கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வித்தியோதயம் 1976-77-78

Page 1


Page 2
உங்கள் பணத்
முதலீடு
2O
வட்டி ெ
தபினுன்ஸ் கம்!
uU 1 ij, tli L
தலைை
3ஆவது மாடி, சிலிங்கே

தை எங்களிடம்
செய்து
O
O
பறுங்கள்.
|
பனி லிமிட்டெட்
நிலய வீதி, ாணம்.
தொலைபேசி 763O
à
tus :
மாளிகை, கொழும்பு.
தொலைபேசி : 23861 ம் : 19.1)

Page 3
தமிழ் இலங்கைப் பல்கலைக் கழ நுகே
THAMIL
UNIVERSITY OF SR LA
NU
 

தழாசிரியர்கள்:
ருட்சோதி வரதராசா
IDG oft pகம், வித்தியோதய வளாகம், கொடை.
MANTRAM
NKA, VIDYODAYA CAMPUS, GEGODA.

Page 4


Page 5
క్ల్లో ஆயிரத்துத் స్టో எழுபத்தேழா 毅 ஆவணித் தி: 蔓 தர்மமாம் பெ S3 தண்க்கு மிந்ந & உதித்த அத SM உணர்வு வெ உயிரைப் பழ
உத்தமச் செ
இம்மலர் சம
 
 
 
 

必
・ダの*-) 研娜娜翻源 称霸娜娜 *%..准婚姻仍

Page 6
um
With the best
C
Lankan For
28-, BOGAL
JANADHI PATI (QUEEN
COLO
O EXPORTERS OF .

Compliments
eign Trades
A BUILDING,
HI MAWATHA,
STREET)
MBO-1
ANKA PRODUCES O

Page 7
ting< fram the Patronܧܧrܢܽ)
It gives me great pleasu, of our Campus and its membe Tamil Festival.
The Tamil medium stude Faculty of Management studies Sinhala Students illustrates the that national amity and under,
I am happy to note that awaited publication among Ta
f? -- ii

ஆசியுரை-1-
re to felicitate the Tamil Manram rs on the occasion of the third
nts of our Campus are in the
and their relationship with the positively congenial atmosphere.
standing can bring about.
the Manram's Annual is a much mil medium Commerce Students.
With regards SAofessor Jusy de -Silva
President, Vidyodaya Campus, Nugegoda,

Page 8
வித்தியோ
6 If gir 60 r
 
 

தயத்துக்கு ழ்த்துக்கள்

Page 9
துணைக் காப்பாளரின் ஆசியு
வித்தியோதய வளாகத்தில் தமிழ் ெ மிகக் குறைவாக இருந்தும் “வித்தியோதய எமது மாணவர்கள் அனுகூலமாக வெளியிடுக சிகையில் இருக்கும் கட்டுரைகளின் சாரரம்ச மாணவர் சங்கங்களால் வெளியிடப்படும் சஞ கூறவேண்டும். முன்னர் வெளியிடப்பட்ட முறை வெளியிடப்படும் சஞ்சிகையும் இ; கையை நிர்வாகம், வணிகம் சம்பந்தமான கொடுத்து வாங்க ஆண்டுதோறும் ஆர்வம. தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்வதற்கு குறையும் நிலவுகின்றது.
இவ்வருடம தெயடக்கம் எமது வ அனுமதிக்கப்படாததன் விளைவாக இம் மு எமது அங்கத்தினர் பெரிதும் கஸ்டப்படுகி மாகவும் இருக்கின்றது. எமது தலைவர்களு மொழிமூல பயிற்சி நெறிகளின் முழு வி. பட்டிருக்கின்றது என்று நாம் விளங்கவேண் வித்தியோதய வளாகத்தில் தமிழ் மொழி மூ நடைபெறுவது தமிழ்மொழிமூலக் கல்வியில் மல் இருப்பதென்பது கவலைக்குரிய விடய
வணிகம் என்பது முற்காலம் தொ. இருந்து வந்துள்ளது. மற்றைய கல்வி ! போதிக்கும் போது வணிகம், பொருளியல் வர்த்தக எண்கணிதம் ஆகிய பாடங்களை நெறிகளை நடாத்துகின்ருர்கள். வித்தியோத முகாமைப் பீடத்தின் ஒரு பகுதியாக இரு வற்றை ஒன்றுடனென்று இணைந்தவை

കൃിu ഞr-2 —
SOJ
மாழி மூலம் பயிலும் மாணவர் தொகை ம்’ எனும் சஞ்சிகையை வருடா வருடமீ பது போற்றத்தக்க காரியமாகும். இச் சஞ் மும், தரமும் வேறு கல்வி நிறுவனங்களின் ந்சிகைகளிலும் பார்க்க மிக உயர்ந்ததென்றே “வித்தியோதயம்” சஞ்சிகைகளும், இம் நற்குச் சான்ருகும் அத்துடன் இந்த சஞ்சி கல்வி பயிலும் வெளி மாணவர் பணம் ாக இருக்கின்ருர்கள். ஆயினும் அவர்களின் இச் சஞ்சிகைக்குச் சில சமயம் பற்ருக்
னாகத்திற்குப் புதிய தமிழ் மாணவர்கள் மறை சஞ்சிகை வெளியீட்டுச் செலவுக்கு ன்றனர். இது ஒரு பிரச்சினைக்குரிய விடய க்கு வித்தியோதய வளாகத்திலுள்ள தமிழ் பரமும் தெரியாததனலேயே இந் நிலை ஏற். 1டியதாக இருக்கின்றது. இவ்வளவு காலமும் முலம் முகாமை, வணிக, நிர்வாக போதனை y ஆர்வமுள்ள சில வெளியாருக்குத் தெரிய4 /JD trg5 ib.
டங்கி வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டதாக ைேலயங்கள் வணிக பயிற்சி நெறிகளைப் 2, தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணக்கியல், மட்டும் அடிப்படையாகக் கொண்டு கல்வி ப வளாகம் ஒன்றிலேயே வணிகம் என்பது ந்து வணிகம், முகாமை, நிர்வாகம், ஆகிய என்று காட்டும் முறையாகப் பாடங்கள்
νii

Page 10
அமைந்துள்ளன. இது ஒரு புதிய அணுகு ( பாடங்களாகிய உற்பத்தி முகாமை, நிதி மு முகாமை, பொது நிர்வாகம், வியாபார நிர் திட்ட மதிப்பீடு ஆகியவை போன்ற தற் வசியமான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன கட்டுரைகளிலிருந்து தெளிவாகப் புலனுகும்.
ஆகவே எமது வருங்கால முகாமை அக்கறையுடையோர் எடுக்கும் எந் நட கொண்டு, மற்றைய இடங்களில் இருக்கு எடுப்பின் கல்வி அபிவிருத்தியையும், மு
வித்தியோதயம் தொடர்ந்து ஆண் வாழ்த்துகின்றேன்!

முறையாகும முறையாகச் சில சிறப்பியல்ப் காமை, சந்தைப்படுத்தல் முகாமை, ஆளணி வாகம், அமைப்பின் உளவியல், நிகழ்ச்சித் கால வணிகத்துக்கும் முகாமைக்குர அத்தியா . இது எமது “வித்தியோதயத்தி’ லிருக்கும்
, வணிகக் கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக வடிக்கைகளும் இதை அடிப்படையாகக் ம் வரையறைகளையும் சிந்தித்துத் தீர்மானம் காமை வணிக அறிவையும் வளர்க்கலாம்.
டுதோறும் வெற்றிகரமாக வெளியிடப்பட
சி. மாணிக்கவாசகர் சிரேஷ்ட வணிக விரிவுரையாளர்.
Viii

Page 11
பெரும் பொருளாளரிடமிருந்
'வித்தியோதயம்" (др6 இது எமது தமிழ் மன்ற மா6 வத்தையும் செயற்றிறனையும்
* வித்தியோதயம்” எ6 அங்கத்தவர்களின் திறமைக்க வேளையில் பல்கலைக்கழகப் பு இதழ்கள் ஒவ்வொன்றுமே இ6 களாக அமைந்துள்ளமை எனக்கு
தமிழின் வளர்ச்சி பன் தமிழிலே எடுத்து கூறுவதிற்ரு
வித்தியோதய வளாகம், நுகேகொடை 10-03-1978.

ஆசியுரை-3
தி
*ருவது இதழ் வெளியாகின்றது. ணவர்களின் தொடர்ச்சியான ஆர்
எடுத்துக்காட்டுகின்றது. *னும் இச் சஞ்சிகை எமது மன்ற 'ன சான்றக இருக்கும் அதே குமுக மாணவர் நிலையில் இதன் ன்றியமையா உசாத்துணை நூல்' தப் பெரும் திருப்தி அளிக்கின்றது.
ன் தங்கியுள்ளது.
கார்த்திகேசு சிவத்தம்பி
இணைத்தமிழ்ப் பேராசிரியர்
i

Page 12
10ஆவது ஆ பரமேஷ்-ே புரொடிக் எம். பி. ட Dreaf
ஆகியோருடன் 2 பங்குபற்
"இசைத்ெ
எம். பி. பரமேஷ். ப Lu IT 4q.u. u l 4 l u IT L l(ôi L P. இசைத்தட்டு ெ
விலே ரூபா எம். பி பரமே 14 பொப் இசைப் பாட
f மற்றுமோர் LP ரூபா 54-50இல் வெ பாடல்களை இயற்றியவர் திருகோணமலை எ
8
ஸ்தாபகர்: எம். பி. பரமேஷ்
பதிய இசைத் த
இந்திய தமிழ். இசைத்தட்டு விற்பனைக்குள் எம். பி. பரே அவர்களின் தி இசையமைப்பில் பாடல்களை இசை வெளியிட ஆ6 இதுவரை பிரபல் LIGN) L6uLu LunrL
I 04 LIFT Lois, 2n இசைத்தட்டுக் வெளியிடவுள் ஆர்வமுள்ளவ விபரங்களுக்குத் ( கொள்ளவு
பரமேஷ்-கோ R LIGJuljaga 9, ஸ்ரான்லி யாழ்ப்பான
نتيجة
ஸ்தாபகர் : எஸ். இ
 
 

|ண்டு விழா! காணேஷ் ஷன்ஸ் ரமேஷ் பரமேஷ் 3 கலைஞர்கள் 9றும்
sirp” மாலினி பரமேஷ் }கள் கொண்ட வளிவருகின்றது. 68-00,
si uniu ல்கள் கொண்ட
இசைத்தட்டு ளிவருகின்றது.
, இசையமைத்தவர்: ாம். பி. பரமேஷ்
swarara
ஸ்தாபகர் : எம். பி. கோணேஷ்
ai
றிவிப்பாளர் : K. T. செல்வகுமா!

Page 13
Wessage fram bear of the
It is with great pleast to the third issue of the annua published by the Tamil M Campus. The articles on C Accounting etc. can be of students as well as to the
I congratulate to the worthy effort and wish contin
Acting Dean,
Faculty of Management Studies and Commerce. {08-03-78.

ஆசியுரை-4-
Faculty
are I write this short message I magazine 'Vidyodayam' 'antram of the Vidyodaya ommerce, Economics, Law, great benefit to the Tamil interested general reader,
Tamil Mantram on its praiseuing success of the magazine.
፲፮«, 20 .7کےtuna singhe

Page 14
அனப
சேகர் மே
118, ஸ்ரான்லி வீதி,
பூநிமதே இரா வெங்கே
இராமாநுசர் பூமன்னு மாது பொருந்திய பாமன்னு மாறன் அடிபணிக் தாம்மன்ன வந்த இராமானுக நாம்மன்னி வாழநெஞ்சே செ
எங்கும் புகழ்பெற்ற ஈஸ்வரி பு FITUD 6ir assit, ut Faso e Lusy Ga களுக்குரிய பொருட்களையும் தலைமை நிலையம் : விரை நாதன் அன் கோ. 102/3, முதலாம் மாடி, முன்ரும் குறுக்குத் தெரு, கொழும்பு-11.

Jr. (6 lish)
யாழ்ப்பாணம்.
நீ Lng.J55wu sLD
Leioar
வணக்கம்
மார்பன் புகழ் மலிந்த துய்ந்தவன் பல்கலையோர் Fன் சரணு விந்தம் ால்லுவோம் அவன் நாமங்களே
-திருவரங்கத்தமுதஞர்.
டைவைகட்கும், மற்றும் சாய்ப்புச் னங்கள், இன்னும் உங்கள் தேவை
நயமாகப் பெற்றுக்கொள்ள யுங்கள்
வெங்கடேஸ்வரா 25, நவீன சந்தை (மேல்மாடியில்), யாழ்ப்பாணம்.

Page 15
Wessage fram !لم\e |lead of
It gives me great ple ings and a message on the of VIDYODAYAM, the Journ, the Vidy odaya Campus org« of this department.
The students in the Tc active in both academic dan of the Campus. Among thei ties, the publication of this raging and commendable o here that as a publication single academic department O. has been the only journal t. over the last three years. I our congratulations for this
VIDYODAYAM is o y limited supply of indigenou field of Commerce. I hope appear with articles of quc various disciplines it serves
I wish WIDYODAYAM
Department of Commerce,
Иid yodaya Campus, Nugeggda.
xi sí - ii

ஆசியுரை-5-
"Aée. Department.
sure to send cordial greet
occasion of the third issue all of the Tamil Mantram of inised by the Tamil students
mil strecam have been very d extra-eurricular activities * many and varied activi
Journal is a very encoune. I am proud to record of students attached to a f the Campus, VIDYODAYAM hat has appeared regularly he Tamil Mantram deserves
effort.
aluable addition to the very reading materials in the the journal will continue to tlity and relevance in the
every suitcess.
efema СИИtјеavачdena
Head, The Department of Commerce.

Page 16
வித்தியோதயத்கு
\
றேடியோ, ரேப்றெக்கோடர்,
உபகரணங்களையும் திருத்திக்
பெற்றவர்கள். அததுடன் அன்பளிப்பு பொருட்களைய பொருட்களையும், மலிவ வதில் முன்னண
ögi (3
610| , பருததித் நல்லூர்,
எமது கல்
சகல கடைச்ச
சிறந்த முறையிலும்,
உடனடியாகச் செய்
தேவி கடைச்ச6 107, ஸ்ரான்லி வீதி,

1க்கு எமது ஆசிகள்
மற்றும் சகலவிதமான மின்சார
கொடுப்பதில் நிபுணத்துவம் தரமான, நாகரீகமான ம், சிறுவர் விளையாட்டுப் ான விலையில் வழங்கு ரி வகிப்பவர்கள்.
[][ềLÎfü0 துறை புதிய வீதி,
யாழ்ப்பாணம்.
லாசிகள்!
ல் வேலைகளும்
குறைந்த செலவிலும் து கொடுக்கப்படும்.
ல் தொழிற்சாலை
யாழ்ப்பாணம்.

Page 17
தலைவர் தரும் செய்தி
நவீன வர்த்தக உலகியல் நமது நா வளர வேண்டுமெனும் பெருநோக்குடன் மு "வித்தியோதயம்' இம்முறையும் பல இன் சுடராக உருவெடுத்து, உங்கள் அன்புக் க கின்றேன்.
ஐம்பத்திரண்டு தமிழ் பேசும் மான ஆண்டு ஆவணித் திங்கள் 19ஆந் நாள் உ யடைந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் கூட, ம6 தொன்பதுக்கே அதிகரித்துள்ளது. ஏனைய நோக்குகையில் எமது தமிழ் மன்றம் குை களைக் கொண்டிருப்பினும் அதன் தமிழ்ப்ப இவ்வகையில் இம்மலர் வெளியிடுவதற்கும். அங்கத்தவரின் பணியும் இன்றியமையாதத
இலங்கைப் பல்கலைக்கழக வளாகங்க பாட நெறிகளைக் கொண்ட முகாமைப்பீட துள்ளது. வருடாவருடம் ஆயிரக் கணக்கா6 அனுமதிக்கப்படும் வேளையில், தமிழ் மாண பது கவலைக்குரியது. சென்ற ஆண்டு அனு மாணவர்களும் குறுகிய நேர அறிவித்தலு பனுப்பப்பட்டார்கள். பரிதாபம்! இக் குை மறுக்கப்பட்டுள்ளது. இதனுல் தமிழில் மு எமது எதிர்காலச் சந்ததி இழந்துவிட்டது
எவ்விடர் வரினும் 'தமிழ்ப் பணி செ உயரிய நோக்குடைய செயற்குழு உறுப்பி யரு ஆக்கபூர்வமான முயற்சியினுல் உதிக் உங்கள் மத்தியில் செல்வாக்குப் பெற வேண் மன்றத்தைப் பொறுப்பேற்றுத் தொடர்ந் னருமைத் தோழர்களை வாருங்கள் - வந்து விடைபெறுகிறேன்,
வாழ்க தமிழ் 1 வளர்க வித்தி
ந

- செய்தி-1
ட்டுத் தமிழ் மக்களின் வர்த்தக அறிவும் தலிரு சுடர்களிலும் அறிவொளி பரப்பிய ானல்களின் மத்தியில் மூன்ருவது அறிவுச் ரங்களில் தவழ்வதைக் கண்டு பூரிப்படை
எவர்களின் பெருமுயற்சியினுல் 1974ஆம் தயமான எமது மன்றம் நாலாவது வயதை ன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஐம்பத் வளாகத் தமிழ் மன்றங்களுடன் ஒப்பு றந்த எண்ணிக்கை யுடைய அங்கத்தவர் ணி எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை.
விழா எடுப்பதற்கும் எமது ஒவ்வொரு ாயிற்று.
ளில் எமது வளாகத்தில் மட்டுமே ஆறு ம் சகல வசதிகளையும் கொண்டு அமைந் ன மாணவர்கள் இம் முகாமைப் பீடத்திற்கு வரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப். மதி வழங்கப்பட்டிருந்த பதினன்கு தமிழ் டன் இரு வேறு வளாகங்களுக்குத் திருப்பி றவான எண்ணிக்கையினரின் அனுமதி கூட காமைக் கல்வி பெறும் பெரு வாய்ப்பை
ய்வோம்' 'தமிழை வளர்ப்போம்" என்ற கார் உதவியுடன் இதழாசிரியர்களின் இடை கும் "வித்தியோதயம்" வாசகர்களாகிய ண்டும் என வாழ்த்தும் இவ்வேளையில், தமிழ் து தமிழ்ப்பணி புரியக் காத்திருக்கும் என் நற்றமிழ்ப் பணி புரியுங்கள் என்று கேட்டு
யோதய வளாகத் தமிழ் மன்றம் ! ன்றி!
மூ. சுப்பிரமணியம் தலைவர்

Page 18
அன் உங்கள் உற்பத்திப் பொ உங்களுக்குத் தேவையா வாங்கவே இன்றே விஜய
6ľGÍD. I. FIIfi 72, 4ஆம் குறுக்குத் தெரு,
கொழும்பு-11.
தொலைபேசி: 2264o
வாழ்த்துக்கள்
அழகிய தங்க தகைகளுக்கு சி. செல்லையா அன் சன்ஸ் ஒருமுறை விஜயஞ் செய்தாவ் உண்மை விளங்கும்
இன்றே விஜயஞ் செய்யுங்கள்
O
சி.செல்லேயா அன்சன்ஸ்
22; கஸ்தூரியர் விதி,
யாழ்ப்பாணம்.

Iளிப்பு! ருட்களை விற்கவேண்டுமா? ன பாவனைப் பொருட்களை ண்டுமா? ஞ் செய்யுங்கள்
அன் கம்பனி 193, மின்சாரநிலையவிதி, யாழ்ப்பர்ணம். தொலைபேசி: 7o25 1
Space Dogated by
w
N hnad Photographers
Sir. Pon. Ramanathan Road,
CHUN NAKAM.

Page 19
உப தலைவரின் செய்தி
பிறந்தோம் - வாழ்ந்நோம் - இ ழால் வாழ்கிருேம் என்ற ஆன்ம திருப் புரட்டும் சந்தர்ப்பத்தில் பெற்றுக்ெ
* மலர் வளர வாழ்த்துகிறேன் கீழே ஒரு கையெழுத்துப் போட்டுவி என்னை நான் மறைத்துக் கொள்வத ஒரு துறையில் புகழுக்குரியதாகிவிட்ட பலர் ஆவலாக இருப்பர். அவர்களு கூறலாமென நினைக்கிறேன்.
இதயத்தை திறந்து வெளிப்பை ணிக்கையை பொறுத்தளவில் நாம் குறைந்த எண்ணிக்கையில் இருந்தும் பாயவிட்டு அதன் வெளிப்பாடா! நடாத்தி வருகிருேம்.
இம்மலரின் பணியில் நாம் ெ பாதித்துக் கொண்ட அனுபவங்கள் கள். எத்தனை ரகமான மனிதர்கள் அடிநிலை வரை முற்றுமுழுதாக இல் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இத் து
திட்டம், தீர்மானம், கட்டுப்பா கொள்கைகளின் பின்னணியில் உற்ப
புத்திஜீவித நுகர்வோரைத் திருப்தி டம் இருந்து விடைபெற்றுக் கொள்

செய்தி-2
றந்தோம் என்றில்லாமல் நாமும் தமி தியை, நீங்கள் எமது "வித்தியோதயத்தை" காள்கிருேம்.
என ஒரிரண்டு வார்த்தைகளில் கூறி டலாம். ஆனல் அப்படிச் செய்வது ாகும். ஏனெனில் எமது மலர் ஏதோ தால், அதைப்பற்றி’அறிய அக்கறையுள்ள தக்காக நான் ஓரிரண்டு வார்த்தைகள்
டயாகக் கூறினல், எமது மாணவர் எண்
மிகவும் துர்ப்பாக்கிய சாலிகள். மிகக் எமது முயற்சியைப் பல கலைகளிலும் க எமது கலைவிழாவை ஆண்டுதோறும்
பறுகின்ற அறிவுத் திருப்தியை விட, சம் உண்மையில் வாழ்க்கையின் ஒளி விளக்கு சமுதாயத்தின்-உயர் மட்டத்தில் இருந்து லாவிட்டாலும் மேலோட்டமாக அறிந்து ாய பணியின் மூலம்தான் கிடைக்கிறது.
டு, ஒழுங்குபடுத்தல் என்ற முகாமைத்துவ த்தியாகிய "வித்தியோதயம் எண்ணற்ற ப்படுத்தும் என்ற நம்பிக்கையில் உங்களி கிறேன்.
யோசேப் ழஜன்கோவ்
2. LUதலைவர்
xvii

Page 20
With the best
fro
PenínSUlla
Df C
25, Stanley Road,
Phone 7657

Compliments
GroUp Ompaníes
JAFFNA.

Page 21
இதழாசிரியர்களின் சிந்தன.
" வணிக நிர்வாகக் கல்வியை வளமுற வைப்போம் இம்மன்
என்ற உயர் இலட்சியத்தை உயிர் மூச்சா மன்றத்தின் ைெளியீடான 'வித்தியோதய தவழவிட்டுள்ளோம். அதன் அழகை, அ. இருக்கும் தேனினைப் பருகத் துடித்துக் கொள
* புத்தம் புதிய கலைகள் -
பூதச் செயல்களின் மெத்த வளருது மேற்கே --
மேன்மைக் கலைகள்
சொல்லவும் கூடுவ தில்லை , சொல்லுந் திறமை த மெல்லத் தமிழினிச் சாகும் - மேற்கு மொழிகள் பு
பாரதி அன்று கூறினன். இன்று அ மேற்கே வளர்ந்துள்ள-வளர்ந்து வரும் ே வளர்க்க வேண்டும். அவைகளை அழகுறச் வேண்டும். இதனைப் பாரதி எடுத்துக் கூறி கூட ‘தமிழுக்கும் அமிழ்தென்று பேர்’’, ! மேலேயே அடிவைக்கும் நம்மவர்கள் அம் முன்வரவில்லை. பழம் பெருமை பேசிப் பே யாது செய்தோம் ?
தாய்மொழிக் கல்வியைத் தவமிருந்து தமிழ் மொழி மூலம் உயர்கல்வி கற்கும் நுட்ப, விஞ்ஞான, கணிதத் துறைகளில் த அமைந்துள்ளது. இதையெல்லாம் நம்'தமி நேரமில்லை. ஈராயிரம் வருடங்களுக்கு முை ஏடுகளைப் புரட்டிப் புரட்டி இனிமை கா தமிழ் இலக்கியத்தை வளர்ப்போன் மட்டு தமிழைப் பல்வேறு துறைகளிலும் வள "தமிழை வளர்க்கின்ருேம்", "தமிழ் வளி வார்த்தைகளாக அமைய முடியும். ஆணுை ளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன?
ஒரு சில மன்றங்கள இப் புதய து செலுத்தினும் அவையும் பூரணத்துவமற்ற என்ற கட்டுக்கோப்புகளைத் தாண்டிப் புதி அமைக்க விரும்பாமை அவற்றின் பூரணத்

கருத்துரை -
பிலிருந்து.
த் - தமிழில் ானில் *
கக் கொண்டு செயற்படும் எமது தமிழ் ம்' மூன்ருவது மலரை உங்கள் கரங்களில் தன் இதழ்களின் மென்மையை, அதனுள் ண்டிருக்கும் உங்களுடன் சிலவார்த்தைகள்.
பஞ்ச நுட்பங்கள் கூறும்; அந்த தமிழினில் இல்லை
அவை மிழ்மொழிக் கில்லை; - அந்த
விமிசை யோங்கும்?
து ஒரு தீர்க்கதரிசன உ ண் மை யா கும். மேன்மைக் கலைகளை -துறைகளைத் தமிழிலும் சொல்லும் திறமையைத் தமிழுக்கு ஊட்ட
இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் "தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ' என்று அடி மேன்மைக் கலைகளைத் தமிழில் வளர்க்க சி மகிழ்ந்தோமே ஒழிய பைந்தமிழ் வளர
பெற்றுப் பல்லாண்டுகள் ஆகியும்கூட இன்று
மாணவருக்கு வணிக, நிர்வாக, தொழில் மிழ்ப் பாடநூல்கள் இல்லாமை, பேரிடராக் ழ் வளம்படுத்தி"களுக்கு நினைத்தும்பார்க்க ா மடித்துவைத்த இராச இராசன் காலத்து ண்பதில்தான் அவர்கள் கவனமெல்லாம். ம் தமிழை வளர்த்தவனுகிவிட முடியாது. ர்க்க முன்வரவேண்டும். அப்போதுதான் rர்ந்துள்ளது” என்பவை அர்த்த புஷ்டியுள்ள ) எத்தனை மன்றங்கள் இப்புதிய துறைக
றைகளின் வளர்ச்சியில் ஒரளவு அக்கின்ற் தாகவே காணப்படுகின்றது. மரபு, ஒழுங்கு ய திசையில் தமது வளர்ச்சிப் பாதையை துவமின்மைக்கு ஒரு காரணம் எனலாம்.
ix

Page 22
இம் மலரை விமர்சிக்கும் சிலர் இது அர்த்தமற்ற கேள்வியொன்றைக் கேட்டு செலவு. இதன் ஒவ்வொரு இதழ்களின் உணர்த்தி நிற்கின்றது. இந் நிலையில் அற வொரு இதழையும் புரட்டும் அத்தனை மா என்ற பெயரால் ஏமாற்ற விரும்பவில்லை. திருப்பி எழுதும்போது இவ்வொரு மலர தூரம் இலக்கியம் குன்றிவிடும்? இவற்றினை
மேலும் சிலர் இது ஒரு 'தமிழ் ம "வணிக மன்றம் அமைத்து அதன்மூலம்
காதில் கேட்கின்றது. இவர்களுக்கு ஒரு : என்ன என்பது பற்றிய அறிவு பூச்சியம் செய்வதுதான் தமிழ் மன்றம்' என்பது இ டும்! ஏடுகளைப் புரட்டி இனிமைகாண்போ இவர்களுக்கு இச் செய்தியில் முதலில் காட நியாயமில்லைத்தான். போகட்டும்!
இத்தகைய பல்வேறு குறுக்கீடுகளுக் தூய நறுமணத்தை - தமிழ் மணத்தைப் மூன்ருவது LDGVASD இப்போது உங் ளோம். தமிழுக்கு முற்றிலும் புதிய து!ை வியல், கணக்காய்வு, சட்டம் போன்ற து
எமது முதலிரு மலர்களுக்கும். அறிஞ கிடைத்த வரவேற்பு-குறிப்பாக மாணவ வரவேற்பு எம்மைப் பிரமிக்க செய்ததுடன் இப்பணியைத் தொடரத் தூண்டிற்று. மா புக்க்ள் இம்மலருக்கு புது மெருகூட்டுகின்ற அறிவுப் பசிக்கு இதைவிட நாம் அளிக்கக் தென்றே நம்புகிருேம்.
பிற மொழியில் உள்ள் "நல்லறிஞர் தல் வேண்டும்' எனும் எமது பெருவிருப் பதி அவர்களின் கட்டுரையின்ை மொழிடெ
*" வித்தியோதயத்துக்கு எழுதுங்கள்’’
வர்களிடமும் வேண்டியபோது, எமக்கு வ அவை எல்லாவற்றையும் பிரசுரிப்பதற்கு பல மாணவர்களது-ஏன் சில விரிவுரையா முடியாமல் போனமைக்காக வருந்துகின்ே
மலருக்கு அழகூட்டினுேம் 1 மண்ம் களில் மணங்கமழ விட்டுள்ளோம்! எமது பயன் பெறுவது உங்கள் கடமை. மலரை இதழ்களிலும் உங்கள் அறிவுப் பசிக்கு ே கிடைக்கும்!
烈 "வித்தியோதயத்தின்' * கதிரொளிக செய்யட்டும் !

ஒரு மலரா அல்லது பாடநூலா என்று வைக்கின்றனர். அதிகரித்துவிட்ட அச்சுச்
அருமைப்பாட்டையும், அவசியத்தையும் வுப் பசிக்கு இரைதேட ஆவலுடன் ஒவ் ணவர்களின் அபிலாசைகளையும், இலக்கியம்
அத்தன் மலர்களுமே அதனைத்"திருப்பித் வது அதனை வரையாவிட்டால் எத்தனை ஏனே சிந்கிக்கத் தவறிவிடுகின்றர்கள்!
ன்றம்' வெளியிடும் மலரல்ல. இதனை ஒரு வெளியிடலாம் என் பரிகசிப்பதும் எமது தமிழ் மன்றத்தின் பணி அதன் கடப்பாடு ான்றே சொல்ல வேண்டும். 'இலக்கியம் இவர்கள் வேதாந்தம். இரக்கப்பட வேண் ரின் ஒலியில் செவிகளைத் தீட்டிக்கொண்ட ட்டிய பாரதியின் பாடல்களைக் கேட்டிருக்க
கிடையில் வணிக, நிர்வாகக் கல்விக்கென பரப்பவென மலர்ந்த 'வித்தியோதயம்' கள் கரங்களில் மணங்கமழ வைத்துள் றகளான கணக்கியூல், முகாமையியல், கிரய றைகளுக்கு முதன்ன்ம அளித்துள்ளோம்.
நர்கள், வணிகர்கள் ஆகியோரிடம் இருந்து சமுதாயத்தில் இருந்து கிடைத்த அமோக ர், மேன்மேலும் உற்சாகப்படுத்தி எம்மை ணவர்களின் தரச் சிறப்பு மிக்க படைப் றன. வளர்ந்துவரும் மாணவ சமுதாயத்தின் கூடிய போஷாக்கு வேறு இருக்க முடியா
ச்ாஸ்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த் பின் நிறைவேற்றலே, எமது பதில் பீடாதி யர்த்து இம்மலரில் அளித்துள்ளோம்.
என நாம் விரிவுரையாளர்களிடமும், மாண ந்து சேர்ந்த ஆக்கங்களோ ஏராளம், ஆணுல் இம்மலர் இடம் கொடுக்கவில்லை. இத்ஞ்ல் ார்களது கட்டுரைகளைக்கூட நாம் அச்சேற்ற g?tb.
சேர்த்தோம் ! இப்பொழுது உங்கள் கரங் பணி நிறைவேறியது! மலரை நுகர்ந்து இதழ் இதழாகப் புரட்டுங்கள்! ஒவ்வொரு வண்டிய ஊட்டச் சத்துமிக்க உண்வுகள்
ள் உங்கள் அறிவுச் சுடன்ர்ப் பிர்காசிக்கச்
F. (5. Gavir
5T. 6QJy,5yiv8FAT (இணை இதழாசிரியர்க்ள்ர்

Page 23
G. A. O., B. A.
First in Law, LL. I
First in Commerce,
I. A. B., I. A. A. ( G. C. E. (OIL - AI கலே, விஞ்ஞான, வர்த்த:
The Jaffna
தலைமை அலுவலகம் :
பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
குறிப்பு: மேற்படி துறைகளுக்
ாடாத்தப்படுகின்றது.
a-iv

3.
B. Com.
Part I & II),
.(هرL
க பாடங்களுக்கு
Law Centre
ur :
B. M. C. ஒழுங்கை,
(வெலிங்டன் தியேட்டர் சந்தி) 1
மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.
கு தபால் கல்விச்சேவையும்

Page 24
உதயத்தில் மலர்ந்
தலைப்பு கணக்கியல் :
மூலதனத் திட்டங்களின் இலா இயல்பு முறை
ஒன்றித்த கணக்குகளும் கம்ப சட்டிரு
கணக்கீடும் கணக்கீட்டுக்
கற்பிதங்களு கணக்கியலில் சில நுண்ணுய்வு
முகாமையியல்:
முகாமையில் அதிகாரக்
கையளிப்பு - ஒரு கண்ணுேட்
சந்தைப்படுத்துதற் திட்டமும்
அதன் முக்கியத்துவரு
வணிகவியல் :
வங்கிக்கும் வாடிக்கையாளருக் இடிையேயுள்ள உறவு மு ஏற்றுமதி இறக்குமதியில் வர்த் மாற்று வீதத்தின் தாக்
பொருளியல் :
இரட்டை அமைப்பும்
பொருளாதார அபிவிருத்தி
கைத்தொழிற்துறை - பொரு தார அபிவிருத்தியில் அதன் ப
Χ

தவைகள் . . . . .
தந்தவர் தாள் இடம்
கள் டி. ரி. இராஜரட்ணம் 37-39 னிச் மும் ச. தம்பிப்பிள்ளை 87 - 89
ரும் க. முருகேசு 107-110 கள் எஸ். இராசதுரை 11 59 67 11 ستمعي
டம் செல்வி மீரா சவுரிமுத்து 73- 77
மும் வ. அன்ரனி 127-136
கும்
றை இ. பாலசிங்கம் a 14
தக 慢 கம் து. சந்திரகுமார் 181 - 86
பும் கலாநிதி வி. நீத்தியானந்தம் 17- 34
ங்கு எம். யூ. எம். ஸனுஸ் 67-70
xii

Page 25
Eg
குறைவிருத்தி நாடுகளின் இை
கொள் இலங்கையின் வேலையின்மையி நோக்கும் வேலை நிறை கொள்கையின் பங்கு பொதுத்துறை நிறுவனங்களில் விலையிடற் கொள்கைச
சுதந்திர வர்த்தக வலையம்
-ஒர் அறிமு: இலங்கையில் விவசாயத்துறை
தொடர்பான போக்குவரத் முயற்சியும் சந்தைப்படுத்தலு
இலங்கை நாணயத்தின்
மீள் மதிப்
அரசியல்:
1977ஆம் ஆண்டுப் பொதுத்தேர் முடிவுகள் - ஒரு கண்ணுேட்
சிறுகதை:
" זחס9itbu **
சட்டவியல்:
கம்பனிகள் சட்டம்
மன்றச் செய்தியும் மரபும்

றக்
கை கே. எஸ். நடராசா 79- 85
| 6 ]வுக் நம் சி. சிறீஸ்கந்தராசா 91 5 0 1 س
நள் கே. ஏ. முன்சிங்க 13-125
கம் இ. இராசசுந்தரம் 1 39 143-سنہ
ந்து
லும் கலாநிதி க. சுந்தரலிங்கம் 145-155
பீடு மொஹமட் இல்லியாஸ் 169-178
தல் டம் ஆர். ஜெயரத்தினரரசா 43- 63
என். சரவணபவன் 1 99 -4 20 ميس
செ. தங்கராஜா 207-228
iii

Page 26
With the Bes
fro
Dehiwela M
194, GALL
V− DEHIW T'Phone : 07-7861
அன்பளிப்பு - உங்களுக்குத் தேவையான ஆங்கில மருந்து வகைகளை
மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
சிங்கம்ஸ் பார்மஸி
25, மின்சார நிலைய வீதி,
uTupturssor id.

; Compliments
71,
)
edical Stores E ROAD,
WELA.
The Best Wishes
General Suppliers, Commission Agents,
Dealers in Leather Goods,
y
Universal
Agencies
I 34, ELIE HOUSE ROAD,
соLомво-15.
Phone , 35747

Page 27
- வர்த்தகவியல்
வங்கிக்கும் வாடிக்கையா
இடையேயுள்ள உறவு மு
G. unt Susiasti, A. I. B. (Lond.) Dipl. Shipping (Lond.) வங்கிப் பரிசோதகர் - மத்திய வங்கி
பகுதி நேர விரிவுரையாளர் வித்தியோதய வளாகம்

ளருக்கும் 1றை
வங்கி :
வங்கி என்ற சொல்லை ஆராயும் பொழுது இதற்கு சட்டரீதியாக ஒரு முறையான வரைவிலக்கணம் கொடுக்கப் படவில்லை. இலங்கை மாற்றுண்டியல் சட்டத்தை ஆராய்ந்தால் இதில் வங்கித் தொழில் என்ற சொற்களையே உள் ளடக்கி யுள்ளது. எனினும் இத்தகைய சொற்களுக்கும் இச் சட்டம் ஒரு வரை விலக்கணம் கொடுக்கவில்லை. எனவே இச் சட்டத்தைப் பொறுத்தவரைவங்கி தொழி லில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் எவ் வெவ் தொழில்களில் ஈடுபட்டு இருக்கின் றனவோ அத் தொழில்களையே வங்கித் தொழில்களாகக் கொள்ள வேண்டியுள் ளது. கம்பனிச் சட்டமோ நாணயச் சட்டமோ வங்கி என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் கொடுக்கவில்லை. கம்ப னிச் சட்டம் வங்கித் தொழில் கம்பனி என்பது காசோலை, உண்டியல், கட்டளை எ ன் பவ் ற் றி ன் மூலமாக திரும்பப் பெறுவதற்கு உட்பட்ட நடைமுறைக் கணக்கில் அல்லது வேறு விதத்தில் பண வைப்புக்களை ஏற்பதை தனது பிரதான தொழிலாகக் கொண்டுள்ள ஒரு கம்பனி யைக் குறிக்கின்றது. அத்துடன் கம்பனிச் சட்டம் மேலே கூறப்பட்ட தொழில்க ளுடன் அச் சட்டத்தின் பகுதி 33 3(1) - (7)இல் கூறப்பட்டுள்ள தொழில்கள் எவற்றிலேனும் ஈடுபடலாம் எனவும் கூறு கின்றது. w ر
நாணய சட்டத்தில் வங்கி என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் கொடுக்கப் படாதிருப்பினும் வங்கி நிறுவனம் என் பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி நிறுவனம் என்ருல் :

Page 28
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
(i) வர்த்தகவங்கிகள் (i) அரசாங்கத்தின் முகவராகவோ அல்லது வேறு எவ்விதமாகவோ இயங்கி வைப்புக்களைப் பெற்றே அல்லது கடனைக் கொடுத்தோ இயங்கும் ஒரு நிறுவனம். (i; நிதிமந்திரியினல் "வங்கி நிறு வனம்” என பிரகடனப் படுத்தப் பட்ட ஏதாவதொரு நிறுவனம். இதே சட்டம் வர்த்தக வங்கி என்ப தற்கு பின்வரும் வரைவிலக்கணத்தைக் கொடுக்கிறது :
தனிப்பட்ட ஒரு ஆள் அல்லது ஆட்களைக் கொண்ட ஒரு உறுப்பானது இலங்கையில் மத்திய வங்கி நீங்கலாக பொது மக்களிடம் இருந்து கேள்வி வைப்புக்களை ஏற்று அல்லது உரு வாக்கி தொழிற்படுமாயின் அது ஒரு வர்த்தக வங்கியாகும். வங்கித் தொழிலைப் பொறுத்த வரை யில் மிக முக்கியமான சட்டம் நாணயச் சட்டமே. ஆகவே இலங்கையில் வங்கி எனப்படும் பொழுது அது ஒரு வர்த்தக வங்கியையே குறிக்கும். எனவே இக் கட்டுரையில் இவ்வாருன வர்த்தக வங்கி களுக்கு ம் வாடிக்கை யாளர்களுக்கும் இடையேயான உறவையே ஆராயமுனையப் பட்டுள்ளது. வாடிக்கையாளர் :
வாடிக்கையாளர் எனும் பதத்துக் கான கருத்தை ஆராயும்பொழுது அது வங்கிகளைப் பொறுத்தவரை முக்கியமான தாகத் தோன்றுகிறது. இந் நாட்டில் உதாரணமாக இலங்கையில் சில வங்கி களே இயங்குகின்றபொழுதும் அவற்றின் வாடிக்கையாளரோ பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றனர். வங்கிகள் சார்பான சட் டங்கள் வாடிக்கையாளர் என்ற பதத் துக்கு வரைவிலக்கணம் கொடுக்கவில்லை. எனவே வங்கியுடன் தொடர்பு கொண் டுள்ள எல்லோரையுமே வாடிக்கையாளர் எனக் கொள்ளலாமா என்பது கேள்விக்

| இ. பாலசிங்கம்
குரியதொன்ரு கும். ஒரு வங்கியில் நட வடிக்கைகள் செய்வதற்காக பலர் தின மும் அவ் வங்கிக்கு செல்கிறர்கள். அவ் வாறு வங்கியுடன் நடவடிக்கையில் ஈடு படும் எல்லோருமே அவ்வங்கியின் வாடிக் கையாளர் எனக் கொள்வது முறை யாகுமா என்பதை ஆராயவேண்டும். இதற்கு ஆதாரமாக மாற்றுண்டியல் சட் டத்தில் குறுக்குக் கோடிடப்பட்ட காசோ லையைப்பற்றிய பகுதியில் வாடிக்கையாளர் என்ற சொல்லுள்ளது. அவ்வாறு அச் சட்டத்தில் அமையப் பெற்றுள்ள இச் சொல்லை ஆராயும்போது வாடிக்கையாளர் என்பதற்கு பின்வரும் இரண்டிலொரு வரைவிலக்கணமே பொருந்தும் எனக் கொள்ளலாம்,
(i) 'ஒரு வங்கியில் ஒரு கணக்கை
ஆரம்பித்துள்ள ஒருவர்' ti) 'ஒரு வங்கியில் ஒரு கணக்கை ஆரம்பித்து அக் கணக்கைப் பாவித்து வந்துள்ள ஒருவர் ‘’ மேலே கூறப்பட்ட வரைவிலக்கணங் களில் ஏதாவது ஒன்றே சரியாக இருக்க வேண்டும். இவற்றை மீண்டும் ஆராயும் பொழுது சட்டரீதியாக தொடர்பை உண் டாக்குகின்ற நிலையில் ஒருவர் ஒரு வங்கி யில் வாடிக்கையாளராக இருக்கலாம் எனக் கொள்ளலாம். ஆகவே மேலே கூறப்பட் டுள்ள வரைவிலக்கணம் (1)இல் உள்ள கூற்றே பொருத்தமாக உள்ளது எனினும் வாடிக்கையாளர் என்பதற்கு சாதாரண மான வழக்கத்தில் ஏதாவது ஒரு வியா பார நிலையத்துடன் வழமையாக தொடர்பு கொண்டுள்ள ஒருவர் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் எனக் கொள்வது முறை. எனவே பின்வரும் நிலைகளில் ஒரு வங்கி யுடன் தொடர்பு கொள்ளும் ஒருவரை சாதாரண வழக்கப்படி வாடிக்கையாளர் எனக் கொள்வது முறையாகுமா.
1. பலமுறை ஒரு வங்கிக்கு சென்று காசோலைகளை மாற்றி, அவ் வங் கிக்குத் தெரிந்த ஒருவர்

Page 29
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
2. ஒரு வங்கியில் கணக்கை ஆரம்
பித்த நிலையில் உள்ள ஒருவர்.
3. ஒரு வங்கியில் கணக்கை ஆரம் பித்து அதைப் பல காலம் பாவித் துள்ள ஒருவர்,
இவற்றை ஆராயும் பொழுது எழுத்து மூலச் சட்டங்களினூடாக இவற்றிற்கு முறையான ஒரு தீர்வைக் காண முடியாது. வழக்கு மூலச் சட்டங்கள் மூலமே இவற் றுக்கு முற்ையான ஒரு தீர்வை காணக் 3,9-u5IT 5 - 66ir 67 g). Great Western Railway V London & County Bank (1901) என்ற வழக்கில் மாற்றுண்டியல் சட்டத்தில் வாடிக்கையாளர் எ ன் ற சொல்லுக்கு வரைவிலக்கணம் இல்லாத பொழுதிலும், இப்பதம் பிரசித்தம் வாய்ந்த தொன்முக இருக்கின்றபடியால் ஒருவரை ஒரு வங்கி பின் வாடிக்கையாளர் எனக் கொள் வதற்கு அவருக்கு அவ்வங்கியில் ஒரு நடை முறைக் கணக்கு அல்லது ஒரு வைப்புக் கணக்கு அல்லது அது போன்ற உறவு முறை இருத்தல் வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ் வழக்கில் முக்கிய மாக ஆராயப்பட்டது என்னவெனில் ஒரு வங்கியில் வழமையாக காசோலைகளை மாற்றும் ஒருவர் அவ்வங்கிக்கு அறிமுக மானவராக இருந்தாலும் அவர் அவ் வங்கியின் வாடிக்கையாளரா என்பதே யாகும். மேலே விபரிக்கப்பட்ட தீர்ப்பின் படி அவ்வாருன ஒருவர் வாடிக்கையாள ராக இருக்க முடியாது என்பதேயாகும்.
அடுத்து ஒருவர் கணக்கை வங்கியில் ஆரம்பித்த உடனே அ வ் வங்கி யின் வாடிக்கையாளர் ஆகிருரா ? அல்லது அக் கணக்கை பலகாலம் பாவித்தபின்பே வாடிக்கையாளர் ஆகிருரா என்பதே பாகும். இதற்கான தீர்வு Ladbroke w Todd {1914) என்ற வழக்கில் கூறப்பட் டுள்ளது. இவ்வழக்கில் ஒருவர் ஒரு காசோ லையை ஒரு வங்கியில் செலுத்தி அதை வங்கி அவரது கணக்குக்கு ஒன்று திரட்டு வதற்காக எப்பொழுது ஒப்புக் கொள்

இ. பாலசிங்கம்
கிறதோ அப்பொழுதே வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையேயான தொடர்பு தொடங்குகிறது என்பதாகும். இதன்படி ஒருவர் வாடிக்கையாளர் ஆவ தற்கு வங்கியில் இருந்து தான் முன்பு வைப்பு செய்த பணத்தை (காசோலையோ நாணயமோ) மீளப் பெறுவது முக்கிய மல்ல. அவர் செலுத்திய பணத்தையோ காசோலையையோ அவர் ஆரம்பித்துள்ள கணக்கிற்கு வங்கி எப்பொழுது வைப்பாக பெறுகின்றதோ அதேநேரத்திலேயே அவர் அவ் வங்கியின் வாடிக்கையாளராகின்ருர்,
மேலே விபரிக்கப்பட்ட 1914ஆம் s2,6ö7 G8 QJupá; 5IT6u Ladbroke V Todd என்பதனைத் தொடர்ந்து 1920ஆம் ஆண் 14. á Commissioners of laxation V English Scottish & Australian Bank 6T65, so 6 pd;36) வாடிக்கையாளர் என்ற சொல் குறிக்கும் உறவில் காலம் முக்கியமில்லை. ஆனல் ஒரு வரது பணத்தை எப்போது ஒரு வங்கி ஏற்று அதற்கு எதிராக அவன் வரையும் கா சோலைகளைச் செலுத்துவதற்கு ஒப்புக் கொள்கின்றதோ அதே நேரத்திலேயே அவன் வங்கியின் வாடிக்கையாளன் ஆகின்றன் என்பதாகும்.
உறவுமுறை :
ஒரு வங்கிக்கும் அதன் வாடிக்கையா ளருக்கும் இடையேயுள்ள உறவு சட்டரீதி யாக அமையவேண்டும் என்பதை வங்கி வாடிக்கையாளர் என்ற சொற்களை ஆராய்வதன்மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இவ்வாறன உறவு மிகுந்த தத்துவம் வாய்ந்ததும் சிறந்த நடைமுறை களுக்கு ஒன்றியதுமாக இருக்கவேண்டும் ; இவ்வாறன தத்துவத்தையும் p560 - முறைக்கு ஒன்றியதுமான உறவை விளக் கிய பின்பே வங்கி, வாடிக்கையாளர் என்ற சொற்களுக்கான முறையான கருத்தை விளங்கக்கூடியதாக இருக்கும்.
வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக் கும் இடையிலான உறவு வரலாற்று ரீதி
3 -

Page 30
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
யாக அபிவிருத்தியடைந்து வளர்ந்த ஒன் ருகும். வங்கித் தொழிலை இங்கிலாந்தில் பொற்கொல்லர் மக்களிடம் இருந்து அவர் களது பணம் மற்றும் அவர்களது பெறு மதி வாய்ந்த திரவியங்கள், முக்கியமாக பொன் போன்றவற்றைப் பாதுகாப்புக்கு பெற்றதில் இருந்தே ஆரம்பித்துள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டதொழில் சட்ட ரீதியாக ஒப்பளி ஒப்புக்கொளி (Balor Bailee) என்ற முறையிலேயே இருந்தது. இவ்வுறவு முறைக்கு ஒவ்வ பொற்கொல்லர் தம்மிடம் பாதுகாப்பிற்குக் கிடைத்த பணத்தை வட் டிக்கு மற்றையோருக்குக் கொடுக்கமுடி யாது. இதற்குச் சான்ருக 1826இல் நடந்த Hall V Fuller என்ற வழக்கின் தீர்ப்புள்ளது. இவ்வழக்கில் வங்கி என்பது அதன் வாடிக்கையாளரின் பணத்தை வைக்கும் களஞ்சியம் எனக் கூறப்பட் டுள்ளது. இதே போன்று 1830இல் நடந்த Marzetti V Williams GT Gör go Gupji 6,6 வங்கிகள் தமது வாடிக்கையாளரின் பணத்தைத் தம்முடன் வைத்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலே விபரித்துள்ளபடி வங்கிகள் தம் வாடிக்கையாளரிடம் இருந்து வைப் பாகப் பெறும் பணத்தை மற்றையோ ருக்குக் கடனுக வழங்க முடியாது. இவ் வாறு பாதுகாப்புக்காகத் தொடங்கிய முறை அதே நிலையில் இருந்திருந்தால் வங்கித் தொழில் வளர்ச்சியுற்று இருக்க முடியாது. ஏனெனில் அவ்வாறு ஒப்ப டைக்கும் பணத்தை அதே நிலையில் வங்கி கள் தம்முடன் வைத்திருந்து திரும்பக் செலுத்தும் நிலேயே ஏற்பட்டிருக்கும்.
அடுத்தபடியாக வங்கி ஒரு முகவராக பணியேற்று இருந்தால் அவை தம் முதல் வரின் கட்டளைக்கு ஏற்பவே பணிபுரிந்து இருக்கமுடியும். அவ்வாறன ஒரு முறை ஏற்பட்டு இருப்பின் வங்கிகள் தம் வாடிக் கையாளராகிய முதல்வர்களின் கட்டளை களுக்கு ஏற்ப இயங்கி அம் முதல்வர் களுக்கு அவர்கள் வைப்புச் செய்த பணத்
4 -س--س

இ. பாலசிங்கம்
தி ன் நிலை, அதனுல் ஏற்பட்ட இலாபம் முதலியவற்றைக் காட்டவேண்டும் என
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அவ்வாறன ஒரு உறவு ஒரு நம்பிக்கைட் பொறுப்பை ஏற்படுத்தும். அதன்
படி வங்கி தன் முதல்வராகிய வாடிக்கை யாளர்களுக்குத் தம் நடவடிக்கைகளுக் கான காரணம் காட்ட வேண்டியநிலை ஏற்ப டும். இவ்வாறன முறைகளுக்கு முரண்பட்ட வருமதியாளர், சென்மதியாளர் என்ற இன்றைய உறவு முறையை 1848ஆம் ஆண்டு நடந்த Foley W Hill என்ற வழக் கின் தீர்ப்பு நிலைநாட்டியது. இவ் வழக்கின் தீர்ப்பின்படி வங்கி வைப்பாகப் பெறும் பணத்தை தனது வாடிக்கையாளர் க ளிடம் இருந்து கடனுகப்பெற்று அதைத் தான் விரும்பியபடி. பாவித்து, ஆனல் வாடிக்கையாளருக்குத் திருப்பிக் கொடுப் பதற்குப் பொறுப்பு உடையது என நிர்ண யிக்கப்பட்டது. இத்தீர்ப்பின்படி வங்கி யிடம் செலுத்தப்படும் பணம் வங்கியின் கட்டுப்பாட்டுக்குக் கீழேயே அது தான் விரும்பியபடி பாவித்து அதனுல் எழும் இலாபத்தையும் தனதாக்கிச் செலுத்திய வர் கேட்கும்போது அவர் செலுத்திய தொகைக்குச் சமமான தொகையைத் திரும்பக் கொடுப்பதற்குப் பொறுப்பாக வுள்ளது என்பதனைத் தெரிந்தே பணத்தை வைப்புச் செய்யும் வாடிக்கையாளராகிய முதல்வர் செய்கின்றர் என்பதேயாகும்.
வருமதியாளர் செல்மதியாளர் உறவு முறை :
Foley VH1 என்ற வழக்கின் தீர்ப் பின்படி வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான உறவு சட்ட ரீதியாக வரு மதியாளர் சென்மதியாளர் என்ற போதி லும் அத்துடன் கூடுதலான பல கடப் பாடுகளும் உள என்பது நவீன வங்கித் தொழில் அளிக்கும் சேவைகளில் இருந்து காணக்கூடியதாக உள்ளது. Foley WHit என்ற வழக்கின் தீர்ப்பிலேயே வங்கிகளின் மரபுப்படி வாடிக்கையாளர் வரையும்

Page 31
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
உண்டியல்களுக்கு (காசோலை) எதிராக பணம் செலுத்த வங்கிகள் கடமைப்பட் டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. இவ் வாருன, கூடுதலான சேவைகள் ஒப்பந்த அடிப்படையிலேயே எழுகின்றன. நவீன வங்கித் தொழிலில் வங்கிகள் வாடிக்கை பாளர்களின் காசோலைகளை ஒன்று திரட் டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலமே எழு கிறது எனினும் வருமதியாளர் சென்மதி பாளர் என்ற அடிப்படை உறவே வங்கிக் கும் வாடிக்கையாளருக்கும் இடையே உள்ளதாகும்.
இன்றைய வங்கித் தொழிலுக்கு அனு சரணையான தீர்வு 1921ஆம் ஆண்டு நடந்த Joachimson V Swiss Bank Corporation என்ற வழக்கில் கூறப்பட்டது. இவ் வழக்கின் சாரம் பின்வருமாறு: Joachimson என்பது ஜெர்மன் ஆங்கிலப் பங்குதா ரர்களைக் கொண்ட ஒரு நிறுவனம். எதிரி வங்கியிடம் இருந்த இந் நிறுவனத்தின் கணக்கு 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி செலவு மீதியாக இருந்தது. 1919ஆம் ஆண்டு யூன் மாதத்தில் ஆங்கி லேயே பங்காளியினல் இவ்வழக்கு தொ டரப்பட்டு அப்பணத்தைப் பங்குடமை யைக் கலைப்பதற்காகச் செலுத்தும்படி கோரப்பட்டது. அதற்கு முன்பு அவன் அப்பணத்தை செலுத்தும்படி வேண்ட வில்லை.
தீர்ப்பு: வாடிக்கையாளரின் வருமதி அதை அவர் கோருமட்டும் செலுத்த வேண்டியதில்லை. எனவே அவ்வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வழக்கில் கூறப்பட்ட மேலதிகத் தீர்ப்பு பின்வருமாறு:
** இவ்வழக்கில் எழும் கேள்வி என்ன வெனில் வங்கி வாடிக்கையாளனுக்காக தடைமுறைக் கணக்கை ஆரம்பித்த நேரத்தில் இவர்களுக்கு இடையில் ஏற் பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் யாது? இது ஒரு சாதாரண கடன் ஒப்பந்தம்

இ. பாலசிங்கம்
என்று கூறப்பட்டது. அத்துடன் வங்கி
வாடிகையாளர் வரையும் உண்டியல் களுக்கு கணக்கில் உள்ள மீதிக்கு உள்ளாக செலுத்துமதி செய்யக் கடமைப்பட்
டுள்ளது. ஆனல் அவ்வாருண மேலதிகப் பொறுப்பு பிரதான ஒப்பந்தத்தைப் பாதிக்காது எனக் கூறப்பட்டது.'
வங்கியானது பணத்தைக் கடனுகப் பெற்றுள்ளது. ஆகவே அது செல் மதியாளர் களுக்கு அதைத் திருப்பிக்கொடுப்பதற்குச் சாதாரணமாகப் பொறுப்பாகவுள்ளது. செல்மதியாளர் தான் விரும்பியபோது கடனைத் திருப்பிப் பெறுவதற்கு வழக்குத் தொடரலாம் எனவும் வாதிடப்பட்டது. நீதிபதி இவ்வாரு ன ஒரு நிலையை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார். அவர் கூறியது என்னவெனில் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஒரேஒரு ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பதாகும். இவ்வொப்பந்தம் இருபகுதி களிலும் பொறுப்பை உண்டாக்குகின்றது. இதை ஆராயும்பொழுது அது பின்வரும் விடயங்களை உள்ளடக்குகின்றது. வங்கி பணத்தை ஏற்பதற்கு ஒத்துக்கொள்கிறது. அத்துடன் வாடிக்கையாளரின் கணக்குக்கு அவர் வைப்புச்செய்யும் காசோலை போன்ற உண்டியல்களை ஒன்று திரட்டவும் ஒப்புக் கொள்கின்றது, அவ்வாரு கப் பெறும் பணத்தை வாடிக்கையாளர் பொருட்டு நம்பிக்கைக்காக வைத்து இருப்பதற்கு அல்லது அதை வாடிக்கையாளனிடம் இருந்து கடனகப் பெற்று திரும்பச் செலுத்துவதற்கு ஒத்துக்கொள்கின்றது. அவ்வாறு திரும்பச் செலுத்துவதற்கான வாக்குறுதியானது வங்கியின் எந்தக் கிளை யில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ அக் கிளையில் வங்கித் தொழில்க் காலத்தில் செலுத்துவதற்கு ஒப்புக்கொள்கின்றது. இவ்வாறன உறுதி வாடிக்கையாளருக்குச் சேரவேண்டிய தொகையில் எவ்வளவிற் கேனும் வாடிக்கையாளரினல் வங்கியின் கணக்குள்ள கிளைமீது வரையப்படும் கட் டளைகளுக்கு எதிராகச் செலுத்துவதை உள்ளடக்குகின்றது. அவ்வாருக வரையப்
wasebarn

Page 32
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
படும் கட்டளைகள் சாதாரணநடவடிக்கைக்
காலத்தில் இரண்டு அல்லது மூன்று நாட் களுக்குக் செலுத்தப்படாமல் இருக்குமாத லால் வங்கி வாடிக்கையாளருடன் ஒரு நியாயமான அளவிலான அறிவிப்பு இன்றி வாடிக்கையாளருடனகிய தொழில் உறவு முறையை நிறுத்தக்கூடாது என்பது ஒப் பந்தத்தில் அடங்கிய ஒரு நிபந்தனையாகும். வங்கி பிழையாக செயல்படுதல் அல் லது மோசடிகளை ஏதுவாக்கல் போன்ற வற்றைத் தவிர்ப்பதற்கான முறையில் 'நிய்ாயமான அளவு கவனத்துடன்தான் எழுதும் கட்டளைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர் தன்னைப் பொறுத்த வரையில் ஒத்துக்கொள்கின்ரு ர். ’’
இவ்வாரு க ஒப்பந்த ரீதியாக ஏற்படும் வருமதியர்ளர் செல்மதியாளர் என்ற உறவு முறையே இன்றைய வங்கித் தொழிலுக்கு பொருந்துவதாகவுள்ளது. சாதாரணமாக கடன்பட்டோர் தமக்குக் கடன் கொடுத் தோரைத் தேடி அவருக்கு தாம் செலுத்த வேண்டிய பொறுப்பில் இருந்து வங்கி களுக்கு விதிவில்க்கு கிடைக்கின்றது. அவ் வாறு இன்றி இருந்தால் வங்கிகள் தொடர்ச்சியாக தம் வாடிக்கையாளர் களைப் பொறுத்தவரையில் தம் கடமையை நிறைவேற்றத் தவறியவர்களாகக் கருதப் படுவார்கள். அவ்வாறெனில் வாடிக்கை யாளர் வங்கிகளுக்கு எதிராக தம் பணத் தைத் திருப்பிக் கொடுப்பதற்கென எழுத் தாணையைப் பிறப்பிக்கலாம். Joachimson V Swiss Bank Corporation GTairp Guypaighair தீர்ப்பின்படி வங்கிக்கும் வாடிக்கையாள ருக்கும் இடையில் உள்ள ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையின்படி வாடிக்கையாள ரின் கணக்கு வங்கியின் எந்தக் கிளையில் இருக்கின்றதோ அக் கிளையில் கோரப்படும் வரையும் செலுத்தவேண்டியதில்லை என்ப தாகும். அதாவது ஒரு வாடிக்கையாளர் ஒரு வங்கியின் எந்தக் கிளையில் தனது கணக்கை. வைத்திருக்கின்றரோ அக்கிளை யில் தனக்கு சேரவேண்டிய பணத்தைக்

இ. பாலசிங்கம்
கோரும் வரையில் அப்பணத்தை அவ னுக்குச் செலுத்த வேண்டிய பொறுப்பி லிருந்து வங்கி விதிவிலக்குப் பெறுகின்றது.
ஒப்பந்தத்தின் கீழான கடப்பாடுகள் :
வருமதியாளர் செல்மதியாளர் என்ற அடிப்படையிலான உறவுடன் முகவர் - முதல்வர் என்ற முறையிலான உறவி லுள்ள 5 L. - GO)D556ITT 6ò நம்பிக்கைப் பொறுப்பு, வாடிக்கையாளரின் கணக்கி லுள்ள நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை வெளியிடாது பாதுகாத்தல் போன்றவை யும். வங்கிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவிலும் கட்டாயமாக இருத்தல் வேண் டும். இவ்வாறன உறவு ஒப்பந்தரீதியாக இவர்களுக்கிடையில் ஏற்படும் உறவில் உள்ளடக்கிய ஒரு உண்மையாகும். இதன் படி வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கை கள் மற்றும் அவர் வங்கிக்கு கொடுத் திருக்கும் பிணைகள் பற்றிய சொத்துவிபரம் இவைகளை மூன்ரும் ஆட்களுக்கு வெளி யிடாது பாதுகாத்தல் அவசியமாகும். இத் 5öglaub Tournier V National Provincial Bank என்ற வழக்கில் நிர்ணயிக்கப்பட்டு அதே வழக்கின் தீர்ப்பின்படி பின்வரும் நிலைகளில் ஒரு வங்கியானது தனது வாடிக்கையாளரின் நடவடிக்கைகள் பற்றி வெளியிடலாம் எனவும் தீர்மானிக்கப் பட்டது.
i) சட்டத்தின் நிர்ப்பந்தத்தின் கீழ். (ii பொது நன்மைகளுக்காக.
{i, வங்கி தனது நன்மைகளுக்காக. (iv) வாடிக்கையாளரின் ஆணைப்படி
(இது எழுத்திலோ அல்லது எழுத் தற்ருே இருக்கலாம்). காசோலைகளைப் பொறுத்தவரையில் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு இரு விதமான செயல்களை நடைமுறைப் படுத்துகின்றன. வங்கிகள் வாடிக்கை
3 -

Page 33
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
யாளரினல் தம்மீது வரை யப்படும் காசோலைகளுக்கு எதிராகப் பணத்தைச் செலுத்துகின்ற அதே வேளையில் அவ் வாடிக்கையாளர் தமது கணக்கிற்கு வைப்பு செய்யும் காசோலைகளையும் ஒன்று திரட்டு கின்றன.
காசோலைகள் மீதான செலுத்துமதி: காசோலைகள் மீதான செலுத்துமதி களைப் பொறுத்தவரையில் வங்கிகள் தம் மீது வரையப்படும் காசோலைகளுக்கு :
1. வாடிக்கையாளரின் கணக்கில் வரையப்படும் காசோலைகளைச் செலுத்துவதற்குப் போதியள வான பணமிருந்தால், அல்லது,
2. வாடிக்கையாளர் தமது கணக்கில் மேலதிகப் பற்று பெறுவதற்கு வங்கி அனுமதி அளித்திருந்தால் : அத்துடன்
3. காசோலைகள் முறையாக வரை
யப்பட்டு இருந்தால்,
பணம் செலுத்துவதற்கு கடமைப் பட்டுள்ளன. எனினும் மாற்றுண்டியல் சட்டமானது பின்வரும் நிலைகளில் ஒரு வாடிக்கையாளரினல் வரையப்படும் காசோலைகளுக்கு பணம் செலுத்தும் பொறுப்பை இழந்து விடுகின்றது எனத் தீர்மானித்துள்ளது :
1. செலுத்துமதி மீதான மாற்று உத்தரவு. அதாவது வாடிக்கை யாளர் தான்வழங்கிய காசோலைக் குப் பணம் செலுத்தவேண்டா மென வங்கிக்கு இடும் கட்டளை, 2. வாடிக்கையாளரின் இறப்புப்பற்
றிய அறிவித்தல். பின்வரும் நிலைகளும் ஒரு வங்கியை அதன்மீது வாடிக்கையாளரினல் வரையப் படும் காசேர் லைகளுக்கான செலுத்துமதி யைத் தடைசெய்யும் :
1. வாடிக்கையாளரின் அறிவு க் கோளாறு பற்றிய அறிவித்தல் கிடைத்திருந்தால்,
7 سس--

இ. பாலசிங்கம்
2
நீதிமன்றத்தால் வழங்கப்படும் எழுத்தாணைகள் பெற்ருல். உதா ரணமாகக் காணிசீக் கட்டளை - இவ்வாருன கட்டளை வாடிக்கை யாளர் தமது கணக்கில் இருந்து வரைபுகள் செய்வதைத் தடுக்கும்.
3. ஒரு கம்பனியைப் பொறுத்தவரை அதைக் கம்பனிச் சட்டத்தின் கீழ் ஒடுக்குவதற்கான அறிவித்தல் கிடைத்திருந்தால்,
4. காசோலைகளுக்கெதிராகப் பணத் தைப் பெறுவதற்கு அதை வங்கி யில் சமர்ப்பிப்பவருடைய உரிமை யில் குறைபாடு இருப்பதை வங்கி
தெரிந்திருந்தால்.
காசோலைகள் செலுத்துவ்தைப் பொறுத்தவரையில் அதன் உரிமை, செலுத்தும் வங்கிக்கும் ( அதாவது
எந்தி வங்கியின்மீது காசோலை வரையப் பட்டுள்ளதோ) வரைபவருக்கும் (அதாவது காசோலையை வழங்கிய வாடிக்கையாளர்) இடையிலேயே உள்ளதாகும். ஆகவே ஒரு வங்கியை அதன்மீது வரையப்பட்ட கா சோலையைச் செலுத்தவேண்டாமென அறிவுறுத்தும் உரிமை காசோலையை வரைந்தவருக்கு மட்டுமே உண்டு. எனி னும் ஒரு உண்மையான காசோலையின் உரிமையாளன் அக் காசோலையைத் தான் தொலைத்துவிட்டதாகவோ அல்லது கள வாடப்பட்டு விட்டதாகவோ வங்கிக்கு அறிவித்தல் கொடுத்திருந்தால் அவ்வா முன காசோலைகளுக்கெதிராகப் பணம் செலுத்துமுன் வங்கி வேண்டிய விசாரணை களைச் செய்து கவனமாகஇயங்குதல் அவசிய மாகின்றது. இவ்வாறன நிலைகளில் அநேக மாக வங்கிகள் காசோலைகளை வரைந்தவரி டமிருந்து அறிவுறுத்தல்களைப்பெறுவதற்கு முயலும். உதாரணமாக ஒரு காசோலை காவிக்கு என வரையப்பட்டு இருந்தாலோ அல்லது கட்டளைக்காக வரையப்பட்ட காசோலைகளில் அவை களவாடப்படுவ தற்கு முன்போ அல்லது தொலைவதற்கு

Page 34
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
முன்போ வெற்ரு கப் புறக்குறிப்பிடப்பட்டு இருந்தால் வங்கிகள் அவ்வாறன காசோலை களுக்கு பணம் செலுத்தும் செயலை நியாய மெனக் கொள்ளலாம். ஆனல் காசோலை எவரிடம் இருந்து களவாடப்படுகின்றதோ அல்லது தொலைகின்றதோ அவரது புறக் குறிப்பை வேண்டி நின்முல் அவ்வாருண் காசோலைமீது அதன் உண்மையான உரிமை யாளன் புறக்குறிப்பிடவில்லை என அறிவித் தல் கொடுத்திருந்தால் அவற்றுக்கு எதி ராகப் பணத்தைச் செலுத்துமுன் அவற் றின் புறக் குறிப்பை வங்கி ஊர்ஜிதப்படுத் தல் வேண்டும். இல்லாவிட்டால் அதன் மீதுள்ள புறக்குறிப்பு உண்மையான உரிமை யாளனினது புறக்குறிப்பாக அர்த்தப்பட் டாலும் அது உண்மையில் களவாகவே இடப்பட்டிருக்கும்.
ஒரு காசோலை மீதான மாற்று உத் தரவைப் பொறுத்த வரையில் அது சக்தி வாய்ந்ததாக அமைய வேண்டுமாயின் அது உண்மையாக வங்கியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருத்தல் வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தான்வழங்கிய காசோலை களுக்கு எதிராகப் பணம் செலுத்த வேண்டா மெனப் பணித்திருந்தால் அவ் வாரு ன காசோலைகளுக்கு எதிராக வங்கி பணம் செலுத்தினுல் அதனல் ஏற்படும் நட்டங்கள் எல்லாம் வங்கியையே சாரும்.
ஒரு வாடிக்கையாளரது இறப்புப் பற்றியதில் உள்ள முக்கியம் என்னவெனில் அதைப்பற்றி வங்கிக்கு அறிவித்தல் கிடைத்திருத்தல் வேண்டும். வங்கிகள் வதந்திகளை நம்பி செயற்படக் கூடாது, எனினும் இவ்வாறன அறிவித்தல் நேரடி யாகவும் கிடைக்கவேண்டியதில்லை. இவ் வாருன அறிவித்தல் புதினப் பத்திரிகை கள் மூலமாகவோ அல்லது வேறு வித மாகவோ வங்கிக்குக் கிடைத்திருக்கலாம் எனினும் வங்கி தனது பாதுகாப்பிற்காக இவ்வாறு கிடைக்கும் அறிவித்தல்களை ஊர் ஜிதப்படுத்துவது முக்கியமாகும். வாடிக் கையாளர் ஒருவரைப் பற்றி அவர் aši

இ. பாலசிங்கம்
முறி என்ற நிலையை எய்திவிட்டார் என்ற அறிவித்தலை வங்கி பெற்றிருத்தால் அவ் வாடிக்கையாளரால் வ  ைர யப் படும். காசோலையை அவரோ அல்லது அவரால் சாட்டுதல்பெற்றவரோ அன்றி வேறு எவ ராவது சமர்ப்பித்தால் வங்கி அவ்வாருன காசோலைகளுக்கு எதிராகப் பணம் செலுத்த மறுத்தல் வேண்டும். வங்கிக்கு வங்கிமுறி விண்ணப்பம் செய்திருந்தால் அல்லது சொத்தைப் பராமரிக்கும் கட் டளை போன்ற அறிவித்தல்கள் கிடைத் திருந்தால் அதில் சம்பந்தப்பட்ட வாடிக் கையாளரினல் வரையப்பட்ட காசோலை களுக்கு எதிராகப் பணம் செலுத்துதலை நிறுத்தல் வேண்டும். க ம் பணி களை ப் பொறுத்த வரையில் அவற்றினது ஒடுக் கல்பற்றி அறிவித்தல் கிடைத்திருந்தால் அவற்ருல் வரையப்படும் காசோலைகளுக்கு எதிராகப் பணம் செலுத்துதல் கூடாது. கம்பனிகளைப் பொறுத்தவரையில் அவற் றின் காசோலைகளில் கையொப்பமிட்ட அலுவலரது இறப்பு வங்கிகளின் செலுத் தும் அதிகாரத்தைப் பாதிக்காது.
வங்கிகள் காசோலைகளைச் செலுத்து முன் அவை முறையாக வரையப்பட்டு இருக்கின்றனவா என அவதானித்தல் அவ சியம். வங்கிகள் பின்வ்ருவன வ்ற்றை அவ
தானிக்கும்.
(i) திகதி : காசோலைகளைச் செலுத் தும் திகதிகளில் அவற்றில் காட் டப்பட்டிருக்கும், திகதி அத் திக திக்குப் பிற்பட்டதாக இருத்தல் கூடாது. காலம் சென்ற காசோலை களுக்கு எதிராகவும் வங்கிகள் செலுத்துமதியை மறுக்கின்றன. இது சட்டப்படி கூறப்ப்டாது இருப்பினும், வங்கிகள் ஆறுமாத காலம் கடந்த காசோலைகளின் மீது செலுத்துமதியை மறுக்கின்
_றன . (ii புறக்குறிப்பு: கட்டளைக் காசோலை கள் முறையாகப் புறக்குறிப்பிடப்

Page 35
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
பட்டிருத்தல் வேண்டும். கட்ட ளைக் காசோலைகள் குறுக்குக் கோடிடப்பட்டு ** பெறுவோன் கணக்கு 'க்கு எனக் குறிப்பிடப் பட்டிருந்தால் அக் காசோலையின் பெறுமதியை பெறுவோன் கணக் கிற்கு வங்கிகள் செலுத்தும். இவ் 6δι TOI குறிப்பிடப்பட்டிருக்கும் காசோலைகள் வேறு வங்கிகளுக்கு ஊடாக ஒன்று திரட்டலுக்காக சமர்ப்பிக் கப்பட்டிருந்த ர ல் செலுத்தும் வங்கிகள் ஒன்று திரட் டும் வங்கியின் ஊர்ஜிதம் பெற்ற பின் பே செலுத்து மதி களைச் செலுத்தும். (i) தொகை: தொகை எழுத்திலும், இலக்கத்திலும் சமமாக இருக்க வேண்டும். (iv) கையொப்பம்: காசோலையை வரை யும் வாடிக்கையாளரது கையொப் பம் அவர் வங்கிக்குக் கொடுத் திருக்கும் மாதிரிக் கையொப்பத் துடன் ஒத்ததாக இருத்தல் வேண்டும்.
காசோலைகள் மீதான புறக்குறிப்புக் கள் ஒரு வங்கி சரிபார்க்கும்போது அது பெறுவோனின் கையொப்பமா அல்லது பெறுவோனின் கையொப்பம் போன்றதோ என்பதை நிர்ணயிக்க முடியாது. ஆகவே மாற்றுண்டியல் சட்டமானது செலுத்தும் வங்கிகளுக்கு இதைப் பொறுத்த அளவில் பாதுகாப்பை அளிக்கின்றது. உதாரண மாக ஒரு காசோலையின் மீதான புறக் குறிப்பு களவாக இடப்பட்டிருந்தால் அவ் வாருன காசோலை மீதான செலுத்துமதியை வங்கி நன்நம்பிக்கையுடனும் அதன் சாதா ரனதொழிற்பாட்டின் ஊடாகவும் செலுத் தினுல் அதற்கு மாற்றுண்டியல் சட்டம் பாதுகாப்பைக் கொடுக்கும். ஒரு வங்கிக்கு காசோலை மீதான புறக் குறிப்பு களவாக இடப்பட்ட தென்ருே அல்லது காசோலை களவாடப் பட்டதோ அல்லது தொலைந்து
வி-2 س- !

最 × இ. பாலசிங்கம்
விட்டதோ என்ற அறிவித்தல்கள் கிடைத்த பின் செலுத்தினுல் அவ்வங்கி நன் நம்பிக்கை யுடன் இயங்கி இருக்க முடியாது. பின்வரும் நிலைகளில் ஒரு வங்கி சாதாரண தொழிற் பாட்டினு டே காசோலைகளைச் செலுத்திய தாகக் கொள்ளப்பட மாட்டாது.
(i) ஒரு வங்கி அதனது வங்கித் தொழிற்பாட்டு நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ காசோலை மீது செலுத்துமதியைச் செய்திருந்தால், வங்கி, தொழிற் பாட்டு நேரத்திற்குத் திறக்கும் போது வாடிக்கையாளன் தான் வழங்கிய காசோலைக்கான செலுத்து மதியை நிறுத்தவிரும்பினுல் வங்கி அக் காசோலையின் தொகையை அதனது கணக்கில் இருந்து அற விட முடியாது. ஏனெனில் அது சாதாரண தொழிற்பாட்டினூடே செலுத்துமதியைச் செய்யவில்லை.
(ii) காசோலை மீதான குறுக்குக் கோட் டிற்கு மாறக ஒரு வங்கி செலுத்து மதியைச் செய்திருந்தால். குறுக் குக் கோடிடப்பட்ட காசோலை களுக்கு எதிராக வங்கிகள் பணம் செலுத்தக்கூடாது. அதே போல பெறுவோன் கணக்குக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ள காசோலை யின் பெறுமதியை வங்கி பெறு வோன் கணக்கிற்கே செலுத்த வேண்டும். இதற்கு மாருக வங்கி கொடுக்குமதியைச் செய் தால் அது சாதாரண தொழிற் பாட்டினூடே இயங்கியது என கொள்ள முடியாது.
(i) வங்கிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் காசோலை ஒன்றைத் தபால்மூலம் வங்கிக்கு அனுப்பி அதற்கான செலுத்துமதியை நாணயத்தாள்கள் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ

Page 36
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
அனுப்பும்படி பணித்தால் அப் பணிப்பை வங்கி நிறைவேற்றி ணு,லும் அது சாதாரண தொழிற் பாட்டினுாடே செய்யப்பட்டதா கக் கொள்ளமுடியாது.
மாற்றுண்டியல் சட்டமானது குறுக்குக் கோடிடப்பட்ட காசோலைகளைப்பொறுத்த வரையில் வங்கிகள் பின்வருமாறு இயங்க வேண்டுமெனப் பணித்துள்ளது:
(i) காசோலை பொதுவாகக் குறுக்குக் கோடிடப்பட்டிருந்தால் அதன் மீதான செலுத்துமதியை வேறு ஏதாவது ஒரு வங்கிக்குச் செலுத் தலாம். (செலுத்தும் வங்கியில் உள்ள வேருெரு கணக்கிற்கும் சேர்ப்பிக்கலாம்.
(i) ஒரு காசோலை சிறப்பான குறுக்குக் கோடிடப்பட்டிருந்தால் (அதாவது குறுக்குக் கோடுகளுக் கிடையில் ஏதாவது ஒரு வங்கியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால்) செலுத் தும் வங்கி குறிக் கப்பட்ட வங்கிக்கோ அல்லது அவரது முக வருக்கோ செலுத்துமதியைச் செய்தல்வேண்டும்.
மேலே விபரிக்கப்பட்டவாறு ஒரு செலுத்தும் வங்கி இயங்கினுல் ஒரு காசோலையின் உண்மையான உரிமை யாளன் அதன் பெறுமதியைப் பெருதுவிட் டால் வங்கி அதற்குப் பொறுப்பாகாது. அதேபோலப் புறக்குறிப்பு களவாக இடப் பட்டிருந்தாலும் வங்கி பொறுப்பாகமாட் டாது. காசோலைகளை வரையும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இயங்கி வங்கிகளைப் பாதுகாத்தல் வேண்டும். இத் தத்துவத்துக்கு மாருக வாடிக்கையாளர் ஒருவர் இயங்கினல் அவர் வங்கிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்குத் தடை செய்யப்படுவார். உதாரணமாக London Joint Stock Bank W. Mcmillan (1918) என்ற வழக்கில் வாடிக்கையாளர்கள்
21 ستحس۔

இ. பாலசிங்கம்
காசோலையை வழங்கும்போது அதில் காட் டப்பட்டுள்ள தொகையில் எழுத்திலும், இலக்கத்திலும் இடைவெளிகள் விட்டு வரைந்தார். அக் காசோலையை நிரப் பிய எழுதுவினைஞர் அவ்வாறு இடைவெளி கள் விட்டு வரைந்தபின்பு அதில் வாடிக்கை யாளரது கையொப்பத்தைப் பெற்றபின் இடைவெளிகளைச் சாதகமாக்கி காசோலை யின் தொகையைக் கூட்டி கூடுதலான தொகையை வங்கியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இதன்மீதான செலுத்துமதி முறையாகவே செய்யப்பட்டது என்று நீதி மன்றம் தீர்ப்புக் கூறியது. இதேபோல Greenwood V Martins Bank (1932) 6Tai to வழக்கிலும் தீர்ப்புக் கூறப்பட்டது. இவ் வழக்கில் கூறப்பட்ட முக்கியமான அபிப் பிராயம் என்னவெனில் ' இரண்டு பகுதி யினரும், நியாயமான அளவிலான கவனத் துடன் முறையாகக் கணக்கை நடாத்துவ தற்குத் தொடர்ச்சியாகக் கடமைப்பட் டுள்ளார்கள்." என்பதாகும்.
காசோலைகளை ஒன்று திரட்டுதல் :
ஒரு வங்கி தனது வாடிக்கையாளருக் காக காசோலைகளை ஒன்று திரட்டும் பொழுது அவற்றின் மீது கிடைக்கும் தொகை அவ்வாடிக்கையாளரின் கணக் கில் சேர்ப்பிக்கப்படும் என்று பொருள் படும் ஒப்பந்தத்தின்படியே செயல்படு கின்றது. இதை மீண்டும் ஆராயும்பொழுது இவ்வாறு ஒன்று திரட்டும் காசோலைகளின் பணத்தை வாடிக்கையாளர் வங்கிக்கு, வங்கிப் பணத்தை ஒன்று திரட்டியபின் கடனுகக் கொடுக்கின்ருர் என்பதேயாகும். வங்கியானது காசோலைகளை ஒன்று திரட் டும்பொழுது அடிப்படையில் வாடிக்கை யாளரின் முகவராகக் கடமையாற்றினுலும் அது தனக்காகவும் செயல்படுகின்றது. சாதாரணமாக ஒரு முகவர் தனது கட மையைச் சரிவரச் செய்யும் பொழுது பொறுப்புக்களுக்கு ஆளாகமாட்டார். ஏனெனில் இவ்வாறன நிலை முதல்வர் தனது முகவருக்கு நட்டம் வராமல் பிாது.
) -

Page 37
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
காப்புக் கொடுத்திருப்பார். எனினும் ஒரு வங்கியானது தனது வாடிக்கையாளருக் காக காசோலைகள், மற்றைய கைமாறத் தகும் பத்திரங்கள் ஆகியவற்றை ஒன்று திரட்டும் பொழுது களங்கமின்றி பாது காப்பை இழந்துவிடுகின்றது. (nnocently Exposed. g605 Lory opio (Conversion) எனக் கூறப்படும். ஒரு வாடிக்கையாளருக் காக ஒரு வங்கி அவ் வாடிக்கையாளருக்கு சொந்தமில்லாத காசோலையை ஒன்று திரட்டுவதை "மாற்றம்' என்று கூற விாம். இது அனேகமாக ஒரு காசோலை வின்மீது கள்ளப் புறக்குறிப்பிட்டிருக்கும் வேளையிலும் வாடிக்கையாளர் காசோலை யைக் களவாடி இருக்கும் வேளையிலும் நேரலாம். இவ்வாறன காசோலைகளின் மீதான ஒன்று திரட்டிய பணத்தை அக் காசோலைகளின் உண்மையான உரிமையா வாருக்குத் திரும்பச் செலுத்தக் கடமைப் பட்டுள்ளது. எனினும் மேலே விபரிக்கப் பட்டுள்ளது போல வங்கி வாடிக்கையாள சிடம் இருந்து நட்டம் வராமல் பாதுகாப் பைப் பெறுவதற்குச் உரிமை பெற் றுள்ளது. இவ்வாறன பாதுகாப்பைப் பெறுவதற்குச் சில வேளைகளில் சட்ட ரீதியான வழக்குகளில் ஈடுபடவேண்டி யிருக்கும். இதன்மீதான பாதுகாப்பு அதாவது வாடிக்கையாளரிடம் இருந்து வங்கி தான் பட்ட நட்டத்துக்கு எதிராகப் பணத்தைப் பெறுவது அவ் வாடிக்கை பாளரின் கடன் தீர்க்கும் தன்மையில் தங்ஓ புள்ளது. * மாற்றம்' என்ற குற்றச் சாட்டுக்கு வங்கி ஆளாவது முக்கியமாக காசோலைகளை ஒன்று திரட்டும்போது வாடிக்கையாளருக்காக மட்டுமன்றி அது தனக்காகவும் இயங்குகின்றது என்ற கோட்பாட்டினலேயாகும். உதாரணமாக G. L. Underwood Ltd. V Bank of Liverpool (1924) என்ற வழக்கில் பிரதிவாதிக் கம் பனியின் தனி இயக்குநர் தன் பெயரில் எதிரி வங்கியில் ஒரு கணக்கை வைத்திருந் தார். அக் கம்பனியின் ஒன்று தவிர்ந்த எல்லாப்பங்குகளையும் இயக்குநரே கொண்டு

இ. பாலசிங்கம்
இருந்தார். மற்றைய ஒரு பங்கும் அவரது மனைவியின் பெயரில் இருந்தது. கம்பனி யின் கணக்கு வேறு ஒரு வங்கியில் இருந் தது. எதிரி வங்கிக்கு பிரதிவாதிக்கம்பனி இருப்பது தெரிந்திருந்தது. ஆனல் அக் கம்பனிக்கு பிரத்தியேகமாக ஒரு கணக்கு இருப்பது தெரியாது. இயக்குநர் கம் பனிக்குச் சேர்மதியான காசோலைகள் பல வற்றை எதிரி வங்கியில் உள்ள தனது சொந்தக் கணக்கிற்கு வைப்புச் செய்தார். வங்கி அக்காசோலைகளை ஒன்று திரட்டி இயக்குநரின் கணக்குக்குச் சேர்த்தது. இயக்குநர் அப் பணத்தை எல்லாம் கையா டல் செய்துவிட்டார். அதன் பின்னர் கம் பணி குலைக்கப்பட்டது. குலைப்போன் மேலே விபரிக்கப்பட்ட கா சோ லை களின் தொகையை அறவிடுவதற்காக வழக்குத் தொடர்ந்தான். இவ் வழக்கின் தீர்ப்பில் எதிரி வங்கி காசோலைகளை ஒன்று திரட்டு வதில் 'மாற்றம்" செய்துவிட்டபடியால் பிரதிவாதிக்கு வங்கி பொறுப்பாகும் என் பதாகும்.
மாற்றுண்டியல் சட்டமானது (பகுதி 82) ஒரு குறைந்த அளவிலான பாதுகாப்பை குறுக்குக் கோடிடப்பட்ட காசோலை களை ஒன்றுதிரட்டுவதில் வங்கிகளுக்கு வழங்குகின்றது. இப் பாதுகாப்பு வங்கி கள் முகவராகஇயங்கி காசோலைகளை ஒன்று திரட்டும் வேளைகளில் கிடைக்கின்றது. முகவர்களாக இயங்கும் வேளைகளில் மறை முகமாக வங்கிகள் தமக்காகவும் இயங்கு கின்றன. எனினும் சிலவேளைகளில் வங்கி கள் தமக்காக மட்டும் இயங்குகின்றன. அதாவது காசோலைகளை ஒன்றுதிரட்டும் பொழுது அவற்றின்மீதான செலுத்து மதியைக் காசோலைகள் வரையப்பட்ட வங்கியிடமிருந்து பெறுவதற்கு முன்பு வாடிக்கையாளருக்குச் செலுத்தினலோ அல்லது அவரது கணக்குக்குச் சேர்ப்பித்து அதற்கெதிராக வரைவதற்கு அனுமதி யளிப்பதினலோ இந்நிலையை வங்கிகள் அடையலாம். இவ்வாறு இன்றி வங்கிகள் காசோலைகள் மீதான பணத்தை ஒன்று
|| -

Page 38
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்
திரட்டி அதன்மீதான செலுத்துமதிகள் பிற வங்கிகளிடமிருந்து கிடைத்தபின்பு அத் தொகைகளை வாடிக்கையாளரின் கணக்குக்குச் சேர்ப்பிக்கும் வேளைகளில் அ  ைவ வாடிக்கையாளர்களுக்காகவே இயங்குகின்றன என " " மாற்றம்" என்ற தத்துவத்தைப் பொறுத்தவரையில் கொள் ளல் வேண்டும். மாற்றுண்டியல் சட்டம் இதுபற்றிப் பின்வரும் பாதுகாப்பை அளிக் கின்றது.
* ஒரு வங்கியானது நன்னம்பிக் கையுடனும், கவனமின்மையின்றியும் தனது வாடிக்கையாளருக்காகச் சாதா ரணமாகவோ அல்லது சிறப்பாகவோ குறுக்குக் கோடிடப்பட்ட காசோலை களின் மீதானபணத்தை ஒன்று திரட்டி யிருந்தால் அவ்வாடிக்கையாளரின் உரிமையில் பிழை இருந்தாலும் வங்கி யானது பணத்தைப் பெற்றதற்காக மட்டும் அதன் உண்மையான உரிமை யாள னு க் குப் பொறுப்பாகமாட் டாது.”*
இவ்விடயத்தில் வங்கியானது சட்டப் படி பாதுகாப்பைப் பெற்றிருந்தாலும் அடிப்படையில் வங்கியே பொறுப்பாளி யாகக் கருதப்படும், இதன் கருத்து என்ன வெனில் மாற்றம் என்ற குற்றச்சாட்டிற்கு வங்கி யாளாகும்போது சட்டப்படியான தேவைகள் எல்லாவற்றையும் வங்கி தான் பூர்த்தி செய்துள்ளதாக நீதிமன்றத் துக்கு ஒப்புவிக்கவேண்டும். உண்மையான உரிமையாளன் வங்கியின் கவனம் இன் மையை நிரூபிக்கவேண்டிய அதேநேரத்தில் வங்கி தான் கவனம் இன்மையின்றி இயங்கி யதாக ஒப்புவிக்கவேண்டும். இத்தகைய பாதுகாப்பைப் பெறுவதற்கு காசோலையை வங்கி ஒரு வாடிக்கையாளனுக்கு மட்டுமே நல்லெண்ணத்தில் ஒன்றுதிரட்டி இருக்க வேண்டும். அத்துடன் வங்கி கவனம் இன்மையின்றியும் இயங்கி இருத்தல் வேண்டும். w
மாற்றுண்டியல் சட்டத்தில் கவனம் இன்மை என்ற சொல்லுக்கு வரைவிலக்
Maumb

இ. பாலசிங்கம்
கணம் கொடுக்கப்படவில்லை. எனவே இவ் விடயம் வழமையாக தீர்ப்புவழிச் சட்டத் தினுல் வழிநடத்தப்படுகின்றது. வாடிக்கை யாளருக்காக காசோலைகளை சேகரிப்பதில்
பின்வரும் விடயங்கள் வங்கிகளைப் பொறுத்த வரையில் கவனமின்மையாகச் கணிக்கப்படுகின்றது.
(i) கணக்குகள் ஆரம்பிக்கப்படும்
(ii)
(iii)
iv)
(v)
(vi)
(vii)
பொழுது தகவல்களைப் பெறத் தவறுதல்.
பெறுவோன் கணக்குக்கு எனக் குறிக்கப்பட்ட காசோலைகளை பெறுவோன் தவிர்ந்த வேறு ஒரு வரின் கணக்குக்கு ஒன்று திரட்டல் ஒரு கம்பனியின் பெயரில் வரையப் பட்ட காசோலைகளின்மீது அக் கம்பனியின் அலுவலர் ஒருவரால் புறக்குறிப்பிடப்பட்டு இருப்பினும் அக் கம்பனியின் சேவையில் உள்ள அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட கணக்குக்கு விசாரணை இன்றி ஏற்றல், பங்குடமைக்குச் செலுத்தப்பட வேண்டிய காசோலையை பங்காளர் ஒருவரின் சொந்தக் கணக்குக்கு ஏற்றல். விசேட அதிகாரம் இன்றி உத்தி யோக பூர்வமான பதவியின் பெயரில் வரையப்பட்ட(உதாரண மாக: அரசாங்க அதிபர்) காசோலை ஒன்றை அவ்வுத்தியோகத்தரது சொந்தக் கணக்குக்கு ஏற்றல். கம்பனி அல்லது பங்குடமை ஒன்றி னல் மூன்ரும் பகுதியினர் பெயரில் வரையப்பட்ட in Gay fraugott விசாரணையின்றி அதை வரைந்த நிறுவனத்தின் அலுவலர் அல்லது அத்தகைய அலுவலரின் மனைவி
யின் சொந்தக் கணக்குக்கு ஏற்றல்,
முகவர் ஒருவரினுல் அவரது முதல் வரின் கணக்கில் அம் முகவரின் பெயரில் வரையப்பட்ட காசோ

Page 39
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும்.
லையை அதே முகவரின் சொந்தக் கணக்கிற்காக விசாரணையின்றி ஏற்றல். விசாரணை செய்யாது விடுவதினுல் வங்கிகள் தாம் கவனமாக செயற்படுவதை தமக்கெதிராகத் தொடரப்படும் வழக்கு களில் அத்தாட்சிப் படுத்த இயலாமல் இருப்பதை பெரும்பாலும் காணக்கூடிய தாக இருக்கின்றது.
வங்கி தனக்காக காசோலைகளை ஒன்று திரட்டும் வேளைகளில் அதாவது காசோலை பின் பணத்தை ஒன்று திரட்டிப் பெறு வதற்கு முன்பு அதன் பணத்தை வாடிக்கை பாளருக்குச் செலுத்தியோ அல்லது அவ ரது கணக்கில் அதைச் சேர்த்து அதை அவர் எடுப்பதற்கு உரிமையை அளிப் பதினலோ எழும் வேளைகளில் இந்நிலை தோன்றுகின்றது. வங்கியிடம் பெற்ற மேலதிகப் பற்று அல்லது கடன் இவற் றைக் குறைக்கும் நோக்குடன் வேறு வங்கிகளில் வரையப்பட்ட காசோலைகளை வாடிக்கையாளரிடம் இருந்து பெறுவதா லும் இந் நிலை எழலாம். இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும் வங்கி தனக்காகவே காசோலைகளை ஒன்று திரட்டுகின்றன எனக் கொள்ளலாம். இச் சந்தர்ப்பங்களில் வங்கி நன் நம்பிக்கையுடனும் இச்செயற்பாட்டில் ஒரு கள்ளமும் இடம்பெருதிருப்பின் வங்கி தெறிமுறை கொண்டிருப்போனக (holder in due Course) gg j5g 5st (83°mäajesti பொறுப் பா ன வ ர் க ளிட ம் இருந்து செலுத்துமதிகளை பெறுவதற்கு உரிமை பைப் பெறுகின்றது. நெறிமுறை கொண் டிருப்போன் என்ற உரிமையை நிறுவு வதற்கு வங்கி நன்நம்பிக்கையுடனும் காசோலையை மாற்றிச் செய்தவரின் உரிமை சயில் எவ்விதக் குறைபாடு இருப்பினும் அக் குறைபாட்டைத் தெரியாமலும் இருந் திருத்தல் வேண்டும்.
வங்கிகளின் கவனமின்மை எந்நிலை களில் எழும் என்பதை ஆராயும்பொழுது நீர்ப்புவழிச்சட்டம் (Case Law) உதவியாக இருக்கும். உதாரணமாக Ladbroke W

இ. பாலசிங்கம்
Todd என்ற வழக்கில் பெறுவோன் கணக் குக்கென வரையப்பட்ட காசோலையை ஒருவன் களவாடி அதைக்கொண்டு, அதில் காட்டப்பட்டிருக்கும் பெறுவோன் தான் எனக்கூறி ஒரு கணக்கை ஆரம்பித்தான். இக் கணக்கை ஆரம்பிக்கும்பொழுது அவனைப்பற்றி எந்தவிதமான அறிமுகத்தை யும் வங்கி பெறவில்லை. இக் காசோலையை அவனது கணக்குக்காக வங்கி ஒன்று திரட் டியமைக்காக நீதிமன்றம் வங்கி வாடிக்கை யாளனுக்கே காசோலையை ஒன்று திரட்டி ஞலும் அது அக் காசோலையின் மீதான சொத்துரிமையைக் கவனமின்மையின் றியே பெற்றது எனத் தீர்ப்புக் கூறியது. g)(3.5Guntair of Lloyds Bank V Savory & Co. (1933) 6T6ir D aipai Seyh Savory & Co என்ற நிறுவனத்தின் ஊழியர்களாகிய எழுதுவினைஞர்கள் அக் கம்பனிக்குச் சொந்தமான காசோலைகளைக் களவாடி வங்கியின் தலைமைக் காரியாலயத்தின் ஊடாக அவ் வங்கியின் கிளைகளில் உள்ள கணக்குகளுக்குச் சேர்ப்பிப்பதற்காகச் செலுத்தினர்கள். ஒரு கிளையில் இருந்த கணக்கு ஒரு எழுதுவினைஞரின் பெயரிலும் வேறு ஒரு கிளையில் இருந்த கணக்கு வே ருெரு எழுதுவினைஞரின் மனைவியின் பெய ரிலும் இருந்தன. இக் கணக்குகளை ஆரம் பிக்கும்போது வங்கி தமது வாடிக்கையாள ராகிய எழுதுவினைஞரின் தொழில்தரு நரையோ அல்லது மற்றைய எழுதுவினை ஞரின் மனைவியின் பெயரில் ஆரம்பிக்கப் பட்ட கணக்கைப் பொறுத்தவரை அவரது கணவரின் தொழில்தருநரின் பெயரையோ பெறவில்லை. எனவே வங்கி கவனமின்மை யின்றி இயங்கியது எனத் தீர்ப்புக் கூறப் Lullar. Morison W London County and Westminster Bank (1914) Greif D apisai பிரதிவாதியின் முகாமையாளர் எதிரி வங்கியிடம் இருந்த கணக்கில் வரை யப்படும் காசோலைகளுக்குக் கையொப்பம் இடுவதற்கு அதிகாரம் பெற்றிருந்தார். அம்முகாமையாளர் பிரதிவாதிக்குத் தெரி யாமல் எதிரி வங்கியில் தனது பெயரிலும்
3 -

Page 40
வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் . .
ஒரு கணக்கை ஆரம்பித்திருந்தார். அம் முகாமையாளர் பலகாலமாகப் பிரதிவாதி யின் கணக்கில் தன்னுல் வரையப்பட்ட காசோலைகளையும் பிரதிவாதிக்குக்கிடைத்த வேறுபல காசோலைகளில் அவருக்காகப் புறக்குறிப்பிட்டும் தனது சொந்தக் கணக் கிற்கு வைப்புச் செய்தார். எதிரி வங்கி இவ்வாறன காசோலைகளை ஒன்றுதிரட்டி முகாமையாளரது கணக்கிற்கு வைப்புச் செய்தது. வங்கி போதிய விசாரணை இன்றி இச் செயலில் ஈடுபட்டமை கவனம் இன்மை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. Ross W London County and Westminster Bank (1919) என்ற வழக்கில் உத்தியோக பூர்வமான பதவியின் பெயரில் வரையப் பட்டகாசோலைகளை அவ் வுத்தியோகத் தரின் சொந்தக் கணக்கிற்கு ஒன்று திரட்டி யமையில் எதிரி வங்கி விசாரணை இன்றி இயங்கியதால் அது கவனமின்மையாக செயற்பட்டது எனத் தீர்ப்பு வழங்கப் பட்டது.
முடிவுரை :
நவீன வங்கித் தொழிலில் வங்கிகள் பலவகைப்பட்ட சேவைகளைத் தமது வாடிக் சையாளருக்ரு அளிக்கின்றன. இவ்வாருன சேவைகளுக்கெல்லாம் அடிப்படையாக வுள்ளது வங்கிகளுக்கும் அவற்றின் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்படும் வருமதியாளர் - சென்மதியாளர் என்ற உறவேயாகும். இவ்வாறன உறவு முறை
உயர் இணைப்பு
கம்பனியின் சாதாரண பங்கு முதலுட நீண்டகாலக் கடன்கள் ஆகிய முதல்கை முதலும் நீண்டகாலக் கடன்களும் சா இருப்பின் அது உயர் இணைப்பாகும் (High நீண்டகாலக் கடன்கள் என்பவற்றின் டெ கூடுதலாக இருப்பின் அது தாழ் இணைப்ப ஒரு கம்பனியின் சாதாரண பங்குகளுக்கு பாயின் முன்னுரிமை பங்குகள் கூடிய டெ
MYYW^*w*w
- 14

இ. பாலசிங்கம்
கணக்குகளை ஆரம்பிப்பதிலேயே தொடங்கு கின்றது. இதை ஆராயும்பொழுது நடை முறையில் ஒரு வங்கியில் கணக்கை ஆரம் பிக்க விரும்பும் ஒருவன் அவ் வங்கிக்குச் சென்று தான் ஒரு கணக்கு ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறுவான் . இவ்வாறு கேட்பது சாதாரணமாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு உளம் கொள்ளல் எனக் கொள்ளலாம். அதை வங்கி ஒப்புக்கொண் டால் அதில் இருந்து எழுவதுதான் ஒப் பந்தம். எனவே வங்கிக்கும் வாடிக்கை யாளருக்கும் இடையேயுள்ள உறவு முறை யானது ஒரு ஒப்பந்தத்தில் இருந்தே எழு வதால் இதை ஒப்பந்தச் சட்டத்தின் தத் துவங்கள், விதிகள் போன்றவையே ஆட் சிப்படுத்துகின்றன. எனினும், வங்கிகளால் அளிக்கக்கூடிய எல்லாச் சேவைகளையும் உள்ளடக்கும் ஒப்பந்தங்கள் நடைமுறை யில் ஏற்படுத்துவது சாத்தியம் இல்லாத படியால் இவ்வுறவு முறையில் எழும் பல பிரச்சனைகளுக்கு வங்கித் தொழில் சார் புடைய சட்டங்கள், தீர்ப்பு வழிச் சட்டங் கள் மூலமாகவே தீர்வுகள் காணப்படுவது முறைமையாகும். இக் கட்டுரையில் இவ் வுறவு முறையில் எழும் எல்லா அம்சங் களையும் விரிவான முறையில் ஆராய்வது சாத்தியமில்லை என்பதால் இவ்வுறவு முறை யில் எழும் முக்கியமான அம்சங்களாகிய கணக்குகளை ஆரம்பித்தல், காசோலைகளுக் கான செலுத்துமதி, காசோலைகளை ஒன்று திரட்டல் போன்றவை சிறப்பாக ஆராயப் பட்டுள்ளது.
தாழ் இணைப்பு
-ன் ஏனைய முன்னுரிமைப் பங்கு முதல், ா ஒப்பிடும்போது, முன்னுரிமைப் பங்கு தாரணபங்கு முதலைவிடக் கூடுதலாக Geared). மாருக முன்னுரிமைப் பங்குகள் 1றுமதியைவிட சாதாரண பங்கு முதல் Teguh (Law Geared. D. Luri g&a007 Lüq Girar கூடிய மதிப்பிருக்கும் தாழ் இணைப் 1றுமதியுடையதாக விளங்கும்.

Page 41
தலைநகரிற் சிறந்த புகைப்பட நிலேய
Bhan
82/182,
BRIGHT CEN
I в. м. с. LANE, CLOCK TO
í AFFNA,
G. A. Q., B. G. C. E. (AIL),
புதிய கல்வித்திட்டத்திற் ஆசிரியரால் கற்பி
குறிப்பு: வெளிநாடு செ VV 0; Li

-
rai StUdíO ಫ್ಲಿಕ್ಹAR ROAD'.
NTRE
WER ROAD,
Com., B. A., G. C. E. (OIL)
ற்கு ஏற்ப பயிற்றப்பட்ட
க்கப்படுகின்றது.
ல்வோருக்கு 3 மாத காலத்தில் DING CLASSES
நடத்தப்படுகின்றன.

Page 42
வர்த்தக மான வரப்பிரசாதமா வித்தியோதய எனது இதயம் ! வாழ்த்துக்கள்
E. V. g5èoI
பட்டயக்

Tவரின்
) II)6) I நிறைந்த
)
w
韧
Tu ugrilēSLb
கணக்காளர்

Page 43
- பொருளியல் -
இரட்டை அமைப்பும் பொருளாதார அபிவிருத்திய
கலாநிதி வி. நித்தியானந்தம் பொருளியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கொழும்பு வளாகம் பகுதிநேர விரிவுரையாளர் வித்தியோதய வளாகம்

பும்
நீண்ட காலப் பொருளியல் மாற்றங் ar ஆய்வது நெடுங்காலமாகவே பொருளியலாளரின் முக்கிய கவனத்தைப் பெற்று வந்துள்ளது. 19ஆம் நூற்றண்டின் பழம் பொருளியலாளர் மரபு அதனுடன் தொடர்புகொண்டிருந்த பொழுதிலும் இரண்டாவது உலக மகா யுத்தத்துக்குப் பின்பு பல புதிய சுதந்திர அரசுகள் உரு வாகியதை யடுத்தே பொருளியலாளர் மீண்டும் பொருளியல் வளர்ச்சி பற்றிய பிரச்சனைமீது கூடிய கவனம் செலுத்த லாயினர். புதிதாக உருவெடுத்த இந்தக் குறைவிருத்தி நாடுகளின் வறுமை, பொது வாகப் பொருளியல் ரீதியிலும், குறிப்பாகக் கைத்தொழில் ரீதியிலும் தாம் அபிவிருத்தி யடைய வேண்டுமென்ற அவற்றின் அவா வாகப் பிரதிபலித்தது. பொருளியலாளர் இப் பிரச்சனைமீது அக்கறை கொண்ட அதே நேரத்தில், ஒரு விடயம் மட்டும் கூடியளவுக்குத் தெளிவாகிக்கொண்டிருந் தது. அதாவது வளர்ச்சி, அபிவிருத்தி என்பன தலா வருமானத்தின்மீது ஏற்படும் அதிகரிப்பாக நோக்கப்பட முடிந்தாலும், உண்மையில், இந்தச் செய்முறை பொரு ளாதாரத்தின் அமைப்பு ரீதியான உரு மாற்றத்துடனேயே நெருக்கமான தொடர்பு கொண்டது என்பதாகும். கிரா மிய விவசாயத்திலிருந்து நகரக் கைத் தொழில் நோக்கி ஏற்படும் அசைவு பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்த ஓர் அம்சமாக மாத்திரமன்றிப் பொரு ளாதார வளர்ச்சியையே விளக்கும் ஒரு பிரதான காரணியாக ஏற்றுக் கொள்ளப்
ill-gi.
மேற்கூறிய புதுப்பிக்கப்பட்ட ஆர்வத் தின் மத்தியிலும், 1936ஆம் ஆண்டுக்குப் பின்பு கெயின்சியப் பொருளாதாரம் எவ்
7 -

Page 44
இரட்டை அமைப்பும் .
வாறு வருமானம், தொழில், வளர்ச்சி என்பவை பற்றிய கோட்பாட்டை ஆக்கிர மித்துக் கொண்டதோ, அது போன்ற நன்கு வரையறுக்கப்பட்ட " புதிய அபி விருத்திப் பொருளியல்" முறைமையொன்று அபிவிருத்திக் கோட்பாட்டில் வளர்ச்சி யடையவில்லை. எனினும், வளர்ச்சி. அமைப்பு ரீதியான மாற்றம் என்பவற்றிற் குரிய காரணங்களை ஆராயும் அடிப்படைத் தன்மை வாய்ந்த இரு நடைமுறை நோக்கு கள் வளர்ச்சியடைந் திருப்பதாகக் கூற முடியும். அவையாவன, (i) சமீப காலங் களில் ருெஸ் ரெள என்பாருடன் (W. W. Rostow) இணைத்துக் கூறப்படும் வளர்ச்சிக் கட்டங்கள்" அல்லது "முதன்மைத்துறை" பற்றிய நோக்கு, (i) இரட்டைப் பொரு ளாதாரம் பற்றிய நோக்கு.
ஆகவே, மேற்கூறியவற்றிலிருந்து பொதுவான பொருளாதாரக் கோட்பாட் டின் ஒரு கிளை என்ற வகையில் இரட்டை அமைப்பு மாதிரி உரு சமீப காலத்தில் தோன்றியதொன்றே என்பது தெளிவா கும். இரட்டைப் பொருளாதாரம் பற்றிய தகுந்ததொரு மாதிரி உருவை அமைப்ப தற்குப் பொருளாதாரத்தைப் பகுப்பாய் வுக்குட்படுத்தக் கூடியதும், நடைமுறை யிற் கருத்துடையதுமான இரு கூறுகளா கப் பிரிக்க வேண்டியதவசியமாகும். இந் தப் பிரிவு, குறிப்பாகக், குறைவு வருமான முடைய நாடுகள் விவசாயம், மற்றும் மரபு ரீதியான நடவடிக்கைகளிலிருந்து அசைந்து செல்வதை அடிப்படையாகக் கொண்டதா யிருக்க வேண்டும். இவ் வகையில் வழமை யாகப் பயன்படுத்தப்படும் அமைப்புமுறை, ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் கிராமிய விவசாயத்துறை, நகரக் கைத் தொழிற்துறை என்பவற்றைக் கொண்ட தாகும்.
இரட்டை அமைப்பு என்னும்போது, ஒரு குறிப்பிட்ட நாட்டின் பொருளாதார அமைப்பினுள் வேறுபட்ட மட்டங்களில் வளர்ச்சி, அபிவிருத்தி என்பவற்றை

வி. நித்தியானந்தம்
அடைந்த இரு துறைகள் ஒன்ருக இணைந் திருக்கும் நிலை என வரையறை செய்ய லாம். இரட்டை அமைப்புக் கருத்தினைச் சிங்கர் என்பார் (H. W. Singer) இரத்தினச் சுருக்கமாக எடுத்து விளக்கியுள்ளார். அதில் அவர் நான்கு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளார்.
(i) தரப்பட்ட ஒரு கால இடையில், ஒன்று தரம் கூடியதும் மற்றது தரம் குறைந்ததுமான இரு தொகை நிலை மைகள் ஒரே நேரத்தில் இணைந்
திருத்தல். (i) இவ்வாருக இணைத்திருத்தல் ஒரு நிலைமாறும் தன்மையுடையதாக
அல்லாமல் நீண்டதொரு காலத் துக்கு உறுதியாக நிலைத்திருப்ப தொன்முக உள்ளது. அதாவது, தரம் கூடியதைத் தரம் குறைந்த நிலைமை அப்புறப்படுத்தி அதன் இடத்தைத் தான் எடுத்துக்கொள் வதற்குப் படிமுறை வழியில் அவசி யம் வேண்டப்படும் கால இடையின் மூலம் இது ஏற்படவில்லை.
(ii) தரம் கூடிய நிலைமை, தரம் குறைந்த நிலைமை என்பவற்றின் தராதர அளவு விரைவில்குறைவடை வதற்கு எந்தவிதமான சாத்தியக் கூறுகளும்இல்லை-அவை நிலைத்திருப் பதுடன் அதிகரிக்கவும் செய்யலாம்.
(iv) இந்த இரு தொகை நிலைமைகளுக் கிடையிலான தொடர்பின் விசேட தன்மை யாதெனில், தரம் கூடிய துறை தரம் குறைந்த துறையைத் தன்பாற் கவர்ந்து அதன் தரத்தை உயர்த்த முனைவதும் இல்லை (பரவல் விளைவு அல்லது தரம் குறைந்த துறையை முற்ருகக் கீழே தள்ளி அழித்து விடுவதும் இல்லை (பின் உந்தல் விளைவு). மிகை ஊழியத்தைக் கொண்டுள்ள குறைவிருத்திப் பொருளாதாரங்கள் மேற் கூறிய தன்மைகளைப், பெரும்பாலும்,
ســ 8[

Page 45
இாட்டை அமைப்பும் .
கொண்டிருக்குமெனலாம். ஆகவே இத் தகைய பொருளாதாரங்கள் இரட்டைப் பொருளாதாரங்கள் என அழைக்கப்படு கின்றன. எனவே நிலையான மெய் வேதன விகிதத்தில் ஊழியத்தின் கட்டற்ற நிரம் பல் இரட்டைப் பொருளாதார அபிவிருத் திக் கோட்பாட்டின் ஒரு பிரதான எடு கோளாகும். இவ்வகையில் ஆதர் லூயிஸ் arciruntri (W. Arthur Lewis) 1954-gh ஆண்டு எழுதிய " ஊழியத்தின் கட்டற்ற நிரம்பலுடன் பொருளாதார அபிவிருத்தி என்ற கட்டுரை சமீப காலத்திய இரட் டைப் பொருளியல் இலக்கியத்துக்கான கித்தனையாளர்களின் “விடுபடு நிலையாகக் கருதப்படுகின்றது. இத்தகைய மிகை அழியத்தைக் கொண்ட பொருளாதாரங் கன், அளவிற் பெரிதாக ஆணுல் பெருமள அக்குத் தேங்கிநிற்கும் சீவனுேபாய மட் டத்தில் இயங்கும் ஒரு குடியான் கள் விவ சாபத்துறையையும், அளவிற் சிறியதாக ஆனல் விரைவாக வளர்ச்சியடைகின்ற வர்த்தகமயமாக்கப்பட்ட ஒரு கைத் தொழிற் துறையையும் கொண்டிருக்கும். இவ்விரண்டிலும் முன்னையதில் நிறுவன விதியான காரணிகள் வேதனவிகிதத்தைத் நீர்மானிக்கப் பின்னையதில் முதலாளித்து வப் பொருளாதாரமொன்றின் போட்டி திலமைகள் அதனை நிர்ணயிக்கின்றன. இத்தகைய இரட்டைப் பொருளாதாரங் களில் ஊழியம் மிகையாகக் காணப்படுவ தால், இது துறைகளிலுமான தரப்பட்ட உற்பத்தி நிலைமைகளின் கீழ் ஊழியம் அருமையற்ற ஒரு காரணியாகவும் மூல தனம் மிக அருமையான ஒரு காரணியாக வும் விளங்குகிறது இந் நாடுகளிலான கூடிய சனத்தொகை அமுக்கமும், குறைந்த சேமிப்பு விகிதமும் இந்நிலைமையை ம்ேலும் மோசமாக்குகின்றன, ஊழியத்தின் மே வதிக நிரம்பல் பரந்த அளவிலான கிராமிய மறைமுக வேலையின்மைக்கும், கீழ் உழைப் புக்கும் இடமளித்தன.
இரட்டைப் பொருளாதார மாதிரி உருக்கள், அபிவிருத்திச் செய்முறையின்

வி. நித்தியானந்தம்
போது மரபுரீதியானதுறை, நவீனதுறை என்பவற்றுக்கிடையே ஒன்றை யொன்று பாதிக்கவல்ல தொடர்புகள் எவ்வாறு அதி கரித்துச் செல்லுகின்றன வென்பதை எடுத்து விளக்க முற்படுகின்றன. இவ்வாறு தொடர்புபடும்போது இரு துறைகளும் தொடர்ச்சியான தொழில் நுட்ப மாற் றத்தை அநுபவிக்கின்றன. எனினும் ஊழிய, மூலதனச் சந்தைகளுக்கிடையே எந்தவித மான பயனுள்ளதொரு தொடர்பும் நிறு வப்படுவதில்லை. இரட்டைப் பொருளா தாரமானது, காரணிகளின் மறு ஒதுக&ட் டின் வழியாக, விவசாயத் துறையின் வர லாற்று ரீதியான முதன்மை நிலையைக் குறைத்துப் படிப்படியாகக் கைத்தொழிற் துறையின் தரத்தை உயர்த்துவதை நோக் கமாகக் கொண்டுள்ளது. விவசாயத் துறை யிலிருந்து கைத்தொழிற் துறை நோக்கி ஊழியத்தைத் தொடர்ச்சியாக மறு ஒதுக் கீடு செய்வதற்கு விவசாயத்துறையிள் உற் பத்தித் திறன் அதிகரிப்பு முக்கிய பொறி மு  ைற யா க க் கையாளப்படுகின்றது. ஆகவே இதிலிருந்து இரட்டைப் பொரு ளாதார மாதிரி உருவின் அடிப்படை அம் சம் ' மாற்றமடைவதே ' என்பதைக் காண முடிகின்றது. அதன் எதிர்கால இறுதி நோக்குப் பொருளாதார முதிர்ச்சி யேயாகும். இதனலேயே இத்தகைய இரட் டைப் பொருளாதார விளக்கம் இயக்கத் தன்மையுள்ள மாதிரி உரு எனப்படுகின் றது. அபிவிருத்திப் பொருளியல் பொறுத்து இயக்கத்தன்மையுள்ள இரட்டைப் பொரு ளாதார மாதிரி உரு முக்கியமானதே. எனினும், இதனை விரிவாக ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. இலங்கைப் பொருளாதாரத்தின் அமைப்பினை நன்கு புரியும் பொருட்டு, இயக்கத் தன்மையுள்ள மாதிரி உருவுக்கு முன்தோன்றிய விளக் கத்தை, அதாவது இரட்டை அமைப்பு முறையின் ஆரம்ப நிலையினை, ஒரளவு விரி வாக, ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். பொருளாதார வளர்ச்சி முழுமையான வகையில் ஏற்படுவதற்கு
-س 9

Page 46
இரட்டை அமைப்பும் .
விவசாயத்துறை, கைத்தொழிற்துறை என்பன ஆற்ற வேண்டிய கடமைகள் பரஸ்பரம் தங்கியிருக்கும் தன்மையுடை யவை என்பதை வலியுறுத்தித் துறைகளுக் கிடையிலான தொடர்புகளைத் தகுந்த வகையில் விளங்கிக் கொள்வதற்கு இயக் கத் தன்மையுள்ள இரட்டைப் பொருளா தார மாதிரி உருக்கள் உதவியுள்ளன என எடுத்துக் கூறுவது எம்மைப் பொறுத்த வரை போதுமானது.
இயக்கத் தன்மையுள்ள இரட்டைப் பொருளாதார மாதிரி உருக்கள் வளர்ச் சிப் பொருளியலில் தோன்றுவதற்கு எவ் வளவோ காலத்துக்கு முன்னிருந்தே இரட்டை அமைப்புக் கோட்பாடு தோன்றி விட்ட தென்பது மட்டுமன்றி. அது பல வடிவங்களையும் எடுத்துள்ளது. உண்மை கபில் அதன் தோற்றம் மேற்கத்திய குடி யேற்ற நாட்டுவாதத்தினுல் அரசியல், பொருளாதார, இராணுவ ஊடுருவல் களுக்குள்ளான மேற்கத்திய முறையல்லாத ஏனைய சமூகங்களில் பின்தங்கும் ஒரு LDՄւլ ரீதியான துறைக்கும், வளர்ச்சியடையும் ஒரு நவீன துறைக்கு மிடையிலான தொடர்பை (அல்லது தொடர் புக் குறைவை) விளங்கிக் கொள்வதற்கு எடுக் கப்பட்ட ஒரு முயற்சியின் விளைவேயாகும். இக் கருத்தில், இதுவரை சுயதேவைப் பூர்த்தி செய் மரபு ரீதியான தன்மை கொண்ட ஒரு சமூகம் எப்போது சர்வதேச வர்த்தகத்திற்காகத் திறந்து விடப்படு கின்றதோ அந் நிலையில் இரட்டைத் தன்மை தோன்றிவிட்ட தெனலாம். ஆகவே குடியேற்ற நாட்டுவாதத்தின் ஒரு விளைவே இரட்டைத் தன்மை எனலாம்.
20ஆம் நூற்றண்டின் ஆரம்பமளவில் நெதலாந்துக் கிழக்கிந்திய தீவுகளின் பொருளியல் நலனில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளும், அறிவியலாளரும் ஒரு விசித்திர நிலையை எதிர்நோக்கினர். 19ஆம் நூற்ருண்டின் இறுதித் தசாப்தங்களில் வளர்ச்சியடைந்த கட்டற்ற வியாபார
2 صبے

வி. நித்தியானந்தம்
முறைகளின் கீழ் ஐரோப்பிய பெருந் தோட்டச் சொந்தக்காரர் நன்மையடைந் தது போன்றே ஜாவா தேசத்துக் குடி யான்களும் பெரு நன்மை அடைந்திருக்க வேண்டும். எனினும் பெருந்தோட்டச் சொந்தக்காரர் பெற்ற நன்மையின் ஒரு சிறு துளியைக் கூடக் குடியான்கள் அணு பவிக்கவில்லை. 1 90 0 -ᎥᏂ ஆண்டளவில் மேற்கு நாட்டவரது தாராண்மைக் கொள் கைகள் டச்சுக் கிழக்கிந்திய தீவுகளைப் பொறுத்தவரை தோல்வியடைந்து விட்ட தென்பது தெளிவாகியிருந்தது. " குறை வடையும் நலவுரிமை தான் இங்கு நிலவு கிறதென்பது உத்தியோக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தத் தோல்விக் குரிய காரணங்களை ஆராயப் புகுந்த டச் சுப் பொருளியலாளர், அதன் மூலம், குறைவிருத்தி நாடுகளில் நிலவும் பொரு ளாதார இரட்டைத் தன்மையின் அடிப் படைகள் பற்றிய மிக நீண்டதோர் ஆய் வினைத் தம்மையறியாமலே ஆரம்பித்து விட்டிருந்தனர்.
இரட்டை அமைப்புப் பற்றிய கருத துக்கள் பலவகையில் மாறுபட்டுக் காணப் படுகின்றன. சமூக, அரசியல், பொரு ளாதார நடத்தைகள் பொறுத்துத் துறை ரீதியில் ஏற்படக்கூடிய வேறுபாடுகளைத் தெளிவற்ற முறையில் எடுத்துக்கூறும் கருத்துரைகள் முதல், பொருளாதார அபி விருத்தி, அமைப்பு ரீதியான மாற்றம் என்பவை பற்றிய போக்கினை எடுத்துக் கூறும் நன்கு வரையறுக்கப்பட்ட சிறந்த முடிபுகள் வரை இவை வேறுபடுகின்றன. இரட்டைத்தன்மை நிலவும் அடிப்படைகளை முக்கியமாக ஆறு வகைகளில் வாதிக்க முடியும் எனலாம் அவையாவன, (i) சமூக முறைமை, (ii) சமூக அல்லது இனப் பின் னணி, (i) உற்பத்தி, (iv) சனத்தொகை நடத்தை, (w) நுகர்வோர் சேமிப்பு, செல வீடு என்பவற்றின் அமைப்பு, (vi) உள் நாட்டு வெளிநாட்டுத் துறைகளுக்கிடையி லான தொடர்பு.
0ー

