்பா பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே.
645
இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
னுதல்காட்டி வெல்லு மிருபான இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
நகைகாட்டு வல்லி யிடைமாதர்
மருள்காட்டி நல்கு ரவு காட்டு மில்ல
இடுகாட்டி னெல்லை நடவாத வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
வினைவாட்டி யல்லல் செயலாமோ

அருணகிரிநாதர் 9 2 3
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
மொழிகாட்டு தில்லை யிளையோனே தினகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு மணிமார்பா
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
அடல்காட்டு வல்ல சுரர்கோபா அடிபோற்றி யல்லி முடிதட்ட வல்ல
அடியார்க்கு நல்ல பெருமாளே.
646
முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை
வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ
லலைபோதம்
மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல்
கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக முன்னல்கமு கார்களத் தோய்சுனங் காயமுலை
66963)6
வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி
றுள்ள துகில் நூலிடைக் காமபண் டாரஅல்குல் வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி
புரவோசை
மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல்
தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு வல்லவர்கள் போலபொற் சூறைகொண்டடார்கள்மய
லுறவாமோ
அல்லல்வினை போகசத் தாதிவிண் டோடநய
வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர முருகோனே
அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிர
லென்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழ லன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி
DGS'SM' T'

Page 71
924 திருப்புகழ்
செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோடதிர
வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி செல்லதிசையோடுவிட்டாடுசிங்காரமுக வடிவேலா
தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி
வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல் தில்லைநகர் கோபுரத்தே மகிழ்ந்தேகுலவு பெருமாளே
647
அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு அணுக்கிச் செந்துணுக்கிற் கோவித மூறல்க ளதுகோதி
அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலை
நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபன மேயென அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க ளுறவோடே
படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள்
படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள பசப்பிப் பின்பினக்கைக் கூறிய வீனிக ளவமாயப் பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள்
பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனை பரத்துற் றண்பதத்துப் போதக மீதென அருள்தாராய்
தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரை
நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண கலைவீரா தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில்
சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில் தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி
DGSRÖTGATGTT
திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய
அரக்கத் திண்குலத்தைச் துறைகொள் வீரிய திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் அறியாமல் திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய
சமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய பெருமாளே.

அருணகிரிநாதர் 9.25
648
அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
டுப்புக் காய்பணி நீர்மயிர் தோல்குடி லப்புச் சீபுழு வோடடை யார்தசை யுறமேவி அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ
ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி விரகாளர்
சுக்கத் தாழ்கட லேசுக மாமென
புக்கிட் டாசைபெ னாசைம னாசைகள் தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ டதனாலே துக்கத் தேபர வாமல் சதாசிவ முத்திக் கேசுக மாக பராபர சொர்க்கப் பூமியி லேறிட வேபத மருள்வாயே
தக்கத் தோகிட தாகிட தீகிட
செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு வெனதாளந் தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி
கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட சத்திக் கேயிரை யாமென வேவிடு கதிர்வேலா
திக்கத் தோகன தாவென வேபொரு
சொச்சத் தாதையர் தாமென வேதிரு செக்கர்ப் பாதம தேபதி யாசுதி யவைபாடச் செப்பொற் பீலியு லாமயில் மாமிசை
பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே.
6 49
ஆரத் தோடனி மார்பினை யானைகள்
போருக் காமென மாமுலை யேகொடு ஆயத் தூசினை மேவிய நூலிடை LD LLDT.g5ft ஆலைக் கோதினி லீரமி லாமன
நேசத் தோடுற வானவர் போலுவர் ஆருக் கேபொரு ளாமென வேநினை வதனாலே

Page 72
926 திருப்புகழ்
காருக் கேநிக ராகிய வோதிய
மாழைத் தோடனி காதொடு மோதிய காலத் தூதர்கை வேலெனு நீள்விழி வலையாலே காதற் சாகர மூழ்கிய காமுகர்
மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள் காமத் தோடுற வாகையி லாவருள் புரிவாயே
துரர்க் கேயொரு கோளரி யாமென
நீலத் தோகைம யூரம தேறிய தூளிக் கேகடல் தூர நிசாசரர் களமீதே சோரிக் கேவெகு ரூபம தாவடு
தானத் தானன தானன தானன துழிட் டேபல சோகுக ளாடவெ பொரும்வேலா
வீரத் தால்வல ராவண னார்முடி
போகத் தானொரு வாளியை யேவிய மேகத் தேநிக ராகிய மேனியன் மருகோனே வேதத் தோன்முத லாகிய தேவர்கள் பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்
மேலைக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே.
650
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
காமப் பூச லிட்டு மதியாதே காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி
னிழற் கேத ருக்கி விளையாடிச்
சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த
சேலொத் தேவ ருத்தும் விழிமானார் தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க
தீமைக் காவி தப்ப நெறிதாராய்
மாதைக் காத லித்து வேடக் கான கத்து
வாசத் தாள்சி வப்ப வருவோனே வாரிக் கேயொ ஸரித்த மாயச் சூரை வெட்டி
மாளப் போர்தொ லைத்த வடிவேலா

அருணகிரிநாதர் 92.7
விதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன்
வீரத் தேர்ம றைத்த புலியூர்வாழ்
மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க
வேதத் தோர்து தித்த பெருமாளே.
65
கொள்ளை யாசைக் காரிகள் பாதக
வல்ல மாயக் காரிகள் துறைகள் கொள்ளும் ஆயக் காரிகள் வினிகள் விழியாலே கொல்லும் லீலைக் காரிகள் யாரையும் வெல்லு மோகக் காரிகள் துதுசொல் கொவ்வை வாய்நிட் டுரிகள் மேல்விழு மவர்போலே
உள்ள நோவைத் தேயுற வாடியர்
அல்லை நேரொப் பாமன தோஷிகள் உள்வி ரோதக் காரிகள் மாயையி லுழல்நாயேன் உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு
கையு நீபத் தார்முக மாறுமுன் உள்ள ஞானப் போதமு நீதர வருவாயே
கள்ள மாயத் தாருகன் மாமுடி
துள்ள நீலத் தோகையின் மீதொரு கையின் வேல்தொட் டேவிய சேவக முருகோனே கல்லி லேபொற் றாள்பட வேயது
நல்ல ரூபத் தேவர கானிடை கெளவை தீரப் போகுமி ராகவன் மருகோனே
தெள்ளி யேமுற் றிரமு னோதிய
சொல்வ ழாமற் றானொரு வானுறு செல்வி மார்பிற் பூஷண மாயணை DGST GSTSATT தெள்ளு மேனற் சூழ்புன மேவிய
வள்ளி வேளைக் காரம னோகர தில்லை மேலைக் கோபுர மேவிய பெருமாளே.
652
தாது மாமலர் முடியா லேபத
றாத நூபுர அடியா லேகர தாள மாகிய நொடியா லேமடி பிடியாலே

Page 73
928 திருப்புகழ்
சாடை பேசிய வகையா லேமிகு வாடை பூசிய நகையா லேபல தாறு மாறுசொல் மிகையா லேயன நடையாலே
மோதி மீறிய முலையா லேமுலை
மீதி லேறிய கலையா லேவெகு மோடி நாணய விலையா லேமயல் தருமானார் மோக வாரிதி தனிலே நாடொறு மூழ்கு வேனுன தடியா ராகிய மோன ஞானிக ஞடனே சேரவு மருள்வாயே
காத லாயருள் புரிவாய் நான்மறை மூல மேயென வுடனே மாகரி காண நேர்வரு திருமால் நாரணன் மருகோனே காதல் மாதவர் வலமே துருழ்சபை நாத னார்தம திடமே வாழ்சிவ காம நாயகி தருபா லாபுலி சையில்வாழ்வே
வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புனைமூ வாயிர மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே வீறு சேர்வரை யரசாய் மேவிய
மேரு மால்வரை யெணநீள் கோபுர மேலை வாயிலின் மயில்மி தேறிய பெருமாளே.
653 எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள் இரத்தச் சாகர நீர்மல மேவிய கும்பியோடை இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி உளைப்புச் சூலையொ டேவலு வாகிய இரைப்புக் கேவல மூலவி யாதியொ டண்டவாதங்
குலைப்புக் காய்கனல் நீரிழி விளையொ
டளைப்புக் காதடை கூனல்வி தசிகை குருட்டுக் கால்முட மூமையு ளூடறு கண்டமாலை குடிப்புக் கூனமி தேசத மாமென
எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு னிடத்துத் தாள்பெற ஞான சதாசிவ அன்புதாராய்

அருணகிரிநாதர் 929
கெலிக்கப் போர்பொரு துரர்கு ழாமுமி
ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள் கெடுத்திட் டேகடல் துர்கிரி தூள்பட கண்டவேலா கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி பங்கின்மேவும்
வலித்துத் தோள்மலை ராவண னானவன்
எடுத்துப் போதுடல் கீழ்விழ வேசெய்து மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர சம்புபாலா மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
அனைத்துச் சீர்புலி யூர்பர மாகிய வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே.
654 நீல மாமுகில் போலும் வார்குழ
லார்கள் மாலைக்கு லாவ வேல்கனை நீள வாள்விழி பார்வை காதிரு குழையாட நீடு மார்ப னி யாட வோடிய
கோடு போலினை யாட நூலிடை நேச பாளித சோலை மாமயி லெனவேகிக்
காலி னுாபுர வோசை கோவென
ஆடி மால்கொடு நாணி யேவியர் காய மோடனு பாகு பால்மொழி விலைமாதர் காத லாயவ ரோடு பாழ்வினை மூழ்கி யேழ்நர காழு மூடனை
காரிர் பாருமை யாசி வாபத மருள்வாயே
கோல மாமயி லேறி வார்குழை
யாட வேல்கொடு வீர வார்கழல் கோடி கோடிடி யோசை போல்மிக மெருதூளாய்க் கோடு கோவென ஆழி பாடுகள்
தீவு தாடக ரார்கு ழாமொடு கூள மாகவி னோர்கள் வாழ்வுற விடும்வேலா
நாலு வேதமு டாடு வேதனை
யீன கேசவ னார்ச கோதரி நாதர் பாகம்வி டாள்சி காமணி gd-GS)). TGDT

Page 74
930 திருப்புகழ்
ஞான பூமிய தான பேர்புலி
யூரில் வாழ்தெய்வ யானை மானொடு நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே.
655
வாத பித்தமொடு துலை விப்புருதி
யேறு கற்படுவ னிளை பொக்கிருமல் மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ டந்திமாலை மாச டைக்குருடு காத டைப்புசெவி டூமை கெட்டவலி மூல முற்றுதரு மாலை யுற்றதொனு றாறுதத்துவர்க ளுண்டகாயம்
வேத வித்துபாரி கோல முற்றுவிளை
யாடு வித்தகட லோட மொய்த்தபல வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் சிங்கியாலே வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற வீட ஸ்ரித்துமயி லாடு சுத்தவெளி சிந்தியாதோ
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
நீறு பட்டலற துர வெற்பவுண ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ழங்கிவேலா ஒந மச்சிவய சாமி சுத்த அடி
யார்க ளுக்குமுப காரி பச்சையுமை ஒர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் தந்தசேயே
ஆதி கற்பகவி நாய கற்குபிற
கான பொற்சரவ னாப ா.பபிரம னாதி யுற்றபொருள் ஒது வித்தமைய றிந்தகோவே ஆசை பெற்றகுற மாதை நித்தவன மேவி சுத்தமண மாடி நற்புலியு ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் தம்பிரானே.
65 6
சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
துரந்துற்ற குளிர்வாடை யதனாலுந் துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
தொடர்ந்துற்று வருமாதர் வசையாலும்

அருணகிரிநாதர் 93
அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு
மடைந்திட்ட விடைமேவு மணியாலும் அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
அசைந்துற்ற மதுமாலை தரவேணும்
கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
கரந்துற்ற மடமானி னுடனேசார் கரும்புற்ற வயல்தழு பெரும்பற்ற புலியூரில்
களம்பற்றி நடமாடு மரன்வாழ்வே
இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர
இதம்பெற்ற மயிலேறி வருகோவே
இனந்துற்ற வருதர னுருண்டிட்டு விழவேல்கொ
டெறிந்திட்டு விளையாடு பெருமாளே.
657
இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள் இளஞ்சொற்செப்பிகள் சாதனை வீணிகள் கடிதாகும் இடும்பைப் பற்றிய தாமென மேயினர்
பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர் இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் எவரேனும்
பனஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்
மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள் பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் அவரோடே பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன பதம்பற் றிப்புக ழானது கூறிட அருள்வாயே
வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ மலங்கப பொக்கரை யீடழி மாதவன் மருகோனே மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர்
குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை வளைந்திட் டுக்கள மீதினி லேகொல விடும்வேலா

Page 75
9 32 திருப்புகழ்
பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள்
பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ பிளந்திட் டுப்பல மாமயி லேறிய முருகோனே பிரந்திட் டுப்பரி வாகிய ஞானிகள் சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய பெருமாளே.
658
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட
மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும் விழுங்கப் பட்டற வேயற லோதியர் விழியாலே விரும்பத் தக்கன போகமு மோகமும்
விளம்பத் தக்கன ஞானமு மானமும் வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர்
விடுநாளில்
இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்
கிடந்திட் டுத்தம ரானவர் கோவென இடங்கட் டிச்சுடு காடுபு காமுன மனதாலே இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
இருந்திட் டுப்பெற வேமதி யாயினும் இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர இசைவாயே
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய குரங்கைச் செற்றும கோததி தூளெழ நிருதேசன் குலங்கட் பட்டநி சாசரர் கோவென
இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய குமண்டைக் குத்திர ராவண னார்முடி அடியோடே
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
ப்ரியங்கொட் டக்கநன் மாமரு காஇயல் ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென விருதுாதும் ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ பெரும்பற் றப்புலி யூர் தனில் மேவிய பெருமாளே

அருணகிரிநாதர் 933
659
கொந்தள வோலைக ளாடப்பண்
சங்கொளி போல்நகை விசித்தண் கொங்கைகள் மார்பினி லாடக்கொண்
டையென்மேகம் கொங்கெழு தோள்வளை யாடக்கண்
செங்கயல் வாளிகள் போலப்பண் கொஞ்சிய கோகில மாகப்பொன் பறிகாரர்
தந்திர மாமென வேகிப்பொன்
தொங்கலொ டாரமு மாடச்செந் தம்பல வாயொடு பேசிக்கொண் டுறவாடிச் சம்பள மீதென வோதிப்பின்
பஞ்சணை மேல்மய லாடச்சஞ் சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் செயல்தீராய்
அந்தக னாருயிர் போகப்பொன்
திண்புர மோடெரி பாயப்பண் டங்கச னாருடல் வேகக்கண் டழல்மேவி அண்டர்க ளோடட லார்தக்கன்
சந்திர துரியர் வீழச்சென் றம்பல மீதினி லாடத்தன் குருநாதா
சிந்துர மோடரி தேர்வர்க்கம்
பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன் சிந்திட வேல்விடு வாகைத்திண் புயவேளே செங்குற மாதுமி னாளைக்கண் டிங்கித மாயுற வாடிப்பண் செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் பெருமாளே
660
நகையா லெத்திகள் வாயிற்றம்
பலமோ டெத்திகள் நாணற்றின் நயனா லெத்திகள் நாறற்புண் தொடைமாதர் நடையா லெத்திக ளாரக்கொங்
கையினா லெத்திகள் மோகத்தின் நவிலா லெத்திகள் தோகைப்பைங் குழல்மேகச்

Page 76
934
சிகையா லெத்திக ளாசைச்சங்
கடியா லெத்திகள் பாடிப்பண் திறனா லெத்திகள் பாரத்திண் சிலர் கூ டிக்கொடு ஆடிக்கொண்
டுழல்வா ருக்குழல் நாயெற்குன் செயலா லற்புத ஞானத்திண்
பகையா ருட்கிட வேலைக்கொண் டுவரா ழிக்கிரி நாகத்தின் படமோ டிற்றிட துரைச்சங் பனநா கத்திடை சேர்முத்தின்
சிவகா மிக்கொரு பாகத்தன் பரிவால் சத்துப தேசிக்குங்
சுகளுா னக்கடல் மூழ்கத்தந்
தடியே னுக்கருள் பாலிக்குஞ் சுடர்பா தக்குக னேமுத்தின் சுகரே சத்தன பாரச்செங்
குறமா தைக்கள வால்நித்தஞ் சுகமூழ் கிப்புலி யூர்நத்தும்
காசி
66
வேழ முண்ட விளாகனி
மேனி கொண்டு வியாபக நாளு மிண்டர்கள் போல்மிக
நானு நைந்து விடாதருள் மாள அன்றம ணிசர்கள்
வாதில் வென்ற சிகாமணி காள கண்ட லுமாபதி
காசி கங்கையில் மேவிய
662
தார ணிக்கதி பாவி யாய்வெகு
தது மெத்திய மூட னாய்மன சாதனைக்கள வாணி யாயுறு
திருப்புகழ்
தெருவூடே
கழல்தாராய்
களிதுரா
குரவோனே
கழல்வீரா
பெருமாளே.
யதுபோல மயலுாறி அயர்வாகி புரிவாயே கழுவேற மயில்வீரா தருபாலா பெருமாளே.
மதிமோக

அருணகிரிநாதர் 935
தாப மிக்குள வீன னாய்பொரு
வேல்வி பூழிச்சிய ராகு மாதர்கள் தாமு யச்செயு மேது தேடிய நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள் பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனைப் பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய போத கத்தினை யேயு மாறருள் புரிவாயே
வார னத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போது மேவிய மாய வற்கித மாக வீறிய மருகோனே வாழு முப்புர வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த மாம திப்பிறை வேணி யாரருள் புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி காவி யச்சிவ நூலை யோதிய கதிர்வேலா கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர காசி யிற்பர தாப மாயுறை பெருமாளே.
6 63 மங்கைக் கணவனும் வாழ்சிவ னாமயல்
பங்கப் படமிசை யேபனி போல்மதம் வந்துட் பெருகிட வேவிதி யானவ னருள்மேவி வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல
பந்துப் பனைபழ மோடிள நீர்குட மண்டிப் பலபல வாய்வினை கோலும வழியாலே
திங்கட் பதுசெல வேதலை கீழுற
வந்துப் புவிதனி லேமத லாயென சிந்தைக் குழவியெ னாவனை தாதையு மருள்கூரச் செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல
பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி லழிவேனோ

Page 77
936 திருப்புகழ்
அங்கைத் தரியென வேயொரு பாலக
னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை அம்பற் கொடுவாரி யாயிரண் யாசுர னுடல்பீறி அண்டர்க் கருள்பெரு மான்முதி ராவணி
சங்குத் திகிரிக ரோனரி நாரவ ரங்கத் திருவனை மேல்துயில் நாரணன்
மருகோனே. கங்கைச் சடைமுடி யோனிட மேவிய
தங்கப் பவளொளி பால்மதி போல்முக கங்குற் றரிகுழ லாள்பர மேஸ்வரி யருள்பாலா கந்துப் பரிமயில் வாகன மீதிரு
கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ் கங்கைப் பதிநதி காசியில் மேவிய பெருமாளே.
மாயாபுரி
664
சிகர மருந்த வாழ்வது சிவஞானம் சிதறி யலைந்து போவது செயலாசை மகர நெருங்க வீழ்வது LDES Ds TL மருவி நினைந்தி டாவருள் புரிவாயே அகர நெருங்கி னாமய முறவாகி அவச மொடுங்கை யாறொடு முனமேகிக் ககன மிசைந்த துரியர் புகமாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே.
வயிரவிவனம்
665
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ஞனு
மரனிட மிருக்கு மாயி யருள்வோனே அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
மணிமயில் நடத்து மாசை மருகோனே
பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
னிருகர மிகுத்த பார முருகாநின் பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
பணியவு மெனக்கு ஞானம் அருள்வாயே

அருணகிரிநாதர் 937
சுருதிக ஞரைத்த வேத னுரைமொழி தனக்கு ளாதி
சொலுவென வுரைத்த ஞான குருநாதா சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
துணிபட அரக்கர் மாள விடும்வேலா மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் தழும்
வயல்புடை கிடக்கு நீல மலர்வாவி வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
வயிரவி வனத்தில் மேவு பெருமாளே.
வெள்ளிகரம்
666
அடலரி மகவு விதிவழி யொழுகு
மைவரு மொய்க்கு ரம்பை யுடனாளும் அலைகட லுலகி லலம்வரு கலக
வைவர்த மக்கு டைந்து தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
டெல்லைவி டப்ர பஞ்ச மயல்தீர எனதற நினது கழல்பெற மவுன
வெல்லைகு றிப்ப தொன்று புகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்
வள்ளையெ னத்த யங்கு மிருகாதும் மரகத வடிவு மடலிடை யெழுதி
வள்ளிபு னத்தில் நின்ற மயில்வீரா
விடதர திகுண ரசசிதர் நிமலர்
வெள்ளிம லைச்ச யம்பு குருநாதா விகசித கமல பரிபுர முளரி
வெள்ளிக ரத்த மர்ந்த பெருமாளே.
667
கள்ள முள்ள வல்ல வல்லி
கையி லஸ்ாளி பொருளியக் கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
கல்வி செல்வர் கிளைமாய

Page 78
938
அள்ளல் துள்ளி ஐவர் செல்லு
மல்லல் சொல்ல ஐய ரைய மெய்யர் மெய்ய
ஐய செய்ய வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
வள்ளி கிள்ளை மைய லெய்து மைய செய்யில்
வையில் வெள்வ
மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்
வெள்ள வெள்ளி வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல
668 தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
தொய்யு மைய துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்
சொல்லு கள்ள
மைய செவ்வி மவ்வல் முல்லை
மல்கு நல்ல மையல் கொள்ள எள்ளல் செய்யும்
வல்லி சொல்லை
செய்ய துய்ய புள்ளி நவ்வி
செல்வி கல்வ தெய்வ வள்ளி மையல் கொள்ளு
செல்வ பிள்ளை
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
வெள்ளை வெள்ளி வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல
669 இல்லையென நாணி யுள்ளதின்ம றாம
லெள்ளினள வேனும் எவ்வமென நாடி யுய்வகையி லேனை
யெவ்வகையு நாமங்
திருப்புகழ்
முடியாதே
கழல்தாராய்
மொழியாலே
ளைகளேற
நுகர்வாழ்வே
பெருமாளே.
இடையாலுந்
விழியாலும்
குழலாலும்
மகிழ்வேனோ
ரையிலேனல்
முருகோனே
நகர்வாழ்வே
பெருமாளே.
பகிராரை
கவியாகச்

அருணகிரிநாதர் 939
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
தொல்லைமுத லேதென் றுனரேனைத் தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது
துய்யகழ லாளுந் திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
மையவரை பாகம் படமோது மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
வள்ளிமலை வாழுங் கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
வெள்ளிலுட னிபம் புனைவோனே வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும் பெருமாளே.
670
பையரவு போலு நொய்யஇடை மாதர்
பையவரு கோலந் தனைநாடிப் பையலென வோடி மையல்மிகு மோக
பவ்வமிசை விழுந் தனிநாயேன்
உய்யவொரு கால மையவுப தேச
முள்ளுருக நாடும் படிபேசி உள்ளதுமி லாது மல்லதவி ரோத
உல்லசவி நோதந் தருவாயே
வையமுழு தாளு மையகும ரேச
வள்ளிபடர் கானம் புடைதழும் வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள
மையுததி யேழுங் கனல்மூள
வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ
வெல்லயில்வி நோதம் புரிவோனே வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும் பெருமாளே.

Page 79
940 திருப்புகழ்
67
வதன சரோருக-நயன சிலிமுக வள்ளி புனத்தில் நின்று
வாராய்பதி காதங் காதரை யொன்றுமூரும் வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப
மற்றழிந்து மாலாய்மட லேறுங் காமுக எம்பிரானே
இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு
மெச்சில்தின்று லீலாசல மாடுந் தூயவன் மைந்தநாளும் இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள
மெனக் கலந்து நூறாயிர பேதஞ் சாதமொ ழிந்தவாதான்
கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்த நந்த
கோபாலம கீபன் தேவிம கிழ்ந்துவாழக் கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப்பயந்து
ஆகாயக பாலம் பீறிநி மிர்ந்துநீள
விதரண மாவலி வெருவமகாவ் ருதவெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயைழு னிந்தகோவே
விளைவய லூாடிடை வளைவிளை யாடிய வெள்ளி
நகர்க் கமர்ந்த
வேலாயுத மேவுந் தேவர்கள் தம்பிரானே.
672
சிகரிக ளிடிய நடநவில் கலவி
செவ்வி மலர்க்க டம்பு சிறுவாள்வேல் திருமுக சமுக சததள முளரி
திவ்ய கரத்தி ணங்கு பொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவி
ஐவன வெற்பில் வஞ்சி கனவாஎன் றகிலமு முனர மொழிதரு மொழியி
னல்லது பொற்பதங்கள் பெறலாமோ

அருணகிரிநாதர்
நிகரிட அரிய சிவசுத பரம நிர்வச னப்ர சங்க நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
நெல்லி மரத்த மர்ந்த
வெகுமுக ககன நதிமதி யிதழி வில்வ முடித்த நம்பர் விகசித கமல பரிமள கமல
வெள்ளி கரத்த மர்ந்த
67 3 குவலய மல்கு தவலிகள் முல்லை
குளிர்நகை சொல்லு குழையிள வள்ளை யிடைசிறு வல்லி
குயமுலை கொள்ளை
கவலைசெய் வல்ல தவலரு முள்ள
கலவியில் தெள்ளு கடிமல ரைய அணிவன செய்ய
கழலினை பைய
தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு
தனியுழை புள்ளி தருபுன வள்ளி மலைமற வள்ளி
தருதினை மெள்ள
அவநெறி சொல்லு மவரவை கொல்லு
மழகிய வெள்ளி அடையலர் செல்வ மளறிடை செல்ல
அமர்செய வல்ல
674 பொருவன கள்ள இருகயல் வள்ளை
புரிகுழை தள்ளி புளசித வல்லி யிளகித வல்லி
புரியிள முல்லை
உருகிட வுள்ள விரகுடை யுள்ள
முலகுயி ருள்ள றுமைதரு செல்வ னெனமிகு கல்வி
யுணர்வொடு சொல்ல
941
குருநாதா
அபிராம
பெருவாழ்வே
பெருமாளே.
முதுபாகு
விழைமேவிக்
கவிமாலை
அருள்வாயே
யுடனாடித்
நுகர்வோனே
நகர்வாழ்வே
பெருமாளே.
விளையாடும்
நகைமீதே
பொழுதேநின்
வுனராதோ

Page 80
942 திருப்புகழ்
மருவலர் வள்ளி புரமுள வள்ளி
மலைமற வள்ளி DGTGATGTT வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை
மரகத நல்ல மயில்வீரா
அருவரை விள்ள அயில்விடு மள்ள
அணிவயல் வெள்ளி நகர்வாழ்வே அடையலர் செல்வ மளறிடை செல்ல
அமர்செய வல்ல பெருமாளே.
திருவல்லம் (திருவலம்)
675
நசையொடு தோலுந் தசைதுறு நீரும்
நடுநடு வேயென் புறுகிலும் நலமுறு வேயொன் றிடஇரு கால்நன்
றுறநடை யாருங் குடிலூடே விசையுறு காலம் புலனெறி யேவெங்
கனலுயிர் வேழந் திரியாதே விழுமடி யார்முன் பழுதற வேள்கந்
தனுமென வோதும் விறல்தாராய் இசையுற வேயன் றசைவற வூதும்
எழிலரி வேழம் எனையாளென் றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும்
இடமிமை யாமுன் வருமாயன்
திசைமுக னாருந் திசைபுவி வானுந்
திரிதர வாழுஞ் சிவன்மூதூர் தெரிவையர் தாம்வந் தருநட மாடுந்
திருவல மேவும் பெருமாளே.
வேலூர்
67 6
அதிக ராய்ப்பொரு ஸ்ரீவார் நேர்படில் ரசனை காட்டிக ளியார் கூடினும் அகல வோட்டிகள் மாயா ரூபிகள் நண்புபோலே

அருணகிரிநாதர் 94 3
அசட ராக்கிகள் மார்மே லேபடு
முலைகள் காட்டிகள் கூசா தேவிழும் அழகு காட்டிக ளாரோ டாகிலு மன்புபோலே
சதிர தாய்த்திரி வோயா வேசிகள்
கருணை நோக்கமி லாமா பாவிகள் தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் நம்பொணாத சரச வார்த்தையி னாலே வாதுசெய்
விரக மாக்கி விடாமூ தேவிகள் தகைமை நீத்துன தாளே சேர்வதும் எந்தநாளோ
மதுரை நாட்டினி லேவாழ் வாகிய
அருகர் வாக்கினி லேசார் வாகிய வழுதி மேற்றிரு நீறே பூசிநி மிர்ந்துகூனும் மருவு மாற்றெதிர் விறே டேறிட
அழகி போற்றிய மாறா லாகிய மகிமை யாற்சமண் வேரோ டேகெட
வென்றகோவே
புதிய மாக்கனி வீழ்தே னுாறல்கள்
பகலி ராத்திரி யோயா ஆலைகள் புரள மேற்செல வூரூர் பாயஅ ணைந்துபோதும் புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி
லளகை போற்பல வாழ்வால் வீறிய புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே.
677
சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்
சீர்வாழ்வு சிந்தை பொன்ற முதல்நாடித் தேன்மேவு செஞ்சொலின்சொல் தானோதி
வந்தணைந்து தீராத துன்ப இன்ப முறுமாதர்
கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு
கூராமல் மங்கி யங்க மழியாதே
கோள்கோடி பொன்றவென்று நாடோறு நின்றி யங்கு கூர்வாய்மை கொண்டி றைஞ்ச அருள்தாராய்

Page 81
944 திருப்புகழ்
மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின்
வாகோட பூழிந்தொ டுங்க முதல்நாடி வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த
மாதுரர் குன்ற வென்றி மயிலேறி
மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க
வேலாலெ றிந்து குன்றை மலைவோனே வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு
வேலூர்வி ளங்க வந்த பெருமாளே.
விரிஞ்சிபுரம்
678
ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத்
தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட் டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட்
டதனாலே ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட்
டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட் டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச்
செயுமானார்
தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச்
சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத் தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத்
திரிவேனைச் சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்
தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுண்துபொற் சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட்
டருவாயே
குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத்
தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக் கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத்
திடும்வேலா குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற்
சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக் கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப்
புனர்வோனே

அருணகிரிநாதர் 945
கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப்
பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக் கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத்
திடுவோனே கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக்
கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற் கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப்
பெருமாளே. 67 9 குலையமயி ரோதி குவியவிழி வீறு
குருகினிசை பாடி முகமீதே குறுவியர்வு லாவ அமுதினினி தான
குதலையுமொ ராறு படவேதான்
பலவிதவி நோத முடனுபய பாத
பரிபுரமு மாட அனைமீதே பரிவுதரு மாசை விடமனமொ வாத
பதகனையு மாள நினைவாயே
சிலைமலைய தான பரமர்தரு பால
சிகிபாரிய தான குமரேசா திருமதுரை மேவு மமணர்குல மான
திருடர்கழு வேற வருவோனே
கலின்வடிவ மான அகலிகைபெ னான
கமலபத மாயன் மருகோனே கழனிநெடு வாளை கமுகொடிய மோது
கரபுரியில் வீறு பெருமாளே.
680 நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படு மவிரோதம் நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
நிருப அங்கு மாரவெ னெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதக ரறியாத தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்ட ரீகம தருள்வாயே

Page 82
946 திருப்புகழ்
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
மறுகி வெந்து வாய்விட நெடுவான
வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த துரனு
மடிய இந்தி ராதியர் குடியேறச்
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
சிறுவ சந்த்ர சேகரர் பெருவாழ்வே
திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
திருவி ரிஞ்சை மேவிய பெருமாளே.
68
பரவி யுனதுபொற் கரமு முகமுமுத்
தனியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப் பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் பரிவாலே படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்
தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப் பசியில் வருமவர்க் கசன மொருபிடிப்
படையாதே
சருவி யினியநட் புறவு சொலிமுதற்
பழகு மவரெனப் பதறி யருகினிற் சரச விதமளித் துரிய பொருள்பறித் திடுமானார் தமது ம்ருகமதக் களப புளசிதச்
சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத் தழுவி யவசமுற் றுருகி மருளெனத் திரிவேனோ
கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக் கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் திடுதிரா கமல அயனுமச் சுதனும் வருணனக்
கினியு நமனுமக் கரியி லுறையுமெய்க் கணனு மமரரத் தனையு நிலைபெறப் புரிவோனே
இரையு முதத்யிற் கடுவை மிடறமைத்
துழுவை யதளுடுத் தரவு பணிதரித் திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் தமவேளே இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத் தவனி தனிலெழிற் கரும முனிவருக் கினிய கரபுரப் பதியி லறுமுகப் பெருமாளே.

அருணகிரிநாதர் 947
682
மருவு மஞ்சுபூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போட அறியாது மயல்கொ ளரிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராத அடியேனும் உருகி யன்பினோடு உனைநி னைந்து நாளும்
உலக மென்று பேச அறியாத உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உபய துங்க பாத மருள்வாயே அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
அடிப னிந்து பேசி கடையூடே அருளு கென்ற போது பொருளி தென்று கான
அருளு மைந்த ஆதி குருநாதா திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து துரர்
செரு வடங்க வேலை விடுவோனே செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு பெருமாளே.
திருவாலங்காடு
683
கனவாலங் கூர்விழி மாதர்கள்
மனசாலஞ் சால்பழி காரிகள் கனபோகம் போருக மாமிணை முலைமீதே கசிவாருங் கீறுகி ளாலுறு
வசைகாணுங் காளிம விணிகள் களிகூரும் பேயமு தூணிடு கசுமாலர்
மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள் மருளாருங் காதலர் மேல்விழு மகளிர்வில் மதிமாடம் வாணிகழ் வார்மிசை மகிழ்கூரும் பாழ்மன மாமுன மலர்பேனுந் தாளுன வேயரு ளருளாயோ

Page 83
948 திருப்புகழ்
தனதானந் தானன தானன
எனவேதங் கூறுசொல் மீறளி ததைசேர்தண் பூமண மாலிகை யணிமார்பா தகரேறங் காரச மேவிய
குகவீரம் பாகும ராமிகு தகைசாலன் பாரடி யார்மகிழ் பெருவாழ்வே
தினமாமன் பாபுன மேவிய
தனிமானின் தோளுட னாடிய தினைமாவின் பாவுயர் தேவர்கள் 5GOGlobodu TLDT திகழ்வேடங் காளியொ டாடிய
ஜெகதீசங் கேசந டேசுரர் திருவாலங் காடினில் வீறிய பெருமாளே.
684
பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
நன்றாமன் றார்க்கின் றுறுதுணை பொன்றானென் றாட்டம் பெருகிய புவியூடே பொங்காவெங் கூற்றம் பொதிதரு
சிங்காரஞ் சேர்த்திங் குயரிய புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு முயிர்கோல
நின்றானின் றேத்தும் படிநினை
வுந்தானும் போச்சென் றுயர்வற நிந்தாகும் பேச்சென் பதுபட நிகழாமுன் நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை விஞ்சாதென் பாற்சென் றகலிட நின்றாள்தந் தாட்கொண் டருள்தர நினைவாயே
குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு கன்றாமுன் காத்துங் குவலய முண்டார்கொண் டாட்டம் பெருகிய மருகோனே கொந்தார்பைந் தார்த்திண் குயகுற
மின்தாள்சிந் தாச்சிந் தையில் மயல் கொண்டேசென் றாட்கொண் டருளென
மொழிவோனே

அருணகிரிநாதர் 949
அன்றாலங் காட்டண் டருமுய
நின்றாடுங் கூத்தன் திருவருள் அங்காகும் பாட்டின் பயனினை யருள்வாழ்வே அன்பால்நின் தாட்கும் பிடுபவர் தம்பாவந் தீர்த்தம் புவியிடை அஞ்சாநெஞ் சாக்கந் தரவல பேருமாளே.
685
புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
புதுமன மானும் பூட்டி யிடையூடே பொறிபுல னிரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
புகல்வழி நாலைந் தாக்கி வருகாயம்
பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
பசுபதி பாசங் காட்டி புலமாயப் படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந்தேத்தி பரகதி தானுங் காட்டி யருள்வாயே சிவமய ஞானங் கேட்க தவமுனி வோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர் முருகோனே திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற ஜெகமொடு வானங் காக்க மயிலேறிக்
குவடொடு தரன் தோற்க எழுகடல் துதந் தாக்கி
குதர்வடி வேலங் கோட்டு குமரேசா குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில் குறமகள் பாதம் போற்று பெருமாளே.
686
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
வரவிடு தூதன் கோட்டி விடுபாசம் மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
மதிகெட மாயந் தீட்டி யுயிர்போமுன்
படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
பழவினை பாவம் தீர்த்து னடியேனைப்
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
பரபுகழ் பாடென் றாட்கொ டருள்வாயே

Page 84
950 திருப்புகழ்
முடிமிசை சோமன் துட்டி வடிவுள ஆலங் காட்டில்
முதிர்நட மாடுங் கூத்தர் புதல்வோனே முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
முதல்மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய்
இடியென வேகங் காட்டி நெடிதரு துலந் தீட்டி
யெதிர்பொரு துரன் தாக்க வரஏகி இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
யிமையவ ரேதந் தீர்த்த பெருமாளே.
திருவோத்தூர்
6 87 தவர்வாட் டோமர தலந் தரியாக் காதிய தருந்
தணியாச் சாகர மேழுங் கிரியேழுஞ்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
தரிசுத் தாடிய மாவுந் தினைகாவல் துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொருதேனுந்
துணையாத் தாழ்வற வாழும் பெரியோனே துணையாய்க்காவல் செய்வாயென் றுணராப் பாவிகள் பாலுந் தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ
பவமாய்த் தானது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும் படிவேதம் படியாப் பாதகர் பாயன் றியுடாப்பேதைகள் கேசம்
பறிகோப் பாளிகள் யாருங் கழுவேறச் சிவமாய்த்தேனமு தூறுந்திருவாக் காலொளிசேர்வெண்
டிருநீற் றாலம ராடுஞ் சிறியோனே செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந் திருவோத் தூர்தனில் மேவும் பெருமாளே.
பாக்கம்
6 88 கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி
காய்த்தொட்டொ னாதவுரு ஒருகோடி
காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல்
காட்டத்தி னிளொரியி லுறவானிற்

அருணகிரிநாதர் 95
கூர்ப்பித்த துலனத னாற்குத்தி யாவிகொடு
போத்துக்க மானகுறை யுடையேனைக் கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி
கோக்கைக்கு நூலறிவு தருவாயே
போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர்
போய்த்திக்கெ லாமடிய வடிவேலாற் பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது
போற்றிச்செய் வார்சிறையை விடுவோனே
பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர
னாய்ப்பத்தி கூர்மொழிகள் பகர்வாழ்வே பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர்
பாக்கத்தில் மேவவல பெருமாளே.
689
பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
நோக்கிச் சுமந்து கொண்டு பதிதோறும் பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து
ஏக்கற்று நின்று நின்று தளராதே
வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு
கீர்த்தித்து நின்ப தங்க ளடியேனும் வேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற
வீட்டிற் புகுந்தி ருந்து மகிழ்வேனோ
மாற்றற்ற பொன்து லங்கு வாட்சக்கி ரந்தெ ரிந்து
வாய்ப்புற்ற மைந்த சங்கு 51q-EsrL மாற்பொற்க லந்து லங்க நாட்டச்சு தன்ப னிந்து
வார்க்கைத்த லங்க ளென்று திரைமோதும்
பாற்சொற்ற டம்பு குந்து வேற்கட்சி னம்பொ ருந்து
பாய்க்குட் டுயின்ற வன்றன் மருகோனே பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த
பாக்கத் தமர்ந்தி ருந்த பெருமாளே.

Page 85
952 திருப்புகழ்
திருவேற்காடு
69 O
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
மாளம்போர் செயுமாய விழியாலே ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார
ஆடம்பார் குவிநேய முலையாலே
சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
வேளங்கார் துடிநீப இடையாலே சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
காலந்தா னொழிவேது உலையாயோ
பாலம்பால் மனநாறு காலங்கே யிறிலாத
மாதம்பா தருசேய வயலூரா பாடம்பார் திரிதுல நீடந்தா கரவிர
பாசந்தா திருமாலின் மருகோனே
வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
வீறங்கே யிருபாலு முறவிறு வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
வேலங்கா டுறைசீல பெருமாளே.
69
கார்ச்சார்குழ லார்விழி யாரயி
லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் மயலாலே காழ்க்காதல தாமன மேமிக
வார்க்காமுக னாயுறு சாதக மாப்பாதக னாமடி யேனைநி னருளாலே
பார்ப்பாயலை யோவடி யாரொடு
சேர்ப்பாயலை யோவுன தாரருள் கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு குமரேசா பார்ப்பாவல ரோதுசொ லால்முது நீர்ப்பாரினில் மீறிய கீரரை
யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ லருள்வாயே

அருணகிரிநாதர் 95.3
வார்ப்பேரரு ளேபொழி காரண நேர்ப்பாவச காரண மாமத ஏற்பாடிக ளேயழி வேயுற அறைகோப வாக்காசிவ மாமத மேமிக
வூக்காதிப யோகம தேயுறு மாத்தாசிவ பாலகு காவடி யர்கள்வாழ்வே
வேற்காடவல் வேடர்கள் மாமக
ளார்க்கார்வநன் மாமகி னாதிரு வேற்காடுறை வேதபு ரீசுரர் தருசேயே வேட்டார்மக வான்மக ளானவ
ளேட்டார்திரு மாமன வாபொனி னாட்டார்பெரு வாழ்வென வேவரு பெருமாளே
வடதிருமுல்லைவாயில்
692
அணிசெவ்வி யார்திரை தழ்புவி
தனநிவ்வி யேகரை யேறிட அறிவில்லி யாமடி யேனிட ரதுதீர அருள்வல்லை யோநெடு நாளின மிருளில்லி லேயிடு மோவுன தருளில்லை யோஇன மானவை யறியேனே
குணவில்ல தாமக மேரினை
யணிசெல்வி யாயரு ணாசல குருவல்ல மாதவ மேபெறு குணசாத குடிலில்ல மேதரு நாளெது
மொழிநல்ல யோகவ ரேபணி குணவல்ல வாசிவ னேசிவ குருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொ
டமர்கள்ளி கானக நாடக பரமெல்லி யார்பர மேஸ்வரி தருகோவே படரல்லி மாமலர் பாணம
துடைவில்லி மாமத னாரனை பாரிசெல்வி யார்மரு காசுர முருகேசா

Page 86
954 திருப்புகழ்
மணமொல்லை யாகி நகாகன
தனவல்லி மோகன மோடமர் மகிழ்தில்லை மாநட மாடின ரருள்பாலா மருமல்லி மாவன நீடிய
பொழில்மெல்லி காவன மாடமை வடமுல்லை வாயிலின் மேவிய பெருமாளே.
693 சோதி மாமதி போல்முக முங்கிளர்
மேரு லாவிய மாமுலை யுங்கொடு தூர வேவரு மாடவர் தங்கள்மு னெதிராயே சோலி பேசிமு னாளிலி னங்கிய
மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு துதி னால்வர வேமனை கொண்டவ ருடன்மேவி
மோதி யேகனி வாயத ரந்தரு
நாளி லேபொருள் துறைகள் கொண்டுபின் மோன மாயவ மேசில சண்டைக ளுடனேசி மோச மேதரு தோதக வம்பியர்
மீதி லேமய லாகிம னந்தளர் மோட னாகிய பாதக னுங்கதி பெறுவேனோ
ஆதி யேயெனும் வானவர் தம்பகை
யான துரனை மோதிய ரும்பொடி யாக வேமயி லேறிமு னிந்திடு நெடுவேலா ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர
லேறி யேயுறி மீதளை யுங்கள வாக வேகொடு போதது கர்ந்தவன் மருகோனே
வாதி னால்வரு காளியை வென்றிடு
மாதி நாயகர் வீறுத யங்குகை வாரி ராசனு மேபணி யுந்திரு நடபாதர் வாச மாமல ரோனொடு செந்திரு
மார்பில் வீறிய மாயவ னும்பணி மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள் பெருமாளே.
694 மின்னிடைக லாப தொங்கலொ டன்னமயில் நான விஞ்சிய மெல்லியர்கு ழாமி சைந்தொரு தெருமீதே

அருணகிரிநாதர் 955
மெள்ளவுமு லாவி யிங்கித
சொல்குயில்கு லாவி நண்பொடு வில்லியல்பு ரூர கண்கனை தொடுமோக
கன்னியர்கள் போலி தம்பெறு
மின்னணிக லார கொங்கையர் கண்ணியில்வி ழாம லன்பொடு பதஞான கண்ணியிலு ளாக சுந்தர
பொன்னியல்ப தார முங்கொடு
கண்ணுறுவ ராம லின்பமொ டெனையாள்வாய்
சென்னியிலு டாடி ளம்பிறை
வன்னியும ராவு கொன்றையர் செம்மணிகு லாவு மெந்தையர் குருநாதா செம்முகஇ ராவ னன்தலை
விண்ணுறவில் வாளி யுந்தொடு தெய்விகபொ னாழி வண்கையன் மருகோனே
துன்னியெதிர் சூரர் மங்கிட
சண்முகம தாகி வன்கிரி துள்ளிடவெ லாயு தந்தனை விடுவோனே சொல்லுமுனி வோர்த வம்புரி
முல்லைவட வாயில் வந்தருள்
துல்யபர ஞான வும்பர்கள் பெருமாளே.
திருவலிதாயம்
695
மருமல்லி யார் குழலின் LDL Dr T5fr மருளுள்ளி நாயடிய னலையாமல் இருநல்ல வாகுமுன தடிபேன இனவல்ல மானமன தருளாயோ கருநெல்லி மேனியரி மருகோனே கனவள்ளி யார்கணவ முருகேசா திருவல்லி தாயமதி லுறைவோனே பெருமாளே.
திகழ்வல்ல மாதவர்கள்

Page 87
956 திருப்புகழ்
திருமயிலை
696
அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு மதிகாளம் அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரன அகிலேச
நிமிர வருள்சரன நிபிட மதெனவுன
நிமிர சமிரமய நியமாய நிமிட மதனிலுண வலசி வசுதவர
நினது பதவிதர வருவாயே
சமர சமரசுர அசுர விதரபர
சரத விரதஅயில் விடுவோனே தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
தரர ரரரரிரி தகுர்தாத
எமர நடனவித மயிலின் முதுகில்வரு
மிமைய மகள்குமர எமதீச இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
மெமது பரகுரவ பெருமாளே.
697
அயிலொத் தெழுமிரு விழியாலே அமுதொத் திடுமரு மொழியாலே சயிலத் தெழுதுணை முலையாலே தடையுற் றடியனு மடிவேனோ கயிலைப் பதியரன் முருகோனே கடலக் கரைதிரை யருகேதழ் மயிலைப் பதிதனி லுறைவோனே மகிமைக் கடியவர் பெருமாளே.
698
அறமி லாவதி பாதக வஞ்சத் தொழிலாலே அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் றிளையாதே திறல்கு லாவிய சேவடி வந்தித் தருள்கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் தருவாயே

