கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 60ல் அறுபது

Page 1
ΕΕ. Ε
 


Page 2


Page 3

அறுபதில் அறுபது
ஆக்கம் :
ச. வடிவேலு
வேலழகன் வெளியீடு காங்கேசன்துறை வீதி, சுன்னுகம்
2-10-1988

Page 4
வெளியீடு : 5
முதற் பதிப்பு: செப்ரெம்பர் 1988
ஆசிரியர் :
ச. வடிவேலு, * முத்தகம் " ஊரெழு மேற்கு, சுன்னுகம்
பதிப்பித்து வெளியிட்டவர் :
ச. வடிவேலு அவர்கள்
உரிமை : நூல் ஆசிரியருக்கே
கிடைக்குமிடம் :
வேலழகன் ஸ்தாபனம், காங்கேசன்துறை வீதி, சுன்னுகம், இலங்கை
அச்சுப் பதிவு :
திருமகள் அழுத்தகம், சுன்னகம்
அறுபதாம் ஆண்டு நிறைவு வெளியீடு

சமர்ப்பணம்
பிஞ்சு உள்ளங்களை, அஞ்சு வயசிலே, ஒன்றிணைத்து, கொஞ்சு மொழியில், கஞ்ச மென மலர்ந்த இதயத்தோடு, நெஞ் சுருக, விஞ்சுபுகழ் ஓங்க, ஊரெழு கணேச வித்தியாலயத்தின் மாமர நிழல் மண்ணில் மறைதந்த அகர, உகர், மகரத்தை முதன் முதல் எழுதப்பண்ணிய கற்களில் பவளமாகவும் கல்லூரியில் பெரிய பவளக்காவாகவும் விளங்கிய, எமது முதல் ஆசிரியர் அவர்களின் நினைவாக இம் மலரைச் சமர்ப்பிக்கின் றேன்.
இளந் தலைமுறையினருக்கு அவரை இனங்காண முடியாது விடினும், ஐந்து தசாப்தங்கட்கு முந்திய மக்கள் அவரை அறிவார்கள்.
iii

Page 5
ாகற்சிந்தனைச் சுடர்
அறிவியல் மாண்பும் ஆன்ற விவேகமும் ஆய்வியல் திறன்களு மோங்கி
பொறியியல் காட்டும் புதுப்புது யுக்திகள் புந்திகொள் விந்தைகள் தேங்கி,
நெறிமுறை மானிட தர்ம சமத்துவ நீதியும் நேயமு முலகில் நின்று நிலைத்திட வென்றுங் குறையா நிதிவள மல்கிட நல்கி,
நாட்டினுக் குதவுஞ் சர்வோ தயமாங் கூட்டுற வுத்தொழில் புரிவோம் ஈட்டுறு செல்வம் காந்தி மஹாத்மா காட்டிய தார்மிக நெறிபோய்.
இல்லாமை யெல்லாம் இல்லாமை யாக்கி நல்லோர்க ளல்லாத யாரும் இல்லாத சமூகத் தெல்லாரும் வாழ வல்லாங் கெலாநின் றுழைப்போம்.
உழைப்போம்-உழைப்போம்-உழைப்பாளிகள் குலம் ஒன்று திரண்டிட அழைப்போம்.
iv

வாழததுரை
* அறுபதில் அறுபது ’ என்பது அன்பர் வடிவேலு அவர்களின் மணிவிழாவை முன்னிட்ட நல்வாசகங்க ளடங்கிய ஒரு சிறு நூலாகும். எத்தனை, எத்தனை எண் ணங்களினுலும் செயற்பாடுகளினுலும் தன்னையும் தன் குடும்பத்தையும் வாழவைக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக் கும் மாந்தர்கள் பலர் வாழும் இந்தக்காலத்திலே மற்றவர் களின் நல் வாழ்வுக்காக அறிவுகொளுத்தும் அரிய அறுபது படிப்பனைகளை வெளியிட்டுதவும் அன்பர் வடிவேலு அவர் களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.
பெற்ருேரை மதித்தல்
பெரியோரை மதித்தல்
ஞானிகளை மதித்தல் ஆகிய நற்பண்புகள் கொண்ட இப் பெரியாரின் உள்ளக் கிடக்கையைத் தெற்றெனக் காண இந்நூல் வழிகாட்டுகிறது.
* உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்’ ’
என்ருர் பாரதியார். இக் கருத்தினை மெய்ப்பிப்பவர் அன்பர் வடிவேலு அவர்கள். இதனுலேயே பயனுள்ள ஒரு நூலை எமக்கெல்லாம் தந்துள்ளார் .
இந்நூல் என்றும் நின்று நிலவி நன்மக்கள் உள்ளங் களில் ஞான மணம் பரப்பிநிற்கவேண்டுமென்றும், அன்பர் வடிவேலு இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு, வாழ்ந்து நற்பணியாற்றவேண்டுமென்றும் திருவருளைப் பிரார்த்திக் கிறேன்.
தங்கம்மா அப்பாக்குட்டி
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை, 29-88.

Page 6
வாழ்த்து
அறுபதில் அறுப தென்னும்
அரிய நூல் சமைத்தான் சொந்த அறுபது வயதில் இந்த
அதிசய நூல்வ டித்தான் அறுபது பக்க நூலில்
ஆறுதல் அளிக்க வென்ருன்
அறுமுகன் ஆசி பெற்ற
அண்ணலாம் வடி வேலன்.
* கவிமாமணி” இணுவில், ந. வீரமணி ஐயர்
2-9-1988
vi

அறிமுகம்
எழுத்துலகில் எத்தனையோ துறைகள். அவற்றிலோர் ரகம் இந்நூல். ஏதாவது புதிதாகச் செய்யவேண்டுமென்ற ஆர்வம் நிறைந்தவர் நூலாசிரியர். நினைவுமலர்களைப் பலவித மாக வெளியிடுவார்கள். இவரோ தமது துணைவியாரின் நினை வாக மணிமொழிக் கதைகளைத் தொகுத்து - இருநூல்களாக வெளியிட்டார். நினைவு வெளியீடுபற்றிய ஆய்வாளர் கூட இதைக் குறிப்பிடத் தவறிவிட்டார்கள். எவரும் முன்வராத ஒரு காரியத்தின் முன்னேடியாகக் காணப்படும் அன்னரின் புதிய கோணந்தான் இவ்வெளியீடு. எவ்வித எதிர்பார்ப்பு மில்லாமல் அவர் செய்யுமிப்பணியைப் பலர் புரிந்து போற்றி யிருக்கிருர்கள். சிந்தனைவளமும் - விவேகமும் - புதுமை உள்ளமும் கொண்ட திரு. ச. வடிவேலு அவர்கள் வெளி யிட்ட தமது ஸ்தாபனத்தின் வெள்ளிவிழாமலர் கூட வர்த்தகத்துறையிற் புதிய திருப்பமாகும். அவருக்கேயுரிய சொந்தமான முத்திரை இந்நூலிற் பொறிக்கப்பட்டிருக்கிறது. சிங்கையாழியான் எழுதிய ஆழ்கடலான் என்னும் நூலை வெளியிட்டவரும் இவரே, தரமான பதிப்பாகப் பாராட்டப் பெற்றது அந்நூல்.
தமது அன்ருட வாழ்வியலோடொட்டிய வெவ்வேறு சுவையான கருத்துக்களை - அனுபவங்களை - ஆழ்ந்த சிந்தனை களை - மனந்திறந்து புலப்படுத்தியுள்ளார். நெஞ்சிலுற்றது செய்கையில் நாட்டும் கர்மவீரர் இவர். ' உள்ளத்தைச் சொல்லுங்கள் " என்றேர் நூலை உருவாக்கவேண்டுமென் பதும் ஆசிரியரின் நீண்டகால ஆதங்கம். யார் உள்ளத் தைத் திறந்து பேசுகிருரர்கள். எவர் பெரியர் - எவர்
vii

Page 7
சிறியர், யார் நல்லவர்-யார் அல்லவர் என்றே இனம் காணமுடியாத இற்றைநாளில் உள்ளத்தை உள்ளபடி பேசு பவர் யார் ? நல்ல எண்ணங்கள் எப்போதும் நிறைவேறும். அன்னரின் நல்ல மனேதர்மமே இந்நூல் எனலாம். நான் முந்தி நீ முந்தியென அண்டவெளியிற் பறக்கும் இற்றை நாளில் - சுதந்திரமாகப்பறந்து -எவ்வித கட்டுப்பாடுமின்றி - தன் ஓட்டங்களை எழுத்திலே பாயவிட்டிருக்கிருர், தமது அறுபதாவது அகவை பூர்ணமாகி, அறுபத்தொன்றுக்கு அடியெடுத்து வைக்கும்போது இம்மஞ்சரி வெளியிடப்படுவது புத்தம்புதிய முயற்சியாகும். இன்றைய தலைமுறையினர்க்கு ஒர் எழுச்சியும் - படிப்பனையும் நல்கி, வருங்காலச் சந்ததி யினர்க்கும் ஓர் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் எமக்கு நிறைய நம்பிக்கையுண்டு. இதைப் போன்ற நவமான நூல்கள் பல வெளியாகவேண்டுமென்பது ஆக்கியோனின் ஆசை. உங்கள் விமர்சனமே இந்நூலின் ஆய்வுரையாகும்.
*" துரப்புல் ”* ஆழ்கடலான் வல்லிபுரம்,
புலோலி. 23 - 8 - 88
viii

ஆசியுரை
"சுய விவேகத்தினுல் தனது அறிவையும் ஆற்றலையும் வளம்படுத்தித் தன்காலில் தான்நின்று வாழ்பவனே வாழ்வில் இன்பம் காண்கிருன்?. - ஓர் அறிஞர். என்னைப் பொறுத்த வரை இன்றளவும் ஏட்டுச் சுரைக்காயாயிருந்த இது இன்று கறிச் சுரைக்காயாகி விட்டிருக்கிறது. திரு. சபாபதிவடிவேலுவின் சிந்தனைச்சிற்பம் அறுபதில் அறுபது. அதில் முன் முப்பது என் பார்வைக்கு எட்டியதே காரணம்.
தான் விடப்பட்ட சூழ்நிலையை நல்லதாகவே காணுதல், அச் சூழ்நிலைக்கு அடக்கமாகத் தன்னை அமைத்துக்கொள்ளல், பெற்ருேர் பெரியோர் விசுவாசம், நல்லோர் சகவாசம் இவை நான்கும் நல்வாழ்வின் அடிப்படை விழுமியங்கள். இவற்றின் அத்திவாரத்தில் எழுந்திருக்கிறது இச் சிந்தனைச் சிற்பம். இந்த அத்திவாரம் லெளகிகம், ஆத்மிகம் இரண் டுக்கும் பொது. இந்த அத்திவாரமே, தர்மம் முளை கொள் ாத் தகுந்த விளைநிலமும். நூலில் 9ஆவது அலகு தர்மம் என்றே தன்னைத் தேற்றி நிற்கிறது.
உலகநூற் கருத்துக்களைத் தொட்டெழுஞ் சிந்தனைகள் ஒருவகை. சூழல் தரும் அனுபவத்தைத் தன்னறிவாற் குடைந்தெழுஞ் சிந்தனைகள் ஒருவகை. இரண்டிலும் விவேக மிருக்கும். ஆனல், உயிரோட்டமும் உயிரூட்டமும் இரண் டாவதில் ஒரு தனி. இராஜாஜியின் உபநிஷதப் பலகணி முன்னேயவகை, கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பின்னேயவகை. வடிவேலுவின் அறுபதில் அறுபதும் இந்த வகையே. அர்த்தமுள்ள வாழ்வியல் என்றே இதுவும் பெயர் பெறலாம்.
மனித மனுேபாவங்களைக் “கிளிக்' செய்து காட்டுஞ் சேவையில் சமீபத்திய ரூஷ்யக் கண்டுபிடிப்பாகிய "இறிவியென் கமரா **வும் இவரின் அறுபதில் அறுபதும் சரிசமம்.
ஒரு குறுகியகாலப் பழக்கத்தில் இவர்பேரில் எனக்கேற் பட்டிருந்த மனப்பதிவு ஒன்றுக்கு "ஆம்" போட்டுக்கொண்டு அலகு 18இல் பதிவிருக்கிருர் இவர். பார்க்க ஆசையாகிறது.
ix

Page 8
புல்நுனிப் பணித்துளியினூடே பரந்த வானத்து வண்ண சாலங்கள் எல்லாந் துலங்கும் செட்டான இவர் சிந்தனைத் துளிகளூடே வாழ்வியல் வண்ணங்கள் எல்லாந் துலங்கும். அலகு 10இன் பிற்பகுதியினூடாக நம் வரலாற்றில் முன்னைய முதியோர் முன்னெச்சரிக்கைப் புத்திவண்ணமும் அதே வேளை பின்னைய சிலரின் பின்னேக்கில்லாப் பேதைமை வண்ணமும் ஒன்றையொன் றுராய்ந்துகொண்டு மிளிர் கின்றன.
எல்லோரும் வாசித்துத் தெளிய இதமான இவர் சித் தினை விளக்கங்களின் தரம் ஒரு தனி. எங்ஙனம்? கூட்டுத் தொழிலாற் சமூகம் இன்புறும். எதுபோல? வெந்நீர், பால், சீனி, தேயிலைக் கூட்டுறவில் பருகுவார்க்கு இதம் விளைவது போல. இதை விளங்காதார் இருத்தல் முடியாது.
மனிதன் தன் நெஞ்சறிய நல்லவனுயிருந்துகொண்டு தன் னையும் உள்ளூரக் கண்டு தன் சூழலையும் நோக்கிக்கொண்டு ஆடம்பரத்தில் தோயாமல் அர்த்தமற்ற சிக்கனத்திலும் மாயாமல் அயலாரையும் வாழ்விக்குமளவுக்கு ஈவித்துக் கொடுத்து அதற்குச் சரிக்கட்டுமளவுக்கு மூளை உழைப்பு, உடலுழைப்பு இரண்டையும் விருத்தியாக்கி, அடிமைத்தனத் தைக் குடிமைப் பண்பாக்கிவிடாமல் அமைதி பேணி வாழ்வதுண்டேல் உலகில் இன்னல் தலைகாட்டாது. இல் லாமை இல்லையாகும். நல்லார் அல்லாதவர் இல்லாதவர் ஆவர். “நாடெங்கும் வாழக் கேடொன்றுமில்லை."
இது அறுபதில் அறுபதின் எக்காளத்தொனி. இத் தொனி கேட்டெழுவோர் ஒளவை, வள்ளுவர் அடிச்சுவட் டில் தாமாகவே பதிவர்.
இவ்வளவுச்குச் சர்வ சனுேபகார சாதனங்களான இச் சிந்தனைகள் இனம் பெருகி மேலும் மேலும் பெற்றுப் பெருகிப் பெருங்கிளையாக வாழ்த்துகின்ருேம். வாழ்க இவை.
பண்டிதர் மு. கந்தையா ** சத்தி முற்றம் ', ஏழாலை மேற்கு, சுன்னகம், 20-9-88

எமதுரை
நெஞ்சம் நிறைந்த நேயர்களே, நாம் இந்தப் பூமியில் பிறந்து இன்றுடன் அறுபது ஆண்டுகள் முடியும் இவ்வேளை யில் நாம் அறிந்துகொண்ட அனுபவங்களையும் நினைவுகளை யும் சிறிது இரைமீட்டு உங்களுக்குத் தெரியப்படுத்தாது விட்டால் நான் கடமையிலிருந்து தவறியவனுவேன்.
மேலும் எமது வார்த்தைகளை முழுக்க, முழுக்க ஏற்றுக் கொள்ளாதுவிட்டாலும் நான் எனது மனது நிறைவுபெற எழுதவேண்டியவனக இருக்கிறேன்.
எமது கருத்துக்கள் எல்லாம் சரியானவைதான் என உறுதி கூறமாட்டேன். இந்த உலகம் தோன்றிய காலம் முதல் பெரியோர்கள், சிந்தனையாளர்கள், ஞானிகள் முதலி யோர் எமக்குச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்; இருக் கிருர்கள். இருந்தும் (காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு) நானும் எனது அனுபவக் கருத்துக்களைச் சொல்கிறேன். நிறைவாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். குறைவாக இருந்தால் மறந்துவிடுங்கள்.
நீங்களும் உங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்தும் கால மொன்று வரும்போது, நிச்சயமாய் உங்கள் கருத்துக்களை வெளியிடுவீர்கள். இதில் எள்ளளவும் எனக்குச் சந்தேகமில்லை. நம்பிக்கையான எதிர்காலத்துக்கு உங்களை இட்டுச் செல்லும் போது என் கருத்துக்களிலேதேனும் உதவட்டுமென்ற என் ஆழ்ந்த நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.
கூர்த்த சிந்தனையே வாழ்வின் அடிப்படை. எமது ஆத்மீக குரு, நாம் "அப்பு வென்று ஆராமையோடழைக்கும் பூனிமத் திருவாசகம் சுவாமிகளின் திருவடிகளே தஞ்சம்.
Χί

Page 9
சமையல் செய்யக்கூடிய பொருட்கள் இருந்தாற் போதுமா, அவைகளை உணவாக்கித் தரும் திறமையும் வேண்டு மல்லவா. அது மட்டுமல்ல, அந்த உணவையும் அன்பாகப் பரிமாறவும் தெரியவேண்டுமல்லவா?
எம்மிடமுள்ள அரிசி, மரக்கறி வகைகளை நல்ல உண வாக்கித் தந்த தாயாகவும், குறுக்கே இழுக்கும் மாட்டை ஒழுங்காக ஒட்டும் தந்தையாகவும், சேவையில் நண்பனுகவும், அறிவூட்டுவதில் குருவாகவும் விளங்குவது மட்டுமல்ல இந்த நூலை உருவாக்கவும் உதவிய ஆழ்கடலான் அவர்களுக்கு நாம் சிரம் தாழ்த்தி வணங்குகிருேம். மேலும் இந்நூல் வெளிவரு வதற்கு ஒத்தாசை வழங்கிய நண்பன் சிவநெறிச் செல்வர் சிவ திரு. சி. சண்முகவடிவேல் அவர்களுக்கும் எமது நன்றிகள் பல. மேலும் சிறந்த நூல்களை உருவாக்கி எங்கும் புகழ் பரப்பிக்கொண்டிருக்கும் சுன்னகம் திருமகள் அழுத்தகத் தாருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் பல பல. பண்டிதர் கலேமாணி மு. கந்தையா அவர்களுக்கும் எமது வணக்கம்.
"முத்தகம்", ச. வடிவேலு ஊரெழு மேற்கு,
சுன்னுகம்,
(இலங்கை)
2-10-1988.
xii

அஅறுபதில் அறுபது 1. பூமியில் நான்
கி. பி. ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மூன்ரும் தேதி (1928-10-3) புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் உள்ள ஊரெழு என்னும் கிராமத்தில் தந்தை சபாபதி அவர்கட்கும் அன்னை சின்னம்மா அவர்கட்கும் இரண்டாவது மகனுகப் பிறந்தேன். என்னை வடிவேலு என்னும் பெயர்கொண்டு அழைப்பார்கள். நானும் இன்று உங்கள்முன் நிற்கின்றேன்.
2. இளவயதில் உள்ள சில நினவுகள்
எமது குடும்பம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருந்தாலும் நிருப்தியுடன்தான் வாழ்ந்தோம். அதற் முக்கியமாக விளங்கியது எமது தாய் தந்தையரின் தர்மசிந்தனையே என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கை. எல்லோரும் பள்ளியில் படிப்பதுபோல் நானும் சிறிது காலம் (ஆரும் வகுப்புவரை) படித்தேன். தொடர்ந்து படிக்க எமது குடும்பநிலை இடங் கொடுக்கவில்லை. ஆகையால் எமது பாரம்பரிய தொழிலையாவது பழக எண்ணி நீர்வையூர் திரு. தம்பையா அவர்களைக் குருவாகக் கொண்டு தொழில் பயின்றேன். 'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பதை எமது பிற்கால வாழ்க்கையிற் கண்டுகொண்டேன்.
அவர்களின் தொழிற் கல்விக்கு நாம் சிரம்தாழ்த்தி ARTIšvg|Gaunt Lorras.
8. காமாட்சி அம்பாள் தொழிற்சாலை
உழைத்து வாழும் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து
பாடுபடுவதால் வாழலாம் என்னும் பெரு முயற்சியால் 1947ஆம் ஆண்டு நீர்வைக் கிராமத்தில் உதயமாகியதுதான்