Page 47
இரட்டை அமைப்பும் . .
எல்வாருயினும் பரந்ததோர் அடிப் படையில் இரட்டைத்தன்மை பற்றிய பல வேறு நோக்குகளையும் இரு முக்கிய தலைப் புக்களின் கீழ் அடக்கலாம். அவையாவன, {1) நிலையான மாதிரிஉருக்கள், (2) இயக் கத்தன்மை வாய்ந்த மாதிரி உருக்கள் : இவற்றிற் பின்னையது மரபு ரீதியான, நவீன துறைகளுக்கிடையிலான அதிகரித் துச் செல்லும் தொடர்பினை ஆராய, முன்னையது இந்த இரு துறைகளுக்கு மிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பினை வலியுறுத்துகின்றது.
- நிலையான இரட்டைத்தன்மை இரு வேறுபட்ட அம்சங்களைக் பின்னணியாகக் கொண்டது :
. சமூக இரட்டைத்தன்மை : இது பொருளாதார ஒழுங்குமுறைமை, நியாயம் என்பவை பற்றிய * மேற்கு நாட்டு", * மேற்கு நாடல்லாத " கருத்துக்களுக்குக் கலாச்சார வேறு பாடுகளே காரணமென வலியுறுத்து கின்றது. 2. "தனிப் பிரதேச இரட்டைத்தன்மை: இது ஊழிய, மூலதன உற்பத்திச் சந்தைகளின் தவருண நடத்தையை வலியுறுத்தி, அதனுTடாக மேற்கத்திய நவீன கைத்தொழில் நாடுகள், உல கின் ஏனைய பிரதேசங்களிலுள்ள மரபு வழிச் சமுதாயங்களுடன் தொடர்பு கொள்வதாகக் கூறுகிறது. சமூக இரட்டைத் தன்மையின் மூல கர்த்தா டச்சுப் பொருளியல்வாதியாகிய ஜே. எச். போக் (J. H. Boeke) ஆவார். இவர் 1910ஆம் ஆண்டு வெளியிட்ட தமது ஆய்வுக் கட்டுரையிற் பழம்பொருளியலா ாகின் கோட்பாட்டு விளக்கங்கள் அயன மண்டலக் குடியேற்ற நாடுகளுக்குப் பொருத்தமற்றவையென்றும், இவற்றின் பொருளாதாரப் பிரச்சனைகளை அணுகுவ தற்கு வேறுபட்டதொரு கோட்பாட்டு விளக்கம் அவசியமானதெனவும் எடுத்துக்

ai. SäSutaristä
கூறினர். அவருடைய கருத்தின்படி, கூரிய, ஆழமான, பரந்த பிளவொன்று சமுதா யத்தை இரு பகுதிகளாகப் பிரிக்குமாயின் பல சமூக, பொருளியற் பிரச்சனைகள் முற்றும் வேறுபட்டதொரு வடிவத்தை எடுக்கின்றன. இந்நிலையில் மேற்கத்திய பொருளியற் கோட்பாடுகள் நடைமுறைக் குப் பொருத்தமற்றதாகி விடுவதால் தமது பெறுமதியையும் இழந்துவிடுகின்றன.
போக் சமூக இரட்டைத்தன்மையைப் பின்வருமாறு வரையறை செய்கின்றர்:
'இறக்குமதி செய்யப்பட்ட சமூக முறைமையொன்று )$ 6וש וה Lיש נ - தன்மை யுடைய சுதேச சமூக முறைமை யுடன் மோதுவதேயாகும். பெரும் பாலும் இறக்குமதி செய்யப்பட்ட சமூக முறைமை உயர் முதலாளித்துவ மாகவே காணப்படும். ஆனல் அது சமவுடமை அல்லது பொதுவுடமை யாகவோ அல்லது இவற்றினது கலப் Lumras Ganunt இருக்கலாம்.
இதன் விளைவாக,
* ஒருமித்த ஒரு சமுதாயத்திற்குப் பதிலாக சுதேச சமுதாயம் அந்நிய ருடைய சமூகத்துக்கு அருகருகே காணப்பட்டது. ஒரு கூட்டம் மக்கள் காணப்படவில்லை. ஆனல் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டத்தினர் காணப் பட்டனர். ஒரே தன்மை வாய்ந்த அபிவிருத்தியன்றி இரு வேறுபட்ட அபிவிருத்தி மட்டங்கள் இடம் பெற் றன. ஒருமித்த உறுதித் தன்மைக்குப் பதிலாக ஆளுவோரும், ஆளப்படுவோ ரும் என்ற வேறுபாட்டுணர்வு தலை தூக்கியிருந்தது. இறுதியாக நோக்கின் நிலத்தின் விளைபொருட்களில் மாத் திரம் பெரும் கரிசனை கொண்டு நாட்டு மக்களை அவர்களின் தரம் குறைந்த ஊதியத்தை மட்டும் ஓரளவு வழங்கு மாறு கேட்டும் ஒரு கூட்டத்தினர் காணப்பட்டனர்."
-

Page 48
இரட்டை அமைப்பும் .
ஆகவே, இங்கு வேறுபட்ட தன்மை வாய்ந்த இற க் கும தி செய்யப்பட்ட சமூக முறைமை, சுதேச சமூக முறைமை என்பவற்றுக்கிடையிலான மோதலே வலி யுறுத்தப்படுன்கிறது. இவ்வாறு மோதும் சமுதாயங்களுக்கிடையிலான பெறு மதி முறை  ைம க ள், பொருளா தா ர த் தன்மைகள் என்பனவும் பெரிதும் வேறு பட்டவையாகும். முதலாளித்துவத்தின் கீழான பெறுமதி முறைமை தர்க்க ரீதி யில் இயங்குவதொன்ருயிருக்கச் சுதேச
சனத் தொ  ைக மரபுகள், சம்பிர தாயங்கள், பழக்க வழக்கங்கள் என்ப வற்றை அடிப்படையாகக் கொண்டு
இயங்குகின்றது. முந்தியதில் தேவைகள் எல்லையற்றுக் காணப்படப் பிந்தியதன் மத்தியில் அவை மட்டுப்படுத்தப்பட்டனவா யுள்ளன. முதலாளித்துவ முறையில் தொழில், குடும்பம் என்பவற்றுக்கிடையி லான பிரிவு தெளிவானதொன்ரு யிருப்பது மட்டுமன்றிக் குடும் பத் தின் பங்கு தொடர்ந்து குறைவடைந்து செல்வ தொன்ருகவே காணப்படும். ஆனல் சுதேச சமூக முறைமையில் குடும்பத்துக்கும் தொழிலுக்கு மிடையிற் பெருமளவு வேறு பாடு இல்லை. இலாப உணர்வோ, போட் டியோ, ஒழுங்கான தொழில் முறையோ அங்கிருப்பதில்லை. அதற்குப் பதிலாக மத, இன, மற்றும் மரபு ரீதியான சமூக நோக்கங்களே அங்கு காணப்படுகின்றன. முதலாளித்துவத்தின்கீழ் தொழிற்பிரிவு முக்கிய அம்சமாயிருக்க, மரபுவழி வந்த சுதேச முறையில் சுயதேவைப் பூர்த்தி செய்யும் சீவனுேபாய உற்பத்தியிலீடுபடும் சுயமான குடும்பங்களே காணப்படுகின் றன. சுருக்கமாகக் கூறின் தமது இரட் டைத் தன்மைக்கான ஒரு முன்கூட்டிய நிலைமையாக போக் வெளியீட்டுச் சந்தை, ஊதியச் சந்தை என்பவற்றின் மட்டுப் படுத்தப்பட்ட தொடர்புகளினூடாக எல்லையோரங்களில் மாத்திரம் ஒரளவு தொர்பு கொள்ளும் இரு வேறுபட்ட சமூக முறைமைகள் நிலவுகின்றன என எடுத்துக் கொள்ளுகின்ருர். -
- 2

வி. நித்தியானந்தம்
தமது ஆய்வில் போக் வெளிப்படுத்தும் முக்கிய உண்மை யாதெனில் மேற்கத்திய கிழக்கத்திய சமூகங்களின் பொருளாதார நடவடிக்கைகளின் நோக்கங்களிலான அடிப்படை வேறுபாடாகும், மேற்கு நாடு களிலும், கீழைத்தேசங்களிலிருந்த மேற் கத்திய " தனிப் பிரதேசங்களிலும் " பொரு ளாதார நடவடிக்கை பொருளியற் தேவை யின் நிமித்தம் அமைந்திருக்க, கிழக்கு நாடுகளில் அது பிரதானமாகச் சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண் டிருந்தது. ஆகவே முதலாளித்துவ சமுகங் களுக்குப் பொருத்தமான பொருளியல் விதிகள், முதலாளித்துவமும், குடியான்க ளுடைய பொருளாதாரமும் அருகருகே காணப்படும் ஒரு சமூகத்துக்குப் பொருந்த மாட்டாது. சாதன ஒதுக்கீடு, வருமானப் பங்கீடு போன்றவற்றை நவ-பழம் பொரு ளியற் தத்துவமாகிய எல்லை விளைவுக் கோட்பாட்டைக் கொண்டு விளக்க முற் படுவதை போக் குறிப்பாகக் கண்டித்தார். கீழைத்தேச சமூகங்களிலுள்ள சாதனங் களின் அசைவற்ற தன்மையின் காரண மாக இவை பொருந்தமாட்டா என இவர்
கருதினர்.
தமது கோட்பாட்டின் மூலம் இவர் வழங்க முற்பட்டிருந்த முக்கிய கொள்கை விளக்கம் யாதெனில், மேற்கத்திய தொழில் நுட்ப முறைகளையும், நிறுவன அமைப்புக் களையும் இந்தோனேசியாவில் (அதாவது ஆசியப் பொருளாதார அமைப்புகளில்) புகுத்த முனைதல் எந்தவிதமான குறிப்பிடத் தக்க ஒரு விளைவையும் ஏற்படுத்த மாட் டாது என்பதேயாகும், முதிர்ச்சியடைந்த முதலாளித்துவத்தை, முதலாளித்துவத் துக்கு முந்திய நிலையிலுள்ள குடியான்கள் பொருளாதாரத்தில் அறிமுகம் செய்தல், பிந்தியதன் சமநிலையைத் தளம்பச்செய்வது மாத்திரமன்றி, மேற்கத்திய பொருளாதா ரங்களைப் போன்று முதலாளித்துவம் படிப் படியாக வளர்ச்சியடைவதையும் முற்ருகத் தடுத்துவிடுகின்றது. மரபுவழிவந்த குடி யான்கள் விவசாயத்தில் நவீன நுட்பங் களைப் புகுத்துதல் தலா வெளியீட்டை
2 -

Page 49
இரட்டை அமைப்பும் .
அதிகரிக்கமாட்டாது. ஆனல், நீண்ட காலத்தில், சனத்தொகை வளர்ச்சிவிகிதம் விரைவடைவதற்கே உதவி புரிகின்றது. இத்தகைய சமூக-பொருளியல் இரட்டைத் தன்மை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்கா வது நிலையானதொன்முகக் காணப்படும். சமூக-பொருளியல் இரட்டைத் தன்மை புடைய நாடுகளின் சமூக-பொருளாதாரக் கொள்கை அடிப்படையில், இருவேறுபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கவேண்டு மென்றும், இந்தப் பிரிவினை குறிப்பிட்ட சமூகங்களின் கொள்கைப் பிரயோகத்துக் கேற்ப அமைந்திருக்க வேண்டுமென்றும் போக் முடிவாக எடுத்துக்கூறிஞர்.
போக் தமது நிலையான இரட்டைத் தன்மைக் கோட்பாட்டை வெளியிட்ட நாள் முதலே அது ஏனைய டச்சுப் பொரு ளியலாளரின் பலத்த கண்டனத்துக்குள் ளாகியிருந்தது. போக் கோட்பாட்டைக் கண்டிப்பவருள் ஒருவராகிய பேகர் (D. H. Burger) என்பார் பின்வருமாறு குறிப்பிடு адрi:
இவர் எடுத்துக்கொண்ட முறை மைகளின் வரையறை காரணமாகச் சில பொருளியல் அம்சங்களை, சுய தேவைப் பூர்த்திசெய்யும் முதலாளித் துவத்துக்கு முந்திய கிராமம் என்ற வகையில் மிகத் தாழ்த்தியும், வேறு சிலவற்றை உயர் முதலாளித்துவம் என்ற வகையில் மிக உயர்த்தியும் எடுத்துக்கூற வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனல், இந்தோனேசிய சமூகத்திற் கும் மேற்கத்திய சமூகத்துக்குமிடை யில் இடையீடு இருப்பது உண்மையா யினும், இது நடைமுறையிலிருப்பதை விடப் பெரிதுபடுத்திக் கூறப்படுகின் றது. இதன் விளைவாக இந்தோனேசி யர்களின் பொருளாதார நடவடிக்கை களும். உண்மையாக நடைமுறையி லிருப்பதைவிடப், பழமையானவை யாக எடுத்துக் கூறப்படுகின்றன."
போக் தமது கோட்பாட்டைக் கட்டி யெழுப்பிய அத்திவாரமாகக் கருதக்கூடிய
- 2

வி, நித்தியானந்தம்
தேவைகளுக்கிடையிலான பாகுபாட்டை யும் பலர் கண்டித்துள்ளனர். தேவைகளைப் பொருளியல் ரீதியானவை, அவ்வாறல் லாதவை எனப் பிரித்தல் பொருத்தமற்ற தென எடுத்துக்காட்டப்பட்டது.
காலப்போக்கில் மேற்கத்திய பொரு ளியற் கோட்பாட்டில் ஏற்பட்ட அபி விருத்திகளின் விளைவாக, போக் கருத்துக் களுக்கெதிராக எழுந்த கண்டனங்களும் கூடியளவுக்கு ஆழம் பெற்றன. சமீப காலத்தில் பெஞ்சமின் ஹிகின்ஸ் (Benjamin Higgins) போக் கருதிய நடைமுறை அவ தானங்கள் உண்மையிற் சரியானவைதான என்றதொரு சந்தேகத்தைக் கிளப்பியுள் ளார். பேகர் என்பாரைப் Glumrøör G3gp இவரும் போக் இரட்டைத்தன்மையின் தராதர அளவை மிகைப்படுத்திவிட்டா ரெனவே கருதுகின்றர். அத்துடன் இரட் டைத்தன்மை கிழக்கத்திய பொருளாதா ரங்களுக்கு மாத்திரம்தான் உரியதென் பதை ஹிகின்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்குநாடுகளிலேயே பயன்படுத்தப்படும் நுட்பங்களின் மட்டம், பொருளியற் சமூக நலன், பொருளியற் சமூக நடத்தை என்பவை பொறுத்துத் துறைகளிடையே வேறுபாடு காணப்படமுடியும். போக் காட்டிய உதாரணங்களுக்கு முரணுன பல உதாரணங்களைத் தந்து மேற்கத்திய பொருளியற்பாகுபாடு கீழைத் தேசங்களுக் கும் பொருந்தக்கூடியதே என இவர் எடுத்துக்காட்டுகின்ருர். மார்ஷல் (Alfred Marshall), Gibu9bpri (Joseph Schumpeter) ஆகியோருக்குப் பிந்திய மேற்கத்திய சிந்தனைகளை போக் நன்கு அறிந்திராததன் காரணமாகவே அவற்றின் பிரயோகத்தை இவர் தவருக எடை போட்டாரென ஹிகின்ஸ் சுட்டிக்காட்டினர்.
எவ்வாருயினும், போக் கோட்பாட்டுக் கெதிராக எழுந்த கண்டனங்கள், குறை விருத்தி நாடுகளின் பொருளாதார அபி ளிருத்திச் செய்முறையை விளங்கிக்கொள் வதற்குரிய ஒரு கருவி என்ற வகையிற். கோட்பாட்டின் முக்கியத்துவத்தை எவ்
3 -

Page 50
இரட்டை அமைப்பும் .
வகையிலும் குறைத்திருப்பதாகக் கூற முடியாது. போக் கூறும் பல அம்சங்கள் கைத்தொழில் அபிவிருத்திக்குட்படாத சமூகங்கள் பற்றிய உண்மைகள் பலவற்றை நேரடியாகக் கண்டறிந்ததன் விளைவே யாகும். இதனல், இவை கூடியளவு நடை முறை முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. போக் கோட்பாடு ஒருகுடியேற்ற நாட்டுவாத அடிப்படையிலிருந்து உருவாகி யுள்ளபோதிலும், புதிதாகச் சுதந்திரம் பெற்ற பல நாடுகளின் திட்டமிடல் நிறு வனங்களும், ப்ொருளாதாரக் கொள் கையை வகுப்பதற்குப் பொறுப்பாயுள்ள உத்தியோகத்தரும் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக இந்தக் கோட் பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனரென லாம். உதாரணமாக, நவீன பொருளியலில் "பின்புறம் சரிந்து செல்லும் நிரம்பற்கோடு” எனப் பிரபல்யம் பெற்றிருக்கும் " நிரம்ப லின் நேரெதிர் நெகிழ்ச்சி" (உயர்ந்த லாபம், உயர்ந்த வேதனம் என்பவற்றின் மத்தியில் பொருளியல்முயற்சியில் ஏற்படும் குறைவு) இரட்டைப் பொருளாதாரங் சளின் ஒரு முக்கிய பண் பெனப் போக் கொண்டார். இது இன்றும் மேற்கத்திய நாடுகளல்லாத கிராமிய சமூகங்களின் பிரச்சனையாயிருப்பதோடு, விவசாயத்தில் உற்பத்தித் திறமை அதிகரிக்காமலிருப்ப தற்குரிய தர்க்கபூர்வமான நியாயமாகவும் எடுத்து விளக்கப்படுகின்றது. ஒரு வகை யில் பல குறைவிருத்தி நாடுகள் கனரகக் கைத்தொழில் வளர்ச்சி, இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில்கள் என்பவற் றுக்கு முக்கியத்துவமளித்து செயற்கை உர உற்பத்தி, விவசாய இரசாயனப் பொருள் உற்பத்தி, பண் ணை உபகரணங்களின் கைத்தொழில் என்பவற்றிற் போதி யளவு முதலீடுகளை மேற்கொள்ளாமைக்கு இதுவே மறைமுகமான காரணமாகவும் இருந்திருக்கலாம். இதனுல் பல நாடுகள் விவசாய அபிவிருத்தியை விட்டுக்கொடுத் துக் கைத்தொழில்களை வளர்க்க முற்பட் டுள்ளன எனலாம்.
போக் ஆய்வு தெளிவாக்க முயல்வ தெல்லாம் என்னவெனில், குறைவிருத்திப்
- 24

வி. நித்தியானந்தம்
பொருளாதாரமொன்றின் உற்பத்தியில் ஏற்படும் ஓர் அதிகரிப்புத் தானுகவே சேமிப்பு, முதலீடு என்பவற்றை உருவாக்கு மென எதிர்பார்த்தால் அது முற்றும் தவ ருகும். தவிர, முதலீடு நிச்சயம் உற்பத்தி அதிகரிப்பைக் கொண்டுவருமென எதிர் பார்த்தால் அது இன்னும் தவருகும். தகுந்த உள்ளிட்டு - வெளியீட்டு விகிதா சாரங்களை முன்கூட்டியே கருத்திற் கொண்டு குறைவிருத்தி நாட்டுக்கெனத் தீட்டப்படும் எந்தவொரு திட்டமும், அந் நாட்டின் கிராமப்புறங்களிற் காணப்படும் நிலைமைகளைத் தவருகப் புரிந்துகொண் டுள்ளதென்றே கூறவேண்டும். பொருளா தார அபிவிருத்திப் பிரச்சனைகளை அணுகு வதற்கு முன்பாகப் பொருளாதார அபி விருத்திக்கான சமூகரீதியான முன்கூட்டிய நிலைமைகள் பற்றிய தெளிந்த அறிவைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். சமூக, கலாச்சார அம்சங்கள் அபிவிருத்திப் பிரச் சனையின் "எச்சங்கள்" என்ற முறையிற் கருதப்படாமல், அவற்றுக்குக் கூடிய முக்கி யத்துவம் கொடுத்து, அவற்றைத் தகுந்த வகையிற் கருத்திற்கொண்டே குறை விருத்தி நாடுகளின் அபிவிருத்தித் திட் டங்களைச் செயற்படுத்த முற்படவேண்டும்.
மேலும் சமீப காலத்தில் சிங்கர் என்பார் (H. W. Singer) ஒழுங்கான வேதனம் வழங்கும் ஊழியம் நிலவும் வரை யறுக்கப்பட்ட துறைக்கும், வேலையின்மை, கீழ் உழைப்பு என்பன பல வடிவங்களில் நிலவும் கிராமியத் துறைக்குமிடையிலான பிளவின் அடிப்படையில் தற்கால்த்தில் ஏற்படும் இரட்டைத் தன்மை, வழமையான மேற்கத்திய கருதுகோள்களை நேரடி யாகவோ அல்லது மாற்றங்களின்றியோ பிரயோகிக்கக் கூடாதென்ற போக் நிலை மையை உறுதிப்படுத்துவதாக உள்ளது எனக் கருதுகின்ருர், மிகை ஊழியத்தைக் கொண்ட பொருளாதாரம் அமுலிலிருக்கும் குறைவிருத்தி நாடுகளைப் பொறுத்தவரை இது பெரிதும் உண்மையென்பதைச் சிங்கர் வலியுறுத்துகின்றர். ஆகவே, முடிவாகக் கூறுமிடத்து போக் தமது இரட்டை அமைப்புக் கோட்பாட்டில், அபிவிருத்திப்
-

Page 51
இரட்டை அமைப்பும் .
பிரச்சனைகளை அணுகுமிடத்துப் பொருளிய துடன் தொடர்புபடாத கலாச்சார மற்று மனித நடத்தை சம்பந்தப்பட்ட காரணி களேக் கவனத்திற் கொள்ளுதல் அவசிய மென்பதையே வலியுறுத்துகின்றர். எனி னும், இவர் இழைத்த தவறு யாதெனில் தமது கோட்பாட்டைச் சமூக ரீதியில் வெளிப்படுத்துவதற்குப் பதிலாகப் பொரு வியல் ரீதியில் வெளிப்படுத்தியதேயாகும்.
IV
* தனிப்பிரதேச இரட்டைத்தன்மை " மறுபுறம், வர்த்தகக் கோட்பாட்டினர் பலருடைய முயற்சிகளைப் பிரதிபலிப்பதா புள்ளது. உள்நாட்டுச் சந்தைக்கு மாத் திரம் உற்பத்தி செய்யும் குறைந்த உற் பத்தித் திறனைக் கொண்டுள்ள ஒரு துறை யுடன், ஏற்றுமதிக்கென உற்பத்தி செய்யும் உயர்ந்த உற்பத்தித் திறன்கொண்ட ஒரு துறை இணைந்திருத்தலை இது விளக்குகின் றது. சமூகவியற் கோட்பாட்டைப் போன் நன்றி இரட்டைத் தன்மைக்குரிய கார ாங்களை இது தொழில்நுட்ப ரீதியில் ஆராய்கின்றது. இவ்வாறு செய்யுமிடத்துத் தனிப்பிரதேச இரட்டைத்தன்மைக் கோட் பாடு " பின்தங்கிய துறையைப் பூரண மான சீவனுேபாய மட்டத்துறையாகக் கருதுவதில்லை. அதற்குப் பதிலாக மிகக் குறைந்தளவான பொருளியற் சிறக்கு வியல்பைக் கொண்டு பொருளியல் நட ாடிக்கையின் பரந்ததொரு நடுவலயத்தில் அமைந்திருக்கும் துறையாகவே அது கரு தப்படுகின்றது. அதன் மூலவளங்களின் ஒரு பகுதி சீவனுேபாய மட்ட நடவடிக்கை தோக்கியும் மறு பகுதி பணம் சம்பாதிக் கும் நடவடிக்கை நோக்கியும் முடக்கப் பட்டிருக்கின்றது. எனவே, தனிப்பிரதேச இரட்டைத் தன்மை குறைவிருத்திப் பொருளாதாரங்கள் பற்றிய தனது நோக் கிற் கூடியளவு நடைமுறைத்தன்மை வாய்ந்ததெனலாம்.
தனிப்பிரதேச இரட்டைத் தன்மை யின் தோற்றம் அறிவியல், தொழில் நுட் பம் என்பவை பொறுத்துச் சர்வதேச ரீதி வில் ஏற்படக்கூடிய ஏற்றத் தாழ்வுடன்
வி - 4 eta
2

வி. நித்தியானந்தம்
தொடர்புடையதாகும். இதனையே சிங்கர் *சர்வதேச இரட்டைத் தன்மை" என அழைக்கின்ருர். கோட்பாட்டு ரீதியில், நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி யானது நாளடைவில் சுலபமடைந்து வந் திருக்க வேண்டும். ஏனெனில் நாடுகளின் வளர்ச்சியுடன் அறிவியல், தொழில் நுட் பம் என்பனவும் பெருகிச் சென்றதாற் பிந்தி வளர்ச்சியடையும் நாடுகள் இந்த இருப்பிலிருந்து வேண்டிய அறிவு, அநுப வம் என்பவற்றைப் பயன்படுத்தக் கூடியதா யிருந்திருக்க வேண்டும். கைத்தொழிற் புரட்சியைத் தொடர்ந்து அறிவியல், தொழில் நுட்ப அறிவு கட்டற்ற ஒரு வேகத்திற் பெருகியிருந்த தென்பது ம் உண்மையாகும். அதே போன்று மேற் கூறிய செய்முறை ஒரு குறிப்பிட்ட நிலை வரை அமுலிலிருந்த தென்பதும் உண்மை யேயாகும். ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள், உதாரணமாக, அபி விருத்தியின் முதற் கட்டத்தில் வளர்ச்சி யடைந்ததாகக் கருதப்படும் பெரிய பிரித் தானியா, பிரான்ஸ் போன்றவற்றைவிட விரைவாகவே அபிவிருத்தியடைந்தன. மூன்ருவது கட்டத்தில் வளர்ச்சியடைந்த ரஷிபா, ஜப்பான் போன்றவை இதற்கு முந்திய இரு கட்டங்களிலுமிருந்த நாடு களை விடக் கூடிய விரைவுடன் வளர்ச்சி யடைந்தன. நான்காவது கட்டத்தில் அபி விருத்தியடைந்த அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து என்பவற்றைப் பொறுத்த வரையும் இதே செய்முறை திரும்பவும் ஏற்பட்டது. ஆனல் இந்த நிலைக்கப்பால், பெரும்பாலான ஆசிய நாடுகளும், ஆபி ரிக்க நாடுகளும் அபிவிருத்தியடையத் தொடங்கிய கட்டத்தில் இந்தச் செய் முறை எதிர்பார்த்தவாறு இயங்கத் தவறி விட்டது. ஏற்கெனவே திரட்டப்பட்டிருந்த அறிவியல், தொழில் நுட்ப அறிவைத் தகுந்த வகையில் பயன்படுத்துவதற்குப் புதிய நாடுகள் தவறியபோது சர்வதேச ரீதியில் இரட்டைத் தன்மையானது ஏற் படலாயிற்று. தொகையளவில் அறிவா னது அதிகரித்துச் சென்ற அதே நேரத் தில், அதன் ச்ேர்க்கை குறைவிருத்தி நாடு
25 -

Page 52
இரட்டை அமைப்பும் .
களின் பிரச்சனைகளுக்குப் பொருத்தமற்ற தாக ஆகிக்கொண்டிருந்தது. சுருக்கமாகக் கூறின், அறிவியல், தொழில் நுட்பம், முகாமை என்பவற்றில் ஏற்பட்டிருந்த பிர மிக்கத்தக்க முன்னேற்றங்களைப் பயன் படுத்தக் கூடியளவுக்கு இந் நாடுகளின் தரம் உயர்வடைந்திருக்கவில்லை. அதாவது புதிய குறைவிருத்தி நாடுகளின் வளர்ச்சி மட்டம் மிகக் குறைவாக இருந்ததால், மேற்கூறிய துறைகளில் ஏற்பட்ட உயர் முன்னேற்றம் இந் நாடுகளுக்குப் பொருத்த மற்றதாக இருந்தது.
சர்வதேச இரட்டைத்தன்மை பல வழி களில் உள்நாட்டு இரட்டைத் தன்மைக்கு வழி வகுத்தது. தொழில்நுட்ப ரீதியில் நன்கு முன்னேற்றமடைந்த மேற்கத்திய நாடுகள் குறைவிருத்தி நாடுகளிற் பெருந் தோட்டங்களையும், சுரங்கங்களையும் திறந்த போது தமது நாடுகளிற் காணப்பட்டது போன்ற நுட்பங்களையே இவற்றிற் பயன் படுத்தின. உதாரணமாகப் பெருந் தோட் டங்களின் முகாமை அபிவிருத்தியடைந்த நாடொன்றின் கைத்தொழில் நிறுவனத் தின் முகாமையைப் பெருமளவுக்கு ஒத் திருந்தது. நவீன தொழில்நுட்பம் வெளி நாட்டிலிருந்து இறக்குமதிமூலம் தருவிக்கப் பட்டதஞலும், குறைவிருத்தி நாடுகளின் சுதேச அறிவியல், தொழில்நுட்பத் திறமை மிகக் குறைவாக இருந்ததனுலும் இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பம் குறைவிருத்தி நாடுகளில் வேரூன்றவில்லை. அத்துடன் அது குறைவிருத்தி நாடுகளின் தேவைகளுக்கேற்ற முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டதொன் ரு யுமிருக்கவில்லை. ஆகவே, நவீன தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்டவிடத்து அது எங்கு புகுத்தப் பட்டதோ, அந்தக் குறிப்பிட்ட பிரதேசத் துக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதொன் ருகவே இருந்தது. இந்தப் பிரதேசம் நவீன தன்மையின் ஒரு "தனிப்பிரதேசம்" ஆயிற்று. இத்தகைய புதிய முதலீடுகளின் விளைவுகள் பொருளாதாரத்தின் ஏனைய பகுதிகளுக்குப் பரவவில்லை. சுதேசிகளின் பலவீனமான நிலை ஒருபுறமிருக்க, அந்நிய
- 2

வி. நித்தியானந்தம்
முதலீட்டாளர் தமது அறிவு, அநுபவம் என்பவற்றைப் பரப்புவதிலும் பெருமளவு அக்கறை காட்டவில்லை. சுரங்கங்கள், பெருந்தோட்டங்கள்என்பவற்றைக் கட்டுப் படுத்திய பெரிய சர்வதேச நிறுவனங்கள் தமது லாபங்கள், பங்குலாபம் என்பவற் றின் பெரும்பகுதியைத் தமது சொந்த நாடுகளுக்கு அனுப்பின. இதனுல் இவை குறைவிருத்தி நாட்டினுட் திரும்பவும் முதலீடு செய்யப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கவில்லை. அது மட்டுமன்றித் தமக்குத் தேவையான தரமான முகாமை, மற்றும் திறமைகளை வெளிநாடுகளிலிருந்து தரு விப்பதையே நிறுவனங்கள் பெரிதும் விரும்பின. உள்நாட்டவரை இந்தச் சேவைகளுக்குப் பயிற்றுவிக்கும் நீண்ட செய்முறையை மேற்கொள்ள விரும்பாமல் அவர்களைத் தொழிலாளர்களாக அல்லது தரம் குறைந்த குமாஸ்தாக்களாகவும், மற்றும் தரகர்களாகவுமே பயன்படுத்த முன்வந்தன. ஆகவே, நவீன தொழில் நுட்பம், முகாமை என்பன அந்நிய நிறு வனங்களுடன் தொடர்புகொண்டிருந்தமை ஆரம்ப முதலீட்டு மட்டத்திற்கு மேலாக, அவை, குறைவிருத்தி நாடுகளின் பொரு ளிாதாரத்திற்குட் பரந்து செல்வதற்கு ஒரு தடையாகவே இருந்ததெனலாம்.
எனினும், வரலாற்று ரீதியிற் தனிப் பிரதேச இரட்டைத்தன்மை முதலாளித்து வத்தின் அபிவிருத்தியுடனும், குறிப்பாக சர்வதேச வர்த்தகத்தின் வளர்ச்சியுடனும் தொடர்புடையதேயாகும். குடியேற்ற நாட்டுவாதம் இதற்கு மேலும்உறுதியளித்த தென்பதிற் சந்தேகமில்லை. கடந்த நூற் முண்டில் அயனமண்டல நாடுகளின் பொரு ளாதார மாற்றத்தை ஏற்படுத்தி வைத்த காரணிகளுள் ஒன்று அவற்றின் உற்பத்திப் பொருட்களுக்கு மேற்கு நாடுகளில் ஏற் பட்ட கேள்வியாகும். முதல் விளைவுப் பொருட்களின் கூடிய நிரம்பல், புதிய நிரம் பல் என்பவற்றை மேற்கு வல்லரசுகள் நாடி நின்றமை அயனமண்டலப் பிரதேசம் " திறந்துவிடப்படுவதற்கு" வழி வகுத்தது.
5 -

Page 53
இரட்டை அமைப்பும் .
19ஆம் நூற்றண்டின் வளர்ச்சியுடன், உணவுப் பொருட்கள், மூலப் பொருட்கள் என்பவற்றின் மூலகங்கள் என்ற வகையில் அயனமண்டலக் குடியேற்ற நாடுகளின் முக்கியத்துவமும் அதிகரித்துச் சென்றது. இவை அப்போது நிலவிய பொருளாதாரக் கொள்கையாகிய தலையிடாக் கொள்கை பின் கீழ் பெருந்தோட்டச் சொந்தக் காரரால் உற்பத்தி செய்யப்படுவனவாக இருந்தன.
இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந்த உலகரீதியான பொருளியற் சிறப்புநிலை யானது, பொதுவாக வாணிப வாதத்தைத் தொடர்ந்து வந்த வர்த்தகத் தாராண் மைக் கொள்கைகளுடனேயே தொடர்பு படுத்தப்படுகின்றது. பழம் பொருளியலாள gyrr&au gyll - ab 8fu 505 (Adam Smith), Ges' (5), 5rGLm (David Ricardo), ds Tupai Lont Gibson) (Thomas Malthus), OgJuÉ) Gl 1þStb (Jeremy Bentham), Gagnoir 6ielsall Liáo (John Stuart Mill) போன்ருேர் நாடுகளிடையான வர்த்தகத் தில் எந்தளவுக்குக் குறைவான தடைகள் திலவுகின்றனவோ அந்தளவுக்கு உலகப் பொருளாதார அபிவிருத்தி பூரணமான தொன்றக இருக்குமெனக் கருதினர். சசிகள், தீர்வைகள், அநுமதிப் பங்குகள் போன்ற இவ்வாருண முறைகளினுற் தடைப் படுத்தப்படாத இத்தகைய வர்த்தகமே " கட்டற்ற வர்த்தகம் " என அழைக்கப் பட்டது. கட்டற்ற வர்த்தகத்தின் மூலம் gos Lu (55u'i) தட்டுப்பாடாகவுள்ள பொருட்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதா விருப்பது மாத்திரமன்றி, அப் பகுதியிற் சிறப்பாக, மிகையாக உற்பத்தி செய்யப் படும் பொருட்களை விற்பதற்குரிய இலகு வான சந்தை வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியுமென இவர்கள் எடுத்துக் காட்டினர். இந்தக் கொள்கையின் செல் வாக்கின்கீழ்ப் பல குடியேற்ற நாட்டு அரசாங்கங்கள், தமது குடியேற்ற நாடுக வின் ஏற்றுமதி வர்த்தகத்தைப் பெரு களவு மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. சர்வதேச வர்த்தகத்தின்

வி. நித்தியானந்தம்
வளர்ச்சியுடன் ஏற்றுமதிச் சந்தையானது குடியேற்ற நாட்டு நடவடிக்கைகளின் முக்கிய கருவியாயிற்று.
எனினும், அந்நிய முதலீடு முடக்கப் பட்ட மார்க்கம், அதன் வழி உருவான அபிவிருத்தி அமைப்பு முறை என்பன, இந்த முதலீட்டைப் பெற்றுக்கொண்ட நாடுகளுக்கு எவ்வளவு தூரம் உதவின என்பது சந்தேகத்துக் கிடமானதே. அந்நிய முதலீடானது ஒரு சிறப்புநிலை முதலீடாக இருந்தது மட்டுமன்றி, ஒரு குறிப்பிட்ட உற்பத்தியாக்கத் திறன் வளைகோட்டின் வழியாகவே அசைந்தும் சென்றது. பெரு மளவுக்கு இந்த முதலீடு வேறு துறை நோக்கித் திருப்ப முடியாததொன்முகவும் காணப்பட்டது. ஏனெனில், போக்குவரத் துத் தொடர்பு போன்ற துறைகளில் முடக்கப்பட்ட வளங்கள், உற்பத்திச் சாத னங்கள் என்பவை " குறிப்பிட்ட தேவை யைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப் பட்டு ஏற்றுமதிச் சந்தைக்கு அல்லது சில சந்தர்ப்பங்களில் ஒரு தனி ஏற்றுமதி உற் பத்திக்கு மாத்திரமே சேவை செய்தன.
அபிவிருத்தியடைந்த நாடுகள் குறை விருத்திப் பிரதேசங்களிற் பொருளியல் ரீதியில் அக்கறைகொண்ட நேரத்தில், அப்போது நிலவிய மாற்றுவிகிதத்தின் படி பயிற்சியற்ற ஊழியம், நிலம் என்ப வற்றுக்கான செலவுகள் அபிவிருத்தி யடைந்த நாடுகளை விடக் குறைவிருத்தி நாடுகளில் மிகக் குறைவாக இருந்தன. ஆகவே, இக் காரணிகளைக் கூடியளவு பயன் படுத்தக்கூடிய முன்னேற்றம் வாய்ந்த நுட் பங்களே உற்பத்தி வழிகளில் ஈடுபடுத்தல் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்குக் கூடிய நன்மை பயப்பதாயிருந்தது. ஆளுல்ை தொழில்நுட்பம், முகாமை சம்பந்தப்பட்ட, பயிற்சிபெற்ற ஊழியத்தின் நிலைமை முற் றும் வேறுபட்டதாயிருந்தது. நிலவுகின்ற ஊழியத்துக்கேற்பத், திறமை மிகுந்த ஊழியத்தைப் பெறுவதற்கு அல்லது பயிற்றுவிப்பதற்கான நிரம்பற் செலவு குறைவிருத்தி நாடுகளில் அபிவிருத்தி யடைந்த நாடுகளைவிட மிகக்கூடியதொன்ரு
حصص 27

Page 54
இரட்டை அமைப்பும் .
யிருந்தது. எனவே, திறமை மிகுந்த ஊழி யத்தைக் கொண் டு நவீன நுட்பங் களின் அடிப்படையிலான உற்பத்திகளைத் தமது நாடுகளிலேயே மேற்கொள்வதில் முன்னேற்றமடைந்த நாடுகள் செலவீட்டு நன்மையை அநுபவிக்க க் கூடியதா யிருந்தன.
மேற்கூறிய இத்தகைய தொடர்பு களின் அடிப்படையிற் குறைவிருத்தி நாடு களில் ஏற்றுமதி வழி உற்பத்தி செய்யப் பட்டவற்றில் அதிக லாபந் தரக்கூடியதா யிருந்தவை, தொழில்நுட்ப ரீதியிற் பயிற்சி யற்ற ஊழியம், நிலம் என்பவற்றைக் கூடு தலாகப் பயன்படுத்தி உற்பத்திசெய்யக் கூடியதாயிருந்த உற்பத்திகளேயாகும். பல அயனமண்டல நாடுகளில் பரந்த நிலப் பரப்புக்களும், மலிந்த பயிற்சியற்ற ஊழிய மும் அந்நிய முயற்சியாளருக்கு இலகு வாகக் கிடைக்கக்கூடியனவாயிருந்தன, இலங்கை, மலேயா போன்ற நாடுகளில் பயிற்சியற்ற ஊழியம் இலகுவிற் கிடைக் காமலிருந்தவிடத்தும், அதனைச் சனத் தொகை மிகுந்த இந்தியாவிலிருந்தோ, சீனவிலிருந்தோ இலகுவில் இறக்குமதி செய்துகொள்ளக் கூடியதாயிருந்தது. தேயிலை, கோப்பி, றப்பர் போன்றவற்றின் உற்பத்தி மேற்கூறிய உயர்ந்த ஊழியக் குணகத்தைக் கொண்டிருந்தது மாத்திர மன்றி, இந்நாடுகளின் தரைத்தோற்றம், காலநிலை என்பன்வற்றுக்குகந்தனவாகவும் காணப்பட்டன. இவற்றின் பயிர்ச்செய்கை யுடன் தொடர்புடைய வேறு பல அம்சங் களும், அபிவிருத்தியடைந்த நாடுகளை விடக் குறைவிருத்தி நாடுகளில் மலி வாகவேஇருந்தன. உதாரணமாகக் காட்டு நிலங்களைப் பயிர்செய் நிலங்களாக்குதல். நீண்டகாலப் பயிர்ச்செய்கை, பதப்படுத் தல், பாதுகாத்தல் என்பவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்தல் போன்ற செய் முறைகளில் மூலதனப் பொருட்கள், பயிற்சிபெற்ற ஊழியம் என்பவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகப் பயிற்சி பெருத ஊழியத்தைப் பயன்படுத்துவதி லான பதிலீட்டு நெகிழ்ச்சி மிகக் கூடியதா யிருந்தது.

வி. நித்தியானந்தம்
எவ்வாருயினும், ஏற்றுமதிக் கைத் தொழில்களான இத்தகைய சிறப்புநிலை" உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு எத் தகைய இயக்கரீதியான நன்மையையும் கொண்டுவரவில்லை. நவீன போக்குவரத்து அறிமுகம், மற்றும் வெளிப்பாட்டு விளை வின் காரணமாக மக்கள் மத்தியில் உரு வாக்கப்பட்ட சில புதிய தேவைகள் என் பவை தவிரச் சர்வதேச வர்த்தகம் குறை விருத்தி நாடுகளைப் பொறுத்தவரை வேறு எதுவித விளைவையும் ஏற்படுத்தியிருக்க வில்லை. முதல்விளைவுப் பொருட்களின் உற்பத்தி, போக்குவரத்துத் தொடர்பு களின் முன்னேற்றம் என்பன மொத்த வளங்களின் எண்ணிக்கையை அதிகரித்த தென்பதிற் சந்தேகமில்லை. எனினும், இந்த எண்ணிக்கை அதிகரிப்பு, குறைவிருத்தி நாடுகளைப் பொறுத்தவரை உற்பத்தி அதிகரிப்பை ஏற்படுத்தத் தவறிவிட்டது. இந்த முறையீடுகளின் மூலம் சாதாரண மாக ஒருவர் எதிர்பார்க்கும் முதற்தர, இரண்டாந்தரப் பெருக்கல் விளைவுகள், குறைவிருத்தி நாடுகளிலன்றி மூலதனம் உருவாகிய மேற்கத்திய நாடுகளிலேயே ஏற்பட்டன. உற்பத்திக் காரணிகள் வெளி நாடுகளில் உருவாகியவை என்பது மட்டும் இதற்குரிய நியாயமாக இருக்கவில்லை. Q6)g96śr (J. V. Levin) 676üurii diligś காட்டுவதுபோலக் காரணிகளின் வெளி நாட்டுடமை ஏற்றுமதிப் பொருளாதாரங் களின் காரணி நிரம்பல், காரணிகளின் விகிதாசாரம் என்பவற்றை மாற்றுவதை விட அதிகமாக ஒன்றும் செய்திருக்க முடி யாது. ஆனல் இதற்குரிய உண்மையான காரணம் ஏற்றுமதித் தொழில்களின் வரு மானம் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதேயாகும்.
குடிபெயர்ந்து வந்த காரணிகளாகிய ஊழியம், மூலதனம், முயற்சி என்ற மூன் றுமே தமது வருமானத்தின் ஒரு பகுதி யைத் தம் சொந்த நாட்டிற்கு அனுப்பின. எனினும், சிாதனங்கள் சிலவற்றைப் பரா பரிப்பது தவிர வேறு நுகர்வுச் செலவுகள் எதுவுமேயில்லாத மூலதனம்தான் மிகக் கூடிய தொகையை அனுப்பக்கூடியதா
-سس- 28

Page 55
இரட்டை அமைப்பும் .
விருந்தது. எனவே சர்வதேச ரீதியில் இடம் பெறும் இலாபங்களின் மாற்றம் மிகப் பரந்ததொன்ருகக் கா ண ப் பட்ட து. 1906ஆம் ஆண்டுக்கும் 1910ஆம் ஆண்டுக்கு மிடையில், உதாரணமாக, 151 மில்லியன் பவுண் வட்டியாகவும், பங்குலாபங்களாக வும் வருடா வருடம் பெரிய பிரித்தானி பாவுக்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தது. ஏற்றுமதிக் கைத்தொழிலின் மிக உயர்ந்த வருமானங்களைப் பெற்றுக்கொண்டிருந்த பெரு ந் தோ ட் ட முயற்சியும் (முகா மையாளர், பெருந்தோட்ட ஏஜண்டுகள் போன்றேர்) தனது உழைப்பிற் கணிச மான பகுதியைச் சேமிப்பு நிதி, ஒய்வு கால நிதிக் கொடுப்பனவுகள், குடும்பத் தேவைகள், விடுதலைகாலச் செலவுகள் என்பவற்றின் வடிவில் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றது, தபால், வங்கி வசதி களினூடாகத் தம் தாய்நாட்டுக்கு அனுப் பப்பட்டுக்கொண்டிருந்த குடி பெயர்ந்த ஊழியத்தின் வருமானமும் குறிப்பிடத் தக்க தொன்ருகவே இருந்தது. இலங்கை வில், உதாரணமாக, 1925 - 1945 க்கு விடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியத் தோட்டத் தொழிலாளர் வருடா வருடம் சராசரி 23 மில்லியன் ரூபாய்களை இந்தி யாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர்.
இத்தகைய நிலைமைகளின் கீழ் ஏற்று கதிக் கைத்தொழில் வருமானங்களின் செலவீடு குறைவிருத்தி நாடுகளில் எத் தகைய பொருளாதார அபிவிருத்தியையும் தூண்டிவிடவில்லை. உள் நாட்டில் ஏதா வது வருமானம் மீதமாயிருந்தால், அது ஏற்றுமதித் துறையுடன் இணைந்த செல்வம் மிகுந்த ஒரு கூட்டத்தவரின் கைகளையே சென்றடைந்தது. இவர்கள் அதனைப் பெரும்பாலும் ஆடம்பரப் பொருட்களின் உயர்மட்ட இறக்குமதிகளிற் செலவிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் சேமித்த தொகைகள் கூட உள்நாட்டுச் சந்தைக்கு உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஏற்று மதிப் பொருளாதாரத்தின் எஞ்சிய பகுதி வில் முடக்கப்படவில்லை. ஆனல் கூடிய இலாபந் தரக்கூடிய வகையில் உள்நாட்
2 جس۔

வி. நித்தியானந்தம்
டில் அல்லது வெளிநாட்டிலிருந்த ஏனைய ஏற்றுமதிக் கைத்தொழில்களிலேயே முத லீடு செய்யப்பட்டன. மேற்கத்திய முத வீட்டாளரைப் பிற்பற்றிக் குடியான்கள் காசுப் பயிர்களைப் பயிர் செய்தனரென்பது உண்மையாயினும், மு ன்னை ய வ ருக்கு க் கிடைத்த அதேயளவு நன்மைகள் அவர் களுக்குக் கிடைக்கவில்லை. அத்துடன் அவர்கள் மரபுரீதியான உற்பத்தி முறை களைப் பயன்படுத்தித் தமது மேற்கத்திய சகாக்களைவிடப் பின்னடைந்தநிலையிலேயே காணப்பட்டனர்.
மேற்கூறிய அபிவிருத்திகளின் விளை வாகக் குறிப்பிட்ட நாடொன்றின் ஒரே அமைப்பினுள் வேறுபட்ட முன்னேற்ற மட்டங்களுடன் இரு துறைகள் உருவாக்கப் பட்டிருந்தன. ஒருபுறம் குறைந்த வேதனம் பெறும் பெருந்தொகை தொழிலாளரை வேலைக்கமர்த்திய சுரங்கங்கள், பெருந் தோட்டங்கள் என்பவை காணப்பட்டன. மறுபுறம் வேதனம் பெறும் ஊழியத்தை மிக அருமையாகவே பயன்படுத்தும் சிறு குடியான்கள் அல்லது குடும்பங்களுக்குச் சொந்தமான பண்ணைகள் காணப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட முதல் விளைவு உற்பத்தித்துறை பொருளாதார அமைப்பி னுள் ஒரு "தனிப் பிரதேசமாக" அல்லது முதலீட்டை மேற்கொண்ட அபிவிருத்தி யடைந்த நாட்டின் ஒரு " வெளி நிலைய மாக இருந்து வரலாயிற்று. ஆகவே, -பழமையான ஏற்றுமதிப் பொருளாதார மானது ஒர் இரட்டைப் பொருளாதார மாக ஆயிற்று. இரு துறைகளுக்குமிடையே பொருளாதார ரீதியிலான தொடர்புகள் மிகக் குறைவான ஒரு நிலையிலேயே காணப் பட்டன. ஏற்றுமதித் துறையிலிருந்து, மரபு ரீதியான துறை நோக்கி ஏற்பட்ட * பரவல் விளைவுகள் " மிகக் குறைவாகவே g(iš 567 , 535rf Gymrufeño (Arthur Lewis) இந் நிலைமையைச் சிறப்பாகப் படம் பிடிக் கின்ருர், அவர் சொற்களில், " . ஏகாதி பத்திய வாதிகள் மூலதனத்தை முதலீடு செய்து, தொழிலாளரை வேலைக்கமர்த்து கின்றனர் ; வேதனங்களைக் குறைவாக
ܚ 9

Page 56
இரட்டை அமைப்பும் .
வைத்திருத்தல் அவர்களுக்கு நன்மை பயப்பதாகும். சீவனுேபாயப் பொருளா தாரத்தை வறிய நிலைக்குள்ளாக்கும் வகை யில் அவர்கள் பாரதூரமான முயற்சிகளை மேற்கொள்ளாத விடத்தும், அதன் உற் பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை."
தனிப்பிரதேச இரட்டைத்தன்மை தொழில்நுட்ப வேறுபாடுகளின் வழி விளக் கப்பட்டாலும், தொழில்நுட்ப இரட்டைத் தன்மையின், ஆகக் குறைந்தது, மூன்று வேறுபட்ட தோற்றங்களை நாம் அடையா ளம் கண்டுகொள்ள முடியும்.
பென்சமின் ஹிகின்ஸ் (Benjamin Higgins) போக் வெளியிட்ட சமூகவியற் கோட்பாட்டை வெளிப்படையாக நிரா கரித்து நவீன, சீவனுேபாயத் துறைகளுக் கிடையிலான தொழில்நுட்ப ரீதியான வேறுபாடுகளை வலியுறுத்தினர். அவர் கருத்தில் நவீன துறையானது சுரங்கங் களிலும், பெருந்தோட்டங்களிலும் முதல் விளைவுப் பொருட்களை உற்பத்தி செய்வ திற் கூடிய கவனம் செலுத்தும் கைத் தொழிற் துறையாகும். அதே நேரம் மரபு ரீதியான துறையானது உணவுப் பொருட் கள், கைத்திறப் பொருட்கள் என்பவற்றின் உற்பத்தியிற் கவனம் செலுத்தும் கிரா மியத் துறையாகும். ஆகவே இரு உற்பத்தி களையும் முறையே கைத்தொழில் மூலப் பொருட்கள் அல்லது ஏற்றுமதிக்கான முதல் விளைவுப் பொருட்கள், உள்நாட்டு நுகர்விற்கான அத்தியாவசியப் பொருட் கள் எனப் பாகுபாடு செய்து கொள்ளலாம். நவீன துறை வெளிநாடுகளிலிருந்து தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்து கொள்ளுவதொன்ருகவும் மூல த ன ச் செறிவுடையதாகவும் உள்ளது. இறக்குமதி செய்யப்பட்டதொழில்நுட்பம், அடிப்படை யில், ஊழியத்தை மீதப்படுத்துவதொன் முகவும், உயர்ந்த நிலையான தொழில் நுட்பக் குணகத்தைக் கொண்டதாகவும் உள்ளது. அதாவது நிலையான விகிதா சாரத்தில் உற்பத்திக் காரணிகள் இணைக்கப் பட வேண்டும். இதற்கு மாருக, மரபு
జాణ, 3

வி. நித்தியானந்தம்
ரீதியான துறை மாறுபடும் தொழில் நுட் பக் குணகத்தைக் கொண்டது. அதாவது ஊழியம், மூலதனம் என்பவற்றுக்கிடையி லான பல்வேறு காரணி விகிதாசாரங் களின் மூலம் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அத்துடன் அது ஊழியச் செறிவுடைய உற்பத்தி முறைகளையே பயன்படுத்துகின்றது.
ஹிகின்ஸ் கருத்துப்படி 19ஆம் நூற் ருண்டு அபிவிருத்திச் செய்முறையின் மூலம் குறைவிருத்தி நாடுகளில் ஏற்பட்ட ஒரு முக்கிய விளைவு யாதெனில் விரைந்த சனத் தொகைப் பெருக்கமாகும். " சில நாடு களில் சில காலப்பகுதிகளில் சனத்தொகை யின் அதிகரிப்பு விகிதம் கைத்தொழிற் துறையில் மூலதனம் திரட்டப்பட்ட விகி தத்தை விட மிகக்கூடியதொன்ருயிருந். தது", என அவர் குறிப்பிட்டார். எனினும், இந்த அதிகரித்த சனத்தொகையை நவீன துறை உறிஞ்சிக்கொள்ள முடியவில்லை. இத்துறையில் உண்மையில் நிலவிய அல் லது நிலவுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான தொழில் நுட்பக் குணகமே. இதற்குக் காரணமாயிருந்தது. ஆகவே, சனத்தொகை பெருகிய அதே விகிதத்திற் தொழில்வாய்ப்புக்கள் பெருகவில்லை. இந் நிலையில் மாறுபடும் தொழில்நுட்பக் குணகம் நிலவிய துறையிலேயே அதிகரித்த சனத்தொகை தனது வாழ்க்கைக்குத் தங்கியிருக்கவேண்டியதாயிருந்தது. மரபு ரீதியான துறையில் நிலவிய மாறுபடும் தொழில் நுட்பத்தின் மத்தியிலும், ஆரம் பத்தில், நிலத்துக்கான ஊழியத்தின் விகி தாசாரத்தை நிலையாக வைத்திருக்கும் வகையில், அதிகரித்த சனத்தொகையைச் சமாளிக்க மேலதிக நிலம் செய்கைக்குட் படுத்தப்பட்டது. எனினும், இவ்வகையில் திறமையாகப் பயன்படுத்தக்கூடிய நிலத் தின் அளவு மட்டுப்படுத்தப்பட்டதொன் ருகவே இருந்தது. ஏனெனில் நிலத்தின் நிரம்பல் ஒருபுறமிருக்கக் கிடைத்த நிலத்தைத் தரமான செய்கைக்குட்படுத்து வதற்கு அவசியமாயிருந்த வேறு வடிவி லான மூலதனமும் இத்துறைக்குக் கிடைக்கி
) -

Page 57
இரட்டை அமைப்பும் .
வில்லை. எனவே இறுதியில் சிறந்த நிலத் தின் நிரம்பல் குறைவடைந்துகொண்டு சென்றதும் மூலதனத்துக்கான (பெரும் பாலும் தரமுடைய நிலம்) ஊழியத்தின் விகிதாசாரமும் குறிப்பிடத்தக்களவுக்கு அதிகரிக்கலாயிற்று. தொழில்நுட்பக் குண கங்கள் மாறுபடக்கூடியவையாயிருந்ததால் மரபுரீதியான துறையானது மேன்மேலும் ஊழியச் செறிவுடையதொன்ருக ஆகிக் கொண்டிருந்தது.
இந்த விளக்கத்திற்கெதிரான முக்கிய கண்டனம் யாதெனில், பொதுவான விவ சாயம் - கைத்தொழில் என்ற பிரிவின் அடிப்படையில் எழும் ஒர் இரட்டை அமைப்பு நிலைக்கு அல்லாமல் பெருந் தோட்டம்-மரபுரீதியான விவசாயம் என்ற வகையில் அமைந்த இரட்டை அமைப்பு திலக்கு இது பெருமளவு பொருத்தமற்ற தாகும். நவீனதுறையிற் காரணி விகிதா சாரங்கள் தொழில்நுட்ப நிலைமைகளினுல் உயர்ந்த மூலதனச் செறிவு நிலையில் வைக்கப்பட்டுள்ளனவென்றும், மரபு ரீதி யான துறையில் அவை மாறுபடக்கூடி கவையென்றும், இத்துறையில் ஊழியம் மிகையாக இருப்பதால் ஊழியச் செறி வள்ள முறைகள் பயன்படுத்தப்படுகின்றன வென்றும் ஹிகின்ஸ் விளக்கம் கூறுகின்றது. ஆனல் நவீனதுறை பெருந்தோட்ட விவ சாயத்தை மையமாகக் கொண்டுள்ள இலங்கை, மலேசியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் இந்தப் பொது விளக் கத்தினின்றும் வேறுபடுகின்றன. இப் பொருளாதாரங்களின் நவீன துறையில் ாழியம் கூடிய உற்பத்தித்திறன் உடைய தாயினும், ஒப்பீட்டு ரீதியில் இந்தத் துறை அம் ஊழியச் செறிவுடையதொன்றே சாகும். ஆரம்பத்திலிருந்தே இது பெருந் தொகைப் பயிற்சியற்ற ஊழியத்தை உற் பத்தி நடவடிக்கைளுக்குப் பயன்படுத்து கின்றது. ஆகவே, பெரியதோர் ஊழியப் வடக்கு அவசியமில்லாத நவீன துறை பற்றிய கருத்து இங்கு பொருத்தமற்ற தாகும். பெருந்தோட்டங்களுக்கு மிகப் பெரியதோர் ஊழியப்படை அவசியமாக
- 3

வி. நித்தியானந்தம்
இருந்தது மட்டுமன்றி, ஹிகின்ஸ் கருதியது போன்று, தொழில்வாய்ப்புக்கள் இத் துறையில் அருமையாக இருக்கவில்லை. அதற்குப் பதிலாகக் கிராமிய சனத்தொகை தொழில் தேடுவதற்கு வேண்டியளவு வாய்ப்புகள் காணப்பட்டன. எனினும் சில குறைவிருத்திப் பொருளாதாரங்களில், மரபுரீதியான துறையானது பயிற்சியற்ற ஊழியத்துக்கு ஏற்பட்ட இந்தக் கேள்வி யைப் பூர்த்திசெய்ய முன்வரவில்லை. மாருகப் புதிய அபிவிருத்திகளிலிருந்து ஒதுங்கியிருக்கவே, விரும்பியது.
இத்தகைய நிலையைப் பகுப்பாய்வு GoF VÙuqib GoGoG9 *6)(o?6iv (D. R. Snodgrass) அதே நேரத்தில், தனிப்பிரதேச இரட் டைத் தன்மைக்கு முற்றும் வேறுபட்ட தொரு விளக்கத்தை அளிக்கின் ருர். இவர் கருத்துப்படி சுதேச மரபு ரீதியான துறை நவீன துறையின் ஊழியத் தேவையைப் பூர்த்தி செய்ய முன்வராமைக்குரிய கார ணங்களை இரண்டாக வகுக்க முடியும்.
(i) கலாச்சார ரீதியான காரணங்கள்
(i) மாற்றுப் பொருளாதார வாய்ப்
புக்கள்.
இலங்கையில் உதாரணமாகப் 19ஆம் நூற்ருண்டில் பெருந்தோட்டங்கள் அபி விருத்தியடைந்துகொண்டிருந்த அதே நேரத்தில் இயற்கை மிகச் சாதகமான கால நிலையையும், மரபு ரீதியான பயிர் களைப் பயிரிடக்கூடிய வேறு நன்மைதரும் நிலைமைகளையும் நாட்டுக்கு வழங்கியிருந் தது. அதுமட்டுமன்றி அடர்த்தியான சனத் தொகை யொன்றுகூட நாட்டிற்காணப் படவில்லை. மரபு ரீதியான துறையின் உற் பத்தியாளருக்கு இயற்கை வழங்கியிருந்த சுலபமான வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்துப் பெருந்தோட்டங்கள் வழங்கிய வேதனம் கவர்ச்சியற்றதொன் ருக இருந்திருக்கலாம். அதே நேரத்தில் மரபு வழிவந்த சிங்களக் கலாச்சார அம் சங்கள் சில, (குறிப்பாக அவை தூய நிலை யில் பாதுகாக்கப்பட்ட மலைநாட்டில்)
! -

Page 58
இரட்டை அமைப்பும் .
வேதனம் பெறும் ஊழியத்தை வெறுக்கக் காரணமாக இருந்திருக்கலாம். எனினும், ஸ்னெட்கிருஸ் கருத்துப்படி, மேற்கூறிய , காரணங்கள் காலப்போக்கிற் சரிப்படுத் தக்கூடியவையேயாகும். ஆகவே, நிலைமை யில் மாற்றம் ஏற்படாததற்குரிய கார ணத்தை வேருேர் இடத்திலேயே ஆராய வேண்டும். மலிவான இந்திய ஊழிய நிரம் பல் வேண்டியளவு கிடைக்கக்கூடியதா யிருந்த நிலையில் சுதேச இலங்கையரை நவீன துறை நோக்கிக் கவரக்கூடிய ஒரு வேதனத்தைப் பெருந்தோட்டங்கள் ஒரு போதும் வழங்க முன்வரவில்லை. எனவே, இங்கு இரட்டைத் தன்மையானது கலாச் சார ரீதியான காரணிகளாலோ அல்லது நிலையான மூலதனச் செறிவுடைய தொழில் நுட்பத்தினலோ வி ள க் கப்பட வில் லை. ஆணுல் மரபு ரீதியான, நவீன துறைகளின் பொருளாதார நடவடிக் கை களுக்கு க் கிடைக்கும் ஒப்பீட்டு விளைவு அல்லது வேத னம் என்ற இலகுவான கருத்தினலேயே விளக்கப்படுகின்றது. தொழில் நுட்ப வேறுபாட்டின் மத்தியிலும், குடிபெயர்ந்த ஊழியத்தை இலகுவிற் பெற்றுக்கொள் வதற்கு வாய்ப்பிருக்குமாயின், அதுவே இரட்டைத் தன்மை நிலைத்திருப்பதற்குப் பொறுப்பாயுள்ள முக்கிய சக்தியாக விளங் குகிறதெனலாம். வேதனங்கள், சுதேச ஊழியம் மரபு ரீதியான துறையிலிருந்து நவீன துறை நோக்கி அசைவதற்கு எத் தகைய தூண்டுதலையும் அளிக்காத ஒரு மட் டத்தில் வைத்திருக்கப்பட்டன. உள்நாட் டிற் பொருளாதார நிலைமைகள் சீர் கெட்டவிடத்துக் குடியான்கள் பெருந் தோட்ட வேலைகளை ஏற்றுக்கொள்வதற் குச் சித்தமாயிருந்தமை இந்த வாதத்துக்கு வலிமையளிப்பதாக உள்ளது.
L5)aörsi) (Hla. Myint), மறுபுறம் ஸ்னெட்கிருஸ் தெரிவித்த பெருந்தோட் டங்கள் பின்பற்றிய மலிவு ஊழியக் கொள்கை பற்றிய கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அதே நேரத்தில், தனிப்பிரதேச இரட்டைத்தன்மைக்குரிய அடிப்படையாக மூலதனச் சந்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றர். அவருடைய முறை
- 3

வி. நித்தியானந்தம்
மையில் பொருளாதார ஒழுங்கு, உற்பத்தி வழிமுறைகள் என்பவற்றிற் குடியான்கள் துறைக்கும், பெருந்தோட்டத் துறைக்கு மிடையே காணப்படும் இரட்டைத் தன் மைக்கு ஒத்ததாக இந்த இரு துறைகளுக்கு மிடையே நிதிரீதியலமைந்த இரட்டைத் தன்மையொன்று காணப்படுகின்றது. இது மூலதனச் சந்தையின் பூரணத்துவ மற்ற நிலை காரணமாகவே எழுகின்றது. நவீன வர்த்தக, கைத்தொழில், விவசாயத் துறைகள் நிதிச் சந்தைகளை இலகுவில் அடையக்கூடியதாயிருந்தது மாத்திரமன்றி மரபுரீதியான துறைக்குக் கிடைப்பதைவிட மிக மலிந்த விலைக்கு மூலதனத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததால் மூலதனச் செறிவு மிகுந்த தொழில்நுட்பம், ஊழிய விளை திறனின் உயர்ந்த மட்டம் என்பவற்றை அவை அடைய முடிந்தது. நவீன அபிவிருத்திகளாற் கவரப்பட்ட குடியான்கள் மேலதிகப் பண வருமா னத்தை ஓரளவு பெற்றுக்கொள்ளும் பொருட்டுப் புதிய பயிர்களின் செய்கை யில் ஈடுபட்டனரென்பது ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டது. இது விடயத் தில் அவர்கள் எதிர்நோக்கிய மிகப்பெரிய தடை தமக்கு வேண்டிய மூலதனத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமையேயாகும். மேற்கத்திய வணிக வங்கிகள் உள்நாட்டுத் துறையைவிட ஏற்றுமதித் துறையிற் கூடிய கவனம் செலுத்தியது மாத்திரமன்றிக் கடன் வழங்குவதில் இவை பின்பற்றிய கடுமையான, பழமைவாய்ந்த விதிகள் உள்நாட்டவரில் மிகச் செல்வம் படைத் தவர்களாற் கூடப் பூர்த்திசெய்ய முடி யாதவையாயிருந்தன. உதாரணமாக, இலங்கையின் உள்நாட்டு முதலாளிகள் வர்த்தக அடிப்படையிலமைந்த தெங்குப் பயிர்ச் செய்கை நோக்கித் தமது கவ: னத்தைத் திருப்பிய போது இந்தக் குறை பாடு தெளிவாகத் தெரியலாயிற்று.
இதுமட்டுமன்றித் தனிப்பிரதேச நிதித் துறையின் நடவடிக்கைகள் "தவருன" கடன் பாய்ச்சல் முறைகள். ஏற்படுவதற் கும் வழி வகுத்ததாக மின்ற் சுட்டிக்காட் டுகின்றர். இந்த நிதி நிறுவனங்கள் உலக
-

Page 59
இரட்டை அமைப்பும் .
நிதி நிலையங்களின் நிதியைக் குறை
விருத்தி நாடுகள் நோக்கிப் பாயச் செய் வதற்குப் பதிலாகத் தாம் உள்நாட்டிற் சேகரித்த சேமிப்பின் ஒரு பகுதியை உலக நிதி நிலையங்களுக்குக் கடனுகக் கொடுத் தன. இதனல் குறைவிருத்தி நாடுகளி விருந்து மூலதனத்தின் தேறிய வெளிப் பாய்ச்சல் ஏற்படுவதற்கு இவை காலா விருந்தன. ஆகவே இந்த மூலதன நிதியி விருந்து குறைவிருத்தி நாடுகள் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய நன்மைகள் அவற் துக்குக் கிடையாமற் போயின. அந்நிய மூலதனத்தின் மொத்தப் பாய்ச்சல் என்ற வகையில் நோக்குமிடத்துக்கூட, 19ஆம் துற்ருண்டிற் குறைவிருத்தி நாடுகளில் முடக்கப்பட்டதில் அந்நிய மூலதனத்தின் பங்கு பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் காட்டப்படுவது போன்று மிகக் கூடிய தொன்றல்ல. குறைவிருத்தி நாடுகளை ஒரு கூட்டமாக எடுத்து நோக்குமிடத்து அவை, சர்வதேச மூலதனப் பாய்ச்சல் மிக உயர்ந்த கட்டத்தில் இருந்ததாகக் கருதப்படும். 1914ஆம் ஆண்டுக்கு முந்திய தசாப்தத்தில் வருடமொன்றுக்கு 500 மில்லியன் டொலர் களுக்கு அதிகமான அந்நிய முதலீட்டைப் பெற்றுக்கொண்டிருக்க முடியாதெனக் apsu96örgQgaiv (A. K. Cairncross) DS) ü பிடுகின்ருர். எனவே முடிவாக நோக்கு மிடத்து, நவீன தனிப் பிரதேசம் உள் தாட்டு பொருளாதார அபிவிருத்தியின் மீது ஏற்படுத்திய தாக்கம், அதன் மலிவு ஊழியக் கொள்கை, முதலீட்டை உள் நாட்டுப் பொருளாதாரம் நோக்கித் திசை நிருப்பத் தவறியமை என்ற காரணங்களி குலும் மட்டுப்படுத்தப்பட்டதொன்றகவே இருந்தது.
V மேற்கூறிய ஆய்விலிருந்து, தனிப்பிர தேச இரட்டைத் தன்மையின் வளர்ச்சி மேற்கத்திய முயற்சியின் அடிப்படையிற் குறைவிருத்தி நாடுகளில் உருவாகிய முத வாளித்துவ முறைமை தனது அபிவிருத்தி
5 - ܘ
3

வி. நித்தியானந்தம்
யின் போது முழுப் பொருளாதாரத்தை யும் உள்ளடக்கத் தவறியமையின் விளைவே என்பது தெளிவாகின்றது. வேருேரு வகை யிற் கூறின் இந்த அபிவிருத்தியின் "பரவல் விளைவுகள் மிகப் பலவீனமானவையா யிருந்தன. ஒரு முக்கியமான அளவுக்கு ஏற்றுமதிப் பொருளாதார மொன்றின் அபிவிருத்தி அமைப்பு முறை அது முதன் முதல் நிறுவப்பட்ட நிலையிலேயே நிர்ண யிக்கப்பட்டுவிட்ட தெனலாம். பெரும் பாலான ஏனைய பொருளாதாரங்களின் சாதாரண வளர்ச்சியில் ஒவ்வொரு வளர்ச் சிக் கட்டத்திற்குமான உற்பத்திக் காரணி கள் அக் குறிப்பிட்ட முறைமையின் சமு தாயப் பெறுமதிகள், பொருளாதாரச் சன் மானங்கள் என்பவற்றின் விளைவுகளாக நிரம்பல் செய்யப்பட்டன. எனினும் பெருந் தோட்டப் பொருளாதாரங்களைப் பொறுத் தவரை அப்போது நிலவிய சமூக, பொரு ளாதார முறை ஈமகள் வேண்டியிருந்த காரணிகளாகிய மூலதனம், ஊழியம், முயற்சி என்பவற்றை வழங்க முடியவில்லை. பிறநாடுகளிலிருந்தே அவற்றைத் தருவிக்க வேண்டியதாயிற்று. ஆகவே சர்வதேசக் காரணி அசைவே பெருந்தோட்டப் பொரு ளாதாரங்கள் நிறுவப்படுவதற்கான அடிப் படையாயிற்று எனலாம். ܗܝ
பழம் பொருளியலாளருடைய கோட் பாட்டின்படி சர்வதேச வர்த்தகம் ஒரு நாட்டின் உள்நாட்டு வருமானம் பரம்பலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம், வேறுபட்ட கைத்தொழில்களிற் காணப்படும் வேறு பட்ட காரணி விகிதாசாரங்களுக்கேற்பவே கணிக்கப்படுகின்றது. இவ்வாறு செய்யு மிடத்து ஒரு நாட்டின் வளங்கள் தரப்பட் டவையாக, நிலையாக உள்ளனவென்றும், அந்த நாடு ஏற்றுமதி உற்பத்தியை அதி கரிக்கவேண்டுமாயின் உள்நாட்டுக் கைத் தொழில்களிலிருந்து வளங்களை மீளப் பெற்று அவற்றை ஏற்றுமதி உற்பத்திகளிற் பயன்படுத்துவதன் மூலமே அது சாத்திய மா குமெனவும் கொள்ளப்படுகின்றது. காரணிகளின் சர்வதேச ரீதியான அசை
3 -

Page 60
இரட்டை அமைப்பும் on
வின்மையும், உள்நாட்டு ரீதியிலான அசை வுமே சர்வதேச வர்த்தகம் பற்றிய பழம் பொருளியற் கோட்பாட்டின் அடிப்படை யாக இருந்தது. * வர்த்தகம் செய்யும் நாடுகளிடையேயான கட்டற்ற அசைவுத் தன்மை குறைவாயிருத்தலே சர்வதேச வர்த்தகத்துக்குரிய முக்கியபண்பை வழங்கு கிறது " என ரெளசிக் என்பார் (F. W. Taussig) குறிப்பிட்டார். ஒரு நாட்டின் உற்பத்திக் காரணிகள், அந் நாட்டுக்குப் புறம்பான பிரதேசம் நோக்கி அசைந்து செல்லமுடியாதெனவும், ஆனல் அக் குறிப் பிட்ட நாட்டின் ஒரு பிரதேசத்திலிருந்து மறு பிரதேசத்துக்கு அசைந்து செல்லலா மெனவும் கருதப்பட்டது. ஆகவே இதன் மூலம் வெளிப்படும் கருத்து யாதெனில் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள காரணிகளின் ஏற்கனவே தரப்பட்ட நிரம்பல்தான் ஓர் ஏற்றுமதிக் கைத்தொழிலின் நிலையத்தை நிர்ணயிக்கமுடியு மென்பதேயாகும்.
எனினும் மேற்கூறிய தத்துவங்கள் குறைவிருத்தி நாடுகளில் முதல்விளைவு ஏற்றுமதிக் கைத்தொழில்கள் நிறுவப்பட் டமையை விளக்கமுடியவில்லை. அவற்றைப் பொறுத்தவரை உள்நாட்டுக்காரணிகளின் ஏற்கனவே தரப்பட்ட நிரம்பல் போதுமான தொன்முக இராதது மட்டுமன்றிப் பொது வாக அசைவற்றதாகவும் காணப்பட்டது, காரணிகளின் சர்வதேச அசைவு வழியா கவே பெருந்தோட்டக் கைத்தொழில்களை நிறுவுவதும், அவற்றை இயக்குவதும் சாத்தியமாயிற்று. அவற்றின் நிலையமும் உள்நாட்டுக் கைத்தொழில்களைப் பொது வாக நிலையப்படுத்திய பொதுத் தத்துவங் களைப் பின்பற்றி மிகக் குறைந்த அசைவுத் தன்மை பொருந்திய உற்பத்திக் காரணிக ளாகிய காலநிலை, தரைத்தோற்றம், நில வளம் என்பவற்றினலும் சந்தைக்கு அண் மித்த நிலையினலுமே நிர்ணயிக்கப்பட்

வி. நித்தியானந்தம்
டிருந்தன. ஏற்றுமதிக் கைத்தொழில்களுக் குரிய வளங்களின் ஒரு பகுதி உள்நாட்டுத் துறை யிலிருந்து பெறப்பட்டதென்பது உண்மையே. எனினும் வெளிநாடுகளி லிருந்து கொண்டுவரப்பட்ட மூலதனம், ஊழியம், முயற்சி என்பவற்றுடனும், அவை உருவாக்கிய விரிவுச் சக்தியுடனும் ஒப்பிடுமிடத்து இந்தப் " பிரதியீட்டு " விளைவு மிகக் குறைவானதொன்றேயாகும்.
ஏற்றுமதிக் கைத்தொழில்கள் ஒரு முறை நிறுவப்பட்டதும் இந்தக் காரணி கள் அசைவுத் தன்மை பெற்று அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தினுள் ஒரு கைத் தொழிலிலிருந்து மற்றென்றுக்கு அசைந்து சென்றன. இலங்கையில், உதாரணமாக, அவை தேயிலை, றப்பர்க் கைத்தொழில்க ளிடையே அசைந்து சென்றன. அது மட்டுமன்றி, ஓர் ஏற்றுமதிப் பொருளா தாரம், நிலவளங்கள் அல்லது கனி வளங் கள் முடிவுற்றதனுலோ, கிருமிகள் தாவ ரத்தை அழித்ததனுலோ அல்லது வேறு மலிந்த பிரதியீடுகளைப் பயிர் செய்தத ஞலோ, தொடர்ச்சியான பல ஏற்றும திக் கைத்தொழில்களை ஏற்றுக்கொண் டிருந்தால், அத் த  ைக ய சந்தர்ப்பங் களிலும் இவ்வுற்பத்திக் காரணிகள் புதிய கைத்தொழில்களை நாடிச் செல்லக்கூடி யதாயிருந்தன. அல்லது வேறு இடங் களில் தொழில் தேடக்கூடியதாயிருந்தன. இலங்கையில் கோப்பிச் செய்கை அழிவுற்ற போது, அதில் இடம் பெற்றிருந்த காரணி கள் எல்லாவற்றையும் தேயிலைக் கைத் தொழிலின் அபிவிருத்திக்குச் சுலபமாகப் பயன்படுத்த முடிந்தது. எனினும் ஆரம் பத்திற் காரணிகளின் சர்வதேச ரீதியி லான அசைவே ஏற்றுமதிக் கைத்தொழில் கள் நிறுவப்படுவதற்கும் அதன் வழி இரட்டைத் தன்மை உருவாவதற்கும் காலாயிற்று.

Page 61
9 கென்லி சேட்
9 வெலோனு பெ
9 டியூரோ சேட் ஆகியவற்றின் வடமாகாண
T. GIDIJF If
42-44, பெரியகடை
தொலைபேசி
Booked
by
MMS
14, CLOCK TOWER ROAD, JAFFNA

வகைகள் னியன்கள்
வகைகள் ா ஏக விநியோகஸ்தர்கள்
ரெக்ஸ்ரைல்ஸ்
யாழ்ப்பாணம்.
* அழகான புகைப்படங்களை எடுத்து வழங்குவதில் அனுபவம் வாய்ந்த புகைப்பட நிலையம்
()
அசோகா போட்டோ மின்சார pêsavu oմՋ, யாழ்ப்பாணம்

Page 62
உங்களை அழைக்கின்றர்கள் கிருஷ்ணு ஏஜென்சி
ஸ்தாபனத்தார் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகின் எத்திக்கும் செல்வதற்கான பாஸ்போட், விசா, விமான நுளைவு சீட்டு என்பன பெற்றுக்கொள்ளவும், மற்றும் பிரதான தேவைகளுக்கும்
கிருஷ்ணு ஏஜென்சி 4. மின்சார நிலேய விதி,
யாழ்ப்பாணம்
நவநாகரீக ஜ பிடவைத் தி
கீரன்ஸ் 3
27/1, மின்ச
யாழ்ப்பு

உங்கள் அன்ருட தேவைகளான
9 நவதானிய வகைகள்,  ெஉழுந்து, தட்டாப்பயறு, ம் பருப்பு வகைகள். ۔۔۔۔ என்பவற்றுடன், எமது தயாரிப்பான அப்பளம், நல்லெண்ணெய் என்பவற்றையும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ள
V
சிவகுமார் ஸ்ரோர்ஸ் 282, ஆஸ்பத்திரி விதி, யாழ்ப்பான்னம்
வுளிகளுக்கும் னுசுகளுக்கும்
KQANS
ர நிலய வீதி
ாணம்.

Page 63
- கணக்கியல்
மூலதனத் திட்டங்களின் இலாப இயல்பு முறைகள்
டி. ரி. இராஜரட்ணம், Dip. in Accy., Dip.P. F. M., F. C. M. A. (Lond.) பிரதிப் பணிப்பாளர் (நிதி) உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாண அமைச்சு
பகுதிநேர விரிவுரையாளர் வித்தியோதய வளாகம்

தொழில் நிலையங்கட்குத் தேவைப்படும் மூலதனத்திற்கு ஒரு செலவு உண்டு. இந்த மூலதனத்திற்கு நியாயமான பங்கிலாபம் (பங்குமுதல்) அல்லது வட்டி (வட்டி உழைக்கும் முதல்) கொடுபடல் வேண்டும். ஆகவே இப் பணத்தை முதலீடு செய்யும் திட்டங்களின் விளைவுவீதம் அதன் செல விலும் பார்க்க கூடுதலாக இருப்பது அவ சியம். முதலீடு செய்யும் திட்டங்களின் இலாப இயல்பை அறிந்து கொள்வதற்கு பல முறைகள் உள. இம் முறைகளில் கழிவு முறைக் காசு ஒட்ட முறை (Dis. counted Cost flow Method) gaspiss Ir(5th. இம் முறைகளின் பிரதான நோக்கம் பல மாற்றுத் திட்டங்களில் திறமான முதலீட் டுத் திட்டத்தைத் தெரிவு செய்வதாகும். இம் முறைகள் இவற்றிற்கு முன்னிருந்த பழைய மூன்று முறைகளின் திருத்தமாக வளர்ச்சி யடைந்தன. பழைய மூன்று முறைகளான மொத்த வருமானம், சரா சரி வருமானம், முதல் திரும்பிவரும் கால் முறை என்பனவற்றைக் கவனித்துவிட்டு திருந்திய கழிவுமுறைக்காசு ஒட்டமுறை களுக்கு வருவது பொருத்தமாகும். மொத்த வருமான முறை:
இம் முறையின்கீழ் பல மாற்றுத் திட் டங்கள் ஒவ்வொன்றில் எதிர்பார்க்கும். மொத்த இலாபம் -முதலீடு என்பவற்றிற் கிடையிலான சதவிகிதத்தைக் கணக்கிட் டுக் கூடுதலான சதவிகிதமுள்ள திட்டமே சிறந்த திட்டமாக ஏற்றுக் கொள்ளப்படும். இந்த முறையின்கீழ் பணம் சேரும் காலம், வட்டி ஆகியன புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதாவது இப்போது கிடைக்கும் ரூபாவுக்கு பின்வருடங்களில் கிடைக்கும் ரூபாவின் பெறுமதி சமமாகக் கருதப்படுகின்றன.
7 -

Page 64
மூலதனத் திட்டங்களின் ..
சராசரி வருமான முறை :
பல மாற்றுத்திட்டங்களில் எதிர் பார்க்கும் சராசரி வருடாந்த இலாபம் - முதலீடு என்பவற்றிற்கிடையிலான சத விகிதத்தைக் கணக்கிட்டு கூடுதலான சத விகிதமுள்ள திட்டமே சிறந்ததெனக் கரு தப்படும். மேலே குறிப்பிட்ட முறையில் உள்ள குறைபாடுகள் இம் முறையிலும் உண்டு. இந்த முறையின்கீழ் ஏதாவது திட்டத்தின் சராசரி வருடாந்த இலாபமுதலீடு வீதம் சாதாரண நிகழும் வீதத் திலும் பார்க்க குறைவாக இருந்தால் அத்
திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
பணம் திரும்பிவரும் காலமுறை : (Pay Back Method)
இந்த முறையின்கீழ் ஒவ்வொரு திட் டத்திலும் முதலீடு அறவிடும் காலத்தை மதிப்பிட்டு, கூடிய கெதியில் முதலீடு அறவிடப்படும் திட்டத்தையே சிறந்த திட்டமென ஏற்றுக்கொள்ளப்படும்.
உதாரணம் :
திட்டம் . திட்டம் B
ரூபா ரூபா முதலீடு 50,000 50,000 தேறிய வருமானம்
1ஆம் வருடம் 20,000 30 ,000 2ஆம் , 20,000 20,000 3ஆம் , 20,000 marrrrr 4ஆம் 20,000 مسح
முதலீடு
திரும்பிவரும் காலம் 24 வரு. 2 வரு.
இவ்விரு திட்டங்களில் திட்டம் Aஇன் முதலீடு 2 வருடங்களிலும்,திட்டம் 8இன் முதலீடு 2 வருடங்களிலும் திரும்பி வருவ தால் திட்டம் B விரும்பத்தக்கதென ஏற் றுக்கொள்ளப்படும். இந்த முறையில் பணம் சேரும் காலத்தை எ டு த் து க் கொண்ட போதிலும் முதலீடு திரும்பி
-
ܠܐ

. . இராஜரட்ணம்
வந்த கால்த்திற்குப் பின் சேரும் பணம் கருத்தில் கொள்ளப்படவில்லை.
மேலே கூறப்பட்ட பழைய மூன்று முறைகளின் குறைபாடுகளைத் திருத்தி அமைத்துள்ள முறைகள் தேறிய நிகழ் LD5 in (up 60 pupth (Net Present Value Method) விளைவு முறையுமாகும். இவ்விரு முறைகளின் கீழ் காசு வரவுகள் யாவும் வருட முடிவில் சேருவதாகவும், முதலீடு செலுத்துபவை யாவும் வருட ஆரம்பத் தில் செலுத்தப்படுவனவாகவும் மேற்
கொள்ளப்பட வேண்டும்.
தேறிய நிகழ் மதிப்பு முறை :
இம் முறையின் கீழ் திட்டங்களில் சேரும் காசு ஒட்டங்களின் நிகழ் மதிப்பை அறிந்து மூலதன முதலீட்டுடன் ஒப்பிட்டு அவற்றின் இலாப இயல்பை அறிய முடி யும். உதாரணமாக நிகழும் வட்டி 10 வீத மாக எடுத்துக்கொண்டால் இன்றைய ரூபா 100/- ஒரு வருடத்தின் பின் ரூபா 110 ஆகும். ஆகவே ஒரு வருடத்தின்பின் ரூபா 110 இன் நிகழ் மதிப்பு ரூபர் 100 ஆகும். அல்லது ஒரு வருடத்தின் பின் - ரூபா ஒன்றின் நிகழ் மதிப்பு ரூபா ?? (0.909) ஆகும். இரண்டாம் வருட முடி முடிவில் அதே ரூபா 100, 10 வீத வட்டி யில் ரூபா 121 ஆகும். இரண்டாம் வருட முடிவில் ரூபா ஒன்றின் நிகழ் மதிப்பு ரூபா ? (0826) ஆகும். இவ்வாறு குறிக்கப்பட்ட வட்டி வீதத்தில் ஒவ்வொரு வருட முடிவிலும் சேரும் ரூபாவின் நிகழ் மதிப்புக் களை அறியலாம். வெவ்வேறு வட்டி வீதத்தில் சேரும் ரூபாவின் நிகழ் மதிப்புக்களைக் கணிப்பதற்கு குறிக்கப்பட்ட வீதத்திற்குப் பொருத்தமான நிகழ்மதிப்பு அட்டவணையை உபயோகிக்கலாம்.
உ + ம்: ஒரு திட்டத்தில் ரூபா 350,000 முதலீடு செலுத்தப் பட்டுள்ளது. இத் திட்டத்தின் வருடாந்த வருமானம் ரூபா 100,000 ஆக அடுத்து 5 வருடங்கட்கு இருப்பின் இக் காசு ஒட்டத்தின் நிகழ் மதிப்புக்கள் பின்வருமாறு : (வட்டி 10%)
8 -

Page 65
மூலதனத் திட்டங்களின் . . .
வருடம் வருமானம் 10 வீதத்தில் வருமானத்தின்
கழிவிடுதல் காரணி நிகழ் மதிப்பு ரூபா ரூபா 1 100,000 0 909 90,900 2 100,000 O 826 82,600 3 100,000 O 751 75, 100 4 100,000 O 683 68,300 5 100,000 0 - 6 21 62,100
மொத்த நிகழ் மதிப்பு 379,000
வருமானங்களின் நிகழ்மதிப்பு 379,000 -மூலதன முதலீடு 350,000 தேறிய நிகழ்மதிப்பு 000, 29 هـه
வருமானத்தின் மொத்த நிகழ் மதிப்பு முதலீட்டிலும் கூடுதலாக இருப்பதால் இத் திட்டம் வரவேற்கத்தக்க திட்ட மாகும்.
இதே உதாரணத்தில் முதலீடு ரூபா 400,000ஆக இருந்தால் இத் திட்டத்தின் இலாப இயல்பு பின்வருமாறு :- வருமானங்களின் நிகழ் மதிப்பு 379,000 -முலதன முதலீடு 400,000 தேறிய நிகழ் மதிப்பு -- 21 ,000
இங்கே வருமானங்களின் நிகழ்மதிப்பு மூலதன முதலீட்டிலும் குறைவாக இருப் பதால் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. எனவே தேறிய நிகழ் மதிப்புமுறை திட்டங்களின் இலாப இயல்பை அளவிட உதவுகின்றது.
விளேவு முறை :
மேலே குறிப்பிட்ட தேறிய நிகழ் மதிப்பு முறையில் திட்டங்களின் தேறிய காசு ஒட்டத்திற்குரிய விளைவு வீதம் யாது என்னும் கேள்விக்கு விளைவுமுறை விடை அளிப்பதாக இருக்கும்.
உ + ம் : ஒரு திட்டத்தின் முதலீடு ரூபா 335,000 ஆகவும், அதன் தேறிய

Iq-. f. gy regulator
காசு ஒட்டம் வருட மொ ன் றி ற் கு ரூபா 100,000 ஆக அடுத்து 5 வருடங் கட்கு இருப்பின், 10 வீத வட்டியில் வரு மானத்தின் மொத்த நிகழ் மதிப்பு மேலே குறிப்பிட்டபடி ரூபா 379,000 ஆகும். இத் திட்டத்தின் தேறிய நிகழ் மதிப்பு ரூபா + 44,000 (379,000 - 335,000). ஆகவே இலாப இயல்பை உடைய திட்டமாகும். நிகழும் வட்டி 15% ஆக இருப்பின் இத் திட்டம் இலாப இயல்பை உடையதா ? 15% உரிய நிகழ் மதிப்பு அட்டவணையின் படி இக்காசு ஓட்டங்களின் மொத்த நிகழ் மதிப்பு பின்வருமாறு :
வருடம் வருமானம் 15% வருமானத்தின்
கழிவிடுதல் காரணி நிகழ் மதிப்பு
ரூபா rvovom. ரூபா
100,000 0 - 869 86,900 2 100,000 0.756 75,600 3 100,000 0 657 65,700 4 100,000 0.571 57, 100 5 100,000 0.497 49, 700
மொத்த நிகழ் மதிப்பு 335,000
வருமானங்களின் நிகழ் மதிப்பு 335,000 -முதலீடு 335,000 தேறிய நிகழ் மதிப்பு 0
நிகழும் வட்டியும் காசு ஒட்டங்களின் வீதமும் 15%ஆக இருக்கின்றபடியால் இத் திட்டத்தில் முதலீடு செய்வதால் இலாப மும் கிடையாது. நட்டமும் ஏற்படாது.
ஒரு திட்டத்தின் விளைவு வீதம் மூல தனக் கொள்வனவு வட்டி வீதத்திலும் கூடுதலாக இருப்பின் அத்திட்டம் ஏற்கக் கூடிய திட்டமாகும். மூலதனவிலை, திட் டத்தின் விளைவு வீதத்திலும் கூடுதலாக இருப்பின் அத்திட்டத்தில் முதலீடு செய் வது பொருத்தமற்றது.

Page 66
வருக! வருக! என யாழ். பிறிஸ்டல் ஹோட் சுத்தமான, சுவையான ஐ ஐஸ சாபதவகைகளுச வகைகளுககும, சுவைய சிறந்த
பிறிஸ்டல் ஒடர்கள் உடனுக்குட
இன்றே விஜய
p ()
-= பிறிஸ்டல்
68-B, கஸ்தூரியார் வீதி
றேடியோ மனுவல்
3. றேடியோ ரேப்றெக்கோடர்கள் விற்பனையாளரும், பழுதுபார்ப்பவர்களும்.
6 ஸ்பீக்கர்கள் கு ருன்ஸ்போமர்கள் றிவைன்டிங் செய்பவர்களும்.
றேடியோ மனுவல் 23/4, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்

அழைக்கிருர்கள் நகரில் -டல் தாபனத்தார் ஸ்கிறீம் வகைகளுக்கும் கும், மற்றும் சிற்றுண்டி ான தேநீர் அருந்தவும்
இடம்
ஹோட்டல் ன் கவனிக்கப்படும். ஒரு செய்யுங்கள்.
ஹோட்டல் ==
யாழ்ப்பாணம்
9 திருமண
வைபவங்கள்
0 பிறந்ததின
வைபவங்கள்
மற்றும்
F966) விசேஷ வைபவங்களுக்கும் நாடுங்கள்
ፖ`Sኦ
டச் றேட்,
உ டு வில்
போட்டோ இராஜேஸ்

Page 67
எமது நல்
)
t E. நீங்கள் விரும்ட ஒலிப்பதிவு செய்வதிலும், றே Ipfögi lib sai மின்சார உபகரணங்க திறமை மீ
N
ஈருே எலெ 23, நவீன சந்தை, ெ
யாழ்ப்பாணம்
அன்பளிப்பு ! அழகுசாதனப் பொருட்கள் அன்பளிப்புப் பொருட்கள் கோல்ட் கவறிங் நகைகள் சிறுபிள்ளைகளின்
விளையாட்டுச் சாமான்கள்
ஆகியவற்றுக்குச் சிறந்த ஸ்தாபனம்
令 நிஹானிஸ் 72, நவீன சந்தை, யாழ்ப்பாணம்
வி - 6
 

லாசிகள்!
O
பும் பாடல்களை டியோ, ரேப் ரெக்கோடர் லவிதமான ளைத் திருத்துவதிலும் க்கவர்கள்
க்ருேனிக்ஸ் தாழிற்சாலை: 1, மேல்மாடி,
நவீன சந்தை, ! யாழ்ப்பாணம்
வாழ்த்துக்கள் அழகிய
பவுண், தங்க, வைர நகைகளுக்கு
விஜயஞ் செய்யுங்கள்
எம். கே. எஸ்.
ஜுவல்லர்ஸ் R. G. die uqi, 61, கன்னுதிட்டி, யாழ்ப்பாணம்
தந்தி ! போன் : எம். கே. எஸ். 7 5 47

Page 68
எமது ތ.
• O suis Lu 9 வைரங்க
என்பன
கே, என். எம். தங்கப்பவுண் கன்னதிட்டி
போன் :
புதுவருடத்தைக் குதுகலமாகக் கொண்டாட குளு குளு வண்ணப் பட்டாடைகளுக்கும் கூறைச் சேலகளுக்கும் றெடிமேட் உடுப்பு வகைகளுக்கும் இன்றே விஜயஞ் செய்யுங்கள்
கணேசானந்தாஸ் சில் க் பலெஸ் 15, மக்கள் நவீன சந்தை, LAGiu afry நிலைய வீதி,
யாழ்ப்பாணம்
 

நல்லாசிகள் !
பவுண் நகைகள் வுண்கள்
ir
வற்றிற்கு
மீருன் சாஹிப்
நகை மாளிகை
யாழ்ப்பாணம்
585
With the best Compliments
from
For Guaranteed
Gold Jewels
New Jewel Palace
68F, KANNATHIDDY
AFFNA Phone 7042

Page 69
- அரசியல்
1977ஆம் ஆண்டுப் பொ - ஒரு கண்ணுேட்டம்
ஆர். ஜெயரத்தினராசா, M. A. பொருளியற்துறை விரிவுரையாளர் கொழும்பு வளாகம்
பகுதிநேர விரிவுரையாளர் வித்தியோதய வளாகம்

துத் தேர்தல் முடிவுகள்
ஜனநாயக நாடுகளில் அரசியல் மாற்ற மானது துப்பாக்கிமுனையில் இரத்தம் சிந் தாது, வாக்குச்சீட்டுக்களால் பொதுத் தேர்தல்கள் மூலம் ஏற்படுத்தப்படுவதாக நம்பப்படுகின்றது. பல ஜனநாயக நாட்டு அரசியல் அநுபவத்தினை நோக்கும்போது அரசியல் மாற்றம் என்ற பதமானது, இரு அரசியற் கட்சிகளின் அதிகார மாற்றத் தினையே அதிகளவில் குறித்து நிற்கின்றது. இந்த வரையறையானது நீண்டகால ஜன நாயக அரசியல் பாரம்பரியத்தினையும், அநுபவத்தினையும் கொண்ட மேலைத்தேய நாடுகளுக்கு மட்டுமன்றி, அண்மைக் காலத்தில் ஜனநாயக அரசியல் முறைக ளைப் பின்பற்றிக் கொண்ட அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளுக்கும் பொருத்த மானதாக அமைந்திருக்கின்றது. மேலும் அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றும் சக்தி வாய்ந்த இவ்விரு அரசியற் கட்சி களுக்கிடையேயும் சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களைப் பொறுத்தமட்டில் பெருமளவு வேறுபாடுகளை அன்றி, நெருங் கிய ஒருமைப்பாடுகளைக் கொண்டிருப்பதும் மற்றுமொரு பொதுவான தன்மையாகும்.
1948ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் ஜனநாயக அரசியல் வரலாற்றினை நோக் கும்போது, ஒவ்வொரு பொதுத்தேர்தல் களிலும் மேற்கூறிய அம்சமானது உறுதிப் படுத்தப்பட்டு வரும் தன்மையினையே ஒரு அரசியல் மாணவனல் அவதானிக்க முடி கின்றது. ஆனலும் 1956ஆம் ஆண்டி லிருந்து ஒவ்வொரு பொதுத்தேர்தலும் முடிவுற்ற பின்பும் அத்தேர்தல் முடிவுகள் எமது நாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளன என்று விமர்
3 -

Page 70
1977ஆம் ஆண்டுப் .
சித்துக் கொள்கின்ற ஒரு அரசியல் மரபும் எமது நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. இத்தகைய பரந்த அடிப்படையில் அமைந்த விமர்ச னத்தை மேற்கொள்வது இக் கட்டுரையின் நோக்கமல்ல. அத்துடன் அது சாத்திய மும் அற்றதாகும். இக் கட்டுரையானது 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவு கள் எவ்வளவு தூரம் அரசியற் கட்சிகளின் வரலாற்றிலும், வளர்ச்சிப் போக்கிலும் ஒன்றிணைந்ததாக அல்லது முரண்பட்ட தாகக் காணப்படுகின்றது, அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்ப தனையே ஆராய முனைகின்றது. மேலும் வட, கிழக்கு மாகாணங்களில் அரசியற் கட்சிகளின் போக்குப் பற்றிய ஆய்விற்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.
பொதுத்தேர்தலில் அரசியற்கட்சி களின் நிலையும், கொள் கை விளக்கமும் : s
இத் தேர்தலில் பல அரசியற் கட்சிகள் போட்டியிட்ட போதும் இரு தனிக் கட்சி களும், இரு அரசியற் கூட்டணிகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் பட்டன. தனிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 153 அபேட்ச கர்களும், பூறfலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் 145 அபேட்சகர்களும் போட்டி யிட்டனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி யினைப் பொறுத்தமட்டில், 17 வருடங்க ளுக்குப் பின்பு முதன்முதலாக இத் தேர் தலிலேயே தனித்து நின்று போட்டியிடும் நிலையினை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இரு அரசியற் கூட்டணிகளும் மிக அண் மைக்காலத்து உற்பத்திகளாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியானது தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் கட்சி. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இஸ்லாமிய ஐக்கிய முன்னணி ஆகியனவற்றை இணைத்து 1976ஆம் ஆண்டில் உறுதியான அமைப்பாக உருப்பெற்றதெனலாம்.

ஆர். ஜெயரத்தினாாசா
ஐக்கிய இடதுசாரி முன்னணியானது
இலங்கை சமசமாஜக் கட்சி, இலங்கை கம், யூனிஸ்கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்றும் ஒன்றுசேர்ந்து தேர்தல் நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் தினத் திற்கு இரு வாரங்களுக்கு முன்பே உருவாக் கப்பட்டதாகும். இதில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 23 அபேட்சகர்களும், ஐக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் 130 அபேட்சகர்களும் போட்டியிட்டனர். இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தமட்டில் அரசியற் கூட்டணிகளும், போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைகளும் அவற்றின் வரலாற்றுடன் இணைந்தனவாகும். ஆனல் தமிழரசுக் கட்சியினைப் பொறுத்த மட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனது முக்கிய முழு அரசியல் எதிரியான தமிழ்க் காங்கிரசுடன் போட்டித் தவிர்ப்பினை ஏற் படுத்திக் கூட்டு முன்னணியாகத் தேர்த லில் போட்டியிடுதல் இதுவே முதல் தடவையாகும்.
அரசியற் கட்சிகள் பொதுமக்களின் ஆதரவைப் பெற்று வளர்ச்சியடைந்து செல்வதற்கு பொதுமக்களின் நம்பிக்கை யினைப் பெற்ற கட்சித் தலைமைப்பீடம் இன்றியமையாததொன்ருகும். ஏனைய ஜன நாயக நாடுகளைப் போன்றே இலங்கையின் அரசியற் கட்சிகளின் தலைமைப்பீடமானது செல்வாக்குப் பெற்ற உயர் வகுப்பினரது உடமையாக அமைந்துள்ளது. இலங்கை யின் உயர் அரசியல் தலைமைப்பீடமானது பெருமளவிற்கு சிறு பிரிவினர்களான தொழிற் பிரிவினர்களிடமிருந்தே ஏற்படு கின்றது. அநேகமாக சட்டத்தொழில் புரிவோர், ஒய்வு பெற்ற அரசாங்க ஊழி யர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் ஆகியோ ராக இருக்கின்றனர். இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய 73 சதவீதமானவர்கள் சிங்கள* பெளத்தர் களாக இருப்பதனல், ஒவ்வொரு அரசியற் கட்சியும் பெரும்பான்மையினரின் ஆதர வினைப் பெறும் பொருட்டுச் சிங்கள பெளத்தர் ஒருவரையே தமது தலைவராக
-س- 4

Page 71
1977ஆம் ஆண்டுப் .
வைத்திருக்க முனைகின்றன. இந்த விடயத் திற் கூட இடதுசாரிக் கட்சிகள் ஏனைய கட்சிகளுடன் ஒருமைப்பாடுடையதாகவே காணப்படுகின்றது.
இத் தேர்தலில் போட்டியிட்ட நான்கு முக்கிய அரசியற் கட்சிகளில் தனித்துப் போட்டியிட்ட இரு கட்சிகளுக்கு மட்டுமே தலைவர் என ஒருவர் காணப்பட்டார். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவியான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960ஆம் ஆண்டிலிருந்து தலைமைப் பதவி பினை வகித்துவந்தவராவார். ஐக்கிய தேசி பக் கட்சியினைப் பொறுத்தமட்டில் அதன் தலைவரான திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தன 1973ஆம் ஆண்டே தலைமைப் பதவியினை ஏற்றவராவார். எனவே சிறீலங்கா சுதந் திரக் கட்சியினைப் பொறுத்தமட்டில், இத் தேர்தலில் தலைமைப் பீடத்தால் மாற்ற மிருக்கவில்லை. ஆனல் ஐக்கிய தேசியக் கட்சியோ புதியதொரு தலைமைப் பீடத் துடன் தேர்தலை எதிர்நோக்கியது. இரு அரசியற் கூட்டணிகளுக்கும் திட்டவட்ட மான தலைவர் என ஒருவர் இருக்கவில்லை. ஐக்கிய இடதுசாரி முன்னணியில் இடம் பெற்ற மூன்று கட்சிகளின் தலைவர்களுமே அம் முன்னணித் தலைவர்களாகக் கருதப் பட்டார்கள். தமிழர் விடுதலைக் கூட் டணிக்குத் திரு. தொண்டமானே தலைவ ராகக் கருதப்பட்டபோதும், அவர் இலங் கைத் தொழிலாளர் காங்கிரசின் பிரதி நிதியாகவே தேர்தலில் போட்டியிட்டார். உண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி யானது அதன் இரு இணைச் செயலாளர் சனேயுமே செயல்முறையில் தலைவர்களாகக் கொண்டு தேர்தற் பிரசாரத்தில் ஈடுபட் டது. இதுவரைகாலமும் கொழும்பு வாழ் பிரமுகர்களே வட, கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தமட்டில், தன்னிக aijam š தலைவர்களாகக் கருதப்பட் டார்கள். 1930ஆம் ஆண்டிற்குப் பின்பு (த் தேர்தலில் மட்டுமே தமிழ் மக்கள் முதற் தடவையாக அத்தகைய தன்னிக சிம்லாத் தலைமையின்றித் தேர்தலை எதிர் நோக்கிஞர்கள்.

4. aegurģisuus
இத் தேர்தலில் போட்டியிட்ட எல்லா அரசியற் கட்சிகளும் ஜனநாயக சோஷ லிஸ தத்துவமே தமது இலட்சியம் எனக் கூறிக்கொண்டன. நீண்ட காலமாக மிகத் தீவிரமான வலதுசாரிக்கட்சியென வர்ணிக் கப்பட்ட ஐக்கியதேசியக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் முதன்முறையாகச் சமதர்ம தத்துவத்தினை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டமை, இக் கட்சிகளின் தத்து வார்த்த ரீதியான வளர்ச்சிப் போக்கினில் ஒரு முக்கிய கட்டமாகும். மரபு ரீதியான இடதுசாரிக் கட்சிகளின் சோஷலிஸ் கொள்கையிலும் 1960க்குப் பின்பு படிப் படியான மாற்றங்கள் ஒரளவு ஏற்பட லாயிற்று. அரசியல் விரக்தி காரணமாக அண்மைக் காலத்தில் மரபு ரீதியான இடதுசாரிக்கட்சிகள்டமார்க்ஸிய வாதத் தினைத் தவிர்த்து, சிங்கள பெளத்த சார் பான சோஷலிஸத்தினைத் தமது பாராளு மன்ற இலக்கிற்கு முன் வைத்துள்ளனர்.? ஐக்கிய தேசியக்கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய இடதுசாரி முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் சோஷலிஸ் இலட்சிய மானது பெளத்த சார்பானதாகக் காணப் பட, தமிழர் விடுதலைக் கூட்டணியின் சோஷலிஸ் இலட்சியம் இனச் சார்புடைய தாகக் காணப்பட்டது. எல்லாக்கட்சிகளும் ஜனநாயக சோஷலிஸத்தில் நம்பிக்கை யுடையதாகக் கூறிக்கொண்டபோதிலும், இடதுசாரிகளின் கருத்து கூடியளவு தீவிரம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. சுருக்க மாகக் கூறுவதேயாணுல், எல்லா அரசியற் கட்சிகளும் தேர்தலில் ஒரே அரசியற் தத்துவத்தினை முன்வைத்தபோதிலும்கூட, அதனை எவ்வளவிற்கு அமுலாக்குதல் என் பதிலேயே வேறுபாடுடையதாகக் காணப் படுகின்றன.
மேலும் பொதுமக்கள் எதிர்நோக்கும் அடிப்படையான எல்லாப் பிரச்சனைகளுக் கும் தீர்வு காணவேண்டிய அவசியத்தினை சகல கட்சிகளும் தேர்தலில் வற்புறுத்தின. இளைஞர்கள் மத்தியில் காணப்பட்ட வேலை
யின்மை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு,
45 -

Page 72
1977ஆம் ஆண்டுப் .
வருமான ஏற்றத்தாழ்வு வீட்டுப்பிரச்சனை விவசாயிகளின் நிலப்பிரச்சனை, கல்வி சுகாதாரம், மனித உரிமைகள் போன்ற பிரச்சனைகளுக்குத் தாம் ஆட்சிக்கு வந்தால் சிறப்பான முறையில் தீர்வு காணப்போவ தாகக் கூறிக்கொண்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழ் முஸ்லிம் மக்களை அடிப்படையாகக்கொண்டே இப் பிரச்சனை களை விளக்க முனைந்தனர். நாட்டின் அடிப் படையான பொருளாதார சமூகப் பிரச் சனைகளுக்கு அவசியம் தீர்வு காணவேண்டு மென்பதில் எல்லாக் கட்சிகளும் ஒருமைப் பாடுடையதாகக் காணப்பட்டன.
இத்தகைய பல ஒருமைப்பாடுகள் சகல கட்சிகளுக்கிடையேயும் காணப்பட்ட போதும், ஒவ்வொரு அரசியற் கட்சியும் வேறுபட்ட சில அரசியல் சுலோகங்களைப் பொதுமக்கள் முன் வைப்பதன் மூலமே தம்மை மற்றக் கட்சியிலிருந்து வேறு படுத்த முனைந்தன. ஐக்கிய தேசியக் கட் சியைப் பொறுத்தமட்டில், "நீதியும் சுதந் திரமுமான சமூகத்தினை உருவாக்கும் நட வடிக்கைக்கான வேலைத் திட்டம்' என் பதே இவர்களது தேர்தல் விஞ்ஞாபனத் தின் முக்கிய சுலோகமாகக் காணப்பட் டது. குடும்ப நலனும், ஊழலும் நிறைந்த அரசாங்கத்தினை ஒழித்துக்கட்டி ஜனநாயக சோஷலிச சமூகத்தினை உருவாக்குவதற்கே தாம் பொதுமக்களின் ஆதரவினை வேண்டி நிற்பதாக தேர்தல் பிரசாரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறிக்கொண் டனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசியற் சுதந்திரத்திலிருந்து பொருளா தார சுபீட்சத்தினை அடைவதற்காக சம தர்ம சமுதாயத்தினை எதிர்நோக்கிச் செல் வதற்குத் தமக்குப் பொதுமக்கள் இம்முறை யும் வாக்களிக்கவேண்டுமென்ற பிரசா ரத்தில் ஈடுபட்டனர். ஆனல், ஐக்கிய இடது சாரி முன்னணியினரோ ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் முதலாளித்துவ வர்க்க நலன் பேணும் கட்சிகளென்றும் தமது கட்சியி னல் மட்டுமே தீவிரமான சோஷலிச

gi. Gagu JğSSUT JT FT
வேலைத் திட்டத்தினை அமுலாக்கி நாட் டின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியு மெனக் கூறிக்கொண்டனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் அரசியற் சுலோகமானது ஏனைய மூன்று கட்சிகளையும் விட, அடிப்படையில் வேறு பாடுடையதாக அ  ைம ந் திரு ந்தது. 1619 ஆம் ஆண்டு யுத்தக் களத்தில் போர்த் துக்கீசரினல் பறிக்கப்பட்ட தமிழ் மக்க ளின் இறைமையையும் அரசுரிமையையும் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து பெறு வதே தமது இலட்சியம் எனத் தமிழர் விடுத்லைக் கூட்டணியினர் வாதிட்டனர். **மக்கள் இறைமை என்ற போர்வையில் ஆட்சியுரிமையை முற்று முழுதாகப் பெரும் பான்மை சிங்கள இனம் பெற வழிகோலிய அரசியல் யாப்பை தமது சுதந்திரத்தை இழந்து நிற்கும் இந் நாட்டுத் தமிழ் மக் களும், முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள் கின்ருர்களா என்பதை நிர்ணயிப்பதாகவே இப் பொதுத் தேர்தல் அமையும்." தமிழர் விடுதலைக் கூட்டணியினரைப் பொறுத்தமட்டில், இத் தேர்தல் ஒரு பொதுசன வாக்கெடுப்பு என்ற சுலோக மாகவே அமைந்திருந்தது.
இலங்கையிலுள்ள அரசியற் கட்சிக ளெல்லாம் சில குறிப்பிட்ட பிரதேசங்க ளில் மிகக் கூடிய ஆதரவினையும், ஏனைய பிரதேசங்களில் 'அவைகளுக்கான ஆதரவு மிகக் குறைவானதாகவுமே காணப்படு கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் பல மானது பெருமளவிற்கு நகரப் புறங்களி லுள்ள மத்திய வகுப்பு வாக்காளரினதும், மத மொழி ரீதியான சிறுபான்மையின ரின் வாக்குகளாலேயேயும் நிர்ணயிக்கப் படுவதொன்ருகும். ஆணுல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியானது கிராமப்புற மக்க ளிடம் கூடிய ஆதரவினைப் பெற்ற கட்சி யாகும். ஏனெனில் இக் கட்சியானது சிங் கள மகாசபையிலிருந்து தோன்றியதுடன் பெளத்தமத குருமார், சிங்கள ஆசிரியர் கள், சுதேசிய மருத்துவர்களூடாகவே வளர்க்கப்பட்டதாகும். இடதுசாரிக் கட்சி
6 -

Page 73
1977ஆம் ஆண்டுப் .
களின் ஆதிக்கமானது தென் மேற்குப் பகு தியில் குறிப்பாக, கொழும்பிலிருந்து தென் முனை வரையுள்ள பகுதி வரையுமே பெரு மளவு பரவியிருக்கின்றது. இப் பகுதியில் செறிவான சனத்தொகை, நகராக்கம். கல்வி வளர்ச்சி, போக்குவரத்து, ஊதியம் பெறும் தொழில் அல்லது சந்தையினை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி மூறை ஆகியன இக் கட்சிகள் கூடிய ஆத சவினைப் பெற்றிருப்பதற்குக் காரணமா கும். தென், மேற்குப் பகுதிகளில் மார்க் விய வாதிகளுக்கு கராவ (Karava) சலா கம (Salagama), துராவ (Durava) ஆகிய சாதியினரிடம் கூடிய ஆதரவு காணப்படு கின்றது5. தமிழர் விடுதலைக் கூட்டணியி ளர் ஆதரவானது பெருமளவிற்கு வட, கிழக்கு மாகாணங்களிலேயே காணப்படு கின்றது. ஏனெனில் இம் மாகாணங் களிலேயே தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ருர்கள்.
நான்கு முக்கிய அரசியற் கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந் திரக் கட்சி ஆகிய இரண்டுமே வடமாகா வாம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தன்கு ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளாகக் காணப்பட்டன. மேலும் பெரும்பான்மை யினரான பெளத்த சிங்கள மக்களின் கலாச்சார பாரம்பரியத்தின. இவ்விரு கட்சிகளாலுமே பாதுகாக்கக் கூடியதாக வும் இருந்தன. ஐக்கிய இடதுசாரி முன் ாணி 130 ஸ்தானங்களில் போட்டியிட்ட போதும், பெரும்பான்மை பெளத்த சிங் கள மக்களின் ஆதரவினைப் பெற முடி வாத க ட் சி யா க வே காணப்பட்டது. எனவே, இத்தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே போட்டியானது ஐக்கிய தேசியக் கட்சிக் கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மிடை விலேயே காணப்பட்டது.
தேர்தல் முடிவுகளும் கட்சிகளின் நிலையும் :
இன்று ஜனநாயக நாடுகளில் அரசி கவற் கட்சிகளின் வளர்ச்சிப் போக்கினை
- 4

ஆர். ஜெயரத்தினராசா
மதிப்பீடு செய்வதற்குத் தேர்தல் முடிவுகள் மட்டுமே ஒரேயொரு வெளிப்படையான சுட்டெண்ணுகக் காணப்படுகின்றது. தேர் தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு கட்சிகளின் வளர்ச்சியினை ஆராயும்போது, பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிக் கும் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை, மொத்தமாகப் பெற்ற ஸ்தானங்கள் என்ற இரண்டு வகையாக மட்டுமே இதனை மேற் கொள்ள முடி யும். ஆனல் பாராளுமன்ற ஆட்சி முறை களில் நம்பிக்கையற்ற புரட்சிகர கட்சி களினது வளர்ச்சிப் போக்கினை இத்தகைய ஒரு ஆய்வின் மூலம் மதிப்பீடு செய்ய முடியாது. ஆனல் இலங்கை யினை ப் பொறுத்த மட்டில், இத் தேர்தலில் போட் டியிட்ட நான்கு முக்கிய அரசியற் கட்சி களுமே பாராளுமன்ற ஆட்சி முறைகளில் நம்பிக்கை கொண்ட கட்சிகளாக இருப் பதனல், இத்தகைய ஒரு மதிப்பீட்டின் மூலம் அவற்றின் வளர்ச்சிப் பேர்க்கினை இலகுவாக விளக்க முடியும்.
இலங்கை அரசியலில் இன்று காணப் படும் இரு கட்சிகளினது அதிகாரப் போட்டியானது 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடனேயே ஆரம்பமாகிய தென லாம். எனவேதான் 1956ஆம் ஆண்டி லிருந்து 1977ஆம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு கட்சிகளின் வளர்ச்சிப் போக்கானது இங்கு ஆராயப்படுகின்றது. 1956ஆம் ஆண்டி லிருந்து ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியானது பெற்ற வாக்குகளானது படிப்படியாக அதிகரித் துச் செல்லும் போக்கினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. 1956இல் மொத்த வாக்குகளில் 275 சத வீதமான வாக்கு களைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி யானது 1977இல் 50 9 சதவீதமான அதி கரிப்பினைக் கொண்டிருக்கின்றது. இவ்விரு இடைக்காலங்களிலும் நடந்த பொதுத்
سس آ

Page 74
1977ஆம் ஆண்டுப் .
தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வாக்குகளானது படிப்படியாக அதிகரித்துச் சென்று ன் ளது. ஆனல் 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் மட்டுமே இவ் அதிகரிப்பில் ஒரு சத வீழ்ச்சி ஏற்பட்
அட்டவ
பொதுத்தேர்தல் முடிவு கட்சிகளின் நிலை
(பெற்ற வாக்குகளின் விகி
கட்சிகள் 1956 1960
upit rid
ஐ. தே. க. 27・5 296 இ. ல, சு. க. 39 9 21, 2 * இடதுசாரி க. 15 52 த. அ. க. 5,4 5,7 த. கா. க. 0 3 12 5・7 6.9
தமிழ் வி. கூ. ܘܚܕ ஏனைய கட்சிகள் 0.7 183 சுயேச்சைகள் 11 "I 88
T
epaid: Economic Review, Peoples Bank (
* இடதுசாரிக் கட்சிகள் என்னும்போது 1970ஆம் ஆ6 கட்சி ஆகிய இரண்டும், 1977இல் மக்கள் ஜனநாயக்
சிறீலங்கா சு த ந் தி ரக் கட்சியினைப் பொறுத்தமட்டில், 1956இல் இருந்து ஒரு ஒழுங்கான வளர்ச் சிப் போக்கினை அவதானிக்க முடியவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்றில் அதிகரிப்பினை அல் லது வீழ்ச்சிப் போக்கினைக் கொண்டதாக வுள்ளது. இடது சா ரிக் கட்சிகளைப் பொறுத்தமட்டில், 1960ஆம் ஆண்டிற்குப் பின்பு அவற்றின் வளர்ச்சியானது ஒரளவு வீழ்ச்சிப் போக்கினில் அமைந்திருக்கின் றது. 1960ஆம் ஆண்டு யூலை தேர்தலில் 152 சத வீதமான வாக்குகளைப் பெற்ற இடதுசாரிக் கட்சிகள் 1970இல் 122 சத வீதமான வாக்குகளையும், 1977இல் 69 சத வீதமான வாக்குகளையுமே பெற்றிருக்கின் றன. முன்னைய தேர்தல்களைவிட இத்
-

ஆர். ஜெயரத்தினராசா
டுள்ளது. 1956ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியானது பொது மக்கள் மத் தியில் ஆதரவு பெற்ற கட்சியாக வளர்ச்சி யடைந்து சென்றுள்ளது என்பதனையே இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.
søT I
களின் அடிப்படையில் 1977 -س- 1956 (
தாசார அடிப்படையில்)
1960 1965 1970 1977 ga V 37.6 38 9 37. 9 50.9 336 ፵ 0 • 2 36 7 29 1 0 3 02 122 69. 7・2 5“4 4°9 bieMmu
5 2“4 23
&·7 7・8 7 - 2
8 6 ---- ܢܕܚܝܢܚܣ '
52 7 - O 夏°4 季4' 6 5 9 4·6 57
foeylon, 1977. May & July.
ண்டு வரை, இலங்கை சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்தே குறிப்பிடப்பட்டது.
தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் பெற்ற வாக்கானது ஏறக்குறைய 50 சத வீதத்தி னல் வீழ்ச்சியடைந்துள்ளன. 1960 க்குப் பின்பு இடதுசாரிக் கட்சிகள் தமது புரட்சி கர இலட்சியங்களைக் கைவிட்ட பின்பே பொதுமக்கள் மத்தியில் இவற்றிற்கிருந்த செல்வாக்கானது வீழ்ச்சியடைந்து செல்வ தாக அமைந்திருந்தது.
一一丁
தமிழ் மக்களின் நலன்களை அடிப்படை யாகக் கொண்ட கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் வளர்ச்சியும் முரண்பட்ட போ க் கினை க் கொண்டதாகவுள்ளது. 1956ஆம் ஆண்டுத் தேர்தலில் மொத்த வாக்குகளில் 54 சதவீதமான தமிழரசுக் கட்சியின் பங்கானது 1960ஆம் ஆண்டுத்

Page 75
1977ஆம் ஆண்டுப் .
தேர்தலில் 72 சதவீதமாக அதிகரித் துள்ளது. ஆனல் 1965இல் 54 சதவீத மாகவும், 1970இல் 49 சதவீதமாகவும், மொத்த வாக்குகளில் தமிழரசுக்கட்சியா னது பெற்ற பங்கானது வீழ்ச்சியடைந்து சென்றுள்ளது. ஆனல் தமிழ்க்காங்கிரஸ் கட்சியானது 1956ஆம் ஆண்டுத் தேர்த வில் மொத்த வாக்குகளில் 0.3 சத வீத மாக இருந்த தமிழ்க் காங்கிரசின் பங்கா னது 1970இல் 23 சதவீதமாக அதிகரித் துச் சென்றுள்ளது. மொத்தமாக இவ்விரு கட்சிகளும் 1960ஆம் ஆண்டு யூலையில் நடைபெற்ற தேர்தலில் 8 7 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருந்தன. ஆனல் 1970இல் இவ்விரு கட்சிகளும் மொத்த வாக்குகளில் 72 சதவீதமான வாக்கு களையே பெற்றிருந்தன. 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலே தமிழர் விடுதலைக் கூட்டணியானது மொத்த வாக்குகளில் 6-8 சதவீதமான வாக்குகளையே பெற் றிருக்கின்றது. பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு தோக்கும்போது தமிழ் மக்களின் நலன் பேணும் கட்சிகள் 1960க்குப் பின் வீழ்ச்சிப் போக்கினையே கொண்டிருக்கின்றன.
1956ஆம் ஆண்டிலிருந்து 1970ஆம் ஆண்டு வரையுள்ள பொதுத் தேர்தல்களில் நான்கு முக்கிய அரசியற் கட்சிகளும் குறிப்பிட்டளவு வீதாசாரமான வாக்குக ளைத் தமது நிலையான வாக்குகளாகக் கொண்டிருப்பதனை ஒரளவு அனுமானிக்கக் கூடியதாகவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பானது ஏறக்குறைய 34 சத வீதமான வாக்குகளையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி 32 சத வீதமான வாக்குகளையும், இடது சாரிக் கட்சிகள் 11 சதவீதமான வாக்கு களையும், தமிழ் மக்களின் கட்சிகள் 7 சத வீதமான வாக்குகளையும் தம் நிலை யான வாக்குகளாகக் கொண்டிருக்கின் தன. எனவே ஒவ்வொரு தேர்தலிலும் இந் நிலையான வாக்குகளில் சிறு வீதாசார மாற்றம் மட்டுமே 1970ஆம் ஆண்டுவரை ஏற்பட்டு வந்துள்ளது. 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிற்கூட இவ் அம்சமானது
வி - 7 - 4

ஆர். ஜெயரத்தினாரசா
சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பொருத்தமான தாக அமைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியானது 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் பெற்ற வாக்குகளுடன் இத் தேர்தலில் பெற்ற வாக்குகளை ஒப்பிடும்போது 13 சத வீத அதிகரிப்பினையும், சராசரி நிலையான வாக்குகளுடன் ஒப்பிடுகையில் 26 சதவீத மான அதிகரிப்பினையும் கொண்டதாக வுள்ளது. இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தமட்டில், 1970ஆம் ஆண் டு பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும்போது 53 சதவீதமான வீழ்ச்சியினையும், சராசரி நிலையான வாக்குகளுடன் ஒப்பிடும்போதும் ஏறக்குறைய இதே அளவினதாகவே யுள் ளது. இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளில் ஏற்பட்ட அதி கரிப்பினையும், இடதுசாரிக் கட்சிகளின் வாக்கில் ஏற்பட்ட வீழ்ச்சியினையும், நீண்ட கால ப் போக் கினை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இது ஒரு அசாதாரண நிலை என்பது நன்கு புரிகின் றது. மேலும் 1970ஆம் ஆண்டுத் தேர்த லிலும் பார்க்க இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி 13 சதவீதமான வாக்குகளை அதிக மாகப் பெற்றமைக்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த ஏறக்குறைய 8 சதவீதமான வாக்காளரும், இடதுசாரிக் கட்சிகளின் ஏறக்குறைய 5 சதவீதமான வாக்காளரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித் தமையே காரணமாகும். மேலும் ஒவ் வொரு கட்சியினதும் மொத்த வாக்குகளின் வீதாசாரமாக நோக்கும்போது சிறீலங்கா சுதந்திரக் கட்சியினை விட இடதுசாரிக் கட்சிகளிலிருந்தே மிகக் கூடிய வாக்காளர் கள் (ஏறக்குறைய 50 சதவீதம்) ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதனை அட்டவணை 1இன் மூலம் ஒரளவு அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
ஜனநாயக நாடுகளில் கட்சிகளின் பல மானது தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்தா னங்களை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகின்றது. இவ்வாறு மதிப்பீடு செய்யும்போது பொதுத் தேர்தலில் ஒவ்
9 -

Page 76
19ů. JešGů .....
வொரு கட்சியும் மொத்தமாகப் பெற்ற ஸ்தானங்கள், வீதாசார அடிப்படையில் பெற்ற ஸ்தானங்கள் என்ற வகையில் மேற்கொண்டால், சில தவருண முடிவு களுக்கு வருவதற்கும் இது இடமளிப்ப தாக இருக்கும். எனவேதான் இவற்றுடன் ஒவ்வொரு கட்சியும் பெற்ற விகிதாசார மான வாக்குகளையும் சேர்த்து மதிப்பீடு செய்யும்போது மட்டுமே இது சிறப்பான முறையில் அமைந்த மதிப்பீடாக விருக்கும். பெற்ற ஸ்தானங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயும்போது, நான்கு அரசியற் கட்சிகளுமே அரசாங்கத்தினைக் கைப் பற்றும் சக்தி வாய்ந்தனவாகக் காணப் படுகின்றன. 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி
அட்டவ
பொதுத்தேர்தல் முடிவு
கட்சிகளின் நி (பெற்ற ஸ்தானங்க
கட்சிகள் 1956 1960 Loir. 1 த்ொகை % தொகை % தெ ஐ. தே. க. 8 84 SO 331 சி. ல. சு. க. 53 537 46 305 * இடது ஐ. மு. 17 179 13 86 1 த. அ. கட்சி 10 105 15 99 த. கா. க. 1 1 O-7
l 1 1.6 16106 தமிழ் வி. கூ. man
ஏனைய கட்சிகள் 0 O 19 126. சுயேச்சை 8 84 7 4'6
மொத்தம் 95 100 - 151 100 1.
typnoth: Economic Review, People's Bank * இடதுசாரிக் கட்சிகள் என்னும்போது 1970ஆம் ஆ கட்சி ஆகிய இரண்டும், 1977இல் மக்கள் ஜனநாயக
இடதுசாரிக் கட்சிகளும் தமிழ் மக்கள் நலன் பேணும் கட்சிகளும் சில பொதுத் தேர்தல்களில் பலம் மிக்க கட்சிகளாக
swez

ஆர். ஜெயரத்தினராசா
ஃ-7 சதவீதமான ஸ்தானங்களையும், இடது சாரிக் கட்சிகள் 17, 9 சதவீதமான ஸ்தா னங்களையும் பெற்றிருக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை 84 சதவீதமாக மட்டுமே காணப்பட்டன. 1970ஆம் ஆண்டுத் தேர்த லிலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி 60 சத வீதமான ஸ்தானங்களையும் இடதுசாரிக் கட்சிகள் 16 7 சதவீதமான ஸ்தானங்களை யும் பெற்ற அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை 113 சதவீத மாகவே காணப்பட்டன. ஆனல் 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 833 சதவீதமான ஸ்தானங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 107 சத வீதமான ஸ்தானங்களையும் பெற, சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் நிலை 48 சத வீதமாகக் காணப்படுகின்றது.
ணை 11
களின் அடிப்படையில்
1956 - 1977
ளின் அடிப்படையில்)
960 g. 1965 1970 1977 ாகை % தொகை % தொகை % தொகை % 30 199 66 437 17 11.3 140 833 "5 49.7 41 272 90 600 8 48 6 10'5 14. 9.2 25 167 ar- Akiwand) 6 106 14 93 13 8.7 serans ma 1 07 3 20 3 20 ཡཁ----
7 113 - 17 113 6 107
ཡང་ཕ-----------ག་ཁ་ཁ་ཡ་མ་--ཐཡང་མ་ 18 10”7
مسننه ــ 6*4 7 6*4 7
6 4' 0 6 4'0 2 13 2 12 (1 100 151 100 150 100 168 100
un person
if Ceylon, 1977. May & July. ண்டு வரை இலங்கை சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் க் கட்சியும் சேர்ந்தே குறிப்பிடப்பட்டது.
இருந்த போதிலும் இரண்டு கட்சிகட்கிடை யேயும் இவ்விடயத்தில் ஒரு பொதுவான தன்மையினை அவதானிக்க முடிகின்றது
سس- 0

Page 77
1977ஆம் ஆண்டுப் .
தமிழ் மக்கள் நலன் பேணும் கட்சிகள் 1956 லிருந்து 1977 வரை வீதாசார அடிப் படையில் பெற்ற ஸ்தானங்கள் ஏறக் குறைய 10 சத வீதமாகவே காணப்படு கின்றன. இடது சாரிக் கட்சிகளும் கூட 1970ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 10 சத வீதமான ஸ்தானங்களையே கொண் டிருந்தன. இவ்விரு கட்சிகளின் வளர்ச்சி பானது அதிகளவில் வரையறுக்கப்பட்ட தாகவே அமைந்திருக்கின்றது. 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சி கள் எந்த ஸ்தானங்களையும் கைப்பற்ற முடியாமை ஒரு அசாதாரண நிலை என் பதனையே இது மேலும் வலியுறுத்துவதாக வுள்ளது, இது போன்றே பெற்ற ஸ்தா எங்களின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியும், சிறீலங்கா சுதந் திரக் கட்சியின் தோல்வியும் என்றுமே எதிர்பாராத நிலைகளாகும். 1965ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் 43-7 சதவீதமான ஸ்தானங்களைப் பெற்ற வெற்றியினை, 1977இல் மொத்த ஸ்தானங் களில் 833 சதவீதத்தினைப் பெற்ற வெற் தியுடன் ஒப்பிடும் போது 1948 க்குப் பின்பு எந்தக்கட்சியுமே இத்தகைய வெற்றி பினை அடைந்ததில்லை. 1970ஆம் ஆண் டிற்கு முன்பு இலங்கையில் ஒரு அரசாங் கக்கட்சி தேர்தலில் படுதோல்வியடைந்த தென்ருல், அது 1956ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியானது 84 சத வீதமான ஸ்தானங்களைப் பெற்றமையையே குறித்து திற்கும். 1956ஆம் ஆண்டு ஐக்கிய தேசி பக் கட்சியின் 84 சதவீத ஸ்தானங்களை, 1977ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 48 சத வீத ஸ்தானங்களுடன் ஒப்பிடும் போது இத் தோல்வி எத்தகை பது என்பதை ஒரளவு ஊகித்துக் கொள்ள முடிகின்றது. சுருங்கக் கூறுவதானல், இத் தேர்தலில் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி யானது மிகப் பெரும் வெற்றியினையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசா ரிக் கட்சிகளும் படு தோல்வியினையும் அடைந்துள்ள தெனலாம்.

