கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிகரம் தொடு 2010.10

Page 1
ஒக்டோபர் 2010
8500IGITI) ۱۰ به بیرون சீரழிகிறதா?
بتایا
 
 
 
 

6Sheo6O4O
(BLTGOTTóò
வருவிரோ. Gmail @@ Unido

Page 2
S-ISTLD 2.GITLS GS 2GTL85ü UuUGCOTub aflm)ë
35 ஆண்டுகளுக்கு ஜஸ்கிறீம் உற்
இலங்கை வர்த்தக தொழில்துறை ம
சுகாதார முறைப்படி தயாரிக்கப்ட
வனிலா ஐஸ்கிறீம் சிக்கள் பு சொக்லேட் ஐஸ்கிறீம் மட்டன் பு ஸ்ரோபெறி ஐஸ்கிறீம் GCDS-Gij Us
ஜெலி, நட்ஸ் ஐஸ்கிறீம்
மங்கோ, ராஜா ஸ்பெஷல் ஐஸ்கிறீம்
$8 இசைக்கு - இ ஜல்கிறீமுக்கு ரா?
கஸ்தூரியார் வீதி,
 
 
 
 

லலத்தின் புதிய க வாழ்த்துகிறார்கள்!
ட்ட, தரமான, சுவையான
சிற்றுனர்கள்
fluυπGαση, றோல்ஸ், சிக்கன் சமோசா, iuμπGαση மட்டனர் மிதிவெடி, பால்கோவா, LLTEαστ 争 -。 拿 o e
மஸ்கெட், பூந்தி லட்டு, குளிர்பான வகைகள்
இளையராஜா
ஐ கிறீ3 வரவுல்

Page 3
நேற்றைய அனுபவங்களிலிருந்து நாளைய சாதனைகளை
சிகரம் @ရပ်သား மாணவர் பயிற்சி வெளியீடு
இதாகுப்பு
கோறுஷாங்கன்
తియెంటెలిత్త இதாகுப்பு மகேஸ்வரன் பிரசாத்
GNip 6469LDû Li அல்பேர்ட் பெஸ்ரியன்
ஆக்கங்கள்: ம, யசோநிதி அ. அஞ்சனா பா. பவித்ரா ஞா. கிரிஷாந் கி. கிருத்திகா கை. கரோலின் தாரிக் அஸிஸ் மு. சுகந்தி பா. கஸ்ரோ செ. கார்த்திகா ம. சுஜீவன் ஆ. சிந்துஜா LU, 8:36TD6.JUULUTT வி. சுமதீஸ்வரன் ஜெயந்தி சிதம்பரப்பிள்ளை து. சுஜிதா இரா. ராஜிதா 壹重壶ā命: கரிகணன் பிறின்டேர்ஸ் * சந்தா விபரம் 噴
ஆண்டு சந்தா 500ரூபா 2 ஆண்டு சந்தா 900 ரூபா மாணவர்களுக்கும், கல்வி
நிறுவனங்களுக்கும் 6ിഥrgിG ஆண்டு சந்தா 400 ரூபா 1
rara
 
 
 

04
உல்லாசபுரி E}(SLDrt
யாழ்ப்பாணம்?
Tese
ജൂൈന്ദ്ര is Scááló gújabb életű,5luj
نے لوگ کہاڑھی) لوتھراپیڑیے علی
Gសme=Go 14.
17
பாரு விளையாரு 3 O க்கா விழிகள் 32 ாட்டு 34 ாய்ப்புக்களைக் கையகப்படுத்துவோம்! 3G 5 (95GirGGustib 39. றக்கலாமன்றம் 4 O D SGöGCDGo GlunlöGCDLD SGöGCDGo. ... 41 னம் மூழ்கிவிருமா
n
ily gd5(3LTuf 201O

Page 4
இது நமது பயனத்தின் இரண்டாவது கட்டம்.
2009 ஒகஸ்டில் "சிகரம் தொடும் முதல் அழயை எடுத்து வைத்தோம்.
பல்வேறு காரணங்களால் 2010இல் அது தொடரவில்லை.
ஒரு சஞ்சிகையை பொருளாதார ரீதியாகத் தொடர்ந்து நடத்த முடியாது என்ற நொண்டிச் சாட்டு நிச்சயமாக இதற்குக் காரணமல்ல.
போருக்குப் பிந்திய சூழலில், தமிழில் ஒரு தரமான ஊடக முயற்சியைச் செய்வதற்கான ஊடக வளப் பற்றாக்குறைக்கு முன்னால், பொருளாதாரச் சுமை இரண்டாம் பட்சமே.
சரக்குக்குப் பஞ்சமில்லாத போர்க்காலத்தில், உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பரபரப்பு ஊடகம் செய்த பாரம்பரியத்தில். மக்களின் உண்மையான தேவைகளையறிந்து, சரியான
ஊடகவியலைச் செய்யக்கூடிய திறனுள்ளவர்களின்
பற்றாக்குறை முக்கிய சவாலாயிற்று.
இது நமது பயணத்தில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
"சிகரம் தொடும் பயனத்தில் பயிற்சி ஊடகவியலாளர்களை இனைத்துக்கொண்டு முன்னேறுவோம் என்ற எமது புதிய முயற்சிக்குக் கிடைத்த எதிர்பாராத ஆதரவு, சிகரம் ஊடகக் கற்கைநெறியொன்றுக்கு அடியெடுத்துக் கொடுத்தது.
நாற்பது மாணவர்களுடன் ஆரம்பித்த இந்தப் பயனத்தில், 20 மாணவர்கள் 5 மாதங்களாகத் தொடர்ந்து உழைத்தனர்.
இவர்களது ஊடகக் கற்கைநெறியின் முதற்கட்ட நிறைவே "சிகரம் தொடும் பயனத்தின் இரண்டாவது கட்டம்,
கூடவே, வட இலங்கைச் செய்திகள் பார்வைகளை இணையப்பரப்பில் உலாவிடும் யாழ்ப்பாணம் இன்று (WWW.JaffnaToday.com) GrGarp u5u 2gLsupò பயனத்தில் இணைந்துகொண்டுள்ளது.
'நேற்றைய அனுபவங்களிலிருந்து நாளைய சாதனைகளை நோக்கிப் பயணிக்கும் இளைஞர்களால், இளைஞர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய ஊடக முயற்சிகளுக்கு, இளையோருடன் இணைந்து அனைவரும் ஆதரவு தருவீர்கள் என்பதில் என்ன சந்தேகமிருக்கிறது?
மாணவர்களுடன் இணைந்து
கோறுஷாங்கள்
リリ
 

2009ம் ஆண்டு வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்தி வீதாசாரம் மிகச் சிறியளவில் அதிகரித்திருப்பதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள மாகாணங்களின் மொத்த தேசிய உற்பத்தி தொடர்பான புள்ளிவிபரம் கூறுகிறது. 2008ல் 32 சதவீதமாக இருந்த வட மாகாணத்தின் மொத்தத் தேசிய உற்பத்திப் பங்களிப்பு, 2009இல் 33 வீதமாக உயர்ந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகச் சிறியதொரு வளர்ச்சியேயாயினும், 2009 மே யில் போர் முடிவுற்ற சுமார் 6 மாதங்களுக்குள் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருப்பது சாதகமாக நோக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டில், முழு இலங்கையிலுமே மிகக் குறைந்த வீதமான 2 சதவீத வளர்ச்சியைக் காட்டிய வட மாகாண மொ.தே.உ பங்களிப்பு, 2002 போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் மீண்டும் 3 சதவீதத்துக்கு உயர்ந்தது. இப்போது 33 சதவீதத்தை எட்டியிருக்கும் இந்த வளர்ச்சி, 2010-11இல் மேலும் துரித முன்னேற்றம் காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ■>
களைகட்டிய வல்லிபுரத் தீர்த்தம்
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, உயர்பாதுகாப்பு வலயத் தடைகள் நீக்கப்பட்ட சூழ்நிலையில், இம்முறை வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத் திருவிழாவில் அதிகூடிய சனத்திரள் கூடியிருந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக நீண்டகாலம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்று வந்த கடல்த் தீர்த்தம், இந்த முறை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக நடைபெற்றதால், பக்தர்கள் ஆயிரக்கணக்கில் மிகவும் உற்சாகமாக கடலில் தீர்த்தமாடி மகிழ்ந்தனர். நீண்டகால இடைவெளியின் பின்னர் கடலுக்குத் தீர்த்தமாடச் சென்ற மகிழ்ச்சியில், இளைஞர்கள் பலரும் நீச்சல், நீர் விளையாட்டு, படகுச் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ses
ஒக்டோபர் 2010
国

