கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல் ஜாமிஆ 2001

Page 1
|o= | No 穆氫 内
 

ணவர்களுக்கான இதழ் ா இஸ்லாமிய்யா - பேருவளை

Page 2


Page 3
MGÖa
மூன்றாவது இத
கொழுத்தி விடு சத்தியத் தீ
-கம்மல்துறை
ஆசிரிய
அஷசெயக் எம். அஷசெz/க எல. அவுசெயக் ஏ.
இதழாசி
67zd. 67. 4 இலட் எ 67. 677d. 672
ஏ. ஏ. 7ெ எம். ஏ. 6 z / 67zd. 67z
எம். எண்.
எம். றஹறிய ஏ. ஆர். எ எம். எப். 6
 

WTIME4
gó — 1422/2001
கொழுந்துவிட்டெரியட்டும்.
மறைதாசன்
பர் குழு
4z. 65. avuloway எச். எம். பழில் // எம். இத/வச்
ரியர் குழு
7ம். ஹசன 7ம். தில7ம் മ. Zില്ക്ക് 7zd. 4 vazfakoj 7zai. Siyasuzai d. பெரோலர் எம். றாஷிட் ானி ஹசனர் மீ. பர்லாணி ாமீ. பாஹிமீ
O O TOGustaisiana gig un gerðEDITIudlum I LI QIEGT

Page 4
/file
Falifor
/#osso sañozów
ffട്ff 00var p Øyer Disimlig
7.9
PussAers
Are
4/ - Ja%a/۶ 1 B. M (aes.
Mugues é ZOO
t / A Fമീ 7ts-sak atas 2 /M fowമr
Vaesumo Primées //64. Pinag MMawné /avima
/ff്ടർന്ന Jawah/Walewa EO Box O7
BeruMala
VIKs. ZÓO ONO

%/(% ടർബ)
/%
ടff

Page 5
நளிமியா இ
நிலையத்தின் ஆய அல்ஹாஜ் எம்
அவர்களின்
ஜாமிஆ நளீமியாவின் மாண6 ஜாமிஆ சஞ்சிகைக்கு இந்த மிகவும் மகிழ்ச்சியடைகின்ே கல்விப் பணியில் ஜாமிஆவின் களும் மனித முயற்சியின் வி பேரருளேயாகும் என்பது எ அல்ஜாமிஆ எனும் சஞ்சிகை சாதனைகளையும் பிரதிபலிக்கு குகின்றது. இச்சஞ்சிகையை ெ ஈடுபட்டுழைத்த விரிவுரையா மனப்பூர்வமாகப் பாராட்டுவ ச்சிக்கும், வெற்றிக்கும் அல்ல
 

ஸ்லாமிய கலா புட் காலத் தலைவர்
ஐ. எம். நளிம் ஆசிச் செய்தி
வர்களால் வெளியிடப்படும் அல் ஆசிச் செய்தியை வழங்குவதில் றன். மூன்று தசாப்தகால அதன் சிறப்பான வளர்ச்சியும், சாதனை ளைவன்று. அது அல்லாஹர்வின் னது ஆழ்ந்த நம்பிக்கையாகும். ஜாமிஆவின் வளர்ச்சியையும், ம் ஒரு முக்கிய அங்கமாக விளங் வளியிடுவதில் மிக ஆர்வத்தோடு ளர்கன்ளயும் மாணவர்களையும் தோடு இச் சஞ்சிகையின் வளர் ாஹற்வை பிரார்த்திக்கின்றேன்.
ஸ்ஹாஜ் எம். ஐ. எம். நளிம்.

Page 6
ஜாமிஆ நளீமியா கலாநிதி. எம்.
அவர்களின்
அல் ஜாமிஆ என்னும் பெயர்த ர்களால் வெளியிடப்படும் சஞ் காவின் ஒரு நறுமலர் மாணவ த்துவளத்தையும் விரிவுரையா சிந்தனைப் பாங்கினையும் இதில் பிரதிபலிக்கின்றன. கல்வித்துறை களத்திலும் மூன்று தசாப்தங்கை காலவளர்ச்சியில் அதற்கேயுரிய ட்டத்தை, அணுகுதலை வளர்த்து யில் பொதிந்துள்ள கட்டுரைகளி குதலும் இழையோடியுள்ளதை ள்வர். இச்சஞ்சிகையை சிறப்பு யில் மாணவர்களும், ஆசிரியர் கரிசனையையும், அதற்காக மே நான் அறிவேன். அவர்கள் அ கள். அல்லாஹ இம்முயற்சியை
56
 

வின் பணிப்பாளர்
ஏ. எம். சுக்ரி ஆசிச் செய்தி
ாங்கி, ஜாமிஆ நளீமியா மாணவ சிகை ஜாமிஆவின் அறிவுப் பூங் fகளின் எழுத்தாற்றலையும் கரு ளர்களின் ஆய்வுத் திறனையும் ) உள்ளடங்கியுள்ள கட்டுரைகள் ரயிலும், இஸ்லாமிய தஃவாவின் 2ளப் பூர்த்திசெய்துள்ள ஜாமிஆ ஒரு சிந்தனை மரபை, கருத்தோ துக்கொண்டுள்ளது. இச்சஞ்சிகை ல் இந்த சிந்தனை மரபும், அணு வாசகர்கள் இனங்கணர்டு கொ ற வெளியிடச் செய்யும் முயற்சி களும் காட்டிய ஆர்வத்தையும், ற்கொண்ட கடும் உழைப்பையும் னைவரும் பாராட்டுக்குரியவர் | அங்கீகரிப்பானாக.
ாநிதி. எம். ஏ. எம். சுக்ரி.

Page 7
ஜாமிஆ நளீமி பணிப்பாளர் அஷே முஹம்மத் அவர்க
அல் ஜாமிஆ சஞ்சிகைக்கு இந்த 6 மிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைகி பரிமாற்றத்தின் மிக முக்கி அறிவுத்துறையிலும் ஆய்வுக்கள பணியிலும் உரிய முறையில் தங் ஜாமிஆ மாணவர்கள் தங்களது திறமைகளையும் வளர்த்துக்கொ வகையில் அலிஜாமிஆ சஞ வெளிப்பாட்டுக்கு ஒரு முக்கிய
சஞ்சிகையை பல்வேறு சிரமங்க வெளியிடுவதற்கு அயராது உை இத்துறையில் நெறிப்படுத் பாராட்டுக்குரியவர்கள். அல்லாத அல்ஜாமிஆ சஞ்சிகையின் எதிர்க
புரிவானாக.
அஷசெய்க் ஏ.
 

யாவின் பிரதிப் செய்க் ஏ. சி. அகார் ளின் ஆசிச் செய்தி
வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் ன்றேன். எழுத்தும் பேச்சும் கருத்துப் ய ஊடகங்களாகும். எனவே த்திலும் இஸ்லாமிய அழைப்புப் களது பங்களிப்பைச் செய்வதோடு உள்ளார்ந்த ஆற்றல்களையும் ள்ளல் மிக அவசியமாகும். இந்த சிகை மாணவர்களின் கருத்து களமாக இருந்துவந்துள்ளது. இச் ளுக்கு மத்தியில் மிகச் சிறப்பாக ழத்த மாணவர்களும் அவர்களை திய விரிவுரையாளர்களும் ற் இம் முயற்சியை அங்கீகரித்து, ால சிறப்பான வளர்ச்சிக்கு அருள்
சி. அகார் முஹம்மத்

Page 8
“தேக்கம், அயர்வு ஆகிய இரணர்டுமே இ இயைபான தயார்நிலைகளாகும். காலனியத்தை வி சுயவிசாரனை அல்லது சுயவிமர்சனம் செய்ய வேை கசாப்புக் கடைக்காரர்களாக இருந்திருக்கமாட்டார்க காரணமாகும். பின்னர் இஸ்லாமிய சமூகம் பின்ன விழுந்தது. அசுர வேகத்தில் மேற்கு நாகரிகத்திலும் முன்னேறியது.’ இவை நவீன சிந்தனையாளர் மா குறித்துப் பேசும் அர்த்தமுள்ள வரிகளாகும்.
ஏன் மேற்குலகு முன்னேறியது, ஏன் முெ மற்றொரு இஸ்லாமிய சிந்தனையாளர், "அவர்கள் நாமோ முன்னேற்றத்திற்கான மதத்தை தூக்கியெறிந் என்பது இலட்சிய உணர்வும், உணர்ச்சி வேகமும என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் இ மையங்களை கேள்விக்குள்ளாக்கி அதன் முதுகெg பெருமையும் நவீன இஸ்லாமிய எழுச்சியில் மு விடலைகள், சின்னப் பெடியன்கள் என்ற மரபுவழி நாம் வாழ்கின்றோம். நான்கு பக்கமும் மதில்க அதிகாரத்திற்கெதிரான குரல்கள் எழுந்துவருவன கல்விமுறையிலிருந்து வாழ்க்கைக் கல்வியை ( ஏற்பட்டுவருவதையும் அவதானிக்க முடிகிறது. அ வெளியீடும் அமையவேண்டுமென நாம் இறைவ:
தமிழியலில் புதுப்பொலிவோடும் வீச்சோடு பிரிவில் அல்-ஜாமிஆ அதன் மூன்றாவது இதழை இருப்பின் அது இறைவனைச் சாரும். குறைகளுப் பொறுப்பு மாணவர்களாகிய எங்களைச் சாரும் இலட்சியத்தின் மாணவர்களாக இருக்கவே விரும்

பதிப்புரையாகச் சில குறிப்புகள்
இஸ்லாமிய சமூகத்தில் தோன்றிய காலனியத்திற்கு விமர்சிக்கவும், நிந்திக்கவும் முன்னர் தம்மைத் தாமே ஈர்டும். நாம் கிடாய்களாக இல்லாவிட்டால் அவர்கள் ள். இதுவே தேக்கத்திற்கும் அயர்விற்குமான முக்கிய டைவு, பிற்போக்கு என்ற உலகில் சரேலென வந்து
விஞ்ஞானக் களத்திலும் இராட்சதப் பாய்ச்சலோடு லிக் பின் நபி இஸ்லாமிய சமூகத்தின் பின்னடைவு
ப்லிம் உலகு பின்னடைந்தது ? என்ற கேள்விக்கு பின்னடைவுக்கான மதத்தை தூக்கியெறிந்தார்கள். துவிட்டோம்” என்று கூறுகின்றார். மாணவப் பருவம் 5 கலகமும் கலந்த உணர்ச்சிப் பிளம்பான கோளம் ப்பூமிப் பந்தின் எல்லாத் திசைகளிலும் அதிகார லும்பை முறிக்கும் போராட்டங்களை முன்னெடுத்த ]ஸ்லிம் மாணவர்களையே சாரும், மாணவர்கள், க்கருத்தாக்கங்கள் சிதைந்து வருகின்ற காலப்பிரிவில் ளால் குழப்பட்டுள்ள வளாகங்களுக்குள்லிருந்து தயும், சப்பித்துப்பும் அல்லது வாந்தியெடுக்கும் நோக்கி அவர்கள் மத்தியில் ஓர் அசைவியக்கம் புதன் புலமைத்துவ வெளிப்பாடாகவே எமது இந்த னைப் பிரார்த்திக்கின்றோம்.
மி இதழ்கள் வெளிவந்துகொணர்டிருக்கும் இக்காலப் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றது. இதில் நிறைவுகள் 5 போதாமைகளும் நிச்சயம் இருக்கும். அதற்கான நாங்கள் எப்போதும் உயர்ந்த கொள்கையின், புகின்றோம்.
-ஆசிரியர் குழு

Page 9
STAFF OF THE JA
Director Dr. M. A. M. Shukri, B.A. Hons (Cey), l
Deputy Director As-Sheikh A.C. Agar Mohamed, B.A. H.
Deans of Acdemic Affairs
As-Sheikh M. A. M. Mansoor, B.A. Hon As-Sheikh C. Ayoob Ali, B.A. Hons. (Ce As-Sheikh H. I. Khairul Basher, B. A. Hc
Acadamic Staff As-Sheikh S.H.M. Falleel, B.A. (Cey), M As-Sehik M.T.K. Zaman, Dip. in ASL (Ri Mr. A.J.M. Hussain, Special Trained (Eng As-Sehik H.L.M. Haris, B.A. Hons.(Cey. As-Sehik A.B.M. Idrees, Mr. A.M.M. Nawas, B.A. Hons. (Cey.) Mr. A.L.M. Yaseen. Mr. M.A.M. Thahir. As-Sehik M.M.M. Niyas, B.A., M.A. (Pa Mr. S.M. Fowmy. B.A. Hons. (Cey.) Dr. Jzmal Nassar, Ph.D (Egpt.) As-Sehik Abdul Shafie As-Sehik Khalf Makhlouf As-Sehik M. F. Zainul Hussain, B.A., (Ce Mr. A. C. M. Riyal B.A. Dip. in (Eng.)
Wardens Mr. S. M. Ansar (Trainee Teacher) Mr. M.A.M. Thahir. (Teacher)
Academic Administrative Staff As-Sehik M. M. M. Azmin Mr. A. M. M. Badurudeen
Chief Librariyan Al-Haj. A. R. A. Noor Amin
Acting Librariyan As-Sehik S. M. Azahim
Assistant Librariyan As-Sehik M. A. L. M. Faslul Faris
Library Staff Mr. P. M. M. Aroos Mr. M. M. M. Farhan
Information Technology Unit As-Sheikh H. I. Khairul Basher, B. A. Ho As-Sehik M. F. Zainul Hussain, B.A., (Ce

MAIHI NALEEMIAH BERUMVALA.
Ph.D (Edin)
ns. (Cey), M.A.
3. (Cey.) i.), M.A. (Sudan) ns, (Cey.), M.A. (Sudan)
.A. (Cey.) yatdh), Dip. in ARS (Libya) lish/Tamil)
), M.A. (Pak.)
k.)
y), M.A. (Pak.)
s, (Cey), M.A. (Sudan) V), M.A. (Pak.)

Page 10
Computer Lecturers Mr. H. I. M. Irshad, Dip. in. (C As-Sheikh M. A. M. Fahry, B.
Accountant Mr. A. M. M. Ansar, B.A., Dip
Administrative Secretary As-Sehik M. Z. M. Najman B.
Foreign Relations Secretar As-Sehik M. A. C. S. Marickal
Publications Bureau As-Sehik S. H. M. Faleel, B.A Mr. M. R. M. Musammil (Typt
Clerk Mr. M. K. M. Hisan Mr. M. A. Insaf
Administrative Staff Mr. A. M. A. Gaffoor Al-Haj. M. L. M. Ismail. Mr. M. M. M. Fikry Mr. M. M. M. Muhuseen Mr. M. I. Pirousdeen Mr. M. S. M. Rilwan Mr. M. M. Irfan
Mr. M. M. Arumugam Mr. L. P. A. Gunasinghe Mr. M. S. M. Kiyasdeen Mr. M. Rizve
Security Staff Mr. M. T. M. Abul Hassan Mr. M. Z. M. Rizan Mr. M. H. M. Iqbal
Kitchen Staff Mr. M. Hassan Mr. M. S. M. Lihar Mr. A. M. Muhusee Mr. A. J. M. Raseen Mr. A. M. Sirujudeen Mr. M. Siddeek Mr. M. M. Mawahir Mr. M. Azwer

om)
b. in (Acc.)
A, Dipin. ASL (Riyath)
y
B.A., Dip. in. (Com.)
, (Cey), M.A. (Cey.)
setter)

Page 11
பொரு
Science fand Technology - fan Islam
- Dr. M. A. M. Shukri Ph.D (Edin) இஸ்லாமியக் கிராமங்களும் அதற்கான ச - அஷஷெய்க் எம். ஏ. எம். ம6 ஹிப்ளுல் குர்ஆன்
- அஷஷெய்க் எஸ். எச். எம். மூன்று கவிதைகள்.
- அஷஷெய்க் எச். ஐ. கைருல் பல அல்குர்ஆனின் நிழலில் ஒரு மானிடன்.
- அவுர்ஷெய்க் எம். ஏ. அப்துல் உலகமயமாக்கலும் உலகம் தழுவும் இறு - அஷஷெய்க் எம். எம். நியாள சூழலைப் பாதுகாக்கும் இஸ்லாம்.
- அஷ்ஷெய்க் ஏ. எஸ். எம். ஜெ தண்டனைக் கோட்பாடுகள் - மேலைத்தேய - அஷஷெய்க் எஸ். எம். அய்யூட இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சிக்கான நியதி
- எம். ரீ. எம். றியாளர். குடும்பத்திட்டம் ஓர் இஸ்லாமிய நோக்கு.
- எம். எண். ஷம்ஸ் அஹமத். இருபதாம் நூற்றாண்டின் இலலாமிய அறிஞ
- ஏ. ஏ. எம். பலீல். இஸ்லாமியப் பொருளாதாரத்தின் ஒழுக்க ம - எம். ஜி ஷஹற்மி அஹமத். பிராணிகள் அறுப்புமுறை ஒரு பகுநோக்கு.
- எம். எஸ். றியாஸி முஹம்மத். ஒழுக்கவிழுமியங்களில் தங்கியிருக்கும் நாக ஒரு சமூகவியல் நோக்கு.
- பீ எம். எம். பெறோஸி. இஸ்லாமிய தஃவாவும் விளிம்புநிலைப் போ
- எம். ஏ. எம். அஜூன். பெற்றோர் - பிள்ளைகள் தொடர்பான உரின
- சீ எம். எம். அமானி

ளடக்கம்
ric.. Perspective.
ாத்தியங்களும். visst.
பழில்.
ҙf.
மலிக்.
தித் தூதும்.
5.
(ຄ).
நாக்கும் இஸ்லாமிய நோக்கும்.
கள்.
நர்கள் - சில நினைவுக் குறிப்புகள்
ாணர்புகள்.
ரிகங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்.
ராட்டங்களும்.
மகளும் கடமைகளும்.
0.
05
f
5
8
23
32
39
43
50
56
6.
66
74
82
84

Page 12
da ćôc - gdeb Soc.
- , , , 8. தஃவாவில் ஊடகத்துறையின் அவசியப்பாடு.
- ஏ. ஆர். பர்ஸான். இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரம். நேற்று - இன்று - நாளை.
- எம். எச். எம். றஹீமான் ஹசன். மாற்று இலக்கியத்தின் தேவையும் அதன் மாதி - அஷஷெய்க் ஏ. பீ. எம். இத்ரீஸி. நளிமிக்களின் பன்முகப் பதிவுகள் ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பு. நளிமிஆ பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல்.
நன்றிகள்.

ரிகளும்,
90
95
0.
105
f6
120
122
26

Page 13
SCiencØ fn( - An slomic
The Lecture delivered on the occasion of Moratuwa. Organised by Muslim Ma
The word "perspective' impliestheangle ofvision ora point ofview from which we see, study, analyse and interpretathing. Hence, Islamic perspective of science signifies the framework on the basis of which Islam views science and technology.
Science may be defined as a body of knowledge, which is gathered by the use of the scientific method, and it is essentially concerned with the material, physical and objective reality. This is done through the scientific method based on empirical observations, experiments and inferences and on the basis of these a hypothesis is developed and experiments are conducted to test its validity from which general conclusions are deduced eventually developing into the theory.
Technology is the application on the knowledge gained by scientific inquiry and method to real life problems. In fact technology until the seventeenth century was simply the collection of tools and techniques to solve the real life problems and things were invented due to necessity. But, after the Industrial Revolution things began to change with the invention ofthe machine aiming at more production. In this process technology gradually acquired the status of a Social institution with its own values, logic and agenda.
When we discuss the subject of Islamic

} TechnologŲ
Perspective -
" Dr. M.A.M. Shukri Ph.D (Edin)
Silver Jubilee Celebration of University of jlis University ofMoratuwa, Sri Lanka.
perspective of the science and technology the question that would inevitably be raised is whether there can bean Islamic perspective of science and technology or in a much broadersence canthere beareligious perspective ofthe science? Science, it may be argued, is based on reason where as religion is based on faith and science essentially deals with thematerial, tangible, observable object which are amenable to measurement, analysis, quantification and experimentation. Religion it may be said deals with the unseen, mysteriousand spiritual which are not within the realm of the observable.phenomenaandalso beyondrationalverification.
This question is raised due to the wrong understanding of Science. There is a general tendency to view science and technology as value free, objective enterprise without any subjective consideration and it is generally assumed that a scientist is a detached personality who observe things with objectivity without any subjective feelings with the soleaim of knowing the barefacts on the basis of rational analysis. But the historical development of Science, and its contemporary application falsifies this generalization. Science. mainly the Western Science, in the course of its historical development became integrated into a cultural tradition having its own worldview and values and attitudes. The Scientist brings his own vision. attitude, perception and prejudice into his
-- அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் ! 1

Page 14
study and research. Sometimes scientific datasare interpreted and manipulated by political aims and other considerations. Rene Dubos in his book "Awake Reason-Science forman" explains this trendin scientific thought as follows:
"Modern man has now depended on scientific technology not only for the construction of machines and buildings but also for giving directions for his social and emotional desires'.
Today what is generally knownas, is really speaking “the Western Science which came into being after the Renaissance, due to the conflict that took place between the church and the scientists, such as Copernicus and Galileo. Eventually, science became separated from religion and assumed amaterialistic secular garb. This had serious consequences for science, religion and humanity. Science fragmented the cosmos and became one-dimensional. For the past three centuries Western Civilization has beenlargely based on Francis Bacon's Maxim "Knowledge is power". It is now apparent that using the power produced by scientific technology for mastering nature is not sufficient to sustain civilization. The tragedy of modern scientific civilization is that it lays more emphasis on things than manand it has becomeone dimensional.
Thus, thereisaneed to provide an ethical, moral and spiritual dimension to science and technology ifmankind is to benefit from them and avert the dangers of their wrong application and religion can playasignificant role in this endeavour. Let us see in what ways Islam can contribute towards this task. Islam's relationship with science must be viewed against the background of Quranic view of God, man and the universe. Tawhid or unity of God is the cornerstone of Islamic faith from which logically follows the Islamic concept of unity ofcreation. The universe is not something that is driftingaimlessly withoutanaimorpurpose. There is a design and purpose increation and the entire creation is bound by certain laws and functions according to certain prescribed pattern.
2 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

Quran on many occasions refers to these laws that bound the entire creation.
"The sun and the moon follow courses exactly computed. The stars and the trees both alike high and has devised for all things a measure in order you may not violatedue measure."(Quran55:5-7)
In chapter36, verse 38 it states as follows:
"And the sun runs its course in the orbit of its own and that is laid down by the willofalmighty, the all knowing. And the moon for which we have determined phases which it must traverse till it became like an old date stalk dried up and curve and neither may the sun overtake the moon nor can the night outstrip the day, since each swims along in its own orbitinaccordance withour law.”
In chapter 25, verse 2 it further states:
" It is he who created every thing and ordered them in due proportion." Quran exhorts mankind to observe, ponder and reflect on the order and harmony that runs through the entire creation and by doing so it invitesman to develop a scientific attitude towards nature.
"Behold in the creation of the heavens and the earth and the alternation of night and day their signs for menofunderstanding. And on the earth there are signs to all who are endowed with
insight just us there signs thereof within your
ownselves. Canyou not see." (Quran-51:20)
750 verses of the Quran, almost 1/8 of it exhort the believers to observe nature and reflect on the wonders, order and harmony that prevail in the creation. Quran in this manner affirms the essential nature of the link between the Quranic message and Allah's cosmic laws. Hence, according to Islam science is the tool, which reveals, illuminates and clarifies the link between the creator and the creation. Thus from Quranic perspective the entire cosmos is a unity and every

Page 15
thing in the universeisboundby certainfundamental laws. Science today is in total agreement with this Quranic truth.
Davies and Grisben referring to the result of sophisticated Quantum experiments states as follows:
* We think of the universe as a vast network of particles and each linkage binds the participating particles into a singlequantum System. In some sense the entire universe can be regarded as a single Quantum system.
Thus according to modern physics, matter, energy, space and time are interchangeable and interconnected. This transforms the observable components of the universe into one entity.
Muslim scientists viewed deferent sciences in a single perspective and as interrelated. The goal ofall sciences was seen as the discovery of unity and coherence in the world of nature. During the period of glorious Islamic civilization we find numerous examples of scholars who while being eminentin the field of religious studies were also excelling in the sciences of nature.
Nature is a fabric of symbols which must be read according to their meaning. Quran is the counterpart of that text in human words. The Arabic term “Ayat” which means the verses of the Quran, is also used in Quran to refer to the phenomena of nature. A Muslim is exhorted by the Quranto study the phenomena ofnature (Ayat) in the light of the verses (Ayat) of the Quran.
Man according to Quran, is the supreme creation and it refers to manas "Khalifathullah' - the vicegerent of God on earth. The nature and the entirecreation are subjected to serve man. This subjugation of nature is referred in the Quranas 'Taskhir."
"Do you not see that God has subjugated to you all things in the heaven and the earth and

has made his bounties flow to you in exceeding measure both seen and unseen." (Quran - 31 : 20)
It is interesting to observe that the 57th chapter of the Quran has been named as "AlHadeed"- Chapter on Iron and the verse 25 of this chapterspeaks about the use ofironas follows:
"We bestowed iron in which there is awesome power as well as power to man
Muhammad Asad, an eminent commentator of the Quran makes the following observation about this verse:
"God has endowed man with the ability to convert to his use the natural resources of his earthly environment. An outstanding symbol of this ability is man's skill, unique among all animated beings, in making tools and the primary for all tool making-and indeed for all human technology-is iron, the one material which is found abundantly on earth and which can be utilized for beneficial as well as destructive ends the awesome powerBas Shadeed - as Quran refers in this verse inherent in iron manifest itself not only in the manufacture of weapons of war but also more subtly in man's every growing tendency to foster the development of an increasingly complicated technology which if put wrong use become a potential evil. It istowarnimanofthis danger Ouran stresses the potential evil of iron."
Subjugation of nature does not imply conquest of nature or rape of nature as we are witnessing today. Islam along with the concept of Taskhir or subjugation also emphasizes two other important concepts Tawazun - Balance and Amana - Trust:
"And the firmament has he raised high and he has set up the balance of justice in order that ye may not transgress the balance.” (Quran -55:07)
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 3

Page 16
Therefore man is notexpected to exploit nature in such a manner as to disturbits balance and cause environmental degradation and ecological catastrophe, everything in the universe is an Amana or trust and must be utilized with greatersense ofresponsibility.
But today due to certain historical development, science and technology have been increasingly separated from moral, ethical and sacred considerations and the consequences of such a separation can be seen in the current problemsofimmensemagnitudeandgrave concen such as ecological crisis, environmental pollution and genetic manipulation.
Most of the scientists of the 19th century were euphoric and optimistic about man's future with the dream that scientific advances and technological progress would guaranteepeace and happiness, reduce human miseries as they would increasingly enable man to manage his own and external nature and thereby he would become masterofhis owndestiny. But somethingradically had gone wrong with technological development during the last century and increased control of nature has not provided safety and peace of mind because technological innovations created problems of their own that endlessly require development of counter technology. Professor Arnold Toynbee in his book "Civilization on Trial 'says:
Man’s conquestofnaturehas beenbrilliant but his misuse of victory has been tragic.”
There is not only a quantitative elementinnature butalsoaqualitative andspiritual elementanditis only by incorporating this element, which is the missing dimensionin modern science and technology that it can made to serve humanity.
4 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் -

Science is said to be like a powerful searchlight in the long winternight lighting up a small area in its beam but unable to shed light beyond its border. This is not to underestimate its value, it is only to say that it is limited. Seyyed Hussain Nasr, a contemporary Islamic scholar makes the following observation in this regard:
“People speak about fusion of science of East and West, such fusion can occur only if modern science could be developed to embrace the qualitative and spiritual element in nature as well as the quantitative aspects of things. It would create anattitude ofcontemplation towards nature rather than the desire for domination and conquest.”
It is only this spiritual outlookabout which Seyyed Hussain Nasr speaks above that can convertman from his role of plundererofearth to that of vicegerent of God. Natural environmentis remarkably complex but a harmonious whole in which nothing functions exceptinconjunction with the other parts. We cannot benefit from science and technology without the spiritual vision of the universe. This in short is the Islamic perspective of science and technology.
The observation made by Prince Charles in his lecture on "Building bridges between Islam and the West" at a foreign office seminar in London on 13th December 1991 is worthy of mentioning asafitting conclusion to this subject:
"Islamic civilization has retained a more integrated and integral view of the sanctity of the world aroundus. We in the West could be helped to rediscoverthese roots of our understanding by an appreciation of Islamic tradition's deep respect for the timeless tradition of the natural order.”

Page 17
இஸ்லாமியக் கிர
அலுல்லுெ!
மேற்குலகம் மனித சமூகத்தின் நல்வாழ்வு க்காக முன்வைத்த கொள்கைகளும், சித்தாந்தங்களும் ஏறத்தாழ தோற்றுப்போய்விட்டன. இனிமேல் கொடு ப்பதற்கு அவற்றிடம் எதுவுமில்லை. ஒருவகை சித் தாந்த வங்குரோத்துநிலையல்தான் அவை உள்ளன. பலஸ்தீனிய இஸ்லாமிய சிந்தனையாளர் முனி ஷபீக் சொல்வது போன்று பின்நவீனத்துவம் அத்தகைய வங்குரோத்து நிலையின் எதிர்மறை நிலையையே பிரதிபலிக்கிறது.
இத்தகையதொரு இடைவெளியில்தான் இஸ்லாமிய எழுச்சி உலகெல்லாம் பரவி தன் சிந்த னைகளை முன்வைக்க முனைந்துள்ளது. மேற்குலகி ன் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்கள் பலர் இளம் லாத்தைப் புரிந்துகொள்ள இப்போது முற்பட்டுள் ளனர். இஸ்லாத்தை நோக்கிய வருகை மேற்குலகில் தற்போது பரவிவருகிறது.
இத்தகைய கால சூழ்நிலையில் சிறுபான் மையாக வாழுகின்ற நாம் நமது வாழ்வு குறித்தும் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். அவற்றைத் தீர் ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டலாக இக் கட்டுரை அமைய முடியும் எனக் கருதலாம்.
முஸ்லிம் 'உம்மத் என்பது முழு மனித சமூ கத்தையும் காப்பதற்கானதொரு ‘பேரியக்கமி’ எனக் கொள்ளப்பட வேண்டும். இந்த உணர்மையை ஒவ் வொரு தனி முஸ்லிமும் நன்குணரவேண்டும். தான் முஹம்மத் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட
தொரு இயக்கத்தின் அங்கத்தவன். உலகில் தீமைக

ாமங்களும் அதற்கான சாத்தியங்களும்
ப்க் எம். ஏ. எம் மன்சூர் சிரேஷ்ட விரிவுரையாளர்
6D6T ஒழித்து நன்மைகளை வளர்த்துக் காக்கும் அடி ப்படைப் பணியை அந்த இயக்கம் ஏற்றுள்ளது எனவு மி அவன் விளங்க வேண்டும்.
“நீங்கள் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த உம்மத் ஆகும். நீங்கள் நன்மையை ஏவத் தீமையை தடுக்கிறீர்கள்.” என்ற இந்த இறை வசனம் இக்கருத்தையே குறிக்கிறது. வெறுமனே உலக வாழ்வில் தன் உரிமைகளைப் பெற்று, அனுபவித்து ஒரு சாதாரண சமூகமாக வாழ்ந்துவிட்டுப் போவத ல்ல இச்சமூகம். அது உலக மக்களை நெறிப்படுத்தி வாழவைக்கும் ஓர் பேரியக்கம் என்கிறது இந்த வச
6TO.
“நல்லவற்றின்பால் அழைத்து நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் ஒரு பரிவினர் உங்களில் இருக்க வேண்டும்.” என்ற இறைவசனம் முஸ்லிம் சமூகத்தின் உள்ளே இதற்கென்றே ஒரு பிரிவினர் காணப்படவேண்டும் என்ற கருத்தைக் குறிக்கிறது. இமாம் முஹம்மத் அப்துஹ0 போன்ற சில தப்ஸிர் ஆசிரியர்களது கருத்துப்படி இந்த வசனம் முழு முஸ் லிம் சமூகத்தையுமே குறிக்கிறது. இக்கருத்தை ஸறொ ஹஜ்ஜின் கடைசி வசனம் (78ஆம் வசனம்) மிகவும் தெளிவாக கீழ்வருமாறு குறிக்கிறது.
‘அல்லாஹவின் பாதையில் மிகச் சரியான முறையில் நீங்கள் போராடுங்கள். அவன் உங்களைத் தெரிவுசெய்தான். மார்க்கத்தில் உங்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் அவன் ஆக்கவில்லை. இதுவே உங் களது தந்தை இப்றாஹீமுடைய மார்க்கமாகும்.”
போராட்டத்தைச் சொல்லி, அதற்காகவே தெ
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 5

Page 18
ரிவு செய்யப்பட்டதாக விளக்கி, அந்தவகையில் மா ர்க்கத்தில் எக்கஷடத்தையும் ஆக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தி இப்றாஹீம் (அலை) அவர்களது மார் க்கம் இதுவே எனவும் முடிக்கும் இந்த வசனம் முஸ் லிம் உம்மத் வெறுமனே பூகோள, இன, மொழி எல் லைகள் கொண்ட சமூகமன்று. அது தீமைகளை ஒழி த்து நன்மைகளை வளர்க்கப் போராடும் ஒரு பேரி யக்கம் என மிக அழகாக விளக்குகிறது.
‘முஸ்லிம் உம்மத்’ எனப்படும் இப்பேரிய க்கத்தின் ஆரம்ப ஸ்தாபகர்-இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உருவாக்கிய அந்த உன்னத சமூகம் பற்றி விபரிக்கும்போது இக்கருத்துப் பின்னணியை யே அவதானிக்க முடிகிறது.
“முஹம்மத் அல்லாஹ்வின் தூதர், அவரோ டிருப்பவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடுமையாக இருப்பார்கள். தம்மிடையே இரக்க உணர்வோடு இருப்பார்கள்.”
"அவரோடிருப்பவர்கள்’ என்ற பிரயோகமு ம் அத்தனிமனிதர்களுக்கு முதன்மையாகச் சொன்ன பணிபுகளும் இக்கருத்தையே காட்டுகின்றன. அல்குர்ஆன் முஸ்லிம் 'உம்மத் என்பது அடிப்படையில் போராளிகள் என்ற கருத்தை மிக அதிகமாக விள க்குகிறது. 'ஜிஹாத்' குறித்த இறைவசனங்கள் அல்குர்ஆனின் மிகப் பரவலாகக் காணப்படுவதிலிருந்தும் உணர்மை முஸ்லிம்கள் பற்றிக் குறிக்கவரும் சந்த ர்ப்பங்களில் போராட்டத்தை அதற்கொரு பண்பாகக் குறிப்பதிலிருந்தும் இக்கருத்தை விளக்கலாம். பத்ர், உஹத், அகழி, ஹoனைன், தயூக் போன்ற எப்போ தோ நடந்து முடிந்த யுத்தங்களை நிரந்தரப் பணிபு படைத்த அல்-குர்ஆன் விபரிப்பதிலிருந்து இக்கரு த்தை மேலும் புரிந்துகொள்ள முடியும். அந்த யுத் தங்களை விபரிக்கும் வசனங்களை ஆழ்ந்து பார் க்கும்போது இக்கருத்துத் தெளிவாகும்.
ஒரு சமூகத்திற்குத் தேவையான சட்டங்களை அல்-குர்ஆன் மிகவும் குறைவாகவே விளக்குகிறது. விளக்கும்போதுகூட அவற்றை சட்டங்களை விள க்கும் வரணர்ட சொற்பிரயோகங்கள் ஊடாக விளக் கவில்லை. நன்மைகளை வளர்த்துத் தீமைகளை ஒழி ப்பதனை அடிப்படைப் பணியாகக் கொண்டிருக்கும் ஒரு உம்மத் சட்டங்களால் ஆளப்படக்கூடாது. பர ஸ்பர சகோதரத்துவப் பணிபே அதனை ஆளவே ண்டும் என்ற கருத்தையே இது குறிக்கிறது. இதுவும் இந்த உம்மத், இயக்கம் என்பதனையே காட்டுகிறது.
நபிமார்கள் அடிப்படையில் போராளிகள்.
6 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

மக்களை இறைவன்பால் திருப்பி சமூக வாழ்வில் நிறைந்து காணப்படும் தீமைகளை ஒழிக்கப் பாடு படுவதே அவர்களது அடிப்படைப் பணி. அந்த நபி மார்களில் இறுதியானவரே முஹம்மத் (ஸல்) அவ ர்கள். இனி முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின் நபிமார்கள் தோன்றமாட்டார்கள். அந்த நபிமார்களது பணியை முஸ்லிம் உம்மத்தே இனி ஏற்கிறது. அந்த வகையிலும் இந்த முஸ்லிம் உம்மத்தின் அடிப்ப டைப் பணிபு பேராட்ட உணர்வே என்ற கருத்துப் பெறப்படுகிறது.
எனவே வெறும் உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராடுகின்ற இன உணர்வு கொண்ட சாதாரண சமூகமாக இந்த உம்மத் மாறி விடுதல் ஒரு பாரிய சித்தாந்தப் பிறழ்வாகவே கொள் ளப்படவேண்டும்.
இஸ்லாமிய உம்மத்தின் அங்கத்தினர்கள் எங்கு வாழ்ந்தபோதும் இந்த அடிப்படை உணர்மை யைக் கவனத்திற் கொள்ளவேண்டும். குறிப்பாக சிறு பான்மையாக வாழும் முஸ்லிம் உம்மத்தின் பிரிவி னர்கள் இக்கருத்துக் குறித்து மிகுந்த அவதானத்தோடு இருக்கவேண்டும்.
இஸ்லாமிய சிந்தாந்தமே மனிதனின் பிரச்சி னைகளுக்குத் தீர்வு என்றவகையில் அத்தகையதொரு இஸ்லாமிய சமுதாய அமைப்பைக் காணபதே ஒரு இஸ்லாமியவாதியின் வேட்கையாக, கனவாக இரு க்கவேண்டும். இந்த இலக்கை நோக்கிய போராட் டமே அவனிடம் முதன்மைப்பட்டுக் காணப்பட வேண்டும்.
எமது அரசியல் போராட்டங்களும், ஏனைய சமூக நடவடிக்கைகளும் இந்த சிந்தனைக்கேற்ப ஒழு ங்குபடுத்தப்படுவது மிக அவசியம். இல்லாதபோது இனவாத, தேசிய சக்திக்குள் வாழ்ந்து இஸ்லாமிய வாதப் போக்கே இல்லாதுபோகும் சூழ்நிலை உரு வாகும். ஆழ்ந்த இஸ்லாமிய சித்தாந்தவாதிகள் எம் நாட்டில் இல்லாமையால், அல்லது இருந்தும் அரசியல் சமூகப் போராட்டங்களை இஸ்லாமிய சித்தாந்த ஒழு ங்கில் நெறிப்படுத்துவதற்கான சித்தாந்தத் தெளிவி ன்மையால் எமது அரசியல், சமூகப் போராட்டங்கள் இனவாதப் போக்கெடுப்பதை நன்கு அவதானிக்க (1plգեւյմ,
நவீன இஸ்லாமிய எழுச்சியோடு இஸ்லா மிய உலகமொன்று தோன்றுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன. முதலாளித் துவ, சுரண்டல்வாத சக்திகள் அனைத்தும் ஒன்றிணை

Page 19
ந்து அத்தகையதொரு இஸ்லாமிய சித்தாந்த உல கமொன்று தோன்றுவதை நசுக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டுவருகின்றன. எனினும் அச் சக்திகள் வரலாற்றைத் திருப்பும் சக்தி படைத்த வைகளல்ல. நிச்சயம் இறையருளால் இஸ்லாமிய சக்திகள் வெற்றிபெறும் இத்தகைய சர்வதேசிய சூழ லில் இஸ்லாமிய வாழ்வுக்கான எமது போராட்டமும் அடிப்படையில் இஸ்லாமிய சமூக வாழ்வுக்கான சில உதாரணங்களை உருவாக்குவதாக அமைதல் மிகவும் பொருத்தமானதாக அமையும்.
இந்தப் பின்னணியில் எமது நாட்டு முஸ் லிம்களின் வாழ்வமைப்பின் புவியியல் ஒழுங்கைப் பார்க்கும் போது முஸ்லிம் கிராமங்களை இஸ்லா மியமயப்படுத்தல் என்ற வேலைத்திட்டம் அதிமுக் கியத்துவம் வாய்ந்ததாகிறது. நிலத்தொடர்பற்ற புவி யியல் ஒழுங்கில் நாம் வாழ்வதால் கிராம ரீதியாக எம்மை ஒழுங்குபடுத்துவதே மிகப் பொருத்தமாக அமைகிறது. அது மாத்திரமன்றி 'இஸ்லாமிய மயப் படுத்தல்’ என்ற கருத்தை முன்னெடுக்கும்போது இனரீதியான செயற்பாடுகள் அற்றுப்போகும் நிலை யும் உருவாகிறது.
சிலவேளைகளில் குறிப்பட்ட சில பிரதேச ங்களைப் பொறுத்து தனி அலகு, மாகாண ஆட்சி முறை, அல்லது நிலத்தொடர்பற்ற நிர்வாக ஒழுங் கொன்றை நோக்கிய அரசியல் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டாலும் அதுவும் மேலே விளக்கிய இஸ்லாமிய மயமாதல்’ என்ற கருத்துப் பின்னணி யைக் கொணடிருப்பது முக்கியமாகும். அவ்வாறில் லாதபோது அது கணிடிப்பாக இனவாதப் போக்கை யே பெறும் என்பதில் சந்தேகமில்லை.
கிராமத்தை இஸ்லாமிய மயப்படுத்தல் என்ப தைப் பொறுத்தவரையில் இஸ்லாமியக் கருத்துக்களை எந்தளவுதூரம் நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்த சில குறிபபுக்களை மாத்திரம் கழே தருகிறோம் :
1. ஆன்மீக வாழ்வு :
இஸ்லாமிய வாழ்வன் அடித்தளம் இறைதொடர்பாகும். ஒவ்வொரு தனிமனிதனும் அல்லாஹர் வோடு எவ்வளவு துரம் தொடர்புபட்டுள்ளான் என்பதைப் பொறுத்தே அவனது இஸ்லாமிய வாழ் வின் முழுமை தங்கியுள்ளது. சரியான நம்பிக்கை உள்ளத்தில் ஆழமாகப் பதியப்படல் ஆன்மீக வாழ் வின் முதல் அம்சமாகிறது.
பின்னர் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற

கடமையான வணக்க வழிபாடுகளும் தஹஜ்ஜத், திக்ர், அவராதுகள் போன்ற ஸுன்னத்தான வணக்க வழிபாடுகளும் இந்த நம்பிக்கையை உள்ளத்தில் பசுமையாக வைத்துக் கெள்ள உதவுவனவாகும்.
ஒரு கிராமம் பள்ளிவாயல் ஊடாக இந்த ஆன்மீகப் பயிற்சியை வழங்கவேண்டும். இதற்காக ஒலிப்பதிவு நாடாக்கள், வீடியோ கெஸட்கள், சிறு கைநூல்கள், பயான்கள், குத்பாக்கள், இரவு நேர ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்கள் என்பவற்றைப் பள் ளிவாயல் ஒழுங்குபடுத்தி, தொடர்ந்தும் கிராமத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும்.
இந்தவகையில் மிக முக்கியமான ஒரு பகு தியே அல்-குர்ஆனை மக்களுக்கு மத்தியில் மிகப் பரவலாக்குவதும் அதனை விளங்குவதற்கான சூழ லை உருவாக்குவதுமாகும்.
அல்-குர்ஆன் மத்ரஸாக்கள் இந்தப் பின்ன ணியில் மறுசீரமைக்கவேண்டும். பாலர் பாடசாலை களும் இந்தப் பின்னணி கொணர்டதாக அமையப் பெறவேண்டும்.
மக்களுக்கு மத்தியில் ஆன்மீக வாழ்வை உருவாக்கிவிட முதலில் ஒரு வருடகாலம் திட்ட மிட்டுத் தொடர்ந்து முயற்சி எடுக்கப்படுமானால் அது ஒரு நல்ல விளைவைக் கொண்டுவருவதனைத் தெளிவாக அவதானிக்கமுடியும். இங்கு விபரிக்க ப்படும் அனைத்துக் கிராம ஒழுங்குகளுக்கும் அதுவே அடித்தளமாக அமைகிறது.
ஆன்மீக வாழ்வை உருவாக்குவதன் இன் னொரு பிரதான அம்சத்தை இங்கு தனியாகக் குறி ப்பிடுதல் முக்கியமாகும். அறபு மொழியை மக்க ளுக்கு மத்தியில் பரவலாக்குதல் என்பதே அந்த அம்சம். அல்-குர்ஆனை மேலோட்டமாகவாவது விளங்குவது நல்ல பாதிப்பை உள்ளங்களில் ஏற்ப டுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அனைத்து வணக்க வழிபாடுகளும் அறபு மொழியிலேயே அமைந்துள்ளன. இந்தவகையில் ஒரு முஸ்லிம் அறபு மொழியைப் படித்தல் அவன் மீது கடமையாகிறது என்றும் கூறலாம்.
எனவே பாலர் பாடசாலை, குர்ஆன் மத்ர ஸா என்ற தொடக்க நிலை வகுப்புக்களிலிருந்தே அறபு மொழியைப் பயில்வதற்கான ஒழுங்குகள் செய் யப்படவேண்டும். சவுதி அரேபியாவின் பல்கலைக் கழகங்கள் அறபு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதோருக்கு அறபு மொழி கற்பிக்கும் முறை
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 17

Page 20
சம்பந்தமான பல ஆய்வுகளை மேற்கொணர்டு பல நூல்களையும் ஆக்கியுள்ளன. அவற்றின் மூலம் இப் பகுதியல் மிகுந்த பிரயோசனம் பெற முடியும்.
2. இஸ்லாமிய அறிவுப் பகுதி :
எமது சமூகத்தில் மதச்சார்பற்ற பாடசாலைக் கல்வ முறை, முற்றிலும் மார்க்கக் கலைகள் சார்ந்த மத்ரஸா கல்வி முறை என்ற இரு கல்வி முறைகள் உள்ளன. பெரியதொரு பிரிவினர் இந்த மதச் சார் பற்ற கல்விநிறுவனங்களில் பயிற்றப்பட, சிறியதொரு தொகையினர் மத்ரஸாக் கல்வி முறையில் பயிற்ற ப்பட்டு ஆன்மீக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக மட்டும் நிற்கின்றனர்.
மதச்சார்பற்ற கல்விமுறையில் பயின்றவர்கள் மார்க்கம் பற்றிய மிக மேலோட்டமான அறிவோடு சமூ கத்தின்அரசியல் சமூகத்தலைவர்களாகஇயங்குகிறார்கள்
இந்த முரண்பட்ட நிலை நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் மார்க்கம் பற்றிய அடிப் படையான அறிவையும் பொது அறிவையும் பெற் றவனாக மாறவேண்டும். அதற்கான நிறுவன ஒழு ங்குகள் கிராமங்களில் உருவாக்கப்படல் மிக அவ சியமானதாகும். இந்த அறிவு, ஆன்மீகப் பண்பு என்ற இரு அடிப்படைகளின் மீதுமே ஏனைய அனைத்துப் பகுதிகளும் எழும்புவது சாத்தியமாகும்.
3. ஷCறா அமைப்பை உருவாக்கல் :
ஷCறா’ என்பது இஸ்லாமியப் பெறுமா னங்களில் ஒன்று. இது வெறுமனே ஏறத்தாழ ஜன நாயகத்திற்கு நிகரான அரசியற் பெறுமானம் மட்டு மன்று. குடும்பம், கூட்டுச் செயற்பாடுகள் அனைத்தி ற்கும் உரிய பெறுமானமாகவே அல்-குர்ஆனும் ஸுன்னாவும் இதனை முன்வைக்கிறது.
கிராமம் தனது விவகாரங்கள் அனைத்தை யும் ஷCறா ஒழுங்கில் தீர்மானித்துக் கொள்ளலி’ என எளிமையாக இக்கருத்தை விளக்கலாம். மிகச் சரியான ஷCறா பேணப்படும் போது உயர்ந்த ஜனநாயகப் போக்கிற்கு நல்லதொரு முன்மாதிரியாக அது அமை ԱվLO.
எகிப்தின் அல்-இஹவானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரா ய்ந்த மேற்கத்தேய ஆய்வாளர்கள் “எகிப்தின் சர்வா திகார ஆட்சியுனுள்ளே நிலவிய உயர்ந்த ஜனநாயக மாதிரிகள்’ என அவற்றை வர்ணித்தனர். ஷாறாவை
8 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் -

நன்கு விளங்கி, கவனமாக நடைமுறைப்படுத்தும் போது அத்தகையதொரு முன்மாதிரியை நாம் முன் வைக்க முடியும்.
4. குடும்பச் சட்டங்கள் :
ஒரு சிறுபான்மை நாட்டிலும் கூட 90% ஆன அளவு இஸ்லாமிய சட்டத்தினை அமுல்படுத்த முடியுமானால் அது இவ்வகை சட்டங்களேயாகும்.
குடும்பம் இஸ்லாமிய சமூக வாழ்வின் அடி த்தளம் பெண் அவளுக்குரிய இடத்தை அவளது இய ல்புக்குத் தகுந்தவகையிலும், சமூக வாழ்வில் சம நிலை அற்றுப்போகாமல் பாதுகாக்கும் விதத்திலும் பெறவேண்டுமானால், குடும்ப வாழ்வைச் சரியாக நடைமுறைப்படுத்துவதிலேயே அது தங்கியுள்ளது. குறிப்பிட்டதொரு மத்ஹப் சார்பின்றி இஸ்லாமிய சட்டங்களை ஆழ்ந்து ஆராய்ந்தால் பெண அநி யாயமிழைக்கப்படாது அவளுக்குரிய அந்தஸ்த்தைப் பெறுவாள். அதே வேளை குடும்பமும் ஒரு ஸ்திர மானநிலையை அடையும். சமூக வாழ்வன் ஸ்திரத் தன்மைக்கும் மிக அடிப்படையானதொரு பங்க ளிப்பை குடும்ப அமைப்பு வழங்கும். பலஸ்தீனியப் போராட்டத்தில் குடும்ப அமைப்பு எப்படியொரு அரசியல் சக்தியாக இயங்கியது என்பது பற்றிய ஆய்வுகள் கவனத்திற் கொள்ளத்தக்கன.
காழிநீதிமன்றம், செலவினம் சம்பந்தமான சட்டங்கள், வாரிசுரிமைச் சட்டங்கள் இங்கு மிக முக் கியமாக மீளாய்வுக்குட்படுத்த வேண்டிய சட்டப் பகு திகளாகும். இவை சரியான ஒழுங்குக்குக் கொணர் டுவரப்படுமானால், சமூக வாழ்வில் அவை தெளி வான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேக மில்லை.
5. பொருளாதாரம் :
சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையை முழு மையாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றதாக இருக்கலாம். எனினும் அதன் ஒரு பகுதியை நடை முறைப்படுத்துவது சாத்தியமானதே. அப்பகுதி பற்றிய தெளிவுக்கு வரவேண்டுமாயின்,
1. முழுமையான இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையையும் ஆழ்ந்த ஆய்வுக்குட்படுத்த
வேண்டும்.
அந்த முழுமையான ஆய்வு வெளிச்சத்தி

Page 21
லேயே எப்பகுதியை எமது சமூக நிலைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தமுடியும் என்ற தெளிவுக்கு வர முடியும். எனினும் எமது ஆய்வுக்குட்பட்டவகையில் சில குறிப்புகளை மட்டும் தருகிறோம்.
வெறும் இலாப நோக்கும், கொள்ளை இலா பமுமே அடித்தளமாக விளங்கும் வியாபார முறை யை எமது கிராம சந்தைகளில் சீர்படுத்த முயலல். இதற்கு இரு அம்சங்களில் கவனம் செலுத்த வேணி டும்.
(அ) ஆன்மீக உணர்வை வியாபாரிகளிடையே வளர்த்தல்.
(ஆ) இஸ்லாமிய வியாபார சட்டங்கள் பற்றிய அறிவை அவர்களுக்கு வழங்கள்.
1. இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகம் செய்தல்:
தற்போது சில ஊர்களில் இந்த வங்கிய மைப்பு காணப்படினும் அது முழுமை பெற்றதாக இல்லை. எனவே இஸ்லாமிய வங்கியமைப்புக் குறி த்து முழுமையானதொரு ஆய்வோடு அது நடை முறைப்படுத்தப்படவேண்டும். கிராமத்தின் செல்வம், முதலீடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவற்றை நெறிப்படுத்தும் அமைப்பாக அப்போது அது இயங்க முடியும்.
I. 'அத்-தகாபுல் அல் இஜதிமாஈ (சமூகக் கூட்டுப் பராமரிப்பு) எனப்படும் ஒழுங்கை நடை முறைக்குக் கொண்டுவர முயற்சித்தல். இது பொரு ளாதார சமநிலையை உருவாக்குவதில் மிக முக்கிய பங்குவகிக்கின்ற ஒரு கொள்கையாகும். இக்கொ ள்கை மிக விரிந்த பொருள் கொண்டது. 'அத்-தகா புல் அல் இஜதிமாஈ என்பது பின்வரும் அடிப்ப டைகளில் பொருளாதாரத்துடன் நேரடியாகத் தொட்ர் புபடுகின்றது.
(அ) ஸகாத் குறிப்பிட்டதொரு மத்ஹபைச் சார்ந்து நிற்காது நவீன தொழில் முறைகள், நிதி நிறுவனங்கள், விவசாய உற்பத்தி ஒழுங்குகள் என் பவற்றைக் கவனத்திற் கொண்டு ஸகாத் மிக விரிந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டால் மட்டுமே இங்கு எதிர்பார்க்கும் விடயம் பூரணமடையும். அது பற்றிய விரிவான விளக்கத்தை இங்கே தருவது கடினம்.
(ஆ) ஏழைகளது வறுமையைத் தீர்ப்பதற்கு லகாத் மாத்திரம் போதாதவிடத்து இஸ்லாமிய அரசு

மேலதிகமாக வரிகளை அறவிட்டு அப்பிரச்சினை யைத் தீர்க்கவேண்டும் என்பது இஸ்லாமிய அறி ஞர்கள் சிலரது கருத்தாகும். இக்கருத்துக்கு ஆதா ரமாகப் பல அல்-குர்ஆன் வசனங்களையும் ஹதீ ஸ்களையும் காட்ட முடியும். அந்த விரிந்த விளக் கத்தைத் தருவது இங்கு எமது நோக்கமன்று. எனி னும் இந்தச் சட்டத்தைக் கிராம மட்டத்தில் நடை முறைப்படுத்த எத்தகைய நிறுவன ஒழுங்கைக் கடை ப்பிடிக்கலாம் என்று ஆராய்வது முக்கியமாகும்.
(இ) செல்வத்தோடு சம்பந்தப்படும் இன்னும் சில சிறிய ஒழுங்குகளும் இஸ்லாமிய சட்டத்தில் காணப்படுகின்றன. அவை பற்றிய விளக்கம் தனி மனிதர்களுக்குத் தெளிவாகும்போது இவையும் பொருளாதார சமநிலைக்கு ஒரு குறிப்பிடத்தக்களவு பங்களிக்க முடியும்.
1. ஸ்காத்துல் பித்ர் : இது நோன்போடு சம்பந்தப்பட்ட ஒரு கடமையாகும். ஹனபி மத்ஹபின் கருத்துப்படி, பிரதான உணவுப் பொருள் மட்டும ல்லாது பணமாகவும் இது வழங்கப்படமுடியும் என்ற கருத்தையும் வைத்துக் கொண்டு இதனை நோக்குவ து மிகவும் பலன்தரக்கூடியதாகும். அத்தோடு இது வும் ஸகாத்தைப்போன்று நிறுவன ஒழுங்கில் சேக ரித்து விநியோகிக்கப்படும்போது பெரும் பயனளி க்கக் கூடியதாக அமையும்.
2. கப்பாரா” சில வகையான குற்றச் செய ல்களுக்கு ஏழைகளுக்கு உணவளிப்பதை இஸ்லாம் பரிகாரமாக முன்வைக்கிறது. அக்குற்றச் செயல்கள் யாவை, அவற்றிற்கான சரியான பரிகாரம் யாது என் பன போன்ற விளக்கங்கள் மக்களுக்குக் கொடுக்க ப்பட்டால் அதுகூட பொருளாதார சமநிலைக்கு ஒரு பங்களிப்பைச் செய்யமுடியும்.
3. ஸதகாக்கள் ஸoன்னத்தான வணக்க வழிபாடுகளில் மிக உயர்ந்தவையாக ஸதகாக்கள் கணிக்கப்படுகின்றன. இத்தகைய வணக்கத்திற்குச் சரியான தூண்டுதல்கள் கொடுக்கப்படும்போது பொரு ளாதாரப் பகுதியில் இது ஏற்படுத்தும் பாதிப்பு பாரி யதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக ‘ஸதகதுன் ஜாரியா’ எனப்படும் நிரந்தர நன்மைதரும் தர்மம் இஸ்லாமிய வரலாற்றில் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் போன்ற வற்றையே பராமரித்துள்ளது. இந்தவகையில் ஒரு சமூகத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெ ய்வதில் கூட அவை பாரிய பங்களிப்புச் செய்ய முடியும். எனவே இவ்வகையான ஸoன்னத்தான
- அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 9

Page 22
லதகாக்கள் பற்றிய தூண்டுதல்கள் மக்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். அத்தகைய ஸ்தகாக்களை ஒழுங்குபடுத்தி நிர்வகிக்க நிறுவன ஒழுங்குகளும் காணப்படவேண்டும்.
6. குற்றச் செயல்களும் தண்டனைகளும் :
ஹ"துத் எனப்படும் வரையறுத்த தணிட னைகளை சிறுபான்மை நாட்டில் நடைமுறைப்ப டுத்துவது சாத்தியமானதல்ல. எனினும் தஃஸ்பீர் என ப்படும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தல் ஒர ளவு சாத்தியமானதே. த.ஃஸ்பீர்” என்ற தண்டனை முறைகள் பற்றிய ஆய்வு இந்தவகையில் முக்கியம். அந்த ஆய்வின்போது எமக்கு நடைமுறைப்படுத் தத்தக்க பகுதிகள் குறித்த தெளிவையும் பெறக் கூடியதாக இருக்கும்.
7 வளையாட்டும் கலைசார் நடவடிக்கைகளும் :
விளையாட்டு, அழகியல், கலைசார் நடவ டிக்கைகளும் மனிதனின் இயல்பான தேவைகள். இவற்றைப் புறக்கணிப்பது சந்தேகத்திற்கிடமின்றி பாரிய பாதிப்புக்களையே ஏற்படுத்தும். நவீன காலம் இப்பகுதிக்கு அளவுமீறிய முக்கியத்துவத்தைக் கொ டுத்து, குறிப்பாக இளைஞர்களை முழுமையாக இப் பகுதியல் ஈடுபடுத்தி விடுகிறது. அங்கு காணப்படும் பாவச் செயல்களும் குற்றங்களும் ஓர் இளைஞனை இஸ்லாத்தை விட்டும் மிகத் தூரமாக்கிவிடக் கூடி யவை. எனவே, கிராமங்களில் இதற்கான ஒரு மாற் ரீடு காணப்படுவது அவசியமாகும். இப்பகுதியில் இறுக்கமான சிந்தனைப் போக்கு எந்த வகையலும் பயன்படாது. ஓரளவு நெகிழ்ந்து கொடுக்கும் போக் கே எமது இளைஞர்கள் ஜாஹிலிய்யத்தின்பால் ஈர் க்கப்படாமல் இருப்பதற்கான வழியாகும்.
(104 ஆம் பக்கத் தொடர்ச்சி.)
மேற்கொள்ள வேண்டும். வளங்களைக் கொணர்டு நீண்டகாலத்திட்டத்தை நோக்கிய ஓர் செயற்திட்ட த்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான செயற் பாடுகளை இஸ்லாமிய இயக்கங்கள், நிதி நிறுவன ங்கள் போன்றன முன்நின்று நடாத்த உதவ வேண் டும். இந் நடைமுறைகளே எதிர் காலத்தில் வெற்றி பெறக்கூடிய வழிமுறைகளாகும்.
துணை நின்றவை:
1. எம். ஐ. எம். அமீன்
இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் (பக்-4)
2. விக்ரர்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும். (பக்-14)
10 / அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

குறிப்பிட்ட சில மத்ஹபுகளோடு மட்டும்நின் றுவிடாது இமாம் இப்னு ஹஸ்ம், இமாம் கஸ்ஸாலி, இமாம் இப்னு அல் அரபி, இமாம் ஷாஹர் வலியுல் லாஹர் தெஹலவி போன்றோரின் கருத்துக்களை இப் பகுதியல் கவனத்திற் கொள்வதும் முக்கியமானதா கும.
இங்கு கிராமங்களை இஸ்லாமிய மயப் படுத்தல் சம்பந்தமான மேற்போக்கான ஒரு சட்ட த்தைத் தரவே முயன்றுள்ளோம். விரிவான விள க்கங்களை தருவதற்கு முற்படவில்லை. அத்துடன், இத்தகைய ஓர் இஸ்லாமியக் கிராமத்தை நோக்கிச் செல்வதற்கான வழிமுறையையும் விளக்க முற்பட வில்லை. தேசிய ரீதியான ஒழுங்குகளையும் விள க்குவதற்கு நாம் முற்படவில்லை. எமது நாட்டைப் பொறுத்தவரையில் எத்தகையதொரு வேலைத் திட்டம் அவசியமானது என்பதை அறிமுகப்படுத் துவதே எமது நோக்கமாகும்.
இஸ்லாமிய சித்தாந்தத்தின்இலட்சிய வடிவை எமது நாட்டில் கிட்டிய எதிர்காலத்தில் காணமுடியாது. எனினும் அதன் சில எளிய வடிவங்களை இத்தகைய கிராம மட்டங்களில் உருவாக்கிக் காட்டமுடியும். அதுவே மிக உயர்ந்த பிரசார வழிமுறையாக அமை யும் என்பதில் சந்தேகமில்லை.
உணர்மையில், அனைத்திற்கும் முதன்மையா கத்தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் இஸ்லாமிய சித்தாந்தவாதிகள் அவசியமாகிறார்கள். எனினும் பொதுவாக புத்திஜீவிகளுக்கு மத்தியில் இக்கருத்தை முன்வைப்பது ஓரளவு அவர்களைச் சிந்திக்கத் தூண்டலாம் என நாம் நம்புகிறோம்.
*3. வ. ஐ. ச ஜெயபாலன்
தேசிய இனப்பிரச்சினையும் இலங்கை முஸ்லிம்களும் 4. எம். ஐ. எம். அமீன்
இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும். 5. கலாநிதி சீ ஆர். டீ. சில்வா
போர்த்துக்களினால்இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார விளைவுகள். (கட்டுரை) 6. எம். எஸ். எம். அனஸ்
கணர்டி மாவட்ட முஸ்லிம்கள். 7. மருதூர் ஏ. மஜீத்
இலங்கையின் சுருக்க வரலாறு. 8. எம். எம். எம். மஃரூப்
மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள். 9. Rosstoe - Economics Stagess Grothery. 10. Hand Book of Listed Companies - 1995.

Page 23
ஹிப்ளுல் குர்ஆன்
அஷர்ஷெ
முகவுரை:
குர்ஆனை ஓதுவது, அதனை உரிய வித த்தில் விளங்குவது, அதன்படி நடப்பது, அதன் போத னைகளை பிறருக்கு எத்திவைப்பது என்பன மிகப்பெரும் இபாதத்’களாகும் என்பதில் சந்தே கமில்லை. தற்கால முஸ்லிம் சமூகம் குர்ஆனின் போதனைகளுக்கு அணர்மித்து வரவேண்டுமாயின் இக்கைங்கரியங்களில் தீவிர அக்கறை காட்டப்ப டவேண்டும். இக்கட்டுரை குர்ஆனை ஓதி மனன மிடுவதன் மகிமை என்ன? உணர்மையான ‘ஹாபிள்’ களின் பணிபுகள் யாவை? என்பவற்றை ஓரளவு விளக்குவதற்காக எழுதப்படுகிறது.
குர்ஆனி பாராயணம் :
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை தான் ஒதி யதுடன் தனது ஸஹாபாக்களையும் இதற்காக அதி கமதிகம் உற்சாகப்படுத்தியுள்ளார்கள். “நீங்கள் குர் ஆனை ஒதுங்கள். ஏனெனில் அது மறுமையில் தன் னை ஒதியவர்களுக்கு (ஷபாஅத் செய்யும்) பரிந்து பேசும்’ (முஸ்லிம்) என்று கூறினார்கள். இதுபோ ன்று குர்ஆன் ஓதுவதன் சிறப்பைக் கூறும் ஏராளமான ஹதீஸ்களைக் காணலாம். "சுபுஹானல்லாஹர், லா இலாஹ இல்லல்லாஹ போன்ற சொற்களின் மூலம் திக்ர் செய்வதை விட குர்ஆனை ஓதுவது சிறந்த தாகும். நம்பத்தகுந்த உலமாக்கள் இந்தக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள். இதுதான் சரியான கருத்தா கும், இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.” என இமாம் நவவி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள் ஒருதடவை நபி (ஸல்) அவர்கள்: “இருதயங்கள் இரும்பைப் போல் துருப்பிடிக்கும்” என்றார்கள். அது கேட்ட ஸஹாபாக்கள் “அதனை எப்படி அகற்றலாம' எனக் கேட்டபோது “குர்ஆனை ஓதுவதன் மூலம்” என்றா ர்கள் (பைஹகீ)
குர்ஆனை ஓதுவது என்பது எந்தவிதச் சிந் தனையும், ஆய்வும் இன்றி வெறுமனே சொற்களை

ய்க் எஸ். எச் எம் பழில் சிரேஷ்ட விரிவுரையாளர்
உச்சாடனம் செய்வதல்ல. மாறாக ஒதலுடன் இசை ந்ததாக ஆழமான சிந்தனையும், கருத்துக்கள் பற்றிய பிரக்ஞையும், தாக்கமும் உருவாக வேண்டும். நிச்ச யமாக ஒரு ‘காா’ இடத்தில் குர்ஆன் வசனங்கள் தாக்கத்தை உணர்டு பண்ணினால் அதன் விளைவாக அவர் நிச்சயமாக செயலில் இறங்க வேண்டும். எனவே பின்வரும் குர்ஆன் வசனத்தில் அல்லாஹர், “யார் அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு வழங்கியுள்ள செல் வத்திலிருந்து ரகசியமாகவும் பரகசியமாகவும் செலவு செய்கிறார்களோ அவர்கள் நஷ்டத்தைத் தராத மறு மைக்கான ஒரு வியாபாரத்தை ஆசிக்கிறார்கள். இவர்களுக்கான கூலி முழுமையாக வழங்கப்படும். அவர்களுக்கு அல்லாஹர் தனது கிருபா கடாட்சங்க ளை மென்மேலும் அதிகரிப்பான்” (பாதிர் : 29,30) எனக் கூறுகிறான்.
இங்கு அல்லாஹற் குர்ஆனை ஓதுவதைத் தொடர்ந்து தொழுகையை நிலைநிறுத்துவது, நற் காரியங்களுக்காக செலவு செய்வது என்பன இட ம்பெறும் எனத் தெரிவிக்கிறான்."எனவே, அல்லாஹ் திலாவத் ஐயும‘அமல் ஐயும் பிரித்து நோக்குவதி
666).
ஹிப்ளுல் குர்ஆன்
குர்ஆனை ஓதிவருபவர் பற்றி மட்டுமல்ல அதனை மனனமிட்டுக் கொள்பவர் பற்றியும் நபி (ஸல்) அதிகமதிகமாக புகழ்ந்து பேசியுள்ளார்கள். இத்தகையவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் காரீக்கள், ஹாமிலுல் குர்ஆன் என்றெல்லாம் அழைக்கப்பட்டிரு க்கிறார்கள். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் “குர் ஆனை ஓதி அதனை நன்கு மனனமிட்டு அதனை எவ்விததங்குதடையுமின்றி ஓதி வருபவர் மறுமையில் கெளரவமான, அல்லாஹற்வுக்குக்கட்டுப்படும்மலக்குக ளோடு இருப்பார்” என்றார்கள். (ஆதாரம் - புகாரி)
" அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 11

Page 24
மேலும் குர்ஆனை மனனமிடுவதன் அவ சியத்தை நபி (ஸல்) பின்வருமாறு விளக்கினார்கள் “எவரது உள்ளத்தில் குர்ஆனின் சில பகுதிகளாவது மனனமாக இல்லையோ அவரது உள்ளம் பாழ டைந்த வீட்டைப்போன்றதாகும்.” (திர்மிதி) அதாவது அவ்வுள்ளத்தில் உயிரோட்டமிருக்காது. அது இருள் சூழ்ந்ததாக இருக்கும். அங்கு ஈமானின் பிரகாசம் இருக்காது. வெறிச்சோடிய வீட்டில் விஷஜந்துக்கள் குடியிருப்பதுபோல் அந்த உள்ளத்தில் தீய எண்ண ங்களே ஊற்றெடுக்கும் என்பது இதன் பொருளாகும். இதற்கு மாற்றமாக குர்ஆனின் பாக்கியத்தால் அவ்வு ள்ளம் பிரகாசமடையும் என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனமிட் டவர்களை அதிகமாக கணிணியப்படுத்தினார்கள். தொழுகையில் இமாமத் செய்வதற்கு குர்ஆனை அதிகம் மனனமிட்டவர்களையும் அதிகமாக அதனை ஒதிவருபவர்களையும் முற்படுத்தியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் “எனது சமுதாயத்தில் கெளரவ த்துக்குரியவர்கள் குர்ஆனை சுமந்தவர்கள்” எனக் கூறியிருக்கிறார்கள். (தபரானி)
உஹத் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் அட க்கம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஜனாஸாக்களைப் பார் த்தார்கள். பின்னர் “அந்த இருவரில் குர்ஆனை அதி கம் மனனமிட்டவர் யார்?’ என ஸஹாபாக்களைக் கேட்டார்கள். அப்போது ஒரு ஜனாஸாவை ஸஹா பாக்கள் சுட்டிக்காட்டியபோது அந்த ஜனாசாவை கப்ரில் முதலில் அடக்கம் செய்தார்கள் என ஸஹீஹ0 ல் புகாரியில் உள்ள ஒரு ஹதீஸில் காணமுடிகிறது. குர்ஆனை மனனமிட்ட ஒருவர் மரணித்த பின்னர் கூட அவருக்கு நபியவர்கள் அதிக கணிணியம் கொடுத்துள்ளார்கள் என்பதை இந்த சம்பவத்திலி ருந்து புரிய முடிகிறது.
ஹிப்ளும் அமலும்
ஆனால், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்க ளது ஹதீஸ்களையும் அவர்களது ஸஹாபாக்களில் ‘ஹாபிழிகளாக இருந்தவர்களது வாழ்க்கை வரலா றுகளையும் நாம் ஆராய்ந்து பார்த்தால் குர்ஆனை 'ஹிப்ள்’ செய்வது என்பது குர்ஆன் வசனங்களை வெறுமனே மனப்பாடமாக்கிக் கொண்டு அவற்றைத் திரும்பத் திரும்ப ஒதிவருவதை மட்டும் குறிக்கவி ல்லை என்பதை அறியமுடிகிறது.
குர்ஆனை மனனம் செய்திருந்த அனைத்து
12 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் -

ஸகாபாக்களும், அந்த குர்ஆனின் வசனங்கள் தரும் பொருள்களை நன்கு கிரகித்திருந்தார்கள் என்பது மட்டுமல்லாமல் அவற்றின் போதனைகளை பிறரு க்கும் போதித்ததுடன் அவற்றைத் தம்வாழ்வில் முழு மையாக எடுத்தும் நடந்திருக்கிறார்கள். இவ்வா றுதான் ஸஹாபாக்களது "ஹிப்ள்’ இருந்தது. இவர்கள் தான் “குர்ரா’க்கள், ‘ஹாமிலுல் குர்ஆன்’ என்று அழைக்கப்பட்டார்கள். ஒரு தடவை நபி (ஸல்) அவ ர்கள் “நீங்கள் குர்ஆனை ஒதுங்கள். கிரகித்து மனன மிட்டுள்ள இருதயத்தை அல்லாஹர் வேதனை செய் யமாட்டான்” என்று குறிப்பிட்டார்கள். இந்த ஹதீ ஸில் இடம் பெறும் ‘விஆஉல் குர்ஆன்’ என்ற சொற் பிரயோகத்திற்கு விளக்கம் கூறும் இமாம் இப்னுல் அதீர்‘அந்த குர்ஆனின் கருத்துக்களை ஆழமாக விசு வாசித்து, அதனை நடைமுறைப்படுத்துவதையே இது குறிக்கும். மாறாக, யார் குர்ஆனின் சொற்களை வெறுமனே மனனமிட்டுவிட்டு அதன் வரையறை களை (ஏவல் விலக்கல்களை) அனுசரிக்காது வாழு கின்றாரோ அவர் ‘விஆ’ என்ற தன்மையைப் பெற் றவராக மாட்டார்" என்கிறார்கள்.
அந்த வகையில்தான்“யார் அல்குர்ஆனை ஓதி அதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துகி றாரோ அவரது பெற்றோருக்கு நாளை மறுமையில் அல்லாஹ ஒரு கிரீடத்தை அணிவிப்பான். அதன் வெளிச்சம் சூரிய வெளிச்சத்தை விட அழகானதாக இருக்கும் (பெற்றோருக்கே இந்த கணிணியமாயின்) குர்ஆனின் படி வாழும் மனிதனுக்கு எப்படியான கெளரவம் கிடைக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் (அபூதாவுத்) எனவே மனனமிட்டு ஒது வதுடன் குர்ஆனின் போதனைகள்படி உலகில் நடந்து கொள்பவர்களுக்கே இத்தகைய கணிணியம் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
மேலும்“யார் குர்ஆனை ஓதி, அதனை மன னமிட்டு அதில் வரும் ஹலாலானவற்றை உலகில் அனுபவித்து வாழ்ந்து அதில் ஹராம் எனக் கூறப் படுபவற்றைத் தவிர்ந்து நடக்கிறாரோ அவரை அல் லாஹர் சுவர்க்கத்தில் நுழைவிப்பான். அவரது குடு ம்பத்தாரில் நரகில் நுழைய வேண்டியிருக்கும் பத்துப் பேருக்கு‘ஷபாஅத்' செய்வதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படும்” (திர்மிதி) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இங்கு குர்ஆனை ஓதிவந்தால் மட்டும் போதாது அதில் வரும் ஹலால், ஹராம்களை அனு சரித்தும் வாழ்பவருக்கே மேற்கூறப்பட்ட பாக்கி யங்கள் கிடைக்கும் என்பதையும் புரியமுடிகிறது.

Page 25
இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் கூறினா ர்கள்: “குர்ஆனை சுமந்திருக்கும் ஒருவர் மக்கள் துரங்கும் வேளையில் இரவு வணக்கத்தில் ஈடுபட வேண்டும். பகல் காலத்தில் மக்கள் உணர்டு குடித்தி ருக்கையில் அவர் நோன்பிருக்கவேண்டும். மக்கள் மகிழ்ச்சியோடிருக்கையில் அவர் கவலையோடு இரு க்கவேணடும். இவர் குர்ஆனை சுமர்ந்திருக்கிறார் என்பது இதன் மூலமே இனம் காணப்படவேண்டும்.” என்றார்கள்.
சுனன் அபீதாவுத் என்ற கிரந்தத்தில் பதிய ப்பட்டுள்ள ஒரு ஹதீஸில் “குர்ஆனின் போதனை களைப் பின்பற்றுவதில் அத்துமீறிப்போய்விடாதி ருக்கும் அதேவேளை அதன் போதனைகளிலிருந்து தூரமாகாமல் வாழும் குர்ஆனை சுமர்ந்திருப்பவரை அல்லாஹ கணிணியப்படுத்துகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
புளைல் இப்னு இயாள் (ரஹ) அவர்கள் : “குர்ஆனை சுமர்ந்திருப்பவர், இஸ்லாத்தின் கொடி யை சுமந்திருக்கின்றார். அவர் வீணர் கேளிக்கைகளில் ஈடுபடுபவர்களோடு சேர்ந்து வீணர் கேளிக்கையில் ஈடுபடக்கூடாது. மறதியாளர்களுடன் சேர்ந்து மறந்து விடலாகாது. தீவிரமாகப் போகிறவர்களுடன் சேர்ந்து தீவிரம் காட்டிவிடக்கூடாது. இது அவர் குர்ஆனுக்குக் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்.” எனத் தெரி வித்தார்கள்
எனவே, குர்ஆனை மனனமிட்டிருப்பவர் அல்லது அதனை கற்றிருப்பவர் அல்லாஹவின் பார் வையில் கணிணியத்திற்குரியவராவார். அந்தக் கணி ணியத்தை அவர் பெறவேண்டுமாயின் தான் சுமந்தி ருக்கும் புனித வேதத்தின் மொத்த உருவமாக அவர் இருக்கவேணடும். அதாவது நடமாடும் குர்ஆனாக அவர் இருக்க வேண்டும் என்பதையே இதிலிருந்து புரியமுடிகிறது.
ஹாபிள்கள் முன்னணியில்
குர்ஆனை மனனமிட்டு அதனை நன்கு விள ங்கி இருப்பவர்களால்தான் சமூக விவகாரங்களில் இஸ்லாமிய அடிப்படையிலான அணுகுமுறைகளை ப் புகுத்த முடியும் என உமர் (றழி) அவர்கள் கரு தினார்கள். எனவேதான் “உமர் (றழி) அவர்களது மஜ்லிஸில் அன்னாருக்கு ஆலோசனை வழங்கிய இளைஞர்களும் நடுத்தர வயதினரும் “குர்ரா' என ப்படும் குர்ஆனை நன்கு கற்றுத் தேர்ந்த, மனன மிட்டவர்களாக இருந்தார்கள்” என ஸஹீஹ0ல் புகாரியில் பதியப்பட்டுள்ளது.

அன்றைய காலத்து ‘ஹாபிள்கள் செயல் வீரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு யமாமா யுத்தம் பெரும் சான்றாகும். பொய் நபி முஸைலமா என்பவனுக்கெதிராகப் போர் தொடுத்தவர்களில் பல ஹாபிள்கள் ஸஹிதாகினார்கள். இவர்களது இறப் புக்குப் பின்னர்தான் குர்ஆன் பாதுகாக்கப்பட வேணர் டுமாயின் அது நூல் வடிவில் தொகுக்கப்பட வேணி டும் என்ற கருத்து ஸஹாபாக்களிடம் வலுப்பெற்றது. குர்ஆனை மனனம் செய்தால் குர்ஆனின் அடிப்ப டையில் வாழவேண்டும், அதன் போதனைகளை நிலை நிறுத்தப் போராட வேணடும் என்ற அவாக் கொண்டவர்களாகவே அக்காலத்து ‘ஹாபிழ்கள் இருந்திருக்கிறார்கள். இதற்கு யமாமா யுத்தத்தில் ஹாபிள்கள் காட்டிய முன்மாதிரி நல்ல சான்றாகும். குர்ஆனை மனனம் செய்திருந்த ஸாலிம் மவ்லா ஹஸ்தைபா அவர்கள் யமாமா யுத்தகளத்தில் போரா டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் : ‘என் காரணமாகப் போராட்டத்தில் தோல்வி வருமா யிருந்தால் நான் குர்ஆனை சுமந்தவர்களில் மிக மோசமானவனாகி விடுவேன்" என்று கூறிய பின்னர் எதிரிகளின் பலத்த தாக்குதலின் முன் சளை க்காது போராடி ஷஹீதாகினார்கள். எனவே, உணர் மையான ஒரு ஹாபிள் - குர்ஆனை சுமந்தவர் அந்த குர்ஆனை அடிக்கடி ஒதுவதில் காட்டும் கரிசனையின் அளவுக்கு அதனை செயலுருப்படுத்தவும் மிகுந்த அக்கறை எடுக்க வேண்டும்.
இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் : “குர்ஆ னை மனனமிடுவது அதன் அட்சரங்களை மனனமி டுவதல்ல. மாறாக அதன் வரையறைகளை உலகில் நிலை நிறுத்துவதாகும்” என்று கூறுமளவுக்கு குர் ஆனிய மனனத்துக்கும் குர்ஆனின் அடிப்படையி லான வாழ்வுமுறைக்கும் இடையிலான இறுக்கமான பிணைப்பை வலியுறுத்தினார்கள்.
குர்ஆனை மறத்தல்:
அல்குர்ஆனை மனனம் செய்தவர்கள் அத னை அடிக்கடி மீட்டி மீட்டி ஓதிக்கொள்ள வேண்டு மென்றும் அல்குர்ஆன் மிகக் கூடிய விரைவில் மன திலிருந்து மறைந்துவிடும் தன்மை படைத்தது என்றும் கூறும் பல ஹதீஸ்களை நாம் காணமுடிகிறது. அதே வேளை மனனம் செய்த பின்னர் அதில் பொடுபோ க்காக இருந்து அதனை மறந்துவிடுவதனைவிட பெரிய குற்றம் எதுவுமில்லை என்ற கருத்தை நபி மொழிகளில் காணமுடியும்.
ஆனால் இங்கு மறப்பது (நிஸ்யான்) என் பதன் கருத்து மனத்திரையிலிருந்து - ஞாபகத்தி
- அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 1 13

Page 26
லிருந்து குர்ஆன் வசனங்கள் விலகுவது மட்டுமல்ல என சுப்யான் இப்னு உயைனா (றஹற்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் : “அல்லாஹ்வின் கணர்டனத்திற்குள்ளாகும் வகையில் ஒருவர் குர் ஆனை மறக்கிறார் என்பதன் பொருள் அவர் அந்த குர்ஆனின்படி செயல்படாதிருக்கிறார் என்பதாகும். அல்லாஹி குர்ஆனில் - “பலம்மா நகு மா துக்கி ரூபிஹீ- அவர்களுக்கு ஞாபகமூட்டப்பட்டதை அவ ர்கள் மறந்த போது” (644) என்று கூறுகிறான். இந்த வசனம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தாது விட்டபோது என்ற கருத் தையே தருகிறது."
ஆகவே ஒரு ‘ஹாபிள்' அல்லாஹற்வின் சந் நிதியில் மிகவும் உயர்ந்த கண்ணியத்தைப் பெற வேண்டுமாயின் அவர் தான் மனனமிட்ட வசன ங்களை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகவேண்டியது அவசியமாகும். நபிமொழியொன்றில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன : “மறுமையில் அல் குர்ஆன் தன்னை மனனம் செய்தவருக்கு சார்பாக அல்லாஹ்விடம் வாதாடும். "இரட்சகா நீஎன்னை இவருக்கு மனனமிடச் செய்தாய். அவர் என்னை சிறப்பாகச் சுமந்தார். இவர் என்னிலிருந்த வரைய றைகளைப் பேணி வாழ்ந்தார். என்னில் உள்ளட ங்கியிருந்த கடமைகளைச் செய்தார்.’ என்று கூறும். இவ்வாறே அவரது நன்நடத்தைகளை தொடர்ந்தும் சாட்சியங்களாக எடுத்துக் கூறும். அப்போது அல் லாஹர் குர்ஆனைப் பார்த்து : “நீ அவருக்கு விரும் பியதைச் செய்’ என்று கூறுவான். அப்போது அது அவரது கையைப் பிடித்து அவரை சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும்” என நபியவர்கள் கூறினார்கள் ஆனால் குர்ஆனைச் சுமர்ந்திருந்தும் அதன்படி நட க்காத ஹாபிளுக்கு நேரும் கதியை விளக்க வந்த அவ ர்கள், அல்லாஹ்வின் சந்நிதியில் குர்ஆன் வாதாடும் விதத்தை பின்வருமாறு சித்தரித்தார்கள்: 'இரட்சகா ! இவன் மீது என்னைச் சுமக்கச் செய்தாய் என்னைச் சுமந்த இவன் மோசமானவன். என்னிலுள்ள வரை யறைகளை இவன் பேணவில்லை. என்னிடம் அடங் கியுள்ள கடமைகளை விட்டுவிட்டான். எனக்கு இவ ன் கட்டுப்படவில்லை. எனக்கு எதிராக நடந்தானி இவ்வாறு அந்தக் குர்ஆன் அவனுக்கெதிரான குற் றச்சாட்டுக்களை தொடர்ந்தும் கூறும். அப்போது அல் லாஹி “நீ அவனுக்கு விரும்பியதைச் செய்யலாம் எனக்கூற, கடைசியில் அது அவனது கையைப் பிடி த்து இழுத்துச் சென்று நரகில் வீசும்.” (ஆதாரம் - பஸ்ஸார்)
14 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் -

முடிவுரை
முஸ்லிம்கள் தமது சிறார்களுக்கு சிறுவயது முதல் கொண்டே குர்ஆனை ஓதப்பழக்க வேண்டும். அதனை முடியுமானவரை அவர்கள் மனனம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். அதுமட்டுமல்ல குர்ஆனின் போதனைகளை அவர்கள் தம் வாழ்வில் கடைப் பிடிக்கும் வண்ணம் அவர்களைப் பயிற்றுவிக்க வே ண்டும். இதற்காக அரபு மொழியும் மிக ஆழமாக அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்.
அல்குர்ஆனை மனம் உருக ஒதிவந்த எம் முன்னோர்களான ‘ஹாபிள்கள் உயர்ந்த ஒரு குர் ஆனிய நாகரிகத்தை உலகில் கட்டியெழுப்பினார்கள். தீமைகளுக்கெதிரான பெரும் போர்க்களங்களைச் சந்தித்தார்கள். உலகில் அல்லாஹ்வின் ஷரீஅத் நிலை பெற தம்மிடம் இருந்த அனைத்தையும்தியாகம் செய் தார்கள். குர்ஆனின் போதனைகளுக்கும் அவர்களது நடைமுறை வாழ்வுக்குமிடையில் இடைவெளி காண ப்படவில்லை. தற்காலத்து ஹாபிள்களும் கூட தமக் கான முன்மாதிரிகளை அந்த உத்தமர்களிடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
எமது நாட்டில் 'ஹிப்ளு மத்ரஸாக்களின் தொகை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அவற்றைக் கொண்டு நடாத்தும் அனைவருக்கும் அல்லாஹ கிரு பை செய்வானாக!'ஹிப்ளு என்பது அல்லாஹ்வின் கலாமை மனனமிடுவதுடன் அதனை விளங்குவதும் அதன்படி முழு வாழ்வையும் மாற்றிக்கொள்வதும் என்பதை மனதில் இருத்தி, அல்லாஹ்வின் பாதையில் உழைக்க அந்த வல்லவன் எமக்கு அருள் புரிவா 60TITSl
உசாத்துணைகள்:
1 இமாம் நவவி (ரஹ்), அத்திப்யானு பீ ஆதாபி
ஹமலதில் குர்ஆன், தாருல் பிக்ர் பக் - 11. 2 மஹற்மூத் அல்ஹஸ்ஸரீ மஅல்குர்ஆனில் கரீம்,
சமானி பதிப்பகம், கெய்ரோ, 1963. பக் - 17 3 இமாம் இப்னுல் அதீர், அந்நிஹாயா, தாரு இஹயா
இல் குதுபில் அரபிய்யா - 1964 பாகம் - 5 பக் - 208 4 இமாம் நவவி பக் - 28
மேற்படி நூல். பக் - 29. 6 அஷஷெய்க் அல்கஸ்ஸாலி கைப நதஆமலு
மஅல் குர்ஆன், அல் மஃஹதுல் ஆலமீலில் பிக்ரில் இஸ்லாமீ அமெரிக்கா, முதற்பதிப்பு - 1991, பக் - 35 7 மஹற்மூத் அல் ஹoஸ்ரீ பக் - 38 8 மேற்படி நூல். பக் - 48.

Page 27
மூன்று கவிதைகள்
ജ്ജമ
அறிவுத் தந்தை
அறிவுக் குயிர்தர அல்லாஹற் வழங்கி செறிவான செல்வத்தை இறைத்தார் பிறழா திறை வழியில் ஈந் தின்புறு பிறர் நலமி நளிம் ஹாஜி.
பணமும் கொடுக்கும் மனமும் உயர் குணமு முடையவர் வள்ளல் - மண
தரும் மலர் நிறைந்த நந்தவன மவர் வரும்போதே கமழும் வளாகம்.
துஞ்சுவதோ வாழ்வின் துயர் கண்டு அஞ்சாத நெஞ்ச முடையோர் - மி தனக்கென் றெதுவு மிங்கே யதனா தானமே தனமெனக் கொண்டவர்.
வறியவராய் பிறந்து வாழ்வின் துணி சிறியவரான காலை கல்விதுறந்தார் சகவாசம் விரும்பப் பெற்றதனா லறி சுகவாசம் தந்தார் செல்வத்தால்.
சமூகத் தொண்டாற்றிய நளிம் ஹா சமயப் பற்று மிகைத்தவர் - சமகால இஸ்லாமிய உம்மத்தின் தேவை உை முஸ்லிம்களில் சமயோசித மானவர்.
கற்றவனாக கற்றுக் கொடுப்பவனா உற்றுக் கேட்பவனாக இரு - மற்றவு யிருக்காதே என்ற ஏந்தல் நபிமொழ உருக்கொடுத் துணிமைப் படுத்தியவ

க் கைருல் பலுர் சிரேஷ்ட விரிவுரையாளர்
லகில் ந்சாது
பத்தால்
- அறிஞர் வுக்கே
க அறிவை
ህ6∂ክ`ለ ̆
ழிக்கு
i.
- அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 15

Page 28
6)U/ë/I)/7/7 6
பெற்ற தாயவள் பேற்றி குற்ற தவம் யாது செய் வழிநினி றொழுகினி தீ பொழியும் நன்றிக் கட6
தீமையகற்றி என் வாழ் வாய்மை காக்க வழியன் மேனிமைக் கிலக்கணமா தூய்மையினி வடிவே த
கள்ளமில்லாப் பிள்ளை வெள்ளை உள்ளம் தா( இல்லாப் பெருமை யெ அல்லாஹற்வை இறைஞ்
விண்ணவர் ஜிப்ரீல் சா அணிணலெம் பெருமான அன்னை பாதடியில் சுே சொனினதுனி மாண்டை
பெற்றன்னைக் கீடாகு( குற்றமாயிர மாயினும் தாங்க மாட்டாள் தமை ஏங்கிடுவாள் தாயணி ட
கணிணியமிக் கிறையே புண்ணியத்துக் கருகை பெற்றோர் என்றியம்பு கற்றோர் மறப்பரோ க
இறைவா நீ கற்றுத்தந் முறையாய் ஒதிக் கேட் அருள் பொழிவாய் இரு கருவறை முதல் காத்த
16 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் --

பெருமை
னைப் பெறுதற் தேனி - கற்ற ருமோ மைந்தனி af.
வில் நிதமும் மைத்து - தாய்மையினி யப் பரிணமித்தாயே நாயே.
உள்ளம் உணர் யே நீ - எல்லை ாடு பெரிதுவக்க நாணி சுகிறேனி ஐவேளை.
"பமிட ஆமீனுரைத்த ர் நபி - மண்ணுலகில் வனமுணி டென
யணிறோ.
மோ உற்ற தாரம் பொறுப்பாள் - சற்றும் யணி படும் துன்பம் 16.
ான வழிபாட்டின் பின் த உடையோர் - கணிணிலுமுயர் ம் குர்ஆனி வாக்கை
Táმრშfმu(5)6)
த பிரார்த்தனை கிறேன் - குறையிலா நவருக்கும் எம்மை து போல்.

