கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பணமும் வங்கியியலும்

Page 1

AND BANKING
សso சேயோன்
1936

Page 2
ჯვა? რაზა
憑
E.
%
W
}
 

? κ7 N
பணமும் வங்கியியலும் MONEY AND BANKING
]്
பாகம் !
L 600T aib
MONEY
ஆக்கம் : கு. கல்வளை சேயோன்
வெளியீடு R. G. & S. J. ge|GeF Préfa Guusio இளையதம்பி கட்டிடம், 22, இராமையா செட்டியார் வீதி, யாழ்ப்பாணம்,

Page 3
முதீதி உதிப்பு - ஆவணி 1988
சகல உரிமைகளும் ஆக்கியோனுக்கே உரியது
அச்சுப் பதிவு திருமகன் அழுத்தகம் சுலினுகம்
விலை: ரூபா 15/-
 
 

நகர் துல @罐 #î #”
முன்னுரை"
வர்த்தகக் கல்வி நெறியைக் கற்கும் மாணவர்களும் கலத்துறை யில் பொருளாதாரத்தை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களும் பல்வேறு பரீட்சைகட்குப் பணம், நிதி, வங்கியியல் போன்றவை பற்றி அறிந்திருக்க வேண்டியோரும் தமிழ் மொழியில் போதியளவு நூல்கள் காணப்படாமையால் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். இதனுல் ஆசிரியர் கள் வழங்கும் குறிப்புகளில் அதிகம் தங்கி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்கட்கு ஏற்படுகின்றது.
இக் குறைபாட்டை அகற்றப் பல்வேறு காலகட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 60 களின் நடுப்பகுதியில் திரு. த. மார்க்கண்டு அவர்களால் ஆக்கப்பட்டு வினவிடை உருவத்தில் வெளியிடப்பட்ட பிரசுரம் இத்தகைய முயற்சிகளின் முன்னேடியாக அமைந்தது. பின்னர் திருவாளர்கள் லோகநாதனும், ஜெயரட்ணராஜாவும் முழுப்பாட நெறியையும் உள்ளடக்கிய நூல்களை வெளியிட்டனர். ஆங்கில மூலத்தி லிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களும் இந்தியாவி லிருந்து வெளிவந்த சில நூல்களுமே மாணவர்களுக்கு உசாத்துணை நூல்களாகப் பயன்பட்டன. வித்தியாசமான மொழிநடை, வேறுபட்ட கலைச் சொற்கள் என்பவை பயன்படுத்தப்பட்டமையால் இவற்றின் பயன் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்தது. மேலும் இவை கிடைத்தற்கரியனவாகவும் உள்ளன. சில கல்லூரி நூல்நிலையங்கள் கூட இவற்றைச் சேகரித்து வைத்திருக்கவில்லை.
அண்மைக்காலத்தில் இத்தகைய நூல்கள் வெளியீட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள தென்றே கொள்ளல் வேண்டும். யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களான திருவாளர்கள் பேரின்பநாதன், சிவநாதன், ஜெயராமன் ஆகியோரின் ஆக்கங்கள் மாணவருலகால் பெரிதும் வரவேற்கப்பட்டன. இத்துறையில் யாழ். பட்டப்படிப்புகள் கல்லூரி யின் பணியும் மகத்தானது.
கல்வித்துறையில் நேரடியாக ஈடுபட்டிராதபோதும் பணம், நிதி, வங்கியியல் பற்றிய அறிவினைப் பரவலாக்குவதில் எமக்குள்ள ஆர்வத் தின் விளைவாக "இலங்கையின் பணச்சந்தை யமைப்பு" என்ற கைநூலை ஆக்கினுேம், யாழ். லயன்ஸ் கழக வேளியீடாக இது பிரசுரிக்கப்பட்டது. இந் நூலுக்குக் கிட்டிய வரவேற்பும், யாழ். பல்கலைக்கழகத்தினரும், கல்வித்துறையினரும் வழங்கிய உற்சாகமும் இத்துறையில் மேலும் அதிகமாக ஈடுபட்டுழைக்க எமக்குத் தூண்டுதல் வழங்கின.

Page 4
iv
இதன் விளைவாகப் "பணமும் வங்கியியலும்" என்னும் நூலினை எழுதத் துணிந்தோம். ஆக்கச் செலவு அதிகரித்திருப்பதும் சந்தைப் படுத்தலில் உள்ள நிச்சயமற்ற தன்மையும் எமது முயற்சிக்குத் தடை யாக இருத்தன. எனவே, கைநூல்களின் வடிவத்தில் மூன்றுபாகங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. இதன் அடுத்த இரு பகுதிகளும் வர்த்தக வங்கிகள் பற்றியும், மத்திய வங்கிகள் மற்றும் நிதியுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பற்றியும் போதிப் பனவாக அமையும், எந்த ஒரு பாட நெறியையும் கருத்தில் கொள்ளாது பொருளியலை ஒரு பாடமாகக் கற்கவிரும்பும் எவருக்கும் பயனுள்ளதாக இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.
இந்நூலில் விளக்கப்பட்டுள்ள கோட்பாடுகளோ அல்லது கருத்துக் கள் வெளியிடப்பட்ட பாணியோ எமது சுய முயற்சியின் விளைவாக எழுந்தனவல்ல. அதற்கான ஆற்றலோ வசதிகளோ எமக்கில்லை. ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளியல் அறிஞர்களின் நூல்களைத் தழுவியே இந் நூல் ஆக்கப்பட்டுள்ளது. இத்தகைய நூல்களை நேரடியாகக் கற்கும் வாய்ப்பினைப் பெறும் மாணவர் இன்னும் அதிகமான பயனை அடைய (1pւգսյւծ.
இந் நூலை வெளியிட முன்வந்த RG & S அசோசியேட்ஸ் நிறுவ னத்தினருக்கும் குறுகிய காலத்தில் சிறப்பாக அச்சிட்டு உதவிய சுன்னுகம், திருமகள் அழுத்தகத்தினருக்கும் எமது நன்றி.
பொருளியலை எமக்குப் புகட்டியவரும் பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ் மொழி மூலம் பொருளியலைக் கற்பிப்பதில் முன்னுேடியுமான யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி திரு. நா. பாலகிருஷ்ணன் அவர்கள் அன்றும் இன்றும் எமக்கு நல்லாசானுகவும் வழிகாட்டியாக வும் உள்ளார். அன்னர் எமது நூலுக்கு அணிந்துரை வழங்கியமையைக் கிடைத்தற்கரிய பேருகக் கருதுகிருேம்.
எமது ஆக்கங்கட்கு உங்கள் தொடர்ந்த ஆத ரவி ன நாடி நிற்கின்றேம். 'மஹாலக்ஷமி" கு. கல்வளை சேயோன் சுதுமலை மேற்கு, மாணிப்பாய்

அணிந்துரை
தற்கால பொருளாதாரங்கள் பணப் புழக் கத்தினை மையமாகக்கொண்டு இயங்கிவரும் அமைப்புகள்.
பணமும் அதன் தொழிற்பாடுகள் பற்றியும் மாணவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் அறிந்து கொள்வது அவசியமாகின்றது.
இத்தகைய நோக்கில், பணத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய முறையில் ஆசிரியர் இந் நூலை எழுதியுள்ளார்.
எளிமையான தமிழில் எ ல் லோ ரா லும் விளங்கிக்கொள்ளும் வகையில் சுருக்கமாக எழுதப் பட்ட நூல் இதுவாகும்.
ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது. இந் நூலை மாணவர்களும் ஏனையோரும் வாசித்துப் பயன் அடைவர் என்பதில் ஐயமில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், நா. பாலகிருஷ்ணன், யாழ்ப்பாணம், B. A. (Hons)(Cey.), M. Phil. (Leeds) 28-8-1986 கலைப் பீடாதிபதி

Page 5
பொருளடக்கம்
பக்கம் 1. பணம்-அதன் தோற்றமும் வளர்ச்சியும் l 2. பணம் என்ருல் என்ன? an 3. பணத்தின் தொழிற்பாடுகள் d do 3 4. பணத்தின் வகைகள் O ( O - 20 5. பண முறைகள் edo 28 6. பணத்தின் பெறுமதி sa o 81 7. பண நிரம்பல் a ,1 1 4 1 1 ܟ】 8. பண வீக்கம் to pe 9 w 雀5
 

1. பணம்-அதன் தோற்றமும் வளர்ச்சியும்
சுயதேவைப் பொருளாதாரம் :
ஆதி காலத்தில் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தேவையான பொருட் களைத் தாமே உற்பத்தி செய்து வந்தனர். மக்கள் தொகை குறைவாகவே காணப்பட்டது. அவர்கள் தேவைகளும் குறைந்தனவாகவே இருந்தன. நிலமே முக்கிய உற்பத்திக் காரணியாக விளங்கியது. தமது உற்பத் திக்கு அவர்கள் சிறு கருவிகளை மட்டுமே பயன்படுத்தினர். சுய உழைப்பு அல்லது குடும்பத்தினரின் உழைப்பு மட்டுமே போதுமானதாக இருந்தது.
தூய பண்டமாற்று முறை:
காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரிக்கலாயிற்று. இதனல் பிரதான உற்பத்திக் காரணியான நிலத்தின்மேல் மக்கள் தொகையின் தாக்கமும் அதிகரிக்கலாயிற்று. மேலும் அவர்களது தேவைகளும் பெரு கின. இதனுல் ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான பொருட்கள் யாவற்றையும் தாமே உற்பத்தி செய்ய இயலாதிருத்தலை உணரலாயி னர். எனவே தமக்குத் தேவையானது போக எஞ்சிய பொருட்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தலைப்பட்டனர். தாம் வழங்கும் பொருட்களுக்கு ஈடாக அவர்கள் ஏனையவர்களின் பொருட்களேயே பெற்றுக் கொண்டனர். ஊடகங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. பொருளாதார அமைப்பு முறையின் இக்கட்டத்தை தூய பண்டமாற்று முறை என அழைப்பர்.
நேரில் பண்டமாற்று முறை:
விரைவாக ஏற்பட்ட மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக பரிவர்த்தனைகளும் அதிகரிக்கத் தொடங்கின. ஒருவர் தமக்குத் தேவை யான சகல பொருட்களையும் உற்பத்தி செய்யாது தான் உற்பத்தி செய்யும் பொருளின் அதிக அளவை உற்பத்தி செய்யும் முறை படிப் படியாக ஏற்படலாயிற்று. இதனையே சிறப்பியல்பு கொண்ட உற்பத்தி முறை என்பர். இது தொழிற் பகுப்புக்கு வழி வகுத்தது. இதன் விளேவாக அதிகளவு பொருட்களே மட்டுமன்றி ஏனையோரின் தேவை களையும் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படலா யிற்று. இந்நிலையில் பொருட்கள் சேவைகளை ஒருவருக்கொருவர் மாற் றிக் கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதை உணரலாயினர். அதாவது ஊடகம் காணப்பட்டால் இத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் எளிதாக நடைபெறலாம் என உணர்ந்தனர். பரவலாக ஏற்கப்பட்டதும், ஓரளவு அருமையானதும், பெறுமானத்தைத் தன்னகத்தே கொண்டனவுமான பொருட்கள் ஊடகங்களாகப் பயன்படுத்தப்படலாயின. ஊடகங்கள் பயன்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பை நேரில் பண்டமாற்று முறை என அழைப்பர்.

Page 6
- 2 -
பண்டமாற்று முறையின் குறைபாடுகள்:
பண்டமாற்றுமுறை பல விதங்களில் வசதிக் குறைவானதாக அமைந்தது. அவற்றுட் சில வருமாறு:
(1) தேவைகளின் இரட்டைப் பொருந்துகை:
பண்டமாற்று முறையில் ஒருவன் ஒரு பொருளை அல்லது சேவையை வேருெருவரிடம் இருந்து பெற விரும்பினுல் தனக்குத் தேவையான அப் பொருளை அல்லது சேவையை வழங்குவதற்குத் தயாராக உள்ள வேருெரு வனத் தேடிக் கண்டுபிடித்தல் வேண்டும். அத்துடன் பின்னையவனுக்கு முன்னையவனின் பொருள் அல்லது சேவை தேவைப்படவும் வேண்டும். இவ்விரு அம்சங்களும் பொருந்தி வருதல் வெகு அபூர்வம். எனவே நீண்டகால இடைவெளியுள் குறைந்த அளவு பரிவர்த்தனைகளே இடம் பெறக் கூடியதாக இருக்கும்.
(2) சிறு கூறுகளாக வகுக்க முடியாமை:
சில பொருட்கள் சிறு கூறுகளாக வகுக்கப்பட முடியாதவை. எனவே அவை முழு அலகுகளாகவே மாற்றப்படல் வேண்டும். உதாரணமாக ஒருவன் ஆடு ஒன்றினை தோல்களுடன் மாற்ற விரும்புகிருன் என்றும் ஆட்டின் பெறுமதி 20 தோல்களின் பெறுமதிக்குச் சமமானது என்றும் கொள்வோம். அவனுக்கு 5 தோல்கள்தான் தேவைப்படுகின்றன என்ருல் ஆட்டின் நாலிலொரு பங்கை மட்டும் வேருக வழங்கமுடியாது. எனவே பரிவர்த்தனை இடம்பெற முடியாத நிலை ஏற்படுகின்றது. மிகக் குறைந்த சத்தர்ப்பங்களிலேயே பெறுமதி வீணடிக்கப்படாமல் பொருட் கள் சிறு அலகுகளாகப் பிரிக்கப்படக்கூடியதாக இருக்கும்.
(3) பொது அலகு காணப்படாமை :
தூய பண்டமாற்று முறையில் ஊடகம் காணப்படவில்லை. அவ் வாறு ஒன்று காணப்பட்டால் பெறுமதியை அளவிடுவதற்கு வாய்ப்பளிப்ப தாக அது அமையும். எல்லாப் பொருட்களும் வேறு பொருட்களுக்காக மாற்றப்படுமேயானுல் அவ்வாறு மாற்றப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத் திலும் பல்வேறு பொருட்களின் சார்புப் பெறுமதிகளைக் கணித்துக் கொள்ளல் சிரமமாக இருக்கும்.
(4) பெறுமானத் திரட்டு காணப்படாமை :
பண்டங்களைக் காலவரையறை இன்றிக் களஞ்சியங்களில் சேகரித்து வைக்க முடியாது. காலகதியில் அவை பெறுமதியை இழந்து விடும். சில பண்டங்கள் ஓரளவு காலத்தின் பின் முற்ருகச் சேதமாகியும் விடும். உதாரணமாக மாணவர்கள் ஒரு ஆட்டையும் சில கோழிகளையும் ஒரு பசுக்கன்றையும் பாடசாலைக் கட்டனத்துக்காக வழங்குகிருர்கள் எனக்

ഭ −' ) ഒരു
கொண்டால் பாடசாலை அதிபருக்கு எத்தனை கஷ்டங்கள் ஏற்படுமெனப் பார்ப்போம். அவைகட்கு அவர் உணவு வழங்க வேண்டும். அசுத்தங் களை அகற்றவேண்டும். தொற்றுநோய் பரவுமேயானல் அவை அனைத் தும் அழிந்து போய்விடும். எனவே பராமரிப்புச் செலவு, பராமரிக்க வேண்டிய சிரமம், பெறுமதி இழக்க வேண்டிய அபாயம் என்பவற்றை அவர் எதிர்நோக்க வேண்டி நேரிடும்.
பணத்தின் தோற்றம் : (1) ஆரம்பகால ஊடகங்கள்:
இத்தகைய வசதியீனங்கள் காரணமாக பொது ஊடகங்களின் பாவனை அவசியமானதென உணரப்பட்டது. பல்வேறு காலப்பகுதிகளில் பல்வேறு பொருட்கள் பொது ஊடகங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந் துள்ளன. போல் எயின்சிக் (Paul Binzig) என்ற அறிஞர் தனது SLTTTLS LLL LTTL LLTLSS SLLLLLLLL LCLLLLLCSTTT TTTT TTTHTTTT பயன்படுத்தப்பட்ட 170 பொருட்களை அகர வரிசையில் தொடுத்துள் ளார். கால்நடைகள், தானியங்கள், பெண்கள், அடிமைகள். உப்பு, இரும்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகங்கள் என்பனவும் பிறவும் இவ்வாறு ஊடகங்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு பொருள் தன்னளவில் பெறுமதி கொண்டதாக இருப்பதுடன் இலகுவில் சந்தைப் படுத்தக் கூடியதாக இருந்தால் மட்டுமே அது ஊடகத்தின் தொழிற் பாட்டை ஆற்ற முடியும்.
(2) அவற்றின் குறைபாடுகள் :
பொதுவாக ஏற்படும் தன்மை அதன் பயன்பாட்டில் தங்கி உள் ளது. மந்தைகள், தோல்கள், தேயிலை, பிராணிகளின் ஓடுகள் (shells), புகையிலை என்பனவும் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பிர தேசங்களில் ஊடகங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
இவை அனைத்திலும் பாரிய குறைபாடுகள் உள்ளன. மந்தைகள் அனைத்தும் ஒரே நிறையுடையன அல்ல. இவை பெரும் சுமையானவை. அவற்றை இடத்துக்கிடம் கொண்டுசெல்லல் கடினமானது. அவற் றின் அலகுகள் பெரியன. ஆகையால் பெரிய கொடுக்கல் வாங்கல் கட்கே இவை பயனுள்ளவை. மந்தைகள் இறப்பின் அதனுல் இழப்பு ஏற்படும். அதேநேரத்தில் உப்பும், தேயிலையும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்படக்கூடியவை. ஆணுல் இவற்றை நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பது செலவு மிக்கதாகும்.
Lräsör agab:
காலப்போக்கில் உலோகங்கள் மாற்றுாடகங்களாக வளர்ச்சி பெற லாயின. ஏனைய ஊடகங்களில் காணப்படாத சில குணதிசயங்கள்

Page 7
--س- 4ھ ہسستے
இவற்றில் காணப்பட்டன. இதனுல் இவை ஏணேய ஊடகங்களை விட வசதிமிக்கனவாக அமையலாயின. அத்தகைய பண்புகள் வரு மாறு:
1. இடத்துக்கிடம் கொண்டு செல்ல வசதிமிக்கவை. 2. நெடு வாழ்வுடையவை. 3. தம்மளவில் பெறுமதிகொண்டவை.
4
எடைக்கேற்ற விகிதாசாரத்தில் இலாபத்தின் பெறுமதியைக் கணிக்கலாம்.
5.
சிறு அலகுகளாகப் பிரிக்கப்படக்கூடியவை. தேவையான வடிவத்தில் வார்த்தெடுக்கப்படக்கூடியவை. இலகுவில் இவற்றை இனங்கண்டு கொள்ளலாம். உலோகங்களே எவரும் அறிந்திருப்பர். ஆதலால் பெறுமதி குறைந்த உலோகத்தைக் கொடுத்து ஒருவர் மற்ருெருவரை
ஏமாற்ற முடியாது. 8. ஏனையவற்றைவிட பெறுமான உறுதிப்பாடு கொண்டவை.
இந்த அடிப்படையில் உலோகங்கள் ஊடகமாக ஏற்கப்படலாயின; எனவே ஒரு பொருளை அல்லது சேவையைக் கொள்வனவு செய்ய விரும்பும் ஒருவர் அதற்கீடாக ஊடகத்தினை வழங்குகிருர், அவற்றை விற்பனை செய்ய விரும்புபவரும் ஊடகத்தினை அவற்றுக்கீடாக ஏற்றுக்கொள்கிருர், தேவைகளின் இரட்டைப் பொருந்துகை ஏற்படவேண்டிய அவசியமோ அதனுடன் இணைந்த சிரமங்களை அனுபவிக்கவேண்டிய தேவையோ இம் முறையில் அற்றுப் போகின்றன.
குற்றிகளின் வரலாறு :
பல்வேறு பொருட்களால் நாணயக் குற்றிகள் அமைக்ககப்பட்டன. இரும்பில் இருந்து பிளாற்றினம் வரை பல்வேறு உலோகங்களில் அவை வார்க்கப்பட்டன. இவற்றைவிட பீங்கான், கண்ணுடி, மரம், களி மண், ரப்பர் போன்றவற்றலும் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. நாணயங்களின் அளவும் பல்வேறு வகையினதாகக் காணப்பட்டது. ஒரு கிரேயின் எடையும் குண்டூசியின் முனையளவு பருமனும் கொண்ட இந்திய நாணயங்கள் முதல் 31 இருத்தல் எடைகொண்ட சுவீடிஷ் பித்தளை நாணயம் வரை பல்வேறுவகை பண்டைய நாணயங்கள் இனங் காணப்பட்டுள்ளன. அவற்றின் வடிவங்களும் வெவ்வேறு பட்டனவாக அமைந்தன. நடுவில் துவாரம்கொண்டதும் 12 அடி விட்டம் கொண்ட வட்ட வடிவினதும் 170 இருத்தல் எடை உள்ளதுமான நாணயம் பசுபிக்கில் உள்ள கரோலின் தீவுகளில் பயன்படுத்தப்பட்டது.