அருணகிரிநாதர் 95.7
விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் பொரும்வேலா
விமல மாதபி ராமித ருஞ்செய்ப் புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொ ஞம்பொற் புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே.
699
இகல வருதிரை பெருகிய சலநிதி
நிலவு முலகினி லிகமுறு பிறவியி னினிமை பெறவரு மிடருறு மிருவினை யதுதீர இசையு முனதிரு பதமலர் தனைமன
மிசைய நினைகிலி யிதமுற வுனதரு ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி உமைபாகர்
மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
மடமை குறைகிலி மதியுனர் வறிகிலி வசன மறவுறு மவுண்மொ டுறைகிலி மடமாதர் மயம தடரிட இடருறு மடியனு
மினிமை தருமுன தடியவ ருடனுற மருவஅருள்தரு கிருபையின்மலிகுவ தொருநாளே
சிகர தனகிரி குறமக ளினிதுற
சிலத நலமுறு சிலபல வசனமு திறைய அறைபயி லறுமுக நிறைதரு மருணித சிரண புரணவி தரனவி சிரவன
சரணு சரவன பவகுக சயனொளி திரவ பரவதி சிரமறை முடிவுறு பொருணித
அகர உகரதி மகரதி சிகரதி
யகர அருளதி தெருளதி வலவல அரணமுரணுறு மசுரர்கள்கெட அயில் விடுவோனே அழகு மிலகிய புலமையு மகிமையும்
வளமு முறைதிரு மயிலையி லதுதின
மமரு மரகர சிவசுத அடியவர் பெருமாளே.
700 இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
இருகுழையின் மீத டர்ந்து அமராடி
இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த
இருநயனர் வாரி னங்கு மதிபாரப்

Page 88
958 திருப்புகழ்
பனைமுலையின் மீத னிந்த தரளமணி யார்து லங்கு
பருவரதி போல வந்த விலைமானார் பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற
படுகுழியி லேம யங்கி விழலாமோ
கணகனென வீர தண்டை சரணமதி லேவி ளங்க
கலபமயில் மேலு கந்த குமரேசா கறுவிவரு துர னங்க மிருபிளவ தாக விண்டு
கதறிவிழ வேலெறிந்த முருகோனே
மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணந்த
மலையவிலி னாய கன்றன் ஒருபாக மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து
மயிலைநகர் வாழ வந்த பெருமாளே.
70 களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
கலகமத வேள்தொ டுத்த கனையாலுங் கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள்பேசவுற்ற கனலெனவு லாவு வட்ட மதியாலும்
வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி
வனிதைமடல் நாடி நித்த நலியாதே வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி
மலரணையில் நீய னைக்க வரவேனும்
துளபமணி மார்ப சக்ர தரனாரிமு ராரி சர்ப்ப
துயிலதர னாத ரித்த மருகோனே சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
துரகதக லாப பச்சை மயில்வீரா
அளகைவணி கோர்குலத்தில் வனிதையுயிர் மீளழைப்ப
அருள்பரவு பாடல் சொற்ற குமரேசா அருவரையை நீறெ முப்பி நிருதர்தமை வேர றுத்து
அமரர்பதி வாழ வைத்த பெருமாளே.
7 O2 கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
கலக மேசெய் பாழ்மூடர் வினைவேடர்
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
கனவி கார மேபேசி நெறிபேனாக்

அருணகிரிநாதர் 959
கொடிய னேது மோராது விரக சால மேமூடு
குடிலின் மேவி யேநாளு மடியாதே குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
குவளை வாகும் நேர்கான வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
பணமு மாட வேநீடு வரைசாடிப் பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
பதிய தாக வேலேவு மயில்வீரா வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னிள்சோலை
வனச வாவி பூவோடை வயலோடே மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
மயிலை மேவி வாழ்தேவர் பெருமாளே,
7 O 3 திரைவார் கடல்துழபுவி தனிலே யுலகோரொடு
திரிவே னுனையோதுதல் திகழாமே தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
சுதனே திரிதேவர்கள் தலைவாமால்
வரைமா துமையாள்தரு மணியே குகனேயென
அறையா வடியேனுமு னடியாராய் வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு
மகநா ளுளதோசொல அருள்வாயே இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு
மிழிவா கிமுனேயிய லிலராகி இருளா மனதேயுற அசுரே சர்களேமிக
இடரே செயவேயவ ரிடர்தீர மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ
மதமா மிகுதுரனை மடிவாக வதையே செயுமாவலி யுடையா யழகாகிய
மயிலா புரிமேவிய பெருமாளே.
04
நிரைதரு மணியணி யார்ந்த பூரித
ம்ருகமத களபதில் சாந்து சேரிய இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ரனைமீதே

Page 89
9 60 திருப்புகழ்
நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி
முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை யொடுபொர இருகர மேந்து நீள்வளை யொலிகூர
விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர
மிசைதர இலவிதழ் மோந்து வாயமு தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக வியனாடும் வினையனை யிருவினை யீண்டு மாழ்கட
லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது மொருநாளே
பரையபி நவைசிவை சாம்ப வீயுமை
யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை சதகோடி பகவதி யிருசுட ரேந்து காரணி
மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி படர்சடை யவனிட நீங்கு றாதவள் தருகோவே
குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க
ளணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு முருகோனே குலநறை மலரளி சூழ்ந்து லாவிய
மயிலையி லுறைதரு சேந்த சேவக குகசர வணபவ வாய்ந்த தேவர்கள் பெருமாளே.
705 வருமயி லொத்தவ ரீவார் மாமுக
மதியென வைத்தவர் தாவா காமிகள் வரிசையின் முற்றிய வாகா ராமியல் LDLLDIT5ff மயலினி லுற்றவர் மோகா வாரிதி
யதனிடை புக்கவ ராளாய் நீணதி தருவிய லுத்தர்கள் மாடா மாமதி மிகமூழ்கி
தருபர வுத்தம வேளே சீருறை
அறுமுக நற்றவ லீலா கூருடை அயிலுறை கைத்தல சீலா பூரண பரயோக சரவண வெற்றிவி நோதா மாமணி
தருமர வைக்கடி நீதா வாமணி மயிலுறை வித்தவு னாதா ராமணி பெறுவேனோ

அருணகிரிநாதர் 96.
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதிதோ தெனவரி மத்தள மீதார் தேமுழ
திடுவென மிக்கியல் வேதா வேதொழு திருநட மிட்டவர் காதே மூடிய குருபோதம்
உரைசெயு முத்தம வீரா நாரணி
உமையவ ளுத்தர பூர்வா காரணி உறுஜக ரக்ஷணி நீரா வாரணி தருசேயே உயர்வர முற்றிய கோவே யாரன
மறைமுடி வித்தக தேவே காரண ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே.
திருவான்மியூர்
7 O 6
குசமாகி யாருமலை மரைமாது ணுாலினிடை
குடிலான ஆல்வயிறு குழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
குழல்கார தானகுன மிலிமாதர்
புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
புலையேனு லாவியமிகு புணர்வாகிப் புகழானபூமிமிசை மடிவாயி றாதவகை
பொலிவான பாதமல ரருள்வாயே
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
நிகழ்போத மானபர முருகோனே நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
நிபுணாநி சாசரர்கள் குலகாலா
'GGDFLDT காமியரி மகவான் னோர்கள்பணி
CLP CLP சிவநாத ராலமயில் அமுதேசர்
கம்பால மாக மணிமாளி மாட(மயர் திகழ் CLADD CLP
திருவான்மி யூர்மருவு பெருமாளே

Page 90
962 திருப்புகழ்
திருவொற்றியூர்
7 07
கரியமுகில் போலு மிருளளக பார
கயல்பொருத வேலின் விழிமாதர் கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர
களபமுலை தோய அணையூடே
விரகமது வான மதனகலை யோது
வெறியனென நாளு முலகோர்கள் விதரணம தான வகைநகைகள் கூறி
விடுவதன்முன் ஞான அருள்தாராய் அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
அவர்கள்புக ழோத புவிமீதே அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
அமரர்குல நேச குமரேசா
சிரகர கபாலர் அரிவையொரு பாகர்
திகழ்கனக மேனி யுடையாளர் திருவளரு மாதி புரியதனில் மேவு
ஜெயமுருக தேவர் பெருமாளே.
7 O 8
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச ELL.DfTLT துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவிக்ரம மாதர்வயி றிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகை யதின்மீறிக் கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை யொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி மருகோனே குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர் குலகாலா

அருணகிரிநாதர் 963
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ னருள்பாலா திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு பெருமாளே.
கோசைநகர்
7 09 ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
தாலிலையெ னாமதன கலைலிலை யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
லாசைமிக வாயடிய னலையாமல்
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
னானபத மாமலரை 56)LDITs நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
நாடியரு ளேயருள வருவாயே சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
சீதசல மாசடில பரமேசர் சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
சீறிவரு மாவசுரர் குலகாலா கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
பாலுமுற விறிவரு குமரேசா கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
வேசமுரு காவமரர் பெருமாளே.
பெருங்குடி
7 10 தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
தழைந்தவு தரந்திகழ் தசமாதஞ் சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
தவழ்ந்தனர் நடந்தனர் சிலகாலந்
துலங்கு நலபெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடுந்தொழி லுடன்தம க்ரகபாரஞ்
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
சுடும்பினை யெனும்பவ மொழியேனோ

Page 91
964 திருப்புகழ்
இலங்கையி லிலங்கிய இலங்களு ளரிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென முறையோதி இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் மருகோனே பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
ப்ரசண்டக ரதண்டமிழ் வயலுாரா பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்குறை பெருமாளே.
மாடம்பாக்கம்
7
தோடு றுங்குழை யாலே கோல்வளை
தடு செங்கைக ளாலே யாழ்தரு கீத மென்குர லாலே தூமணி நகையாலே தூம மென்குழ லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி லோச னங்களி னாலே சோபித அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர் பார கொங்கைக ளாலே கோலிய விலைமாதர் பாவ கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய ராதே நூபுர பாத பங்கய மீதே யாள்வது கருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ நாத தந்த்ரக லாமா போதக வடிவாகி நால்வி தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம னோல யந்தரு நாதா ஆறிரு புயவேளே
வாட யங்கிய வேலா லேபொரு
துர்த டிந்தருள் வீரா மாமயி லேறு கந்தவி நோதா கூறென அரனார்முன் வாச கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே.

அருணகிரிநாதர் 965
7 2
விலைய றுக்கவு முலைம றைக்கவு
மணந்துன் றுஞ்செ முந்தார் புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்
விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர் விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு
நிணந்துன் றுஞ்ச லம்பா யுதிரநீ ருடனே
வெளியி னிற்கவும் வலிய முட்டரை
மெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை
திரும்பும் பண்ப ரன்றே யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி
புடன்கொண் டன்பு டன்போய்
சயனபா யலின்மேல்
கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு
நயங்கொண் டங்கி ருந்தே குனுகி யிட்டுள பொருள்ப றித்தற முனிந்தங் கொன்று கண்டே கலக மிட்டவ ரகல டித்தபின்
வரும்பங் கங்கு ணங்கோர் புதியபே ருடனே
கதைகள் செப்பவும் வலச மர்த்திகள்
குனங்கண் டுந்து ளங்கா மனித னிற்சிறு பொழுது முற்றுற
நினைந்துங் கண்டு கந்தே கடிம லர்ப்பத மனுகு தற்கறி
விலன்பொங் கும்பெ ரும்பா தகனையா
ளுவையோ
சிலைத னைக்கொடு மிகஅ டித்திட
மனந்தந் தந்த னந்தா மரைமலர்ப்பிர மனைந டுத்தலை யாரிந்துங் கொண்டி ரந்தே திரிபு ரத்தெரி புகந கைத்தருள்
சிவன்பங் கங்கி ருந்தா ளருளுமா முருகா

Page 92
966 திருப்புகழ்
செருவி டத்தல கைகள் தெனத்தென தெனந்தெந் தெந்தெ னந்தா எனஇ டக்கைகள் மணிக ணப்பறை
டிகுண்டிங் குண்டி குண்டா டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு
டிகுண்டிங் குண்டி குண்டீ யெனஇரா வனனிள்
மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு மிரண்டஞ் சொன்ப தொன்றேய் பனைபு யத்தையு மொருவ கைப்பட
வெகுண்டம் பொன்றெ ஹிந்தோன் மதலை மைத்துன அசுர ரைக்குடல்
திறந்தங் கம்பி ளந்தே மயிலின்மேல் வருவாய்
வயல்க ளிற்கய லினமி குத்தெழு வரம்பின் கண்பு ரண்டே பெருக யற்கொடு சொரியு நித்தில
நிறைந்தெங் குஞ்சி றந்தே வரிசை பெற்றுயர் தமனி யப்பதி
யிடங்கொண் டின்பு றுஞ்சீர் இளைய நாயகனே.
கோடைநகர்
7 3
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று புவிமீதில் ஆசையுட னேயி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று விளையாடிப் பூதல மெலாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று பொருள்தேடிப் போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார னன்றன் மருகோனே தேவர்முனி வோர்கள் கொண்டல்மா லாரிபிர் மாவு நின்று தேடஅரி தான வன்றன் முருகோனே

அருணகிரிநாதர் 967
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த குமரேசா கூடிவரு துரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த பெருமாளே.
7 4 சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ தாக வந்து விமீதே சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழ்ந்து விளையாடிப் பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன மீத ணைந்து பொருள்தேடிப் பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று பாதமலர் சேர அன்பு தருவாயே ஆலமழு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூனர் தந்த முருகோனே ஆணைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார னன்றன் மருகோனே கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமு தூற லுண்ட குமரேசா கூடிவரு துர டங்க மாளவடி வேலெ றிந்த
கோடைநகர் வாழ வந்த பெருமாளே.
7 5 ஏறா னாலே நீறாய் மாயா
வேளே வாசக் கணையாலே GJuu T GBG. Juu T LDT uLunt CBG uuLuT
லாமே ழேர்சைத் தொளையாலே மாறா யூறா யீறாய் மாலாய்
GunT LT DIT GOGOST&5 கழியாதே வாராய் பாராய் சேரா யானால்
GJптL-T šuš தொடைதாராய்
சீறா வீறா ஈரேழ் பார்துழி
சீரார் தோகைக் குமரேசா தேவா சாவா மூவா நாதா
தீரா கோடைப் பதியோனே

Page 93
திருப்புகழ்
வேறாய் மாறா யாறா மாதுர்
வேர்போய் வீழப் வேதா போதா வேலா பாலா
வீரா வீரப்
7 6
ஞால மெங்கும் வளைத்த ரற்று
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ஆல முந்து மதித்த ழற்கும்
ஆறி ரண்டு புயத்த னைக்க கோல மொன்று குறத்தி யைத்த
கோடை யம்பதி யுற்று நிற்கு கால னஞ்ச வரைத்தொ ளைத்த
கால்வி லங்கு களைத்த றித்த
7 17
பொருதோனே
பெருமாளே.
கடலாலே வசையாலே
அழியாதே வருவாயே
ழுவுமார்பா மயில்வீரா
முதல்வானோர் பெருமாளே.
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஒதிய நன்றிம றந்த குண்டர்கள்
தழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்க
ளிவது கண்டுத கைந்த குண்டர்கள்
பெரியோரைத்
துளுற வென்பதொழிந்த குண்டர்கள் தொலையாமல்
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள் மானவ கந்தைமி குந்த குண்டர்கள் மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
வலையாலே
தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும் வாலியு மம்பர மும்ப ரம்பரை
ராவண னுஞ்சது ரங்க லங்கையு
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
சூரிய லுஞ்சுர ரும்ப தம்பெற ராம சரந்தொடு புங்க வன்திரு
விழுவாரே
மடைவேமுன்
மருகோனே

அருணகிரிநாதர் 969
கோழி சிலம்பந லம்ப யின்றக
லாப நடஞ்செய மஞ்சு தங்கிய கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல வயலுாரா கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேல னெனும்பெய ரன்பு டன்புகழ் கோடை யெனும்பதி வந்த இந்திரர் பெருமாளே.
7 8
தோடப் பாமற் றோய்தப் பாணிச்
தழ்துற் றார்துற் றழுவாருந் தூரப் போகக் கோரப் பாரச்
தலப் பாசச் சமனாரும்
பாடைக் கூடத் தீயிற் றேறிப்
பாழ்பட் டேபட் டழியாதே பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
பாதத் தேவைத் தருள்வாயே ஆடற் துர்கெட் டோடத் தோயத்
தாரச் சீறிப் பொரும்வேலா ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
காரத் தாரைத் தரும்வீரா
கூடற் பாடிக் கோவைப் பாவைக்
கூடப் பாடித் திரிவோனே கோலச் சாலிச் சோலைச் சீலக்
கோடைத் தேவப் பெருமாளே.
7. 9
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
வாய்மைப்ர காச மென்று நிலையாக மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
வாயுப்பி ரான னொன்று மடைமாறி
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
ரோமத்து வார மெங்கு முயிர்போக யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
லோகத்தில் மாய்வ தென்று மொழியாதோ

Page 94
970 திருப்புகழ்
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
மேலிட்ட சூர்த டிந்த கதிர்வேலா வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
வேடிச்சி காலி லன்று விழுவோனே
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
கூளப்பு ராரி தந்த சிறியோனே கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
கோடைக்குள் வாழ வந்த பெருமாளே.
திருப்போரூர்
720
அனுத்தே னேர்மொழி யாலே மாமய
லுடைத்தார் போலவு மோர்நா ளானதி லடுத்தே தூதுகள் நூறா றானதும் விடுவார்கள் அழைத்தே வீடினி லேதா னேகுவர்
நகைத்தே மோடிக ளாவார் காதலொ டடுத்தே மாமுலை மீதே மார்புற அனைவார்பின்
குனித்தே பாகிலை யீவார் பாதியில்
கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது குடிப்பார் தேனென நானா லீலைகள் புரிவார்கள் குறித்தே மாமய லாலே நீள்பொருள்
பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக குணத்தார் மாதர்கள் மேலா சாவிட அருள்வாயே
வனத்தே வேடுவர் மாதா மோர்மினை
யெடுத்தே தான்வர வேதான் யாவரும் வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் விறல்வீரா மலர்த்தே னோடையி லோர்மா வானதை
பிடித்தே நீள்கர வாதா டாழியை மனத்தா லேவிய மாமா லானவர் மருகோனே
சினத்தே துரர்கள் போராய் மாளவு
மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி திருத்தோ ளாஇரு பாதா தாமரை முருகோனே திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக
ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள திருப்போ ரூருறை தேவா தேவர்கள் பெருமாளே.

அருணகிரிநாதர் 97
72 உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
உகப்பார் வால சந்த்ர னுதனுாலாம் உருச்சேர் நீண்ம ருங்குல் பனைத்தோளோதி கொண்ட லுவப்பா மேல்வி ழுந்து திரிவோர்கள் அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப
வலைக்கே பூணு நெஞ்ச னதிபாவி அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த
அவத்தா லீன மின்றி யருள்வாயே எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை
யினைச்து டாதி நம்பர் புதல்வோனே இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
லிருப்பா யானை தங்கு மணிமார்பா
செருக்கா லேமி குந்த கடற்துர் மாள வென்ற
திறற்சேர் வேல்கை கொண்ட முருகோனே தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க
திருப்போ ரூர மர்ந்த பெருமாளே.
7 22 சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
சேய சாயல்க லாமதி முகமானார் தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
சேலு லாவிய கூர்விழி குமிழ்நாசி தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
சார்பி லேதிரி வேனைநி னருளாலே சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய
தாளில் வீழவி னாமிக அருள்வாயே காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை
காவல் மாதினொ டாவல்செய் தனைவோனே கான ஆகம வேதபு ராண நூல்பல வோதிய
கார ணாகரு ணாகர முருகோனே
போரு லாவிய துரனை வாரி சேறெழ வேல்விடு
பூப சேவக மாமயில் மிசையோனே போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு
போரி மாநகர் மேவிய பெருமாளே,

Page 95
972 திருப்புகழ்
723
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
திமிர மேயரி துரிய திரிலோக தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாவரி நாரணன் மருகோனே குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
குணக லாநிதி நாரணி தருகோவே குருகு காகும ரேசுர சரவ னாசக ளேசுர
குறவர் மாமக ளாசைகொள் மணியேசம்
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
பசுர பாடன பாளித பகளேச பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல பரயோக சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில் முதுவீர சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய பெருமாளே.
உத்தரமேரூர் 7 24
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முனிவோர்கள்
துகளி லிருடி யெழுபேர்கள் சுடர்மூவர் சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் தொலைவி லுடுவி னுலகோர்கள் மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடி யிவர்கூடி அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறியு மறிவூற அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாக முதுதரும் மடிய அலகை நடமாட விஜய வணிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி வருநாய்கள்

அருணகிரிநாதர் 973
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேன மயிலேறி
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் பெருமாளே.
7 25
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்ட மாயு ருண்டு வடிவான தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
சோரு மிந்த நோய கன்று துயராற
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்விரிஞ்ச
னார ணங்க ளாக மங்கள் புகழ்தாளும் ஆன னங்கள் மூவி ரண்டு மாறிரண்டு தோளுமங்கை
யாடல் வென்றி வேலு மென்று நினைவேனோ
வால சந்த்ர துடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே மாயை யைந்து வேக மைந்து பூதமைந்து நாதமைந்து
வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ளுறைவோனே
வேலை யன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச அனைவோனே வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
மேரு மங்கை யாள வந்த பெருமாளே.
726 நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
நேசமுற் றடியேனு நெறிகேடாய் நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
நீதியிற் சிவவாழ்வை நினையாதே பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
பாடலுற் றிடவேசெய் திடுமோச பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
பார்வைசற் றருளோடு பணியாயோ
ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
மாகமப் பொருளோரு மனைவோரும் ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
மாயிரத் திருநூறு மறையோரும்

Page 96
974 திருப்புகழ்
வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
வாகுசித் திரதோகை மயிலேறி மாறெனப் பொருதுர னிறெழப் பொரும்வேல
மான்மகட் குளனான பெருமாளே.
727
மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு
மார்பி லங்கியல் முத்தா ரத்தினில் வாச மென்குழ லிற்சே லைப்பொரும் விழிவேலில்
மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்
வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில் வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் மயலாகி
ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
ஆசை யின்கட லுக்கே மெத்தவும் ஆகி நின்றுத வித்தே நித்தலும் அலைவேனோ
ஆறி ரண்டுப னைத்தோ ளற்புத
ஆயி ரங்கலை கத்தா மத்திப னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் புரிவாயே
சாத னங்கொடு தத்தா மெத்தென
வேந டந்துபொய் பித்தா வுத்தர மேதெ னும்படி தற்காய் நிற்பவர் சபையூடே
தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்
நீதி தந்திர நற்சார் புற்றருள் சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ளரன்வாழ்வே
வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்
வேள்வி யும்புவி யிற்றா பித்தருள் வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ்
மறையோர்வாழ் மேரு மங்கையி லத்தா வித்தக
வேலொ டும்படை குத்தா வொற்றிய வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள்
பெருமாளே.

அருணகிரிநாதர் 975
மதுராந்தகம்
7 28
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை வினைகூர்துரர் குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்து சுழலாதே உதிதாம்ப ரத்தை யுயிர்கெடப்பொற்
கிண்கி னிச்ச தங்கை விதகித உபயாம்பு யப்பு னையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்று தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
ரந்த ரித்த கொண்டல் மருகோனே கருணாஞ்ச னக்க மலவி பூழிப்பொற்
பைம்பு னக்க ரும்பின் o66
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
மந்த னிற்பி றந்த குமரேசா மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த பெருமாளே.
729
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பர் வெகுசாரி சதிதாண்ட வத்தர் சடையி டத்து
கங்கை வைத்த நம்பர் உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த வுபதேசஞ் சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
றுங்கு ருத்து வங்கு றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
கன்ற னைப்பி ளந்து சுரர்வாழ அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
றுந்தி றற்ப்ர சண்ட முழுநீல

Page 97
976
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
குன்றி டித்த சங்க்ர மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த
730 மனைமாண்சுத ரான சுணங்கரு
மனம்வேந்தினை யான தனங்களு மடிவேன் றனை யீன அணங்குறு மயமாம்பல வான கணங்குல
திருப்புகழ்
மவிநோதா
பெருமாளே.
வம்பராதி
மெனப்ராந்தியும் யானென தென்றுறு
வனவாம்பிர மாத குணங்குறி
இனவாம்பரி தான்ய தனம்பதி
விடஏன்றெனை மோன தடம்பர மிகுதாம்பதி காண கணங்கன இடவார்தன சானு நயம்பெறு
கடகாங்கர சோன வியம்பர இடமாங்கன தாளரு ஞம்படி
தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட தனவாம்பர மான நடம்பயில் தமதாஞ்சுத தாபர சங்கம
மெனவோம்புறு தாவன வம்படர் தகுதாம்பிர சேவித ரஞ்சித
முனவாம்பத மூடிக வந்தன
முயல்வான்பிடி மாடிமை யைங்கரர் முகதாம்பின மேவுறு சம்ப்ரம முககாம்பிர மோடமர் சம்பன மதுராந்தக மாநக ரந்திகழ் முருகாந்திர மோடம ரும்பர்கள்
சேயூர்
73 முகிலாமெனும் வார்குழ லார்சிலை
புருவார்கயல் வேல்விழி யார்சசி முகவார்தர ளாமென வேநகை
யின்பசார
வும்பரேசா
யென்றுதானோ
எம்பிரானார்
வும்பர்வாழ்வே
சங்கனாறு
தம்பிரானே.
புரிமாதர்

அருணகிரிநாதர் 97 7
முலைமாலினை கோபுர மாமென
வடமாடிட வேகொடி நூலிடை முதுபாளித சேலைகு லாவிய மயில்போல்வார்
அகிசேரல்கு லார்தொடை வாழையின்
அழகார்கழ லார்தர வேய்தரு அழகார்கண நூபுர மாடிட நடைமேவி
அனமாமென யாரையு மால்கொள
விழியால்சுழ லாவிடு பாவையர் அவர்பாயலி லேயடி யேனுட லழிவேனோ
ககனார்பதி யோர்முறை கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட கடலேழ்கிரி நாகமு நூறிட விடும்வேலா
கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுர னாரிட மேவிய கருணாகர ஞானப ராபரை யருள்பாலா
மகிழ்மாலதி நாவல்ப லாகமு
குடனாடநி லாமயில் கோகில மகிழ்நாடுறை மால்வளி நாயகி LUDGET GAT GYTT
மதிமாமுக வாவடி யேனிரு
வினை தூள்பட வேயய் லேவிய
வளவாபுரி வாழ்மயில் வாகன பெருமாளே.
பேறைநகர்
732
நீலமயில் சேரு மந்தி மாலைநிக ராதி யந்த
காரமிக வேநி றைந்த குழலாலும் நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர
னேர்தருமு கார விந்த மதனாலும்
ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்
ஆசைவலை வீசு கெண்டை விழி அலும் ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த
னாகிமயல் நானு ழன்று திரிவேனோ,

Page 98
978 திருப்புகழ்
கோலவுரு வாயெ முந்து பாரதனை யேயி டந்து
கூவிடுமு ராரி விண்டு திருமார்பன் கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ முந்த
கோபவரி நார சிங்கன் மருகோனே
பிலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்
பேர்பெரிய வேல்கொள் செங்கை முருகோனே பேடைமட வோதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற
பேறைநகர் வாழ வந்த பெருமாளே.
திருவக்கரை
733
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துணைச்சிறி துரையாதே கருவழி தத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை யிடைவிழா
உலகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி யடிநாயேன் உனதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு மயில்வீரா குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புனர் மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை யுறைவோனே அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் பெருமாளே.
734
பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள் பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட
நினைவோர்கள்

அருணகிரிநாதர் 97 9
பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை
யொத்தந கைப்பில்வி பூழிப்பில்ம யக்கிகள் பகூடிமி குத்திட முக்கனி சர்க்கரை யிதழுறல் எச்சில ளரிப்பவர் கச்சணி மெத்தையில்
இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு மடமாதர்
இச்சையி லிப்படி நித்தம னத்துயர்
பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத
மருள்வாயே நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு
ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர் நத்துத ரித்தக ரத்தர்தி ருத்துள வணிமார்பர்
நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை
நட்டர வப்பணி சுற்றிம தித்துள நத்தமு தத்தையெ முப்பிய ஸ்ரித்தவர்
மருகோனே கொச்சைமொ ழிச்சிக றுத்தவி பூழிச்சிசி றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு றத்தித னக்கும னப்ரிய முற்றிடு (5LDGSust
கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு
குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை பெருமாளே
சிறுவை 735 அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற அருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முனிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு மெதிர்கான மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்

Page 99
980 திருப்புகழ்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள வுயர்தோளா பொங்குட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
736
சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம சேவல மாமயில் ப்ரீதாந மோநம மறைதேடுஞ் சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம தேவர்கள் சேனைம கீபாந மோநம கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம பாரினி லேஜய வீராந மோந மலைமாது பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம பாலகு மாரசு வாமிந மோநம அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேனியர் நேயாப்ர பாகர பூமக ளார்மரு கேசாம கோததி யிகழ்துரா போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக பூரண மாமதி போலாறு மாமுக முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ் மாநில மேழினு மேலான நாயக வடிவேலா வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் பெருமாளே.

அருணகிரிநாதர் 98.
737 பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று தடுமாறிப் பெருகு தீயவினையி னொந்துகதிகடோறுமலைபொருந்தி
பிடிப டாத ஜனன நம்பி யழியாதே நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை யகலாதே நரர்சு ராதி பரும்வணங்கு மினிய சேவை தனைவி
ரும்பி நலன தாக அடிய னென்று பெறுவேனோ பொறிவ ழாத முனிவர்தங்கள்நெறிவ ழாத பிலனுழன்று
பொருநி சாச ரனைநி னைந்து வினைநாடிப் பொருவிலாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து புளக மேவ தமிழ்பு னைந்த முருகோனே சிறுவராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ
ருஞ்சொல் சிலையி ராம னுடனெ திர்ந்து சமராடிச் செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி
குந்த சிறுவை மேவி வரமி குந்த பெருமாளே.
738
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
காத லின்பொருள் மேவின பாதகர் வீனில் விண்டுள நாடிய ரூமைகள் விலைகூறி வேளை யென்பதி லாவசை பேசியர்
வேசி யென்பவ ராமிசை மோகிகள் மீது நெஞ்சழி யாசையி லேயுழல் சிறியேனும் மால யன்பர னாரிமை யோர்முனி
வோர் புரந்தர னாதிய ரேதொழ மாத வம்பெறு தாளினை யேதின மறவாதே வாழ்த ருஞ்சிவ போகந னுானெறி
யேவி ரும்பிசி னாவுட னேதொழ வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் களைவாயே

Page 100
982 திருப்புகழ்
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி நீடு பஞ்சவி துலினி மாலினி யுமைகாளி நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ காம சுந்தரி யேதரு பாலக நீர்பெ ருஞ்சடை யாரருள் தேசிக முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற மாநி லங்களெ லாநிலை யேதரு ஆயனந்திரு ஆரக மால்திரு மருகோனே ஆட கம்பயில் கோபுர மாமதி
லால யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய பெருமாளே.
திருவாமாத்தூர்
739
அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
மயில்விழி யாலு மாலெனு மதவேழத் தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை யதின்முக மூடு மாடையி னழகாலுந்
துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு
துணிவுட னுாடு மாதர்கள் துணையாகத் தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர் துலையலை மாறு போலுயிர் சுழல்வேனோ
அடவியி னுாடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு
மடிதொழு தாடு மாண்மையு முடையோனே அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை அறிவுட னோது மாதவர் பெருவாழ்வே
விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை
யுகநெடி தோட மேலணை பவர்மூதூர் விரைசெறி தோகை மாதர்கள் விரகுடனாடு மாதையில் விறல்மயில் மீது மேவிய பெருமாளே.

அருணகிரிநாதர் 983
740
கண்க யற்பினை மானோடுற வுண்டெ னக்கழை
தோளானது நன்க மைக்கின மாமாமென முகையான கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு
கோடோடுற
விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ டுயர்காலன்
பெண்ட னக்குள கோலாகல மின்றெடுத்திளை
யோராவிகள்
மன்பி டிப்பது போல்நீள்வடி வுடைமாதர் பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி
யாதேயுறு
கிஞ்சி லத்தனை தாள்பேணிட அருள்தாராய்
விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன்
வேதாவொடு
விண்டு வித்தகன் வீழ்தாளினர் விடையேறி வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர் வெங்க யத்துரி யார்போர்வையர் மிகுவாழ்வே
தண்பு டைப்பொழில் தழ்மாதையில் நண்பு வைத்தருள்
தாராதல
முங்கி ளைத்திட வானிள்திசை யொடுதாவித் தண்ட ரக்கர்கள் கோகோவென விண்டி டத்தட
மாமீமிசை
சண்ட விக்ரம வேலேவிய பெருமாளே.
74
கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு கனியமு தூறித் தேறிய மொழிமாதர் கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள் கனதன பாரக் காரிகள் செயலோடே

Page 101
984 திருப்புகழ்
பொருகயல் வாளைத் தாவிய விழியினர் துறைக் காரிகள்
பொருளள வாசைப் பாடிகள் புவிமீதே பொதுவிகள் போகப்பாவிகள் வசமழி வேனுக்கோரருள் புரிவது தானெப் போதது புகழ்வாயே
தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
சமனிலை யேறப் பாறொடு கொடிவிழத் தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
தசையுண வேல்விட் டேவிய தனிவீரா
அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள்முத் தார்நகை
அழகுடை யாள்மெய்ப் பாலுமை யருள்பாலா அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
அழகர்தென் மாதைக் கேயுறை பெருமாளே
742
கால முகிலென நினைவுகொ டுருவிலி
காதி யமர்பொரு கனையென வடுவகிர் காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு கயலாலுங் கான மமர்குழ லாரிவையர் சிலுகொடு
காசி னளவொரு தலையணு மனதினர் காம மிவர்சில கபடிகள் படிறுசொல் கலையாலுஞ்
சால மயல்கொடு புளசித கனதன
பார முறவண முருகவிழ் மலரணை சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும் அடியேனைச் சாதி குலமுறு படியினின் முழுகிய
தாழ்வ தறஇடை தருவன வெளியுயர் தாள தடைவது தவமிக நினைவது தருவாயே
வேலை தனில்விழி துயில்பவ னரவணை
வேயி னிசையது நிரைதனி லருள்பவன் வீர துரகத நரபதி வனிதையர் கரமீதே வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது
வேடை கெடவமு தருளிய பொழுதினில் வீசு கயிறுட னடிபடு சிறியவ னதிகோப

அருணகிரிநாதர் 985
வாலி யுடனெழு மரமற நிசிசரன்
வாகு முடியொரு பதுகர மிருபது மாள வொருசரம் விடுமொரு கரியவன் மருகோனே வாச முறுமலர் விசிறிய பரிமள
மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக வானி லடியவ ரிடர்கெட அருளிய பெருமாளே.
தச்சூர்
7 43
அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த
செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து
உறவாடி அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க
வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி ரிலையாசை
வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க
ளொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன் மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க ளதனாலே
மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து
புற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்து வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து
திரிவேனோ
எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த
பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி
நிலையாயே எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த
முத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கி யெக்காலு மக்காத துர்க்கொத் தரிந்த சினவேலா தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த
சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து சக்காகி யப்பேடை யாட்குப் புகுந்து மணமாகித்

Page 102
986 திருப்புகழ்
தப்பாம லிப்பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்காகு மிப்பாரில் கீர்த்திக் கிசைந்த தச்துர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த பெருமாளே.
திருக்கோவலூர் 744
பாவ நாரிகள் மாமட மாதர் வீனிக ளானவ
பாவை யாரிள நீரன முலையாலும் பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை
பார காரன வார்குழ லதனாலுஞ்
சாவ தார விதாரமு தார்த ராவித ழாலித
சாத மூரலி தாமதி முகமாலுஞ் சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு
சார மாயதி லேயுற லொழிவேனோ
ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி
யாதி கானரி தாகிய பரமேச ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர
னாதி தேவர்க ளியாவர்கள் பணிபாத
கோவ தாமறை யோர்மறை யோது மோதம்
விழாவொலி கோடி யாகம மாவொலி மிகவீறும் கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத
கோதை யானையி னோடமர் பெருமாளே.
தேவனூர் 745
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் அறுநாலும் ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆர ணாக மங்க டந்த SSGR)GAO TGST
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றி யொருதானாய் யாவு மாய்ம னங்கடந்த மோன வீட டைந்தொருங்கி
யான வாவ டங்க என்று பெறுவேனோ

அருணகிரிநாதர் 9 8 7
மாறு கூறி வந்தெ திர்ந்த துரர் சேனை மங்க வங்க
வாரி மேல்வெ குண்ட சண்ட விததாரை வாகை வேல கொன்றைதும்பை மாலை கூவி
ளங்கொழுந்து வால சோம னஞ்சு பொங்கு பகுவாய சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேனி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல் புனைவோனே தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு தேவ னுார்வி ளங்க வந்த பெருமாளே.
46 தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
சாதி பூத ரங்கு லுங்க முதுமீனச் சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொளுந்த அன்று
தாரை வேல்தொ டுங்க டம்ப மததாரை ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
மானை யாளு நின்ற குன்ற மறமானும் ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ பாரமார்தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண்க
பால மாலை கொன்றை தும்பை சிறுதாளி பார மாசு னங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
பானல் கூவி ளங்க ரந்தை அறுகோடே சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
சீத ளார விந்த வஞ்சி பெருவாழ்வே தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு தேவ னுார்வி ளங்க வந்த பெருமாளே.
747
காணொ னாதது உருவோ டருவது
பேசொ ணாதது உரையே தருவது கானு நான்மறை முடிவாய் நிறைவது பஞ்சபூதக் காய பாசம தனிலே யுறைவது
மாய மாயுட லறியா வகையது காய மாணவ ரெதிரே யவரென வந்துபேசிப்

Page 103
988 திருப்புகழ்
பேனொ னாதது வெளியே யொளியது மாய னாரய னறியா வகையது பேத பேதமொ டுலகாய் வளர்வது விந்துநாதப் பேரு மாய்கலை யறிவாய் துரியவ
தீத மானது வினையேன் முடிதவ பேறு மாயருள் நிறைவாய் விளைவது ஒன்றுநீயே
வினொ னாதென அமையா தசுரரை
நூறி யேயுயிர் நமனி கொளுவென வேல்க டாவிய கரனே யுமைமுலை யுண்டகோவே வேத நான்முக மறையோ னொடும்விளை
யாடி யேகுடு மியிலே கரமொடு வீற மோதின மறவா குறவர்கு றிஞ்சியூடே
சேனொ னாயிடு மிதண்மே லரிவையை
மேவி யேமயல் கொளல் லைகள்செய்து சேர நாடிய திருடா வருடரு கந்தவேளே சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
ஞான யோகிக ஞளமே யுறைதரு
தேவ னுார்வரு குமரா வமரர்கள் தம்பிரானே.
திருவதிகை 7 48
பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
பவளநிறத் ததரம்விளைத் தமுதுாறல் பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
படைமதனக் கலையடவிப் பொதுமாதர்
சொருகுமலர்க் குழல்சாரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
துகிலகலக் க்ருபைவிளைவித் துருகாமுன் சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
சுழலுமனக் கவலையொழித் தருள்வாயே
கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
கணைதொடுமச் சுதன்மருகக் குமரேசா கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
கவிநிறையப் பெறும்வரிசைப் புலவோனே

அருணகிரிநாதர் 9 89
திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும்வயற் கதிரலையத் திரைமோதித் திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே
749
விடமும் வேலன மலரன விழிகளு
மிரத மேதரு மமுதெனு மொழிகளும் விரகி னாலெழு மிருதன வகைகளு மிதமாடி
மிகவு மாண்மையு மெழினல முடையவர்
வினையு மாவியு முடனிரு வலையிடை வெளியி லேபட விசிறிய விஷமிக ஞடன்மேவா
இடரு றாதுனை நினைபவர் துணைகொள
இனிமை போலெழு பிறவியெ னுவரியி னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி லிழியாதே
இசையி னாடொறு மிமையவர் முனிவர்கள்
ககன பூபதி யிடர்கெட அருளிய இறைநி னாறிரு புயமென வுரைசெய அருள்வாயே
படரு மார்பினி லிருபது புயமதொ
டரிய மாமணி முடியொளி ரொருபது படியி லேவிழ வொருகனை தொடுபவ ரிடமாராய்
பரவை யூடெரி பகழியை விடுபவர்
பரவு வார்வினை கெடஅரு ஞதவியெ பரவு பால்கட லரவணை துயில்பவர் மருகோனே
அடர வேவரு மசுரர்கள் குருதியை
அரக ராவென அலகைகள் பலியுண அலையும் வேலையும் அலறிட எதிர்பொருமயில்வீரா
அமர ராதிய ரிடர்பட அடர்தரு
கொடிய தானவர் திரிபுர மொரிசெய்த அதிகை மாநகர் மருவிய சசிமகள் பெருமாளே.

Page 104
990 திருப்புகழ்
திருவாமூர்
750
சீத மதிய மெறிக்குந் தழலாலே
சீறி மதனன் வளைக்குஞ் சிலையாலே ஒத மருவி யலைக்குங் கடலாலே
ஊழி யிரவு தொலைக்கும் படியோதான்
மாது புகழை வளர்க்குந் திருவாமூர்
வாழு மயிலி லிருக்குங் g5LDGStJ Frt காத லடியர் கருத்தின் பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே.
வடுகூர்
75
அரியய னறியா தவரெரி புரமூ
ணதுபுக நகையே வியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசி
றழலையு மழுநேர் பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியே வியநாதர்
மனமகிழ் குமரா எனவுன திருதாள்
மலரடி தொழுமா றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய் வருவோனே அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா தணைவேடா மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முனிவோர் பெருமாளே.

அருணகிரிநாதர் 99
திருத்துறையூர் 7 52
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
யாழ்வைத்திசை கூரக்குழ லுடைசோர ஆகப்பணி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
யாசப்படு வார்பொட்டணி சசிநேர்வாள்
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
கோவைக்கனி வாய்பற்கதி ரொளிசேருங் கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
கோபச்செய லார்பித்தர்க ளுறவாமோ பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
பூசைக்கியல் வாள்பத்தினி சிவகாமி பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
போகர்க்குப தேசித்தருள் குருநாதா
தரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள் விறல்வீரா தோகைச்செயலாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு சோதித்துறை யூர்நத்திய பெருமாளே.
திருநாவலூர் 753 கோலமறை யொத்த மாலைதனி லுற்ற
கோரமதன் விட்ட கணையாலே கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற
கோகிலமி குத்த குரலாலே
ஆலமென விட்டு வீசுகலை பற்றி
ஆரழலி றைக்கு நிலவாலே ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
மாசைகொட ணைக்க வரவேனும்
நாலுமறை கற்ற நான்முகனு தித்த
நாரணனு மெச்சு மருகோனே நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து
நாகமற விட்ட மயில்வீரா

Page 105
992 திருப்புகழ்
சேலெனும்வி பூழிச்சி வேடுவர்சி றுக்கி
சீரணித னத்தி லனைவோனே சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
தேவர்சிறை விட்ட பெருமாளே.
திருவெண்ணெய் நல்லூர் 754
பலபல தத்துவ மதனை யெரித்திருள்
பரையர ணப்படர் வடவன லுக்கிரை படநட னச்சுடர் பெருவெளி யிற்கொள விடமேவிப்
பவன மொழித்திரு வழியை யடைத்தொரு
பருதி வழிப்பட விடல்கக னத்தொடு பவுரி கொளச்சிவ மயமென முற்றிய பரமூடே
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத
வொலிமலி யத்திரு நடன மியற்றிய கனக சபைக்குளி லுருகி நிறைக்கட லதில்ரூமுழ்கிக்
கவுரி மினற்சடை யரனொடு நித்தமொ
டனக சகத்துவம் வருதலு மிப்படி கழிய நலக்கினி நிறமென விற்றுட லருள்வாயே
புலையர் பொடித்தளும் அமண ருடற்களை
நிரையில் கழுக்களி லுறவிடு சித்திர புலவனெ னச்சில விருது படைத்திடு
மிளையோனே புனமலை யிற்குற மகளய லுற்றொரு
கிழவ னெனச்சுனை தனிலவ ளைப்புய புளசித முற்றிபம் வரவனை யப்புணர்
மணிமார்பா
மலைசிலை பற்றிய கடவு ளரிடத்துறை
கிழவி யறச்சுக குமரி தகப்பனை மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள்
முருகோனே

அருணகிரிநாதர் 993
மகிழ்பெனை யிற்கரை பொழில்முகில் சுற்றிய
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத மயிலின் மிசைக்கொடு திருநட மிட்டுறை
பெருமாளே.
திருப்பாதிரிப்புலியூர் 755
நினமொடு குருதி நரம்பு மாறிய
தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை நிரைநிரை செறியு முடம்பு நோய்படு முதுகாயம்
நிலைநிலை யுருவ மலங்க ளாவது
நவதொளை யுடைய குரம்பை யாமிதில் நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ முயவோரும்
உணர்விலி செபமுத லொன்று தானிலி
நிறையிலி முறையிலி யன்பு தானிலி உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை
வழியாமுன் ஒருதிரு மரகத துங்க மாமிசை
அறுமுக மொளிவிட வந்து நான்மறை யுபநிட மதனை விளங்க நீயருள் புரிவாயே
புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி பொலமணி மகுட சிரங்கள் தாமொரு பதுமாறிப்
புவியிடை யுருள முனிந்து கூர்கனை
யுறுசிலை வளைய வலிந்து நாடிய புயலதி விறலாரி விண்டு மால்திரு மருகோனே
அணிதரு கயிலை நடுங்க வோரெழு
குலகிரி யடைய இடிந்து தூளெழ அலையெறி யுததி குழம்ப வேல்விடு முருகோனே
அமலைமு னரிய தவஞ்செய் பாடல
வளநகர் மருவி யமர்ந்த தேசிக அறுமுக குறமக ளன்ப மாதவர் பெருமாளே.

Page 106
994 திருப்புகழ்
திருமானிகுழி
7 56
மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி மணத்த வார்குழல் மாமாத ராரிரு கொங்கைமூழ்கி
மதித்த பூதர மாமாம னோலயர்
செருக்கி மேல்விழ நாடோறு மேமிக வடித்த தேன்மொழி வாயூற லேதுகர்
பண்டநாயேன்
பதித்த நூபுர சீர்பாத மாமலர்
படைக்குள் மேவிய சீராவொ டேகலை பணைத்த தோள்களொ டீராறு தோடுகள்
தங்குகாதும்
பணிக்க லாபமும் வேலோடு சேவலும்
வடிக்கொள் தலமும் வாள்வீசு நீள்சிலை படைத்த வாகையு நாடாது பாழில்ம
யங்கலாமோ
கதித்து மேல்வரு மாதுரர் துழபடை
நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் வஞ்சவேலா
களித்த பேய்கன மாகாளி கூளிகள்
திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள் கடித்த பூதமொ டேட டி யாடுதல் கண்டவீரா
குதித்து வானர மேலேறு தாறுகள்
குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள் குலைக்கு மேல்விழ வேரேறு போகமும்
வஞ்சிதோயுங் குளத்தி லூறிய தேனுாறல் மாதுகள்
குடித்து லாவியெ சேலோடு மாணிகொள் குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு
தம்பிரானே.

