கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவுக்களஞ்சியம்

Page 1
அறிவுக் 5GT5.
அ. சி. உதயகுமார் B. Sc
TAMIL INSTITUTE OF TAMIL INSTITUTE OF
UDUW
 

(Eng), Ex - Legionnaire
POLITICAL STUDES STRATEGIC STUDES

Page 2

* *
அறிவுக்
களஞ்சியம்-2
SKS S TTTTTTT LS L LS SSLLLaaSSS SLLLSSSLTaTmLCCC LLLLTK SS
LLLLLL LLLL SLLLLLL SS LL L a LLLLLL LLLLLS LLLLLL TAMIL, INSTITUTE OF STRATEGICSTUDES
UDU WIL .畫」專

Page 3
First Edition: October, 1992
Copy Right: A. S. UTHAYAKUMAR
LLaLLLTT LHCS S LLL LLLLL LL LLaaLLLL LLLaLLLLSS LLaLLLL
Tamil Institute of Strategic-Studics, Uduvil
Printo di by: A RUN PRINTERSAND PUBLISHERS, JAFFNA.
 

"அறிவுக் களஞ்சியம் சஞ்சிகையும், நாமும்
1 ܠܐ .
அன்பான தமிழீழ மக்களே!
இலங்கைத் தமிழர்களாகிய நாம் எமது சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவியல் முன் னேற்றங்களுக்கும், மேன்மையான மானுட வாழ்க்கை க்கும் "தமிழீழம்' என்ற தனிநாட்டினை அமைக்கப் புேராடிவருகின்றோம். அமைக்கப்போகும் தமிழீழத்தில் மேலே குறிப்பிட்ட குறிக்கோள்களை இலகுவாகவும், காலதாமதங்களின்றியும் அடைவதாயின், எமது சமூகத் தின் அடிப்படையறிவைப் பல்வேறு துறைகளிலும் ೩೭ೇತ್ಲಿಶ್ನ! அத்தியாவசியமானது. இத்தேவைபற்றி எம்மால் Gariff L'il, ஆய்வு நூல்களில் மீண்டும், மீண்டும் விவியுறுத்திவந்துள்ளோம். இந்த அடிப்படையில், தமிழ் மக்களின் அடிப்படையறிவை வளர்க்கும் நோக் கில் சஞ்சிகைகள், கைநூல்கள். நூல்கள் வெளியிடப்படவேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்திவந்துள்ளோம். மேலும், இப்படியான வெளியீடுகளை எமது சமூகத்திலுள்ள அறிஞர்கள், கல்விமான்கள், பேராசிரியர்கள் தொழில்துறையாளர்கள், ஆசிரியர்கள் புத்திஜீவிகள் மனவிருப்புடன் இணைந்து, பொறுப்புணர்ச்சியுடன் ஒரு அமைப்பு ரீதியில் வெளியிடவேண்டும் எனவும் வலியுறுத்தி வந்துள்ளோம்
கடந்த சில மாதங்களாக மாணவர்களதும், சாதார ண மக்களதும் பொது அறிவை வளர்க்கவென "அறிவுக் களஞ்சியம் " என்ற சஞ்சிகை யாழ்ப்பாணத்தில் வெளி யாகி வருகிறது. இதில் கல்விமான்களும், பேராசிரிய்ர்களும், மூதறிஞர்களும், கல்விட்ட பொறுப்பாளர்களும், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளர்களும், கல்லூரி அதிபர்களும், சிந்தனையாளர்களும், கவிஞர்களும், கலை ஞர்களும், முற்போக்கு எழுத்தாளர்களும் ஆசிரியர்களாகவும், "காப் பாளர்கள் ஆகவும் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு மேலாக, இந்தச் சஞ்சிகையானது ரூபா 10/- இற்கு விற்கப்படுபமை மாணவர்களும், சாதாரண் மக்களும் அதனை வாங்கிப் படிக்கும் சந்தர்ப்பங்களையும் அதிகரித்துள்ளது.
இவைகளெல்லாம் அறிவுக்களஞ்சியம்' சஞ்சிகையின் வெளிக் குண அமைப்புக்கள் தொடர்பானவைகளே. ஆனால், இந்த சஞ்சிகை யின் உள் விடயங்களுக்கே நாம் அதிமுக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும்"எனக் கருதுகின்றோம். ஏனெனில், அவைகளில் இருந்து

Page 4
  

Page 5
நுழைவு
இலங்கைத் தமிழ் சமூகத்தினைப் பொறுத்தமட்டில் மாணவர் களதும், பொதுமக்களதும் பொது அறிவை வளர்ப்பதற்கென சரியான விபரங்களையும், விளக்கங்களையும் கொடுக்கும் தரமான, நம்பகமான ஒரு சஞ்சின்க் தொடர்ச்சியாக ட்வெளியிட்ப்பட வேண்டிய தேவை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. பொது அறிவை வளர்க்கும் நோக்குடன் 'அறிவுக் களஞ்சியம் என்றொரு சஞ்சிகை வெளிவரு அதைத் கேள்வியுற்று, ஆவல் மிகுந்த நிலையில், அதன் முதலாவது வெளியீட்டின்ைப்ப்டித்தோம். யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் களும், மூதறிஞர்களும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் களும், யாழ் குடாவின் முக்கிய-கல்லூரிகளின் அதிபர்களும், ஆசிரியர் களும், யாழ் குடாவின் கல்விக்குப் பொறுப்பாகவிருக்கும் உதவி ட்ைரக்டர்களும் கல்விமான்களும், கலைஞர்களும், "கவிஞர்களும், முற் போக்கு எழுத்தாளர்களுமென, தமிழ் சமூகத்தின் அறிஞர்கள் எனக் கருதப்படுபவர்கள் இச்சஞ்சிகையின் ஆசிரியர்களாகவும், காப்பாளர் கள் ஆகவும் உள்ளனர் என முதலாவது பக்கம் தெரிவித்ததைக் கண்டு, ஒருவித மன நிறைவு ஏற்பட்டது.
"அறிவுக் களஞ்சியம்-1" இன் சிறு கட்டுரைகள், துணுக்குகள் என்பவைகளில் விபர, விளக்கப் பிழைகளும், வேறு குறைபாடுகளும் ஆங்காங்கு காணப்பட்ட போதிலும், இவைகள் முதலாவது சஞ்சிகை யினைப் படித்தவர்களால் சுட்டிக்காட்டப்படும் நிலையில், தொடர்ந்து வரும் வெளியீடுகளில் பிழைகளும், குறைபாடுகளும் தவிர்க்கப்பட்ட விதத்தில் சஞ்சிகையினை ஆசிரியர்களும், காப்பாளர்களும் வெளிவிடு வர் என்ற நம்பிக்கையுடன், அடுத்த வெளியீட்டினை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.
1 + அறிவுக் களஞ்சியம் - 2 உம் ஆகஸ்ட் மாதம் 1992 இல் வெளி யாகியது. அதிலுள்ள அறிவுரைகள், சிறு கட்டுரைகள், துணுக்குகள் என்பவைகளில் விபர விளக்க பிழைகள் மலிந்து காணப்பட்டதுடன், கட்டுரைகளில் திரிபுபடுத்தல்களும், திசை திருப்பல்களும் காணப் LLTTLLTTATSS AASASASS LIEبھی تبدیہہ شبھا
"அறிவுக்களஞ்சியம் - 2 இல் 'வாசகர் கருத்து' என்பதன் கீழ் ஆர்ன்வீர்க்ள் நுமக்கள், கல்லூரிகளின் மன்றப் பொறுப்பாசிரி
இருப்பதையும், மாணவர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் அறி வுக் களஞ்சியத்தில் கொடுக்கப்படும் விபரங்கள், விளக்கங்கள் அனைத்
--

தும் சரியானவைகள் என்ற கருத்தினைக் கொண்டிருப்பவர்கள் என் பதையும் உறுதிப்படுத்தியது. அதாவது எமது மாணவ சமூகமும், பொதுமக்களும், ஆசிரியர்களும் சமூகத்தில் அறிவாணிகள் எனக் கரு தப்பட்டவர்களால் கூறப்படுவதையெல்லாம் வேத வாக்கியங்கள் போல் ஏற்றுக்கொள்பவர்கள் என்பது உறுதியாகிறது.
இப்படியான ஒரு சமூகத்தில் அறிஞர்கன் எனக் கருதப்படுபவர்கள் உண்மையில் போலி அறிஞர்களாக இருந்தால், அந்தச் சமூகம் முழு, வதும் பெரும் ஆபத்தினையே எதிர்நோக்கவேண்டியிருக்கும். ஏனெனில்: போலி அறிஞர்களினால் பிழையாகக் கூறப்பட்டவைகளையெல்லாம் வேதவாக்கியங்கள்போல் ஏற்கப்பட்டுவந்தால், காலப்போக்கில், அந்த சமூகம் பிழையான விபரங்களையும், விளக்கங்களையுமே சரியானவை எனக்சுருதி அறிந்துவைத்திருக்கும். இது பெரும் ஆபத்தினுள்தான் அந்த சமூகத்தினை வீழ்த்தும். இது அந்த சமூகம் சீரழியவே வழி வகுக்கும். இலங்கைத் தமிழ் சமூகத்தின் அரசியலும் சுதந்திர காலத் திலிருந்து இப்படியான சீரழிவையே எதிர்நோக்கிவந்தது.
இப்படியான ஒரு சமூகம் தமிழ்போன்ற தாய்மொழியில் மாத் திரம் கல்விகற்று, ஆங்கிலம் போன்ற மொழிகளும் தெரியாது இருக்கு மேயாயின், சரியான விபரங்களையும், விளக்கங்களையும் ஆங்கில, மற்
நூல்ககள் (Hand Books) நூல்கள், சஞ்சிகைகள் என்பவற்றி விருந்துகூட அறியமுடியாதே போகும். இவற்றிற்குமேலாக, ஆங்கிவிட மற்றும் மொழிகளில் வெளியிடப்படும் கலைக்களஞ்சியங்கள் கை நூல்கள், நூல்கள், சஞ்சிகைகள் உண்மையில் தேவையற்றவ்ைகள். எமது தாய்மொழியில் இவைகள் இருந்தால்போதும் என்று கூறி இத் தப்போலி அறிஞர்கள் தமது"தாய்மொழிப்பற்று" என்பதையும் சமூகத். திற்கு வெளிக்காட்ட முற்படுவார்களேயாயின், அந்த சமூகம் போவி அறிஞர்களின் பணயக்கைதிகளாகி, தப்பித்துக்கொள்ள முடியாதபடி மிகக்குறுகிய காலத்தில் சீரழிந்துவிடும்:
இங்குதான் "அறிவுக் களஞ்சியம்" என்ற சஞ்சிகையில் கொடுக்கப் படும் விபரங்கள், விளக்கங்கள் என்பவைகளும், அதன் ஆசிரியர்கள் காப்பாளர்கள் என்பவர்களின் உண்மை நிலையும் மிக முக்கியமாகின்
| = mmmmmm . (T - - - -
"அறிவுக் கள்ளுசிய்ம். 1.அறிவுக் களஞ்சியம் * என்பவைகளிஜ் காணப்படும் விர, விளக்கப் பிழைகளையும், இரண்டாவது அறிவுச் களஞ்சியத்தில் " காப்பாளர் கருத்துக்கள் என்பதன்கீழ் பேராசிரியரி அ. சண்முகதாஸ், பேரறிஞர் சொக்கன், அநு: வை. நாகராஜன்,
-vii

Page 6
வீண்ண்சிவீரர்ச்சி:இ.ஜெயராஜ்.இந்துக்கல்லூரி அதிபூர்.பஞ்ச் லிங்கம் செம்பியன் செல்வன் ஆகியோரின் கருத்துக்களையும் பார்க் கும்போது ஒருவித பீதியே ஏற்பட்டது.குறிப்பாக.எமது சமூர்த் தின் எதிர்கால நிலைபற்றியே பீதி ஏற்பட்டது.
இப்பீதியை உச்சப்படுத்தும் வகையில் "அறிவுக்களஞ்சியம் - 2 இல் வெளிவந்த 'உங்கள்"சந்தேகம்?" என்பதில் தொலைகாட்டி தொடர் பிர்ன்வை அமைந்துள்ளன. சு. கு. என்பவரால் தொலைகாட்டி தொடர் பர்க்க்கொடுக்கப்பட்ட விபரங்களும், விளக்கங்களும் பொது அறிவு ஓரள்விற்கு இருக்கும் ஒருவருக்கு ஒருவித ஆச்சரியத்தை ஏற்படுத்தி பிருக்கும். Encyclopaediaக்களைப் பயன்படுத்தும் பழக்கமுடையவருக்கு, சு. கு: வினால் கொடுக்கப்பட்ட விபரங்களும், விளக்கங்களும் முற் தும் பிழையானவை என்பதை 'ஆறுதிப்படுத்தக் கூடியதாக இருக் ம்; அதேவேளையில், க. கு. பிழையான விபரங்களையும், விளக்கங் க்ள்ையும் எப்படி ஒருவித மன உறுதியுடன் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் கொடுக்கிறார் என்று பெரும் ஆச்சரியமும், ஒருவித புதியும் ஏற்படும். - - 'இவற்றிற்கு மேலாக, தனது பின்ழயான விளக்கங்களையும் விபரங்களையும் படிப்பவர்கள் அவை சரியானவைகள் என எண்ணத் த்ரீண்டுவத ற்குப் பொய்யான முறையில் " ஆதாரம்: கலைக்களஞ் தொகுதி. 5 " என த. கு. எழுதியிருப்பதை ஒருவர் சென். ສ. வெளியிடப்படும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தினைப் பார்ப்பதன் மூலம் றுதி செய்யமு ற்படுவாரேயாயின், அவர் க.குவும், அறிவுக் களஞ் தியத்தின் ஆசிரியர்களும், காப்பாளர்களும் வெறும் பொய்யர்கள், பொறுப்புணர்ச்சியற்றவர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்பதையறிந்து
சிற்றமடைவர். ממשל
'இது ஒரு உதார்னமாகும். இங்கு "ஆதாரம்" என்பது குறிப் பிடப்பட்ட-நிலையில்தான் அறிவுக் களஞ்சியம் பிழையான விபரங் களையும், விளக்கங்களையும் கொடுத்துவிட்டுப் பொய்யான் முறை" பிற்:ஆதாரம்: என்பதையும் தந்துள்ளது என்பதை ஒருவர் அறியக்
கூடியதாகவுள்ளது. "ஆதாரங்கள்" என்பவை கொடுக்கப்படாவிட்ட்ால், அறிவுக்களஞ்சியத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்களும், விளக் கங்களும் பிழையானவை என்பதைச் சாதாரணமான ஒருவர் கண்டறி இது சற்றுக் கடினமாகவே இருக்கும் - .--
i" .
:இல்ைகளைப் பார்க்கும் போது, அறிவுக் களஞ்சியம் தொடர் புதுகலும், ஆதன் ஆசிரியர்கள், காப்பாளர்கள் தொடர்பாகவும் பல கேள்விகள்"எழவே செய்கின்றன. "அறிவுக் களஞ்சியம்" சஞ்சிகை
-viii

s = பின் உண்மை நோக்கங்கள் எவை? அதன் ஆசிரியர்களும், காப் பாளர்களும் உண்மையில் யார்? இவர்கள் மாணவர்களதும், சாதாரண மக்களதும் பொது அறிவை வளர்ப்பது என்ற போர்வையில் தமிழ் சமூகத்திற்குப் பிழையான விபரங்கள்ை யும், விளக்கங்களையும் கொடுப்பது ஏன்? ; இவர்கள் உண்மையில் யாரின் பின்னணியில் இங்கு செயற்படுகின்றனர்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகளைச் சரி யாக ஆராய்ந்தறிவது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானது.
இவற்றையெல்லாம் சரியாக ஆராய்ந்தறிவதாயின் முதலில் 'அறி வுக் களஞ்சியம்" சஞ்சிகையினை கவனமாக ஆராயவேண்டியுள் ளது. இங்கு " அறிவுக் களஞ்சியம் - 2" பற்றி மிகவும் துணுக்கமாக ஆராயப்படுகிறது. இறுதியில் சில முடிவுகளும், ஆலோசனைக் கும் தரப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களும், ஆசிரியர்களும், சாதா ான மக்களும் அறிவுக் களஞ்சியம் - 2 இல் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாகச் சரியான விபரங்களையும், விளக்கங்களையும் அறிந்து கொள்ள, அவைகளும் இங்கு தரப்பட்டுள்ளன. இவைகள் BBCyclopaedia Britanica Chambers Encyclopaedia, The American Peoples Encyclopaedia, மற்றும் பல தரமான, நம்பகமான கைநூல்களி விருந்தும் பெற்றுத் தரப்பட்டுள்ளன.-.
இறுதியாக, இந்த நூலில் ஆராயப்பட்டவைகளை ஒருவர் ஏற் பதும், நிராகரிப்பதும் அவரது சுதந்திரம். ஆனால், இந்த நூலில் கூறப்பட்டிருப்பவைகளைப் பெரும்பான்மையான தமிழ் சமூகம் ஏற்காது நிராகரிக்குமேயாயின், அது ஒன்றினையே எமக்கு வலியுறுத்துகிறது எனக் கருதவேண்டும் எமது சமூகம் போலி அறிவாளிகளின் பணயக் கைதிகளாகிவிட்டது. போலி அறிவாளிகளின் கோரப் பிடியிலிருந்து இனித் தவறமுடியாத-நிலையில், எமது சமூகம் முன்னேற முடியாது. சீரழியத் தொடங்கிவிட்டது. அது நிலைகுலைய எவ்வளவு காளிங்கள் செல்லலாம் என்பது தொடர்பாகவே நாம் இனி-ஆராய்ந்து-அறிய வேண்டும் என்பதே.
எது எவ்வாறாயினும், காலம் இன்னும் கடந்துவிடவில்லை. எல் லாம் தமிழ் சமூகத்தின் ஆராயும்-தன்மையில்தான்-பெரிதும் - தங்கி புள்ளது.
S SS SS S S SSS S S S S S S S S S S SSSSLS S S SS
உடுவில், அ. சி. உதயகுமார் 20 செப்டெம்பர் 1992: - - ---------
-ix

Page 7
. . ii . ܡܫ . ܬܐ 调 ==
- =ܒܒ ܥ ܕ ܩܒ - - ----
= * SS SSASS
.. *====== -- سي من mili і п . ܬܐ ཀ།། な富。
 
 

O.
.
2.
3.
4.
5.
|6.
- பக்கம் *அறிவுக் களஞ்சியம் சஞ்சிகையும், நாமும் iii
நுழைகிy Wi மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோம் மனதில் உறுதி வேண்டும் | 02 ஜெயராஜ் சொன்ன கதை 06
உங்கள் சந்தேகம் 3
சுப்பர் சோனிக் - 2O டென்னிஸ் விளையாட்டுப்பற்றி SO தத்துவம் தந்த ஆக்கிமெடீஸ் 39 என்னைப் பின்பற்றி வாருங்கள் கரிபோல்டி 43 பெற்றோலிய அரசியல் - 5W
புவியின் மரணம் " " " - ó3 நாம் விடும் மூச்சு 65 ஐபல் கோபுரம் 68 சுத்தமான நகர் சிங்கப்பூர் 69, உருளைக் கிழங்கு 7
மாங்காய் புளிப்பதேன் மாம்பழம் இனிச்பதேன் 76
சிந்தனையாளர் பிளேட்டோ W8
(ptубlyб007 88

Page 8
  

Page 9
u = -
2 மனதில் உறுதி வேண்டும்
அறிவுக்களஞ்சியம் -2, பக்கம் - 5
ட எழுதியவர் ச. பா.
சபா என்பவர் மனத்தில் உறுதியிருக்க வேண்டியது பற்றிக் கூறமுற்பட்டு, முதலாவது பந்தியின் பின்னர் வேறு விடயங்கள் பற்றியே கூறுகிறார்.-- YSS S SLL L L S L S L L L L L S SS S SS SS SS == في بداية بشر
ச. பா.வினது இரண்டாவது-பந்தியில் 'மற்றவர்களிடம் அன்பு செலுத்த . மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பதும், அவர்களின்பால் குற்றம், குறை-கூறாமவிருப்பதுமே-ஆகும்" எனக் கூறுகிறார்.
ச. பா. வும் தனது இச்சிறு அறிவுரையில் உள்ள பிழையான கருத்துக்கள், -விளக்கங்கள் தொடர்பாகக் குற்றம், குறை கூறாமல் இருக்கவேண்டும் என்பதை எதிர்பார்த்து இதை இச்சிறு அறிவுரையில் எழுதியுள்ளாரோ-தெரியவில்லை; ட
-தமிழ் மாணவர்களதும், சாதாரன மக்களதும் அறிவை வளர்க்க வென அறிஞர்கள் " இனால் வெளியிடப்படும் அறிவுக் களஞ்சி யம்" என்பதிலிருக்கும் பிழையான விபரங்களையும், வி ஆள க்கங் களையும் எவரும் சுட்டிக்காட்டாது இருக்க வேண்டும் என ச. பா. எதிர்பார்ப்பது முற்றிலும் பிழையானது. தவறுகள் சுட்டிக்காட்டப் படவே வேண்டும். இல்லாவிட்டால், தவறுகளையே அறியாது. ஒருவர் பிழையானவைகளைச் சரியெனக் கொண்டிருப்பார். இது அந்தத் தனிநபரின் வாழ்க்கையை மாத்திரம் பாதிக்காது, ஒரு சமூகத்தினையே-பாதிக்க முடியும். இதற் குச் சிறந்த உதார விணங்கள் அறிவுக் களஞ்சியம், சில பாடநூல்கள், சஞ்சிகைகள் போன்ற வற்றை எழுதுபவர்களும், அவற்றைப்-படிப்பவர்களும். இவற்றில் பிழைகள் இருப்பது சுட்டிக்காட்டப்படாவிட்டால், சில வருடங் களின் பின்னர், தமிழ்ச் சமூகம்-பிழையானவற்றையே-சரியென அறிந்து வைத்திருந்து சீரழியும்.
| R || -
ச. பா வினது அறிவுரையைப் படிக்கும்போது, அறிஞர் ஒரு வசின் கூற்றும் ஒரு கேள்வியும்-ஞாபகத்திற்கு-வருகிறது
... . .''. Physician's... faults are, covered with Earth, and rich Men's with money " அதாவது மருத்துவரின் தவறுகள் மண்ணால் மூடப் படுகிறது. செல்வந்தர்களின் தவறுகள் பணத்தால் ஈடுசெய்யப்பதி கிறது.
-2-

ஆனால், அறிஞர்கள் " இனதும் " ஆசிரியர்கள் ' இன தும் தவறுகள் எதனால் ஈடுசெய்யப்படமுடியும்? ஒன்றினாலும் அவை ஈடுசெய்யப்படமுடியாது, சமூகம் சீரழிந்தே போகும். அப்படியாயின் ச. பா. வினது சித்தனையும், கொள்கைப் போக்கும் உண்மையில் எப்படியானது? " " " - - -
தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதைக் "குற்றம்" " குறை" கூறு வதாகக் கருதுவது முற்றிலும் பிழையானது. தவறு செய்யும் ஒரு வர் தான் செய்வது தவறு என்பதை அறியாமலே அதனைச் செய்ய லாம். இந்த சூழ்நிலையில், தவறு சுட்டிக்காட்டப்படும்போது அதனை ாற்று, திருந்திக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. தவறு சுட்டிக் காட்டப்படாவிட்டால் அவர் தான் செய்வது சரியானதெனக் கருதித் தொடர்ந்தும் அதே தவறினைச் செய்வார். இந்த நிலையில், ச.பா. வினது அறிவுரை பிழையானதே.
எதுவிதத்திலும், தவறுகள் செய்வோர்களில் இன்னுமொருவகை யினரும் உள்ளனர். அவர்கள் " தாம் தவறே செய்யமாட்டாதவர்கள்" எனத் தம்மைத்தாமே கருதிக்கொள்பவர்கள் இவர்கள் தாம் தவறு செய்யும்போது, பிறர் அதைச் சுட்டிக்காட்டுவதை விரும்பாதவர்கள், தம்மைத் திருத்தியமைக்க மாட்டாதவர்கள். ஒவ்வொரு சமூகத்தி லும் இப்படியானவர்கள் இருக்கவே செய்கின்றனர். இவர்களுக்குச் சிறந்த உதாரணம் போலி அறிஞர்கள் ஆகும்.
அடிப்படையறிவு குறைந்த சமூகத்தில் போலி அறிஞர்கள் தம்மை " அறிஞர்கள் ", " பேரறிஞர்கள் " , மூதறிஞர்கள் ", "இளவறிஞர்கள்" ஆக்கிக்கொள்ள வேண்டுமாயின், (இவர்களது ) தவறுகள் சுட்டிக் காட்டப்படாது பார்க்கவேண்டியதுடன், ஒரு போலி அறிஞரை ஏனைய போலி அறிஞர்கள் புகழ்ந்து கொள்ளவும் வேண்டும். அப் போதுதான் அடிப்படையறிவு குறைந்த மக்களும் அவர்களைப் போற் றுவர் அவர்களை அறிஞர்கள், மூதறிஞர்கள். பேரறிஞர்கள் எனக் கருதுவர். இதன்மூலம்தான் போலி அறிஞர் குழாம் தம்மை அந்த சமூகத்தில் நிலைநாட்டிக் கொள்ளமுடியும்.
இதனையேதான். மன உறுதி" பற்றிய அறிவுரையைக் கூறமுற் பட்ட ச. பா வும் வலியுறுத்துவதை அவதானிக்கமுடியும், ச. பா. அவர்கள்: "..அப்பலவீனத்தை தாம் மிகைப்படுத்தாமல் அவனது பலத்தை நாம் போற்றவேண்டும் ' எனக் கூறுகிறார். மேலும் அவர் ' மற்றவனை நாம் வசப்படுத்த நம்பால்-ஈர்க்க நாம் செய்யவேண் டிய மிக எளிமையான கைங்கரியம் அவனது பெருமைகளையும், அவ ாது ஆற்றல்களையும் புகழுவதே" எனக் கூறுகிறார். இங்கு சபா.
T-3-

Page 10
வசப்படுத்தலிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறாரன்றி சமூக முன் னேற்றத்திற்கல்ல.
ச பா. வினது அறிவுரையானது ஒரு போவிச் சமூகம் உருவாக வும், அந்த சமூகம் சீரழியவுமே வழிவகுக்கிறது. குறிப்பாக ஒரு போலி அறிஞர்கள் குழாம் இப்படி உருவாக்கப்பட்டால், இவர்களில்ட முழுமையாகத் தங்கியிருக்கும் சமூகத்தின் நிலை எப்படியிருக்கும்
என்பதைச் சுயமாகச் சிந்திக்கும் ஒருவர் அறிவார்.
ச. பா வினது சமூக முன்னேற்ற நோக்கமற்ற சுயநல பிற் போக்குச் சிந்தனையை நாம் அவரின் இரண்டு வசனங்களிலிருந்து மேலும் உறுதிசெய்யக்கூடியதாகவுள்ளது. சட்பாட்டஅவர்கள்ட
- மன உறுதி ஏற்பட்டால் அங்கு தவறுகள் ஏற்பட இயலாது. கொண்ட கொள்கையில் பற்றும் இறுக்கமும் ஏற்படும்' எனக் கூறு கிறார்.
கற்பழிப்பவனும் மன உறுதி யுடன்தான் அதனைச் செய்கிறான். களவெடுப்பவனும், கொள்ளையடிப்பவர்களும் மன உறுதி உடை யவர்கள்தான். இவர்கள் தாம் செய்வதில் தவறுகள் எதுவும் இல்லை யெனக் கருதியே அவற்றைச் செய்கின்றனர். அப்படியாயின் சி. பாட வினது அறிவுரையின்படி கொடுங்கொலைகள், கற்பழிப்புகள் கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் தவறுகள் செய்யவில்லை என்பதே
பாகும்.
இவர்கள் உண்மையில் ஒருவித வெறியர்களே, புத்தி சுவாதீன மற்ற்வர்களே. விஞ்ஞான ரீதியாக ஒரு விடயத்தினை ஆராய்ந்துசரியான முடிவுகளுக்கு வருவதன் மூலம் தெளிவினை ஏற்படுத்தி, மன உறுதி ஏற்படுமாயின் ஒருவர் தவறுகள் செய்வதைக்-குறைத்துக் கொள்ளமுடியும். ஆனால், எந்தவித ஆராய்வும்: தெளிவும் அற்ற நிலையில்கூட, உணர்ச்சிவசப்படும் தன்மை ஒருவனுக்கு ஒருவித மன் உறுதியை ஏற்படுத்த முடியும். இந்த நிலையில், அவன் தான் தவறுகள் செய்யவில்லை என்றே-கருதுவான். தனது பிழையான கொள்கை களை மனஉறுதியுடன் கடைப்பிடிப்பான்.
இலங்கைத் தமிழரின் அரசியல் போக்கும் அன்று இப்படித்தான் இருந்தது அங்கு மன உறுதி" என்பது விஞ்ஞான ரீதியிலான ஆராய்வு கனின் தெளிவில் ஏற்பட்டதல்ல. உணர்ச்சிவசப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஒருவித வெறித்தன்மையே (FalaiBI ) அங்கு காணப்
- 4
 

KJARANJA, წმ. სასაც
பட்டது. இதனால், இலங்கைத் தமிழரின் அரசியலில் தவறுகள் மலிந் தன. ஆனால், தவறுகளைத் தமிழ் அரசியல் தலைவர்கள் ஏற்கவில்லை. தவறுகளைச் சுட்டிக்காட்டியவர்கள் ஒதுக்கப்பட்டனர், நசுக்கப்பட்ட னர். ச. பா வினது இன்றைய அறிவுரையில் குறிப்பிடப்பட்டது போன்ற போக்கினை, அன்றும், தமிழ் அரசியல் தலைவர்கள் " உம், "சமூகப் பெரியோர்கள்'உம், சமூகத்தின் கணிசமான பகுதியினரும் கடைப் பிடித்துவந்த நிலையில், தமிழ் சமூகத்தின் அரசியலும் சீரழிந்து, தமிழ் சமூகத்தின் முன்னேற்றமும் தடைப்பட்டது.
மனத்தினை ஒருநிலைப்படுத்துவது பற்றியும் மனஉறுதி பற்றியும் சிலஅறிவுரைகளைக் கூறமுற்பட்ட ச, பா, ஒவ்வொரு விடயம் தொடர் பாகவும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து,நாம் தெளிவினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியமுக்கியத்துவத்தினை வலியுறுத்தாது, போலி, வெறித் தன்மைகளை உருவாக்க வழிவகுக்கும் விதத்தில்தான் နှီ - கூறியுள்ளார். இவரின் அறிவுரைகள் சமூகத்தில் போலி அறிஞர்களும், போளிச் சமூகப் பெரியோர்களும், வெறியர்களும் (Fanatics) உருவாக வும், இப் போலிகள் சமூகத்தில் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், நிலைநாட்டப்படவுமே வழிகோலுகின்றன. கடந்த காலங்களில் இப்படி யான போலியர்களது பொறுப்பற்ற தன்மையாலேயே எமது சமூகம் படிப்படியாகச் சீரழிந்து, இன்று ஒரு இக்கட்டான-நிலையை அடைந் துள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.
இன்று எமது சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, விஞ் ஞான, தொழில்நுட்ப அறிவியல் முன்னேற்றத்திற்கும்-மேன்மையான மானுட வாழ்க்கைக்கும் போராடி, தனிநாட்டினை அமைக்க முற்படும் வேளையில், ச. பா. போலிகளை உருவாக்கவும், அப்போலி களை நிலைநாட்டவும் அறிவுரைகளை வழங்குவது பிற்போக்குத் தன - 10PTGBT:-
ச. பாவோ போலிகளதும், வெறியர்களதும் தவறுகள் சுட்டிக் காட்டப்படக்கூடாது, அவர்களது பலத்தினை நாம் போற்ற வேண்டும் என்கிறார்.
இச்சிறு அறிவுரையிலிருந்து அறிவுக் களஞ்சியம் எப்படியான தமிழ் சமூகத்தினை உருவாக்க விரும்புகிறது, முற்படுகிறது என்பது ஒரள விற்கு அறியடமுடிகிறது. எதுவிதத்திலும்-அறிவுரைகள்-தவிர்ந்த ஏனையவை தொடர்பாக இன்றைய தமிழ் அறிஞர்கள் " என்ன என்ன கூறுகிறார்கள் என்பவற்றை-ஆராய்வதன் மூலமே அறிவுக் களஞ்சியத்தின் நோக்கங்களைச் சரியாக அறியமுடியும். ஆகவே, ஏனைய விடயங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

Page 11
ஒன்ராறியோத் தமிழர்கள் அறிவுக் களஞ்சியம்-2, பக்கம் - 3
க. குட்வினால் எழுதப்பட்டது
3 ஜெயராஜ் சொன்ன கதை
דוד יחד עד החל דד דוד ח
இச்சிறு கட்டுரையின் உண்மை நோக்கம் என்னவென்பது தொடர்
பாகக் கேள்விக்குறியெழும்பும் அதேவேளையில், இக்கட்டுரை விபர.
விளக்கப் பிழைகளையும்-கொண்டதாகவே உள்ளது. முதலில் இக் சுட்டுரையிலுள்ள விபர விளக்கப் பிழைகளைப் பார்ப்போம்.
அ) கட்ைசிப் பந்திக்கு முதல் பந்தியில்:
* 9,976, 185 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய கனடாவில் ட24 கோடி மக்கள் உள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதில் இரண்டு பிழைகள் உள்ளன.
1. " கனடாவில் 24 கோடி மக்கள் உள்ளனர் ' என்பதில் 'கோடி " என்பது பிழையானது-ஒரு கோடி என்றால் 100 லட்சமாகும்.
அப்படியாயின் கனடாவின் சனத்தொகை 2,400 லட்சமாகிவிடும் -அதாவது- 240 மில்லியனாகிவிடும். க.கு. என்பவர் " மில்லியன்' என் பதைத் தமிழில் கோடி எனப் பிழையாக குறிப்பிட்டுள்ளார். 1 மில்லியன் என்றால் 10 லட்சமாகும். + கனடாவில் 24 மில்லியன்
2. இங்கு 2தி " என்ற எண்ணிக்கையும் சரியானதல்ல. 1981 ஆம் ஆண்டிலேயே கனடாவின் சனத்தொகை 3444-மில்லி பன்கள் வரையிருந்தது. 1989ஆம் ஆண்டில் கனடாவின் சனத் தொகை 26, 22 (UNESCO அறிக்கை 1991) மில்லியன்கள் வரையாகும்.
ஆ) கடைசிப் பந்தியில் " இவர்களில் நம்மவர்கள் 50 ஆயிரம்
வரையிருக்குமாம் ' எனக் கூறப்படுகிறது.
இது எவ்வளவி ற்குச் சரியானது என்பது தெரியவில்லை. இந்த விபரத்தினைக் கனடா அரசின் அறிக்கையிலிருந்தே பெறவேண்டும் இ) கடைசிப் பந்தியில் ' நம்மவர்கள் மலிவான கூலிகள். ஆகவே, குடியேற்ற நிபந்தனைகளைக் கனடா அரசு தளர்த்தியுள்  ௗதாம்' எனக் கூறப்பட்டுள்ளது.
6-1- ܬܐ ܕ ܕ ܐ ܝ ܢ ܒ ܢ ܢܝ ܥ ܒ+1 ܒܐ.
 