سے 5 سے
கி. மு. 2000 ஆண்டளவில் சீனுவில் வஜ்ராயுத வடிவம் கொண்ட செம்பு நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. கி. மு. 1200 அளவில் மோதிர வடிவில் அமைந்த பித்தளை நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெல்ஜியம் கொங்கோ நாட்டில் சிலுவை வடிவில் அமைந்த பித்தளை நாணயங்களும், மலாக்காவில் மரவடிவில் அமைந்த தகர நாணயங் களும் இன்னும் பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாணயங்கள் புழக்கத்துக்கு வந்த காலம் பற்றியும் சரியாக அறிய முடியாதுள்ளது. 0ே00 ஆண்டு பழமை வாய்ந்த நாணயங்கள் இந்தியாவில் கண்டெடுக் கப்பட்டதாக "பண்டைய நாடுகளில் பணத்தின் சரித்திரம்' என்னும் நூலில் அலெக்சாந்தர் டெல்மார் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
நாணயக் குற்றியிடல் (Coimage)
குறித்த உலேகத்துண்டில் மாற்றுப் பெறுமானத்தைப் பொறித்தலே நாணயக் குற்றியிடல் எனலாம். ஆரம்பத்தில், உலோகங்களின் அகப் பெறுமதி மாற்றுப் பெறுமதியாகவும் கணக்கிடப்பட்டு நாணயக் குற்றி கள் வெளியிடப்பட்டன. நாணயங்களின் உலோகத்தை வெட்டியோ சிதைத்தோ அதனை எவரும் துர்ப்பிரயோகம் செய்யாதிருக்கும்வரை ஒவ்வொருமுறையும் அது கைமாற்றப்படும்போது அதன் எடையையோ தூய்மையையோ பரிசீலிக்க வேண்டிய சிரமம் ஏற்படமாட்டாது. நாணயம் நாணயமாகக் கைக்கொள்ளப்பட்ட நாடுகளில் வர்த்தகம் பன்மடங்கு பெருகுவதற்கு அது காரணமாயமைந்தது.
எந்த உலோகம் நாணயமாக வார்க்கப்பட்டுப் பணமாகக் கணிக்கப் படல் வேண்டுமென்பதை உலோகங்களின் விலைமட்டங்களும் பல் வேறு உலோகங்களின் அகப் பெறுமதியும் நிர்ணயித்தன. இரும்பு, பித்தளை, நிக்கல் ஆகியவை அகப் பெறுமதி அதிகம் கொண்டனவாக இருந்த போது நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் அகப் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட குறைந்த இன சில்லறைக் காசுகளாக மட்டுமே அவை பயன்படுத்தப்படலாயின. ஆளுல் பிளாற்றினம் போன்ற அதிக விலைகொண்ட உலோகங்கள் பொதுவாக பணமாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே அதிக அகப் பெறுமதிகொண்ட உலோ கங்களும் வசதியீனம் காரணமாக நாணயமாக வார்க்கப்படவில்லை.
வெள்ளி நீண்ட காலமாக நாணயம் வார்ப்பதற்குய் பயன்படுத்தப் பட்டது. ஆளுல் தங்கம் இதைவிடக் குறைந்த காலப்பகுதிக்கே பயன் படுத்தப்பட்டது. தங்கத்தின் அகப் பெறுமதி மிக அதிகமானதாக இருந்தமையே இதன் காரணமாகும். இருப்பினும் கி. மு. 1000 ஆண் டளவில் பண்டைய எகிப்தில் தங்கத்தைவிட வெள்ளியே அதிக பெறுமானம் உள்ளதாகக் கருதப்பட்டது, கிரேக்கர்கள் பெரிய செலுத்துமதிகட்கு வெள்ளியையும் சிறியனவற்றுக்குப் பித்தளையையும்

Page 8
-- 6 سے
பயன்படுத்தினர். ரோம சாம்ராஜ்யத்தில் (கி. மு. 3-கி. பி. 476) தங்க நாணயம் பெறுமதி மிக்கதாக விளங்கிய போதும், தாராளமாகக் கிடைத்தமையால் வெள்ளி நாணயங்களே அதிகம் புழக்கத்தில் இருந் A567. உரோம சாம்ராஜ்ய வீழ்ச்சியின் பின்னர் தங்க நாணயம் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. இதன் இடத்துக்கு வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. 1252ஆம் ஆண்டளவில் பிளோ rsărsâ bestib (City of Florance) l?Garriflair (Florin) 5ăis brter யங்களை வெளியிடும் வரை இந்நிலை தொடர்ந்து காணப்பட்டது. மெச்சிக்கோ, பீரு ஆகிய நாடுகளை ஸ்பானியர் கைப்பற்றிய பின்னர் பெருமளவு வெள்ளி ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்டது. மேற்கு ஐரோப்பாவின் அதிகரித்த வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவைப்பட்ட நாணயங்களை வார்க்க இந்த வெள்ளி இருப்பு போதுமானதாக இருந் தமையால் அண்மைக் காலம் வரை வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
தாள் நாணயத்தின் வரலாறு :
பணத்தின் வரலாற்றில் உலோகங்கள் நாணயங்களாக வார்க்கப் பட்டமைக்குப் பின்னர் ஏற்பட்ட முக்கிய வளர்ச்சி தாள் நாணயங்கள் வெளியிடப்பட்டமையாகும். தாள் நாணயங்கள் திடீரெனப் புழக்கத் துக்கு வந்துவிடவில்லை. அவற்றின் வளர்ச்சி நான்கு கட்டங்களைக் கொண்டதாக இருந்தது.
வளர்ச்சியின் நான்கு கட்டங்கள்:
உலோக நாணயங்கள் இலகுவாக இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல வசதியாக இருந்த போதிலும் எளிதிற் களவாடப்படக் கூடியனவாகவும் இருந்தன. எனவே அக்கால வியாபாரிகள் பணத்தைத் தம்முடன் எடுத்துச் செல்வதில்லை. அவற்றைப் பிரபலமான ஒருவரிடம் அல்லது நிறுவனத்திடம் ஒப்படைத்து அவர்கள் வழங்கும் பற்றுச்சீட்டினை மட்டுமே எடுத்துச் சென்றனர். நாணயத்தை இவ்வாறு ஒப்புக் கொண் டோரே பின்னர் வங்கிகளாக வளர்ச்சிகண்டனர். அவர்கள் வழங்கிய பற்றுச்சீட்டுகள் தற்கால பயணிகள் காசோலைகள், நாணயக் கடிதங்கள் என்பவற்றுக்கு நிகரானவை. வர்த்தகர்கள் தம்முடன் கொண்டு சென் றவை பணத்திற்கு மாற்றீடான ஆவணங்களே ஆகும். இதுவேதான் நாணய வளர்ச்சி வரலாற்றின் முதல் கட்டமாகும்.
காலப்போக்கில் இத்தகைய ஆவணங்கள் குறிப்பிட்ட ஒருவரின் பெயரில் அவர் வைப்பில் இட்ட முழுத் தொகைக்குமாகப் பிறப்பிக்கப் படாமல் எவரும் கையாளத்தக்க விதத்தில் (காவி ஆவணங்களாக) வசதியான தொகைகட்கு வழங்கப்படலாயின. இது இரண்டாம் கட்டம், இக்கட்டத்தில் வங்கித் தாள்கள் உருவாகி விட்டன. அவை

ܚ 7 ܚܗ
பனமாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் பணமாகக் கருதப்படவில்லை. பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சான்றிதழாகவே அவை கருதப் பட்டன. செலுத்துமதிகட்காக ஏற்கப்பட்ட போதிலும் விரைந்து பணமாக மாற்றப்பட்டன. ஒரேஒரு கொடுக்கல் வாங்கலுக்கு மட்டுமே அவை ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டன.
படிப்படியாக ஒன்றுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கும் இவை பயன்படுத்தப்படலாயின. பற்றுச்சீட்டை வழங்கியவர் தான் நாணயமானவர் என்பதையும் அப்பற்றுச்சீட்டில் குறிக்கப்பட்ட பணத்தை வழங்குவதில் தாமதம் காட்டமாட்டார் என்பதையும் மக்கள் நம்பும்வரை தான் வழங்கிய பற்றுச்சீட்டுகள் ஒன்றுக்கு மேற் பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவற்றுக்கான பணத்தை உடனடியாகச் செலுத்தவேண்டி இருக்காது என்பதையும் உணரலாயினர். எனவே தான் வைப்பாக ஏற்ற பணத்தை விட பலமடங்கு தொகைகட்குச் சான்றிதழ்களை, எவ்வித சிக்கலும் இன்றி வெளியிடலாம் என்பதை அறிந்தார். இதுவே வளர்ச்சியின் மூன்ரும் கட்டமாகும்.
முதல் கட்டத்தில் வங்கித் தாள் பணமாகக் கருதப்படவில்லை. குற்றி நாணயத்தின் பிரதியீடாகவே இருந்தது. இரண்டாம் கட்டத் தில் கூட வெளியிடப்பட்ட சான்றிதழ்களின் பெறுமதிக்குச் சமமான உலோக நாணயங்கள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டு பெட்டகங் களில் தஞ்சம் புகுந்தன. இந்நிலையில் வங்கித் தாள்கள் காணப்படுவது நாட்டின் மொத்தப் பண அளவில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்த மாட்டாது. ஆனல் மூன்ரும் கட்டத்தில் அவை வெறுமனே பணத் துக்குப் பிரதியீடாக அன்றி மொத்தப் பண நிரம்பலை வெகுவாக அதிகரிப்பவையாக மாற்றம் கண்டன.
ஆணுல், தமது அபூர்வ சக்தியை உணர்ந்த சில வங்கியாளர் பாது காப்பானது எனக் கருதப்படும் பன இருப்புகளைக்கூட கருத்தில் கொள்ளாது பெருமளவு தாள்களை வெளியிடலாயினர். இதனுல் செலுத்து மதிக்காகத் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட குறைந்தளவு தாள்களுக்கே அவர்களால் பணம் செலுத்த முடியவில்லை, பரவலாக வங்கி முறிவுகள் ஏற்படலாயின.
18ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் ஜோன் லோ (John Law) என்பவரின் உடைமையான பிரான்சிய வங்கி (Banque de Francaise) முறிவடைந்தமையைத் தொடர்ந்து அரசு தலையிட வேண்டிய அவசியம் ஏற்படலாயிற்று. மூலதனத்துக்கும் தாவி வெளியீட்டுக்கும் இடையேயும் மொத்த வைப்புகளுக்கும் தாள் வெளியீட்டுக்கும் இடையேயும் குறிப்பிட்ட விகிதாசாரம் பேணப்படல் வேண்டும் என்ற நிபந் துணைகள் விதிக்கப்படலாயின.

Page 9
--سے 8 سـ
இதனுல் முதன்மை வங்கிகளுக்குத் தாள் வெளியீட்டில் ஒரளவு தனியுரிமை வழங்கப்படலாயிற்று. இங்கிலாந்தில் இத்தகைய சிறப் புரிமை இங்கிலாந்து வங்கிக்கு வழங்கப்பட்டது. படிப்படியாக தாள் வெளியீட்டின் பூரண தனி உரிமையை இத்தகைய வங்கிகள் பெற்றன. மேலும் கடன்களைத் தீர்ப்பதற்கு இத்தகைய வங்கிகளின் தாள்கள் சட்டபூர்வமான கருவிகள் என விதிக்கும் சட்டங்களும் ஆக்கப்பட்டன. சட்டபூர்வ பணத்தாளில் பணம் திருப்பிச் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி காணப்படும். ஆரம்பத்தில் வங்கித் தாள்களைத் தங்க நாண யங்களாக மாற்றிக்கொள்ளும் ஏற்பாடு நடைமுறையில் இருந்தது. நெப்போலிய யுத்த காலத்திலும் முதலாம் உலக மகாயுத்த காலத்தி லும் இது கைவிடப்பட்ட போதிலும் இந்த ஏற்பாடு தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்தது. யுத்தத்தின் பின் 1925இல் இது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டபொழுதும் வங்கித் தாள்களைச் செலுத்தி தங்க நாணயங்களைப் பெறுவதற்குப் பதிலாக தங்கக் கட்டிகளைப் பெறுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் வங்கித் தாள்களை ஏற்பதில் மக்கள் தயக்கம் காட்டி னர். படிப்படியாக அவர்கள் தயக்கம் மறையலாயிற்று. தாள் நான யத்தைத் தங்கத்தின் பிரதியீடுகள் எனக் கருதாது அதன் அகப் பெறு மதிக்காக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். இதுவே தாள் நாணய வரலாற்றின் இறுதிக் கட்டமாகும்.
நம்பிக்கை வெளியீடு:
ஆரம்பத்தில் நாணய வெளியீடு 100% இருப்புகட்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் வெளியிடப்பட்ட தாள்நாண யங்களுக்கும், உலோக இருப்புகளுக்கு மிடையே விகிதாசார உறவு மட்டுமே காணப்பட்டது, உலோக இருப்பை விட மேலதிகமாக மேற் கொள்ளப்படும் வெளியீட்டை நம்பிக்கை வெளியீடு என்பர். நாணய வெளியீட்டுக் கோட்பாடுகள் என்ற பகுதியில் இவை விரிவாக விளக்கப் மீேட்டுள்ளன.
தாள் நாணயத்தின் அனுகூலங்கள் :
ஏனைய நாணய வடிவங்களை விட தாள் நாணயங்கள் பலவிதங்க ளில் அனுகூலமானவை. அவற்றுட் சில வருமாறு: 1ே) உலோகங்கள் அதிகமாகக் கையாளப்படும்போது சிதைவுறலாம், சிதைவுகள் காரணமாக எடை இழக்கப்படும் போது அவற்றின் பெறுமதி குறைவுறும். இப்பிரச்சினை தாள் நாணயங்களில் காணப் படுவதில்லை. (2) இவை எடையில் குறைந்துள்ளமையால் இடத்துக்கிடம் கொண்டு
செல்ல வசதியானவை. (3) அகப்பெறுமதி கொண்ட உலோக நாணயங்களின் எடை, தூய்மை என்பவை பரிசீலிக்கப்படல் வேண்டும். தாள் நாணயங்களில் இச்சிரமங்கள் இல்லை
، = محسع?

كسيس 9 مسيس.
(4) வெளியீட்டை நெறிப்படுத்துவதன் மூலம் நாணயத்தின் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெறுமதியை உறுதிப்படுத்தலாம். (3) வர்த்தக தேவைகளுக்கினங்க வெளியீட்டளவை மாற்றியமைப்பது
இலகுவானது. (6) குறைந்த செலவில் பண அனுப்பல்களை மேற்கொள்ள வசதி
யளிக்கிறது. (7) இவை பூரண சட்டபூர்வ தன்மை கொண்டவையாகையால் வங்கிகள் தமது இருப்புக்களை இவற்றின் அடிப்படையில் எளிதாகப் பேணமுடிகின்றது. (8) போர் போன்ற அவசர காலங்களில் இலகுவாக அதிகளவு வெளி யீட்டை மேற்கொண்டு அதிகரித்த செலவுகளைச் சமாளிக்க முடி கின்றது. பிரதிகூலங்கள் : தாள் நாணயங்கள் சில பிரதிகூலங்களை உள்ளடக்கியவை. (1) இவை அகப்பெறுமதி கொண்டிராமையால் வெளியிடும் நாட்டுக் குப் புறத்தே பொதுவாகப் பெறுமதியற்றவையாகக் காணப்படும். (2) உலோகங்களைவிட காகிதம் எளிதில் சேதமுறக்கூடியது. (3) இலகுவில் வெளியீட்டை அதிகரிக்க முடிவதனுல் பின்வரும் பிரச்
சினைகள் தோன்றுவதற்குச் சந்தர்ப்பம் அதிகம். (அ) அதிகரித்த வெளியீட்டால் விலைமட்டம் உயரும் நிரந்தர
வருமானம் பெறுவோரின் மெய் வருமானம் பாதிப்புறும். (ஆ) விலை உயர்வால் நாணயத்தின் வெளிநாட்டுப் பெறுமதி
வீழ்ச்சியுறும். (இ) இதனுல் அன்னிய செலாவணி இழப்பு ஏற்படும்.
மிகை வெளியீட்டின் அறிகுறிகள்:
சிலசமயங்களில் நியாயமான அளவைவிட அதிகரித்ததாக நாணய வெளியீடு அமையலாம். இதனை மிகை வெளியீடு என்பர். மிகை வெளியீடு நடைபெற்றிருத்தலைப் பின்வரும் அறிகுறிகள் புலப்படுத்தும். (1) தங்கத்தின் வி ைஉயர்வு, (2) நாணய மாற்று விகிதம் பாதிக்கப்பட்டு இறக்குமதிப் பொருட்க
ளின் விலை அதிகரித்தல், - (3) சிறு இனங்களுக்கான நாணய தான்களும் உலோக நாணயங்களும்
புழக்கத்தில் காணப்படாமை. (தீ) பொதுவிலைமட்டம் அதிகரித்துக் காணப்படுதல், (5) இரட்டை விலைகள் காணப்படுதல் , ஒரே பொருளுக்கான பெறு மதி பிறநாட்டு நாணயத்தின் அல்லது தங்கத்தின் அடிப்படையில் குறைவானதாகவும் உள்நாட்டு நாணயத்தின் அடிப்படையில் அதிகரித்தும் காணப்படல்,
() y M. r.

Page 10
2. பணம் என்ருல் என்ன ?
பணத்தின் வரலாற்ை ற விரிவாகவும் அதன் கோட்பாடு சிலவற் றையும் நாம் கற்றுள்ளோம். இனிப் பணமென்ருல் என்ன என்பதை அறிந்தால் மட்டுமே எமது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
வரைவிலக்கணம் :
"பணம்" என்ற பதத்துக்கு பலர் வெவ்வேறு வரைவிலக்கணங்களைத் தந்துள்ளனர். "பணத்தின் கருமத்தை நிறைவேற்றக்கூடிய ஒன்று இருப்பின் அதுவே பணம் எனப்படும் " என ஒருசாரார் வரையறுத் துள்ளனர். பொதுவாகப் பணத்தின் கருமத்தைப் பல்வேறு சாதனங்கள் தற்காலத்தில் நிறைவேற்றி வருகின்றன. பண்டமாற்று ஊடகமாகப் பயன்படும் உலோகங்கள், நாணயத்தாள், காசு, காசோலே, மாற் றுண்டியல்கள், வாக்குறுதிப் பத்திரங்கள் என்பவை இவற்றுள் அடங்கும்.
காசோலைகள், மாற்றுண்டியல்கள், வாக்குறுதிப் பத்திரங்கள் என் பவை பனத்துக்குப் பதிலாகப் பயன்படுகின்றன. எனவே இவை பன மாகா. காசோல்களைப் பிறப்பிப்பவரின் வங்கிக்கணக்குகளில் பணம் இருந்தால் மட்டுமே அவற்ருல் பணத்தின் பணியை ஆற்ற முடியும் எனவே இவை அனைத்தும் பன அறிகுறி மட்டுமே.
"கடன்கள் தீர்ப்பதற்கும், பண்டங்களின் பரிவர்த்தனைக்கும் பொதுவாக ஏற்கப்படத்தக்கனவாகச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லா ஊடகங்களும் பணம் ஆகும்’ என்ற வரைவிலக்கணம் பொது வாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பணத்தின் முக்கிய பண்பு சகலராலும் ஏற்கத்தக்கதாக இருத்தலாகும், காசோலைகளை சகலரும் ஏற்கமாட்டார்கள். எனவே அது பணமாகாது.
அத்துடன் சட்டபூர்வமாகக் கடன்களைத் தீர்ப்பதற்குக் காசோலை ஏற்கப்பட்ட சாதனமுமல்ல. சட்டரீதியான ஏற்கப்படுந் தன்மை எவ் வாறு இருப்பினும் தயக்கமின்றி எல்லோராலும் ஏற்கப்படும் தன்மை கொண்டிருப்பின் அதனைப் பணமெனக் கொள்ளலாம். வங்கிப்பணம்:
தற்கால உலகில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பணத்தின் வேருெரு வடிவம்பற்றி விளக்காமல் எமது ஆய்வு பூரணமாக அமைய மாட்டாது. காசோலைகளின் உருவில் ஒருவரிடமிருந்து மற்ருெருவருக்கு மாற்றப்படும் பண வடிவமே வங்கிப்பணமாகும். முகப்பரப்பில் ஏனைய வடிவங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டதுபோல் தோற்றமளித்த போதிலும் உண்மையில் இவை வங்கித்தாளின் பிறிதொரு வடிவமாகவே உள்ளன. ஆரம்பத்தில் வங்கித்தாள்கள் பணமாகவன்றி பணத்துக்

بين 1 إل سيس
கான பற்றுச்சீட்டுக்களாகவே விளங்கியதை மேலே கண்டோம். தொலைந்துபோவதால் அல்லது களவாடப்படுவதனல் ஏற்படக்கூடிய இழப்புக்களை நிவர்த்திப்பதற்காகவே காசோலைமுறை வளர்ச்சி பெற்றது. வங்கித்தாள் அகப் பெறுமதி யடைய பணமாக மாறிய பின்னர் இழப்புக் கட்கு எதிரான பாதுகாப்பு வழங்கும் தன்மையையும் அவை இழந் தன. தற்காலத்தில் மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட வங்கித்தாள் ஒன்றினை ஒருவர் தொலைத்துவிடுவாரே யெனில் அவருக்கு ஏற்படும் இழப்பு தங்க நாணயம் ஒன்றினை இழந்தமைக்குச் சமமானதாகும்.
(1) காசோலைகளும் வங்கித் தாள்களும் :
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகக் காசோலைகள் உருவாக்கப்பட்டன. வங்கித்தாள்கள் அவற்றை வெளியிடும் வங்கியின் கடப்பாட்டுக்கான பற்றுச்சீட்டுக்களாக உள்ளன. அவற்றில் பணம் பெறுபவரின் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. வெளியிடும் வங்கி தனது வாக்குறுதியைக் காப்பாற்றும் என மக்கள் நம்புவதால் அது பணமாக ஏற்கப்பட்டு சுழற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றது. ஒருவரிடமிருந்து பிறிதொருவருக்கு வங்கித்தாள் கைமாறும்போது வங்கியின் கடப்பாடு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாற்றப்படுகின்றது. உதாரணமாக இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட ரூ. 100/-தாள் ஒன்றினை நாகராசா என் பவர் துரைராசா என்பவருக்குக் கொடுக்கும்போது நாகராசாவுக் கான மத்திய வங்கியின் கடப்பாடு துரைராசாவுக்கு மாற்றப்படு கின்றது.
காசோலையும் இத்தகைய பணியையே ஆற்றுகின்றது. நாகராசா தன் பெயரில் ரூ. 100/- வைப்பை வங்கியில் இட்டால் வங்கி அவ ரிடம் ரூ. 100/- கடன்படுகின்றது என்றே பொருள் கொள்ளப்படுகின் றது. இக்கடனுக்கு பற்றுச்சீட்டு ஒன்றினை வழங்குவதற்குப் பதிலாகத் தனது ஏடுகளில் அவரது கணக்கில் ரூபா 100/- ஐச் செலவு (Credit) வைக்கின்றது.
இப்போது துரைராசாவுக்குச் செலுத்தத்தக்கதாக ரூ. 100/-க்கான காசோலே யொன்றை நாகராசா பிறப்பிக்கின்ருர். இவ்வாறு பிறப் பிக்கும் போது தனக்குத் தரவேண்டிய பணத்தை துரைராசா வுக்கு மாற்றும்படி நாகராசா வங்கியைப் பணிக்கின்ருர், வங்கித் தாள்களை ஒருவர் பிறருக்குக் கையளிக்கும்போது உண்மையில் இத் தகைய விளைவே ஏற்படுகின்றது.
(2) இரண்டுக்குமுள்ள வேறுபாடுகள் :
எனினும் வங்கித்தாள்களை விட காசோலை வேறுபட்டது. உடனடி
கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்படும் இரு திறத்தாரையும் அது பெயர்
சுட்டிக் குறிப்பிடுகின்றது. அத்துடன் ஈற்றில் கடன்பட்டிருப்பவரையும்

Page 11
سلسله 12 س.
(அதாவது வங்கியையும்) அது அவ்வாறே குறிப்பிடுகின்றது. காசோலை குறித்த தொகைக்கே பிறப்பிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த ஒரு கொடுக்கல் வாங்கலுடன் அது வலுவிழக்கின்றது. ஆணுல் கொடுக்கல் வாங்கலின் இறுதிச் செலுத்துமதியை நிறை வேற்றுவது காசோலை அல்ல. உண்மை பணத்தை மாற்று வதற்கு ஒரு சாதனமாகவே அது பயன்படுகின்றது. வங்கியில் காணப்படும் வைப்பே உண்மை பணமாகும். வங்கியில் பிறப்பித்தவ ரின் கணக்கில் போதியளவு மீதி காணப்படாதவிடத்து அாசோலை பணம் செலுத்தாது திருப்பப்படும். இதஞல் வர்த்தகர்கள் காசோலைகளை ஏற்பதில் தயக்கம் காட்டுகின்றனர். ஆணுல் வங்கி வைப்பின் மாற் றத்தை ஏற்க ஒருவரும் தயங்கமாட்டார்கள். எனவே வங்கி வைப் புக்களே பணம் என அழைக்கப்படல் வேண்டும்.
வங்கியின் கடப்பாடு வங்கித்தாளைப் பொறுத்தவரை ஒரு தாளிலும், வங்கி வைப்புக்களைப் பொறுத்தவரை ஒரு கணக்கேட்டிலும் குறிக்கப் பட்டிருத்தல் இவற்றுக்கிடையேயான வித்தியாசமாகும். வங்கித்தாளைப் பொறுத்தவரை ஒப்பளிப்பதனுல் இக்கடப்பாடு ஒருவரிடமிருந்து பிறி தொருவருக்கு மாற்றப்படுகின்றது; பின்னையதில் கடன் கொடுத்தவரின் எழுத்து மூலமான கட்டளையால் இக்கடப்பாடு மாற்றப்படுகின்றது. வங்கி பெற்றுக்கொண்ட கடன் ஒருவரிடமிருந்து பிறிதொருவருக்கு மாற்றப்படுகின்றது என்பதே வங்கித் தாளுக்கும் காசோலைக்குமுள்ள ஒற்றுமையாகும். இவையிரண்டும் பல்வேறு வசதிகளைத் தம்மகத்தே கொண்டவை. தற்காலத்தில் இவையிரண்டும் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றன.
வசதிமட்டுமே காசோலையின் தோற்றத்துக்குக் காரணமாக இருந் திருக்கலாம். ஆனல் தாள் வெளியீட்டின்மீது கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் காசோலைப் பாவனையைப் பரவலாக்கி விட்டன. இன்று காசோலைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் வங்கிகளுக்கு ஏராள மான இலாபம் கிடைக்கின்றது. இதனைப்பற்றி ** வர்த்தக வங்கிகள்" என்ற அத்தியாயத்தில் விரிவாகக் கற்போம்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் மொத்த பணநிரப்பலின் மூன்றில் இரண்டு பங்காக வங்கி வைப்புக்கள் காணப்படுகின்றன. எமது நாட்டில் கூட மொத்த பன நிரப்பலின் அரைப்பங்காக வங்கி வைப்புக்கள் அமைந்துள்ளன. இவற்றின் பங்கு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல் கின்றது. எனவே பணத்தின் வடிவங்களில் வங்கி வைப்புக்கள் முக்கிய இடம் பெறுகின்றன,