Page 5
வட இலங்கை செய்
யாழ்ப்பான மக்கள் மனம் திறந்து
பேசவேண்டும்!
மோதல்கள் முடிவுக்கு வந்து இயல்புச் சூழ்நிலை காணப்படுகின்றபோதும், யாழ் குடா நாட்டிலுள்ள மக்கள் எந்தவொரு விடயம் தொடர்பிலும் வெளிப்படையாகக் கருத்துக்களை வெளியிடத் தயங்குவதாக, அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த தெற்காசிய பெண்கள் ஊடக வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். மூன்று நாள் பயணமாக ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்த 11 பேர் கொண்ட இந்த ஊடகக் குழுவினர், பலாலி வீதி, கந்தர்மடத்தில் உள்ள சிகரம் ஊடக இல்லத்தில் யாழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு கருத்து வெளியிட்டனர். ܡ "நாம் சாதாரண மக்களைப் ଔutଶd(3ତ! யாழ்ப்பாண மக்களிடமும் கதைத்தோம். ஆனால், அவர்கள் பேசுவதற்குப் பயப்படுகிறார்கள். யாரோ தம்மைக் கண்காணிக்கிறார்கள் என்ற அச்சம் அவர்களிடம் காணப்படுகிறது. இதனால் அவர்களால் சுமுகமாகப் பேசமுடியவில்லை’ என்று, இந்த ஊடகக்குழுவுக்குத் தலைமை வகித்த "யங் ஏசியா தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் ஷாமினி பொய்ல் கூறினார். ->
பெறுபேறுகள் கிடைக்காத வன்னி மானவர்கள்
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையில் பழைய பாடத்திட்டத்தின்படி பரீட்சை எழுதிய மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கான பெறுபேறுகள் இதுவரை கிடைக்கவில்லை என்று முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருந்தபடி 2009ம் ஆண்டு பரீட்சைக்கு விண்ணப்பித்த இந்த மாணவர்கள், யாழ் வலயக் கல்வி அலுவலகத்தில் மீண்டும் தமது விண்ணப்ப விபரங்களைச் சமர்ப்பித்து யாழ் பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றினர். "யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் மட்டும் சுமார் 45 பேர் பரீட்சை எழுதினோம். ஆனால், இன்னமும் எமக்குப் பெறுபேறுகள் கிடைக்கவில்லை' என்று வேதனைப்பட்டார் பரீட்சைக்குத் தோற்றிய தனது பெயரை வெளியிட விரும்பாத மாணவர் ஒருவர். பெறுபேறுகள் வெளியாகி ஆறு மாதங்களின் பின்னரும் இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து மாணவர்கள் கவலை வெளியி
 
 
 

அருணோதயா வீரர்களுக்கு வெ
2009 ஆம் ஆண்டு: 匿毒蠱* தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அளவெட்டி அருணோதயாக் கல்லூரியை சேர்ந்த 3 விளையாட்டு வீரர்களுக்கு இலங்கை விமானப் பணியகத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
அத்துடன், 2009ம் ஆண்டில் தேசிய மட்டத்தில் கோலூன்றிப் பாய்தலில் சாதனை நிலைநாட்டிய சண்முகராசா தனுசாவுக்கு விளையாட்டு " : "" .ی முன்னேற்றத்துக்கான உதவித் தொகையாக ஜனசக்தி இன்சூரன்ஸ் மாதாந்தம் 10,000 ரூபா வழங்க முன்வந்துள்ளது. 2009இல் நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில், சண்முகராசா தனுசா (19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு), கோபாலன் கணதிபன் (21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு), ம.திருவரன் (17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். கல்லூரி அதிபர் நாகலிங்கம் கேதீஸ்வரனின் ஊக்கமும், விளையாட்டுப் பயிற்றுனர் சிசுபாஸ்கரனின் சிறந்த வழிகாட்டலுமே தமது சாதனைகளுக்குக் காரணம் என்று இந்த மாணவர்கள் கூறுகின்றனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு, பரந்து கிடக்கும் உயர்கல் வாய்ப்புக்கள் பற்றி வழிகாட்டும் கருத்தரங்கொன்று. சிகரம் ஊடக இல்லத்தின் கல்வி வழிகாட்டல் பிரிவினால், யாழ்ப்பாணத்திலும், நெல்லியடியிலும் இலவசமாக நடத்தப்பட்டது. சிகரம் ஊடக இல்லத்தின் பணிப்பாளர் கோறுஷாங்கன், யாழ்பல்கலைக்கழக விஞ்ஞான பீட விரிவுரையாளர் ச.அறிவழகன் ஆகியோர் இங்கு மாணவர்களுக்கான கருத்துரைகளை வழங்கியிருந்தனர். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும், யாழ்.மத்திய கல்லூரியிலும் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குகளில், சிகரம் ஊடக இல்லத்தின் ஊடகக் கற்கைநெறி தொடர்பான விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
மேலும் செய்திகள், பார்வைகளுக்கு
JaffnaToday.com
5 Jii ஒக்டோபர் 2010

Page 6
与 துப்புது முகங்களின் வரவு, அதிகரித்திருக்கும் சனநரிசல், வாகனங்களின் நெருக்கம், நகர்ப்புறக் கடைகளில் மும்முரமாகும் வியாபாரங்கள் என முழு யாழ்ப்பாணமும் இன்று புது மாற்றம் கண்டுள்ளது. த்றி குவாட்டர் - ரீசேர்ட் அணிந்த பெண்கள், அரைக் காற்சட்டை-கையில்லாத ரீசேர்ட் அணிந்த ஆண்கள், புதுவித பஞ்சாபிகள் என்று விதவிதமான உடைகளே ந்தப் புதுமுகங்களை இலகுவாக அடையாளம் காட்டி
விடுகின்றன.
நாட்டின் பிற பாகங்களுடன் வட மாகாணத்தை இணைக்கும் தரைவழிப் போக்குவரத்துப் பாதையான ஏ9 வீதி 24 மணிநேரமும் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்ட பின்
GD GÖGNOTE:
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள கோல மாற்றம் இது.
உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கமும், வீதிகள் திறப்பும், பாதுகாப்பு கெடுபிடிகளின் தளர்வும், உள்ளுரிலும் சனநடமாட்டத்தை அதிகரிக்கச் செய்து,
04
*、Q
 
 

தென்னிலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவோருக்குப் போட்டியாக உள்ளுர் மக்களையும் சுற்றுலாக்களில் நாட்டம் கொள்ளச் செய்துள்ளது கசூரினா, சாட்டி, யாழ் கோட்டை மற்றும் புகழ் பூத்த ஆலயங்கள் எல்லாம் மக்கள் வெள்ளத்தால் நிரம்புகிறது.
யாழ்ப்பாணம் முற்றிலும் ஒரு புதினமாக இருப்பது பலரது வருகைக்குக் காரணமாயிருக்கிறது. நீண்ட காலமாகப் பிரிந்திருந்த தம் தேசத்தையும், உறவு களையும் காண்பதற்காய் புலம்பெயர் தமிழர்கள் வந்தவண்ணமுள்ளனர். ஜூலை, ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்கள் கோவில் திருவிழாக் காலம் என்பதும் இவர்களது வருகைக்கான மேலதிக ஊக்கியாகியது.
திடீரென அதிகரித்துள்ள இந்த வருகைகள், இதனால் எமது
பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் பொருளாதார முன்னேற்றம் என்பன. யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை விரிவு படுத்தவேண்டிய தேவையை அதிகரித்துள்ளது.
சுற்றுலா மையங்கள்
புராதன வரலாற்றுச் சின்னமாக இருக்கும் யாழ் கோட்டை, நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவி உடன் புனரமைக்கப்பட்டு வருவதுபோல், நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சங்கானைக் கோட்டைகள், சங்கிலியன் தோப்பு, மந்திரி மனை, நிலாவரைக் கிணறு என்பனவும் விரைவாகப் புத்தாக்கம் செய்யப்படவேண்டும்.
圈@>
JUOD gd5(3LTuf 2010

Page 7
பிரித்தானியா, அமெரிக்கா அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், உல்லாசப் பயணி
கள் இலங்கைக்கு வருவதற்கான g56aoLGaouu நீக்கி உள்ளதுடன் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் மீது விதித்திருந்த எச்சரிக்கையையும் முற்றாக நீக்கிவிட்டன.
ब्र्भृत्। õigi · බබn:ංගණ්ලීඝ. sigasang உல்லாசப் பயணிகள் லண்டனிலிருந்து வந்துள்ளதாகவும், இது கடந்த வருடத்தைவிட 5மூ அதிகரிப்பு என்றும் சொல்கிறது து ວ. @డి
sailer. The Times of London
உலகின் 3 ese esas gp65Gromagames GSiGnomicroscou குறிப்படுத்தியுள்ளது fl:Gümüş cao 56ổ [ Newyork TimeS },
எல்லா மதத்தினரையுமே ஈர்க்கும் நல்லூர் முருகன், நயினாதீவு அம்மன், நாக தீப விகாரை, நாக விகாரை, செல்வச்சந்நிதி, கீரிமலை நகுலேஸ்வரர், கந்தரோடை பெளத்த சின்னங்கள், சின்னமடு தேவாலயம், பெரியபள்ளிவாசல் என நீளும் வழிபாட்டுத் தலங்கள்
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய வகையில் பயன்படுத்தப்படவேண்டும்.
நிலாவரை கிணறு, யமுனா ஏரி போன்ற புராதன நீர் மையங்களுக்குப் புறம்பாக, கசூரினா, சாட்டி, மணற்காடு, தொண்டமனாறு கடற்கரைகள், தென்னிலங்கையிலுள்ள காலி, பெந்தோட்டை கடற்கரைகளுக்கு ஈடாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வெளிநாட்டு வருவாயை அதிகளவில் எமக்கு ஈட்டித்தரக்கூடியவை.
யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பனை வளத்தை உபயோகித்துச் செய்யப்படும் பொருள்கள், உணவுவகைகள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பவை. கள்ளு என்றழைக்கப்படும் பனஞ்சாறு இதில் ஏற்கனவே அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. கடலுணவுகள் மற்றும் யாழ்ப்பாணத்தவரின் பாரம்பரிய உணவு வகைகளும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படத்தக்கவையே.
 