ஆர். ஜெயாத்தினராசா
ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி க ள் பெற்ற ஸ்தானத்தினையும், பெற்ற வாக்கு களையும் ஒப்பிடும் போது இரண்டிற்கு மிடையே முரண்பட்ட த ன்  ைம யினை ப் பொதுவாக அவதானிக்க முடிகின்றது. 1956ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசி யக் கட்சியானது 275 சத வீதமான வாக் குகளையும், 84 சத வீதமான ஸ்தானங் களையுமே பெற்றிருந்தது. ஆணுல் 399 சத வீதமான வாக்குகளைப் பெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சி 587 சதவீதமான ஸ்தா னங்களைப் பெற்றிருந்தது. இதே போன்று 1970ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசி யக் கட்சி 379 சதவீதமான வாக்குகளை யும், 11*3 சதவீதமான ஸ்தானங்களையும் கைப்பற்றியமைக்குப் பதிலாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி 367 சதவீதமான வாக் குகளையும், 66 சதவீதமான ஸ்தானங்களை யும் கைப்பற்றியிருந்தது. இலங்கையில் ஒவ்வொரு கட்சியினது மொத்த வாக்கு களில் ஏற்படுகின்ற சிறு மாற்றமானது மொத்த ஸ்தானங்களில் பெரும் மாற்றத் தினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அத்துடன் பொதுத் தேர்தலில் கூடிய ஸ்தானங்களைக் கைப்பற்றும் கட்சியானது மொத்த வாக்குகளில் பெறும் வீதாசாரத் தினை விட, கூடிய வீதாசார ஸ்தானங் களைக் கைப்பற்றும் தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது. இதே போன்று தேர்தலில் தோல்வியடைகின்ற கட்சிகள் பெற்ற ஸ்தானங்களானது அவை பெற்ற மொத்த வாக்குகளின் வீதாசாரத்தினை விட மிகக் குறைவாகவும் காணப்படுவதனை 1956இல் இருந்து நடந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
1977ஆம் ஆண்டுத் தேர்தலும் கூட இவ் அம்சத்திற்கு விதிவிலக்காக அமைய வில்லை. மொத்த வாக்குகளில் 50 9 சத வீதத்தினைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி யானது மொத்த ஸ்தானங்களில் 833 சத வீதமானவற்றைப் பெற்றிருக்கின்றது. மொத்த வாக்குகளில் 29 7 சத வீதத்தைப்
ii --

Page 78
1977ஆம் ஆண்டுப் .
பெற்ற சிறீலங்கா சுதந் தி ரக் கட்சி மொத்த ஸ்தானங்களில் 438 சத வீதத் தைப் பெற, 68 சதவீத வாக்குகளை மட் டும் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி யானது 1037 சத வீத ஸ்தானங்களைப் பெற்று எதிர்க் கட்சியாக இருக்கின்றது. ஆனல் 69 சத வீதமான வாக்குகளைப் பெற்ற இடதுசாரிக் கட்சிகளுக்கு தேர்த லில் எந்த ஸ்தானங்களையும் பெற முடிய வில்லை. மொத்த வாக்குகளின் அடிப்படை யில் நான்காவது பலமான கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியானது பெற்ற ஸ்தானங்களின் அடிப்படையில் இரண்டா வது பலம் மிக்க கட்சியாகக் காணப்படு கின்றது. பெற்ற வாக்குகளையும், பெற்ற ஸ்தானங்களையும் ஒப்பிட்டு நோக்கின், இலங்கையில் பலமிக்க அரசியற் கட்சிக ளாக ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீ லங்கா சுதந்திரக் கட்சியுமாக இருப்பது டன், இவை இரண்டுமே அரசாங்கத்தினைக் கைப்பற்றும் சக்தி வாய்ந்த கட்சிகளாக இன்றுவரை காணப்படுகின்றது.
வட, கிழக்கு மாகாணங்களில் கட்சிகளின் நிலை :
இலங்கையின் கட்சி முறையின் வியா பகத்தின் மிகக் கூடிய பிரதேச ரீதியான வேறுபாடானது இலங்கையில் சிறுபான்மை யினரான தமிழ் மக்களின் பிறப்பிடமான வடமாகாணத்திலும், கிழக்கு மாகாணத் தின் பெரும் பகுதியிலும் காணப்படுகின் றது. இவ்விரு மாகாணங்களிலும் தமிழ் மக்கள் நலன் பேணும் கட்சிகளான தமி ழரசுக் கட்சியும், தமிழ்க்காங்கிரசுமே பெரு மளவு அரசியற் செல்வாக்குப் பெற்ற கட்சிகளாகக் காணப்படுகின்றன. இவ் விரு கட்சிகளும் இம் மாகாணங்களில் பெருமளவு ஸ்தானங்களைக் கைப்பற்று வதை அடிப்படையாகக் கொண்டு மட்டும் இவ்விரு மாகாணங்களும் இலங்கையின் கட்சிமுறை வளர்ச்சிப் போக்கினில் எதிர் நீச்சல் தன்மையினைக் கொண்டிருக்கிறதா என்பதனை புள்ளிவிபர ரீதியான மெய்

4i. GguU Jj5Soor J.T.Fr
சான்றுகள் மூலம் நோக்குதல் அவசிய மானது மட்டுமன்றி, இன்றைய சூழ்நிலை யில் பயன் நிறைந்ததுமாகும்.
வடமாகாணத்தினைப் பொறுத்த மட்டில், தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங் கிரஸ் கட்சி ஆகிய இரண்டும் மிகப் பலம் வாய்ந்த கட்சிகளாக இருந்த போதிலும், இடதுசாரிக் கட்சிகளும் சில இடங்களில் ஒரளவு செல்வாக்கு மிக்கனவாகக் காணப் பட்டன. இடதுசாரிக் கட்சிகளது அரசியல் செல்வாக்கானது 1956இலிருந்து 1977 வரை படிப்படியாக வீழ்ச்சியடைந்து சென்றுள்ளன. 1956ஆம் ஆண்டு தேர்த லில் 18*1 சதவீதமான வாக்குகளைப் பெற்ற இடதுசாரிக் கட்சிகள் 1977ஆம் ஆண்டு 0-9 சதவீதமான வாக்குகளையே பெறக் கூடியதாக விருந்தன. ஏனெனில் 1960க்குப் பின் இடதுசாரிக் கட்சிகள் பெளத்த சார் பான சோஷலிஸ தத்துவத்தினைப் பின் பற்றியமையினல் தமிழ் மக்களின் ஆதர வினைப் பெருமளவு பெற முடியாமையே இதற்குக் காரணமாகும். தமிழரசுக் கட்சி யின் செல்வாக்கானது 1960ஆம் ஆண்டுக் குப் பின்பு வடமாகாணத்தில் வீழ்ச்சிப் போக்கினைக் கொண்டதாகவே காணப் படுகின்றன. 1960 யூலைத் தேர்தலில் 63.6 சதவீதமான வாக்குகளைப் பெற்ற தமிழர சுக் கட்சியானது 1970ஆம் ஆண்டுத் தேர் தலில் 47*8 சதவீதமான வாக்குகளையே பெற்றன. ஆனல் தமிழ்க் காங்சிரஸ் கட்சி யினைப் பொறுத்தமட்டில், 1965இலிருந்து 1970 வரை தொடர்ச்சியான ஒரு வளர்ச் கிப் போக்கினை வடமாகாணத்தில் கொண் டதாகக் காணப்படுகிறது. 1956ஆம் ஆண்டுத் தேர்தலில் 46 சதவீதமான வாக்குகளைப் பெற்ற தமிழ்க் காங்கிரள் கட்சியின் நிலையானது 9170ஆம் ஆண்டு 345 சதவீதமாக அதிகரித்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியானது வடமாகாணத்தின் தன் பெரும் அரசியல் எதிரியான தமிழ் காங்கிரசுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி யாக இணைவதற்கு, தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிப் போக்கும், தமிழ்க்காங்கிரள் கட்சியின் வளர்ச்சிப் போக்கும் முக்கிய காரணங்களில் ஒன்ருக அமைந்திருக்கலாம்.
س- 52

Page 79
1977ஆம் ஆண்டுப் .
அட்டிவ வடமாகாணத்தில் பெற்ற
கட்சிகளின் நி
(சதவி
கட்சிகள் 1956 196 LDTrf
ஐ. தே. க. --- சி. ல. சு. க. -- - * இடது ஐ. மு. 181 17.' த. அ. கட்சி 482 45", த. கா. க. 4'6 16 528 62.
தமிழ் வி. கூ. - --- சுயேச்சை 291 20"
மொத்தம் 100 10
paid: Economic Review, People's Ban ச இடதுசாரிக்கட்சிகள் என்னும்போது 1970ஆம் ஆ கட்சி ஆகிய இரண்டும், 1977இல் மக்கள் ஜனநாயக
1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவு கன் அதற்கு முற்பட்ட காலத்துடன் ஒப்பி டப்படும்போது, ஓரளவு வேறுபட்ட தன்மை வினைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. 1960க்குப் பின்பு ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரசுக்கட்சியும், தமிழ்க்காங்கிரஸ் கட்சி பும் வடமாகாணத்தின் மொத்த வாக்கு களில் 80 சத வீதத்தினைக் கொண்டிருந் தன. ஆனல் 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியானது.68.5 சதவீதமான வாக்குகளை மட்டுமே பெற் திருக்கின்றன. தமிழர் நலன் பேணும் கட்சிகள் தமது அரசியற் கூட்டிணைப்பினுற் கட தம் ஆதிக்கத்தினை இத் தேர்தல் மூலம் பெருமளவு நிலைநாட்ட முடியாத நிலைக்குள்ளாகி விட்டன. 1970ஆம் ஆண் Oத் தேர்தலில் 32 சதவீதமான வாக்கு கண்ப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கானது இம் முறை 76 சதவீதமான வாக்குகளையும், 0° 4 சதவீத வாக்குகளைப் பெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சி 15 சத
šo

ஆர். ஜெயரத்தினாாசா
爱
so I
வாக்குகளின் அடிப்படையில்
லை 1956 - 1977
சீதமாக)
) 1960 1965 1970 1977 ர் göv
28 AMWwIvMMA 32 7.6
一 s O4 15 7 85 8”6 45 09 4. 636 486 478 x-w 6 69 31'4 345 gromad:
O 805 80°0 823
- 686 3 82 '4 96 214
0 100 100 100 100 k of Ceylon, 1977. May & July.
ஆண்டு வரை, இலங்கை சமசமாஜக்கட்சி கம்யூனிஸ்ட் க் கட்சியும் சேர்ந்தே குறிப்பிடப்பட்டது,
வீதமான் வாக்குகளையும் பெற்றிருக்கின் றன. மேலும் வவுனியா, மன்னர் ஆகிய இரு தொகுதிகளிலும் இம்முறை தமிழர் விடுதலைக் கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் மிகக் கூடிய போட்டியினை எதிர்நோக்கியிருந்தன. அதாவது இலங்கை யின் அரசியலில் நீண்டகாலமாகத் தனித் தும் ஒதுங்கியுமிருந்த வடமாகாணத்தின் எல்லைப்புறங்கள் தேசியக் கட்சிகளின் செல்வாக்குக்கு உட்பட்டு வருவதனையே
இது காட்டுகின்றது.
வட மாகாணத்தினைப் போலன்றி கிழக்கு மாகாணத்தில் வேறுபட்ட கட்சி முறையின் வளர்ச்சியினை 1960லிருந்து அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் ஏனைய மாகாணங்களைப் போன்றே கிழக்கு மாகாணத்தில் தேசியக் கட்சிகள் வகுப்பு வாத கட்சிகளை விடப் பலமிக்க தொன்முக வளர்ச்சியடைந்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தமட்டில், எக்
ܢܚ- 53

Page 80
1977ஆம் ஆண்டுப் :
காலத்திலும் வகுப்புவாதக் கட்சிகள் சக்தி வாய்ந்தனவாகக் கா ண ப் பட வில் லை. 1956ஆம் ஆண்டு மட்டுமே தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாணத்தில் மிகக் கூடிய வாக்கு களை ஏறக்குறைய 424 சத வீதமான வாக்குகளைப் பெற்றிருந்தது. 1956லிருந்து தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகள் படிப் படியாக வீழ்ச்சியடைந்து 1970ல் 25 1 சத வீதமாக இருந்தது. இடதுசாரிக் கட்சி கள் தவிர்ந்த ஏனைய தேசியக் கட்சிகள் 1960லிருந்து ஒரு உறுதியான வளர்ச்சிப்
9 R.6). கிழக்கு மாகாணத்தில் பெற்ற
கட்சிகளின் நி
(சதவி
கட்சிகள் 1956 1960 மார்ச் ஐ. தே. க. 49 சி. ல. சு. க. 6:0 * இடது ஐ. மு. 38 Ꮕ*8 த. அ. கட்சி 42'4 351
த. கா. க. omwa, xa
42'4 35*1 தமிழர் வி. கூ. ബ — சுயேச்சையும் ஏனையவையும் 53.8 532 மொத்தம் 100 100
elpsult : Economic Review, People's Banl * இடதுசாரிக் கட்சிகள் என்னும்போது 1970ஆம் கட்சி ஆகிய இரண்டும், 1977இல் மக்கள் ஜனநாய
1977ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவு களை அவதானிக்கும் போது இது ஏற்கன வேயுள்ள வளர்ச்சிப் போக்கின் தொடர்ச்சி யாகவே காணப்படுகின்றது. கிழக்கு மாகர் ணத்தில் வளர்ச்சியண்டந்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியினதும், சிறீலங்கா சுதந் திரக் கட்சியினதும் வாக்குகளில் கூடிய அதிகரிப்பு இம் முறை ஏற்பட்டுள்ளது. 1970இல் 316 சதவீதமாகவிருந்த ஐக்கிய

ஆர். ஜெயரத்தினராசா
போக்கினை கிழக்கு மாகாணத்தில் கொண் டிருக்கின்றன. 1960ஆம் ஆண்டு மொத்த வாக்குகளில் 49 சத வீதமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பங்கானது, 1970இல் 316 சத வீதமாகவும், 6 சத வீதமாகவிருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி யின் பங்கு 252 சத வீதமாகவும் அதி கரித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியினை விட, ஐக்கிய தேசியக்கட்சியே மிகக்கூடுதலான வளர்ச்சி யினைக் கொண்டிருக்கின்றது.
Isis IV
வாக்குகளின் அடிப்படையில்
by 1956 - 1977
சீதமாக)
1960 1965 1970 1977 யூலை
186 245 36 37911'8 121 232 23・2 ameams 03 16. 38.9 31 - 1 251 t 26 4'4 -- -- 4 'S 355 25
322 -* p-n ܚܡ
28 276 201 31
100 100 100 100
c of Ceylon, 1977. May & July.
ஆண்டு வரை இலங்கை சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட். கக் கட்சியும் சேர்ந்தே குறிப்பிடப்பட்டது.
தேசியக் கட்சி வாக்குகள், இத் தேர்தலில் 379 சதவீதமாகவும், 232 சதவீதமாக விருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் 252 சதவீதமாகவும் அதிகரித் துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியி னைப் பொறுத்தமட்டில் கூட, 1970இல் 25'1 சதவீதமாகவிருந்த வாக்குகள் இம் முறை 322 சதவீதமாக அதிகரித்துள்ளது. 1970ஆம் ஆண்டுத் தேர்தலுடன் ஒப்பிடும்
54 -

Page 81
1977ஆம் ஆண்டுப் .
போது மட்டுமே தமிழர் விடுதலைக் கூட் டணி கூடுதலான வாக்குகளைப் பெற் திருக்கின்றது. ஆனல் அதற்கு முற்பட்ட காலத் தேர்தல்களில் பெற்ற வாக்குக குடன் ஒப்பிடும்போது இது குறைவான தாகும். இத் தேர்தலில் 1970ஆம் ஆண்டுத் தேர்தலைவிட ஐக்கியதேசியக் கட்சி, சிறீ சங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கட்டணி ஆகியன கூடுதலான வாக்கு கனேப் பெற்றமைக்குச் சுயேச்சை அங்கத் தவர்களின் வாக்குகளில் ஏற்பட்ட வீழ்ச் சியே முக்கிய காரணமாகும். 1970இல் 291 சதவீதமாக இருந்த சுயேச்சை அங்கத்தவர்களின் வாக்குகள் இத் தேர் தவில் 31 சதவீதமாக அல்லது 17 சத விதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இப் 17 சதவீதமான வாக்குகளில் 99 சத விதமான வாக்குகள் தேசியக் கட்சிகளி மூலும், 71 சதவீதமான வாக்குகளே தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் பெறப் பட்டிருக்கின்றது. இலங்கையின் கட்சி முறையில் பிரதேச ரீதியான வேறுபாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே காணப் படுகின்றது என்ற பேராசிரியர் ரொபேர்ட்
வடக்கு கிழக்கு மாகாணங்களில்
(சதவி
கட்சிகள் 1956 1960 ԼDITri :
ஐ. தே. க. mns 24 சி. ல. சு. க. 30 * இடது ஐ. மு. 128 102 i 6 - e.9 - éis · 461 425 த. கா. க. 29 92
- 4.90 51-7 தமிழர் வி. கூ. bunn amaகயேச்சை 382 32.7
epsoid: Economic Review, People's Bank இடதுசாரிக் கட்சிகள் என்னும்போது 1970ஆம் கட்சி ஆகிய இரண்டும் 1977இல் மக்கள் ஜனநாய

ஆர். ஜெயரத்தினராசா
கேர்ணியின் வாதம் கிழக்கு மாகாணத் திற்குப் பொருத்தமற்றதாகும்.7 ஏனெனில் இன்று கிழக்கு மாகாணத்தின் கட்சி முறை யும் ஏனைய மாகாணங்களில் கட்சி முறை யினைப் போன்று தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகக் காணப்படு கின்றன. 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் ஏறக்குறைய 647 சதவீதமான வாக்குகள் தேசியக் கட்சியினல் பெறப்பட்டதாகும்.
வட, கிழக்கு மாகாணங்களில் கட்சி முறையின் வளர்ச்சியினை மொத்தமாக நோக்கும்போதுகூட தமிழர் நலன்பேணும் கட்சிகளின் வீழ்ச்சிப் போக்கினையும், தேசியவாதக் கட்சிகளின் வளர்ச்சிப் போக்கினையுமே அவதானிக்க முடிகின்றது. 1956ஆம் ஆண்டு 24 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி 1977இல் 233 சதவீதமான வாக்குகளையும்; 3 சத வீத வாக்குகளைப் பெற்ற சிறீலங்கா சுதந் திரக் கட்சியின் நிலை 13-7 சதவீதமாக வும் அதிகரித்துள்ளது. இடதுசாரிக்கட்சி களைப் பொறுத்தமட்டில் 1956இல் 128 சதவீதமாக இருந்த வாக்குகள் 1977இல்
26o2 V
கட்சிகளின் நிலை 1956 - 1977
தமாக)
1960 1965 1970 1977 யூலை 10 7 22 176 233 5'8 60 1 9 13.7 43 46 22 13 519 405 363 Scal 100 183 17・1
619 588 534
amas ~ 3ыны 92 498 17.3 8’4 149 19
of Ceylon, 1977. May & July.
ஆண்டு வரை இலங்கை சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட்
கட்சியும் சேர்ந்தே குறிப்பிடப்பட்டது.
55 -

Page 82
1977ஆம் ஆண்டுப்.
13 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளன. தமிழர் நலன்பேணும் கட்சிகளும் 1960 யூலைத் தேர்தலில் 61*9 சதவீதமான வாக் குகளைப் பெற்றமைக்குப்பதிலாக 1977இல் 498 சதவீதமான வாக்குகளையே பெற் றிருக்கின்றன. வட, கிழக்கு மாகாணங் களில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் 1960இலிருந்து ஒரு தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கினை யும், இடதுசாரிக் கட்சிகளும், தமிழர் நலன்பேணும் கட்சிகளும் தொடர்ச்சியான வீழ்ச்சிப் போக்கினையும் கொண்டிருக்கின் றன. 1977ஆம் ஆண் டு த் தேர்தல் முடிவுகள் இவ்விரு மாகாணங்களிலும் புதிதான ஒரு அரசியல் மாற்றத்தினைப் பிரதிபலிப்பதாகத் காணப்படவில்லை. 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக் கட்சிகள் இவ்விரு மகாணங்களிலும் 317 சதவீதமான வாக்குகளையும், தமிழர் நலன் பேணும் கட்சிகள் 534 சதவீதமான வாக்குகளையும் பெற்றிருந்தன. ஆனல் 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக் கட்சிகள் 48*3 சதவீதமான வாக்குகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணி 498 சதவீத மான வாக்குகளையுமே பெற்றிருக்கின்றன. வட, கிழக்கு மாகாணங்களில் ஸ்தானங் களைக் கைப்பற்றுதல் என்ற குறிக்கோளில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரளவு வெற்றியடைந்துள்ள போதிலும் தேசியக் கட்சிகளின் வளர்ச்சியினைத் தடுத்து நிறுத்து வதில் தோல்வியே கண்டுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்குப் பொறுப்பாக இருந்த காரணங்கள் :
இலங்கையிலுள்ள முக்கியமான அரசி யல் கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்டளவு வீதாசாரமான வாக்குகள் நிலையான வாக்குகளாக இருப்பதனல், எல்லை வாக்காளர்களே கட்சிகளின் வெற்றி யினை நிர்ணயிக்கும் முக்கிய -காரணகர்த் தாக்களாகக் காணப்படுகின்றனர். இத்
- 5

ஆர். ஜெயரத்தினராசா
தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 70 சதவீதமான வாக்காளர்கள் 18 வயதிற்கும் 35வயதிற்குமிடைப்பட்டவர்களாக இருந்த துடன் இப் பிரிவினரிடையே வேலையற்ற வர்கள் மிக அதிகமாகக் காணப்பட்டார் கள். பதின்மூன்று மில்லியன் சனத்தொகை யில் ஒரு மில்லியன் மக்கள் வேலையற்றவர்க ளாகவும் காணப்பட்டனர்.8 மேலும் 1071ஆம் ஆண்டு பயங்கரவாத இயக்கத் தில் ஈடுபட்டவர்களும், அதன் ஆதரவாள ரும் கூட பல தேர்தற் தொகுதிகளில் எல்லை வாக்காளர்களாகக் காணப்பட் டார்கள். இவர்களிற் பலர் 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் வெற்றிக்காக உழைத்த வர்கள் என்பதும் குறிப்பிடக்கூடிய ஒரு அம்சமாகும். மேலும் இலங்கையின் பல தேர்தற் தொகுதிகளில் தமிழர்களும், முஸ்லிம்களும் எல்லை வாக்காளர்களாகக் காணப்பட்டார்கள். இத் தேர்தலின் வெற்றி, தோல்வியானது இளைஞர்கள், 1971ஆம் ஆண்டு பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள், சிறுபான்மைச் சமூகத்தி னர்கள் ஆகியோரின் கூடிய வாக்குகளைப் பெறுவதிலேயே தங்கியிருந்தது. மேற். குறிப்பிட்ட வாக்காளர்களின் ஆதரவினைப் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமாக இருந்த காரணிகளை அக ரீதி யான காரணிகள், புற ரீதியான காரணி கள் என இருவகையாகப் பிரித்து ஆராய லாம்.
அக ரீதியான காரணிகள் என்னும் போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற் பட்ட மாற்றங்களையே இது குறித்து நிற். கிறது. குறிப்பாக 1973ஆம் ஆண்டிற்குப் பின்பு திரு. ஜே. ஆர். ஜயவர்த்தனவின் தலைமையுடன் கட்சியின் கிளைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டதுடன், அதன் அங்கத்தினர்களின் எண்ணிக்கையிலும் மிக வேகமான அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தினர் எண்ணிக்கை 1976ஆம் ஆண்டு ஐந்து இலட்சமாக இருந்ததுடன், 1977ஆம்
6 -

Page 83
1977ஆம் ஆண்டுப் .
ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மட்டும் இரண்டு இலட்சம்பேர் கட்சியில் சேர்ந் திருந்தார்கள். நாடு முழுவதும் 4000 பிரதானக் கிளைகள், இளைஞர் முன்னணி கள், மாதர் சங்கங்கள் அமைக்கப்பட் டிருந்தன.9 தேர்தலுக்குமுன்பாக 960,000 சந்தாப் பணம் செலுத்தும் அங்கத்தவர் களேக் கொண்டிருந்தது. மேலும் முதலா வித்துவக் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஏழைமக்களின் ஆதரவுடன் சோஷலிசத்திற்கு உழைக்கும் ஒன்ருகவும் காணப்பட்டது.10 புதிய தலைமைப்பீடத் துடன் 1973இக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சியானது அமைப்பு ரீதியாகப் பெரும் வளர்ச்சியினை இக்காலத்தில் அடைந் திருந்தது.
இவ் அமைப்பு ரீதியான வளர்ச்சியுடன் இக்கிய தேசியக் கட்சியின் கொள்கை ரீதி வான மாற்றமும் குறிப்பிடக் கூடிய ஒரு அம்சமாகக் காணப்பட்டது. முதன் முத காக ஐக்கிய தேசியக் கட்சியானது இத் தேர்தலிலேயே ஜனநாயக சோஷலிச வேலைத் திட்டத்தினை தான் அமுலாக்கப் போவதாகக் கூறியிருந்தது. ** சோஷலிச மற்ற ஜனநாயகம் சுரண் டலின் ஜன தாயகமாகவும், ஜனநாயகமற்ற சோஷ விசம் அடக்குமுறையில் சோஷலிசமாகவும் அமைந்திருக்கும். என தாம் நம்புவதாக ர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனநாயக ஃேசம் பற்றிய விளக்கம் வரையறை செய்யப்பட்டிருந்தது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் விளக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் :
(i) இமாலயம் போன்று அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்தல், மேலும் ஒவ்வொருவருக்கும் கிழ மைக்கு எட்டு இருத்தல் தானியம் வழங்கல். கி) இளைஞர்களுக்குக் கல்வி, வேலை
ாய்ப்பு வசதியினை அதிகரித்தல். ம்)/தவருண முறையில் வழி நடத்தப் பட்டு 1971ஆம் ஆண்டுக் கிளர்ச்சி யில் ஈடுப்ட்ட இளைஞர்களின் வழக் குகளை பரிசீலனை செய்தல்.
வி - 8 --57 -س

ஆர். ஜெயரத்தினராசா
(iv) தமிழ் மக்களின் கல்வி, குடியேற்றம், தமிழ்மொழி உபயோகம், அரசாங் கத்திலும் அரசாங்கக் கூட்டுத் தாபனங்களிலும் வேலை வாய்ப்புக் கள் சம்பந்தமான விடயங்களே சர்வ கட்சி மகாநாடு மூலம் தீர்த்தல்."
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயக சோஷலிச வேலைத்திட்டக் கொள்கையா னது குடும்பப்பெண்கள், இளைஞர்கள், 1971ஆம் ஆண்டு பயங்கரவாத இயக்கத் தினர், தமிழ் மக்கள் போன்ற பல்வேறு வாக்காளப் பிரிவினரையும் கவரக்கூடிய தாகவிருந்தது.
புறக் காரணிகள் என்னும்போது ஐக்கிய தேசியக் கட்சியினை எதிர்த்துத் தேர்தலிற் போட்டியிட்ட சிறீலங்கா சுதந் திரக் கட்சி, ஐக்கிய இடதுசாரி முன்னணி ஆகியவற்றின் தவறுகளையும், குறைபாடு களையுமே இது சிறப்பாகக் குறித்து நிற் கின்றது. குறிப்பாக 7 வருடங்கள் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியினல் ஜனநாயக சோஷலிசம் என்ற கொள்கையின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களின் தோல்வியே பொதுமக்களை இடதுசாரி இயக்கத்தின்மீதும் நம்பிக்கை யிழப்பதற்குக் காரணமாக அமைந்திருந் தது. ஏனெனில் இந்த 7 வருடத்தில் 5 வருடத்திற்கு மேற்பட்ட ஆட்சியில் இவர் கள் பங்காளிகளாகவும் பொறுப்பாளிக ளாகவும் காணப்பட்டனர்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சி குடும்ப ஆதிக்கமும், ஊழலும் நிறைந்த ஒரு ஆட்சி என்பதே ஐக்கிய தேசியக் கட்சி யினது மட்டுமன்றி, ஐக்கிய இடதுசாரி முன்னணியினதும் வாதமாக அமைந்திருந் தது. தேர்தல் பிரசாரத்திற்காக வெளி யிடப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிர சுரமொன்றில் பிரதமர் சிறிமாவோ பண் டாரநாயக்காவின் இனத்தவர்கள் அர சாங்கத் துறைகளிலும் அரசாங்கக் கூட்டு தாபனங்களிலும் உயர் பதவிகளில் 51 பேர்களும், அமைச்சரவையில் நால்வரும்,

Page 84
1977ஆம் ஆண்டுப் .
தேசிய அரசுப் பேரவையில் அறுவரும் இருப்பதாக எடுத்துக்காட்டப்பட்டது.* திருமதி பண்டாரநாயக்கா அரச உடமைக் கூட்டுத்தாபனங்கள் பலவற்றில் தம் இனத் தவர்கள் பலருக்கு வேலைவாய்ப்பினை வழங் கியமையினுல் உடமை மாற்றமானது தனி யார் துறையிலிருந்து பிரதமரின் துறைக்கு மாற்றப்பட்டது.*
நாட்டின் வேளையின்மையானது அதி கரித்துச் செல்கின்ற நிலையில் குடும்ப ஆதிக்கத்துடன் புதியதொரு பணக்கார வகுப்பினரும் தோன்றியமை இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தவும் வழிவகுப்பதாக அமைந்திருந்தது. அர சாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவாக அரச முதலாளித்துவமும், புதிய பணக் கார வகுப்பினரும் உருவாக்கப்பட்டுள் ளனர். காணிச் சீர்திருத்தக் கொள்கை யானது அரச உத்தரவாதம் பெற்ற நிலச் சுவான் வகுப்பினரை உருவாக்கியுள்ளது. அதேபோன்று அரச உடமை நிறுவனங் களும் இதே போன்ற ஒரு வகுப்பினரையே உருவாக்கியுள்ளது.14
1970ஆம் ஆண்டுத் தேர்தலில் பயங் கரவாத இயக்கத்தினரைச் சேர்ந்த இளை ஞர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக் காகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட் டிருந்தார்கள். 1971ஆம் ஆண்டு நடந்த ஏப்ரல் கிளர்ச்சியினை அரசாங்கம் ஆடக்கு வதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற் கொண்டமையினுல் இவ் இளைஞர்களின் எதிர்ப்பினையும் இம்முறை சம்பாதிக்க வேண்டியிருந்தது. மேலும் 1976ஆம்ஆண்டு பல்கலைக்கழக மாணவன் ஒருவன் இலங் கையில் முதன் முதலாகச் சுட்டுக் கொல் லப்பட்டமையும், மாணவ சமுதாயத்தின் எதிர்ப்பினையும் பெறுவதற்கு காரணமா யிருந்தது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமானது இளம் சந்ததியினரின் பெருமளவு எதிர்ப்பைப் பெற்ற ஒரு அர சாங்கமாக இருந்தமையினல் இளைஞர்க
- 5

ஆர். ஜெயரத்தினராசா
ளின் பெருமளவு வாக்கினைப் பெற முடி 4ாத நிலையிலிருந்தது.
சில அவதானிகள் சிறீலங்கா சுதந்தி ரக் கட்சியின் ஆட்சியின்போது தீவிர நிலை யினை அடைந்த வாழ்க்கைச் செலவு அதி கரிப்பு, உயர்ந்த வேலையின்மை, மற்றும் வீட்டுப்பிரச்சனை, நிலப்பிரச்சனை போன்ற வையே இதன் தோல்விக்குக் காரணமென அபிப் பிராயம் தெரிவித்திருந்தார்கள். ஆளுல் இத் தேர்தலில் எந்த ஒரு கட்சி யும் இப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டவட்டமான வேலைத்திட்டங்களையோ வழிவகைகளையோ கூறவில்லை. எனினும் இவற்றினைத் தீர்ப்பதற்கான தீவிரமான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக மட்டுமே கூறியிருந்தார்கள். எனவேதான் நாட்டில் காணப்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குத் தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக் களித்தார்கள் என உறுதியாகக் கூறமுடி யாது. எனவே ஏனைய காரணங்களே ஐக் கிய தேசியக் கட்சியின் வெற்றிக்குச் சாத கமாக இருந்தனவாகும்.
மரபு ரீதியான இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் தவறுகளும், கொள்கை ரீதி யான பலவீனமும் கூட, இடதுசாரிக் கருத் துக்களில் நம்பிக்கை கொண்ட சாதாரண வாக்காளன் கூட இம்முறை ஐக்கிய தேசி யக் கட்சிக்கு வாக்களிக்குமாறு நிர்ப்பந் திக்கப்பட்டிருக்கிருன். இத் தேர்தலில் இடது சாரித் தலைவர்கள் சிறீலங்கா சுதந் திரக் கட்சி அரசாங்கத்தின் குறைபாடு களை எடுத்துக் காட்டுவதில் கூடிய கவனஞ் செலுத்தினரே யொழிய, நாட்டின் பிரச் சனைகளைத் தீர்ப்பதற்கான பொது வேலைத் திட்டத்தினை மக்கள் முன் வைக்கத் தவறி விட்டார்கள். அதே நேரத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் தவறுக ளில் 4 க்கு தாமும் பொறுப்பாளிகள் அல்லது பங்காளிகள் என்பதனை மறந்துவிட் டார்கள். தேர்தலில் இடதுசாரிக் கட்சி கள் தோல்வியடைந்தமைக்கான காரணத்
8 -

Page 85
1977ஆம் ஆண்டுப் . to O O.
தினை பொதுவுடமைக் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. பீட்டர் கெனமன் அவர் கள் பின்வருமாறு கூறியிரு ந் தா ர். ‘பொதுத் தேர்தல் மனுப் பத்திரங்கள் தாக்கல் செய்வதற்கு இரு வாரங்களுக்கு முன்பே ஐக்கிய இடதுசாரி முன்னணி உரு வாக்கப்பட்டமையினுல் பொது மக்களைக் கவரக்கூடிய ஒரு மாற்றுத் திட்டத்தினை தம்மால் முன்வைக்க முடியவில்லை, **** முப் பத்தைந்து வருட கால அரசியல் அனுப வமுள்ள இடதுசாரியினரால் நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடியதும், Lná களைக் கவரக்கூடியதுமான வேலைத் திட் டத்தினை முன்வைக்க முடியாமையும்கூட ஐக்கிய தேசியக் கட்சுயின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் வெற்றிக்கு அக ரீதியான காரணிகள், புற ரீதியான காரணிகள் ஆகிய இரண்டுமே பெருமள விற்குப் பொறுப்பாக இருந்திருக்கின்றன
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கை ரீதியான தோல்விக்கான காரணிகள் :
தமிழர் விடுதலைக் கூட்டணியானது இத் தேர்தலை தமிழ் ஈழத்திற்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பாகவே கருதிட் போட்டியிட்டது. தமிழர் விடுதலைக் கூட் டணியின் 24 அபேசட்கர்களில் 18 பேர் இத் தேர்தலில் வெற்றி பெற்ருலும் பெற்ற வாக்குகளைப் பொறுத்தமட்டில், தோல்வி யென்பதனை மறுப்பதற்கில்லை. 1970ஆப் ஆண்டுத் தேர்தலில் பெற்ற வயக்குகளை விட இத் தேர்தலில் குறைவான வாக்கு களையே தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பெற்றுள்ளனர். மேலும் கிழக்கு மாகாணத் தினைப் பொறுத்தமட்டில், தேசியக் கட்சி களே மிகக் கூடுதலான வாக்குகளைப் பெற திருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டண பினரின் பொதுவான தோல்விக்கான கார ணங்கள், கிழக்கு மாகாணத்திற்கான விசேடமான காரணங்கள் என இரு வை பாக ஆராய்தல் பொருத்தமானதாகும். பொதுவான காரணங்கள் :

ஆர். ஜெயரத்தினராசா
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தாம் தமிழ் ஈழத்தினை சமாதான வழி மூலமே அடைவதாகக் கூறிய போதிலும் சமா தான வழிகள் எவையெனத் திட்டவட்ட ம்ாகக் கூறவில்லை. மேலும் சமாதான வழி மூலம் சமஷ்டி ஆட்சியினைப் பெற முடியாத ஒரு அரசியற் கட்சியிஞல் எவ்வாறு தமிழ் ஈழத்தினைப் பெற முடியும் என்ற கேள்வி ஒரு சாதாரண வாக்காளனிடம் எழுவது தவிர்க்க முடியாததாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள கட்சிகளிடம் சரியான ஒருமைப்பாடும் இருக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி யின் அங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்து இத்தேர்தலிற் போட்டி யிட்டது. இஸ்லாமிய ஐக்கிய முன்னணி யானது இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற இயக்க மாகவும் இருக்கவில்லை. தமிழ் காங்கிரசின் ஒரு பகுதியினர் ஜி. ஜி. காங்கிரஸ் என்ற பெயரில் தனித்து தேர்தலில் போட்டியிட் டனர். தமிழரசுக் கட்சியும் 1960 க்குப் பின் செல்வாக்கினை யிழந்து கொண்டு வந்த கட்சியாக இருந்தது. எனவேதான் இது ஒரு பலவீனமான கூட்டணியாகக் காணப்பட்டது.
தேர்தலுக்கு அபேட்சகர்களைத் தேர்ந் தெடுப்பதில் கூட பல பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டியிருந்தது. பல தேர்தல் தொகுதிகளில் அபேட்சகர் தேர்வுக்குப் பின் ஆர்ப்பாட்டங்களும் கொடும்பாவி எரிப்புக்களும் கூட நடைபெற்றன. மட்டக் களப்பில் இரு அபேட்சகர்களை நியமித்தது பொதுமக்கள் மத்தியில் கூட்டணியினர் பற்றி தவமுன அபிப்பிராயங்கள் உருவாகு வதற்கும் வழி வகுத்தது.
வேலையின்மை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வறுமைபோன்றவற்ருல் தவித் துக் கொண்டிருக்கும் சாதாரண ஒரு வாக் காளனுக்கு அயர்லாந்து தேசிய வாதிக ளின் சுலோகங்களைப் போன்ற அரசியற் பேச்சுக்கள் கவர்ச்சியளிக்க மாட்டாது. இதனுல்தான் வடமாகாணத்தில் கூட விவ சாயிகளையும், குடியானவர்களையும் பெரு
59 -

Page 86
1977ஆம் ஆண்டுப் .
மளவு கொண்ட கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய தொகுதிகளில் பெரும் வெற்றியினைக் கூட்டணியினரால் அடைய முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட சூழ்நிலைகள்:
வடமாகாணமும், கிழக்கு மாகாண மும் தமிழ்மொழி பேசுபவர்கள் அதிகமாக வாழ்பவர்கள் என்ற அடிப்படையில் பொது வான தன்மைகள் காணப்பட்ட போதி லும் உள்ளார்த்த ரீதியாகப் பல வேறு பாடுகள் காணப்படுகின்றன. வடமாகா ணத்தினை விட கிழக்கு மாகாணம் கூடி யளவு ஒரு பன்முகச் சமூகமாக அமைத் திருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் 44 சத வீதமும், முஸ்லிம்கள் 34 சத வீதமும், சிங்களவர்கள் 20சத வீதமும் இங்கு வாழ் கின்றனர். மேலும் யாழ்ப்பாணக் குடா நாட்டில் மத்திய வகுப்பினர் (வெள்ளை யுடை உத்தியோகத்தினர்) அதிகமாக இருப்பது போன்று கிழக்கு மாகாணத்தில் இல்லை. இங்கு விவசாயிகளும் குடியான வர்களுமே முக்கியத்துவம் பெறுகின்றனர். வரலாற்று ரீதியாக வடமாகாணம் யாழ்ப் பாண இராச்சியத்திற்குட்பட்டது போன்று கிழக்கு மாகாணம் கண்டி இராச்சியத்துக் குட்பட்டதாகவும் இருந்திருக்கின்றது. இதனுலேயே யாழ்ப்பாணத் தமிழர் , மட்ட்க்களப்புத் தமிழர் என்ற பிரிவு இலங்கைத் தமிழர் மத்தியில் இன்றுவரை காணப்படுகின்றது.
இத் தேர்தலில் யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர் என்ற பிரிவினை உணர்ச்சி, சக்தி வாய்ந்ததாகக் காணப் பட்டிருக்கின்றது. தேர்தலுக்கு முன்பும் பின்பும் கே. டபிள்யூ. தேவநாயகம் அவர் கள் கூறியவை இதற்கு சிறப்பான எடுத்துக் காட்டாகும். "தனித்தமிழ்நாடு உருவா ஞல் கிழக்கை வடமாகாணத்தவர்களே ஆளுவார்கள்.”*18 **இதுவரை காலமும் வடமாகாண அரசியல் வாதிகளே எம்மை வழிநடத்தி வந்தனர். இனிமேல் எம்மை
- (

ஆர். ஜெயரத்தினராசா
வழிநடத்த எமக்கே உரிமையும் யோக்கிய மும் உண்டு," நீண்ட காலமாகக் கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட இவ் உணர்ச்சி இத் தேர்தலில் மேலும் தூண்டிவிடப் பட் டிருக்கிறது.
வடமாகாணத்தினரையும், கிழக்கு மாகாணத்தினரையும், இணைக்கக்கூடிய ஒரு தலைமைப்பீடம் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் இருக்கவில்லை. திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின், பொதுவான தலைமைப்பீடமின்மை யினல் கிழக்கு மாகாண மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் நம்பிக்கையிழக்க மற்ருெரு காரணமாக இருந்தது.
வடமாகாணத்தினர்களே பெருமளவு தரப்படுத்தல் முறை மூலம் பாதிக்கப்பட் டிருந்தனர். ஆனல் கிழக்கு மாகாணம் கல்வியில் பின்தங்கிய ஒரு மாகாணமாக இருந்ததால் தரப்படுத்தல் பெரும் பாதிப் பினை இம் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வில்லை. கிழக்குமாகாண மக்கள் அரசாங் கத்தின்மீது குரோத மனப்பான்மை கொண்டு ஈழக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் நிலையிலிருக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தில் விவசாயிகளையும் குடியானவர்களையும் பொறுத்தமட்டில், பல அடிப்படை பிரச்சனைகளை எதிர்நோக்கி ஞர்கள். போக்குவரத்து, நீர்ப்பாசனம், மருத்துவம் ஆகியன விருத்தி செய்தல் இவர்களுக்கு இன்றியமையாதனவாக விருந்தன. மேலும் விவசாயிகளும் குடியான வர்களும் இலங்கையின் ஏனைய மாகாண விவசாயிகளும் குடியானவர்களும் எதிர் நோக்கும் பிரச்சனையினையே எதிர்நோக்கி ஞர்கள். எனவே இவற்றிற்குத் தேசிய கட்சிகட்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தீர்வு காணலாம் என எண்ணுவது இயல் பானதாகும்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் வாக் காளர் பெருமளவு காணப்படுகின்றனர். முஸ்லிம் மக்கள் தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலமே தம்
0 -

Page 87
1977ஆம் ஆண்டுப் .
இன உரிமைகளைப் பாதுகாக்கலாம் என் பதே அவர்களின் அரசியல் நம்பிக்கை யாகும். மேலும் தமிழர் விடுதலைக் கூட் டணியில் அங்கம் வகித்த இஸ்லாமிய ஐக்கிய முன்னணி, முஸ்லீம் லீக், இஸ்லா மிய சோஷலிஸ் முன்னணி போன்று பெரும் பான்மை முஸ்லிம்களின் ஆதரவினைப் பெற்ற இயக்கமாக இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் இத்தகைய சூழ்நிலைகள் காணப்பட்டமையே ஈழ பொதுசன வாக் கெடுப்பில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பெரும் தோல்வி வின அடையவேண்டியிருந்தது. &
தேர்தலின் விளைவுகள் :
1956ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பொதுத் தேர்தலும் இலங்கையில் இரு கட்சிப் போக்கின் தன்மையினை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்திருக்கிறது. அதே போன்று இத் தேர்தலும் இலங்கை வில் அரசாங்கத்தினைக் கைப்பற்றும் சக்தி பானது ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக கட்சி ஆகிய இரண்டினுல் கட்டுமே சாத்தியமானது என்பதனை மேலும் வற்புறுத்துவதாகவே உள்ளது. இத்தகைய ஒரு முடிவானது ஜனநாயக முறைகளில் நம்பிக்கை கொண்ட அரசியற் கட்சிசளை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட முடிவாக மட்டுமே கருதப்பட வேண்டும். ஏனெனில் பாராளுமன்ற முறை களில் நம்பிக்கையற்ற அரசியல் இயக்கங் கங்களின் பலத்தினைப் பொதுத்தேர்தல் முடிவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அனுமானிக்கமுடியாது.
இலங்கையில் தேர்தல்வன் செயல்களும் படிப்படியாக அதிகரித்து வருவதனை இத் தேர்தல் முடிவுகளின் பின் நன்கு அவதா விக்க முடிகின்றது. தேர்தல் வன்செயல் கள் 1965ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுடன் ஆரம்பமாகி 1970இல் கார்ச்சியடைந்து இம்முறை மேலும் உக் கிர நிலையினை அடைந்துள்ளது. இம்முறை பொதுத்தேர்தலின் பின் ஏறக்குறைய
- 6

ஆர். ஜெயரத்தினார்சா
இறந்தவர்கள் தொகை 50ஆகவும், நூற் றுக் கணக்கானவர் காயமடைந்ததுடன், ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளும் நிறுவ னங்களும் எரிக்கப்பட்டுள்ளன.18 இதன் பின் நடந்த இனக்கலவரம் கூட இதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கின்றது. எனவே எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் தேர்தல்களின் பின் பெரும் உள்நாட்டுக் கலகம் ஏற்படுவதுகூட சாத்தியமானதா கும். சுருங்கக்கூறின், எமது நாட்டில் ஜன நாயக பாரம்பரியங்கள் எல்லாம் படிப் படியாக செயலிழந்து வருவதனையே இது எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக தொகை ரீதியாகவும், தர ரீதியாகவும் ஒரு பலவீனமான எதிர்க்கட்சி இத் தேர்தலினலேயே உருவாக்கப்படடுள் ளது. அரசாங்கக் கட்சியானது 140 ஸ்தா னங்களுடன் இருக்கின்ற நி யில் எதிர்க் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி யானது 18 ஸ்தானங்களுடன் மட்டுமே இருக்கின்றது. ஆனல் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற வாக்குகள் 68 சதவீத மாகவும், ஐக்கிய இடதுசாரி முன்னணி பெற்ற வாக்குகள் 69 வீதமாகவும், சிறீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்ற வாக்குகள் 29 7 சதவீதமாகவும் காணப்படுகிறது. உண்மையில் தேசிய அரசுப் பேரவையில் அரசாங்கக் கட்சிக்கு அடுத்து பொதுமக்கள் ஆதரவைப் பெற்ற கட்சி சிறீலங்கா சுதந் திரக் கட்சியாகும். ஒரு பொருத்தமற்ற நிலையிலேயே இன்று எதிர்க்கட்சியானது தேசிய அரசுப் பேரவையில் அமைத்திருக் கின்றது. தேசிய அரசுப் பேரவையின் எதிர்க்கட்சிகளின் நிலைபற்றி க லா நிதி கொல்வின் ஆர். டி. சில்வா பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருக்கின்ருர் :
** இப்போதைய நிலையில் பேரவையில் கூட உரிய முறையில் விவாதித்துச் சட் டங்களை அலசி ஆராயக்கூடியோர் இல்லை. எதிர்க்கட்சி இருந்தபோதும், அதில் ஒரு சாராருக்கு வேறு பிரச்சனை உள்ளது. நாட்டைப் பிரிப்பதா? இல்லையா ? என்

Page 88
1977ஆம் ஆண்டுப்.
பதே இவர்களது பிரச்சனை. மற்றச் சாராரோ சரிவர விவாதிக்க முடியாதோ ராவார் .அரசாங்கத் தரப்பினரோ தம்மை தாமே புகழ்வதிலேயே ஈடுபட்டுள்ளனர்.”9
முற்பட்டகாலத் தேர்தல் முடிவுகளைப் போன்றே இத்தேர்தல் முடிவுகளும் பிர தேச வாரிப் பிரதிநித்துவத்தின் குறைபா டுகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக் கின்றது. இத் தேர்தலில் 50 9 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கியதேசியக் கட்சி 140 ஸ்தானங்களையும், 29 7சதவீத வாக்கு களைப் பெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஸ்தானங்களையும், 68 சதவீத வாக்கு களைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஸ்தானங்களையும் பெற, 69 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய இடதுசாரி முன்னணி எந்தவித ஸ்தானங்களையும் பெறவில்லை. சாதாரண பெரும்பான்மை யினை அடிப்படையாகக் கொண்ட வாக் களிப்பு முறையானது நாட்டின் அரசியல் நிலையினை பூரணமாகப் பிரதிபலிக்கவில்லை. இதனல் ஒரு மாற்று வாக்களிப்பு முறை கட்டாயமாக உருவாக்கப்பட வேண்டும் என்பது கலாநிதி என். எம். பெரேரா அவர் களின் வாதமாகும்.*0 எனவே எதிர்காலத் தில் தற்போது ஆராயப்பட்டு வரும் விகி தாசாரப் பிரதிநிதித்துவ முறையினை அமு லாக்குதல் இக் குறைபாடுகளைத் தவிர்ப் பனவாக இருக்கலாம்.
இலங்கையில் வகுப்புவாத அரசியல் செயல் இழந்து செல்கின்றது என்ப தனையே இத் தேர்தல் முடிவுகள் மேலும் வற்புறுத்துவதாகக் காணப்படுகின்றது. இத் தேர்தலில் போடியிட்ட நான்கு முக் கிய அரசியற் கட்சிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சி களும் தேசியக் சுட்சிகளாகக் காணப்பட் டன. இம் மூன்று கட்சிகளும் 1965ஆம் ஆண்டுத் தேர்தலில் 793 சதவீத வாக்கு களையும், 1970ஆம் ஆண்டுத் தேர்தலில்
6 سے

ஆர். ஜெயரத்தினராசா
868 சதவீத வாக்குகளையும், 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் 875 சதவீத வாக்கு களையும் பெற்றிருக்கின்றன. ஆணுல் தமிழர் விடுதலைக் கூட்டணி 1965இல் 78 சதவீத வாக்குகளையும், 1970இல் 72 சதவீத வாக்குகளையும், 1977இல் 68 சதவீத வாக்குகளையுமே பெற்றிருக்கின்றன. எதிர் காலத்தில் வகுப்புவாத அரசியல் சிறிது சிறிதாக அற்றுப்போய்விடுமென்பதனையே இது எடுத்துக் காட்டுகின்றது.
மரபுரீதியான இடதுசாரிக் கட்சிகளின் இறுதிக் கட்டமாகவே இத்தேர்தல் அமைந் திருக்கின்றது. எதிர்காலத்தில் இடதுசாரி இயக்கம் புனர் நிர்மானம் செய்யப்பட் டால் அன்றி, இலங்கையின் அரசியலில் இவை வளர்ச்சிப் போக்கினைக் கொள்ள (pigt Tsgil.
முடிவுரை:
இத் தேர்தல் முடிவுகளானது முற் பட்ட காலத் தேர்தல் முடிவுகளின் ஒரு தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்காகவே அமைந்திருக்கின்றது. மேலும் வட, கிழக்கு மாகாணங்களின் அரசியல் போக்கானது ஓரளவு தேசிய அரசியல் சத்திகளுடன் இணைத்துச் செயற்படத் தொடங்கி யிருக் கின்றது. இக் கூற்று கிழக்கு மாகாணத் திற்கே பெருமளவு பொருந்துவதாக இருப் பினும், வட மாகாணத்திலும் ஒர் ஆரம்ப நிலை ஏற்பட்டிருப்பதை ஓரளவு அவதா னிக்க முடிகின்றது. மேலும் இத் தேர்தல் முடிவுகளை ஒரு தற்செயல் அரசியல் விபத் தாகக் கருதுவதற்கில்லை. ஆனல் எதிர் காலத்திலும் இத்தகையதொரு போக்கு சாத்தியமானதா என்பதனை திட்டவட்ட மாக இன்று கூற முடியாது. எதிர்காலத் தில் ஏற்படும் அரசியல் சமூக மாற்றங்கள் இதற்கு முரணுன முடிவுகளைக்கூட ஏற். படுத்துவதாகவும் அமைந்திருக்கலாம்.
2ー

Page 89
1977ஆம் ஆண்டுப் .
அடிக் கு
A. J. Wilson, Politics in Sri-Lanka Ibid, P. 129 Asia's Voice, (Bombay. 15 July 197, தமிழர் விடுதலைக் கூட்டணிப் பொதுத் Robert N. Kearney, The Politics of
bid., P. 104.
bid. Asia's Voice, (Bombay, 15 July 1977 A. B, Talagune, From J. R......., (C Asia's Voice, (Bombay, 29 July 1977 U. N. P. Elections Manifesto, Colo A. R. Robinson, The Family Free, Asia's Voice, Bombay, 15, July 19 U. N. P. Manifesto, (Colombo, 1977 Ceylon Daily News, (Colombo, 29 தினபதி, (கொழும்பு, 11 June 1977), வீரகேசரி, (கொழும்பு, 16 August 19 Sunday Times, (Colombo, 4 August வீரகேசரி, (கொழும்பு, 22 September Sunday Times, (Colombo, 14 August
AeMAMqMAeALMAeLMALMLMALqSqASLSLSqAqALSqAAAA LqSLMSeSqLMLqqSASASAMLMAqLqALMLMAeqLMSMALALAMLqMLMSqLALASLLLALLSAAAASAAAA
மூலதன மீட்பு
பங்கு மீட்பின்போது மீட்பு வட்டத்து பங்குகள் வழங்கும்போது அதுவும் 6 வட்டத்துடனுன மீட்புத் தொகைக் தொகைக்கும் இடையேயுள்ள வித்தியா
ஒதுக்கப்படவேண்டும். இது இ ல ங் ை இங்கிலாந்து முறைப்படி வட்டம் தவி gp5, Guo LD5 (Face Value) di 6fair
நிதியாக ஒதுக்கப்படும்.

ஆர். ஜெயரத்தினராசா
றிப்புக்கள்
1947 - 1973, (London, i974), P. 128.
'), P. 15. தேர்தல் பிரகடனம், (கொழும்பு, 1977).P. Ceylon, (London, 1973), P. 105.
), P. 15. 'olombo, 1977), P. 5. '', P. 11. mbo, 1977.)
Dehiwela, 1977), P. S. 77). P. 14. ', P, 1July 1977), P. t.
P. S. 77), P. l. : 1977) P. 4. 1977), P. 4. 1977), P. 4.
-- qASASMASASASASqqSqSqSqSASTSASASASqSqqS
ஒதுக்கு நிதி டன் செய்யப்பட்டும் மீட்புக்காகப் புதிய பட்டத்துடனும் வழங்கப்பட்டிருப்பின் தம் வட்டத்துடனன பங்கு வழங்கல் சமே மூலதன மீட்பு ஒதுக்கு நிதியாக கயி ல் பின்பற்றப்படும் முறையாகும். ர்ந்த பங்குகளின் பெறுமதி அதாவது வித்தியாசமே மூலதன மீட்பு ஒதுக்கு

Page 90
சகலவிதமான பலசரக்குச் சாமான்களுக்கும்
குணரத்தினம் ஸ்ரோர்ஸ் 98, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்
போன் 556
Dealers in Household goods, groceries, stationery and gift articles, specilists in rosting and grinding of COFFEE and SOYA BEAN.
མང་
Mohamedally
Abdulally
5-7, Grand Bazaar, JAFFNA Phone : 515 Grams: "SAFEE Branch : 81, Old Moor Street, COLOMBO-12 Phone : 33569 Grams 'BARWALA

With the best Compliments
ფf
General Merchants
& Commission Agents
R. N. R. Stores
33, MANIPAY ROAD, JAFFNA.
கு கைத்தறிப் புடவைகள் றெடிமேட் உடுப்புகள் வர்ணக் குடைகள் மற்றும் நம்நாட்டு அன்பளிப்புப் பொருட்கள் உற்பத்திப் பொருட்கள் - அனேத்திற்கும் -
(6) ( G (GO HÚU
யாழ்ப்பாணம்,

Page 91
எமது நல்வாழ்த்துக்கள்! W,
Ulu Grčar (35 zru'r உற்பத்திகள் 0 தரமானவை 9 உறுதியானவை e கவர்ச்சியானவை 0 மலிவானவை பண்கோப் சேட் வகைகள் பண்கோப் காற்சட்டைகள் பண்கோப் சிறுவர் உடைகள் பண்கோப் அரைக்காற்சட்டைகள் இவைகளையெல்லாம் | மக்களுக்காகச் செய்து வழங்கிச் சேவை புரிவது பண்டத்தரிப்பு பரிஷ்
பலநோக்குக் | கூட்டுறவுச் சங்கம் பண்டத்தரிப்பு
தொலைபேசி:
தலைமை அலுவலகம்:
808 பண்டத்தரிப்பு மொத்த விற்பனை நிலையம் :
36 பண்டத்தரிப்பு
தந்தி: ' பண்கோப்” பண்டத்தரிப்பு
a? - 9

வித்தியோதயத்துக்கு எமது வாழ்த்துக்கள்! W, நங்கையர் விரும்பும் நவநாகரீகப் புடைவைத்
தேர்வுகளுக்கு
w
- கல்பனுஸ் - ரெக்ஸ் ரைல் 70, நவீன சந்தை, யாழ்ப்பாணம்
எமது வாழ்த்துக்கள்!
மீன்பிடித் தொழிலுக்குத்
தேவையான உபகரணங்கள், நைலோன் வலைகள், நூல்கள், குறுலோன் வலைகள், நூல்கள் யாவற்றையும் மலிவான விலயில்
பெற்றுக்கொள்ள
நாடுங்கள் !
se
நித்தியா ஸ்ரோர்ஸ்
9, நவீன சந்தை, யாழ்ப்பாணம்

Page 92
With
Vickna T
விக்கு டி
52, (யூரீதர் திே
O G. C. E. (OIL) O G
O B. A.
வகுப்புக்கள் சிறந்த அணு ஆசிரியர்களாலும் பல்கலை யாளர்களாலும் போதிக்
எமது மனமார்ந்
நிதான விலை
தற்கால நவநாக தரம் மிக்ச அனைத்தையும் (
கணேசன் 63, 78, காங்கேசன்துறை

the best Compliments of
Tuition Center யூசன் சென் றர் ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். யட்டருக்கும் நாகவிஹாரைக்கும் மத்தியில்)
. C. E. A/L) O G. A. Q.
O B. Com.
பவமிக்க பட்டதாரி 0க்கழக விரிவுரை க்கப்படுகின்றன.
த வாழ்த்துக்கள்!
N,
சிறந்த ரகம்! ரிகத்திற்கு ஏற்ற
பெற்றுக்கொள்ள
ஸ்ரோர்ஸ்
வீதி : : யாழ்ப்பாணம்

Page 93
- பொருளியல் -
கைத்தொழி ற்துறை - பொருளாதார அபிவிருத்தி
எம். யூ. எம். ஸனுாஸ் B. Com. (Sp.) (Vidyodaya).
:
sacre

தியில் அதன் பங்கு
சுதேச மன்னர்களின் ஆட்சிக்காலத் லும், அதன் பின்னர் போர்த்துக்கேயர் ல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலங் ளிலும் இலங்கை ஒரு விவசாய நாடா வே இருந்துவந்தது. மிக அண்மைக் ாலம் வரையில் தேயிலை, இறப்பர், தன்னை போன்ற விவசாயப் பொருட்களை ற்றுமதி செய்து, எமக்குத் தேவைப்படும் ல்லாவகையான கைத்தொழில் உற்பத் ப் பொருட்களையும் இறக்குமதி செய்து ந்தோம். சவர்க்காரம், தீப்பெட்டி பான்ற மிகச் சாதாரண கைத்தொழில் கர்வுப் பொருட்களையேனும் மிக அண் மக்காலம் வரை நாம் எமது நாட்டில் ற்பத்திசெய்யவில்லை. தவிர, எமது ஏற்று திகள் யாவும் விவசாய உற்பத்திகளான தல் விளைவுப் பொருட்களாகவே இருந்து ந்தன. இந்தியாவிலிருந்து தருவிக்கப் ட்ட தொழிலாளரைக் குறைந்த கூலியில் ஊழியச் செறிவுடைய விவசாயத் தொழி ல் ஈடுபடுத்தக்கூடியதாக இருந்ததும், தாழில்நுட்ப அறிவு குறைவாக இருந்த மயும், ஊழியச் செறிவு குறைந்த ஆணுல் லதனச் செறிவு கூடிய இயந்திரமயமான கத்தொழில்கள் தேவைப்படாமையும், ாட்டின் இயற்கை வளங்கள் சரியாக ராயப்படாமையும் நாடு தொடர்ந்து கத்தொழிலில் கவனம் செலுத்தாமல் ருந்ததற்கு முக்கிய காரணங்களாகும்.
எனினும், கைத்தொழில்-விஞ்ஞான கமாகிய இவ் 20ஆம் நூற்ருண்டின் 1றுதிப்பகுதியில், ஒரு நாட்டின் பொருளா ாரத்தில் கைத்தொழிலின் பங்கானது ன்றியமையாததாகக் காணப்படுகின் து. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மாத்தத் தேசிய உற்பத்தியில் கைத்

Page 94
கைத்தொழில்துறை .
தொழிலின் பங்கே மிகவும் அதிகமாக - அதாவது 65 சதவீதம் வரையில் காணப் படுகிறது.
ஒரு நாட்டில் பல்வேறு காரணங்களுக் காகக் கைத்தொழிலானது அத்தியாவசியப் படுகிறது. முதலாவதாக, தொழில் வாய்ப் புக்களை உருவாக்குதல் முக்கியமாகக் கவ னிக்கப்படவேண்டும். நாட்டின் சனத் தொகைப் பெ ருக் கத்திற் கேற்பப் பொருளாதாரத்திலும் விருத்தியேற்பட வேண்டும். அவ்வாறு பொருளாதாரத்தில் வளர்ச்சி காணப்பட வேண்டுமாயின் விவ சாயத் துறையினுல் மாத்திரம் அதனைச் சாதிக்கமுடியாதுள்ளது. விளைவிக்கக்கூடிய நிலம் வரையறுக்கப்பட்டுக் காணப்படுவ தும், நுகர்வுப் பொருட்களுள் பெரும் பங்கு கைத்தொழில் சார்ந்தவையாகமாறி வருவதுமே இத்தடைக்கு முக்கிய காரணங் களாகும். 1972ஆம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கையின்படி, கைத்தொழிற் துறையி லுள்ள 1897 நிறுவனங்களில், நேராக வேலை செய்வோரின் எண்ணிக்கை 123, 986 பேர் ஆகும். இதிற் பல சிறிய நிறு வனங்களும் சொந்தக் கைத்தொழில் களும் சேர்க்கப்படவில்லை. அவ்வாருனவற் றில் வேலை செய்வோரின் எண்ணிக்கை யைக் குறைந்தபட்சம் 75,000 பேர் என மதிப்பிடலாம். இவற்றைவிட சுமார் 100,000 ஆட்களுக்குக் கைத்தொழிற் துறை மறைமுகமாக வேலையளிக்கிறது. அதாவது, இக் கைதொழில்களின் மூலப் பொருட்களையும், துணைப் பொருட்களையும் உதிரிப் பாகங்களையும், உற்பத்திசெய்யும் தொழில்களிலும், இவற்றின் விநியோகத் தொழில்களிலும் அவ்வளவு தொகையா ஞேர் ஈடுபட்டிருப்பர். எனவே மொத்தத் தில் கைத்தொழிற்துறை I972ណ្ណទាំង 300,000 பேருக்கு வேலைவாய்பளித்திருந் தது எனலாம்.
குறைவாக வருமானம் பெறுவோரின் திட்மிடப்பட்ட வருமான அதிகரிப்பின் காரணமாகத் தேவையில் அதிகரிப்புத் தோன்றுகிறது. இது வாழ்க்கைத்தர உயர்
6 ۔یس۔

எம். யூ. எம். ஸனுாஸ்
வினல் ஏற்படுவதாகும். இத் தேவை அதி கரிப்பை ஈடுசெய்யக்கூடிய வகையில், அவ சியமான நுகர்வுப் பொருட்களின் உற் பத்தியை அதிகரிப்பது அத்தியாவசியப் படுகிறது. இதனுல் பாவனைப் பொருட் களை-பண்டங்களை உற்பத்தி செய்வதற் காகப் புதிய கைத்தொழில்களைத் தாபிப் பதும், ஏற்கனவே உள்ள கைத்தொழில் களை விரிவாக்குவதும் அவசியமாகிறது,
அடுத்து, பல்வேறு கைத்தொழில்கள் ஒன்றில் ஒன்று தங்கியே காணப்படுகின் றன. ஒரு கைத்தொழிற் பொருளின் ஆக் கத்துக்கு, வேருெரு கைத்தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் இடைப் பொருட் கள் தேவைப்படுகின்றன. அல்லது கைத் தொழில்களுக்குத் தேவையான மூலதனப் பொருட்களை-இயந்திர சாதனங்களை ஆக்கு வதற்காக அடிப்படைக் கைத்தொழில் களைத் தாபிப்பது அத்தியாவசியப் படு கிறது. ** பிற கைத்தொழில்களுக்கு வேண் டப்படும் இடுகைகளை அளிக்க வல்ல அடிப் படைக் கைத்தொழில்களைத் தாபிக்க வேண்டிய தேவை : இது கைத்தொழில் துறைக்கும் பிற துறைகளுக்கும் இடையே யான இணைப்பும், பல்வகைத் தொழில்க ளிடையேயான இணைப்பும் தோன்ற ஏது வாகும். இதனுல் தொடர்ச்சியான கைத் தொழில் வளர்ச்சி சாத்தியமான ஒன்ரு கும்" என ஐந்தாண்டுத் திட்டத்தில் கூறப் பட்டுள்ளது. இவ்வாறு ஏனைய தொழில்க ளில் உள்வீடுகளை உற்பத்தி செய்யும் கைத் தொழில்கள் பாரிய கைத்தொழில்களாக வும் அடிப்படைக் கைத்தொழில்களாக வுமே அமைகின்றன. இவை பெருவீதத் தொழில்களாகும்.
மக்கள் பெருந்தொகையாக உபயோ கிச்கும் பாவனைப் பொருள் உற்பத்திக்கு. அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசிய மாகிறது. ஏனெனில் ஒரு பரந்த சந்தைக்கு இப் பாவனைப் பொருட்களைத் தொடர்ந் தும் இறக்குமதி செய்துகொண்டிருப்ப தற்கு, அந்நியக் செலாவணிச் செலவு இனி
مسایہ 8

Page 95
கைத்தொழில்துறை o e a se
மேலும் இடம் கொடுக்காது. எனவே இதற் காகவேனும் கைத்தொழில்களைத் தாபிப் பதும், விருத்தி செய்வதும் அத்தியாவசிய மாகிறது.
பல நூற்றண்டுகளுக்கு முன் காணப் பட்ட ஓரளவு மூடப்பட்ட, பொருளாதார அமைப்பிலிருந்து இலங்கையானது தற் பொழுது பூரணமாக விடுபட்ட நிலையில் காணப்படுகிறது. தன்னிறைவு கொண்ட கிராமிய வாழ்க்கை முறையில், சாதனங் களின் தோற்றத்தால் மாற்றங்கள் ஏற் பட்டு, ' பரிவர்த்தனை உலகில் "* இப் பொழுது சஞ்சரிக்கிருேம். இந் நிலையில் எமது தேவைகளில் பெரும் பங்கு இறக்கு மதி செய்யப்படும் பாவனை - நுகர்வுப் பொருட்களில் தங்கியிருக்கிறது. இதனுல் விவசாய முதல் விளைவுப் பொருட்களின் ஏற்றுமதியினல் சம்பாதிக்கப்பட்டு வந்த அந்நியச் செலாவணியானது, வெறும் துகர்வுப் பொருட் களை இறக்கு மதி செய்வதற்காக விரயமாக்கப்பட்டு வந்தது. இவ் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காகவேனும் இறக்குமதிப் பதி வீட்டின் அடிப்படையில் கைத்தொழிற் துறையை விருத்தி செய்வது அவசியமா கிறது. இன்று எமது கைத்தொழில்கள் எமக்குத் தேவையான நுகர்வுப் பொருட் களில் ஒரு பகுதியை உற்பத்தி செய்வத ஞல், நாம் ஒவ்வொரு வருடமும் சுமார் ரூபா 900 மில்லியன் பெறுமதியான வெளி நாட்டுச் செலாவணியைச் சேமிக்கிருேம். உதாரணமாக 1971ஆம் ஆண்டில் இலங்கை பில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தொழிற் பொருட்களை நாம் இறக்குமதி செய்திருந் தால் சுமார் 1700 மில்லியன் ரூபா பிற தாட்டுச் செலாவணி செலவாகியிருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
நாட்டின் விளங்களின் சரியான பயன் பாட்டைப் பெறுவதற்கும் கைத்தொழிற் துறை அவசியமாகிறது. வளர்முக நாடான இலங்கையில் மிக அண்மைக்காலம் வரை பில் இயற்கை வளங்கள் சரியாக ஆராயப் படாமல் வீணடிக்கப்பட்டே வந்தன. கைத்
- 6

எம். யூ. எம், ஸனுரஸ்
தொழிற் துறைகளின் தோற்றத்தினுல் இவை இவ்வாறு வீணடிக்கப்படாமல் பொருத்தமான முறையில் பயன்பாட்டுக்கு உட்படுத்தப் படலாம். நகரப்புறங்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் கிராமப் புறங் களிலும் கைத்தொழில்கள் பரவலாக்கப் படுவதால் அப் பகுதிகளில் பெறத்தக்க மூலவளங்களைச் சரியான முறையில் பயன் படுத்தக் கூடியதாக இருக்கும். 'கிராமப் பிரதேசங்களிலும் கைத்தொழில்களை வளர்ச்சியுறச் செய்ய வேண்டிய தேவை : இதல்ை தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கிராம வருமானத்தை அதிகரிக்கச் செய்ய வும், கிராமப் புறங்களிலே பெறத்தக்க மூலப் பொருட்களுக்கான கிராக்கியை ஏற் படுத்தவும் முடியும்" என ஐந்தாண்டுத் திட்டம் கூறுகிறது. ஒரு நாட்டில் காணப் படும் மூலவளங்கள் -அதை நன்கு பயன் படுத்தக்கூடிய முறை-அறிவுத் திறமை என் பனவும் கவனிக்கப்படல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்டில் மூலவளங்கள் இல்லை யாயின் அதனை அபிவிருத்தியடையும் நாடு என்ருே, அ ல் ல து குறைவிருத்தி நாடென்றே அழைக்க முடியாது. அபி விருத்தி செய்யக்கூடிய மூலவளங்கள் இருப் பது குறைவிருத்திக்குரிய முக்கிய நிபந்தனை யாகும். இத்தகைய மூலவளங்கள், இலங் கையில் சில அபிவிருத்தியடைந்த நாடு களைவிடக் கூடியளவு இருப்பதையும் காண லாம். ஆனல் இம் மூலவளங்களைப் பயன் படுத்துவதிலேயே அபிவிருத்தியின் முக்கி யத்துவமும், தரமும் தங்கியுள்ளது. உதா ரணமாக அமெரிக்காவில் நிறைந்திருந்த வளங்களைச் சுதேசிகள் பயன்படுத்தாது குறைவிருத்தி நிலையில் இருந்த அதே வேளை ஐரோப்பியர் அவ்வளங்களுள்ள இடங் களை நாடிச் சென்று அவற்றைப் பயன் படுத்த முற்பட்டதால் அங்கு பொருளா தார வளர்ச்சி புரட்சிகரமாக ஏற்பட்ட தைக் குறிப்பிடலாம்.
அந்நியச் செலாவணியைச் சம்பாதிப்
பதற்காகவும், ஏற்றுமதிகளை அதிகரிப்பதற் காகவும் கைத்தொழிற் துறையை அபி
ܚܡܝ 9

Page 96
கைத்தொழிற்துறை .
விருத்தி செய்யவேண்டியது முக்கியமாகின் றது. மரபு வழியான விவசாயப் பொருட் களை நாம் தொடர்ந்தும் ஏற்றுமதி செய்வ தஞல் பாதகமான நிலைமைகளே ஏற்படு கின்றன, என்பதற்கு அண்மைக்காலப் புள்ளிவிபரங்கள் ஆதாரமாக அமைந்துள் ளன. 1972 முதல் 1976 வரையுள்ள ஐந் தாண்டுத் திட்டத்தில் கூறப்பட்டதுபோல் ஏற்றுமதிச் சந்தையைப் பெருக்குவதற் காக, கைத்தொழில் வளர்ச்சியை விரைவு படுத்தவேண்டியது அவசியமாகும்.
விவசாயம் - கைத்தொழில் எனும் இரண்டுக்கும் அபிவிருத்தியில் சம முக்கி யத்துவம் அளிக்கப்படுவேண்டுமெனினும், இன்று அபிவிருத்தியடைந்து காணப்படும் கைத்தொழில் நாடுகளில் விவசாயத்தை விடக் கைத்தொழிலுக்கே கூடிய முக்கியத் துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இதனல் கைத்தொழிற் துறையின் விருத்தியே எந்த நாட்டிலும் அதன் முன்னேற்றத்தை அள விடும் கருவியாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில், விருத்தியுடன் சேர்ந்து விவசாயத்துறையின் பங்கு குறை வடைய, கைத்தொழிற் துறையின் பங்கு அதிகரித்துவந்துள்ளது. இப் போக்கு காணப்படவில்லையெனில் அந்நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படவில்லை யென லாம். ஹோலிஸ் பி. சென்றி (Haulis P. Centry 676öTU a flašr 2ů6jů படி விவசாயத் துறையில் நெகிழ்ச்சி யின் அதிகரிப்பு விகிதம் 0°5 சதவீதத் துக்கும் குறைவாகவே இருக்கும். அதே கைத்தொழிற் துறையில்
நடைமுறை கணக்காண்டு காலப்பகுதியில் ெ புக்கள் எல்லாம் நடைமுறைப் பொறுட் யாக இருப்பினும் விதிவிலக்குப் பெரு. மீட்கப்படவேண்டிய தொகுதிக்கடன் தொகையில் நீண்டகாலக் கடனகும். கொடுக்கப்படாதிருந்தால்) அது ஒரு ந அது அவ்வருடத்தில் கொடுக்கவேண்டி

எம். யூ. எம், ஸனுாஸ்
நெகிழ்ச்சி 13 சதவீதத்துக்கும் மேல் அதி கரித்துச் செல்கிறது. ஆகவே மக்களது வருமானம் உயரும்பொழுது பொதுவாக விவசாயத்துறையின் முக்கியத்துவம், குறிப் பாக உணவுப் பொருட்களுக்கான கேள்வி குறைந்துகொண்டே செல்லும். ஆனல் அதே வேளையில், அவர்கள், கொள்வனவு செய்யும் பல்வேறு கைத்தொழிற் பொருட் களின் அளவு, வாழ்க்கைத் தர உயர்வுக் கேற்ப அதிகரிக்கும். இதனல் இயல்பாகவே விருத்தியடையும் நாடுகள் கைத்தொழில் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது.
கைத்தொழில்கள் கூடிய மூலதனச் செறிவுடையதாக இருப்பதால் தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கு அது வாய்ப் பளிக்கிறது. விவசாயத்துறை ஒழுங்கான முறையில் முன்னேறுவதற்குக் கைத்தொ ழிற் துறையும் முன்னேறவேண்டும். விவ சாயத்துறையில் உருவாகக்கூடிய மேலதிக சனத்தொகையை உறிஞ்சக்கூடியதாகக் கைத்தொழிற்துறை அமையவேண்டும். இதனுல் கைத்தொழிற்துறைக்கு வேண்டிய ஊழியப் பலம் கிடைப்பதோடு விவசாயத் திலும் புதிய தொழில்நுட்ப முறைகளை யும், கருவிகளையும், புகுத் த முடியும். மேலும், கைத்தொழிற்துறை விருத்தி மூலமே தலா மெய் வருமானத்தை அதி கரிக்கலாம். உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வாய்ப்பும் கைத்தொழில் துறையில் மிக அதிகமாகும். இவ்வாறு பொருளாதார அபிவிருத்தியில் கைத்தொழிற் துறையா னது பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது.
ப் பொறுப்பு காடுத்துத் தீர்க்கவேண்டியிருந்த பொறுப் புக்களாகும். அவை எவ்வளவு தொகை உ + மாக 65இல் அழைக்கப்பட்ட 70இல் 100,0000 ரூபா. 69ஆம் ஆண்டு ஐந் 70ஆம் ஆண்டு ஐந்தொகையில் (காசு டைமுறைப் பொறுப்பாகும். ஏனெனில் ய ஒரு பொறுப்பாகும்.
70 -

Page 97
அன்பளிப்பு!
食
மின்சார உபகரண விற்பனையாளரும் ஒப்பந்த காரரும்
rN. எலெக்ருேலக்ஸ்
LITOLUX
காங்கேசன்துறை வீதி, சுன்னுகம்,
வித்தியோதயத்துக்கு எமது முத்தான வாழ்த்துக்கள்!
ஞ்
அம்பாள் கபே
* ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்

TISA TOIs
70, Manipay Road, JAFFNA.
வித்தியோதயம் சிறப்புடன் மலர எமது வாழ்த்துக்கள் ! 6 சிறுவர் கண்கவர்
விளையாட்டுப் பொருட்கள் 9 பிறந்ததினப் பரிசுகள் : O ligiLD8a07 புகுவிழாப் பரிசுகள் 0 வீட்டை அழகு படுத்தும் அலங்கார அழகு சாத னங்கள் சு பாலர் பாடசாலைக்கு வேண் டிய நவீன உபகரணங்கள் 0 காரியாலய பாவனைக்குரிய
தளபாட வகைகள் D சாப்பாட்டு மேசைகள்
போன்றவற்றிற்குரிய விசேட ஆடர்கள் ஏற்றுக் கொள்ளப்படும் o இந்திய மர விளையாட்டுப்பொருட் களின் தரத்திற்கு இலங்கை யில் மர விளையாட்டுப் பொருட் கள் செய்யும் ஒரே தாபனம்.
N GJI GJILisit)
70, மானிப்பாய் வீதி,
யாழ்ப்பாணம்

Page 98
DOnateG
bÐy
Institute of Commerce Studies
ܫܦܐ འཚོང་
Classes for :
இ. (s 匡。 (O/(L)
Gā. t. ē. (A/).
London Examination
0 A. B. (FOU ñNGStjGñà
ñtSeiriññDeG StE & Fña 0)
Director :
S. KANDASAMY
F. I. A. B (Lond.)
69. Sivaw. Bawai Road,
· JAFFNA.

Ipsűɔŋŋmo: (@sipos)) tại ha’s) q’ f’pays worņas : 亡岭闽图umD图图
'quicas un ņđi um “gogo y gogoriajos@ “†gs osog)?) fÒ o go rapore olgoryhmo o 4@n, sẽ tạo úgyıęsố @@@www.src f)%īų (įrns
los um resus@g) $@ş@șiși-a i u9@os į uo uinontos g-g issouris
}- i possos filte soosĒĶm&ım:$$ys
izoz : Ispun:) 'qucc9.uriņțiurn
(ųoỊsísı solo strossitolog -0,919||
|
jų9??I$$đìLIO IĜ0119 Tīņír, qılore01 @qĪĻ09an qirngourm@gosso

Page 99
- முகாமையியல்
முகாமையில் அதிகாரக் 6 - ஒரு கண்ணுேட்டம்
செல்வி மீரா - சவுரிமுத்து
B. Com. (Sp.) (Vidyodaya.)
s? - 10 7 =سته

paьш6fйц
மனிதர்களையும் வளங்களையும் பயன் படுத்தி அதாவது மனித நலனுக்காக இயற்கை வளங்களையும்,மனித சக்தியையும் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்துவதுடன் வழி நடத்திக் கட்டுபடுத்தும் ஒரு கலை, விஞ் ஞானமே முகாமை எனப்படுகின்றது. முகாமைக்கான இவ் வரைவிலக்கணத்தி லிருந்து ஐந்துவிதமான கருத்துக்களை நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின் றது, அதாவது சிந்தனையின் ஒரு வழியே முகாமை என்றும், புத்திதிறமை என்னும் தன்மையில் வேறுபட்ட மனிதர்களைப் பற்றியதென்றும்,மனிதர்களை ஒன்றிணைத்து வேலை செய்விப்பதும், அவர்கட்கிடையே யான வேறுபாட்டை நீக்குவதுமே முகாமை என்பதன் சாரம் என கூறக்கூடியதாக உள்ளது.
மேற்கூறப்பட்ட முகாமைபற்றிய கருத் துணர்வில் இருந்து முகாமையின் அமைப்பு தொழில்பாட்டிற்கு அதாவது தன்மையில் வேறுபட்ட மனிதர்களையும், இயற்கை வளங்களையும் ஒன்றிணைத்து, வழிநடத்தி நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அதிகாரக் கையளிப்பின் முக்கியத்துவம் உணரப்படாமல் இருக்க முடியாது. அதி காரக் கையளிப்பு அமைப்பு தொழிற் பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. ஏனெனில் அமைப்பிற்கான வரைவிலக் கணத்தை நோக்கும்போது முகாமையில் அமைப்புத்தொழில்பாட்டில் அதிகாரக் கையளிப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்வது சுலபமாக உள்ளது.
** அமைப்பு என்பது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் திட் டத்தை நடைமுறைப் படுத்தவும், நபர்கள் திறமையாக வேலை செய்ய
3 -

Page 100
முகாமையில்
B e o 0 O
வும், நிறுவனத்தின் அலுவல்களைப் பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்வது, அவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதி அலு வல்களை நிறைவேற்றுவதற்கு நடை முறையில் முரண்பாடுகள் ஏற்படாத வாறு அதிகாரத்தைப் பிரித்து வழங்கு வது" என்று சுருக்கமாகக் கூற முடியும்.
எனவே முகாமைக் கோட்பாட்டின் முழு அமைப்பு தொழில் பாட்டிலும் பூரண ஆதிக்கம் செலுத்தும் அதிகாரக் கைய ளிப்புப்பற்றி ஆராயமுன் அதிகாரக் கைய ளிப்பு என்ருல் என்ன என்பது பற்றி ஒரு சில வார்த்தை கூறப் புகுதல் சிறந்தது.
"அதிகாரக் கையளிப்பு என்பது ஒரு மேல்மட்ட அதிகாரி தன்னிடம் இருக்கும் அதிகாரத்தில் ஒரு பகுதி யினை இன்னெரு வருக்குத் தான் செய்யும் வேலைகளைத் தனக்காக நிறைவேற்றுவதற்காக வழங்கப்படும் அதிகாரமாகும்.”*
அதிகாரக்  ைக ய விப் பு இல்லாது அமைப்பு என்று ஒன்று இருக்கமுடியாது. ஏனெனில் அமைப்பை முகாமைத் தொழிற் பாடு என்ற ரீதியில் நோக்கும்போது நிறு வனத்தை ஒழுங்குபடுத்தி அமைப்பதும், அதன் விளைவாக உருவாகும் நிறுவன அமைப்பும், நிறுவன முயற்சியும் உள்ள அதிகார உறவு முறைகளையும் அடக்கி உள்ளதாக அவதானிக்க முடியும், நிறுவன நோக்கத்தை அடைய நடவடிக்கைகளைத் தொகுப்பதும், ஒவ்வொரு தொகுதி நட வடிக்கைகளையும் மேற்பார்வை செய்ய அதிகாரம் வழங்கப்பட்ட முகாமையா ளரை நியமிக்க "அதிகாரக் கையளிப்பு" அவசியமாகும்.
அடுத்து அதிகாரம் கையளிக்கப்படும் முறையாலும், கையளிக்கப்படும் அதிகா ரத்தின் அளவினுலும், அதிகாரத்தின் அள வும் தன்மையும் வேறுபடலாம். இவ் வதி காரக் கையளிப்பின் தன்மையில்தான் ஒரு நிறுவனம் தனது நோக்கத்தை நீண்ட காலத்தில் நிறைவேற்றக் கூடிய தகுதி
- 7

செல்வி மீரா - சவுரிமுத்து
களைக் கொண்டிருக்கும். அமைப்பிற்கு ஒரு லி டிவத்தைக் கொடுக்கும் அ தி கா ர க் கையளிப்பு முறையானது கீழ்மட்டத்தவர் கள் குறிக்கப்பட்ட அலுவல்களைச் செய்வ தற்குத் தாமே தீர்மானங்களைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வழங்கப் படுகின்றது எனலாம். இவ் அதிகாரக் கைய ளிப்பு எந்த ஒரு நிறுவனத்தினதும் அதி காரச் செறிவாக்கம், அதிகார பரவலாக் கம் எனும் தத்துவத்தை விளக்க உதவுவ துடன் தீர்மானம் எடுத்தலிலும் இவ் அதி காரச் செறிவாக்கமும், பரவலாக்கமும் முக்கிய இடத்தை வகிக்கின்றது எனலாம்.
ஒருவர் தனக்காக ஒரு வேலையை நிறைவேற்றுவதற்கு இன்னுெருவரிடம் அதிகாரம் வழங்கும்போது இரண்டாவது நபர் அவ்வேலையைச் செய்வதற்கு வழங் கப்படும் அதிகாரத்திற்கு நிகரான பொறுப்பை ஏற்றுக்கொள்ளின் அங்கு அதி காரக் கையளிப்பு இடம்பெறும். எனவே மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டத்தவருக்கு வழங்கப்படும் அதிகாரத்தையே பொது வாக அதிகாரக் கையளிப்பு என்ற பதம் விளக்குகின்றது என முகாமை அறிஞர்கள் கொள்வர். ஆனல் ஒரு கீழ்மட்ட முகாமை யாளர் தனக்கு வழங்கப்பட்ட அதிகா ரத்தை மீண்டும் மேல்மட்ட முகாமையா ளருக்குக் கொடுத்துச் சில கடமைகளைச் செய்யும்படி கேட்கும்போதும் ஒரே மட்டத் திலுள்ளவர்கள் தமக்கிடையில் மேல்மட் டத்தவர் அனுமதியின்றி அதிகாரம் வழங் கும் போதும் முகாமைக் கட்டுப்பாடு வில குவதுடன் அதிகாரக் கையளிப்பும் பலமற்ற தாகின்றது எனக் கொள்ளவேண்டும்.
அதிகாரக் கையளிப்பைப் பொறுத்த வரையில் அதிகார்த்தை வழங்குபவரும், அதிகாரத்தைப் பெறுபவரும் தாமாக விரும்பி ஈடுபடல் வேண்டும். ஆனல் எப் போதும் கீழ்மட்டத்தவர் தாமாக விரும்பி அதிகாரத்தை ஏற்பர் எனக் கூறமுடியாது. பதவி உயர்வுகளைத் தடுத்தல், பதவி மாற் றம் செய்தல் எனும் சில நடவடிக்கைகள்
4 -

Page 101
முகாமையில் ...
மூலம் கீழ்மட்டத்தவர் தாமாக விரும்பிப் பொறுப்புக்களை ஏற்கவும், அதிகாரத்தைப் பெறவும் வழிவகை செய்வதிலும், அதிகா ரத்தைத் தாமாக விரும்பிக் கையளிப்ப திலும், ஏற்பதிலும் தான் ஒரு நிறுவனத் தின் மேல்மட்ட, கீழ்மட்ட முகாமைக் கிடையில் நெருங்கிய தொடர்பும், நடவ டிக்கைகளைப் பொறுத்தமட்டில் இணைப் பும் ஏற்படும். மேலும் ஒரு மேல் மட்ட முகாமையாளனின் ஆற்றல், விருப்பம், என்பவற்றிலும், கீழ்மட்ட முகாமையாளர் ஒருவர் தனக்கு வழங்கும் அதிகாரத்தை ஏறபதில் காட்டும் விருப்பம், அவரின் ஆற்றல் என்பவற்றிலும் கையளிப்பின் வெற்றி தங்கியுள்ளதுடன், கீழ்மட்ட உத்தியோகத்தரைச் செய்யும்படி கேட்கும் வேலையின் தன்மையிலும், அதன் அளவி லும் கையளிப்பின் வெற்றி தங்கியுள்ளது.
அடுத்து மேற் கூறப்பட்ட அதிகாரம் கையளிப்பின் வகைகளை ஆராய்தல் அதி காரக் கையளிப்புக் கோட்பாட்டைத் தெளிவாக்க உதவும். அதிகாரக் கையளிப் பன்போது கீழ்மட்டத்தவருக்கு எவ்வளவு அதிகாரம் கையளிக்கப்படவேண்டும். மேல் மட்டத்தில் எவ்வளவு அதிகாரம், வைத் திருக்கப்படவேண்டும் என்பது அமைப்பு விதியில் அமைந்த முகாமைக் கோட்பாட் டில் முக்கிய பிரச்சனையாக உள்ளது. அதி காரக் கையளிப்பை, மையப்படுத்தப்பட்ட அதிகாரக் கையளிப்பு என்றும் பன்முகப் படுத்தப்பட்ட அதிகாரக் கையளிப்பு என் தும் இருவகைப்படுத்தலாம். உயர் மட் டத்தில் முழு அதிகாரங்களையும் வைத் நிருக்கும்போது அல்லது உண்மையில் அதி களவான அதிகாரத்தை ஒரு நிறுவனத்தின் மேல்மட்டத்தினர் வைத்திருக்கும்போது அது மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என் தும், அதே வேளை ஒப்பீட்டு ரீதியில் அதிக அதிகாரத்தைக் கீழ்மட்டத்தில் அளிக்கும் போது அது பன்முகப்படுத்தப்பட்ட அதி காரம் என்றும் கருதப்படும். ஒரு நிறு வனத்தில் பலவகையான கடமைகள் இருப் பதால் அவை யாவற்றையும் ஒருவர் புரிய முடியாது என்பதால் எந் நிறுவனத்திலும் முழுமையான ஆதிகார மையவாக்கம் இருக்கமுடியாததுடன் அதே வேளை கீழ் கட்டத்திலுள்ளவர்கள் தாம் நிறைவேற்ற

செல்வி மீரா - சவுரிமுத்து
வேண்டிய வேலைகட்கு தாம் நினைத்தவாறு தீர்மானம் எடுப்பாராயின் அது நிறுவன ஒருமைப்பாட்டைக் குலைக்குமாதலால் பூரண அதிகாரப் பரவலாக்கமும் இருக்க முடியாது.
எந்த ஒரு நிறுவனத்திலும் அதிகாரம் பங்கிடப்படும்போது நிறுவனத்தின் இணைப் புக்கும். ஒருமைப்பாடான நடவடிக்கை கட்கும் ஏற்ற வகையிலேயே அதிகாரம் பங்கிடப்படவேண்டும். எவ்வளவு அதிகா ரம் கொடுக்கப்படவேண்டும் என்பது தீர் மானம் எடுத்தலில் தங்கியுள்ளது. எந்த பட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்கப்படு கின்றது, நிறுவனத்தின் நோக்கில் அத் தீர்மானத்தின் முக்கியம் என்ன ? அவ் வாருண தீர்மானங்களில் எவை முக்கிய மானவை எவை முக்கியமற்றவை என அளவிடப் பொதுவான அளவீடு கிடைக்கு மாயின் அதிகார பகிர்வு மிக இலகுவாக அமையும். உதாரணமாகத் தீர்மானம் எடுக்கும் நேரத்தின் அளவு, தீர்மானம் எடுக்கும்போது எதிர்பார்க்கப்படும் நிச்சய மின்மை, மூலப்பொருட்கள், கருவிகள் ஆகியவற்றின் செலவீடுபற்றி எந்தெந்த மட்டங்கள் தீர்மானம் எடுக்கவேண்டும், தொழிலாளர் நியமனம், பதவிஉயர்வு, பதவிநீக்கத் தீர்மானம் எந்த மட்டத்தில் எடுக்கவேண்டும், கூலி, சம்பளம் என்ப வற்றை எந்த மட்டம் நிர்ணயிக்கவேண்டும் என்பன போன்ற தகவல்களைக் கொண்டு ஒவ்வொரு நிறுவனமும் எவ்வளவு அதிகா ரத்தை மேல்மட்டத்தில் வைத்தல், எவ் வளவு அதிகாரத்தைப் பங்கிடல் வேண்டும், எவ்வாருன முறையில் மையவாக்கத்திற் கும், பரவலாக்கத்திற்கும் இடையில் சம நிலை பேணவேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் அதிகாரக் கையளிப்பின் அளவு, தன்மைகள் என்பவற்றை நிர் ணயிக்கும்.
இவ்வாருன அதிகாரக் கையளிப்பை எந்த ஒரு நிறுவனமும் சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டுமாயின் கையளிட பு கோட்பாட்டை மிகச் சிறந்த முறையில் விளங்கியிருத்தல் அவசியம் மேலும் கீழ் மட்ட உத்தியோகத்தரை பயிறகியளிப்
75 -

Page 102
முக்ாகமயில் .."
பதன் மூலமும், அவர்களை முன்னேற்று வதில் அக்கறை காட்டுவதன் மூலமும், தீர்மானம் எடுக்க வேண்டிய விடயத் தின் முக்கியத்துவத்திற்கும் தீர்மானம் எடுக்கப்படும் மட்டத்தின் தன்மைக்கும் ஏற்ப அதிகாரத்தைக் கையளிப்பதன் மூலமும், உயரதிகாரி தன்னம்பிக்கை உடையவராக இருப்பதன் மூலமும் அதி காரக் கையளிப்பைச் சிறந்த முறையில் மேற்கொள்ள முடியும். ஆனல் இதன் எதிர்த் திசையை நோக்கின் அதாவது அதிகாரக் கையளிப்புத் தோல்வியுறுவதற்கு அதிகாரக் கையளிப்புக்கோட்பாட்டைச்சரியாகவிளங் கிக் கொள்ளாமையும் ஒரு முக்கிய காரணி எனலாம். அத்துடன் மேலதிகாரி அதிகாரக் கையளிப்பின் பின்பும் மேற்பார்வை செய்ய முனைதல், அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ள போது கீழ்மட்டத்தவர்கள் நெறிப்படுத் தப்படாதிருத்தல், கீழ்மட்டத்தவர்கள் பயிற்சி அளிக்கப்படாதிருத்தல், முழு நிறு வனத்தையும் உள்ளடக்கிய மிக முக்கிய மான தீர்மானத்தை எடுப்பதற்குக் கீழ் மட்டத்தவருக்கு அதிகாரம் வழங்கல், நிறுவனத்தில் தகவல் தொடர்பு போதி யளவு இன்மை, சமூக, அரசியல் பாதிப்புக் கள், கையளிக்கப்பட்ட அதிகாரத்தைச் சரியாக வரையறுக்காது விடல், அதிகாரம் வழங்கப்பட்ட பின் பு குறிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய கருவி களை வழங்காது விடல், தேவையற்ற நேரத் தில் அதிகாரக் கையளிப்பு என்பன அதி காரக் கையளிப்புத் தோல்வியுறக் காரணங்
5 is gees alsT
அடுத்து இவ்வாறன அதிகாரக் கைய ளிப்பு அல்லது அதிகாரப் பகிர்வை நிர் ணயிக்கும் காரணிகளில் தீர்மானத்தின் செலவு அல்லது பெறுமதி முதலிடம் வகிக் கிறது. செலவு கூடிய தீர்மானம் எடுக்கும் போதும் அதற்கான அதிகாரங்கள் மையப் படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என்றும், ஒப்பீட்டு ரீதியில் குறைந்த செலவுடைய தீர்மானம் எடுக்கும் இடத்தில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதும் பொதுவிதி ஆகும். எனவே பிரதான முத லீட்டுத் திட்டங்கள் எடுப்பதற்குரிய அதி காரத்தை மையப்படுத்த வேண்டும் என் றும், சிறிய கருவிகள் கொள்வனவு செய்
- 7

செல்வி மீரா - சவுரிமுத்து
தல் போன்ற தீர்மானங்கள் எடுத்தலில் அதிகாரம் பரவலாக் கப்படலாம். இன் னும் நிறுவனத்தின் புகழ், அதன் போட்டி, நிலை, தொழிலாளர் நடத்தை, ஒழுக்கம் போன்ற புலனுகாத காரணிகளும் அவற் றின் பெறுமதி அடிப்படையிலேயே அதி காரப் பகிர்வு செய்யப்படலாம். மேலும் ஒரு நிறுவனத்தின் ஒருமைப்பாடான கொள்கையும் அதிகாரப் பகிர்வு மையப் படுத்தப்பட வேண்டுமா அல்லது பன்முகப் படுத்தப்பட வேண்டுமா என்பதை நிர்ண யிக்கும். ஏனெனில் ஒவ்வொரு திணைக்கள மும் தமக்கென ஒரு உப கொள்கைகளைக் கொண்டிருப்பதினுல் அவை சில சமயம் நிறுவனத்தின் பொதுக் குறிக் கே ரா ஃா நிறைவேற்ற இடையூருக இருப்பது மட்டு மன்றி அவ்வவ் துறையின் கொள்கைகளை நிறைவேற்றவும் இடையூருக இருக்கும். ஒரு திணைக்களத்தில் உள்ளவர்கள் தமக்குக் கீழ் உள்ள அதிகாரத்தைக் கையாண்டு அத்துறையின் தொழிலாளர் பற்றிய சம் பளம், பதவி உயர்வு போன்ற தீர்மானத் தில் நிறுவனம் முழுமையாகவும் பாதிப் புச் செலுத்தும் போது அதிகாரம் இவ் விடத்தில் பகிரப்படுவதிலும்விட மேல் மட்டத்தில் மையப்படுத்தி வைத்திருப்ப தற்கு ஒருமைப்பாடான கொள்கை அவ சியம், அடுத்து ஒரு சிக்கனமான நிறுவ னத்தின் சிக்கன அளவு அல்லது பொரு ளாதார அளவும் அதிகாரப் பகிர்வை நிர் ணயிக்கும். நிறுவனம் வளர்ச்சியடையும் போது அதாவது துறைகளும், நிர்வாக மும் அதிகரித்துச் செல்லும் போது எடுக்க வேண்டிய தீர்மானத்தின் அளவும் விகிதா சார ரீதியாக அதிகரித்துச் செல்லும். எனவே இவ்வாருன சமயங்களில் பிர மாண்டமான நிறுவனங்களில் முகாமை ஆலோசகர்கள் அதிகரிப்பதுடன் தீர்மா னம் எடுப்பது காலதாமதத்தையும் கூடிய செலவையும் ஏற்படுத்தும். எனவே நிறு வனம் வளர்ச்சியடையும் போது அலுவ லின் சிறக்கின்ற அளவிற்கேற்ப அதிகாரம் பகிரப்படும்.
அடுத்து நிறுவனம் வளர்ச்சி அடைந்து வந்த முறையும் அதிகாரக் கையளிப்பை நிர்ணயிக்கும். ஒரு நிறுவனம் தானே வளர்ச்சியடையும்போது கூடியளவு அதி
6མ་ཡས་མས་

Page 103
முகாமையில் .
கார மையவாக்கம் உடையதாகும். ஆளுல் ஒன்ருக்கல், ஒன்றிணைதல் ஆகியனமூலம் வளர்ச்சி அடையும் நிறுவனங்களின் துணை திறுவனங்கள் அதிகளவு லாபகரமானவை யாக இயங்க நன்முகத் தீர்மானம் செய்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படுதல் அவசிய மாக இருப்பதால் கூடியளவு அதிகாரப் பகிர்வு அவசியம். இன்னும் நிறுவனம் கடைப்பிடிக்கும் முகாமைத்தத்துவமும் அதிகாரப் பகிர்வை நிர்ணயிக்கும். சில திறுவனத்தின் முகாமைப் பீடம் அதிகளவு அதிகாரத்தைக்கீழ்மட்டத்திற்குப்பங்கிடுவ தையும் இன்னும் சில நிறுவன ங் க ள், உயர் முகாமைப் பீடம் குறைந்தளவு அதிகாரத்தைக் கீழ்மட்டத்திற்குப் பகிர்வ தையும் விரும்பலாம். இம் முகாமைத் துவம் அந்தந்த நிறுவனங்களில் உள்ள தனிப்பட்ட முகாமையாளர்களின் விருப்பு, வெறுப்பைப் பொறுத்து அமையும். அதா வது உயர் முகாமைப்பீடம் கீழ்மட்டத்தில் உள்ளவர்கட்குப் பயிற்சியளிக்கவும், அவர் கட்குப் பொறுப்புகளை ஏற்கும் மனப்பான் மையை உருவாக்கவும் விருப்பம் இருந் தால் அங்கு அதிகாரப் பகிர்வு இருக்கும்,
மேலும் தன்னுதிக்கமும், சுதந்திரத்திற் கான விருப்பமும் அதிகாரக் கையளிப்பை நிர்ணயிக்கும் சில நிறுவனங்களில் உள்ள வர்கள் எல்லா விடயத்திற்கும் மேல் கட்டத்தவரைக் கலந்துஆலோசிப்பதையும் அனுமதி பெறுவதையும் விரும்புவதில்லை. இவ்வாறன நபர்கள் இருக்கும் இடத்தில் அதிகாரக் கையளிப்புஇடம்பெறும் மேலும் திறுவனத்தின் கட்டுப்பாட்டு நுண்முறை கண் விருத்தி செய்தலும், வேலையின் பரவ கணக்கமும், சூழல் பாதிப்பும் அதிகாரப் பகிர்வை நிர்ணயிக்கும் கட்டுப்பாட்டு நுண் முறை எனும்போது உதாரணமாக நிறு வனத்தின் உற்பத்தித் துறையை எடுப்பின் தயாரிப்பு, கொள்வனவு, இருப்பு, தரக்கட் Cப்பாடு போன்ற நுண்துறைகள் இருக்கும், இவற்றைக் கொண்டு உற்பத்தித் துறைக் குள்ளேயே அதிகாரம் பகிரப்படலாம். வேலேயில் பரவலாக்கம் எனும்போது வேலை கிள் போக்கு, புவியியல் ரீதியாக வேலை அமைந்துள்ள இடம் என்பனவும் சூழல் எனும்போது அரசாங்கச் சட்டம், கட்டுப்

செல்வி மீரா - சவுரிமுத்து
பாடுகள், தொழிற்சங்க நடவடிக்கை என்பனவற்றைக் கூறலாம். உதாரணமாக அரசாங்கக் கட்டுப்பாடுகளை ஆராயின் விலைக்கட்டுப்பாடு இருக்கும்போது ஒரு நிறு வனத்தின் விற்பனைத்துறைக்கு விலையைத் தீர்மானிக்கின்ற அதிகாரத்தை நிறுவனத் திற்கு வழங்கத் தேவையில்லை.
இறுதியாக அதிகாரப் பரவலாக்கம் செய்வதற்கான காரணங்களை ஆராயின் முதலாவதாகத் தீர்மானம் எடுப்பதில் வேகமும், குழப்பமின்மையும் இருப்பதற் கும், உயர்மட்ட முகாமையினருக்கும் கீழ் மட்ட முகாமையினருக்கும் இடையில் பிரச்சனைகளைக் குறைப்பதற்குமே அதிகார பரவலாக்கம் அவசியம் எனப்படுகின்றது. மேலும் நிறைவேற்றும் அலுவல்கள் நியாய மான முறையில் நிறைவேற்றப்படவும், நன்ருகச் செய்யப்பட்ட அலுவல்கள் பா ராட்டப்படவும், முகாமையில் ஐனநாயக முறை கடைப்பிடிக்கப்படுவதற்கும், அதி காரப் பகிர்வு அவசியமாகும். உயர்மட்ட முகாமையினருக்கும் கீழ்மட்ட முகாமை யினருக்குமிடையில் அதிக இடைவெளி இல்லாது இருப்பதற்கும், சிறந்த தகுதி வாய்ந்த முகாமையாள்ர் பயிற்றப்பட் டுத் தேவையானபோது உயர்பதவிகட்கு நிர்ண யம் செய்யக்கூடியதாக இருப் பதற்கும், போட்டியான அரைச் சுதந்திரம் உள்ள பல்வேறு நிறுவனங்களில் முகாமை யாளர் ஈடுபடவேண்டி இருப்பதால் அவர் களின் திறமை வெளிச்சமாக அறியப்பட வும் அதிகாரக் கையளிப்பு அவசியம். இறுதி யாக, தகுதியுடைய ஒருவருக்கு அதிகாரம் வழங்கி வேலைகளை ஒப்படைக்காத போது விரக்தி ஏற்பட்டு அவர் முகாமைப்பிரச்சனை களை ஏற்படுத்தலாம் என்பதுடன், நிறுவன அலுவல்களை ஒருவரால் செய்யமுடியா திருப்பதாலும் அதிகாரப் பகிர்வு முக்கிய மான தொன்ருகக் கருதப்படுகிறது.
எனவே மனித சக்தியையும் இயற்கை வளங்களையும் ஒருங்கிணைத்து நோக்கை நிறைவேற்ற அதிகாரக் கையளிப்பு அதன் அளவிற்கும் தன்மைக்கும் ஏற்பப் பகிரப்படு தல் அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை"
7 -

Page 104
92174) : grwp&egros)
·ųı.1,091|rıŋfìırn35$1,9 golplímp oggi (ų9qopr099 og Ørn 409&p@19 q9frygų9T1çoĠ 1991.0999 七七n四习丽与四严9 时明um妃
· @ıņos@olcogrīgs īss qiło icorn@sofi) optılıyores· 1,9€19.1cco fíor-a osoasri Inų@o@sergisgogorn@ ļļccolgoso gif@qsiji qırı rmso@ırıo ış» f4?@ ,ajorngoqogs, qi@șaț¢& !gs , uJafi,
|19@@@@đĩLTO Im J09@ @@@@fm@In@@@so

*VNH HVÍopeoYI [eļļdsOH‘10xļues, Iapo/N too ? 9
●び個』a』凸四倍西自Q始仙创4U@@@司姆 何尼自制AA 的自创自何甘肃四比一吻创昌回明创昌Q尼西AA
să,5 əuquəɔ səles seqeu||ueĄ (Šo
x年 : tuous squatu II dagoo ssaq aqq qȚIM

Page 105
- யொருளியல் -
குறைவிருத்தி நாடுகளின் (Fiscal Policy in Under-Developed
கே. எஸ். நடராசா B.Com. (Sp.) Hons. (Vidyodaya)

இறைக்கொள்கை Countries)
இறைக் கொள்கையைப் போன்று பொருளியலின் வேறு எந்தத் துறைகளும் கடந்த ஆண்டுகளில் அபிவிருத்தி அடைந்த தில்லை. இறைக் கொள்கை பற்றி வளர்ச்சி யடைந்த பொருளாதாரத்தில் ஒழுங்கு முறையான அமைப்புக் காணப்பட்ட பொழுதிலும் வளர்ச்சியடைகின்ற பொரு ளாதாரத்தில் ஒழுங்குமுறையானதும் ஒன் றிணைக்கப்பட்டதுமான இறைக்கொள்கை காணப்படவில்லை. அத்துடன் குறைவிருத் திப் பொருளாதாரமானது இறைக் கொள் கையின் பிரச்சினைகள் பற்றிய கருத்துக் களைப் பெற்றிருக்கவுமில்லை. கடந்த காலத் தில் தனிநபர்களும், ஏஜென் டு களும் (Agecies) கொள்கை ரீதியாகவும், நிர் வாக ரீதியாகவும் ஆராய்ந்தனர். குறிப் பாக ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ் வொரு நாடுகளிலும் பொருளாதார விவகாரங்களின் இறைக் கொள் கைத் S2007 is at 5605 (The Fiscal Division of the Department of Economtc Affairs) isola இறைக்கொள்கையைஆராய்ந்து வருகிறது. விரிவடைந்த பொருளாதாரத்தில் பொது நிதியியல் பிரச்சனைகளைப்பற்றி தொழில் Blu 2 56í šíře). T5b (The Techanical Assistance Administration) Guitairpa) ay குழுக்களை (Mission) அனுப்பி ஆராய்ந்து வருகின்றன. ஐக்கிய அமெரிக்காவினல் (U. S. A.) அனுப்பப்பட்ட இறைக் கொள் 6055 (5(pdi Sigir (Fiscal Missions) Ludi Garg நாடுகளின் இறைக்கொள்கை பற்றிய அறிவும், விளக்கமும் வளர்ச்சியடைந் திருப்பதுடன் அதன் நடைமுறைப் பிரச் சனைகள் பற்றிய அறிவும் 2ஆம் உலக யுத்தத்தின் பின்னர் வளர்ச்சியடைந்து வருவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
79 -

Page 106
குறைவிருத்தி .
ஏறக்குறைய நாற்பத்தைந்து ஆண்டு களுக்கு முன்னர் இறைக் கொள்கையானது அரசாங்க செலவு-வருவாய் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் தேசிய வருமானம், உற் பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அதி கரிப்பை ஏற்படுத்துவதற்கு விரும்பத்தக்க உற்பத்தி முயற்சிகளை மேற் கொள் வதையே குறித்தது. 1930இல் ஏற்பட்ட மந்தம், 2ஆம் உலக யுத்தம் ஆகியன வற்றின் பின்னர் இறைக்கொள்கை பெரி தும் வளர்ச்சியடைந்துள்ளது. கீன்சின் பொதுக்கொள்கை வெளியிடுவதற்கு முன் னர் குறுகிய கால உறுதிநிலை அதாவது பற்ருக்குறையை நிவிர்த்தி செய்வது பற்றி அக்கறை செலுத்தினர். இன்று நீண்ட 35 nr 6) p.gpgp?&av u fibró) (Long Run Stability) கவனம் செலுத்த முற்பட்டுள்ளனர். * 'இறைக்கொள்கையின் மூல நோக்கமா னது முன்னேற்றமடைந்து வருகின்ற பொருளாதாரமொன்றின் உறுதி நிலையான வளர்ச்சியை உயர்த்துவதற்காக உபயோ கப்படுத்தும் நிபந்தனைகளைக் குறிக்கும்.'
பொருளாதாரத்தில் சுழற்சி முறை யில் ஏற்படும் பின்னடைவுகளைக் குறைப் பதற்காக 1936இன் பின்னர் கெயின்சின் வருமான வேலைக் கொள்கையும், இயக்க ரீதியான மாதிரியங்களும் (Dynamic Models) கைக்கொள்ளப்பட்டன. கெயின் சின் அடிப்படையில் வேலையின்மையைக் குறைப்பதற்காகப் பொருளாதாரப் பின் னடைவுக் காலங்களில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பற்ருக்குறை வரவு செலவுத் திட்டங்கள் தயாரிக்கப் பட்டன. எனவே குறைவிருத்தி நாடுகளிலும் இக் கொள் கையைப் பயன்படுத்த வேண்டுமென வற் புறுத்தப்பட்டது. பிரிட்டனில் இக் கொள்கை ஒரளவுக்கு உகந்ததாக அமைந் திருப்பினும் இலங்கை, இந்தியா போன்ற குறைவிருத்தி நாடுகளுக்குப் பொருத்த மாக அமைவதில் சிக்கல் ஏற்படுகின்றன. இவை விவசாய நாடுகளாகவும், ஆளுக் குரிய மூலதனத்தின் பிரயோகம் குறை வாகவும், மூலதன உபகரணங்கள் அடிக்

Gs. Greio, sly assif
கடி அதிகரிக்கப்படாமலும் உள்ளன. பெரும்பாலான மக்கள் சொந்த வேலை செய்பவர்களாகவும், உற்பத்தியைச் சந் தைக்கு வழங்காது தாமே நுகர்பவர்க ளாகவும், விவசாயப் பொருட்களின் வழங்கல் நெகிழ்ச்சியற்றதாகவும் உள்ளன. இச் சந்தர்ப்பத்தில் முதலீட்டில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால் முதன் முறையாக வருமானமும், வேலைவாய்ப்பும் அதிகரிக் இம். இரண்டாவது கட்டத்தில் வருமானம் வெளியீடு, வேலைவாய்ப்பு ஆகியன கைத்தொழில், நுகர் பொருள் உற்பத்தித் துறையில் அதிகரிக்கும், எல்லை நுகர்வு நாட்டம் உயர்வாக அமைய, பெருக் கெண்ணும் உயர்வாக அமைந்து கேள்வி அதிகரிக்க வேலை வாய்ப்புக்கும், வெளியீடு அதிகரிப்புக்கும் வசதியேற்படுகிறது.
குறைவிருத்தி நாடுகள் விவசாய நாடுகளாகவும், த லா வருமானம் குறைந்த நாடுகளாகவும் காணப்படுகின்றமையால் வருமானத்தில் பெரும்பகுதி ஏறக் குறைய மொத்தச் செலவில் 67 சதவீத மானவை உணவுக்கே 7 செலவிடப்படுகின் றது. எனவே வருமானம் உயரும்பொழுது அதனூடாக ஏற்படும் கேள்வி அதிகரிப் பானது விவசாயப் பொருள்களை நோக் கியே செலுத்தப்படுமிடத்து குறுகியகாலத் தில் அவற்றின் வெளியீட்டை அதிகரிக்க முடியாததாகையால் உணவுப் பொருள் களின் விலைகள் அதிகரிக்கின்றன. இதனுன் விவசாய உற்பத்தியாளர்களின்வருமானம் உயர்வடைய அவர்கள் தமது உணவுக் கான நுகர்வை முன்பிலும் பார்க்கக் கூட்டு வார்களாகையால் சந்தைக்கு வரக்கூடிய உணவுப் பொருள்களின் வழங்கல் குறை வடையும். தற்பொழுது அதிகளவு வரு மானத்தினைப் பெறும் விவசாயிகள் தமது கேள்வியைக் கைத்தொழில் பொருட்களை நாடி அதிகரிப்பார்களானுலும் அக் கேள்வி யைப் பூர் த் தி செய்யக்கூடியளவுக்குப் பொறிகளில் மேலதிக இயலளவு இருக்கு மெனக் கூறமுடியாது. ஆயினும் இந்நாடு களில் தனியார் துறையினரிலும் பார்க்கப்
)ー

Page 107
குறைவிருத்தி .
பொதுத்துறை முயற்சிகளில் மேலதிக இயலளவு ஓரளவுக்கு இருக்கின்றதாயினும் அவை விலைப்பொறிக்கமைய இயங்குபவை எனக் கூறமுடியாது. எனவே பண வருவா பின் மூன்ருவது அதிகரிப்பானது வெளி பீட்டையோ, வேலைவாய்ப்பையோ, அதி கரிக்கமாட்டாது. பற்ருக்குறை நிதியீட்ட மானது இந்நாடுகளில் வெளியீடுகளையும் வேலைவாய்ப்பையும் உயர்த்துவதற்குப் பதி காகப் பணவருமானத்தை அதிகரித்துப் பணவீக்கத்தை ஏற்படுத்துகின்றன. மூல தன உபகரணங்களில் மிகையான இயலள வுகள் சில சந்தர்ப்பங்களில் காணப்படு மாயினும் புதிய வருமான ஓட்டம் ஏனைய வளங்களின் விலைமட்டத்தை - மின்சாரம் இறக்குமதி மூலப்பொருள், போக்குவரத்து, திருத்தச்செலவுகள், கடன் வசதிகள் - உயர்த்துவதனுல் சிக்கல்கள் மேலும் அதி கரிக்கின்றன. கீன்ஸ் பணக்கணியக் கோட் பாட்டைப் புனரமைக்கும்பொழுது விலை உயர்வினூடாக இத்தகைய பிரச்சனை தோன்றும் எனக் குறிப்பிட்டமை குறிப் பிடத்தக்கது. ஆனல் மூலவளங்களைக் குறுகிய காலத்தில் மிகச் சிறிய விலை உயர்வினுரடாக அடைய முடிகின்றது.
குறைவிருத்தி நாடுகளில் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் மேற்கொள் எப்பட்ட பற்ருக்குறை நிதிகள் கீழுழைப் உபயோ, வேலையின்மையையோ குறைப்ப தற்குப் பதிலாகப் பணமதிப்பில் உறுதி பற்ற தன்மையையும், பணவீக்கத்தையும் உருவாக்கியது. எனவே கீழுழைப்பையும், வேலையின்மையையும் குறைப்பதற்கு உழைப்புடன் ஏனைய உற்பத்தி நிரப்பிக் காரணிகளையும் இணைக்க வேண்டுமேயன்றி பணத்தை மட்டும் இணைப்பது நீண்ட காலப் பிரச்சனைக்குத் தீர்வு தரத்தக்க தாக அமையாது. குறிக்கப்பட்ட கீழ்மட் டத்திலிருக்கும் நாடுகள், வேலையின்மையி விருந்தும். நிறைமட்டத்தை நோக்கிச் செல் துதலே அதன் வளர்ச்சிக்குத் துணையாக அமையும். மந்தநிலைக்கு எதிராகக் குறுகிய கால நடவடிக்கைகளைக் கெயின்சின் வரு
வி  ை11 awan

கே. எஸ். நடராசா
மானத் துணிதல் கொள்கையின் சேமிப்புமுதலீடு அணுகுதல் முறையினூடாகக் குறைவிருத்தி நாடுகள் மேற்கொள்ளுவது பெறுமதியற்றதாக அமையும். ஆயினும் இக் கொள்கை வருமானம் துணிதல் தொடர்பான செய்முறைகளை ஆராய்வது எந்த நாட்டுக்கும் பொருத்தமுடையதா கும். குறைவிருத்தி நாடுகளின் தேசிய வரு மானத்தில் அவற்றின் குறித்த சில முதல் விளைவுப் பொருள்களின் ஏற்றுமதி வருவா யானது குறிப்பிடத்தக்க இடத்தை வகிப் பதனல் அவற்றின் பொருளாதாரத் தளம் பலுக்குக் கைத்தொழில் நாடுகளிலிருந்து வழங்கப்படும் குறைவான பொருளாதார நன்மைகளே காரணமாக அமைகின்றன. இந்நிலையில் வெளிநாட்டுக் கேள்வியில் மாற்றம் ஏற்படும் இடத்து பணவீக்க, சுருக்க நிலைமைகளினுல் பொருளாதாரத் தளம்பல்கள் ஏற்படுகின்றன. ஏற்றுமதியில் உடனடி விரிவு ஏற்படுமாயின் வெளிநாட்டு வர்த்தகப் பெருக்கெண்ணின் தொழிற் பாட்டினல் தேசிய வருமானமும், விலைக ளும் உயரும். குறைவிருத்தி நாடுகளின் முதலீட்டு அமைப்பானது தேசிய வருமா னத்தில் மிகவும் குறைந்த வீதமாக அமை வதனுல் தனியார் முதலீட்டினல் பொரு ளாதார நடவடிக்கைகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியாது. இக் காரணங்களின் அடிப்படையில் பொரு ளாதார நடவடிக்கைகளின் மட்டத்தைத் தீர்மானிப்பதால் முதலீட்டிலும் பார்க்க வெளிநாட்டு வர்த்தகமே முக்கிய பங்காக அமைகிறது. சில சந்தர்ப்பத்தில் மந்தநிலை களைப் போக்குவதற்கான் பற்ருக்குறை நிதிக்கொள்கையினுல் உற்பத்திச் செலவு கள் அதிகரிக்குமிடத்து வெளிநாட்டுக் கேள்வி வீழ்ச்சியடைவதனல் உள்நாட்டுக் கேள்வி விரிவடையுமாயின் சிக்கலிலிருந்து விடுபடமுடியாத துன்பநிலை மேலும் தொடரும். இந்நாடுகளில் இறக்குமதிக் கான எல்லை நாட்டம் உயர்வாக இருப்ப தனல் வருமானத்தில் ஏற்படும் உய்ர்வு இறக்குமதியை அதிகரிக்குமிடத்து-ஏற்று மதி வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில்-ஏற்
81 -