3. பணத்தின் தொழிற்பாடுகள்
சுழற்சியின் சக்கரமாகவும் வர்த்தகத்தின் பெரும் கருவியாகவும் கருதப்படும் பணம், பல்வேறு தொழிற்பாடுகளை ஆற்றுகின்றது. தூய பண்டமாற்று பொருளாதாரத்தில் காணப்பட்ட கஷ்டங்களை அகற்றுவதாக அதன் ஒவ்வொரு தொழிற்பாடும் அமைந்திருக்கின்றது. பனத்தின் தொழிற்பாடுகளை நான்காக வகுக்கலாம்3 (1) கணக்கியல் அடிப்படையில் பதிவுகளைப் பேணவும் பொருளாதார கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி நிர்வகிக்கவும் பல்வேறு சிக்கலான அம்சங்களைப் பொது அலகில் நிர்ணயிப்பதன்மூலம் எளிமையாக்க வும் உதவுவதனுல் அதனைக் கணக்கியல் அலகென அழைக்கலாம். கொள்வனவு வலு கோட்பாடுகளுடன் கணக்கியல் அலகு சம்பந் தப்படுவதஞல் அதனைப் பெறுமான நியமம் எனவும் அழைக் கலாம். இவை இரண்டையும் விட பெறுமதியின் பொது நியமம் என்றும் கூறிக்கொள்ளலாம். இவ்வனைத்து அம்சங்களையும் இணைத்து பெறுமதியின் அலகுத் தொழிற்பாடென இதனை அழைப் பதே பொருத்தமானது. (2) பணத்தின் தொழிற்பாடுகளில் தலையாயது மாற்றுடகத் தொழிற்பா
டாகும். (3) கடன் நிபந்தனைகள், பணத்தைச் செலுத்துவதற்கான வாக் குறுதிகளாகவோ கட்டளைகளாகவோ அமைகின்றன. இவற்றை இலகுவில் கணிக்க பணம் உதவுகின்றது. எனவே அது பிற்போ டப்பட்ட செலுத்துமதிகளின் நியமத் தொழிற்பாட்டையும் பணம் மேற்கொள்கின்றது.
(4) பணத்தின் கொள்வனவு வலு ஒரு வரையறைக்குட்பட்டதே. எனவே அவ்வலு திரட்டப்படல் அவசியமாகின்றது. பெறுமானத் திரட்டகச் செயற்படல் அதன் மற்ருெரு தொழிற்பாடாகின்றது. இவற்றுள் முதலிரண்டையும் ஆரம்ப தொழிற்பாடுகள் என அழைப் பர். கடைசி இரண்டு தொழிற்பாடுகளும் முன்னையதன்வழி வந்தமையால் அவற்றை வழிவந்த தொழிற்பாடுகள் என்பர்.
பணம் பெறுமதியின் அலகு:
குறித்த சமூகம் தனக்கெனத் தனியான பணவியல் அலகொன்றை வகுத்துக்கொள்ளும், இதன் அடிப்படையிலேயே சகல பொருட்களதும் சேவைகளதும் பெறுமானத்தை அளவிட்டு விளக்கும். இவ்வாறு அளவிடப்படும் பெறுமானமே குறித்த பொருள் அல்லது சேவையின் விலே ஆகும். எனவே பணவியல் அலகின் எத் தொகையைக் கொடுப் பதன்மூலம் குறித்த பொருளை அல்லது சேவையைப் பெற்றுக்கொள்ள

Page 12
முடியும் என விளக்குதல் எளிதாகின்றது. ஒரு தொலைக்காட்சிப் பெட் டியின் விலை ரூபா 12000/- என்ருே ஒரு கிலோ அரிசியின் விலை ரூபா 10/- என்ருே இலகுவில் கூறிவிடலாம். பணப் பொருளாதாரத்தில் பெறுமதிகள் பணத்தின் அலகுகளிலேயே விளக்கப்படுகின்றன. பண மற்ற பொருளாதாரத்தில் அதாவது தூய பண்டமாற்றுப் பொருளா தாரத்தில் ஒரு பொருளின் பெறுமதியை இவ்வாறு எளிதாக விளக்கிவிட முடியாது. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் பெறுமானம் 120 கிலோ அரிசியின் பெறுமானத்துக்குச் சமம் என மட்டுமே விளக்கலாம். அவ்வா முயின் அரிசியின் பெறுமானம் என்ன என்ற கேள்வி பிறக்கும். அதனை வேருெரு பொருளின் குறித்த அலகுகளின் பெறுமானத்துடன் தொடர்புபடுத்தல் வேண்டும். இதனுல் கால விரயம் ஏற்படுவதுடன் சிக்கலான கணிப்பீடுகளைச் செய்யவேண்டியும் நேரிடுகின்றது.
பெறுமதியின் அலகாகப் பணம் இருப்பதனுல் கணக்குவைத்தல் எளிதாகின்றது. பல்வேறு வருமானங்கள், செலவுகள், உரிமைப் பொருட்கள், சென்மதிப் பொருட்கள் என்பவற்றின் பெறுமதி பொது அலகால் குறிக்கப்படுவதனுல் கணக்கியல் சற்றுத் தெளிவான விளக் கத்தை வழங்கக்கூடியதாக அமைகின்றது. மேலும் பெறுமதி பொது அலகின் அடிப்படையில் அமைந்துள்ளமையால் கூட்டியோ கழித்தோ தேவையான தகவல்களைத் தெளிவாகப் பெறமுடிகின்றது.
பெறுமானங்களை ஒப்பிடுவதும் அதனுல் எளிதாகின்றது. ஒரு கிலோ இறைச்சியின் பெறுமானம் ரூபா 50/- எனவும் ஒரு கத்தரிக்காயின் பெறு மானம் ரூபா 5/- எனவும் கொண்டால் ஒரு கிலோ இறைச்சியின் பெறுமா னம் 10 கிலோ கத்தரிக்காயின் பெறுமானத்துக்குச் சமமானதென இவ்விரு விலைகளையும் எளிதில் ஒப்பிட்டு விடலாம்.
தற்காலப் பொருளாதார முறையில் பணவியல் அலகுகளைவிட ஏனைய அளவீட்டு அலகுகளும் நாளாந்தம் பயன்படுத்தப்படுகின்றன. எடையை அளவிட இருத்தல், அவுன்ஸ், கிரும், கிலோகிரும் என்ப வையும் திரவங்களை அளவிட போத்தல், கலன், லீற்றர் என்பவையும் நீட்டல் அளவையில் யார், அடி, அங்குலம், சென்ரிமீற்றர், மீற்றர் என்பவையுமான பல்வேறு அலகுகளை நாம் பயன்படுத்துகின்ருேம். இத் g5605tti அலகுகள் மாருதவை எனவும் பணவியல் அலகுகள் மட்டுமே மாற்றத்துக்குள்ளாகும் எனவும் கொண்டு எமது நாளாந்த கொடுக் மல் வாங்கல்களை எளிதாகச் செய்துவிடுகிழுேம். பணவியல் அலகுகள் மாருதவையாகவும் ஏனைய சகல அலகுகளும் மாற்றத்துக்குள்ளாகு மெனவும் கொண்டால் எத்தகைய குழப்பநிலை தோன்றும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.

- 15 -
பணவியல் அலகின் பெறுமானம் நாளாந்தம்-ஏன் ஒரு நாளில் பல முறை கூடாமாற்றத்துக்குள்ளாகலாம். இந்த மாற்றங்களை அளவிட
நாம் பல்வேறு சுட்டிகளைப் பயன்படுத்துகின்ருேம். இலங்கையில் கொழும்புமாநகர வாழ்க்கைச் செலவுச் சுட்டெண், மொத்த விலைச் சுட்டெண் ஆகியவை பணவியல் அலகின் கொன்
வனவு வலுவில் ஏற்படும் மாற்றங்களை அளவிட எம்மால் பயன்படுத் தப்படும் சுட்டிகளாகும். விலைமட்டம் வீழ்ச்சியடைந்தால் (இது சாதா ரணமாக நிகழ்வதில்லை) கொள்வனவு வலு அதிகரிக்கின்றது. விலை மட்ட அதிகரிப்பு கொள்வனவு வலுவைக் குறைக்கின்றது.
ஒவ்வொரு நாடும் தனக்கெனத் தனியான பணவியல் அலகொன் றினை வகுத்துக்கொள்கின்றது. ஐக்கிய அமெரிக்கா தனது பணவியல் அலகை டொலர் என நிர்ணயித்துள்ளது. ஜேர்மனியில் டொயிஷ் மார்க் அலகாக அமைந்துள்ளது. யப்பானில் யென்னும், பர்மாவில் கயாத்தும், ஈரானில் ரியாலும், இங்கிலாந்தில் பவுண்டும், இந்தியா, பாகிஸ்தான், நேப்பாளம், இலங்கை ஆகிய நாடுகளில் ரூபாயும் பண வியல் அலகாக உள்ளன. இவ்வலகுகள் வேறு ஏதாவது பொருளுடன் தொடர்புபட்டதாகவோ அன்றி இல்லாததாகவே இருக்கலாம். அண் மைக்காலம் வரை பல்வேறு நாடுகளின் நாணயம் பொன்னுடன் அல் லது வெள்ளியுடன் தொடர்புபட்டதாகக் காணப்பட்டது. ஆரம்பத் தில் இலங்கை ரூபாய் இந்திய வெள்ளி நாணய இருப்புகட்கெதி ராகவே வெளியிடப்பட்டது. இந்திய ரூபாயோ பிரித்தானிய பவுண் டுடன் இணைக்கப்பட்டிருந்தது. பவுண் நாணயம் தங்கத்துடன் தொடர்புபட்டிருந்தது. எனவே இலங்கை ரூபாய் தங்கத்துடன் மறை முகமாகத் தொடர்புபட்டிருந்தது. தற்போது அத்தகையநிலை இல்லை. வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கலைப் பொறுத்தவரை குறித்த நான யத்துக்கு உலோகங்களுடன் உள்ள தொடர்பு முக்கியமாகக் காணப் பட்டபோதும் உள்நாட்டுப் பெறுமதியைப் பொறுத்தவரை அத் தகைய தொடர்பு முக்கியமானதாகக் கணிக்கப்படுவதில்லை. அந்நான யத்தின் கொள்வனவு வலுவின் அடிப்படையிலேயே அதன் பெறுமா னம் மதிப்பிடப்படுகின்றது.
ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரேஒரு தனி அலகினையே கொண் டிருக்கும். எனினும் தற்போது சிறப்பு எடுப்பனவு உரிமை (SDR) என்னும் அலகும் உள்நாட்டு நாணய அலகுகளுடன் சமாந்தரமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு உருவம் கிடையாது. நாணயங் களின் வெளிநாட்டுப் பெறுமதியை இலகுவாகக் கணிப்பதற்கு இது உருவாக்கப்பட்டது. பொதுவாக ஒரு நாட்டின் பண அலகு அந் நாட் டுக்கு வெளியே சட்டபூர்வமாகச் செல்லுபடியாகாது. சர்வதேச வர்த் தகம் பெருமளவில் வளர்ந்துவிள நிலையில் கரைகடந்த வங்கிச் சேவைகள் என்ற எண்ணக் கரு செயற்படுத்தப்படுகின்றது. ஒரு நாட்டின் நாணயம்

Page 13
س۔ 16: ۔۔۔
சட்டபூர்வமாகச் செல்லுபடியாகும் நாட்டுக்கு வெளியே வியாபாரக் கொடுக்கல்வாங்கல்கட்கு அந்நாணயத்தினைப் பயன்படுத்துதல் இத் தொழிலின் முக்கிய அம்சமாகும். பணத்தின் பெறுமதி பொருட்க ளின் பெறுமதியின் அடிப்படையில் கணிக்கப்பட்ட காலத்தில்-அதா வது வெள்ளி நியமம், பொன்னியமம் போன்றவை நிலவிய காலத் தில் - பணத்தின் கணக்கியல் அலகுத் தொழிற்பாடும் பெறுமான நியமத் தொழிற்பாடும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தன. இன்று சிறப்பியல்பு கொண்ட இரு வேறு தொழிற்பாடுகளாக அவை மலர்ந் துள்ளன.
மாற்றுாடகத் தொழிற்பாடு
மாற்றுாடகம் என்பதைவிட செலுத்துமதிகளின் ஊடகம் என்றும்
சுழற்சி ஊடகம் என்றும் செலுத்துமதிச் சாதனம் என்றும் பல்வேறு
பெயர்கள் இத்தொழிற்பாட்டுககு வழங்கப்படுகின்றது.
பணம் என்னும் கருவி கண்டுபிடிக்கப்பட முன்னர் தூய பண்ட மாற்று முறை நிலவியது. அம்முறையில் பண்டங்கள் பண்டங்களுக் காகவும் சேவைகள் பண்டங்களுக்காகவும் மாற்றப்பட்டன. இத் தகைய மாற்றங்களில் ஊடகம் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. குறித்த பண்டங்கள், சேவைகளின் பெறுமானங்களின் அடிப்படை யில் நிர்ணயிக்கப்பட்டன. மக்கள் தொகையும் அவர்களின் தேவையும் குறைவாக இருந்த நிலையில் இப்பொறி முறை இலகு வாகச் செயற்பட்டது. மக்கள் தொகையும் அதிகரித்து அவர்கள் தேவைகளும் அதிகரிக்கத் தொடங்கியவுடன் இவ்வமைப்பு பல் வேறு சிக்கல்களை உருவாக்கியது. இதனை ஓர் எளிய உதாரணத் தால் விளக்கலாம். பொருளாதாரத்தில் A, B, C, D என நான்கு பொருட்கள் (அல்லது சேவைகள்) மட்டுமே உள்ளன எனக் கொள் வோம். இவற்றின் பெறுமானம் மற்றென்றுடன் கணிக்கப்படவேண்டு மாளுல் ஆறு விகிதாசாரத் தொகுதிகள் உருவாக்கப்படல் வேண்டும். sepal osii 6uguorp solaolpujb: AB, AC AD, BC, BD, CD, பொருட்கள் தொகை பத்தாக அதிகரிப்பின் தொகுதிகள் 45ஆக அதிகரித்துவிடும். பொருட்கள் 100 ஆகப் பெருகத் தொகுதிகள் 4,950 ஆகவும் பொருட்கள் 1000 ஆக அதிகரிக்க தொகுதிகள் 499,500 ஆக வும் பெருகிவிடும். இது கால விரயத்தை ஏற்படுத்துவதுடன் வேக மான வர்த்தகத்தையும் தடை செய்யும். பணத்தின் மாற்றுாடகத் தொழிற்பாடு இத்தகைய கஷ்டங்களே இல்லாதொழிக்கின்றது. பனப் பொருளாதாரத்தில் ஒவ்வொரு பொருளின் பெறுமானமும் பணத்தின் அடிப்படையில் விலையாகக் கணிக்கப்படுகின்றது. ஒவ்வொரு விலையும் கணக்கு அலகின் பொது அளவீட்டால் குறிக்கப்படுகின்றது. ஒரு பொருளின் விலையை ஏனைய பொருளின் பெறுமதி அல்லது விலையுடன் ஒப்புநோக்கல் எளிதாகின்றது.

-anara 17 -
பண்டமாற்றுப் பொருளாதாரத்தில் ஒரு பொருளின் கொள்வனவும் வேருெரு பொருளின் விற்பனவும் ஏககாலத்தில் நடைபெறல் வேண் டும் ஆணுல் பணப் பொருளாதாரத்தில் பணம் மாற்றுாடகமாகத் தொழிற்படுவதனுல் கொடுக்கல் வாங்கல் ஒரேநேரந்தில் நடைபெற வேண்டிய அவசியம் இல்லை. பொருளை விற்க விரும்பும் ஒருவன் தனது பொருளைக் கொடுத்து அதற்கீடாகப் பணத்தைப் பெற்றுக்கொள்கிருன். அதைப்போலவே பொருளைக் கொள்வனவு செய்ய விரும்பும் ஒருவனும் பணத்தைக் கொடுத்துப் பொருளைக் கொள்வனவு செய்துகொள்ளு கிருன். தனக்குத் தேவையான பொருளை வழங்குபவனுக்குத்தான் தனது பொருளைக் கட்டாயமாக விற்கவேண்டுமென்ருே தனது பொருளை வாங்குபவனிடமிருந்து கட்டாயமாக வேருெரு பொருளைக் கொள்வனவு செய்யவேண்டுமென்ருே எதுவித நிர்ப்பந்தமும் கிடையாது. எனவே பொருளை வாங்கவோ விற்கவோ விரும்பும் ஒருவன் அதற்கான தேரம், இடம், தரம் என்பவற்றுடன் யாருடன் அத்தகைய கொடுக்கல் வாங் கலைச் செய்யவேண்டும் எள்பதையும் சுயமாகவே தீர்மானிக்கக்கூடியவ னக இருக்கிருன். எனவே பணத்தின் மாற்றுாடகத் தொழிற்பாட்டின் விளைவாக அவன் அதிகரித்த பொருளாதாரச் சுதந்திரத்தை அனுபவிக்கக் கூடியதாக உள்ளது.
பணம் கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்குகின்றது. காலவிரயத் தைத் தடுக்கிறது. சிறு அலகுகளாகப் பிரிக்கப்படக்கூடியதாக இருப்ப தஞல் குறித்து பொருளின் தேவையான அளவைமட்டுமே கொள்வனவு செய்ய முடிகின்றது. வேறு காரணங்களுக்காக ஒரு பொருளைத் தேவைக் கதிகமாகக் கொள்வனவு செய்தால் தேவை போக எஞ்சியபகுதி வீணடிக் கப்படும். எனவே பணம் மாற்றுாடகமாக இருப்பதனல் பொருட்களின் உச்சப்பயன்பாடு எய்தப்படுகின்றது. இவைமட்டுமல்ல, தொழிற் பாகு பாடு ஏற்படுவதற்கும் பணத்தின இத் தொழிற்பாடு உதவுகின்றது. இதனுல் சிறப்பியல்பு வளர்ச்சி காண்கின்றது. இதன் காரணமாக பேரளவு உற்பத்தி ஏற்பட வசதி பிறக்கின்றது. மொத்தத்தில் குறைந்த விலையில் தரமான பொருட்களைக் கொள்வனவு செய்ய வழியேற்படு கின்றது.
இத்தகைய நன்மைகனை மக்கள் அடைய வேண்டுமானுல் பணத்தின் கொள்வனவுவலு உறுதியாக இருத்தல் வேண்டும். அது அடிக்கடி தளம்ப லுறுமானல் வர்த்தகத்தில் குழபபநிலை ஏற்பட்டுவிடும். பிற்போடப்பட்ட செலுத்துமதிகளின் நியமம் :
பெறுமதியின் அலகாகவும் செலுத்துமதிகளின் ஊடகமாகவும் பணம் வளர்ச்சி பெற்றவுடன் எதிர்கால அல்லது பிற்போடப்பட்ட செலுத்துமதிகள் அதன் அலகிலேயே கணிக்கப்படும். நவீன பொருளா தார முறைகளில் இத்தகைய பல ஒப்பந்தங்கள் அவசியமானவையாகின் றன. இத்தகைய ஒப்பந்தங்கள் நிகழ்காலத்தில் பெறப்படும் கடனையும்
2

Page 14
- 18 -
வட்டியையும் எதிர்காலத்தில் செலுத்துவது சம்பந்தமானவை. இவற் றின் தொகைகள் பல அலகுகளால் விளக்கப்பட்டவையாக இருக்கும். இவை சில தினங்களின் பின்போ மாதங்களின் பின்போ ஆண்டுகளின் பின்போ செலுத்தத்தக்கதாக உருவாக்கப்படுகின்றன. உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன்கள், கடன் பத்திரங்கள், பங்கிலாபங்கள், நீண்ட காலக் குத்தகைகள், காப்புறுதிச் செலுத்துமதிகள், ஓய்வூதியங்கள் என்பவை இவற்றுள் அடங்கும். இத்தகைய ஒப்பந்தங்களில் சம்பந்தப் பட்ட செலுத்துமதிகள் பொருட்களின் அடிப்படையில் மீளச் செலுத் தப்படல் வேண்டுமெனில் எத்தகைய கஷ்டங்கள் ஏற்படுமெனச் சிந் திக்க வேண்டும். உதாரணமாக விவசாயி ஒருவன் விதைப்பின் முன்னர் விதை நெல்லைக் கடனுகப் பெறுகிமுன் எனக் கொள்வோம். அதேபோல உழவுயந்திர வாடகைக்கும் கடன் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்கிருன் என்றும், வயலில் உற்பத்தி நடவடிக்கைக்குத் தேவையான தொழிலாளரையும் கடன் அடிப்படையிலே பொருந்திக் கொள்கிருன் என்றும் கொள்வோம். ஒப்பந்தப்படி அறுவடையிலிருந்து அவன் அனைவரது கடனையும் வட்டியுடன் மீளச் செலுத்தல் வேண்டும். இந்நிலையில் அறுவடையின் பின் நெல்லின் பெறுமானம் குறைவடையு மானுல் பொருட்களையும் சேவைகளையும் வழங்கியோர் பாதிப்படைவர். அதே சமயத்தில் நெல்லின் பெறுமானம் அதிகரிக்குமேயானல் விவசாயி பாதிப்புறுவான். இவை அனைத்துக்கும் போதுமான நெல் விளையா விடின் தனது கடனை அவன் எவ்வாறு மீளச் செலுத்துவது?
பண்டமாற்றுப் பொருளாதாரத்தில் இத்தகைய பல சிக்கல்களால் எதிர்காலச் செலுத்துமதிகள் பற்றிய ஒப்பந்தங்கள் எழுவது குறை வாகவே காணப்பட்டன. இதனுல் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பணம் ஒரு ஊடகமாக வளர்ச்சிபெற்ற பின்னர் இத்தகைய சிக்கல்கள் குறைந்து விட்டன. இப்போது பணத்தின் அலகுகளின் அடிப்படையில் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம். பொதுமக்களும் அரசாங்கங்களும் கடன் பெறலாம். கம்பணிகள் தொகுதிக்கடன் பத்திரங்களை வழங்கலாம்.
ஆணுல் இச் செயற்பாடு வெற்றிகரமாக அமையவேண்டுமெனில் பன அலகின் பெறுமானம் அதிக தளம்பலுக்குட்பட்டதாக இருத்தல் ஆகாது. பணப் பெறுமதி வேகமாக அதிகரிக்குமானுல் எதிர்காலத்தில் குறித்த தொகையைச் செலுத்துவதாகப் பொருந்திக் கொண்டவர் நட்டமடைவர். பணப்பெறுமதி வீழ்ச்சி பெறுமானுல் நன்மைகளைப் பெறுவோர் பாதிக்கப்படுவரீ, குறிப்பாக நிலையான வருமானங்களைப் பெறுவோர் அதிகம் சிரமப்பட நேரிடும். இதனுல் சேமிப்புகளும் மூலதனவாக்கமும் பாதிக்கப்பட நாட்டின் அபிவிருத்தி குன்றும்,
பெறுமானத் திரட்டாகப் பணம் :
மனிதவாழ்வில் எதிர்பாராது தேவைகள் எந்நேரத்திலும் ஏற்பட லாம். இத்தேவைகளைச் சமாளிக்க அவன் தன்னிடமுள்ள பெறுமானங்
 

- 19 -
களைப் பொருட்களாகவும் சேவைகளாகவும் மாற்றக் கூடியதாக இருத்தல் வேண்டும். அவனிடம் உள்ள பெறுமானங்கள் எவராலும் தயக்கமின்றி ஏற்கப்படத்தக்கதாயின் இலகுவில் அவன் தனக்குத் தேவையான பொருட்களையோ சேவைகளையோ பெற்றுக்கொள்ள முடியும். இக் குணதிசயத்தைப் பெற்றுள்ளமையால் பெறுமானத் திரட்டாகத் தொழிலாற்றுவதற்கு மிகச் சிறப்பான சாதனமாக அது அமைந்துள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஏனைய பொருட்களின் குறைபாடுகளைப் பணம் கொண்டிருக்வில்லை; எனவே பெறுமானந்தின் அலகாகவும் செலுத்துமதியின் நியமமாகவும் வளர்ச்சியடைந்தவுடன் அது பெறு மானத் திரட்டாகவும் பயன்படுத்தப்படலாயிற்று.
பெறுமானத்தை ஏனைய சாதனங்கள் மூலமும் திரட்டலாம், பெறுமதிமிக்க எந்தச் சொத்தும் இத் தொழிற்பாட்டை ஆற்றலாம். உதாரணமாக குறுங்கால வாக்குறுதிப் பத்திரங்கள், ஈடுகள், தொகு திப் பங்குகள், வீட்டுத் தளபாடங்கள், வீடுகள் காணிகள் ஆகிய வற்றைக் கூறலாம். பணத்தைப் போலன்றி இத்தகைய ஆதனங்கள் வட்டி, SAMT GRAD&3 இலாபம் ஆகியவற்றை உழைப்பனவாகவோ அல்லது பயனுள்ளவையாகவோ அமையும். சில சமயங்களில் அவற்றின் பணப் பெறுமானம் காலப்போக்கில் அதிகரிக்கவும் கூடும். மறுபுறத் தில் இவை சில பிரதிகூலங்களையும் தம்மகத்தே கொண்டுள்ளன. அவற்றுட் சில வருமாறு:
(1) அவற்றைக் களஞ்சியப் படுத்துவதற்குச் சில வேளைகளில் செலவு ஏற்படலாம். ــــــــــــ
(2) சில வேளைகளில் அவற்றின் பெறுமதி குறைவடையலாம். (3) அவற்றைப் பெறுமதி இழப்பில்லாமல் விரைவில் பணமாக
மாற்ற முடியாது.
எனவே பெறுமானத் திரட்டுத் தொழிற்பாட்டை ஆற்றுவதற்குப் பணமே சிறந்த சாதனம் என்பது பெறப்படுகின்றது. எனினும் பெறு மானத்தைப் பண உருவில் திரட்டும் ஒருவன் அது வேறு வகையில் முதலிடப்பட்டிருந்தால் உழைத்திருக்கக் கூடிய வருமானத்தை இழக்கி முன். இருப்பினும் தேவையான நேரத்தில் பணத்தை அவன் பொருட்க ளாகவும் சேவைகளாகவும் மாற்றிக்கொள்ள இயலும், இதனல் பெறுமானத்தைப் பண உருவில் திரட்டுவது அவனுக்கு வசதியானதாக வும் நிச்சயமானதாகவும் அமைகின்றது. உடனடிக் கொள்வனவு வலுவை அவனுக்கு வழங்குகின்றது.
ஆளுல், இத்தொழிற்பாட்டைப் பயனுள்ள வகையில் பணம் <器DD வேண்டுமெனில் அதன் பெறுமானம் விரைவாகத் தளம்பலுருததாக அமைந்திருத்தல் வேண்டும். பணவீக்க காலங்களில் மெறுமானத்தைப் பண உதவில் திரட்டுவதனல் வருமான இழப்பு ஏறப நிகின்றது. அத்துடன் பணவீகக காலத்தில் விலைகள் உயர்ந்து செல்வதினுல பணம் சேர்க்கப்பட்ட காலத்துக்கும் அது செலவிடப்படும் காலத்துக்குமிடையே உண்மைப் பெறுமதியிலும் இழப்பு ஏற்படுகின்றது.