Page 29
ജffമിഴ്ച ബff;
விரும்பிச் சென்றால் வில திரும்பிச் செனிறால் விரும் யெனின பயனி றையோன யென்றும் பலிக்கு மெனில்
தேடியது சத்திய மெனி6ை ஒடிவிட நினைத்த போது இறையோனி எனக்கு நனர் மறையோ திடவே நளிமிய
அல்லாஹற் நன்மை நாடுே எல்ல விளக்கமும் தருவான நாயன் தூதர் நவின்ற நற் நயக்க ஒவ்வுதல் நாயமே.
முயற்சிக் கென்றுமுண்டு தளர்ச்சியின்றி தொடர்ந்( வித்திட்டுத் திக்கெட்டும் சத்தாய் அமைந்ததனிறோ
ஈழத்து முஸ்லிம்கள்னர் நீல ஆழமான தடம் நளீமியா
ஏற்றத்துக் கேணியா கை போற்றத்தானி இயலுமோ

ழய2/
கிச் செல்லும் *பிவரும் - இருந்தேங்கி ர் விருப்பமே
or 5s,60f
- நாடினானி
மையை வானி
பாவில்.
வார்க் குலகில் ர் தீனில் - வல்ல போதனை
முன்னேற்ற மதலால் தேனி கல்வி - மறுமலர்ச்சிக்கு நற்பணி புரிய
<9W&mሁ
ாமான வரலாற்றில் - ஏழையெனி
மந்த கதை
Ussfs).
-G அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 17

Page 30
அல்குர்ஆனின் நிழல்
ஒருவன்மயிர்க்கூச்செறிய உணர்ச்சிவசப்ப ட்டு எவ்வளவுதான் பேசினாலும் பேசுமி வார் த்தைகள் பரிபூரணமாக நம்பிக்கை கொள்ளாத உள்ளத்திலிருந்து வெளிவருமென்றால் மக்களி டத்தில் அதுவோர் உயரற்ற பிரேதத்தைப் போன்றே சென்றடைகிறது. அவன் தான் கூறுபவற்றிற்கான செயல் ரீதியான முன் மாதிரியாக மாறுகின்ற போதே தனது கருத்துக்கள் மீது முழுமையான நம்பிக்கை கொணர்டவனாகக் கருதப்படுவான். அப்போது தான் மக்கள் அவ்வார்த்தைகளை ஏற் றுக்கொள்கிறார்கள். உணர்மை என்ற தரத்திலும் அத னை வைத்துப் பார்க்கின்றார்கள். அப்போது உயி ரோட்டத்தை வழங்கும் சக்தியையும் அவ்வார்த் தைகள் பெற்றுக்கொள்கின்றன. உயிர்த்துடிப்புள்ள உள்ளம் அவைகளை வெளிக்கொணர்ந்ததே அவ்வுயிரோட்டத்தின்இரகசியமாகும்.
இது போன்றே ஷஹீத் செய்யித் குதுப் (றஹற்) அவர்களின் சிந்தனைகள் சிறைச் சுவர்களை ஊடறுத்து மனித உள்ளங்களைச் சென்றடைகின்றன. இதனால் மக்கள் தெளிவு பெற்று சீரிய பாதையில் ஒன்று சேரக்கூடிய சமூகமாக மாறுகின்றார்கள்
ஜிஹாதிய உணர்வுகளும், துணிவும் கலந்த அவரது சிந்தனை, வரலாற்றில் அவரது அர்ப்பண த்தை பிரதிபலிக்கக்கூடிய, அழிக்க முடியாத சின் னங்களாக மாறிவிட்டன.
“அல்குர்ஆனின் நிழலிலீ பற்றிய அன் னாரது சிந்தனை ஸஈத்றமழான் (றஹற்) அவர்களின் “அல் முஸ்லிமூன்” என்ற சஞ்சிகையை ஆரம்பித்த போதே உதித்துவிட்டது. 1951ம் ஆண்டின் இறுதிப் பகுதியே இந்நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக இருந்தது. பெரும் சிந்தனையாளர்களினதும்,
18 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

பில் - ஒரு மானிடன்
அஷர்ஷெய்க் எம். ஏ. அப்துல் மலிக்
அறிஞர்களினதும் எழுத்துக் களமாகவிருந்த இச் சஞ்சிகையில் செய்யித் குதுப் (றஹ) அவர்கள் அவரது குர்ஆன் பற்றிய சிந்தனைகளை மாதாந்தம் தொட ர்ந்தும் எழுதுமாறு வேண்டப்பட்டார்.
“அல்குர்ஆனின் நிழலிலி” என்ற தலைப்பில் தொடர்ச்சியாக ஏழு தொடர்களை மிக ஆர்வத்துடன் இச் சஞ்சிகையில் ஸெய்யித் குதுப் (றஹற்) வெளி யிட்டார். ஏழாவது தொடரின் இறுதிப் பகுதியில் தனது கருத்துக்களை சஞ்சிகைக்கு வெளியே தனியான ஆக்கங்களாக வெளியிடப் போவதாகவும் எழுதி யிருந்தார்.
“அல்குர்ஆனின் நிழலிலி” என தனது தப்ஸி ருக்கு ஷஹீத் அவர்கள் பெயரிட்டார்கள். இத்தலை ப்புக்கும், குர்ஆனுடன் அவருக்கு ஏற்பட்ட சுய அனு பவங்களுக்கும் ஏதாவது தொடர்புகள் உணர்டா ?
அன்னாரது தப்ஸிரின் முன்னுரையில் இக் கேள்விக்கான பதில் கூறப்பட்டிருக்கிறது. தான் இத் தலைப்பை வலிந்து தெரிவு செய்யவில்லை. தான் அல் குர்ஆனின்நிழலின் கீழ் வாழ்ந்து பெற்ற உணர்வுகள் உண்மையானவை என்பதையே அது பிரதிபலிக்கிறது. மேலும் அல்குர்ஆனின் நிழலின் கீழ் சில காலங்கள் வாழ்ந்து ஏனைய எந்தக் கொள்கையின் நிழலிலும் பெற முடியாத திருப்தியை அதன் கீழ் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றார்.
இத் தப்ஸிரைப் பற்றித் தனது ஆய்வுக் கட்டுரையை அமைத்து கலாநிதிப் பட்டம் பெற்ற ஸலாஹி அல் ஹாலத் பன்வருமாறு குறிப்படுகின்றார், ஷஹீத் அவர்கள் அனைவரது கவனத்தையும் திரு ப்பிய இத் தலைப்பையே தப்ஹீருக்குத் தெரிவுசெய் துள்ளார். இத் தெரிவு எதேச்சையாக ஏற்பட்ட ஒரு

Page 31
திகழ்வல்ல. மாறாக இத்தலைப்பு அன்னாரது உள்ள த்திலே அல்குர்ஆனிலிருந்து நிழலாடத் தொடங்கிய எணர்ணங்களும், உணர்வுகளும் ஆகும். ஆகவேதான் ழிழால் (நிழல்கள்) என்பதை தான் வாழ்ந்து அனுப வித்தவற்றைப் பற்றிக் கூறும் விளக்கவுரைக்குப் பெய ராக வைத்துள்ளார்.
அல்குர்ஆனிய வசனங்கள் ஆழமான கரு வூலங்களையும், ஆழமான விளக்கங்களையும் தன் னகத்தே பொதிந்து வைத்திருக்கின்றது. அதன் வழி காட்டல்களையும், அர்த்தங்களையும் விளங்கிக் கொள்ள முழுக் கவனத்தையும் செலுத்தி ஆழ்ந்து நோக்கவேணர்டியுள்ளது. இதற்காக முழுமையாக ஈடுபடக்கூடிய ஒருவரினாலேயே இவ் விடயங் களை நன்கு உணர்ந்துகொள்ள முடியும். ஷஹீத் அவர்கள் அல்குர்ஆனின் நிழலின் கீழ் வாழ்ந்து, அதன் பழங்களைச் சுவைத்து இப் பணியைச் சிறப் பாகச் செய்துதந்துள்ளார்கள். தான் பெற்றவற் றிலிருந்து எல்லாவற்றையும் மக்களுக்கு விளக்கதான் சக்தியற்றவன் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு அல்குர்ஆனுடன் வாழக் கிடை த்ததை ஓர் அருட்கொடையாகவும், அதனைச் சுவை த்தவராலேயே அதனை அறிந்துகொள்ள முடியும் என்பதாகவும் கூறுகின்றார். அல்குர்ஆனியத் தொட ர்பு, வாழ்வை உயர்வுமிக்கதாகவும், அருட்கொடை, தூய்மை என்பன கொணடதாகவும் ஆக்குகின்றது. உணர்மையில் இது அல்லாஹீவின் மிகப் பெரும் அருட்கொடையாகும். இங்கு அல்குர்ஆனின் நிழ லின் கீழ் வாழ்ந்து பெற்ற சுவையை வேறெங்குமே தான் பெற்றதில்லை என ஷஹீத் அவர்கள் குறிப்பி டுகின்றார்கள். அல்குர்ஆனின் கருத்துக்களின் ஆழ த்தில் புதைந்திருக்கின்ற கருவூலங்களை ஆழ்ந்து சென்று பார்த்தபோதே அல்குர்ஆனைத் தன்னால் சரியாகக் கண்டுகொள்ள முடிந்ததாகவும் தெரிவி க்கின்றார். உயிர்ப்பிராணிகளுக்கு இருக்கவேண்டிய பணிபுகளைப் பெற்ற உயிரோட்டம் மிக்க சக்தியாக அல்குர்ஆன் காட்சியளித்ததை தன்னால் உணர முடிந்ததாகவும், ஒரு மனிதன் தனது தோழனுடன் எவ்வாறு நெருங்கிப் பழகி அன்பு காட்டுவானோ அது போன்றே தனக்கும் இவ்விறைமறைக்கு மிடையிலான தொடர்பு இருந்ததாகவும் விளக்கு கிறார்.
இக் கணிப்பீட்டின் படி, அல்குர்ஆனின் ஒவ்வொரு சூராவும், விசேட பணிபுகளையும், தனித்துவமான உயிரோட்டத்தையும் கொணர்ட, மனிதனுக்கு மிகவும் அணிமித்து வந்து வழிகாட்டக் கூடிய, நேசமிக்க சக்தியாகக் காணப்படுகின்றது.

செய்யித் குதுப் (றவற்) அவர்கள் இத் தப் ஸிரை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் எழுதி யிருக்கிறார்கள். 1951 ஒக்டோபர் மாதத்தில் பல பகுதிகள் ஆரம்பமாக வெளியிடப்பட்டன. 16வது ஜூஸிவின் இறுதிப்பகுதிவரை அவர் எழுதியிருந்த விளக்கங்களை தொடர்ந்தும் அச்சு வாகனம் ஏற்றினார். 1954 ஜனவரியில் கைதுசெய்யப்பட்ட போது சிறையில் வைத்து இரணடு “ஜூஸ” உகளுக்கான தப்லீர் விளக்கவுரையைப் பிரசுரித்தார். 1954 நவம்பரில் அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரும் சோதனைக்கு முன்னால், 18 ஜூஸ் உகளுக்கு எழுதப்பட்ட விளக்கவுரைகள் வாசகர்களுக்கு வழங் கப்பட்டன. இப் பதிப்புகளில் தப்லீர் எழுதுவதற்காக அவர் கையாண்ட வழிமுறை சிந்தனை ரீதியாக மட்டுமே காணப்பட்டது. அல்குர்ஆன் வசனங்களுக்கு சிந்தனை ரீதியான கருத்தோட்டங்களையே முன் வைத்தார். இக் கருத்தை ஆரம்பப் பதிப்புகளில் ஷஹீத் அவர்கள் கீழ்வருமாறு வலியுறுத்தியுள்ளா ர்கள். “சிலர் இதனை அல்குர்ஆனுக்கு எழுதப்பட்ட தப்லீர்களில் ஒரு வகை எனக் கருதலாம், இன்னும் சிலர் அல்குர்ஆனி கொண்டு வந்த பொதுவான கொள்கையின் பாற்பட்ட விடயங்களை ஆராயும் ஒரு நூலாகக் காணலாம், மற்றும் சிலர் தனி மனித, சமூக வாழ்கைக்கு ஏற்றவாறு இத் தெய்வீகச் சட்ட யாப்பினை விளக்குவதற்கான ஒரு முயற்சியாக எணர்ணலாம். இவைகளில் எதனையும் நான் எணர்ணத்திற் கொள்ளவில்லை. அல்குர்ஆனின் நிழலில் வாழ்கின்ற நிலையில் எனது உள்ளத்தில் தோன்றிய” கருத்துக்களைப் பதிவு செய்வதற்காக மட்டுமே இம்முயற்சி காணப்படுகிறது.”
அல்இஹவானுல் முஸ்லிமூன்இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அறிஞர்கள், இளைஞ ர்களுடன் சேர்ந்து செய்யித் குதுப் (றஹர்) 1954 ஒக்டோபரில் இரண்டாவது தடவையாகக் கைது செய்யப்பட்டார். இவ்வேளை பல்வேறுபட்ட சித் திரவதைகளுக்கும் உட்பட்டார். இதனால் எந்த ஒன்றையும் அவரால் எழுத முடியவில்லை. பின்னர் 15 வருடகால சிறைத் தணர்டனை விதிக்கப்ப ட்டபோது, சித்திரவதை நிறுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இங்குதான் அல்குர்ஆனுடனான அவரது வாழ்க்கை நீடித்தது. அவரது அனுபவங்கள் ஆழமானவையாக அமைந்தன. சிந்தனை, அறிவு, பிரசாரப் பணி, இஸ்லாமிய இயக்கம், ஜிஹாத் போன்றவை பற்றி புதிய எண்ணக் கருக்களை இந்த நீண்ட காலக் குர்ஆனியத் தொடர்பு அவரில் தோற்றுவித்தது. இந்த மார்க்கத்தின் இயல்பு, அது ஆற்ற வந்த ஜிஹாதியப் பணி, அல்குர்ஆனை விள ங்குவதற்கான உயிரோட்டமிக்க வழிமுறை ஆகிய
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 19

Page 32
வற்றை சிறையிலேதான் ஷஹீத் அவர்கள் சரியாக இனங்கண்டு கொண்டார்கள்.
இறை வேதத்திற்கு விளக்கவுரை எழுது கின்றவேளையில் ஷஹீத் அவர்கள் மேற்கூறப்பட்ட அறிவியல் பொக்கிஷங்களில் மூழ்கினார்கள் 27ஆம ஜூலிஉ வரை அல்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதி நீண்ட ஒரு காலப் பகுதியைக் கடந்து வந்த பின்னர், அவர் இதுவரை எழுதியவற்றை மீண்டும் 30 முறை ஆழ்ந்து நோக்க வேண்டியதன் அவசியத்தை உண ர்ந்தார். ஏனெனில் இதுவரை ஏற்பட்ட அனுபவ ங்களின் வாயிலாகக் கிடைத்த புதிய உணர்வின் அடிப்படையில் அல்குர்ஆனிய விளக்கவுரையை தொகுப்பதற்காகவே இவ்வாறு செய்ய எண்ணினார். தனது புதிய ஈடுபாடுகளுக்கேற்ப இந்தத் தப்லீரின் போக்கை மாற்றுவது இஸ்லாத்தைப் பற்றிய தனது புதிய வளக்கம் இதுவரை எழுதியவைகளில் பிரதி பலிக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளல், நம்பிக்கைக் கோட்பாடு சார்ந்த விடயங்களை முக் கியமானவையாகக் குறிப்பிடல் போன்றவற்றையும் அன்னாரது மீள்பார்வைக்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம். நம்பிக்கைக் கோட்பாட்டில் சட்ட மியற்றும் அதிகாரம், சட்டவாக்கம் என்பவை பற்றிய சிந்தனைக்கு அதிக கவனத்தைச் செலுத்தினார். இதன் காரணமாக திருத்திய பதிப்பின் அளவு முன்னரைவட இரட்டிப்பாகியது. இப்போதைய பதிப்பிலுள்ள ஒரு பாகம் முதலாவது பதிப்பின் ஒரு பாகத்தின் இரண்டு மடங்கையும் விடப் பெரிதாக மாறியது.
மேற்குறிப்பிட்ட அம்சங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவைகளில் ஏழாவது பாகம் மிகப் பெரியதாகும். சூறா அல் அன்ஆமுக்கு எழு தப்பட்ட நீணட முன்னுரையில் அகீதா சார்ந்த விடயங்களைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.
இவவேளையிலேயே ஷஹீத் அவர்கள் இஸ்லாமிய தஃவா பற்றிய தனது கோட்பாட்டுக்கும் இஸ்லாமிய இயக்கம் பற்றிய தனது வழிமுறைக்கும் ஏற்ப தான் இதுவரை எழுதியவைகள் உடன்படுகி ன்றனவா என்பதை உறுதிப்படுத்த விரும்பினார். இந்த வகையில் தனது புதிய சிந்தனைக்கு ஏற்ப அல்குர்ஆனின் இறுதி மூன்று ஜூஸஉகளுக்கும் விளக்கவுரை எழுதினார்.
பின்னர் 10 ஜூஸஉக்களுக்கும் தனது புதிய சிந்தனையை மையமாக வைத்து மீள விளக்கவுரை எழுதினார். வசனங்களிடத்தில் நீண்ட நேரம் தரித்து அவற்றைப் பற்றிய தனது உளப் பதிவுகளனைத் தையும் பதித்தார். அந்த வசனங்கள் சுட்டிக்காட்டு
20 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் *)

கின்ற அகீதா, பிக்ஹ, அரசியல் பொருளாதாரம், வர லாறு போன்றவை பற்றிய பல்வேறு விடயங்களையும் பேசியுள்ளார். அத்தோடு இஸ்லாமிய தஃவாக் களத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் அவ்வசனங்கள் கூறும் போதனைகளையும் விளக்கியுள்ளார். அவ வசனங்களின் ஒளியில் அவர்களது தஃவாப் பாதைகளுக்கு வெளிச்சம் கொடுத்துள்ளார்.
1954ஆம் ஆணர்டில் முதல் தடவையாக கைதாவதற்கு முன்னர் “தாரு இஹயாயில் கிதாபில் அறபி” எனும் நிறுவனத்துடன் தனது அல்குர்ஆனிய விளக்கவுரைகளை பிரசுரித்து வெளியிடுவதற்கு ஷஹீத் அவர்கள் உடன்பட்டிருந்தார்கள். ஆனால் நீதிமன்றம் 15 வருட கால கடூழிய சிறைத் தணி டனையை விதித்தது. சிறைச்சாலை விதிகள், கைதி எழுத்துத் துறையில் ஈடுபடக்கூடாதென நிபந்தனை யும் இட்டிருந்தது. உடனே மேற்குறிப்பிட்ட நிறுவன உரிமையாளர் அரசுக்கெதிராக நீதிமன்றத்தில் வழ க்குத் தொடுத்தார். ஷஹீத் அவர்களது அல்குர்ஆனிய விளக்கவுரையை பூரணப்படுத்த விடாமையின் காரணமாக 10 ஆயிரம ஜூனைஹற் நஷ்ட ஈட்டைக் கோரியது. அந் நிறுவனம் நஷ்ட ஈட்டைக் கொடு க்குமாறு அரசுக்கெதிராக நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. உடனே அரசு நஷ்ட ஈட்டுக்குப் பகரமாக ஷஹீத் அவர்களுக்கு எழுத்துத் துறையில் ஈடுபட அனுமதி வழங்கியது.
சிறையில் அல்குர்ஆனுக்கான விளக்கவுரை யை பூரணமாக எழுதுவதற்கு ஷஹீத் அவர்களுக்கு வழங்கிய அனுமதியின் மூலம் செய்யித் குதுப் (றஹற்) தானி விருமிபியதை எழுதுமளவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளார் என்ற பிரமையை அரசு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இவ் வேளையில் ஜமால் அப்துந் நாசிர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தி ருந்தார். ஷஹீத் அவர்களைக் கைது செய்தமைக்காக அங்குள்ள உலமாக்கள் அவரைச்சாடினர். அதற்கவர் கீழ்வருமாறு பதில் கூறினார். “செய்யித் குதுப் கைது செய்யப்படவில்லை. அவர் இப்போது சுதந்திரமாக எழுத்துத் துறையில் ஈடுபட்டுப் புத்தகங்களை வெளி யிட்டுக கொணர்டேயிருக்கிறார்.” ஷஹீத் அவர்கள் சம்பந்தமாக எங்கு கேள்வி எழுப்பப்பட்டாலும் மேற் கூறப்பட்ட பிரமையை ஏற்படுத்துமாறு அனைத்து எகிப்தியத் தூதுவராலயங்களும் வேண்டப்பட்டன.
அச்சுவாகனம் ஏறுவதற்கு முன்னர் ஷஹீத் அவர்கள் எழுதியவற்றைச் சோதனை செய்வதற்கான கணிகாணிப்பாளராக அரசு மர்ஹoம் ஷெய்க் முஹ ம்மது அல் கஸ்ஸாலி (றஹற்) அவர்களை நியமித்தது. தனது பணியை நேரடியாக மேற்கொண்ட ஷெய்க்

Page 33
அல் கஸ்ஸாலி (றஹற்) அவர்கள் செய்யித் குதுப் (றஹற்) அவர்கள் எழுதிய அனைத்தையும் அச்சுரு வில் வெளிவர அனுமதி வழங்கினார்கள். ஆனால் சூறா அல் புறுஜcடைய பந்திகளை மட்டுமே பதி ப்பிக்க அனுமதிக்கவில்லை. ஏனெனில் அதில் ஷஹீத் அவர்கள் தானும் தனது தோழர்களான முஜாஹி துகளும் சிறையில் சந்தித்த சித்திரவதைகளின் கொடூரங்களைப் பற்றிக் கூறியிருந்தார்கள்
முதுமை, நோய், துன்பங்கள் என்பவற்றைக் கூடப் பொருட்படுத்தாது செய்யித் குதுப் (றஹற்) அவர்கள் அரசாங்கப் போக்கிரிகளினால் கடுமை யான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள். என்றாலும் அல்லாஹி அவருக்கு அருள்பாலித்தான். எனவே இவ்விக்கட்டானநிலையைக்கூட எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதனை அறிந்து கொண்டார். ஷஹீத் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். “கஷ்டங்கள் அடியார்களை வந்தடைவது அல்லாஹி அவர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கும் ஒரு பரீட்சை பாகும். இந்த உணர்மையைப் பற்றிய விழிப்புணர் வுடன் யார் காணப்படுகின்றாரோ அவர் அத்துன் பத்தின் மூலம் பயனடைவார். சோதனையின் பய னாகப் படிப்பினை பெறுவார். கவனமாக இருந்து தனக்குரிய நலன்களை இவ்வேளையில் பெற்று க்கொள்வார்கள். அடுத்து வரும் காலகட்டத்தைத் தீர்மானிக்கப்போகும் இச் சோதனைக் கட்டத்தைத் தான் கடந்து கொணர்டிருக்கிறேன். இக் காலப் பகுதியில் பெறவேண்டிய பயன்களை நல்ல முறையில் பெறவேண்டுமென்ற உணர்வுடன் யாராவது செய ற்பட்டால் அவர் படும் வேதனைகள் ஒரு போதும் வீணாகிவிடமாட்டாது. இவ்வுணர்வுடன் கூடிய அவரது உள்ளம், ஏற்படும் துன்பங்களை எப்போதும் அற்பமாகவே கருதும்.
தூக்கிலிடப்படுவதற்கு சில காலங்களுக்கு முன்னர் தனது நணர்பர்களுக்கு எழுதிய இரண்டு கடிதங்களில் ஷஹீத் அவர்கள் இக் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்கள். அஹமத் அப்துல் கபூர் அத்தார் என்ற சவூதி எழுத்தாளரான இந்நண்பருக்கு தான் சிறையில் பெற்ற மகத்தான அனுபவங்களைத் தெரிவிக்கின்றார்.
முதலாவது கடிதம்:
முன்னர் எப்போதையும் விட இப்போது ஈமானிலும், அகீதாவிலும் மிகத் தெளிவுடன் என் னை நான் காணர்கின்றேன். அந்த ஈமான் எனது ஆன்மாவில் காணப்படுகின்றது. இந்த இஸ்லாமிய தம்பிக்கைக் கோட்பாடு, அது நாடவருகின்ற அம்

சங்கள், அதன் இலக்கு, வழிமுறைகள் என்பன பற்றிய பூரண தெளிவுடன் நான் காணப்படுகின்றேன். இவைகள் அனைத்தும் நான் பெற்ற மிகப் பெரும் நலன்களாகும். இவற்றிற்கான பெறுமதியாக நான் அர்ப்பணமாக்கிய எனது ஓய்வு, ஆரோக்கியம் என்பவற்றை விட உயர்ந்ததாக இவை உள்ளன. எல்லாப் புகழும் அல்லாஹீவுக்கே.
இரணடாவது கடிதம்:
எனது எணர்ணப்படி உமக்கு நன்றி தெரி விப்பதனை விட என்னுடைய நிலைபற்றி உன்னைத் திருப்திப்படுத்துவதே முக்கியமாகவிருக்கின்றது. நீர் அறிந்து வைத்திருக்கின்ற அதே நிலையில்தான் நான் இருக்கின்றேன். முன்னர் எப்போதும் உணர்ந்திராத வகையில் இப்போது நான் அல்லாஹர்வை உண ர்கின்றேன். அவ்வாறே முன்னரை விட மிக நன்றாக அவனது பாதையையும், வழிமுறையையும் புரிந்து கொணர்டேன். அவனது பராமரிப்பின் கீழ் எனது தாகங்களைத் தீர்த்துக்கொள்கிறேன். அவனது முஃ மின்களுக்கான வாக்கில் உறுதியான விசுவாசம் கொண்டுள்ளேன். முன்னர் ஒருபோதும் இவ்வாறு அவனது வாக்கில் நான் திருப்தி கொண்டதில்லை. அடுத்து நான் உடன்படிக்கை செய்துகொண்டவாறு அல்லாஹ்வுக்கு மட்டும் அடிபணியக் கூடியவனாக தலைநிமிர்ந்து செயற்படுகின்றேன். அல்லாஹ தான் வரும்பயவற்றைச் செய்யக்கூடியவன். அவன் தனது விடயங்களை செயற்படுத்துவதில் மிகவும் சக்தி பெற்றவன். அதிகமான மனிதர்கள் இதனை உண ராமல் உள்ளார்கள்.!!
சிறையில் சீரிய சிந்தனையுடனும், திடமான உள்ளத்துடனும் நிலைத்திருந்து தனது சிறை வாழ்வை சிறந்த முறையில் உபயோகித்துப் பாரிய அறிவியல், கல்வி பயன்பாடுகளைப் பெறுபவர் மிகச் சிலரே. தனது ஆய்வு, சிந்தனை, கருத்து போன்ற விடயங்களில் அருள்பாலிக்கப்படுபவர்கள் மிக அரிதே. இவ்வரிதான பாக்கியத்தைப் பெற்ற சிலரில் செய்யித் குதுப் (றஹர்) முன்னணியில் காணப் படுகின்றார்.
அல்லாஹி அவருக்குத் தனது அருட கொடையின் வாயில்களைத் திறந்து கொடுத்தான். அதன் கணிணியமிக்க பிரவாகிப்பால் மூழ்கியவ
ராகவே தனது ஆயுளைக் கழித்தார்.
அல்குர்ஆன் அதன்நிழலில் வாழக் கிடைத்த ஒவ்வொரு வினாடியிலும் மூளைக்குச் செல்லும் கருத்துக்களில் இருந்து சுவைக்கக் கூடிய வாழ்வோடு
- அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 21

Page 34
நேரடியாக ஒட்டிச் செல்லக் கூடிய உணர்மைகளாக மாறியதென ஷஹீத் அவர்கள் விளக்குகின்றார்கள்.
“. அல்குர்ஆனின் உணர்மை நிலையை உள்வாங்கிக் கொள்வதற்கும் எனது ஆன்மாவில் அது நிலைபெறுவதற்கும் அல்லாஹ எனக்கு உதவி செய்தான். நான் மிடர், மிடராக அருந்துகின்ற அமி ரீதமாகவும் அதன் நகர்வை, ஊடுருவலை என்னில் உணர்வது போன்றும் இருக்கின்றது. புரிந்து கொள்ளும் கருத்தென்ற நிலையை விட சுவைக் கக்கூடிய உணர்மையாக அதனை நான் கணர்டேன். உணர்மையிலேயே இது ஓர் அருட் கொடையாகும். இந்தப் பாக்கியத்தின் காரணமாக எனது ஆத்மாவிற்கு இவ்வாறு திறந்து கொடுக்கப்பட்ட ஒவ்வொரு வசனத்திற்கும் நடைமுறை வாழ்வில் விளக்கத்தைப் பெற்றுக் கொணர்டேன். இதற்கு முன்னர் இந்த வச னங்களை எத்தனையோ தடவை ஒதயருக்கின்றேன், கடந்து வந்திருக்கின்றேன். ஆனால் இந்த வினா டியில்தான் அல்குர்ஆன் வசனங்கள் அமிர்தத்தை தனது உள்ளத்தில் எனது உள்ளத்தில் கொட டுவதோடு அதன் அர்த்தத்தை யதார்த்தமென நிரு பிக்கின்றன. அவற்றின் மிகத் தெளிவான கருத்தை வழங்குகின்றன. அவை எனக்குப் பின்வருமாறு கூறு கின்றன. “இதோ நான் அல்லாஹி திறந்து கொடு க்கின்ற அருட்கொடைகளின் ஒரு வடிவமாகும். அவனது அருட்கொடை எப்படியிருக்கின்றது என்பதை நன்றாகக் கவனித்துப் பார்”
இந்த வகையில் ஷஹீதவர்கள் ஓர் இனி மையான அருட்கொடைமிக்க நிறைவான வாழ்வை அல்குர்ஆனின் நிழல்களில் வாழ்ந்தார். அவை உணர்த்த வருகின்ற கருத்துக்கள் ஏற்படுத்த விரும்பும் தாக்கங்கள் அனைத்தையும் அப்போது பெற்றார். அல்குர்ஆன் சொரிகின்ற அனைத்துப் பாக்கிய ங்களும் அவரைச் சூழ்ந்து கொணர்டன. அல்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமளிக்க முற்படும்போது, அவை உணர்த்த வரும் விடயங்களைப் பதியும் வேளையில் அவற்றிலிருந்து தான் உணர்கின் றவற்றையும் சுவைக்கின்றவற்றையும் மக்களுக்கு தனது நடையில் மொழிபெயர்க்கின்ற சந்தர்ப்பத்தில் அச்சம், சங்கடமி என்பன ஏற்பட்டவராக அவ் வச னத்திலே நிற்பார். ஏனெனில் ப்ரந்த அர்த்தங்களைக் கொண்டும் மொழிபெயர்ப்பைச் சாத்தியப்படுத்தத் தன்னால் முடியாதெனக் கணர்டார். தனது சொற் களும், வசனங்களும் அவர் உணர்கின்றவற்றை தெளிவுபடுத்த சக்தியற்றிருந்தன. “அல்குர்ஆனூடாக நான் உணர்கின்றவற்றை எனதுநடையில் மக்களுக்கு வெளியிடுகின்றபோதெல்லாம் பயம், நடுக்கம் என் பன என்னை அடைந்து கொள்கின்றன. எனது
22 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் <

சிந்தனையில் அல்குர்ஆன் நேரடியாகத் தோற்று விக்கின்ற அனைத்தையும் எனது சொற்கள், வசன நடை என்பவற்றைக் கொண்டு மக்களுக்கு முன் வைப்பது சாத்தியமற்றது என்பதுவே அதற்கான காரணமாகும். அந்த வகையில் நான் அல்குர்ஆ னிலிருந்து உணர்கின்றவற்றுக்கும் மக்களுக்கு இந்தத் தப்ளினுடாக வெளியிடுகின்றவற்றிற்குமிடையே பாரிய இடைவெளியைக் காணர்கின்றேன்.”
தான் உணர்கின்றவை முழுவதையும் தனது மொழிநடையில் கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதாகக் கூறிய ஷஹீதவர்கள், அதற்கான கார ணத்தைக் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார். ஒரு மொழியில் எழுதுவதற்கு வரையறைகளும், அம் மொழிச் சொற்களுக்கே உரிய தனித்துவமான கருத்துக்களும் காணப்படுகின்றன. எனவே இவ ற்றைப் பயன்படுத்தி எழுதும்போது எந்த வேகத்தில் மனித ஆளுமையிலும், உணர்விலும் அல்குர்ஆன் கொண்டுள்ளவைகள் தாக்கத்தை ஏற்படுத்தினவோ அதே வேகத்தில் அத்தாக்கம் உணர்த்துகின்றவற்றை வெளியிட முடியாதது ஒரு குறையேயாகும்.
அல்குர்ஆனிலிருந்துதான் பெற்றுக் கொண்ட உணர்வுகளைப் பதிவு செய்வதில் யாரும் கையாளத தனித்துவமிக்க வடிவமைப்பை ஷஹீதவர்களின் “பீ ழிலாலில் குர்ஆனிலி” நாம் அவதானிக்க முடியும். தான் உள்வாங்கித் தன்னகத்தே மறைந்திருக்கும் அம்சங்களை வெளியிடத் திராணியில்லாமையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளமையையும் நாம் அவ தானிக்கின்றோம். அவ்வாறே தனது சொற்களும், வசனங்களும் அல்குர்ஆனிலிருந்து தனக்குக் கிடை, த்தவற்றைப் பூரணமாக வெளிக்கொணர சக்தியற்றவை எனவும் குறிப்பிடுகின்றார். தான் அல்குர்ஆனின் நிழ லில் வாழ்ந்த போது இருந்த நிலைமைக்கும், பின்னர் தன்னுடைய அல்குர்ஆனிய உணர்வுகளை தனி ‘த்துவமான முறையில் வெளியிடுவதற்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுவதாகவும் குறிப்பி டுகின்றார்.
மேற்கூறப்பட்டவை அனைத்தின் மூலமும் அன்னாரது ஆயுளை உயர்வு பெறச் செய்த, பாக் கியமிக்கதாக ஆக்கிய, தூய்மை பொருந்தியதாக மாற்றிய அல்குர்ஆனின் நிழலான இனிமையான வாழ்க்கையை எங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறது.
ஷஹீதவர்களின் சிறைத் தோழர்களில் ஒரு வராகிய உஸதாத் செய்யித் அபூஸாலிம் என்பவர் கழ்வருமாறு குறிபபடுகின்றார்.“சிறைச்சாலையிலுள்ள (தொடர்ச்சி பக் 38)

Page 35
உலகமயமாக்கலும் உலகம் தழுவும் இழ
உலகமயமாக்கல் என்றால் என்ன ?
உலகமயமாக்கல் என்பது அகராதியில் சேர்க்கப்பட்ட ஓர் புதிய கலைச் சொல்லாகும். ஒரு பரப்பெல்லைக்குள் உலகத்தை ஒருங்கிணைத்தல் என்ற கருத்தை அகராதி மூலம் நாம் அறிய முடிகின்றது. இங்கு ‘புதிய உலக ஒழுங்கு' என்றும் சிலர் பெயரிட்டுள்ளனர். புதிய உலக ஒழுங்கு என்ற வார்த்தையுடன் சேர்த்து ‘அரசியல் ஒழுங்கு’ என்ற விசேட கருத்தையும் இச் சொல் காட்டி நிற்கின்றது. ஆனால் உலக மயமாக்கல் எனும் கலைச் சொல், அரசியல், பொருளாதாரம், சமூகம், பணிபாடு, ஒழு க்கம், வழக்காறு, மதம், மரபு என இன்னபிறவ ற்றையும் உள்ளிட்ட ஒரு சொல்லாகும். சில போது நாடுகளுக்கிடையிலான பூகோள, அரசியல் எல்லை களையும் தாண்டி இச்சொல் புதிய பரிமாணத்தையும் பெற்றுவருகின்றது.
உலகமயமாக்கல் மிகவும் அபாயகரமான திட்டமாகும். நாடுகளுக்கும், சமூகங்களுக்குமிடை யிலான அனைத்து எல்லைகளையும் முறித்து விடுவதையே இலக்காகக் கொண்ட மேற்குலகினால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கொள்கையாகும். இதற்கு முன் மாஸோனியா அமைப்பு அழைப்பு விடுத்த கொள்கைக்கு உலகமயமாக்கல் ஒத்த கருத்துள்ள சொல்லாகும். இன்றும் புதிய உலக ஒழுங்கு என்று அழைக்கப்படும் கொள்கையும் அதனையே செய் கின்றது. உலகின் அனைத்து மதங்கள், சமூகங்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடை யாளத்தை அழித்து மேற்கின் சிந்தனைக்கேற்ப வார் த்தெடுத்து ஐ.நா வின்நம்பத்தகுந்த வட்டாரங்களாக மாற்றுவதே அதன் நோக்கமாகும். குறிப்பாகப் பொரு ளாதாரம், சமூகவியல் என்ற இரு துறைகளில் அது மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. உலகம் முழுவதும் அமுலாக்கப்படும் புதிய மதமே உலகமயமாக்க

றுதித் தூதும்.
அஒர்ஷெய்க் எம் எம் நியாஸ் விரிவுரையாளர்
லாகும். அனைத்து நாடுகளுக்கிடையே காணப்படும் அனைத்தையும் நீக்கி ஒழுக்கம், நடத்தை, சிந்தனை, பணிடம், கம்பனி, மதம் பேண்ற அனைத்தையும் ஒன் றாக மாற்ற முயற்சிக்கும் அதிபயங்கர சதித் திட்டம் என்றும் இதைக் கூறலாம். இச் சிந்தனைக்கு வேறு பல பெயர்களும் சூட்டப்படுகின்றன. கோளமய மாக்கல், சர்வமயமாக்கல், அகிலமயமாக்கல் போன்ற பெருஞ் சொல்லாடல்கள் அனைத்தும் ஒரே பொரு ளையே தருகின்றன. அதுதான் உலகமயமாக்க லாகும். அதாவதுதார்மீகப் பெறுமானங்களை இழந்த மேற்கின் அடிப்படைகளுக்கேற்ப சமூகங்களை அடிமைப்படுத்தல், அல்லது காலனியம் செய்தல் என் றும் சொல்லலாம். பொருளாதாரம், முதலீடு, கம்பனி, வியாபார ஒப்பந்தம், கல்விச் சிந்தனை, தகவல் தொ டர்பு, சூழல் பிரச்சினை போன்றவற்றை உலகமய ப்படுத்துவதற்கு இக்கோஷங்களின் பின்னால் இருப்பவர்கள் பேரளவு பிரயத்தனங்களை எடுத்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவையனைத்தையும் விட அதி பயங்கரமானது என்னவென்றால் இஸ்லாத்தை உலகமயமாக்குவதும், மேற்கிற்குப் பணிந்த ஒன்றாக மாற்றுவதுமாகும்.
உலகமயமாக்கல் வல்லரசு அணியின் நல ன்களை உறுதிசெய்ய தொழில்நுட்ப மேனிலையை இலக்காகக் கொண்ட ஒரு திட்டமாகும். பலவீனமான சமூகங்களை அடிமைப்படுத்தி அவற்றைப் பயங்கா ட்டி அவற்றின் வளங்களை மெல்ல மெல்ல உறிஞ்சி, அதன் செல் நெறியைத் தடைப்படுத்தி, அவற்றின் ஆக்க சக்தியை அழித்து, அடையாளத்தை நீக்கி, அதன் சீர்திருத்த அசைவியக்கத்தைப் புதைத்து, அதன் சிந்தனையை மழுங்கடித்து உலகமயமாக்கலின் பணிகள் தொடர்கின்றன. இப்பகைப்புலத்தில் பார் க்கும்போது இஸ்லாமிய உலகின் குரல் வளையை
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 23

Page 36
மடக்கிப் பிடித்திருக்கும் பாரிய திட்டமே உலகமய மாக்கல் எனலாம்.
றிச்சட் ஹேபேர்ட் என்பவர் ‘உலகமயமா க்கலும் பிராந்தியங்களும்’ எனும் நூலில் பின்வ ருமாறு கூறுகின்றார். “மூன்றாம் உலகில் பல நூற் றாண்டுகளாக நாம் கடைப்பிடித்துவரும் காலனியமே உலகமயமாக்கலாகும். மேற்கத்தைய அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப, காலனிய யுத்தம் என்று கூடச் சொல்லலாம். மேற்கத்தைய காலனித்துவத்தின் வகைமாதிரிகளில் மிக மோசமானது இந்த உலக மயமாக்கலாகும். ஏனெனில் மேற்குத் தவிரவுள்ள அனைத்து நாகரிகங்களும் ஒழிக்கப்பட வேண்டு மென்றே உலகமயமாக்கல் அழைப்புவிடுக்கின்றது. இதனை வேறு வார்த்தையில் கூறுவதாயின், அமெ ரிக்கத்தனத்தை தவிரவுள்ள அனைத்தையும் ஒழித் தலாகும்.
இன்று உலகமயமாக்கல் ஒரு லிபரலாகவே காணப்படுகின்றது. அதாவது மேற்கின் கண்ணோ க்கிலான ஜனநாயகமாகும். பல்லினங்களைக் கொண்ட கம்பனிகளின் கூட்டாகும். ஒருங்கிணை க்கப்பட்ட திறந்த பொருளார சந்தையாகும். மதமோ, சட்டமோ, நாடோ கட்டுப்படுத்த முடியாத கட்டற்ற பொருளாதாரமாகும். முன்னேறிவரும் தொடர்புப் பரிவர்த்தனையும் வலைப்பின்னலும் அதுவே. தகவல்களை உடனுக்குடன் வழங்குவதும் பரிமா ற்றுவதும் அதன் பணியாக இருக்கின்றது. அரசிய லையும், பொருளாதார முறைமைகளையும், அறி வியல் பெறுமானங்களையும், குறிப்பாக சிந்தனை நடத்தைக் கோலங்களையும் ஊடறுத்துப் பாயும் ஓர் கூரிய அம்பாகவும் காணப்படுகின்றது. இத்தனை க்கும் அப்பால் மிக மெதுவாக சமூகங்களை வந்த டையும் இவ்வுலக மயமாக்கல் ஏலவே குறிப்பிட்ட இலக்குகளை இனாமாகவே நிறைவேற்றிக் கொள்கி ன்றது.
உலகமயமாக்கலின் மூலம் பிரகட்னம் செய் யப்படும் இலக்கு யாதெனில், தடைகளை நீக்கி இக்கட்டுப்பாடுகளை மறுக்கும் மூலதன, உற்பத்திக் கருவிகளைக்கொண்டு இக்கணர்காணிப்பை மறுக்கும் தகவல் தொழில்நுட்பத்தையும் ஆளுகின்ற பல்வே றுபட்ட மனித சமூகங்களுக்கிடையே நிலவும் வேறு பாடுகளை ஸ்தம்பிக்கச்செய்வதாகும். இதன் கருத்து உலகமயமாக்கலின் நிழலில் எல்லாக் கருத்துநிலை களும், சிந்தனைகளும், கோட்பாடுகளும் முற்றாகக் கரைந்து மிலேச்சத்தனமான யூத மையவாத மேற் கத்திய சடவாத சிந்தனை மட்டுமே நிலைத்திருக்க
24 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் <

வேண்டுமென்பதாகும்.
தூய இறைத்தூதை இன்றுவரை பேணிவரும் முஸ்லிம்களுக்கே இது சொல்லப்படுகின்றது. அஃ தாவது திரிபுபடுத்தப்பட்ட நம்பிக்கைக் கோட்பா டுகளுடனும் இறையியல்களுடனும் நெறிபிறழ்ந்த சிந்தனைகளுடனும் முஸ்லிம்கள் ஐக்கியமாகி தம்மைக் கரைத்துக்கொள்ளவேண்டுமென்பதாகும். உலகமயமாக்கல் என்பது பணிடங்களையும், பணிகளையும், தகவல்களையும், விமர்சனங்களையும் பரிவர்த்தனை செய்வதல்ல. அங்கே தெரிவிற்கான ஒரு துறை இருந்து, மக்கள் தமக்கு அனுகூல மானதைத் தேர்ந்தெடுத்துக்கொணர்டு பிரதிகூல மானதை விட்டுவிடுவது என்பதுமல்ல. மாறாக யதா ரீத்த நோக்கில் உலகமயமாக்கல் என்பது இணையத் தளத்தோடு கணினியையும், அறிவியலோடு தொழி ல்நுட்பத்தையும், சமூக, குடும்ப கரைதலோடு பெள தீக ரசாயணக் கோட்பாட்டையும் அங்கீகரிப்பதாகும். மேற்கை அதன் வழக்காறுகள், ஒழுக்கங்கள், இழி செயல்களோடு கூடிய அதன் சடவாதத்தோடு சேர்த்து அங்கீகரிப்பதாகும். ஏனையவர்களை அடிபணியச் செய்வதற்கு மேற்கின்அசைவியக்கத்துடனான ஊடா ட்டமே உலகமயமாக்கலாகும். அலெக்சாந்தர் மெக் டோனா, சிலுவைவாதிகள் ஆகியோரின் படை யெடுப்புகளுடன் ஆரம்பிக்கும் இந்த அசைவியக்கத் தன்மை இஸ்லாத்தை இணைவைத்தலோடும், ஜாஹி லியப்யத்தோடும் அடிபணியச் செய்வதற்கான நவ யுத் தமாகும். பீரங்கி, வான்வழி குண்டுத் தாக்குதல் களுக்குப் பதிலாக பெரும் சொல்லாடல்களாலும், கதையாடல்களாலும், கலைச்சொற்களாலும், நவீன உபகரணங்களாலும் மேற்கொள்ளப்படும் யுத்தமா கும். மெண்மையான ஆனால் சூடான வார்த்தையால் நடக்கும் பனிப்போராகும். இங்கே மனித உரிமைகள் சர்வதேச வழக்காறுகள் போன்ற கவர்ச்சியான சுலோ கங்கள் மேற்கிளம்புகின்றன.
ஆக உலகமயமாக்கல் எல்லா சமூகங்களும் காலியாகிப்போகும் அளவுக்கு தம்மைக் கரைத் துக்கொள்கின்ற சமுத்திரமாகும். குறிப்பாக இஸ் லாமிய உம்மத் அதன் ஆளுமை, நம்பிக்கைக் கோட் பாடு, அடிப்படை விதி ஆகியவற்றை இழக்கச் செய் வதாகும். அவர்களையும் மேற்கைப் பின்பற்றுமாறு விடுக்கப்படும் அழைப்பாகும். பொருளாதாரம், கல்வி, ஊடகவியல், சட்டம் உட்பட அனைத்து நடத்தைகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதாகும். உலகமயமாக்கலின் நிழலில் மேற்குடன் முரணர்ப டுபவர்கள் மீது கடுமையான கணிடனங்கள் மேற் கொள்ளப்படுவதுடன் பகுதியாகவோ, முழுமை

Page 37
யாகவோ, படிப்படியாகவோ அவர்கள் மீது st ITf தொடுக்கப்படுகின்றது. குற்றஞ்சாட்டுவது தயார் செய்யப்பட்ட ஓர் ஆடுகளமாகும். அவர்களுக்கு முரணிபடுபவன் அவர்களின் உலகமயமாக்கலை மறுப்பவன் சர்வதேச விதிகளையும் வழக்காறுக ளையும் எதிர்ப்பவனாகக் காட்டப்படுகிறான். இக்காலத்தில் ஜிவிக்கப் பொருத்தமற்ற படு பிற் போக்குவாதியாக முத்திரை குத்தப்படுகிறான்.
உலகமயமாக்கலினி தோற்றமும் வளர்ச்சியும்.
இந்த நவ அரசியல் விளையாட்டுப் பொருள் 85 கும் 91 கும் இடைப்பட்ட இளஞ்சூடான நெரு ப்பில் தயாரிக்கப்பட்டதாகும். முன்னாள் சோவியத் தலைவர் மிகைல் கொர்பச்சேவ், பெரஸ்ப்ரொய்க்கா தீர்வைப் பிரகடனப்படுத்தியபோதே தோன்றிவிட்டது. சோவியத் ஒன்றியம் அரசியல், பொருளாதாரம், கட்டமைப்பு, செல்வாக்கு ரீதியாக வீழ்ச்சியடைந்த நிலையில் மீளக் கட்டியெழுப்பல் என்பதே பெர ஸ்ரொய்க்காவின் சாரமாகும். இதையடுத்து நடந்த நிகழ்வுகள் உலக செல்வாக்கு என்ற சிம்மாசனத்தில் ஒரு வல்லரசு சம்மணமிட்டு உட்காருவதற்கான வாய் ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்புதிய அரசு உல கில் தன்னை வெளிப்படுத்திக் கொணர்டது. அதுவே தனது அரசியல், பொருளாதார, இராணுவ மற்றும் நாகரிக செல்வாக்குக் கம்பளத்தை விரிப்பதற்கு உல கின் எல்லாப் புறங்களையும், பரிமாணங்களையும் நிருவகிப்பதற்கான ஏக தலைமை மையத்தில் அப் புதிய அரசு ஏறிக்கொண்டது. ‘துருவ ஒன்றியம்’ என்ற புதுப்பெயரோடு அது உலகிற்கு அறிமுக மாகியது.
உலகமயமாக்கலின் இலக்குகள்.
உலகமயமாக்கல் திட்டம் முப்பெரும் செயற் திட்டப் பணிகளை நிறைவேற்ற முயல்கிறது.
1. தகவல்களைப் பரப்புதல் :
எத் துறை சார்ந்த எந்தத் தகவலையும் யாரு க்கும் பரப்பமுடியும். ஏனெனில்நாம் தகவல் யுகத்தில் வாழ்கிறோம். யார் நம்பகமான தகவல்களைப் பெ ற்றிருக்கிறாரோ அவர் கறாரான தீர்மானத்தை எடு ப்பதற்கும் உரித்துடையவராகிறார். அமெரிக்கத் தொ டர்புப் பரிவர்த்தனைக் கம்பனியான Coast வொஷி ங்டனிலுள்ள அமெரிக்கக் கொங்கிரஸ் அலுவலகம் உள்ளிட்ட பெருந்தொகையான தகவல்களை 20 வினாடிகளில் உலகம் முழுக்கப் பரப்புவதற்கான

சக்தியைப் பெற்றிருக்கிறது. தகவல் தொடர்பு யுகத்தின் அற்புதம் என்று அழைக்கப்படும் இணையத்தளத் தினூடாகவே இது சாதிக்கப்படுகிறது. எமது வீட் டிலுள்ள பிரத்தியேக கணினியின் வழியாக உலகம் முழுமையும் நாம் பிரவேசிக்க முடியும். சில வினா டிகளிலேயே நாம் விரும்பும் ஒலியையும், உரு வத்தையும் ஒருசேரக் காணமுடியம். இதிலே கட்டற்ற பாலியல் சுதந்திரத்தைப் பரவச் செய்யும் இணையத் தளங்களும் தனியாக இடம்பெற்றுள்ளன. 99ஆம் ஆணர்டு உலகம் முழுவதும் இணையத் தளத்தைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை 200 மில்லிய னுக்கும் அதிகமாகும்.
2. எல்லை நீக்கம் :
உலக நாடுகளுக்கிடையே காணப்படும் பர ப்பெல்லைகளை உடைத்தெறியும் முயற்சியும் இதில் நடைபெறுகிறது. முதற்கட்டத்தில் இச்செயற்திட்டப் பணி விரும்பியவருக்கான சுதந்திரத் தேர்வாகவே அமைகின்றது. காலஞ் செல்லச் செல்ல உலகம் முழு வதையும் விட்டு நீங்க முடியாத, நீங்குவதையேற்க முடியாத நிலைக்கு அவர் உள்ளாகிறார். பனிப் போரின் மூலம் அவர் போராடுகிறார். இப்பயங்கரத் திட்டத்திற்குப் பலியாகும் வரை பொருளாதார ரீதி யாக ஆக்கிரமிக்கப்படுகிறார். ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பது இத்திட்டத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கலாம்.
3. இனக்குழுமங்கள், நிறுவனங்கள், சமூக
ங்களுக் கிடையே ஒத்த தன்மையை அதிகரித்தல்:
மனிதர்களுக்கும், செய்திகளுக்கும் இடை யிலான இயக்கத் தன்மையை இலகுபடுத்துவதன் ஊடாகவும் சமூகங்களுக்கிடையே பண்டங்களைப் பொதுமைப்படுத்துவதன் ஊடாகவும் இது நடை பெறுகிறது. ஆண்டுகளின்நகர்வில் இவ்வொத்ததன் மை மென்மேலும் அதிகரித்துச் செல்ல தனியாள் வேறு பாடுகள் படிப்படியாக மறைந்துபோகும். குறிப்பாக உலகின் கம்பனிகள் ஒன்றாக இருக்குமாயின் அதன் நிறுவனங்களும் விளம்பரமும் அதைப் பின்பற்று வதும் ஒன்றாகவே இருக்கும். இவ்வாறே அவர்கள் எண்ணுகின்றனர். மேற்கத்திய தொடர்பூடகங்களின் வழியே வரும் இந்தச் சுலோகத்தை பொருட்படுத் தாமல் இருப்பது நல்லதல்ல. அமெரிக்காவும், ஐரோ ப்பாவும் தனது சாத்தியப்பாடுகளைச் சாதித்துக் கொள்வதற்கு முயலும் புதிய உலக ஒழுங்கை நடை முறைப்படுத்துவதல்லாமல் வேறெதுவுமல்ல. உல கமயமாக்கல் இதற்கு முன் உயர்த்திப் பிடித்த வாத ங்களையும், கோஷங்களையும் இருவகையான
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 7, 25

Page 38
அளவை நிறுவைக் கோட்பாட்டிற்கேற்ப நடை முறைப்படுத்துவதாகும். உலகமயமாக்கலின்நிழலில் மேற்குலகம் மதத்திற்கு குறைவான பங்கைக் கொடுத்து ஒழுக்கத்திற்கு அதைவிடக் குறைந்த இடத்தை அளி த்து புதிய பெறுமானங்களை தயாரிப்பதற்கு முய ல்கிறது. அளவையில் குறைப்பது தெளிவானது. யூத ர்களுக்கான அளவையில் அதிகமாகக் கொடுக்கிறது. முஸ்லிம்களுக்கும், அரபிகளுக்குமான அளவையில் குறைத்துக் கொடுக்கிறது. அதற்கு இருவகையான அளவை நிறுவைக்கோட்பாடுகள் இருக்கின்றன. உல கமயமாக்கலின் நிழலில் உலகம் எப்போதும் மகி ழ்ச்சியாக இருக்கிறது எண்பதை உணர்மைப்படுத் தவேணர்டிய அவசியமில்லை. மாறாக ஏழை தொட ர்ந்தும் ஏழையாகிக்கொணர்டேயிருக்கின்றான். இறக் குமதியாளன் புதுக்கண்டுபிடிப்புக்கு வாய்ப்பளிக் கப்படாமல் தொடர்ந்தும் நுகர்வாளனாகவே இரு க்கிறான். ஆனால் உலகமயமாக்கலின் நிழலில் செல் வந்தன் மேலும் குபேரனாகவும் பலவான் மேலும் பலம் பெறவும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.
எனவே உலகமயமாக்கல் நலன்களின் மொழியாகும். இவர்களிடம் நலன் என்பது ஓர் அர சியற் கோட்பாடாகும். உலகமயமாக்கலின் தலை வர்களில் ஒருவர் அவருடைய பேட்டியில் இந்நலன் பற்றிய கருத்தைத் தெளிவாக அறிய முடிகிறது “ஒப்பந்தங்கள் அத்தியாவசியமாகின்றபோது அதை நிறைவேற்றுவது நம்மீது கடமையாக மாறுகின்றது. பேச்சுவார்த்தைகள் கண்டிப்பானவையாக மாறும் போது அவற்றைப் பெற்றுக்கொடுப்பது நமக்குப் பொறுப்பாகிறது. செய்திகள் தேவைப்படும்போது அவற்றை வழங்குவதும் நமக்குக் கடமையாகின்றது. எமது சமூகத்தின் உத்தரவாதத்திற்கான பலம் தேவைப்படும்போது அதனை நாம் பயன்படுத்த வேணர்டியிருக்கின்றது.” இதுதான் அவர்களின் மொழியாகும். ஏனையவர்களுடன் உறவாடும் அவ ர்களின் உத்தியும் அதுவே. பொதுப் புத்தியுடன் வாழ் ந்துகொண்டிருக்கும் நாம் நிகழ்காலத்தைப் பற்றி அறி யாமலிருக்கும்நாம் எதுவரைக்கும்.இப்படியிருப்பது 1?
உலகமயமாக்கலின் துறைகள்.
உலகமயமாக்கலின் துறைகள் பல. அவற்றுள் நான்கு துறைகளை மட்டும் இங்கு சுருக்கித் தருகின்றோம். 1. பொருளாதார உலகமயமாக்கல்:
இதுவே முதன்முதலாகத் தொடங்கிய பல வழிகளில் மேற்கொள்ளப்படும் முதல் தரத் துறை யாகும். ஏனைய எஞ்சிய துறைகள் யாவற்றையும் மறுதலித்துவிடுமளவிற்கு எங்கும் பிரவேசிக்கக்கூடிய
26 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் அ--

அபாயகரமான துறையே இதுவாகும். உலகமயமா க்கல் அரசியல், அறிவியல், விஞ்ஞான, சமூகவியல் கொள்கையாக கருதப்பட முன்னர் அடிப்படையில் பொருளாதாரக் கொள்கையாகவே கருதப்பட்டது. இன்றும் உலகமயமாக்கல் பற்றிப் பேசும் போது பல ரின் நினைவுக்கு வருவது பொருளாதார உலகமய மாக்கலே, அரசியல், அறிவியல் உலகமயமாக்கலை விட நிஜ உலகில் அதிகம் சாதனையை நிகழ்த்திக் காட்டியது பொருளாதார உலகமயமாக்கலே என கள ஆய்வுகள் அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன. உல கமயமாக்கல் மீது கொள்ளப்படும் பொருளாதார விள க்கம் பொருளாதார உணர்மை மட்டுமல்ல. பொரு ளாதாரத்தோடு மட்டும் சுருங்கியதுமல்ல. உலகப் பொருளாதாரம் சுழலும் சில அடிப்படைகள் இங்கே யுள்ளன. இன்றைய சர்வதேசப் பொருளாதார ஒழு ங்கை மொத்தத்தில் கட்டமைக்கும் நிறுவனங்களின் பெயர்களை நோக்குவோம்.
1. சர்வதேச நாணய நிதியம் :
சர்வதேச நாணய ஒழுங்கை மேற்பார்வை செய்யும் நிறுவனமாகும்.
2. உலகவங்கி :
நீண்டகாலத்திற்கான நாணயக் கொள்கைத் திட்டமிடலை மேற்கொள்கிறது. அத்துடன் வளர்முக நாடுகளின் பொருளாதார அபிவிருத்திற்கான உதவி களை வழங்குவதும் அதன்மீது செல்வாக்குச் செலு த்துதலும்
3. வர்த்தகம் மற்றும் வியாபாரத்திற்கான பொது
உடன்படிக்கை :
வல்லரசு நாடுகள், ஒப்பந்தக்கார ஏனைய நாடுகளைப்போல சந்தையில் தமது செல்வாக்கை உறுதி செய்வதை இவ்வமைப்பு இலக்காகக் கொணர் டுள்ளது. இதுவே வெளிநாட்டு வர்த்தகத்துக்கும், உற்பத்திற்கான பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலை யைப் பேணுகிறது.
பொருளாதாரத் துறையில் உலகமயமாக்க லின் யதார்த்தத்தைப் பின்வருமாறு சுருக்கித் தரலாம்.
1. மத, தார்மீக, சமூகப்பெறுமானங்கள் மீது எழுந்து நிற்கும் குடும்பம் எனும் கருத்தாக்கத்தை மாற்றும் பணி: மேற்கத்திய சமூகத்தில் பொதுவாக கட்டமைக்கப்ப ட்டுள்ள நடத்தைகளை உள்ளடக்கும் வகையில் இக் கருத்தாக்கத்தை விரிவுபடுத்திச் செல்லுதல்
2. வட்டியைப்பரவலாக்குதல்: அதாவது வட்டி யை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களின்

Page 39
ஆக்கிரமிப்பை உறுதிசெய்வதாகும்.
3. முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரத்துடன் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தையும் இணை த்தல்,
4 வரையறுக்கப்பட்ட, வரையறுக்கப்படாத கமி பனிகளை பொருளாதாரம் என்ற கடிவாளத்தில் பிணைத்து தேசிய அரசியலுடன் விளையாடல். இக் கம்பனிகள் பெரும்பாலான சமூகங்களில் பிரவே சித்துவிட்டன. பல உடன்பாடான, எதிர்மறையான நடத்தைகளைத் தம்முடன் கொணர்டுவந்து சேர்த் துள்ளன. இதை மறுதலிக்கும் சமூகம் பொருளாதாரத் தடையென்ற பெயரில் முழுமையாகவோ, பகுதியா கவோ ஆக்கிரமிப்புக்குட்படுத்தி அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
5. பொருளாதார உலகமயமாக்கலில் GETT போ ன்ற சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி உலகமயமாக்கல் தனது நிபந்தனைகளை நிறை வேற்றிக்கொள்கிறது. இதனால் எந்தத் தடைகளும், கட்டுப்பாடுகளுமின்றி மேற்கின் உற்பத்திகளுக்கு முன்னால் உலக சந்தைகள் திறந்து கொள்கின்றன. இந்நாடுகளின் உற்பத்திகள் இறக்குமதி நாடுகளின் உற்பத்திகளோடு போட்டியிடவே முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இறக்குமதியோடு சுருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரதியீட்டம் சர்வதேசநாணயத்தளம்பலில் குறைந்த ஆயுளையே கொண்டது. பொருளாதாரத் தேக்கநிலையின் விளை வாக பணவீக்கம் ஏற்படுகிறது. அல்லது பொரு ளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் சர்வதேசக் கம்பனிகளுக்கு பொருளாதார அடிப்படைகளை விற் றுவிடும் நிலையும் தோன்றுகிறது.
பொருளாதார உலகமயமாக்கலை நிறுவு கின்ற வேளையில் அதற்கெதிராகக் கிளர்ந்தெழும் நாட்டை கடன்தொல்லையில் மூழ்கடிக்கும் கைங் கரியத்தையும் செய்கின்றது. உலகமயமாக்கலில் இலக்காகக் கொள்ளப்பட்ட முஸ்லிம் பிராந்தியங் களின் வெளிநாட்டுக் கடன் தொகை 1995ஆம் ஆணி டு 250 மில்லியன் டொலராக இருந்து ஒரு செக்கனில் 50 ஆயிரம் மில்லியன் டொலராக உயர்த்தப்பட்டது.
கடன்தொகை உயரும்போதெல்லாம் கட் டுப்படலும் உறுதியடைகின்றது. இதன்மூலம் கால னியச் சக்திகள் வளர்முக நாடுகளின் பொருளாதார ங்களை தொடர்ந்தும் கட்டுப்படுத்திவருகின்றன. உல க வங்கியும், சர்வதேசநாணய நிதியமும் வளர்முக நாடுகளை தொடர்ந்தும் கடன் தொல்லையில் அமிழ்

த்திவருகிறது. இந்நாடுகளில் பெரும்பாலானவற்றின் பொருளாதாரம் கடன் தொகைக்கான வட்டியை அடைப்பதிலேயே செலவிடப்படுகிறது. இது வல் லரசுகளின் மேலாதிக்கத்தை தொடர்ந்தும் வைத்தி ருப்பதற்கான காரணமாகிவிடுகின்றது இந்நிலையில் உலகமயமாக்கலின் நிழலில் போட்டித்தன்மை எங் ங்னம் ஏற்பட முடியும் ?! எனவே தொழுவத்திலிரு ந்து வெளியேற விரும்பும் கறவைப் பசுவின் நிலை யையே இந்நாடுகள் அனுபவிக்கின்றன. உதாரண மாக ஜப்பான் (62 கம்பனிகள்), அமெரிக்கா (53), ஜேர்மன் (23), பிரான்ஸி (19), பிரிட்டன் (11), சுவி ற்சர்லாந்து (8), தென்கொரியா (6), இத்தாலி (5), ஒல்லாந்து (4) ஆகிய நாடுகளின் கம்பனிகளைப் பார்க்கும்போது பொருளாதார உலக மயமாக்கல் யுகத்தில் நாடுகளின் அரசியலைத் தீர்மானிப்பதில் இவை எத்துணை செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ளமுடியும், ஜெனரல் மோ ட்டார் கம்பனியின் வருமானம் டென்மார்க் போன்ற நாட்டின் தேசிய வருமானத்தைவிடக் கூடியதாகும். போர்ட் கம்பனியின் வருமானம் தென்னாபிரிக்கா வின் தேசிய வருமானத்தைவிட அதிகமாகும். டொ யோட்டோ கம்பனியின் வருமானம் நோர்வேயின் தேசிய வருமானத்தைவிடக் கூடியதாகும். மிட்சுபிசி கம்பனியின் பொருளாதாரச் செயற்பாடு இந்தோனே சியப் பொருளாதாரத்தின் அளவைவிடக் கூடுதலா கும். மேலும் இக்கம்பனிகள் தனிமனிதர்களுக்குச் சொந்தமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகில் 358 பேர் உலக சனத்தொகையில் இரணர்டரை மில் லியன் பேருக்குச் செலவிடக்கூடிய பெருந்தொகைச் செல்வத்தைச் சொந்தமாக வைத்திருக்கின்றனர். அதாவது உலக சனத்தொகையில் அரைவாசிக்குச் சொந்தமான செல்வமாகும். இக்கம்பனிகள் தமது நட வடிக்கைகளையும், முதலீடுகளையும் ஆளுகைக்குட் பட்ட பிராந்தியங்களில் வைத்துக்கொண்டிருந்தாலும் பெரும்பகுதியை மூன்று பிரதான பொருளாதாரப் பிராந்தியங்களிலேயே மையப்படுத்தியுள்ளன. அந் நகரங்களில் மொத்த உலக உற்பத்தியில் 80% காண ப்படுகிறது.
1. யூரோ நாணயம் : ஐரோப்பியப் பங்குச் சந்தை நாடுகளின் புதிய நாணயத் திட்டமே இதுவாகும். இது 1999ஆம் ஆண்டு முதலாம்நாள்நிறுவப்பட்டது.
2. வடஅமெரிக்க நாடுகளுக்கான கட்டற்ற வாணிப மையம் : இது நேட்டோ என்று அறியப்பட் டுள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் கூட்டுச் சேர்ந்துள்ளன.
3. யென் சமுத்திரம் : இதில் ஜப்பானும், சீனாவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உள்ளடங்குகின்றன.
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 27

Page 40
80களின் காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை எய்திய பிற்பாடு பொருளாதாரக் களத்தில் புதிய பொ ருளாதாரக் கைத்தொழில் சக்திகளோடு இறுதியாகக் குதித்த நாடுகளாகும்.
லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, வளைகுடா எண்ணெய் வள நாடுகள் ஆகியவை உலகமயமாக்கல் கம்பனிகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடும்போது அத்திவாரமற்ற பொருளாதாரப் பிராந்தியங்களாகக் கருதப்படுகின் றன. இக் கம்பனிகள் பொருளாதார உலகமயமா க்கலின் எரிபொருளாகத்திகழ்கின்றன. பொருளாதார உலகமயமாக்கலுக்கான வாய்ப்பையும் தம்மோடு சும
ந்திருக்கின்றன.
யூத முதலாளியம் விரித்துள்ள இவ்வலை யிலிருந்து வெளியேறித்தனியாக அரசியல் தீர்மான த்தை எடுக்கக்கூடிய நிலை இஸ்லாமிய உலகின் சக்தியொன்றால் மட்டுமே முடியும். அதுவும் அங்கு மதச்சார்பின்மை ஆட்சி செய்யுமானால் அது முடி யாமல் போகும். முஸ்லிம்களும், முஸ்லிம் நாடுகளும் ஒற்றுமைப்படுவார்களாயின் இதிலிருந்து மீட்சி
பெறலாம்.
2. அறிவியல் உலகமயமாக்கல்:
அறிவியல் உலகமயமாக்கல் அதிபயங்கர வகை மாதிரியாகும். பல்வேறு சாதனங்கள் ஊடாக மனித சிந்தனையையும், நடத்தையையும் தனக்கேற்ப வார்த்துக்கொள்வதில் நேரடியாகத் தொடர்புபடு கின்றது. எனவேதான் சிந்தனையாளர்களும், கல்வி யலாளர்களும் சமூகங்களின் கல்விக் கட்டமைப்பு மீதான உலகமயமாக்கலின்தாக்கம் குறித்து அதிகமும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
கனேடிய வெளிநாட்டமைச்சர் பின்வருமாறு கூறுகின்றார். “பதுக்கலானது நுகர்வுக் கைத்தொழிலில் மிக மோசமான அம்சமாக இருக்குமாயின் அறிவியல் உருவாக்கத்தில் அதைவிட மோசமானதாகும் விலை யை உறுதிப்படுத்துவதோடு மட்டும் இது சுருங்கி விடுவதல்ல. மாறாக சிந்தனையை உறுதியாக பதி த்துவிட்டுச் செல்கிறது.”
அறிவியல் உலகமயமாக்கத்தை தெளிவான மொழியில் இப்படிக் கூறலாம். மேற்கின் அறிவிய லையும், அமெரிக்க அறிவியலின் பரப்பெல்லை யையும் உலகின் ஏனைய நாடுகளுக்கு நகர்த்த முய ற்சிப்பதாகும். சில சிந்தனையாளர்கள் இக்கருத்தை உலகத்தை ‘அமெரிக்க மயமாக்கல்’ என்ற சொல்
28 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

லோடு சுருக்கியும் விடுகின்றனர். இந்த ஊடுருவல் அறிவியலை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது நேர டியாக அதன் கோட்பாட்டையோ, சிந்தனைச் செல் நெறியையோ மாற்றமுடியாதவர்களாகி விடுகின் றனர். நாம் நினைத்துப்பாராத வாயில்களுடாக அவ ர்கள் நம்மை வந்தடைந்துவிடுகின்றனர். ஒரு சமூ கத்தின் உணர்ணல், பருகல் என்பனவற்றில் ஏற்படு த்தும் மாற்றமானது ஒரு வாயிலாலேயே நிகழ முடியும். ஆனால் இதுவோ ஒரு வீட்டுக்கான ஒன்று, இரண்டு, மூன்று. எனப் பல வாயில்களைத் திறந்து விடுகின்றது. ஒரு சந்ததியை மட்டுமல்ல பின்னால் வரும் பல சந்ததிகளையும் அறிவியல் உலகமயமா க்கல் பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இது தற்செயலாக நடைபெறுவதல்ல ஒரு 10 ஆண்டுகளுக்குள்ளால் உலகம் முழுவதையும் தாக் கியழிக்கும் ஒரு போராட்டத்தாலேயே ஏற்பட்டது. மெக்டொனால்ட் போன்ற அமெரிக்கக் கம்பனிகளின் சிற்றுணர்டிகளையும், உணவுத் தயாரிப்புகளையும் மக்கள் ஏற்றுக்கொண்டதும் ஏனைய பிரதியீடுகளை துரக்கிவீசியதும் இன்றும் வியப்பான விடயமே. மேற்கிக்கு மற்றொரு இறக்கையும் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலேயே அமெரிக்க உலகமய மாக்கலை எதிர்க்கக்கூடியதொன்றாகப் பிராண்ஸைக் குறிப்பிடலாம். பிரான்ஸின் ஜனாதிபதி ஷிராக், ஈபிள் கோபுரத்தில் மெக்டொனால்ட் உணவகத்தை திறப் பதைக் கடுமையாக எதிர்த்தார். நாம் ஏன் எதிர்க் காமல் இருக்கின்றோம். இவ்வுணவகங்களின் குளி ரூட்டல், அது தரும் சொகுசு குறைந்தபட்சநமி எதிர்ப் புணர்வையும் அற்றுப்போகச் செய்து விடுகிறது.
அறிவியல் உலகமயமாக்கலில் கொகா கோலா போன்ற மென்பானங்களே முன்னணிப் படையினராகும். மனித சமூகத்தின் களைப்பையும் தாகத்தையும் போக்கிபுத்துணர்ச்சியையும், தெம்பை *யும் ஏற்படுத்தும் நன்மாராய புருஷர்களாக நமக்குக் காட்டப்படுகின்றனர்.
3. அரசியல் உலகமயமாக்கல்:
இஸ்லாமிய உலகில் உலகமயமாக்கலை அமுல்படுத்துவதற்கு பின்னால் இருப்பவர்கள் கொஞ் சம் கொஞ்சமாக அரசியல் உலகமயமாக்கலைச் செய் து வருகின்றனர். அதில் சிலவற்றை நாம் இங்கே குறிப்பிடலாம். ஆட்சியில் மேற்கத்தேய மாதிரியை அமுல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தல், ஏனை ய நாடுகளுடன் உறவை ஏற்படுத்தலுக்கான நிபந் தனையாக ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கூறல் என்பனவற்றைக் குறிப்பிடலாம். அராஜகம்

Page 41
மனித உரிமை மீறல், இனப்பிரச்சினை என்பவற்றுக்கு ஜனநாயகமின்மையே காரணமென மேற்குக் கருது கின்றது. அதே நேரம் உலகம் முழுவதும் புதிய ஒழு ங்கை நிறுவுவதற்கு மேற்கு முயற்சித்து வருகின்றது. அரசியல் உலகமயமாக்கலில் பிராந்தியங்களுக்கி டையிலான பரப்பெல்லையை இல்லாமலாக்கி விடு வதும் ஒன்றாகும். தொடர்பு சாதனங்களில் திடுக் கிடும் வகையில் தொழிநுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தி பாரிய இடைவெளியைத் தாணிடுவதில் வெற்றியும் ஈட்டியுள்ளனர். இணையத்தளத்தின் மூலம் உலகைக் கணர்காணிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளனர்.
அரசியல் உலகமயமாக்கலில்நாடுகளின் பர ப்பெல்லைகளுக்குள்லிருந்துகொண்டே பொருளாதார வளங்களைச் சுரண்டுவதும் அதன் நோக்கமாகும். சர்வதேசநாணயநிதியத்தினூடாகவும் விலைகளைத் தீர்மானிப்பதன் மூலமும் கட்டற்ற பொருளாதாரத்தின் மூலமும் அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றனர். VISA அட்டைகளை விரிவான அளவில் பயன்ப டுத்துவதன்மூலம் உள்நாட்டு வங்கிகளில் நம்பிக் கையீனத்தை ஏற்படுத்தி உலக வங்கிகள் மீது பூரண நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமும் அரசியல் உலகமயமாக்கல் விரிவடைந்து செல்கிறது.
4. சமூக உலகமயமாக்கல்:
சர்வதேச மாநாடுகள் மூலமாகவே இவ்வுலக மயமாக்கலின் மைல் கல்கள் நிறைவேற்றப்படுகி ன்றன. உலகமயமாக்கலின் திட்டத்தை அப்படியே கொட்டுகின்ற மாநாடுகள் காலத்திற்குக் காலம் நடை பெற்று வருகின்றன. அவற்றிலொன்றுதான் சனத் தொகை மாநாடாகும். உணர்மையில் இது சனத்தொ கைக்கெதிரான சதித்திட்டமாகும். மிக அணிமையில் கெய்ரோவிலும், பீஜிங்கிலுமாக இரண்டு மாநாடுகள் நடாத்தப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முந்திய பாலி யல் தொடர்புக்கு அனுமதி வழங்கள், கருக்கலைப்பு, குடும்பத் திட்டம், ஒருபால் உறவு போன்றவற்றை ஆகுமாக்கல் என மேற்கின் சட்டவிதிகளுக்கு முர ணிபடும் நடத்தைகளை கட்டுப்படுத்தி எதிர்காலத்தில் சட்டங்களைப் பிறப்பிப்பதற்கு இவ்விரு மாநாடுகளும் வழிசமைத்துக்கொடுக்கும். இம்மாநாடுகளில் சமூக ஒழுக்க விவகாரங்களை விவாதிப்பதில் இவர்கள் பிடிவாதமாக இருப்பது ஏன் ? கெய்ரோவில் நடை பெற்ற சனத்தொகை மாநாட்டைப்போல பின்னர் பீஜிங்கிலும் ஸ்தன்பூலிலும் நடைபெற்ற மாநாடுக ளைக் குறிப்பிடலாம். இவை மேற்கத்திய சமூகப் பெறுமானங்களுக்கான உலகமயமாக்கலின் ஒரு வகையாகும். மேற்கில் சரிந்துபோயுள்ள சமூக ஒழு

க்கப் பெறுமானங்களின் வீழ்ச்சியோடு சமத்துவமாக கால்வைக்கவேண்டுமென சர்வதேச சமூகம் விரும் புகின்றது. உதாரணமாக குடும்பம் கீழைத்தேய சமு தாயங்களில் அத்தியந்த உறவையும் பலத்தையும் தீர்மானிப்பதில் எஞ்சியிருக்கும் ஒரு சக்தியாகும். குறிப்பாக இஸ்லாமியர்களிடத்தில் இது அசைக்க முடியாததொன்றாக இருந்துவருகின்றது. இந்த விட யத்தில் சில சிந்தனையாளர்களும், மத ஸ்தாபனங்க ளும் இதை ஏற்றுக்கொணர்டிருந்தாலும் பெண்ணை, அவளது பாலின வேறுபாடுகளிலிருந்து முற்றாக வெளியேற்றுவதன் மூலம் கீழைத்தேய சமூகத்திலி ருக்கும் இக் குடும்ப அமைப்பை சிதைக்க முயல்கி ன்றனர்.
இந்த இடத்தில் இமாம் இப்னு கல்தூன் தனது முகத்திமாவில் “வெற்றிகொள்ளப்பட்டவன் வெற்றி கொண்டவனின் கலாசாரத்தையே பின்பற்றுகிறான்.” என்று கூறுகின்றார். எனவே போராட்டக் களத்தில் படைகள் அடையும் தோல்விக்கும் சிந்தனை தார்மீகப் பெறுமானங்களில் சமூகங்கள் அடையும் தோல் விக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் பிரித்த றியத்தெரிந்திருக்க வேண்டும். இராணுவ ரீதியான தோல்வி, வெற்றி மாறி மாறி வரக் கூடியது. அது வோர் இறைநியதியும் கூட ஆனால் மனோவியல் ரீதியாக சமூகங்கள் அடையும் தோல்வி அதன் முது கெலும்பையே முறித்துவிடக் கூடியதாகும்.
உலகமயமாக்கலின மேய்ப்பாளன்
உலகமயமாக்கல் திட்டத்தின் முதலாவது மேய்ப்பாளன் அமெரிக்காவாகும். அரசியல், பொரு ளாதாரம் மற்றும் பிறவற்றிலும் அமெரிக்காவின் ஒட்டு மொத்த அதிகாரத்தை ஆழப்படுத்துவதும் அமெ ரிக்காவின் மேற்பார்வையைப் பெற்றுக்கொடுப்பதுமே இன்றைய உலகமயமாக்கலின்சாரமாக இருக்கின்றது. தொடர்பூடக, தொழில்நுட்ப, இராணுவ, அரசியல் இயக்கங்கள் யாவும் அமெரிக்கச் செல்வாக்கிலிருந்து பிரிந்தவையல்ல. உணர்மையில் அமெரிக்க பிரதிமை யானது உலகமயமாக்கலின் அறிவியல் உலகில் மூன் று காரணங்களுக்காகவே பரப்பப்பட்டு வருகின்றன.
1. அமெரிக்கச் சமூகத்தின் திறந்த தன்மை :
இதுவே அனைத்தையும் உள்ளடக்கியதா கவும் மாற்றத்தையேற்பதாகவும் புத்தாக்கத்தை வர வேற்பதாகவும் அதிகம் காணப்படுகின்றது.
2. அமெரிக்கப் பாரம்பரியத்தை தனியாகக் கட்டியெழுப்பும் திட்டம் நீண்ட காலமாகவே இருந் துவருகின்றது.
- அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 29

Page 42
3. அமெரிக்கக் கல்வி, கலாசாரம் பன்முகத் தன்மையைக் கொணடது. பல்லினங்களையும் பல் தேசியங்களையும் பல்மொழிகளையும் கொண்ட பன் முகப் பாங்கிலேயே அமெரிக்கச் சமூக அமைப்பு இன்று காணப்படுகின்றது.
இதனாலேயே அமெரிக்காவுக்கப்பாலும் அதன் கலாசாரம் பரவ வழியேற்பட்டுள்ளது. உலகில் வேறெந்த நாடும் அடையமுடியாத பிரதிமை நிலை யை அமெரிக்கா அடைந்துள்ளது. உலகில் தொடர் பூடக வண்டியை ஒட்டிச் செல்லும் பென்னம்பெரிய வணிடிக்காரனாக அமெரிக்காவே இருக்கின்றது.
அமெரிக்கா வருடாந்தம் ஐரோப்பாவுக்கு 1 மில்லியன் 200 ஆயிரம் மணித்தியால தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகின்றது. யுனெஸ்கோவின் கருத்துப்படி இது மொத்த உலக செய்திப் பரிவர்த்தனையில் 3/4 பகுதியாகும்.
பிரித்தானிய சினிமா அரங்குகள் உழைக்கும் 80 வீத வருமானம் அமெரிக்கத் திரைப்படங்கள் ஊடாகவே கிடைக்கின்றது. பிரான்ஸில் 60 வீத வரு மானம் அமெரிக்கத் திரைப்படங்களால் கிடைக்கி ன்றது. 96ஆம் ஆண்டு உலகத் திரைப்படத் தயா ரிப்பில் அமெரிக்கா 85 வீதத்தை பெற்றிருந்தது. இது தவிர தொலைக்காட்சி, அமெரிக்க இசை என உலகம் எங்கும் பரவியுள்ளது. அமெரிக்க உணவு, அமெரிக்க உடை, அமெரிக்க மொழி என அடுக்கிக்கொணர்டே போகலாம்.
‘அரபுகளை நோக்கிய அமெரிக்க அரசியல் என்ற நூலில் அதன் ஆசிரியர் பின்வருமாறு கூறுகி ன்றார். “அமெரிக்காவுக்கு ஏனைய நாடுகளைப் போல நிரந்தரநண்பர்கள் கிடையாது. ஆனால் நிர ந்தர நலன்கள் இருக்கின்றன. அதேநேரம் இந்நல ண்கள் நிலையானவையல்ல. மாற்றத்திற்குட்படக்கூடி யவை. இதன் கருத்து உலகமயமாக்கலின் ஊடாக உலகம் முழுவதும் அமெரிக்காதனது செல்வாக்கைப் பதித்துவிட்டது என்று கூற முடியாது. அமெரிக்கா வின் உலகமயமாக்கலை எதிர்க்கும் நாடுகள் பல 26T66.
உலகமயமாக்கலும் குற்றச்செயலும்.
உலகமயமாக்கல் மூலம் முன்னெப்போ
தையும்விட குற்றச்செயல்கள் அதிகரித்துக் காண
ப்படுகின்றன. குற்றச்செயல்கள்தொடர்பாக 1994ஆம்
ஆண்டு நவம்பரில் ஐநா மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டமைச்சர்கள் தொடர்புப் பரிவர்த்தனை
30 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் அ--

யின் பின்னர் குற்றச்செயல்கள் பெருகியுள்ளதாக ஏற் றுக்கொண்டுள்ளனர். உலகமயமாக்கலே குற்றச்செ யல்களுக்கு அழைப்புவிடுப்பதாகவும் அவர்கள் கூறி னர். போதைவஸ்த்துக்கள், ஆயுதங்கள் விற்பனை உலகமயமாக்கலின் பின் வணிகச் சந்தையை ஆக்கிர மித்துள்ளதால் குற்றச் செயல் பெருகிவருகிறது. 12 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சேர்ந்து (YOROBALL) எனும் பிராந்திய செய்திப் பிரிவை ஏற்படுத்தியுள் ளனர். இது போதைவஸ்த்துக் கடத்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறது.
உலகமயமாக்கலும் இஸ்லாமும்,
மேற்குறித்த விளக்கங்களிலிருந்து நோக் கும்போது உலகமயமாக்கல் எமது கருத்துநிலை, பண்பாடு போன்ற பலஅம்சங்களுக்கு எதிராக உள் ளது என்பது கணிகூடு. பொதுவாழ்வில் மதச்சார் பின்மையை ஏற்படுத்தி சமூகங்களை அடிமைப் படுத்துவதே இதன் நோக்கமாகும். இதற்கு முன்னால் மாசோனியா என்ற இயக்கம் இதனைச் செய்து வந் தது. இப்போது உலகமயமாக்கல் அதனை கனகச் சிதமாகச் செய்கிறது.
உலகமயமாக்கலின் தாக்கத்திலிருந்து முஸி லிம்கள் தம்மைக் காத்துக்கொள்வது எப்படி ? இளம் லாம் உலகமயமாக்கலை எதிர்க்குமாயின் அதற்கான மாற்றுத் திட்டம் என்ன ? அப்படியாயின் இஸ்லா த்தில் உலகமயமாக்கல் இருக்கின்றதா ? என்ற கேள் விகள் ஒருவரின் உள்ளத்தில் எழக்கூடும். இக்கே ள்விகளுக்கான விரிவான விடையை இங்கே கூற முடியாது. ஆனால் இஸ்லாமிய உலகமயமாக்கல் தொடர்பான சில சிந்தனைகளை தொட்டுக்காட்ட
(1plգԱյԼճ.
இஸ்லாம் ஒரு சர்வதேச மார்க்கமாகும். அதன் அழைப்பு சர்வதேசியமானது. இஸ்லாமிய நாகரிகத்தின் தூது ஆன்மீக, சடவாத, ஒழுக்க, தார்மீகப் பெறுமானங்களை உள்ளிட்ட இம்மை, மறு மை இரணர்டிற்குமான முழுமைத் தன்மை வாய்ந்த பன்மைத்துவம்கொண்ட ஒரு தூது என்பதை அதன் அடிப்படைகளைப் படித்த எவரும் ஏற்றுக்கொள்வர்.
இஸ்லாத்தின் உலகமயமாக்கலில் மனித இன மே பொதுவாக நோக்கப்படுகின்றது. நாடு, இனம், மொழி, மதம் என்ற தனித்துவங்களின் அங்கீகரிப்பில் இஸ்லாத்தின் உலகப் பார்வை இருப்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இஸ்லாத்தின் சர்வதேசத் தன் மையை மக்காவில் இறக்கப்பட்ட வசனமே தெளி
வுபடுத்திநிற்பது இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது.