 
 
 
 
 

இது உண்மையில் இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்குப் பிழை யான விளக்கத்தினையே ஏற்படுத்தும் இந்தக்கட்டுரையைப் படிக் கும் சாதாரண ஒருவர் :
1. இலங்கைத் தமிழர்கள் சுலபமாகக் கனடாவில் குடியேற
அனுமதிக்கப்படுவர் என்றும்
2. இலங்கைத் தமிழர்கள் மலிவான கூலிகள் என்ற காரணத் தினாலேயே கனடா அவர்களைக் குடியேற அனுமதிக்கிறது என்றும் ஒருவித பிழையான விளக்கத்தினை ஏற்படுத்திக் CYTGITTF .
இதில் முதலாவது தமிழ் இளைஞர்கள் கனடாவிற்குச் சுலப மாசுப் போகமுடியும் என்ற விபரத்தினைப் பிழையாகக் கொடுத்து, அவர்களுக்கு ஒருவித ஆசையைத் துரண்டுவதாகத் தோன்றுகிறது.
இரண்டாவதானது தமிழர்கள் மலிவான கூலிகள்" என்ற கார
னைத்தினால்தான் அங்கு-குடியேற அனுமதிக்கப்படுகிறார்கள், வேறு
காரணங்களுக்காகவல்ல என்றவொரு பிழையான விளக்கத்தினையும் இக்கட்டுரை ஏற்படுத்துகிறது:
ஒரு புறத்தில், இன்று இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட் டம் முக்கிய கட்டத்தினை அடைந்துவருகிறது. மறுபுறத்தில், "அறிவுக் களஞ்சியம்' சஞ்சிகையின் நோக்கம் அறிவை வளர்ப்பது ' எனவும் கூறப்படுகிறது. இந்த இரண்டினது அடிப்படைகளிலும் சு. குவினது கட்டுரை முரண்பாடுடையதாகவே உள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் வாழும் இலங் கைத் தமிழர்கள், பெரும்பாலும், ஐந்து பிரிவுகளின் கீழ்தான் வநி விட அனுமதி வழங்கப்பட்டவர்கள்
தவையாவன:
LLS S S T T TT TTTTTTTTTuS S S S S LLLLLLKS LLLLLLLHHLLLLLLL S TTTT அகதிகள்" (Refuge ) ஆக ஏற்கப்பட்டு, "நிரந்தர வதிவு STTTSTYTS SLSLLLLaHLHaS LLLLL L LLLLLLLHaaaSS TTTTYTTTTT TTT பவர்கள். (ஞாபகமிருக்கட்டும் பிரபல விஞ்ஞானியான அல் பேட் ஐன்ஸ்டன் (Albert Einstein ), தந்திரோபாய வகுப் பாளர் ஹென்றி கிசிஞ்ஜர் (Henry A Kissinger) என்பவர் களும் அகதிகள்" ஆக அமெரிக்காவினால் ஏற்கப்பட்டவர்கள்ே)
-7.

Page 12
2. ஜெனீவா உடன்படிக்கையின்கீழ் அகதிகள்" அந்தஸ்துக்கோரி, முடிவுகள்-எடுக்கும்-வரை-தற்காலிசு-வதிவுரிமை வழங்கப் பட்டவர்கள்;
3. " குடியேறிகள் " ( Immigrants ) ஆக வாழ அனுமதிக்கப்பட்ட
வர்கள்
4. " மாணவர்கள் 'ட(Student ) ஆக வாழ அனுமதிக்கப்பட்ட
வர்கள்
5. " பிரஜா உரிமை Citizenship ) வழங்கப்பட்டு வாழ்பவர்கள்.
இவர்களுள் 1, 3, 5 என்பவைகளில் குறிப்பிடப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள்" (அதாவது மனைவி, அன்லது கணவன், வயது வராதபிள்ளைகள், தனித்துவாழும் தங்கியிருக்கும் தாய், தகப்பன், தனித்துவாழும் வயதுகுறைந்த சகோதரன், சகோதரி என்போர்) மனிதாபிமான அடிப்படைகள் " ( Humanitarian Grounds ) என்பதன் கீழ் " குடும்ப மீன் - இணைவு ( Family Reunification ) செய்ய இந்த நாடுகள் அனுமதி வழங்குகின்றன. இங்கும், 1 ஆவது பிரிவின் கீழ் அடங்குபவர்களைத் தவிர்ந்த ஏனைய 3, 5 என்பவைகள் தொடர் பாகக் குடியேற்றச் சட்டங்கள், நிர்வாக ஒழுங்குகள் எவ்வளவிற்கு இறுக்கமானவை என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும்.
பொதுவாகக் கூறினால், குறிப்பிட்ட ஒரு தாடு அதன் பொரு ளாதாரத்திட்டங்களைக் கருத்தில்கொண்டு, ஆகவே பூகோள - அரசி யல் குறிக்கோள்களைக் கருத்தில்கொண்டு. அதன் குடியேற்றச் சட் டங்களையும், நிர்வாக ஒழுங்குகளையும் வகுத்துச் செயல்படுகிறது. இதனால், வெவ்வேறு நாட்டவர்கள் தொடர்பாக இந்தநாடுகள் வெவ்வேறு கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தமட்டில், மேற்கு நாடுகள் பூகோள - அரசியல் குறிக்கோள்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தே குடியேற்றச் சட்டங்களையும், நிர்வாக ஒழுங்குகளையும் கிடைப் பிடித்துவருகின்றன. "மலிவான கூவிகள்' என்பது இரண்டாந்தர விடயமாகும். மேற்கு நாடுகளுக்கு "மலிவான கூலிகள் தான் மிகமுக் கியமாயின், அந்தநாடுகள் பலமில்லியன் மலிவுக்கூலிகளை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுலபமாகப் பெறமுடியும். இலங்கைத் தமிழர்கள் மட்டும்தான் "சிறந்த" மலிவுக்கூலிகள் என்பதற்கில்லை.
மேற்கு - நாடுகள் தமது பொருளாதார மேலாதிக்க நிலைநாட்
டலினை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்
-8-

பூகோள - அரசியல் கொள்கைகளையும், ஆகவே பூகோள் - இரா ணுவ தந்திரோப்ாயங்களையும் தகுத்தபடியே அமைத்துக்கொள்கின் றன. இங்குதான் இலங்கைத் தமிழரின் விடுதலைப்போரட்டமும் முக் கியமாகிறது: இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக மேற்கு = நாடுகளின் குடியேற்றச்சட்டங்கள், நிர்வாக ஒழுங்குகள் என்பவையும் முக்கிய மாகின்றன. SS -
இலங்கைத்தமிழர்களின் தனிநாட்டுக்கோரிக்கை தீ விர மடை வதைத்தடுக்கும் நோக்கில், ஜயவர்த்தன் அரசு 1977 ஆம் ஆண்டின் பின்னர் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தனக்கிவித் தது. நாட்டில் வேலையில்லாப் பிரச்சனையைக் குறைப்பதென்ற பொர்வையில், இளைஞர்களை வெளியேற்ற, ஜயவர்த்தன. அரசு வெளிநாட்டு நாணயமாற்று வசதிகளைச் செய்துகொடுத்தது.
இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களே நாட்டை விட்டு வெளியேறினர். சிங்களவர்கள், ஒப்பிடுகையில், சிறிய எண் கணிக்கையில் தான் வெளியேறினர்.
இதன்மூலம் மேற்கு நாடுகளும், ஜயவர்த்தன அரசும் குறைந்தது மூன்று இலாபங்களை அடைய முற்பட்டன:
1. வேலையற்ற தமிழ் இளைஞர்கள் தம்மைத் தனிநாடு அமைப்
பதில் இனைத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தைக் குறைப்பது;
2. வெளிநாடு சென்றவர்கள் தமது குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வதன் மூலம் வேறு தமிழ் இளைஞர் களையும் வெளிநாடுகள் செல்வத் தூண்டுவதுடன், விடுதலைப் போராட்டத்திலிருந்து சற்று விலகிக்கொள்ள வைப்பது;
3. வெளிநாடுகள் சென்றவர்கள் தமது குடும்பத்தினருக்குப் பணம் அனுப்புவதன்மூலம் சிறி-வங்க அரசு வெளிநாட்டுப் பணத்தைப் பெறுவது,
னோல், மேற்கு - நாடுகளினதும், ஜயவர்த்தன அரசினதும் எதிர் பார்ப்பிற்கு முரணாக, வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட் டத்திற்கான சர்வதேச பிரசாரமும், நிதி சேகரிப்பும் தீவிரமடைந்து, வடக்குக் கிழக்கில் ஆயுதம் தாங்கிய போராட்டமும் தீவிரமடைந்தது.
இலங்கைத் தமிழ் சமூகம் பற்றி ஆராய்ந்து,விடுதலைப் போராட் -த்தினை முறியடிக்க ஜயவர்த்தன அரசும், மேற்கு நாடுகளும்
-9-

Page 13
கையாண்டதந்திரோபாயங்கள் வெற்றியளிக்கவில்லை. இதனால் மேற்கு நாடுகள் இலங்கைத் தமிழ் சமூகத்தின் குண இயல்புகளை ஆராய்ந் அறிவது தொடர்வதுடன், புதிய தந்திரோபாயங்களும் கையாளப்படு கின்றன. தமிழ்ச்சமூகம் பற்றி ஆராய்வதற்கு இன்று தமிழ் அறிஞர் களும், புத்திஜீவிகளும் மிகவும் சாமர்த்தியமான முறையில் ஏகாதி பத்தியங்களாலும், syllisir Intelligence அமைப்புக்களாலும் பயன் படுத்தப்படுகின்றனர். இந்த *ராய்வுகளை வைத்து-மேற்கு நாடுகள் தமது முறியடிப்புத் திட்டங்களை வகுத்துச் செயற்படுகின்றன.
குறுகியகாலக் கண்ணோட்டத்திலும், நீண்டகாலக் கண்ணோ. டத்திலும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தினை முறியடிக்கவும், தவிர்க்க முடியாதபடி தமிழீழம் அமைக்கப்பட்டால், அதனை முன் னேறாதவாறு தடுக்கவும் பலவசையான தந்திரோபாயங்களை மேற்கு நாடுகளும், சிறி - லங்க அரசும் கையாளுகின்றன. இங்குதான் "குடும்ப மீள் - இணைவு ! என்பதுவும், தமிழ் சமூகத்தின் அறிவு வளர்ச்சி மழுங்கடிக்கப்படுவதும் மிகமுக்கியமா கின்றன.
துடு'fள் "இணைவுத்திட்டமானது, ஒருபுறத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தினையும், தமிழீழத்தினையும் முறியடிக்கப் பயன்படுகையில், அது, மறுபுறத்தில், இன்று, பொருளாதார மந்த நிலையை எதிர்நோக்கும் மேற்குநாடுகள் தமது பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடையாது தடுக்கவும் பயன்படுகிறது.
ஒரு மூன்றாம் உலகநாட்டவரின் குடும்பத்தின் கணவன், அல்லது மனைவி மாத்திரம் மேற்கு " நாடொன்றில் இருந்தால், அவர் தனது குடும்பத்தினருக்கு மாதாமாதம் பணத்தை அனுப்புவார். மேலும், அவரது இறுதிநோக்கமானது தனது சேமிப்பு அனைத்தையும், அணு பவம், பயிற்சி என்பவைகளையும் திாய்நாடு கொண்டுசெல்வதாகவே இருக்கும். இது, ஒருபுறத்தில், குறிப்பிட்ட ஒரு மேற்குநாட்டிற்குப் பொருளாதார நட்டத்தினையும், அனுபவமும், பயிற்சியுமுள்ள தொழி லாளியை இழக்கும் நிலையையும் ஏற்படுத்துகையில், மறுபுறத்தில், ஒரு மூன்றாம் உலகநாடு மூலதனம், அனுபவம், பயிற்சியுடைய ፵üቓ வரைப்பெற்று, முன்னேற்றமடையும் சந்தர்ப்பத்தினையும் ஏற்படுத்து கிறது.
இந்தநிலையில்-குடும்ப மீள்-இணைவின்கீழ் அவரது குடும்பம் முழுவதும் குறிப்பிட்ட மேற்கு - நாட்டில் குடியேற வழிவகைசெய் தால், காலப்போக்கில், அவரது சொத்துக்களும் மேற்கு நாட்டிறகு மாற்றம் செய்யப்பட்டு, அனுபவம், பயிற்சி என்பவைகளும் பேணிப்
—lC)-

+1 : ܒ - L_+1 ܒ
பாதுகாக்கப்படும். மேலும், இது மலிவுத்தொழிலாளர்களையும் தேவை யான அளவில் வைத்திருக்க அந்த மேற்கு நாட்டிற்கு உதவும்.
காலப்போக்கில்-அக்குடும்பத்திற்கு Naturalisation" என்பதன்கீழ் பிரஜா உரிமை" (Citizenship)யும் வழங்கப்படுமாயின், மூன்றாம் உலக நாடு பல நட்டங்களை அடையும். -
இலங்கைத் தமிழருள் இருக்கும் அறிவாளிகள்-தொழில் துறை யாளர்கள், புத்திஜீவிகள், சொத்துடையோர்கள் குடும்ப மீள்-இணைவு, Naturalisation--என்பவைகளின்கீழ்-மேற்கு = நாடுகளில் நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட்டால், தமிழீழ விடுதலைப் போராட்டமும் பாதிக் கப்படும், முக்கியமாக தமிழீழத்தின் முன்னேற்றமும் பாதிக்கப்படும்.
குறுகியகால - நீண்டகால நலன்களின் கண்ணோட்டத்தில் இப் பிரச்சினைகளைத் தீர்க்க எப்படியான கொள்கைகள், திட்டங்கள் வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதிலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வெற்றியும், தமிழீழத்தின் முன்னேற்றமும் பெருமளவில் தங்கியுள்ளது. இந்தநிலையில், இப்பிரச்சினைடமிகவும் ஆழமாக ஆராயப்பட்டே கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.
இன்று தமிழீழ விடுதலைப்போராட்டம் உச்சநிலையை அடைந் திருக்கும்போது, மேற்குநாடுகளின் குடியேற் றக்கொள்கைகள் ப ந் றிய விளக்கங்களைச் சரியாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொடுக் காது, அவர்களுக்குப் பிழையான விளக்கங்களைக்கொடுப்பது பொறுப் புணர்ச்சியற்ற ஒரு செயற்பாடாகவே இருக்கமுடியும்.
"ஒன்ராறியோத் தமிழர்கள்" என்ற இந்தச் சிறுகட்டுரையின் விபர. விளக்கப்பிழைகளைப் பார்த்தநாம், இனி ஏனைய விடயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
இக்கட்டுரையின் தலைப்பில் விசேடபெட்டி போடப்பட்டு "ஜெய ா சொன்ன கதை" என்று எழுதப்பட்டுள்ளது. தலைப்பினைப் பாக்கும்போது ஒருவருக்கு ஜெயராஜ் ' என்று ஒரு "பெரியார்", அல்லது " அறிவாளி 'யினால் கூறப்பட்ட ஒரு முக்கிய விடயம்பற்றிய கதை தொடர்பானதுதான் இந்தக்கட்டுரை என்றொரு தோற்றம் கொடுக்கப்படுகிறது. முதல் தலையங்கத்தின்கீழ், "ஒன்ராறியோத் தமிழர்கள்" என்ற இரண்டாவது தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தலையங்கத்தினைப் பார்ப்பவருக்கு, ஜெயராஜ் ான்ற "பெரியார்" அல்லது "அறிஞர்' ஒன்ராறியோவில் வாழும் தமி
- 1 -

Page 14
ழர்கள் பற்றி ஒரு கதை கூறியுள்ளார் என்ற தோற்றம் உருவாகும். ஆனால், முதலாவது பத்தியைப்படித்த பின்புதான் ஜெயராஜ் என்ற "பெரியார்' அல்லது "அறிஞர் கனடாவையும், இலங்கைத்தமிழர் களையும் இணைத்து, 1970 ஆம் ஆண்டுகளின் இறுதிப்பகுதிகளில் ஐரோப்பாவையும், இலங்கைத் தமிழரையும் இணைத்துக்கூறப்பட்டு வந்த ஒரு பகிடி' யினைக் கூறியுள்ளார் என்பது தெரியவந்தது.
"கட்டுரையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஜெயராஜ் பெரி யார்", அல்ல்து-"அறிஞர்" கனடாவையும்,- இலங்கைத்தமிழரையும் பற்றிக் குறிப்பிட் டபோதும், கட்டுரையைக் ககு ஒன்ராறியோத் தமி -ழருக்கு-இழுத்துச்-சென்றுவிட்டார்.-- -
கட்டுரையில் கனடா, ஒன்ராறியோ என்பனவகளைப்பற்றிக் கலந்து, சில விபரங்கள் பிழையான விபரங்களுடன் தரப்பட்டிருக்கும் போதும், ஒன்ராறியோத் தமிழர்கள் பற்றிக் கது. இரண்டேயிரண்டு சிறு வசனங் களே எழுதியுள்ளார்.
மொத்தம் 0ே வரிகளைக் கொண்டிருக்கும் இச்சிறு கட்டுரையில் ஜெயராஜ் பெரியார்’ அல்லது " அறிஞர்" இன் பகிடி க்கு மாத் திரம் 25 வரிகளையும் ஒன்ராறியோ மாநிலம் என்பது எதைக் குறிக் கும் என்பது பற்றி விளக்க 6 வரிகளையும் ஒதுக்கியிருக்கும் க. கு, ஒன்றிராறியோத் தமிழர்கள் பற்றி இரண்டேயிரண்டு சிறு வசனங் களை எழுதியிருப்பமை அவர் ஒன்ராறியோத் தமிழர்களுக்கு இக் கட்டுரையில் எந்தவித-முக்கியத்துவமும்-கொடுக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.
கனடாவின் மாநிலங்கள் எவை; கனடாவின் தலைநகரம் எது: கனடாவின் ஆட்சிமுறை என்ன கனடாவின் அரசகரும மொழிகள் எவை என்னென்ன மாநிலங்களில், என்னென்ன மொ ழிகள் பேசப் படுகின்றன; கன்டாவில் வாழும் வெவ்வேறு இனங்கள் எவை; அவை எங் ஜெரன்வின் வீதாசாரங்களில் உள்ளன; கனடாவில் என்னென்ன மாநிலங்களில் தமிழர்கள் எப்படி வாழ்கின்றனர் என்ற விபரங்களைச் கருக்கம்ாக ஆவது கொடுக்க க.கு. விரும்பவில்லை.
* ஒன்ராறியோ மாநிலத்தின் தலைநகரம் ரொறொன்ரோ (Toronto) என்பதைக்கூட மாணவருக்கும், சாதாரண மக்களுக்கும் அறியக் கொடுக்க விரும்பாத க.கு." அதுவும் ஒன்ராறியோவிலுள்ள ரொறொன் ர்ோவில் யாழ்ப்பாணத்தவர்கள். என்றே எழுதியுள்ளார்:
- 12

இவைகளைப் பார்க்கும் போது-க, குடவினது-இச்சிறு கட்டுரை யானது, உண்மையில், மூன்று குறிக்கோள்களை கொண்டதாகவே புள்ளது எனக்-கருதமுடியும் அவையாவன:
1. ஜெயராஜ் என்பவருக்கு-விளம்பரம்-செய்வது;
2. மாணவர்களதும், சாதாரண மக்களதும் அறிவு வாராது தடுக் கப் பிழையான விபரங்களையும், விளக்கங்களையும் கொடுப்
பதி
கனடாவின்-குடியேற்றச்சட்டம்-பற்றிப்-பிழையான-விபரங் களையும், விளக்கங்களையும் கொடுத்து, மாணவர்களையும், பொதுமக்களையும் திஈசதிருப்புவது, -
ச, பாவினது-அறிவுரைகளையும், க +கு வினது- ஒன்ராறி யோத் தமிழர்கள் ' என்ற சிறு கட்டுரையையும் வைத்து மாத்திரம் அறிவுக் களஞ்சியம் ' சஞ்சிகையின் நோக்கங்களை எடை போட முடியாது. நாம் சஞ்சிகையிலுள்ள ஏ  ைனய விடயங்கள் பற்றியும் பார்க்கவேண்டியுள்ளது. ஆகவே, அவற்றைத் தொடர்ந்து பார்ப்போம் .
உங்கள் சந்தேகம்? அறிவுக் களஞ்சியம் -2, பக்கம்-10
க. கு வினால் எழுதப்பட்டது.
இதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளளயும், அதற்குக் க - கு வினால் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்களையும் விளக்கங்களையும் பார்க்கும்போது, எமது மாணவர்களதும், ஏனையோர்களதும் பரிதாப நிலை வெளிக்காட்டப்பட்டுள்ளது. இன்று எமது சமூகம் இரு பெரும் பகுதியினைக் கொண்டுள்ளது. ஒரு புறத்தில், சரியான விபரங்களை அறியவும், விளக்கங்களைத் தமக்கு ஏற்படுத்திக் கொள்ளவும் ஆவலாக விருக்கும் சமூகம் மறுபுறத்தில், அடிப்படை விளக்கமற்ற, பொறுப் புணர்ச்சியற்ற போலி அறிஞர்களும், போலிக் கல்விமான்களும். இத ளையே டெலஸ்கோப் ( Telescope ) தொடர்பாகக் கொக் கு வில் அ. சந்திரனின் கேள்வியும், க. கு வினது விளக்கமும் உறுதிப்படுத்து கின்றன.
டெலஸ்கோப்பினைக் கண்டுபிடித்தவர் டச்சுக்காரரான ஹன்ஸ் ப்பெர்சியா, அல்லது இத்தானிய கலிலியோவா என்பதே அ. சந்திர ாள் சந்தேகம், ஆனால், இந்த சந்தேகத்தைத் தீர்க்க விளக்கங்
-13

Page 15
களைக் கொடுத்திருக்கும் க. கு. அவர்கள் : ' தொலைகாட்டி தற் செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் . . . . கண்டுபிடித்த வர் ஹன்ஸ் லிப்பேர்சி, செய்துமுடித்தவர் கலிவியோ" எனக் கூறி புள்ளார்.
டெலஸ்கோப் தொடர்பான கேள்வியையும், அதற்கு க. குவினால் கொடுக்கப்பட்ட விடை, விளக்கங்களையும் பார்க்கும் போது, முதலில் அவதானிக்கப்படக் கூடியது என்னவென்றால், ' கண்டுபிடிப்பது " கண்டுபிடித்தார்' என்ற சொற்களின் பயன்பாடு தொடர்பாக ஒரு வித மயக்க நிலை காணப்படுவதும்; க.கு. விற்கு ' தூய விஞ்ஞானம் - " rit Culta, விஞ்ஞானம்' , ' தொழில் நுட்பம், 'Discovery, Invention என்பவைகள் தொடர்பாகத் தெளிவை ஏற்படுத்த வேண்டியிருப் பதுமாகும். இப்படிக் கூறும்போது பல அறிஞர் களுக்கு ஒருவித எரிச்சல்தன்மை ஏற்படலாம், ஆனால் உண்மைநிலை அதுதான்.
ஆராய்ச்சிகள் மூலம் விஞ்ஞானிகள் சில அடிப்படை உண்மை" களையே கண்டறிகின்றனர். இந்த அடிப்படைகளை வைத்துச் சில விதிகளையும், நியதிகளையும், மேலதிக விளங்கங்களையும் உருவாக் கிக் கொள்ள முடியும், உதாரணமாக 1.
ஒளி நேர்கோட்டில் செல்கிறது என்ற அடிப் ப  ைட யு எண்  ைம ஆராய்ச்சிகள் மூலம் கண் டறியப் பட்டது. இது பிரபஞ்சம் உருவான நாட்களிலிருந்து இயற்கையில் நடைபெற்றுவந்த போதி லும், மனிதர்கள் இதை அண்மைக்காலத்தில் தான் சரியாக அறிந்து கொண்டனர். இந்த அடிப்படையினை வைத்து "ஒளித்தெறிப்பு ( Reflection ) "ஒளி-முறிவு" (Refraction) என்பவைகளையும், அவை தொடர்பான விதிகளையும், நியதிகளையும் உருவாக்கினர். இவற்றை யெல்லாம் நாம் "தூய விஞ்ஞான (Pure Science) ஆராய்ச்சிகள் என்போம்.இதில் ஈடுபடுபவர்கள் விஞ்ஞானிகளாகும்.
மேலும், ஒளி நேர்கோட்டில் செல்வதையும், ஒளித்தெறிப்பு, ஒளி முறிவு என்பவைகளையும் பிரயோகித்து, மனித சமூகம் அத னது தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் வெவ்வேறு கருவிக ளையும், சாதனங்களையும் உருவாக்கமுடியும். இப்படி அடிப்படை உண்மைகளைப் பிரயோகித்து, அவை சமூகத்திற்குப் பயன்படும் ஒரு வித அமைப்புக்களாக உருவாக்குவதை "பிரயோக விஞ்ஞானம்" (Applied Science) Toit Guth.
தூய விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்த உண்மை களைப் பிரயோகித்து, பயன்படக் கூடிய ஒருவித அமைப்புக்களாக
-14

மாற்றியமைப்பதற்குத் தேவையானவைகளை நாம் தொழில் நுட்பம்"
(Technology) என்போம். இவற்றைச் செய்பவர்களை பிரயோக Gisle's TG:sfasair" (Applicid -- Scientist) அல்லது தொழில்நுட்ப வல்லு னர்" (Technologist) என்போம். இன்று "தொழில்நுட்ப வல்லுனர்' எனக் குறிப்பிடுவதிலும் "விஞ்ஞானி' (Scienti) என்றே இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
இங்கு ஒரு விடயம் அவதானிக்கப்பட வேண்டும். சில விடயங் களை எந்தவித ஆராய்ச்சிகளுமின்றியே ஒருவர் கண்டறிந்திருக்க முடியும். ஆனால் அது ஏன், எப்படி உண்மையில் நடைபெறுகிறது -போன்றவற்றினை ஆராய்ந்து, சோதனை செய்து, சரியான முடி வுக்குவராத நிலையில், அதனை நாம் விஞ்ஞான ஆராய்ச்சி எனக் கூறமுடியாது. உதாரணமாக பூமியிலிருந்து மேல்நோக்கி எறியும் ஒரு பொருள் பூமியை மீண்டும் வந்தடையும் என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர் கண்டறிந்திருப்பர். ஆனால் அதி ஏன், எப்படிப் பூமிநோக்கி மீண்டும் வருகிறது; பூமியின் ஈர்ப்பினால் astLirgli Acceleration Due To Gravity 525 in Tiso tro இதன் அளவு 82 அடி / செக், அல்லது 10 மீற்றர் செக்2 என்பவை களையெல்லாம் அவர்கள் ஆராய்ந்தறிந்திருக்கவில்லை. சேர் ஐசாக் நியூற்றன் ( Sir Issac Newton ) gyfrair இவைகளை ஆராய்ந்து விளக்
கம் கொடுத்திருந்தார். இதனால்தான் நாம் நியூற்றனை விஞ்ஞானி என்கிறோம்; -
மேலே குறிப்பிட்டதைப்போல், பல்வேறு விடயங்களைப் பலர் தற்செயலாகக் கண்டறிந்துள்ளனர். ஆனால், அவற்றிற்கா? வினாக் கங்களை ஆராய்ந்தறிவதே விஞ்ஞான ஆராய்ச்சியாகும். எதுவிதத்தி லும், இப்படித் தற்செயலாகக் கண்டறிந்த உண்மைகளின் அடிப் படையைப் பிரயோகித்தும் கருவிகள், சாதனங்கள் உருவாக்கப்பட லாம். ஆனால், விஞ்ஞான ஆராய்வுகளின் மூலம் எழுந்த தெளி வுகள் ஏற்படுத்தப்படாத நிலையில், உருவாக்கப்படும் சாதனங்களும் கருவிகளும் திருத்தங்கள் செய்யப்படவேண்டியவைகளாகவே கட்டா பம் இருக்கும். ܕ ܬ ܒ
ட மேலே விளக்கப்பட்டவைகளிலிருந்து-இன்னுமொரு விடயத் தினை நாம் அவதானிக்க முடியும். ஒரு விஞ்ஞானி கட்டாயமாகத். தொழில்நுட்ப வல்லுனராக இருக்க வேண்டுமென்றில்லை. மறுபுறத் தில், ஒரு தொழில்நுட்ப வல்லுனர் ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டுமென்பதற்கில்லை. ஆனால், ஒரு விஞ்ஞானியே தொழில்நுட்ப வல்லுனராகவும் இருக்கமுடியும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்
-15

Page 16
பவைகள் முன்னேறாத அன்றைய காலகட்டத்தில், விஞ்ஞானிகளே தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் இருந்தனர். விஞ்ஞான அறிவு வளர வளர விஞ்ஞானிகளும், தொழில்நுட்படவல்லுனர்களும் வெவ் வேறாக உருவாகினர். இன்று விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வெகுவாக முன்னேறியுள்ளடநிலையில்,டமீண்டும் விஞ்ஞானிகளே தொழில்நுட்ப வல்லுனராகவும் இருக்கவேண்டிய நிலை உருவாகியுள் விாது. -
இப்போது நாம் க. கு வினால் "தொலைக்காட்டி" தொடர்பாகக் கொடுக்கப்பட்ட விபரங்களையும், விளக்கங்களையும் பார்ப்போம்.
க. கு-வினால்-கொடுக்கப்பட்டிருக்கும்-மூதலாவது விளக்கம்: "தொலைக்காட்டி தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான்" எனக் கூறுகிறது.
இங்கு எழும் முதலாவது பிரச்சினை என்னவென்றால், தொலை காட்டி ஒரு சாதனமாகும். இது இயற்கையாகத் தோன்றியிருக்கும் ஒரு பொருளல்ல. ஆகவே, இது மனிதரால்-உருவாக்குப்படவேண்டும். ஆகையால், இதைத் தற்செயலாகக் கண்டுபிடிக்க முடியாது. இது தெரிந்தே உருவாக்கப்படவேண்டும். ஆகவே முதல் விளக்கம் பிழை யானதே.
"தொலை காட்டி ' தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது எனக் குறிப்பிட்ட க.கு. அடுத்த இரண்டு வசனங்களிலும் "தொலை எாட்டி" எப்படித் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை விளக்கியுள் எார்.
ஆனால், இங்கு, அவர் விஞ்ஞானியில்லாத ஹன்ஸ் லிப்பேர்சி (Hans Lippershey) என்பவர் இரு வில்லைகளை ஒன்றன்பின் ஒன்றாக வைத்துப் பார்த்தால், வெகு தொலைவிலிருந்த ஒரு பொருள் பெரி தாகவும், அருகில் இருப்பது போலவும் தெரிவதைக் கண்டறிந்தார் எனக் கூறியுள்ளார். சு. கு வின் விளக்கத்தின் முதலாவது வசனமும், அதைத் தொடரும் மற்றய இரு வசனங்களும் ஒன்றிலிருந்து மற்றயவை முற்றிலும் வேறுபட்ட விடயங்களையே குறிப்பிடுகின்றன.
முதலாவது வசனம் தூரவிருக்கும் பொருட்களைத் தெளிவாகக் காட்டும் ஒரு சாதனத்தினைக் குறிப்பிடுகிறது. ஆனால், இரண்டாவது மூன்றாவது வசனங்கள் இரு வில்லைகளூடாகப் பார்க்கும் போது தொலைவில் இருக்கும்பொருள் பெரிதாகத் தோன்றும் தன்மை பற்றிக் குறிப்பிடுகின்றன. அதாவது: இரண்டு வில்லைகளூடாகப் பார்க்கும் போது, அவ்வில்லைகள் இணைந்த படி " பெரிதாகக் காட்டும் விளைவை (Magnifying Effect) கொடுப்பது பற்றிக் கூறுகின்றன.
-16

அடுத்த வசனத்தில் க. கு: " இந்தக் கண்டுபிடிப்பு விரைவில் மற்ற நாடுகளுக்குப் பரவியது " எனவும், அதன்பின்னர் இத்தாலிய விஞ் ஞானியான கலிவியோ பற்றிக் கூறி ஈற்றில் " கண்டுபிடித்தவர் ஹன்ஸ் விப்பேர்சி, செய்து முடித்தவர் கலிலியோ " எனக்கூறியுள்ளார்.
க. கு. வினது வசனங்கள் முற்றிலும் பீழையான விபரங்களையும், விளக்கங்களையுமே தருகின்றன. மேலும், கண்டுபிடிப்பது " என்பது உண்மையில் எதனைக் குறிக்கிறது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது: க. கு. வினது விளக்கப்படி டெலஸ்கோப்பினைக் "கண்டுபிடித்தவர்' ஹன்ஸ், " செய்து முடித்தவர் " கலிலியோ!
ஆனால், உண்மைநிலை முற்றிலும் வேறுபட்டது. 1808 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் திகதியன்று ஹன்ஸ் லிப்பேர்சி என் பவர், தான் உருவாக்கிய டெலஸ்கோப் தொடர்பாக நெதர்லாந்தின் State General-இற்கு அறிவித்தல் செய்தார் 4 ஆம் திகதியன்று ஹன்ஸ் உருவாக்கிய டெலஸ்கோப்பினைப் பரீட்சித்து, ஆராய்ந்து முடிவுகள் எடுக்கும் கமிட்டியொன்று அமைக்கப்பட்டது. அக்டோபர் 6 ஆம் திகதியன்று அந்தக் கமிட்டியானது ஹன்ஸ் உருவாக்கிய டெலஸ்கோப்பினை அங்கீகரித்து, அவருக்கு 900 Floris பணமும் கொடுத்தது. அதைவிட, இரண்டு "பைனாக்குலேர்ஸ்" (Binaculars ) கள் செய்வதற்கும் அக்கமிட்டி 900 Flons களை அவருக்குக் கொடுத் 岳芷’·
அதே வருடம் அக்டோபர் 17 ஆம் திகதியன்று நெதர்லாந்தின் " அல்க்மார்-( Alkmar ) என்ற இடத்தைச்சேர்ந்த James Metius என்பவரும் தான் உருவாக்கிய டெலஸ்கோப் தொடர்பான அறிவித் தலை நெதர்லாந்தின் State General இற்குத் தாக்கல் செய்திருந்தார். CLLLLLLL LLLLLL TTTTTT TTT LL STTTTTTTTTLGTT TTTTT LLLLL LCLLLLLLL இன் சகோதரனாவார். இவர், தான், தற்செயலாகவே பொருள்கள் பெரிதாகத் தெரியப்படுத்தும் தன்மையைக் கண்டறிந்ததாகக் கூறி GITT.
ச09 ஆம் ஆண்டில் பரியில் ( Paris ) டெலஸ்கோப்புகள் விற் பனைக்கு இருந்தன.
தான் உருவாக்கிய டெலஸ்கோப் தொடர்பாகக் கலி லியோ Nuncius Siderius என்பதில் குறிப்பிட்டுள்ளார். 1609 மே மாதமளவில் தான் வெனிஸ் (Wenice) இலிருக்கும்போது பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் ஒளி-முறிவினைப் பயன்படுத்தும் ஒரு டெலஸ்கோப்பிளை உருவாக்கியிருப்பதாகக் கேள்விப்பட்டதாகவும், தான் பதுஅ
- 17

Page 17
(Padua) என்ற இடத்திற்குச் சென்ற அடுத்தநாள் ஒரு டெலஸ் கோப்பினை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிலநாட்களின் பின்னர் மற்றுமொரு திருத்தங்கள் செய்யப்பட்ட டெலஸ்கோப்பினை உருவாக்கியதாகவும் கவிவியோ குறிப்பிட்டுள்ளார்.
கலீலியோ தான் உருவாக்கிய டெலஸ்கோப்பினை வெனிஸ் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டுசென்றார். அந்த டெலஸ்கோப் ஆனது பல்கலைக்கழகத்தினரதும், பொதுமக்களதும் பார்வைக்குவிடப்பட் டது. மாதம் 500 Florins கள் சம்பளத்தினைப் பெற்றுவந்த கலிலியோ விற்கு 1000 Florins களாகச் சம்பளம் உயர்த்தப்பட்டதுடன், அவர் விேயகாலப் பேராசிரியராகவும் ஆக்கப்பட்டார். இவற்றினால் கவிலியோவிற்கும், டெலஸ்கோப்பிற்கும் இடையிலுள்ள தொடர்பு பிரபல்யமானது. ஆளால், ஹன்ஸ் பற்றியும், அவர் உருவாக்கிய டெலஸ்கோப் பற்றியும் பொதுமக்கள் அதிகம் அறியவில்லை.
இவைகளிலிருந்து தெளிவாகுவது என்னவென்றால் டச்சுக்கார ரான ஹன்ஸ் லிப்பேர்சி என்பவரே முதன்முதலாக ஒளி முறிவினைப் பயன்படுத்தும் டெலஸ்கோப்பினை உருவாக்கினார் . இவரைத் தொடர்ந்தே கலிலியோ திருத்தப்பட்ட டெலஸ்கோப்பினை உருவாக்கி
TTT"
எதுவிதத்திலும், க. கு. வினது " கண்டுபிடித்தவர் ஹான்ஸ் விப்பேர்சி, செய்துமுடித்தவர் கலிலியோ என்ற வசனத்தின் சொற் பயன்பாடுகள், கண்டுபிடிப்பது ' என்ற சொல்வின் பயன்பாடு பற்றி யும் மீள் ஆய்வு செய்யவேண்டிய சுட்டாயத்தினை வளியுறுத்துகின்
IT,
இயற்கையாக இருப்பவைகளை நாம் கண்டறிகிறோம். ஆனால், கருவிகளையும், சாதனங்களையும் நாம் உருவாக்குகிறோம். ஆங்கிலத் gão girl : Columbus Discovered America; Madame Curie Discovered Radium; Michael Faraday Discovered Indlu CCid CLITrents största aprtih. Gororcio, Watt Invented the Modern Steam Engine; Alexander Graham Bell Inwent Cd that Telephone, Galo leo Perfec
tcd thic Telescopic G7 GirīGroTLb.
இவைகளுள் முதல் மூன்றிலும் * Discoveாdே என்ற சொல்லை யும் அடுத்த இரண்டிலும் Invented" என்ற சொல்லையும்; கடைசி பில் Perfected" என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளோம்.
ஆனால், தமிழைப் பொறுத்தமட்டில், சாதாரணமாக, சகலவற் றிற்கும் " கண்டுபிடித்தார் ' என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. இதுவே அடிப்படைப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
-1.8-