Page 15
4. பணத்தின் வகைகள்
பணத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் குணுதிசயங்கள், அதை வழங்கும் நிறுவனத்தின் இயல்பு, பணம் என்ற முறையிலும் பொருள் என்ற முறையிலும் பணத்தின் இயல்பு என்ற அடிப்படையில் பணம் பல வகையினதாக வகுக்கப்படலாம்.
முழுப் பெறுமதி நாணயம் :
நாணயத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருளின் அகப்பெறுமதி பணம் என்ற முறையில் அதன் புறப்பெறுமதிக்குச் சமனுக இருப்பின் அதனையே முழுப்பெறுமதி நாணயம் எஸ்பர். மந்தைகள், அரிசி, வள்ளங்கள் போன்ற பல பொருட்கள் ஆதிகாலத்தில் பணமாகப் பயன்படுத்தப்பட்டன. பணம் என்ற முறையிலும் பொருள் என்ற முறையிலும் இவை சமமான பெறுமதியைக் கொண்டிருந்தன. அறியப் பட்ட அண்மைக்கால பணவியல் முறைகளிலே முழுப்பெறுமதி நான யங்களாக வெள்ளியும் தங்கமும் இருந்துள்ளன. தங்க நியமம், வெள்ளி நியமம், ஈருலோக நியமம் என்பவை அண்மைக்காலம்வரை நிலைத் திருந்தன.
உலோகங்களே முழுப்பெறுமதி நாணயங்களாக வார்ப்பது அநேக சந்தர்ப்பங்களில் அரசின் தனி உரிமையாகவே இருந்துள்ளது. மிக அபூர்வமாகவே தனியாருக்கும் இந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது.
நாணயமாக வார்க்கப்படும் உலோகத்தின் தூய்மையும், எடையும் வரையறுக்கப்படும். அத்துடன் நாணயத்தின் பணப் பெறுமதியும் அவ் வாறே நிர்ணயிக்கப்படும். ஒரு அவுன்ஸ் (480 கிரெயின்) தங்கத்தின் விலை $ 20167ஆக இருந்தபோது 23:22 கிரெயின் எடையும் 10/10 தூய்மையும் கொண்ட நாணயங்கள் வார்க்கப்படல் வேண்டும் என்று அமெரிக்க ஐக்கியநாடுகளின் சமஷ்டி அரசாங்கம் விதித்திருந்தது. 1983 வரை இந்த ஏற்பாடு தொடர்ந்திருந்தது.
இந்த ஏற்பாட்டின் கீழ் விற்பனைக்கு வரும் தங்கம் யாவும் அர சாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டு எதுவித உயர் எல்லையும் இன்றி நாணயமாக வார்க்கப்படும். இதனுல் தங்கத்தின் சந்தைவிலே நாணய சாலேயின் கொள்வனவு வில்யை விட ஒருபோதும் குறைவடைய மாட்டாது. பண அதிகாரி ஒரு அவுன்ஸ் தங்கத்தை தீ 20167க்குக் கொள்வனவு செய்யத் தயாராக இருப்பதால் எத்தகைய வேறு நோக் கங்களுக்கும் இதைவிடக் குறைந்த விலையில் தங்கத்தை விற்பனே! செய்ய எவரும் முன்வரமாட்டார்.
 

- 21 -
அதே சமயம் நாணயங்களை ஏனைய தேவைகட்காக உருக்குவதும் தடைசெய்யப்படவில்லை. இதஞல் தங்கத்தின் சந்தைவிலை நாணயசாலை விலையைவிட அதிகரிக்கமாட்டாது. இருப்பினும் ஏனைய தேவைகட்கு தங்கத்துக்கான கேள்வியை நாணயங்களை உருக்குவதன் மூலம் பூர்த்தி செய்ய இயலாது போகுமானல் தங்கத்தின் சந்தைவிலை நாணயசாலை விலையைவிட அதிகரித்து விடும். இத்தகைய சந்தர்ப்பங்களில் தங்கத் தின் அடிப்படையில் நாணயத்தின் மதிப்பு குறைவடைந்து விட்டதாகவே கொள்ளவேண்டும்.
-SISOL„s Ster St Erunnið :
இதன் பின்னர் தங்க நாணயம் முழுப் பெறுமதி நாணயமாக அல்லது அடையாள நாணயமாகவே நிலவும். அடையாள நாணயம் குறித்த உலோகத்தால் ஆக்கப்பட்டிருப்பினும் நாணயத்தின் அகப் பெறுமதி அது குறித்து நிற்கும் புறப்பெறுமதியை விடக் குறைவான தாகவே அமையும். உலோகங்கள் நாணயமாக வார்க்கப்பட மட்டுமன்றி ஏனைய கைத்தொழில் தேவைகளுக்கும் பயன்படுவதனுல் காலப் போக்கில் நாணயங்களின் உலோக எடையும் தூய்மையும் குறைவுறலாயின. முழுப் பெறுமதி நாணயங்கள் நிலவிய காலத்திலும் சிறிய இனக் காசுத் தேவைகளுக்காக அடையாள நாணயம் பரவலாகப் பயன்படுத்தப் மட்டது.
அடையாள முழுப்பெறுமதி நாணயம்:
அநேகமாக இந்நாணயங்கள் காகிதத்தால் ஆக்கப்பட்டிருக்கும். ஆனல் அவற்றின் பெறுமதிக்கீடான உலோகங்களை வெளியீட்டாளர் இருப்பில் வைத்திருப்பர். நாணயம் பணமாக அன்றி பணத்துக்கான பற்றுச்சீட்டுகளாகவே கருதப்படும். தேவையானபோது இவற்றைக் கொடுத்து இவற்றுக்கீடான உலோகத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய தாக இருக்கும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1938 வரை சுழற்சியில் இருந்த " தங்கச் சான்றிதழ்கள்' இவற்றுக்குச் சிறந்த உதாரணமாகும். இலங்கையிலும் 19ஆம் நூற்ருண்டின் முன் அரைப் பகுதியில் தாள் வெளியீட்டுரிமை பெற்றிருந்த வங்கிகள் தமது வெளியீடுகளின் பெறு மானங்களுக்குச் சமமான தொகைக்கு இந்திய வெள்ளி ரூபா நாணயங் களை இருப்பில் வைத்திருத்தல் வேண்டும் என்ற சட்டம் நிலவியது.
அடையாள முழுப் பெறுமதி நாணய வெளியீடுகளின்போது நாட்டின் மொத்தப்பண நிரம்பல் பாதிக்கப்படுவதில்லை. எனவே, ஓரள வுக்கு இவை முழுப் பெறுமதி நாணயங்களை ஒத்தவை எனலாம்.
தாள் நாணயங்களை வெளியிடுவதற்கு ஏற்படும் செலவு குற்றி நாணயங்களை வார்ப்பதற்கு ஏற்படுவதை விடக் குறைவானது, எனவே அடையாள முழுப்பெறுமதி தாணயங்கள் செலவு இக்கனமானவை

Page 16
- 22 -
யாகின்றன. மேலும் உலோகங்கள் நாணயங்களாகப் பயன்படுத்தப் பட்டால் அவை சிதைக்கப்பட்டும், தொடர்ந்த பாவனையால் தேய்மான முற்றும் உலோக எடையை இழக்கின்றன. இம்முறையின்கீழ் அப்பிரதி கூலமும் இல்லை. அத்துடன் முழுப்பெறுமதி நாணயங்களை விட இவற்றை இடத்துக்கிடம் கொண்டுசெல்லல் இலகுவானது. இவற்றில் சில பிரதி கூலங்களும் உண்டு. உரிய பாதுகாப்புக்களுடன் காகிதப் பணம் தயா
ரிக்கப்படாவிட்டால் போலி நாணயங்கள் உருவாக்கப்படும் சந்தர்ப் பம் அதிகம். அத்துடன் காகிதம் எளிதில் தீயால் அழிக்கப்படக் கூடிய
பதார்த்தமாகும். எனவே முழுப்பெறுமதி நாணயங்களைவிட இவற்றை இல்லாதொழித்தல் இலகுவானது.
அடையாளப் பணம்:
இருப்பில் வைக்கப்பட்ட வெள்ளி அல்லது தங்கம் என்பவற்றின்
பெறுமானத்துக்கீடான நாணயங்களே ஆரம்பத்தில் வெளியிடப்பட்டன.
நாணயங்கள் பணமாக அன்றி பணத்தின் அடையாளங்களாகவே
கருதப்பட்டன. அடையாளப் பணம் என இவையே பொதுவாக
அழைக்கப்படுகின்றன.
காலப்போக்கில் வேறு வர்த்தகக் கருவிகள் வளர்ச்சி பெறலாயின.
வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் அதிகரிக்க வர்த்தக உண்டியல்களின் பாவனை அதிகரிக்கலாயிற்று. பொருட்களை அல்லது சேவைகளை வழங்கு
வோர் பணத்துக்குப் பதிலாக உண்டியல்களை ஏற்றுக்கொண்டனர். பின்னர் காசோலைகள் பயன்படுத்தப் படலாயின. கொடுக்கல் வாங்கல்
களில் இறுதியில் கடனைத் தீர்க்கும் ஆவணங்களாகப் பரவலாக இவை ஏற்றுக்கொள்ளப்படலாயின. இத்தகைய கருவிகள் பணமாகமாட்டா, ! அவை பணத்தின் அறிகுறிகளே. எனவே இவற்றையும் அடையாளப்
பணம் என அழைக்கலாம்.
கடன் பணம்:
தன்னை ஆக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருளின் பெறு
மதியைவிட அதிகளவு பெறுமதி கொண்டதாக சுழற்சியில் ஈடுபடுத்தப் படும் பணத்தைக் கடன் பணம் எனலாம். இக்கருத்தில் தாள்நாணயங்
களும் கடன் பணமே. சில்லறைக்காகப் பயன்படும் உலோக நாணயங்
களின் புறப்பெறுமதி அவற்றின் அகப்பெறுமதியை விட அதிகமானது. எனவே அவையும் கடன் பணமே.
கடன்பணம் பல்வேறு வகையினதாக அமைந்திருக்கலாம்,
 

--سے 23 سس۔
(1) அடையாள சில்லறை நாணயங்கள்
எமது பனமுறையில் புழக்கத்திலிருக்கும் சில்லறை நாணயங்கள் வெளியிடப்பட்ட மொத்த நாணய அளவின் மிகக் குறைந்த விகிதா சாரமானதேயாகும். இலங்கையில் தற்போது மொத்த நாணய வெளியீட்டில் 4%த்துக்கும் குறைவாகவே சில்லறை நாணயங்கள் காணப்படுகின்றன. இவற்றின் உலோகப் பெறுமதி புறப் பெறுமதியை விட மிகக் குறைந்ததே ஆகும். பணமாக அல்லாமல் பொருளாக அவற்றின் பெறுமதி அதிகரிக்கத் தொடங்குமானல் "கிறிஷம்ஸ் விதி" (Gresham's Law) செயற்பட ஆரம்பிக்கும். அவ்விதியின்படி "கெட்ட பணம் நல்ல பணத்தைச் சுழற்சியிலிருந்து அகற்றிவிடும்."
(2) குழுப் பெறுமதிஅற்ற அடையாள நாணயம்:
இவை அடையாள முழுப் பெறுமதி நாணயத்தை ஒத்தவை எனி னும் நாணயத்தின் அகப் பெறுமதியைவிடக் குறைந்த பெறுமதி உள்ள உலோகங்களின் இருப்புகட் கெதிராகவே வெளியிடப்படுகின்றன. 1878 - 1967 வரை அமரிக்க ஐக்கிய நாடுகளில், சுழற்சியில் இருந்த "வெள்ளிச் சான்றிதழ்கள்" இந்த வகையைச் சாரும். அத்துடன் 19ஆம் நூற்ருண்டின் பின்அரைப் பகுதியில் தாள் வெளியீட்டுரிமை பெற்றிருந்த தனியார்துறை வங்கிகள் இலங்கையில் மேற்கொள்ளும் தாள் வெளியீடுகளின் பெறுமதியின் மூன்றில் ஒருபங்கு இந்திய வெள்ளி நாணயத்தை இருப்பாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கப்பட் டிருந்தது. எனவே அக்காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்த வங்கித் தாள்களும் முழுப் பெறுமதி அற்ற அடையாள நாணயங்களே.
(3) அரசாங்கத்தால் வழங்கப்பட்டுச் சுழற்சியிலிருக்கும்
வாக்குறுதிப் பத்திரங்கள் :
இவையும் ஒருவகைக் கடன்பணமே. இவை அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. பொதுவாகப் போர்க்காலங்களில் ஏற்படும் அதிக ரித்த செலவுகளை ஈடுசெய்ய இவை வழங்கப்படுகின்றன. சீன எல்ை யுத்தத்தின்போது இந்திய அரசாங்கம் வெளியிட்ட தங்கச் சான் றிதழ்கள் இந்தவகைக்கு ஒர் உதாரணம். இவை குறித்த காலத்தில் முதிர்வுபெறத்தக்கனவாகவும் அன்றியும் வெளியிடப்படலாம். பிரித் தானிய அரசாங்கம் வழங்கும் Consols எனப்படும் முறிகன் எக் காலத்திலும் முதிர்வடைவதில்லை. இவற்றைப் பின்னேயவற்றுக்கு உதாரணமாகக் காட்டலாம். அரசாங்கங்கள் தமது செலவினங்களை ஈடுகட்ட இப்போது அதிகளவில் வாக்குறுதிப் பத்திரங்கண் வழங்கு கின்றன. அரசின் சார்பில் திறைசேரியால் வழங்கப்படுவதால் இவை திறைசேரி உண்டியல்கள் என அழைக்கப்படுகின்றன. இவையும் இந்து வகையுள் அடங்குவனவே.

Page 17
- 24 -
(4) மத்திய வங்கிகளால் வழங்கப்பட்டு சுழற்சியிலிருக்கும்
வாக்குறுதிப் பத்திரங்கள்: இன்று புழக்கத்திலிருக்கும் தாள் நாணயங்கள் அனைத்தும் இவ் வகையைச் சேர்ந்தனவே அவற்றின் முகப்பரப்பில் திருப்பிச் செலுத்தப் படும் என்ற வாக்குறுதி காணப்பட்டபோதும் செயலளவில் இது நடை முறைப்படுத்தப்படுவதில்லை. தாள் நாணயம் ஒன்றை ஒருவர் மத்திய வங்கிக்கு எடுத்துச் சென்று அதற்குப் பணம் தருமாறு கேட்டால் அவர்கள் சில்லறை நாணயங்களையோ அல்லது வேறு இன உள்ளூர் தாள் நாணயங்களையோதான் அவற்றுக்கீடாக வழங்குவர்.
இலங்கை மத்திய வங்கியால் 1980ல் வெளியிடப்பட்டு 1985ல் முதிர்வடைந்த பணமுறிச் சான்றிதழ்கள் (Beater Bonds) இத்தகைய வாக்குறுதிப்பத்திரங்களுள் ஒன்ருகும்.
ஏனைய மத்திய வங்கிகளைப் போலன்றி இலங்கை மத்திய வங்கி தனது சொந்தப் பிணைகளை வெளியிட்டு அவற்றின் மூலம் பகிரங்கச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரம் கொண்டது. இதற்கென வெளியிடப்படும் பிணைகளையும் இவ்வகையுள் அடக்கலாம்.
(5) தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்டுக் கழற்சியிலிருக்கும்
வாக்குறுதிப் பத்திரங்கள்: ஆரம்பத்தில் தனியார் வங்கிகள் தாள் வெளியீட்டைச் செய்தன. முதலில் தாள் வெளியீட்டுரிமை சகல தனியார் வங்கிகளுக்கும் வழங் கப்பட்டன. காலகதியில் தாள் வெளியீட்டின் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. ஈற்றில் அவை அரச தனியுரிமையாக ஆக்கப் பட்டன. இவ்வாறு வெளியிடப்பட்ட நாணயங்கள் இவ்வகையுள் அடங்கும். இலங்கையில் தாள் வெளியீட்டுரிமை பெற்ற முதல் வங்கி 'ஓரியன்ரல் பாங்கிங் கோப்பரேசன்" (Oriental Banking Corporation) ஆகும். இவ்வங்கி 1843ல் ஆரம்பிக்கப்பட்டதெனினும் 1856) இலங்கைவங்கியின்* வியாபாரத்தைப் பொறுப்பெடுத்து தனது பெயரை மாற்றிக்கொண்டது. 1854ல் மேர்கன்டைல் வங்கியும் தனது கிளைகளை இலங்கையில் அமைத்தது. இவ்விரு வங்கிகளுமே தனியார் வங்கிகளின் தாள் வெளியீட்டுரிமை இறுதியாக 1884இல் ரத்துச் செய்யப்படும் வரை இலங்கையில் அவ்வுரிமை பெற்ற நிறுவனங்களாக விளங்கின. இவ் வங்கிகளால் வெளியிடப்பட்ட நாணயத் தாள்களும் இவ்வகை யுள் அடங்கும்.
* இங்கு குறிப்பிட்ட **இலங்கை வங்கி" தற்போதுள்ள இலங்கை வங்கியுடன் எதுவிதத்திலும் தொடர்புடையதல்ல. இலங்கையின் வங்கியியல் வரலாற்றை "வர்த்தக வங்கி" என்ற அத்தியாயத்தில் விபரமாகக் கற்கலாம். - -

- 25 -
தற்போது தனியார் வங்கிகட்கு இலங்கையில் தாள் வெளியீட் டுரிமை காணப்படாதபோதிலும் அவை சுழற்சியிலீடுபடத்தக்க வாக் குறுதிப் பத்திரங்களை வெளியிடுகின்றன. 1981ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதன்முதலாக அமரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கிக் கூட்டுத் தாபனத்தால் வெளியிடப்பட்டுப் பின்னர் பல்வேறு வங்கிகளாலும், சில நிதி நிறுவனங்களாலும் பின்பற்றப்பட்ட 'வைப்புச் சான்றிதழ் கள்’ தனியார் வங்கிகளின் வாக்குறுதிப் பத்திரங்களே.
(6) வங்கிகளின் நடைமுறைக் கணக்குகள்
தற்போது நாட்டின் பணநிரம்பலில் கணிசமான அளவு வங்கிகளின் கேள்வி அமைப்புக்களாகவே உள்ளன. இலங்கையின் குறுகிய பண நிரம்பலில் அரைப்பங்கினதாக இவை காணப்படுகின்றன. வங்கிகளின் நடைமுறைக் கணக்குகளில் வைப்புகளை ஏற்கும்போது உண்மையில் அது வைப்பாளர்களிடம் இருந்து கடன் பெறுகிறது என்றே கொள் ளல் வேண்டும். கொடுகடனளி தனது கடனை எந்நேரமும் கோரிப் பெறலாம். அவன் தனது கோரிக்கையைக் காசோலைகள் பிறப்பிப்பதன் மூலம் செய்கின்றன். இக் கோரிக்கைகள் கடன்களை இறுப்பதற்கும் பொருட்கள் சேவைகட்கீடாகச் செலுத்துவதற்கும் பொதுவாக ஏற் புடையனவாக அமைகின்றன. பெருந்தொகைச் செலுத்துமதிகட்கு அநேகமாகவும் சிறிய செலுத்துமதிகட்குப் பரவலாகவும் காசோலைகள் பயன்படுத்தப்படுகின்றன. காசோலைகள் மூலம் செலுத்துமதிகளை மேற்கொள்வதில் சில அனுகூலங்கள் உள:
1. களவாடப்படுமேயாளுல் ஏற்படக்கூடிய இழப்பு ஏனைய பண
வகைகளைவிட காசோலைகளில் குறைவு.
2. ஒர் இடத்தில் இருந்து பிறிதொரு இடத்துக்கு இவற்றை அனுப்பிவைக்கும் செலவு மிகக் குறைவானதாகும். காசோலை யின் தொகையாலோ அனுப்பப்படவேண்டிய தூரத்தைப் பொறுத்தோ இச் செலவு அதிகரிப்பதில்லை.
.ே சரியான செலுத்துமதி தொகைக்கு காசோலை பிறப்பிக்கப்பட லாம். இதனுல் நாணயத் தாள்களையும் குற்றிகளையும் எண்ணும் சிரமம் செலுத்துமதிகளைக் காசோலேமூலம் மேற்கொள்ளும் போது ஏற்படுவதில்லே.
4. பணம் பெறுபவர் காசோலையில் இடும் புறக்குறிப்பு செலுத்து மதிக்கான பற்றுச்சீட்டாகும். இவ்வகையில் இது மிகவும் வசதி யூானது. ۶۔ ۶) "" ۔۔۔ + .. ' ' -- ، "" :--"..........-...