அருணகிரிநாதர்
995
திருவேட்களம் 7 57
சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை தழையச்சிவ பாக்கிய நாடக சரணக்கழல் காட்டியெ னானவ
மலமற்றிட வாட்டிய ஆறிரு சயிலக்குல மீட்டிய தோளொடு
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
மயிலிற்புற நோக்கிய னாமென கருணைக்கடல் காட்டிய கோலமும் கனகத்தினு நோக்கினி தாயடி யவர்முத்தமி ழாற்புக வேபர கதிபெற்றிட நோக்கிய பார்வையு
சிதறத்தரை நாற்றிசை பூதர
நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி சிதறக்கட லார்ப்புற வேயயில் சிவபத்தினி கூற்றினை மோதிய
பதசத்தினி மூத்தவி நாயகி செகமிப்படி தோற்றிய பார்வதி
விதுரற்கும ராக்கொடி யானையும் விகடத்துற வாக்கிய மாதவன் விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் வெளியெட்டிசை துர்ப்பொரு தாடிய கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய விறல்மெய்த்திரு வேட்கள மேவிய
7 58
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
வாழ்க்கையை நீடென மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
மாப்பரி வேயெய்தி
அநுபூதி
முகமாறுங்
அடியேனைக்
மறவேனே
விடுவோனே
யருள்பாலா
மருகோனே
பெருமாளே.
மதியாமல்
அதுபோக

Page 107
996 திருப்புகழ்
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
பாற்படு ஆடக மதுதேடப் பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
பாற்கட லானென வுழல்வேனோ சாத்திர மாறையி நீத்தம னோலய
சாத்தியர் மேவிய பதவேளே தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
தாட்பர னார்தரு குமரேசா வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
மீக்கமு தாமயில் DGSST GSATGITT வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
வேட்கள மேவிய பெருமாளே.
திருநெல்வாயில்
7.59
அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
பகரு நாவினர் லோபர்தீக் குணங்க ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் புனையாதர் அசடர் பூமிசை விணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் தெரியாத
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த தமிழ்கூறி நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி யருள்வாயே
நறிய வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து களிகூர நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர்ம னாளர்தோட் பிரிந்து நசைபொறாதமு தாகமாய்த் தழுங்கி யிடர்கூர

அருணகிரிநாதர் 997
மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த வடிவேலா மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து மதியு லாவிய மாடமேற் படிந்த வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த
பெருமாளே.
விருத்தாசலம்
7 60
குடத்தாமரை யாமென வேயிரு
தனத்தார்மதி வாணுத லாரிருள் குழற்காடின மாமுகில் போல்முது கலைமோதக் குலக்கார்மயி லாமென வேகயல்
விழித்தார்கர மேல்கொடு மாமுலை குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் குரலோசை
படித்தார்மயி லாமென வேநடை
நெளித்தார்.பல காமுகர் வார்கலை பழிப்பாரவ ராசையை மேல்கொடு விலைமாதர் படிக்கார்மின லாமென வேநகை
புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள் பறிப்பார்பழி காரிகள் நாரிக ளுறவாமோ
அடைத்தார்கட லோர்வலி ராவன
குலத்தோடரி யோர்சர னார்சின மழித்தார்முகி லேய்நிற ராகவர் மருகோனே அறுத்தாரய னார்தலை யேயுர
மெரித்தாரதி லேபுல னாருயி ரளித்தாருடல் பாதியி லேயுமை அருள்பாலா
விடத்தாரசு ரார்பதி வேரற
அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம் விளைத்தாய் குடி வாழம ரோர்சிறை மிடிதீர விழித்தாமரை போலழ காகுற
மகட்கானவ னாஎன தாயுறை விருத்தாசலம் வாழ்மயில் வாகன பெருமாளே.

Page 108
998 திருப்புகழ்
7 6 திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
செயமூன மருளிய குளவோனே திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
தெறிபட மறுகிட விடுவோனே ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
னுறுபட ருறுமெனை யருள்வாயோ உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வரு மயில்வீரா கருவரி யுறுபொரு கனைவிழி குறமகள்
கணினெதிர் தருவென முனமானாய் கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு முதல்வோனே முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
முரணுறு மசுரனை முனிவோனே முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு பெருமாளே.
7 62 பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் வெளியாகிப் படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி னிறமாகி விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று தடியோடே வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப தொருநாளே அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
னடல்வஜ்ர கரன்மற்று முளவானோர் அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச்ச மரவெற்றி யுடையோனே
வசையற்று முடிவுற்று வளர்பற்றி னளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் மருகோனே மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
வளர்விர்த்த கிரியுற்ற பெருமாளே.

அருணகிரிநாதர்
வேப்பூர்
7 63
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
கூத்தாடு கின்ற குகையிட மருவிய கருவிழி மாந்தர்
கோட்டாலை யின்றி
வரஇரு வினையற உணர்வொடு தூங்கு
வார்க்கே விளங்கு வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
வாக்கால்மொ ழிந்த
திரள்வரை பகIகு குருகுல வேந்து
தேர்ப்பாகன் மைந்தன் தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
தீப்பாய இந்த்ர
விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
வேற்கார கந்த மிடிகெட விளைவன வளவயல் தழ்ந்த
வேப்பூர மர்ந்த
நிம்பபுரம்
7 64
அஞ்சுவித பூத முங்கரன நாலு
மந்திபகல் யாது அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி வந்தசர னார விந்தமது பாட
வண்டமிழ்வி நோத
குஞ்சரக லாப வஞ்சியபி ராம
குங்குமப டீர கும்பதன மீது சென்றனையு மார்ப
குன்றுதடு மாற
குடில்பேனிக்
யவிரோதம்
மநுபூதி
ருளவேனும்
மறையோடு
புரிவாழ
புவியேழும்
பெருமாளே.
மறியாத
பெறுமாறு
வனமீது
மருள்வாயே
வதிரேகக்
இகல்கோப

Page 109
OOO திருப்புகழ்
வெஞ்சமர துர னெஞ்சுபக வீர
வென்றிவடி வேலை விடுவோனே விம்பமதில் துழு நிம்பபுர வாண
விண்டலம கீபர் பெருமாளே.
வேப்பஞ்சந்தி
7 6 5
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் படியாதே நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் பதமிவாய் வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் படைமீதே மாற்றந் தந்துப் பந்திச் சமருக் கெதிரானோர்
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் பொருவோனே கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் தொளிர்வேலா வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் கிளையோனே வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் பெருமாளே.
திருக்கூடலையாற்றுார்
7 66
வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்
மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு விஞ்சையாலே வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபணி நீர்களொடு
காற்றுவரத் தாங்குவன மார்பிலனி யாரமொடு வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ்
வன்புகூரத்
தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை
பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன
தன்பிலாமல் தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம
னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள் சீட்டுவரக் காண்டுநலி காலனனு காநினரு
ளன்புதாராய்

அருணகிரிநாதர் 00
வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்
நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும்
விஞ்சையோனே வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை
யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தர்தைபுர மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை
யேறியிட முங்கொளாயி
கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி
தோற்றமெனப் போந்த அழ கானசிவ காமிவிறல் கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள்
கந்தவேளே கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ்
நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர
தம்பிரானே. கடம்பூர் 767 வாருமிங் கேவிடி தோபனம் பாஷான
மால்கடந் தேபோமெ னியலூடே வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார
வாசகம் போல்கூறி யனைமீதே சேருமுன் காசாடை 'வாவியும் போதாமை
தீமைகொண் டேபோமெ னடமாதர் சேரிடம் போகாம லாசுவந் தேறாமல்
சீதளம் பாதார மருள்வாயே நார ணன் சீராம கேசவன் கூராழி
நாயகன் பூவாயன் மருகோனே நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு
நாடகஞ் சேய்தாள ரருள்பாலா
துரணங் கோடாழி போய்கிடந் தேவாட
துரியன் தேரோட அயிலேவி
தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு
தழ்கடம் பூர்தேவர் பெருமாளே.

Page 110
002 திருப்புகழ்
திருவரத்துறை
7 68
கறுவி மைக்கனிட் டினித ழைத்தியற்
கவிசொ லிச்சிரித் துறவாடிக் களவு வித்தையிட் டுளமு ருக்கிமுற்
கருதி வைத்தவைப் பவைசேரத்
தறுக னரிற்பறித் திருக முத்துறத்
தழுவி நெக்குநெக் குயிர்சோரச் சயன மெத்தையிற் செயல பூழிக்குமித்
தருணி கட்ககப் படலாமோ
பிறவி யைத்தனித் தருளு நிட்களப்
பிரம சிற்சுகக் கடல்மூழ்கும் பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
ப்ரபல கொச்சையிற் சதுர்வேதச்
சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
சிவிகை யைக்கொடுத் தருளிசன் செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
திருவ ரத்துறைப் பெருமாளே.
யாழ்ப்பாணாயன்பட்டினம்
7 69
பூத்தார் தடுங் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலுங் கட்கமு மதனவிடு போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் விடுதூதும் போற்றாய் நாளுங் கைப்பொரு ஞருடையவர் மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது பூட்டா மாயங் கற்றமை விழியின ரமுதுாறல்
வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்
நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத மகிலாரம் மாப்பூ னாரங் கச்சணி முலையினர்
வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய் வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட அருளாயோ

அருணகிரிநாதர் 003
ஆத்தாள் மால்தங் கைச்சிக ணிகையுமை
கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி புவநேசை ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை யாட்டா லீசன் பக்கம துறைபவள் பெறுசேயே
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு முருகோனே ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள் யாழ்ப்பா னாயன் பட்டின மருவிய பெருமாளே.
பூரீமுஷ்டம் 77 0 கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை மலைமேவுங் கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல் முத்து மாலை யரவினும் அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவ அடியேன்முன் அடர்பச்சை மாவி லருளிற்பெ னோடு
மடிமைக்கு ழாமொ டருள்வாயே மழையொத்த சேர்தி குயில்தத்தை போலு
மழலைச்சொ லாயி யெமையினு மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யினு முருகோனே செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
திருமுத்தி மாதின் D66ATGTT சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு பெருமாளே.
77
சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி
சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில் தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை மடவார்கள்

Page 111
004 திருப்புகழ்
சனுமெத் தப்பரி வாகிய மாமய
லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர் தகுதத் தக்கிட தோதகு தீதென விளையாடும்
விரகத் துர்க்குண வேசைய ராசையர்
பணமெத் தப்பறி காரிகள் மாறிகள் விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் அதிபோக மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்
கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள் விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் உறவாமோ
பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட
லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட மொருமாது புகழ்சத் திச்சிலு காவண மீதுறை
சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி புவனத் தைப்பரி வாய்முத லினுமை யருள்பாலா
திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி
புனைவித் துத்தலை நாளமு தார்சுவை சிவபத் தர்க்கிது வாமென வேபகி TfiUrrDňr திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
மகளைப் பொற்றன வாசையொ டாடிய திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் பெருமாளே.
திருநல்லூர்
772
மூல முண்டகனு பூதி மந்திரப
ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ தார சந்திமுக மாறு மிந்த்ரதரு வுந்தளாமேல் மூது ரம்பலவர் பீட மந்தமுமி
லாத பந்தவொளி யாயி ரங்கிரண மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக
விந்துநாதம்
ஒல மென்றுபல தாள சந்தமிடு
சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ரங்கிதுலம்

அருணகிரிநாதர் OO 5
ஒடு மந்தகல காலொ டுங்கநடு
தூணில் தங்கவரி ஞான வண்கயிறு மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி சந்தியாதோ
துலி யந்தரிக பாலி சங்கரிபு
ராரி யம்பரிகு மாரி யெண்குனசு வாமி பங்கிசிவ காம சுந்தரியு கந்தசேயே துர சங்கரகு மார இந்திரச
காய அன்பருட கார சுந்தரகு காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட
னங்கொள்வேலா
சீல வெண்பொடியி டாத வெஞ்சமனர்
மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக கந்தவேளே தேவ ரம்பையமு தீன மங்கைதரு
மான னைந்தபுய தீர சங்கரதி யாகர் வந்துறைந லுார மர்ந்துவளர்
தம்பிரானே
திருமயேந்திரம்
773
வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல் வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை குயில்போல வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை
யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை
மடவார்பொன்
கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்
குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள் கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் சதிகாரர் கஞ்சுளி யுந்தடி யீந்து போவென
நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள் கம்பையி லுஞ்சுட மாய்ந்து நாயனு முழல்வேனோ

Page 112
006 திருப்புகழ்
அண்டரு டன்தவ சேந்து மாதவர்
புண்டரி கன்திரு பாங்கர் கோவென அஞ்சலெ னும்படி போந்து வீரமொ டசுராரை அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக
ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட அந்தக னுங்கயி றாங்கை வீசிட விடும்வேலா
செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி
யென்பணி யன்கன சாம்பல் பூசிய செஞ்சட லன்சுத சேந்த வேலவ முருகோனே திங்கள்மு கந்தன சாந்து மார்பின
ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய பெருமாளே.
சீகாழி
774
சந்த னம்பரி மளபுழு கொடுபுனை
கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை தங்கு செங்கையர் அனமென வருநடை மடமாதர் சந்த தம்பொலி வழகுள வடிவினர்
வஞ்ச கம்பொதி மனதின ரனுகினர் தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர அவர்மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
தந்த்ர மந்த்ரிகள் தரணியி லனைபவர் செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு முனிவாகித் திங்க ளொன்றினில் நெனல்பொரு ஞதவில
னென்று சண்டைகள் புரிதரு மயலியர் சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி
னருள்கூர்வாய்
மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்
சிந்த அன்றடர் மழைதனி லுதவிய மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் மருகோனே மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ
துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல் வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி DGT (GosT6ffT

அருணகிரிநாதர் 10 O7
தந்த னந்தன தனதன தனவென
வண்டு விண்டிசை முரல்தரு மனமலர் தங்கு சண்பக முகிலள வுயர்தரு பொழில்மீதே சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு
துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு சண்பை யம்பதி மருவிய அமரர்கள்
பெருமாளே. 775
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ்கூறுஞ் சலிகையு நன்றியும் வென்றியு மங்கள
பெருமைக ளுங்கன முங்குன மும்பயில் சரவண மும்பொறை யும்புக முந்திகழ்
தனிவேலும்
விருது துலங்க சிகண்டியி லண்டரு
முருகி வணங்க வரும்பத மும்பல விதரண முந்திற முந்தர முந்தினை புனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி
வருடிம னந்துபு ணர்ந்தது வும்பல விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல்
மறவேனே
கருதியி லங்கை யழிந்துவி டும்படி
அவுணர டங்கம டிந்துவி ழும்படி கதிரவ னிந்துவி ளங்கிவ ரும்படி விடுமாயன் கடகரி யஞ்சி நடுங்கிவ ருந்திடு
மடுவினில் வந்துத வும்புய லிந்திரை கணவன ரங்கமு குந்தன்வ ருஞ்சக டறமோதி
மருதுகு லுங்கி நலங்கமு னிந்திடு
வரதன லங்கல் புனைந்தரு ஞங்குறள் வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை தொடுமீளி மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய
பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர் மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள்
பெருமாளே.

Page 113
0.08 திருப்புகழ்
77 6
சிந்துற்றெழு மாமதி அங்கித் திரளாலே தென்றற்றரு வாசமி குந்துற் றெழலாலே அந்திப்பொழு தாகிய கங்குற் றிரளாலே அன்புற்றெழு பேதைம யங்கித் தனியானாள் நந்துற்றிடு வாரியை மங்கத் திகழாயே நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் பொருவேளே சந்தக்கவி நூலினர் தஞ்சொற் கினியோனே சண்பைப்பதி மேவிய கந்தப் பெருமாளே.
777
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
தெற்கிலுா தைக்கனற் றணியாத சித்ரவி னைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்
சித்தம்வா டிக்கனக் கவிபாடிக்
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்
கற்பதா ருச்செகத் த்ரயபாது கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்
கைக்குனான் வெட்கிநிற் பதுபாராய்
சக்ரபா னிக்குமப் பத்மயோ னிக்குநித்
தப்ரதா பர்க்குமெட் டரிதாய தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத்
தத்வரூ பக்கிரிப் புரைசாடிக்
கொக்கிலே புக்கொளித் திட்டதுர் பொட்டெழக்
குத்துரா வுத்தபொற் குமரோனே கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்
கொச்சைவாழ் முத்தமிழ்ப் பெருமாளே.
778
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
தினகர னேய்ந்த மாளி கையிலாரஞ் செழுமனி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட இருபாலும்

அருணகிரிநாதர் 1009
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசி யரசாகி இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருடபிடி சாம்ப லாகி விடலாமோ வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
மயிலொடு பாங்கி மார்க ளருகாக மயிலொடு மான்கள் சூழ வளவாரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய வடிவோனே
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடு பெறவேதக் கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த தேவர் பெருமாளே.
77 9
பூமாதுர மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர் கோமான்முநி வோர்முதல் யாருமி யம்புவேதம் பூராயம தாய்மொழி நூல்களும்
ஆராய்வதி லாதட லாசுரர் போரால்மறை வாயுறு பீதியின் வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு நீறார்தரு மேனிய தேனியல் கொன்றையோடு நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை நேரோடம்வி ளாமுத லார்சடை யெம்பிரானே
போமாறினி வேறெது வோதென வேயாரரு ளாலவ ரீதரு போர்வேலவ நீலக லாவியி வர்ந்துநீடு பூலோகமொ டேயறு லோகமு
நேரோர்நொடி யேவரு வோய்சுர சேனாபதி யாயவ னேயுனை யன்பினோடுங்
காமாவறு சோம ஸமானன
தாமாமன மார்தரு நீபசு தாமாவென வேதுதி யாதுழல் வஞ்சனேனைக்

Page 114
100 திருப்புகழ்
காவாயடி நாளசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய தம்பிரானே.
780
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்
மருளப்பட் டாடைக் காரிக ளழகாக மவுனச் சுட்டாடிச் சோலிகள் இசலிப்பித்தாசைக் காரிகள் வகைமுத்துச் சாரச் சூடிகள் விலைமாதர் குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்
குசலைக்கொட் தலைக் காலிகள் மயல்மேலாய்க் கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை குமுதப்பொற் பாதச் சேவையி லருள்வாயே கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட
ககனக்கட் டாரிக் காயிரை யிடும்வேலா கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக்
கோகில கவுரிப்பொற் சேர்வைச் சேகர முருகோனே திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப்
U TGGG) தினமுற்றுச் சாரத் தோள்மிசை யனைவோனே திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக்
காழியில் சிவன்மெச்சக் காதுக் கோதிய பெருமாளே
78
விடமெனமி குத்தவட வனலெனவு யர்த்துரவி
விரிகதிரெ னப்பரவு நிலவாலே விதனமிக வுற்றுவரு ரதிபதிக டுத்துவிடு
விரைதருவி தட்கமல கணையாலே
அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல்
அழலொடுகொ தித்துவரு கடைநாளில் அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற
அவசமொட னைத்தருள வரவேனும்

அருணகிரிநாதர் 10
அடவிதனில் மிக்கபரு வரையவ ரளித்ததிரு
அனையமயில் முத்தமணி சுரயானை
அழகியம ணிக்கலச முலைகளில்ம யக்கமுறு
மதிவிரக சித்ரமணி மயில்வீரா
கடதடக ளிற்றுமுக ரிளையவகி ரிக்குமரி
கருணையொ டளித்ததிற முருகோனே
கமலமல ரொத்தவிழி யாரிமருக பத்தர்பணி
கழுமலந கர்க்குமர பெருமாளே.
782
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
அரிவையர் வசையுட னங்கி போல்வர அசைவன விடைமணி யன்றில் கோகிலம்
அஞ்சிநானும் அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ
அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற அணிபணிமணிபலவெந்துநீறெழ அங்கம்வேறாய்
முலைகனல் சொரிவர முன்பு போல்நினை
வழிவச மறஅற நின்று சோர்வுற முழுதுகொள் விரகனல் மொண்டுவீசிட மங்கிடாதே
முருகவிழ் திரள்புய முந்து வேலணி
முளரியொ டழகிய தொங்கல் தாரினை முனிவற நினதருள் தந்தென் மாலைமு
னிந்திடாதோ
சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
திரிபுரை பயிரவி திங்கள் துடிய திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள்
சிங்கமேறி திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொ டறைபறை நின்று மோதிட சிவனுட னடம்வரு மங்கை மாதுமை தந்தவேளே
மலைதனி லொருமுநி தந்த மாதுதன்
மலரடி வருடியெ நின்று நாடொறு மயில்பயில் குயில்கிளி வம்பிலேகடி தொண்டினோனே

Page 115
102 திருப்புகழ்
மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில் வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள்
தம்பிரானே. 783 இரத மான தேனூற லதர மான மாமாத
ரெதிரி லாத பூணார முலைமீதே இனிது போடு மேகாச உடையி னாலு மாலால
விழியி னாலு மாலாகி யநுராக விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு
ம்ருகம தாதி சேரோதி நிழல்மூழ்கி விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்
விழல் னாய்வி டாதேநி னருள்தாராய் அரக ராள னாமூடர் திருவெ னிறி டாமூடர்
அடிகள் பூசி யாமூடர் கரையேற அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்
அறம்வி சாரி யாமூடர் நரகேழிற் புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி
புரண பூர ணாகார முருகோனே புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு
புகலி மேவி வாழ்தேவர் பெருமாளே.
784 ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாயமிகுந்த
ஊசற்சுடு நாறு குரம்பை மறை நாலும் ஒதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
ஒடித்தடு மாறி யுழன்று தளர்வாகிக் கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச்சட மீதை யுகந்து புவிமீதே கூசப்பிர மாண ப்ரபஞ்சமாயக்கொடு நோய்க ளகன்று கோலக்கழ லேபெற இன்று அருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச்சம னோர்கழு வின்கண் மிசையேறத் தீரத்திரு நீறுபுரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
தீமைப்பிணி தீர வுவந்த குருநாதா

அருணகிரிநாதர் 10 3
கானச்சிறு மானைநி னைந்து ஏனற்புன மீதுந டந்து
காதற்கிளி யோடுமொ ழிந்து சிலைவேடர்
காணக்கணியாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
காழிப்பதி மேவி யுகந்த பெருமாளே.
7 85
ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
மெய்யா ரப்பணி பூஷண மாலைக ளுய்யா நற்கலை யேகொடு மாமத விதமாகி ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு
கையா ரக்கனை மோதிர மேய்பல வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு முடல்பேணிச்
செய்வா ரிப்படி யேபல வாணிப
மிய்யா ரிற்பண மேயொரு காசிடை செய்யார் சற்பனை காரர்பி சாசரு னடிபேனாச் செய்வா ரிற்படு நானொரு பாதகன்
மெய்யா எப்படி யோர்கரை சேர்வது செய்யாயற்புத மேபெற வோர்பொருளருள்வாயே
மையா ரக்கிரி யேபொடி யாய்விட
பொய்து ரப்பதி யேகெட் வானவர் வையாய் பொற்சர னாஎன வேதொழ விடும்வேலா வையா ளரிப்பரி வாகன மாகொளு
துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய் மைபோ லக்கதி ரேய்நிற மாகிய மயில்வாழ்வே
தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்
செய்யா முத்தமி ழாகர னேபுகழ் தெய்வீ கப்பர மாகுரு வேயென விருதுாதத் திய்யா ரக்கழு வேறிட நீறிடு
கையா அற்புத னேயிர மாபுர செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் பெருமாளே.
786 கட்கா மக்ரோ தத்தே கட்சீ
மிழ்த்தோர் கட்குக் கவிபாடிக் கச்சா பிச்சா கத்தா வித்தா
ரத்தே யக்கொட் களைநீளக்

Page 116
014 திருப்புகழ்
கொட்கா லக்கோ லக்கோ னத்தே
யிட்டா சைப்பட் டிடவேவை கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே
னித்தி தத்தைக் களைவாயே
வெட்கா மற்பாய் சுற்று மர்ச்சேர்
விக்கா னத்தைத் தரிமாறன் வெப்பா றப்பா டிக்கா ழிக்கே
புக்காய் வெற்பிற் குறமானை
முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்
முற்சார் செச்சைப் புயவிரா முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
7 87
கொங்கு லாவிய குழலினு நிழலினு
நஞ்ச ளாவிய விழியினு மிரணிய குன்று போல்வளர் முலையினு நிலையினு மடமாதர் கொம்பு சேர்வன இடையினு நடையினு
மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி கொண்ட சேயித ழமுதினு நகையினு மனதாய
சங்கை யாளியை அணுவிடை பிளவள
வின்சொல் வாசக மொழிவன இவையில சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ழிசைகூருந் தண்டை நூபுர மணுகிய இருகழல்
கண்டு நாளவ மிகையற விழியருள் தந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேனே
வங்க வாரிதி முறையிட நிசிசரர்
துங்க மாமுடி பொடிபட வடவனல் மங்கி நீறெழ அலகைகள் நடமிட மயிலேறி வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய
சண்பை மாநக ருறையுமொரறுமுக வந்த வானவர் மனதினி லிடர்கெட நினைவோனே

அருணகிரிநாதர் 10 15
பங்க வீரியர் பறிதலை விரகினர்
மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர் பந்த மேவிய பகடிகள் கபடிகள் நிலைகேடர் பண்பி லாதவர் கொலைசெயு மனதின
ரிங்கெ ணாயிர ருயாரிய கழுமிசை பஞ்ச பாதகர் முனைகெட அருளிய பெருமாளே.
கரியவனகர்
788 அளிசுழ லளகக் காடு காட்டவும்
விழிகொடு கலவித் தீயை மூட்டவும் அமளியில் முடியப்போதுபோக்கவும் இளைஞோர்கள் அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்
அழகிய மயிலிற் சாயல் காட்டவும் அளவிய தெருவிற் போயு லாத்தவும் அதிபார
இளமுலை மிசையிற் றுாசு நீக்கவும்
முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும் இருநிதி யிலரைத் தூர நீக்கவும் இனிதாக எவரையு மளவிப் போய னாப்பவும்
நினைபவ ரளவிற் காதல் நீக்கியென் இடரது தொலையத் தாள்கள் காட்டிநின்
அருள்தாராய்
நெளிபடு களமுற் றாறு போற்சுழல்
குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட நினமது பருகிப் பாறு காக்கைகள் கழுகாட நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட
அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு பொரும்வீரா
களிமயில் தனில்புக் கேறு தாட்டிக
அழகிய கனகத் தாம மார்த்தொளிர் கனகிரி புயமுத் தார மேற்றருள் திருமார்பா கரியவ னகரிற் றேவ பார்ப்பதி
யருள்சுத குறநற் பாவை தாட்பணி கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் பெருமாளே.

Page 117
O 6 திருப்புகழ்
வைத்தீசுரன்கோயில்
7 89
உரத்துறை போதத் தனியான உனைச்சிறி தோதத் தெரியாது மரத்துறை போலுற் றடியேனும் மலத்திருள் மூடிக் கெடலாமோ பரத்துறை சீலத் தவர்வாழ்வே பணித்தடி வாழ்வுற் றருள்வோனே வரத்துறை நீதர்க் கொருசேயே வயித்திய நாதப் பெருமாளே.
79 0
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வான ரோது
சித்திர ஞான பாத மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ விட தாக
நிர்த்தம தாடு மாறு முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை துல பாணி யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளுர்
பற்றிய மூவர் தேவர் பெருமாளே.
79
பாட கச்சிலம் போடு செச்சைமணி
கொவெ னக்கலந் தாடு பொற்சரனர் பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி னிடை நூலார்

அருணகிரிநாதர் 07
பார பொற்றனங் கோபு ரச்சிகர
மாமெ னப்படர்ந் தேம லிப்பரித பாகு நற்கரும் போடு சர்க்கரையின் மொழிமாதர்
ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ
டாட ளரிக்குலம் பாட நற்றெருவி லேகி புட்குலம் போல பற்பலசொ லிசைபாடி ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம்
வாரு முற்பனந் தாரு மிட்டமென ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் செயலாமோ
சேட னுக்கசண் டாள ரக்கர்குல
மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள் சேர வற்றநின் றாட யிற்கரமி ரறுதோள்மேல் சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி
யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
சேசெ யொத்தசெந் தாமரைக்கிழவி புகழ்வேலா
நாட கப்புனங் காவ லுற்றசுக
மோக னத்திமென் தோளி சித்ரவளி நாய கிக்கிதம் பாடி நித்தமணி புனைவோனே ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்
நாய கிக்குநன் பாக ரக்கணியும் நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் பெருமாளே.
79.2
மாலி னால்ெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி மாறி யாடெ டுத்த சிந்தை யநியாய மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாள னக்கி ரங்கி வாரை யாயி னிப்பி றந்து இறவாமல்
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர் கணமூடே மேவி யானு னைப்பொல் சிந்தை யாகவேக ளித்துகந்த வேளெ யாமெ னப்பரிந்து அருள்வாயே
காலி னாலெ னப்ப ரந்த துரர் மாள வெற்றி கொண்ட
கால பாது சக்தி யங்கை முருகோனே காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு னர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா

Page 118
10 18
திருப்புகழ்
சேலை நேர்வி பூழிக்கு றம்பெ னாசைதோளு றப்பு ணர்ந்து
சீரை யோது பத்த ரன்பி
லுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளுருக்கு கந்த
சேவல் கேது சுற்றுகந்த
793
மூலா தாரமொ டேற்றி யங்கியை
ஆறா தாரமொ டோட்டி யந்திர மூலா வாயுவை யேற்று நன்சுழி மூதா தாரம ரூப்பி லந்தர
நாதா கீதம தார்த்தி டும்பர மூடே பாலொளி ஆத்து மந்தனை
மாலா டுனொடு சேர்த்தி தம்பெற
நானா வேதம சாத்தி ரஞ்சொலும் வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர மாதா நாதனும் வீற்றி ருந்திடும்
வீடே மூணொளி காட்டி சந்திர வாகார் தேனமு தூட்டி யென்றனை
தலாள் மாதுமை தூர்த்த சம்பவி
மாதா ராபகல் காத்த மைந்தனை துடோ டீர்வினை வாட்டி மைந்தரெ தூயாள் மூவரை நாட்டு மெந்தையர் வேளுர் வாழ்வினை தீர்த்த சங்கரர் தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
மூடார் தரரை வாட்டி யந்தகன் வீடு டேவிய காத்தி ரம்பரி வேதா நால்தலை சீக்கொ ஞம்படி
கோலா காலம தாட்டு மந்திர வேலா மால்மக ளார்க்கி ரங்கிய
794
மேய வார்குழல தாடதன பாரமிசை
பெருமாளே
முனையூடே
விலகாமல்
தவிதுடே
யுடனாள்வாய்
னெமையாளுந்
ளருள்பாலா
மயில்வாழ்வே
பெருமாளே.
யார மாடகுழை யாடவிழி யாடபொறி மேனி வாசனைகள் வீச அல்குல் மோதிபரி மளமேற

அருணகிரிநாதர் O 9
மீனு லாடையிடை யாடமயில் போலநடை யோல மோலமென பாதமணி நூபுரமு மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் முழவோசை
ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு
வோரை வாருமென வேசரச மோடுருகி ஆசை போலமனை யேகொடனை வார்கள்குவ
டதிபார ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு வேர்வை பாய அணை யூடமளி யாடியிட ரான தலைபல நோய்கள்கட லாடியுட
லுழல்வேனோ
நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி
நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ்
முனிவோர்கள் நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை
வேத கீதவொலி பூரையிது பூரையென நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட விடும்வேலா
தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை
புணர்வோனே தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு
மீதெய் வானவடி வாதொழுதெ னாவயனர் தழு காவிரியும் வேளுர்முரு காவமரர் பெருமாளே.
திருக்கடவூர் 79.5
ஏட்டின்வி திப்படி யேகொடு மாபுர
வீட்டில டைத்திசை வேகசை மூனதி லேற்றிய டித்திட வேகட லோடம தெனவேகி ஏற்குமெ னப்பொரு ளாசைபெ னாசைகொ
ளாத்துவெ னத்திரி யாபரி யாதவ மேற்றியி ருப்பிட மேயறி யாமலு முடல்பேணிப்

Page 119
1020 திருப்புகழ்
பூட்டுச ரப்பளி யேமத னாமென
ஆட்டிய சைத்திய லேதிரி நாளையில் பூத்தம லக்குகை யோபொதி சோறென கழுகாகம் போற்றிந மக்கிரை யாமென வேகொள
நாட்டிலொ டுக்கென வேவிழு போதினில் பூட்டுப னிப்பத மாமயி லாவருள் புரிவாயே
வீட்டில டைத்தெரி யேயிடு பாதக
னாட்டைவி டுத்திட வேபல துதினில் வீழ்த்தவி திப்படி யேகுரு காவலர் வனமேபோய் வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது பார்த்துமு டித்திட வேயொரு பாரத மேற்புனை வித்தம காவிர மாயவன் மருகோனே
கோட்டை யழித்தசு ரார்பதி கோவென மூட்டியெ ரித்தப ராபர சேகர கோத்தம ணிக்கதி ரேநிக ராகிய வடிவேலா கூற்றும ரித்திட வேயுதை பார்வதி
யார்க்குமி னித்தபெ னாகிய மான்கள் கோட்டுமு லைக்கதி பாகட வூருறை பெருமாளே.
796
தலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
தூயவொளி காண முத்தி விதமாகச் தழுமிருள் பாவ கத்தை வீழஅழ லூடெ ரித்து
சோதிமணி பீட மிட்ட LDLCSLD6)
மேலைவெளி யாயிரத்து நாலிருப ராப ரத்தின்
மேவியரு ணாச லத்தி னுடன்மூழ்கி வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து
வீடுமது வேசி றக்க அருள்தாராய்
ஒலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
மூடுருவ வேல்தொ டுத்த மயில்வீரா ஒதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
ளோமெனுப தேச வித்தொ டனைவோனே

அருணகிரிநாதர் 02
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
காலனிட மேவு சத்தி யருள்பாலா
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
கானமயில் மேல்த ரித்த பெருமாளே.
திருப்படிக்கரை
797
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கனிட்
டழைத்தி தப்படச் சிலகூறி
அரைப்ப னத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
தனைத்தி தழ்க்கொடுத் தநுராகம்
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
குளக்க ருத்தினிற் ப்ரமைகூரா
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
துனைத்தி ருப்புகழ்ப் பகர்வேனோ
தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்
றடப்பொ ருப்பெடுத் தனையாகச்
சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்
றரித்த ரக்கர்பொட் டெழவேபோர் செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
செயித்த வுத்தமத் திருமாமன்
திருத்த கப்பன் மெச் சொருத்த முத்தமிழ்த்
திருப்ப டிக்கரைப் பெருமாளே.
மாயூரம் 798
அமுதின மெத்தச் சொரிந்து மாவின
தினியப ழத்தைப் பிரிந்து பானற வதனொடு தித்தித் தகண்ட ளாவிய விதழாராய் அழகிய பொற்றட் டினொண்டு வேடையின்
வருபசி யர்க்குற் றவன்பி னாலுண வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் மயல்தீரக்
குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய
நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண தனபாரக்

Page 120
1022 திருப்புகழ்
குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு
மவர்மய லிற்புக் கழிந்த பாவியை குரைகழல்பற்றிப் புகழ்ந்துவாழ்வுற அருள்வாயே வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு
மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன் மதிகொட பூழித்திட் டிடும்பை ராவணன் மதியாமே மறுவறு கற்பிற் சிறந்த சீதையை
விதனம் விளைக்கக் குரங்கி னாலவன் வமிசம றுத்திட் டிலங்கு மாயவன் மருகோனே
எமதும லத்தைக் களைந்து பாடென
அருளஅ தற்குப் புகழ்ந்து பாடிய இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் முருகோனே எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய
பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை பெருமாளே.
திருவிடைக்கழி
799
மருக்கு லாவிய மலரணை கொதியாதே வளர்த்த தாய்தமர் வசையது மொழியாதே கருக்கு லாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை யினிவர விடவேனும்
தருக்கு லாவிய கொடியிடை fGT6AFTGTT சமர்த்த னேமணி மரகத மயில்வீரா திருக்கு ராவடி நிழல்தணி லுறைவோனே திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே.
800
முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு முக்கைக ளசடிகள்
முறைம சக்கிகள் திருடிகள் மதவேனுால் மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள்
தகுநகை
முகமி னுக்கிகள் கசடிகள் இடையேதும்

அருணகிரிநாதர் 023
கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள்ப றித்தம
ளியின்மிசை
கனிய தழ்ச்சுருள் பிளவிலை யொருபாதி
கவலை யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி
கவலை யற்றிட நினதருள் புரிவாயே
அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம
னர்கள்குலம்
அணிக முப்பெற நடவிய மயில்வீரா
அரண் ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர
அவர வர்க்கொரு பொருள்புகல் பெரியோனே
சிலைமொ ஞக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்
திருவி னைப்புன ராதிரு மருகோனே திரள்வருக் கைகள் கமுகுகள் சொரிம துக்கதலி கள்வளர்
திருவி டைக்கழி மருவிய பெருமாளே.
8 O
அனலப் பரிபுக் ககுனத் ரயம்வைத்
தடர்பொய்க் குருதிக் குடில்பேனா அவலக் கவலைச் சவலைக் கலைகற்
றதனிற் பொருள்சற் றறியாதே
குனகித் தனகிக் கனலொத் துருகிக்
குலவிக் கலவிக் கொடியார்தங் கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
குலைபட் டலையக் கடவேனோ
தினைவித் தினநற் புனமுற் றகுறத்
திருவைப் புணர்பொற் புயவீரா தெளியத் தெளியப் பவளச் சடிலச்
சிவனுக் கொருசொற் பகர்வோனே
கனகச் சிகரக் குலவெற் புருவக்
கறுவிப் பொருகைக் கதிர்வேலா கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
கழியிற் குமரப் பெருமாளே.

Page 121
024
8 O2 இரக்குமவர்க் கிரக்கமிகுத்
தளிப்பனசொப் பனத்திலுமற் றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் றெடுத்துமுடித் தடக்கைமுடித்
திரட்டையுடுத் திலச்சினையிட் டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற்
குரக்குமுகத் தினைக்குழலைப்
பனிப்பிறையொப் பெனப்புயலொப் பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் குளப்படியிற் சளப்படுமிப்
பவக்கடலைக் கடக்கஇனிக் குறித்திருபொற் கழற்புணையைத்
அரக்கரடற் கடக்க அமர்க்
களத்தடையப் புடைத்துலகுக் கலக்கணறக் குலக்கிரிபொட் அனைத்தும்வறப் புறச்சுரர்கற்
பகப்புரியிற் புகக்கமலத் தனைச்சிறையிட் டிடைக்கழியிற்
கரக்கரடக் களிற்றுமருப்
புலக்கையினிற் கொழித்தமணிக் கழைத்தரளத் தினைத்தினையிற் கணிக்குறவக் குறிச்சியினிற்
சிலைக்குறவர்க் கிலச்சைவரக் கயத்தொடுகைப் பிடித்தமணப்
803 பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் புகளில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத்
திருப்புகழ்
புலவோரென்
றியல்மாதர்
திடுமானின்
தருவாயே
டெழவாரி
பயில்வோனே
குறுவாளைக்
பெருமாளே.
பலவாழ்வும்
தருவாழ்வும்
பெருவாழ்வும்
தரவேனும்

அருணகிரிநாதர் 0.25
தகரி லற்றகைத் தலம்வி டப்பினைச்
சரவ னத்தினிற் பயில்வோனே தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் குமரேசா செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் பெருமாளே.
804 படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப்
பவமுறைய வத்தைமுக் குணநீடு பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்
பசிபடுநி னச்சடக் குடில்பேனும்
உடலதுபொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
குணர்வுடைய சித்தமற் றடிநாயேன் உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்
துனதுதம ரொக்கவைத் தருள்வாயே
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்
கொடிபடர்புயக்கிரிக் கதிர்வேலா குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
குமரமகிழ் முத்தமிழ்ப் புலவோனே
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்
தடலனுச வித்தகத் துறையோனே தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
தருதிருவி டைக்கழிப் பெருமாளே.
8 O 5 பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
பகரும்வினைச் செயல்மாதர் தருமாயப் படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
பழமைபிதற் றிடுலோக முழுமூடர் உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
யொருபயனைத் தெளியாது விளியாமுன்
உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதுாற
உனதுதிருப் புகழோத அருள்வாயே

Page 122
1026 திருப்புகழ்
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
திடுதிடெனப் பலபூதர் விதமாகத்
திமிதிமெனப் பொருதுர னெறுநெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலை விடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற் சிதநீல மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிப இடைக் கழிமேவு பெருமாளே.
8 O 6
பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
நகைத்து வாமென அமளிய ருகுவிரல் பிடித்து போயவர் தொடையொடு தொடைபட
வுறவாடிப் பிதற்றி யேயள விடுபண மதுதம
திடத்தி லேவரு மளவுந லுரைகொடு பிலுக்கி யேவெகு சரசமொ டனைகுவர்
கனமாலாய்
முருக்கி னேரித ழமுதுப ருகுமென
வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர்
பொருள்தீரின் முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு
மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ
அருள்தாராய்
நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற
வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி
கொளும்வேலா
நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி புரத்தி லேநகை புரிபர னடியவர் நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய
புதல்வோனே

அருணகிரிநாதர் 0.27
செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை
மருக்கு லாவிய மலரனை மிசைபுனர் திருக்கை வேல்வடி வழகிய குருபர முருகோனே சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
யிருக்கு வேதனு மிமையவர் பரவிய திருக்கு ராவடி நிழல்தணி லுலவிய பெருமாளே.
LTO)5S
807 ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்
தாகம் வேர்வுற மால்கொண் டயராதே ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்
றாயு வேதனை யேயென் றுலையாதே சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்
த்யாக மீபவர் யாரென் றலையாதே தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்
தேவ நாயக நானின் றடைவேனோ பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்
பாவை பாகனு நாளுந் தவறாதே பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்
பாகை மாநக ராளுங் குமரேசா கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்
கூறு நாவல மேவுந் தமிழ்வீரா கோடி தானவர் தோளுந் தாளும் விழவு லாவுங்
கோல மாமயி லேறும் பெருமாளே.
80.8 ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
நோய்கள் வளைந்தற இளையாதே ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
காடு பயின்றுயி ரிழவாதே
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
வேறு படுந்தழல் முழுகாதே மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
வாழ்வு பெறும்படி மொழிவாயே

Page 123
1028
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
சேல்கள் மறிந்திட வாகை துதைந்தனி கேதகை மங்கிட
மோதி வெகுண்டிள
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
சாடி நெடுங்கடல் பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
தோகை விரும்பிய
809
குவளை பொருதிரு குழையை முடுகிய்
கோல வேல்விழி கொடிய ம்ருகமத புளக தனகிரி
கூடி நாடொறு
துவள வுருகிய சரச விதமது
சோர வாரிதி சுழலு மெனதுயிர் மவுன பரமசு
கோம கோததி
கவள கரதல கரட விகடக
போல பூதர கடவுள் கணபதி பிறகு வருமொரு
கார ணாகதிர்
பவள மரகத கனக வயிரக
பாட கோபுர பரியு மிடறிய புரிசை தழுவிய
பாகை மேவிய
தான்தோன்றி
80
திருப்புகழ்
வலைபீறா
மதிதோயும்
கழிபாயும்
பெருமாளே.
மடவார்தங்
மயலாகித்
யலையூடே
படியாதோ
முகமான
வடிவேலா
அரிதேரின்
பெருமாளே.
சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்துான்று மப்பில்வளர்
தூண்போன்ற இக்குடிலு
முலகூடே
சோர்ந்துாய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு
தோம்பாங்கை யுட்பெரிது
முனராமே

அருணகிரிநாதர் 0.29
வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்
வேண்டீங்கை யிட்டுவர குழுவார்போல் வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை
வாம்பாங்கில் நற்கழல்கள் தொழஆளாய்
வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்
வான்தோன்று மற்றவரு LDL-CBLuostT மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும் வான்தீண்ட வுற்றமயில் மிசையேறித் தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்
சாய்ந்தேங்க வுற்றமர்செய் வடிவேலா தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ
தான்தோன்றி நிற்கவல பெருமாளே.
கந்தன்குடி
8
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி யொருநாளே இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட ரொளிபோலும் வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்
கொளும் வண்டன்தமி யன்றன்பவம் ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு மணியாரம் சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம் விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை கந்தன்குடி யின்தங்கிய பெருமாளே.

Page 124
030 திருப்புகழ்
திலதைப்பதி
8 2
இறையத் தனையோ அதுதானும் இலையிட் டுணலேய் தருகாலம் அறையிற் பெரிதா DØDLDTS)UL அலையப் படுமா றினியாமோ மறையத் தனைமா சிறைசாலை வழியுய்த் துயர்வா னுறுதேவர் சிறையைத் தவிரா விடும்வேலா திலதைப் பதிவாழ் பெருமாளே.
8 3
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
படர்பொற் பணிபு னைந்த முலைமீதிற் பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை
படுபுட் பவன முன்றி லியலாரும் அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்
அழகிற் றனித ளர்ந்து மதிமோக மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப
அலையிற் றிரிவ னென்று மறிவேனோ
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
தனிமத் தளமு ழங்க வருவோனே செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி
செறிநற் கழைதி ரண்டு வளமேவித் திருநற் சிகரி துங்க வரையைப் பொருவு கின்ற
திலதைப் பதிய மர்ந்த பெருமாளே.
8 4
மகரக் குழைக்கு ஞந்து நயனக் கடைக்கி லங்கு
வசியச் சரத்தி யைந்த குறியாலே வடவெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று
மதர்விற் பனைத்தெ ழுந்த முலைமீதே

அருணகிரிநாதர் 03
உகமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த
வுலைபட் டலர்ச்ச ரங்கள் நலியாமல் உலகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு
னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து திரிவேனோ
புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி பூழிந்த
பொழுதிற் கரத்தொ டர்ந்து பிடிநாளிற் பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்
புகுதக் கனத்து வந்து கையிலாருந்
திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த
சிவைதற் பரைக்கி சைந்த புதல்வோனே சிவபக்தர் முத்த ரும்பர் தவசித்தர் சித்த மொன்று
திலதைப் பதிக்கு கந்த பெருமாளே.
திருவம்பர்
8 5
சோதி மந்திரம் போத கம்பரவு
ஞான கம்பரந் தேயி ருந்தவெளி தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட முங்கொளாமல் சூது பந்தயம் பேசி யஞ்சுவகை
சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு தோத கம்பரிந் தாடு சிந்துபரி கந்துபாயும்
விதி மண்டலம் பூண மர்ந்துகழி
கோல மண்டிநின் றாடி யின்பவகை வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ டுங்குபோதில் வேதி யன்புரிந் தேடு கண்டளவி
லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ரென்றுபோமோ
ஆதி மண்டலஞ் சேர வும்பரம
சோம மண்டலங் கூட வும்பதும வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப டர்ந்ததோகை ஆழி மண்டலந் தாவி யண்டமுத
லான மண்டலந் தேடி யொன்றதொமு கான மண்டஞ் சேட னங்கனயில் கொண்டுலாவிச்

Page 125
032 திருப்புகழ்
வானோர்க ளிசன்மயி லோடுகுற மாதுமண
வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு
பெருமாளே.
இஞ்சிகுடி
8 7
குங்குமகற் பூர நாவி யிமசல
சந்தனகத் தூரி லேப பரிமள கொங்கைதனைக் கோலி நீடு முகபட நகரேகை
கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை
துங்கமுடித் தால கால மெனவடல் கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு
மமுதேயாம் அங்குளநிட் டுர மாய விழிகொடு
வஞ்சமனத் தாசை கூறி யெவரையு மன்புடைமெய்க் கோல ராக விரகினி S2 AD GAT
அன்றளவுக் கான காசு பொருள்கவர்
மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ லன்றியுனைப் பாடி வீடு புகுவது மொருநாளே
சங்கதசக் ரீவ னோடு சொலவள
மிண்டுசெயப் போன வாயு சுதனொடு சம்பவகக் ரீவ னாதி யெழுபது வெளமாகச்
சண்டகவிச் சேனை தேறி யால்மு னலைகடல்
குன்றிலடைத் தேறி மோச நிசிசரர் தங்கிளைகெட் டோட ஏவு சரபதி மருகோனே
எங்குநினைப் போர்கள் நேச சரவண சிந்துரகர்ப் பூர ஆறு முககுக எந்தனுடைச் சாமி நாத வயலியி லுறைவேலா
இன்புறுபொற் கூட மாட நவமணி
மண்டபவித் தார வீதி புடைவளர் இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய பெருமாளே.