 

என்று ஒன்றில்லை
எங்கடை நாடு உங்கடை நாடு என ಙ್ಗ இது நமது நாடு நாட்டுக்கு உரிமை காரி நமக்குள் சண்டை பிடிப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை'. இவ்வாறு சொல்கிறார், இலங்கையின் தென் பிராந்தியமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்த பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் விஜித்த என்ற உள்நாட்டுச் சுற்றுலாப் பயணி
ஒளிப்படக்கலையில் ஆர்வமுடைய அவர், வாகனச் சாரதியாக 15 பேருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார் யாழ்ப்பாணம் கோட்டையைப் பார்வையிட்டுவிட்டுக் கையில் கமராவுடன் திரும்பிய அவருடன் பேச்சுக் கொடுத்தோம்.
நான் மூன்றாவது டவையாக யாழ்ப்பாணம் வந்துள்ளேன். STELITUů GPLATGü576mü நிலையத்திற் அருகிலுள்ள வீடொன்றிலேயே தங்கியிருக்கிறோம். இப்போதும் அங்கேதான் சென்று கொண்டிருக்கின்றோம் என்று சொன்ன அவர்,
நாங்கள் தங்கவிருக்கும் வீட்டுக்காரர் மிகவும் அன்பானவர் யாழ்ப்பாண மக்கள் எம்முடன் நட்புடன் பழகுகின்றனர் என்றார். எனினும், "ಕ್ಟಿ மக்களுடன் சகஜமாகக் கதைத்துப் பழகுவதற்கு மொழி ஒரு தடைக்கல்லாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். -
பொதுவாக மக்களுக்கிடையில் போட்டிமனப்பான்மை இருப்பதுண்டு வாகனத்தில் வரும்போது ஒருவர் ந்துவதும், மற்றவர் மீண்டும் அவரை முந்திச் சல்வதும் சாதாரணமான சம்பவங்கள். இதற்காக ஒருவருக்கொருவர் பகையை வளர்த்துக்கொள்வதில் அர்த்தமில்லை" என்கிறார் விஜித
நாட்டில் தற்போ தோன்றியிருக்கும் இந்த நிலைமை நீடிக்கவேண்டும் என்பதே அவருடைய விருப்பமாகவும் அமைந்திருந்தது.
உண்மையில் அனைவருடைய விருப்பமும் அதுதான்.
- மகேஷ் பிரசாத்
■@>
gd56LTuf 2010

Page 8
கலாசாரப் பகிர்வு சுற்றுலாப் பயணிகளின் வருகை புதிய கலாசாரப் பகிர்வுகளுக்கும், பரஸ்பர மொழி அறிமுகத்துக்கும்
வழியேற்படுத்தியுள்ளது எமது சகோதர இனத்தவரான ங்களவர்களுடனான ஊடாட்டம் இதில் முக்கியமானது.
O இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த உல்லாசப் A regrafi எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 487 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றது.
O 326.3 மில்லியன் டொலர்களாக இருந்த உல்லாசத்துறை வருமானம் இந்த வருடம் 700 |6|იზინiuuai (მს. Tabjფითიrofilt | அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஏ9 பாதை திறப்பும், அதிகரித்திருக்கும் வெளியார் வருகையும், பொருளாதார, கலாசார மற்றும் அறிவுசார் மேம்பாடுகளுக்கு வழிசமைத்துள்ளபோதும், இதனை எதிர்மறை நோக்கில் பார்க்கும் மனோபாவமும் இங்கே வளர்ந்துள்ளது. அர்த்தமற்ற சந்தேகங்களின் அடிப்படையில் இதனை ஒரு ஆக்கிரமிப்பாக நோக்குவது எமது பிரதேசத்தின் எதிர்காலப் பொருளாதார மேம்பாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. "எங்களை வித்தியாசமா பார்க்காம உங்களைப்போல ஒருத்தரா நினைச்சுப் பழகலாம்தானே.” என்று தென்னிலங்கையிலிருந்து வந்த ஒருவர் தனக்குத் தெரிந்த தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து என்னிடம் சொன்னபோது, பெருமை மிக்க நமது வந்தாரை வரவேற்கும் கலாசாரமும், விருந்தோம்பல் பாரம்பரியமும் வெட்கி நிற்பதாகவே உணர்ந்தேன்.
O 20 இலட்சத்துக்கும் அதிகமான உள்ளுர் சுற்றுலாப் பயணிகள் அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி
இவ்வாறான எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, எமது உற்பத்திகளையும், கைத்தொழில் துறைகளையும், வர்த்தகத்தையும் சுற்றுலாத்துறை வருமானத்தை நோக்கிக் குவித்தால், குடாநாடும், முழு வடமாகாணமும் பொருளாதார எழுச்சி காண்பது உறுதி கு
விரைவில் வெளிவருகிறது Jaffna City Guide
 
 
 

திராதளவுக்குக் களைகட்டியிருந்தது. நீண்ட த்துக்குப் பின்னர் பெருந்தொகைச் சனம் வாரு நாள் திருவிழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழா களை கட்டினதுக்கு நீண்ட காலத்துக்குப் றகு யாழ்ப்பாணம் வந்திருந்த எமது புலம்பெயர் உறவுகளும் ஒரு காரணம். ஜூலை, ஓகஸ்ட் மாதங்கள்
ரும்பாலான புலம்பெயர் நாடுகளில் வேனிற்கால விடுமுறை. இங்கே நாட்டுச் சூழலும் மாறியிருக்கிறது. எல்லாம் சேர்த்து நல்லூர் திருவிழாவை களைகட்டச்
தது. -
ண்ட காலத்துக்குப் பின்னர் யாழ் வந்தவர்களின் மன உணர்வுகள் பரவசப்பட்டன.
கொழும்பிலிருந்து இவ்வளவு ஈசியா யாழ்ப்பாணத்துக்கு ானில வருவம் எண்டு நினைச்சே இருக்கேல்ல. வ்வளவு கெதியா யாழ்ப்பாணம் இப்பிடி மாறும் எண்டும் கனவிலையும் நினைக்கேல்லை. என்கிறார் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் கிருபாகரன்.
ses
gó56Luf 2010

Page 9
1995ம் ஆண்டு யுத்த சூழல் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்கு சென்றவர், அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது கசூரினா பீச், நயினாதீவு, நல்லூர் ஆலயம் என்று எல்லா இடமும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டே திரும்பினார். போக்குவரத்து, பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாகவும், யாழ் நகர்ப் புறத்தில்
tடுப்
போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் கூறும் அவர், “மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது என்று சிலாகிக்கிறார்.
நிலைமைகள் பெருமளவு சீரான பின்னரும் யாழ்ப்பாணச் சூழ்நிலை தொடர்பாக பரவிய பல்வேறு வதந்திகளால் குழம்பியிருந்தவர்களுக்கு, நேரடி அனுபவம் வித்தியாசமாகவே இருந்தது. "யாழ்ப்பாணத்தில வெள்ளை வானில் கடத்துறாங்கள். போறது கவனம் எண்டாங்கள். ஆனா இங்க வந்து பாத்தால் அப்படியில்லை. கொள்ளைகள்தான் ā_QJT இருக்குது."என்று கூறுகிறார் கனடா வாசியான ஆரூரான் ஞானசெளந்தரி
- கனடாவுக்குச் சென்று 14 ஆண்டுகளின் ன்னர் யாழ்ப்பாணம் வந்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்னரே தான் வர இருந்த போதும், கடத்தல் பீதிகGHTab பயந்துபோய் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
'ரவுனிலை பழை யபடி கடைகளெல்லாம் ஓரளவு இயங்குது. இரவெல்லாம் கூட சன நடமாட்டமா இருக்குது. என்று மகிழ்ச்சி வெளியிட்டார் 1980ம் ஆண்டு ஜேர்மன் சென்றபின் முதல் தடவையாக இங்கு வந்திருந்த கனகரட்ணம் சண்முகரட்ணம்.
சனநடமாட்ட அதிகரிப்பும், வியாபார விருத்தியும், புதிய கம்பனிகளின் வரவும் வேலை
O7 园
 