Page 43
"இது உலகத்தாருக்கான வேதமி” (81:27) என அலகு ர்ஆன் கூறுகின்றது. ஹிஜ்ரத் செய்து ஏழாம் ஆணர்டின் தொடக்கத்திலேயே ரோம, பாரசீக வல்லரசுகளின் தலைவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தனது தூதுவர் களை அனுப்பிவைத்தார்கள்.
இஸ்லாத்தின் உலகமயமாக்கலை இன்றைய உலகம் ஏற்றுக்கொள்ளும் ர்ைவருமி நியாயங்களை பரிந்துரைசெய்ய முடிகின்றது. 1. இஸ்லாம் உரிமைக்ள், கடமைகளில் ஒரு நுணர் மையான சமநிலையைப் பேணுகின்றது. 2 நீதியும், நேர்மையும், பலமும் கொண்ட சமூகத் தைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாம் பேரார்வம் கொண்டுள்ளது. 3 இனம், பால், நிறம், பணம், அந்தஸ்த்து போன்ற கணிப்பீடுகளுக்கப்பால் மனிதர்களுக்கிடையிலான சம த்துவக் கோட்பாட்டை இஸ்லாம் முன்வைக்கின்றது. 4. இஸ்லாமிய அரசியலின் அத்திவாரமாக ஷரொ அமைப்பு முறை காணப்படுகின்றது. 5. அபிவிருத்தி, முன்னேற்றம் ஆகியவற்றையடைய மனித :: மேற்கிளம்பச் செய்வதற்காக கல் வியை அனைவர் மீதும் கடமையாக்கியுள்ளது.
ஆனால் இன்றைய உலகமயமாக்கல் முதலா ளிய லிபரல் பரப்பெல்லைக்குள்ளே புதுவகைக் கணி காணிப்பை மேற்கொள்கிறது. இன்றைய உலகமயமா க்கலை புதிய காலனியப் பிரமிபாக அடையாளப்படுத் தலாம். அதன் மறை கரங்களாக உலக வங்கி, சர்வதே சநாணய நிதியம், கெட், ஜிஎட்டு நாடுகளின் பொரு ளாதாரக் கூட்டு இவற்றின் தலைமை அதிகாரியாக அமெரிக்கா விளங்குகின்றது. மூன்றாம் உலகை அமெரிக்கத்தனமானதாக மாற்றியமைப்பதே அதன் நோக்கமாக உள்ளது.
உலகமயமாக்கலை அணுகுவது எப்படி ?
நாம் என்ன கூறினாலும் அனைவரையும் உலகமயமாக்கல் ஆக்கிரமித்துவருகிறது. இதன்
அபாயத்திலிருந்து எவரும் தப்பமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகமயமாக்கல் விட
யத்தில் எம்மத்தியில் இன்று மூன்று நிலைப்பாடுகள்
காணப்படுகின்றன. அவையாவன :
1. உலகமயமாக்கல் சிந்தனையை ஏற்றுக்கொள் வதும் இறைநிராகரிப்பும் ரித்தத்தும் ஆகும் எனக் கூறு மீநிலை.
2. உலகமயமாக்கலை முற்றாகப் பகிஷ்கரித்து அத ற்கெதிராகப் போர்தொடுக்கும் நிலை. இது நடை முறைச் சாத்தியமற்றது. உலகமயமாக்கல் இராட்சத வடிவம் எடுத்துவிட்டது. உலகம் பூகோள அறையாக மாறிவிட்டது. அலைவரிசையூடாக பட்டி தொட்டியெ ங்கும் பரவிவிட்டது. புதிய உலக ஒழுங்கில் பரஸ்பர

எடுத்தல், கொடுத்தல் வந்துவிட்டன. தனிமைச் சுவர் களைப் போட்டுக்கொண்டு யாரும் இங்கே வாழ முடி யாது. அதே நேரம் இன்னும் பல மூன்றாம் உலக நாடுகள் காலனியத்தின் கீழ் இருந்து வருகின்றன.
3. இது இரண்டுக்கும் இடையில் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டுமெனக் கூறுவோரும் உள்ளனர். உலகமயமாக்கலின் உடன்பாடான அம் சங்களை ஏற்றுக்கொணர்டு எதிர்மறையை விட்டுவி டுவதை இது குறிக்கும். அறிவு முஸ்லிமின் காணா மல்போன சொத்தாகும். அதை அவன் காணும்போது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தேர்ந்தெடுத் தலின் அரசியல் இலகுவான விடயமொன்றல்ல. அத ற்கு நுட்பமான அறிவும் பெரும் முயற்சியும் தேவை ப்படும். தேர்ந்தெடுத்தலின் அரசியலை இரண்டு மட் டங்களில் மேற்கொள்ளமுடியும். 1. தனிநபர் மட்டம் : இஸ்லாத்தின் பூரணத்துவத் தையும் நோக்கத்தையும் அறிவதனுடாகவும் உல கமயமாக்கலின் அனுகூலங்களையும், பிரதிகூலங்க ளையும் அறிவதனுடாகவும் அதனோடு உறவாடு வதும் பிரதிகூலங்களுக்கெதிராகப் போராடுவதும் சாத்தியமாகும். இதில் இஸ்லாமிய சிந்தனையாள ர்களும் பிரசாரகர்களும் பொதுமக்களுக்கு தெளிவை வழங்க முடியும்.
2. சமூக மட்டம் : இது இஸ்லாமிய சமூகம் தனது மார்க்கம், பணிபாடு என்பவற்றின் பால் மீளச்செ ல்வதும் தம்மைப் புதுப்பித்துக் கொள்வதும் தமிமை ஒருங்கிணைப்பதும் சாத்தியமாகக் கூடிய கட்டமாகும்.
உலகமயமாக்கலை உத்தியோகபூர்வ தீர்மா னங்களினாலோ நிருவாக முடிவுகளினாலோ எதிர்த் துவிட முடியாது. அதை அணுகுவது எவ்வாறு என்ற அறிவினூடாகவே அல்லது உலகமயமாக்கலுக்கான பிரதியீட்டங்களை இஸலாமிய சிந்தனையிலிருந்து உருவாக்கிக் கொள்வதனூடாகவும் கொள்கையைத் தாரைவார்க்காது ஊடாடுவதன் மூலமாகவுமே அது சாத்தியமாக மாறும். இணையத்தளங்கள் என்ற சமு த்திரத்தில் ஒவ்வொரு உயிர்ச்சோடிகளையும் சுமந்த நூஹி (அலை) அவர்களின் கப்பலைப் போல நாம் அதைத் தாணர்டிக் கடப்பதிலேயே நமது வெற்றி தங்கியுள்ளது.
உசாத்துணை :
1. அல் அவலமா, அஷ்ஷெய்க் நாஸிர் அல் அஹமத்,
ஒலிப்பேழை விரிவுரை ஹி 1421 6 - 28 தமாம். 2. கிதாப் பஹ அல் அவலமா, உஸ்தாத் செய்னுல்
ஆபிதீன் அர் றிகாபி, அஷ்ஷர்குல் அவிஸத், 3. அல் அவலமா கலாநிதி அப்துர் றஹற்மான் அளப் சுதைஸ் ஜூம்ஆ பிரசங்கம், ஹி 1421-11-7 மக்கா, 4. பஹ் அல்அவ்லமா, பீட்டர் மார்டின் ஹெரல்ட் ஷோமன் பெயர்ப்பும் வெளியீடும் அல் மஜ்லிகல்வத்தனி குவைத்
3 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 31

Page 44
சூழலைப் பாதுக
நவீன உலகு எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் பல பிரச்சினைகளுள் “ சூழல் மாசடைதலி” என்ற பிரச்சினை முக்கிய இடத்தை வகிக்கின்றது. இப் பிரச்சினையைத் தீர்த்து மனிதனை சுபிட்சமாய் வாழ வைப்பதற்காக உலக நாடுகளும், சர்வதேச நிறுவ னங்களும் பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கை களையும் மேற் கொண்ட வணர்ணம் இருக்கின்றன. எனினும் இப்பிரச்சினையானது இதுவரை தீர்க்கப் படாத ஒன்றாகவே காணப்படுகின்றது. மனிதன் பல வீனமானவன் என்ற அடிப்படையில் அவன் முன் வைக்கும் அனைத்துத் தீர்வுகளும் ஏதோ ஒரு வகை யில் குறைபாடுடையதாகவே காணப்படும். இதனா ல்தான் இப்பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாமல் உள்ளது. எனவே இப்பிரச்சினைக்கான தீர்வை இறை வனிடமிருந்து பெற்றுநடைமுறைப்படுத்தினால் சிறந்த விளைவுகளைப் பெறலாம் என்பது தெளிவாகி ன்றது.
அல்லாஹ மனிதனுக்கு வழிகாட்டியாக அல் குர்ஆனை இறக்கி வைத்தான். அது மனிதனுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் தன்னகத் தே கொண்டதாக விளங்குகின்றது. இதுபற்றி பின்வரு மாறு அல்லாஹி கூறுகின்றான்.
“நாம் எதையும் வேதத்தில் குறிப்படாமல் வடுவதில்லை.” (06:38)
“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பூரணமாக்கிவட்டேன்.” (05:03)
பூரண வழிகாட்டல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இஸ்லாம் தனது சட்டங்கள் அனைத்
32 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் -ெ

ாக்கும் இஸ்லாம்
-அஷர்ஷெய்க் ஏ. எஸ் எம் ஜெலிஸ்
தையும் இரு பிரதான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றியுள்ளது. அவையாவன :
1. மனிதனுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுத்
தல் (ஜல்புல் மஸாலிஹர்)
2. மனிதனுக்கேற்படும் தீங்குகளைத் தடுத்தல்
(தர்உல்மபாலித்)
மனிதனுக்குத் தீங்குகளை விளைவிக்கும் ‘சூழல் மாசடைதலைத் தடுப்பதற்கும், அதற்குப் பகர மாகச் சூழலிருந்து மனிதனுக்கு நன்மைகளைப் பெற் றுக் கொடுப்பதற்கும் போதுமான சட்டங்கள் இஸி லாத்தில் காணப்படுகின்றன.
தற்கால சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நேரடியாக அல்குர்ஆன், அல்ஹதீஸ் என்பவற்றில் காணப்பட்டாலும், “வருமுன் காப்போமி” என்பது போல் அப்பிரச்சினைகள் தோன்றுவதைத் தடை செய் யும் வசனங்களையும், அவை தோன்றாமலிருப்ப தற்கு நாம் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதற் கான வழிகாட்டல்களையும் தாராளமாகக் கண்டு கொள்ளலாம். எனவே இஸ்லாம் சூழல் மாசடை தலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை எவ்வாறு முன்வைத்துள்ளது என்பதை வரிவாக நோக்குவோம்.
மனிதனினர் பணி
அல்லாஹ மனிதனை இவ்வுலகில் தனது பிர
திநிதியாக படைத்துள்ளான். இது பற்றிப் பின்வ ருமாறு கூறுகின்றான் :
“அவன்தான் உங்களைப் பூமியில் தனது பிரதிநிதியாக ஆக்கினானி” (6:165)

Page 45
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறி னார்கள்: நிச்சயமாக உலகமானது பசுமையானதும், இன்பமானதுமாகும். அல்லாஹ அதில் உங்களைப்
பிரதிநிதிகளாக்குகின்றான். (முஸ்லிம், அந்நஸாஈ)
பிரதிநிதி எனப்படுபவன் பூமியின் உரிமை யாளனல்லன். மாறாக அவன் பூமியையும், அதிலுள் ளவற்றையும் பரிபாலித்து தான் பயன் பெறுவதோடு, எதிர்கால சந்ததியினர் பயன் பெறக்கூடிய முறையில் பாதுகாத்துக் கொடுத்தல் வேண்டும். எனவேதான் அல்லாஹ இப்புமியை வளப்படுத்துமாறு மனிதனிடம் வேண்டினான்.
“அவன் உங்களைப் பூமியலிருந்து படைத்து, அதனை வளப்படுத்துமாறு வேண்டினான்’ (11:61)
அறபு மொழியில் “வளப்படுத்தல்” என்ப தன் எதிர்க்கருத்து “பாழடையச் செய்தல்” என்பதாகு மி. இங்கு அல்லாஹற் பூமியை வளப்படுத்துமாறுவே ண்டுகிறான். அதாவது பூமியைப் பாழடையச் செய்து விட வேண்டாம் எனக் கட்டளையிடுகிறான். ஆகவே இப் பூமியைப் பாழடையச் செய்கின்ற, சூழலை மாசு படுத்தக்கூடிய விடயங்களைத் தவிர்த்து அதை வளப் படுத்தும் செயல்களை மேற்கொள்வதே மனிதனின் பணியாகும். ஏனெனில் பிரதிநிதியின் பணி தனது எஜமானின்கட்டளைகளை நடைமுறைப்படுத்தலாகும்.
மேலும் மனிதனது பணி வேறொரு வகை யில் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
“ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவன்றி நான் படைக்கவில்லை.”
(51:56)
இவ்வசனத்தின்படி மனிதன் தனது முழு வாழ்வையும் வணக்க வழிபாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும். எனவே அவன் தனது செயற்பாடுகளை பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவையாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பிறரைத் துன்புறுத் துகின்ற விடயங்கள் வணக்கவழிபாடாகக் கணிக்க ப்படமாட்டாது. ஆகவே மனிதன் தனது சூழலை மாசுபடுத்தி பிறருக்குத் துன்பங்களை ஏற்படுத்துவது அவனது பணிக்கு முரணானதாகும்.
அதேவேளை மனிதன் தனது சூழலையும், இயற்கையையும் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவனது எணர்ணமி தூய்மையாக இருக்கும்போது வணக்கவழிபாடாகக் கணிக்கப்பட்டு அவனுக்கு நற் கூலியைப் பெற்றுக் கொடுக்கும். பொதுவாக ஒரு

செயலுக்குக் கூலி வழங்கப்படுமானால் மனிதன் அதி ல் ஆர்வத்தோடு ஈடுபடுவான். அதுவும் கூலி இறை கூலியாக இருந்தால் அதில் இன்னும் ஆர்வத்தோடு ஈடுபடுவான். எனவே மனிதன் தனது பணி யாது என்பதை உணர்ந்து செயற்பட்டால் இயற்கைச் சூழல் இயல்பாகவே பாதுகாக்கப்படும்.
பிரபஞ்ச சமநிலை.
பிரபஞ்ச செயற்பாடுகள் அனைத்தும் திட்ட மிடப்பட்ட சமநிலையில் இயங்கிக் கொண்டிருக்கி ன்றன. அல்லாஹ பிரபஞ்சத்தை நுணுக்கமாகவும், ஒன்றின் செயற்பாட்டால் மற்றொன்று செயலிழக் காமல் சமநிலையாகவும் படைத்துள்ளான்.
“அவனே வானத்தை உயர்த்தினான், மே லும் சமநிலையையும் ஏற்படுத்தினான்.” (55 7) “அருளாளனின் படைப்பில் எத்தகைய சம நிலையற்ற தன்மையையும் காணமாட்டீர்.” (67; 3)
ஒவ்வொரு உயிரினமும் சுபீட்சமாய் வாழ வேண்டுமாயின் பிரபஞ்ச சமநிலை பேணப்பட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் குறிப்பிட்டளவு ஆற்றலும், சக்தியும் காணப்படுகி ன்றது.
“நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பிட்ட அளவின்படி படைத்துள்ளோம்.” (54: 49)
எனவே மனிதன் தான் விரும்பியவாறு பிர பஞ்சப் பொருட்களைப் பயன்படுத்திப் பிரபஞ்ச சம நிலையைக் குலைக்க முடியாது. ஏனெனில் ஒவ் வொரு பொருளினதும் குறிப்பிட்டளவு ஆற்றல், சக்தி மீறப்பட்டு பயன்படுத்தப்படும்போது அது செயலிழ ந்துவிடும். அவ்வாறு அளவு மீறிப் பயன் பெற்றுப் பிரபஞ்சப் பொருட்களைப் பயன்படுத்தி வீணாக்கு வதை அல்லாஹ தடுத்துள்ளான். காரணம் இப் பிரப ஞ்சம் வீணாகப் படைக்கப்படவில்லை.
“எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை என அறிவுடையோர் கூறுவார்கள்.” (03: 191)
உயிரினங்கள் சுபீட்சமாய் வாழவேணர்டு மாயின் பிரபஞ்ச சமநிலை என்றும் பேணப்பட வேண்டும். இன்று இச் சமநிலை குலைந்திருப்ப தனால் மனிதன் பல சூழல் பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளான். இப்பிரச்சினைகள் தோன்றாதிரு ப்பதற்காக அல்லாஹர் பிரபஞ்ச சமநிலையைக் குலை
- அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 33

Page 46
க்க வேணடாம் எனப் பல இடங்களில் எச்சரித்து ள்ளானர்.
“அல்லாஹீவின் படைத்தல் செயற்பாட்டை மாற்றமுடியாது.” (30: 30)
“அல்லாஹவின் அருட்கொடைகளை தம்மி டம் வந்த பின் யார் மாற்றுகின்றாரோ அவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் அல்லாஹி கடுமையான வன்.” (2 : 211)
அல்லாஹி மனிதனுக்கு வழங்கியுள்ள அருட் கொடைகளுக்குப் பகரமாக அவற்றை மாசுபடுத்தி வீணடித்தல் எவ்விதத்தலும் பொருத்தமற்றது. மாறாக அவற்றைப் பாதிக்காமல் பயன் பெறுதலே இறை வனால் வேண்டப்பட்ட விடயமாகும்.
“அல்லாஹி உனக்குச் சிறந்த முறையில் உபகாரம் செய்திருப்பதுபோல்நீயும் சிறந்த முறையில் உபகாரம் செய்வீராக” (28:77)
பிரபஞ்சத்தின் பிரதான இயல்பு"சமநிலை” என்பதனால் இஸ்லாமிய சமூகம் எப்போதும் நடு நிலையானதாகவே இருக்கும். இதனால்தான் அல் லாஹி எமது சமூகத்தை “நடுநிலையான சமூகம் - உம்மத்துன் வஸத்’ என வர்ணித்துள்ளான். அவ் வாறே அல்லாஹற்வின் நல்லடியார்களின் பிரதான பணிபாகவும் “நடு நிலமை” என்பது காணப்படுகி ன்றது. எனவே இஸ்லாமிய சமூகத்தில் வாழ்வோர் இயற்கை வளங்களை தமது தேவைக்கேற்ப பயன்ப டுத்துவார்கள். மாறாக எல்லை மீறி அவற்றை உப யோகித்து வீணர் விரயம் செய்யமாட்டார்கள். இவ் வாறு மக்கள்தம் செயற்பாடுகளை அமைத்துக் கொள் ளும்போது இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படும். அல்லாஹி தனது நல்லடியார்கள் பற்றி பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.
“அருளாளனின் அடியார்கள் செலவு செய் தால் வீணர்விரயம் செய்யமாட்டார்கள், மேலும் உலோபித்தனமாக குறைத்து செலவிடவும்மாட்டா ர்கள். எனினும் இரண்டுக்கும் மத்திய நிலையில் இரு ப்பார்கள்.” (25 : 67)
“நடுநிலைமை, சமநிலை” என்ற பணிபுகள் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கவேண்டுமென்பதற்காக இஸ்லாம் அன்றே வீணர்விரயத்தைத் தடுத்து சூழ லைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
“வீண்விரயம்செய்யாதீர்கள் ஏனெனில்அல்லாஹ் அளவு கடந்து வீணர்விரயம் செய்பவர்களை நேசிப் பதில்லை.” (7: 31)
34 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் -

இன்று பல வளர்முக நாடுகள் காட்டு வளம் வீணி விரயமாவதைத் தடுத்து சூழலைப் பாதுகாப் பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இங்கு இஸ்லாத்தின் வழிமுறைகள் பின்பற்றப்ப டுகின்றன. அதாவது“வீணர் விரயமி”தடுக்கப்படுகி ன்றது. இதிலிருந்து இஸ்லாம் இவ்வுலகில் நடை முறைப்படுத்தப்படுமானால் பிரபஞ்சத்தில் நடு நிலையான சமூகம் தோன்றி இயற்கை வளம் நடு நிலையாகப் பயன்படுத்தப்பட்டு சூழற் பிரச்சினைகள் தோன்றாது தடுக்கப்படும் என்பது புலனாகின்றது.
பூமியில் குழப்பம் விளைவித்தல்
அல்குர்ஆனில் “அல்ஃபஸாத்” என்ற சொல் “குழப்பம் விளைவித்தலி” என்ற கருத்தில் பயன்படு த்தப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தினால் தடுக்கப்பட்ட விடயமாகும். பூமியில் மனிதன் குழப்பம் விளை விக்கும் போது இயற்கை வளங்கள் அழிக்கப்படும் அல்லது பாதிக்கப்படும். இதனால் மனிதனும், ஏனை ய உயிரினங்களும் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடும். “குழப்பம் விளைவித்தல் - அல் ஃபலாத்” பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
“பூமியில் குழப்பம் விளைவித்துத்திரியா தீர்கள்.” (2: 60)
“பூமியில் குழப்பம் செய்வதை விருமபாதே.”
(28: 77)
“குழப்பம் விளைவித்தலை அல்லாஹ விரும் புவதில்லை” (2: 205)
பிரபஞ்சத்திலுள்ள இயற்கை வளங்களை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் அனைத்தையும் “பூமி யில் குழப்பம் விளைவித்தல்” என்ற வட்டத்திற்குள் உள்ளடக்கலாம். இது பற்றி கலாநிதி எம். ஏ. எம். ஷ0க்ரி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“இஸ்லாம் இயற்கை வளங்களை காரண மின்றி அழிப்பதையும், துஷ்பிரயோகம் செய்வ தையும், வீணர் விரயம் செய்வதையும் தடுத்துள்ளது. மட்டுமன்றி இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கும் வகைசெய்துள்ளது. இவ்வாறு இயற்கை வளங்களை அழிப்பதை “பூமியில் குழப்பம் விளைவித்தல் - அல் ஃபஸாத் ஃபில் அர்ள்” என்ற பிரிவில் தயக்கமின்ற நாம் உள்ளடக்க முடியும்.
எனவே இறை வழிகாட்டலுக்கேற்ப இப் பிரபஞ்சத்தில் எவ்வித சீர்கேடுகளையும் ஏற்படுத்தா

Page 47
து மனிதன் வாழ்வானேயானால் இயற்கை வள ங்கள் பாதுகாக்கப்படும். இதனால் சூழற் பிரச்சினை கள் தானாகத் தீரும்.
மர நடுகை
இஸ்லாம் இயற்கை வளங்களைப் பாதுகா ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதால் மர நடுகை யைத் தூணர்டியுள்ளது. அல்குர்ஆனில் 172 இடங் களில் மரம், மரத்துடன் தொடர்பான விடயங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இதுவே இஸ்லாத்தின்தூணி டுதலை எடுத்துக்காட்டுகிறது. மரங்கள் பற்றிய சில அல்குர்ஆன் வசனங்கள் :
“மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை ஆண், பெண வகையுள்ள ஜோடியாக முளைப்பித்தி ருக்கிறோம்.” (50 : 7)
“வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ளநீரை இறக்கி, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறு வடை செய்யப்படும் தானியங்களையும் முளை ப்பிக்கிறோம். அடுக்கடுக்கான பாளைகளைக் கொ ணர்ட குலைகளையுடைய நெடிய பேரீத்த மரங் களையும் முளைப்பிக்கிறோம்.” (50: 9,10)
இறைதூதர் (ஸல்) அவர்களும் மரநடுகை யை ஊக்குவித்து பல பொன்மொழிகளைக் கூறியு ள்ளார்கள். அவற்றில் சில,
“உன் கையில் பேரீத்த மரச் செடி ஒன்றிரு ப்பின் அடுத்த நிமிடம் உலகம் அழியும் என்றிருந் தாலும், அதற்கு முன் அச்செடியை நடமுடியுமாக இரு ந்தால் அதனை நட்டிவிடு. அச்செயலுக்கும் கூலி Այ666f6).” (அஹர்மத்)
“ஒரு முஸ்லிம் ஒரு செடியை அல்லது ஒரு பயிரைப் பயிரிட்டு அதிலிருந்து ஒரு பறவை அல்ல து ஒரு மனிதன் அல்லது ஒரு மிருகம் உணவைப் பெறுமாயின் அது அவனுக்கு நன்மையைப் பெற்று த்தரும் ஸதகாவாக அமையும்.” (முஸ்லிம்)
இஸ்லாம் மர நடுகையை இம்மையில் பயன்தரும் செயலாகவும், மறுமையில் நன்மையை ஈட்டித்தரும் ஸதகாவாகவும் ஆக்கியுள்ளது. இத் தூண்டல் காரணமாக மனிதன் அதிகமான மரங்களை நடுவான். எனவே சூழல் தானாகப் பாதுகாக்கப் படும்.
இஸ்லாம் மரங்கள் வீணாக வெட்டி அழிக்

கப்படுவதைத் தடுத்துள்ளது. இதற்கு சிறந்த உதா ரணமாகப் போராட்டங்களில் மரங்களை வெட்டி அழிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளமையைக் குறிப் பிடலாம். யுத்தத்திற்கு முன் தளபதி இதுபற்றி உப தேசிக்கப்படுவார். அபூபக்கர் (ரலி) அவர்கள் பாரசீ கத்திற்கு படைநடாத்திச் சென்ற உஸாமா பின்ஸைத் (ரலி) அவர்களுக்குப் பின்வருமாறு உபதேசித்தார்.
“பேரீத்த மரத்தை வெட்டி எரிக்க வேணி டாம். மேலும் பழம் தரும் எந்தவொரு மரத்தையும் வெட்டவேண்டாம்.”
இஸ்லாத்தின் இந்த வழிகாட்டல் மூலம் எம க்கு காட்டு வளத்தைப் பாதுகாக்கலாம். காட்டு வளம் பாதுகாக்கப்படும்போது பல சூழல் பிரச்சினைகள் தீர்க்கப்படும். அத்தோடு காட்டு வளம் அருகிவரு கின்றமை சூழல் மாசடைதலுக்கான ஓர் முக்கிய காரணி எனப் பலராலும் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மர நடுகைக்கான தினங்கள் குறிக்கப்பட்டு “மரநடுகை” ஊக்குவிக்கப்படுகின்றது.
விலங்குகளைப் பாதுகாத்தல்.
இஸ்லாம் விலங்குகளைத் தேவையின்றிக் கொலை செய்தலைத் தடுத்துள்ளது. ஏனெனில் சில மிருகங்களும், பறவைகளும் அழுக்குகளை சாப்பி ட்டு வாழ்வதன் காரணமாக சூழல் மாசுறாமல் பாது காக்கப்படுகிறது. இஸ்லாம் வேட்டையாடுவதை அனுமதித்த போதிலும் இரு விடயங்களைப் பேணு மாறு கூறியுள்ளது.
i தேவைக்கேற்றளவு வேட்டையாடுதல். i பயனுள்ள விலங்குகளை மாத்திரம் வேட்
டையாடுதல்.
“யாராவது ஒரு சிட்டுக்குருவியைக் கொன் றால், அது மறுமையில் அல்லாஹவிடம் பின்வரு மாறு கூறும் : இறைவா ! ஒரு நபர் என்னை எவி விதப் பயனையும் எதிர்பாராது வீணாகக் கொலை செய்தான்.” (அந்நஸாஈ, இப்னு ஹிப்பான்)
இவ்வழிகாட்டலின்படி நாம் செயற்பட்டால் எமக்குப் பயன்தராத விலங்குகள் பாதுகாக்கப்படும்.
அவ் விலங்குகள் மூலம் சூழல் பாதுகாக்கப்படலாம்.
அல் - ஜாமிஆ, மூன்றாவத இதழ் 135

Page 48
சுத்தம்
அல்லாஹி மனிதனை அழகான தோற்றங் களில் படைத்து, அவன் அழகாக வாழ்வதை விரும் புகின்றான். அல்லாஹி பின்வருமாறு கூறுகின்றான்.
“அவன் உங்களை உருவாக்கி, உங்கள உரு வங்களையும் அழகாக்கினான்.” (64 : 3)
நபி (ஸல்) அவர்களும் மனிதன் அழகான வனாக இருப்பதை அனுமதித்துள்ளார்கள்,
“யாருடைய உள்ளத்தில் அணுவளவேனும் பெருமை இருக்கின்றதோ அவன் சுவர்க்கம் புகமா ட்டான” என நபியவர்கள் கூற, ஒருவர், “ஒரு மனி தன் தனது ஆடை அழகானதாகவும், தனது பாதணி அழகானதாகவும் இருப்பதற்கு விரும்புகிறான் இவ னது நிலை என்ன ?” என வினவினார். அதற்கு நபியவர்கள், “அல்லாஹி அழகானவன், அழகையே விரும்புகின்றான். பெருமை என்பது உணர்மையை மறைப்பதுமி மக்களை மதியாது நடப்பதுமாகுமீ” எனக் கூறினார். (முஸ்லிம், மாலிக்)
ஒரு மனிதன் தான் அழகானவனாக இரு க்கவும், தனது வாழ்வு அழகானதாய் அமையவும் சுத்தம் அவசியமாகின்றது. மனிதனை அழகாக வாழு மாறு பணித்த இஸ்லாம் அதற்கான வழியாக சுத் தத்தை ஆக்கியுள்ளது. நபியவர்கள் சுத்தமாக வாழி வதைப் பின்வருமாறு வற்புறுத்தியுள்ளார்கள்.
«، நிச்சயமாக அல்லாஹி தூய்மையா னவன். அவன் தூய்மையையே விரும்புகின்றான். அவன் கண்ணியமானவன், கண்ணியத்தையே விரும் புகின்றான். எனவே நீங்கள் சுத்தமாக இருங்கள்.
மேலும் யூதர்களை ஒத்திருக்காதீர்கள்” (அத்திர்மிதி)
பிறிதொரு அறிவிப்பில் பின்வருமாறு வந்து ள்ளது.
- - - நீங்கள் உங்கள் வீடுகளையும், உட லையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.”
மனிதன் தன்னையும், தன்னைச் சூழவுள்ள பொருட்களையும் சுத்தமாக வைத்திருந்தால் “சூழல் மாசடைதல்” என்ற ஓர் பிரச்சினை தோன்றியிருக் காது. மேலும் பொது இடங்கள், நீர்நிலைகள் என் பவற்றில் அழுக்குகள் ஒன்று சேர்வதனால் எமது சூழல் பல்வேறு அமைப்புக்களில் மாசடைகின்றது.
36 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் <

இதைத் தடுப்பதற்காக இஸ்லாம் பின்வருமாறு வழி காட்டியுள்ளது. நபியவர்கள் பின்வருமாறு நவின்று ள்ளார்கள்,
“சாபத்தை உணர்டுபண்ணும் மூன்று விடய ங்களைப் பயந்து தவிர்த்துக்கொள்ளுங்கள். அவை யாவன : நிழல், பாதை, நீர்நிலைகளில் மலம் கழித் தலாகும்.” (அபூதாவுத்,இப்னு ஹிப்பான்)
“உங்களில் யாரும் தேங்கியிருக்கும் நீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம்.”
(புஹாரி, முஸ்லிம், அத்திர்மிதி, இப்னு மாஜா)
மேற்சொன்ன கருத்தில் வந்துள்ள ஹதீஸி களை ஆதாரமாகக் கொண்டு இமாம் அவர் ஷவிக் கானி “பாதை, நிழல்களின் கீழ் மலம் கழிப்பது ஹறாமீ” என்கிறார். இவை மட்டுமன்றி பாதைகளில் எச்சில் துப்புவதைக்கூட இஸ்லாம் தடுத்துள்ளது.
“பள்ளிவாயிலில் எச்சில் துப்புவது பாவமா கும். அதற்கான குற்றப்பரிகாரம் அதைப் புதைத்து விடுதலாகும்.” (புகாரி, முஸ்லிம்)
இவ்வாற இஸ்லாம் பல வழிகளிலும் சுத்த த்தை வலியுறுத்தி மனிதன் சுத்தமாக வாழ்வதையே விரும்புகின்றது. இவ்வாறு மனிதன் சுத்தமாக வாழு மீபோது சூழலும் சுத்தமாகும். எனவே சூழல் மாச டைதல் என்பது இயல்பாக அற்றுப்போகும்.
துர்நாற்றம்.
மனிதனுக்கு கஷ்டத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்துகின்றதுர்நாற்றம் சூழலை மாசுபடுத்துகின்ற காரணிகளுள் ஒன்றாகும். எனவே இஸ்லாம் துர் நாற்றத்தைத் தோற்றுவிக்கும் அற்பக் காரணிகளைக் கூடத் தடுத்துள்ளது. இந்த வகையில் நபியவர்கள் வெள்ளைப் பூண்டு போன்றவற்றை உட்கொண்டு பிற ருக்கு கஷ்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என அறிவு றுத்தியுள்ளார்கள்.
“வெள்ளைப் பூண்டுச் செடியைச் சுட்டிக் காட்டிய நபியவர்கள் யார் இந்தச் செடியிலிருந்து சாப்பிடுகின்றாரோ அவர் பள்ளிவாயிலை நெருங்கா திருக்கட்டும்.” (புகாரி)
அதேபோல் துர்வாடையைப் போக்குகின்ற வாசனைப் பொருட்களை அதிகம் உபயோகித்து துர் நாற்றத்தைத் தவிர்க்குமாறு நபியவர்கள் கூறியுள் 6Tittasai.

Page 49
“யாரிடமாவது வாசனைத் திரவயம் எடுத்து க காண்பிக்கப்பட்டால் அவர் அதை மறுக்காமல் இரு க்கட்டும்." (அபூதாவுத், அந்நஸாF, அஹமத்)
இவ்விரு நபிமொழிகளையும் அறிந்த ஒரு வன் தனக்கும், பிறருக்கும் துன்பத்தை ஏற்படுத்தும் துர்நாற்றத்திலிருந்து தவிர்ந்து வாழ்வான். மேலும் இவ்விடயங்களை சாதாரண விடயங்கள் என மக்கள் கருதலாம். எனினும் சாதாரண விடயங்களில் இஸி லாம் இவ்வளவு அக்கறை செலுத்துகின்றதெனின் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய வடயங்களைத்தடு ப்பதில் எவ்வளவு எச்சரிக்கையாயிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு இஸ்லாம் துர் நாற்றத்தை முற்றாகத் தடுத்துள்ளது.
அதிகரித்த ஒலி.
மனிதனுக்கு இடைஞ்சல், தடங்கல்களை உண்டுபண்ணும் ஒலி சூழலை மாசுபடுத்துகின்ற மற் றுமொரு ஊடகமாகும். இதனால் இஸ்லாம் சத்தமான ஒசைகளைத் தடுப்பதோடு, குரலைத் தாழ்த்திக் கொ ள்ளுமாறு பணிக்கின்றது. அல்குர்ஆனில் அல்லாஹி பின்வருமாறு கூறுகிறான்.
“உன் குரலைத் தாழ்த்திக்கொள், குரல்களி லெல்லாம், வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்.” (31 : 19)
நபியவர்கள் இதுபற்றிப் பின்வருமாறு நவி ன்றுள்ளார்கள்.
“நாய் குரைப்பதையும், கழுதை கத்துவ தையும் நீங்கள் செவிமடுத்தால் அல்லாஹவிடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள்” (அஹமத்)
பயங்கர ஓசைகளை ஏற்படுத்தி சூழலை மரசு படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்காது என்பது இதி லிருந்து தெளிவாகின்றது.
அது மட்டுமன்று அல்குர்ஆனை ஓதும் போது அழகாக ஒதுமாறும், பேசும்போது மெண்மை யாகப் பேசுமாறும்இஸ்லாம் கூறுகின்றது. இவைகள் ஒலியினால் சூழல் மாசுபடுவதைத் தடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட வழிகாட்டல்களாகும்.
கூட்டாகச் செயற்படுதல்.
“சூழல் மாசடைதலி” என்பது குறிப்பிட்ட
ஒரு நாட்டவருக்கு அல்லது குறிப்பிட்ட ஒரு இன த்தவருக்கு மாத்திரம் உரிய பிரச்சினை அல்ல. மாறாக

இது பிரபஞ்சத்தில் உயிர் வாழ்கின்ற அனைத்துப் படைப்பினங்களுக்கும் எதிரான ஓர் அச்சுறுத்தலா கும். ஏனெனில் அல்லாஹ இப் பூமியை அனைத்துப் படைப்பினங்களுக்குமாகப் படைத்துள்ளான். என அல்குர்ஆன் கூறுகின்றது.
“பூமியை அனைத்து படைப்பினங்களுக்காக விரித்தமைத்தான்.” (55 : 10)
எனவே சூழல் மாசடைவதைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேணி டும். குழல் மாசடைதலைத் தடுப்பதற்காக முன்வை க்கப்படும் தீர்வுகள் சிலவேளை ஒரு சிலருக்குப்பாத கமானவையாக இருக்கலாம். எனினும் சர்வதேச ரீதியான ஓர் பிரச்சினையைத் தீர்ப்பதில அனைவரும் ஒன்றிணைந்து முன்வைக்கப்பட்ட தீர்வுகளை நடை முறைப்படுத்த வேண்டும். ஏனெனில் சூழல் மாசட தலைத் தடுப்பது நன்மையான ஓர் விடயமாகும். இஸ்லாமும் நன்மையான விடயத்தில் ஒத்துழைப் பதைத் தூண்டியுள்ளது.
‘நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒரு வருக்கொருவர் உதவி செய்யுங்கள்.” (5:2)
இஸ்லாத்தின் இவ் வழிகாட்டலைப் பின் பற்றி அனைவரும் ஒத்துழைத்தால் சூழல் மாசடைவ தைத் தடுக்கலாம்.
அல்குர்ஆன், அல் ஹதீஸ் என்பவற்றில் காணப்படும் வழிகாட்டல்கள் தவிர்ந்த இன்னும் பல வழிகாட்டல்களை இஸ்லாத்தின் ஏனைய சட்ட மூலா தாரங்களிலும், சட்ட விதிகளிலும் எம்மால் கணர்டு கொள்ளலாம். அவற்றில் முக்கியமான சிலதை மாத்
திரம் குறிப்பிடுகின்றேன்.
1. இஸ்லாத்தின் சட்டமூலாதரங்களுள் ஒன்றா ன“ஸத்துல் தராஇஃ” (தீங்கிற்கு இட்டுச்செல்லும் வழியை அடைத்தல்) என்ற சட்ட மூலாதாரமானது எதிர்காலத்தில் தீங்கு விளைவிக்கும் என எதிர்பார் க்கப்படும் நல்ல விடயங்களைக் கூடத் தடுக்கும். இதன்படி மனிதனின் ஏதாவது ஒரு செயற்பாடு எதி ர்காலத்தில் சூழலை மாசுபடுத்தி மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உறுதியானால் நிச்சயம் இஸி லாமிய அரசு அச்செயலைத்தடுத்து நிறுத்தும் என வே இச்சட்ட மூலாதாரம் மூலம் சூழலை மாசுபடுத் தும் அனைத்து விடயங்களும் தடுத்து நிறுத்தப்படும்.
2. “அல்லரரு யுஸாலி” (தீங்கு நீக்கப்படும்) என்ற இஸ்லாமிய சட்ட விதிக்கு ஏற்ப மனிதனுக்கு
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 37

Page 50
தீங்கு விளைவிக்கும் அனைத்து விடயங்களும் இல் லாது ஒழிக்கப்படும். எனவே குறிப்பிட்ட ஒருவனது செயற்பாடு இன்னுமொருவனுக்கு தீங்கு விளைவி க்குமானால் இஸ்லாமிய அரசு தலையிட்டு அச் செயற்பாட்டைத்தடுத்துநிறுத்தும். இதன்படி மனித இனத்திற்கே அச்சுறுத்தலான சூழலை மாசுபடுத்தும் பல செயற்பாடுகள் தடுக்கப்பட்டு சூழல் பாதுகாக்க ப்படும்.
3. சில குற்றங்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைக ளைக் கவனத்திற்கொண்டு வரையறுக்கப்படாத தனி டனை நீதிபதியால் வழங்கப்படும். இது “அத் தஃ ஸி’ (நியாயத்தண்டனை) எனப்படும். இதன் ஆகக் குறைந்தளவு, எச்சரித்து உபதேசித்தலாகும். ஆகக் கூடியளவு மரணதண்டனையாகும். நீதிபதி வரைய றுக்கப்படாத தணர்டனைகளையுடைய குற்றங்களுக்கு பொருத்தமானநியாயத்தண்டனையை வழங்குவார். சூழலை மாசுறச் செய்யும் செயல்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதனால் அவற்றிற்கான தணிட னை“அத்தஃRர்” அடிப்படையில் நிர்ணயிக்கப்படு மி. இதன் காரணமாக மனிதன் இவ்வாறான செய ல்களில் ஈடுபடுவதைத் தவிர்ந்து கொள்வான்.
மேற்கூறியவாறு சில வழிமுறைகள் மூலம் இஸ்லாம் சூழல் மாசடைவதைத் தடுக்கின்றது. எனி னும் இஸிலாத்தைப் பின்பற்றாமல் உலக இன்பங் களை இயன்ற வரை அனுபவித்து மரணிப்பதே இலட்சியம் என செயற்பட்ட மனிதனின் செயற்பா ‘டுகளால் சூழல் மாசுற்று பல்வேறு பிரச்சினைகளைத்
தோற்றுவித்துள்ளது.
இன்று குழல் மாசடைவது முதல் அனைத்து சூழல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டு மாயின் பிரபஞ்ச சமநிலைகுலைக்கப்படாமல் இயற் கை வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இதற் கான வழிகாட்டல்கள் இஸ்லாத்தில்தாராளமாக உள் ளன. இவ் வழிகாட்டல்கள் பின்பற்றப்படாதவரை சூழல் பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட மாட்டாது. இக்கருத்தை செய்யித் ஹஸ்ஸைன் நஸர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“மனிதன் சூழலில் காணப்படும் சமநிலையை சீர்குலைத்துள்ளான். வானுலகிற்கு எதிரான மனித னின் கலகம் பூமியை மாசுபடுத்தியது. வானுலகிற்கு எதிரான இக் கலகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கா தவரை பூமியின் இந்தக் கட்டுக் கோப்பை சீர்திருத்த எடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றியளிக்க முடி யாது
38 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் -ை

உசாத்துணைகள் :
1. அத்தர்பியதுல் பீஇயப்யதுல் இஸ்லாமியப்யா வ
ஹிமாயதுல் பீஅதில் பஹரியப்யா மினத் தலவ்வுஸ் - கலாநிதி அப்துல் மக்ஸ9த் அனிமீ 2. அல் வஃயுல் இஸ்லாமி :
1995 பெப்ரவரி பக்-62 1995 uomiTffji Lué-70, 1995 டிஸம்பர் பக்-42, 1997 ஏப்ரல் பக்-38.42. இஸ்லாமிய சிந்தனை - 17:03 - பக்-10 4. அல் ஜாமிஆ - 1995 - பக்-55.
(22 ஆம் பக்கத் தொடர்ச்சி)
அல்குர்ஆனின் நிழலில் .
சுகாதார நிலையத்தில் இருந்த போது இத் தப்ஸிரை அன்னார் எழுதுவதை நான் கணிடேன். இரவில் உஷணம் குறைந்த பின்னர் அச் சுகாதார நிலையப் படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பார். அனைவரும் தூங்குகின்ற நிலையில் தான் மட்டும் தனித்திருந்து அல்லாஹி நாடியளவிற்கு எழுதுவதில் ஈடுபடுவார். அடுத்த நாள் விழித்தெழுந்ததன் பின்னர் எங்களு டனஅமர்ந்திருந்துதான் எழுதியவற்றை வாசித்துக் காட்டுவார். பின்னர் அவரது கருத்துக்களை நாங்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்வோம். கலந்துரையாடலைத் தொடர்ந்து மிகச் சரியானதை எடுத்துக்கொள்வார்.”
உஸ்தாத் அஹமத் ஹசனைன் கூறுகின்றார். “சிறைச்சாலை நிலவரங்கள், அதனளவு விசால மில்லாமை, கடுமையான உஷ்ணம் என்பவற்றி லிருந்துகொண்டு இந்தப் புத்தகங்களை எப்படி எழுதி முடித்தார் என நான் ஆச்சரியப்படுபவனாக இரு ந்தேன். அதிலும் குறிப்பாக சீமெந்தினால் அமை க்கப்பட்ட அச்சுகாதார நிலையத்தில் செய்யித் குதுப் நோயாளியாக சிகிச்சை பெற்றுக் கொணர்டிருந்தார். அங்கு உஷ்ணமி கடுமையாகவே காணப்படும். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது இரவில் வெப்பம் தணிந்ததன் பின்னர் எழுதுபவராக நான் அவரைக் கணிடேன்.”

Page 51
தண்டனைக் கே மேலைத்தேய நோக்கும்
எப்போதும் மனிதன் நல்லவனாக வாழ் வான் என்பதற்கில்லை. அவன் பலவீனமாகப் படை க்கப்பட்டுள்ளான் என்ற வகையில் தவறிழைப்பதும் தப்புச்செய்வதும் இயல்பானதே. இந் நேரத்தில் அவ னை அவனது குற்றச் செயல்களிலிருந்து விடுவித்து தூய மனிதனாக மாற்ற வேண்டிய தேவை ஏற்படு கிறது.
சமூக மட்டத்திலிருந்து குற்றங்களைக் களை ந்து குற்றவாளியைச் சீர்திருத்துவதோடு, சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்தவுமே காலத்துக்குக் காலம் தண்டனைக் கோட்பாடுகள் தோற்றம்பெற்றன. தணி டனைக் கோட்பாடுகள் பற்றி அறிவதற்கு முன்னால் குற்றமென்றால் என்ன என்பது பற்றி அறிவது பொ ருத்தமாகும்.
குற்றம் என்றால் என்ன ?
குற்றம் என்ற எணர்ணக்கரு பல விடய ங்களை உள்ளடக்கியிருக்கின்றது. பணிடைய அற நூல்கள் “செருக்கும், சினமும், குற்றங்கள்” என்று கூறுகின்றன. ஆனால் குற்றவியல் சட்டங்கள் குற்ற த்தை வரையறை செய்யும்போது “சட்டம் தடுத்த ஒரு செயலைச் செய்தல் அல்லது சட்டம் செய்யும்படி ஏவிய ஒரு செயலைச் செய்யாது விடல் என்று வரையறை செய்கின்றன. அத்தோடு குறிப்பிட்ட செயல் குற்றம் என்று குற்றவியல் சட்டத்தால் வரைய றுக்கப்பட்டாலேயே அது குற்றமாகக் கருதப்படும்’ என்றும் கூறுகின்றது.
குற்றச் செயல் பழிச் செயலாகவோ அல்லது பாவச் செயலாகவோ அல்லது குற்றச் செயலாகவோ அமையலாம். ஆனால் பழி, பாவம், குற்றம் என்ற சொற்கள் வெவ்வேறு பொருளைக் கொணர்டவை. அறநெறிக்கு மாறானவை, பழிச் செயல்; சமயக் கரு

5ாட்பாடுகள்
இலப்லாமிய நோக்கும்
அஷர்ஷெய்க் எஸ். எம் அய்யூப்
த்துகளுக்கு மாறானவை பாவம், சட்டவிதிகளுக்கு மாறானவை குற்றமெனக் கூறப்படும்.
ஒரு விடயம் குற்றமென்றும், அவர் தணி டனை பெறத் தகுதியானவர் என்றும் கருதப்ப டுவதற்கு அதில் இரண்டு கூறுகள் இடம் பெறுதல் வேண்டும்.
1 (5pp LD60TL6; Guilty mind - mens rea
குற்றமனதோடு ஒரு செயல் இடம் பெற் றாலேயே அது குற்றமாகும். இல்லாவிட்டால் அது குற்றமில்லை. ஒருவர் பகையின் காரணமாக மற்ற வரது கையைத் துண்டித்து விடுகின்றார். அதே போல் வைத்தியரும் சத்திர சிகிச்சைக்காகத்துணர்டிக்கின்றார். இங்கே முன்னையது குற்றமாகக் கருதப்படும். கார ணம் அதில் குற்றமனமுள்ளது. பின்னையது குற் றமாகக் கருதப்படாது. காரணம் அதில் குற்ற மனமில்லை. எனவே குற்ற மனமில்லாத செயலைச் சட்டம் தண்டனைக்குரியதாகக் கருதுவதில்லை. (The act alone doesnot amount to guilty: it must be accompanied by a Guilty mind': Salmond)
2 øppløj GeFULu6ai (Actus reus)
குற்ற எணர்ணம் செயலாக வெளிப்படுவதை இது குறிக்கும். குற்றச் செயல்“செய்வினை”“விளை வு”“சூழ்நிலை” ஆகிய மூன்று கூறுகளைக் கொணர் டிருக்கும். இவற்றில் முதலிரணிடும் செயலைத் தோற்றுவிக்கும். பின்னையது தணர்டனையைத் தீர்மானிக்கும்.
இஸ்லாமிய அறிஞர்கள், குற்றம் பற்றிய எண்ணக் கருவை பல்வேறு மொழியமைப்பில் விள
-G அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 39

Page 52
க்கிய போதும் கருத்து ஒன்றாகவே இருக்கின்றது. “ஹத்” (வரையறுக்கப்பட்ட குற்றங்களுக்கான) தண்ட னையைக் கொணர்டோ அல்லது தஃலிர்’ (வரைய றுக்கப்படாத குற்றங்களுக்கான) தணடனையைக் கொண்டோ அல்லாஹிவால் தடுக்கப்பட்ட ஷரீஆ ரீதி யான தடைகள் குற்றங்கள்” எனப்படும். இவ் வரை விலக்கணம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஷரீஆ ரீதியான தடைகள் என்பது குறிப்பிட்ட விட யம் தடைசெய்யப்பட்ட செயலைச் செய்தல் அல்லது ஏவியதொரு செயலைச் செய்யாது விடல் என்ற விட யங்களை உள்ளடக்கியிருப்பதோடு அது சட்ட அங்கீகாரமும் பெற்றிருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.
இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களின் மொத்த நோக்கமும் நலன்களை ஏற்படுத்தலும், தீமைகளைக் களைவதுமாகும். அந்த வகையில் ஒரு மனிதனுடை யமார்க்கம், உயிர், அறிவு, பரம்பரை, சொத்துப் போ ன்ற ஐந்து விடயங்களும் பாதுகாக்கப்பட வேண்டு மென்று கட்டளையிடுகின்றது. இவைகளுக்குப் பங்கம் விளைவித்துச் சீர்கேடுகளை ஏற்படுத்துவதை இஸ்லாம் குற்றமாகக் கருதுகின்றது.
தணடனை என்றால் என்ன ?
சட்ட மெய்யியலாளர்கள் “சட்டத்தை மீறு கின்ற செயல் குற்றமாகும். இக் குற்றத்துக்கு வழ ங்கப்படுவது தண்டனையாகும்” என்று சுருக்கமாகத் தணர்டனையை வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர். எனினும் தண்டனை என்ற எண்ணக்கரு பின்வரும் ஐந்து விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது.
1. ஒருவனைத் தணிடிக்கும் போது அவனைத்
துன்புறுத்துவதாக அமைகின்றது.
2. சட்டத்தை மீறுகின்ற செயல்குற்றமாகும். இக் குற்றத்துக்கு வழங்கப்படுவது தண்டனையா கும.
3. தண்டனை வழங்குபவர் சமூகத்தில் ஓர் அங் கத்தவராக இருக்க வேண்டும். ஆனால் அவர் குற்றவாளியாக இருக்கக்கூடாது.
4. குற்றத்தைத் தீர்மானிப்பதற்கும், தண்டனை
யைத் தீர்மானிப்பதற்கும் சட்டத்திற்குட்பட்ட அதிகாரம் இருக்க வேண்டும்.
5. குற்றவாளியெனத்தீர்மானிக்கப்பட்டவர்தணி
டிக்கப்படுகின்றார்.
இஸ்லாமிய அறிஞர்கள் தணர்டனையை வரைவிலக்கணப்படுத்தும்போது “குற்றவாளியைத் திருத்தி, ஏனையவர்களும் அக்குற்றத்தைச் செய்யாது தடுப்பதற்காகக் குற்றவாளிக்குக் கொடுக்கின்ற, சட்
40 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

டமியற்றுபவனால் அங்கீகரிக்கப்பட்ட எதிர் நடவ டிக்கைகளே தண்டனைகள்” என வரையறை செய் கின்றனர்.
தணடனைக் கோட்பாடுகள்
சட்ட மெய்யியலாளர்களிடையே முக்கிய மாக மூன்று வகைத் தணடனைக் கோட்பாடுகள் நிலவுகின்றன. அவை ஒவ்வொன்றும் அக்கோட்பாடு சொல்லும் நோக்கங்களுக்காகவே தணடனை வழ ங்கப்படுகிறது என்று வாதாடுகின்றன. அவைகள்:
1. தடு தண்டனைக் கொள்கை (Deference)
மெய்யியலாளர்களிடையேயும் தத்துவாதி களிடையேயும் இக் கொள்கை பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
தடு தண்டனை என்பது குற்றவாளி அக் குற்றத்தை மீணடும் செய்வதைத்தடுப்பதோடு, குற்றவாளியைத் தணர்டிக்கும் போது அதனை மற் றவர்கள் பார்ப்பதன் மூலம் அவர்களையும் குற்றம் செய்யாமல் தடுப்பதை நோக்காகக் கொண்டது. இத் தண்டனை பகிரங்கமாக வழங்கப்படுகின்றது. கார ணம், அவ்வாறு வழங்கப்படுவதன் மூலம் ஏனை யவர்களும் அதனைப் பார்த்துப் படிப்பினை பெற வேயாகும்.
இஸ்லாமிய அறிஞர்களும் இந்நோக்கத்தின் அடிப்படையில் தணடனை வழங்குவதை ஏற்கி ன்றனர். விபசாரம் செய்தவர்களுக்கான தணர்டனை பற்றி அல்குர்ஆன் சொல்லிவிட்டு,
“அவ்விருவருக்கான தணர்டனையையும் முஃமின்களில் ஒரு கூட்டம் நேரில் பார்க்கட்டும்.”
(அந்நூர் :2) என்று சொல்லுவது மேற்போந்த கருத்தை உறுதிப்படுத்துகின்றது என அவர்கள் கூறுகின்றனர்.
2. பழிக்குப்பழி வாங்கும் தணர்டனைக்
Qasimtai 6ampas (Retribution)
குற்றவாளியை குற்றம் செய்யாமல் தடு ப்பதற்கோ அல்லது அவனைச் சீர்ப்படுத்துவதற்கோ அன்றி அவனை பழிவாங்குவதற்காகவே வழங்கப் படுவது இத் தணடனைக் கொள்கையாகும். அடிப் படையில் சமூகத்துக்குப் பயனாகவோ, குற்றவாளி ககுப் பயனாகவோ இது அமையாது. சட்டத்திற்கு

Page 53
மாறாக நடக்கும்போது பழிவாங்குவதையே நோக்க மாகக் கொணர்டது. குற்றவாளியை அவன் செய்த அதேயளவு துன்பத்தை இக்கொள்கை அனுபவிக்கச் செய்கிறது. இத் தண்டனை முறையை இஸ்லாம் கிஸாஸ் தண்டனை விடயத்தில் ஏற்கிறது.
“திருடனும் திருடியும் அவ்விருவரும் சம் பாதித்ததற்குக் கூலியாக அல்லாஹவிடமிருந்துள்ள தணர்டனையாக அவ்விருவரின் கைகளைத் துணர்டி த்து விடுங்கள்.” (அல் மாயிதா 38)
இந்த வசனத்தில் களவு செய்தவர்களுக்கு அவர்களின் செய்கைக்காகத் தண்டனை வழங்கப் படுவதாகக் கூறுகின்றது.
3. சீர்திருத்தத் தணடனைக் கொள்கை
(ReFormation)
குற்றம் புரிந்தவனின் ஒழுக்கத்தைச் சீர்திருத்த
முனைவதுதான் இக்கொள்கையின் நோக்கமாகும்.
இதன் ஆதரவாளர்கள், குற்றவாளி சிகிச் சைக்கு உட்படுத்தப்படவேண்டும். அவன் யதார்த்த த்தில் நோயாளி, இந்நோய் உள, உடல், மூளை சார் ந்ததாக இருக்கலாம். எனவே இவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இவ்வகை யில் கலவ புகட்டல், மன்னிப்பு, தண்டனைக் குறைப்பு போன்றவை குற்றவாளிக்கு வழங்கப்படுவதோடு குற்றம் செய்யக் காரணமான வறுமை, அறியாமை, தீய பழக்கமி, கெட்ட சூழல் ஆகியன ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
திறந்த சிறைச்சாலை அமைப்புத் திட்டம், சிறுவர் நன்நடத்தை நிலையம், பெண்கள் நன்நடத்தை நிலையம் என்பன இக்கொள்கையை அடியொற்றி அமைக்கப்பட்ட நிலையங்களாகும்.
இஸ்லாமிய தஃஸ்பீர்தணர்டனையில் சிறைப் பிடித்தலும் இடம்பெறுவது இக்கொள்கையின் நோக் கத்தை ஒத்திருக்கிறது. குற்றவாளி திருந்தி அல்லா ஹவிடம் மன்னிப்புக் கேட்கும் போது அவன் விடு தலை செய்யப்படுகின்றான்.
இவ்வாறு மூன்று வகையான தணர்டனைக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு கொள்கையும் குற்றத்தைத் தடுத்தல், பழிக்குப் பழி வாங்கல், குற்றவாளியை சீர்திருத்தல் என்ற ஒவ்வொ ரு நோக்கத்தையே கொணர்டிருக்கின்றன. மூன்று நோக்கங்களும் ஒரே கொள்கையில் இடம் பெறவி ல்லை. இவற்றோடு தணர்டனை பயனளிக்க வழங்

கப்படுகிறது என்போர் பயன்பாட்டுவாத தண்டனைக் கொள்கை என்ற ஒன்றையும் முன்வைத்தனர்.
இஸ்லாமியக் கணிணோட்டத்தில் தணடனை வ ங்குவதன் நோக்கங்களும், லட்சியங்களும்
1. மக்களிடையே நதியை நிலைநாட்டல், மனிதன் ஒரு சமூகப் பராணி அவன் ஒரு தனிமனிதனாக வாழ முடியாது. சமூகத்தோடு சேர் ந்தே வாழ வேண்டும். இதன் போது சில உரிமை களைப் பெறவும் சில கடமைகளைச் செய்யவும் வேண்டும். இவற்றில் குழறுபடிகள் தோன்றும் போது சமூகம் சீரழியும்.
ஒரு சமூகத்தில் கொலை, கொள்ளை, கற்ப ழிப்பு என்பன மலியும் போது அதற்குரிய சூத்திர காரர்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டால் இந்த உரி மைகளிலும், கடமைகளிலும் குளறுபடிகள் தோன் றும். எனவே, இவற்றுக்குப் பங்கம் வராது பாதுகா த்துச் சமூகத்தின் சமநிலையை, நீதியை நிலைநாட்ட குற்றவாளி தணர்டிக்கப்பட வேண்டும்.
இவ்வகையிலேயே இஸ்லாம் தண்டனை யைக் கடமையாக்கியது. அத்தணர்டனையைக் கூட நீதியான முறையில் பாரபட்சமின்றி நிறைவேற்ற வேண்டுமெனப் பணிக்கிறது.
2. சமூகத்தில் அருளையும் பாதுகாப்பை
யும் ஏற்படுத்தல்.
அல்லாஹ மனிதனை இப்பூமியை நிர்வகி க்கும் தனது பிரதிநிதியாக அனுப்பினான். இதனை மறந்து மனிதன் இப்பூமியில் மற்றவர்களோடு டோரா டிக்கொணர்டிருந்தால் பூமியை நிர்வகிக்காமலேயே இறந்துவிடுவான். எனவே, இஸ்லாமிய ஷரீஆ தணர் டனையை முன்வைத்ததன் மூலம் அநியாயம் செய்து கொணர்டிருந்த மனிதனின் செயலை விட்டுவிடச் செய்கின்றது. இதன் மூலம் அவனுக்கு அருள் ஏற் படுகிறது. இவனது அநியாயத்திற்கு உட்படாமல் சமூகத்திற்குப் பாதுகாப்புக் கிடைக்கின்றது.
3. பொதுவான நலன்களை ஏற்படுத்தலும்
சில நலன்களைப் பாதுகாத்தலும்,
இஸ்லாமியச் சட்டங்கள் பொதுவாக நலன் களை ஏற்படுத்தலும் தீமைகளைக் களைதலும் என்ற அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக மார்க்கம், உயர், அறிவு, பரம்பரை, சொத்து இவைகளைப் பாதுகாப்பதைக் குறிப்பாகக் கொணர்
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 41

Page 54
உதாரணமாக கொலைத் தண்டனை கட்சி விட்டு கட்சி மாறும் அரசியல்வாதி போல் இஸ்லாம் மார்க்கத்தை விட்டு வேறு மதம் மாறும் மனிதனுக்கு வழங்கப்படுவதன் மூலம் மார்க்கம் பாதுகாக்கப் படுகின்றது. அதே போல் கொலைகாரனுக்கு இத்தணி டனை வழங்கப்படுவதன் மூலம் மனித உயிர் பாது காக்கப்படுகின்றது.
4. குற்றவாளியைச் சீர்திருத்தலும் அவ னைப் பணிபடுத்தலும்,
இஸ்லாமியத் தண்டனைகளை மேலோட் டமாகப் பார்க்கும் ஒருவனுக்கு வேதனைகளின் தொகுப்பாகவே அது தெரியும். ஆனால் ஆழமாக அவதானிப்பவனுக்கே அதன் யதார்த்த நிலை புரியும். குற்றவாளியைச் சீர்திருத்தி அவனைப் பண்படுத்தும் நோக்கத்தை அது கொண்டுள்ளது. உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்யும் வைத்தியர் அநியாயக்காரர் போல வே தெரிவார். ஆழ்ந்து பார்ப்பவனுக்கே அவர்நாடு ம் நன்மை துலங்கும். எனவே இஸ்லாம் மேற்போந்த நோக்கங்களை அடைவதற்காகவே தணர்டனையை அமுல்படுத்தியது. முக்காலத்தையும் அறிந்த அல்லா ஹற்வால் இத்தண்டனை வழங்கப்பட்டது என்ற வகை யில் காலத்தை மிஞ்சிநிற்கிறது. இதனை அறியாத கீழைத்தேய ஆய்வாளர்களும், திரிபுவாதங்களை ஏற்போரும் இஸ்லாத்தின் தண்டனைகள் காலம் கட ந்தவை, கொடூரமானவை என்ற கருத்தை முன்வை க்கின்றனர்.
இஸ்லாத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் அதுதண்டனையை மட்டும் நம்பிநிற்பதில்லை. தணி டனையை வழங்கும் முன் குற்றமற்ற குழலை உரு வாக்க முயல்கிறது. அவ்வாறு ஒழிந்த பின்னும் குற் றமிழைக்கப்பட்டால் அவன் தணடிக்கப்படுவதில் என்ன அநியாயம் இருக்கிறது ?
மனிதன் நேர்மையான முறையில் வாழ்க் கைத் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும். திருட் டு, ஏமாற்று என்பவைகள் மூலம் நிறைவேற்றிடக்கூ டாது. யாராவது ஒருவன்திருட்டு மூலம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றினால் அதற்கான பொறுப்பு சமூகத்தைச் சாரும். ஏனெனில் அவர்கள் அதனை ஏற்படுததிக்கொடுக்கவில்லை. வாழ்க்கைத்தேவைகளை ஏற்படுத்திக் கொடுத்த பின்னும் அவன் திருடினால் அவன் தணர்டிக்கப்படவேண்டும் என்ற கருத்தே நியாயமானதாகும். காரணம் இவன் சமூகத்தைக் குழப்புகின்றான், சமூகத்தில் சீர்கேட்டை ஏற்படுத்த விளைகின்றான். எனவே தான் இஸ்லாத்தின் தண்டனைகள் கடுமையாக இருக்கின்றன.
42 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் <

2
1 O.
உசாத்துணை
இஸ்லாமிய சிந்தனை. இளங்கதிர் 29வது ஆண்டு மலர் குற்ற இயல் சட்டம் - மா. சண்முக சுப்ரமணியம். ப'உஸலெல் நிழாமல் ஜனாய அல் இஸ்லாம.
கலாநிதி முஹம்மத் ஸ்லீம் அல் அவ்வா. அல் உகூபாத்துவர் தப்விழியப்ய வஅஹதாபுஹா பீ
ழவ்இல் கிதாப் வளப்ஸுன்னா.
- கலாநிதி முதிஉல்லாஹி சுலைமான். அத்தஷரிஉல் ஜினாயி அல் இஸ்லாம். - அப்துல் காதிர் அவதா. அல் அஹற்காமுஸ்ஸDல்தானியா, - அல்மாவர்தி. அல் அஹற்காமுல் ஆம்மா பல் கானுரனில் ஜனாய - அலி பெக் பதவி அஷஷoப்ஹாத் ஹவ்லல் இஸ்லாம். - முஹம்மது குதுப்.
குலுக்குல் முஸ்லிம். - அஷஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி.
55 ஆம் பக்கத் தொடர்ச்சி. குடும்பத் திட்டம்
வென்பதை மிகத்தெளிவாக அறிந்திருத்தல் கட்டா யமானதாகும். ஏனைய சமூகங்களின் கொள்கையை அல்லது கருத்துக்களை எடுத்துக்கொண்டு, இஸ்லா த்திலே ஆதாரம் தேடும் பாணியில் ஆராய்ச்சியை மேற்கொண்டு முடிவு சொல்லும்போதே பல ஹரா மான காரியங்களைக்கூட ஆகும் என்ற நிலைக்குக்
கொண்டு வந்து நிறுத்துகின்றது.
துணை நின்றவை:
அல்-ஹலால் வல்-ஹராம் பில் இஸ்லாம்: -கலாநிதி யூசுப் அல்-கர்ழாவிஹரகது தஹற்தீந் நஸில்: -மெளலானா மெளதுரதி (ரஹ) கலியப்யது தஹற்தீதிந் நஸ்ப்ல் பில்-ஷரீஆ அல்இஸ்லாமியப்யா : -உம்மு குல்ஸிம் யஹியா முஸ்தபா அல்-ஹதீப்அல்-அஹற்காம் அத்திப்பியப்யா அல்-முதஅல்லிகா பின் நிஸாஇ பில்-பிக்ஹில் இஸ்லாமி. -முஹம்மத் காலித் மன்ஸர்ெஇஸ்லாத்தின் பின்னணியில் குடும்பத்திட்டம்:
-பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒம்ரான்
அல்-ஹஸனாத் மலர் : 27 - இதழ் 4.

Page 55
இஸ்லாமிய சமூகத் எழுச்சிக்கான நியதி
எம் f எ
“சுனனி” என்ற சொல் சுன்னா என்ற சொல் லின் பன்மையாகும். இது பாதை, வழிமுறை என மொழியில் பல கருத்துக்களில் பயன்படுத்தப்ப டுகிறது. “அமிழி அலாஸoனனிக” என்றால் “நான் உனது வழிமுறையில் செல்கிறேன்.” என பொருள் படும். அவ்வாறே வரலாறு, கதை, நடத்தை, போக்கு என்ற கருத்திலும் பயன்படுத்தப்படுகிறது. “ஹ0வ அஷபஹ0 ஷையின் பிஹிஸoன்னதனி” என்றால், “நடத்தையால் அவனை ஒத்திருக்கின்றானி” எனப் பொருள்படும். மேலும் “சுன்னதுன் பித்தபிஆ” என்றால் (Law of Nature) இயற்கையின் நியதிகள் என்ற கருத்தும் காணப்படுகிறது. நாம் இந்த சுன்னா என்ற சொல்லை ரஸoல் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என அறிந்து வைத்திருக்கின் றோம். ஆனால் ஷரீஆவில் இச் சொல் “மார்க்கத்தில் கடமையான (வாஜிபான) விடயங்களுக்கு” அடுத்த தரத்திலுள்ள விடயங்களையே குறிக்கிறது. இங்கு சுன்னா அல்லது சுனன் என்பதன் மூலம் கருதப்படு வது அல்லாஹி இவ்வுலகத்தில் அவனது படைப்பு க்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் நியதியாகும். இக் கருத்திலேயே அல்குர்ஆன் இந்தச் சொல்லை 14 இடங்களில் பயன்படுத்தியுள்ளது. மேற்சொன்ன வேறு எந்தக் கருத்திலும் பயன்படுத்தவில்லை என்பதை நாம் முதலில் கவனத்திற்கொள்ள வேண
டும்.
சுனன் என்பது குர்ஆனியப் பரிபாஷையில் காரணங்கள், நியாயங்கள், விதிகள், நியதிகள் எனப் பல கருத்தில் பாவிக்கப்படுகிறது. எனவே பின்வ ருமாறு இச்சொல்லை வரைவிலக்கணப்படுத்தலாம். “மனிதர்களின் நடத்தைகள், செயற்பாடுகள், இறை வழிகாட்டல்கள், இறைதூதர்களுடனான அவர்களின் நிலைப்பாடு என்பவற்றிற்கு இணங்க அல்லாஹி

தின்
கள்
ம் றியாஸ் நான்காம் வருடம் உளUலுத்தின் பீடம்
மனிதர்களை நடாத்துவதில் கையாளும் நிலையான வழிமுறையே இறை நியதியாகும்.”
சமூகங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான நியதிகள் பெரும்பாலும் குர்ஆனிய கதைகளைத் தொடர்ந்து வருகின்றன. இந் நியதிகள் பொதுத் தன்மை கொணர்டவை என அல்குர்ஆன் குறிப்பி டுகிறது. சில அறிஞர்கள் இந் நியதிகளை இறை விதிகள் அல்லது சமூகவியல் விதிகள் அல்லது நாகரிக விதிகள் அல்லது பிரபஞ்ச நியதிகள் எனவும் அழைப்பர். இவ்வுலகில் நிகழும் எந்தவொரு நிகழ்வும் தற்செயலாக, எதேச்சையாக நிகழ்வதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் நிலையான, நுணுக்கமான என்றுமே வழுவாத ஒரு நியதியின் அடியாகவே நிகழ்கிறது. எப்படிச் சடப்பொருட்களுக்கு பிரபஞ்ச நியதிகள் உள்ளனவோ அதே போன்றுதான் மனித நாகரிகம், அவற்றின் எழுச்சி-வீழ்ச்சி என்பவையும் குறித்த சமூகவியல் விதிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. இவை ஒரு போதும் மாற்றத்திற்கு உட்படாது என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. “இதற்கு முன்னர் அல்லாஹீவுடைய நியதி சென்றுவிட்டது, நீர் அல் லாஹர்வுடைய நியதியில் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்” (48:23) “அல்லாஹர் ஏற்படுத்திய நியதியில் யாதொரு மாற்றத்தையும் நீர் காணவே மாட்டீர். அவ்வாறே யாதொரு திருப்பத்தையும் நீர் காணமாட்டீர்” (35:43)
சமூகங்களின் வீழ்ச்சி வெறும் சூனியத்திலி ருந்து நிகழ்வதில்லை. அதேபோன்று அது ஒரு திடீர் நிகழ்வுமன்று. ஏனெனில் இவ் வீழ்ச்சியின் சமிக்ஞை கள் மனிதர்களின் கண்ணெதிரே நீண்ட நெடுங்காலம் தெட்டத் தெளிவாக வெளிப்பட்டிருக்கும். சிலவேளை பலநூற்றாண்டுகள் கூட நீடிக்கலாம். எனவே வீழ்ச்
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 43

Page 56
சிக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் சீர்திரு த்த முயற்சிகள் இடம்பெறின் சமூகநிலை சீரடை யும். அவ்வாறில்லாவிடின் நாகரிகக் கட்டம் சிதைந்துவிடும். சீர்கேடு, பிற்போக்கு போன்ற அறி குறிகள் சமூகத்தில் தோன்றி நீடித்தால் அவை சமூ கத்தை அழித்துவிடும். எனவே குறித்த சமூகம் நிலை யாச் சின்னமாய் மறைந்துவிடும். கிரேக்க, ரோம, பாரசீகம் போன்ற புராதன நகாரிகங்களுக்கு நேர்ந்தது இதுவே.
இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்தவரை யிலும் அதனை அழிவு பீடிக்காவிடினும் வீழ்ச்சி பாதித்தது. இதனால் உயர் நிலையிலிருந்து தாழ் நிலைக்குச் சென்றது. ஏனெனில், அவர்கள் பிரபஞ்ச நியதிகளைக் கையாளாததுடன் ஷரீஆச்சட்டங்களை விட்டும் தூரமாகினர். அல்குர்ஆனை வெறுமனே “பரக்கத்'துக்காக மட்டும் ஒதினார்களே தவிர, அதை விளங்கவோ, தமது வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தவோயில்லை. அத்தோடு அறியாமை, தீய பணிபுகள், பழக்கவழக்கங்கள், பழமை வாதம், அநி யாயக்காரப் பரம்பரை ஆட்சி, சொகுசான ஆடம்பர வாழ்க்கை, நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதை விட்டுவிட்டமை போன்ற பல்வேறு காரணங்களை முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களாக அடையாளப்படுத்த முடியும்.
செய்யித் குதுப் (றஹ) குறிப்பிடுகிறார்கள் “முஸ்லிம்களில் சிலர் இந்த மார்க்கம் அல்லாஹீவி டமிருந்து இறக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக வேண்டி அந்த மார்க்கம் மனித வாழ்க்கையில் பெள தீகக் காரணிகளுக்கு அப்பாற்பட்டு அற்புதமான முறையில் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கி ன்றனர். அவர்கள் மனிதனது இயல்பான பலம், பல வீனம், அவனது இயல்புகள், அவனது பொருளா தாரநிலைகள் போன்றவற்றைக் கருத்திற்கொள்ளா மல் இஸ்லாம் நடைமுறைக்கு வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.” எனக் குறிப்பிடுகின்றார்.
அல்லாஹ மனிதரிலே எந்தவொரு மாற்ற த்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் மனிதனது முயற்சியின் ஊடாகவே அந்த மாற்றம் வர வேண்டுமென எதிர்பார்க்கிறான். இதே நியதியை அவனுக்கு நெருக்கமான நபிமார்களிடமும் கூட கடைப்பிடித்துள்ளான். யாருக்கும் இதிலே எவ்வித பாகுபாடும் இல்லை. “நிச்சயமாக அல்லாஹ எந்த வொரு சமூகத்தினரையும் அவர்கள் தாங்களாகவே மாற்றிக்கொள்ளாத வரை அல்லாஹவும் அவர்களை மாற்றிவிடமாட்டாணி’ (13:11) மேலுமோரிடத்தில் அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது. "நம்முடைய
44 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் அ

வழியில் யாரெல்லாம் செல்ல முயற்சிக்கின்றார்களோ அத்தகையவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய நேரான வழியில் செலுத்துகிறோம்.” (29:69) “நிச் சயமாக அல்லாஹி எந்தவொரு அருட்கொடை யையும் ஒரு சமூகத்தார் மீது அவன் அருளச் செய் தானோ அதை அச்சமூகத்தார் தங்களது நிலை மைகளை மாற்றிக் கொள்ளாதவரை அவன் மாற் றுபுவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹர் செவி யுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கி ன்றான்.” (8 : 53)
இங்கு அல்லாஹற் சமூக மாற்றத்தை முழு மையாக மனிதனது பொறுப்பிலே விட்டுவிடுகிறான். மனித சமூகத்தின் முழு வரலாறும் மனிதன் செயற் படவேண்டுமென்பதை எடுத்துக்காட்டுகிறது. அவ னது செயற்பாட்டின் மூலம்தான் மாற்றங்கள் வந் துள்ளது என்பதை வரலாற்றினூடாக நாமறிகிறோம். இதைத்தான் அல்லாஹ “ஸoனனி” எனக் குறிப்பி டுகின்றான். நீங்கள் செயற்படக் கூடிய முன்மாதிரி யான பல நிகழ்வுகள் அதிலே இருக்கிறது. எனவே நீங்கள் வரலாற்றை உற்றுநோக்கிப் படிப்பினை பெற்றக்கொள்ளுங்கள் என அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். “மனிதர்களே, உங் களுக்கு முன்னால் பல நியதிகளைக் கொண்ட சமூ கங்கள் வாழ்ந்துள்ளன. எனவே நீங்கள் பூமியில் பரந்து சென்று பொய்ப்பித்தவர்களின் முடிவு எவ் வாறமைந்தது என்பதைப்பற்றிச் சிந்தியுங்கள். மேலு மிதன் மூலம் மக்கள் எல்லோருக்கும் தெளிவு கிடை க்கும். இறையச்சமுள்ளோருக்கு நேர்வழியும், உபதேசமும் இருக்கிறது.” (3:137-138) எனக் குறி ப்பிடுகிறான்.
இங்கு “ஸoனனி” என்பது மூலம் இதற்கு முன் வாழ்ந்த சமூகங்களின் எழுச்சி, வீழ்ச்சிக்குக் கார ணமான நியதிகள் என்னவென்பதைக் கண்டுபி டிக்கவேண்டுமென கூறுகின்றான். இவை மாறாத “ஸoனனி’ ஆகும். மேலுமோரிடத்தில், “நபியே நீர், அவர்கள் சிந்திக்க வேண்டுமென்பதற்காக குர்ஆனி யக் கதைகளைச் சொல்லிக்காட்டுவீராக’ (7: 176) என்று குறிப்பிடுகின்றான்.
எனவே நாம “ஸoனனி”களைக் கவனிப்ப தும் அவற்றை எமது வாழ்வில் முன்மாதிரியாகக் கொள்வதும், படிப்பினை பெறுவதும் எவ்வளவு அவ சியமென்பதை நாம் அறிகிறோம். அல்குர்ஆன், அனைத்து விடயங்களும் காரணத்தின் அல்லது நிய தியின் அடிப்படையில் நிகழ்வதாக துல்கர்னை னுடைய சம்பவம்பற்றிக் குறிப்பிடும்போது கூறுகின்

Page 57
நது. “ஒவ்வொரு பொருளிலும் தக்க பயனடையும் வழிமுறையை அல்லது காரணத்தை அவருக்கு நாம் கொடுத்தோம். எனவே அவர் அக்காரணத்தை அல் லது வழியைப் பின்பற்றிச் சென்றார்” (10:84-85) இவ்வாறே நபி (ஸல்) கூட தமது வாழ்க்கையில் இத் தகைய நியதிகளைக் கையாண்டுள்ளார்கள். உதாரண மாக தமது சமூகத்தின் மத்தியில் தஃவாவை முன்வை த்தபோதும், அவ்வாறே ஹிஜ்ரத் செல்லும் போதும் பல காரணங்களைக் கைக்கொண்டிருக்கிறார்கள் என் பதை அவரது வரலாற்றின் மூலமாக அறிகின்றோம். எனவேதான் ஹசன் அல் பஸரி “நீர் ஒரு வீழ்ச்சியை அல்லது ஒரு பின்னடைவை அவதானித்தால் ஷரிஆ வின் நியதிகளோடு அல்லது பிரபஞ்சநியதிகளோடு அல்லது இரண்டோடும் ஊடாடுவதன்மூலம் நீவிட்ட தவறைத் தேடு.” எனக் குறிப்பிடுகின்றார்.
எனவே ஒரு முஸ்லிம் இப் பிரபஞ்சத்திலும் அவனது வாழ்விலும் நிகழும் அனைத்து விடய ங்களும் அவை நிகழும் முன்னே அல்லாஹவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என பூரண சமநிலைத்தன் மையோடு விசுவாசிக்கின்றான். அதேவேளை செய ற்படுவதும் காரணங்களைக் கையாளுவதும் அவன் மீது கடமையெனவும் முழுமையாக நம்புகின்றான். ஏனெனில் பூமியில் நிகழும் அல்லாஹற்வின் நிர்ணயங் கள் அனைத்தும் காரணங்களைக் கையாளுவதிலோ அல்லது அவற்றை விட்டுவிடுவதிலோதங்கியுள்ளது என அவன் விசுவாசிக்கின்றான். “மேலும் அவ்வூர் வாசிகள் விசுவாசம் கொண்டு அல்லாஹீவுக்குப் பய ந்தும் நடந்திருந்தால் அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள பாக்கியங்களை நாம் திறந்து விட் டிருப்போம் எனினும் அவர்கள் நபிமார்களைப் பொய்யாக்கினர். ஆகவே அவர்கள் சம்பாதித்துக் கொண்ட பாவத்தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்துக்கொணர்டோம்.” (7: 96)
“மனிதர்களின் கைகள் சம்பாதித்த தீயவற்றின் காரணமாக தரையிலும், கடலிலும் குழப்பம் வெளி ப்பட்டுவிட்டன. அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய்வதற்காக இவ் வாறு சோதிக்கின்றான்.” (30 : 41)
சமுக எழுச்சிக்கான நியதிகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்
1. விசுவாசம் என்ற நியதி:
ஏனைய அனைத்து நியதிகளை விடவும் மிகவும் முதன்மையானதாக இது காணப்படுகிறது. ஒரு சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் ஆழ்ந்த இறை விசுவாசமுள்ள, அக்கொள்கைக்காக

செயற்படக்கூடிய அர்ப்பணம் செய்யக்கூடிய ஒரு குழு இருக்க வேண்டும். அதன் மூலம் தான் அது சாத்தியமாகும் என்பதை அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. “மனிதர்களே உங்களில் விசுவாசம் கொண்டு நற் கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையவர்க ளுக்கு அல்லாஹி அவர்களுக்கு முன்பிருந்தவர்களை அதிபதிகளாக்கிய பிரகாரம் இவர்களையும் பூமிக்கு அதிபதிகளாக்குவதாகவும், அவர்கள் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் உறுதிப்படுத்திவைப்பதாகவும் அவர்களது பயத்திற்குப் பின் அமைதியைக் கொடு ப்பதாகவும் வாக்களிக்கிறான். மேலும் அவர்கள் என க்கு யாதொன்றையும் இணைவைக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின் எவர் நிராகரிக்கின்றா ரோ நிச்சயமாக அவர்கள் பாவிகளே” (24:55) மேலும் ஓர் இடத்தில"எவன் அல்லாஹவுக்கு உதவி செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹவும் உதவி செய்கின்றானி” (22:40) எனவே அவ்வாறு இல்லாத எந்தக் கொள்கையும், கோட்பாடும் உலகில் நிலையாக நிலைத்து நிற்காது என்பதை வரலாற் றினூடாக நாம் அறிகிறோம். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கொள்கையில் பற்றுள்ள, ஆழ்ந்த இறை விசுவாசமுள்ள மனிதர்க ளை உருவாக்கினார்கள். இவர்களால் தான் பாரிய தொரு நாகரிகம் கட்டியெழுப்பப்பட்டது என்பதை நாம் அறிகிறோம். எனவே இன்றைய காலத்தில் முஸ்லிம் சமூகம் மீண்டும் எழுச்சியடைய வேணி டுமென்றால், இத்தகைய மனிதர்கள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அதள பாதா ளத்தில் முஸ்லிம் சமூகம் விழுந்து விடும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
2. படிமுறை என்ற நியதி:
படிமுறை வளர்ச்சியினூடாகவே ஒரு சமூ கத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்பது இறை நிய தியாகும். பெளதீக உலகத்தைப் பொறுத்தவரையிலும் இது பொருந்துவதாக அமைகின்றது. உதாரணமாக பூரண வளர்ச்சியடைந்த பின்பே ஒரு தாயின் வயி ற்றிலிருந்து குழந்தை பிறக்கின்றது. எனவே ஒரு சமூ கத்தைப் பூரணமாகக் கட்டியெழுப்ப இந்நியதி பின் பற்றப்பட வேண்டும். உதாரணமாக இஸ்லாத்தைப் பற்றி எந்த அறிவுமில்லாத சமூகத்தில் சென்று உடன டியாக வட்டியெடுக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்றால், நாம் இந் நியதியைக் கவன த்தில் கொள்ளவில்லை என்பதாகும். நபி (ஸல்) அவர்கள் சமூகததிலே உஹது யுத்தததின் பின்னர்தான் மது தடை செய்யப்பட்டது. இது பற்றி அஷஷெய்க் முஹம்மது அல் கஸ்ஸாலி அவர்கள் குறிப்பிடும்
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 45

Page 58
போது உஹது யுத்தத்தில் கொல்லப்பட்ட பல ஸஹா பாக்களின் வயிற்றுக்குள் மது இருந்தது. அதாவது மதுஅருந்திய நிலையில் பலர் மரணித்திருந்தனர். எனவே நபி (ஸல்) அவர்கள் உடனே மது அருந் துவதைத் தடைசெய்யவில்லை. மாறாக அதற்கான மனோநிலை வரும்வரை விட்டுவைத்தார்கள் என் பதை நாம் அறிந்து கொள்கிறோம். அவ்வாறே வட்டியும் ஹஜ்ஜதுல் விதாஃ’வில் வைத்துத் தடை செய்யப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தஃவா'வை முன்வைத்த பாங்கு இந்நியதியை எடுத்துக்காட்டு வதாக அமைகின்றது. ஆரம்பத்தில் மூன்று வருடம் இரகசியப் பிரசாரம், பின் இரண்டாவது கட்டம் பகிரங்கப்படுத்தல், மூன்றாவது கட்டம் அத்துமீறிய வர்களுடன் போராடியவாராக பகிரங்க அழைப்பை மேற்கொள்ளல், நான்காவது கட்டம் தஃவாப் பாதையில் தடையாக நின்றவர்கள், இஸ்லாத்தின் பரவலுக்குத்தடையானவர்களுடன் போராடிய நிலை யில் பகிரங்கப் பிரசாரத்தை மேற்கொண்டமை. என வே நபி (ஸல்) அவர்கள் கூட இந்நியதியைக் கையா ண்டுள்ளார்கள் என்பதை நாம் காணர்கின்றோம்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் கோள்களை வணங்கியவர்களை, அல்லாஹி ஏகன் என்பதைக் கற்பிக்க நாடி அதனை அவர் படிப்படியாக கற்பித்தார் என்பதை அல்குர்ஆன் விளக்குகின்றது. எனவே இறைவன்கூட அல்குர்ஆனைப் படிப்படியாக மக்கள் விளங்க வேணடும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக இறக்கி வைத்தான். எனவே முஸ் லிம்களாகிய நாமும் தஃவா, கல்வியூட்டல் நடவடி க்கைகளிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் இந்நியதி யைக் கடைப்பிடிப்பதன் ஊடாக எமது சமூகத்தையும் எழுச்சிக்கு இட்டுச் செல்லலாம்.
3. தவணை என்ற நியதி:
மேற்குறிப்பிட்ட நியதியுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இந்நியதிகாணப்படுகின்றது. ஒரு மனிதன் விளைவுகளுக்கு அவசரப்படக்கூடாது என் பதை இந் நியதி எடுத்துக்காட்டுகின்றது. நூஹி (அலை) அவர்கள் 950 வருடங்கள் இந்தத் தஃவா வை மேற்கொண்டார்கள். அல்லாஹர்வின் நியதியும் அவ்வாறுதான் இருந்தது. எனவே காலம்தான் ஒரு வனைத் திருத்தும் என்றிருந்தால் காலத்தை அனு சரிக்க வேண்டும். அதற்கேற்ப தனது திட்டத்தைத் தீட் டிச் செயற்பட வேண்டுமென்பது இந்நியதி எடுத்து க்காட்டுகின்றது. எனவே அல்லாஹர்நபி (ஸல்) அவர் களுக்கு ஆரம்ப வசனம் முதல் இறுதி வசனம் இறங் கும் வரை 23 வருடகாலஇடைவெளி காணப்பட்டது. அல்லாஹி நாடியிருந்தால் ஒரே தடவையில் இறக்
46 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

கியிருக்கலாம். எனவே ஒரு குறிப்பட்ட வளைவு குறிப்பட்ட காலப் பகுதிக்கு முன்வர வேண்டுமென எதிர்பார்ப்பது கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் குறிக்கப்பட்ட தவணை ஒன்று உணர்டு. அதற்கு முன் அவசரப்படக்கூடாது என்பதை அல்லாஹ அல்குர் ஆனில் இவ்வாற குறிப்பிடுகின்றான் “எந்த ஒரு சமு தாயமும் தமக்குரிய தவணையை முந்தவும் மாட்டாது பிந்தவும் மாட்டாது.” (1515) “ஒவ்வொரு தவணை க்கும் பதிவு ஏடு உள்ளது.” (13 : 38)“ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தவணை உணர்டு ஆகவே அவர்களுடைய தவணை வந்துவிட்டால் ஒரு கணப் பொழுதும் முந்தவும் மாட்டார்கள் பிந்தவும் மாட்டா ர்கள்” (7:34) அத்தோடு அனைத்து விடயங்களை யும் அதற்குரிய காலத்துடன்இணைக்கப்பட்டுள்ளன என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது. “ஒவ்வொரு விடயத்தினதும் களஞ்சியங்கள் எம்மிட மே இருக்கின்றது. அவற்றைநாம் குறிப்பிட்ட அளவே இறக்கி வைப்போம்” (15:21) எனவே இஸ்லாமிய அழைப்பாளர்களும் தமது சமூகத்தை எழுச்சிப் பாதையில் கட்டியெழுப்புவதற்காக இத்தகைய கார ணிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4. வசப்படுத்தல் என்ற நியதி:
அல்லாஹ மனிதனை இவ்வுலகில் பிரதிநி தியாகப் படைத்து அவனுக்கு இவ்வுலகிலுள்ள அனைத்தையும் அவனது வாழ்க்கைக்கு ஏற்ற வித த்தில் வசப்படுத்திக்கொடுத்துள்ளன், என்ற கருத்தை அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான். “அவன் எத்தகை யவனென்றால் பூமியிலுள்ள யாவற்றையும் உங்களு க்காகவே படைத்தான்.” (2:29) “வானங்கள் பூமி யிலுள்ள அனைத்தும் தன்னிடமிருந்து உங்களுக்கு அவனே வசப்படுத்திக்கொடுததருக்கிறான” (45; 13)
மனிதர்கள் தமது வேலைகளை இலகுவில் ’செய்துகொள்வதற்காக அல்லாஹர் அவர்களைப் பல் வேறு தரத்தில் படைத்துள்ளான். "நபியே உமதிர ட்சகனின் அருளை அவர்களா பங்கிடுகிறார்கள். இவ் வுலக வாழ்வில் அவர்களுடைய வாழ்க்கைத் தேவை யை அவர்களிடையே நாமே பங்கிட்டுள்ளோம். அவ ர்களில் சிலர் சிலரைப் பணியாளர்களாக வைத்துக் கொள்வதற்காக அவர்களில் சிலரை மற்ற சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தியிருக்கிறோம். உமதிரட்சக னின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருப்பதை விட மிக்க மேலானதாகும்.” (43: 32)
எனவே மனிதன் தனது அறிவாற்றலினூடாக தனக்கு வசப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தும் போது அது அவனு

Page 59
க்குப் பாரிய விளைவுகளையும், வெற்றிகளையும் தரும். எனவே இத்தகைய நடவடிக்கைகளிலேயே மேற்கத்தைய சமூகத்தினர் ஈடுபட்டனர். இதனால் உலகில் அவர்கள் பாரிய வெற்றிகளையும், சாதனை களையும் நிலை நாட்டினர். அவ்வாறே அறிவியல் துறைக் கண்டுபிடிப்புகளிலும் உச்ச நிலையை எய் தினர். ஆனால் முஸ்லிம்கள் இவைகளை விட்டும் பொடுபோக்காக இருந்ததால் பாரிய வீழ்ச்சிக்கு உட் பட்டனர். ஆனால் அல்குர்ஆனோ அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யுமாறும், அவற்றை வளப்படு த்துமாறும் வேண்டிக்கொண்டிருக்கிறது.
5. நாகரிக சுழற்சி என்ற நியதி:
அல்லாஹி குரா ஆலஇம்ரானில் உஹது யுத் தம் சம்பந்தமாக குறிப்பிட்ட பின்னர் இந்நியதி பற்றி யும் குறிப்பிடுகிறான். “அந்த நாட்களை மனிதர்களுக் கு மத்தியில் மாறிமாறி வரும்படி நாமே செய்திரு க்கிறோம்.” (3; 140) எனவே ஒரு சமூகத்தின் எழுச் சியும், வீழ்ச்சியும் அல்லாஹி ஏற்படுத்திய நியதியே யாகும். அல்லாஹநீதியானவனாவான்; அவன் யாரு க்கும் அநியாயக்காரனல்ல, அவன் நல்ல சமுதாய த்தை ஒரு போதும் அழிக்கமாட்டான். “உமதிரட்சகன் ஓர் ஊரை அவ்வூரார் சீர்திருத்தவாதிகளாக இருக்கும் நிலையில் அநியாயமாக அழித்துவிடமாட்டான்.” (11 : 17) அல்லாஹி ஒரு சமுதாயத்தை அழிப்பதெ ன்பது அவர்களைப் புரட்டிவடுவது அல்லது கொண்று குவித்துவிடுவது மட்டுமன்று. மாறாக அந்த சமூ கத்தினரிடையே கட்டுப்பாட்டை இல்லாமலாக்கு வதும், பிளவை ஏற்படுத்துவதுமாகும். அத்தோடு இழிவையும், அவமானத்தையும், அடிமைத்துவத்தை யும் ஏற்படுத்திவிடுவதுமாகும். இந்த வகையில் நாம் உலகத்தை உற்று நோக்கும்போது எத்தனையோ நாகரிகங்களைக் கொண்ட சமூகங்கள் தோன்றிப்பின் னர் எத்தகைய அடையாளங்களுமின்றி அழிக்கப்ப ட்டுவிட்டன. ஆனால் அவற்றின் பெயர்கள் மட்டு மே எஞ்சியுள்ளன. அல்லாஹி ஒரு சமூகத்தை அழி க்க நாடினால் அவற்றை முற்றுமுழுவதுமாக அழித் துவிடுவதில்லை. மாறாக அம்மக்கள் வாழ்வார்கள். ஆனால் அவர்கள் தங்களது தனித்துவமான Լ1600fւկ கள், பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தையும் இழ ந்த நிலையில் காணப்படுவார்கள் என்பதாக மெளலா
னா மெளதுரதி (றஹற்) குறிப்பிடுகிறார்கள்.
இந்த வகையில் மீண்டும் இவ்வுலகில் முஸி லிம்கள் எழுச்சி பெறுவார்கள் என்பதில் எந்தச் சந்தே கமுமில்லை. எனவே முஸ்லிம்கள் இந்தவகையில் பொறுமையிழக்காமல் தொடர்ந்தும் செயற்பட வேண் டும் என்பதை இந்நியதி எடுத்துக்காட்டுகின்றது.

6. இம்மை மறுமையைத் தேடல் என்ற நியத:
உலகைத் தேடல் என்பது ஒரு மனிதனின் மறுமைக்கான தேவைகளுடன் உலகத் தேவைகள் மோதும் போது மறுமை நாட்டத்தை விட உலக நாட் டத்தையே விரும்பி முற்றாக அதனை நேசிப்பதையே கருதுகிறோம். இத்தகைய மனிதனது உள்ளம் எப் போதும் உலகத்துடனே தொடர்புபட்டிருக்கும். உல கில் இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவே கிடை க்கும். ஒருபோதும் இவர்கள் விரும்பி ஆசைப்பட் டதெல்லாம் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவ ர்களுக்கு மறுமையில் எதுவுமே கிடையாதென அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது. “யார் இவ்வுலக வாழ் வையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக இருக்கின்றார்களோ அவர்களது செயல்களுக்குரிய பலன்களை இவ்வுலகிலேயே நாம் பூரணமாக நிறைவு செய்வோம். அவர்களோ அதில் குறைவு செய்யப் படமாட்டார்கள். மேலும் இத்தகையோருக்கு மறு மையில் நரக நெருப்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர்கள் இவ்வுலகில் செய்தவை அழிந்துவிட்டன. மேலும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணா னதாகும்.” (11 : 15,14)
மறுமையைத் தேடல் என்பது உலகத்தைத் தேடுவதைவிட மறுமை மீதான நாட்டம் கூடுவதை யே இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.“எவர் முஃமினாக இருந்த நிலையில் மறுமையை நாடி அதற்காக உழை க்கின்றாரோ அத்தகையோரது முயற்சி அல்லாஹவி டமி அங்கீகரிக்கப்பட்டதாகும்.” (17:19)
7. போராட்டம் என்ற நியதி:
அநீதியை எதிர்த்துப் போரிடும் உணர்வு மனித வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் இருந்தே வருகின்றது. ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை தனது செல்வம், அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்க முற்படும் போது இந்நியதி தொழிற்படுகின்றது. “அல் லாஹர் மனிதர்களில் சிலரை, சிலரைக்கொண்டு தடு த்திராவிட்டால் இப்பூமி சீர்கெட்டிருக்கும்.” (2:251) மேலுமோரிடத்தில் “அல்லாஹ மனிதர்களில் சிலரை மற்றும் சிலரைக் கொண்டு தடுத்திருக்காவிட்டால் மடங்களும், கிறிஸ்தவ, யூத வணக்கஸ்தலங்களும் அல்லாஹவுடைய பெயர் அதிகமாக உச்சரிக்கப்படு கின்ற மஸ்ஜிதுகளும் இடிக்கப்பட்டுப் போயிருக்கும்.”
(22 : 40)
இந்நியதியை யூதர்கள் சிறப்பாகக் கையா ணர்டார்கள். அதாவது உலகில் காணப்படும் பெரும்
சக்திகளைத் தங்களது கைக்குள் வைத்துக்கொள்ளு
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 47

Page 60
பாடுகளும் கிடைக்கப்பெறும் விளைவுகளும் இறை நியதியின் (கத்ர்) தீர்ப்பாகும். மாற்றமாக அவன் மேற் கொண்ட காரணிகளால் கிடைத்ததல்ல. ஒரு போதும் காரணிகள் மட்டும் விளைவைத் தருவதில்லை. இத்த கைய சமநிலையான, சீரான சிந்தனையே ஒரு முஸ லிமின் சிந்தனையாகும். எனவே இரண்டுக்குமிடை யில் முரண்பாடு கிடையாது. ஒரு முஃமின் மேற்கு றிப்பிட்ட நியதிகளைக் கையாள வேண்டுமென அல்லாஹ எதிர்பார்க்கின்றான். நபி(ஸல்) கூட தனது வாழ்வில் சீர்திருத்தப் பணியில் இத்தகைய நியதி களைக் கையாண்டுள்ளார்கள். பெளதீக விதிகளை மட்டும் நம்பி வாழ்பவன்காபிர் அற்புதங்களை நம்பி வாழ்பவன்முட்டாள். இதில் சமநிலை பேணுபவவே முஸ்லிம்.
துணை நின்றவை:
1. வரிவாகப்பார்க்க - பழலாலல்குர்ஆன் செய்யத்குதுப்
ஸ்றொ அல் அஃறாப் (59-64), (65-72) ஸ்றொ ஹூத் (51-58), (71-83), (84-95) 2. மஆலிமுன் பீத் தரீக் - செய்யித் குதுப் :
பக் 14-16 வரை. 3. ஹாதத் தீன் - செய்யித் குதுப்
பக் 3-14 வரை. 4. கைப் நதஅமலு மஅல்குர்ஆன் - முஹம்மத் அல்
களப்ஸாலி பக் 144, 5. ஹாதத்தீன் - செய்யித் குதுப் - பக் 3-14 வரை. 6. விரிவாகப் பார்க்க. அல் மால் வல் ஹ0க்கும் பில் இஸ்லாம் - அப்துல் காதிர் அவதா. பக் 7 - 25. 7. தெளறுத் தலிபா பீபினாயி முஸ்தக்கில் ஆலமின் இஸ்லாமி - மெளலான மெளதுரதி (றஹற்) பக் -89 8. ஸ்றெத்துல் அஃறாப் (76 - 79) விரிவாகப்
பார்க்க. 9. மஜ்மூஅத்து றஸாயில் லில் இமாம் அஷ் ஷஹீத்
ஹஸனுல் பன்னா. 10 மஆலமுன் பத் தரக் - செய்யத் குதுப், (முன்னுரை). 11. லிமாதா தஅஹற்ஹற அல் முஸ்லிமூன் வலி மாதா தகத்தம கையறுஹம் - அல் அமர்ஷகீப அர்ஸலான் 12. தாரீஹுத் தபரீ - "தாரிஹுத் உமம் வல் முலுக்” -முகம்மது ஜரீர் அத்தபரீ பாகம் - 2, பக் 96-97 ப அல் வஃயுல் இஸ்லாமியப்யு இதழ் - 132 பக் 30. ா மன்ஹாஜுத்தகயர் இன்தவுர் ஷஹதைனி ஹஸனுல் பன்னா- வஸய்யத்குதுப் - கலாநிதிமுஹம்மத்அப்துர் காதிர் அபூ பாரிஸ். ா ஸிர்ரு தஅஹற்ஹoரில் அறப் வல் முஸ்லிமீன்.
- முஹம்மத் அல் கஸ்ஸாலி. ா இஸ்லாமிய சிந்தனை. - 14 3.
சமூகங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும். ப நளிமிய்யா மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள்:
() ஸoனனுல் இலாஹிய்யா. லிநஹலத்தில் உம்ம வஸகூதிஹா - அஷஷெய்க் முஹம்மது நிஷாத். (i) அத்தகையிறுல் இஜதிமாயி பில் இஸ்லாம் -
அஷஷெய்க் எஸ். எச். எம். பழில்.