அருணகிரிநாதர் 0.33
சூதர் மண்டலந் தூளெ முந்துபொடி
யாகி விண்பறந் தோட மண்டியொரு சூரி யன்திரண் டோட கண்டுநகை கொண்டவேலா சோடை கொண்டுளங் கான மங்கைமய
லாடி இந்திரன் தேவர் வந்துதொழ சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் தம்பிரானே.
திருமாகாளம்
8 6
காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல
கோலாக லாரமுலை மார்புதைய பூனகல காரோடு கூடளக பாரமல ரோடலைய அனைமீதே
காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ
டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள காவீர மானஇத மூறல்தர நேசமென மிடறோதை
நாதான கீதகுயில் போல அல்குல் மால்புரள
மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல்
படுவேனை நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர்
சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் புரிவாயே
பாதாள சேடனுட லாயிரப னாமகுட
மாமேரொ டேழுகட லோதமலை தரருடல் பாழாக தூளிவினி லேறபுவி வாழவிடு சுடர்வேலா
பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி
சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி
மருகோனே
மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை
ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன் மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள்
குருநாதா

Page 126
I 0.34 திருப்புகழ்
திருநள்ளாறு 8 8 பச்சை யொண்கிரி போலிரு மாதன
முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில் பற்று புண்டரி காமென ஏய்கயல் விழிஞான பத்தி வெண்டர ளாமெனும் வாணகை வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ் பத்ம செண்பக மாமநு பூதியி னழகாளென்
றிச்சை யந்தரி பார்வதி மோகினி
தத்தை பொன்கவி னாலிலை போல்வயி றிற்ப சுங்கிளி யானமி னுாலிடை யபிராமி எக்கு லங்குடி லோடுல கியாவையு
மிற்ப திந்திரு நாழிநெ லாலற மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன வுருகேனோ
கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
பொற்பு யங்களும் வேலுமி ராறுள கட்சி வங்கம லாமுக மாறுள முருகோனே கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென கட்ட வெங்கொடு துர்கிளை வேரற விடும்வேலா
நச்சு வெண்பட மீதனை வார்முகில்
பச்சை வண்புய னார்கரு டாசனர் நற்க ரந்தது கோல்வளை நேமியர் மருகோனே நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி
யிச்சை கொண்டொரு வாரண மாதொடு நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் பெருமாளே.
வழுவூர் 8 9 தருவூரிசை யாரமு தார்நிகர்
குயிலார்மொழி தோதக மாதர்கள் தனியாமய லாழியி லாழவு மமிழாதே தழலேபொழி கோரவி லோசன
மெறிபாசம காமுனை சூலமுள்
சமனார்முகில் மேனிக டாவினி லணுகாதே

அருணகிரிநாதர் 035
கருவூறிய நாளுமு நூறெழு
மலதேகமு மாவலு மாசைக படமாகிய பாதக தீதற மிடிதீரக் கனிவீறிய போதமெய் ஞானமு மியலார்சிவ நேசமு மேவர கழல்சேரணி நூபுர தாளினை நிழல்தாராய்
புருகூதன்மி னாளொரு பாலுற
சிலைவேடுவர் மானொரு பாலுற புதுமாமயில் மீதனை யாவரு மழகோனே புழுகார்பனிர் மூசிய வாசனை
யுரகாலணி கோலமென் மாலைய புரிநூலுமு லாவுது வாதச புயவிரா
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள் செழிசாலிகு லாவிய கார்வயல் மகதாபத சீலமு மேபுனை வளமூதூர் மகதேவர்பு ராரிச தாசிவர்
சுதராகிய தேவசி காமணி வழுவூரில்நி லாவியெ வாழ்வருள் பெருமாளே.
820 தலைநா ளரிற்பத மேத்தி யன்புற
வுபதே சப்பொரு ரூட்டி மந்திர தவஞா னக்கட லாட்டி யென்றனை யருளாலுன் சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க
ளறியா முத்தமி மூட்டி முண்டக தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் வலமேவுங்
கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட
ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி கமழ்வா சற்படி நாட்ட முங்கொள விதிதாவிக் கமலா லைப்பதி சேர்த்து முன்பதி
வெளியா கப்புக ஏற்றி யன்பொடு கதிர்தோ கைப்பரி மேற்கொ ஞஞ்செயல்
மறவேனே சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட
அவுனோ ரைத்தலை வாட்டி யம்பர சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு கதிர்வேலா

Page 127
1036 திருப்புகழ்
சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்
வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு சிவஞா னப்பொரு ரூட்டு முண்டக அழகோனே
மலைமே வித்தினை காக்கு மொண்கிளி யமுதா கத்தன வாட்டி யிந்துள மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் DGT (GATST வரிகோ ழிக்கொடி மீக்கொ ஞம்படி
நடமா டிச்சுரர் போற்று தண்பொழில்
வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் பெருமாளே.
கனனபுரம
82. அன்னமிசைச் செந்நளினச் சென்மிகணக் கந்நியமத்
தன்னமயப் புலால்யாக்கை துஞ்சிடாதென் றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்
கன்னியசற் றுலாமூச்ச டங்கயோகம்
என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட்
டின்னணமெய்த் தடாமார்க்க மின்புறாதென் றின்னதெனக் கென்னுமதப் புன்மைகொடுத்
தின்னல்விடுத் தின்னதெனப் படாவாழ்க்கை தந்திடாதோ
கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக் கண்ணவிரச் சுறாவிட்டு கெண்டையாளைக் கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுடரைக் கன்முழையிற்
கன்னிலையிற் புகாவேர்த்து நின்றவாழ்வே
பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்
பொன்னிநதிக் கராநிர்ப்பு யங்கநாதா பொன்மலையிற் பொன்னிநகர்ப் புண்ணியர்பொற்
பொன்மவுலிப் பொன்னுலகத் திராசாக்கள் தம்பிரானே.
திருவாஞ்சியம்
8 22
இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைக ளிடவாழ்ந்து திக்கு விசயம னரசாகி

அருணகிரிநாதர்
இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
யெழிலார்ந்த பட்டி வகைபரி
தபனாங்க ரத்ன வணிகல
னிவைசேர்ந்த விச்சு வடிவது தமர்தழ்ந்து மிக்க வுயிர்நழு
தழல்தாங்கொ ஞத்தி யிட வொரு
பிடிசாம்பல் பட்ட தறிகிலர் தனவாஞ்சை மிக்கு னடிதொழ
உபசாந்த சித்த குருகுல
பவபாண்ட வர்க்கு வரதன்மை யுருவோன்ப்ர சித்த நெடியவன்
உலகின்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ னுயர்சார்ங்க சக்ர கரதலன்
த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்து னமுருக திறல்பூண்ட சுப்ர மண்யஷண்
திரைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு திருவாஞ்சி யத்தி லமரர்கள்
திருச்செங்காட்டங்குடி
8 23
O37
மளலேபந்
வியபோது
நினையாரே
ரிஷிகேசன்
மருகோனே
முகவேலா
பெருமாளே.
வங்கார மார்பிலனி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ்
மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள் கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய
லிடுமாதர்

Page 128
1038 திருப்புகழ்
சங்காளர் துதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர்சிசியவர்மாயவலையோடடியெ னுழலாமற்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூல அழல் வீசவுப தேசமது தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள்
புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென சிந்துார பார்வதிசு தாகரந மோநமென விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேனிகுரு வானவந மோநமென திண்துர ராழிமலை தூள்படவை வேலைவிடு
முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை யின்பான தேனிரச மார்முலைவி டாதகர
மணிமார்பா எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர்
பெருமாளே.
திருவிற்குடி 8 24
சித்தி ரத்திலுமி குத்த பொற்பவள
மொத்த மெத்தஅழ குற்ற குத்துமுலை சிற்ப சிற்பமயி ரொத்த சிற்றிடைய வஞ்சிமாதர் சித்த மத்தனையு முற்ற ளப்பகடல்
மொய்த்த சிற்றுமண லுக்கு மெட்டியது சிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிம ளங்கள்விசப்
பத்தி ரத்திலுமி குத்த கட்கயல்கள்
வித்து ருத்ததுவ ளைத்த நெற்றிவனை பற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல் விஞ்சைபேசிப்

அருணகிரிநாதர் O 39
பச்சை ரத்னமயி லைப்பொ லத்தெருவி
லத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலை பட்டு ழைத்துகுழி யுற்ற அத்தியென மங்குவேனோ
தத்த னத்தனத னத்த னத்தனன
தித்தி மித்திமிதி மித்தி மித்திமித தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென சங்குபேரி சத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள்
நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி சக்கு முக்கிவிட கட்க துட்டசுர ரங்கமாள
வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு
ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு வித்த ளித்துமதி பெற்ற தத்தைமண முண்டவேலா வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி
யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ் விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் தம்பிரானே.
விஜயபுரம் 8 25
குடல்நின மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை
தோலிடை குளுகுளெ லும்படி மூடிய LDODLDsfEr குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை
நீரெழு குமிழியி னுங்கடி தாகியெ யழிமாய
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
லவுடத மும்பல யோகமு முயலாநின் றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
னழகிய தண்டைவி டாமல Taol CS6. Gorr
இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர
மிடிபட இன்பம கோததி வறிதாக இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர எழில்பட மொன்று மொராயிர முகமான

Page 129
1040
திருப்புகழ்
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
வெயில்நகை தந்த புராரிம
தனகோபர்
விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
விஜயபு ரந்தனில் மேவிய
திருவாரூர்
826
நீதானெத் தனையாலும் -நீடூழிக் மாதானத் தனமாக -மாஞானக் வேதாமைத் துனவேளே -வீராசற் ஆதாரத் தொளியானே-ஆரூரிற்
827
மகரம துகெட இருகுமி ழடைசி
வாரார்ச ரங்க
மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்
வானாள டங்க
பகர்தரு மொழியில் ம்ருகமத களப
பாடீர கும்ப படிமன துனது பரிபுர சரண
பாதார விந்த
நகமுக சமுக நிருதரு மடிய
நானாவி லங்கல் நதிபதி கதற வொருகனை தெரியு
நாராய னன்றன்
அகனக கனக சிவதல முழுது
மாராம பந்தி அரியளி விததி முறைமுறை கருது
மாரூர மர்நத
828
கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
பெருமாளே.
க்ருபையாகி கழல்தாராய் குணசீலா பெருமாளே.
ளெனநீளும்
வருவார்தம்
மிசைவாவிப்
நினையாதோ
பொடியாக
மருகோனே
யவைதோறும்
பெருமாளே.
கனம தெனுமொழி கணிகதிர் முலைநகை
கலக மிடுவிழி கடலென விடமென
மனதுடே

அருணகிரிநாதர் 04
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
கமழு மகிலுட னிளகிய ம்ருகமத களப புளசித கிரியினு மயல்கொடு திரிவேனும்
இரவு பகலற இகலற மலமற
இயலு மயலற விழியினி ரிழிவர இதய முருகியெ யொருகுள பதமுற மடலூடே எழுத அரியவள் குறமக ளிருதன
கிரியில் முழுகின இளையவ னெனுமுரை யினிமை பெறுவது மிருபத மடைவது மொருநாளே
சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு துயரில் செவியினி லடிபட வினவுமி னதிதீது துணிவி லிதுபிழை பெரிதென வருமநு உருகி யரகர சிவசிவ பெறுமதொர் சுரபி யலமர விழிபுனல் பெருகிட நடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவிய
பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு படிய ரதமதை நடவிட மொழிபவ னருளாரூர்ப் படியி லறுமுக சிவசுத கணபதி
யிளைய குமரநி ருபபதி சரவன பரவை முறையிட அயில்கொடுநடவிய பெருமாளே.
8 29
பாலோ தேனோ பலவுறு சுளையது
தானோ வானோர் அமுதுகொல் கழைரச பாகோ வூனோ டுருகிய மகனுண வருண்ஞானப்
பாலோ வேறோ மொழியென அடுகொடு
வேலோ கோலோ விழியென முகமது பானோ வானூர் நிலவுகொ லெனமகண்
மகிழ்வேனை
நாலாம் ரூபா கமலஷண் முகவொளி
யேதோ மாதோம் எனதகம் வளரொளி நானோ நீயோ படிகமொ டொளிரிட மதுசோதி

Page 130
042 திருப்புகழ்
நாடோ வீடோ நடுமொழி யெனநடு
தூனோர் தோளா சுரமுக கனசபை நாதா தாதா எனவுரு கிடஅருள் புரிவாயே
மாலாய் வானோர் மலர்மழை பொழியவ
தாரா துரா எனழுனி வர்கள்புகழ் மாயா ரூபா.அரகர சிவசிவ எனவோதா
வாதா டுரோ டவுனரொ டலைகடல்
கோகோ கோகோ எனமலை வெடிபட வாளால் வேலால் மடிவுசெய் தருளிய முருகோனே
துலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
ஒதார் சீராள் கதிர்மதி குலவிய தோடாள் கோடா ரினைமுலை குமரிமுன்
அருள்பாலா தூயா ராயார் இதுசுக சிவபத
வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு தழ்சி ராரூர் மருவிய இமையவர் பெருமாளே.
830
கூசா தேபா ரேசா தேமால்
கூறா நூல்கற் றுளம்வேறு கோடா தேவேல் பாடா தேமால்
கூர்கூ தாளத் தொடைதோளில் வீசா தேபேர் பேசா தேசீர்
வேதா தீதக் கழல்மீதே வீழா தேபோய் நாயேன் வாணாள்
வீணே போகத் தகுமோதான்
நேசா வானோ ரீசா வாமா
நீபா கானப் புனமானை நேர்வா யார்வாய் துர்வாய் சார்வாய்
நீள்கார் தழ்கற் பகசாலத்
தேசா தீனா தீனா ரீசா
சீரா ரூரிற் பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.

அருணகிரிநாதர்
83
கூர்வாய் நாராய் வாராய் போனார்
ởn.L-TT Gồ[J9°ị) கோதா னேன்மா தாமா றானாள்
கோளே கேள்மற்
ஈர்வாள் போலே மேலே வீசா
ஏறா வேறிட் ஈயா வாழ்வோர் பேரே பாடா
ஈடே றாரிற்
துர்வா ழாதே மாறா தேவாழ்
துழவா னோர்கட் தோலா வேலா வீறா ரூர்வாழ்
சோதீ பாகத்
சேர்வாய் நீதீ வானோர் வீரா
சேரா ரூரைச் சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்
832
பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத் பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான் முத்
தாலோ தாலே லோபா டாதே
தாய்மார் நேசத் தாரா தேபே ரீயா தேபே
சாதே யேசத்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
லானா தேனற் ஆயாள் தாள்மேல் விழா வாழா
ஆளா வேளைப்
1 043
றலஆவி
றிளவாடை
டதுதீயின்
கெடலாமோ
கருள்கூருந்
துமையூடே
சுடுவார்தஞ்
பெருமாளே.
தமுதேயோ
தெனநீளத்
துனுசாரந்
தகுமோதான்
புனமேபோய்
புகுவோனே

Page 131
1044 திருப்புகழ்
சேலோ டேசே ராரால் சாலார்
சீரா ரூரிற் பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
பெரியமடம்
8.33
கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்
களவுமத னுால்பலப டித்தவா வேட்கை கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து கழுநீரார்
கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து
நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய் கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே
தலமடைசு சாளரமு கப்பிலே காத்து
நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை
தடுமாறித் தழுவியநு ராகமும்வி ளைத்துமா யாக்கை
தனையுமரு நாளையும வத்திலே போக்கு தலையறிவி லேனைநெறி நிற்கநி தீகூைடி தரவேணும்
அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி
அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி அடல்மயில்ந டாவியப்ாரி யத்தனே போற்றி
அவதான அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி அகலிதல மோடிவரு நிர்த்தனே போற்றி அருணகிரி நாதனனும் அப்பனே போற்றி அசுரேசர்
பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி கரதலக பாலிகுரு வித்தனே போற்றி பெரியகுற மாதனைபு யத்தனே போற்றி
பெருவாழ்வாம் பிரமனறி யாவிரத தக்ஷனா மூர்த்தி
பரசமய கோளரித வத்தினால் வாய்த்த பெரியமட மேவியசு கத்தனே யோக்யர் பெருமாளே.

அருணகிரிநாதர் 1045
சோமநாதன் மடம்
834
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமது ராக மோக அநுபோகம் உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு அடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாச கனகோப எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர நீயும் அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும் அறிவாளன் அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோம நாதன் மடமேவும்
முருகபொரு துரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக முனிவோனே மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும்வேறு முனியஅறி யாத தேவர் பெருமாளே.
த்ரியம்பகபுரம்
835
உரையொ ழிந்துநின் றவர்பொரு ளௌரிதென
வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு
பொருள்தேடி உளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக ளுபய கொங்கையும் புளசித மெழமிக வுறவாயே
விரக வன்புடன் பரிமள மிகவுள
முழுகி நன்றியொன் றிடமல ரமளியில் வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம துறுநாளே

Page 132
1046 திருப்புகழ்
விளைத னங்கவர்ந் திடுபல மனதிய
ரயல்த னங்களுந் தமதென நினைபவர் வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற
அருள்வாயே
செருநி னைந்திடுஞ் சினவலி யசுரர்க
ளுகழு டிந்திடும் படியெழு பொழுதிடை செகம டங்கலும் பயமற மயில்மிசை தனிலேறித்
திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு
தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென வருபூதங்
கரையி றந்திடுங் கடலென மருவிய
வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ கலவி யன்புடன் குறமகள் தழுவிய முருகோனே
கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய
கவுரி தந்தகந் தறுமுக எனஇரு கழல்ப னிந்துநின் றமரர்கள் தொழவல
பெருமாளே.
சிக்கல்
836
கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர் வன்ம னத்தை யுருக்கு லீலையர் கண்வெ ருட்டி விழித்த பார்வையர் இதமாகக் கையி லுற்ற பொருட்கள் யாவையும்
வையெ னக்கை விரிக்கும் வீனியர் கைகள் பற்றி யிழுத்து மார்முலை தனில்விழப்
பின்னி விட்ட சடைக்கு ளேமலர்
தன்னை வைத்து முடிப்பை நீயவி ழென்னு மற்ப குணத்த ராசையி லுழலாமற் பெய்யு முத்த மிழிற்ற யாபர
என்ன முத்தர் துதிக்க வேமகிழ் பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயக அருள்தாராய்

அருணகிரிநாதர் 047
வன்னியொத்த படைக்க லாதிய
துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி மண்ணி லற்று விழச்செய் மாதவன் மருகோனே. மன்னு பைப்பணி யுற்ற நீள்விட
மென்ன விட்டு முடுக்கு துரனை மல்லு டற்று முருட்டு மார்பற அடைவாகச்
சென்னி பற்றி யறுத்த கூரிய
மின்னி ழைத்த திறத்த வேலவ செய்ய பொற்புன வெற்பு மானனை மணிமார்பா செம்ம னத்தர் மிகுத்த மாதவர்
நன்மை பெற்ற வுளத்தி லேமலர் செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே.
837
புலவரை ரகூரிக் குந்தாரு வேமது
ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை பொருபுய திக்கெட் டும்போயு லாவிய புகழாளா பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய
கவிபாடி
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிக
ளெவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும் வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு மிடிதீர மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு
மருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
சிலைநுதல் மைக்கட் சிந்துார வாணுதல் இமயம கட்குச் சந்தான மாகிய முருகோனே இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக எழிலியெ பூழிற்பற் றுங்காய மாயவன் மருகோனே

Page 133
O 48 திருப்புகழ்
அலர்தர புட்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி யிசையாலே அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும் அசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமாளே.
நாகப்பட்டினம்
838
ஒல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
ஊர்மு கிற்ற ருக்க ளொன்று மவராரென் றுாம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த
ரென்றும் ஊன ரைப்ர புக்க ளென்று மறியாமற்
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
கோடி யிச்சை செப்பி வம்பி லுழல்நாயேன் கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப னிந்து கூடு தற்கு முத்தி யென்று தருவாயே
வாலை துர்க்கை சத்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்றெ டுத்து கந்த சிறியோனே வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழநெட்ட யிற்று ரந்த வாகை மற்பு யப்ர சண்ட மயில்வீரா
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
நார ணற்க ருட்சு ரந்த மருகோனே நாலு திக்கும் வெற்றி கொண்ட துர பத்ம னைக்க
ளைந்த நாக பட்டி னத்த மர்ந்த பெருமாளே.
839
மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ
டார மும்படித ரம்பொறியு டன்பணிகள் மாலை யொண்பவள மும்பரிமளங்கலவை
தொங்கலாட

அருணகிரிநாதர் 1049
வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக
பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள
சங்குமோக
சார மஞ்சள் புய முங்கிளிமு கங்களுகிர்
பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச தாழி யென்ப அல்குலுந்துளிர ரம்பைதொடை
ரம்பைமாதர்
தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி
யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம
றந்திடேனே
வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர
சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும் வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ டர்ந்ததுரன்
வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய
ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு மேகொ ஞந்தபல்சி ஏந்தனையெ றிந்துநட
னங்கொள்வேலா
நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி
யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் தந்தமூல
ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர் புகழ்
தம்பிரானே.
840
விழுதா தெனவே கருதா துடலை
வினைசேர் வதுவே புரிதாக
விருதா வினிலே யுலகா யதமே
லிடவே மடவார் duu LDMrGBGuo

Page 134
1050 திருப்புகழ்
அழுதா கெடவே அவமா கிடநா
ளடைவே கழியா துணையோதி அலர்தா ளடியே னுறவாய் மருவோ
ரழியா வரமே தருவாயே
தொழுதார் வினைவே ரடியோ டறவே
துகள்தீர் பரமே தருதேவா சுரர்பூ பதியே கருணா லயனே
சுகிர்தா வடியார் பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
லிறைவா எனையா ளுடையோனே இறைவா எதுதா வதுதா தனையே
இணைநா கையில்வாழ் பெருமாளே.
எட்டிகுடி
84
உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
திளகிப் புளசித் திடமாயே உடைகற் றுமிடைச் சுமையொக் கஅடுத்
தமிதக் கெறுவத் துடன்வீறு
தரமொத் துபயக் களபத் தளமிக்
கவனத் தருணத் தனமிதே சருவிச் சருவித் தழுவித் தழுவித்
தவமற் கவிடுத் துழல்வேனோ
அரிபுத் திரசித் தசஅக் கடவுட்
கருமைத் திருமைத் துனவேளே அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்
தசுரப் படையைப் பொருவோனே
பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்
தகமுத் தமிழைப் பகர்வோனே பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்
பதியிற் குமரப் பெருமாளே.

அருணகிரிநாதர் 05
842
ஓங்கு மைம்புல னோட நினைத்தின் பயர்வேனை
ஒம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந்
தனையாள்வாய்
வாங்கி வெங்கனை துரர் குலக்கொம் புகடாவி வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் குமரேசா
மூங்கி லம்புய வாச மணக்குஞ் சரிமானு மூண்ட பைங்குற மாது மனக்குந் திருமார்பா காங்கை யங்கறு பாசில் மனத்தன் பர்கள்வாழ்வே காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே.
843
கடலொத்த விடமொத்த கனையொத்த பிணையொத்த
கயலொத்த மலரொத்த விழிமானார் கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
கதிர்முத்து முலைதைக்க அகலாதே மிடலுற்ற கலவிக்கு ஞளநச்சி வளமற்று
மிடிபட்டு மடிபட்டு மனமாழ்கி மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
மிகநட்பொ டருள் தற்கு வருவாயே தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட னுயிர்போகச் சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தருசக்ர தரனுக்கு மருகோனே திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த புதல்வோனே செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற பெருமாளே.
844
மைக்குழ லொத்தவை நீலோ மாலோ
அக்கணி னைக்கினை சேலோ வேலோ மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ வடிதேனோ

Page 135
052 திருப்புகழ்
வத்திர மெய்ச்சசி தானோ நானா குத்துமு லைக்கிள நீரோ மேரோ வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ வெனமாதர்
தக்கவு றுப்பினுள் மாலே மேலாய்
லச்சைய றப்புணர் வாதே காதே சைச்சையெ னத்திரி நாயே னோயா தலையாதே
தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
தற்சமை யத்தக லாவே னாதா தத்தும யிற்பரி மீதே நீதான் வருவாயே
முக்கணர் மெச்சிய பாலா சீலா
சித்தசன் மைத்துன வேளே தோளார் மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன்
மருகோனே
முத்தமிழ் வித்வவி நோதா கீதா மற்றவ ரொப்பில ரூபா தீபா முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் முருகோனே
இக்குநி ரைத்தவி ராலூர் சேலூர்
செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர் மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் வயலுாரா எச்சுரு திக்குளு நீயே தாயே
சுத்தவி றற்றிறல் வீரா தீரா
எட்டிகு டிப்பதி வேலா மேலோர் பெருமாளே.
எண்கண்
845 சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
சண்ப கஞ்செ றிந்தி லங்கு திரடோளுந்
தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச
லென்று
சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச மயிலேறித்
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
சென்ற சைந்து கந்து வந்து க்ருபையோடே சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
செம்ப தம்ப னிந்தி ரென்று மொழிவாயே

அருணகிரிநாதர் OS 3
அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த பூழிந்தி டும்ப
கண்டன் அங்க முங்கு லைந்த ரங்கொள் பொடியாக அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச் லம்பு
னைந்தி டும்ப ரன்ற னன்பில் வந்த குமரேசா இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
எண்க ணங்க மர்ந்தி ருந்த பெருமாளே.
திருக்குடவாயில்
846
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
அயலார் நத்திடு விலைமாதர் அணைமி திற்றுயில் பொழுதே தெட்டிக
ளவரே வற்செய்து தமியேனும்
மயலா கித்திரி வதுதா னற்றிட
மலமா யைக்குன LDSLOTD மறையால் மிக்கருள் பெறவே யற்புத
மதுமா லைப்பத மருள்வாயே கயிலா யப்பதி யுடையா ருக்கொரு
பொருளே கட்டளை யிடுவோனே கடலோ டிப்புகு முதுதுர் பொட்டெழ
கதிர்வேல் விட்டிடு திறலோனே குயிலா லித்திடு பொழிலே சுற்றிய
குடவா யிற்பதி யுறைவோனே குறமா தைப்புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் பெருமாளே.
847
சுருதி யாயிய லாயியல் நீடிய
தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள் தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு துணையாய்மேல்

Page 136
1054 திருப்புகழ்
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள் சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு சுடர்வீசும்
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
பலவு மாய்வெளி யாயொளி யாயெழு பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு பரமாகும்
பரம மாயையி னேர்மையை யாவரு மறியொ ணாததை நீகுரு வாயிது பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு பயனோதான்
கருது மாறிரு தோள்மயில் வேலிவை
கருதொ னாவகை யோரர சாய்வரு கவுணி யோர்குல வேதிய னாயுமை கனபாரக்
களப பூண்முலை யூறிய பாலுணு
மதலை யாய்மிகு பாடலின் மீறிய கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் கழுவேறக்
குருதி யாறெழ வீதியெ லாமலர்
நிறைவ தாய்விட நீறிட வேசெய்து கொடியமாறன்மெய் கூனிமி ராமுனை குலையாவான்
குடிபு கீரென மாமது ராபுரி
யியலை யாரண வூரென நேர்செய்து குடசை மாநகர் வாழ்வுற மேவிய பெருமாளே.
வலிவலம்
848 தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
இருக்க வேறொரு பெயர்தம திடமது துவட்சி யேபெறி லவருடன் மருவிடு பொதுமாதர்
துவக்கி லேயடி படநறு மலரயன்
விதித்த தோதக வினையுறு தகவது துறக்க நீறிட அரகர வெனவுள மமையாதே
அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்
பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு மசடட னாதுலன் அவமது தவிரநி னடியாரோ

அருணகிரிநாதர் OS 5
டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை
யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை யரத்த மாமணி யணிகழ லினைதொழ
அருள்தாராய் எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்
விடுத்து ராவணன் மணிமுடி துணிபட எதிர்த்து மோர்கனை விடல்தெரி கரதலன்
மருகோனே எருக்கு மாலிகை குவளையி னறுமலர்
கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள்
புதல்வோனே வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ வடித்த வேல்விடு கரதல ம்ருகமத புயவேளே
வனத்தில் வாழ்குற மகள் முலை முழுகிய கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகருறை பெருமாளே
வேதாரணியம்
849
தழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி கழிகாமஞ் சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு துணையாதே ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ ஏதம கற்றிச் செம்பத சிந்தனை தருவாயே ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை யெழுநாளே ஆண்மைசெலுத்திக் கொண்டக ரும்புயல் மருகோனே வேழமு கற்குத் தம்பியெ னுந்திரு முருகோனே
வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே.
850
சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து
சீத வரிக்குழல் கிண்டி யளிமூசத் தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு
தேச மனைத்தையும் வென்ற விழிமானார்

Page 137
1056 திருப்புகழ்
மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து
மாலி லகப்பட நொந்து திரிவேனோ வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்
மாயை தொலைத்திட வுன்ற னருள்தாராய்
பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று
பார மலைக்குள கன்று கணையாலேழ் பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து
பால்வ ருணத்தலை வன்சொல் வழியாலே
வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை
விட னருக்கருள் கொண்டல் மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
வேத வனத்தில மர்ந்த பெருமாளே.
85
நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்
நூபுர மொய்த்த பதங்கள் இவையாலும் நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள் நூல்வல்ம லர்ப்பொரு துண்டம் அவையாலும்
சேலினை யொத்திடு கண்க ளாலும ழைத்திடு பெண்கள்
தேனிதழ் பற்றுமொ ரின்ப வலைமூழ்கிச் சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி
தேறுத வத்தை யிழந்து திரிவேனோ
வாலஇ ளப்பிறை தும்பை யாறுக டுக்கை கரந்தை
வாசுகி யைப்புனை நம்பர் தருசேயே மாவலி யைச்சிறை மண்ட ஒரடி யொட்டிய ளந்து
வாளிப ரப்பியி லங்கை யரசானோன்
மேல்முடி பத்தும ரிந்து தோளிரு பத்தும ரிந்து
வீரமி குத்தமு குந்தன் மருகோனே மேவுதி ருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
வேதவ னத்தில மர்ந்த பெருமாளே.

அருணகிரிநாதர் 0.57
கோடி (குழகர் கோயில்)
852
நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
நேயமதி லேதினமு முழலாமல் நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை
நீரிலுழல் மீனதென முயலாமற்
காலனது நாவரவ வாயிலிடு தேரையென
காயமரு வாவிவிழ அணுகாமுன் காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு
கால்முருக வேளெனவு மருள்தாராய் சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி
தோகைகுற மாதினுட ணுறவாடிச் சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ
சோதிகதிர் வேலுருவு மயில்வீரா
கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு
கூடிவிளை யாடுமுமை தருசேயே கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர்
கோடிநகர் மேவிவளர் பெருமாளே.
திருப்பெருந்துறை
853
இரத்த முஞ்சியு மூளை யெலும்புட்
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட் டிறுக்கு மண்சல விடுபு குந்திட் டதில்மேவி இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட் டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் L q-L—Lro TLLu fT
பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப் பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் தடிமேலாய்ப் பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
குலத்தெ னும்படி கூனிய டங்கிப் பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் சடமாமோ

Page 138
1058 திருப்புகழ்
தரித்த னந்தன தானன தந்தத்
திமித்தி மிந்திமி தீதக திந்தத் தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் டியல்தாளம் தனத்த குந்தகு தானன தந்தக்
கொதித்து வந்திடு தருடல் சிந்தச் சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் டிடும்வேலா
சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்
டிரைத்து வந்தம ரோர்கள்ப டிந்துச் சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் சரனோனே செகத்தி னின்குரு வாகிய தந்தைக்
களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத் திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் பெருமாளே.
854
வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன
மகிழ்ச்சிகொண் டிடஅதி விதமான வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன்
மயக்கவந் ததிலறி வழியாத கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர
களிப்புடன் களிதரு LDL-LDT.g5ft கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடி
களைத்தருந் திருவுள மினியாமோ
பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு
புகைப்பரந் தெரியெழ விடும்வேலா புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி
பொறுத்தமந் தரகிரி கடலூடே திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக
திருட்டியெண் கணன்முத லடிபேணத் திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு
திருப்பெருந் துறையுறை பெருமாளே.
855
முகர வண்டெழுங் கருமுகி லலையவு
முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு மமுதுாறும்

அருணகிரிநாதர் OS 9
முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு
மருவு சங்கநின் றொலிகொடு பதறவு முழுது மன்புதந் தமளியி னுதவிய அநுராகச்
சிகர கும்பகுங் குமபுள கிததன
மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட னுறமேவித்
திமிர கங்குலின் புதவிடு மவசர
நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் புரிவாயே
மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல்
மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது புயவீரன்
மடிய வங்குசென் றவனொரு பதுமுடி
முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல் மதிலி லங்கையும் பொடிபட அருளரி மருகோனே
நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற
விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு
மிளையோனே நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர்
பவள மும்பொரும் பழனமு மழகுற நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு
பெருமாளே.
திருத்துருத்தி 85 6
மலைக் கனத்தென மார்பினி லேயிரு
முலைக் கனத்துற வேயிடை நூலென வளைத்து குப்பமை யார்குழல் தோளொடும்
அலைமோத மயிற் குலத்தவ ராமென நீள்கலை
நெகிழ்த்து வித்திரு வார்விழி வேல்கொடு மயக்கி நத்தினர் மேல்மறு பாடும விழியேவி

Page 139
1060 திருப்புகழ்
விலைக் கெனத்தன மாயிர மாயிர
முலைக்க ளப்பினு மாசைபொ தாதென வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் மயல்மேலாய்
வெடுக் கெடுத்தும காபிணி மேலிட
முடக்கி வெட்கும தாமத வீணனை மினற் பொலிப்பத மோடுற வேயருள் புரிவாயே
அலைக் கடுத்தசு ரார்பதி கோவென
விடப் பணச்சிர மாயிர சேடனும் அதிர்த்தி டக்கதிர் வேல்விடு சேவக மயில்வீரா அடைக் கலப்பொரு ளாமென நாயெனை அழைத்து முத்திய தாமநு பூதியெ னருட்டி ருப்புக ழோதுக வேல்மயி லருள்வோனே சிலைக்கை முப்புர நீறெழ வேதிரு
வுளத்தி லற்பமெ னாநினை தேசிகர் சிறக்க முத்தமி ழாலொரு பாவக மருள்பாலா திருக் கடப்பலர் துடிய வார்குழல்
குறத்தி கற்புட னேவிளை யாடியொர் திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர் பெருமாளே
திருவிழிமிழலை 857
எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் விளைவாகி இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் வெறிபோல ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா யழியாதே ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லினைதா ளருள்வோனே முனிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுது ருரமேல் விடும்வேலா

அருணகிரிநாதர் I O 61
திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால் மருகோனே செழுமா மதில்சே ரழகார் பொழில்துழ
திருவி பூழியில்வாழ் பெருமாளே.
திருவாவடுதுறை 858
சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து
நிற்பதுவ ராத பவக்கடத் திற்கற்றி சுக்கிலவ தார வழிக்கினக் கிக்களித்து விலைமாதர்
துப்பிறைய தான இதழ்க்கணிக் குக்கருத்தை
வைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்த துற்சனம காத கரைப்புவிக் குட்டழைத்த நிதிமேவு
கற்பகஇ ராச னெனப்படைக் குப்பெருத்த
அர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்து கற்றறிவி னாவை யெடுத்தடுத் துப்படித்து
மிகையாகக் கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்து
கைப்பொருளி லாமை யெனக்கலக் கப்படுத்து கற்பனைவி டாமலலைத் திருக்கச் சலிக்க
விடலாமோ
எற்பணிய ராவை மிதித்துவெட் டித்துவைத்து
பற்றிய கராவை யிழுத்துரக் கக்கிழித்து எட்கரிப டாம லிதத்தடத் திக்கதிக்கு நிலையோதி
எத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்து
முற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்த யிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்த
திறல்வீரா
வெற்பெனம தானி நிறுத்துருக் கிச்சமைத்து
வர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின் மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதித்து
வெகுகோடி

Page 140
10 62 திருப்புகழ்
விட்கதிர தாக நிகர்த்தொளிக் கச்சிவத்த ரத்தினப டாக மயிற்பாரிக் குத்தரித்து மிக்கதிரு வாவ டுநற்றுறைக் குட்செழித்த
பெருமாளே.
மருத்துவக்குடி
859
கருத்தி தப்படு காமா லீலைகள்
விதத்தை நத்திய வீணா விணிகள் கவட்டு விற்பன மாயா வாதிகள் பலகாலுங்
கரைத்து ரைத்திடு மோகா மோகிக
ளளிக்கு லப்பதி கார்போ லோதிகள் கடைக்க ணற்சுழ லாயே பாழ்படு வினையேனை
உரைத்த புத்திகள் கேளா நீசனை
யவத்த மெத்திய ஆசா பாசனை யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை யருளாகி
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
யளிக்கு நற்பொரு ளாயே மாதவ வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளினை யருள்வாயே
செருக்கி வெட்டிய தீயோ ராமெனு மதத்த துட்டர்கள் மாத ராதிய சினத்தர் பட்டிட வேவே லேவிய முருகோனே
சிவத்தை யுற்றிடு தூயா தூயவர்
கதித்த முத்தமிழ் மாலா யோதிய செழிப்பை நத்திய சீலா வீறிய மயில்வீரா வரைத்த வர்க்கரர் துலா பாணிய
ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த மனத்தி யற்படு ஞானா தேசிக வடிவேலா
வருக்கை யிற்கணி சாறாய் மேலிடு
தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் பெருமாளே.

அருணகிரிநாதர்
O 63
திருப்பந்தணைநல்லூர்
8 60
கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்
கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற்
கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் கொடுபோய்வண்
கெந்தபொடி யும்புனைந் துறவனைத்
தின்பவச னந்தருந் தொழிலடுக் கின்றமய லின்படுந் துயரறப்
ப்ரபைவீசுந்
தண்டைகள் கலின்கலின் கலினெனக்
கிண்கிணி கினின்கினின் கிணினெனத் தண்கொலு சுடன்சிலம் பசையவுட் பரிவாகிச் சந்ததமும் வந்திரும் பரிமளப்
பங்கய பதங்களென் கொடுவினைச் சஞ்சல மலங்கெடும் படியருட் புரிவாயே
தொண்டர்கள் சரண் சரண் சரனெனக்
கொம்புகள் குகுங்குகுங் குகுமெனத் துந்துமி திமிந்திமிந் திமினெனக் குறுமோசை சுந்தரிம ணஞ்செயுஞ் சவுரியக்
கந்தகுற வஞ்சிதங் கருவனத் துங்கமலை யும்புரந் தமரருக்
பண்டர்கள்பு யங்களும் பொடிபடக்
கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற் பைந்தருவ னம்புரந் தகழெயிற் புடைதழும் பந்திவரு மந்திசெண் பகமகிற்
சந்துசெறி கொன்றைதுன் றியவனப் பந்தணையில் வந்திடுஞ் சரவணப்
கிடர்கூரும்
பெருமாளே
86
தேனி ருந்தஇத ழார்ப ளரிங்குநகை
யார்கு ளரிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய தென்புரூவர் தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி
னார்பு யங்கழையி னார்த னங்குவடு சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை புண்டரீகம்

Page 141
0 64 திருப்புகழ்
தனி யங்கொள்செய லார ரம்பைதொடை
யார்ச ரண்கமல நேரி ளம்பருவ தோகை சந்தமணி வாரு டன்கலவி யின்பமூடே சோக முண்டுவிளை யாடி னுங்கமல
பாத மும்புயமி ராறு மிந்துளபல் தோடலங்கலணி மார்பமும்பரிவு ளங்கொள்வேனே
ஒந மந்தசிவ ரூபி யஞ்சுமுக
நீலி கண்டிகலி யாணி விந்துவொளி யோசை தங்குமபி ராமி யம்பிகைப யந்தவேளே ஒல மொன்றவுணர் சேனை மங்கையர்கள்
சேறு டன்குருதி யோட எண்டிசையும் ஒது கெந்தருவர் பாட நின்றுநட னங்கொள்வேலா
ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற மானொ டும்பர்தரு மான னைந்தழகி லங்குமார்பா ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி
யாற னிந்தசடை யார்வி ளங்குமெழி லீறில் பந்தணைந லூர மர்ந்துவளர் தம்பிரானே
862
மதியஞ்சத்திரு நிறைந்த மாமுக
மயிலஞ்சக்கிளி யினங்க ளாமென மதுரஞ்செப்பிய மடந்தை மேனகை ரதிபோல மருவும்பொற்குட மெழுந்த மாமுலை
வளர்வஞ்சிக்கொடி நடந்த வாறென வருதுங்கக்கட லணங்கு போல்பவர் தெருவூடே
நிதமிந்தப்படி யிருந்து வாறவர்
பொருள் தங்கப்பணி கலந்து போய்வர நெறிதந்திட்டவர் வசங்க ளாமென வுழலாதே நிதிபொங்கப்பல தவங்க ளாலுனை
மொழியும்புத்திகள் தெரிந்து நானுனை நிகர்சந்தத்தமிழ் சொரிந்து பாடவு மருள்தாராய்
நதிமிஞ்சச்சடை விரிந்த நாயக
னுமையன் பிற்செயு மிகுந்த பூசனை நலமென் றுட்குளிர் சிவன்ப ராபர னருள்பாலா

அருணகிரிநாதர் O 6 is
நவகங்கைக்கினை பகர்ந்த மாமணி
நதிபங்கிற்குல வுகந்து காபுரி
நகர்பொங்கித்தழை யவந்து வாழ்வுறு முருகோனே
கெதிதங்கத்தகு கணங்கள் வானவ
ரரிகஞ்சத்தவர் முகுந்தர் நாவலர் கிளைபொங்கக் க்ருபை புரிந்து வாழ்கென
அருள்நாதா கெருவம்பற்றிகல் விளைந்த துரொடு
தளமஞ்சப்பொரு தெழுந்து தீயுகள் கிரவுஞ்சக்கிரி வகிர்ந்த வேலுள பெருமாளே.
863 இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக விசி
யனையுந்தன கிரிகொண்டிணை யழகும்பொறி சோர இருளுங்குழல் மழையென்பந வரசங்கொளு மோகக்
குயில்போலே இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பார
இலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மான இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித்
தெருமிதே பதபங்கய மனையும்பரி புரமங்கொலி வீச
நடைகொண்டிடு மயிலென்பன கலையுஞ்சுழ லாட பரிசும்பல மொழியுஞ்சில கிளிகொஞ்சுகை போலப்
பரிவாகிப் பணமுண்டென தவலம்படு நினைவுண்டிடை சோர இதுகண்டவர் மயல்கொடிட மனமுஞ்செயல் மாற பகலுஞ்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத்
துயர்தீராய் திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு போரி
டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வினை செகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு
மோதக் கொடுதுரர் சிரமுங்கர வுடலும்பரி யிரதங்கரி யாளி
நினமுங்குடல் தசையுங்கட லெனசெம்புன லோட சிலசெம்புள்கள் கழுகுஞ்சிறு நரியுங்கொடி யாடப்
பொரும்வேலா

Page 142
066
திருப்புகழ்
மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணி
யிடமன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதி வளருந்தழ லொளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத்
தருசேயே
வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர வருபந்தனை நகர்வந்துறை விமலன்குரு நாதப்
864
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச எனதிடர் மங்க வுனதருள் பொங்க
இசைகொடு துங்க
திருமுக சந்த்ர முருகக டம்ப
சிவசுத கந்த சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
திகழந டஞ்செய் மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
மகிழரி விண்டு வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன்
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
மமலனு கந்த அருள்செறி பந்த னையிலிரு மங்கை
அமளிந லங்கொள்
865
எகினி னம்பழி நாடக மாடிகள்
மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல் இசையி டுங்குர லார்கட னாளிகள் எனவி ழுந்திடு வார்முைைல மேல்துகி
லலைய வுந்திரி வாரெவ ராயினு மிளகு கண்சுழல் வார்விலை வேசியர்
பெருமாளே.
LOG)L) TUL
புகழ்கூறித்
குகவேல
கழல்தாராய்
மருகோனே
மயில்வீரா
முருகோனே
பெருமாளே.
வெகுமோகம்
வலைவீசும்

அருணகிரிநாதர் 1067
அகித வஞ்சக பாவனை யால்மயல்
கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி யதிக முங்கொடு நாயடி யேனினி யுழலாமல் அமுத மந்திர ஞானொப தேசமு
மருளி யன்புற வேமுரு காவென அருள்பு குந்திட வேகழ லார்கழ லருள்வாயே
ககன விஞ்சையர் கோவென வேகுவ
டவுனர் சிந்திட வேகடல் தீவுகள் கமற வெந்தழல் வேல்விடு சேவக முருகோனே கரிநெ டும்புலி தோலுடை யாரெனை யடிமை கொண்டசு வாமிச தாசிவ கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை யருள்பாலா
செகமு மண்டமு மோருரு வாய்நிறை
நெடிய அம்புயல் மேனிய னாரரி திருவு றைந்துள மார்பக னார்திரு மருகோனே தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி வளர்த னம்புதை மார்பழ காமிகு
திலக பந்தனை மாநகர் மேவிய பெருமாளே.
866
கும்பமுநி கர்த்த கொங்கையைவ ளர்த்த
கொஞ்சுகிளி யொத்த மொழிமானார் குங்குமப னிக்குள் வண்புழுகு விட்ட
கொந்தளகம் வைத்த மடவார்பால்
வம்புகள்வி ளைத்து நண்புகள்கொ டுத்து
மங்கிநர கத்தில் மெலியாமல் வண்கயிலை சுற்றி வந்திடுப தத்தை
வந்தனைசெய் புத்தி தருவாயே
பம்புநதி யுற்ற பங்கொருச மர்த்தி
பண்டுளத வத்தி லருள்சேயே பைம்புயலு டுத்த தண்டலைமி குத்த
பந்தனை நகர்க்கு ளுறைவோனே

Page 143
O 68
சம்புநிழ லுக்குள் வந்தவத ரித்த
சங்கரர்த மக்கு சங்கணிக ரத்த ரும்பர்பய முற்ற
சஞ்சலம றுத்த
திருப்பனந்தாள்
867
கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
யென்றே செப்பிய
கொங்கார் முத்துவ டந்தா னிட்டத
னந்தா னித்தரை
வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம
னந்தா னிப்படி மங்கா நற்பொரு ளரிந்தா வற்புத
மென்றே யிப்படி
இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட
மண்டா நற்றவர் எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி
யென்றே திக்கென
பந்தா டித்தலை விண்டோ டக்களம்
வந்தோ ரைச்சில பங்கா கத்தரு கந்தா மிக்கப
னந்தா ளுற்றருள்
திருவிடைமருதூர்
868
திருப்புகழ்
மிறையோனே
பெருமாளே.
மொழிமாதர்
மலைபோலே
யுழலாமல்
அருள்வாயே
குடியோட
வருதரைப்
ரனகாளிப்
பெருமாளே.
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினிலருமையிட மொளுமொளெனவுடல்வளர
ஆளு மேளமாய் வால ரூபமாய் அவரொரு
பெரியோராய்

அருணகிரிநாதர் 1069
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
ஆவியாய வோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை
நிலைமையென
வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
ஆசை யாளராய் ஊசி வாசியாய் அவியுறு
சுடர்போலே
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி
யவர்களொடு
சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
வீனி யார்சொலே மேல தாயிடா விதிதனை
நினையாதே
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய் மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
வார்கள் போகுவார் காணு மோஎனா விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெ டென
மேளமேசொலா யாளி வாயராய் மிடையுற
வருநாளில்
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
வாத மூதுகாமாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
வாடி யூனெலாம் நாடி பேதமாய் மனையவள்
மனம்வேறாய்
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநனு கெனுமளவில்
மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு

Page 144
O7 O திருப்புகழ்
காடு வாவெனா வீடு போவெனா வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் மனிதர்கள்
பலபேச
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
ஏழை மாதராள் மோதி மேல்விழா எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
ஈமொ லேலெனா வாயை ஆவெனா இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் துழவதாய் எரிதனி
லிடும்வாழ்வே
இணையடிள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
ஏசி டார்களோ பாச நாசனே இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய் இறுகும்வகை பரமசுக மதனையரு ளரிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா இமையவர்
பெருமாளே.
869
இலகு குழைகிழிய வூடு போயுலவி
யடர வருமதன னுால ளாவியெதி ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ திந்தநீலம்
இனிமை கரைபுரள வாகு லாவுசரி
நெறிவு கலகலென வாசம் வீசுகுழ லிருளின் முகநிலவு கூர மானுடைய கன்றுபோக
மலையு மிதழ்பருகி வேடை தீரவுட
லிறுக இறுகியது ராக போகமிக வளரு மிளகுதன பார மீதினில்மு யங்குவேனை
மதுர கவியடைவு பாடி வீடறிவு
முதிர அரியதமி ழோசை யாகவொளி வசன முடையவழி பாடு சேருமருள் தந்திடாதோ

அருணகிரிநாதர் 107
கலக அசுரர்கிளை மாள மேருகிரி
தவிடு படவுதிர வோல வாரியலை கதற வரியரவம் வாய்வி டாபசித னிந்தபோகக்
கலப மயிலின்மிசை யேறி வேதநெறி
பரவு மமரர்குடி யேற நாளும்விளை கடிய கொடியவினை வீழவேலைவிட
வந்தவாழ்வே
அலகை யுடனடம தாடு தாதை செவி நிறைய மவுணவுரை யாடு நீபனழி லடவி தனிலுறையும் வேடர் பேதையைம
ணந்தகோவே அமணர் கழுவில்விளை யாட வாதுபடை
கருது குமரகுரு நாத நீதியுள தருளுமிடை மருதில்மேவு மாமுனிவர் தம்பிரானே.
870 படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும் பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன்
செம்பொன்மேனிப் பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்
திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும் பரியகுமி முறுகுகன தும்பையுஞ் செம்பையுந்
துன்றுமூலச் சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்
குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன் சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென்
றுய்ந்துபாடித் தனியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்
பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன் தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கனஞ்
சிந்தியாதோ கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்
பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங் கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங்
கண்டுசேரக்

Page 145
1072 திருப்புகழ்
கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்
றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங் கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந்
துங்கவேலா
அடல்புனையு மிடைமருதில் வந்தினங் குங்குணம பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங் கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந்
தங்குமார்பா அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்
கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென் றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந்
தம்பிரானே.
87
புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன
புளசிதஅபி ராம பூஷித கொங்கையானை பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீதுதாவடி
பொருவனகணை போல்வி லோசன வந்தியாலே
மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன
வெகுவிதபாரி தாப வாதனை கொண்டுநாயேன் மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக
சாமிநின் விதரணசிவ ஞான போதகம் வந்துதாராய் எழுகிரிநிலையோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி யிடர்கெடஅசு ரேசர் சேனைமு றிந்துபோக இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன்
மேலிட ரணமுககண பூத சேனைகள் நின்றுலாவச் செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக
செயசெயழுரு காகு காவளர் கந்தவேளே திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல்
வாவி தழ்தரு
திருவிடைமரு தூரில் மேவிய தம்பிரானே.