* அமெரிக்கா " இயற்கையாக உண்டாகியிருந்தது. அதனைக் கொலம்பஸ் தற்செயலாகக் கண்டறிந்தார்: இயற்கையாகவே உண் டாகியிருக்கும் ரேடியம் உலோகத்தினை Madame Curieայլն, Induccd Currents களை Paraday யும் கண்டறிந்தனர். இவர்கள் இவற்றினை உருவாக்கவில்லை. ஆனால், ரெலிபோனை பெல் என்பவரும், நவீன நீராவி இயந்திரத்தினை Watt என்பவரும் தாமே உருவாக்கினர். இவைகள் இயற்கையாக ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கவில்லை. களிலியோவினைப் பொறுத்தமட்டில், அவர் ஏற்கனவே உருவாக்கப் பட்ட டெலஸ்கோப்பினைத் திருத்தியமைத்தார். ஏனெனில், டெலஸ் கோப்பினை முதன்முதலாகக் கலிவியோ உருவாக்கவில்லை. குறிப்பாக: ஒளி - முறிவினைப் பயன்படுத்தும் டெலஸ்கோப்பிளை ஹன்ஸ் ஏற் கனவே உருவாக்கியிருந்தார்.
இவைகளைப் பார்க்கும்போது, சொற்களைப் பயன்படுத்தும் நாம் அவற்றை ஒருவித தெளிவுடன்தான் பயன்படுத்த வேண்டும். இயற்கை யாக இருப்பவை தொடர்பாகக் கண்டறிந்தார் என்ற சொல்லை யும்; மனிதரால் உருவாக்கப்பட்டவை தொடர்பாக "உருவாக்கினார்" என்ற சொல்லையும் பயன்படுத்துவதே சரியானது.
இறுதியாக, க. கு. அவர்கள் தனது விளக்கங்களைக் " கலைக் களஞ்சியம் தொகுதி - 5 இன் அடிப்படையில் தந்திருப்பதாகக் குறிப் பிட்டுள்ளார். ஆனால், தரமான, நம்பகமான ஆங்கில Encycl0 paedia க்களில் க. கு வினால் தரப்பட்டிருக்கும் விளக்கங்கள் இல்லை. இந்த நிலையில், அவர் குறிப்பிடும் " கலைக் களஞ்சியம் உண்மை பில் தமிழில் வெளிவந்திருக்கும் கலைக் களஞ்சியமாகவே இருக்கமுடி யும். அதிலுள்ளபடியே க கு. தனது விளக்கத்தினைத் தந்திருந்தால், அந்தக் கலைக் களஞ்சியத்தில் டெலஸ்கோப் தொடர்பாகக் கொடுக்கப் பட்டிருக்கும் விபரம் பிழையானதே.
ஆனால், சென்னையிலுள்ள "தமிழ் வளர்ச்சிக்கழகம்" 1958 ஆம் ஆண்டில் தமிழில் வெளியிட்ட கலைக் களஞ்சியம்' என்ற சுைநூலின் தொகுதி - 5 இன் பக்கம் 372 இல் " டெலஸ்கோப் " தொடர்பான விப ரங்கள் "டெவிஸ்கோப்பு' என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தரப்பட்டுள்ள முதல் மூன்று வசனங்களும் பின்வருமாறு:
"ஹான்ஸ் லிப்பர்ஷி என்ற டச்சுக்காரர்தான் 1608ல் முதன் முதலில் டெலிஸ்கோப்பை அமைத்தார். கலிலியோ என்ற இத்தாலிய வானவியலறிஞரும் 1610ல் டெலிஸ்கோப்பை அமைத்தார். இவருடைய சிறந்த டெவிஸ்கோப்பு பொருள்களை 33 மடங்குகள் மட்டுமே பெரி தாகச் செய்யக்கூடியதாக இருந்தது."
- 19

Page 18
இந்தத் தமிழ்க் கலைக் களஞ்சியத்திலும் டெலஸ்கோப் யாரால் முதன் முதலாக உருவாக்கப்பட்டது, மற்றும் விபரங்கள் தெளி வாகவும், சரியாகவும் தரப்பட்டுள்ளன. இந்த நிலையில் "ஆதாரம்: கலைக்களஞ்சியம், தொகுதி - 5' எனக்கூறும் க கு எங்கிருந்து "கண்டு பிடித்தவர் ஹன்ஸ் லிப்பேர்சி, செய்து முடித்தவர் கலிவியோ' என்ற விளக்கத்தினைப் பெற்றார் என்பது உண்மையில் புதிராகவே உள்ளது.
மாணவர்களுக்கும், சாதாரண-மக்களுக்கும் அறிவை வளர்க்க வென வெளியிடப்படும் "அறிவுக் களஞ்சியம்" என்பதில் க. கு என் பவர் பிழையான விபரங்களையும், விளக்கங்களையும் கொடுத்து விட்டுப் பொய்யான முறையில் ஆதாரங்களையும் கொடுப்பது இரண்டு காரணங்களாலென்றே கருதமுடியும். அவையாவன:
1. போலி அறிஞர்களாலும், அறிவாளிகளாலும், அரசியல்வாதி களாலும் கடந்த காலங்களில் வழிநடாத்துப்பட்டுவந்த தமிழ்
சமூகம்-தொடர்ந்தும் "பேராசிரியர்கள்"-"மூதறிஞர்கள்', "அறிவாளிகள்", "புத்திஜீவிகள்', 'கலைஞர்கள்' , ' கவிஞர் கள்", "முற்போக்கு எழுத்தாளர்கள்' ---என்போர்கள்
எதை, எப்படிக்கூறினாலும் சரியென ஏற்கும் என்ற ஒருவித நம்பிக்கையும், ஏற்கவேண்டும் என்ற ஒருவித மனப்பான்மையும்
器
"தமிழ்த்தேசியவாதம்" என்ற போர்வையின் கீழ் அன்று தமிழ்த் தேசியவாதம் தமிழ் அரசியல் தலைவர்களால் மழுங்கடிக்கப் பட்டு வந்ததைப்போல், இன்று, "அறிவை வளர்ப்பது" என்ற போர்வையின் கீழ் தமிழ் சமூகத்தின் அறிவு வளர்ச்சியை மழுங்கடிக்கும் கொள்கைப்போக்கு
இவைகளுள் எது, அல்லது எவைகன்-காரணமாக அமையலாம் என்பதுபற்றி அறிவுக் களஞ்சியத்தின் ஒட்டுமொத்த போக்கை ஆராய் வதன் மூலமே-ஒருவர் சரியான முடிவுக்கு வரமுடியும். ஆகவே, அறிவுக் களஞ்சியத்தில் தரப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் பற்றித் தொடர்ந்த பார்ப்போம்.
சுப்பர் சோனிக்
அறிவுக் களஞ்சியம்-2, பக்கம் - 30
க. கு. வினால் எழுதப்பட்டது.
" சுப்பர்சோனிக்" என்பதன் கீழ் க. கு. என்பவர் தந்திருக்கும் விபரங்களும், விளக்கங்களும் பிழையானவைகளாகும். அவற்றை நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
-20

1. முதலாவது வசனத்தில்:
"ஒலியின் வேகத்திற்கு இணையான வேகத்தில் பறக்கும் விமா னங்களுக்குச் சுப்பர்சோனிக்" விமானம் என்று பெயர்' எனக் பீறப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்திற்கு இணையான-வேகத்தில் பறக்கும்-விமானம் மாத்திரம் தான் சுப்பரிசோனிக் விமானம் என்று இங்கு விளக்கப் பட்டுள்ளது. இந்த விளக்கம் பிழையானது.
வேகங்கள் தொடர்பான அடிப்படை விளக்கமற்ற நிலையிலே தான் க கு. அவர்கள் பிழையான விளக்கத்தினை இங்கு தந்துள்ளார். ஆகவே, வேகங்கள் பற்றிய சரியான அடிப்படைகளை இங்கு பார்ப் போம்.
வேகங்களைப் பொதுவாக மூன்று பிரிவாகப் பிரிப்போம்; அவை LITET" -
1. ஒலியிலும் குறைந்த வேகம் (Sub-80nie-3peed);- ஃ. ஒவியிலும் கூடிய வேகம்(Super-Sonic Speed) 3. ஒலியிலும் அதிகூடிய வேகம்(Hyper - 80nic Speed).
இப்பொழுது நாம் இந்த வேகங்கள் ஒவ்வொன்று பற்றியும் விமானங்களின் வேகங்கள் பற்றியும் சுருக்கமாக, ஆனால் சற்று விளக்க மாகப் பார்ப்போம்.
91. Se siluisyb 35. päg Gsi sio(Sub-Sonic Speed):
ஒரு பொருள் ஒலியினது வேகத்திலும் குறைவான வேகத்தில் அசைந்தால், அப்படியான வேகத்தினை Sub-80nic pேed" எனக் குறிப்பிடுவோம். அப்படியாயின், ஒளியினது துேகம் எவ்வளவு என்ற கேள்வி ஒருவருக்கு எழுகிறது.
ஒளியினது வேகம் வெவ்வேறு ஊடகங்களில் (Media) வேறுபடும்: ஊடகத்தின் (Medium) பெளதீக குணாதிசயங்களைப் (அடர்த்தி, வெப்பநிலை, அமுக்கம் போன்றவை) பொறுத்து, அந்த ஊடகத்தில் ஒலியின் வேகம் வேறுபடும், 0°C வெப்பநிலையில், கடல் மட்டத்தில், வளியில் ஒவியினது வேகம் 381.7 மீற்றர்/செக்கனாகும். சாதரண மாக வளியில் ஒலியினது வேகத்தினை 340 மீற்றர்செக்-எனக்கொள் வோம். அதாவது 1224 கிலோ மீற்றர் மணி, அல்லது "பீைெமல் / மணி வேகம்வரையிருக்கும். ஆகவே, ஒரு விமானம் 1824கிலோ மீற்றர் மணி, அல்லது 780மைல் மணி வேகத்திலும் குறைவான வேகத்தில் பறந்தால், அது பேb-80ார் வேகத்தில் பறக்கிறது எனக்கூறுவோம், உளட்டிகள் ( Propellers ), ட்ரேபோ - புறப்பெல்லர்கள் (TபrboPropellers ) என்ஜின்களைக் கொண்ட விமானங்கள் Sub-Sonic வேகத்
-21

Page 19
தில்தான் பதக்கும். உதாரணமாக: சிறீ - வங்க அரச படைகள் பயன் படுத்தும் " மசெட்டி ", அவ்றோ (AWro ), சீனாவின் Y-8, Y-12 என்பவைகளுக்கு "ட்ரேபோ புறப்பெல்லர்" என்ஜின்கள் தான் பொருத் தப்பட்டுள்ளன. ஆகவே, இவற்றின் வேகம் Sub-Sonic வேகமாகவே இருக்கமுடியும்.
விமானங்களின் பறப்பு வேகத்தினை அதிகரிக்க அவற்றிற்குக் பீட்டிய உந்து சக்தியுடைய ட்ரேபுே Gāori) " ( Turbo - Jet) sriär ஜின்கள் பொருத்தப்பட வேண்டும். ஆனால், ட்ரேபோ ஜெத் என் ஜின்கள் பொருத்தப்பட்ட விமானங்கள் அனைத்தும் ஒலியினது வேகத் கிலும், அதற்குக் கூடியவேகத்திலும் பறக்கக்கூடியவை என்பதற் கில்லை. ஜெம் என்ஜின்களின் சக்தி, அவற்றின் எண்ணிக்கை, விமா னத்தின் பருமன், அது காவும் நிறை, விமானம் பறக்கவேண்டிய தூரம் என்பவைகளைப் பொறுத்தே ஜெற் என்ஜின்கள் பொருத் தப்பட்டிருந் தாலும், அந்த விமானத்தின் பறப்புவேகம் தங்கியிருக்கும்,
உதாரண்அாக சிவிலியன் போக்குவரத் து விமானங்களான ஐரோப் பிய Air - Bபs, அமெரிக்க Boeing - 747, Boeing- 707, Boeing - 737, மற்றும் DC -10 போன்றவையும், ஏனைய விமானங்களும் ஜெந் “ஜின்கள்பல பொருத்தப்பட்டிருந்தாலும் அவை sub soic வேகத் தில்தான்பறக்கக்கூடியவை.இராணுவப்போக்குவரத்து விமானங்களான asyGrinfid, Kc - 135, C-5A Galaxy மற்றும் விமானங்களும், அமெ சிக்கக் குண்டுவீச்சு விமானங்களான B - 52, B - 2 போன்ற விமானங் களும் பல ஜெத்என்ஜின்கள் பொருத் தப்பட்டிருந்தாலும் அவை SubSonic வேகத்தில்தான் பறக்கக்கூடியவை. இவைகள் மிகப்பெரியதாகை யாலும், மிகவும் கூடிய பாரத்தினைக் காவக்கூடியவையாகையாலும் தான் இவற்றின் வேகம் குறைவானதாகவுள்ளது. ஞாபகமிருக்கட்டும்: B - 52 குண்டுவீச்சு விமானத்திற்கு எட்டுப்பாரிய ஜெற் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இது Sub - Sonic வேகத்தில்தான் பறக்கக்கூடியது.
-24. 25ğluîyılın 3.L4LI Galasü (Super-Sonic Speed):
ஒரு விமானம் ஒலியினது வேகத்திலும், அதிலும் கூடிய வேகத் திலும், ஆனால் ஒலியினது வேகத்தின்து ஐந்து மடங்குகளிலும் குறை வான வேகத்தில் பறந்தால், அந்த விமானம் 'சுப்பர்சோனிக்" வேகத் தில் பறக்கிறது என்போம். அதாவது: ஒரு விமானம் 122 கிலோ மீற்றர் / மணி வேகத்திலும், அதிலும் கூடிய வேகத்திலும் ஆனால் 6. 120 கிலோ மீற்றர் மணி (5x1224 கிலோ மீற்றர்/மணி) வேகத் திலும் குறைவான வேகத்தில் பறந்தால், அந்த விமானம் சுப்பர் சோனிக் வேகத்தில் பறக்கிறது என்போம்.
տ 17ա

ஒரு விமானம் ஒலியினது வேகத்தை அடையும் போது விமானக் g5 girl Bodyggio Standing Shock Wawe ra l-essri IT SRI IDJI ... 3 r Gio D IT-TABs தின் Bodyஇல் பலத்த சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. ஒரு விமா னத்தின் வேகம் ஒவியினது வேகத்திலும் கூடியதாக இருக்கவைப்ப தற்கு மிகவும் கூடிய சக்தி தேவைப்படும். விமானத்தின் பருமன் அதிகரிக்க, அதிகரிக்க Standing Shock Wave இனால் ஏற்படுத்தப் படும் தாக்கங்களும் அதிகரித்துத் தொழில்நுட்ப, பொறியியல் பிரச்சனைகள் கூடும். இதனாலேதான் நாடுகள் சுப்பர்சோனிக் வேகத்தில் பறக்கும் விமானங்களை உருவாக்குவதில் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன. மேலும், உற்பத்திச் செலவுகளும் அதிகரிக் கின்றன. விமானம் சிறிதாகவிருக்க வேண்டியுள்ளது.
இன்றைய நவீன போர் விமானங்கள் (Modern War Plan8ே) பெரும்பாலும் சுப்பர்சோனிக் வேகத்தில் பறக்கின்றன. நவீன சண்டை விமானங்கள் (Fighters) தரை - தாக்கும் விமானங்கள் (GroundLLLLLLLLS LLLLL S LLLLLLlLLLLLSSS TTTT TTL S TTTTTE TTT eTTLTekTTTT SSSLTaLLS Bombers) இடைமறிப்பு - விமானங்கள் (Interceptors) மற்றும் விசேட வேவு பார்க்கும் விமானங்கள் (Reconnaissance P1ADCS) என் பவைகள் சுப்பர்சோனிக் வேகத்தில் பறக்கின்றன.
உதாரணமாக அமெரிக்க F-15, F-16 போன்ற விமானங்கள்: ருசிய Mig விமானங்கள்; பிரெஞ்சு "மிராஷ்ஜ் (Mirage) விமானங்கள்: பிரெஞ்சு ரபேல்" (Rafale); அமெரிக்க F-111 சண்டை- குண்டுவீச்சு விமானங்கள் SR-71 என்ற அமெரிக்க வேவு விதானங்கள் என்பவை சுப்பர்சோனிக் வேகத்தில் பறக்கின்றன.
இன்றுவரை இராணுவ - போக்குவரத்து விமானங்கள் "கப்பர் சோனிக், வேகத்தில் பறக்கக் கூடியதாகச் செய்யப்படவில்லை. சிவி வியன் போக்குவரத்து விமானங்களைப் பொறுத்தமட்டிலும், இன்று வரை "கொன்கோர்ட்"( Congrde ) என்ற ஒரேயொரு விமானமே "சுப்பர்சோனிக்" வேகத்தில் பறக்கக் கூடியது. இந்த சிவிலியன் போக்கு GJIT5g esiirts:Th Air. Bus, Boeing 707, 737, 747, DC- I0 போன்ற விமானங்களைப்போல் நூற்றுக்கணக்கான பயணிகளைக் காவமாட்டாது. இந்த விமானம் 108 முதல் 135 பயணிகள் வரையே காவக்கூடியது. ஆனால் Boeing 747 விமானம் 400 இற்கு மேற்பட்ட பயணிகளைக் காவக்கூடியது. பிரித்தானியாவும், பிரான்சும் இணைந்தே கொன்கோர்ட்" என்ற சுப்பர்சோனிக் போக்குவரத்து விமா மனத்தினை உருவாக்கி, உற்பத்தி செய்தன. இந்த விமானங்கள் பிரான்சினதும், பிரித்தானியாவினதும் பாவனையில் மாத்திரம் இன்று வரை உள்ளன.
-23

Page 20
இதைவிட, "கொன்கோர்ட்" போன்ற உருவ அமைப்பினைக் கொண்ட ஒரு சுப்பர்சோனிக் போக்குவரத்து விமானத்தினை ருசியா வும் உருவாக்கியது. ருசியா அதன் பறப்புப் பரீட்சைகளைச் செய்த போதும், அவைகள் பாவனைக்கு இதுவரை விடப்படவில்லை.
-ஒலியிலும் அதிகூடிய வேகம் (Hyper - 80nic Speed,
5) "ஹைப்ப சோனிக்" வேகம்):
ஒரு பொருளின் வேகம் ஒலியின் வேகத்தினது ஐந்து மடங்குகள் வேகத்திலும்,- அதற்குக் கூடிய வேகத்திலும் இருந்தால் , அந்தப் பொருள் ஹைப்ப சோனிக் வேகத்தில் பறக்கிறது என்போம். அதா வது ஒரு பொருள் 6120 கிலோ மீற்றர்/மணி வேகத்திலும், அதற் குக்கூடிய வேகத்திலும் பறந்தால், அந்தப்பொருள் ஹைப்ப சோனிக் வேகத்தில் பறக்கிறது என்போம்.
இன்றுவரை ஹைப்ப சோனிக் வேகத்தில் பறக்கும் விமானங்கள் பாவனையில் இல்லை. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு என்பவைகள்-இப்படியான விமானங்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இப்படியான விமா னங்களை உருவாக்குவதில் இரண்டு பெரும் தொழில் நுட்பப் பிரச் சனைகள் உள்ளன. அவையாவன:
1. விமானத்திற்கு அதிகூடிய பறப்பு வேகத்தினைக் கொடுக்கும்
என்ஜின்களை உருவாக்குவது;
மிகவும் வேகமாகப் பறக்கும்போது, உராய்வு விசைகளினால் விமானத்தின் வெளிப்புறப்பகுதிகள் அதிகூடிய வெப்பநிலையை அடைவதும், வெப்பம் விமானத்தின் உட்பகுதிகளுக்குச் செல் விாது தடுப்பதும்.
மிகக்கூடிய வேகத்தில் விமானத்தினைப் பறக்கவைக்க ட்ரேபோ ஜெம் என்ஜின்கள் உகந்தவையல்ல. இதற்கு "Ram Jet' என்ஜின் களும், றொக்கற் மோட்டோர் (Rocket Motors) களுமே உகந் தவை. ஆனால், இங்கு விமானம் நிலத்திலிருந்து, தங்குநிலையிருந்து ஓடி மேலெழும்பவேண்டியிருப்பதால், Ram Jet தனித்துப் பயன்படுத்த முடியாது. ட்ரேபோஜெந், Ram Jet என்பவைகள் இணைக்கப்பட வேண்டும். ஆனால் இப்படியான இணைப்பு என்ஜின்களைக்கொண்டு அதிகூடிய வேகத்தினை அடைவது கடினமாகும். மறுபுறத்தில் றொக்கற் மோட்டோர்களைக்கொண்டு மிகக்கூடிய வேகத்தினை அடை பலாம் ஆனால், தரையிலிருந்து ஓடி மேலெழுவதற்கு றொக்கற் மோட்டோரினைப் பயன்படுத்துவதில் பிரச்சனைகள் ஏற்படும். இப்
-24

படியான சிக்கில் நிறைந்த பிரச்சனைகளையெல்:Tம் தீர்ப்பதற்கு ஆராய்ச்சிகளை மேற்குநாடுகள் நீண்டகாலமாக மேற்கொண்டு வந் துள்ளன.
அடுத்தபிரச்சனை என்னவென்றால், அதிகூடிய வேகத்தில் விமா னம் வளிமண்டலத்தில் பறக்கும்போது, அதன் வெளிப்புற வெப்ப நிலை அதிகூடவாகவிருக்கும். இது விமானத்தின் வெளிப்புறம் செய் பப்படும் பொருட்களின் குணாதிசயங்களில் தாக்கங்களை ஏற்படுத் தும். எதுவிதத்திலும், பின் வெளித் திட்டங்களூடாக அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள் அதிகூடிய வெப்பநிலை தொடர்பாகப் பல அணு பவங்களைப் பெற்றுள்ளன.
எதுவிதத்திலும், இன்று வியாபாரப்போட்டிகள் உச்சமடைந்துள்ள நிலையில், முன்னேறிய நாடுகளிடையே தொழில் நுட்பங்களை இரக சியமாக வைத்திருப்பதும் முக்கியமாகிறது, பொருட்களை முதலில் உற்பத்திசெய்து சந்தையில் விடுவதும் இரகசியமாக வைக்கப்பட வேண்டியதாக உள்ளது. இதனால், ஹைப்ப சோனிக் விமானங்களை உற்பத்திசெய்ய முற்பட்டுள்ள நாடுகள் தமது விமானங்களின் உருவாக் கத்தில் என்னென்ன கட்டங்களில் உள்ளன என்பதுபற்றிய விபரங்கனை முழுமையாக வெளியிடவில்லை, எதுவிதத்திலும், 1993 - 1995 இனுள் இவ்வகையான விமானங்கள் -பெரும்பாலும், பாவனைக்கு வரலாம் என்பது பரவலான எதிர்பார்ப்பாகும்.
இதுவரை வேகங்கள் பற்றி விளக்கப்பட்டவைகளைச் சுருக்க 10ான முறையில் கீழ்வருமாறும் விளக்கமுடியும்.
(ஒரு பொருளின்) வேகம் - ஒவியின் வேதம் என்பதை Mach NumhET என்று கூறுவோம். Mach " என்பதை " மா " (Mahh ) என் உச்சரிப்பதே சரியானது. இதனை "M" எனச் சுருக்கமாகக் குறிப் பிடுவோம். இது ஒஸ்திரிய விஞ்ஞானியும், தத்துவஞானியுமான rேnst Mach என்பவரின் ஆராய்ச்சிக்குப் பின்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. M " இன் அளவைப் பொறுத்து, வேகங்களுக்கு வெவ் வேறு பெயர்கள் கொண்டு அழைப்போம்.
1-M*1 ஆகவிருந்தால், அதாவது 'M' ஒன்றிலும் குறைவாக விருத்தால், அந்த வேகத்தினை நாம் Sub - Sonic வேகம்
என்போb.
ஆங்கிலத்தில் " பேb" என்றால் Under அல்லது - Below, ! என்பது கருத்து 80nic " என்றால் " ஒலியின் " என்பது கருத்து.
-25

Page 21
ஆகவே "Sub - Sonic Speed என்றால் ஒலியிலும் குறைவான வேகம் என்பது கருத்து.
* 15 M* 5 ஆகவிருந்தால், அதாவது "M" ஆனது ஒன்றாகவும், ஒன்றுக்குக் கூடவாகவும், ஆனால் 5இலும் குறைவாகவும் இருக்குமேயானால், அந்த வேகத்தினை "Super - Sonic Speed என்து குறிப்பிடுவோம்.
"பேper என்றால் " Aboyo " (மேலே, மேலான) என்பது கருத்து. ஆகவே: ' இuper - Sonic Speed' என்றால், ஒ வி யிலும் கூடிய வேகம் என்பது கருத்து.
* M > 3 ஆகவிருந்தால், அதாவது M ஆனது 5 ஆகவும், 5இற்குக் கூடவாகவும் இருந்தால், அந்த வேகத்தினை "Hyper-Sonic "வேகம் என்று குறிப்பிடுவோம்.
"Hyper" என்றால் " மிக அதிகமான ' (Excessive ) என்பது as claig. 2.5Gahl, "Hyper - sonic Speed." என்றால் " ஒலியிலும் மிக அதிகமான வேகம் ' என்பது கருத்து.
1. க. கு: அவர்களது அடுத்த வசனத்தை எடுத்தால் அது: "இவை மணிக்கு 1250 கிலோமீற்றர் / மணி வேகத்தில் பறக்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.
மேலே விளங்கப்பட்டவைகளிலிருந்து க. கு. அவர்களது இந்த விளக்கம் முற்றிலும் பிழையானது என்பது தெளிவாகும்.
இதைவிட, க. கு. அவர்கள் இன்னுமொரு அடிப்படை பிழையை பும் விட்டுள்ளார். பொதுவாகக் கூறினால், ஒரு விமானத்தின் வேகத்தினைக் குறிப்பிடும்போது, இரண்டு விதமாக அவற்றைக் குறிப் பிடவேண்டும். அவையாவன:
1. விமானத்தின் அதிகூடிய வேகம் (Maximum Speed ):
2. சாதாரண பறப்பு வேகம் (Normal Cruising Speed ).
சாதாரணமாக ஒரு விமானம் அதன் சாதாரண பறப்பு வேகத் தில்தான் பறக்கும். அதன் அதிகூடிய பறப்பு வேகமானது இதிலும் கூடவாகவே இருக்கும். சாதாரண பறப்பு வேகம் ஒலியினது வேகத் திற்குச் சமனாகவும், அதிலும் கூடவாகவும் இருந்தால்தான் நாம் அந்த விமானம் சுப்பர்சோனிக் வேகத்தில் பறக்கும் எனப் பொதுவாகக் கூறுவோம். எதுவிதத்திலும், ஒரு சுப்பர்சோனிக் விமானம் ஒலியிலும்
-26

குறைந்த வேகத்தில் பறக்கமாட்டாது என்பதற்கில்லை. எந்த விமா னமும் தங்குநிலையிலிருந்துதான் வேகம் அதிகரிக்கப்படுகிறது. மறு புறத்தில், சுப்பர்சோனிக் வேகத்தில் பறக்கக்கூடிய ஒரு விமானம் எப்போதும்-சுப்பர்சோனிக்-வேகத்தில்தான்-பறக்கும் என்பதற்கு மில்லை.
இவைகளிலிருந்து தெளிவாகுவது என்னவென்றால், ஒரு சுப்பர் சோனிக் விமானம் பறக்கும்போது கட்டாயமாக 80nic Boom இருக் கும் என்பதற்கில்லை. அது ஒலியினது வேகத்திலும், அதற்குக்கூடிய வேகத்திலும் பறக்கும் போதுதான் ஒலி - அதிர்வு உண்டாகிறது.
கொழும்பில் குண்டுவெடிப்புகள் நிகழ்வதாகவும், அதை நிரா கரித்து அரச தரப்பினர்கள், தமது சுப்பர்சோனிக் விமானங்கள் பறக் கும்போதுதான் இப்படிச் சத்தங்கள் கேட்கின்றன என்ற விளக்கத் தினைக் கொடுத்திருந்ததையும், சில யாழ்குடாப் பத்திரிகைகள் ஜெம் விமானங்கள் பறக்கும்போது உண்டாகும் சத்தங்கள் பற்றிப் பிழை யான விளக்கங்கள் கொடுத்திருந்ததையும் ஒருவர் இங்கு அவதானிக்க வேண்டும்.
ஏற்கனவே வேகங்கள் பற்றி விளக்கப்பட்டவைகளிலிருந்து, ஜெத் என்ஜின்களைக் கொண்ட விமானங்கள் கட்டாயமாகச் சுப்பர்சோனிக் வேகத்தில் பறக்கும் என்பதற் கி ல்  ைல என்பது தெளிவாகும். விமானம் சுப்பர்சோனிக் வேகத்தில் பறக்காவிட்டால் Sonic Boom இருக்கமாட்டாது. ஆகவே, ஜெற் என்ஜின்கள் பொருத்தப்பட்ட விமானங்கள் அனைத்தையும் " சுப்பர்சோனிக்" விமானங்கள் எனக் கூறுவது பிழையானது.
இதைவிட, ஏற்கனவே விளக்கப்பட்டவைகளிலிருந்து, ஒலியின் வேகத்திலும், அதிலும் கூடிய வேகத்திலும் பறக்கும் விமானங்களை "சுப்பர்சோனிக்" வேகத்தில் பறக்கும் விமானங்கள் என்று கூறுவோம் என்பது தெளிவாகிறது. ஆனால் யாழ்குடாப் பத்திரிகைகள் "சுப்பர் சோனிக் விமானம்" என்றால் அது ஒரு குறிப்பிட்டபெயருடைய ஒரு விமானம்போல், பிழையாகப் பயன்படுத்துவதை ஒருவர் அவதானிக்க முடியும,
(ii) க. கு. அவர்களது நான்காவது வசனத்தை எடுத்தால், آقائل ! "இவ்வகையான விமானங்களைப் பிரித்தானியாவும், பிரான்சும் இணைந்த கொன்கே ர்ட்" நிறுவனம் தயாரிக்கிறது" எனக்கூறு கிறது.
ಟ್ಲಿ விபரப்பிழைகளும், விளக்க, சொற்பிழைகளும் உள்ளன „SG ElILIsraesar
-27

Page 22
அ. இதில் "கொன்கேர்ட்" என்பது பிழையானது. "கொன்கோர்ட்"
(Concorde) என்பதே சரியானது. -
ஆ. அடுத்ததாகக் க. கு. அவர்களது விளக்கத்தினைப் பார்த்தால், சுப்பர்சோனிக் விமானங்களைப் பிரான்சு, பிரித்தானிபா என்று நாடுகள் இணைந்த "கொன்கோர்ட்" என்ற ஒரேயொரு ஸ்தாபனம் மாத்திரம் நான் உற்பத்திசெய்துள்ளது போன்ற கருத்தே தரப்பட்டது.
இது முற்றிலும் பிழையானது.
ஏற்கனவே விளக்கப்பட்டதுபோல், சில பத்து எண்ணிக்கையில், உலகின் வெவ்வேறு நாடுகளின்-அரச, தனியார்டஸ்தாபனங்கள் ஏற் கனவே பல்வேறு விதமான கப்பர்சோனிக் வேகத்தில் பறக்கும் விமா னேங்களை உருவாக்கி உற்பத்திசெய்துள்ளன-இன்றும், பல, சுப்பர் சோனிக் விமானங்களை உருவாக்கிவருகின்றன, உற்பத்திசெய்கின்றன.
இ. சு. கு. அவர்களது கடைசி வசனமானது:
'. கொன்கேர்ட் நிறுவனம் தயாரிக்கிறது" எனக்கூறுகிறது
இது பிழையான விளக்கத்தினையே கொடுக்கிறது. "கொன் கோர்ட்" என்ற "சுப்பர்சோனிக்" சிவிலியன் போக்குவரத்து விமானத் தின் உற்பத்தி (Production) நீண்டகாலத்திற்குமுன்னே நிறுத்தப்பட்டு விட்டது. ஏனைய Sub - Sonic சிவிலியன் போக்குவரத்து விமானங் களைப்போல் இந்த விமானத்தை வேறுநாடுகளின் விமானப்போக்கு வரத்துக் கம்பனிகளும், அரச நிறுவனங்களும் வாங்கிப் பயன்படுத்த வில்லை. இதனால், சிறு எண்ணிக்கையில் இந்த விமானத்தினை உற் பத்திசெய்தபின்னர், அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. ஆகவே, "கொன்கேர்ட் நிறுவனம் தயாரிக்கிறது" எனக்கூறுவது பிழையானது. கொன்கோர்ட் நிறுவனம் தயாரித்தது என்றே கூறவேண்டும்.
இவைகளைவிட, க. கு. அவர்கள் சுப்பர்சோனிக் கொன்கோர்ட், 80nic Boom போன்ற சொற்களை ஆங்கிலத்திலும் கொடுத்திருத் தால், மாணவர்களும், பொதுமக்களும் சில புதிய ஆங்கிலச்சொற் களை அறியவும் உதவியிருக்கும், "கப்பர்சோனிக்" வேகம் தொடர் பாகச் சரியான விளக்கங்களை Encyclopaedia க்களிலிருந்து பெறவும் உதவியிருக்கும்.
2. LI - LF டிவுகள்:
மேலே விளக்கப்பட்டவைகளை வைத்துக் க. கு. அவர் களது விபரங்களையும், விளக்கங்களையும் பார்த்தால், அவர் "கொன்கோர்ட்
-28

என்ற சிவிலியன் போக்குவரத்து விமானம் பற்றிய சிறு துணுக்கினை ஏதோவொரு பழைய சஞ்சிகை, அல்லது வெளியீட்டிவிருந்து பொறுக்கி யெடுத்து, அதற்குச் "ரீப்பர்சோனிக்" என்ற தலைப்பையும் கொடுத்து "கொன்கோர்ட் விமானத்தினது விபரங்களை "சுப்பர்ரோனிக்" விமானங்களுக்குக் கொடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது. க. கு. அவர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவைகள்பற்றிய ஒவ் வொரு சொல்லும் முக்கியமானது என்பதைப் புரியாதநிலையில், விப ரங்களைக் கலந்துவிட்டார்.
க. கு. அவர்கள், சரியான விபரங்களையும், விளக்கங்களையும் nேcyclopaedia, மற்றும் கைநூல்களிலிருந்து பெற்றே மாணவர்களுக் கும். பொதுமக்களுக்கும் கொடுக்கவேண்டும் என்பதற்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்பதை இது உறுதிப்படுத்து கிறது.
இன்று யாழ்குடாவில் "சுப்பர்சோனிக்" என்ற சொல்லானது சாதாரண மக்களாலும், பத்திரிகைகளாலும் அடிக்கடி-கூறப்படும் ஒரு சொல்லாகும். இந்தநிலையில், "சுப்பர்சோனிக்" என்பது பற்றி அறிவுக் களஞ்சியம், அவர்களின் அறியும் ஆவலை திருப்தி செய்துள் ளது. ஆனால், பிழையான விபரங்களுடனும், விளக்கங்களுடனும்!
ஒன்ராறியோத் தமிழர்கள் ', " உங்கள் சந்தேகம்? ", "சுப்பர் சோனிக்" என்பனவகள் தொடர்பாகக் க.கு. அவர்கள் கொடுத்திருக் கும் விபரங்கள், விளக்கங்களைப் பார்க்கும் போது, மாணவர்களதும், சாதாரண மக்களதும் அறிவை வளர்க்கவென வெளியிடப்படும் சஞ் சிகைகளில் க. கு. அவர்களது சிந்தனைப் போக்கில் உள்ளவர்களைச் சிறு கட்டுரைகள் துணுக்குகள், விளக்கங்கள்-எழுத அனுமதிப்பது எமது எதிர்காலச் சந்ததியினையும், முழு சமூகத்தினையும் நீண்ட காலப் போக்கில் பெருமளவில் பாதிக்கவே போகிறது என்பது உறுதி பாகிறது.
மறுபுறத்தில், இச்சஞ்சிகையில் கல்விக்குப் பொறுப்பாகவிருக்கும் உதவி - டைரக்டர்களும், பேராசிரியர்களும், அறிஞர்களும், கல்வி மான்களும், விரிவுரையாளர்களும், ஆசிரியர்களும், புத்திஜீவிகளும் காப்பாளர்களாக இருந்தும், இப்படியான பிழைகளும், ஏமாற்றுகளும் ஒருவித ஐயப்பாடுகளையே அடிப்படையில் ஏற்படுத்துகின்றன. எது விதத்திலும், " அறிவுக் களஞ்சியம் " சஞ்சிகையில் கூறப்பட்டிருக்கும் ஏனைய விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே இச்சஞ்சிகை பற்றிய சரியான முடிவுகளுக்கு வரமுடியும். ஆகவே, இச்சஞ்சிகையிலுள்ள ஏனைய விடயங்களையும் தொடர்ந்து பார்ப்போம்,
-29