Page 10
அந்தத் தொழிற்சாலை. அதில் நாமும் சேர்ந்து பத்து வருடம் உழைத்தபடியால் பல அறிஞருடனும் தொழில் விற்பன்ன ருடனும் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அது எமது பிற்கால வளர்ச்சிக்கு மிக மிக உறுதுணையாக அமைந்துள் ளது. குறிப்பிட்ட அமைப்புக்கு எமது நன்றியையும் வணக் கத்தையும் செலுத்தாதிருப்பது எப்படி ?
4. திரு. சி. க. அவர்கள்
1945-1957ஆம் ஆண்டு வரைக்கும் மகாத்மாகாந்தி அவர்களின் சிந்தனைக் கருவூலங்களை உயர்திரு. சி. க. வேலாயுதபிள்ளை அவர்கள் மூலம் அறியும் வாய்ப்பைப் பெற்றேன். அவர்களின் நிழலில் இருந்தபடியால் 1956ஆம் ஆண்டு தென் இந்தியாவில் (காஞ்சிபுரம்) நடைபெற்ற பூதான இயக்க மகாநாட்டிற்பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். மேற்படி மகாநாட்டில் பெரியார் வினுேபாவே அவர்களின் கீதைப் பேருரையில் அவர்களின் ஒப்பத்தைப் பெற்றதும் பெரியார் இராசேந்திரபாபு (ஜனதிபதி) அவர்களுடன் இருந்து போசனமருந்தியமையும் மறக்க முடியாத சம்பவங்களாகும். திரு. சி. க. மூலம் காந்தி மகானின் சிந்தனைகள் எல்லாவற்றை யும் கடைந்து நான் எடுத்த முத்து 'அமைதியாக இரு, அடிமை யாக இருக்காதே’ என்பதாகும். எமக்கு உலக வளப்பம் தெரியவைத்த அண்ணல் வேலாயுதபிள்ளைக்கு நன்றி சொல் வதற்கு ஏற்ற தருணம் இதுவாகும்.
5. ஆண்டவனின் சேலை
எம்மை ஈன்ற அன்னைக்கு எமது உழைப்பில் ஒரு சேலை வேண்டிக் கொடுக்க ஆசைப்பட்டுப் பல நாட்களாக உழைத் துச் சேர்த்த பணம் இரண்டு ரூபாயுடன், சுன்னுகம் சந் தையை நோக்கிப் போகும்போது ஆண்டவன் அருளால் மேலும் இரண்டு ரூபாய் வழியிற் கிடைத்தது. அப்பணத் தையும் சேர்த்து நான்கு ரூபாய்க்கு ஒரு சேலை வாங்கி எமது அன்புத் தெய்வத்திற்கு (முதலாவதாயும் கடைசி யாயும்) கொடுத்ததை எண்ணி எமதுள்ளம் மகிழ்ந்ததுபோல் இற்றைவரைக்கும் நாம் மகிழவில்லை.
- 2 -

6. காவற் தெய்வம்
எங்கள் அன்னை 1947ஆம் ஆண்டில் எம்மை எல்லாம் விட்டு நீங்கியதும் சுக்கான் இல்லாத கப்பல்போல் தடு மாறும்போது தனிமையாக இருந்த எமது சிற்றன்னை (அன்னமுத்து) எம் அனைவரையும் காப்பாற்றி வளர்த்ததும் அன்றி, எமது சகோதரங்கள் கல்வி அறிவைப் பெற்று முன்னேறியதற்கும் அவரே முழுக்க முழுக்கக் காரணகர்த் தாவாக இருந்தார் (இருக்கிருர்). எம்மை எல்லாம் பாது காத்த காவற் தெய்வம் - அவரே.
7. வறுமை தோற்றது இங்கே
வறுமையின் கொடுமையினிடையிலும் ஒரு நாள் (எமக்கு நான்கு வயதிருக்குமென நினைக்கின்றேன்) மழை தொடர்ந்து பெய்துகொண்டிருக்கின்றது. வீடு எங்கும் ஒரே ஒழுக்கு. ஆனல் ஒரு திண்ணை மட்டும் மிச்சம். அந்த இடத்தில் ஒரு பிள்ளையை வளர்த்திச் சிறிது நேரம் நித்திரை கொண்டபின் எழுப்பி, மற்றப் பிள்ளையை வளர்த்தி விட்டுத் தான் விடியும் வரை விழித்திருந்த செயல் ஒரு தாயை விட வேறு யாரால் முடியும்.
8. அறிவு அறிந்தபடியால் அஞ்சுகிறது
Libé517 பாரதத்தில் வரும் பாண்டுவைப்போல் (மறைந் திருந்த ஞானத்தை உடையவர்) எமது தந்தையார் ஒரு குறிப்பு மட்டும் சொல்வார்.
ஒரு நாள் இரவு எமது அயல் வீட்டில் குளறிக் கேட் டதும் உடனே போய் உதவும்படி தாயார் வேண்ட தந்தை அவர்கள் சிறிது சிந்தித்துப் போங்கள் என்று சொல்ல, நாமும் சிறிது தாமதித்துப் போகும்போது முந்தி ஓடிய அடுத்த வீட்டுக்காரர் தாங்கள் பட்டுவந்த அவமானத்தைச் சொன்னதும் நாம் தந்தையைப் பார்த்து வெட்கப்பட்டதை யும் அவர்கள் எம்மைப் பார்த்துச் சிரித்ததையும் நாம் எமது வாழ்க்கையில் கற்ற பாடத்தில் ஒன்ருகக் கருது கிறேன்.
- 3 -

Page 11
9. தர்மம் என்ருல்
பிள்ளைகளே! தர்மத்தைப் பற்றிச் சிறிது சிந்திப்போம். தர்மம் எது என்று தெரிவதே மிகச் சிரமமானது. அவை யாவன: தானம், தயை, தாட்சண்யம், ஈகை, இரக்கம், உதவி, கொடை, புண்ணியம். ஆகவே இவைகள் யாவும் தர்மத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைகளே.
முக்கியமாக நீ செய்யும் தர்மம் உன் உள்ளத்திற்கு உண் மையானவைதான் என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். எமது செய்கைமூலம் அதர்மம் வளர ஏதுக்கள் உண்டா என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தர்மம் செய்வதற்கெனப் பொருளோ பண்டமோ இல்லையே என்று கவலைப்பட வேண்டாம், உனது எண்ணமே முதற் தர்மம். நீ அன்ருடு செய்யும் தொழில் மூலமாகவே தர்மம் செய்ய லாம். பிச்சை என்று வருபவனுக்குப் பத்துக்காசு போடு வதிலும் பார்க்க அவனை நீ வழிபடுத்தி விடுவது மலை போன்ற தர்மம். நீ செய்யும் தர்மங்கள் ஏனையோருக்குத் தெரிய வேண்டுமாகில் பொருள் வேண்டுந்தான்.
(ஒரு செயல் உனக்காகச் செய்வதாயின் ஏன் பொருள் வேண்டும்) தர்மம் உனக்காகவோ பிறருக்காகவோ சிந்தித் துப் பார்.
சந்தர்ப்பவசத்தால் அதர்மம் செய்யவேண்டி ஏற்பட் டாலும் அதனுள்ளேயும் நீ தர்மம் செய்யலாம்.
உதாரணத்திற்கு ஒன்று.
காட்டுக்குட் போப் மிருகங்களைப் பார்க்க ஆசைப் பட்டு வேட்டை ஆடுபவர்களுடன் போனேன். அப்போது மான் கூட்டம் குளத்தில் நீர் அருந்த ஆயத்தப்படுத்திய வேளை துவக்குவைத்திருந்த ஒருவர் மான் ஒன்றுக்குக் குறி வைத்தார். நான் தடுத்து நீர் அருந்திய பின் சுடும்படி வேண்டியும் எம்மை உதாசீனம் செய்து அம்மானைச் சுட்டு விட்டார். பின் ஒருகால் தான் செய்த தவறுக்காக என்னி டம் கவலைப்பட்டார்.
- 4 -

வழியிற் தேங்காய் தெருவிற் பிள்ளையாருக்கு :
அதிஷ்டவசமாக பொருள் கிடைத்தால் உட்னே தர்மம் செய் என்பதே அதன் கருத்து. ஆம் பொருள் நமதேயானல் அறம் பிறர்க்காவதுண்டோ. அறிவாலும் உடம்பாலும் நீ செய்யும் தர்மத்தின் பலன் கிடைத்தே தீரும். ஆகையால் வாழ்க்கையின் அத்திவாரத்தைத் தர்மக் கல்லினல் கட்டத் தொடங்கினல் எக்காலத்திலும் உடைந்துவிழ்மாட்டாது.
10. வருமுன் காப்போம்
மனித திறமையும் உழைப்பும் திடசங்கற்பமும் ஆதிமுதல் இத்தேதி வரையும் பயன்பட்டுக்கொண்டும், வளர்ந்துகொண் டுந்தான் வருகிறது. எனினும் தஞ்சைப் பெரிய கோவிலை எப் படிக் கட்டிஞர்கள் என மூக்கிலே விரல்வைத்து அதிசயிக் கிருேம். கல்லணைக் கால்வாயை நிர்மாணித்த பொறியியலா ளரை எவருக்குந் தெரியாது.தாஜ்மஹாலை அமைத்த சிற்பியை மறந்து, அமைப்பித்த மன்னனைப் புகழ்கின்றது வரலாறு. உண்மையிலே ஒருவனதோ-சிலரதோ சிந்தனையின் செயற் பாடே இப்படியான ஆக்கங்களென்பதைச் சமுதாயம் மறந்து விடுகிறது. ஏன் மறைத்தும் விடுகிறது. தொழில் விற்பன்னன் வீட்டிலே தரித்திரதசையில் வாடுகின்ருன். ஆனல் விளம்பர தாரனும், விற்பனைப் பிரதிநிதிகளும் மேடைக்கு வந்துவிடு கிருர்கள். முதலாளியோ ஒருபடி மேலே வாழுகிருன். இச் சூழ்நிலைகள்தான் வர்க்கப் போராட்டத்தை உண்டாக்கின. உழைப்புக்கும் திறமைக்கும் உரிய இடம் கிடைக்குமளவும் இந்நிலை வளர்ந்துகொண்டே போனல் அதிலேதும் அதிசய மில்லைத்தானே.
இன்றைய பரம்பரை வருங்காலச் சந்ததிக்கு என்ன வைத்துப் போகவேண்டும், இருபத்தோராம் நூற்ருண்டு எப்படி யமையலா மென்பதை இன்றைய சூழ்நிலைகளைக் கொண்டு முன்கூட்டியே ஆலோசித்து கனதியான தரமான தரவுகளை முன்வைக்க வேண்டும். அந்த எடுகோள்கள் வருங் காலத்தில் ஆய்வுகளாயமையவேண்டு மென்ற முன்னெச்ச
- 5 -

Page 12
ரிக்கையில்லாத தனிமனித வாழ்வும் ஏன் சமுதாய நாட் டின் வாழ்வும் வருமுன்னர் காவாத வாழ்வாகும். இந்நில வைக்கோற்பட்டடைமுன் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைப்பது போன்ருகிவிடும் என்பதை எண்ணி எதிலும் எச்ச ரிக்கையாய் இருப்போம். எமக்கென்னென்று இருந்துவிட்டுக் கழிவிரக்கப்படக்கூடாதல்லவா?
11. கூடித் தொழில் செய்வோம்
நல்ல தேநீர் வேண்டுமாயின் தரமான தேயிலை வேண்டும். கலப்படமில்லாத பசும்பால் இருக்க வேண்டும். சுத்தமான வெல்லம் அல்லது சீனி வேண்டும். இவைகளிருந்தாலும் அதைப் பக்குவமாய்த் தயாரிக்கும் திறமையும் அனுபவமும் அதைவிட வேண்டியிருக்கிறது. அப்போதான் தேநீர் சுவ்ை யாயும் தரமாயுமிருக்கும். செலவிட்டதன் பெறுமதி அங்கே தொனிக்கும். அதை நுகர்ச்சியாளர் விரும்புவார். அதே வேளை ஆயாசமும்தீர்ந்துவிடுகிறது.ஆனல் சீனி, பால, தேயிலை இவை ஓரிடத்தில் இருந்து பெறப்படா விடினும் தனிப்பட்ட வெவ்வேறு உற்பத்தியாளரின் அக்கறையான கைவண்ணத் தால் முதலிடம் பெறுகின்றன. தேநீரைத் தயாரிப்பவர்க்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லாவிடினும், தனித்தனி ஒவ் வொரு உற்பத்தியாளர்களின் அக்கறையான தயாரிப்பா லவை முதலிடம் பெறுகின்றன. தேநீரைத் தயாரிப் பவர்க்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லாவிடினும் எல்லோரதும் கூட்டு முயற்சியே தரமான தேநீரைப் பெற அடிப்படையாய் அமைவது போல ;
ஒரு சைக்கிள் தொழிற்கூடத்திலும், உதிரிப்பாகங்க ளொவ்வொன்றும் தனித்தனி பிரிவுகளில் உருவாவதை அத் தொழிற்சாலையிற் காணலாம். பின்னரந்த உதிரிப்பாகங் களைப் பொருத்துபவர்-சைக்கிளுக்கு ஒரு முழு வடிவம் கொடுக்கிருர். இதை எல்லோரும் அறிவோம். இவ்வாறு கூட்டுமுயற்சியின் உயரிய உழைப்பும் திறமையும் உத்தர வாதமுமே சந்தைப்படுத்துவதற்குத் தனித்துவமான பிரக்தி
- 6 ܤܡܩܡ

யாதியைத் தேடிக் கொடுக்கிறது என்ருல் கூட்டு முயற்சியின் உன்னத நிலைக்கான மதிப்பீடு தரமான பொருளாகப் பரி மாணம் பெறும்போது கூட்டுமுயற்சியின் உன்னத நிலைக் களனே மதிப்பின் ஆதாரமென்பதை ஒவ்வொருவரும் மனதிற் கொள்ளுவதே முன்னேற்றப்பயணத்தின் நாணயக் கயிருகும்.
12. செலவல்ல சிக்கனம்
பணத்தை மட்டும் செட்டாகச் செலவு பண்ணுவதே சிக்கனமென எண்ணுகிருேம் நாம். இதற்காக, கசவஞ்சித் தனமாக நடப்பதோ வரவுக்கு மிஞ்சிச் செலவு பண்ணு வதோ ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று. விருந்துக்கு வந்தவர் களுக்கு அரைவயிற்றுணவு கொடுப்பது சிக்கனமல்ல. உணவை அள்ளிக் கொட்டிச் சிந்துவதும் வெறுக்கத்தக்கதே. கணக் காக உணவைப் பெற்று பசியாற உண்பதும் வெளியே உணவை வீசாதிருப்பதும் சிக்கணமே. இதனுல் இன்னும் பலருக்கு உணவு கிடைக்கிறது அல்லவா. பாடசாலை மாண வன் தன்கை வந்தபடி செலவழிப்பதாற் பெற்ருர்கள் பாதிக்கப் படுகிருர்கள் அப்படித்தானே. கொப்பி ஒற்றை களைக் கிழித்துக் கடிதம் எழுதுவதுகூடப் பாரதூரமான செயலே. நேரத்தை வீணடிக்காமல் ஒவ்வொரு நிமிடத்தை யும் பயனுள்ள வழியிற் பயன்படுத்துவதும் ஒருவகைச் சிக்கணமே. நாளாந்தம் ஒரு குடும்பப்பெண் திட்டமிட்ட தொகைக்குள் செலவு பண்ணிக் குடும்பம் நடத்தத் தெரிந் திருக்க வேண்டும். இன்று ஐந்து ரூபாவுக்குள் தேவையான சத்துள்ள விலை அதிகமில்லாத மரக்கறி வகைகளை வேண்டி வாழ்வது முதற்கொண்டு பைப்புத் தண்ணீரை விரயமாக் காமல் இருப்பதுகூட ஒருவகைச் சிக்கணமே. மின் விளக்கு களை வேண்டாத நேரம் தணித்து விடுவதும் இவ்வகையி லடங்கும். உடை வேண்டுந்தான். விலையுயர்ந்த ஆடைகளா யவை யமைய வேண்டுமென்பதில்லை. ஆடம்பர - அழகு சாதனங்களை விரும்பி வேண்டுவதும் மற்றவர்களைப்போல் நாமும் இருக்க வேண்டும் என எண்ணுவதும் கூட வாழ் வுக்கு வெற்றியளிக்காது. மற்று, பொருள்களைப் பேணிப் பாது
- 7 -

Page 13
காப்பதும் கூடச் சிக்கனந்தான். பற்ருக்குறை பட்ஜெட்டை வைத்து வாழ்வதை முற்ருக நிறுத்திவிட வேண்டும். பழைய தாய்மார் உலையில் அரிசி போடும்போது ஒரு பிடி பரிசி எடுத்து வைப்பார்கள். அந்தச் சிக்கணமோ காத்திர மான காரியங்களைச் செய்திருக்கிறது. இவற்றை எண்ணிப் பாருங்கள்.இத்துறையிலிப்படிச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எனவே, வாழ்வினடிப்படையான சிக்கனம் பற்றிப் பல கோணங்களில் நின்று சிந்தித்து வாழ்வோமாக.
13. இளமையிற் கல்
நீங்களெல்லாம் புதுச்சேரியைப் பற்றித் தெரிந்திருப் பீர்கள். புதுவை யென்றுமதைச் சொல்வார்கள் வெள்ளை யரின் கெடுபிடி இந்தியாவில் இருந்தபோது மஹாகவி பாரதியார் புதுவையிற் பலகாலம் வாழ்ந்து வந்தார். புதுவை அப்போ பிரான்சியரின் ஆட்சியின் கீழ் இருந்தது. புதுவை யிலேதான் அரவிந்த மஹரிஷியினச்சிரமும் இருக்கிறது. பழைய கால வீடுகளின் முன் புறத்திலே பெரிய திண்ணை யிருப்பது வழக்கம். யாழ்ப்பாணத்திலுமப்படி யிருந்த கால மொன்றுண்டு. பாரதியார் புதுவை வீதி வழியே சென்று கொண்டிருந்தார். அப்படிப் போகும்போது ஒரு பையன் வீட்டின் முன் திண்ணையில் இருந்துகொண்டு இளமையிற் கல் இளமையிற் கல் என்று ஒளவையாரின் பாடலை நெட் டுருப் பண்ணிக் கொண்டிருந்தான். பாரதியாரதைக் கேட்டு விட்டு ** இளமையிற் கல் முதுமையில் மண்" என்று கொஞ் சம் உருய்ப்பாச் சொல்லிக்கொண்டே போய் விட்டார். எவ்வளவு ஆழமான - அகலமான பேச்சு இது. இளமை யிலே படிக்கத்தான் வேண்டும். அது சிலையில் எழுத்தாய் விடும். ஆனல் இளமையிலே வைரக் கல்லுப் போல - ஜட மாய் இருந்து விட்டால் நம்மகதி யென்னவெனச் சிந்திக்க வைத்தவர் பாரதியார். அப்படி இருந்துவிட்டால் வளர வளர அவனுடைய (ள்திர்கால) வாழ்வு மண்ணுய் - வீணுய்ப் போய்விடும் என்பது அவருடைய திருஷ்டாந்தம். எனவே ஒவ்வொருவரும் இளமைதொட்டே ஊக்கமுள்ளவர்களாய்
- 8 -