 

யை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான வரப்பிரசாதம் என்று மகிழ்ந்த அவர், "இளம் சமுதாயம் பொருளாதார விருத்தியை நோக்கி காலடி எடுத்து வைக்கும் காலமிது” என்றார் ஆணித்தரமாக
'வரும் புதிய தொழில் வாய்ப்புகளைக் கைப்பற்றுங்கள் யுத்த காலங்களில் வேலைவாய்ப்பின்றியும், வருமானங்கள் இன்றியும் தவித்தபோது நாம் அங்கிருந்து உங்களுக்குக்
ܓܸܠ
கைகொடுத்தோம். இனி உங்கள் உழைப்பால் உயருங்கள் என்று இன்றைய சந்ததியினருக்கு ஆலோசனை சொல்கிறார் அவர் நெருக்கடியான காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாடு பட்டு உழைத்து இங்குள்ளவர்களுக்கு செய்த உதவிகள் இங்கே அதிகளவு விரயமாக்கப்படுவதாக வந்திருந்த பலரும் அங்கலாய்த்தார்கள். "இங்க உழைக்கிறது செலவுக்கே காணாது என்டீனம். இங்க வந்து பாத்தா. முத்தம் கூட்டுறதுக்கும்
வேலைக்காரி. சந்தைக்கு போறது ஆட்டோவில என்டு
99
எங்கட வீட்டுக் கூத்தைப் பார்த்தா தலை சுத்துது. என்று புளுங்குகிறார் ரீஸ்கந்தராசா ஜெயந்தி 1992இல் திருமணத்துக்காக ஜேர்மனிக்கு சென்றவர்,
G دعط.
- gd56LTuf 2010

Page 10
தாய் மண்ணையும், தன் உறவுகளையும் பார்க்க வந்திருந்தபோது, தனது தங்கை வீட்டில் பணம் படும் பாட்டைப் பார்த்தே இப்படி வெதும்பினார். "தொலைக்காட்சி போடுவதே தங்கையின் மூத்த மகனின் காலைக்கடன் பார்ப்போர் இல்லாமலே அது ஓடிக்கொண்டிருக்கும் விடிந்தால் பொழுது பட்டால் செல்போனோடு தான் இளைய மகனின் பொழுது கழிகிறது. மாபிள் பதித்த ஹோலை யார் கூட்டுவது என்ற பிடுங்குப்பாட்டுக்குள் வேலைக்காரி முத்தம் கூட்டி முடித்துவிடுவாள். ஹீற்றரில் ரீ போட்டு பாணன் வேண்டி மிக்சியில் சம்பல் அரைப்பதற்கே தங்கை அலுத்துக்கொள்கிறாள்' என்று பாடுபட்டு உழைத்து அனுப்பும் பணம் கரைந்துபோகும் விதத்தைப் பார்த்து அங்கலாய்த்தார் அவர்
'அங்க என்ர பிள்ளையளை தன்ரியறைக்குள்ள விட்டுப் பூட்டீட்டு நாலு மணத்தியாலம் உழைக்கிற 300 யூரோவைத் தான் இங்க அனுப்புறனான். 'என்று காசுழைக்கத் தான் படும் பாட்டை விபரிக்கிறார் அவர்
300 யூரோ என்றால் இங்கே கிட்டத்தட்ட 45 000 ரூபா கிடைக்கும். இதுவே ஸ்ரேலிங் பவுண் என்றால் அண்ணளவாக 55 000 ரூபாவும், கனடா டொலர் என்றால் சுமார் 30 000 ரூபாவும் கிடைக்கும். இவ்வாறு உண்டியல் மூலம் இங்குள்ளவர் கைசேரும் பணம் பெருமளவுக்கு இப்படித்தான் இங்கே கரைந்து போகிறது.
"மாதா மாதம் உடல் உழைப்பின்றி மேலதிக வருமா. னமாய் சும்மா கிடைப்பதால் உழைப்பின் பெறுமதி இங்குள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. ஆடம்பரமான சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்கள், பிறந்தநாள் வைபவங்கள், கோயில் திருவிழாக்கள் என்று அதைக் கரைத்துவிடுகின்றனர்” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத உள்ளுர்வாசியொருவர்.
காலை எழுந்து மனைவி வேலைக்குச் செல்கிறாள். கணவனுக்கு இரவிலும் இரண்டாவது வேலை இங்குள்ள தமது உறவுகளுக்கு உதவுவதற்காக இப்படி தமது குடும்ப வாழ்க்கையையே பரஸ்பர அன்பும் ஆதரவுமின்றி நகர்த்துகின்றார்கள் புலம்பெயர் மக்கள். இதனால், குடும்ப நிம்மதியையும், அன்பையும்கூட அவர்கள்
இழந்துவிடுகிறார்கள்.
"ஒரு நாளைக்கு நாலு மணத்தியாலம் மட்டும் நித்திரை கொண்டு, நேரம், காலம் பார்க்காமல் பனிக்குளித்து உழைத்து அனுப்பும் பணம் இது என்ற உணர்வு, அதை இங்கே கரைப்பவர்களுக்குத் தெரிகிறதா? என்கிறார் ஒரு புலம்பெயர் வாசி. -
இந்தப் பணத்தை அவமே கரைத்துவிடாமல், கல்வி உபகரணங்கள் வாங்கவோ, பிரயோசனமான முதலீடுகளைச் செய்யவோ அதைப் பயன்படுத்தினால், காலம் முழுக்க வெளிநாட்டு உழைப்பை நம்பியிராமல் சுயமாக உழைத்து, கெளரவமாக வாழ்ந்திடலாம். சிறியதொரு கைத்தொழில் முயற்சி, ஒரு கடையை நடத்தலாம். அல்லது ஒரு முச்சக்கரவண்டியை வாங்கி ஓடி உழைக்கலாம்.
1980 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த சுமார் 5,000 கைத்தொழில் முயற்சிகளில் சுமார் 600 வரையில்தான்
08 -

இன்று செயற்படுவதாக முன்னாள் யாழ் அரசாங்க அதிபர் அண்மையில் கூறியிருந்தார். இவ்வாறு நின்றுபோன ஆயிரக்கணக்கான கைத்தொழில்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்கு இந்த வெளிநாட்டுப் பணத்தை முதலீடு செய்தால், நாமும் வருமானமீட்டி, இன்னும் பலருக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்கி, படிப்படியாக ஒரு தொழிலதிபராகவே உயர்ந்துவிடலாம்.
உலகெங்கும் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்களின் வருமானத்தையும் சேர்த்தால், இலங்கைத் தமிழர்களின்
கவரும் புதிய தொழில் GJ TULJLJL 956CDGTT6 கைப்பற்றுங்கள். யுத்த காலங்களில் GGչյcopGooչյունննicժiրծlպլb, வருமானங்கள் இன்றியும் தவித்த போது நாம் அங்கிருந்து உங்களுக்குக் கைகொருத்தோம். இனி Θπένεσή Θ σαορί υπου உயருங்கள் )
தலா வருமானம் ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் என்கின்றனர் பொருளியல் வல்லுநர்கள்.
,இழந்துபோன எல்லாவற்றுக்கும் அப்பால் ܗܝ கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இளைஞர்களாகிய நாம் சரியாகப் பயன்படுத்தினால் பொருளாதார ரீதியாக நமது மண்ணை சிறப்பாக உயர்த்திடலாம்.
இவ்வாறு பொருளாதார ரீதியாக நாம் உயர்ந்துவிட்டோமென்றால், ஊருக்குள்ளேயே அடைந்து கிடக்காமல், நாமே வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பரந்த உலக அறிவையும், அனுபவத்தையும் பெற்றுவிடலாம். இன்று வெளிநாட்டிலிருந்து வந்து நம்மை பார்க்கும் உறவுகளை அப்படியே ஒரு சுற்றுச் சென்று பார்த்துத் திரும்பவும் முடியும். எங்களுடைய பலத்தையும், வளத்தையும் சரியாகக் கணிக்கத் தெரியாதவர்கள் இதெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்லக்கூடும். அவர்களைப் பொருட்படுத்தாமல், இப்போதே பணத்தை மீதப்படுத்தி, முதலீடு செய்து, உழைத்து வருமானமீட்டி, குடும்பத்தோடு வெளிநாட்டுச் சுற்றுலா ஒன்றுக்குத் தாயாராகுங்கள்.
அ.அஞ்சனா
QãGLAJLuñ 2OsO