Page 23
6 -டென்னிஸ் விளையாட்டுப்
பற்றி
அறிவுக் களஞ்சியம் - 2, பக்கம் - 19
எழுதியவர் ஹம்ஸ்
அறிவுக் களஞ்சியம் - 2 இன் காப்பாளர் கருத்துக்கள் என்பதில் பேராசிரியர் ஆ. சண்முகதாஸ் அவர்கள். தனது கருத்துக்களில்: "படித். தவர்களாகிய நாங்கள் மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ள வேண்டி பது அவசியம். பங்கிட்டுக்கொள்ள அறிவுக் களஞ்சியம் நல்ல வாய்ப் பளிக்கிறது. அவ்வாறு விஞ்ஞானம், அரசியல், விளையாட்டு முதலிய எல்லாத்துறைகளிலும் இதற்கென ஒரு வங்கியை வைத்திருந்தால் நன்று ' எனக் கூறியுள்ளார்.
பேராசிரியர் சண்முகதாஸ் இனது கருத்துக்களையும், அறிவுக் களஞ்சியம் " சஞ்சிகையில் வெளியிடப்படும் சிறு கட்டுரைகளையும், விபரங்களையும், விளக்கங்களையும் பார்க்கும்போது, ஒருவித பீதியே ஏற்படுகிறது. ஏனெனில்: அறிவுக் களஞ்சியத்தில் விஞ்ஞானம், அரசி பல் விளையாட்டு என்பவைகள் தொடர்பாகத் தரப்படும் விபரங் களும், விளக்கங்களும் முந்நறிலும் பிழையானவைகளாகவே உள்ளன. இந்த நிலையில், ஒரு வங்கியையும் உருவாக்கினால், காலப்போக்கில் அது எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறதோ என்ற ஏக்கம் சராசரி அறிவுடைய எவருக்கும் ஏற்படும்.
ஒரு நூலில், அல்லது சஞ்சிகையில் பிழையான விபரங்களும், விளக்கங்களும் கொடுக்கப்படுபமை, பெரும்பாலும், அவற்றைப் படிப் பவர்களுள் ஒரு பகுதியினர்கள் பிழையான விபரங்களை அறியவும், பிழையான விளக்கங்களை ஏற்படுத்தவும் வழியமைக்கையில், மற் றொரு பகுதியினர் குழப்பமடையவும் வழியமைக்கும். ஆனால், மத் தியப்படுத்தப்பட்ட ஒரு வங்கியில் பிழையான தரவுகள், விபரங்கள், விளக்கங்கள் சேகரித்து வைக்கப்படுமேயாயின் காலப்போக்கில் அந்த சமூகம் தவற முடியாதபடி சீரழியும்.
ஏனெனில், காலப்போக்கில் முழு சமூகமும் பிழையானவைகளையே சரியானவைகளெனக் கொள்ளும் நிலை ஏற்படும். ஆங்கிலம் வேறு பாஷைகள் அறிந்தவர்கள் அந்த சமூகத்தில் குறைந்து சென்று, ஆங் கிலம், வேறு பாஷைகளிலுள்ள கலைக் களஞ்சியங்கள், கைநூல்கள், நூல்கள், சஞ்சிகைகள் கிடைக்கப்பெறாத நிலையும் ஏற்படுமாயின்
-30

நிலைமைகள் மிகவும் மோசமாகவே இருக்கும். தற்போது ஆங்கிலம், மற்றும் பாஷை களில் வெளியிடப்படும் Encyclopedia க்கள் கைநூல்கள், சஞ்சிகைகள், நூல்கள் போதியளவில் கிடைக்கப்பெறும் நிலையில்கூட, பிழையான விபரங்களும், விளக்கங்களும் மானவர் களினதும், பொது மக்களதும் பொது அறிவை வளர்க்கவென வெளி யிடப்படும் பிரத்தியேக சஞ்சிகைகளினால் கொடுக்கப்படுகின்றதாயின், அவைகள் அறவே இல்லாதும், மத்தியப் படுத்தப்பட்ட வங்கியும் மாத்திரம் இருக்குமேயாயின், தமிழ் சமூகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தாம் ஆங்கிக்க முடியும்
இது ஆங்கில மோகம், வெளிநாட்டு மோகம் எனச்சிலர் வருணித்து எமது தாய் மொழியிலேயே சகலவற்றையும் நாம் சேமித்து வைக்க முடியும் என்ற வாதத்தினை முன்வைக்கமுடியும். ஆனால், அறிவுக் களஞ்சியத்தினைப் படித்து பிழையான விபரங்களையும், விளக்கங் களையும் அதில் கண்டறிந்த புத்திசுவாதீனமுள்ளவர்கள் இப்படி யான வாதத்தின்ன முன்வைக்கவே மாட்டார்கள்
ஒரு வங்கியில் சகலதுறைகள் தொடர்பாகவும் தரவுகள், விபரங் கள், விளக்கங்கள் என்பவைகளைத் தமிழில் சேமித்து வைக்கமுடியும் எனச் சில தமிழ் 'அறிஞர்கள் கூறலாம். ஆனால், எமக்கு எழும் முக்கிய முதல்பிரச்சனை என்னவென்றால் விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வெகுவாக முன்னேறியிருக்கும் இன்றைய காலகட்டத்தில், பல்லாயிரம் புதிய சொற்களுக்குத் தகுந்த தமிழ் சொற்களை எமது "அறிவாளிகளும்', தமிழறிஞர்களும் இன்னும் உருவாக்கவே இல்லை.
அடுத்ததிாக, தகவல்களையும், தரவுகளையும், விளக்கங்களையும் வேறு மொழிகளில் இருந்து பெற்றே நாம் சேகரித்து வைக்கவேண் டும். இலங்கைத் தமிழர்களாகிய நாம் இவற்றை எவர்களைக்கொண்டு சேகரித்துவைப்பது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஏனெனில்: தமிழ் சமூகத்தின் அறிஞர்கள் எனக் கருதப்படுபவர்களை ஆசிரியர் களாகவும், காப்பாளர்களாகவும் கொண்டிருக்கும் அறிவுக்களஞ்சியம் சஞ்சிகையின் 40 சிறு பக்கங்களில் தரவுகள், விபரங்கள், விளக்கங்கள் என்பவைகளைக் கொடுப்பதிலேயே நூற்றுக்கணக்கான பிழைகளைக் காணக்கூடியதாகவுள்ளது. இந்த நிலையில், விஞ்ஞானம், அரசியல் விளையாட்டு என்பவைகளுக்கெனப் பிரத்தியேக வங்கியினை யாரைக் கொண்டு உருவாக்குவது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
'இது தேவையற்ற முறையில் பீதியைக் கிளப்புகின்ற நடவடிக்கை' என்று சிலர் கடிந்துகூற முற்படலாம். ஆனால், விஞ்ஞானம் தொடர் பான விடயங்களான டெலஸ்கோப், சுப்பர்சோனிக் என்பவைகளைப் பற்றி அறிவுக் களஞ்சியம் சஞ்சிகையில் படித்த பின்னர் விளையாட்
-3-

Page 24
டுக்கள் பற்றி, குறிப்பாக டென்னிஸ் விளையாட்டுப்பற்றி, படிக்கும் போது இப்படியான பீதி எழவே செய்கிறது. - -
"ஹம்ஸ்" எழுதியுள்ள "டென்னிஸ் விளையாட்டுப் பற்றி" என்பதை மாணவர்களும், சாதாரண மக்களும் படிக்கும்போது, அது பல விடயங்களையும், விபரங்களையும் அறியத்தருகிறது என்ற ஒருவித தோற்றத்தினையே கொடுக்கும். ஏனெனில் அதில் அவர்கள் முன்பு அறிந்திராத பல விடயங்கள், விபரங்கள், விளக்கங்கள் அவர்களுக்குக் கிடைக்கிறது என்ற ஒருவித உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால், இச்சஞ்சிகைமூலம் அவர்கள் அறிந்தவைகள் பிழையான வைகள் என்பது அவர்களுக்குத் தெரியாத நிலையில்தான், அவர்க ளுக்கு ஒருவித மனநிறைவு ஏற்படுகிறது. இது எமது வருங்காலச் சந்ததியினரான மாணவர்களையும், சாதாரண மக்களையும் ஒருவித மாயையுள் வீழ்த்தும் நடவடிக்கையே. இது பெரும் ஆபத்தினையே காலப்போக்கில் எமது சமூகத்திற்கு ஏற்படுத்தும்.
இப்படியெல்லாம் கூறும்போது, அறிவுக் களஞ்சியம் சஞ்சிகையி லுள்ள விடயங்களைப் படித்தவர்களுள் பெரும்பான்மையினர்களுக்கு பல அறிஞர்கள். பேராசிரியர்கள், கல்லூரி அதிபர்கள், விரிவுரையா ளர்கள், ஆசிரியர்கள், கல்வி உதவி - எடரக்டர்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என்போரைக் காப்பாளர்களாகக் கொண்டி ருக்கும் "அறிவுக் களஞ்சியம்" சஞ்சிகையில் பிழையான விபரங்களும், விளக்கங்களும் இருக்க முடியாது என எண்ணவும் தோன்றும். பெரும் பான்மையான மூன்றாம் உலகநாடுகளில் நிலை, உண்மையில், இது போன்றதுதான். இந்த மாயைநிலை மாற்றப்படவேண்டும்
'ஹம்ஸ்" டென்னிஸ் பற்றி எழுதியிருப்பவைகளை எடுத்தால், முதலாவது பந்தியில்:
"இன்றைய டென்னிஸ்' (Law Tennis) ஆட்டத்தின் முன்னோடி ஜ் பூ தே பெளமா என்ற தனிரகப்பந்தாட்டமாகும். இதனைப் பண்டைய கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆடிவந்தனர். "தெனஸ்" என்ற பிரான்சிய மூலத்திலிருந்து "டென்னிஸ்" என்ற சொல் பிறந்தது எனக் கூறப்படுகின்றது. -
இவைகளில் விபர கருத்து, சொற்பினழகள் இருப்பதுடன், டென்னிஸ் இன் வரலாறு தொடர்பாகவும் குழப்பநிலை காணப்படு கிறது. அவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். -
அ) முதல் வசனத்தில் : "இன்றைய டென்னிஸ்" (Lawn Tennis ) . என எழுதப்பட்டுள்ளது.
-32

இது பிழையான விளக்கத்தினையே மாணவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் ஏற்படுத்தும். இதன்படி, இன்றைய என்ற தமிழ் சொல் விற்கு ஆங்கிலம் LAWB என்றே சாதாரண ஒருவரை எண்னத் துரண்டும்.
இங்கு அவதானிக்கப்படவேண்டியது என்னவென்றால் இன்று உலகில் பிரசித்தமாக விளையாடப்படும் . டென்னிஸ் விளையாட் டானது LAWI இல் விளையாடப்படும் டென்னிஸ் அன்றி, இன்றைய டென்னிஸ் என்பதன் ஆங்கி:ம் LAW Tennis அல்ல.
பிரித்தானியர்கள் டென்னிஸ் விளையாட்டினைப் புல் வளர்க்க
கப்பட்டு, வெட்டப்பட்ட பீரத்தியேக நிலப்பரப்பில் (LaWா இல்) விளையாடியதால், அதனை அவர்கள் Lawn Tennis என்று அழைத்தனர். இதனால், பிரித்தானியரது Lawn Tennis ஆட் டம் திறந்தவெயினில்தான் ஆடப்பட்டுவந்தது. திறந்த வெளியில் டென்னிஸ் விளையாடும்போது, மழை, காற்று, பணி என்பவை களும் ஆட்டத்தினைக் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும். இதனால், குறிப்பிட்ட காலங்களிலேயே திறந்த வெளிகளில் " LaWI Tennis விளையாடவேண்டியிருந்தது. உலகப் பிரசித்தி பெற்ற "விம்பிள்டன்' போட்டியானது " LAWI இல்தான் விளையாடப்படுகிறது.
ஆனால், இன்று, இதே டென்னிஸ் ஆட்டம் திறந்த வெளி நளில் மண்தரையிலும், மக்கி கொண்டு தயாரித்த தரையிலும் விளை பாடப்படுவதுடன், மூடப்பட்ட பாரிய கட்டடங்களுள் றப்பர் மரம், மற்றும் விசேட செயற்கைப் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப் பட்ட தரைகளிலும் விளையாடப்படுகிறது. அமெரிக்கர்கள் டென்னிஸ் விளையாட்டினை "க்கோற் டென்னிஸ்ட( Court Tennis )-என்றே கூறுவர்.
ஆ) ஹம்ஸ்" இன் முதல் வசனத்தில் : "இன்றைய டென்னிஸ்" (Lawn Tennis ) ஆட்டத்தின் முன்னோடி ஜ்-யூ-தே பெளமா என்ற தனிரகப் பந்தாட்டமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஹம்ஸ் என்பவரால் இங்கு ழ் பூ தே பெளமா எனத் தமிழில் எழு தப்பட்டிருப்பது பிழையானது. ஒன்றில், இவர் ஒரு அகராதி அல் TTS LLLHHLHHLHLaCllLLLLLLS TTTTuS TTS TTTT S LLLLL LLL LLTHC TT எழுதப்பட்டிருந்ததைத் தமிழில் பிழையாக எழுதியிருக்கலாம். அல் லது, இவர் பயன்படுத்திய தமிழ் சஞ்சிகையில், அல்லது குறிப்பிட்ட தமிழ் நூலில் ஜ் யூ தே பெளமா எனத் தமிழில் பிழையாக எழுதப் பட்டிருந்திருக்கலாம்.
-33

Page 25
வ de Paume என்பது பிரெஞ்சு மொழிச்சொற்களாகும். இதில் சu என்றால் விளையாட்டு அதாவது-Game என்பது-கருத்தாகும். Paume என்றால் உள்ளங்கை, அதாவது Palm என்பது கருத்தாகும். DE என்பதற்கு இங்கு ஆங்கில OF என்பது கருத்தாகும். ஆகவே, பே பிPேaபme என்றால் உள்ளங்கையால் விளையாடும் விளையாட்டு என் பது விளக்கமாகும். இதை ஆங்கிலத்திற்கு நேரடியாக மாற்றினால்: Game of Palm என்றுவரும். ஆனால், அப்படிப் பொதுவாக எழுது வதில்லை.
ஹம்ஸ் என்பவர்-dே de Paulne-என்பதை-ஜ்-யூ-தே பெளமா எனத் தமிழில் மாத்திரம்ஆனால் பிழையாக,எழுதியிருப்பமை, பிரெஞ்சு காரசால் அன்று விளையாடப்பட்ட விளையாட்டின் பெயரையே முற்றிலும் மாற்றியமைத்துவிட்டது.
Jபே என்பதை ஜ்(விடியூ என்று உச்சரிப்பதே சரியானது. DE என்பதை (த்)த என்று-எழுதுவதே சரியானது.-Paume-என்பதை (ப்) பொம் என்றே எழுதவேண்டும். ஆகவே, பே de Paume என்பதை ஜ் (ஷ்) யூ (த்) த (ப்) பொம் (P0In) என்றே எழுதவேண்டும். பிழை யாகத் தமிழில் ஒரு பிறநாட்டுச்சொல்லை எழுதிக் குழப்பத்தினை ஏற்படுத்துவதிலும் பார்க்க, ப"ேde paபme எனப் பிரெஞ்சு மொழி யிலேயே எழுதுவது பல பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவதுடன், குறை வான பாதிப்பையே ஏற்படுத்தும்,
இ) eu is pAIC ஆட்டத்தினைப்பற்றிக் குறிப்பிட்ட ஹம்ஸ், அடுத்த வசனத்தில் இதனைப் பண்டைய கிரேக்கர்களும், ரோமானி யர்களும் ஆடிவந்தனர் எனக்கூறியுள்ளார்.
இதன்மூலம் அவர் இரண்டு-பிழையான விளக்கங்களை ஒரு வருக்கு ஏற்படுத்துகிறார்: அவையாவன:
1. ஜ் யூ தே பெளமா என அவர் குறிப்பிட்டது கிரேக்க, அல்லது
இலத்தின் மொழியென ஒருவரை எண்ணத்தூண்டுவது;
2. இந்த-விளையாட்டு கிரேக்கருடனும், ரோமருடனும்தாள்
தொடர்புடையது என்று ஒருவரை எண்ணத்தூண்டுவது.
இவை முற்றிலும் பிழையானவை. வரலாற்றின் மத்தியகாலப் பகுதியில் (Middle Ages)பிரான்சில் ஆடப்பட்ட இந்த பே de Paume என்ற ஆட்டத்தினில், விளையாடும் தரைப்பகுதியானது ஒரு கயிறி எாலோ (Cord), அல்லது வலையினாலோ (Net) இருபகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு புறத்திலிருந்து மறுபக்கத்திற்குச் சிறிய பந்
-34

தானது உள்ளங்கையால் அடித்துச் செலுத்தப்படுகிறது. மறுபுறத்திற் குச் செல்லும் பந்தினை அப்பகுதியிலிருப்பவர் தனது உள்ளங்கை யினால் அடித்து மறுபக்கம் மீண்டும் செலுத்துவார். காலப்போக்கில், பந்தினை உள்ளங்கையால் அடிப்பதற்குப் பதிலாக ரக்கற் (Racket) பயன்படுத்தப்பட்டு, ஈற்றில் இந்த விளையாட்டு டென்னிஸ் ஆட் படமாக உருவாகியது.
ஈ) Tennis என்ற ஆங்கிலச்சொல்லானது TENEZ என்ற பிரெஞ் சுச் சொல்லில் இருந்து மருவிவந்தது.
எதிரில் இருக்கும் ஒருவருடன் நேரடியாகப் பேசும் போது, விளை யாட்டில், அவரை எடு (Take), அல்லது வாங்கு (Receive) Ta:Tü பிரெஞ்சு மொழியில் கூறுவதாயின் (த்)தெனே' (Tene) என்றே கூறவேண்டும். Tencz என்ற சொல்லை பிரெஞ்சுமொழியில் (த்)தெனே என்று உச்சரிக்கையில், ஆங்கிலத்தில் (த்)தெனேஸ் என்ற ஒவியே வரும். மே de Paபm9 இல், ஒரு புறத்திலிருந்து பந்தை மறுபுறம் அடிப்பவர் எதிரிலுள்ளவருக்குத் த்தெனே (Tenez) எனக்கூறியவாறு அடிக்கலாம். காலப்போக்கில், வேறு நாட்டவர்கள் இந்த விளை பாட்டினை விளையாடும்போது, குறிப்பாகப் பிரித்தானியர் விளை யாடும் போது, அவர்கள் தாமும் Tenez எனக்கூறி விளையாடும் போது Tenzே என்பது (த்)தெனேஸ் என்ற ஒலியைப் பெற்று, ஈற்றில் அது போர்8 என்ற ஒலியைப்பெற்றது. மொத்தத்தில்: Tengத என்ற சொல் Tennis என்ற ஒலியைப் பெற்றுவிட்டது.
ஆகவே, இன்று விளையாடப்படும் டென்னிஸ் என்ற விளையாட் டிற்கு பிரெஞ்சுக்காரரும், அவர்களது eu de Paume உம்தான் மூலமாகும். ஆனால், ஹம்ஸ் என்பவர் டென்னிஸ் ஆட்டத்திற்கும், கிரேக்கருக்கும், ரோமருக்கும் தொடர்பென்ற விளக்கத்தினை முதலில் கொடுத்துவிட்டுப் பின்னர் (த்)தெனே என்ற பிரெஞ்சுச்சொல்லையும் தொடர்புபடுத்தி, டென்னிஸ் ஆட்டத்தினைப் பற்றிப்பெரும் குழப்பத் நினையே ஏற்படுத்தியுள்ளார். -
டென்னிஸ் ஆட்டத்திற்குப் பிரான்சே மூலமாயின், டென்னிஸ் க்கோற் உம் (Tennis Court) உலகில் முதன் முதலாகப் பிரான்சில் தான்-அமைக்கப்பட்டிருக்க முடியும். ஆனால், டென்னிஸ் க்கோற் பிரான்சில் எங்கு அமைக்கப்பட்டது என்பது தொடர்பாகவும் ஹம்ஸ் பிழையான விபரத்தினையே தந்துள்ளார்-ஹம்ஸ்இன்படி.டட
உ) உலகின் முதலாவது டென்னிஸ்க்கோற்-1469-இல் பாரிஸ் நகரில்தான் அமைக்கப்பட்டது எனக்கூறப்பட்டுள்ளது.
m
-35

Page 26
பிரான்சில் முதலாவது டென்னிஸ் க்கோற் 1330 ஆம் ஆண்டில் பு:ஆதிதிஏ (Politiers ) என்ற இடத்தில்தான் அமைக்கப்பட்டது. உள் ளங்கையால் அடித்து விளையாடப்பட்ட இந்த விளையாட்டில் ரக்கற் (Racket) பயன்படுத்தத்தொடங்கியதுமுதல், இந்த விளை பாட்டு மிகவும் பிரபல்யமானது 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில் டென்னிஸ் ஆனது பிரெஞ்சு, பிரித்தானிய அரசர்களாலும், பிரபுக் களாலும் பெரிதும் விரும்பி விளையாடப்பட்டது. 1530 ஆம் ஆண் tyä li.55Taifu pair6Tri Gapsirri - VIII ( Henry-VIII ) Hampton Court Palace (ஹம்ரன் க்கோற் பலஸ்) இல் டென்னிஸ் க்கோ ற் இனை அமைத்தார். 1615 ஆம் ஆண்டளவில், லண்டனில் (London ) 15 டென்னிஸ் க்கோற்கள் இருந்தன. 1857 இல் பரியில் ( Paris ) 14 டென்னிஸ் க்கோற்கள்வரை இருந்தன.
1788 இல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, மன்னர்களும், பிரபுக்களும் விரட்டப்பட்டநிலையில், பிரான்சில் டென் எரிஸ் ஆட்டமும் விரட்டியடிக்கப்பட்டது. இன்று பரியில் ஒரேயொரு டென்னிஸ் க்கோற்தான் எஞ்சியுள்ளது. முழு பிரான்சிலும், பரியிலும் (Paris ), (ப்)போர்ட்தோ ( Bordeaux ) விலுமாக, இரண்டேயிரண்டு டென்னிஸ் க்கோற்களே உள்ளன. இவைகள் இரண்டும் மண்தரை களிலான க்கோற்களாகும். லண்டனில் நான்கு டென்னிஸ் க்கோ ற்கள் பாவனையில் உள்ளன.
டென்னிஸ் ஆட்டம் தொடர்பாக ஹம்ஸ் என்பவரால் கொடுக் கப்பட்டிருக்கும் கணிசமான முக்கிய ஏனைய விபரங்களும் பிழையா னவை. அவற்றுள் முக்கிய சில பிழைகள் பின்வருமாறு:
1. டேவிஸ் கப் ( Davis Cup ) போட்டியானது, பந்தி இரண்டில் குறிப்பிட்டிருப்பதுபோல், 1990 ஆண்டில் ஆரம்பிக்கப்பட வில்லை. அது 1900 ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இப்பிழையானது சிலவேளைகளில் அச்சுக்கோப்பினைச் சரி யாகப் பிழைபார்க்காததால் ஏற்பட்டிருக்கலாம்.
2. டேவிஸ் கப் ஆனது அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டு வீரரான டுவைற் டேவிஸ் (Dwight F. Davis) என்பவரால் கொடுக்கப்பட்டு, முதலில் பிரித்தானிய, அமெரிக்க ஆட்டக்
காரருக்கிடையில்தான் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் காலப்போக்கில், வேறு நாடுகளும் போட்டியில் அனுமதிக்கப்
lar
.ேடஹம்ஸ் என்பவர்-குறிப்பிட்டிருக்கும் சினிமா நட்சத்திரம் என்ற வர் உண்மையில் பிரான்சினது புகழ்பெற்ற டென்னிஸ் ச்சம்பி
-36

பனாகும். Zபzanne Lenglாே என்ற இந்த இளம் டென்னிஸ் ச்சம் பியனாவாள் 1919 இற்கும் 1925 இற்குமிடையில் ஆறு தடவை கள் விம்பிள்டன் ( Wilbledon ) ச்சம்பியனாக வெற்றியீட்டி
TTT... " " " - -
பிரபல்ய டென்னிஸ் க்ரம்பியனாக இருந்து வந்த செல்வி பேAnய0 Lnேgen இனை என்ன காரணத்திற்காக ஹம்ஸ் சினிமா நட்சத்திரம் எனக் குறிப்பிட விரும்பினாரோ தெரியவில்லை.
செல்வி குசேன் லெங்கிலேன் பிரான்சின் தலைநகரமான பரியில் ( Paris ) இளம் டென்னிஸ் ஆட்டக்காரர்களை உருவாக்கவென ஒரு விசேட பாடசாலையையும் ஆரம்பித்திருந்தார்:
* டேவிஸ் கப் போட்டியானது 1901, 1910 ஆம் ஆண்டுகளி லும் 1915, 1916, 1917, 1918 ஆம் ஆண்டுகளிலும் 1940, 1941, 1842, 1943, 19tt, 1945 ஆம் ஆண்டுகளிலும் நடைபெற வில்லை. அதாவது 1901, 1910 ஆம் ஆண்டுகளிலும், முத லாம். இரண்டாம் உலகயுத்த காலங்களிலும் நடைபெறவில்லை.
ஹம்ஸ் இனால் கொடுக்கப்பட்ட பிழையான விபரங்களையும், விளக்கங்களையும் பார்த்த நாம், டென்னிஸ் தொடர்பாக ஹம்ஸ் கொடுக்காது விட்டுள்ள சில முக்கிய விபரங்களை இனிப்பார்ப்போம்.
1 விம்பிள்டன் போட்டி தொடர்பாக அது எந்த ஆண்டுமுதல் டேப்பட்டுவருகிறது. என்ன மாதத்தில் இது, எங்கே விளை பாடப்படுகிறது போன்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை.
2. இன்றைய டென்னிஸ் ஆட்டமும், அதன் சட்ட ஒழுங்குகளும் எத்தி நாட்டில். எந்த ஆண்டில், யாரால் உருவாக்கப்பட்டன என்பவை சுருக்கமாகக் குறிப்பிடப்படவில்லை.
o. Polonia, Lawn Tennis Association எப்போது ஆரம்பிக்கப்
பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை.
4 உலக டென்னிஸ் ச்சம்பியன்களைப் பற்றிக் குறிப்பிட்ட ஹம்ஸ், 19 ஆம் நூற்றாண்டின் மாபெரும் டென்னிஸ் ச்சம்பியனான 1.Edmond Barre பற்றிக் குறிப்பிடவேயில்லை. பிரெஞ்சுக் காரனான இவர் 183 முதல் 1863 வரை உலக ச்சம்பியனாக இருந்தார். இவரைவிட, பிரித்தானியாவின் தலைசிறந்த ச்சம்பிய னான Peter Lathaா பற்றியும், 20 ஆம் நூற்றாண்டின் மிகச்
-37

Page 27
சிறந்த அமெரிக்கச் சம்பியனான Pierre Etchebaster பற்றியும் குறிப்பிடப்படவில்லை.
3. டென்னிஸ் இன்று உலகின் எந்தெந்த நாடுகளில் முக்கியமான விளையாட்டாகவுள்ளது. இலங்கையில் இந்த விளையாட்டு எந்த ஆண்டில், யாரால் அறிமுகம் செய்யப்பட்டது போன்ற விபரங்கள் இரு வசனங்களில் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
6. முக்கிய சொற்களினதும், பெயர்களதும் ஆங்கிலம், மற்றும் மொழிகளிலுமான சொற்கள் அடைப்புக்குறிகளில் கொடுக்கப் படவில்லை.
உப - முடிவுகள்
ஹம்ஸ் என்பவரால் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்களையும், அவற்றிலுள்ள பிழைகளையும் பார்க்கும்போது, அவர் பெரும்பாலும் இந்த விபரங்களைத் தமிழ் நாட்டில் வெளியாகும் ஒரு சஞ்சிகை யிலிருந்து, அல்லது ஒரு நூலிலிருந்து பெற்றிருக்கவேண்டும் என்றே எண்ணத்தோன்றுகிறது. குறிப்பாக FRENCH TENNS STAR ஆன Sபzanne Lenglem இனை பிரான்சிய சினிமா நட்சத்திரமாகவும் சூசேன் என்பது சுசானே எனவும் எழுதப்பட்டிருப்பமை தமிழகப் போக்கையே காட்டுகின்றன. Jayawardene என்பது ஜயவர்த்தன என எழுதப்படாது . வர்த்தனே எனத் தமிழகத்தில்தான் பெரும்பாலும் எழுதப் படுகிறது.
இச்சிறு கட்டுரையை டென்னிஸ் தொடர்பாக ஒருவித முழுமை யான விளக்கத்தினை ஏற்படுத்தும் வகை யில் ஹம்ஸ் Encyclopaedia க்கள், மற்றும் கைநூல்களைப் பயன்படுத்தித் திட்டமிட்ட முறையில் எழுதிவில்லை. அரைகுறை விபரங்களும், விளக்கங்களும் மாணவர்களையும், சாதாரண மக்களையும் டென்னிஸ் பற்றிய ஒரு வித முழுமையான விளக்கங்களைப் பெற அலையவே விட்டுள்ளன. மொத்தத்தில் இது ஒரு ஏமாற்றுக் கட்டுரையே.
-
S S S S - - - -
- - -ாாம்--

தத்துவம் தந்த ஆக்கிமெடீஸ்
அறிவுக் கள்ளுசியம் - 2, பக்கம் - 26"
எழுதியவர் வண்ணை சே. சிவராஜா
இக்கட்டுரையும் பலவித விபரங்களைக் கொடுத்திருப்பது போன்ற தோற்றம் ஏற்படலாம். ஆனால், இக்கட்டுரை பலவிதமான விபர. கருத்துப் பிழைகளைக் கொண்டிருப்பதுடன், பல முக்கிய விபரங்களை மாணவர்களுக்கும், படிப்போர்களுக்கும் அறியக்கொடுக்காது விட்டுள் எாது, அவைபற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அ) பந்தி இரண்டில் 'பிபிடியாஸ் என்ற கிரேக்க வான சாஸ்திர நிபுணரின் மகனாகக் கி.மு. 387 இல் பிறந்த ஆக்கிமெடிஸ் ." என ஆக்கிமெடிஸ் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
இதைப்படிப்பவர் ஆக்கிமெடிஸ் இணைக் கிரேக்க நாடான கிறீ சுடன் இணைக்கும் சந்தர்ப்பங்களே உருவாகும்.
சிசிலித்தீவின் அன்றைய தலைநகரான சைராக்குஸ் (Syriacus)ே இனில்தான் ஆக்கிமெடிஸ் பிறந்தார். எகிப்தின் அலெக்ஸ்ஆன்ட்ரியா (Alexandria) வில் கல்விகற்ற அவர் சிசிலியில்தான் வாழ்ந்தார். சிசிலியிலேதான் இற ந் தார். ஆலெக்ஸ்ஆன்ட்ரியாவில் கல்வி சுற்றதனாலேயே இவருக்கு எகிப்தின் நீர் விநியோகப் பிரச்சினைக் குத் தீர்வுகாணவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. இதனால், அவர் அன்று ARCHIMEDEAN BCREW என்ற நீர் இறைக்கும் இயந்திரத் தினை உருவாக்கினார்.
இந்ததிலையில், சிசிலியைச்சேந்த ஆக்கிமெடிஸ், அல்லது சைராக்குஸ் இன் ஆக்கிமெடிஸ் என்று அவரைக் குறிப்பிடுவதுவே சரியானது, குழப்பத்தினையும் ஏற்படுத்த மாட்டாது.
எது விதத்திலும், கிறீஸ்த்துவுக்கு முன்னர் 700 ஆம் ஆண்டுகளில் கிரேக்கர்கள் சிசிலி, மற்றும் மத்தியதரைக்கடல் பகுதிகளில் கிரேக்க காலனிகளை ஏற்படுத்தியிருந்தனர் என்பதுவும், பின்னர், சைராக் குஸ் போன்ற அரசுகள் பல உருவாகின என்பதுவும் அவதானிக்கப் படவேண்டும்.
"ஆ) பந்தி மூன்றில்: "இவரது அரசனாகிய கிரேக்க மன் னேன் . " எனக் கூறும் வசனமும் மேலே குறிப்பிட்டதைப்போல் பிழையான, மயக்கமான விளக்கத்தினையே ஏற்படுத்துகிறது.
-39

Page 28
  

Page 29
இதில் கூறப்படும் விபரமும், இதன்மூலம் ஏற்படுத்தப்படும் விளக் கமும் பிழையானவை.
1. ஆக்கிமெடிஸ் கி. மு. 215 இல் கொல்லப்பட்டதென்பது பிழை யான்து:"அவர் கி.மு.212இல் தான் கொல்லப்பட்டார். 2. கி. மு. 212 இல் ரோமானியப் படைகள் சைராக்குஸ் அரசைக் "கைப்பற்றின. சைராக்குஸ் இனைக் கைப்பற்றிய குளோடியஸ் மார்சலேஸ் ஆக்கிமெடிஸ் இனை அழைத்துவரும்படி அனுப்பிய வீரர்கள்ே ஆக்கிமெடீஸ் இனை வெட்டிக்கொன்றதாக வரலாறு கூறுகிறது. இந்த நிலையில், அவர் எதிரி ஒருவனால் வெட்டிக் கொல்லப்பட்டார் என சிவராசா அவர்கள் கூறியிருப்பது, உண்மையில், அவரது கட்டுரையைப் படிப்போருக்கு ஒருவித மயக்கம்ான் விளக்கத்தையே ஏற்படுத்துகிறது. இவைகளைவிட, சிவராசா அவர்களின் இச்சிறு கட்டுரையினில், மாணவர்கள் தம்து அறிவை உயர்த்திக் கொள்ள உதவும் வகை யில் சில் "முக்கிய சொற்களின் ஆங்கிலங்கள் அடைப்புக்குறிகளில் கொடுக்கப்படவில்லை. ஆக்கிமெடீஸ் (Archimedes) என்ற பெயரையே மாணவர்கள் ஆங்கில்த்தில் அறிய இடமளிக்கப்படவில்லை. யூரேக்கா, புவியீர்ப்பு மையம், அடர்த்தி, நெம்புகோல், ப்பை, கணிதவியலாளர் போன்ற சொற்களுக்கு ஆங்கிலச் சொற்களைக் கொடுத்தால், மான வர்கள் புதிய சொற்களையறிய உதவியாகவிருந்திருக்கும்.
மேலும், சிவராசா அவர்கள் இக்கட்டுரைக்கான விபரங்களை எந்த நூல்களிலும், சுைநூல்களிலுமிருந்து பெற்றதென்ற குறிப்புக் களைக் கொடுக்கவில்லை. இதனால், இந்த விபரங்கள் எவ்வளவு தூரத்திற்கு நம்பகமானவை என்பதில் ஐயப்பாடுகளை ஒருவருக்கு ஏற்படுத்தமுடியும். 'மறுபுறத்தில், மாணவர்களும், பொதுமக்களும் வெவ்வேறு விடயங்கள் தொடர்பான விபரங்களையும், விளக்கங்களை யும் சரியாகப் பெறுவதற்கு என்னென்ன கைநூல்களையும், நூல் களையும் பெற்றுப் பயன்படுத்த முடியும் என்ற விபரங்களை அறியக் கொடுக்காது, தடுக்கப்பட்டுள்ளது.
SS
dh"Frii "iiliiili"
- H ""
S SS SS S S S S S S
உம ம -