கடும் உழைப்பாளிகளாய் இருந்தாற்ருன் அவர்களுடைய எதிர்கால வாழ்வு சிறப்படையும். கல்லுளி மங்களுய் இருந்து விட்டால் என்னுவது. இப்போதைக்கு அப்போது சென்ன பாரதியாரின் வாக்கு ஒரு புரட்சிகரமானது. எனவே அல் லும் பகலும் தெருக் கல்லாயிருந்துவிட்டு அதிஷ்டமில்லை யென்று நாமெல்லாம் அலட்டிக்கொள்ளலாமா?
14. தனிமனிதனும் உலகமும்
எனது வாத்தியார் மிக அனுபவம் உள்ளவர், விவேக மானவரும்கூட. படிப்பிலே கண்ணுங் கருத்துமாயிருப்பார். ஒரு மாணவன் பெரிய குழப்படிக்காரன். ஒருநாட் கூப்பிட்டு உலகப் படமொன்றைக் கிழித்துப் பல துண்டாக்கி, அதை ஒட்டிவரும்படி சொன்னர். இவனெங்கே ஒட்டப்போகிருன். குறைந்தது பத்துநாட் செல்லுமெனத் தப்புக்கணக்குப் போட்டிருந்தார். மாணவனே மூன்று மணித்தியாலத்தில் பழையபடி ஒட்டிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டான். ஆசிரியருக்கோ வியப்பாயிருந்தது. எப்படி நீ இதை ஒட்டினய் என்ருர். நீங்கள் கிழிக்கும்போது நான் அவதா னித்தேன். உலகப்படத்தின் பின்னுல் ஒரு முழு மனிதன் படமும் இருந்தது. அதை அவதானித்து மனிதனின் படத் தைச் சரியாக வரும்படி ஒட்டினேன். உலகப்படம் உருப்படி யாய் வந்துவிட்டது என்ருன். அப்பொழுது ஆசிரியரின் சிந் தளை ஓடியது. மாணவ ரெல்லாரையும் அழைத்துச் சம் பவத்தைச் சொல்லி விளக்கமும் கொடுத்தார். தனிமனிதன் எப்போ பூரணமுள்ள முழுமனிதனய் இருக்கிருனே, அப்போ உலகமும் சரியாய் இருக்கும் என்று விளக்கம் கொடுத்தார். நீ திருந்தினல் உலகமே திருந்தும் அல்லவா? இந்த உண் மையைப் படிக்கும்போது கொஞ்சம் விளக்கம் முதலிற் புரி யாமலிருக்கலாம். மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மனிதனில் மனிதனுய்-உயர்ந்த
- 9 -

Page 14
மனிதனுய் உங்களை அமைத்துக்கொண்டால் உலகில் மேன் மையான ஒரு சமுதாயம் தானே அமைந்துவிடுகிறது. அங்கே போட்டியில்லை, பூசலில்லை, அமைதியும் ஆனந்தமும் சாந்த மும் சதா நிலவிக்கொண்டே இருக்கும், இந்தப் படிப்பனே எங்கள் இதயங்களைத் திறக்கட்டும்.
15. நம்பிக்கை
பிள்ளைகளே, சொல்வதை நம்பிக் கேளுங்கள்.
நம்பிக்யைால்தான் இந்த உலகமே இயங்குகின்றது என்பார்கள் நம்புகிறவர்கள்.
நம்பிக்கை, மூடநம்பிக்கை எனப் பிரித்துச் சொல்பவர் களும் உண்டு. நம்புவதே ஒருவகையில் மூடமே.
உதாரணத்திற்கு: எட்டும்+நான்கும் பன்னிரண்டே, சூரியன் நாளை உதிக் கும். இவை உண்மையே. இதில் நம்பிக்கைக்கு இடமேயில்லை.
நாளை மழை பெய்யும், அப்பா நாளை வருவார். இவை நம்பிக்கையைச் சேர்ந்தவை.
மூட நம்பிக்கை என்ருல், தனக்கும் மற்றவருக்கும் துன்பத்கைக் கொடுத்துக், காலத்தை வீணுக்கி வாழ்வு பூராவும் சபலத்தைக் கொடுக்கும்.
ஒருவனுக்கு நம்பிக்கையாக இருப்பதால் நீயும் அதை நம்பவேண்டியதில்லை. அதேபோல் நீ நம்புவதை மற்றவர் கட்கு யதார்த்தமாக விளங்கவைக்கத் தயங்காதே. ஒவ்வொரு பழக்கவழக்கங்களும் எப்படி வந்துள்ளது, அதனிலுண்டான திரிபுகள் என்ன, உண்மைகள் என்ன, அவைகளின் செயற் பாட்டால் என்ன நன்மை, தீமைகள் விளையும் என்பதை
- 10 -

அறிந்தே நம்புவதும் நம்பாது விடுவதும் என நீ தீர்மானித் துக்கொள். ஞானி ஒருவரின் உள்ளொளியைப் பல பேர்கள் காணுதபடியால் அவர்மீது நம்பிக்கை வைக்காது இருக்கிருர் கள். நீ அவரைப்பற்றிப் புரிந்துள்ளபடியால் நம்பு. உண்மை யானவற்றைப் புரியவைப்பது உனது கடமை.
உதாரணத்திற்கு ஒன்று:
மன்னர் மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் நான் ஒரு மரணச்சடங்கில் பங்குபற்றியபோது கண்ட நிகழ்ச்சி: மயானத்திற் பிணத்தைப் புதைத்தபின் அந்த மண்வெட் டியைக் கழட்டி மறுபக்கமாக இறுக்கினர்கள். என்ன கார ணத்திற்காக அப்படிச் செய்தீர்கள் என்று கேட்டேன். அப் பாவைத் தாட்ட குற்றத்திற்காக அப்படிச் செய்வது எமது வழக்கம் என்ருர்கள். நான் எமக்குத் தெரிந்த விளக்கத்தில் உங்கள் குலத்தில் உள்ள (பெரியவர் என நீங்கள் நினைப்பவர்) வெட்டும்போது கழண்ட மண்வெட்டியை மாற்றி இறுக்கிய படியால் நீங்களும் அதை நம்பி வழக்கம் என்று செய்கி நீர்கள் என்றேன். அவர்களும் அதை ஆமோதித்தார்கள்.
படித்தவர்கள், பெரியவர்கள் என்பவர்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்குப் பூரண விளக்கங்கள் கொடுத்தால் நாட்டில் இந்த மாதிரியான மூடப் பழக்கங்கள் வளராது. ஆகையால் நம்புவது எது நம்பாது விடுவது எது என்று தீர் மானித்து (தன்னம்பிக்கைதான் வாழவைக்கும் என்ற உறுதியுடன்) வாழுங்கள்.
18. நிம்மதி
அது மனிதனிடத்தில் இல்லை என்ருல் அதைப்போலச் சங்கடம் வேறென்றில்லை. இருந்துவிட்டால் அதற்கு ஒப்பா னதும் வேருென்றில்லை.
நிம்மதி காசு கொடுத்துக் கடையில் வாங்கத்தக்கது அல்ல. சிலர் காசுகொடுத்து நிம்மதியை வாங்குவதும் உண்டு. அந்த நிம்மதி மணிக்கணக்கிற் தான் பயன் தரும்.
مس۔ 11 --سس۔

Page 15
அதனுல் அதைப் பலபேர் விரும்புவதில்லை. எந்த ஒரு பொருளிடத்திலும் அதிகப் பற்றும் வைக்கக்கூடாது. மிகுந்த வெறுப்பையும் காட்டிக்கொள்ளக்கூடாது.
அந்தக் கொள்கையைக் கைக்கொள்ளும் வீதத்துக்குத் தக்கவாறு நிம்மதியும் நிம்மதியின்மையும் சித்திக்கும். குற்றம் செய்தவர் வாழ்வில் நிம்மதி என்பதேது?
எது சுகம்?
17. அதிஷ்டம்
நிண்யாதபோது முன்வந்து நிற்பனவே அதிஷ்டமும், துர் அதிஷ்டமும், நல்ல அதிஷ்டமும் முன்னைய நல்வினைப் பயனின்படி நடக்கும் என்பார்கள். கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்றும், விழுகிற தேங்காய் வேலிக்குள் விழும் என்றும் அதிஷ்டத்துக்கு உவமானஞ் சொல்வார்கள்.
அதிஷ்டம் வந்தால் மட்டும் போதாது. அதனை அனுப விக்கவும் அதிஷ்டம் வேண்டும். வந்த அதிஷ்டத்தைப் பாதுகாத்து, சரியான வழிகளில் பயன்படுத்துபவனுக்கே அதிஷ்டம், அதிஷ்டமாக இருக்கும்.
சிலபேருக்கு வரும் அதிஷ்டத்தால் பலவித தொல்லை களும் துயரங்களும் வந்து ஈற்றில் ஆளுக்கே இறுதியாய் விடும். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் சில காலமாவது, அதிஷ்ட தேவதை அவர்களை நோக்குவாள். அவர்கள் காலத்தில், மிகவும் நிதானமாக நடந்து அதிஷ்டத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,
பாவதுன்பங்களுக்கிடையிலும் அதிஷ்டம் வரும். யோக மிருந்தும், போகமில்லாது. வாழ்பவர்களும் உண்டு. "நாய்க்கு நடுக் கடலிலிற் போனலும் நக்குத் தண்ணீர்தான்' என்று பழமொழி. உனக்கு அதிஷ்டம்வந்தால் உன் முன்னேய
س 12 سب

நிலையை மறந்து வாழாதே. ஆஞலும், அதனல் வரும் சுகத்தை அனுபவியாமலும் இருக்காதே.
ஒருமுறை அதிஷ்டம் வந்தால் அதனைத் தொடர்ந்து துர்அதிஷ்டமும் வரும் என்பதை மறந்துபோகாதே. அதிஷ் டத்தை நம்பி அதனை எதிர்பார்த்தும் வாழாதே. உன் சுய முயற்சியால் வரும் நன்மைகளை அதிஷ்டமாக நீ எண் ணிக்கொண்டால், அவ். அதிஷ்டம் ஒருநாளும் உன்னை விட்டு அகலாது,
18. நண்பன்
நண்பன் என்ருல் எப்படி இருப்பான், அவனைக் கண்டு கொள்ள முடியவில்லையே? என்று நாம் எல்லோரும் ஏங்குவ துண்டு. நட்பைப்பற்றி முற்றுமுழுதாக அறியாதுபோன ஆம் சிலவற்றைப் பார்ப்போம்.
நட்பு என்னும் குணமானது ஒத்த வயது, தன்னுடன் சமமான செல்வம், வறுமை, சூழல் ஆகிய இடங்களில்தான் தோன்றும். காலகதியில் அது பெருவிருட்சமாக வளர்ந்து ஒருவருக்கு ஒருவர் உயிரைக் கொடுப்பார்கள்போல் தோன்றும்.
தூய்மையான நட்பின்மூலம் ஒருவரை ஒருவர் நேரில் காளுதுவிட்டாலும் அவரவர்களின் செயற்பாடுகளை அறி யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்தான் உண்மை நண்பர்கள்.
உண்மையான நட்பு தன்னை வெளிக்காட்டாது; தேவைக்கு அதிகமாக மரியாதை கொடுக்கமாட்டாது;
கண்டிப்பாக இருக்கும். குற்றங்குறை காணுது; இனிக்கப் பேசாது; சுருங்கச்சொன்னல் மெளனமாக இருக்கும்.
ஒருவனை நீ சரியாக அறியவேண்டுமாயின், அவனுடன் சிலகாலம் கோபமாக இருந்துபார். அவன் உன்னைத் தூற்று கிருஞ என்பது தெரியும். நல்ல நண்பன் உன்னை விட்டுப்
-- 13 س--

Page 16
பிரிந்தாலும், உன்மீதுள்ள கருணையால், எல்லோரிடமும், உன்னைப்பற்றி அறியவே எண்ணுவான். உனது துன்பத் தில் பங்கேற்கவே ஆவலாக இருப்பான்.
நீ அழுதால் அழுபவன்தான் நண்பன். உனக்காகத் தான், நன்மையையும் விட்டுக்கொடுப்பவன்தான் நண்பன்.
அற்றகுளத்தில் கொட்டியும், ஆம்பலும்போல் இருப்ப வன் நண்பன்.
19. கணவனும் மனைவியும்
தாரமும் குருவும் தலைவிதிப்படி,
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஏதாவதொரு கற்பனையை எதிர்பார்த்தே வாழ எத்தனிப்பார்கள். ஆனல் அப்படி வாழ்வ தற்குத் தம்மிடம் என்ன நிறைவு குறைவுகள் இருக்கின்றன என்பதை எண்ணவே மாட்டார்கள். தான் எண்ணும் கற் பனைகள் கிடைத்தால் "நான் அதை ஏற்று நடத்துவேன்" என்றுதான் மேலும் கற்பனை செய்வார்கள்.
அதிகமான கற்பனைகளை வளர்த்தவர்கள்தான் வாழ்க்கை யில் அதிகமான தோல்வியை அடைந்தவர்கள் என்பதைக் காணலாம். ஒரு குறிக்கோளுடன்தான் நாம் வாழவேண்டும். ஆனல் நாம் ஒவ்வொருவரும் அக்குறிக்கோளைப் பின்பற்று கிருேமோ என்பதைக் கருத்திற்கொள்ளவேண்டும், எமது குறிக்கோள் நிறைவு பெருத இடத்து நாம் எவ்வளவு தூரம் விட்டுக்கொடுப்போம் என்பதை அவர்கள் தீர்மானித்தால் சந்தோஷமாக வாழ வழி தெரியும்.
அவனிடமோ, அவளிடமோ பல நல்ல குணங்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தான் விரும்பிய குறிக்கோளை அடையத் தெண்டிப்பதாலேயே குடும்பம் விரிசலடைகின் றது. துன்பங்களுக்கு நீயே பொறுப்பென்று சொல்லித் தான்
سب سے 14 سس۔

விலகிக்கொள்வதாலும், இன்பங்களுக் கெல்லாம் காரணம் நானே என்று முன்நிற்பதும், குடும்பம் பிரிவதற்குரிய காரணங்களில் ஒன்று.
புத்தம்புதிய வாழ்க்கையில் ஒத்துழைத்த குடும்பம் காலஞ் செல்லச்செல்ல ஏன் குழப்பமடைகின்றது என்ப தைச் சிறிது நோக்குவோம். முக்கியமாக எதிர்பார்த்ததில் நிறைவு காணுத இடத்துக் குடும்பப் பொறுப்பு வளரவும்: வறுமை தொடரவும், நோய் பிணி வரவும் தேவையான பொருட்களை வாங்கமுடியாத நிலையிலும் (ஒருவர் விரும் பாதபடியாலும்) மோகம் குறைவதாலுமே என்பது எனது எண்ணம்,
பெண் என்பது பேண் என்பதின் திரிபு. அதாவது பேணுபவள். ஆண் என்பது ஆளுமையுள்ளவன். ஆளுந் தன்மை. அதாவது பாதுகாப்பவன். குடும்பத்தில் மேலே கூறிய குணங்கள் இனம் மாறியிருப்பதையும் காணலாம்.
குடும்பம் சிலகாலம் பிரிந்து பின் ஒன்றுகூடி இருக்கும் காலங்களில் மிகவும் ஒற்றுமையாக இருப்பதைக் காணலாம். அவர்கள் தம் குறிக்கோளை மாற்றி அடுத்தவருக்காக வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தனிமையில் இருந்து உணர்ந்துள்ளார்கள் என்பதே. ஈருடலும் ஒருயிரும் போல, பூவும் மணமும் போல, பாலும் சுவையும் போல இப்படிப் பல உவமைகள் உண்டு.
இவைகளில் ஏதாவது ஒன்றைப்போல ஒரு கணவனும் மனைவியும் பெறும் இன்பத்தைச் சிற்றின்ப வாழ்க்கை என்று எவரும் துணிந்து கூறமாட்டார்கள்.
இந்தக் கணவன் மனைவி என்ற தொடர்கதையை மிக நீளமாக எழுதலாம். ஆணுல் அவை எல்லாம் பழைய கதைதானேயென்று நீங்கள் வாசிக்காமலும் விட்டுவிடு வீர்கள். இத்துடன் பூர்த்தியாக்குகிறேன்.
- 15 -

Page 17
20. நாதயமும்-நாணயமும்
பழைய காலத்திலே உலோகத்தாலான காசுதான் பாவனையிலிருந்தது. அதற்கு நாணயம் என்று பெயர். நாணய மின்றேல் உலகமே நடக்காது. நாணயமென்ற பதம் சிறப் பாக இரு அர்த்தங்களை உடையது. முதலாவது பணத்தைக் குறிக்கின்றது. இப்போ நோட்டுகளும் பாவனையுள்ள காலம். தங்க நாணயங்கள்கூடப் புழக்கத்திலிருந்தன. மற்றது விரிவான பொருளுடையது. நீ நாணயமாய் நடந்துகொள். நாக்குக் கவனம் என்னும்போது வாழ்வின் உயர்ந்த நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. பணக் கொடுக்கல் வாங்கலிலே நிதானம, வாழ்வில் நிதானம, நாக்கு நிதானம் என்றிப்படி விரியலாம் சொன்னபடி நடத்தல்-சிலர் சொல் வேறு செயல்வேருயிருப்பர். உள்ளத்திலொன்று உதட்டில் வேருயிருப்பவர்களுமுண்டு. இவர்கள் நாணயமில்லாதவர் கள். 5 ரூபாவாயினும 5000 ஆயினும் கடன் வேண்டிஞல் தருவேனென்ற வேளை தவருமல் கொடுப்பவன் நாணயவான். நாளைக்குப் பத்துமணிக்கு வருவேனென்று சொல்லி அதன் படி நடப்பதும் ஒருவகை நாணயமே. பொய் களவு வஞ்ச கம் இப்படியான தீய குணத்தை விட்டு தூய குணத்துடன் வாழ்வதும் நாணயத்தின் தூண்களாகும். எனவே பணத் துக்குப் புறம்பேயும் சிறந்த வாழ்வின் நேர்கோடாயமைந் திருப்பது நாணயமே. எப்படியும் வாழலாமென்பவர்களி லும் இப்படித்தான் வாழவேண்டுமென்பவர்களுக்கும் நாண யத்துக்கும் உறவுண்டு, நாணயந் தப்பினுற் செல்லாக்காசு தான். நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல ஒரு மனிதனுக்கு நாணயமும் - நாநயமும் அமைந்திருக்கிறது. நாணயம்+நாநயம் உடையவன் சிறப்பு மனிதன். இரண் டிற்குமடிப்படை நாக்குத்தான். நாநயம் எல்லா நலன்களி லும் மேலானது. உலகத்திலுள்ள ஆயுதங்களில் கொடிய தும் நல்லதும் நாக்குத்தான். நாவூறு கண்ணுறு பற்றிக்
- 6 -

கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. நீ நாணயமாயும் நட, நாநயத்துடனும் நட, தீயினல் சுட்ட புண் மாறிவிடும். நாவினுற் சுட்ட வடு ஆருது. எனவே, இதமாக - இனிமை யாக - மாற்ருனின் மனம்கூடப் புண்படாமற் பேசு. கடின சொல் பேசுவது பழம் இருக்கக் காயைப் பறிப்பதுபோலத் தான். மலர் இருக்க இலையைப் பிடுங்கி மணந்தது போலத் தான். இப்போது உனக்குப்புரிகிறதா, நாநயமெது நாணய மெதுவென்று. நாணயமுள்ளவன் வறி ய வ னு கலா ம். அவனுடைய நாக்குக்கு மதிப்புண்டு. அவன் நா அசைய நாடு அசையும். நாநயமுள்ளவனை உலகம் சுற்றமாய்ச் சுற்றும். உனது வாழ்வில் மெத்தக் கவனமாயிருக்கவேண்டி யவை - கேட்டிலும் உறுதி பயப்பவை நாணயமும், நாநய மும் என்பதைச் செயலிற் காட்டு. உன் சந்ததியினரும் உன் னடிச்சுவட்டிலே நடப்பார்கள். பணமும் வேண்டலாம், நாணயம் வேண்ட முடியாதது. நாநயமும் இரவலாய்க் கிடையாது. உன்னிடமே இருக்கின்றன.
21. மெளனம்
மெளனம் கலக நாஸ்தி". ! என்ப்ார்கள். மெளனத்தில் கலகம் இல்லை என்பதை முற்றுமுழுதாக ஒப்புக்கொள்ள ՓւգԱյո ֆl.
துறவியாக இருந்தால் கலகமற்றிருக்க மெளனத்தைக் கடைப்பிடிக்கலாம்.
சமுதாயத்தில் சேர்ந்து வாழும்போது, பிரச்சினைகள் சிக்கல்கள் தலைதுாக்கும்போது மெளனம் கலகத்தை ஒத்தி வைக்கும்.
அந்த அந்த நேரங்களில் மெளனத்தைக் கலைத்து பிரச்சினைகளைப் பேசித் தீர்க்காவிட்டால் பல பிரச்சினைகள் ஒன்று திர்ண்டு பூகம்பமாகிவிடும்.
நெருப்புப் பொறிதானே என்று கூரையில் வைத்து விட்டால் வீட்டையே பதம்பார்த்துவிடும்.
- 17 -

Page 18
அதனுல் மெளனம் கலைந்து உடனுக்குடன் பிரச் சினைகளைத் தீர்த்துவைத்தால் கலகம் கால்கொள்வதற்குக் காரணமே இருக்காது.
மெளனம் கலைக, கலகம் நீங்க, மெளனம் கணவன் மனைவியிடத்தும் நண்பர்களிடத்தும் பொருந்தாது. ஏனெனில், மெளனம் நீடித்தால் - பழையநிலைக்கு மாறுவது கஷ்டமாய்விடும்.
உலகத்தில் உள்ள அனைத்தும் உனக்குள்ளே இருக்கிறது. உனக்குள்ளே இல்லாத எவையையும் வெளியுலகத்திலும் பார்க்க முடியாது.
ஆனல் உனக்குள்ளே காணும் வல்லபம் இல்லாமையால் வெளியுலகத்தைப் பார்த்து ஆனந்திக்கின்ருய்.
، .. .-Zܘ .
22. சிந்தனையும் செயற்பாடும்
தனி மனிதனிடத்தில்தான் சிந்தனை பிறக்கிறது. அதுவும் தனிமையில்தான் பிறக்க முடியும்.
பிறந்த சிந்தனையின் செயற்பாட்டிற்குக் கூட்டு ஒத்துழைப்பும் முயற்சியும் தேவைப்படுகிறது. மைசூர்ப் பிருந்தாவனத்தை ஒருவன்தான் சிந்தித்திருப்பான். அந்தச் சிந்தனையைச் செயலாக்கக் கூட்டு ஒத்துழைப்பு வேண்டி இருந்தது.
மாபலிபுரச் சிற்பங்களை ஒருவன்தான் சிந்தித்திருப்பான். அந்தச் சிந்தனையைச் சாதனையாக்கக் கூட்டு முயற்சி வேண்டி இருக்கும்.
வானெலியை மார்க்கோனி சிந்தித்தான். செயற்படுத்த எத்தனைபேர் உழைக்கிறர்கள்.
தனிமனித சிந்தனையின் செயலாக்கம் கூட்டுமுயற்சி ஒத்துழைப்பில்தான் தங்கி இருக்கிறது.
۔--س 18 ----

23. உழைப்பு
வாழ்வதற்கு ஒரு வகை செய்வதே உழைப்பு. இது இருவகை. 1. சரீர உழைப்பு, 2. மூளை உழைப்பு. சரீர உழைப்பிற்கு உடம்புடன் மூளையுஞ் செயற்படவ்ேண்டும். மூளை உழைப்புக்கு மூளை மட்டுமே செயற்படும். சரீர உழைப்பையே ஆண்டவனும் விரும்புகிறன் என்று பெரியோர் கள் சொல்வார்கள். ஆனலும் எமது நாட்டு மக்களைப் பொறுத்தவரை மூளை உழைப்புக்கே அதிக கெளரவம் கொடுக்கிருர்கள். அதனல் சரீரத்தால் உழைப்பது கெளரவ மற்றது என எமது சந்ததியினர் நினைத்து இருவகை உழைப்புமின்றி நாட்டுக்கே பாரமாக இருக்கிருர்கள்.
உழைப்பாளி ஒருவன் தான் எடுத்துக்கொண்ட தொழிலையோ - கல்வியையோ ஒரு துறையிலாவது பூரணப் படுத்திக் கொள்ளவேண்டும். மூளை உழைப்பாளி தான் கற்றதை - எழுத்து வடிவத்தில் வழங்குவதால் அவன்மட்டு மல்ல சரீர உழைப்பாளியையும் வழிநடத்துகிருன். சரீர உழைப்பாளி. மூளை உழைப்பாளியின் உதவியை ஒருபோதும் வெறுக்கக்கூடாது. அதேபோல,
சரீர உழைப்பாளியின் உழைப்பின்றி நாம் வாழ முடி யாது. ஒவ்வொருவரும் தன்னல் முடிந்த உழைப்பை இந் நாட்டுக்கு வழங்கினுல் எமது நாடும் நாமும் நிறைவாக வாழலாம்.
ஆகையால் உழைப்பவனுக்கே உலகம் என்பது உண்மை யாகும்.
24. அழகு
இந்த அழகே உலகத்தை இயக்குகின்றது. அது ஆக்க வும் அழிக்கவும் வல்லமை உள்ளது. எதனுல் இவ்விரு வேலைகளைச் செய்யமுடியுமோ, அது அழியாததுவே. ஒரு வடிவம் எப்போ தோன்றியதோ - அப்போதே அழகுந் தோன்றியது. அழகு ஒரு மாயாசக்தி. இதை நம்பாதே, மயங்காதே என்றுஞ் சொல்வார்கள், இந்த அழகுக்கு ஒரு
- 19 -

Page 19
வரைவிலக்கணமில்லை. எந்த உருவத்தில் எங்கே அழகு இருக்கிறதென்று யாராலுஞ் சொல்லமுடியாது. ஆஞலும்
இந்த அழகில் மயங்கியே, ஆசையுண்டாகி, அதை அடைய அன்பைச் சொரிந்து, அந்த அன்பு கருணையாகப் பிரமிக்கும்போது, அருளாக எமக்குக் காட்சியளிக்கின்றது, இந்த அழகும். இந்த அழகில் மானிடராகிய நாம் மட்டும் மயங்கவில்லை. தேவுக்கள், தபசிகள் - முனிவர்கள், அரசர்கள் வரை மயங்கினர்கள் என வரலாறுகள் உண்டு. ஒழுங்கு என்ற அமைப்பு எங்கு இருக்கின்றதோ அங்கு அழகு இருக்கும். ஒழுங்கான ஒசைநயம் சங்கீத அழகாகிறது. கவி யழகுமப்படியே. இவர் அழகாகப் பாடுகிருர் என்ருல் அங்கே அந்த ஒழுங்கு இருப்பதாற்ருன். அந்த அழகு இந்த வடிவத் தில் எங்கே இருக்கிறது, என யாராலுஞ் சொல்ல முடியாது. ஆளுல் அழகாக இருக்கிறது என்றுமட்டும் சொல்வார்கள். அழகினல் என்ன பெறுபேறுகளை அடைந்தார்களோ அதைக் கொண்டே அவர்கள் அளப்பார்கள். அழகை அழகுக்காக இருக்க வை. உன்னே யழகாக்கும். அந்த அழகு அழகாகவும் காக்கும்.
25. கடமை
என்ன கடமை கடமை என்கிருர்களே.
அதுவா, நீங்கள் மட்டும் வாழ்ந்தாற் போதாது. மற்ற வர்களையும் வாழவைப்பதற்குப் பெயர்தான் கடமை. பலனை எண்ணுத பிழைப்பு அது. சிலபேர் ஏதோ முன் செய்த குற்றத்திற்குக் கொலைக்களம் போகும் மாடு போன்ற தோற்றமளிக்கிருர்கள்.
தாய், தந்தை, சகோதரம் மற்றும் உதவி செய்தவர்கட்கு மட்டும் நாம் கடமை செய்தாற் போதும். மேற்கொண்டு ஏன் முறிய வேண்டும் என்று எண்ணுதீர்கள். மனிதஞகப் பிறந்தவன் தன்னல் இயன்றவரையில் அடுத்த ஜீவனுக்குக் கடமை செய்வதே மனிதப்பண்பு.
- 20 -

கடமைக்கும் - உதவிக்கும் சில வித்தியாசம் உண்டு. உதாரணமாக பசியுடன் வருபவனுக்கு ஐந்து ரூபாவைக் கொடுத்து உணவருந்தி வா என்பது உதவி-அவனுக்கு எப்படியாகிலும் உணவு கொடுத்து உதவுதல் கடமை. உனக்குமட்டும் தெரிவது கடமை. மற்றவர்கட்குத் தெரிவது உதவி. இன்ன இன்னவற்றில் இருந்து நழுவக் கூடாது என்பது கடமை. உங்களுக்கு வசதி உள்ளபோது செய்வது கூதவியுமில்லைக் கடமையுமில்லை. கண்டிப்பாகச் செய்ய வேண்டியது கடமை. விரும்பினற் செய்வது உதவி.
விருப்பு வெறுப்பற்றுச் செய்வதிற் கண்ணுய் இருப்பது கடமை. கடமையைச் செய், பலனை எதிர்பாராதே,
26. பொய்யின் வலிமை
உண்மை நிலையானது; அழிவில்லாதது. பொய் நிலை யில்லாதது; நீர்க்குமிழி போல அழியும் தன்மையுடையது.
என்ருலும் பொய்யையும் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. பொய்க்கும் கூட உண்மை போல நிற்கும் தன்மையினுல் அதற்கும் ஆற்றலும் வலிமையும் உண்டு. பொய்யை உடைக்கும் வரையில் உண்மையின் இடத்தைத் தனதாக்கிக் கொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு ஒன்று,
பூமி எங்கோ ஒன்றின் மேல் நிலையாக இருக்கிறது என்றுதானே நம்புகிருேம் - அது பொய். ஆனல் பூமி அண்ட வெளியில் அந்தரத்தில் நிற்பது மெய்,
துணிச்சலையும் ஆற்றலையும் பக்கபலமாக வைத்துக் கொண்டு உண்மை வழியில் நின்ருல்தான் பொய்யின்
வலிமையைத் தகர்க்க இயலும்.
است. 21 است.

Page 20
27. காலதத்துவம்
ஒரு சூரியனுக்குக் கீழ் ஒரே நேரத்தில் பலவகை நிகழ்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அற்புதம் காலதத்து வத்தின் நிலைப்பாடேயாகும்.
ஒரு பூமரத்தை எடுத்துக் கொண்டால் காலைப்பொழுதில் மொட்டுக் கட்டுகிறது. கட்டிய மொட்டு அரும்புகிறது. அரும்பிய மொட்டு அலர்கிறது. அலர்ந்த மொட்டு மலர் கிறது. மலர்ந்த மொட்டு மலராக விரிகிறது. விரிந்த மலர் வாடி உதிர்கிறது.
அது போலவே அனைத்தும் - மானிடர்கள் உட்பட உலகிலுள்ள யாவும் கால தத்துவத்திற்குள் கட்டுப் பட்டவையே.
மனவாற்றலாலும் சிந்தனைத் தெளிவாலும் பற்றுக்களை விடுதலாலும் காலதத்துவத்திற்கு அப்பாற்படவும் இயலும்.
காலதத்துவத்தைக் கடந்துவிட்டால் காலம் செய்யும் கோலமான வளர்ச்சி, முதிர்ச்சி, தாக்கங்கள் அணுகமாட்டா.
எத்தனையோ யோகிகள், எத்தனையோ முனிவர்கள் எத்தனையோ ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்ருல் - அது காலதத்துவத்திற்கு அப்பாற்பட்ட நிலை எனக் கொள்ளலாம்.
28. முதல் வார்த்தை
தம்பி, இலண்டனில் இருந்து வந்ததென அறிந்தேன். சரி, எப்போ திரும்பப் போவது ?
ஒருமாதிரி எமது மகளுக்கும் திருமணம் நிறைவேறி விட்டது. - சந்தோஷம். மாப்பிள்ளை என்ன உத்தியோகம் ?
மச்சான் எனக்கு அடுத்த கிழமை திருமணம் = ஆம், என்ன சீதனம் ? கூட்டத்தில் இப்போதுதான் வந் தீர் கள் போல, = என்னத்தில் வந்தீர்கள் ?
- 22 -

எமக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. = நல்லது. இது எத்தனையாவது ?
தம்பியின் கடிதம் வந்தது நேற்று. = என்ன அனுப்பினவன்? எங்கள் பக்கம் நல்லமழை = இங்கு ஒருதுளிகூட இல்லை. இராத்திரித்தான் திருமலையால் வந்தனன். - எத்தனை இடத்தில் ஆமி செக்கிங்?
அண்ணை உங்கள் நண்பன் செல்லத்தம்பி காலமாய் விட்டாராம். க எப்பவாம் தகனம் ?
தம்பி கொழும்பாலை வந்தது சரி. = ஏணிப்படி மெலிந்து போஞய்?
இப்படியான முதல்வார்த்தை மூலம் தன் தேவைகளை
மட்டும் நிறைவேற்ற ஆவல் கொள்பவர்களை எப்படி அழைக்கலாம்.
29. உலகமும் நீயும்
தம்பி! உலகத்தில் நல்லவனுக வாழத்தான் வேண்டும். ஆஞல் எல்லோரும் நல்லவர்களாக வாழும்போது நீயும் நல்லவனக வாழ்வது சுலபம்.
ஆணுல் எல்லோருக்கும் ஒருவன் நல்லவனுக வாழ (tpւգսյւIn ?
அப்படித்தானே வாழச் சொல்லுகிருர்கள்.
* உன்னைத் திருத்திக்கொள். உலகம் தானகத் திருந்தும் GT6T untfissair.
உலகம் தனிமனிதன் அல்லவே. பல மனிதர்களுடைய கூட்டம் உலகம் ஆகலாம்.
அதனுல்தான் உன்னைத் திருத்தி உலகத்தைத் திருத்த முயலாமல் உலகம் திருந்திய அளவிற்கு உன்னத் திருத்திக் கொள் என்கிருர்கள். உன்னை நீ திருத்துவது இலேசு. உலகைத் திருத்த நீ யார்? உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே. உலகம் உன் சொத்தல்ல. நீ உலகத்தின் ஒரு குடி மகன். மறந்துவிடாதே.
- 23 -

Page 21
30. நீ மயக்காதே- நீயும் மயங்காதே
மகளே ! ஒன்றினுடைய உண்மையை உடனிருந்து ஆராய்ந்து பாராமல் தூரத்திலிருந்து போடும் கற்பனை தான் மயக்கத்திற்குக் காரணம்.
அங்கே பார் ! கடல் நீலமாகத் தெரிகிறது. எவ்வளவு அழகாக இருக்கிறது. பார்த்தாயா?
அருகில் சென்று பார் - அவ்வளவு நீலம் தெரியாது. கொஞ்ச நீரைக் கையில் அள்ளிப் பார் - நீலமே இருக்காது. இன்னும் உள்நுழைந்து பார்க்க விரும்புகிருயா ? கொஞ்சக் கடல்நீரை வாயில் விட்டுப் பார் !
என்ன பச்சை உப்பாக இருக்கிறதா ?
இப்போது அறிந்துகொண்டாயா ? 'தூரத்தில் நின்று பார்த்தபோது இருந்த அழகும் கவர்ச்சியும் உள்ளிட்டுப் பார்த்தபோது மருந்துக்கும் இல்லை.
இனி எண்ணிப்பார் ! நீலக்கடல் உன்னை மயக்கவில்லை. நீதான் அதைப் பார்த்து மயங்கிவிட்டாய்.
சமுதாய வாழ்க்கையிலும் அந்தத் தப்பெண்ணம்தான் பிறரை நீ மயக்குவதற்கும் - பிறரில் நீ மயங்கிவிடுவதற்கும் அடிப்படைக் காரணம் மகளே !
அதனல் வெளிப்பகட்டைப் பற்றி வாழ்க்கை அனுபவம் உனக்குக் கற்றுத்தரும் படிப்பினை இதுதான் மகளே !
நீ உன்னிடத்தில் இல்லாததை இருப்பது போல் காட்டி
மயக்காதே - அதே போலப் பிறரிடத்திலும் இல்லாததை உள்ளது போலப் பாவித்து நீயும் மயங்கிவிடாதே.
- 24 -

81. உணவு
உயிர்வாழ்வதற்கு உணவு முக்கியம், இந்த உணவை உணர்ந்து பகிர்ந்து உண்பதும் தனிச்சிறப்பு. உணவிலே எத்தனையோ வகை எத்தனையோ ருசி. இந்த ருசிக்கே முத லிடம் கொடுக்கிருர்கள். உணவில் சுகத்தோடு வாழவைக்கும் பலவகைச் சத்துக்கள் நிறையவுள்ளன. நோய்வருமுன் காக்கும் வகையில் எம் உணவு அமைய வேண்டும். உணவோடு தொடர்புடைய அத்தனையும் புனிதமாயிருக்க வேண்டும். நமது நாட்டின் சீதோஷ்ணத்துக்கு இசைந்த உணவு சிறப் பானது. வெளிநாட்டுத் தாக்கந்தான் எம் உணவமைப்பை முற்ற முழுக்க மாற்றிவிட்டது. பல நோய்களும் எம்மை வாட்டுகின்றன. இதிலிருந்து தப்ப நல்ல உணவமைப்பை நாமாகவே தேடி வகுத்துக்கொள்ள வேண்டும்.
நமது மண்ணில் மலிவான சத்துள்ள பல உணவுகளுண்டு. குறிப்பாக இலைகுழை வகை, கீரைவகைகளைச் சொல்லலாம். பொன்னங்காணி, வல்லாரல், முளைக்கீரை, கரிசலாங்கண்ணி, நிலபாவல், முடக்கொத்தான், குறிஞ்சா, சிறுகுறிஞ்சா, முசுட்டை, முல்லை, பொன்னவரசு, சண்டி, கறிமுருங்கை, பனங்கீரை, வள்ளைக்கீரை, பசளி என்பன இலகுவாய்க் கிடைக்கக்கூடியவை. நமது வளவிலேயே வளர்க்கக் கூடியன. அடுத்து கணிவகைகள் முக்கியமானவை. பருப்பு வகை, வெண்டி, கறட், போஞ்சி போன்றவற்றினை நாம் தெரிந்தெடுக்கலாம். பால், முட்டை எல்லார்க்கும் இசைந்த உணவு - சுட்டாறிய நீர் பருகல் மிக உகந்தது. தவிடு போன அரிசியிற் சத்தேயில்லை. குரக்கன், வரகு, நீரிழி வுக்குப் பொருத்தமானவை. பூடு, இலுப்பைப்பூ இரத்த அழுத்தம் வராமற் காக்கும். ஒடியல் பிட்டு மிக மேன்மை யான உணவு.
உணவை நேரம் தவருமல் உண்ணுவது, அளவாய் உண்ணுவது, தொடர்ந்து ஒரேவகையான உணவை உண்ணு திருப்பது, உண்டபின் நீர் அருந்துவது, சிறிது நேரம்
بسسس 25 سم.