Page 11
நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கு என்னவிதமான ஆடை அணியவேண்டும் என்று ஒரு சர்ச்சை இம்முறை எழுந்திருந்தது.
ஆண்கள் வேட்டி, சால்வை, பெண்கள் சேலை, பாவாடை, தாவணி என, கலாசார உடைகளை அணியவேண்டும் என்று, திருவிழா தொடர்பாக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையொட்டியே இந்தச் சர்ச்சை உருவாகியிருந்தது.
ஆண்களும், பெண்களுமாக பக்தர்கள் அனை வரும் அணிய வேண்டிய உடைகள் பற்றியதான பொதுவான இந்த அறிவுறுத்தல், பெண்களது ) உடை பற்றிய ஒரு விவகாரமாக மட்டுமே ஊடகங்களில் அதிகளவில் வலியுறுத்தப்பட்டதே இந்தச் சர்சைக்குக் காரணமாகியது.
கலாசாரம் என்பது ஏதோ பெண்களின் உடையில் மட்டும்தான் தங்கியிருப்பது போல, பெண்களுடைய ஆடைகளை மையமாகக் கொண்டு பெரும் வாதப் பிரதிவாதங்கள், பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும், ஃபேஸ் புக் அரட்டைகளிலும் சக்கை போடு போட்டன.
எல்லோருடைய பேச்சினதும் தொனிப்பொருள் பெண்களுடைய உடைகள் பற்றியதாகவே அதிகம் இருந்தது. பெண்கள் அரைகுறை ஆடை அணிவதா கவும், இதனால் தமிழ்க் கலாசாரம் சீரழிவதாகவும் பலரும் கண்ணிர் வடித்தனர். இதில் சுவாரஸ்யமான சில வாதங்களை இணையத்தள அரட்டலில் காணக்கிடைத்தது.
“பெண்கள் அரைகுறை ஆடை அணிவதால் ஆண்கள் கெட்டுப் போகிறார்கள் என்றால், பிரச்சினை பெண்களுடைய உடையில் இருக்கிறதா அல்லது ஆண்களின் கண்களிலா? என்று ஒரு அன்பர் தர்க்கித்திருந்தார்.
இன்னுமொரு பெண்மணி ஒருபடி மேலே போய், 'பெண்கள் அரைகுறை ஆடை அணிவதால் ஆண்களது மனம் சஞ்சலப்படுகிறது என்கிறார்களே? மேலங்கி அணியாத ஆண்களைக் கண்டால் எனது மனமும்தான் சஞ்சலப்படுகிறது. அப்போ ஆண்கள்
O9
 

எல்லாம் கோயிலுக்கு மேலங்கி அணிந்து செல்லவேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்போகிறீர்களா? என்று
கேள்வியெழுப்பியிருந்தார். இந்த வாதப் பிரதிவாதங்கள் சரியா, பிழையா
என்பதற்கப்பால், கலாசாரம் என்பதை உடையுடன், அதுவும்
பெண்களுடைய உடையுடன் மட்டும் மட்டுப்படுத்திப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தில் உள்ள குறைபாட்டை
இவை சுட்டிக்காட்டுவதாக இல்லையா?
ஏ-9 பாதை திறந்த பின்னர் பெருமளவு மக்கள தென்னிலங்கையிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் யாழப்பாணம் வருவதே, பெண்களுடைய ஆடைகள் பற்றிய அதீத அக்கறைக்கும். இதனால் கலாசாரம் சீரழிந்துவிடுமே என்ற அனேகரது ஆதங்கத்துக்கும்
பிரதானமான காரணமாக நியாயமாகச் சொல்லப்பட்டது.
இது ஒரு வகையில், யாழ்ப்பாணத்துக்கு வருவோரை எதிரிகளாக நோக்கும் தப்பான மனோபாவத்தை நம் மத்தியில் வளர்க்கவும் செய்தது. அப்படியானால், வந்தாரை வரவேற்று விருந்தோம்பும் நமது கலாசாரச் சிறப்புக்கள் என்னானது? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நமது பண்பாடு கெட்டுப்போய்விட்டதா?
வெறுமனே ஆடையில் மட்டும், அதுவும் பெண்களுடைய ஆடையில் மட்டும் தொங்கும் சமாசாரமாக நோக்குவதே இந்தச்சிக்கலுக்குக் காரணம் கலாசாரம் என்பது, பேசும் மொழி, அணியும் ஆடை அன்பு, பண்பு, பழக்க
AVAaz-A7iö
சீரழிகிறத?
வழக்கங்கள், நம்பிக்கைகள், மனிதநேயம் என்று நீளும் பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கிய ஒன்று பரஸ்பரப் புரிந்துணர்வு இதன் அத்திவாரம்
இவை எல்லாவற்றையும் இணைத்த ஒரு தமிழ்க் கலாசாரம், யாழ்ப்பாணத்துக்கேயுரிய ஒரு சிறப்புக் கலாசாரம் நம் மத்தியில் இருந்தது இருக்கிறது. இதனை வெறுமனே பெண்களுடைய உடைகளுடனும், இளைஞர்களுடைய நடத்தையுடனும் மட்டுப்படுத்தி, அவர்களால்தான் கலாசாரம் சீரழிகிறது என்று அவர்களை மட்டும் குற்றவாளிகளாக்குவது நியாயமற்ற விடயம் எல்லோருமாக இணைந்து, இருப்பவற்றைப் பேணி, சுருதிப் பிசுகுகளைச் சீர்செய்து மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கலாசாரத்தை வளர்த்தெடுப்போம்! இ
பாபவித்ரா
5(8Livin 2010 ஒக்டோபர்

Page 12
படத்துக்க இன்னும், துகளையும்
விருதான
ஏ.ஆர். ரகு கைத்தொ6 மத்தியில் இளமைத் ஒன்றிப்பதி இசையுலக ஒன்றும் இ தந்தையை ஆர்வத்தில் மற்றும் கி
11வது வாசிப்பதற் பணியாற்றி of Music) பட்டமும் ( 1992 இல் அமைத்தா திரைப்பட்ட
முதல் தேக் லகான் :
தந்தன. இவரிடம் இளமைத்
s莓接鲑
 

ல் முன்னால் முன்னால் முன்னால் வாடா ல் முடியும் உண்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் வாடா. உன்னால் முடியும் முடியும் தோழா என்ற பாடல் வரிகளை தெரியாதவர்கள் ருக்க மாட்டீர்கள்.
இசைப்புயல் என்று செல்லமாக வர்ணணிக்கப்படும் அல்லா இரக்கா ரகுமான் ஏ.ஆர் ரகுமான், தானே 狗 இசையமைத்துப் பாடிய இந்தப்பாடல், இளைஞர்களின் நெஞ்சில் உற்சாக உணர்வுகளைத் துாண்டுவதில்
t பெருவெற்றி கண்டது
ஆர்.ரகுருன்ே
இ து பே ா ன  ேற களின் மனதைத் தட்டிய ஸ்லம் டோக் மில்லியனியர் 'ஜேய் ஹொ என்ற பாடல், இசை உலகில் தமிழர் ஒருவர் ஒஸ்கார் விருதுகளை வெல்லச் செய்தது
ஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் ஒரு இளைஞர் என்பதே வெகுவாகக் கவர்ந்த விடயம்
Liġillaib T6żjiegi li jlai5lib Ċi... u Iii 6.5cIbgi je356i (Film fair Awards), தசிய விருதுகள், ஸ்லம்டோக் மில்லியனியர் ஆங்கிலப் ாக BAFTA Awards , கோல்டன் குலோப் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள் மற்றும் இரண்டு அக்கடமி விரு ம் (Academy awards) பெற்று, இந்திய தேசத்தின் அதியுயர் பத்மபூஷண் விருதையும் வென்றுள்ளார். குமானின் பாடல்களைக் கொண்ட அழைப்புமணி இல்லாத லைபேசிகளே இல்லை என்ற அளவுக்கு இளைஞர்கள் ரகுமான் கோலோச்சுகிறார். ரகுமான் என்ற இளைஞரின் துடிப்பும், துள்ளலும் அந்தளவுக்கு இளைஞர் சமுதாயத்தோடு ல் வெற்றிகண்டுவிட்டது. - கில் சிகரம் தொட்ட ரகுமானின் இசைப்பயணம் அப்படி னிமையானதாக அமைந்துவிடவில்லை. சிறு வயதிலேயே இழந்த ரகுமான், வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற ம் கஷ்டத்தின் மத்தியிலும் பியானோ, ஹார்மோனியம் ற்றார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் காக சேர்ந்த அவர் தொடர்ந்து பல இசையமைப்பாளர்களிடம் வினார். ட்ரினிட்டி கொலிஜ் ஒப் மியுசிக் (Trinity College என்ற கல்லூரியில் க்ளாசிக்கல் மியூசிக் (Classical Music) பெற்றார். ܡܢ ܗܘ
தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கோடிங் தியேட்டர் ர். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா ம் இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து, சியவிருதை வாங்கித் தந்தது. பின்னர் 1997 மின்சாரக்கனவும், ஹிந்திப் படமும் இவருக்கு தேசிய விருதுகளை வென்று
பொங்கிப் பிரவாகித்த இசைத் திறன்களுடன், இவரது துடிப்பும் சேர்ந்து, இந்திய தேசிய கீதமான 'வந்தே மாதரம்
di (3LT 20 O ULA ଦ୍ବିତ୍ର