8. என்னைப் பின்பற்றி -
வாருங்கள் கரிபோல்டி
அறிவுக் களஞ்சியம் - 2, பக்கம் - 32
எழுதியவர் பெயர் தரப்படவில்லை
| iii
இக் கட்டுரையானது, இத்தாலியில் அன்று புரட்சியை நடாத்திய கரிபோல்டி பற்றியும், இத்தாலியை ஒன்றாக்கப் போராடிய கரிபோல்டி யினது குணாதிசயங்கள், கொள்கைப் போக்கு என்பவைகளை மாண வர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் விளக்குவதாக அமைகிறது. இன்று இலங்கைத் தமிழ் மக்கள் ஆயுதம் தாங்கியபோராட்டத்தினை நடாத்திவரும் நிலையில், இக் கட்டுரை மாணவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினைக் கரிபோல்டியி னால் இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்துடன் ஒப் பிட்டு, ஆராயப் பெரிதும் உதவும்.
ஆனால், அறிவுக் களஞ்சியத்தின் இச்சிறு கட்டுரையில் தரப் பட்டிருக்கும் விபரங்களும், விளக்கங்களும் பிழையானவையாகளாக
வும்: திரிவுபடுத்தப்பட்டவைகளாகவும், திசைதிருப்பப்பட்ட "எண்ணக் ما قد تسلسل " لا
கருக்களை ஏற்படுத்துபவைகளாகவுமே உள்ளன.
அ) இச்சிறு கட்டுரையின் முதலாவது பந்தியை எடுத்தோமே -யானால், அதில்: - -
"நான் உங்களுக்கு-ஒருபோதும்-விருந்து வைக்கப்போவதாக எண்ணாதீர்கள். பணமோ, பொருளுதவியோ என்னிடமிருந்து உங்
T.
'களுக்குக் கிடைக்காது. பசி, பட்டினி, தாகம், சர்வு இவைதான் நான்
உங்களுக்குக் கொடுக்கப்போகும் பரிசுகள், வானக் கூரையின் கீழ் வறிய தரையின்மீது நீங்கள் படுத்துறங்க வேண்டியிருக்கும். அதிஷ்ட தேவதை ஒருநாள் நம்மீது சீறலாம். ஆயினும், மற்றொரு நாள் நம்மை அண்டியே தீரவேண்டும். நம் தாய்நாட்டின்மீது அன்புடைய வர்கள் என்னைப் பின்பற்றி வரலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், றோமின் ( Rome ) திறந்தவெளிப் பகுதியில் மக்களுக்கு அறைகூவல் விட்டபோது, கரிபோல்டி-கூறியவற்றை ஆங்கில் வர லாற்று நூல்கள் கீழ் வருமாறே தருகின்றன !
" "Fortune which betrays us today will smile on us tomoIrow. I am going out from Rome. Let those who-wish to continue" the war against the stranger come with me. I offer nei
-43

Page 30
ther pay, nor quarters nor provisions; I offer hunger, thirst, forced marches, "battles and death. Let hill who loves his
country in his heart and not with his lips only, follow me,'
அதாவது :
" இன்று எமக்கு இரண்டகம் பண்ணும் அதிஷ்டமானது-நாள்ை எமது பக்கம் திரும்பும். நான் றோமிலிருந்து வெளியே செல்கிறேன். அன்னியனுக்கு எதிரான் போனரத் தொடரவிரும்புகிறவர்கள்-என் னுடன் வாருங்கள். நான் ஊதியமோ, அல்லது வதிவு வசதியோ, உணவுப்பொருட்களோ தரப்போவதில்லை; நான் தரப்போவது பட் டினி, தாகம், பலவந்தமான நடைகள், போர்கள், இறப்பு. உதட்ட ளவில் மாத்திரமில்லாது, மனதாரத் தனது நாட்டினை நேசிப்பவன் என்னைப் பின்தொடரட்டும்" என்பதே.
கரிபோல்டியினது அறைகூவலையும், அறிவுக் களஞ்சியத்தினில் கரிபோல்டி கூறியதெனக் கூறப்பட்டவைகளையும் ஒப்பிட்டுப் பார்க் கும்போது, அறிவுக் களஞ்சியத்தில் கட்டுரையை எழுதியவர் தனது விருப்புக்கேற்றவிதத்தில் சில மினுமினுப்புச் சொற்களைப் பயன்படுத்தி யிருப்பது ஒருபுறமிருக்க, கரிபோல்டியின் அறைகூவலிலிருந்து சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடாது தவிர்த்துவிட்டார் என்பதை யும், சில திரிவுகளையும் செய்துள்ளார் என்பதையும் அவதானிக்க முடியும். அவையாவன : -
I. அன்னியனுக்கு எதிராகப் போரைத் தொடர விரும்புகிறவர்கள்
என்னுடன் வாருங்கள் என்பது:
2. நான் தரப்போவது பட்டினி, தாகம், பலவந்தமான நடைகள் போர்கள், இறப்பு என்பதில் பலவந்தமான நட்ைகள், போர்கள் என்பவைகள் குறிப்பிடப்படாது விடப்பட்டுள்ளன. 1. -
3. உதட்டளவில் மாத்திரமல்லாது, மனதாரத் தனது நாட்டினை நேசிப்பவன் என்னைப் பின்தொடரலாம் என்பதில் உதட்டளவில் மாத்திரமல்லாது என்ற பகுதி கட்டுரை எழுதியவரால் நீக்கப் பட்டுள்ளேது. - - - -
என்னைப் பின்பற்றி வாருங்கள் என்ற தலைப்பில் கட்டுரையை எழுதியவர் ஏன் கரிபோல்டியினது அறைகூவலில் இருந்து இந்த முக்கிய பகுதிகளை நீக்கி எமது மாணவர்களுக்கும், பொதும்க்களுக் கும் அறிவுரைகளைக் கூற முற்பட்டுள்ளார் என்பது உண்மையில் ஆராயப்பட வேண்டியதே. இவற்றை முதலில் இங்கு ஆராய்வோம்.
- 4.4-

முதலாவதை எடுத்துக்கொண்டால், நீக்கப்பட்ட பகுதியானது அன்னியனுக்கு எதிரான போரைத் தொடர விரும்புகிறவர்கள் என்று
-டன்-வாருங்கள் என்ற பகுதியாகும். ன்று இதனைத் தமிழ் TGRT
வருக்கும், பொதுமக்களுக்கும் கூறினால், அவர்கள் முதலில் சிந்திக் கப்போகும் அன்னியர்கள் சிங்களவரே. அதைத் தொடர்ந்து அவர்கள் சிந்திக்கக்கூடியது இந்திய ஆளும் வர்க்கங்களையும், ஏகாதிபத்தியங் களையுமாகவே இருக்கமுடியும். = —
இந்த நிலையில், இந்தக் கட்டுரையை எழுதியவர் சிங்கள, அல் லது வேறு அன்னியருக்கு எதிரான போரை நடாத்துவதை விரும்ப வில்லை என்ற விளக்கமும்; மாணவர்களும், பொதுமக்களும் அது பற்றிச் சிந்திப்பதை விரும்பவில்லை என்ற விளக்கத்தினையுமே ஏற் படுத்துகிறது.
இரண்டாவதை எடுத்தால், இக்கட்டுரையை எழுதியவர் பல வந்தமான நடைகள், போர்கள் என்பவைகளைக் குறிப்பிடாது விட்டுள் ளார். அதாவது : இராணுவ நடவடிக்கைகள் பற்றிக் கரிபோல்டி கூறியவைகளை நீக்கி-ஏனைய விடயங்களையே குறிப்பிடுகிறார். இது அவர், இன்றைய காலகட்டத்தில், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பலவத்தமான-நடைகள், போர்கள்-பற்றிச் சிந்திக் காது திசை மாற்றுவதையே குறிக்கோளாகவுள்ளார் என்பதுபோன்ற விளக்கத்தினையே-கொடுக்கிறது. - -
மூன்றாவதை எடுத்துக்கொண்டால், கரிபோல்டியின் முக்கிய கருத்து கட்டுரை எழுதியவரால் மூடிமறைக்கப்பட்டுவிட்டது. வீரம் நிறைந்தவனும், ஆற்றல் உள்ளவனும், மன உறுதியானவனுமான சிறந்த படைத்தலைவன் கரிபோல்டி உதட்டளவில் மாத்திரம் இல் லாது, மனதாரத் தனது நாட்டினை நேசிப்பவனை, அவன் பட்டினி, தாகம், பலவந்தமான தடைகள், போர்கள், இறப்பு என்பவைகளைச் சந்திக்கத் தயாரானால், அன்னியனை எதிர்த்துப்போராடத் தன்னைப் பின்தொடருமாறு அறைகூவல் விட்டிருந்தான்.
கரிபோல்டிடஉதட்டளவில் மாத்திரம் தமது நாட்டினை நேசிம் பவர்கள் பட்டினி, தாகம், பலவந்தமான நடைகள், போர்கள், இறப்பு என்பவைகளைச் சந்திக்கத் திராணியற்றவர்கள்-எனக் கருதியிருந்தார்.
ஆனால் இக்கட்டுரையை எழுதியவர் இவைகளை மூடிமறைத்து, நம் தாய் நாட்டின்மீது அன்புடையவர்கள் என்னைப் பின்பற்றி வரலாம் என்றே கூறுகிறார். - S S S
- 45

Page 31
இங்கு மூடிமறைப்புக்களும், திசைதிருப்பல்களுமே நடைபெற் றுள்ளன. இக்கட்டுரையை எழுதியவர் ஏன் இப்பட உதட்டளவில் மாத்திரம் இல்லாது என்ற சொற்களைக் குறிப்பிட விரும்பவில்லை
இதுவும் இக்கட்டுரையினை எப்படியான சிந்தனையுடையவர். என்ன குறிக்கோளுடன் எழுதியுள்ளார் என்பதைச் சரியாக ஆராய்ந்தறிய உதவும்.
கரிபோல்டியினது அறைகூவலை அறிவுக் களஞ்சியத்தில் இக்கட்டு
ரையை எழுதியவர் மாத்திரம் திரிவுபடுத்தவில்லை. கிரிபோல்டியின் அறைகூவலைத் திரிவுபடுத்தி, இளைஞர்களைத் திசைதிருப்புவதில்,
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஈடுபட்டவர்கள் தமிழரசுக் கட்சியும், அதன் தலைவர்களுமாகும்.
1973 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதியன்று மல்லாகத் தில் தமிழரசுக் கட்சியின் 12 ஆவது "தேசிய' மாநாட்டின் தலை மைப் பேருரையை நிகழ்த்திய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கூடத் தான் கரிபோல்டி இத்தாலிய இளைஞர்களுக்கு அறைகூவல் விட்ட தைப்போல் தமிழ் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுவதாகக் கூறி யிருந்தார். ஆனால், அவரது அறைகூவலும் கரிபோல்டியினது துறை கூவலுக்கு முரணானதாகவும், திரிவுபடுத்தபட்டதாகவுமே இருந்தது. அப்பாப்பின்ளை அமிர்தலிங்கம் அவர்கள்"
இத்தாவிய நாட்டு இளைஞர்களைக் கரிபால்டி அழைத்ததுபோலவே
உங்களை நாங்கள் அழைக்கின்றோம். உடனடியாக நாங்கள் தரக்
கூடியது பொலீஸாரின் அடி, பட்டாளத்தின் இடி சிறைவாழ்க்கை துன்பம், சில சமயங்களில் வீரமரணமாகவும் இருக்கலாம்.
(இலங்கை தமிழரசுக்கட்சி வெள்ளிவிழா மலர், பக்கம்-118)
ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் முழுநம்பிக்கையைக் கொண் டிருந்த கரிபோல்டி தான் பட்டினி தாகம், பலவந்தமான நடைகள், போர்கள் இறப்பு என்பவைகளையே தரமுடியும் எனக்கூறியிருந் தார். ஆனால், தமிழரசுக் கட்சியும், அதன் தலைவர்களும், தாம் கரிபோல்டிபோல் தமிழ் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுவதாகக் கூறி, நாம் உடனடியாகத் தரக்கூடியது பொலிஸாரின் அடி, பட்டாளத் தின் இடி, சிறைவாழ்க்கை துன்பம், சிலசமயங்களில் வீரமரணம் st୍t#, கூறினர்
இங்கு இரண்டு முக்கிய விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டும். அவையாவன்
-46

1. தமிழரசுக் கட்சியினர் கரிபோல்டியுடன் தம்மை ஒப்பிட்டு
விட்டு, கரிபோல்டியின் அறைகூவலை மூடிமறைத்தமை;
2. கரிபோல்டியினது பெயரைக்கூறிக்கொண்டு, திரிவுபடுத்தப்பட்ட
பிரசாரத்தினைச் செய்தமை. தமிழரசுக் கட்சியினர்கள் 1973 ஆம் ஆண்டில் ஏன் கரிபோல்டி யின் அ  ைற கூவ வில் மூடிமறைப்புக்களைச் செய்யவேண்டியிருந்தது. என்பது உண்மையில் ஆராயப்படவேண்டிய விடயமாகும். கரிபோல்டி யினது அறைகூவலை ஆராய்ந்தால், இரண்டு முக்கிய விடயங்களை நாம் அவதானிக்க முடியும், அவையாவன:
கரிபோல்டி ஆயுதம் தாங்கிய போராட்டத்தில்தான் முழு நம் பிக்கையை வைத்திருந்தார்;
2. உதட்டளவில் மாத்திரம் நாட்டை நேசிப்பவர்கள் பட்டினி, தாகம், பலவந்தமான நடைகள், போர்கள், இறப்பு என்ப வைகளை எதிர்கொள்ளத் திரானியற்றவர்கள் எனக் கரிபோல்டி கருதி, அவர்களைத் தன்னைப் பின்தொடரவேண்டாம் என்று மறைமுகமாகக் கூறியிருந்தார்.
கரிபோல்டியினது கொள்கைகளுக்கு முரணானவர்களே.
1973ஆம் ஆண்டில் மல்லாகத்தில் நடைபெற்ற 12ஆவது தேசிய மாநாட்டில் அ. அமிர்தலிங்கம்: 'தன் கொள்கைக்காக ஒன்றேகால் ஆண்டுகளாக வெலிகடைச் சிறையில் வாடும் தமிழ்க் கவிஞன் காசி ஆனந்தன் பாடியதுபோல் ஆண்டபரம்பரை மீண்டும் ஓர் முறை ஆள நினைப்பதுதான் அந்த வழி எனக்கூறினார்.
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஒர் முறை ஆள நிணைப்பதுதான் அந்த வழி" எனக்கூறியபோதும் தமிழ ரசுக் கட்சியினர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தினை முற்று முழுதாக நிராகரித்தே வந்தனர் 1973 ஆம் ஆண்டின் தலைமைப் பேருரையில்கூட, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆயுதம் தாங்கிய போராட்டத்தினை முற்று முழுதாக, பிரேசில் பேராசிரியர் ஒருவரின் கருத்தைச் சுட்டிக்காட்டி, நிராகரித்த பின்னர்தான் இறுதியில், - தான் கரிபோல்டியைப்போல் தமிழ் இளைஞர்களுக்கு அறை கூவல் விடுவதாகக் கூறினார். (தமிழரசுக் கட்சி வெள்ளிவிழா மலர், பக்கங்கள் 117-118.)
"

Page 32
கரிபோல்டி அன்று இத்தாலிய மக்களுக்குவிட்ட அறைகூவல் என்ன கரிபோல்டிஎப்படியான போராட்டத்தினில் நம்பிக்கை வைத்
திருந்தார், எப்படி வெற்றி கண்டார் எப்படியானவர்கள் உண்மை யான நாட்டுப்பற்றுடையவராக இருக்கமுடியும் என்ற கருத்தினைக்
ST S SYS S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கூறுவதைப் பகிரங்கமாக எதிர்த்து வெற்றிகாண முடியாது என்ற
கரிபோல்டி கொண்டிருந்தார் என்பவைகளை அறிந்தவர்கள், ஆராய்த்
தவர்கள் அன்றைய தமிழ் சமூகத்தினுள்ளே மிகக் குறைவாகவே
இருக்கமுடியும் என்ற கணிப்பீட்டின் அடிப்படையிலும், தாம்
கணிப்பீட்டின் அடிப்படையிலும்தான் அன்று தமிழரசுக் கட்சியி
னர்கள் கரிபோல்டியின் பெயரைச்சொல்லி, அதே கரிபோல்டியின் கருத்துக்களுக்கு முரணானவைகளைத் தமிழ் இளைஞர்கள் முன்வைத்
உதனர். அவர்கள். இதைப்பொறுத்தமிட்டில், சாமர்த்தியமானவர்களே.
ஏனெனில்: அவர்களின் கணிப்பீடு அன்று சரியாகவே இருந்தது
அன்றைய தமிழ் இளைஞர்களுள் பெரும்பான்மையினர்கள். தமிழர சுக்கட்சியின் பேச்சைக்கேட்டு அவர்கள் பின்சென்றனர். மிகச்சிறிய
உபகுதியினரே தமிழரசுக் கட்சியின் கருத்துக்களை அன்று முற்று
முழுதாக நிராகரித்தனர்.
இவர்களுக்கே தமிழரசுக் கட்சியினரின் போலித் தன்மையும், கைக்கூலித்தன்மையும் நன்கு விளங்கியிருந்தது. இவர்களுக்கு மலை யகத்தமிழ் மக்களை இலங்கைப் பிரஜா உரிமை அற்றவர்களாக ஆக் கும் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒரு சில நாட்களின் பின்னர், யாழ் முற்றவெளியில் நடைபெற்ற இலங்
கைத் தமிழ்டகாங்கிரஸ் கட்சிக் கட்டத்தில், காங்கிரஸ் கட்சி
யூ.என். பி. அரசுடன் இணையவேண்டும் என்று S.J. W. செவ்வநாயகம் கூறியிருந்தார் என்பதும் ட(Times of Ceylon, 1948-August,-23): பின்னர் ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் காக்க, அதே 8, J. W.செல்வ நாயகம்-1949-டிசெம்பர் 18 ஆம் திகதியன்து சமஷ்டி-கோரிக் கையைக் கொள்கையாக முன்வைத்து "இலங்கைத் தமிழரசுக் கட்சி" என்றொரு கட்சி ஆரம்பிக்கப்பட்டதென்பதும் நன்கு தெரிந்திருந் தது, விளங்கியிருந்தது:
இவர்களுக்கே பேராசிரியர் .ே சுந்தரலிங்கம் 1958 ஆம் ஆண்
-டில் தமிழர்களுக்குத் தனிநாடு அமைப்பதுதான் ஒரேயொரு தீர்க்கமான வழியெனக்கூறி, தமிழரசுக் கட்சியினரை ஆயுதம் தாங்கிய போராட் -டத்தின் மூலம் தமிழருக்குத் தனிநாடு அமைக்கச் செயற்பட அறை சுவல் விட்டபோது, தமிழரசுக் கட்சியினர்கள் அதை முற்றுமுழுதாக நிராகரித்து, தாம் சிங்களப் பெருமக்களின் கண்ணியத்திலும், பெருந் தன்மையிலும் முற்றாக நம்பிக்கை இழந்துவிடவில்லை எனக்கூறித் தனி நாடு அமைப்பதற்கு எதிராகச் செயற்பட்டமையும் நன்கு தெரிந்
-48

திருந்தது (இலங்கைத் தமிழரசுக் கட்சி வெள்ளிவிழா மலர், 18 18 1974 பக்கங்கள் 47, 48)
1960 ஆம் ஆண்டுகளின் முற்பகுதிகளில் அமெரிக்க ஏகாதிபத்தி பம் இந்து சமுத்திரத்தினில் அதன்து ஆதிக்கத்தினை நிலைநாட்ட முற்பட்டவேளையில், இதே தமிழரசுக் கட்சியே 1961 ஆம் ஆண் டில் போலிச் சத்தியாக்கிரகத்தை நடாத்தி, சிங்கள், தமிழ் கிறீஸ் தவர்களும், பறங்கிகளும், 1968 ஜனவரியில், அமெரிக்க சார்பான நிரந்தர ஆட்சியை அமைக்க, இராணுவ - பொலீஸ் படையினர் ஆட் சிக்கவிழ்ப்பில் ஈடுபட முன்னேற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டது என் பதும் இந்த இளைஞர்களுக்கு நன்கு விளங்கியிருந்தது.
1965 ஆம் ஆண்டில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்துசமுத்தி ரத்திலுள்ள டியாகோ கார்ஷிபா (Diego Garcia) தீவில் தளங்களை அமைத்து, இந்துசமுத்திரத்தினை மேலாதிக்கம்செய்யும் திட்டங் களை நிறைவேற்ற முற்பட்டபோது இலங்கையில் அமெரிக்கா சார் பான அரசை நிறுவுவதற்காகத் தமிழரசுக்கட்சித் தலைவர் யூ என். பி. கட்சியுடன் இணைந்து ஒரு தேசிய அரசை நிறுவினர் என்பதையும் இவர்கள் நன்கு விளங்கியிருந்தனர்.
"தமிழ்த் தேசியவாதம்' என்று கூறிக்கொண்டு தமிழரசுக்கட்சித் தலைவர்கள் தமிழ் தேசியவாதத்தினை முழுமையாக மழுங்கடித்தே வந்தனர் என்பதையும் இந்த இளைஞர்கள் நன்கு விளங்கியிருந்த னர். ஆனால், இன்று அரசியல் விளக்கங்கள் கொடுப்பவர்களில் எத் தனைபேருக்குத் தமிழரசுக் கட்சியினர்கள் யூ என். பீ. கட்சியுடன் 1985 இல் இணைந்து கூட்டரசை நிறுவியபின்னர் தமது 10 ஆவது தேசிய மாநாட்டில் UNP கட்சியுடன் இணைந்து நாம் ஒரு தேசிய அரசாங்கத்தை நிறுவப்-பங்குகொண்டு பெருமளவில் தேசிய ஒற்று ஐமயை ஏற்படுத்தியுள்ளோம் எனக்கூறி, தமிழ்தேசியவாதத்த்தினை நிராகரித்து சிங்கள் தேசியவாதத்தை வளர்ப்பதையே உண்மையில் கொள்கையாகக் கொண்டிருந்தனர் என்பது நெரியும் என்பது தெரிய வில்லை (இலங்கை தமிழரசுக்கட்சி வெள்ளிவிழா மலர் பக்கம் -78)
1958ஆம் ஆண்டில் பண்டா-செல்வா ஒப்பந்தத்தினை எதிர்த்து, கொழும்பிவிருந்து சுண்டி வரை பாதயாத்திரை ஆரம்பித்து தமிழர்கள் மீது தெற்கில் தாக்குதல்கள் நடைபெறுவதற்குக் காரணமாகவிருந்த அதே J. R. ஜயவர்த்தனவுக்குத் தான், 1966 இல் செல்வதாயமும், தமிழரசுக் கட்சியும் யாழ்குடாவில் தேர் கட்டியிழுத்துப் பெரும் புகழ் மாலைகள் சூட்டினர் என்பது இந்த இளைஞர்களுக்கு நன்றாக விளங்கி யிருந்தது. S S S S S S
- 49

Page 33
இவை மாத்திரமல்ல. எந்தவொரு அரசாங்க ஊழியனும் சிங்களம் படித்து இனத்தை விற்கக்கட்டாது என்று, தன் கையெழுத்திட்டு ஒவ் வொரு தமிழ் அரசாங்க ஊழியனுக்கும் ஈழத்துக் காந்தி செல்வ நாயகம் கடிதம் எழுதியிருந்தபோதிலும், 1988 அக்டோபரில் யூ.என்.பி, அரசின் அமைச்சரவையின் முடிவிற்கேற்ப, சிங்களத்தில் சித்தியடை பாததமிழ் அரசாங்க அலுவலர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட தைத் தொடர்ந்து 1969 மார்ச் மாதத்தில், W நவரத்தினத்தால் -முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணை விவாதத்திற்கு எடுக் கப்பட்ட போது அதே செல்வநாயகமும், தமிழரசுக் கட்சியினரும் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வழிமொழியவும் மறுத்துப் பிரேரணை விவாதத்திற்கு வராமற் செய்து அமெரிக்க சார்பான யூ.என். பீ. அரசின் ஆட்சியைத் தொடரவைப்பதில் சுண்ணும் கருத்துமாக இருந் தனர் என்பதும் இந்த இளைஞர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
இதில் முக்கியமானதென்னவென்றால், 1965 இல் யூ என். பி. புடன் "தேசிய அரசை நிறுவி பெருமளவில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்திவந்த செல்வநாயகமும், தமிழரசுக் கட்சியும், மந்திரிப் பதவி பையும் வகித்து வந்த பின்னர், 1968 செப்டம்பரில் போலிக் காரணங் களைக் காட்டி அரசைவிட்டு நீங்கிய பின்னர்கூட செல்வநாயகமும், தமிழரசுக் கட்சியும் அமெரிக்க நலன்களை காப்பதில் தீவிரமாகவிருத் $୍T.
1987 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பேரதேனிய வளாகத்தில் (Peaderiya Campus) தமிழ் மாணவர்களால் உருவாக் கப்பட்ட தமிழ் இளைஞர் ஒன்றியம் என்ற அமைப்பு 1968 தைப் பொங்கல் முதல் தமிழ் இளைஞன் என்ற சஞ்சிகையையும் வெளியிட்டு, தமிழர்களுக்குத் தனிநாடு அமைக்கும் கொள்கையின் அடிப்படை பிலும், அரசியல், பொருளாதார, சமூக விஞ்ஞான தொழில்நுட்ப, அறிவியல் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் செயற்பட்டு, பல்கலைக் கழகப் புகுமுகத் தமிழ் மாணவர்களை முதலில் அணிதிரட்டி, 1970 இல் அரசு தரப்படுத்தல் (Standardisation ) என்ற முறையின்கீழ் பல்கலைக் கழக அனுமதித் தெரிவை இனரீதியாக-ஆக்கி, தமிழ் மாணவர்களை பல்கலைக் கழகத்தில் அனுமதி பெறுவதற்குத் தடைகள் புகுத்தப்பட்ட போது தமிழ் மாணவர்களையும், இளைஞர்களையும் அணிதிரட்டி, தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி, மானவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அரசை எதிர்க்கத் தொடங்கிய போது, தமிழர்கள் தனி நாடு அமைப்பதைத் தடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், தமதும் நலன்களைக் காக்க, செல்வநாயகமும், தமிழரசுக் கட்சியின் ரும் ஊடுருவல்களைச் செய்தும், தமது கைப்பொம்மைகளைக்
-50.

காண்டும் தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பிளையும் உரு ாக்கி, மாணவ-இளைஞர் அமைப்பைச் சீரழித்தனர் என்பதும் இந்த ட் ளைஞர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது."
அன்று தரப்படுத்தல் என்பதற்கு எதிராக தமிழ் இளைஞர் ன்றியம் அமைப்பைச் சேர்ந்த நா. அரியரத்தினம் (அ பரியம் ), த்தியசீலன் (சிவன்), ஏனையோர்கள் தமிழ் மாணவர்களுக்குப் பாட் ான் வகள் தோறும் கூட்டங்கள் வைத்துப் பிரசாரங்கள் செய்த பாது, அன்று செல்வநாயகத்தினதும், தமிழரசுக்கட்சியினதும் ஆதர ாளர்களாகவிருந்த பாடசாலை ஆசிரியர்களும், தலைமை உபாத்தி ாயர்களும், உப - அதிபர்களும் அதிபர்களும் கூட்டங்கள் conqu## னுமதி வழங்க மறுத்தும், எதிர்த்தும் வந்த நிலையில் கூட்டங்கள் வத்தவர்கள் பாடசாலை மதில் மீதும், சுேற்மீதும் ஏறி ன்ேறும் எங்குற்றிகள், சுமைதாங்கிகள், சயிக்கிள்கள் என்பவைகள் மீதும் ன்றே கூட்டங்கள் நடாத்தப்பட்டு, மாணவர்கள் அணித் திரட்டப் ட்டனர்"
இன்று 35 வயது எல்லையை அடைபவர்களுக்கும், அ ை-ந்தவர் க்கும் அன்று இவை நடைபெற்றமை நன்கு தெரிந்தேயிருக்கும். ன்று செல்வநாயகத்தினையும், தமிழரசுக் கட்சியினையும் ஆதரித்து, னவர்களுக்கு கூட்டங்கள் வைக்க அனுமதியை மறுத்தும் எதிர்த் ம், அமெரிக்க நலன்களைப் பேணிப் பாதுகாக்கவும் தமிழர் தனி டு அமைப்பதை எதிர்த்தும் வந்த பல ஆசிரியர்களும் சிலைமை பாத்தியாயர்களும், உப - அதிபர்களும், அதிபர்களும் இன்று நீ நம்மைத் மிழரின் முன்னேற்றத்துடனும், தமிழுடனும் இறுக பிரிக்க முடியா
போல் காட்டிக்கொள்வதையும் அவதானிக்கவேண்டும்.
மேலும், 1960 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழக தமிழ் மாணவர் து தமிழ் இளைஞர் ஒன்றியம் அமைப்புடன் அன்று தொடர்புகள் வத்திருந்த தமிழ் அரசியல்வாதி"யின், அவர் பினர்காவி துறை ன் அன்றைய எம். பி. ஆன W. நவ த்தினமாகும். இவர் த விழரசுக்
சியினரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமையும் அவதானிக் கப்பட
1970 ஆம் ஆண்டில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிர் வினை ந்த உருவத்திலும் இந்த-நாட்டிற்கோ-தமிழ்பேசும் மக்களூ ருக்கோ எமையாகமாட்டாது என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும். னவே,பிரிவினையை முன்வைத்த அரசியல்-இயக்கங்களுக்கு ஆதரவளிக்க பண்டாமென்று தமிழ்பேசும் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் T றைகூவல் விடுத்த தமிழரசுக்கட்சித் தலைவர்கள் 1978 ஆம் ஆண்
-51

Page 34
tல்: ஆண்ட பரம்பரை மீண்டும் ஒர்முறை ஆளநினைப்பது தான் அந்த வழி எனக் கூறுவது, வெறும் போவியான, ஏமாற்றுக்கொள்கை என் பதை தமிழ் இளைஞர்களுள் மிகச்சிறிய ஒரு பகுதியினரே நன்கு விளங்கி, போலிகளை எதிர்த்தனர். சிறுபான்மையான இளைஞர்களே தமிழரசுக்கட்சித் தலைவர்கள் அமெரிக்க, மற்றும் ஏகாதிபத்தியங் களின் நலன்களையும்,-தமது-நலன்களையும் மாத்திரம் டகருத்தில் கொண்டவர்கள் என்ற உண்மையை விளக்கியிருந்தனர்.
அன்று ஏகாதிபத்தியத்தின் கைக்கூளிகளாகச் செயற்பட்ட தமி ழரசுக்கட்சித் தலைவர்கள், போலியான முறையில் ஆண்ட பரம்பரை மீண்டும் ஒர்முறை ஆள நினைப்பதுதான் அந்த வழி" எனக் கூறிய - நிலையில், கரிபோல்டியினது அறைகூவலை மூடிமறைத்துத் திரிவு
படுத்திப் பிரசாரங்களைச் செய்யவேண்டியிருந்தது. -
ஆனால், இன்று ஆயுதம் தாங்கிய போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அறிவுக் காஞ்சியத்தில் இக்கட்டுரையை எழுதியவர் கரி போல்டியின் அறைகூவலிலிருந்து முக்கிய பகுதிகளை நீக்கி மாணவர்
களுக்கும், பொதுமக்களுக்கும் கொடுப்பது அவர்களைத் தமிழரசுக்
கட்சியினர்போல் திசைதிருப்பும் ஒரு முயற்சியாகவே இருக்கமுடியும்.
- - - - .ܝܒ-- ܚܨܝܡܝ அப்படியாயின், இக்கட்டுரையை எழுதியவர் யார்? அன்று தமிழ்
ரசுக் கட்சித் தலைவர்கள் சாமர்த்தியமாகத் தமிழ் மக்களை ஏமாற்
றியதுபோல், இன்று "அறிவுக் களஞ்சியம்" சஞ்சிகையும் சாமர்த்தி யமாக-ஏமாற்ற-முற்பட்டுள்ளது. இக்கட்டுரையை எழுதியவரின்
பெயர் குறிப்பிடப்படவில்லை! பொதுவாகப் பெயர்கள் கொடுக்கப் படாவிடின் சஞ்சிகையின் ஆசிரியர்கள்தான் கட்டுரைகளுக்கு பொறுப்பு. ஆனால், ஆசிரியர்கூட, அறிவுக் களஞ்சியம் - 3 இல் "தங்கந்தாத்தா' நவாலியூர் சோமசுந்தரப்-புலவர்-என்ற-தலைப்பில்டகட்டுரையைத் தனது பெயரில் எழுதியுள்ளார்.
அப்படியாயின் இக்கட்டுரையில் மாத்திரம் பெயர் கொடுக்காதது ஏன்? எதுவிதத்திலும், இங்கு 'காப்பாளர்கள்" என்போரின் நிலை என்ன?
இவை மாத்திரமல்ல: இக்கட்டுரையில் பல பிழையான விபரங் களும், விளக்கங்களும், திசைதிருப்பல்களும் உள்ளன, அவையாவன:
1. இரண்டாவது பந்தியில் கரிபோல்டியின் குடும்ப நிலைபற்றிக் குறிப்பிடுகையில் ஒர் ஏழை மீனவருடைய மகன் இளவயதில் கடற்படையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறிக் கப்பல் தலை வனானார் என்று கூறப்பட்டுள்ளது.
-52

- இதில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் பிழையானவைகள்:
தரிபோல்டியின் தகப்பன் ஒரு கப்ட்லோட்டி (Seaman) ஆகும்: கரிபோல்டி தகர்பனுடன் கப்பலில் வேலை பழகியே கப்பல் தலை வனானான் கப்பவில் டித்தித் தரைக்கடல் பகுதியின் துறைகளுக்குச் செல்லும்போது, அங்கு அரசியல் காரணங்களுக்காக இத்தாலியை விட்டு வெளியேறி ஷாழ்ந்து அந்தவர்கள்ளச் சந்திக்கும் சந்தர்ப்பமும் அவர்களுடன் பேசவும். ஒநேகமாகவும் கரிபோல்டிக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவ்ே க்ரிாேல்டி இத்தாலிய அரசியலில் தீவிரமாக ஈடுபடவும், 1831 இல் கிளர்ச்சியில் பங்குபற்றவும் முக்கியகாரணமாக விருந்தது. KSKSuKS AA SiSi iiiii SSSK SSSSuuuuu S SS
இக் கட்டுரையை ஏழுதியவர் கரிபோல்டியினை வறிய மீன்பிடி பாளர்போன்ற ஒருவித விளக்கத்தினையும், கரிபோல்டி கடற்படை யில் (Naval Force) சேர்ந்துதான் கப்பலோட்டக்கற்று, கப்பற் தலைவன் ஆனான் என்ற விளக்கத்தினையும் ஏன் கொடுக்கி முற் பட்டார் என்பது புதிராகவே உள்ளது. - SS
2. அதே பந்தியில் " இத்தாலிபின் வடபகுதியை ஆஸ்திரியா கைப்பற்றியபோது, 1834 இல் ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு புரட்சியை நடாத்தினார்" என்றும் "பல தடவைகள் தோல்வியடைந்தாலும் மனந்தளராது ஆஸ்திரியாவை எதிர்த் துப் போராடி இறுதியில் வெற்றி கண்டார்" என்றும் கூறப்
பட்டுள்ளது.
இவை பிழையான விபரங்களையும், விளக்கங்களையுமே மாண வர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் கொடுக்கின்றன.
உ
முதலாவதாக : "இத்தாலியின் வடபகுதியை ஆஸ்திரியா கைப் பற்றியபோது 1834 இல் ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக." எனக் கூறப்படுகிறது.
இதன்படி, 1834 ஆம் ஆண்டுப் பகுதியில்தான் இத்தாலியின் வடபகுதியை ஒஸ்திரியா கைப்பற்றியது போன்ற விளக்கம் ஏற்படுத் தப்படுகிறது. இது பிழையானது. இதை எழுதியவர் வரலாற்றி னையே LDT ற்றிவிட்டார்.
- - -ா டி வா
1718 ஆம் ஆண்டுப் பகுதியிலேயே இத்தாலியின் மிலான் (Milan), Mantua, Tuscany, Modena staira lug, Sait spiegnut (Austria வினது ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டன. இத்தாலியின் வேறு பகுதிக ரூம் ஸ்பானிய ஆதிக்கத்தின் கீழும், பாப்பாண்டவரின் ஆட்சியின்
-53