Page 22
உலாவுவது நல்ல பழக்கங்களாகும். மாமிச உணவில் நிறையச் சத்துக்கள் உண்டு. நமது குணங்களை மாற்றும் தன்மையுள்ள வற்றைத் தவிர்த்தல் நன்று. உணவினமைப்பினல் இந்திரியங் களைக் கட்டுப்படுத்தி வாழ்கிறர்கள் யோகிகள். சில நாட்க ளில் உபவாசமிருப்பதும் நன்று. எல்லாவற்றுக்கும் மேலாக நீங்களுண்ணும்போது மேலும் ஒரு சீவனுக்காவது கொடுத்து உண்ணுங்கள்.
32. உயர்ந்தோர்
'நல்கூர்ந்தார் ஆணுலும் இல்லையென மாட்டார் இசைந்து". புலி பசித்தாலும் புல்லைத் தின்னது. அதனல் எக்காலத்தும் புல்லைத் தின்ன முடியாது. ஆனபடியாலது உயர்ந்ததல்ல. சிங்கம் தன் இரைமீது ஒரு முறைதான் பாயும், தவறினல் பின்னெருகால் பாயாது. ஆகையால் அது உயர்ந் வரிசையில் இடம்பெறும். குப்பைக்குள் குண்டுமணி யிருந்தாலும் அதன்மீது அழுக்கேறது. அது உயர்ந்தது. தன் எதிரியானுலும் அவன் செய்யும் ‘நல்ல செயல்களை மதிப்பவன் பெரியவன். மல்லிகை பகைவன் வீட்டி லிருப்பினும், மணந்தரும்.
ஒவ்வொரு செயலையும் தனித்து ஆராய்பவன் உயர்ந் தோன். யானைக்குப் பூனை சரியென்று வாதிப்பவனதில் அடங்க மாட்டான். மற்றவர்களிடமில்லாத உயர்ந்த அம்சங்கள் உள்ளவன் உயர்ந்தோன். ஒருவன் செய்த உதவிக்காக மற்றவன் கெடுதி செய்தால்தை மன்னிப்பவன் உயர்ந்தோன். மறந்தும் பிறருக்குத் தீங்கு நினைக்காதவன் உயர்ந்தோன். மற்றவர்களை உயர்த்துபவன் உயர்ந்தோன். தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிறருடைய பொருளைத் தீண்டாதவன் உயர்ந்தோன். மனித நேய தெரிந்தவன் உயர்ந்தோன். சந்தனம் தயத்தேய மணந்தரும். பட்டை போடப்போட வைரம் பளபளக்கும், பால் அதிகம் காய்ச்சினுலும் சுவை குன்றது. அதேபோல உயர்ந்த பண்பை வளர்ப்பவன் உயர்ந் தோன். உள்ளத்தளவே உயர்வு.
۔۔۔۔۔۔ 26 ------

38. வறட்டுக் கெளரவம்
மக்களே ! இந்தப் போலிவேஷம் என்பதே வறட்டுக் கெளரவம் என்பது.
உள்ளதைப், பட்டவர்த்தனமாகக் காட்டுவதே உண்மை யான கெளரவம். அதை விடுத்து நாம் செய்யும் செயல் மூலம் உண்மையை மறைத்து (மறைப்பதென நினைத்து) கடைசியில் ஏமாந்து போகிருேம். நண்பனைக் கண்டவுடன் தனது குறைகளை மறைப்பது, மற்றவர்களின் பொருளா தாரத்திற்குக் குறைவில்லாதவன் போல் நடப்பது, தேவைக்கு மேல் புகழ்வது, அழகுபடுத்துவது, கல்விமான், புத்திமான், பக்திமான், கொடையாளி போற் காட்டிக்கொள்வதெல்லாம் வறட்டுக் கெளரவமே. மேலும் தன்தகுதிக்கு மேற்பட்ட உடை அணிவது, இரவல் நகை, உடைகளைப் பாவிப்பது, வேறு இனத்தவரின் எல்லாப் பழக்க வழக்கங்களையும் கொப்பி அடிப்பது முதலியன எல்லாம் வறட்டுக் கெளரவமே,
ஒரு சந்தர்ப்பத்தில்
எமது நண்பர் டாக்டர் சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்களின் வீட்டிற்கு ஒருமுறை போனபொழுது “அம்மா எமக்கு வேண்டிய ஒருவர் வந்துள்ளார். ஏதாவது தாக சாந்திக்குக் கொடுங்கள்" என்று சொன்ன வார்த்தையில் உள்ள கெளரவத்தையும் அதன் தூய்மையையும் எம்மால் இற்றைவரை இரைமீட்காமல் இருக்க முடியவில்லை.
தான் விட்டுக்கொடுத்தால் அகெளரவம் என நினைத்துத்
தானும் அழிந்து மற்றவரையும் அழிப்பதே இந்த வறட்டுக் கெளரவம்.
ஆகையால் போலியாக நடவாதீர்கள்.
س- 27 --م

Page 23
34. uuJib
தனிமைதான் பயத்திற்குக் காரணம் என்று பொதுவாகச் சொல்லுவார்கள்.
பயம் இயற்கையாக எல்லோருக்கும் உண்டு. அதை அவரின் சிந்தனையின் துணை கொண் டு கூட்டவோ குறைக்கவோ முடியும், அறிவாளிகள் அதிகமாகப் பயப் படுவதும் உண்டு. வரும் தீமைகளை முன்கூட்டியே அறிவதால், அறிவுகுறைந்தவர்கள், அதிகம் பயமில்லாது அதிக தீவினை களையும் செய்வார்கள்.
உண்மையே குறிக்கோளாக வாழ்பவன் அதிகம் பயப்பட மாட்டான், மூடப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பவன் அதிக மாகப் பயப்படுவான்.
மனிதன் இறைவனை வணங்குவதும் பயத்தினுல் என்று நான் சொன்னுல் நீங்கள் நகையாடுவீர்களா? அதிக பயத்தி ஞல் அவன் தன்நிலையை மறந்து ஒரு சுத்தவீரனுகச் செயற் படுவதையும் காணலாம். காரணம் தன்மீது இருக்கும் அதிக பற்ருகவும் இல்லை. தன்னை அழிக்கத் தயாராகும் நிலையிலும் பயம் அற்றவனுக இருப்பான்,
பயம் உள்ளவன் எப்போதும் சந்தேகப் பிராணியாக இருப்பான்.
எதையும் எதிர்கொள்பவன் எப்போதும் பயமின்றி வாழ்வான்.
பயமின்றி வாழ்வதற்கு ஒரேஒரு வழி இறைவனிடம் சரணுகதி அடைவதே.
நீதிக்காகப் போராடுவது வீரம். முடிவு அறியாது செய்யும் செயல் துணிபு:
- 28 -

35. சோதிடம்
சோதித்துத் திடப்படுத்திக்கொண்டு வழங்கிய அறிவே சோதிடம். ஒருவகைச் செயலால் (நடைமுறையில்) தொடர்ந்து தீமை நடந்தாற் தீமை எனவும், நன்மை நடந்தால் நன்மை என்றும் அறிந்து, அந்த அனுபவத்தால் வந்தவைகளைத்தான் எமக்குச் சோதிடமாக எழுத்துவடிவில் வழங்கியுள்ளனர் அறிஞர்கள்.
இப்படியான கணிதமேதைகள் - சிந்தனையாளர்கள் - ஒரு வழிமுறையைப் பின்பற்றி இருந்திருக்கமாட்டார்கள் என்பதே எமது நிலைப்பாடு. ஒவ்வொருவரும் சொல்லும் சோதிட நிலையில் பல கருத்து வேறுபாடுகள் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம். அதனல் எப்போன்றவர்கள் திக்குமுக்காடுகிருர்கள். இருந்தும் நாம் எமது அனுபவ - அறிவு - ஆற்றலைக்கொண்டும் நடைமுறையில் உள்ள அனுபவங்களாலும் வாழப் பழகவேண்டும்.
முக்கியமாக ஒவ்வொருவரும் எமக்கு இப்போ நல்ல காலம் நடக்கிறது என்ற மனநிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒருவனது வாழ்வின் நிலைப்பாட்டை முன் கூட்டியே எழுதி வழங்குவதற்குப் பெயர் சாதகம். சாதகத்தைச் சாதகனுக்குச் (சாதனை செய்பவனுக்கு) சாதக மாக எழுதுக என்ருெரு வழக்குமுண்டு.
சோதிடக்கலை முற்றுமுழுக்க அனுபவ முதிர்ச்சியால் வளருங் கலை , அனுபவங்கள் முடிவதில்லை. ஆகையாற் சோதிடமும் முடிவதில்லை. உங்களுக்கு நான் சொல்லும் அறிவு எதுவானுல், சோதிடத்தை வெறுக்காதீர்கள். நீங்களே உங்களுக்குச் சோதிடனகிக் கொள்ளுங்கள்.
سه 29 سست

Page 24
38. இருக்குமிடத்தில்
எப்பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் அதற்கொரு மெளசுண்டு. நீதிபதி சிம்மாசனத்தில் இருந்து சொல்லும் ஒவ்வொருசொல்லும் கட்டளையாகும். வெளியே இருந்து சொன்னுல் அது வெறும் பேச்சாகும். அதிகாரத் தில் இருக்கும்போது நிலைவேறு, விலைமதிப்புள்ள பொருள் அழகான, பாதுகாப்பான இடத்தில் இருந்தாற்ருன் கவர்ச்சி யாக இருக்கும். ஆசிரியர் என்பவர் சொல்வது எல்லாம் படிப்பித்தலே. டாக்டர் பட்டம் உள்ளவர் சொல்லும் மருந்தைத்தான் குடிப்பார்கள், தர்மம் தெரிந்தவன் சொல்வதுதான் தர்மம், மன்னன் அவன் நாட்டிற்ருன் மன்னன். உன் வீட்டுக்குத்தான் தலைவன் நீ. அறிஞன் - அறிஞர்கள் கூட்டத்திற்ருன், அது அறிவான வார்த்தை பேசுகிறவனறிவில் கேட்பவனுமிருக்க வேண்டும். 'பெண் சிரிச்சால் போச்சு - பொயிலை விரிச்சால் போச்சி" என்று பழமொழியுண்டு. நாம் உணவுக்காக உழைக்கிருேம் - அதே உணவுப் பார்சல் ஒன்று வழியில் இருந்தால் அதை எடுத்து உண்போமா ?
ஏணிவைகள் எல்லாம் இருக்கவேண்டிய இடத்தில் இருக்காதபடியால் அவைகளின் பெறுமானங்கள் எல்லாம் - கானல் நீராகிவிட்டன. கருடனும் பாம்பும் இந்தநிலைதான். இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாஞ் சுகந்தான்.
37. தியாகம்
தியாகத்தில் உயிர்த்தியாகமே உயர்ந்தது என்று அதிகம் பேர் சொல்வார்கள். ஆனல் உயிர்த்தியாகி - தன்னை அழித்த பின்பே - தியாகத்தின் சாயல் ஏனை யோருக்குத் தெரியும். அதுவுமன்றி அவனுக்கே தெரியாது தான் செய்த தியாகம் எப்படிப்பட்டதென்று. ஆகையினல்,
உயிர்த்தியாகத்திலும் பார்க்க உபத்திரவத்தை ஏற்றுச் சாதனை செய்வதே தியாகத்தில் மிகஉயர்ந்தது.
- 30 -

பத்திரிகையில் ஒருவருக்குச் சிறுநீரகம் ஒன்று தேவை என அறிந்து தனது சிறுநீரகம் ஒன்றைத் தியாகம் செய்ய முன்னிற்பவனின் தியாகம் உயர்ந்தது. ஒரு உயிரைக் காக்க இரத்ததானம் செய்தலும் தன்னலமற்ற தியாகமாகும். ஞானவாழ்விற் கண்ணப்பன் காட்டியது போல - உலக வாழ்வில் அவனுயிருடன் இருக்கும்போதே தனது கண்ணைக் கொடுப்பவனின் தியாகம் உயர்ந்தது.
வறுமையின் கொடுமையாலோ, இல்லை ஏமாற்றப் பட்டதிகுலோ, வாழ்விற் சறுக்கி விழுந்தவளுக்குப் பகிரங்க மாக வாழ்வளிப்பதும் மிக உயர்ந்த தியாகமாகும். தான் உணவின்றித் தவிக்கும் நேரத்திற் கிடைத்த சாப்பாட்டை தியாகம் செய்வது தியாகத்தில் உயர்ந்தது. நான் சொல்லித் தந்த தாரக மந்திரத்தை நீ யாருக்கும் சொன்னுல் உனக்கு நரகந்தான் கிடைக்குமென ஆச்சாரியார் சொல்லியும் தான் நரகமடைந்தாலும் பறவாயில்லை. எல்லாரும் வைகுந்தஞ் சேரட்டுமெனப் பகிரங்கமாகச் சொன்ன இராமானுஜரின் செயல் தியாகத்தில் உயர்ந்ததே.
38. áfÚl
சிரிப்பது உடம்பிற்கு நல்லது. உள்ளத்திற்கும் நல்லது. உள்ளத்தில் உடம்பிலுள்ள நோய்களே சிரிப்பதனுல் அகன்றுவிடுமாம்.
மனிதன் ஏன் சிரிக்கிருன் ?
கண்ணுல் காணும் காட்சியோ, அல்லது காதால் கேட்கும் செய்தியோ, அல்லது புத்தகத்தில் படிக்கும் சம்பவமோ அவன் பெற்ற அனுபவத்தை விடத் தாழ்ந்ததாகவோ, கிண்டலாகவோ, கேலியாகவோ இருப்பதளுல் சிரிப்பு வருகிறது.
பிறருடைய மனதைப் புண்படுத்தாத வகையில் சிரிப்பு அமைவது அபூர்வம்.
அதனல் நாம் பிறரைப் பார்த்து எதற்காகச் சிரிக் கிருேமோ அந்தக் குறையை நம்மிடத்தில் கண்டு பிறர்
- 31 -

Page 25
சிரிக்காத வண்ணமாக நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயல்வோமானுல் பிறரைப் பார்த்து நமக்குச் சிரிக்க வராது. ஆணுல் பிறர் நம்மைப்பார்த்துச் சிரிக்கவும் கூடாது. நாம் பிறரைப் பார்த்து நகைக்கவும் கூடாது. துன்பம் வரும்போது சிரி என்கிருர் வள்ளுவர்.
39. காதல்
காதல் இன்றேல் சாதல். இதுதான் இன்றைய திருமந்திரம்.
தன்னை வழிப்படுத்தமுன் காதல் கொள்வதனுலேதான் இந்த நிலை, ஞானிகளுக்குப் பார்த்த இடமெல்லாம் ஆண்டவ ஞகத் தெரியும். ஆனல் இந்தக் காதலுக்கோ அதைவிட வேறு ஒன்றும் தெரியாது.
அதனுல்தான் என்னவோ கண்கெட்ட காதல் என்றர்கள்.
ஆண், பெண் இருவருக்கும் உள்ள உடலின்பத்தின் அவாவே காதல் என்று பொதுவாகச் சொல்வார்கள்.
ஆளுல் காதல் அவைகட்கு மட்டுமல்ல என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும்.
இப்போது நாம் இன்றைய ஆண், பெண் காதலைப் பற்றிச் சிறிது நோக்குவோம்.
கண்டதும் காதல். இது ஒருவித மயக்கம், அழகை மட்டும் கருவாகக்கொண்ட காதல் அழகும் அழியத் தானும் அழிந்துவிடும், தன் குறிக்கோளை மட்டும் விரும்புவது ஒருதலைக் காதல். நானும் ஒருவரைக் காதலிக்கிறேன் என்ப தற்காக ஒரு காதல். அவளின் பொருளாதாரத்தால் ஒரு காதல். அவன் புகழுடன் இருக்கிருன் என்பதற்காக ஒரு காதல், அவனின் உழைப்பில் வாழலாம் என்ருெரு காதல். இப்படியான சில எதிர்பார்ப்புகளை எண்ணியே இன்றைய காதல் தொடங்குகிறது. எதிர்பார்ப்பது கிடைக்கவில்லையே யாயின் காதலும் இல்லைக் கடமையும் இல்லை.
۔۔۔ --۔ 32 - مسیس۔

ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளக்கூடிய வழிகளை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். அவர்களின் உடல்நிலை (நோய்நொடி), அடிப்படைக்குணம் உழைப்பின் தன்மை, பொதுவிவேகம் முதலியவற்றை அறிந்தே காதலிக்க வேண்டும்,
முக்கியமாக நாம் இருவரும்தானே வாழவேண்டியவர் கள் என நினைத்து மற்றவர்களை (உறவினர்களை) உதாசீனம் செய்யக்கூடாது. ஏன் என்ருல் அவர்களாலே நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம் என்று நன்றி மறவாது இருக்க வேண்டும்.
40. அடிமணம்
ஆழ்கடலில் வாழும் சில உயிரினங்கள் மாதமொரு முறையோ, இருமுறையோ மேலேவந்து தமக்குத் தேவை யான பிராணவாயுவைப் பெற்றுக்கொள்வதைப்போல,
உங்கள் மறைமணங்களில் (அடிமணம்) இருக்கும் அறிவு என்பது சிலநேரங்களில் உங்கள் சுயசிந்தனைக்கு வரும். அப்போது எல்லாம் தெரிந்தது போல் ஒரு உணர்வு உண்டா கும். அதே நேரங்களில் நீங்கள் சொல்வது செய்வது எல்லாம் சரியாக நடக்கும். நடப்பதையும் நீங்கள் அறிந் திருப்பீர்கள்.
உதாரணத்திற்கு உங்களையறியாமலே உங்கள் மனம் காரணமின்றி வெறுப்பாகவும், விருப்பாகவும் இருப்பதை அறிவீர்கள். அவ்வெண்ணத்தை உங்கள் அந்தராத்மா வெளியே தெரியப்படுத்துவதால் அப்படியே நடந்து கொள் ளுங்கள். சில காலங்களில் நடப்பவைகளை முன்கூட்டியே நீங்கள் அறிந்தும் வெளியிற் சொல்லமுடியாமல் இருப்பதை யும் - சிலவேளை சொல்லக் கூடியதாகவும் இருக்கும்.
எம்வாழ்க்கையில் ஒன்று. யாழ்ப்பாணம் சென்றல் கொலீஜ் (மத்திய கல்லூரி) முன்வளவுக்குள் மறைந்த கலைப்புலவர் நவரத்தினம் அவர்
- 33. --