Page 18
سے 26 --~~~۔
பிறப்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என அதைக் கொண்டிருப்பவர் (Holder) அறியமுயாதிருப்பது காசோலை யின் முக்கிய பிரதிகூலமாகும். இருப்பினும் மீதி உத்தரவாதப்படுத்தப் பட்ட காசோலைகள், வங்கியால் பிறப்பிக்கப்படும் காசோலைகள், (Pay Orders), வங்கிகளால் வழங்கப்படும் பயணிகள் காசோலைகள் (Traveller's cheques) என்பவை பணத்தொகைக்கான உத்தரவாதம் கொண்டவை யாக உள்ளன.
பணம் பல்வேறு வகைப்பட்டதாக இப்பகுதியில் விபரிக்கப்பட் டுள்ளது. எனினும் குறித்த ஒருகாலத்தில் ஒருவகைப் பணம் மட்டும் தான் நடைமுறையிருந்ததெனப் பொருள் கொள்ளல் தவருனது. பல் வேறு விகிதாரசாங்களில் இணைக்கப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
சில காலப் பகுதிகளில் முழுப் பெறுமதி நாணயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. வேறு சிலகாலப்பகுதிகளில் அவற்றுடன் சேர்த்து அடையாள முழுப்பெறுமதி நாணயங்களும் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய ஏற்பாடுகளில் நாட்டின் பண நிரம்பல் பணத்தை ஆக்கு வதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருளின் பெறுமானத்துக்குச் சமமான தாகக் காணப்படுகிறது, ஆணுல் இத்தகைய ஏற்பாடுகள் தற்போது எங்கும் நடைமுறையில் இல்லை. நவீன பொருளியல் சமூகத்தில் கடன் பணமே சுழற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றது. மத்தியவுங்கியின் பொறுப் பான தாள் நாணயங்களும் வர்த்தக வங்கிகளின் பொறுப்பான கேள்வி வைப்புகளும் தற்காலப் பணத்தின் வடிவங்களாக அமைகின்றன.
தாள் வெளியீடு பற்றிய கோட்பாடுகள்
இச் சந்தர்ப்பத்தில் தாள் வெளியீட்டுடன் தொடர்பான சில கோட்பாடுகள் பற்றி அறிதல் பொருத்தமானது.
நூறு வீதமான ஒதுக்குக்கட்கெதிராக மட்டுமே நாணயங்கள் வெளி யிடப்படவேண்டுமென ஒரு சாராரும் வங்கியியல் கோட்பாடுகளுக்கு அமையவே நாணய வெளியீடு அமைய வேண்டுமென மற்ருெரு சாராரும் நீண்டகாலமாக வாதிட்டு வந்தனர். பணவியல் வரலாற்றில் "நாணய வியல் வங்கியில் தர்க்கம்" என இது அழைக்கப்பட்டது. நாணயவிய லாளரின் கோட்பாடுகள், வெளியிடப்பட்ட தாள்களின் உண்மைப் பெறுமதி நிலைநிறுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டன. இவர்கன் கோட்பாடுகளுக்கிணங்க நாணய வெளியீடு அமையுமெனில் வெளியீட் டில் நெகிழ்ச்சி காணப்படமாட்டாது. வங்கியியல் வாதிகளின் கோட் பாட்டின்படி நாணய வெளியீடு அமைந்தால் வெளியீட்டு நெகிழ்ச்சிக்கு இடம் உண்டு. ஆளுல் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது,

سنة 27 كصيد
தற்கால தாள் வெளியீட்டில் கடைப்பிடிக்கப்படும் கோட்பாடுகளை இதன்கீழ் ஆராய்வோம்
(1) மேல் எல்லை குறிக்கப்பட்ட நம்பிக்கை வெளியீடு (Fixed Fiductary
System:
இங்கிலாந்தில் 1844இல் நிறைவேற்றப்பட்ட வங்கிப் பட்டயச் சட்டத்தில் இம்முறையின் தோற்றத்தைக் காணலாம். இம்முறையின் படி, குறிக்கப்பட்ட எல்லைக்குள் வெளியிடப்படும் நாணயம் நம்பிக்கை வெளியீடாக அமையும். இவற்றுக்குப் பிணையாக அரசாங்க ஆவணங்கள் காணப்படும். இதற்கு மேலான வெளியீட்டுக்கு ஈடாக உலோக இருப்பு காணப்படல் வேண்டும். இம்முறையின் கீழ் நாணய வெளியீடு நடை பெறுகையில் மிதமிஞ்சிய கடன் விரிவாக்கம் ஏற்படுவதற்கு இடமில்லை. தேவை ஏற்படின் மேல் எல்லையை அதிகப்படுத்துவதன்மூலம் வெளி யீட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். ஆஞல் அவ்வாறு அதிகரிப்பது நாணய உறுதிப்பாட்டைப் பலவீனமடையச் செய்யும். ஜப்பான், நோர்வே, இந்தியா போன்ற நாடுகள் ஒரு காலகட்டத்தில் இம் முறையைக் கையாண்டன.
(2) விகிதாசார g(5) (pango (Proportional Reserve System);
சுழற்சியில் உள்ள நாணயத்தின் குறித்த விகிதாசாரத்தின் பெறு மதிக்குச் சமமான உலோகங்களைக் கையிருப்பிற் கொண்டு வர்த்தக உண்டியல்கள். அரச ஆவணங்கள் என்பவற்றின் பெறுமதியின் அடிப் படையில் எஞ்சிய தொகை அமையத்தக்கதாக வெளியீட்டை மேற் கொள்ளல். அநேக ஐரோப்பிய நாடுகளாலும் அமரிக்க ஐக்கிய நாட் டாலும் சில மாற்றங்களுடன் இம்முறை பின்பற்றப்பட்டது.
(3) இழிவெல்லை குறிக்கப்பட்ட ஒதுக்கு முறை: (Fixed miniமயm Reserve
System):
இம்முறையில் அந்நிய நாட்டு ஆவணங்களும், தங்கமும் குறிப் பிட்ட இழிவெல்லைக்குக் குறையாது இருப்பாக வைத்திருக்கப்படல் வேண்டும். அந்த எல்லையின் குறிப்பிட்ட விகிதாசாரமாக நாணய வெளியீடு மேற்கொள்ளப்படும். இம்முறையே தற்போது பல நாடுக ளால் கைக்கொள்ளப்படுகிறது. ஏனைய முறைகளைவிட இது அதிகளவு நெகிழ்வுள்ளது. தனது தேவைகளை ஈடுகட்டுவதற்குத் தேவையான அதிகளவு நாணயத்தை வெளியிடுமாறு மத்திய வங்கிகளே அரசாங்கம் நிர்ப்பந்திக்கக்கூடிய அபாயம் இம்முறையில் உள்ளது. இருப்பினும் நாணய வெளியீடு அரசாங்கம் தவிர்ந்த பிறிதொருவரால் (மத்திய வங்கி) மேற்கொள்ளப்படுவதால் ஒரளவுக்காவது இத்தகைய நிர்ப்பந்
தத்தை எதிர்த்து நிற்கு ஆதளுல் முடிகிறது. .

Page 19
5. பணமுறைகள்
பணத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றிய அறிவு பல்வேறு பணவியல் நியமங்களையும் உள்ளடக்காவிடில் பூரணமற்ற தாகிவிடும் ஏனைய பண்கிகள் யாவும் குறித்த ஒரு பணத்துக்காக மாற்றப்படுதல் என்பதை 'நியமம்" என்ற பதம் குறிக்கும். எனவே பொருட்கள் சேவைகளின் மாற்றுப் பெறுமானம் நியமப் பெறுமா னத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். எனவே குறித்த நியமமே சட்டபூர்வமான நியமமாகக் காணப்படும்.
நியமங்களின் பெரும் பிரிவுகள்:
பணத்தின் வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் இத்தகைய பல்வேறு நியமங்கள் காணப்பட்டன. அவற்றை "பொருள் நியமங்கள்", "பொருள் சார்பற்ற நியமங்கள்" என்ற இரு பெரும் வகையுள் அடக்கலாம்.
(1) பொருள் நியமங்கள்:
பொருள் நியமத்தில் குறித்த ஒரு பொருளின் பெறுமதி, நியமப் பெறுமதியாக இருக்கும். வெள்ளி, தங்கம் என்ற உலோகங்களின் அடிப்படையில் நிலவிய நியமங்களை முறையே வெள்ளி நியமம், தங்க நியமம் என அழைப்பர். சிலகாலப்பகுதிகளில் இவ்விரு உலோகங் களுமே இணைந்து நியமமாக இருந்துள்ளன. இதனை ஈருலோக நியமம் என அழைப்பர்.
(2) பொருள் சார்பற்ற நியமங்கள்:
இத்தகைய நியமங்களில் தாள் தாணயங்களே நியமமாக உள்ளன. முகாமைப்படுத்திய தாள் நாணய நியமம் (Managed Currency Standard), as"L&T siani (Fiat Money), assrair Lonfò p sia Loth (Paper Exchange Standard) என்பவை பொருள்சார்பற்ற நியமங்க ளின் உட்பிரிவாகும். இவற்றுட் சிலவற்றை ஆராய்வோம். பல்வேறு நியமங்கள் : (1) ஒரு உலோக நியமம்: V
இம்முறையின் கீழ் ஒரு உலோகம் சட்டபூர்வ அந்தஸ்துப் பெற் றிருந்தது. அந்த உலோகம் நாணயமாக வார்க்கப்பட்டது. சிறிய தொகை காசுகளாக ஏனேய உலோக நாணயங்கள் பயன்படுத்தப்பட் டன. நியம லோகம் பொன்ஞக இருப்பின் அதனைப் பொன் நியமம் என்றும் வெவிளியாக இருப்பின் வெண்ணி நியமம் என்றும் அழைத்த

- 29 -
னர். 1835-1898வரை இந்தியாவில் வெள்ளி நியமமும் 1914வரை இங்கிலாந்தில் பொன் நியமமும் நிலவின. நியம உலோகங்கள் நாணய மாக வார்க்கப்பட்டது மட்டுமன்றி அவற்றின் இருப்புகட்கெதிராக தாள் நாணயங்களும் வெளியிடப்பட்டன.
(2) ஈருலோக நியமம் :
வரையறை அற்ற தொகைகட்குச் சட்டபூர்வமாக இரு உலோகங் களை ஒரே நேரத்தில் பயன்படுத்துதலை ஈருலோக நியமம் எனலாம். இரு உலோகங்களின் மாற்றுப் பெறுமானமும் குறித்த விகிதாசார அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இரு உலோகங்களையும் நாணயமாக வார்க்கலாம். அத்துடன் அவற்றின் இருப்புகட்கெதிராக தாள் நாணயங்களும் வெளியிடப்படலாம்.
(3) பொன் நியமம்:
பொன் நியமத்தின் கீழ் பொருட்கள் சேவைகளின் பெறுமானங்கள் பொன்னின் பெறுமானத்தால் அளவிடப்படுகிறது. பொன்னின் பெறு மான அடிப்படையிலேயே கடன்களும் ஒப்பந்தங்களும் எழுகின்றன. ஈற்றில் அவை அதன் பெறுமானத்தின் அடிப்படையிலேயே தீர்க்கப் படுகின்றன. தூய பொன் நியமத்தின்கீழ் நாட்டின் நாணய அலகு குறித்த தூய்மையும் எடையும் கொண்ட பொன்னுல் வார்க்கப்பட்ட நாணயங்களை உள்ளடக்கியிருந்தது. இந்நியமம் 1816ல் முதல்முதல் பிரித்தானியாவால் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஐரோப்பிய நாடுகளும் அ. ஐ. நாடுகளும் இதனைக் கடைப்பிடித்தன. 1914வரை இந்நியமம் நீடித்திருந்தது.
பொன் இருப்பின் அடிப்படையில் தாள் நாணயங்கள் வெளியிடப் பட்டன. அவற்றைத் தேவையானபோது பொன்னக மாற்றிக்கொள்ள லாம்.
(4) பொற்கட்டி நியமம் :
இந்நியமம் 1925 - 31 காலப்பகுதியில் பிரித்தானியாவில் செயற் படுத்தப்பட்டது. சர்வதேச வர்த்தகத்துக்கு அதிகளவில் பொன் தேவைப்பட்டமையால் அதனை நாணயமாக வார்ப்பது நிறுத்தப்பட் டது. தனிப்பட்ட வங்கித் தாள்களைப் பொன்னக மாற்றக்கூடிய ஏற் பாடு கைவிடப்பட்டது. எனினும் 400 அவுன்ஸ் எடையுள்ள பொற் கட்டிகளே 1ே669 செலுத்திப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டது.
(5) பொன்மாற்று நியமம் :
இந் நியமத்தில் நாட்டின் பணமுறை பொன்னுடன் நேரடியாகத் தொடர்பு படுத்தப்படவில்லை. ஆளுல் பொன் நியமத்திலுள்ள வேருெரு நாணயத்தினூடாகப் பொன்னுடன் தொட்ர்புபடுத்தப்பட்டிருந்தது.
*.蠢。 . is a

Page 20
-سي- 30 حس--
இந்நியமத்திலுள்ள நாட்டு நாணயத்தைப் பொன்னக மாற்றுவதென்ருல் முதலில் அதைப் பொன் நியமத்திலுள்ள நாட்டின் நாணயமாக மாற்றி, பின்னரே பொன்னுக மாற்றிக் கொள்ளலாம். 18776) ஒல்லாந்திலும் 1894ல் ரஷ்யாவிலும் 1907 ல் இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் இம் முறை பின்பற்றப்பட்டது. பொன் நியமத்தின் அனுகூலங்கள்:
பொன் நியமம் பல்வேறு $அனுகூலங்களைத் தன்னகத்தே கொண் டிருந்தது. 1. இது ஈருலோக முறையையும் தாள்நாணய முறையையும் விட
இலகுவானது.
2. பொன் அனைத்துலக நாடுகளாலும் ஏற்கப்படுவதால் சர்வதேச வர்த்தக வளர்ச்சிக்குப் பொன்நியமம் பெரிதும் உதவியது. அத் துடன் பொன்நியமத்திலுள்ள நாட்டின் நாணயத்தின் வெளிநாட்டுப் பெறுமதி உறுதியான நிலையில் காணப்பட்டது.
3. நாட்டின் நாணய வெளியீடு பொன்னிருப்பால் நிர்ணயிக்கப்படுவ
தால் பணவிரிவோ நாணய மதிப்பிறக்கமோ ஏற்படமாட்டாது.
4. பொன் உற்பத்தி அதிகரிப்பு நாணயத்தின் உறுதிப்பாட்டை அதி
களவு பாதிக்காமையால் இந்நியமம் அதிககாலம் நீடித்தது,
பொன் நியமத்தின் பிரதிகூலங்கள்:
பொன் நியமத்திற்கு எதிரானேர் அதன் பிரதிகூலங்களை எடுத்துக் காட்டினர். அவற்றுள் சில வருமாறு:
1. பொன்நியமம் நாணயத்தின் வெளிப்பெறுமதியை உறுதியாக வைத் திருப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனல் வெளிப்பெறுமதியைப் போல் உள்ளூர் விலைமட்டத்தின் உறுதிப்பாடும் அவசியமானதே. எனவே பொன் நியமத்தை விட ஒழுங்குபடுத்தப்பட்ட நாணய முறையே சிறந்தது.
2. பொன் நியமத்தில் பொன்னின் இருப்புக்கிணங்கவே நாணய வெளியீடு நடைபெறுவதனுல் உள்நாட்டுப் பொருளாதாரத் தேவை கட்கிணங்க நாணய வெளியீடு விரிவாக்கம் பெறல் தடைப்படுகிறது.
3. உலக நாடுகளிடையே பொன் சமமாகப் பகிரப்பட்டிராமையால் சில நாடுகட்கு இது அனுகூலமாக இருந்தபோதும் பலவற்றுக்குப் பிரதிகூலமானதாகவே இருந்தது.

6. பணத்தின் பெறுமதி
பொதுவாக ஒரு பொருளின் விலையையே அதன் பெறுமதி என நாம் கருதுகின்ருேம். பெறுமதி என்பது உளரீதியான ஒன்ருகும். எனவே அதனை அளவிடமுடியாது. ஒருவருக்குப் பெறுமதிமிக்க பொருள் வேருெருவருக்குப் பெறுமதியற்றதாக அமையலாம். ஒருவருக்கே வெவ் வேறு சந்தர்ப்பங்களில் அதேபொருள் வெவ்வேறு பெறுமதி உடைய தாகவும் அமையலாம். பணத்தின் பெறுமதியும் இத்தகையதே.
ஆளுல் ஏனைய பொருட்கள் யாவற்றின் பெறுமதியும் பணத்தின் அடிப்படையில் கவனிக்கப்படுவதனல் பணத்தின் பெறுமதியை எளிதாக விளக்கிவிடமுடியாது. பல்வேறு பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்வதற்கு எமக்குப் பணம் தேவைப்படுகின்றது. அவ் ஒவ்வொரு தேவையையும் பொறுத்து பணத்தின் பெறுமானம் தனிப் பட்டதாகவும் வேறுபட்டதாகவும் அமைகின்றது. ரபரைப் பொறுத்த வரை பணத்தின் பெறுமதி ஒன்ருகவும் டயரைப் பொறுத்தவரை அதன் பெறுமதி வேருகவும் அமையும். அத்துடன் குறித்தகாலப் பகுதியில் இப்பெறுமானங்கள் ஒத்த விகிதாசாரத்தில் மாற்றமடையும் என்று கூற முடியாது.
பெறுமதியை அளவிடல்:
சுட்டெண்களைப் பயன்படுத்தி பணத்தின் பெறுமானத்தை நாம் அளவிடுகிழுேம். ஆணுல் அச்சந்தர்ப்பத்தில் தனி ஒரு பொருளுக்குச் சுட்டெண் கணிக்கப்படுவதில்லை. ஒத்த தன்மையுடைய குறித்த தொகுதிப் பொருட்களுக்கே சுட்டெண் கணிக்கப்படுகின்றது. ஒரு தொகுதிப் பொருட்கள் ஆரம்பப் பொருட்களாக இருக்கும். வேறு தொகுதிப் பொருட்கள் முடிவுப் பொருட்களாக இருக்கும். மொத்த விலைகட்கும் சுட்டெண் தயாரிக்கின்ருேம், ஆனல் தொகுதிகளில் எல்லாம் சில பொருட்களே அடக்கப்படுகின்றன. அனைத்துப் பொருட் களும் அடக்கப்படுவதும் இல்லை. இது சாத்தியமானதும் அல்ல,
வட்டி விகிதம் :
விலைகள் பொருளின் பெறுமானத்தை விளக்குவதஞலும் பணத்தின் பெறுமதி அதனைக்கொண்டு எந்தளவு பொருட்களை வாங்கலாம் என்பதை விளக்குவதனலும் * பெறுமதி", " விலை என்ற பதங்கள் ஒத்தகருத்துள்ளவை என்றே கருதுகின்ருேம், அப்படியானல் பணத்தின் விலை என்ன என்ற கேள்வி எழுகின்றது. மேற்கூறிய கருத்தின் அடிப் படையில் குறித்த காலப்பகுதிக்கு குறித்த தொகைப் பணத்தைப் பயன்படுத்துவதற்கான விலையே பணமாக அமைதல் வேண்டும். அவ்

Page 21
- 32 -
வாறெனில் வட்டியே பணத்தின் விலையாக அமையும், நடைமுறையில் கடன்படுதல், கடன் கொடுத்தல் என்பவற்றைப் பொறுத்தவரை தான் வட்டி பணத்தின் விலையாக அமைய முடியும். ஏனைய பொருட்க ளதும் சேவைகளதும் பெறுமானத்தைப் பொறுத்தவரை வட்டி பணத்தின் விலேயாக அமைவதில்லை. எனவே பணத்தின் பெறுமதி என்பது எளிதாக விளக்கப்படக்கூடிய ஒன்றல்ல.
பணப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள்:
பணத்தின் பெறுமதிக்கு வரைவிலக்கணம் தருவது எவ்வளவு சிரமமோ அதன் பெறுமதியை அளவிடுவதும் அவ்வளவு சிரமமானதே. ஆணுல் சிலநேரங்களில் அதன் பெறுமதி மாற்றமுறுவதை இலகுவாகக் காணமுடிகின்றது. ஏறத்தாழ சகல பொருட்களின் விலைகளும் ஏக காலத்தில் அதிகரிக்குமானுல் பணத்தின் பெறுமதி குறைவுற்றிருப்பதை உணரலாம். உலகப் பெரும் போரின் பின் சகலநாடுகளிலும் இந்நிலை ஏற்பட்டது. அண்மைக் காலத்தில் 1977ன் பின் இலங்கையிலும் இந்நிலை தோன்றியது. பணத்தின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் அதிகமானதாக இருந்தமையால் இதனை இலகுவில் உணரமுடிந்தது, பொதுவாகப் பொருட்களின் விலைகள் நீண்டகாலத்திற்கு உறுதியாக இருப்பதில்லை. சில பொருட்களின் விலைகள் உயர்வடைய ஏனைய பொருட்களின் விலைகள் குறைவுறும். இந்த மாற்றம் பொருட்களின் கேள்வியையும் நிரம்பலையும் பொறுத்தது. பணத்தின் பெறுமதி அதன் கேள்வி நிரம்பலைப் பொறுத்ததாகும்.
ஏனைய பொருட்கள் சேவைகளின் பெறுமதியைப்போல பணத்தின் பெறுமதியும் அதன் கேள்வி நிரம்பலுடன் தொடர்புடையது. பணம் உற்பத்தி அளவையும் வருமானப் பகிர்வையும் பாதிக்க வல்லது. எனவே பணம் பண்டமாற்றுரடகமாகவோ வருமானத்தை அளவிடும் கருவியாகவோ மட்டுமன்றி பொருளாதாரத்தில் மூக்கிய அம்சமாகவே அணுகப்படுகின்றது.
மாற்றங்களை அளவிடல் :
பணத்தின் பெறுமதியை அளவிடமுடியாதெனினும் பணப் பெறு மதியில் ஏற்படும் மாற்றங்களைக் சுட்டெண்கள் மூலம் அளவிடலாம். அடியாண்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவ்வாண்டில் குறித்த தொகுதிப் பொருட்களதும் சேவைகளதும் விலைகளை 100 ஆகக் கொள்வர். பின்னர் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை விகிதங்களில் விளக்குவர். சுட்டெண் அதிகரிப்பைக் காட்டின் பணத்தின் பெறுமதி வீழ்ந்துள்ளதென்றும் சுட்டெண் குறைந்திருப்பின் பெறுமதி அதிகரித்துள்ளதென்றும் கொள் ளலாம். இத்தகைய சுட்டெண்களுக்கு உதாரணமாக மத்தியவங்கியால் கணிக்கப்படும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணையும் மொத்த விலைச் சுட்டெண்ணையும் கூறலாம்.
•ሥ→ሪ
ዘ፧ ̊w ; " 蟾(
38