73ஆம் பக்கத் தொடர்ச்சி. பிராணிகள் அறுப்புமுறை.
.யான இடங்களில் ஒன்றாக அறுத்துக் குவிப்ப துண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில் இஸ்லாம் கூறும் ஜீவகாருணிய முறைகள் மீறப்படுவது அவதானி க்கத்தக்க விடயமாகும். அத்தோடு சிலர் கசாப்புத் தொழிலைப் பழகுவதற்கான ஒரு களமாக இந்த வைபவங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.
அதே போன்று அளவுக்கதிகமான பிராணி களை ஒரே வாகனத்தில் ஏற்றிச் செல்வதனால் குறித்த பிராணிகள் பெரும் சிரமத்துக்குட்படுவதோடு வழியி லேயே சிலபோது சில பிராணிகள் இறப்பதுணர்டு. அவ்வாறு இறந்த மாடுகளையும் அறுத்து விற்பனை செய்யும் ஒரு தவறான போக்கு இன்று எம்மத்தியில் நிலவுகிறது.
முஸ்லிம்கள் இஸ்லாம் சொல்லித்தந்த ஜீவ காருணிய முறைகளைப் புறந்தள்ளிவிட்டு இத்தகைய தவறான போக்குகளைக் கையாளும் நிலையில் மாற்று மதத்தவர்களின் விமர்சனங்களை மாத்திரம் சுட்டிக்காட்டுவதில் அர்த்தமில்லை. எனவே முஸ்லிம் சகோதரர்கள் இந்த விடயங்களில் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
அடிக்குறிப்புகள்:
1. அல் - ஹலால் வல் - ஹராம் பில்இஸ்லாம் :
கலாநிதி யூசுப் அல் - கர்ழாவி 2. அல் - இபாதா - பில் இஸ்லாம். : கலாநிதி யூசுப் அல் - கர்ழாவி 3. பிக்ஹ0 அஸ் - ஸoன்னா :
அஷ் - ஷெய்க் செய்யது ஸாபீக். 4. அத்யானுல் ஹினிந்துல் குப்ரா :
கலாநிதி அஹமத் ஷல்பீ 5. உணவுக்காக பராணிகளைக் கொல்லும் முறைகள் :
கலாநிதி ஏ. ஆர். முஹம்மத். 6. திருக்குர்ஆன் (மூலமும், தமிழுரையும்):
கலாநிதி எஸ். முஹம்மது ஜான் 7. திருக்குறள் - பரிமேலழகருரை. 8. சந்திப்பு - பெளத்த மத குரு
சமிந்த தேரர் அவர்கள். மாலேவன விகாரை - பேசிவிளை
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 149

Page 61
குடும்பத் திட்டம் -
எம் என் ஷம்ஸ்
மனித வாழ்வை நிலைபெறச் செய்யும் முதல் அம்சமாகவும் மனித சமூகத்தைக் கட்டியெழுப்பு வதற்கான ஓர் அடிப்படையாகவும் குடும்பம் காண ப்படுகின்றது. மனித இனம் இவ்வுலகில் நிலை பெறவேண்டும் என்பதற்காக அல்லாஹி மனிதனைச் சோடியாகப் படைத்துள்ளான். எனவேதான் இளம் லாம் திருமணத்தின் பால் தூண்டுதல் அளிக்கின்றது மாத்திரமின்றி அதனைத் தன் இரட்சகனிடம் நெரு ங்குவதற்கான ஒரு வழியாகவும் அது கருதுகின்றது. அந்த வகையில் இஸ்லாம் துறவறத்தை அனுமதிக்கும் ஒரு மார்க்கமன்று. மாறாக குடும்ப வாழ்க்கையை, சீர்திருத்தத்தின் அடியாகக் கருதிய இஸ்லாம், அத னுடாகவே சந்ததிப் பெருக்கத்தினை ஊக்குவிப்ப தனைக் காணலாம். அதே போல அல்லாஹி шо6ї தனுக்குப் பாலியல் உணர்வையும் கொடுத்து, அத ற்கான ஒரு சிறந்த தீர்வாகவும், வழியாகவும் திருமண பந்தத்தினை ஏற்படுத்தியிருப்பதனையும் பார்க்கலாம்.
அந்த வகையில் மனிதன்தன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தித் தொடர்ந்தும் இப்பூவுலகில் தன் சந் ததியினைநிலைநிறுத்தச் செய்வதற்கான சிறந்த ஒழு ங்கு முறைகளாக மனித சட்டங்களை விட இறை சட் டங்களே மிகவும் பொருத்தமானவைகளாகக் காண ப்படுகின்றன. ஏனெனில் படைத்த இறைவனே அவ ன் படைப்புக்கள் பற்றிய நுட்பங்களை அறிந்தவனாக இருக்கின்றான். இது பற்றி அல்லாஹி தன் அருள் மறையில் பல்வேறு இடங்களிலே பிரஸ்தாபித்து ள்ளான். அல்லாஹ இது பற்றி ஓரிடத்தில் குறிப்பிடு மீபோது, “வானங்களையும் பூமியையும் படைத்த அவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா ? ஆம் சக்தியுள்ளவனே. அவனே யாவற்றையும் படைத்தவனாகவும், அவற்றை நண்க றிந்தவனாகவும் இருக்கின்றான்.” (36:81) என்ப தாகக் குறிப்பிடுகின்றான்.
50 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் O

ஒர் இஸ்லாமிய நோக்கு
அஹ்மத் நான்காம் வருடம் உஸ்லுத்தின் பீடம்
எனவே, இறை சட்டத்திற்கு வெளியே மனி தன் தீர்வைத் தேடிப்போனபோதெல்லாம் பயங்கர நோய்களும், சீர்கேடுகளும், தோல்விகளும் தோன்றி, மனித சமூகம் அழிந்து போனதை வரலாறு பதிந்து வைத்திருக்கின்றது. அந்த வகையில் ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் தோன்றும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும், மோதல்களுக்கும் அது சிறிய தாக இருப்பினும், அதற்கான தீர்வுகளைப் புனித குர் ஆனிலிருந்தும் தூய ஸoன்னாவிலிருந்தும் பெற்று வாழ்வதே மிகவும் பொருத்தமானதாகும்.
இந்தப் பின்னணியில் ஏறத்தாழ அரை நூற் றாண்டாகப் பரவலாகப் பேசப்படும் குடும்பத்திட்டம், கருத்தடை, கருச்சிதைவு போன்ற கொள்கைகளுக்குப் பின்னால் பல்வேறுபட்ட அரசியல், பொருளாதார, சமூகப் பின்புலங்கள் மறைந்து காணப்படுவதை மறு க்க முடியாதுள்ளது. இத் தொடரில், முதலாளித்துவ நாடுகள்தம் பொருளாதாரத்திற்கான சந்தையைத் தே டும் நடவடிக்கைகளின் விளைவாகவே இவ்வாறான கொள்கைகளின் ஊற்றுக் கணிகள் தோற்றம் பெற் றனவென்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் மேற்கு நாடுகள் தமது பரீட்சார்த்த சிந்தனையை ஏற்றுமதி செய்து, அதற்கப்பால் அதற்கான நடைமுறைச்சாத னங்களைப் பெற்றுக்கொடுப்பதென்பது நாம் அறிந்த விடயமே. ஐரோப்பா தனது திறந்து விட்ட கலாசாரப் பிரிவுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வ தற்காக இவ்வாறான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. முறையற்ற தொடர்புகளால் ஏற்பட்ட பாலியல் ரீதியான நோ ய்கள், உடல் பாதிப்புகள், சமூகச் சீரழிவுகள் போன்ற வற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகப் பல்வேறு வகையானதற்காப்புச் சாதனங்களை அது உற்பத்தி செய்யவேணர்டியேற்பட்டது. காலப் போக்கில் ஏனைய மூன்றாம் மணிடல நாடுகளுக்கும் இவை

Page 62
குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் என்ற பெயரில் பரவலாயின.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அது இல குமார்க்கமாகும். அது மக்களுக்கு இலகுவையே விரு ம்புகின்றது. இதனால்தான்நபியவர்கள் “மக்களுக்கு மார்க்கத்தை இலகுபடுத்துங்கள். அதனைக் கஷ்டப் படுத்தாதீர்கள். அவர்களுக்கு நன்மாயாரயம் கூறுங் கள்; அவர்களை விரட்டியடிக்காதீர்கள்” என்றார்கள் (புகாரி, முஸ்லிம்) அல்லாஹி தனது அருள் மறை யிலே எந்தவொரு ஆன்மாவையும் அதனது சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் கஷ்டங்களைக் கொடுப்ப தில்லை என்கிறான். ஆகவே, இஸ்லாம் குடும்பத் திட்ட முறைகளை முற்று முழுதாக ஒதுக்கிப் புறம் தள்ளிவிடவில்லை. ஏற்புடைய நியாயமான காரண ங்களுக்காகத் தனிப்பட்டவர்களால் மேற்கொள்வதை அது சில வரையறைகளுடன் அனுமதிக்கின்றது. இரு ப்பினும் அதனை ஒரு தேசியக் கொள்கையாக நடை முறைப்படுத்துவதை அது அனுமதிக்கவில்லை என் பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உணர்மை யாகும்.
இனவிருத்தியினபுரல் இஸ்லாத்தின் தூண்டுதல
மனித இனம் நிலைபெறவேண்டுமென்பதே திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியுமென்பதால் இஸ்லாம் இன ப்பெருக்கத்தை விரும்பி, உற்சாகப்படுத்துகின்றது. இதனால் தான் இனப்பெருக்கத்தை வலியுறுத்திவந்த பெருமானார் (ஸல்) அவர்கள் மனைவியாக அமை யப்போகிறவளின் பண்புகள் பறறிக்குறிப்பிடும்போது கீழ்வருமாறு பகர்ந்தார்கள் :
“அதிகம் பிள்ளைகளைப் பெறக்கூடிய, அதி கம் அன்பையும் பாசத்தையும் பரிமாறிக்கொள்ளக் கூடிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங் கள். ஏனெனில், மறுமை நாளில் பிற சமூகங்களின் முன்னிலையில் உங்களது அதிகரித்ததொகை மூலம் நான் பெருமிதமடைவேன்”அறிவிப்பாளர் - அனஸ் (றழி), (அஹமத், அல் ஹாகிம், இப்னு ஹிப்பான்)
இன்னொருமுறை, சந்ததி விருத்தியின்பால் ஆர்வமூட்ட வந்த நபியவர்கள் பின்வருமாறு கூறி னார்கள்."நீங்கள் விவாகம் செய்து கொள்ளுங்கள், சந்ததியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்; இனத்தை அதிகரித்துக்கொள்ளங்கள். ஏனெனில் நிச்சயமாக நான் இறுதி நாளிலே ஏனைய சமூகங்களின் முன் னால் உங்களைக் கொண்டு பெருமையடைவேன்.”
(அபூதாவூத்)

எனவே தான், விதவைகளைவிடக் கன்னிப் பெணிகளிடம் இனப்பெருக்க ஆற்றல் அதிகம் என் பதால் கன்னிப் பெணிகளை திருமணம் செய்யும்படி நபியவர்கள் ஏவியிருக்கிறார்கள். மேற் சொன்னஹதீ ஸில் “அல்-வலுத்” என்ற பதத்தில் “அதிகம் பிள்ளை களைப் பெறக்கூடியவள்” என்ற கருத்துத் தொனி ப்பதை அவதானிக்கலாம். ஒரு முறை ஜாபிர் இப்னு அப்தில்லாஹி (றழி) அவர்கள் ஒரு விதவையை மண மி முடித்து நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது,
“ஒரு கன்னிப் பெண்ணை நீர் திருமணம் முடித்திருக்க வேண்டாமா நீஅவளுடனும், அவள் உம்முடனும் கொஞ்சி விளையாடியிருக்கலாமே /” என்றார்கள். (இப்னு மாஜா) பின் அந்த ஸஹாபி தான் விதவையைத் திருமணம் செய்ததன் நோக்கத்தி னை நபியவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இவ்வாறாக, பிள்ளைப்பேற்றின்பாலும், திரு மணத்தின்பாலும் ஆர்வமூட்டுகின்ற நபியவர்களின் ஏராளமான ஹதீஸ்கள் இனவிருத்தியைத் தூண்டு பவனவாக இருக்கின்றன. அல்குர்ஆனிலும் இதனை வலியுறுத்துகின்ற பல வசனங்கள் காணப்படுகி ன்றதை அவதானிக்கலாம். “உங்கள் மனைவிகள் உங் களுக்குரிய விளைநிலங்களாகும். ஆகவே உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் விரும்பியவாறு செல்லு ங்கள்.” (2:223) என்பதாக அல்லாஹர் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றான்.
எனவே அல்லாஹவும் அவனது தூதரும் இனப் பெருக்கத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொணி டுவரும் நோக்கத்தோடு எத்தகைய தடையையும் விதிக்கவில்லையென்பது புலனாகின்றது. அதேபோல் எத்தகைய தடைகளை விதித்ததாகவும் தெரியவி ல்லை. நாம் மேல் குறிப்பிட்டுக் காட்டிய ஹதீஸ்களும் அக்கருத்தில் அமைந்த ஏனைய ஹதீஸ்களும் சொல்ல ப்பட்டதன் பின்னணியையும், சூழ்நிலையையும் எடுத்து நோக்கும்போது மேற்சொன்ன கருத்து அங்கே காணப்படுவதனை அவதானிக்கலாம்.
G50Lijua as Gil IG (Family Planning)
இலப்லாம் இனவிருத்தியின்பால்தூண்டுதல் அளித்ததுடன் மாத்திரம் நின்றுவிடாது, குடும்ப ஒழு ங்கமைப்பைப் பற்றியும் அது பிரஸ்தாபிக்கின்றது. பிள்ளைப் பேற்றிலே இருக்கவேண்டிய ஒழுங்குக ளையும் அது பேசத் தவறவில்லை. இஸ்லாமிய சட் டவாக்கம் மிகவும் பரந்தது. அது வெறுமனே நம் பிக்கையையும் வணக்க வழிபாடுகளையும் மாத்திரம் சார்ந்ததன்று. மாறாக குடும்ப அமைப்பு உட்பட மனித
னின் சகல நடவடிக்கைகளையும் ஒழுங்கமைக்கும்
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 51

Page 63
ஒரு சாதனமாகவே அமைந்து காணப்படுகின்றது. எனவே அது அவசியம் என உணரும் சந்தர்ப்பத்தில் குடும்பத்திட்டமிடலுக்கு ஆதரவு வழங்குகின்றது. இது இஸ்லாமிய சட்டத்துறையில் தனிப்பட்ட நிபந் தனையின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக அமைகின்றது. இது குழந்தைப் பேறுகளுக்கிடையே இடைவெளி ஏற்படுத்துவதாகவும், அதன் தொகை யை ஒழுங்குபடுத்துவதாகவும் அமையவேண்டுமே யன்றிநிரந்தரத்தடைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இட்டுச்செல்லக்கூடாது.
எனவே இந்த நூற்றாண்டில் மேற்குலகம் அறிமுகம் செய்த குடும்பக் கட்டுப்பாட்டுச் சிந்த னைகளுக்கும் இஸ்லாத்திற்குமிடையே எத்தகைய ஒப்புதல்களோ, தொடர்புகளோ இல்லை. அச் சிந்த னையானது குடும்பத்திட்டம், குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை, கருச்சிதைவு போன்ற பகுதிகளை உள்ளட க்கியிருப்பதையும் நாம் அறிவோம். இஸ்லாத்தின் கோட்பாடுகளை ஆழ்ந்து கவனம் செலுத்தி ஆரா யாது, அதனை நுனிப்புல் மேய்ந்து விட்டு இஸ்லாம் குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரிக்கின்றது என நிலை குலைந்து தீர்ப்பளிப்பது கவலைக்குரிய விடயமே. இஸ்லாத்தின் உயிரோட்டத்தை உணர்ந்து கொள்ளத் தவறிய சிலரின் மார்தட்டலின் பயங்கர விளைவே
இது.
(sGLöug gill L-5605Li (Family Planing) பொறுத்தளவில் அது பிள்ளைகளுக்கிடையே இடை வெளி ஏற்படுவதை மையமாகக் கொணர்டிருக்கி ன்றது. ஒரு மனிதன் தனது குடும்பத்தை திட்ட மிடுவதிலோ அல்லது குழந்தைப்பேறுகளை ஒழுங்கு படுத்திக் கொள்வதிலோ பிழையில்லை. ஆனால் இது அளவுகடந்த இடைவெளிகளை ஏற்படுத்திவிட க்கூடாது. மிகைக்கும் திட்டமிடல் சிலபோது அபாய த்திற்கு இட்டுச் செல்லலாம். இப்பகுதியிலே இஸ் லாமிய நோக்குகள் கவனிக்கப்பட்டால் இரு பிர்ளை களுக்கிடையிலான இடைவெளி மூன்று வருடங்க ளாக இருப்பது சிறந்தது என்பதை அவதானிக்கலாம். அல்குர்ஆன் இவ் ஒழுங்கை பின்வரும் வசனத்தி னுரடாக மறைமுகமாக முன்வைக்கின்றது. “எவரே னும் தலாக் கூறப்பட்ட மனைவிகளிடம் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத்தலாக் கூறப்பட்ட மனை விகளைக் கொணர்டே பால் ஊட்டுவதைப் பூர்த்தி யாக்க விரும்பினால் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள்வரை பூரண மாகப் பாலூட்டவும். ” (2:233)
எனவே ஒரு சிசு கருவில் இருக்கும் பத்து மாதங்களும் பாலூட்ட இரு வருடங்களுமாக மொத்
52 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் O

தம் 3 வருடங்கள் இடைவெளி ஏற்படுவதை அவ தானிக்கலாம். அத்தோடு பிள்ளைகளுக்கிடையிலான இடைவெளி இரண்டு வருடமாக அவசியம் அமை தல் வேண்டும் என்று மேற்படி வசனம் குறிப்பிட வில்லை. மாறாக ஓர் ஒழுங்கை மாத்திரம் வலியுறு த்துகின்றது என்பதை கவனத்திற் கொள்ளவேண்டும்.
கர்ப்பத்தடையைப் பொறுத்தவரையில் நிர ந்தரக் கர்ப்பத்தடைக்குஇஸ்லாத்தில் அனுமதியில்லை. இது மனித இனம் பெருகுவதைத் தடுக்கும் ஓர் நட வடிக்கை என்பதால் அனேக இஸ்லாமிய அறிஞர்கள் இதில் உடன்பாடான கருத்தைக் கொண்டுள்ளனர். எனினும் “பெரியதொரு தீங்கை சிறியதொரு தீங் கினால் நீக்கலாம். ’ என்ற இஸ்லாமிய அடிப்படை விதியின் கண்ணோட்டத்தில் தீங்குகள் ஏற்படும்நிலை யை தவிர்த்து நடப்பதே சாலப்பொருத்தமாகும். இதன டிப்படையில் சில நியாயமான காரணங்களுக்காக
இதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
1 பிரசவத்தின் போது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நம்பத்தகுந்த மருத்துவர்கள் மூலம் அறிதல். இச்சமயத்தில் குழந்தையின் உயிரைவிட தாயின் உயிருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
2 பரம்பரை பரம்பரையாகப் பரவும் பயங்கரமான நோய்கள் இருப்பதைச் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் அறிதல்,
குடும்பக் கட்டுப்பாட்டை அனுமதிக்கின்ற நியாயமான காரணங்களாக கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி அவர்கள் பின்வரும் விடயங்களை முன் வைக்கின்றார்.
1 தாயின் உயிருக்கோ அல்லது உடல்நலனுக்கோ ஆபத்து ஏற்படும் என அனுபவத்தினூடாகவோ அல்லது நமீபத்தகுந்த மருத்துவர் ஒருவர் மூலமோ அறிந்தால், குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதியு ண்டு. இக்கருத்திற்கு ஆதாரமாகக் கீழ்வரும் அல்கு ர்ஆன் வசனங்களை அறிஞர்கள் சுட்டிக் காட்டுவர் -9j6ð)6) Jll Isø) J6ðI:
உங்களை நீங்கள் அழிவுக்கு உட்படுத்த வேணர்டாம். (2 : 195) மேலும் உங்களை நீங்கள் கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ உங்கள் மீது அதிகம் அன்பு கொண்டவனாய் இருக்கிறான்.
2 லெளகீக ரீதியில் அமைந்த சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டிவரும்; அது பின்னர் மார்க்க விவ

Page 64
காரங்களையும் பாதிக்கும், தனது குழந்தைகளுக்காக வேண்டி ஹராத்தையோ அல்லது வேறு பாவங் களையோ செய்ய வேண்டியேற்படுமென்று ஒருவர் அஞ்சுமி நிலைகளிலும் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதுபற்றிக் குறிப்பிடு
ம்போது அல்குர்ஆன்,
“அல்லாஹ உங்களுக்குச்சங்கடத்தை ஏற்படு த்த விரும்புவதில்லை.” (5 : 6)
3 ஒருவர் தனது குழந்தையின் தேகாரோக்கியம் பாதிப்புறும் என்று அஞ்சுமி நிலையிலோ அல்லது அவர்களை முறையாக வளர்ப்பதில் பிரச்சினைகள் தோன்றும் என அஞ்சும் நிலையிலோ அதற்கான நியாயமான காரணங்கள் இருப்பின் குறித்த செயற் பாட்டிற்கு அனுமதியுண்டு. உஸாமா (ரழி) அறிவிக் கிறார்கள் ஒருமுறை ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹவின் தூதரே! நான் எனது மனை வியிடத்தில் அஸில் செய்கிறேன்” என்றார். அதற்கு நபியவர்கள் “ஏன் அவ்வாறு செய்கிறீர் ?” என்று வினவ அதற்கு அம்மனிதர் “நான் எனது குழந்தை யையிட்டு அஞ்சுகின்றேன்” என்றார். அதற்கு நபிக ளார் “அது (அஸல்) தீங்கிழைப்பதாக இருப்பின் பாரசீகத்தையும், ரோமாபுரியையும் பாதித்திருக்கும்.” அதாவது இத்தகைய தனி மனிதர்களின் நிலைகள் முழுச் சமூகத்தையும் பாதிக்காது, அவ்வாறு இருப் பின் அண்றைய வல்லரசுகளாகத் திகழ்ந்த ரோம, பார சீகத்தையும் பாதித்திருக்கும் என்பதாகும் என்றார்கள்
4 பால்குடிக் குழந்தையின் நிலையைக் கருத்திற் கொண்டு, தாய் கருத்தரிப்பதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுவதும் குடும்பக் கட்டு ப்பாட்டை நியாயப்படுத்துகின்ற ஒரு காரணமாகும். பால் குடிக் குழந்தை இருக்கும் நிலையில் தன் மனை வியுடன் (கருத்தரிக்கும் நோக்கோடு) உடலுறவு கொள்வதனை நபியவர்கள்இரகசியக் கொலை என வர்ணித்துள்ளனர். ஆயினும் இதனை ஷரீஅத் முற் றாகத் தடை செய்யவில்லை.
மேற் சொன்ன கருத்துக்களே பிரபல்யம் வாய்ந்த ஷெய்குல் அஸ்ஹர் மஹமூத் ஷல்துத் அவர்களின் மார்க்கத் தீர்ப்பிலும் காணப்படுகின்றது.
குடும்பக் கட்டுப்பாடு சமூகத்திட்டங்களில் ஒன்றாக மாற்றப்படுவதானது இஸ்லாமிய ஷரீஅ த்துடன் மோதுவதாக அமைகின்றது. எனவே இது பொதுப்படையாக நோக்கப்படக் கூடாது. அரசி னாலோ ஏனைய நிறுவனங்களினாலோ அல்லது குழுக்கள் மூலமாகவோ அல்லது கூட்டுத்திட்ட மாகவோ (combine) பிரசார முயற்சிகளாக மேற்

கொள்ளப்படுவதினை இஸ்லாம் தடை செய்கின்றது. முஸ்லிமகளைத் தம் சமூக அங்கத்தினர்களை அதி களித்துக் கொள்ளுமாறு ஏவிவிட்டு, நபியவர்கள் குடு ம்பக் கட்டுப்பாட்டை ஒரு கொள்கையாக பிரகடனம் செய்திருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.
"அல்-அஸப்லுமீ இஸ்லாத்தின் நிலைப்பாடும்.
“அல்-அஸ்லி” என்பது (உடலுறவின் போ து) ஆணர் தனது இந்திரியத்தைப் பெண்ணின் கர்ப்ப வறையைப் போய் அடையவிடாது தடுத்துக் கொள் வதைக் குறிக்கும். அன்று முதல் இன்றுவரை குடும்பக் கட்டுப்பாட்டிற்குரிய பல வழிமுறைகள் கையாள ப்பட்டு வந்திருக்கின்றன. இந்த வகையில் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் குடும்பக் கட்டுப்பாட்டிற்குரிய வழிமுறையாக அல்-அஸில் எனும் செயற்பாடே காணப்பட்டது. இது சம்பந்தமாக வந்திருக்கின்ற சில ஹதீஸ்களை நோக்குவோம்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “ரஸ்ல்ெ (ஸல்) அவர்களது கால த்தில் நாங்கள் விந்தை கர்ப்பத்தில் செலுத்துவதை தவி ாத்து வந்தோம்.”இன்னோர் அறிவிப்பில்,
“அல்குர்ஆன்இறங்கிக்கொண்டிருந்தவேளை நாங்கள் விந்தை கர்ப்பத்தில் செலுத்துவதை தவிர்த்து (அல்-அஸில் செய்து) வந்தோம்”(புகாரி, முஸ்லிம்) ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாம் அஸ்ல் செய்து வந்தோம். இச்செய்திநபியவர்களுக்கு எட்டிய போது எம்மைத்தடுக்கவல்லை” (முஸ்லிம்)
மேற் சொன்ன ஹதீஸ்கள் அஸில் ஆகுமா னதென ஸஹாபாக்கள் செய்து வந்திருப்பதனை எடு த்துக்காட்டுகின்றது. இருப்பினும் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அப்துல்லாஹ இப்னு உமர் (ரழி) போன்றோர் அல்-அஸிலை விரும்ப வில்லை என்பதாகவும் தகவல்கள் காணப்படுகின்றன. இமாம் மாலிக் தனது “முஅத்தா” வில் இப்னு உமர் (ரழி) அவர்கள் அல்-அஸிலை மேற்கொள்பவராக காணப்பட்டார் எனக் குறிப்பிடுகின்றார். இமாம் திர் மிதி தனது கிரந்தத்தில் “ஸஹாபிகளும் வேறு சில அறிஞர்களும் அஸ்லை விரும்பத்தகாதது என்கின் றனர்” எனக் குறிப்பட்டுள்ளார். ஆனால் நபரியவர்கள் இம் முறையை ஹராம் எனவுமில்லை, தடுக்கவுமி ல்லை. அபூ ஸயீத் அல்-குத்ரி (ரழி) அவர்கள் அறி விக்கிறார்கள். “நாங்கள் கைதிப் பெண்களைப் பெற்று அவர்களுடன் சேரும் போது “அஸ்லை’ மேற்கொ ண்டு வந்தோம், இதனை நபியவர்களிடம் கேட்டோ ம். “அஸ்லி’ என்ற செய்முறையை நீங்களும் மேற்
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 53

Page 65
கொள்கிறீர்களா ?” என மூன்று முறை கேட்டுவிட்டு “மறுமை நாள்வரை உருவாக வேண்டிய அனைத்துப் படைப்புக்களும் உருவாகியே தீருமி” எனப் பதில் அளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே தான் கியாஸின் அடிப்படையில் நவீன காலப்பிரிவில் ஆணுறை பாவித்தல், வளையம் வைத்தல், மாத்திரைகளைப் பயன்படுத்தல், இஃதி ஸால் எனும் முறையை கையாளல் போன்ற செய ற்பாடுகள் கூடும் என்ற முடிவுக்கு வருகின்றனர். இவ ற்றில் இஃதிஸால் தவிர்ந்த மற்றைய அனைத்தும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவைகளே. இவை சில போது நிரந்தர மலட்டுத் தன்மைக்கே இட்டுச் செல்லும்.
அஸில் பற்றி இமாமி நவவி அவர்கள் “அனைத்து நிலைகளிலும் மக்றுாஹி ஆகுமீ” என்கி றார். மெளலானா மெளதுரதி அவர்கள் “அஸ்லி” அனுமதிக்க பின்வரும் மூன்று நிலைகளை விளக் குகின்றார்.
1. ஓர் அடிமைப் பெண்ணுக்குப் பிள்ளை
உணர்டாகும் என எஜமான் பயப்படும் நிலை.
2. அடிமைப் பெண தொடர்ந்தும் தன்னிடம்
இருக்க வேண்டும் என எஜமான் விரும்பும் நிலை,
3. பாலூட்டும் தாய் ஏதாவது கஷ்டத்திற்குள்ளா
கலாம் என அஞ்சுமி நிலை.
பொதுவாக அறிஞர்கள் இது சம்பந்தமாக இரண்டு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
1. சுதந்திரப் பெண், அடிமைப் பெண் எவருடனா
வது “அஸ்லி” செய்வது ஹராம் ஆகும். 2. “அஸில்” செய்வது மக்றுஹற். ஆயினும் அடிமை ப்பெண்ணோடு செய்யலாம் தற்காலதத்தில்அடிமை முறை இல்லையென்பதை கருததிற்கொள்ளவும்.
வறுமைக்குப் பயப்படல்
பொதுவாக ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வாகச் சனத்தொகையைக் குறைக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் இன்று உல கில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இத் தொடரில் மேற்கத்தேய சிந்தனையின் விளைவாகவும் சடவாதக் கணிணோட்டத்தின் விளைவாகவும் தோற்றம் பெற்ற மால்தூஸின்சனத்தொகைக் கோட்பாடு இன்று பொய் ப்பிக்கப்பட்டு வருகின்றது. இவர் சனத்தொகை யானது பெருக்கல் விருத்தியின் அடிப்படையிலும்
54 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 3

பொருளாதார வளங்கள் கூட்டல் விருத்தியின் அடிப் படையலும் பெருகிக் கொண்டிருப்பதாக, சனத்தொகை வேகத்திற்கும், வளங்களின் வளர்ச்சி வேகத்திற்கு மிடையேயுள்ள வேறுபாட்டைத்தன் சிந்தனை மூலம் முன்வைத்தார். பொருளாதாரத்தின்மீது தாக்கம் செலு த்தும் காரணியான சனத்தொகைப் பெருக்கம் உணர் மையானது அல்ல. பொருளாதாரப் பிரச்சினைகளு க்கு சனத் தொகை அல்லாத வேறு பல முக்கிய கார ணிகள் இருப்பதனை பொருளியலாளர்கள் ஏற்று வருகின்றனர்.
இஸ்லாத்தைப் பொறுத்தளவில் வறுமைக்காக குழந்தைகளைக் கொலை செய்வதனையோ, பிள்ளை ப்பேற்றை முற்றாக நிறுத்திக் கொள்வதனையோ அது கடுமையாகச் சாடுகின்றது. இது பற்றி அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகின்றது.
“நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களு க்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொலை செய்தல் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்.” (17 : 31) இன்னுமோர் இடத்தில் அவன்தன்னைப் பற்றிக் கூறுகின்றான். “நிச்சயமாக அல்லாஹீரஸ்ஸாக் ஆவான். அவன் பலமிக்கவனும் உறுதியானவனுமாவான்.” (அத்தாரிக் 58)
மேற்கூறிய வசனங்கள் அல்லாஹர் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் அளவோடும் ‘ரிஸிக் வழங்குவதாக குறிப்பிடுகின்றான். இமாம் ராகிப் (ரஹ) அவர்கள் “இது உணவுத் தேவைகளை மாத்திரமின்றி தேவைகளுக்காகப் பயன்படுத்தும் அனைத்தையும் இது குறித்துநிற்கிறது” என்றார்கள் அல்குர்ஆன் பல இடங்களில் மனிதனின் பெளதீகத் தேவைகளை நிறைவு செய்தல் அல்லாஹீவைச் சார் ந்தது எனக் குறிப்பிடுகிறது.
எனவே அல்லாஹர் மீது முழு நம்பிக்கை கொண்டு அவன் ஆற்றல்களைப் புரிந்ததுகொண்டு, ஒருவன் இத்தகைய சலனங்களுக்கு உட்படமாட் டான். இதன் மூலம் இனப்பெருக்க நடவடிக்கை மூலம் பெருகும் சந்ததியினருக்கு உணவளிக்க முடி யாமல் போகும் என்றெண்ணி குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதை அறி யமுடிகின்றது. இது அல்லாஹதான் உணவளிக்கிறான் என்ற நம் தவக்குலோடு முரண்படுகின்றது.
வறுமை ஒரு செயற்கை அமைப்பே. செல்
வப் பகிர்வு சரியான முறையில் இருந்தால் சமூகத்தில் வறுமை இருக்காது. செல்வங்களின் பெரும் பகுதி

Page 66
ஒரு சிறிய குழுவினரிடம் இருக்க, அதன் சிறிய பகுதியே பெரிய ஒரு குழுவினரிடம் உலாவுகின்றது. சர்வதேச ரீதியாகவும் இதை அவதானிக்கலாம். ஆசி ய நாடுகளில் செல்வம் குறைந்து காணப்பட சனத் தொகையோ பெருகிக் காணப்படுகின்றது. மாறாக ஐரோப்பிய நாடுகளில் செல்வம் அதிகரித்துக் காண ப்பட சனத்தொகையோ அங்கு ஒப்பீட்டு ரீதியில் குறைந்து காணப்படுவதை அவதானிக்கலாம்.
ஷரீஅத்தின் நிபந்தனைகளை மீறிச்செயற்ப டுத்தும் சகல இனவிருத்திக் கட்டுப்பாடுகளும் ஹரா மானவையாகும். அதிகமானோர் வறுமைக்குப் பய ந்தே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள் ளனர். இது பாரதூரமான ஒரு விடயமாகும். மனி தனானவன் வளத்தை அழிப்பவன் மாத்திரமல்ல, மாறாக வளத்தை உண்டுபணினுபவனாகவும் காண ப்படுகின்றான். அவன் இல்லை என்றால் எத்தனை யோ வளங்கள் அழிந்து போயிருக்கும். எனவே அவன் பிறப்பது பிரச்சினையல்ல. சிறந்த முறையில் திட்டமிட்டு நடத்துவதிலேயே வெற்றிதங்கியுள்ளது. ஒருவன் ஒரு வாயோடும் வயிற்றோடும் மட்டுமல்ல, இரண்டு கைகளோடும் கால்களோடும் தான் பிறக் கிறான் என்பதன் அடிப்படையில் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பிறந்த மனிதனைச் சிறந்த குடும்ப அமைப்பில் வளர்த்து நுட்பமான திட்ட மிடலின் கீழ் அவனை நடாத்துவதிலேயே வெற்றி தங்கியுள்ளது.
asc5didamsa (Abotion)
இன்றைய சமூகத்தில் பரவிக் கொண்டிருக்கு ம் கருச்சிதைவு பற்றியும் சுருக்கமாக நோக்குவோம். அனைத்து மதங்களும் கருத்தடையையும் சிசுவதை யையும் வெறுத்து வந்துள்ளன. இஸ்லாம் இதனைப் பூரணமாகத் தடைசெய்கின்றது. அக் கருவானது ஹராமான முறையில் தரித்திருப்பினும் சரியே. ஒரு கருவை அதற்கு ரூஹ’ ஊதப்பட்டதன்பின்னர் சிதை ப்பது பெருங் குற்றமாகும்.
கருச்சிதைவுக்காக முழுச் சுதந்திரமும் பெணி ணுக்கு அழிக்கப்பட வேண்டும் என்ற ஓர் வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஓர் உயி ரைக் கொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஒரு குழந்தை பிறந்து வளர்வதென்பது மனித சக்திக்கு அப் பாற்பட்ட ஒரு சக்தியின் செயற்பாடே. இதற்கு முர 6TT5 செயற்படுவது எமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியோடு மோதுவதாக இருக்கின்றது. அள வுக்கு அதிகம் முட்டிமோதுவது ஆக்கத்திற்கு வழிவகு ப்பதை விட அழிவுக்கே வழிவகுக்கும்.

மனிதன் தன் உணவுக்காக ஓர் உயிர்ப்பிரா ணியை அறுக்கும்போதுகூட இறைவனின் பெயரால் அதை அனுமதியெடுத்து அறுப்பதைக் காணலாம். ஆகவே, இறைவனின் அதி சிறந்த சிருஷ்டியான மனித உயிர் ஓர் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக் கும்போது அவனால் அதை எப்படி அழிக்க முடியும். குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மனிதனை நிரபரா தியாக்குவதற்காக இங்கே எத்தனையோ வழக்கறி ஞர்கள் கோப்புகளோடு தயாராயிருக்கின்றனர். வாயப்பேசாச்சிசுவாய் வளரும், வயிற்றிலிருக்கும் குழ ந்தைக்காக வாதாடுவதற்கு யாருமில்லை என்பதற்காக எந்தக் குற்றமும் புரியாத குழந்தையைக் கொல்வதற்கு உரிமை வழங்கமுடியுமா ? இதனால் தான், ஹாமிதி யப்யா என்ற பெண்மனி விபசாரம் செய்து ரஸ்ல்ெ (ஸல்) அவர்களிடம் தண்டனை பெற வந்தபோது, நபியவர்கள் அவள் வயிற்றில் வளர்ந்து வரும் சிசு விற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பெற்றுவரச்
சொன்ன வரலாற்றுச் சம்பவத்தை பார்க்கின்றோம்.
கலாநிதி யூசுப் அல்கரீழாவி பின்வரும் கார ணங்களுக்காக கருச்சிதைவுக்குச் சலுகையளித்திரு க்கின்றார்.
1. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை பிறந்தால் தாய்க்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் என அஞ்சும் பட்சத்தில் நம்பிக்கையான வைத்தியரின் விதந் துரைப்பின் பெயரில் கருச்சிதைவு செய்யலாம். இது, இரண்டு தீங்குகள்இருக்கும்போது அவற்றில் குறை ந்ததைத் தெரிவு செய்ய வேண்டும்’ என்ற சட்ட விதி யின் அடிப்படையில் கருவைச் சிதைப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத போது அதற்கு அனும தியுண்டு.
| 2. வைத்தியரின் ஆலோசனைப்படி பிறக்கும் குழ ந்தை தீராத நோய்களுக்கு உட்படலாம் என்றிருந் தாலும் கருச்சிதைவுக்கு அனுமதியுண்டு. பிறக்கும் குழ ந்தையானது உருக்குலைந்த நிலையிலோ, பெரும் அவலத்தையுடனோ வாழும் என்ற நிலைக்கு உட்ப டும் என விஞ்ஞானரீதியாகக் கண்டறிய வேண்டும்.
இவ்வாறான குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதனுடன் இணைந்த விடயங்களை முடியுமான வரை சுருக்கமாக விளக்க முற்பட்டுள்ளேன். பொது வாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமூ கத்தில் இஜதிஹாத் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியே பிரதான காரணமாய் அமைகின்றது. இதுவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அத்தோடு அனைத்துத்
துறைகளிலும் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன.
(தொடர்ச்சி பக் - 42)
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 55

Page 67
இருபதாம் நூற் இஸ்லாமிய அறி
6. 6... 6
ஒரு முஸ்லிம் எப்பொழுதும் உலக சமூகத் தினர் அனைவருக்கும் சான்று பகரக்கூடியவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் இவ்வாறு சான்று பகர் வதானது நடுநிலையான முஸ்லிம் சமூகத்தினது பணி யாக வலியுறுத்தியுள்ளது. இந்த வகையில் மனிதர்கள், நிகழ்வுகள், சிந்தனைகள் ஆகியவற்றின் போக்கைக் கணிப்பீடு செய்து சீர்தூக்கிப் பார்ப்பதும் முஸ்லிம் சமூகத்தின் பெருங்கடப்பாடாகும். இந்த வகையில் சென்ற நூற்றாண்டில் எம் சமூகத்தில் ஆழ்ந்த தாக் கத்தை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகள், இஸ்லாமியத் தலைமைகள், அவர்கள் விட்டுச் சென்ற தடயங்கள், முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துவதில் அவர்களது பங் களிப்புகள் என்பன பற்றிய குறிப்புகளாகவே இக்க ட்டுரை அமைகிறது.
இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப நிலைமைகள்
இஸ்லாத்தின் தோற்றத்திலிருந்து இன்று வரையான வரலாற்றை வரண்முறையாக நோக்குகின்ற போது, அதனது எழுச்சி வீழ்ச்சிகளை, ஏற்ற இறக்க ங்களை எமக்கு உணரக்கூடியதாகவுள்ளது.
இஸ்லாமிய சமூகமானது அப்பாஸியக்கிலா பத்தின் இறுதிக் காலப்பகுதியில் படிப்படியானதொரு வீழ்ச்சிப் பாதையினை நோக்கிச் சென்றது. இச்செல் நெறி ஒரு பாரதூரமான கட்டத்தை அடையும் அள வுக்கு மாறியது. இதனை ஆங்காங்கே தோன்றிய சில தனிமனிதர்களது முயற்சிகள் தடைக்கற்களாக நின்று அவற்றை இடைநிறுத்தின. இதன் மூலம் முழு ஐரோ ப்பாவும் அணிதிரண்டுவந்து தொடுத்த சிலுவை
56 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

றாண்டின் ஞர்கள் ಹಿ(ಆರಿ_ಹi
7ம் பளில் நான்காம் வருடம் உளUலுத்தின் பீடம்
யுத்தங்களில் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைத்த தினை எமக்குக் குறித்துக் காட்ட முடியும். அவ்வாறே தாத்தாரியப் படையெடுப்பானது இறுதியில் அந்தத் தாத்தாரியர்களையே இஸ்லாமிய மார்க்கத்தின்பால் கவரக்கூடியவாறு அமைந்தது. முஸ்லிம் உலகையே சின்னாபின்னப்படுத்தி அட்டூழியங்கள், அடாவடி த்தனங்கள் புரிந்த அந்தத் தாத்தாரியர்களை மாற்றிய இச் சம்பவம் இன்று மக்கள் மத்தியில் பேசப்படக் கூடிய ஒரு மாபெரும் அற்புதமாக மாறியது.
இதனைத் தொடர்ந்துவந்த இஸ்லாமிய சமூக ம் உட்பலவீனங்களாலும் வெளிச் சூழ்ச்சிகளினாலும் பயங்கரமான சிந்தனை, ஆயுதப் படையெடுப்புகளி னாலும் தொடர்ந்து பலவீனப்பட்டே வந்துள்ளது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த இந்நிலை இறுதியில் ஹிஜரி 8 ஆம் நூற்றாண்டின் பின்னர் பாரிய வீழ் க்சிக்கு வழிகோலியது. இதனைத் தொடர்ந்து 13ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஆரம்பித்து 14 ஆம் நூற்றாணர்டின் இறுதிவரை மங்கோலியப் படையெ டுப்பானது உக்கிரமடைந்து காணப்பட்டது. இதன் விளைவாக பாரிய அழிவுக்கும் நாசநடவடிக்கைகளு க்கும் வழிவகுத்தன. ஆனால் 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உஸ்மானியர் தோன்றி 16 ஆம் நூற் றாண்டின் ஆரம்பப்பகுதியில் சீர் கேடுகளுக்கெதிராக எதிர்பார்க்கத்தக்க பாதுகாப்பு அரணாக மாறினர். முஸ்லிம் பிரதேசங்களைப் பலமாகப் பாதுகாத்தது டன் இஸ்லாமிய வீரர்களாகவும் திகழ்ந்தனர். உஸி மானியரின் கீழ் முஸ்லிம்களின் பெருக்கம் சிகரத்தைத் தொட்டது. மூன்று கண்டங்களைச் சேர்ந்த கிட்டத்த ட்ட 28 நாடுகளை ஏககாலத்தில் ஆட்சி செய்யும

Page 68
ளவிற்கு உஸ்மானியரின் பலமும் அதிகாரமும் வியா பித்துக் காணப்பட்டது. 38உஸ்மானிய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். 18 ஆம் நூற்றாண்டு அளவில் சாம்ராஜ்யத்தின் வளர்ச்சி தேக்க நிலையை யடைந்து வீழ்ச்சிக் கட்டத்தினை எட்டியது. புற எல் லைகளில் அதன் கட்டுப்பாடு தளர்ந்ததோடு கிறிஸி தவ ஐரோப்பியர்கள் மொழி, இன, பிரதேச வாதங் களைத் தூணர்டி பல சதித்திட்டங்களை மேற்கொள் ளலானார்கள். இதனால் இச்சதித் திட்டத்தைக் கட்டுப் படுத்துவதற்கு மேலதிகமான வளங்கள் தீவிரமாகத் தேவைப்பட்டன. கி.பி 17, 18 ஆம் நூற்றாண்டு தொடுத்து வரலாற்றிலென்றும் சந்தித்திராத சிந்தனைப் படையெடுப்பிற்கும், இராணுவப் படையெடுப்புக்கும் கிலாபத் உட்பட்டது. மீளமுடியாத படுகுழியில் தள்ள ப்பட்டுவிட்டதோ என்ற அச்ச நிலைக்கு அது மிக மோசமாக வீழ்ச்சியுற்றது. இன்னும் சிலகாலம் சென்ற போது ஐரோப்பாவின் நோயாளி என்ற பெயரில் கிலாபத்தின் கேந்திரப் புள்ளியான துருக்கி பெயரி டப்பட்டு அழைக்கப்படுமளவிற்கு பின்தள்ளப்பட்டது. இறுதியாக 1924 ஆம் ஆண்டு துருக்கியின் தந்தை என வர்ணிக்கப்படுகின்ற“கமால் அதாதுர்க்” என்ற ஆட்சியாளரால் உஸ்மானியக் கிலாபத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டது.
அதையடுத்து யூதர்களின் வருகைக்காக கத வுகள் திறக்கப்பட்டன. இஸ்லாமியக் கிலாபத்திற் கெதிரான புரட்சியைக் காரணமாக வைத்து அரபு சமூகங்களை பிரித்தானியா ஏமாற்றியது. துருக்கியில் மதச்சார்பற்ற அரசு உருவாக்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கும் பிரான்சுக்குமிடையில் நடைபெற்ற “ஸைகஸி பிக்கோ ஒப்பந்தமி” தான் காலனிய நாடுகளுக்கு மத்தியில் அரபு இஸ்லாமிய உலகைக் கூறு போடுவதற்கான சிந்தனை விதைக்க ப்பட்டது எனலாம். 1917ஆம் ஆண்டு மேற்கொள்ள ப்பட்ட“போல் ஷவீக்” புரட்சியானது சடவாத மார் க்சியக் கோட்பாட்டை முதல் முறையாக நடைமுன்ற ப்படுத்தல் என்றவகையில் சோவியத் ஒன்றியத்தை உருவாக்கியது. சுமார் எழுபது ஆண்டுகள் நீடித்த “கம்யூனிஸ” ஆட்சியில் ஸ்டாலின், லெனின் போன் ற சர்வாதிகாரத் தலைமைத்துவங்கள் உருவாகின. இவர்களும் இவர்களின் ஒன்றியமும் முஸ்லிம்கள் மீதும் பொதுவாக இஸ்லாமிய உலகத்தின் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினர்.
மீளெழுச்சியும் புனர்நிர்மானமும்
முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிப்பாதையினை
வரலாற்றுக் காலங்களினூடாக நோக்கினோம். இஸ் லாத்தைப் பேசினால் அவருக்கு “அடிப்படைவாதி”

அல்லது "பயங்கரவாதி” எனப் பெயர் சூட்டி அவர் களை இழிவுபடுத்திய காலங்களை நாம் அறிவோம். ஆனால் அல்லாஹவின் நாட்டம் வேறு விதமாக இரு ந்தது. இஸ்லாம் ஒரு போதும் இறந்துவிடமாட்டாது. அது ஒரு போதும் இருந்த இடமறியாமல் ஒதுக்கித் தள்ளப்பட்டுவிடாது என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்பவேண்டும் என்ற நிலையை உணர்த்தியது. இந் தக் கருத்தினை அல்குர்ஆன்மிகத் தெளிவாக விளக் குகின்றது.
“அவன்தான் நேர்வழியையும், சத்திய மார்க் கத்தையும் கொடுத்து இவ்வுலகில் அதுவே மிகைத்த தாக இருக்கவேண்டும் என்று தனது தூதரை அனுப்பி வைத்தான” (48: 28)
இவ்வசனங்கள் இறங்கியமைக்கான பின்ன ணியை அவதானித்துப் பார்த்தால் மேற்கூறிய கரு த்தினை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். மேலும் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ நூற்றாண்டுக்கொரு முறை அந்த சமூகத்திற்காக அதன் மார்க்கத்தை புனர மைக்கக் கூடியவர்களை அனுப்பி வைக்கிறான்.” எனக் கூறினார்கள் அவரது இக் கருத்து இஸ்லாமிய சமூகம் நோயுற்று பலவீனமடைய முடியும். ஆனால் ஒருபோதும் அது இறந்துபோகமாட்டாது, அது தனது வீழ்ச்சிப் பாதையிலிருந்து மீட்சிபெறும் என்பதை இது வலியுறுத்துகின்றது.
இஸ்லாமிய சமூகம் தன் பணியை மறந்து சத்தியத்தில் இருந்து தூரமாகி அசத்தியத்தின் பால் சாய்கின்ற போதெல்லாம் அல்லாஹ இத்தகைய (முஜத்திதுரன்) புனர்நிர்மாணிகளை அனுப்பி காலத் திற்குக் காலம் நேர்வழிகாட்டுகிறான். இந்த வகையில் சென்ற இருபதாம் நூற்றாணர்டின் முன்னோடிகள், இஸ்லாமிய அறிஞர்கள் என்று பார்க்கின்றபோது முஸ்தபா கமால், முஹம்மத் அப்துஹo, ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹம்மத் அல் கஸ்ஸாலி, இமாம் ஹஸ னுல் பன்னா, மெளலானா மெளதுரதி, றவுத் றிழா, இமாம் இல்யாஸ் (றஹர்), அப்துல் காதர் அவதா, அஷ்ஷஃராவி, மஹமூத் அஸிஸவ்வாப், செய்யித் குதுப், உமர் தில்மஸானி, இமாம் அபுல் ஹஸன் அலி நத்வி, அப்துல்லாஹ இப்னு பாஸி, செய்யித் சாபிக், முஸ்தபா ஸர்கா, யூசுப் அல் காழாவி, அலி அத் தன்தாவி, முனிர் ஷபீக் போன்றோரையும் இன்னும் பலரையும் முஜத்தித் என்ற பெயர் வரிசையில் கூறி க்கொணர்டே செல்லமுடியும்.
இவர்களில் பலரைப்பற்றிக் கட்டுரைகள், பேச்சுக்களின் ஊடாக நாம் ஓரளவு அறிந்து வைத்தி ருக்கின்றோம். என்றாலும் சமூகத்தில் அதிகம் அறிமு
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 57

Page 69
கமாகாத ஆனால் இஸ்லாமிய எழுச்சிப் பாதையில் மதிப்பிட முடியாத தியாகப் பணிகளைச் செய்த எத்த னையோ மாமனிதர்கள் இருந்திருக்கின்றார்கள். இவ ர்களில் சிலர்தூக்குமேடை கூட சென்றிருக்கிறார்கள் எனவே இத்தகைய தியாக முன்னோடிகளை ஞாப கப்படுத்துவது எமது கடமையாகும்.
அல்லாமா அபுல் ஹஸனி அலி நத்வி
அபுல் ஹஸன் அலிநத்வி அவர்கள் அப்துல் ஹை, ஹைருன்னிஸா எனும் தம்பதிகளுக்கு மகனாக இந்தியாவில் “தகிஹி" எனும் கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்தார்கள். அவரது தந்தை ஒரு பன்னூலாசிரியராகவும் நத்வதுல் உலமாவின் நிருவாகியாகவும் கடமையாற்றினார். இவரது தாய் குர்ஆனை மனனமிட்டவர்.
“அலிமியானி” என்றழைக்கப்படும் மெளலா னா அபுல் ஹஸன் அலிநத்வி அவர்கள் 1924இல் அரபு மொழிக் கல்வியை அஷ் ஷெய்க் அல் யெமா னி என்பவரிடம் பெற்றுக்கொண்டு 27களில் லக்னோ பல்கலைக்கழகத்தில் இணைந்து 29இல் கற்கையை முடித்துநத்வதுல் உலமாவில் சேர்ந்து ஹதீஸி துறை யை இரண்டு வருடம் படித்தார்கள். தனது ஆரம்பத் தொழிலாக ஆசிரியத் தொழிலை தேர்ந்தெடுத்த இவர் 1934இல் நத்வதுல் உலமாவின் தப்லீர் இலக்கியத் துறை விரிவுரையாளராகக் கடமையாற்றினார்கள்.
“அர்ரிஸாலதுல் இன்ஸானியப்யா” என்ற பெயரில் 1952 ஆம் ஆண்டில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். 1958களில்“அல் மஜமஉல் இஸ்லாமி அல் இல்மி” என்ற அமைப்பை நிறுவினார். 1961 இல் நத்வதுல் உலமா தலைமைப் பொறுப்பை ஏற்று மரணிக்கும் வரை கடமையாற்றினார். 1964 இல் அனைத்திந்திய இஸ்லாமிய சட்ட ஆலோசனை அமைப்பொன்றை நிறுவி அதனூடாக கல்கத்தா, ராஜசி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவர ங்களையடுத்து அப் பகுதிகளில் இன நல்லுறவை வளர்ப்பதற்குப் பாடுபட்டார். இஸ்லாமிய ஷரீஅத் திற்கு எதிரான இந்து அரசாங்கம் பல பிரேரணை களைக் கொண்டு வந்தபோதெல்லாம் முக்கிய அரச தலைவர்களையும் சட்ட வல்லுணர்களைச் சநதித்து மார்க்கத்தை விட்டுக் கொடுக்காது போராடினார். அனைத்துலக இஸ்லாமிய இலக்கியமன்றத்தின் தலைவராகவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இஸ் லாமிய கற்கைகளுக்கான நிலையத்தின் தலைவரா கவும் செயற்பட்டார்.
இவர் ஆரம்பத்தில் அவர் ஷெய்க் இல்யாஸ்
58 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 0

(றஹர்) அவர்களுடன் தஃவா பணியில் வெகு சிரத்தையுடன் ஈடுபட்டார்கள். பின்னர் 1940 களி லிருந்து மெளலானா மெளதுரதி (றஹர்) வின் சிந்த னையால் கவரப்பட்டு அவருடன் பல பணிகளை மேற் கொண்டார். ஜமாஅத்தின் லக்னோ பகுதியின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து அல் இஹவானுல் முஸ்லிமூன் அமை ப்புடன் இவருக்கு தொடர்புகள் ஏற்பட்டு அதனு டாகவும் பல பணிகளை மேற்கொணர்டார். காதியா னியர்களுக்கெதிரான போராட்டத்தில் தனது பேச்சு, எழுத்துக்களின் மூலம் பெரும் பங்காற்றினார். மெள லான நத்வி 150 க்கும் அதிகமான நூல்களை எழுதி யுள்ளார்கள். அவற்றுள் மிகப் பிரபல்யமான நூல் “மாதா கலிர ஆலம் பீஇன்ஹிதாதில் முஸ்லிமீனி” அதாவது முஸ்லிம்களின் வீழ்ச்சியினால் உலகம் இழ ந்தது என்ன ? என்பதாகும். இவர் சென்ற நூற்றாணர் டின் இறுதிநாள் 1999-12-31 ஆம் திகதி காலமா னார்கள்.
செய்யித் ஸாபிக்
அஷ் ஷெய்க் செய்யித் ஸாபிக் அவர்கள் 1915 ஆம் ஆண்டு எகிப்தில் பிறந்தார்கள். இவர் தனது ஆரம்ப வயதுகளிலேயே“அல்இஹவானுல் முஸ்லிமூன்” இயக்கத்தில் இணைந்து கொண்டார். எனவே இவரது வாழ்வு இஸ்லாமிய அறிவுப் பாரம் பரியத்துடனும் இரண்டரக் கலந்து பரிணமித்தது. இவர் இஸ்லாமியச் சட்டத்தில் புலமை பெற்று விளங்கினார்.
நவீன காலத்தில் இஸ்லாத்தின் சட்டத்துறை க்கு இவர் ஆற்றியுள்ள பணி மகத்தானது. “பிக்ஹCஸ் ஸுன்னா’ எனப்படுகின்ற நவீனகால இஸ்லாமியச் சட்டத் தொகுப்பு நூலை தனது 25ஆவது வயதில் எழுதி வெளியிட்டார்கள். இவரது இப்பாரிய பணி காரணமாகத்தான் அவர் ஷெய்க் முஹம்மத் அல் களம் ஸாலி"சமகால சட்ட அறிஞர்களில் இஸ்லாமிய சட்ட த்துறையில் மிகவும் புலமை மிக்கவர்” என செய்யித் ஸாபிக் அவர்களைப் புகழ்ந்துரைத்தார்கள். ஏனெ னில் இந்நூல் இஸ்லாமிய உலகில் மகத்தான வரவே ற்பைப் பெற்றது. அதற்குரிய முக்கிய காரணம் என்ன வென்றால் இமாம் அவர்கள் இந்நூலின் முன்னு ரையில் குறிப்பிடுவது போல் அறிஞர்கள்முதல் சாதா ரண மக்கள் வரை இஸ்லாமிய சட்டத்தைப் படிக்க வழிவகுக்கும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ள மையாகும். அத்தோடு இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டை இலகுவாக விளக்கவென அகீதா சர் ச்சைகளை விட்டொதிங்கி"அல் அகாஇத் அல் இஸி லாமியப்யா” என்ற நூலை எழுதினார்கள். பிறகு 1948 ஆம் ஆண்டு இஹவான்களுடன் இணைந்து பலஸ் தீன் போராட்டத்தில் பங்கு கொண்டார்கள்.

Page 70
1949 முதல் 1951 ஆம் ஆணர்டு வரை கொள்கைக்காக சிறைவாசம் அனுபவித்தார். இவர் எகிப்தின் வக்ப் அமைச்சில் பணியாற்றினார். அல் அஸ்ஹர் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்கள். சவுதி “உம்முல் குறா’ பல்க லைக்கழக ஷரீஆ உயர்பீடத்திற்குதலமை தாங்கினார்.
அப்துல்லாஹ இப்னுபால, முஸதபா ஸர்கா, அலி தனிதாவி.
இஸ்லாமிய சமூகம் இம்முக்கிய மூவரையும் மிக அணிமைக் காலத்தில் இழந்துவிட்டது. அப்துல் லாஹ் இப்னுபாஸ் அவர்கள் சாதாரணமாக விவசாய, வியாபாரத்துறையில் ஈடுபாடுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவர். ரியாதில் கல்வி கற்ற இவர் சிறுவயதிலே யே குர்ஆனை மனனமிட்டார்.
ஸலபிசிந்தனையின்தலைவராகவும் ஹதீஸி, சட்டத்துறையில் பாணிடித்தியம் பெற்றவராகவும் சவூதி நாட்டின் தீர்ப்பு வழங்கும் ஒரு “முப்தி” ஆக வும் இருந்தார்கள். தனது எழுத்தாலும், பேச்சாலும் இஸ்லாமிய எழுச்சிக்கு உழைப்பவராகவும் காணப் பட்டார். அறிவியல் ஆராய்ச்சிக்கான அமைப்பினதும் முதிய அறிஞர்களது அமைப்பினதும் தலைவராகத் திகழ்ந்தார்கள் பள்ளிப்பரிபாலனத்திற்கான சர்வதேச உயர்சபையில் தலைமை வகித்து வந்தார்.
கலாநிதி அஹமத் ஸர்க்கா சிரியாவில் “ஹலப்”நகரில் 1904 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அலிதன்தாவி, முஸ்தபாஸிபாF போன்றோர்களோடு இஸ்லாத்திற்காக ஈடுபட்ட இஸ்லாமிய சிந்தனையின் முன்னோடியாகவும், வக்ப் அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் ஹலப் பிரதேச பாராளுமன்ற உறு ப்பினராகவும் காணப்பட்டார்கள். “புதிய உருவில் இஸ்லாமிய சட்டமி” என்ற இவரது பிரபல்யமான நூல் பல பல்கலைக்கழகங்களில் ஆய்வு நூலாகக் கொள்ளப்படுகிறது. கலாநிதி அவர்கள் 1999-8-3 ஆம் திகதி தனது 95வது வயதில் இறையடி சேர்ந்தா
ர்கள்.
அஷ் ஷெய்க் அலி தனிதாவி சிரியாவின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர். ஒரு சட்ட மேதை யாகவும், சிறுகதையாசிரியராகவும் பதவி வகித்தார். இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி யுள்ளார். மஹமூத் முஹம்மது ஸவ்வாபி, ஸைய்யித் குதுப் போன்றவர்களின்பரம்பரையைச் சேர்ந்த இவர் அவர்களோடு சேர்ந்து, இஸ்லாமிய எழுச்சிக்காக தம் வாழிவையே அர்ப்பணித்துப் போராடியவர். தூக்கு மேடை கண்ட அப்துல்காதிர்அவதா, உஸ்தாத்ஹசன்,

ஹcழைபி இஹவானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் இவர் பொதுச் செயலாளராகத் தெரிவானார். இவர் அனுபவமுள்ள ஒரு நீதிபதியும் நுணுக்கமான சட்டவல்லுனருமாவார். இஸ்லாமிய சட்டம், பொருளாதாரம், அரசியல் எண் பன தொடர்பான பல சிறந்த நூல்களை எழுதினார்,
உஸ்தாத் அப்துல்காதிர்அவ்தா மேற்கத்தேய சட்டத்துடன் ஒப்பிட்டு, இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின் சிறப்பை விளக்கினார். 1951 களில் சுயஸ் கால்வாயப் போராட்டங்களில் இஹர்வான்களின் ஜிஹாத் பிரிவிற்குத் தலைமைதாங்கி வழிநடாத்தினார். இவர் பொதுமக்கள் மீதான அராஜக அட்டூழியங்களு க்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார். இத்தகைய இவரது பங்களிப்புக் காரணமாக சகிக்க முடியாத அரச தலை மைகள் இம்மாமனிதருக்கு தொடர்பேயில்லாத குற்ற ங்களை அவர் மீது சுமத்தி தூக்கிலடப்பட்டார். என வே அல்லாஹீவின் பாதையில் 1953-12-8ஆம் திக தி ஷஹிதானார்.
உஸ்தாத் உமர் தில் மஸானி.
அல்ஜீரியாவில் தில்மஸானி என்ற கிராமமே அவர் பிறந்த, அவரது மூதாதையர்கள் வாழ்ந்த நில மாகும். சிறுவயது முதல் இமாம் இப்னு தைமியா, இமாம் கஸ்ஸாலி போன்றோரின் சிந்தனைகளைப் படித்து வந்துள்ளார்கள்.
சட்டத்துறையில் கல்விகற்ற இவர் பிற்கால த்தில் மிகப் பிரபல்யமான வழக்கறிஞராக மாறினார். அவர் 1940 களில் அல் இஹவானுல் முஸ்லிமூன் இயக்கத்தில் சேர்ந்து கொண்டு இமாம் ஹஸனுல் பன் னாவுடன்இணைந்து சீர்திருத்த முயற்சிகளில் தீவிரப் பங்கெடுத்தார். நாஸரின் காலத்தில் 20 வருடகாலம் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
இஹற்வான்இயக்கத்தின்மூன்றாவது தலைவ ராக இருந்த இவர் மிகத் திறமையான தலைவராகக் கருதப்பட்டார். மிக இக்கட்டானநிலையில் தலைமை க்கு வந்ததில்மஸானி அவர்கள் குறுகியதொரு தசா ப்த காலத்திலேயே இஹவான்இயக்கத்தை எகிப்தின் அரசியலில் தவிர்க்கமுடியாத சக்தியாக மாற்றுவதில் வெற்றிகணடார். அதுமட்டுமன்றி இயக்கத்தை சர்வ தேசமயப்படுத்துவதில் இவர் பெற்ற வெற்றி குறிப்பி டத்தக்கது.
கலாநிதி முஸ்தபா அஸ்ஸிபாஈ.
சிரியாவிலுள்ள “ஹிம்ஸி” பிரதேசத்திலே அறிவியல்துறையில் முன்னோடியாய்த் திகழ்ந்த ஒரு குடும்பத்தில் கலாநிதிஅவர்கள் பறந்து வளர்ந்தார்கள்
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 59

Page 71
1915 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1964-10-03 சனிக் கிழமையன்று இறையடி சேர்ந்தார்கள் இவர் தனது தந்தையுடன் பல நாட்டு அறிஞர்கள் கலந்து கொள் ளும் கல்விசார் அமர்வுகளுக்கெல்லாம் சென்று வந்து ள்ளார்கள். சிரியா மீதான பிரான்சிய ஆக்கிரமிப்புக் கெதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பல ஆர்ப் பாட்டங்களை முன்னெடுத்துச்சென்றார்கள். இதனால் போராட்ட வாழ்வில் அனுபவத்தைப் பெற்றார்.
இவர் 1933ஆம் ஆண்டு எகிப்து அஸ்ஹர் கலாசாலைக்குச் சென்று, அங்கே அவர் எகிப்திய சகோதரர்களோடு இணைந்து பிரித்தானிய ஆக்கிர மிப்புக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொணி டார். பின் 42இல் சிரியாவில் ஜமாஅதுல் இஹவா னில் முஸ்லிமீன்நிறுவப்பட்டது. இதனால் இதற்குரிய சிரியாவின் பிரதிநிதியாக 1945ஆம் ஆண்டு ஏகம னதாகத் தெரிவானார். 1949இல் “அல் - மனார்” பத்திரிகையை ஆரம்பித்த இவர் சிரிய பல்கலைக்க ழகத்தில் ஷரீஆப்பீடத்தைப் புதிதாக ஆரம்பிப்பதிலும் சமகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லக் கூடிய வகையிலும் சன்மார்க்க சட்டக்கலைக் களஞ்சியம் ஒன்றை வடிவமைப்பதிலும் பாடுபட்டார். 1949 க்குப் பின் கலாநிதி முஸ்தபா லிபாஈ டமஸ்கஸில் ஜனநா யக பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்ப ட்டார். பின் 1950இல் சிரிய பல்கலைக்கழக சட்ட க்கல்லூரி ஆசிரியராக நியமனம் பெற்றார்.
பேரறிஞர் நாஸிருத்தீன அல்பானி.
பேரறிஞரும் ஹதீஸ்துறை விற்பன்னருமான அவர் ஷெய்க் நஸ்ருத்தீன் அல்பானியவர்கள் 1914 ஆம் ஆண்டு அல்பேனியாவில் பிறந்தார்கள். இவர் தனது தந்தையுடன் சிரியா வந்து ஷெய்க்கத்தாளிடம் கல்விகற்றார்.
இவர் தன்னை முழுமையாக அறிவுத் துறை க்கு அர்ப்பணித்து, ஹதீஸ்துறையில் பாரிய பங்களிப்பு ச் செய்து முஸ்லிம் சமூகத்திற்கு அளப்பரிய சேவை யாற்றியுள்ளார்கள். அன்னார் எழுதிய நூல்களின் எணர்ணிக்கை குறிப்பாக ஹதீஸ்துறையில் 100 எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. அல்குர்ஆன், அஸ் ஸுன் னா என்பவற்றின் பால் முஸ்லிம்கள் மீள வேண்டு மென்றும் மத்ஹப் வெறியின் பிடியிலிருந்து விடுபட வேண்டுமென்றும் மக்களுக்கு வலியுறுத்தினார். தான் சரி எனக் கண்டதை எவ்விதத் தயக்கமுமின்றி எடுத் துரைத்தார். கடிகாரம் திருத்தும் தொழிலை செய்து வந்த இவர் தனது 85 ஆம் வயதில் 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி இறைபாதை யில் மரணித்தார்கள்
60 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

எழுச்சியினர் வெளிப்பாடும் விளைவும்
இத்தகைய மாமனிதர்களது மறைவு, அவர் களது தியாகம், பணி சாதாரணமானவைகளல்ல. பல அழுத்தங்களும் பல சவால்களும் இருந்த போதும் கூட இந்த சமூகம் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளது. குறிப்பாக அந்நிய காலனிய ஆதிக் கத்தை விட்டும் விடுதலை பெறுவதற்காக நிகழ்த்திய போராட்டம் வெற்றிகண்டதைக் குறிப்பிடலாம். என வே இவற்றின் விளைவாக ஓர் இஸ்லாமிய எழுச்சி மேற் கிளம்பியுள்ளதை எமக்கு அவதானிக்க முடிகி ன்றது. இதனால் முஸ்லிம்களின் சிந்தனைச் செல் நெறியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்நிய சிந்த னைப் படையெடுப்பின் செல்வாக்கிலிருந்து முஸ்லி மிகள் விடுபடத்துவங்கியுள்ளதோடு எல்லா விவகார ங்களிலும் இஸ்லாமிய அடிப்படையில் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளமை அவதானிக்கப்படுகின்றது. முஸ் லிம்கள் மத்தியில் இஸ்லாம் பற்றி நிலவிவந்த குறை கணிணோட்டங்கள் நீங்கி, இஸ்லாம் என்பது வாழி வின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டும் ஓர் சம் பூரண வாழ்க்கைத்திட்டமாகும் என்ற சிந்தனை அவர் கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.
இதன் விளைவால் அல் குர்ஆனையும், அஸ் ஸoன்னாவையும் பரவலாகப் படிக்கவும், ஆரா யவும் முற்பட்டுள்ளார்கள். முஸ்லிம்கள் இதற்காக உலகின் மொழிகள் அனைத்திலும் அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புகளின் விளக்கவுரைகள், இஸ்லா மிய நூல்கள் தொடர்ந்து வெளிவருகின்றமையைக் காணமுடிகின்றது. மேலும் இஸ்லாமியச் சிந்தனைப் போக்கின் விளைவாக அறிவியற் கலைகள் இஸி லாமிய மயப்படுத்தும் ஒரு முயற்சியும் இஸ்லாமிய அறிஞர்களாலும், புத்திஜீவிகளாலும் சில காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல எழுத்தாளர் கள் இஸ்லாமிய அடிப்படையில் எழுத நிர்ப்பந்த த்திற்குட்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இஸ்லாத்தின் ப்ால் நெருங்கியுள்ளனர். சிலர் முற்றாக இஸ்லாத்தில் நுழைந்துள்ளனர். இன்றைய இஸ்லாமிய எழுச்சியின் வெளிப்பாடாக இஸ்லாத்தினதும், முஸ்லிம் உம்ம த்தினதும் சமூக, பொருளாதார அரசியல் நலன்க ளைக் கவனிப்பதற்கான பல்வேறு சர்வதேச அமைப் புக்கள் தோன்றி, காத்திரமான பணிகளை மேற்கொ ண்டு வருகின்றது. உசாத்துணை நூல்கள்:
மஜல்லதுல் முஜ்தமஃ (இதழ் - 1350, 1351, 1334) வாகிஉனா அல் முஆஸிர் (முஹம்மத் குத்ப்) ஜரீததுர் ராஇத் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட் - 1999) இஸ்லாமிய சிந்தனை (மலர் - 20, 22) மீள்பார்வை (இதழ் - 27, 37)

Page 72
இஸ்லாமியப் பொரு ஒழுக்க மாண்புகள்
எம் ஜி ஷஹற்மி
இஸலாமியப் பொருளாதாரக் கொள்கை அல்குர்ஆன், அஸ்-ஸுன்னாவின் அடிப்படையில் பெறக்கூடிய ஒரு கண்டுபிடிப்பே தவிர அதுவொரு புது உருவாக்கமல்ல. ஆனால் இன்று உலகில் காணப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மனி தர்களின் சிந்தனையால் உருவாக்கப்பட்டவைக ளாகும். மேலும்இஸ்லாமியப் பொருளாதாரக் கொள் கைகள் முழு இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் காண ப்படும் ஒரு பகுதியே தவிர முழு வாழ்க்கைக் கொள் கையுமல்ல. அதாவது ஏனைய பொருளாதாரக் கொள்கைகள் போன்று பொருளாதாரத்தை தனியாக நோக்கக்கூடியதாக இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையைக் கருதுவது ஒரு தவறான கணிணோ பட்டமாகும். மாறாக இஸ்லாமிய நம்பிக்கை, வணக்க வழிபாடு, குற்றவியல் சட்டம், குடும்ப அமைப்பு, அரசியல் போன்றவற்றுடன்இணைத்தே அது நோக் கப்பட வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய நம்பி க்கைக்கும் இஸ்லாமியப் பொருளாதாரத்துக்கும் இடையில் காணப்படும் தொடர்பு விசாலமானது. அதாவது செல்வம் அல்லாஹவுக்கே சொந்தம் என்ற கருத்து இறைநம்பிக்கையோடு தொடர்புபட்டது. அவ்வாறே இஸ்லாமிய வணக்க வழிபாட்டுக்கும் இஸ்லாமியப் பொருளாதாரத்துக்குமிடையில் பாரிய தொடர்புகள் காணப்படுகின்றன. இத்தொடர்பு பொரு ளாதாரத்தை இலட்சியமாகக் கொள்ளும் நிலை நீங்கி, பொருளாதாரத்தில் காணப்படும் கடுமையான போட் டி நிலையைத் தணிக்கக் கூடிய ஒரு முக்கியமான சாதனமாகத் திகழ்கின்றது. அவ்வாறே இஸ்லாமியப் பொருளாதாரம் இஸ்லாத்தின் அனைத்துத் துறை களோடும் பின்னிப் பிணைந்ததாகக் காணப்படுவது அதன் சிறப்பம்சமாகும். இதைத்தான் நவீன கால அறிஞர்களில் ஒருவரான மெளலானா மெளதுரதி

ளாதாரத்தின்
அஹ்மத் நான்காம் வருடம் உஸ்லுத்தின் பிடம்
(ரஹர்) அவர்கள் இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் “பாரியதோர்இயந்திரத்தின் உதிரிப் பாகங்களை அத னுடன் இணைத்து இயக்கினால் மாத்திரமே அதன் முழுமையான செயற்பாட்டை எம்மால் பெற முடியு ம். மாறாக அவைகளைத் தனியாக இயக்க நாடுவது ஓர் அர்த்தமற்ற செயலாகும்.”அவ்வாறேதான் இஸ் லாம் எனும் முழுமையான கொள்கையில் இருந்து பொருளாதாரத்தை மாத்திரம் வேறாக நோக்காமல், ஏனைய அனைத்துத் துறைகளுடன் ஒருங்கிணை ந்ததாகப் பூரணமாக நோக்குவதே மிகவும் பொருத் தமாகும். அத்தோடு இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை ஏனைய பொருளாதாரக் கொள்கைக ளுடன் ஒப்பிடுகையில பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகக் காணப்பகின்றது. அவற்றைப் பின்வ ருமாறு சுருக்கமாக விளக்கலாம்.
தெய்வீகத் தனிமை வாய்ந்தது.
இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடு தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகத் திகழ்கின்றது. அதாவது ஏனைய அனைத்துப் பொருளாதாரக் கொள்கைகளும் சாதாரண மனிதர்களின் சிந்தனைக ளிலிருந்து தோன்றியவைகளாகும். ஆனால் இஸ் லாமியப் பொருளாதாரக் கொள்கையோ மேன்மை தாங்கிய இறைவனிடமிருந்து பெறப்பட்ட ஒரு தெய் வீகக் கொள்கையாகக் காணப்படுகின்றது. எனவே மனிதன் பொருளாதாரத்தின்மூலம் இறை திருப்தியை அடைவதையே நோக்காகக் கொள்ள வேண்டும். மனிதன் உருவாக்கிய பொருளாதாரக் கொள்கை களில் பலவீனங்கள் வெளிப்படுகின்றன. ஆனால் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையில் அத்த கைய பலவீனங்களுக்கும் குறைகளுக்கும் பதிலாக ஞானம் நிறைந்ததாகவும் எக்காலத்திற்கும் பொருந்த க்கூடியதாகவும் காணப்படுகின்றது.
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 61

Page 73
மானிடத் தன்மை வாய்ந்தது.
இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை மானிடத்தன்மை வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. மனிதன் உலகில் அவனது பொறுப்புகளைச் சிறந்த முறையில் நிறைவேற்றி அவனது உயர் இலட் சியங்களை அடைந்து கொள்வதற்கு உதவி புரியக் கூடியதாக இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை காணப்படுகின்றது. அத்தோடு இஸ்லாமியப் பொரு ளாதாரக் கொள்கை மனிதனின் இயல்பான தேவை களையும் அவனிடத்தில் காணப்படும் பலவீனங் களையும் சிறந்த முறையில் கருத்திற் கொள்ளக் கிடியதாகக் காணப்படுகின்றது.
பூரணத்துவம் வாய்ந்தது.
இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை பூரணத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இதைப் பற்றி மேன்மை மிக்க அல்லாஹி தனது அருள்மறை அல்குர்ஆனில் சூறா மாயிதாவின் மூன்றாவது வசனத்திலே தெளிவுபடுத்துவதை எம்மால் அறியமுடியுமாக இருக்கின்றது. “இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பூரணமாக்கி வைத்துவிட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி விட்டேன் இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொணர்டேன்.” என வே எவ்வாறு இஸ்லாம் மார்க்கம் பூரணத்துவமானது என்று குறிப்பிட்டானோ அதே போன்று மார்க்கத்தின் ஒரு பகுதியான இஸ்லாமியப் பொருளாதாரமும் பூரணத்துவம் வாய்ந்ததாகும். அதேவேளை ஏனைய பொருளாதாரக் கொள்கைகள் மனித ஆக்கமென் பதால் குறையுடையதாகவும், நாளுக்கு நாள் மாற்ற த்தை வேண்டி நிற்கக்கூடியதாகவும் காணப்படுகி ன்றன.
சமநிலை வாய்ந்தது.
இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை சமநிலைத்தன்மை வாய்ந்ததாகும். ஏனைய பொரு ளியல் சிந்தனைகளைப் பொறுத்த வரையில் முத லாளித்துவம் தனி மனித நலன்களை மாத்திரமே கருத்திற் கொள்கின்றது. சோஸலிஸம் சமூக நலனை மாத்திரம் கருத்திற் கொள்ளக் கூடியதாகக் காண ப்படுகின்றது. இத்தகைய இரண்டு தீவிரப் போக்கு களைக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளுக்கு மத்தியில் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை தனி மனித, சமூக நலன்களைக் கருத்திற் கொள் ளக்கூடிய ஒரு சமநிலைத் தன்மை வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
62 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் O

நிலையான தன்மையும் மாறும் தனிமையும் வாய்ந்தது.
இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை ஒரே நேரத்தில் நிலையான தன்மையையும், மாறும் தன்மையையும் கொண்டுள்ளது. அதாவது பொரு ளாதாரக் கொள்கையின் அடிப்படைகள் நிலையான தன்மை கொண்டதாகவும் அதன் நடைமுறைப் பகுதி, (இஜதிஹாத் பகுதி) மாறும் தன்மை வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது. பொருளாதாரம் சார்நடவடிக்கை களை மனிதன் காலத்திற்குக் காலம் உருவாக்கிக் கொள்கிறான் என்பதை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அப்பொருளாதார நடவடிக்கைகளில் எவை அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்க முடியாதவை என்பதை இறை சட்டம் தலையிட்டு திருத்தியமை க்கின்றது.
நடைமுறைச் சாத்தியமானது.
இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை யாதார்த்த பூர்வமானதாகக் காணப்படுகின்றது. ஏனைய பொருளாதாரக் கொள்கைகள் போன்று கற்பனையுலகில் சஞ்சரிக்கக்கூடியதாக இஸ்லாமியப் பொருளியல் சிந்தனை அமையவில்லை. மாறாக நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய யதார்த்த பூர்வமான கொள்கையாகக் காணப்படுகின்றது. பல் வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை மனிதனின் ஆன்மீகத் துறையை நெறிப்படுத்தி, ஒழுக்க ரீதியான பயிற் சிகளின் ஊடாக உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கின்றது. ஆனால்நவீன பொருளாதாரக் கொள் கைகள் மனிதனின் ஆன்மீக ஒழுக்க நிலைப்பா டுகளை முற்றாக நிராகரிக்கின்றன. இந்த வகையில் மனிதனின் பொருளாதாரத் தேவைகள் இரண்டு நிப ந்தனைகளின் அடிப்படையில் நிறைவு செய்யப்பட வேண்டும் என இஸ்லாம் வரையறை செய்கின்றது.
1. இஸ்லாமிய ஷரீஆவால் அனுமதிக்கப்பட்ட தாகப் பொருளாதாரம் அமைய வேண்டும்.
2. பொருளாதாரததின்மூலம் மக்களுக்குத்தங்கு
விளையக்கூடாது.
இவ்விரு நிபந்தனைகளும் இஸ்லாமியப் பொருளாதாரத்தின் உற்பத்தி, பங்கீடு, வருமானம், வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் பிரதிபலிப்ப தைக் காணலாம். (இஸ்லாத்தில் இவை ஒவ்வொரு துறையும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.) இஸ்லாமி யப் பொருளாதாரக் கொள்கையல் வர்த்தகத்துறையல் எவ்வாறு பரதிபலிப்பது என்பதைலுரளவு நோக்குவோம்

Page 74
முதலாவது நிபந்தனையைப் பொறுத்த வரையில் இஸ்லாத்தின் மனித உபயோகங்களுக்காக அங்கீகாரம் பெற்ற வியாபார முறைகளைச் செய் வதில் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளமை கவ னிக்கத்தக்கது. உதாரணமாக:- கூட்டுப்பங்காணிமை (ஒரு பொருளாதார முயற்சியில் ஒருவரது மூலத னமும் இன்னொருவரது உழைப்பும் இடப்பட்டு விகிதசமன்களில் இலாப நட்டத்தை ஏற்றுக்கொள்ளும் முறைமையைக் குறிக்கும்) கூட்டுப்பங்குடமை (ஒரு பொருளாதார முயற்சியில் பல பங்குதாரர் சேர்ந்து தத்தமது மூலதனத்தை ஒன்றிணைத்து விகிதசம அடிப்படையில் இலாப நட்டங்களை ஏற்றுக்கொ ள்ளும் முறைமையைக் குறிக்கும்.)
அதேபோன்று அனுமதிக்காத நடவடிக் கைகளை இஸ்லாம் தடை செய்துள்ளது. (அனு மதிக்காகதவைகள் பற்றிய விபரம் பின்னால் நோக்கப்படுகின்றது.) எனவே அங்கீகாரமற்ற பொரு ளாதார நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்தே ர்ச்சியாகக் கையாளும்நிலை இறைமறுப்புக்கு இட்டுச் செல்லக்கூடியதாகக் காணப்படுகின்றது. ஆனால் இஸ்லாமிய ஷரீஆவில் அனுமதித்த வியாபார நடவ டிக்கைகளையும், அனுமதிக்காத வியாபார நடவடிக் கைகளையும் ஒப்பிட்டு ஆராயும்பொழுது, அனுமதி த்தவைகளின் பகுதி விசாலமானதாகக் காணப்ப டுகின்றது.
இஸ்லாம் எதிர்பார்க்கக்கூடிய இரண்டாவது நிபந்தனை மக்களுக்கு தீங்கு செய்யும் வியாபார நடவடிக்கைகள் அதனுடன் தொடர்புபடும் அனைத்து அம்சங்களையும் தடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது. அதனாலேதான் ரஸ்ல்ெ (ஸல்) அவர்கள் “நிச்சய மாக அல்லாஹவும் அவனது தூதரும் மதுபானம், இறந்தவை, பன்றி, சிலைகள் போன்றவற்றை விற்ப னை செய்வதை ஹராமாக்கியுள்ளார்கள்.’ (புகாரி, முஸ்லிம்) இன்னுமொரு தடவை நபி (ஸல்) அவ் ர்கள் “நிச்சயமாக அல்லாஹர் ஒரு பொருளை ஹரா மாக்கினால் அதனுடைய பெறுமதிய்ையும் ஹராமா க்குகின்றான்.” என்று கூறினார்கள்.
இஸ்லாம் தீமையான பொருட்களைத் தடுத் தது போன்று நண்மையும் தீமையும் கலந்துள்ள பொரு ட்களில் தீமைகள் அதிகரிக்கும் போது அவற்றையும் தடைசெய்துள்ளது கவனிக்கத்தக்கதாகும். பின்வரும் திருவசனத்தில் அல்லாஹ இதனைக் குறிப்பிடு கின்றான். “நபியே! மதுவையும் சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அதற்கு நீர் கூறுவீராக அவ்விரண்டிலும் பெரும் பாவமும் மனி தர்களுக்கு சில பலன்களுமிருக்கின்றன. மேலும் அவ்

விரண்டின் பாவம் அவ் விரணர்டின் பலனை விட மிகப் பெரியதாகும்.” (2: 219)
நன்மையும் தீமையும் கலந்த பொருட்களை இவ்வாறு விளக்கிய திருமறை மதுபானத்தையும், சூதாட்டத்தையும் ஹராமாக்கியுள்ளது. எனவே இவைகள்இஸ்லாமிய அடிப்படையிலான வியாபார நடவடிக்கைளின்போது தவிர்க்கப்படுதல் வேண்டும். இவ்வாறு வியாபார நடவடிக்கைகளில் காணப்படும் ஒழுக்கங்களைப் போதித்த இஸ்லாம்; வியாபாரி கொண்டிருக்கவேண்டிய ஒழுக்க விழுமியங்களையும் தெளிவாக வரையறை செய்துள்ளது.
இஸ்லாம் வியாபாரிக்குப் போதிக்கின்ற ஒழுக்க மாணர்புகள்
வர்த்தக மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரி பல்வேறு ஒழுக்க விழுமியங் களைக் கைக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில் ஒரு வியாபாரி கொடுக்கல், வாங்கல் நடவடிக்கையில் உணர்மையாளனாகவும், நேர்மையாளனாகவும் திகழ வேண்டுமென்பதை முக்கிய ஒழுக்க மாணிபாக இஸ் லாம் போதிப்பதை எமக்கு அறியமுடிகின்றது. ரசூல் (ஸல்) அவர்கள் நேர்மையான வியாபாரி பற்றிக் கூறும்போது “வாய்மை நிறைந்த, நம்பிக்கையான வியாபாரி மறுமையில் நபிமார்களோடும், உணர்மை யாளர்களோடும், ஷமஹதாக்களோடும் இருப்பார்” (திர்மிதி) என்று நன்மாராயம் கூறினார்கள். இதை வரலாற்றில் நடைபெற்ற ஒரு சம்பவம் தெளிவுப டுத்துகின்றது. இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய சட்ட மேதை அபூஹனிபா புடவை வியாபாரம் மேற்கொணி டதாக வரலாறு குறிப்பிடுகின்றது. அவர் ஒரு தடவை வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்தில அவரது ஊழி யர் ஒருவர் பழுதடைந்த ஒரு புடவைச் சுருளை நல்ல பொருட்கள் விற்கும் விலைக்கு விற்றுவிட்டபோது கவலையடைந்த இமாம் அவர்கள் பொருளைக் கொள்வனவு செய்த அம்மனிதரை அழைத்துவரச் செய்து அப் புடவைச் சுருளை விரித்து அதிலுள்ள பழுதடைந்திருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி ஒரு தொகை மீளச் செலுத்தியதாக வரலாறு குறிப்பிடு கின்றது. எனவே இந்தப் பண்பை ஒரு வியாபாரி எடுத்து நடப்பதோடு இஸ்லாம் கூறும் விட்டுக் கொடு த்தல், தாராளத்தன்மையுடன் நடத்தல் என்ற பணிபுக ளையும் கைக்கொள்ளவேணடும். எனவே ஒரு வியாபாரி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் நுகர்வாளர்களுடனும், கடனைத் தர முடியாத கடனா ளிகளோடும் விட்டுக்கொடுத்து தாராள மனதுடன் நடந்துகொள்வதை இஸ்லாம் வரவேற்கின்றது. இதை
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 63

Page 75
த்தான் அல்லாஹர் திருமறையில் குறிப்பிட்டுக் காட் டுகின்றான். “கடன்பட்டவர் அதனைக் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பித் தர முடியாதவாறு அவர் கஷ் டத்தையுடையவராகக் காணப்பட்டால் கடனை அடைக்கும் வசதியேற்படும் வரை எதிர்பாத்திருத்தல் வேண்டும். மேலும் அதன்நன்மை பற்றி நீங்கள் அறி கிறவர்களாக இருப்பின் அதைக் கடன்பட்டவருக்கு நீங்கள் தருமம் செய்துவிடுவது உங்களுக்கு மிகச் சிறந்தது.” (2:280)
ரசூல் (ஸல்) அவர்களும் ஒரு வியாபாரி நுகர்வாளனுக்கு நன்மை செய்வதற்காக விட்டுக் கொடுத்து தாராளத் தன்மையுடன் நடந்து கொள் வதை போற்றக் கூடியவராகக் காணப்பட்டார்“யார் ஒரு முஸ்லிமுக்கு நன்மை செய்வதற்காக வியாபார உடன்படிக்கையை முறித்து உதவி செய்கின்றானோ அல்லாஹி அவனுடைய துன்பத்தை நீக்கிவிடுகி ன்றான்.” (அபூதாவுத்) எனவே ஒரு நேர்மையான வியாபாரி விட்டுக்கொடுத்து தாராள மனதுடன் நட ந்து கொள்வதோடுதான் மேற்கொள்ளக்கூடிய வியா பாரநடவடிக்கைகளைக் கச்சிதமாக செவ்வனேநிறை வேற்றும்படி இஸ்லாம் மார்க்கம் ஏவுகின்றது. ஒரு தடவை நபி (ஸல்) குறிப்பிட்டார்கள். “உங்களில் ஒருவர் ஒரு செயலை செய்தால் அதைத் திறப்படச் செவ்வனே செய்வதை அல்லாஹ விரும்பக்கூடிய வனாக இருக்கின்றான்” (பைஹகி)
எனவே ஒரு வியாபாரி இந்நற்பணிபுகளை எடுத்து நடக்கும்போது அவனிடத்தில் காணப்படும் அநாகரீகமான பணிபுகள் நீங்கி, இஸ்லாம் எதிர்பா ர்க்கக்கூடிய உணர்மையான, நேர்மையான வியா பாரியாக மாற முடிவதோடு இஸ்லாமியப் பொரு ளாதாரம் எதிர்பார்க்கும் உயரிய இலட்சியத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் துணை புரியக்கூ டியவனாகவும் மாறுகிறான். இஸ்லாம் தனது பொரு ளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியான வியாபாரத் துறையிலே அதன் முக்கிய பாத்திரமாக விளங்கும் வியாபாரி தொடர்பாக பல ஒழுக்க மாணிபுகளைப் போதித்தது போன்று அதன் உற்பத்தி, பங்கீடு, வரு மானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இவ் விழுமியங்களை வலியுறுத்துகின்றது. அத்தோடு மேற் கூறிய பணிபுகளுக்குப் பாதகமான நடவடிக்கைகள் எவை என்பதையும் இஸ்லாமியப் பொருளியல்
சிந்தனை விளங்குகின்றது.
இஸ்லாம் தடுக்கக்கூடிய பொருளாதார நடவடிக்கைகள் 1. வட்டி:
இஸ்லாம் தடுக்கக்கூடிய மிக மோசமான பொருளாதார நடவடிக்கையாக வட்டி அமைந்துள் ளது. அதாவது இஸ்லாம் வியாபாரத்தை ஹலாலா
64 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ 3--