Page 108
குறைவிருத்தி .
கனவே வெளிநாட்டுச் செலாவணி ஒதுக் கங்கள் இருந்தாலன்றி சென்மதி நிலுவை பாதகமாக அமையும். இச் சந்தர்ப்பத்தில் இறக்குமதிக் கட் டு ப் பா டு அறிமுகப் படுத்துமாயின் அதிகரித்த உள்நாட்டுக் கேள்வி உள்நாட்டுப் பொருட்களின் மீது திருப்புமாகையால் வெளியீடு அதி கரிக்க வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். ஆயினும் விவசாயப்பொருளாதாரங்களின் நிறுவன ரீதியான நெகிழ்ச்சியற்ற தன்மை யாலும், மூலவளங்களின் அசைவு மிகக் குறைவாகவும் இருப்பதனலும் இச் சந் தர்ப்பத்தில் வெளியீடு,வேலைமட்டங்களின் உயர்விலும் பார்க்க விலை உயர்வு அதிக மாக இருக்கும். எனவே சர்வதேச சந்தை நிலைமைகளே இந்நாடுகளின் தளம்பலுக் குக் காரணமாக அமைவதனுல் பற்ருக் குறை நிதியீட்டத்தைக் கைக்கொள் ளும் பொழுது வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கங்களைப் பெறுவதற்கான வழிகளை யும் அவதானித்தல்வேண்டும்,
செழிப்புக் காலத்தில் வழமையான மிகையான வரவு செலவுத் திட்டமே தயாரிக்கப்படுவதனுல் மந்த காலத்துக்கு எதிரான நடவடிக்கைகளின் விளைவுகளி லும் பார்க்க செழிப்புக்கான விளைவுகள் மிகத் தாக்கமுடையனவாகும். இலங்கை யில் யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் ஏற்பட்ட பணவீக்க நிலைமை களை நேரடியான வளர்வீத வரிகளின் மூலம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தக்கூடிய தாக இருந்தது. பணவீக்க நிலைமைகளில் ஏற்றுமதி உடனடியாக அதிகரிக்கக் கூடு மாகையால் பொதுவான உயர்விலும் பார்க்க ஏற்றுமதித் தீர்வைகளே கூடுத லான தாக்கமுடையன. குறைவிருத்தி நாடுகளின் பணவீக்க நிலைமைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஏற்றுமதித் தீர்வைகள் மிகவும் தாக்கமுடையனளன்பதைக் கடந்த அனுபவங்கள் - கொரியா யுத்தம்-வெளிப் படுத்துகின்றன.
வளர்ச்சியடைந்த நாடுகளை வரலாற்று ரீதியாக ஆராயும் பொழுது அவற்றின்
- 8

Ges. 6rsio. St-gusu
பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனத் திரட்சி, பொருளாதார முயற்சி, விரிவான அறிவும், அதனைப் பிரயோகித்தலும் அவ சியம் என்று வற்புறுத்தலாம். நடைமுறை யில் பல குறைவிருத்தி நாடுகளில் மூல தனத் திரட்சியானது மிகவும் வரையறைக் காரணியாக உள்ளது. தலைவீத வருமா னம் குறைவாகவும், சேமிப்புகள் குறை வாகவும் இருப்பதனுல் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறைகின்றன. எனவே நிறு வன ரீதியான அரசாங்க அமைப்புகள் முதலீட்டை வழங்கக் கூடியளவுக்கு தனி உரிமை முறையில் அமையாது போட்டி முறை யில் பரவலாக உருவாக்கப்படுதல் வேண்டும். சேமிப்புகள் இல்லாத இடத்து இத்தகைய நிறுவனங்களின் தொழிற்பாட் டுக்குத் தேவைப்படும் மூலதனம் எவ் வாறு வழங் க ப் படும் எ ன் ப  ைத ப் பொறுத்தே நாட்டின் பணவீக்க நிலைமை கள் அமையும். பொருளாதார அபிவிருத் திச் செய்முறைக்குத் தேவைப்படும் முத வீடு இந் நாடுகளின் தேசிய வருமானத் தில் ஏறக்குறைய 12 சத வீதமாக அமைய வேண்டுமாயினும், மூலதனச் செலவுகள் மிகக் குறைவான வீதத்தில் அதாவது 6 சத வீதத்துக்குள்ளாகவே அமைந்துள்ளன. தலைவீத வருமானம் குறைந்திருக்கும் நிலை யில் உயர்வான சேமிப்பிற்கும், முதலீட் டிற்கும் வாய்ப்பில்லாது இருக்கும். குறை விருத்தி நாடுகளின் வருமானமும், சந் தையின் பருமனும் குறைவாக இருப்பத ஞல் தூண்டப்பட்ட முதலீடுகளில் பாய்ச் சல் குறைவாக உள்ளது. நச்சு வலையத் தைக் கேள்வியினுாடாக உடைப்பதாயின் தனியார் முதலீடுகளின் எல்லை வினைத் திறன் அதிகரிக்கும். இச் சந்தர்ப்பத்தில் ஏதேனும் வெளிநாட்டு முதலீடுகள் சந் தைப் பருமனைக் கூட்டக் கூடியதாகவோ தொழில்நுட்பம், மூலப் பொருள், போக்கு வரத்து, பொறி வசதிகள், கடன் வசதி கள் என்றவகையில் அல்லது சமூக மேல திகச் செலவுகளின் வடிவத்தில் அரசாங்க முதலீடுகள், கல்லூரிகள், வைத்தியசாலை கள், நூல் நிலையம், பொதுச் சுகாதார

Page 109
குறைவிருத்தி * o * v) s e a es •
வசதிகள் என்ற வகையில் அமையுமா வின் விரிவான சந்தை அமைப்புக்கு வழி வகுக்கும்.
ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இறைக் கொள்கை இன்று பயன் படுத்தப்படும் நவீன கருத்தில் பயன்படுத் தப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் அர சாங்க நிதித் தொழிற்பாடுகளும், பொரு சாதாரத் தொடர்புகளும் மிகவும் வரை கறுக்கப் பட்டமையாகவே காணப்பட் டன. பல்வேறு நிதி அலகுகளுக்கிடை வில் பொது நிதியியலானது தனித்தனி திதி அலகாகக் காணப்பட்டது. தனியார் திதி போன்று பொது நிதியும் முக்கிய கான சில அடிப்படைகளின் கீழ் - அர சாங்கச் செலவினூடாக ஒன்று திரட்டிய நுகர்வு - உச்சத் திருப்தியை அளிக்கக் கடிய வகையில் கைக்கொள்ளப்பட வேண் டியதாயிற்று, எனவே அதற்குத் தகுந்த வகையில் பற்ருக்குறை வரவு செலவுத் திட்டங்கள் கீன்சுக்குப் பின்னர் தயாரிக் கப்பட்ட போதும் அதற்கு மு ன் ன ர் பெரும்பாலும் சமமான வரவு செலவுத் திட்டங்களே தயாரிக்கப்பட்டன. ஆனல் அரசாங்க வரவு செலவுகளினூடாகத் தொழிற்பாட்டு நிதியின் முக்கியத்துவமும் இன்று அதிகரித்துள்ளமையால் உறுதி யான தன்மையையும், வளர்ச்சியையும் பேணக்கூடிய ஆரம்ப ஆயுத மா த த் தொழிற்பாட்டு நிதியைப் பயன் படுத்தக் கடியதாக உள்ளது.
உறுதியான வளர்ச்சிக்குரிய தேவைப் பாடுகளை ஹருெட், டொமர் (Harrod and மறைar) இருவரும் ஆராய்ந்து காலத்துக் குக் காலம் ஏற்படக்கூடிய இயக்க ரீதி யான சம நிலைக்கு வருமான வளர்ச்சி எந்தளவுக்கு அமையவேண்டுமெனக் கூறி னர். இவர்கள் முதலீடானது இரட்டைத் தன்மைகளைக் கொண்டிருப்பதாகவும் அதா வது ஒருபக்கத்தில் வருமானத்தை அதிக சிப்பதாகவும், மறுபக்கத்தில் மூலதன இருப்புகளில் அதிகரிப்பை ஏற்படுத்துவ்தனூ
- 8

Gs, srciv.-pst-varss
டாக உற்பத்தித்திறன் இயலளவுவிருத்தி யடைவதாகவும் குறிப்பிட்டனர். கீன்சிய னின்கொள்கையானதுகுறிப்பிடத்தக்கமட் டத்தில் மூலதனஇருப்பு இருக்கும்பொழுது வருமானத்தில் ஏற்படுகின்ற அதிகரிப்பு முதலீட்டைத் தாக்கும் என்பதாகும். இது குறுகியகாலப் பிரச்சனைபற்றியே முக்கிய மாக ஆராய்வதனுல் நீண்டகாலத்தைக் கணக்கில் எடுக்கும்பொழுது தேறிய முத லீட்டின் இயலளவில் வளர்ச்சியை ஏற் படுத்தல் வேண்டும். வருமானமும் வெளி யீடும் அதிகரிப்பது மட்டுமன்றி மூலதன இருப்பின் உற்பத்தித்திறன் விகிதாசார மும் அதிகரிப்பதனல் பொருளாதாரமா னது உறுதியான வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. நீண்டகாலத்தில் முதலீட்டி னதும், வருமானத்தினதும் வளர்ச்சி வீதத் தின் தொழிற்பாடானது வேலைவாய்ப்பை அளிக்கத்தக்கதாக அமைதல் வேண்டும். சமநிலையையும், வேலைவாய்ப்பையும் ஏற் படுத்துவதற்குத் தேவைப்படும் வருமான வளர்ச்சியை வளர்ச்சியின் முழு இயலளவு வீதம் என அழைக்கப்படும்.
ஹரோடியன் மாதிரியத்தைச் (Harodian Models)

Page 110
குறைவிருத்தி .
யாசப்படும். G>GW என அமையுமாயின் உண்மையான வளர்ச்சியின் இயலளவிலும் பார்க்க வருமான வளர்ச்சியானது வேக முடையதாக இருப்பதனுல் உண்மையான மூலதன இருப்புக் குறைவாக அமைய இயலளவின் அமுக்கம் அதிகரித்துப் பண வீக்கம் உருவாகும். இந் நிலையில் முதலீடு கள் சேமிப்பிலும் பார்க்க அதிகமாக இருக் கும். G Gw என அமையுமாயின் வேலையின்மையும்
4 -

Page 111
குறைவிருத்தி ...
பணவீக்கமும் ஏற்படும். எனவே பொதுக் கொள்கையானது இந்த இரு பிரச்சினை களையும் தீர்க்கத்தக்க வகையில் வகுக்கப் படுதல் வேண்டும். இந் நாடுகளில் பண வீக்கமின்றி மூலதனச் சொத்துக்கள் அதி கரிக்க வேண்டியிருப்பதுடன் வளர்ச்சிச் செய்முறைக்கு அதன் உறுதிப்பாடும் இன் றியமையாதது. எனவே உறுதியைப் பேணத்தக்க வகையில் வேலையின்மையைக் குறைக்க வேண்டுமாயின் வருமான உயர்வி னுரடாக எல்லைச் சேமிப்பு நாட்டம் சரா சரி நாட்டத்திலும் பார்க்க உயர்வாக அமையத்தக்கவகையில் சீரமைக்க வேண் டும். எனவே தனியாள் வருமானத்தை உயர்த்தத்தக்க வகையில் அரசாங்க முத லீடுகளினூடாக தொழிற்பாட்டு நிதி வழங்கப்படுதல் வேண்டும்.
இறைக் கொள்கையானது வரவு செலவுத் திட்டக் கொள்கையினூடாக முதலீடு, வேலைவாய்ப்பு, நுகர்வு, ஆகிய வற்றை அதிகரிப்பதுடன் துணைத்திட்ட மிடுதல் பொருளாதாரத்தில் ( Quasi - Planned Economy 6 (Tig faigaot). ஒழுங்குபடுத்தி, நாட்டின்ஒழுங்கற்றமுறை
இரகசிய
நிறுவனத்தினுல் பாவிக்கக்கூடிய 6 புத்தகங்களில் பிரதிபலிக்கப்படாமலிரு ஒதுக்கம் எனலாம். ஐந்தொகை முகப்பி காணப்படாது. உதாரணமாக நிலையான பதிவழித்து வரும்போது சொத்தின் ெ பதிவழிக்கப்பட்டோ இருக்கும். ஆனல் உ பயன்படுத்தக் கூடியதாகவும் இருந்துவ இரகசிய ஒதுக்கம் எனப்படும். அதாவது காட்டப்படும்போது இரகசிய ஒதுக்கங்க
8 - ح۔

கே. எஸ். நடராசா
யில் அமைந்திருக்கும். வருமானத்திலும், செல்வத்திலும் மறு பங்கீடு செய்து பொரு ளாதாரரீதியிலும், சமூகரீதியிலும், மக்க ளின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக அமைதல் வேண்டும், இறைக் கொள்கை யானது அரசாங்க செலவு - வருமானம் ஆகிய இருவழிகளிலும் பொருளாதாரத் தில் செல்வாக்கு உடையதாகக் காணப்படு கிறது. திறைசேரிக்கு செல்லவேண்டிய வரு மான மூலங்களைப் பெறுவதில் இக் கொள்கை வரி வசூலித்தல், மக்களிடம் இருந்தும் வங்கிகளிடம் இருந்தும் கடன் பெறுதல் மூலம் செயலாற்றுவதுடன், உறுதிப்பாட்டுடன் அமைந்த பொருளா தார வளர்ச்சியிலும் இணைவான கவனத் தைக் கொண்டுள்ளது.
இறுதியாகக் கூறுவதாயின் மக்களுக்கு இடையில் அல்லது தனியார் துறைக்கும், பொதுத்துறைக்கும் இடையில் வரவு செலவுத் திட்டக் கொள்கையினூடாக வளங்களை மாற்றியமைப்பதன் மூலம் உறு திப்பாட்டுடன் அமைந்த பொருளாதார வளர்ச்சியை அடைய முனைகிறது.
ஒதுக்கம்
வளங்கள் அந் நிறுவனத்தின் கணக்குப் ப்பின் அவ்வாருன வளங்களை இரகசிய ல் இவ்வொதுக்கத் தொகையோ வளமோ ன சொத்துகளில் கூடிய தேய்மானத்தைப் பறுமதி குறைந்தோ அல்லது முற்றிலும் ண்மையில் அதன் பெறுமதி கூடுதலாகவும் ரும். அவ்வாருண மேலதிக பெறுமதியே உண்மையான இலாபங்கள் குறைத்துக் ள் தோன்றுகின்றன.
5 -

Page 112
Best Wis
2
4.
Importers, Gener
Commissi
N
New Sri Mu
49, OLD Moor STRE
Telegrams : ' MINNOLEY"
வித்தியோதயத்துக்கு எட
ஜவ்னு ஓட்ே
171, ஸ்ரான்லி வீதி
 

---
shes from
all Rice Merchants
on Agents
f
rugan Stores
ET, COOMEO-2
Telephone 3377o
V மோட்டார்வாகனம்
தண்ணிர்ப் பம்பு ஆகியவற்றின் உதிரிப்பாகங்கள்
விற்பனையாளர்
டா ஹவுஸ்
யாழ்ப்பாணம்

Page 113
- கணக்கியல்
ஒன்றித்த கணக்குகளும்
母。 தம்பிப்பிள்ளை, Dip. in Accy., A. C. A. பிரதிப் பணிப்பாளர் (வரவுசெலவுத் திட்டம்) பொதுத் திறைசேரி பகுதிநேர விரிவுரையாளர் வித்தியோதய வளாகம்
- 5,

கம்பனிச் சட்டமும்
கம்பனிச் சட்டம் இலங்கையில் 1938ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டுவரப்பட் டது. இச் சட்டத்தின் 124ஆவது பிரிவின் கீழ் கூறப்படுவதாவது: ஒரு கம்பனி, இன் னெரு கம்பனியில் 50 சத வீதத்துக்கு மேலான பங்குகளில் முதலீடு செய்திருந் தால் அதாவது 50சத வீதத்துக்கு மேலான வாக்குரிமையைப் பெற்று இருப்பின் முத லீடு செய்த கம்பனியை கொளிக்கம்பனி (Holding Company) 6Tairapy JapuluGub. அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட கம்பனி கொளிக் கம்பனியின் உப கம்பனியாகும் என்று மேற்படி சட்டத்தின் 125ஆவது பிரிவின் கீழ் கூறப்படுகிறது. இச் சட்டத் தின் 123ஆவது பிரிவின்கீழ் உபகம்பனியின் பங்குகளில் ஒரு கம்பனி முதலீடு செய் திருந்தால், அச்சொத்தை முதலீட்டுக் கம் பணியின் (கொளிக் கம்பனி) ஐந்தொகை யில் வேருகக் குறித்துக் காட்ட வேண்டும்.
கொளிக் கம்பனியும் அதன் உப கம் பணியும் (அல்லது கம்பணிகளும்) தங்கள் ஒவ்வொருவரது இலாப நட்டக் கணக்கை யும் ஐந்தொகையையும் தயாரிப்பதுடன் ஒன்றித்த, இலாப நட்டக் கணக்கையும் ஒன்றித்த ஐந்தொகையையும் கொளிக் கம்பனியின் பங்காளர்களுக்குக் காண்பிப் பதற்காகத் தயாரிக்கலாம். 1938ஆம் ஆண் டுக் கம்பனிச் சட்டத்தின்கீழ் ஒன்றித்த கணக்குகள் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லை. ஒரு கொளிக் கம் பணியானது உப கம்பனியில் முதலீடு செய்திருந்தால் கொளிக்கம்பனி தனது ஐந்தொகையுடன் உபகம்பனியைப் பற்றிய சில விபரங்களையும் ஒரு கூற்றிலே இணைத் துக் காட்டல் வேண்டும். உபகம்பனியின் நட்டங்களுக்கு உபகம்பனியின் கணக்கிலோ அல்லது கொளிக் கம்பனியின் கணக்கிலோ
-

Page 114
ஒன்றித்த .
அல்லது இரண்டிலும் எவ்வளவுதூரம் ஏற் பாடு செய்யப்பட்டது என்பதை குறிப்பாக இந்தக் கூற்று எடுத்துக் காட்ட வேண்டும். அத்துடன் கொளிக்கம்பனி இயக்குநர்கள் தமது (கொளிக்கம்பனி) இலாபநட்டங்களை கணிக்கும்போது எவ்வளவு தூரம் உப கம்பனி நட்டங்களை கணக்கில் கொண் டார்கள் என்பதையும் இக் கூற்றுக் காட்ட வேண்டும்.
ஆங்கிலக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஒன்றித்த கணக்குகள் தயாரித்தல் அவசி யம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆங்கிலக் கம்பனிகள் காலத்திற்குக் காலம் கம்பனிச் சட்டத்தை மீளவாய்தல் செய்து வரு கின்றன. ஆனல் இலங்கையில் 1938ஆம் ஆண்டிற்குப் பின் கம்பனிச் சட்டம் திருத்தி அமைக்கப்படவில்லை. அன்று உப கம்பனி கள் மிகக் குறைவாக இருந்தன. ஆனல் தற்போது இலங்கையில் உப கம்பனிகள் பல உள. எனவே கொம்பனிச் சட்டத் தின் கீழ் ஒன்றித்த கணக்குகள் தயாரிக்க வேண்டிய நிபந்தனைகள் இல்லா திருந்த போதிலும், கொளிக்கம்பனி - உப கம்ப னித் தொடர்புள்ள கம்பணிகள் ஒன்றித்த கணக்குகள் தயாரித்து வருகின்றன.
ஒன்றித்த கணக்குகள் தயாரிக்கும் போது பின்வரும் முக்கிய அம்சங்களைக் கவனத்தில் வைத்துக் கணக்குகள் தயா ரிக்கப்பட வேண்டும்.
நடைமுறைக் கணக்குகள் :
கொளிக் கம்பனியினதும் உப கம்பனி யினதும் சொத்துக்களையும் பொறுப்புக் களையும் ஒரே ஐந்தொகையில் காட்டும் பொழுது கம்பணிகளுக் கி  ைடயி லா ன கொடுக்கல் வாங்கல்கள் தமக்குள் இரத் தாகும்.
வழியில் சொத்துக்கள் :
கம்பனிகளுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டு, நிதியாண்டு முடி வில் அவை வழியில் சொத்தாக (காசாக
അ 8

s. sú úůúdia
அல்லது சரக்காக) இருப்பின் அக் கொடுக் கல் வாங்கல் பெறவேண்டிய கம்பனியின் அல்லது சேரவேண்டிய கம்பனியின் கணக் கில் பதிவு செய்யப்படும். இதன் பின்னர் உள்ள மீதிகளுக்கு ஏற்ப கம்பனிகளுக் கிடையிலான கொடுக்கல் வாங்கல் இரத் தாகும்.
வருமதி சென்மதி உண்டியல்கள் : உண்டியல்கள் தொகுதிக் கம்பனி sely dig (Grouped Companies) geolus வருமதியாகவும் சென்மதியாகவும் இருப் பின் அவைகளும் ஒன்றித்த ஐந்தொகையில் சேர்க்கும்போது தமக்குள் இரத்தாகும்.
மேற்கூறப்பட்டவாருக தொகுதிக் கம் பணிகளுக்கிடையில் நடைபெற்ற உண்டி யல் கொடுக்கல் வாங்கலின் போது தொகு திக் கம்பனியில் ஒன்று தனது வருமதி உண்டியலைக் கழிவுக்கு மாற்றியிருந்தால் அத் தொகை கம்பனிகளுக்கிடையேயான கொடுக்கல் வாங்கலாக கருதி ஒன்றித்த ஐந்தொகையில் இருந்து ரத்தாக்கப்பட மாட்டாது. ஏனெனில் உண்டியல் கழிவுக்கு மாற்றப்பட்டு விட்டபடியால் ஒன்றித்த ஐந்தொகை தயாரிக்கும்போது உண்டியலே மாற்றிக் கொடுத்த வங்கிக்கே உண்டியலை ஒப்புக்கொண்ட கம்பனி பொறுப்பாளரா வர். எனவே உண்டியலை பிறப்பித்த கம்பனி இப் பொறுப்பில் இல்லை. எனவே இது கம்பனிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கலாக கருதப்படமாட்டாது.
உப கம்பனிப் பங்கு இலாபம் :
கொளிக் கம்பனிக்கு உப கம்பனியில் இருந்து கிடைத்த பங்கு இலாபம் முன் இலாபம் அல்லது பின் இலாபமாக இருக்கு லாம் முன் இலாபமாக இருந்தால் அதை மூலதன ஒதுக்கமாகக் கருதி கொளிக் கம் பணியின் ஏட்டிலுள்ள ** உப கம்பனி முத லீட்டுக் கணக்கில்" பதியவேண்டும். பின் இலாபமாக இருப்பின் வருமானமாகக் கருதி கொளிக் கம்பனி இலாப நட்டக் கணக்கில் பதியப்படும்
8 -

Page 115
ஒன்றித்த .
சரக்கிருப்பில் ஏற்பட்ட தேருத இலாபம் :
தொகுதிக் கம்பனியில் ஒரு கம்பனி மற்றைய கம்பனிக்கு (கொளிக் கம்ப னியோ உப கம்பனியோ யாராயினும்) இலாபத்துடன் சரக்குகளை விற்றிருந்து - நிதியாண்டு முடிவில் அச் சரக்குமுழுவதும் விற்கப்பட்டிருந்தால் தேருத இலாபம் ஏற்படாது. ஆணுல் அச் சரக்கில் ஒருபகுதிச் சரக்கு விற்கப்படாதிருப்பின் அத் தொகை பில் அடங்கியுள்ள தேருத இலாபத்தைக் கணித்து அதில் கொளிக் கம்பனியின் பங் கிற்கு தேருத இலாப ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்றித்த கணக்குகள் தயாரிக் கும்போது இத்தொகையைச் சரக்கிருப்பில் இருந்தும் கொளிக் கம்பனியின் இலாப தட்டக் கணக்கில் இருந்தும் கழித்துக் காட்டப்படவேண்டும்.
உப கம்பனியால் வழங்கப்பட்ட உபகாரப் பங்குகள் :
உப கம்பனி தனது பங்கு இலாபத்தை உபகாரப் பங்குகளாக வழங்கியிருந்தால் கொளிக் கம்பனியில் இதற்கான பதிவுகள் இடம்பெற மாட்டா. ஏனெனில் அப்பங் கிலாபம் பணமாகக் கிடைக்கவில்லை. பங்கு களாகவே கிடைத்துள்ளன. இவ்வாறு பங்குகளாக வழங்கும் பொழுது-ஒன்றித்த ஐந்தொகை தயாரிக்கையில் முன் இலாப மாக இருந்தால் அது மூலதன ஒதுக்கமாக கருதப்பட்டுக் கட்டுப்பாட்டுக் கிரயக்
பங்கு மீட் வட்டத்துடன் பங்குகளை மீட்கும்பே ஆரம்பத்தில் பங்கு வழங்கியபோது கிடை என்பது இங்கிலாந்து முறையாகும். இ பங்குகள் வழங்கியிருப்பின் அதற்குரிய வழங்கியபோது கிடைத்த வட்டத்தில் வருமான ஒதுக்கங்களில் இருந்தே ஈடு (
8 - 12 ܚܕ ?ef

ச. தம்பிப்பிள்ளை
கணக்கில் காட்டப்படும் பின் இலாபமாக இருந்தால், கொளிக் கம்பனியின் பங்கை வருமானமாகக் கருதாது இதையும் மூல தன ஒதுக்கமாகத் தனியாகக் காட்ட வேண்டும். ஏனெனில் இப் பங்கிலாபம் கொளிக் கம்பனிக்குப் பணமாகக் கிடைக்க வில்லை.
உப கம்பனிச் சொத்துக்கள் - மீள மதிப்பிடல் :
கொளிக் கம்பனி உப கம்பனியின் பங்குகளில் முதலீடு செய்யும்பொழுது உப கம்பனியின் சொத்துக்களை மீள மதிப்பீடு செய்தபோதிலும் அவ்வாறு புத்தகங்களில் சாதாரணமாகப் பதிவதில்லை. ஆனல் ஒன் றித்த கணக்குகள் தயாரிக்கும்பொழுது அச் சொத்துக்களை மீள மதிப்பிட்ட பெறு மதியிலேயே ஐந்தொகையில் காட்டப்பட வேண்டும். இதனுல் ஏற்பட்ட இலாபம் அல்லது நட்டத்தை முன் இலாபம் அல்லது முன் நட்டமாகக் கருதிக் கட்டுப்பாட்டுக் கிரயக் கணக்கிலும் (அல்லது நன்மதிப்புக் கணக்கு) சிறுபான்மையர் கணக்கிலும் பதியவேண்டும். அதே நேரத்தில் மீள மதிப்பினுல் ஏற்பட்ட தொகையில் தேய்மா னத்திற்கு சீராக்கம் செய்தல்வேண்டும்.
இவ்வாறு மேற்கூறிய முக்கிய அம்சங் கள் தொகுதிக் கம்பனிகளுக்கிடையிலான ஒன்றித்த கணக்குகளைத் தயாரிக்கும் பொழுது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பு வட்டம் ாது ஏற்படும் பங்கு மீட்பு வட்டத்தை, த்த வட்டத்தில் இருந்து ஈடு செய்யலாம் இலங்கை முறைப்படி மீட்பதற்கு புதிய விகிதாசார மீட்பு வட்டத்தையே முன்பு
இருந்து ஈடு செய்யலாம். மிகுதியை செய்யவேண்டும்:
ഞ്ഞു.ബ
9 --

Page 116
With the best Compliments
from
P. K. Paramanathan
& Co. (Kandiah Buildings) 109, Old Moor Street соLомво-12
T'Grams: "Sridharan T'Phone : 33863
Branches:
Mano Mills & Industries
Station Road,
SEEDUWA
Grants : MANOINDUS
༤
p。以 PARAMANATAN
PAWN BROKERS & JEWELLERS 236, K. K, S, ROAD,
AFFNA.
Tphone : 551

qılossunsj fium
$ so mæss solgogi ‘9LI
「io也增過唱白日
aye soa’us;1 q1.1, qľof
=ாாாாறு
i Hıriųısnışsko
• .NVGITOXICI, I stup49, ),
VN-I-IVT
GICIIS CINVIS ST18I
SHOEINWoHT|0\\[(I L'HOITINITS |
uouf
174.17 : ɔuotsas „I
stuðuqqduoO 1səq əųq qiq M

Page 117
- பொருளியல்
இலங்கையின் வேலையின் வேலை நிறைவுக் கொள்ை
சி. சிறீஸ்கந்தராசா வர்த்தகவியல் (சிறப்பு) இறுதி வருடம்
! 9. --سي

மையின் நோக்கும் கயின் பங்கும்
திட்டமிட்ட சமதர்ம நாடுகளைத் தவிர்ந்த உலகின் ஏனைய எல்லா நாடு களிலும் இயல்பாகவே காணப்படுகின்ற வேலையின்மையானது, குறைவிருத்தி நாடு களில் ஒன்ருகிய இலங்கையையும் பாதித்து பொருளாதார அபிவிருத்தியில் பாரதூர மான விளைவுகளையும் ஏற்படுத்தும் ஒன்ருக அமைந்துள்ளது. வேலையின்மை என்பது ** எந்தவிதமான வேலையில்லாதவர்களை யும், அதனுல் வருமானம் பெருதவர்களை யும் குறித்து நிற்கின்றது. அத்துடன் பொருத்தமான வேலையின்மை, கீழ் உழைப்பு வேலையின்மை, பருவ வேலை யின்மை ஆகியவைகளையும் வேலையின்மை யின் தன்மையை ஆராயும்போது கவனத் தில் எடுக்கப்பட வேண்டும். இலங்கை யில் அந்நியராட்சிக் காலத்தில் உருவாக் கப்பட்ட மறைமுக வேலையின்மை, சுதந் திரம் அடைந்ததும் தாக்கத்தை ஏற்படுத் தத் தொடங்கியது. ஆனல் பொருளாதார நிலைமை சீராகக் காணப்பட்டமையும், சனத்தொகையின் மெதுவான வளர்ச்சி யும், அதிகரிக்கும் மக்களை வரண்ட வலயம் தாங்கும் என்ற நம்பிக்கையும், வேலை யின்மையின் பாரத்தை உணராமையும் தொழில்நுட்ப மூலதனச் செறிவால் பொருளாதாரத்தை நவீனமயமாக்கலாம் என்ற நம்பிக்கையும், போன்ற காரணங் களால் வேலையின்மையின் தாக்கம் உணரப் படாதிருந்தது. 58/59 ஆம் ஆண்டு உரு வாக்கப்பட்ட பத்தாண்டுத் திட்டத்தில் தொழில் பிரச்சினைகளுக்கு முக்கிய இட மளிக்கப்பட்டதும், 1963ஆம் ஆண்டு குடி சன மதிப்புப்புள்ளி விபரம் வேலையற்ருேர் தொகையை 2,36,000 பேர்கள் எனக் காட்டியதுமே, இலங்கையின் வேலையின்

Page 118
மையைத் தெளிவாகப் பிரதிபலித்தது. இவ் வேலையில்லாப் பிரச்சினையானது கல்வி கற்ற இளம் தலைமுறையினரை அதிக தாக்கத்திற் குள்ளாக்கியமையினுல்தான் மொழி, மத, சாதி இனப் பிரச்சினைகள் ஏற்பட்டது மட்டுமன்றி, புதிய அரசியல் பிரச்சினையாகவும் வளர்ந்துள்ளது. இந்த இளம் தலைமுறையினரின் இப் பிரச்சினை யானது, விரக்தி மனப்பான்மைக்குத் தூபமிட்டு, கொள்ளை, களவு, கொலை போன்றவற்றிற்கு வழி வகுத்து ஒரு பயங் கரவாத புரட்சிக்கே வழிவகுத்தது எனக் கூறலாம். எனவே வேலையின்மை என்ருல் என்ன? இலங்கையின் வேலையின்மையின் வளர்ச்சியும், அதன் பரம்பலும் எவ்விதம் அமைந்துள்ளது? இதற்குரிய பிரதான காரணங்கள் யாவை ? இலங்கை அரசு மேற்கொண்ட திட்டங்கள் வெற்றி பெற் றனவா? வேலை நிறைவுக் கொள்கையை எவ்விதம் செயற்படுத்தலாம்? என்பதை இக்கட்டுரை ஆராய்கின்றது.
Gounoufeir 6-DDD (Unemployment):
ஒரு உற்பத்திக் காரணி வேலைபார்க் கும் ஆர்வமும் அவசியமும் இருக்கின்ற போதும் கூட வேலையற்றிருக்கும் நிலையே வேலையின்மை எனப்படும். அதாவது உற் பத்திக் காரணி எதுவித வருமானமும் பெருது இருக்கும் நிலையாகும். இதனைப் பழம் பொருளியலாளர்கள் (குறிப்பாக அடம் ஸிமித், J. S. மில், டேவிட் றிக் கார்டோ) பொருளாதாரத்தில், உராய்வு வேலையின்மை, விரும்பிய வேலையின்மை என்பன இயல்பானதொன்று எனவும், அது தடையற்ற சுதந்திர பொருளாதார நட வடிக்கையினல் பூரண வேலை நிறைவைப் பெறும் எனவும் விளக்கியிருந்தார்கள். ஆனல் நவீன பொருளியல் தந்தை என அழைக்கப்படும் கெயின்ஸ், அபிவிருத்தி யடைகின்ற நாடுகளில் திரவப்பொறி நிலை யில் வட்டிவீதம் மாருது இருக்கும்போது பணநிரம்பல் அதிகரித்தாலும், வட்டிவீதம் வீழ்ச்சியடையாமையால் முதலீடு கூடா மல், குறையாமல் இருப்பதால், ஒரு குறிப்
92 سس

சி. சிறீஸ்கந்தராசா
பிட்ட எல்லைக்கு அப்பால் கட்டாய வேலை யின்மை நிலவும் எனவும், பயன்படு கேள் வியின் குறைவும் இதனை உறுதிப்படுத்தும் எனவும் கூறினர். ஆனல் ஏலின் என்னும் பொருளியலறிஞர் ' கேள்வியில் ஏற்படும் குறைவுதான் கட்டாய வேலையின்மைக்குக் காரணம் எனக் கூறமுடியாது என்றும், பொருளாதார வளர்ச்சியினைத் தொடர்ந்து அடைகின்ற வேலைப் பெருக்கம் ஏற்படும் வரையுமே வேலையின்மை நிலவும் என்றும் இது தற்காலிகமாகக் காணப்படும் வேலை யின்மை என்றும் கூறியுள்ளார்.
ஜோன் ருெபின்சன் "* பிறழ்ச்சிகள் நிலவும் வரைக்கும் உராய்வு வேலையின்மை நிலவுவதால் வேலையின்மையை ஒருபோதும் நீக்கமுடியாது’ என்று கூறினர். எனவே ஒரு வேலையிலிருந்து இன்னெரு வேலையை நாடும்போது ஏற்படும் உராய்வு வேலை யின்மை வேலையின்மையில் முக்கிய இடம் பெறுகின்றது, லேனர் ** வேலையின் பொரு ளாதாரம்' என்ற நூலில் "உத்தியோகம் போதாமையால் வேலையின்மை ஏற்படு கின்றது என்றும், இது பணவாட்ட வேலை யின்மை என்றும் குறிப்பிடுகின்றர். இது வும் வேலையின்மையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு "வேலை நிறைவுபற்றிய தேசிய அனைத்துலக நட வடிக்கைகள் " என்ற நூலில் வளர்ச்சி குறைந்த பொருளாதாரமே வேலையின் மைக்குரிய காரணம் என்றும், வேலையின் மையை, வாணிகச் சூழல்சார் வேலை பின்மை, பருவகால வேலையின்மை, நுட்பத் தொழில் சார் வேலையின்மை, உருமறைந்த வேலையின்மை என வகுத்து விளக்கியுள் ளது. அத்துடன் குறைவிருத்தி நாடுகளில் உரு மறைந்த வேலையின்மையே மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது என்றும் வேலை பின்மை என்பதைவிட வேலைக் குறைவு ான உபயோகிப்பது சிறந்ததாகும் எனவும் கூறியுள்ளது.

Page 119
இலங்கையின்
இலங்கையின் வேலையின்மை :
இலங்கையின் வேலையின்மையானது, பூரண வேலையின்மை, அரைகுறை வேலை யின்மை, பொருத்தமான வேலையின்மை, பருவ வேலையின்மை, உராய்வு வேலை யின்மை, விரும்பிய வேலையின்மை, கீழ் உழைப்பு வேலையின்மை போன்ற தன்மை களில் காணப்படுகின்றது.
அரைகுறை வேலையின்மை என்பது திறமையும், ஆற்றலும் உள்ள தொழில் அணி, தனது ஆற்றலுக்கு ஏற்ற வேலை செய்யாது, குறைவான வேலையில் ஈடுபடு வதைக் குறித்து நிற்கின்றது. பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பினை முடித்து வெளியேறியவர்கள், தமது படிப்புக்கு ஏற்ற வேலை கிடையாது, சாதாரண எழுது வினைஞர் வேலை செய்வதைக் கூறலாம். கீழ் உழைப்பு என்பது, ஒரு குறித்த வேலை செய்ய, குறித்த தொகை வேலையணியை விட கூடிய தொழில் அணியினர் ஈடுபடுத் தப்படும்போது ஏற்படும் நிலையினைக் குறிக் கின்றது. அதாவது ஒர் ஏக்கர் நெற் காணி 10 பேர் வேலை செய்யப் போதுமான தாகும். ஆனல் அதே காணியில் 25 பேர் ஈடுபட்டிருக்கும் நிலையாகும். இலங்கையில் இன்று பெருமளவு காணப்படும் வேலை பின்மை கீழ் உழைப்பு நிலைமையே ஆகும். 1975ஆம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கை பின்படி 6,38,846 பேர் கீழ் உழைப்பு நிலை பில் காணப்பட்டார்கள் என்றும், இது தொழில் அணியில் 16% எனவும் கணிக் கப்பட்டது. இதில் 50% மாணவர்கள் ஆண்கள் என்றும் உணரப்பட்டது. கருண திலக்க என்பவர் 'குறை உழைப்பு கிரா மத்தை விட நகரப்புறத்தில் அதிகமாக உள்ளது" எனக் கூறினர்
தொழில் அணி பெற்ற கல்விக்கும் பயிற்சிக்கும் ஏற்ற வேலை கிடைக்காமல் வேறு வேலை செய்வதைப் பொருத்தமான வேலையின்மை எனப்படும். பல்கலைக்கழகத் நில் பொது நிர்வாகம், வியாபார நிர்வா கம், வரி மதிப்பீடு, அபிவிருத்திப் பட்டப்

சி. சிறீஸ்கந்தராசா
படிப்பு போன்ற விசேட கல்விப் பயிற்சி பெற்று வெளியேறியோர்கள், தமது கல் விப்பயிற்சிக்கேற்ற வேலை செய்யாது சாதா ரண அன்றி வேறு வேலை செய்வதைக் குறிக்கின்றது. ஆனல் விரும்பிய வேலை யின்மை என்பது மத்திய, உயர்கல்வி கற் ருேர் தமக்கு விருப்பமான வேலையைப் பெற முடியாமையைக் குறிக்கின்றது. மார்கா நிறுவனம், ஆண் பெண், கல்வி யளவு வேறுபாடுகளுக்கேற்ப விரும்பிய வேலையின்மையைக் கணிக்க முடியும் எனக் கூறியுள்ளது. மத்திய பாடசாலை ஆரம்பக் கல்வியைப் பெற்றவர்கள், கைப்பணி, கைத்தொழில், உற்பத்தி, ஆக்க வேலைகளை யும், மத்திய கல்வியைப் பெற்றேர் (க. பொ. த. சாதாரணம், க. பொ. த. உயர்தரம்) களில் 18% மானவர்கள் ஆசி ரியர், தாதி, உப வைத்தியம், ஆகிய அறி வுத் துறைத் தொழில்களையும், மருத்து வம், பொறியியல், கணக்காய்வு போன்ற நுட்பத் தொழில்களையும் விரும்பினர். இதனைவிட 15% மானேர் எழுதுவினைஞர் வேலையை விரும்பினர். இவர்கள் தாம் விரும்பியவாறு வேலைவாய்ப்பைப் பெற முடியாத நிலையே விரும்பிய வேலை யின்மை உருவாகக் காரணமாக இருந்தது.
பருவ வேலையின்மை என்பது ஒரு பரு வம் வேலை செய்வதும், அதன் பின் வேலை யின்றியும், அடுத்த பருவம் வரை காத் திருக்கும் நிலைமையை குறிப்பிடுகின்றது. இலங்கையின் பெரும்பகுதிகளில் இடம் பெறும் கிராமிய விவசாய நடவடிக்கை களில் இத்தன்மை காணப்படுவதாக உள் ளது. நெற் பயிர்ச் செய்கை, கரும்பு மற் றும் உப உணவுப் பயிர்ச்செய்கை நடை பெறும் காலங்களில், சிறப்பாக விதைத் தல், அறுவடைக் காலங்களில் வேலை வாய்ப்பும், ஏனைய காலங்களில் வேலை யின்றி இருக்கும் நிலை காணப்படுகின்றது. இத்தகைய நிலையினையே ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு "உருமறைந்த வேலை யின்மை” எனக் கூறியுள்ளது. அத்துடன் இலங்கையில் உராய்வு வேலையின்மையும் அதிகரித்து வருகின்றது. ஒரு தொழில்
-ܚܗ 93

Page 120
இலங்கையின் .
அணி ஒரு வேலையிலிருந்து இன்னுமொரு வேலைக்கோ அல்லது ஒரு இடத்திலிருந்து இன்னெரு இடத்திற்கோ வேலை தேடிச் செல்லும் போது ஏற்படும் வேலையின் மையே உராய்வு வேலையின்மையாகும். இன்று கிராமம், பெருந்தோட்டம் ஆகிய வற்றிலிருந்து பெருந்தொகையானேர் நக ரங்களுக்கு இடம் பெயர்ந்து வருவதும் அதன் விகிதம் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வேலையின்மையின் வளர்ச்சி :
இலங்கையின் சனத்தொகை பெருகு வதனல், வேலைதேடும் தொழில் அணியும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு அதி கரிக்கும் வேலை தேடுவோருக்கேற்ப எமது பொருளாதாரம் வாய்ப்பளிக்காமையால் தான் வேலையின்மை ஏற்பட்டது. அந்நிய ராட்சிக் காலத்திலிருந்து இன்று வரை ஏற் பட்ட வேலையின்மையின் வளர்ச்சியை மூன்று காலப் பகுதியாகப் பிரித்து நோக் குவோம். (i) அந்நியராட்சிக் காலம் :
ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசினல் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டப் பொரு ளாதாரமும், கிராமப் புறங்களில் உருவா கிய நவீன நிலப்பிரபுத்துவ முறையும் மறைமுகமாக உருமறைந்த வேலையின் மையை உருவாக்கியது. தேயிலை, தென்னை றப்பர் போன்ற பெருந் தோட்டங்கள், அந்நிய முதலீடு, அந்நிய தொழில் அணி (இந்தியர்) அந்நிய தொழில் நுட்பம் பயன் படுத்தப்பட்டமையும் இலங்கையருக்கு வேலைவாய்ப்பை அளிக்க முன்வர முயல வில்லை. கிராமப் புறங்களில் உருவாக்கப் பட்ட பண்ண்ை நிலப் பிரபுத்துவம் முத லாளிகளால் மேற்கொள்ளப்பட்ட சிக்கன, கடின ஊழிய முறையும் அதிகரித்த சனத் தொகைக்கு தொழில் வாய்ப்பளிக்க முடிய வில்லை. இதனுல் மறைமுகமாக வேலை யின்மையை உருவாக்கி, வறுமை, பசி, பட்டினி போன்ற நிலைகளை அனுபவிக்கச் செய்தது.

S. Sosio asis JrF
ti) சுதந்திர காலம் தொடக்கம் 1963 வரை: இக்காலப் பகுதிகளில் பெருந்தோட்டங் களிலும், கிராமிய விவசாய நிலவுடமை களிலும் எதுவித மாற்றமும் செய்யப்படா மல், நவீன விஞ்ஞான தொழில்நுட்பங் கள் பயன்படுத்தியமையால், வேலைவாய்ப் பளிப்பதற்குப் பதிலாக வேலை செய்தவர் களையே வேலையற்றேராக்கியது. பெருந் தோட்டப் பொருளாதாரம் வளர்ச்சி யடைந்த போதும் இலங்கைத் தொழில் அணிக்கு வேலையளிக்காது மாருக இந்தியத் தொழில் அணிக்கே வேலை வாய்ப்பளித் தது. சுதந்திரத்தின் பின்னர் பதவியேற்ற அரசாங்கங்கள் எடுத்த நடவடிக்கைகள் முரண்பாடான அரசியல் கொள்கைகளால் வேலையின்மையை நீக்கமுடியவில்லை. அக் காலங்களில் ஏற்பட்ட செல்மதி நிலுவை சாதகநிலை தொடர்ச்சியாக இருக்கும் என வும், நவீன விஞ்ஞான தொழில்நுட்பம் பயன்படுத்துவதன்மூலம் வாழ்க் கைச் செலவை உயர்த்தி சகலருக்கும் Gauðav வாய்ப்பு அளிக்கமுடியும் எனவும் நம்பப் பட்டநிலையில் தொடர்ந்து வேலையின்மை அதிகரித்தது. இக் காலத்தின், மத்திய பகுதிக்குப்பின் (1957க்குப்பின்) தொடர்ச் சியாக ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளா லும், தொடங்கப்பட்ட கைத்தொழில்கள் யாவும், வெளிநாட்டு மூலப்பொருள் பயன் படுத்தப்பட்ட முதல்நிலைக் கைத்தொழில் களினலும் வேலையின்மை தொடர்ச்சியாக அதிகரித்தது, 1963ஆம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட குடிசனமதிப்புப் புள்ளி விபரத்தில் தொழில் அணி 32 இலட்சம் எனவும் இதில் 2,36,000 பேர் வேலையற் ருேராக இருந்ததாகவும், இது மொத்தத் தொழில் அணியில் 8%மாக உள்ளது என வும் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது. (i) 1963இலிருந்து 1978வரை :
1963ஆம் ஆண்டிலிருந்து தெளிவாக வெளிக்கிளம்பிய வேலையில்லாப் பிரச்சினை யானது, 1971இல் துரிதகதியில் அதிகரித்து 1978இல் மிகப் பெரிய பொருளாதாரப்
4 -

Page 121
இல்ங்கையின் .
பிரச்சினையாக விளங்குகின்றது. 1963ஆம் ஆண்டு தொடக்கம் 1971ஆம் ஆண்டு வரை புதிய தொழில் அணிப் பிரவேசிகள் 10 இலட்சம் பேராக அதிகரித்தது. 1965-70ஆம் ஆண்டுகளில் 5,50,000 பேர் வேலையில்லாதிருந்தார்கள். அது 1971ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி 10 வயதுக்கு மேற்பட்ட வேலையற்றேர் தொகை 7,96000 பேர் என காட்டப்பட் டுள்ளது. எனவே 1963இல் 8%மாக இருந்த வேலையின்மை 1971இல் 29%மாக அதிகரித் தது. வருடாவருடம் 3*2% அதிகரிப்பு ஏற் பட்டுள்ளது. 1973இல் மத்திய வங்கி தொழில் அணி பங்காற்றல் மதிப்பீட்டில் வேலையற்றேர் 7,93,000 பேர்கள்எனவும் 1974இல் மத்திய வங்கி காணி, தொழில் பயன்படுத்தல் மதிப்பீட்டில் 9,84,000 பேர் வேலையற்றவர்கள் எனவும் கணிக்கப் பட்டுள்ளது. பி. வில்சன் என்பவர் ** இலங் கையின் வேலையின்மையானது 1971 - 1981ஆம் ஆண்டுக்கிடையில் வருடாவருடம் 1576 ஆயிரம் அதிகரிக்கு மெனவும், 1981ஆம் ஆண்டில் 59 இலட்சமாக உயர லாம்" எனவும் கூறியுள்ளார்.
வேலையின்மையின் பரம்பல்:
இலங்கையின் வேலையின்மை கிராம, நகரப்புறங்களில் பரவிவரும் நோயாகக் காணப்படுகின்றது. இத்தகைய வேலையின் மையின் பரம்பல் இலங்கையில் கிராம, நகர அடிப்படையிலும், ஆண், பெண் என்ற பால் அடிப்படையிலும், இளைஞர், முதியவர் என்றவயதின் அடிப்படையிலும், உலர்வலய, ஈரவலய மாவட்ட அடிப்படை யிலும் வகைப்படுத்தி, அதன் தாக்கங்களை ஆராயலாம்,
கிராமங்களில், நகரங்களைவிட கூடிய வேலையின்மை காணப்படுகின்றது. சனத் தொகை 1 கோடி 20 இலட்சமாக இருந்த காலத்தில் மொத்தத் தொழில் அணி 38 இலட்சம் எனவும், இதில் கிராமம் பகுதி எனவும், பெருந்தோட்டமும் சேர்த்தால்

சி. சிறீஸ்கந்தராசா
இவ் விகிதம் ஜ் எனவும் கூறப்பட்டது. கிராமப்புற பகுதிகளில் வேலையற்றேர் பற்றிய 1963ஆம் ஆண்டு குடிசன மதிப் பீட்டில் 1,84,450 பேர் எனவும், இது மொத்தத்தில் 77% எனவும் 1971ஆம் ஆண்டின் மதிப்பீட்டில் த,71,800 பேர் எனவும், இது மொத்தத்தில் 70% என வும் மதிப்பிடப்பட்டிருந்தது. 1971இல் இருந்து glgarmš45 பின்பற்றிய கொள்கை களிஞலும், கிராம பெருந்தோட்டங்களி லிருந்து வேலையற்ருேர், வேலைதேடி நக ரங்களை நோக்கி இடம்பெயர்ந்தமையி ஞலும் கிராமப்புறங்களில் காணப்பட்ட வேலையின்மை குறைவடைந்ததோடு மாருக நகர்ப்புறங்களில் வேலையின்மை பின் வீதம் 1963இல் 23%ஆக இருந்து 1971இல் 30%ஆக மாறியது எனக் கூறலாம்
சனத்தொகை வேகமாக அதிகரித்த மையும் வயது அடிப்படையில் வேலை யின்மை பரவ வழிவகுத்தது. 1942இல் இருந்து மேற்கொள்ளப்பட்ட நவீன சுகாதார வசதிகளினல் இறப்பு வீதம் குறைந்து, பிறப்புவீதம் அதிகரித்தமையி ஞல்தான், இன்று இளைஞர்கள் தொகை அதிகரித்துள்ளதுடன் வேலையற்றேர் அணியில் இவ் இளைஞர்கள்தான் முன் நிற் கின்றர்கள். 1963ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி 15-24 வயதுகளுக் கிடைப்பட்டோர் 64% எனவும், இதில் 74% ஆண்கள், மிகுதி பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத் தி யடைந்த நாடுகளில் 1950-1970 ஆண்டு களுக்கிடையில் வருடாவருடம் இளைஞர் கள் தொகை 235%ஆக அதிகரித்தது எனவும், இது இலங்கையில் 3.82% அதி கரிப்பு எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பீடுகளின்படி 15-24 வயதிற்கிடைப் பட்டவர்கள் 1953இல் 14 இலட்சமாகவும், 1971இல் 26 இலட்சமாகவும் அதிகரித் துள்ளதாகவும், இதில் 132 இலட்சம் பேர் அதாவது 50-52% சுறுசுறுப்பான தொழில் அணியாகவும் காணப்பட்டார் கள். இம் மதிப்பீட்டின்படி 15-29 வயதுக
سس 95

Page 122
ளுக்கிடையில் வேலையின்மையின் வீதம் 1963இல் 1422% எனவும் 1975இல் 3726%மெனவும் கூறப்பட்டது. இதனை 15 -24வயதுக்கிடையில் கவனிக்கும்போது 60%மாகவும் 15-30 வயதுக்கிடையில் 90%மாகவும் காணப்படுகின்றது. இதி லிருந்து இளைஞரிடையேதான் வேலை
யின்மை காணப்படுவதை உணரலாம்.
ஆண், பெண் என்ற பால் அடிப்படை யிலும் வேலையின்மை பரந்து காணப்படுகின் றது. 1963ஆம் ஆண்டின் குடிசன மதிப் பீட்டில் 15-24 வயதுக்கிடைப்பட்டோ ரில் 74% ஆண்கள் எனவும், 26% பெண்கள் எனவும் கணிக்கப்பட்டது. 1971இன் மதிப்பீட்டில் ஆண்களின் தொகையில் மாற்றமுரு:திருக்க பெண்களின் தொகை 41%மாக அதிகரித்தது. எனவே மொத்த தொழில் அணியில் ஆண்கள் 66*5%ஆகவும் பெண்கள் 335%மாகவும் காணப்பட்டது. தொழில் அணியில் 1963இல் 15-25 வயதுகளுக்கிடைப்பட்ட பெண்கள் 21*7% மாகவும், 1971இல் இத்தொகை 26*1% மாகவும் உயர்ந்துள்ளது. இன்னும் நுணுகி ஆராயும்போது பெண்களில் வேலையற்ருே ரில் கூடிய வீதம் 20-24 வயதுக்கிடைப் பட்டோரிடையே அதிகரித்துள்ளதைக் காணலாம். இவ்வயதெல்லையில் 1963இன் மதிப்பீட்டில் 29%மெனவும், 1971இன் மதிப்பீட்டில் 422%மெனவும் பெண்கள் வேலையின்மை வளர்ச்சி பெற்றதையும் உணரக் கூடியதாகவுள்ளது.
இலங்கையின் 22 மாவட்டங்களிலும் வேலையின்மையின் வீதம் வேறுபடுவதைக் காணலாம். 1973 - 74ஆம் ஆண்டில் ** மார்கா நிறுவனம் " மேற்கொண்ட 125 தெரிந்தெடுத்த கிராமங்களின் அடிப் படையில் வேலை யின்மையை மதிப்பீடு செய்தது. அப்போது கொழும்பு, களுத் துறை, காலி, கண்டி, மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி,குருநாகல் போன்ற மாவட்டங்களில் வேலையின்மையின் வீதம் கூடுதலாகக் காணப்பட்டது. இப் பிரதே சங்கள் சிறப்பாக தேயிலை, தென்னை,
- 96

சி. சிறீஸ்கந்தராசா
றப்பர் பெருந்தோட்டங்களை உள்ளடக்கி யதும், இங்கு இந்தியத் தொழில் அணி பணியாற்றுவதும், சிறிய சிக்கலான நில வுடமையில் பலர் தங்கியிருப்பதும் காரண மாகும். அனுராதபுரம், மொன்ராகலை, அம்பாறை மாவட்டங்கள் வரண்ட வலய மாகவும், நிலம் போதியளவு காணப் பட்டமையும், வேலையின்மையின் வீதம் (29%) குறைவாகக் காணப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 11% வேலை யின்மை காணப்பட்டது. தோட்டப்பகுதி மாவட்டங்களில் இடப்பெயர்ச்சி அதிகரித் தமையால் வேலையின்மையின் வீதம் குறை வாகக் காணப்பட்டுள்ளது என மார்கா நிறுவன மதிப்பீட்டிலிருந்து உணரக் கூடிய தாக உள்ளது.
வேலையின்மை ஏற்பட்டதற்குரிய காரணங்கள் : r
(அ) வேகமாக வளர்ந்துவரும் ஜனத்
தொகைப் பெருக்கம். (ஆ) பொருளாதாரத் தேக்கம். (இ) செல்மதி நிலுவைப் பிரச்சினை.
(ஈ) கல்விமுறைச் சீர்கேடு. (உ) இளைஞர்களின் தொழில் எதிர்
பார்ப்பு.
(ஊ) பெண்களின் நிலைமாற்றம்.
வேகமாக அதிகரித்துவரும் ஜனத் தொகையும் வேலையின்மை ஏற்படுவதற் குரிய பிரதான காரணமாகும். ஜனத் தொகை அதிகரிக்க, தொழில் அணி அதிகரிக்க, அதனைத் தாங்கும் வல்லமை எமது பொருளாதாரத்துக்கு இல்லாமை யினுல்தான் வேலையின்மை ஏற்பட்டது எனலாம். 1940 ஆண்டிலிருந்து புகுத்தப் பட்ட விஞ்ஞான சுகாதார, பாதுகாப்பு வசதிகள் இறப்பு வீதத்தைக் குறைத்து பிறப்புவீதத்தைக் கூட்டியமையினுல்தான் இன்று உருவாகியுள்ள. இளைஞர் தொகைப் பெருக்கம் வேலை அணியில் கூடிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. 1963இன் மதிப்பீட் டின்படி சனத்தொகை 2.75%மாக அதி

Page 123
இலங்கையின் .
t t t e is
கரித்தது எனவும், 15 வயதுக்குட்பட் டோர் 42%மாகவும் மதிப்பிட்டிருந்தது. ஆனல் 1969ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி 19 வயதுக்குட்பட்டோர் 48* 9%மென வும் 1978இல் இது 15-64க்குட்பட்டவர் கள் 598%மாக அதிகரிக்குமெனவும் மதிப் பிடப் பட்டது. திரு. பி. வில்சன் 19631971 வரை வருடாந்தம் 54,000 பேராக வும், 71-81 வரை வருடாந்தம் 1,57,600 பேர் வீதம் தொழில் அணி பெருகும் எனவும், H. N. S. கருணதிலக்க, வருடம் 1,05,000 பேராகப் பெருகும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து வேலை பின்மையின் வளர்ச்சிக்கு சனத்தொகை பெருக்கமே காரணம்ெனத் தோன்றுகின் ADğ5l.
இலங்கையின் பொருளாதாரம் வேலை செய்யக்கூடியவர்களுக்கு வாய்ப்பினை பளிக்க முன்வரவில்லை. கடந்த காலங் களில் விஞ்ஞானமுறை, தொழில்நுட்ட முறை, நவீன விவசாயமுறை முதல் செறி வான கைத்தொழில்கள் என்பவற்றினுல் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றிருந்த போதிலும், வேலைவாய்ப்பினை அளிக்க முன் வரவில்லை. வேலைவாய்ப்பளிக்கக்கூடிய கட்டிடத்துறை, நிர்மானித்தல், நீர்ப்பா சனம் போன்றவைகளைத் திருத்தி அமைக்க வில்லை. விவசாயம், கைத்தொழில், மீன் பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட வில்லை. பருவகால மாற்றமும், மந்தநிலை பும் கூட எமது பொருளாதாரத்தில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்துவதாக இருந்தது. 1971இன் குடிசன மதிப்பீட்டின்படி 63 - 71க் கிடையில் 10 இலட்சம் தொழில் அணியில் 45 இலட்சம் பேருக்கு மட்டுமே இலாபகரமான தொழிலை அளித்துள்ளது. இவ்வாறு அதிகரிக்கும் தொழில் அணிக் கேற்ப பொருளாதார வளர்ச்சிவீதம் 7%மாக இருந்தால் இதனை ஈடுசெய்திருக் கும். ஆனல் இதன் வளர்ச்சி வீதம் 4%மாக இருந்தமையினல் வேலையின்மைஏற்பட்டது.
இலங்கையின் கல்விமுறையும் வேலை வின்மை வளரக் காரணமாகும். அந்நிய
------- 13 - ܘ

சி. சிறீஸ்கந்தராசர
ரால் அறிமுகம் செய்யப்பட்ட புத்தகக் கல்வி முறையினல் நாட்டின் பொருளா தாரத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக பெரும் தலையிடியையே ஏற்படுத்தியது. மத்திய பாடசாலை ஆரம்பக் கல்வி பெற் ருேர், க. பொ.த. (சாதாரண, உயர்தரம், வகுப்புகளில் கல்வி பெற்றேர், பல்கலைக் கழகப் பட்டதாரிகள் அதிகரிக்கப்பட்ட பொழுது அவர்களின் கல்விக்கேற்ற வேலை கிடைக்காமையும் வேலையின்மை தொ டர்ச்சியாக அதிகரிக்கக் காரணமாகும். 1946ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இல வசக் கல்வி முறையும் கிராமப் பகுதியில் படித்தவர்கள் தொகை அதிகரிக்கக் காரணமாக இருந்தது. இன்று கிராமத்தில் 76%மும் நகர்ப்புறத்தில் 70%மும் படித்த வாலிபர்கள் காணப்படுகின்ருர்கள். கிராமப்புறத்தில் பெருமளவு கலைப் பாடங் கள் படித்தவர்களே உள்ளார்கள். 1946ஆம் ஆண்டில் ஆரம்பக் கல்விபெற்ருேர் 86,000 பேராகவும், இன்று 3,50,000 பேராகவும். பல்கலைக்கழகத்தில் 1000 பேரும் இன்று 12,000 பேரும் கல்வி பயில்கின் முர்கள். 1969ஆம் ஆண்டு மத்தியவங்கி அறிக்கை யின்படி 3 இலட்சம்பேர் (கிராமிய அரை குறை வேலையில்லாதவர் தவிர்த்து) க. பொ. த. வகுப்பில் சித்தியடைந்தவராக வும் இது ஏறத்தாழ 364%மாகவும், பல் கலைக்கழகப் பட்டதாரிகள் 10,000 பேரும் வேலையில்லாதோர்எனவும் கணித்துள்ளது. எமது பொருளாதார அமைப்புக்கேற்ற முறையில் இக்கல்வி முறை அமையாததும் வேலையின்மை தொடர்ந்துஅதிகரிப்பதற்கு காரணமெனக் கூறலாம்.
இளைஞர்களின் தொழில் எதிர்பார்ப் புகள், விருப்பு வெறுப்புக்களும் வேலை யின்மை உருவாகக் காரணமாகும். தாம் விரும்பிய, எதிர்பார்த்த வேலை கிடைக் காத விடத்து வேலையின்றி இருக்க விரும்பு கின்ருர்கள். மத்திய பாடசாலை ஆரம்பக் கல்வி பெற்றேர், நெசவு, கட்டிட நிர் மாணம், தச்சு வேலை போன்ற கைப்பணி,
س- 7(

Page 124
இலங்கையின் ...
கைத்தொழில், உற்பத்தியாக்கல் தொழில் களை விரும்புகின்றர்கள். இந்த இளைஞர் கள் தமது தகப்பனர் செய்த குடும்பத் தொழிலைச் செய்ய 60%க்கு மேலானவர் கள் விரும்புவதில்லை. அத்துடன் க.பொ.த. பரீட்சைகளில் சித்தியடைந்தோர் ஆசிரி யர், தாதித் தொழில், எழுது வினைஞர் தொழில்களையே விரும்புகின்றர்கள். ஒரு சிலர் மட்டுமே விவசாயம், சுரங்கம், கைத் தொழில், உருவாக்க வேலைகளில் ஈடுபட விரும்புகின்றர்கள். உயர் கல்வி பெற்ற வர்களும் மருத்துவம், பொறியியல், கணக் காய்வு, நிருவாகம் போன்ற தொழில் களையே எதிர்பார்த்தார்கள். இந்த இளை ஞர்கள் அனைவரும் வெள்ளை உடை அணி யும் வேலைகளையே நாடியமையால் வேலை யின்மை வளர்ச் சிய  ைட ந் த து எனக் கூறலாம்.
பெண்கள் தமது வழமையான தொழில் களை விட்டு தொழில் அணியில் சேர்ந்து வேலைதேட மு ன் வந்த  ைம யும் வேலை யின்மை உயர்வுக்கு காரணமாகும். பெண் களிடத்தில் குடும்பத் தொழில் ஈடுபாடு குறைந் தமை, உயர்கல்வி கற்றமை, குடும்பத்தில் தங்கியிருத்தலை விட்டு விடுபட வேண்டு மென்ற உணர்வு, வாழ்க்கைச் செலவு உயர்வைச் சமாளித்தல் போன்ற காரணங் களுக்காக பெண்கள் வேலை தேட முன் வந்தார்கள், 1963ஆம் ஆண்டு மதிப்பீட் டில் 29% மாக இருந்த பெண்கள் தொகை 1971இல் 422% மாக அதிகரித்தது. இவர் களில் பெரும்பாலானேர் ஆசிரியர், தாதித் தொழில், எழுதுவினைஞர் தொழில்களையும் விரும்பினர். 11% மட்டு ே நெசவுத் தொழிலைச் செய்வதற்கு விரும்பினர். 73/74 ஆம் ஆண்டு மார்கா நி று வ ன ம் செய்த ஆராய்ச்சியின் போது, பெரும்பா லான பெண்கள் தமது தாய்மார் செய்த விரும்பவில்லை எனத் தெரியவந் ושתי6ע%$6u) தது. எனவே பெண்களும் வேலை தேட தொழிற்சந்தைக்கு வந்தமையும் வேலை யின்மை வளாச்சிக்கான காரணமெனக் கூறமுடியும்.
- 9:

சி. சிறீஸ்கந்தராசா
செல்மதி நிலுவையில் ஏற்பட்ட பாதக நிலைமையும் கைத்தொழில், விவசாய பொருளாதார நடவடிக்கைகளைப் பாதித்து வேலையின்மையை ஏற்படுத்தியது. எமது முதல் செறிவான கைத்தொழில்களுக்குத் தேவையான வெனிநாட்டு மூலப் பொருட் களையும், தேவையான பொறித் தொகுதி, இயந்திர உபகரணங்களையும் பெறுவதற்கு அந்நியச் செலவாணி பற்ருக்குறையாக இருந்தமையால், கைத்தொழில்களை இயக் குவதற்கும் முழு இயலளவை உபயோகிப் பதற்கும் முடியாமல் இருந்தமையால் வேலைவாய்ப்பை அளிக்க முடியவில்லை. இதுபோல் விவசாய நடவடிக்கைகளும், வெளிநாட்டு இயந்திரம், உரம் போன்ற வற்றையும், கிருமிநாசினி, களைகொல்லி போன்றவற்றை கூடியளவுக்கு பயன்படுத் திக் கொண்டிருக்கும் போது, செலவாணி பற்ருக்குறையால் அவை இறக்குமதி மட்டுப்படுத்தியதும் விவசாய உற்பத்தி வீழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது. அத்துடன் மறைமுகமாக வேலையின்மையையும் உருவா க் கி யது СТ60Tal) fiti) .
வேலை வாய்ப்பளிக்கும் திட்டங்களும் அவற்றின் செயற்பாடுகளும்:
இலங்கை சுதந்திரமடைந்து 10ஆண்டு களின் பின்னர் வேலையின்மையின் தாக்கம் வெளியரும்பிக்கொண்டிருந்தது. இலங்கை யின் மக்கள் யாவரும் வேலைவாய்ப்புப் பெற்று பொருளாதார மறுமலர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்குடன் பல திட்டங் கள் தீட்டப்பட்டன. திட்டங்களின் உரிய இலக்குகளை அடையத் தவறியமையும், காலத்துக்கு காலம் ஏற்பட்ட பொருளா தார மாறுதல்களும் வேலையின்மையை உக்கிரவேகப்படுத்தின எனலாம்.
-

Page 125
இலங்கையின் .
பொருளாதா
gospozitis
பூரண வேலேய
உருமறைந்த உராய்வு வேலை பெருந்தோட்டப் பகுதி *- ಸಿ
வாணிகச் சுழ
ஜனத்தொகைப் பெருக்கம்
கிராமியப் பகுதி <-
நகரப் பகுதி <一ー நுட்பத் தொ
' ' தொழில்"
up6sTů tu
கல்விமுறைச் ர்ேகேடு
இவ் வேலையின்மையானது சனத் தொகைப் பெருக்கம், பொருளாதாரத் தேக்கம், செல்மதி நிலுவைப்பிரச்சினை, கல்வி முறைச் சீர்கேடு, தொழில் எதிர் பார்ப்பு மனப்பான்மை, பெண்களின் நிலை மாற்றம் போன்ற காரணங்களினல், இலங்கையின் கிராமிய, பெருந்தோட்ட, நகரப்பகுதிகளில் பல்வேறுபட்ட வேலை பின்மையை உருவாக்கி, பல்வேறுபிரச்சினை களைக் கொண்டுவந்துள்ளது. இதனை நீக்கு வதற்காக திறனன திட்டமிடல், உறுதி பான பொருளாதார வளர்ச்சி, தேசிய உணர்வு, கல்விமுறை மாற்றம், மனநிலை மாற்றம் போன்ற காரணங்களைக்கொண்டு வேலையின்மையை நீக்கமுடியும் என்ப தையே இப்படம் விளக்குவதாக உள்ளது. எனவே இலங்கையின் திட்டங்களையும் அவற்றின் செயற்பாடுகளையும், அவை வேலைவாய்ப்பை ஏறபடுத்திய விதத்தையும் கவனிப்போம்.
(i) பத்தாண்டுத் திட்டம் : (இளைஞர் விவசாயக் குடியேற்றத் திட்டம்)
1958/59 ஆண்டில் உருவாக்கப்பட்ட பத்தாண்டுத் திட்டம் (58 - 68 வரை) வேலை வாய்ப்புக்கள் அளிக்கும் நோக்குடன்

f
a. absinasigay rst
ரத்தேக்கம் செல்மதி நிலுவைப்பிரச்சினே
656 to
1. திறனுன திட்டமிடல்
wயின்மை 2. உறுதியான பொருளா
வலையின்மை . தார வளர்ச்சி
tarni Galise 3. தேசிய உணர்வு
யின்மை 14. கல்வி முறை மாற்றம்
6&amử Gauồừ 5. மன நிலை மாற்றம்
யின்மை Y
எதிர்பார்ப்பு
ராமை
பெண்களின் நிலைமாற்றம்
ஆரம்பிக்கப்பட்டதி இதனை வேலைவாய்ப்பு ரூபத்திட்டம் என வர்ணிக்கலாம். இதனை காமினி கொரியா ' வேலையற்றேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் நோக்கமாகவே வரையப்பட்டது" எனக் கூறியுள்ளார். இத் திட்டத்தின்படி -
(அ) இளைஞர் விவசாயக் குடியேற்றத்
திட்டம் (ஆ) கைத்தொழில் விருத்தி (இ) விவசாய நிலம் பெருக்கல் போன்றவைகள் முக்கிய இடம் வகித்தன. இவைகளினல் அதிக வேலை வாய்ப்பு அளிக் கலாம் எனக் கூறப்பட்டது. ஆனல் கைத் தொழில்கள் யாவும் வெளிநாட்டு முதல் செறிவான உற்பத்திகளிலும், வெளிநாட்டு தொழில் நுட்பங்களிலும் அதிகளவிற்குத் தங்கியிருந்தமையினலும், எமது நாட்டு தொழில் அணிக்கு வேலைவாய்ப்பளிக்க ஊழியச் செறிவான கைத்தொழில்கள் மேற்கொள்ளப்படவில்லை. விவசாய உற் பத்தியும் நவீன தொழில் நுட்பம் பயன் பாடுகள் மனித சக்தியின் பயன்பாட்டைக் குறைத்தன. இளைஞர் விவசாயக் குடி யேற்றத் திட்டங்கள் வெற்றியளித்தாலும்
99 -

Page 126
அதிகரித்த தொழில் அணியை இத் திட் டங்கள் தாங்கிக்கொள்ள முடியாமையும், தொழில் அணியின் மனப் போக்கும் இத் திட்டத்தின் இலக்காகிய பூரண வேலை நிறைவை S26ö91 -l முடியாமையுமே காரணம் எனக் கூறலாம்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத் தின் முதல் வேலைவாய்ப்புத் திட்டம் - விவசாயப்படை
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தி ஞல் 65ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட (65 - 70) வேலைவாய்ப்புத் திட்டமும் வேலைவாய்ப்பளிக்கும் நோக்குடனேயே ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் பிர காரம் 5 வருடத்தில் 63 இலட்சம் பேர் வேலைவாய்ப்புப் பெறுவர் என எதிர்பார்க் கப்பட்டது. இத் திட்டம் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக --
(அ) விவசாயப்படை (ஆ) கைத்தொழில் பேட்டை (இ) நவீன விவசாயக் கடனும், விவ
சாய அபிவிருத்தியும்,
போன்றவைகளை மேற்கொண்டது. கைத் தொழில் பேட்டைகள் யாவும் வெளி நாட்டு மூலப் பொருளைப் பயன்படுத்தி யமையும், இதனைப் பெற போதிய அந்நிய செலவாணி இல்லாமையால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியளிக்கவில்லை. இதனல் இப் பேட்டைகளினுல் போதிய வேலை வாய்ப்பை அளிக்க முடியவில்லை. மாருக சில தனியுரிமை முதலாளிகளையே உருவாக் கியது. நவீன விவசாயக் கடன் மூலம் விவசாய அபிவிருத்தி ஏற்பட்டமை குறிப் பிடத்தக்கதாக இருந்தாலும், பெருகும் வேலை அணிக்கு வேலைவாய்ப்பளிக்கத்தக்க தாக நிலவுடமை அமையவில்லை. விவசா யப்படை ஒரளவு வெற்றி பெற்ருலும், இளைஞர்களின் மனப்பான்மையாலும், பின்னடைய வேண்டி ஏற்பட்டது. அவை கள் பின் வந்த அரசினல் கலைக்கப்பட்ட மையும், காரணமாக இத் திட்டம் பெரும் தோல்வி கண்டதுடன் பெரும்பாலான
- 1

G。 deas išsgraFr
வேலையற்றேர் தொழில் அணியையும் உரு வாக்கியது.
ஐந்தாண்டுத் திட்டம்:
மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத் தினல் உருவாக்கப்பட்ட 72 - 76 வரை) ஐந்தாண்டுத் திட்டம் வேலைவாய்ப்பளிக் கும் மிகப்பெரிய திட்டமென வர்ணிக்க லாம். இத் திட்டத்தின் ஆரம்பத்தில் வேலை யற்றேர் 54 இலட்சம் எனவும் திட்ட முடி வில் 11 இலட்சமாக மாறும் எனவும் இதற் கேற்ப வேலை வசதி அளிக்கும் விதத்தை யும் திட்டமிட்டிருந்தது.
விவசாயம் み。50,000 கைத்தொழில் I, 65,000 நிருமாணவேலை 60,000 ஏனையவை 2, 85,000
8, 10,000 பேருக்கு வேலையளிப்பதாகவும் கூறப்பட்டது. எனவே திட்டமுடிவில் 3 இலட்சம்பேர் வேலையின்றி இருப்பார்கள் எனவும் கூறப் பட்டது. இதற்கென திட்டத்தை விவ சாயப் பகுதி, கைத்தொழில் பகுதி என வகுத்து செயற்படுத்தியது.
விவசாயத்தைப் பொறுத்த அளவில் இயற்கையின் பாதிப்பும், அமுல்செய்த முறையில் உள்ள குறைபாடும், வேறு பட்ட விவசாயச் சூழலை கவனிக்கத் தவ றியமையும், விவசாயிகளுடைய பண்பாற் றல் வேறுபாட்டை உணராமையும் காரண மாக இத்துறை வெற்றி பெறவில்லை. இதேபோல் கைத்தொழில் துறையும், அரசாங்கம் உருவாக்கிய வசதிகள் எல் லாக் கிராமியக் கைத்தொழிலுக்கும் கிடைக்கவில்லை. கிராமியச் சமூகங்கள், முழுப் பொருளாதாரத்துடன் ஒரு ங்கு இணைக்கப்பட்டதாக அணுகுமுறை பின் பற்றப்படவில்லை. இதனுல் கைத்தொழில் துறையும் எதிர்பார்த்த வெற்றிபெற முடியவில்லை.
இத்திட்டத்தின்கீழ் கிராம அபிவிருத்தி தொழில்வாய்ப்புத் திட்டங்கள் :
00 -

Page 127
இலங்கையின் .
(i) இளைஞர்கள் குடியேற்றத் திட்டம். ti) கூட்டுறவு கூட்டுப்பண்ணைத்
திட்டம். ti) பிரதேச அபிவிருத்திச் சபை. (iv) ஐக்கிய நாடுகள் சபை சிறுநீர்ப்
பாசனத் திட்டம், (w) மகாவலி, உடவளவை அபிவிருத்
தித் திட்டம். . (wi) ஜனவாசாக்கள். (கூட்டு ற வுப்
பண்ணைகள் : (Vi) பாற்பண்ணைத் திட்டம். (Wi) மறுபயிர் அபிவிருத்தித் திட்டம்.
இத் திட்டங்களில் வேலையின்மையை நீக்குவது பாரதூரமாகக்குறிப்பிட்டிருந்தும் இத் திட்டங்களின் செயற்பாடுகளில் ஏற் பட்ட தவறுதல்களும், திறனற்ற முகா மையும், உறுதியற்ற மேற்பார்வையும் குறைந்த பல்னை ஈட்டித்தந்தன. அரசியல்
திட்டமிடல் செய
ora antošaFñSS5Si5s நீர்ப்பா
கீழான நிர்வாகம்
வேலைவாய்ப்பு தேசிய இளைஞர் தொழிலமர்
அபிவிருத்தி 廖磊鲁纽影 துகை நிர்ணய
வங்கி வேலைக் குழு குே
தகவல் வேலை வழங்கும் சேகரிக்கும் auias
aš8
() வேலைவாய்ப்பு அபிவிருத்தி வங்கி
இலங்கையில் உள்ள 160 தேர்தல் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பினை ஏற் படுத்துவதற்காகவும், தகவல்களை சேகரிப் பதற்காகவும், ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு வங்கிகள் நிறுவப்படும்.
(அ) தகவல் சேகரிக்கும் வங்கி (ஆ) வேலை வழங்கும் வங்கி

5. éjsius-jégsvers-r
கட்சியின் முன்னேற்றம் கருதி உழைப் பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு நிய மனம் செய்யப்பட்ட அரசியல் பிரமுகழ் களின் தவழுன நடத்தைகளினலும், அதனைக் கண்டிக்கும் ஆற்றல்வாய்ந்த உயர்மட்ட முகாமை இல்லாமையும் இத் திட்டத்தின் உரிய இலக்காகிய வேலை வாய்ப்பை அதிகளவுக்கு ஏற்படுத்தத் தவறிவிட்டது எனலாம்.
புதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள்: 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அர சைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வேலையின்மையை நீக்குவதே முக்கிய நோக்காகக் கொண்டு பல திட்டங் களை உருவாக்கியுள்ளது. பின்வரும் அட்ட வணை இதனைத் தெளிவுபடுத்துகின்றது.
ற்பாடுகள் அமைச்சு
ாசன அபிவிருத்தித் சுதந்திர வர்த்தக வலயம்
菇 虫
திட்டம்
V மகாவலி திசை களனி சிறிய நீர்ப்
திருப்பும் கங்கைத் பாசனத் திட்டம் திட்டம் திட்டங்கள்
திருகோணமலை கட்டுநாயக்கா
தகவல் சேகரிக்கும் வங்கியானது அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நிய திச் சட்டமுறையான நிறுவனங்கள், மற் றும் உள்ளூராட்சி தாபன நிறுவனங்களி லும் ஏற்படும் வெற்றிடங்கள் பற்றிய
தகவல்களைச் சேகரிக்கும்.
வேலை வழங்கும் வங்கி வேலையற்றேர் பட்டியலைப் பெறுவதுடன், அவர்களின்
10 -

Page 128
இலங்கையின் .
குடும்பநிலை, வருமானநிலை. கல்வித் தரா தரம் போன்ற தகவலைப் பெற்றுத் தகுதிக் கேற்ப வேலையைப் பெற்றுக் கொடுக்க முயற்சி எடுக்கும். இவ் வங்கிகள் மாவட்ட அமைச்சுமூலம் திட்டமிடல் செயற்பாடு கள் அமைச்சினுல் செயற்படுத்தப்படும்.
(ii) சுதந்திர வர்த்தகவலயம் (கட்டுநாயக்கா) : கட்டுநாயக்கா விமானத் தளத்தைச் சுற்றி வரியற்ற சுதந்திர வர்த்தகவலயம் 1978ஆம் ஆண்டில் அமைக்கப்பட இருக் கின்றது. இப் பிரதேசத்துக்குள் வெளி நாட்டவர் தமது முதல், தொழில்நுட்பம், நிர்வாகம் போன்றவற்றை இங்குகொண்டு வந்து, இங்கு கைத்தொழில் நிலையங்களை நிறுவி, இங்குள்ள ஊழியத்தையும், மூலப் பொருட்களையும் பயன்படுத்திப் பொருட் களை உற்பத்திசெய்து மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு இடமளிக்கும் திட்டமாகும். இத் திட்டத்தினுல் அந்நியச் செலாவணி சேமிப்பதுடன், கப்பல் தங்கும் கட்டணம், உல்லாசப்பிரயாணக் கைத்தொழில் போன் றவை விருத்தி பெறுவதுடன் வேலையற்ற தொழில் அணியில் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதோடு மறைமுகமாக 80,000 பேருக்கும் வேலைவாய்ப்பளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
(ii) மகாவலி திசைதிருப்பும் திட்டம் :
இத்திட்டம் 30 ஆண்டுகளில் பூர்த்தி செய்வதாகப் போடப்பட்ட நீண்டகாலத் திட்டத்தை இன்னும் 5 வருடத்துக்குள் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள் ளது. இத் திட்டம் பலபயன் தரும் திட்ட மாக இருப்பதனுல், பின்வரும் வழிகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாகஉள்ளது
(1) குடியேற்றத்திட்டம் (i) நீர்ப்பாசனத் திட்டம் (ii) வலு உற்பத்தி (iW) சிறுகைத்தொழில் - விவசாய
அடிப்படை
- (

சி. சிறீஸ்கந்தராசா
(அ) சீனிக் கைத்தொழில் (ஆ) புகையிலை பீடிக் கைத்
தொழில் (இ) காகிதக் கைத்தொழில் (v) safTub
(அ) நெல் உற்பத்தி (ஆ) உபஉணவுப்பயிர்ச்செய்கை (vi) மகாவலி திசை திருப்பு வேலைகள் போன்றவைகளின் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தலாம். மகாவலி திசைதிருப்பு வேலைகளுக்கு மனிதசக்தியைக் கூடுதலாகப் பயன்படுத்துவதின்மூலம் பெருந்தொகை யான வேலைவாய்ப்பை அதாவது ஏறத் தாள 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கமுடியும் எனக் கூறப்படு கின்றது.
(iv) ஏனைய திட்டங்கள்:
வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதற் காக இலங்கையின் பல்வேறுபாகங்களிலும் தேசிய இளைஞர்சபை வேலைக்குழுக்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இக் குழுக்கள் பொருளாதார அபிவிருத்தி, நீர்ப்பாசன பெருந்தெரு வேலைகள் போன்றவற்றிலும், கலை, கலாச்சாரப்பணி களிலும் ஈடுபடும். இதற்கு முன்னேடியாத மாத்தறை மாவட்டத்தில் 7 தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டு, தற் போது பெரும் வெற்றிபெற்றும் வரு கின்றது.
ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் தொழிலமர்த்துகை நிர்ணயக்குழு அமைக் கப்படவுள்ளது. இக்குழுவில் உதவி அர சாங்க அதிபர், தொழில்வகை விசேட அறிவு பெற்ற ஒருவர், தொழில் அமைச் சின் பிரதிநிதி போன்ற மூவர் அங்கம் வகிப்பர். இவர்கள் திட்ட செயற்பாட்டு அமைச்சினல் நியமிக்கப்படுவர்.ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் 1000 பேருக்கு வருடாவருடம் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்படும். ஆசன எண்ணிக்கைக் கேற்ப இவ்வெண்ணிக்கை வேறுபடும். இவ் வாறு வேலைவாய்ப்பளிக்கும்போது இப்
)2 -

Page 129
இலங்கையின் ..
பகுதி தேசியப் பேரவை உறுப்பினரின் ஆலோசனையும்பெறப்படும். இக்குழு மார்ச் ஆந் திகதியிலிருந்து இயங்கும். 18-40 வயதுக்கிடைப்பட்டோரில், குடும்ப அடிப் படையில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கா வது அரசாங்கத்தொழில் பெற்றுக்கொடுக் கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இக்குழு தொழிற் தரத்தை வகைப்படுத்தினலும் விண்ணப்பதாரிகள் தமது விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் வேலையின்மையை நீக்குவதோடு விருப்பமான வேலையையும் பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் 1978ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின்மூலம் வேலையற்ருேராக, வேலை அபிவிருத்தி வங்கியில் பதிவுசெய்யும் ஒவ்வொருவருக் கும், வேலையின்மை மானியமாக ரூ. 50/- பணமாக வழங்கப்படும் திட்டமும் அமு ாைக்கப்பட இருக்கின்றது.
இத் திட்டங்கள் யாவும் இலங்கை பின் மாவட்டங்கள் ரீதியாகப் பரவ லாக்கி, மாவட்ட அமைச்சர்களின் கீழ் ஒழுங்குபடுத்தவும். இப் பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்தாசை யுடன் நிறைவேற்றவும், திட்டமிடல் செயற்பாடுகள் அமைச்சின் திறனுன முகா மைக் கட்டுப்பாடுகளின் மூலம் குறித்த இலக்கினை நிறைவேற்றவும் திட்டமிடப் பட்டுள்ளது. வேலை வாய்ப்புத் திட்டங்கள் பற்றிய திறனுய்வு :
இலங்கையின் பொருளாதாரம், விவ சாய நடவடிக்கைகளின்மூலம் கூடிய தேசிய வருமானத்தைப் பெறுகின்றது. கைத் தொழில் வகிக்கும் பங்கு மிகவும் குறை வாக (14%)க் காணப்படுகின்றது. அந் நிய, காலனித்துவ ஆட்சிக் காலத்தி லிருந்து உருவாகிய பொருளாதார முறை யானது ஒருபுறம் நிலச்சுவாந்தார்கள், தொழில் அதிபர்களையும், மறுபுறம் பல இலட்சக்கணக்கான அன்ருடம் உழைத்து உண்டு வாழும் பாட்டாளி வர்க்கத்தினை

so. S5 dicsitivs
யும் உருவாக்கி இரண்டு வேறுபட்ட வர்க் கப் பொருளாதாரமாக உருவாக்கியுள் ளது. தேர்தலுக்கு தேர்தல் மாறி மாறி ஆட்சிப்பீடமேறிய அரசியல் கட்சிகளின் கொள்கை முரண்பாடு காரணமாக பொருளாதார முன்னேற்றம் பல கஸ்ட நிலைகளுக்குள்ளாகி வளர்ந்து கொண்டி ருக்கின்றது. கடந்த 1961-71 ஆண்டு களுக்கிடையில் பொருளாதாரம் 4% வளர்ச்சியை காட்டியது. ஆனல் அதி கரித்து வந்த வேலையில்லாதோருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதானல் எமது பொருளாதாரம் 7% வளர்ச்சியையாவது அடையவேண்டும். இவ்வாறன வளர்ச்சி யின்மைதான் வேலையின்மை அதிகரித் தற்கு காரணமெனக் கூறலாம். 1971ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளின் சீர் கேடும், இயற்கைப் பாதிப்பும் பொருளா தாரத்தை தேக்க நிலைக்குக் கொண்டுவந் துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் மந்த அல்லது தேக்க நிலையிலிருக்கும் போது, வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித் துக் கொண்டே இருக்கின்றது. இலங்கை யின் வேலையின்மையினை நோக்கும்போது, 1 அன்று தொடக்கம் இன்று வரை
வேலையில்லாதிருப்போர்
(10 இலட்சம் பேர்கள்) 2. இயற்கையான வருட அதிகரிப்பு
(1,25,000 பேர்கள்}
3. தகுதி ஆற்றல், திறமைக்கேற்ப வேலை பெருதோர் என வகுக்க
69). இவற்றினை மனதில் கொண்டே வேலை வாய்ப்புத் திட்டங்களை, நீண்ட காலப்
பயன் கருதியும், குறுகிய காலப் பயன் கருதியும் இடவேண்டும். திட்டங்கள் இடும் போது, உயர்மட்டத் திட்டங்களாக இருக் காமல் சமுதாயத் திட்டமாக இருக்க வேண்டும்; ஆனுல் 65 - 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட விவசாயப் படையும்,
حبس 03|

Page 130
orasady .........
70 - 77 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டங் களும் வேலை வாய்ப்பு அளிக்கும் நோக் குடன் ஆரம்பிக்கப்பட்டும், அவைகள் பல வீனமான முகாமையினல் தோல்வி கண் டன. இத்திட்டங்களின் தோல்விக்கு பிர தான காரணங்களாக, திட்டமிடலில் அனுபவமின்மை, செறிவான தொழில் வாய்ப்பளிக்கும் தொழில்நுட்பம் பயன் படுத்தாமை, பலவீனமான நிர்வாகம் , உயர்மட்டப் பிழையான மதிப் பீடு கையாளப்பட வேண்டிய நுணுக்கங்களில் பரிச்சயமின்மை போன்றவைகளைக் குறிப் பிடலாம். எனவே கடந்த திட்டங்களின் அனுபவத்தைக் கொண்டு. இன்றைய திட்டங்களும் இத்தகைய நிலையை அடை யாது பாதுகாக்கப்பட வேண்டும்.
எமது வேலைவாய்ப்புத் திட்டங்கள், கிராமிய ரீதியில் இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டங்களாக உருவாக்கப்பட வேண்டும். இன்றைய பிழைப்பூதிய விவசாயச் செய் கையை, அரசு இயன்றவரை சீர் செய்து ஒரு நிரந்தர விடிவு காணவேண்டும். அப் போது விவசாயிகளின் வருமானம் உயர் வடையும். இதனுல் மக்களின் நுகர்வுப் பொருள்களுக்கான கேள்வி உயரும். இத சூல்ை கைத்தொழில் உற்பத்தி பெருகு வதற்கு இடமுண்டு. ஆனல் இறக்குமதி யைக் கட்டுப்படுத்தினுல் மட்டுமே உள் நாட்டு உற்பத்தி பெருக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையே உலக வங்கித் தலைவர் மக்னமாரா "விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து, சந்தை வசதியை ஏற்படுத்திய பின்பே தானுகக் கைத்தொழி லைப் பெருக வைக்கமுடியும் ' எனக் கறிஞர். X
கல்வி நிலையை மாற்றியமைத்து எமது பொருளாதாரத்துக் கேற்ப, தொழில் கல்வியைப் போதிப்பதன்மூலம் அதிகரித்து வரும் படித்த இளைஞர்களைக் குறைக்க லாம். இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைய புத்தகக் கல்வி ஒருபோதும் பயன்படாது. இக் கல்வியைக்கொண்டு வெளிநாடுகளில் வேலை பெறலாம் எனக்
- l(

சி. சிறீஸ்கந்தராசா
கூறப்பட்டாலும் இது எவ்வளவுதூரம் வெற்றிதரும் எனக் கூறமுடியாது. தாய் மொழிக் கல்வி கற்ற பெரும்பான்மையோ ருக்கு ஆங்கில அறிவு மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதனல் வெளிநாட்டில் வேலைபெறுவதும் பெரும் கஷ்டமாகும். தொழில் கல்வியுடன் ஆங்கிலப் பாடத் தையும் கட்டாய பாடமாக்கவேண்டும்.
ஏற்றுமதி வர்த் தக த் தை மாற்றி யமைத்து செல்மதி நிலுவையைச் சாதக. மாக்குவதுடன், கூடிய வெளிநாட்டுச் செலாவாணியையும் உழைக்க வேண்டும். இதற்கு எமது பாரம்பரிய ஏற்றுமதிகளாக தேயிலை, தென்னை, றப்பர் பொருட்களை இருந்த நிலையில் பேணி வருவதுடன், அப் பொருட்களிலிருந்து கைத்தொழில் உற் பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும். அத்துடன் பாரம் பரிய மற்ற கைத்தொழில்களைப் பெருக்கி அதன் உற்பத்திப் பொருட்களை யும் ஏற்றும்தி செய்யவேண்டும். வெளி நாட்டுச் சர்வதேச நாடுகளின் ஒப்பந்தங் களையும், நட்புறவினையும் ஏற்படுத்துவதன் மூலம் ஏற்றுமதிக் கைத்தொழிலைப் பெருக் குவதோடு, இயன்றளவு இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கைத்தொழில் நாடாக மாற்றலாம். இதனுல் வேலை யின்மை முற்ருக நீங்கும்.
இலங்கையில் இனப் பாகுபாட்டை முற்ருக நீக்கித் தேசப்பற்றுணர்ச்சியை அதிகரிக்கச்செய்து, மக்களைக் கடினமாக உழைக்கத் தூண்டுவதும், தாம் விரும்பிய தொழில், அந்தஸ்துள்ள தொழில் என் பதை விடுத்து எந்தத் தொழிலையும் செய் வதற்குரிய மனப்பான்மையை ஏற்படுத்து வதும் வேலையின்மையை நீக்குவதற்கு மிகவும் முக்கியமானதாகும். இதனையே சியார்ஸ் " மக்களின் மனநிலையை மாற்றிய மைக்க சூழ்நிலையை மாற்றியமைக்க வேண் டும் ** என்று கூறினர்.
இலங்கையின் பயனுள்ள பொருளா தாரக் காரணியாகிய மனிதவளம், பய னற்ற முறையில் இருப்பது பெரும் கவலைக்
حرم 4{

Page 131
இலங்கையின் .
8 a 4 b e
கிடமானதொன் ருகும். இது சமூகரீதியில் பெரும் பழுவாகவும், அரசியல் ரீதியில் ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. அரசாங்கங்கள் உருவா க் கி ய வேலை வாய்ப்புத்திட்டங்கள் தோல்வியடைந்தன. மறுகணம் அரசாங்கமே மாற்றியமைக்கப் படுகின்றது. இப்பிரச்சினை இன்று அல்லது நாளையுடன் முற்முக நீங்கும் பிரச்சினை பல்ல. நாளுக்குநாள் வேலை தேடுவோர்
உசாத்துணை
1. Macro Economics - T. F. 2. பொருளாதார வளர்ச்சி பற்றிய கட் 3. மத்தியவங்கி அறிக்கைகள் 71, 74, 7 4. பொருளியல் நோக்கு 5. ஐந்தாண்டுத் திட்டம் (72 - 76)
6 வரவு செலவுத் திட்டங்கள் {71 - 77 7. மார்காநிறுவன அறிக்கை 8. புள்ளிவிபரத் திணைக்கள ஆண்டறிக்கை 9. அரசாங்கத்துறை முன்னேற்றம். - 1
10. கணக்காளர் - ஏடு.
முன்னுரிமைப்
பங்குகளை மீட்கும்போது முற்ருக முடியும். மீட்கும்போது:
1. புதிய பங்குகள் - மீட்கத்தக்
வழங்கி மீட்கலாம். 2. இலாபத்தில் இருந்து - வேண் நிதிக்கு மாற்றி - மீட்கலாம். 3. பொது ஒதுக்கத்தில் இருந்து 4. இவை மூன்றின் மூலமாகவும்
வி - 14 -

சி. சிறீஸ்கந்தராசா
அதிகரித்துக்கொண்டே இருப்பர், இதற். கேற்ப எமது பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கவேண்டும். வேலைவாய்ப் பினை ஏற்படுத்தக்கூடிய விதமாகப் பொரு ளாதாரம் நிலையிலிருந்து பிறழாமல் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்க, அர சாங்கம் தக்க ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நூல்கள்
. Durnburg die DM. MC Dougall டுரைகள் M. K. சுப்பிரமணியம்
A
usopr}
973
MAMMAM
பங்கு மீட்டல்
அழைக்கப்பட்ட பங்குகளையே மீட்க
5 முன்னுரிமைப் பங்குகள் தவிர்ந்த -
டிய தொகையை மூலதன மீட்பு ஒதுக்கு
ஒதுக்கு நிதிக்கு மாற்றி - மீட்கலாம். மீட்கலாம்.
--سمیہ۔ 05

Page 132
own-lowr opeos Jeezeq pue19 *0;
○○ 3 山NHE%」
: 01 14s! A SINAWHvÐ NEIRICITIHɔ e
SLRMOHS O
SLRIIHS ©SYIOVIS O
• 3x IIInokseqAA ouļų, sub əui Ilos moĂ
ThO Å è: O-, ElèJ V BAVA – Sn èlO-. ElòAV DO A
: uouy sụuəuĮĮduoɔ ŋsƏq əų) qņIAA
*ig*3
 

·noÁ əŋAu] uus !ssuno L ueretun XI
qNyIs sna əų, uolų sprek OSI øouostoauoɔput Luo-Iwoɔ -1-1v HLIWA sWOO?! Nèd:HClOWN
} : səųsỊAA ĮSƏq əų) qļļAA
*

Page 133
ட கணக்கியல் -
கணக்கீடும் கணக்கீட்டுக்
8. (up(5G-55, A. C. A., A. C. M. A. பிரதிப் பணிப்பாளர் (ஒழுங்குபடுத்தல்) பொதுத் திறைசேரி பகுதிநேர விரிவுரையாளர் வித்தியோதய வளாகம்
- 0

கற்பிதங்களும்
“கணக்கீடு என்பது ஓரளவாவது நிதியி யல்பு பொருந்தியதான கொடுக்கல்வாங்கல் களையும் நிகழ்ச்சிகளையும்,காசினை தனித்திற அலகாகக் கொண்டு, விளைவுவளக்கூறுடைய வகையிலே பதிவு செய்தும் வகுப்பீடு செய் தும், சுருக்கியும் காட்டி அதனுடைய முடிவுகளை விளக்கிக் காட்டுவதாகும் " என உறுதிப்படுத்திய பொதுக் கணக்கா ளர் அமெரிக்க நிறுவகம் (A. . C. P. A.} வரைவிலக்கணம் கூறுகின்றது. "விளைவு வளக்கூறுடைய " எனும்போது அறிக்கை எழும்காலத்துச் சமூகத்தின் பொருளாதார சட்ட அரசியல் நிலைமைகளுக்கு இணங்கிய வகையில் அறிக்கையைப் பெறுவோரது நோக்கங்களுக்கேற்ப பெறுவோருக்கு விளை வுவளக் கூறுடையதாக இருக்கின்றமையே கருதப்படுகின்றது. கணக்கீட்டுக் கற்பி தங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கற்பிதங்களே. அவற்றின் அடிப்டையிலேயே நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை ஏற்றுக்கொள்ளப்படுவதும் பயன் படுத்தப்படுவதும் பாவனை செய்யப்படுவ தன்றி குறிப்பாகவோ சுட்டிப்பாகவோ கூறும் வழக்கம் இல்லை.
கணக்கீட்டுமுறை கி. மு. 4500 வரை பிலேகூட வழக்கிலிருந்ததெனக் கூறப்படு கிறது. ஆதியிலே கணக்கீட்டுப் பதிவுகளை எகிப்தியர், கிரேக்கர், உரோமர் முதலான முற்கால ஐரோப்பியர்களும் எழுதிவந் திருக்கிருர்கள். இந்தப் பதிவுகள் குறிப்பு நிலைப் பதிவுகளாகும். இப்படிப்பட்ட கணக் குகள் குறுகிய காலப் பங்குடமைக்கும் வர்த்தக முயற்சிகளுக்குமே மேற்கொள் ளப்பட்டு வந்தன. 12ஆம், 13ஆம் நூற் முண்டுக் காலத்திலே முகவர் வாயிலான கொடுக்கல் வாங்கல்கள் அபிவிருத்தி பெற்று, ஏற்றுமதிகளும் கடன்வசதிக்

Page 134
கொடுக்கல் வாங்கல்களும் அதிகரித்து வந் தன. இந்த நிலைமைகள் கொடுக்கல் வாங்கல்களில் இரட்டை விளைவினையும் இரட்டைப் பதிவு முறியினையும் ஏற்படுத் தின. கணக்குகள் யாவும் முற்பணக் கொடுப்பனவுகளையும் அட்டுறுகளையும் எடுத்துக் கருதாமல் காசு வரவுகள் கொடுப்பனவுகள் அடிப்படையிலேயே வைக்கப்பட்டன.
இக்கணக்கீட்டுப் பதிவுகள், தனித்த ஒருவரோ, பலர் கூடிய குழுவினரோ மேற்கொண்டு நடாத்திவரும் முயற்சி இலாபம் காட்டுகின்றதா, வருமதிகள் பெறப்பட்டதா, செல்மதிகள் கொடுக்கப் பட்டதா என்பவற்றை நிர்ணயிப்பதற்காக எழுதிப் பேணி வைக்கப்பட்டு வந்தன. ஒரு முயற்சியில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் யாவற்றையும் காட்டும் பதிவு களைக் கொண்டனவாயும் அம் முயற்சியினை நடாத்துவோரோ முயற்சியின் சொந்தக் காரரோ அறியவிரும்பும் செய்திகளைச். சுருக்கமாகக் காட்டுவனவாயும் கணக்கு ஆவணங்கள் அமைந்திருந்தன. வர்த்தக தொழிற்பாடு விருத்திபெற்றுப் பெருகி வரவர கொம்பனிகள், கூட்டுத்தாபனங் கள் போன்ற வெவ்வேறு உருவிலே வர்த் தகத் தாபனங்கள் உருவாகி வந்தன. இவற்றிலே அக்கறை கொண்டோர் உரிமை யாளருடன் கடன் வழங்குவோர், வங்கி யாளர்கள், முதலீடு செய்வோர் உட்பட்டு வந்தனர். இத்தாபனங்களின் முகாமை யாளர்களும் உரிமையாளர்களும் வேறு பட்டவர்களாவர். முகாமைப்பணி ஒரு கூட்டத்தினராலேயே கொண்டு நடாத்தப் படுகின்றது. நிகழும் கொடுக்கல் வாங்கல் கள் முழுவதையுமே முற்ருகப் பதிவு செய்து அவற்றை பொழிப்பாக சுருக்கி அக்கறையுடையோருக்கு வழங்குவது முகா மையாளரின் கடமையாகும். முகாமை யாளரின் கணக்களி பொறுப்புக்கள் கணக்கு வாயிலாகத் தீர்க்கப்படுகின்றன. கணக் கீட்டின் நோக்கமே கட்டுப்பாடுதான்.
 

க. முருகேசு
கொடுக்கல்வாங்கல்களைப் பதிந்து வைக்கும் முறை காலப்போக்கில் அபி விருத்தி பெற்று, திறம்பட்ட கட்டுப்பாட் டினை உறுதிப்படுத்திக் கொள்ளும்வகையில் விரிவுபெற்றுள்ளது. இவ்வகையான நட வடிக்கைகளைப் பதிவுசெய்யும்போது பல கற்பிதங்கள் (Assumptions) கையாளப்படு கின்றன. இவற்றைப் பயன்படுத்தி ஏற்றுக் க்ொள்ளும்போது இவையாவும் முறைக ளாகவும் நடைமுறைகளாகவும் வகை முறைகளாகவும் ஆகின்றன. நடவடிக்கை களைப் பதிவுசெய்தலில் ஈடுபட்டோரினல் வழக்கத்திலிருந்து இம் முறைகளும், நடை முறைகளும் வகைமுறைகளும் உருவாக்கப் படுகின்றன. நடவடிக்கைகளைப் பதிவு செய்தலில் இவர்கள் எப்போதும் இம் முறைகளைக் கையாளுவார்கள். எனவே இவை நாளடைவில் மரபொழுங்குகளாக வும் கோட்பாடுகளாகவும் மலர்ச்சி பெறு கின்றன. குறிப்பாகக் கூருமலே இம் மர பொழுங்குகளினதும் கோட்பாடுகளினதும் பயன்படுத்தல் எப்போதும் பாவனை செய் யப்படுகிறது. வழக்கிலிருந்து படிப்படியாக உருவாக்கப்பட்டு மரபொழுங்குகள்,கோட் பாடுகள் என்று கூறப்படும் கணக்கீட்டு கற்பிதங்களே கொடுக்கல் வாங்கல்களைப் பதிவுசெய்யும் விதித்தொகுப்பாக அமை கிறது. இவை கருதுகோள்கள் அல்லது கணக்கீட்டுக் கோட்பாடுகள் என்றும் சொல்லப்படும். -
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகம் உட்பட்ட சர்வதேச கணக்காளர் சபையின் கருத்துப்படி அடிப்படை கணக் கீட்டுக் கற்பிதங்கள் பின்வருவானவாகும்: (1) செயல்படு அமைப்புக் கருக்கோள், (2) மாருநிலைக் கருக்கோள், (3) அட்டுறுக் கருக்கோள் செயல்படு அமைப்புக் கருக்கோள் என்பது, ஒரு வணிகம் காலவரையின்றித் தொழிற் பட்டுக்கொண்டிருக்கும் என்றும், கொடுக் கல் வாங்கற் கணக்கெடுத்து மூடிவிட வேண்டிய நோக்கமோ அவசியமோ இல்ல
حسی. . 08

Page 135
auvigG
2 & 0 0 . 8 e
யென்றும், முக்கியமான அளவுக்கு தொ திற்பாட்டு எல்லையினைச் சுருக்கிக்கொள் ரும் கருத்தோ இல்லையென்றும் கொள்ளு கதாகும். இக் கருக்கோள் இருப்புச் சொத் துக்களின் பெறுமான மதிப்பீட்டினைட் பாதிப்பதாகும், நடைமுறைச் சொத்துக் கள் தேறிய காசாக்கற் பெறுமானத்தில் கணிப்பிடப்படுகின்றது. நிலையான சொத் துக்கள் வரலாற்றுக் கிரயத்திலிருந்து தேய் கானம் சழித்துக் கணிக்கப்படுகின்றது.
மாரு நிலைக் கருக்கோளின் படிநிதி கற்றுக்களைத் தயாரிக்கும்போது கணக் பேட்டுக் கொள்கைகள் அதாவது கையா எப்படுகின்ற மூலங்களும் முறைகளும் காலத்துக்குக்காலம் மாருமல் ஒரே படித் தானவையாய் இருத்தல் வேண்டும். உருத் திரிபினைத் தவிர்த்துக்கொள்வதற்காகவும் ஒரு காலத்துடன் மற்ருெரு காலத்தை ஒப்புநோக்கிப் பார்ப்பதற்தாகவுமே இப் படிச் செய்யப்படுகிறது. எடுத்துக்காட் டாக ஒரு வணிகத் தாபனம் நிலையான சொத்துக்களுக்கு நேர்கோட்டு முறையிலே தேய்மான ஏற்பாடு செய்துவந்தால் அப் படியே தொடர்ந்து செய்தல்வேண்டும். மதிப்பிறக்கத்திற்கு ஏற்பாடு செய்யும் முறையினை மாற்றிக் கொண்டால் - எடுத் துக் காட்டாக குறை மீதி முறையினைக் கை பாண்டால்-தேறிய முடிவு திரிபுபட்டு முந் திய ஆண்டுகளின் முடிவுகளுடன் ஒப்பு தோக்கிப் பார்க்க இயலாது போய்விடும்.
அட்டுறுக் கருக்கோளின்படி வருமா எங்கள் ஈட்டப்படுகிறதென்றும் செலவுகள் இறுக்கப்படுகிறதென்றும், கொள்ளப்படு கிறது. ஒரு காலத்தில் ஈட்டிய வருமானத் தையும் இறுத்த செலவுகளையும் தொடர்பு கொண்டே அதே கால நிதிக் கூற்றுக்களில் பதியப்படுகின்றன. குறித்த ஒரு காலத் திலே ஈட்டிய வருமானங்கள் யாவும், அக்காலவெல்லையிலே ஈட்டிய ஆனல் பெறப்படாத வருமானங்களும் கணக் கிலே சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. அதேபோல அக்காலவெல்லையிலே இறுத்த செலவுகளும், இறுத்த ஆனல் தீர்க்கப்படா தனவும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

க. முருகேசு
பின்வருவன உட்பட பிறகருக்கோள் களும் உண்டு. உருப்படிக்கருக்கோள் - ஒரு நிதி யறிக்கை தயாரிக்கப்படும் பொழுது அது ஒரு தாபனத்தினை அல்லது தொழிற்பாட்டினைப் பற்றியதாகவே இருக்கும். உதாரணமாக ஒரு தனி வணிகர், ஒருகொம்பனி, ஒரு கூட்டுத் தாபனம் அல்லது ஒரு தாபனத்தின் கிளை போன்றவையாகும். அதேபோல் ஒவ்வொரு கணக்கீட்டு ஆவணத்தொ குதியும் ஒரு தொழிற்பாட்டினைப் பற்றியதாகவே இருக்கும். இக்கருக் கோளின்படி அப்பொருளாதார தொ ழிற்பாட்டினைச் சுற்றி ஓர் எல்லை இருக் கிறதாகப் பாவனே செய்யப்படுகிறது. இது குறிப்பிட்ட நோக்கங்களை நிறை வேற்றுவதற்காக ஈடுபடுத்தப்படும் சாதனங்களின் ஒரு சேர்க்கையாக, அதன் சொத்துக்களில் உரிமையாளர். முதலீட்டாளர், கடனளிகள் முதலி யோரின் உரிமையுடன் கருதப்படு கிறது. கணக்கீட்டு உருப்படியானது சட்டப்படியான உருப்படிகளுடன் கட் டாயமாக ஒத்திருத்தல்வேண்டும்என்ற நியதியில்லை. கணக்குக்காலம் - பொருளாதார தொழிற்பாடுகளின் நிலை பேற்றுக் காலத்துக்கு எல்லே கூறமுடியாது. அவை தொடர்ச்சியாக நீண்ட காலங் கள் செயற்படுகின்றன. ஒரு உருப் படியின் தொழிற்பாடுமுடிந்த பின்பும் அந்த உருப்படி எவ்வகையான பொரு ளாதார தொழிற்பாட்டினைப் புரிவதை நிறுத்தியதின் பின்புமே அதன் உண் மையான பெறுபேற்றை அறியமுடியும் கட்டுப்பாட்டுக் காரணங்களுக்காகவும் சட்டப்படி செய்யவேண்டியவைகளுக் காகவும் தொழிற்பாட்டின் நிலைபேற் றுக்காலம் விருப்பப்படி காலங்களாகப் பகுக்கப்படுகின்றது. சாதாரணமாக நிதி அறிக்கைக்கு இது ஒரு வருடமா கும். இக்கருக்கோள் ஒரு கால எல்லை யாக அமைகிறது.
صس 109

Page 136
கணக்கீடும் .
நாணயமாற்று விலைக்கருக்கோள் - காசு ஒரு பொது அளவையாயும், மாற்று ஊடகமாகவும் இருப்பதஞல் நடவடிக்கைகள் யாவும் அவை நிகழும் போதுள்ள மாற்று விலைகளின் அடிப் படையிலே பதிவு செய்யப்படுகின்றன. இக் கருக்கோள் காசு வாயிலாக ஒரு நடவடிக்கையின் அளவை ஏற்படுத்து கின்றது. கொடுக்கல் வாங்கல்கள் அவை நிகழும்பொழுது காசு வாயி லாக நிர்ணயிக்கப்பட்ட அளவைக ளின் அடிப்படையிலே புத்தகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதனை வரலாற்றுக் கருக்கோள் எனவும் கூறலாம்.
சமத்துவ கொள்வனவு வலுக்கருக் கோள்-இக்கருக்கோள் காலத்துக்குக் காலம் காசின் பெறுமதி மாற்ற மடைவதில்லை எனப் பாவனை செய் கிறது. நடவடிக்கைகள் காசின் முகப் புப் பெறுமதிப்படியே பதிவு செய்யப் படுகின்றன.
புறநோக்குக் கருக்கோள்-இந்த மர பொழுங்கின் கீழ் நிதியறிக்கைகள், சரிபார்க்கக் கூடிய சான்றுகளை அடிப் படையாகக் கொண்டிருத்தல் வேண்டு
மென்பதுடன் இயன்றவரை 6תעשי
லாற்று விலைகளே உபயோகிக்கப் படல் வேண்டும். எடுத்துக்காட்டாக நிலையான சொத்துக்கள் கொள்விலை யில் மொத்தத் தேய்மானம் கழித்தே காட்டப்படுகின்றன. தேறக்கூடிய பெறுமதிகளை நோக்காமலே இருப்பு களும் கொள்விலைகளிற் காட்டப்படு கின்றன. மதிப்பீடு தேவைப்படும் பொழுது அது கிடைக்கக் கூடிய சகல சான்றுகளின் அடிப்படையிலும் செய் பப்படல் வேண்டும். இது அறிக்கை கள் எச் சார்புமின்றி இருப்பதை இய லச் செய்யும். அப்படிப்பட்ட அறிக் கைகளை, அறிக்கையைத் தயாரித்தவ ரல்லாத த குதி வா ய் ந் த ஒருவர் தனிப்பட்ட முறையில் சரிபார்த்து ஆய்வு செய்யலாம்.
பாதுகாப்புக் கருக்கோள் (Conservatism) - இருக்கருக்கோளின் கீழ் உள்ள படியான சொடுக்கல் வாங்கல்கள் பூர்த்தி செய்யப்படாமலிருந்து அல் லது பெறுபேறுகள் தெரியாமலிருந்து
கணக்கீட்டுத் தேதியில் அவை மதிப்
-

க. முருகேசு
பிடப்படுவதற்கு இருக்கும் நிலைமை களில் சாத்தியமான நட்டமொன் றிருந்தால் அந்த நட்டம் கணக்கிற் கெடுத்துக்கொள்ளப்படும். ஆணு ல் எந்த இலாபங்களும் கணக்கிற்கெடுத் துக் கொள்ளப்படமாட்டாது. நட்ட மானது பல பெறுமதிகளில் மதிப்பிடப் படுமிடத்து ஆகக்கூடிய பெறுமதித் தொகை தெரிவுசெய்யப்படும். அது இலாபமாக இருக்குமிடத்து ஆகக் குறைந்த பெறுமதி தெரிவுசெய்யப் படும். இது முன்மதிக் கருக்கோள் (Prudence Concept) 6T60Taylh960.pdist படுகின்றது.
7. வெளிப்படுத்துதல் - எந்த அறிக்கை களிலும் அல்லது முதனிலையாக வெளி யிடப்பட்ட நிதி அறிக்கைகளில், வெளிப்படுத்தப்படா ம லிருந்தால் அறிக்கையைப்பற்றித் தவருகப்புரிந்து கொள்ளும் நிலைக்கு இட்டுச்செல்லக் கூடிய முக்கியமான தகவல்கள் யாவும் வெளிப்படுத்தல்வேண்டும்.வெளியிடப் பட்ட அறிக்கைகள் தொடர்பிலான கம்பனிச்சட்டத்தின் தே  ைவகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். 8. பொருட்கூற்றுக் கருக்கோள் - பிரதி நிதித்துவப்படுதலைத் திரிபுபடுத்தக் கூடிய அளவிலானவைகளும், மதிப் பீட்டினையும் தீர்மானங்களையும் பாதிக் கக்கூடியவைகளுமான விட யங் கள் வெளிப்படுத்தப்படல் வேண்டும். உதா ரணமாக கையிருப்புக்களின் பெறு மான மதிப்பீட்டுக் கொள்கையானது" மாற்றப்பட்டு தேறிய பெறுபேற்றின் மீதான தாக்சம் கணிசமான அளவின தாகவிருந்தால் மதிப்பீட்டு அடிப் படை மாற்றப்பட்டதையும் அம் மாற் றத்தின் தாக்கம் பற்றியும் வெளிப் படுத்துதல் வேண்டும். இக் கருக்கோள்கள் யாவும் கணக்கீட் டின் அமைப்பிற்கான ஏற்பாடாகவும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக் கீட்டுக் கோட்பாடுகளாகவும் அமைகின் றன. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட் டுள்ள இந்தக் கணக்கீட்டுக் கோட்பாடு கள் கணக்கீட்டுக் கொடுக்கல் வாங்கல் களைப் பதிவு செய்யும் முறையிலும் அக் கறை யுடையவர்களுக்கு நிதி யறிக்கை களைச் சமர்ப்பிப்பதிலும் பின்பற்றப்படு கின்றன.
C -

Page 137
With the best Wishes
from
Ambal Trade Centre 129, Old Moor Street,
COLOMEBO-12
A
With the best wishes from :
Importers
&
General Merchants
Wijaya Trading Agency 229, 5th Cross Street,
COLOMO-11
Cables : "Nagammal' Phone. 33864

With the best Compliments from
ESESCEE (Ceylon) Ltd. 169, Second Cross Street,
COLOMEBO— 1 1
T”Phone ፤ 29040
வித்தியோதயம் சிறப்புடன் மலர எமது வாழ்த்துக்கள்!
亨
சகலவிதமான புடைவைத் தினுசுகளையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் வழங்குபவர்கள்
கணேஸ் ரெக்ஸ்ரைல் 81-83, பிரதான வீதி, கொழும்பு-11

Page 138
எமது நல்
உள்ளூர் விளைவுப் பொரு விற்றுக் கெ
அத்துட உள்ளுர் அரிசி, நவதானியப் ெ பெற்றுக்ெ
ஆனந்தா ஸ்ரோர்ஸ் 1 3O, DAM COLOM
போன் : 26856
ருேயல் டி
PHONE3
 

லாசிகள்!
ட்கள் கூடிய கமிஷனுக்கு ாடுக்கப்படும்
i |பாருட்களையும் தேவைக்கேற்பப் 566T60s).
p
& Anantha Stores
STREET MSO-12
ஸ்பென்ஸறி
27.JAFFNA

Page 139
- பொருளியல்
பொதுத்துறை நிறுவனங் விலையிடற் கொள்கைகள்
கே. ஏ. முனசிங்க b. Sc. (Econ.); M.A., Dip, in Dev. Admin, பதில் பீடாதிபதி வணிக, முகாமைக் கல்விப்பீடம்
வித்தியோதய வளாகம்
வி - 15 -

களில்
இக்கட்டுரையின் தலைப்பு பொதுத் துறை நிறுவனங்களில் விலையிடற் கொள் கைகள் சம்பந்தமானதாகும். பொருளியல் சார் முகாமைத்துவத்தின் ஒரு அம்ச மாகவே விலையிடல் உள்ளது. எனவே இந் நிறுவனங்களின் ஏனைய பிரதானமான பொருளியற்கொள்கைகள் விலையிடலுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பத னல் அவற்றிலிருந்து வேறு பிரித்து ஆய்வு செய்தல் இயலாததாகும். பொதுத்துறை நிறுவனங்களில் இயக்கத்தைப் பற்றிய மதிப்பீடு செய்வதற்கான பொருளாதாரக் குறிகாட்டிகளாகிய நிதி நோக்குகளும், நடாத்தலும், முதலீட்டு நிலைமை விலை யிடல் போன்றவை மீது அதிக கவனம் எடுக்கப்படுகின்றது. பொதுமக்களின் கண்ணுேட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட கைத்தொழில்களும் பொதுக் கூட்டுத் தாபனங்களும் அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனங்களாக நோக்கப்படுகின்றன. எனவே தற்பொழுது இந் நிறுவனங்கள் அரச இயந்திரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படாது பொதுமக்கள் உரித்தாகிய பாரிய தொழில் முயற்சியாகவே நோக்கப் படுகின்றன.
1960-70 ஆண்டுக் காலப்பகுதி பிரித் தானிய தேசியமயமாக்கப்பட்ட கைத் தொழில்களின் பிரதான விருத்தி பற்றி ஆய்வு செய்கையில் லெனுட் ரிவி (Leonவார் Tivey) ' தேசியமயக் கைத்தொழில்களின் இப்பத்தாண்டுக் காலம் பொருளியலாளர் களின் யுகம் எனக் கூறலாம் " என்ருர், ** இச் சிக்கனத் தன்மையில் விளக்கமும், புதிய வினையாண்மையும் உண்டாகி யுள் ளது." இவ்வாருன நிலைமை அதாவது
3 -

Page 140
பொதுத் துறை . .
வினையாண்மை அதிகரிப்பு தேசிய பொரு ளாதாரத்தில் கூடிய பங்கினை பொதுத் துறை கட்டுப்படுத்தும் நாடுகளுக்கு ஒரு நல்ல நிலையை எய்துவதற்கு அறிகுறியா கின்றது. .
பொதுத்துறை நிறுவனங்களில் விலை யிடல் கொள்கையானது பொருட்களை யும் சேவைகளையும் நுகர்வோருடனும், அரசாங்கத்துடனும் மாத்திரமன்றி முழுச் சமூகத்துடனும் தொடர்பு பட்டதாகும். பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பீட்டள வில் அதிகமாக இருக்கும் நாடுகளில் இக் காள்கையானது, வாழ்க்கைச் செலவு, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மீது அதிக தாக்கத்தை ஏற்டுபத்துவத ஞல் பாதீட்டுக் கொள்கைகள் போன்று முக்கியத்துவம் பெறுகின்றன. -
தனியார்துறை நிறுவனங்களால் அல் லது பொதுத்துறை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சேவைகளின் விலைகள் அவற்றின் ஆக்கச் செலவுடன் நெருங்கிய தொடர்புடைய தாகும். ஆக்கச் செலவானது நிறுவனத் தின் பருமன்சார் அளவுசார் இயக்கத் திலும், கொள்ளளவுப் பயன்பாடு போன்ற வற்றிலும் தங்கியுள்ளது. பொருட்கள் சேவைகளின் தன்மையும் அவற்றிற்கான கேள்வியும் பிரதான காரணிகளாகும். இக் கட்டுரையின் பிரதான பகுதிகளில் இவ்வெண்ணக்கருபற்றி ஆய்வு செய்யப் படும்.
ஒரு தொழில் நிறுவனத்தை வைத்து பொதுத்துறை நிறுவனங்களின் விலையிடல் கொள்கைகளைத் தீர்மானிக்க முடியாது. அவை நாட்டின் முழுப் பொருளாதாரத் துடன் தொடர்பு படுத்தியே நோக்கப் படல் வேண்டும். அத்துடன் எந்தவொரு நாட்டிலும் பொருளாதாரப் பாங்கு, பொதுத்துறையின் ஒப்பீட்டளவிலான பருமன், தேசியப் பொருளியற் கொள் கைகள் சமூக, அரசியல் நிலைமைகள் என் பன கவனத்திற் கொள்ளப்படல்வேண்டும்.
-

கே. ஏ. முனசிங்க
இக் கட்டுரையில் இப் பொருளை முழு வதாக ஆய்வு செய்ய முடியாமல் இரு கின்றது. இக் கட்டுரையில் தொடர் பட்ட பிரதான அம்சங்கள் இடம்பெறு கின்றன.
எண்ணக்கருக்களும் கொள்கைகளும் விலையின் முக்கியத்துவம் :
பண்டங்களினதும் சேவைகளினதும் பெறுமதியை அளவிடும் கருவியாக வில்ை இருக்கின்றது. விலை பண அலகிலேயே அளவிடப்படுகின்றது. கட்டில்லா நிறுவன அமைப்புக்களில் கேள்வி, நிரம்பல் ஆகிய வற்றினல் சந்தை விலை நிர்ணயிக்கப்படு கின்றது. இவ் விலைகளே பொருளாதாரத் தில் காரணிகளின் உத்தம பங்கீட்டினைத் தீர்மானிக்கின்றது. விலைகள் வேறு கார ணங்களுக்காகவும் முக்கியத்துவம் வாய் தவைகளாகும். சார்விலைகள் பங்கீட்டின் மீதுபாதிப்பினை ஏற்படுத்துகின்றன,பொது விலைமட்டமானது மக்களின் வாழ்க்கைத் தரத்தை நேரடியாகப் பாதிக்கின்றது.
கட்டில்லாச் சந்தையில் "மறைக்ரம்" ஆண்து பொதுத்துறை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகளைத் தீர்மானிக்க மட்டாது. பொதுத்துறை நிறுவனங்களில் விலைகள் பொருளியல் சார் சிக்கன விை கள் அல்லது அவை முகாமைசெய் விaை களாகும். வேறு விதத்தில் கூறப்புகின் பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களினதும் சேவை களினதும் விலைகள், கேள்விநிரம்பல் ஆகிய பெயரளவு விசைகளினல் தீர்மானிக்கட் படுவதில்லை. ஆனல் வெவ்வேறு சந்தர்ட் பத்தைப் பொறுத்து வெவ்வேறு முறை யில் தயாரிக்கப்படும். ஆணுல் விலைத் தீர் மானத்தில் எக்காரணி மு த லூ க்க ங் கொடுத்த தென் பதும் கூறப்பட்டது. ஆனல் இவ்விலைகள் எவ்வடிப்படையில் தீர்மானிக்கப்படுவ தென்பதும், யாரால் இடப்பட்ட தென்றும் அறிதல்வேண்டும்.
4 -