Page 35
இமும், வேறு அரசுகளின் கீழும் இருந்தன. இந்த நிலையில் 1884 ஆம் ஆண்டுப் பகுதியில்தான் இத்தாலியின் வடபகுதி ஒஸ்திரியாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததுபோன்ற விளக்கத்தினை ஏற்படுத்துவது பிழையானது
2. அதே வசனமானது". 1834ல் ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்
ஒற்கு எதிரான ஒரு புரட்சியை நடாத்தினார்" எனக் கூறுகி"
如卤·
இதுவும், உண்மையில் பிழையான விளக்கத்தினையே கொடுக் கிறது.
1834 இல் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள்ே ஒஸ்திரிய மேஸ்ாதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி (Rebellion) செய்தனர். மிக வும் வீரமான இவர்கள் மக்களுடன் இணைந்து புரட்சியைச் செய்ய வில்லை. இதனால் இவ்ர்கள் தோற்கடிக்கப்பட்டு நாட்டை விட்டும் ஓடவேண்டியிருந்தது, சில தலைவர்கள் கொல்லவும் பட்டனர்.
கரிபோல்டி தென் - அமெரிக்காவிற்குத் தப்பி ஓடினான். முதலில் அவன் அங்கு தனக்குப் பழக்கப்பட்ட கடற்கரை வியாபாரத்தினைச் செய்து வந்தான். அக்காலப் பகுதியில், தென் - அமெரிக்காவின் பிறேசில், ஆர்ஜன்டினா, உருகுர (UTபguay) போன்ற நாடுகளி டையே போர்களும், உட்போர்களும் நடைபெற்று வந்தன. பிறேசிலில் (Brazil) இருந்து தன்னை விடுவிக்க உருகுலு 1880 முதல் 1825 வரை போரிட்டு, ஈற்றில், அங்கு வெவ்வேறு குழுக்களிடையே உட் போர்களும் நடைபெற்று வந்தன. இந்த நாடுகளின் இப்படியான சிவில் புத்தங்களில் கரிபோல்டியும் பின்னர் பங்குபற்றினான்.
கரிபோல்டி, ஏறக்குறைய 14 வருடங்களின் பின்னர் 1848 ஜூன் 24 ஆம் திகதியன்று, இன்று பிரான்சின் ஒரு பகுதியாகவிருக்கும் தனது பிறப்பிடமான நீஸ் (Nice) இல் வந்திறங்கினான். இதன் பின்னரே கரிபோல்டி ஒஸ்திரியாவின் ஆதிக்கத்திற்கெதிராகவும், இத் தாலியை இணைக்கவும் போர்களைத் தானே தலைமை தாங்கி படை களை வழிநடாத்தி, முன்நின்று நடாத்தினான்.
ஆனால் அறிவுக் களஞ்சியத்தில் கட்டுரையை எழுதியவர்: ". 183 ஆம் ஆண்டில் ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு புரட்சிய்ை-நடாத்தினார் பல தடவைகள் தோல்வியடைந்தாலும் மனம் தளராது, ஆஸ்திரியாவை எதிர்த்துப் போராடி இறுதிவெற்றி கண்டார்" எனக் கூறியுள்ளார்.
-54

கரிபோல்டியின் வரலாற்றில் மிகமுக்கிய பகுதியான 14 வருடத் தென்-அமெரிக்க வாழ்க்கைபற்றி இக்கட்டுரையை எழுதியவர் மான வர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் அறியக்கொடுக்க விரும்பாத்து ஏன் என்பது தெரியவில்லை.
கரிபோல்டி 848 இல் சார்டினியா (Sardinia ) படைகளுடன்" ஒஸ்திரியாவிற்கு எதிராகப் போராடினான். 1849 இல் பிரெஞ்சுத்
தலையீட்டாகுக்கு எதிராகப் போராடினான். இதன்பின்னர் அமெரிக்கா சென்று திரும்பிய கரிபோல்டி, கப்பிறேறா (Caprera) என்ற தீவினை விலைக்கு வாங்கி, அதில் தனக்கொரு மனையையும் அமைத்துக்
கொண்டான்,
1859 இல் ஒஸ்திரியாவிற்கு எதிராக ப் போர் மூண்டபோது, 总亡厅芷 பங்குபற்றி வெற்றிக ண்டான். 1860 இல் சிகப்புச்சேட்டு களுடன், கரிபோல்டியின் தலைமையில், இரு பிரித்தானிய போர்க் கப்பல்களில் சென்று சிசிலித் தீவில் இறங்கிய 1000 பேர் வரையா னோர், சிசிலித் தீவின் ஆட்சியைக் கைப்பற்றினர். இதன்பின்னர் Naples உம் இவர்களால் கைப்பற்றப்பட்டது. தொடக்க காலத்தில் குடியரசை நிறுவும் கொள்கையைக்கொண்டிருந்து பின்னர் அதனைக் கைவிட்டிருந்த கரிபோல்டி, தான் கைப்பற்றிய அரசுகளை விக்ரர்
அவன் தனது கப்பிறேறா (Caprera) தீவிற்குச் சென்று வாழ்ந்தான்.
இதனாலேயே மூன்றாம் உலக நாடுகளின் அரசியல்வாதிகள், குறிப் பாக! அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிவரும் மக்களின்ட அரசியல்வாதிகள், கரிபோல்டிபற்றிச் சற்று அதிகம் பேசுவதுண்டு. ஏனெனில்: ஆயுதம் ஏந்திப் போராடி, ஆட்சிகளைக் கைப்பற்றிய கரிபோல்டி, அவற்றை ஆளும் வர்க்கங்களிடம், அதாவது அரசனொருவ எனிடம்தான்கையளித்திருந்தான். மூன்றாம் உலக நாடுகளில், தமிட முரசுக் கட்சியின் தலைவர்கள் போன்றோரும் இளைஞர்கள் போராடி, ஆட்சியும்-அதிகாரமும்-ஈற்றில்-கரிபோல்டியைப்-போல்-தடிக்கு கையளிக்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள் போலும்,
இந்த அடிப்படையில்தான், 1970 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமி -ழர்கள்-தனிநாடு அமைப்பதைத்-தீவிரமாக எதிர்த்திருந்த தமிழரசுக்கட்சியும், செல்வநாயகமும், 1973 ஆம் ஆண்டில் ஆண்ட பரம்பரை மீண்டும் ஓர் முறை ஆள-நினைப்பது தான் தமிழர்களுக்கு வழியெனக் கூறி, மல்லாகத்தில் நடைபெற்ற தமது "தேசிய மாநாட்டில் செல்வ நாயன்மும் தமிழரசுக்-கட்சியினரும் இத்தாலிய இளைஞரைக் கரிபோல்டி அழைத்ததுபோல், இங்குள்ள இளைஞர்களைக் கரம்கூப்பி
-55

Page 36
அழிக்கிறோம் என க் கூறினார்கன் போலும். செல்வநாயகமும், தமிழரசுக் கட்சியினரும் அன்று எதிர்பார்த்தது: "விடுதலை"யை வென் றெடுத்து, தமிழ் இளைஞர்கள் அதிகாரத்தையும், ஆட்சியையும் அறி வாளிகள், ஆளத் தெரிந்தவர்களாகிய தம்மிடம் கையளிக்க வேண்டும் என்பதே. அது அன்று.
அதை இன்று " அறிவுக் களஞ்சியம் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் மீண்டும் வலியுறுத்துகிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
* கடைசிப் பந்தியில் நாடு சுதந்திரமடைந்த போது பதவிகளை யும், பட்டங்களையும் அவர் ஏற்கமறுத்து எளிய வாழ்க்கையை நடாத்திவந்தார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கம் பிழையானதே.
கரிபோல்டி சிறந்த வீரன், படைத் தலைவன், மனவுறுதி மிக்கவன் என்பதைப் போர்களும், அவனது செயற்பாடுகளும் இத்தாலிய மக்க இருக்கும் உலகிற்கும் நிரூபித்திருந்த நிலையில், அவனுக்குப் பட்டங்கள் எவரும் வழங்கவேண்டியதில்லை.
மறுபுறத்தில், கரிபோல்டியின் நோக்கங்கள் பற்றி இத்தாலியின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டுவந்த போப்பாண்டவரும், வேறு மன் னர்களும், ஒஸ்திரியா, பிரான்சு, பிரித்தானியா போன்ற நாடுகளும் சற்று அவதானமாகவே இருந்தன. 1862 இலும், 1867 இலும் கரிபோல்டி போப்பாண்டவரின் ஆட்சியின்கீழிருந்த பிரதேசங்களைக் கைப்பற்ற முற்பட்டபோது, அரச படைகளும், பிரெஞ்சுப் படைகளும் தடுத்தமை அவதானிக்கப்பட வேண்டும்.
1870 இல் கரிபோல்டி-பிரான்சிற்கு ஆதரவாக ஜேர்மனியருக்கு எதிராக ஒரு படையுடன் சென்று போரிட்டான். இதனால் பிரான் சின்-Chation, Autun, Dion போன்ற இடங்களில் ஜேர்மனியர்கள் தோற்கடிக்கப்பட உதவியாகவிருந்தது. இதனால், கரிபோல் டி வேர்சை (ய்) அஸ்ஸம்பிளி (Wersaille Assembly)இல் அங்கத்தவராகத் தெரியப்பட்டார். ஆனால், பின்னர் அவர், அங்கு அவமதிக்கப்பட்ட போது, அங்கத்துவத்திலிருந்து நீங்கிக்கொண்டார்.-க சிபோல் டி ரோமாபுரியினது பிரதிநிதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அவருக்குக்கொடுக்கப்பட்ட ஓய்வூதியம், சன்மானங்களை அவர் முத
வில் நிராகரித்தபோதும், பின்னர் அவற்றை அவர் ஏற்றுக்கொண்டார் நீஸ் (Nice) பகுதியானது பிரான்சிற்குக் கொடுக்கப்பட்டதைக் கரி
-56

போல்டி தீவிரமாக எதிர்த்திருந்தார். ஈற்றில், நீசினில் (Nice) 1807 ஜூலை 4 ஆம் திகதியன்று பிறந்த கரிபோல்டி, நீஸ்-இத்தாலி பிளிருந்து பிரிக்கப்பட்டுப் பிரான்சுடன் இணைக்கப்பட்ட பின்னர், 1883 ஜூன் 2 ஆம் திகதியன்று தனது Capera தீவினில் இறந் தாா.
இவைகள் கரிபோல்டியின் வாழ்க்கையை ஒரளவிற்கு அறிந்து கொள்ளப் போதுமானவை. அதே நேரத்தில், அறிவுக் களஞ்சியம் சஞ்சிகை கரிபோல்டி பற்றியும், அவரின் கொள்கைப்போக்குகள் பற்றியும் எவ்வளவு தூரத்திற்குப் பிழையான விபரங்களையும், விளக் கங்களையும் திரிவு வாதங்களையும் கொடுத்துள்ளது என்பதை விளங் கிக்கொள்ள இவை போதுமானவை. ம
அறிவுக்களஞ்சியத்தில் எட்டு விடயங்களில் மாத்திரம் காணப்பட்ட பிழையான விபரங்களையும், விளக்கங்களையும், திரிவுகளையும் பார்த்த நாம் அறிவுக்களஞ்சியம் - 2 இல் வெளியான ஏனைய விடயங்க ளைப் பற்றியும் தொடர்ந்து-பார்ப்போம்.
பெற்றோலிய அரசியல் அறிவுக் களஞ்சியம் - 2, பக்கம் - 24
க கு வினால் எழுதப்பட்டது
க. கு. அவர்களது இச்சிறு கட்டுரையில் விபர. சொற்பிழைகளும் இருப்பதுடன், மூக்கிய விபரங்கள் கொடுக்கப்படாதும் உள்ளன. இக் கட்டுரையின் முதல் வசனத்தில்: -
அ) உலகில் முதன்முதலாக 1859 ஆம் ஆண்டு பென்சில்வேனியா வில்பிற்றஸ்பில்ஸ் (Titustills ) என்றவிடத்தில் பெற்றோலியம் கண்ட றியப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. H
இதில் பலவிதமான பிழைகள் உள்ளன. - ". . 1. பென்சில்வேனியாவில் பிற்றஸ்பில்ஸ் என உச்சரிப்பது பிழையா
னது. இதை ந்னரற்ரஸ்பில்ஸ் என்றே உச்சரிக்கவேண்டும்."
2. பென்சில்வேனியாவில் றிற்றஸ்பில்ஸ் எனக் க. கு. அவர்கள் குறிப்பிட்டிருப்பது பிழையானது. அது Tiusvile ஆகும். அதா வது: ற்றைற்ரஸ்வில் ஆகும். |-
-57

Page 37
உலகில் முதன்முதலாகப் பெற்றோலியம் 1859 இல் தான் கண்ட வியப்பட்டது என்பதும் பிழையானது, அது முதலில் அமெரிக்கா வில்தான் கண்டறியப்பட்டது என்பதும் பிழையானது.
பெற்றோவியத்தினை ( Petroleum ) உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்துவந்த வெவ்வேறு சமூகத்தினர் பல்லாயிரம்-வருடங்களுக்கு முன்னனே கண்டறிந்து, வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே-மெசொப்பொத் தேமியா (Mesopotamia ), ஊர் Ur), கிஷ் ( Kish) நகர மக்கள் வெட்டப்பட்ட-சுற்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கட்டுவதற்கு பெற்றோவியத்திலிருக்கும் அஸ்பல்ற் (Asphalt ) இனைச் சாத்தாகப் பயன்படுத்தியுள்ளனர். வரலாற்றில் பிரசித்திபெற்ற Tower of Babe) இணைக் கட்டியவர்கள் அதில் செங்கட்டிகளைக் கட்ட sime என் பதைப் பயன்படுத்தியுள்ளதாக வரலாறு கூறுகிறது. இதில் Sime என்பது அஸ்பஸ்ற் இனைக் குறிக்கிறது.
பபிலோனினதும், Nineveh இனதும் வனைஞர்கள் (Artisins) தோணிகள், சவப்பெட்டிகள், குளியல் அறைகள், மலசல கூடங்கள். வடி - வாய்க்கால்கள், கட்டடங்களின் நிலமட்டப்பகுதிகள், களஞ்சிய அறைகள் என்பவைகளில் நீர் புகாதவாறு செய்வதற்கு அஸ்பல்ற் இனைப் பயன் படுத்தியுள்ளனர். கி , மு. 2000 ஆண்டுகள் வரையில் இங்கு இன்றைய ஒரு ட்டன் நிறைக்குச் சமனான அஸ்பல்ற் இன் றைய 30 அமெரிக்க டொலர்வரை சமனான விலையில் விற்கப்பட்
பதென வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
இவைகளைவிட, இற்றைக்கு 4,500 ஆண்டுகள் வரையில் சிந்து வெளியின் மொஹெஞ்ஜதாரோ. ஹரப்பாடநகரங்களில்-வாழ்ந்த மக்கள் பெற்றோவியத்திலிருக்கும் அஸ்பல்ற் இனைப் பயன்படுத்தி புள்ளனர். மொஹெஞ்ஜதாரோவில் டகட்டப்பட்ட-பாரிய-குளியல் தொட்டியில் நீர் வெளியே போகாதவாறு தடுக்க ஒரு அங்குலம் வரை போன தடிப்பில் அஸ்பல்ற் பூசப்பட்டுள்ளது. இதைவிட டிவிடுகளின் குளியல் அறைகள், ம்ல-சல கூடங்கள், வடிநீர்வாய்க்கால்கள் போன்றவற்றிலும் அஸ்பல்ற் பூசப்பட்டுள்ளது.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் அரேபியர்கள் பெற்றோலி பத்தினைப் பட்டுச்சீலைகள் சலவைசெய்யவும், மருந்தாகவும், வேறு பல தேவைகளுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.
58

கிறிஸ்துவுக்கு 600 ஆண்டுக்களுக்கு முன்னர் இன்று ஈரான் என் றழைக்கப்படும் பாரசீகத்தில் வாழ்த்த மக்கள், தாம் புனிதத் தன்மை கொடுத்த அக்னி (Agni)யினைத் தொடர்ந்து எரிய விவப்பதற்குப் பெற்றோலியத்தினையே பயன்படுத்தினர் எனக்கரு தீப்படுகிறது.
கிரேக்க அரிஸ்டோட்டில் (Aristole) காலத்தில், அதாவது கி.மு 0ே0 ஆம் ஆண்டுகளில், அல்ஜீரிய மக்கள் பெற்றோவியத்தினைப் பயன்படுத்தினர் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
இற்றைக்குத் 900 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க கண்டத்தின் கலிபோனியப் பகுதிச் செவ்விந்தியர்களும்; பெரு (Peru) வில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி. பி. 1500 ஆண்டுகள் வரையிலும் பெற்றோவியத் தினைச் சீமெந்து போலவும், மருந்தாகவும், தோணிகளில் நீர் புகாது தடுக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.
இவை மாத்திரமல்ல. ஜப்பானில் Echig0 மாகாணத்தில் Kuzறது என்ற பெயருடைய ஒரு இடமுண்டு. இப்பெயரானது Kusai Midzu என்ற பெயர் மருவி வந்த பெயராகும், Kusai Mizu என்றால், மனக் கும் நீர் என்பதே கருத்து. அதாவது ஆங்கிலத்தில் Stinking Water என அழைத்தனர். Kuzodzu என்ற இடத்தில் பெற்றோலியம் மாத் திரம் நிலத்திலிருந்து கசியவில்லை. துளைகளூடாக இயற்கை வாடி வும் வெளியேறியது.
கெந்தகம் (பேlphur ) கலந்திருக்கும் பெற்றோலியமானது நிலத் தில் கசிந்து, வெப்பமேறும் போது துர்நாற்றம் வீசலாம். இக்காரணத் தினால் அன்று அவர்கள் பெற்றோவியத்திற்கு மனக்கும் நீர் எனப் பெயர் வைத்திருக்கமுடியும். இயற்கை வாயு (Natural gas J. Gig அவர்கள் வைத்தபெயர்: Kaza Kusodzய என்பதாகும். RIARusadzu என்றால் மணக்கும்-நீர் காற்று என்பதாகும், அதாவது: tேiாking Water Wind. Fairus Irgh,
ஜப்பானிய வரலாற்றின் பிற்காலத்தில், 1890 ஆம் ஆண்டுகளின் தொடக்ககாலத்தில் எரியும் நீர் (Burning Water கண்டறியப்பட்ட தாகவும், 1613 ஆம் ஆண்டில் Echig0 மாகாணத்தில் Magara என்ப வர் அதனை வடித்து, வெளிச்சமூட்டப் பயன்படுத்தக்கூடிய திரவத் தினை உற்பத்தி செய்ய முயற்சித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது. பெற்றோவியத்தினை வடித்து, எரிக்கக்கூடிய எண்ணெயினைப் பெறமுடியும் என்பதை 1600ஆம் ஆண்டுகளில் விளங்கி ஜப்பானியர்கள் அந்த முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை இது உறுதிப்படுத்து கிறது. - -
-59.

Page 38
அதேவேளையில் ருமேனியா, ருசியா என்பவைகளிலும் பெற்றோ வியம் கண்டறியப்பட்டது. 1745 ஆம் ஆண்டில் ருசியர்கள் பெற்றோ லியத்தினைக் காய்ச்சி வடிக்கும் சாதனத்தினை உருவாக்கினர். 1750 ஆம் ஆண்டில் ரூமேனியாவில் பெற்றோலியம் பாரிய அளவில் பயன் பாட்டிற்கு வந்திருந்தது. 1818 ஆம் ஆண்டில் போலாந்தில் (Poland) மாளிகைகளில் வெளிச்சமூட்ட மண்ணெண்ணெய் பாரியளவில் பயன் படுத்தப்பட்டது. - -
1853 ஆம் ஆண்டிற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் வெவ்வேறு சமூகங்கள் பெற்றோலியத்தினைக் கண்டறிந்த துடன், அதனைக் காய்ச்சிவடித்தும், வேறுபலதேவைகளுக்கும் பயன் படுத்தியே வந்துள்ளன. இதற்கு, மேலே தரப்பட்ட விபரங்கள் போது மானவை.
Guiyan Todlut (Petroleum ) srairp Garrávou Tsary Petra, Oleum என்று இருசொற்கள் இணைந்து , உருவானது. இலத்தீன், கிறீக் மொழிகளில் Petra என்பது கல்லினையும், 0leum என்பது எண்ணெய் (011) என்பதையும் குறிக்கின்றன. ஆகவே, Petroleum என்பது Rockoi sysiggi Mineral Oil SToir D digig/69lugl.
இந்த நிலையில், பெற்றோலியமானது உலகில் முதன்முதலாக 1859 ஆம் ஆண்டில்தான் கண்டறியப்பட்டது எனக் க. கு. அவர்கள் குறிப்பிட்டிருப்பமை முற்றிலும் பிழையானது. மேலும், அது முதன் முதலாக அமெரிக்காவில்தான் கண்டறியப்பட்டது எனக் க. கு. அவர் கள் குறிப்பிட்டமையும் பிழையானது.
'ஆனால், அமெரிக்காவில் கைத்தொழில், வியாபார ரீதிகளில் பெற்றோவியமானது 1859 ஆம் ஆண்டில் தான் பென்சில்வேனியா (Pensylvania ) மாநிலத்தில் ற்றைற்ரஸ்வில் எனுமிடத்தில் இறைக் கப்பட்டது , 70 அடி ஆழத்திற்குத் துளையிட்டுக் கிணற்றிலிருந்து நாளுக்கு 30 பீப்பாக்கள் வரையான பொற்றோவியம் இறைக்கப்பட்டு, ஏறக்குறைய $530 இற்கு விற்கப்பட்டது. இந்த வேலைகளை இளைப் பரிறிய ரயில் இயக்குனர் எட்வின் ட்ரேக் ( Edwin Drake ) என்பவர் Seneca oil Co. frtifasi Gafligiouisitif.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் பென்சில்வேனியா, மற்றும் மாநிலங்களில் பெற்றோவிய வேட்டை காட்டுத்தீ போல் பரவியது. பெற்றோலியத்திலிருந்து பெற்ரல் (Petrol) வடிக்கும்முறை கண்டு பிடிக்கப்பட்டமையும், பெற்ரவில் இயங்கும் இயந்திரம் கண்டுபிடிக் கப்பட்டமையும், சக்தித்தேவைக்குப் பெற்றோலியத்தினை மிகவும் முக் கியமாக்கின.
-60

வெவ்வேறு நாடுகளின் சமூகங்களது நெருப்பின் பயன்பாடு, மற் றும் பெற்றோவியம் தொடர்பான விபரங்களை ஆராய்ந்து, பெற் றோவியம் எங்கெங்கே கிடைக்கப்பெறலாம் என்பவற்றை அறிந்து, பெற்றோலியம் பாரியளவில் பெறும்வரை, உலகில் அன்று அமெ ரிக்காவே பெருமளவு பெற்றோலியத்தினை இறைத்து, ஏனைய தாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தது.
ஆ) க. கு. அவர்கள் இந்தியாவினையும் முக்கிய-பெற்றோலிய உற்பத்தி நாடெனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது அப்படியல்ல. இந்தியாவுடன் ஒப்பிடுகையில், பிரித்தானியா வடகடல்பகுதியில் (North Sea) கூடிய பெற்றோலிவத்தினை உற்பத்திசெய்கிறது. இந் தியா எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையில் ஒன்று பெற்றோலித் தட்டுப்பாடாகும். இந்தியா பெரும்தொகையான பெற்றோவியத் தினை இறக்குமதி செய்யவேண்டியுள்ளது.
இ) கி. கு. அவர்கள், முக்கியமாக, என்ன காரணத்திற்காக வல் லரசுகள் மத்திய கிழக்கிலுள்ள பெற்றோலிய வனத்தினைத் தமது ஆதிக்கத்துள் பெற்றுவிட-முயல்கின்றன என்பதற்கான விளக்கத் தினைச் சரியாகக் கொடுக்கவில்லை,
சு.கு. அவர்கள் விளக்கத்தினை உற்பத்தி (Production)அடிப் படையில்தான் கொடுக்க முற்பட்டுள்ளார். பெற்றோவிய உற்பத்தி யானது, குறுகியகாலக் கண்ணோட்டத்தில்தான் மிகவும் முக்கியமானது. ஆனால், வெவ்வேறு நாடுகளின் கண்டுபிடிக்கப்பட்ட பெற்றோலிய வள opio ( Petroleum Reserve ), கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை வாயு - வளமும் (Natural Gas ResTேYe ) நீண்டகாலக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமானவை. இந்தநிலையில், உலகின் பெற்றோவிய வளத்தின் எத்தனை வீதமானது மத்திய கிழக்கில் உள்ளது என்பது பற்றியும்; பெற்றோலிய வளம், இயற்கை - வாயு, நிலக்கரி வளங்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் போதுமானது என்பது பற்றியும் குறிப்பிட்டு, மத்திய கிழக்கின் முக்கியத்துவம் விளக்கப்படவில்லை,
க. கு. அவர்களின் அரை குறை விளக்கங்கள் மாணவருக்கும், சாதாரண மக்களுக்கும் விளக்கத்தினைத் தெளிவாக்கப் போதுமான தல்ல. -
ஈ) பெற்றோவிய அரசியலை விளக்க முற்பட்ட க. கு. அவர்கள் வல்லரசுகளினது ஆதிக்க விஸ்தரிப்புப் போட்டியில் பெற்றோவியம் எப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்தது; இஸ்ரேல்-அரபுப் போர்கள் 1967, 1973 என்பவைகளில் எப்படியான பெற்றோவியப் பிரச்சனைகளை உலகில் ஏற்படுத்தின, அதன்பின்னர் நிலைமைகள் எப்படியிருந்து வந்தன என்பவைகள் விளக்கப்படவில்லை.
-81

Page 39
உ) பெற்றோலிய அரசியலை க. கு. அவர்கள் மாணவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் தெளிவாக விளக்க விரும்பியிருந்தால், அவர் முதலில் சில விடயங்களை முன்னேற்பாடான முறையில் அறிவுக் களஞ்சியத்தின் சில வெளியீடுகளில் விளக்கிய பின்னர்தான் பெற் றோவிய அரசியலை விளக்க முற்பட்டிருக்கவேண்டும்.
ஒரு வெளியீட்டில் சக்தியின் பயன்பாடுகள், சக்தியின் மூலங்கள்: சக்தி மூலத்தின் வளங்கள், வற்றும் சக்தி மூலங்கள், வற்றாத சக்தி மூலங்கள் என்பவை பற்றியும் வற்றும் சக்தி வளங்களின் முக்கியத் துவம், அவைகள் எந்தெந்த நாடுகளில், என்னென்ன வீதங்களில் உள்ளன. வற்றும் சக்தி வளங்கள் எவ்வளவு ஆண்டுகளுக்குப் போது மானவை என்பது போன்ற விபரங்களும், விளக்கங்களும் கொடுப்ப துடன், இதனால், பூகோள அரசியல் போக்கு எப்படியிருக்கும் என் பதும் விளக்கப்படமுடியும்.
இன்னுமொரு வெளியீட்டில், பெற்றோவியம் தொடர்பான அடிப் படை விளக்கங்கள் கொடுக்கப்படலாம், உதாரணமாக பெற்றோலி யம் எவைகளினால் ஆனது; அதன் குணாதிசயங்கள், அதிலிருந்து பெறப்படும்-வெவ்வேறு பொருட்கள் எவை பெற்றோவியடடற்பத்தி நாடுகள்; பாரிய அளவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகள்: ஒரு பீப்பா-பெற்றோலியம் என்றால் எவ்வளவு கனவளவு: பெற் றோலியத்தின் விலை எவ்வளவு பெற்றோலிய விலை அரபு-இஸ்ரேல் போர்களினால் எப்படி ஏறி-இறங்கியது: பெற்றோவிய விலை ஏற்ற, இறக்கங்களினால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்கள், எந்த நாடுகள் இதனால் -பெரிதும் தாக்கப்படும் என்பவைகள்-விளக்கப்பட லாம். OPEC நாடுகள் பற்றியும், அதன் செயற்பாடுகள், பலவீனங்கள் பற்றியும் விளக்கப்பட வேண்டும்.-- SS
" மற்றுமொரு வெளியீட்டில் பெற்றோலியம் தொடர்பான பூகோள அரசியலைத் தெளிவாக விளக்கமுடியும்,
இப்படிச் செய்தால் மாணவருக்கும், பொதுமக்களுக்கும் பெற்றோ லிய அரசியலைத் தெளிவாக விளக்கிக்கொள்ளமுடியும். தெளிவாக விளக் கங்களை ஏற்படுத்த விரும்பினால், திட்டமிட்ட முறையில், மேலே கூறப்பட்டவைகள்போல், விளக்கங்களைக் க. கு. அவர்கள் கொடுத்
திருக்கவேண்டும். S S S
எதுவிதத்திலும், மாணவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இப் படித் தெளிவை ஏற்படுத்துவதென்றால், அங்கு இரண்டு விடயங்கள் முக்கியமாகின்றன:
-62

1. இப்படியான தெளிவை ஏற்படுத்தவேண்டும் என்ற கருத்தும், விருப்பும் அறிவுக் களஞ்சிய ஆசிரியர்களுக்கும், காப்பாளர்களுக் கும் இருக்கவேண்டும்;
2. இப்படியான விபரங்களையும், விளக்கங்களையும் தெரிந்திருக்க
வேண்டும், அல்லது அவைகளை எந்தெந்தக் கைநூல்களிலிருந்து சரியாகப் பெறலாம் என்பதைத் தெரிந்திருக்கவேண்டும்.
க. கு. அவர்களதும், ஏனையோர்களதும் சிறு கட்டுரைகளிலும், துணுக்குகளிலும் உள்ள விபர விளக்கப் பிழைகளையும் விபர விளக்கப் பற்றாக்குறைகளையும் பார்த்தால், மேலே குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் அறிவுக் களஞ்சிய ஆசிரியர்கள், காப்பாளர்கள்" என்பவரிடம் இல்லையா என்ற ஐயப்பாடு ஒருவருக்கு எழச் சந்தர்ப் பங்கள் அதிகம் உண்டு.
O புவியின் மரணம்
அறிவுக் களஞ்சியம் - 2 பக்கம் - 31
எழுதியவர் பெயர் குறிப்பிடவில்லை
இச்சிறு துணுக்கானது பல விபரப் பிழைகளையும், விளக்கப் பிழை களையும் கொண்டுள்ளது. அவையாவன:
அ) முதலாவது வசனத்தில் சூரிய மண்டலத்திலுள்ள அனைத்து கோள்களினதும் வாழ்க்கை சூரியனிலேயே தங்கியுள்ளது எனக் கூறப் படுகிறது. இதில் வாழ்க்கை என்ற சொல் பிழையான விளக்கத் தினையே மாணவருக்கும், சாதாரண மக்களுக்கும் ஏற்படுத்தும். இங்கு நிலைத்தல் என்ற சொல் பொருத்தமானதாகவிருக்கும் சூரிய மண்டலத்தினில் பூமியைத் தவிர்ந்த வேறு கோள்களில் உயிர்கள் வாழுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கப்பெற வும் இல்லை.
ஆ) இரண்டாவது வசனத்தில் சூரியனிலுள்ள ஐதரசன் வாயு ஹீலியம் வாயுவாக மாறுவதால் ஏற்படும் அளவிடமுடியாத சக்திப் பிரவாகம் வானவெளியில் கோள்களை வாழவைத்துள்ளது எனக் கூறப் பட்டுள்ளது.
இந்த வசனத்தில் விளக்கப் பிழைகளும், விளக்கப் பற்றாகுறை களும்-உள்ளன.-- S S
7. சூரியனிலுள்ள ஐதரசன் வாயு ஹீலியம் வாயுவாக மாறுவதால் ஏற்படும் . என்ற பகுதி ஒருவித மயக்கநிலையை ஏற்படுத்து கிறது:
-63

Page 40
சூரியனிலிருக்கும் ஐதரசன் அணுக்கள் தொடர்ச்சியாகக் ஹீலியம் அணுக்களாக மாறுவதால், சக்தி வெளியேற்றமானது சூரியனில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இங்கு மாற்றம் தொடர்ச்சியாக நடைபெறுவது வலியுறுத்துப்படவேண்டும்.
2. அடுத்ததாக, ஐதரசன் அணுக்கள் தொடர்ச்சியான „9Чt:3)І — சேர்க்கை ( Nuclear Fusion ) மூலம் ஹீலியம் அணுக்களாக மாற்றமடைவதால்தான் சூரியனிலிருந்து தொடர்ச்சியாகப் பாரியளவு சக்தி வெளிவருகிறது. இந்த நிலையில், அறிவுக் களஞ் யத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் அரைகுறையானது.
ஐதரசன் வாயுவிலான பாரிய சூரியனது ஐதரசன் அணுக்கள், அணு - சேர்க்கை மூலம் ( Nuclear Fusion மூலம் ), தொடர்ச்சியாக ஹீலியம் அணுக்களாக மாறுவதால் தொடர்ச்சியாக வெளிவரும் அள
விடமுடியாத சக்திப் பிரவாகம். என்றே எழுதப்படவேண் வேண்டும்.
3. இந்த வசனத்தின் கடைசிப்பகுதியானது: ". அளவிட
முடியாத சக்திப் பிரவாகம் வாணவெளியில் கோள்களை வாழ வைக்கிறது" எனக்கூறுகிறது.
சூரியனிலிருக்கும் ஐதரசன் ஹீலியமாக மாறுவதன் மூலம் வரும் சக்தி கோள்களை வாழவைக்கிறது எனக்கூறுவது பிழையானதாகும்.
பூமியைத் தவிர்ந்த வேறெந்தவொரு சூரியமண்டலக் கோள்களி ஆலும் உயிரினங்கள் இருப்பதாக் இன்னும் அறியப்படவில்லை. சூரிய னின் சக்தி வெளியாக்கம் பூமியின் தரையிலும், சமுத்திரங்களில் குறிப்பிட்ட ஆழத்திலுமே உயிரினங்களை வாழவைக்கிறது. பூமியில் கூட பலமைல்கள் ஆழத்தினில் சூரியவெளிச்சம் செல்லாத சமுத் திரப் பகுதிகளில் ஒருவகை நண்டு, இறால், மற்றும் உருளைக் குழாய் போன்ற பலவகை உயிரினங்கள் வாழ்வது 1977 ஆம் ஆண் டில்தான் கண்டறியப்பட்டு, 1979 இல் விஞ்ஞானிகள் முதல் ஆராய்ச்சி களை மேற்கொண்டு, இன்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
பூமியிலேயே எவ்வளவு தூரத்திற்குச் சூரிய ஒளியும், சூரியனி விருந்துவரும் வேறு சக்திகளும் உயிரினங்களை வாழவைக்கிறது என்ற கேள்விக்கு இன்று விஞ்ஞானிகள் விடைகான முற்படுகையில், இந்தச் சிறு துணுக்கில் எழுதியிருப்பது போல், சந்திரன், மற்றும் கோள் களைச் சூரியனிவிருத்து வெளிவரும் சக்தி என்னவிதத்தில் வாழவைக் கிறது என்பது தெரியவில்லை; ஆனால், சூரியனின் ஈர்ப்பு - விசை
-64

யானது சூரிய கோள்கள் அண்டவெளியீல் நிலைத்துநிற்கக் கார ணமாகவுள்ளது என்பது உண்மை. இந்த நிலையில், சூரியன் நிலை குலைந்தால், சூரிய மண்டல கோள்களின் நிலைத்தல் கேள்விக்குரிய தாகவே இருக்கும்.
இ) அடுத்த-வசனத்தில்:- என்றோடஒருநாள், சூரியனின் எரி பொருளான ஐதரசன் படிப்படியாகக் குறைந்து அற்றுப்போகும் . அன்று சூரியன் நிலைதளர்ந்து வெடிக்க, பூமி முதலான கோள்களும் அழியும் " எனக் கூறப்பட்டுள்ளது.
இது சரியான, தீர்க்கமான விளக்கமா என்பது கேள்விக்குரியதே. பிரபஞ்சம் தொடர்பான ஆராய்வினை 0ே810logy என்போம். இது அண்மைக் காலமாகப் பாரிய மாற்றங்களை அடைந்து வந்துள்ளது. நட்சத்திரம் ஒன்றின் நிவைத்தல், முடிவடைவு என்பவை பற்றித்
தீர்க்கமான முடிவுகளுக்கு இன்னும் விஞ்ஞானிகள் வரவில்லையென்றே கூறவேண்டும். தட்சத்திரங்களின் வாழ்க் கை முடிவு, அனேகமாக, Wiolent Collapse உடன்தான் நடைபெறும் எனவும், இதன்போது நட்சத்திரப் பிண்டமானது மிகவும் அடர்த்தியுடையதாக அமுக்கப் படுவதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சில நட்சத்திரங்களின் வாழ்க்கை முடிவு Black Holes ஆகவும் இருக்குமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மிகவும் தீவிர மாக மேற்கொள்ளப்பட்டுவரும் போதிலும், விஞ்ஞானிகள் இவை பற்றித் தீர்க்கமாகவும், விபரமாகவும் வெளியீடுகளை விடுவது மிக மிகக் குறைவு-பிரபஞ்சத்தின் உருவாக்கமும், பிரபஞ்சத்தின் முடிவும் விஞ்ஞானிகளுக்கு இன்றும் புதிராகவே இருந்துவருகிறது. இவை தொடர்பான ஆராய்ச்சிகள் இன்று மேற்கு நாடுகளில் தீவிரமடைத் துள்ளன. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிரபஞ்சம் பற்றி-ஆராய்ந்து-அறிவைப் பெருக்கிக் கொண்ட சமூகங்களின் வழித் தோன்றல்கள் இன்று எந்தவித ஆராய்வுகளுமின்றிப் பின்னடைந்து போயுள்ளன. இதற்கான காரணங்களை ஆராய்ந்து, திருத்தங்களை ஏற்படுத்தாவிடின், இந்த சமூகங்கள் மேலும் பின்னடைந்து, அழியவே நேரிடும்,
நாம் விடும் மூச்சு "
அறிவுக் களஞ்சியம்-2-பக்கம் -30
த. வே. எழுதியது
இச் சிறு கட்டுரையில் விபர, விளக்கப் பிழைகள் இருப்பதுடன் இது முழுத்தன்மையற்ற கட்டுரையாகவுமே உள்ளது. இச்சிறு கட்டுரை யில்
-65