க்கி மனிதனுக்குச் சுதந்திரமாக இயங்க வழிவகை ஏற்படுத்திவிட்டு, மனிதனுக்குத் தீங்கு செய்யக்கூடிய இஸ்லாமியப் பொருளாதாரத்தின் ஒழுக்க மாணர்பு களைப் பாதிக்கக்கூடிய வட்டியை ஹராமாக்கி உள் ளது. அல்லாஹி இதனைப் பற்றிக் குறிப்பிடும்போது “அல்லாஹ வியாபாரத்தை அனுமதிக்கின்றான். வட் டியைத் தடை செய்கின்றான்.” (2:275) ஒரு மனி தன் எந்தவித உழைப்புமின்றி பணத்தைக் கொடுத்து பணத்தை உழைக்கும் நடவடிக்கை வட்டியாகக் கருத ப்படுகின்றது. எனவே வட்டி ஏனைய மனிதர்களின் பணத்தைப் பிழையான முறையில் உரிமையில்லாமல் உணர்ணக்கூடியதாகக் காணப்படுவதால் அல்குர்ஆன் வட்டியெடுப்பவரின்நிலையை மிகப் பயங்கரமாகச் சித்தரித்துள்ளது. “யார் வட்டியைப் புசிக்கின்றாரோ அவர் பைத்தியம் பிடித்த ஷைத்தான் போல எழுப் பப்படுவார்” (2 : 275) என குறிப்பிடுகின்றது. மேலும் நபி (ஸல்) அவர்கள் வட்டியைப் பற்றிக் குறிப்பிடும்போது “நிச்சயமாக அல்லாஹி வட்டி யெடுத்துச் சாப்பிடுபவரையும், அதைச் சாப்பிடக் கொடுப்பவரையும், அவி வட்டியைப் பதிவு செய்ப வரையும் அதற்குச்சாட்சியாகவும் உடந்தையாகவும் இருப்பவர்களையும் சபித்துள்ளான்.’ (புஹாரி, முஸ்லிம்) எனக் கண்டித்துள்ளார்கள். எனவே வட்டி யானது மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சக் கூடிய பெரும் அநீதி என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.
2. பதுக்கல்
இஸ்லாமியப் பொருளாதார நடவடிக்கைக ளில் தடுக்கப்படவேண்டிய, மக்களுக்குத் தீங்கு செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையாகப் பதுக்கல் நடவடிக்கை கருதப்படுகின்றது. ஏனெனில் பொரு ட்களை உற்பத்தி செய்பவர்கள் அல்லது விற்ப னையாளர்கள் கூடுதலான இலாபத்தைச் சமிபா தித்துக்கொள்ளும் நோக்கில் சந்தையில் காணப்படும் பொருட்களுக்குச் செயற்கையானதட்டுப்பாடுகளை ஏற்படுத்தி பொதுமக்களின் நலனைப் பாதிக்கச் செய் யும் நடவடிக்கையாக பதுக்கல் அமைந்துள்ளது. என வேதானி ரகுல (ஸல்) அவர்கள் பதுக்கக் கூடியவனைப் பற்றிக் கூறும்போது “பொருட்களைப் பதுக்கக்கூடியவன் தவறிழைத்தவன்.” எனக் கூறினா ர்கள். இந்த ஹதீஸிலே நபி (ஸல்) அவர்கள் ‘காதி உ’ (தவறிழைத்தவன்) எனக் குறிப்பிடப்படுவதைக் காணலாம். தவறிழைத்தவன்’ என்ற கருத்தில் சூரத் துல் கஸஸில் 8வது வசனத்தில் பிர்அவ்ன், ஹாமான் அவர்களுடைய படையினரையே குறிப்பிடுவதை அவதானிக்கலாம். இந்த வகையில் பதுக்கல் நடவ டிக்கை மிக வெறுக்கத்தக்கதாகும். ஏனெனில் பதுக்கல் நடவடிக்கை மக்களுக்கு தீங்கு செய்யக்கூடியதாக வும், பொருளாதாரத்தின் ஒழுக்க மாணிபுகளை

Page 76
தகர்த்தெறியக் கூடியதாகவும் அமைந்துள்ளது. மக்களுக்குத் தீங்கு ஏற்படுத்தாத முறையில் பதுக்கல் நடவடிக்கை அமைவதை இஸ்லாம் அங்கீகரித்து ள்ளது. ஒரு முறை உமர் (ரழி) கூறினார்கள் உணர் மையிலேயே இறை நம்பிக்கையுள்ள ஓர் உற்பத் தியாளன் மிகை இலாபம் பெறுவதற்காக இத்தகைய இழி செயலைச் செய்ய மாட்டான். இறைவன் திரு மறையில் கூறுகின்றபடி “நீங்கள் உணர்மையிலேயே விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால் உங்கள் தொழிலில் இலாபகரமாக அல்லாஹமீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும்” (11:86) என்ற திருவசனத்திற்கேற்ப சொற்ப இலாபத்துடன் திருப் தியடைந்து விடுவார்கள். எனவே பொருளாதார த்தில் பதுக்கல் நடவடிக்கை அதன் ஒழுக்கப் பெறுமா னங்களைப் பாதிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
3. அளவை நிறுவையில் மோசடி:
மக்களுக்குத் தீங்குசெய்யக்கூடிய பொருள தாரத்தின் உயர் ஒழுக்கப் பணிபுகளைப் பதிக்க க்கூடிய ஒரு செயலாகவே அளவை நிறுவை- மோ சடி காணப்படுகின்றது. இது இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டுள்ள வியாபார நடவடிக்கை களில் சர்வசாதாரணமாக நிகழ்கின்றது. அல்குர் ஆனில் “நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள் நிறுத்தால் சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது மிக்கநல்லது அழகான பலனைத் தருமி”(17:17) என்று குறித்துக் காட்டப்பட்டிருக்கின்றது. மேலும் ‘அளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்’ (83:01) எனவே வியாபாரத்துறையில் நுகர்வோரின் நலன்களை மிகப் பெரிய அளவில் பாதி க்கும் ஒரு நடவடிக்கையாக இம்மோசடி அமைந்தி ருக்கின்றது. உற்பத்தியாளனுக்கும், நுகர்வோனுக்கும் ஏற்படுகின்ற பரஸ்பரத்திருப்தி இந்நடவடிக்கையால் மறைந்து செல்கின்றது.
4. ஏமாற்றுதலும் கலப்படமும்:
மனித நலனைப் பாதிக்குமென்ற அடிப்ப டையில் இதனையும் இலலாம் தடைசெய்திரு க்கின்றது. தரம் கூடிய பொருட்களோடு தரம் குறைந்த பொருட்களைக் கலந்து விற்பது ஒரு துரோகச் செய லாகக் கணிக்கப்படுகின்றது. இது உணவுப் பொரு ட்களில் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் நுகர்வோன் பொருளாதார ரீதியில் பாதி க்கப்பட்டுச் செல்வதோடு சுகாதார ரீதியாகவும் பாதி க்கப்படுகின்றான். ஒரு மனிதனின் பொருளாதார நலன்களைப் பாதிப்படையச் செய்வதும் அவனது உடலாரோக்கியத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய தவறுகளாகும். ஏமாற்றல் என்ற வகையில்

இஸ்லாம் இதைக் கண்டிருக்கின்றது. “ஒருவன் ஒரு பொருளை விற்கின்றான். ஆனால் அதிலுள்ள குறை யை அவன் சுட்டிக்காட்டவில்லையென்றால் அது அனுமதிக்கப்பட்ட செயலல்ல. ஒருவன் பொருளி லுள்ள குறையை அறிகின்றான் ஆனால் அதனைத் தெளிவாக எடுத்துரைக்கவில்லையென்றால் அதுவும் அனுமதிக்கப்பட்ட செயலல்ல” (முன்தகா) எனவே இதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வியாபாரிகளது நட வடிக்கைகளை அவதானிப்பதற்காக சந்தைக்குச் சென்ற போது, சில தானிய வியாபாரிகளைச் சந் தித்தார்கள் அவர்களது தானிய மூடைகளில் கவர் ச்சியான அமைப்பில் காய்ந்த தானியங்கள் மேலே வைக்கப்பட்டிருப்பதனை அவதானித்தார்கள் தானிய மூடைகளினுள் தமது கையைச் செலுத்திப் பார்த் தபோது, கீழே செல்லச் செல்ல ஈரமானதானியங்கள் மூடைகளில் இடம்பெற்றிருப்பதனை அவதானி த்தார்கள். அப்போதுநல்லதை நல்லதாகவும் தீயதைத் தீயதாகவும் அடையாளம் காட்டி விற்பனை செய் யுமாறு அவ்வியாபாரிகளை எச்சரித்தார்கள். எனவே பொருளாதாரத்தில் ஏமாற்றுதலும், கலப்படமும் மிக வும் மோசமான நடவடிக்கைகளாக காணப்படு வதோடு, பொருளாதாரத்தின் ஒழுக்க மாண்புகளைப் பாதிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
இவை தவிர இஸ்லாமியப் பொருளாதாரத்தி ன் ஒழுக்க மாண்புகளைப் பாதிக்கக்கூடிய பொருளா தார நடவடிக்கைகளாக இலஞ்சம் வாங்குதல், சூதாட் டத்தில் ஈடுபடுதல் போன்றவைகளும் காணப்படுகி ன்றன. மேலும் இஸ்லாமியப் பொருளியல் திட்டம் அதன் வாழ்க்கைத் திட்டத்தில் ஒரு பகுதியாகும். இப் பகைப்புலத்தில் பார்க்கும்போது இஸ்லாமியப் பொரு ளாதாரக் கொள்கை மனிதர்களால் இயற்றப்பட்ட கொள்கைகள் போன்றல்லாமல், நிகரற்ற, இவ்வுலகில் நடைமுறைப்படுத்துவதற்கு எண்றைக்கும் பொருத்தமா ன ஒரு கொள்கையெனத்திட்டவட்டமாகக் கூறலாஜி
உசாத்துணை:
1. அல்குர்ஆன். 2. அல் பிக்ஹ0 அளப் ஸoன்னா. -(செய்யிது
அஸப் ஸாபிக்) 3. அல் ஹலால் வல் ஹராம் பில் இஸ்லாக்
- கலாநிதி யூசுப் அல் கர்ழாவி 4. அல் ஹஸாயிஸ் அல் - ஆம்மாலிஸ்திஸ்லாம்
கலாநிதி யூசுப் அல் கரிழாவி, 5. நிழாமுல் இஸ்லாம் - அல் இக்திஸாத் மபாதி
உன் வகவாஇதுண் ஆம்மதுண். - முஹம்மது முபாரக் 6. அல் வஃயுல் இஸ்லாமீ - 1987 நவம்பர். 7. இஸ்லாமிய சிந்தனை.
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 65

Page 77
பிராணிகள் அறுப்பு ஒரு பகு நோக்கு
எம் எஸ் றியாஸ் முடி
இஸ்லாத்தின் உலக நோக்கு
அல்லாஹர் எந்த சிருஷ்டியையும் ஓர் இல ட்சியத்தை அடிப்படையாகக் கொணர்டே படைக்கி றான். அதில் மனிதனை ஓர் உன்னத சிருஷ்டியாகப் படைத்து அவனது தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டு ஏனைய சிருஷ்டிகளை அவ னுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். “மனிதர்களே ! வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவ ற்றையும் நிச்சயமாக அல்லாஹர் உங்களுக்கு வசப் படுத்தித் தந்துள்ளான் என்பதையும் அவன் தனி அரு ட்கொடைகளை, வெளிப்படையாகவும் மறைவாக வும் உங்கள் மீது நிறைவாக்கி வைத்துள்ளானி என்ப தையும் நீங்கள் பார்க்கவில்லையா?” (31:20)
அல்லாஹர் உன்னத சிருஷடியாகப் படைக கப்பட்ட மனிதனுக்கு “கிலாபத்” எனும் உன்னதப் பணியையும் அவன்மீது சுமத்தியுள்ளான். “கலீபா" (பிரதிநிதி) என்ற சொல் ஒரு சமூகத்தைப் பிரதிநிதி ப்படுத்துகின்ற ஒருவரைக் குறித்து நிற்கிறது. ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஒருவர் அந்தச் சமூகத்தின் சார்பில் நின்று பல காரியங்களை நிறைவேற்ற வேண்டும். அவர் அச்சமூகத்தின் சார் பாக செயலாற்றத் தவறும் பட்சத்தில் அவர் அந்த சமூ கத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட மாட்டார். எனவே மனிதன் பூமியிலுள்ள பெளதீகச் சக்திகள், பொருட் கள், மிருகங்கள், தாவரங்கள், ஏனைய வஸ்துக்கள் அனைத்தையும் நிர்வகிப்பவனாக இருக்க வேண்டும் என்பதுவே “பிரதிநிதி என்ற சொல்லின் கருத்தாகும். இக்கருத்தினை அல்லாஹ“அவன் உங்களைப் பூமி யிலிருந்து தோற்றுவித்து பூமியைப் பரிபாலிக்குமாறு கேட்டுக்கொண்டான” (11:61) எனக்குறிபபடுறைான்.
66 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

முறை
ஹம்மத் - மூன்றாம் வருடம், உஸ்லுத்தின் பீடம்
அல்லாஹ மனிதனை இவ்வாறு உயர்ந்த சிரு ஷடியாகப் படைத்திருக்க மனிதன்தன்நிருவாகத்தின் கீழ் வாழும் ஏனைய பிரபஞ்ச சிருஷ்டிகளுக்கு தெய் வீக அந்தஸ்த்தை வழங்கித்தன்னை இழிவுபடுத்திக் கொள்வதனை இஸ்லாம் ஒருபோதும் விரும்பவி ல்லை. “மேலும் ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கணிணியப்படுத்தினோம். கரையிலும், கடலிலும் நாம் அவர்களைச்சுமந்து செல்லும்படி செய்கிறோம். நல்லவற்றிலிருந்து நாமே அவர்களுக்கும் உணவளி க்கிறோம். நாம் படைத்தவற்றில் அதிகமானதை விடத் தகுதியில் நாம் அவர்களை மிக மிக மேன்மையாக் கியும் வைத்திருக்கிறோமீ” (17:70) என அல்லாஹர் உயர்த்திக் காட்டுகிறான்.
இவ்வாறு உயர்ந்த சிருஷ்டியான மனிதனின் பயன்பாட்டுக்காக ஏனைய படைப்புக்களைப் படை த்த அல்லாஹி அவற்றை எவ்வாறு கையாள வேணி டும் என்ற வரையறைகளையும் வழிமுறைகளையும் விதிக்கத்தவறவில்லை. இந்த வரையறைகளுக்கு முர ண்படாதவனாக ஏனைய சிருஷ்டிகளுடனான தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்ற போதுதா ன் தனக்கு வழங்கப்பட்ட“கிலாபத்” பணியை உரிய முறையில் நிறைவேற்றியவனாகக் கருதப்படுவான்.
இஸ்லாத்தின் உணவுக் கொள்கை.
இஸ்லாம் வருவதற்கு முன்னர் அரேபிய சமூக வாழ்வு சிதைந்து காணப்பட்டது. ஜாஹிலிய சமூகத்தில் இரு விதமான தீவிரப் போக்குகள் காண
ப்பட்டன:

Page 78
1. பல நல்ல வடயங்களைச் செய்வதைப் பாவமாகக் கருதியமை. உதாரணமாக கிறிஸ்தவ மதததினர் நீர் அருந்துதல், நல்ல உணவுகளை உண்ணல் போன்ற பல நல்ல விடயங்களைச் செய்வதைப் பாவமாகக் கருதினர்.
2. அனைத்து விடயங்களையும் ஆகுமானதாகக்
கருதும் நிலை. பாரசீகததில் தோன்றிய“மஸ்தக” என்ற பிரிவினர் விதிவலககின்றி அனைத்து விட யங்களையும், அனைத்துப் பொருட்களையும் ஆகுமானதாகக் கருதிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இஸ்லாம் உலகிலுள்ள எல்லாப் படைப்பினங்களுக்கும், அவை தொடர்ந்தும் பாது காப்பாக வளர்ச்சி பெற்றுச் செல்லும் வகையில் அவற் றின் இயல்பு, தன்மைகளுக்கேற்ப சில சட்டவிதிக ளை வகுத்து வைத்துள்ளது. அவ்விதிகள் உலகில் குளறுபடிகள் தோன்றாதிருக்க உதவி வருகின்றன. அவற்றை மனிதன் பேணி வருகின்ற போதுதான் இயற்கையோடு மோதிக்கொள்ளது இயல்பாக வாழ் வைத் தொடர முடிகின்றது. இப் பின்னணியிலேயே இஸ்லாத்தில் ஹலால், ஹராம் பற்றிய சட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அல்லாஹி அனைத்துப் பொருட்களையும் மனிதனுக்காகவே படைத்து அவற்றில் மிகப் பெரு ம்பாலானவற்றை மனிதனுக்கு ஆகுமானதாக ஹலால் என்ற ரீதியில் அவனுக்குப் பயன்படுத்தும் உரிமை யை வழங்கியுள்ளான். அது போலவே மிகச் சிலவற் றை மனித நலன்களைக் கருத்திற் கொண்டு அவற் றைப் பயன்படுத்தக்கூடாது என்ற ஒரு வரையறை யையும் விதித்துள்ளான். அந்த வரையறைக்குட்பட்டு நின்று மனிதன் செயற்படுகின்ற போதுதான் அவனது பிரதிநிதித்துவப்பணி பூர்த்தியடைகின்றது.
உணவு பற்றிய இஸ்லாத்தின் கொள்கையை விளக்கும்போது ‘தானாக இறந்தவை, இரத்தம், பன் றியின் இறைச்சி, அல்லாஹி அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெரித்துக் கொல்லப்ப ட்டவை, அடிபட்டு இறந்தவை, கொடிய விலங்குகள் கடித்து இறந்தவை, மலையிலிருந்து விழுந்து இறந் தவை, கொம்புகளால் குத்துப்பட்டுச் செத்தவை ஆகி யன உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளன. அனும திக்கப்பட்டவற்றில் எதை நீங்கள் உயிரோடு முறைப் liq- அறுத்தீர்களோ அதைத்தவிர” என அல்லாஹி குறிப்பிடுகின்றான். இவை தவிர்ந்த இன்னும் சில பிராணிகளை உட்கொள்வதை மனித நலன்களைக்
கருததிற்கொண்டுநப(ஸல்) அவர்கள்தடுத்துள்ளர்கள்
மனித நலன்களுக்காகவே படைக்கப்பட்ட

பிரபஞ்ச சிருஷ்டிகளில் உணவாக, உட்கொள்ள இஸ் லாம் அனுமதித்த மிக முக்கியத்துவம் வாய்ந்த வைதான் உயிரோடு காணப்படும் பிராணிகளில் சில தை உரிய முறையில் அறுத்து உண்பதாகும். “மேலும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு ஆகாதவை என ஒதுக்கப்பட்டதைத் தவிர மற்றவை உங்களுக்கு அனு மதிக்கப்பட்டுள்ளன.” (22:30) எனவே இஸ்லாம் ஆகுமாக்கிய இப் பிராணிகளை இஸ்லாம் சொல்லக் கூடிய விதத்தில் உரிய முறையில் அறுத்து மனிதனு க்குப் பயன்பெற முடியும்.
இஸ்லாத்தில் ஜீவ காருணியம்.
இஸ்லாம் இவ்வாறு உயிரோடுள்ள பிராணி களை அறுத்துப் பயன்படுத்துவதற்கு மனிதனுக்கு அனுமதி வழங்கியிருப்பதால் இஸ்லாத்தைச் சிலர் காருணியமற்ற மார்க்கம்; காட்டுமிராண்டித்தனமான செயல்களை ஊக்குவிக்கின்றது என்ற கருத்தைச் சிலர் கொண்டிருக்கலாம். ஆனால்உண்மை அதுவல்ல சகல உயிரினங்களின் மீதும் கருணைகாட்டும் மார்க்கமே இஸ்லாம். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தாகத் தோடு இருந்த நாயொன்றிற்கு நீர்புகட்டியமைக்காக, முன்சென்ற சமூகத்தில் ஒருவரது பாவம் மன்னிக்க ப்பட்டது எனக்கூறியபோது கால்நடைகளுக்கு உத வியதற்கும் நற்கூலியுண்டா? எனத் தோழர்கள் வின வினர். அதற்கு நபி (ஸ்ல்) அவர்கள் “உயிருள்ள, இதயமுள்ள எதற்கு உதவி செய்தாலும் நன்மையு ணர்டு” எனக் கூறினார்கள் (புகாரி)
அதே போன்று"ஒரு பெண, பூனையொன் றைக் கட்டிப் போட்டு அதற்கு உணவு கொடுக்காம லும் தன் உணவைத் தானாகத் தேடுவதற்கு அனும திக்காமலும் இருந்து அப்பூனை இறந்து போனதன் காரணமாக அவள் நரகம் நுழைவாளி” என்றார்கள்.
(புகாரி)
ஆரம்பகாலத்து அரபிகள் தங்களிடம் விருந் தாளிகள் வந்தால், இறைச்சி வாங்கவோ தன்னிடமு ள்ள முழு ஒட்டகத்தையும் அறுக்கவோ முடியாமல் ஒட்டகத்தின் ஒரு பகுதியை வெட்டிச் சமைத்தார்கள் இச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் வண்மையாகக் கணிடித்தது மாத்திரமன்றி அவ்வாறு பெறப்பட்ட இறைச்சியையும் ஹராமென்றார்கள். இது போன்ற அநேக சந்தர்ப்பங்களில் ஜீவகாருணியத்தை வலியு றுத்துவதைக் காணமுடியும். இவ்வாறு ஜீவகாருணிய த்தை வலியுறுத்தும் இஸ்லாம் மனித இனத்தின் தேவைகளையும் படைப்பினப் பெருக்கத்தின் சம நிலை கருதியும் சில உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இவ்வா
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 67

Page 79
று அவற்றை அறுக்கின்ற போதும்கூட எந்தளவு தூரம் பேணுதலாகவும், காருணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் எமக்குணர்த்துகின்றது.
உலகில் பராணகளைக் கொல்லும் முறைகள்
1. கழுத்தை அறுப்பதன்மூலம் இரத்தத்தை வெளி
யேற்றல். 2. மின்னதிர்ச்சியை மூளைக்குச் செலுத்தி மூளை யில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திக் கொல்லல், 3. உணர்வு நீக்கல் துப்பாக்கியை பிரயோகித்துச் சுடுவதன் மூலம் உணர்வை நீக்கிய பின் கழு த்தை அறுத்துக் கொல்லல், 4. மின்சாரம் பாய்ச்சிய உப்பு நீர்த் தொட்டியில்
அமிழ்த்திக் கொல்லுதல் 5. வாயுவைப் பயன்படுத்திக் கொல்லுதல். 6. கதவிடுக்கில் தலையைவைத்து நெரித்துக் கொல்
லுதல். 7. தலையில் பலமாக அடித்தல். 8. துப்பாக்கியைப் பிரயோகித்துச் சுடுதல். 9. கயிற்றினால் கழுத்தை நெரித்துக் கொலை செய்
யப்படுதல் 10. கூரிய ஆயுதங்களால் உடலில் குத்துதல். 11. ஒடுகன்ற போதேகத்தியைப் பரயோகத்துக்குத்து
தல் 12. உயர்த்தி நிலத்தில் அடித்தல். 13. குண்டுகள் வைத்துக் கொல்லுதல். 14. குழிகள் தோண்டி அதற்குள் வீழ்ததிஇறக்கச்செய்
தல 15. வலைகளைப் பயன்படுத்தல். 16. அம்பெறிவதன் மூலம் கொல்லுதல். 17. நீரில் அமிழ்த்திமூச்சடைப்பை ஏற்படுத்தல். 18. குகை போன்ற இடங்களில் மிருகத்தைச் செல்ல விட்டு மிளகாய்ப் புகை போன்றவற்றை உட்செ லுத்தி கொல்லுதல். 19. கம்பங்களை நட்டு அதற்கு மேற்புறத்தில் ஒரு
பலகையைவைத்துபலகையின்மது மிகப்பாரமான கற்களை ஏற்றிவைப்பர். பின்னர் அதன் ஒரு கம்பத்தைக்கயறறினால் பணைத்து கூடு போன்ற அந்த அமைபபனுள பராணியைச் செல்லவட்டு அக்கயிற்றை இழுத்து விடுவதனால் அப்பார மான பலகையுடனான அக்கற்கள்.அதன்மது வழு ந்து பிராணி உயிர்துறக்கும்.
இலங்கையில் பொதுவாக இம்முறைகளே பிராணிகளைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படு கின்றன. இவற்றுள் எம்முறைகள் காருணியமானவை, எம்முறைகள் மனிதனுக்குச் சாதமாக அமைகின்றன என்பதை சற்று நோக்குவோம்.
68 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 3

மூளைக்கு மன் அதர்ச்சியைக் கொடுத்தல்
அணர்மைக்காலங்களில் உலகின் பெரும்பா லான பணிணைகளில் ஆடுகள், மாடுகள், செம்மறி யாடுகள், பன்றிகள் போன்ற பிராணிகளை அறுப்ப தற்கு முன் மின் அதிர்ச்சியை மூளைக்கு வழங்குவ தன் மூலம் அவற்றின் உணர்வுகள் நீக்கப்பட்டு பின் அவற்றை அறுக்கும் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இம்முறை“காருணிய அறுப்பு முறை” எனக் கூறப்பட்டு வருகின்றது. இவ்வாறு செய்யப் படுவதற்குரிய காரணம், அவற்றின் உணர்வுகள் நீக்க ப்பட்டதன் பின்பு அவை அறுக்கப்படுகின்ற போது அந்த மிருகங்களினால் வேதனையை உணர முடி யாது என்பதாகும். ஆனால் யதார்த்தம் யாதெனில் சாதாரண மின்னோட்டம் ஒன்றையே எம்மால் தாங் கிக் கொள்ள முடியாத போது அதி சக்தி வாய்ந்த மின்னோட்டம் பிராணியின் மூளைக்குச் செலுத் தப்படுவதால் அப்பிராணி எந்தளவு வேதனையை எதிர்கொள்ளும் என்பது விபரிக்க வேண்டிய விட யமல்ல.
இம்முறை சிறைக்கைதி ஒருவனுக்குத்தணி டனைக்காக வழங்கப்படும் மின் அதிர்ச்சியை ஒத் ததாகும். மின்னதிர்ச்சி வழங்கப்பட்ட ஒருவனால் தனக்கு வழங்கப்படும் நோவினைக்கு எதிர்ப்பைக் காண்பிப்பதற்குச்சக்தியற்று நிற்பானே தவிர, வேத னைகளை அவனால் உணர முடியாது என்பது பொருளல்ல. இதனை ஒத்த செயற்பாடே இங்கும் இடம்பெறுகிறது. மிருகங்களைத் துரிதகதியில் அறு ப்பதற்கு அவை தமது எதிர்ப்பைக் காட்டா வணர்ணம் இம்முறை காருணிய சாயம் பூசி மேற்கொள்ளப்ப டுகிறது. உணர்வு நீக்கற் துப்பாக்கியைப் பரயோகித்தல்:
மிருகங்களின் உணர்வுகளை நீக்கப் பயன் படுத்தப்படும் அடுத்த முறைதான், ஆணி போன்ற அமைப்பினையுடைய உருக்கினாலான துப்பாக்கி ரவைகள் பிராணிகளின் மூளையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்த அதன் நெற்றியினூடாகச் செலுத்தப்பட்டு, சீர் செய்ய முடியாத சேதத்தை அவற்றின் மூளையில் ஏற்படுத்தும் அம் முறைக்குக் காருணியப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறையானது ஒருவரைத் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டால் ஏற்படும் அதே தாக்கம், வேதனையைப் பிராணிகளுக்கு ஏற்படுத்து கின்றது. இம் முறை மூலம் பிராணிகள் பெரிதாக இருப்பின் அல்லது குறிதவறி சரியான இலக்கைத் தாக்காத போது குறித்த பிராணியின் உணர்வை ஒரே யடியாக நீக்கமுடியாத சந்தர்ப்பங்களும் அதிகமாகும். எனவே இம்முறையும் முன்னால் சொல்லப்பட்ட

Page 80
முறையைப் போன்று கொல்லப்படுவதற்கு முன்னர்
கொல்லப்படும் ஒரு மிருகவதை என்பதனை உணர்
ந்து கொள்ள முடியும்.
மின்சாரம் பாய்ச்சியூ உவர் நீர்த்
தொட்டியில் அமிழ்த்திக் கொல்லுதல்:
இம்முறைகள் அதிகமாக நவீன கோழிப் பணி ணைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோழி கள் பூரண விழிப்பு நிலையில் இருக்கின்ற போது அவற்றின் கால்கள் பிணைக்கப்பட்டுதலைகீழாக இழு த்துச் செல்லப்பட்டு மின்சாரம் பாய்ச்சப்பட்ட உவர் நீர்த் தொட்டிகளில் இவற்றின் தலைகள் மூழ்கடிக் கப்பட்டு கொலை செய்யப்படுகின்றன. இம்முறை மூலம் குறித்த பிராணி கடுழி அச்சத்தை எதிர்கொ ள்ளவது போலவே மின்னின் காரணமாக கடும் வேதனைப்படுகின்றது.
இம்முறை தவிர்ந்த கழுத்தை நெரித்தல், கயிற்றால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்படு தல், கதவிடுக்கில் கழுத்தை வைத்து நெரித்துக் கொல் லுதல் போன்ற கொடூரமான முறைகளும் இலங் கையில் கோழிகளைக் கொல்வதற்குப் பயன்படுத் தப்படுகின்றன.
மேலே குறிப்பிட்டுக்காட்டிய பிராணிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் முறைகள் மிருகவதை மாத்திரமின்றி இம்முறைகள் மூலம் பல பாதக விளைவுகளும் இருப்பதனை அவதானிக்க முடியும். குறித்த பிராணியில் எலும்பு முறிவுகள் ஏற்படுதல், இறைச்சியில் இரத்தம் தேங்கி இருத்தல் இதன் விளைவாக அவற்றின் இறைச்சி இளகிய தன்மை குறைந்து காணப்படுவதோடு அதனால் நோய்கள் ஏற்படவும் ஏதுவாக இருக்கின்றது. அதன் தசைகள் வெளிறிக் காணப்படுதல், அதன் சுவையில் பாத கமான தன்மை ஏற்படுதல், இலகுவில் பழுதடையும் தன்மை கொண்டதாகக் காணப்படுதல் போன்ற புல விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே இம்முறைகள் அதிகப் பிராணிகளைக் குறுகிய நேரத்தில் அறுப் பதற்குப் பயன்படும் ஒரு நுட்பமுறையேயன்றி காருணிய முறைகளன்று என்பது தெளிவு.
இஸ்லாமிய அறுப்பு முறை.
அடுத்து உலகளாவிய ரீதியில் காணப்படும் முஸ்லிம்களால் கையாளப்படும் அத்-தப்ஹற் எனும் முறை முக்கியத்துவம் பெறுகின்றது. இது அதி - தஸ்கியா என்றும் சொல்லப்படும். இதற்கு மொழி ரீதியான கருத்து வெட்டுதல், பிளத்தல் என்பதாகும்.
இஸ்லாமிய ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில்

அறுப்பதென்பது எங்கு, எந்தளவு என்பது பற்றி 'மத்ஹபுகளுக்கிடையே கருத்துவேறுபாடுகள் நிலவு கின்றன.
ஹனபி, மாலிக 'மத்ஹபுகளின் கருத்தின்படி மிருகத்தின் நான்கு இடங்கள் அறுக்கப்பட முடியும். அவையாவன : குரல்வளை, உணவுக்குழாய், கழுத் தின் இருபகுதியிலும் காணப்படும் பெரிய இரு நர ம்புகளாகும்.
ஷாபிஈ, ஹன்பலி, 'மத்ஹபு’களின் கருத் தின்படி குரல் வளையையும், உணவுக்குழாயையும் அறுத்தால் போதுமானது. அறுக்கப்படும் பகுதிகழு த்தின் ஆரம்பப் பகுதி என்றும் கூறப்படுகின்றது. இமா மிகளான லைல-இப்னு-ஸஹதீ, அபூ தெளவர், இப்னு முன்திர், தாவூத் போன்றோர் கழுத்திலுள்ள நான்கு பகுதிகளும் துண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். குரல்வளையுடன் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளை அறுத்தால் போதுமானதாகும். அன்றி ஆகுமாகாது என்ற கருத்தை இமாம் அபூ ஹனிபா (றஹற்) அவர்களின் ஒரு அறிவிப்பும், குரல் வளையுடன் உணவுக்குழாயையும் இரண்டு நரம்புக் குழாயையும் வெட்டினால் போதுமானது என்று மற் றொரு அறிவிப்பும் காணப்படுகின்றது.
இத்தகைய கருத்து வேறுபாடுகளுக்கு மத்தி யில் மிருகத்தின் கழுத்தில் உள்ள நான்கு பகுதிகளும் துண்டிக்கப்பட வேணடும் என்பதுவே மிகப்பொரு த்தமான கருத்தாகும்.
இஸ்லாமிய ஷரீஅத்திலே பிராணிகளை அறுப்பதற்கான சில நிபந்தனைகள் காணப்படுகின் றன. அவையாவன :
1. நன்கு தீட்டப்பட்ட கூரிய கத்தியினால் அறுக்கப் பட வேண்டும். அவறறின்நரம்புகள் புரணமான முறையில் துண்டிக்கப்பட்டு இரத்தம் வெளியே ற்றப்பட வேண்டும்.
2. தொண்டைக்குழியை அறுத்தல், அதன் தாக்கத்
தால் பிராணி உயிர்துறத்தல் வேண்டும்.
3. அல்லாஹவின் பெயர் சொல்லி அறுத்தல்.
இஸ்லாத்திற்கு முன்னர் ஜாஹிலியப்ய மக்கள் பராணிகளை அறுக்கும்போதுதாம் கடவுளாகக் கொண் டிருக்கக்கூடியவர்களது பெயர்களைக் கூறி அறுத்து வந்தனர். இஸ்லாம் அவ்வாறு பெறப்பட்ட இறை ச்சிக்குத் தடைவிதித்து, அல்லாஹவின் திருப் பெய ரைக் கூறி அறுக்க வேண்டும் என்ற நிபந்தனையை யும் விதித்தது. இதற்குச் சில நியாயங்கள் உள்ளன.
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 69

Page 81
1. ஜாஹிலியாக் கால மக்கள் தம் கடவுளர்களின்
பெயர்களை, பிராணிகளை அறுக்கின்ற போது கூறினர். நிராகரிப்பாளர் தத்தமது சிலைகளின் பெயர்களைக் கூறினர். அவ்வாறென்றால் மனித ர்களுக்குப் பராணிகளை வசப்படுத்தித் தந்த அல்லாஹவின் பெயரை ஏன் கூறக் கூடாது.
2. இதன் மூலம் அல்லாஹ மனிதனுக்கு வழங்கியு ள்ள அருள்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.
3. அதன்மூலம் அவனுக்கு நன்றி செலுத்தக் கூடிய
வாய்ப்புக் கிடைக்கின்றது.
4. மனிதனுக்காக வசப்படுத்தப்பட்டிருந்தாலும்அவை மனிதனுக்குச் சொந்தமானதல்ல. எனவே இறை வனின் அனுமதியின்றி வெறுமனே அவற்றைக் கொல்வதற்கு முடியாது என்ற உணர்வை ஏற்ப டுத்தல்.
இவ்வாறு அறுக்கின்றபோது கூட ஜீவகாரு ணியத்தை கையாளுமாறு இஸ்லாம் வலியுறுத்துகி ன்றது.
1. அறுப்பதற்காகப் பராணியை அழைத்து வருகின்ற
போது பிராணியோடு மிருதுவான முறையில் நடந்து கொள்ள வேண்டும். “ஒரு முறை ஒரு மனிதன் அறுப்பதற்காகப் பிராணியைக் கடுமை யாக இழுத்துக்கொணர்டிருந்ததைக் கண்ணுற்ற உமர் (றழி) அவர்கள் அச்செயலைத் தடுத்த தோடு அப் பிராணியோடு அன்பாக நடந்து கொள்ளுமாறு ஏவனார்கள’- அப்துர் ரஸ்ஸாக்
2. அறுக்கக்கூடிய கத்தியைநல்ல முறையில் தீட்டிக் கொள்ள வேணடும். “நிச்சயமாக அல்லாஹி அனைத்து விடயங்களையும் சிறப்பாகச் செய்வ தனை வதியாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஆகுமாக்கப்பட்ட ஒரு கொலையைச் செய்வதா னால் அதனைச் சிறந்த முறையில் செய்யுங்கள் நீங்கள் பிராணிகளை அறுப்பதானால் அதனை நல்ல முறையில் அறுங்கள் உங்களில் ஒவ்வொ ருவரும் தமது கத்தியை நன்கு தீட்டிக் கொள்ள ட்டும். அறுத்ததன் பிறகு அறுக்கப்பட்ட பிராணக் கு உயிர் பிரியும் வரை ஒய்வு வழங்கட்டும்.” (ஆதாரம்-முஸ்லிம்) என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.
3. கத்தியைத் தீட்டுகின்றபோது அறுக்கப்படும் பிரா ணிக்கு முன்னால் திட்டாதிருத்தல் வேண்டும். ஒரு முறை ஒரு மனிதன் அறுக்கப்போகும் பிரா ணிக்கு முன்னால் இருந்து கததியைத்தட்டிக்கொ ண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்“நீர் அப்பிராணியை இரண்டு தடவை அறுக்கப்போ கின்றரா?” (அல்ஹாகிம்) எனக்கண்டித்தார்கள்
70 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 0

4. பிராணிகளை அறுப்பதற்காக அவற்றைப் புரட்டு கின்றபோது நளினமான முறையல் புரட்டல் வேண்டும். 5. ஒரு பிராணியை மற்றொரு பிராணக்கு முன்னால்
அறுக்காதிருத்தல், 6. அறுக்கின்ற போது பிராணிகளோடு கடினமாக நடந்து கொள்ளது மிருதுவான முறையில்நடந்து கொள்ளல். 7 இருள் சூழ்ந்த இடங்களில் அறுக்காதிருத்தல். 8. அறுக்கப்பட்ட பராணியின் உயிர் பரிவதற்கு முன்னர் அதன் தோலை உரிக்காதிருத்தல்,
அறுப்பு முறைமூலம் ஏற்படும் சாதக
ளைவுகள்.
அறுக்கப்படும் பிராணியின் தலையை பின் னோக்கிச் சாய்த்துவிடுவதன் மூலம் அறுக்கப்பட்ட கழுத்தின் குழாய்கள் மீண்டும் தொடுகையுறுவதைத் தடுக்கும். பெருமளவு இரத்தப்பெருக்கு ஏற்பட வாய் ப்பு ஏற்படுவதனால் பிராணியில் உணர்வின்மை அதி கரித்து மரண அவஸ்த்தையின் நேரத்தைக் குறை க்கின்றது. அவ்வாறு அறுக்கப்படும் பிராணியின் முன்னாணி துணிடிக்கப்படாமல் இருப்பதன் மூலம் அதன் நரம்புத் தொகுதிக்கு எதுவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதது போன்றே தூண்டல் முறைகள் மூலம் அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்ப தனால் 30 வினாடிகளுக்குள்ளாகவே குறித்த பிராணி சுய உணர்வை இழந்து வேதனையை உணரும்
சக்தியை இழந்து விடுகின்றது.
பிராணிகளைத்தடியால்தாக்கிக் கொல்லுதல், உணர்விழக்கச் செய்து அறுத்தல், துப்பாக்கியால் சுட் டுக் கொல்லுதல், குழிகளில் வீழ்த்திக் கொல்லுதல் அல்லது இவை போன்ற முறைகளின் மூலம் இறக்கும் பிராணியின் உடலில் இரத்தம் தோய்ந்துவிடும். இத னால் இறைச்சியிலும் மனிதனுக்கு ஏற்படும் பாதி ப்புக்களை நாம் முன்னர் பார்த்தோம். எனவே ஒரு பிராணியின் இதயமும், நரம்புத் தொகுதியும் அவை உயிரோடு, தேகாரோக்கியமானநிலையிலேயே பூர ணமாக செயற்படும். இவ்வாறான நிலையில் அதன் இரத்தக் குழாய்களை துண்டிக்கின்ற போதுதான் அவ ற்றிலிருந்து இரத்தத்தை வெளியேற்ற முடியும். அதே நேரம் அவற்றின் மூளை, முன்னாணி தொழிற்பாட்டு விசையுடன் கூடியதாக இருக்கும் நிலையில் அறு க்கப்பட்டால்தான் இதயச் சுருக்க விசை காரணமாக குருதிக் குழாய் வழியாக அதிக இரத்தம் அவசரமாக வெளியேற்றப்படுகின்றது. இதன்மூலம் இறைச்சியின் சுவை, பாதுகாப்புத்தன்மை என்பன பேணப்படுகி ன்றன.

Page 82
1994 இல், அமெரிக்க கொலராடோ பல் கலைக்கழக விஞ்ஞானபீடப் பேராசிரியர் கிராண்டின் என்பவர் ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். பிராணிகளை அறுக்கின்ற போது அவற்றின் தலைக ளைப் பற்றிப்பிடித்துக்கொள்ளும் சாதனத்தை அறுப டும் பிராணிகள் தாம் விரும்பினால் விடுவித்துக் கொள்ள முடியுமான அளவில் மிக இலேசாகப் பிர யோகித்தார். இவ்வாறு அறுக்கப்பட்ட 10 பிராணிகளு ள் எதுவுமே தனது தலையை விடுவித்துக்கொள்ள முற்படவில்லை என்பது அவரது முடிவாகும்.
இவ்வாறு பிராணிகளை அறுக்கின்ற போது மூளைக்குச் செல்லும் பிரதான குருதிக் குழாய்கள் துணர்டிக்கப்படுவதனால் மூளைக்கு மிகக் குறைந்த அளவிலான ஒட்சிசனே கிடைக்கின்றது. இதன் மூலம் உடலிலுள்ள தசைகள் சுருக்கமடைவதனால் உடலில் வலிப்புகள் தோன்றும். எனினும் குறித்த பிராணி இரத்தப் பெருக்கேற்பட்டு மயக்க நிலையில் இருப் பதனால் அவற்றால் வேதனையை உணர்ந்து கொள்ள முடியாது. உதாரணமாக, காக்கை வலிப்பு ஏற்பட்டுக் கீழே விழுந்த ஒருவர் தனக்குக் காயங்களை ஏற்ப டுத்திக் கொண்டிருக்கின்ற போதும் அவர் மீண்டும் சுய உணர்வை பெறும் வரை அதனை அவரால் உண ர்ந்துகொள்ள முடிவதில்லை. எனவே பிராணிகள் அறுக்கப்பட்டதன் பின்பு அவை தொடர்ந்து துடிப் பதனை அவை வேதனையில் விளைவாகத்தான் துடிக்கின்றது என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது. இவ்வாறு ஏற்படும் வலிப்பின் விளைவாக அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்டு சாதகமான விளைவு ஏற்படுகின்றது.
எனவே மேலே குறிப்பிட்டுக் காட்டிய கொ ல்லல் முறைகளில் எம் முறைகளில் பிராணி தேகா ரோக்கியத்துடன் இருக்கும் நிலையில் உரிய முறை யில் அறுக்கப்பட்டு இரத்தம் வெளியேற்றப்பட வில்லையோ அந்த அனைத்து வழி முறைகளும் மனித நலனுக்குக் கேடு விளைவிப்பனவாக அமை வது போன்றே குறித்த பிராணி மிருக்வதைக்கு உட் படுகின்றது என்பதுவே உணர்மையாகும். எனவே இஸ்லாம் கூறும் இவ்வறுப்பு முறையானது இன்று சமூகங்களில் காணப்படும் ஏனைய கொல்லும் முறைகளை விடவும் மிகப் பொருத்தமானதும், காரு ணியமிக்கதாகவும் காணப்படுகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
பிராணகளைக் கொல்வதற்கெதரான வாதங்கள்.
பணிடைக்காலம் தொட்டு பிராணிகளை மன தத் தேவைக்காகக் கொல்லுவது தொடர்பாக சில

சமூகங்கள், அல்லது தனிப்பட்ட சிலர் தமது எதிர் ப்பைத் தெரிவித்து வந்துள்ளனர். புத்தர், ஜைனர், வள்ளுவர் போன்றோர் பிராணிகளைக் கொல்வது சம்பந்தமாக தமது எதிர்ப்பைக் காட்டி வந்தனர்.
புத்தர் இது பற்றிக் கூறுகையில் “பானாதி பாதா வேர மணி சிக்கா பதங் சமாதியானி” அதாவது உயிருள்ள பிராணிகளைக் கொல்வதனைத்தவர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் அவர் கொல்லுவத னைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கூறினாரே தவிர வேண்டாமென்று தவிர்க்கவில்லை. இவ்வாறு கூறிய புத்தரேதான் “நான் சொல்லக்கூடிய கருத்துக்கள் உங் களது மனச்சாட்சிக்கு முரண்பட்டால் நீங்கள் அவ ற்றைப் பின்பற்ற வேண்டாம்” என்றும் குறிப்பிட்டார் என்பது நோக்கத்தக்கதாகும்.
புத்தரின் இக்கருத்தின்படி பார்க்கின்ற போது உயிருள்ளவை என்ற வட்டத்தில் தாவரங்களும் அட ங்குகின்றன. தாவரங்களுக்கும் உயிர் இருப்பது விஞ் ஞானம் நிரூபித்த உணர்மையாகும். எனவே தாவ ரங்களைக் கொல்வது பாவமில்லையா ? என்று அவர் களிடம் கேட்கப்பட்ட போது ஒரு மரத்தை வெட் டுவதனால் அதனை வெட்டுவதற்கு முதல் தினமே குறித்த மரத்தடிக்குச் சென்று குறித்த மரத்துக்குப் பொ றுப்பான கடவுளிடம் பிராத்தனை புரிந்து அனுமதி பெற்று, பின்னர் மரத்தை அசைத்து அதிலே காணப் படுகின்ற பறவைகளைத் துரத்திவிட்டுத் திரும்புவ தாகவும் மறு தினம் சென்று குறித்த மரத்தை வெட் டுவதாகவும் குறிபபட்டனர். ஆனால் அதே முறையில் நாம் பிராணியின் கடவுளிடம் அனுமதி பெற்று ஏன் அறுக்க முடியாது 1 என்ற கேள்விக்கு விடைபகர முடியாது போகும். ஆனால் உணர்மை யாதெனில் புத்தர் இக்கருத்தைக் குறிப்பிட்டமைக்கு சமயமோ அல்லது உயிரினங்கள் மீதான கருணை காட்டுதல் என்ற நோக்கமோ இருந்ததென்பதை விட சமூகவியல் நோக்கமே காரணமாக இருந்தது எனலாம்.
புத்தர் வாழ்ந்த கால சூழ்நிலையில் மாடுகள் முக்கியமானதொரு அச்சாணியாக இருந்தது. மாட் டைச் சுற்றியே அவர்களது வாழ்க்கைச் சக்கரம் சுழ ன்றது. இந்நிலையில் அன்றைய அரசர்கள் நடத்திய வேள்வியாகததின் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் அழிக்கப்பட்டன. அதனை எதிர்த்த புத்தர், மன்னர்களோடு எதிர்த்துநிற்க முடியாத நிலை யில் “பசுவையாவது கொல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” எனப் பிரசாரம் செய்தார். இக்கருத் து மக்களிடையே பரவலானது - பகவான் புத்தர் - இதே காரணத்திற்காகத்தான், ஜைனரும் பிராணிக ளைக் கொல்லுவதனைத்தடுத்தார். - பகவான்புத்தர்
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 71

Page 83
இவர்களின் வரிசையில் வள்ளுவர் கொல் லாமைக் கோட்பாட்டை வலியுறுத்தினார். “கொல்லா ன் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழுமி” (குறள்-260) மேலும் “தன்னுரன் பெருக்க த்திற்குத் தான் பிரிது ஊணி உணர்பான் எங்ங்னம் ஆளும் அருள்” (குறள்-251) அதாவது “கொல்லா மையும் புலால் உணர்ணாமையையும் கடைப்பிடி ப்பவனை எல்லா உயிரும் வணங்கும்.” லுேம் அவர் குறிப்பிடும் போது “தனது உடலைப் பெருக்க தான் பிற உயிரினங்களின் உடலை உணர்பவனுக்கு எவ வாறு அருள்கிட்டும்” எனதனது கொல்லப்படாமைக் கோட்பாட்டை வலியுறுத்தினார்.
பிராமணர்களும் மிருகங்களை அறுப்பத னையும் அதனை உணர்பதனையும் பாவமாகக் கரு தினர். மிருகங்களைக் கொள்வதானது மனிதன் தன் னைப் போன்ற ஒரு உயிரைக் கொடுமைப்படுத் துவதாகும். அவற்றின் வாழ்வுரிமையைப் பறிப்பதற்கு மனிதனுக்கு அனுமதியில்லை என்ற கருத்தைக் குறிப்பிட்டனர்.
இது தவிர ஹிந்துக்கள் ஆரம்பகாலந் தொ ட்டுப் பசுவுக்கு அளவுகடந்த கணிணியத்தை வழங்கி அதனைக் கடவுளாக வழிப்பட்டு வந்தனர். இவ்வாறு சில சமூகங்கள் மிருகங்களைக் குறிப்பாக மாடுகள் கொல்லப்படுவதற்கு தமது எதிர்ப்பைக் காட்டி வந்துள்ளன.
ஆனால் இஸ்லாம் மனிதனைக் கால்நடை களை விடவும் தாழ்வானவனாகக் கருதவில்லை. மனிதன் இயல்பாகவே தன்னைவிடத் தரத்தில், தகு தியில் கூடிய ஒருவனுக்காகத்தான் சிரம் தாழ்த் துவான். ஒரு எஜமான் ஒரு போதும் தனது வேலை யாளின் முன்னால் தான் கூனிக் குறுகி நிற்பதை விரும்பமாட்டான். அவ்வாறிருக்க மனிதன் இயல் பிலேயே தன்னை விடத் தாழ்ந்த, பகுத்தறிவு வழ ங்கப்படாத ஒரு மிருகத்தின் முன்னால் கூனிக் குறுகி அதற்கு தெய்வ அந்தஸ்த்தை வழங்குவதன்மூலம் தனது அந்தஸ்த்தை, கெளரவத்தை கால்நடைகளை விடவும் தாழ்த்திக் கொள்வதனை இஸ்லாம் விரு ம்பவில்லை.
இப் பெளதீக உலகம் எதுவித ஏற்றத்தாழ்வு களும் இன்றி சமநிலையில் படைக்கப்பட்டிருப்பினும் படைப்பினங்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு இரு க்கத்தான் செய்யும் என்பது இறை நியதியாகும். இவ் வேற்றத்தாழ்வு மனிதன், மிருகங்களிடத்தில் மாத்தி ரமல்ல. தேனி எறும்பு போன்ற மிக அற்ப உயிரினங் களிடத்திலும் காணப்படுகின்றன. ஒரே கூட்டுக்குள்
72 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

வசிக்கும் எறும்புகள் கூட தங்கள் வாழ்க்கையை நட த்துவதற்கு ஒன்றோடொன்று ஒத்துழைத்து வாழ வேணர்டியுள்ளது. இல்லையேல் அவை வாழமுடி யாது இறந்துவிடும். சில எறும்புகள் வெளியே சென் று உணவைச் சேகரித்து வருகின்றன. இன்னும் சில தங்கள் வதியுமிடத்தைத் தூய்மைப்படுத்துகின்ற பணி யையும், விரிவுபடுத்துகின்ற பணியையும் செய்கின் றன. இன்னும் சில இராணி எறும்பின் தேவைகளைக் கவனிக்கின்றன. தாதி எறும்புகள்குட்டி எறும்புகளைப் பேணி வளர்க்கின்ற பணியைச் செய்கின்றன. இவ வாறு ஒவ்வொன்றுக்குள்ளும் ஏற்றத்தாழிவு இரு ப்பதாக விஞ்ஞான உலகம் கூறுகிறது. இந்நிலையில் இவர்கள் ஏன் ஒரு மனிதனுக்கும் மிருகத்துக்குமுள்ள ஏற்றத் தாழ்வை உணர்ந்து கொள்வதில்லை. இயல்பி லேயே மனதனுக்கு வசப்பட்டு அவனுக்காகவே சேவை செய்யக் கூடிய இப்பிராணிகளை ஏன் காருணிய முறையில் அறுத்துப் பிரயோசனம் பெறமுடியாது.
உலக வாழ்வின் போது படைப்பினங்கள் ஒன்றில் ஒன்று தங்கி வாழ வேணடும் என்பதுவே நியதியாகும். இல்லாது போனால் வாழ்வு அசாத்தி யமானதாக மாறிவிடும். இந்த வகையிலேதான் புல் லை வெட்டுக்கிளியும், வெட்டுக்கிளியை தவளையும், தவளையைப் பாம்பும், பாம்பைக் கழுகும் தத்தமது உணவாகக் கொள்ளக்கூடியவாறு உணவுச் சங்கிலி முறைமைகள் காணப்படுகின்றன. இவ்வுணவுச் சங் கிலி முறையில் மனிதன் மாத்திரமே அனைத்துமுணர் ணியாகக் காணப்படுகின்றான். இயற்கை நியதியாகக் காணப்படும் உணவுச் சங்கிலி முறைமைகள் மனித னாலோ அல்லது ஏனைய உயிரினங்களினாலோ மீற ப்படுகின்ற போது அது பெளதீக உலகில் பாரிய பாதி ப்புக்கள் ஏற்பட ஏதுவாகிறது. உதாரணமாக நோர்வே நாட்டில் ஒரு வகை மானினம் அருகிவருவதாகக் கூறி அதற்கான காரணம் அம் மான்களை உட்கொள்ளும் பூமா என்னும் ஒரு வகை விலங்குகளின் தொகை அதிகரித்து வருவதுதான் என நினைத்து பூமா மிரு கங்களைக் கொன்று குவித்தனர். சிறிது காலத்துக் குள்ளாகவே அக்குறித்த பிரதேசங்களில் தரிசு நில மாதல் அதிகரித்து வருவதனை அவதானித்த அவர் கள் அதற்கான காரணத்தை ஆராய்ந்த போது மான் களை உணர்பதற்கு பூமாக்கள் இல்லாமையால் மான் கள் அதிகரித்து அப்பிரதேசத்தின் தாவரங்கள் உட் கொள்ளப்படுதல் அதிகரித்தமையால் அங்கு தரிசு நிலமாதல் அதிகரித்து வருவதனை கண்டுபிடித்தனர். எனவே அதனை ஈடு செய்வதற்கு வெளிநாடுகளில் இருந்து பூமா மிருகங்களை இறக்குமதி செய்தனர்.
இதனை அவதானிக்கின்ற போது பணிடைக் காலம் தொட்டு வருடம் தோறும் பல இலட்சக்கண

Page 84
க்கான ஆடுகள், மாடுகள். உணவுக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் கொல்லப்பட்டு வரு கின்றன. இந்த நியதிகளில் மனிதன் தானாக முடி வெடுத்து இவற்றைக் கொல்லக் கூடாது என்ற தத்துவத்தைச் செயற்படுத்தியிருப்பின் இன்று மணி தரை விட பன்மடங்கு மாடுகள் அல்லது ஏனைய மிருகங்கள் அதிகரித்து அதன் மூலம் பல பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமி ல்லை. எனினும் இவ்வாறு மிருகங்கள் கொல்லப்ப டுவதனால்தான்இயற்கைச் சமநிலை பாதிக்கப்படாது உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஆரோக்கியமான மனிதவாழ்வுக்குத் தேவை யான புரதச் சத்தை இப்புலால் உணவுகள் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது. அதனை வேறு எந்தத் தாவர உணவுகளாலும் ஈடுசெய்வதற்கு முடியாது. இன்று உலக சனத் தொகையின் 85% சதவிகிதமா னோரின் உணவுத் தேவையை மாமிசமே நிறைவு செய்யும் நிலையில் முற்றாக அவற்றை உர்ைணக் கூடாது எனத் தடுத்துவிட்டால் உலகில் உணவுப் பற்றாக்குறைதாண்டவமாடும் என்பதில் ஐயமில்லை. அவவாறு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் பரவாயில்லை என உலகம் பூராவும் அதனைத் தடை செய்துவிட்டால் எதுவித தாவரங்களும் விளையாத நிலையில் வெறும் மாமிசத்தை மாத்திரம் நம்பிதுரு வப் பிரதேசங்களில் வாழும் எக்ஸிமோவர்களின் நிலை என்ன ? அவ்வாறு தாவர உணர்ணிகளாக வில ங்குகள், மனிதர்கள் அனைவரும் மாறிவிட்டால் இன் றிருக்கும் குழல் சமநிலை பாதிக்கப்பட்டு சில வரு டங்களுக்குள்ளாகவே அன்று நோர்வேயில் ஏற்பட்ட பாதிப்புகளை விட மிக மோசமான சூழல் தாக்க ங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதில் சந்தேக மில்லை.
‘உயிரினங்களைக் கொல்லக்கூடாது' எனப் போர்க் கொடி நாட்டுபவர்கள் தாவரங்களுக்கும், விலங்குகளைப் போன்றே உயிரிருக்கிறது என்பத னைக் கருத்திற் கொள்வதில்லை. அவர்களது கருத் தின் படி எம்மால் நீரைக்கூட அருந்த முடியாது. கார ணம் நீரிலும் கூட பல நுண்ணுயிர்கள் காணப்படு கின்றன. எனவே ஒரு கருத்தை முன்வைப்பதானால் அது நடைமுறைச் சாத்தியமானதாக காணப்படல் வேண்டும். ஹிந்து, பெளத்த மத ஆலயங்களில் கொட் டப்படும் மேளம், பூசாரி அணியும் பட்டுப் புடவை என்பன அத்தகையவர்களது கொல்லாமைக் கோட் பாட்டின் கோளாறை எடுத்துக் காட்டுவதாக அமை கிறது. எனவே வெற்று வேதாந்தம் வாழ்க்கைக் குதவாது.

ஒரு மனிதன் எந்த மதத்தை, எந்தக் கொள் கையைச் சார்ந்தவனாக இருப்பினும் அவன் தான் உயிர் வாழக்கூடிய காலங்களில் அனேக உயிரின ங்களை அறிந்தோ, அறியாமலோ தனது ஆரோக்கிய த்துக்காக கொல்வது தவிர்க்க முடியாததாகும். இந்த வகையிலேதான் ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளை மருந்துகள் மூலம் அழிக்கப்படுகின்றன. அவ்வாறே அது வளரும் பருவத்தில் அதன் உணவுக் குழாயில் வளரும் ஆயிரக்கணக்கான புழுக்கள் மருந்துகள் மூலம் அழிக்கப்படுகின்றன. இது தவிர வெளிப்ப டையாக மனிதனுக்கு ஆபத்துக்களைத் தோற்றுவி க்கக்கூடிய பாம்பு, தேள், பல்லி. போன்ற உயிரி னங்களைக் கொல்லக்கூடாது என்று விட்டு விட்டால் அவை மனிதனுக்கே ஆபத்தாய் முடியும்.
இன்று ஆடுகள், மாடுகள் போன்ற பெரிய மிருகங்களை மாத்திரம் கவனத்திற் கொள்ளும் இத் தகையவர்கள் கோழி போன்ற சிறிய பிராணிகள் விட யத்தில் அலட்டிக் கொள்வதில்லை. விசனத்துக்குரிய விடயம் யாதெனில் இன்று ஏனைய சமூகங்களினால் மிருகங்கள் மிக மோசமான முறையில் மிருக வதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டாலும், மிரு கங்களை கொடுமைப்படுத்தாதுகாருணியமான முறை யைக் கையாளும் இஸ்லாமிய அறுப்பு முறையை மாத்திரம் அந்நிய சமூகங்கள் விமர்சித்து வருகி ன்றன. அதற்காக தொலைத் தொடர்புச் சாதனங்களை ப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் செய்வதன் உள்நோக்கம் ஜீவகாருணியத்தின் விளை வாக ஏற்பட்டதா ? அல்லது இஸ்லாத்தைப் பற்றி தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் பரப்பு வதற்கான ஒரு கேடயமாக இதனைப் பயன்படுத்து கின்றனரா ? என்பதனை இலகுவில் புரிந்துகொள்ள (1plգԱրճ.
பிராணிகளை அறுப்பதில் முஸ்லிம்கள் இன் று கையாளும் முறைகள் விமர்சிக்கப்படுவதற்கு முளப் லிம்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். பிரா ணிகளை அறுக்கின்றபோது எம்மவர்களில் சிலர் இன்று கையாளக் கூடிய முறைகளும் சிலபோது அவ ர்கள் விமர்சிப்பதற்கு தூண்டுகோலாக அமைகின்றன. உதாரணமாக இலங்கையில் சில பிரதேசங்களில் சம் பிரதாய சடங்குகளாக இடம் பெறும் விருந்து வைப வங்கள் மற்றும் மார்க்க ரீதியான நேர்ச்சை, உழ்ஹி ய்யா போன்றன வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் மாற்று மதத்தவர்களின் உணர்வுகளைத் தூண்டும் வதததில் ஒட்டு மொத்தமாகப் பிராணிகளை அவர்கள் பார்க்கும் நிலையில் எடுத்து வந்து, வெட்ட வெளி. (தொடர்ச்சிபக் 49)
அல் - ஜாமஆ மூன்றாவது இதழ் / 73

Page 85
ஒழுக்க விழுமியங்கள் நாகரிகங்களின் எழு ஒரு சமூகவியல் நோக்கு
இப்பூமியில் மனிதனுக்கு பூர்வீகம் தொட்டு வழிகாட்ட வந்தவைகள் அனைத்தும் தமக்கென்று ஒழுங்குகளையும் நியதிகளையும் உருவகப்படுத்தி மனித இனத்திற்கு வழிகாட்ட முனைந்தமையை வரலாற்று ஒழுங்கில் காணமுடியும். இத்தகைய ஒழுங்கு விதிகளும் நியதிகளும் பொதுவாக மனித சமூகத்தின்இயங்கு விதியாகக் கருதப்பட்டன. இதன் விளைவாக “மனிதன் வரலாற்றில், தனது தனிப்பட்ட உரிமைகளை உணர்வதற்கு முன்னரே தன் சமூகக் கடமைகளை உணர்ந்து செயற்பட்டான். இது அவனுக்கு “நல்ல குடிமகனி” எனும் சிறப்பைக் கொடு த்தது’ என்ற சமூகவியல் அணுகுமுறையானது மனி தன் இயல்பிலேயே ஒழுக்க நெறிப் பணிபுகளைப் பெற்றுள்ளதோடு, அதற்கு மதிப்பளித்தும் வந்துள் ளான் என்ற உணர்மையைப் புலப்படுத்துகின்றது.
ஒழுக்கம் என்பது, “தனது அல்லது தான் சார்ந்து வாழும் குழுமத்தியில் பொதுநலன், ஒற்றுமை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு தனிமனிதன் கடைப்பிடிக்கும் நெறிமுறை, உரியமுறையில் நட ந்துகொள்ளல், அல்லது ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு ஏற்பட்டிருக்கும் நியதி, பொருத்தமான முறை (ProperManner), ஒழுக்கம், ஒழுங்கு” ஆகும் என அகராதி விளக்குகின்றது.
உணர்மையில் ஒழுக்கவியல் என்பது சமூக வாழ்வோடு தொடர்புடையதாகும். மனிதன் சமூக வாழ்விலிருந்து தனிப்பட்டு வாழமுடியாத ஒரு சமூக விலங்காவான். எனவே அவனது கலாசாரத்தில் ஏற்படும் பாதிப்பு அவன்சார்ந்து வாழும் நாகரித்தில் பாதிப்பை ஏற்படுத்துவது தெளிவாகின்றது.
74 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 0

ரில் தங்கியிருக்கும் ச்சியும் வீழ்ச்சியும்
பெறோஸ் மூன்றாம் வருடம் உஸ்லுத்தின் பீடம்
எனவே ஒழுக்கவியல் சமூக உறவுகளோடு தொடர்புபட்டதாக, மனிதன், பிரபஞ்சம், வாழ்வு என்பவற்றோடு பரந்து நோக்கப்பட வேண்டும். சமூ கத்தின் ஒட்டு மொத்தமானநன்மைகருதி, மனித இன மேம்பாட்டை இலக்காகக் கொண்டு, சமூக உறவுக ளை ஒழுங்காகவும் சீராகவும் அமைப்பது இதன் வெளிப்பாடாகும்.
மனிதனின் ஒழுக்கநெறிகள் உணர்மையில் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியதும் யாவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், காலத்தால் மாற்ற முறாதவையாகவும் மிளிரவேண்டும். ஒழுங்கீனம், கட்டுப்பாடின்மை, ஒழுக்கமின்மை, ஆக்கிரமிப்பு, அமைதிக்கேடு என்பன சமூகவாழ்க்கையை, அதன் கூட்டமைப்பை (Community) சிதிலப்படுத்துபவையா கக் கருதப்படுவதும், ‘நேர்த்தியான அமைப்பு, கீர் த்திமிக்க கட்டுப்பாடு (Discipline) பரஸ்பர அன்பு, சகோதர உணர்வு என்ற நற்பணிபுகளைப் பெற்று, மக்களின் நீதி, சுதந்திரம், சமத்துவம், சமாதான சகவாழிவு என்பவற்றின் அடியாகச் செப்பியதை செயல்படுத்திக் காட்டும் ஒரு சமூக அமைப்பை ஸ்தாபித்த சமூகமே மரியாதையும் மதிப்பும் மிக்க சமூகமாகக் கருதப்படுவதுடன் சமூக நோக்கில் ஒழு க்கப் பணிபாட்டியலின் இருப்பிடத்தை எடுத்து க்கொள்கின்றது.
“மனித இனம் ஓரளவு வளர்ச்சியடைந்து சுற்றித்திரியும் வாழ்க்கையையும், பின்பு ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்து விவசாயத்தையும் மேற்கொண்ட காலத்தில்தான் தனி மனிதனது சுயம் (Self) பற்றிய சிந்தனைகள் வளர்ச்சிபெறத் தொடங்கின’ எனக்

Page 86
கூறும் சமூகவியலறிஞர்களின் கூற்றுக்கு ஏற்ப, இத் தனித்தன்மை தொழில்நுட்ப, நாகரிக வளர்ச்சியில் மேலும் வலுப் பெற்றதைத் தொடர்ந்து மனித சிந் தனை (Reason), பகுத்தறிவின் அடியாக, வாழ்வியல் கோட்பாடுகள், இயங்கு விதிகள் தோற்றம் பெற்றன. இத்தகு மாற்றங்களுள் ஒழுக்கவியல் தொடர்பாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன :
1. அரிஸிடோடில்.
“மனிதன் மகிழ்ச்சியுடனும் களிப்புடனும் வாழத் துணை புரிவதே ஒழுக்கம்” எனவும்,
2. ஸ்பினோஸா.
“செல்வமோ, புகழோ, புலன் இன்பங்களோ, மனிதனுக்கு இணங்கிய வகையில் அவற்றுக்கு சாதகமாக அமைந்தால் அவை நன்மையான வை. மனிதனுக்கு பாதகமாக அமைந்தால் அவை தீமையானவை” என்ற நண்மை தீமை பற்றிய சார்பிலான கோட்பாட்டை முன்வைத்தார்.
3. காண்ட்
“எல்லா ஒழுக்கக் கோட்பாடுகளினதும் மூலமு ம் அடிப்படையும் பகுத்தறிவே”
4. நீட்சே
“மனிதனின் அதிகாரபலத்தை வளர்க்க எது துணை புரிகிறதோ அதுவே ஒழுக்கமாகும்.”
5. ஏங்கல்ஸ்,
எல்லாக் காலத்துக்கும் இணைந்து செல்லக்கூடி ய, நித்தியமானதன்மையைக் கொண்ட சமூகங் களின் மாற்றங்கள், வரலாற்றின் வளர்ச்சிப் படி களைத் தாண்டிச் செல்கின்ற ஒழுக்கக் கோட்பா டுகள் உணர்டு என்ற கருத்தை நாங்கள் பூரண
மாக நிராகரிக்கின்றோம். எனவே "சமூக மாற்ற ங்களுக்கேற்ப ஒழுக்கவியல் மாறுபடக்கூடியதா குமி" என்ற மார்க்ஸிய சிந்தனையடியான தனது கருத்தை முன்வைத்தார். A.
ஆனால் இத்தகைய பகுத்த்றிவினடியாக எழுந்த கோட்பாடுகள் மனிதனில் அமைந்துள்ள “ஒழுக்க உணர்வு” என்ற பொருள்படும் பரந்த கருத்தில் அமைவதாகக் கொள்ள முடியாது. அன்றி வரையறுக்கப்பட்டு குறுக்கித் தறித்ததாகவே காணப்படுகின்றன.
ஒழுக்கவியல் பற்றி இஸ்லாம்.
இஸ்லாம் ஓர் உலகளாவிய வழிகாட்டல் திட்டம் அதன் கட்டளைகள் சட்ட திட்டங்கள் போதனைகள் அனைத்துமே மனித நலன்களைக்

கருத்திற்கொண்டவை. அல்லாஹீவின் பிரதிநிதியாக விளங்கும் மனிதன் இவற்றை அமுல்படுத்தி வெற் றிபெற வேண்டுமாயின் அவன் அதற்காகத் தயாராக வேண்டும். இதற்கு ஒரு மகத்தான ஆளுமை அவசிய மாகிறது.
இத்தகைய ஆளுமையானது சத்தியத்தா கமும், தியாகமும் பக்குவமும் பண்பாடும் கொண்ட ஓர் ஆரோக்கியமான சூழலில் மாத்திரமே உருவாக முடியும். இங்கு ஆரோக்கியம் என்பது நன்மையும் ஒழுக்கமும் ஓங்கி தீமைகளும் தீங்குகளும் நீங்கி நிற்கும் நிலையாகும்.
இத்தகைய பின்புலத்தில்தான் தொழுகை முதற் கொண்டே இஸ்லாத்தின் எல்லாக் கடமைகளும் செயற்பாடுகளும் மனிதர்களை நல்ல ஒழுக்கத்தி ண்பால் இட்டுச் செல்பவையாக அமைந்துள்ளன. மனிதன் எப்படி நேர்மையாளனாக, பணிபாளனாக நம்பிக்கையின்பால் நிலைத்து நிற்பவனாக மாற வேண்டும், எத்தகைய சூழ்நிலைகளிலும் நல்ல ஒழுக் கத்தின்பால் எவ்வாறுநிலைத்துநிற்கவேண்டும் என்ப தையும் அவைகள் கற்பிக்கின்றன. சுருங்கக் கூறின் நல்லொழுக்கத்தின் மீதே தங்கள் வாழ்வை அமைத் திட வேண்டும் என்பது இஸ்லாத்தின் அழைப்பாகும்.
இந்தவகையில் இஸ்லாம் நன்மையையும் தீமையையும் பிரித்தறிவதற்கு ஒரு சரியான, திட் டமான அளவு கோலை வழங்கியுள்ளதோடு, அதற் கேயுரிய ஏவல்களையும், தூண்டும் சக்திகளையும் பெற்றிருப்பது மட்டுமன்றி, சர்வதேசத் தன்மைவா ய்ந்த காலமாற்றத்தினால் மாற்றமுறாதவைகளாகவும் அவை காணப்படுகின்றன. நன்மை தீமை என்பது மனித இயல்போடு ஒட்டிப்பிறந்ததும், அனைவ ராலும் நன்கு அறிந்தும் தெரிந்தும் கொள்ளப்பட் டதாகும் என்பதை திருமறை வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
“நண்மையையும் தீமையையும் பிரித்தறிவதற் கான உணர்வையும் அறிவையும் மனித இயல்புக்கு அருளியுள்ளானி” ( 91:8)
எனவேதான் மனிதவிருத்தியின் தொண்மை முதலே மனிதன் தன் இயல்பூக்க சக்தியின் பேறாக சில பணிபுகளை (Character) ஏற்றும் மற்றும் சிலதை தவிர்த்தும் வந்துள்ளான். இந்தப்புலத்தில் ஒழுக்க நன்நெறிகள் சார்பில் நீதி, நேர்மை, வாய்மை, தூய் மை, உணர்மை, தைரியம், சகோதர உணர்வு, பரோப கார சிந்தனை, கருனை, இரக்கம், நம்பிக்கை, பரந்தம னப்பான்மை, தாராளத்தன்மை, விடாமுயற்சி, கட
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 175

Page 87
மை, கணிணியம், கட்டுப்பாடு, தன்னடக்கம், இங்கி தம், இன்முகங்காட்டல், இனிய எளிய தன்மை, பொறுப்புணர்ச்சி, விசுவாசம். என்ற பரந்த நோக்கிலும், சமூக நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரான நடத்தைகளில் (Immoral) பொய், அநீதி, நேர்மையின்மை, நம்பிக்கைத் துரோகம், வாக்குமா றல், சுயநலம், குரூரம், கொடுமை, உலோபித்தனம், குறுகிய மனப்பான்மை, பொறுமையின்மை, சபல புத்தி, நிலையற்ற மனோநிலை, கோழைத்தனம், சிந்த னைக் குழப்பம், பலவீனம், வெளிப்பகட்டு, தவறான நடத்தை, கடமையுணர்ச்சியின்மை. என்ற பரந்த நோக்கிலும் புகுத்தப்பட்டுள்ளது.
மேலும் நன்மையான விடயங்களை “ப0ஃ றுப்” நன்கு அறியப்பட்டவை - என்றும் தீய விடயங்களை “முன்கர்” - அறியப்படாத ஒன்று - எனவும் விளக்கிச் செல்லும் திருமறை, நன்மையும் ஒழுக்கமும் ஓங்கி தீமைகளும் தீங்குகளும் நீங்கி நிற்கும் ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அமைக்கும்படி வேண்டுகின்றது. எடுத்துக்காட்டாக,
“உங்களில் ஒரு கூட்டத்தார் மக்களை நன் மையின்பால் அழைப்பவர்களாகவும், நல்ல விடய ங்களைக் கொண்டு ஏவுகின்றவர்களாகவும், தீய செய ல்களிலிருந்து விலக்குகின்றவர்களாகவும் இருக்க ட்டும் அவர்கள்தான் வெற்றியாளர்கள்.” (3; 104) என்ற வசனத்தைக் குறிப்பிடலாம்.
மனித நாகரிகம் பற்றி.
இப்பிரபஞ்சம் இறைவனின் படைப்பு, அந்த இறைவன் ஒருவன்’ என்ற கருத்தும் இப்பூ மியில் ‘மனிதன் இறைவனின் பிரதிநிதியும் சேகவனு மாவானி’ என்பதும்இஸ்லாத்தின் கொள்கையாகும். இந்தப்பின்னனியில்தான் இஸ்லாம் மனித நாகரிக த்தை அணுகுகின்றது.
நாகரிகம் என்பது ஒரு சமூகத்தின் அறிவி யல், இலக்கியம், கலைகள், தொழில்துறைகள் ஆகிய வற்றின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான வள ரிச்சியின் கூட்டுமொத்தம் மாத்திரமன்று, அதுமுழுமை பெறுவதற்கு கீழ்வரும் தகுதிவிதிகளைக் கொணர்டி ருத்தல் வேண்டும் என மெளலானா மெளதுரதி அவர் கள் தனது “அல் ஹழாரதுல் இஸ்லாமியா’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
1. மனிதவாழ்வு பற்றிய கண்ணோட்டம் :
இவ்வுலக வாழ்வு எத்தகையது, இதில் மனிதனின் நிலை என்ன, இவ்வுலகுடனான மனித
76 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் O

தொடர்புகள் எவை? என்பனபோன்ற கேள்விகள் மனித வாழ்வு பற்றிய அறிதலுக்கு அவசியமாகும்.
2. இந்த உலகில் மனித வாழிவின்
இலட்சியம் என்ன?
இந்தவினாவே மனித வாழ்வின் நடத்தை களையும் வாழ்க்கைக்கூறுகளையும் நிர்ணயம் செய்கி ன்றது. இது மனிதன் எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்ற சிந்தனையை நீக்கி"இவ்வாறுதான் வாழவேண்டும்” என்ற இலட்சியத்தை வரையறை செய்கின்றது.
3. நாகரிகம் கொணர்டுள்ள நம்பிக்கைக்
கோட்பாடு:
ஒரு நாகாகம் எத்தகைய நம்பிக்கைக் கோட் பாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது, என்பது இன்றியமையாததாகும். அது தேர்ந்தெடுத்துள்ளதனி த்துவமான வாழ்வின் இலட்சியம் இந்த நம்பிக்கைக் கோட்பாட்டின் மீதுதான் தங்கியுள்ளது.
4. தனிமனித பணிபாட்டுப்பயிற்சி :
ஒரு நாகரிக சமூக அமைப்பானது அதன் தனிநபர்களினாலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே அது ஆன்மீக, ஒழுக்கவியல் ரீதியில் தனி மனிதர்களைப் பயிற்றுவிக்கும் பணிபாட்டுப் பயிற்சித் திட்டங்களைக் கொண்டிருப்பது அவசியமாகும்.
5. சமூகத் தொடர்புகள் பற்றிய கோட்பாடு:
மனிதர்களுக்கும் மனிதர்களுக்குமிடை யேயான தொடர்புகள், குடும்பத்துக்கும் அயலவர் களுக்கும் இடையிலான தொடர்புகள், ஒருவருக்கு மற்றொருவர் மீதான உரிமைகள், கடப்பாடுகள் எதை அடிப்படையாகக் கொண்டது என்பதும், நாடுக ளுக்கிடையிலான சர்வதேசத் தொடர்புகள் பற்றிய கோட்பாடுகள் எத்தகையது என்பதும் ஒரு நாகரிகத்தின் பிரிக்கமுடியாதவைகளாகும்.
எனவே மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் என்ற பரந்த நோக்கை விட்டும் பகுத்தறிவின் அடியாக வெ றும் பிரபஞ்ச தொடர்புகளை மட்டும் கொண்டு உரு வாகும் நாகரிகங்கள் ஆன்மீக, ஒழுக்கவியல் ரீதி யான வீழ்ச்சியைத் தழுவவேண்டி நேரிடும். இது குறி த்தநாகரிகங்களின் சமூகச்சீர்குலைவுகளை தோற்றுவி ப்பதுடன் அவற்றை வீழ்ச்சியடையச் செய்வதும் நிதர் சனமாகும்."அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் களுடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்துக் கொணர்டோம்.’ (அன்கபூத் 40)

Page 88
“உங்களில் அநியாயம் செய்தோரை மட்டும் குறிப்பாகப் பிடிக்காத வேதனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்” (அன்பால் : 25)
என்ற மறைவசனங்கள் மேற்போந்த சமூக, நாகரீகங்களிக் வீழ்ச்சியைக் குறிப்பிடுகின்றன.
சமூகங்களின் வீழ்ச்சி
சமூகங்களின் வீழ்ச்சி என்பது, எந்த சமூக ங்களின் நாகரிக வீழ்ச்சியுடனும், நாகரிகங்களின் வீழ் ச்சி, அதைப் பின்பற்றும் மக்களின் கலாச்சார பணிபா ட்டியலில் ஏற்படுகின்ற வீழ்ச்சியுடனும் தொடர்புப ட்டதாகும். மனிதனுடைய சமூக, பொருளாதார, تکN/T சியல் வாழ்விலும், அவனது உள்ளத்து உணர்வு களின் ஒவ்வொரு தூண்டுதலிலும் அவன் எதனைச் செய்யவேண்டும் எதனைச் செய்யக் கூடாது என்ற ஏவல்கள் புறந்தள்ளப்பட்டு, மனோ இச்சைகள விரு ப்பு வெறுப்புக்கள், மனித சிந்தனைகளின் அடியாக நாகரிக சமூக அமைப்பு வளர்ச்சி பெறும்போது அதன் கலாசாரம் சீர்குலைவதும், நாகரிகம் வீழ்ச்சியை தழுவு வதும் வரலாற்று உணர்மையாகும்.
நூஹி சமூகத்தின் வீழ்ச்சி:
இச்சமூகத்தினர் வாழ்ந்த பகுதி இன்றைய ஈராக் பிரதேசமாகும். தங்கள் தூதர் நூஹி (அலை) அவர்களின் வாழ்வியல் வழிகாட்டல்களைப் புறக்க ணித்துவிட்டு, கண்மூடித்தனமாக வாழ்க்கை நடத்தி னர். அவர்களிடையே பிடிவாதம், தீயவிருப்பங்கள், நன்மையில் ஆர்வமின்மை மலிந்து காணப்பட்டன. எந்த நன்நடத்தையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடி யாது என்ற நிலை தோன்றியது. இதனால் தங்களுக்கு நேர்வழியைக் காண்பித்த அல்லாஹீவின் தூதரைப் பொய்ப்படுத்தினர். அவரது கட்டளைகளுக்கு மாறு செய்தனர். எனவே பூமியில் சீர்திருத்தம் ஏற்படுவ தற்குத் தடையாக இருந்த இந்த சமூகத்தினர் அடை மழையினாலும், நீரூற்றுக்களாலும் ஏற்பட்ட மிகைப் பட்ட வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட் டனர். அல்லாஹீவின்தூதரும் நேர்வழிநடந்த நல்ல
வர்களும் பாதுகாக்கப்பட்டனர்.
ஆத் சமூகம்:
வீழ்ந்துபோன நூஹி சமூகத்தினரைத் தொட ர்ந்து வந்தவர்களே இச்சமூகத்தினர். இவர்கள் அஹகாப் (Ahqaf) என்ற பிரதேசத்தில் வாழ்ந்தனர். இது ஹிஜாஸி, யமன், யமாமா ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள பகுதியாகும். இங்கிருந்து

தொடங்கி யமனின் மேற்குக் கடலோரம் ஒமான், ஹழரமவத்திலிருந்து (Had ramaut) ஈராக் வரை இவர்களின் அதிகாரம் பரந்த செல்வாக்குப் பெற்றி ருந்தது. இவர்கள்நல்ல உடல் வலிமையும், கம்பீரமும் மிக்கவர்களாக இருந்தனர். விந்தை மிகு ஆற்றல் களைப் பெற்றிருந்தும் தங்களைப் படைத்த இறை வனை மறந்து செயற்பட்டனர். தங்கள் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கடவுள்களை உருவாக்கிக் கொண்டனர். இத்தகு தவறான நடத்தைகளை விட்டு ஒதுங்கி, சமூக நெறிமுறைகளுக்கு ஏற்ப நடக்கும்படி அவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாக வந்த ஹ9த் (அலை) அவர்கள் அழைப்புவிடுத்தார்கள் தொடர் ந்தும் பிடிவாதக்காரர்களாகவும், முரடர்களாகவும் வாழத் தலைப்பட்ட இவர்களிடம் சிறந்த கலாசார பண்பாடுகள் அழிந்தபோது அல்லாஹிவால் அழிக்கப் பட்டனர். அல்லாஹவின்தூதரும் அவரது வழிநடந்த தோழர்களும் பாதுகாக்கப்பட்டனர்.
ஸ்மூத் சமூகத்தினர்:
ஆத் சமூக நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொட ர்ந்து வந்த சமூகத்தவர்களே இவர்கள். அரபு நாட் டின் வடமேற்குப் பகுதியில் அல் ஹிஜர் என்ற பகு தியில் வாழ்ந்தனர். இன்று “மதாயின் ஸாலிஹ” என அழைக்கப்படும் மதீனாவுக்கும் தபூக் இற்கும் இடைப் பட்ட பிரதேசமே அவர்களின் அன்றைய தலைமைப் பீடமாகும். ஆத் சமூகத்தின் அழிவிற்குப்பின்னர் இப் பூமியில் அல்லாஹ இவர்களுக்கு சிறப்பான வசதிக ளை வழங்கினான். அதன் சமவெளிகளில் பிரமாணர் டமான மாளிகைகளை எழுப்பினார்கள். மலைக ளைக் குடைந்து வீடுகள் அமைக்கும் வல்லமையும் இவர்களிடம் காணப்பட்டது. இவர்களிடையே ஆண வம் மிகுந்து காணப்பட்டது. இதனால் பாரிய ஒரு நிலநடுக்கத்தின் மூலம் அழிக்கப்பட்டனர். நேர்வழி நடந்தவர்கள் தங்கள்தூதர் ஸாலிஹர் (அலை) அவர் களோடு அவ்வூரை விட்டும் வெளியேறினார்கள். இவர்கள் மலைகளைக் குடைந்து உருவாக்கிய கட்டி டங்கள் சில இன்றும் அங்கு காணப்படுவதை நாம் காணலாம்.
“மேலும் ஆதையும், ஸ்மூதையும் இவ்வா றே அழித்துவிட்டோம். என்பது அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து அவர்கள் அடைந்த முடிவு திட்ட மாக உங்களுக்கு தெளிவாகிவிட்டது. அவர்களுடை ய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கார மாக்கியும் காண்பித்தான். ஆகவே அவர்கள் நல்லறி வுடையோர்களாக இருந்தும், நேர்வழியைவிட்டும் அவன் அவர்களைத் தடுத்துவிட்டான். (29 : 38)
லுத் சமூகம்:
இவர்கள் இப்றாஹீம் (அலை) அவர்களது வழித்தோன்றர்களில் வந்தவர்களாகும், இவர்களுக்கு
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 77

Page 89
வழிகாட்டியாக லூத் (அலை) அவர்கள் அனுப்ப ப்பட்டார்கள். இவர்கள் வாழ்ந்த பகுதி இப்போது LDIT60755l65 (Death Sea) -96.DLoig6fott பிரதேசமா கும். இவர்கள் இறையச்சமற்றவர்களாக இருந்தனர். இவர்களது பழக்க வழக்கங்கள், நடத்தைகள் வாழி வின் வழிகாட்டல்களை விட்டும் தடம்புரண்டிருந்தது. சந்தைகளிலும், பொதுவிடங்களிலும், தெருவோரங் களிலும் வெட்கமற்றவர்களாக உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர். பெண்கள் புறக்கணிக்கப்பட்டு, ஆணர்களிடையே ஓரினச்சேர்க்கை, பாலியல் துஷ்பிர யோகம் என்பன பரந்து காணப்பட்டிருந்தன. எனவே தான் கல்மாரி அவர்கள் மீது பொழிந்தது. இதுவே நெறிதவறும் சமூகங்களுக்கு நேரும் என்று அல் குர்ஆனின் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. இந்த சமூகத்தில் நேர்வழி வாழ்ந்தவர்கள் பாதுகாக்கப்
பட்டனர்.
மதியன தேசத்தவர்:
இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களின் முக்கிய பகுதி ஹிஜாஸின் வடமேற்கில் பலஸ்தீனத்திற்கு தெற் கில் இருந்தது. மேலும் செங்கடல் மற்றும் அகபா வளைகுடாவின் ஓரமாகவும், சினாய் (Sinai) தீப கற்பத்தின் கிழக்குக் கடலோரங்களிலும் சிறிது பரவி யிருந்தது. இவர்கள் பெரும் வர்த்தக சமூகத்தினராக இருந்தனர். பணிடைக் காலத்தில் யமனிலிருந்து மக்கா, யண்பூஃ வழியாக சிரியா வரை சென்ற பிரதா ன வர்த்தகப் பாதையும் ஈராக்கிலிருந்து எகிப்து வரை யான பிரதான வர்த்தகப் பாதையும் சந்திக்கும் இடத் திலேயே இவர்களின் ஊர்கள் காணப்பட்டன. ஆனால் வர்த்தகத்தில் கள்வர்களாகவும் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் காணப்பட்டனர். இவர்களிடை யே பொய், நம்பிக்கைத் துரோகம், முரன் ஒழுக்க நெறிகளை (Immoral) மேற்கொள்ளாதவரை வியாபா ரம், அரசியல் மற்றும் உலகியல் விவகாரங்களைச் சரிவர நடத்த முடியாது என்ற நிலை உருவாகிய போது பாரிய ஒரு நில நடுக்கத்தின் மூலம் அடி யோடு அழிக்கப்பட்டனர். இவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டல்களை வழங்க வந்த சுஐப் (அலை) அவர்களும் அவர் வழிநடந்தவர்களும் பாதுகாக்க ப்பட்டனர். இவர்கள் இவ்வூரைவிட்டே இடம் பெயர் ந்தார்கள்.
“மேலும் மத்யன் எனும் தேசத்தவர்களிடம் அவர்களுடைய சகோதரர் சுஜபை நம் தூதராக அனு ப்பினோம். அவர் என்னுடைய சமூகத்தவாகளே ! அல்லாஹீவையே நீங்கள் வணங்குங்கள். உங்க ளுக்கு அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, அளவையையும், நிறுவையையும் நீங்கள் குறைக் காதீர்கள். நீங்கள்நல்லநிலைமையில் இருப்பதையே நான் காணர்கின்றேன். அவ்வாறிருக்க ஏன் மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால் நிச்சயமாக உங் களையிட்டு நான் பயப்படுகிறேன்.” (11:84)
ஃபிர்அவினி சமூகத்தவர்: இம்மக்கள் இஸ்ராயிலின் வழித்தோன்றல்
78 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

களாக இருந்தனர். இங்கு வாழ்ந்த பணிடைய மன் னர்களுக்கு ஃபிர்அவினி என்பது பரம்பரைப் பெயராக இருந்தது. இவர்கள் தங்களுடைய மகா தேவனாக கருதிய சூரியனை “ரஃ” என அழை த்தனர். இந்தச் சொல்லின் அடிப்படையில்தான் ஃபிர் அவன் - சூரிய தேவனின் மக்கள் - என்ற பெயர் உருவாகியது. இவர்கள் பசுவை புனிதப்படுத்துவதை யும், பூஜிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
வாழ்வின்இலக்கைத்தவறவிட்ட மக்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட மூஸா (அலை), ஹாறுான் (அலை) அவர்களும் அன்றைய அரசன் ஃபிர்அவ னால் புறக்கணிக்கப்பட்டுப் பொய்ப்படுத்தப்பட்டனர். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களில் ஆணர் குழந்தை கள் கொல்லப்பட்டனர். அவர்களது பரம்பரை அழிந் துவிடவேண்டும். மற்ற சமூகங்களோடு இரண்டரக் கலந்து காணாமல் போய்விட வேண்டும் என்ற இல க்கில் ஒரு இனஅழிப்பையே (EthnicCleansing) மேற் கொணர்டனர்.
எனவே இவர்கள் பல ஆண்டுகளாக நீடித்த பஞ்சம், விளைச்சல் குறைவு, புயல், மழை, வெட்டுக் கிளி என்பவற்றால் சோதிக்கப்பட்டனர். பேன், தவ ளைகள் இவர்களிடையே பெருக்கப்பட்டுப் பரப்பப் பட்டது. இது இவர்கள் திருந்துவதற்கான சலுகை களாக வழங்கப்பட்டன. இருந்தும் தொடர்ந்தும் அவ fகள் ஆணவம் கொண்டு நடந்தனர். தங்கள்தூதரைக் கொல்வதற்குக் கூட முயற்சித்தனர். எனவே நேர்வழி நடந்து, சீரிய சமூக உருவாக்கத்துக்கு முன்நின்ற தூத ரும் அவரது தோழர்களும் பாதுகாக்கப்பட்டனர். ஃ பிர்அவ்னும் அவனைப் பின்தொடர்ந்தவர்களும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்துவந்த இஸ்ரவேலர்களும் தங்கள் மதக் கோட்பாட்டை விரும்பியவாறு மாற்றிக் கொண்டனர். வட்டித்தொழிலை அறிமுகப்படுத்தி, பாட்டாளி, முதலாளி வர்க்கபேதங்களைத் தோற்றுவி த்தனர். தம் இனம் சாராத பெணிகளைத் தவறான பாலுறவுக்கு உட்படுத்துவது தவறில்லை எனக் கொண்டனர். எனவே சுயநலம் சுவாலையாகி, சமூக நலன்கள் இருணர்ட போது வறுமை, பூகம்பம், இன்ன ல்களால் இவர்களும் அழிக்கப்பட்டனர்.
இவ்வாறு நல்ல காரியங்களைச் செய்வதை விடுத்து குற்றங்கள், தவறுகளில் ஈடுபட்டு அட்டகாச ங்களைப் புரிய முற்பட்டாலன்றி எந்த சமூகமும் அழி ந்துவிட மாட்டாது என்பது இயற்கை நியதியாகும்.
“இன்னும்நபியே ஊர்களை அவ்வூரார் சீர்தி
ருத்துபவர்களாக இருக்கும் நிலையில் அநியாயமாக உமதிரட்சகன் அழித்துவிடுபவனாக இல்லை”(11117)
“மேலும் ஏதேனும் ஓர் ஊரை நாம் அழித்து விட நாடினால் அதில் சுகமாக வாழ்வோரை நம் கட்
டளைகளுக்கு பணிந்து நடக்குமாறு நாம் ஏவுவோம்.