ضس۔ 33 -----
சுட்டெண்கள் கணிப்பதில் பல பிரச்சனைகள் உள்ளன. அடி யாண்டைத் தேர்ந்தெடுப்பது இவற்றுள் முதலாவதானதாகும். தேர்ந் தெடுக்கப்படும் ஆண்டு சாதாரணமானதாக இருத்தல் வேண்டும். தொகுதியில் சேர்க்கப்படும் பொருட்கள் யாவை என்பதும் அடுத்து வரும் பிரச்சனைகளாகும். குறித்த வருமானம் பெறுவோர் பயன் படுத்தும் பொருட்களும் அவற்றின் அளவும் வேறு வருமான மட்டத்தினர் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றின் அளவையும் விட வேறுபடும். எனவே சுட்டெண்கள் எவ்வளவு தூரம் உண்மை யானவை என்பது சர்ச்சைக் குரியதே. எனினும் தற்காலத்தில் பணத் தின் பெறுமான மாற்றத்தை அளவிடுவதற்குச் சுட்டெண்கள் பெருமள வில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆரம்பகாலப் பணக்கணியக் கொள்கை:
பொருட்களின் நிரம்பல் அதிகரிக்க விலை குறைவடைவதும் பொருட் களின் நிரம்பல் குறைவடைய விலை அதிகரிப்பதும் பொதுவான விதி at investb. அதாவது பொருட்களின் நிரம்பலும் அவற்றின் விலையும் தலைகீழ் தொடர்புடையவை. இதே கோட்பாட்டைப் பணப்பெறு மதியைக் கணிப்பதற்குப் பயன்படுத்தினுல் பணநிரம்பல் அதிகரிக்க அதன் பெறுமதி குறைவடைதல் வேண்டும். பணநிரம்பல் குறை வடைய அதன் பெறுமதி அதிகரித்தல் வேண்டும். ஆனல் பொருட்க ளும் சேவைகளும் அவற்றின் அகப் பயன்பாட்டுக்காகக் கொள்வனவு செய்யப்படுகின்றன. தற்காலத்தில் பணம் அகப்பெறுமதியுடையதல்ல. ஏனைய பொருட்களை வாங்குவதற்கான வலுவைமட்டுமே அது வழங்கு கின்றது. எனவே அதன் பெறுமதியைக் கணிப்பதற்கு இக்கோட்பாடு பூரணமாக உதவமாட்டாது.
எனினும் ஆரம்பகால நாணயக் கணியக் கொள்கையின்படி பணத் தின் பெறுமதி அதனுடைய நிரம்பலுடன் மட்டும் தொடர்புடையது என விளக்கப்பட்டது. பணநிரம்பலில் ஏற்படும் மாற்றத்தின் அதே விகிதாசார மாற்றமே பொதுவிலை மட்டத்தில் ஏற்படுமென்று போடின் (Bodin) என்பவர் விளக்கினுர்,
செலவிடப்படும் பணத்தின் அளவு பணநிரம்பலுடன் விகிதாசாரத் தொடர்பு கொண்டது என்பதே அவர் எடுகோளாகும். ஆனல் பண நிரம்பலில் ஏற்படும் அதிகரிப்பு சிலசமயங்களில் விலைமட்டத்தில் குறைந்தளவு மாற்றத்தை ஏற்படுத்துவதையும் வேறு சில சமயங்களில் அதிகளவு மாற்றத்தை ஏற்படுத்துவதையும் நடைமுறையில் & 15f1;"60px" |
முடிகின்றது.
7 9 7 2 በ
3

Page 22
இருப்பினும் பண நிரம்பலுக்கும் அதன் பெறுமதிக்கும் தொடர்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. பன நிரம்பலில் சில மாற்றங்கள் ஏற்படும்போது விலை மட்டத்தில் அதன் தாக்கம் உணரப்படாதபோதும் பெரிய மாற்றங்கள் ஏற்படும்போது - விகிதாசார அடிப்படையில் அமையாவிடினும் - விலைமட்டத்தில் அது மாற்றங்களை ஏற்படுத்தக் ಟಿìಡ್ಗಿರಿ!ge
மேலும் ஏற்படும் அதிகரிப்பு சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் அதைப் பெறுபவர் எவர் என்பதிலேயே விலைமட்டத்தில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தங்கியுள்ளது. மிகவும் வறியவர்களை இவ்வதிகரிப்புச் சென்றடையுமெனில் அனைவற்றையும் அவர்கள் செல விட்டுவிடுவர். இதனுல் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்கும். இதன் விளைவாக அவற்றின் விலையும் அதிகரிக் கும். ஆனல் இவ்வதிகரித்த பணம் செல்வர்களைச் சென்றடைந்தால் அவர்கள் இவற்றைச் சேமிக்கக்கூடும். எனவே பொருட்களின் விலை மட்டத்தில் அதிகளவு பாதிப்பை இது ஏற்படுத்தமாட்டாது. எனவே விலைமட்டத்தில் விகிதாசார மாற்றம் ஏற்படும் என்பது ஏற்கப்பட முடியாததாகும்.
திருத்திய பணக்கணியக் கொள்கை:
ஏர்விங் பிஷர் (Erving Fisher) என்பவர் இக் கொள்கையைத்
திருத்தியமைத்தார். "சுழற்சி வேகம்" என்ற தத்துவத்தையும் வங்கி, பணம் என்பவற்றையும் கணியக் கொள்கையுடன் தொடர்புபடுத்தினர்.
ஒருவரிடமிருந்து வேருெருவருக்குப் பணம் கைமாறும் விகிதத்தைச் சுழற்சி வேகம் விளக்குகின்றது. 100/- தாள் 10 முறை கைமாறினல் அதன் சுழற்சி வேகம் பத்தாக அமையும். பத்து நூறு ரூபா தாள்கள் செய்யும் பணியை அது ஆற்றியுள்ளது. வங்கி வைப்புகளும் ஒருவரிட மிருந்து மற்ருெருவருக்கு மாற்றப்படுவதினல் அதன் சுழற்சி வேகமும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது. ஆனல் சுழற்சி வேகத்தை அளவிடல் கடினமானது. குறித்த ஒருநாளில் நாட்டின் பணநிரம்பல் 2 கோடி யாக இருக்க அன்று 6 கோடி பெறுமானமுள்ள கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெற்றிருப்பின் சுழற்சி வேகம் 3 எனக் கொள்ளலாம். அன்று நிலவிய கொள்வனவுச் சக்தி இரண்டு கோடியல்ல, ஆறு கோடியே! யாகும். எனவே சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றம் பண நிரம்பலில் ஏற்படும் மாற்றத்தை ஒத்த முக்கியத்துவம் உள்ளது. அது சிலசமயங் களில் பண நிரம்பலில் ஏற்படும் மாற்றத்தையும் வலுவிழக்கச் செய்ய வல்லது. பணநிரம்பலில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படும் வேளையில் சுழற்சி வேகத்தில் வீழ்ச்சி ஏற்படாமல் செலவு (அல்லது நுகர்வு) அதிகரிக்க மாட்டாது. பணவீக்கத்தின் உச்சக்கட்டத்தில் பொருட்கள் விரைவாகக்

- 35 -
கைமாறப்படுவதனுல் பணநிரம்பலில் ஏற்படும் சிறு அதிகரிப்புடன் சுழற்சி வேகத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டு விலைகள் விகிதாசா ரத்தைவிட அதிகமாக உயர்வடையவும் கூடும்.
மாற்றுச் சமன்பாடு :
MV = PT என்ற சமன்பாட்டால் பணக்கணியக் கொள்கையை விளக்கலாம். இதில்,
M என்பது மொத்த பண அளவையும் W என்பது சுழற்சி வேகத்தையும் P என்பது பொதுவிலை மட்டத்தையும் T என்பது கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கையையும்
குறிக்கின்றது. பிஷர் தனது கெள்கையில் வங்கி வைப்புகளையும் உள்ளடக் கினர். எனவே M என்பது வங்கி வைப்புகளையும் V என்பது அதன் சுழற்சி வேகத்தையும் விளக்கும் எனக்கொண்டால் இச் சமன்பாட்டை MV+ MW ஊPT என மாற்றி அமைக்கலாம். சமன்பாட்டின் இரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று சமனுனவை. அப்படியாயின் செலவிடப் பட்ட பணம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்குச் சமமாகும்.
குறைபாடுகள் :
1. பணப் பெறுமதியில் மாற்றங்கள் எவ்வாறு ஏற்படுத்தப்படு கின்றன என்பதை மட்டுமே இக் கொள்கை விளக்குகின்றது. பணப் பெறுமதி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை விளக்கவில்லை.
2. சுழற்சி வேகத்துடன் பணக்கேள்வி தொடர்புடையது. பணத் தைப் பணமாக வைத்திருக்க மக்கள் விரும்பும்போது சுழற்சி வேகம் குறைவடயும் அவ்வாறு விரும்பாதபோது சுழற்சி வேகம் அதிகரிக்கும். இந்தஅளவில் மட்டுமே பணக் கேள்வியை அது விளக்குகிறதேயன்றி, அதிகளவு முக்கியத்துவத்தைப் பண நிரம்பலுக்கே விட்டுவிடுகின்றது.
3. சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்ட M.V.P, T ஆகிய மாறிகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவையல்ல. பன நிரம் பலில் (M) ஏற்படும் மாற்றம் சுழற்சி வேகத்தில் (V) எதிர் மாற்றத்தைக் கொண்டுவரும். எனவே MV என்ற இரண்டை யும் ஒரே அம்சமாகவே கொள்ளல்வேண்டும். அவ்வாறெனில் சுழற்கிவேகம் (V) பணப் பெறுமதியில் தனிப்பட்ட தாக்கத்தை

Page 23
- 36 -
ஏற்படுத்தமாட்டாது. எனவே பணப் பெறுமதியை விளக்கு வதில் இச் சமன்பாடு பூரணமானதன்று. அதேபோல T என்ற மாறியும் தனித்தன்மைகொண்டதல்ல. MVல் ஏற்படும் அதி கரிப்பு Tயிலும் அதிகரிப்பை ஏற்படுத்தும்.
4. பல்வேறு பொருட்களதும் சேவைகளதும் விலைகளில் ஒரே நேரத்தில் ஒரே திசையில் ஒரே விகிதத்தில் மாற்றம் ஏற்படுவ தில்லை. எனவே தனி ஒரு பொருள் அல்லது சேவை என்ற அடிப்படையில் மட்டுமே பணத்தின் பெறுமதி கணிக்கப் படலாம். இதனுல் பொது விலைமட்டம் என்ற ஒன்று உண்மை யில் கிடையாது எனலாம். ஆனல் இக் கொள்கை பொது விலைமட்டம் (P) என்ற அடிப்படையிலேயே பணத்தின் பெறு மதியை விளக்க முயல்கின்றது.
5. நாணயக் கணியக் கொள்கை வட்டியைப்பற்றி எதனையும் கூறவில்லை. பணத்தின் விலை வட்டியே. எனவே வட்டியைக் கணக்கிலெடுக்காத இக் கொள்கை பண்டப் பெறுமதியைச் சரியாக விளக்க முடியாது. w
6. பன வருமானங்கள் பொருட்களின் கேள்வியையும் அதன் வாயிலாக விலையையும் பாதிப்பன. எனவே பண நிரம்பலை விட வருமானங்கள் வாயிலாகவே பணத்தின் பெறுமானத்தை அளவிட முடியும். இதனை விளக்காமையால் இக் கொள்கை இந்த விடயத்தில் குறைபாடுடையது.
பணத்தின் கேள்வி :
பணத்தைப் பணமாக வைத்திருப்பதற்கான கேள்வியே பணத்தின் கேள்வியாகும். தற்காலப் பணம் அகப் பெறுமதியற்றது. எனவே அதனைப் பணமாக ஏன் வைத்திருக்க மக்கள் விரும்புவர் என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு 3 முக்கிய நோக்கங்களை கேயின்ஸ் பிரபு (Lord Keynes) எடுத்துக் கூறியுள்ளார்.
(1) Glassr(Giassi arriassis G5Irish (Transaction Motive):
ஒருவனது வருமானத்தின் கணிசமான பகுதி அவனது நாளாந்த தேவைகட்காகச் செலவிடப்படுகின்றது. இத்தகைய செலவுகட்குத் தேவையான பணத்தை அவன் பணமாகவோ அல்லது எளிதில் மீளப் பெறத்தக்க கேள்வி வைப்புகளாகவோ வைத்திருக்க விரும்புவான். இந் நோக்கத்திற்கான தொகை அவனது வருமான மட்டத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் வருமானம் கிடைக்கப் பெறும் கால இடைவெளியையும் பொறுத்து வேறுபடும்.

- 37 -
(2) முன்னெச்சரிக்கை நோக்கம் (Precautionary Motive):
(3)
எதிர்பாராமல் ஏற்படக்கூடிய செலவுகட்கெனவும் குறித்த ஒரு தொகையை ஒருவன் பணமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது. எதிர்பார்ப்பதைவிட அதிகளவு செலவை ஏற்படுத்தக்கூடிய சில சம்பவங்கள் ஒருவன் வாழ்வில் ஏற்படக் கூடும். திடீரென ஏற் படக்கூடிய சுகவீனங்களால் அதிகளவு பணம் செலவிடப்பட நேரலாம். இவற்றுக்காக ஒரு தொகையை அவன் பணமாக ஒதுக்கி வைத்திருத்தல் அவசியமாகின்றது. இதனைக் கெயின்ஸ் முன்னெச்சரிக்கை நோக்கமென அழைத்தார்.
தனிமனிதன் மட்டுமின்றி நிறுவனங்களும் குறித்த தொகையைப் பணமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது. மூலப் பொருள் கொள்வனவுக்கும் சம்பளங்கள், கூலிகள் வழங்குவதற்கும் நிறு
வனங்களுக்குப் பணம் தேவைப்படுகின்றது. இதனைக் கொடுக்கல்
வாங்கல் நோக்கத்துக்குள் அடக்கலாம். இத்தேவைகட்கெனப் பனமாக வைத்திருக்க வேண்டிய தொகையை நிறுவனத்தின் புறழ்வு விகிதம் நிர்ணயிக்கின்றது. இயந்திரங்களில் ஏற்படக் கூடிய எதிர்பாராத பழுதுகள், போக்குவரவுச் சீர்குலைவினல் உற் பத்திசெய்யப்பட்ட பொருட்களை கருதிய விரைவுடன் பணமாக மாற்ற இயலாது போய்விடுதல் போன்ற எதிர்பாராத நோக்கங் கட்கும் நிறுவனங்கள் ஓரளவு தொகையைப் பணமாக வைத்தி ருத்தல் அவசியமாகின்றது. இதனை முன்னெச்சரிக்கை நோக்கமென அழைக்கலாம்.
எனவே, தனி மனிதனும் நிறுவனங்களும் கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக மேற்கொள்வதற்கும் முன்னெச்சரிக்கை நோக்கம் காரண மாகவும் ஒரளவு தொகையைப் பணமாக வைத்திருக்கவேண்டியுள் ளது. இவ்விரு நோக்கங்களும் பணத்தின் கேள்வியை நிர்ணயிக் கும் ஓர் அம்சமாக அமைந்திருக்கும். அதேவேளையில் வேருெரு நோக்கத்துக்காகவும் பிறிதொரு தொகை பணமாக வைத்திருக்கப் படுகின்றது. கெயின்ஸ் இதனை ஊகநோக்கமென அழைத்தார்,
parts(85mdasib (Speculative Motive):
செல்வம் பணவடிவில் காணப்படும்பொழுது உழைக்கும் ஆற்றல் அது இழக்கின்றது. அதேதொகை முதலிடப்படுமேயானல் வரு மானத்தை அது ஈட்டித்தருகின்றது. எனவே, சாதாரண செலவு கட்கு மேற்பட்ட தொகையை தனி மனிதனே அல்லது நிறுவனங் களோ பணமாக வைத்திருப்பார்களேயானுல் அது ஊக நோக்கத் துக்காகவே எனக் கெயின்ஸ் விளக்கினர். உழைக்கக்கூடிய ஆத ங்ைகளின் எதிர்கால விலை அல்லது அவை ஈட்டித்தரவல்ல வரு

Page 24
حسن 38 ہے۔
மானம் வீழ்ச்சியடையுமென ஊகிக்கப்பட்டால் அவற்றில் முதலிடு வதை விடுத்து அத்தொகையைப் பணமாக வைத்திருக்கவே விரும்பு வர். இச் சந்தர்ப்பத்தில் பணத்துக்கான கேள்வி அதிகரிக்கின்றது. அதிகரித்த வருமானத்தை ஈட்டித்தரவல்ல ஆதனங்கள் கிடைக்கும் வேளையில் தம்மிடமுள்ள பணத்தைக்கொண்டு அவற்றைக் கொள் வனவு செய்கின்றனர். இந் நிலையில் பணத்துக்கான கேள்வி குறை வடைகின்றது. இவ்வாறே பணத்தின் கேள்வி ஊக நோக்கத்தால் பாதிக்கப்படுவதைக் கெயின்ஸ் விளக்கினர். எவ்வளவு தொகை El 20f'S வைத்திருக்கப்படுமென்பதையும் எவ்வளவு தொகை முத லிடப்படுமென்பதையும் விளக்க கெயின்ஸ் திரவத் தேர்வு என்னும் எண்ணக்கருவைப் பயன்படுத்தினுர்,
திரவத்தேர்வு :
பணம் ஒரு திரவச் சொத்தாகும். ஏனைய சொத்தாக மாற்றிக் கொள்ளாமல் பணமாகவே ஒரு தொகையை வைத்திருக்கும் விருப் பத்தைத் திரவத்தேர்வு எனலாம். திரவச் சொத்தை எனைய சொத்தாக ஒருவன் மாற்றுவதாணுல் அவனுக்குச் சில தூண்டுதல்கள் அவசியம், ! வட்டி இத்தகைய தூண்டுதல்களில் ஒன்று. திரவத்தேர்வு அதிகமாக இருப்பின் உயர்ந்த விகித வட்டியை வழங்குவதினுல் மட்டுமே முதலீடு செய்வதற்கு அவனைத் தூண்டக்கூடியதாக இருக்கும். 鷺
என்வே பணப் பெறுமதியைப் பொறுத்தவரை வட்டிவிகிதம் மிகமுக்கிய அம்சமாகும். இதனைப்பற்றி நாணயக் கணியக் கொள்கை யினர் அதிக அக்கறை காட்டவில்லை. முதலீட்டின் பெறுமதி வீழ்ச்சி யடையுமென ஊகிக்கும் முயற்சியாளரோ பொருட்களின் விலை வீழ்ச்சி யடையுமென எதிர்பார்க்கும் நுகர்வோரோ பணத்தை ஏனைய ஆதனங் களாக மாற்ருது பணமாகவே வைத்திருக்க விரும்புவர். எனவே பன நிரம்பலுக்கும் திரவத்தேர்வுக்கு மிடையே சமநிலை ஏற்படவேண்டு மெனில் வட்டி விகிதத்தால் மட்டுமே இதனைச் சாதிக்கமுடியுமென கெயின்ஸ் விளக்கியுள்ளார்.
சாதாரண செலவுக்கான பணத்தின் கேள்வி நெகிழ்வற்றதாகவே உள்ளது. திரவத் தேர்வால் நிர்ணயிக்கப்படும் பணத்திற்கான கேள்வி நெகிழ்வுள்ளது. பணத்தின் கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமமான தென விளக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் பணத்தின் பெறுமதியில் ஏற்படும் மாற்றம் அதன் கேள்வியில் விகிதசமமான மாற்றத்தை ஏற்படுத்தல் வேண்டும். ஆனல் பணத்தின் பெறுமதியில் மாற்றம் ஏற்படும்போது சகல பொருட்களின் விலைகளிலும் விகித சமமான் மாற்றம் ஏற்படுவதில்லை.
 

--سیا۔ 39 ملی۔
பணத்தின் பெறுமதியில் ஏற்படும் மாற்றம் வருமானப் பகிர்வில் மாற்றத்தைக் கொண்டுவரும். இதனுல் வருமானச் சமமின்மை குறைக் கப்படும். எனவே முதலீட்டுக்கான பணத்தின் அளவு குறைவடையும். இதனுல் பணத்திற்கான கேள்வி, விகிதாசாரத்தைவிட உயர்ந்த அளவில் அதிகரிக்கும். எனவே இயக்கமுள்ள பொருளாதாரத்தில் பனத்தின் கேள்வி ஒன்றுக்குச் சமமானதாக இருப்பதில்லை.
மேலும் குறித்த ஒரு நேரத்தில் காணப்படும் பணம் வங்கிவைப்புக் களாகவோ பணமாகவோ யாராலோ ஒருவரால் வைத்திருக்கப்படும். எனவே பணத்துக்கான கேள்வியும் அதன் நிரம்பலும் எந்நேரமும் சமமாக இருத்தல் வேண்டும்.
's
வட்டி விகிதம்:
பொருட் சந்தையில் விலை கேள்வி நிரம்பலால் நிர்ணயிக்கப்படுவது போலவே பணத்தின் விலை (அதாவது வட்டி)யும் கேள்வி நிரம்பலால் நிர்ணயிக்கப்படுகின்றது. பணநிரம்பல் வட்டிவிகிதத்தைப் பாதிக்கும். மத்திய வங்கிகள் பகிரங்கச் சந்தை நடவடிக்கைகள் மூலமும் ஏனைய நடவடிக்கைகள் மூலமும் பணநிரம்பலைக் கூட்டவோ குறைக்கவோ வல்லமையுள்ளவையாக இருக்கின்றன. எனவே அவை கையாளும் ஆவணங்கள் சந்தையில் அதிகமாக இருக்கும் வேளையில் அவற்றின் வில் குறைவடையும். அதாவது வட்டி விகிதம் குறைவடையும். எதிர்ப்புறத்தில் வட்டிவிகிதம் அதிகரித்கும். ஆனல் வட்டிவிகிதம் எவ்வளவுக்குப் பாதிக்கப்படும் என்பதைத் திரவத்தேர்வு அல்லது கடனுக் கான கேள்வியே நிர்ணயிக்கும். எனவே வட்டி விகிதத்தைக் குறைத்த போதிலும் திரவத்தேர்வு அதிகரிக்குமானுல் பணநிரம்பல் அதிகரிக்க மாட்டாது. திரவத்தன்மையைக் கைவிடுவதற்கான வெகுமதியாக வட்டிவிகிதம் அமைவதினுல் திரவத்தேர்வு வட்டி விகிதத்தைப் பாதிப்ப தோடமையாது வட்டி விகிதத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்களினுல் ஆட்கொள்ளப்படவும் கூடும்.
ஆஞல் திரவத்தேர்வு வட்டி விகிதத்தைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளில் ஒன்ருகமட்டுமே உள்ளது. கடன்களுக்கான கேள்விக்கும் கடனுக வழங்கப்படக்கூடிய நிதிகட்குமிடையே சமநிலை ஏற்படுத்தும் விதகிமாகவே வட்டி விகிதம் கொள்ளப்படல் வேண்டும். திரவத் தேர்வு மட்டுமின்றி காலத்தேர்வு, ஊகிக்கும் இலாபம் என்பவையும் வட்டிவிகிதத்தைப் பாதிக்கக்கூடியன. மேலும் நிதிச்சந்தையில் வட்டி விகிதப் போக்கினை மத்தியவங்கியின் தலையீடும் நிர்ணயிக்கின்றது.