Page 141
பொதுத்துறை .
விலை தீர்மாளித்தலில் உள்ள அடிப்படைகள் :
கடந்தகாலத்திலும், தற்காலத்திலும் விலையிடல் பற்றி ஒரு முரண்பாடான கொள்கைகள் உள்ளன. அதாவதுபொதுத் றுறை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப் படும் பொருட்களும் சேவைகளும் பொரு னியல், வர்த்தக ரீதியாக விலையிடப்படல் அல்லது விலையிடலானது சமூக, அரசியல், தேசிய ஆர்வம் சார்ந்ததாக இருத்தல் வேண்டுமா என்பதில் வேற்றுமை உள் ளது. அத்துடன் யார் விலையிடலைத் தீர் மானித்தல் வேண்டுமென்பது பற்றியும் தீர்வு காணப்படாத பிரச்சினை உளது. பொதுத்துறை நிறுவனங்களின் விலையிடல் பற்றிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருத் தல் வேண்டும் எனவும், இந் நிறுவனங் களை நடாத்தும் முகாமையினல் செய்யப் படல் வேண்டும் என்பது பற்றியும் கருத் துக்கள் உள்ளன. இதைவிட தேசிய விலை பிடில் அதிகாரசபையே விலையிடலைச் செய்ய வேண்டும் எனவும் கருத்து நிலவு கிறது.
விலை ஊக்குவித்தல் பொறிமுறை :
தனியார்துறை நிறுவனங்கள் தமது நிதிசார் நோக்கங்களை எய்துவதற்கு விலையே பிரதானமான முறைகளில் ஒன் ருகக் கருதப்படுகின்றது . சாதாரணநிலை பில் தமது இலாபங்களை உச்சப்படுத்தும் முறையிலேயே தனியார்துறை நிறுவனங் கள்விலையைத் தீர்மானிக்கின்றன. ஆனல் சில நிறுவனங்கள் சமூகத் தேவைகளையும் நிறைவேற்றமுனைகின்றன. நோக்கங்களைப் பொறுத்து தனியார்துறை பொதுத்துறை நிறுவனங்களுக்கிடையில் வேறுபாடுகளைக் காட்டுதல் அவசிமானதாகும். ஒரு தனி பார்துறை நிறுவனத்தின் நோக்கங்கள் அதன் அகத்திலிருந்து தோற்றுவிக்கப்பட் டதாக இருக்கும், ஆனல் பொதுத்துறை நிறுவனங்களில் அவ்வாறல்ல. போட்டிச் சந்தை திறனக இயங்குமிடத்தில், ஒரு சாதாரண போட்டிக்குள் உள்ளாகி இருப்

கே. ஏ. முனசிங்க
பின் விலையிடல் பற்றிய பிரச்சனைகள் அதிகம் தோன்ரு. ஆனல் தனியுரிமைக் கான நிலைமைகளை அனுபவித்துக்கொண் டிருக்கும் அதிகமான பொதுத்துறைபற் றியே தொடர்ந்த ஆய்வுகள் செய்யவேண் டியுள்ளன.
தனியார்துறைத் தனியுரிமையாளன் தனது இலாபத்தை உச்சப்படுத்தும் நிலை மையைப் பொறுத்து விலையை உயர் வாகவோ அல்லது குறைந்ததாகவோ தீர் மானித்துக்கொள்வான். ஆனல் பொதுத் துறை நிறுவனங்களில் விலை ஊக்குவிப்பு முறையைப் பொதுமையாக்கம் செய்வது இலகுவான காரியமல்ல. அதிகமான நிறு வனங்களில் ** அரசாங்கத்தின் தீர்வுகளின் அடிப்படையிலேயே இலாப இலக்குகள் நிலைகொள்ளச் செய்யப்படுகின்றன”.
சட்டமுறை தீர்வுகளுக்கான தேவை யான வருமானத்தை உழைப்பதற்காக மட்டும் விலையிடல் தொழிற்பாடு இருத்தல் ஆகாது என்பது எடுத்துக்காட்டப்பட வேண்டியதாகும். திறனன உற்பத்திக்கு வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கு வழங்கு வதற்கு விலையிடப்படின், பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் கேள்வியுள்ள இடத்திற்கு அதாவது தமது திறனுன பங்களிப்பைச் செய்யுமிடத்திற்கு வளங்களைக் கவர்தல் வேண்டும்.
உயர் விலையை நிலைநிறுத்துவதற்கு சார்பான காரணிகளில் சரியான போட்டி யில்லாமையும் நுகர்வோருக்கிடையில் பதட்டநிலை யுருவாகக்கூடிய நிலை ஏற்படு வதனுல் அரசாங்கத் தலையீடும் அமைகிறது. அத்துடன் எல்லாப் பொதுத்துறை நிறுவ னங்களும் தேசியமயமாக்கல் மூலம் உரு வாக்கப்பட்டவையும் அல்ல. பொதுத் துறை நிறுவனங்களில் சில மறைமுகமான திரும்பல்களை அடிப்படையாகக்கொண்டு நேரில் திரும்பல்கள் குறைந்த விலையிடலை நிலைநிறுத்துவதற்கான வர்த்தகம்சார் தீர் மானமாக எடுக்கப்படுகின்றது. இது பொருளாதார, வர்த்தகம்சார் தீர்மானங் களுக்கு மேலாக சமூக, அரசியல் தீா
15 -

Page 142
satular Sigarep ... • .....
மானங்கள் மேற்செல்லும் அபிவிருத்தி குறைந்த நாடுகளில் காணப்படுகின்றது.
கேள்வி நிலைமை:
பண்டங்களினது சேவைகளினதும் கேள்வித் தொகையானது அவற்றின் விலை யோடு தொடர்புபட்டதாகும். முற்தீர் மானமான நிதிசார் நோக்கங்களை அடை யும் நோக்கத்துடன் அதி உயர்விலை உற் பத்திகளுக்கு இடப்படின் அது கேள்வி யைத் தாழ்வு அடையச் செய்வதுடன் தொழிலில் வேலையின்மையையும், கொள் ளளவு பயன்படாதிருத்தலும் ஏற்படுகின் றது. உற்பத்திப் பண்டத்திற்கான கேள்வி நெகிழ்ச்சியற்றதாக இருக்கும் போதே உயர்விலைகளை நிலைநிறுத்தலாம். எனினும் இது நுகர்வோரைச் சுரண்டும் நிலையை ஏற்படுத்துகிறது. ஆனல் குறைந்தவிலை யானது கேள்வியை அதிகரிக்கச் செய்து தொழிலை அதிவிரிவாக்கம்செய்யத் தூண்டு வதனல் பொருளாதாரத்தில் மூல வளங் களின் ஒதுக்கல் செய்வதைச் சீர்குலையச் செப்கின்றது.
இலாபமும் விலையும் :
இலாபத் தன்மையும் விலையிடலும் ஒன்றிணைந்ததாகஉள்ள அம்சமாகும். விலை களுக்கும் இலாபத்திற்கும் நேர டி த் தொடர்பு இருப்பது போன்று உடன் நோக்கும்போது புலப்படும். அதாவது இலாப இலக்கு அதிகமாக இருக்கும் போது விலை அதிகமாக இருக்கும் என்ப தாகும். ஆனல் ஒரு நிறுவனத்தின் கேள்வி நிரம்பல் நிலைகளைப் பொறுத்து வெவ்வேறு மாற்றீடான விலைமட்டங்களில் ஒரு குறித் தளவு இலாபத்தினைப் பேணும்வகையில் விலையிடல் செய்யலாம். அல்லது வெவ் வேறு சந்தைகளுக்கிடையில், நுகர்வோர் களுக்கிடையில் விலை பேதப்படுத்தலை நடைமுறைப் படுத்துவதன் மூலமும் தீர் மானித்த இலாப மட்டத்தை எய்தலாம். வினைத்திறனற்ற அதிகரித்த ஆக்கச் செலவி ணு,லும் உயர் விலைகளிலும் குறைந்த இலா பத்தையும், உய்ர்மட்ட முகாமைத்துவ
Massers

கே. ஏ. முனசிங்க
வினையாண்மையால் அதிகரித்த உற்பத்தி யினுலும் குறைந்த விலையில் கூடிய இலா பத்தையும் எய்தும்.
இது பொதுத்துறை நிறுவனங்களில் " திட்டமிடப்பட்ட இலாபம் ' என்பது பற்றிய பிரச்சினைக்கு இட்டுச் செல்கின்றது. இலாபத்திற்கான உயர்மட்டம் எதுவென நியமப்படுத்தப்படாத நிலையிலும் பொதுத் துறை நிறுவனங்கள் இலாபம்உழைத்தலைச் செய்யவேண்டியுள்ளன. எனவே இலா பத்தை உழைப்பதற்கு அதன் சிக்கன விலை யிலும் கூடிய விலைக்கே விற்கப்பட வேண்டி யுள்ளது. சிக்கன விலையானது ஆக்கச் செலவையும், பெறுமானத் தேய்வு, விரிவாக்கம், பராமரிப்பு ஆகிய செலவு களையும் தீர்க்கக் கூடியதாக மட்டுமே அமையும். "இலாப விலையிடல் கொள்கை" பற்றிய சார்பான வாதமானது தனியார் துறை நிறுவனங்கள் இலாபத்தைஉழைத்து பங்குதாரர்களுக்குப் பகிர்வு செய்வது போல பொதுத்துறை நிறுவனங்கள் இலாபத்தை உழைத்து வேறு எங்காவது முதலீடு செய்யக் கூடாது என்ற கேள்வி எழுகின்றது. சோவியத் சமவுடைமைக் குடியரசில் பொதுத்துறை நிறுவனங்கள் தமது இலாபத்தினை தேசிய புாதீட்டிற்கும் வழங்குகின்றது.
கிரயமும் விலையும்:
விலையை தீர்மானிப்பதில் பிரதான மூலகமாக பண்டங்களினதும் சேவைகளி னதும் கிரயம் அமைந்துள்ளது. மூல வளங் களின் திறனுன பயன்பாட்டைப் பெறு வதற்கு விலைகள் கிரயத்துடன் தொடர்பு படுத்தப்படல் வேண்டும். ஆணுல் சின. சந்தர்ப்பங்களின் தேசிய நலன் கருதிப் பொதுத்துறை நிறுவனங்கள் பண்டங்களி னதும் சேவைகளினதும் உண்மைக் கிரயத் திலும் குறைவாக விலையிடப்படும். நீண்ட கால அடிப்படையில் இவ்வாறு ஏன் விக்க யிடப்படுவதில்லை என்பதற்கு காரணங்கள் உண்டு. பின்வருவன சில காரணங்களாகும். முதலாவதாக, இவ்வாறு செய்தல் பண
سم 16

Page 143
போதுத்துறை .
வீக்க நிலைமைக்கு இட்டுச்செல்லும். வேறு முறைகளில் ஈடுசெய்யப்படாவிடின் இக் குறைபாடானது பணவீக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும், இரண்டாவதாக, விற்பனை விலைகள் கிரயத்திலும் குறைவாக இருப் பின் அதிகவரி செலுத்தவேண்டி ஏற்படும். மூன்ருவதாக, விலையினுல் கிரயமானது மீட்கப்படாவிடின் அதாவது பண்டங்களும் சேவைகளும் நட்டத்தில் விற்கப்படின் தொழில் நிறுவன அதிவிரிவாக்கத்திற்கு இட்டுச்செல்லும். நான்காவதாக வர்க்க ரீதியில் நுகர்வோருக்கு உதவிப்பணம் வழங்குவது தவருனதாகும். கடைசியாக, இவ்வாறன விலைக்குறைப்பானது ஏழை நாடுகளில் அத்தியாவசியப் பண்டங்களி னதும் சேவைகள் மீதும் அதிகம் தாக் கத்தை ஏற்படுத்துவதில்லை.
பொதுவாக விலைகள் கிரயத்தின் அடிப் படையிலேயே தொடர்பு படுத்தப்படு கின்றதாயினும் சிக்கனக் கிரயத்தைக் கணிப்பதனலும் கிரயத்தைக் கணக்கிடுத லிலும் பல நுட்ப பிரச்சினைகள் இருக்கின் றன. நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கிரயங்கள் இருப்பினும் விலைகள் மொத் தக் கிரயத்தைத் தீர்க்கக்கூடிய முறை யில் அமைந்திருக்கின்றன.
எல்லைக் கிரய விலகள் :
பொருளியலாளர்களுக்கிடையில் விலை கள் கிரயத்துடன் தொடர்புபடுத்தப்பட வேண்டுமென்ற அம்சத்தில் ஒருமைப்பாடு காணப்படுகின்றது. பொதுத் துறையில் தொழில்கள் எவ்வகையான கிரய முறை யானது விலையிடலுக்குப் பொருந்தமானது என்பதுபற்றி திட்டவட்டமான அபிப் பிராயங்கள் பொதுவாக இல்லை. ஒரு சாரார் எல்லைக் கிரயத்தின் அடிப்படை யிலேயே விலையிடவேண்டும் என்று கூறு கின்றனர். ஆயினும் எல்லைக் கிரயத்தை அளவிடுதல் சம்பந்தமாகவும் விலைகள் குறுங்கால அல்லது நீண்டகால எல்லைக் கிரயத்தில் அல்லது அதன் அடிப்படையில் அல்லது அதைப் பிரதிபலிக்கும் வகையில்

Gas. gr. eyareiás
அல்லது அதோடு தொடர்புபடுத்தப் பட்ட வகையில் இருக்க வேண்டும் என் பது பற்றி பல கருத்துக்கள் காணப்படு கின்றன.
நிறைபோட்டி நிலைமைகளில் எல்லேக் கிரயம் விலைக்குச் சமமாகும். தூய தனி யுரிமை நிலைமைகளில் எல்லைக் கிரயமா னது எல்லை வருமானத்திற்குச் சமமாகும். இது விலையிலும் குறைவானதாக இருக் கும். இரு நிலைமைகளும் இலாபத்தை உச்சப்படுத்தும் வெளியீட்டு நிலைமைகளை காட்டுகின்றது. பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் தனியுரிமையை அண் மித்ததாக இருப்பினும் இலாபத்தை உச் சப்படுத்துவதை எதிர்பார்ப்பதில்லை. எல் லைக்கிரய விலைகளானது மூலதன ஒதுக்குக் களைத் திறனுக ஊக்கிவிப்பதும், உற்பத் திக் காரணிகளை உச்ச அளவில் பயன் படுத்தவும், உற்பத்தி நிலையை உத்தம நிலையில் வைத்திருக்கவும் செய்கின்றது"
நடைமுறையில் எல்லைக் கிரய முறை யானது பல பிரச்சினைகளுடன் சம்பந்தப் பட்டதாகும். மூலவளங்களை உத்தம அள வில் ஒதுக்குவதற்கு முழுப் பொருளாதா ரத்திலும் எல்லைக் கிரயத் தத்துவம் பயன் படுத்தப்பட வேண்டும். கலப்புப் பொரு ளாதாரத்தில் தூய்மையில் நிறை போட்டி தனியார் துறையில், இந்நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது. எல்லைக் கிரய நிலையிலும் நுகர்வோர்களுக்கு உற்பத் திக்குத் தேவையான வழங்கலின் விரயத் திற்குத் தேவையான மேலதிக பண்டங்க ளும் சேவைகளும் வழங்கப்படுவதில்லை. ஆயினும் இந்நோக்கம் மின்வலு, வாயு, போக்குவரத்து பாரிய மேந்தலைக் கிரயங் களையுடைய தொழில் முயற்சிகளிஞல் எய்தப்பட முடியாததாகும். உதாரண மாக மின்வலுத் தொழிலில் மின்வலுவுக் கான உயர்வுக் கேள்விகளை அடிப்படை யாகக் கொண்டே மின் ஆக்கிகளின் அளவு தேவைப்படுகின்றது. உயர்வு நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் பொறிகள் மேலதிக
7 -

Page 144
பொதுத்துறை .
மாக இருக்கின்றமையால் மேலதிக அலகு களை உற்பத்தி செய்வதற்கான கிரயம் மிகவும் குறைவாக இருக்கும். இக் கிரயத் தின் அடிப்படையில் வரிகள் இடப்படின் இத்தொழிலானது வருமான குறைபாட் டைக் கொண்டிருக்கும். அதுபோன்று அதிகரித்த கிரயத் தொழில்களில் எல்லைச் செலவுமுறையிடலானது அதிக மிகையைக் கொண்டுவரும். பல் உற்பத்தி நிறுவனங் களில் ஒவ்வொரு உற்பத்திக்கும் எல்லைக் கிரய முறையைக் கடைப்பிடிப்பது பல பிரச்சனையைக் கொண்டுவரும்.
சராசரிக் கிரய விலெயிடல்:
மேந்தலைக் கிரயத்தை அடக்கிய சரா சரிக் கிரயத்தின் அடிப்படையில் எல்லா நுகர்வோருக்கும் ஒரே விலையே இடப்படு” கின்றது. இம் முறையானது பெரும்பா லான நாடுகளின் தபாற்சேவையில் பயன் படுத்தப்படுகின்றன. எல்லைக் கிரயத்தின் அடிப்படையில் எல்லைக் கிரய விலையிடலில் நுகர்வோர் அலகுக்கான முழுக் கிரயத்தை யும் வழங்குகின்ருரன். இம்முறையில் சாதாரண இலாபத்துடன் உற்பத்திக் கிரயம் முழுவதும் கிடைக்கின்றது.
ஆனல் பொருளாதார ரீதியில் நோக் கும்போது இம்முறை அதிகமான கைத் தொழில்களில் பிரயோகிக்கப்படும்போது பல தாக்கங்களைக் கொண்டுவரும். இதில் பிரதான பிரச்சினையாக உள்ளீடுகளின் கிர யத்தைச் சரியாகக் கணிப்பீடு செய்வதில் ஏற்படுகின்றது. இவ்விலையிடல் முறையில் மிகைக் கொள்ளளவு ஏற்படுவதும் இயக்க லின் வினையாண்மையின்மையும் உண்டா கும். அதிகமான தொழில்களில் ஒவ்வொரு நுகர்வோருக்கும் பண்டங்களையும் சேவை களையும் பங்கீடு செய்வதற்கான செலவுக ளில் வேறுபாடு ஏற்படுகின்றது. எனவே ஒரே விலையிடப்படுதல் சமமற்ற தன்மை யைக் காட்டுவதுடன் மூலவளங்களின் பிழையான பங்கீட்டிற்கும் இடம் வகுக் கும். மின் வலு ஆக்கத்தை உதாரண மாகக் கொள்ளும்போது உயர் உற்பத்தி
- 1

கே. ஏ. முனசிங்க
நேரங்களில் கிரயமானது உயர்வற்ற உற். பத்தி நேரத்திலும் உயர்வானது. இரு முறைகளுக்கும் சம விலையை இடும்போது அது "மானிய விரயமும் வரியிடல் பொரு 6TTg, IT proupth' (Subsidizing extravagance & taxing Economy 2,65th.
கிர ய த் துட ன் இலாபத்தையும் சேர்த்து விலையிடல் : -
இம் முறையில் அலகுக்கான கிரயத் திற்கான மதிபீடுகளுடன் இலாப வீத மொன்றும் இடப்படும். சில சமயங்களில் கிரயத்தின் ஒரு பகுதி கணிக்கப்பட்டு விற் பனைக்காக உள்ள விலைக்குறிப்பில் மீதி மதிப்பிடப்படாத கிரயம் அடககப்படும்.
கடைசி முறையானது வினையாண்மை இணைக்கப்படமுடியாமல் அதாவது நிறு வனத்தின் ஆரம்பகாலப் பகுதியில் பிர யோகிக்கப்படும். இம் முறையானது வரை யறுத்த இந்தியத் தொலைபேசி தொழி லகத்திலும், வரையறுக்கப்பட்ட இந்துஸ் தான் வானூர்தி நிறுவனத்திலும் பயன் படுத்தப்படுகின்றது. இம்முறையானது இலங்கையில் உள்ள கைத்தொழிற் கூட்டுத் தாபனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையில் ஒரு விசாரணைக் குழுவிற்கு முன் கைத்தொழில் அமைச்சின் செய லாளர் சாட்சியமளிக்கையில் "விலைகள் உற்பத்திக் கிரயத்துடன் பொருத்தமான எல்லை இலாபத்துடன் சேர்த்தே நிர்ண யிக்கப்படுகின்றது. இலாபத்தை உச்சப் படுத்தல் விலையை வழிநடத்தும் காரணி யாக அமைக்கப்படுவதில்லை.”*
இம் முறையானது உற்பத்திக் கிர யத்தை செம்மையானதாகக் கணிப்பதற் கான இலகு முறையாகும். ஆனல் எந்தக் கிரயத்திற்கு எல்லையைச் சேர்த்தல் என்பது பற்றிய பிரச்சினை எழுகிறது. இம் முறை மூலம் உற்பத்திக் கிரயம் முழுவதும் பெறு வதற்கேற்றதாக இருப்பதனல் வினைத்திற னின்மையால் ஏற்படும் கிரயம் இதனல் பெற்றுக்கொள்ளப்படுகிறது.இம்முறையை
3 -

Page 145
பொதுத்துறை .
நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துவ்தா பின் கிரய வினையாண்மை பற்றி மிகவும் விரிவான பரிசோதனை இருத்தல்வேண்டும்.
*இலாபமின்மை”, “நட்டமின்மை" efallewau îs-sib:
பேராசிரியர் ஆர்தர் லூயிஸின் கூற் றுப்படி பொதுத்துறை நிறுவனங்கள் இலாபமின்மை அல்லது நட்டமின்மையில் இயங்குவதாயின் எல்லாச் செலவினங்க ளின் இரு அடிப்படைகளில் தங்கியிருக்கும் என்பதாகும். இம்முறையானது ஒன்றில் பணவீக்கநிலைக்கு அல்லது பணச்சுருக்க நிலைக்கு இட்டுச்செல்லும். ஒரு பொதுத் துறை நிறுவனமானது மூலப் பொருட்கள் சேவைகள் என்பவற்றிற்குக் கொடுப்பனவு செய்வதன்மூலம் பணத்தைப் பணச்சுற் ருேட்டத்தில் விடுகின்றது. பண்டங்களுக் கும் சேவைகளுக்கும் விலை அறவிடுவதன் மூலம் பணச் சுற்றேட்டத்தில் இருந்து பணத்தை நீக்குகிறது. வேறு ஏதாவது பொருளியல் முறையினல் சரிசெய்யப் படாவிடின் இக் குறைபாடு பணவீக்க நிலைமைக்குள்ளாக்கும். அதுபோல மிகை аштботgöl சுருக்கநிலைமையை உண்டாக்கும். எனினும் மிகை நிறுவனங்களும் குறைநிறு வனங்களும் இவற்றினுல் பணச்சுற்ருேட் டத்தில் ஏற்படும் தாக்கத்தினை இல் லாமல் செய்யலாம்.
இவ்வாருக உற்பத்திக் கிரயம் தீர்க் கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று பொதுத்துறை நிறுவனங்களின் மிகை அல்லது குறை விரிவாக்கத்தைத் தடுப் பதற்காகும்.
ஐரிஷ் மின் வழங்கல் சபையானது சட்டத்தின்மூலம் சமநிலைப்புள்ளி நிலையை படையும்படி கேட்கப்பட்டது. அத்துடன் பிரித்தானியத் தேசியமயக் கைத் தொழில் கள் 5 வருட காலத்தில் தமது கணக்கு களைச் சீர்படுத்தவேண்டும் என்பது உத்தி யோக பூர்வமான கொள்கையாகும்.
-

கே. ஏ. முனசிங்க்
பொதுப்பயன்பாட்டுத் தொழில்களைத் தவிர வேறு தொழில்களில் இம்முறை ஏற்கப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறு வனங்கள் உருவாக்கும் மிகைகள் அவற் றின் விஸ்தரிப்பிற்கு நிதி அளிக்கவும் வேறு திட்டங்களில் மீள முதலீடு செய்ய வும் பயன்படுத்தப்படல்வேண்டும் என்பது பொதுவானதொரு அபிப்பிராயமாக இருக்கின்றது.
விலை பேதப்படுத்தல்:
தேர்வு முறை நுகர்வை ஊக்குவிக்க அல்லது பின்னடையச் செய்யும் நோக்கு டன் விலை பேதப்படுத்தல் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. இம்முறை இல்ா பத்தை உச்சப்படுத்தும் நோக்குடன் தனி யார்துறை தனியுரிமையாளன் நடை முறைப்படுத்தும் விலை பேதப்படுத்தலில் இருந்து வேறுபட்டதாகும். நுகர்வுக்காக வும், முதலீட்டிற்காகவும் பயன்படுத்தப் படும் பண்டங்கள், சேவைகள் மீது இம் முறைதிறனுகப் பிரயோகிக்கப்படுகின்றது. உதாரணமாக கரி, கணிஜ எண்ணை, மின் வலு ஆகியவை இரு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. நுகர்விற்காக வும், உற்பத்திக்காகவும் எடுக்கப்படும் பண்டங்களில் நுகர்விற்குக் கூடிய விலை யும் உற்பத்திக்குக் குறைந்த விலையும் அறவிடப்படுகின்றது. அதிகமான நாடு களில் புகையிரதக் கட்டணங்களில் விலை பேதப்படுத்தல் நடைமுறையில் காணப் படுகின்றது.
பொதுக் கூட்டுத்தாபனங்கள் பல் வேறு காரணங்களுக்காக மானியமளிக்கப் பட்ட விலைகளை இடுகின்றன. இலங்கை உரயாக்கம் ஒரு எடுத்துக்காட்டாகும். வரையறுத்த இந்துஸ்தான் கப்பல்கட்டும் துறை நிறுவனங்கள் ஐ. இராச்சிய விலை யுடனன நாணயமாற்று வீதத்தைப் பேணும் நோக்குடன் அரசாங்கத்தினுல் மானியமளிக்கப் படுகின்றது. இப் பகுதி
-ܚܬܝ 19 :

Page 146
பொதுத்துறை .
யின் கடைசியில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் மானியத்திட்டம் பற்றி யும் ஆய்வு செய்யப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் விலை யிடலுக்கு திட்டவட்டமான விதிகள் எவையும் பின்பற்றப்படுவதில்லை. விலை யிடலானது கூடியளவில் நிறுவனத்தின் நிதிசார் நோக்கத்தை உற்பத்திசெய்யப் படும் பண்டங்கள் சேவைகளின் வகையை பொருளாதாரத்தின் தன்மை, அரசாங் கத்தின் சமூக அரசியல் நோக்கங்களைச் சார்ந்ததாகவே இருக்கின்றது. எனவே பொதுத்துறை நிறுவனங்களில் இவற்றுள் அதிஉயர்வாக எந்த ஒரு கொள்கையை யும் வைக்கமுடியாது. பின்வரும் நிபந்தனை கள் நிறைவேற்றப்படின் ஒரு ஒன்றித்த கொள்கை யொன்றினை எழுத்தாளர் ஒரு வர் முன்வைத்திருக்கின்றர்: (1) சமமான கேள்வியும் நிரம்பலும்
இருத்தல் வேண்டும். (2) முழு உற்பத்திக்கிரயமும் பெறப் படுவதுடன் மூலதன மீட்பிற்கு மற் றைய தனியார்துறை நிறுவனங்கள் பெறுவது போன்று ஓரளவான திரும் பலும் இருத்தல் வேண்டும். (3) பொருளாதாரம் முழு வ தி லும் மொத்த உற்பத்திக் கிரயமும் பங் கீட்டுச் செலவும் குறைக்கப்படல் வேண்டும். (4) அருமையான மூலவளங்களைச் சிக்கன மாகப் பயன்படுத்த வேண்டும். (5) காரணி வருமானத்தைச் சமமாகப்
பங்கிட உதவுதல் வேண்டும்.
கொள்கை அமுலாக்கம்: Cup S66Dy:
விலையிடல் கொள்கையானது ஏனைய பொருளாதார, நிதிக் கொள்கைகளுடன் தொடர்பு பட்டமையால் அவற்றிலிருந்து வேறு பிரித்து ஆய்வுசெய்தல் சாத்திய மில்லை. அத்துடன் அவை அரசாங்கத்தின்

கே. ஏ. முனசிங்க
சமூக, அரசியல், வர்த்தக நோக்கங்க ளுடனும் தொடர்புடையதாகும்.
இத்துடன் தொடர்புபட்ட பிரதான பிரச்சினை நிதிநோக்கம் சார்ந்ததாகும். அதாவது முதலீடு செய்யப்பட்ட மூல தனத்தின் திரும்பப்பெறுகை வீதம், முத லீட்டு முறை, விலையிடல் என்பதாகும். பிரித்தானிய அதிகார மையங்கள் கடந்த இருபது வருடங்களாக சுற்றிக்கொண் டிருக்கும் இப் பிரச்சினைகளுக்கு தேசிய மயக் கைத்தொழில்களில் கொள்கை களை உருவாக்க முனைகின்றனர். ஆணுல் வேறுபாடுகள் தொடர்ந்து செல்கின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு குறித்த தேவைக்காக திறனுக இயங்க வேண்டுமாயின் அந் நிறுவனங்களுக்கு தீர்க்கமான க்ொள்கைகளும் நோக்கங்க ளும் இருத்தல் வேண்டும். ஆயினும் நோக்கங்கள் எவை, நோக்கங்களே உரு வாக்குபவர் யார் என்பதில் பல பிரச் சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின் றது. நோக்கங்கள் வரையறுக்கப்பட்ட வுடன் அதை அடைவதற்கான பொறுப்பு நிறுவனத்தின் முகாமைச் சபையினுல் தாங்கிக்கொள்ளப்படும்.
பொறுப்புவாய்ந்த அமைச்ச ரே பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக் கும் நிறுவனத்தைத் திறனுணமுறையில் நடாத்துவதற்குப் பொறுப்புடையவர் ஆகி முர். பொதுப்பணமே இம் முயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றது. எனவே அர சாங்கம் இந்நிறுவனங்களின் விவகாரங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருத்தல் வேண்டும். எனவே தர்க்கரீதியாகப் பார்க் குமிடத்து நோக்கங்களை வரையறை செய் வது அரசாங்கத்தின் ஒரு தொழிலாகவே அமைகின்றது.
அதிகமான நாடுகளில் சட்ட ஏற்பாடு களும் நெறிப்படுத்தல்களும் இந் நிறுவ னங்களின் முகாமையாளர்களுக்குச் சரி யான வழிகாட்டியாக அமைவதில்லை.
سد 20|

Page 147
பொதுத்துறை .
திட்டவட்டமான நடைமுறைகள் நிதி ஏற்பாட்டில், முதலீட்டின் கணியமும் இயல்பும், விலையிடல், உற்பத்தி ஆகியவற் தில் தெளிவானதாக இருப்பின் முகாமை பானது கட்டளைகளை நடாத்தியுள்ளதா இல்லையா என்பதை மதிப்பீடு செய்வதும் ஒழுங்குபடுத்துவதுமே பிரச்சினைகளாக அமைகின்றன. 'போர்ட் நிறுவக' வல் லுநரான J. O. உதோஜி பின்வருமாறு கூறுகின்ருர் : .
** சில கூட்டுத்தாபனங்கள் தமது நோக்கங்களை அடையாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கூட்டுத்தாப னங்கள் நோக்கங்களைப் பற்றிக் கூறும் போது. அவற்றின்நோக்கங்கள் எவை பும் திட்டவட்டமாக வரையறுக்கப்படு வ்தில்லை. நோக்கங்களை எய்துதல் இலாபத் தன்மையுடன் எப்பொழுதும் இணங்க வேண்டியதில்லை. சமூகவுடமை பொருளா தாரத்தில் இலாபம் உழைக்காது நோக் கங்கள் எய்தப்படுகின்றது,
அவ்வாறன நோக்கங்கள் இருக்கு மாயின் அது தெளிவாக எடுத்துக்காட் டப்படல் வேண்டும். அரசாங்கம் கூட்டுத் தாபனங்களை என்ன செய்யவேண்டு மென்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து வைத்திருப்பதில்லை. திட்டமிடல் கால எல்லை பூராவும் பொறுப்புவாய்ந்த அமைச் சரினுல் குறிப்பானதும், தெளிவானதுமான கணிய இலக்குகளாக, சட்டத்தில் குறிப் பிடப்பட்ட நோக்கங்கள் பரிவர்த்தனை செய்யப்படல்வேண்டும். "7
நிதி நிறைவேற்றுகைகள் :
நிதிசார் நோக்கங்கள் பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தளவில் தெளி வாக்கப்படுதல் வேண்டும். அவை முகா மைக்கு ஊக்குவிப்பாகவும், நிறுவனத்தின் வெற்றி அல்லது தோல்வியை நிர்ண விக்கும் அளவுகோலாகவும் அமைகின்றது. சமனுக்கும் புள்ளிக்கு எய்தப்பட வேண்டும் என்ற நோக்குடன் அரசாங்கம்
of - 16 Wawels

கே. ஏ. முனசிங்க
நிதித் தேவைகளை நியமப்படுத்தல்வேண் டும். நிறுவனங்கள் இலாபத்தை உழைக்க வேண்டுமென எதிர்பார்ப்பின் எவ்வளவு இலாபம் பெறவேண்டுமென்பது தீர்மா னிக்கப்படல்வேண்டும். கணிய ரீதியில் கூறின், இலக்கை முன்வைத்தல் சொத்துக் களிலிருந்து மீளுதலே அடிப்படையாகக் கொள்ளுதல் வேண்டும். சில சந்தர்ப்பங் களில் இலக்குகள் ஒரு குறித்த தொகைப் பணமாக நிர்ணயிக்கப்படுவதுண்டு. உதா ரணமாக இந்தியாவின் மூன்ரும் ஐந்தாண் டுத் திட்டத்தில் உற்பத்தி நிறுவனங்களி லிருந்து ரூபா 4,500 மில்லியன் மிகை எதிர்பார்க்கப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் அரசாங்கம் சில நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதைச் சமூக அல்லது வேறு காரணங்களுக்காகச் செய்யலாம். எனினும் இச்சந்தர்ப்பத்தி லும் தெளிவான நிதிசார் நோக்கங்கள் முகாமைக்கு அவசியமாகும். இரு தோக் கத்திட்டங்கள், நிறுவனத்தின் இயக்கத்தி ல்ை ஏற்படக்கூடிய திட்டமிடப்பட்ட நட்டத்தினையும், மறுபக்கத்தில் போதி யளவு மீள்கையையும் கொண்டிருக்கும். சுருங்கிச் செல்லும் மானிய முறைத் திட்ட மும் சேர்ந்த நிதிசார் நோக்கமும் ஒரு முறையாகும்.
UNIDOவினுல் நடாத்தப்பட்ட ஆய் வின் அடிப்படையில் பொதுத்துறை நிறு வனங்களின் இலாபத்தன்மை பற்றிய உத்தியோக பூர்வமான கொள்கைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. மேற்கு நாடுகளான பிரான்ஸ், சுவீடன், இத்தாலி ஆகியவற்றுள் உற்பத்தி நிறுவனங்கள் இலாபத்தை நோக்குகின்றன. "துருக்கியில் 440 இலாபத்தன்மை கட்டாயப்படுத்தப் பட்டு இருக்கின்றது. ஈராக்கில் மொத்த உற்பத்திக் கிரயத்தில் 10% இலாபம் எதிர் பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் 4ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் மூலதனத்தில் 11-12 வீத இலாபம் எதிர்பார்க்கப்படு கின்றது."8
2 -

Page 148
பொதுத்துறை .
"இலாபமின்மை', 'நட்டமின்மை' க் கொள்கைகள் பொதுவாகப் பொதுப் பயன்பாட்டு உற்பத்திகளில் மட்டுமே பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங் களில் கடைப்பிடிக்கப்படுகின்றன.பொதுத் துறை நிறுவனங்கள் இலாபம் உழைக்க வேண்டுமா எனும் வினவுக்கு சார்பாகவும் எதிராகவும் வாதங்கள் செய்யப்படுகின் றன. இங்கு இலாபம் உழைத்தல் பண்டங் களினதும் சேவைகளினதும் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனும் ரீதியிலேயே வினவப்படுகின்றது. விருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு இலாபம் உழைத்தல் அனு மதிக்கப்பட்டுள்ளது. ஆனல் அவ் இலாப உழைப்புக்கள் வினைத்திறன் மூலமாகப் பெறப்பட்டிருக்கவேண்டுமேயன்றி தனி யுரிமைக் காரணத்தால் நுகர்வோரிட மிருந்து பெறப்பட்டதாக இருக்கக்கூடாது.
முதலீட்டுத் தீர்மானங்கள்:
அரசாங்கத்தினுல் முதன் மை யின் அடிப்படையில் பொருளியல் சார்பாக உருவாக்கப்படும் முதலீட்டுத் தீர்மானங் கள்ஒன்றிணைக்கப்படல்வேண்டும். தொழில் நுட்ப அபிவிருத்தி, நுகர்வோர் கேள்வியில் மாற்றம், சமூகத் தேவைகளை நிறைவுறச் செய்தல் ஆகியவற்றிற்குப் புதிய முத லீடுகள் அவசியமாக்கப்படுகின்றன. அவை பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை யாகவும் அமைகின்றன.
தனியார்துறைக் கைத்தொழில்கள் இழிவுத் திரும்பல் இல்லாவிடில் புதிய முத லீடுகளை விரும்பமாட்டாது. புதிய முதலீடு களுக்கான திரும்பல் ஒரு நிறுவனத்தின் தேறிய சொத்திற்கான திரும்பலுக்குச் சமமாக இருக்கமாட்டாது.
புதிய முதலீடு ஒன்றின் வினைத்திறனை வர்த்தகவியல் ரீதியாக மதிப்பீடு செய்வ தற்குக் கழிவு செய்யப்பட்ட காசுப்பாச்சல் நுட்பம் பயன்படுத்தப்படும். மூல வழங்க ளைத் திறஞக ஒதுக்கீடு செய்வதற்கான பல் வேறு மாற்றிடுகளில் இருந்து சிறந்த முத
-

கே. ஏ. முனசிங்க
லீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு இம்முறை உதவுகிறது. கழிவுசெய்யப்பட்ட காசுப் பாச்சல் நுட்பமானது ஒரு முதலீட்டின் எதிர்கால விளைவின் கழிவு செய்யப்பட்ட நிகழ் பெறுமதி கண்டறியப்படக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் கிரயத்துடன் அவற்றை ஒப்பீடு செய்யவும் உதவுகின் றது. முதலீட்டிற்கான எதிர்கால விளைவின் மதிப்பீடானது உற்பத்திப் பொருள் எவ் விலையில் விற்கப்படும் எனும் அடிப்படை யிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இவ் ரீதியில் விலைத்தீர்மானம் செய்தலும் முதலீட்டுத் தீர்மானம் செய்தலும் தொ டர்புபடுத்தப்படுகின்றன.
நோக்கங்களுக்கிடையிலான தொடர்புகள்;
ஒரு குறித்த நிதிசார் நோக்கங்கள், ஒரு குறித்த முதலீட்டின் தீர்வு ஆகியவை பொருத்தமான விலைக் கொள்கையிலேயே தங்கியிருக்கின்றது. அரசாங்கத்தினுல் இடப்படும் திட்டவட்டமான நோக்கங்கள் அல்லது கொள்கைகள் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தில் தீர்க்கப்பட முடியாத ஒன்ருக இருக்கும். அரசாங்கத் தினுல் முதலீட்டுத் திரும்பல் வீதம், முத லீட்டுத் திட்டம், விலைக்கொள்கை போன் றவை முகாமையை இரும்புச் சட்டையி னுள் திணித்ததுபோலாகும். எனினும் இம் மூன்று நோக்கங்களும் இரண்டுதிட்டவட்ட மாக முகாமைக்கு இடப்பட்டு மூன்ருவது முகாமையினல் தீர்மானிக்கவிடப்படுகின் றது. இதிலும் எந்த இருகொள்கைகளை திட்டவட்டமாகத் தீர்மானிப்பது என்பதி லும் வேறுபாடுகள் உண்டு பிரித்தானி யாவில் தேசியமயமாக்கப்பட்ட கைத் தொழில்களின் தேர்வுக்குழு அரசாங்கம் புதிய முதலீடுகளுக்குத் தேர்வு விகிதத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என வும் நீண்டகால எல்லைக் கிரயத்தின் அடிப்படை யில் விலைகள் தீர்மானிக்கப்படவேண்டு மெனவும் கூறுகின்றது. இம்முறையானது பல பிரதான காரணிகளைத்தவிர்க்கின்றது.
سسست 222

Page 149
பொதுத்துறை .
நிதி இலக்குகள் ஒரு நிறுவனத்தை விலை யாண்மையுடன் நடத்துவதற்கு முகா மைக்கு தூண்டுகோலாய் இருக்கின்றது. நோக்கமின்றி செயற்படவிடப்படும்போது நிறுவனங்கள் வருடம்தோறும் நட்டத்தை அனுபவிப்பதனுல் முகாமைக்குக் களங்கம் ஏற்படுகின்றது. பொதுவாகப் பெரும்பான் மையான அரசியல்வாதிகளும் பொதுமக் களும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் வெற்றியை அல்லது தோல்வியை அதன் இலாபத்திலிருந்து அல்லது நட்டத்தி லிருந்து கணிக்கின்றனர்.
எனவே ஒரு இலக்கை நிறுவுவதற்கான முறையான திரும்பல்விகிதத்தையும் புதிய முதலீட்டிற்கான கோதனை விகிதத்தையும் நிறுவி அதில் இருந்து விலைமட்டத்தைத் தீர்மானித்தல்வேண்டும். ஏனெனில் பெரும் பாலான பொதுத்துறை நிறுவனங்கள் தனித்துறைப் போக்கினைக் கொண்டிருக் கின்றமையால் விலை யிட லை அடிக்கடி சோதித்துக்கொள்ளல் வேண்டும். எனினும் இங்கு கூறப்பட்டிருக்கின்றசில கொள்கை கள் பிரயோகிக்கப்படும்போது இலக்கு களின் எய்துகைக்கு நேரடித் தாக்கமாக இருக்க முடியாது. எனவே அத்தகைய சந் தர்ப்பங்களில் இவை விலைகளை அமைப்புச் செய்வதற்கான அடிப்படையாக இருக்க லாம். பொதுவாக அரசாங்கம் மேற்குறிப் பிடப்பட்ட கொள்கைகளை அமைக்கும் போது முகாமைச்சபையிடமிருந்து ஆலோ சனைகளைப் பெறுவது வழக்காற்றுச் செய லாகும். அத்துடன் விரும்பக்கூடியதும் ஒன் ருகும், விலையிடலுக்கான பொறுப்பு :
தனியார்துறை நிறுவனங்களில் முகா மையாளரே விலையை அமைப்புச் செய்யும் சுதந்திரம் உடையவராக இருக்கின்றர். ஆனல் பொதுத்துறை நிறுவனங்களில் விலைக்கொள்கையை அமைப்புச் செய்வதற் கான அமைத்தல்முறை அரசாங்கம், பொறுப்புவாய்ந்த அமைச்சர், முகாமை ஆகியவற்றில் பரவி நிற்கிறது. அரசாங்கம் நிறுவனங்களுக்கு இலாப இலக்கொன்றை

கே. ஏ. முனசிங்க
இடின் அரசாங்கம் விலையிடல் கொள்கை களுக்கான வழிகாட்டுமுறையினையும் கூறல் வேண்டும். அதுவும் தனி உரிமை முயற்சி களில் இது மிகவும் முக்கியமானதாகும். இலாபம் கொண்ட விலையிடற் கொள்கை மந்திரியினுல் அல்லது அரசாங்கத்தினுல் கூறப்படும்போது அவை எவ்விதம் முகாமை யினுல் நடைமுறைப்படுத்தப்படப் போகின் றது? எதிர்பார்த்த இலக்கை அடைவ தற்கு முகாமையாளர்கள் திருத்தமான கொள்கைகளை எவ்வாறுவெளியிடுவார்கள்? இப் பகுதியில் உரைக்கப்படும் ஒவ்வொரு விலையிடல் எண்ணக்கருக்களும் அனுகூலங் களையும்பிரதிகூலங்களையும் கொண்டுள்ளன. அத்துடன் நிறுவனத்தின் வகை அதன் வளர்ச்சியில் படிநிலை என்பவற்றில் வினை யாண்மை தங்கியிருக்கும். உதாரணமாக எல்லைக்கிரய விலையிடல்முறை பயன்படுத் தப்படும்போது முகாமை ஒரு நிறுவனத் தின் முழுக் கொள் அளவையும் பயன் படுத்தக் கூடிய வகையில் உற்பத்தித் திட்டமிடல் அவசியமாகும். சராசரி கிரய விலையிடல் முறையில் தூங்கும் அல்லது தொழிற்பட்ாதிருக்கும் நிலையான மூலதனத் தின் கிரயத்தை நுகர்வோர் செலுத்த வேண்டிய அவசியமில்லை. கிரயத்துடன் கூடிய முறையில் கிரயக்கட்டுப்பாடு எல் லாப் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டு அவையே எய்தப்பட்க்கூடிய கிரய அடிப் படை யாகின்றது.
எந்த ஒரு முறை பயன்படுத்தப்படினும், விலையானது உற்பத்திக் கிரயத்தை மீட்கக் கூடியதாக இருக்க வேண்டும். அத்துடன் மீள அமைத்தலுக்கான ஏற்பாடுகள் விரி வடைதல் இலாபங்கள் ஆகியவற்றையும் அடக்கியிருத்தல் வேண்டும். ஆனல் விலைத் திறனின்மையினல் ஏற்படும் நட்டங்களை விலையினுள் அடக்கக்கூடாது. தேசிய நல னுக்காக கிரய வினைத்திறனை ஊக்குவிப் பதற்கான நுட்பங்களைப் பயன்படுத்துவது முகாமையின் பொறுப்பாகின்றது. அத் துடன் அரசாங்கமானது இந் நடவடிக் கையை உறுதிப்படுத்தல் வேண்டும்.
23 -

Page 150
பொதுத்துறை .
பெரும்பான்மையான நாடு களி ல் உள்ள தனியார் கைத்தொழில்களில் உள்ள பொருளாதார நிர்வாக வினைத் திறனை அளவிடுவதற்கும் பேணுவதற்கும் நுட்பம் வாய்ந்த முறைகள் பின்பற்றட் படுகின்றன. ஆனல் எதிர்பாராத விதத் தில் பெரும்பான்மையான வளர்ந்துவரும் நாடுகளுக்கு இத்தகைய நுட்பங்களோ அல்லது வல்லுன்த் தன்மையோ கிடைட் பது குறைவு. அப்படிக் கிடைப்பினும் அரசாங்கங்கள் அவற்றைப் பயன்படுத்த விரும்புவதில்லை. ஏனெனில் அவை நிறு வனங்களின் வினைத்திறனின்மையைவெளிச் காட்டுகின்றன.
திருத்தியமைக்கப்பட்ட கிரயக்கணக் கீட்டு நுட்பங்கள் பயன்படுத்துதலிலும் திறஞன கணக்காய்வு முறைகளைச் செய் வதை உறுதிப்படுத்துவதிலும் கிரயவினை யாண்மையைப் பேணலாம். மூலதன வளங் களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல்,மூலட் பொருட்களின் உள்ளிடு, எரிபொருள். வலு, மனித வளங்கள் ஆகியவை மிகவும் கவனத்துடன் அவதானிக்கப்படவேண் டும். மேந்தலைச் செலவுகளைக் குறைத்த லுக்கான படிகள் உழைப்பின் உற்பத்தித் திறனை அளவிடுவதற்கும் திருத்தி அமைட் பதற்குமான முறைகளை உருவாக்குதல் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் இலாபங்களில் இருந்து தூண்டல், உபகா ரப் பணங்களை வழங்குதல், இலாபப் பங் கீட்டுத் திட்டங்கள் வெளியீட்டு உபகாரட் பணங்கள் வழங்குதல் என்பவற்றைநடை முறைப்படுத்தல் மூலம் தொழிலாளர் களின் மனநிலையை செழிப்படையச்செய்து உற்பத்தியை அதிகரிக்கனாம். போட்டி யில்லா நிலை யில் ஒரு நிறுவனத்தின் வினைத்திறனை அளவிடுவதற்கு இலாபத் தன்மையை ஒரு திருத்திகரமான முறை யாகக் கருத முடியாது. அதன்மூலம் உயர் மட்ட கிரய வினைத்திறனை எய்துவதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கும் போது இலாபக்குறைவுவினைத்திறனின் மைக்கு ஒரு எடுத்துக்காட்டு அல்ல.

Ga.; gr. oper is
மானியங்கள் :
சில சந்தர்ப்பங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்குவழங்கும் பொருட் களினதும் சேவைகளினதும் கிரயத்தை விலையினல் பெறமுடியாத நிலை ஏற்படுவது உண்டு. இதனல் நுகர்வோருக்கு மானிய மளிக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆளுல் இம் மானியங்களுக்குத் தேவையான பணம் வரிசெலுத்துவோரிடமிருந்து பெறப் படுகின்றது. சமூக அல்லது அரசியல் கார ணங்களுக்காக அரசாங்கம் நிறுவனங்கள் தமது கிரயத்தை விலைகளின் மூலம் மீட்ப தற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. கிரயத் திற்கும் விலைக்குமுள்ள வேறுபாடானது மானியமாக அளிக்கப்படுகிறது. வித்தி யாசமான மானிய முறைகளை நடைமுறைப் படுத்தல் சிக்கல் தன்மை வாய்ந்ததாகும். ஆனல் மானியம் வழங்குதல் முகாமையின் வினைத்திறனின்மைக்கும் ஊழலுக்கும் வழி வகுக்கும். இத்தகைய நிலையில் " தேசிய நலம் *, பரந்த பொருளாதாரத் தீர்மா னங்கள் ஆகியவற்றினல் ஏற்படும் நட்டங் கள் மொத்த வினைத்திறனின்மையை விளக்
கும். சில சந்தர்ப்பங்களில் சமூக காரணங்
களுக்காக மானியம் அளித்தல் விரும்பக்
கூடியதாக இருப்பினும் ஒரு சமூகத்தின்
சமூக அம்சங்கள் அரசாங்கத்தினுல் கவனிக் கப்பட்டு பொதுத் துறை நிறுவனங்களே வர்த்தகக் கொள்கைக்கு அமைய இயங்க விடல் வேண்டும். யதார்த்த ரீதியாக அர சாங்கம் நுகர்வுகளுக்கு நேரடியாக மாளி யங்களை வழங்கி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் சிக்கன விலையிடுதலை நடைமுறைப்படுத்தப் படல்வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு மானியம் வழங்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற் படின் நிருவாக சுதந்திரத்தை அமைப்ப தற்கு வெளிப்படையாக வழங்கு தன் வேண்டும்.
விலக்கட்டுப்பாடு :
சந்தையில் நிறைவுத்தன்மையின்மை விலக்கட்டுப்பாட்டைக் கொண் டு வர
24 -

Page 151
பொதுத்துறை .
முயலும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விலைக்கட்டுப்பர்ட்டுத் திட்டத்தை அமுல் நடாத்துவது அவசியம். ஏனெனில் இவை தனியுரிமையாக இருப்பதுடன் இலாப இலக்கு மிகவும் குறைந்ததாக இருப்பத ஞல் விலைகள் கட்டுப்பாடு செய்யப்படல் வேண்டும். தேசிய மட்டத்தில் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கெனச் சில நாடுகளில் சட்ட வழிமுறைச் சபைகள் அமைக்கப்பட் டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களுக் கும், மற்றைய துறைகளுக்கும் வேறு அமைப்புக்கள் இருப்பது விரும்பத்தக்க தொன் ருகும். அரசாங்கத்தினுல் அல்லது மந்திரியினல் விலையிடற் கொள்கை இறுதி யாகத் தீர்மானிக்கப்படுவதாக இருப்பின் இவ் விலைக்கட்டுப்பாட்டு அதிகார சபை ஆலோசனை கூறுவதை மட்டுமே செய்யும். எப்படியாயினும் அச்சபைகள் சிறந்த ஆலோசனை அளிப்பதன்மூலம் முக்கியத்து வம் பெறலாம். இச்சபைகள் தமது தொழிற்பாடுகளைத் திருப்தி கரமாக ச் செய்யவேண்டுமாயின்நிறுவனங்களை ஆய்வு செய்வதற்கான சட்டரீதியான அதிகாரங் கள் அளிக்கப்படுதல்வேண்டும். இச் சபைகள் மூலதன அமைப்பிலிருந்து பொ ருட்களை விற்பனைசெய்யும் வரையிலான சகல அம்சங்களை ஆய்வுசெய்யவும் அதன்
1. Leonard Tivey (de), he Nationalist 2. V. V. Ramanandham, The finances o t There is, of course, the remote po 3. Nabagopal, The public sector in in i 4. Francis Casell, “The pricing policie
ation'', A. H. Hanson (ed) p. 216. 5. Report of the Committee on Pricing PC
р. 2. 6. N. C. Joshi, ' Pricing in Public Sec
7. Quoted in the Report of the Cabin of Employment in Statutory Board
8. Profitability and efficiency measure.
by UNIDO.

கே. ஏ. முனசிங்க
மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் உத்தம கிரய வினைத்திறனையும் பேண முடியும்.
முடிவுரை :
விலைகள், ஒரு நாட்டில் மூலவளங்களை ஒதுக்கீடு செய்வதில் பாதிப்பை ஏற்படுத்து வதனுல் பங்கீட்டு விளைவுகளை உண்டாக்கும் ஒரு நாட்டில் சந்தையானது மூலவளங்களை ஒதுக்கீடு செய்வதில், பொதுத்துறை நிறு வனங்களின் விரிவு திருப்திகரமற்றதாக இருக்கின்றது. அர சாங் கம் பொதுப் பணத்தை முதலீடு செய்திருப்பதனுல் விலைக் கொள்கையைத் தீர்மானஞ் செய்வ திலும், ஏனைய நிதிநோக்கங்களை தீர்மானிப் பதிலுமான உரிமை அரசாங்கத்திலேயே தங்கியிருத்தல் வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் உன்ழக்கும் இலாபங்கள் வினைத்திறன் மூலம் உழைத்த இலாபமாக இருக்கவேண்டுமேயன்றி தனியுரிமை மூலம் பெற்றதாக இருக்கக்கூடாது விலையிடல் கொள்கையில் இறுதி இலக்கு அருமைத் தன்மையுடைய மூலவளங்களின் உத்தம ஒதுக்கீட்டைப் பெறுவதாகவும் பொது மக்களுக்கு உயர்ந்த நன்மைகளை அளிப்ப தாகவும் இருத்த்ல் வேண்டும். V−
cd industries since 1960, p. 14. f public enterprise, p. 58. issibility of “denationalisation". dia, p. 113. s of Nationalised Industries in Nationalis
licies of Public Enterprises in Sri Lanka 1966
tor” Lok Udyog vol. 5, July 1971.
et Sub-Committee on Terms and Conditions
and Corporations in Sri Lanka.
s of public enterprises. Paper prepared
25 -

Page 152
For the BES
OFFICE EQ
STEEL CUPBO.
FLNG CABIN
STEEL WARD
CARD BOXES
CASH BOXES
CARD INDEX
TYPEWRITERS
ADDING MAC
CALCULATORS
o DUPLICATING
Ο
Ο
O PRE-PRINTED OFFICE STAT
AND for rellable af
conTACT
OFFICE EQUIF
20, Parsons Road,
COLOMBO-2.

T in
UIPMENT
ARDS
ETTS
ROBES
CABINETS
HINES
MACHINES
ACCOUNTING FORMS & ONRRY
ter-Sales service. . . . . .
MENT LIMITED
205 (85), MANIPAY ROAD,
JAFFNA.

Page 153
- முகாமையியல்
சந்தைப்படுத்துதற் திட்ட அதன் முக்கியத்துவமும்
வ. அன்ரனி வர்த்தகவியல், (சிறப்பு இறுதிவருடம்

மும்
பெரும்பாலான உற்பத்தியாளர்களின் நோக்கம் தமது பொருட்களை நல்ல விலைக்கு விற்று இலாபம் பெறுவதாகும். எனவே நல்ல விலைக்கு விற்று இலாபம் பெறுவ தற்குச் சந்தைப்படுத்துவதற்கென அமர்த் தப்பட்ட நிர்வாகிகள் நன்கு ஆலோசனை செய்து திட்டம் ஒன்றினை வரைய வேண் டும். முற்காலத்தில் பொருட்களைச் சந்தைப் படுத்தும்போது இலாபத்தினை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பொருள் உற் பத்தி நடைபெற்றன. ஆனல் இன்று சந் தைப்படுத்தும் திட்டத்தினை அமைக்கும் நிர்வாகிகள் நுகர்வோரின் தேவைகளைத் தகுந்த முறையில் பூர்த்திசெய்து நிறு வனத்தின் இலாபத்தினை அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தினை அடைவதாகும்.
சந்தைப்படுத்துவோர் தமது விற்பனை இலாப இலக்குகளை அடைவதற்கு நுகர் வோரின் திருப்தி அவசியமானதாகும். ஒரு பொருள் வெற்றிகரமாகச் சந்தைப் படுத்த வேண்டுமாயின் நுகர்வோரினதும், பயன்படுத்துவோரினதும், தேவைகளும், விருப்பங்களும் நியாயமான அளவு பூர்த்தி செய்யப்படல் வேண்டும், ஏனெனில், எல்லா நுகர்வோரினதும் கேள்வி மாறிகள் ஒரே தன்மையானவை என்று கொள்ளக்கூடாது. எனவே எல்லா வகையான நுகர்வோரி னுடைய தேவைகளையும் திருப்தி செய்யக் கூடியதாகப் பொருள் அமைய வேண்டும். வேண்டுமாயின் பலவிதமான நுகர்வோரின் தேவைகளுக்குத் தகுந்ததாக ஒரு பொரு ளைப் பலதரமாக அல்லது பலவகையாக அளிக்க வேண்டும். சரியான முறையில் திருப்தி செய்யப்படாவிட்டால் சில சமயங் களில் பொருட்களை மாற்றி அமைக்க
27 -

Page 154
சந்தைப்படுத்துதற் .
வேண்டி ஏற்படும். எனவே சந்தைப்படுத் தும் திட்டத்தினை வரைந்தபின் அதனை இடைநிறுத்தாமல் அதனைக் கடைப்பிடித்து அத் திட்டத்தினுல் வரும் விளைவுகளைப் பற்றி நன்கு ஆராய வேண்டும். குறிக்கப் பட்ட ஒரு சந்தைப்படுத்தும் திட்டத்தினை வரைந்த பின்பு அத்திட்டத்தின் நோக்கப் படி விளைவுகள் ஏற்படாமல் விடலாம் எனத் திட்டவட்டமாகத் தெரிந்தால் முதல் வகுத்த திட்டத்தினைக் கடைப்பிடித்தல் வேண்டுமெனப் பொருள்கொள்ளக்கூடாது. ஓர் அளவுக்குத் திட்டத்தினைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்தல் அவசியமாகும்.
முதலாளித்துவ சமுதாய அடிப்படை யில், அரசாங்கச் சட்டங்கள்,கொள்கைகள் அனுசரிப்பதுடன் திட்டம் நீண்டகால திட்டங்களாகவும் குறுங்காலத் திட்டங்க ளாகவும் அமைக்கப்படல் வேண்டும். ஏனெனில் சந்தைப்படுத்தற் திட்டத்தினை வரையும்போது அரசாங்கங்களின் சட்ட திட்டத்திற்கு ஏற்ப அமைக்கப்படல் வேண்டும். அப்படி அமைக்கப்படாவிடில் அரசாங்கங்களின் எதிர்ப்புக்களைப் பெற வேண்டி நேரிடும் காரணம் அரசாங்கம் மக்களின் நன்மை கருதி இச் சட்டங்களை இயற்றுகின்றன.எனவே அரசாங்கச்சட்டங் களுக்கு ஏற்பச் சந்தைப்படுத்துதல் திட்டம் அமைக்கட்படல் வேண்டும். அத்துடன் அரசாங்கத்தின் உற்பத்தி அல்லது நுகர்வு அல்லது முதலீடு சம்பந்தமான திட்டங்க ளுடன் ஒரு முயற்சியாளனின் சந்தைப் படுத்தல் திட்டமும் ஒன்றிணைக்கத் தக்க தாக இருக்க வேண்டும். திட்டத்தின்படி அமைக்கப்பட்டால் அத் தி ட் டத் தின் விளைவு இலாபகரமாயின் அதன் பெரும் பகுதி சேமிப்பாகவும், முதலீடாகவும் மாறு கின்றது. இத் தனியார் முதலீட்டுத் திரட்டு ஒரு கால எல்லையில் அரசாங்க முதலீட்டுத் திரட்டுடன் சேர்ந்து தேசத்தின் அபி விருத்தியை நிர்ணயிக்கும். ஆகவே திட் டம் சரியான முறையில் அமைக்கப்படல் வேண்டும். இதே போல் சூழலையும் மனதில் கொண்டு திட்டம் அமைக்கப்படல் வேண்

வ. அன்ரனி
டும். ஏனெனில், பலவிதமான சூழல் காரணி கள் ஒரு நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் திட்டத்தின்மேல் தற்காலத்தில் தாக் கத்தை ஏற்படுத்துகின்றது.
சந்தைப்படுத்தும் திட்டத்தினை வகுப் பது யார் பொறுப்பு? சந்தைப்படுத்தல் என்பது தற்காலத்தில் ஓர் சிக்கலான தொன்ருகும். எனவே சந்தைப்படுத்தற் திட்டத்தினை வகுப்பது அவ்வளவு எளிதான செயலன்று. எனவே அத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் ஒப்படைத்தால் அவர் தம் விருப்பு வெறுப்புக்கு உட்பட திட்டத் தினை வரைவார். ஒருவரே ஒரு செய்தியை ஆராய்ந்து முடிவு காண்பதற்கும் பலர் ஆராய்ந்து முடிவு காண்பதற்குமிடையில் வேறுபாடுகள் இருக்கலாம். அதாவது ஒரு வர் ஆராய்ந்து காணும் முடிவுகளில் உள்ள குறைபாடுகள் பலர்கூடி ஆராய்ந்து காணும் முடிவில் இல்லாதிருக்கலாம். ஆனல் பலர் ஒன்றுகூடி ஆராய்ந்து ஒரு மனதான முடி வுக்கு வராமல் இருக்கலாம். எனவே சந். தைப்படுத்தற் துறையில் சில செய்திகள் உடனுக்குடன் முடிவு எடுக்க வேண்டி இருக்கும். பலர் ஒன்றுகூடி முடிவு எடுக்கக் காலதாமதம் ஏற்படலாம். காலதாமதம் ஏற்பட்டால் நட்டம் ஏற்படக்கூடும். எனவே நன்கு தேர்ச்சியும், அறிவும், அனுபவமும் மிகுந்த ஒருவரைத் தேர்ந்: தெடுத்து அவருக்குச் சந்தைப்படுத்தற் திட்டத்தினை வரையும் பொறுப்பினைக், கொடுப்பது நன்று. ஆனல் அவர் மற்றய துறைகளுடன் கலந்து ஆலோசனை செய்து திட்டத்தினை வரைய வேண்டும்.
சந்தைப்படுத்தற்குப் பொறுப்பாக உள்ள முகாமையாளன் சில அம்சங்களைப் பற்றி முக்கியமாக ஆராயவேண்டும்.
9,606 it lite607
1. விற்பனை முயற்சியும், உபாயங்களும்
கேள்வி மாறிகளும்.
2. சந்தைப்படுத்தற் சேர்வை.
(அ) சரக்குகளுக்கு குறியிடல்.
28 -

Page 155
சந்தைப்படுத்துதற் .
(ஆ) தரமும், தரப்படி வகைபிரித்
தலும்: (இ) விளம்பரத்திட்டம். ஈ) விலைக்கொள்கை. (உ) விநியோக வழிமுறைகள். 3. சந்தை ஆராய்ச்சி.
4. விற்பனையின் பின் சேவையும், சந்தைப்
பிரதிபலிப்பும்.
* விற்பனே முயற்சியும் உபாயங் களும், கேள்வி மாறிகளும் :
நுகர்வோருக்கு அளிக்கப்போகும் பொருட்களைப்பற்றி ஆராயப்படவேண்டும். அப் பொருட்களின் குணம், தோற்றம், அமைப்பு ஆகியவற்றினைத்தான் ஆராய வேண்டும். இத்தகைய பொருட்களை நுகர் வோர்கள் ஏற்பார்களா, எத்தகைய முயற் சிகளை எடுத்தால் பொருட்களின் விற்ப னையை அதிகரிக்கமுடியும், இவ் விற்பனைக் குரிய சந்தைகள் யாருக்கு, எப்போது எங்கே, எந்த அளவில் என்பதனையும், போட்டிப் பொருட்கள் சந்தையில் நில வுகின்றனவா, அதன் காரணமாக நுகர் வோர் வேறு உற்பத் தி யா ள ர் க ளின் பொருட்களை கொள்வனவு செய் கி ன் றனரா எனவும் ஆராய வேண்டும். அதற் கேற்ப தமது பொருட்களில் மாற்றங்களை ஏற்படுத்தித் தொடர்ந்தும் கொள்வனவு செய்யத்தூண்டல்வேண்டும். புதிய பொருட் களை அறிமுகம்செய்தால் எதிர்ப்புக்கிடைக் குமா என்பதனை ஆராய்ந்து விற்பனையை பெருக்க முயற்சிகள் எடுத்தல்வேண்டும். ஒரு ஸ்தாபனத்தின் விற்பனைக்கும், அதனது செலவுக்குக்மிடையேயான தொ டர்பைக் கொள்வதில் காணும் வெற்றியின் விளைவுடன் நுகர்வோரின் தேவையைப் பூர்த்திசெய்யும் தன்மையுமே இலாபமா கும். ஆகவே இலாபம் கிடைக்கத்தக்க அளவில் விற்பனையை நடைபெறச்செய்தல் திட்டமிடல் முகாமையின் பணியாகும். ஸ்தாபனத்தின் விற்பனையானது அனேக மாறிகளினல் பாதிக்கப்படுகின்றது. இதில்
வி - 17 -

வ, அன்ரனி
கேள்வி மாறி முக்கியமானதாகும். இதில் வாடிக்கையாளர்கள் மாறிகளை எடுத்தால் ஸ்தாபனத்தின் விற்பனையானது சந்தை யில் உள்ளகொள்வனவாளர்களின் தொகை யினுலும் அவர்களது வருமான அளவின லும், அவர்கள் தேவை மனப்பான்மை கொள்வனவுப் பழக்கம் போன்றவற்றினல் பாதிக்கப்படலாம். சூழல் மாறிகளாயின் சூழல் காரணிகள் பொருளாதார நடவடிக் கைகளின் அளவு, சட்டத்தின் தன்மையும் ஒழுங்கும், சுவாத்திய நிலைமைகள் என் பதன் ஒழுங்குகளாலும் ஸ்தாபனத்தின் விற்பனை பாதிக்கப்படலாம். இறுதியாகப் போட்டி மாறியை எடுத்தால் இத் தாப னத்தின் உற்பத்திப் பொருட்களை ஒத்த அல்லது பதிலீட்டுப் பொருட்களை உற் பத்தி செய்யும் போட்டியாளர்களின் கொள்கைகளாலும் ஸ்தாபனத்தின் விற் பனை பாதிக்கப்படலாம். இத் துட ன் சந்தைத் தீர்மானங்களையும் எடுக்கலாம்.
2. சந்தைப்படுத்தற் சேர்வை:
சந்தைப்படுத்தும் சேர்வையை நோக் கும்போது சந்தைப்படுத்தும் தொழிற்பாடு களில் முக்கியமான பகுதிகளை ஆலோசித்து ஆராயப்படவேண்டியதைக் குறிக்கும்.
(அ) சரக்குகளுக்குக் குறியிடுதல் (Branding
of Goods):-
சரக்குகளை வாங்கும் மக்கள் தாங்கள் வேண்டும் சரக்கினுடைய தன்மை, தரம் முதலியவை பற்றி எளிதாகவும் இலகுவாக வும் அறிந்துகொள்ள உதவிசெய்வது இக் குறியாகும். சரக்குகளின் உற்பத்தியாளர் களும், வியாபாரிகளும் தாம் விற்கும் சரக் கிற்குக் குறியிட்டு மக்களுக்குத் தம் குறி யிட்ட சரக்கு இன்ன தன்மை உடையது, இன்ன தரத்தினை உடையது என்றெல்லாம் விளம்பரத்தின் உதவியுடன் உணர்த்து வார்கள். இதன் காரணமாகக் குறிப்பிட்ட அல்லது குறிப்பெயர் கொண்ட ஒரு சரக்கு யாரால், எந்த நிலையத்தால், உற்பத்தி செய்யப்பட்டது, என்பதனை அறிந்தபின்
29 -

Page 156
சந்தைப்படுத்துதற் .
இதனைத் த யக் க மின் றி வாங்கலாம் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்ப டும். இக் குறி யை ச் சரக்கின் மீதோ அல்லது அதைச் சுற்றியிருக்கும் உறையின் மீதோ இடுவது வழக்கம். இதற்கு ஒரு சின்னத்தையோ, எழுத்துக்களையோ, அல்லது குறிக்கப்பட்ட ஒரு சொல்லையோ பயன்படுத்துவர். குறியீட்டினை வாணிபக் குறியாகப் (Trade Mark) பதிவு செய்து விட்டால் சட்டப்படி வேறு ஒரு வியாபாரி யும் அவ்வகைச் சரக்கிற்கு அக் குறியினைப் பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன் படுத்தினுல் சட்டப்படி நஷ்ட ஈடு கோரி நடவடிக்கை எடுப்பதுடன் மேலும் அப் படிச் செய்வதைத் தடுக்க உதவியாக இருக் கும். இப்படியாகக் குறிப்பெயர், எழுத்து சொல் அல்லது சின்னத்தையோ தேர்ந்து எடுக்கும்போது மிகவும் கருத்துச் செலுத்த வேண்டும். ஏனெனில் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய பெயராக இருக்க வேண்டும். அதாவது எளிதாக உச்சரிக்கக் கூடியதாகவும், எளிதில் மற்றைய பொருட் களில் இருந்து வேறுபடுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும். தேர்ந்து எடுக்கப்படும் குறியீடு தனிச் சிறப்புக் கொண்டதாகவும் இருக்கவேண்டும். குறியீடு நல்ல தரத் திற்கு உறுதியளிப்பதாகத் திகழவேண்டும். அத்துடன் குறியினை அடிக்கடி மாற்றக் agal-fligil.
ஆ) தரமும் தரப்படி வகை பிரித்தலும் : Standardising and Grading)
சரக்கின் குணத்தினைப் பொறுத்து அவைகளைப் பிரித்தலே தரப்படுத்துதல் என்கிருேம். சரக்குகளின் குணத்தினை நிர்ணயிப்பதற்கு அதன் அளவு, நிறம், எடை, தோற்றம், சுவை, மணம் முதலிய அம்சங்கள் அடிப்படையாக விளங்குகின் றன. ஒரு சரக்கு தரப்படுத்தப்பட்டுள்ளது என்ருல் அது நல்ல சரக்கு என்று பொருள் கொள்ளக் கூடாது. அச் சரக்கு குறிக்கட் பட்டுள்ள குணங்களையுடையது என்பது தான் பொருள்.

N. அன் Jessif
விற்பனைத்துறையில் தரப்படுத்துதலும் தரப்படி வகைப்படுத்துதலும், வணிகருக் கும், நுகர்வோருக்கும் பெரும் நன்மை அளிக்கின்றது. ஆகவே இச் செயலை மேற் கொள்ள முன்பு தயாரிப்பாளர் (உற்பத்தி யாளர்) பல செய்திகளைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக சரக்குகளை வகைப்படி பிரித்தால் அதனை வாங்கும் வணிகரும் ஏற்றுக்கொள்வார்களா, வகைப் படுத்திய சரக்கு ஒரே வாதிரியான குணத் தினை உடையனவாக இருக்கின்றனவா என்று கவனிக்கவேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் வாணிபம் நாளுக்கு நாள் பெருகி வரும் நேரத்தில் உலகில் வாழும் நுகர்வோர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தகுந்த முறையில் தரம் வகைப்படுத்தப்படாவிட்டால் சர்வ தேச வர்த்தகம் சிறப்பாக நடைபெற மாட்டாது. எனவே சிறந்த முறையில் தரப்படுத்திவகைப்படுத்தவேண்டும்.இதன் காரணமாக சரக்குகளை உற்பத்திசெய்யும் நாட்டின் அரசாங்கங்கள் தரங்களைப் பற்றி யும், குறியிடுதல் பற்றியும், வகைப்படுத் தல் பற்றியும் பல சட்டங்களை இயற்று கின்றன. தரப்படுதல், குறியிடுதலால் உண்டாகும் கன்மைகள் :
1. தரப்படுத்திய சரக்கினை விற்பனை செய்வது மிகவும் எளிதானது. வாங்குப வரும் சரக்கினை மாறுபாடின்றி வாங்க முடிகின்றது.
2. வாங்குபவர்க்கு சரக்கின் தரம் உறுதியாகத் தெரிவதால் அச்சம், தயக்க மின்றி அவற்றினை வேண்டிய அளவிற்கு வேண்டுவதோடு, வாங்குபவர் விற்பவர் இடையில் வேண்டும் காலம் குறுகியதாகும்.
3. சரக்கின் குணத்தினை எல்லோரும் அறிவதால் சரக்கினைப்பற்றி அதிக விளம் பரம் செய்யத் தேவையில்லை.
4. தரப்படுத்தாத சரக்கினைவிட தரப்படுத்திய சரக்குகள் சந்தையில் அதி கம் விற்கப்படுவதால் பரும்படி ஆக்கத் திற்கு வழிகோலுகின்றது.
ܚ 130

Page 157
சந்தைப்படுத்துதற் .
5. தரப்படுத்திய சரக்கினை கைஇருப் பாக வைத்திருக்கும் வணிகர் தமக்குப் பணம் தேவையாயின் வணிக வங்கியிடம் சரக்கினை அடைவாக வைத்துக் கடன் பெற முடியும்.
6. சந்தை நிலைமையைப்பற்றிச் சரி பாக அறிந்துகொள்ளத் தரப்படுத்தல் பெரிதும் உதவுகின்றது.
7. ஒரே தரம் உடைய சரக்குகளை ஒன்று சேர்த்து உற்பத்தியாளர்கள் விலைக் கட்டுப்பாடு முதலிய முறைகளை மேற் கொள்ளத் தரப்படுத்தல் உதவியாக உள்ளது. பொதிகட்டுதல் :
தரமும், தரப்படி வகை பிரித்தலும் மட்டும் செய்தால் போதாது அதன் as G52) tub '' ( Packing ) சிறிது ஆராயவேண்டும். அதாவது கட்டுதல்எனப் படுவது சரக்கினை எடுத்துச்செல்லும் வகை பில் கட்டிக்கொடுப்பது அல்லது பாது காப்பாகப் பெட்டிகளில் அடைப்பதுடன், பொருளை வேறுபடுத்தலும், கண்டுபிடித் தலுமே பொதிகட்டுதல் என்பர்.
சரக்கினைக் கட்டி விற்பதால் பல நன்மைகள் உண்டு,
1. அவற்றினை எடுத்துச்செல்வது சுலபம்.
2. சரக்குகளைக் கட்டாகக் கட்டி, அக்கட்டின்மேல் குறியினைத் தக்கவாறு இடுவதால் அதில் உள்ள தரம் உடைய சரக்கை எடுத்துக்கொண்டு போலிச் சரக் கினை அவற்றிற்குப் பதிலாக வைப்பதையும் தவிர்க்கப்படுகின்றது.
3. சரக்கினைக் கெடாமல் வைக்கவும் கட்டுதல் அவசியமாகின்றது.
4. சரக்கினைக் கட்டியிருக்கும் தாள் (உறை) மிகவும் அழகாக இருப்பின் சரக்கு என்ன தரமாக இருந்தாலும் அதனை வாங்கத் துரண்டும்.
5. சில சரக்குகள் கட்டப்பட்டுள்ள வகையையும், முறையையும் கண்டே மக்கள் அச் சரக்கினை எளிதாக அடையா ளம் கண்டுகொள்ளலாம். (இ) விளம்பரத் திட்டம் : (Advertising Planning
விளம்பரத்தின் முக்கிய நோக்கப் சரக்கினை விற்பனை செய்வதாகும். ஒரு
-

வ. அன்ரனி
சரக்கிற்குப் புதிய பயனை உண்டாக்கியோ அல்லது புதிய வாடிக்கையாளனைச்சேர்த் தோ, அல்லது ஏற்கனவே வாங்கும் வாடிக் கையாளரை அதிகமாக வாங்கச்செய்வதன் மூலம் வாணிகர் தம் சரக்குகளின் விற் பனையை மிகைப்படுத்தலாம். விளம்பரத் தின் மூலம் மொத்த விற்பனையாளரும் சில்லறை விற்பனையாளரும் அதிக விற்ப னையை நடாத்துகின்றனர்.
உற்பத்தியாளர்கள் தரம் உள்ள சரக் கினை உற்பத்திசெய்து அதை மக்களுக்கு தொடர்ந்து அளித்துவருவாராகில் நாள டைவில் மக்கள் அச் சரக்குக் குறியினை வெகு எளிதாக நினைவில் வைத்துக்கொள் வதுடன், அவ்வகைச் சரக்கைப்பற்றி நினைக்கும்போது குறிப்பிட்ட அந்தச் சரக் கினையே நாடுவர். இதற்குக் காரணம் விளம்பரமே. அச் சரக்கின் குணம், தரம் முதலியனபற்றி அசையாத நல் எண்ணம் மக்கள் மனதில் உண்டாகிவிட்டால் உற் பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகளை நம்பி இருக்க வேண்டியதில்லை. மக்கள் தாமே அச் சரக்கினைக் கேட்டு வாங்கும் நிலைக்கு வந்துவிடுவர்.
விற்பனைத் துறையில் விளம்பரம் முக்கிய இடத்தினைக் கொண்டிருக்கிறது. எனவே விளம்பரப் பொறுப்பினை நிர்வகிக்க கம்பனி களில் விளம்பர நிர்வாகி ஒருவர் அமர்த் தப் படுவார். அத்துறையில் அவர் ஆகக் கூடிய செலவினை சரிவர திட்டமிடலும் திட்டத்தினை செயலாற்றுவதும் அவர் பொறுப்பாகும். எனவே திட்டம் சரியான முறையில் அமைக்காவிட்டால் விளம்பரத் திற்காகச் செலவிட்ட பணம் வீணுகும். சரக்குகளுக்கு சரியான தேவை (Demand) கணக்கிடாமலும், விற்பனைத் துறையை சரிவரத் தேர்ந்து எடுக்காமலும் விளம்பரம் செய்தால் அது ப்யனளிக்காது. விளம்பரம் செய்தவுடன் விற்பனை பெருகவேண்டும் என எதிர்பார்ப்பதும் தவறு. விளம்பரத் தின் பயன் பல நாட்களின் பின்புதான் தெரியவரலாம். உடனே பயன் தரவில்லை என அரைகுறையாக விளம்பரம் செய் வதை நிறுத்திவிடக் கூடாது. அப் படிச் செய்தால் அதுவரை செய்த விளம் பரச் செலவு வீணுகும். எனவே தவருசை
31 -

Page 158
சந்தைப்படுத்துதற் .
முறையில் வெளியிடப்பட்ட விளம்பரம் நற்பயனை அளிக்கமாட்டாது.
சரக்கை வாங்க நினைக்கும் நுகர்வோன் விளம்பரத்தினைக் கண்டதும் உடனே அச் சரக்கை வாங்க முடிவு செய்யலாம், அல் லது எதிர்காலத்தில் வாங்கத் தீர்மானிக் கலாம். இது விளம்பரத்தின் அமைப்பைப் பொறுத்தது. விளம்பரத்தினைப் படித்த வுடனே அவரது கருத்தைக் கவர்ந்து அவாவை உண்டாக்கி, அச் சரக்கினை வாங் கத் தூண்டும் வகையில் விளம்பரம் அமைந் தால் அது நிகழ்காலச் செய்கை விளம் பரநகல் எனப்படும். பெரும்பாலான விளம்பரங்கள் இவ்வகையினதாகஇருக்கும். எதிர்காலச் செய்கை விளம்பர நகல் நுகர் வோர்க்கு நினைவூட்டும் வகையில் அமை கின்றது. இவ் வகையான நகலை அடிக்கடி படிக்கும் நுகர்வோர் வாய்ப்பு ஏற்படும் போது இச் சரக்கினை வேண்ட முடிவு செய் வார்கள். எனவே விளம்பர நகலை தயார் செய்ய முன் விளம்பரம் செய்பவர் தமது குறிப்பான நோக்கம் என்ன என்று திட் டம் செய்து கொள்ள வேண்டும். விளம் பரம் செய்வது இருக்கும் தேவையை பெருக்கவா, அல்லது புதிய தேவையை உண்டாக்கவா என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந் நோக்கங்களுக்கு அமைய நகலை அமைக்க வேண்டும்.
இந் நகலை மக்களைக் கவரும் வகையில் அமைக்க வேண்டும். பால் உண்ர்வு மூலம் விளம்பரத்தினை பரப்புவதை நறுமணப் பொருள்தயாரிப்போர் கையாளுகின்றனர். அழகிய பெண்களின் உருவங்களைத் தீட்டி அவர்களின் அழகிற்குக் காரணம் குறிப் பிடப்பட்ட சவர்க்காரம், பவுடர் உபயோ கிப்பதால் என்று எழுதி வைக்கின்றனர். சில விளம்பர தாரர்கள் அழகிய சினிமா நடிகைகளின் படங்களை விளம்பரங்களில் போடுகின்றனர். பொதுமக்களுக்கு இது பெரிதும் கவருவதாக உள்ளது. இதே போன்று பலவிதமான விளம்பரங்கள் அமை கின்றன. எனவே எவ்வித உணர்வைத்தட்டி எழுப்பும் விளம்பரமாக இருந்தாலும் அதன் முதல் சிறப்பு மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் அமைவதுதான். அவ் விளம்பரத்தினைக் கண்டதும் அதனைப் படிக்கத் தூண்டும் வகையில் நகல் அமைய
-

a. Joešg6
வேண்டும். விளம்பரத்தைப் படித்தவர் அதைத் தன் மனதில் இருத்தி அதன்மீது நம்பிக்கை கொண்டு அதிற் கூறப்பட்ட சரக்கினை வேண்ட முடிவுசெய்யும் வண்ணம் நகல் அமைய வேண்டும்.
விளம்பரத்தினை மக்களுக்கு எந்த வகை யில் அளிப்பது என்பது மிகவும் கவனிக்கத் தக்க ஒரு கேள்வியாகும்; ஏனெனில் விளம்பரத்தினுல் எதிர்பார்க்கும் பலன் அடைவது, விளம்பரம் எதிர்பார்த்த அள வுக்கு மக்களுக்குக் கிட்டியதா என்பதைப் பொறுத்திருக்கிறது. சிறப் பா ன தும், பொருத்தமானதுமான விளம்பரம் யாதெ னில் சரியான சாதன மூலம் கவர்ச்சிகர மாக அமைப்பதுதான். எவ்வளவு சிறப் பாகவும், கவர்ச்சியாகவும் விளம்பரம் அமைந்திருந்தாலும் அதை சரியான சாதனமூலம் வெளியிடாவிட்டால் எதிர் பார்த்த பலனை அளிக்காது. அதற்கெனச் செலவிடப்பட்ட பணம் வீண் ஆகும். விளம்பர சாதனத்தைத் தெரிந்து எடுத்து விட்டால் மட்டும் போதாது. அச் சாத னத்தில் உள்ள பல பிரிவுகளில் எது மிகவும் பொருத்தமானது என்று ஆரா ய் ந் து தேர்ந்து எடுக்கவேண்டும். இன்றைய வாணிப உலகில் கீழ்க்கண்ட விளம்பரச் சாதனங்கள் வழக்கத்தில் உள்ளன. (அ) அக விளம்பரம் :
1. அச்சு விளம்பரம்
(a) செய்தித்தாள், (b) இதழ்கள்.
(c) வாணிப இதழ்கள். 2. தபால் வழி அனுப்புதல், 3. வானெலி, டெலிவிசன். (ஆ) புற விளம்பரம் :
4. விற்பனையாளர்கள் சாதனங்கள். 5. வீட்டுக்கு வீடு மாதிரி கொடுத்
தல். 6. பெருவகை அறிவிப்பு - உ+ம்: கலண்டர், மை ஒற்றுத் தாள். பொருட்காட்சி முதலியன. 7. சினிமாப் படக் காட்சி. (ஈ விலைக் கொள்கை: (Pricing Policy)
உற்பத்திசெய்த பொருட்க ளின் விலையை நிர்ணயிப்பது விலைக்கொள்கை
|32ー

Page 159
சந்தைப்படுத்துதற் .
எனப்படும். இவ் விலைக்கொள்கையை முடிவுசெய்யும் பொறுப்பு விற்பனை நிர்வாகி யினுடையதாகும். விலைக்கொள்கையை முடிவுசெய்யும் காரணிகள் தொழிலுக்குத் தொழில், ஆலைக்கு ஆலை, நிலையத்திற்கு திலையம் வேறுபடுவதுண்டு. இருப்பினும் எல்லாச் சூழ்நிலைகட்கும் பொதுவான சில அம்சங்கள் உள்ளன. அவையாவன:
(அ) ஒரு சரக்கின் உற்பத்தி விலையில் அதன் உற்பத்தி விலை, தயாரிப்பாளருக்கு தியாயமான இலாபம் ஆகியவை சேர்ந் திருக்கும்.
(ஆ) அதே சரக்கினை உற்பத்தி செய் պւն மற்றைய உற்பத்தியாளர்களின் விலையை அறியவேண்டும். தனது விலைக் கும், மற் றை ய உற்பத்தியாளர்களின் விலைக்குமிடையில் ஏற்றத்தாழ்வு இல்லை பாயின் எப்படித் தமது உற்பத்தியில் சிக்கனத்தை ஏற்படுத்தித் தமது விலையைக் குறைக்கலாம் என்று ஆராய வேண்டும். மற்றைய உற்பத்தியாளரை விடத் தமது உற்பத்தி விலை அதிகமாயின் அப் பொரு ளின் உற்பத்தியினைத் தொடர்ந்து நடாத்த முடியுமா என ஆராய வேண்டும்.
(இ) குறிப்பிட்ட விலைக்கு மக்கள் தம் பொருட்களை வாங்கின்றனரா என சந்தை ஆராய்ச்சிமூலம்அறிந்துகொள்ளவேண்டும்.
(ஈ) சரக்குகளின் தரமும், மக்கள் அதனை எங்ங்ணம் விரும்புகின்றனர் என் பதும், ஆடம்பரத்தினையும், சமூகத்தில் உயர்ந்த நிலைமையையும் நிலைநாட்ட வேண்டிச் சாதாரண ஒரு பொருளுக்குக் கூட மிகுதியானவிலையினைச் சிலர் கொடுக்க முன்வரலாம். பொதுவாகச் சரக்கை வாங் குபவர்கள் தமக்கு அது தேவைப்படுவ தால் தான் வாங்குகின்றனர். எனவே அவர் விலையினைப்பற்றி இரண்டாவதாகத் தான் எண்ணுவார். சரக்கினை குறைவான விலைக்கு விற்கப்படுமாயின் அதன் காரணத் தினைக் குறித்து ஐயப்படுவதுண்டு. ஆகவே சரக்கின் விலைக்குத் தக்க அளவுக்கு மேல் முக்கியத்துவம் தரவேண்டுவதில்லை.
(உ) சரக்கு இருப்பாக இருந்தால் அதனை விற்பனைசெய்யநிண்டகாலம் ஆகும் என எதிர்பார்த்தால் அது விற்பனையாகா மல் கைஇருப்பாகக் கிடக்கும் காலத்திற்கு ஆகும் வட்டியையும் விலையுடன் சேர்த்து

வ. அன்ரனி
விடல் வேண்டும். இதனுல் சரக்கின் விலை அதிகமாகும்.
சரக்குகளைச் சந்தை விலைக்குக் குறைவா கவோ சந்தை விலைக்கோ அல்லது சந்தை விலைக்கு அதிகமாகவோ விற்க விற்பனை நிர் வாகம் முடிவுசெய்யலாம். சந்தை விலைக்குக் குறைவாக விற்பனை செய்வதன் நோக்கம் போட்டியாளர்களை வெல்லவே. ஆனல் இந்த விலை பொருளின் அடக்கவிலைக்குக் குறைவாக இருக்கக்கூடாது. அவ்விலைக்குக் குறைவாக விற்ருல் நட்டம் வரும். ஆகவே மற்றைய விற்பனையாளர் விலைக்கு சிறிது குறைவாக விற்பதே சந்தைவிலைக்குக் குறைவான விலை என்கின்ருேம். மிகக் குறைந்த இலாபம் இவ் விற்பனையில் வரு வதால் மிக அதிகமானசரக்குகள் விற்பனை யாகும். அதிகசரக்குகள் விற்பதால் பெரும் இலாபம் கிடைக்கும்.
விலைக்கொள்கையில் முடிவுசெய்ய வேண்டிய மற்றும் ஓர் சிக்கலான செய்தி, எல்லோருக்கும் ஒரே விலையா அல்லது தயா ரிப்பு நிலையத்தின் அருகில் இருப்பவர் களுக்கு ஒரு விலையும், அங்கிருந்து தொலை வில் இருப்பவர்களுக்கு, தொலைவில் இருப் பதற்கு ஏற்றபடி அதிக விலையுமா, அல்லது பெரும்தொகையாக வாங்குபவர்களுக்கும் சில்லறையாக வாங்குபவர்களுக்கும் ஒரே விலையா என்பதும் ஆகும். பொதுவாகத் தாயாரிப்பாளர்கள் மொத்த விற்பனைவிலை என்று ஒருவிலையும், சில்லறை விற்பனை விலை என்று வேறு ஒரு விலையும் நிர்ணயித்து அதன்படி விற்பனையை நடாத்துவர்.குறிப் பிட்ட விலைக்குக் குறைவாக விற்பனைசெய் தால் மக்களுக்குச் சரக்கினைப்பற்றி, தவ ருன அபிப்பிராயம் தோன்றும். எனவே உற்பத்தியாளர்கள் விற்பனை விலையைக் கட்டுப்படுத்துவதுமுண்டு.
(உ) விநியோக வழிமுறைகள் :
சந்தைப்படுத்தற் துறையில் சரக்கினை உற்பத்தியாக்கி நுகர்வோரை அடையும் வரையும் பல கைகள் மாறுகின்றன. உற் பத்தி யாளருக்கும் சரக்கினைப் பெறும் நுகர் வோருக்கும் இடையே சரக்குகளை கையாளு Genurr 6oT GOL-pil&advuuri (Middle men) எனப்படுவர். எனவே ஒரு உற்பத்தி ஸ்தா பனம் தனது உற்பத்திப் பொருட்களைப் பல வழிகள் ஊடாக விநியோகம் செய்து, சந்தைப்படுத்த முயற்சிகளை எ டுக் க வேண்டும்"
33 -

Page 160
நேரடிக் கிளைகள் மூலம் விற்ப
உற்பத்தியாள
யாளரின் இ
உற்பத்தி
நுகர்வோர் = ெ
முகவர், நடுநிலையர் மூலம் வி
உற்ப

Tவிற்பனை ust 6Tsissi
B
விற்பனையாளர்கள்
up பொதுமக்கள்

Page 161
சந்தைப்படுத்துதற் ...
மேற்காட்டிய படத்தின்படி ஸ்தாபனம் சரக்கினை உற்பத்தியாக்கி பின் அச் சரக் கினை எத்தகைய வழிகள் ஊடாக நுகர் வோர் கையை அடையச் செய்தல் என் பதை இது குறிக்கும். எனவே நிறுவனத்தின் விநியோக முறையில் முக்கியமாக:
1. தனது நேரடிக் கிளைகள் மூலம்
விற்பது. 2. முகவர், நடுநிலையர் மூலம் விற்பது. தனது நேரடிக்கிளைகள் மூலம் விற்ப தாயின் அதன் செலவு (Cost), காலம், அமைப்பு திறனுகப் பயன்தருமா, என் பதனை ஆராயப்படல் வேண்டும். ஆகவே நேரடியாக தமது கிளைகள் மூலம் கொடுத்து நுகர்வோருக்குச் சந்தைப்படுத்துவதாயின் ஒரு சிறிய இலாபத்தினை மட்டும் கிளைகள் வைத்து விற்கக்கூடியதாக இருக்கும். ஏனெனில் இதில் இடைநிலையர்களில் கிளை கள் மட்டும்தான் காணப்படுவர்.
முகவர், நடுநிலையர்கள் மூலம் சந்தைப்
படுத்துவதாயின் இங்கு இடைநிலையர்கள் அதிகம் காணப்படுவர். உற்பத்தியாளன் நேரடியாக மொத்த வியாபாரிகளுக்கும், மொத்த வியாபாரி சில்லறை வியாபாரி களுக்கும், பின்பு சில்லறை வியாபாரிகள் பொதுமக்களுக்கும் (நுகர்வோருக்கும்) விநியோகிப்பர். எனவே ஒவ்வொரு இடை நிலையர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப சிறிய இலாபங்களை பொருளின் விலைமீது சேர்த்து விற்பதஞல் இறுதியாக நுகர்வோரை அடை பும்போது நுகர்வோர் கூடிய விலையைக் கொடுக்கவேண்டி நேரிடும். இதனல் நுகர் வோர் பொருட்களுக்கு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வார்களா என்பது சந்தேகத்திற் கிடமானதாகும். எனவே இரு வழிகளில் நுகர்வோரைப் பாதிக்காத வகையில் தேர்ந்து எடுக்க வேண்டும். இரண்டு வழிகளிலும் நன்மை களும், தீமைகளும் இருந்த போதிலும் சரியான வழிமுறையை தேர்ந்து எடுத்து விநியோகம் செய்வது சிறந்ததாகும்.
-

al. gieia geof
3. சந்தை ஆராய்ச்சி: (Market Research)
சரக்குகளை உற்பத்திசெய்யமுன் உற் பத்தியாளர்கள் எந்த அளவிற்குச் சரக்கு களை உற்பத்திசெய்வது என்று நிர்ணயிக்க வேண்டும். அந்த அளவை நிர்ணயிக்கச் சரக்குகள் எந்த அளவிற்குத் தேவைப்படு கின்றது என்று தெரியவேண்டும். தே வைக்கு மேலதிகமாக உற்பத்திசெய்து விட்டால் சரக்குகள் விற்காமல் தேங்கி உற்பத்தி குறைவடைகின்றது. இதனல் வேலையின்மை நிலையும் வந்து விடும். தேவைக்குக்குக் குறைவாக உற்பத்திசெய் தால் நுகர்வோர் இன்னல்படுவர். ஆகவே தேவையும், நிரம்பலும், சமமாக இருக்கக் கூடியதாக உற்பத்தி செய்யவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு சரக்கு எவ்வளவு விற்கப்படுகின்றது எவரால், எங்கு, எப் போது விற்படுகின்றது என்ற செய்திகளை ஆராயவேண்டும். விற்பனைபற்றிய புள்ளி விபரங்களைச் சேர்க்கவேண்டும். விற்பனை குறைந்தால் காரணத்தினை ஆ ர ய வேண்டும். சரக்கின் விலை அதிகரித்தால் விற்பனை குறைந்துவிட்டதா, அல்லது போட்டியின் காரணமாக வேறு தயாரிப் பாளரின் சரக்குகளை மக்கள் வேண்டத் தொடங்கி விட்டன ரா, என்று ஆராய்ச்சி செய்யவேண்டும். அல்லது தரம் மாறிவிட்டதா என ஆராயவேண்டும். குறிப்பிட்ட இடங்களில் விசாரணைகள் நடாத்தியும், மற்றும் சில இடங்களில் விற்பனைச் சோதனைகளை நடாத்தியும், புது விற்பனை முறைகளின் விளைவு பயன்தரு கின்றதா, இல்லையா என்பதைக் கண் டறியலாம்.
நுகர்வோர் விருப்பு வெறுப்புக்களையும் பழக்க வழக்கங்களையும் கண்டறிய, நுகர் வோர் ஆராய்ச்சி நடாத்தப்படுகின்றது. அவர்களுக்கு வினக்கொத்துக்களைச் சில் லறை விற்பனையாளர் மூலமும், தபால் மூலமும் அனுப்பி விடை பெறுவது வழக் கம். விஞக்கொத்தில் அச் சரக்கினை
35 -

Page 162
சந்தைப்படுத்துதற் 08 - 8 O 9 o e
விரும்பி வேண்டக் காரணம் என்ன , அதன் விலையைப் பற்றிய எண்ணம், நுகர் வோர் சரக்கினைப்பற்றிக் கூறும் சிறப்பு அம்சம் போன்ற பல அம்சங்கள் இடம் பெறும். விணுக்கள் அதிகமாக இருப்பின் அவர்கள் விடைகள் எழுதச் சோம்பல் படுவார்கள். எனவே ஒர் அளவான எண் ணிக்கையுடைய விஞக்களாக இருக்க வேண்டும். அத்துடன் வி  ைட க ள் அனுப்பு வ த ந் குத் தபாற் செலவு கொடுத்து அனுப்பும்போது அது அச் செலவு இன்றி அனுப்புமாறு ஆராய்ச்சி யாளர்கள் ஏற்பாடு செய்யவேண்டும். சில சமயங்களில் நுகர்வோர் வீட்டிற்குச் சென்று சரக்கினைப்பற்றி அவர்கள் கூறும் செய்திகளைப்பற்றிக் குறித்து வருவது முண்டு. இம்முறை ஆராய்ச்சியாளர்களுக்கு கூடுதலான பயனை அளிக்கும். எனவே சுருங்கக்கூறின் சந்தை ஆராய்ச்சியை நடாத்துவதன்மூலம் தயாரிப்பாளர்கள் தம் சரக்குகளின் தேவையை நிர்ணயிக்க வும், புதுச் சரக்குகளைப் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யவும். அதன் விளைவுகளை சரியானமுறையிற் புரிந்துகொள்ளவும் முடி கின்றது. இதனுல் சரக்குகளை விற்பதில் நட்டங்களைத் தவிர்ப்பது மட்டுமன்றி. பெருமளவு விற்பனையால் சிக்கனங்களும் அடையமுடிகின்றது.
4. விற்பனையின் பின் சேவையும்
சந்தைப் பிரதிபலிப்பும் :
விற்பனைத் திட்டத்தின் இறுதி முக்கிய மான தொழிற்பாடு விற்பனையின் பின்
முதல
முதல் குறைப்பின் போது மீதி ( சொல்லாது விடப்பட்டிருப்பின் அதை தொகையில் காட்டலாம். இது கட்ட
حسيحیح***مح۔

சேவையாகும். அதாவது விற்பனையாளர் கள் தங்களிடம் வேண்டிய பொருட்களை (சரக்குகளை வேண்டியவரிடம் தாங்களே கொண்டுசென்று அவரிடத்தில் ஒப்படைத் தலைக் குறிக்கின்றது. இச் சேவை வாங்கு பவர்களைத் தொடர்ந்தும் வாங்குவதற்கு ஊக்கப்படுத்துகிறது. இன்று நாம் காணக் கூடியது என்னவெனில் சில்லறை விற்பனை யாளர்கள் தாங்கள் விற்பனை செய்த பொருட்களைத் தங்களது விற்பனை நிலையத் திற்கு வெளியே வாங்கியவர்களின் வாக னங்களில் தாங்களே ஏற்றிவிடுகின்றனர். இதேபோல், மொத்த வியாபாரிகள் தங்க ளது சொந்த வாகனங்களில் சில்லறை வியாபாரிகள் வாங்கிய பொருட்களை அ வ ர் க ள து வியாபாரநிலையங்களில் கொண்டு சென்று ஒப்படைக்கின்றனர். எனவே பெரும்பாலான மொத்த வியாபாரி களுக்கு வாகனங்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன. எனவே விற்பனைத் திட்டத்தில் வாகனங்களுக்கு எனப் பரா மரிப்பு ஸ்தாபனம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே மொத்த வியாபாரியின் வியாபார ஸ்தா பனத்தில் நல்ல ஒர் முறையான வாகனப் போக்குவரத்து அவசியம் தேவைப்படுகின் ft) gil. ஆகவே வாடிக்கையாளர்களின் பொருட்களைத் தாங்களே கொண்டுசென்று சேர்ப்பதால் விற்பனையை மேலும் மேலும் மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்.
SqLALLSAeSqSqqSLLSS S AAAqAASAALSLSLSLSLSSSSSALSLSSLLLSLSSLSLSALASLLALSLSSASSS
தறைப்பு மீதி
rற்பட்டிருந்து அதுபற்றிக் கணக்கில் எதுவு ா ஒரு மூலதன ஒதுக்கமாகக் கருதி ஐந் ாயம் செலவு மீதியாகவே இருக்கும்.
ܚܝܚ 136

Page 163
The best wishes from
General Rice Merchants
&
Commission Agents, Dealers in Sri Lanka Produces
|
M. Letchumanan & Co. 133, Old Moor Street, COLOMEO-12
T'Grams: "Muruga' T'Phone : 33487
The Best wishes
from
Dealers in : Tyres, Tubes, Chemicals, Hardware, Estate Supplier,
& Transport Agents
JAILAXMSTORES
91-A, Maliban Street, COLOMBO-11 T'Phone: 2649 T'Grams Jeya Export'
Branch:
MADULKELLE
Phone: 807
வி - 18

With the best Compliments
from
Mls. RANJANA STORES
52, Bankshall Street, соLомво-11
வித்தியோதயத்துக்கு எமது வாழ்த்துக்கள்!
உள்ளுர் விளவுப்பொருள் விற்பனையாளர்கள்
ராஜா ஸ்டோர்ஸ் RAJA STORES
54, 4-ம் குறுக்குத் தெரு, கொழும்பு-11
தொலைபேசி: 26722 தந்தி :
2576 “Liquia

Page 164
மனமுவந்த உள்ளுர் உற்பத்திப் பொரு கமிஷன் விற்பனையாளர்.
6. V
அன்பளிப்பு!
命 卷 பலவகை உளஞா விளைபொருள் விற்பனையாளர்கள்
PEOPLEಣ್ಣ TRADE SUPPLIES
112, 4-ம் குறுக்குத் தெரு 143 மலிபன் வி
கொழும்பு-11
தந்தி : “சரவணன்" Guifr Gör: 225389 23509

அன்பளிப்பு !
ட்களின்
−
W வலிகம ஸ்டோர்ஸ்
Veligama Stores
139, 4-ம் குறுக்குத் தெரு கொழும்பு-11
With Best Compliments from
女
M/s.Vasanda's Ltd. 104, Third Cross Street COLOMEBO-11
TPhone: 27871,

Page 165
- பொருளியல்
சுதந்திர வர்த்தக வலைய
இ. இராசசுந்தரம் வர்த்தகவியல் (சிறப்பு) இறுதிவருடம்

ம்- ஓர் அறிமுகம்
சுதந்திர வர்த்தக வலையம் முதன் முதலில் அயர்லாந்தின் “சணன்’(Shannan) எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிங்கப்பூர், பிரான்ஸ் ஹொங்ஹொங், எகிப்து. மொறிசியஸ், நைஜீரியா, சல்வடோர், பிறேசில், தாய் லாந்து போன்ற நாற்பது நாடுகளில் நடைமுறைக்குட்பட்டுள்ளது. இலங்கையில் 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதற்கிணங்க ஒரு சுதந்திர வர்த்தக வலையத்தை ஆரம் பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற் சாக கொழும்புக்கு வடக்கேயுள்ள பகுதி யில் 150 சதுரமைல் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் நடவடிக்கையாக கட்டுநாயக்காவில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு வலையக் கைத்தொழிற்பேட்டை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. சுதந்திர வர்த்தக வலைய எல்லையை தேவைக்கேற்ப விஸ்தரிக்கலாம்.
சுதந்திர வர்த்தக வலையம் எனுமிடத்து வெளிநாட்டு மூலதனத்தைக் கவரக்கூடிய தும், கட்டுப்பாடுகளற்றதுமான ஒரு கைத் தொழில் பேட்டையையே க ரு த் து க் கொள்ள ஏதுவாகின்றது. இவ்வரைவிலக் கணத்தை மட்டும் கொண்டு சுதந்திர வர்த்தக வலையத்தையிட்டு பூரணமாக ஆராய முடியாது. அதனையிட்டு மேலும் ஆராய்வதாயின் அதன் செயற்பாடுகள் என்னவென்ற தரவுகள் அவசியமாகும். எனவே அச்செயற்பாடுகளை ஆராய்வோம்.
சுதந்திரவர்த்தக வலையத்தை அமைக் கும் பொறுப்பு கொழும்பு பாரிய பொரு ளாதார ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. சுதந்திர வர்த்தகவலைய எல் லைக்குள் வெளிநாட்டு மூலதனமாயினும்சரி
139 -

Page 166
சுதந்திர வர்த்தக வலையம்
உள்நாட்டு மூலதனமாயினும்சரி அனுமதிக் கப்படும். வெளிநாட்டு முதலீடும் சோசலிச நாட்டினதானுலென்ன முதலாளித்துவ நாட்டினதானலென்ன அனுமதிக்கப்படும். ஆனல் எந்த ஒரு மூலதனமாவது எமது நாட்டிற்குத் தீமை விளைவிக்கும் எனக் கருதப்பட்டால் அதைத் தவிர்த்துக் கொள்ள முடியும். ஒரு மூலதனம் அனு மதிக்கப்படுமுன் நன்கு ஆராய்ந்தே அனு மதிக்கப்படும். பெரிய அளவினதான மூல தனத்திற்கும் கூடிய வேலை வாய்ப்பளிக்கக் கூடிய மூலதனத்திற்கும் வரிச் சலுகைகள் அளிக்கப்படும்.
கைத்தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் முடியும். இப்படி இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட் களுக்கு இறக்குமதி வரியோ, சுங்கத் தீர்வையோ அறவிடப்படமாட்டாது. ஆரம்பத்தில் தொழில்நுட்பவியலாளர்கள் வருவிக்கப்படுவர். நாளடைவில் எமது தொழிலாளருக்கும் தொழில்நுட்பம் பயிற் றப்படுங்கால் வெளிநாட்டுத் தொழி லாளர் தேவைப்படமாட்டார்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட் கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வ தற்காகவே உற்பத்தி செய்யப்படும். உற் பத்தியில் சிறு பகுதி எமது நாட்டிற்குள் ளும் விற்கப்படலாம். அப்படி உள்நாட் டிற்குள் அனுமதிக்கப்படும் பொருட்கள் யாவும் இறக்குமதிப் பொருட்களாகக் கருதப்பட்டு இறக்குமதி வரி விதிக்கப்படும். சுதந்திர வர்த்தக வலையத்தினுள் இலங்கை யர் அல்லாதோர் வங்கிக் கணக்கு ஆரம் பிக்கவும், இரகசிய கணக்குகள் வைக்கவும் வசதிகள் வழங்கப்படும். இங்கு சுவிற்ச லாந்து வங்கியமைப்பைத் தழுவி வங்கி முறை விருத்தி செய்யப்படும்.
இவ் வர்த்தக வலையப் பிரதேசத்திற்குள் உள்ள கிராமசபைகள், நகரசபைகள் யாவும் கலைக்கப்படும். இவ்வெல்லைக்குள் தேர்தல் எதுவும் நடாத்தப்படமாட்டாது.

இ. இராசசுந்தாம்
பாரிய கொழும்புப் பொருளாதார ஆணைக் குழு ஒரு ‘* உன்னத மாநகரசபை ** யாக இயங்கும். இதன் பரிபாலனம் ஆணைக்குழு வினல் விசேட ஆணையாளர் மூலம் நடாத் தப்படும். சுதந்திர வர்த்தக வலைய எல்லைக் குள் மக்கள் சுதந்திரமாகப் போகவும் வர வும் வசதிகள் இருக்கும். சுதந்திர வர்த்தக வலையம் அதிக கட்டுப்பாட்டுக் குட்பட மாட்டாது. தொழிற்சாலை அமைப்பு நிறு வன நிர்வாகம், வேலைக்கு ஆள்சேர்த்தல் போன்ற விடயங்களில் அரசின் தலையீடோ அன்றி வேறெவரின் தலையீடோஇருக்கமாட் டாது. இவை யாவற்றையும் தொழிலதி பர்களே கவனிப்பர். எமது நாட்டிலுள்ள பொதுவான சட்டங்கள் யாவும் செல்லு படியாகாது. தொழிலாளர் சேமநலன்புரி சட்டங்கள் இவ்வெல்லைக்குள் செல்லுபடி யாகாது. திருப்தியில்லாத தொழிலாளரை தொழிலதிபர் வேலைநீக்கம் செய்ய முடியும்.
சுதந்திரவர்த்தகவலையத்தை எவ்வாறு வெற்றிபெறச் செய்யமுடியும் என்பதை ஆராய்வதற்காக சுதந்திர வர்த்தகவலைய நிபுணர்கள் வெளிநாடுகளிலிருந்து அழைக் கப்பட்டுள்ளார்கள். எனவே அவர்களின் ஆலோசனைப்படி மேலும் சில மாற்றங்கள் செய்யப்படக்கூடும்.
சுதந்திர வர்த்தகவலையத்தின் வெற்றி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்து முதலிடுவதிலேயே தங்கியுள்ளது. எனவே முதலீட்டாளர் இங்குவந்து முதலிடத் துரண் டும் காரணிகளை ஆராய்வோம்.
ஒரு முதலீட்டாளன் தனதுமுதலீட்டை ஈடுபடுத்தமுன் அம்முதலீட்டின் பாதுகாப் புத் தன்மை,இலாபத்தன்மைஎன்பவற்றை நன்கு ஆராய்ந்தே முதலிடுவான். முத லீட்டின் பாதுகாப்புத்தன்மை அரசியல் ஸ்திரத்திலேயே தங்கியுள்ளது. இலாபத் தன்மை வெற்றிகரமாக அமைய, உற் பத்திப் பொருட்கள் சந்தையில் ஸ்திர மான இ ட த்  ைத ப் பிடிக்கவேண்டும். அதற்கு உற்பத்திச் செலவில் முக்கிய இடத்தை வகிக்கும் கூலி மலிவாகவும் போதியதாகவும் காணப்படவேண்டும்.
140 -

Page 167
சுதந்திர வர்த்தக வலையம்
அபிவிருத்தியடைந்த நா டு களி ல் தொழில்நுட்ப வளர்ச்சியினல் கூலி வீதம் கூடிக் காணப்படுகின்றது. அபிவிருத்தி படைந்துவரும் நாடுகளிலே கூலி வீதம் குறைவாகவே உள்ளன. ஆசியாவில் உள்ள அநேக சுதந்திர வர்த்தக வலையங்களில் கூலிவீதம் கூடிச்சென்றுள்ளது. எனவே அபிவிருத்தியடைந்துவரும் எமது நாட்டில் கூலி வீதம் அவர்கட்குச் சாதகமாகவே காணப்படுகின்றது. எமது நாட்டில் பட்ட தாரிகள் உட்பட 15 லட்சம் பேர் வேலை யற்றுக் காணப்படுவதும், வேலையிலுள்ள வர்களிலும் பலர் தமது தகமைக்கேற்ப வேலையின்றி கீழ் உழைப்பிலுள்ளதும் முத லீட்டாளருக்கு குறைந்த கூலி வீதத்தில் கூடிய தொழிலாளர்களைப் பெறலாம் என்ற நம்பிக் கை யைத் தூண்டக்கூடியதாக வுள்ளது,
கைத்தொழில் வளர்ச்சியடைய நிதிச் சந்தையின் சேவை முக்கியமானதாகும். இலங்கை யி ல் நிதி ச் ச ந் தை யின் வளர்ச்சி திருப்திகரமற்றதாகவே இருந்த போதும், அக்குறையைத் தீர்க்க நட வடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதாவது இப்பிரதேசத்துக்குள் பிறநாட்டு வங்கி களை அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள் ளது. மேலும் செலவாணி நடவடிக்கை களில் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாக சுவிஸ் வங்கி யமைப்பினைத் தழுவி இரகசியமானதான ஒரு வங்கியமைப்பு அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புவியியல் காலநிலை கைத்தொழில் பொருட்களின் உற்பத்திக்கு பாதகமற்றதாகவேயுள்ளது. எந்த ஒரு காலத்திலும் பணியாலோ மழையாலோ எமது நாடு பாதிப்படைவதில்லை. எனவே வருடம்முழுவதும் தொடர்ந்து உற்பத்தி செய்யலாம். கொழும்பில் சுகாதாரவசதி, போக்குவரத்துவசதி, தொலைபேசித்தொ டர்பு என்பவை யாவும் மிகச் சிறந்தவகை யில் உள்ளமையும் புதிய முதலீட்டாளர் கட்கு வசதியாகவேயுள்ளது.

இ. இராசசுந்தரம்
சுதந்திர வர்த்தகவலையம் அமைவதின் மூலம் எமது பொருளாதாரப் பிரச்சனைகள் யாவும் முற்ருகத் தீர்ந்துவிடாது. ஆனல் சில பிரச்சனைகளை ஒரளவுக்காவது குறைத்து விடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே அப்பொருளாதாரப் பிரச்சனைகளை யும் அவற்றை எவ்வாறு சுதந்திர வர்த்தக வலையம் தீர்க்கும் என்பதையும் ஆராய் வோம். -
கைத்தொழில்துறையில்வளர்ச்சியுள்ள நாடுகளே பொருளாதாரத் துறையிலும் வளர்ச்சியுடையனவாகக் காணப்படுகின் றன. இலங்கை யை நோக்குமிடத்து 1975ஆம் ஆண்டு தேசிய வருமானத்தில் 1312 வீதத்தையே கைத்தொழிற்துறை வகித்துள்ளது. இது மிகக் குறைந்த அள வாகவேயுள்ளது. எனவே எமது பொருளா தாரத் துறையை முன்னேற்றக் கைத் தொழிற்துறையை முன்னேற்றவேண் டியது அவசியமாகிறது. கைத்தொழிற் துறையின் முன்னேற்றத்திற்குச் சுதந்திர வர்த்தகவலையம் பேரளவில் உடந்தையாக அமையலாம்.
ஒரு நாடு கைத்தொழில்துறையில் முன்னேறுவதற்கு மூலதன ஆக்கம் இடம் பெற வேண்டும். குறை விருத்தி நாடுக ளில் ஆக்கவீதம் குறைவாகவே காணப் படுகின்றது-5%க்குக் குறைவாகும். அபி விருத்தி அடைந்த நாடுகளில் இவ்வீதம் உயர்த்தியாகும்-15%-20%வரை காணப் படுகின்றது. இலங்கையிலும் ஆக்கவீதம் குறைந்துள்ளதற்குக் காரணம் குறைந்த சேமிப்பு மட்டமேயாகும். இருக்கும் சிறிது முதலீடும் குறுகிய கால பலனளிக்கும் நுகர் வில் முடக்கப்படுகின்றனவேயன்றி உற் பத்தித் துறையை நோக்கிச் செலுத்தப்பட வில்லை.
மூலதன ஆக்கம் குறைவாக இருப்ப தால் நாட்டிற்கு அவசியமாகும் மூல தனத்தை, உள்ளூர் சேமிப்புக்களை அதிகரித் தல், வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெறல், வெளிநாட்டு மூலதனங்களை ஈர்த் தல் ஆகிய முறைகளிலேயே பெறமுடியும்.
l4 -

Page 168
apsidy anigss aerouth
எமது நாட்டு மக்களின் சராசரி வருமானம் குறைவாக இருந்து அன்ருட வாழ்க்கைச் செலவுக்கே போராடிக்கொண்புருக்கும் போது உள்ளூர்ச் சேமிப்பு மட்டத்தை உயர்த்தி அதன்மூலம் மூலதனத்தை அதி கரிப்பது முடியாத காரியமாகும். அடுத்து, வெளிநாட்டுக் கடன்களைப் பெறல், நாட்டை ஈடுவைப்பதற்குச் சமமான தாகும். ஆனலும், இதையே நாம் பல காலமாகச் செய்துவருகின்ருேம். கடன் களையும் அவைக்கான வட்டிகளையும் திருப் பிச் செலுத்தவேண்டிய பெரும் பொறுப்பு எமக்குள்ளது. எமது ஏற்றுமதி வருமானத் தில் $ பங்கு இக் கடன்களை அடைக்கவே இன்று பிரயோகிக்கப்படுகின்றது. இப்படிப் பெறும் கடன்களும் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடாது நுகர்ச்சி சம்பந்தமாகச் செல விடப்படுவது மற்றுமோர் பெரும் குறை பாடு, அத்துடன் எம்மை நம்பிக் கடன் த ரு வோரு ம் குறைவாகவேயுள்ளனர். அடுத்து, முதலீடுகளை ஈர்ப்பதற்கு இது வரை காலமும் அரசு எடுத்த முயற்சிகள் யாவும் போதிய திருப்தியளிக்கவில்லை. எனவே, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க் கும் வழியில் சுதந்திர வர்த்தக வலையம் பயன்படுத்தப்படும்.
எமது நாட்டின் கைத்தொழில் வளர்ச் சிக் குறைவுக்கு மற்றுமோர் காரணம் மனித மூலவளம் பற்ருக்குறையேயாகும். மனித மூலவளம் பற்ருக்குறைவு என்னும் போது இருக்கும் மூலவளத்தைப் பயன் படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப அறிவுடைய தொழிலாளர் குறைவாகவே காணப்படுகின்றனர் என் பதையே கருதப்படுகிறது. நாட்டில் 15 லட்சம் மக்கள் வேலையற்றுக் காணப்படு கின்றனர். இவர்களுள் கல்விகற்றேர் பெரும்பகுதியினரெனினும் தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகுறைவாகும். வெளிநாட்டு உதவியின் அடிப்படையில் தொழில்நுட்ப பயிற்சியின் மூலம் இக்குறைபாட்டைத் தீர்த் து க் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்
-

இ. இராசசுந்தரம்
பட்டபோதும் அவை போதிய திருப்தியை அளிக்கவில்லை. ஆனல் சுதந்திர வர்த்தக வலையம் அமையப்படின் வருவிக்கப்படும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்க ளூடாக எமது நாட்டுத் தொழிலாளிக ளுக்கு தொழில் நுட்ப அறிவு புகட்டப் படும் வாய்ப்பு உண்டு எனலாம்.
கைத்தொழில் வளர்ச்சி குறைவுக்கு அரசியற் தலையீடு இன்னுமொரு காரண மாகலாம். நமது நாடு சுதந்திரம் பெற்று 30 வருடங்களாகின்றது. இக்காலப் பகுதி யில் கைத்தொழிற்துறையை நேரடியாக வும் மறைமுகமாகவும் அரசாங்கம் கட்டுப் படுத்தி வருவதையே காணக்கூடியதாக வுள்ளது. மூலப்பொருள் இறக்குமதிக் கட்டுப்பாடு, ஆள் சேர்த்தல் மற்றும் நிர்வாக விடயங்களில் அரசியல்வாதிகள் தலையிடுவதனுல் இலாபம் தரக்கூடியதான முயற்சிகளை மேற்கொள்ள தொழிலதிபர் கள் இடைஞ்சல்களுக்கு உள்ளாகின்றனர். ஆணுல் சுதந்திர வர்த்தகவலையம் அமையுக் கால் உள்நாட்டு முதலீட்டாளர்களும் முதலீடு செய்து இலாபம் சம்பாதிக்கலாம். இங்கு நடைமுறையில் உள்ளதுபோல் அரசியல் வாதிகளின் உறவினர்களோ ஆதரவாளர்களோ வேலைக்குச் சேர்க்கு மாறு கட்டாயப்படுத்தவும் முடியாது. திறமையற்ற முகாமைக்கும் இடமளிக்கப் பட மாட்டாது. எனவே கைத்தொழில் வளர்ச்சியுற வழிவகுக்கலாம்.
எமது நாடு எதிர்நோக்கும் பிரச்சனைக ளுள் பாாதூரமானதும் உடன் தீர்க்கப் படவேண்டியதும் வேலையில்லாப் பிரச்சனை யாகும். சுதந்திர வர்த்தகவலையத்தில் எமது நாட்டுத் தொழிலாளர்களே பிர யோகிக்கப்படுவாராகையால் ஏறக்குறைய 1 லட்சம்பேர் வேலைகொள்வர் என அர சாங்கம் நம்புகின்றது.
அடுத்து நாம் எதிர்நோக்கும் பொரு ளாதாரப் பிரச்சனையாக செலாவணிப் பற்ருக்குறையைக் கூறலாம். எமது ஏற்று மதி வருமானம் குறைவடைந்துள்ளமை
42 -

Page 169
சுதந்திர வர்ந்தக வலயம்
யும் இறக்குமதிச் செலவினம் கூடியுள்ள மையும் செலவாணிப் பற்ருக்குறையை உண்டுபண்ணிற்று. சுதந்திர வர்த்தகவலை யம் அமையுங்கால் அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களின் கூலி, மற்றும் எமது மூலப்பொருட்களை விற்பதன்மூலம் பெறும் வருவாய் யாவும் எமது செலவாணிப் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வாக அமையும்.
எமது நாட்டில் கைத்தொழில் துறை யின் உற்பத்தி அளவு சுதந்திர வர்த்தக வலையம் மூலம் பாதிப்படையும்எனக் குறை கூறப்படுகின்றது. இலங்கையில் நிலவும் கைத்தொழில்கள் பெரும்பாலும் தரமா னவையாகவே காணப்படுகின்றது. உதா ரணமாக இலங்கை புகையிலைக் கம்பனி, மகாராஜா ஒகனைஸ்சேசன் என்பன உலகக் கைத்தொழில்களுடனேயே போட்டிபோட வல்ல தரம் மிக்கவையாகும். அத்துடன் இன்று இறக்குமதித் தடை நீக்கியபின்பும் உள்நாட்டு கைத்தொழில்கள் இலாபம் சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றன. சுதந்திர வர்த்தகவலையத்தில் ஏற்றுமதிக் காகவே உற்பத்திசெய்யப்படும். உள்நாட் டுக்குள் வரும் சிறிய தொகைகூட இறக்கு மதியாகக் கருதப்பட்டு விசேட தீர்வை விதிக்கப்படும். எனவே சுதந்திர வர்த்தக வலையம் வருமுன் இருந்த இறக்குமதிக் கட்டுப்பாடற்ற நிலைக்கும் சுதந்திர வர்த் தக வலையம் வந்தபின் இருக்கவுள்ள நிலைக் கும் வேறுபாடில்லை. அப்படி ஒரு சிறு அள விலான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிப்படைகிருர்கள் என்று கருதினுலும் கூட தரம்குறைந்த ஒரு சில தொழிலதிபர் கள் மூலவளங்களைத் திறனற்ற முறையில் பாவித்துக் கூடிய இலாபம் பெறுவதற்காக நாட்டிலுள்ள 140 லட்சம் மக்களும் பாதிப் படைவது நியாயமாகாது.