Page 90
ஆனால் அவர்கள் நம் கட்டளைகளை மீறிப் பாவம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் பின்னர் அதன் மீது வேதனை பற்றிய நம்முடைய வாக்குறுதி உறுதியா கிவிடுகிறது, ஆகவே நாம் அதனை அடியோடு அழித்துவிடுவோம்.” (17:16)
எனவே ஓர் ஊரை அழிப்பதென்பது அதை தலைகீழாகப் புரட்டிவிடுவதும், அவ்வூர் மக்கள் அனைவரையும் கொன்றுகுவித்துவிடுவதும் மட்டும் தான் என்பதன்று. அந்தச்சமூகத்தினரிடையே கட்டுப் பாட்டை இல்லாமலாக்குவதும், பிரிவுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்திவிடுவதும், அவர்களுக்கு இழிவையும், அவமானத்தையும், அடிமைத்துவத்தை யும் ஏற்படுத்திவிடுவதும் கூட அழிப்பது என்பதனுள் அடங்கும்.
இந்தநோக்கிலேயே உலகில் மாறி மாறித் தோன்றிய சமூகங்கள் நாகரிகங்களின் மறைவுகள் அணுகப்பட முடியும். சிந்துவெளி நாகரிகம், யூப்பிரடிஸ், டைகிரிஸ், குவாங்கோ போன்ற நதி க்கரை நாகரிகங்களும், திராவிடம், ஆரியம், யூதம் போன்ற இனங்களுக்குரியநாகரிகங்களும், கிரேக்கம், ரோம், பாரசீகம் குறிப்பிட்ட கால நாகரிகங்களும் வரலாற்றில் வளர்ச்சியும் வீழ்ச்சியும் கண்டன.
நவீன மேற்கத்திய நாகரிகம்
(Modern Western Civilization)
மனிதனை வெறும் பொருளியல் கண்ணோ ட்டத்தில் அணுகி, அவனை ஒரு சடத்துவப் பணிட மாகக் கொண்டு வாழ்க்கைக் கோட்பாடுகளை வழ ங்கிய கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடு சமகாலத்தில் ‘சர்வமயபப்டுத்தல் (Globalaization) என்ற சிந்தனை யோடு இன்றைய உலகுக்கான ஒரே ஏக நாகரிகம் மேற்கு நாகரிகம்’ என்ற மேற்கின்நவீனத்துவவாதம் (Modermity) ஒருநாகரீகத்தின் எந்த அடிப்படையுமற்ற பூச்சியமாகும்.
இதன் தோற்றம் எப்போது, எவ்வாறு, எத்த கைய சூழலில் என்பதையும், அது தனக்கேயுரிய தனி த்துவப் பணிபுகளைப் பெற்று, ஏனைய நாகரீகங் களிலிருந்து எப்போது வேறுபட்டமைந்தது என்ட தையும் எமக்கு திட்டவட்டமாக கூறமுடியாது போய விட்டாலும், மத்திய காலப்பிரிவின் முதற் கூறில தொடங்கி சுமார் நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு கால எல்லைக்குள் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும என்று கூறலாம்.
இது வீழ்ச்சியுற்ற ரோமானிய நாகரிகத்தில் ருந்தும் கீழைத்தேய மதமான கிறிஸ்தவ மத நாசி ரிகத்திலிருந்தும் தோன்றி பின்னர் மேற்கத்தயவர்களது வாழ்க்கைப் போக்கிற்கும் அவர்களது தேவைகள் மனோபாவங்கள், அறிவுத் தரங்கள் என்பவற்று க்கேற்ப படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பது வரலாற்று ஆய்வுகளின் வெளியீடாகும். இருந்துப

இது முற்றிலும் ரோமநாகரிகத்தினதும் கிறிஸ்தவ மத நாகரீகத்தினதும் முதுசமாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், ரோம நாகரிகம்; புலன்உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவை நம்பாமை, மதப்பற்றின்மை, உலக இன்பத்தை அதிகம் நுகர்தல் தேசியப் பற்றுப் போன்ற கிரேக்க சிந்தனையின் பணிபுகளோடும், Etruscans (இத்தாலி) Minoan போன்ற வேறு சில இனங்களின் சிந்தனைகளினதும் தொடர்புகளோடும் தோன்றிய தாகும்.
இத்தகு பகைப்புலத்தோடு, நாஸ்திகத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள மேற்கு நாகரிகம், “மனிதன் வாழும் குழலை, இயற்கைவளங்களைக் கட்டுப்படுத்தி அவ்வளங்களின் உச்சப் பயனை அடையும் வழிவகைகளைக் கண்டுபிடிப்பதே மனித வாழ்வின் இலட்சியமி” என்று கருதியதோடு ஒரு நாகரிகத்தின் அடுத்தபக்கமாக விளங்கும் மனிதனை மறுதலித்தமையுமே ஐரோப்பா அதன் வரலாற்றில் இருண்ட காலத்தை சந்திக்க வைத்தது. மணிணைத் துழாவியும் விண்ணை அளாவியும் காலத்தின் தேவைகளை கண்டுபிடித்துக்கொண்டிருக்கும் சமகால மேற்கு நாகரிகம் ஒரு முழுமையான மனிதனை உரு வாக்க முடியாமற் போனமை அதன் அடிப்படை களற்ற உருவாக்கத்தையே புடம்போட்டுக் காட்டு
கிறது.
கலாநிதி யூஸுப் அல் காழாவி அவர்கள், “மேற்கு தனது விஞ்ஞான தொழில்நுட்பத்துறையில் பல முன்மாதிரிகளை உலகிக்கு வழங்கினாலும் கூட ஒப்பிடும்போது ஆன்மீக, ஒழுக்கப் பண்பாட்டில் அது கண்ட வீழ்ச்சி மிகப் பாரியதாகும். மேற்கில் பல்வேறு வகையான தத்துவ, சமூக, உள ரீதியான சிந்தனைக் கோட்பாடுகள் பிழையானவையாகக் காணப்படுவதே இதற்கான முதன்மைக் காரணமாகுமி” என்று குறிப் பிடுகின்றார்.
மேலும் நாகரிகம் பற்றிக் குறிப்பிடவந்த கலா நிதி அவர்கள் “உணர்மையான முழுமையான ஒரு நாகரிகம் ஒரு பூரண மனிதனைப் போன்றது. அதற்கு உடல், ஆன்மா என்ற இரண்டு பகுதிகள் உணர்டு, ஒரு நாகரீகத்தின் உடலமைப்பு அதன் உறுதியான முன்னேற்றத்தில் பிரதிபலிக்கின்றவேளை ஆன்மீகப் பகுதி அதன் பண்பாட்டுப் பெறுமானங்களதும் வழி காட்டல்கள், நம்பிக்கைக் கோட்பாடு என்பவற்றின் கூட்டுத்தொகையாக விளங்க வேண்டுமி” என்று விளக்குகிறார்.
ஆனால் இன்றைய மேற்கு நாகரிகத்தில் கடவுளைப் புரிந்துகொள்வதில் ஒரு இருள்படிந்த நிலை, சட ரீதியான மனோநிலை, லோகாயத சிந்த னைப் பாங்கு, தத்துவ ரீதியான உள்ளார்ந்த முரணர் பாடுகள் மேலோங்கியிருப்பதால், ஆன்மீகப் பண்பு கள் வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் பாலியல் வன் முறைகள், தற்கொலைகள் தலைதூக்கிநிற்கின்றன. இதன் விளைவாக பண்பாட்டு வீழ்ச்சி, குடும்ப உறவு
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 79

Page 91
களுக்கிடையிலான துணர்டிப்பு, மனவிரக்தி, சிந்த னைக் குழப்பம் என்பன மேற்கத்தேய மனிதனின் நடைமுறை வாழ்வை மிகக் கடுமையாகப் பாதித் துள்ளன. எனவே இத்தகைய ஒருநாகரிகத்தின் எதிர் காலம் என்னவாகும் ? என்று வினாத் தொடுக்கிறார். இத்தகைய கேள்விகள் இன்றைய மேற்கத்தேய சமூ கவியலாளர்கள் மத்தியிலும் எழும்பியுள்ளமை அதன் உள்வீட்டு எதிர் அலைகளாகவே கொள்ள முடியும்.
“மேற்கு நாகரிகம் ஒழுக்க விழுமியங் களையும், பண்பாட்டுப் பெறுமானங்களையும் இழ ந்து, தன்னைத்தானே அழித்துக்கொண்டதோர் நாகரி கமாக மாறிவிட்டது.” என்ற Gohn Tosaiwi எனும் மேற்கத்தைய அறிஞனின் கருத்து இதற்கு ஓர் எடுத்
துக்காட்டாகும்.
மேற்கின் வீழ்ச்சி பற்றிக் கூறவந்த ஓர் கீழை த்தேய அறிஞர் இப்படிக் குறிப்பிடுகின்றார் “மேற்க த்தேய நாகரிகம் மனிதனை வான்வெளியில் சிறகடி த்துப் பறக்கும் புள்ளினங்களைப் போல் வட்டமிட்டு பறந்து திரியும், கடலிலே நீந்திச் செல்லும் மீன் மச்ச ங்களைப் போல் ஊர்ந்து செல்லவும் கற்றுக் கொடுத் துள்ளது. ஆனால் பூவுலகின் மேற்பரப்பில் மனிதப் புனிதனாக வாழத்தான் கற்றுக் கொடுக்கவில்லை.”
முடிவுரை:
இத்தகைய ஒரு வரலாற்று ஆய்வாக நோக்கு கின்றபோது மேற்கின் கோளமயப்படுத்தல் (Globalai zation) என்ற சிந்தனையானது எந்தளவு தூரம் சாத் தியமாகும் என்ற வினா தொடுக்கப்படுவது தவிர்க்க வியலாததாகும். மனித வரலாற்றில் பல்வேறுபட்ட நாகரிகங்கள் தோன்றினாலும் அவற்றால் குறிப்பிட்ட ஒரு காலத்துக்கப்பால் நிலைத்துநிற்க முடியாமல் போனமையை வரலாற்று ஒழுங்கில் காணமுடியும். அவைகள் ஒரு பூரண நம்பிக்கைக் கோட்பாட்டில் கட்டியெழுப்பப்படாமையே இதற்கான காரணமாகும். இன்றைய மேற்கத்தேய நாகரிகத்தினது நிலையும் இதுவே ஆகும்.
எனவே ஒருநாகரிக சமூக உருவாக்கத்திற்கு, அதன் அடிப்படைகள் ஆரோக்கியமான சமூகத்தை இலக்காகக் கொண்டிருத்தல் வேண்டும். இத்தகு உருவாக்கம் அதன் தனிநபர்களிலிருந்து குடும்ப நிறுவனங்களினுடாக உயர் பணிபாடுகளைக் கொண்ட கலாசாரமாக உருவெடுத்து, சிறந்த நாகரிக சமூகத்தை நோக்கிச் செல்வது அவசியமாகும். இவைகளே எழுச்சி மிக்க நாகரிகங்களின் முதன்
மைக் கூறுகளாகும்.
எனவே மேற்குறித்த அனைத்துப் பணிபு களையும் ஒருங்கே பெற்று கால வளர்ச்சிக்கும் சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும் ஏற்ப ஈடுகொடுத்துச் செல்லும் தகுதி விதி கொண்ட ஏக நாகரிகம் இஸ் லாமே. என்பதை அதை அணுகி ஆய்பவர் அறிந்து கொள்ளும் உணர்மையாகும்.
80 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் <--

எனவே காலத்தின் கட்டாயத் தேவையான மனித உடலின் தாளங்களுக்கும், அவனது ஆத்மா வின் அழைப்புகளுக்கும் இடையே சமரசம் செய்து குறுகிய எல்லையைக் கொண்ட அவனது வாழ்வின் பரிபூரணத்துவத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பூரண நாகரிகம்இஸ்லாமாகும். அதுவே நாளை நாக ரிகமாக மிளிர்வதற்குத் தகுதிபெற்றதாகும்.
உசாத்துணைகள்:
1. அல் ஹலாரதுல் இஸ்லாமியப்யா,
- மெளலானா மெளதுரதி. 2. அல் இஸ்லாம் ஹழாரதுல் கதி. - கலாநிதி யூசுப் அல் கர்ழாவி. 3. தப்ஹீமுல் குர்ஆன். (குர்ஆன் விளக்கவுரை)
- மெளலானா மெளதுரதி. 4. இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள்.
- கலாநிதி M. A. M. சுக்ரி. 5. இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறி.
- மெளலானா மெளதுரதி. 6. அல் - ஜாமிஆ,
- 1992. 7. சமூகவியல் ஓர் அறிமுகம்.
- டாக்டர். எஸ். சாவித்திரி
தந்தையின் உபதேசம்
“லுக்மான் அவருடைய மகனுக்கு உபதேசிக்கும் போது பின்வருமாறு கூறினார். மகனே இணைவை க்காதே. அல்லாஹற்வின்மீது சத்தியமாக இணைவை த்தல் மிகப் பெரும் அநீதியாகும். நாம் மனிதனுக்கு அவனது பெற்றோர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டுமென உபதேசித்துள்ளோம். அவ னை அவனது தாய் துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்துச் சுமந்தாள். இரண்டு வருடங்களாக அவனுக்குப் பாலூட்டினாள் எனக்கும் உனது பெற் றோருக்கும் நீநன்றியுடன் நடந்துகொள்வாயாக, என் னிடமே மீண்டுவரவேண்டியிருக்கிறது. உனக்கு அறி வில்லாத விடயத்தில் எனக்கு இணைவைப்பதற்கு உனது பெற்றோர் முயற்சித்தால் அதில் அவ்விருவரு க்கும் வழிப்பட வேண்டாம். இவ்வுலகில் அவ்விருவ ரோடும் நல்லமுறையில் நடந்துகொள்வாயாக. என்னி டமி திரும்பிவிட்டவர்களின் பாதையைப் பின்பற்று வீராக. நீங்கள்திரும்பிவருமிடம் என்னிடமே இருக்கி றது. அப்போது நீங்கள் செய்துகொண்டிருந்தவைக ளைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன் மகனே நீகடுகளவு நன்மைசெய்து அது கற்பாறையில் அல் லது வானங்களில் அல்லது பூமியில் மறைந்திருந்தா லும் அல்லாஹி அதைக் கொண்டுவருவான். அல்லா ஹ நூனுக்கமானவன், நிபுணன், மகனே தொழுகை ய்ைநிலைநாட்டு நன்மையை ஏவித் தீமையைத் தடு. உனக்கேற்படும் துன்பத்தில் பொறுமையாய் இரு.”
லுக்மான் 13-19.

Page 92
இஸ்லாமிய த
எம். ஏ. எம்
தஃவா என்பது மொழியில் அழைத்தல் என் று பொருள்படும். குறிப்பிட்ட கொள்கையினர்பால் அல்லது வாழ்க்கைநெறியின்பால் மக்களை ஈர்ப் பதற்குச் செய்யப்படும் சொல் செயல் நடைமுறைசார் முயற்சியென அடையாளப்படுத்தலாம். இஸ்லாம்; மதத்தின் குறுகிய எல்லைகளையும் தாண்டிய ஒரு வாழ்க்கை நெறியாகும். மனிதன், வாழ்வு, பிரபஞ்சம், கடவுள் பற்றி அதற்கொரு உலக நோக்கு இருக்கிறது. இந்த உலக நோக்கை ஏற்றுக்கொள்பவனே முஸ்லி மாகிறான். இவ்வுலக நோக்கிற்கேற்ப ஒரு சமூகக் கட் டுக்கோப்பை உருவாக்கிக்கொள்ளும்போதே இஸ்லாமிய சமூகம் பிறக்கின்றது. இவ்வுலக நோக்கின் பக்கமும் இதனடியாக எழும் சமூக அமைப்பை நோக்கியும் அழைப்பு விடுப்பதையே இஸ்லாமிய தஃவா என்கிறோம். இவ்வழைப்பு குறுகிய எல்லைக் கோடுகளைத் தாண்டி உலகம் தழுவும் அழைப்பாக அல்லது உலகிற்கு அப்பாற்பட்ட மறுவாழ்வை நோக் கிய பிரபஞ்சம் தழுவிய அழைப்பாகவும் காணப் படுகின்றது. 4)
இஸ்லாமிய அழைப்புப் பணி'இக்ரஃ' என் ற திருவசனத்தோடு தொடங்குகின்றது. குறிப்பிட்ட கொள்கைக்காகவோ அல்லது வாழ்க்கை நெறியொன் றிற்காகவோ அழைப்பு விடுப்பவர் அதுபற்றிய ஆழ் ந்த தெளிவுள்ளவராய் இருப்பது முக்கியம். கொள் கைத் தெளிவில்லாத பிரசாரங்களும் பெருங் கதையா டல்களும் ஈற்றில் கொள்கைகளையே குழிதோண்டிப் புதைப்பதாக அமைந்துவிடும்.
ஆரம்பத்தில் இறங்கிய அல்குர்ஆன் வசன ங்கள் பிரசாரத்திற்குத் தோவையான அறிவுத் தகை மைகளையுமீஆளுமைப் பணிபுகளையுமே வலியுறு

ஃவாவும் விளிம்புநிலைப் போராட்டங்களும்
அஜூன் மூன்றாம் வருடம், உஸ்லுத்தின் பிடம்
த்துகின்றன. குர்ஆன் சொல்லும் சிந்தனைகளைப் புரிந்து கொள்ளல் அதைநடைமுறைப்படுத்தல் என்ற கட்டத்திற்கு முன் நிபந்தனையாக மாறுகின்றது. இறைத்தூதரைக் கொலைசெய்யச்சென்ற உமர் இஸ் லாத்தைத் தழுவிய சம்பவத்தில் அவரின் சகோதரியும், மைத்துனரும் குர்ஆனைப் படித்துக்கொண்டிருந்த தாக வரும் வரலாற்றுக் குறிப்பு இஸ்லாமிய அழைப் பாளர்களுக்கு கற்றலின் முக்கியத்துவத்தை உணர் த்தும் முதற்தர உதாரணமாகும்.
அல்குர்ஆன் விளிக்கும் போது ஆரம்பத்தில் ‘மனிதர்களே என்றே வளிக்கின்றது. அரசியல், சமூக, பொருளாதார, தனிமனித சட்டங்களைக் கூறுவதற்கு முன்னால் ‘விசுவாசம் கொண்டவர்களே' என விளிக் கின்றது. இது சட்டங்களை வலியுறுத்தும் முன் சட்டம் இயற்றுவோன் பற்றிய விசுவாசம் பிரதானமானது என்பதைக் காட்டுகின்றது. சிறையிலிருந்த தோழர்க ளுக்கு யூசுப் (அலை) அவர்கள் பிரபஞ்சத்தின் கர்த் தாவையே முதன்முதலில் அறிமுகஞ் செய்து வைக் கிறார்.
இஸ்லாமிய அழைப்புத் தொடர்பான சட்ட ங்களையும், விதிகளையும் ‘பிக்ஹத் தஃவா’ எனும் கலை மிகத்தெளிவாக விளக்கிச் செல்லும் அளவிற்கு முன்னெப்போதையும் விட கடந்த நூற்றாண்டில் வள ாந்திருக்கிறது என்பதை இஸ்லாமியத்துறை சார்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள் பேரளவிலிருந்த உஸ்மா னிய சாம்ராஜ்யம் 1924ஆம் ஆண்டு துருக்கியில் வீழ்ச்சியடைந்ததோடு இஸ்லாமியதஃவாவும் முனை ப்புடன் செயற்படத் தொடங்கியது. இஸ்லாமிய தஃ வா குறித்து முற்றிலும் புதிய பல நுணிமையான ஆய் வுகள் நவீன கால இஸ்லாமிய அறிஞர்களால் மேற்
S அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 81

Page 93
கொள்ளப்பட்டுள்ளன. இழந்துபோன இஸ்லாமிய சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆவலோடு ஆயுதம் மற்றும் சிந்தனைப் போராட்டங்களும் முனை ப்படைந்துள்ள ஒரு காலப்பிரிவில் அப்போராட்ட ங்களை மலினப்படுத்தும் வகையிலும் போராட்ட த்தின் மையத்தை அழித்துவிடுமோ என அஞ்சுமள வுக்கு விளிம்புநிலைப்போராட்டங்களின் பக்கம் தஃ வாவில் குவிமையம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றிக் கலாநிதியூசுப் அல்கர்ழாவி அவ ர்கள் குறிப்பிடும் போது “இஸ்லாமிய சமூகத்தின் அடி க்கட்டுமானத்தோடும் அதன் அடையாளத்தோடும் செல்நெறியோடும் தொடர்புபடும் பாரிய பணிகளை விட்டுவிட்டு விளிம்புநிலைப் பிரச்சினைகளிலும் கிளை அம்சங்களிலும் முஸ்லிம் இளைஞர்கள் அதி கம் ஈடுபடுவது பெருந்தவறாகும். அதே நேரத்தில் மதச்சார்பின்மை முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவுவ தையோ, நாஸ்திகம் பரவுவதையோ, சியோனிசம் கால் ஊன்றுவதையோ கிறிஸ்தவம் சூழ்ச்சியில் ஈடுபடுவதையோ யாரும் சிந்திப்பதில்லை. அகன்ற இஸ்லாமிய உம்மத்தின் உடலில் இவை தமது கைங் கரியத்தை மிகக் கவனமாக நிறைவேற்றிவருகின்றன. வரலாற்று ஆளுமையை அழித்தும், இஸ்லாமிய சுயத்தை உரித்தெடுத்தும் புதுவகைக் கிறிஸ்தவ பிரசாரத்தாக்குதல்களை ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்கள் மேற்கொணர்டு வருகின்றனர். பூமிப் பந்தின் பல்வேறு பக்கங்களிலும் முஸ்லிம்கள் கொல் லப்படுகின்றனர். இஸ்லாமிய வாதிகள் எங்கும் சோத னைக்குள்ளாகின்றனர்.
“ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவெ ன்றால் கடல்தாண்டி அமெரிக்கா, கனடா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் இந்த விளிம்புநிலைப் போராட்டங்களை அங்கும் எடுத்துச் செல்லுகின்றனர் என்பதுதான்.
“நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய இஜதிகா த்துக்குட்பட்ட, சட்ட மரபுகள் வேறுபட்ட கருத்து க்களைக் கொண்டுள்ள இப் பிரச்சினைகள் தொட ர்பாக முஸ்லிம் அணிகளுக்கிடையே அஞ்சத்தக்க பிளவும் வன்மமான வாதமும் ஏற்பட்டுள்ளதை என் கணிணால் கண்டும் காதால் கேட்டும் உள்ளேன். அந்தோ இவ்விடயங்களில் மக்களை ஒன்றிணை க்கத்தான் முடியுமா ?!
இவர்கள் செய்யவேணர்டிய முதன்மைப் பணி, முஸ்லிம்களைப் பாதுகாத்தல் அவர்களின் நம்பிக்கைக் கோட்பாட்டில் வளர்த்தெடுத்தல், கட மைகளோடு அவர்களைத் தொடர்புபடுத்தல், பெரும்
82 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 6

பாவங்கள் இழைப்பதை விட்டும் தடுத்தல் ஆகிய வற்றில் அவர்களின் முயற்சிகளை செலவளிக்க வேண்டும். நம்பிக்கையைப் பாதுகாத்தல், கடமையை நிறைவேற்றல், பெரும்பாவங்களை நிறுத்துதல் ஆகிய முப்பெரும் பணிகளை சிறுபான்மை முஸ்லிம்கள் ஆற்றுவார்களாயின் பெரும் பணியையும், பெரும் இலக்கையும் ஈட்டியவர்களாய்க் கருதப்படுவர்.
வருந்தத்தக்க விடயம் யாதெனில் இக்கிளைப் பிரச்சினைகளில் பிரதிவாதங்களைத் தூண்டி, தொடர் ச்சியாக நெருப்பை மூட்டிவரும் இவர்கள் பெற்றோ ருக்கு உபகாரம் செய்தல், ஹலாலைப் பேணல், கட மைகளை சரிவர நிறைவேற்றல், மனைவியைக் கவ னித்தல், பிள்ளைகளைப் பராமரித்தல், அயலவர்க ளுக்கு உதவுதல் போன்ற நற்காரியங்களில் வரம்பு மீறிநடந்துகொள்கின்றனர். பிரதிவாதங்களில் தொடர் ச்சியாக மூழ்கிவிடுவது, எதற்கெடுத்தாலும் விவாத த்திற்கு அழைப்பது இத்தகைய விளிம்பு நிலைப் போராளிகளுக்கு ஒரு பொழுது போக்காகவும், பேரி ன்பமாகவும் மாறிவிட்டது. வெறுக்கத்தக்க விதணி டாவாதம், குரோதம், காழ்ப்புணர்வு போன்ற இழி குணங்களுக்கே இவை ஈற்றில் வந்து சேர்கின்றன. இவ்வகை விதண்டாவாதத்தை பின்வரும் ஹதீஸிகள் வண்மையாக கணிடிக்கின்றன.
“நேர்வழி கொடுக்கப்பட்ட பின்பு ஒரு சமூ கம் வழிதவறுமாயின் அது குதர்க்கவாதம் புரியும் சமூகத்தைத் தவிர வேறல்ல.” (ஆதாரம் : திர்மிதி)
“ஆயிஷா (றழி) அவர்கள் அறிவிப்பதாவது, அல்லாஹர்விடம் மிகவும் வெறுப்புக்குரிய மனிதன், பக்கச் சார்போடு கடுமையாக வாதிடக்கூடியவனே.”
(ஆதாரம் : முஸ்லிம்)
இக்கருத்தை ஸஹாபாக்கள் வாழ்வில் நடந்த சம்பவமொன்றின்மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அலி (றழி) அவர்களின் மகனும், இளைஞர் களின் தலைவருமாகிய ஹcஸைன் (றழி) அவர்க ளை ஈனத்தனமாக கொலைசெய்துவிட்டு கொசுவின் இரத்தம் நஜிஸா என ஈராக் வாசிகள் கேட்டபோது அப்துல்லா இப்னு உமர் (றழி) அவர்கள் அளித்த பதில் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
இப்னு அபீ நயீம் என்பவர் அறிவிப்பதா வது, "இப்னு உமர் (றழி) அவர்களிடம் நான் உட் கார்ந்துகொண்டிருக்கும்போது ஒரு மனிதன் வந் தான். அவன் கொசுவின் இரத்தம் பற்றி அவரிடம் கேட்டான்.” மற்றொரு அறிவிப்பில் கொசுவை கொலை செய்தவனின் நிலை பற்றிக் கேட்டதாக வருகிறது. ‘அதற்கவர்நீர் யாரெனக் கேட்டார். அவ

Page 94
ண், தான் ஈராக் வாசியென்று கூறினான். அப்போது இப்னு உமர் எம்மை நோகக, இவனைப் பாருங்கள்! பூவுலகின் இரண்டு ரைஹான் என இறைதூதரின் மகளால் வர்ணிக்கப்பட்ட புதல்வர்களில் ஒருவராகிய ஹoஸைனைக் கொலை செய்துவிட்டு கொசுவின் இரத்தம் பற்றி தீர்ப்புக் கேட்கிறான்.” (ஆதாரம் : முஸ்னத் அஹமத்)
பெரும் பாவமொன்றைத் துணிச்சலோடு இழைத்துவிட்டு அற்ப விடயத்துக்காக அருட்டல் செய்யும் முரண்பட்ட போக்கு இஸ்லாமிய புனர்நிர் மாணப் பணியில் கணிடிக்கப்பட வேண்டியதாகும். இதனையே இப்னு உமரின் மேற்குறித்த கேள்வி மீதா ன இகழ்ச்சிப் பார்வை எமக்கு உணர்த்திநிற்கின்றது.
அழைப்புப் பணியில் ஈடுபடுபவர் ஏவல், விலக்கல், பொறுமை போன்ற விடயங்களில் மக்க ளுக்கு முதலில் அறிமுகம் செய்துவைக்கவேண்டும். ‘ஒரு தூதரை அனுப்பாமல் எந்தச் சமூகத்தையும் நாம் தண்டிப்பதில்லை.” என்ற திருவசனம் தீர்ப்புக்கு முன் சட்டம் பற்றிய அறிமுகம் அவசியம் என்பதைக் காட் டுகின்றது. ஓர் அழைப்பாளனின் பேச்சு சுவர்க்கம், நரகம், மீளெழுப்புதல், விசாரித்தல் போன்ற அம்ச ங்களோடு சுருங்கிவிடவும் கூடாது. அதையும்
/
இலங்கையின் தகா அமானா தகாஃ
தகாஃபுல் என்பது பரஸ்பர உதவுதை முகாமைத்
இது வியாபார மற்றும் அன்றாடத் தீ மோ போன்ற காப்புறுதித் தேவைகள், குடும்பத் தகாஃபுல் திட்டங்கை
"தக7./ேலி" ஷரிஆ சட்டமுறைக்கு
A/
Amâna Tal
“Amana 550, R.A. De Colon
சந்தைப்படுத்தல் ~ கீ0 ܢܠ

தாணர்டி நடப்பியல் உணர்மைகள், வாழ்வியல் பிரச்சினைகள், அநீதியின் கோர முகங்கள் போன்ற அனைத்தையும் தனது பிரசாரத்தோடு இணைத் துக்கொள்ளல் வேணடும். மனிதனி, பிரபஞ்சம், வாழ்வு என்பவற்றில் தொழிற்படும் இறை நியதி களை எடுத்துக் கூறி அவற்றின் அடிப்படையில் தீர்வைத் தேடவேண்டும். மனித உள்ளங்களில் மென் மையை ஸ்பரிசிக்கத் தெரிந்தவனுக்கே அவற்றை வெற்றிகொள்ள முடியும். பயிற்றுவிக்கப்படுபவனை விட பயிற்றுவிப்போன் பணிவுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனையாகும்.
துணைநின்றவை:
1. முஷகிலாத் பீதரீக்கில் ஹயாத்தில் இஸ்லாமியப்யா, அஷஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, பக் 54.
2. மஜ்முஅத்துர் ரசாயில், இமாம் ஹசனுல் பன்னா, Ludi : 158.
3. நஹவ வஃயின் இஸ்லாமியின் ரஷீதின், கலாநிதி யூசுப் அல் கர்ழாவி, பக் 7
4. அத் தஃவா கவாயித் வஉசூல், ஜும்ஆ அமீன் அப்துல் அஸிஸ், பக் 205
ஃபுல் முன்னோடிகள் புல் நிறுவனம்.
N
ல அடிப்படையாகக் கொணர்ட ஓர் இடர் துவ முறை.
ட்டார், கடல்சார், திருட்டு, தனிநபர் விபத்து தகாஃபுல் திட்டங்கள் உட்பட இன்னும்பல ளயும் வழங்குகின்றது.
இணக்கமான காட்புறுதியினது ஒரு ற்றிதி
kaful Limited.
House"
Mel Mawatha,
mbO-3. 74-518781 / O74-518782
Zسے
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 1 83

Page 95
பெற்றோர் - பி
a fir
உறவுகள், சொந்தங்கள் என்று பொதுவாக நோக்கின் உலகில் இரு வகை உறவுகள் காண ப்படுகின்றன. ஒன்று இரத்த உறவு. மற்றது திருமண உறவாகும். இரத்த உறவுகளில் தாய், சேய் பற்றிய உறவுகளே மிகவும் முதன்மையான நிலையில் நோக்கப்படுகிறது. மற்றெல்லா உறவுகளைவிடவும் தாய், தந்தை மற்றும் பிள்ளை போன்ற இவர்களு க்கிடையிலான உறவு உறுதியான ஒரு பாசக் கயி ற்றால் இறுதி வரையில் இறுகப் பற்றியிருப்பதைக் காணலாம். இவ்வுறவுகள் பற்றி இறை வேதத்தின் வசனங்களும், இறுதித் தூதரின் மொழிகளும் சிலா கித்துக் கூறியிருப்பதை அவதானிக்கலாம். இருந்த போதிலும், மேலைத்தேய சமூகப் பார்வைகள் இதில் எந்தளவு தமது கரிசனையைக் காட்டியுள்ளன என்று நோக்குவது இன்றைய காலத்தில் இஸ்லாத்தில் இதுசார் கணிணோட்டத்தை சரியான கோணத்தில் நின்று புரிந்துகொள்ள உதவும்.
பிள்ளைகள் பற்றிய வரைவிலக்கணம்
(35p560.g5LÜ (child-hood) Lu(565605 616ðDIT யறுப்பதில் உளவியலாளர்கள் மத்தியில் பல்வேறு வரைவிலக்கணங்கள் உள. குழந்தையின் வளர்ச்சிப் பருவங்கள் வயதை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு பிரிக்கப்படுகின்றது.
1 வயது வரை பால்குடிப் பருவம் 2-5 வயது வரை குழந்தைப் பருவம் 6-8 வயது வரை முன் பிள்ளைப் பருவம் 9-12 வயது வரை பின் பிள்ளைப் பருவம்
84 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் <--

lள்ளைகள் தொடர்பான 0மகளும் கடமைகளும்.
அமானி மூன்றாம் வருடம், உஸ்லுத்தின் பீடம்
அல்லது, முன் கட்டிளமைப் பருவம் என்றும்,
பொதுவாக 6-12 வயது வரையிலான பருவம்
பிள்ளைப் பருவம்
13-18 வயது வரை கட்டிளமைப் பருவம் என வும், வரையறுக்கப்படுகின்றன. 24 வயது வரை கட்டி ளமைப் பருவம் என்று கூறும் உளவியலாளர்களும் 267T.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் நிறை வேற்றப்பட்டு இலங்கை கைச்சாத்திட்ட“பிள்ளைகள் பட்டயத்தில் (children Charter) 18 வயதிற்குக் குறை ந்தவர்கள் அனைவரும் பிள்ளைகளாக குறிக்க ப்பட்டுள்ளது.” அணிமையில் நிறுவப்பட்ட தேசிய பிள்ளைகள் பாதுகாப்பு அதிகாரச் சட்டத்திலும் இதே வரைவிலக்கணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளமையும் குறி ப்பிடத்தக்கது.
குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகின்ற பொறுப்பு முஸ்லிம் பெற்றோர் மீதுள்ள ஒரு விஷேட சவால் மட்டுமன்றி கடமையும் கூட. ஏனெனில் ஒரு குழந்தை தன் அன்றாட வாழ்வில் ஏதோ வழியில் தனது பெற்றோரின் பிரதிமைகளாக இருக்கின்றனர். “ஒவ்வொரு குழந்தையும் பூர்வீக இறையுணர்வி லேயே பிறக்கின்றது. பெற்றோர்களே அவனை யூத னாகவும் கிறிஸ்தவனாகவும் நெருப்பை வழிபடுபவ னாகவும் மாற்றுகின்றனர்.” என்று நபி (ஸல்) அவ ர்கள் நவின்றார்கள். மேலும் குழந்தைகளின் ஆளு மையை வடிவமைப்பதிலும் இஸ்லாமியத் தனித் துவத்தை விருததி செய்வதிலும் பெற்றோர் மிகப் பெரும் பங்காற்றுகின்றனர்.

Page 96
“உலகில் மனிதன் பெற்றெடுக்கும் பிள்ளைச் செல்வங்கள் அல்லாஹீவின் அருட்கொடையாக, உலக வாழ்வின் அலங்காரமாக மற்றும் கணிகளின் குளிர்ச்சியாக திருமறை உருவகப்படுத்துகிறது. பெற் றெடுக்கும் பிள்ளை ஆணாகவோ அல்லது பெண்ணா கவோ இருக்கலாம். அஃது இறை நாட்டம் என்றெணி ணித் திருப்திப்படவேண்டும்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லா ஹவுக்கேயுரியதாகும். அவன் படைக்கின்றான் ஆக வே அவன் நாடியவர்களுக்குப் பெண் மக்களை வழ ங்குகின்றான். அல்லது ஆணி மக்களையும் பெண மக்களையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றியும், அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகி ன்றான். நிச்சயமாக அவன் யாவற்றையும் நன்கறி ந்தவன். தான் விரும்பியதைச் செய்ய மிக்க ஆற்றலு டையவன். (அஷஷறொ: 49 , 50)
பிள்ளைகள் மீதான பெற்றோரினி
கடமைகள்:
1. சந்ததியை உறுதிப்படுத்தல்:
பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முக்கிய கடமை சந்ததியை உறுதிப்ப டுத்தலாகும். ஏனெனில் குழந்தைகள்தம் பெற்றோரின் பணிபுகளை அச்சொட்டாகச் சுமந்து வருகின்றனர். உலகிலே அவர்களுக்கான கணி குளிர்ச்சியாக இக் குழந்தைகள் காணப்படுகின்றனர். அவர்கள் இறந்த பின்னரும் சந்ததிநிலைத்திருக்க குழந்தைகள் மூலம் வழி பிறக்கின்றது எனக் குறிப்பிடுவதில் மிகை யில்லை. இதனால் தான் பரம்பரையைப் பாதுகாப் பதற்கும், குழந்தையின் தந்தை யார் என்பதை அறிந்து கொள்ளவும் விபசாரத்தைத் தடை செய்த இஸ்லாம் திருமணத்தை ஆகுமாக்கியது. இதன் மூலம் தன் மனைவிக்குக் கிடைக்கும் அனைத்துக் குழந்தைகளும் கணவனின் குழந்தைகளாக அவனது பரம்பரையில் வந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.
மேலைத்தேயக் கலாசாரம் தம் சந்ததியைத் தூய்மையாகப் பெறுவதிலும் பரம்பரையைப் பாதுகாப்பதிலும் எவ்வளவு தூரம் அசிரத்தையாக உள்ளது என்பது கணகூடு. மேலைத்தேயர்கள் நாக ரிகம் எனும் போர்வையில் குடும்பத்தினதும் சமூக த்தினதும் கட்டுக் கோப்பைக் குலைத்துவிடுவதுடன், குழந்தை தனது பிறப்பைப் பற்றி அறிந்துகொள்ள முடியாத நிலையையும் பெற்றோரிடமிருந்து வரு கின்ற வாரிசுச் சொத்துக்களை இழக்கும் நிலையை யும் ஏற்படுத்திவிடுகின்றனர். மேற்கத்தேய சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தத்தெடுத்தல் முறை

என்பது சட்டரீதியற்றதாகும். ஒரு குழந்தையின் தனித்துவ அடையாளத்தை இல்லாமலாக்கி, புதிய தோர் அடையாளத்தை அதன் மீது திணிக்கும் போது அக் குழந்தைக்கும், தத்தெடுக்கும் பெற்றோரின் உறவினர்களுக்கும் அநியாயம் இழைக்கப்படுகின் றது. ஒரு அனாதைக் குழந்தை அதனது சொத்தைப் பாதுகாக்கின்ற, அதனது தனித்துவ அடையாளத்தைப் பாதுகாக்கின்ற, ஒரு பொது காவலராலேயே கவனி க்கப்பட வேண்டுமென்பதே இஸ்லாத்தின் கருத் தாகும்.
தனக்குப் பிறக்காதவர்களைத் தன் குழ ந்தைகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு குழந்தைகளாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் ஜாஹி லியப்யாக்கால சமூகங்களுக்கு மத்தியில் பரவிக் காண ப்பட்டன, பெருமானார் (ஸல்) அவர்கள் கூட'ஸைத் பின் ஹாரிஸா’வை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொண்டார்கள். இவ்வாறு ஒருவரைத்தத்தெடுத்துக் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவராக அவரைக் கருதி அவருக்குச் சொந்தக் குழந்தைகளுக்குக் கொடுப்பது போல் வாரிசு உரிமை போன்ற பல்வேறு உரிமைக ளை வழங்குவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
2. பாலுரட்டல்:
குழந்தையின் பிறப்பு முதல் கண்காணித்தல், பாதுகாத்தல், பயிற்றுவித்தல் என்பன கடமை களாகின்றன. இவ்வகையில் ஆரம்பக் கட்டத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமான தாய் ப்பாலூட்டலும் அவர்களின் கடமையே!
“தங்களின் குழந்தைகளுக்கு தம் மனை விகளைக் கொணர்டே பால் ஊட்டுவதைப் பூர்த் தியாக்க விரும்புகிறவருக்காக தாய்மார்கள் தங் களுடைய குழந்தைகளுக்கு அவை பிறந்ததிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை பூரணமாகப் பாலுட்டு வார்கள். இன்னும் பாலூட்டும் காலங்களில் அவர் களுக்கு உணவும் உடையும் முறைப்படி வழங்குவது தகப்பன் மீது கடமையாகும். எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கேற்றவாறல்லாது செய்யும் படியாக சிரமப்படுத்தப்படமாட்டாது. ஒரு தாய் தன் குழந்தை யின் காரணமாக, இன்னும் ஒரு தந்தை தன் குழந்தை யின் காரணமாகத்துன்புறுத்தப்படமாட்டார்.’(2:233)
««. விவாக விலக்குப் பெற்றவர்கள் பிரச வத்தின் பின்னர், உங்களுக்காகக் குழந்தைக்கு அவர் கள் பாலூட்டினால், அப்போது அதற்காக அவர்க ளுக்குரிய கூலியையும் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். இதைப்பற்றி முன்னதாகவே உங்களுக்கு ள் அறியப்பட்ட முறையைக் கொண்டு பேசி முடிவும்
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 85

Page 97
செய்துகொள்ளுங்கள். இது விஷயத்தில் தகராறுகள் உண்டாகிநீங்கள் ஒருவருக்கொருவர் சிரமம் அடை ந்தால் அப்பொழுது குழந்தையாகிய அதற்கு மற்றொ ருத்தி பால் கொடுப்பாள்.” (அத்தலாக்-6)
இந்த அல்குர்ஆன் வசனங்களும், றஸல்ெ (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களும் பாலூட்டலின் முக்கியத்துவத்தை எமக்குப்புலப்படுத்துகின்றன. தாய் மீது குழந்தைக்குப் பாலூட்டுவது கடமையாகின்றது. ஏனெனில் தாய்ப்பாலே ஆரம்பகட்டத்தில் பிள்ளை க்கு மிகவும் தேவையான உணவும், நிறை போஷா க்குமாகும். பிள்ளைகளின் பல்வேறு துறைகளினதும் வளர்ச்சி இத்தாய்ப்பாலிலேயே தங்கியுள்ளது.
பாலூட்டுதல் பற்றிய மேலைத்தேய சமூக நோக்கு உணர்மையிலேயே சிறார்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது. ஏனெனில் தாயொருத்தி தன் மனவிருப்பின் அடிப்படையில் அன்றி தன் குழந் தைக்குப் பாலூட்டுவதை விட்டும் நிர்ப்பந்திக்கப்பட மாட்டாள் எனவும் சிறார்கள்தாயிடம் பாலருந்துவது கூட அவர்களின் உரிமைகளில் ஒன்றெனக் குறிப் பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன.
3. பராமரித்தல்:
குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோரின் கடமை எனினும் குழந்தையின் இளம் பிராயக் கட் டத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு தாய்க்கே உரியது. அவளால் மட்டுமே அன்பையும் இரக்கத்தையும் பொறுமையையும் தன் குழந்தை மீது பூரணமாகக் காட்ட முடிகின்றது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெணி வந்து தான் அன்போடு வளர்த்து வரும் தன் குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்தெடுக்க தன்னைத் தலாக் சொன்ன கணவன் விரும்புகிறான் என முறையிட, “நீதிருமணம் முடிக்காதிருக்கும் காலமெல்லாமிநீதான் அக்குழந்தையைப் பராமரிக்க மிகவும் அருகதை யுடையவள்” எனக் கூறினார்கள்.
இதிலிருந்து குழந்தைகளைப் பராமரிக்க தந் தையை விடத் தாய்தான் மேலானவள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இந் நிலை குழந்தை பிரித்தறியும் வயதை அடையும் வரை நீண்டு செல் கிறது. அக்குழந்தை பிரித்தறியும் வயதை அடைந் ததும் தன் பெற்றோரில் விரும்பியவரைத் தோந்தெ டுக்க அதற்கு தெரிவுச் சுதந்திரம் வழங்கப்படும்.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தன் தாய், தந்தை இருவரிலும் விரும்பியவரைத் தேர்ந்தெடுக்க
86 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

ஒரு குழந்தைக்குத் தெரிவுச் சுதந்திரத்தை வழங் கினார்கள். இச்சம்பவம் இப்னு மாஜா மற்றும் திர்மிதி ஆகியவற்றில் பதிவாகியுள்ளது. அக் குழந்தை தன் தாயையே தேர்ந்தெடுத்துக்கொண்டது. அத்தாய் அக் குழந்தையைக் கூட்டிச் சென்றாள் என்று ஹாகிமில் பதிவாகியுள்ளது.
இது பற்றிய மேலைத்தேய சமூக நோக்கு வரவேற்கத்தக்கது. பிள்ளையை வளர்க்கும் முக்கிய பொறுப்பு தாய், தந்தை ஆகிய இருவரையுஞ் சார்ந் ததாகும், அரசாங்கம் இது விடயத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதுடன், பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்குத் தகுந்த உதவியும் வழங்கும் என்று பரிந்துரை செய்துள்ளமை இஸ்லாமிய கணிணோ ட்டத்தோடு நோக்கின் மெச்சத்தக்கது. என்றாலும் தொழில் ஒன்றைச் சார்ந்துள்ள ஒரு தாய் தன் சிசுவை நாள் காப்பகத்தில் (Day CareCentre) விட்டுச் செல்லச் சுதந்திரம் உடையவள் என்று கூறியுள்ளமை விசனத்
திற்குரியது.
4. பொறுப்பாய் நிற்றல்:
குழந்தைகள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கும் அவர்களது செல்வங்களுக்கும் பொறுப்பாய் நிற்பது பெற்றோரின் கடமையாகும். அவர்களுக்குப் பொறுப்பாய் நிற்றல் என்பது அவர் களைப் பாதுகாத்தல், பயிற்றுவித்தல், கற்பித்தல், திரு மணம் செய்து வைத்தல் மற்றும் தகுந்த சந்தர்ப்பங் களில் ஆலோசனை வழங்கல் போன்ற நடவடிக்கை
களோடு தொடர்புறுகின்றது.
பெற்றோர் வாழ்வின் யதார்த்தங்களைத்தம் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர் களை கவுரவப்படுத்துகின்றனர். அனைத்துக் குடும்ப ங்களிலும் பிரச்சினைகள் எழுவது இயல்பே. அவை வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் காணப்படுகின்றன. மேலும் அவை சுமுகமாகத் தீர்க்கப்பட்டாலன்றி வாழ் ‘வு இழுபறியில்தான் செல்லும். உணர்மையை வெளி யிடாது துன்பங்களையும் நோய் நொடிகளையும், மரணத்தையும் பிள்ளைகளுக்கு மறைக்கின்ற போது அது அவர்களை அவமதித்து நடப்பதாய் அமைந் துவிடுகிறது. மாறாக வாழ்க்கையின் யதார்த்தங் களைப் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது மிகவும் பெறுமதி மிக்க ஓர் அம்சத்தை அவர்களிடம் சமர்ப்பிக்க முடிகிறது. இதன் மூலம் நெருக்கடி மிக்க சந்தர்ப்பங்களில் அவர்கள் தம் மனவெழுச்சிகளை விளங்கிக் கொள்ளவும் அவற்றைச் சமாளிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.
“மேலும் லுக்மான் தன் மைந்தனுக்கு, உப

Page 98
தேசம் செய்தவராக - என் அருமை மைந்தனே நீ அல்லாஹீவுக்கு இணை வைக்காதே ! நிச்சயமாக, இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும் என்று கூறியதை - நபியே நீர் நினைவு கூருவீராக” (லுக்மான் 13)
சுருக்கமாகக் கூறுவதாயின், தம் குழந்தைகள் சிறந்த முஸ்லிம் சிறுவர்களாக வளரவேண்டுமென எதிர்பார்க்கும் பெற்றோர், தாம் சிறந்த பெற்றோராக இருப்பதே ஒரேயொரு வழியாகும். சிறுவர்களுக்கு எவ்வளவுதான் அறிவு புகட்டினாலும், தமது அன்றா ட வாழ்வில் அதற்கான நடைமுறை உதாரணங்களை க் காணர்கின்ற போதுதான் அதனைப் பின்பற்றி நடப் பார்கள் குழந்தைகள்இறைவனிடமிருந்து சோதனை ப் பொருட்களாக வந்தவர்கள் பொறுமை, சகிப்புத் தன்மை, அன்பு, ஒழுக்கம் என்பவை ஊட்டப்பட்டுச் சரியான முறையில் வளர்க்கப்படுகின்ற குழந்தைக ளுக்கே வெற்றிக்கான அனைத்து வாய்ப்புக்களு முள்ளன.
பெற்றோர் மீதான பிள்ளைகளின் கடமைகள்:
தங்களது இன்ப துன்பங்களைப் பொருட் படுத்தாது பிள்ளைகளின் நலனிலே கணினும் கரு த்துமாக இருந்து அவர்களை உயர்ந்தவர்களா க்கிவிடுகின்ற தாய், தந்தையர் உண்மையிலே மிகவும் மேலானவர்கள் அவர்களுக்கு இறைவனிடத்தில் உயரிய வெகுமதிகள் உணர்டு. இதனால் தானி அவர்களோடு ஒழுங்காக நடந்து கொள்ளல், அவர்களுக்குப் பணிவிடை செய்தல், கட்டுப்பட்டு நடத்தல் போன்றவற்றைப் பிள்ளைகள் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. பெற்றோரது கட்டளைகளை ஏற்று நடக்காது அவர்களுக்கு மாறு செய்வது அல் லாஹ்விடத்தில் தண்டனை பெற்றுத்தரும் குற்றமாகும்.
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின் றார்கள் “பெற்றோருக்கு மாறு செய்வதைத் தவிர வுள்ள அனைத்துப் பாவங்களிலும் அல்லாஹி தான் விரும்பியவற்றிற்கான கூலியைப் பிற்படுத்தி மறுமை நாளில் வழங்குகின்றான். பெற்றோருக்குக் கட்டுப் பட்டு நடவாது மாறு செய்பவனது கூலியை இவ்வு லகிலேயே அவனது மரணத்திற்கு முன் ஏற்படுத்தி வைத்துள்ளான்” என்று ஹாகிமில் பதிவாகியுள்ளது.
இது பற்றிய மேலைத்தேய சமூக நோக்கு பெற்றோர் மீதான பிள்ளைகளின் கடமைகளை அலட்சியப்படுத்துவதாக, பெற்றோரின் உரிமைகளை உதாசீனப்படுத்துவதாக அமைகிறது. பெற்றோருக்கு

உதவி செய்கிறோம் எனக் கூறிக் கொண்டு எங்க ளுடன் இருந்தால் அவர்களால் சொகுசாக வாழ முடியாது, அவர்களுக்குத் தேவை நிம்மதி, அமைதி யான வாழ்வு என்று வலிந்து கட்டி வியாக்கியா னப்படுத்தி, அவர்களை முதியோர் இல்லம் Elders Home இல் சேர்ப்பித்து விடுகின்றனர். தமது நலனை மட்டுமே கருதி, உதவி எனும் பெயரில் உபத்திரவம் புரிகின்றனர். அத்தோடு தம் கடமை முடிந்துவிட்டது எனக் கருதி, வருடத்திற்கு ஒரு தடவை அவர்களைத் தரிசித்து வர, பெற்றோர் தினம் Parents Day என்று ஒரு நாளை ஏற்படுத்தி, அந்நாளில் சென்று அவர் களோடு அன்று முழுக்க பொழுதைக் கழித்து, தம் கையாலே உணவையும் ஊட்டுகின்றனர். மறு வருடம் அவர்கள் உயிரோடு இருப்பின் கையில் பூச்செணி டோடும் இனிப்பு வகையறாக்களோடும் செல்லுகி ன்றனர். உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியதாய்க்கும், உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோன தந்தைக்கும் புரியும் பதில் மரியாதை அல்லது பிரதியுபகாரம் என்று இதைக் குறிப்பிடலாமா ? வருடம் முழுக்க அன்புக் காக ஏங்கும் பெற்றோர் ஒரு நாள் மட்டும் ஏற்படு த்தப்படும் செயற்கை அன்பினால் திருப்தி அடை 6) IITF356TIT... ?!
1. உபகாரம் புரிதல்:
பெற்றோருக்கு உபகாரம் புரிதல் பற்றிஇறை வேத வசனங்களும் இறுதித் தூதரின் மொழிகளும் குறிப்பிட்டு வந்துள்ளன.
“மேலும், தன்னுடைய பெற்றோர்க்கு நன்மை செய்யுமாறு, மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம் அவனுடைய தாய், சிரமத்துடன் அவனைச் சுமந்தி ருந்து, சிரமத்துடன் அவனைப் பிரசவிக்கின்றாள் அவள் கர்ப்பத்தில் அவனைச் சுமப்பதும், அவனு க்குப் பால்குடி மறக்கச்செய்வதும் முப்பது மாத ங்களாகும். முடிவாக இவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் : “என் இரட்சகனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த உன் அருளு க்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அந்த நற்செயலைச் செய் யவும் நல்லறிவை நீஎனக்கு உதிக்கச் செய்வாயாக ! எனக்காக என்னுடைய சந்ததியில் உள்ளோரை நீ சீர்திருத்தியும் வைப்பாயாக 1.” (46 : 15)
ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து, நான் இறை பாதையில் போராட விரும்புகிறேன் எனக் கூற, றகுல் (ஸல்) அவர்கள்“உமக்குப் பெற்றோர் இருவரும் இருக்கின்றனரா ?”. எனக் கேட்க, அவர் “ஆம் இருக்கின்றனர்” என்று பதிலளித்தார். றகுல் (ஸல்) அவர்கள் “நீர் உமது பெற்றோர் இருவரினதும்
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 87

Page 99
விடயத்தில் சிறந்த முறையில் நடந்து கொள்ளுவது இறை பாதையில் போராடுவதாகும்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
எனவே இதிலிருந்து பெற்றோருடன் சிறந்த முறையில் நடந்து கொள்வதும், உபகாரம் செய்வதும் இறை பாதையில் போராடுவதற்கு நிகரானதாகும்.
2. கட்டுப்பட்டு நடத்தல்:
சிறார்களை எவ்வாறு வளர்க்க வேண்டு மென்று பெற்றோருக்கு அறிவுறுத்துகின்ற ஒரு சில வரையறுக்கப்பட்ட விதிகள் அல்குர்ஆனில் காண ப்படுகின்றன. இதற்கு மாற்றமாக பெற்றோருடன எவி வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் எவ்வாறு அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனப் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துகின்ற அனேக கட்டளை கள் காணப்படுகின்றன. பெற்றோர் விடயத்தில் இவ் வாறு முக்கியத்துவம் செலுத்தியிருப்பதற்குக் காரணம் மனிதன் தன் குழந்தைகள் மீது செலுத்துகின்ற அதே யளவு ஈடுபாட்டையும், இயல்பானதன்மையும் தன து பெற்றோர் மீது காட்டுவதில்லை என்பதனாலாகும். அல்குர்ஆன் பெற்றோருக்கு ஒரு முக்கிய விடயத்தை
நினைவுபடுத்த விரும்புகிறது.
“எந்தவோர் ஆத்மாவும் அதன் சக்திக்கேற்ற வாறல்லாது செய்யும்படியாக சிரமப்படுத்தப்படமா ட்டாது. ஒரு தாய் தன் குழந்தையின் காரணமாக, இன்னும் ஒரு தந்தை தன் குழந்தையின் காரணமாக துன்புறுத்தப்படமாட்டார். குழந்தையின்தகப்பன்இற ந்து விட்டால், அதனைப் பரிபாலிப்பது இவ்வாறே வாரிசின் மீது கடமை இருக்கிறது.”
பெற்றோர் இணைவைப்பவர்களாக இருந்த போதிலும், அவர்களுக்கு நல்லுபகாரம் புரிவதை இஸ்லாம் வலியுறுத்துவதுடன், பாவமல்லாத காரி யங்களில் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவ சியமாகிறது. மாறாக இணைவைப்பாளர்களாக இருப் பின் பாவமான காரியங்களில் கட்டுப்படுவது அவ சியம் இல்லை என்பதே ஏகோபித்த கருத்தும் முடிவு மாகும்.
றகுல் (ஸல்) அவர்கள் காலததல் ஸஃது பன் அபீவக்காஸ் (றழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவ முற்படும்போது, அவான்தாயார்தான் கொதிநீரில் வழு ந்து விடுவதாகக் கூறியபோது ஸஃது பின் அபீவக் காஸ் தாயை நோக்கி"தாயே! உமக்குநூறு உயிர்கள் தாம் இருந்தும் அவை ஒவ்வொன்றாக இவ்வாறு நீர் இழக்க முனைந்தாலும் நானஇஸ்லாத்தைத் தழுவுவ
தைவிட்டும் பின்வாங்கமாட்டேனி” என்று கூறினார்.
88 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் அ

3. நோவினை செய்யாதிருத்தல்:
பெற்றோருக்கு உபகாரம் செய்வது எவ்வாறு பெரும் நன்மைகளை ஈட்டித்தரும் விடயமோ அவ் வாறேதான் அவர்களுக்கு மாறு செய்தலும், அல்லா ஹற்விடத்தில் தணர்டனை பெற்றுத் தரும் விடயமாகக் காணப்படுகின்றது.
நபியே! உமதிரட்சகன் - தவிர மற்றெவரை யும் நீங்கள் வணங்கக் கூடாதென்றும், பெற்றோர்க்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட் டிருக்கின்றான், அவ்விருவரில் ஒருவரோ, அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திணிணமாக முதுமை யை அடைந்துவிட்டால், அவ்விருவருக்கும் இழித்துக் கூறப்படும் வார்த்தைகளிலுள்ள 'சீ' என்று கூட நீர் சொல்ல வேண்டாம்; உம்மிடத்திலிருந்து அவ்விரு வரையும் விரட்டிவிடவும் வேண்டாம், அவ்விருவ ருக்கும் மாரியாதையான வார்த்தையைக் கூறுவராக ! இன்னும், இவ்விருவருக்காக இரக்கத்துடன் பணிவு எனும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! மேலும் ‘எண் இரட்சகனே! நான் குழந்தையாக இருந்தபொழுது மிக்க அன்பாக எண்னை அவர்கள் வளர்த்தது போன் றுநீயும் அவவருவருக்கும்அருள்புரிவாயாக!' என்றும் பிரார்த்திப்பீராக ” (17:23, 24.)
ஒருவர் பெற்றோருக்கு அநியாயம் செய்வ தையும், அவர்களைத் துன்புறுத்துவதையும், அவர் களைத் தூற்றுவதற்குக் காரணமாய் அமைவதையும் பெரும் பாவமாக இஸ்லாம் கருதுகின்றது.
“பெரும் பாவங்களில் மிப் பெரியது ஒரு வன்தன் பெற்றோரைத் தூற்றுவது” என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட, அங்கு குழுமியிருந்தோர், ஒரு புத்திசுவாதீனமுள்ள முஃமின் அவனது தோற்றத் திற்குக் காரணமாய் அமைந்த பெற்றோரைத் தூற்’ றுவதா ? என ஆச்சரியப்பட்டு ‘தன் பெற்றோரை ஒருவன் எவ்வாறு தூற்றுவது ?’ என வினவினர். இதற்கு நபி (ஸல்) அவர்கள், ஒருவன் அடுத்தவ னுடைய தந்தையைத் தூற்றுகிறான். அவன் இவனது தந்தையைத் தூற்றுகிறான். அவ்வாறே, ஒருவன் மற்றவனுடைய தாயை தூற்றுகிறான். அவன் இவனது தாயைத் தூற்றுகின்றான் எனப் பதிலளித்தார்கள்.”
(நூல் - புகாரி, முஸ்லிம்)
பிறர் தன் பெற்றோரைக் தூற்றக் காரணமாக அமைபவனது நிலையே இவ்வாறாயின், தன் பெற் றோரை நேரடியாக தூற்றுபவனது நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும்.

Page 100
4. பராமரித்தல்:
மூப்படைந்த பெற்றோரைப் பராமரிப்பதும் கவனிப்பதும், அவர்களுக்காகச் செலவுகளை மேற் கொள்ளுவதும் பிள்ளைகள் மீது இன்றியமையாத கடமைகளாகும். இயல்பிலேயே தந்தையைவிடத் தாயே பிள்ளைகளது நடவடிக்கைகளை நெறிப்படு த்துவதிலும், பிள்ளைகளை வளர்ப்பதிலும் பெரும் பங்கு வகிப்பதால் தாய்க்கே பிள்ளைகள் முதலில் கடமைப்பட்டிருக்கின்றார்கள்
றசூல் (ஸல்) அவர்களிடம் மனிதர் ஒருவர் சமுகம் தந்து, “அல்லாஹீவின் தூதரே நாeர் நல் லவிதமாக நடந்து கொள்ள அனைவரையும் விடத் தகுதியானவர் யார் ?’ என்று வனவரிய போது, றகுல் (ஸல்) அவர்கள்,“உமது தாயி’ என்றார்கள். அதற் கடுத்தபடியாக யார் என்று வினவ. “உமது தாயி” என்றார்கள் மீணடும் அதற்கடுத்தபடியாக யார் என்று வினவ, “உமது தாயி’ என்றார்கள். அதற்கடுத்தபடி யாக யார்? என்று வினவ “உமது தந்தை” என்று பதிலளித்தார்கள். நூல் - புகாரி, முஸ்லிம்,
தாய், எவ்வளவு தூரம் பிள்ளைகளால் மதி த்து நடக்க மற்றும் பராமரிக்க உரித்துடையவர் என்
பதையே இந்த ஹதீஸ் பிரதிபலிக்கிறது.
இமாம் இப்னு தகிக் அல் ஈத் (றஹ) அவர்கள் “கவனம் செலுத்துவதிலும் பராமரித்தலிலும் ஒருவன் நான்கில்.மூன்று பகுதியை தாய்க்கும் நான்கில் ஒரு பகுதியை தந்தைக்கும் கொடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடுகிறார்.
பிள்ளைகள் சார் உரிமைகள்:
இத்தலைப்பைப் பொதுவாக நோக்குவதே சிறந்தது. ஏனெனில் இறை வேதமும், இறைதூதரின் வழிமுறைகளும் குழந்தைகளுக்கேயுரிய இயல்பான பல உரிமைகளைத் தெளிவாகவும், மறைமுகமாகவும் உணர்த்தியுள்ளன. முதன்மைப்படுத்தப்படவேண்டிய உரிமைகளில் ஒன்றுதான் வாழும் உரிமையாகும். குழந்தைகளது உயிர் வாழும் உரிமை, வயது வந் தவர்களது உரிமை போன்றே பெறுமதியானதும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுமாகும். விஷேட மாக இது பிறவாத குழந்தையின் உரிமையையும் சுட் டுகிறது. கருச்சிதைவு, தாயின் உயிருக்கு குழந்தை பிறந்தால் ஆபத்து ஏற்படும் என்றிருந்தாலேயன்றி, இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்ன்ல. மேலும் குழ ந்தைகள் சட்டபூர்வமானதாகப் பிறந்திருக்க வேணி டும். தன்னைப் பெற்றவர்களையும் அது அறிந்திருக்க வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிட்டிருந்தாலும்

மேலைத்தேய சமூகம் இதனைப் பொருட்படுத்த வில்லை என்றே கூற வேண்டும்.
இஸ்லாம் குறிப்பிடும் சிறார்களின் இதர உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரி மைகள் பற்றிய சமவாயத்தின் உறுப்புரைகளோடு இயைந்து செல்வதாகக் காணப்படுவது குறிப்பி டத்தக்கன.
பிரஸ்தாபிக்கப்பட்ட 42 உறுப்புரைகளில் 31 உறுப்புரைகள் இஸ்லாமியக் கணிணோட்டத்தோடு ஒத்துச் செல்வது பெருமைக்குரியது மட்டுமன்றி, ஏனைய 11 உறுப்புரிமைகளும் சமவாயம் மற்றும் அதனை அரசு நடைமுறைப்படுத்த எடுக்கும் நட வடிக்கைகள் தொடர்பாக அமைந்துள்ளமையைக் காணலாம்.
எனவே, சரியான முறையில் கவனிக்கப்பட வேண்டும் இஸ்லாமிய அடிப்படையில் வளர வேணி டும் என்பன அனைத்துக் குழந்தைகளுக்கும் உள்ள உரிமைகளாகும். இவ்வுரிமை ஒவ்வொரு முஸ்லிம் பெற்றோருக்கும் முன்னுள்ள ஒரு கடமை மட்டு மன்றி சவால் எனவும் கருதலாம். (1Քlգ6|60|Մ:
பெற்றோர் தமது குழந்தைகளுடன் சேர்ந்து, அவர்களது உணர்வுகளை அறிந்து கொள்ள முயல் வதுடன், தமக்குக் குழந்தைகளைக் கொடுத்திருப்பதன் மூலம் அல்லாஹவுக்கு நன்றி செலுத்துவதுடன், அவர் களின் ஆன்ம நலத்திற்காகவும், ஈருலக வாழ்வின் வெற்றிக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண டும். இவ்வாறே பிள்ளைகளும் தம் பெற்றோருக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதுடன் அவர்களின் முது மைப் பருவத்தில் அன்புடன் நடந்து கொள்ள வேணி டும். பெற்றோரின் மறைவுக்குப் பின் அவர்களது நணர்பர்களையும் உறவினர்களையும் தரிசிப்பது வரவேற்புக்குரியதாகும். துணை நின்றவைகள்:
1. பதாவா அல்முஆஸரா - கலாநிதியுசுப்அல்கர்ழாவ 2 நழாமுல்உஸ்ராவஹல்லுமுஷகிலாதிஹாபலவ்வல் இஸ்லாம் - கலாநிதிஅப்துர் றஹீமான் அஸ்ஸாபுனி 3. அஹகாமுல் அவிலாத் பில் இஸ்லாம்
- ஸ்கரியா அல் பர்ரி 4. நீதி முரசு-99 பொன் விழாச் சிறப்பு இதழ்
- இலங்கைச் சட்டக் கல்லூரி 5. Family System. In Islam-S.M. Anwer Sadath. The is Submitted For The Licentiate Examina -tion of Jamiah Naleemiah. Year - 1993/1994. 6 இஸ்லாமிய சிந்தனை -மலர் 17 இதழ் 02.04. 7. சிறுவர் உரிமைகள் - ஒரு துரித நெறிகாட்டி
ஐ.நா சபயிைனால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் - (2000 - ஆண்டு).
-G அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 189

Page 101
කාන්තා අයිතිය - ඉස්(
අයිතිවාසිකම් හා සමානාත්මතාව සඳහා කාන්තාවෝ අද සටන් වැදී සිටිති. එහෙත් ඔවුන් ඉල්ලා සිටින ඒ අයිතිවාසිකම් හා සමානාත්මතාවය අතුරින් ඔවුන්ට යොග්‍ය ඔවුන්ගේ ස්වභාවයට ගැළපෙන සෑම අයිතිවාසිකමක්ම සහ සමාජ තත්ත්වය ද ඉස්ලාම් ධර්මය විසින් මීට අවුරුදු 1400 ට පෙරදීම ඔවුන්ට ඉබා දී ඇත. එදා කිසිම සටනක් කිරීමට අවශ්‍යතාවයක් නොතබාම ඒවා සීමිකර දීම ඇත්තෙන්ම ඉස්ලාමයේ විශිෂ්ඨත්වයට නිදසුනකි.
ලෝකයේ ප්‍රධානතම ආගම් අතුරින් එකක් වූ ද, ලෝපුරා සිටින ඒකසිය විසිපස් කෝටියක ජනතාවක් විසින් අදහනු ලබන්නාවූද ඉස්ලාමය, මිනිස් ජීවිතයේ කාන්තාවන්ගේ තත්ත්වය පිළිබඳ දරන අදහස් කුමක් ද යන්න අපි දැන ගනිමු.
ඉස්ලාම් ධර්මයේ කාෂ්කාවට ලැබෙන තැන සමිබන්ධයෙන් විස්තර කිරීමට පෙර යුරෝපයේ කාන්ත) නිදහස පිළිබඳ වනාපාරයේ ඉතිහාසය ගැන යමක් බැලීම සුදුසුයැයි සිතමි.
ඉතිහාසයේ යුරෝපයේ පමණක් නොව තවත් අධිරාජයන්‍ය රටවල් කීපයක්ම කාන්තාව සැලකුවේ කිසිදු කැකීමක් කිරීමට අනවශ්‍ය කෙනෙකු හැටියටයි. ඔවුන් තමන් අතර කාන්තාව ගැන මෙසේ වාද ප්‍රතිවාදයක් ඇතිකර ගත්හ. ස්ක්‍රියට ආහ්මයක් තිබේද ? නැද්ද ? තිබේනමි ඇයගේ ආත්මයේ නියම ස්වභාවය කුමක් ද ? ඇයට මිනිස් ආත්මයක් තිබේනම් පුරුෂයන් හා සම කඨින කල කවර් සමාජික හා මානුෂික තත්ත්වයක් ඇයට සීමිවියයුතුද ? යනුවෙන් තමන් අතර වාද විවාද ඇති කර ტენტ),
පාඨ ග්‍රීක රෝම අධිරාත්‍ය යුගවලදී කාන්තාවන්ට පුධාන තැනක් තිබුනා)යන්න කෙනෙකුට වාද කළ හැකියි. එහෙත් එයට පිළිතුරු වන්නේ එය කාන්තාවට ගරු කිරීමක් නොව, ඇයගෙන් Qasi 980a) 0}çC60 CoeÓCS6 C5ailaô, O))ao0 896 සැඹුතු තත්වය එහි වැඩවසම් ක්‍රමය පැවති යුගවලදී ද පැවතිණි.
90 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் ஆட

}මික මතය.
dē dē dē 3 pē5 čad cago5 ča,
කමින්, බොමින්, දරුවන් බිහිකරමින් දිවා රාත්‍රී මෙහෙකාර කරමින් ජීවිතය ගත කරන්නට ඇයට සිදුවිය.
යුරෝපයේ කාර්මික විප්ලවය ඇතිවූ කාල සීමාවේ මිනිස් ඉතිහාසයේ පෙර නොවූ අන්දමේ පුග්නවලට මුහුණ දීමට ස්ත්‍රීය ධ සිදු විය. ගැහැණීයද පුරුෂයා කළ උපකාරයට ප්‍රතිඋ පකාර ලෙස යම් යම් සුඩ් ගෘහ කර්මාන්තයන්හී යෙදුණි)ය.
කාර්මික විප්ලවය හේතුවෙන් ස්ත්‍රිහුන් ළමයිනුත් සිය රුකියාවන් මගීන් තමන්වෙත පැටවුණු වැඩබරින් මිරිකුණහ. මෙහිදී බලවත් අවාසිය සිදුවුයේ ස්ක්‍රියටය. අද මෙයට පෙර කවදුවක් නොකළ පරිදි වෙහෙස මහන්සි වී වැඩ කළාය. කාන්තාවන් කමිභ 800 0êx80i eðQ) 0cê Deç Qaida) ez@ 0ĝQð 8őðasie6 වැටුපට වඩා බොහෝ අඩුය.
මෙවැනි අසාධාරණිකම් නොඉවසු අවංක පුද්ගලයන් නැගු විරෝධතාවල ප්‍රතිඵල වශයෙන්, ළමයින් වැඩට යෙදවිය හැකි වයස වැඩි කරන ලදී. එහෙත් ස්ක්‍රින් වෙනුවෙන් ඉදිරිපත්වනන් ට කිසි කොනෙක් නොවිය. එම නිසා තමන්ගේ අයිතිවාසිකම් සඳ භූ) සටන් කිරීමට ස්ත්‍රීෂ්ට සිදුවිය මෙසේ සටන් කිරීමේදී මහජන රැස්වීම් ඇමතීම මෙන්ම තවත් යම් දේ කරන්නට විය. ගැහැණු පිරිමි දෙපක්ෂයම ලබුවේ එකමවිධියේ අධ්‍යාපනය ක්හෝයින් පාලන කටයුතුවලදී ද පිරිමින් හා සම තත්වයක් කාන්තාව පැතුවාය. එසේ පටන්ගත් එම සටන් තම අයිතිවාසිකම් හා) සමාකාෂ්මතාව සඳහා ස්ත්‍රීෂ්විසින් ඉදිරියට ගෙනයනු ලැබිණී.
කාන්තා නිදහස පිළිබද වසාපාරයේ ඉතිහාසය දෙස බැලීමෙන් අනතුරුව, ඉස්ලාමය වනිකාවට ලබාදෙන තැන කුමක් Qtổ Ê99.
පළමුවෙන්ම පුරුෂයාට මෙන් ස්ත්‍රියට ද මනුෂ්‍යයත්වයක් සීමි බව ඉස්ලාම් ධර්මය පිළිගනී. මෙය කුර්ආනයේ අල්ලාහුතඇඹු) මෙසේ සඳහන් කරයි.

Page 102
“දෙවියන් වන අල්ලාහ් ට ඔබගෙන් ඉඩුවිය යුතු 8 got)9 (et)6Ó8 dté96999d 0dia, 09 ðp9 d'idiocfai ඔබ මැවීය. ඔහුගෙන්ම ඔහුගේ භාර්යාව ද මැවීය. ඔවුන් දෙදෙ නාගෙන් බොහෝ ස්ත්‍රී-පුරුෂයන් පැකීඨ විය” (4 - 1)
එවගේම සිරිමිෂ්ට මෙන්ම ස්ත්‍රීෂ්ට ද ජීවත්වීමේ ආත්ම Dóttii0C G) 0çog CODóczâdeẽ ô6co gelê Qõ80Ca ලැබේ. මෙය භූර්ඝ}නයේ මෙසේ සඳහන් වේ.
“විග්වාසවන්තයිනි, ඔබගෙන් ඇතමෙක් වෙනත් අයට (අපහාස කිරීම වශයෙන්) සීනා) නොවන්න. දෙවනුව සඳහන් කරන ලැබූ අය පළමුව කී අයට වඩා හොඳ අය විය හැකිය. එසේම ඇතම් ස්ත්‍රීන් වෙනත් ස්ත්‍රීන්ට ද අපහාස නොකරන්න. දෙවනුව කී අය පළමුව කී අයට වඩා හොඳ අය විය හැකිය. එපමණක් නොව විකට නම් දී කිසිවෙතු සීක් සීඩාවලට බ්‍රක් නොකරන්න, අප කීර්තියට පත් නොකරන්න.” ( 49-|4 )
sê coÕ@a0 0 0ē0 apã (ao) q0) Gêec සඳහන් කළේය. “මුස්ලිමෙකුට තවත් මුස්ලිමෙකුගේ ජීවිතය හා) ආහ්මගඨා(හ්වය නැසීමන් දේපළ පැහැර ගැනීමන් තහනම් ය.” (බුහාරී, මුස්ලීමි)
ස්ත්‍රීන්ට තමන්ගේ එදිනෙදු අවශ්‍යතාවයන් සපුරාගැනීමට අයිතියක් ඇතිශාස්ම දේපළ සතුකරගැනීම, ඒවා විකිණීම, බදුදීම, මරණීයෙන් පසු කෙනෙකුට උරුම කර දීම වැනි අයිතින්ද ඇත. මේ සමිබන්ධව භූර්ඝනයේ මෙසේ සඳහන් වේ.
“o8 69983a e5 500 35 563 o6) (3o දේපළවලින් කොටසක් පිරිමින් සතුය. එසේම තම දෙමවුපියන් හෝ බීට්ටු ඥාතීන් විසින් තබා) යන දේපළවලීන් කොටසක් ස්ෂීන් සතුය.” (4 7)
මෙහීදී වැදගත් කරුණු දෙකක් සලකා බැලිය යුතුය. ඉස්ලාමය මෙවැනි අයිතිවාසිකම් කාන්තාවන්ට පිරිනැමුවේ මනුෂ්‍ය ජීවිතයට බලපාන ප්‍රධාන සාධකයන් දෙකක්වූ සත්‍යය හා යුක්තිය ඉටු කිරීමේ අභිලාෂය හේතුකොටගෙනය.
මනුෂ්‍ය ජීවිතයක් මනුෂයාගේ ආර්යීක ජීවිතයන් එකක්ම බව කොමියුනිස්ට් වාදය කියයි. එයින් අදහස්වන්නේ ස්ත්‍රීෂ්ට ස්වාධීන ජීවිතයක් දකින්නට ලැබුණේ ස්වාධීන ආයීඨික ජීවිතයක් ගත කරන්නට වූ පසුවය. ඉස්ලාම් ධර්මය කාන්තාවන්ගේ ස්වාධීඝ ආර්ඨක තත්වය පිළිගෙන භාරකාරයෙකු හෝ එවැන්නෙකුගේ අතපැමක් නොමැතිව දේපළ අත්පත්කරගැනීමට, පාවිච්චි කීරීමට හා භූක්ති විදීමට අයිතිය ලබාදෙයි.
මෙ පමණක් නොව ඇයගේ ජීවිතයේ වැදගත්ම ස්ථානයක්වූ විවාහයේදීත් ඇයගේ ස්වාධීනත්වය තහවුරු කරයි.

SOOdd Seð ertoed ovStoo O0 gæå ded etab86 Ozêza) app0 cc Õ0seo ó 0 gelê QõDec 0cq නොවේ. විවාහයෙන් පසු තමා කැමැත්ත පළ කළේ නැතැයි ඇය කියා සිටියහොත් විවාහය අහෝසි කර දැමීමේ හැකියාව ඉස්ලාම් ධර්මය මගීන් සැලසේ.
විවාහයට පෙර කැමැත්ත ගත යුතු බව පහත හදීසයෙන් තව දුරටත් සනාථ වේ.
“ඇයගේ කැමැත්ත නොවීමය) කිසිදු වැන්දඹුවක් සරණිකර පාවා නොදීය යුතුය. කිසිදු කනන්‍යාවක් ඇයගේ කැමැත්ත නොවිමසා පාවා නොදිය යුතුය. ඇයගේ කැමැත්ත නම් නිෂ්ශබ්දතාවයි” (ệexő, dê)
o86 ÖoC 6863, 69.900) Çiç0ç 021898 603695 68 803 c699óz93) bó cz69 gö6G, ඇයට එවක රටේ පැවති කිසිම නීතියකින් ලැබුණේ නැත. එහෙත් gelêCO C0 sê99 36c ç 980) , GEO), geẽ QðêGS ar8óte 14400 eoÓ braio:00 (96)) gaí e99 d'é66 geói පයේ කාන්තාවට ලැබුනේ 18 වන ශතවර්ෂයේදීය.
වැරදි ෙකාගැනක සිදුවුවත්, පාලන කටයුතුවලදිවුවක් එම වැරදී පෙන්වා දීමේ අයිතිය පුරුෂයාට මෙන්ම ස්ක්‍රියට ද ඇත.
ÔóCỉ ecôồ ĐöÖ) Cềỗ (óộ6691ỹ đổộ} Qề} මීමිබරය මත සිධ සභාවප් (තුන්බා) පැවත්වමින් සිටියේය. ඔහු තමාගේ කතාවේ මෙසේ සඳහන් කළේය. “මේ කාලයේ ස්ෂීන් පිරී මින්ගෙන් ඉල්ලීන මහර් (විවාහයේ දී ස්වාමියා විසින් ගැහැණියට දෙනු ලබන දැවද්ද) වැඩියි. එය අඩුකර ඉලීලනයේමන් මම ස්ත්‍රීන් ගෙන් ඉල්ලා සිටිමි.”
මෙම අවස්ථාවේදී එකතැන සිටි එක් ස්ත්‍රියෙක් අැඹීට මෙසේ සඳහන් කඳුය “කලීෆ) තුමණි ! අල්ලාහුතආලා මෙසේ සදහන් කරයි. “ස්ක්‍රිෂ් මහර් වශයෙන් රහ්තරන් කන්දක් ඉලීඩුවක් එය දී විවාහ කර ගන්න” යනුවෙන් අල්ලාහ් කියතවිට ඔබ ඔම සේ සඳහන් කරන්නේ ඔකයේද ?” ඇයූවාය. එවිට උමර් (රලි) තුමා තමාගේ වරද පිළිගත්තේය.
වැරදි කරන්න) පාලකයාවූවන් එම වැරදි සියල්ල ඔෆ්රුමි කර දීමේ අයීතිය කාෂ්කාවකට ද ඇත. ඉස්ලාම් ධර්මය කාෂ්කාවට දී ඇඹි සීදහස මේ සිද්දියෙන්ම පැහැදිළිවේ.
තවද මුළු ලොවම අන්ධකාරයේ ගැලීපවත්නා විටක මනුශ්‍යයාගේ දැනුම හෙවත් විද2)ෙවි ආලෝකය පැතිරවීමේ හා වැඩිදියුණු කිරීමේ වැදගත්කම ලොවට අවධාරණය කෙළේ
ඉස්ලාමියයි. දැනුම වැඩිම පුරුෂයන්ගේ මෙන්ම ස්ත්‍රීන්ගේද යුතුකමකි.
- அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 91

Page 103
දැනුම වැඩිමේ වැදගත්කම මුහමිමද් නබිතුමා මෙසේ Gç5a E0ës, “çogë gë)0;&ë G3 q6:9 0çOEec300
8082C56,”
චියට හේතුවන්නේ ඔවුන්ගේ මානසික තත්වය වැඩිදියුණු t)ó0ö8 gögð erøS) orðoðað 605 e. credoe) de දෙයක් වූ බැවිනි.
ඉස්ලාම් ධර්මය ස්ත්‍රීෂ්ට දේශපාලන කිරීමට ද තහනම් නොකරයි. දේශපාලන ජීවිතයේ පාර්ලිමෙහ්තුවට යන්නට ද එමගීන් වැදගත් රුස්වීම් අමතන්නට ද කාන්තාවට නිදහස ඇත. එම සමාජය නියෝජනය කරන්නට හැකි පිරිමින් නැති අවස්ථාවලදී ද, තමන් එයට සහභාගී විය යුතුමය සනුවෙන් සිඹිය හැකි අවස්ථාවක් උදුවූ විටද තමාගේ ස්වකීය පවුල් ජීවිතවලට හානි නොවනසේ දේශපාලනය කිරීමට කාන්තාවට නිදහස ඇත.
එමෙන්ම පවුල් ජීවිතයට කිසිදු භාෂීයක් නොවෙන්නේනම් ස්ත්‍රීන් රැකියාවන්හී නිරතවීම ද ඉස්ලාම් ධර්මය තහනම් නො) කරයි.
මෙයින් අපට පැහැදිලි වන්නේ ඉස්ලාම් ආගමේ අඹීවිශීෂීඩ් මෑක්ෂණය නම් එය පුයෝගීක ජීවන භ්‍රමයක් වීමය. මනුෂ්‍ය ස්වභාවය සැලකිල්ලට ගෙන ඒ සඳහා) නිසි ඉඩකඩ ඉන් ದQತಿದೆ.
ඉස්ලාම් සමයේ ස්ත්‍රී පුරුෂ දෙපක්ෂය අතර වෙනසක් කරණ පුකට අවස්ථා දෙකක්ය.
1. උරුමයෙන් ලැබෙන දේපළ බෙදීම, 2. පවුලක ප්‍රධානත්වය පිරිනැමීම,
දේපළ උරුමය පිළිබඳව ඉස්ලාම් ධර්මය පිරිමියාට ගැහැනුන් දෙදෙනකුගේ කොටස් හිමිවියයුතුය යනුවෙන් කියයි. බැලූ බැලීමට මෙය අසාධාරණයක් වශයෙන් පෙනුනත් ඇක්කෝම යුක්ති සහගත දෙයකි. සැමවිටම ආර්ඨක වගකීම පැවරෙන්නේ පිරීමියාටය. විවාහයට පෙරදී ද විවාහයෙන් පසුව ද සියලූ ආර්ඨක පුග්නවලට මුහුණ දීමට සිදුවන්නේ පිරිමියාට ය. ස්ත්‍රීන් තමන්ගේ අවශ්‍යතාවයන් සඳහා හැර අත් කිසිව කු සදහා මුදල් වැය කිරීමට බැඳී නැත. එම නිසා පුරුෂයාගේ භාරය, වගකීම අනුව බලනවිට ඔහුට ස්ත්‍රීයමෙන් දෙගුණයක් බ්‍රඹිම සාධාරණයකි.
වෙනය සිදුවන ෙදවන අවස්ථාව දෙස බැලූවෝක්, සෑම සංවිධානයකට මෙන්ම පවුලකට ද වගකිවයුතු පුධානියෙකු අවශ්‍යයි. පවුලක පුධානත්වය පහත සඳහන් තුන් අයුරින් පිඹිඹුවාශ්‍රිය හැකිය.
01. පුරුෂය) පවුලේ පුධානීය) වීම, 02. ස්ත්‍රීය පවුලේ පුධානිය) වීම. 03. දෙදෙනාම එකවිට පවුලේ ප්‍රධානත්වය දැරීම,
92 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் <--

මෙයින් තුන්වැනි අවස්ථාව අපි සැලකිල්ලට ගත යුතු ato, e6oa) esi gó)écä 80eac äÖa Ö0 Öota O)00GS 56(3)000 g86G50 000Gaia)0 e8d085 0008, ඩී පමණක් නොව එම පාලනය අවුල් වී යන බවද අපි දනීමු.
фogođg ać0 бGared eeed oca pó3.
“re8066ða eoeee806 es cotó e0a0 දෙවියන් සිටින්නේනම් ඒ දෙකකැනම අවුල් වියවුල් සහිත වේ. ඔහු සමග තවත් දෙවියෙක් ද නැත. එසේ වුයේ නම් ඔවුනොවුන් විසින් මවනු ලැබූ දේ නිසැකයෙන්ම ඔවුන්ට වර්ණාවට බ්‍රක් කරනු ඇත. සමහරුන් නිසැකයෙන්ම අඹින් දෙවිවරුන් මැඩපවත්වා G0 etc).” {2f-22)
මෙමඹින් පුධානීයන් දෙදෙනෙතුගේ පාලනය කිබිමට 805 800 30 000) DO SECO,
ස්ත්‍රීය පවුලේ පුධානීය) වීම දෙස යොමුවුවහොත් ස්ව භාවයෙන්ම බාකීර බලපෑමිවලට පහසුවෙන් බ්‍රස්වන නිසා මානසිකව හා ශාරීරිකව නුසුදුසු තත්වයකින් ස්ත්‍රීය සිටින බව වටහා ගත හැකිය. තවද, පවුලක පුධානිය) වීමට අවශ්‍ය බොහෝ දේවල් ඔවුන් සතුව නැත. ස්ත්‍රීයකට පවුලක නායකත්වය දිය හැක්කේ ඇයට ළමයින් නොමැකිතාක්ය. ඒ කියන්සෝන මවක් වශයෙන් ඇයට පැවරෙන වගකීම සෙසු වැඩවලට වඩා ඇයට වැදගත් ය. මෙමගින් ස්ත්‍රියට ද පවුලේ ප්‍රධානිය) වීමට ඇති අවස්ථි) අඩු බව පැහදිළිය.
එසේ නම් තර්ක බුද්ධියෙනුත් ශක්තිමත් ශරීරයකිනුත් යුත් පුරුෂයි හ්ධයි. එම තනතුර හිමිවිය සූක්කේ. ඒ කියන්නේ නූසුදුසු තත්වයක සිටින ස්ක්‍රියට වඩා පිවිත සටනටත්, පවුල සීසියාකාරව නඩත්තු කිරීමටත් යෝග්‍යය තත්වයක් පිරිමිෂ්ට ඇත.
පවුල් ජීවිතය පදනමි විය යුත්තේ අන්නොන්‍යාන්ය අවබෝදය මත හැර තරඟ ගැටුම් මත නොවන බව ඉස්ලාමී “දහම තහවුරු කරයි. මෙය කුර්ආනයේ අල්ලාහුතආලා මෙසේ සඳහන් කරයි.
**ඔවුන් සමග කරුණාවෙන් යුතුව හැසිරෙන්න” (4–49)
තවද මුහමිමද් නබිතුමා මෙසේ පැවසුවේය.
“ඔබ අතුරෙන් හොඳම තැනැත්තා තමාගේ පවුලට 8A) GENO) Otto)CS”
පවුල් ජීවිතය ගැන යමක් කියනවානම්, පවුලක් වශයෙන් චීකට ජීවත්වනතෙක් භාර්යාව ස්වාමිපුරුෂයාගේ ලිංගීක අවශ්‍යතාවයන් සපුරාලීය යුතුය. මෙය ඉස්ලාමයේ බීබීයයි. මෙය ස්ත්‍රියට බල කිරීමක් නොව මෙයින් අදහස් කරන්නේ ස්වාමියා දුසිරිත්වලට පෙළඹීමෙන් වැළත්වීමය.