அருணகிரிநாதர் 1073
திரிபுவனம்
872
தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
சத்திக் கச்சில தித்திக் கப்படும் அன்புபேசித்
தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை
தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன தொண்டையூறல்
கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை
கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி கின்றதோதான் கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு
கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப தம்பெறேனோ
முனைமலி குலிசைதன் ம்ருகமத புளசித
முத்தச் சித்ரத னத்துக் கிச்சித அம்புராசி
முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட
முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும டங்கல்விரா
அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்
அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை கொண்டநாதா அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ
னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் தம்பிரானே.
சோமீச்சுரம்
873
கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு
களபமுலை புளகமெழ நேரான வேல்விழிகள் கயல்பொருது செயலதென நீள்பூச லாடநல
கனிவாயின் கமழ்குமுத அதரவிதழ் தேனூறல் பாயமிகு
கடலமுத முதவியிரு தோள்மாலை தாழவளை கலகலென மொழிபதற மாமோக காதலது
கரைகானா
தெரியனுகு மெழுகுபத மாய்மேவி மேவியினை
யிருவருட லொருவரென நானாது பாயல்மிசை யிளமகளிர் கலவிதனி லேமூழ்கி யாழுகினு
மிமையாதே

Page 146
074 திருப்புகழ்
இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும் இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை
யருள்வாயே உரியதவ நெறியில்நம நாராய னாயவென
ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு
னுறுதூணில் உரமுடைய அரிவடிவ தாய்மோதி விழவிர
லுகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு
முயர்வாக வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள
மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ வளர்கமுகின் விரிகுலைகள் பூனார மாகியிட
மதில்தழும் மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில் மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள்
பெருமாளே.
கும்பகோணம்
874
இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் துரணொளிபட்
டின்பரசப் பாலமுதச் சுவைமேவு எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்
றெந்தைநடித் தாடுமணிச் சபையூடே
கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
கண்டுகளித் தேயமுதக் கடல்மூழ்கிக் கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக் காணஎனக் கருள்வாயே
திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தமெனக் காளமணித் தவிலோசை சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்
செண்டுகுலைத் தாடுமணிக் கதிர்வேலா

அருணகிரிநாதர் 0.75
குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
கொண்டல்நிறத் தோன்மகளைத் தரைமீதே கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க் கும்பகொணத் தாறுமுகப் பெருமாளே.
875
தும்பிமுகத் தானைபனைக் கொம்பதெனத் தர்விமயற்
றொந்தமெனப் பாயுமுலைக் கனமாதர் தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்
தொங்கல்மயிற் சாயலெனக் குழல்மேவிச்
செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச்
செங்கயலைப் போலும்விழிக் கணையாலே சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித்
திந்திமெனுற் றாடுமவர்க் குழல்வேனோ
தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்
சந்தமயிற் சாய்விலகிச் சிறைபோகச் சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத்
தங்கநிறத் தாள்சிறையைத் தவிர்மாயோன்
கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்
கொண்டுவளைத் தேமகிழச் சுதனின கொஞ்சுசுகப் பாவையினைக் கொங்கைதனிற்
றாவிமகிழ்க் கும்பகொணத் தாறுமுகப் பெருமாளே.
876
கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
கெந்தவா சப்புழுகு மணநாறுங் கிம்புரி சக்களப கொங்கையா னைச்சிறிது
கிஞ்சுகா னப்பெருகி யடியேனும்
மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி
வண்டனாகப்புவியி லுழலாமல் வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது
மஞ்சுதா ளைத்தினமு மருள்வாயே

Page 147
I 0.76 திருப்புகழ்
அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரிய
ளைந்துவீ ழப்பொருத கதிர்வேலா அஞ்சுவா யிற்பரணை நெஞ்சிலுர் றித்தவசி
னன்புளா ரைச்சிறையி டசுரோரைக்
கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
கொந்தியா டத்தலையை யாரிவோனே கொண்டல்து ழக்கழனி சங்குலா விப்பரவு
கும்பகோ ணத்திலுறை பெருமாளே.
87 7 பஞ்சுசேர் நிர்த்தப் பதமாதர் பங்கமார் தொக்கிற் படியாமற் செஞ்சொல்சேர் சித்ரத் தமிழாலுன் செம்பொனார் வத்தைப் பெறுவேனோ
பஞ்சபா னத்தற் பொருதேவர் பங்கில்வாழ் சத்திக் குமரேசா குஞ்சரி வெற்புத் தனநேயா கும்பகோ னத்திற் பெருமாளே.
878 மாலைதனில் வந்து வீதிதனில் நின்று
வாசமலர் சிந்து குழல்கோதி வாரிருத னங்கள் பூனொடுகு லுங்க
மால்பெருகி நின்ற மடவாரைச்
சாலைவழி வந்து போமவர்க ணPன்று
தாழ்குழல்கள் கண்டு தடுமாறிக் தாகமயல் கொண்டு மாலிருள முந்தி
சாலமிக நொந்து தவியாமற் காலையிலெ முந்து னாமமெமொ ழிந்து
காதலுமை மைந்த எனவோதிக் காலமுமு னர்ந்து ஞானவெளி கண்கள்
காண அரு ளென்று பெறுவேனோ
கோலமுட னன்று தர்படையின் முன்பு
கோபமுட னின்ற g5LDGsu & IT கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப
கோனநகர் வந்த பெருமாளே.

அருணகிரிநாதர் 07 7
87 9
கறுத்த குஞ்சியும் வெளிறியெ முங்கொத்
துருத்த வெண்பலு மடையவி ழுந்துட் கருத்து டன்திகழ் மதியும ருண்டுச் சுருள்நோயாற் கலக்க முண்டல மலமுற வெண்டிப் பழுத்தெ ழும்பிய முதுகுமு டங்கக் கழுத்தில் வந்திளை யிருமலொ துங்கக் கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகைந டுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித் தடுத்த மைந்தரும் வசைகள்வி ளம்பச் சடமாகி அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழியலொ ழிந்திட் டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் றிடுவேனோ
புறத்த லம்பொடி படமிக வுங்கட்
டறப்பெ ருங்கடல் வயிறுகு ழம்பப் புகட்ட ரங்கிய விரகது ரங்கத் திறல்வீரா பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட் டரக்கர் வன்றலை நெரியநெ ருங்கிப் புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப்
பொரும்வேலா
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத் தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் கிரிமேவிச் செருக்கு நெஞ்சுடை முருகசி கண்டிப்
பரிச்சு மந்திடு குமரக டம்பத் திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் பெருமாளே.
880
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு முடலுாடே
தெளித்தி டும்பல சாதியும் வாதியும்
இரைத்தி டுங்குல மேசில கால்படர் சினத்தி டும்பவ நோயென வேயிதை யனைவோருங்

Page 148
O78 திருப்புகழ்
கனைத்தி டுங்கலி காலமி தோவென
வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு
முடல்பேனிக் கடுக்க லுஞ்சில பூடண மாடைகள்
இருக்கி டுங்கலை யேபல வாசைகள் கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு மருள்வாயே
தனத்த னந்தன தானன தானன
திமித்தி திந்திமி தீதக தோதக தகுத்து துந்துமி தாரைவி ராணமொ டடல்பேரி
சமர்த்த மொன்றிய தானவர் சேனையை வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் புரிவோனே
னைப்பு னந்கனி லேமய லாலொ
பு னநத (E5 மயிற்ப தந்தனி லேசர னானென திருப்பு யந்தரு மோகன மானினை யணைவோனே
சிவக்கொ முஞ்சுட ரேபர னாகிய
தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் பெருமாளே.
கொட்டையூர்
88.
பட்டுமணிக் கச்சிறுகக் கட்டியவிழ்த் துத்தரியப்
பத்தியின்முத் துச்செறிவெற் பிணையாமென்
பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
பட்டுருகிக் கெட்டவினைத் தொழிலாலே
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
சுற்றுமறச் சித்தனெனத் திரிவேனைத்
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
சுத்தியணைப் பத்தரில்வைத் தருள்வாயே

அருணகிரிநாதர் 0.79
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப்
பொற்கொடியைத் துக்கமுறச் சொர்க்கமுறக் கொடியாழார் சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச் சுற்றுவனத் திற்சிறைவைத் திடுதீரன்
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
குற்றமறச் சுற்றமறப் பலதோளின்
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் பெருமாளே.
சிவபுரம்
882
மனமெ னும்பொருள் வானறை கால்கனல் புனலு டன்புவி கூடிய தோருடல் வடிவு கொண்டதி லேபதி மூனெழு வகையாலே வருசு கந்துய ராசையி லேயுழல்
மதியை வென்றுப ராபர ஞானநல் வழிபெ றும்படி நாயடி யேனைநி னருள்சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளை யானது வேரற சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு முருகோனே
கனக னங்கையி னாலறை தூணிடை
மனித சிங்கம தாய்வரை பார்திசை கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் முனையாலே கதற வென்றுடல் கீனவ னாருயி ருதிர முஞ்சித றாதமு தாயுணு கமல வுந்திய னாகிய மால்திரு மருகோனே
தினக ரன்சிலை வேளருள் மாதவர் சுரர்க ளிந்திர னாருர காதிபர் திசைமு கன்செழு மாமறை யோர்புக ழழகோனே

Page 149
080 திருப்புகழ்
திரும டந்தையர் நாலிரு வோர்நிறை அகமொ டம்பொனி னாலய நீடிய சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக பெருமாளே.
திருநாகேச்சுரம்
883
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள் ஆமாவி னுானைச் செகுத்த துட்டர்கள் பரதாரம் ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்
நானாவு பாயச் சரித்ர துட்டர்க ளாவேச நீரைக் குடித்த துட்டர்கள் தமியோர்சொங்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள் கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் குருசேவை கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் கோமாள நாயிற் கடைப்பி றப்பினி லுழல்வாரே
வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி பேரார வாரச் சமுத்தி ரத்தினில் மீளாம லோடித் துரத்தி யுட்குறு மொருமாவை வேரோடு வீழத் தறித்த டுக்கிய
போராடு சாமர்த் தியத்தி ருக்கையில் வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு வயலுாரா
நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்
மாயாவி காரத் தியக்க றுத்தருள் ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு வடிவான நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி
யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள் நாகேச நாமத் தகப்பன் மெச்சிய பெருமாளே.
கூந்தலூர்
884
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டிடாமத சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகுகேள்வி

அருணகிரிநாதர் 108
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய் சமடனை வலியஅ சாங்க மாகிய தமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர் விழிவலை மகளிரொ டாங்கு கூடிய வினையேனை வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ அருள்வாயே
ஒருபது சிரமிசை போந்த ராவன
னிருபது புயமுட னேந்து மேதியு மொருகனை தனிலற வாங்கு மாயவன் மருகோனே உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
ரமரர்கள் முனிவர்க ளிந்த பாலகர் உயர்கதி பெற அரு ளோங்கு மாமயி லுறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு களமிசை யறமது தீர்ந்த துரர்கள் குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ முனிவோனே கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர் குருபர னெனவரு கூந்த லூருறை பெருமாளே.
திருச்சத்திமுத்தம் 885 கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக
வுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர் கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணி
யணியாலே கதிர்திகழு செப்பைக்க திக்கப்ப தித்துமகிழ்
கமலமுகை பட்சத்தி ருத்திப்பொ ருத்துமுலை கமழ்விரைகொள் செச்சைக்க லப்பைப்பொ
தித்ததனை விலகாது கடுவைவடு வைப்பற்றி விற்சிக்க வைத்தசெய லெனநிறமி யற்றிக்கு யிற்றிப்பு ரட்டிவரு கயல்விழிவெ ருட்டித்து ரத்திச்செ விக்குழையின்
மிசைதாவும்

Page 150
1082 திருப்புகழ்
களமதன னுக்குச்ச யத்தைப்ப டைத்துலவு
கடுமொழிப யிற்றக்க ளைத்துக்கொ டிச்சியர்கள் கணியினில கப்பட்ட முத்தத்து யர்ப்படுவ
தொழியேனோ
அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு
மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில் அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு
மழகோனே அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி
லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு மசடர்தம னத்தைக்க லக்கித்து னித்தடரு மதிதுரா
விடவரவ னைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவு
ளுலவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரு
மொருமாயோன் விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை
நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு
பெருமாளே.
திருவலஞ்சுழி
886
மகர குண்டல மீதே மோதுவ
வருண பங்கய மோபூ வோடையில் மருவு செங்கழு நீரோ நீவிடு வடிவேலோ மதன்வி டுங்கனை யோவா ளோசில
கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை மறலி யென்பவ னோமா னோமது நுகர்கீத
முகர வண்டின மோவான் மேலெழு
நிலவ ருந்துபு ளோமா தேவருண் முதிய வெங்கடு வோதே மாவடு வகிரோபார் முடிவெ னுங்கட லோயா தோவென
வுலவு கண்கொடு நேரே துறைகொள் முறைய ஹிந்தப சாசே போல்பவ ருறவாமோ

அருணகிரிநாதர் 083
நிகரில் வஞ்சக மாரீ சாதிகள்
தசமு கன்படை கோடா கோடிய நிருத ரும்பட வோரே வேவியெ யடுபோர்செய் நெடிய னங்கணு மானோ டேயெழு பதுவெ ளங்கவி சேனா சேவித நிருப னம்பரர் கோமான் ராகவன் மருகோனே
சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்
பிரபை யொன்றுபி ராசா தாதிகள் சிவச டங்கமொ டீசா னாதிகள் சிவமோனர் தெளியு மந்த்ரக லாபா யோகிக
ளயல்வி ளங்குசு வாமி காமரு திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே.
திருப்பழையாறை
887
தோடுற்றுக் காதள வோடிய
வேலுக்குத் தானிக ராயெழு ததத்திற் காமனி ராசத விழியாலே சோடுற்றத் தாமரை மாமுகை
போலக்கற் பூரம ளாவிய தோல்முத்துக் கோடென வீறிய முலைமானார்
கூடச்சிக் காயவ ரூழிய
மேபற்றிக் காதலி னோடிய கூளச்சித் தாளனை மூளனை வினையேனைக் கோபித்துத் தாயென நீயொரு
போதத்தைப் பேசவ தாலருள் கோடித்துத் தானடி யேனடி பெறவேணும்
வேடிக்கைக் காரவு தாரகு
ணாபத்மத் தாரணி காரண வீரச்சுத் தாமகு டாசமர் அடுதீரா வேலைக்கட் டாணிம காரத
துரர்க்குச் சூரனை வேல்விடு வேழத்திற் சீரரு ரூறிய இளையோனே

Page 151
I 0.84 திருப்புகழ்
ஆடத்தக் காருமை பாதியர்
வேதப்பொற் கோவண வாடையர் ஆலித்துத் தானரு ரூறிய முருகோனே ஆடப்பொற் கோபுர மேவிய
ஆடிக்கொப் பாமதிள் தழ்பழை யாறைப்பொற் கோயிலின் மேவிய பெருமாளே.
திருச்சக்கிரப்பள்ளி
888
திட்டெ னப்பல செப்பைய டிப்பன
பொற்கு டத்தையு டைப்பன வுத்தர திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன வதின்மேலே செப்ப வத்திம ருப்பையொ டிப்பன
புற்பு தத்தையி மைப்பில பூழிப்பன செய்த்த லைக்கம லத்தைய லைப்பன திறமேய
புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன
சித்த முற்பொர விட்டுமு றிப்பன புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன இளநீரைப் புக்கு டைப்பன முத்திரை யிட்டத
னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல் புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு தருள்வாயே
துட்ட நிக்ரக சத்தித ரப்ரப
லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய துட்க ரக்கவி தைப்புக லிக்கர செனுநாமச் சொற்க நிற்கசொ லட்சன தட்சண
குத்த ரத்தில கத்திய னுக்கருள் சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண் முகநாத
தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ
ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரக சத்து வத்தைய ஸ்ரித்திடு செய்ப்பதி மயிலேறி சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில்
மிக்க ரத்நம திற்புடை சுற்றிய சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் பெருமாளே.

அருணகிரிநாதர் 1085
திருக்குரங்காடுதுறை
889
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
கசைந்தாடு குழைக்கவசத் திரடோளும் அலந்தாம மணித்திரளைப் புரண்டாட நிரைத்தகரத்
தணிந்தாழி வனைக்கடகச் சடர்வேலுஞ் சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்
சிவந்தேறி மணத்தமலர்ப் புனைபாதந் திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறு நடிப்பதுமற் புகல்வேனோ இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்
டிளந்தாது மலர்த்திருவைச் சிறைமீளும் இளங்காள முகிற்கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
திருங்கான நடக்குமவற் கினியோனே குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக் கொடுந்தாரை வெயிற்கயிலைத் தொடும்வீரா கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை
புணர்க்குமிசைக் குரங்காடு துறைக்குமரப் பெருமாளே.
890
குறித்தநெஞ் சாசை விரகிகள் நவிற்றுசங் கீத மிடறிகள் குதித்தரங் கேறு நடணிகள் எவரோடுங் குறைப்படுங் காதல் குனகிகள்
அரைப்பனங் கூறு விலையினர் கொலைக்கொடும் பார்வை நயனிகள் நகரேகை
பொறித்தசிங் கார முலையினர்
வடுப்படுங் கோவை யிதழிகள் பொருட்டினந் தேடு கபடிகள் தவர்சோரப் புரித்திடும் பாவ சொருபிகள்
உருக்குசம் போக சரசிகள் புணர்ச்சிகொண் டாடு மருளது தவிர்வேனோ

Page 152
1086 திருப்புகழ்
நெறித்திருண் டாறு பதமலர்
மனத்தபைங் கோதை வகைவகை நெகிழ்க்குமஞ் சோதி வனசரி DG 56ST s நெருக்குமிந்த் ராதி யமரர்கள்
வளப்பெருஞ் சேனை யுடையவர் நினைக்குமென் போலு மடியவர் பெருவாழ்வே
செறித்தமந் தாரை மகிழ்புனை
மிகுத்ததண் சோலை வகைவகை தியக்கியம் பேறு நதியது பலவாறுந் திரைக்கரங் கோலி நவமணி
கொழித்திடுஞ் சாரல் வயலனி
திருக்குரங் காடு துறையுறை பெருமாளே.
89 குடங்கள் நிறைத்தேறு தடங்கள் குறித்தார
வடங்கள் அசைத்தார செயநீலங் குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது
குளிர்ந்த முகப்பார்வை வலையாலே
உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி
யுலந்து மிகக்கோலு மகலாதே உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு
முரங்கொள பொற்பாத மருள்வாயே
விடங்கள் கதுப்பேறு படங்க னடித்தாட
விதங்கொள் முதற்பாய லுறைமாயன் விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு
விளங்கு முகிற்கான மருகோனே
தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை
தழங்கு மியற்பாடி யளிதழத் தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு
தலங்க ளிசைப்பான பெருமாளே.
காவளூர் 89 2
மானை நேர்விழி யொத்தம டந்தையர்
பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர் வாச மாமலர் கட்டும ரம்பைய ரிருதோளும்

அருணகிரிநாதர் 1087
மார்பு மீதினு முத்துவ டம்புரள்
காம பூரண பொற்கட கம்பொர வாரி நீலவ ளைக்கைபு லம்பிட அநுராகம்
ஆன நேரில்வி தத்திர யங்களும்
நாண மாறம யக்கியி யம்பவும் ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் உறவாடி ஆர வாரந யத்தகு னங்களில்
வேளி னுால்களை கற்றவி ளம்பவும் ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை யடைவேனோ
சான கீதுய ரத்தில ருஞ்சிறை
போன போதுதொ குத்தசி னங்களில் தாப சோபமொ ழிப்பஇ லங்கையு மழிவாகத் தாரை மானொரு சுக்கிரி பன்பெற
வாலி வாகுத லத்தில்வி ழுந்திட சாத வாளிதொ டுத்தமு குந்தனன் மருகோனே
கான வேடர்சி றுக்குடி லம்புன
மீதில் வாழித னத்திலு றைந்திடு காவல் கூருகு றத்திபு னர்ந்திடு மணிமார்பா காவு லாவிய பொற்கமு கின்திரள்
பாளை வீசம லர்த்தட முஞ்செறி காவ ஞர்தனில் முத்தமி ழுந்தெரி பெருமாளே.
தஞ்சை
89.3
அம்பு ராசியிற் கெண்டை சேலொளித்
தஞ்ச வேமணிக் குழைவீசும் அங்க ணாரிடத் தின்ப சாகரத்
தங்கி மூழ்குமிச் சையினாலே
எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித்
திந்த்ர சாலஇப் ப்ரமைதீர இங்கு வாவெனப் பண்பி னாலழைத்
தெங்கு மானமெய்ப் பொருள்தாராய்

Page 153
1088 திருப்புகழ்
கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்
கொண்டல் போல்குழற் கனமேருக் குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
கொண்ட கோலசற் குணவேலா
சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக் குருநாதா சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப் பெருமாளே.
894
கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து
மஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்து கண்ட மாலைக ளான ஆணி முத்த னிந்து
தெருவூடே கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்து
வண்ப யோதர பார மேரு வைத்தி றந்து கண்க ளாகிய கூர வேலை விட்டெ றிந்து விலைகூறி
வந்த பேர்களை யேகை யாலெ டுத்த ணைந்து
கொண்டு தேனித மூறு வாயை வைத்த ருந்தி மந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்து
மயல்பூணு மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள் மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க வருவாயே
இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த
சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன்
மருகோனே எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு
கதிர்வேலா சந்த்ர சேகரி நாக பூஷ னத்தி யண்ட
முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு மணிமார்பா

அருணகிரிநாதர் 1089
சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து
கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த பெருமாளே.
895 அஞ்சன வேல்விழி LDL or T5ft அங்கவர் மாயையி லலைவேனோ விஞ்சுறு மாவுன தடிசேர விம்பம தாயரு ளருளாதோ நஞ்சமு தாவுணு மரனார்தம் நன்கும ராவுமை யருள்பாலா தஞ்சென வாமடி யவர்வாழத் தஞ்சையில் மேவிய பெருமாளே.
சப்தஸ்தானம்
896
மருவு லாவிடு மோதிகு லைப்பவர்
சமர வேலெனு நீடுவி பூழிச்சியர் மனதி லேகப டுருப ரத்தைய ரதிகேள்வர் மதன னோடுறழ் பூசலி டைச்சிய
ரிளைஞ ராருயிர் வாழுமு லைச்சியர் மதுர மாமொழி பேசுகு ணத்தியர் தெருமீதே
சருவி யாரையும் வாவென ழைப்பவர்
பொருளி லேவெகு ஆசைப ரப்பிகள் சகல தோதக மாயைப டிப்பரை யணுகாதே சலச மேவிய பாதநி னைத்துமு
னருணை நாடதி லோதுதி ருப்புகழ் தணிய வோகையி லோதன னக்கருள் புரிவாயே
அரிய கானக மேவுகு றத்தித
னிதனி லேசில நாளும னத்துட னடவி தோறுமெ வாழியல் பத்தினி DGTGTGITT அசுரர் வீடுகள் நூறுபொ டிப்பட
உழவர் சாகர மோடியொ ஸரித்திட அமரர் நாடுபொன் மாரிமி குத்திட நினைவோனே

Page 154
090
திருவின் மாமர மார்பழ னப்பதி
அயிலு சோறவை யாளுது றைப்பதி திசையி னான்மறை தேடிய முற்குடி சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதி திருவை யாறுட னேழுதி ருப்பதி
திருவையாறு
897
சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்
திருப்புகழ்
விதியாதிச்
பெருமாளே.
சுடர்கொள் வாளினை யோபினை யோவிழி
சுரர்த மாரமு தோகுயி லோமொழி துவர தோஇல வோதெரி யாஇடை துகளி லாவன மோபிடி யோநடை
யிதழ்கோவை
துணைகொள் மாமலை யோமுலை தானென
பரிவி னாலெனை யாளுக நானொரு
பழுதி லானென வாணுத லாரொடு பகடி யேபடி யாவொழி யாஇடர் பரவை மீதழி யாவகை ஞானிகள்
பரவு நீள்புக ழேயது வாமிகு பரம வீடது சேர்வது மாவது
கரிய மேனிய னானிரை யாள்பவன்
அரிய ராவனை மேல்வளர் மாமுகில் கனகன் மார்பது பீறிய வாளரி கபடன் மாமுடி யாறுட னாலுமொர்
கணையி னால்நில மீதுற நூறிய கருணை மால்கவி கோபக்ரு பாகரன்
திரிபு ராதிகள் தூளெழ வானவர்
திகழ வேமுனி யாவருள் கூர்பவர் தெரிவை பாதியர் சாதியி லாதவர் சிகர பூதர நீறுசெய் வேலவ
திமிர மோகர வீரதி வாகர திருவை யாறுறை தேவக்ரு பாகர
உரையாடிப்
படுமாயப்
மொருநாளே
கனமாயக்
மருகோனே
தருசேயே
பெருமாளே.

அருணகிரிநாதர் O 9
திருப்பூந்துருத்தி 898 வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை
சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ் உண்டுதோயா வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன வாஞ்சை யிற்களி கூரா வாள்விழி மேம்ப டக்குழை மீதே மோதிட வண்டிராசி
ஓங்கு மைக்குழல் சாதா விறென
வீந்து புட்குரல் கூவா வேள்கலை யோர்ந்தி டப்பல க்ரீடா பேதமு யங்குமாகா ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை தீர்ந்து னக்கெளி தாயே மாதவ மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ ழங்குவாயே
தாங்கு நிற்சரர் சேனா நீதரு
னாங்கு ருத்ரகு மாரா கோஷன தாண்ட வற்கருள் கேகி வாகன துங்கவிரா சாங்கி பற்சுகர் சீநா தீசுர
ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ லங்கன்மார்பா
பூங்கு ளத்திடை தாரா வோடன
மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை போன்ற விக்ரக துரா ரீபகி ரண்டரூபா போந்த பத்தர்பொ லாநோய் போயிட
வேண்ட நுக்ரக போதா மேவிய பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள் தம்பிரானே.
திருநெய்த்தானம் 899
முகிலைக் காரைச் சருவிய குழலது
சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் முகம்வேர்வ முனையிற் காதிப் பொருகணை யினையிள
வடுவைப் பானற் பரிமள நறையிதழ் முகையைப் போலச் சமர்செயு மிருவிழி குழைமோதத்

Page 155
092 திருப்புகழ்
துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்
பருகிக் காதற் றுயரற வளநிறை துணைபொற் றோளிற் குழைவுற மனமது களிகூரச் சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத
நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை துவளக் கூடித் துயில்கினு முனதடி மறவேனே
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
திமிதித் தீதித் திமிதியென் முரசொடு குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் களமீதே குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
குவியக் கூடிக் கொடுவர அலகைகள் குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு குமரேசா
செகசெச் சேசெச் செகவென முரசொலி
திகழச் சூழத் திருநட மிடுபவர் செறிகட் காளப் பணியணி யிறையவர் தருசேயே சிகரப் பாரக் கிரியுறை குறமகள் கலசத் தாமத் தனகிரி கழுவிய திருநெய்த் தானத் துறைபவ சுரபதி பெருமாளே.
திருப்பழுவூர்
9 OO
விகட சங்கட வார்த்தை பேசிகள்
அவல மங்கைய ரூத்தை நாறிகள் விரிவ டங்கிட மாற்றும் வாறென வருவார்தம் விதம்வி தங்களை நோக்கி யாசையி
லுபரி தங்களை மூட்டி யேதம இடும ருந்தொடு சோற்றை யேயிடு விலைமாதர்
சகல மஞ்சன மாட்டி யேமுலை
படவ ளைந்திசை மூட்டி யேவரு சரச இங்கித நேத்தி யாகிய சுழலாலே சதிமு ழங்கிட வாய்ப்ப னானது
மலர வுந்தியை வாட்டி யேயிடை தளர வுங்கனை யாட்டும் வேசிய ருறவாமோ

அருணகிரிநாதர் O93
திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு
தமையர் தம்பியர் மூத்த தாதையர் திலக மைந்தரை யேற்ற தரரை வெகுவான செனம டங்கலு மாற்றி யேயுடல்
தகர அங்கவர் கூட்டை யேநரி திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ளடர்பூமி
அகடு துஞ்சிட மூட்டு பாரத
முடிய அன்பர்க ளேத்த வேயரி யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் மருகோனே அமர ரந்தனர் போற்ற வேகிரி
கடல திர்ந்திட நோக்கு மாமயி லழகொ டும்பழு வூர்க்குள் மேவிய பெருமாளே.
பெரும்புலியூர்
9 O
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
சரங்களொளி வீசப் புயமிதே தனங்கள்குவ டாடப் பட்ர்ந்தபொறி மால்பொற்
சரங்கண்மறி காதிற் குழையாட
இதங்கொளமயி லேரொத் துகந்தநகை பேசுற்
றிரம்பையழ கார்மைக் குழலாரோ டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
றிரங்கியிரு தாளைத் தருவாயே
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
சிறந்தமயில் மேலுற் றிடுவோனே சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
சினந்தசுரர் வேரைக் களைவோனே
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
ப்ரசண்டஅபி ராமிக் கொருபாலா பெரும்புனம தேகிக் குறம்பெனொடு கூடிப்
பெரும்புலியுர் வாழ்பொற் பெருமாளே.

Page 156
1094 திருப்புகழ்
நெடுங்களம்
9 O2 பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
பஞ்செனன் ரிந்துபொடி யங்கமாகிப் பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி
பஞ்சவர்வி யன்பதியு டன்குலாவக்
குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ
கொஞ்சியசி லம்புகழல் விந்துநாதங் கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை
கொன்றருள்நி றைந்தகழ லின்றுதாராய் எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல
இன்பரசு கொங்கைகர முங்கொளாமல் எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள
இந்துநுத லும்புரள கங்குல்மேகம் அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள
அம்பொனுரு மங்கைமண முண்டபாலா அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியி
லண்டரய னும்பரவு தம்பிரானே.
குறட்டி
9 03 கூரிய கடைக்க ணாலு மேருநிக ரொப்ப தான
கோடதனில் மெத்த வீறு முலையாலுங் கோபவத ரத்தி னாலு மேவிடுவிதத்து ளால
கோலவுத ரத்தி னாலு மொழியாலும் சீரியவ ளைக்கை யாலு மேகலைநெ கிழ்ச்சி யேசெய்
சீருறுநு சுப்பி னாலும் விலைமாதர் சேறுதணி னித்த மூழ்கி நாளவமி றைத்து மாயை
சேர்தருமு ளத்த னாகி யுழல்வேனோ
தாரணித னக்குள் வீறி யேசமர துட்ட னான
ராவணன்மி குத்த தானை பொடியாகச் சாடுமுவ ணப்ப தாகை நீடுமுகி லொத்த மேனி
தாதுறைபு யத்து மாயன் மருகோனே

அருணகிரிநாதர் 095
வாரணமு ரித்து மாதர் மேகலைவ ளைக்கை நான
மாபலிமு தற்கொ னாதன் முருகோனே வாருறுத னத்தி னார்கள் சேருமதி ஞப்ப ரீகை
வாகுளகு றட்டி மேவு பெருமாளே.
904
நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
நீள்குளிர் வெதுப்பு வேறு முளநோய்கள் நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
நீடிய விரத்த மூளை தசைதோல்சீ
பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
பாய்பினி யியற்று பாவை நரிநாய்பேய் பாறொடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
பாழுட லெடுத்து வீணி லுழல்வேனோ
நாரணி யறத்தி னாரி ஆறுசம யத்தி பூத
நாயக ரிடத்து காமி மகமாயி நாடக நடத்தி கோல நீலவரு ணத்தி வேத
நாயகி யுமைச்சி நீலி திரிதலி
வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
வாணுத லளித்த வீர மயிலோனே மாடமதில் முத்து மேடை கோபுர மணத்த சோலை
வாகுள குறட்டி மேவு பெருமாளே.
அத்திப்பட்டு
905
கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி
லிடைபோடாக் கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
கலையையுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல் கணகனென எரியவுடல் சுட்டுக் கசுவியவர்
வழியேபோய்

Page 157
0.96 திருப்புகழ்
மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
மனிதர் தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன்
மலராலே மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி வழியையிது வழியென வுரைத்துப் பொற்கழல்கள்
தருவாயே
பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில் புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல் புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி லுறமேவும்
புகழ்வணிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள் பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில்
மருகோனே
அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற அமரர் பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு
மிளையோனே அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு
மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர் அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை
பெருமாளே. அத்திக்கரை
90 6 தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை
சுற்றிக்கல னிட்டுக் கடிதரு சொக்குப்புலி யப்பிப் புகழுறு களியாலே சுத்தத்தைய கற்றிப் பெரியவர்
சொற்றப்பிய கத்தைப் புரிபுல சுற்றத்துட னுற்றிப் புவியிடை யலையாமல்
முக்குற்றம கற்றிப் பலகலை
கற்றுப்பிழை யற்றுத் தனையுணர் முத்தர்க்கடி மைப்பட் டிலகிய அறிவாலே

அருணகிரிநாதர் O 97
முத்தித்தவ சுற்றுக் கதியுறு
சத்தைத்தெரி சித்துக் கரையகல் முத்திப்புன ரிக்குட் புகவர மருள்வாயே
திக்கெட்டும டக்கிக் கடவுள
ருக்குப்பணி கற்பித் தருளறு சித்தத்தொட டுத்துப் படைகொடு பொருதுரர் செச்சைப்புய மற்றுப் புகவொரு
சத்திப்படை விட்டுச் சுரர்பதி சித்தத்துயர் கெட்டுப் பதிபெற அருள்வோனே
அக்கைப்புனை கொச்சைக் குறமக
ளச்சத்தையொ ழித்துக் கரிவரும் அத்தத்தி லழைத்துப் பரிவுட னனைவோனே அப்பைப்பிறை யைக்கட் டியசடை
அத்தர்க்கரு மைப்புத் திரவிரி
அத்திக்ரை யிச்சித் துறைதரு பெருமாளே.
கந்தனூர்
9 O7 விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
மின்சரா சர்க்குலமும் வந்துலாவி விண்டுபோய் விட்டவுடல் சிந்தை தானுற்றறியு
மிஞ்சநீ விட்டவடி வங்களாலே வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
வந்துதா இக்கணமெ யென்றுகூற மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி
வந்துசே யைத்தழுவல் சிந்தியாதோ அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
மங்கிபார் வைப்பறையர் மங்கிமாள அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகி
ழண்டரே றக்கிருபை கொண்டபாலா
எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடைய
ரெந்தைபா கத்துறையு மந்தமாது எங்குமாய் நிற்குமொரு கந்தனுார் சத்திபுக
ழெந்தைபூ சித்துமகிழ் தம்பிரானே.

Page 158
098 திருப்புகழ்
வாலிகொண்டபுரம்
908 ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
காக முண்பவுட லேசு மந்துஇது ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத வும்பல்போலே ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
மேவி நம்பியிது போது மென்கசில ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச
னங்கள்பேசிச் சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
வீச மங்கையர்க ளாட வெண்கவரி சீற கொம்புகுழ லூத தண்டிகையி லந்தமாகச் சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ சேவை கண்டுனது பாத தொண்டனென
அன்புதாராய் துருதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
துரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ துரி யன்புரவி தேர்ந டந்துநடு பங்கினோடச் சோதி யந்தபிர மாபு ரந்தரனு
மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது தழ மன்றில்நட மாடு மெந்தைமுத லன்புகூர
வாது கொண்டவுனர் மாள செங்கையமி
லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள் மாதர் சிந்தைகளி கூர நின்றுநட னங்கொள்வோனே வாச கும்பதன மானை வந்துதினை
காவல் கொண்டமுரு காஎ னும்பெரிய வாலி கொண்டபுர மேய மர்ந்துவளர்
தம்பிரானே. திருமாந்துறை
9 O 9 ஆங்குடல்வ ளைந்து நீங்குபல்நெ கிழ்ந்து
ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறி
ஆர்ந்துளக டன்கள் வாங்கவும றிந்து
ஆண்டுபல சென்று கிடையோடே

அருணகிரிநாதர் 109.9
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து
ஒய்ந்துணர்வ ழிந்து உயிர்போமுன் ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து
ஊன்றியப தங்கள் தருவாயே
வேங்கையுமு யர்ந்த தீம்புனமி ருந்த
வேந்திழையி னின்ப oSoost வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
வேண்டியப தங்கள் புரிவோனே
மாங்கனியு டைந்து தேங்கவயல் வந்து
மாண்புநெல்வி ளைந்த வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற
மாந்துறைய மர்ந்த பெருமாளே.
வயலூர்
9 0
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் கண்களாலே என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் தொந்தநோயை என்னா லொரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் இங்குநானார்
கன்னா ருரித்தனன் மன்னா எனக்குநல்
கர்னா மிர்தப்பதம் தந்தகோவே கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் கண்டவேலா
மன்னா னதக்கனை முன்னாள் முடித்தலை
வன்வா ளியிற்கொளும் தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு தம்பிரானே.

Page 159
00 திருப்புகழ்
9 கடல்போற் கனைவிழி சிலைபோற் பிறைநுதல்
கனிபோற் றுகிரிதழ் எழிலாகும் கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை
கடிபோற் பணியரை யெனவாகும் உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ
ளுடையாற் கெறுவித நடையாலும் ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்
ஒழியாத் துயரது தவிரேனோ குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி
கொளிவாய்ப் பலஅல கைகள்பேய்கள் கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்
குடியேற் றியகுக வுயர்தாழை மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி
வயலூர்ப் பதிதனி லுறைவோனே மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை
மகள்மேற் ப்ரியமுள பெருமாளே.
9 2
கமலத் தேகு லாவு மரிவையை
நிகர்பொற் கோல மாதர் மருள்தரு கலகக் காம நூலை முழுதுண ரிளைஞோர்கள் கலவிக் காசை கூர வளர்பரி மளகற் பூர துாம கனதன கலகத் தாலும் வானி னசையுமி னிடையாலும்
விமலச் சோதி ரூப இமகர
வதனத் தாலு நாத முதலிய விரவுற் றாறு கால்கள் சுழலிருள் குழலாலும் வெயிலெப் போதும் வீசு மணிவளை
அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர் விழியிற் பார்வை யாலு மினியிடர் படுவேனோ
சமரிற் பூதம் யாளி பரிபிணி
கனகத் தேர்கள் யானை யவுணர்கள் தகரக் கூர்கொள் வேலை விடுதிற லுருவோனே

அருணகிரிநாதர் 10
சமுகப் பேய்கள் வாழி யெனளதிர் புகழக் கானி லாடு பரிபுர சரணத் தேக வீர அமைமன மகிழ்வீரா
அமரர்க் கீச னான சசிபதி
மகள்மெய்த் தோயு நாத குறமக ளணையச் சூழு நீத கரமிசை யுறுவேலா அருளிற் சீர்பொ யாத கணபதி
திருவக் கீசன் வாழும் வயலியி
னழகுக் கோவில் மீதில் மருவிய பெருமாளே.
9 3 கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
களையுற்று மாயாது மந்த்ரவாதக் கடைகெட்ட ஆடாத முறுசித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது கொண்டுபூணுஞ்
சமயத்த ராசார நியமத்தின் மாயாது
சகளத்து ளேநாளு நண்புளோர்செய் சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
சலனப்ப டாஞானம் வந்துதாராய்
அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக
மதுதுக்க மேயாக மிஞ்சிடாமல் அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர்
அருணச்சி காநீல கண்டபார
மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமிநி
மலநிட்க ளாமாயை விந்துநாதம் வரசத்தி மேலான பரவத்து வேமேலை
வயலிக்குள் வாழ்தேவர் தம்பிரானே.
914
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
மருவு முருவமு மலமல மழகொடு குலவு பலபணி பரிமள மறுசுவை மடைபாயல்
குளிரி லறையக மிவைகளு மலமல
மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல மொருநாலு

Page 160
O2 திருப்புகழ்
சுருதி வழிமொழி சிவகலை யலதினி யுலக கலைகளு மலமல மிலகிய தொலைவி லுனைநினை பவருற வலதினி
யயலார்பால் சுழல்வ திணிதென வசமுடன் வழிபடு முறவு மலமல மருளலை கடல்கழி துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற
அருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகு மொகுவென முகுற ககபதி முகில்திகழ் முகடதில் விகட இறகுகள் பறையிட அலகைகள் Bl LDTL
விபுத ரரகர சிவசிவ சரனென
விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும்
வடிவேலா
மருது நெறுநெறு நெறுவென முறிபட
வுருளு முரலொடு தவழரி மருகசெ வனச மலர்சுனை புலிநுழை முழையுடை யவிராலி
மலையி லுறைகிற அறுமுக குருபர
கயலு மயிலையு மகரமு முகள்செநெல் வயலி நகரியி லிறையவ அருள்தரு பெருமாளே.
9 5
குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை
பிடியோநடை குறியீர் தனி செறியீரினி யென்றுபாடிக் குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை
குலையாவல்கு லளையாவிரு கொங்கைமீதிற்
பயிலாமண மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்
பகையேயென நினையாதுற நண்புகூரும் பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர
பதிநேருநி னருளால்மெயு ணர்ந்திடேனோ

அருணகிரிநாதர் 03
வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன
வசையேழபரி ரவிசேயெனு மங்கராசன் விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன்
விதிதேடிய திருவாளிய ரன்குமாரா
அயலூருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை
யகிலாரம தெறிகாவிரி வண்டல்மேவும் அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர
அமராபதி யதில்வாழ்பவர் தம்பிரானே.
9 6
கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங்
கோதை மாதர் முலைக்குங் குறியாலுங் கோல மாலை வளைக்குந் தோளி னாலு மணத்தங்
கோதி வாரி முடிக்குங் குழலாலும்
ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண்
டாசை யாயினு நித்தந் தளராதே ஆசி லாத மறைக்குந் தேடொ னாதொ ருவர்க்கொன் றாடல் தாள்க ளெனக்கின் றருள்வாயே
சேவி லேறு நிருத்தன் தோகை பாக னளிக்குந்
த்யாக சீல குணத்தன் திருமாலும் தேடொ ணாத பதத்தன் தீதி லாத மனத்தன்
தேயு வான நிறத்தன் புதல்வோனே
காவி டாத திருச்செங் கோடு நாடு தனக்குங்
காவி சூழ்வ யலிக்கும் ப்ரியமானாய் காதிமோதி யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்குங்
கால னாடல் தவிர்க்கும் பெருமாளே.
9 17
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளினைநி னைப்பி லடியேனைத்
தாதவிழ்க டுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி யவிராலி

Page 161
04 திருப்புகழ்
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவெனஅ ழைத்தென் மனதாசை மாசினைய றுத்து ஞானமுத ஸரித்த
வாரமினி நித்த மறவேனே காமனையெ ரித்த தீநயன நெற்றி
காதியசு வர்க்க நதிவேணி கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் குருநாதா சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று வயலுாரா துடிய தடக்கை வேல்கொடுவி டுத்து
துர்தலை துணித்த பெருமாளே.
9 8 திருவு ரூப நேராக அழக தான மாமாய
திமிர மோக மானார்கள் கலைமூடுஞ் சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி
செருகு மால னாசார வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு
கனவி லாள்சு வாமிநின் மயில்வாழ்வுங் கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
கழலு நீப வேல்வாகு மறவேனே சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி
சயில நாரி பாகாதி புதல்வோனே சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை
சகச மான சாரீசெ யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ னாவான
வரையில் வீசு தாள்மாயன் மருகோனே மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை
வயலி மீது வாழ்தேவர் பெருமாளே.
9 9
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ நெட்டை யினைவிழி கணையோ பினையோ
இனிதுாறும்

அருணகிரிநாதர் 105
நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
சுத்த மிடறது வளையோ கமுகோ நிற்கு மிளமுலை குடமோ மலையோ
அறவேதேய்ந்
தெய்த்த இடையது கொடியோ துடியோ
மிக்க திருவரை அரவோ ரதமோ இப்பொ னடியினை மலரோ தளிரோ எனமாலாய் இச்சை விரகுடன் மடவா ருடனே
செப்ப மருளுட னவமே திரிவேன் ரத்ன பரிபுர இருகா லொருகால் மறவேனே
புத்த ரமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீ றிடவே புக்க அனல்வய மிகர டுயவே உமையாள்தன் புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமா புரம்வாழ் பொற்ப கவுணியர் பெருமா னுருவாய்
வருவோனே
சத்த முடையவுண் முகனே குகனே
வெற்பி லெறிசுட ரயில்ா மயிலா சத்தி கணபதி யிளையா யுளையா யொளிகூருஞ் சக்ர தரஅரி மருகா முருகா
உக்ர இறையவர் புதல்வா முதல்வா தட்ப முளதட வயலூ ரியலூர் பெருமாளே
9 20
முலைமறைக்கவும் வாசலி லேதலை
மறைய நிற்கவும் ஆசையு ளோரென முகிழ்ந கைச்சிறு தூதினை யேவவு முகமோடே முகம முத்தவும் ஆசைகள் கூறவு
நகம ழுத்தவும் லீலையி லேயுற முறைம சக்கவும் வாசமு லாமல ரனைமீதே
கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர்
உடல்ச ளப்பட நாள்வழி நாள்வழி கறைய பூழிக்கவு நானென வேயணி விலையிதே

Page 162
06 திருப்புகழ்
கடிய சத்திய மாமென வேசொலி
யவர்கொ டப்பண மாறிட வீறொடு கடுக டுத்திடு வாரொடு கூடிய தமையாதோ
மலையை மத்தென வாசுகி யேகடை
கயிறெ னத்திரு மாலொரு பதியு மருவு மற்றது வாலியு மேலிட அலையாழி வலய முட்டவொ ரோசைய தாயொலி
திமிதி மித்திமெ னாவெழ வேயலை மறுகி டக்கடை யாவெழ மேலெழு மமுதோடே
துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள
வயலை யற்புத னேவினை யானவை தொடர றுத்திடு மாரிய கேவலி DGS GT SITT துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு
மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு
துகள றுத்தணி யாரழ காசுரர் பெருமாளே.
92
மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி வேல்விழி புரட்டிக் காட்டி யழகாக மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி
வீடுக ளழைத்துக் காட்டி மதராசன் ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி
யாரொடு நகைத்துக் காட்டி விரகாலே ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட ஆசையை யவர்க்குக் காட்டி யழிவேனோ
மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி
மூதமிழ் முனிக்குக் கூட்டு குருநாதா மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு
மூரிவில் மதற்குக் காட்டு வயலுாரா
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி வாழ்மயில் நடத்திக் காட்டு மிளையோனே மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி வானவர் சிரத்தைக் காத்த பெருமாளே.