Page 25
- 40 -
பணப்பெறுமதி மாற்றத்தின் வினேவுகள்:
(1) பணத்தின் பெறுமதி தொடர்ச்சியாக மாற்றமுற்று வருகின்றது. இதனுல் பண அலகின் கொள்வனவுச் சக்தியும் மாற்றமுறுகின்றது. ஆணுல் பொருட்களின் அலகுகள் (மீற்றர், கிலோகிரும் போன்றவை) அவ்வாறு மாற்றமுறுவதில்லை.
(2) பணப்பெறுமதியில் ஏற்படும் மாற்றம் வருமானத்தைப் பாதிக்க வல்லது பணத்தின் பெறுமதி அதிகரித்தால் விலைவீழ்ச்சி, இலாப வீழ்ச்சி, உற்பத்திக் குறைவு, வேயிைன்மை என்பவை ஏற்பட மொத்தக் கேள்வி ஈற்றில் குறைவடையும். கடன் கொடுத்தோர் நன்மையடைவர். கடன் பெற்றேர் இழப்புக்குள் ளாவர். மறுபுறத்தில் பணத்தின் பெறுமதி குறைவுற்ருல் விலை அதிகரிப்பு, உற்பத்தி அதிகரிப்பு, வேலைவாய்ப்புக்கள் பெருகுதல் என்பவை ஏற்பட மொத்தக் கேள்வியும் அதிகரிக்கும்.
(3) வருமானப் பகிர்விலும் பணப் பெறுமதியில் ஏற்படும் மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தும். விலைகள் அதிகரிப்பதஞல் பணப் பெறுமதி குறைவுற்றல் நிரந்தர வருமானம் பெறுவோர் அதிகளவு பிரதிகூலங்களை அனுபவிப்பர். அவர்களின் மெய்வருமானம் குறைவடையும், முதலீடுகள்மூலம் இலாபம் உழைப்போரின் வருமானங்கள் அதிகரிக்கும். மறுபுறத்தில் பணத்தின் பெறுமதி அதிகரித்தால் வேலையின்மை அதிகரிக்கும். அதே வேளையில் தொழிலில் தொடர்ந்து இருக்கக்கூடியவர்களின் மெய்வருமானம் அதிகரிக்கும். படுகடனளிகளின் மெய்வருமானமும் இவ்வாறே அதிகரிக்கும். வருமானச் சமமின்மை பெருமளவில் காணப்பட் டால் அதனைச் சீர்செய்வதற்குப் பணத்தின் பெறுமதி அதிகரிப்பு 2-5Syts.
பணத்தின் பெறுமதியில் ஏற்படும் மாற்றம் பொருளாதாரத்தைப் பொதுவாகப் பாதிப்பதை இதன்மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

7. பணநிரம்பல்
"பணம்" என்ற பதத்திற்கு நவீன பொருளாதாரத்தில் சரியான அல்லது ஏற்ற வரைவிலக்கணம் கொடுப்பதில் பிரச்சனைகள் உள்ளமை யால் பணநிரம்பலுக்கு இறுதியான வரைவிலக்கணம் வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. பணத்தின் தொழிற்பாடுகளில் செலுத்து மதிகட்கான (பண்டமாற்று) ஊடகமான தொழிற்பாடு மட்டுமே முக்கிய மானதென்று வாதிடுவோர் அதனைக் குறுகிய கண்ணுேட்டத்தில் அணுகு கின்றனர். இந்த வகையில் பணநிரம்பல் என்பது நாணயங்களையும் வர்த்தக வங்கிகளில் உள்ள கேள்வி வைப்புகளையும் மட்டுமே உள் ளடக்கியதாக அமையும்,
பெறுமானத் திரட்டாக வணம் ஆற்றும் தொழிற்பாடு செலவு களில் ஏற்படும் மாற்றங்களுடன் மிக நெருங்கிய தொடர்புடையதால் மனம் இக்கண்ணுேட்டத்தில் வரையறை செய்யப்படல் வேண்டுமென் பது வேறு சில பொருளியலாளரின் வாதமாகும். இந்த அடிப்படையில், பணம் என்ற பதத்தை அவர்கள் " விரிந்த கண்ணுேட்டத்தில் அணுகு கின்றனர். அவர்கள் கருத்துப்படி பணத்திற்கான மாற்றீடுகளும் அண்மிய பணமும் பணநிரம்பலினுள் உள்ளடக்கப்படுகின்றன.
இத் தர்க்கங்கள் இன்னும் முற்றுப் பெருததால் பல்வேறு நாடுக ளின் மத்திய வங்கிகள் பணநிரம்பல் பற்றி பலவிதமான புள்ளி விபரங் களை வெளியிட்டு வருகின்றன.
பணத்தன்மை (Moneynes) கொண்ட ஆதனங்கள்:
இலங்கையில் நவீன நிதிக் கருவிகள் அண்மைக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பணத்தன்மை கொண்ட ஆதனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பண ஆதனங்களைப் செலுத்துமதி குளுதிசயங்கள் கொண்டவை எனவும் முதலீட்டு குண திசயங்கள் கொண்டவை எனவும் இருவகையுள் அடக்கலாம். பொது வாக முதலீட்டுக் குளுதிசயங்கள் கொண்ட ஆதனங்கள் திரவத்தன்மை குறைந்தவையாகவும் இலாபத்தை உருவாக்கித்தர வல்லவையாகவும் உள்ளன. அதேநேரத்தில் செலுத்துமதி குளுதிசயங்கள் கொண்ட ஆதனங்களோ திரவத்தன்மை மிக்கனவாக இருக்கும் வேளையில் இலா பத்தை உருவாக்கித் தராதவையாக அமைகின்றன. ஆதனங்களே. இவ்வாறு பேதப்படுத்துவதில் தற்காலத்தில் பல பிரச்சனைகள் தோன்றி. யுள்ளன. நவீன நிதிக் கருவிகள் இவை இரண்டின் குணுதிசயங்களையும் உள்ளடக்கியனவாகக் காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக வைப்புச் சான்றிதழ்கரேக் கூறலாம்; இவை வருமானத்தை ஈட்டித்தரும்

Page 26
- 42 -
அதே வேளையில் கைமாறத்தகு ஆவணங்களாகவும் இருப்பதனுல் இவற்றின் "பணத்தன்மை அதிகரித்ததாகவே கொள்ளப்படல் வேண்டும். மேலும் முன்னர் சேமிப்புக் கணக்குகளிலிருந்து பணத்தை மீளப்பெறு வதற்கு ஏழு நாள் முன் அறிவித்தல் கொடுத்தல் வேண்டும். வாரத் திற்கு ஒருமுறை மட்டுமே பணத்தை மீளப்பெறலாம் என்ற விதி இருந்தமையால் வாடிக்கையாளர் தாம் முன்னறிவித்தல் கொடுக்கின்ருேம் என்ற உணர்வின்றி அத்தகைய முன்னறி வித்தலை வழங்கி வந்தனர். அதைப் போலவே முன்னர் நிலையான வைப்புக் கணக்குகளில் இட்ட பணத்தை முதிர்வின்முன் மீளப் பெற் றுக்கொள்ள முடியாது. தற்போது வட்டிக் கழிவுடன் நிலையான வைப்பிலிட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் நிலையான வைப்பினை இட்டிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் தனது நடைமுறைக் கணக்கில் பிறப்பிக்கும் காசோலைகட்குப் போதிய பணம் காணப்படாதவிடத்தும் அக்காசோலைகளுக்கு வங்கிகள் பணம் செலுத்து கின்றன. போட்டியடிப்படையில் வைப்புக்களை ஈர்த்துக் கொள்வதற் காகவும் தமது திரவப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அதிகளவில் மத்திய வங்கியை நாடாதிருக்கவும் வங்கிகள் கைக்கொண்ட மாற்றுவழிகளே இவை. எனவே பணத்தன்மை " கொண்ட ஆதனங்களின் அளவு அதிகரித்துச் சென்றிருக்கின்றது.
பணநிரம்பலின் வரைவிலக்கணம்:
இலங்கை மத்தியவங்கியைப் பொறுத்தவரை பணவியல் கட்டுப் பாடுகளுக்காகப் பணநிரம்பலை வரையறுப்பதில் 1980இல் ஒரு மாற் றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆரம்பம் முதல் 1979வரை அவர்கள் பன நிரம்பலுக்கான குறுகிய வரைவிலக்கணத்தின் அடிப்படையிலேயே புள்ளி விபரங்களை வெளியிட்டு வந்தனர். இதன் பின்னர் அவற்றுடன் விரிந்த பண நிரம்பல் பற்றிய புள்ளி விபரங்களும் வெளியிடப்படு கின்றன.
(1) குறுகிய பணநிரம்பல்:
பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள தாவி, உலோக நாணயங்க ளையும் வர்த்தக வங்கிகளில் பொதுமக்களின் கேள்வி வைப்புக்களையும் சேர்த்து குறுகிய பணநிரம்பல் கணிக்கப்படுகின்றது. நாணயத்தைப் பொறுத்தவரை மத்தியவங்கியால் வெளியிடப்பட்ட அனைத்து நாணய மும் பணநிரப்பலில் உள்ளடக்கப்படுவதில்லை. அரசாங்க திறைசேரி, கச்சேரிகள் என்பவற்றில் இருப்பாக உள்ள நாணயம் கணிப்பீட்டி லிருந்து கழிக்கப்படுகின்றது. வர்த்தக வங்கிகளிலும் மத்திய வங்கியி லும் உள்ள நாணயமும் இவ்வாறே கழிக்கப்படுகின்றது. இதைப் போலவே வங்கிகளிலுள்ள கேள்வி வைப்புகள் யாவும் பணநிரம்பல் கணிப்பீட்டிற்குள் சேர்க்கப்படுவதில்லை. வர்த்தகவங்கிகளிலும் மத்திய

-س. 43 جسسه
வங்கியிலுமுள்ள அரசாங்க வைப்புகளும் மத்திய வங்கியுட்பட உள் நாட்டு வெளிநாட்டு வங்கிகளில் காணப்படும் வங்கிகளுக்கிடையேயான வைப்புகளும் தவிர்ந்த ஏனைய கேள்வி வைப்புகளே பணநிரம்பலில் உள்ளடக்கப்படுகின்றன.
மொத்தத்தில் சுழற்சியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடம் உள்ள நாணயமும் அவர்களின் உடமையாக வர்த்தக வங்கிகளில் காணப்படும் கேள்வி வைப்புகளையும் உள்ளடக்கியதே குறுகிய பண நிரம்பலாகக் கணிக்கப்படுகின்றது. இது M என்ற குறியீட்டால் விளக்கப்படுகின்றது.
(2) விரிந்த பணநிரம்பல்
இவற்றுடன் வர்த்தக வங்கிகளில் மொதுமக்கள் இட்டுள்ள தவணை
சேமிப்பு வைப்புகளையும் உள்ளடக்கியதே விரிந்த பண நிரம்பலாகும்.
இது M. என்ற குறியீட்டால் விளக்கப்படுகின்றது.
(3) விரித்த பணநிரம்பல் (M3):
பணவியல் சொத்துக்களின் உருவெளித் தோற்றத்துக்கு வடிவம் தர விரிந்த பணநிரம்பல் வரைவிலக்கணமும் போதாமல் இருப்பது தற் போது உணரப்பட்டுள்ளது. அண்மிய பணச்சொத்துக்கள் பெருமளவில் பெருகியுள்ளன. தேசிய சேமிப்பு வங்கியில் பொதுமக்களால் இடப் பட்டுள்ள தவனை சேமிப்பு வைப்புகளின் அளவு அதிகரித்துள்ளது. இதைப்போலவே நிதி நிறுவனங்களும் பல்வேறு திட்டங்களின்கீழ் மக்களின் சேமிப்புக்களைத் திரட்டி வருகின்றன. இவ்விருவகை வைப்பு களும் நிதிமுறையின் மொத்த வைப்புகளில் மூன்றில் ஒரு பங்கின தாக அண்மையில் வளர்ச்சிபெற்றுள்ளன. எனவே இவற்றையும் உள் ளடக்கிய கணிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இது M, என்ற குறியீட்டால் விளக்கப்படுகின்றது. இது குறுகிய பண் நிரம்பல் (M) அண்மிய பணம் (M) என்பவற்றுடன் தேசிய சேமிப்பு வங்கியிலும் நிதி நிறுவனங்களிலும் மக்களால் இடப்பட்ட தவணை, சேமிப்பு வைப்புகளையும் உள்ளடக்கியதாகும்.
(4) ஏனைய தரவுகள்
மரபுசார்ந்த பணநிரம்பல் தரவுகட்குப் புறம்பான நிதித்தரவுகளும் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. 1979 முதல் இங்கிலாந்து வங்கி ' தனியார்துறை திரவத்தன்மையின் கூறுகள் ? என்ற தல்ப்பில் இத்தகைய விபரங்களை வெளியிட்டு வருகின்றது. இத்தரவுகள் குறுகிய திரவத்தன்மை கொண்ட ஆதணங்களுக்கு வேருகவும் விரிந்த திரவத் தன்மைகொண்ட ஆதனங்கட்கு வேருகவும் வெளியிடப்படுகின்றன. இவை முறையே P. S. T., P. S. L. என்ற குறியீடுகளால் விளக்கப்படு கின்றன இவற்றுள் பணம் ஏனைய பணச்சந்தைக் கருவிகள், வரிச் சான்

Page 27
- 44 -
றிதழ்கள் என்பவற்றை PSb உள்ளடக்குகின்றது. இவற்றுடன் ஏனைய சேமிப்பு நிறுவனங்களில் இடப்பட்டுள்ள திரவத்தன்மை கொண்ட வைப்புக்களை PSL2 உள்ளடக்குகின்றது.
இதனை ஒத்த தரவுகளை இலங்கை மத்தியவங்கியும் 1979 முதல் வெளியிட்டு வருகின்றது. * வங்கியற்ற தனியார் துறையின் மொத்த திரவச் சொத்துக்கள்" என்ற தலையங்கத்தின்கீழ் மத்தியவங்கியின் **பொருளாதார மீளாய்வு' என்ற பிரசுரத்தில் இத் தகவல்கள் வெளி யிடப் படுகின்றன.
திரவத்தன்மை கொண்ட ஆதனங்கள் ஆரம்ப ஆதனங்களாகவும் இடைநிலை ஆதனங்களாகவும் பாகுபடுத்தப்பட்டு இத் தகவல்கள் தயா ரிக்கப்பட்டுள்ளன. " -
(அ) ஆரம்ப ஆதனங்கள் :
திரவத்தன்மை கொண்ட ஆரம்ப ஆதனங்கள் என்ற பிரிவு புழக் கத்தில் உள்ள நாணயத்தையும் வர்த்தக வங்கிகளிலுள்ள தனியார் உடைமையான கேள்வி வைப்புக்களையும் உள்ளடக்குகின்றது. எனவே இப்பகுதியில் தரப்படுபவை குறுகிய பணநிரம்பல் (M) விபரங்களே யாகும்.
(ஆ) இடைநிலை ஆதனங்கள் :
வர்த்தக வங்கிகளிலும் தேசிய சேமிப்பு வங்கியிலுமுள்ள தவனை சேமிப்பு வைப்புகள் தேசிய சேமிப்பு வங்கியிலுள்ள ஏனைய வைப்பு
கள், திறைசேரி உண்டியல்கள், வரி ஒதுக்குச் சான்றிதழ்கள், அரசாங்க ஆவணங்கள் என்பவை இடைநிலை ஆதனங்களில் உள்ளடக்கப்படுகின்றன.
இவற்றைவிட தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் சேமலாபநிதி போன்ற நிறுவனங்களின் உடைமையாகவுள்ள திறைசேரி உண்டியல்கள் அரசாங்க ஆவணங்களின் தொகையும் வேருகத் தரப்பட்டுள்ளது.
சுருங்கக்கூறின் பணத்திற்கு இறுதியான வரைவிலக்கணம் ஒன்று * காணப்படாமையால் பணநிரம்பலுக்கான இறுதியானவரைவிலக்கணம் ஒன்றை வகுப்பதில் சிரமங்கள் உள்ளன. அத்துடன் வங்கியியலில் புகுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக பணத்தன்மை கொண்ட ஆதனங்கள் அதிகரித்துள்ளன. இதஞல் நிதிச் சொத்துக்கள் பணநிரம்பலின்மேல் செலுத்தும் ஆதிக்கம் பரவலாக்கப்பட்டுள்ளது. இவற்றின் தாக்கங்கள் பணநிரம்பலுக்கு வரைவிலக்கணம் வழங்குவதில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
 

8. பணவீக்கம்
பணவீக்கம் என்ற பதம் பல்வேறுபட்ட கருத்துக்களில் இன்று பயன்படுத்தப்படுகின்றது. விலைகளில் ஏற்படும் பொதுவான அதிகரிப்பு சாதாரணமாக பணவீக்கம் என வர்ணிக்கப்படுகின்றது. காலநிலை காரணமாக அறுவடை பாதிக்கப்படல் அல்லது போக்குவரத்தில் ஏற் படும் தற்காலிகத் தடைகளால் பொருட்களுக்குக் தட்டுப்பாடு ஏற் படல் என்பவற்ருலும் விலைகள் அதிகரிக்கக்கூடும். ஆனல் இவை பணவீக்கமாகமாட்டா.
வரைவிலக்கணம்:
பொருட்கள், சேவைகளின் வெளியீட்டைவிட உயர்ந்த வேகத்தில் வருமானம் அதிகரித்துச் செல்வதைப் பணவீக்கமென அழைக்கலாம். இத்தகையநிலையில், அனைத்துப் பொருட்கள், சேவைகளின் விலைகளும் தொடர்ச்சியாக உயர்வடையும்.
பணவீக்க விகிதம்:
பணவீக்கம் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறி பொதுவிலை மட்டத் தில் ஏற்படும் தொடர்ச்சியான அதிகரிப்பே, பொது விலைகள் உயர்ந்து செல்லும் விகிதத்தைப் பணவீக்க விகிதமெனலாம், பணவீக்கத்தின் அளவை விளக்குவதற்கு இவ்விகிதம் பயன்படுத்தப்படுகின்றது. பொது வாகப் பணவீக்கம் என்பது தகாத விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு நிலை யெனவே கொள்ளப்படுகின்றது. எனவே பொது விலைமட்டத்தில் ஏற்படும் அதிகரிப்பு குறைந்ததாக (5%-10%) இருந்தால் அதனை வர்ணிக்கப் பணவீக்கமென்ற பதத்தைப் பயன்படுத்தலாகாது என் பது தற்காலப் பொருளியல் அறிஞரின் வாதமாகும். அவர்கள் கருத் துப்படி இத்தகைய விலை அதிகரிப்பு பொருளாதாரத்தில் நல்விளைவு களையே ஏற்படுத்தும். பொருளாதாரத்தைத் தேக்கநிலையில் இருந்து செழிப்பு நிலைக்கு இட்டுச் செல்ல இந்த அதிகரிப்புப் பெரிதும் உதவும். விலைமட்டத்தில் ஏற்படும் சிறு அதிகரிப்பின் விளைவாக ஆக்ககாரணி களின் வருமானங்கள் அதிகரிக்கின்றன. முக்கியமாக முயற்சியாளரின் இலாபங்கள் அதிகரிக்கும். உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அதி களவு இலாபத்தை அடவதற்கு அவர்கள் தூண்டப்படுவார்கள். இத ஞல் முதலீடுகள் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
ஆனல் பொது விலைமட்டம் குறித்த அளவைவிடக் கூடுதலாக அதிகரிக்கத் தொடங்குமேயாளுல் பணவீக்கமென்ற பதம் எத்தகைய தகாத கருத்தில் பயன்படுத்தப்படுகின்றதோ அத்தகைய விளைவுகளை அது ஏற்படுத்த முற்படும். பணவீக்க விகிதம் அதிகரிக்குமேயானல்

Page 28
- 46 -
அதன் விளைவு சமூக அமைப்பின் சீர்குலைவாகவும், அரசியல் பொரு ளாதார அமைப்பின் உறுதிப்பாட்டுக்குச் சவாலாகவும் அமைந்துவிடும்.
பணவீக்கத்தை அளவிடல்:
பொதுவாக நுகர்வோன் விலைச்சுட்டெண்மூலமே பணவீக்கம் அள விடப்படுகின்றது. முழுநாட்டுக்குமான நுகர்வோன் விலைச்சுட்டெண் இலங்கையில் கணிக்கப்படுவதில்லை. கொழும்பு மாநகர விலைகளின் அடிப் படையிலேயே மத்திய வங்கியால் நுகர்வோன் விலைச்சுட்டெண் கணிக் கப்படுகின்றது. எனவே இச் சுட்டெண்ணின் அடிப்படையில் மட்டும் பணவீக்கத்தை அளவிடுதல் தவருண முடிவுக்கே எம்மை இட்டுச் செல் லும். 1974முதல் மத்திய வங்கி மொத்த விலைச் சுட்டெண்களைத் தயாரித்து வருகின்றது. இதனைவிட தேசிய உற்பத்தியின் சுருக்கியும் மத்திய வங்கியால் கணிக்கப்படுகின்றது. இவற்றின் உதவியால் பண வீக்கத்தை நாம் அளவிடலாம்.
பணவீக்கத்தின் காரணங்கள்:
பணவீக்கம் பல்வேறு காரணங்களால் ஏற்படுத்தப்படலாம். அவற் றுட் சில வருமாறு:
(1) பொருட்கள், சேவைகளில் விகிதாசார அதிகரிப்பு ஏற்படா
மல் பணநிரம்பலில் மட்டும் அதிகரிப்பு ஏற்படுதல்,
(2) சமூகத்தின் மொத்தச் செலவினத்தில் ஏற்படும் பொதுவான
(3) பஞ்சம், வரட்சி, அசாதாரணமான வேலை நிறுத்தங்கள்
போன்றவற்ருல் உற்பத்தி வீழ்ச்சியுறுதல்.
(4) வில்ைகள் அதிகரிக்கலாமென்ற ஊகத்தால் பொருட்களைப்
பதுக்கிவைத்தல்.
(5) கூலிவிகிதம் உயர்ந்து செல்லுதல்.
இவையும் பிறவுமான பல்வேறு காரணங்களை இரு பெரும் தொகுதி கட்குள் அடக்கக்கூடியதாகவுள்ளது. அவையாவன :
(1) மொத்த நிரம்பலைவிட மொத்தக் கேள்வி அதிகரித்தல்.
(2) பொருட்கள், சேவைகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துச்
செல்லுதல்.
அதிகரிப்பு. இதனுல் பொருளாதாரத்தின் வெளியீட்டுக்கான கேள்வி அதிகரிக்க அதன் வாயிலாக விலைகளும் அதிகரிக்கும்.

\ - 47 -
பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சில **பணவீக்கங்கள் ',
போர்க்காலத்திலும், போரின் பிற்காலத்திலும் பணவீக்கம் பல மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தைச் சின்ஞபின்னமாக்கியது. ஜோன் லோ என்னும் பிரபல வங்கியாளரின் செயற்பாடுகளால் பிரான் சிய வங்கி (Banque De Francoise) 1720இல் முறிவடைந்தமையைத் தொடர்ந்து பிரான்சில் பணவீக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தி லிருந்து அந்நாடு இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டுவிட்டது. பிரான்சியப் புரட்சியைத் தொடர்ந்து அசிக்நைட்ஸ் (Assignates) என்னும் ஒரு வகை முறிகள் வெளியிடப்பட்டன. 1790இல் இவை சட்டபூர்வமான பணமாக்கப்பட்டன. இரண்டாண்டுக்குள் இவற்றின் பெறுமானம் பாதியளவுக்கு வீழ்ச்சியடைந்தது. பின்னர் அது மூன்றில் ஒரு பங்காக வும் ஈற்றில் 1795இல் முகப் பெறுமதியின் ஒரு விகிதமாகவும் வீழ்ச்சி யுற்றது. காலப்போக்கில் இவற்றின் உண்மைப் பெறுமதி மூவாயிரத் தில் ஒருபங்காக வீழ்ச்சியடையலாயிற்று. ஈற்றில் இம்முறிகள் வழக் கொழிக்கப்பட்டன.
முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து ஜேர்மனியில் ஏற்பட்ட பணவீக்கம் உலகப் பிரசித்தமானது. 1920இல் அங்கு விவைாசிகள் அதிகரிக்கத் தொடங்கின. விலைமட்டம் மிகவிரைவாக அதிகரித்துச் செல்லலாயிற்று. 1923இன் இறுதியில் ஒரு இருத்தல் பாண் வாங்குவ தற்கு 5000 கோடி "மார்க்" நாணயங்கள் கொடுக்கவேண்டியிருந்தது. இது எமது நாணயத்தின் அக்காலப் பெறுமதியில் ரூ. 26000/-க்குச் சமமானது. தாள் நாணய வெளியீடு எதுவித கட்டுப்பாடுமின்றி மேற் கொள்ளப்பட்டமையே இதன் காரணமாகும். மூன்று வருடங்களுக்குள் தாள் நாணய வெளியீடு 700 கோடி மடங்காக அதிகரித்தது. சுழற்சி வேகமும் அதிகரித்தமையால் விலைகள் நாணய வெளியீட்டு அளவைவிடக் கூடிய வேகத்தில் அதிகரிக்கத்தொடங்கின. ஈற்றில் 1924இல் ஜேர்மன் நாணயமான "மர்க்" இல்லா தொழிக்கப்பட்டு, புதிய நாணயமான foi arriřáš (Reichs mark) அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய 'மார்க்" நாணயத்தில் 100,000 கோடி அலகுகளைக் கொடுத்தே புதிய நாணயத் தின் ஒருஅலகைக் கொள்வனவு செய்ய முடிந்தது.
ஹங்கேரியிலும் இதைவிட மோசமான பணவீக்கம் 1944ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஏற்பட்டது. 1944இல் 1200 கோடியாகக் காணப்பட்ட "பெங்கோ" நாணயத்தாள் வெளியீடு 1945இல் 3,600,000 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 1946இல் தாள் வெளியீடு 1945இல் காணப்பட் டதை விட 100 கோடி மடங்காக அதிகரித்திருந்தது. இதன் விளை வாக பெங்கோ நாணயம் வழக்கொழிக்கப்பட்டு "பொரிண்ட்" (Forint) என்ற அலகு அறிமுகப்படுத்தப்பட்டது.