இ. இராசசுந்தரம்
தொழிலாளர்களின் நல ன் களை ப் பேணும் சட்டங்கள் சுதந்திர வர்த்தக வலைய எல்லைக்குள் செல்லுபடியாகாது எனப் பொதுவாகக் கருதப்படுமிடத்து நம் நாட்டுத் தொழிலாளிகளை வெளிநாட்டு முதலாளிகள் சுரண்ட ஏதுவாகும் எனும் குற்றச்சாட்டு உண்டு. ஆனல் வர்த்தக வலையத்தில் வேலை செய்வோருக்கு ஆரம்ப கட்டத்தில் வழங்கப்படும் ஊழியமானது நாட்டில் ஏனைய பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கட்குக் கிடைப்பதை விட சிறிது அதிகமாகவே கிடைக்கும் எனப் பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக் குழுவினுல் உத்தரவாதம் அளிக்கப்பட் டுள்ளது. எனவே தொழிலாளர் சுரண்டப் படும் சந்தர்ப்பம் குறைவாகவே காணப் படுகின்றது. இன்னும் நவீன முகாமைத் துவக் கொள்கைப்படி தொழிலாளர்களை நிரந்தரமாகவும், விசு வாச மா கவும் தொழில் புரியத் தூண்டுவதற்காக அவர்க ளுக்கு விசேட வசதிகள், சலுகைகள் அளிக் கப்படலாம். எது எப்படியிருப்பினும் அரபு மற்றும் நாடுகட்கு நம்மவர் வேலைதேடிச் சென்று அவதியுறுவதிலும் பார்க்க எமது நாட்டிலேயே வேலைபெறும் வாய்ப்புநல்லது என்றே கூறவேண்டும்.
சுதந்திர வர்த்தகவலையம் அமைவதன் மூலம் அங்கு முதலிடவரும் முதலீட்டாளர் கள் எமது நாட்டு அரசியலில் தலையிட்டு எமது இறமை பாதிக்கப்படும் எனவும் குறை கூறப்படுகின்றது. முதலீட்டாளர் களோ குறுகிய கால இலாபம்பெறும் நோக் குடனேயே இயங்குவர். எனவே இவர்கள் தொடர்ந்தும் தமது நலன்களைக் காக்க உள்நாட்டு அரசியலில் ஈடுபடமாட்டார். கள். எனவே இறமையும் பாதிப்படையாது.
43 -

Page 170
~−uq
With the best Compliments from
v
V v
Importers, Exporters,
General Merchants &
Commission Agents रुy
. . AUPPAR SONS
28, MANIPAY ROAD, JAFFNA,
TPhone: 7154 T'Grams: ESVEEKAY
With the best Compliments
from
ತಯಾಡ್ಜಡ್ಕ iı:#မုံ့ဖြုံဣ၅:

எமது நல்வாழ்த்துக்கள்
N, சாரதாதேவி
இண்டஸ்ரீஸ் 98/1, வில்சன் விதி, கொழும்பு-12, போன்: 26247
சுத்தமாகவும் சுவையாகவும் தயாரிக்கப்பட்ட கீழ்க்காணும் சிறந்த பொருட்களை எமமிடம் பெற்றுக்கொள்ளலாம். உபப்படம்-அம்மாமிமார்க் |
-மெங்கூஸ் மார்க் -பி.கே.ஜி.மார்க் உழுத்தம்பருப்பு உழுத்தம்மா 65uapuldT Slféf Lor Georgmub uDT உள்ளுர் பருப்பு வகை மிளகாய்த்தூள் மசாலேத் தூள் மற்றும் ஹாட்வெயர்பொருள்கள்
விநியோகஸ்தர் :
FIJET (35i si GS. 21, மூன்ரும் குறுக்குத் தெரு, கொழும்பு-11. Gunyin: 26938 55bS): “Freshpach

Page 171
- பொருளியல்
இலங்கையில் விவசாயத் போக்குவரத்து முயற்சியு
கலாநிதி க. சுந்தரலிங்கம்
M. Sc.. (Econ.) (Lond.); Ph. D. (Lond.); A. M. lns. T. (Lond.) பிரதிப் பணிப்பாளர் - மார்கா நிறுவனம்,
w பகுதிநேரவிரிவுரையாளர் வித்தியோதய வளாகம்
6 - 9

துறை தொடர்பான ம் சந்தைப்படுத்தலும்
எமது நாட்டில் இன்று வி வ ச |ா ய முயற்சிகளுக்கும் பேரளவு முக்கியத்துவம் வழங்கப்படுவது விளங்கற்பாலது. கடந்த பத்தாண்டு காலத்துள் விவசாயத் திட் டங்கள் பல இடம்பெற்றுள்ளன. எதிர் காலத்திலும் பல திட்டங்கள் இடம்பெற வுண்டு. பிரதானமாக, மகாவலித் திருப்புத் திட்டத்தினுள் பெரியதும் சிறந்ததுமான பல விவசாயத் திட்டங்களை நாம் எதிர் பார்க்கலாம். ஆயினும், அம் முயற்சிகளின் வெற்றி ஆங்காங்கு இடம்பெறும் உற்பத்தி -முயற்சிகளுக்கூடாகப் பெறப்படும் விவ சாயப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் சிறப்பினில் தங்கியிருக்கும் என்பது மறுப் பதற்கில்லை. சந்தைப்படுத்தும் முயற்சியில் போக்குவரத்து பிரதான ஸ்தானத்தை வகிக்கின்றது என்பதும் மறுத்தற்குரிய தன்று.
இன்று ஆக்குவோர் தம் விவசாயப் பொருட்களுக்குக் கொள்ளும் விலையிலும் பார்க்க நுகர்வோர் அவற்றிற்குக் கொடுப் பது அதி உயர்வாக இருப்பது புலனுகும். அவ்விலை வேறுபாட்டிற்கு நடுவனே காரண மென்று உறுத்தப்படும் அதே வேளையில், அவன் தான் கொள்ளும் இலாப மட்டங் கள் பிறர் கருதுவதைப் போன்று அதி உயர்வானதல்லவென்றும் நுகர்வோருக் கும் ஆக்குவோருக்குமிடையே நிலவும் விலைமட்ட வேறுபாட்டிற்கு சந்தைப்படுத் தும் முயற்சி சம்பந்தமாகக் காணப்படும் வசதிக் குறைவுகளே அடிப்படைக் கார ணம் என்று உறுத்த முன்வருகின் முன். இரு பாலார்களின் நியாய காரணங்கள் எவ்வளவு தூரம் ஏற்க வல்லனவென்பதை ஒரளவு ஆராயும் முகமாக விவசாயத்துறை
45 -

Page 172
இலங்கையில்
8 a
சம்பந்தமான சந்தைப்படுத்தும் தன்மை களையும் அவை தொடர்பான போக்கு வரத்துத் தன்மைகளையும் இங்கு சற்று அவதானிப்போம்.
சந்தைப்படுத்தல் என்ருல் என்ன? நுகர்வோர் விரும்பும் கால நேரங்களி லும் இடங்களிலும் அவர்கள் விரும்பும் தொகையளவுகளிலும் குறிப்பான பொருட் களை அவர்கள் விரும்பத் தகும் வழிகளில் அவர்களுக்கு வசதியான இடங்களில் கொண்டு சேர்க்கும் முயற்சியே சந்தைப் படுத்தல் எனப்படும். அம்முயற்சி தொடர் பான வேறும் பல முயற்சிகளை நாம் அடை யாளம் கொள்ள ஏதுவாகின்றது. அவை யாவன:- பொருட்களை ஒன்றுசேர்த்தல், துப்பரவு செய்தல், களஞ்சியப்படுத்தல், பெட்டியில், சாக்கில் அல்லது தகர டப் பாவில் அடைத்தல், ஆரம்ப முறைக் கான பதப்படுத்தல், போக்குவரத்து, நிதி மற்றும் நிர்வாகக் கணக்குச் சேவைகள் ஆகியவற்றை வழங்குதல் ஆகும்.
ஆக்குவோனும் நுகர்வோனும் ஒரே நபராக இருக்கும் சந்தர்ப்பத்தில் சந்தைப் படுத்துதல் அவசியமற்றது என்பது புலனு கின்றது. நுகர்வோன் ஆக்குவோனுக் கருகாமையில் இருந்துஆக்கப்படும் பொருட் களில் எவ்வித உருவ மாற்றத்தினையும் அவன் விரும்பாத தன்மையில் சந்தைப் படுத்துதல் இலகுவாகக் காணப்படும். அவ்வாருன சந்தைப்படுத்தும் தன்மையை இன்றும் நாட்டுப் புறங்களில் நாம் காண ஏதுவாகின்றது. ஆங்கு, நுகர்வோர் தாம் நுகரும் பொருட்களில் பெரும்பாலான வற்றைத் தாமே உற்பத்தி செய்துகொள் வர். அதுவன்றி ஆக்குவோர் தம் பொருட் களை நேரடியாகத் தாமே நுகர்வோருக்கு விற்பனைசெய்வர். ஆங்கு நடுவன் இடம் பெறமாட்டான். ஆகவே நகரப்புறத்தில் இடம் கொண்டுள்ள சந்தைப்படுத்தும் முயற்சித்தன்மை கிராமப்புறத்தில் இடம் பெறுவது இல்லை என்பதாகும். அந் நிலைமை யில் நவீன சந்தைப்படுத்தும் முயற்சி

க. சுந்தரலிங்கம்
தொடர்பாக மேற்கூறப்பட்ட முயற்சிகள் எவையும் இடம்பெறமாட்டா. sysdr காரணமாகச் சந்தைப்படுத்துதல் தொடர் பான செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன.
மேலும் கிராமப்புறச் சந்தைப்படுத்து தலில் போக்குவரத்துத் தேவைகளும் அதி குறைவாகவே காணப்படும். எதிர்நிலையில், ஆக்குவோன் நாட்டுப்புறத்திலும் நுகர் வோன் பட்டினப்பகுதியிலும் வசிப்பவர்க ளாயிருப்பின் அவர்களிடையே நிலவும் பெளதீக இடைவெளி விசாலமாக இரும் பதைக்கொண்டு உற்பத்தியாக்கப்படும் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள் ளும் தன்மையில் போக்குவரத்து அதிமுக்கி யத்துவம் பெறுகின்றது.இடைவெளி விசால மாகும் நிலையில் சந்தைப்படுத்துதல் சம் பந்தமான மற்றும் முயற்சிகள் இடம் பெறுவதுடன் நடுவனின் தனிப்பெருமை யும் ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றது.
விவசாயப் பொருட்களுக்கான சந்தைப் படுத்தும் முயற்சிகள் பேரளவு சிக்கற் தன்மையைக் கொண்டு காணப்படுவதும் புலனுகும். பொருட்களின் தனி விசேட குணுதிசயங்களைக்கொண்டு விசேடத்துவம் கொண்ட சேவைகள் அவற்றிற்கு அவசிய மாகின்றன. சாதாரண நடைமுறையில் விவசாயப் பொருட்களில் அநேகமானவை நெடுந்தூர இடமாற்றங்க்ளுக்கு அருகதை யற்றனவாகும். அவ்வகைத் தூரப் போக்கு வரத்திற்குள்ளாகும் பொருட்களுக்கு அவைக்கென விசேட வசதிகள் அளிக்கப் படாத தன்மையில் நிறையிலும் தரத்தி லும் அவை பாதிப்பிற்குள்ளாகும் விசேட களஞ்சிய வசதிகளில்லாத நிலையில் பழ வகைகள், மரக்கறி வகைகள், மீன். இறைச்சி, பால் போன்ற பொருட்கள் அழிவுறுவது தவிர்க்க முடியாது.
இலங்கையின் விவசாயப் பிரிவு களும் அவற்றிற்கான போக்கு வரத்து வசதிகளும் :
இலங்கையில் விவசாயத்துறையினை இரு பிரிவுகளுக்குள்ளாக்கலாம். ஒன்று
سسه 46:

Page 173
இலங்கையில் ...
பெருந்தோட்டப் பிரிவு. அங்கு தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய மூன்று பயிர் களும் விசாலமான நிலப்பரப்புக்களில் பயிர் செய்யப்படுகின்றன. மற்றது சிறு தோட்டப் பிரிவு. இங்கு நெல் மற்றும் தானிய வகைகள் இதர உணவுப் பயிர்கள் மரக்கறி, பழவகைகள் யாவும் சிறு நிலத் துண்டுகளில் பயிரிடப்படுகின்றன.
விரிவடைந்த வர்த்தக அமைப்பு அடிப் படையில் பயிர் செய்கைக்குள்ளாகிய தேயிலை, இறப்பர், தென்னைப் பயிர்களுக் கான போக்குவரத்து வசதிகள் ஆரம்பம் தொட்டே, சிறு தோட்டப் பயிர்ச்செய்கை சம்பந்தமான வசதிகளிலும் திறன்வாய்ந் தனவாக இருந்துள்ளன.
1850 தொட்டு நிறுவப்பட்ட பெருந் தெருக்களும், பின்னர் இடம்பெற்ற புகை யிரதப்போக்குவரத்து வசதிகளும் பெருந் தோட்டத்துறையைக்குறித்தே அமைக்கப் பட்டன. இன்று அத்துறை, சிறு தோட் டத் துறையிலும் திறன்வாய்ந்த போக்கு வரத்து வசதிகளைக்கொண்டு காணப்படு வது ஏற்கற்பாலது.
ஆகவே, அத்துறையையிட்டல்லாது சிறு தோட்டத்துறையையிட்டே எமது கவனத்தைச் செலுத்துவது இங்கு அவசிய மாகும். சிறு தோட்டப் பயிர்ச்செய்கை பிரதானமாக நாட்டுப்புறத்துடன் தொ டர்பு கொண்டது. ஆங்கு விவசாயிகளில் பெரும்பாலோர் ஓர் ஏக்கருக்குக் குறைந்த பரப்பிற்குள்ளான நிலத்துண்டுகளிலேயே விவசாய முயற்சிகளை மேற்கொள்கின்ற னர். அவர்களில் பெரும்பாலோர் தம் சுய தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவே விவசாயத்தில் ஈடுகொண்டவராவர். நெல், குரக்கன், இறுங்கு, கவ்பி, உழுந்து, பயறு. எள்ளு போன்ற பயிர்களை அவர்கள் பயிர் செய்து, வெளியீட்டினில் தேவைக்கு மேல திகமானவற்றைத் தம் உள்ளூர்ச் சந்தை களில் பிற வியாபாரிகளுக்கு விற்பர். உடனடியாகப் பழுதடையாப் பொருட்களை (நெல், எள்ளு, பயறு சிறு காலம் களஞ்

க. சுந்தரலிங்கம்
சியப்படுத்தி இறுதியில் விலைகள் சற்று உயர்ச்சிபெறும் தறுவாயில் தம் கிராமங் களுக்குப் புறத்தேயிருந்து வரும் வியாபாரி களுக்கு விற்கும் தன்மை நிலவுவதும் பொதுத்தன்மை.
நெல், எள்ளு, பயறு போன்ற 'காத் திரமான”பொருட்களுக்குத் தேவையாகும் போக்குவரத்துவசதிகள், காத்திரமற்ற சீக்கிரம் அழிவுக்குள்ளாகவல்ல பழம், மரக் கறி போன்ற பொருட்களுக்காகும் வசதி களிலிருந்து வேற்றுமை கொண்டன. அதி சீக்கிரம் பழுதடையவல்ல பொருட்களைச் சீக்கிரமாக விற்கவேண்டிய அவசர நில்ைமை யைப் போன்று நெல், பயறு போன்ற காத்திரமான பொருட்களை விற்கவேண்டிய அவசியம் பொதுவாக நிலவாதெனினும் பெரும்பாலும் சிறுவிவசாயிகள் ஏற்கனவே நடுவர்களிடமிருந்து (நடுவர்கள் பெரும் பாலும் அந்தந்தக் கிராம வியாபாரிகளாக இருப்பர்.) தாம் பெற்றுள்ள கடன்களைத் திருப்பும் முகமாக அப்பொருட்களையும் அதே அவசரத்துடன் விற்கவேண்டிய சந். தர்ப்பம் நிலவுவது எம் நாட்டில் பொதுப் படையானது என்பது விளங்கும். அது வல்லாது களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகளின்மையுடன் போக்குவரத்து வச திகளின் மையும் நிறுவகப்படுத்தப்பட்ட கடன் வசதிகளில்லாத தன்மையும் சேர்ந்து தம் உடனடித் தேவைகளுக்கு மேலதிகப் பொருட்களைக் காலதாமதமின்றி விற்கத். தூண்டும் சந்தர்ப்பம் சகல சிறுதுறை விவ சாயிகளிடையே நிலவுவது நாட்டினில் இன்று நிலவும் குறிப்பான தன்மை எனலாம்.
சீக்கிரம் அழிவுறவல்ல விவசாயப் பொருட்களுக்கும் அழிவுருத பொருட்க ளுக்கும் வெவ்வேருன சந்தைப்படுத்தும் சேவைகள் தேவையெனினும் இங்கு அவை இருதொகுதிகளுக்கும் பொதுவான வசதி களையிட்டே ஆராயப்படுகின்றது.
47 -

Page 174
இலங்கையில் .
சந்தைப்படுத்தும் வசதிகள்:
எமது நாட்டின் உற்பத்தி அமைப்பி னில் விவசாயத்துறை முக்கியத்துவம் கொண்ட தொகுதியெனினும் அதற்குப் போக்குவரத்து சம்பந்தமாக வழங்கப்படும் முக்கியத்துவம், வர்த்தகம், சேவை, கைத் தொழில் ஆகிய துறைகளுக்கு வழங்கப் படும் முக்கியத்துவத்திலும் அதி, குறை வென்பது பொருளாதார அறிஞர்களின் அபிப்பிராயம். அதுவன்றி விவசாயத் துறையினிலும் வெவ்வேறு பொருட் தொகுதிகளுக்கான வசதிகளிலும் பேரளவு வேறுபாடுகள் நிலவுகின்றன. நெல், அரிசி, மாவு, சீனி ஆகிய பொருட்கள் மக்களின் அன்ருட சீவியத்தினில் முக்கியத்துவம் வாய்ந்தனவெனும் அடிப்படையில் அவைக் கான சந்தைப்படுத்தும் வசதிகள் ஒரள வில் திறன் வாய்ந்தனவாகக் காணப்படு கின்றன. அப் பொருட்களின் இடம் மாற்றுதலுக்கு அரசாங்கம் பொறுப்பாகை யால் திறன் கூடிய சேவை, வசதிகள் இடம்பெறுகின்றன. உதாரணமாக நெல் சந்தைப்படுத்தும் துறையில் காணப்பட்ட இடைசல்களை நிவிர்த்திசெய்யும் நோக்கு ட்ன் நெல் சந்தைப்படுத்தும் சபை நிறுவப் பட்ட தன்மை அப்பொருள் சம்பந்தமாக அரசாங்கம் செலுத்தும் அக்கறையை வெளிக்காட்டுகின்ற ஒர் உதாரணமாகும். மாவு, சீனி, அரிசி ஆகிய பொருட்கள் பங்கீட்டிற்கு உரித்தான பொருட்களாகை யால் நடுவர்கள் தவிர்க்கப்பட்டு அதன் காரணமாகப் பொருட்களையிட்டு எழக் கூடிய போக்குவரத்து சம்பந்தமான கேள்வி யமைப்பு ஓரளவில் கட்டுப்படுத்தப்பட் டுள்ளதும் புலனுகின்றது. ஆயினும் அப் பொருட்கள் சம்பந்தமான போக்குவரத் துத் தேவைகள் முழுவதாகத் தவிர்க்கப் பட்டுள்ளன என்பதற்கில்லை. நெல் சந்தைப் படுத்துவதற்காகச் சபையொன்று நிறுவப் பட்டிருப்பினும் நெல் வயல்களிலிருந்து சபையின் சேகரிப்பு நிலையங்களுக்கும், நிலையங்களிலிருந்து நெல் குற்றும் ஆலைக ளுக்கும் அங்கிருந்து நுகர்வோருக்கு அரி

க. சுந்தரலிங்கம்
சியை வழங்கும் முகமாகவும் போக்குவரத் துச்சேவைகள் அவசியமாகின்றன. நெல், அரிசி, சீனி, மாவுக்கான போக்குவரத்து வசதிகள் பொதுத்துறை முயற்சிகளான காரணத்தைக் கொண்டு ஓரளவு திறன் வாய்ந்ததாகக் காணப்படும். அதேவேளை யில் பழவகை, மரக்கறிவகை மற்றும் விவசாயப் பொருட்களுக்கான போக்கு வரத்து வசதிகள் திறன் குறைந்தவை என்பதில் ஐயமில்லை.
மரக்கறி, பழம் போன்ற பொருட்களை யும் வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் சந்தைப்படுத்தும் போது மூன்று தொழிற்பாடுகள் இடம் பெறுகின்றன. சிறுசிறு தொகைகளை ஒன் ருக்குதல், அவற்றினை விற்பனைக்குத் தயார் செய்தல், பல சிறு வியாபாரிகளூடாக நுகர்வோருக்கு அவற்றினைப் பங்கீடு செய் தல், மேல்மிதமான சிறு தொகைகளைப் பல விவசாயிகளிடமிருந்து ஒன்று சேர்ப்பது அதிகளவு தொழிற் பிரயோகத்திற்கும், பணச்செலவிற்கும் உள்ளாகும் அம்சம். அத்தொழிலுக்கு எக்காலமும் வாகனங்க ளின் பிரயோகம் பொருந்தாது என்பதும் விளங்கற்பாலது.
பங்கீட்டிற்கான வழிவகைகள்:
நுகர்வோருக்கு பொருட்களின் விநி யோகம் மூன்று முயற்சியாளர்களுடாக நிவர்த்தி கொள்கின்றது - ஆக்குவோர், மொத்த வியாபாரிகள், சில்லறை வியா பாரிகள். ஆக்குவோர் மட்டத்தில் கீழ்க் காணும் முயற்சியாளர்கள் காட்டப்படுகின் நனர்:- கமிஷன் ஏஜென்டுகள், மொத்த வியாபாரிகள், கூட்டுறவுச் சங்கங்கள், விற் பனைத் திணைக்களம், கிராமச் சந்தையில் இயங்கும் மொத்த வியாபாரிகள் அல்லது தனிப்பட்டு இயங்கும் ஒன்றுசேர்க்கும் வியாபாரிகள், மரக்கறிப் பொருட்களின் விநியோகத்திற்குக் கமிஷன் ஏஜென்டுகள் பெரிதும் விரும்பப்படுவர். மாகாணங்களி லுள்ள பிரதான நகரங்களில் கமிஷன் ஏஜென்டுகளுக்கும் விவசாயிகளுக்கு
مسيس 48

Page 175
இலங்கையில் .
மிடையே நிலவ வேண்டிய தொடர்பைப் பெருந்தெருப் போக்குவரத்து.ஏஜென்டுகள் அமைத்துக் கொடுப்பர். விவசாயிகள் தம் பொருட்களைச் சாக்குகளில் கட்டி முக வரிகளிட்டு அவர்களிடம் ஒப்படைப்பது வழக்கம். பெரும்பாலும் இச் சேவையின் திறன் பல அம்சங்களில் தங்கியிருப்பது புலனுகும். இறுதி நிலையங்களில் எச் சீக் கிரத்துடன் பொருட்கள் ஒப்படைக்கப்படு கின்றன, பொருட்களுக்கு ஏற்படும் சேதத் தின் தன்மை, அன்றி அவை தொலைவுறும் தன்மையாவன அவ் வம்சங்களில் சில எனலாம்.
சந்தைப்படுத்தல் சம்பந்தமாக ஏற் படும் மொத்தச் செலவுகளில் போக்கு வரத்துச் செலவுகள் பெரும் பங்கிற்கு உரித்தாகவுள்ள காரணத்தைக் கொண்டு சிறு விவசாயிகளுக்கான சந்தைப்படுத்தும் வசதிகள் எத்தூரம் திறன்வாய்ந்தன வென்பதை அடையாளம் கொள்வதற்கும் போக்குவரத்து வசதிகளின் திறன் இன்றி (168 ptuTg5!.
இன்றைய நிலைமையில் கூட்டுறவுச் சங்கங்களின் தொழில் பிரதானமாக அவற் றில் அங்கத்துவம் கொண்ட ஆக்குவோரின் பொருட்களை ஒன்று சேர்த்துப் பல நோக் குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு ஒப்படைப்பது மட்டுமாகவே காணப்படுகின்றது. உதா ரணமாக மலைநாட்டுப்பகுதியில் (பலுகம) உடபாலத்தக் கூட்டுறவுச்சங்கம், மரக்கறி வகைகளை நேராகக் கொழும்பில், விற் பனைத் திணைக்களத்திற்குரிய ம த் தி ய கொள்வனவுச் சந்தைக்கு அனுப்புகின்றன, ஆயினும் அவை வழங்கும் சேவைகள் திருப்தியற்றனவெனும் காரணமாக மரக் கறி விவசாயிகள் தம்பொருட்களைவிற்பனை
*1973இல் மேற்கொள்ளப்பட்டுள்ள களில் 513% கமிஷன் ஏஜென்டுகள்மூலம னர். 24*4% தம் பொருட்களில் பெரும் பகு எஞ்சியதைக் கூட்டுறவுச் சங்கங்களுடாகவும் களின் விற்பனைக்குக் கூட்டுறவுச்சங்கங்களை ( களில் காணப்பட்ட மொத்தச் சந்தை வ
-

க. சுந்தரலிங்கம்
செய்யும் முகமாகப் பிற சேவை வசதிகளை நாடுவது பொதுத்தன்மை. அத்தன்மையை பலுகமவில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு வெளிக்கொணர்ந்துள்ளது.*
தனியார்துறைவழங்கும் வசதிகளுடன் ஒப்பிடுமிடத்து விற்பனைத் திணைக்களம் வழங்கும் வசதிகள் அண்மையில் விஸ்தரிப் புக்கொண்டிருப்பினும், இன்னமும் திருப்தி யற்றனவாகக் காணப்படுகின்றன. விற் பனைத் திணைக்களம், மரக்கறி மற்றும் விவசாயப் பொருட்கள் பெருந்தொகை யளவில் உற்பத்தியாக்கப்படும் பிரதேசங் களில் பொருட்களைச் சேகரிக்கும் முக மாகப் பல நிலையங்களை அண்மையில் நிறுவி அவற்றினூடாகக்கொள்ளப்படும்பொருட் களைத் தனது சில்லறை விற்பனை நிலையங்க ளூடாகச் சந்தைப்படுத்துவது வழக்கமா யிற்று. ஆயினும் விற்பனைத் திணைக்களத்தி னுரடாகச் சந்தைப்படுத்தப்படும் தொகை அதிகுறைவாகும். அதற்குக் காரணம், அதன் சேவைகள் பொதுவாக, மற்றும் அரசாங்கத் திணைக்களச் சேவைகளைப் போன்று திறன் குறைவாக இருப்பது என்பது ஏற்கற்பாலது
தம் மேலதிகப் பொருட்களை உற்பத்தி யாளர்கள் தத்தம் உற்பத்தி ஸ்தானங்க ளுக்கு அருகாமையிலுள்ள சந்தையில் விற்பதுமுண்டு. ஆங்கு நாட்டின் பல பகுதி களிலிருந்து வரும் மொத்த வியாபாரிகள் அவற்றினை விலைக்குக் கொள்வர்,
இவ்வகைச் சந்தைப்படுத்தலில் காணப் படும் பிரதான நன்மை பொதுவாகப் பொருட்களைக் கைப்பணத்திற்கு விற்பதே. தனிப்பட்ட சிறு வியாபாரிகளும் பொருட் களைக் கைப்பணத்திற்குக் கொள்வாரெனி னும் அவர்களின் செயற் தொகையளவு அதி குறைவாகவே காணப்படுகின்றது.
மதிப்பீட்டில் மரக்கறி உற்பத்தியாளர் ாகத் தம் பொருட்களை உற்பத்திசெய்த குதியைக் கமிஷன் ஏஜென்டுகள் ஊடாகவும், > விற்றனர். 77% மட்டுமே தம் பொருட் முழுதாக நாடினர். 153% தம் பிரதேசங் சதிகளைப் பயன்படுத்தினர்.
49 -

Page 176
இலங்கையில் .
கொழும்பில் இயங்கும் மொத்த வியா பாரிகள் சந்தைப்படுத்தும் முயற்சியில் பிரதான பங்கினைக் கொண்டவரெனும் பேரில் மரக்கறி உற்பத்தியாளர்கள் அவர் களை நாடுவது பொதுத்தன்மை. மொத் தத் தொகைச் சந்தைப்படுத்துதல் சம் பந்தமாக கொழும்பில் காணப்படும் பிர தான விற்பனை நிலையங்கள் புறக்கோட் டைச் சந்தையும், சந்தைப்படுத்தும் திணைக் களத்தின் மொத்த வியாபாரத் தளமும் ஆகும். இவ்விரு தளங்களும் பொருட்களைக் துப்பரவு செய் த ல் , தரப்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்குத் திருப்தியான நிலப் பரப்பினைக் கொண்டு காணப்படா தது ஒரு பெரும் குறைபாடு எனலாம்.
தனியார் சந்தைப்படுத்தும் ஸ்தாபனங் களை, மரக்கறிப் பொருட்களை உற்பத்தி செய்வோர் நாடுவதற்குப் பல காரணங்கள் உள. கொள்வனவு செய்த உடனேயே பொருட்களுக்கான விலைப்பணம் செலுத் தப்பட்டு விடும். மொத்த வியாபாரிகளும், கமிஷன் ஏஜென்டுகளும் உற்பத்தியாளர் களின் தேவைக்கேற்பக் கடனுதவி வழங்கு வர். அரசாங்க சந்தைப்படுத்தும் திணைக் களம் அல்லது கூட்டுறவுச் சந்தை வழங்குவதற்குக் கூடுதலான விலைகளை உற் பத்தியாளர்களுக்குத் தனி வியாபாரிகள் வழங்குவர். அவையல்லாது அரசாங்க நிறு வனங்களுக்கு எதிராகப் பல்வேறு குறை பாடுகளைக் காண ஏதுவாகின்றது. நிறு வைக் குறைவு, காலதாமதம், இம்சைகள், இலஞ்சம், விலைக்குக் கொள்ளுதல் தொடர் பாகப் பண, பெளதிகக் கட்டுப்பாடுகள் யாவும் ஆங்கு காணக்கூடிய இடைசல்க ளில் சில. உற்பத்தியாளர்கள் தம் பொருட் களை அரசாங்கக் கொள்வனவு நிலையங்க ளுக்கு இடமாற்றம் சம்பந்தமான இன்னல் களை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதுடன், போக்குவரத்து சாக்குக ளில் கட்டுதல், தரப்படுத்துதல் ஆகிய முயற்சிகளுக்கான செலவுகளையும் திருப்பிப் பெறும் வாய்ப்பினைப் பெருதிருப்பதும் இன் ணுெரு தடையான அம்சம்.
-

க. சுந்தாலிங்கம்
விவசாயத்துறையில் போக்குவரத்துத்துறையின் பங்கு : தி ற ன் வாய் ந் த சந்தைப்படுத்தும் அமைப்பிற்கு மூலைக்கல்லாகப் போக்கு வரத்து முயற்சிகள் அமைகின்றன. உண வுப் பொருட்கள், விவசாயத்தொடர்பான பல மூலப்பொருட்கள், உரம் யாவும் அவையவை உற்பத்தி யாக்கப்பட்ட ஸ்த லங்களில் இருந்து அவற்றினை நுகரும் ஸ்தலத்திற்கு நெடுந்தூரம் இடமாற்றம் அவசியம் இன்று உண்டு. சனத் தொகை யின் விஸ்தரிப்பு, கிராமப் பகுதிகளில், இருந்து பட்டினப் பகுதிகளுக்குக் குடியே றும் தன்மை, விவசாயப் பிரதேசங்களில் இருந்து அதி தூரமான ஸ்தலங்களில் கைத்தொழிற்துறையும், மக்கள் குடியேற். றமும் விஸ்தரிப்புறும் தன்மை யாவும் ஒன்றுசேர்த்து விவசாயப் பொருட்களின் இடமாற்றத்திற்கு, விஸ்தரிப்புக்குள்ளா னதும் திறன் கொண்டதுமான போக்கு, வரத்து வசதிகளைக் கோரும் நிர்ப்பந்தத் திற்கு நாம் இன்று உள்ளாகியுள்ளோம்.
சந்தைப்படுத்துதல் தொடர்பான மற்றும் இதரமுயற்சிகள் - துப்பரவாக்கு. தல், தரப்படுத்துதல், அடைத்தல் யாவும். பூர்த்தியாக்கப் பெறினும் பொருட்களை நுகர்வோருக்குக்கிடைக்கும்வண்ணம் அவற் றினை இடமாற்ருதநிலையில் நுகர்ச்சிபூர்த்தி கொள்ளாது என்பது விளங்கும். ஆகவே சந்தைப்படுத்துதலும் பூர்த்திகொள்ளா திருக்கும். இத்தன்மையே போக்குவரத் தின் முக்கியத்துவத்தை உறுத்துகின்றது எனலாம். நுகர்ச்சி பூர்த்தி உறுவதாயின் நுகர்வோனிடம் நுகர்வுப் பொருள் சேர்க் கப்படல்வேண்டும். அன்றி நுகர்பொருள் இருக்கும் ஸ்தலத்திற்கு நுகர்வோன் இட மாற்றம்கொள்ளவேண்டும். இந்தஇரண்டு தொழிற்பாடுகளுக்குமே போக்குவரத்து அவசியம் ஆயினும் இன்றைய சமூக பொரு ளாதார சூழ்நிலைகளை நோக்குமிடத்து நுகர்வோன் நுகர்பொருள் இருக்கும் இடத்தை நாட விருப்பங்காட்டுவதற்கு,
50 -

Page 177
இலங்கையில் .
எதிராகப் பொருளை அவனிடம் இட்டுச் செல்லவேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.
விவசாயப் பொருட்கள் தொடர்பான போக்குவரத்து வசதிகளை இரு தொகுதிக ளாக்கலாம்-நெடுந்துாரப் போக்குவரத்து, குறுந்தூரப் போக்குவரத்து. சிக்கலற்றன வாக மேற்பரப்பில் தோன்றக்கூடும் ஆயின் குறுந்தூரப் போக்குவரத்து கூடுதலான சிக்கற்தன்மை கொண்டுள்ளது. தேவை யான காலநேரங்களில் சேவைகள் கிடைக் காதிருப்பதுடன் கூடுதலான செலவுக ளுக்கு அவை அருகதையாயும், பெளதீக இடைவெளி தொடர்பாக நோக்குமிடத்து, சந்தைப்படுத்துதல் சம்பந்தமான செலவு களில் கூடுதலான பங்கிற்கும் அவை உரித் தாகக் காணப்படுகின்றன.
பலுகமத்தில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம் மரக்கறி உற்பத்தி செய்யப்படும் ஸ்தலத்திலிருந்து அரைமைல் தூரத்திலிருக்கும் ஒன்று சேர்க்கும் நிலையத் திற்கு ஒரு மூடை மரக்கறியை இடமாற்று வதற்கு 1 ரூபா செலவான அதே வேளை யில், 125 மைல்களுக்கப்பால் இருக்கும் கொழும்பு மத்திய சந்தைக்கு இடமாற்று வதற்கான செலவு 2 ரூபா 50 சதம் மட்டு மாகக் காணப்பட்டது. அதாவது முற் தொகுதிச் செலவு பிற்தொகுதிச் செலவி லும் 100 மடங்கு அதிகமானது என்பது புலனுகின்றது. அக் கிராமத்தில் திருப்தி வாய்ந்த பெருந் தெருக்கள் காணப்படாத தன் காரணமாக உற்பத்தியாளர்கள் பொருட்சுமைகளைத் தம் தலைகளிலே இட்டு இடம் மாற்றவேண்டியதாகின்றது. அது வல்லாது மதிப்பீட்டின் பிரகாரம் உற்பத்தி யாளர்களில் 20% தாம் விரும்பிய கால நேரங்களில் போக்குவரத்து வசதிகளைக் கொள்ளும் வாய்ப்பற்று இருந்தனர் என்ப தும், அம் மதிப்பீட்டில் இருந்து வெளிப் படை ஆயிற்று. அவ்வாருண சேவைக் குறைவு உற்பத்தி அதி உச்சநிலை கொண் டிருக்கும் தறுவாயில் ஏற்பட்டதன் காரண மாக அவர்கள் தம் பொருட்களை விற்க வல்ல விலைகளுக்கல்லாது அதி குறைவான
- 15

க. சுந்தாலிங்கம்
விலைகளுக்கு விற்கவேண்டிய நிர்ப்பந்தத் திற்கு உள்ளாயினர் என்பதும் வெளிப்படை ஆயிற்று.
தம் மரக்கறி தோட்டங்களில் இருந்து ஒன்றுசேர்க்கும் நிலையங்களுக்கு உரித்தாய குறுந்தூரப் போக்குவரத்துச் சம்பந்தமான மேலதிகச் செலவுகளை ஏற்றுக்கொள்வ துடன் விவசாயிகள் தம் தோட்டங்களில் இருந்து உள்ளூர்ச் சந்தைகளுக்குத் தம் பொருட்களை இடமாற்றம் சம்பந்தமாகவும் பல இன்னல்களுக்குள்ளாயினர். அதே போன்று வடமத்திய மாகாணத்தில் பெரும்பாலான சிறு தோட்டங்கள், மோட்டார் வாகனங்கள் உபயோகிக்கும் பெரும் பாதைகளிலிருந்து குறைந்தது 4-5 மைல்களுக்கப்பால் இருப்பதன் காரணமாகத் தம் சொந்த மாற்றுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத நியதி யில் சிறு சுமைகளை விவசாயிகள் தம் தலைகளிலேயே கொண்டுசென்று பேரூந்து களினூடாகச் சந்தைகளுக்கு இடமாற்று வது பொதுத்தன்மை. இத் தனிப்பட்ட இன்னல்களுடன் பேரளவு பணச் செலவிற் கும் இவ்வித இடமாற்றம் உள்ளாகின்றது. வடக்கு, வடமத்திய, கீழ் மாகாணங் களில் விவசாயப் பொருட்களை இடம் மாற்றுவதற்கு டிராக்டர்களும், இணைப்பு வண்டிகளும் பேரளவு உபயோகிப்புக்குள் ளாகின்றன. ஆயினும் அண்மையில் எரி பொருட்களுக்கு ஏற்பட்ட விலைகளின் உயர்ச்சிகள் காரணமாக டிராக்டர்போக்கு வரத்துச் செலவும் அரிகரிப்புற்று, சிறு விவ சாயி அப்போக்குவரத்தை நாடாது பொரு ளாதார ரீதியில் அதி குறைவான பலா பலன்களைக் கொண்ட எருத்து வண்டிக ளைப் பயன்படுத்துவதற்குத் தூண்டப்பட் டுள்ளான்.
விவசாயப் பொருட்களுக்கான நெடுந் தூரப் போக்குவரத்து வசதிகள் புகை யிரத மார்க்கமாயும் பெருந்தெரு மூல மாயும் வழங்கப்படுகின்றன. ஆயினும் சீக்கிரம் பழுதடைய வல்ல பொருட்களில் பெரும்பாலான பங்கின் இடமாற்றுத
-

Page 178
இலங்கையில் 0 W we a
லுக்குப் பெருந்தெருப் போக்குவரத்து பெரிதும் விரும்பப் படுகின்றது. சீக்கிரம் பழுதடைய வல்லாத பொருட்களுக்கும் பெருந்தெருப் போக்குவரத்தையே உற் பத்தியாளர்களும் நடுவரும் இன்று விரும்பு கின்றனர். அதற்குச் காரணம் புகையிர தப் போக்குவரத்திலும் பெருந்தெருப் போக்குவரத்து பல வழிகளில் குறைந்த செலவுகளுக்கு அரு கதையாயுள்ளதே. பெருந்தெருப் போ க்கு வ ரத் தி ல் இரட்டை ஏற்றி இறக்கல் தவிர்க்கப்படு கின்றது. எதிர்நிலையில் புகையிரதப்போக்கு வரத்தில் ஆரம்ப/இறுதி நிலையங்களில் பொதிகளை வாகனங்களில் ஏற்றியும் அவை களிலிருந்து இறக்கிக்கொள்ளும் தன்மை நிலவுவதுடன் புகையிரத நிலையங்களி லிருந்து திரும்பவும் பெருந்தெருக்கான வேறு வாகனங்களில் ஏற்றி இறுதியாக அடையவேண்டிய நிலையங்களில் இறக்கும் நியதியும் உண்டு. புகையிரத நிலையங் களுக்கு அவைக்கருகாமையிலே நுகர்ச்சி இடம்பெருது பொதுவாக அவற்றிற்கு அப் பால் இடம்கொண்டுள்ள பட்டின்ங்களி லேயே ( சந்தைகளிலேயே ) மொத்த/ சில்லறை வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதன் காரணமாக அவ்வகையான இரட்டை ஏற்றி இறக் க ல் அவசியமாகின்றது. இத்தன்மைகளுக்கு எ தி ரா கப் பெருந் தெருப் போ க் கு வ ரத்து உற்பத்தி யாளர்களின் ஸ்தலத்திலிருந்து நுகர் வோன் இருக்கும் ஸ்தலத்திற்கு நேரடி யான சேவையை வழங்குகின்றது எனலாம். வெவ்வேறு நிலையங்களில் ஏற்றி இறக்கும் கூலிகள் போக்குவரத்துக்கான மொத்தச் செலவுகளை உயர்ச்சியாக்குகின்றன. அத் துடன் அவ்வகையாக ஏற்றி/இறக்கும் சூழ் நிலைகளில் பொருட்கள் கூடுதலான சேதத் திற்குள்ளாவதுடன் காலநேரச்சுணக்கமும் இடம்பெறுவது பொதுத்தன்மை. மேலும் உடனடி இணைச் சேவைகள் இல்லாத தன்மையில் புகையிரதப் போக்குவரத்துச் சார்பான தன்மைகள் குறைவுறுகின்றன.

க. சுந்தரலிங்கம்
புகையிரதப் போக்குவரத்துக்கு எதி ராகச் செலவு சம்பந்தமாகக் காணக்கூடிய குறைபாடுகளுடன் கூடுதலான பயண நேரமும், சிரமமற்றதும் உற்பத்தியாள னுக்குச் சார்பான சேவை வசதிகளின் மையும் திருப்தியற்ற ஏற்றி/இறக்கும் தன்மை காரணமாக நிலவும் பொருட் சேதமும், களவுகளும்பெருந்தெருப்போக்கு வரத்தின் நற்றன்மையை உறுத்துகின்றன. மேலும் இக்குறைபாடுகள் தனிப்பட்ட ஒவ்வொரு உற்பத்தியாளனுக்கு மேலதிகச் செலவுகளை வழங்கவல்லன என்பதும் புல ணுகும். வேகம் சம்பந்தமாக நிலவும் தன் மையுடன் புகையிரதப் போக்குவரத்தில் காணக்கூடிய மற்றும் பல வசதியீனங்களும் பெருந்தெருப் போக்குவரத்தில் தவிர்க்கப் படுகின்றன. பற்பல பாரங்கள் (Forms) நிரப்புவதிலும், பொருட்களை நிலையங்களிற் பாரம் கொடுப்பதிலும், அவற்றை மீட்ப திலும் செலவாகும் நேரம், புகையிரத ஊழியர்களின் பல்வகை இம்சைகள் (இலஞ்சம் உட்பட) யாவும் புகையிரதத் துறையுடன் தொடர்பான வசதியீன்ங் களிற் சில.
பல நற்றன்மைகளைப் பெருந்தெருப் போக்குவரத்தில் காணக்கூடுமாயினும் உண்மைநிலையில் இன்று நிலவும் பெருந் தெருப் போக்குவரத்து வசதிகள் விவசா யப் பொருட்களை இடமாற்றுதற்குத் திறன் வாய்ந்தன என்பதற்கில்லை. அத்துறையில் பிரதிபலிக்கும் பிரதான குறைபாடு அங்கு நிலவும் பெளதீகப் பற்ருக்குறை என உறுத் தலாம். நாட்டில் இன்று பதிவுக்குள்ளாகி யிருக்கும் லொறிகள், வான், டிராக்டர் வாகனங்களின் எண்ணிக்கையில் ஏறக் குறைய 65% 15 வருடங்களுக்கு மேல் தொடர் ந்து பாவனைக்குள்ளானவை. ஆகவே அவற்றின் செயற்றிறன் பெரிதும் ஐயத்துக்குள்ளாகும். மேலும் கடந்த 5 வருடங்களுள் எரிபொருள், இதர உதிரிப் பாகங்கள் தொடர்பாக இடம் கொண்ட விலை உயர்வுகள் பெருந்தெருப் போக்கு
152 -

Page 179
இலங்கையில் ...
வரத்துக்கான செலவுகளை 300% உயர்த்தி யுள்ளன.
இத்தன்மைகள் விவசாயப் பொருட்க ளின் சந்தைப்படுத்தும் முயற்சியில் பேரளவு வரையறுப்புக்களை உறுத்துகின்றன. சரா சரி உற்பத்தியாளன் தன் சொந்தப் போக்குவரத்து வசதிகளைக் கொண்டில் லாத பேரில் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதைத் தம் முழுத் தொழிலாகக் கொண்டிருக்கும் ஏஜண்டுகளுக்கு அதி உயர்வான கூலிகளை வழங்கவேண்டிய நிர்ப் பந்தத்திற்கு உள்ளாகின்றனர். உயர்வான போக்குவரத்துச் செலவுகள் பொருட்க ளின் விலைகளை உயர்த்தும் தன்மையைக் கொண்டுள்ளதால் பொருட்களுக்கான் இறுதிக் கேள்வி அமைப்பும் பாதிப்பிற்குள் ளாகலாம். அந்நிலையில் அவற்றின் ஆக்கத் தொகையிலும் வரையறைகள் இடம் பெறும் சந்தர்ப்பம் நிலவும்.
இவையன்றி பெருந்தெரு வாகனங்கள் மரக்கறி, பழவகைகள் போன்ற இலகுவில் பழுதடைய வல்ல பொருட்களை இடமாற்று வதற்குப் பொருத்தமானதன்று. எதிர் நிலையில் காத்திரமான பொருட்க்ளை (தானிய வகை, காய்ந்த மிளகாய் போன்ற வற்றை) இடம் மாற்றுவது கடினமான பிரச்சினைகளைக் கொணரமாட்டாது. அவ் வாழுயினும் அவை தொடர்பாக நிலவும் போக்கு வரத்தும் பெளதிகப் பற்ருக்குறை யும் சேவையின் தரைமட்டக் கட்டுப்பாடும் சேர்ந்து அவற்றிற்கான போக்குவரத்துச் செலவுகளையும் உயர்த்துகின்றன என்பது ஏற்கற்பாலது. மரக்கறி, பழவகைகள் யாவும் சாக்குகளிலும் பெட்டிகளிலும் அடைக்கப்பட்டே லொறிகளில் இடம் மாற்றப்படுகின்றன.
சாக்குகளையும், பெட்டிகளையும் ஒன் றுக்குமேல் ஒன்ருக அடுக்குமிடத்து காற் ருேட்டமில்லாது பொருட்சேதம் உயர்ச்சி கொள்வது பொதுவான ஒரு குறைபாடு. இங்கு லொறி வாகனங்களின் கூரைகளி லும் இவை அடுக்கப்பட்டு இடமாற்றத் தின்போது உஷ்ணம் காரணமாகவும்
1 - 20- 8ܣ

க. சுந்தரலிங்கம்
பொருட்கள் சேதத்துக்கு உள்ளாகின்றன." அவ்வர்ருக ஏற்படும் சேதம் பண அடிப் படையில் நோக்குமிடத்து போக்குவரத் துடன் தொடர்பான செலவு என்பது விளங் கற்பாலது. மேலும் பெருந்தெருப் போக்கு வரத்தில் கட்டணங்கள் புகையிரதப் போக்குவரத்தினில் போன்று நிறைகளி லல்லாது துண்டுக்கணக்கில் அறவிடப்படுவ தால் உற்பத்தியாளர்கள் இயலுமளவு நெருக்கமாகச் சாக்குகளிலும் பெட்டிகளி லும் பொருட்களை அடைப்பதும் பொதுத் தன்மை, அம்முறையைக் கொண்டு சேமிக் கப்படும் போக்குவரத்துச் செலவுக்கெதி ராக பொருட்சேதத்தினுல் ஏற்படும் நட்டம் அதிகூடுதலாக இருக்கும். ஆயினும் தனிப் பட்ட உற்பத்தியாளன் மேற்கொள்ளும் பண ந ட் டத் தி ற்கு மேலாக நாட் டிற்கு ஏற்படும் சமூக பொருளாதார நட்டம் கூடுதலானதென்பதை அவன் உணரவல்லானல்ல. அதற்குக் காரணம் பிரதான போக்குவரத்து வசதிகளிற் காணப்படும் பற்ருக்குறைகளிலிருந்து உரு வாகும் பிரச்சினை என்று இங்கு குறிப்பிடு வது நியாயம். மேலும் இவ்வகையாக சாக்குகள், கூடைகள், பெட்டிகள் ஆகிய உபகரணங்களில் அடைக்கப்பட்டபொருட் களில் பெருமளவு சேதமுறும் காரணத் தைக் கொண்டு அவற்றுக்கு நுகர்வோர் வழங்க வே ண் டி ய விலைமட்டங்களும் உயர்ச்சி பெற்று வாழ்க்கைச் செலவும் உயர்ச்சி கொள்ளும் தன்மை நிலவுகின்றது. அதன்பேரால் ஏற்படும் மறு சமூக பொரு ளாதார பிரதிபலிப்புக்களும் பல உண்டு.
விற்பனைத் திணைக்களம் மரக்கறிப் பொருட்களைக் காற்ருேட்டம் கூடிய வாக னங்களில் இடமாற்றுவது உண்மையென் னும் அவ்வகைச் சேவையை விஸ்தரிப்ப தற்கான சந்தர்ப்பங்கள் ஆங்கு குறைவா கையால் பொருட்சேதமும் விரயமும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
புகையிரதத் துறையிலும் விசேட வாகனங்களை மரக்கறிப் போக்குவரத்துக் காகப் பாவிக்கின்ற சந்தர்ப்பங்கள் உள.
53 -

Page 180
இலங்கையில் .
ஆயினும் ஆங்கும் பண இடைஞ்சல்கள் காரணமாக திருப்தியான முறையில் அவ் விசேட வாகனங்களின் எண்ணிக்கையை விஸ்தரிக்கும் வாய்ப்பு நிலவாததுடன் கையிருப்பிலிருக்கும் வாகனங்களைத் திற ஞன முறையிற் பயனுக்குள்ளாக்கும் சந் தர்ப்பங்களும் என்ஜின் பற்ருக்குறைகளின் காரணமாகத் தவிர்க்கப்படுகின்றன. இங்கும் மரக்கறி வகைகளையும் மற்றும் சீக்கிரம் பழுதடைய வல்ல பொருட்களை யும் இடம்மாற்றுவதற்குச் சாக்குகள், கூடைகள், பெட்டிகள் போன்ற உபகர னங்களே பயனுக்குள்ளாக்கப்படுகின்றன.
பொதுவாகப் பெருந்தெருப் போக்கு வரத்திற் போன்று போக்குவரத்துக்கான கூலிகளில் சேமிக்கும் நோக்குடன் பொருட் கள் நெரிசலாக அடைக்கப்படும் நியதி நிலவாதெனினும் (புகையிரதத் துறையில் கூலிகள் நிறை அடிப்படையில் நிர்ணயிக் கப்படுகின்றன.) அடைக்கும் உபகரணங் களின் உயர்ச்சியான விலைகள் உற்பத்தி யாளர்களையும் நடுவர்களையும் அதே திருப்தியற்ற வழிகளைப் பின்பற்றத்தூண்டி பொருட்களிற் பெரும்பங்கு சேதமுறு கின்றன என்பது ஏற்கப்பால்து. ஆகவே விசேடவாகனங்களும் உபகரணங்களும் திருப்தியான அளவுகளில் பயனுக்குள்ளா காத நியதியில் பொருட்சேதம், அழிவுறு கின்ற தன்மையைப் பொதுவாக ப்ோக்கு வரத்துத் தொடர்பான இன்னல் என்று கணித்து அத்தால்வரும் பண நஷ்டத்தை போக்குவரத்துத்துறைக்கான அதிகப்பே முன செலவு என்று கணிக்கும் நியதியுண்டு.
புகையிரதத் துறையை மேலும் ஆராயு மிடத்து அதன்பேரில் ஏற்படும் கூடுதலான இடமாற்றும் நேரமும் பொருட்சேதத் திற்கு உடந்தையாகக் காணப்படுகிறது. எனினும் புகையிரத நிலையங்களில் பொ ருட்களை களஞ்சியப்படுத்தும் வசதிகள் பெருந்தெருப் போக்குவரத்துத் துறையி லும் திறன்வாய்ந்தன வென்று ஒரு வகை யில் புகையிரதத்துறைக்குச் சார்பான தாகத் தோன்றுகிறது."

க. சுந்தரலிங்கம்
புகையிரதத் துறையினர் ஆரம்பத் தொட்டு விவசாயப் பொருட்களுக்குக் கூலி வகையில் விசேட சலுகைகள் வழங்கி வந்துள்ளனர். ஆயினும் மறு மார்க்கங்க ளூடான செலவுகள் தொடர்பான சேமிப் புக்கள் காரணமாகப் பெருந்தெருப் போக்குவரத்தினையே மக்கள் பொதுவாக நாடுகின்றனர். இந்நிலையில் 1974இல் புகையிரதத் துறையினர் மரக்கறி, பழ வகைகளுக்கான கட்டணங்களை மும்மடங் காக்கிய தன்மை பெருந்தெருப் போக்கு வரத்தினை உற்பத்தியாளர்களும், நடுவர் களும் மேலும் விரும்புவதற்குத் தூண்டி யுள்ளது எனலாம். ஏற்கனவே வாகனப் பற்ருக்குறையால் வாகனப் போக்கு வரத்து பல இன்னல்களுக்குள்ளாகியிருக் கும் நியதியில் அதன் சேவைகளுக்கான கேள்வி மேலும் விரிவடைந்ததன் காரண மாகப் போக்குவரத்துக் கட்டணங்கள் மேலும் உயர்வுற்று சேவைகளை வழங்கும் முகமாக மற்றும் இடைஞ்சல்கள் விஸ்தரிப் புக் கொண்டுள்ளன என்பது விளங்கற் பாலது. தம் கட்டண உயர்ச்சியால் புகை யிரதத் துறையினர் எந்தளவு இலாபம் கொண்டனர் என்பதும் கட்டண உயர் வால் முன்னைய பொதிச்சுமையில் என்ன வீதம் புகையிரதப் போக்குவரத்தை நாடாதுவிட்டது என்பதும் அதன் காரண மாக அத்துறையில் எந்தளவு கொள்வ னவு பாவிக்காதுவிட்டது என்பதும் பெருத் தெருப்போக்குவரத்திற்கு அக் கட்டன உயர்வு எந்தளவில் கேள்வியை உயர்த்தி பொதுவாக அத்துறையை நாடியவர்க ளுக்கேற்பட்ட உயர்ச்சியான செலவு எந் தளவு என்பதையும், ஆராய்வது ஒரு கடின மான அப்பியாசம் ஆயினும் பலவித பிரதி பலிப்புக்கள் உருவாகி இறுதியில் நுகர் வோர் தம்பொருட்களுக்குக் கூடுதலான விலைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தத் திற்கு உள்ளாயினர் என்பது ஏற்கவல்ல ஒரு முடிவு.
அது வல்லாத மற்ருெரு முடிவு இன் றைய நிலையில் புகையிரதப் போக்கு
بسم 54}

Page 181
இலங்கையில் . . . . . . -7
வரத்துவசதிகள் விவ் சாயப்பொருட்களின் இடமாற்றத்திற்கு திருப்தியற்றனவென் பதாகும். விவசாயத்துறையில் விஸ்த ரிப்பை எதிர் நோ க் கும் அரசாங்கம் விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத் துவதற்கான முயற்சிகளை விஸ்தரிக்க வேண்டிய அவசியத்தை உணராதுள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒரு அம்சம். விவ சாயப்பொருட்களைச் சந்தைப்படுத்தலில் அரசாங்கம் பிரதான அக்கறையைக் காட்ட வேண்டியதற்கு இன்னுெரு கார ணத்தையும் நாம் உணர ஏதுவாகின்றது. அது பிரத்தியேகமாக மக்களின் வாழ்க் கைச் செலவுடன் தொடர்பானது. திறன் வாய்ந்த போக்குவரத்துவசதிகள் வழங்கப் படுமிடத்து சந்தைப்படுத்துதல் தொடர் பான செலவுகள் குறைவுற்று பொருட் களின் விலைமட்டங்கள் வீழ்ச்சிகொள்ளு மாதலால். வாழ்க்கைச் செலவும் வீழ்ச்சி கொள்வற்கு ஏதுவாகின்றது. அத்தன்மை அரசியல் தொடர்பான பல நற்பலா பலன்களை உறுத்துமாயினும், சமூக பொரு ளாதார நற்பலன்களுக்கு அருகதையான தாகையால் அம்முயற்சிகளை ஈடேற்றும் முகமாக அரசாங்கம் போக்குவரத்துத் துறையில் இன்று நிலவும் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய முன்வரவேண்டிய அவசி யம் பிரதிபலிக்கின்றது.ஆயினும் அரசாங்க முயற்சிகளிலும் பல்வேறு வரையறுப் புகள் உண்டு. பெருந்தெருப் போக்கு வரத்துப் பகுதியை விஸ்தரிப்பதற்கு பேரளவு அந்நிய செலாவணி அவசிய மாகும். லொறிகள், டிராக்டர்களை இறக்கு மதி செய்யவேண்டும். அவற்றுடன் கூடுத
வாடகைக் கெ
வாடகைக் கொள்வனவில் கொள் விலையாகும். காசு விலையுடன் வாடகை பனை விலையாகும். எனவே கொள்விை யாசத்தில் இலாபமும் வட்டியும் ஐ விலையே வாடகைக் கொள்வனவு விை

க, சுந்தரலிங்கம்
லான தொகையில் எரிபொருளும் உதிரிப் பாகங்களும் அவசியமாகும். பெருத் தெருக்களை நிறுவி பாாமரிக்கும் செலவுக ளும் அதிகரிக்குமாயினும் கையிருப்பிவிருக் கும் அவ் வசதிகள் ஓரளவு திருப்தியாகக் காணப்படலாம். புகையிரதப் போக்கு வரத்துத் துறையூடாக விவசாயப்பொருட் களை திறனன வகையில் இடமாற்றம் செய்வதாயின் ஆங்கும் அதிகளவு பணச் செலவுகளை மேற்கொள்ளவேண்டி இருக் கும். புதிதாக வாகனங்களையும் என்ஜின் களையும் பிறநாட்டிலிருந்து வரவழைப்ப தற்கான செலவுகளுடன் ஏற்கனவே திருப்தியற்றதாகக் காணப்படும் பாதை களைத் திருத்தி அமைப்பதற்கான செலவு களும் சேர்ந்து அத் துறைக்கான செலவு கள் பேரளவு உயர்ச்சி கொள்ளும் அவ் வாரு கப் புதிய செலவுகள் மேற்கொள்ளப் படுமாயினும் சில பொருட்கள் புகையிரத போக்குவரத்திற்கு அருகதையற்றன வாகையால் அவை பெருந்தெருப் போக்கு வரத்தையே நாடும் தன்மை நிலவும்.
விவசாயப் பொருட்கள் தொடர்பான போக்குவரத்து முயற்சிகள் திறன்கொள் வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் பேரளவு சிக்கல்களைக் கொண்டு காணப் படும் என்பது ஏற்கப்பாலது. ஆங்கு பண நிர்வாகப் பிரச்சினைகளல்லாது சமூக பொருளாதாரப் பிரச்சினைகளையும் அடை யாளம் கொள்ளலாமாகையால் போக்கு வரத்துச் சம்பந்தமாக மேற்கொள்ளப் படும் எ வ் வித முயற்சிகளும் தகுந்த ஆராய்ச்சி அடிப்படையில் மேற்கொள் ளப்படவேண்டிய அவசியம் புலனுகின்றது.
ாள்வனவு விலை
விலையுடன் இலாபமும் சேர்ந்ததே காசு க் கொள்வனவு வட்டியும் சேர்ந்தது விற் }க்கும் விற்பனை விலைக்கும் உள்ள வித்தி உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ் விற்பனை
யாகும்.
55 -

Page 182
BARI N
Tutorial Head office:
K. K. S. ROAD,
CHUNNAKAM.
F.
G. C. E. (OIL),
SCE
AF
COM
Direc
 

G TANS
College
Branch : Power HOUSE ROAD, JAFFNA.
OR
G. C. E. (A/L)
NCE
RTS
B
MERCE
tor : A. Satchithananthan

Page 183
வித்தியோதயம் சிறப்புடன்
шо60Ј எமது வா ழ்த்துக்கள்!
சகல உள்ளுர் விளைபொருள்கள் விற்பனையாளர்கள் ܣܐܬܐ
Nallur Traders நல்லூர் டிரேடர்ஸ் 49, நான்காம் குறுக்குத் தெரு,
கொழும்பு-11.
sföSI: 'PONVILA' போன்; 33991
அன்பளிப்பு
GENERAL MERCHANTS
|
Ms. Thiruppathy Stores 51, Manipay Road,
AFFNA

அன்பளிப்பு
O பூப்போட்ட சீத்தை O புது வண்ணக் கூறை O றெடிமேட் சேட் பற்றிக்ஸ், சிந்தட்டிக்ஸ் புத்தாடைத் தினுசுகளுக்கு
ଥ୍ରି; நியூ சிவாயம் ஸ்
யாழ்ப்பாணம்.
With the best Сотрliтепts
from
Dealers in: O All Electrical Goods O Winding wire
and General Suppliers
Ampex
Commercial Agencies
29, PRINCE STREET,
соLомво-11. Phone: 2S255

Page 184
வித்தியோதயத்துக்கு
* புத்தம் புதிய கலைகள்
பூதச் செயல்களின் மெத்த வளருது மேற்கே
மேன்மைக் கலைகள்
சொல்லவும் கூடுவதில்
சொல்லுக் திறமை த மெல்லத் தமிழினிச் சாகு மேற்கு மொழிகள் பு
என்றந்தப் பேதை உரை
இந்த வசையெனக் சென்றிடுவீர் எட்டுத் திச் செல்வங்கள் யாவும் ெ

எமது வாழ்த்துக்கள்
-பஞ்ச நுட்பங்கள் கூறும்; -அந்த தமிழினில் இல்லை.
ல-அவை நமிழ்மொழிக் கில்லை ம்- அந்த விமிசை யோங்கும்."
ாத்தான்-ஆ
கெய்திட லாமோ க்கும் - கலைச் காணர்ந்திங்கு சேர்ப்பீர்!
-ஓர் அன்பர்

Page 185
- கணக்கியல்
கணக்கியலில் சில நுண் Investications in Account
எஸ். இராசதுரை B.Com. (Cey.), A. C. A., A. C. C. A.
கணக்காய்வு அத்தியட்சகர் இலங்கை விமானசேவை
பகுதிநேர விரிவுரையாளர் வித்தியோதய வளாகம்

ணுய்வுகள் CS
.
நுண்ணுய்வு கணக்காய்விலிருந்து வேறு பட்டதாகும். ஏனெனில், கணக்காய்வின் நோக்கம் கணக்குகளிலும் ஐந்தொகை யிலும் ஒரு கணக்காய்வாளரை அறிக்கை செய்வதற்கு இயல்புபடுத்தக் கூடியதாக அமைகின்றது. ஆனல், நுண்ணுய்வு குறிக் கப்பட்ட தனிப்பட்ட ஒருவர் சார்பிலோ அல்லது பலரைக் கொண்ட குழு சார் பிலோ சில முக்கிய அந்தரங்க தகவல் களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நுண்ணுய்வு செயல் நிலையில் கட்டுப்படுத்தப்படலாம். உதாரணமாக, காசுக் கொடுக்கல் வாங் கல்களைச் சார்ந்த மோசடியை நுணுகிக் காண்பதற்காக ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆயின், / நியமச்சட்ட ஏற்பாடொன்றின் கீழ் கணக்காய்வொன்று நடாத்தப்படுமா யின் அதனை எவ்விதத்திலும் மட்டுப்படுத்த captgtting .
நுண்ணுய்வின் வகுப்பினங்கள் :
நுண்ணுய்வு பல சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்படலால், இவற்றைப் பெருமளவில் மூன்று வகையாகப் பிரிக்க லாம். அவையாவன :
1. முதலீடு அல்லது நிதிசார்ந்தவை. 2. தவருண முகாமைப்படுத்தல். 3. மோசடிகள்.
1. முதலீடு அல்லது நிதி
aff disaba :
இந் நுண்ணுய்வு பலர் சார்பில் எழலாம்:-
(t) எதிர்கால வாய்ப்புக்களை எதிர் நோக்கி முதலீடு செய்பவர் ஓர் வியாபாரத்தைக் கொள்வனவு செய்ய அல்லது பங்குடமையில் பங்காளராக “ல்லது பங்குகளையோ தொகுதிக்
159 -

Page 186
கணக்கியலில் .
கடன்களையோ கொள்வனவு செய்ய அல்லது ஓர் வியாபாரத்தை எடுத்து ஒரு கம்பனியைத் தொடக்கிவைக்க ஆலோசிக்கும் ஓர் உயர்வு ஊக்கு suavit (Promoter) frtridi).
(i) தொகுதிக் கடன்களை அல்லது பங்கு களை வாங்குவதால் எழும் வருவா யைக் கொண்டு ஓர் வியாபாரத்தைக் கொள்வனவு செய்யும் ஓர் கம்பனி, கம்பணிச் சட்டத்தில் வேண்டியவற் றிற்கிணங்க முன் விவரணத்தில் சேர்த் துக்கொள்வதற்காக வேண்டும் அறிக் бйо45455пт 35,
(i) ஒரு வியாபாரத்திற்கு இருக்கும் கடன் வசதியைக் கொடுப்பதற்கு அல்லது கூட்டுவதற்கு அல்லது பணம் கடன் கொடுப்பதற்குக் கடன் கொடுப்பவர் afntris).
2. தவருண முகாமைப்படுத்தல்:
இவ்வாறன நுண்ணுய்வு பின்வருபவர் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படலாம் :-
(i) வகையற்றதென ஐயுறவு கொள்ளப் பட்டால் சென்மதியாளர் குமுச் சார்
olá). (i) தவறன முகாமையெனச் சாட்டப் பட்ட வேளையில் அங்கத்தவர்கள் sem rit á). ii) பொதுத் தர்மகர்த்தாச் சட்டத்தின் கீழ் தர்மகர்த்தா அல்லது நலம் பெறு Lauri sfntriu9a).
8. GLDrafg-disoir:
இவ்வித நுண்ணுய்வு பின்வருவோர் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படலாம்:-
(i) பணத்தை வஞ்சக வழிப்படுத்தியிருந் தால் அதன் தொகை எல்லையைக் கூர்ந்து காண்பதற்கு உரிமையாளர்
ser gridi (i) வரி செலுத்தாது நழுவிக்கொண்டால்
உள்நாட்டு இறைவரி அதிகாரிகள் ertido
-

எஸ். இராசதுரை
இவ்வித நுண்ணுய்வைக் கையாள்வ தற்கு கண்டிப்பான பிரமாணங்கள் இடப் படவில்லை. இருந்தும், நுண்ணுய்வின் நோக்கமும் ஒவ்வோர் விடயம் பற்றிய குறிப்பான சூழ்நிலைகளும் செய்யவேண்டிம் வேலைப் பரவியலையும், இயல்பையும் தீர்மா னித்துக்கொள்ளும்.
இவ்வாறு எழும் பலவித நோக்கிலான நுண்ணுய்வுகளையும் விபரமாக இங்கு கூற முடியாமையால் சுருக்கமாக விளக்கப்படு கின்றது. முதலில் ஒரு வியாபாரத்தைக் கொள்வனவு செய்பவர் அல்லது பங்கா ளர் அல்லது ஒரு கம்பனியை உயர்வு ஊக்கு பவர்கள் சார்பில் எழும் நுண்ணுய்வில், ஆய்வுக் கணக்குகள் பேரேடுகளில் மட்டும் தங்காது, வியாபாரத்தைப் பெருமளவில் சார்ந்துள்ள மற்றைய விடயங்களையும் பெறுவதற்குத் தகவல் கோரப்படவேண் டும். கணக்குகளைப் பரீட்சிப்பதால் வியா பாரத்தின் விவகாரநிலை உண்மையான தென்றும், மெய்மையானதென்றும் அதன் அடிப்படையில் செலுத்தும் கொள்வனவுக் கிரயம் ஓரளவிற்குப் போதியதென்றும் தீர்மானிக்கமுடியும். எனினும் பின்வரும் விடயங்களில் விசேட விசாரணைகள் எழ. வேண்டும் :
(i) பங்காளரைச் சேர்ப்பதற்கு அல்லதுச் வியாபாரத்தை விற்பதற்குரிய கார ணங்கள் யாவை? இது வியாபாரப் போட்டியால் அல்லது அயலார் குண மாற்றங்களால் அல்லது பழக்கவழக் கங்களால் அல்லது வியாபாரம் எதிர் காலத்தில் இலாபகரம் குறைந்ததாக லாமாகையினல் அல்லதுஇதுபோன்ற மற்றும் காரணங்கள் தெளிவாக வெளிவரமுன் வியாபாரத்தைக் கை யகற்ற ஆலோசிக்கலாம். W
(i) வியாபார இயல்பு உண்மையில் ஒரு வர் குணு திசயத்தில் தங்கியிருந்து
இன்னுமொருவருக்கு மாற்றமுடியாத தாகலாம்.

Page 187
s V
கணக்கியலில்
(i) வியாபாரத் தொழிலகத்தின் உரிமை நுகர்வுக்காலம் முக்கியமாகக் குத் தகையுரிமை, அபிவிருத்தித்தடைகள் ஆகியன இருக்கலாம். (iv) ஊழியர்களுடன் அல்லது மற்றவர் களுடன் இருக்கும் ஒப்பந்தங்களில் திறமைவாய்ந்த அல்லது மதிப்பான ஊழியர்கள் தமது கடப்பாட்டைப் புதிய உரிமையாளருக்கு மறுக்கலாம். (w) இந்த வியாபாரக் கொள்வனவு ஒப் பந்தம் விற்பவரைக் குறிக்கப்பட்ட சுற்ருடலில் அதே போன்ற வியாபா ரத்தை நடாத்திப் பழைய வாடிக் கைக்காரரை அழைக்கக்கூடும். (wi) வியாபாரத்தில் கொடுபடும் அல்லது பெறப்படும் கடன்வசதி, இருப்புச் சுழற்சி, தேவைப்படும் தொழிற்படு மூலதனம் முதலியன கணிக்கப்பட வேண்டும். கணக்குகளேப் பரீட்சித்தல் :
பரிசீலனைக்கு உள்ளடக்கவேண்டிய காலத்தை வாடிக்கைக்காரனுடன் ஒழுங்கு படுத்த வேண்டும். ஆய்வில் கணக்குகள் அமைப்பொத்த விதத்தில் திரும்ப வரை யப்பட வேண்டுவதுடன் எல்லாச் செலவு களும் விற்பனையின் விகிதாசாரத்துடன் வருடாவருட விளைவைக் கண்காணிக்கக் கூடிய முறையில் தயாரிக்க வேண்டும். ஐந்தொகையும் செங்குத்து நிலையில் நிலை யான சொத்துக்கள், நடைமுறைச் சொத் துக்கள். தொழிற்படு மூலதனம், முழு மூலதனம் என்பன வருடாவருடம் தெரியும் விதத்தில் வரையப்பட வேண்டும். உற்பத்தி பாக்க அல்லது வியாபாரக் கணக்கில் வரும் மேன் தலைச் செலவுகள் விற்பனையுடன் அசைவன வேருகவும், அசையாதவை வேருகவும் பகுத்தாய வேண்டும். இதன் பின் ஓர் ஆரம்ப பரீட்சை பின்வரும் அம் சங்களை கவனத்தில் கொண்டு நடாத்த வேண்டும்.
வி - 21 མཁས་གང་ལ་མཐོང་།

orde. இராசதுரை
(s)
(الچہ)
61 -
விற்பனை இதன் போக்கு எவ்வாறு உள்ளது என்பதைக் கவனித்து அசாதாரண மான ஊசலாட்டமிருப்பின் அதற் கான காரணங்கள் அறிய ப் பட வேண்டும். இது திடீர் வளர்ச்சி யால் அல்லது விசேட விற்பனைக ளால் அல்லது போலி அல்லது கபட வீக்கத்தால் காட்டப்படலாம். விற்பனையின் கொள்விலை நுகர்ந்த பொருட்களின் கொள்விலை விற்பனையின் கொள் செலவு என்பன விற்பனையுடன் ஒப்பிடக்கூடியதாக இருக்க வேண்டும். விற்பனையி லிருந்து விற்பனையின் கொள்விலை பல காரணங்களால் ஊசலாட்ட மடையும். அவையாவன :
(1) விற்பனைவிலை அல்லது கொள்
விலை மாற்றங்கள். (i) விற்பனைப் பதிவேடுகளை சூழ்ச் சித் திறனுடன் கையாளுவ தால் (iii) கொள்வனவுகளை இறுதி இருப் பிற்கு எடுத்துக்கொண்டுகொள் வனவில் கொண்டுவராது விடு தல்
(iv) விற்ற பொருட்களையும் இறுதி
இருப்பில் சேர்த்தல்
(w) இருப்பைக் கூட்டி அல்லது
குறைத்து மதிப்பிடுதல்
(Vi) இருப்பில் அல்லது ஆக்க இருப் பில் மேன் தலைச் செலவுகளைக் கூடிய அளவில் சேர்த்துக் கொள்ளல்
ஊதியமும் ஆக்கச் செலவுகளும் : விகிதார அசைதல் சம்பள விகித மாற்றத்தால், ஆக்கமுறை மாற்றத் தால் அல்லது உரிமையாளர் செல வினங்களைத் தனது பணத்திலிருந்து செலவுசெய்து மொத்த இலாபத்தை

Page 188
கணக்கியலில் .
(HF)
வீக்கிக்கொள்வதால் அல்லது சம்ப ளச் செலவில் சூறையாடுதலால், கணக்குகள் சூழ்ச்சிமுறையில் தயா ரிப்பதால் ஏற்படலாம்
மொத்த இலாப விகிதாசாரம் :
இது மேற்கூறிய காரணங்களால் அல்லது வியாபார இயல்பு மாற்றத் தால் ஊசலாடலாம்.
(உ) இலாபநட்டக் கணக்குகள்:
(ади)
இங்கு ஒவ்வொரு அம்சமும் பரீட் சித்து ஊசலாட்டம் யாவும் கவனிக் கப்படவேண்டும். நிலையான செலவு கள் உதாரணமாக வாடகை, சம்ப ளம் ஆகியன விற்பனையுடன் சாதா ரணமாக அசையமாட்டாது. இவற் றின் முரண்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். அறவிட முடி யாக் கடன்களுக்கும் தேய்மானங்க ளிற்குமான பதிவழித்தல் பற்றி விசேடமாகக் கவனிக்கவேண்டும். பழுது பார்த்தல், புதுப்பித்தல் போன்ற செலவுகளைத் தாக்கல் செய்யாதும், செலவுகளைப் பதியாது தமது பணத்திலிருந்து உரிமையாளர் செலவு செய்வதாலும் இலாபநட்டக் கணக்கில் தாக்கல் செய்யாது விட லாம். தேறிய இலாபத் திருத்தங்கள் : இந்த வியாபாரம், பெறக்கூடிய தேறிய சராசரி இலாபத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துமெனக் கணிக்க முன், இலாபத்தை உழைக்காத செலவுகள் யாவும் உதாரணமாக, இலாபப் பகிர்வுகள், மூலதனச் செலவுகள், கடன்வட்டிகள் மற்றும் இலாபம் உழைப்பதில்லாத செல வுகள் இலாப நட்டக் கணக்கில் தாக்கல் செய்யப்பட்டால் நீக்கப்பட வேண்டும். அதேபோல் முதலீட்டு வருமானம் மூலதனவருவாய் போன் றவையும் நீக்கிக் கணிக்கப்பட வேண்டும். முகாமை ஊதியத்திற்குப்

எஸ். இராசதுரை
போதிய கழிவுகொடுக்க வேண்டும். இதன்பின் எழும் திருத்தப்பட்ட சராசரி இலாபம் வியாபார விற் பனையின் கிரயத்துடன் ஒப்பிட்டு எதிர்பார்க்கும் வருவாயையும் பார் வையிடவேண்டும்.
FT6ă (guiu a :
இதன் பரவியலை மேல் எழுந்துள்ள விடயங்களைக் கொண்டு ஊகித்துக் கணித் துக்கொள்ளவேண்டும் தொழில் ரீதியான கணக்காய்வாளரால் பரீட்சிக்கப்பட்ட கணக்குகளாயின் நம்பிக்கை வைக்கக் கூடியதாகும். அவரின் கூற்றுக்கள்ல்கொண் டுள்ளவையையும் கவனித்துக்கொள்ள லாம். அவரிடமிருந்தும் விளக்கங்கள்: தகவல்ககளை பெற்றுக்கொள்ளலாம். இவ் வாறு தேடுதற் பரீட்சையைக் கையாள (Մ)ւգսյւն .
நன்மதிப்பு:
நன்மதிப்பு மதிப்பீட்டு அடிப்படை யைப் பரீட்சித்து வியாபாரத்தின் சூழ் நிலையில் அம் மதிப்பீடு நியாயமானதென விளங்கிக்கொள்ளவேண்டும்.
அறிக்கை:
இது முழுமையானதாகவும் ஐயுறவற்ற தாயும் இருக்கவேண்டும். நுண்ணுய்வு வியாபாரக் கொள்வனவிற்காக எழுந்திருந் தால் அவ்வியாபாரத்தின் குறுகிய கான சரித்திரத்தையும், அதன் ஆளணியினர்பற் றியும் அபிவிருத்தி பற்றியும் சொத்துக்களை யும் பொறுப்புக்களையும் பட்டியல்படுத்தி விசேட ஊசலாட்ட விளக்கங்களையும் கொடுத்து மொத்த, தேறியஇலாபங்களைக் காட்டி, முழு மூலதனத்தில் சராசரி வரு வாயையும், வாடிக்கைக்காரன் விரும்பும் வேறும் விசேட தகவல்களையும் அறிக்கை யில் சேர்த்துக் கூறவேண்டும். முன் விவரணத்தில் சேர்க்கவேண் டிய அறிக்கை :
கம்பனியின் பங்குகளுக்கு அல்லது தொகுதிக் கடன்களுக்கு பணம் அழைக்
l62 -

Page 189
கணக்கியலில்
es
கும் முன் விவரணத்தில் எடுத்துக் காட்ட வேண்டிய அறிக்கை கம்பனிச் சட்டத்திற் கிணங்க பின்வரும் விதத்தில் சுருக்கமாக வுள்ளது :
(அ) கிளைக் கம்பனிகள் இல்லாத கம்பனி யாயின் கம்பனியின் கணக்காய்வாள ரின் அறிக்கை பின்வருவனவற்றைக் காட்டவேண்டும்
(1) கடந்த ஐந்து வருடங்களில் ஒவ்வொரு வருட இலாப நட்டங் களும்,
(ii) கடைசியாகக் கணக்குகள் தயா ரிக்கப்பட்ட திகதியிலான சொத் துக்களும் பொறுப்புக்களும்.
(i) அந்த ஐந்து வருடத்திலும்
ஒவ்வொரு பங்கு வகுப்பிலும் செலுத்தப்பட்ட பங்குலாப விகிதங்களும், எந்த வகுப்பி லான ஏதேனும் பங்குகளுக்கு எந்த வருடத்திலாவது பங்கு லாபம் செலுத்தப்படாதிருப் பின் அதற்கான கூற்று ஒன்றும்.
(iv) மேற்கூறிய ஆண்டுக் காலங்க களில் எந்த ஓர் கணக்கும் விவ ரணம் வழங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன் தயாரிக்கப் படாதிருந்தால் அதன் காரணம் பற்றிய கூற்று ஒன்றையும்
(ஆ) கிளைக் கம்பெனிகளை அக்கம்பனி வைத்திருந்தால் அக் கம்பனியின் கணக்காய்வாளரின் அறிக்கை பின் வருவனவற்றைக் காட்டவேண்டு
 ே(அ) கடந்த ஐந்து வருடத்துக் கான வருடாந்த இலாப நட்டங்களுடன் எல்லாக் கிளைகளின் -
(1) ஒன்றித்த இலாப நட்டக் கணக்கு; அல்லது
6 . سیست

எஸ். இராசதுரை
(g))
(2) ஒவ்வொரு கிளையி னதும் த னித்த இலாப நட்ட க் கணக்கும் அல்லது
(ஆ) கம்பனியினதும் அதன் கிளைகளினதும் ஒன்றித்த இலாப நட்டக் கணக்கு
களும் (i) கணக்குகள் தயாரிக்கப்பட்ட
திகதியிலான சொத்துக்களு பொறுப்புக்களும், கம்பனியின் சொத்துக்களும் பொறுப்புக்க ளும் தனிப்பட்ட விதத்தில் கொடுத்துக் காட்டுவதுடன் -
(1) கம்பனியுடன் சேர்த்தோ சேர்க்காமலோ கிளைக் கம் பணிகளின் ஒன்றித்த சொத்துக்களும் பொறுப் புக்களும் அல்லது (2) ஒவ்வோர் கிளைக் கம்பனி களினதும் சொத்துக்களும் பொறுப்புக்களும் தனிப் பட்ட விதத்தில் கிளைகளின் இலாப நட்டங்கள் பற்றிய தகவல் அக்கம்பனியின் பங்காளர்களைப் பொறுத்து வேண்டப்படுகின்றது. கிளைக் ளின் சொத்துக்களையும் பொறுப் புக்களையும் பற்றிய கூற்று சிறு பான்மையினரின் அக்கறை யைக் காட்டவேண்டும்.
வழங்கீட்டின் வருவாய் முழுவதிலும் அல்லது ஒரு பகுதியில் ஓர் வணிகத் தைக் கொள்வனவு செய்தலில் பயன் படுத்தப்பட்டால் முன் விவரணத் தில் குறிப்பிட்ட கணக்காளரின் அறிக்கையும். (இவர் கம்பனிக் கணக்காய்வாளராக நியமிக் கப் படக்கூடிய தகுதிவாய்ந்தவராக இருக்கவேண்டும்.) -

Page 190
கணக்கியலில் . . . . . . . .
(1) வழங்கீட்டிற்கு முந்திய ஐந்து வருடங்களின் வருடாவருட இலாப நட்டங்களும்,
(ii) கடைசியாகக் கணக்குகள் தயாரிக்கப்பட்ட திகதியில் வணிகத்தின் சொத்துக்களும் பொறுப்புக்களும்.
(ஈ) வழங்கீட்டு வருவாய் முழுவதிலும் அல்லது ஒரு பகுதியில் இன்னெரு கம்பனியின் பங்குகளைக் கொள் வனவு செய்து அதனுல் அக் கம்பனி கிளைக்கம்பனி யாகுமாயின் (இ) என்ற பகுதியில் காட்டிய மாதிரி யான விபரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இவ் அறிக்கை செம்மையாக்கப்பட்ட வற்றை கொடுக்கப்பட்ட தொகைகளில் எம்மாதிரிச் செய்யப்பட்டன வென்று அடிக்குறிப்பில் கூற வேண்டும்.
கடன் கொடுப்பவர் சார்பிலான நுண் ணுய்வில் முன்னுரிமைப் பொறுப்புக்களி லும், பாதுகாப்புப் பொறுப்புக்களிலும், வணிகத்தின் திரவ நிதிநிலையையும், கடந்த காலச் சரித்திரத்தையும், பதிவேடுகளையும் தற்போதைய நிதி இடர்பாடுகளையும் விசேட கவனத்திற்கு உட்படுத்தவேண்டும்.
வங்கியாளர் சார்பிலான நுண்ணுய்வில் கடன் வசதியின் காரணத்தையும், கடனின் திரவத் தன்மையையும், கடன் பொதுப் பையும் காட்ட வேண்டும் கணக்காளரின் கூற்று சொத்துக்களையும், பொறுப்புக் களையும் - முக்கியமாக பலவித தருமதியா ளர்கள், வருமதி உண்டியல்கள், இருப்பு, உண்மையான ஆதனங்கள், முதலீடுகள், பாதுகாப்புப் பொறுப்புக்கள், காப்புறுதி கள் ஆகியவற்றின் விபரங்கள் பெறப்பட வேண்டும்.
மோசடிகளே நுண்ணுய்தல் :
மோசடிகள் பின்வருவனவற்றை உள்
ளடக்கலாம்,

6r díhu». QTT 3Fʻgv8D
(அ) காசு, பொருள், கைமாறக்கூடிய ஆவணங்கள்ஆகியனவற்றைத் துர்ப் பிரயோகம் செய்தல். (ஆ) கணக்குகளைச் சூழ்ச்சி முறையில் பிழையான நிதிநிலையைக் காட்டும் விதத்தில் தயாரித்தல் அல்லது மோசடிகளை மறைத்தல்,
(இ) வரி செலுத்தாது நழுவும் விதத்தில் கணக்குகளைத் தயாரித்தல். பன துர்ப்பிரயோகப் பலவிதத்தில் செய்யப்படலாம். அவற்றில் சில பின்வரு Long
ti) காசு விற்பனையைக் களவாடுதல். (i) தருமதியாளரிடமிருந்து வரும்
பணத்தை எடுத்தல், ti) வாடிக்கைக்காரருடன் கூட்டுச்சதி
செய்தல். {ivர் வியாபாரச் சென்மதியாளருடன்
கூட்டுச்சதிசெய்தல்.
tw) கொள்வனவுப் பட்டியல்களை இரட்
டித்தல். (wi) சம்பளத் தாள்களில் சூழ்ச்சிசெய்தல். (vi) சில்லறைக்காசில் களவாடல்செய்தல், இவ்வாறு எழும் மோசடிகளைக் கண்டு பிடித்து கொடுக்கல் வாங்கல்களைக் கால ஆரம்பத்திலிருந்து சான்ருய்வு செய்து, காட்டும் சூழலுக்கேற்ற விதத்தில் விசா ரணைகள் நடாத்தவேண்டும். இவ்வாய்வு கணக்காய்வில் செய்யும் முறைகளைப் போல அமையலாம். கம்பனிச் சட்டத்தின்கீழ் நுண்ணுய்தல்:
கம்பனிப் பதிவாளர் கம்பணிச்சட்டத் தின் கீழ் கம்பனியின் விடயங்களை நுண் ணுய்வதற்குப் பரிசோதகர்களை நியமிக்க லாம். இது விண்ணப்பத்தின் பிரகார மாகும். இந்நிலை
1. குறிப்பிடப்பட்ட பங்காளர் விண்ணப்
பத்திலும்
ܚܙܘܩܝܗ 64

Page 191
கணக்கியலில் ...
2. கம்பனியின் விசேட தீர்மானத்தாலும் 3. நீதிமன்றக் கட்டளையாலும்
கம்பனியின் விவகாரங்களை நுண்ணுய் விற்குப் பிரகடனம் செய்யலாம். கம்பனிப் பதிவாளரும் இதைச் சூழ்நிலை இருப்பின் உருவாக்கலாம். இச் சூழ்நிலை பின்வருமாறு ஆகலாம்:
(i) கம்பனியின் வணிகம் சென்மதியா
ளரை ஏமாற்றும் நோக்குடன் நடாத் தப்பட்டால் அல்லது சட்டமற்ற அல்லது கபடநோக்கான விதத்தில் அமைந்திருந்தால் அல்லது நடாத்தப் பட்டால்
{i கம்பனியின் உருவாக்கத்தில் அல்லது அதன் விவகார முகாமையில் ஈடு பட்டோர் மோசடிக் குற்றவாளியாக வும் அல்லது பங்காளரைப்பொறுத்த அளவில் கெட்ட நடத்தைகாட்டியும் இருந்தால் : அல்லது
(ii) கம்பனியின் பங்காளருக்கு அவர்கள் நியாயமாக எதிர்பார்க்கும் எல்லா வித தகவல்களும் கொடுபடாதிருந் தால்
இதன் தொடர் பாக நியமிக்கப்பட் டுள்ள பரிசோதகர்களுக்கு கம்பனியின் கிளைக்கம்பனிகளை அல்லது கொழுக் கம்பனியை அதன் விவகார நிலையை அறிய ஆய்வதற்கும் கடந்தகால தற்போதைய ஊழியர்களை சத்தியமுறையில் விசாரிக்க வும், மற்றும் கம்பனியின் முகவர், வங்கி யாளர், கணக்காய்வாளர், சட்டத்தரணி கள் ஆகியோரைப் பரீட்சிக்கவும் உரிமை யுண்டு.
வரிப்பொறுப்புச் சார்ந்த நுண்ணுய்வு:
இங்கு நுண்ணுய்வு பெருமளவில் வியா 11 ltᎢpr இயல்பிலும், இருக்கும் பதிவேடுகளி லும், பதிவேடுகளைப் பிழையாக வைக்கக் கூடிய சந்தர்ப்பங்களிலும் தங்கியுள்ளது. இதில் கணக்காய்வாளர் போதிய திறமை காட்டவேண்டி நேரிடும். அவர் முதலில்

Ffigwrspoog يعته
உள்ளடக்கவேண்டிய காலத்தைத் தீர்மா ணிக்கவேண்டும். அத்துடன் வாடிக்கைக் காரனிடமிருந்து அவரிடமிருக்கும் பின்
வரும்
மாதிரியான பத்திரங்களைப் பெற்
றுக்கொள்ளவேண்டும்:
(i)
(iiY
iii )
(iv)
(v)
(vi)
(vii)
(viii)
ܚ܂ 165
வியாபாரப் புத்தகங்களும் பரீட்சிக் கப்பட்ட கணக்குகளும் வங்கிப் புத்தகங்கள், கூற்றுக்கள், வைப்புப்பற்றுச்சீட்டுக்கள், ஆதியன வும் நடைமுறை மீதிகள் காட்டும் சாட்சிப்பத்திரங்களும்.
நுண்ணுய்வுக்கால ஆரம்ப்த்திலும் இறுதியிலும் தனியார் சொத்துக் களும் பொறுப்புக்களும் பற்றிய கூற்றுக்கள். கொள்வனவு செய்யப்பட்ட முதலீட் டுப் பட்டியலும், சான்றிதழ்களும், யார் யார் பெயரில் கொள்ளப் பட்டதும்.
வாடிக்கைக்காரன் சார்பில் வைத் திருந்த சொத்துக்களில் ஒப்புக் கடிதங்களும். முதலீடுகள் பற்றிய தரகர் கொள் வனவு விற்பனைக் கூற்றுக்கள். வியாபாரத் தோடல்லாத சொத் துக்கள் அல்லது ஆதனங்கள் வாங்கி விற்கப்பட்டிருப்பின் அவற்றின் விபரங்கள். இக் காலத்துக்குள் முற்றிய காப் புறுதி, விருப்புரிமைக் கொடை, மூலதன வரவினம் ஆகியவற்றையும் காப்புறுதி செய்யப்பட்டிருப்பின் செலுத்தப்பட்ட கட்டணங்கள். எல்லா, வட்டி பங்கிலாப அடிச்சீட் டுக்கள், வாடகைகள், அதன் செல வுகள். சொந்தச் செலவுகள், சீவியச் செலவு கள், பிள்ளைகளின் படிப்புச் செலவு கள், விடுதலைப் பிரயாணச் செலவு கள், நன்கொடைகள் மற்றும் சாதா ரணச் செலவுகள் பற்றிய உத்தே சக் கணிப்புகள்.

Page 192
கணக்கியலில் .
வருமானவரிக்குக் காட்டிய விபரங் களும் செலுத்தப்பட்ட வரிகளும் பெறப்பட வேண்டும். புத்தகங்கள் பேணப்பட்டுக் கணக்கு கள் சீராகவிருந்தால் ஆய்வு சுலபமாக இருக்கும் விற்பனைகளை மறைப்பதிலும், கொள்வனவுகளைக் கூட்டிக்காட்டுவதிலும், இருப்பைக் குறைத்து மதிப்பீடு செய்வதி லும் இலாபத்தைக் குறைத்துக் காட்டலா மாகையால் இவ் விடயத்தில் விசேட கவ னம் செலுத்தப்பட வேண்டும். எல்லா வங்கிக் கூற்றுக்களும் சரி நுட்பமான விபரத்தில் ஆராயப்படவேண்டும். இதனுல் வைப்புப் பண ஆரம்பமும் செலவினங்க ளின் சேரிடங்களும் விசாரணையில் அறிய முடியும். இவ்வாறு விவரங்களைத் திரட் டியபின் காசு வரவினம், செலவினம் கொண்ட ஒர் மொத்தக்கணக்குத் தயா ரித்து நுண்ணுய விருப்பவருடைய சாதா ரண வீட்டு, சீவியச் செலவுகளையும் கவ னித்துக்கொள்ள வேண்டும். இந்த க் கணக்கு பின்வருமாறு திரட்டமுடியும் :-
வரவுப்பக்கம் :
-வங்கியிலிருந்து எடுத்தபணம் -வியாபாரத்திலிருந்து எடுத்த பணம் --வேறு காசு வரவினங்கள்.
உதாரணமாக வாடகைத் திரட்டல் கள்
செலவுப்பக்கம் :
- வங்கியில் போட்ட பணம் -மூலவழி காணமுடியாத வங்கி வைப்
புக்கள் -காசால் செலவிடப்பட்ட செல
வினங்கள் உதாரணமாக வரிப்பணம் மற் றும் திருப்பத் திரும்ப வரும் செல வுகள் -மனைவிக்கு அல்லது பிள்ளைகளுக்கு வீட்டுச் செலவுக்கு அல்லது கைப் பணமாகக் கொடுத்தவை -மற்றும் காசுச் செலவுகள்

எஸ். இராசதுரை
-வரி செலுத்துபவரின் சொந்தக்
காசுச் செலவுகளின் மதிப்பீடுகள்
இவ்வாறு தயாரிக்கப்படும் கணக்கில் செலவினம் கூடியிருந்தால் மூலவழி காட் டப்படாததிலிருந்து காசு பெறப்பட்டு இருக்கின்றதென்பதைக் கணக்காய்வாளர் அறிந்துகொள்ளலாம். இவ்வாருன வித்தி யாசம் விளக்கப்பட முடியாததினல் வரி அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியாதெனவும் சுட்டிக்காட்ட வேண்டும்.
புத்தகங்சள், பேரேடுகள் தயாரிக்கா விடில் வங்கிக் கூற்றுக்கள், கொள்வனவு விற்பனைப் பட்டியல்கள், சென்மதியாளர் கூற்றுக்கள், செலவினங்களின் பற்றுச் சீட்டுக்கள் ஆகியவற்றிலிருந்து கணக்கு. கள் தயாரிக்கப்பட வேண்டும். சகல காசு. வருவாயும் வருமதியாளர்களிடமிருந்து பெற்ற பணங்களும் வங்கியில் போடப்படா திருந்தால் விற்பனையின் தொகை உண்மை யாகக் கணிக்க முடியாது. ஆனல் கொள் வணவுகள் நிச்சயிக்கப்பட்டால் மொத்த இலாபத்தை வியாபாரத்துக்கு ஏற்ற முறை யில் கொள்விலையின் இலாப விகிதத்தின் படி கணிக்கமுடியும்.
தகவல்கள் அருமையாகவிருந்தால் இலாப நட்டக் கணக்குகள் தயாரிக்க முடியாது. கணிக்கக்கூடிய ஒரேவழி கால ஆரம்பத்திலும் இறுதியிலும் இரு ந் த தேறிய மதிப்பு அஃதாவது, சொத்துகளி லிருந்து பொறுப்புக்களைக் கழித்தபின் எழும் தேறிய மதிப்பு கணித்து வாடிக் கைக்காரனின் சொந்தமான சொத்துக் களும் பொறுப்புக்களும் ஒவ்வொரு திகதி யிலும் பொற்றுக்கொள்ளப்படவேண்டும்.
இவ்வாறு கூற்றில் காட்டும் தேறிய சொத்து மிகைப்பிற்கு கூட்ட வேண்டியவை: - வாடிக்கைக்காரனின் சீவியச் செலவு கள், சொந்தச்செலவுகள் அவர்க ளின் குடும்பநிலைக்கேற்ப w -முதலீட்டு விற்பனையில் ஏற்பட்ட
நட்டங்கள்
66 -

Page 193
கணக்கியலில் ..
--சூதாட்ட நட்டங்கள் -மூலதன நட்டங்கள் போன்ற மற்
றைய நட்டங்கள் - கையகற்றப்பட்ட அல்லது பாவிப் புக்கு அப்பாற்பட்டசொத்துக்களின் மதிப்புக்கள் --மற்றும் எந்தவிடயத்தாலும் தேறிய சொத்து மதிப்புக் குறைக்கப்படு மாயின் அதையும் இவ்வாறு பெற்ற தொகையிலிருந்து கழிக்கவேண்டியவை: --காப்புறுதி முற்றுதல்களிலான வரு
வாய - --சூதாட்ட இலாபங்கள் -முதலீட்டு விற்பனையிலான இலா
ji do 6 -நன்கொடை உரிமைகள் -நட்டஈடு போன்ற மற்றைய மூலதன
வரவினங்கள்.
கணக்குப்பதிவியலு
Book-Keeping
வியாபார அன்ருடக் காசுக் கொடுக் செய்துவைப்பதே கணக்குப் பதிவியலா ! பேரேடுகளில் பதிவு செய்தலாகும். கண } செய்த கொடுக்கல் வாங்கல்களைக் கொ நட்டங்களைக் கணிப்பதற்காகக் கூற்றுக் வியாபார, இலாப நட்டக் க/கு கள், ஐந்
*\**\^^^; مصیحیحیرہبرہمی بربر"
- 6

sтcio. Glara glay
இவ்வாறு எழும் தொகை நுண்ணுய்வுக் காலத்தில் எல்லாவித மூல வழிகளால் எழும் மொத்த வருமானத்தைக் குறிக்கும் இவ் இலாபம் பின்வரும் மூல வழிகளால் எழும் வருமானமாகக் கணிக்கப்படும்.
- முதலீடுகள்
-ஆதனங்கள்
-மற்றைய மூல வழிகள்
-மீதி வியாபார இலாபம்.
இவற்றை இலாபப் போக்கு இடைக் காலங்களில் சொந்தமாக வைத்திருந்த சொத்திற்கேற்ப வரி வருட காலத்திற் கமைய நுண்ணுய்வுக் காலத்தில் உள்ள ஒவ்வொரு வருடத்திற்கும் பகிர வேண் டும். கணக்காய்வாளர் தமது அறிக்கையில் தரப்பட்ட விடய விபரங்களில் குறைபாடு அல்லது திருப்தி அடைய முடியாதவை அல்லது விளக்கக் குறைவானவை இருப் பின் அவை பற்றியும் குறிப்பிட வேண்டும்"
|ம், கணக்கியலும் and Accounts
கல் வாங்கல்களைப் புத்தகங்களில் பதிவு கும். உதாரணம்: காசேடு, நாளேடு, 'க்கியல் என்னும்போது அவ்வாறு பதிவு : ண்டு கணக்குக் கால முடிவில் இலாப,
களைத் தயாரித்தலாகும். உதாரணம்: தொகைகள் என்பன தயாரித்தலாகும்.
حسی

Page 194
Donated by
விெy Watch Works
44-46, Kasturiar Road,
JAFFNA.
வித்தியோதயம் வாழ்க! |
சப்பாத்து, பாதணிகள் விற்பனையாளர்
சரவணஸ் 45, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்,

அன்பளிப்பு
w
w V7
சகலவித இரும்பு, பித்தளைச் சாமான்கள், பலவர்ண மை வகைகள் முதலியன சகாயமான விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம். y
NZ த மலாயன்
றேடிங் கொம்பனி 128-130, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். போன் : 547
భ
Space Donated
by
t
ELECTRICAL CONTRACTORS
8.
DEALERS
《
Jaffna Electricals 6, STANLEY ROAD, JAFFNA

Page 195
- பொருளியல்
இலங்கை நாணயத்தின்
T
எச். எம். மொஹமட் இல்லியாஸ் வர்த்தகவியல் (சிறப்பு) இறுதி வருடம்
வி -22 Garw

மீள் மதிப்பீடு
இலங்கை நாணயத்தின் மீள் மதிப்பு (Re-valuation) 6T6 ords கூறுமிடத்து இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டிருக்கும் ஏனைய நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக எமது நாணயத் தில் எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என நிர்ணயிப்பதாகும், அதாவது நடை முறையில் (மீள மதிப்பீடு செய்யப்படும் வேளையில்) உள்ள செலாவணி மாற்று வீதத்தில் மாற்றம் செய்யப்படுவதை மீள் மதிப்பீடு எனக் குறிப்பிடலாம். மீள் மதிப்பீடு எனும் பதம் இரண்டு விடயங் களை உள்ள்டக்கி உள்ளது. அதாவது ஏனைய நாடுகளின் நாணயங்களின் மதிப் பிற்கு எதிராக, எமது நாணயத்தின் மதிப்பு குறைக்கப்படுமாயின் அது நாணய மதிப்பிறக்கம் (Devaluation) எனவும், எமது நாணயத்தின் மதிப்பு அதிகரிக்கப் படுமாயின் அது மிகை மதிப்பு (0WerValuation) எனவும் அழைக்கப்படும்.
இலங்கையின் அண்மைக்கால பொரு ளாதார வரலாற்றில் அதன் நாணயத்தில் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட மீள் மதிப் பீடானது இலங்கை யின் பொரு ளாதார நடவடிக்கையில் ஆர்வம் உடைய வர்களை விமர்சனக் கண் கொண்டு நோக்கத் தூண்டியது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் போக்கை அந் நாட்டின் நாணயத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றத் தைக் கொண்டு ஒரளவு அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. எனவே இலங்கை பின் ரூபா நாணயத்தை மீள் மதிப்பீடு செய்வதில் கடந்த இரு சகாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறி வது அவசியமாகின்றது. இதுவே இக் கட்டுரையின் நோக்கமும் ஆகும்.
-سس- 69 |

Page 196
இலங்கை .
இலங்கை நாணயத்தின் மதிப்பானது காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் மாற்றமடையச் செய் யப்பட்டது எனக் கூறுமிடத்து அதற்கான பின்னணிக் காரணிகளையும் நோக்குவது அவசியமாகின்றது. இலங்கை நாணயத் தின் மதிப்பானது அதன் பொருளாதார அமைப்பின் முக்கிய அம்சமான ' ஏற்று மதி - இறக்குமதி 'ப் பொருளாதாரத் தன்மையுடன் நெருங்கிய உறவுகொண்ட தாகக் காணப்படுகின்றது. ஏனெனில், எமது தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி - இறக்குமதித்துறையானது ஏறத்தாழ 20% மான பங்கினை வகிக்கின்றது. அத்துடன் எமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மாவு, சீனி, துணி வகைகள், மருந்து வகைகள் மற்றும் இர சாயனப் பொருட்கள், கைத்தொழில் மூலப் பொருட்கள், மூலதனப் பொருட்கள் போன்றவற்றிற்கு நாம் இறக்குமதியையே நம்பி இருக்கவேண்டிய நிலையில் உள்ளோம். இவ்வாறன அத்தியாவசியப் பொருட்களை நாம் இறக்குமதி செய்யவேண்டிய கட்டாய நிலையில் இருப்பதால் சென்மதி நிலுவை நடைமுறைக் கணக்கில் ஏற்படும் சாதகபாதக நிலைமைகள் எமது நாணயத்தை மீள் மதிப்புச் செய்யவேண்டிய கட்டாய நிலைக்கு உந்துகின்றது எனலாம்.
கடந்த இருபது வருடங்களாக எமது Gafsirudg) figy 606 (Balance of Payment) பாதகமான தன்மையையே அனுபவித்து வருகின்றது. 1955ஆம் ஆண்டு தொடக்கம் அண்மைக்காலம் வரை எமது பிரதான ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, இறப் பர் என்பவற்றின் விலைகள் உலகச்சந்தை யில் கீழ்நோக்கிய போக்கினைக் கொண்ட தாகவே காணப்பட்டன. இவ்வாறு விலை கள் வீழ்ச்சியடையத் தொடங்கிய அதே கால கட்டங்களில் தேயிலை, இறப்பர் என்பவற்றின் ஏற்றுமதியளவில் அதிகரிப் புக் காணப்பட்டாலும் தொகையளவில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கேற்ப ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கவில்லை. ஆனல் 1956ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து இறக்கு மதியளவும், இறக்குமதிப் பொருட்களின் விலையும் அதிகரித்து வந்துள்ளன. 1956ஆம் ஆண்டைத் தொடர்ந்து இலங்கை அர

எச். எம். மொஹமட் இல்லியாஸ்
சாங்கமானது குறைநிலை வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக உள்நாட்டில் பணநிரம்பல் அதிகரித்துச் செல்ல ஏதுவாயிற்று. அதா வது குறைநிலை வரவு செலவுத் திட்டத்திற் கான நிதியீட்டமானது பெரும்பாலும் வர்த்தக வங்கிகளிடம் இருந்து பெறும் கடன்களினலும், மத்திய வங்கியினுல் விநி யோகிக்கப்படும் புதிய நாணயத் தாள்களி ஞலும் நிறைவேற்றப்படலாயிற்று. இவ் வாறு குறைநிலை வரவுசெலவுத் திட்டத் திற்குப் பெறப்பட்ட நிதியானது நாட்டின் ஆக்கத்தை அதிகரிக்கக்கூடிய துறையில் முதலீட்டுச் செலவாக இடப்பட்டு இருந் தால் அது ஒருவேளை எமது சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் பாதகத் தன்மையைக் குறைத்து இருக் கும் எனலாம். ஆனல் குறை நிலை வரவுசெலவுத்திட்ட நிதியீட்டமானது சமூகச் செலவீடுகளிலேயே மேற்கொள்ளப்பட லாயிற்று. இதன் காரணமாக உள்நாட்டுச் சந்தையில் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்தது. ஆயினும் உள்நாட்டுக் கேள்வி அதிகரிப்பிற்கு ஏற்ப உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பல தடை கள் காணப்பட்டமையால் அதிகரித்த கேள்வியை ஈடுசெய்ய இறக்குமதியளவு தொடர்ந்து அதிகரித்துச் செல்வது அவ சியமாயிற்று. ح
இவ்வாறு ஏற்றுமதிப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து சென்றதாலும் இறக்குமதியின் கொடுப்பனவு அதிகரித் துச் சென்றமையாலும் எமது , சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கு பற் ருக்குறையைக் காட்டியது. ஆயினும் 1960ஆம் ஆண்டுவரை எமது வெளிநாட் - டுச் சொத்தைக் கொண்டு நடைமுறைக் கணக்கின் பற்ருக்குறை ஈடுசெய்யப்பட லாயிற்று. ஆனலும் தொடர்ந்தும் இந் நிலைமை நீடிக்க முடியவில்லை. எமது தேறிய வெளிநாட்டுச் சொத்தின் அளவானது படிப்படியாக வீழ்ச்சியடைந்து சென்றமை யால் 1961க்கும் 1965க்கும் இடைப்பட்ட காலத்தில் இறுக்கமான இறக்குமதிக் கட் டுப்பாடு மேற்கொள்டப்பட்டமையால் ஒரளவு சென்மதி நிலுவையின் பற்றக் குறையின் தாக்கம் குறைவடைந்து காணப்
-س 170

Page 197
இலங்கை.
படலாயிற்று. அத்துடன் 1964ககும் 1965க் கும் இடைப்பட்ட காலத்தில் இறக்குமதிப் பதிலீட்டுப் பொருள் உற்பத்திகள் பல உள் நாட்டில் சென்மதி நிலுவைப் பற்றக் குறையை ஒர
ளவு குறைந்த அளவில் கூடியதாக இருந்தது.
ஆரம்பிக்கப்பட்டமையாலும்
வைத்திருக்கக்
இலங்கையின் ெ
1957
1958
1959
1960
1961
1962
1963
1994
1965
1966
1967
1968
s
1
6
6
9
624
1773
1796
707
1763
1708
1767
1909
1674
1650
1975
1764
173
1958
2006
1794
1906
1869
1960
1922
2018
1968
234.
- 89
- 185
210 -م
- 87
- 143
- 16.
193 -ܝܢ
13 ܚܝܢ
-344
335 سم
366 ܚܦ
1 -ܝܗ 100 ܚܚܝܕ
m
十
23 -
10 -
{ -سم 33
72 --
53 - ,
46 -
سن 20
அட்டவணை 1
-

எச். எம். மொஹமட் இல்லியாஸ்
ஆயினும், இவ்விறக்குமதிக் கட்டுப் பாட்டு முறைமைகளும், இறக்குமதிப் பதி வீட்டு உற்பத்திகளும் எமது சென்மதி நிலுவைப் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த கருவிகளாக அமையவில்லை. தொடர்ந்தும் 1966, 1967ஆம் ஆண்டுக ளில் சென்மதி நிலுவையின் நடைமுறைக்
சன்மதி நிலுவை
மில்லியன் ரூபாயில்
5
兹 है 3
g 8 “.
बै i 凯 sਤੇ 器默 క్లక్షి བའི་བུ་སྐྱེ་
5) s 越 S 鼩盛滨 క్ష བ་
སྒྲིད་ཞི་སྒྱེ་ཕྱི་སྤྱི་སྒྱུ་ S3 ਉਰੰ
l95 - 18 - 1 -1062 214 - ܚ
933 129 -سم مدة 6 + 32 + 8 + I53 734 175 - 1 + سس--. 32 + 203
541 193 سم 29 -+ 24 -سسه 22 + 20{
532 9 سم 19 - 93 + 11 - 95
504 28 -ܢ 31 + 42 + 39 , -ܛ 140
168 - 80 + 42 - 4 - 42 462
351 51 نسم 8 - 33 + 69 + 60
39 + 58 + 3 - 6 + 114 440 290 + 137 + 53 - 22 - 122 318
449 131 + 2 - 1 27 -- 161 پا 289
346 + 224 + 162 - 26 + 14 463
மூலம் : இலங்கை மத்திய வங்கியின்
ஆண்டு அறிக்கை - 1968

Page 198
Geoštands ...
sGaw&š5 (Current Account) singu Gran பற்ருக் குறையையே காட்டி நின்றது. அத்துடன் எமது வெளிநாட்டுச் சொத்தும் மிகக் குறைத்த மட்டத்தையே அடைந்து இருந்தது. மேற்கூறிய நிலைமையை அட்ட வண்ை ஒன்றில் கொடுக்கப்பட்ட தரவுகள் தெளிவாக விளக்கு கின்றது. எனவே தொடர்ந்தும் சென்மதி நிலுவை நடை முறைக் கணக்குப் பற்ருக்குறையை வெளி நாட்டுச் சொத்துக்கள்ைக் கொண்டு ஈடு செய்வது என்பது சாத்தியமற்ற தென்பது நன்கு உணரப்படலாயிற்று.
சென்மதி நிலுவை ந  ைட முறை க் கணக்குப் பற்ருக் குறையைத் தீர்ப்பதற்கு அல்லது அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஒன்றில் உள்நாட்டுப் பணக் கொள்கை யைக் கடைப்பிடிப்பது அல்லது நாணய மதிப்பிறக்கம் செய்வது அவசியமாயிற்று. உள்நாட்டு பணக் கொள்கை என்பது உள் நாட்டில் பண நிரம்பலைக் குறைப்பதற்கு வட்டி வீதத்தை அதிகரித்தல் என்பதா கும். ஏனெனில் உள்நாட்டில் அதிகரித்துச் செல்லும் பண நிரம்பலே இறக்குமதிப் பொருட்களுக்கான கேள்வியை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்திருந்தமையா கும். அத்துடன் இறக்குமதிப் பதிலீட்டுப் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த கைத் தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், மூலதனப் பொருட்கள் போன்றவற்றிற் கும் கூடிய அளவு இறக்குமதிக் கேள்வி காணப்படலாயிற்று. எனவே உள்நாட்டில் இறுக்கமான பணக்கொள்கை கடைப் பிடிக்கப்படுமானல் அதாவது வட்டி வீதம் உயர்த்தப்படுமானல் உள்நாட்டில் பண நிரம்பல் கட்டுப்படுத்தப்படுவதுடன் இறக் குமதிப் பொருட்களுக்கான கேள்வியும் குறைவடையக் கூடிய சந்தர்ப்பம் கூடுத லாகக் காணப்பட்டது. ஆயினும் இவ் வாறு வட்டி வீதத்தை உயர்த்துவது உள் நாட்டில் முதலீட்டுத் துறையைப் பாதிக் கக்கூடியதாக அமையும், அவ்வாறு உள் நாட்டில் முதலீடு குறைவதானது பொரு

எச். எம். மொஹமட் இல்லியாஸ்
ளாதார இலட்சியங்களில் ஒன்றன பூரண வேலை வாய்ப்பு மட்டத்தை அடைதல் அல்லது பூரண வேலை வாய்ப்பு மட்டத்தை அடைய முயற்சித்தல் என்ற விட யம் தடைப்படும். அத்துடன் வட்டி வீதம் உயர்த்தப்படுமாயின் ஏற்றுமதிப் பொருட் களின் விலை கூடி அதனுல் உலகச் சந்தை யில் அப்பொருட்களுக்கான கேள்வி குறை வடைய வகை செய்யும். மேலும் ஆரம் பக் கட்டத்தில் இருக்கும் இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில்கள் தமக்கு வேண்டிய நிதி வசதியைப் பெற இயலாது ஸ்தம்பித நிலையை அடையவும் கூடும். எனவே சென்மதி நிலுவைப் பற்ருக் குறையைத் தீர்ப்பதற்கு உள்நாட்டின் இறுக்கமான பணக்கொள்கையைக் கடைப் பிடிப்பது சாத்தியமற்ற ஒரு செயலா யிற்று.
1967ஆம் ஆண்டில் இலங்கையின் சென்மதி நிலுவையானது 329 மில்லியன் ரூபாயினுல் பற்ருக் குறையை வெளிப் படுத்தியது. இவ்வாண்டில் வர்த்தக மாற்று வீதம் 9 14%ஆல் அதிகரித்தது. இவ் அதி கரிப்பிற்கு ஏற்றுமதிப் பொருட்களின் வின் 63%ஆல் குறைந்ததும் இறக்குமதிப் பொருட்களின் விலை 34% ஆல் அதிகரித் ததும் முக்கிய காரணமாக இருக்தன. அத் துடன் 1960ல் எமது வெளிா ட் டுச் சொத்து 458 மில்லியன் ரூபாயாக இருந்து 1966 ல் 282 மில்லியன் ரூபாயாகக் குறை வடைத்தது.
இந்நிலையில் 1966ஆம்ஆண்டு ஜுன்மாதம் இந்தியா தனது ரூபாவின்மதிப்பைக்குறைத் தது. இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களின் விலைகுறைந்து குறிப்பாக இந்தியாவின் தேயிலையின் வி.ை குறைந்து எமது தேயிலை ஏற்றுமதி வர்த் தகத்தைப் பாதிக்கும் என அஞ்சப்பட்டது. ஆயினும் இந்திய அரசாங்கம் நாணய மதிப்பிறக்கத்தால் பெறப்பட்ட ஏற்றுமதி வருவாய்மீது கூடிய அளவு கட்டணம் விதித்தமையால் இலங்கை ரூபாவின் பெறு மதியைக் குறைக்க வேண்டியதில்லை என
72 -

Page 199
இலங்கை .
இலங்கை அரசாங்கம் முடிவு செய்தது. ஆளுல் குறுகிய காலத்திற்குள் இந்திய அரசாங்கம் தேயிலை ஏற்றுமதி வருமானத் தின் மீது விதித்த கட்டணத்தை நீக்கிய மையால் இலங்கையும் தனது ரூபாவின் மதிப்பைக் குறைக்க வேண்டிய நிலைக்கு உள்ளாயிற்று. அத்துடன் ஸ்டேர்லிங் பவு ணின் மதிப்பு 143%ஆல் குறைக்கப் பட் டதைத் தொடர்ந்து இலங்கையும் தனது நாணயத்தின் மதிப்பை 20%ஆல் 1967ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி
குறைத்தது.
1967இல் இலங்கை ரூபாவின் பெறு மதி குறைக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது எமது சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் தொடர்ந்து நிலவி வந்த பற்ருக் குறை யாகும். ரூபாவின் மதிப்புக் குறைக்கப் பட்டதனல் எமது ஏற்றுமதிப் பொருட்க ளின் விலை உலகச் சந்தையில் குறை வடைந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட் களின் கேள்வி கூடும் என எதிர்பார்க்கப் பட்டது. அத்துடன் எமது ஏற்றுமதிப் பொருட்களின் விலைகுறைவடைவதால்உலக சந்தையில் ஏனைய நாட்டுப் பொருட்களு டன் போட்டி இடுவது இலகுவாகும் எனக் கருதப்பட்டது. நாணய மதிப்பிறக்கத்தின் காரணமாக ஏற்றுமதிப் பொருட்களுக்கு கேள்வி கூடும் என எதிர்பார்க்கப்பட் டாலும் கேள்வியில் ஏற்படும் அதிகரிப்பா னது அதன் விலை நெகிழ்ச்சியைப் பொறுத்த ஒரு விடயமாகும். பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக இருந்த தேயிலை, தென்னை, இறப்பர் என்பன விவசாயப் பொருட்க ளாக இருந்தமையால் அவற்றின் நிரம்பல் நெகிழ்ச்சியும் குறைவு என்பது நோக்கத் தக்கது. அத்துடன் நாணய மதிப்பிறக்கம் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை கூடுவதினுல் இறக்கு மதிப் பொருட்களின் அளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுள் அதிகமானவை ஒன்றில் அத்தியாவசியப்

எச். எம். மொஹமட் இல்லியர்ஸ்
பொருட்களான அரிசி, மாவு, சீனி, மருந்து வகைகள் அல்லது கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள், இடை நிலைப் பொருட்கள், மூலதனப் பொருட்க ளாக இருந்தன. இவற்றின் கேள்வி! நெகிழ்ச்சியானது மிகக் குறைவானதாக இருக்கின்றபடியால் நாணய மதிப்பிறக் கத்தினுல் இறக்குமதியை கட்டுப்படுத்த முடியும் என்பது பூரண வெற்றியை அளிக்கவில்லை. நாணய மதிப்பிறக்கத்தின் மற்றுமொரு நோக்கம் உள்நாட்டில் பொருட்களின் விலையை அருமையாக இருக்கும் அந்நியச் செலாவணியின் பெறு மதியுடன் ஒரு நேர் கோட்டில் இணைக்கச் செய்வதாகும்.
இவ்வாறு நாணய மதிப்பிறக்கம் பல் வகைப்பட்ட நோக்கங்களின் அடிப்படை யில் செய்யப்பட்டதாயினும் அதன் முழுப் பயனையும் பெறமுடியாத நிலையை உள் நாட்டுக் கூலி மட்டமும் பண வருமான மும் அதிகரிக்கப்பட்டமை ஏற்படுத்திற் எனலாம்.
எனவே 1967ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி செயற்படுத்தப்பட்ட நேரடியான 20% நாணய மதிப்பிறக்கத் தைத் தொடர்ந்து 1968ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி அந்நியச் செலாவணி of 60LD& Frtair fisp 5 Lih (Foreign Exchange Entitlement Certificate Scheme) நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதுவும் இலங்கை தாணயத்தின் மறைமுக மான மதிப்பிறக்கமாகும். தேர்ந்து எடுக் கப்பட்ட குறிப்பிட்ட சில பொருட்களைத் தவிர ஏனைய பொருட்களுக்கு அதன் இறக்குமதிப் பெறுமதியில் 44% மேலதிக மாகச் செலுத்தப்படவேண்டும் என விதிக் கப்பட்டது. இதன் காரணமாக இறக்கு மதி செய்யப்பட்ட பொருட்களுக்கு, முன் னர் செலுத்திய பணத்தை விடக் கூடுத லாகச் செலுத்தவேண்டிய நிலை உருவா யிற்று. இவ் அந்நியச் செலாவணி உரிமைச் சான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்திய தற்குப் பல காரணங்கள் கூறப்படலா யிற்று.
-ܚܝ 73

Page 200
இலங்கை .
இக் காலகட்டத்தில் இறக்குமதி நட வடிக்கைகளுக்கும் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாட்டு முறைமைக்கும் இடையில் ஒரு முரண்பாடு இருப்பது கவனிக்கப்பட லாயிற்று. அதாவது நடைமுறையில் இருந்த இறக்குமதிக் கட்டுப்பாட்டு முறை யானது இறுக்கமான அனுமதிப் பங்கு (Quota) அடிப்படையில் அமைந்திருந்தமை யால் எமது பொருளாதாரத்தில் சில விட யங்களில் பாதகமான விளைவுகளையும் ஏற் படுத்தக்கூடியதாக இருந்தது. உதாரண மாக, கூடிய அளவு இலாபம் உழைக்கக் கூடியதும் திறனுக இயங்கிக் கொண்டிருந் தனவுமான பல கைத்தொழிற் துறைகளும் விவசாயத் துறைகளும் பெருமளவு இறக்கு மதி செய்யப்பட்ட பொருட்களையே உள் வீடாகக் கொண்டிருந்தன. ஆனல் இவற் றிற்குப் போதியளவு இறக்குமதி அனுமதிப் பங்கு கொடுக்கப்படாமையால் அவை தமது இயலளவிலும் குறைவாகவே செயற் படவேண்டியதாயிற்று. எனவே நாட்டின் பொருளாதார நலன் கருதி நுட்பம் கூடிய ஒரு இறக்குமதிக் கட்டுப்பாட்டு முறை அவசியமாயிற்று.
அத்துடன் 1967ஆம் ஆண்டின் 20% நாணய மதிப்பிறக்கமானது பாரம்பரிய மான_ஏற்றுமதிகளுக்கே ஒரளவு ஊக்கம் அளிப்பனவாக இருந்தது. ஆனல் பாரம் பரியமற்ற பொருட்களின் ஏற்றுமதிக்கு இந் நடவடிக்கை போதியளவு ஊக்கம் அளிப்பனவாக அமையவில்லை. ஏனெனில் பாரம்பரியமற்ற ஏற்றுமதிப் பொருட்களின் ஆக்கச் செலவானது 1967ஆம் ஆண்டின் 20% நாணய மதிப்பிறக்கத்தால் கூடியது மட்டுமன்றி ஏற்கனவே அத்துறைகள் போதியளவு இலாபம் உழைக்காதவைகளா கவும் காணப்பட்டன. ஆனல் எமது சென் மதி நிலுவைப் பிரச்சினையைத் தீர்ப்பதற் குப் பாரம்பரியமற்ற பொருட்களின் ஏற்று மதியை அதிகரிப்பது அத்தியாவசியமாகக் காணப்பட்டது. இக் குறையினைத் தீர்ப்ப தற்காகவும் அந்நிய செலாவணி உரிமைச் சான்றிதழ் திட்டம் புகுத்தப்படலாயிற்று.
-

எச். எம். மொஹமட் இல்லியாஸ்
அதாவது இச் சான்றிதழை வைத்திருப்ப வர்கள் குறிப்பிடப்பட்ட ஏற்றுமதிகளுக்கு எதிராக அந்நியச் செலாவணியை வர்த் தக வங்கிகளிடம் ஒப்படைப்பார்களாயின் அவ் ஏற்றுமதி வருவாயில் 44% மேலதிக மாக உள்நாட்டு நாணயத்தில் வழங்கப் படலாயிற்று. இவ்வாறு வழங்கப்படும் தொகையானது பின்னர் 55% ஆகவும்: அதன் பின்னர் 65% ஆகவும் அதிகரிக்கப் பட்டது. அதே போன்று இறக்குமதியைப் பொறுத்தவரை நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியைக் கட்டு ப் படுத்த 20% நாணய மதிப்பிறக்கம் துணை புரியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் இலங்கை யில் வருமானம் சமனற்ற முறையில் பங் கீடு செய்யப்பட்டுள்ளமையால் உயர் வரு
மான வகுப்பினரது ஆடம்பரப் பொருட் களுக்கான இறக்குமதிக் கேள்வியைக் குறைப்பதில் அது பூரண வெற்றியடைய வில்லை எனலாம். எனவே. இவற்றைச் சீர்செய்ய அந்நிய செலவாணி உரிமைச் சான்றிதழ் திட்டம் துணைபுரியும் எனக் கருதப்பட்டது.
அந்நியச் செலாவணி உரிமைச் சான் றிதழ் திட்டத்தின்படி இறக்குமதி செய்யப் படும் பொருட்கள் A, B எனும் இரு வகுப் பினுள் அடக்கப்பட்டன. வகுப்பு Aயினுள் அடங்கிய பொருட்களை இறக்குமதி செய்வ தாயின் அந்நியச் செலாவணிக்கு நிர்ண யிக்கப்பட்ட வீதம் (Ofical Rate) கொடுக் கப்பட வேண்டும். வகுப்பு Bயை மேலும் இரண்டாக பிரிக்கலாம். அதன் முதலாவது பிரிவு அனுமதிப்பங்கு வழங்கப்பட்ட பொருட்கள் அனுமதிப்பங்கு அளிக்கப் பட்ட தொகையிலும் கூடுதலாக இறக்கு மதி செய்யப்படுமாயின் அம் மேலதிகத் தொகைக்கு குறிப்பிட்ட வீதம் மேலதிக மாகச் செலுத்தப்பட வேண்டியதாயிற்று. மற்றைய பிரிவு பொது அனுமதிப்பத்திர Qp69pusär (Open General Licence) &b. இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட் களை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. இப்பொழுது அனுமதிப்பத்திர முறையின்
74 -

Page 201
இலங்கை
a s as
கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்க ளுக்கு இறக்குமதிப் பெறுமதியில் 44%ம் ஆரம்பத்தில் மேலதிகமாகச் செலுத்த வேண்டியதாயிற்று. பின்னர் இத் தொகை 65%வரை அதிகரிக்கப்பட்டது. அந்நியச் செலாவணி உரிமைச் சான்றிதழ் திட்டத் தின் முக்கிய நோக்கம் இறக்குமதிக் கொடுப்பனவைக் குறைப்பதும் ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதுமாகும். எவ்வா ருயினும் அது இலங்கை நாணயத்தின் மதிப்பை மறைமுகமாகக் குறைத்தது என் பது மிகையாகாது.
1967ஆம் ஆண்டின் நாணய மதிப் பிறக்கமும் 1968ஆம் ஆண்டின் அந்நியச் செலாவணி உரிமைச் சான்றிதழ் திட்ட மும் எமது சென்மதி நிலுவையின் நடை முறைக் கணக்கின் பற்ருக் குறையை
இலங்கையின் ெ
தேறிய கட்புலனுகா
... ( . ஏற்றுமதி ఊ9 # పీ ,
உள்ளடக்கியது
967 -46 -- 335 س
1968 - 380 + 25 1969 - 746 - 51 1970 - 315 35 --س
97. 7 -- 287 سس
1972 59 -- 255 -ܝܢ
1973 138 * 299 --م
1974 356 -- 1263 -ܚܝܢ
1975 - 1421 十 649 1976 - 709 4.59
அட்டவணை 2