அருணகிரிநாதர் O7
922
வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம
ராஜ நடையினு மம்பதி னும்பெரு வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு மரிதான வாரியமுதுபொ சிந்துக சிந்தசெ
வாயு நகைமுக வெண்பலு நண்புடன் வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய பனிநீருந்
துாளி படுநவ குங்கும முங்குளி
ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம சோதி வளர்வன கொங்கையு மங்கையு மெவரேனுந் தோயு மளறெனி தம்பமு முந்தியு
மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில் துளை யரையெதிர் கண்டும ருண்டிட
லொழிவேனோ
காளி திரிபுரை யந்தரி சுந்தரி
நீலி கவுரிப யங்கரி சங்கரி காரு னியசிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி காதல் மனைவிப ரம்பரை யம்பிகை
ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை கான நடனமு கந்தவள் செந்திரு அயன்மாது
வேளி னிரதிய ருந்ததி யிந்திர
தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ளிளையோனே வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர் தீர வருள்தரு கந்தநி ரந்தர மேலை வயலையு கந்துள நின்றருள் பெருமாளே
9 2 3
விகட பரிமள ம்ருகமத இமசல
வகிர படிரமு மளவிய களபமு மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில்
உலவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர் கலவி விதவிய னரிவையர் மருள்வலை

Page 163
08 திருப்புகழ்
யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர்
விரவு நவமணி முகபட எதிர்பொரு புரண புளசித இளமுலை யுரமிசை தைக்கக் கழுத்தொடுகை யொக்கப்பி னித்திறுகி
யன்புகூர
விபுத ரமுதென மதுவென அறுசுவை
அபரி மிதமென இலவிதழ் முறைமுறை துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின்
வரையு முறைசெய்து முனிவரு மனவலி கரையு மரிசன பரிசன ப்ரியவுடை தொட்டுக்கு லைத்துதுதல் பொட்டுப்ப டுத்திமதர் விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு
புந்திமூழ்கிப்
புகடு வெகுவித கரணமு மருவிய
வகையின் முகிலென இருளென வனமென ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய
அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை குமுத பதிகலை குறைகலை நிறைகலை சித்தத்த ழுத்தியது வர்க்கத்து ருக்கியொரு
பொழுதும் விடலாரி தெனுமது பவமவை முழுது மொழிவற மருவிய கலவியி தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில்
நைந்துசோரப்
புணரு மிதுசிறு சுகமென இகபரம்
உணரு மறிவிலி ப்ரமைதரு திரிமலம் அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில்
மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய் உணர்வு முணர்வுற வழுவற வொருஜக வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை
புகலு மநுபவ வடிவினை யளவறு அகில வெளியையு மொளியையு மறிசிவ தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை
யென்றுசேர்வேன்

அருணகிரிநாதர் 09
திகுட திகுகுட திகுகுட திகுகுட
தகுட தகுகுட தகுகுட தகுகுட திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
Dl-, -sbf). L.Ds) -ss) - டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி
என்றுபோரி
திமிலை கரடிகை பதலைச லாரிதவில்
தமர முரசுகள் குடமுழ வொடுதுடி சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர
அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி குசல பசுபதி குருவென விருதுகள் ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கனழு
சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென மகர சலநிதி மொகுமொகு மொகுவென எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற நின்றசேடன்
மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென
அகில புவனமும் ஹரஹர ஹரவென நசுஷ்த்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண
நிருதர் தலையற வடிவெனு மலைசொரி குருதி யருவியின் முழுகிய கழுகுகள் பக்கப்ப முத்தவுடல் செக்கச்சி வத்துவிட
வயிறு சரிகுடல் நரிதின நிணமவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் பசுஷித்து நிர்த்தமிட ரகூஷித்த லைப்பரவி யும்பர்வாழ
மடிய அவுனர்கள் குரகத கஜரத
கடக முடைபட வெடிபட எழுகிரி அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ
நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற அமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசை

Page 164
O திருப்புகழ்
அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன்
வயலி நகருறை சரவண பவகுக இயலு மிசைகளு நடனமும் வகைவகை
சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள்
தம்பிரானே.
9 24
அரிமரு கோனேநமோவென் றறுதியிலானேநமோவென்
றறுமுக வேளே நமோவென் றுனபாதம் அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே
நமோவென் றருனசொ ரூபா நமோவென் றுளதாசை
பரிபுர பாதா சுரேசன் றருமக னாதா வராவின்
பகைமயில் வேலா யுதாடம் பரநாளும் பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழைநானுன் பதிபசு பாசோப தேசம் பெறவேணும்
கரதல துலாயு தாமுன் சலபதி போலார வாரங்
கடினசு ராபான சாமுண் டியுமாடக் கரிபாரி மேலேறு வானுஞ் செயசெய சேனாப தீயென் களமிசை தானேறி யேயஞ் சியதுரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
குடல்கொள வேபூச லாடும் பலதோளா குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி தழுங்
குளிர்வய லூரார மேவும் பெருமாளே.
9 25
ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி
யாடையணி காட்டி அநுராக ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி
ஆதரவு காட்டி எவரோடும்
ஈரநகை காட்டி நேரமிகை காட்டி
யேவினைகள் காட்டி uD@nJ FT Lqஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி
யீடழிதல் காட்ட லமையாதோ

அருணகிரிநாதர்
வீரவப ராட்டு துரர்படை காட்டில்
வீழனலை யூட்டி மயிலுார்தி வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு
வேளைவிளை யாட்டு வயலூரா
சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட
சீலிகுற வாட்டி OGSÅGS TG6YTT தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி
தேவர்சிறை மீட்ட பெருமாளே.
926
இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத
மத்தக்க ளிற்றையெதிர் புளகதன மிளகஇனி தெட்டிக்க முத்தொடுகை
கட்டிப்பி னித்திறுகி யிதழ் பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி
முத்தத்தை யிட்டுநக தந்தமான
இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையி
லெற்றிக்க லக்கமுற இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது
தொட்டுத்தி ரித்துமிக இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி
செக்கச்சி வக்கவளை செங்கைசோர
அகருவிடு ம்ருகமதம னத்துக்க னத்தபல
கொத்துக்கு ழற்குலைய மயில்புறவு குயில்ஞமிறு குக்கிற்கு ரற்பகர
நெக்குக்க ருத்தழிய அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண
வர்க்கத்தி னிற்புணரு மின்பவேலை
அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர
கட்டுப்பொ றிச்சியர்கள் மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை
யுற்றுத்து திக்கும்வகை அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில்
ரகூழித்த ளித்தருள்வ தெந்தநாளோ

Page 165
2 திருப்புகழ்
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட
தத்தித்த ரித்தகுட செகணசெக சகனசக செக்கச்செ கச்செகன
சத்தச்ச கச்சகன திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி
தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி
தத்தித்த ரித்தரிரி டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி
டட்டட்ட குட்டகுட தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை
பக்கக்க னப்பறைத வண்டைபோரி
வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை
பக்கத்தி னிற்சரிய எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி
விட்டத்த மித்ததென வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளரித்துழுது
தொக்குக்கு னிப்புவிட வென்றவேலா வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி
சித்ரப்ர சித்தமுறு அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி
தத்வத்தி றச்சிகர வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி
தப்பற்று ரைக்கவல தம்பிரானே
927
இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்
கலைகள் பலவறி தெருளிகள் மருளிக ளெயிறு கடிபடு முதடிகள் பதடிகள் எவரோடும் இனிய நயமொழி பழகிக ளழகிகள்
மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள் யமனு மிகையென வழிதரு முழிதரும் விழிவாளால்
உலக மிடர்செயு நடலிகள் மடலிகள்
சிலுகு சிலரொடு புகலிக ளிகலிக ளுறவு சொலவல துரகிகள் விரகிகள் பிறைபோலே

அருணகிரிநாதர் 1 3
உகிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
பகடி யிடவல கபடிகள் முகடிகள் உணர்வு கெடும்வகை பருவிக ஞருவிக ஞறவாமோ
அலகை புடைபட வருவன பொருவன
கலக கணநிரை நகுவன தகுவன அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன பொடியாடி அலரி குடதிசை யடைவன குடைவன தரும வநிதையு மகிழ்வன புகழ்வன அகில புவனமு மரகர கரவென அமர்வேள்வி
திலத நுதலுமை பணிவரு செயமகள்
கலையி னடமிட வெரிவிரி முடியினர் திரள்ப லுயிருடல் குவடுக ளெனநட மயிலேறிச் சிறிது பொழுதினி லயில்விடு குருபர அறிவு நெறியுள அறுமுக இறையவ த்ரிசிர கிரியயல் வயிலியி லினிதுறை பெருமாளே.
திருத்தவத்துறை
9 28
காரணி யுங்குழ லைக்கு வித்திடு
கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர் காணவ ருந்திமு டித்தி டக்கடு விரகாலே காதள வுங்கய லைப்பு ரட்டிம
னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி காமுக ரன்புகு வித்த கைப்பொரு ளுறவாகிப்
பூரண கும்பமெ னப்பு டைத்தெழு சீதள குங்கும மொத்த சித்திர பூஷித கொங்கையி லுற்று முத்தணி பிறையான போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்
யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட அருள்வாயே
வீரபு யங்கிரி யுக்ர விக்ரம
பூத கணம்பல நிர்த்த மிட்டிட வேக முடன்பறை கொட்டி டக்கழு கினமாட

Page 166
4 திருப்புகழ்
வீசிய பமபர மொப்பெ னக்கிளி
வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர் வேதப ரம்பரை யுட்க ளித்திட வரும்வீரா
சீரணி யுந்திரை தத்து முத்தெறி
காவிரி யின்கரை மொத்து மெத்திய சீர்புனை கின்றதி ருத்த வத்துறை வரும்வாழ்வே சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் பெருமாளே.
92.9
நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்
பொறுத்த வெற்பினை மார்முலை மேலணி நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி முகமானார் நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை
யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல் நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு நெறியாலே கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்
வலைக்கு ஸ்ரிற்சுழ லாவகை யேயுன கழற்று தித்திடு வாழ்வது தான்மன துறமேவிக்
கதித்த பத்திமை சாலடி யார்சபை
மிகுத்தி பூழிக்குண பாதக னேனுயர் கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ளுரையாதோ
வரைத்த நுக்கரர் மாதவ மேவின
ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய
வடிவேலா மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ
ருரைத்து ளத்திரு வாசக மானது மனத்து ளெத்தழ கார்புகழ் விசிய மணிமாடத்
திரைக்க டற்பொரு காவிரி மாநதி
பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை குவையாகச்

அருணகிரிநாதர் 5
செருக்கு செய்ப்பதி வாழ்முரு காவறம்
வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி திருத்த வத்துறை மாநகர் தானுறை பெருமாளே.
பூவாளூர்
9 30 காலன் வேற்கனை யீர்வா ளாலமு
நேர்க னாற்கொலை தழ்மா பாவிகள் காம சாத்திர வாய்பா டேணிக ளெவரேனுங் காத லார்க்கும்வி னாவாய் கூறிகள் போக பாத்திர மாமூ தேவிகள் காசு கேட்டிடு மாயா ரூபிக ளதிமோக
மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்
ஆனை போற்பொர நேரே போர்முலை மார்பு காட்டிகள் நானா பேதக மெனமாயா மாப ராக்கிக ளோடே சீரிய
போது போக்குத லாமோ நீயினி வாவெ னாப்பரி வாலே யாள்வது மொருநாளே
பால றாத்திரு வாயா லோதிய
ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய் பாடல் தோற்றிரு நாலா மாயிர சமண்மூடர் பாரின் மேற்கமு மீதே யேறிட
நீறி டாத்தமிழ் நாடீ டேறிட பாது காத்தரு ளாலே கூனிமி ரிறையோனும்
ஞால மேத்திய தோர்மா தேவியும்
ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு ஞான பாக்கிய பாலா வேலவ மயில்வீரா ஞான தீக்ஷத சேயே காவிரி
யாறு தேக்கிய கால்வாய் மாமழ
நாடு போற்றிய பூவா ஞருறை பெருமாளே.
திருப்பராய்த்துறை
9 3 வாசனை மங்கையர் போற்று சிற்றடி
பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட மாமலை ரண்டென நாட்டு மத்தக முலையானை

Page 167
6 திருப்புகழ்
வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை
நூலிடை நன்கலைதேக்க இக்குவில் மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு விழியார்கள்
நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர்
தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ நீசனெ லும்படி யாக்கி விட்டொரு பினியான
நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட
யோகமி குந்திட நீக்கி யிப்படி நீயக லந்தனில் வீற்றி ருப்பது மொருநாளே
தேசம டங்கலு மேத்து மைப்புய
லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர தேகமி லங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே
தீரனெ லும்படி சாற்று விக்ரம
துரண் டுங்கிட வாய்த்த வெற்புடல் தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர்வேலா
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
லாசனன் வந்துல காக்கி வைத்திடு வேதன கந்தையை மாற்றி முக்கண ரறிவாக
மூதறி வுந்திய தீகூைடி செப்பிய
ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத மூவரி லங்குப ராய்த்து றைப்பதி பெருமாளே.
தென்கடம்பந்துறை
9 32
புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்
கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும் புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப்
பெறிவேலும் பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன்
றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம் புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக்
குழைமோதிக்

அருணகிரிநாதர் 1 7
குனலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும் படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங் கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக்
கணினார்பால் குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்
த்ரிவிதகர னங்களுங் கந்தநின் செம்பதங் குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற்
றமைவேனோ
துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும் புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந் தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத்
திருதோளுந் தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும் பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந் துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்று செய்ப் பதிவாழ்வாய்
கணபனபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்
குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங் கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் குருநாதா
கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்
குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங் கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப்
பெருமாளே. கருவூர்
9 33 மதியால்வித் தகனாகி -மனதாலுத் தமனாகிப் பதிவாகிச் சிவஞான -பரயோகத் தருள்வாயே நிதியேநித் தியமேயென் -நினைவேநற் பொருளாயோய் கதியேசொற் பரவேளே -கருவூரிற் பெருமாளே.
9 34
சஞ்சல சரித பரநாட்டர்கள்
மந்திரி குமரர் படையாட்சிகள் சங்கட மகிபர் தொழஆக்கினை முடிதுடித்

Page 168
8 திருப்புகழ்
தண்டிகை களிறு பரிமேற்றணி
வெண்குடை நிழலி லுலவாக்கன சம்ப்ரம விபவ சவுபாக்கிய முடையோராய்க்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
பஞ்சனை மிசையி லிசையாத்திரள் கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய மியல்கீதங் கொங்கணி மகளிர் பெருநாட்டிய
நன்றென மனது மகிழ்பார்த்திபர் கொண்டய னெழுதும் யமகோட்டியை யுணராரே
பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்
வென்றிட சகுனி கவறாற்பொருள் பங்குடை யவனி பதிதோற்றிட அயலேபோய்ப் பண்டையில் விதியை நினையாப்பனி
ரண்டுடை வருஷ முறையாப்பல பண்புடன் மறைவின் முறையாற்றிரு வருளாலே
வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
முந்துத முடைய மனைவாழ்க்கையின் வந்தபி னுரிமை யதுகேட்டிட இசையாநாள் மண்கொள விசையன் விடுதேர்ப்பரி யுந்தினன் மருக வயலூர்க்குக
வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் பெருமாளே.
9 35
முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவ
முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ வநுபோக முலைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி
கூப்பிட
முகுளித பங்கய மாக்கர நுதல்சேரத்
துயரொழு குஞ்செல பாத்திர மெலியமி குந்துத
ராக்கினி
துவளமு யங்கிவி டாய்த்தரி வையர்தோளின் துவயலி நின்றன வியாத்தமும் வயலியல் வஞ்சியில்
மேற்பயில்
சொருபமு நெஞ்சிலி ராப்பகல் மறவேனே

அருணகிரிநாதர் 119
சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள்
சரவண சம்பவ தீர்க்கவுண் முகமாகிச் சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை
வேற்கொடு சமரமு கந்தனில் நாட்டிய மயிலேறி
அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத
வசுரர கங்கெட வார்த்திடு கொடிகூவ அமரர டங்கலு மாட்கொள வமரர் த லங்குடி யேற்றிட வமரரை யுஞ்சிறை மீட்டருள் பெருமாளே.
9 36
இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி
யிரதக் குடத்தையெணு மரபோடே இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய
இதழ்சர்க்க ரைப்பழமொ டுறமூறல் முளரிப்பு வொத்தமுக முகம்வைத் தருத்திநல
முதிரத்து வற்பஅல்குல் மிசைமூழ்கி மொழிதத்தை யொப்பகடை விழிகட் சிவப்பமளி
முழுகிச்சு கிக்கும்வினை யறஆளாய் நளினப் பதக்கழலு மொளிர்செச்சை பொற்புயமெ
னயனத்தி லுற்றுநட மிடும்வேலா நரனுக் கமைத்தகொடி யிரதச்சு தக்களவ
னறைபுட்ப நற்றுளவன் மருகோனே
களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக
கமலப்புயத்துவளி go GT கடலைக் குவட்டவுனை யிரணப் படுத்தியுயர்
கருவைப் பதிக்குளுறை பெருமாளே.
937
தசையா கியகற் றையினால் முடியத்
தலைகா லளவொப் பனையாயே தடுமா றுதல்சற் றொருநா ஞலகிற்
றவிரா வுடலத் தினைநாயேன்

Page 169
20 திருப்புகழ்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
படுபூ ரணநிட் 956) of பதிபா வனையுற் றநுபூ தியிலப்
படியே யடைவித் தருள்வாயே அசலே சுரர்புத் திரனே குணதிக்
கருனோ தயமுத் தமிழோனே அகிலா கமவித் தகனே துகளற்
றவர்வாழ் வயலித் திருநாடா கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
கமலா லயன்மைத் துனவேளே கருணா கரசற் குருவே குடகிற்
கருவூ ரழகப் பெருமாளே
9 38
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு நிற்பொற் ககனமொ டாமிவை பூதக லவைமேவி நிற்கப் படுமுல காளவு மாகரி
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
வுற்றுத் தெளிவுன ராதுமெய் ஞானமொ டிச்சைப்பட அறியாதுபொய் மாயையி லுழல்வேனை எத்திற் கொடுநின தாரடி யாரொடு
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற இனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட வெனடேரிச் சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட சர்ப்பச் சதமுடி நானிட வேலதை யெறிவோனே வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
சத்திக் கிடமருள் தாதகி வேனியர் வெற்புப் புரமது நீறெழ காணிய ரருள்பாலா

அருணகிரிநாதர் 121
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய பெருமாளே.
9 39
முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணயலென மொட்பைவி ளைத்து முறையளித் திடுமாதர் முத்தமி ரத்ன மரகதம் வைத்தவி சித்ர முகபட
மொச்சிய பச்சை யகில்மணத் தனபாரம்
கட்டிய னைத்து நகதுதி பட்டக முத்தி லிறுகிய
கைத்தல மெய்த்து வசனமற் றுயிர்சோருங் கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித
கற்பனை பசுஷ் முடனளித் தருளாதோ வெட்டிய கட்க முனைகொடு வட்டகு னத்து ரனமுக
விக்ரம வுக்ர வெகுவிதப் படைவீரா வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு
மிகமகிழ் வித்தக சித்த வயலியிற் குமரேசா கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு
கித்திந டக்கு மலகைசுற் றியவேலா கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி
கெர்ப்பபு ரத்தி லறுமுகப் பெருமாளே.
நெருவூர்
9 40
குருவு மடியவ ரடியவ ரடிமையு
மருண மணியணி கனயண விதகர குடில செடிலினு நிகரென வழிபடு குணசீலர் குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுத
லழுகு தலுமிலி நலமிலி பொறையிலி குசல கலையிலி தலையிலி நிலையிலி விலைமாதர்
மருவு முலையெனு மலையினி லிடறியு மளக மெனவள ரடவியில் மறுகியு மகர மெறியிரு கடலினில் முழுகியு முழலாமே

Page 170
22 திருப்புகழ்
வயலி நகரியி லருளபெற மயில்மிசை
யுதவு பரிமள மதுகர வெகுவித வனச மலரடி கனவிலு நனவிலு மறவேனே
உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு மருது நெறிபட முறைபட வரைதனி லுரலி னொடுதவழ் விரகுள இளமையு மிகமாாரி உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி
கவிகை யிடவல மதுகையு நிலைகெட வுலவில் நிலவறை யுருவிய வருமையு மொருநூறு
நிருப ரனமுக வரசர்கள் வலிதப
விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு நிகில செகதல முரைசெயு மரிதிரு மருகோனே நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய நெருவை நகருறை திருவுரு வழகிய பெருமாளே.
திருவெஞ்சமாக்கூடல்
94
வண்டுபோற் சாரத் தருள்தேடி மந்திபோற் காலப் பிணிசாடிச் செண்டுபோற் பாசத் துடனாடிச் சிந்தைமாய்த் தேசித் தருள்வாயே தொண்டராற் காணப் பெறுவோனே துங்கவேற் கானத் துறைவோனே மிண்டராற் கானக் கிடையானே வெஞ்சமாக் கூடற் பெருமாளே.
திருப்பாண்டிக்கொடுமுடி
9 4 2
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி இடர்கள்பட் டலையப் புகுதாதே திருவருட் கருனைப் ப்ரபையாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ

அருணகிரிநாதர்
23
அரியயற் கறிதற் கரியானே அடியவர்க் கெளியற் 53.5uT குருவெனச் சிவனுக் கருள்போதா கொடுமுடிக் குமரப் பெருமாளே.
943
காந்தட் கரவளை சேந்துற் றிடமத
காண்டத் தரிவைய ருடனுாரி காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறி
காண்டற் கநுபவ விதமேவிச் சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில்
சாய்ந்திட் டயில்விழி குழைமீதே தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி
தாங்கித் தழுவுத லொழியேனோ மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்
வாஞ்சைப் படியருள் வயலுாரா வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை
மான்சிற் றடிதொழு மதிகாமி பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய
பாண்டிக் கொடுமுடி யுடையாரும் பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு
பாண்சொற் பரவிய பெருமாளே.
சேலம்
944
பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற் றதனாலே பனிபடு சோலைக் குயிலதூ கூவக்
குழல்தணி யோசைத் தரலாலே மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
தனிமிக வாடித் தளராதே மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு காவுற் றனைவாயே

Page 171
124 திருப்புகழ்
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
தொடுகும ராமுத் தமிழோனே கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
திருவளர் சேலத் தமர்வோனே பொருகிரி துரக் கிளையது மாளத்
தனிமயி லேறித் திரிவோனே புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி நோதப் பெருமாளே.
ராஜபுரம்
945
சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
தண்டு மாகிரி பெற்றவன் வெகுகோடிச் சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி
சண்ட மாருத மற்றுள கவிராஜப்
பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர
பந்த போதமு ரைத்திடு புலவோன்யான் பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில
பஞ்ச பாதக ரைப்புகழ் செயலாமோ
வெங்கை யானைவ னத்திடை துங்க மாமுத லைக்குவெ
ருண்டு மூலமெ னக்கரு டனிலேறி விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி
தம்ப ராவஅ டுப்பவன் மருகோனே
கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னுாடுசு கித்திடு
கொங்கின் வீரக னப்ரிய குமராபொற் கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி கொங்கு ராஜபு ரத்துறை பெருமாளே.
விஜயமங்கலம்
946
கலக சம்ப்ரமத் தாலேவி லோசன
மலர்சி வந்திடப் பூணார மானவை கழல வண்டெனச் சாரீரம் வாய்விட அபிராம

அருணகிரிநாதர் 25
கனத னங்களிற் கோமள மாகியெ
பலந கம்படச் சீரோடு பேதக கரண முஞ்செய்துட் பாலூறு தேனித ழமுதுாறல்
செலுவி மென்பனைத் தோளோடு தோள்பொர நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர் செருகு முந்தியிற் போய்வீழு மாலுட னநுராகந்
தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி
லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய் திடினு நின்கழல் சீர்பாத நாணினி மறவேனே
உலக கண்டமிட் டாகாச மேல்விரி
சலதி கண்டிடச் சேராய மாமவ ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் மகவாயும்
உணர்சி றந்தசக் ராதார நாரணன் மருக மந்திரக் காபாலி யாகிய உரக கங்கணப் பூதேசர் பாலக வயலுTரா விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென இணையு மங்குறப் பாவாய்வி யாகுலம் விடுவிடென்றுகைக்கூர்வேலையேவிய இளையோனே விறல்சு ரும்புநற் க்ரீதேசி பாடிய
வுரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் பெருமாளே.
சிங்கை (காங்கேயம்)
947
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற
தண்குவளை யுந்து குழலாலுந் தண்டரள தங்க மங்கமணி கின்ற
சண்டைவித கும்ப கிரியாலும்
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
நம்பிவிட நங்கை யுடனாசை நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி வரவேனும்

Page 172
126 திருப்புகழ்
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்திகமழ் கின்ற கழலோனே கன்றிடுபி னங்கள் தின்றிடுக னங்கள்
கண்டுபொரு கின்ற கதிர்வேலா செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
திண்குயம ணைந்த திருமார்பா செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
சிங்கையில மர்ந்த பெருமாளே.
948
சந்திதொறு நாண மின்றியகம் வாடி
உந்திபொரு ளாக அலைவேனோ சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
தங்கள்வச மாகி அலையாமற்
சுந்தரம தாக எந்தன்வினை யேக
சிந்தைகளி கூர அருள்வாயே தொங்குசடை மீது திங்களனி நாதர்
மங்கைரண காளி தலைசாயத் தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
என்றுநட மாடு மவர்பாலா துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
மங்களம தாக அனைவோனே
கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
அந்தமுனை வேல்கொ டெறிவோனே கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
சிங்கைநகர் மேவு பெருமாளே.
பட்டாலியூர்
949
இருகுழை யிடறிக் காது மோதுவ
பரிமள நளினத் தோடு சீறுவ இணையறு வினையைத் தாவி மீளுவ வதிதுர

அருணகிரிநாதர் 127
எமபடர் படைகெட் டோட நாடுவ
அமுதுடன் விடமொத் தாளை யீருவ ரதிபதி கலைதப் பாது தழுவ முனிவோரும்
உருகிட விரகிற் பார்வை மேவுவ
பொருளது திருடற் காசை கூறுவ யுகமுடி விதெனப் பூச லாடுவ வடிவேல்போல்
உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்
மயல்தரு கமரிற் போய்வி ழாவகை உனதடி நிழலிற் சேர வாழ்வது மொருநாளே
முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
மரகத கிரணப் பீலி மாமயில் முதுரவி கிரணச் சோதி போல்வய லியில்வாழ்வே
முரண்முடி யிரணச் சூலி மாலினி
சரனெனு மவர்பற் றான சாதகி முடுகிய கடினத் தாளி வாகினி மதுபானம்
பருகினர் பரமப் போக மோகினி
அரகர வெனும்வித் தாரி யாமளி பரிபுர சரணக் காளி கூளிகள் நடமாடும்
பறையறை சுடலைக் கோயில் நாயகி
இறையொடு மிடமிட் டாடு காரணி
பயிரவி யருள்பட் டாலி யூர்வரு பெருமாளே.
950
கத்தூரி யகரு ம்ருமகத வித்தார படிர இமசல
கற்பூர களப மணிவன மணிசேரக் கட்டார வடமு மடர்வன நிட்டுர கலக மிடுவன
கச்சோடு பொருது நிமிர்வன தனமாதர்
கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு
கொற்சேரி யுலையில் மெழுகென வுருகாமே கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை
யுடன் முயல்
குற்றேவல் அடிமை செயும்வகை யருளாதோ

Page 173
I28 திருப்புகழ்
அத்துார புவன தரிசன நித்தார கனக நெடுமதி
லச்சான வயலி நகரியி லுறைவேலா அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய
பரவையொ டக்காகி விரக பரிபவ மறவேபார்
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்துாதர் விரவ வருடரு
பற்றாய பரம பவுருஷ குருநாதா பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
பட்டாலி மருவு மமரர்கள் பெருமாளே.
95
சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
சங்கற்பித் தோதும் வெகுவித கலைஞானச்
சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை
யிடுமவர்
சம்பத்துக் கேள்வி யலமல மிமவானின்
மங்கைக்குப் பாக னரிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
வந்திக்கப் பேசி யருளிய சிவநூலின் மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி
யலமலம் வம்பிற்கற் றாது பரகதி யருள்வாயே
வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக
விடவல வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் மருகோனே வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை
விரிபொழில் விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை வயலுாரா
கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு
நறுமலர் கொண்டைக்கொப் பாகும் முகிலென வனமாதைக் கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற்
பாடுமிளையவ கொங்கிற்பட் டாலி நகருறை பெருமாளே.

அருணகிரிநாதர்
திருமுருகன்பூண்டி 952
1129
அவசியமுன் வேண்டிப் பலகாலும் அறிவினுணர்ந் தாண்டுக் கொருநாளில் தவசெபமுந் தீண்டிக் கனிவாகிச் சரணமதும் பூண்டற் கருள்வாயே சவதமொடுங் தாண்டித் தகரூர்வாய் சடுசமயங் காண்டற் களியானே சிவகுமரன்பீண்டிற் பெயரானே திருமுருகன் பூண்டிப் பெருமாளே.
அவிநாசி
95.3
இறவாமற் பிறவாமல் -எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான -பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே -குகனேசொற் குமரேசா அறநாலைப் புகல்வோனே -அவிநாசிப் பெருமாளே.
954 பந்தப்பொற் பாரப யோதர
முந்திச்சிற் றாடகை மேகலை பண்புற்றுத் தாளொடு மேவிய துகிலோடே பண்டெச்சிற் சேரியில் வீதியில்
கண்டிச்சிச் சாரொடு மேவியெ பங்குக்கைக் காசுகொள் வேசியர் பனிநீர்தோய் கொந்துச்சிப் பூவணி கோதையர்
சந்தச்செந் தாமரை வாயினர் கும்பிட்டுப் பாணியர் வீனிய ரநுராகங் கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு
மண்டிச்செச் சேயென வானவர் கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை மறவேனே அந்தத்தொக் காதியு மாதியும்
வந்திக்கத் தானவர் வாழ்வுறும் அண்டத்துப் பாலுற மாமணி ColшгтөrflөdgR

Page 174
30 திருப்புகழ்
அங்கத்தைப் பாவைசெய் தாமென சங்கத்துற் றார்தமி ழோதவு வந்துக்கிட் டார்கழு வேறிட வொருகோடிச்
சந்தச்செக் காளநி சாசரர்
வெந்துக்கத் தூளிப டாமெழ
சண்டைக்கெய்த் தாரம ராபதி குடியேறத்
தங்கச்செக் கோலசை சேவக
கொங்கிற்றொக் காரவி நாசியில் தண்டைச்சிக் காரயில் வேல்விடு பெருமாளே.
955
மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
கறுத்த குஞ்சியு மேநரை யாயிட மலர்க்க னண்டிரு ளாகியு மேநடை தடுமாறி
வருத்த முந்தர தாய்மனை யாள்மக
வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும் வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின நகையாட
எனைக்க டந்திடு பாசமு மேகொடு
சினத்து வந்தெதிர் துலமு மேகையி லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய முறவேதான்
இழுக்க வந்திடு தூதர்க ளானவர்.
பிடிக்கு முன்புன தாள்மல ராகிய இணைப்ப தந்தர வேமயில் மீதினில் வரவேணும்
கனத்த செந்தமி ழால்நினை யேதின
நினைக்க வுந்தரு வாயுன தாரருள் கருத்தி ருந்துறை வாயென தாருயிர் துணையாகக்
கடற்ச லந்தனி லேயொளி துரனை
யுடற்ப குந்திரு கூறென வேயது கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில்
விடும்வேலா
அனத்த னுங்கம லாலய மீதுறை
திருக்க லந்திடு மாலடி நேடிய அரற்க ரும்பொருள் தானுரை கூறிய குமரேசா

அருணகிரிநாதர் 13
அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய பெருமாளே.
திருப்புக்கொளியூர் 956
பக்குவ வாசார லட்சன சாகாதி
பட்சன மாமோன சிவயோகர் பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
பற்றுநி ராதார நிலையாக அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞான வுபதேசம் அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
னற்புத சீர்பாத மறவேனே உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
வுற்பல வீராசி மணநாற ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
யுற்பல ராசீவ வயலுாரா பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகார அவிநாசிப் பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு பெருமாளே.
957
மதப்பட்டவி சாலக போலமு
முகப்பிற்சன வாடையு மோடையு மருக்கற்புர லேபல லாடமு மஞ்சையாரி வயிற்றுக்கிடு சீகர பாணியு
மிதற்செக்கர்வி லோசன வேகமு மணிச்சத்தக டோரபு ரோசமு மொன்றுகோல
விதப்பட்டவெ ளானையி லேறியு
நிறைக்கற்பக நீழலி லாறியும் விஷத்துர்க்கன துளிகை மாளிகை யிந்த்ரலோகம்

Page 175
132 திருப்புகழ்
விளக்கச்சுரர் துழிதர வாழ்தரு
பிரப்புத்வகு மாரசொ ரூபக வெளிப்பட்டெனை யாள்வயலூரிலி ருந்தவாழ்வே
இதப்பட்டிட வேகம லாலய
வொருத்திக்கிசை வானபொ னாயிர மியற்றப்பதி தோறுமு லாவிய தொண்டர்தாள இசைக்கொக்கவி ராசத பாவனை
யுளப்பெற்றொடு பாடிட வேடையி லிளைப்புக்கிட வார்மறை யோனென வந்துகானிற்
றிதப்பட்டெதி ரேபொதி சோறினை
யவிழ்த்திட்டவி நாசியி லேவரு திசைக்குற்றச காயனு மாகிம றைந்துபோமுன் செறிப்பித்தக ராவதின் வாய்மக
வழைப்பித்தபு ராணக்ரு பாகர திருபுக்கொளி யூருடை யார்புகழ் தம்பிரானே.
958 வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்
அழைக்கப்பொரு மார னேவ தாமலர் மருத்துப்பயில் தேரி லேறி மாமதி தொங்கலாக மறுத்துக்கடல் பேரி மோத வேயிசை
பெருக்கப்படை கூடி மேலெ ழாவணி வகுத்துக்கொடு சேம மாக மாலையில் வந்துகாதிக்
கணக்கப்பறை தாய ளாவ நீள்கன
கருப்புச்சிலை காம ரோவில் வாளிகள் களித்துப்பொர வாசம்வி சுவார்குழல் மங்கைமார்கள் கலைக்குட்படு பேத மாகி மாயும
துனக்குப்ரிய மோக்ரு பாக ராஇது கடக்கப்படு நாம மான ஞானம தென்றுசேர்வேன்
புனத்திற்றினை காவ லான காரிகை
தனப்பொற்குவ டேயு மோக சாதக குனித்தப்பிறை துடும் வேணி நாயகர் நன்குமாரா பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்
சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள் புயத்துற்றணி பாவ துர னாருயிர் கொண்டவேலா

அருணகிரிநாதர் 33
சினத்துக்கடி வீசி மோது மாகட
லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி தெறிக்கக்கனை யேவு வீர மாமனும் உந்திமீதே செனித்துச்சதுர் வேத மோது நாமனு மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள்
தம்பிரானே.
திருநணா (பவாநி)
959
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் கடலேறி பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத்
தருவாயே மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் குமரேசா சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற்
பெருமாளே.
பேரூர்
9 60
தீராப் பிணிதீர -சீவாத் துமஞான ஊராட் சியதான -ஒர்வாக் கருள்வாயே பாரோர்க் கிறைசேயே -பாலாக் diff JTC3g. பேராற் பெரியோனே -பேரூர்ப் பெருமாளே.
9 6
மைச்ச ரோருக நச்சு வாள்விழி
மானா ரோடே நானார் நீயா ரெனுமாறு வைத்த போதக சித்த யோகியர்
வாணாள் கோணாள் வீணாள் கானா ரதுபோலே நிச்ச மாகவு மிச்சை யானவை
நேரே தீரா வூரே பேரே பிறவேயென்
நிட்க ராதிகண் முற்பு காதினி
நீயே தாயாய் நாயேன் மாயா தருள்வாயே

Page 176
34 திருப்புகழ்
மிச்ச ரோருக வச்ர பாணியன்
வேதா வாழ்வே நாதா தீதா வயலுாரா வெற்பை யூடுரு வப்ப டாவரு
வேலா சீலா பாலா காலா யுதமாளி பச்சை மாமயில் மெச்ச வேறிய
பாகா துரா வாகா போகா தெனும்விரா பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
பாரூ ராதுழி பேரூ ராள்வார் பெருமாளே.
கொடும்பாளூர்
962
கலைஞரெனுங் கற்புக் கலியுகபந் தத்துக்
கடனபயம் பட்டுக் கசடாகுங் கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
கலகலெனுங் கொட்புற் றுடன்மோதும் அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
றரவியிடந் தப்பிக் குறியாத அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
றருள்வசனங் கிட்டப் பெறலாமோ கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
கொடிமருவுஞ் செச்சைப் புயமார்பா கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
குரைகடல்செம் பச்சக் கரவrளச்
சிலைபகளண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினுந் தத்தச் செகமேழுந் திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
திறலகொடும் பைக்குட் பெருமாளே.
கீரனூர்
9 63
ஈர மோடுசி ரித்துவ ருத்தவும்
நாத கீதந டிப்பிலு ருக்கவும் ஏவ ராயினு மெத்திய ழைக்கவு மதராஜன்

அருணகிரிநாதர்
ஏவின் மோதுக னரிட்டும ருட்டவும்
வீதி மீதுத லைக்கடை நிற்கவும் ஏறு மாறும னத்தினி னைக்கவும்
ஆர பார தனத்தைய சைக்கவு
மாலை யோதிகு லைத்துமு டிக்கவும் ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும் ஆசை போல்மன இஷடமு ரைக்கவு
135
விலைகூறி
அதிமோக
மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும்
ஆன தோதக வித்தைகள் கற்பவ
பார மேருப ருப்பத மத்தென
நேரி தாகன் டுத்துட னட்டுமை பாக ராரப டப்பணி சுற்றிடு பாதி வாலிபி டித்திட மற்றொரு
பாதி தேவர்பி டித்திட லக்ஷ சமி பாரி சாதமு தற்பல சித்திகள்
கீர வாரிதி யைக்கடை வித்ததி
காரி யாயமு தத்தைய ஸ்ரித்தக்ரு பாளு வாகிய பச்சுரு வச்சுதன் கேடி லாவள கைப்பதி யிற்பல
மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய கீர னுாருறை சத்தித ரித்தருள்
குளந்தைநகர்
9 64
தரங்க வார்குழற் றதுநூதல்
தகைந்த மாமுலைத் துடியிடை
பரந்த மாலிருட் படுகுழி
பயந்து காலனுக் குயிர்கொடு
வரந்த ராவிடிற் பிறரெவர்
மகிழ்ந்து தோகையிற் புவிவலம்
குரும்பை மாமுலைக் குறமகண்
குளந்தை மாநகர்த் தளியுறை
ருறவாமோ
கயிறாகப்
வருமாறு
மருகோனே
பெருமாளே.
விழியாலம் LDL-LDfTg5ft வசமாகிப் தவியாமல்
தருவாரே வருவோனே 6 of To
பெருமாளே.

Page 177
36 திருப்புகழ்
தனிச்சயம்
9 65
இலைச்சுருட் கொடுத்தனைத் தலத்திருத்திமட்டைகட்
கிதத்தடட் குரற்கள்விட் டநுராகம் எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டனைத் தெடுத்திகழ்க் கடித்துரத் திடைதாவி அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட்டுழைத்துழைத்
தலக்கணுற் றுயிர்க்களைத் திடவேதான் அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்
டயர்க்குமிப் பிறப்பினித் தவிராதோ கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்
கொடித்திருக் கரத்தபொற் பதிபாடுங் குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்
குருத்துவத் தெனைப்பணித் தருள்வோனே
தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
தமிழ்த்ரயத் தகத்தியற் கறிவோதுஞ் சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்
தனிச்சயத் தினிற்பிளைப் பெருமாளே.
9 66
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
கறுத்த குஞ்சியும் வெளிறிய் பஞ்சொத் தொலித் டுஞ்செவி செவிடுற வொண்கட் குருடாகி உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
டிரைத்து கிண்கினெ னிருமலெ முந்திட் டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித்
தமுமேல்கொண்
டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
பழுத்து ளஞ்செயல் வசனம்வ ரம்பற் றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் தனைவோரும் அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்
துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக் கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் கருள்வாயே

அருணகிரிநாதர் 37
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
டுடுட்டு டுண்டுடு டுடுருடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதிதோ திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
டிடக்கை துந்துமி முரசுமு ழங்கச் செருக்க ளந்தனில் நிருதர்த யங்கச் சிலபேய்கள்
தரித்து மண்டையி லுதிரம ருந்தத்
திரட்ப ருந்துகள் குடர்கள்பி டுங்கத் தருக்கு சம்புகள் நினமது சிந்தப் பொரும்வேலா தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்
படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற் றணிச்ச யந்தனி லினிதுறை கந்தப் பெருமாளே.
மதுரை
9 67
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி யதனாலே பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசைத ரும்பத sg, T 9 வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழவ ரங்களு மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுணி
அடியர்ப னிந்திட மகிழ்வோனே அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித fdGTS). Is TGITs T
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு மணிமார்பா கனகமி கும்பதி மதுரைவ ளம்பதி
யதனில்வ ளர்ந்தருள் பெருமாளே.