Page 41
அ) "மண்புழு தனது சருமத்தால் மூச்சு விடுகிறது. ஒவ்வொரு சமயமும் தவளைகூட சருமத்தினால் மூச்சு விடுகிறது" எனக் கூறப்படு கிறது.
இதில் தவளை தொடர்பாகப் பிழையான விபரத்தினையும், விளக்கத்தினையுமே த. வே. தந்துள்ளார். த. வே. அவர்களின் விளக் கப்படித் தவளைக்கு மூக்கில்லை, அது மூக்கால் சுவாசிப்பதில்லை என்ற ஒருவித விளக்கம் ஏற்படுகிறது. இது பிழையானது,
தவளை இரண்டுவிதமாக ஒக்சியினைப் பெற்றுக்கொள்கிறது. RIJE UTGA GIF:
1. முக்கினால் காற்றைச் சுவாசித்து, நுரையீரலுள் செல்லும் காற்றிலிருந்து ஒக்சியினைப் ப்ெறுவது; -
2. தவளையின் துரையீரல்களின் உள்மேற்பரப்புச் சிறிதாகையால், தவளையின் வெளித்தோலும் மற்றுமொருமூச்செடுக்கும் உறுப் ட் பாகச் செயற்பட்டு, இரத்தத்தினால் ஒக்சியின் உறிஞ்சப்படு
படுகிறது
இதனாலேயே தவளைகள் நீரினுள்ளும் நீண்டநேரம் தங்கியிருக்க கூடியதாகவுள்ளது.
ஆ) அடுத்ததாக, இச்சிறு கட்டுரையில், மூச்சு நமது நெஞ்சின் இருபக்கங்களிலும் அமைந்துள்ள நுரையீரலுக்குச் செல்கிறது எனக் கூறப்பட்டபின்னர், மூச்சுடன் நாம் உள் இழுக்கும் ஒட்சிசன் உமல் முழுவதிலும் பயணம்செய்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இதுமானவருக்கும், படிப்போருக்கும் பெரும் குழப்பத்தினையே ஏற்படுத்தும், மூச்சுடன் நுரையீரலுக்குச் செல்லும் ஒக்சியின் எப்படி உடல் முழுவதும் பயணம் செய்யமுடியும் என்ற வினா ஒருவருக்கு எழும். சாதிான ஒருவர் நுரையீரலிலிருந்து உடல் முழுவதற்கும் ஒக்சியின் செல்லக் குழாய்கள் இருப்பதாகவும்-எண்ணமுடியும்.-
உத. வே. அவர்கள் நுரையீரலிலிருந்து ஒக்சியின் இரத்தத்திலுள்ள ஹெய்மோகுளோபின் (Haemoglobin) இனால் உறிஞ்சப்பட்டு, இரத் தத்துடன் உடல் முழுவதும் பயணம் செய்கிறது என்ற விளக்கத்தி சினைக் கொடுக்காது விட்டுவிட்டார்;
ஒக்சியின் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல்முழுவதும் பயணம் செய்கிறது என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் என்று கூறி. ஆகவே மேலதிக விளக்கம் தேவையற்றது என ஒரு வாதத் தைச் சிலர் முன்வைக்க முற்படலாம். அப்படியாயின், இந்தச் சிறு
-66

கட்டுரையே உண்மையில் தேவையற்றதாகிவிடும். ஏனெனில் இக்கட் திரையில் சுவாசிப்பது பற்றியும்-நுரையீரல்-பற்றியும், வேறு அடிப் படைவிடயங்கள்தான் தரப்பட்டுள்ளன.
தி.வே. அவர்களின் இச்சிறு கட்டுரையில் சில பிழைகளைப் பாரிந்த நாம் இக்கட்டுரையில் த. வே. அவர்கள் கொடுக்காது விட் டுள்ள முக்கிய அடிப்படை விபரங்களையும் பார்ப்போம்.
* எந்த ஒரு விடயம் பற்றியும் முழு விபரமும், விளக்கமும் கொடுக்கப்படவில்லை. மூச்சுப் பற்றியோ, அல்லது நுரையீரல் பற்றியோ, அல்லது ஒக்சியின் உறிஞ்சப்படுவது பற்றியோ முக் -கியாவிபரங்களும் வினக்கங்களும் கொடுக்கப்படவில்லை."
*-ஒருவரின்-உடல்சக்திக்கும் நுரையீரலின்-பருமனுக்கும் நள்ள தொடர்புகள் விளக்கப்படவில்லை. குழந்தைகளின் நுரையீரல் -முழுமையான வளர்ச்சியடைய, குழந்தைகள்" முன்னேறிய நாடுகளில் குப்புறப்படுக்கவிடுவது பற்றியும், சிறுவர்களின் உடற்பயிற்சி பற்றியும் குறிப்பிடவில்லை. SS
சீ. வளிமண்டலத்திலிருந்து காற்றைச் சுவாசிக்கும்போது, வளி மாசுபட்டதாகவிருந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி விளக்கப்படவில்லை.
-அ-வளிமண்டலத்தினுள் இறைக்கப்படும் தூசுகள் தொழிற் சீாவைகள், உற்பத்தியாலைகள் என்பவற்றில் உண்டாகும் தூசுகள் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன, இவற்றிலிருந்து பாது காப்புக்களை எப்படி ஏற்படுத்துவது என்பவைபற்றி விளக்கப்பட வில்லை.
ஆ) வளிமண்டலத்தினுள் இறைக்கப்படும் நச்சு வாயுக்களால் ஏற் படும் தாக்கங்கள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. உதாரணமாக: பெற்ரலில் இயக்கப்படும் வாகனங்களின் கழிவு வாயுக்களில் கானப் படும் ஈயத்துகள்களின்(Lead Particles) களின் நச்சுத்தன்மைகள் பற் நியும், அவற்றின் தாக்கங்கள் பற்றியும் விளக்கப்படவேண்டும். இன்று யாழ் குடாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தி வாகனங்கள் ஒடுவ தால் உண்டாகும் கார்பன் மொனொக்சைட் (Carbon Monoxide C0) வாயுவினால் ஏற்படுத்தப்படும் ஆபத்துக்கள் பற்றி விளக்கப்பட வேண்டும். இவற்றைவிட, தொழிற்சாலைகள், உற்பத்தியாலைகளிலி ருந்து வளிமண்டலத்தினுள் இறைக்கப்படும் நச்சு வாயுக்களின் தாக் கங்கள் பற்றி விளக்கப்படவேண்டும்.
-67

Page 42
இவைகளை வைத்து, சூழல் மாசுபடாது பார்க்கவேண்டிய முக்கி யத்துவம் குறிப்பிடப்பட வேண்டியதுடன், தொழிற்சாலைகள், உற் பத்தியாலைகள் என்பவைகளிலிருந்து கழிவு வாயுக்கள் வெளியேற்றப் படுவதைத் தடுக்கச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டிய முக்கியத் துவமும் மாணவருக்கும், சாதாரண மக்களுக்கும் விளக்கப்படவேண்டும்.
இ) புகைபிடிப்பதால் புகைபிடிப்பவருக்கும், அருகில் இருப்பவர் களுக்கும் நுரையீரலிலும், மூளை, நரம்புகள் என்பவற்றிலும் ஏற்படும் தாக்கங்கள் பற்றி விளக்கப்படவில்லை. இதனால் என்னென்ன நோய்கள் உண்டாகின்றன என்பது பற்றி விளக்கப்படவில்லை. சுற்பினித் தாய் புகைபிடிப்பதும், அவர் இருக்கும் இடங்களில் புகைபிடிப்பதும் கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிப்பது பற்றியும், குழந்தைகள், சிறு வர்கள் இருக்கும் இடத்தில் புகைபிடிப்பது, அவர்களை எப்படிப் பாதிக் கிறது என்பது பற்றியும் விளக்கப்படவேண்டும். -
இவைகளை விளக்கி, பொது இடங்களில் (கட்டடங்கள், பஸ், ரயில் வண்டிகள்) புகைபிடிப்பதைத் தடைசெய்யவேண்டிய முக்கியத்துவம் விளக்கப்படவேண்டும். இதற்கான சட்டங்கள், வேறு ஒழுங்குகள் என் பவை பற்றி விளக்கப்படவேண்டும்.
இவைகளைப் பார்க்கும்போது, நாம் விடும் மூச்சு பற்றி மாணவர்களுக் கும், சாதாரண மக்களுக்கும் அறிவை வளர்க்க முற்பட்ட த வே: அவர்கள் எந்தவித ஆராய்வுகளுமின்றி, பெயரளவில் கட்டுரையை எழுதியுள்ளார் என்பது தெளிவாகிறது. ஏனைய கட்டுரைகளைப் போல் இங்கும் அறிவை வளர்க்கும் நோக்கம் இல்லாதே காணப்படுகிறது.
-
12 ஐபல் கோபுரம்
அறிவுக் களஞ்சியம் -2 பக்கம் - 33
- எழுதியவரின் விபரம் தரப்படவில்லை
இந்தச்சிறிய துணுக்கிலும் விபர விளக்கப்பிழைகளும் விளக்கப்பற்ஹாக்குறைகளும் காணப்படுகின்றன. உதாரணமாக: இக்கோபுரத்தின் மேல் மூன்று மாடிகள் உள்ளன என எழுதப்பட்டுள்ளது. இது பிழை யானது ஜபல் கோபுரத்தின் (Eiffel Tower) இன் உச்சியில் மூன்று மாடிகள் இருப்பது போன்ற விளக்கம் அறிவுக் களஞ்சியத்தினால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில், கோபுரம் மூன்று மாடி களைக் கொண்டுள்ளது :
ஐபல் கோபுரம் ம்ற்றிஅேதீன் நிறை, உயரம் போன்ற விபரங்கள் முக்கியமானவ்ை எனக்கருதிய அறிவுக்களஞ்சியம், ஜபல் கோபுரம் ஏன்
- -68

கட்டப்பட்டது என்பது முக்கியமற்றது எனவும், கட்டிய ஐபல் யார் என்பது முக்கியமற்றது எனவும் கருதுகிறது.
இச்சிறு துணுக்கிலுள்ள பிழைகளையும் குறைபாடுகளையும் எடுத் துக் கூறுவதிலும், இத்துணுக்கு எப்படி எழுதப்பட்டிருக்கவேண்டும் என் பதை கீழ்வருமாறு விளக்கமுடியும்.
ஜபல் கோபுரம் (EIFFEL TOWER)
பிரான்சின் தலைநகரான பரி (Paris ) யின் செ(ப்)ன் ( Seine) நதிக்கரையில் அமைந்திருக்கும் ச்சாம் (த்)த மார்ஸ் (Champs de Mars) என்ற குறுச்சியில் 300 மீற்றர் வரை உயரமான இரும்புக் கோபுரம் ஒன்றுள்ளது. அதனை ஐபல் கோபுரம் என்பர். 1889 ஆம் ஆண்டில் ப்ரியில் நடைபெற்ற Exposition இற்காக அலெக்ஸ்ஆன்ட்ர் கஸ்ட்ாவ் ஜபல் (Alexandra Gustave Eiffel) என்ற பொறியியலாளர் இதனை 7, 300 தொன்கள் வரையான இரும்பு கொண்டு கட்டினார். இக் கோபுரம் மூன்று மாடிகளாலானது. மாடிகளுக்கு ஏற விப்ற் (Lift) இருப்பதுடன், படிகளும் உள்ளன. முதலாவது மாடியில் பரி நகரை யும், அதன் அயல் பகுதிகளையும் பார்ப்பதற்குத் தொலை காட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மூன்று மாடிகளுள், இரண்டாவது ஒரு உணவக மாகும் ( Restaurant). இக் கோபுரத்தில் விப்ற் மூலம் ஏறி இறங்க சிறிதளவு பணம் அறவிடப்படுகிறது. பரி நகரின் உல்லாசப் பயணி களைக் கவரும் இடங்களில்-ஐபல்-கோபுரமும் ஒன்று
- சுத்தமான நகர் சிங்கப்பூர்
அறிவுக் களஞ்சியம் -2, பக்கம் - 11
எழுதியவர் விபரம் தரப்படவில்லை
ஒரு நாட்டின் விபரங்களைக் கொடுக்க முற்படும்போது என்ன குறிக்கோளில் அந்த விபரங்கள் கொடுக்கப்படுகிறது என்பது மிக முக்கியமானதாகும். பிறநாடு ஒன்றினைப் பற்றிய விபரங்களைக் கொடுக்கும்போது, அதன் நோக்கமானது-கீழ்வருவனவை பற்றிய விளக்கங்களை ஏற்படுத்துவதாகவே முக்கியமாக இருக்கவேண்டும்:
1. உள்நாட்டு அரசியல், சமூகநிலை:
2. நாட்டின் பொருளாதார நிலை;
3. பூகோள. பிராந்திய அரசியலில் அந்த நாட்டின் நிலை.
■一
-69

Page 43
இந்த அடிப்படையில் விபரங்களைக் கொடுக்காவிடின், அந்த நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலை பற்றியும், அந்த நாட்டின் பிராந்திய, பூகோள அரசியல் நிலைபற்றியும் ஆராய்வு களை நடாத்த அந்த விபரங்கள் உதவமாட்டா. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தமட்டில், நூல்களையும், சஞ்சிகைகளையும் வெளியிடுபவர்கள் எந்தவித குறிக்கோள்களும் அற்றநிலையில்தான் நாடுகளின் விபரங்களைக் கொடுக்கின்றனர். இதனால் இந்த விப ரங்கள் ஆய்வுகளைச் செய்யப் பயன்படுத்த முடியாதே போகின்றன. இதற்கு அறிவுக் களஞ்சியம் எந்த வகையிலும் விதிவிலக்கல்ல. எது விதத்திலும், இங்கு சில சுட்டிக்காட்டல்கள் பொதுவான முறையில் தரப்படுகின்றன.
அ) நிலப்பரப்பானது இரண்டு தசமதானங்களுக்குச் சரியாகக்
கொடுக்காது முழு எண்களில் கொடுக்கப்படும்போது ஏறக்குறைப் அல்லது வரையிருக்கும் என எழுதப்படவேண்டும். விவசாய நிலத் தின் பரப்பளவு, காடுகளின் பரப்பளவு, நீர் நிலைகள் கடல் மற் றும் விபரங்கள் வீதாசாரத்தில் கொடுக்கப்படவேண்டும்
ஆ) மொத்தச் சனத்தொகை; இன, மத, மொழி ரீதிகளில் சனத் தொகை ஆண், பெண் வீதாசாரம்: ஆண்கள், பெண்களின் எழுதப் படிக்கத் தெரிந்த வீதாசாரம்; வெவ்வேறு வயதெல்லைகளுள் ஆண், பெண் வீதாசாரம் என்பவையும்; இன, மொழி ரீதிகளில் வதிவுப் பிராந்திய விபரங்களும் கொடுக்கப்படவேண்டும். இந்த விபரங்கள் எந்த வருடத்திற்குரியவை என்பது கட்டாயமாகக் கொடுக்கப்படல் வேண்டும்; SLSLSLSLSLSLS
இ) நாட்டின் ஆட்சிமுறை பற்றியும், அரச கரும மொழிகள்), முக்கிய அரசியல் கட்சிகள், நாடாளுமன்றம் எவ்வளவு காலத்திற்குத் தெரிவுசெய்யப்படுகிறது, எத்தனை நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஆட்சி யிலிருக்கும் கட்சி, ஆட்சியிலிருந்த கட்சி போன்ற விபரங்கள் கொடுக்கப் படவேண்டும்; வாக்குரிமை பற்றிய விபரம் கொடுக்கப்படவேண்டும்.
ஈ) நாட்டின் பணம், ஒதுக்கிவைத்திருக்கும் பணம் (Money Reserv ); ஒதுக்கிவைத்திருக்கும் பொன் (Gold RSேTேYe ) கடன் TTTS LLL LL LL SLLLLS TTTTTTTT TTTTeTTTS LLLLL LL LL S S LLLLLLLLS இல் விவசாயம், கைத்தொழில், சுரங்கவேலைகள், சேவைகள் என் னென்ன வீதங்கள் இந்தத் துறைகளில் என்னென்ன வீதமானோர். ஈடுபட்டுள்ளனர் சராசரி பணவீக்கம்; சராசரி வேலையற்றோர் நிலை ஏற்றுமதி வருமானம்; ஏற்றுமதிடஇறக்குமதி-வேறுபாடு போன்ற விபரங்கள் கொடுக்கப்படவேண்டும். இங்கும் விபரங்கள்
-)-

எந்த ஆண்டுக்குரியது என்பது கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்; வளங்கள் முக்கிய கனியங்கள் பற்றிக் கொடுக்கப்படவேண்டும்"
-உ}-அயல்நாடுகள், எல்லைகளின்-விதம்-தரையமைப்பு, படைகள், பூகோள - இராணுவ தந்திரோபாய ரீதியில் அந்த நாட் டின்-முக்கியத்துவங்கள்-என்பவை-குறிப்பிடப்படவேண்டும். - - -
இக் கட்டுரையை எழுதியவர் மேலே குறிப்பிட்டவைகளுள் ஒரு சில விபரங்களைத் தந்திருக்கும் போதும், அவை குழப்பத்தினையே ஏற்படுத்துகின்றன. உதாரணமாக: - -
1. சிங்கப்பூரின் பரப்பளவு சரியாக 618 சதுர கிலோ மீற்றரா,
அல்லது 1ே6 சதுர கிலோ மீற்றர் வரையானதா?
3. சிங்கப்பூரின் சனத்தொகை சரியாக 28 லட்சமா, அல்லது 26
சிட்சம் வரையானதா? இது எந்த ஆண்டின் சனத்தொகை?
3. இதேபோல், கல்வியறிவுடையோர் வீதாசாரமும், விபரத்திற்
குரிய ஆண்டும்?
4. இன அடிப்படையிலான வீதாசாரத்தில், 76+15+7ஆ98% இன் மிகுதி 2% மும் எந்த இனத்தவர்கள்? இது எந்த ஆண்டிற்
குரியது? .11+*
சீனம், மலே, தமிழ், ஆங்கிலம் என்பவைகள் தேசிய மொழிகளா,
அல்லது அரச கரும மொழிகளா? İ Frri il
罚
8. சிங்கப்பூரில் தலைக்குரிய வருமானம் 561.5 அமெரிக்க டொலர்
களா? அல்லது சிங்கப்பூர் டொலர்களா? بہتر "
இக் கட்டுரையை எழுதியவர் சிங்கப்பூரின் ஆங்கில த்தினர்ை$ingaPor)ேக் கொடுத்திருந்தால், ஒரு புதிய ஆங்கிலச் சொல்லை"மான வர்களும் சாதாரண" மக்களும் அறிந்திருக்க முடியும். மொத்தத் தில்: இச்சிறு கட்டுரை முழும்ை" பெறாத, ப்ோலிக் கட்டுவீரயாகும்.
உருளைக் கிழங்கு
அறிஷ்க் களஞ்சியம் - 2, பிக்கம் - 11
SLS S SS S S S S S S S S - ச. பா. வினால் எழுதப்பட்டது.
ܧܨ
செ. பா. அவர்கள்து உருளைக்கிழங்கு தொடர்பான விபரங்களும், விளக்கங்களும் ஏன்ைய் கட்டுரைகள் போலவே, எந்தவித குறிக்
--

Page 44
கோளும் அற்றதாகவே காணப்படுகிறது. இதில் தரப்பட்டுள்ள விட ரங்கள் பொருளாதார ரீதியிலும், அறிவியல் ரீதியிலும் முன்னேற்றங் களை ஏற்படுத்த எவ்வளவு தூரத்திற்கு உதவும் என்பது கேள்விக் குரியதே.
உருளைக்கிழங்கு பற்றிய பொது விபரங்களைக் கொடுப்பது தான் இச்சிது கட்டு  ைரயின் நோக்கமாயின்கூட அங்கு விபரப் பிழைகளும், பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன.
அ) இதில் ஸ்பானியரே முதன் முதல் தென் - அமெரிக்காவில் உருளைக்கிழங்கைக் கண்டுபிடித்தனர் எனக் கூறப்படுகிறது. இங்கு சொற்பயன்பாட்டிலும், விளக்கத்திலும் பிரச்சினை எழுகிறது.
இதில் கண்டுபிடித்தனர் என்பது சரியானதா, கண்டறிந்தனர் என்பது சரியானதா ?
உருளைக்கிழங்கு இயற்கை யாக உருவாகியிருந்தது. இதை எவரும் உருவாக்கவில்லை, இந்த நிலையில் கண்டறிந்தனர் என்று கூறுவதே சரியானது"
அடுத்ததாக ச. பா. அவர்கள் ஸ்பானியரே அதை முதன்முத லாகக் கண்டுபிடித்தனர் எனக் கூறுவது பிழையானது, தென் - அமெ ரிக்காவின் அன்டிஸ் ( Andes). சில்லி ( Chile ), பெரு (Pாேப ) மற்றும் பகுதிகளில் வாழ்ந்து வந்த பூர்வீகக் குடிகனான செவ்விந் தியர்கள் பல நூற்றாண்டுகளாக உருளைக்கிழங்கினை உணவுக்குப் பயிரிட்டு வந்தேயுள்ளனர், ஸ்பானியர்கள் அமெரிக்சரவிற்குச் சென்ற பின்னர்தான் உருளைக்கிழங்கு முதன் முதலாகக் கண்டறியப்பட்டு, செவ் விந் தி பர்கள் அதை உண்ணத்தொடங்கவில்லை. ஐரோப் பியரைப் பொறுத்தமட்டில், ஸ்பானியர்களே உருளைக்கிழங்கைச் செவ்வித்தியரூடாக முதன்முதலில் அறிந்திருந்தனர். ஆனால் ஸ்பானி யர்தான் அதை முதன்முதலாகக் கண்டுபிடித்தனர் என்பது பிழையானது.
16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த ஸ்பானிய வர லாற்றுக் குறிப்புக்களில் உருளைக்கிழங்கு பற்றிக் குறிப்பிடப்பட்டுள் ாது. 18 ஆம் நூற்றாண்டில் இது ஸ்பெயினுக்கும், பெரும்பாலும் அயர்லாந்திற்கும் புகுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உருளைக்கிழங்கு இத்தாலி, பெல்ஜியம், ஜேர்மனி என்ப வைகளில் பயிரிடப்பட்டது.
பிரித்தானியாவில் 1790 ஆம் ஆண்டில் எசெக்ஸ் (E85) எனு மிடத்தில் உருளைக்கிழங்கு வியாபார அடிப்படையில் பயிரிடப்பட்ட
-72

தென வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் சகல பாகங்களையும் உருளைக்கிழங்கு அடைந்து கணிசமான அளவில் உற்பத்தியும் செய்யப்பட்டது.-- SS
ஆ) சேர் வோல்ற்றர் றெவி (Sir Walter-Raleigh) என்பவர் அமெரிக்காவிலிருக்கும் வேர்ஜினியா (Wirginia) விலிருந்து பிரித்தானி யாவிற்கு உருளைக்கிழங்கை அறிமுகம் செய்தார் என்பது ஒரு பரவ லான கதை. ஆனால், அக்காலப்பகுதியில் வேர்ஜீனியாவில் உருளைக் கிழங்கு பயிரிடப்படவேயில்லை. அவர் உருளைக்கிழங்கினை அயர் லாந்திலிருந்தே பிரித்தானியாவிற்கு அறிமுகம் செய்திருக்கமுடியும் என இன்று கருதப்படுகிறது.
இந்தநிலையில், இன்னுமொரு கேள்வியும் இங்கு எழுகிறது.
ச. பா. அவர்கள் மூவரின் பெயர்களைத் தந்து, அவர்கள் இத் தாலி, பெல்ஜியத்திற்கு உருளைக்கிழங்கை அறிமுகம் செய்தனர் என் பது ஒருவருக்கு ஒருவித ஐயப்பாட்டினையும், கேள்வியையுமே எழுப் பும்.
இ) ஆசியாவில் அரிசி பிரதான உணவாக இருப்பதுபோல், மேற்கு நாடுகளில் இன்று உருளைக்கிழங்கானது முக்கிய உணவுப் பொருளாக ஆகிவருகிறது. உருளைக்கிழங்கை வட்டம், வட்டமாக வெட்டிப்பொசித்தும் (Chips) சிறிய சதுரக் குறுக்குவெட்டுடைய நீண்ட துண்டுகளாக வெட்டிப் பொரித்தும் (French Frt), களியாகச் செய்தும், வேறுவிதங்களாகவும் உண்கின்றனர்.
எதுவிதத்திலும், உருளைக்கிழங்கானது ஐரோப்பாவில் அயர் லாந்திலேதான் முதன்முதலாகப் பிரதான உணவாகவிருந்தது. இத னால் அயர்லாந்து ( Ireland) 1845, 1848 ஆம் ஆண்டுகளில் பெரும் பஞ்சத்தினையும், பல லட்சம் பேர்களின் இறப்பையும் எதிர் நோக்க நேரிட்டது.
Potato - Blight என்ற நோய் உருளைக்கிழங்கிற்கு உண்டான தால், அதன் உற்பத்தி பாரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பட்டினியால் ஒரு மில்லியன்வரை ( பத்து லட்சம் வரை ) யான மக்கள் இறந்ததுடன், பலமில்லியன் கணக்கானோர் அமெரிக்கா ஒஸ்ற்றேவியா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இதுவே அமெ ரிக்காவில் இன்று அயர்லாந்தினை மூலமாகக் கொண்டவர்கள் பெரு மெண்ணிக்கையில் இருக்கக் காரணமாகும். ஞாபகமிருக்கட்டும்: அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த ஜோன். F. கெனடி ( John
73

Page 45
F. Kemncdy ). GJITGAT Tjil ”. Ở T. Går ( Ronald Reagan y GTGŠTua frff, Gior அயர்லாந்தினை மூலமாகக் கொண்டவர்களே!-- S S S
ஈ) உருளைக்கிழங்கின் பொது விபரங்களைக் கொடுப்பதுதான் ச. பா. அவர்களது நோக்கமாக இருப்பதால், அவர் உருளைக்கிழங் கில் என்னென்ன பதார்த்தங்கள் உள்ளன என்பதைக் கொடுத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும். ஆனால், அந்த விபரங்களையும் "H" அவர்கள் தனது சிறு-கட்டுரையில்-கொடுக்க விரும்பவில்லை.
உருளைக்கிழங்கானது ஏறக்குறைய 78%-மான நீரையும்;-18% வரையான மாப்பதார்த்தத்தையும் (Starch); சிறுசிறு அளவுகளில் புரதம் வைற்றமின் - B ( Witamin - B ) வைற்றமின் - C-தாதுப் பொருட்கள் ( Minerals மற்றும் பொருட்களையும் கொண்டது.
உருளைக்கிழங்கானது முழுமையான உணவல்லாதபோதும், ஒரு வரை உயிருடன் வாழவைக்கப் போதுமானது. - -
)ே ஐரோப்பாவிற்கு கொண்டுவரப்பட்டுப் பரப்பப்பட்ட உரு ளைக்கிழங்கானது தென் . அமெரிக்காவின் இலி ( Chile) , Lilijjili Chiloe தீவு என்பவைகளிலிருந்துதான் கொண்டுவரப்பட்டன என் 'சிது 20 ஆம் நூற்றாண்டில் ருசியர்கள் ஆராய்ந்தறிந்தனர். தமது 'எனிப்பிராந்தியத்திற்கேற்ற புதிய உருளைக்கிழங்கு வகைகளை ருசியர்கள் உருவாக்குவதற்குச் செய்த ஆராய்ச்சிகளின்போது, அவர்கள் தென் - அமெரிக்காவின் சகல உருளைக்கிழங்கு வகைகளையும்
ஆராய்ந்தபோதே இது அறியப்பட்டது. T
இ) உருளைக்கிழங்கு உற்பத்தியில் யாழ்ப்பாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிக் குறிப்பிட்ட ச. பா அவர்கள், *ருவிளக்கிழங்கு விதைகள் உரியட்காலத்தில் கிடைக்கப் பெறமுடி யாது போவதற்கான அடிப்படைப் பிரச்சனை என்ன? யாழ்ப் Hாணத்திற்கென சர்வகலாசாலை பல்லாண்டுகளுக்கு முன்னரே ஆரம் பிக்கப்பட்டபோதிலும், வடக்குக் கிழக்கிற்கு உகந்த, விளைச்சல் அதிகமான, நோய்களை எதிர்க்கக்கூடிய உருளைக்கிழங்கு வகைகள் ஆராய்ச்சிகள் மூலம் ஒரன் உருவாக்கப்படவில்லை?
இதற்கு எமது கல்விப்பாடத்திட்டங்கள் காரணமா?, அல்லது ஆராய்ச்சிகளைச் செய்ய வசதிகளும், நிதியும் இல்லையா? இரண்டா வதுதான் காரணமாயின், அதற்கான உண்மைக் காரணங்கள் எவை? இவைகள்ை எப்படித் தீர்க்கலாம் என்பவைகளை ஆராயவில்லை.
முதலாவதுதான் காரணமாயின் சர்வகலாசாலையின் கல்வித்திட் படத்தினை ஏன் மாற்றவில்லை? இப்படியான ஆராய்ச்சிகளைச் செய்ய
-74
 
 
 

விசேட உயர்கல்வி தேவையாயின் அவை எவை? அவற்றைப் பெற். றவர்கள் தமிழர்களுள் இல்லையா? அப்படியாயின் அவற்றை எங்
॥
இவைகளை மாணவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் விளக்கு வதன் மூலமே மாணவர்களை இத்துண்றயில் ஈடுபடவைக்கமுடியும்: ஒருவித வழிகாட்டிகளை அனிமக்கமுடியும், எமது பொருளதாரத்தினை முன்னேற்ற முடியும்.
ச. பா. அவர்கள் இவைபற்றி மாத்திரம் விளக்கங்களை ஏற். படுத்தாது விட்டுவிடவில்லை. இன்னுமொரு முக்கிய விடயம் பற்றி யும் எந்தவித விளக்கத்தையும் ச. பா. அவர்கள் ஏற்படுத்த முற்பட
Кейін . m - - - - SS
எ) யாழ் குடாவைப் பொறுத்தாட்டில் உருளைக் கிழங்கின் விலை 40 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை ஏறி இறங்குவதை ஒருவர் அவதானித்திருக்கமுடியும். இதனால் நுகர்வோர்களே பருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மறுபுறத்தில், உருளைக்கிழங்கை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், உண்மையில் விலையேற்றத்தின் மூலம் இலா பத்தினை அடைவதில்லை. உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கு மிடையே இருக்கும் "முதலாளி "களே உண்மையில் பெரும் இலாப மடைகின்றனர். - u
இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் குறுகிய காலக் கண் ணோட்டத்திலும், நீண்டகாலக் கண்ணோட்டத்திலும் என்ன்ெ செய்யமுடியும் என்பது பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடப்படவேயில்லுை.
உருளைக்கிழங்கினை நீண்டகாலம் களஞ்சியப்படுத்தி வைப்பது எப்படி? : இதற்கு எவை தேவைப்படுகின்றன? ; உருளைக்கிழங்கை உப - உணவுகள்ாகப் பதப்படுத்தி, களஞ்சியப்படுத்தி வைக்கமுடியுமா? இதற்குத் தேவையான " உணவு-தொழில்நுட்பம் (Food Technology) பற்றிப் படித்தவர்கள்-தமிழருள் உள்ளனரா? எத்தனைபேர்டவடக்குக் கிழக்கில் உள்ளனர்? இவர்களின் எண்ணிக்கை போதுமானதா? போன் றவை ஆராயப்படவில்லை- -
-எமது பொருளாதார முன்னேற்றத்திற்கு இனவ போன்ற விளக்" கங்களே மாணவர்களுக்கும். பொது மக்களுக்கும் ஏற்படுத்தவேண்டும். ஆனால் யாழ் குடாவின் தினசரிகளும்-சஞ்சிகைகளும் இளை-போன்றவிடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை. அறிவு வளர்ச்சியை முழுமுதல் நோக்கமாகக் கொண்டதெனக் கூறப்படும் " அறிவுக் களஞ்
-5-

Page 46
॥ "  ܼ ܒ ܐ ܵ ܪ ݂ ܒ
சியம்' சஞ்சிகையும் இதற்கு எந்தவிதத்திலும் விதிவிலக்காக அமைய வில்லை-ஆம் =لتسليط التي تقيس السفسطاطسيس
,
-இப்படியான-விபரங்களையெல்லாம்-உள்ளடக்கும்-விதத்தில் சிறுகட்டுரைகள் எழுதுவதற்குப் பக்கங்கள் கூடத் தேவைப்படும் என்ற வாதத்தினைச் சிலர் முன்வைக்கலாம். ஆனால், எமது சமூகத்தின் அறிவுவளர்ச்சியூடாக நாம் பொருளாதார முன்னேற்றத்தினை அடைய "வேண்டுமாயின் உருளைக்கிழங்கு விடவம் பற்றி இரு பக்கங்களில்முழுமையான விபரங்களையும், விளக்கங்களையும் கொடுக்கத்தான் வேண்டும். அப்படிக்" கொடுக்கவும் முடியும். - -
இதற்கு முதல் முக்கியமானது என்னவென்றால் அறிவு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட சஞ்சிகைகளை வெளியிடுவதில், திட்டமிடுகை
என்பது முக்கியமானதாகும். .
- ( : மாங்காய் புளிப்பதேன்
b、端 ம்பழம் இனிப்பதேன் .
அறிவுக் களஞ்சியம்-2, பக்கம்-17
- SS தனுடனழுதியது,
- எமது பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கு முக்கியமானன்வ்ய்ாக இருப்பவைகளுள் பழங்களும், குறிப்பாகமாம் பழமும், ஒன்று. ஆனால், டஅறிவுக்களஞ்சியம்' இவற்றிற்குத் துணுக்கு களின் இடரே கொடுத்துள்ளது. மேலும், " அறிவுக் களஞ்சியம் " ஆனது படத்திற்கும், தலைப்பிற்குமே கூடிய இடத்தினைச் செலவுசெய்துள்ளது. இந்த இடத்தினில் மேலதிக விபரங்களையும், விளக் கங்களையும் கொடுத்திருந்தால் பயனுள்ளதாகவிருக்கும். -
பழங்களில் இருப்புவைகள் பற்றிப் பொதுப்படையாகத் தந்துள்ள தனு அவர்கள், பெரும்" குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளார். பழர் களில்-செல்யூதோஸ் (Clu0ே$ ) இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது: இது பிரையான்த்ாகும்.இதிசெலுலோஸ் (Cellulose) ஆகும். Cellucose
என்ற ஒத சொல் #-fif အွပ္ဖါရံ့ அகராதிகளிலும் இல்லை. , 4 بیوی ۔
". -அடுத்ததாக, எல்லாப்பழங்களிலும் பெரும் பகுதியானது-நீழா
கும். ' உதாரணமாக "வாழைப்பழத்தில் 75% வரை நீரேயாகும்: மாம்பழத்தில் ஏறக்குறைய 80 - 85 % மானது நீரேயாகும். தணு அவர்கள் அதைக்குறிப்பிடாது விட்டுவிட்டார்.
-6-