எச். எம். மொஹமட் இல்லியாஸ்
நீக்குவதில் பூரண வெற்றி பெறவில்லை எனலாம். இலங்கை அரசாங்கம் தொ டர்ந்து குறை நிலை வரவு செலவுத் திட் டத்தைச் செயற்படுத்தியமையாலும் உள் நாட்டில் பண நிரம்பல் அதிகரித்துச் சென் றமையாலும் இறக்குமதிப் பொருட்களுக் கான கேள்வி அதிகரித்துச் சென்றது. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை உலகச் சந்தையில் அதிகரித்துச் சென்றமையும் ஏற்றுமதிப் பொருட்களின் விலை கீழ்நோக்கி சென்ற மையும் எமது சென்மதி நிலுவை நடை முறைக் கணக்கின் பற்ருக்குறை தொடர்ந் தும் ஒரே போக்கைக் கொண்டதாக அமையக் காரணமாயிற்று. இவ் விட யத்தை அட்டவணை இரண்டில் கொடுக் கப்பட்டுள்ள தரவுகள் தெளிவாக விளக்கு கின்றது எனலாம்.
சன்மதி நிலுவை
மில்லியன் ரூபாயில்
நடைமுறைக்
ಫ್ಲೇಕ್ಗಿ ಸೆಕ್ಟ್ಗಳಿಕೆ ೫೩°ಞ್ಞತಿಥಿ
A முதலீடு Balance
128 -سس 161 -+ 289 سم
131 - 224 - 355 حساس
522 سم 275 -- ;797 سس--
166 - 184 -4 • 350 سم.
88 - 404 a 216 سسہ
96 + 1 292 -+ 196 سے
- 61 + 190 -29 -ܛ
- 907 - 298 609 سم
- 772 -- 613 -- 159
- 50 -- 71S -- 665
மூலம் இலங்கை மத்திய வங்கியின்
ஆண்டு அறிக்கை - 1976
5 -

Page 202
இலங்கை 69 ( o ) R i 5 g
1971ஆம்ஆண்டிற்குப்பிற்பட்ட காலத் தில் ரூபா நாணயத்தை மதிப்பிறக்கம் செய்வதற்கு மறைமுகமான, ஆனல் இலகு வான ஒரு முறை பின்பற்றப்பட்டது. அதாவது சர்வதேச நாணய அமைப்பு முறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ரூபா நாணயம், பவுண் ஸ்டேர்லிங்கு டனும் அமெரிக்க டொலருடனும் மாறி மாறி இணைக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு நவம்பர் வரை ரூபா நாணயம் பவுண் ஸ்டேர்லிங்குடன் இணை க் கப்பட்டு இருந்தது. 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க டொலர் மிதக்க விடப்பட்டதும் அதன் மதிப்பு பவுண் ஸ்டேர்லிங்கிற்கு எதிராக இறங்கிற்று. இதன் காரணமாக பவுண் ஸ்டேர்லிங் குடன் இணைக்கப்பட்டு இருந்த ரூபா நாண யத்தின் மதிப்பு ஏற ஆரம்பித்தது. இந்நிலையில் 1971ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூபா நாணயம் அமெரிக்க டொலருடன் இணைக்கப்பட்டது. இதனல் ரூபா நாணயத்தின் மதிப்பு பவுண் ஸ்டேர் லிங்குக்கு எதிராகக் குறைவடைந்தது. ஆன ல் 1972 ஜூன் மா த த்தில் பவுண் ஸ்டேர்லிங் மிதக்க அனுமதிக்கப் பட்டது. இந்நிலையில் ஸ்டேர்லிங் வர்த்தக வட்டாரத்தில் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருப்பது சிரமமாக இருந்தபடியால் மீண்டும் ரூபா நாணயம் பவுண் ஸ்டேர் லிங்குடன் ஒரு பவுண் = 15-60 ரூபா என்ற வீதத்தில் இணைக்கப்பட்டு 1972 ஜூலை முதல் 1976 ஏப்ரல் வரை செயற்படுத்தப் பட்டது. பின்னர் 1976 மே 24இல் இருந்து ஸ்டேர்லிங் பவுணுடனுன இலங்கை ரூபா வின் தொடர்பைத் துண்டிக்கத் தீர்மா னித்ததுடன் மத்திய வங்கி செலாவணி வீதத்தை வெளிநாடுகளின் குறிப்பிட்ட நாணயங்களுடன் தொடர்புடையதாக நிர்ணயித்தது. இவ்வாறு அந்நியச் செலா வணிச் சந்தையில் மதிப்புக் குறையும் நாண யங்களுடன் ரூபா நாணயத்தை இணைத் துச் செல்லும் போக்கானது ரூபா நாண யத்தின் மதிப்பு ஏனைய நாணயங்களுக்கு எதிராகக் குறைவடைந்து செல்ல ஏதுவா யிற்று.
-

எச். எம். மொஹமட் இல்லியாஸ்
இலங்கை நாணயத்தின் மீள் மதிப் பிடல் வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகக் குறிப்பிடக்கூடிய ஒரு விடயம் யாதெனில் 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை நாணயம் 20%ஆல் மிகை மதிப்புச் செய்யப்பட்டதாகும். முன்னர் ஒரு அமெரிக்க டொலர் 872 ரூபாவில் இருந்து மிகை மதிப்பின் பின் ஒரு அமெ ரிக்க டொலர் 7.28 ரூபாவாகக் காணப் பட்டது. அதே போன்று ஒரு பவுண் ஸ்டேர் லிங் 1497 ரூபாவில் இருந்து மிகை மதிப் பின் பின் 12.51 ரூபாவாகக் காணப்பட் டது. அன்றைய அந்நிய செலாவணி உரிமைச் சான்றிதழ் திட்டத்தின் 65%ஐயும் சேர்த்துக் கணக்கிட்டால் மார்ச் மாத நடுப்பகுதியில் ஒரு அமெரிக்க டொலர் 12*01 ரூபாவாகவும், அதற்குமுன்னர் 14° 38 ரூபாவாகவும், முன்னர் ஒரு பவுண் ஸ்டேர்லிங் 2470 ரூபாவாக இருந்து மிகை மதிப்பின் பின் 20-65 ரூபாவாகவும் காணப் பட்டது.
இலங்கை நாணயத்தின் மதிப்பேற்றத் திற்கு அன்றைய நிதியமைச்சரினல் கூறப் பட்ட காரணம் கூடியளவு கவனத்திற் குரிய விடயமாகும். அதாவது சென் மதி நிலுவை சாதகமாக இருப்பதனுல் அதன் நற்பயனை நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டு என்பதே நாணயத்தின் மிகை மதிப்பின் அடிப்படை நோக்கம் எனக் கூறப்பட்டது. ஆணுல் உண்மையில் சென் மதி நிலுவை சாதகமாகக் காணப்பட் டதா? அது நிலைத்து நிற்கக்கூடியதா என நுணுக்கமாக நோக்குதல் அவசியமாகின் றது. 1976ஆம் ஆண்டின் மத்திய வங்கி யின் ஆண்டறிக்கை அவ்வாண்டில் மிகவும் திருப்தியான வர்த்தக நிலுவை காணப் பட்டதாகக் கூறுகின்றது. இக் கூற்றின் உண்மையை முன்னைய வருடங்களின் வர்த் தக நிலுவைகளுடன் ஒப்பிட்டு நோக்குவ தன் மூலமே உணரக்கூடியதாக இருக்கும். 1976ல் 49,450 இலட்சம் ரூபா பெறுமதி கொண்ட இறக்குமதிகளுடன் ஒப்பிடுகை
--سس۔ 76

Page 203
gesošanas ee
யில் ஏற்றுமதி வருவாய் 48,400 இலட்சம் ரூபா பெறுமதியுடையதாக இருந்தமை யைக் காட்டியதுடன் வர்த்தக நிலுவை 1050 இலட்சம் ரூபா கொண்ட குறை நிலையையும் காட்டியது. தேயிலை. தெங் குப் பொருட்களின் ஏ ற்று ம தி ய ள வில் வீழ்ச்சி காணப்பட்ட போதும் தேயிலை, இறப்பர் முதலியவற்றின் விலையில் ஏற் பட்ட அதிகரிப்பும் இறக்குமதிப் பொருட் களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் கார ணமாக அ  ைம ந் தன. இதன் கார ணமாக வர்த்தக மாற்று வீதம் (Terms of Trade} ஒரளவு திருப்தியடிைந்து காணப் பட்டது. இம் முன்னேற்றம் கடந்த வரு டங்களில் மேற்கொள்ளப்பட்ட பொரு ளாதார பன்முகப்படுத்தலினல் பெறப் பட்ட பெறுபேறுகளினலும் ஏற்பட்டது எனலாம். மூன்று முக்கிய வேளாண்மைப் பொருட்கள் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் நிலை 1975இல் மொத்த உள் நாட்டு ஏற்றுமதியில் 76%இலிருந்து 1976ஆம் ஆண்டில் 70%ஆக வீழ்ச்சியடைந்து.
1976ஆம் ஆண்டின் சென்மதி நிலு வைத் தரவுகளின் நியதிப்படி வணிகக் கணக்கு ரூபா 7090 இலட்சம் குறைநிலை யைக் காட்டியது. இக் குறை ரூ. 47,070 இலட்சம் கொண்ட ஏற்றுமதி வரவுகளை ரூபா 54,170 இலட்சம் கொண்ட இறக் குமதிக் கொடுப்பனவு விஞ்சியதினுல் ஏற் பட்டதாகும். இவ்விறக்குமதிப் பொருட்க ளுள் 5,000 இலட்சம் ரூபா கொண்ட பொருட்கள் பன்னட்டு முகவர்களிடம் இருந்தும் வெளிநாட்டு அரசாங்கங்களிடம் இருந்தும் பொருட்கள் வடிவில் குறிப்பாகக் கோதுமை 7மாவாக முழுதான நன் கொடையாகப் பெறப்பட்டது. இதனல் ஏற்றுமதி வரவுகளுக்கு மேலாகச் சொந்த மூலங்களில் இருந்து நிதியிடப்படவேண்டி இருந்த இறக்குமதிகளின் பெறுமதி ரூபா 2100 இலட்சம் மட்டுமேயாகும். வெளி நாடுகளில் தொழில்புரியும் இலங்கைக் குடி களிடம் இருந்து பெறப்பட்ட கட்புலனுகக் கொடுக்கல் வாங்கல்களினலும் உள்வந்த
ଈପ୍ସି - 23 - 1

எச். எம். மொஹமட் இல்லியாஸ்
பணவருகையாலும் ரூபா 1600 இலட்சமய பெறக்கூடியதாக இருந்தது. எனவே சென் மதி நிலுவைக் குறைநிலையை நிதியீட்டு வதற்கு மேலதிகமாகத் தேவைப்படும் தொகை ரூபா 500 இலட்சம் மட்டுமேயா கும். இவ்வாண்டில் ரூபா 9430 இலட்சம் பெறுமதிகொண்ட பண்ட, செயற்திட்ட உதவிகளும் காசுக் கடன்களும் கிடைத்த மையால் குறைநிலையை எவ்வித இடர் பாடும் இன்றி நிதியிட்டக்கூடியதாக இருந் தது. இத்தன்மையால் கடந்த காலக் கடன் பாடுகளை மீளச் செலுத்துவதற்கு இட மளித்தபின்பும் 1976இல் ரூபா 700 இலட்சம் கொண்ட தேறிய உள் வருகை பதிவுசெய்யப்பட்டது. இதனுல் சென்மதி நிலுவையின் அடிப்படை நிலுவை (Basic Balance) சென்ற ஆண்டில் ரூபா 1590 இலட்சம் கொண்ட குறைநிலைக்கு மாருக ரூபா 6650 இலட்சம் கொண்ட மிகையைக் காட்டியது.
இலங்கை நாணயத்தை மிகை மதிப்பு செய்தது பொருளாதார சித்தாந்தங்களுக்கு இயைபுடையதா ? என்ற வின பரவலாக எல்லோரிடமும் எழுப்பப்பட்டது. சென்மதி நிலுவையில்மேலதிகம் தென்பட்டதெனபது அதாவது சென்மதி நிலுவை சாதகமான மீதியைக் காட்டுகின்றது என்பது எவ்வள வில் உண்மையானது என்பது நோக்கப்பட வேண்டும் சென்மதி நிலுவையின் நடை முறைக் கணக்கானது ரூபா 500 இலட்சம் பற்ருக்குறையைக் காட்டியது. இதற்கான நிதியீட்டம் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களால் ஈடு செய்யப் பட்டது. எனவே கடன்கள் பெறுவதினுல் எமது வெளிநாட்டுச் சொத்து அதிகரிப் பதைக் கொண்டு எமது வெளிநாட்டு வர்த்தகம் திருப்தியான நிலையில் உள்ளது எனக் கூறமுடியாது. அத்துடன் தேயிலை யினதும், இறப்பரினதும் விலை ஏற்றம் நிச்சயமானது எனக் én.D(piatră எனவே ஏற்றுமதிப் பொருட்களை நிச்சய மற்ற விலையேற்றத்தையும் நடைமுறைக் கணக்கின் பாதகமான மீதியை வெளி
77 -

Page 204
mians .........
த ச ட் டு க் கட ன் க ள |ா ல் நிதி விட்டம் செய்ததையும் அடிப்படையாகக் கொண்டு நாணய மிகைப்புச் செய்வது பொருளாதார ரீதியில் ஏற்ற செயல் அன்று. சுருக்கமாகக் கூறுவதாயின் நாண யத்தை 20% மிகைமதிப்பு செய்தது பொருளியற் காரணியன்று அரசியற் காரணமே ஆகும் எனக் கூறுவது மிகை ssig.
எனவே 1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி மீண்டும் இலங்கை நாணயத்தின் மதிப்பு இறக்கம் செய்யப் பட்டது. அதாவது இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த அந்நிய செலா வணி உரிமைச் சான்றிதழ் திட்டம் அகற் றப்பட்டது. அத் துட ன் இலங்கை தாணயம் மிதக்கவிடப்பட்டு ஒரு அமெ
qqqqqSSqqSSLqALLSAAAAAALLLLLSALSLALLLL AAAAAALAAAAALLAAAAALLAAAAALALSMLSAALASSASqALSLAAqq ALASSAASAAS
மூலதனச் செலவும்
ஒரு வியாபாரத்தின் உழைக்கும் ச யப்பட்ட செலவுகள் யாவும் மூலதன கொண்டு நடாத்த ஏற்பட்ட செலவு கும் நிலையில் பராமரிக்கும் செலவு வ மாணிக்கும் முக்கிய மூன்று காரணங்க 1. செய்யப்பட்ட செலவின் அள
2. குறிப்பிட்ட செலவிற்கும் விய
3. குறிப்பிட்ட செலவு வியாபார முதலில் எவ்வளவு வீதம் என்

எச். எம். மொஹமட் இல்லியாஸ்
ரிக்க டொலர் க ரூபா 16 என்ற வரை யறைக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நாணய மதிப்பிறக்கத்திற்கு முன்பு ஒரு அமெரிக்க டொலர் = 1201 ஆக காணப் படலாயிற்று, இத்தொகை அந்நியச் செல வாணிச் சான்றிதழ் திட்டத்தின் 65%தை யும் சேர்த்ததாகும். நாணயத்தின் மிகை மதிப்பிற்கு முன்பு ஒரு அமெரிக்க டொலர் = ரூபா 14° 38 ஆகக் காணப்பட்டது. இவற்றுடன் ஒப்பிடும்போது இலங்கை ரூபா நாணயத்தின் மதிப்பு இறக்கம் செய் யப்பட்டு இருப்பது நன்கு விளங்கும். இந் நாணய மதிப்பிறக்கம் 1977 மார்ச் மாதத் தில் மேற்கொள்ளப்பட்ட மிகை மதிப் பையும் வடித்துச் செல்வதாக அமைந்தது. இவ்வகையான நாணயமதிப்பிறக்கத்திற் கான நோக்கமும் அதன் விளைவும் ஒன் றுடன் ஒன்று முரண்படுவனவாக உள்ளன.
வருமானச் செலவும்
க்தியைக் கூட்டுவிக்கும் நோக்குடன் செய் ச் செலவாகும். ஒரு வியாபாரத்தைக் அல்லது ஒரு சொத்தினைத் திறம்பட இயங் ருமானச் செலவாகும். இவற்றினைத் தீர் ள் :
ாபாரத்திற்கும் உள்ள தொடர்பு. ாத்தின் நிதியில் அல்லது தொழிற்படு
7 a.
78 -

Page 205
மனமுவந்த அன்பளிப்பு!
சிறந்த புகைப்படங்களுக்கு நாடுங்கள்
1á JLII CIII".GLr
108, ஸ்ரான்லி வீதி, u I rрti LI r5. го.
தரமான, சுவையான
O ஐஸ்கிறீம் வகைகள் 0 ஐஸ் பழம் 0 குளிர்பானங்கள் 0 ஜஸ்சொக்
0 சிற்றுண்டி வகைகள் த ஐஸ்ஜொலி
ஸ்பெஷல் O சொக்லெட் கிறிப்ஸ் O ஸ்ரோபநி கிறீம் O ungt fl-T மற்றும் களியாட்டங்களுக்குத் தேவையானவற்றைக் குறித்தநேரத்திற் பெற்றுக்கொள்ள
ராஜா கிறீம் ஹவுஸ் (நவீன ஐஸ்கிறீம் தாபனம்) 36, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்

The best wishes
Leading Emporium for Quality Fancy Goods
女
FANCY HOUSE
68, GRAND BAZAAR, SAFFNA.
Donated By
W
IMPORTERS & DISTRIBUTERS OF
MOTOR SPARES MOTOR CYCLE SPARES TRACTOR SPARES
& ELECTRICAL GOODS
R. Kanapathipilai & Co
12/2, Stanley Road, JAFFNA

Page 206
அன்பளிப்பு எங்களிடம் சகலவிதமான அழகுசாதன்ப் பொருட்கள் கோல்ட்கவரிங் நகைகள் றில் நூல்கள் O றேந்தைகள் பட்டன்கள் எலாஸ்ரிக் வகைகள் நைலோன் நூல்கள் வூல் நூல்கள் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் சாய்ப்புச்சாமான்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள O அம்பிகாபதி ரெக்ஸ்ரைல்ஸ் 66, பெரியதடை : யாழ்ப்பாணம் Gurer 7437
வித்தியோதயம் சிறப்புடன் மலர எமது வாழ்த்துக்கள்
வேல் மோட்டோர் ஸ்றோர்ஸ் 221, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
 

· 1,2091099)
608 :ựno(aegist)
(sibiplefter(s) qqssorolfo “sofo· IIgsg) ora rcc{2391099)
sąsūnaszysłegson i spory@ņure
i usoņ@uns
·lgo-ng Dunto ŋıcɛrugogo@Tuo qimq9oC9gầrilo e ug유나(白urmo日子「나田 ● 七宮中니府Duno 널nuar%영 ●199니ngDurmo ņģe@ạ@ • Ipseștere reco-lÇI • Igo-s@unto rifosos • 41,6 ugoros)
? sięgęs@@fillsts sąjį Ilgileo01 IĜquo @@@@rms Irmg)?$59 qÉ009.J.

Page 207
- வணிகவியல் -
ஏற்றுமதி இறக்குமதியில் வர்த்தக மாற்று வீதத்தின்
து. சந்திரகுமார்
வர்த்தகவியல் (சிறப்பு) இரண்டாம் வருடம்

தாக்கம்
கைத்தொழில் புரட்சியைத் தொ டர்ந்தே வெளிநாட்டு வியாபாரம் வளர்ச்சி யடைந்தது. இன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு மனிதனே அல்லது ஒரு நாடோ தனக் குத் தேவையான பொருட்களைத் தனித்து நின்று உற்பத்திசெய்ய முடியாது. எனவே இந் நிலையில் ஒரு நாடு ஏனைய நாடுகளு டன் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கை களை மேற்கொள்கின்றன. இவ் வர்த்தக மானது எவ்வாறு அமைகின்றது என்பதை ஒவ்வொரு நாடுகளும் வர்த்தகமாற்றுவீதம் மூலம் கண்டுகொள்கின்றன. அதாவது ஒரு நாடு தாம் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வரு மானத்தைக் கொண்டே இறக்குமதி செய்ய வேண்டிஇருக்கும். எனவே இறக்குமதி செய் யக் கூடிய பொருட்கள் சேவைகளது அளவு ஏற்றுமதிமூலம் கிடைக்கும் வருமானத்தில் தங்கியுள்ளது. இதனுல் இறக்குமதி செய்யும் சக்தி ஏற்றுமதிச் சக்தியில் தங்கியுள்ளது. இத்தகைய ஏற்றுமதி இறக்குமதிச் சக்தி களுக்கு இடையே உள்ள தொடர்பை இவ்வர்த்தகமாற்றுவீதம் எடுத்துக் காட்டு கின்றது. இவற்றை வேறுவிதமாகக்கூறின் ஏற்றுமதி செய்கின்ற அலகு (Unit) ஒன் றைக் கொண்டு எத்தனை அலகுகளை இறக்கு மதி செய்யலாம் என்பதைக் காட்டுவதே வர்த்தக மாற்று வீதம் எனப்படும். இத் தகைய வர்த்தக மாற்று வீதத்தை ஒரு நாட்டு அரசாங்கம் அல்லது அதன் பிரதி நிதியான மத்திய வங்கி வருடா வருடம் கணிப்பிடுகின்றது.
வர்த்தக மாற்று வீதத்தை பொது வாக 3 வகையாகப் பிரிக்கலாம். அவை
escars
8 -

Page 208
UjJplunge .........
(1) பண்ட வர்த்தக மாற்றுவீதம். (Barter terms of Trade) (2) வருமான வர்த்தக மாற்றுவீதம்.
(Income Terms of Irade) (3) தனிக் காரணி வர்த்தக மாற்று
வீதம். (Single factoral Terms of Trade) இவற்றில் பெரும்பாலான நாடுகள் பண்ட வர்த்தக மாற்று வீதத்தையே அதி களவில் பயன்படுத்துகின்றன. வர்த்தக மாற்றுவீதத்தைக் கணிப்பிடுவதற்கு முத லில் ஏற்றுமதி விலைச் சுட்டெண்ணையும், இறக்குமதி விலைச் சுட்டெண்ணையும் கணிக்க வேண்டும், ஏற்றுமதி இறக்குமதி விலைச் சுட்டெண்ணைப்பின்வருமாறு கணிக்க லாம் :
ஏற்றுமதி விலைச் சுட்டெண்:
நடைமுறை ஆண்டு ஏற்றுமதிப் பொருட்களின் சராசரி விலை
X 100 அடிப்படை ஆண்டு ஏற்றுமதிப் பொருட்களின் சராசரி விலை
இறக்குமதி விலைச்சுட்டெண் :
நடைமுறை ஆண்டு இறக்குமதிப் பொருட்களின் சராசரி விலை
-- X 10 () அடிப்படை ஆண்டு இறக்குமதிப் பொருட்களின் சராசரி விலை நடைமுறை ஆண் டென்பது வர்த்தக மாற்றுவீதத்தைக் கணிக் க இருக்கும் ஆண்டையே குறிக்கும். இந் நடைமுறை ஆண்டின் நிலையை ஓர் நிலையான ஆண்டு டன் ஒப்பிட்டே கணிக்கவேண்டும். இந் p53 unt 607 gait Gol-Gu ( Base Year) sylgly படை ஆண்டு என்கிருேம். (இலங்கையில் 1967ஆம் ஆண்டு அடிப்படை ஆண்டாகக் கணிக்கப்படுகிறது) ஏற்றுமதி விலைச் சுட் டெண்ணை இறக்குமதி விலைச் சுட்டெண் ணுல் பிரித்து வீதத்தில் கணிப்பதே வர்த் தக மாற்று வீதமாகும்.
வர்த்தக மாற்று வீதம் !
ஏற்றுமதி விலைச் சுட்டெண்
X 100 இறக்குமதி விலைச் சுட்டெண்

து. சந்திரகுமார்
ஒரு நாட்டின் வர்த்தக மாற்று வீதம் சாதகமாகவோ பாதகமாகவோ காணப் படலாம். அதாவது ஏற்றுமதிச் சக்தி இறக்குமதிச் சக்தியிலும் கூடிக் காணப் பட்டால் சாதகமாகவும், ஏற்றுமதிச் சக்தி இறக்குமதிச் சக்தியிலும் குறைந்து காணப் பட்டால் பாதகமாகவும் இருக்கும். அதா வது வர்த்தக மாற்றுவீதக் குறிகாட்டி நூற்றுக்கு மேலாக இருக்குமாயின் அது ஏற்றுமதிச் சக்தி கூடுதலாக இருப்பதை யும், இறக்குமதி சக்தி குறைவாக இருப் பதையும் குறிக்கும். வர்த்தக மாற்றுவீதக் குறிகாட்டி நூற்றுக்குக் குறைவாக இருக்கு மாயின் ஏற்றுமதிச் சக்தி குறைவாக இருப்பதையும் இறக்குமதிச் சக்தி கூடுத லாக இருப்பதையும் காட்டுகின்றது. இத் தகைய வர்த்தக மாற்று வீதத்தின் பயன் பாட்டினை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.
(i) ஒரு நாடு குறிப்பிட்ட ஏற்றுமதி யைக் கொண்டு எவ்வளவு இறக்கு மதி செய்யலாம்.
(ii) குறிப்பிட்ட அளவு இறக்குமதியை மேற்கொள்ள எவ்வளவு பொருட் களையும் சேவைகளையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே அறியலாம்.
வர்த்தக மாற்று வீதத்தில் மாற்றம் ஏற்படுவதற்குக் காரணம் ஏற்றுமதி வில் களின் போக்கும் இறக்குமதி விலைகளின் போக்குமாகும். ஏற்றுமதி விலைகள் மாரு மல் இறக்குமதி விலைகள் அதிகரித்தால் அல்லது இறக்குமதி விலைகள் மாருமல் ஏற்றுமதி விலைகள் குறைந்தால் பாதக மான வர்த்தக மாற்றுவீதத்திை ஏற்படுத் தும். இறக்குமதி விலைகள் மாருமல் ஏற்று மதி விலைகள் கூடினுல் அல்லது ஏற்றுமதி விலைகள் மாழுமல் இறக்குமதி விலைகள் குறைந்தால் சாதகமான வர்த்தக மாற்று வீதத்தை ஏற்படுத்தும். இத்தகைய மாற்று வீதம் வர்த்தக மாற்று வீதத்தை எவ் தாறு பாதிக்கும் என்பது இறக்குமதி ஏற்று மதிகளுக்கான கேள்வி நெகிழ்ச்சியைப் பொறுத்து இருக்கும்.
82 -

Page 209
ஏற்றுமதி ..
இறக்குமதிப் பொருட்களை நோக்கு வோமானுல் இறக்குமதிப் பொருட்களின் விலை கூடும்போது கேள்வி நெகிழ்ச்சி பூச்சியமாயின் முன்பு இறக்குமதி செய்த அதே அளவு பொருட்களை இறக்குமதி செய்யவேண்டியதால் மொத்தஇறக்குமதிச் செலவு கூடும். இதனல் வர்த்தக மாற்று வீதம் பாதகமான நிலையை அடையும். கேள்வி நெகிழ்ச்சி ஒன்முனல் மொத்த விலையில் ஏற்படும் மாற்றமும் மொத்த இறக்குமதியில் ஏற்படும் மாற்றமும் ஒரே அளவாக இருப்பதால் மொத்தச் செலவில் மாற்றம் ஏற்படாது. எனவே வர்த்தக மாற்றுவீதத்தில் மாற்றத்தை ஏற்படுத் தாது. நெகிழ்ச்சி ஒன்றுக்கு மேலாணுல் விலை வீத அதிகரிப்பு வீதத்திலும் பார்க்க இறக்குமதி அளவு கூடியவீதத்தால் வீழ்ச்சி யடைவதால், முன்னைய இறக்குமதி செல விலும் பார்க்கத் தற்போது செலவு குறை வதால் வர்த்தக மாற்றுவீதம் சாதகமான நிலையை ஏற்படுத்தும். நெகிழ்ச்சி ஒன் றுக்குக் குறைவானுல் விலை வீத அதிகரிப்பி லும் பார்க்க இறக்குமதி குறைந்த அளவு வீழ்ச்சி அடைவதாலும், முன்னரிலும் பார்க்கக் கூடிய தொகை செலவு செய்ய வேண்டி யிருப்பதாலும் வர்த்தக மாற்று வீதம் பாதகமான நிலையை ஏற்படுத்தும்.
இறக்குமதிப் பொருட்களின் விலை குறையும்போது கேள்வி நெகிழ்ச்சி பூச்சி மானல், இறக்குமதித் தொகையில் மாற் றம் ஏற்படாததால் மொத்தச் செலவு குறைவடைந்து வர்த்தக மாற்று வீதத்தில் சாதகமான விலையை ஏற்படுத்தும். கேள்வி நெகிழ்ச்சி ஒன்ருயின் விலையில் ஏற்படும் மாற்றமும் இறக்குமதித் தொகையில் ஏற் படும் மாற்றமும் ஒரே அளவாக இருப் பதால் மொத்தச் செலவில் மாற்றம் ஏற் படாது. எனவே வர்த்தக மாற்று வீதத் தில் மாற்றத்தை ஏற்படுத்தாது. கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்குக் கூடுதலானல் விலை யில் ஏற்படும் சிறு வீழ்ச்சி வீதத்திலும் பார்க்க, இறக்குமதித் தொகை கூடிய வீதத்தால் அதிகரித்து இறக்குமதி மொத்
- 8:

து. சந்திரகுமார்
தச் செலவு முன்னரிலும் பார்க்க அதிகரிப் பதால் வர்த்தக மாற்று வீதம் பாதகமான நிலையை ஏற்படுத்தும். கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்குக் குறைவாயின் விலை வீழ்ச்சி வீதத்திலும் பார்க்க, இறக்குமதித் தொகை அதிகரிப்பு வீதமானது சிறிதள வாகக் காணப்பட்டு, இறக்குமதி மொத் தச் செலவு குறைவடைவதால் வர்த்தக மாற்று வீதம் சாதகமான நிலையை ஏற் படுத்தும்.
ஏற்றுமதிப் பொருட்களின் விலை கூடும் போது கேள்வி நெகிழ்ச்சி பூச்சியமானல், ஏற்றுமதித் தொகையில் மாற்றம் ஏற் படாது. எனவே மொத்த வருமானம் அதிகரித்து வர்த்தக மாற்று வீதத்தில் சாதகமான நிலையை ஏற்படுத்தும். கேள்வி நெகிழ்ச்சி ஒன்ருயின் விலையில் ஏற்படும் மாற்றமும் ஏற்றுமதித் தொகையில் ஏற் படும் மாற்றமும் ஒரே அளவாக இருப் பதால் மொத்த வருமானத்தில் மாற்றம் ஏற்படாது. எனவே வர்த்தக மாற்று வீதமும் மாற்றம் அடையாது. கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்குக் கூடவாயின் விலை வீத அதிகரிப்பிலும் பார்க்க, ஏற்றுமதித் தொகை கூடிய வீதத்தில் வீழ்ச்சியடை வதால் முன்னர் ஏற்றுமதி செய்த பொருட் களிலும் பார்க்கக் குறைவான தொகையே ஏற்றுமதி செய்யப்படும். இதனுல் மொத்த வருமானம் குறையும். எனவே வர்த்தக மாற்று வீதத்தில் பாதகமான நிலையை ஏற்படுத்தும், கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்கு குறைவாயின் விலை வீத அதிகரிப்பிலும் பார்க்க, குறைந்த வீதமே ஏற்றுமதித் தொகை வீழ்ச்சியடைவதால் முன்னர் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானத்தி லும் பார்க்க, கூடிய வருமானம் கிடைப் பதால் வர்த்தக மாற்று வீதம் சாதகமான நிலையை ஏற்படுத்தும்.
ஏற்றுமதிப் பொருட்களின் விலை குறை யும் போது கேள்வி நெகிழ்ச்சி பூச்சியமா ஞல், ஏற்றுமதித் தொகையில் மாற்றம் ஏற்படாது. ஆனல் மொத்த வருமானம்
-

Page 210
sJjaJpneĝ ... ... ...
குறைவதால் வர்த்தக மாற்று வீதத்தில் பாதகமான நிலையை ஏற்படுத்தும், கேள்வி தெகிழ்ச்சி ஒன்ருயின் விலையில் ஏற்படும் மாற்றமும் ஏற்றுமதித் தொகையில் ஏற் படும் மாற்றமும் ஒரே அளவாக இருப்ப தால் மொத்த வருமானத்தில்மாற்றத்தை ஏற்படுத்தாது. எனவே வர்த்தக மாற்று வீதமும் மாற்றம் அடையாது. கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்குக் கூடுதலாயின் விலை வீழ்ச்சியில் ஏற்படும் மாற்றத்திலும் பார்க்க கூடிய வீதத்தில் ஏற்றுமதித் தொகை அதி கரிப்பதால் மொத்த வருமானம் அதிகரிக் கும். எனவே வர்த்தக மாற்றுவீதம் சாதக மான நிலையை ஏற்படுத்தும். கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்குக் குறைவாயின் விலை வீழ்ச்சி வீதத்திலும் பார்க்க, குறைந்த வீதத்தில் ஏற்றுமதித் தொகை கூடுவதால் முன்னர் கிடைத்த வருமானத்திலும் பார்க்க, தற்போது மொத்த வருமானம் குறைவதால் வர்த்தக மாற்று வீதத்தில் பாதகமான நிலையை ஏற்படுத்தும்.
இத்தகைய வர்த்தக மாற்று வீதத்தை ஆதாரமாகக் கொண்டு பழம் பொருளியல் அறிஞர்கள் சர்வதேச வியாபாரத்தைப் பொறுத்த வரையில் மூன்று பிரதான விடை யங்களுக்கு விடைகாண முயன்றனர்
(1) ஓர் குறிப்பிட்ட நாடு ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் போது எப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் எப்பொருட்களை இறக்குமதி செய்யும்.
(ii பொருட்களை ஏற்றுமதி இறக்கு மதி செய்யும்போது அவை என்னென்ன விலைகளில் அதாவது என்ன மாற்று விகி தங்களில் மாற்றப்படுகிறது.
(i) வர்த்தகத் தொடர்புகளிலே மாற்றங்கள் ஏற்பட்டு வர்த்தகச் சமநிலை பாதிக்கப்பட்டு மீண்டும் சமநிலை ஏற்படுத் தப் படும்போது என்ன நடைபெறுகிறது? அத்துடன் இரண்டாம் உலக யுத்தத்தின் பின் வர்த்தக மாற்று வீதத்தின் முக்கியத் துவத்தை பல கோணங்களில் இருந்து ஆராய்ந்தார்கள்
-

து. சந்திரகுமார்
(i) வெளிநாட்டு வர்த்தகத்தின்பங்கு அதி உயர்வாக இருக்கும் நாடுகளின் வர்த் தக மாற்று வீதத்தின் முக்கியத்துவம்,
ti) வர்த்தக மாற்றுவீதத்தில் ஏற் படும் மாற்றங்கள் நாடுகளுடைய வரு மானப் பங்கீட்டைப் பாதிக்கிறது. எனவே நாடுகளிடையே காணப்படும் வருமான வேறுபாடுகளுக்கு வர்த்தக மாற்றுவீதம் எவ்வளவு காரணமாயுள்ளது?
(ii) குறைவிருத்தி நா டு க ளின் குறைந்த வருமான மட்டத்திற்கு வர்த்தக மாற்று வீதங்கள் எவ்வளவு தூரம் காரண மாய் இருக்கலாம் என்னும் விடயங்கள் ஆராயப்பட்டன.
இலங்கையின் வர் த் த க மாற்று வீதத்தை நோக்குவோமானுல் :
1967 s 100
ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக ஆண்டு வின்ே வின்ே மம்
1959 22 83 148 1960 22 83 48 1961 12 82 136 1962 109 77 142 1963 109 85 129 1964 105 105 1965 13 100 12 1966 07 98 109 1967 100 00 00 1968 7 26 93 969 17 134 88 1970 18 140 84 197 17 50 78 1972 18 58 75 1973 137 209 65 1974 213 370 58 1975 99 433 46 1976 239 383 62
மூலம்: இலங்கை மத்திய வங்கி மீளாய்வு
இலங்கையின் வர் த் த க மாற்று
வீதத்தை 1968ஆம் ஆண்டு தொடக்கம்
நோக்கினல், தொடர்ச்சியாகப்பாதகமான
34 -

Page 211
ஏற்றுமதி .
நிலையில் செல்கின்றது. 1967ஆம் ஆண்டு சாதகமோ, பாதகமோ அற்ற ஒரு சமநிலை யாகக் காணப்படுகின்றது. இதனல், இவ்வாண்டு அடிப்படை ஆண்டாகக் கொள்ளப்படுகின்றது. 1966ஆம் ஆண் டுக்கு முன்னர் வர்த்தக மாற்றுவீதம் சாதகமான நிலையில் இருந்தது. வர்த்தக மாற்று வீதத்தை ஆதாரமாகக் கொண்டு எவ்வளவு அலகுகளை இறக்குமதி செய்ய லாம் எனக் கணிப்பிடலாம். அதாவது 1967ஆம் ஆண்டுக்கு முன்பு 100 அலகுகளை ஏற்றுமதி செய்து 100க்கு மேற்பட்ட அலகுகளை இறக்குமதி செய்யமுடியும். 1962ஆம் ஆண்டில் 100 அலகுகளை ஏற்று மதி செய்து 142 அலகுகளை இறக்குமதி செய்ய முடியும். ஆனல் 1967ஆம் ஆண் டுக்குப் பின்பு 100 அலகுகளை ஏற்றுமதி செய்தால் 100க்குக் குறைந்த அலகையே இறக்குமதி செய்ய முடியும். 1976 ஆம் ஆண்டு 100 அலகுகளை இறக்குமதி செய்ய வேண்டுமானுல்
38
x 100-61 3 + 100 s 1613
அலகுகளை ஏற்றுமதி செய்யவேண்டும்.
இலங்கை அரசாங்கம் வர்த்தகத்தைப் பன்முகப் படுத்திய போதும் அது வர்த் தக மாற்று வீதத்தில் சாதகமான நிலையை ஏற்படுத்த வில்லை. இறக்குமதிப் பொருட் களின் விலைகள் மாரு விகிதத்தில் ஏறிக் கொண்டே போக, அதே வேளையில் ஏற்றுமதிப் பொருட்களின் விலைகள் சரிந்து கொண்டே போயின 1960-1970ஆம் ஆண்டுக்கிடையில் எல்லா ஏற்றுமதிப் பொருட்களினதும் விலைச் சுட்டெண்கள் 30 சத வீதத்தால் வீழ்ச்சியுற்ற அதே வேளையில் இறக்குமதிப் பொருட்களின் விலைச்சுட்டெண் 687 சத வீதத்தால் அதிகரித்தது. எனவே மேற்படி பத் தாண்டுகளில் எமது வர்த்தக மாற்று விகிதம் 433 சத வீ த த் தால் வீழ்ச் சியுற்றது. இது இலங்கையின் கொள் வனவுப் பலம் வீழ்ச்சியுற்றமையை எடுத் துக் காட்டுகிறது. இந் நிலைமை 1970க்கும்
வி - 24 - 18

து. சந்திரகுமார்
1975க்கு மிடையில் தொடர்ந்து நிலவி யது. எனவே எல்லா ஏற்றுமதி விலைச் சுட்டெண்களும் 80°5 சத வீதத்தால் இறங்க, இறக்குமதி விலைச் சுட்டெண் 31 சத வீதத்தால் அதிகரித்தது. எனவே 1960ஐ அடிப்படை வருடமாகக் கொண்ட ஒரு கணிப்பில் 1975இல் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தின் கொள்வனவுப் பலம் 61 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது.
இலங்கையின் வர்த்தகமாற்றுவீதத்தை 1971ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பிற்பட்ட காலப் பகுதி என இரு பிரிவாக ஆராய லாம். முற்பட்ட பகுதியை நோக்கினுல் ஏற்றுமதிப் பொருட்களின் விலையில் பெரு மளவு மாற்றம் ஏற்படவில்லை. அதாவது சிறிதளவு வீழ்ச்சி தொடர்ந்து ஏற்பட்டுள் ளது. இறக்குமதிப் பொருட்களை நோக்கு வோமானுல் விலை அதிகாப்பு வீதம் படிப் படியாக அதிகரித்து வருகின்றது. இதனுல் வர்த்தக மாற்று வீதம் சாதகமான நிலை யில் இருந்து பாதகமான நிலையை ஏற் படுத்தியுள்ளது. 1971ஆம் ஆண்டுக்கு முற் பட்ட காலப் பகுதியில் ஏற்றுமதிப்பொருட் களின் விலையும், இறக்குமதிப் பொருட் களின் விலையும் முன்னைய ஆண்டைவிடக் கூடிய வீதத்தில் அதிகரித்து உள்ளது. ஆனல் ஏற்றுமதிப் பொருட்களின் விலை உயர்வை விட இறக்குமதிப் பொருட்களின் விலை கூடிய வீதத்தில் அதிகரித்தமையால் வர்த்தக மாற்று வீதம் தொடர்ந்தும் பாதகமான நிலையில் உள்ளது. 1971ஆம் ஆண்டுக்கு முன்னா ஏற்றுமதிப் பொருட் களின் விலைகள் அதிகரிக்காமைக்கு காரணம் முக்கிய ஏற்றுமதியாக தேயிலை, இறப் பர், தெங்குப் பொருட்கள் இருந்தமை யாகும். இவற்றின் விலை நீண்ட காலமாக உயர்ச்சி இனறி இருந்து வந்துள்ளன. மொத்த ஏற்றுமதியில 90% மான இப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்க ளாக இல்லாமையும், பிரதியீட்டுப் பொருட்கள் கூடியளவு இருந்தமையும், புதிய நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடு பட்டமையும், உலகச் சந்தையில் மேலதிக
35 -

Page 212
ஏற்றுமதி . .
மாகத் தேயிலை வந்தமையும் இதற்குக் கார ணமாகும்.இறப்பருக்குப்பதிலாகசெயற்கை இறப்பர் உற்பத்தி செய்யப்பட்டமையும், தெங்குப் பொருட்களுக்குப் பதிலாகக் கடலை பயன்படுத்தப்பட்ட மையும் இதன் விலையை உயர்த்த முடியாமைக்கு மேலும் காரணமாக அமைந்தன. இறக்குமதிப் பொருட்களைப் பொறுத்த வரையில், அவை அத்தியாவசிய உணவுப் பொருட்களாக இருப்பதாலும், உலக சந்தையில் குறை வாக பொருட்கள் வருவதாலும், அதன் விலை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. 1971ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியை நோக்குவோமானுல் ஏற்றுமதிப் பொருட்களின் வருவாய் அதிகரித்தமைக்கு முக்கிய காரணம் பாரம்பரியமற்ற ஏற்று மதியாகும். இவற்றில் இரத்தினக்கல் முக் கிய இடத்தைப் பெறுகின்றது. இறக்கு
கிறுக்கப்பட்ட WEGHTED AV
கணக்கில் தரப்பட்டுள்ள இலாபங் யால் பெருக்கிவரும் தொகையின் கூட பிரித்து வரும் சராசரியை வேண்டிய கொள்வனவு எத்தனை வருடம் என கொள்வனவாகவே கணிக்கப்பட வே மதிப்புக் கணிப்பதற்கே பயன்படுத்த
wr.

து. சந்திரகுமார்
மதிகளைப்பொறுத்தமட்டில் விலைதொடர்து கூடிய வீதத்தில் அதிகரிக்கின்றது. உலகச் சந்தையில் எரி பொருட்களின் விலை அதிக ரித்தமை இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. எனவே வர்த்தக மாற்று வீதம் பாதகமான நிலையை தொடர்ந்தும் அடைகின்றது.
இலங்கை ஒரு விவசாய நாடாக இருந் தும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தலும், கைத் தொழில் அபிவிருத்தி யடையாமையும் முக்கிய பிரச்சினையாகும். எனவே வர்த்தக மாற்றுவீதத்தை சாதக மாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமானல் உணவுப் பொருட்களில் தன் நிறைவை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கைத் தொழிலையும் அ பி விரு த் தி செய்ய வேண்டும்.
சராசரி முறை ERAGE METHOD
களை அவற்றிற்கெனத் தரப்பட்ட நிறை ட்டுத் தொகையை மொத்த நிறைகளால் கொள்வனவால் பெருக்க வேண்டும்.
த் தரப்படாவிட்டால் இரண்டு வருடக் ண்டும். இம்முறை பெரும்பாலும் நன் ப்படுகிறது.
میحی ہسےیہصحصحیہ مہی۔
186 -

Page 213
With the Best
fron
W தலைமை அலுவலகம் : கல்வி போத
34, பலாலி வீதி
$26T : Ο
Loganathan 166/4 , ஆஸ்பத்திரி வீதி
V G. C. E. (OIL - AII
G. A. Q. First in Cor
ത്ത് ;-
I. A. A., I. A. B., Chartered Accountan
- கிழ
6- سسسسس
SPOKEN ENGLIS)
- 1

Compliments
(D நிலையம்
யாழ்ப்பாணம்
Institute
யாழ்ப்பாணம்
) :- கால மாலை முழுநேர
வகுப்புகள்
herCel
னி, ஞாயிறு மாத்திரம்.
L. C. M. A.
icу மை நாட்களில் மாலை, ரி, ஞாயிறு தினங்களும்
H:
ல வகுப்புகள்.

Page 214
Space Donated
by
Ameer Tex
JAFFNA.
Space Donated
by
Thirugnanas & Company
Certified Accountants, (Lond.)
Dr. V. Thirugnanasambanthar B.Com. M. Com, Ph.D., A. C, i. S., A. M. B. l. M., A. C. C. A., D.Com., Final l. C. M. A., Certified Accountant (Londoi).
14, C. Ponnampalam Road,
JAFFNA.
 

அன்பளிப்பு !
அழகான புகைப்படங்களை
சிறந்த முறையிலும் குறைந்த செலவிலும் எடுத்து வழங்குபவர்கள்
|
கஜேந்திரா ஸ்ருடியோ 40, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
نخستش
Donated by
M. Nagaratnam & Co Dealers in Electrical Goods,
62, Stanley Road,
JAFFNA,

Page 215
- பொருளியல்
பொருளியலில் சில விளக் சில முக்கிய பிரச்சினைகளு
ந. கலைச்செல்வன் வர்த்தகவியல் (சிறப்பு இரண்டாம் வருடம்
- 18

கங்களும்
lò
பொருளியல் என்ருல் என்ன என்பதற் கான வரைவிலக்கணத்துடன் ஆரம்பிப்ப தாயின் அது பொருத்தமற்றதாகவே காணப்படும். ஏனெனில் அன்றில் இருந்து இன்றுவரையும் யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டவட்டமான பரி பூரணமான வரைவிலக்கணத்தை எவரும் வழங்கவில்லை. அத்துடன் தற்காலத்தைப் பொறுத்தவரையில் பொருளியல் என் முல் என்ன என பொருளியலாளர்களால் வரைவிலக்கணம் செய்யப்படும் முயற்சி யானதும் மேற்கொள்ளப்படுவதில்லை. காரணம், தற்காலத்தைப் பொறுத்தவரை யில் பொருளியல் என்ருல் என்ன என்ப தற்கு வரைவிலக்கணம் செய்யும் முயற்சி யிலும் பார்க்க தனிப்பட்ட மனிதர்களோ, அன்றி பல்வேறுபட்ட சமூகங்களோ, சமு தாய அமைப்புக்களோ இன்னுேரன்ன பல் வகையான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் நிர ந் தர மா ன வரைவிலக்கணத்தை அமைக்க வேண்டிய பாரிய பொறுப்பும், கடமைப்பாடும் காணப்படுகின்றது. அத் துடன் பல சிறந்த பொருளியல் அறிஞர் கள் தாம் வாழ்ந்த வெவ்வேறு காலத்துக் கேற்ப அக்கால பொருளாதார நிலைகளை அடிப்படையாகக் கொண்டு வேறுபட்ட விளக்கங்களை வழங்கியுள்ளார்கள். இவ் வாருக பல்வேறு விளக்கங்களையும், கருத்து வேற்றுமைகளையும் வழங்கியபோதும், ஒரு பரிபூரணமான விளக்கத்துக்கு வெற்றி காணவில்லை. எனவே பொருளியல் பற்றிப் பரிபூரணமான வரைவிலக்கணம் ஒன்றை நிரந்தரமானதாகக் கூற முடியாதமைக்குப் பல காரணங்களைக் காட்டியபோதும், முக்கியமான காரணங்களில் ஒன்று என்ன வெனில் பொருளியலானது ஒன்ருேடு
9 -

Page 216
பொருளியலில் .
ஒன்று இணைக்கப்படாத ஒரு தனி நட வடிக்கை அல்ல. இது நாளாந்த மனித நடவடிக்கைகள், மனித நடத்தைகள், இயற்கை யமைப்புக்கள் போன்றவற்றுடன் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதொன்ருகும். இவ்வகையில் மிகப் பாரிய அடிப்படையில் அல்லது மிகவும் குறுகிய அடிப்படையில் கொடுக்கப் பட்ட வரைவிலக்கணத்தைப் பின்வரும் முறையில் விளக்குவது பொருத்தமான தொன்ருகும்.
பொருளியல் பற்றி விளக்கப்பட்ட வரைவிலக்கணங்கள் அதன் வரலாறு ரீதி யாக ஆராயும்போது மூன்று பிரதான அம் சங்களுக்குப் புகழிடம் கொடுக்கப்பட்டுள் ளது குறிப்பிடத் தகுந்ததே. இவ்வகையில் மிகவும் ஆரம்பகால பொருளியல் விளக் கங்கள்,கருத்துக்களைப் பொறுத்தவரையில் செல்வத்தைப் பிரதான அம்சமாகக் கொண் டும், அடுத்து 18ஆம் நூற்றண்டின் இறுதிக் காலகட்டத்திலும், அதனைத் தொடர்ந்து 19ஆம் நூற்ருண்டுப் பகுதிகளிலும் வழங் கப்பட்ட பொருளியல் கருத்துக்கள் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டும், இறுதியாக விளக்கப்பட்ட பொருளியல் விளக்கங்கள் அருமையை அடிப்படை அம்ச மாகக் கொண்டும் விளக்கப்பட்டு, அக்கால கட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தாகக் காணப்பட்டுள்ளது,
இவ்வகைப்பட்ட விளக் க ங் களை க் கூர்ந்து நோக்குவோமாயின், 18 ஆம் நூற் முண்டின், ஆரம்ப காலகட்டத்தில் வாழ்ந்த வரும், பொருளியல் தந்தையென அழைக் கப்படுபவருமான "அடம் சிமித்" (Adam Smith) என்ற பொருளியல் அறிஞர் எழு திய தேசங்களின் செல்வம்" (Wealth of Nations) என்ற நூலில் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கியுள் ளார். அதாவது, **பொருளியல் என்பது செல்வத்தின் தன்மை, அதற்கான கார ணங்கள் பற்றிய ஓர் ஆய்வாகும்' என விளக்கம் கொடுத்துள்ளார். இவரது வரை

ந. கலைச்செல்வன்
விலக்கணத்தைத் தொடர்ந்து வந்த மற்று மோர் பழம் பொருளியலாளராகக் கருதப் படும் ஜே. எஸ். மில் (J. S. Mil) என்ப வர் "பொருளியலானது செல்வத்தின் ஆக்கத்தையும், அதனது விநியோகத்தை யும் பற்றிய ஓர் நடைமுறை விஞ்ஞா னமே யாகுமென' - வரைவிலக்கணம் வகுத்துள்ளார். செல்வம் பற்றிய வரை விலக்கணத்தில் இருந்து பொருளியல் என் பதற்கான வரைவிலக்கணத்தை அறிந்து விட முடியாது. காரணம் செல்வம் என்று கூறும்போது அது பொருட்களை மட்டும் கருதுகின்ற தே தவிர, G39 606) 60 ulü பற்றிக் கவனிக்கவில்லை. அதுமட்டுமன்றி செல்வத்தின் ஆக்கத்தையும், அதனது விநியோ க த்தை யும் பற்றிக் கூறுகின் றதே தவிர அதை அனுபவிக்கும் மனி தனின் நடத்தைகளைப் பற்றியும் கூற வில்லை. மேலும் "டிவன் போட் (Deven port) என்ற பொருளியலறிஞர் * விலையின் அடிப்படையிலே விளக்கங்கள் அளிக்கும் விஞ்ஞானமே பொருளியலாகும்" - என விளக்கம் செய்தார். இங்கு விளக்கப்பட்ட அத்தனை விளக்கமும், பணம் -செல்வம் என்னும் பெறுமதிகளுக்கு மாத்திரம் முக் கியத்துவம் கொடுக்கப்பட்டு, விளக்கப் பட்டுள்ளது. எனவே பொருளியல் பற்றி அறியும் ஆரம்பக் கோட்பாட்டுக் காலப் பகுதிகளில் வாழ்ந்த பொருளியலறிஞர் கள் யாவரும் செல்வம் பற்றிய நிலையில் இருந்தே பொருளியல் என்பதற்கு விளக் கம் அளித்துள்ளனர். எனவேதான் இவ் வறிஞர்களால் பொருளியல் பற்றி வகுக் கப்பட்டு, விளக்கப்பட்ட வரைவிலக்கணங் கள் பூரணத்துவமான வரைவிலக்கண மாக அமையாது. பொருளியலின் ஒரு பக்கம் சார்ந்த வரைவிலக்கணமாக அமை யக் காரணமாயிற்று.
இதன் பின்னணியில் தோன்றிய பொருளியல் அறிஞர்கள் பொருளியல் எள் பதற்கான விளக்கங்களை, சமூக நலனை அடிப்படையாகக் கொண்டு வகுத்துள் ளார்கள். சிறப்பாக நோக்குமிடத்து பொரு
190 -

Page 217
பொருளியலில் . .
ளியலறிஞரான "" அல்பிரட் மார்ஷல் ' (Alfred Marshalli Grsät Lairm á GIssTGIá கப்பட்ட விளக்கமான மனித வாழ்க்கை யும், அதனது சாதாரண பிரச்சனைகளை யும் தீர்வுகாணும் என்ற மு  ைற யில் அமைந்த விளக்கத்தைக் குறிப்பிடலாம். குறிப்பாகத் தனி மனித வாழ்க்கையில் உல "கியல் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டவர்களுக்கு இவ்விளக்கம் வழங்கப் பட்டுள்ளது. மனித வாழ்க்கையில் சாதா ரண பிரச்சினை என்பது பொருளாதாரப் பிரச்சினையை மட்டும்தான் கருதுவதாக அமையாது. மாருக அவை ஆத்மீகத் துறையுடன் தொடர்புடைய அல்லது குடும்ப உறவு முறைகள் பற்றிய தொடர் பான பல்வேறு பிரச்சினைகளுடன் தொடர் புடையனவாக இருக்கலாம். எனவே இவ் வாறு எழும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்றே, அல்லது பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் இப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றே இங்கு விளக்கம் அளிக்க முடியாது? அவ்வாருக விளக்கம் அளிப்பதாக இருப் பின் செல்வம் மிகுந்த மேற்கு நாடுகளில் சமூகங்களிடையே 'புற்றுநோய்' என வர் ணிக்கப்படத்தக்க "கிப்பீஸ்" இயக்கத்தி னைப் பொருளாதார ரீதியாக விளக்கவோ, ஆராயவோ முடியாது. மேலும் இதே அடிப்படையில் அமைந்த சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பேராசிரியர் "பிகு' (Piegu) என்பவர் நேரடியாகவோ அல்லதுமறைமுகமாகவோ பொதுநலன் என்பது பணத்துடன் தொடர் புடையது என விளக்கம் அளித்துள்ளார். எனவே பணமானது சமூக நலனுடன் தொடர்புடையதாக இருப்பதனுல் சமூக நலன் கோட்பாட்டினுள் இவரது பொருளி யல் வரைவிலக்கணமும் அமைந்துள்ளது. இறுதியாக அருமையை அடிப்படை யாகக் கொண்டு பொருளியலுக்கான வரை விலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. "மனித தேவைகள் அதிகமாகவும், நாணயமும் பொருள்களும் பற்ருக்குறையாக இருத் தல் ஆகிய இரு நடவடிக்கைகள் இடையே

ந. கலைச்செல்வன்
யேற்படுகின்ற தொடர்பினல் எழுகின்ற மனிதனின் நடத்தை பற்றி ஆராயும் விஞ் ஞானக் கலையே பொருளியல் கலையாகும்" எனப் பொருளியலறிஞரான "லயனல் Gloyt slaira sir." " (Linal Robinson) стеiшат விளக்கியுள்ளார். அதாவது தேவையின் அதிகரிப்பினல் பற்ருக்குறையாக இருக்கும் சாதனங்களை வழிப்படுத்தும் ஆற்றலைப் பற்றிய ஆய்வே பொருளியலாகும் என்ப தாகும். எனவே இவரது விளக்கமானது அருமையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உபயோகங்களைக் கொண்ட சாத னங்களுக்கிடையே மனித நடத்தையானது எவ்வாறு அமைகின்றது என்பதையும், பொருளாதார அமைப்புக்களிடையே பற் ருக்குறையான சாதனங்கள் மத்தியில் மனிதனின் எண்ணிறந்த தேவையிடையே எவ்வாறு ஒழுங்குசெய்வது என்பதையும் கொண்டு காணப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும், இங்கு மனித நடத்தை, மனிதனின் நாளாந்த பிரச்சினைகள், அவற்றை நிறைவுபடுத்தத் தேவைப்படும் சாதனங்கள் என்பவற்றுக்கு முக்கியத் துவம் கொடுத்து விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். லயனல் ருெபின் சன் என்ற பொருளியலாளரின் கருத்து விளக்கத்தில் இருந்து விளங்குவதாவது, பொருளியல் என்பது அருமையைப் பற்றி யது என்பதாகும். ஆனல் இன்று பொரு ளியலானது அருமைப் பிரச்சினையை மட் டும்தான் ஆராய்கின்றது எனப் பூரண மாகக் கூறமுடியாது. ஏனெனில், பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் அருமை பற் றிய பிரச்சினைகளுக்கு மட்டுமன்றி விர யத்தை எவ்வாறு தடுப்பது, என்ன வழிக ளைக் கையாள்வது என்ற பிரச்சினைகளுக் கும் தீர்வு காணவேண்டியுள்ளது. குறிப் பாக அமெரிக்காவின் பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டால், அங்கு அருமை பற் றிய பிரச்சினை மட்டுமன்றி விரயத்தைத் தடுக்கவேண்டிய நிலையும் காணப்படுவது வெளிப்படை. எனவே இன்றைய பொரு ளாதாரத்தில் அருமை பற்றிய பிரச்சினைக் குத் தீர்வுகாண்பதை விட விரயத்தைத்
91 -

Page 218
பொருளியலில் ..
தடுத்தல் பற்றிய் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது கஷ்டமானதாக இருக்கின்றது. ஆகவே இன்றைய பொருளாதாரப் போக் கின்படி அருமை பற்றிய விதியினைச் செயல் படுத்த முடியாதுள்ளது.
மேற்காட்டிய செல்வ நிலையில் ஆரா யப்பட்ட கோட்பாடுமூலமும், சமூக நலனை ஆதாரமாகக் கொண்டு ஆராயப்பட்ட கோட்பாடு மூலமும், அருமை நிலையினை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்ட கோட்பாடுமூலமும் எடுத்துக்காட்டப்பட்ட பொருளியல் பற்றிய விளக்கங்கள் யாவும் பொருளியல் என்பதற்கு முற்றும் முழு தான நிரந்தரமான விளக்கத்தைக் கொடுக் கக்கூடியதாக அமையவில்லை. ஒவ்வொரு கோட்பாட்டாளர்களும், தமக்கு முன்னைய கோட்பாட்டு ரீதியாக ஆராயப்பட்ட கோட்பாடுகளுக்குத் தக்க முறையிலேயே தமது விளக்கங்களையும் வகுத்து விளக்கி யுள்ளார்கள். ஆணுல் இன்றைய காலகட் டத்தில் தனிநபர் இடையேயோ அல்லது சமூகங்களிடையேயோ அல்லது நாடுக ளிடையேயோ உள்ள பொருளியல் நிலை யைப்பற்றி ஆராயும்போது பொருளியல் என்ருல் என்ன என்பதற்கான வரைவிலக் கணத்தை அறிந்துகொள்வதிலும் பார்க்க, அவற்றின்மீது ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றியோ அல்லது அப் பிரச்சினைகளை ஏற் படுத்துகின்ற மூல வளங்களைப் பற்றியோ அல்லது அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் கையாளும் வழிமுறைகளைப் பற்றியோ சிந்திக்கவேண்டியதாகவும், அவற்றின் நிரந் தரமான தீர்வுக்கு விளக்கமளிக்கவேண்டிய தாகவும், பூரண பொருளாதாரத் தன் னிறைவை அடைய வழிவகுக்கவேண்டிய தாகவும் காணப்படுகின்றது. எனவே தற் காலகட்டத்தில் பொருளியல் பற்றிய விளக்கம் அளிக்க முற்பட்டால் அது பொரு ளியல் பிரச்சினைகளின் தீர்வு பற்றிய விளக்க மாகவே அமையும். எனவேதான் இன்று நாம் பொருளியல் பற்றி மிகவும் எளிமை யான வரைவிலக்கணம் ஒன்றை வழங்க வேண்டியதாகவுள்ளது. ஆனல் இவ்வா
ജ്ഞ

ந. கலைச்செல்வன்
முன பொருளியல் பற்றிய விளக்கம் அளிப் பது இலகுவானதொன்றல்ல. ஏனெனில் பொருளாதாரப் பரந்தவியலில் சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதாரப் பிரச் சினைகளானது வெவ்வேறு விதமான மாற் றங்களை அணுகிக்கொண்டு செல்கின்றது, இதனல்தான் "'யோக்கப் லீனர் "" (Jocob Liner) என்ற பொருளியலறிஞர் ' எதை எதைப் பொருளியல் என்கின் ருர்களோ ! அவைகளே பொருளியலாகும் " என விளக்கம் அளித்துள்ளார்.
**பொருளியல் பிரச்சினைகள்’ என்று கூறும் போது அவை ஒரு நாட்டின் பொருளா தார அமைப்புக்கள் பொருளாதார ரீதி யாகவும், அரசியல் ரீதியாகவும் பொது வாக முதலாளித்துவ அமைப்பு, பொது வுடமை அமைப்பு அல்லது இரண்டும் பெற்ற கலப்புப் பொருளாதார அமைப்புப் போன்ற நிலைகளில் உள்ள ஒரே தன்மையை யொத்த மூலப் பிரச்சினைகளைக் கொண்ட வையாகவே இருப்பதைக் குறித்து நிற் கின்றது. இப் பிரச சினைகள் பொருளாதார அமைப்புக்களுக்கு ஏற்ப ஒத்தனவாகக் காணப்படினும் தீர்க்கும் வழிமுறைகள் வித்தியாசப்பட்டவையே. பொருளாதார அமைப்புக்கள் எதுவாக இருப்பினும் பின் வரும் பொருளாதார அடிப்படை அம்சங் களான அருமை, தெரிவு, பரிமாற்றம், உச்சப்பயன் ஆகியவை பொதுவானவை யாகவேயுள்ளன. அடிப்படைப் பிரச்சினை களுக்குத் தீர்வுகாணும் வழிகளே பொரு ளாதார அமைப்புகளுக்கு ஏற்ப வேறு பட்டுக் கா ண ப்ப டு கி ன் ற து; குறிப் பாக முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை எடுத்துக்கொண்டால் அங்கு *" விலைப்பொறி முறை இயக்கத்தை " (The Price Mechanism) அடிப்படையாகக் கொண்டே பிரச்சினைகளுக்குத் தீர் வு காணும் வழிமுறைகள் இயக்கப்படுகின் றன. ஆனல் சமூகவுடைமைப் பொருளா தார அமைப்புடைய நாடுகளில் "மத்திய g) --á G(p' (Central Economic Planமing Council) பின்வரும் வழிகளில் தோன்
92 -

Page 219
பொருளியலில் .
றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதன் மூலம் பொருளாதார நட வடிக்கைகளைப் பரந்த அடிப்படையில் நோக்குகின்றது.
(1) ** என்ன ** பொருட்களை உற் பத்தி செய்தல்.
(2) *எவ்வாறு', 'எவ்வழிகளில்" உற் பத்தி செய்தல்
(3) "யாருக்காக ** இவ ற்றை உற் பத்தி செய்தல் - என்பனவாகும்.
எந்தப் பொருளாதார அமைப்புக் களும் தம் நாட்டிடையே ஏற்படுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மேற் கூறப்பட்ட ஏதோவொரு வழிமுறைகளில் தீர்வுகாண முயலுகின்றன. குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தை எடுத் துக் கொண்டு ஆராய்ந்தால் இ த ன் அமைப்பு முற்றும் முழுதான ஒரு தனி அமைப்பாக அமையாது, முதலாளித்துவ சமூகவுடமைக் கொள்கைப் போக்குக்கள் இரண்டும் கலந்த அமைப்பாகவுள்ளது என லாம். எனவே இலங்கையின் பொருளா தார நிகழ்வில் இவ்வாறன கலப்புத் தன்மை காணப்படுவதற்கு முக்கிய காரண மாக அமைவது காலத்துக்குக் காலம் அர சியல் கொள்கைகளும், அரசாங்கப்போக் குகளும் மாற்றம் அடைவதே. இலங்கை யின் அரசியல், பொருளாதார நிலைகளை வர லாற்று ரீதியாக அவதானிக்கும்போது நிரந்தரமான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின்கீழ்த் திட்டமிடப்பட்டு அவை செயல்படுத்தப்படவில்லை. எனவே தான் இலங்கையின் பொருளாதாரத்தின் அபிவிருத்தியில் இரு துறை அமைப்புக்க ளின் போக்குகள் காணப்படுகின்றது.
தற்கால சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற முக்கிய மானதும், தீர்வுகாணப்பட வேண்டியது மான பிரச்சினைகள் அதிகம் இருப்பினும் நாட்டின் உடனடித் தேவைக்காகத் தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளைப் பின்வரு மாறு வகைப்படுத்தலாம்:
வி-25 -

ந. கலைச்செல்வன்
சனத்தொகையும் அதன் தாக்கமும்: இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் முக்கிய மான பிரச்சினையாக அமைவது சனத் தொகைப் பிரச்சினையே. நாட்டின் பொரு ளாதார அபிவிருத்திக்கான வேகத்திலும் பார்க்க, இச் சனத்தொகை அதிகரிப்பு வேகம் அதிகரித்துச் செல்வதணுலேயே பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது வெளிப்படையாகத் தெரி கின்றது. இவ்வாறு சனத்தொகை அதி கரிப்பு வீதம் அதிகரித்துச் செல்வதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
(அ) கிராமப்புறமட்டத்தில் கல்வி யறிவு வளர்ச்சி குன்றியிருத்தல், (ஆ) நாட்டின் சுகாதார சேவைகள் அதிகமாகவும், திடமானவையு
மாக இருத்தல். (இ) நாட்டின் கலாச்சார, பண்பாட் டுடன் தொடர்புடையதான
மரபுவழி காரணமாக இளமை யில் திருமணம் செய்தல். (ஈ) இலங்கையில் ஏனைய நாடுகளைப் போலன்றி இயற்கையால் ஏற் படும் அழிவுகள் ஏற்படாது இருத்தல். (உ) மக்கள் தமது பொழுதினை உல் லாசமாகக் கழிக்கக் கூடியள வுக்கு பொழுதுபோக்கு வசதிகள் குறைவாக இருத்தல். (ஊ) பழமை பேணும் மக்கள் அதிக மாக இருத்தல். அதாவது சமய நம்பிக்கைக் குட்பட்ட வர்கள் மகப்பேறு கிடைக்கக் கிடைக்க "இறைவன்வரம்" எனக் கருதி *" கருத்தடை * செய்ய விரும்பு வதில்லை.
முன்னைய அரசாங்கத்தினுல் தீட்டப் பட்ட ஐந்தாண்டுத் திட்டத்தில் கடந்த 10 வருட காலங்களில் வருடத்துக்கு சரா சரி 3,70,000 குழந்தைகள் பிறக்கின்றன
3 -

Page 220
பொருளியலில் .
என்று கூறப்படுகின்றது. இந்த விகிதப்படி சனத்தொகை பெருகிக்கொண்டு போகு மானுல் 1981ஆம் ஆண்டில் வருடத்துக்கு சராசரி 5,05,000 குழந்தைகள் பிறக்க லாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதா வது 8 வருடங்களால் இலங்கையின் சனத் தொகையில் சராசரி பிறப்புத் தொகை 5,00,000 ஆகும். கட்டத்தை அடைந்து விடும் முன்னைய அரசாங்கத்தினல் நடாத் தப்பட்ட சமூக, பொருளாதார ஆய்வின் படி 5 குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும் பங்களில் 63%மான குடும்பங்கள் மாதம் 200 ரூபா வருமானத்துக்குக் குறைந்தவர் களாகவே காணப்படுகிருர்கள். ஒவ்வொரு 100 இலங்கை மக்களில் 41 பேர் 15 வய துக்குட்பட்டவர்களாவர். அபிவிருத்தி யடைந்த நாடுகளில் 22-30 பேர்களே 15 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின் ருர்கள். சனத்தொகை எதுவித கட்டுப் பாடும் இல்லாமல் பெருகுமானுல் அண்டி வாழ்பவர்களின் தொகை கூடிக்கொண்டே போகும். ஒரு நாட்டின் சனத்தொகையில் அண்டி வாழ்பவர்களின் தொகை கூடிக் கொண்டே போனுல் அது முதலீட்டைப் பெரிதும் பாதிக்கும். இவ்வாறு முதலீட் டைப் பாதித்தால், அப்பாதிப்பு நாட்டின் உற்பத்தித்துறையைப் பெரிதும்பாதிக்கும். உற்பத்தித்துறை பாதிப்படைய நாட்டின் பொருளாதாரத்தில் கேட்கப்படும் கேள்வி களுக்கு வழங்கப்படும் வழங்கல் அளவு குறைவாகக் காணப்படும். இந்நிலை எல் லாத் துறைகளிலும் ஏற்படும்போது நாட் டின் பொருளாதாரத்தைப் பெரிதும்பாதிக் கக் கூடியளவுக்கு உற்பத்திப்பொருளிலும், உற்பத்திச் சாதனங்களின் அமைப்பிலும் அருமை நிலையை உண்டுபண்ணுவதுடன் நாட்டில் பணத்தின் பெறுமதி குறை வடைந்து விலை வீக்கப் பிரச்சினையைக்கூட ஏற்படுத்திநிற்கும். எனவேதான் ஒவ் வொரு நாட்டின் அரசாங்கங்கள் சனத் தொகை அதிகரிப்பு வீதத்தைக் கட்டுப் படுதுவதற்காகப் பல வழிகளைக் கையாளு கின்றன.
- 1"

ந. கலைச்செல்வன்
இலங்கையின் சனத்தொகை அதிகரிப் புக்கு முக்கிய காரணமாகத் தோன்றுவது யாதெனில் பிறப்புவீதம் அதிகமாகவும், இறப்புவீதம் மிகவும் குறைவாகவும் இருப் பதேயாகும். அதாவது பிறப்பு வீதம் பெருக்கல் விருத்தி முறையிலும் பெருகிச் செல்வதையும் இறப்புவீதம்கூட்டல் விருத்தி முறையிலும் கூடிச் செல்வதையும் குறித்து நிற்கின்றது. சனத்தொகை விகிதாசார அளவீட்டின்படி 43% மாஞேர் தொகை இளைஞர்களாக இருப்பதனல் இவர்களில் பெரும் பகுதியினர் உற்பத்தி முயற்சியில் ஈடுபடும் தன்மை அற்றவர்களாகவும், உற் பத்தி செய்த பொருட்களையும், சேவை களையும் நுகர்ச்சி செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்நிலையில் நாட்டின் முதலீட்டுப் பெருக்கம் குறைவாகவும்-- அதாவது சேமிப்புத் தொகை குறைவாக வும்-நுகர்ச்சிச் செலவுவீதம் அதிகமாகவும் இருக்கும். இக்கட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சரிப்படுத்துவது என்பது பிரச்சினைக்குரியதொன்றே:
எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் சனத் தொகையைக் கட்டுப்படுத்துவது என்பது அவசியமாகின்றது. பெண்களுக்கான இனப் பெருக்க வயதான 15-44 வயதுக்குமிடை யில் இலங்கையில் 37,63,000 பெண்கள் இருக்கின்றனர். ஆண்களுக்கான இனப் பெருக்க வயதானது இடைவெளி மிகவும் கூடியது எனினும் இலங்கையில் அவர்க ளின் தொகை 40 இலட்சத்துக்கு மதிப் பிடலாம். ஆகவே இலங்கையின் முக்கிய பிரச்சினை யாதெனில் சனத்தொகையை அதிகரிக்கவிடாமல், கட்டுப்படுத்தும் பல வழிகளைக் கையாளுவதேயாகும்.
(அ) பெண்கள் விவாகம் செய்யும் வய
தைக் கூட்டுதல்.
(ஆ) உபகாரப் lucoor Lh கொடுத்துப் பெரும் பான்மையான வர் களை க் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வேண் டிய சத்திரசிகிச்சை செய்யும்படி வேண்டுதல்,
سه 94ر

Page 221
பொருளியலில் .
(இ) இலங்கை யில் குறைந்தபட்சம் அடுத்த மூன்று ஆண்டுக்குள் 10 இலட் சம் குடும்பக் கட்டுப்பாட்டுச் சத்திர சிகிக்சையாகிலும்செய்தல் வேண்டும். ஏனெனில் பிறப்பு வீதம் 1000க்கு 30 ஆகவும், இறப்பு வீதம் 1000க்கு 8 ஆகவும் உள்ளது. எனவே கிட்டத் தட்ட சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
தொழில் இன்மையும் அதன் தாக்கமும் :
நாட்டின் தொழில் இன்மைப் பிரச் சினை என்று கூறும்போது, அப் பிரச்சினை பின்வரும் காரணங்களினலேயே பெரிது படுத்தப்படுகின்றது:
(அ) நாட்டின் பொருளாதார நிலைக் கேற்ப கைத்தொழில், விவசாயத் துறைக ளின் உற்பத்தியில் பன்முகப்படுத்தப் பட்ட திட்டமிட்டு இயங்காதிருத்தல்,
(ஆ) இலங்கையில் பெறத்தக்க மூல வளங்களைக்கூட உரியமுறையில் பயன்படுத் தப்படாது விட்டுவிடுதல் .
(இ) நாட்டின் உற்பத்தித்துறையின் பெருக்க விகிதத்திலும் பார்க்க, சனத் தொகை அதிகரிப்பு வீதம் கூடிக்கொண்டு செல்லுதல். く (ஈ) நாட்டின் சேமிப்பு மிகக் குறை வாக இருப்பதனுல், மூலதன முதலீட்டுநிலை மிகவும் பின்தங்கிய கட்டத்தை அடைந், திருப்பதும், மூலதன முதலீட்டுநிலை பின் தங்கிய கட்டத்தை அடைந்திருப்பதனல், பல்வகை உற்பத்திப் பொருட்களை உற் பத்தி செய்யும் நவீன தொழிற்சாலைகளை அமைக்கும் வாய்ப்பு அரிதாக இருப்பத ஞலும், தொழிலின்மை நி%யில் உள்ளோர் தொகை அதிகரிக்கக் காரணமாகின்றது. அத்துடன் உரிய தொழில்களுக்கெனப் பயிற்றுவிக்கப்படுகின்ற பயிற்சியாளர்க ளுக்குக் கூட தற்கால இலங்கைப் பொரு ளாதாரத்தில் தொழில் வாய்ப்பு அளிக்க முடியாதுள்ளது,
19 سے

ந. கலைச்செல்வன்
1946இல் இலவசக்கல்வி முறை அமு லுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நாட் டின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் மக் கள் கல்வி கற்க முனைந்ததன் காரணத் தால், தொழிற்பட்டாளத்தில் குறிப்பிடத் தக்க ஒரு பகுதி கல்வி கற்ற ஒரு பகுதி யாக மாத்திரமன்றி ஆரம்ப உயர்கல்வி கற்ற பகுதியாகவும் காணப்படுகின்றது. குடித்தொகைப் புள்ளி விபரவியற் திணைக் களத் தகவல்களின்படி 1971இல் 7,96,199 பேர் வேலையின்றி இருந்தனர். இவ் வெண் ணிக்கை அப்போதைய மொத்தத் தொழிற் பட்டாளமான 44 இலட்சத்தில் 18%ஆக இருந்தது. ஆனல் மத்திய வங்கியால் 1975இல் மேற்கொள்ளப்பட்ட flරිකා தொழில் பயன்பாடு தொடர்பான ஒர் ஆய்வின்படி 9,68,313பேர் தொழில் இன்றி இருந்தனர். இவ் வெண்ணிக்கை மொத்தத் தொழிற்பட்டாளத்தில் 20%ஆக இருந்தது. வேலையின்மை 15-29 வயதுக் குழுவின ரிடையே அதிகமாகக் காணப்படும். அதே வேளை குறை உழைப்புநிலையானது 15-59 வரையான சகல வயதுக் குழுவினரிடையே யும் காணப்படுகின்றது. 20-29 வயதுக் குழுவினரிடையே இது மிக அதிகமாகக் காணப்படுகின்றது. வேலையின்றியுள்ளோர் இளவயதினர் மட்டுமன்றி, அவர்கள் ஒரளவு கல்வி கற்ருேரும் ஆவர். 1963-71 காலப் பகுதியில் தொழில் வாய்ப்புக்கள் வருடாந்தம் 54,000 தொழில்கள் என்ற விகிதத்தில் அதிகரித்தன எனவும், 197181 காலப்பகுதியில் வேலையின்மை வரு டாந்தம் 1,05,000 என்ற விகிதத்தில் அதிகரித்து வரும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. சுதந்திரத்தைத் தொடர்ந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பை உரு வாக்கும் கொள்கைகள் எவையும் நடை முறைப் படித்தப் பட்டதாக இல்லை. பொதுவாகப் பொருளாதார நிலைமை சீரா கக் காணப்படாமை சனத்தொகையின் மெதுவான வளர்ச்சி அதிகரிக்கும் மக்களை வரண்ட வலய அபிவிருத்தித் திட்டங்கள் தாங்கிக்கொள்ளும் என்ற தம்பிக்கை,
5 -

Page 222
பொருளியலில் .
அதிகரித்து வந்த வேலையின்மையின் பாரதூரமான விளைவை உணர்ந்துகொள்ள முடியாமல் போனமை போன்ற காரணங் களால், தொழில் வாய்ப்புக்களை அதிகரிக் கும் தொழில் நுட்பங்கள் மூலமாகவன்றி முதலீட்டுச் செறிவுள்ள தொழில் நுட்பங் களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை நவீன மயமாக்குவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை செலுத்தியது. ஆனல் கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் ஆரம்பிக்கப் பட்ட கிராம அபிவிருத்தி, கிராமத் தொழில் வாய்ப்புப் பெருக்கத் திட்டங் களில் பின் வருவன நடைமுறையில் செயல் படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்க தாகும்:
(அ) இளைஞர்களைக் குடியேற்றி விவ சாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவென, 1966இல் இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இத்திட்டங்கள் கூட் டுறவு அடிப்படையில் செயற்படும் நோக் கத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டதாயினும், தற்போது ஏறக்குறைய எல்லாத் திட்டங் களிலும் காணிகள் ஒவ்வொருவருக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. 1974இல் சுமார் 5000 இளைஞர்கள் இச் செயற் பாட்டின் மூலம் தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
(ஆ) கூட்டுறவுக் கூட்டுப்பண்ணைத் திட்டங்களை ஸ்தாபிப்பதற்கான திட்ட மொன்று 1971இல் ஆரம்பிக்கப்பட்டது. 1974 அளவில் 50 திட்டங்கள் இயங்கிவந் தன. இவற்றில் 3,400 பேர் தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். மேலும் 15 திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரு கின்றது. எனவே இன்னும் அதிகப்படியா னேருக்கு தொழில் வாய்ப்பு இத்துறையில் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படு கின்றன.
(இ) பிரதேச அபிவிருத்திச் சபைத் திட்டங்கள் 1971இல் தொடங்கப்பட்டன. 1975 மார்ச் வரை 1,673 திட்டங்கள் அங் கீகரிக்கப்பட்டிருந்தன. 31,656 பேருக்கு
-

ந. கலைச்செல்வன்
இவை வேலைவாய்ப்பை வழங்க வல்லன. இவற்றுள் 984 திட்டங்கள் தற்போது இயங்கிவருவதுடன் 18,772 பேருக்குத் தொழில் வாய்ப்பைபையும் வழங்கியுள்ளது
(ஈ) ஐ. நா. உதவியுடன் கிராமக் குளங்களையும், சிறுநீர்ப்பாசனத் திட்டங் களையும் புனர் நிர்மாணம் செய்யும் வேலைத் திட்டமொன்று 1968இல் ஆரம் பிக்கப்பட்டது. மொத்த இலக்கான 8,000 சிறிய குளங்களுள் 1974 யூன் அளவில் 445 புனர்நிர்மாணம் செய்யப்பட்டன. மேலும் 1029 தேக்கங்களில் வேலை ஆரம் பிக்கப்பட்டது. இவற்றுடன் 1975இல் மேலும் 1971 நீர்த்தேக்கங்கள் புனர்நிர் மாணம் செய்யப்படவிருந்தன. இவ் அபி விருத்தித் திட்ட நடவடிக்கைகளினல் அதி கப்படியான அளவு வேலைவாய்ப்பினைச் செய் யக்கூடியதாகவுள்ளது.
(உ1 1972, 1973ஆம் ஆண்டுகளில் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் அர சாங்கத்தால் கையேற்கப்பட்ட சில காணி களில் "ஜனவாசா'க்கள் (கூட்டுப் பண்ணை கிள்) உருவாக்கப்பட்டன. இலாப நோக் குக்குப் பதிலாகக் கூடிய தொழில் வாய்ப் புக்களை உருவாக்கும் நோக்கத்துடன் உரு வாக்கப்பட்டது. இவற்றின் மூல மேலதிக மாகப் பலருக்குத் தொழில் வசதிகள் கிடைக்கும். 1975 இறுதியளவில் சுமார் 11,500 இளைஞர்களும், யுவதிகளும் இங்கு தொழில் வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
(ஊ) நாட்டின்பால் பொருட்தட்டுப் பாட்டை நீக்கும் நோக்குத்துடன் 42,000 ஏக்கர் நிலத்தில் பால்பண்ணை நடவடிக்கை கள் அபிவிருத்திசெய்யும் புதிய திட்ட மொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் புதிய திட்டத்தினுல் அதிகமானுேர் வேலை வாய்ப்பு வசதியினைப் பெற்றிருகின்றனர்"
(எ) மகாவலி, உடவளவை அபிவிருத் தித்திட்டங்களின் கீழ் 25,000 குடும்பங் களுக்கு மேல் நேரடியாக விவசாயத்தின் மூலம், மேலும் சில ஆயிரம் குடும்பங் களுக்கு அவைசார்ந்த ஏனைய தொழில்கள்
96 -

Page 223
பொருளியலில் ...
மூலமும் வாழ்க்கை வசதிகள் கிட்டுவ துடன் அநேகமான தொழில் வாய்ப்பு வசதிகளும் கிட்டும். சென்மதி நிலுவைப் பிரச்சினையும் அதன் தாக்கமும்:
"சென்மதி நிலுவை '’ என்பது ஒரு நாட்டின் கட்புலணுகும் எற்றுமதியினதும், கட்புலனுகாத ஏற்றுமதியினதும் மொத்தத் தொகைக்கும், கட்புலனுகும் இறக்குமதி யினதும், கட்புலனுகாத இறக்குமதியின தும் மொத்தத் தொகைக்கும் இடையே யுள்ள வித்தியாசத்தையே குறித்து நிற்கின் றது. குறிப்பாக ஒரு நாட்டின் கட்புல ஞகும், கட்புலனுகாத ஏற்றுமதிகளின் மொத்தத்தொகை அந்நாட்டின் கட்புல ணுகும், சட்புலனுகாத இறக்குமதிகளின் மொத்தத் தொகையிலும் பார்க்கக் கூடுத லாக இருப்பின் அது சாதகமான சென் மதிநிலுவையினையும், கட்புலகுைம், கட் புலனுகாத ஏற்றுமதிகளின் மொத்தத் தொகை கட்புலனகும், கட்புலனுகாத இறக்குமதிகளின் மொத்தத் தொகையி லும் பார்க்கக் குறைவாகக் காணப்படு மாயின், அது பாதகமான சென்மதி நிலு வையினையும் ஏற்படுத்தி நிற்கும். அதாவது வேறுவிதமாகக் கூறின் ஒரு நாட்டின் மொத்த வெளிநாட்டு வருமானங்களின் அளவிற்கும், அந்நாட்டின் மொத்த வெளி நாட்டுச் செலவினங்களின் அளவிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைக் குறித்து நிற்கும். மொத்த வெளிநாட்டு வருமா னத்திலும் பார்க்க மொத்த வெளி நாட் டுச் செலுத்துகை குறைவாக இருப்பின் சா த க ம |ா ன சென்மதி நிலுவை மீதி யும், மொத்த வெளி நா ட் டு வருமா னத்திலும் பார்க்க மொத்த வெளிநாட்டுச் செலுத்துகை அதிகமாக இருப்பின் பாதக மான சென்மதி நிலுவை மீதியும் ஏற் படும். எனவேதான் இவ்வாருண பாதக மான நிலுவை மீதியானது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக் கின்றது. இவ்வாருன பாதிப்புக்கள் அந் நா ட் டி ன் பொருளாதாரத்தைப் பாதிக்கும்போது அந்நாட்டின் அரசு அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவது அவசியமான தே . இவ் வாரு ன
- 19

ந. கலைச்செல்வன்
பாதகமான பாதிப்பு நிலையானது ஒரு நாட்டில் தொடர்ச்சியாக இருப்பின், அந் நாடு ஏனைய நாடுகளுக்கு கடனுளியாகச் செல்லும் நிலைமையேற்படும். இதனுல் அந் நாட்டின் விலைமட்டம், வேலைமட்டம், வருமானமட்டம் என்பன பாதிப்படையும். இவ்வாருண பாதகமான சென்மதி நிலுவை மீதியானது இலங்கையின் பொருளா தாரத்தை பல வருட காலமாகப் பாதித்து வந்துள்ளது. குறிப்பாக இலங்கை 1950ஆம் ஆண்டின் பின்னர் 1951, 1952, 1954, 1956 ஆகிய ஆண்டுகளைத் தவிர்ந்த ஏனைய காலம் தொட்டு இப் பாதிப்புக்கு இலக் காகி வருகின்றது. இதனைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் பின்வரும் வழிமுறை களைக் கடைப்பிடித்து வருகின்றது
(அ இறக்குமதிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிகவரி விதிக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.
(ஆ) ஏற்றுமதிசெய்யப்படும் பொருட் களின் அளவும், பாரம்பரியமற்ற பொருட் களின் ஏற்றுமதியின் அளவும் அதிகரிக்கப் பட்டது. அதாவது ஏற்றுமதியை பன்முகப் படுத்தியமை, இறக்குமதிப் பதிலீட்டு நட வடிக்கைகளை ஏற்படுத்தியமை என்பன.
(இ) நாட்டில் நாணயப் பெறுமதி இறக்கம் செய்தல்,
(ஈ) அந்நியச் செலவாணிக் கட்டுப் பாட்டைச் செய்தல். அந்நிய செலாவணி உரிமைச் சான்றிதழ்த் திட்டத்தை ஏற் படுத்தலும், நடைமுறைப்படுத்தலும்.
(உ + பல்நாணய மாற்று வீதத்தை ஏற்படுத்தி வருதல்.
(ஊ) நாட்டில் பணச்சுருக்க நிலையை ஏற்படுத்துதலும், நடைமுறைப்படுத்துத ஆலும்.
இவ்வாருன நடவடிக்கைகளைக் கடைப் பிடிப்பதனுல்தான் ஒரு நாடு பாதகமான சென்மதி நிலுவைப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதன் மூலம் நாட்டில் பொருளா தாரத்தில் ஏற்படுகின்ற தாக்கத்தைத் தளர்த்தி அபிவிருத்தியடையமுடியும்.
س- 7

Page 224
சுன்னுகம் பல.நோ.கூ. ச
நுகர்ச்சிப்பொருள் விநியோகத் பொருள் விரியோக நிலைய விளங்குகின்றது.
புடவை விநியோகத்திற்காக : த செய்து விற்பனை செய்வதுட நிலையங்களையும் தன்னகத்ே
கட்டிடப்பொருள் விநியோகம் :
வாகப் பெறுவதற்கான வசதி கிராமிய வங்கிகள் ; ஏழை விவ வழங்குதல், அடைவு பிடித்து ஒப்பந்த வேலைப் பகுதி : குறித் டங்களை அமைத்துக் கொடு கைத்தொழில்களை ஊக்குவிக்க தொழிற்சாலை, காகித உ போன்றவற்றைச் சிறப்பாக
இன்னும் அரசாங்க முற்போக்குத்
யான ஆக்க வேலைகளிலும், மு காத்திரு
அணண விஞ்ஞான ரீதியில் சுகாதார மு மின்சார ருேஸ்டரில் வ என்றும் நறுமணத்துடனும், சுவை வகையில் பத்திரப்ட
4 முத்தல், தி ருத்தல், ருத்தல்
எம்மிடம் பெற்.
அண்ணு தொழ 4. நவீன சந்தை,
Cur
தலைமையகம்: அண்ணு தொழிற்சாலை
போன் ; 7412

Iங்களைக் கொண்டு, தன்னிகரற்று
ரமான புடவைகளைக் கொள்வனவு டன், மூன்று தரமான கைத்தொழில் த நிறுவியுள்ளது.
எல்லாப் பொருட்களையும், இலகு கிகளுடன் மலிந்த விற்பனை, சாயிகளுக்கு இலகுவான கடன் 5ல் ஆகியவற்றைச் செய்கின்றது. த காலங்களுக்குள் தரமான கட்டி }த்து வருகின்றது.
: பாண் தொழிற்சாலை, பீடித் -றைத் தயாரிப்புத் தொழிற்சாலை ாகடாத்தி வருகின்றது. திட்டங்களை முன் வைத்து பலவகை முன்னணியில் நின்று செயல்படக் க்கின்றது.
O O. ー。 o FEISLD (shjapJ6jali 5) சுண்ணுகம
தில் முப்பத்தினன்கு நுகர்ச்சிப்
ற கோப்பி.
முறைப்படி உங்கள் முன்னிலையில்
1றுத்து அரைக்கப்பட்டு,
குன்ருமலும்,புதிதாகவும் இருக்கும் படுத்தி உடனுக்குடன் ஆகிய அளவுப்பைக்கற்றுக்களில் றுக்கொள்ளலாம்.
Pற்சாலை (கிகள)
யாழ்ப்பாணம். i : 7413
32T : :
1, மத்திய சந்தை,
சுன்னுகம்.

Page 225
- சிறுகதை -
86 Søndidt 9y
என். சரவணபவன் வர்த்தகவியல் (சிறப்பு) மூன்றம் வருடம்
- 19

1.
அன்று நண்பகல் கோட்டைப் புகை யிரத நிலையம் மக்கள் கூட்டத்தால் நிறைந்து கொண்டிருந்தது. சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களின் விடுமுறையைப் பயன்படுத்தி தங்கள் ஊர்களுக்குச் சென்று திரும்புவதற்காகப் புறப்பட்டு வந்தவர்கள் கூட்டம் மிக அதிகமாயிருந்தது. அவர்கள் எல்லோரும் கோட்டையில் இருந்து காங் கேசன்துறைக்குச் செல்லும் யாழ்தேவியை எதிர்பார்த்த வண்ணமாக நிற்கின்றனர். சிலர் பத்திரிகைகளைப் புரட்டிப் புரட்டிப் படித்தப ; அதில் வந்த செய்திகளை விமர் சிப்பதில் ஈடுபட்டிருக்கின்றனர். வேறு சிலர் குடும்ப, அரசியல் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடுகின்றனர். எதிரும் புதிருமான கருத்துக்கள் அவர்கள் மத்தி யில் பரிமாறப்படுகின்றன. இன்னும் சிலர் தங்கள் பழைய நண்பர்களைக் கண்ட குதுர கலத்தில் பரஸ்பரம் தங்கள் பழைய நட் பைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலர் காதலராகிக் காதல் மொழி பேசுகின்றனர். அவர்களிடையே சிலரிடம் பிரிவின் ஏக்கம் பெரிதாகக் காணப்படு கின்றது. வாழ்க்கைப் பயணத்துக்குத் துணை தேடாதவர்களும், யாழ்தேவிப் பய ணத்துக்கு ஏற்ற துணையைத் தேடிப் பெற்று அவர்களுடன் கதை பேசுகின்றனர். மற்றுமுள பேர்கள் கணவன், மனைவி, பிள்ளைகளாக குடும்ப சமோதமாய் காட்சி தருகிருர்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்குள் ஏதேதோ பற்றி உரையாடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு புகை யிரத நிலைய மேடை பேச்சொலிகளால் நிறைந்திருந்தது. ஆனல் நான் மட்டும் துணை யாருமின்றித் துயர் படிந்த உள்ளத்
-سس- 9

Page 226
“ sequi LDII s
துடன் தனித்து நின்று கொண்டிருக் கின்றேன்.
சற்று நேரம் கடந்து. புகையிரத மேடைக் கடிகாரம் நேரம் 11*30 எனக் காட்டியது. யாழ்தேவி வந்து கொண்டிருப்பது கண்ணுக்கெட்டிய தூரத் தில் தெரிந்தது. யா ழ் தே வி நிற் பதற்கு முன் அதன் நுழைவாயில்களில் தொங்கிப் பாய்ந்து ஏறுபவர்களும், அது நின்றதும் முண்டியடித்துக்கொண்டு ஏறு பவர்களும், யன்னல் வழியாகத் தமது பொருட்களைத் திணித்து விட்டு பின்னர் நு  ைழ வா யி லா ல் ஏறுபவர்களுமாக **கோணர்சீற்’ எனும் இருக்கை தேடும் படலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாழ்தேவி நிறுத்தப்பட்டபோது நான் நின்றுகொண்டிருந்த இடத்தில் ஒரு நுழை வாயில் இருந்தமையால் அதிக சிரமமின்றி ஏறி 'அப்பனே' என்று ஓர் ஆசனத்தில் அமர முடிந்தது. சிறிது நேரத்தில். யாழ்தேவி புறப்படுவதற்கான சத்தத்து டன் இரைச்சலிட்டு முன்னுேக்கிக் கிளம் பியது. எனது நினைவுகளோ என் அம்மா வுடன் நான் வாழ்ந்த காலத்துக்கு பின் நோக்கிக் கிளம்பியது.
நான் வாழ்க்கையில் தனித்தவனகி நாளையுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது. பத்து மாதம் என்னைச் சுமந்து பெற்றெ டுத்து - பாலூட்டித் தாலாட்டிச் சீராட் டிப் பேணி வளர்த்து - என்னை இன் றைய இந்நிலைக்கு ஆளாக்கிய என் அன்னையை இழந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனல் நேற்றுப்போன்றல்லவா தெரிகிறது! அம்மாவின் இறுதிக்கிரிகையை நிறை வேற்றிவிட்டுக் கொழும்புக்கு வந்த நான், இப்போது அம்மாவின் அந்தியேட்டிக்காக அம்மாவின் ஊருக்கு - அம்மாவின் வீட் டுக்குக் காலடி எடுத்துவைக்கப்போகிறேன் அம்மாவின் வீட்டில் இப்போதிருக்குப் மாமாவும், மாமியும். பிள்ளைகளும் என்னை கண்டதும் வரவேற்பார்கள்தான். ஆனல் முன்பெல்லாம் கொழும்பில் இருந்து திருட் பும்போது என்னைக் கண்டு அம்மா அடையு

6Taiv. Fyao Tuasir
மகிழ்ச்சி அம்மாவைக் கண்டு என்னுள்ளத் தில் எழும் மகிழ்வலைகள் அப்பப்பா. அந்த மகிழ்வுக்கு அளவேது? அதை நான் இப்போது நினைத்துப் பார்க்கையில் என் னுள்ளம் ஏக்க மிகுதியால் வருந்துகிறதே!
அம்மா தெரிந்தும் தெரியாமலும் நான் உனக்கு எத்தனை பிழைகள் செய் திருப்பேன். கோபவெறி தலைக்கேறியதால் சிலசமயம் என்னை நான் மறந்து, நீ என் தாயென்பதையும் மறந்து உன்னை ஏசியும், பேசியும் நான்புரிந்த தவறுகள் கொஞ்சமா? அவற்றையெல்லாம் நீ எவ்வளவு பெருந் தன்மையுடன் பொறுத்து மன்னிப்பளித் தாய்!
இறுதிக் காலத்தில் உன்னுடலில் நோய் குடிகொண்டுவிட்டபோதும் கூட எனக்காக உன்னுடலை வருத்தினுய். அறுவகைச் சுவை களையும் ஆக்கி அளித்தாய். 'தாயோடு அறுசுவை போம் " என்ற தத்துவத்தின் உண்மை ஒளிர்வினை இப்போது காண்கின் றேன். உன் பொருளையெல்லாம் பொரு ளாக மதியாது என்னையே நீ பொருளாக மதித்து என்னை வாழவைக்க உன் பொருளை யெல்லாம் கொடுத்தாய். உன் உயிர் உலகை விட்டுப் போகின்ற இறுதி நிமிடத்திலும் உன் நினைவு என் நினைவாகவே இருந்ததை எப்படி மறப்பேன் ? இவ்வாறு உடல் பொருள் ஆவியையும், எனக்காகவே அர்ப் பணித்த உனக்கு நான் என்ன கைமாறு செய்வேனம்மா? அம்மா , நீதெய்வமம்மா. என் கண் கண்ட தெய்வமம்மா.. என் உள் நின்ருெளிரும் ஒளிவிளக்கம்மா நீ!
கொல்லனில் உலைக்களத்தில் ஊத ஊத மேன்மேலும் ஒளிரும் பொன்போன்று நான் எனது நினைவலைகளில் மீண்டும் மீண்டும் உன்னை இருத்திப் பார்க்கின்ற ஒவ்வோர் தடைவையும் உன் மகிமையின் ஒளிர்வினை என்னுள் காண்கின்றேன். கள்ள மற்ற உனது வெள்ளை உள்ளத்தையும், உன் உள்ளம் வாழ்வு பூராவுமே 6T6ardisints ஏங்கித் தவித்ததையும் நீ உயிருடன் இருக் கும்போது நினைத்துப் பார்க்காத நாள்
200 -

Page 227
ég அம்மா 9
இப்போது காலம்கடந்து உன்னை எண்ணி எண்ணிக் கண்ணீர் வடிக் கின் றே ன். "அம்மா . கவனமாய்ப் படிராசா தகப்பன் இல்லாத பிள்ளையல்லே நீ எனக்கு ஒரே பிள்ளை நீதான், கவனமாய்ப் படித்து முன்னுக்குவா இப்படி எத்தனை அறிவுரைகளை வழங்கினய். அவற்றை அப் போது நான் அசட்டை செய்தேன். இப் போது உன்னை இழந்து ஓர் மாதமாகி விட்ட இந்நேரத்தில் உன் மதிப்பு மிக்க அறிவுரைகளின் மகிமையை எண்ணிப் பார்க்கிறேன். உள்ளத்தால் உணர்ந்து கொள்கிறேன்.
அம்மா . .நீ உயிருடன் இருந்தபோது ஊற்றெடுத்துப் பிரவகித்த தாயன்புக் கடலில் நான் சுகமாகவே நீந்தி வந்தேன். பாற்கடல் மீன்கள் அங்குள்ள் பாலைப் பரு காது நீந்தியது போன்று உன் தாயன்பாம் கடலில் நீந்திய நானும் தாயன்பை அப் போது உணர்ந்திலன். நீ என்னை விட்டு இவ்வுலகினின்றும் பிரிந்தபின்தான் எனது தாயன்புக் கடல் வற்றியதை உணர்ந்தேன். இப்போது நான் நீந்தவில்லை; நடக்கின் றேன். வற்றிவிட்ட அந்தக் கடலின் அடி யில் கிடந்த கல்லும், முள்ளும் நிறைந்த அப்பாதையில் நடக்கின்றேன். வாழ்வின் கற்களிலும், முட்களிலும் நான் வைக்கும் ஒவ்வோர் அடியின் போதும் உன்னை நான் நினைக்கின்றேன்; வேதனை கொள்கின்றேன்; அந்த வேதனையால் வெந்துகொண்டிருக் கின்றேன்.
ஆறு வயதில் நான் அப்பாவை இழந்த தினல் நீ எனக்கு அம்மாவாக இருந்த தோடு அப்பாவாகவும் இருந்தாய். நித்த குடிவெறியரான அப்பாபோனதும் நீஎன்னை வறுமையிலும் செம்மையாய் வளர்த்தாய். எைைன நீ கண்ணை இமை காப்பதுபோல் காத்து வளர்த்ததால்போலும் உன் நினைவு என் கண்முன் நிலைத்துநிற்கிறது.
நான் உத்தியோகம் தேடி அலைந்து இறுதியில் கவலையுடன் வீடு திரும்பியதும் *வேல் உண்டு வினை இல்லை மயிலுண்டு
வி - 26 -

GTeón. JganoUTuan die
பயமில்லை" என்ற கந்தநாமத்தைக் கூறி என்னை நீ ஆறுதல்படுத்துவாய். நான் உத்தியோகம் ஆகிவிடவேண்டுமென்று நீ ஆறுபடை வீடுடைய முருகனை நாள் தோறும் பூச்சூடி கண்ணிர்சிந்த வணங்கி னயே. உன் வேண்டுதல் வீண்போகவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு நான் உத்தி யோகம் கிடைத்துவிட்ட செய்தியை உன் னிடம் கூறியபோது நீ அடைந்த மகிழ்ச்சி தான் எவ்வளவு ?
முன்பெல்லாம் கதைகள், கட்டுரை கள், நாவல்கள் என்று இலக்கியத்துறை யில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளேன். ஆனல் நீ இறந்தபின் உன் நினைவிலேயே என் காலம் கடந்துவிடுகின்றது. கதைக ளுக்கான கருக்களும், கற்பனைகளும் உதித்த என் சிந்தையில் இப்போது உனது சிந் தனையே திரும்பத்திரும்ப ஏற்படுகின்றது. ஏதாவது எழுதுவோம் என்று பேப்பரை யும் பேணுவையும் எடுத்தால் உன் நினைவில் உன்னைப்பற்றியே எழுதத் தோன்றுகிறது"
2 யாழ்தேவி முன்னேக்கிச் சென்றுகொண் டிருந்த அதன்பாதையில் பாலம் ஒன்றினைக் கடந்துகொண்டிருந்தது. பா ல த்  ைத க் கடக்கும்போது ஏற்பட்ட பெரும் இரைச் சல் பின்நோக்கிச் சென்ற-எனது அம்மா வின் நினைவலைகளிலிருந்து என்னை நிறுத்தி யது. நான் சுயநினைவு பெற்றேன். என் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணிரைக் கைக்குட்டையால் துடைத்துக்க்ொண் டேன். தலையைச் சற்றுமுன்னேக்கி நிமிர்த் திப் பார்க்கிறேன். எனக்குள் ஒருவியப்பு: திகைப்பு ; பதைப்பும் கூட.
என்ன ஆச்சரியம் ! எனது அம்மாவின் இளமை குன்ரு எழில் வதனம். நான் அவளை மீண்டும் மீண்ம்ெ பார்க்கிறேன். அவளும் என்னையே நோக்கி நிற்கிருள். அவள் பார்வையில் அனுதாபத்துடன் கூடிய புன்சிரிப்பொன்று தோன்றி மறை கின்றது. அது எனது அம்மாவின் புன் சிரிப்போ ? நான் காண்பது கனவோ,
201 -

Page 228
அம்மா
நனவோ என்ற ஐயம் மனதில் எழுகிறது. கனவல்ல நனவே என மனம் தெளிகிறது.
i 9 »
** அம்மா..! அம்மா அம்மா. வார்த்தைகள் உள்ளக் கருவறையில் எழுந்து வெளிக்கிளம்பாது என் உள்ளத் தின் உள்ளேயே தொடர்ச்சியாக ஒய் வின்றி ஒலிக்கிறது. சிந்தனைச் சுழற்சி இப் போது புதுவேகம் கொள்கிறது.
அவளின் முகம் அம்மாவின் فقا 5 م போன்றல்லவா இருக்கிறது? இறந்த எனது அம்மாதான் நான் இங்கு வருந்து வது கண்டு எழுந்தோடி வந்தாளோ ? அவள் தான் பிடிசாம்பலாகி விட்டாளே! அப்படியானல் இவள். ? 'அம்மா..! அம்மா..! அம்மா..!” என் இதயம் அவளை அழைக்கின்றதா ?
அம்மாவின் அழகுமுகம் பொழியும் இவளைக் கண்டதும் என் உணர்வுகள் என் னுள் உந்துதல் பெற அவள் காலடியில் விழுந்து வ"ங்கிவிடத் துடித்தேன்.
3 கந்தோரில் எனது சக நண்பர்கள் அங்கு வேலைபார்க்கும் பெண்களுடன் எவ்வளவு கேலியும், கிண்டலும் புரிவார்கள்! அவசிய மில்லாமல் அடிக்கடி அவர்கள் தங்கள் வீரப் பிரதாபங்களைப் பெண்கள் மத்தியில் கூறித் தம்மைத்தாமே புகழ்ந்து கொள்வார்கள். எனக்கோ இவை பிடித்தமற்ற செயல்கள். கந்தோரில் வேலை விடயமாக சக பெண் ஊழியர்களுடன் கதைக்கவேண்டிய சந்தர்ப் பங்கள் தினமும் எனக்கு ஏற்படுவதுண்டு. அப்போதெல்லாம் ஒரிரு வாக்கியங்களில் அளவாகப் பேசி எனது வேலையை முடித்துக் கொள்வேன். வேலை விடயமாகப் பெண்கள் யாராவது என்னுடன் வந்து கதைக்கும் போதும் நான் இவ்வாறுதான் நடந்து கொள்வது இயல்புளுது இந்த இயல்புக்கு முரணுக எந்தப் பெண்ணும் நடந்தது கிடை யாது. ஒவ்வொரு பெண்ணையும் பெயரள வில் தெரிந்துவைத்திருக்கின்றேனே ஒழிய, அதற்கு மேலாக அவர்களைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ள
2 --سمیہ

ஏன். சரவணபவன்
நான் முயற்சித்ததுமில்லை. ஆளுல் அம்மா வின் அழகு முகம் பொருந்திய இவளைக் கண்டதும் அவளைப்பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளும் அவா என்னுள் எழுந் தது. அவ் வுந்துதல் என்னைப் பேசவைத் ჭნჭნl •
'நீங்கள் எங்கே இருக்கிறது ?" அம்மா வுக்குமுன் நான் பேசுவதுபோன்று என் வார்த்தைகள் வெளிவந்தன.
"கொக்குவில்". அவள் ஒரே வார்த் தையில் பதில் கூறினுள், அம்மாவின் குர லில் இருக்கும் அதே இனிமை அவள் குரலி லும் இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவளைப்பற்றிய மேலும் பல விபரங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன்.
. நீண்ட அமைதி. பின் -
அவள் கேட்டாள் "உங்கள் உள்ளத் தில் பெரியதொரு சோகம் ஏற்பட்டிருப் பதைக் காண்கிறேன். கண்ணிர் விட்டு இப்படிக் கவலை கொள்ள அப்படி என்ன துன்பம் உங்களுக்கு நேர்ந்துவிட்டது?" நான் அதைத் தெரிந்துகொள்ளலாமா?
என்னுள்ளத்தில் பொங்கி நின்ற அந் தச் சோகக் கதையை ஒருவாறு அவளுக் குக் கூறி முடித்தேன். இறுதியாக எழுந்து கண்ணீர்விட்ட வண்ணமாகக் கூறினேன்; * உமது அழகு முகம் என் அம்மாவின் முகத்தைப் போன்றுள்ளது. உருவத்தா லும், உள்ளத்தாலும் நீர் அம்மாவைப் போன்றே இருக்கிறீர். எனது அம்மாவின் குரலின் இனிமையை உமது குரல் நாதத் தில் காண்கிறேன்."
நான் கூறி முடித்ததும் அவளும் எழுந்து கொண்டாள். ஒரு கையால் என்னை அணைத்தாள். மறுகையால் எனது கன்னத் தில் வழிந்திருந்த கண்ணிரைத் தனது கைக்குட்டையால் துடைத்து விட்டாள். அப்போது நான் சிறுவனக இருந்தபோது அழுகின்ற சமயங்களில் அம்மா தன் சேலைத் தலைப்பால் கண்ணிரைத் துடைத்து விடு கின்றபோது எனக்கு ஏற்படும் சுகம் ஏற் பட்டது போன்று இருந்தது.
02 -

Page 229
* அம்மா”
அவளும் கூச்சம் எதுவுமின்றி என்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் கேட் டறிந்து கொண்டாள். ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டோம்; புரிந்து கொண் டோம். அப்போது நான் கேட்டேன்
* உங்கள் பொழுதுபோக்கு என்ன ?"
" நாவல்கள் என்ருல் எனக்கு நிறை யப் பிடிக்கும். அதனுல் நாவல் படித் தலையே எனது பொழுதுபோக்கு ஆக்கிக் கொண்டேன்."
** எந்த எழுத்தாளரின் நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கும் ?"
* கலைக்கண்ணன் ' என்னும் புனை பெயரில் எழுதி வருகிறரே ஒருவர், அவ ருடைய எழுத்துக்களே எனக்குப் பிடித்த மானது. அவரது நாவல்கள் சமுதாயத்தை யதார்த்த பூர்வமாகச் சித்தரிக்கும்.அவரது 'சிறைவாசம்’ என்ற நாவலைப் படித்த பின்பு அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதிவிட முயன்றேன். ஆனல் அவரது சரியான முகவரி கிடைக்கவில்லை. * தமி ழிதழ் பத்திரிகையில் அவரது "பூமகள் என்ற நாவல் வாரந்தோறும் வெளிவந் தது. ஆனல் சென்ற மாதம் அது இடை யில் நின்றுவிட்டது, ' கலைக்கண்ணனின் " தாயார் இறந்து விட்டதனுல் அவர் தொடர்ந்து எழுத முடியாத நிலையில் தாயை இழந்து வருந்துகிறர். வெகு விரைவில் தொடர்ந்து எழுதுவார் எனப் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள். அப்போதும் ஒரு ஆறுதல் கடிதம் அவருக்கு எழுத முயற்சித்தேன். ஆனல் அவரது முக வரியை என்னுல் பெறமுடியாமல் போனது. இப்போதும் அவரின் பழைய நாவல்களைத் திரும்பத் திரும்பப் படித்து வருகிறேன். எத்தனை தடவை படிப்பினும் அவரின் நாவல்கள் சுவைகுன்ருதவை. காலத்தால் சாகாதவை "" என்று கூறியவள் தனது கையிலிருந்த "இதயவன்பு" என்னும் "கலைக் கண்ணனின் நாவலை எனக்குக் காட்டினுள்.
மீண்டும் "கலைக்கண்ணனின் முகவரி உங்களுக்குத் தெரியுமா?" என்று ஆவலு டன் கேட்டாள்.

sreir. ar gasruanais
நான் இதுவரை மறைத்து வத்த உண்மையை இனியும் மறைக்க மன மொப்பவில்லை. "நீங்கள் அவனின் முக வரிக்காக இனிக் கவலைகொள்ள வேண் டாம். அவனுக்கு நீங்கள் தெரிவிக்கும் பாராட்டை எனக்குத் தெரிவியுங்கள். அப் பாராட்டு அவனுக்கே போய்ச் சேரும்."
** என்ன. நீங்கள் கூறுவதொன்றும் எனக்குப் புரியவில்ல்லையே . . "
என் முகத்தில் ஒரு புன்சிரிப்பு இழை யோடக் கூறினேன்- 'அவன்தான் உங்கள் முன் நிற்கின் முன்"
* அப்படியானல். நீங்களா அந்தக் கலைக் கண்ணன் ???
**ஆம். நானேதான்."
அவள் ஆச்சரியத்துடன் என்னையே நோக்கி நின்ருள். அவளின் இதயம் ஆயிரம் கதை பேசியது. ஆனல் வாய் ம்ெளனம் சாதித்தது. மெளனத்தின் பின் ன ர் கேட்டாள்- ۔
** பூமகள் என்ற நாவலை இனி எப் போது தொடர்ந்து எழுதுவீர்கள்?"
o 6Tiši G35 எழுதப் போகிறேன். அம்மாவை இழந்தது முதல் அவளையே அல்லும் பகலும் நினைந்து என் வாழ்வு உருகிறதே . . "'
பதில் கூறிவிட்டு யாழ்தேவியின் விரைவு சிறிது சிறிதாகக் குறையவே யன்னலூடாக எனது பார்வையை வெளி யில் செலுத்தினேன். யாழ்ப்பாணம் புகை யிரத நிலையம் வந்துவிட்டதை அப்போது தான் உணர்ந்தேன். எனது சூட்கேசை எடுத்தவண்ணம் அவசரமாக அவளுக்கு விடை கூறினேன். ஆனல் அவள் எனக்கு விடை தரவில்லை. மாறக, "போய் வரு கிறேன்" என நான் கூறியபோது அவள் 'போகிறீர்களா ?' சின்று கேட்டுவிட்டு விம்மி விம்மி அழுதாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பெரும் சிரமப் பட்டு ஒருவாறு அவளைத் தேற்றிவிட்டு இறங்கினேன், புகையிரத நிலையத்துக்கு
203 -

Page 230
“ squitor ”
வெளியே வந்து புகையிரதப் பாதையின் அருகில் செல்லும் குறுகியவிதி வழியாகச் சென்றுகொண்டிருந்தேன். யா ழ் தே வி புறப்பட்டு என்னைக் கடந்து செல்ல முற் هایی -ا-Lلا
யாழ்தேவியின் உள்ளே தெரியும் மங்க லான வெளிச்சத்தில் அம்மாவின் முக வழகுடைய அவளின் முகத்தை இறுதித் தடவையாகத் தரிசிக்க நினைத்து என்னைக் கடந்துசென்ற யாழ்தேவியின் ஒவ்வொரு பெட்டியையும் உற்று நோக்கிக்கொண் டிருந்தேன். கடைசிப் பெட்டியும் அப் பால் கடந்தது. அவளின் 'அம்மா முகம்" காணுது ஏமாற்றமடைந்து என் கால்க ளைச் சோர்வுடன் முன்னுேக்கி வைத்தேன்.
** நில்லுங்கள், நானும் வருகிறேன்." என் பின்னல் அம்மாவின் இனிய குரல் இப்படி அழைக்கவே என் முகத்தைப் பின் நோக்கித் திருப்பினேன். அதிர்ச்சினயில் தாக்குண்டேன். சற்றுமுன் யாழ்தேவியில் நான் விடைகொடுத்துவிட்டு வ ந் த "அம்மாமுகம் * பொருந்திய அவள் என் னருகில் ஓடோடிவந்தாள். வந்ததும் என்னை அணைத்துக்கொண்டாள்.
" நான் உங்கள் எழுத்தில் என்னை எப்பவோ பறிகொடுத்தேன். இங்கு உங்க ளிலேயே என்னைப் பறிகொடுத்துவிட் டேன். தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள் ளுங்கள். உங்கள் அம்மாவே என்னை உங்க ளிடம் அனுப்பியதாகக் கருதி என்னை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா ??? அவள் என் நெஞ்சில் முகம் புதைத்து உருக்க மாகக் கூறினுள்.
அவளை இறுக்கமாகப் பற்றிக்கொண் டேன். " நிச்சயமாக ** இந்த ஒரு வார்த் தையத் தவிர வேறு எதுவுமே என்னுல் கூற முடியவில்லை. தண்கள் பனித்தன. என் கண்ணீர்த்துளிகள் அவளுடம்பில் பட்டுச் சங்கமமாகியது.
ஆழமான நடுக்கடலில் சுங்கான் உடைந்து தவித்த படகுக்குப் புதியதொரு
- 2

Gr sir. Fg alsJOT Lladdit
சுங்கான் கிடைத்தது போன்று, அம்மாவை இழந்து தவித்துக்கொண்டிருந்த என் மன துக்கு இப்போது புதியதொரு சுகம்-ஒரு நிம்மதி - ஒரு நிறைவு D67 L-tõ0. ஒ. இனியென் வாழ்க்கைப் படகு தடை யேதுமின்றிச் செல்வது உறுதியாகிவிட்ட தல்லவர் ?
என் கையிலிருந்த சூட்கேஸ் அவள் கைக்கு அசைகிறது. இதுவரை பாரம் மிக்க சூட்கே சைப் பற்றி வந்ததால் வலி உண்டான என் கை இப்போது 'அம்மா'வின் அழகு மென் கரங்களைப் பற்றிக் கொள்கிறது. எவ்வளவு சுகம்
"அம்மா வா" என்று அவளை உரிமை யுடன் அழைத்தேன்!
ஒரு பக்கம் பெளத்த விகாரையும், மறு பக்கம் ஆரிய குளமும் அமைந்த அந்த நெடுவீதி வழியாக இருவரும் கை கோத்த வண்ணம் சென்றுகொண்டிருந்தோம்.
'நீங்கள் என்னை "அம்மா?, என்று அழைக்கின்றீர்களே! அப்படியானல் உங் கள் அம்மா உயிருடன் இருந்தபோது நீங்கள் எவ்வாறு உயர்ந்த - உயிர்த் துடிப் புள்ள இலக்கியங்கள் ஆக்கினீர்களோ, அப்படியே இனியும் உங்கள் இலக்கியங்கள் உயர்ந்து பிரகாசிக்க வேண்டும்" என 'அம்மா' கூறிவிட்டுச் சிரித்தாள்.
'சந்தேகமில்லை. என் எழுத்துக்களை நீதான் அருகிருந்து அனுபவிக்கப் போகின் ருயே!"
ஒளிச்சுடர் விளக்காக இருந்து என்னை இவ்வுலகில் பிரகாசிக்கவைத்து, நான் பிரகாசிக்க வேண்டுமென்பதற் காகவே தன் நெய் உடம்பை உருக்கி, என்னை விளங்கவைத்த் என் அம்மா இப் போது எனது உள்ளத்திலேயே புதியதொரு ஒளியை ஏற்றிவிட்டாள். அந்த ஒளி உன் ளத்தில் எங்கோ பிரகாசித்தது.
tயாவும் கற்பனை)
04 -

Page 231
அன்பளிப்பு
'r' II''ifי6t
யாழ்ப்பாணம்.
With the Best Compliments from
女
||AHNATINN;
No. 2, Stanley Road, sJAFFNA

அன்பளிப்பு
சகலவிதமான மருந்துச் சாமான்களையும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளலாம்
க. செ.கைலாசம்பிள்ளை அன் சன்ஸ்
76, பெரியகடை, யாழ்ப்பாணம். போன் 7135
மலரும் வித்தியோதயத்துக்கு எமது வாழ்த்துக்கள்
மோட்டார் உதிரிப்பாக
விற்பனையாளர்கள்
UIT) (IDT"GLIf GibGITitici
YARL MOTOR STORES 108/s , ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
*Nagpasir
Gursă : 7752

Page 232
மனமார்ந்த ஆ
வாசிப்பதால் மனித කියවීමෙන් මිනිසt READING MAKE.
By Courtesy; MLK WHITE soar * மில்க்வைற் தயாரிப்பு ஆதரவு நாட்டின் பொரு ஆதரவாகும். ஆதரவு பெ மில்க்வைற் சவற் த, பெ. எண்: 77, யாழ்ப்ப
கினை : 79, மெசென்ஜர் வீதி,
கொழும்பு-12.
s
அன்பளிப்பு
Vijaya Hardware Stores
விஜயா ஹாட்வெயார்
ஸ்ரோர்ஸ் 146, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்

ன்பூரணமடைகிஜன் ඝඨිත ඝමිෂුණී ශාකයර් SA MAN PERFEG
wORKs, Jaffna (SR LANKA) புகளுக்கு நீங்கள் கொடுக்கும்! ளாதார வளர்ச்சிக்குக் கொடுக்கும் ருகுதல் அறப்பணிக்கே உதவும், ! காரத் தொழிலகம்
ாணம், தொலைபேசி 7233
தொலைபேசி : 36063
வித்தியோதயம் வாழ்க!
V. M. | Paramanathan |
& Sons
47, K. K. S. ROAD,
sJAFFNA

Page 233
- சட்டிவியல்
கம்பனிகள் சட்டம்
செ. தங்கராஜா B. Sc. (Madras), L. L. B. (Cey.)
Attorney - at - Law
பகுதிநேர விரிவுரையாளர் வித்தியோதய வளாகம்
- 2

[தமிழில் சட்டநூல்கள் இல்லாமையி னல் கம்பனிச் சட்டத்தின் முக்கிய ஏற் பாடுகள் (கம்பனி குலைத்தல் பற்றிய ஏற் யாடுகள் தவிர) மாணவர்களின் நன்மைக் காக இக் கட்டுரையில் சுருக்கித் தரப் பட்டுள்ளன. கம்பனிச் சட்டத்தைப் படிக்க வேண்டியுள்ள மாணவர்களின் தேவைக்கு இது உதவும் என்று நம்புகிருேம்.)
1. கம்பனிகளின் தன்மையும்
அவற்றை உருவாக்கலும் : 1 : 1. தன்மை
சட்டத்தில் கம்பனி என்பது ஒரு சட்ட நபராகும். அதாவது, சட்டக் கடப்பாடு களைப் பொறுப்பேற்றுக் கொள்ளவும் சட்ட வுரிமைகளைப் பிரயோகிக்கவும் இயலுமான ஒரு நபராகும். அது யாரை உறுப்பினர் களாகக் கொண்டுள்ளதோ அவர்களிலும் பார்க்க வேறுபட்ட ஒரு தனித்துவமான சட்ட நபராகும். எனவே கம்பனியானது அதன் பணிப்பாளர்களிடமிருந்தும், பங்கு தாரர்களிடமிருந்தும் வேறுபட்ட ஒரு தனி நபராகும். (சலோமன் எதிர் சலோமன் அன்ட் கம்பனி லிமிடெட் 1897 A.C. 22)
ஒரு செயற்கை நபரான கம்பனிக்குச் சட்ட நபரென்ற தனித்துவம் கிடைப்பது அது நியதிச் சட்டத்தின் கீழ்க் கூட்டிணைக் கப்படும்போதுதான் ஆகும். வியாபார மொன்று கம்பனியால் நடாத்தப்படும் போது அவ்வியாபாரத்திற்கு வர்த்தக முறையில் பல அனுகூலங்கள் கிடைக்கப் படுகின்றன ; அவையாவன:-
(அ) கம்பனிப் பங்குதாரர்கள் எவர் இறப்பினும் அல்லது அவர்களுள் எவரும்
7 -