Page 104
එමෙන්ම ඉස්ලාමික නීතිය අනුව දෙපාර්ශවයටම යුතුකම් හා අයිතිවාසිකමි ඇඹීමෙහයින්, භාර්යාව තෘප්තිමත් කිරීමට පුරුෂයා අසමත් වුවහොත් එම හේතුවෙන් ඔවුන්ගේ විවාහය අවලංගු කිරී මට ද නිදහස ඇත.
විවාහය ෆිසා ස්ක්‍රියකට පැවරෙන යුතුකම් හා වගකීමිවලින් සීදහස්වෙමින් කසාදය අවලංගු කර වෙන්වීම තුන් අයුරිෂ් සිදු De SEC5,
01. කාන්තාවන් ඉතා කලාතුරකින් පාවිච්චි කරන
දික්කය)ද අයිතිය පාවිච්චි කළ හැකිය.
02. ස්ත්‍රීය දික්කය)දය ඉල්ලනවිට ඇයවිසින් සපුරාලීය යුතු එකම කොන්දේසිය ඇයට සැමියාගෙන් ලැබූ
vdte det dyd 6 gy6.
03. ඇයගේ දායාදයක් නඩත්තු දීමනාවක් ලබාගෙන
®öຕຽງຢູ່ 98
මෙඹිදී අපි සැලකිල්ලට ගතයුතු කරුණක්නම්, මෙවැනි බීබ් කිබුනාට සැමෝම එය පාවිච්චි කිරීමට පෙළඹෙන්නේ නැත. මෙවැනි නීති පාවිච්චි කිරීම කලාතුර කිත්‍රයි සිදුවන්නේ,
ඉස්ලාමයට විරුද්දව එන තවත් චෝදනාවක් නමි, ගැහැණුන් දෙදෙනෙකුගේ සාක්‍ෂිය පිරිමියෙකුගේ සාක්‍ෂියට සමානයzයි කීමය. තවද දේපළ බෙදීම, පවුලේ පුධානියවීම වැනි පුග්නවලට පිළිතුරු දීමට පෙර දැනගත යුතු කරුණක් තිබෙ. ඔවුන්ගේ චෝදනාවලට මුල්වන්නේ එකම කරුණකි. එනම් පිරිමියට ගැහැණු සියළු අතින් සමානයයි විග්වාස කිරීමයි. මේ හේතුව උඩ සමහර කරුණුවලදී පිරිමිෂ්ට හා ගැහැණුන්ධ නිඛිය වෙන්වීම ඔවුන්ගේ මවිතයට හේතුවී ඇත.
පිරීමියාට සෑම අතින්ම ගැහැණීය සමානයකැයි කියන් පුහු අදහස ඉස්ලාමි පිළීවෙත)ගනී. මෙම වාදය අසන්නට ශ්‍රීය දෙයක් වුවත් බුද්ධියට නොගැලපෙන බැවින් ඉස්ලාමය සමිපූර්ණයෙන් එය ප්‍රතිකෂේප කරයි. 4
පිරීමියාක් ගැහැණියක් වෙනස්ය. ඔවුන්ගේ ශාරීරික අව යව පිහිටා තිබෙන අන්දමත්, ස්වභාවයත්, ගති පැවතුමන් වෙනස්ය. යම් යම් කරුණු අතින් ගැහැණු පිරීම් සමාන බවක් ඇතද ඒ කරුණුවලදී ඔවුන් සම තත්වයෙහිලා ඉස්ලාමය පිළිගනි.
ස්ක්‍රියට වඩා වැදගත්කමක් පිරීමීය)තුල තිබෙන තැනක ගැහැණීයට වඩා පිරීමිය) වැදගත් වෙයි. පිරිමිය) තුල නොමැති වැදගත්කමක් ගැහැණීය කුඹු ඇති තැන පිරීමියාට වඩා ගැහැණීය වැදගත් වන්නීය.
සාමානය මිනිසෙකුට පවා වෙනස පැහැදිලිව ox. අවයව පිළිබඳී විශේෂඥයින් ද වෙනස තහවුරු කර තිබියදීත් දැනුම පැෆ්තකට දමා කරන බොරු වාදය ඉස්ලාම් අනුමත කරන්නේ නැත.

eêc 86c)ó8 eóê obelo 68,00 Gêia): වශුට මෙයම පිළිතුර්කී,
ඉස්ලාමි නොවන්නන් අතර වැඩිපුර විවේචනයට බ්‍රහ්වෙන bbi bózépzi ae, 8ő99cc90 ezetápai obó eceae) Ö0: 0)ó 0390 * gó5 g955 G. 666ę ozozgó0 866 කීරීම නොහැකියයි නීති පැනවීම ද විවේචනයට තවත් කරුණකි. 09 G98a006 0000C5a 600 80000óda 085,
මුලින්ම බහුභාධීය) විවාහය අනුමත කිරීමට හේතුන් කුමක්ද(සී බලමු.
01. Czeitged CO eje)0C5.
විවාගය මගීන් ලැබෙන ශාරීරික සුවය මිනිස් ජීවිතයට ඉතා) අවශ්‍ය දෙයකි. සෑම කෙනෙකුම මේ සුවය පොදුවේ ශු(බීම ධනම් ලෝකයේ ගැහැණුත් පිරිමින් එක සමානව ඉපදිය යුතුය. එහෙත් ලොව බහුල පුදේශවල පිරිමින්ට වඩා ගැහැණුන්ගේ උත්ප ක්ෂීය අධික බව කාහටත් ප්‍රතික්ෂේප කළ නොහැක. එනම් චීතාට එකියක් යන දර්ශනය අනූව ගැහැණුන්ගෙන් කොටසකට මෙම සුවය ලබාගැනීමේ අවස්ථාව නොලැබී යන්නේ ය.
02. පිරිමියෙකු වෙනුවෙන් ඉල්ලන මහා පුමාණයේ දැවැද්ද නැති
560,
(Dz0zépaj g@0)80 @teŝ):2) loĝG5ô élébë:ĝG:065 ĝş වැඩිකරගෙන යාමන්, කිලෝ ගනන් ආභරණ ඉල්ලීමත්, ලොරීගනීන් දෑවැද්ද නාමයෙන් මංකොල්ල කෑමක් අද දක්වාම පවතිෂ්ඨාණ්ය. මෙය බලපාන්නේ දුප්පත් අයටයි. එනම් පිරිමින් සියයට පහත්වක් එකකට වැඩි විවාහකරගත්තේ නම් පවණක් මේ අශෝබන සිද්දින් වළක්වාලිය හැක.
03. යුද්ධවලදී මියයන පිරිමින්ගේ සංඛ්‍යාව වැඩිවීම,
80er ÖD) 09ódh coas contes 63ð 8ßęci නැඹිවුවද පිරිමින් පමණක් මියයාමේ සමහර මාර්ගෝපායන් සමාජය මඹින් ඇතිකරගෙනඇත. එනම් යුද්ධවල දී මියයන පිරීමීන්ගෙ සංඛ්‍යාව වැඩිවීමත් සමය සමාජ අවශ්‍යතාවයක් වීමට හේතු විය. {9||4 අගෝස්තු 14 සිට 1917 දක්වා පැවති පළමු ලෝක යුද්ධ ගේ දී මියගියවුන්ගේ සංඛිකාව කෝටි තුෂ්කාෆුය. තවද නොසෙලියන් තනියම කළ සටනේදී මිය ශීයවුන්ගේ සංඛිකාව මුහම් 20 කි. එනම් බහුස්ත්‍රී විවාහය කොතරම් දුරට අවශ්‍යද යන්න මෙයින් වටහා ගත හැකිය. මෙවැනි අවස්ථාවලදී ස්ත්‍රීන් සල්ලාශ්‍ර සීරීමිෂ්ඨි පහසුවෙන් ගොදුරු විය හැකිය. මෙහි ප්‍රතිඵලය සමාජ පදනම දෙදරා යෑමට ඉඩ සැලසෙයි. මෙවැනි සමාජ පිරිහානියක් වැලික් විය හැක්කේ පිරිමියෙකුට එකකට වඩා විවාහ කර ගැනීමට නිසි යෙන්ම අවසර දීමෙන් ය.
04. පරපුර බෝකිරීම
පරපුර බෝකිරීම විවාහයේ එක අරමුණකි. කොණ්ඨමී
- அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 93

Page 105
caciôèdi 866C36ai gos 0ze)Zbc.55 805 80G30 40 Gessi 50 ci g9000 cóz8a gqo Ce 609z5 os030 000a6ca. එහෙත් වයස 60 නැත්නම් 70 ඉක්මවූ පසුද දරුවන් ජාතික කිරීමේ ශක්තිය පිරිමියෙක් බ්‍රබාසිටී. මෙවැනි අවස්ථාවක පිරිමිෂ්නේ ලිංගීක අවශ්‍යතාවයන් ඉටුකිරීම සඳහා) එකකට වැඩි විවාහවීම් පිරිමිෂ්ට අවශ්‍ය වේ.
පිරිමින්ට එකකට වැඩියෙන් විවාහවීමට අනුමැනිය ලබා දෙන ඉස්ලාම් ධර්මය ගැහැණුෂ්ටත් එසේ ඉබාදියයුතුයැයි වාද කරන අයද වෙතී
මෙම වාදය නුවන පාවිච්චි කරන කිසිවෙක් පිළිනොගනිති. ගැහැණුෂ්ට වැඩිපුර සැමියන්ව අනුමත කිරීමට එකම හේතුවක්වන් නොමැත. පිරිමියෙකුට ගැහැණු සංබනාවක් මගීන් දරුවන් දහෙදෙනකු ලැබුනොත් ඒ දරුවන් දහ දෙනාට පියා කවුද ? කියා පහසුවෙන් හඳුනාගත හැක. සිරිමින් වැඩි සංඛිත්‍යාවක් ඇසුරු කළ ගැහැණියක් එක දරුවෙක් පූසූත කරයි. ඒ දරුවට මව කවුද කීය) මිසක් පිය) කවුද යන්න දැනගත නොහැඟහැක. ඒ දරුවාට මීටත් වඩා) අපහාසයක් වෙනත් නැත. ඒසේනම් ස්ත්‍රීෂ්ට බහු පුරුෂ විවාහය කිසිසේත් අනුමත කළ නොහැක.
එනම්, ඉස්ලාම් ධර්මයේ කාන්තාව බ්‍රබාසිටින සෑම අයිතිවාසිකමක් ගැනම කතා නොකලක් වැදගත් කරුණු හීපයක්ම අපි සලකා බැලූවෙමු. මේ කරුණු සියල්ල නවකාලීන බටහිර නීති න් සමග සසඳා බැලීම නොව මෙහීදී අවශ්‍යවන්නේ අවුරුදු |400 0 පෙර තීබූ පරිසරය, ජනතාව සමග සසඳා බැලීමයි. ඒ කියන්ෂින ඉස්ලාම් ධර්මය කාෂ්කාවන්ට මෙම අයීතීන් සියල්ල පිරිනැමුවේ අද, ඊය නොව අවුරුදු 1400 ට පෙරදීය. අද කාෂ් කාවෝ සටන් කර ලබාගන්නා) මෙම අයිෆිෂ් ඵදු කිසිදු සධනක් 5600 00089 O3000 988,96 góę866 536063,
e0ec Dao0ec bêáhoi ea 80 86ða ecç gda 800 8099 gadeié ÔÔêec5 carton, gden9 ÔÔêC) මනුෂ්‍ය ස්වභාවය සැලකිල්ලට ගෙන ඒ සඳහා සීසී ඉඩකඩ සැග්‍රිස්වීම එහි අඹීවිශීෂ්ඨ බ්‍රහමණය කි.
to 90
01. - ges)) oÕ00 goð - Qenëê pê),
02. ඉස්ලාම් - චෝදනා) හා පිළිතුරු - පී. ජෙයිෆුල් අබ්දීන්, 08, 9d0996 (28 - ggcó dó dö9ð,
94 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

(100 ஆம் பக்கத் தொடர்ச்சி.)
ஊடகத்துறையினர். வினதும் ஒற்றுமையினதும் கருப்பைகளாக அவற் றினை நாம் மாற்ற வேண்டும். அங்கு கூறப்படும் ஒவ் வொரு வார்த்தையும் சமூகத்தின் தேவையை நிறை வேற்றுவதாக, அனைவரையும் ஒன்றுபடுத்துவதாக வர வேண்டும். இவ்வாறு, மக்களுடன் நேரடியாகத் தொடர்புபடும் இம் மேடைகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தும் போது சமூகத்தின் அனைவரையும் அடக்கிய பிரசாரம் எளிதான முறையில் அமை ந்துவிடும்.
இவற்றுடன் கலை இலக்கிய படைப்புக்க ளையும் சேர்த்து ஊடகத் துறை என்ற அம்சத்துக்குள் பேசலாம். இவை மக்களால் தானாகவே கவரப் படுபவை. எனவே, சமூக நோக்குடன் அவற்றினைப் படைக்கையில் விளைவுகள் பன்மடங்காகும்.
உயர் ஒழுக்க நாகரிக மதிப்பீடுகள் மீதுதான் சமூகத்தின் தூணர்கள் எழுந்து நிற்கின்றன. பயிற்ற ப்பட்ட தனி மனிதன் நிழல் பெறும் உறவுகளையும் அல்லாஹவின் சட்டத்தின் பால் மன ஒப்புதலுடன் அழைக்க வேண்டியதும், அவர்களிடம் நாகரிக அதி உச்சத் தன்மையை, நீதத்தை, சகிப்பு மனப்பான் மையை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனின், கடமையாகும். இஸ்லாத்தின் பயணமானது வெறுமனே குடும்ப சட்டங்கள் வண க்கங்களுடன் நின்றுவிடுவது மாத்திரமன்று. அது சர்வதேசத் தன்மை கொண்ட முழு வாழ்விற்குமான வழிகாட்டல் என்பதை நிறுவிவிடுவதற்கு அல்லாஹி கூறுவது போல் மனிதர்களுக்கு வசப்படுத்தப்பட்ட இப் புவியியல் அனைத்து வழியையும் கையாளல் அவசியமாகிறது.
மேலே குறிப்பிட்ட வழிமுறைகள் பற்றி மிக வும் காத்திரமான பல்முனைக் கருத்துக்களின் மோதல் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அதன் செய ற்திட்டங்கள் பற்றிய பூரணதள விபரங்களைப் பெற லாம். மேலே குறிப்பிட்டவை இவை தொடர்பான முற்கூறேயாகும்.
ஆர்ப்பரிக்கும் கடலலைகளிடையே அடங்கி மூழ்கியது போதும் அல்லாஹீவன்கட்டளை எமையழைககறது. இனியாவது விழித்துக்கொள்வோம்.
என்ற வரிகளுடன் இது நிறைவடைகிறது.

Page 106
தஃவாவில் ஊடகத்துை
ஏ ஆர் ப
ஊடகங்களின் தன்மையும் ஸ்தானங்களும்.
தகவல் தொழில்நுட்பத்தினூடாய்ப் பூகோள அறையாகிவிட்ட இன்றைய உலகை மறைமுகமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஊடகத்துறையினை இஸ்லாமியப் பிரசாரத்திற்காகவும், சமூகப் புனர்நி ர்மாணத்திற்காகவும் பயன்படுத்துவதன் தேவைப்பாடு குறித்த சிந்திப்பு முயற்சியை இத் தலைப்பு முன் வைக்கிறது. எமது சூழலில் இவை தொடர்பான முய ற்சிகள் குன்றியும், போதியளவு இன்மையும், காத் திரமான சுதந்திரக் கருத்துப் பரிமாறலும் இடம் பெறாமையும் இத்தலைப்பின் அவசியத்தை வேண்டி நிற்கின்றது.
மக்களின் அன்றாடத் தகவல் பரிமாறல்கள் தொடக்கம் அவர்களின் நாகரிகங்களது முன்மாதிரி யான ஊடகங்களின் வகை மாதிரிகள் வரை அவ ற்றின் பரந்துபட்ட இயக்கத் தன்மையாலும் பணி புகளாலும் மக்களின் மீது தம் ஆதிக்க நிலைகளில்,
வேறுபட்டவையாக உள்ளன.
இந்த ஊடகங்கள் ஒரு தனி மனிதனையோ அல்லது ஒரு சமூகத்தையோ சீரிய முறையில் வள ர்க்கவும், சீரழிக்கவும் சக்தி கொண்டவை எனபது வெளிப்படையாகும். நவீன சமூகத்தின் குறிப்பாய் இளவயதினரின் முன்மாதிரிகளாக ஊடகத் துறைகள் காணப்படுகின்றன.
ஜேர்மனியரான ஒடோகுறோர் ஊடகத் துறை பற்றிக் கூறுகையில் “பொது மக்களின் மனோ நிலை, வேட்கைகள், அவர்களின் செயற்பாடுகளை ஒரே நேரத்தில் அவ்வாறே முன்வைப்பது ஊடகத்

றயின் அவசியப்பாடு.
ர்ஸான் இரண்டாம் வருடம் உளUலுத்தின் பீடம்
துறையாகும். அதனது உணமை நிலையில்தான் அவ ற்றின் ஸ்திரத்தன்மை தங்கியுள்ளது” என்கிறார். இந்த ஊடகங்கள் முன்வைக்கும் விடயங்களின் இயல்பு நிலையைப் பொறுத்தே மக்களிடையிலான அவற்றின் தொடர்பு தங்கியுள்ளது.
நவீன கால சடவாத சிந்தனை சமூகங்கள் தங்களின் பூரண வழிகாட்டியாக ஊடகத் துறையி னை நம்பியிருக்கின்ற நிலையில் அவற்றில் ஏற்படும் சிறிய மாறுதல்கள்கூட அக்கணமே மக்களிடையே தாக்க அலைகளை உருவாக்கி, நவீன நாகரிகங்களாக மறுதினமே மாறுதல் அடைகின்றன. இவ்வாறு மிகுந்த மக்கள் சக்தியினைக் கொண்டுள்ள இவை பல் வேறுபட்ட படித்தரங்களுடாய் மக்களைவந்தடைகிறது. அவைகளில். பார்வைப் புலனோடு தொடர்பு டையவை,கேள்விப் புலனோடு தொடர்புடைய வை, பார்வை-கேள்விப்புலனர்களோடு தொடர் புடையவை, ஏனையவை - என இத்துறை அறிஞ ர்களினதும், ஆய்வுகளினதும் பாகுபாட்டிற்கு இது உட்படுகின்றது.
பார்வைப் புலனோடு தொடர்புடையவற்றில் நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், குறிப்புகள், விளம்பரங்கள் என நீளும் அதனது சக வடிவங்கள் துண்டுப் பிரசுரம் வரை செல்கின்றது.
கேள்விப் புலனோடு தொடர்புடையவற்றில்
வானொலி நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், குறி
ப்பிடும்படியான விவாதங்கள், மன்றங்கள் என்ப னவையும்,
பார்வை கேள்விப் புலனோடு தொடர்பான
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 95

Page 107
வற்றில் சினிமா, நாடகங்கள், கலந்துரையாடல்கள், சிறுவர் திரைப்படங்கள், அரசியல் விமர்சனங்கள், ஒலி-ஒளி நிகழ்வுகளும் நிகழ்ச்சிகளும், அரங்க அளி க்கைகள், சமூகநல, மகளிர் நிகழ்ச்சிகள் என்பன வுடன் இன்னும் பலவும் அடங்குகின்றன.
ஏனையவை எனக் குறிப்பிட்டவற்றில் தனி நபர் தொடர்புகள், அழகிய முன்மாதிரிகள், பொதுப் பணிகள் என்பவற்றை உட்படுத்தலாம்.
கொள்கையொன்றினை மையப்படுத்தி செய ற்படாத ஊடகங்கள் கூட மக்கள் மத்தியில் தாக் கத்தினை ஏற்படுத்துகின்ற போது கொள்கைசார் ஊட கங்களின் செல்நெறிகள் நுணர் உணர்வும் நுழைகின்ற பணிபினையும் கையாள்கையில் நிச்சயமாக பாரிய வெற்றியினை ஈட்டிக் கொள்பவையாக அமைந்து விடும். இன்னொரு வடிவில் குறிப்பிட்டால் ஒரு கொ ள்கைக்காய் இயங்கும் கூட்டம் தன் இலக்கையடைய மிகச்சிறந்த பிரசார சாதனமாக ஊடகத்துறையினை யே கண்டு கொள்ளும்.
இஸ்லாத்தில் ஊடகங்களின் நிலை.
மனித வாழ்விற்கான இறைவழிகாட்டலான இஸ்லாத்தின் வெற்றியை எய்துவதற்கு அதனை ஏற்றவர்களான முஸ்லிம்கள் ஊடகத் துறையினை பயன்படுத்துதல் தவிர்க்கவியலாத ஒன்றாகும். இஸி லாத்தைப் பிரசாரம் செய்யும் வழிமுறைகள் பற்றி அல்லாஹ குறிப்பிடும் போது “உயர்ந்த கருத்துக்க ளாலும் ஞானத்தாலும் அழகிய நல்ல, உபதேசங் களாலும் உமதிரட்சகனின் வழிக்கு அழைப்பீராக” என்கிறான். (சூறதுன் நஹல் - 125)
இவவசனத்தில் அல்லாஹர் இஸ்லாமிய அழைப்பாளனொருவன் அல்லாஹவின் பாதையை நோக்கி மக்களை அழைக்க வேண்டும் எனக் குறி ப்பிடுகின்ற போது இவ்வழியில்தான் அழைக்க வே ணர்டுமென சாதனங்களை வரையறுத்துக் குறிப்பிடா மைக்கு ஓர் உட்காரணமுண்டு. அதாவது, கால மாற் றமானது அழைப்புச் சாதனங்களின் தன்மையையும் மாறுதலடையச் செய்யும் என்பதாகும். சுருங்கக் கூறி அதிகளவு விளக்கத்தினைக் கொண்ட இவ்வசன மானது அழைப்பிற்கான இருவழிகளைத் தொட்டுக் காட்டுகின்றது.
ஒன்று, உயர்ந்த ஞானங்களைக் கொணர்ட கருத்துக்கள் மற்றது அழகிய உபதேசங்கள் என்பன வற்றையாகும்.
96 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 3

அறிவின் ஆராய்ச்சியின் முன்னேற்ற கால ங்களில் அறிஞர்கள் கற்றோர் மத்தியில் அறிவுசார் கருத்துக்கள் பேசப்பட வேணடும். இந்த வகையில் இஸ்லாத்தின் கண்ணோட்டம் அதன்நிலைப்பாடுகள் சித்தாந்த வடிவம் பெறுவது தவிர்க்க முடியாததாகும்.
இருந்த போதும் இவற்றுடன் மனிதனது இய ல்புகள் குன்றிப்போய்விடுபவையல்ல. அவர்கள் உணர்ச்சி, உத்வேகம் என்பவற்றையும் தங்களது இயல்பின் ஒரு பகுதியாகப் பெற்றவர்கள், அதன்பால் வழிநடத்தப்படக் கூடியவர்கள். எனவே, கற்பாறை யான உள்ளங்களை இளகச் செய்திட அழகிய பணி புகொணிட உபதேசங்கள், முன்மாதிரி அம்சங்கள் தேவையாகும்.
இறையன்பை, இறையச்சத்தினை வளர்த்து, மறுமையின் பயங்கரங்களை உணர்த்தி, ஆத்மாவின் உணர்வ்லைகளது மோதல் மூலம் ஆத்மீகத் தாக் கத்தினால் இறைவன் பால் ஈர்ப்படையச் செய்யும் வழிமுறைதான் அழகிய உபதேசங்களாகும்.
இஸ்லாத்தின் பாலான அழைப்பானது மேலே குறிப்பிட்ட முதலாவது வழியில்தான் அதிகம் நடைபெற்றுள்ளது. ஆனால் வேற்று மதத்தினர், ஏனைய சிந்தனைப் பிரிவுகள் இரண்டாவது வழி யினைப் பின்பற்றிக் கணிசமான அழைப்பியல் வெற் றியினை ஈட்டிவிட்டனர். இஸ்லாமிய அழைப்பில் இரண்டாவது பகுதி போதியளவு மேற்கொள்ளப் படாமைதான் கீழைத்தேய நாடுகளில் அனைவரை யும் உள்வாங்கிய அமைப்பில் பிரசாரமானது வெற்றியடையாமைக்கும், மக்களின் இயல்புகளுடன் ஒன்றிய பிரிவுகளின் தோற்றத்திற்கும் முதற் காரணி எனக் குறிப்பிடலாம்.
இவ்வகையான வழிமுறையின் பின்புலமாக ஊடகத்துறையினை நன்கு பயன்படுத்திய மேற்குறி ப்பிட்ட பிரிவுகள் தங்களின் பிரசாரத்தை சாதாரண மக்கள் வரை கொணர்டு சென்றனர். ஒடுக்கப்படும் முதலாளிகளின் அதிகார வரம்பினுள் அகப்பட்ட இய ந்திர வாழ்வை மேற்கொள்ளும் தொழிலாளிகளின் நிலையான கம்யூனிச மற்றும் சோசலிச இலக்கிய ங்கள், நாவல்கள், கவிதைகள் என்பன தம் பாடு டொ ருளாகக் கொணர்டு, தமி சிந்தனையை அவர்களில் நிலை நிறுத்தவும், அதற்கான மக்கள் பலத்தினைப் பெறவும் முயன்றன. சில வேளைகளில் அதில் வெற் றியும் கண்டன. இதே போல்தான் முதலாளித்துவம், கிறிஸ்தவ சிந்தனைகள் கவர்ச்சிகளையும், சொகுசு களையும் தம் பிரசாரத்தின் விளைவுகளாய் ஊட கங்களில் எடுத்துக்காட்டி, அதிகப்படியான வெற்

Page 108
றிகளைச் சமிபாதித்துவிட்டன. ஆனால், முன்னேற்ற கரமான இஸ்லாமிய சிந்தனைகள் கிலபா ராஷிதா மந்த நிலையினை அடைவதில் தோன்றிய முஸ்லி மிகளின் அறிவியல் வீழ்ச்சியும், மார்க்கத்தில் கூறு போடல் நிகழ்வுகளும் இஸ்லாமியப் பிரசாரத்தில் பலமானதாக்கங்களை உருவாக்கிநவீனத்துடன் சேர் ந்து, பிர்சாரம் இடம் பெற வழி ஏற்படாது போனது.
முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பிரசாரத்திற்காக இந்த ஊடகத்துறையில் நிலையான கால் பதிக்கா ததை, அதனை நன்றாகப் பயன்படுத்தாததைத் தங்க ளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மேற்க த்தேய நாடுகள் அவற்றைத் தம் வக்கிரப் பிடியில் இக்கணம் வரை தொடராய் வைத்துக்கொண்டுள்ளது.
மேற்கத்தியரால் சீரழிக்கப்பட்ட நிலையில் ஊடகத் துறையின் சில பகுதிகள் காணப்படுவதால் அவற்றினை ஹராம் - தடுக்கப்பட்டவை எனக் கூறி முஸ்லிம்களை அதன் பாலிருந்து விலகச் செய்த மார் க்கத் தீர்ப்புகள் இன்னும் எங்களிடையே காணப் படத்தான் செய்கின்றன. ஆனால் இவ்விடயமானது நவீன காலத்தில் தவறான தன்மையினைப் பிரதிப லிப்பதாய் அமைந்துள்ளது. இஸ்லாத்தின் தூதைக் காவிச் செல்லக்கூடிய இக்காவிகளை இஸ்லாத்திற்கு நன்மை விளைவிப்பவற்றைத் தடுக்கப்பட்டவை என் ற வட்டத்திற்குள் எவ்வாறு அடக்க முடியும்? !
நாங்கள் வாழ்ந்து கொணர்டிருக்கும் இக் காலமானது முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியுற்று மீள் நிர் மாணம் செய்யப்பட்டுக்கொணர்டிருக்கும் காலப்பகு தியொன்றாகும். இஸ்லாத்தின் எதிரிகள் அதிநவீன அறிவியல் சாதனங்கள் அனைத்தினையும் இஸ்லா த்தின் துரயப்மையை மாசுறவைக்கவும், இஸ்லாம் தேவையற்ற கட்டுப்பாடுகளைக் கொணர்டது, சர்வ திகாரப் போக்குடையது, வக்கிரத் தன்மையானது, புராதனங்களை அங்கீகரிக்காதது, மத சகிப்பற்ற போக் குக் கொண்டது எனக் காட்டப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக வசனங்கள் திரிபுபடுத்தப்பட்ட அல் குர்ஆன் பிரதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஹதீஸ் தொடக்கம் இஸ்லாத்தின் பல முக்கிய அம் சங்களில் போலிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இன்னும் இஸ்லாத்திற்கெதிரான சதித்திட்டங்கள் தொடர்ந்து கொணர்டே போகிறது. ஆனால், நாம் அவை தடுக் கப்பட்டவை எனக் கூறி மெளனமாய் எவ்வித உண ரீவுகளுமற்றவர்களாய் அவற்றை ஏற்கும் நிலை வந்து ஏமாந்தவர்களாக மெளன விரதம் கொள்வது நியா யமன்று.
இஸ்லாம் நிறுவனமயப்பட்ட தாக்கத்திற்கு

உட்படுகையில் நாங்களும் நிறுவனமயப்பட்ட நிலை யை அடைவது எவ்வளவு முக்கியமோ அதே போல், இன்றைய கால கட்டத்தில் ஊடகத் துறைகளை இஸி லாத்திற்கு மாசுகற்பிக்க சில சக்திகளும், சிந்தனை முகாம்களும் பயன்படுத்துகின்ற போது இஸ்லாத்தின் தூய்மையையும், அதனது பிரசாரத்தையும் அதனுT டாகச் சொல்வது மிகுந்த தேவையாக அமைகின்றது. எனவே, நாங்கள் இஸ்லாத்தை வெளிக்கொணர் வதில் தடைக்கற்களாக நிற்காமல், எல்லாவிதமான வழிமுறைகள் மூலமும் இறைவழியில் நின்று இஸ் லாத்தை வெற்றி பெறச் செய்வதிலும், அதன் பிரசா ரத்தினை முன்னெடுப்பதிலும் படிக்கற்களாக அமைய வேண்டும்.
தொடர்பூடகம் பற்றி கலாநிதி அம்மாரா நஜிப் அவர்கள் குறிப்பிடும் போது “ஷரிஆவில் அனுமதிக்கப்பட்ட அனைத்து வகையான அறிவியல் ஊடகங்களையும் கைக்கொண்டு சத்தியத்தை விளக்கி அதன் உயர்வை எடுத்தியம்பல்” என்கிறார்.
இஸ்லாத்திற்காக ஊடகத்துறையினைப் பய ன்படுத்தல் என்பது கிறாஅத், ஹதீஸ் விளக்கம், கஸி தாக்கள் என்பவற்றுடன் சுருங்கிவிடலாகாது. உணர் மையிலே வெகுஜன தொடர்பூடகம் பற்றிய இஸ்லா த்தின் நிலைப்பாடானது மிக ஆழமானதும், பரந் ததுமாகும். இதன்படி ஊடகத்துறை வெளியிடும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இஸ்லாமிய நிகழ்ச்சி களாக மாற்றிட முடியும். ஏன் இன்னும் பல மேம் பட்ட நிகழ்ச்சிகளையும் அமைக்கலாம். செய்திகள், அரசியல் விமர்சனங்கள், சமூக கலாசார அரசியல் விடயங்கள், சிறுவர் நிகழ்ச்சிகள், நாடகங்கள், திரை ப்படங்கள், கார்டூன்கள், கலை இலக்கிய வடிவங்கள் என இப்பகுதிநீண்டு தொடரவே செய்யும். ஆனால், இங்கு அதி விஷேட கவனம் செலுத்தப்படுவது அவை ஷரிஆவின் வரையறையினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதேயாகும்.
நபிமார்களின் வருகை ஆரம்பிக்கப்பட்ட துடன் தஃவாவும் ஆரம்பமாகின்றது. இங்கு நபி மார்களின் பிரசார ஊடகமாக அவர்களது பேச்சுக் கள், அழகிய முன்மாதிரிகள், அற்புதங்கள் காணப்ப டுகின்றன. (ஒவ்வொரு நபியின்) மக்களின் பணச்பி ற்கேற்ப அழைப்பியல் சாதனமும், அற்புதமும் வேறு பட்ட தன்மையினைப் பெற்றிருந்தது. மூஸா நபிக் கான அற்புதமாக அஸாவும், மின்னும் கையும் வழ ங்கப்பட்டிருந்தது. அதே போல் ஈஸாநபிக்கு குஷ்ட ரோகத்தினைக் குணப்படுத்தல், மரணித்தவர்களை உயிர்ப்பித்தல் என்பனவும் சுலைமான்நபிக்கு காற்று, ஜின் என்பனவின் வசப்படுத்தலுடன் உலகின் ஆட்
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 97

Page 109
சியும் வழங்கப்பட்டது. இதன் முடிஒவாய் அறிவியல் அற்புதமான அல்குர்ஆன் நபிகளாருக்கு வழங்கப் LILI gl.
நபி (ஸல்) அவர்கள் காய்ந்த மரமொன்றின் கிளையை அசைத்து இலை உதிர்வதை சுட்டிக்காட்டி பாவங்கள் மன்னிக்கப்படுவதை விளக்கியதும், வீட் டின் முன் இருக்கின்ற ஆற்றில் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் குளிப்பதைப் போல் ஐவேளைத் தொழு கையால் பாவக்கறைகள் நீங்குவதைப் பற்றிக் கூறி யதும் மிகவும் சிறப்பான உணர்த்துதல் வழிமுறையி னைக் கையாண்டு தொழுகையின் முக்கியத்துவத் தினை அழகிய முன் உதாரணங்கள், நாடகசார் பணி புகள் மூலம் குறித்த இலக்கையடைய நபிகளார் கையாண்ட வழியாக அவதானிக்கலாம்.
பொது அறிவிப்பின் மூலம் அதனை ஊடகத் துறையாகக் கையாண்டு பிரசாரம் மேற்கொண்ட நிலைகளை ஜாஹிலிய்யாச்சமூக ஒழுங்குகளிலிருந்து கண்டு கொள்ளமுடியுமாக இருக்கிறது. கஃபாவில் தொங்கவிடப்பட்ட கவிதைகள், இலக்கிய முயற்சிகள், அறிவிப்புகள் என்பன அன்றைய அராபிய நிலத்தின் மிகப்பெரும் தொடர்புடகமாகக் காணப்பட்டது. அதே போல் தான் ஸபா மலையின் அறிவிப்பும் அரபிக ளிடம் தாக்கம் விளைவிப்பதாகக் காணப்பட்டது.
நபிகளாரின் காலத்தில் ஏனைய கோத்திரத் தலைமைகளுக்கும் ஹிஜாஸைச் சூழ இருந்த சிற் றரசுகளுக்கும் அவர் அனுப்பிவைத்த கடிதங்கள் கூட பிரசார நோக்கத்துடனே அனுப்பப்பட்டது. மேலும் இஸ்லாமிய சமூகத்தின் வரலாறு நெடுகிலும் பள்ளி வாசல்கள் பொது அறிவிப்பு மையமாக அதாவது பொது ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டது. இன்னும் ஊடகத்துறையில் இஸ்லாமியப் பிரசாரத்திற்கான வரலாற்று ஆதாரங்களை எவ்வளவோ கூறலாம். அவை இம்முற்கூற்றினை விட ஆய்வுகளுக்கு முத ன்மைப்படுத்தப்பட வேண்டுமென்பதால் இப்போது அவற்றினைத் தவிர்த்துக் கொள்ளுவோம்.
நவீன காலப் பிரசாரம்.
ஒரு போராளியின் கரத்தில் ஜிஹாதின் கருவியாகவும், கொலையாளி ஒருவனின் கரத்தில் கொலைக் கருவியாகவும் உள்ள வாளைப் போன் றதுதான் ஊடகத்துறைச் சாதனங்கள்.
இஸ்லாமிய ஊடகத்துறையின் நோக்காக சிறந்த ஆளுமை கொண்ட மனித இனத்தின் உரு
98 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் ஓ

வாக்கம் மகத்தான குணங்களின் உருவாய் நன்மை புரிதல், நீதம், மனிதம், கற்பு என்பவற்றின் பிரதி பலிப்பான தனி மனித சமூகங்களின் உருவாக்கம், சமூகத்தின், தேசத்தின் அனைத்து வகையான பிர ச்சினைகளையும் நீதமாக அணுகுதல் என்பன காண ப்படுகின்றன. மாறாக மக்களது குறைகள், ரகசியம், பலவீனம் என்பவற்றைக் கூறிப் பொய்யையும், புர ட்டையும் வெளிப்படுத்தும் இன்றைய தொடர்பூடகத் தன்மையினை இஸலாம் ஒரு போதும் அனும திப்பதில்லை.
மேலே குறிப்பிட்டதைப் போன்று மனித உருவாக்கத்தின் துணைக் கருவியான ஊடகத் துறையினை இஸ்லாத்தின் துதிற்காகப் பின்வரும் வழிமுறைகளில் பயன்படுத்தலாம். எழுத்துத் துறையில், நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவற்றினைக் குறிப்பிடும் போது ஒருவன் பேசி விளங்கப்படுத்தும் விடயமொன்றினை எழுத்து வடிவில் வழங்கும் போது அதனது வெற்றி வாய்ப்பு அபரிமிதமானது. குறிப்பிடப்படும் விடயம் பாதுகா க்கப்பட்டு செயலுருப் பெறும் தன்மையும் அதிக மாகும். எழுத்துத் துறைசார் விடயங்கள் மீளவும் வாசிக்கப்படுகையில் அதனது தாக்கவீதம் மிகுந்ததாய் இருக்கும். தற்காலத்தில் கூட இஸ்லாமிய தஃவாவில் எழுத்துத்துறை கனமான, உறுதியான பங்களிப்பைச் செலுத்தி வருகின்றது. கூறுகின்ற விடயங்களுக்கான தெளிவான, உறுதி கொண்ட ஆதாரங்களை வரலாறு சமூகவியல் நடவடிக்கைகள் மூலம் விளங்கப்படுத்த எழுத்துத்துறை பாரிய பங்களிப்பைச் செலுத்து கின்றது.
ஒரு விடயத்தினை மக்கள் முன்பகுதி பகுதி யான தெளிவினை வழங்கி, அவர்களுடன் தொட ராக உரையாடுவது போன்றதுதான் சஞ்சிகைகள், இங்கு வாசகர்கள் எவ்வகையான தளத்தினில் நிற்கி றார்கள் என்பதனை அவர்களின் ஊடாகவே அறிந்து, அவர்களுக்கு குறித்த வழியினூடாக விடய விளக்கத் தினை வழங்க சஞ்சிகைகள் துணைநிற்கின்றன.
இதே துறையில் உள்ளதுதான் விளம்பரம். நாங்கள் கூற எடுத்துக்கொள்ளும் விடயத்தை மிக நுணுக்கமாக விளம்பரம் மூலம் சமர்ப்பிக்கலாம். இன்றைய விளம்பரங்கள் மக்கள் மீது செலுத்துகின்ற அடையாள தாக்கத்தினை நோக்குகையில் அதனது வேக வீச்சைப் புரியக்கூடியதாக உள்ளது. உதார ணமாக சீதனக் கொடுமையைப்பற்றி ஒரு பத்திரிகை சில இதழ்களில் தொடராக எழுதி குறிப்பிட்ட இதழில் அதி கூடிய முக்கியத்துவத்தை அதற்குக் கொடுத்து எழுதியது. இவ்வாறு இஸ்லாமியத்தினில் இருந்து

Page 110
எழுதப்பட்டதன் பின் அடுத்த இதழில் மணமகன் விற்பனையில் உள்ளதாக ஒரு விளம்பரமும் வெளி யிடப்பட்டிருந்தது. அதில் மணமகனின் தகைமை களுக்கேற்ப வாங்கப்படும் சீதனங்கள் பற்றிய விபரக் கொத்தொன்றும் தரப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பல இளைஞர்களிடையே அவர்களின் சிந்தனைக .ளைத் திசைமாற்றி, தங்களை அவமானச் சின்னமாக உணரவைத்ததுடன் அவர்களின் கருத்தியல் தளத்தி லும், வாழ்வின் செயற்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. சில பிரபலமான நிறுவனங்கள், தனிநபர்கள் தங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் அவைகளை, அவர்கள் தங்களது தலைத் தொடர்பிக ளிலும், ஆடைகளிலும் பொறித்து அணிந்து திரிகின்ற இளைஞர்களை இன்று பரவலாய்க் காணலாம். இவ்வாறான் நிகழ்வுகள் எதைத்தான் கட்டமிடு கின்றன ? விளம்பரங்கள் அதிஉச்ச காவியமாகவே தொழிற்படுகின்றது என்பதை மட்டுமே.
கேள்விப் புலனோடு தொடர்புடையவை எனக் கூறும்போது அவற்றில் வானொலி முக்கிய மான பாத்திரத்தினை ஏற்றிருக்கின்றது. இன்று போல் வானொலி நிகழ்ச்சிகள் போதிய ஆழமற்ற சிறுவர் நிகழ்ச்சிகள், சில கொள்கைகளுக்கான பிரசாரங்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளுடன் சுருங்கிவிடாது இன்றை ய வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றினையும் இஸ்லா மிய மயமாக்கலின் கீழ் கொண்டுவரலாம். வானொலி நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட சாராருக்கென்றிருக்காது, அனைத்து நேயர்களையும் ஒரே நேரத்தில் கவர்வது. சில விடயங்களை நோக்கும் போது - ஆக்கபூ ர்வமான அரசியல், சமூகத் தளங்கள் தொடர்பான விமர்சனங்களை இஸ்லாம் கூறும் வழிகளினுடாக அமைக்கலாம். சிறுபாண்மையினராக நாங்கள் வாழும் இக்கால கட்டத்தில் எங்களின் சமூக வாழ்விற்கான செப்பனாக இதனைக் கருத முடியும் அரசியல் வாதிகளின் சமூக நடவடிக்கைகளின் ஒருதலைப்பட்ச முடிவுகள், தவறான செயற்திட்டங்கள் என்பவற்றைச் சிறப்பான கலந்தாலோசனைகள் மூலம் தகர்த்து இஸ்லாம் எதைக் கூற வருகிறது என்பதை மக்கள் முன் கொண்டு வரமுடியும்.
வாழ்க்கையை எங்கோ தாரைவார்த்து விட்டு, அழிவினை விலையின்றி வாங்கும் இங்குள்ள வரணர்ட, மேற்கின் இசைப் பிரியர்களுக்கு ஓரிறை வனின் பாலான அழைப்பினையும், அவன் மீது வைக்க வேண்டிய அன்புப் பிணைப்பையும் அவர் களின் உணர்வுகளுக்கு இஸ்லாமிய இசைத்தீனியை யிட்டு அவர்களின் வழி பிறழ்தலைத் தடுக்கலாம். பாடகர்களையும், பாடலாசிரியர்களையும் ஊக்குவிப் பதன் மூலம் இஸ்லாமிய சமூகம் வேண்டி நிற்கும்

பல்வேறு உணர்வுத் தேவைகளை நிறை வேற்றமுடி யும். இங்கு இஸ்லாமியப் பாடல்கள் மூலம் நாடப்படு வது இறைவனின் பாலான அழைப்பையாகும். அவனின் மீது நம்பிக்கை கொண்டவர்களுடனான சகோதர அன்பை வலுப்படுத்துவது, அவனின் சமூகத் தின் ஒழுக்கத்தை உயர்வடையச் செய்வதாகும். வரணிட சிந்தனைகளின் தாக்கத்திலிருந்தும், ஆபாச உணர்வுகளின் அடிமைத்தனத்திலிருந்தும் இளைஞ ர்களை விடுவித்து, அழகிய வழிகள், மென்மையான ராகங்கள், மனஆறுதலான கருத்தியல் சூழலும், பாடல்கள் உள்ளதைக் கூறும் பணிபுகளின் மூலம் வழி நடாத்த எத்தனிப்பதாகும்.
சிறுவர் நிகழ்ச்சிகள் மூலம், இளம் பராய த்திலே அவர்களின் ஆழ்மனதில் வேற்றுமத, நாஸ்தீக விதைகள் தூவப்படுவதைத் தவிர்த்து யதார்த்தத்தின் வித்துக்களை விதைக்க முற்படலாம். அவர்களுக்கு ஏற்ற உளவியல் நிலைகளில் நின்று தங்களின் தேட லைப் பூர்த்தி செய்யக் கூடிய விடயங்களை இஸ்லா த்துடன் நீதத்துடன் இணைத்து செவிகள் மூலம்
உள்ளத்தில் விதைக்கலாம்.
இவ் வகையானதஃவாவானது மிகப் பெரிய விருட்சங்களை நடுவதன் முதற்படியாகும். சமூக உணர்வூட்டலினால் சமூகத்திற்கான பாதுகாவலர்கள் இதன் மூலம் உருவாக்கப்படுவார்கள் என்பது மிகுந்த நம்பிக்கை தரக்கூடிய வார்த்தையாகும்.
மற்றைய வழிமுறையான பார்வைக் கேள் விப் புலனோடு தொடர்புடையவை எனக் குறிப்பிடும் போது, நாடகங்கள். திரைப்படங்கள், சிறுவர் திரைப் படமான கார்டூன்கள் என்பன நாடப்படுகின்றன. இவை ஒரு கல்லில் இரு மாங்காய்களைப் பறிப்ப வை. நாடகங்கள் திரைப்படங்கள் தற்காலத்தில் ஆக்கபூர்வமான மையக் கருத்தைத் தாங்கிவராத, வெறுமனே இளவயதினரின் பாலியல் காதலை மட் டும் முற்படுத்தி சில வேளைகளில் அதையே மைய மாகக் கொண்டு ஆபாசம் கலந்த போதையுடனேயே வெளிவருகின்றன. இந்நிலையில் ஈரானின் திரைப் படங்களும், சில அறிவியல் கருப்பொருள் கொண்ட மிகவும் சொற்ப அளவான திரைப்படங்களுமே அவ் விடத்தை நிரப்புகின்றன. மேற்கூறப்பட்ட இரணர் டையும் இஸ்லாமிய மயமாக்கலின் போது, சமூகம் பற்றிய பிரக்ஞை, அது தொடர்பான கவலை, இஸ்லாமியம் தொடர்பான தவறுகளைக் களைந்து, துயதை வெளிக் கொணரும் ஆர்வம், இவ்வுல குக்கான ஒரே நீதத்தினை வேண்டி நிற்கும் தேவை. சடவாத, செல்லுபடியற்ற இலங்கள், வாதங்களின் இருண்ட சூனியத்தன்மையை வெளிக்கொணரல்,
S அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 99

Page 111
சமூகத்துடன் இணைந்து இயங்கல், இயந்திர வாழ்வை மேற்கொள்ளும் மனிதனுக்கு இதய ஆறு தலை வழங்கல் என்ற அடிப்படையில் நிழல்களை உரையாட வைப்பதன் மூலம் சாதிக்கலாம்.
நடிப்புத்துன்ற சார்ந்த பலரின் திறமையான செயற்படுகள் மூலம் அவர்களிடமிருந்து மிகவும் அதிகமான பிரயோசனங்களைப் பெற்று அதனூடாக தஃவா பயணப்பட வேண்டியது அவசியமும், முத ன்மையானதுமாகும். இவ்வழிமுறை அதிகமான விருத்தியை குறுகிய காலத்தில் சமீபாதிக்கக் கூடியதாகும்.
ஈரானிய கொள்கைத் திணிப்பினைத் தவிர் த்து வெளிவரும் அவர்களின் திரைப்படங்கள் போன் று நமது சூழலிலிருந்தும் காத்திரமான அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் வெளிவர வேண்டியது அவசி யமாகும். இவற்றில் எமது சமூகம் எதிர் நோக்கிய, நோக்கும் சவால்கள் அவற்றுக்கான பின்புலம் என் பன கூறப்படுவதுடன்தீர்வுகளும் முன்வைக்கப்படல் இன்றைய கட்டாயத் தேவைகளாகும்.
கார்டூன்கள் இஸ்லாமியத் தன்மைகளுடன் தஃவாவை முற்படுத்தி அறபு நாடுகளில் தற்போது வெளிவரத் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. அவை இஸலாமிய வரலாற்றம்சங்கள், இஸலாமியக் கடமைகளைக் கற்றுக் கொடுப்பது தொடர்பாயும் அநீ திக்குள்ளாகி உலகின் அறிவியல் சமூக வரலாறு களிலிருந்து தூரமாக்கப்பட்ட நமது சமூகத்தினை மீளவும் உயிர்ப்பிப்பது தொடர்பாய் வெளிவரும் போது சிறுவர்களிடத்தில் அதனது தாக்கம் மிக அதிகமானதாக மாறும்.
இஸ்லாமிய நடைமுறை வாழ்க்கையிலும், கோட்பாடுகளிலும் பிரிவினை கொணர்டு பிளவு பட்டுள்ள அமைப்புக்கள், இயக்கங்களிடையே கலந் துரையாடல்கள் விமர்சனத் தளங்களை ஆக்கபூ ர்வமாகப் பேணும் நிகழ்ச்சிகள் மூலம் ஒரு ஒற்றுமை க்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இதே வகையில் ஏனைய சிந்தனை முகாம்களுடன், மதப் பிரிவுகளுடனும், வேற்று நாகரிகங்களுடன் மேற்கொ ள்ளுவது சாதாரண பொதுமக்களிடம் பிரச்சாரத்தை எத்திவைப்பதுடன் ஏனைய மதத்தினர் நம்மைப் பற்றிய சரியான புரிதலைப் பெற வழியேற்படும்.
பார்வைப் புலனோடுகூடிய காண்பிய வடிவு கள் பல வகையான ரச்னையாளர்களையும் ஒன்றா கவே உள்வாங்கி மிகப் பெரும் அழைப்பியலை மேற் கொள்ளக் கூடியவை. திரைப்படங்கள், நாடகங்கள்
100 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 6

போலவேதான் கீழைத்தேய நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்ற வீதிக் கூத்துக்களையும் நாம் பிரசார வழிக்காகப் பயன்படுத்தலாம். இது நேரடியாக மக்க ளுடன் தொடர்புபடக்கூடிய கலை, ஊடக வடிவங் களாகும்.
இவற்றுடன் தனிநபர் தொடர்பானது இஸ்லா மியப் பிரசாரத்திற்கான சிறந்த சாதனங்களில் ஒன்றா கும். இஸ்லாமிய சமூக வெற்றிக்கு தனிநபர் சீர்திரு த்தம் எவ்வளவுதூரம் அவசியமானதோ அதே போல் தஃவாவிற்கும் தனிநபர் தொடர்பு இன்றியமையாத தாகும். ஒருவர் இயல்பு அவரது நிலைக் களன் என்ப வற்றிற்கு எவ்வாறு அவரின் அறிவினது எல்லை வரை சென்று தஃவா செய்வதுதான் ஏற்றது. இவ் வகையான பிரசாரம் தான் தனிநபர் தொடர்புக ளாகும். நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூட இஸ்லாம் மறைமுகமாக வாழ்ந்து கொணர்டிருந்த வேளை தனி நபர் தொடர்பினால்தான் தங்களின் பிரசாரத்தினை முன்னெடுத்துச் சென்றார்கள்
சுபீட்சம் நிறைந்த சமூகங்களுக்கு இறை நம்பிக்கைகளில் ஆணி வேராக தனி மனிதர்களை உருவாக்கவே இஸ்லாம் விரும்புகின்றது. அதே போல் சமூகக் கட்டுமானத்தின் நாகரிக ஒழுக்க ங்களில் முதற் கல்லாக தனி மனிதர்கள் அமைந்து காணப்படுவதால், இயற்கையாகவே தனிமனிதர் தொடர்பு மூலம் தனிமனித சீர்திருத்தத்தினை வைத்து ஒரு உயர் பெறுமான சமூகத்தினை உருவாக்க இஸி லாம் களத்திற்கு வந்திருக்கின்றது.
அடுத்து தஃவாவிற்கான ஊடகத்துறையின் வழிமுறையாக, ஓர் அமைப்பிலான அழகிய முன் மாதிரிகளைக் குறிப்பிடலாம். பல ஸஹாபாக்கள் இஸ் லாத்தில் தங்களைஇணைத்துக் கொள்ள, நபியவர்கள் இப் பணிபுதான் காரண வழியாக அமைந்தது. அழ கிய முன்மாதிரியை செலவு செய்து, விளம்பரமிட்டு பிரசாரம் மேற்கொள்ள வேணர்டியதில்லை. அது தானாகவே பிரசார வழியாக அமைந்து விடும்.
இறுதியாக, இக்கட்டுரை குறிப்பிட்டு நிறை வடைகின்ற வழிமுறைதான் குத்பா மேடைகளாகும். நமது சமூகத்தினது வரலாற்றின் ஆரம்பம் முதல் இன்று வரையும் பரிணாமம் பெறாத, தொடர் ஊடகத் துற்ையாகவும் தனித்து நோக்கப்பட வேண்டிய அம்சமாகவும் மிம்பர்கள் அமைந்துள்ளன. இன்றைய நமது மிம்பர்களில் நடப்பது போலன்றி சர்ச்சைகளின் திரும்பத்திரும்ப ஒன்றையே கூறும் உறைவிடமாக அவற்றினை மாற்றாது, கருத்தியல்களினதும் அறி. (தொடர்ச்சி பக் 94)

Page 112
இலங்கை முஸ்லிம்க நேற்று - இன்று - நாளை
எம் எச் எம் றஹ்மான்
இலங்கை முஸ்லிம்களது பொருளாதாரம், அரேபிய தீபகற்பத்தில் இஸ்லாத்தின் தோற்றத்துடனும் இஸ்லாத்தின் உலகளாவிய பரவலுடனும் ஆரம்பி க்கின்றது. அரேபியாவில் இஸ்லாம் தோன்ற முன்னரே அரேபியருக்கும் இலங்கைக்குமிடையி லான தொடர்புகள் இருந்து வந்துள்ளன. எனினும் இலங்கை முஸ்லிம்களது பொருளாதாரம் எனும் வரையறையானது கி.பி - 630 இல் இருந்து ஆரம் பிக்கின்றது எனலாம். கி.பி - 625 இல் அரேபியா விலிருந்து நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இலங் கைக்கு அனுப்பி வைத்த ‘வஹஹாப் இப்னு அபி ஹப்ஸா’ எனும் ஸஹாபியின் வருகையும் அதனு டன் இலங்கையில் குடியேறி வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள் இஸ்லாத்தை ஏற்றதுவும் இலங்கை முஸ்லிம்களது வரலாறு ஆரம்பிப்பதற்கான அடிப்ப டைகளாகும். இப்பின்னணியிலிருந்தே இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரம் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட வேண்டியுள்ளது.
ஆரம்பத்தில் ஆடைகள், உணவுப் பதார்த் தங்கள் என்பவற்றை இலங்கைக்கு சந்தைப்படுத்தி வந்த அராபியர்கள் இலங்கையிலிருந்து மிளகு, கறு வா, ஏலம், பாக்கு, கராம்பு, வெற்றிலை, புகையிலை என்பவற்றைத் தம் நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். இஸ்லாத்தின் வருகையுடன் இவர்களது வியாபா ரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. வியாபாரத் தில் சில வரையறைகள் பேணப்பட்டன. ஆகுமான வைகள், விலக்கப்பட்டவை என மதிப்பீடுகள் செய்ய ப்பட்டன. மது, வட்டி என்பன முற்றாகத் தவிர்க் கப்பட்டன. இதனால் இவர்களது வியாபாரமும் வாழ் வும் செழித்தது. “ஆனால் அல்லாஹ வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். ஆயினும் யார் தன் ரப்பிடமிருந்து நற்போதனை வந்த

5ளின் பொருளாதாரம்
ஹசன் இரண்டாம் வருடம், உஸ்லுத்தின் பீடம்
பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவனு டைய விவகாரம் அல்லாஹவிடம் இருக்கிறது, ஆனா ல் யார் நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால் திரும்புகிறார்களோ அவர்கள் நரக நெருப்பின் தோழர்கள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென் றும் தங்கிவிடுவார்கள்.” (2:275) அரேபியர்களின் நேர்மையான வியாபாரத்தின் காரணமாக இலங்கை மன்னர்களிடமும் மக்களிடமும் அவர்கள் நன்மதிப் பைப் பெற்றனர்.
இலங்கை முஸ்லிம்கள் எனும் போது அது வெறுமனே இலங்கைக்கு வந்து தாய் நாடாக ஏற்றுக் குடியேறிய அராபியர்களை மாத்திரம் நாம் கணி ப்பிட்டுக் கொள்ள முடியாது. மாறாக இலங்கைச் சோனகர், கரையோரச் சோனகர், மலாயர், போரா க்கள், மேமன்காரர், ஆப்கானியர் எனும் பல இனக்கு ழுவினர் அடங்கியுள்ளனர். எனினும் நீண்ட கால த்திற்கு முன்னரே அரேபியாவிலிருந்தும் தென்இந்தி யக் கரையோரங்களிலிருந்தும் இங்கு வந்து குடி யேறிய, இலங்கைச் சோனகர் என்று அழைக்கப்படும் குழுவினரே 90% திற்கும் அதிகமானவர்களாயிருப்ப தன் காரணமாகவும் இவர்களது பொருளாதாரக் கட் டமைப்புப் பெரும்பாலும் வியாபாரமாக இருந்தமை யினாலும் நாம் அதிகமாக இவர்களது பொருளாதா ரக் கட்டமைப்பான வியாபாரத்திற்கே இவ்வாய்வில் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது.
வர்த்தகத்தில் புகழ்பெற்றிருந்த அராபியர் கடல்கடந்து வியாபாரம் செய்பவர்களாக இருந்தனர். இவர்கள் மத்தியதரைக் கடல்நாடுகட்கும் கிழக்காசிய நாடுகட்குமிடையிலான பெரும் வர்த்தகப் பாதையை இணைப்பவர்களாயிருந்தனர். இப்பாதையின் மத்
> அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 101

Page 113
தியில் இலங்கை அமைந்திருந்தமையும், இந்து சமுத் திரத்தில் வீசிய வியாபாரக் காற்றும் பாய்மரக் கப்ப லில் தமது சரக்குகளைக் கொண்டு வருவதற்கு மிக வாய்ப்பாக அமைந்தது.
ஆரம்பகால அராபிய முஸ்லிம்களது வியா பாரம் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரமாக இருந்தது. பெறுமதி மிக்க ஆடைகளையும் தம்நாடுகளில் விளை யும் உணவுப் பொருட்களையும் இங்கு கொண்டு வந்து சந்தைப்படுத்துவதும் இங்கிருந்து வாசனை த்திரவியங்கள், உணவு வகைகளைத் தமது நாடுக ளுக்கு ஏற்றுமதி செய்வதும் இவர்களது பிரபல்யம் பெற்ற வியாபாரமாக இருந்தது மட்டுமன்றி உள்நா ட்டில் கூட்டம் கூட்டமாக வியாபாரக் குழுக்களாகப் பயணம் செய்து தமது பொருட்களை சந்தைப்ப டுத்தினர். இவர்களது நற்பணிபாடுகளும், கலப்பட மோ, களவோ அற்ற வியாபார அமைப்பும் வாய்மை யும் பழக்க வழக்கங்களும் அவ்வப்பிரதேச மக்க ளைக் கவர்ந்தன. இதனால் அவ்வூர்த் தலைவர் களிடமும், மன்னர்களிடமும் நன்மதிப்பைப் பெற்ற னர். இம் மன்னர்கள்இவர்களுக்குநிலங்களை வழங் கினார்கள். இங்கு குடியேற்ற அரேபியர் இந்நாட்டுப் பெணிகளைத் திருமணம் முடித்தமையால் அது குடு ம்ப உறவாகப் பரிணமித்தது. இதன் விளைவாக நாட் டின் எல்லாப் பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் பரந்து வாழக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது மட்டுமன்றி இஸ்லாமும் உலகமெங்கும் பரவிச் சென்று அல்லாஹி வின் அருட்கொடைகளைத் தேடிப் பெற்று அனுபவிக் குமாறு மக்களை அழைப்பு விடுக்கின்றது.
இவ்வாறு வளமாக வியாபாரத்தில் முன்னே றிக் கொண்டிருந்த அரேபியர் 1505 ஆம் ஆணrடு அரேபியக் கடலில் போர்த்துக்கேயர்களால் துரத்தியடி க்கப்பட்டார்கள். அரேபிய வியாபாரிகள் தப்பிப்பத ற்காக இந்து சமுத்திரம் வழியாக இலங்கையில் வந்து ஒதுங்கிக் கொண்டார்கள் போர்த்துக்கேயர்கள் இச்சம் பவத்தின் காரணமாக தற்செயலாக இலங்கை வந் தனர். இலங்கையை முதன்முதலாக அடைந்த போர் த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றித்தமதுவர்த்தக ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைந்தனர்.
ஏற்கனவே இங்கு வர்த்தகத்தில் வளமி க்கவர்களாக இருந்த முஸ்லிம்களுக்கும் புதிதாய் வந்த போர்த்துக்கேயர்களுக்குமிடையில் தமது வர்த்தக மேலாணமையைப் பாதுகாக்க வேண்டி கடலிலும் தரையிலும் இரு தரப்பினரும் மோதவேண்டிய நிலமை ஏற்பட்டது. 17கப்பல்களைக் கொண்ட ஒரு கப்பல் படையுடனும் ஒரு இராணுவப் பிரிவுடனும் ஏராளமான பீரங்கிகளுடனும் இலங்கையை ஆக்கிர
102 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் -

மித்த போத்துக்கீசரை முதன்முதலாக எதிர்த்தவர்கள் முஸ்லிம்களேயாவர். முஸ்லிம்களுக்கும் போர்த்து க்கேயர்களுக்குமிடையிலான இம் மோதலில் கரை யோர முஸ்லிம்களின் கிராமங்கள் அவர்களால் அழிக்கப்பட்டன. மட்டுமன்றி முஸ்லிம்களது வியாபா ரப் பொருட்களுக்கு பெரும் நாசங்களை ஏற்படு த்தினர். இதனால் முஸ்லிம்கள் சீதாவாக்க இராச் சியத்தின் அரசனான மாயாதுன்னவுடன் இணைந்து போர்த்துக்கீசருக்கு எதிராகப் போரிட்டனர். இப்போ ரிலும் கூட போர்த்துக்கீசரே வெற்றிபெற்றமையினால் தெற்குக் கரையோரத்தை ஆக்கிரமித்த போர்த்துக் கீசர்கள் முஸ்லிம்கள் மீது சுமக்க முடியாத வரிகளை விதித்தனர். போதாமைக்கு 1926இல் தமது ஆட்சிப் பரப்பிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு உத்தர விட்டனர். இதனால் கிட்டத்தட்ட 4000 முஸ்லிம்கள்
கண்டியை நோக்கி இடம்பெயர்ந்தனர். இதே முறை யிலான பாதிப்பே வடக்கு முஸ்லிம்களுக்கும் போர் த்துக்கீசர்களால் ஏற்பட்டது.
தொடர்ந்தும் 1658இல் ஒல்லாந்தரின் ஆக் கிரமிப்பினால் இலங்கையில் முஸ்லிம்கள் மேலும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் பொருளாதார ரீதியில் முஸ்லிம்களைச் சுரண்டுவதில் போர்த்துக்கீசரை விட மிகத் தீவிரமாகச் செயற்பட்டனர். இவர்களது தீவி ரமான இப்போக்கின் காரணமாக கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக தெற்கு முஸ்லிம்கள் சமூக, பொரு ளாதார ரீதியில் பின்தள்ளப்பட்டார்கள்.
17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டி இராட்சியத்தில் முஸ்லிம்கள் பெருந்தொகையானோர் குடியேறியமை கண்டி இராட்சியத்தின் பொருளாதார எழுச்சிக்கு ஓர் இன்றியமையாத காரணியாக இருந்தது. கண்டிக்குத் தேவையான உப்பு, கருவாடு, ஆடை என்பவற்றை துறைமுகப் பிரதேசங்களிலிரு ந்து வாங்கி வந்து விற்றனர். எனவே கணிடி சமூ கத்தின் முக்கிய தேவையொன்றைப் பூர்த்தி செய்வதில் ‘முஸ்லிம்கள் ஈடுபட்டனர். எனினும் கண்டியில் தொட ர்ந்தும் முஸ்லிம் குடியேற்றம் அதிகரித்ததனால் அங்கு விவசாயத்திலும் ஒரு குழுவினர் நுழைந்து கொணர் டனர். கணிடியில் கோப்பி அறிமுகம் செய்யப்ப ட்டமையினால் மீண்டும் அதிகமான முஸ்லிம்கள் வியாபாரத்தில் நுழையும் வாய்ப்புக் கிடைத்தது. எனி னும் 19ஆம்நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மத்திய மாகாணத்தில் 174,633 ஏக்கர் நிலம் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்பட்டபோதும் அதில் முஸ்லிம்களுக்கு உரித்தாயிருந்த அளவு மிகச் சொற்பமே ஆகும். பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை யில் மிகப் பிரபல்யமான முஸலிம் கம்பனியாக “சின்ன லெப்பை சகோதரர்கள்’ எனும் நிறுவனத்தைக்

Page 114
குறிப்பிடலாம். இந்நிறுவனம் 6500 ஏக்கர் கோப்பித் தோட்டத்தைத் தம்வசம் வைத்திருந்தது. அத்துடன் 'மீயாப்பிள்ளை’ எனும் வர்த்தகரும் மிகப்பிரபல்யம் பெற்ற கோப்பிச் செய்கையாளராவார். இவர் 263 ஏக்கர் பரப்புடைய ஒரு தோட்டத்தை வைத்திரு ந்தார். எனினும் இவ்விரு நிறுவனங்களும் கால வோட்டத்தில் மூடப்பட்டமையினால் சிறிய அளவி லான முஸ்லிம் வணிகர்களே கோப்பிச் செய்கையில் ஈடுபட்டனர். தெற்கு முஸ்லிம்கள் மத்தியில் மணிப் பெட்டி வியாபாரம், சந்தை வியாபாரம், ஈரொட்டு வியாபாரம் என்பவை பிரபல்யம் பெற்றிருந்தன. முக் கியமான வியாபாரமாக 'தவளம் வியாபாரமும் காணப்பட்டது.
பிரித்தானியர் ஆட்சியில் இலங்கை முஸ்லிம் களுக்கு வர்த்தகத்துறையில் பல வாய்ப்புக்கர் ஏற் பட்டது. புறக்கோட்டையில் சொந்தமாக நிலங்கள் வைத்துக்கொள்ள உரிமை கிடைத்தது. எனவே முஸ்லிம்கள் மாணிக்கம், கட்டடப் பொருட்கள், இரு மிபுருக்கு இயந்திர உபகரண வேலை, பட்டு, ஆபர ணம், முத்து ஏற்றுமதி, பிடைவை, தளபாடம் இறக் குமதி, இரத்தினக்கல் ஏற்றுமதி என்பவற்றில் ஈடுபட் டனர். மாணிக்க வியபாரத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களது கையிலேயே முழுமையாகக் காணப் பட்டது. பேருவலை, காலி, இரத்தினபுரி, எஹலிய கொடை போன்ற பிரதேச மக்கள் இதைத் தமது பிர தான தொழிலாகவும் கொணர்டனர். இவ் வியாபா filsafa5 Makan Makar Co., Abdeen Co., Raheem Co. Ansa Co என்பவை குறிப்பிடத்தக்கவை.
மாக்கான் மாக்காரது ஸ்தாபனம் கடல் கட ந்து எகிப்திலும் ஒரு விற்பனை ஸ்தாபனத்தை நிறுவியது. பின்னர் ஒரு படையெடுப்பின் காரணமாக அது மூடப்பட்டது. எல். எம். நூர்தீன் நிறுவனத்தார் பிரித்தானியாவிலிருந்து துப்பாக்கி, தோட்டா போன்றவற்றை இறக்குமதி செய்தார்கள் மட்டுமன்றி எஸ். எல். எம். நைனா மரிக்கார் நிறுவனத்தார் பிரி த்தானியாவிலிருந்து மோட்டார் வாகன்மி இறக்குமதி செய்தனர். எனவே முஸ்லிம்கள் அப்பொழுது பாரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமையும் அவர்கள் ஆட்சியாளர்களுக்கு நம்பிக்கையுடை யோராக இருந்தமையும் இதிலிருந்து புலப்படு கின்றது.
புத்தளம், கற்பிட்டி போன்ற முக்கியமான தென்னை பயிரிடும் பிரதேசங்களிலிருந்து தென்னி ந்தியாவுக்கு முஸ்லிம்கள் தென்னை ஏற்றுமதி செய் தனர். வித்துக்குடியிலிருந்து ஆடு, மாடு, சீனி என்பன இறக்குமதி செய்யப்பட்டன. எனவே ஏற்று, இறக்

குமதி வியாபாரத்தில் முஸ்லிம்கள் கணிசமான பங்க ளிப்பை இலங்கையில் செய்தார்கள் என்றே குறிப்பிட வேண்டும்.
19 ஆம் நூற்றாணர்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மாணிக்க வியா பாரத்திலும் நகை வியாபாரத்திலும் முஸ்லிம்களே ஏக போக உரிமை உடையோராக இருந்தனர். 1911இல் இலங்கையில் இருந்த 979 மாணிக்க வியாபாரிகளில் 866 பேரும் 849 நகை வியாபாரிகளில் 411 பேரும்
முஸ்லிம்களாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வணிகம் தவிர முஸ்லிம்கள் விவசாய உற்ப த்தி, மந்தை மேய்த்தல், பண்ணை அமைத்தல் என்ப வற்றிலும் ஈடுபட்டனர். குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இத்துறையில் ஈடுபட்டமை குறிப்பிட த்தக்கது. 1961 ஆம் ஆணர்டின் சனத்தொகைக் கணி ப்பீட்டின் படி 41.6% ஆன முஸ்லிம்கள் வியாபா ரத்திலும் 07% ஆன முஸ்லிம்கள்மீன்பிடித் தொழிலி லும் ஈடுபட்டனர் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின் றன. முத்துக் குளிப்பிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். எனினும் ஆக்கிரமிப்பாளர்களின் மத ரீதியான இறுக் கத்தினால் ஆங்கில மொழியைக் கற்கும் வாய்ப்பை இழந்த முஸ்லிம்கள் அப்பொழுது அரச உத்தியோக ங்களில் போதியளவு இடம்பெற வாய்ப்பிழந்து போனமை துரதிஷ்டவசமான ஒரு நிகழ்வாகும்.
20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியையும் 21 ஆம் நூற்றாண்டின் தற்போதைய ஆரம்பப் பகு தியையும் நாம் தற்காலம் என்று வகுத்துக் கொள்ள முடியும். இன்றைய முஸ்லிம்களது பொருளாதாரம் கேள்விக்குள்ளாகும் நிலைமையில் இருப்பது வரு த்தத்திற்குரியதாகும். பொதுவாக பொருளாதார தரங் களின் பரிணாமங்களை விளக்கும் “ரொஸிடோ' எனும் மேற்கத்தைய அறிஞரின் கருத்தின்படி, ஒரு சமூகத்தின் அல்லது ஒருநாட்டின் பொருளாதார வள ர்ச்சியானது 5 கட்டங்களை அல்லது 5 படித்தரங்க ளை தாண்டிச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும்.
1. Traditional Socity - LDTL, 61st &epslf 2. Varioes Socity - 6160&Longiflá; stepslf 3. TakeoffPeriod - 659 LG) si LLó 4. Mars Invesment - Luftfulu (pg56ổ6) 5. Mars Cons - எழுச்சிக் கட்டம்
எனினும் பரிணாம வளர்ச்சியோடு எழுச்சிய டைந்து செல்வதிலிருந்து தூரமாகி முஸ்லிம்களின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சாய்ந்து செல் வதே இன்றைய நிலைப்பாடாகும்.
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 103

Page 115
இன்று மாணிக்கக்கல் வியாபாரத்தின் பெரும் பகுதி சிங்களவர்களது கைக்கு மாறியுள்ளது. தைத்த ஆடைகள், துணிவகைகள் என்பன இறக்குமதி செய் வதில் பிரதானமாக இன்று தமிழர்கள் இருப்பதைக் காணர்கிறோம். கொழும்பில் அவர்களது ஆடை விற் பனை நிறுவனங்கள் நாளொன்றுக்கு கோடிக் கண க்கில் இலாபம் உழைக்கக்கூடியதாயிருக்கிறது. கேகா லையில் தமிழர்களின் குறித்த ஓர் ஆடை விற்பனை நிலையம் கேகாலையில் மட்டும் நான்கு பெரிய கிளை நிறுவனங்களை நடாத்திவருகின்றது. இரும்பு வியாபாரத்தைப் பொறுத்தளவிலும் கூட தமிழர்களின் கைகளிலேயே இருப்பதைக் காணர்கிறோம். கொட்டா ஞ்சேனை பாபர் வீதியில் உள்ள மிகப் பெரும் இரு ம்பு விற்பனை நிலையங்களில் 70%ற்கு அதிகமான விற்பனை நிலையங்கள் தமிழர்களுடையதே. பொரு ளாதார ரீதியாக இப்படியான பாதிப்புக்கள் ஏற்படுவ தற்கு இரு காரணிகளை நாம் முன்வைக்க முடியும்.
1. முஸ்லிம்கள் பக்கம் இருந்த பலவீனங்கள் 2. சிங்கள மற்றும் தமிழ் இனவாதத்தலைமைகளது
திட்டமிட்ட நடவடிக்கைகள்
இவ்விரு காரணிகளும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்து ஒரே காலப்பிரிவில் நிகழ்ந்தமையால் முஸ் லிம்களுக்கு அதிக பாதகம் ஏற்படக் கூடியதாக அமைந்தது. முஸ்லிம்கள் கூட்டிணைந்து வியாபார முயற்சிகளை வளர்ப்பதில் திட்டமிடத் தவறியமை, அவர்களுக்கிடையில் போட்டி, பொறாமை உணர்வு கள் தோன்றியமை, ஆடம்பர வாழ்க்கையை விரும் பியமை, பாரிய முதலீடுகளில் தலையிடுவதில் தயக்க ம் கொணர்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மட்டுமன்றி தமக்கு முன்னோர்கள் வாடிக்கை யாளர்களுக்கு நம்பிக்கையுடையோராக இருந்தது போல இவர்கள் இருப்பதற்குத் தவறியமை, கலப் படமும், பொய்யும், ஏமாற்றலும் இவர்களது வியாபா ரத்தில் கலந்தமை எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் இஸ்லாமிய விழுமியங்களிலிருந்து விடுபடத் துவங்கியமை, இஸ்லாத்தையும் வியாபாரத்தையும் இரண்டாகப் பார்த்தமை போன்ற காரணிகள் மக்கள் மத்தியில் முஸ்லிம் வியாபாரிகள் பற்றிய ஓர் கசப் புணர்வை ஏற்படுத்திவிட்டன. எனவே முஸ்லிம்கள் தமது பொருளாதாரத்தை தாமாகவே இழந்து விடுகின்ற ஒரு சூழ்நிலையை நோக்கிச் சென்றனர்.
அடுத்து ஏனைய சமூகங்களினால் வரலாறு நெடுகிலும் வியாபாரிகள் புறக்கணிக்கப்பட்டமை முஸ்லிம்களது வியாபாரம் சீர்குலைய இன்னுமோர் பிரதான காரணியாக அமைந்தது. போர்த்துக்கேய
104 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்--

ரிலிருந்து ஆரம்பித்து ஒல்லாந்தர், பரித்தானியர், பின்னர் சிங்கள ஆட்சியாளர்கள், இனவாதிகள் என்று பட்டியல் நீண்டு கொணர்டே செல்கின்றது.
இரணர்டு வருடங்களுக்கு முன்னர் கடவத் தையில் கட்டப்பட்ட பைரஹா (Bairaha) கம்பனியின் வியாபார நிலையம் கைக்குண்டு வீசப்பட்டு சேதப் படுத்தப்பட்டமையும், நாட்டின் பல பிரதேசங்களிலும் தீமூட்டப்பட்டு சேதப்படுத்தப்படும் முஸ்லிம் வியாபா ரிகளின் கடைகளும், கடந்த மே மாதம் முதலாம் திகதி மாவனல்லையில் சிங்களப் பேரினவாதிகளால் பகிர ங்கமாக மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான பொருளாதார அழித்தொழிப்பு நடவடிக்கையும் இத ற்குப் போதிய உதாரணங்களாகும்.
இன்று இலங்கையில் அதிஉச்ச இலாபத்தை அடையும் 15 தனியார் கம்பனிகளில் ‘ஹேலீஸி’ (Heylees) 62G las (Odel) GigiTai daianj (Jhon Keels) போன்ற நிறுவனங்கள் காணப்படுகின்றன. எனினும் இதில் ஒன்று கூட முஸ்லிம்களுடையதாக இல்லாமை பெரும் வருத்தத்திற்குரியதாகும். ஆகக் குறைந்தது ‘பைரஹா’ (Bairaha) நிறுவனத்திற்கு இது போன்ற ஒரு நிறுவனமாக மாறுவதற்கு நினைப்பது வே கஷ்டமாக இருப்பது, முஸப்லிம்களின் பொருளா தாரம் இருக்கும் இடத்தை நாம் புரிந்து கொள்ள மிகப்
போதுமான சான்றாகும்.
எனவே முஸ்லிம்களது நாளைய பொருளா தாரம் பற்றிய முற்போக்கான ஓர் செயல்திட்டம் நம் நாட்டிற்கு கணிடிப்பாக அவசியம் ஆகும். அதனை வளர்ச்சியடையச் செய்வதற்கான நிறுவனங்கள், குழு க்கள், அமைப்புக்கள், இயக்கங்கள், தனிமனிதர்கள் என எல்லா வகையான வளங்களும் அவசியமா கின்றன. எதிர்காலத்தில் முஸ்லிம்களது பொருளாதார த்தை வளர்ச்சியடையச் செய்வதற்கான எல்லா வகை யான சக்திகளையும் திரட்டிக் கொள்வது முஸ்லிம் களது இன்றைய கடமையாக காணப்படுகின்றது. “முஃமின்கள் அவர்கள் தங்கள் விடயங்களில் கலந் தாலோசித்துக் கொள்வார்களி”முஃமின்களின் ஒரு பண்பாக கலந்தாலோசித்தல், திட்டமிடல், கருத்துப் பரிமாறல், விமர்சித்தல் போன்ற சிறந்த பணிபுகள் காணப்படும். மட்டுமன்றி எதிர்கால சமூகத்தின்நிலை குறித்த முற்போக்குச் சிந்தனை அவர்களிடம் இரு ககும.
எனவே முஸ்லிம்களும் பாரிய முதலீடுகளில் ஈடுபடல் வேண்டும். மட்டுமன்றி வளர்ந்து வரும் வர் த்தகங்களை ஊக்குவிக்கக்கூடிய நடவடிக்கைகளை. (தொடர்ச்சி பக் 06)

Page 116
இஸலாமிய சமுகம் இன்று மிகப்பெரும் சிந்தனை, கலாசாரப் படையெடுப்பொன்றை எதிர் நோக்கி வருகின்றது. இச்சமூகத்தின் மீது தன் கால னியத்தையும் அதிகாரத்தையும் நிறுவிக்கொள்ள அது தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது. மேற்கத்திய சிந்தனையோடு இணைத்துக் கொண்டு, விடுதலை, முன்னேற்றத்தை விட்டு இச்சமூகத்தைத் தடுப்பதே அதன் ஏக இலக்காகவும் இருக்கின்றது.
குறிப்பாக இலக்கியம் இப்படையெடுப்புக்குத் துணைபோகும் துறைகளில் மிகவும் முக்கியமான தாகும். மேற்கத்திய கல்விப் பாரம்பரியத்தில் வளர்ந்த முஸ்லிம் இலக்கியவாதிகள் இதற்கு பொறுப்பாகவும் நிற்கின்றனர். மேற்கின் காலனிய இலக்குகளை இனா மாகவே நிறைவேற்றிக் கொடுக்கும் இவர்கள், பிற் போக்கு, வீழ்ச்சிக் காலப்பிரிவில் தோன்றிய விடி வெள்ளிகளாகவும் அவர்களால் கருதப்படுகின்றனர்.
இவர்கள் மேற்கத்திய இலக்கிய வகை மாதி ரிகள் தான் எமக்கு ஏற்றது என்றும் அதுவே மிகச் சிறந்தது என்பதையும் முன்னேற்றம், நவீனத்துவம், மறுமலர்ச்சி என்ற பதாதைகளின் கீழ் மிகக் கவனமாக முன் மொழிந்து வருகின்றனர். முன்னேற்றம், நவீன த்துவம், மறுமலர்ச்சி போன்ற சொற்களுக்கு ஒரே யொரு அர்த்தம் தான் உண்டு. அதுதான் மேற்குமய ப்படுத்தல், அல்லது மேற்கைப் பின்பற்றுவதாகும். கட ந்த நூற்றாண்டின் முழுமையும் எமது இலக்கியத்தின் பெரும் பகுதி இந்த வகை சார்ந்ததே.
மேற்கு மொழியில் எழுதப்பட்டு, விடுதலை, முன்னேற்றத்துக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்டு, ஒரு சமூகத்தின் அபிலாஷைகளை விட்டும் பிரிந்து நிற்கும் இவ்விலக்கியம் என்னும் பெரு வெள் ளத்தை எதிர்கொள்வதில் தனித்துவ அடையாளத் தோடும், அறிவுப் பாரம்பரியத்தோடும் ஒப்பற்ற உலக நாகரிகம் ஒன்றை உருவாக்குவதில் உள்ள பிரக்ஞை பூர்வமான பங்குபற்றல் கலந்த, தூய்மையான அழை ப்புக் குரல்கள் வெளிப்படத் தொடங்கியது.
இந்த அமைப்பின் சொந்தக்காரர்கள் இஸ்லா மீதான் இச் சமூகத்தின் அடையாளம், தனித்துவம்,
 

முதல் முறையாக நாகரிகம் எழுந்துநின்ற மையப் புள்ளி என்பதையெல்லாம் அறிந்து வைத்திருந்தனர். எனவே, அதன் வழியில் இச் சமூகத்தின் எதிர்காலத் தை வடிவமைக்க வேண்டியது அவசியமாகின்றது. இல்லாவிடில் ஒரேயொரு பிரதியீடு மேற்கின் மடியில் அடைக்கலம் தேடுவதே மேற்கின் சடவாத முன்னே ற்றத்துக்கு முன்னால் உள ரீதியாகவும் நாகரிக ரீதியா கவும் சரணடைவது, படையோ, பட்டாளமோ இல் லாவிட்டாலும் அதன் கலாசார, சிந்தனை ஆக்கிரமி ப்பிற்கு தொடர்ந்தும் உட்பட நேரிடும்.
இப் பின்புலத்திலிருந்தே இந்த அழைப்பின் சொந்தக்காரர்கள் இலக்கியத் துறையில் மேற்கத்திய நாகரிக மாதிரியை கண்மூடிப் பின்பற்றும் கசப்பான பிரதியீட்டைக் கடுமையாக மறுத்தார்கள் பிரபஞ்சம், வாழ்வு பற்றிய முழுமையான கோட்பாட்டிலிருந்து பிறக்கும் இஸ்லாமிய இலக்கிய உருவாக்கத்தின் அவ சியத்தை வலியுறுத்தினர்.
இந்த அழைப்பின் உரிமையாளர்கள் சுயஸ் கால்வாயிலும், பலஸ்தீனிலும் ‘நம்பிக்கை’ என்ற ஆயுதத்தால் காலனியத்தை எதிர்த்துப் போராடிய தையும் அவர்களில் பலர் வீரமரணமடைந்ததையும் நாம் அறியும் போது இந்த அழைப்பின் முக்கியத் துவத்தையும் தெளிவாக உணரலாம். இவர்கள் எமக் குள்ளே இருந்த அநீதியையும் அரசியல் அராஜக த்தையும் எதிர்த்துப் போராடினர். அதனால் துக்கு மேடைகளில் ஏறுவதையோ, சிறைக் கூடங்களில் நுழைவதையோ, கசையடிகளுக்கு உட்படுவதையோ மேற்கிலிருந்து தருவிக்கப்பட்ட கருவிகளால் வதைக்க ப்படுவதையோ கண்டு இவர்கள் அஞ்சவில்லை.
இக்காலப் பிரிவில்தான் “அல்இஹற்வானுல் முஸ்லிமூன்” பத்திரிகையின் முதலாவது இதழில் “இலக்கியக் கோட்பாடு” என்ற தலைப்பில் இஸ்லா மிய இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்ற
அழைப்பை ஷஹீத் செய்யித் குதுப் விடுத்தார்.
இஸ்லாமிய இலக்கியம் என்பதை அவர் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தினார்.
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 105

Page 117
“இலக்கியம் என்பது ஏனைய கலைகளைப் போன்று கலைஞனின் உள்ளம் உய்த்துணரும் உயி ரோட்டம் நிறைந்த பெறுமானங்களின் வெளிப்பா டாகும். இப்பெறுமானங்கள் ஆளுக்கு ஆள் இடத்து க்கிடம், கால்த்துக்குக் காலம் வேறுபடலாம். ஆனால் எல்லா நிலையிலும் வாழ்க்கை பற்றிய குறிப்பிட்ட கோட்ட்ாட்டிலிருந்தும், மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கு மிடையிலான, மனிதனுக்கும் மனிதனுக்குமிடையி லான அத்தியந்த உறவுகளிலிருந்துமே அப்பெறுமான ங்கள் ஊற்றெடுக்கின்றன.”
நேரடியாக அல்லது மனிதப் புலனுடாக வெளிப்படுத்த முயற்சிக்கும் பெறுமானங்களிலிருந்து இலக்கியத்தைப் ப்ொதுவாக கலையை விடுவிக்க முயற்சிப்பது விளையர்ட்டுத்தனமாகும் பெறுமானங் களிலிருந்து, கலையையும் இலக்கியத்தையும் விடுவி ப்பதில் நாம் வெற்றி பெறுவோமாயின் - அவ்வாறு முடியாது - வெற்று வார்த்தைகள், உள்ளிடற்ற வரிக ள் பொருளற்ற ஓசைகள், செவிட்டுக் கற்றைகள் ஆகி யவற்றைத் தவிர வேறு எதனையும் நாம் காண (1ՔlգԱմո5].
அவ்வாறே வாழ்வு பற்றிய முழுமையான கோட்பாட்டிலிருந்து மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவுக ளை விட்டும் இப் பெறுமானங்களைப் பிரிக்க முயற்சி ப்பதும் வேடிக்கையானதே.
இலப்லாம் வாழ்க்கை பற்றிய குறிப்பிட்ட கோட்பாட்டைக் கொண்டுள்ளது. அக்கோட்பாட்டிலி ருந்தே அதற்கேயுரிய பெறுமானங்கள் பிறக்கின்றன. எனவே இஸலாமிய இலக்கியமும் இப்பெறுமான ங்களின் வெளிப்பாடாக அல்லது மனிதனில் அது ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக அமைவதும் குறித்த பணிபோடு வெளிப்படுவதும் இயல்பாகும்.
இஸலாத்தின் மிக முக்கியமான தனிப் பணிபு, அதன் விசாலித்த வினைத்திறனுள்ள நம்பி க்கைக் கோட்பாடாகும். அது மனம், வாழ்வு ஆகிய வற்றின் வெற்றிடத்தை நிரப்புகின்றது. உணர்வு, செயல், பிரத்ஞை, தொழிற்பாடு என்பவற்றிலுள்ள மனித சக்தியை அது பாதுகாக்கின்றது. குழப்பம், கலக்கம் போன்றவற்றுக்கு அது வெற்றிடத்தை வைக் கவில்லை. உருவங்கள், பிரதிமைகள் ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் தோற்றுவிக்காத அர்த்தமற்ற தியானத்திலும் மனிதனை அது விட்டுவிடவில்லை.
இஸ்லாத்தின் மற்றொரு தனிப் பணிபு அதன் நடைமுறை யதார்த்தமாகும். இஸ்லாத்தில் "தியானமி'
106 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்ஸ்

என்பது பிரபஞ்ச உறவுகளின் அல்லது மனித உறவு களின் இயல்பை அறிவதற்கான ஒரு முயற்சியாகும். அல்லது சிருஷ்டிக்கும் கர்த்தாவுக்கும் இடையிலான தொடர்பை உறுதி செய்வதாகும். அல்லது இப் பிரப ஞ்சத்தின் ஒருமைத்துவத்திற்கும் பண்மைத்துவத்துக்கு மிடையிலான உறவை ஸ்திரப்படுத்துவதாகும் அன்பு என்பது ஓர் இலக்கை உருவாக்குவதற்கான அல்லது ஒரு இலக்கு எவ்வளவு உயர்ந்ததாயினும் நீளமா யினும் அதனை உறுதி செய்வதற்கான உந்துதலாகும்.
இஸ்லாம் மனித வாழ்வை விருத்தி செய்து அதை வளர்த்துவிடுவதற்காகவே வந்தது. குறிப்பிட்ட காலத்தின் அல்லது இடத்தின் யதார்த்தத்தை அங் கீகரிப்பதற்காக அல்ல. குறிப்பிட்ட காலத்திலோ அல் லது தொடர்ச்சியாகவோ உள்ள உந்தல் காரணிகள் உணர்வுகள், விலங்குகள், கட்டுப்பாடுகள் போன்ற அம்சங்களைப் பதிவு செய்வதற்காகவும் அல்ல. புதுமை, விருத்தி, உயர்வு என்பனவற்றை நோக்கி வாழ்க்கையை எப்போதும் உந்தித்தள்ளுவதே இஸி லாத்தின் பணியாகும். உருவாக்கம், விடுதலை, முன்னேற்றம் நோக்கி மனித சக்திகளைக் குவிய ல்படுத்துவதே அதன் தலையாய பொறுப்பாகும்.
எனவே கலை அல்லது வாழ்க்கை பற்றிய இஸ்லாமியக் கோட்பாட்டிலிருந்து பிறக்கும் இல த்கியம் மனிதப் பலவீனத்தின் கணப் பொழுதுகளை உருவகப்படுத்துவதில் சிலவேளை அதிக கவனம் செலுத்தாததாக அல்லது அதை எடுத்துரைப்பதில் விசாலிப்பில்லாததாக அதனை ஆதாரத்தோடு அழகியல் உருக்கொடுப்பதை விடவும் அதனை நியா யப்படுத்தவே முயற்சிக்காமல் இருக்கவும் கூடும்.
மனிதப் பலவீனம் என்பது உண்மையானது. அதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இஸி லாம் மனிதனிடம் காணப்படும் பலவீனத்தை மறுக் கவில்லை. அதேவேளை மனிதனிடம் காணப்படும் பலத்தையும் அது நன்கறிந்து வைத்துள்ளது. பலத்தால் பலவீனத்தை வெற்றி கொள்ள வேண்டிய அவனது பொறுப்பையும் அது அறிந்து வைத்துள்ளது. பலவீ னத்தைநியாயப்படுத்தாது அல்லது அதற்கு அழகியல் வடிவம் கொடுக்காது மனிதனை உயர்த்தவும் அவ னை வளர்க்கவும் விருத்தி செய்யவுமே அது முயற்சி க்கின்றது.
மனிதப் பலவீனத்தின் கணப்பொழுதுக ளோடு சில வேளை அது தொடர்புறுவதாகவும் இரு க்கலாம். ஆனால் இத்தகைய கணப்பொழுதுகளின் பாதாளத்திலிருந்து மனிதனை உயர்த்திவிடவும் யதா ரீத்தத்தின் கட்டுக்களிலிருந்தும் அதன் ஆழத்திலிரு ந்தும் அவனை விடுதலை செய்யவே முயற்சிக்கி ன்றது.
இதனை ஒழுக்கம் என்ற குறுகிய கருத்தின் தாக்கத்தால் இஸ்லாம் செய்யவில்லை. வாழ்க்கை பற் றிய இஸ்லாமியக் கோட்பாட்டின் விளைவாகவே இத

Page 118
னை செய்கின்றது. இஸ்லாத்தின் இயல்பே மனித வாழ்வை விருத்தி செய்து வளர்த்து விடுவதும் குறிப் பிட்ட கணப் பொழுதின் யதார்த்தத்தோடு நிறுத்திக்
கொள்ளாமையுமாகும்.
இஸ்லாமியக் கோட்பாடு இப் பூமியில் மனி தனின் புறவயத் தன்மையில் மட்டும் நம்பிக்கை கொள்ளவில்லை. வாழ்க்கை விருத்தி செய்வதில் அவ னாற்றும் பங்கைத் தொலைத்து விடுவதிலும் அது நம் பிக்கை கொள்ளவில்லை.
எனவே இஸ்லாமியக் கோட்பாட்டிலிருந்து பிறக்கும், கலை இலக்கியம்; மனித சிருஷ்டியின் பல வீனம், குறைபாடு, வீழ்ச்சி என்பவற்றை ஆரவாரம் செய்யவில்லை. புலன் இன்பங்களின் சுழற்சியால் அவனது உணர்வு, வாழ்வு ஆகியவற்றின் வெற்றி டத்தையும் கலக்கம், குழப்பம், பொறாமை, புறவய த்தன்மை ஆகியவற்றைத் தவிர படைக்கப்படாத இன் பத்தைப் பெறுவதன் மூலமும் அவனது உணர்வு, வாழ்வு ஆகியவற்றின் வெற்றிடத்தை அது நிரப் பவில்லை. மனித சிருஷ்டியின் உயர்வு, விடுதலை குறித்தே அது பேசுகின்றது. தனி மனிதனிலும், சமூ கத்திலும் மனித வாழ்வை விருத்தி செய்து வளர் த்துவிட வேண்டும் என்ற இலக்குகளின் மூலமே அவ னது வாழ்வினதும் உணர்வினதும் வெற்றிடத்தை நிர 'ப்புகின்றது.
உபதேச உரைகள் இஸ்லாமியக் கோட்பா ட்டிலிருந்து பிறக்கும் கலை அல்லது இலக்கியத்தின் பாதை அல்ல. இது ஒரு ஆரம்ப மேற்போக்கான வழி முறையாக இருக்கலாம்; ஒரு கலைப் பணியாக இரு க்க முடியாது. VO
அவ்வாறே மனித ஆளுமையைப் பொய் மைப்படுத்தியும் அதன் உயிரோட்டம்நிறைந்த யதார் த்தத்தை திரிபுபடுத்தியும் இருத்தலியலே அல்லாத கற்பனாவாத உருவில் மனிதவாழ்வை வெளிப்படுத் துவதும் இஸ்லாமிய இலக்கியத்தின் பணியன்று.
மனிதனில் மறைந்து கிடக்கும், அல்லது வெளிப்படையாகத் தெரியும் ஆற்றல்களை உருவ கிப்பதில் அது வாய்மையுடன் செயற்படும். இந்த வாய்மை ஓநாய்களின்பட்டிக்கு அல்ல. பொரு த்தமான வாழ்க்கையின் இலக்குகளை உருவகிப்பதில் வெளிப்படும். இஸ்லாமியக் கோட்பாட்டிலிருந்து பிறக்கும் கலை, இலக்கியம் என்பது வாழ்க்கையைத் தொடர்ச்சியாக விருத்திசெய்யும் இயக்கம் என்ற தீர்ப்பை முன்னெடுத்துச் செல்லும் இலக்கியமாகும் அல்லது கலையாகும். குறிப்பிட்ட கணப்பொழுதில்