பொதுப்படையாகக் கூறினால், பழங்களில் நீர், கார்போஹைற்ப் றேற்ஸ்-வெhahydrates).-அமிலங்கள்.(கொழுப்பு:உட்பு).புரதம் (Protein), வைற்றமின்கள் (Witamins), சாம்பல் (Ash) செலுலோஸ் -(Cellulosa) என்பவைகள் காணப்படலாம்-கார்போஹைற்பட்றேற்ஸ்
என்பவை சர்க்கரை, மாச்சத்து என்பவைகள்ை அடக்கும்.
உதாரணமாக ஒரு வாழைப்பழத்தின்ரில் 'ஏறக்குறைய 75% -மானது-நீரும்ட82%மானது-கார்போஹைட்ற்றேற்ஸ்டஉம்ட0.8 %ட வரை சாம்பலும் 1, 9 % வரை புரத்திரன்களும்; .ே6% வரை -கொழுப்பும்- இநக் ம்-வெவ்வேறு-வாழைப்பழ-இனங்களைப்
பொறுத்து, இந்த வீதாசாரங்களில் சிறுவேறுபாடுகள் இருக்கும்.
நன்கு முற்றிப்பழுத்த மாம்பழத்தினில் ஏறக்குறைய 80 - 85% மானது நீராகும்-10-2ய % வரை சர்க்கரையும் (Sucrose), மிகுதி வைற்றமின்கள், சாம்பல், செலுரலோஸ் (eேllulose), கொழுப்பு மான் Lassir - 5றியளவுகளில் காணப்படும். -
மாம்பழம் பற்றியும், வாழைப்பழம் பற்றியும் குறிப்பிட்ட தணு அவர்கள், இவைகள்ள் எப்படிப் பதனிட்டுக் களஞ்சியப்படுத்தலாம், இதனால் விலை ஏற்ற இறக்கத்தினை எப்படிக் குறைக்கலாம்; பொருளாதாரத்தை எப்படி விருத்திசெய்யலாம் என்பவைகள் பற்றிச் சுருக்கமாகவும்கூடக் குறிப்பிடவில்லை. - SS
முற்றிய வாழைக்காயிலிருந்து பெறும் மாவானது குழந்தைகளுக்கு உணவாகக் க்ொடுக்கல்ாம். ஒரு கிலோ கிறாம் நிறையான வாழைக்காய் மாவில் இரண்டு கிலோகிறாம் நிறையான கோதுமை மாவின் சத்துள் 'ளது என நிபுணர்கள் கருதுகின்றனர். ”
--—
வாழைப்பழங்களை உலர்த்தி, சீனிபோட்டுப் பதப்படுத்தி, பக்கற்றுக்களில் அடைத்து, நீண்டகாலம்' களஞ்சியப்படுத்தலாம். வாழைப்பழங்களை 'வட்டம் வட்டமாக வெட்டி, இனிப்புப்போட்டு, பூக்கீற்களில் **இத்தீக்களஞ்சியப்படுத்தலாம். வாழைக்காயினை வட்டம், வட்டமாக வெட்டிப் பொரித்து, பக்கற்களில் அடைத்து, நீேண்ட்கால்ம்விேஞ்சியம்டுத்த்ல்ர்ம். இன்வக்ள் ஐர்ேப்ப்ர் அம்ெ சித்தரமற்றும் காடுகளில் விரும்பி உண்ணப்படுகிறது.
iii ::::::: .م - 龜- , உமாம்பழங்கள்ை பதனிட்டு, டின்கள்ல் அடைத்து நீண்டகாலம் *களஞ்சியப்ப்டுத்தலாம்.மாம்பழச்சாறு போத்தல்களிலும், டின்களி லும் அடைத்து, நீண்டகாலம் சேமித்தும் வைக்கலாம், ஏற்றுமதியும் Garfi LIsvrrth.
۔۔۔۔۔۔
--

Page 47
-இவைகள் அனைத்திற்கும்-உணவு-பதனிடும்-தொழில்-நுட்பம். தேவை. தமிழர்களுள் இங்கு எத்தனை உணவு - தொழில் நுட்ப
- வியலாளர்கள் (FedTechnologists-துள்ளனர்.ஒரு கையின் விரல்கள்
மாத்திரம் எண்ணப் போதுமானவை! இதுபற்றிக் குறிப்பிடுவத ன் -மூலமே-உணவு-தொழில்நுட்பம்பற்றி மாணவர்களைப்-படிக்கத்
தூண்டலாம். எமது பொருளாதாரத்தினை முன்னேற்றமுடியும்.
1ம் சிந்தனையாளர் பிளேட்டோ:
அறிவுக் களஞ்சியம்-2, பக்கம் -13
SS எழுதியவர்-கொங்கூர் கிழார்
-இச்சிறு கட்டுரையும் ஏனைய கட்டுரைகளைப்போலவே,-அறிவைவிருத்திசெய்ய உதவும் குறிக்கோளிலிருந்து விலகியதாகவே கானப் படுகிறது. இக்கட்டுரையில் பிளேட்டோ பற்றிப் படிப்பவர் தனது அறிவை வளர்க்க பிளேட்டோவின் சிந்தனைகளைப்பற்றி அறிய
"முற்பட்டால், அவர் "நட்டாற்றில் விடப்பட்ட நிலையே"காணிப்படு
கிறது: '
- ت ܡܠܐ="T = 1.
பிளேட்டோ (Plato) பற்றியும், பிளேட்டோ என்னென்ன துறைகள் பற்றி'என்ன்ென்ன் வயதுகளில் நூல்கள்ை எழுதினார் போன்றி விபரங் களையெல்லாம் விபரமாகக் கொடுத்திருந்தாலும், கொக்கூர் கிழார் ஒன்றில்மட்டும் மிகவும் கவனமாக இருந்துள்ளார். அது என்னவென் றால் அறிவுக் களஞ்சியம் - 2 இல் சிந்தனையாளர் பிளேட்டோ என்ற கட்டுரையைப் படிக்கும் ஒருவர் பிளேட்டோவின் சிந்தனை களை அறியமுடியாதபடி, கொக்கூர் கிழார் பிளேட்டோவினது முக்
கிய நூல்களைக்கூடக் குறிப்பிடாது தவிர்த்துவிட்டார்.
சாதாரண மக்களதும் அறிவை வளர்ப்பதாயின், கொக்கூர் கிழார் பிளேட்டோவினால் எழுதப்பட்ட சகல நூல்களினதும் பெயர்களைக் கொடுக்காது போனாலும், Republic, Laws என்ற இரு நூல்களின் பெயர்களையாவது குறிப்பிட்டிருந்தால் போதுமானதாகவிருந்திருக் கும் ஏன் இதைக்கூடச் செய்ய கொக்கூர் கிழாருக்குப் பின்னடிப்போ, தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, பிளேட்டோ 一盘 கி 品 டு * டு F.
என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் எங்கு சென்றார் என்ப தைக் கொக்கூர் கிழார் அவர்கள் குறிப்பிடவில்லை.
தனது தாய் நாட்டைவிட்டு
-8-
 
 

உட்பிளேட்டோ-ஏதென்ஸ் நகரைவிட்டுச் சென்று சிசிலித் தீவினது சைராக்குஸ் ( SyாகCu83 ) நகருக்குத்தான் சென்று தங்கினார். இங் கிருந்து-ஏதென்ஸ் திரும்பியபின்னரே பிளேட்டோ அக்கடமி (Academy) யினைத் ஸ்தாபித்தார். இதன் பின்னரும் பிளேட்டோ இரண்டு தடவைகள்-சிசிலித்திவிற்குச்-சென்றிருந்ததாக வரலாறு "கூறுகிறது:
டAcademy என்பதைத்-தமிழில் அகடமி-என-எழுதுவதிலும் பார்க்க, அக்கடமி என எழுதுவது சற்றுக் கூடியளவில் சரியான ஒலி
-யைக் கொடுக்கும்.--
■ s
இக்கட்டுரையில் சில முக்கிய சொற்களுக்கு-ஆங்கிலச்-சொற் களும் கொடுத்திருந்தால், அது மாணவர்களும் சாதாரண மக்களும், சில புதிய முக்கிய சொற்களை அறியப்-உதவியாக இருப்பதுட்ன் ஆங்கிலக் கைநூல்களையும், கலைக் களஞ்சியங்களையும் பயன்படுத் தவும் உதவியாகவிருக்கும். -
- - - i
" . *晶一
ܐ
- -
"THE "Illuսլոմ"
-9-

Page 48
டட் முடிவுரை `
அறிவுக்களஞ்சியம் சஞ்சிகைகளைப் பொதுவாகவும், அறிவுக்
களஞ்சியம் - 2 சஞ்சிகையினைக் குறிப்பாகவும் ஆராய்ந்தவைகளிலி
உருந்து. நாம் கீழ்வரும் குறைபாடுகளையும், போக்கினையும் அறிவுச்
களஞ்சியங்களில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அ) குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாகப் பிழையான விப உரங்களையும், பிழை யான, திரிபுபடுத்தப்பட்ட விளக்கங்களையும்.
கொடுக்கும் போக்கு: =
ஆ) குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக முக்கிய விபரம் களையும், விளக்கங்களையும் கொடுக்காமல் விடும் தன்மை:
இ) ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக முழுமையான விளக் கங்களையும், மேலதிக விளக்கங்களையும் ஒருவர் ஏற்படுத்த் உத்வும் வகையில் சில முக்கிய விபரங்களைக் கொடுக்காது விடும் தன்மை;
உ)"இடங்கள் நாடுகள், பெயர்கள், சில முக்கிய சொற்கள் போன்றவற்றைச் சரியாக அறியமுடியாதபடியும், சரியான உச்சரிப் பினைத் தெரிந்துகொள்ள முடியாதபடியும், அவற்றைத் தமிழில் "மாத்திரம், ஆனால், பெரும்பாலும் பிழையாகக் கொடுக்கும் போக்கு:
ஊ) சில முக்கிய துறைகளை முழுமையாகக் கைவிட்டநிலை யும், சில துறைகளிலுள்ள முக்கிய அடிப்படைகளைக் கை விட்ட நிலையும்: =
= —எ எந்த அறிவு மட்டத்தில் உள்ளவர்களுக்கு என்ன மட்டத்
திற்கு அறிவை வளர்ப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது என்பதில் தெளி
வற்றநிலை r - - - - - - - - -
-ஏ) சஞ்சிகையினைச் சில தனிநபர்களின் பெயர்களைச் சமூகத் "தில் நிலைநாட்டப் பிரசாரக் கருவிப்ாகப் பயன்படுத்தும் போக்கு:
. . . . . ... . - - * 'இவைகள் எல்லாம்" அறிவுக்களஞ்சியத்தின் நோக்கமான து அறிவை வளர்க்கும். நோக்கம் அல்ல என்பதையே எடுத்துக்காட்டு, "வதாக அமைகின்றன. . . . .
qSSTSSiDSDDSSSS SS
அேறிவுக் களஞ்சியம் சஞ்சிகையின் உண்மை நோக்கம் மாணவர்களி தும், பொது மக்களதும் அறிவை வளர்ப்பதாயின், அது மேலே குறிப் பிட்ட விடயங்கள் தொடர்பாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்
-80

ளது. இதனை அறிவுக்களஞ்சியம் எந்தவித காலதாமதமின்றியும் செய்ய வேண்டியுள்ளது.ஆனால்,--இந்த மாற்றங்களை அறிவுக் களஞ்சியம்ட எவ்வளவு தூரத்திற்குச் சரியாகச் செய்யமுடியும் என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.-ஏனெனில்-அறிவுக்-களஞ்சியத்தின் ஆசிரியர்களும், காப்பாளர்களும் இலங்கைத் தமிழ் சமூகத்தின் அறிஞர் குழாம் எனக் கருதப்படும்-நிலையில்கூட அந்த சஞ்சிகையில் விபர விளக்கப்பிழைகளும், திரிபுகளும், ஏமாற்றுகளும் மலிந்துள்ளன.
காப்பாளர் பட்டியலை எடுத்தோமேயானால், பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் யாழ். பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத்தலைவராகும்;"திரு. ந. சிவஞானசுந்தரம் அவர்கள் யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடப் பேராசிரியராகும்; வித்துவான் க. சொக்கலிங்கம் அவர்கள் "தமிழறிஞராகும்; க.சி.குலரத்தினம் அவர்கள் மூதறிஞ ராகும்; கலாநிதி காரை-செ சுந்தரம்பிள்ளை அவர்கள் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராகும்; கவிஞர் சோ. பத்ம நாதன் அவர்கள் பலரலி ஆசிரியர் கல்லூரி உப-அதிபராகும் திரு அ.பஞ்சவிங்கம் அவிர்கள் யாழ். இந்துக் கல்லூரி அதிபராகும்; திரு. நா. கா.சண்முகநாதபிள்ளை அவர்கள் யாழ். மத்திய கல்லூரி அதிப ராகும்; திரு. சி. சிவ்ச்ரவணபவன் அவர்கள் வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி அதிபராகும்; திரு. அநு. வை. நாகராஜன் அவர்கள் தாவடி இந்து தமிழ் வித்தியாலய அதிபராகும்; திரு. த. துரைசிங்கம் அவர்கள் யாழ். உதவிக் கல்விப் பணிப்பாளராகும்; திரு. க. வேலாயுதம் யாழ், கோட்டக் கல்வியதிகாரியாகும் வண. பிரான்சிஸ் அடிகளார் அவர்கள் யாழ். சம்புத்திரிசியார் கல்லூரி முன்னைய அதிபராகும்; திரு.ஐ. சாந்தன் அவர்கள் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளரா கும் திரு.ஆ,இராஜகோபால் அவர்கள் யாழ். இந்துக்கல்லூரி ஆசிரிய ராகும்; கவிஞர் இ. முருகையன் அவர்கள் யாழ்.பல்கலைக்கழக மேலதி: கப்பதிவாளர் ஆகும்; திருமதி. ச. அருள்நங்கை அவர்கள் யாழ். தனி யார் கல்வி நிறுவனமான புதிய உயர் கல்லூரி அதிபராகும்; திரு. சு. குமாரசாமி அவர்கள் யாழ். விக்டோரியாக் கல்லூரி ஆசிரியராகும்; திரு. ச. பாலசுந்தரம் அவர்கள் மக்கள் வங்கி அதிகாரியாகும்; திரு. டொமினிக் ஜீவா அவர்கள் முற்போக்கு எழுத்தாளரும், சஞ்சிகை ஆசிரியருமரகும்.திரு. நா. சோமகாந்தன் அவர்கள் முற்போக்கு எழுத்தாளர்ாகும்;"திரு. இ. ஜெயராஜ் அவர்கள் பிரசங்கியாகும்.
இவர்களும் ஈழுத்தாளரும், பாடநூல்களின் ஆசிரியருமான க. குணராச்ா அவ்ர்கள், மற்றும் வரதர், கல்வயல் குமாரசாமி ஆகி யோர் இணைந்தே அறிவுக் களஞ்சியம் வெளியிடப்படுகிறது:
யாழ். குடாவின் அறிஞர் குழாம் எனக் கருதப்படுபவர்களால் வெளியிடப்படும், அறிவை வளர்க்கும் நோக்கத்தினைக்கொண்ட ஒரு
-81.

Page 49
சஞ்சிகையின் நிலை இதுவாயின் தமிழ் சமூகத்தின் வருங்கால அறிவு நிலைபற்றிச் சற்றுச் சிந்திக்கவேண்டியே புள்ளது. இப்படியான அறி ஞர் குழாம் அறிவை வளர்க்கும் நோக்கில் என்று கூறிப் பிழையான விபரங்கள், விளக்கங்களுடனும், திரிபுகளுடனும், ஏமாற்றுக்களுட ஒனும் ஒரு சஞ்சிகையை வெளிவிடுவதாயின் அதற்கு அடிப்படையில்
மூன்று காரணங்களே இருக்கமுடியும். அவையாவன:
l அறிஞர் குழாமின் பொறுப்புணர்ச்சியற்ற தன்மையும், –"அறிஞர்கள் கூறும் எதையும் சமூகம் ஏற்கும் ஏற்கவேண்டும்
என்ற கொள்கைப் போக்கும்
- -ட
2. இவர்கள் தமிழ் சமூகத்தின் அறிவை வளர்ப்பதென்ற போர்வை யில், தமிழ் சமூகத்தின் அறிவு வளர்ச்சியை மழுங்கடித்து, ஏகாதிபத்தியங்களின் நலன்களைப் பாதுகாப்பது
இவர்கள் பல்வேறு விடயங்கள் பற்றித் தாமாகவே ஆராய்ந்தறி யுவும் இல்லை, அவைபற்றி எவற்றிலிருந்து சரியாக அறிந்து கொள்ளமுடியும் என்பதைத் தெரிந்திருக்கவும் இல்லை. அதா" வது இவர்கள் போவி அறிஞர்கள் ஆக இருப்பது.
அறிவுக் களஞ்சியம் சஞ்சிகையைப் பொறுத்தமட்டில், இவைகளில்
எவை அடிப்படைக் காரணங்களாகவுள்ளன என்பதை ஆராய்ந்தறி.
வது மிக முக்கியமானதாகும். ஏனெனில், இவை தமிழ்ச் சமூகத்தின்" எதிர்காலத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை.
முதலாவது அடிப்படைக் காரணத்தை எடுத்தால், அறிஞர் குழா மிற்குப் பொறுப்புணர்ச்சி இல்லாமலிருந்தால், முதலில் அவர்கள் அறி ரூர்களாக இருக்கவே முடியாது. மேலும், இவர்கள் தாம் கூறுவதை “ ခြု႔မျိုü சமூகம் ஏற்கும், ஏற்கவேண்டும் என்ற கொள்கைப்போக்
தூக்கி எறியப்படவேண்டியவர்களே.
இப்படியான கொள்கைப்போக்கை உடையவர்கள் தாம் தவறே "செய்யமாட்=ாதவர்கள்-எனக்-கருதுபவர்களாகும்.தமது தவறுதுளை
ஏற்று, தம்மைத் திருத்திக்கொள்ள முடியாதவர்களுமாகும்.
இதனை அவர்கள் ஏற்கனவே நிரூபித்தும் உள்ளனர். அறிவுக் களஞ்சியங்களிலுள்ள பிழையான-விபரங்களையும்-விளக்கங்களையும்
திரிபுகளையும், ஏமாற்றுக்களையும் ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டிய
போது எமக்கு அறிவுக்களஞ்சியத்திலிருந்து கிடைத்த பதில் ஒரு சமூ
-82

கத்தின் அறிஞர்கள் பிழையான விபரங்களையும், விளக்கங்களையும் கொடுப்பார்கள் எனக் கருதுகிறீர்களா? என்பதே.டட
அறிவுக் களஞ்சியம் - 2 இனை ஆராய்ந்தவைகளிலிருந்தும், அதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிவுக் களஞ்சியங்களை ஆராய்ந்தவை புகளிலிருந்தும், ஆகவே அறிவுக்களஞ்சிய ஆசிரியர் குழு, காப்பாளர் களின் கொள்கைப்போக்குகளிலிருந்தும், எமக்கு ஒன்றேயொன்று தெளிவாகிறது. அது என்னவென்றால்-அறிவுக் களஞ்சியத்தின்-முக் கிய உண்மை நோக்கம் மாணவர்களதும், சாதாரண மக்களதும் - அறிவை வளர்ப்பதல்ல்
அறிவுக் களஞ்சியத்தின்-முக்கிய உண்மை-நோக்கம்-அறிவை வளர்ப்பதென்ற போர்வையில் தமிழ்ச் சமூகத்தின் அறிவு வளர்ச்சியை மழுங்கடிப்பதாகும்
இக்கட்டத்தில் சிலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், இந்த அறிஞர்கள் தமிழ் சமூகத்தின் அறிவு வளர்ச்சியை மழுங்கடிக்க முற் படவேண்டிய தேவை என்ன? இதன்ால் அவர்கள்- அடையக்கூடிய இலாபம் என்ன? ஒன்றுமேயில்லை, ஆகவே இக்கருத்து பிழையானது -என ஆவேசத்துடன் கூறலாம்
ஆனால், இவர்களது வாதம் பிழையானது.
அறிவுக் களஞ்சியம் சஞ்சிகையில் வெளிவரும் விடயங்கள் சகல வற்றினதும் சரியான விபரங்களையும், விளக்களையும் ஒருவர் ஆங்கில Encyclopaedia க்களிலிருந்தும், வேறு கைநூல்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும் என்பது சராசரி அறிவுடைய எவருக்கும் தெரியும். அப்படியாயின் அறிவுக்களஞ்சியத்தில் பிழையான விப ரங்களும், விளக்கங்களும் தரப்படுபமை இரண்டேயிரண்டு காரணங் களால்தான் இருக்கமுடியும். அவையாவன:
1 வெவ்வேறு விடயங்கள் பற்றிய சரியான விபரங்களையும், விளக்கங்களையும் எவற்றிலிருந்து பெறுவது என்பது தெரி யாத நிலை:
2. சரியான விபரங்களையும், விளக்கங்களையும் மாணவர்களுக் கும், சாதாரண மக்களுக்கும் கொடுக்காதுவிடும் கொள்கைப் போக்கு
இவைகள் இரண்டிலும் முதலாவதுதான் காரணமாயின், இவர்கள்
போலி அறிஞர்கள் ஆக இருக்கவேண்டும்.
-83

Page 50
அப்படியிருக்க முடியாது. அவர்கள் B, A, B Se: Dip in Ed; M. A : Ph.D பட்டமெடுத்தவர்கள், அவர்கள் பல ஆய்வுக்கட்டு ரைகள், நூல்களை எழுதியுள்ளனர்; அவர்களுக்கு Encyclopaediaக்க ளையும், கைநூல்களையும் பற்றித்தெரியும் என்றவாதம் முன்வைக் கப்படுமேயாயின் அறிவை வளர்க்கவென வெளியிடப்படும் அறிவுக் களஞ்சியத்தில் ஏன் அவர்கள் பிழையான விபரங்களையும், விளக்கங் களையும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொடுத்துவருகின் றனர் என்ற கேள்வி இங்கு எழுகிறது. இங்கும், அடிப்படையில், இரண்டு காரணங்களே இருக்கமுடியும். அவையாவன:
1. அவர்களது பொறுப்புணர்ச்சியற்ற தன்மை:
2 சகியான விபரங்களையும், விளக்கங்களையும் கொடுக்காது
விடும் கொள்கைப்போக்கு
இவற்றுள் முதலாவதுதான் காரணமாயின், இவர்கள் உண்மை யில் போலி அறிஞர்கள் ஆகும். அப்படியாயின், இந்தப்போலி அறி ஞர்களில் எமது சமூகம் முழுமையாகத் தங்கியிருக்கும் நிலை தொட ருமேயாயின், எமது சமூகம் வெகுசீக்கிரத்தில் சீரழிந்து, நிலைகுலை பும் ஆபத்தினை எதிர்நோக்குகிறது.
இரண்டாவதுதான் காரணமாயின், அறிவுக் களஞ்சியம் வெளி யீட்டின் உண்மை நோக்கமானது அறிவை வளர்ப்பதென்ற போர் வையில் தமிழ்ச் சமூகத்தின் அறிவு வளர்ச்சியை மழுங்கடிப்பதாகும். இது ஒரு சமூகத்தினையே நாசமாக்கும் ஒரு நாசகாரக் கொள்கைப் போக்காகும். இது, உண்மையில், கைக்கூலிகளின் நடவடிக்கைகளை ஒத்ததாகும்.
இவை எம்மை மீண்டும் முன்னைய கேள்விகளுக்கே கொண்டு வந்துள்ளது.
இலங்கைத் தமிழரின் அறிவு வளர்ச்சி ஏன் மழுங்கடிக்கப்பட வேண்டும்? இதனால் யார், எப்படியான இலாபங்களை அடையமுடி யும்? இதனால், போலி அறிஞர் குழாம் எப்படியான இலாபங்களை அடையமுடியும்?
இத்தக் கேள்விகளுள் முதலாவது கேள்வி மிக மிக முக்கியமான தாகும். இதற்கான விடைகளிலிருந்து நாம் இரண்டாவது மூன்றா வது கேள்விகளுக்கான விடைகளையும் ஓரளவிற்குச் சரியாக அறிந்து கொள்ளமுடியும்.
-4-

இன்று இலங்கைத் தமிழ்ச் சமூகம் தமது அரசியல், பொருளா தார, சமூக, விஞ்ஞான, தொழில்நுட்ப, அறிவியல் முன்னேற்றத்
திற்கும், மேன்மையான மானுட வாழ்க்கைக்கும் தமிழீழம் என்ற
தனிநாட்டினை அமைப்பதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்தினை மிகவும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறது. ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டுமாயினும்சரி, அமைத்துக்கொள்ளும் தமிழீழத்தில் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்களைத் துரிதமாகவும், காலதாமதமின்றியும் ஏற்படுத் திக் கொள்வதாயினும் சரி, தமிழ் சமூகம் அதன் அடிப்படையறிவை வளர்த்துக் கொள்ளவேண்டியுள்ளது. குறிப்பாக எமது வருங்காலச் சந்ததியினரான மாணவ சமூகத்தின் அடிப்படையறிவை வளர்க்க வேண்டியுள்ளது.
மறுபுறத்தில், குறுகிய காலக் கண்ணோட்டத்தில் இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட வேண்டுமாயின், மாணவர்களும், மக்களும் திசை திருப்பப்பட வேண்டியதுடன், மாண வர்களதும், பொதுமக்களதும் அரசியல், பொருளாதார, சமூக அறிவு வளராது பார்க்கவேண்டியுமுள்ளது. அப்போதுதான் மாணவ சமூ கத்திலிருந்தும், மக்களிடமிருந்தும் விடுதலைப் போராட்டத்தினை வெற்றிப்பாதையில் முன்னெடுத்துச் செல்லத் தேவையான செயற் பாடுகள் இயல்பாக எழமாட்டாது.
இதனைத் தமிழ் சமூகத்தினுள் இருந்து கொண்டே செய்வது சிறந்ததாகவிருக்கும், சுலபமாகவிருக்கும்.
இராணுவ, பொருளாதார ரீதிகளிலான அழுத்தங்களைக் கொடுத் தும், தமிழ் மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் விடுதலைப்போராட்டத்திலிருந்து திசை திருப்பப்பட்ட செயற்பாடு களுக்கான எண்ணக்கருக்களைப் புகுத்தியும், விடுதலைப்போராட் டத்தினை முறியடிக்க முடியாது போகும் சந்தர்ப்பசிகள் காணப் படுமேயாயின், உருவாக்கப்படும் தமிழீழத்தில்:
1) சமூகப் பிரிவினைகளும், முரண்பாடுகளும் அதிகரிக்க வழிவகை
களை முற்கூட்டியே செய்யவேண்டியுள்ளது;
2) தமிழீழத்தில் பொருளாதார, அரசியல், சமூக முன்னேற்றங்கள் ஏற்படாது பார்க்க வழிவகைகளை முற் கூட்டியே செய்ய வேண்டியுள்ளது:
3) தமிழீழத்தில் பொருளாதார, சமூக முன்னேற்றங்களை ஏற் படுத்துவதில் நிதிகளையும், சக்திகளையும் செலவுசெய்ய
-85

Page 51
சிேபியாது தடுக்சு, இராணுவச் செலவை அதிகரிக்கவும், இரா
அவ நடவடிக்கைகளில் சக்தி வீணாக்கப்படவும் சில வழிவகை
I) இவற்றுள் முதலாவதைச் செய்வதென்றால், சமய, சாதி, பாலின L’.ī Esli பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்த
- படவேண்டி புள்ளன - ம
*ளை முற்கூட்டியே செய்யப்பட்வேண்டியுள்ளது.
வேண்டியுள்ளதுடன், மாணவர்களதும், மக்களதும் அடிப்படையறிவு
சிங்கள், சமூகம் தொடர்பாக வளராது பார்த்து, இவைகள்
தொடர்பாகத் திரிபுவாதங்களும், மிகைப்படுத்தல்களும் செய்யப்
- -
இன்று இலங்கைத் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச் 'வன் ஒன்று கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைளே, |-
இந்திய திருச்சபை, அமெரிக்கள் மிஷன்) பெந்திக்கோஸ்ற் சபை,
ஜெஹோவாவின் சீாட்சிகள், எக்காலத் தொனி, அஸ்லம்பிளி ஒவ்(f)
disti (Assembly of God) போன்ற கிறீஸ்தவ சர்வதேச அமைப்புகள்.
இராணுவ டேவடிக்கைகளின் தாக்கங்களைச் சா தகமாகப் பயன் 'டுக்கி தமிழ்ச் சமூகத்தினில் மதமாற்றங்களைச் செய்து, சமூகத்தில்நிரந்தர அடிப்படையில் பிரிவினையையும் ஏற் படுத்தி, கிறீஸ்தவ சமூகத் சினைக்கணிசமான அளவில் பெரிதாக்க தீவிரமாகச் செயற்படுகின் றன. இதற்கான நிதியுதவியும், பிரசாரங்களும் அமெரிக்கா, கனடா,
ஐரோப்பிய நீாடுகளிலிருந்து வழங்கப்படுகின்றன.
_மறுபுறத்தில், காலனித்துவ வாதிகளிடமிருந்து சைவத்தினைக் *ாப்பாற்றக் கடுமையாக உழைத்தவர்களும், சைவமும் இழிவு படுத்
திப்படும் நடவடிக்கைகள் இரகசியமாகவும், -ஊடுருவல்கள்.மூலமும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், சைவக் கடவுள்கள் )2( ,)נח, מ வாளிக்கூண்டுகளில் விசாரிக்கப்படுவது போன்ற சம்பவங்களும் தடை பெறுவது அவதானிக்கப்படலாம்.
இங்கு சமயங்கள், சமூகம் தொடர்பான அடிப்படையறிவு வள "சி"ார்க்க வேண்டியதும், திசை திருப்பல்களும் நாசகார சக்தி கிளுக்கு முக்கியமாகின்றன. இதற்குப் போலி அறிஞர்களும், போவிப் பிரசங்கிகளுமே தேல்ை, ! தாய்மை" பற்றிவிளக்குவதாயினும் இங்கு ஐரோப்பாவும், கிறீஸ்தவமும், இவைகளின் அமைப்புக்களுமே உதாரண மாக்கப்படவேண்டும்! SSSDSSu DS DDS S D SDS S u S |-
F
இவைகள் நாசகார சக்திகள் தமது நீண்டகாலதலன்களின் கண் ணோட்டத்தில், தமிழீழம் சமூக ப் பிரச்சினைகளை எதிர்நோக்க
இத்தீவிரமாகச் செயற்படத் தொடங்கியிருப்பதை எடுத்துக்
காட்டுகின்றன. ། f ༣.ri -, །
S S S S S S S S S -86- . - - - - -

II. " இரண்டாவை தச் செய்வதாயின், தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக.விஞ்ஞான-தொழில்நுட்ப அறிவு வளராது பார்க்கவேண்டியுள்ளது. -
" இதனைக் குறைந்தது இரண்டு வழிகளில் செய்யமுடியும். அவை
பாவன :
" தமிழ்ச்சமூகத்தின் கல்வியினைச் ஒழிப்பது
2iமாணவர் சமூகம்-தமது அறிவை-வளர்க்கும் முயற்சியில்
அவநம்பிக்கையை ஏற்படுத்தி, விரக்தியையும் ஏற்படுத்தி, அவர் டகளைத் தமது அறிவை வளர்க்கும் முயற்சியைக் கைவிடவைப்பது
இவற்றுள் முதலாவதைச் சிறீலங்கா அரசு பல வருட காலமாகக்
குண்டுவீச்சுக்கள், இராணுவ, மற்றும் நடவடிக்கைகள் மூலமும்,
பரீட்சைகளை நடாத்தாது பிற்போடுவதன் மூலமும், அண்மைக்-காலங்
களில் தரப்படுத்தல்" மூலமும் செய்துவருவதை அவதானிக்க முடியும்.
اق""" "Ha =H"
இரண்டாவதைப் போஜி அறிஞர்களின் கருத்தரங்குகள் மூலமும் சஞ்சிகைகள், நூல்களை வெளியிடுவதன் மூலமும்-சுலபமாகச் செய்ய முடியும். பல்வேறு துறைகளின் வெவ்வேறு விடயங்கள். தொடர் பாகிப்பின்மயான விபரங்களையும், விளக்கங்களையும் கொடுத்து, காலப்போக்கில் மாணவர்களை குழப்பமடையவைத்து, அவர்களுக்குச் -சகல-சஞ்சிகைகளிலும் நூல்களிலும் கூறப்படுபவைபற்றி ஐயப் பாடுகள் உருவாக வழிவகுத்து, அவர்களுக்கு விரக்தி ஏற்படவைத்து இதனைச் செய்யமுடியும் - - -
இங்குதான் "அறிவுக் களஞ்சியம்" சஞ்சிகையும், அதன் ஆசிரி "யர்கள், காப்பாளர்களும், அதில் கொடுக்கப்பட்டுவரும் பிழையான விபரங்களும், விளக்கங்களும், திரிபுபடுத்தங்களும், ஏமாற்றுகளும் மிக முக்கியமாகின்றன. இவற்றிற்கு மேலாக, அறிவுக் களஞ்சியங்களில் விபரங்களும், விளக்கங்களும் பிழையாக இருப்பது பற்றி எடுத்துக் கூறப்பட்டு, திருத்தங்களை ஏற்படுத்தும்படியும்; விபரங்களையும், விளக்கங்களையும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும். சரியாகக் கொடுக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தபோதும், ஆசிரியர்களும், காப்பாளர்களும், தொடர்ந்தும்-பிழையான-விபரங்களையும் விளக் கங்களையும் கொடுத்துவருவது இங்கு மிகமுக்கியமாகிறது.
III. மூன்றாவதை எடுத்துக்கொண்டால், இதனைத் தமிழ்ச் சமூகத் தினுள் வெவ்வேறு ஆயுதக்குழுக்களைடநிரந்தர அடிப்படையில் உருவாக்கி, அவற்றை ஸ்திரப்படுத்துவதன் மூலமும், தமிழீழத்தின் அயல்நாடுகளுடன் தமிழீழத்திற்கு முரண்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் செய்யமுடியும்,
-87

Page 52
ஏற்கனவே தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக்குழுக்கள் உருவாக் -கப்பட்டு, -அவற்றை-ஸ்திரப்படுத்தும்-நடவடிக்கைன்ட சிறீ-லங்கா
இந்தியா, மற்றும் ஏகாதிபத்திய சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு -வந்துள்ளன. இன்றும்-தொடர்கிறது: - - - இவைகளைப் பார்க்கும்போது-குறுகிய-காலக்கண்ணோட்டத்தில் இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்படவும், -அது இயலாது போனால்-நீண்டகாலக்-கண்ணோட்டத்தில்-தமிழர்
ழத்தினில் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் ஏற்படாது. செய்வதிலும் நாசகாரச்சக்திக்ள்ட்சல்-விழின் கையாளுவது தெளிவாகிறது.
இலங்கைத் தமிழ்ச் சமூகம் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் -வெற்றிகாண்பதாயினும் சரி, அமைக்கப்போகும் தமிழீழத்தில் அரசியல் பொருளாதார, சமூக முன்னேற்றங்களைத்துரிதமாகவும், T -தாமதமின்றியும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமாயினும் சரி, LDrror வர்களதும், பொதுமக்களதும் அடிப்படையறிவை பல்வேறு துறை களிலும் உயர்த்திக்- கொள்ளவேண்டியுள்ளது. இதற்கு பல்வேறு துறைகளிலும் வெவ்வேறு விடயங்கள் தொடாது" "தீர்வுகள் விளக்கங்கள், விபரங்களை மாண்வர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் கொடுக்கும் தரமான, நம்பகமான, பிழைகளில்லாத சஞ்சிகைகளும், நூல்களும் வெளியிடப்படவேண்டியுள்ளன. - - -
இதனையே மாணவர்களும், சாதாரண-மக்களும் ஆசிரியர்களும். அறிஞர்களிடமிருந்தும், கல்விமர்ன்களிடமிருந்தும் நம்பிக்கைபுட்ன்" எதிர்பார்க்கின்றனர். இதற்குச் சிறந்த-உதாரணம்: யாழ்ப்பானத்தைச் சேர்ந்த வேம்படி மகளிர்கல்லூரி மாணவி ஒருவர் "அறிவுக்களஞ்சியம்" "ஆசிரியருக்கு எழுதியிருக்கும் "கடிதமாகும் அவர் - - -
'அறிவுக்-களஞ்சியம் என் போன்ற மான - வருக்குப் பெரிய துணையாக உள்ளது. சிறு
"தவறுகளும்-ஏற்படாமல்- "பார்த்துக்கொள்ள
ογώ.
-- அறிவுக் களஞ்சியம்
ஆனால், அறிவுக் களஞ்சியத்தின் ஆசிரியர்களும், காப்பாளர்களும் தமிழ் மாணவ சமூகத்திற்கும், சாதாரண மக்களுக்கும், முழு தமிழ்ச்சிமு 惠 கத்திற்குமே பெரும் துரோகத்தை இழைத்துவருகின்றனர். 丁→
བཟ ==
-88


Page 53
6 TD 35
3- ܧ ܝܼܨ. ܠܘܬ
% இலங்கைத் தமிழ்பேசும் ம
சுகளினது ஆதிக்க விஸ்த களும் - பக்கங்கள் ix +
് ഖഞ67& 70 8070 - ).
 ിധീഖ്
எதிர்கால உலகமும் நாமு 1991 நவெம்பர்
பூகோள ஆதிக்க ബ് ഔട്ട0 களும், தந்திரோபாயங்களு 17| {്കെn/്.
Tanj | Inst
"Fami| |nst
చేరడైడ్రొద్ది డ్రిడ్జ్ డ్రి
KNOW
Knowledge is of Two a Subject Ourselves 0 can find information

வெளியீடுகள்
க்களின் அரசியலும், ονούουα ரிப்புக் கொள்கைத் தாக்கங் 250 - 1990 ஜூலை
கங்கள் - ix + 89 1991
ம் - பக்கங்கள் x + 92,
ப்ேபில் ஆப்புத உருவாக்கங் நம் - பக்கங்கள் XY -- 30,
i tute Of Political Studies,
Uduvi|| .
itute of Strategic Studies,
Uduwi .
yesتختر
EDGE
Kinds. We know r know where ve ирот. ii.
- Samuel Johnson.