Page 29
- 48 -
இதைப்போலவே ஆஸ்திரியாவிலும், மோசமான பணவீக்கம் ஏற்
பட்டது. ஈற்றில் அதன் நாணயமான 'கிரெளன்' வழக்கொழிக்கப் பட்டுப் புதிய அலகான ஷிலிங் (Schilling) அறிமுகப்படுத்தப்பட்டது.
பணவீக்கத்தின் வகைகள்
மேலே காட்டப்பட்ட பணவீக்கங்கள் பொதுவாக அதீத நாணய வெளியீட்டால் ஏற்பட்டவையாகும். அதீத நாணய வெளியீடு மக்களின் கொள்வனவுச் சக்தியை அதிகரிக்கும். இதனுல் பொருட்களுக்கான கேள்வி அவற்றின் நிரம்பலை விட அதிகரிக்கும். இதனைக் கேள்வித் giTai Lai Liaorodistib (Demand Pull inflation) 6T6ar 960 uplicii. இதைப்போலவே செலவுகளின் அதிகரிப்பால் ஏற்படும் பணவீக்கத்தை செலவுத்தூண்டல் பணவீக்கம் (Cost Push Inflation) என அழைப்பர். பணவீக்க நிலை தொடர்ந்து நிலவுமேயாளுல் மேற்கூறிய இருவகை பணவீக்க காரணிகளும் இணைந்து அதனுல் பணவீக்கம் மேலும் தீவிர Լճ6նt-սկած,
கேள்வித்தூண்டல் பணவீக்கம்
மொத்தக் கேள்வி மொத்த நிரம்பலைவிட அதிகரிப்பதனல் கேள்வித் தூண்டல் பணவீக்கம் ஏற்படும். தற்காலத்தில் வளர்முக நாடுகளில் இத்தகைய பணவீக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. துரித அபி விருத்தியை ஏற்படுத்துவதற்காக இந் நாடுகள் மேற்கொள்ளும் முயற்சி சுளால் இந் நாடுகளில் பணவீக்கம் ஏற்படுகின்றது. நெகிழ்ச்சியற்ற நிரம்பல், அன்னிய செலாவணிப் பற்ருக்குறை, மூலதனக்குறைவு என் பவை அபிவிருத்திக்குத் தடையாக அமைகின்றன. அபிவிருத்தி கருதி அவை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பணவிரிவாக்கத்தை ஏற்படுத்து வனவாக அமைகின்றன. பணவிரிவாக்கத்தின் நேரடி விளைவு பண வீக்கமாகும். பணவீக்கம் ஏற்பட, பொருட்கள், சேவைகளுக்கான மொத்தக் கேள்வி அதிகரிக்கின்றது. அந்நாடுகளின் உற்பத்திகள், நிரம்பல் நெகிழ்ச்சியற்றனவாகையால் குறுகிய காலத்தில் அவற்ருல் உற்பத்தியை அதிகரிக்கமுடியாது. அத்துடன் இறக்குமதிகளை மேற் கொண்டு கேள்வி அதிகரிப்பைச் சமாளிப்பதற்கு அந்நிய செலாவணிப் பற்ருக்குறை தடையாக அமைகின்றது. எனவே விலைகள் வேகமாக உயர்வடைகின்றன.
வளர்முகநாடுகளிற் சில வேண்டுமென்றே கேள்வித் துரண்டல் பணவீக்கத்தை ஏற்படுத்துகின்றன. விரிவாக்க கொள்கைகளைச் செயற் படுத்துவதனல் இவை பணவீக்கத்தை ஏற்படுத்துகின்றன. தமது அபிவிருத்திக்கு முக்கிய தடையான மூலதனப் பற்ருக்குறையை இவ் வகையில் தீர்க்க அவை முயல்கின்றன. பணவீக்கம் ஏற்பட்டால் வரு

- 49
மானங்கள் அதிகரிக்கும். இதனல் சேமிப்புகள் பெருகும். எனவே மூலதனவாக்கம் ஏற்பட வழிபிறக்கும். இந்த அடிப்படையில் இந் நாடுகள் பணவீக்கத்தை வரவேற்கின்றன. பாதீட்டில் (வரவு-செலவுத் திட்டம்) துண்டு விழும் தொகையை அதிகரித்த வரிகளாலும், பொதுப்படுகடனை அதிகரிப்பதஞலும் ஈடுசெய்யலாம். இவற்ருல் நிரப் பப்படாத தொகை காணப்படுமானுல் அதனைப் பணவீக்க இடையீடு (Inflationary Gap) என அழைப்பர். இந்த இடையீட்டை அதிகரித்த நாணய வெளியீட்டாலோ அல்லது வங்கித்துறையிடம் கடன் பெற லாலோ நிரப்ப முனைந்தால் பணவிரிவாக்கம் ஏற்படும். வரிகளைக் குறித்த மட்டத்தின்மேல் அதிகரிக்க இயலாதிருத்தலாலும், கடன்களை வழங்கத்தக்க அளவுக்கு வங்கியற்ற தனியார்துறை வளர்ச்சியெற் றிருக்காமையாலும், எதிர்பாக்கும் அளவுக்கு அநநிய கடன்களையும் உதவும் தொகைகளையும் பெற்றுக்கொள்ள இயலாது இருப்பதனுலும் இந்நாடுகள் பாதீட்டில் ஏற்படும் இடையீட்டைப் பணவீக்கத்தை ஏற் படுத்தக்கூடிய விரிவாக்க மூலங்கள் வாயிலாக ஈடுசெய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றன.
இலங்கையின் அநுபவமும் இதே வகையினதாகவே காணப்படு கின்றது. அண்மைக் காலத்தில் 1977 நீங்கலாக 1975முதல் 1986வரை இத்தகைய மூலங்கள் அதிகரித்தளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1980 பாதீட்டில் துண்டு விழுந்த தொகையின் 46% விரிவாக்க மூலங்களால் ஈடு செய்யப்பட்டது. 1985இல் துண்டு விழுந் தொகையை ஈடுசெய்வதற்கு உத்தேசிக்கப்பட்ட நடவடிக்கைகள் பணச்சுருக்க விளைவு களையே ஏற்படுத்துமென மதிப்பிடப்பட்டது. ஆனல் ஈற்றில் துண்டு விழுந்த தொகையின் 12% விரிவாக்க நடவடிக்கைகளாலேயே ஈடு செய்யப்பட்டது. 1986 பாதீட்டு மதிப்பின்படி இந்த விகிதம் 7% ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
விரிவாக்க நிதியளிப்பு, பொருட்கள், சேவைகளின் கேள்வி அதி கரிப்புக்கு வழிவகுக்கும். இந்நிலையில் பொருட்கள், சேவைகட்கான நிரம்பல் நெகிழ்வுள்ளதாக இருந்தால்மட்டுமே விரிவாக்க நடவடிக்கை கள் மூலம் அபிவிருத்தியைத் தூண்டிவிடக்கூடியதாக விருக்கும். நிரம்பல் நெகிழ்வற்றுக் காணப்படும் நிலையில் பணவீக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க
(plgatings
செலவுத்தூண்டல் பணவீக்கம்:
பொருட்களின் உற்பத்திச் செலவு மூலப்பொருட்களின் விலைகளிலும் தொழிலாளருக்கு வழங்கப்படும் வேதனங்களிலும்,பெருமளவு தங்கி
... ... (åíÏ
& :&&"... :( :

Page 30
--سے 50 ----
யுள்ளது. எனவே சம்பளங்கள், கூலிகள் என்பவை அதிகரிக்குமாயின் உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து அதன் விளைவாகப் பணவீக்கம் ஏற்படும். அதேபோல மூலப்பொருட்களின் விலை உயர் வாலும் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுமிடத்து வேறுநாடுகளில் நிலவும் பணவீக்கம் அப்பொருட்களின் விலைகளினூடாக எமது நாட்டினுள் செலுத்தப்படுகின்றது. இவற்றின் விளைவுகளால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இதனையே செலவுத்தூண்டல் பணவீக்கமென அழைப்பர்.
கூலி அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்படுவதில்லையெனவும் பண வீக்கத்தின் விளைவாகவே கூலி அதிகரிப்புக்கான கோரிக்கை யெழுப்பப் படுகின்றன வென்றும் சிலர் வாதாடுவர். பொதுவாக தொழிற்சங்கங் களின் வாதமும் இவ்வாறே அமையும்.
விலைஅதிகரிப்புக்கும் கூலிகள் அதிகரிக்கப்படுவதற்கு மிடையே கால இடைவெளி காணப்படுகின்றது. பொதுவாக பணவீக்கத்தின் வரு டாந்த சராசரி அதிகரிப்பை விட கூலிமட்டத்தின் அதிகரிப்புக் குறை வாகவே காணப்படுகின்றது. வளர்முகநாடுகள் தமது மூலப்பொருட்க ளில் பெருமளவை வேறுநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்கின்றன. எனவே இறக்குமதி விலைகளின் அதிகரிப்பாலேயே வளர்முக நாடுகளில் பணவீக்கம் ஏற்படுகின்றதென்பது தற்கால பொருளியலாளர்களின் கருத்தாக அமைகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை 1978க்கும் 1984க்குமுடையேயான காலப்பகுதியில் இறக்குமதிகளின் விலைச்சுட்டெண் 315% அதிகரிப்பைக் காட்டியது. ஏற்றுமதி விலைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பு 107% மட்டுமே. இதனுல் வர்த்தக மாற்றுவிகிதம் 50 ஆகக் காணப் பட்டது (1978=100). இந்தக் கண்ணுேட்டத்தில் சர்வதேச விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புகளாலேயே உள்ளூரில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இதனை " இறக்குமதி செய்யப்பட்ட பன விக்கும் ' எனலாம்.
இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம்: −
சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படும் பொருட்களின் விகை ளுடாக பணவீக்கம் ஒரு நாட்டில் இருந்து வேருெரு நாட்டுக்குப் பரப்பப் படுகின்றது. இதனைப் பணவீக்கத்தின் விலை விளைவு (Price effect) என்பர். அதே நேரத்தில் அதிகரித்த ஏற்றுமதிகளால் சென்மதி நிலுவை

--س۔ 51 --سے
நடைமுறைக் கணக்கில் சாதகமான நிலை ஏற்படுமாயின் அது உள்ளூரில் மொத்தக் கேள்வி அதிகரிப்புக்குக் காரணமாக அமையும். இதனைகி (ssio 623rray (Demand Effect) 6Tairuri.
சென்மதிநிலுவையில் ஏற்படும் மாற்றங்கள் பணநிரம்பலையும், அதனூடாக வருமானத்தையும், செலவுகளையும் பாதிக்கின்றது. இதனேத் திரவ விளைவு (Liquidity Effect) என்பர். இவற்றைவிட உலகளாவிய பணவீக்கம் ஏற்படலாம் என்ற ஊகமும், செய்முறை விளைவை (Expectations and Demonstration Effect) 67 fibLIGigh. Qeyth ஒருநாட்டில் இருந்து பிறிதொன்றுக்குப் பணவீக்கத்தைப் பரப்பும் ஆற்றலைப் பெற்றது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை மிகச் சிறிய நாடாகும். எமது உற்பத்திப் பொருட்களின் தன்மையாலும், அள வாலும் எம்மால் உலக விலைகளில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. ஆஞல் உலக சந்தை விலைகள் எம்மை வெகுவாகப் பாதிக்கின்றன. இதன் காரணமாக எமது நாணயத்தின் வெளிநாட்டுக் கொள்வனவுச் சக்தியும் பாதிப்படைகின்றது. அதன் பெறுமதிக் குறைவின் காரண மாக இறக்குமதிகளின் விலைகள் அதிகரிக்கின்றன. அண்மைக் காலத்தில் எமது நாணயத்தின் பெறுமதி முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிகளின் அடிப்படையில் வெகுவாகக் குறைவடைந்துஉள்ளது.
பின்வரும் அட்டவணை இதனை விளக்கும்
இலங்கை ரூபாவின் மாற்று விகிதம்
(ரூபாய்கள்)
1984 1985 %குறைவு
நாணயம் ۔۔۔ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ۔۔۔۔۔۔۔۔ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ۔
முடிவில் முடிவில்
அமெரிக்க ஐக்கிய நாட்டு டொலர் 26.28 274. 4. ஐக்கியராச்சிய ஸ்டேலிங் பவுண் ○0。5型 39。葛8 30 Gogfungir Gloria prriá. 8,35 33 யப்பானிய யென் 0. 0.4 27 19yrreirslau 19graris 2.73 3.62 33
மூலம்-மத்திய வங்கி அறிக்கைகள்

Page 31
- 52 -
மேலும் 1977க்கும் 1985க்கு மிடையில் அ. ஐ. நாட்டு டொலர் நாணயத்துக்கான எமது ரூபாயின் மாற்றுப்பெறுமதி 69.22% குறைவு பெற்றுள்ளது. அதாவது எமது நாணயத்தின் மெறுமதி அ. ஐ. நாட்டு நாணயத்தின் பெறுமதியின் அடிப்படையில் ஆண்டுக்குச் சராசரியாக 7.69% இழப்பைப் பெறுகின்றது. அதேபோல 1977ல் சிறப்பு எடுப்பனவு உரிமை (S. D. R.) க்கும் எமது நாணயத்துக்குமான மாற்று விகிதம் ரூ. 10/42 ஆகக் காணப்பட்டது. இது 1984இல் ரூ. 26/08 ஆகக் குறை வுற்றது. இவ் வீழ்ச்சி 150.29%க்கு சமமானதாகும். இந்த அடிப்படையில் ஆண்டு சராசரி வீழ்ச்சி 16.7% மாக அமையும்.
ஆனல் அண்மைக்காலத்தில் இலங்கையின் பணவீக்கம் பூஜ்ய நிலையை எட்டியதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் அது தொடர்ந்து அதிகரித்துச் செல்வதாக அறியப்படுகின்றது.
காரணிகளின் இணைப்பால் எற்படும் பணவீக்கம்:
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் ஒன்றில் கேள்வித் தூண்டலால் அல்லது செலவுத்தூண்டலால் பணவீக்கம் ஏற்படக்கூடும். எவ்வாறு ஏற்பட்டபோதும் பணவீக்கம் தொடர்ந்து நிலைத்திருக்குமாஞல் அதனை ஏற்படுத்திய காரணியை இனங்காணமுடியாது போய்விடும். இதனுல் பொருளாதாரத்தின் சகல துறைகளும் பாதிப்படையும். ஆரம்பத்தில் கேள்வித்தூண்டலால் பணவீக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனல் பண வீக்கத்தின் விளைவாக செலவுகள் அதிகரிக்க அது செலவுத்தூண்டல் பணவீக்கமாகவும் மாறிவிடும். எனவே இவ்வாறு தொடர்விளைவு ஏற்படுத்தப்படுதலேயே காரணிகளின் இணைப்பால் ஏற்படும் பணவீக்கம் என்பர்,
விக்கத்தினைத் தீவிரப்படுத்தும் காரணிகள் :
இவைபற்றி முன்னரேயே விளக்கப்பட்டுள்ளன. கல்பிரயித் என்னும் பொருளியல் அறிஞர் பணவீக்கத்தைக் கர்ப்பத்துடன் ஒப்பிட் டார். கர்ப்பம் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அதனையும் மீறி அது ஏற்பட்டால் கர்ப்பத்தில் சிசு வளர்ந்து பிரசவிக்கப்படும் வரையுள்ள பிரச்சனைகளை எதிர்நோக்குவது தவிர்க்கப்பட முடியா தது. இதைப்போலவே பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்காவிட்டால் அதன் தொடர் விளைவுகளை அனுபவிப்பதிலிருந்து இப்பமுடியாது. . -
 

ہے۔ 53 بس۔
வீக்கத்தினைத் தீவிரப்படுத்தும் காரணிகளைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்
l.
இறக்குமதிகளின் செலவு அதிகரிப்பதன் ஏது எதுவாக இருந்த போதும் அவை உள்ளூர்ப் பணவீக்கத்தைத் தீவிரப்படுத்துவ தாகவே அமையும். நுகர்பொருள் எனில் அவற்றின் விலை மட்டம் நேரடியாக உயர்வடையும். இடைநிலைப் பொருட்க ளதும் மூலதனப் பொருட்களதும் அதிகரித்த விலை அவற் றைக் கொண்டு ஆக்கப்பட்ட பொருட்களின் செலவு அதிகரிப் பின் மூலம் பொது விலைமட்டத்தைப் பாதிக்கும். அத்துடன் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதனுல் கூலிமட்டமும் அதி கரிக்கும்.இவற்றின் விளைவாக கேள்வித்தூண்டல் பணவீக்கமும் செலவுத் தூண்டல் பணவீக்கமும் ஒருங்கே ஏற்படும்.
உலக பணவீக்கத்தால் ஏற்றுமதி வருமானமும் அதிகரிக்கும். இதனுல் மொத்தக் கேள்வி அதிகரிக்கும். நிரம்பல் நெகிழ்வ தற்றதாகையால் விலைகள் உயர்வடையும். அத்துடன் அதி கரித்த ஏற்றுமதி வருமானத்தால் வங்கிமுறையின் சர்வதேச சொத்துக்கள் அதிகரிக்கும். இதனுல் அவற்றின் பனவாக்க ஆற்றல் அதிகரிக்குமாகையால் பணவீக்கம் மேலும் தீவிர மடையும்.
வில்வாசிகள் உயர்வடைவதனுல் உள்ளூர் வர்த்தகமும் வெளி நாட்டு வர்த்தகமும் நடாத்தப்படுவதற்கு வங்கிக்கடன் அதிக ரிக்கப்படல் அவசியமாகின்றது. இதனுல் பன நிரம்பல் அதி கரிக்க அதன்மூலம் பணவீக்கம் தீவிரமடையும்.
பங்கீட்டில் ஏற்படும் பற்ருக் குறையை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் கையாளும் முறைகளில் ஒன்று வரிகளை விதித்த லாகும் வரிகளில் மறைமுக வரிகள் பெரும் பங்கினை வகிக் கின்றன. இவற்றின்மூலம் வருமான மறுபங்கீடு செய்யப்படு கின்றது. இதனுல் மொத்தக் கேள்வியில் அதிகரிப்பு ஏற் பட்டு பணவீக்கம் தீவிரமாகும்.
பொதுச் செலவினங்களே விரிவான முறையில் மேற்கொள்வதி ணுல் பணவீக்கம் ஏற்படுகின்றது. இதஞல் கொள்வனவுச் சக்தி அதிகரித்து மொத்தக் கேள்வியும் அதிகரிக்கும். இதனை ஈடுசெய்ய அதிகரித்த இறக்குமதியைச் செய்தல் வுேண்டும்.

Page 32
--54 =--۔
இதஞல் வர்த்தக மீதி பாதிப்படையும். அந்நிய செலாவணி வீணடிக்கப்படும். பணவீக்கத்தால் பொதுச் செலவினங்கள் மீண்டும் அதிகரிக்கப்படவேண்டி ஏற்படும். இத் தொடர் விளைவுகள் பணவீக்கத் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தும்,
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தல்:
பண வீக்கத்தின் விளைவாகப் பொருட்களின் நிரம்பல் விட அவற்
றின் மொத்தக் கேள்வி அதிகரிக்கின்றது. அத்துடன் வில்களும் கூலி
களும் ஒன்றுக்கு ஒன்று போட்டியாக அதிகரிக்கின்றன.
எனவே கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த இத் துறை களில் மேற்கொள்ளப்படவேண்டும்.
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வழமையாக மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளுட் சில கீழ் வருமாறு:
1. மொத்தக் கேள்வியைக் கட்டுப்படுத்துதல்
(அ) வங்கிக் கடனைச் செலவு மிக்கதாகவும் கிடைத்தற்
கரியதாகவும் மாற்றுதல். (ஆ) இறையியல் நடவடிக்கைகள்மூலம்
(i) அதிக வரிகளை விதித்தும் (i) வருமான உச்சவரம்பைக் குறைத்தும்
(i) முறைசாராத் துறையினரை வரியமைப்புக்குள்
கொண்டுவந்தும்
(iv) அரசின் மூலதனச் செலவினங்களைக் குறைத்தும்
மக்களின் கொள்ளனவுச் சக்தியைக் குறைத்தல், 2. நிரம்பலை அதிகரித்தல்
(அ) தூண்டுதல்கள் வழங்குவதன்மூலம் உள்ளூர் உற்பத்திகளை
அதிகரித்தல், (ஆ) இறக்குமதிகளை அனுமதித்தல்.
3. நாணய மதிப்பிறக்கம் செய்தல்.
4. சேமிப்புகளைக் கடனுக்கத்துக்குப் பயன்படுத்தப்படாது மூலதன
ஆக்கத்துக்குத் திசைதிருப்பல்,
5. உலக விலைகளின் தாக்கத்தினுல் இலகுவில் பாதிக்கப்படாத வகையில் அமையத்தக்கதாகப் பொருளாதார அமைப்புை மாற்றியமைத்தல்,

--س 55 سس
மேற்கூறிய நடவடிக்கைகள் கருதிய பலனைத் தருமா என்பது ஆயத்துக் கிடமானதே,
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென மேற்கொள்ளப்படும் இந் நடவடிக்கைகள் அதனை மேலும் தீவிரப்படுத்துவனவாக மாறவும்
கூடும்.
தற்காலத்தில் முதலாளித்துவப் பொருளாதாரங்களில் மட்டுமின்றிச் சோசலிசப் பொருளாதாரங்களையும் பணவீக்கம் பாதித்துவருகின்றது. பதினெட்டு நாடுகளின் நாணயப்பெறுமதியடிப்படையில் தனது நாணய அலகான யுவான (Yuan) மக்கள் சீனக் குடியரசு அண்மையில் 10.8%ஆல் மதிப்பிறக்கம் செய்துள்ளமை இதற்கோர் எடுத்துக்காட்டு.
எனவே தனியொரு நாட்டின் அடிப்படையிலன்றி உலகளாவிய ரீதியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் அவசியமாகியுள்ளது.

Page 33
இந்நூலே ஆக்குவதில் எமக்கு வழிகாட்டியாக இருந்தவை
Books:
l. An Outline of Money - Geoffrey Crowther E. L. B. s.
3. Money and Banking - L. J. Pritchard- Houghton
Miffilin Co., Boston - 1958
代
4. Economics of Money & Banking - L. V. Chandler and S. M. Goldfeld - Harper - 1977
5. Applied Economics in Money and Banking - H. Carter ar, I. Patrington - Oxford 1982
6. Banking and Financial Institutions in Ceylon - H. N. s
Karunatilake Central Bank of Ceylon - 196, t
பொருளியல் விளக்கக் குறிப்புகள் (பகுதி I) - சி. வரதராஜன்
Periodicals;
1. பொருளியல் நோக்கு - மக்கள் வங்கிப் பிரசுரம் A
April 1982, Oct. 1 Nov. 1982
2. Central Bank News Survery - Monthly Bulletin of :
Bank of Ceylon
அறிக்கைகள் :
1. ஆண்ாலி ககள் - இலங்கை மத்திய வங்கி
2. பொரு :தார மீளாய்வு - இலங்கை மத்திய வங்கி
3. Monthly Bulletin - Central Bank of Ceylon
79.720
 
 
 
 
 
 


Page 34
STTTSMTSTSTSTTSTSMSTSTTTTeSeTTTeeTTTTTSTTTTSTeAeAeYeqAMeAeAeAeeAeSeLSAeeTeAeAeeMTTeAAS AAAAA AeeA eAqASqS
@ಡ್ಗಿ நூலாசிரியரின் ஆக்கங்களாகத் ー、 தொடர்ந்து வெளிவர இருப்பவை
* பணமும் வங்கியிய
வர்த்தக வங்கிகளும் கிராமிய கடனுதவு நிறுவ
* பணமும் வங்கியிய
- Liricii. III மத்திய வங்கியியல் வங்கியற்ற நிதி நிறுவனங்
* இலங்கையின் மூல
LiDL
பணச்சந்தை யை
క్వెన్స్గా
திருமகள் அழுத்தகம் சுன்ன
 
 

sae
sୋଷ୍ଟ