Page 234
Si U6sflassi suLui
வங்குரோத்காக அல்லது சித்தசுவாதீன மற்றவராக வரினும், அவை கம்பனியைப் பாதிக்கா. கம்பனி தொடர்ந்து இருந்து வரும்.
(ஆ) கம்பனியினுல் பயன்படுத்தப் படும் மூலதனமானது நிரந்தரமான கூட் டுப் பங்குத் தொகுதியாகும். இது பங்கு தா ரர் க ளா ல் உதவப்பட்டிருப்பினும் இதனை வாபஸ்பெறமுடியதென்பதால் இது நிரந்தரமானதாகும்.
(இ) கம்பனியின் மூலதனமானது பங்குதாரர்களால் வாபஸ் பெறப்படமுடி யாத தொன்ருயினும், அது மாற்றப்படக் கூடியதாகும். அதாவது பங்குதாரர் ஒருவர் கம்பனி மூலதனத்தில் உள்ள தனது பங்கினை வேருெருவருக்கு விற்கலாம் அல்லது மாற்றலாம்.
(RF) கம்பனியினல் கூறப்படும் கடன் களுக்கும் மற்றும் கடப்பாடுகளுக்குமான பங்குதாரரின் பொறுப்பானது பங்குதாரர் தனது பங்கு தொடர்பில் இன்னமும் செலுத்தப்படாத தொகையினளவிற்கு அல் லது அவர் உத்தரவாதம்செய்த தொகையி னளவிற்கு வரையறுக்கப்படலாம்.
(உ) உறுப்பினர்கள், கம்பனி உறுப்பி னர்கள் என்ற முறையில் கம்பனியை எச் செய்கையினலும் கட்டுப்படுத்தமுடியாது. கம்பனி தகுதிவாய்ந்த, நியமிக்கப்பட்ட தனது முகவர்கள் மூலமாகவேதான் செயலாற்ற முடியும்.
(ஊ) கம்பனியினல் கூறப்படக்கூடிய சட்ட முறையான கடப்பாடுகளின் அளவும், தன்மையும் கம்பனி அமைப்பினல், முக்கிய மாக அகவுரையில் உள்ள நோக்கம்பற்றிய வாசகத்தினுல் ஆளப்படும்.
1 , 2. கம்பனிச் சட்டங்கள்
கம்பனிகள் பற்றிய சட்டம் மிகுதி யாக நியதிச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு சட்டமாகும். பங்குடைமை யின் பிரதிகூலங்களைக் கண்டறிந்த ஆங்கி லச் சட்டவறிஞர்கள், அவ்வில்லங்கங்களை
ー2

செ. தங்கராஜா
அகற்றும் நோக்குடன் கம்பனி" என்ற கோட்பாட்டைக் கண்டுபிடித்த நாள்முதல் கப்பணிகள் ஆங்கில நாட்டில் பிரபல்ய மடைந்து வந்தன, ஆங்கில நாட்டுக் கம் பணிகள் பற்றிய சட்டம் முதன்முதலில் 1866ஆம் ஆண்டின் 22ஆம் இலக்கக் கட்ட ளைச் சட்டத்தின் 3ஆம் பிரிவினுல் இலங்கை யில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் 1861ஆம் ஆண்டின் 4ஆம் இலக்கச் சட்டம் கூட்டுக் கம்பனிகள் பற்றிக் கூறி யிருப்பினும், கம்பனிகள் பற்றிய ஆங்கிலச் சட்டம் முழுமையாகக் கொண்டுவரப்பட் டது 1866ஆம் ஆண்டில்தான். இதனை அடுத்து 1888, 1893, 1897 ஆகிய ஆண்டு களில் பல்வேறு வகைக் கம்பனிகள் பற்றிய சட்டங்கள் ஆக்கப்பட்டிருந்திருப்பினும், 1938ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க கம் பணிகள் சட்டம்தான், கம்பனிகள் பற்றி ஏற்கனவே இருந்துவந்த எல்லாச் சட்டங் களையும் நீக்கி அவற்றின் ஏற்பாடுகளை ஒரு முகப்படுத்தி முழுமையானவொரு கம்பனிச் சட்டத்தை இலங்கைக்கு அளித்தது. 1938ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கம். பனிகள் கட்டளைச்சட்டம் காலத்துக்குக் காலம் சிறிதளவேதான் திருத்தப்பட்டிருக், இறதென்பதையும், அதுவே இன்றும் தொடர்ந்து இருந்துவரும் வலுவுள்ள சட்ட மென்பதையும் நாம் மனத்திலிருத்திக் கொள்ளவேண்டும். 1938ஆம் ஆண்டின் 51ஆம் இலக்கக் கட்டளைச் சட்டமானது முழுக்கமுழுக்க 1929ஆம் ஆண்டின் ஆங் கிலக் கம்பனிகள் சட்டத்தின் அடிப்படை யில் அமைந்த தொன்ருகும்.
கம்பனிச் சட்டமானது தற்கால நவீன சர்வதேசத் தொடர்புடைய சூழ்நிலைகளுக். கேற்ப அமைந்திருக்கவேண்டுமென்று கரு தப்பட்டு கம்பனிச்சட்ட மறுமலர்ச்சிக்காக இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு சிறந்த நல்ல ஆயத்தங்கள் மேற்கொள்ளப் பட்டிருப்பினும் கூட தீர்க்கமான முடிவு எதுவும் செயற்படுத்தப்படவில்லை என்பது மிகவும் துரதிஷ்டவசமானதாகும்.
08 -

Page 235
கம்பனிகள் சட்டம்
1 . 3. கம்பனி வகைகள்
பதிவு செய்யப்பட்ட கம்பனிகள் பின் வருவனவாகப் பாகுபடுத்தப் படலாம் :-
(அ) வரையறுக்கப்பட்ட கம்பனிகள் : இக்கம்பணிகளின் கடனுக்கான உறுப்பினர் களின் பொறுப்பானது வரையறுக்கப் பட்டதாகும். எனவே கம்பனியானது தனது கடப்பாடுகளை இறுப்பதற்குப் போதிய சொத்துக்களை வைத்திருக்கா விடின் அதன் கடன்களைச் செலுத்துமாறு கடன் கொடுத்தவர்கள் கம்பனியின் உறுப் பினர்களைக் கோர முடியாது. கம்பனியின் கடனுக்கான உறுப்பினர்களின் பொறுப்பு பின்வரும் இரண்டிலொரு வகையால் எழலாம்:
(i) பங்கினுல் வரையறுக்கப்பட்ட கம் பணியில், தனது பங்கில் செலுத்தப்படாத தொகைக்கு மேற்படாத எதற்கும் மேலதி கமாக ஒரு பங்குதாரர் பொறுப்பாக மாட்டார்
(i உத்தரவாதத்தினுல் வரையறுக் கப்பட்ட கம்பனியில், அவர் உத்தரவாதம் செய்யப்பட்ட தொகைக்கு மேற்படாத எதற்கும் மேலதிகமாக ஒருவர் பொறுப் பாக மாட்டார். உத்தரவாதத்தால் வரை யறுக்கப்பட்ட கம்பனியொன்று பங்கு மூல தனத்தையும் கொண்டிருக்கலாம்.
(ஆ) பகிரங்கக் கம்பனிகளும் தனியார் கம்பணிகளும் பதிவு செய்யப்பட்ட கம்பனி கள் ஒன்றில் பகிரங்கக் கம்பனிகளாக அல்லது தனியார் கம்பணிகளாக விளங்கி வருகின்றன.
(i) ஒரு பகிரங்கக் கம்பனி ஆகக் குறைந்தது 7 உறுப்பினர்களைக்கொண்ட தாகும். அதன் பங்குகள் இலகுவில் மாற்றக் கூடியவை. அது தனது பங்குகளைப் பொது மக்களுக்கு விற்கலாம்.
(i) தனியார் கம்பனியொன்று 2க்குக் குறையாத உறுப்பினர்களைக்கொண்டதா கும். அதன் பங்குகள் இலகுவாக மாற்றப் படக்கூடியனவல்ல. இதில் 50க்குமேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கக்கூடாது.
ଈପ୍ସି - 27 -
2

GF. s. asyTagT
தனியார் கம்பனிகள் பகிரங்கக் கம் பணிகளிலும் பார்க்க பல அனுகூலங்களை உடையன. எனவேதான் பொதுவாக முதலில் தனியார் கம்பனிகள் உருவாக்கப் கப்பட்டுப் பின்னர், அவை பகிரங்கக் கம்ப னிகள் ஆக்கப்படுகின்றன.
1. 4. பதிவு செய்யப்படும் கம்பனிகள்
உருவாக்கப்படுதல் 1. 4. 1. கூட்டிணைக்கப்படு முன்னரான
ஒப்பந்தங்கள் ஏற்கனவேயுள்ள ஏதேனும் ஒரு வியா பாரத்தை - ஆதனத்தை வாங்குவதற்கா கவே கம்பனியொன்று சாதாரணமாக உருவாக்கப்படுகிறது. ஆனல் அது கூட் டிணைக்கப்படும்வரை அதனுல் ஒப்பந்த மெதுவும் செய்யமுடிவதில்லை.
சில வேலைகளில் வியாபாரத்தை அல் லது ஆதனத்தை விற்பவருக்கும் உருவாக் கப்படப்போகும் கம்பனியின் முகவர் அல் லது நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற முறையில் இன்னுெருவருக்குமிடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்படலாம். ஆனல் அவர் இல் லாத ஒரு நபருக்காக முகவராகச் செய லாற்ற முடியாது. இதனுல் பின்வரும் விளை வுகள் ஏற்படலாம்
(அ) கம்பனி உருவாக்கக்பட்டபின் அதன் சார்பில் அது உருவாகுமுன்னர் செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்குக் கம்பனி கட்டுப்பட்டதாகாது. (இங்கிலிஸ் அன்ட் கொலனியல் புரடியூஸ் கம்பனி 19062CH. 435.)
(ஆ) கம்பனியானது ஒப்பந்தத்தின் மீது பொருள் விற்றவரை வழக்கிடமுடி யாது. (நேரல் லான்ட் கம்பனி எதிர் போலின் கோல்பரி சின்டிகேட் லிமிட்டெட் 1904. A. C. 120)
(இ) ஒப்பந்தத்திற்கு எவர் முகவராகச் செயற்பட்டாரோ அவரே அவ்வொப்பந் தத்திற்குத் தனிப்பட்ட முறையில் பொறுப் பாக இருத்தல்வேண்டும். (கெல்னர் எதிர் ušari 1866. L. R. 1 CP, 174.)
09 -

Page 236
suhusussair சட்டம்
மேற்படி சட்ட விளைவுகளைத் தடுக்கும் நோக்குடன் சில வாசகங்கள் சாதாரண மாக ஒப்பந்தத்தில் உட்புகுத்தப்பட்டிருக் கும். அவையாவன:-
(i) கம்பனிபின்னல் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால் முகவரின் பொறுப்பு முடிவடையும் : −
(i) கம்பனி குறிப்பிட்ட கால எல்லைக் குள் அத்தகைய உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளத் தவறுமிடத்து உடன்படிக்கைத் திறத்தவர்களுள் எவரும் அதனை நீக்க உரிமையுடையவராவர் ;
(ii) கம்பனி தொடங்கப்பட்ட பின் னர் அது புதிய உடன்படிக்கையினைச் செய்துகொண்டு முகவரின் பொறுப்பை நீக்கலாம்.
1. 4, 2. பதிவுசெய்தல்
கம்பனியை ஊக்குவிப்போர்கள் கம் பனிக்குத் தேவையான ஆகக்குறைந்த எண்ணிக்கையான சந்தாதாரர்களை(பகிரங் கக் கம்பனிக்கு 7; தனியார் கம்பனிக்கு2) முதலில் சேர்த்து உருவாக்கப்போகும் கம்பனியின் புறவுரையை அவர்களைக் கொண்டு ஒப்பமிடச் செய்தல் வேண்டும். பின்னர், அவர் பின் வரும் ஆவணங்களைக் கம்பனிப் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும். பதிவாளரிடம் கோப்பிடப்படவேண்டிய ஆவ ணங்கள் :
(அ) புறவுரை: இப்புறவுரை கம்பனி யின் பெயர். அதன் குறிக்கோள், அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம், அதன் மூலதனம், அதன் பொறுப்புடமை ஆகிய விடயங்கள்பற்றி எடுத்துக்கூறுவதாக இருத் தல் வேண்டும்.
(ஆ) அகவுரை: கம்பனியின் அலுவல் கள் முகாமை எவ்வாறு செய்யப்பட வேண்டுமென்ற ஒழுங்கு விதிகளை இவ் ஆவணம் கொண்டிருத்தல் வேண்டும்.
(இ) நியதிச்சட்ட வெளிப்படுத்துகை: இது கம்பனிச் சட்டத்தின் ஏற்பாடுகள் இணங்கி
8 Mars

GF. Silasy regr
யொழுகப்பட்டிருக்கின்றனவென வெளிப் படுத்துதலாகும்.
(ஈ) பணிப்பாளர்களாகச் செயலாற் றச் சம்மதம் தந்த ஆட்களின் நிரல்.
(உ) பணிப்பாளர்களாகச் செய லாற்ற விருப்பவர்களின் எழுத்திலான சம் மதங்கள்.
கவனிக்க: (ஈ. வும் (உவும் தனியார் கம்
பணிகளுக்குத் தேவையில்லை.
1. 4, 8. கட்டிணைப்புச் சான்றிதழ்
மேற்படி எடுத்துக் கூறப்பட்ட ஆவ ணங்கள் யாவும் கம்பனிச்சட்ட ஏற்பாடு களுக்கமைவாகவும், இணங்கியொழுகுவன வாகவும் பதிவாளரின் திருப்திக்கமைய இருக்குமிடத்துப் பதிவாளர் இக் கம்பனி யின் பெயரைக் கம்பனிகள் பதிவேட்டில் பதிந்து கூட்டிணைப்புச் சான்றிதழை வழங்குவர். கூட்டிணைப்புச் சான்றிதழ்த் தேதி முதல் உருவாக்கப்பட்ட கம்பனி யானது இ  ைடய் ரு வழியுரிமையை யும், பொது இலச்சினையையும் கொண்ட தளித்துவமான சட்ட நபராகக் கருதப் படும். மேலும் கூட்டிணைப்புச் சான் றிதழானது, பதிவுத்தொடர்பிலும் அது தொடர்பாக முன்னர் செய்யவேண்டிய நட வடிக்கைகளும் அதன் இடைநேர் விளை வான நடவடிக்கைகளும் முழுமையாக இணங்கியொழுகப்பட்டன என்பதற்கும். அது முறையாகப் பதிவுசெய்யப்பட்டிருக் கிறதென்பதற்கும் மறுதலிக்க முடியாச் சான்ருக இருக்கும்.
கூட்டிணைப்புச் சான்றிதழ் பெறப்பட்ட வுடன், கம்பனி சட்ட நபராகக் கருதப்படி னும் கூட தனியார் கம்பணிகள் தவிர்ந்த ஏனைய கம்பனிகள், உடனேயே வியாபாரம் தொடங்க முடியாது. அவை கட்டளைச் சட்டத்தின் 93ஆம் பிரிவின் ஏற்பாடுக ளுக்கு இணங்கியொழுகி வியாபாரச் சான் றிதழைப் பெற்றபின்னரே வியாபாரத்தி லீடுபட முடியும். 93ஆம் பிரிவின்படி கம் பனி ஆகக்குறைந்த சந்தாப் பணத்தை
س. 10{

Page 237
&lniussfassiv dy"Linio
மூலதனமாகப் பெற்றிருந்தாலன்றி வியா பாரச் சான்றிதழைப் பெறமுடியாது. ஆகக் குறைந்த சந்தாப் பணமென்பது ஆரம்பச் செலவினங்கள், ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மீதான கொடுப்பனவுகள், வியாபார மூலதனம் ஆகிய மூவற்றினதும் கூட்டுத்தொகையாகும்.
1. 4, 4. புறவுரை
உள்ளீடு : (1) வரையறுக்கப்பட்டது என்ற சொல்லினை உள்ளடக்கிய கம்பனி யின் பெயர் , (i) பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள இடம் (ii) கம் பணியின் குறிக்கோள்கள் ; (iv) கம்பனி உறுப்பினர்களின் பொறுப்பு வரையறுக்கப் பட்டதென்ற கூற்று (V) உத்தேசிக்கப் பட்ட மூலதனமும் அது எவ்வாறு பங்குக ளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதென்பதுவும்.
(அ) கம்பனிப்பெயர் கம்பனியின் பெயரில் 'வரையறுக்கப் பட்டது" என்ற சொல் இருக்கவேண்டு மென்பது நியச்சட்ட நிபந்தனையாக இருப் பினும் வர்த்தகம், கலை, விஞ்ஞானம், சமயம், அறநிலையம் அல்லது வேறு ஏதே னும் உபயோகமான குறிக்கோளுக்காக உருவாக்கப்பட்ட கம்பனிகள் "வரை யறுக்கப்பட்டது" என்ற பதத்தைப் பயன் படுத்தத் தேவையில்லை. ஆணுல் இதற்குப் பதிவாளரின் சம்மதம் தேவை. மேலும் இத்தகைய கம்பனிகளின் இலாபங்களைப் பங்கிலாபங்களாக வழங்கமுடியாது.
கம்பனியின் பெயர் துலாம்பரமாகவும், தெளிவாகவும் அதன் பதிவு அலுவலகத் திலும் மற்றும் கம்பனியின் எல்லா வியா பார நிலையங்களிலும் வைக்கப்படுதல் வேண்டும்.
கம்பனியின் பெயர் ஏற்கனவேயுள்ள ஒரு கம்பனியின் பெயரை ஒத்ததாகவோ, அதனேடு சம்பந்தப்பட்ட தெனக்கருதக் கூடிய அளவில் உள்ளதாகவோ, அல்லது வேறு கம்பனிப் பெயருடன் மயக்கம் தருவ தாகவோ இருக்கக்கூடாது. இவ்வாறிருப்
- 2

செ. தங்கராஜா
شمسسسسس
பின் பதிவாளர் அக் கம்பனியைப் பதிய மறுக்கலாம், அல்லது பெயர்ப் பதிவினல் இன்னலுற்ற திறந்தவர் அக் கம்பனிக் கெதிராகத் தடைக்கட்டளை பெறலாம். பின்வரும் வழக்குகள் இக் கோட்பாட்டை விளக்குவனவாகும்:-
(t) ஊவா சிலோன் எஸ்டேட் லிமி டெட் எதிர் ஊவா சிலோன் ரப்பர் எஸ் டேட் லிமிடெட்-தடைக்கட்டளை வழங்கப் lull-gil.
(i) செசயிட்டே பன்காட் எற் லவசர் எதிர் பன்காட் லவசர் மோட்டார் கம்பனி லிமிடெட் 2 CH. 513-தடைக்கட்டளை வழங்கப்பட்டது.
(ii) நேர்த் செசயர் அன்ட் மன்சஸ் டர் புறுவரி கம்பனி லிமிடெட் எதிர் மன்சஸ்டர் புறுவரி கம்பனி லிமிட்டெட் (1889) Ac. 87-தடைக்கட்டளை வழங்கப் Lull-gil.
(iv) சிலோன் இன்சூரன்ஸ் கம்பனி லிமிட்டெட் எதிர் யுனைட்டெட் சிலோன் இன்சூரன்ஸ் கம்பனி லிமிட்டெட் (48 NLR 567) என்ற வழக்கில் இன்சூரன்ஸ் என்னும் பதம் ஒருவரினதும் ஏகபோக உரிமை யில்லை என்றும் அது ஒரு செய்தொழிலைக் குறிப்பதாதலால் தடைக்கட்டளை வழங்கப் படமாட்டாது என்றும் தீர்ப்பளிக்கப் Ull-gil.
சில பதங்களும், வார்த்தைகளும், சொற்ருெடர்களும் பயன்படுத்தப்பட முடி யாதவை. அவற்றின் பிரயோகம் கட்டளைச் சட்டத்தின் 18ஆம்பிரிவினல் தவிர்க்கப்பட் டிருக்கின்றன. அவையாவன : "ருேயல், இம்பீரியல், மாநகரம், வரைவுபெற்ற, கூட்டுறவு, தேசிய, அரச, இலங்கை முதலியன.
பெயரைச் சிறப்புத் தீர்மானத்தினலும், பதிவாளரின் சம்மதத்துடனும் மட்டுமே மாற்ற முடியும்.

Page 238
akui usisir sulLuh
(ஆ) கம்பனியின் பதிவலுவலகம் கம்பனியின் பதிவு அலுவலகம் எம் மாவட்டத்தில் அமைந்திருக்கவேண்டுமென் பது அகவுரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கம்பனிக்கும் ஒரு பதிவு அலுவலகம் இருத்தல் வேண்டும். இவ்வலுவலக இடம் பதிவாளருக்கு அறி விக்கப்படவேண்டும். கம்பனிக்கு அறிவிக் கப்படவேண்டிய அறிவித்தல்கள் யாவும் அதன் பதிவலுவலகத்திற்கே அனுப்பப் படும்.
(இ) கம்பனியின் குறிக்கோள் சந்தாதாரர்கள் என்னசெய்யப்போகி முர்கள் என்பதை மட்டும் கூறுவதல்ல இவ்வாசகம். இது இரு பயனுடையது. முதலாவதாக, குறிக்கோள் வாசகம் கம் பணியின் தத்துவங்களை வரையறை செய்வ தாகும். இரண்டாவதாக, இவ்வாசகம் கம்பனியின் செயற்றத்துவங்களை வரை யறை செய்வதாகும். கம்பனி குறிக்கோள் வாசகத்திற் கொடுக்கப்பட்ட தத்துவங்க ளுக்கு முரணன எவ்வித செயலையும் செய்ய முடியாது. தத்துவத்திற்கு அப்பாற்பட்ட ஒப்பந்தங்கள்வறிதானவையாகும்.(அஷ்பரி ரெயில்வே கரீஜ் கம்பனி எதிர் ரிச் 1875 L. R. 7 H. L 672.)
மேற்படி விதி பொதுமக்களையும் இனி வரப்போகும் பங்குதாரர்களையும் பாது காக்கவே அமைந்துள்ளது. எனினும் பின் வரும் சந்தர்ப்பங்களை யும் விளைவுகளையும் அவதானித்தல் வேண்டும் :-
(அ) செய்யப்பட்ட செயல் பணிப்பா ளர்களின் தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட தாய் மட்டும் இருந்தால், பங்குதாரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளலாம்;
(ஆ) அது அகவிதிகளுக்கு அப்பாற் பட்டதாயின் கம்பனி அக விதியை முறை யாக மாற்றியமைக்கலாம்;
(இ) கம்பனியின் அகவிதி கடும் பொருள் கோடலுக்கு உட்படுத்தப்படுத லாகாது. (வொல்டர் எதிர் லண்டன் சதாம் அன்ட் டோவர் ரெயில் கம்பனி)

செ. தங்கராஜா
(ஈ) வெளிப்படையாகச் சொல்லப் படாத சில தத்துவங்கள் உட்கிடையாக ஊகிக்கப்படுதல் வேண்டும்.
இன்று, கம்பனியை ஊக்குவிப்பவர் கள் கம்பனியின் நோக்கங்களை மிக விரி வாக எடுத்துக் கூறுவதுண்டு. அவ்வாரு யினும் கம்பனியின் நோக்கங்களை முக்கிய நோக்கம், இடைநிலை நோக்கமெனப் பாகு படுத்தலாம். கம்பனி தனது முக்கிய நோக் கத்தை அடைய முடியாவிட்டால், அதன் இடைநிலை நோக்கம் அடையப்பட முடியு மாயினும் கூட, கம்பனி கலைக்கப்பட வேண்டும். (ஜேர்மன் டேட் கோப்பி கம் usof 1882).
நோக்கம் பற்றிய வாசகம் பின்வருட நோக்கங்களுக்காக மாத்திரமே சிறப்புத் தீர்மானத்தினுல் மாற்றப்படலாம்
(1) கூடிய பொருளாதார மேன்மை, (ii) கம்பனியின் முக்கிய நோக்கினை புதிய அல்லது சீர்படுத்திய செய்முறை களால் எய்தல்.
(ii) அதன் இயக்கெல்லையை விரிவாக் கல்,
(iv} ஏதேனும் நோக்கினை மட்டுப் படுத்துதல் அல்லது விட்டுவிடுதல்.
(W) வியாபாரத்தை விற்றுவிடுதல். (wi) வேருெரு கம்பனியுடன் கூட்டி ணைத்தல்,
நோக்கம் பற்றிய வாசகம் மாற்றப் படுவதை ஆட்சேபித்து கம்பனியின் பங்கு களில் 15சத வீதத்திற்குக் குறையாத பங்குகளையுடைய பங்குதாரர்கள், நீதி மன்றத்திற்கு 21 நாட்களுக்குள் மனுச் செய்யலாம். அவ்வாறு மனுச்செய்யப்படின் நீதிமன்றத்தின் தீர்மானத்தின் பின்னரே அம்மாற்றம் வலுவுள்ளதாக வரும். (ஈ) வரையறைப் பொறுப்பு
கம்பனி பங்குகளினுலா அன்றி உத் தர வாதத்தினுலா வரையறுக்கப் பட்ட தென்பதை அகவுரையில் எடுத்துக் கூறுதல் வேண்டும்.
22 -

Page 239
6à Ussassir FLui
(உ) மூலதனம்
கம்பனியின் மூலதனம் எவ்வாறு பங்குக ளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை மூலதனம் பற்றிய வாசகம் எடுத்துக் கூறும் சந்தாதாரர் ஒவ்வொருவரும் ஒரு பங்குக் குக் குறைய எடுத்தலாகாது. (ஊ) இணைப்பு வாசகம்
மேற்படி ஐந்து கட்டாய வாசகங் களுடன் சந்தாதாரர்கள் தமது கூட்டுச் சேரும் எண்ணத்தை எடுத்துக்கூறுவதே இவ்வாசகமாகும். இவ்வாசகத்தினடியில் ஆகக்குறைந்த ஏழு சந்தாதாரர்கள் ஒப்ப மிடுவர். அவர்களது பெயர், விலாசம், தொழில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் பங்கின் எண்ணிக்கை ஆகியன தரப்பட வேண்டும். சத்தாதாரர்கள் ஒவ்வொருவ ருக்கும் தாம் எடுத்துக்கொண்ட பங்குக ளுக்கான பணத்தைச் செலுத்துவதற்கும், அகவுரைக்கு ஒப்பமிடுவதற்கும், முதற் பணிப்பாளர் சபையை நியமிப்பதற்கும், அவ்வாறன நியமனம் தாமதப்பட்டால் பணிப்பாளர்களாகத் தாமே கடமை யாற்றவும் கடமைகள் உண்டு.
1. 4. 5. அகவுரை
இவை கம்பனியின் முகாமைபற்றியும் கம்பனிக்கும் உறுப்பினர்களுக்கும், உறுப்பி -னர்களுக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கு மிடையே உள்ள தொடர்புகளையும் பற்றிய ஒழுங்கு விதிகளாகும். அநேகமான கம்பனி கள், கம்பனிச் சட்டத்தின் (அ) நிரலில் காணப்படும் புறவுரையையே தமது தேவைப்பாடுகளுக்கிணங்க ஏற்ற மாற்றங் களுடன் ஏற்றுக்கொள்ளுகின்றன.
(அ) உள்ளீடு :- (i) பங்குகள் வழங் கல், பங்குரிமைகள் , அவற்றை மாற்றும் வழிவகைகள்: (i) பங்குச் சான்றிதழ்கள் வழங்கல், அழைப்புகள், இழப்பீடுகள் முதலியன; (ii) பங்குகளின் மாற்றமும் வழியுரிமை மாற்றமும் (iv) கணக்குகள் கணக்குப் பரிசோதனை பற்றிய ஏற்பாடுகள்; (V) பொதுக்கூட்டங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையும் அறிவித்தல் பற்
- 2

Gs. SSIGT
றிய ஏற்பாடுகளும்; (wt) பணிப்பாளர்க ளினதும், செயலாளரினதும் நியமனமும் கடமைகளும் .
அ கவு  ைர அச்சிடப்பட்டிருத்தல் வேண்டும். அகவுரைகள் பதியப்பட்டதன் மேல் கம்பனியையும்,அதன் உறுப்பினர்களை யும் கட்டுப்படுத்தும் அகவுரை எப்பொழு தும் புறவுரைக்கு அமைந்ததே ஆகும். அகவுரை கம்பனியின் தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட எவ் வேற்பாட்டையும் கொண்டிருத்தலாகாது.
அகவுரையின் எவ்வாசகமும் சிறப்புத் தீர்மானத்தின் மூலமே மாற்றப்படலாம். இம் மாற்றமானது சட்டபூர்வமானதாக வும் புறவுரைக் கமைந்ததாகவும் சிறு பான்மை உறுப்பினர்களின் நலனை மோசடி செய்வதாக இல்லாததுமாய் இருத்தல் வேண்டும். (அலன் எதிர் கோல்ட் ரீவ்ஸ் லிமிட்டெட். 1 Ch, 656 - சைட் பொட்டம் எதிர் கேர்சோ லீஸ், ஆன்ட் கம்பனி 1 Ch. 154.)
அகவுரையினதும், புறவுரையினதும் பிரதிகள் பதிவலுவலகத்தில் வைக்கப்பட் டிருத்தல் வேண்டுமென்பதுடன் அது எவ ராலும் பெறப்படுவதற்கானதாகவும் இருத் தல் வேண்டும்.
2. ஊக்குவிப்போனும் கம்பனி
விபரத் திரட்டும் : 2 . 1. ஊக்குவிப்போன்
சட்டத்தில் எங்கணும் ஊக்குவிப்போன் பற்றி வரைவிலக்கணம் கூறப்படவில்லை. ஊக்குவிப்போன் என்பவன் கொடுக்கப் பட்ட குறிக்கோள் தொடர்பில் கம்பனி யொன்றை உருவாக்க முனைந்து அதற் கான ஆயத்தங்களைச் செய்பவன் என்று கூறலாம். (ரைகுரஸ் எதிர் கிராண்ட் 1977 2 GPD 541 - }
ஊக்குவிப்பவர்கள் கம்பனியின் முக வர்களுமல்ல, நம்பிக்கைப் பொறுப்பாளர் களுமல்ல. ஏனெனில் அவர்கள் கம்பனிக் காகச் செயலாற்றும்போது கம்பனி கூட் டிணைக்கப் பட்டிருக்கவில்லை யாதலால் அது
13 -

Page 240
கம்பனிகள் சட்டம்
சட்ட நபரல்ல, ஆனல் ஊக்குவிப்போர் கம்பனியுடன் நம்பிக்கையுறவு கொண்ட வர்களாவர். (ஏர்லங்கர் எதிர் நியு சோம் பேரோ போஸ்பேட் லிமிட்டெட் 1878.3 AC 1236).
ஊக்குவிப்போன் நேரடியாகவோ மறை முகமாகவோ கம்பனியின் அறிவும், சம்மத மும் இன்றி இலாபமெதுவும் பெறுத லாகாது. அவர் இரகசிய லாபமெதனையும் பெற்ருல் அத் தொகையைக் கம்பனிக்குக் கொடுத்தல் வேண்டும். (லீட்ஸ் அன்ட் ஹன்லி தியேட்டர் ஒவ் வரயிற்றீஸ் லிமிட் GL 2CH 809).
ஊக்குவிப்போன் ஒருவன் தனது பொருளை அல்லது ஆதனத்தைக் கம்ப னிக்கு விற்கும்போது
(அ) அவ்வாதனத்தின் மீதான அக் கறையை சுயாதீனமான பணிப்பாளர் சபைக்கு வெளியிடுதல் வேண்டும் ; அல்லது
(ஆ) அத்தகைய எல்லா நிகழ்வுகளை யும் பொதுமக்களுக்கு கம்பனி விபரத் திரட்டுமூலம் வெளியிடுதல் வேண்டும்.
2.1. கம்பனி விபரத் திரட்டு
" கம்பனியின் ஏதேனும் பங்கை அல் லது கடன் பத்திரத்தைப் பொதுமக்கள் வாங்குவதற்காக முனைவு செய்யும் ஏதே னும் விபரத்திரட்டு, அறிவித்தல், சுற் றறிக்கை, விளம்பரம் அல்லது வேறு முனை வழைப்பே கம்பனி விபரத் திரட்டாகும்’ என்று 363ஆம் பிரிவில் குறிப்பிடப்பட் டிருக்கிறது. கம்பனி விபரத்திரட்டு வெளி யிடப்படுவதன் நோக்கம் பொதுமக்களைக் கூடிய முறையில் கவருவதற்கேயாம்.ஆனல் சட்டத்தின் நோக்கம் பொதுமக்கள் தவ ருக வழி நடாத்தப்படுவதையும், மோசடி செய்யப்படுவதையும் தவிர்ப்பதேயாம்.
கம்பனி விபரத் திரட்டை வெளியிடு வதற்குப் பொறுப்பானவர்கள், கம்பனியில் முதலீடு செய்வதனல் ஏற்படப்போகும் அனுகூலங்களைப் பற்றி எடுத்துக் கூறுபவர் களாதலால், அதில் காணப்படும் எல்லா
- 2

Gs. தங்கராஜா
நிகழ்வுகள் பற்றியும் மிகவும் திட்டவட்ட மாகவும், மெய்யாகவும் எடுத்துக் கூறவேண் டுமென்பதுடன் தமது அறிவுக்கு எட்டிய பாரிய நிகழ்வெதுவும் பற்றிக் கூருமலு மிருக்கக் கூடாது, கம்பனி விபரத்திரட்டை வெளியிடுவதற்குப் பொறுப்பானவர்களின் கடமைகளையும், அக்கடமைகளைப் புரியாத விடத்து ஏற்படும் விளைவுகளையும் நூலாசி ரியர் பார்மர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிருர் :
(i) கம்பனி விபரத் திரட்டை வெளி யிடுவதற்குப் பொறுப்பானவர்கள் பொய் யான அல்லது தவருண கூற்றுக்களைச் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யின்
(அ) வழங்கப்பட்ட பங்குகள் மோச டிக்காக அல்லது பொய்யான பிரதிநிதித் துவத்திற்காக நீக்கப்படலாம்.
(ஆ) மோசடிக்காக அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கப்படலாம்.
(இ) கட்ட ளை ச் சட்டத்தின்கீழ் பொய்யான பிரதிநிதித்துவத்திற்காக அவருக்கெதிராக நட்டஈட்டு வழக்குத் தொடுக்கப்படலாம்.
(ii) கம்பனிகள் கட்டளைச் சட்டத் தினல் வெளியிடப்பட வேண்டுமென்று தேவைப்படுத்தப்பட்ட எல்லா விடயங்கள் பற்றியும் அவர் கம்பனி விபரத்திரட்டில் வெளியிடுதல் வேண்டும். இவ்விடயம் பற்றிய சட்ட ஏற்பாடானது (அ) முக்கிய நிகழ்வுகளை மறைத்து வைத்தல்; (ஆ) கம் பனியில் பணிப்பாளர்கள் முக்கிய பண முதலீடு செய்யாமை; (இ) போதிய மூல தனத்தைத் திரட்டாது கம்பனி வியா பாரத்தை தொடங்குதல்; (ஈ) வாங்கப் பட்ட ஆதனவுக்கான விற்பனைப் பணமாக கூடுதலான பணங்களைக் ஊக்குவிப்போ ருக்கு வழங்கி மூலதனத்தைக் குறைத் தல் ஆகிய நிகழ்வுகளைத் தடுப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது.
கம்பனி விபரத்திரட்டை வெளியிடும் கம்பனியொன்று கட்டளைச் சட்டத்தின் நான்காம் அட்டவணையில் 1ஆம் பாகத்தில்
14 -

Page 241
கம்பனிகள் சட்டம்
குறிப்பிடப்பட்டுள்ள எல்லா விடயங்கள் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். அத் துடன். அவ்வட்டவணையின் 11ஆம் பாகத் தில் காணப்படும் அறிக்கைகளும் அத னுடன் இணைக்கப்படவேண்டும். அத் தகைய விடயங்களும் அறிக்கைகளும் பின் வருமாறு :
(அ) புறவுரையின் உள்ளீடும் சந்தா தாரர்களின் பெயர், விபரங்கள்,முகவரிகள் ஆகியனவும்
(ஆ) கணக்குப் பரிசோதகர்களின் பெயரும், முகவரியும்.
(இ) பணிப்பாளர்களின் பெயர்கள், விபரங்கள் மற்றும் முகவரிகள் முதலியன -வும் அவர்களின் ஊதியங்களும்
(ஈ) ஊக்குவிப்போருக்குக்கொடுக்கப் பட்ட பணத்தொகை எதுவும், அதற்காக அவரிடமிருந்து கம்பனி பெற்ற எதிர்ப் பயனும்,
(உ) பங்குகளின்பல்வேறு வகைகளும், அவை தொடர்பான வாக்குரிமைகளும், மூலதனம், பங்கிலாபம் தொடர்பான சிறப்புரிமைகளும்,
(ஊ) பங்குக்காக விண்ணப்பம் செய் யப்படும்போதும் பங்குகள் வழங்கப்படும் போதும் செலுத்தப்படவேண்டிய பணத் தொகை. x, (எ) தாபிப்பவர்கள் பங்குகள், எவை யேனுமிருப்பின் அதுவும், பணிப்பாளர்க ளின் தகமைக்காக நிர்ணயிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையும்.
{ஏ) ஏதேனும் வியாபாரம் வாங்கப் பட்டிருந்தால் அதற்காகக் கொடுக்கப் பட்ட விலையும், நன்மதிப்புக்காகக் கொடுக் கப்பட்ட தொகையும்.
(ஐ) ஆரம்பச் செலவுகள் பற்றிய மதிப் 17G.
(ஒ) கம்பனியினுல் சாதாரண வியா பார முறையில் அல்லது கம்பனி விபரத் திரட்டு வழங்கப்படுவதற்கு இரு ஆண்டுக ளுக்குள் செய்யப்பட்ட முக்கிய ஒப்பந்தங் கள் பற்றிய விபரங்கள்.
1

செ. தங்கராஜா
(ஒ) கம்பனி வியாபாரம் தொடங்கி நடாத்தியிருப்பின் வியாபாரம் நடாத்தப் பட்ட காலப்பகுதி.
(ஒள) விற்பனைக் கமிசன் ஏதேனு மிருப்பின் அத்தொகை.
(க) பொதுமக்களுக்குப் பங்கு கள் விற்பனைக்காக வைக்கப்படும்போது ஆகக் குறைந்த சந்தாப்பணம்.
fங்) ஊக்குவித்தலிலும் கம்பனியினல் கொள்ளப்பட்ட ஆதனங்களிலும் பணிப் பாளர்களின் அக்கறையும், பணிப்பாள ராக்குவதற்கு அவரைத் தூண்ட அல்லது அவர் தகமையெய்த அவருக்குச் செலுத் தப்பட்ட பணத்தொகை.
(ச) பணமாகவன்றி வேறு ஏதேனும் எதிர்ப்பயனுக்காக வழங்கப்பட்ட பங்குக ளின் அல்லது கடன் பத்திரங்களின் எண் ணிக்கை.
அறிக்கைகள் :-
(அ) கம்பனி விபரத்திரட்டு வெளி யிடப்படுவதற்கு முந்திய மூன்று ஆண்டுக ளுக்குமான கணக்குப் பரிசோதகர் அறிக்
6) ES 56'
(ஆ) ஏதேனும் வியாபாரம் வாங்கப் பட வேண்டுமாயின் அவ்வியாபாரம் பற்றி பெயர் குறிப்பிட்ட ஒரு கணக்காளரின் அறிக்கை.
கம்பனியொன்று விபரத்திரட்டை வெளியிடாவிடின் அக்கம்பனி பங்குகளை வழங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் பதிவாளரிடம் விபரத் திரட்டுக்குப் பதிலான கூற்று ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். விபரத் திரட்டுக்குப் பதிலான கூற்றும் விபரத் திரட்டிலுள்ள அதே விபரங்களைக் கொண்டிருத்தல் வேண்டுப்.
3. உறுப்பினர்களும் பங்குதாரர் களும்
3. 1. எவ்வாறு உறுப்பினராகலாம் என்பது: பின்வரும் ஏதேனும் வழிகளில் ஒருவர் கம்பனியின் உறுப்பினராகலாம் : k .

Page 242
கம்பனிகள் சட்டம்
(அ) புறவுரைக்கு ஒப்பமிடுதன் மூலம் ஒருவர் கம்பனியின் உறுப்பினராகலாம். புறவுரைக்கு ஒப்பமிடுபவர்கள் யாவரும் கம்பனியின் உறுபினர்களாகக் கருதப்பட்டு அவர்களின் பெயர் உறுப்பினர் பதிவேட் டில் வைக்கப்படல் வேண்டும். இவர்களின் விடயத்தில் இவர்கள் உறுப்பினர்களாக வருவதற்குக் கம்பனி அவர்களுக்குப் பங்கு கள் வழங்கியிருக்கத் தேவையில்லை. (லண் டன் அன்ட் புரவின்சியல் முதலி கம்பனி (1877); நிக்கல்சின் வழக்கு (1885)].
(ஆ) உடன்படிக்கையினலும் சிலர் கம்பனியின் உறுப்பினராகலாம். இது பல வழிகளில் ஏற்படலாம் -
(i) கம்பனியிடமிருந்து பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்து, பங்கினைப் பெற்றதனுல் உறுப்பினர் இடாப்பில் பெய ருடையவர்கள்.
(ii) வேருெரு பங்குதாரரிடமிருந்து பங்கினை வாங்கியதனுல் மாற்றம் பெற்ற வர்கள்.
(இ) பங்குதாரர் இறப்பின் அவரது பங்குகள் அவரது வழியுரிமையாளருக்குச் செய்வதால்.
(ஈ) ஒருவர் தனது பெயரை உறுப் பினர் இடாப்பில் இருக்கவிட்டு தம்மை உறுப்பினரெனக் காட்டிக்கொள்வதினுல், (சுவெல்ஸ் வழக்கு 1866).
உ) பணிப்பாளராகச் செயலாற்றும் ஒருவர் சில வேளைகளில் தனது தகமைப் பங்குசளை வாங்க உடன்பட்டுள்ளாரெனக் கருதப்படுவார், (சால்ரன் எதிர் நியூ பஸ் ரன் கம்பனி. 1899, 1 CH, 775).
(ஊர் கம்பனியின் பங்குகளின்மீது பிணை ஈடாகப் பணம் கடன் கொடுத்த ஒருவர் அப்பங்குகள் தொடர்பில் உறுப் பினர் போன்று பொறுப்பாவார்.
(øyq-F6ör Saupšs5 1 870 · 5 Ch. A. 294 j. (எ) புனைப்பெயரில் அல்லது பொய்ப் பெயரில் பங்குகளை வாங்கும் ஒருவரும் உறுப்
21 ܚ

செ. தங்கராஜா
பினர் போன்று பொறுப்புடையவரே, (சென்றல் கிளென்டிக் கோல்ட் மைனிங் கம்பனி 1899) .
3. 2. பார் உறுப்பினராகலாம் என்பது
கம்பனியொன்று வெருெரு கம்பனிப் பங்குகளை வாங்கலாம் ; அதன் உறுப்பின ராகலாம். ஆணுல் கம்பனி தனது பங்கு களைத் தானே வாங்கமுடியாது. அகவிதி இதற்கு அனுமதித்தாலும்கூட இது முடி யாததாகும், ரெவர் எதிர் விற்வேர்த். 1887. 12 Ac. i 09)
பராயமடையாதவர் ஒரு பங்குதார ராக வரலாம். ஆணுல் அவ்வொப்பந்தம் வறிதாக்கப்படக்கூடிய தொன்ருகும்.
இலங்கையில் கல்யாணம் செய்த பெண் ஒருத்தி திருமணமான பெண்களின் ஆதனம் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று ஒரு பங்குதாரராக முடியும்.
, 3. உறுப்பினர் இடாப்பு
ஒவ்வொரு கம்பனியும் தனது உறுப் பினர்களது பெயர்கள், முகவரிகள், அவர் களின் பங்குகளின் எண்ணிக்கை, அவர்கள் உறுப்பினர்களாக வந்த தினம், அவர்கள் உறுப்பினராக இல்லாதொழிந்த தேதி: ஆகியவிபரங்களை உள்ளடக்கிய உறுப்பினர் இடாப்பினை வைத்திருத்தல் வேண்டும். உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐம்பதிற் குக் கூடுதலாகவும் உறுப்பினர் இடாப்பு அகர வரிசையில் இல்லாதுமிருந்தால் அவ் விடாப்பினைச் சுலபமாகப் பார்வையிடுவ தற்கு வசதியாகச் சுட்டொன்றும் வைத். திருக்கப்படுதல் வேண்டும். உறுப்பினர் இடாப்பும் சுட்டும் கம்பனியின் பதிவலுவ லகத்தில் வைத்திருக்கப்பட வேண்டுமென் பதுடன் எவராலும் பார்வையிடுவதற்கும். கிடைக்கச் செய்தல் வேண்டும்.
உறுப்பினர் இடாப்பில் உறுப்பினர் களின் உரிமைபற்றிக் குறிப்பிட்டிருக்குமே. தவிர சட்டவுரிமை தவிர்ந்த நம்பிக்கைப் பொறுப்பு போன்ற ஏனையவுரிமைகள்
6 -

Page 243
கம்பணிகள் சட்டம்
எதுவும், அவை வெளிப்படையாக உரு வாக்கப்பட்டிருப்பினுஞ் சரி உட்கிடையாக உருவாக்கப்பட்டிருப்பினுஞ்சரி பதியப்படு தலாகாது.
ஒவ்வொரு கம்பனியும் ஒவ்வோராண் டும் கம்பனி உறும்பினர் இடாப்பில் செய் யப்பட்ட மாற்றங்களை உள்ளடக்கிய ஆண் டுத் திரட்டொன்றைத் தயாரித்துப் பதி வாளருக்குக் கிடைக்கச்செய்தல் வேண்டும்
4. பங்குகள் 4. 1. பங்கு முலதனம்
முதன்மைக்கண் பொறுப்புக்கும் இரண் டாவதாக அக்கறைக்குமாக கம்பனிச் சட்டத்திற்கிணங்க எல்லாப் பங்குதாரர் களுக்கிடையே ஏற்பட்ட உடன்படிக்கை யின் மூலம் உருவாக்கப்பட்ட அக்கறை யின் பண அளவே பங்காகும். அகவுரை யின் பயனுக எழுந்த ஒப்பந்தத்தின் முதல் விளைவே பங்கு. பங்கென்பது ஒரு பணத் தொகையல்ல. அது ஒப்பந்தத்திலுள்ள பல வேறு உரிமைகளைக் கொண்ட ஒரு பணத் தொகையால் அளவிடப்படக்கூடிய ஓர் அக்கறையாகும். பங்கு மூலதனம் என்ற சொற்கள் பின்வரும் வழிகளில் பயன்படுத் தலாம்;
(அ) பெயரளவிலான அல்லது அதிகார மளிக்கப்பட்ட மூலதனம்
இது கம்பனியால் மொத்தமாக வழங் கப்படக்கூடிய பங்குகளின் பெறுமதி. (ஆ) வழங்கப்பட்ட மூலதனம்உண்மையில் பங்குதாரர்களுக்கு ஏற் கனவே வழங்கப்பட்ட பெயரளவினதான மூலதனம்.
(இ) சந்தாவழி மூலதனம்பங்குதாரர்கள் பணஞ் செலுத்திவிட்ட அத்துணை எண்ணிக்கையாக வழங்கப்பட்ட ep6.a5687 b.
(ஈ) அழைக்கப்பட்ட மூல்தணம்:- வழங்கப்பட்ட பங்குகளின்மீது செலுத் தப்படவேணடு மென்று அழைக்கப்பட்ட
வி- 28

Gs, sólsJga
தொகையே இதுவாகும். ஏதேனும் மிகுதித் தொகை அழைக்கப்படாத மூலதனம் என அழைக்கப்படும்.
(உ) செலுத்தப்பட்ட மூலதனம்அழைக்கப்பட்ட மூலதனத்தில் உண் மையாகச் செலுத்தப்பட்ட தொகையே இதுவாகும்.
(ஊ) ஒதுக்கிய மூலதனம் - குலைக்கப்படும் போதல்லாது வேறு சந் தர்ப்பங்களில் அழைக்கப்பட முடியாதஅழைக்கப்படாத மூலதனத்தின் பகுதியே இதுவாகும். கவனிக்க :- மூலதனம் என்னும் பதம் பின்வரும் பொருளிலும் பயல படுத்தலாம் :
(i) மூலதனச் சொத்துக்கள் : தடுத்து வைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதற்கு மாகக் கொள்ளப்பட்ட நிலையான சொத் துக்கள் அல்லது கையளிக்கப்படுவதற்கு முன்னர் தற்காலிகமாக வைத்திருக்கப் படும் சுற்றும் சொத்துக்கள் ஆகியன உள் ளடங்கிய கம்பனியின் ஆதனம் இதுவாகும். தொழிற்சாலைகளும் அதில் காணப்படும் பொருத்தப்பட்ட எந்திரங்களும் நிலையான சொத்துக்களுக்கு உதாரணமாகும். உற் பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட வுள்ள மூலப்பொருட்களும், விற்பனைக்காக வைத்திருக்கப்படும் உற்பத்திசெய்யப்பட்ட பொருள்களும் சுற்றும் மூலதனத்திற்கு உதாரணங்களாகும்.
"(ii) கடன்பத்திர மூலதனம்: (சில வேளை களில் கடன் மூலதனம் என்றும் அழைக் கப்படும்). கம்பனியினுல் தனது கடன் பத்திரப் பிணை மூலமாகக் கடனகப் பெற பட்ட தொகையே இதுவாகும்.
(ii) முறைமை மூலதனம் : பங்கு இலா பங்கள் விநியோகிக்கப்படுவதிலும், கம் பனி குலைக்கப்படும்போது சொத்துக்களி லும் முழுமையாகப் பங்கெடுக்கக்கூடிய அத்தகைய பங்குதாரர்களால் கொடுத் துவப்பட்ட வழங்கப்பட்ட மூலதனத்தின் பாகமே இதுவாகும். சாதாரணப் பங்குக
-- 17ܐ

Page 244
கம்பனிகள் சட்டம்
ளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் மூல தனத்தையே இது குறிக்கும்.
4 , 2. பங்குகளின் வகைகளும் பங்கு
தாரர்களும்
பல்வேறு வகையினவான பங்குகளைக் கம்பனியொன்று வழங்கலாம் ; அதாவது வைத்திருக்கும் பங்கின் வகைக்கேற்பக் கம்பனிக்கெதிரான பங்குதாரர்களின் உரி மைகளும் வேறுபடும். ஒவ்வொரு வகைப் பங்கிற்குமுள்ள உரிமைகளைக் கண்டறிய அகவுரையை அல்லது எந்நியதிகளின்மீது பங்குகள் வழங்கப்பட்டனவோ அந்நியதி களை ஆராய்தல் வேண்டும். பொதுவாகப் பின்வரும் வகைப் பங்குகள் வழங்கப்படு கின்றன :-
(அ) சிறப்புரிமைப் பங்குகள்-இப் பங்கு களை வைத்திருக்கும் பங்குதாரர்கள் பங்கு லாபங்களைப் பெறுவதில் சிறப்புரிமை யுடையவர்கள். சாதாரண பங்குதாரர் களுக்கு பங்கிலாபம் வழங்குவதற்கு முன் னர் குறிப்பிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட வீதத்தில் சிறப்புரிமைப் பங்குதாரர்களுக்கு பங்குலாபங்கள் வழங்கப்படும். குறிப்பா கச் சொல்லப்படாவிடின் சிறப்புரிமைப் பங்குகள் சேர்ப்புத் தன்மையின ; அதாவது ஏதாவதொரு ஆண்டில் கம்பனி பங்கு லாபங்களை வெளியிடாவிடின், அடுத்து வரும் ஆண்டுகளில் பங்கிலாபங்கள் வழங் கப்படும்போது வழங்கப்படாத ஆண்டிற் கும் சேர்த்துப் பங்கிலாபங்கள் வழங்கப் பட வேண்டும்.
(ஆ) சாதாரண பங்குகள்--காலத்துக்குக் காலம் கம்பனியினல் வெளியிடப்படும் பங்கு லாபங்களைப் பெறவும், கம்பனி குலைக்கப்படும்போது கம்பனியிலுள்ள கூடுதலான சொத்தில் பங்குபெறவும் சாதாரண பங்குதாரர்கள் உரிமையுடைய வர்களாவர். அவர்கள் கூட்டங்களில் வாக் களிக்கவும் உரித்துடையவர்கள். சில வேளை களில் சில கம்பனிகள் வாக்குரிமையில் லாத சாதாரண பங்குகளையும் வழங்குவ துண்டு.
- 2

செ. தங்கராஜா
(இ) மீட்கப்படக்கூடிய சிறட்புரிமைப்பங்கு கள் : அகவுரை அதிகாரமளிப்பின், கம்பனி யொன்று, தனது முனைவால் மீட்கப்படக் கூடியனவான சிறப்புரிமைப் பங்குகளை வழங்கலாம். ஆனல் -
(i) அத்தகைய பங்குகள் யாவும், பங்குலாபங்களாக வழங்கப்படுவதெற் கெனவுள்ள கம்பனியின் லாபங்களைக் கொண்டல்லாது அல்லது அத்தகைய மீட் புக்காகச் செய்யப்பட்ட புதிய பங்கு வழங்கல்களினுல் சேர்க்கப்பட்ட தொகை யைக் கொண்டல்லாது மீட்கப்படக் dial-Tg.
(i) அத்தகைய பங்குகள் முழுமை யாகச் செலுத்தப்பட்டாலன்றி அவை மீட்கப்படமுடியாது.
4. 3. மூலதனத்தை மாற்றுதல்
கம்பனியானது தனது புறவுரையில் காணப்படும் மூலதனம் பற்றிய வாசகத் தைப் பின்வரும் எவ்வழிகளிலும் மாற்ற லாம்
(அ) தனது மூலதனத் தொகையை அதி கரிக்கலாம். இது புதிய பங்குகளை வழங்கு வதன் மூலம் நடைபெறலாம். அதிகார மளிக்கப்பட்ட மூலதனம் அதிகரிக்கப்பட வேண்டுமாயின், பொதுக்கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் படல்வேண்டும்.
(ஆ) அது தனது எல்லாப் பங்குகளை யும் ஒன்று சேர்த்துப் பின் பெரும் பங்கு களாக ; அதாவது பங்கின் எண்ணிக்கை யைக் குறைத்து மதிப்பைக் கூட்டி வழங்க aծուb.
(இ) தனது செலுத்தப்பட்ட பங்கு களை எல்லாம் திரட்டிப் பங்குத் தொகுதி களாக மாற்றலாம். மேலும் பங்குத் தொகுதியைச் செலுத்தப்பட்ட பங்குக ளாக மாற்றலாம்.
8 -

Page 245
suis LuGolfsdir Fil-lib
(ஈ) தனது பங்குகளை மேலும் சிறு பங்குகளாகப் பிரிப்பதன்மூலம் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து அவற்றின் மதிப்பைக் குறைக்கலாம்.
(உ) தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளன்று விற்கப்படாத அல்லது விற்கப் படவென ஒப்பந்தம் செய்யப்படாத அத் தகைய எண்ணிக்கையான பங்குகளை இல்லாதொழிக்கலாம்.இவ்வில்லாதொழிப் பானது பங்கு மூலதனத்தைக் குறைப்ப தாகாது.
(ஊ) அகவுரையில் அதிகாரமளிக்கப் பட்டிருப்பின், சிறப்பான தீர்மானத்திஞல் பங்கு மூதனத்தைக் குறைக்கலாம். அத் தகைய தீர்மானம் நீதிமன்றத்தின் அங்கீ காரம் பெறவேண்டும். இல்லையேல் அத் தீர்மானம் வலுவற்றதாகும்.
4. 4. பங்குகளை மாற்றுதல்
பங்குதாரர் ஒருவர், அகவுரையானது வேறு வகையாக ஏற்பாடு செய்தாலன்றி
தனது பங்குகளை வேறு எவருக்கும்
மாற்றலாம். (தனியார் கம்பனியின் அகவுாை பங்குமாற்றத்தை மட்டுப்படுத்து வதாக அமைந்திருக்கும்.) பங்குகள் மாற் றப்படும்போது மாற்றுச் சாதனமானது மாற்றம் செய்பவரால் ஒப்பமிடப்பட வேண்டும். பின்னர் அச்சாதனமானது பங்குச் சான்றிதழுடன் கம்பனிக்கு அனுப் பப்படவேண்டும். கம்பனிப் பங்குதாரர் களின் இடாப்பினைத் திருத்தி மாற்றம் பெற்றவரின் பெயரினை அதிற் பதிந்து அவருக்குப் புதிய பங்குச் சான்றிதழ்களை அனுப்பும். பங்குச் சான்றித ழானது பங்கிலுள்ள உரித்திற்கு முதற்முேற்றச் சான்ருகும்,
4. 5. பங்கிலாபங்கள்
கம்பனியின் உறுப்பினர்களுக்குப் பங் கிலாபங்கள் வழங்குவதுபற்றிய ஏற்பாடு கள் கம்பனியின் அகவுரையில் காணப் படும். பங்கிலாபங்கள் லாபங்களிலிருந்து தான் வழங்கப்படவேண்டும்; மூலதனத்தி
2

செ. தங்கராஜ
லிருந்தல்ல. கம்பனிதான் பங்கிலாபங்களை வெளிப்படுத்தமுடியும். ஆனல் அது பணிப் பாளர்களின் விதப்புரையின்மீதே செய்யப் படலாம். பங்கிலாபங்கள் வெளிப்படுத் தப்பட்ட பின்னரே அது பங்குதாரர்களுக் குச் செலுத்தப்படவேண்டியனவாக வரும். பங்கிலாபங்கள் வெளிப்படுத்தப்படுவது தொடர்பில் பின்வரும் பொது விதிகள் கவ னத்துள் எடுக்கப்பட வேண்டியனவாகும் :-
(அ) பங்கிலாபங்கள் வெளிப்படுத்தப் படுவது கம்பனியின் அகவுரை, புறவுரை களுக்கிணங்கவே செய்யப்பட வேண்டும். ஆணுல் அவை, பங்கிலாபங்கள் மூலதனத்தி லிருந்து வெளிப்படுத்தப்பட வேண்டுமென அதிகாரமளிக்க முடியாது.
(ஆ) கம்பனி தனது கடன்களை இறுக்க வழியுடையதாயின் மட்டுமே பங்கிலாபங் கள் வெளியிடப்படலாம்.
(g) பங்கிலாபங்கள் வழங்கப்படு முன்னர் நிலையான சொத்துக்களுக்கு ஏற். ப்ட்ட தேய்மானத்தைச் சரிசெய்வது கம் பனிக்கு அவசியமாகாது.
(ஈ) கம்பனியின் வருவாய் இழப்புக் கள் சரிசெய்யப்பட்ட பின்னரே லாபங்கள் கணிக்கப்பட வேண்டும். ஆனல் முந்திய ஆண்டின் வருவாய் இழப்புக்கள் சரிசெய்யப் பட வேண்டுமென்பது, சிறந்த வர்த்தக வழமையாய் இருப்பினும் சட்ட பூர்வமான அவசியமல்ல.
(உ) அகவுரைக்கமைய நிலையான சொத்தினை விற்பதன்மூலம் பெறப்பட்ட இலாபங்களிலிருந்து பங்கிலாபங்கள் வழங் கப்படலாம்.
(ஊ) அகவுரைக்கமைய நிலையான சொத்துக்கள் மீதான மதிப்பீட்டின் பய ஞகப் பெறப்படாத இலாபங்களிலிருந்து பங்கிலாபங்கள் வழங்கப்படலாம். ஆனல் நடைமுறையில் இது செயற்படுத்தப்படுவ தில்லை. அவ்வாறு செய்யப்படுகையில் பங் கிலாபங்களுக்குப் பதிலாக, போனஸ் பங்குகள் வழங்கப்படுகின்றன.
219 -

Page 246
sissi sult
(எ) பணிப்பாளர் இடையிட்ட பங்கி லாபங்களைத் தமது தற்றுணிபில் வழங்க லாம்.
(ஏ) பணிப்பாளர்களினல் விதப் புரைக்கப்பட்ட தொகைக்குக் கூடுதலாக வெளிப்படுத்தப்பட்ட பங்கிலாபங்கள் இருக்கக்கூடாது.
(ஐ) பங்கிலாபங்களை வெளிப்படுத்து முன்னர் பணிப்பாளர்கள் இலாபத்தின் ஒரு பகுதியினை ஒதுக்கு நிதிக்கு ஒதுக்கலாம்.
5. கம்பனியின் முகாமை 5 , 1. பணிப்பாளர்கள்
கம்பனி ஒரு செயற்கையான நபராத லால் அதன் அலுவல்களைக் கவனிக்க வே ருெரு இயற்கையான நபர் அல்லது அவ் வாருண் இயற்கை நபர்களைக்கொண்ட சபை அவசியமாகிறது. (பெர்குசன் எதிர் வில்சன் 2Ch, App. 77) எனவேதான் கம் பணிச் சட்டம் தனியார் கம்பனி தொடர் பில் ஆகக் குறைந்தது ஒரு பணிப்பாள ராகவாவது இருக்கவேண்டும் என்றும், பகி ரங்கக் கம்பனி தொடர்பில் ஆகக் குறைந் தது இருவராவது இருக்கவேண்டும் என்றும் ஏற்பாடு செய்துள்ளது. பணிப்பாளர்களின் முடிவை நிறைவேற்றுவதற்கென ஒவ் வொரு கம்பனிக்கும் ஒரு செயலாளர் இருத்தல்வேண்டும்,
5 , 1 , 1. பணிப்பாளர்களின் நியமனம் கம்பனியின் அகவுரையானது எவ்வாறு பணிப்பாளர்கள் நியமிக்கப்படலாமென ஏற்பாடு செய்யும். வழக்கமாக ஒவ்வோ ராண்டும் பணிப்பாளர்கள் ஒரு சுற்றுவகை யில் இளைப்பாறித் திரும்பவும் தெரிவு செய்யப்படுவதற்குத் தகுதியுடையவரா யிருப்பர். ஒவ்வொரு கம்பனியும் தனது பதிவலுகலத்தில் பணிப்பாளர்கள், செய லாளர் ஆகியோர் பற்றிய விபரங்களைப் பதிந்து வைத்திருத்தல் வேண்டும். 5. 1 , 2. வேதனம்
சாதாராணமாகப் பணிப்பாளர்கள் வேதனம் பெற உரித்துடையவர்களல்லர்.
2 س--

செ. தங்கராஜா
ஆயின், அவர்கள் கம்பனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் வேதனத் தைக் கோர உரிமையுடையவர்களாகக் கூடும். வழமையாக வேதனம் பற்றிய ஏற் பாடுகள் கம்பனியின் அகவுரையில் காணப் படும்.
5.1,3. பணிப்பாளர்களின் அதிகாரம்
பணிப்பாளர்களின் நிறைவேற்று அதி காரம் கம்பனியின் அகவுரையிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் கம் பணியின் அலுவல்களைக் கவனிக்கவும், கம் பனிக்காகச் செயலாற்றவும் தகுத்த யெச லாளர்களையும், ஊழியர்களையும், கம்பனி முகவர்களையும் நியமிக்கும் அதிகாரம் பணிப்பாளர்களுக்கு உட்கிடையாகக் கிடைக்கிறது.
தமது வெளிப்படையான அல்லது உட்கி டையான அதிகாரத்தைப்பிரயோகிப்பதில் கம்பனியானது தனது முகவர்களான பணிப்பாளர்கள் மூலமாகவே செயலாற்று கிறது. எனவே கம்பனியைக் கட்டுப் படுத்தப் பணிப்பாளர்கள் ஒரு சபையாகச் செயல்படவேண்டும். சில வேளைகளில் தனித்த ஒரு பணிப்பாளருக்கும் அத்தகைய அதிகாரத்தைக் கம்பனி வழங்கலாம்.
5. 1. 4. பணிப்பாளர்களின் சட்ட அந்தஸ்து
சட்ட ரீதியாகப் பார்க்கப்போஞல் கம்பனியின் பணிப்பாளர்கள் மூன்று வகை யான அந்தஸ்தை உடையவர்களாகின் றனர். அவையாவன :-س--
(1) கம்பனியின் நம்பிக்கைப் பொறுப் பாளர்கள்.
ii) கம்பனியின் முகவர்கள் அல்லது முகாமையாளர்கள்.
(ii) கம்பனியுடன் ஒரு நம்பிக்கை அடிப்படையில் எழுந்த உறவு.
(i) பணிப்பாளர்கள் சில சந்தர்ப்பங் களில் கம்பனியின் நம்பிக்கைப் பொறுப் பாளர்களாகிருச்கள். பின்வரும் நோக்கங்
سست۔ 20'

Page 247
கம்பணிகள் சட்டம்
களுக்காக அவர்கள் நம்பிக்கைப் பொறுப் பாளராகக் கருதப்படுவர்
(அ) மாற்றங்களைச் செய்ய ; (ஆ) பங்கு களை வழங்கவும், குறித்தொதுக்கவும் ; (இ) அழைப்புக்களை விடுக்க; (ஈ) அவிர் களது உடமைக்குள் வரும் ஆதனங்கள் சம்பந்தமாக,
அநேக நோக்கங்களுக்காக அவர்க ளுக்கும் கம்பனிக்குமிடையே நம்பிக்கை யின் அடிப்படையில் அமைந்தவோர் உறவு காணப்படுகிறது. பணிப்பாளர்கள் கம் பணியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களே பல்லாது கம்பனியின் தனிப்பட்ட உறுப் பினர்களது நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் அல்லர், (பேர்சிவல் எதிர் றைற் 1902. 2. Ch, 421) வழமையான நம்பிக்கைப் பொறுப்பாளர்களது க ட  ைம க ளிலும் பார்க்க இவர்களின் கடமைகள் சிறிதளவு வேறுபட்டவையாகும். பணிப்பாளர்கள் ஏனைய நம்பிக்கைப் பொறுப்பாளர்களைப் போன்று எல்லாவகை விடயங்களிலும் கணக்குக்காட்ட வேண்டியதில்லை. (சிமித் -எதிர் அன்டர்சன் 188. 15 Ch, 247).
(ii) கம்பனிக்கும் பணிப்பாளர்களுக்கு மிடையே காணப்படும் உறவு முழுமையான முதல்வர்-முகவர் உறவு எனக் கொள்ளப் படுதலாகாது. இது ஏனெனில், ஒப்பந்தம் செய்யும்பொழுது உண்மையான திறத்த வராக அமைவது கம்பனியே. கம்பனி யொன்று ஒப்பந்தம் செய்யும் பொழுது உண்மையில் கம்பனியே ஒப்பந்தம் செய் கிறது. இவ்வொப்பந்தமானது ஒன்ருே அதற்கதிகமான பணிப்பாளர்களினல் வெறுமனே அங்கீகரிக்கப்படுகிறது. (நியூ போர்ன் எதிர் சென்சொலிட் 1953 1 AER 708).
பணிப்பாளர்கள் கம்பனிக்காக ஒப்பந் தம் செய்கிருர்களே தவிர தாமே எவ்வித பொறுப்பையும், ஒப்பந்தம் அவர்களது சொந்தப் பெயரிலிருந்தாலொழிய, எடுப்ப தில்லை. பின்வரும் விதிகள் இது தொடர் பில் ஏற்புடையனவாகும் :-

செ. தங்கராஜா
محتسبے-۔ --سی۔سب ہے۔یعسس------۔-ب۔۔--ــــــــــــــــــــــــــــــــــــــ--۰س~~سہ ---------------- سیبہ ۔............... --سد--* ----* -ہ ہمہ .......ہ --•-- - ܫܫ - - ܗܢܚܫ -- - ܝܝܝܝ
fi) கம்பனியின் பெயரில் அல்லது கம்பனியைக் கட்டுப்படுத்தும் வகையில் பணிப்பாளர் ஒருவர் ஒப்பந்தம் செய்தால் கம்பனியே அவ் வொப்பந்தத்திற்குப் பொறுப்பாகும். (பணிப்பாளர்களல்ல) பணிப்பாளர்கள் சொந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டால் மாத்திரமே அத் தகைய ஒப்பந்தத்திற்குப் பொறுப்பாவர். (மக்கொலிங் எதிர் கில்பின் 1880, 5 OBD 390).
(ii) பணிப்பாளர்கள் கம்பனிக்காக, ஆணுல் தனது சொந்தப் பெயரில் ஒப் பந்தம் செய்தால், ஒப்பந்தத்திற்கான திறத்தவர் உண்மையான முதல்வரைக் கண்டுபிடித்துக் கம்பனிக்கெதிராக அவ் வொப்பந்தம் தொடர்பில் வழக்கிடலாம். (i ஒப்பந்தம் கம்பனியின் தத்துவங் களை மீருததாய் ஆனல் பணிப்பாளர்களின் தத்துவங்களை மீறியதாக இருக்குமிடத்துக் கம்பனியே அவ் வொப்பந்தத்திற்குப் பொறுப்பாகும். ஆனல் பணிப்பாளர்கள் கம்பனிக்குப் பொறுப்பாக வேண்டும். (ருேயல் பிரிட்டிஷ் பாங்எதிர் ரேக்குவன்ட்) (iv) ஒப்பந்தம் கம்பனியின் குறிக் கோளை மீறியதாக இருப்பின் கம்பனி அவ் வொப்பந்தத்திற்குப் பொறுப்பாகாது" ஆனல் பணிப்பாளர்கள் உட்கிடையான அதிகார வாரண்டியை மீறியதற்குப் பொறுப்பாவார். 5. 1.5 பணிப்பாளர்களின் கடமைகள் பணிப்பாளர்கள் கம்பனியினல் தொழி லுக்கமர்த்தப்பட்டவர்கள் எனவே அவர் களது கடமை கம்பனிக்கேயாகும். பணிப் பாளர் பங்குதாரர் ஒருவருக்கு எவ்வித கடமையையும் உடையவரல்ல. பணிப்பா ளர்கள் யாவரும் நம்பிக்கையின் அடிப் படையில் அமைந்த ஒரு உறவினைக்கொண் டிருப்பதால், அவர்கள் எப்பொழுதும் நேர் மையுடனும், நம்பிக்கையுடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும் என்பதுடன் தமது கடமைகளையும் அவ்வாறே புரிதல்வேண் டும். நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் என்ற முறையில் அவர்கள் எல்லோரும் கம்பனி யின் பொது நன்மைக்கும், அனுகூலத்திற்கு மான செயல்களையே செய்தல் வேண்டும்,
22 -

Page 248
கம்பனிகள் சட்டம்
நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த கடமைகள் யாவற்றுடனும் சேர்த்து அவர் தமது கடமைகளைப் புரிவதில் தகுந்த கவனத்தையும், நுட்பத் திறமையையும் பயன்படுத்த வேண்டும். இரகசிய இலாபங் கள் எதனையும் பெறுதலாகாது.
சிட்டி ஈகூவிற்றி பயர் இன்சூரன்ஸ் கம்பனி (1925) என்ற வழக்கில் பணிப்பா ளர்களின் கடமைகள் பின்வருமாறு எடுத் துச் சொல்லப்பட்டிருக்கின்றன:-
(அ) பணிப்பாளர் ஒருவர் தனது கடமைகளைப் பிரயோகிக்கையில், அவரது அறிவும், அனுபவமும் கொண்ட ஒருவரிட மிருந்து எதிர்பார்க்கப்படுவதிலும் கூடுத லான அளவு திறமையை வெளிக்காட் டத் தேவையில்லை.
(ஆ) கம் பனி யின் அலுவல்களில் பணிப்பாளர் தொடர்ந்து கவனத்தை எப்ப்ொழுதும் வைத்திருக்கத் தேவை யில்லை, அத்துடன் எல்லாச் சபைக் கூட் டங்களுக்கும் அவர் வருகை தரவேண் டிய அவசியமில்லை.
(இ) கடமைகள் தொடர்பில் அலு வல்களின் தன்மையையும், கம்பனியின் அக வுரையின் ஏற்பாடுகளையும் கவனத்துட் கொண்டு பணிப்பாளர், அக்கடமைகளை வேறு உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்க லாம். ஐமிச்சம் ஏற்பட்டாலொழிய பணிப்பாளர், ஓர் உத்தியோகத்தர் தமது கடமைகளை விசுவாசமாகப் புரிவார் என்று நம்புவது தவருகாது. 5. 2. கூட்டங்களும் தீர்மானங்களும் 5. 2. 1. கூட்டங்கள்
எந்தவொரு கூட்டத்திற்கும் ஆகக் குறைந்தது இரு உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும். ஆனல் ஒருவகைப் பங்குகள் எல்லாவற்றையும் ஒருவரே வைத்திருப்பா ராயின் அவ்வகைப் பங்குதாரர்களின் கூட்டத்திற்கு அவர் ஒருவரே சமூகமா யிருப்பினும் அது ஒரு முறையான கூட்ட மாகும். மேலும் நீதிமன்றம் ஒரு கூட்டத்
ー2

செ. தங்கராஜ
தைக் கூட்டும்போது ஒருவர் மட்டுமே அக் கூட்டத்திற்குச் சமூகமளிப்பினும் அது ஒரு கூட்டமெனவே கருதப்படும். சாதாரண மாக கம்பனியில் பங்குதாரர்களின் மூன்று வகைக் கூட்டங்கள் நடைபெறும். அவை யாவன :- (i) நியதிச் சட்டக் கூட்டம் (i) வருடாந்தக் கூட்டம் (ii) அதிவிசேட கூட்டம்.
5 2 2. நியதிச்சட்டக் கூட்டம்
கம்பனியானது வியாபாரத்தை ஆரம் பித்து ஒரு மாதங்களுக்குப் பின் ஆனல் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டவேண்டும். இக் கூட்டம் நியதிச்சட்டக் கூட்டமெனப்படும். இக் கூட்டத்தைக் கூட்டும் அறிவிப் புடன் ஒரு நியதிச் சட்ட அறிக்கை யும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அவ்வறிக்கையானது பின் வரும் விபரங்களையும் கொண்டிருத்தல் வேண்டும்: (அ) குறித்தொதுக்கப்பட்ட பங்குக ளின் மொத்த எண்ணிக்கை, அவற்றுள் முழுதுமாகச் செலுத்தப்பட்ட தொகை, பகுதியாகச் செலுத்தப்படவுள்ள தொகை, பங்கு ஒதுக்கலுக்காகப் பெறப்பட்ட எதிர்ப்பயன் ஆகியன.
(ஆ) குறித்தொதுக்கப்பட்ட பங்குக. களின் தொகை தொடர்பில் கம்பனியினல் பெறப்பட்ட மொத்தப் பணத்தொகை.
(இ) அறிக் கை தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு முன்னர் வரை கம்பனியின் பெறப்பட்ட - செல விடப்பட்ட தொகைகளின் வெளியீடும், கம்பனியின் ஆரம்பச் செலவுபற்றிய மதிப் பீடும்.
(ஈ) கம்பனியின் பணிப்பாளர்கள், ! கணக்குப் பரிசோதகர்கள், முகாமை யாளர்கள், செயலாளர்கள் என்போரிருப் பின் அவர்களது பெயர்கள், முகவரிகள் மற்றும் விபரங்கள் என்பன.
(உ) கூட்டத்தில் அங்கீகாரத்திற்கா கச் சமர்ப்பிக்கப்படவுள்ள ஏதேனும் ஒப் பந்தத் திரிபுகளின் விபரங்கள்.
22 -

Page 249
கம்பணிகள் சட்டம்
மேற்படி அறிக்கையின் பிரதி பதிவாள ருக்கும் அனுப்பப்படல் வேண்டும்.
5 - 2 . 3 வருடாந்தக் கூட்டம்
ஒவ்வொரு கம்பனியும் ஒவ்வோராண் டும் வேறு ஏதேனும் கூட்டங்களுடன் தனது ஆண்டுப் பொதுக்கூட்டத்தைக் கூட்டுதல் வேண்டும். இரு ஆண்டுப் பொதுக்கூட்டங் களுக்கிடையில் 15 மாதகால இடை வெளிக்கு மேல் இருக்கக் கூடாது. ஆளுல் கம்பனியின் முதலாவது பொதுக்கூட்டம் கம்பனி கூட்டிணைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் இருத்தல் வேண்டும். ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் பொதுவான நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு இருக்கும் :
(i) பங்கிலாபங்களை வெளியிடல். (ii) கம்பனியின் கணக்குகள்; லாப நட்டக் கணக்குகள்; பணிப்பாளர்கள், கணக்குப் பரிசோதகர்கள் ஆகியோரின் அறிக்கைகள் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தல்.
(i) இணைப்பாறும் பணிப்பாளர்களின் இடத்திற்குப் புதிய பணிப்பாளர்களை நிய மித்தல்.
(iv) கணக்குப் பரிசோதகர்களை நிய மித்தலும், அவர்களது வேதனத்தை நிர் ணயித்தலும்.
ஆண்டுப் பொதுக்கூட்டம் நடை பெருவிடின் அதற்குக் காரணமான ஒவ் வொரு பணிப்பாளரும் (up 5 ft 60)unt unt GT ரும் குற்றமொன்றைப் புரிந்தவராகக் கருதப்படுவார்.
5. 2. 4, அதிலிசேட கூட்டம்
நியதிச்சட்டக் கூட்டத்தையும், ஆண் டுப் பொதுக்கூட்டத்தையும் தவிரப் பணிப் பாளர்கள் கம்பனியின் அகவுரை ஏற்பாடு களுக்கமைய அவர்கள் வேண்டும்போது எக் கூட்டத்தையும் கூட்ட முடியும். அத் தகைய கூட்டங்கள் அதிவிசேட கூட்டங்கள் எனப்படும். மேலும் கம்பனியின் செலுத்தப் :பட்ட மூலதனத்தில் பத்திலொரு பாகத்திற்
- 223

செ. தங்கராஜா
குக் குறையாத பங்குகளைக் கொண்டவர்க ளும்வாக்குரிமைஉடையவர்களுமான பங்கு தாரர்கள் அத்தகைய அதிவிசேட கூட்டங் களைக் கூட்டுமாறு பணிப்பாளர்களைக் கட்டாயப்படுத்தலாம். கம்பனியின் அக வுரையானது இத்தத்துவத்தை நீடிக்க லாமே யொழிய அதனை மட்டுப்படுத்த லாகாது.
மேற்படி கூட்டத்தைக் கூட்டவேண்டு மென்று கோரும் பங்குதாரர்கள் தமது கூட்டத்தின் குறிக்கோள்களை எடுத்துக் கூறுவதாக அக் கோரிக்கை இருக்கவேண் டும். இவ்வாருண கோரிக்கை செய்யப் பட்ட 21 நாட்களுக்குள் பணிப்பாளர்கள் அதி விசேட கூட்டத்தைக் கூட்டாவிடின் கோரிக்கை செய்தவர்களில் அரைவாசிப் பேர் தாமாகவே ஒரு கூட்டத்தைக் கூட்ட Gonth. 5 , 2. 5. கூட்டங்கள்பற்றிய போது
ஏற்பாடுகள்
கம்பனியில் காணப்படும் கூட்டங்கள் பற்றிய பல்வேறு ஏற்பாடுகளுடன் பின் வரும் ஏற்பாடுகளும் கவனத்துள் எடுக்கப் பட வேண்டியனவாகும் :
(அ) விசேட தீர்மானங்கள் கூட்டப் படுவதற்கான கூட்டங்களைத் தவிர ஏனைய கூட்டங்கள் யாவும் எழுத்திலான 7 நாள் அறிவித்தலில் கூட்டப்படலாம்.
(ஆ) கம்பனியின் உறுப்பினரெல்லா ருக்கும் அறிவித்தல் வழங்கப்படவேண்டும். (இ) ஏதேனும் விசேட அலுவல் விவாதிக்கப்படவிருப்பின் அறிவித்தலா னது அதன் தன்மைபற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
(ஈ) வழங்கப்பட்ட பங்கு மூலதனத் தின் பத்திலொரு பாகமான பங்குகளை உடைய இரண்டு அல்லது அதற்கதிக மான உறுப்பினர்கள் அல்லது கம்பனியா னது பங்குமுதலை உடையதல்லவாயின் கம்பனி உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 5 சதவீதமானேர் கூட்டமொன்றைக் கூட்டலாம்.
)ー

Page 250
கம்பனிகள் சட்டம்
(உ) முறையாகக் கூட்டப்பட்ட ஒரு கூட்டம் பணிப்பாளர்களினல் தள்ளிவைக் கப்படுதலாகாது.
(ஊ) தனியார் கம்பனிக்கு இருவரும், பகிரங்கக் கம்பனிக்கு மூவரும் கூட்ட நடப்பெண்ணுக இருப்பர். ஆஞல் அகவுரை வேறு ஒர் எண்ணை கூட்ட நடப்பெண்ணு கக் குறித்து நியமிக்கலாம். அவ்வெண் ணிக்கையான உறுப்பினர்கள் நேரடியா கச் சமூகம் தர வேண்டும்.
(எ) சமூகமாயிருக்கும் உறுப்பினர்கள் தம்முள் ஒருவரைக் கூட்டத் தவிசாளராக (தலைவராக) நியமிக்கலாம்.
(gr) இரகசிய வாக்கெடுப்பதற்காக ஒரு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டால், அத் தகைய ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் முந் திய கூட்டத்தின் தொடர்கூட்டமாகக் கருதப்படும். முந்திய கூட்டத்தில் எடுக்க முடியாத விடயங்கள் இவ்வொத்திவைக் கப்பட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட லாகாது.
(ஐ) கூட்டத்திற்குச் சமூகமளிக்க முடியாதவர்கள், தமது பிரதிநிதியைப் பிரதியாகக் கூட்டத்திற்கு அனுப்பி அவர் மூலமாக வாக்கினை அளிக்கலாம். அத்த கைய பிரதிநிதி அக் கூட்டத்தில் பேச முடியாது. வாக்கினை மட்டுமே அளிக்க லாம். ஆனல் தனியார் கம்பனிகளில் அத் தகைய பிரதிநிதிகள் வாக்களிக்கலா மென்பதுடன் பேசுவதற்கும்உரிமையுடைய வர்களுமாவார்.
5. 2.6. தீர்மானங்கள்
கம்பனியின் கூட்டங்களில் நிறைவேற் படும் தீர்மானங்கள் மூன்று வகையின. அவையாவன : (1) சாதாரண தீர்மானங் கள் (ii) அதிவிசேட தீர்மானங்கள் (iii) சிறப்புத் தீர்மானங்கள்.
(i) சாதாரண தீர்மானங்கள்: வr க் களிப்பவர்களில் ப்ெரும்பான்மையினரின் வாக்கைப் பெற்று நிறைவேற்றப்படுவது தான் சாதாரண தீர்மானமாகும். அவை
- 2

Ge. sé syrgr
சாதாரணமான முறையில் நிறைவேற்றப் பட்டுக் கூட்ட அறிக்கைப் புத்தகத்தில் தவிசாளரினல் பதியப்படும். தவிசாளரின் அத்தகைய பதிவானது, அத்தகைய தீர் மானம் முறையாக நிறைவேற்றப்பட்ட தற்கான சான்ருக அமையும். நியதிச் சட்டம் அல்லது அகவுரையானது ஒரு தீர்மானம், அதிவிசேட தீர்மானமாக அல்லது சிறப்புத் தீர்மானமாக இருக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்தாலன்றிக் கம்பனியின் அலுவல்கள் சாதாரண தீர்மா னத்தினலேயே செய்யப்படுகின்றன.
(i) அதிவிசேட தீர்மானங்கள்: பொதுக் கூட்டமொன்றில் வாக்களிக்க உரிமை யுடைய உறுப்பினர்களின் வாக்களிப்பின் போது மூன்றில் நான்கு பெரும்பான்மை வாக்குப் பெற்று நிறைவேற்றப்படும் இவ் அதிவிசேட தீர்மானங்கள் பற்றிய அறி வித்தல், அத்தகைய தீர்மானங்கள் அதி விசேடமானவையாக நிறைவேற்றப்படக் கருதப்பட்டுள்ளனவென்று குறிப்பிட்டுக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இத் தீர் மானம் பற்றிய அறிவித்தலானது தீர்மா னத்தின் அதே வாசகங்களைக் கொண் டிருக்கவேண்டும். பொதுவாக இத்தகைய தீர்மானங்கள் தாமாகவே கம்பனியைக் குலைக்க அல்லது பணிப்பாளர்களை நீக்க அவசியமானதாகும்.
(iii சிறப்புத் தீர்மானங்கள் : இவை யும் நான் கில் மூன்று பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்படவேண்டும். இத் தீர்மானங்களின் அறிவித்தல்கள் 21 நாட்கள் அறிவித்தல்களாக இருக்க வேண்டும். தீர்மானத்தின் வாசகம் அறி வித்தலில் முழுமையாக இருக்கவேண்டும், (அ) கம்பனியின் அகவுரையை மாற்ற, (ஆ) புறவுரையின் நோக்க வாசகத்தை மாற்ற, (இ) கம்பனியின் பெயரை மாற்ற, (ஈ நீதிமன்ற அனுமதியுடன் கம்பனியின் மூலதனத்தைக் குறைக்க, (உ) அழைக்கப் படாத மூலதனத்தை அல்லது அதன் ஒரு பகுதியை ஒதுக்கு மூலதனமாக மாற்ற, இத்தகைய சிறப்புத் தீர்மானங்கள் அவ சியமாகும்.
24 -

Page 251
கம்பனிகன் சட்டம்
5. 2. 7. கூட்ட அறிக்கை
கம்பனிக் கூட்டங்களின் நடவடிக்கை கள் யாவும் கம்பனியால் பேணப்பட வேண்டிய கூட்ட அறிக்கைப் புத்தகத்தில் பதியப்பட்டிருக்கவேண்டும். இப் புத்தக மானது கம்பனிப் பதிவகத்தில் வைக்கப் பட்டிருத்தல் வேண்டும். அது எவரேனும் உறுப்பினரால் பார்வையிடப்படலாம். பார்வையிடுவதற்கு உறுப்பினரிடமிருந்து கட்டணமெதனையும் வசூலிக்கக்கூடாது.
8. கம்பனிக் கணக்குகள் 6. 1. கணக்குப் புத்தகங்கள்
ஒவ்வொரு கம்பனியும் (i) வரவினங் கள் செலவினங்கள் (i) விற்பனைகள் வாங்குவன : (i) சொத்துக்கள் பொறுப் புக்கள் ஆகியன பற்றிய முறையான கணக்குப் புத்தகங்களை வைத்திருத்தல் வேண்டும். கட்டளைச் சட்ட த் தி ஞ ல் தேவைப்படுத்தப்பட்டவாறு கம்பனியில் லாபநட்டக் கணக்குகளையும் ஐந்தொகை யையும் கணக்குப் பரிசோதகர்கள் தயா ரிப்பதற்கு அவருக்கு அவசியமாகக் கூடிய அத்தகைய தகவல்களைக் கொண்டிருக்கும். கணக்குப் புத்தகங்கள் ** முறையான கணக்குப்புத்தகங்களாக""க் கருதப்படும். (ஹீன்பண்டா எதிர் ஹெரத் 51 NLR 305) கணக்குப் புத்தகங்கள் கம்பனிப் பதி வகத்தில் அல்லது பணிப்பாளர்களால் நிய மிக்கப்படக்கூடிய அத்தகைய இடத்தில் கணக்குப் புத்தகங்கள் வைத்திருக்கப்பட வேண்டும். அவை பணிப்பாளர்கள் பார் வைக்குக் கிடைக்கக்கூடியனவாக இருத்தல் வேண்டும்.
மேற்படி ஏற்பாடுகளுக்கிணங்கியொழு கத் தவறும் எப்பணிப்பாளரும் அல்லது கம்பனி அத்தவறைச் செய்வதற்குத் தமது வேண்டுமென்ற செயலின் காரணமாக இருக்கும் எப்பணிப்பாளரும் குற்றம்ொன் றைப் புரிந்தவராவர்.
கம்பனியின் ஆண்டுப் பொதுக்கூட்டத் தில் பணிப்பாளர்கள் கம்பனியின் இலாப
ଈନ୍ମ - 29 - 2

செ. தங்கராஜா
நட்டக் கணக்கையும், ஐந்தொகையையும் சமர்ப்பித்தல் வேண்டும். கம்பனியின் அலு வல்கள் பற்றியும் பங்கிலாங்களாகச் செலுத்தப்படச் சிபாரிசு செய்யப்படும் தொகை பற்றியும், ஒதுக்காக வைக்கப்பட வுள்ள தொகைபற்றியும் பணிப்பாளர் களின் அறிக்கையொன்று ஐந்தொகை யுடன் சேர்த்தனுப்பப்படல்வேண்டும்.
6. 2. லாபநட்டக்கணக்கும்ஐந்தொகையும்
ஒவ்வோராண்டுப் பொதுக்கூட்டத் திலும் லாபநட்டக் கணக்கும் ஐந்தொகை யும் சமர்ப்பிக்கப்பட்டு கூட்டத்தின் கவ னத்துக் கெடுக்கப்பட வேண்டும். ஐந் தொகையானது பின்வருவனபற்றிய விப ரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் :
(அ) அதிகாரமளிக்கப்பட்ட மூலதனம். (ஆ) வழங்கம்பட்ட மூலதனம்.(இ) பொறு ப்புகள். (ஈ) சொத்துகள். (உ) பொறுப்புக் கள் சொத்துக்கள் ஆகியவற்றின் பொது வான தன்மையைக் காட்டும் விபரங்கள். (ஊ) தனித்தனியே நிலையான சொத்துக் கள், மிதக்கும் சொத்துக்கள் பற்றிய விபரங்கள்.
மேலும், ஐந்தொகையானது புறம் பாகப் பின்வரும் விபரங்களைக் காட்டுவ தாக இருக்க வேண்டும் :-
(i) ஆரம்ப மூலதனம் (ii) பங்குகள் அல்லது கடன்பத்திரங்கள் வழங்குவதில் ஏற்பட்ட செலவினங்கள் (ii) வியாபார நன்மதிப்பு, வியாபாரச் சின்னங்கள், வர்த் தக அடையாளங்கள் ஆகியவற்றின் மதிப்பு (iv) பிணையுடைய பொறுப்புக்கள் (w) பங் குகள் கடன் பத்திரங்கள் மீதான கொமி ஷன்களும், கழிவுகளும் (wi) கம்பனி ஊழி ய்ர்கள் பங்குகளை வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட கடன்கள் (wi) மீட்கப் பட்ட முதனுரிமைப் பங்குகளின் எண்க ளும், தொகையும் (wi) பணிப்பாளர்கள் ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கடன்களின் விபரம். (ix) ஏனைய கூட்டுக் கம்பணிகளுக்குக் கொடுக்கப்பட்ட கடன்
25 -

Page 252
கம்பனிகள் சட்டம்
கள், அவற்றின் இலாப நட்டங்கள் (x) பணிப்பாளர்களின் ஊதியமாக வழங் கப்பட்ட பணத்தின் தொகை.
8. 3. கணக்குப் பரிசோதகர்கள்
கம்பனியின் கணக்குகள் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென்பது கட்டாய மாகும். கணக்குப் பரிசோதகர்களுக்குக் கட்டளைச்கட்டம் மிக அதிகளவான தத்துவங்களை வழங்கியுள்ளது. கம்பனியின் முதலாவது கணக்குப் பரிசோதகர்கள் முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டத் திற்கு முன்னர் எப்பொழுதும் பணிப் பாளர்களால் நியமிக்கப்படலாம். அவ் வாறு நியமிக்கப்பட்ட கணக்குப் பரிசோ தகர்கள் ஆண்டுப் பொதுக்கூட்டம் "வரை பதவிவகிப்பர். கம்பனியானது தனது பொதுக்கூட்டத்தில் அவ்வாறு நியமிக்கப் பட்ட முதலாவது கணக்குப் பரிசோதகர் களை அகற்றி வேறு எவரையும் அவரிடத் திற்கு நியமிக்கலாம். மேலும் பணிப் பரளர்கள் கணக்குப் பரிசோதகர்களை நியமிக்காதவிடத்து தாமே கணக்குப் பரி சோதகர்களை நியமிக்கலாம்.
ஏனைய கணக்குப் பரிசோதகர்கள் ஆண்டுப் பொதுக்கூட்ட மொவ்வொன்றி லும் நியமிக்கப்படுவர். அவ்வாறு நியமிக் கப்படாவிட்டால் எவரேனும் உறுப்பி னரின் விண்ணப்பத்தின்மீது கம்பனிப் பதி வாளர் கணக்குப் பரிசோதகர்களை நிய மிக்கலாம். புதிய கணக்குப் பரிசோதகர் ஒருவரை நியமிப்பதற்குக் கம்பனிக் கூட்டத் திற்கு ஆகக் குறைந்தது 14 நாட்கள் அறிவித்தல் கொடுக்கப்படுதல் வேண்டும்.
பதிவுசெய்யப்பட்ட கணக்குப் பரி சோதகர்கள் மட்டுமே நியமிக்கப்படலாம். பின்வருவோர் நியமிக்கப்படத் தகுதியற் றவர்களாவர்:
(அ) கம்பனியின் பணிப்பாளர் அல் லது வேறு உத்தியோகத்தர்.
(ஆ) கம்பனியின் அல்லது, கம்பனியின் உத்தியோகத்தரின் பங்காளர் அல்லது அவ ரால் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளவர். (தனி யார் கம்பனி தவிர)
- 2

செ. தங்கராஜா
(இ) ஒரு கூட்டுத்தாபனம்.
கணக்குப் பரிசோதகர்கள் கம்பனி யில் எல்லாப் புத்தகங்களையும் பெற்றுப் பார்வையிடத் தகுதியுடையவர்களாவர். அவர்களது அறிக்கை கவனத்துக்கெடுக்கப் படும் எல்லாக் கூட்டங்களிலும் சமூகம் தரவும் அவர்கள் உரிமையுடையவர்கள்.
6. 4. கணக்குப் பரிசோதகர்களது கடமைகள் முதலாவதாக, கணக்குப் பரிசோதகர் கள் தமது ஆய்வுக்குத் தேவையான எல் லாத் தகவல்களையும் விளக்கங்களையும் கம்பனியிடமிருந்து பெற்ருர்களா என்பது பற்றியும் கம்பனியின் ஐந்தொகை முறை யாக வரையப்பட்டிருக்கிறதா என்பது பற்றியும் உறுப்பினர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஐந்தொகையுடன் கணக்குப் பரிசோதகர்களின் அறிக்கையும் பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்படவேண்டும். உறுப்பினர்கள் அறிக்கையைப் பார்வையிடவும் அதன் பிரதிகளைப் பெறவும் உரித்துடையவர்க ளாவர்.
இரண்டாவதாக, கணக்குப் பரிசோத கர்கள் கட்டளைச் சட்டத்தின் கீழும் கம் பணியின் அகவுரையின் கீழும் தமது கடமைகளைப் பற்றித் தெரிந்து வைத் திருக்கவேண்டும்.
மூன்முவதாக, கணக்குப் பரிசோத கர்கள் தமது கடமைகளைப் புரிவதில் நேர்மையுடனும் நியாயமான கவனத்துட னும் செயல்பட வேண்டும். அவரது கவன மின்மையால் அல்லது நேர்மையின்மை யால் கம்பனிக்கு ஏற்படும் இழப்புகளுக்கு அவர் பொறுப்பாவார். 7. கம்பனியின் ஒப்பந்தம் செய்யும் தகைமை 7. 1. அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட
ஒப்பந்தங்கள் கம்பனியின் புறவுரையில் உள்ள குறிக் கோள் பற்றிய வாசகம் கம்பனியின் ஒப் பந்தம் செய்யும் தகமையைக் கட்டுப்படுத்
=س- 26

Page 253
கம்பனிகள் சட்டம்
துவதாகும். கம்பனி தனது அதிகார வரம் புக்குள் செய்யப்படும் ஒப்பந்தங்களுக் கெல்லாம் பொறுப்பானது என்பதை முன் னர் பார்த்தோம். ஒப்பந்தமொன்று கம்பனியின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட தாயின் ஒப்பந்தம் வறிதானதாகும்.
கம்பனி ஒரு செயற்கையான நபராத லால் அதனது முகவர்கள் மூலமாகவே கம்பனி செயற்படமுடியும், கம்பனி முகவர் களின் உண்மையானதும் வெளித்தோற்ற மானதுமான அதிகாரங்கள் கம்பனியின் கட்டுப்படுத்தப்பட்ட ஒப்பந்தத் தகமைப் பின்னணியில் கவனிக்கப்படுதல் வேண்டும், கம்பனி முகவர்களின் அதிகாரம் பொது வாகப் கம்பனியின் அகவுரையில் வரை யறை செய்யப்பட்டிருக்கும்.
சில சந்தர்ப்பங்களில் கம்பனியின் முகவர்களினல், அதாவது பணிப்பாளர் களிஞல் செய்யப்படும் ஓர் ஒப்பந்தம் அவர்களது அதிகாரத்திற்கு அப்பாற் பட்டதாயும் ஆணுல் கம்பனியின் அதிகா ரத்திற்கு உட்பட்டதாயும் அமையலாம். இச் சந்தர்ப்பங்களில் அத்தகைய ஒப்பந் தங்களுக்குக் கம்பனியே பொறுப்பாகும். கம்பனியுடன் ஒப்பந்தம் செய்பவர் கம்பனி யின் அகவுரை புறவுரை ஆகியவற்றில் சொல் லப்பட்டனவற்றைத் தெரிந்துவைத்திருக்க வேண்டுமேயொழிய கம்பனியின் அன்ருட அலுவல்களையோ, சம்பிரதாயங்களையோ y6006) பின்பற்றப்பட்டனவா என்ப தையோ அறிந்து வைத்திருக்கத் தேவை யில்லை. (ருேயல் பிரிட்டிஸ் பாங் எதிர் நேர்குவன்ட்). ベ
ஆயினும் இத்தகைய நேர்குவன்ட் விதி பின்வரும் சந்தர்ப்பங்களையும் பாதுகாப்ப தாகாது;
(அ) வெளியாருக்கு (ஒப்பந்தம் செய் பவருக்கு, செய்யப்படும் ஒப்பந்தம் ஒழுங் கற்றது எனத் தெரிந்தால்
(ஆ) ஒப்பந்தம் பற்றிய அலுவல் பெறுமதியுடையதாக வருவதற்கு அதி
7 -س

செ. தங்கராஜா
விசேட அல்லது சிறப்புத் தீர்மானம் தேவையாய் இருந்திருப்பின். (இத் தீர் மானங்களின் பிரதி பதிவாளருக்கு அனுப் பப்பட்டிருக்கும்.). (இ) நம்பப்படும் ஆவ ணம் புனையப்பட்டதாயின். (ஈ) ஒப்பத்த அலுவல் சாதாரண வகையில் ஐமிச் சத்தை வரவழைத்திருக்கக் கூடியதாக விருந்திருந்தால்.
1 , 2. கடன் வாங்கும் அதிகாரம்
கம்பனியின் கடன்வாங்கும் அதிகாரம் அதன் ஆவணங்களினல் கட்டுப்படுத்தப் பட்டிருக்கும். கம்பனி தனது அதிகாரத் திற்கு அப்பாற்பட்டு ஒரு கடன் ஒப்பந் தத்தைச் செய்து கொண்டால் அவ்வொப் பந்தம் வறிதானதாகும். எனினும் இங்கும் நேர்குவன்ட் விதி செல்லும். அதாவது கடனுனது பணிப்பாளர்களின் அதிகாரத் திற்கு அப்பாற்பட்டும் ஆனல் கம்பனி யின் அதிகாரத்திற்கு உட்பட்டும் மிருத் தால் அவ்வொப்பந்தம் செல்லுபடியான தாகும்.
1 . 3. கடன் பத்திாங்கள்
கம்பனி கடன்வாங்கியுள்ளது என் பதை நிரூபிக்கும், அத்தாட்சிப்படுத்தும் ஆவணமே கடன்பத்திரமாகும். இது கடன் ஒப்பந்தத்தின் முக்கிய நியதிகளைக்கொண் டிருக்கும், எழுத்திலான இவ் ஆவணம் கம்பனி கடன்கொடுத்தவருக்குக் கொடுத் துள்ள பிணை, கடன் மீது செலுத்தப்பட வேண்டிய வட்டி வீதம், கடனைத் திருப்பிச் செலுத்துவோமென்ற உறுதிமொழி ஆகிய நியதிகளைக் கொண்டிருக்கும். எழுத்திலான நியதிகளுக்கிணங்கக் கடன் பத்திரங்கள் பிணையுடன் கூடியனவாக அல்லது பிணை யற்றவையாக, அல்லது பதில செய்யப்பட் டனவாக அல்லது வைத்திருப்பவரைச் சாந்ததாக அல்லது மீட்கப்படக்கூடிய தாக அல்லது இடையருததானதாக இருக்கலாம்.
27

Page 254
கம்பணிகள் சட்டம்
1. 4. கம்பனிச் சொத்தின் மீதான
அக்கறைகள் பிணையுடன் கூடிய கடன்பத்திரங்கள் வழங்கப்படும்போது, கம்பனியின் சொத் துக்கள் மீது நிலையான அக்கறைகள் அல் லது மிதக்கும் அக்கறைகள் அல்லது இரண்டும் சேர்ந்த அக்கறைகள் உருவாக் கப்படுகின்றன.
நிலையான அக்கறைகள் என்பது கம் பனிக்குச் சொந்தமான ஒரு குறிப்பிட்ட பொருள்மீது உருவாக்கப்டும் அக்கறையா கும். இத்தகைய அக்கறை பொதுவாகச் சட்டமுறையான ஈட்டின்மூலம் செய்யப் படலாம். சிலவேளைகளில் அவதானத் தின் உறுதிகளைக் கடன் கொடுப்பவரிடம் விட்டுவைப்பதன்மூலமும் பிணைஉருவாக்கப் படலாம். இத்தகைய பிணை முறைமையடிப் படையில் அமைந்ததாகும்.
மிதக்கும் அக்கறைகள் கம்பனியின் மிதக்கும் சொத்துக்களின்மீது அல்லது வேறு ஏதேனும் சொத்தின்மீது உருவாக் கப்பட்டதாகும். இத்தகைய சொத்துக்கள் கம்பனியால் எவ்வகையாலும் கையாளப் படலாம். இதுவே இத்தகைய அக்கறை யின் அனுகூலமாகும்.
1. 5. கடன் கொடுத்தவர்களுக்கான நிவா ரணங்கள்
கடன் கொடுத்தவர்களுக்கான நிவா ரணங்கள் அவர்களுடைய கடன் பத்திரங் களின் வகையைப் பொறுத்ததாகும்.

செ. தங்கராஜா
பிணையற்றகடன் பத்திரங்களை வைத் திருப்பவர்கள் சாதாரண கடன் கொடுத் தவர்களாகவே கருதப்படுகின்றனர். கம் பணியானது முதலையும், வட்டியையும் கொடுக்கத் தவறுமிடத்து கடன் பத்திரங் களை வைத்திருப்பவர்கள் கம்பனிக்கெதி ராக ஒப்பந்த முறிவிற்கான வழக்கொன் றைத் தொடரலாம் ; அல்லது கம்பனி குலைக்கப்படவேண்டுமென்று மனுச் செய் uapruh.
கடன் பத்திரமானது பிணையுடன் கூடியதாயின் பின்வரும் நிவாரணங்கள் அவருக்குண்டு :-
(அ) கம்பனிக்கெதிராக ஒப்பந்த முறி விற்காக வழக்குத் தொடர்ந்து முதலையும், வட்டியையும் கோரலாம்; அல்லது
(ஆ) கம்பனி குலைக்கப்படவேண்டு மென்று நீதிமன்றத்திற்கு மனுச் செய்ய லாம்; அல்லது
(இ) கடன் பத்திரத்தில் அவருக்குத் தரப்பட்ட தத்துவங்களைப் பிரயோகித்து பிணையாகவுள்ள ஆதனத்தை விற்கலாம் அல்லது பெறுநர் ஒருவரை நியமிக்கலாம்; அல்லது
(ஈ) நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்து பிணையாகவுள்ள ஆதனத்தை விற்கும்படி அல்லது பெறுநர் ஒருவரை நியமிக்கும் படி வேண்டலாம்.

Page 255
BEST WISHES
AUTHORISED stockists of
DUCO DULUX 8. PENTALTE E MUSSON PANTS
T. Rasiah & Sons
23/10, Stanley Road,
AFFNA •
அன்பளிப்பு !
சுவையான "யானே மார்க் குளிர்பானங்களுக்குச் சிறந்த இடம்
|பிள்ளையார் ஸ்ரோர்ஸ்
31, மானிப்பாய் ருேட், யாழ்ப்பாணம்,

வித்தியோதயத்துக்கு எமது வாழ்த்துக்கள்!
சுத்தமான ருசிமிக்க உணவுகளுக்கு
ஞ்
மலாயன் கபே 36-38, பெரிய கடை யாழ்ப்பாணம்.
With Best Compliments
from
Cheapest House for QUALITY TEXTILES & FANCY GOODS
visit once! and you will be Satisfied Well
SASYOGAS
183/1, GALLE ROAD, DEHIWELA

Page 256
அன்பளிப்பு
ፖ`s
அழகிய தங்கப்பவுண், வைர
ாகைகள் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்
G ஒடர்கள் குறித்த தவணையில் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும்.
ܥܣܩܐ
G5. 6.5. Gifi. VIII DILITGDI sh நகை மாளிகை 82/4, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி : 362
With the best Compliments
from
Dealers in Motor Parts
Subamala Motor
79, Stanley Road,
AFI FINA.
T'Phone: 7520

%
†7f7f7 : grīgasguoso„apqa legsús, : goso qııcısırıņfìırın “103) sığıĝ@lp? '0g aprşıtıąogi (5) *YI
dų9ụ0909rea_ão 1991(TĒ
įspoļırılmgo (Tecto odos
O)))
joļ09ơi đ1909&] qirmo Img);##59
,블學열 편(高子,藏阁819 : Lønns)
(III) oli Tifilm
(ụuson gotsi-së) og sis manĝi duelgogi og (unos mooi seo s-ı Tırn@$ $ possum)
(ųodori Qolsong) Isiqil@ ĝĪ |
‘ąınasılsıp use) #roqľne) oniso urnajosasąote wałego ugnoệț mons) 'qi@w 1ęs sonu?
fhŋŋŋ wo ɑrɑrɑsɑı o ipopouso? rogreso - napus o “uso
Ti@nrie) sursos roofiso usunoussaooo ŋ-ığı9şıyıs
}
ị hIŲofilolo

Page 257
6dful
மன்றச்
1976
 

ப்தியும் மரபும்
-77-78

Page 258
செயற்குழு -
காப்பாளர்
துணைக் காப்பாளர் :
பெரும் பொருளாளர் :
தலைவர் :
துணைத் தலைவர் :
செயலாளர் :
துணைச் செயலாளர் :
பொருளாளர் :
இணை இதழாசிரியர்கள் :
செயற்குழு உறுப்பினர்கள் :
பேராசிரி
திரு. சி.
கலாநிதி
திரு. மூ.
ஜோ. மல
திரு. க.
ஜகுப் யூ திரு. கு.
திரு. ச. திரு. நா.
திரு. அ. திரு. சி.
- 23

- 1976-77-78
பர் ரியூலி த. சில்வா
வளாகத் தலைவர்
மாணிக்கவாசகர்
வணிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்
கா. சிவத்தம்பி
இணைத் தமிழ் பேராசிரியர்
சுப்பிரமணியம்
ன் கோவ்
தர்மகுணசிங்கம்
கs மரைக்கார்
வீமராசன்
அருட்சோதி
வரதராசா
தேவச்சந்திரன் திருச்செல்வம்

Page 259
செயற்குழு மாணவ உறுப்பி
நப்பவர்கள் (இடமிருந்து வலம்) திரு. க. தர்மகுணசிங்க தலைவர்), திரு. மூ. சுப்பிரமணியம் (தலைவர்), திரு பவர்கள் (இடமிருந்து வலம்) : ஜனப் யூ. க. மரைக் கார் இதழாசிரியர்), திரு. கு. வீமராசன் (பொருளாளர்) கமளிக்காதவர் : திரு. சி. திருச்செல்வம் (செயற்
.
 

তাrঞলোঁ। — 1976 – 77 – 78
ம் (செயலாளர்), திரு. யோ, மலன்கோவ் (துணைத் ந. ச. அருட்சோதி (இணை இதழாசிரியர்).
(துணைச்செயலாளர்), திரு. நா. வரதராசா (இணை திரு. அ. தேவச்சந்திரன் (செயற்குழு உறுப்பினர்). தழு உறுப்பினர்).

Page 260


Page 261
செயலாளர் ஏட்டில்....
"தமிழுண்டு தமிழ் மன்ற நாளெல்லாம் செய்வோம்
தமிழ் மன்றங்கள் கலை, கலாச்சாரம், மூலம், தமிழைப் பேணி வளர்ப்பதற்கென எமது வித்தியோதய வளாகத் தமிழ் மன் வந்திருக்கின்றது. இன்று மூன்ருண்டுகளைக் காலத்தை எண்ணிப் பார்க்கவேண்டியது இரண்டு கலைவிழாக்களை மிகவும் விமரிசை நடைமுறையாண்டின் செயலாளர் எனும் அத்துடன் ** வித்தியோதயம் ' மூன்ருவது பெற்றுக்கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தி பணியை நாமும் தளர்வின்றித் தொடர்ந் மகிழ்ச்சி அடைகின்றேன்.
வித்தியோதய வளாகத்தில் கல்விபயி வர்கள். நாமும் கலையார்வம் கொண்டவ மிகக் குறைந்த எண்ணிக்கையை உடைய நடத்துவதுடன், பன்னிராயிரம் ரூபா ெ வெளியிட்டு வருகிருேம் என்ருல், அதற்கு தமிழை மேம்படச்செய்வதில் நாம் கொண்
பல்கலைக்கழக வளாகங்கள் அடிக்கடி ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இனக்கலவ மூடப்பட்டமையால், ஏனைய வளாகங்களு அரங்குகளை நடத்தச் சாத்தியமான நிலை அங்கத்தினர்களின் விவாதத்திறமையை ஊ களில் பல விவாத அரங்குகளை எமது வள படுத்தி நடாத்தியுள்ளோம்.
' தற்போதைய அரசின் காலத்தில் ஏமாற்று வித்தையே "
* சுதந்திர வர்த்தக வலையம் இலங்ை களுக்குத் தீர்வாக அமையுமா ?”
"இன்றைய வரவுசெலவுத்திட்டம் திற்கு வழிவகுக்கும் "
a- 2 வி-30

அறிக்கை -1
முண்டு-கற்தமிழுக்கு
நல்லதொண்டு?
இலக்கியம் என்பவற்றை வளர்ப்பதன் வே ஆரம்பிக்கப்படுகின்றன. இவ்வகையில் றம் தனது பணியினைத் திறம்படச்செய்து கடந்து நிற்கும் எமது மன்றத்தின் கடந்த இங்கு அவசியமாகின்றது. எமது மன்றம் யாகக் கொண்டாடியது என்பதையிட்டு முறையில் பெருமிதம் அடைகின்றேன். மலர் வெளியீடும், கலைவிழாவும் நடை ல், முன்னவர்கள் தொடர்ந்து செய்துவத்த த்து செய்துமுடித்தோம் என்பதில் பெரு
லும் நாமனைவரும் முகாமைப்பீட மாண ர்கள் தமிழ்மொழிப் பற்று உடையவர்கள். நாம் பிரமாண்டமான ஓர் கலைவிழாவினை சலவில் ஓர் மலரினையும் வருடாவருடம் த் தமிழின்மேல் நாம் கொண்டுள்ள பற்றும், ஈடுள்ள ஆர்வமுமே காரணமாகும்,
மூடப்பட்டமையால்குறிப்பாக--இவ்வாண்டு ர காலத்தில் நீண்டகாலம் வளாகங்கள் டன் எமது மன்ற விவாதக்குழு விவாத மைகள் ஏற்படவில்லை. ஆயினும் மன்ற ாக்குவிப்பதற்காகவெனக் கீழ்வரும் தலைப்புக் ாக சுமங்கலா விரிவுரை மண்டபத்தில் ஏற்
தமிழர் பிரச்சனை தீர்க்கப்படும் என்பது ஒரு
கயின் இன்றைய பொருளாதாரப் பிரச்சினை
ட்டுப்பாடற்ற சுதந்திரப் பொருளாதாரத்
33 -

Page 262
மேலும் ""நாளை நமதே ', 'விடிவு களையும் நடாத்தியுள்ளோம்.
எமது மன்றத்தின் சார்பில் பல சுற் முக்கியத்துவம் வாய்ந்த கதிர்காமம், ! இடங்களையும் பார்வையிட்டுள்ளோம்.
எமது இரண்டாவது கலைவிழாவில் கையில் உருவான நா. சுந்தரலிங்கத்தின் கொழும்பில் நடிகர் ஒன்றியத்திற்காக தடவையாக மேடையேற்றினுேம். սյուի காக க. பாலேந்திராவின் நெறியாள்ை *மழை" நாடகத்துடன் கூடவே மூன்ரு
இறுதியாக எமது மன்ற வளர்ச்சிக்க கும் நன்றி கூருவிடில் நாம் நன்றி மறந்த வேண்டும் இவர்களுக்கு
வணிக, நிர்வாகத்துறையில் சிறந்து மலரை வெளியிடவும் சிறந்த முறையில் நல்கிய எல்லோருக்கும் நன்றிகளை உருத் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்ய சனே வழங்கிய எம்து பெருப்பொருளா லாதீஸ் லோகநாதன், கே.எஸ். நடராசா
எமது இன்றைய கலைவிழாவில் மேை நாடகத்தின் பிரதியினத் தந்துதவியதுட அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரி கேற்று நடித்த எமதினிய மாணவ நண் றேன். மேலும் எமது கலைவிழாவில் நட6 தரம் அவர்களுக்கும், கார்த்திகா ஆடற் நன்றிகள் உரியதாகும்.
எமது மன்றத்துக்கு மறைமுகமாகப் எனது ஞாபகசக்திக்கு உட்படாதவர்களு
இம்மன்றத்தை, எம்மைத் தொடர்ந்: இயங்கச்செய்வார்கள் என்ற நம்பிக்கைய

காண்போம்' என்ற த&லப்புகளில் கவியரங்கு
றுலாக்களையும் ஒழுங்குசெய்து வரலாற்று திருக்கோணேஸ்வரம் போன்ற பல்வேறு
மேடையேறிய அ. தாசீசியஸின் நெறியாள் "ஒலங்கள்’’ என்னும் நாடகத்தைக் லயனல் வென்ற் தியேட்டரில் இரண்டாவது வீரசிங்கம் மண்டபத்தில் எமது மன்ற நிதிக் கயில் உருவான் நா. பார்த்தசாரதியின் வது தடவையும் மேடையேற்றினுேம்.
ாக பலவிதத்திலும் உதவிபுரிந்த அனைவருக் வர்களாகிவிடுவோம். நாம் நன்றி சொல்ல
விளங்கும் "வித்தியோதயம்' எனும் . இம்
கலைவிழாவினை நடத்தவும் ஒத்துழைப்பு தாக்குகின்றேன். குறிப்பாக கலைவிழாவில் வும், நிரற்படுத்தவும் பலவிதத்திலும் ஆலோ ார் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களுக்கும், அவர்களுக்கும் எமதுநன்றிகள் உரியதாகும்.
டயேறும் "ஒர் யுகத்தின் விம்மல் ' என்னும் ன், மேடையேற்றுதற்குதவிய க. பாலேந்திரா விப்பதுடன் எம்மிரு நாடகங்களிலும் பங் பர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின் னவிருந்தளிக்கும் செல்வி காஞ்சஞ தாமோ }கலையக மாணவிகட்கும் எமது இனிய
பலர் உதவிசெய்திருக்கலாம். அவர்களுக்கும், க்கும் நன்றி கூறுகின்றேன்.
து அடுத்துவரும் செயற்குழுவினர் திறம்ப்ட
டன் விடைபெறுகின்றேன்.
க. தர்மகுணசிங்கம்
செயலாளர்
'34 -

Page 263
பொருளாளர் ஏட்டில் ...
எமது மன்றத்தின் வருடாந்தவெளியீட வது ஆண்டு மலர் தங்களுடைய கரங்களி யில், மன்றத்தின் பொருளாளர் என்றவை கூற விரும்புகிறேன்.
இலங்கைப் பல்கலைக்கழக ஆறு வளா? குறைந்த தமிழ்பேசும் மாணவர்களைக் ( நிலையில் தமிழ் மன்றத்தை நடாத்துவதில் இன்னல்களோ அளவிடற்கரியன.
பல இன்னல்கள், துன்பங்கள் வந்தே மனந்தளராத எமது மாணவர்களின் முய சிறு பராயத்தில் வளர்த்துவரும் எமது தய கலேவிழா நடாத்துவதற்கும் நிதிசேகரிப்ப; தரமன்று.
எமது மன்றத்தின் நிதி உதவிக்காக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் "ஒலங்கள் மேடையேற்றியதுடன் 1978ஆம் ஆண்டு படமாளிகையில், ' ராமன் எத்தனை ராம யாகக் காண்பித்ததன் மூலம் போதியளவு தந்த அன்பர்களுக்கும், இக் காட்சிகளை ஒ நன்றி தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை னையோ வர்த்தக நிறுவனங்களின் வாசற்பப எம்மை உதாசீனம் செய்யாது மனமுவ பெருமக்களுக்கும் நன்றி கூறுவதுடன், மன்றம் சிறப்பாகத் தன் பணிகளை வேண்டிநிற்கிறது. a
இறுதியாக, மன்றத்தின் நிதியீட்டத் உழைத்த செயற்குழுவினருக்கும், காப்பா6 அங்கத்தவர்களுக்கும் எனது மனமார்ந்த மன்றத்தினைப் பொறுப்பேற்று நடாத்த இ வந்து சிறப்பாக நட்ாத்துங்கள் என ஆசி
- 2:

அறிக்கை-2
ான "வித்தியோதயம்" சஞ்சிகையின்மூன்ரு ல் தவழ்ந்துகொண்டிருக்கின்ற இதேவேளை கயில் என் உள்ளத்தில் இருந்து சிலவற்றைக்
கங்களிலும் வித்தியோதய வளாகம் மிகக் கொண்டதாகத் திகழ்வதணுல் அத்தகைய ஏற்பட்ட-ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற
போதும் அதைப் பெரும் துயரெனக் கருதி ற்சியால், தவழ்ந்து துள்ளி நடைபோடும் ழ்ெமன்றம், இம் மலர் வெளியிடுவதற்கும், தில் தாம் அனடந்த கஷ்டங்கள் சொல்லும்
976ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 13ஆந்திகதி ர்', 'மழை" எனும் இரு நாடகங்களை தை மாதம் 29ஆந் திகதி தெகிவளை ட்ரியோ னடி" திரைப்படத்தை நிதிஉதவிக் காட்சி நிதிண்ய்ம் பெற்றுக்கோள்வதற்கு ஆதரவு ழுங்குபடுத்துவதில் உதவிபுரிந்தவர்களுக்கும் "யில், இம் மலர் வெளியீட்டுக்காக எத்த டியேறி விளம்பரம் கேட்டுச் சென்றபோது $து விளம்பரம் தந்து உதவியவர்த்தகப் தொடர்ந்துவரும் ஆண்டுகளிலும் எமது ஆற்றுவதற்கு உங்களினது ஆதரவினை
திற்கு என்னுடன் தோளோடு தோள்நின்று ாருக்கும், பெரும் பொருளாளருக்கும், மன்ற நன்றியைக் கூறி, அடுத்துவரும் ஆண்டில் ருக்கும் செயற்குழுவினரை, வாருங்கள் கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
es alaoyu vadir
பொருளாளர்
35 -

Page 264
மரபுவழி நின்று மாண்புடன்
மலரின் இதழ்களை மணம்பெறச் செய் துக்களுடனுன விடையதானங்கள் தற் வர்களுக்கும்; மன்றத்தின் சாதனைகளுக்கு மேன்மை மகத்தான ஆலோசனைகள் வழங்கியும் ளாளர் கலாநிதி கா. சிவத்தம்பி அ மாணிக்கவாசகர் அவர்களுக்கும், வி அவர்களுக்கும் ; மாணவர்களின் ஆக்கங்களை சிரமத்ை சகல விரிவுரையாளர்களுக்கும்; இம் மலருக்கு வாழ்த்துச் செய்தி வழ தும் எமக்கு மேலான உதவிகள் புரி த சில்வா அவர்களுக்கும்; ஆசிச்செய்தி முனசிங்க அவர்களுக்கும்; வணிகத்து தன அவர்கட்கும்; காப்பாளர் திரு, ! பொருளாளர் கலாநிதி கா. சிவத்தம் இயலாத நிலையிலும் இல்லையென்று ( வளம் பெற விளம்பரம் தந்துதவிய சேகரிக்க சேர்த்ந்தவிய எம்தினிய நண் து. சந்திரகுமார், ந. கலைச்செல்வன், பொ. முருகையா, . ஆப்தீன், வ. அ. இம் மலரின் அட்டைப்படத்தினை அ வாரிதி' திரு. வி. கனகலிங்கம் (வீ. ே இம் மலருக்கு ஆய்வுரை நிகழ்த்தவிரு சிரமங்களையும் இழப்புகளையும் சிந்தனை சிறப்புடன் முடிப்போம் என அல்லு செயற்குழுவினர்க்கும்;
மலர் வெளியீட்டில் என்னுடன் தோே
துணைநின்ற நண்பன் நி. சரவணபவனு ளுக்கும்; குறுகிய காலத்தில் கூடிய முயற்சியு அச்சிட்டு வழங்கிய சுன்னுகம் திருமகள் யாளர் சோ. இராசரத்தின்ம் அவர்க நாம் நன்றிகூற மறந்திட்டபோதும் உள்ளங்களுக்கும்:
மண்டபம் தந்துதவிய கதிரேசன் மண்
எமது இத்தும் கனிந்த நன்றிகளை உரித்தா
- 2

ா தவில்கின்ருேம் !
யும் வண்ணம் சிரமம் பாராது சீரிய கருத் த்துதவிய விரிவுரையாளர்களுக்கும், மாண
மிகு பணிபுரிந்தும், மலர் வெளியீட்டுக்கு
எம்மை ஊக்குவித்த மன்ற பெரும்பொரு வர்களுக்கும், துணைக்காப்பாளர் திரு. சி. ரிவுரையாளர் திரு. எஸ். சிதம்பரநாதன்
தைப் பாராது சீர்திருத்திச் சிறப்பாக்கிய
2ங்கியும், எமதுமன்றக் காப்பாளராக இருந் த்த வளாகத் தலைவர் பேராசிரியர் ரியூலி கள் வழங்கிய பதில்ப் பீடத் தலைவர் திரு. றைத் தலைவர் திரு. ஹேமா விஜயவர்த் சி.மாணிக்கவாசகர் அவர்களுக்கும்; பெரும்: பி அவர்களுக்கும்; சொல்லாது மனதார விரும்பி மலர் எமது விளம்பரதாரர்களுக்கும் அதனைச் பர்களான சி. நவரத்தினம், எம். ஜமால், பொ. இரத்தினசிங்கம், இ. இராஜசுந்தரம், ன்ரனி, இராசரத்தினம் ஆகியோருக்கும்;
ழகுற வரைந்துதவிய அன்பர் "வண்ண க.) அவர்களுக்கும்; க்கும் திரு. வாமதேவன் அவர்களுக்கும். ாயில் கொள்ளாது எடுத்த முயற்சியைச் தும் பகலும் அயராதுழ்ைத்த இவ்வாண்டு:
ளாடு தோள் கொடுத்துச் சகல விதத்திலும் க்கும், மற்றும் கா. ஆறுமுகராசா அவர்க
டன் சிறப்புற இம்மலரை செம்மையுடன் r அழுத்தகத்தினருக்கும், அதன் முகாமை. ளூக்கும், அழுத்தக ஊழியர் அனைவருக்கும் நன்மைசெய்ய மறந்திடாத ஏனைய அன்பு
rடப நிர்வாகத்தினருக்கும்; "க்குகின்ருேம்.
இனே இதழாசிரியர்கள்
36 -

Page 265
(20th the best Gompliment
of Cey-Nor
Boat Yard,
KARAN AGAR.
Phone: 804
Fishing Net Factory, GURUNAGAR,
JAFFNA.
Phone: 76
O Manufacturers of: Fibre Glass Ferrocement Boats and Fishing Nets.
O Exporters of:
Marine Products.
O Importers and Distributers of : All Sizes of Kuralon Ropes.
O Also Supplies :
Frozen Fish.

சி-நோர் படகு உற்பத்திச்சாலே,
காரைநகர்.
போன்: 804
வலைத் தொழிற்சாலை, குருநகர்,
யாழ்பபாணம்.
G3 unr 67 ; 7604
கண்ணுடி நார் மீன் பிடிப் படகுகள்.  ேசீமேந்து ஆழ்கடல் மீன்
பிடிப் படகுகள். 9 நைலோன், குறுலோன் வலைகள் உற்பத்தியாளர்கள் 9 கடல் உற்பத்திப் பொருள்
ஏற்றுமதியாளர்கள். 9 குறுலோன் கயிறுகள்
இறக்குமதி விநியோகஸ்தர்கள்.
O குளிரூட்டிய மீன்
விநியோ கஸ்தர்கள்.

Page 266
1 ܫܡܐ ܨܗ܂ .
C.
Raith the Best
of
K. K. S.
8, Dam Street
Phone : 328O2
அச்சுப்பதிவு : திருமகள் அழுத்த
 

Compliments
Namarts
MBO-12
GES
கம், சுன்னுகம்-967/2-78