Page 13
புதுவடிவம் பெற்று அனைத்து இந்திய உள்ளங்களையும்
ஈர்த்தது. பொம்பே ட்றீம்ஸ் இசை அல்பம் இவரது இசைப் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்.
தற்பொழுது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கான பாடலை இசையமைத்து இந்திய தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ள அவர், "சிறு வயதிலேயே ஸ்ருடியோவுக்கு சென்றமையே எனது முதிர்ச்சிக்குக் காரணம்' என்கிறார்.
சாதிக்கும் எண்ணம் கொண்டு சிறுவயதில் இருந்தே நம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு, எமது மனதை ஈர்த்த ஒஸ்கார் நாயகன், பத்மபூஷண்.இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். ஒ
LIT also LOGñTEGORITEGñT
தன்னம்பிக்கையும் விடா முயற்சியுமே
வாழ்க்கையில் வெற்றிக்கு வழிகாட்டி என்பதை உலகிற்கு
எடுத்துக்காட்டியவர் பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் சாதனைக்கு வயது ஒரு தடைக்கல் அல்ல என்பதை அவரின் வாழ்க்கை எமக்கு நினைவுட்டுகின்றது.
இளவயது முதல் பெரியோர் வரை அனைவரையும் தனது
இசையாலும் அதிரடி ஆட்டத்தினாலும் கட்டிப்போட்டவர் ஜாக்சன். -
அதிரடியான ஆட்டம் என்றால் அது ஜாக்சனின் ஆட்டம் தான் என சொல்லும் அளவிற்கு உலகின் மூலை முடுக்கல்லாம் பிரபல்யம் அடைந்தவர். பொப் சை மன்னன் என்று வர்ணிக்கப்படும் ஜக்சன், எல்லாக் காலத்துக்குமான மிகச் சிறந்த மகிழ்விப்பாளர் (Best Entertainer) என்று கின்னஸ் புத்தகத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளார்.
1958-08-29 அன்று குடும்பத்தில் 8வது மகனாக பிறந்த ஜாக்சனின் இசைப் பயணம் சிறுவயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. ஜாக்சனின் 5 சகோதரர்களும் சேர்ந்து 'ஜாக்சன் 5' என்ற பெயரில் பொப் இசைக்குழுவை ஆரம்பித்தனர். ஒரு பொப் பாடல் போட்டியில் ஜாக்சன் குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தபோது ஜாக்சனுக்கு வெறும் ஆறே வயதுதான் ஆகியிருந்தது.
இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் தனது 11 வது வயதில் தனி பொப் இசைக்குழுவை ஆரம்பித்தார் ஜாக்சன் 14 வது வயதில் இவரது தனி பொப் அல்பம் வெளியாகி உலகம் முழுவதும் சக்கை போடு போட்டது.
இதன் பின்னர் அவருடைய இசை முயற்சிகள்
எல்லாமே பெருவெற்றிகள்தான். தனிப்பட்ட வாழ்க்கையில்
அவருக்குப் பல பிரச்சனைகள் ஏற்பட்டபோதிலும், அவரது சாதனைகளின் முன்னால் இரசிகர்கள் அதனைப் பெரிதுபடுத்தவில்லை. இறந்த பின்னரும்கூட
பிரச்சினைகள் அவரைத் துரத்தினாலும், ஜாக்சனின் இசை
காற்றுவெளியெங்கும் அதிர்ந்துகொண்டேதானிருக்கும்.இ
リリ
11 ܗ - 岳

ஞா.கிரிசாந்
gd5(3LT if 2010

Page 14
ன்றைய உலகை முழுமையாக வியாபித்து நிற்கும்
ஊடகத்துறையில் இளைஞர்களைத் தேர்ச்சிபெறச் சய்து, தரமான தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு அவசியமான திறன்மிக்க ஊடகவியலாளர்களைத் தோற்றுவிக்கும் நோக்குடன், 2010 மே முதல் சிகரம் ஊடக இல்லத்தின் அடிப்படை ஊடகக் கற்கைநெறி நடத்தப்பட்டு வருகிறது.
ஊடகத்துறையில் த | flយID DI
மூத்த தமிழ் ஊடக வியலாளர் தசபாரத்தினம் அவர்களுடைய 6. காட்டலின் கீழ், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக த துறைகளில நீண்ட கால அனுபவம் மிக்க வரும், சர்வதேச ஊடகவியலாளர் சம்மே ளத்தின் அங்கீகாரம் பெற்றபயிற்சியாளருமான கோறுஷாங்கன் இந்தக் கற்கைநெறியை நடத்தி வருகிறார்.
கொழும்பு ஆங்கில, சிங்கள, தமிழ் ஊடகத்துறை வல்லுநர்கள் பலர் மாணவர்களுக்கான விசேட
விரிவுரைகளை இங்கு நடத்துகின்றனர். சிகரம் ஊடகக் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான ஊடகத் தொழில்வாய்ப்பு உத்தரவாதங்களையும் அவர்கள் வழங்கி வருகின்றனர்.
“எந்தவொரு தொழில்வாய்ப்புக்கும் இன்று
அவசியமாக இருக்கும் தகவல் தொழில்நுட்ப (Information Technology) அறிவுடன் கூடிய, செயல்பூர்வமான (05İTLÜLTLGÖCEffective Communication) Liu fili)ğlu LGöz
2
 
 

நடத்தப்படும் இந்தக் கற்கைநெறி ஊடகத்துறையில்
பலவிதமான தொழில்வாய்ப்புக்களையும் பெறுவதற்கு
மாணவர்களுக்குச் சந்தர்ப்பமளிக்கும் என்று இந்தக் கற்கைநெறி தொடர்பாக விளக்கம் தருகிறார் சிகரம் ஊடகக் கற்கைநெறி ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் பிரசாத்.
至導房「字。 தனியார் மற்றும் அரசசார்பற்ற
ரமான பயிற்சி தரும்
is 6,6060D
நிறுவனங்களில், விள ம்பரம், விற்பனை ஊக்குவிப்பு நிகழ்ச்சி
த்திட்ட முகாமைத்
வாய் ப் புக் களையும் பெறுவதற்கான அடிப் படைத் தொழிற் த கை மைகளையும்
இந்தக் கற்கைநெறி
அவர் இங்கு, மூன்று மாத கால அடிப்படை ஊடகக்
கறி கை நெறியைப்
பூர்த்தி செய்த முதல்
அணி மாணவர்கள், ஒரு மாத அடிப்படை ஊடகத் தொழில் பயிற்சியையும் பெற்று ஊடகத்துறையில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
தாம் பெற்றுக்கொண்ட ஊடகப் பயிற்சியின் பெறுபேறாக, சிகரம் ஊடக இல்லப் பணிப்பாளர் மற்றும் கற்கைநெறி
ஒருங்கிணைப்பாளரின் வழிகாட்டலுடன், நேற்றைய
அனுபவங்களிலிருந்து நாளைய சாதனைகளை நோக்கிப் பயணிக்கும், முற்றிலும் இளைஞர்களுக்கேயான வெளியீடாக, "சிகரம் தொடு மாதாந்தப் பத்திரிகை
துவம் உட்பட தொழில்
வழங்கும் என்கிறார்
量姆>
gd5(3LTuf 2010

Page 15
மற்றும் யாழ்ப்பாணம் இன்று இணையத்தளம் என்பவற்றுக்கூடாக புதிய ஊடகப் பயணத்தைத் தொடக்கிவைத்துள்ளனர்.
சிகரம் ஊடகக் கற்கைநெறியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக,
ஒளிப்படத்துறை, ஆக்கத்திறன் விருத்தியுடன் கூடிய 560 6,60)ijascoal (Creative Graphic Designing), ஒலி, ஒளித் தொகுப்பு(Audio - Video Editing), அச்சு, வானொலி, தொலைக்காட்சி இணைய ஊடகங்கள் தொடர்பான மேம்பட்ட கற்கைநெறிகள்(Advanced Media Studies) என்பவற்றை, கொழும்பு வானொலி, தொலைக்காட்சி ஊடக வல்லுநர்களின் நேரடிப் பங்குபற்றலுடன் விரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக, சிகரம் ஊடக இல்லப் பணிப்பாளர் கோறுஷாங்கன் அறிவித்துள்ளார்.
கணினி ஆய்வுகூடம்
நாலகம் Chess. Batminton & Carom Sports Activities
வாசகர் வட்டம், சினிமா, குறும்படக் காட்சிகள். இ
高飞司
 