Page 26
களும் வேறு இருவரும் பேசிக்கொண்டு நிற்கிருர்கள். நான் முன்வீதியால் துவிச்சக்கரத்தில் வருகிறேன். தற்சமயமாக அவர்களைப் பார்க்கிறேன். ஐயோ! இந்தப் புலவர் இன்று இறக்கப்போகிருர் என்றது என்மனம். ஆளுல், நான் அதிற் சிரத்தைகொள்ளவில்லை ; மறந்துவிட்டேன்.
மறுநாட்காலை எமது அடுத்த வர்த்தக ஸ்தாபனமாகிய திருமகள் அழுத்தகம் பூட்டி இருப்பதையும் புலவர் காலமா னதையும் அறிகிறேன். ஆகையால் உங்கள் அடிமனது சொல்லும்படி நடவுங்கள், பழகுங்கள்.
41. நிறைவு எங்கே!
நிறைவைத் தேடுபவர்களே இங்கே பாருங்கள். மருத்துவமனைக்கு வாருங்கள், பாருங்கள். உங்களிலும் பார்க்கக் கொடியநோயால் வருந்துபவர்களைப் பாருங்கள். உங்களுக்கு அதிக நோயில்லைத்தானே. ஆகையால் நீங்கள் நிறைவாக இருக்கிறீர்கள். நீங்கள் இன்று இருமுறை உணவருந்தியும் ஒருமுறைக்கு இல்லையே என்று ஏங்கு கின்றீர்கள். இருநாட்களாக உணவு இல்லாத குழந்தைகளைப் பாருங்கள். உங்களுக்கு நிறைவுதானே வரும்.
அவளின் சேலையிலும்பார்க்க நமது சேலை நல்லதுதானே. அதிலும் ஒர் நிறைவு. அவனின் சைக்கிளிலும் பார்க்க எனது சைக்கிள் நல்லது ஆகையால் எனக்கு என்ன குறைவு எமது வீட்டில் T. W. உண்டு - அங்கே இல்லை என்பதில் ஒரு மகிழ்ச்சி. சென்ற காற்றுக்கு எங்கள் வாழை முறிந்தது குறைவு. ஆகையால் ஒரு திருப்தி. அவனுக்கோ ஒரு குழந்தையுமில்லை ; எமக்கு நான்கு பிள்ளைகள். அதில் ஒரு நிறைவு. எமக்கு இருக்க ஒரு வீடுண்டு, ஆனல் அவர்கட்கோ அதுவுமில்லை. ஆமி அவருக்கு நல்லாயடித்ததாம், நான் மட்டும் அடிவேண்டாது தவறிவிட்டேன். எவ்வளவு அதிஷ் டம். நான் செய்த புண்ணியம்தானே.
இப்படியான எண்ணங்களை முன்வைத்து நடந்தீர்களா ஞல் எப்போதும் நிறைவாக இருக்கலாம்.
- 34 -

42. சோதனையும் வேதனையும்
சோதனையா என்ன வேதனையைக் கிளப்புகின்ருய்.
சோதனையென்றவுடன் ஏதோ பாடசாலையில் நடப்ப தாகவோ, அன்றி, பரீட்சை மண்டபத்தில் (Exam Hall) நடப்பதாகவோ - போட்டிக்கு முன்னிற்பதாகவோ எண்ணி விடாதீர்கள், வாழ்க்கையில் வரும் சோதனைகளைப் பார்ப் போம். குழந்தையிற் தொடங்கிக் கல்லூரியில் இருந்து வெளி யேறும் வரை கல்வியிற் சோதனை -தொடர்ந்து ஒரு தொழில் கிடைக்கும்வரை சோதனை. தொழில் எடுப்பதற்காகக் காக்காய் பிடிப்பது ஒரு சோதனை. பின் காதலில் சோதனை. தோற்ருல் வேதனை. பெண்பார்க்கும் படலத்திற் சோதனை. அடுத்துவரும் சோதனைகள்தான் மிக வேதனை. மனையாளுக்கு விரும்பிய பொருட்களை வேண்டிக் கொடுக்கவில்லையே என்ற வேதனை. கொடுத்தும் திருப்திப்படுத்த முடியவில்லையே யென்ற சோதனை. குழந்தையொன்று இல்லையேயென்ற வேதனை. அதனுல் வரும் பிணக்குகளைத் தீர்ப்பதில் ஒரு சோதனை, குழந்தைகளை வளர்ப்பதில் சோதனை, குழந்தையின் நோயைச் சுகப்படுத்த வேணுமே யென்ற வேதனை. பெற்ற தாய் தந்தையரைக் காப்பாற்றவேண்டுமே என்ற சோதனை. சகோதரியை வாழவைக்க வேண்டுமேயென்ற வேதனை. இப்படிப் பல கோணங்களில் வரும் வேதனைகலந்த சோதனை களில் அவன் வெற்றிவாகை சூடினனேயானல்தான் உலகம் அவனை மனிதஞக ஏற்கும். ஆகையால் வாழ்க்கையில்வரும் வேதனையுடன் கலந்த சோதனைகளில் நீங்கள் ஒரு சாதனை புரியுங்கள்.

Page 27
43. செல்வம் எது?
செல்வம் என்ருல் சொத்தோடு சம்பந்தமுள்ளது.
அருட செல்வம், கல்விச் செல்வம், மழலைச் செல்வம் என்று எல்லாம் பேசப்பட்டாலும் செல்வம் என்ருல் பொருட் செல்வத்தைத்தான் எல்லோரும் நினைப்பார்கள்.
பொருட்செல்வம் நமக்குப் போதும் என்று திருப்திப் படடவர்களைக் காண்பது அரிது.
இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும் என்று செல்வத்தை ஈட்டிக்கொண்டிருந்தாலும் செல்வம் தேய்ந்து கொண்டிருப்பதற்கான செலவும் வந்துகொண்டுதான் இருக்கும்.
செல்வம் அதிகரிக்க அதிகரிக்கக் குடும்பத்தில் அமைதி யின்மையும் வளர்ந்துகொண்டுதான் இருக்கும்.
கணவன் மனைவி ஒரு சேலையை இரண்டாகக் கிழித்து உடுத்து கஞ்சியையே மகிழ்ச்சியோடு குடிக்கும் ஒற்றுமையை, நிம்மதியை, குடும்ப உறவை அங்கே காணலாம்.
அதனற்தான் ஆன்ருேர்கள் - செல்வம் என்பது பணப் பெருக்கம் என்று சொல்லாமல் "செல்வம் என்பது சிந்தை யின் நிறைவே" என்ருர்கள். எனவே, ஆசைதான் வறுமை யென்று அடுத்துக் கூறியிருக்கிருர்கள். ' போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து." இச்செல்வத்தை நாமே ஆக்கிக்கொள்ளலாம் அல்லவா ?
۔۔۔ 36 -۔

44. ஏமாருதே - ஏமாற்றதே
புகழ்ச்சியில் மயங்காதவர் இந்த உலகில் இருப் பார்களோ,
அதைக் கருவாக வைத்தே ஏமாற்றலாம் என்ற எண்ணம் வருகின்றது. ஏமாற்றுவதில் பலவிதங்கள். உதவிபுரிபவனைப் போல், அப்பாவிபோல், அழகொழுகப் பேசுபவனைப்போல், அதிகம் தெரிந்தவன்போல், செல்வந்தன்போல், கடவுள் பக்திமான்போல் இப்படிப் பலகோணங்களில் இருந்து வரும் ஏமாற்றுதல் என்பது.
சிலபேர்கள் தன் புத்திக்கூர்மையால் முன்னேறுவதை விடுத்து மற்றையோரை ஏமாற்றி முன்னேறுவதை ஒரு கலையாகக் கொண்டிருக்கின்றர்கள்.
ஒருவன் தான் நிற்கவேண்டிய, நடக்கவேண்டிய, செயற்படவேண்டிய இடத்தில் இருந்து மாறுபட்டு இருப் பானேயானல் அவன் எம்மை ஏமாற்றுகிருன் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒருவனை நீ ஏமாற்றி வாழ்வதில் நீயே ஏமாறுகிருய் என்பது உனக்குத் தெரியாது.
இரக்க சிந்தனை உள்ளவனும் மூடபக்திநிறைந்த அப்பாவி
களும்தான் ஏமாற்றப்படுகிருர்கள். அவர்களை ஏமாற்றுவது பேடித்தனம்.
யாரையும் நீ ஏமாற்ருதுவிட்டால் யாரும் உன்னை ஏமாற்றமுடியாது.
ஏமாருமல் இருப்பதற்கு ஒரேஒரு வழி ஏமாறியவன் போல் நடிப்பது, நீ தீண்டாவிட்டால் உன்னை யாரும் தீண்ட மாட்டார்கள்.
- 37 -

Page 28
45. நகைச்சுவை
நான் இற்றைவரை வாழ்வதின் இரகசியம் என்னவென் ருல் எமது (ஹாஸ்யம்) நகைச்சுவையே என்ருர் மாகாத்மா காந்தி அவர்கள்.
ஒருவன் நகைச்சுவையாகப் (விகடமாக) பேசுவது அவ்வளவு சுலபமானது அல்ல. அவனின் பேச்சில் அறிவும், அன்பும், இனிமையும் கலந்து இருக்கவேண்டும். கற்பனை யும் சமயோசித புத்தியும் வேண்டும்.
ஒன்று சொல்லட்டுமா ?
வயதுவந்த பெண் பிள்ளைகளிடம் பாடசாலைப் பரிசோத கரிடமிருந்து ஒரு கேள்வி. நீ சமையல் அறையில் இருக்கும் போது மாப்பிளைவந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது மாப்பிளை (காதலன் அல்ல) மாவின் பிழை எனக் காட்டப்பட்டது.
இன்னென்று
வேலுப்பிள்ளை (விகடகவி) என்பவர் புகையிரதக் கடவையில், கோச்சி வரும் கவனம் என எழுதி இருந்ததைப் பார்த்து கொப்பரும் வருவார் என நயமாக எழுதி அதி காரிகட்கு விளங்கவைத்து, கோச்சி என்பதைக் கோச் என எழுதவைத்துள்ளார்.
மேலும் பார்ப்போம்,
கோப்பாய்ச் சந்தியில் நின்று கிழக்கே நோக்கிய ஒருவர் இவ்வழி சென்ருல் எவ்வழி போகலாம் என்ருர். இவரின் இலக்கணப்பேச்சிற்கு ஒரு தட்டுப்போட எண்ணி ஒருவர் சம்புகுண்டம், கரதண்டம் போகலாம் என்ருர். சம்புகுண்டம் - நாவற்குளி, கரதண்டம்- கைதடி,
இப்படியும் ஒன்று.
சிவாஜி கணேசனப் போல் இராவணனுக ஒருவராலும் நடிக்க முடியாது என்ருர், மற்றவர் சொன்னர். சிவாஜி நடிக்கவே இல்லை. அவர் இராவணனுகவே விட்டார். ஆகையால் அவர் நடிக்கவில்லை.
இன்னும்
سس۔ 38 ۔۔۔

மனைவியிடம் (விருந்தாளி ஒருவரைப் பார்த்து) இவரை எமது குடும்பத்தில் ஒருவரைப்போல் உபசரிக்கவும் என்றதே விருந்த வியாக வந்தவர் வெளியேற ஆயத்தமானர். அதைப்பார்த்த கணவர் ஏன் வெளியேறுகிறீர் என்று வினவ குடும்பத்தில் உள்ளவருக்குக் கொடுக்கும் உணவே நமக்கு மானல் நான் இங்கு தங்குவதில் எவ்வித கருத்தும் இல்லையே என்ருர்,
இப்படியான பயன்தரக்கடிய நகைச்சுவைகளைப் பேசுங் கள், நாங்களும் ரசிப்போம்.
48. ஒரு மனிதனில் - இரு குணங்கள்
நாட்டில் ஒரு மனிதனில் இரு குணங்களைக் காணலாம், ஒன்று - கடன் பெறும் வரைக்கும். இரண்டு - கடனைத் திரும்ப அடைக்கும்போது.
நாம் எப்படித்தான் வேதாந்தம் பேசினலும், கடன் பெற்றபோது இருந்த மனமகிழ்ச்சி திரும்பக் கொடுக்கும் போது இருக்கமாட்டாது. இப்படியான வார்த்தையை நான் சொல்வதால் உங்களுக்குக் கசப்பாகத்தான் இருக்கும், ஆனல் இந்த இருகுணங்களும் எம்மிடம் இல்லை என்போர் எம்மில் யார் ?
ஒருவன் எமக்கு உதவிசெய்யும்போது மலைபோல் தோன்றியவன் திரும்பக் கேட்கும்போது எலிபோலத் தெரி வான். நல்ல உள்ளம் உள்ளவன்தான் எமக்குக் கடன் தருகிறன். ஏன் என்ருல் நல்லவன்தான் நம்பும் பழக்க முள்ளவன். இதனுல் நம்புகிறவன் ஒரு கோளை, நம்பாதவன் விவேகி என்ற கருத்தும் உண்டு.
நீ ஒரு விவேகியாக இரு. ஆனல் அவனைக் கோளை என்று மட்டும் சொல்லாதே.
கடன்பெற்றபோது நடந்த இசைத்தட்டை உன் நெஞ்சில் போட்டுப்பார்த்தாயானல், நீ கொடுத்தேதீருவாய்.
"கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினன் இலங்கை வேந்தன் " அன்று. கடன் கொடுத்தார் நெஞ்சம் போலக் கலங்குகிறன் இன்று.
يس. 39 -سس

Page 29
47. கல்வி
அறிவைத் துலங்கவைக்கும் ஒரு பாதை.
அப்பாதையில் கல்லையும், முள்ளையும் காணலாம். வெறும் புல்லுமுண்டு. நல்ல பூவும் உண்டு. நல்ல நாவியும் இருக்கும். கள்ள நரியுமிருக்கும். கல்வயலையும் காணலாம். நல்ல நெல்வயலையும் பார்க்கலாம்.
ஆணுல் உனக்குத் தேவையானவற்றுடன் நீ போய்க் கொண்டிரு.
அப்பாதையில் நீ நெடுந்துாரம் போவாயானல் அங்கு உயர்ந்த மலையுண்டு. அதன் உச்சியில் ஒரு பொந்துண்டு. அப்பொந்துவழி நீ கூனிக் குறுகிக் கொண்டும், தவழ்ந்து கொண்டும் போஞய் ஆணுல் அங்கு மதிப்பிடமுடியாத ஞானக்கல் உண்டு. அதை மட்டும் நீ எடுத்துவிட்டால் திரும்ப வரும்போது நீ கூனவும் வேண்டாம் தவழவும் வேண்டாம். அதன் ஒளியே உனக்கு வழிகாட்டியாகும்.
ஆகையால் நீ கல்வி கற்கவேண்டுமல்லலா. அதற்கு முதல் தேவை ஆணு என்னும் அமைதி.
தேவை இல்லாதது ஆவன்ன என்னும் ஆணவம். இவை இரண்டையும் நீ மறக்காது நினைத்தாயானுல் உன்னைத் தேடிக் கல்விவரும்.
மாட்டை ஒடப்பழக்குகிருன் ஒருவன். பின் மாட்டுடன் ஓடவேண்டியவனுகின்றன். அதேபோலக் கல்வியை நீ ஒட்டு. பின் கல்விக்காக ஒடு. முன்பு சொன்ன இடத்திற்குப் Gunts6 it li.
தேடுவது - அறிவை
கிடைப்பதோ - ஞானம்
--- 40 س--

48. அன்னத்தின் இயல்பு நமக்கும் நல்லது
அன்னத்தைப் பொறுத்தவரையில் தண்ணிரைப் பற்றி அதற்கு அக்கறை இல்லை. பாலைப்பருகிக்கொண்டு தண்ணீரை விட்டுவிடும்.
பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் பலரோடு பேசும் பொழுதில் எல்லாம் எவ்வளவோ நல்ல கருத்துக்கள், நல்ல சிந்தனைகள், வாழ்க்கைக்குப் பயன் தரத்தக்க நல்லுரைகள் எல்லாம் கிடைக்கும். பெரும்பாலும் அந்த நல்லனவற்றை எல்லாம் நமது வாழ்க்கையிற் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிடுகிருேம்.
மாருக அங்கு கூடி இருந்து உரையாடலிற் பேசப்படும் பயனற்ற கதைகளை மனத்தில் பதித்துக்கொள்கிருேம். கேட்ட கருத்துக்களைக் கைவிட்டுவிட்டு சொன்னவருடைய குறை குற்றங்களை ஆராயத் தொடங்கி விடுகிருேம்.
நாம் வாழ்க்கையில் நன்மைகளை அடைய முடியாதிருப் பதற்கும் பல சந்தர்ப்பங்களில் தோல்வியையே எதிர் நோக்குவதற்கும் அதுவும் ஒரு காரணமே.
அதிக மோரைக் கடைந்து அதன் பெறுபேருகக் கொஞ்ச வெண்ணெய்யைத் திரட்டிச் சேகரித்துத் தேகாரோக்கியத்திற் குப் பயன்படுத்திக்கொள்வதுபோற் கலந்து பேசும்பொழுது வேண்டாதவற்றை எல்லாம் விலக்கிவிட்டு நல்ல கருத்துக்களை நமதாக்கிக் கொள்வது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாகும்.
அன்னம் செயலிற் காட்டும் நல்லதொரு முன்மாதிரியை என்றும் மனத்தில் நினைத்திருப்போமானுல் நமக்கும் நன்மையாகும்.
- 41 -

Page 30
49. புதுமையும் பழமையும்
எது புதுமையோ அது பழமை என்பதை அறியாமல் இருப்பதை அறியோம்.
புதைபொருள் ஆராய்ச்சி மூலம் இப்போ கண்டபடியால் அது புதுமை. ஆனல் அது பழமையே.
வெள்ளைக்காரப்பெண் தலைமயிரைக் குருேப் செய்தால் அது பழமை. தமிழ்ப்பெண் அப்படிச் செய்தால் அது புதுமை, வெளிநாட்டவன் கையினுல் உணவை எடுத்து உண்டால் அது புதுமை. நாம் கரண்டிமூலம் உணவருந்தி ல்ை அது புதுமை. பிறந்த தினத்தில் நாம் கேக் வெட்டி ஞல் அது புதுமை. ஆண்டவனை நினைத்து அபிடேகம் செய் தால் அது பழமை.
மேல்நாட்டார் செய்வதெல்லாம் புதுமை. நாம் செய்வ தெல்லாம் பழமை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை வளரவிட்டிருக்கின்ருேம்.
புதுமை எதுவாகும்.
புதிய கருத்துக்களை விளக்கமாகச் சுருக்கமாக ஏற்கக் கூடியதாகச் சொல்வது, எல்லோராலும் சாதிக்க முடியாத சாதனைகளைப் புரிவது, வாழ்க்கையில் துன்பத்தைக் கொடுக் காத, மனிதப்பண்பை அழிக்காத, தர்மத்தை மறக்காத, அழகைக் குறைக்காத செயல்களைப் புதுமை என்று சொல்லலாம்.
பழமை என்பது
ஒருவரைப் பார்த்துப் பின்பற்றல், அடுத்தவருக்கு மன வேதனையைக் கொடுப்பது, மனச்சாட்சிக்கு விரோதமாகத் திணிப்பது, காரியமில்லாத காரணங்களைக் கூறுவதுமான வாழ்க்கைக்கு எவ்வித நன்மையுமில்லாத பழக்கவழக்கங்களைப் பழமை என்று சொல்லலாம்,
ஆகையால் மேலே சொன்ன நல்ல புதுமைகளையும் தீய பழமைகளையும் அறிந்து நடப்பது நல்லது. இது தீவின் கடற்கரையில் தொடங்கும் பாதைபோல், தொடக்கமும் முடிவும் ஒன்றேதான். ஆகையால் பழமை புதுமை என்ற ஒன்று இல்லையே.