Page 178
38 திருப்புகழ்
968
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர் பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் அளவளப் பதனாலே படுக்கை வீட்டினு ளவுஷத முதவுவர்
அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள் பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென
அவரவர்க் குறவாயே
அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை
முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர் அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு
நரகினிற் சுழல்வேனோ
அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும்
விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து
கதிதனைத் தருவாயே
தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள
குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு தகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த
முருகவித் தகவேளே சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு மருமகப்
பரிவோனே
செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது
பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை மனமதுற்
றிடுவோனே திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்
கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும்
அறுமுகப் பெருமாளே

அருணகிரிநாதர் 139
969
சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக
மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென
தொங்கலாரஞ் சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு
வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி சேலைகாலில் விழவிட்டுநடை யிட்டுமயி
லின்கலாபச்
சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை
யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள்
பங்கினுாடே தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை பாவ மானபிற விக்கடலு ழப்பவனை தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது மெந்தநாளோ
வாத வூரனைம தித்தொருகு ருக்களென
ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை வாசி யாமெனந டத்துவகை யுற்றரச னன்புகான
மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை
யாறின் மீதுநட மிட்டுமனெ டுத்துமகிழ் மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் கந்தவேளே
வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி
பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற வேலை யேவியவு னக்குலமி றக்கநகை
கொண்டசிலா வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு
ராம ரீனமயி லொக்கமது ரைப்பதியின் மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி தம்பிரானே.
970
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி
யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி பொரமுத் தந்தரு மிங்கித நயவித மதனாலே

Page 179
1 40 திருப்புகழ்
புகலச் சங்கிசை கண்டம தனிலெழ உருவச்செந்துவர் தந்தத ரமுமருள் புதுமைத் தம்பல முஞ்சில தரவரு மனதாலே
பருகித் தின்றிட லஞ்சுக மெனமன
துருகிக் குங்கும சந்தன மதிவியர் படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல வியினாலே பலருக் குங்கடை யென்றெனை யிகழவு
மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி
பணிவேனோ
திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை
வரவச் சங்கொடு வந்திடு முழையுடல் சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி சிரனோடு திரமிற் றங்கிய கும்பக னொருபது
தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ்
மருகோனே
மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள் சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் முருகோனே வடவெற் பங்கய லன்றணி குசசர
வணையிற் றங்கிய பங்கய முகதமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர்
பெருமாளே.
97 முகமெ லாநெய் பூசித் தயங்கு
நுதலின் மீதி லேபொட் டணிந்து முருகு மாலை யோதிக் கணிந்த LDL fostgif முதிரு மார பாரத் தனங்கள்
மிசையி லாவி யாய்நெக் கழிந்து முடிய மாலிலேபட் டலைந்து பொருள்தேடிச்
செகமெ லாமு லாவிக் கரந்து
திருட னாகி யேசற் றுழன்று திமிர னாகி யோடிப் பறந்து திரியாமல்

அருணகிரிநாதர் 4
தெளியு ஞான மோதிக் கரைந்து சிவபு ராண நூலிற் பயின்று செறியு மாறு தாளைப் பரிந்து தரவேணும்
அகர மாதி யாம கூடிரங்க
ளவனி கால்வி னாரப் பொடங்கி அடைய வேக ரூபத் திலொன்றி முதலாகி அமரர் காண வேயத் தமன்றி
லரிவை பாட ஆடிக் கலந்த அமல நாத னார்முற் பயந்த முருகோனே
சகல வேத சாமுத் ரியங்கள்
சமய மாறு லோகத் ரயங்கள் தரும நீதி சேர்தத் துவங்கள் தவயோகம் தவறி லாம லாளப் பிறந்த
தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று தவிர ஆல வாயிற் சிறந்த பெருமாளே
972 ஏலப்பணி நீரணி மாதர்கள்
கானத்தினு மேயுற வாடிடு மீரத்தினு மேவளை சேர்கர மதனாலும் ஏமக்கிரி மீதினி லேகரு
நீலக்கய மேறிய னேரென ஏதுற்றிடு மாதன மீதினு மயலாகிச்
சோலைக்குயில் போல்மொழி யாலுமெ
தூசுற்றிடு நூலிடை யாலுமெ தோமிற்கத லீநிக ராகிய தொடையாலும் சோமப்ரபை வீசிய மாமுக
சாலத்திலு மாகடு வேல்விழி துருதத்தினு நானவ மேதின முழல்வேனோ ஆலப்பணி மீதினில் மாசறு
மாழிக்கிடை யேதுயில் மாதவ னானைக்கினி தாயுத வியருள் நெடுமாயன் ஆதித்திரு நேமியன் வாமன
னிலப்புயல் நேர்தரு மேனியன் ஆரத்துள வார்திரு மார்பினன் மருகோனே

Page 180
1142 திருப்புகழ்
கோலக்கய மாவுரி போர்வையர்
ஆலக்கடு வார்கள நாயகர் கோவிற்பொறி யால்வரு மாசுத குமரேசா கூர்முத்தமிழ் வானர்கள் வீறிய
சீரற்புத மாநக ராகிய
கூடற்பதி மீதினில் மேவிய பெருமாளே.
973
நீதத் துவமாகி -நேமத் துணையாகிப் பூதத் தயவான -போதைத் தருவாயே நாதத் தொனியோனே -ஞானக் கடலோனே கோதற் றமுதானே -கூடற் பெருமாளே.
974.
மனநினை சுத்தஞ் சூது காரிகள்
அமளிவி ளைக்குங் கூளி மூளிகள் மதபல நித்தம் பாரி நாரிக ளழகாக வளைகுழை முத்தும் பூணும் விணிகள்
விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள் வரமிகு வெட்கம் போல வோடிகள் தெருவூடே
குனகிகள் பசுஷ்ம் போல பேசிகள் தனகிக ளிச்சம் பேசி கூசிகள் குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் பொருளாசைக் கொளுவிக ளிஷடம் பாறி வீழ்பட
அருளமு தத்தின் சேரு மோர்வழி குறிதனி லுய்த்துன் பாத மேறிட அருள்தாராய்
தனதன தத்தந் தான தானன
டுடுடுடு டுட்டுண் டுடு டூடுடு தகுதிகு தத்தந் தீத தோதக எனபோரி தவில்முர சத்தந் தாரை பூரிகை
வளைதுடி பொற்கொம் பார துரரை சமர்தனில் முற்றும் பாறி நூறிட விடும்வேலா
தினைவன நித்தங் காவ லாளியள்
நகைமுறை முத்தின் பாவை மான்மகள் திகழ்பெற நித்தங் கூடி யாடிய முருகோனே

அருணகிரிநாதர் 43
திரிபுர நக்கன் பாதி மாதுறை
யழகிய சொக்கன் காதி லோர்பொருள் செலவரு ளரித்தென் கூடல் மேவிய பெருமாளே.
975
முத்துநவ ரத்னமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதரு வெனவோதும் முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுர ரடிபேணி பத்துமுடி தத்தும்வகை யுற்றகணை விட்டஅரி
பற்குனனை வெற்றிபெற ரதமூரும் பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம் அருள்வாயே தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்த்ததென தெனனான திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை யெனஆடும் அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள் புரிபாலா அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
ரற்கனக பத்மபுரி பெருமாளே.
97 6
அலகில வுணரைக் கொன்ற தோளென
மலைதொளை யுருவச் சென்ற வேலென அழகிய கனகத் தண்டை சூழ்வன புண்டரீக
அடியென முடியிற் கொண்ட கூதள
மெனவன சரியைக் கொண்ட மார்பென அறுமுக மெனநெக் கென்பெலாமுரு கன்புறாதோ
கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள் கதறிய வெகுசொற் பங்க மாகிய பொங்களாவுங்

Page 181
44 திருப்புகழ்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன கரணமு மொழியத் தந்த ஞானமி ருந்தவாறென் இலகுக டலைகற் கண்டு தேனொடு
மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன் இனிமையி னுகருற் றெம்பி ரானொரு
கொம்பினாலே எழுதென மொழியப் பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில் எழுதிய பவளக் குன்று தாதையை யன்றுதழ
வலம்வரு மளவிற் சண்ட மாருத
விசையினும் விசையுற் றெண்டி சாமுக மகிதல மடையக் கண்டு மாசுன முண்டுலாவு
மரகத கலபச் செம்புள் வாகன
மிசைவரு முருகச் சிம்பு ளேயென மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு தம்பிரானே.
977 ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த கமரேசா ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த குருநாதா தானவர்கு லத்தை வாள்கொடுது னித்த
சால்சதுர்மி குத்த திறல்வீரா தாளினைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடுசி றக்க அருள்வாயே வானெழுபு விக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு மறியாத மாமதுரை சொக்கர் மாதுமைக ளிக்க
மாமயில்ந டத்து முருகோனே
தேனெழுபு னத்தில் மான்விழிகு றத்தி
சேரமரு வுற்ற திரள்தோளா தேவர்கள்க ருத்தில் மேவியப யத்தை
வேல்கொடுத னித்த பெருமாளே.

அருணகிரிநாதர்
பூரீ புருஷமங்கை
978
ஆடல்மத னம்பின் மங்கைய
ராலவிழி யின்பி றங்கொளி
யாரமத லம்பு கொங்கையின்
ஆதிகுரு வின்ப தங்களை
நீதியுட னன்பு டன்பணி யாமல்மன நைந்து நொந்துட
வேடரென நின்ற ஐம்புல
னாலுகர ணங்க ளின்தொழில் வேறுபட நின்று ணர்ந்தருள்
வேடைகெட வந்து சிந்தனை
மாயையற வென்று துன்றிய வேதமுடி வின்ப ரம்பொரு தாடகையு ரங்க டிந்தொளிர்
மாமுனிம கஞ்சி றந்தொரு தாழ்வறந டந்து திண்சிலை ஜாநகித னங்க லந்தபின்
ஊரில்மகு டங்க டந்தொரு தாயர்வச னஞ்சி றந்தவன் சேடன்முடி யுங்க லங்கிட
வாடைமுழு தும்ப ரந்தெழ தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட
சீர்மயில மஞ்சு துஞ்சிய
சோலைவளர் செம்பொ னுந்திய
பூரீபுருட மங்கை தங்கிய
97 9
145
மயலாகி
லழியாதே
பெறுமாறென்
ளருள்வாயே
முறியாவொண்
மருகோனே
நடமாடுஞ்
பெருமாளே.
கார்குழல்கு லைந்து வார்குழையி சைந்த சைந்து
காதலுறு சிந்தை யுந்து
LDL-LDfTGOTT fr
காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த
காழ்கடிய கும்ப தம்ப
இருகோடார்

Page 182
46 திருப்புகழ்
பேர்மருவு மந்தி தந்தி வாரனஅ னங்க னங்க
பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே பேரறிவு குந்து நொந்து காதலில லைந்தசிந்தை
பீடையற வந்து நின்ற னருள்தாராய்
ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த
ஏகமயி லங்க துங்க வடிவேலா ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்ட
ரீடெறஇ ருந்த செந்தில் நகர்வாழ்வே
தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணfந்த கெந்த
சீலர்கு ஞந்து யர்ந்த பொழிலோடே சேரவெ யிலங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த
பூரீபுருட மங்கை தங்கு பெருமாளே.
9 80
வேனின்மத னைந்து பாணம்விடநொந்து
வீதிதொறு நின்ற மடவார்பால் வேளையென வந்து தாளினில்வி ழுந்து
வேடைகெட நண்பு பலபேசித்
தேனினும ணந்த வாயமுத முண்டு
சீதளத னங்க ளினின்மூழ்கித் தேடியத னங்கள் பாழ்படமு யன்று
சேர்கதிய தின்றி யுழல்வேனோ
ஆனிரைது ரந்து மாநிலம ளந்தொ
ராலிலையி லன்று துயில்மாயன் ஆயர்மனை சென்று பால்தயிர ளைந்த
மருகோனே
ஆரணமு குந்தன்
வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த
மானொடுவி ளங்கு மணிமார்பா
மாமறைமு ழங்கு பூரீபுருட மங்கை
மாநகர மர்ந்த பெருமாளே.

அருணகிரிநாதர் 147
இலஞ்சி
9 8 கரங்க மலமின தரம்ப வளம்வளை
களம்ப கழிவிழி மொழிபாகு கரும்ப முதுமுலை குரும்பை குருகுட
கரும்பி டியினடை யெயின்மாதோ டரங்க நககன தனங்கு தலையிசை
யலங்க நியமுற மயில்மிதே அமர்ந்து பவவினை களைந்து வருகொடி
யவந்த கனகல வருவாயே
தரங்க முதியம கரம்பொ ருததிரை
சலந்தி நதிகும ரெனவான தலம்ப ரவமறை புலம்ப வருசிறு
சதங்கை யடிதொழு பவராழி இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப
னிரண்டு புயமலை கிழவோனே இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
இலஞ்சி மருவிய பெருமாளே.
982
கொந்தள வோலை குலுங்கிட வாளிச்
சங்குட னாழி கழன்றிட மேகக் கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் பனிநீர்சேர் கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக் கண்கயல் மேனி சிவந்திட கோவைக் கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் கடலூடே
சந்திர ஆர மழிந்திட நூலிற்
பங்கிடை யாடை துவண்டிட நேசத் தந்திட மாலு ததும்பியு மூழ்குற் றிடுபோதுன் சந்திர மேனி முகங்களு நீலச்
சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச் சந்திர வாகு சதங்கையு மோசற் றருள்வாயே

Page 183
48 திருப்புகழ
சுந்தரர் பாட லுகந்திரு தாளைக்
கொண்டுநல் தூது நடந்தவ ராகத் தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் சிவகாமி தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச்
சங்கரி மோக சவுந்தரி கோலச் சுந்தரி காளி பயந்தரு ளானைக் கிளையோனே
இந்திர வேதர் பயங்கெட துரைச்
சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக் கின்புற மேவி யிருந்திடு வேதப் பொருளோனே எண்புன மேவி யிருந்தவள் மோகப்
பெண்திரு வாளை மணந்திய லார்சொற் கிஞ்சிய ளாவு மிலஞ்சி விசாகப் பெருமாளே.
983 சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
துரந்தெறி கின்ற விழிவேலால் சுழன்று சுழன்று துவண்டு துவண்டு
சுருண்டு மயங்கி மடவார்தோள்
விரும்பி வரம்பு கடந்து நடந்து
மெலிந்து தளர்ந்து மடியாதே விளங்கு கடம்பு விழைந்தணி தண்டை
விதங்கொள் சதங்கை யடிதாராய் பொருந்த லமைந்து சிதம்பெற நின்ற
பொலங்கிரி யொன்றை யெறிவோனே புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணங்கொள்
புரந்தரன் வஞ்சி DGTGATGTT இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்
குரும்பை மணந்த மணிமார்பா இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று
இலஞ்சி யமர்ந்த பெருமாளே.
9 84 மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை யநங்கன் மலராலும்
வாடை யெழுந்து வாடை செறிந்து
வாடை யெறிந்த அனலாலுங்

அருணகிரிநாதர்
49
கோல மழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவு மின்று
கால னடுங்க வேலது கொண்டு
கானில் நடந்த கான மடந்தை நாண மொழிந்து
காத லிரங்கு
சோலை வளைந்து சாலி விளைந்து
தழு மிலஞ்சி துரிய னஞ்ச வாரியில் வந்த
துரனை வென்ற
திருக்குற்றாலம்
9 85
ஏடுக்கொத் தாரலர் வார்குழ
லாடப்பட்ட டாடைநி லாவிய ஏதப்பொற் றோள்மிசை மூடிய ஏதத்தைப் பேசுப ணாளிகள்
வீசத்துக் காசைகொ டாடிகள் ஏறிட்டிட் டேனியை வீழ்விடு
மாடொக்கக் கூடிய காமுகர்
மூழ்குற்றுக் காயமொ டேவரு வாயுப்புற் தலைவி யாதிக LDT&isibgpu Lustgilbo) LIT FLD
னுார்புக்குப் பாழ்நர கேவிழு மாயத்தைச் சீவியு னாதர
தாடுட்டுட் டூடுடு டீடிமி
டுடுட்டுட் டுடுரு டாடமி தானத்தத் தானத னாவென தானொத்தப் பூதப சாசுகள்
வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள் சாகப்பொற் றோகையி லேறிய
தளராமுன்
வரவேணும்
முருகோனே
g5LDGStJ FIT
மகிழ்வோனே
பெருமாளே.
கரமாதர்
முழுமாயர்
ளிவைமேலாய்
வருள்வாயே
வெகுபேரி
சதிரோனே

Page 184
50
கூடற்கச் சாலைசி ராமலை
காவைப்பொற் காழிவெ ரூர்திகழ் கோடைக்கச் சூர்கரு வூரிலு கோதிற்பத் தாரொடு மாதவ சீலச்சித் தாதியர் சூழ்தரு கோலக்குற் றாலமு லாவிய
986
வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்திற் றுார மிலாதது
விதித்துத் தேடரி தானது
ஆதித்தற் காய வொணாதது வேகத்துத் தீயில் வெகாதது
வாதத்துக் கேயவி யாதது
காதத்திற் பூவிய லானது வாசத்திற் பேரொளி யானது
மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரம தாகிய வாழ்வைச்சற் காரம தாஇனி
காதத்திற் காயம தாகும
தீதித்தித் தீதிது தீதென காதற்பட் டோதியு மேவிடு
காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட் டேமதி தீதக லாமற்கெட் டேதடு மாறிட
கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற் றேவன வேடுவர் கூடத்துக் கேகுடி யாய்வரு
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் துழிதரு கோலக்குற் றாலமு லாவிய
திருப்புகழ்
முயர்வான
பெருமாளே.
கதியாளர்
சுடர்கானம்
மதமுறு
யருள்வாயே
கதிகானார்
அடுவோனே
முருகோனே
பெருமாளே.

அருணகிரிநாதர்
9 8 7
முத்தோலைத னைக்கி பூழித்தயி
லைப்போரி கலிச்சி வத்துமு கத்தாம ரையிற்செ ருக்கிடும் முற்றாதிள கிப்ப னைத்தணி
கச்சாரம றுத்த நித்தில முத்தாரம முத்து கிர்க்குறி வித்தாரக வித்தி றத்தினர்
பட்டோலைநி கர்த்தி னைத்தெழு வெற்பானத னத்தில் நித்தலு மெய்த்தேவர்து தித்தி டத்தரு
பொற்பார்கம லப்ப தத்தினை மெய்ப்பாகவ முத்தி டக்ருபை பத்தானமு டித்த லைக்குவ
டிற்றாடவ ரக்க ருக்கிறை பட்டாவிவி டச்செ யித்தவன் பற்பாசன்மி கைச்சி ரத்தைய
றுத்தாதவ னைச்சி னத்துறு பற்போகவு டைத்த தற்பரன் கொத்தார்கத லிப்ப ழக்குலை
வித்தாரவ ருக்கை யிற்களை கொத்தோடுதி ரக்கு தித்தெழு கொட்டாசுழி யிற்கொ ழித்தெறி சிற்றாறுத னிற்க ளித்திடு குற்றாலாரி டத்தி லுற்றருள்
ஆய்க்குடி
9 88
5
விழிமானார்
யதனாலே
முழல்வேனோ
புரிவாயே
மருகோனே
மகிழ்வோனே
கயலாரங்
பெருமாளே.
வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
மாப்புடைத் தாளரசர்
பெருவாழ்வும்
மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்
வாழ்க்கைவிட் டேறுமடி
யவர்போலக்

Page 185
52 திருப்புகழ்
கோட்படப் பாதமலர் பர்ர்த்திளைப் பாறவினை
கோத்தமெய்க் கோலமுடன் வெகுரூபக் கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
கூத்தினிப் பூரையிட அமையாதோ தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
சாய்த்தொடுப் பாரவுநின் கழல்தாவிச் சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
தீாழ்க்கவஜ் ராயுதனு மிமையோரும் ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
மாய்க்குடிக் காவலவு ததிமீதே ஆர்க்குமத் தானவரை வேற்கரத் தால்வரையை
ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே.
திருப்புத்தூர்
9 89
கருப்புச் சாப னனைய இளைஞர்கள்
ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய கடைக்கட் பார்வை யினிய வனிதையர் தனபாரங் களிற்றுக் கோடு கல்ச மலிநவ
மணிச்செப் போடை வனச நறுமலர் கனத்துப் பாளை முறிய வருநிக ரிளநீர்போற்
பொருப்பைச் சாடும் வலியை யுடையன
அறச்சற் றான இடையை நலிவன புதுக்கச் சார வடமொ டடர்வன எனநாளும் புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்
ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில் பொகட்டெப் போது சரியை கிரியைசெய்
துயிர்வாழ்வேன் இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ எயிற்றுப் போவி யமர ருடலவர் தலைமாலை எலுப்புக் கோவை யணியு மவர்மிக
அதிர்த்துக் காளி வெருவ நொடியினி லெதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் நவநீத

அருணகிரிநாதர் 53
திருட்டுப் பாணி யிடப முதுகிடை
சமுக்கிட் டேறி யதிர வருபவர் செலுத்துப் பூத மலகை யிலகிய படையாளி செடைக்குட் பூளை மதிய மிதழிவெ ளெருக்குச் சூடி குமர வயலியல் திருப்புத் தூரில் மருவி யுறைதரு பெருமாளே.
990
வேலை தோற்க விழித்துக் காதினி
லோலை காட்டி நகைத்துப் போதொரு வீடு காட்டி யுடுத்தப் போர்வையை நெகிழ்வாகி
மேனி காட்டி வளைத்துப் போர்முலை
யானை காட்டி மறைத்துத் தோதக வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர்
வருவார்மேல் கால மேற்க வுழப்பிக் கூறிய
காசு கேட்டது கைப்பற் றாஇடை காதி யோட்டி வருத்தப் பாடுடன் வருவார்போல்
காதல் போற்று மலர்ப்பொற் பாயலின் மீத னாப்பு மசட்டுச் சூளைகள் காம நோய்ப்படு சித்தத் தீவினை யொழியேனோ
ஆல கோட்டு மிடற்றுச் சோதிக
பாலி பார்ப்பதி பசுஷத் தால்நட மாடி தாத்திரி பட்சித் தாவென வுமிழ்வாளி
ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக
னோடை பூத்த தளக்கட் சானவி யாறு தேக்கிய கற்றைச் சேகர சடதாரி
சீல மாப்பதி மத்தப் பாரிட
சேனை போற்றிடு மப்பர்க் கோதிய சேத னார்த்தப்ர சித்திக் கேவரு முருகோனே சேல றாக்க்யல் தத்தச் சூழ்வய
லூர வேற்கர விப்ரர்க் காதர தீர தீர்த்த திருப்புத் துாருறை பெருமாளே.

Page 186
154 திருப்புகழ்
திருவாடானை
99 ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட
லூதாரி பட்டொழிய வுயிர்போனால் ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி
ஒயா முழக்கமெழ அழுதோய நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது
நாறா தெடுத்தடவி யெரியூடே நானாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி
நாடா தெனக்குனருள் புரிவாயே மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு
மாயோனு மட்டொழுகு மலர்மீதே வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
வானோரு மட்டகுல கிரியாவும் ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு
மாலால முற்றவமு தயில்வோன்முன் ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையரு
ளாடானை நித்தமுறை பெருமாளே.
உத்தரகோசமங்கை
992
கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
திற்புத சேனைக் கதிபதி யின்பக் கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் கரைபால்தேன் கட்டிள நீர்முக் கணிபய றம்பொற்
றொப்பையி னேறிட் டருளிய தந்திக் கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் பாரியாய
பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்
பொற்சாரி நாதப் பரிபுர என்றுப் பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் திணிதேயான் பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற் றுப்புக லாகத் தமுதையு முண்டிட் டிடுவேனோ

அருணகிரிநாதர் 55
தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்
குப்பைக ளாகத் தசுரர்பி னந்திக் கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் செவையாகித் திக்கய மாடச் சிலசில பம்பைத்
தத்தன தானத் தடுடுஇ வென்கச் செப்பறை தாளத் தகுதொகு வென்கச் gflaoQBLuff.) உற்பன மாகத் தடிபடு சம்பத்
தற்புத மாகத் தமரர்பு ரம்பெற் றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் தொடுவேலா உட்பொருள் ஞானக் குறுமக ளும்பற்
சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்
றுத்தர கோசத் தலமுறை கந்தப் பெருமாளே.
993 வெற்பென வேயெழுந்து செப்பென வேதிரண்டு
மெத் தென மோடி கொண்ட தனமாதர் மெய்ப்படு கோலமுங் கண் மைப்படு சாலமுஞ்செய்
வித்தையு மேநினைந்து மயலாகி அற்பக லாவலைந்து கற்பதெலாம் உலைந்து
அற்பமு மானமின்றி அழிவேனோ அக்கினி ரூபமைந்த கிர்த்திகை மாதர்தந்த
அற்புத பாலையுண்ட குமரேசா பொற்பதி காவலிந்தி ரத்குற வேலெறிந்து
பொய்ப்படு துர்பிளந்த அதிதீரா புட்பதி யேறு கொண்டல் அச்சுத னார்மகிழ்ந்த
புத்தமிர் தான செஞ்சொல் உடையோனே உற்பல மோகொடுங்க ணைக்கிணை யோவெனுங்கண் உத்தம தேவதந்தி yoGo உத்தம மாவளங்கொள் உத்தர கோசமங்கை
உற்றினி தாயிருந்த பெருமாளே.
இராமேசுரம் 994
வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல் வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு பொருள்தேடி

Page 187
156 திருப்புகழ்
வாசபுழு கோடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை மாதர்களை மேவியவரா சைதனி லேசுழல
சிலநாள்போய்த் தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி தழ்கதிகள் மாறிசுகமாறிதடி யோடுதிரி யுறுநாளிற் துலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல் சூழலுற மூலகசு மாலமென நாறியுட லழிவேனோ நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுறை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென நாலுசிரமோடுசிகை தூளிபட தாளமிடு மிளையோனே நாறிதழி வேனிசிவ ரூபகலி யாணிமுத
லீனமக வானைமகிழ் தோழவன மீதுசெறி ஞானகுற மாதைதினை காவில்மன மேவுபுகழ்
மயில்வீரா ஒலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு மோதகட ழாமமரில் ராவணகு லோடுவிறல் பொடியாக ஒகைதழல் வாளிவிடு மூரிதது நேப்மிவளை
பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் பெருமாளே.
995 வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்
மீதே பணிக்கும்வகை யறியாதே மானார் வலைக்கணதி லேதுாளி மெத்தையினி
லூடே யணைத்துதவு மதனாலே
தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
ளேதோ வெனக்கலவி பலகோடி தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
சேறாடல் பெற்றதுய ரொழியேனோ
மேனாடு பெற்றுவளர் துராதி பற்கெதிரி
னுாடேகி நிற்குமிரு கழலோனே மேகார வுக்ரபரி தானேறி வெற்றிபுனை
வீரா குறச்சிறுமி logo

அருணகிரிநாதர் 57
ஞானா பரற்கினிய வேதாக மப்பொருளை
நானா துரைக்குமொரு பெரியோனே நாரா யணற்குமரு காவீறு பெற்றிலகு
ராமே சுரத்திலுறை பெருமாளே.
இந்தம்பலம் 99 6
அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை
அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய லளவு மசலமது கண்டங் கொருத்தருள வறியாத தகர முதலுருகொ ளைம்பந் தொரகூடிரமொ டகில புவனநதி யண்டங்களுக்குமுத லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல்
கமல துரியமதி லிந்துங் கதிர்ப்பரவு நடுவான
கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத சிவயோகம் கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி
குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது கனிவு வர இளமை தந்துன் பதத்திலெனை
யருள்வாயே திமிலை பலமுருடு திந்திந் திமித்திமித
டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதிதோ செகண செகணசெக செஞ்செஞ் செகக்கனென அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் களமீதே அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள
அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள
விடும்வேலா
அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்கமுகT
அழகு புயமொடணை யின்பங் களித்துமகிழ் அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ்
பெருமாளே. எழுகரைநாடு
997
விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிட அன்புமேன்மேல்

Page 188
1 58 திருப்புகழ்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
விழைவுகு ராப்புனை யுங்குமார
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
முலைநுகர் பார்த்திப என்றுபாடி மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
முழுதும லாப்பொருள் தந்திடாயோ
பரகதி காட்டிய விரகசி லோச்சய
பரமப ராக்ரம சம்பராரி படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
பகவதி பார்ப்பதி தந்தவாழ்வே
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
எழுகிரி யார்ப்பெழ வென்றவேலா இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
எழுகரை நாட்டவர் தம்பிரானே.
ஒடுக்கத்துச்செறிவாய் 998
வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு
மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள் வளைத்துச் சித்தச சாத்தி ரக்கள வதனாலே மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்
சுகித்துத் தெட்டிக ரூர்த்து திப்பரை மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் மதியாதே
கழுத்தைக் கட்டிய னாப்பி நட்பொடு
சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள் கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது கரிசானி கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு
பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள் கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை யொழியேனோ
அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை
நெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம் அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன கிரிதோய்வாய் அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்
சமத்துக் கட்டியி லாத்த முற்றவன் அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி
லுறைமாயன்

அருணகிரிநாதர் 1 5 9
உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்
விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல் உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் மருகோனே உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
மதித்திட் டுச்செறி நாற்க விப்புணர் ஒடுக்கத்துச்செறி வாய்த்தலத்துறை பெருமாளே.
காமத்தூர்
999
ஆகத் தேதப் பாமற் சேரிக்
கார்க்கைத் தேறற் கணையாலே ஆலப் பாலைப் போலக் கோலத்
தாயகக் காயப் பிறையாலே போகத் தேசற்றேதற் பாயற்
பூவிற் றீயிற் கருகாதே போதக் காதற் போகத் தாளைப்
பூரித் தாரப் புணராயே தோகைக் கேயுற் றேறித் தோயச்
துர்கெட் டோடப் பொரும்வேலா சோதிக் காலைப் போதக் கூவத்
துாவற் சேவற் கொடியோனே பாகொத் தேசொற் பாகத் தாளைப்
பாரித் தார்நற் குமரேசா பாரிற் காமத் தூரிற் சீலப்
பாவத் தேவப் பெருமாளே.
முள்வாய்
OOO
மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து
வெவ்வேறு றுழன்று ழன்று மொழிசுற விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க
மென்னா ளறிந்த டைந்து உயிர்போமுன்

Page 189
160 திருப்புகழ்
பொன்னார் சதங்கை தண்டை முந்நூல்கடம்ப னரிந்து
பொய்யார் மனங்கள் தங்கு மதுபோலப் பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னி தெரிந்த ழுங்கு புன்னா யுளுங்க வின்று புகுவாயே
பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து
பன்னா கணைந்து சங்க முறவாயிற் பன்னூல் முழங்கலென்று விண்ணோர் மயங்க நின்று
பண்ணுாது கின்ற கொண்டல் மருகோனே
முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து
முன்னோர் பொருங்கை யென்று முனையாட மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மாதர்
வந்தி றைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே
வாகைமாநகர்
0 0
ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு
மால கால விழிக்கு முறுகாதல் ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு
மார பார முலைக்கு மழகான
ஒலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு
மோரை சாயு மிடைக்கு மயல்மேவி ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி
லூர வோடு விருப்பி லுழல்வேனோ
வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு
மீறு காத லளிக்கு முகமாய மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து
மீள வாய்மை தெளித்து மிதண்மீது
மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து
வாயி லூறல் குடித்து மயல்தீர வாகு தோளி லனைத்து மாக மார்பொ ழிலுற்ற
வாகை மாநகர் பற்று பெருமாளே.

அருணகிரிநாதர் 116
விசுவை
10 O2 திருகுசெ றிந்த குழலை வகிர்ந்து
முடிமலர் கொண்டொ ரழகாகச் செயவரு துங்க முகமும் விளங்க
முலைகள்கு லுங்கு வருமோக அரிவையர் தங்கள் வலையில் விழுந்து
அறிவுமெ லிந்து தளராதே அமரர்ம கிழ்ந்து தொழுது வணங்கு
னடியினை யன்பொ டருள்வாயே வரையைமு னிந்து விழவெ கடிந்து
வடிவெலெ றிந்த திறலோனே மதுரித செஞ்சொல் குறமட மங்கை
நகிலது பொங்க வரும்வேலா விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த
விடையரர் தந்த முருகோனே விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு
விசுவைவி ளங்கு பெருமாளே.
க்ஷேத்திரக்கோவை
OO 3
கும்ப கோணமொ டாரூர்சி தம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூர மம்பெறு சிவகாசி கொந்து லாவிய ராமேசு ரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர்ப ரங்கிரி தனில்வாழ்வே செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ செகநாதஞ் செஞ்சொ லேரக மாவாவி னன்குடி
குன்று தோறுடன் மூதூர்வி ரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோனாடு வஞ்சியில்
வருதேவே

Page 190
62 திருப்புகழ்
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர வயலுாரா கந்த மேவிய போரூர்ந டம்புரி
தென்சி வாயமு மேயாய கம்படு கண்டி யூர்வரு சாமீக டம்பணி மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கைய
ரும்பர் வாணிபொ னீள்மால்ச வுந்தரி எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு பெருமாளே.
பொதுப் பாடல்கள்
0 04
வேத வித்தகா சாமீ நமோநம
வேல்மி குத்தமா துரா நமோநம வீம சக்ரயூ காளா நமோநம விந்துநாத வீர பத்மசீர் பாதா நமோநம
நீல மிக்ககூ தாளா நமோநம மேக மொத்தமா யூரா நமோநம விண்டிடாத
போத மொத்தபேர் போதா நமோநம
பூத மற்றுமே யானாய் நமோநம பூர ணத்துளே வாழ்வாய் நமோநம துங்கமேவும் பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம
ஆறி ரட்டிநீள் தோளா நமோநம பூஷ னத்துமா மார்பா நமோநம புண்டரீக
மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்
மீதி ருக்குமே ரார்மாபு லோமசை வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் நின்றுநாளும் வேத வித்தகி விமா விராகிணி
வீறு மிக்கமா வீணா கரேமக மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ யங்கராகீ

அருணகிரிநாதர் 63
ஆதி சத்திசா மாதேவி பார்வதி
நீலி துத்தியார் நீணாக பூஷணி ஆயி நித்தியே கோடீர மாதவி யென்றுதாழும் ஆர்யை பெற்றசீ ராளா நமோநம
துரை யட்டுநீள் பேரா நமோநம ஆர னத்தினார் வாழ்வே நமோநம தம்பிரானே.
0 05
போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம பூர ணக்கலை சாரா நமோநம பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம போக சொர்க்கபு பாலா நமோநம சங்கமேறும்
மாத மிழ்த்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம என்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
யேழபி றப்பினில் மூழ்கா மனோபவ மாயை யிற்சுழி யூடே விடாதுக லங்கலாமோ
கீத நிர்த்தவெ தாளா டவீநட நாத புத்திர பாகீ ரதீகிரு பாச முத்திர ஜிமூத வாகனர் தந்திபாகா
கேக யப்பிர தாபா முலாதிப
மாலி கைக்கும ரேசா விசாகக்ரு பாலு வித்ரும காரா ஷடானன புண்டரீகா
வேத வித்தக வேதா விநோதகி
ராத லக்ஷமிகி ரீடா மகாசல வீர விக்ரம பாரா வதானவ கண்டதுர
வீர நிட்டுர வீராதி காரண
தீர நிர்ப்பய தீராபி ராமவி நாய கப்ரிய வேலாயு தாசுரர் தம்பிரானே.

Page 191
64 திருப்புகழ்
0 0 6
ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி
தாமெ னாப்பர மார்த்தம துணராதே ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட நேக நாட்டொடு காட்டொடு தடுமாறிப்
பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு
பூவி னாற்றம றாத்தன கிரிதோயும் போக போக்யகலாத்தொடு வாழ்பராக்கொடி ராப்பகல் போது போக்கியெ னாக்கையை விடலாமோ
தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சார்அ
தீத தீகூைடிய ரீகூைடிக ளறவோதுந் தேவ பாற்கர நாற்கவி பாடு லாகூடின மோகூவுதி
யாக ராத்திகழ் கார்த்திகை பெறுவாழ்வே
மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷச டாக்ஷர
மேரு வீழ்த்தப ராக்ரம வடிவேலா வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட
வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே.
O 07
ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ
மீதெ னாக்குரு வார்த்தையை யுணராதே ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி யேறு மாப்பிறு மாப்புட னரசாகித்
தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி
னாற்கெடு சோர்வி னாற்கொடி தாக்கையை யிழவாமுன் சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய
தூரி தாப்ர மார்த்தம தருள்வாயே
நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு
ஞான வார்த்தையி னாற்குரு U U GOTTLU நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல் நாவ லோர்க்கரு ளாற்பத மருள்வாழ்வே

அருணகிரிநாதர் 65
வேக மேற்கொளராப்புடை தோகை மேற்கொடுவேற்கொடு
வீர மாக்குலை யாக்குல G) j66)J &Ffru மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ
னாத்தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே.
10 O 8
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை
எப்பொருளு மாய அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ
ரித்தபெரு மானும் நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ஸ்ரியமவுன மந்த்ரந்த னைப்பழைய நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது
ணர்த்தியருள் வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு தகுதகென கெனசெகுத தந்தந்த ரித்தகுத
தத்ததகு தீதோ தனதனன தனதனன தந்தந்த னத்ததன
GGGGGS GGGGGG GGST (BIGsoT G G “GIGGB) தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு
டுக்கையுமி யாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக - ளத்திலொரு கோடி

Page 192
66 திருப்புகழ்
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச
ளித்தபெரு மாளே. 1009 அரிய வஞ்சக ரறவே கொடியவ
ரவலர் வன்கண ரினியா ரவகுண ரசட ரன்பில ரவமே திரிபவ ரதிமோக அலையில் மண்டிய வழியே யொழுகியர் வினைநி ரம்பிடு பவமே செறிபவ ரருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் நரகேற
உரிய சஞ்சல மதியா னதுபெறு
மனஇ டும்பர்க ளிடமே தெனஅவ ருபய அங்கமு நிலையா கிடவொரு கவியாலே உலக முண்டவர் மதனா ரிமையவர்
தருவெ னும்படி மொழியா வவர்தர உளது கொண்டுயி ரவமே விடுவது தவிராதோ
கரிய கொந்தள மலையா ஸரிருதன
அமுது ணுங்குரு பரனே திரைபடு கடல டும்படி கணையே வியஅரி மருகோனே கருணை கொண்டொரு குறமா மகளிடை
கலவி தங்கிய குமரா மயில்மிசை கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு
மிளையோனே
திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து
பொதுந டம்புரி யரனா ரிடமுறை சிவைச வுந்தரி யுமையா ளருளிய புதல்வோனே சிகர வெண்கரி அயிரா வதமிசை
வருபு ரந்தர னமரா பதியவர் சிறைவி டும்படி வடிவேல் விடவல பெருமாளே.
0 1 0 ஆராத காத லாகி மாதர்த மாபாத சூட மீதி லேவிழி
யாலோல னாய்வி கார மாகியி லஞ்சியாலே
ஆசாப சாசு மூடி மேலிட ஆசார வீன னாகி யேமிக ஆபாச னாகி யோடி நாளும ழிந்திடாதே

அருணகிரிநாதர் 67
ஈராறு தோளு மாறு மாமுக மோடாரு நீப வாச மாலையு மேறான தோகை நீல வாசியு மன்பினாலே
ஏனோரு மோது மாறு தீதற நானாசுபாடி
யாடி நாடொறு
மீடேறு மாறு ஞான போதக மன்புறாதோ
வாராகி நீள்க பாலி மாலினி மாமாயி யாயி தேவி
GSG
வாசாம கோச ராப ராபரை யிங்குளாயி வாதாடி மோடி காடு காளுமை மாஞால லிலி யால
GBunrFGsf
மாகாளி துலி வாலை யோகினி யம்பவானி
துராரி மாபு ராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி
சோணாச லாதி லோக நாயகி தந்தவாழ்வே தோளாலும் வாளி னாலு மாறிடு தோலாத வான
நாடு துறைகொள் துராரி யேவி சாக னேசுரர் தம்பிரானே.
O
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்து மடலாலும் ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந்
தலத்து மாமாறெரி தாமிந் தனத்து மருளாதே
நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த
நீநானற வேறின்றி நிற்க நியமாக நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி
நேரேபர மாநந்த முத்தி தரவேணும்
வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
வேதாளச மூகம் பிழைக்க அமராடி வேதாமுறை யோவென்றரற்ற ஆகாசக பாலம்பிளக்க
வேர்மாமர மூலந் தறித்து வடவாலும்

Page 193
168 திருப்புகழ்
வாராகர மேழுங் குடித்து மாதுரொடு போரம் பறுத்து
வாணாசன மேலுந் துணித்த கதிர்வேலா வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென்
றழைத்து வானோர்பரி தாபந் தவிர்த்த பெருமாளே.
1 0 1 2
ஆலா லத்தைய முத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு தாகா ரைத்தொடர் கைக்கெனும் விழியாலே ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறி
வார்போ கச்செயல் விச்சைகள் விலைகூறிக்
கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள்
கூறா கப்பெறில் நிற்கவு மிலதானார் கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள்
கோமா ளத்துய ருட்பய முறலாமோ பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெடடுத லைக்கிரி
பால்பார் வைக்கள விட்டுமை யுறுபோதிற் பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர் பாலா பத்திரி டத்தியல் பயில்வோனே மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை வேர்மா ளப்பொரு திட்டொளி விடும்வேலா மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு வேதா வைச்சிறை யிட்டருள் பெருமாளே.
0 3
ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும் ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும் ஆதேச வாழ்வி னிற்பர மித்தி ளைத்துயி ரழியாதே ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்
வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும் ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி துலகேழும்
யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்
தேனுாற வோதி யெத்தி சைப்பு றத்தினும் ஏடேவு ராஜ தத்தி னைப்ப னித்ததும் இடராழி

அருணகிரிநாதர் 69
ஏறாத மாம லத்ர யக்கு னத்ரய
நானாவி கார புற்பு தப்பி றப்பற ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் மறவேனே
மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர் மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு மாலாய வாளி யைத்தொடுத்த ரக்கரி லொருமூவர் மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்
தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர் வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக வனமேவும்
தேநாய காஎ னத்து தித்த வுத்தம
வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல் சேராத துர னைத்து னித்த டக்கிய வரைமோதிச் சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ
மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய பெருமாளே.
0 4 இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து
விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் வலையாலே இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து
முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும் இருவரையுங் காட்டி மாலெ முப்பி விலைபேசி
மடலவிழும் பூக்க ளால்நி றைத்த
சுருளளகந் தூற்றி யேமு டித்து மறுகிடைநின் றார்க்க வேந கைத்து நிலையாக வருபொருள்கண் டேற்க வேப றிக்கும் அரிவையர்தம் பேச்சி லேமு முக்க மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து விடலாமோ
படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி
முதுமறையின் பேச்சி நூலி டைச்சி பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி யிருநாழி படிகொடறங் காத்த மாப ரைச்சி
மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி நெடுநீலி

Page 194
17 O திருப்புகழ்
அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி
சமரமுகங் காட்டு மால்வி டைச்சி அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி பெருவாழ்வே அரியயனின் றேத்த வேமி குத்த
விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த பெருமாளே.
O 5
இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக்
கிடையிட்டிட் டினிமைச்சுற் றமுமற்றைப் புதல்வோரும் இனமொப்பித் திசையற்சொற் பலகத்திட் டிழியப்பிற்
கிடையத்துக் கமும்விட்டிட் டவரேக
விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட்
டுயிர்வித்துத் தனையெற்றிக் கொடுபோமுன் வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப் புயவெற்றிப் புகழ்செப்பப் பெறுவேனோ
அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க்
கறிவொக்கப் பொருள்கற்பித் திடுவோனே அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட்
டலறக்குத் துறமுட்டிப் பொரும்வேலா
கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக்
கிரிகைக்குட் டிகிரிக்கொற் றவன்மாயன் கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட்டிசையர்க்குக்
கடவுட்சக் கிரவர்த்திப் பெருமாளே.
0 6
இரவினிடை வேள்தொ டுத்து டன்று
முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி யிருகுழையு மோதி யப்ப டங்கு கடலோடே எதிர்பொருது மானி னைத்து ரந்து
சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி யினியமுத ஆல முற்ற கண்கள் வலையாலே

அருணகிரிநாதர் 7
முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து
விசிறிவளை மாத ரைக்க லந்து மொழியதர கோவை யிக்க ருந்தி யமுதாகு முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து
சுழிமிதுன வாவி யிற்பு குந்து முழுகியழி யாம னற்ப தங்கள் தரவேணும்
திரையுலவு சாக ரத்தி லங்கை
நகரிலுறை ராவ ணற்கி யைந்த தெசமுடியு மீரு பத்தொழுங்கு திணிதோளுஞ் சிதையவொரு வாளி யைத்து ரந்த
அரிமருக தீத றக்க டந்து தெளிமருவு கார ணத்த மர்ந்த முருகோனே
அரணமதிள் துழிபு ரத்தி ருந்து
கருதுமொரு மூவ ருக்கி ரங்கி யருளுமொரு நாய கற்ப னிந்த குருநாதா அகல்முடிவை யாதி யைத்தெ ளரிந்து இரவுபக லாக நெக்க விழ்ந்த அடியவர்கள் பாட லுக்கி சைந்த பெருமாளே.
0 1 7 இரவொ டும்பக லேமா றாதே
அநுதி னந்துய ரோயா தேயே யெரியு முந்தியி னாலே மாலே பெரிதாகி இரைகொ ஞம்படி யூடே பாடே
மிகுதி கொண்டொழி யாதே வாதே யிடைக ளின்சில நாளே போயே வயதாகி
நரைக ஞம்பெரி தாயே போயே
கிழவ னென்றொரு பேரே சார்வே நடைக ளும்பல தாறே மாறே விழலாகி நயன முந்தெரி யாதே போனால்
விடிவ தென்றடி யேனே தானே நடன குஞ்சித வீடே கூடா தழிவேனோ திருந டம்புரி தாளி தூளி
மகர குண்டலி மாரீ துரீ திரிபு ரந்தழ லேவி சார்வீ யபிராமி

Page 195
172 திருப்புகழ்
சிவனி டந்தரி நீலீ துலீ
கவுரி பஞ்சவி யாயீ மாயீ
சிவைபெ னம்பிகை வாலா சீலா அருள்பாலா
அரவ கிங்கிணி வீரா தீரா
கிரிபு ரந்தொளிர் நாதா பாதா அழகி ளங்குற மானார் தேனார் GoGo அரிய ரன்பிர மாவோ டேமூ
வகைய ரிந்திர கோமா னிள்வா னமரர் கந்தரு வானோ ரேனோர் பெருமாளே.
O 8
இருகுழை மீதோடி மீளவும் கயல்களு மாலால காலமும்
ரதிபதி கோலாடு பூசலு மெனவேநின் றிலகிய கூர்வேல் விலோசன ம்ருகமத பாடீர பூஷித
இளமுலை மாமாத ரார்வச முருகாதே முருகவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர்பாத தூளியின்
முழுகிவி டாய்போ மனோலயம் வரவோது முழுமதி மாயாவி காரமு மொழிவது வாசாம கோசர முகுளித ஞானோப தேசமு மருள்வேனும் அருமறை நூலோதும் வேதிய னிரணிய ரூபாந மோவென அரிகாரி நாராய னாவென ஒருபாலன் அவனெவனாதார மேதென இதனுளனோவோது நீயென அகிலமும் வாழ்வான நாயக னெனவேகி ஒருகணை தூணோடு மோதிட விசைகொடு தோள்போறு
வாளரி யுகிர்கொடு வாரா நிசாசர னுடல்பீறு முலகொரு தாளான மாமனு முமையொரு கூறான
தாதையு முரைதரு தேவாசு ராதிபர் பெருமாளே.
0.9
இருமுலை மலையென ஒப்பிட் டேயவர்
இருவிழி யதனில கப்பட் டேமன மிசைபட வசனமு ரைத்திட் டேபல மினிதோடே

அருணகிரிநாதர் 73
இடையது துவளகு லுக்கிக் காலணி
பரிபுர வொலிகள்தொ னிக்கப் பூதிர இளமுலை குழைய அணைத்துக்கேயுர மணியோடே
மரகத பவள மழுத்திப் பூஷண
மணிபல சிதறி நெறித்துத் தானுக மருமலர் புனுகு தரித்துப் பூவணை மதராஜன்
மருவிய கலவி தனக்கொப் பாமென
மகிழ்வொடு ரசிது மிகுத்துக் கோதையை மருவியு முருகி களைத்துப் பூமியி லுழல்வேனோ
திரிபுர மொரிய நகைத்துக் காலனை
யுதைபட மதனை யழித்துச் சாகர திரைவரு கடுவை மிடற்றிற் றானணி சிவனார்தந்
திருவருள் முருக பெருத்துப் பாரினில்
சியொதனன் மடிய மிகுத்துப் பாரத செயழுறு மரிதன் மனத்துக் காகிய மருகோனே
நரிகழு வதுகள் களிக்கச் சோரிகள்
ரணகள முழுதுமி குத்துக் கூளிகள் நடமிட அசுரர் குலத்துக் காலனை நிகராகி
நனிகடல் கதற பொருப்புத் தூளெழ
நணுகிய இமையவ ருக்குச் சீருற நணுகலர் மடியதொ லைத்துப் பேர்பெறு
பெருமாளே.
10 20
இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ
எமன்விடு தூதோ மானோ விடமிதோ
எனவிழி கூறா வாரா அரிவையர் தோளூ டாடா
இறுதியில் வேறாய் மாறா நினைவாலே
பலபல கோளாய் மாலா யுழலும தானால் விணே
படிறுசொ லாகா லோகா யதனாகிப்
பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே
பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ

Page 196
4 திருப்புகழ்
அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா
அவுனரை வாடா போடா எனலாகி அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே
யவருடல் வானா ளிரா எதிராகி
மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா
மகபதி வாழ்வே சேயே மயில்வீரா மறைதொழு கோவே தேவே நறைசெறி பூவே நீரே
வளவிய வேளே மேலோர் பெருமாளே.
O2
உமையெனு மயில்பெற்ற மயில்வா கனனே
வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே உளமுரு கியபத்த ருறவே மறவே னெனவோதி
உருகுத லொருசற்று மறியேன் வறியேன்
இருவினை யிடையிட்ட கொடியே னடியேன் உணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய்
foLLDT.g5.fr அமையென வளர்சித்ர இருதோள் தழுவா
அமுதென மதுரித்த கனிவா யணுகா அமளியி லனைவுற்ற அநுரா கமகோ ததிமூழ்கி
அநவர தமுமுற்ற மணிமா முலைதோய்
கலவியி னலமற்ப சுகமா கினுமா அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா தியலாதே
தமனிய குலசக்ர கிரியோ கடலோ
விடமென முடிவைத்த முதுபே ரிருளோ தனுவென முனையிட்ட கொலைமூ விலைவேல்
கொடுபார்வை தழலெழ வருமுக்ர எமபா தகனோ
யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ பதியாகி
இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ
அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ
பொரவாரும்

அருணகிரிநாதர் 75
எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர்
பெருமாளே.
0 22
உரைத்த பற்றுட னடிகள்ப னிந்திட்
டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற் றுமிழ்த்த டைக்கல மெனனதிர் கும்பிட்
டனைமேல்வீழ்ந் துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட்
டெடுத்த ணைத்திதழ் பெருகமு தந்துய்த் துனக்கெ னக்கென வுருகி முயங்கிட் டுளம்வேறாய்
அருக்கி யத்தனை யெனுமவ சம்பட்
டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத் தறப்பி தற்றிட அமளிக லங்கித் தடுமாறி
அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட்
டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக் கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த் திடலாமோ
தரைக்க டற்புகு நிருதர்த யங்கச்
சளப்ப டத்தட முடிகள்பி டுங்கித் தகர்த்தொ லித்தெழு மலையொடு துண்டப் பிறைதுடி
தனுக்கி ரித்திரி தரளதி ருங்கொக்
கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத் தருக்க டக்கிய சமர்பொரு துங்கத் தனிவேலா
பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித்
திருக்கு முத்தம நிருதர்க லங்கப் படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக் கிரிசாடிப்
படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக்
குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற் பதத்தி றுத்துகு பசியசி கண்டிப் பெருமாளே

Page 197
76 திருப்புகழ்
10 23
உலகத்தினில் மாதரு மைந்தரும்
உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை உயர்துக்கமு மோடுற வென்றுற வருகாலன் உதிரத்துட னேசல மென்பொடு
உறுதிப்பட வேவள ருங்குடில் உதிரக்கனல் மீதுற என்றனை யொழியாமுன்
கலகக்கலை நூல்பல கொண்டெதிர் கதறிப்பத றாவுரை வென்றுயர் கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு களிகூருங் கவலைப்புல மோடுற என்துயர்
கழிவித்துன தாளினை யன்பொடு கருதித்தொழும் வாழ்வது தந்திட நினைவாயே இலகப்பதி னாலுல கங்களும்
இருளைக்கடி வானெழு மம்புலி யெழில்மிக்கிட வேணியில் வந்துற எருதேறி இருகைத்தல மான்மழு வும்புனை
யிறையப்பதி யாகிய இன்சொலன் இசையப்பரி வோடினி தன்றரு ளிளையோனே
மலைபட்டிரு கூறெழ வன்கடல்
நிலைகெட்டபி தாவென அஞ்சகர் வலியற்றசு ரேசரு மங்கிட வடிவேலால் மலைவித்தக வானவ ரிந்திரர்
மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ வடிவுற்றொரு தோகையில் வந்தருள் பெருமாளே.
024
உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற
பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற உலகிலுள பலராரிசி வாய்மீதிலேசொரியு மந்தநாளில்
உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை
திரள்புயமுமெழில்பணிகொள்வார்காது நீள்விழியு முபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் அந்தமார்பும்

அருணகிரிநாதர் 77
மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய
மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர்
வந்துகூட மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது
விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து மதலையொரு குதலையடி நாயேனை யாளஇங்ண்
வந்திடாயோ
பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ
அதிரனழு புவியுலக மீரேழு மோலமிட பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில்
நின்றநாகம் பிரியநெடு மலையிடிய மாவாரி தூளியெழ
பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு பிணநினமு முணவுசெய்து பேயோடு மாடல்செய வென்றதீரா
குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட
கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு குளிர்கனியி னிளமரம் தேயாகி நீடியுயர்
குன்றுலாவி கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய
வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய் குமரகு ருபர அமரர் வானாடர் பேனஅருள்
தம்பிரானே. 0.25 உறவு சிங்கிகள் காமா காரிகள்
முறைம சங்கிக ளாசா வேசிகள் உதடு கன்றிகள் நாணா வினிகள் நகரேகை உடைய கொங்கையின் மீதே தூசிகள்
பினமெ னும்படி பேய்நீ ராகிய உணவை யுண்டுடை சோர்கோ மாளிகள்
கடல்ஞாலத்
தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள் வறுமை தந்திடு பாழ்மூ தேவிக ளணிநெ ருங்கிக ளாசா பாஷன Lot-Lorgbsr

Page 198
178 திருப்புகழ்
அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள்
கலவி யின்பமெ னாவே சோருதல் அலம லந்தடு மாறா தோர்கதி யருள்வாயே
பறவை யென்கிற கூடார் மூவரண்
முறையி டுந்தமர் வானோர் தேரரி பகழி குன்றவி லாலே நீறெழ வொருமூவர் பதநி னைந்துவி டாதே தாள்பெற
அருள்பு ரிந்தபி ரானார் மாபதி பரவு கந்தசு வாமி கானக மதின்மேவுங்
குறவர் தங்கள்பி ரானே மாமரம்
நெறுநெ றென்றடி வேரோ டேநிலை குலைய வென்றிகொள் வேலே யேவிய புயவிராகுயில்க ளன்றில்கள் கூகூ கூவென
மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை குறவர் சுந்தரி யோடே கூடிய பெருமாளே.
O 26 ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற
வூசாடு பாழ்குடி லெடுத்த திற்படி ஓயாத மாமய லுழற்றி னிற்படு வம்பனேனை ஊதாரி யாய்விடு சமத்தில் நிற்பது
மாராத காதலை மனத்தில் வைப்பது
மூரோடு போயெதிர் பிணக்கி னிற்பது முந்திடாதே
தேனுாறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன மென்றுநீபச் சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள்
சீராடி நாண்மல ரெனப்ரி யப்படு சீர்பாத போதக மநுக்ர கிப்பது மெந்தநாளோ
மானாக பாயலில் படுக்கை யிட்டவர்
மாமேரு வாரியில் திரித்து விட்டவர் மாடோடு போய்வரு மிடைக்கு லத்தவ ரன்றுவாவி வாய்காக மோலிட பிடித்த சக்கிர
வாளேவி யேகர வினைத்த றித்தவர் மாமாய னாயுல களித்த வித்தகர் தங்கைவாழ்வே

அருணகிரிநாதர் 179
கானாரு மாமலை தினைப்பு னத்தினில்
கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள் கந்தவேளே காரேழு மாமலை யிடித்து ருக்கெட
காராழி யேழவை கலக்கி விட்டுயர் காவான நாடர்கள் பகைச்ச வட்டிய தம்பிரானே
O 27
எட்டுட னொருதொளை வாயா யதுபசு
மட்கல மிருவினை தோயா மிகுபிணி யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் நிலையாக
எப்படி யுயர்கதி நாமே றுவதென
எட்பகி ரினுமிது வோரார் தமதம திச்சையி னிடருறு பேரா சைகொள்கட லதிலேவீழ்
முட்டர்க னெறியினில் வீழா தடலொடு
முப்பதி னறுபதின் மேலா மறுவரு முற்றுத லறிவரு ஞானோ தயவொளி வெளியாக
முக்குண மதுகெட நானா வெனவரு
முத்திரை யழிதர ஆரா வமுதன முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ தொருநாளே
திட்டென எதிர்வரு மாகா ஸரியினொடு
திக்கிட தரிகிட தீதோ மெனவொரு சித்திர வெகுவித வாதா டியபத மலராளன்
செப்புக வெனமுன மோதா துணர்வது சிற்சுக பரவெளி யிதே யெனஅவர் தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் குருநாதா
மட்டற அமர்பொரு துரா திபனுடல்
பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு மற்புய மரகத மாதோ கையில்நட மிடுவோனே
வச்சிர கரதல வானோ ரதிபதி
பொற்புறு கரிபாரி தேரோ டழகுற வைத்திடு மருமக னேவா ழமரர்கள் பெருமாளே.

Page 199
80 திருப்புகழ்
10 28
எத்தி யிருகுழையை மோதி மீனமதின்
முட்டி யிடறியம தூதர் போலமுகி லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை யெதிர்சீறி எத்தி சையினுமொரு காம ராஜன்மிக
வெற்றி யரசுதனை யாள வீசியட லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி மடமாதர்
வித்தை தனிலுருகி யாசை யாகியவர்
கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை மெத்தை தனிலுருகி மோக மாகிவிட அதன்மேலே வெட்க மிலைநடவு மேகு மேகுமினி
மற்ற வரையழையு மாத ரேயெனமுன் விட்டபடிறிகள் தம்நேச ஆசைகெட அருள்வாயே
ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல்
அத்தி நகரமர சான வாள்நிருபன் ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல நிலைகூற உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன்
வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும் ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி லசுரேசன்
பத்து முடிகள்துக ளாக வாகுஇரு
பத்து மொருகணையில் வீழ நேரவுனர் பட்டு மடியஅமர் மோது காளமுகில் மருகோனே பச்சை மயிலில்வரு வீர வேல்முருக
துட்ட நிருதர்குல கால வானவர்கள் பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு பெருமாளே.
0.29
ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட
வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட உற்ப லங்கள்சி வந்துகு விந்திட இந்த்ரகோபம் ஒத்த தொண்டைது வண்டமு தந்தர
மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற வொக்க மென்தொனி வந்து பிறந்திட அன்புகூர

அருணகிரிநாதர் 81
மிக்க சந்திர னொன்றுநி லங்களில்
விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ ளரின்பமாதர் வித்த கந்தரு விந்துத புங்குழி
பட்ட பூழிந்துந லங்குகு ரம்பையை விட்டகன்றுநினம்புயமென்பத மென்றுசேர்வேன்
மைக்க ருங்கட லன்றெரி மண்டிட
மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட மற்று நன்பதி குன்றிய பூழிந்திட வும்பர்நாடன் வச்சி ரங்கைய னிந்துப தம்பெற
மெச்சு குஞ்சரி கொங்கைபு யம்பெற மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை நுங்கும்வேலா
குக்கு டங்கொடி கொண்டப ரம்பர
சக்ர மண்டல மெண்டிசை யும்புகழ் கொட்க கொன்றைய னிந்தசி ரஞ்சர ணங்கிகாரா கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய
மிக்க வங்கன கங்கண திண்புய கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய தம்பிரானே.
030
ஒது வித்தவர் கூலிகொ டாதவர்
மாத வர்க்கதி பாதக மானவர் ஊச லிற்கன லாயெரி காளையர் மறையோர்கள்
ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
ஆர்த னக்குமு தாசின தாரிகள் ஓடி யுத்தம ரூதிய நாடின ரிரவோருக்
கேது மித்தனை தானமி டாதவர்
பூத லத்தினி லோரம தானவர் ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை
யிகழ்வோர்கள் ஏக சித்ததி யானமி லாதவர்
மோக முற்றிடு போகித மூறினர் ஈன ரித்தனை பேர்களு மேழ்நர குழல்வாரே

Page 200
182 திருப்புகழ்
தாத தத்தத தாதத தாதத
தூது துத்துது தூதுது தூதுது
சாச சச்சச சாசச சாசச FFFF
g5ft - L-L-L-L-L-T-L - L-ft--
GSG GGGS (6GGS (GG) g5TLq- (q-L-Lq-Lq- Lelq-Lq- Letq-Lq- g-g-leg
தீதி தித்திதி தீதிதி தீதிதி
தோதி குத்திகு தோதிகு தோதிகு சேகு செக்குகு சேகுகு சேகுகு செகுசேகு
சேயெ னப்பல ராடிட மாகலை
ஆயு முத்தமர் கூறிடும் வாசக சேகு சித்திர மாகநி ணாடிய பெருமாளே.
O 3
ஒலைத ரித்தகு ழைக்கு மப்புற
மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற லோதிநி ழற்குள ளரிக்கு லத்துட னொன்றிஞானம் ஒதிமி குத்தத வத்த வர்க்கிட
ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி யூடுவி டத்தையி ருத்தி வைத்தக னம்பினாலே
மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள்
வாசமு லைக்குள கப்ப டுத்தியில் வாவென முற்றிந டத்தி யுட்புகு மந்தமாதர் மாயம யக்கையொ ழித்து மெத்தென வானவ ருக்கரு ஞற்ற அகூடிர வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் தந்திடாதோ
வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு
வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில் வேகமொ டப்பும லைக்கு லத்தைந ளன்கைமேலே வீசஅ வற்றினை யொப்ப மிட்டனை
மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட வீடண னுக்கருள் வைத்த வற்றமை யன்கள்மாளக்

அருணகிரிநாதர் 83
காலயி லக்கனை தொட்ட ருட்கன
மாலமை திக்கரை யிற்ற ரித்துல காளஅ ஸ்ரித்தப்ர புத்வ ருட்கடல் தந்தகாமன் காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ
நானில வித்ததி னைப்பு னத்தொரு காதல்மி குத்துமி கப்ர மித்தருள் தம்பிரானே.
10 32
கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு
குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர் கரிய கண்துறந் தவர்நி றந்தொளை படவோடக்
கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட
முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர் கவர இங்கிதங் கெறுவி தம்பெற விளையாடும்
படைம தன்பெருங் கிளைதி ருந்திய
அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி பணிநி தம்பஇன் பசுக முந்தர முதிர்காம
பரவ சந்தணிந் துணையு ணர்ந்தொரு
மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக பதம டைந்திருந் தருள்பொ ருந்தும தொருநாளே
வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட
மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட வருபு ரந்தரன் தனபு ரம்பெற முதுகோப
மகர வெங்கருங் கடலொ டுங்கிட
நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற வனச னின்றழும் படிநெ ருங்கிய வொருததம் அடியொ டும்பிடுங் கியத டங்கர
வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய அடவி யுந்தொழும் பொடுதொ மும்படி யநுராக
அவச மும்புனைந் தறமு னைந்தெழு
பருவ தஞ்சிறந் தகன தந்தியின் அமுத மென்குயங் களின்மு யங்கிய பெருமாளே.

Page 201
84 திருப்புகழ்
0 33
கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்
பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி கருவற இருவினை கெட்டாற் காண்வரு மென்றஏகங் கருகிய வினைமன துட்டாக் காதது
சுருதிக ஞருகியொர் வட்டாய்த் தோய்வது கசடற முழுதையும் விட்டாற் சேர்வது
ணர்ந்திடாதே
விதமது கரமுரல் மொட்டாற் சாடிய
ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன் வினைபுரி பவரிடு முற்றாச் சாலிரு புண்டரீக ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக
நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக விரகுடை விழிவலை பட்டாற் றாதுந லங்கலாமோ
பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக
சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக பருகென வனமுலை கிட்டாத் தாரகை தந்துநாளும் பரிவுற வெகுமுக நெட்டாற் றுடொரு
படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை படர்வன பரிமள முட்டாட் டாமரை தங்கிவாழுஞ்
சததள அமளியை விட்டாற் றேறிய
சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு தமனிய குலகிரி பொட்டாய்த் தூளெழ வென்றகோவே தழைதரு குழைதரு பட்டாட் சாலவு
மழகிய கலவிதெ விட்டாக் காதலி தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் தம்பிரானே.
O 34
கலவியி னலமுரை யாமட வார்சந்
தனத் தனங்களில் வசம தாகி யவரவர் பாதாதி கேச மளவும் பாடுங்
கவிஞ ணாய்த்திரி வேனைக் காமக் ரோதத்
தூர்த்தனை யபராதக்

அருணகிரிநாதர் 118.5
கபடனை வெகுபரி தாபனை நாளும்
ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறைமுறை ஆசார வீன சமயந் தோறுங்
களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச்
சாத்திர நெறிபோயைம்
புலன்வழி யொழுகிய மோகனை மூகந்
தனிற் பிறந்தொரு நொடியின் மீள அழிதரு மாதேச வாழ்வை நிலையென் றேயம்
புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப்
பூக்கழ லிணைசேரப் பொறியிலி தனையதி பாவியை நீடுங்
குணத் ரயங்களும் வரும நேக வினைகளு மாயா விகார முழுதுஞ் சாடும்
பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக்
காப்பது மொருநாளே
குலகிரி தருமபி ராம மயூரம்
ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடு வாரா வுலாவி யுணரும் யோகங்
குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப்
பார்த்தருளியபார்வைக் குரிசிலு மொருசுரர் பூசுர னோமென்
றதற் கனந்தர மிரணி யாய நமவென நாராய னாய நமவென் றோதுங்
குதலை வாய்ச் சிறி யோனுக் காகத் தூணிற்
றோற்றிய வசபாணிப்
பலநக நுதியி னிசாசர னாகங்
கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல் தோண்மாலை யாக அணியுங் கோவும்
பரவி வாழ்த்திட வேகற் றாரச் சோதிப்
பாற்பணி யிறைவாகைப் படமுக வடலயி ராபத மேறும்
ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட வேலேவி வாவி மகரஞ் சீறும்
பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோடத்
தாக்கிய பெருமாளே.

Page 202
86 திருப்புகழ்
0 35
கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை
சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை கடக்க வோடிய ஆலால நஞ்சன வஞ்சநீடு கயற்க ணார்கனி வாயூற லுண்டணி
கழுத்து மாகமு மேகிப வங்கொடு கலக்க மார்பக பாடீர குங்கும கொங்கைமீதே
உறுத்து மாரமு மோகாவ டங்களு
மறுத்து நேரிய கூர்வாள்ந கம்பட உடுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ழன்றுவீழ உருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை
செருக்கு மோகன வாராத ரங்களை யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை
யொன்றுகாணேன்
நிறத்த நூபுர பாதார விந்தமு
முடுத்த பீலியும் வாரார்த னங்களும் நிறத்தி லேபடு வேலான கண்களும் GANGSTOG TIL நெறித்த வோதியு மாயான்ம னம்பர
தவிக்க மால்தர லாமோ கலந்திட நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட
னண்புகூர்வாய்
மறித்த வாரிதி கோகோவெ னும்படி
வெறுத்த ராவணன் வானாளை யம்பினில் வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல் மண்டமேரு வளைத்த தாதையு மாறான குன்றமு
மனைத்து லோகமும் வேதாக மங்களும் மதித்த சேவக வானாளு மும்பர்கள் தம்பிரானே.
1036
குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு
குழைக்கும்வடு விழிக்குமெழு குமிழாலுங் கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமு
தினுக்குமிக வுறத்தழுவு குறியாலும்

அருணகிரிநாதர் 187
அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமல
ரடிக்குமிள நகைக்குமுள மயராதே அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரம ரளப்பரிய பதக்கமல மருள்வாயே
கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு
கனத்திலவர் நிணத்தகுடல் கதிர்வேலாற் கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை
யளித்திடரை யறுத்தருளு மயில்வீரா
செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி
சினத்தினொடு பறித்தமர்செய் பெருகானிற் செலக்கருதியறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது
சிமிழ்த்தனமு னுறத்தழுவு பெருமாளே.
1037
குணகியொரு மயில்போல வாராம னோலீலை
விளையவினை நினையாம லேயேகி மீளாத கொடியமன தநியாய மாபாத காபோதி யெனஆசைக்
கொளுவஅதில் மயலாகி விறோடு போய்நீள
மலரமளி தனிலேறி யாமாறு போமாறு குலவிநல மொழிகூறி வாரேறு பூனார
முலைமூழ்கி மனமுருக மதராஜ கோலாடு மாபூசல்
விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி யநுராக
வகைவகையி லதிமோக வாராழி யூடான
பொருளளவ தளவாக யாரோடு மாலான வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற
அருள்வாயே
எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி
லெனவிரகு குலையாத மாதாவு நேரோத இசையுமொழி தவறாம லேயேகி மாமாது
மிளையோனும்

Page 203
188 திருப்புகழ்
இனிமையொடு வருமாய மாரீச மானாவி
குலையவரு கரதுரஷ னாவீரர் போர்மாள இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி யுயிர்சீறி
அநுமனொடு கவிகூட வாராக நீராழி
யடை செய்தனை தனிலேறி மாபாவி யூர்மேவி அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப நிருதேசன்
அருணமணி திகழ்பார வீராக ராமோலி
யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி
அடல்மருக குமரேச மேலாய வானோர்கள்
பெருமாளே.
O 38
கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக்
கொடியிடை துவளத் துவளத் தனபாரக்
குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக்
குயில்மொழி பதறப் பதறப் ப்ரியமோகக்
கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக்
கரமொடு தழுவித் தழுவிச் சிலநாளிற் கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும்
விடுசிச் சியெனக்
கடியொரு செயலுற் றுலகிற் றிரிவேனோ சலநிதி சுவறச் சுவறத் திசைநிலை பெயரப் பெயரத்
தடவரை பிதிரப் பிதிரத் திடமேருத் தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச்
சமனுடல் கிழியக் கிழியப் பொருதுரன் பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப்
பிறநரி தொடரத் தொடரத் திரள்கூகை பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப்
ப்ரபையயில் தொடுநற் குமரப் பெருமாளே.
O 39
சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை
சந்திரந் ததும்ப சைந்து தெருவூடே
சங்கினங் குலுங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு
சந்தனந் துவண்ட சைந்து வருமாபோல்

அருணகிரிநாதர் 189
கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங்க இன்சு கங்கள் கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன் மடவார்தோள் கொங்கைபைங் கரம்பு ணர்ந்த பூழிந்துணங்க லுந்த
விர்ந்து கொஞ்சுநின் சரண்க ளண்ட அருள்தாராய்
தந்தனந்த செஞ்சி லம்பு கிண்கிணின்கு லங்கள் கொஞ்ச
தண்டையம்ப தம்பு லம்ப வருவோனே சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க சண்பகம் புனங்கு றம்பொன் அனைமார்பா
வந்தநஞ் சுகந்த மைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி
மந்தரம் பொதிந்த கொங்கை யுமையினும்
மைந்தனென் றுகந்து விஞ்சுமன் பணிந்த சிந்தை யன்பர்
மங்கலின் றுளம்பு குந்த பெருமாளே.
040
சுருதி வெகுமுகபு ரான கோடிகள்
சரியை கிரியைமக யோக மோகிகள் துரித பரசமய பேத வாதிகள் என்றுமோடித் தொடர வுணரஅரி தாய தூரிய
பொருளை யணுகியநு போக மானவை தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய
நின்ப்ரகாசங் கருதி யுருகியவி ரோதி யாயருள்
பெருகு பரமசுக மாம கோததி கருணை யடியரொடு கூடி யாடிம கிழ்ந்துநீபக் கனக மணிவயிர நூபு ராரிய
கிரண சரணஅபி ராம கோமள கமல யுகளமற வாது பாடநி னைந்திடாதோ
மருது நெறுநெறென மோதி வேரொடு
கருது மலகைமுலை கோதி வீதியில் மதுகை யொடுதறுக னானைவீரிட வென்றுதாளால் வலிய சகடிடறி மாய மாய்மடி
படிய நடைபழகி யாயர் பாடியில் விளரு முகில்மருக வேல்வி நோதசி கண்டிவீரா

Page 204
90 திருப்புகழ்
விருதர் நிருதர்குல சேனை சாடிய
விஜய கடதடக போல வாரண விபுதை புளகதன பார பூஷண அங்கிராத விமலை நகிலருண வாகு பூதர விபுத கடககிரி மேரு பூதர விகட சமரசத கோடி வானவர் தம்பிரானே.
O4
சுற்றத் தவர்களு மக்களு மிதமுள
சொற்குற் றரிவையும் விட்டது சலமிது சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு மெனமாழ்கித் துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல் சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடு தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை
பிணமூடச்
சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல்
சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது தப்பிற் றவறுறு மத்திப நடையென உரையாடிச் சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை
தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி தத்தச் சடம்விடு மப்பொழு திருசர னருள்வாயே
சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல்
சித்ரப் ப்ரபைபுனை பொற்பின விளமயில் செற்கட் சிவகதி யுத்தமி களிதர முதுபேய்கள் திக்குச் செககென தித்தரி திகுதிகு
செச்செச் செனக்ருத டொட்டரி செனக்ருத டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென நடமாடுங்
கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள்
குட்டிக் கரிமுக னக்கவ லமுதுசெய் கொச்சைக் கணபதி முக்கண னிளையவ களமீதே குப்புற் றுடனெழு சச்சரி முழவியல்
கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர் கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த
பெருமாளே.

அருணகிரிநாதர் 191
042
செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு
சோமாசிகள் தெண்டெ னத்துணை தாள்மேல்விழ அமராடிச் சிந்த னைப்படு மோகாதியி லிந்த்ரி
யத்தினிலோடாசில திண்டி றற்றவ வாள்வீரரொ டிகலாநின்
றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன
மந்தி பட்டிருள் மூடாவகை யவிரோத அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந
லன்பு வைத்தரு ளாமோர்கழ லருளாதே
கொங்க டுத்தகு ராமாலிகை தண்கடுக் கைதுழாய் தாதகி
கும்பி டத்தகு பாகீரதி மதிமீது கொண்ட சித்ர கலாதுமடிகை யிண்டெருக் கணிகா கோதர குண்ட லத்தர்பி னாகாயுத ருடனேயச்
சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர்
தங்க ளைச்சிறை மீளாயென அசுரேசன் தஞ்ச மற்றிட வேதாகர, னஞ்ச வெற்புக வீராகர
சண்ட விக்ரம வேலேவிய பெருமாளே.
10 4 3
சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித்
தூறுசிவப் பேறுவிழிக் கணையாலே
தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத்
தேறலெனக் கூறுமொழிச் செயலாலே
ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத்
தாலுமிதத் தாலும்வளைப் பிடுவோர்மேல் ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற்
றாளினையைச் சேரன்னக் கருள்வாயே
காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக்
காயனாரித் தேவிதியிற் றலையூடே
காசினியிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத்
தேறிவகித் தூருதிரைக் கடல்மீதில்

Page 205
92 திருப்புகழ்
ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற்
றாடியிடத் தேயுமைபெற் றருள்வாழ்வே
ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட்
டாதுலருக் காறுமுகப் பெருமாளே.
1044
சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு
ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள் முலைமீதே சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர்
முற்றிக்குத் தத்தைக் கொப்பென சொற்பித்துக் கற்பிற் செப்பிய துயராலே
சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு
வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ் தித்திப்பிற் கொத்துப் பித்துயர் கொடுநாயேன் திக்குக்கெட் டொட்டுச் சிட்டென பட்டத்துற் புத்திக் கட்டற செப்பத்துற் பற்றற் கற்புத மருள்வாயே
தக்குத்தக் குக்குக் குக்குட
தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ விருதோதை தத்தித்தித் தித்தித் தித்தென
தெற்றுத்துட் டக்கட் டர்ப்படை சத்திக்கொற் றத்திற் குத்திய முருகோனே
துக்கித்திட் டத்தித் துக்கக
நெக்குப்பட் டெக்கித் துட்டறு சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு ளருள்வேலா துற்றப்பொற் பச்சைக் கட்கல
பச்சித்ரப் பகூஷிக் கொற்றவ சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய பெருமாளே.
1045 தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்
துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின் தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன்
பதுவாயுந்

அருணகிரிநாதர் 193
தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்
பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன் தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின்
வசமாகித்
திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்
கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன் சிதறவுயிர் பிணமெனவே மைந்தரும் பந்துவும்
அயர்வாகிச் செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்
சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ் செனனமிது தவிர இரு தண்டையுங் கொண்டபைங் கழல்தாராய்
செருவெதிரு மசுரர்கிளை மங்களங் கெங்கணும் கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந் திரியமிகு அலகையுடன் வெங்கனந் தங்களின்
மகிழ்வாகிச் சினவகர ருடலமது தின்றுதின் றின்புடன்
டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந்
தவமோதச்
சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்
சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன் சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங்
கதிர்வேலfr சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந்
தெரிவாரிய முடியினர வங்களுந் திங்களுஞ் சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும்
பெருமாளே.
046
தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற் சதங்கைக்கற் சிலம்பொத்திக் கையில்வினை ததும்பக்கைக் குழந்தைச் சொற் பரிந்தற்புக்
கிதங்கப்பொற் சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் சரவேலால்

Page 206
194 திருப்புகழ்
தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத் தினந்தெட்டிக் கடன்பற்றிக் கொளுமாதர் சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச்
சிவம்பெற்றுத் தவம்பற்றக் கழல்தாராய் தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்
டடண்டட்டட் டிமிண்டுட்டுட் டியல்தாளந் தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத் தகண்டத்தர்க் குடன்பட்டுற் றசுராரைச் சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச்
சதம்பொர்ப்பைச் சிரந்தத்தப் பிளந்துட்கக் கிரிதுரளாச் செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச் செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் பெருமாளே.
047
நரையொடு பற்க ழன்று தோல்வற்றி
நடையற மெத்த நொந்து காலெய்த்து நயனமி ருட்டி நின்று கோலுற்று நடைதோயா நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து நமதென மெத்த வந்த வாழ்வுற்று நடலைப டுத்து மிந்த மாயத்தை நகையாதே
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் வினையோடு மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு
மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன் விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு வினவாதோ
உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு
மொளிபெற நற்ப தங்கள் போதித்து மொருபுடை பச்சை நங்கை யோடுற்று முலசுடே உறுபலி பிச்சை கொண்டு போயுற்று முவரிவி டத்தை யுண்டு சாதித்து முலவிய முப்பு ரங்கள் வேவித்து முறநாகம்

அருணகிரிநாதர் 95
அரையொடு கட்டி யந்த மாய்வைத்து
மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து மரவோடே அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த
அரியய னித்தம் வந்து பூசிக்கும்
அரநிம லர்க்கு நன்றி போதித்த பெருமாளே.
10 48
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி
நிறைந்த வயிறுஞ் சரிந்து தடியூனி நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு நினைந்த மதியுங் கலங்கி மனையாள்கண்
டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து
உறைந்த உயிருங் கழன்று விடுநாள்முன் உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ
திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி
திரண்ட சதியும் புரிந்து முதுதுரன் சிரங்கை முழுதுங் குடைந்து நினங்கொள் குடலுந்
தொளைந்து சினங்க முகொடும் பெருங்கு ருதிமூழ்கி
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்
டுமண்ட அடர்ந்த அயில்முன் துரந்து பொருவேளே அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி அணங்கை மணமுன் புணர்ந்த பெருமாளே.
0.49
தங்க மிகுந்த முலைக்க டாமலை
பொங்க விரும்பிய முத்து மாலைகள் தங்க அணிந்து முறுக்கும் வேசியர் மொழியாலே சஞ்சல மிஞ்சி மயக்கி யேஒரு
மஞ்ச மிருந்து சுகிக்க வேவளர் சந்து சுகந்த முடித்து நூலிடை இடையாடக்

Page 207
1196 திருப்புகழ்
கொங்கை குலுங்க வளைத்து வாயத ரங்க ளருந்தி ருசிக்க வேமத குங்கும மிஞ்சு கழுத்தி லேகுயி லெனஓசை கொண்டவர் இந்த விதத்தி னாடர
சங்கிலி கொண்டு பிணித்து மாமயில் கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீனியர் உறவாமோ
திங்கள் அரும்பு சலத்தி லேவிடம்
வந்தது கண்டு பயப்ப டாதவர் சிந்தை நடுங்கி இருக்க வேமயில் மிசையேறிச் சிங்க முகன்தலை வெட்டி மாமுகன்
அங்க மறுந்து கிடக்க வேவரு சிம்பு ளெனும்படி விட்ட வேலுள குருநாதா
மங்கை மடந்தை கதிக்கு நாயகி
சங்கரி சுந்தரி அத்தி யானனை மைந்த னெனும்படி பெற்ற ஈசுரி தருபாலா மந்திர தந்திர முத்த யோகியர்
அஞ்சலி செங்கை முடிக்க வேஅருள்
வந்து தரும்படி நித்த மாடிய பெருமாளே.
O 50
நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு நீளு மங்க மாகி மாய வுயிரூறி நேச மொன்று தாதைதாய ராசை கொண்ட
போதில் மேவி நீதி யொன்று பால னாகி யழிவாய்வந் தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத
ரோடு சிந்தை வேடை கூர உறவாகி ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச
ஊனு டம்பு மாயு மாய மொழியாதோ
துரனண்ட லோக மேன்மை துறை கொண்டு
போய்வி டாது தோகை யின்கண் மேவி வேலை விடும்வீரா தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை துடி யாடு தோகை பங்க ரோடு துது மொழிவோனே

அருணகிரிநாதர் 97
பாரை யுண்டமாயன் வேயை யூதிபண்டுபாவ லோர்கள்
பாடல் கண்டு ஏகு மாலின் மருகோனே பாத கங்கள் வேறிநூறி நீதியின்சொல் வேதவாய்மை
பாடு மன்பர் வாழ்வதான பெருமாளே.
05
பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு
நவரத்னப் பத்தித் தொடைநக நுதிபட்டிட் டற்றுச் சிதறிட இதழுறல் பருகித்தித் திக்கப் படுமொழி
பதறக்கைப் பத்மத் தொளிவளை வதறிச்சத் திக்கப் புளசித தனபாரம்
அகலத்திற் றைக்கப் பரிமள
அமளிக்குட் சிக்கிச் சிறுகென இறுகக்கைப் பற்றித் தழுவிய அநுராக அவசத்திற் சித்தத் தறிவையு
மிகவைத்துப் பொற்றித் தெரிவையர் வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு
துணர்வேனோ
இகல்வெற்றிச் சத்திக் கிரணமு
முரணிர்த்தப் பச்சைப் புரவியு மிரவிக்கைக் குக்டத் துவசமு மறமாதும் இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு
கவிமெத்தச் செப்பிப் பழுதற எழுதிக்கற் பித்துத் திரிபவர் பெருவாழ்வே
புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு
கலகச்செற் றச்சட் சமயிகள் புகலற்குப் பற்றற் கரியதொ ருபதேசப் பொருளைப்புட் பித்துக் குருபர
னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி புனையப்பர்க் கொப்பித் தருளிய பெருமாளே.
052 பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி
பட்டப்புள கச்செப் பிளமுலை பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ருயர்தாளப்

Page 208
198 திருப்புகழ்
பத்மத்திய ரற்புக் கடுகடு
கட்சத்தியர் மெத்தத் திரவிய பட்சத்திய ரிக்குச் சிலையுரு விலிசேருஞ்
சித்தத்தரு ணர்க்குக் கனியத
ரப்புத்தமு தத்தைத் தருமவர் சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை நுதலார்தந் தெட்டிற்படு கட்டக் கனவிய
பட்சத்தரு ளற்றுற் றுனதடி சிக்கிட்டிடை புக்கிட் டலைவது தவிராதோ
மத்தப்பிர மத்தக் கயமுக
னைக்குத்திமி தித்துக் கழுதுகள் மட்டிட்டஇ ரத்தக் குருதியில் விளையாட மற்றைப்பதி னெட்டுக் கணவகை சத்திக்கந டிக்கப் பலபல வர்க்கத்தலை தத்தப் பொருபடை யுடையோனே
முத்திப்பர மத்தைக் கருதிய
சித்தத்தினில் முற்றத் தவமுனி முற்பட்டுழை பெற்றுத் தருகுற மகள்மேல்மால் முற்றித்திரி வெற்றிக் குருபர
முற்பட்டமு ரட்டுப் புலவனை முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே.
0.53
பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள்
அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள் பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோட்டிகள்
கொடிதாய பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி
தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள் பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் ஒருகாம
விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில் ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெ விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய தமிழ்நூலின்

அருணகிரிநாதர் 99
விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள்
முலைகளில்வி ழுந்துபரி தாபத் தாற்றினில் விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது
மொருநாளே உரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய
சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி யுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் உறிதாவும் ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல
மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்த்திடும் உரலொடு தவழ்ந்த நவநீதக் கூற்றணு மதிகோபக்
கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி
கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை கருமமென வந்துதொழ வேதப் பாற்பதி பிறியாத கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர்
கரவடக்ர வுஞ்சகிரி சாயத் தோற்றெழு கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய
பெருமாளே.
054
பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து
பலபல யோகத் திருந்து மதராசன் பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து
பரிதவி யாமெத்த நொந்து LDu 6öSin Dr
அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி
யவர்விழி பானத்து நெஞ்ச மறைபோய்நின் றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றை யுன்ற
னருள்வச மோஇப்ர மந்தெ ரிகிலேனே
எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை
யெனவொரு ஞானக் குருந்த ருளமேவும்
இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து
இரணியன் மார்பைப் பிளந்த தனியாண்மை
பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த
புளகப டீரக் குரும்பை யுடன்மேவும்
புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து
புனமிசை யோடிப் புகுந்த பெருமாளே.

Page 209
200 திருப்புகழ்
055
பாணிக்குட் படாதுசாதகர் காணச்சற்றொனாதுவாதிகள்
பாஷிக்கத் தகாது பாதக பஞ்சபூத பாசத்திற் படாது வேறொரு பாயத்திற்புகாது பாவனை பாவிக்கப் பெறாது வாதனை நெஞ்சமான
ஏணிக்கெட் டொனாது மீதுயர் சேனுக்குச் சமான
நூல்வழி யேறிப்பற் றொனாது நாடினர் தங்களாலும் ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி யேறச்செச் சைநாறு தாளைவ ணங்குவேனோ
ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி
வாசவன் ஆபத்தைக் கெடாநி சாசரர் தம்ப்ரகாசம் ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர
ஆழிச்சக் ரவாள மாள்தரும் எம்பிரானே
மாணிக்கப் ப்ரவாள நீலம தானிப்பொற் கிராதை நூபுர
வாசப்பத் மபாத சேகர சம்புவேதா வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல் வாசிப்பித் ததேசி காசுரர் தம்பிரானே.
O 56
பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக்
காட்டி பாயலி லிருத்திக் காட்டி யநுராகம் பாகிதழ் கொடுத்துக்காட்டி நூல்களைவிரித்துக்காட்டி
பார்வைகள் புரட்டிக் காட்டி யுறவாகி
மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி
மேல்விழு நலத்தைக் காட்டு மடவார்பால் மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு
மேன்மையை யெனக்குக் காட்டி யருள்வாயே

அருணகிரிநாதர் 201
காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி
காரணம் விளைத்துக் காட்டி யொருகாலங் கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி
காமனை யெரித்துக் காட்டி தருபாலா
மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில்
வாலிப மிளைத்துக் காட்டி அயர்வாகி மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக்
கேட்டு வாழ்வுறு சமத்தைக் காட்டு பெருமாளே.
0.57
புகாரில் சேவல தந்துர சங்க்ரம
நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக குன்றவர் பெண்கொடி மணவாள புனித பூசுர ருஞ்சுர ரும்பணி
புயச பூதர என்றிரு கண்புனல் பொழிய மீமிசை யன்புது ஞம்பிய மனனாகி
அகில பூதவு டம்புமு டம்பினில்
மருவு மாருயி ருங்கர னங்களு மவிழ யானுமி ழந்தஇ டந்தனி லுணர்வாலே அகில வாதிக ஞஞ்சம யங்களும்
அடைய ஆமென அன்றென நின்றதை யறிவி லேனறி யும்படி யின்றருள் புரிவாயே
மகர கேதன முந்திகழ் செந்தமிழ்
மலய மாருத மும்பல வெம்பரி மளசி லிமுக மும்பல மஞ்சரி வெறியாடும் மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர
மதுர கார்முக மும்பொர வந்தெழு மதன ராஜனை வெந்துவி ழும்படி முனிபால
முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு
முதுப கீரதி யும்புனை யுஞ்சடை முடியர் வேதமு நின்றும ணங்கமழ் அபிராமி முகர நூபுர பங்கய சங்கரி
கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள் முருக னேசுர குஞ்சாரி ரஞ்சித பெருமாளே.

Page 210
1202
0.58 புருவத்தை நெறித்து விழிக்கயல்
பயிலிட்டு வெருட்டி மதித்திரு புதுவட்டை மினுக்கி யளிக்குல புயல்சற்று விரித்து நிரைத்தொளி
வளையிட்ட கரத்தை யசைத்தகில் புனைமெத்தை படுத்த பளிக்கறை
சரசத்தை விளைத்து முலைக்கிரி
புளசிக்க அனைத்து நகக்குறி தனைவைத்து முகத்தை முகத்துட தணிவித்தி ரதத்த தரத்தும்
ழமுதத்தை யளித்து வுருக்கிகள் தருபித்தை யகற்றி யுனைத்தொழ
பரதத்தை யடக்கி நடிப்பவர்
த்ரிபுரத்தை யொரிக்க நகைப்பவர் பரவைக்குள் விடத்தை மிடற்றிடு பரையுற்ற கரத்தர் மிகப்பகி
ரதியுற்ற சிரத்தர் நிறத்துயர் பரவத்தர் பொருப்பி லிருப்பவ
சுரர்சுத்தர் மனத்துறை வித்தகர்
பணிபத்தர் பவத்தை யறுப்பவர் சுடலைப்பொடி யைப்பரி சிப்பவர் துணையொத்த பதத்த ரெதிர்த்திடு
மதனைக்கடி முத்தர் கருத்தமர்
திருப்புகழ்
மிசைபாடும்
தனிலேறிச்
னுறமேவித்
முயல்வேனோ
பவர்தேர்கப்
ருமையாளர்
விடையேறுந்
தொலைவற்ற க்ருபைக்கு ஞதித்தருள் பெருமாளே.
0.59
புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை
புலிக்கண் கூடு மதுதனை
அறியாதே
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை
புழுக்கண் பாவ மதுகொளல்
பிழையாதே
கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி
களைக்கும் பாவ சுழல்படு
மடிநாயேன்
கலக்குண்டாகு புவிதனி லெனக்குண்டாகுபணிவிடை
கணக்குண் டாதல் திருவுள
மறியாதோ

அருணகிரிநாதர் 1203
சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ
சிறக்குஞ் சாமி சொருபமி தொளிகானச் செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ்சாமி பவமதை தெறிக்குஞ் சாமி முனிவர்க ளிடமேவுந் தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை
தரிக்குஞ் சாமி யசுரர்கள் பொடியாகச் சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமிசரவண தகப்பன் சாமி யெனவரு பெருமாளே.
0 60
பூசல்த ருங்கய லும்பொ ருந்திய
வாசந றுங்குழ லுந்து லங்கிய பூரண கும்பமெ னுந்த னங்களு LDL Dr T5s போகம டங்கலை யும்பு ணர்ந்தது
ராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழை போயக லும்படி யொன்றை யன்புற நினையாதே
ஆசையெ னும்படி யுந்த னங்களு
மோகைந டந்திட வுந்தி னங்களும் ஆருட னும்பகை கொண்டு நின்றுற 5-(DfT 9 ஆடிய பம்பர முன்சு ழன்றெதி
ரோடிவி ழும்படி கண்ட தொன்றுற ஆவிய கன்றுவி டும்ப யங்கெட அருள்வாயே
வாசவ னன்புவி ளங்க நின்றக
ரேசர்கு லங்கள டங்க லுங்கெட வானவர் நின்றுதி யங்கு கின்றதொர் குறைதீர வாரிய திர்ந்துப யந்து நின்றிட
மேருஅ டங்கஇ டிந்து சென்றிட வாகைபு னைந்தொரு வென்றி கொண்டரு
ளிளையோனே வீசிய தென்றலொ டந்தி யும்பகை
யாகமு யங்கஅ நங்க ணும்பொர வேடையெ னும்படி சிந்தை நொந்திட - 960-GNJIT45 வேடர்செ மும்புன வஞ்சி யஞ்சன
வேலினு ளங்கள்க லங்கி யின்புற வேளையெனும்படி சென்றிறைஞ்சிய பெருமாளே.

Page 211
204 திருப்புகழ்
O 6 பூசல் வந்திரு தோடார் காதொடு
மோதி டுங்கயல் மானார் மானமில் போக மங்கையர் கோடா கோடிய மனதானார் பூர குங்கம தூளா மோதப
டீர சண்பக மாலா லாளித பூத ரங்களின் மீதே மூழ்கிய அநுராக
ஆசை யென்கிற பாரா வாரமு
மேறு கின்றில னானா பேதஅ நேக தந்த்ரக்ரி யாவே தாகம 956)G) T ஆழி யுங்கரை காணே னுாபுர
பாத பங்கய மோதே னேசில னாயி னுங்குரு நாதா நீயருள் புரிவாயே
வாச வன்பதி பாழா காமல்நி
சாச ரன்குலம் வாழா தேயடி மாள வன்கிரி கூறாய் நீறெழ நெடுநேமி மாத வன்தரு வேதா வோடலை
மோது தெண்கடல் கோகோ கோவென மாமு றிந்திட நீள்வே லேவிய இளையோனே
விசு தென்றலும் வேள்பூ வாளியு
மீறு கின்றமை யாமோ காமவி டாய்கெ டும்படி காவா யாவியை யெனஏனல் மீது சென்றுற வாடா வேடுவர்
பேதை கொங்கையின் மீதே மால்கொடு வேடை கொண்டபி ரானே வானவர் பெருமாளே.
10 62
பொங்குங் கொடிய கூற்றணு நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர வலைவீசிப் பொன்கண். டிளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டுயிர்
புண்கொண் டுருகி யாட்படு மயல்தீரக்
கொங்கின் புசக கோத்திரி பங்கங் களையு மாய்க்குடி
கொங்கின் குவளை பூக்கிற drfG3sFITGOOT
குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய
குன்றம் பிறவும் வாழ்த்துவ தொருநாளே

அருணகிரிநாதர் 205
எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கிய
வென்சண் டதனு வேட்டுவர் சரனார விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை
மென்குங் குமசூ யாத்திரி பிரியாதே எங்குங் கலுமி யார்த்தெழ எங்குளு சுருதி கூப்பிட
எங்குங் குருவி யோச்சிய திருமானை என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ டென்றும் பொழுது போக்கிய பெருமாளே.
0.63
பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர்
புளக தனவட மசைத்துக் காட்டுவர் புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் பொதுமாதர் புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர்
பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர் புதிய பரிபுர நடித்துக் காட்டுவ ரிளைஞோரை
உருக அணைதனி லனைத்துக் காட்டுவர்
உடைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ உததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் பொடிமாயம் உதர மெரிதர மருத்திட் டாட்டிக
ளுயிரி னிலைகளை விரித்துச் சேர்ப்பவ ருறவுகலவியை விடுத்திட்டாட்கொள நினையாதோ
மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி
மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர் மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற அழுதுாறும் வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென
வசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன் மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன்
மருகோனே விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை
விகட தடமுடி பறித்துத் தோட்களை விழவு முறியவு மடித்துத் தாக்கிய அயில்வீரா வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட
வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய விபுத மலரடி விரித்துப் போற்றினர் பெருமாளே.

Page 212


Page 213


Page 214