 
 
 
 

தனித்து நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது மாணவர்களின் ஆர்வம்
மகிழ்ச்சியளிக்கிறது.
என்னால் முடிந்த
உதவிகளை உங்களுக்குச் செய்வேன்
தயங்காமல் கேளுங்கள்
சீவகன்,பி.பி.சி. தமிழோசை
முயற்சி என்னுடைய வாழ்த்துக்களும், ஒத்துழைப்பும் என்றென்றைக்கும் உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு வேண்டிய
பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை எந்த வேளையிலும் வழங்கத் தயாராகவுள்ளேன்”
-சஹாமினி பொய்ல், பிரதம ஆசிரிய
யங் ஏசுழியா டெலிவிசஷன்
இந்த முயற்சி பாராட்டுக்குரியது. அதிகளவு பெண்கள் ஊடகத்துறையில் ஈடுபட ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது வேண்டியபோது உங்களுக்கு . ܒ  ܼ ܠ பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கத்
u].'
-ழல்ருக்கூறி ஹந்துநெத்தி ,
முன்னாள் சண்டே டைம்ஸ்,
கண்டே லீடர் ஊடகவியலாளர்
===@g
ஒக்டோபர் 2OO

Page 16
O O ஆயிரம் வாசல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களே! அடுத்து என்ன என்று யோசித்துக் இணு கொண்டிருக்கிறீர்களா?
கம்பஸ் கிடைத்துவிட்டால் வாசிதான். ஒருவேளை கிடைக்காவிட்டால்.
எவ்வளவுதான் முக்கி முக்கிப் படித்து, புட்டுப் புட்டு எழுதி வைத்தாலும், வருடம் 20ஆயிரம் பேருக்குத்தான் தேசிய பல்கலைக்கழங்களில் இடம் என்பது மாற்ற முடியாத விதி
கடந்த 6) ICD Lib பரீட்சைகள் திணைக்களத்தால் Gajaflufl L'ILIl L அறிக்கையின் படி, 199,000 பேர் பரீட்சைக்கு தோற்றி 126,000 பேர் சித்தியடைந்துள்ளனர். ஆனால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 20,000 பேரை மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவவுசெய்தது. இந்தப் புள்ளிவிபரத்தின்படி பார்த்தால், பரீட்சைக்குத் தோற்றுவோரில் வெறும் 10 சதவீதம் பேர்தான் தேசிய பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர்? 90 சதவீதம் பேர் அவுட் - அதாவது தேசிய
பல்கலைக்கழகங்களுக்கு வெளியேதான்
20 ஆயிரம் பேருக்குத்தான் தேசிய பல்கலைக்கழகங்களில் இடமிருக்கிறது. இவ்வளவு பேருக்கான வளங்களைத்தான் அவை கொண்டுள்ளன.
பரீட்சைக்குத் தோற்றும் 2 இலட்சம் பேரில் இந்த 20 ஆயிரம் பேரைத் தெரிந்தெடுப்பதற்குத்தான் மிரட்டுகிறது
வெட்டுப்புள்ளி - 20 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் இடம் g5J (PLGL III g5 பல்கலைக்கழக வசதியீனமே 90 சதவீதம் பேர் வெளியே நிற்கக் காரணமே தவிர, இவர்கள் கெட்டிக்காரர்களல்ல என்று நினைப்பதெல்லாம் வெறும் புளுடா.
14
 
 
 

எனவே, வெட்டுப்புள்ளியால் 芭L9堑 கனவுகள் சிதைந்துபோனதாய் மாணவர்கள் நம்பிக்கையிழக்கத்
STY0FSRLAMKA 窪彗AF氰A
தேவையில்லை.
ஒரு வழி மூடினால், திறக்கிறது ஆயிரம் வழிகள் இவை இன்னும் சிறப்பானவையும் கூட
2ம் தடவை, 3ம் தடவையும் பரீட்சைக்குத் தோற்றி இன்னும் அதிகளவு மாணவர்களுடன் போட்டி போட்டுக் காலத்தை
- வீணடிக்காமல், பரந்து கிடக்கும் மாற்று வழிமுறைகளை அறிந்து அவற்றினூடாக எதிர்காலத்தை வளம்படுத்தத் தயாராகிவிடவேண்டும். தேசியப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்கள்போல் தொழில்வாய்ப்புக்காக யார் யாரிடமோவெல்லாம் கையேந்தாமல், தொழில்வாய்ப்பை உறுதிப்படுத்தும் கற்கைநெறிகளைத் தெரிவுசெய்து நம் கையே நமக்குத் துணை என்று தலைநிமிர்ந்து வாழலாம்.
திறந்த பல்கலைக்கழகம், உயர் தொழிநுட்பவியல் கல்லூரி பற்ரீசியன், விஜரி(VIT), யாழ்ப்பாணக் கல்லூரி பட்டப்படிப்புகள் பிரிவு என ஏராளமான உயர் கல்வி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திலேயே உள்ளன. இவைதவிர, யாழ்ப்பாணம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களில் வெளிவாரி கற்கைநெறிகள் மூலமும் பட்டமொன்றைப் பெற்றுக்கொண்டுவிடலாம்.
இந்த நிறுவனங்கள் வழங்கும் கற்கைநெறிகள் அனைத்துமே இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற தரமான கற்கைநெறிகள் வழங்கப்படும் பட்டம் உள்வாரிப்பட்டமா வெளிவாரிப்பட்டமா என்ற பாகுபாடு இருப்பதில்லை. -
ā@L町山前201G |JK|| ஒ

Page 17
திறந்த பல்கலைக்கழகம் கயொத உயர்தரத்தில் குறைந்தளவு சித்தியுடன் பட்டப்படிப்புக்கான கற்கைநெறியொன்றையோ தொடர் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான திறந்த பல பிராந்திய நிலையங்களையும் கொண்டுள்ளது
எந்த வயதினரும் தமது கல்வித் தராதத்துக்கு ஏற்ற மே இறுதி நாட்களிலேயே இங்கு நாம் கல்வியைத் தொடர கல்விப்பீடம் பொறியியற்துறை, மனிதநேய மற்றும் பீடங்களில், சான்றிதழ் கற்கைநெறி முதல் டிப்ளோமா
கயொத உயர்தரத்தில் குறைந்தது மூன்று பாடங்களில்
தொடர முடியும்
திறந்த பல்கலைக்கழகத்தில் தொடரக்கூடிய சில கற். மற்றும் கற்கைநெறிக் காலம் உள்ளிட்ட தகவல்கள் விபரங்களை நேரடியாக திறந்த பல்கலைக்கழக யாழ் அறிந்துகொள்ளலாம்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்
@ວ கற்கைநெறி கற்கை மொழி
0 முகாமைத்துவப் பட்டக் கல்வி ஆங்கிலம்
02 முகாமைத்தவ டிப்ளோமா ஆங்கிலம் 2
/தமிழ் O3 சமூக விஞ்ஞான கலைப் ஆங்கிலம்
பட்டக்கல்வி
04 இளைஞர் அபிவிருத்தி ஆங்கிலம்
முகாமைத்துவக் கல்வி / தமிழ்
05 முயற்சியாண்மை ஆங்கிலம்
சிறுமுகாமைத்துவ சான்றிதழ் / தமிழ்
கற்கை நெ
O6 சமூக விஞ்ஞான சான்றிதழ் ஆங்கிலம்
கற்கை நெறி / தமிழ்
O7 ஆங்கில உயர சான்றிதழ் ஆங்கிலம்
கற்கை நெறி
08 முன்பள்ளி பாடத்திட்ட ஆங்கிலம்
சான்றிதழ் கற்கை நெறி /தமிழ்
09 விஞ்ஞானப் பட்டக் கல்வி ஆங்கிலம்
/தமிழ்
O தாதியர் விஞ்ஞானப் பட்டக் ஆங்கிலம்
கல்வி
வெளிவாரியாகக் கற்று பட்டம் பெற்ற பலர் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும்கூட இரு உற்சாகத் தகவல். எனவே, உங்களுக்குப் பொருத்தமான உயர் கல்வி தெரிவுசெய்து அதிலே மேற்படிப்பைத் தொடர்ந்து தொழி றுதிப்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனமானது. கு
15 瓦
as as the
 