50. முன்னேற்றத்தின் முதல் இரகசியம்
வாழ்வில் முன்னேற விரும்பாதவர்கள் யாரும் இருந் தால் கொஞ்சம் கேளுங்கள்.
முதலாவதாக அதிகாலை ஐந்துமணிக்குப் பிந்தாது எழுந்திருத்தல் வேண்டும்.
வேலை ஒன்றுமில்லையே என்று ஏங்காதீர்கள். எழுந்த உடம்பு சும்மா இருக்கவிடாது.
ஆகையினல் இறைவனை வணங்குவதற்கும் (மணம் ஒருமைப்பட) கல்வியை வளர்ப்பதற்கும் ஏற்றநேரம், அவை அன்றி மூளைவிருத்தி அடைவதற்கும், யோகாசனம், தேகாப்பி யாசம் செய்வதற்கும் உரியநேரம்;
அத்துடன் நோய்வராமல் தடுக்கக்கூடிய சூரியபகவானின் செங்கதிர்கள் உடம்பில் படியக்கூடிய நேரம் இப்படியான உருப்படியானவை எல்லாம் கிடைக்கும்.
அடுத்த இரகசியம்
சிரிக்கப் பழகு - சிரிப்பில் பலவிதங்கள். நான் சொல்லும் சிரிப்பு மனநிறைவினல் உந்தியில் இருந்துவரும் கருணைச் சிரிப்பு. அடுத்து உன் மனதில் அழுக்காறு இல்லாது வைத்துக் கொள்ளவேண்டும். அதற்கு இரு மனம் வேண்டும்.
ஒன்று போதுமென்ற மனம், இரண்டு துன்பத்தை மறக்கும் மனம்.
இவை இரண்டும் உன்னிடம் நிரம்பிவிட்டால் மகிழ்ச்சி யாக இருப்பாய். மகிழ்ச்சியாக இருப்பவனே எல்லாம் நிரம்பி யவன். எல்லாம் நிரம்பியவனிடம் நோய்,பேய் (பேய்க்குணம்), வறுமை முதலியன அணுகா. இவை எல்லாம் கிடைப்பதற்கு நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
அதிகாலையில் எழுவதே இரகசியம்.
-- 43 -

Page 31
51. நன்றி மறவாமை
மனிதனிடத்தில் பேசப்படும் நற் பண்புகளில் நன்றி மறவாமை மிக உயர்ந்த பண்பு.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற படிக்கிரமத்தில் நன்றியைப் பாராட்டுகிருேம்.
முதலில் சுமந்து பெற்று வளர்த்த தாய்க்கு நன்றி யுடையவர்களாக இருக்கவேண்டும்.
பின்பு பேணிய தந்தையிடத்தில் நன்றி. பின்பு வழிகாட்டிய குருவிடத்தில் நன்றி.
பின்பு இறைவனிடத்தில் நன்றி செலுத்தும் வணக்கம் தானகவே நம்மிடத்தில் அமைந்துவிடும்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங் களைத் தோற்றுவித்தும் தனு கரண புவன போகங்களைத் தந்தும் நம்மீது இறைவன் கொண்டிருக்கும் கருணையை மறவாது நினைத்து வணங்குதலே நன்றி மறவாமையில் தலையானதாகும். எனினும் சமுதாய வாழ்வில் பிறர் எப்படி நடந்தாலும் நாம் நன்றியுணர்வுடன் வாழ்வோம். எதையும் எதிர்பாராமல் மற்றையோர்க்கு உதவும் நன்றி யுணர்வு நம்மை வாழவைக்கும் அல்லவா?
52. மனிதன் இயல்பு
ஒருவரிடம் எப்படியான ஞானம், அறிவு, கல்வி இருந் தாலும் ஒவ்வொருவருக்கெனத் தனி இயல்புகள் இருப்பதைக் காணலாம்.
இந்த இயல்பு என்ன என்பது அவனுக்கே தெரியாது செயற்படும்.
سسه 44 س--

உதாரணத்திற்கு :
எதுவித காரணமுமின்றிச் சிரிப்பார்கள், அழு மூஞ்சி யுடன் இருப்பார்கள், கோபிப்பார்கள், பெலத்துக் கத்து வார்கள், இப்படியான பல இயல்புகளைக் காணலாம்.
இவர்களை டாக்டர்கள் ஒருவித நோய் உள்ளவர்கள் என்றும் சொல்வார்கள்.
நாங்கள் இன்று தொடக்கம் இப்படியான செயல்களை மாற்றுவோம் என்பார்கள். ஆனல் அவைகளை நடைமுறைப் படுத்த முடியாது தவிப்பார்கள்.
அறிவிலிபோல் தெரிபவன் மிகவும் புரட்சிகரமான செயல்களைச் செய்வான்
மிக உயர்ந்த கருத்துக்களைச் சொல்பவன் நம்பமுடியாத அளவுக்குக் கீழ்த் தரமான செயல்களைச் செய்வான்.
இந்த இயல்பு அவரவரின் தனித்தன்மையே அன்றிச் சந்ததியோ, அல்லது சூழலோ, அல்ல. இந்த நிலையைச் சில பேர்கள் பிறவிக்குணம் என்று சொன்னுலும் அதை எம் மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. W
குணமாயின் அவற்றைத் திருத்தியோ, திருந்தியோ கொள்ளலாம்.
மேலும், படுக்கை ஒன்று கிடையாதா என்று ஏங்கு பவனுக்கு ஒரு பாய் கிடைத்துவிட்டால் மெத்தை வரைக் கும் எண்ணுவான். பசி ஆற உணவின்றித் தவிப்பவ னுக்கு யாராவது உணவு படைத்தால் பாயாசம் இல்லையா என்பான். வெற்றிலையும் தேவைவரும்.
மிக உயர்ந்த பொருளைத் தானஞ் செய்வான். ஆனல் மிக அற்ப பொருளைக் களவாடுவான்.
இக் கருத்தை எழுத எண்ணியதும் இந்த இயல்பே எனலாம்.
இந்த இயல்புக்குத் துணிவு உண்டு - வெட்கம் இல்லை,
- 45 -

Page 32
58. களவு
களவு ப்லரகங்கள் :
பொருளைக் களவெடுப்பது, ஒருவரின் சிந்தனையை, அறிவை, கல்வியை எடுப்பது, மேலும் வேலை செய்வது போல் பாசாங்கு செய்வது, கணக்கில், தரத்தில், நிறையில், செய்வதெல்லாம் களவுகளே.
அதிகமாக, வறுமையினலே களவு எடுக்கிருர்கள் என் பதே உலக எண்ணம்.
மேலும் மற்றவர்களைப் பார்த்துப் பொருமைப்படுவதா லும் தம்மை ஒரு பொருட்டாக மதிக்கிறர்கள் இல்லையே என்ற ஏக்கத்தாலும் தனது மனமகிழ்ச்சிக்காகவும் அதை ஒரு வீரமாகவும் கருதியே களவு செய்கிருன்.
களவைத் திருத்தலாமா?
அவனை முற்றுமுழுதாக நம்பியதுபோல் நடக்கவேண் டும். பல பொறுப்புகளை நிர்வகிக்க விடுதல், அவனுக்காக அவன்முன் வாதாடுதல், பொருளாசை நீக்கக்கூடிய அறி வைப் புகட்டல் முதலியனவாகும்.
தண்டனைகள்மூலமும், அவன் திருந்தவில்லையேயாளுல் அவன் களவை ஒரு கலையாகக் கொண்டான் என்பதே (Մ)ւգւմn (35ւհ.
ہے۔ 46 سس۔

54. இன்பம் எங்கே?
காலையில் கடற்கரையில் நின்று பார்க்கையில் ஆதவன் உதயமாகும் அழகு கண்ணுக்கு இன்பமாகிக் கருத்துக்கு விருந்தூட்டுகிறது.
பண்ணிலே பாடலைக் கேட்கும்போது, செவியின்பம் உள்ளத்தை மலர்விக்கிறது. பசித்துவந்தவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனுடைய முகமலர்ச்சி உயிருக்கே இன்பம் தருகிறது.
குழந்தையினுடைய தளிர்க் கரங்கள் உடம்பில் படும் போது ஒரு இன்பம் பிறக்கிறது. குழந்தை மழலைச் சொல் பேசும்போது அந்த இன்பம் மேலும் மெருகூட்டப்படுகி
sIDšl.
எடுத்த காரியத்தைக் கோணல்மாணல் இல்லாமல் நிறை வேற்றும்போதும் மனத்துக்கு இன்பம் கிட்டுகிறது:
ஏழையாயிருந்தவன் சுய முயற்சியினல் முன்னேறு வதைப் பார்க்க இன்பம் பிறக்கிறது. வேலை இல்லையே என்று அலைந்தவன் தொழில் இருப்பதைக் கேட்க வருவது இன்பம், பிறருக்கு உதவி செய்யும்போது அவர்கள் சொல் லும் நல்வார்த்தைகளைக் கேட்க இன்பம்
கணவனின் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவியைக் காண இன்பம்-இப்படியாக அன்ருடம் நாம் அனுபவிக்கும் வாழ்க்கையில் உண்டு உடுத்துக் கண்டு கேட்டு இன்பத்தை உணர முடியாதவர்கள்தான் இன்பம் வேறு எங்கோ இருக் கிறது. அதை விலைகொடுத்து வாங்கமுடியும் என்று அலைந்து திரிந்து ஏமாறுபவர்கள்.
س۔ 47 ۔۔۔۔۔

Page 33
55. மறதி
ஆண்டவனுல் எமக்கு வழங்கிய குணங்களில் முன்னிற் பது மறதி.
இந்த மறதி மூலம் பல நன்மைகளையும் சில தீமைகளை யும் அடையலாம், சென்ற ஆண்டு நடைபெற்ற துன்ப நிகழ்ச்சி ஒன்று இன்றுவரை மனதை விட்டு மறையாது போனல் உன்னுல் இற்றைவரை வாழ முடியுமா? உன் காதலினல் அடைந்த தோல்வியை மறக்காதுவிட்டால் , உன் அருமைக் குழந்தை பறிபோனதை நினைத்துக்கொண் டால் மேற்கொண்டும் குழந்தையில் அன்பு செலுத்தலாமா? உன் நண்பணுெருவன் செய்த துரோகத்தை நீ மறக்காது இருந்தால் அவனை நீ மன்னிக்கமுடியுமா ?
மறப்பதென்பது மிகவும் கஷ்டமானதும் துன்பப்படுத் துவதும்தான். இருந்தும் இங்கு நீ வாழவேண்டுமானல்: மறந்துதான் தீரவேண்டியுள்ளது.
மறப்பது என்பது சிறந்த ஞானிகளால்தான் முடியும், ஆகையால் நீயும் உன்னைத் தயார்படுத்திக்கொள்.
நான் இற்றைவரை சொன்ன மறதியால் நீ துன்பமில் லாது வாழலாம். மறதியையும் மறந்துவிடு இங்கே.
உன்னை உயிர்ப்பித்த இறைவனை ஈன்றெடுத்த அன் னையை, அறிவூட்டிய ஆசிரியனை,
மறப்பதால் வரும் மனவேதனையைக் குறைப்பதற்கு ஒரேஒரு வழி.
ஒவ்வொன்றையும் நினை. ஆனல், அந்த ஒன்றுக்கு நீ அடிமையாகாதே.
۔۔۔۔۔۔۔ 48 ---سے

58. மிதத்தல்
கடற்கரையில் நின்று அதன் அழகில் மிதந்தார்கள் பலர். அதிலே ஒருத்தர் கரையிலே கொஞ்சம் இறங்கிப் பார்த்தார். குறிப்பிட்ட அளவு தூரத்துக்குத்தான் அவராற் போகமுடிந்தது திரும்பி விட்டார். மறுதினம் ஒரு தடியின் உதவிகொண்டு ஊன்றி, ஊன்றி மேலுஞ் சிறிது தூரம் போனர். அப்பாலே நீரிற் செல்ல முடியவில்லை. கடலாழம் அவரைக் கலக்கியது. அவருக்கு ஓர் யோசனை பிறந்தது. சில மரங்களை நீரிலே போட்டுப் பார்த்தார். மிதந்த மரப் பகுதிகளை இணைதது அதன்மேல் உட்கார்ந்தார். தொடர்ந்து போக முடியவில்லை. என்ன செய்தார் தெரியுமா ? இன்னேர் கம்பை நிலத்தில் தாங்கி மேலுஞ் சிறிதுதுரம் சென்ருர், கம்பை ஊன்றமுடியாத ஆழம்வர ஒருமாதிரிக் கரையேறினர். இப்படி மனிதசாதனை வளர்ந்ததன் விளைவே கடலில் மிதக் கும் கலங்களாய் அமைந்தன. இன்று பென்னம் பெரிய கப்பல்கள், போர்க்கப்பல்கள், விமானந்தாங்கிகள், ஏன் நகரங்கள், ஹோட்டல்கள் என்றெல்லாம் சமுத்திரத்தில் மிதக்கின்றன. இனி மிதக்கும் தீவுகளில் மனிதன் வாழவும் போகின்றன். கடலில் மட்டுமென்ன, வானத்திலே மிதக்கும் தட்டுகள், செயற்கைக் கோள்கள், சட்லைற்றுகள் இப்படி யெத்தனையோ, விஞ்ஞானத்தின் விளைவே இந்த மிதவைக ளெல்லாம். இதனுலே மனிதகுலமே மிதந்து கொண்டிருக் கின்றது.
காற்றிலே இசையும், மலரின் மணமும் மிதந்துவர இரசிக்ருேம். நாமதிலே லயித்து மிதக்கிருேமல்லவா? மனிதன் நாளாந்தம் குடிபோதையில் மிதக்கிருன். நாகரீகத்தில் மிதக்கிருன். புகழிலும், கீர்த்தியிலும் தம்மை மிதக்க வைக்கிறவர்களும் உண்டு. செல்வததிலும் சிறப்பிலும் மேலே மேலே மிதக்கிருன் மனிதன், ஏன் அதிகாரத்திலும், ஆணவத்திலும் மிதப்பவர்களுமுண்டு. இன்னுஞ் சிலர் அறியாமையிலும், ஆனந்தத்திலும் மிதப்பார்கள். ஒரு வரைத் தாழ்த்தி மற்றவர் மிதக்கிருர், சமுதாயத்தின்
بیعت چھ مدت 49ھ ۔۔

Page 34
மிதப்பு இப்படியும் அமைவதுண்டு, கொள்ளையும், களவும் கூட மிதப்புக்குக் காரணியாகிறது. தற்போதம், அந்தஸ்து இவைகூடச் சிலரை மிதக்கவைக்கிறது. திறமை, வீரம், விவேகம் வல்லமை உள்ளவர்களின் மிதப்பும் ஒருவிதம்.
பட்டம்பெருத கல்விமான்களுக்கு முன்னே பட்டம் பெற்றவர்களின் மிதப்பான போக்கு ஒரு தினிசே. மனிதன் மண்ணிலே நடந்துகொண்டு வானத்திலே எண்ணங்களைப் பரவவிட்டுக் கற்பனைத் தேரில் மிதக்கிருன். பொய்யும் புளுகும் நிறைந்தவர் நாவன்மையால் மிதக்கிறர். தங்கநகை யணிந்தவளும், ஆடம்பர உடைகளனிபவளும் இல்லா தவர்களின் முன்னே மிதக்கிருர்கள். ஒன்றும் படியாதவன் படித்தவனை மடக்கி மிதக்கலாமெனப் பார்க்கிருன், மேடை கிடைத்தவன் பேச்சாளனுக மிதக்கிருன், சந்தர்ப்பவாதி கள் மற்றவர்களைவிட மிதக்கிருர்கள். ஒருவரை ஒருவர் புகழ்ந்து தம்மைத்த}மே உயர்த்தி மிதப்பவர்களும் உண்டு. எனக்கெல்லாம் தெரியுமென்று சொல்லிக்கொண்டே மிதக் கிருர்கள். திடீர்ப் பணக்காரராக மிதந்தவர்களுமதிகம்பேர். குதிரை ஓடி மிதந்தவர்களின் தசாப்தமு மொன்றிருந்தது. சின்னஞ் சிறுசுகளின் மிதப்பான பேச்சும் ஒருவகை, கொள்ளை லாபம்-கள்ளச்சந்தை--கலப்படம்-நிறை, அளவில் மோசடி என்றெல்லாம் பல மார்க்கங்களைக் கொண்டு மிதந்தவர்களை யும் காணலாம். இன்று இளைஞர்கள் காதலிலே மிதக்கக் கன்னியர் ஏமாற்றத்தில் மிதப்பார்கள். கப்பம் வாங்குபவர் களும், அடாவடித்தனமுள்ளவர்களின் மிதப்பும் ஒருவகை. மாப்பிள்ளையின் பெற்றேர் சீதனத்தில் மிதப்பர். பெண்களோ பட்டிலும்-தங்கத்திலும் மிதப்பதுண்டு. இப்படிக் கொஞ் சம் வகுத்தும் தொகுத்தும் பார்த்து எழுதுவதைப் படிப்ப வர்களின் எண்ணங்களும் வெவ்வேழுய் மிதக்கலாம்.
சிந்திக்கும்போது-மனிதசுபாபங்களிப்படி அமைந்தபோ தும் ஏதோ ஒருவகையில் தாம் மிதந்துவிடவேண்டுமென்ற சிந்தனைகளும் முயற்சியும் சரியான வகையில் அமையவேண்டு மல்லவா? பண்பட்ட உள்ளமுள்ளவர்கள், சான்ருண்மை மிக்கவர்கள், உள்ளத்தால் உயர்ந்தவர்கள் - சஹ்ருதயம்
---سس. 50

கொண்டவர்கள், மனித நேயமும்-பக்குவமும் - மனிதத் துவமுமுள்ளவர்களென்று பார்க்கும்போது, சாதாரண ஜடப் பொருள் தாவரம், பறவை, மிருகம் போன்ற நிலையிற் தம்மைத் தாழ்த்திக்கொள்ளாமல் உயர்ந்த பக்குவம்நிறைந்த வாழ்வின் உதாரண புருஷர்களாய் வாழ்பவர்கள் மற்றவர் களாற் கணிக்கப்பட்டுப் போற்றப்படும்போது மிதக்கிருர் கள், உத்தம மனிதர்களின் மகோன்னதமான வாழ்விலே தான் அவர்கள் மிதக்கிருர்கள் என்ருல் நாம் குறுக்கு வழியை விடுத்து-நேர்வழியில் எம்மை மிதத்துவோமாக
ஜிவசாட்சி இழையோடிய மனச்சாட்சியுள்ள மனித ரெல்லாம் மிதந்தவர்களே. உங்களைத் தாழ்த்துவதும் உயர்த்துவதும் நீங்களேதான்.
57. காவிரியின் பயிர்ப்புத்தான் என்னே!
மகாமேரு மலையில் தவஞ் செய்துகொண்டிருந்த அகத் திய முனிவரை இறைவன் பொதியமலையில் சென்றிருக்கும் படி பணித்தருளினர்.
அகத்தியர் இறைவனிடத்தில் தமது சிவபூசைக்குத் தீர்த் தம் தந்து உதவுமாறு வேண்டினர்.
இறைவனர் காவிரி நதியை அகத்தியருடன் தமிழ் நாட் டிற்குச் செல்லுமாறு கூறி அருளினர். உடனே காவிரிநதி இறைவனிடத்தில், தான் அகத்தியருடன் செல்லுதற்குரிய சங்கடத்தை எடுத்தியம்பியது.
** பெருமானே! அகத்தியர் என்னதான் முனிவராக இருந்தாலும் ஒரு ஆடவர். நானே பெண். பெண்ணுகிய நான் ஆணுகிய முனிவருடன் எப்படித் தனிவழி செல்வேன்" என்று வினவியது.
நதியாக இருந்தாலும் இறைவன் பணித்தாலும் பெண் மையின் பெருமையைத் துணிந்து எடுத்துரைக்கும் காவிரி ஆற்றின் ஆற்றலே ஆற்றல்.
س~~- 5l -۔