அல்லது ஒரு தலைமுறையில் நிலவும் யதார்த்தத்தை அப்படியே ஏற்பதோ அதனை நியாயப்படுத்துவதோ அல்ல. அது யதார்த்தம் என்ற ஒரே காரணத்துக்காக அதை அழகியல் படுத்துவதுமல்ல.
இஸ்லாத்தின் பிரதான பணி இந்த யதார்த்த வாழ்வை மாற்றுவதும் அதை அழகுபடுத்துவதுமா கும். வாழ்க்கையின் புதுப் புது வடிவங்களை உருவா க்கும் படைப்புத் தொழிற்பாட்டை தொடர்ச்சியாக உருவகிப்பதுமாகும். இதிலே வரலாற்றுக்குச் சடவாத விளக்கமாக்கும் கலை இலக்கியங்களுடன் ஒரு கண ம் அது சந்திக்கலாம். மறுகணம் அது பிரிந்தும் விட
6DO.
அத்தகைய இலக்கியத்தின் வர்க்கப் போரா ட்டமே எழுச்சியின் அச்சாணியாக இருக்கும். ஆனா ல் இஸ்லாம் வர்க்கப்போராட்டத்துக்கு அந்தளவு முக் கியத்துவம் கொடுக்க மாட்டாது. ஏனெனில் இஸ்லா த்தின் மனித இலக்குகள் குறித்த கண்ணோட்டம் மிகவும் விசாலமானதும் உயர்ந்ததுமாகும். அது சமூக அநீதியை ஏற்றுக் கொள்வதோ, அங்கீகரிப்பதோ இல்லை. அதனை எதிர்த்துப் போராடி, மாற்றியமை ப்பதில் எப்போதும் செயற்பட்டுக்கொணர்டே இருக்கிறது. ஆனால் வர்க்க குரோதத்தின் மீது அதன் எழுச்சி இயக்கத்தை உருவாக்க விரும்புவதில்லை. மாறாக மனிதனைக் கணிணியப்படுத்துவதிலும் மனோ இச்சைகளுக்கு அடிமைப்படுவதை விட்டும் அவனை உயர்த்துவதிலும்; உண்ணல், பருகல், உடற் பசிகளில் சுருங்கி விடுவதிலிருந்து படைப்பாளுமை கொண்ட மனிதத்தை விடுதலை செய்வதில் அது பேரார்வம் கொண்டுள்ளது.
இஸ்லாமிய சிந்தனையில் எழுச்சி இயக்கம் சுழலும் அச்சாணி; மனித சமூகம் முழுவதையும் எழுச்சி பெறச்செய்து விடுதலை, முன்னேற்றம், படை ப்பாற்றல், புதுமை என்பவற்றை நோக்கி உந்தித்தள் ளுவதாகும். இந்தப் பாதையில் வர்க்கங்களின் வேத னைகளையும், விலங்குகளையும் கண்டறிந்து அத னை உடைத்தெறிவதற்காக அது எப்போதும் தொழி ற்படும்.
இஸ்லாம் பாட்டாளிகளின் வேதனைகளை இழிவாகக் கருதவில்லை. அதை நீக்க வர்க்க குரோத த்தைப் பயன்படுத்தவும் விரும்பவுமில்லை. குரோதம் என்பது மனித விடுதலையை திசைமாற்றி விடக் கூடியது.
-> அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 107

Page 119
二 Gി
வியாழக்கிழமை;
இங்கே "அல்புரைஜ்’ முகாமிலுள்ள எல்லா அகதிகளும் என் மீது பொறாமைப்படுகின்றனர். ஆவ லும் பசியும் மேலிட அவர்கள் என்னைப் பார்க்கின்றனர். இரண்டு அம்சங்களுக்காக அவர்கள் என் மீது பொறா மைப்படுகின்றனர். அதிலொன்று இருபது ஜுனை ஹுக்குச் சற்றுக் குறைவான மாதச் சம்பளத்தை நான் பெறுவது; மற்றது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவு நான் அழகாயிருப்பது. இதோ ! இன்று நான் முகாமை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றேன். இது மாதக் கடைசி என்பதும் இந்த சௌந்தர்ய ஹிந்தாவின் பையில் இருபது ஜுனைஹற் இருக்கு மென்பதும் எல்லோருக்கும் தெரியும். அத்துடன் ஒரு தாய், ஒரு தந்தை, ஏழு சகோதர, சகோதரிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தை நான் பராமரிக்கின்றேன் என்பதையோ காஸாவில் நான் வேலை பார்க்கும் பாடசா லைக்கு அண்மையில் சில ஜுனைகள் செலவில் வாட கைக்கு ஒரு வீட்டை எடுக்கப் போகிறேன் என்பதை யோ என் குடும்பத்துக்குத் தேவையான பணத்தில் பெரும்பகுதி நகரத்தில் எனது தனிப்பட்ட செலவைக் கரைத்துவிடுகிறது பற்றியோ உறுதிப்படுத்த அவ
108 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்
 
 

ர்கள் மத்தியில் எந்த மனிதனும் இருக்கவில்லை. இத்தோடு இந்த அகதிகளுக்காகவும் செலவளிக்கின்றேன். இவர்கள் ஏழைகள். , நோயாளிகள். , நாடு, செல்வாக்கியம், சந் தோஷம் என எல்லாவற்றையும் இழந்தவர்கள். அல்லாஹ் இவர்களின் பாவத்தை மன்னிக்க வேண்டும். உதவி யையும் சுபீட்சத்தையும் அவன் அவர்களுக்கு விதியாக்க வேண்டும். நானும் அவர்களில் ஒருத்தி. அவர்கள் படும் வேதனை என்னுள்ளத்தையும் உசுப்புகிறது. அவர்களின்
நஜீப் அல்கைலானி இருபதாம் நூற் றாண்டின் இஸ்லாமியக் கலை இலக்கிய பிரதிமைகளில் முதன்மையானவர். இஸ்லா மியத்தையும் அழகியலையும் சரிவிகிதத்தில் கலந்த மகத்தான படைப்பாளி. மனிதத்தின் மென்னுணர்வுகளை தனது படைப்புக்களில் செய்நேர்த்தியுடன் செதுக்கிய சிற்பி. நாற்பது | க்கு மேற்பட்ட நாவல்களையும் பதிற்றுக்கணக் கான சிறுகதைத் தொகுதிகளையும் ஐந்து நாடகத் தொகுப்புக்களையும் பல கவிதைத் தொகுதிகளையும் ஆய்வு நூல்களையும் நம் f முன் சமர்பித்துவிட்டு அவர் மறைந்து இன் i றுடன் ஐந்தாண்டுகளாகின்றன. J
f
i

Page 120
உடன்பிறப்பான கவலைகளை நானும் உணர்கின்றேன். அவை ஈவிரக்கமின்றி என்னுள்ளத்தைக் கிழிக்கின்றன. இரட்சகா நீயே துணை !
சனிக்கிழமை;
இன்று என் காதலன் என்னைச் சந்திக்கின்றான். அவனது பெயர் ஜெமீல். காஸாவின் வசீகரமான இளை ஞர்களில் ஒருவன். வலீத் என்றால் எல்லோருக்கும் தெரியும். படைகளினதும் பெருங் கட்டிடங்களினதும் சொந்தக்காரனின் புதல்வன். வலீத் நீண்டகாலமாக என் னைப் பின்தொடர்ந்து வருகின்றான். நான் உண்மை யைத்தான் சொல்கின்றேன். நான் அவனிடமிருந்து விரண் டோடுகின்றேன். சிலபோது அவனது செல்லமாக இரு க்கின்றேன். என் உள்ளம் அவன் பக்கம் சாய்வதை அல்லாஹ்வே நன்கறிவான். நான் என் கண்களிரண்டையும் மூடித் திறக்கும் போது மணவீட்டில் அவனது கரங் களுக்கிடையில் நானிருப்பதாக ஆவலுறுகின்றேன். ஆனா லும் அவனது தந்தையுடன் அதிகமும் என்னால் ஆறுத லாய் இருக்க முடிவதில்லை. அவன் வரண்ட இயல்பு
என்னைப் பெரிதும் வாட்டுகின்றது. அவனில் எவ்விதக் குறையும் இல்லை. சொல்லப்படுவதைவிடவும் அவன் அதிகம் சிறப்புடையவன். அவனது கல்வி குறைவாயினு ம் அது ஒரு குறையல்ல. கல்வி, சான்றிதழ்களை வைத்து மதிப்பிடப்படுவதல்ல. அவன் நல்ல கதைகாரன். பொது விஷயங்கள் நிறையத் தெரிந்த ஒரு நிபுணன் என்று கூடச் சொல்லலாம். அவன் திருமணத்தை அவசர ப்படுத்தக் கூடாதா ?! எனக்குப் பதினெட்டு வயதாகப் போகின்றது. ஏறத்தாழ அவனது வயதிலேயே நானுமிருக் கின்றேன். அலுப்புகள், வேதனைகள், இழப்புகள் நிறைந்த தே என் வாழ்வு. நாம் வாழ்ந்து கொண்டிருப்பது எவ்வ ளவுதான் மோசமான சூழலாயிருப்பினும் திருமணம் செய்வ தற்கு எனக்கு உரிமையிருக்கின்றது. திருமணப் பிரக்சி னை வலீதுக்கும் விளங்குகிறது. அவனது கண்களில் ஓர் அலாதியான விருப்பத்தையும் அன்பையும் நான் கண்டிருக்கின்றேன். அவனது உள்ளத்தில் தீயை மூளச் செய்யாது நான் பாதுகாப்பாக இருக்க முயற்சித்துள்ளேன். சிலவேளை விஷயத்தை வாபஸ் வாங்கப் போவதாகப் பெய்யாகக் கூட அவனிடம் நடித்திருக்கின்றேன். அவனை திருமணம் முடிப்பதிலுள்ள எனது கட்டுக்கடங்காத ஆவ லை அல்லாஹீவே அறிவான். வசீகரமான இளைஞன்,
வேண்டும். எவ்வளவு ஆனந் தமாயிருக்கிறது !
புதன்கிழமை
பல சோழிகளுக்கு மத்தியில், பல பிரச்சினைகளு

க்கிடையில் என்னை நானே மறக்கப் பார்க்கின்றேன். பெ ரிய சோதனையைக் கூட மறக்கப் பார்க்கின்றேன். இன்று மே பதினைந்து. பலஸ்தீன் துண்டாடப்பட்ட நாள். என்னருமைத் தாய் நாடு ஆக்கிரமிக்கப்பட்ட நாள். கா ஸா, ரபாஹ், கான் யூனுஸ் மற்றும் எல்லா முகாம்களிலும் எல்லா இடங்களிலும் இன்று திரும்பச் செல்வதற்கான அழைப்புக்கள், ஆரவாரங்கள் கேட்ட வண்ணமிருக்கின்ற ன. பாடசாலைச் சிறார்கள் கோஷம் போடுகின்றனர். கீதமி சைக்கின்றனர். நிரபராதிகளான அவர்களின் குரல்கள் அடி
கள், நகரங்கள், காத்திருந்து சலிப்படைந்த மௌனப் பெண்ணைப்போல தூரத்தில் தெரிகின்றன. கோதுமை மாவு, சவர்காரம், பட்டர் போன்ற வைகளை விநியோக நிலையங்களிலிருந்து பெறுவதற்காக இற்றுப்போன ஆடைகளுடன் அகதிகள் செல்கின்றனர். வாழ்க்கையை வெறுக்கும் கோபக் குறியே அவர்களின் முகங்களில் தெரிகின்றது. என் உள்ளமும் அழுகின்றது. என் கண்களி ரண்டிலுமிருந்தும் மளமளவென்று கண்ணிர் கொட்டுகின் றது. வலீதைச் சந்திக்கப் போவதில் எனக்கு விருப்பமில் லை. முகாமுக்குத் திரும்பி வந்து விட்டேன். அரை நூற்றாண்டுக்குத் துயரின் நினைவுகளை மீட்டியவர்களாக இருக்கும் யுவதிகள், பெண்கள், வயோதிபர்கள் மத்தியில் நானும் அமர்ந்தேன். கொழுந்து விட்டெபியும் எம் இதயத்தி ல் எதிர்பார்க்கையின் துளிகளைக் கொட்டியவர்களாய். அது சற்று ஆறுதலைத் தரும் அல்லவா ?
வியாழக்கிழமை;
இன்று வலீத் இப்படிச் சொன்னான்.
“வியாபாரியின் மகன் வியாபாரிதான் என்றாலும் நான் பேரம் பேசுவதை விரும்பமாட்டேன்.”
“வலீத் நீ என்ன சொல்கிறாய் ?”
“உனக்குத் தெரியும், நமது திருமணத்தோடு தொடர்பானதைத்தான் சொல்கிறேன். எனது தந்தையிடம் விஷயத்தை எடுத்துச் சொல்ல, தெளிவான உடன்பாடாக அது இருக்க வேண்டும். பின் ஓரிரு மாதங்களில் கலி யான விடயங்களை முடித்துவிடலாம்.”
நான் வெட்கத்தோடு இப்படிச் சொன்னேன்,
“முதலில் உன் தந்தையிடம் ஏன் விஷயத்தைச் சொல்கிறாய் அவருக்குரிய இடம் இரண்டாவது வரும். முடிவெடுக்கவேண்டியது நீயல்லவா ?”
“நான் என்ன சொல்கிறேன் என்பது உனக்கு விளங்கவில்லையா ?”
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 109

Page 121
“உனக்கும் விருப்பம் அப்படித்தானே ?”
நான் சொன்னேன்; “தொடர்ந்து கேட்காதே. விவேகியாய் நடந்து கொள்”
அவன் உணர்ச்சிவசப்ப்டிருந்தான். முகம் அதை க் காட்டியது. நாம் காஸா கடற்கரையில் அமர்ந்தோம்.
"நீயே என் உயரிய இலக்கு” என்று அவன் மகிழ்ச்சி பொங்கக் கூறினான்.
“வலீத் நீயும் எனக்கு அப்படித்தான்”
இரு குவளை குளிரான தோடம்பழச்சாற்றை இருவரும் பருகினோம். எமது எதிர்காலத்தைப் பற்றி நிறையப் பேசினோம். திருமணத்தின் போது நான் வேலை யை விட்டு விலக வேண்டுமென்பதே வலீத்தின் கருத்தாக இருந்தது. இக்கருத்து எனக்குச் சரியாகப் படவில்லை. எனது சம்பளம்தான் என் குடும்பத்தைத் தாங்கும் தூண். தொழிலை விட்டால் அவர்களுக்கு எப்படி உதவுவது ? கணவன் அல்லது அவரது தந்தையின் பணத்துக்கு நான் கைநீட்ட முடியுமா ? அது சங்கடமான விஷயம். முரண்பாட்டின் வெளிப்படையான புள்ளியே அதுதான். எமது நிகழ்கால சந்தோஷம் பாழ்படாமலிருக்க வேறொரு சமயத்தில் இவ்விடயத்தைப் பேசி அவரை ஏற்றுக் கொ ள்ளச்செய்ய என்னால் முடியும் அன்பும் ஆவலும் பொங்க அவன் சிரித்தான். பின்னர் வேறு விடயங்களைப் பற்றிப் பேசினோம். அது எவ்வளவு சுவாரஷ்யமாயிருந்தது.
வெள்ளிக்கிழமை;
இன்று எனது தாய், எனது தந்தை ஏனைய குடும்ப அங்கத்தினர் எல்லோரும் எனது திருமண விடயத்தை அறிந்த போது ஆனந்தத்தால் சிறகடித்துப் பறக்கப் பார்த்தனர். ஆனால் பேராசையின் நிழலையோ, எதிர்கால மோகத்தையோ, தேவையான அச்சத்தையோ யார் கண்ணிலும் நான் காணவில்லை. எனக்கு முன்னால் அவர்கள் அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டிய நல்ல அமரர்கள் போன்றே தோன்றினார்கள். எனது மகிழ்ச்சி அவர்களது மகிழ்ச்சியின் உண்மையான ஓர் அங்கம். என்பால், எனது சம்பளத்தின்பால் உள்ள அவர்களின் தேவையை அது ஒரு போதும் குறைத்துவிடாது. ஆயினும் நான் சுயநலக்காரியாக இருக்க விரும்பவில்லை. இது விடயமாக நான் இன்னும் ஆராய்ந்து வருகின்றேன் என்பதையும் அவர்களின் எதிர்காலத்தில் நிம்மதி ஏற்படாமல் எந்த முடிவையும் அமுல்படுத்தமாட்டேன் என்பதையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தினேன். அவர்களின் கண்களில்
10 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 6

கண்ணிர் பொங்குவதைப் பார்த்தால் எனக்கு எவ்வளவு கவலையாக இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை;
இன்று ஸ்பானிய கஷினோ கடைக்கு வலீத் ஆழ்ந்த கவலையுடன் வந்தான். என் இதயம் அச்சத்தால் அடித்துக் கொண்டது. என் முகத்திலே வரையப்பட்டிரு ந்த கவலை மேகங்களை அவன் அவதானித்திருக்கலா மல்லவா ?
அவன் விரைந்து சொன்னான்: “என்னைத் தொந்தரவு படுத்தாதே !”
“ஏன் அப்படிச் சொல்கிறாய் ?”
“பெய்ரூத்துக்கருகில் சரக்கு கப்பல்களில் ஒன்று மூழ்கிவிட்டது மூவாயிரம் ஜுனைஹ் பெறுமதியான எமது வியாபாரப் பொருட்கள் அதிலிருக்கின்றன.”
“உண்மையில் கவலையான விஷயம்தான். பெரிய சோதனைதான்.”
“நீயும் கவலைப்படாதே 1 நாம் எப்படியாவது சமாளித்துவிடுவோம். வியாபாரம் என்பது எப்போதும் இப்படித்தான். நஷ்டம், லாபம். லாபம், நஷ்டம்.
இன்று நான் அவனுடன் நிறையப் பேச எண் ணியிருந்தேன். எதிர்காலத்திற்கான வெற்றிகரமான திட் டங்களை மாலைவரை அவனுடன் பேசி விவாதிக்க எண்ணியிருந்தேன். நான் ஒரு வார்த்தைக்கேனும்வாய் திறக்கவில்லை. வேறொரு நாளில் சந்திப்பதாக இருவரும் பிந்தோம். வலீதுக்கேட்பட்ட துன்பம் நீங்கவேண்டுமென என்னுள்ளம் அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றது.
வியாழக்கிழமை;
ஏற்கனவே ஒத்துக்கொண்டது போல கஷினோ வில் வலீதை நான் காணவில்லை. எதிர்பார்த்துக் கொண் டிருந்தேன். அவன் வருவான் என உறுதியாக நம்பிக் கொண்டிருந்தேன். இதற்குமுன் அவன் எனக்கு வாக்குத் தவறியதில்லை. அவனது தந்தையின் உருவத்தைக் காணச் சகியாமல் எண் மலர்க் கனவுகளிலிருந்து மீண் டேன். அவன் இருக்கையை இழுத்துப் போட்டுக் கொ ள்கிறான். என்னை நோக்கி அமர்கிறான். என் உடலிலுள்ள எல்லா உணர்ச்சி நரம்புகளும் நாணத்தால் குறுகுவதை என்னால் தடுக்க முடியவில்லை. ஆயினும் பலவீனமான புன்னகையொன்றைத் தவழவிட்டேன். அவன் மயங்கி விழப்பார்த்தான்.

Page 122
அந்த மனிதன் தெளிவாக இருந்தான். அவன் முற்றுமுழுதாகப் பேரம் பேசுவதை அறிந்திருக்கவில்லை
“என் மகன் ஓர் அகதிப் பெண்ணை முடிக்கே
அவனது வார்த்தை இடியைப்போல் என் மீது இ கேட்டேன்.
“வியாபார நிமித்தம் இன்று அவன் பெய்ரூத்துக் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே நான் தெரிவு செய்துவிட்டே பெண்ணே உனக்குப் புரிகிறதா ? பெண்ணே உனக்காக மில் பதிற்றுக்கணக்கான ஆண்கள் இருக்கின்றனர். அவ
கஷினோவிலிருந்து வாட்டத்தோடு வெளியேறி ருந்தன. வாழ்க்கை அதன் அர்த்தத்தை இழந்திருந்தது
எள் நிரந்
நணர்பனொருவன் எனர் நிரந் அக் கேள்வியை எனக்குள்ளேயே நா6 அகதிகளாக்கப்பட்டவர்களு
என் நிரந்தர முகவரி ?
எனது முகவரி ? அல்லது என் முகவரியைக் கேட்கிறாயா ? அந்தோ ஆயுளே ! காலத்தின் தோழர்களே,
வழித்துணைகளே, என் உள்ளமே, உணர்வே 1
நணர்பா ! என் நிரந்தர முகவரியை நீ கேட்கிறாய் ? முகவரி என்பது எவ்வளவு அற்புதமானது. எனது முகவரி அடக்குமுறைக்கும் அநியாயத்திற்கும் காலத்தின் அநீதிக்கும் சவாலுக்கும்

ஒரு பழைய வியாபாரி ஆயினும் அவனது மகனைப்போல 0. அவன் வெறுப்புடனேயே கூறினான்.
வமாட்டான்.
இறங்கியது. பூமி கற்றியது. பின்னரும் அவன் சொல்வதைக்
குப் போய்விட்டான். அவனுக்குப் பொருத்தமானவளை
-ன். ர் என் கட்டுப்பாட் விட்டு
நான் வருந்துகிறேன். உன் கரம்பிடிக்க அல்புறைழ் முகா வர்கள்தான் உனக்குப் பொருத்தமானவர்கள்.
னேன். எனது பார்வையில் எல்லாமே இருண்டு போயி
தர முகவரி .
தர முகவரியைக் கேட்டான். ர் கேட்டுப்பார்த்தேன். இந்தப் பூமியில் க்கு நிரந்தர முகவரி எது ?
சோகச் சுவர்களுக்கும் மத்தியில் வாழ்கின்றது.
எனது முகவரி ஒரு கடற்பறவை. இரு கரைகளும் வெறுப்பதை அதுமுறையிடுகின்றது. மோகமுள்ள காதற் சிப்பி முத்துக் குவியலில் தட்டுத்தடுமாறுகிறது. வாடிய மலர்ச் செணர்டு நேரிய பாதையில் நடக்க ஆசைப்படுகிறது. காதற் பாடல் கோபாவேசத்தோடு அத்துமீறலின் முகத்தைப் பார்த்து கர்ச்சிக்கின்றது. எனது முகவரி அலைகளுக்கு மேலும்
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 1

Page 123
அலைகளுக்கு கீழும் பெருக்குக்கு மேலும் வற்றுக்கு கீழும் வளைகுடாக்களின் பாறைகளுக்கிடையிலும் பயணம் செய்கிறது. ஒருபோதும் அது இறங்குதுறையை ஏற்பதில்லை. இரு கரையிலும் இறங்கவேணர்டியிருப்பதால்.
எனது முகவரி வாழிடத்தை விட்டு வெளியேறிவிட்டது. புரட்சிக் கனவுகளோடு புறப்பட்டுவிட்டது.
தோட்டங்களில் சூரியக் கரங்கள் தழுவும் வீட்டில் பெளர்ணமி நில வொளியில் தாய்நாட்டுக் கனவுகளோடு அது ஹிஜ்ரத் செய்கிறது. மனித உரிமைகளைப்பெற்றெடுக்கப் புறப்படுகிறது. ரஹற்மானின் சட்டத்துக்கு அது கட்டுப்படுகின்றது. ஆகாயத்தில் அது வட்டமிடுகிறது. ஆழங்களின் அளவை அறிய ஆசைப்படுகிறது. அக்கினிக் குணர்டத்தின் மத்தியிலும் அது துடுப்புவலிக்கிறது.
எனது முகவரி ஒரு வாழிடத்தைத் தேடுகின்றது. எனது முகவரி ஒரு சுதந்திரத் தாயகத்தை ஆஷிக்கின்றது. ஆசைகள் என்னைத் தள்ளுகின்றன.
* முஹம்மத் வலீத் சர்வதேச இலலாமிய இலக்கிய ப பெற்றவர். ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலிக்கும் அதிர்வும் கலந்திருப்பதைக் காணலாம்.
12 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 0

நான் இந்தப் பிரபஞ்சத்தோடு சேர்ந்து நடக்கும் போது இருணிட உள்ளத்தில் ஓர் ஒளிக் கீற்றுத் தெரிகிறது. இரவுத் திரையைக் கிழிக்கிறது. வைகறை ஒளியைப் பெற்றெடுக்க, ரோஜா இதழை மலரவைக்க, மெழுகுத்தேன் உள்ளத்தைப் பிழிய, ஆத்மாவின் அன்புக் கயிற்றைப் பிணைக்க. எனவே, ஒளியையும் அதைப் படைத்தவனையும் பயப்படு 1 அதை இணைத்துக்கொள். அதுவே என் முகவரி 1 என் முகவரி, கணிணியச் சுவர்களுக்கிடையிலும் புகழ்மிக்கப் பாரம்பரியத்துக்கு மத்தியிலும் ஒட்டகப் படையின் ஈட்டி முனைகளுக்கிடையிலும் ஈமானியக் கணவாய்களிலும் வளைந்துநிற்கிறது. எனது முகவரி பாறையின் இதயத்தில் தோணிடப்படுவதையும் பொறுமையின் நகக் கணிணிலும் இதயத் துடிப்பிலும் காதல் அரும்பிலும் பயணிகளின் கவிதைகளிலும் நீகாணலாம். எனது முகவரியை ஓர் இலட்சியக் கப்பலாக நீகாணலாம். அது நோவாவின் பெருவெள்ளத்தையும் தாணர்டிவிட்டது.
மன்றத்தின் அவைக் கவிஞர்களில் மிகுந்த கவனத்தைப் i இவரது கவிதைகளில் இஸ்லாமியமும் கவித்துவ

Page 124
snflauf
அப்துல்லாஹீ பின் அஹமத்
sné - 1
அபூபக்கர் (ரழி) நஹிதியாவையும் அவரது
மகளையும் விடுதலை செய்கிறார் - ஏனைய குறைஷி அடிமைகளை விடுதலை செய்வதைப்
போல் அப்போது குறைஷிகளின் அடிமைக்
கூட்டத்தைச் சேர்ந்த உம்மு உபைசும்
வின்னிராவும் நஹர்தியாவிடம் வருகின்றனர்.
O
வின்னிரா : நஹற்தியா! உனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக
இருக்கும் நீ எவ்வளவு அதிஷ்டசாலி.
உம்மு உபைல் : ஆண்ால் நஹீதியா அபூபக்கர் ஏன்
உங்கள் இருவரையும் விடுதலை செய்தார்.
நஹீதியா : முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவரது
தோழர்களுக்கும் ஏற்பட்டுவரும் துன்பங்க ளையும் கொடுமைகளையும் அறிவீர்கள். அவர்கள் இஸ்லாத்தை தழுவியதாலேயே இதெல்லாம் நடக்கிறது. நானும் என் மகளும் இஸ்லாத்தை தழுவியதால் எமது எஜமானர்கள் மிக கொடூரமாக எம்மைச் சித்திரவதை செய்தனர். ஒரு நாள் நானும் என் மகளும் எமது எஜமானின் அப்தர்யாவுடன் திரும்பிக்கொண்டிருந்தோம். அரைத்த மாவை பெரிய பாத்திரம் ஒன்றில் சுமந்து வந்தோம். அப்போது அவள் லாத் தின் மீது சத்தியமாக உங்கள் இருவரையும் ஒரு போதும் விடுதலை செய்ய மாட்டேன் என்று கூறினாள். அப்போது அபூபக்கர் எம் மைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அவ ளைப் பார்த்து உனது சத்தியத்தை விட்டுவிடு என்று கூற அதற்கவள் நான் அதனைச் செய்யமாட்டேன் நீயும் உனது தோழரும்தான் இவ்விருவரையும் கெடுத்துவிட் டீர்கள். நீ விரும்பினால் இவர்களை விடுதலை செய்யலாம் என்று கூறினாள். சிறிது நேரத்தில் அபூபக்கர் திரும்பி வந்து எம்மை விடுதலை செய்வதற்காகப் பணம் கொடுத்தார். அல்லாஹ்வுக்காக எம்மை அவர் விடுதலை செய்தார்.
ஸின்னிரா : (கொட்டாவி விட்டுக்கொண்டே)

auförmr.
நான் முஹம்மதை விசுவாசித்திருக்கக் கூடாதா? விசுவாசித்திருந்தால் .
உம்மு உபைஸ் : (பேச்சை இடைமறித்து)
ஸின்னிராவே 1 கொஞ்சம்பொறு முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய குறைஷிகள் சதி த்திட்டம் தீட்டுகிறார்கள். நீ அவசரப்படாதே ! அவசரப் பட்டால் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் லுக்மா னைப்போலாகிவிடுவாய். அவர் வயிறு நிறையாத
நஹந்தியா : அல்லாஹ் அவர்களுடைய சூழ்ச்சியை
தடுத்துவிடுவான் பின்னர் அவரது சிற்றப்பா.
உம்மு உபைஸ் : பின்னர் என்ன நஹற்தியா ? அபூதாலிப்
பெரிய கிழவர் அவருக்கு வயதேறிவிட்டது. இன்று முஹம்மதைத் தடுத்தால் நாளை அவரை யாரும் தடுக்கமுடியாது.
ஸின்னிரா : (இடைமறித்து)
நஹீதியா ! நீ பயப்படாதே ! உனது மார்க்கம் அவரது தடுப்பிலா இருக்கிறது. நேற்று ஹம்ஸா இஸ் லாத்தை தழுவி விட்டார். குறைஷி இளைஞர்களிடையே அவர் மிகவும் கண்ணியமானவர் இதோ ! உமரிப்னுல் கத்தாப் கோத்திரத்திலேயே மிகவும் வலிமையானவர் முஹ ம்மதை ஈமான் கொண்டுவிட்டார். ஒவ்வொருநாளும் குறைஷிகளில் மிகப்பெரும் கனவான்கள் உங்கள் கூட் டத்தோடு இணைந்து கொண்டிருக்கின்றனர். எனவே நீ பயப்படவோ கவலைப்படவோ வேண்டாம்.
உம்மு உபைஸ் : உன்னுடைய எஜமானர்களின்
மார்க்கத்தைப் பிந்து முஹம்மதின் மார்க்கத்தால்
நீகவரப்படுவதற்கு காரணம் என்ன ? அவர்களுக்கேற்படு
ம் துன்பம் உமக்கும் ஏற்படும் அல்லவா ?
ஸின்னிரா : உண்மையில் நஹீதியா நீ ஏன் இஸ்லாத்
தைத் தழுவினாய் ?
நஹர்தியா : நான் எப்படி தழுவாமல் இருக்கமுடியும்.
அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 1 13

Page 125
முஹம்மத் ஒரு மகத்தான மார்க்கத்தைக் கொண்டுவந்துள்ளார் ? சத்தியத்தின் பக்கமும் அழை
க்கிறார். பிறர் நலம் பேணுகிறார். இனபந்துத் தொடர்பை
ஸின்னிரா : நஹந்தியா தொடர்ந்து சொல்லு.
நஹற்தியா ; பின்பு யாசிரின் குடும்பத்தார் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்டதை நான் கண்ணால் கண்டேன். அவர்களது மார்க்கத்தை விட்டு விலகியதற் காகவே அது செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் அந்த சித்திரவதையின் போது பொறுமையையே கடைப்பிடித்தா ர்கள். சத்தியம் இல்லாமல் அவர்களைப்போல் பொறுமை யாக இருக்க முடியாது என்பதை அறிந்து கொண்டேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தின் பக்கம் சாயலானேன். கடைசியல் ஈமான் கொண்டுவிட்டேன்.
sin & – 2.
சில நாட்களின் பின் ஸின்னிரா, நஹற்தியா, உம்மு உபைஸ் ஆகியோர் சபா மலையடிவாரத்தில் சந்திக்கின்றனர்.
ஸின்னிரா : லாத் மீது ஆணையாக முஹம்மதின்
மார்க்கம் ஏனையஅனைத்தையும் வெற்றி
கொண்டுவிடும். குறைஷிகளின் மதத்தை, அறபுகளின்
மதத்தை முழுமையாக மிகைத்துவிடும்.
உம்மு உபைஸ் : ஸின்னிரா உனக்கு இதை யார்
சொன்னார்கள் ? அல்லது உனக்கு விண்ணிலி ருந்து வஹி இறங்கியதா ?
ஸின்னிரா : குறைஷிகளிடமிருந்துதான் எனக்கு வஹி வந்தது. அவர்கள் மத்தியில் உலவும் செய்திக ளை வைத்துப் புரிந்து கொண்டேன்.
நஹீதியா : (மிகுந்த ஆவலுடன்)
அது என்ன செய்தி ?
வின்வீரா : அபூஜஹில் முஹம்மத் ஆலயத்தில் தொழுது
கொண்டிருக்கும்போது அவரது தலையை வெட்டுவதாகச் சபதம் இட்டிருந்தார். ஆனால் அவரால்
குறைஷிகள் அவரைப் பார்த்துக் கேள்வி கேட்டனர். அதற்கவர் லாத் மீது ஆணையாக 1 முஹம்மத் தொழும் போது, நான் அவரைக் கொலை செய்ய முயன்றேன்.
14 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் அ

அப்போது பெருத்த உடலும் நெடிய தோற்றமும் கொண்ட பெரிய ஒட்டகம் ஒன்று அவ்விடத்தே தோன்றி என்னை கடித்துக் குதறப் பார்த்தது. நான் கடுமையாகப் பயந்துட விட்டேன். உயிரைக் காத்துக் கொள்வதற்காக தப்பி ஓடி வந்தேன்.
இதைக் கூறிய போது நழ்ர் பின் ஹாரிஸ் எழு ந்து குறைஷிகளே ! உங்களுக்கு ஒரு பெரும் துன்பம் இறங்கி விட்டது. உங்களால் அதனைத் தடுத்துவிட முடியாது. அதனைத் தடுப்பதற்கு நீங்கள் சக்தியற்றவ ர்களாக இருக்கிறீர்கள். முஹம்மத் உங்கள் மத்தியில் சிறிய குழந்தையாக இருந்தார். அவர் ஒழுக்கத்தால் உங்களை விட உயர்ந்தவராக இருந்தார். வாய்மையில் மேலானவராய் இருந்தார். அமானிதத்தில் உங்களை விடச் சிறந்தவராய் இருந்தார். பரம்பரையிலும் உங்களில் மேலா னவர். குடும்பத்திலும் அவர் உயர்ந்தவர். எனவே முடி நரைத்தபின் அவர் கொண்டு வந்ததைப் பார்த்து நீங்கள் அவரைச் சூனியக்காரர் என்று கூறுகிறீர்கள். இறைவன் மீது ஆணையாக அவர் சூனியக்காரர் அல்லர். நாம் சூனியக்காரர்களையும், அவர்கள் சூனியம் செய்வதையும் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவரைச் சாஸ்திரக்காரர் என்று கூறுகிறீர்கள். லாத் மீது ஆணையாக, அவர் சாஸ்திரகாரர் அல்லர். நாம் சாஸ்திரகாரர்களையும், அவரது சாஸ்திரங் களையும் கேள்விப்பட்டுள்ளோம். நீங்கள் முஹம்மதைக் கவிஞர் என்று கூறுகிறீர்கள். லாத் மீது ஆணையாக ! அவர் கவிஞருமல்லர். எல்லாக் கவிதைகளும் எமக்குத் தெரியும். நீங்கள் அவரை பைத்தியக்காரர் என்று கூறு கிறீர்கள். லாத் மீது ஆணையாக அவர் பைத்தியக்கர் அல்லர். எனவே இந்த விடயம் குறித்து ஆழ்ந்து சிந்தியுங்கள்.
காட்சி - 3.
ஸின்னிரா ஏனைய குறைஷி அடிமைகளைப்போல் இஸ்லாத்தை தழுவுகிறார். அவரது பார்வை போய்விடுகிறது.
நஹீதியா : ஸின்னிரா. நீ பொறுமையைக் கடைப்பிடி அல்லாஹ் பொறுமையாளர்களுக்குப் பெரும் கூலியைத் தயார்படுத்தியுள்ளான்.
வின்னிரா : அல்லாஹ்வின் மீது ஆணையாக, பார்வை
பறிபோனதை நான் பொருப்படுத்தவில்லை. அல்லாஹ் அவனது அண்பால் என் உள்ளத்துக்கு ஒளியூ ட்டியுள்ளான். அவனது மார்க்கத்துக்கு வழிகாட்டி விட்
L.

Page 126
உம்மு உபைஸ் : (இஸ்லாத்தைத் தழுவியின்)
குருடன் என்பவன் ஈமானின் ஒளியை க் காணாதவன். முஃமின் அல்லாஹ்வின் ஒளியைப் பார்க் கிறான்.
நஹீதியா : அல்லாஹ்வின் மீது ஆணையாக ! உம்மு உபைஸ் நீ உண்மை சொன்னாய்.
ஸின்னிரா : “குப்ரு’ரில் கழித்த என் இளமைக் காலத்து க்காக நான் கவலைப்படுவது போல நான் வேறெதற்கும் கவலைப்படவில்லை.
நஹீதியா : சகோதரிகளே பொறுமையாக இருங்கள எல்லாவற்றுக்கும் முன்னால் இஸ்லாம் முக்கியம்
உம்மு உபைஸ் : நேற்று குறைஷிகள் கூறியதை நீ (ssisi 'LITILT 2
ஸின்னிரா : என்ன கூறினார்கள் ?
உம்மு உபைஸ் : ஆ. ஆ. அதைச் சொல்ல வேண்டாம்
ஸின்னிரா ; உனக்கென்ன ? அவர் சொல்லட்டும்.
உம்மு உபைஸ் : வேண்டாம். சொல்ல வேண்டாம்.
 

சொல் அல்லாஹ்வின் தூதருக்கு ஏதாவது sisaarur
உம்மு உயைஸ் : அல்லாஹீ அவனது தூதரைப்
பாதுகாப்பானாக ஆனால்.
லின்னிரா : என்ன ஆனால்.
உம்மு உபைஸ் : (தனக்குத் தானே)
என்ன அவசரம்
நஹீதியா : என்ன சொல்லுங்கள் !
உம்மு உபைஸ் : நல்லது நான் சொல்கிறேன் நீங்கள்
பிடிவாதமாக இருப்பதால் நான் சொல்கிறேன்.
(சிறிது மெளனம் சாதித்துவிட்டு) குறைஷிகள் நீ இஸ்லாத்தை தழுவியபோது லாத் உஸ்ஸா உனது பார்வையை பறித்துவிட்டதாக நம்புகிறார்கள்.
ஸின்னிரா : (கடும் கோபத்துடன்)
அவர்கள் பொய் சொல்கிறார்கள் அல்லாஹற்
வின் மீது ஆணையாக லாத் உஸ்ஸா கடவுள்களுக்கு
நன்மையோ தீமையோ செய்யமுடியாது ?
(அவ்வாறு கூறியதுதான் தாமதம் அல்லாஹி ஸின்னிராவுக்கு பார்வையை மீண்டும் வழங்கினான்.)
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 15

Page 127
நளிமிக்களின் ப
இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் மைல் கல்லாகத் திகழும் ஜாமிஆ நளீமிய்யா அதன் குறுகிய காலப் பயணத்தில்அரிய பல சாதனைகளைச் செய்துள்ளமை அல்லாஹ்வின் பேரருளாகும்.
இதுவரையில் இந்தக் கலாநிலையத்தில் கற்று வெளியேறியவர்கள் பல துறைகளிலும் தடம்பதித்து ள்ளமை தேசிய, சர்வதேசிய மட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். இது இலங்கை முஸ்லிம்கள் தங்களைப் பூரணமாக ஈமானிய உணர்வுடன் அர்ப் பணித்தால் இந்த நாட்டில் இன்னும் பல சாதனை களைச் செய்ய முடியும் என்பதற்கான சிறியதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பதை உறுதி யாகக் கூறமுடியும்.
“எவர் கல்வி ஞானம் கொடுக்கப் பெறுகிறா ரோ அவர் நிச்சயமாக அநேக நன்மைகளைப் பெற்ற வராவார்.” (2:269) என்ற அல்குர்ஆன் வசனத்திற் கேற்ப நாம் தூய இஸ்லாமிய அறிவைப் பெற்றுக் கொள்ளும் போது எந்தவகையிலும் இழிவுபடுத்த ப்படமாட்டோம் என்பதை இது உணர்த்துகின்றது.
இந்த வகையில்ஜாமிஆவின்இருபத்தைந்து வருடகாலத்திற்குள் பல்துறைகளிலும் தம்பதிவுகளை ஏற்படுத்தியநளிமிக்களையும், கற்று விட்டு இடையில் சென்றவர்களையும் நாம் நினைவுகூறுகின்றோம்.
இவர்களின் சேவைகள் எம் சமூகத்தின் தேவைகள் என்பதை எம்மை நோக்கிவரும் சில கேள்விகள் தொட்டுக்காட்டுகின்றன எண்பதையும் இங்கு நினைவுகூருகின்றோம்.
எனவே பன்முகத்துறைகளிலும் தங்களைப் பதித்துக் கொண்ட இவர்கள் எழுத்துலகில் எந்தளவு க்குத் தடம்பதித்துள்ளனர் என்பதை இங்கு மீள்பா ர்வை செய்ய விளைகின்றோம். இதன் மூலம் நாம் எம்மைப் பற்றிய பிரமைகளை ஏற்படுத்த விளைய வில்லை. நாங்கள் புகழப்பட வேண்டியவர்கள் என்று கருதவில்லை. ஏனெனில் அல்லாஹ்தான்.அனைத்துப் புகழுக்கும் சொந்தக்காரன்
இதன் மூலம் நாம் முற்றிலும் எதிர்பார்ப்பது, இதுவரை எழுத்துலகில் எங்களால் எவ்வளவுதூரம்
பயணிக்க முடிந்தது?நாம் செல்லாததுறைகள் எவை? 16 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

ர்முகப் பதிவுகள்
காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எந்தளவுக்கு விளைந்துள்ளோம்? எமது பயணம் வேகமானதா? போன்ற கேள்விகளுக்கான விடைகளையாகும்.
இந்த வகையில் எம் பன்முகப் பதிவுகளை எம்மால் முடிந்தவரையில் கைகளுக்குக் கிடைத்த சில நூல்களுடனும் விரிவுரையாளர்களின் பேருதவியுட னும் திருப்தியாகத் தொகுக்க முடிந்தது.
இங்கு பல நூல்கள் சஞ்சிகைகள் விடுபட்டி ருக்கலாம். மேற்குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள், சஞ்சி கைகளில் பெரும்பாலானவை எமது நூலகத்திலும் கிடைக்கப் பெறவில்லை. இது தொடர்பாக நூலாசிரிய ர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
இந்நூல்களைப் பொதுவாகவும், ஆழ்ந்து நோக்கும் போதும், அவை அனைத்தும்இஸ்லாமிய சிந்தனையைத் தெளிவாகவும், ஆதாரபூர்வமாகவும் முன்வைக்கின்றன. இஸ்லாமிய ஷரீஆவின் சட்டங்க ளும் நடைமுறைகளும்இந்த நூற்றாண்டுக்கும் பொரு ந்தும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. இஸ்லாம் நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவான மார்க்கம் எனும் ஆழ்ந்த கருத்தை முண்வைப்பதுடன் ஆழமான ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டிய ஞானமிகுந்த மார்க்கமாகும் எனும் சிந்தனையையும் தோற்றுவிக் கின்றன.
இதற்கு நளிமிய்யா பழைய மாணவர் அமை ப்பின் வெளியீடான “ஸகாத் நடைமுறையும் கோட் பாடுமீ” என்ற ஆய்வு நூல் சிறந்த எடுத்துக்காட் டிாகும்.
இவ்வாறே இஸ்லாமிய சட்டத்துறையில் அஷ் ஷெய்க் A.C. அகார் முஹம்மத் அவர்களின் “சன்மார்க்க சட்ட விளக்கங்களி” எனும் நூலையும், அரசியல் துறையில் அவர் ஷெய்க் M.AM மன் ஸ9ர் அவர்களின் “இனப்பிரச்சினை ஓர் இஸ்லாமியக் கணிணோட்டமி” எனும் நூலையும் குறிப்பிட முடி ԱվԼՕ.
“பலஸ்தீனப் பிரச்சினையும் போராட்டமுமீ” என்ற நூல் மூன்று வாரங்களில் இருபத்திரண்டாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அத்துடன் இருபெரும் பாகங்களைக் கொண்ட எம். ஏ. எம். அக்ரம் (நளிமி)

Page 128
எழுதிய “நடைமுறைக்கேற்ற இஸ்லாமி” என்ற நூல் பாடநூலுக்கு அப்பாலும் வாசிப்புக்குள்ளாகியதோடு மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
கலாநிதி M.A.M. சுக்ரி அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஆய்வுச் சஞ் சிகையான “இஸ்லாமிய சிந்தனை”யில் நளிமிக்களின் படைப்புக்கள் கூடுதலாக வெளிவருகின்றன.
முற்றிலும் நளீமிக்களின் படைப்புகளைக் கொண்ட 20 க்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் நளிமிய்யா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின் றன. இவை தவிர உளவியல், இலக்கியம், மொழி, இஸ்லாமிய வரலாறு, அகீதா, ஸிறா, தஃவா போன்ற துறைகளிலும் குறிப்பிடத்தக்க நூல்கள் வெளிவந்து ள்ளன. எனினும் இலக்கியத் துறையில் இஸ்லாமிய இலக்கியத்துக்கான ஓர் அடிப்படை பெரிதாக இடப் படாமை ஒரு வெற்றிடத்தையே அத்துறையில் தொட ர்ந்தும் வைத்துவருகிறது.
இன்றைய காலத்தின் தேவையான இஸ்லா மியப் பொருளியல், நிதியியல், சமூகவியல் தொடர் பான பல துறைகளிலும் ஆய்வுகள் வரவேண்டியது அவசியமாகும் என்பதை இத் தொகுப்பு சுட்டிக் காட்டுகிறது.
இதுவரை வெளியேறியவர்களில் அறுநூறு பேரில் 35 பேரின் 83 படைப்புக்களே வெளியாகியு ள்ளன. இவ் வெளியீடுகளுக்குப் பின்புலமாக சிலரு க்கு நிறுவனமயப்பட்ட உதவிகள் கிடைத்துள்ள தென்பதும் எல்லாநளிமிய்யாப் படைப்பாளிகளுக்கும் அவ்வாறு கிடைக்கவில்லை என்பதும் சில போது பிர சுரச் சுமையன் அழுத்தத்தினால் ஒரு வெளியீட்டுடன் அவர்கள் அதைக் கைவிட்டதையும் நிறுவனமயப்ப டுமாக இருப்பின்இவ்வெழுத்துலகப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தமுடியும் என்பதையும் இதற்குப் பின்னால் உணரக்கூடியதாய் உள்ளது. இவ்வெழு த்துப் போராட்டத்தை நிறுவனமயப்படுத்தும்போது அதிக வினைத்திறனுள்ளதாய் மாறும் என்பது யாரும் மறுக்க முடியாது.
மேற்குறிப்பிட்ட நளீமிக்களின் ஒலி, ஒளிப் பேழைப் பதிவுகளும் ஏராளமாக இருக்கின்றன. அவை பற்றிய பூரண விபரங்கள் இல்லாததாலும் அவற்றைத் தேடிப்பட்டியல்படுத்த அதிக அவகாசம் தேவை என்பதனாலும் அவை பற்றிய விபரங்கள் கொண்ட ஒரு தொகுப்பையும் இந்த இதழில் வெளி யிட முடியாமல் போனதையிட்டு வருந்துகின்றேன்.

200-வரை வெளியிடப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள்
1. ஸ்றெதுல் பாதிஹாவின் விளக்கவுரை
-அவர் ஷெய்க் NP ஹம்ஸா முஹம்மது.
P முஹம்மது ஸoல்பி. அகில இலங்கை ஜம்யதுல் உலமா “குர்ஆன் ஸுன்னா கருத்தரங்கு” -அவர் ஷெய்க் M. A. M. மன்ஸ்ர்ெ.
2
-அஷ ஷெய்க A.C. அகார் முஹம்மது. -அஷ ஷெய்க் C ஐயூப் அலி -அவர் ஷெய்க் H.I. கைருல் பஷர். 3. அஜமி கணிட அல்குர்ஆன்.
-அவர் ஷெய்க் M.A.M. மன்சூர்.
(2) அல் - ஹதீஸி.
1. நபி வழி - ஹதீஸ் விளக்கவுரை, 11
-அவர் ஷெய்க் A.C. அகார் முஹம்மது. அல் ஹதீஸ் -அவர் ஷெய்க் M.T. M. தாரிக் 3. சமூக அநீதி (எண்பதுஹதீஸ்களின்மொழிபெயர்ப்பு)
-அஷ் ஷெய்க் AB. M. இத்ரீஸ்,
2.
(3) இஸ்லாமிய சட்டவியல். (பிக்ஹர்)
1. சன்மார்க்க சட்டவிளக்கங்கள். (கேள்வி-பதில்)
-அவர் ஷெய்க் AC அகார் முஹம்மது. 2. ஸகாத் நடைமுறையும் கோட்பாடும்.
-அவர் ஷெய்க் H.I. கைருல் பஷர். -அவர் ஷெய்க் M. A. M. மன்ஸ்ர்ெ. -அவர் ஷெய்க் A.C. அகார் முஹம்மது. -அவர் ஷெய்க் C. ஐயூப் அலி 3. நோன்பு நோக்கமும் நடைமுறையும்.
-அஷ ஷெய்க் M. A. M. மனிஸ்ர்ெ. 4. இஸ்லாத்தில் ஹலாலும்ஹராமும் (மொழிபெயர்ப்பு)
-அஷ ஷெய்க் M.A.M. மன்ஸ்ர்ெ. 5. இஸ்லாமிய சட்டத்தீர்ப்புகள். (மொழிபெயர்ப்பு)
-அவர் ஷெய்க் C ஐயூப் அலி -அவர் ஷெய்க் H.I. கைருல் பஷர். -அவர் ஷெய்க் A.C. அகார் முஹம்மது. -அவர் ஷெய்க் M. A. M. மனிஸ்ர்ெ. -அவச் ஷெய்க் நவாஸ் ஸனுர்தீன் -அஷ ஷெய்க் S. A. R. அப்துர் ராசிக். 6. ஸகாத்திலிருந்து தஃவாவுக்கு.
-அஷ் ஷெய்க M. A. M. மன்ஸ்ர்ெ.
-> அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 117

Page 129
7 ஸகாத் மூலம் ஒரு ஜிஹாத்
-அஷ ஷெய்க் M. A.M. மனிஸ9ர். 8. இஸ்லாமிய சட்டம் ஓர் அறிமுகம். -அவர் ஷெய்க் M. A. M. மன்ஸ9ர். 9. நோன்பு ஓர் ஆன்மீகப் பாசறை.
-அஷ ஷெய்க் PM. இர்பான். 10. இஸ்லாத்தில் சுத்தம் (மொழிபெயர்ப்பு)
-அஷ ஷெய்க் B. தாரிக் அலி. 11. திருமணம். (முஸ்லிம் தனியார் சட்டம்)
-அவர் ஷெய்க் M. A. M. மனர்ஸ்ர்ெ. 12. தொலைக்கல்வித் துறை மொடியூல்ஸ்
தேசிய கல்வி நிறுவகம், 8. (i) இஸ்லாத்தில் வியாபாரமும் அதன் அமைப்புக
ளும். (i) இஸ்லாத்தில் வாரிசுரிமைச் சட்டம். (i) அல்லாஹர்வை நம்புதல். (iv) இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு. (v) இஸ்லாத்தில் கல்வி -அவர் ஷெய்க் A.C. அகார் முஹம்மது. 13. நோன்பு.
-அவர் ஷெய்க் ரஷீத் M பியாஸி. 14 பிக்ஹ்கலையும்கருத்துவேறுபாடும் (மொழிபெயர்ப்பு)
-அஷ ஷெய்க் M.A.M. மன்ஸ9ர்.
(4) இஸ்லாமிய அகீதா.
1. தெளUதின் யதார்த்த நிலை. (மொழிபெயர்ப்பு)
-அவர் ஷெய்க் M.A.M. மண்ஸ9ர். 2 இஸ்லாமிய அகீதாவில் அல்லாஹ் (மொழிபெயர்ப்பு)
-அஷ ஷெய்க் M.A.M. மன்ஸ்ர்ெ. 3. கருத்துச் சுதந்திரம்.
-அஷ ஷெய்க் AB. M. இத்ரீஸ், 4 லாஇலாஹ இல்லல்லாஹி பற்றிய விளக்கம்.
(மொழிபெயர்ப்பு) -அஷ ஷெய்க் A. L. M. இல்யாஸி. 5 லாஇலாஹ இல்லல்லாஹ வாழ்க்கை வழி
(மொழிபெயர்ப்பு) -அஷ ஷெய்க் M. A. M. மண்ஸ9ர். 6. இஸ்லாத்தில் இடைச் செருகல் வேணடாம.
(மொழிபெயர்ப்பு) -அஷ ஷெய்க் AS. M. நிஸ்தார்.
(5) ஆன்மீகம்.
1. ஷரீஆவின் பார்வையில் தஸவ்வுப்
-அஷ ஷெய்க் H. 1. கைருல் பஷர். 2. நாளும் ஓத நபிகளாரின் திக்ர்கள்.
-அஷ் ஷெய்க் A.C. அகார் முஹம்மது.
18 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்

3. அல்-மஃஸ9றத் - நாளாந்த ஒதல்கள்.
(மொழிபெயர்ப்பு) -அஷ் ஷெய்க் M. அஜவத் ஹாஷிம்.
(6) வீறதுண் நபி (நபிகளாரின் வரலாறு)
1. இறைதூதரும் இல்லற வாழ்வும் (மொழிபெயர்ப்பு)
-அஷ ஷெய்க் M. A. M. மன்ஸ்ர்ெ.
2. அண்ணலாரின் அழகிய வழிமுறை. (மொழிபெயர்ப்பு)
-அஷ ஷெய்க் M. A.M. மன்ஸ்ர்ெ.
J. நபிகளாரின் மருத்துவம் (கருஞ்சீரகம், தேன் பற்றிய
விளக்கம்) (மொழிபெயர்ப்பு)
-அஷ ஷெய்க் A. L. M. இல்யாஸ்.
4. இஸ்ராவும் மிஃறாஜும் ஒரு புதிய பார்வை.
-அவர் ஷெய்க் AC அகார் முஹம்மது.
(7) தஃவாவும் நவீன இஸ்லாமிய எழுச்சியும்.
1. மனிதகுல ஐக்கியத்துக்கு இஸ்லாத்தின் அழைப்பு
-அஷ ஷெய்க் H.I. கைருல் பஷர்.
2.
தஃவாப் பணியில் பெண்கள். (மொழிபெயர்ப்பு) -அவர் ஷெய்க் M. A.M. மனிஸ்ர்ெ. VA 3. நாளைய முஸ்லிம் பெண. (மொழிபெயர்ப்பு)
-அவுர் ஷெய்க் S.H.M. ஃபழில். 4. பாதை தெளிவானது பயணிக்க யார் தயார்.
-உஸ்தாத் றஷித் ஹஜ்ஜுல் அக்பர். 5. இஸ்லாமிய இயக்க வாழ்வு.
-அஷ ஷெய்க் S.H. ஸல்மான் பாரிஸ். 6. 20ம்நூற்றாண்டு கண்ட இணையற்ற இஸ்லாமியப்
போராளி ஜைனப் அல் கஸ்ஸாலி. -அவர் ஷெய்க் A. B. M. இத்ரீஸ், 7. யார் இந்த தஸ்லிமா நஸ்ரீன்
-அஷ் ஷெய்க் S.H.M. ஃபழில். 8. மதம் ஏன் அவசியம். (மொழிபெயர்ப்பு)
-அவர் ஷெய்க் S.H.M. ஃபழில் 9. நடைமுறைக்கேற்ற இஸ்லாம் i.i. -முஹம்மது அக்ரம். B.A (நளிமி) 10. நாளைய சக்தி இஸ்லாம். (மொழிபெயர்ப்பு)
-அவர் ஷெய்க் A அப்துல் மலிக், 11. ஜாஹிலிய்யா என்றால் என்ன ?
-அஷ ஷெய்க் A, B. M. இத்ரீஸம். 12. இருபதாம் நூற்றாணர்டு ஜாஹிலியப்யா,
-அவர் ஷெய்கி M. A.M. மன்சூர். 13. பலஸ்தீன் (மொழிபெயர்ப்பு) -அஷ ஷெய்க் அப்துல் மலிக், 14. பலஸ்தீனப் பிரச்சினையும் போராட்டமும்
(மொழிபெயர்ப்பு) -அவர் ஷெய்க் M. A. M. -அவர் ஷெய்க் 2. A. ரஊப்.

Page 130
15. உலமாக்களும் நவீன சவால்களும்.
(அக்கரைப்பற்றுசாய்ந்தமருதுமுளப்லிம்காங்கிரஸ்) -அவள் ஷெய்க் M இனாமுல்லாஹீ.
16. குத்பாக்களால் ஏற்படும் சமூகத்தாக்கங்கள்.
-அவர் ஷெய்க் FM. A. அன்சார் மெளலானா
(8) இலலாமிய வரலாறு.
1. இஸ்லாமிய நாகரிகம். (வினா-விடை)i, i
-முஹம்மது அக்ரம். B.A.(நளிமி) 2. இன்றைய இஸ்லாமிய உலகு.
-அவச் ஷெய்க் A.C. அகார் முஹம்மது.
(9) அரசியல் நோக்கு.
1. இனப்பிரச்சினை ஓர் இஸ்லாமியக் கணிணோட்டம்
-அவர் ஷெய்க் M. A. M. மன்ஸ்ர்ெ. 2. சுதந்திர இஸ்லாமிய தலைமைத்துவத்தை உருவா க்குவதில் இலங்கை முஸ்லிம்கள் (அறபு மொழி) -அவர் ஷெய்க் M இனாமுல்லாஹர்.
(10) உளவியல்.
1. குழந்தை வாழ்வும் எதிர்காலமும்.
-முஹம்மது அக்ரம். B.A. (நளிமி) இஸ்லாத்தில் சிறுவர் உளவியல்.
2.
-அவர் ஷெய்க் A, B. M. இத்ரீஸ்,
3.
உங்கள் சிறார்களின் இஸ்லாம்.
-அவர் ஷெய்க் அப்துல்லாஹ்.
(11) மொழியியல்.
1. அறபு மொழி
-அவர் ஷெய்க் M. A. M. மன்ஸ்ர்ெ.
2 அல்-அறபியா லின் நாஷியின் (தமிழ்த் தொகுப்பு)
-அவர் ஷெய்க் M. A.M. மஸாஹிர்.
3. அறபு மொழி இலக்கணமும் பயிற்சிகளும்.
(மொழிபெயர்ப்பு),
-அவர் ஷெய்க் M. A. M. மன்ஸ்ர்ெ.
4. அல்அறபியா லின் நாஷியின் (தமிழ்த் தொகுப்பு)
-அவர் ஷெய்க்றபீகுள்ளாஹற்.
5. க.பொ.த (சாத) அறபு மொழி (வினா-விடை)
-அஷ ஷெய்க் S. M. அஸாஹிம்.
(12) இலக்கியம்.
1. நாளை இன்னொருநாடு. (மொழிபெயர்ப்புக்கவிதை)
-அவர் ஷெய்க் M. K. M. ஷகீப்.
2.
காணாமல் போனவர்கள். (கவிதைத் தொகுதி) -அஷ்ரப் ஷிஹாப்தீன்

நமக்கெண்றொரு யுகம் (புதுக்கவிதைக் கோர்வை)
-நகஷதிரன் செய்னுல் ஏநியாஸி.
இகம் சிந்தும் பனித்துளி (கவிதை)
A நெளபர் அலி.
நட்சத்திரப் பூக்கள். (கவிதை)
-தென்னையூரான் மஜீட் எம். றிஷாம்.
ஹாஜி நளிம் ஒரு காவியம்.
-அஷ் ஷெய்க் A. B. M. இத்ரீஸ், -அஷ ஷெய்க் PM.இர்பான்.
போர்க்காலப் பாடல்.
-பதிப்பாசிரியர் அஷ ஷெய்க் A. B. M. இத்ரீஸ்,
முக்காடு - சிறுகதைகள்.
-பதிப்பாசிரியர் அவர் ஷெய்க AB. M. இத்ரீஸ்,
தரிசனங்கள், நிலவின் நிழலில். (குறுநாவல்கள்)
-பதிப்பாசிரியர் அவர் ஷெய்க AB. M. இத்ரீஸ்,
(13) சஞ்சிகைகள்.
1.
2.
7.
8.
9.
1 O.
11 12.
13
இஸ்லாமிய சிந்தனை. (முத்திங்கள் வெளியீடு) -நளிமியப்யா வெளியீட்டுப் பணியகம் அல்-ஜாமிஆ, -நளீமிய்யா மாணவர் சஞ்சிகை. எமது பார்வை. -அவர் ஷெய்க் M. K. M. ஷகீப். மறைவழி (இலக்கிய சஞ்சிகை) அல்பிக்ர் - நளீமிய்யா மாணவர் சஞ்சிகை. சுகந்தம்.
-அவர் ஷெய்க் H. L. M. ஹாரிஸி. (உடுநுவர பட்டதாரிகள் சங்கம்.)
யாத்ரா,
-அஷ்ரப் ஷிஹாப்தீன் அம்சம் இண்டநெஷனல்,
-எஸ்.எல். மதனி
விடிவெள்ளி
சத்தியத்தீ
. இலட்சியப் பயணம்.
அல் கிலாபா. வானவில்.
(14) பத்திரிகைகள்.
1.
முஸ்லிம் நோக்கு. -நளிமியப்யா வெளியீட்டுப் பணியகம். தளிர்.
மீள்பார்வை.
eç 990,
ராபிதா செய்திமடல்.
-9 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 19

Page 131
f
8.
1O.
11.
12.
1.3.
14.
15.
16.
17.
18.
19.
2O.
冷
. لكه
22.
f لاية كض
11
25.
26.
27.
28.
č8Ž.
O.
31.
J2.
J3.
J4.
35.
36.
37.
நளீமியப்யா கலாபீடப் பட்ட
ஆணர்டிலிருந்து 1999ஆ சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு
இஸ்லாமிய சந்தைக் கோட்பாடு. தஃவாவுக்கான பிக்ஹின் நோக்கில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய முப்பெரும் பிரச்சினைகள் ஓர் ஆய்வு. இஸ்லாத்தில் கல்விக் கொள்கை. அல்குர்ஆனில் விவாதக் கலை. அழைப்புப் பணியில் முஸ்லிம் பெணர்ணின் பங்கு. அல்லாஹர் - ஆதாரங்கள் ஓர் ஆய்வு. ஜாஹிலிய்யக் காலத்தில் அரபு இலக்கியம் ஓர் வரலாற்று ஆய்வு. அல்குர்ஆனின் நோக்கில் பூரண மனிதன் - சூாத்துல் இஸ்ராவின் பதினாறு ஆயத்துக்களுக்கான ஓர் ஆய்வு. அஹமதிய, காதியானிய வாதங்களும் அதன் மூலங்களும் நோக்கங்களும் இஸ்லாமியக் குடும்பத்தில் மனைவி. அஸ்மாஉல்லாஹி அல்ஹஸ்ஸப்னாவை விளங்குவதில் ஓர் அறிமுகம். இஸ்லாத்தின் யதார்த்த வாதம் ஓர் ஆய்வு. விசுவாசிகளின் அண்னையர் ஓர் ஆய்வு. ஒழுக்கமாணர்புகளுக்கான அடிப்படை என்ற வகையில் பொறுமை.
தக்வா ஓர் ஆய்வு.
மங்கோலியப் போராட்டங்கள். கைபர் போராட்டம் ஓர் வரலாற்று ஆய்வு. இஸ்லாத்தின் நோக்கில் மனிதன். வரலாற்றுக்கு இஸ்லாமிய விவரணம் ஓர் அறிமுகம். மூன்று கட்டங்களில் குர்ஆனின் தொகுப்பு. இஸ்லாத்தின் நிலைக்களனில் பெண்ணும் கல்வியும். சுன்னாவை விளங்குவதற்கான வழிகாட்டல். இலங்கையில் பிரபல்யமான ஹதீஸ்கள் ஓர் திறனாய்வு. மத்திய காலப் பிரிவில் இஸ்லாத்தின் சிந்தனைப் பாரம்பரியம். சிலுவை யுத்தங்கள் ஓர் வரலாற்று ஆய்வு. நபிகளாரின் மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கர் ஓர் ஆய்வு.
அல் விலாயத் ஓர் ஆய்வு. சரியாக விளங்கப்பட வேண்டிய ஹதீஸ்கள். ஸிப்பீன் போராட்டம் ஓர் வரலாற்று ஆய்வு. சிந்தனையாளர் ஷஹீத் செய்யித் குதுப் இறையியல் ஒழுக்கமாணர்புகள் ஓர் ஆய்வு. இஸ்லாமிய சிந்தனையாளர் அஷஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி. முஃமின்களின் அன்னை ஆயிஷா (றழி) அவர்களின் வாழ்வும் பணியும். சட்ட மூலாதாரம் என்ற வகையில் இஜமா. கூட்டுப்பணி ஓர் ஆய்வு. குர்ஆனால் குர்ஆனை விளங்கல் ஓர் ஆய்வு. குர்ஆனை விளங்குவதற்கான வழிகாட்டல்.
120 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் அ

டப் பரீட்சைக்கு 1995ஆம் ஆம் ஆணர்டு வரையில் க்கட்டுரைகளின் தலைப்பு
38 திக்ர் ஓர் ஆய்வு. 39. ஸ்காத் - அதன் தத்துவமும் நோக்கங்களும். 40. இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்திலும் மனித
சட்டத்திலும் ஹ"தூத். 41. இஸ்லாத்தில் குழந்தைகளுக்கு அறிவூட்டல்.
ஸகாத்துல் பித்ர் ஓர் ஆய்வு. அழைப்பாளனின் பணிபுகள் இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கங்கள் ஓர் ஆய்வு. குர்ஆனில் இஸ்லாமிய அழைப்பிற்கான வழிமுறைகள் 46. இஸ்லாத்தின் நோக்கில் சூனியமும் அதன்
யதார்த்தமும் 47. இஸ்லாத்தில் அல்ஹுப். 48. 21ஆம் நூற்றாண்டு இஸ்லாத்திற்கே. 49. இஸ்லாத்தின் பார்வையில் பாவங்களும் அதன்
வகைகளும் 50. இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹீஹாப். 51. இஸ்லாமியப் பரவலின் இயல்பு. 52. அல்குர்ஆனை சுமப்பவர்களுக்கான ஆன்மீக
வழிகாட்டல்கள். 53. இஸ்லாத்தில் சர்வதேச உறவுகளுக்கான
அடிப்படைகள் 54. இஸ்லாமிய சிந்தனையாளர் அஷஷெய்க் அபுல்
ஹஸன் அலி அந்நத்வி 55 முஅத்தா மாலிக் ஓர் ஆய்வு. 56. அரசியல் தலைவர் என்ற வகையில் அல்லாஹற்வின்
துரதர். 57. சமூக சீர்திருத்தத்தைப் பாதுகாப்பதில் குற்றவியல்
சட்டங்களின் பங்கு. 58. இஸ்லாமிய ஷரீஆவில் இலகுபடுத்தல் கோட்பாடு. 59. அல்குர்ஆனின் ஒளியில் மனித நாகரிகம். 60. பலஸ்தீனப் பிரச்சினை. 61. இஸ்லாத்தின் பார்வையில் சகோதரத்துவம் 62. தப்ஸிருல் மனார் சில பார்வைகள். 63. அத்தப்லீருல் மவிளுயி ஓர் ஆய்வு. 64. சட்ட அறிஞர்களின் கருத்து வேறுபாட்டுக்கான
காரணங்கள் ஓர் ஆய்வு. 65. அல்குர்ஆன் வசனங்களில் இல்முல் முனாஸபாத். 66. சூரத்துல் பகராவுக்கு அத்தப்ஸிர் அல் மவிளுயி 67 அல் பெளசுல் கபீர் ஓர் ஆய்வு. 68. இஸ்லாத்தில் மத சகிப்புத்தன்மையும் இலங்கையில்
அதை அமுல்படுத்தலும் 69. இராணுவத் தலைவர் என்ற வகையில் இறைத்தூதர் 70. குர்ஆனில் பிரபஞ்சம். 71. அஷஷெய்க் அப்துல் காதிர் அல்ஜீலானி 72. மத்ஹபுகளின் தோற்றமும் வளர்ச்சியும்
சட்டவாக்கத்துறையில் அதன் முக்கியத்துவமும் 73. இஸ்லாத்தின் பார்வையில் ஜீவகாருனர்யம்.
:

Page 132
74. 75
76.
77.
78.
79. 80.
81.
.که
83. 84. 85.
86. 87.
88.
89. 90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98. 99. 1OO.
101. 102. 103.
104. 105. 106. 107. 108. 109. 110.
111.
112.
113. 114.
15.
116.
இலப்லாமியத் தளபதி ஸலாகுத்தீன் அல் ஐயூபி. ஷரீஆவின் பார்வையில் ஜனாசாவும் அதன் மரபுகளும். முஸ்லிம் குடும்பத்தில் கணவன் மனைவி உறவுகள் குலபாஉ ராஷிதூன் காலத்தில் அரசியல் நிர்வாக ஒழுங்கு. இஸ்லாமிய வரலாற்றைக் கற்பதற்கான அடிப்படை. இஸ்லாமிய பிக்ஹில் சட்டங்களைப் பாதுகாத்தல். சமகாலத்தில் மார்க்கத்தைப் புனரமைத்தல். இமாம் ஹசனுல் பன்னாவும் பயிற்றுவித்தல் முறைகளும் சட்டமூலாதாரங்கள் - குர்ஆன், சுன்னா. இறுதித் தூதரின் கற்பித்தல் முறைகள் சமகால இஸ்லாமிய எழுச்சி ஓர் ஆய்வு. இஸ்லாத்தில் கருத்துச் சுதந்திரம் மதத்தின் பால் மனிதனின் தேவை. உணவுப்பொருட்களில் ஹலாலும் ஹராமும் அப்துல்லாஹர் அலாம். குர்ஆனில் ஆயாத் பற்றிய கொள்கை. புனித மக்கா நேற்று - இன்று. கழா-கத்ர் ஓர் ஆய்வு. இஸ்லாமிய நோக்கில் ஜனநாயகம். குர்ஆன் சுன்னாவின் ஒளியில் தவக்குல். ரஜா. வரலாற்றில் இஸ்லாமிய இராணுவம். ஸலாத்துத் தத்தவப்உ ஓர் சட்ட ஆய்வு. குர்ஆனின் ஒளியில் இறைதூதர் வாழ்வு. (மக்கா காலம்) குர்ஆனின் ஒளியில் இறைதூதர் வாழ்வு. (மதீனா காலம்) இமாம் அலி இப்னு அபிதாலிபின் போராட்ட வாழ்வு. இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் விபசாரம் அஹற்லுல் பைத்தின் சிறப்புகளும் வரலாற்றில் அவர்களுக்கான இடமும். குர்ஆனில் பிர்அவ்னியம். இனப்பிரச்சினையும் இலங்கை முஸ்லிம்களும் சமகாலத்திற்கு இஸ்லாமிய ஷரீஆவின் பொருத்தப்பாடு. அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல், குர்ஆனில் சத்தியங்கள் ஓர் ஆய்வு. குர்ஆனில் உதாரணங்கள் ஓர் ஆய்வு. இஸ்லாமிய சிந்தனையாளர் முஹம்மத் அப்துஹ0. கம்யூனிசத்தின் அடிப்படைகள் ஓர் விமர்சன நோக்கு. மதச்சார்பின்மை ஓர் ஆய்வு. அல்குர்ஆனில் கூறப்படும் தீர்க்கதரிசிகளின் பூமி, மாதிரி சமூகம் என்ற வகையில் நபித் தோழர் சமூகம் சடவாதமும்இஸ்லாமிய சமூகத்தில் அதன் புறவயத் தாக்கமும் மேற்கத்திய நாகரிகம் ஓர் விமர்சன நோக்கு. குர்ஆன் சுண்ணாவின் ஒளியில் ஜின் இஸ்லாமிய வங்கியில் முதலீட்டுக்கான வழிகர் திருமணத்திற்கான அடிப்படைகளி ஓர் ஒப்பீட்டாய்வு.

117. இஸ்லாமியத் தீர்ப்பு ஓர் ஆய்வு. 118 இஸ்லாமிய நாகரிகத்தைக் கட்டியெழுப்புவதில்
முஸ்லிம்களின் பங்கு. 119. தொழுகையின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்கள்
திறனாய்வு. 20. இஸ்லாமிய ஐக்கியமும் அடிப்படைகளும் 121. ஹதீஸில் கலையழகும் இஸ்லாமிய பயிற்றுவித்தலில்
அதன் தாக்கமும். 122. விகாஉ ஸித்தாவின் ஒளியில் அஹாதீசுல் பிதன் 123. இமாம் அப்துல்லாஹி பின் அப்பாஸCம்இஸ்லாமியக்
கலைகளின் தோற்றத்திற்கு அவரின் பங்களிப்பும். 124. இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம். 125. அறிவைப் பரப்புவதில் அல் அஸ்கர்
பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு. 126 இறைத்தூதரின் மனிதத்துவம் 127 குர்ஆனில்நுபுவத்தின் பணர்புகள். 128. ஆயிஷா பிஸ்ஸஹிஹைனி 129. சூரத்துத்தலாக் தப்லீர். 130 கிறிஸ்தவத்துக்கும்இஸ்லாத்துக்குமிடையில்
உலுஹமிய்யத் ஓர் ஒப்பீட்டாய்வு 131. குர்ஆன் சுண்ணாவின் ஒளியில் சுவர்க்க இன்பம். 132 சமூகங்களின் எழுச்சி வீழ்ச்சிக்கான இறைநியதிகள். 133 அல்குர்ஆனில் நான்கு கலைச்சொற்கள். 134 இஸ்லாமிய சட்டத்தில் காணாமல் போனோர்கள். 135. குர்ஆனில் நபிமார்கள் அல்லாத போற்றத்தக்க
ஆளுமைகள் 136 மனித உள்ளத்தில் பாவங்களின் தாக்கம் 137 அல்குர்ஆனில் நற்செயல். 138 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதும் இஸ்லாமிய
கலைகளின் தோற்றத்திற்கான அவரது பங்களிப்பும் 139. அபுல் அஃலா அல் மெளதுரதி-வாழ்வும் சிந்தனையும் 140 இறைத்தூதரின் பிள்ளைகள். 141. ஈழத்து தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின்
பங்களிப்பு. 142 இஸ்லாமியப் பொருளாதாரத்தில் விலைக் கட்டுப்பாடு. 143 அல்குர்ஆனின் மூலம் பரிகாரம் - ஓர் பிக்ஹல
கணர்னோட்டம். 144 இஸ்லாமிய ஷரீஆவில் அல் கிஸால. 145. குர்ஆனின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்கள் ஓர்
திறனாய்வு. பகுதி -1 146 இஸ்லாமிய நோக்கில் அடிப்படை வாதமும் பயங்கர
வாதமும் 147 குர்ஆனின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்கள் ஓர்
திறனாய்வு பகுதி-2 148 உமர் (றழி) காலத்தில் இஸ்லாமிய வெற்றிகள். 149. அல்குர்ஆன் கூறும் இறைத்தூதர் போராட்டங்கள். 150 இலங்கையில் அத்வைதச் சிந்தனையின் பரவலும்
அதனால் ஏற்பட்ட விளைவுகளும் ஓர் ஆய்வு. 151. சமகால இஸ்லாமிய சிந்தனை ஓர் ஆய்வு. 152. இஸ்லாமிய நோக்கில் பெனர்ணியம்.
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 121

Page 133
2.
NAM SANDA D O RSSSO FAMA (RA
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh. Ash sheikh
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh.
A. W. MUSTHAQAHAMED
A. S. M. AKRAM
MA F ZANUL HUSSAN
T. M. NAUSHADH
A. MAI. M. SMAL
M. B. LUTHUFURRAHMAN
A. M. MHAR
A. A. M. FAIZAI.
S. MAI. M. NAFEES
M. G. RAYEESU SAM
M. A. A. SALMAAN
M. M. M. AKYAS
M. Z.M. SHHAM
MAB, MRZW
M. R. M. FRIDOUS
M. R. SADIR HASSAN
N. MA, MI NAZOOFAR
M. R. M. MUSTHAKEEMI
A. S. ASSAN
M. F. FOWZULAMEER
MTARASHEED KHAN
M.S.M. ABUL KALAM AZAD
M. H. JEBERULLAH
A. H. A. AMJADH
M. F. M. ANAS
A. L. M. AUFER
S. S. SEYEID AROOS
P. M. M. ASLAM
ʼ J. M. ASHRAFF
S. M. AZAHM
M. H. M. FASULUR RAHMAN
A. R. M. HALEEM DEEN
M. H. M. NUWAR
A. M. A. HAFEEL
A. F. M. IRFAN
M. O. M. RSHALD
A.H. IHSANUD DEEN
M. M. JAWAD
M. N. M. JAWFER
M. H.M.NALEEM
M. H. M, N YAS
U. L. NIYAS
M. S.M. RFHAN
122 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ்-ெ

DUTS WHOPASSEDOUTBETVE EN 1996-1999.
DICKWELLA
WEWELDENYA,
UKUWELA.
HAPUGASTALAWA.
MADAWALA BAZAAR.
GALLE.
COLOMBO - O.S.
KAUDENI YA.
CHLAWATURA,
NAGOLLAGODA.
HEMMATTHAGAMA.
AKURANA.
BERUWALA,
AKURANA.
BALANGODA.
COLOMBO - 4.
AKURANA.
UIDUGODA.
COLOMBO - 4.
WEERAKETYA.
CHLAW.
350/8, RAMEES VILLA, HADRAMA ROAD. ALAWATHUGODA
2005, MAN STREET, ADDALACHENAJ - 04.
24, BABUL HASSEN, ADDALACHENA.
34 B, KAHATOWITA. .
35/ AL-HDAYAROAD, AKKARAPATTU - 4. 2377. A, MEGODA KOLONNAWA, WELLAMPITIYA
49, KANDY ROAD, PASYALA.
234/2, BULUGAHATHENNA, AKURANA. 333. NITHUL GAHA KOTUWA UKUWELA.
404, FIRST LANE, SPILL ROAD, PUTTALAM 126, WATAGAPOTHA, DELTOTA
16, ST. ANTHONY S ROAD, PERIYAMULLA, NEGOMBO
B 67, HAPUGASTALAWA.
29.!, MURUTHA GAHA MULLA, GAMPOLA.
53, LEECHMAN’S LANE, SLAWE ISLAND, COLOMBO - (2.
21, STADIUM ROAD, CHINA FORT, BERUWALA
NEITHAL NAGAR, MUTHUR - 01.
269, DEL GAHLA WATA, ALULUGAMA BANDARAGAMA.
550, KURUNAGALA ROAD, WATHAUWALA. KATUGASTOA. HOLY QURAN COLLEGE, HUTHA ROAD, VALAIVHENAI
294, S.L. RIPAD, IRAKKAMAM - 03, AMPARA.
K.A. HOUSE, YONAKA PURA DICKWELLA.

Page 134
87.
88.
89.
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
S.A. M. SHAHEED
M. F. M. SNAN
H. SRAMUNEER
A.H. M. SHBLY
B.THARKAL
M.S. M. YESMN
A. C. M. YASIR
M. M. ZUHURI
A ANAS MOHAMED
P. M. M. RFAN
M. N. M. ZİYAN
M. ABDULLAH
A. ABDU MALK
M U. AVAULAMEER
M.. M.AZEM
U. L. M. AZHAR
A. H. DAWOOOMOHDEEN
MI FAIROOZ
M. R. M. FOWZY
A. H. H. HASEEN
M. A. HASSAN
F. M. IRFAN
M. L. M. SHAQUE
M. I. M. SMATHIRAMZY
L. M. A. jNNAH
M. M. M. MACKE
A. A. KYAS MOHAMED
M. M. M. MURPHLASSAL
A. NASOOHAR KHAN
M. İ. M. NIZAM
M. I. M. NYAS
M. S. S. KALEELURRAHMAN
M. A. M.RAZEEN
N.M.M. RAMEZEEN
A. C. M. RAMEEZ
A.W.M. RIMS
A. G. M. RISWAN
M. M. M. RYAS
A. L. M. SABEEL
M.T.M. THOWZEER
A. R. SAFARULLAH
N. L. M. ANAS
M. A. AWARD
A. M. M. AZAD
M. S. AHAMEDAL
M. R. K. M. NIZAR

8, SINGHA PURA, PARAGAHADENIYA, WAVE-UJDA.
124/2A, JAMAH NALEEMEAH ROAD, CHINA FORT, BERUWALA.
206, ANURADHA PURA ROAD, AMBON POLA.
WARD NO : OS, ERUKKALAMPDDY.
73; BATUPITIYA LEEMA GAHA KOTUWA.
24/11, BROADWAY ROAD, MATARA.
î6 YUSUF AVENUE, CHEINA FORT, BERUWALA
IQBAL STREET, MUTUR-06.
15, SIRMAL WATTA ROAD, MADAWALA BAZAAR.
80, AL-MANAR ROAD, MARUTHAMUNAI.
08, RAXAPANA, MALWANA
28, MALVATTA ROAD, ELUWILA, PANANDURA.
10 B/2, MAVADY ROAD, PERIYA NEELAWANAI - 03.
ALGOLLA, BOGAHAKUMBURA, VELIMADA. KosGAHASEVANA ARAKYALA KAKUNAGOLLA
SCHOOL ROAD, RAKKAMAM.
ison, KNG STREET, MATALE.
WELLAMANAL CHINA BAY.
273/A, MABERIYA UKUWELA.
48, LANE NO - OS, PUTTALAM
MIKOHIDEEN MANZY, SAMMANTHURA - 02.
73/SA, SARANNANKARA ROAD, DAHEWALA.
14/A, LAKE ROAD, SAMANTHURA.
B SS, HINAYA MANZIL KOTEGODA, HEMMATHAGAMA
45, ABUKAGAMA MONNEKULMA.
21/6, MANSOOR-ALM MAWATHA, CHENA FORT, BERUWALA.
06, M. C. H. SCHEME, MANAMBODA, UKUVELA.
t0/2, JINNAH ROAD, AKKARAPATTU - 04.
ANNAL STREET, KINNIYA - 03.
1S, SKOLAWATTE, LAGAMUWA, KADUGANNAWA.
132 A, NAZAR STREET, ADDALAICHENAI - 01.
2/A, FISHERIES ROAD, WALAICHENAI - 04.
92/A PILLAWA, PANAGAMUWA.
98, MEERA MOUSQUE ROAD, KAETANKUDY - 05.
11, WALPALUWA, THAMBUTTA.
316, MAN STEET, GANDARA.
08, HIRIMBURA LANE, GALLE.
93, N.H.S., PANAGAMUWA,
“RINOSA MANZIL. 10877, OLD POST OFFICE ROAD, KATTANKUDY - 04.
92, KANDY ROAD, THIHARIYA KALAGEDIHENA.
82, BOPTIYA ROAD, DELTOTA
71, HUREEMALUWA, RAMBUKKANA. 14, MARKKAR PLACE, MARADANA, BERUWALA
MALMADUWA ROAD, THALGAHAPTIYA, KOTTEYAKUMBURA. vIYANGALLA.
ANGUNAWILA.
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் 1123

Page 135
(b)
().
2.
3.
4.
OS.
7.
8.
09.
10.
i.
S.
}}4。
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh.
Ash sheikh:
Ash sheikh.
Ash shenkih:
Ash sheikh:
. Ash sheikh. Ash lekh;
Ash shekh.
Ash sheikh.
. Ash sheikh.
Ash sheikh:
. Ash sheikh.
. Ash aheikh.
. Ash shekh:
Ash sheikh:
. Ash sheikh:
. Ash sheikh.
. Ash sheikh:
. Ash sheikh
Ash sheikh: . Ash theikh
Ash sheikh.
S. Ash sheikh:
. Ash sheikh.
. Ash sheikh.
Ash sheikh.
S. I. M. SODEEK
N. M. M. UWAS
M. J. M. FALL
A. L. M. ARAFATH
N. M. ASHRAF
P. M. AYYOOB
S. H. BADUR DEEN
J. M. HAMJAX
M. H. M. HAREES
M. S. M. HASEEN -
M. M. HIDAYATHULLAH M. B. L.M. İHSAN
M. M. KRAM
M. S. M. IRFAN M. T. M. IRSHAD
M. B. M. ISFAHAN
A. S.M. MASEED
M. M. M MEUFTHY
M. I. M. MUNAS
M.I.M. MUNEER
MA. R. M. MUSTHAQ
A.T.M.MURSHD
M. N. M. NAJEEB
M, T. M. NUSRATH
2. A. RAUF
M. R. M. RHAN
M. L. SEYEDMOHAMED
M.A. M. SHBY
S. M. M. A. UMAR FAROOK
M. H. M. ZİYAD)
C. M. M.ZUBAR
A. L. ZUHAR KARAPPAR
U!.. K RAMEES
S. M. AYYOOB
L. M. SANOOSY
M. A. M. FAHRY
M. S. NOORULLAH
M. R. T.ARIFEEN
M. A. M. ARSHAD YUSUF
A. G. M. BAHEE
R. M. DILSHAD
A. L. M. FAZULL FARS
M. B. M. FRITHOUS
M. K. M. HMY
M. A. M. ILYAS
M. R. M. RSHAN
124 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் அ

HAPUGASTALAWA,
GALGAMUWA.
BERUWALA.
AKKARAPATTU - (2.
MAHAWELA,
MARDANKADAWALA
GALGAMUWA.
LEEMAGAHAKOTUWA.
NINTAVUR. 15.
W YANGALLA.
NINTAWUR - 5.
BERUWALA.
BANDARAKOSWATTA.
VELAMBODA.
WERELLAGAMA.
BERUWAL.
OOBAPITIΥΑ
BERUWIALA.
ERAWUR - 02.
DEL TOTA
VAAMBODA
BERWALA.
GALLE.
KAHANOWITA.
RAKKAMAM.
POLGABAWELA.
THIHARIYA
GELOYA.
PUTTALAM.
KIINNYA.
|DEITOA.
SANTHAMARUTHUj - 11.
NANGALLA.
OLUVL - 0.
BALANaODA.
BERUWALA.
BORALU wEWA GOPALAPURAM, NILAVELI.
74 B, JAMIAH NALEEMEAH ROAD, CHINA FORT, BERUWALA.
NETHANAGAR, MUTHUR - 0
MAN STREET, NEGAMA BAZAAR, NEGAMPAHA.
KANAMOOLA, MADURANKULIYA.
"BATHULBARAKATH OLDROAD. KATTANKUDY - 04.
20/1, PATHINGASKOTUWA, MAAWELA. 71s F/n. M.pcs ROAD. MAWADICHENAL VALAICHENA.
MOSQUE ROASID, MUMMANA DAMBADENYA.

Page 136
. Ash sheikh:
. Ash sheikh:
. Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
. Ash sheikh:
. Ash sheikh:
Ash sheikh:
Ash sheikh:
. Ash sheikh.
Ash sheikh:
. Ash sheikh:
. Ash sheikh:
Ash sheikh:
. Ash sheikh:
. Ash sheikh:
A. S.M. JALEES
S. A. JAZZHR MOHAMEC)
A. J, JAWAN
M. R. M. MANZIL
N.M. ABDULMUJEEB
U. L.M. NSHAD
M. E. M. RIFKAN
E. L. RZWAN
M.U.M. RISWAN
A. R. S. SAEETH
S.H. M. SHFAN
M. S. A. ZUHAR
A. L. LAFEER
M. L. M. YASIR
N. M. A. AHSAN
A. W. A. ALAV

EW MOSQUE ROAD. THALAGASPITIYA, AMBAKOTTE.
HAREEF HAJ ROAD, ADDALAICHENAI - 0.
)7, WALGAMA, MALWANA.
il 19, HIJRAGAMA, HEMMATTHAGAMA.
5, MARKET ROAD. SAINTHAMARUTHU - 08.
1/3, UYANWATTA, DEWANAGALA.
3/7, NOWFER MAWATHACHINA FORT, BERUWALA.
O: ITC, MIRAVODAI - 04. VALICHENAI. B0,BANDAWA, POLGAHAWELA. ʼ
5, LINGANAGER ROAD, TRINVOMALEE.
IYAMBALASGASKOTUWA, KEKUNEGOLLA.
55/40, MARDANA ROAD, MARDAN. BERUWALA.
|3 A, AMPARA ROAD, VARPATHAN CHENAI - 0, IRAKKAMAM.
| 1, NALEEM HAIJAR MAWATHA, CHINA FORT, BERUWIALA.
DARUS SALAM’. SPILL ROAD, PUTTALAM.
1, AMTHARAWALA, MURUTHAGAHAMULLA.
-0 அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் / 15ை

Page 137
நன
இவ்விதழை வெளிக்கொணர அனுமதித்த பணிப்ப உதவிப் பணிப்பாளர் அஷஷெய்க் ஏ. சி. அகார்மு இவ்விதழுக்குப் பொறுப்பான ஆசிரியர் குழுவினரு ஆக்கங்களை எழுதியுதவிய எழுத்தாளர்களுக்கும் நிதியுதவி வழங்கிய கணக்காளர் ஏ. எம். எம். அை வெளிக்கள வேலைகளுக்கு அனுமதி வழங்கிய வி எம். ஏ. எம் தாஹிர் ஆகியோருக்கும் அட்டை வடிவமைப்பில் உதவிய எம் பெளலர், ஏ கட்டுரைகளை ஒப்புநோக்குவதில் உதவிய எப். எப ஏ. எல். அறபாத், எம். பாயிக், எம். இஸ்பஹான் கணனி வடிவமைப்புச் செய்த ஏ. எல். எம். இர்ஷா கேசவன்தியாகராஜா அவர்களுக்கும் விளம்பரங்களைப் பெற உதவிய அஷஷெய்க் எச். தோன்றாத்துணைகளுக்கும் எமது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்
126 /அல் - ஜாமிஆ, மூன்றாவது இதழ் -

ர்றிகள்
ாளர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களுக்கும் ஹம்மத் அவர்களுக்கும் நக்கும்
ர்சார் அவர்களுக்கும் டுதியதிபர்களான ஏ. எஸ். எம். அன்சார்,
1. எமிறஷிமி ஆகியோருக்கும் ம் ஐயூப்கானி, றவூப் லெய்ன், எம். பீ எம். பிர்தெளஸி, ஆகியோர்களுக்கும்
த் அவர்களுக்கும்
ஐ. ஹைருல் பஷர் அவர்களுக்கும்
றோம்.
-ஆசிரியர் குழு

Page 138
/
ܢܠ
2Cith Che 5e C
AMANA INVESTIN
PIONEERS IN ISLAMIC
HEAD OFFICE:
480, GALLE ROAD, COLOMBO - 03. କିଳିଞ 564090,
BRANCHES:
PETTAH: 194, MAIN STREET, COLOM KANDY: 74, D.S.SENANAYAKE VEED
அறபு, தமிழ், சிங்கள, ஆங்கி
இஸ்லாமிக் இறக்குமதியாளர், ஏற்றும
77, DL
bless.
தொலைபேசி : 687191.

st Compliments y
MENTS LIMITED
FINANCE IN SRI LANKA
MBO - 11. 密380686、
)TYA, KANDY. 密08-200241,
N
الأدب
ல இஸ்லாமிய நூல்களுக்கு
புக் ஹவுஸ்
தியாளர், விற்பனையகம்
fill - BDIL, bL-9.
பெக்ஸ் : 686030.

Page 139


Page 140


Page 141
write Michael R Eades, M.D. Ma
Chicken has a very high contento but low level of harmful carbohydra insulin is life sustaining too much of
Higher level of consumption of carbo glucose and an increased insuline 200 calorie diet that is 60 percent nutritionists recommend your body wille almost 2 Cups of pure Sugar pe are generally associated with diabetes and obesity (excess fat) and elevated Food that contain high level of carb potatoes, apples
For purchasing / Ordering Protein Power visit Bir
Thimbirigasyaya
65A Galle Rd 90. Thimbirig
De rea Colom
 

essential protein (and low fat) eS (Starch). In the properamount
Causes enormous health problems hydrates leads to increased blood el. For instance, if you follow a Carbohydrate - the very one most ind up having to deal metabolically with
day. Increased insulin levels high blood pressure heart disease Cholesterol and other blood fats Ohydrates are rice, bread four
grape S etc.
Copy of the book titled na Supermar at Colpetty
or Dehiwela.
asyaya Rd, 407, Galle Rd OO5 Colombo 03