Page 35
58. உண்மை
உன் உள்ளத்தைச் சொல்வது உண்மை. ஆகையால் உண்மை உனக்கு மட்டுமே தெரியும்.
உண்மை என நாம் நம்பும் செயல்களில் எவ்வளவு பொய்மை மறைந்திருக்கும். அதேபோல் பொய் என நாம் காண்பதில், உண்மை மறைந்திருப்பதும் தெரிவதில்லை.
எமது பார்வைக்கோ, உணர்வுக்கோ, அறிவுக்கோ எட்டாத உண்மை பற்றி இங்கு நாம் சொல்லவில்லை, எமது உலக நடைமுறையில் உள்ள உண்மைகளையே நாம் காண்போம்.
ஒருவரை ஏழ்மையாக்குவதற்காக, உனது மகளின் திருமணத்திற்குப் பணம் தேவையானல் நான் கடனுதவி செய்கிறேன். நீர் திறம்படச் செய்யும் என்ருர் ஒருவர். அப் படியே செய்த பின் தான் ஒரு கடனளியாக இருப்பதையும் உண்மைக்குள், ஒளிந்திருக்கும் பொய்மையையும் காண்கிருர், அஃதேபோல்,
இளம் பையன் ஒருவன் பிச்சை என முன் நிற்கிருன், இவனே அவனுக்குப் பிச்சை போட்டால் மேலும் பிச்சையே எடுத்துக் கெட்டுப் போவான் என நினைத்து பிச்சை போடாது விட்டதைப் பார்ப்பவர்கட்கு இவனிடம் பொய்மையில் மறைந்திருந்த உண்மையைக் காண முடிய வில்லை.
சில உண்மைகள் பல காலத்தின் பின் தெரியும். சில பொய்மைகள், எக்காலத்திலும் தெரியாது. உண்மை உனக்கு மட்டும் தெரியும். உனது பொய்மை எல்லோருக்கும் தெரியும், ஆகையால் உனக்குத் தெரிந்ததை எமக்குச் சொல். அதுவே. உண்மை. நீ இரு கண்களாற் பார்க்கிருய்; உன்னை ஆயிர மாயிரம் கண்கள் பார்க்கின்றன.
~~~~ 52 سب۔

59. கற்பன
இது வெறும் கற்பனைதானே என்று இருக்கிருேம். இந்தக் கற்பனைதான் எம்மை வாழ வைக்கின்றது.
கற்பனையைச் சிந்தனையாளன், கலைஞன், கவிஞன், இரசிகன் ஆகியோர்களால்தான் வழங்க முடியும்.
சிறந்த ஒரு கற்பனையாளனிடம் ஒரு தெய்வீகத் தன் மையைக் காணலாம். அவனின் தூரநோக்கு நாட்டுக்கே எவ்வளவு நன்மைகளைச் செய்துள்ளன என்பதை நீங்கள் காணலாம்.
உதாரணத்திற்கு ஒன்று
பிரபல பத்திரிகையான கல்கியில், அதன் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் இற்றைக்கு நாற்பது வருடங் களுக்கு முன் பத்திரிகை மூலம் ஆழ்கடலில் பெண்கள் வாழுகிருர்கள் என்றும் அதன் வடிவ அமைப்பையும் வரைந்துள்ளார்கள். அவர்களின் கற்பனையில் வந்த உருவ அமைப்பில் சென்ற இரு வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலியா கடற்கரையில் மக்கள் பார்ப்பதையும் அதன் படத்தையும் பத்திரிகைமூலம் வெளியிட்டதையும் நீங்களும் பார்த்திருப்பீர்கள். (வயிற்றுக்கு மேல் முற்ற முழுக்க பெண்ணின் அமைப்பே.)
இன்று வியக்கத்தக்க வானிலை ஆராய்ச்சியின் ஆரம்பம் ஒரு கற்பனையின் ஆரம்பமே.
அதிகமேன் சொல்வான். நாம் வணங்கும் இறைவடிவங் களும் கற்பனையில் உதித்தவையே என்று சொன்னுல் மிகை யாகாது. மட்டுநகர் நீரரமகளிரையும் அறிமுகமாக்கியவர் சுவாமி விபுலானந்தர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
எங்கே-உங்கள் கற்பனைகளை, வளங்களைக் காண்போம் இங்கே.
-- 53 س--

Page 36
80. நீணப்பும் மறப்பும்
நினைத்தேன் என்முன் காதலன். மறந்துதானே நினைத் தீர்களென்ருள் காதலி. இல்லை இப்பிறவியில் நின்னை மறக்க முடியுமா என்ருனு, அப்படியாயின் அடுத்த பிறவியில் என்று அடித்துக் கேட்டாள் பத்தினி. இப்படியிருக்கிறது தலைவன் தலைவியர் நினைவும் மறதியும். நன்றல்லதன்றே மறக்க வேண்டுந்தான். வாலி தன் பழைய பகையை மறந்து சுக்கிரீவன அழைத்து தனது மனைவில் யயும் மகனையும் அவனிடமொப்படைத்தான், மறதி தேவை. வாழ்விலே சில சம்பவங்கள் பெரியவர்களின் மறைவுகள் போன்றவற்றை நினைக்காமலிருக்க முடியாது. ஆணுல் நினைத்தாற் துன்பம், ஆனல் மறக்க முடியுமா அவரை. அவ்வளவு பெரியவர். எனவே மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் வாழும் மக்கள் ஈற்றில் தம்மையே மறந்து விடுகிறர்கள். மற்றவர்களும் அவரை மறந்து விடுகிருர்கள் தானே.
2
பத்தாண்டுகளுக்கு முன் உன் நிலையை எண்ணிப் பார். பத்து நிமிஷங்களின் முன் நீ எப்படி இருந்தாய், இதையும் யோசித்துப்பார். இனிவரும் 10ஆம் நாள், 10ஆம் வருடம் பற்றியும் எண்ணங்களைப் பரவ விடு. இன்னும் சிந்தி, இதிலே உனக்குத் துலக்கந் தரும் கால தேச வர்த்தமான மெது? அதை நின் நிலைக்களனக்கு. உன் தூய சிந்தனையில் வாழ்வைக் கட்டியெழுப்பு. சென்ற காலம் பழுதிலாதிருந் தால் அதையே தொடர், பழுதானல் உன்னை மாற்றி யமைத்து எதிர்காலம் பழுதுருமல் பாதுகாத்துக்கொள். இல்லையானல் உன் வாழ்வு வெறும் ஜடசம்பந்த மென்பது அர்த்தம். அதனுல் வரும் சுவைகளை அனுபவித்தே தீர வேண்டும். நீ வெருண்டோடி என்ன பயன். தெய்வத்தைத் திட்டியுமென்ன பயன், உன் குற்றம் உனக்கே விரோதி
= 54ー

யாயிற்றே என்பதைக் காணுமட்டும் மற்றையோர் மேல் பாரம்போட்டு வாழ்வைப் பாழடிக்காதே. இனியாகிலும் திருந்து. இது வாய்த்த தருணம், விட்டுவிடாதே, சிக்கெனப் பிடி.
3
நேற்றைய சிந்தனை இன்றைய வாழ்வு. இன்றைய தலைமுறை நாளைய சமுதாயம். நாளைய அரும்புகள் அடுத்த நாண்மலர்கள். ஆயிரமாயிரமாண்டுகட்கு முன் வீசிய விதைகள், பல்லாயிரமாண்டுகள் கழித்தும் பயன்தரும் ஜால விருட்சங்கள். இவ்வாறு ஒவ்வொரு சகாப் தத்திலும் நமக்கு வழங்கிய தயாமூல தன்மநிதிகள் நம் முடைய வாழ்வின் நறுமணமிக்க நாணயங்கள். இவ்வண்ணம் வளர்ந்த நம் கதையில் பலவற்றைச் சந்திக்கலாம். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாயிருந்தாலும், சுவாசிக்கும் வளியில், உறக்கத்தில், உணவில் மாற்றமில்லை. எனினும் நம்மைப் பற்றி நேற்றைய முந்தைநாளைய ஞானி சிந்தித்த அளவில் அடுத்த நூற்ருண்டின் வாரிசுகளைப்பற்றி நாம் சிந்தித்த வற்றைச் சொல்லி வைக்கவேண்டும். இப்படிப் பார்க்கை யில் பல நூற்ருண்டுகட்கு முன் ஒரு மன்னனுடைய இதயத்தி லெழுந்த நாதம் இன்றும் செவிநுகர் கணியாய் சித்தத்தைக் குளிர வைக்கின்றது. அந்த ஈரமே வாழ்வின் ஜீவ நாடி யாகும்.
4.
முள்ளு என்ருலே நெஞ்சை உறுத்துகிறதா. அப்படியா யின் முள்ளே தைத்து விட்டால் எப்படியிருக்கும். முள் தைக்கப் பொருத உடலை வைத்துக்கொண்டு எப்படியெல் லாம் நடக்கிருய் தெரியுமா? ருே ஜா இருக்கிறதே, முள்ளுக்கு மத்தியிலேதான். கையிலே முள் சீண்டாமல் எடுக்கிறவன் பாக்கியசாலி. உறுத்தினுல் இரத்தம் பீறிடும்.ருேஜா ஆசையே போய்விடும். அப்படித்தானே இருந்தாலும் ஒரு பூவெடுத்துக் கொண்டையிலே வைக்கிறதற்கு எத்தனைபாடு. அதோ தெரி கிறதே தோடையும் எலுமிச்சையும். அங்கேயும் முள்தான். முள் இருக்கிறதினலோ என்னவோ அது தப்புகிறது போலும், நிலமெல்லாம் நெருஞ்சி, சப்பாத்தி, தைத்தாலோ
حس~ہ 55 ہے۔

Page 37
ஆனந்தத்தாண்டவமாட வைக்கும். இலந்தை முள்ளிருக் கிறதே, போகிறவர்கள் வருகிறவர்களைப் பிடித்திழுக்கும். இப் படிச் சமுதாயத்திலே பலதரப்பட்ட முள்ளுகள். ஏன் வேலி யிலே நிற்கிறதே அந்த முட்கிழுவை, தைத்தால் அவ்வளவு தான், உயிரையே வாங்கிவிடும். அதற்குத் தடுப்பூசி போட லையோ அவ்வளவுதான். வேலிக்கு வைத்த முள்ளு காலுக்குச் சேதமென்ற மாதிரி குடும்பத்திலும் சமூகத்திலுமுண்டு. முள்ளை முள்ளாலே எடுத்த காலமது. இப்ப ஆபறேசன் பண்ணினுற்ருன் முடியும். இந்த நாகதாளியை அழிக்கவே ஒரு பூச்சி வந்தது. இப்.டி அழியாத முட்புதர்கள் பல உண்டு. வாழ்விலே எதிலும் ஜாக்கிரதையாகக் காலைக்கையை வைக்கணும். அல்லாவிட்டால் அழிவுதான். வழி விவேக மென்னும் பாதுகைபோட்டு அறிவென்னும் கண்ணுடி யணிந்து அந்தரங்கமென்னும் இகதயம் கொண்டு அன்பு வழியில் வருமுன்னர் காக்கும் முன் யோசனையுடன் வாழ வில்லையோ வாழ்வே துன்பமேயாகும்.
5
உக்கிய ஈர்க்கிலொன்றை எண்ணெயில் தோய்த்து நெருப்பில் வாட்டி வளைத்துக் காட்டுகிருன் வியாபாரி. பக்கத்தே மயிற்ருேகை, மயில் செட்டை . இப்படிப் பல சாட்சியங்கள். இதுதான் மயிற்கால் எண்ணெய் விளம்பரம் , விலைபோகிறது. ஆனல் சட்டம் மயிலைக் கொல்லக் கூடாது காட்டில் நாட்டில் என்று. அப்பா முருகன் மயில் மேலே வருகிருன் என்னஆனந்தம். அதற்குப்பாவனை மயில்வாகனம். பிள்ளைக்குக் கூட மயில் வாகனம், மயூரன், வேலுமயிலு மென்று பெயர். அப்பாடி அந்தப் பேர்பெற்ற முருகன் கோயிலிலே கூடுகள் கட்டி மயில் வளர்க்கிருர்கள். பெரிய பாதுகாப்பு, சாப்பாடு. அந்த மயிலும் செட்டையை அடித்து விட்டுத் சுதந்திரமாகப் பறக்கமுடியாமல் படுத்து விடுகிறது. பக்தர்களும் போற்றுகிறர்கள். நேர்த்திக்கு எத்தனை காவடி கள். ஏகப்பட்ட செலவு அப்பப்பா முருசனுக்கு இறக்கும் பாற்காவடிக்கு எத்தனை மயில்கள் இறந்திருக்கும். இறவாமற் பிறவாமல் இருக்க இதுவும் ஒரு வழிதான் முருகா,
۔۔۔۔۔۔ 56 ۔۔۔۔۔۔

6 என்ன அழகான மலர்கள். வண்ணமும் வடிவமும் தேனயமைந்தவை. குணமும் மணமும் அவ்வண்ணமே. இப் பூக்களிலெல்லாம் தேனீக்கள் ஒடி ஒடி ரீங்காரத்துடன் தேன் எடுக்கின்றனவே. தேன் எவ்வளவு புனிதமானது, தித்திப்பானது மட்டுமல்ல உயர்ந்ததும் கூட. இதனை உண் ணும் தும்பிகள் மலருக்கு எவ்வித ஊனமுமின்றி-இடைஞ் சலுமில்லாமல் தேனை எடுப்பதும் ஒர் அற்புதம்தான். அதைவிடப் பெரிய விநோதம் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவது. இவ்வாறு ஒரு சில மனிதர்கள் சமுதாயத்தில் வாழக் காணலாம். மலரின் மணம் காற்றின் திசையோடு மிதந்து கமழும். ஆனல் தேன்போல் மேம்பாடுடையவர்கள் இனியவர்கள். தேன்வண்டுக்கு நிகரானவர்களின் மணம் திசையெல்லாம் செறிந்திருக்கும்; அப்படித்தானே. இவ் வாறு வாழ்ந்த வாழும் மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவராய், இலட்சத்தி லொருவராய் இருக்கிறர்கள். இவர்களே எமது
இலட்சிய புருஷர்கள் மகனே.
ஒரு நூலின் கையடக்கம் முதற்பக்கத்திலாரம்பமாகி இறுதிப்பக்கத்தில் பூர்த்தியாகும். இடையில் எத்தனையோ பக்கங்கள், அத்தியாயங்கள். சில அத்தியாயங்கள் சுருக்க மாகவும், சில விரிவாகவும், இன்னும் சில இரத்தினக் கசி வாயும் அமையும். எது எவ்வாறயினும் நல்ல புத்த கத்துக்குத் தனியான ஒரு மவுசுண்டு. இவ்வாறே வாழ்க்கை யும் ஒரு புத்தகம்தான். வாழ்வின் முதற் பக்கம் பிறப்பு. இறுதிப்பக்கம் இறப்பு. புத்தகம் சாரமுள்ளதாய் இருக்க வேண்டுவதுபோல வாழ்வும் சத்துள்ளதாயமையவேண்டும். பொருள்பொதிந்த வாழ்வே பூரணத்துவம் அடைகின்றது. தான் பிறந்த இல்லம், தனது நிலைப்பாடு, சமுதாயத்தில் தன் உத்தரவாதம், மற்றவர்களின் போற்றுதல், தன் மனச் சாட்சி போன்ற குறியீடுகள் ஒவ்வொருவர்க்கும் இன்றி யமையாதனவாகும்.
- 57 -

Page 38
8
நிலையில்லாத மனித வாழ்விலே நிலையான பொருளேது தம்பி. விலைபோட முடியாத உயிருக்காக அலை போல உழைக் கின்ருன் இந்த மனிதன். பசியை மிஞ்சி யொன்றுமில்லை. ஒவ்வொரு மனிதனும் ருசிபார்த்து உண்ண விரும்பி உழைத்து உழைத்து மடிகிருன். பிழைப்பின் முடிவிலே என்ன காண்கிருன், காலன் அழைப்பை ஏற்று அமைதி காண்கிருன். அமைதியான வாழ்வை இவன் அல்லலாக் கினன். அமைதி காணமுன்னே அவன் அமரணுகிருன். அமைதியான நிலைமையிருக்க அலையும் மனிதனே ஆழ்ந்து பார்த்து உந்தன் வாழ்வைப் புனிதமாக்குவாய். புனிதரான மனிதர் வாழ்வே உனது சாட்சியம்.
ஓம் சாந்தி ! சாந்தி ! ! சாந்தி ! ! !
- 58 -

நிறைவுரை
தமிழ்மொழிவளமும், இலக்கணத் தேர்ச்சியும் இல்லா தவன், எழுத்துத் துறையில் எனக்குக் கிஞ்சிற்றேனும் பரிச் சயம் இல்லை. இடைநிலைக் கல்வியைக்கூடத் தொடர முடி யாத பாக்கியசாலி. நானெங்கே,எழுதுவதெப்படி?நான் இளை ஞஞய் இருக்கும்போது எனக்குக் கைவந்தது தொழிற்கல்வி தான். நல்ல வினைத்திட்பமுள்ள குரு எனக்கு வாய்த்தார். அப்பட்டறையில் நான் வார்க்கப்பட்டேன். கூட்டுறவு முறையிலமைந்த கூடத்தில் அனுபவங்களைப் பெற்றபின், ஒரு ஸ்தாபனத்தை நடத்தும் உழைப்பாளியானேன். அங்கே தான் எனக்குப் புதிய அனுபவமும் ஆற்றலும் கிடைத்தது. சமுதாயத்தின் எல்லாவகையான மக்களை நாளும்-பொழு துஞ் சந்தித்தேன். அதனுற் பல பண்பாளர்கள், அறிவாளி கள், உழைப்பாளிகள், விவேகிகள், எழுத்தாளர்கள், ஆத் மீகச் செல்வர்கள், கவிஞர்கள், முதலாளிகள், தொழிலாளி கள், ஏமாற்றுக்காரர்கள் என்று இன்னேரன்ன பலரும் எனக்கு உதவினர். எனது சஞ்சாரம் விரிந்த விண்வெளி போன்றிருந் தது. இதன் பெறுபேறுதான் இந் நூல். நிச்சயமாய் எனது சுற்ருடல் என்னை வளர்த்தது. இறுக்கமும் தந்தது. நல்ல படிப்பினைகளையும் தந்தது. நான் வளரவேண்டுமெனத் துடித் தேன். என் வளர்ச்சியோ-முதிர்ச்சியோ எந்த அளவில் இருக் கின்றதென்பதையும் காண்கிறேன்.இந்த அடிநாதத்திலிருந்து எழுந்த இதயக்குரல்தான் இந்த உருப்படிகள், பல்வேறுபட்டுப் பரந்த வாசகர்களை- விமர்சகர்களை-நூலாசிரியர்களை- சஞ் சிகை முகவர்களை-திறனுய்வாளர்களை இந்நூல் சந்திக்கப் போகிறது.
இந்த நெருக்கடியான வேளையில் வெளியாகும் இந்நூ லில் ஒவ்வாமைகளும், சர்ச்சைக்குரியவைகளும் அமைந்திருக்
- 59 -

Page 39
கலாம். உங்கள் பிள்ளைகளை வழிநடத்துவதுபோல-குற்றங் குறைகளைச் சொல்லி என்னை ஆளாக்கும் பணியை உங்க ளிடமே விட்டுவிடுகிறேன். நானே சமுதாயத்திலொருவன். நீங்களோ ஜனசமுத்திரம். என்ருலும் இப்படியான புது முயற்சிகளுக்கு உங்கள் மன்னிப்பும் அமோக ஆதரவுமுண் டென்ற நம்பிக்கை எனக்குண்டு.
மகப்பேறண்மிய ஒருத்தி தாங்கிய குழந்தையைப் பெற்றபோது இருந்த நிறைவும், தந்தை தன் மகளை ஒருவனது கையிற் கொடுக்கும்போது இருந்த நிறைவும், போரில் வெற்றிவாகை சூடிய மன்னனின் நிலையிலும் நான் இன்று எனது எண்ணத்தை உங்கள்முன் வைத்திருக்கின் றேன் என்ற நிறைவுடன் விடைபெறுகிறேன்.
நன்றி.
سہ ۔ 60 ہس۔


Page 40


Page 41
திருமகள் அழுத்தகம், சுே