தொழில்வாய்ப்புக்கான கற்கைநெறியொன்றையோ, தவற்கான சிறந்த இடம் இதுவாகும் கொழும்பு நாவல கலைக்கழகம், யாழ்ப்பாணம் உட்பட, ந்ாடு முழுவதும் 6
படிப்பைத் தொடரக்கூடிய வாய்ப்பு இங்கு உள்ளது வார
ம் முடியும் முக விஞ்ஞானம், இயற்கை விஞ்ஞானம் என நான்கு ற்றும் பட்டக் கல்வி வரையில் பாடநெறிகள் உள்ளன.
சாதாரண சித்தி பெற்றவர்கள் இந்தக் கற்கைநெறிகளை
கைநெறிகள், அதற்குத் தேவையான கல்வித் தகைமை இங்கே தரப்பட்டுள்ளது. இவை தொடர்பான மேலதிக பிராந்திய அலுவலகத்துடன் தொடர்புகொண்டு நீங்களே
பிறவுண் வீதி கொக்குவில்.தொ.பே: 021 222 3374
கற்கைநெறிக் தேவைப்படும் விண்ணப்பங்கள்
SIT6)b கல்வித்தகைமை கோரும் காலம்
வருடங்கள் ஒரே தடவையில ஒகஸ்ட் /
பொ翠 செப்டெம்பர் உயர்தரத்தில் 3 பாடமும் சித்தி வருடங்கள் ஒகஸ்ட் /
செப்டெம்பர் வருடங்கள் ஒரே தடவையில ஒகஸ்ட் /
ST. GLUT. செப்டெம்பர் உயர்தரத்தில் 3 பாடமும் சித்தி வருடங்கள் ஒரே தடவையில மே / ஜூன்
கா.பொ.த உயர்தரத்தில் 3 பாடமும் சித்தி
1 வருடம் O/L 6 பாடமும் செப்டெம்பர்
சித்தி
வருடங்கள் ஜூன்
வருடம் "C"ஆங்கிலம் சித்தி ஜனவரி 1 வருடம் கா.பொ.த சாதரணம் டிசெம்பர்
கணிதம் தமிழ் சித்தி
வருடங்கள் கா.பொ.த - பெப்ரவரி / மார்ச்
உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவு வருடங்கள் கா.பொ.த ஒக்டோபர்
உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவு
பல்கலைக்கழக
க்கின்றனர் என்பது
நிறுவனமொன்றைத் ல்வாய்ப்பையும் உ
கி.கிருத்திகா
SUJUD gó6LTuf 2010

Page 18
U IIToż೪೮ - எல்லையிலுள்ள எங்கள் ஊருக்கு பஸ்கள் பெரும்பாலும் வெறும் இருக்கைகளுடன்தான் வரும் ஆனால், திரும்பும்போது எப்போதுமே நின்றுதான் பயணிக்கவேண்டும். யன்னலோர இருக்கை வாய்த்துவிட்டால் அதைவிட இனிமையான பிரயாணம் எதுவுமில்லை என்று தோன்றும்
பெரும்பாலும் மினிபஸ் போக்குவரத்தே இன்னமும் அதிகளவில் நடைபெற்றுவரும் சூழலில், இப்படியும் அப்படியும் வளைந்து, உள்ளே கிடந்து கசங்கிக் கிழிபடுவதே சாதாரண பயணிகளின் விதியாகிவிட்டது.
இயல்புச் சூழல் திரும்பியபின்,
பாதைகள் திறந்து, சோதனைக் கெடுபிடிகள் தளர்ந்து, ஊரடங்கு விலகியிருப்பதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து
போக்குவரத்து நெரிசல் கூடிவிட்டது.
நடத்துனர்களில் சிலர் அன்பாகவும், நகைச்சுவை உணர்வுடனும் நடந்து கொண்டாலும், ஒரு சிலர் மிகக் கடுமையாக நடக்கின்றார்கள் என்னதான் நடத்துநர்கள் மீது கோபம் இருந்தாலும், பஸ்சிற்குள் அவர்கள் மீது ஏறும் கோபம், பஸ்சை விட்டு இறங்கும்போது கூடவே இறங்கிப் போய்விடுகிறது.
இவ்வளவு சிரமப்பட்டுப் பிரயாணஞ் செய்யும் பஸ்கள்கூட, திருமண நாட்கள், பிரபலமான கோவில் திருவிழா நாட்களில் கிடைத்துவிடுவதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில்தான் இவற்றின் அருமை எமக்குப் புரியும்.
இந்தப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என்று, யாழ்.மாவட்ட தனியார் சிற்றூர்திச் சங்கத் தலைவரிடமே @5亡GL厅ö
"யாழ்.குடாநா நாளைக்கு 350 வி பஸ்கள் சேவைய எனினும், நெருக்
DIT606) நேரங்க
சேவையிலீடுபடுத்
போதாது” என்று
அவர்.
பெரிய பஸ்க நிறுத்தவும், திருப் போதாமலுள்ளதா 30-34 சீற்றுக்கள் சிறிய பஸ்களுக்ே வழங்கப்படுவதாக கூறினார்.
- Obser
போக்குவரத்து தொடர்பான மக்க பிரச்சினைகள் தீர யாழ்ப்பாணத்தில் சேவையிலீடுபடும் பெரிய பஸ்களாக யாழ்ப்பாணத்தின் அகலப்படுத்தும் ! துரிதமாக மேற்ெ வருவதால், நீளம போக்குவரத்தில் பிரச்சினையாக இ
வங்கி லீசிங்
16
 
 
 
 
 
 
 
 
 
 

டில் ஒரு ரையான தனியார் லீடுபடுகின்றன. டி மிகுந்த காலை, 6) (peak hours) துவதற்கு பஸ்கள் குறைப்படுகிறார்
Ö96ኽቸ பவும் வசதி ல் தற்போது ១_aign
க அனுமதி வும் அவர்
நெருக்கடி ஒளின் வேண்டுமென்றால், இப்போது
மினிபஸ்கள் மாறவேண்டும். பிரதான வீதிகளை பணிகளும் ாள்ளப்பட்டு ான பஸ்கள் ஈடுபடுவது ஒரு ருக்காது.
வசதிகள்
யாழ்ப்பாணத்தில் இப்போது தாராளமாகக் கிடைப்பதால், இதனை மினிபஸ் உரிமையாளர்கள் சரியாகப் பயன்படுத்தினால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும்.
மேலும், ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையிலீடுபடும் ஒரு பஸ் உரிமையாளர் புதிய பஸ் ஒன்றை வாங்கும்போது அவருக்கு நான்கு இலட்சம் வரையில் கழிவு வழங்க அரசாங்கம்
முன்வந்திருப்பதாகவும், வங்கிக் கடன்களுக்கும் சிபாரிசு வழங்கப்படுகின்றது என்றும், மினிபஸ் சங்கத் தலைவர் ஒரு நற்செய்தியைக் கூறுகிறார்.
இந்த வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தி, மினிபஸ்கள் பெரிய பஸ்களாக மாறுவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள், பொறுப்புவாய்ந்த அரசாங்க அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் மனம் வைத்தாலே, வசந்தமான போக்குவரத்து யாழ் பயணிகளுக்கு வாய்க்கும். கு
==
gd5(SLTuf 2010

Page 19
夔
எதிர்கால இலட்சியத்தை - அத
இன் வபாக்ஸ்
(e) எங்கும் எதிலும் தமிழ்
O Bungan ရဲ့ရှီ၅† Gmail Unido Sent)
பலமான பாஸ்வேர் (Password)
(e) பூகுந்து sang öĪDĪ BöOD
O Facebook GG BGGTGG GGHIGGIpUGOG
O iPhone3 VS iPhone 4
O ဖြူးရှူး(ဂျူး ရ၍ifi၍ ஆக்கினை தருமா
(O Download origiõGung solali
BOGIGIDO
as a te:
 
 
 

ற்கான arabaĵarou 4 ***
இளைஞர்களாகிய எமது எதிர்காலத்துக்கும் எந்தவொரு தொழிற்துறையிலும் நாம் இடம்பிடிப்பதற்கும் தகவல் தொழில்நுட்பத் திறன்களும், தொடர்பாடல் தி றனும் அவசியமாவை இவற்றுடன், ஆங்கிலத்தில் பேசும் திறனையும் வளர்த்துக் கொண்டுவிட்டோமென்றால், எந்தத் துறையிலும் நாம் பிரகாசிக்க முடியும்
கணினி என்பது நாம் பயன்படுத்தும் ஒரு கருவி ஆங்கிலம் ஒரு தொடர்பாடல் மொழி. இவற்றைப் படிக்கவேண்டிய பாடங்களாக்கி, அதை ஒரு சுமையாகச் சுமக்க முனைந்தோமென்றால் காரியம் கெட்டுவிடும்.
முதலில் எமது எதிர்கால இலட்சியம் என்ன என்பதை நாம் தெளிவாகத் தீர்மானிக்கவேண்டும் எதிர்காலத்தில் எந்தத் துறையில் நாம் ஈடுபடப்போகிறோம் என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக்கொண்டு, அந்தத் துறைக்கு அவசியமான கணினி கற்கைநெறியைத் தெரிவு செய்து கற்கவேண்டும்.
ஆங்கில மொழி தொடர்பாக எமக்குள் இருக்கும் தயக்கத்தையும், அச்சத்தையும் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு, வாய் திறந்து ஆங்கிலத்திலே பேசத் தொடங்கினோம் என்றால் அது எமக்குக் கட்டுப்பட்டு விடும்.
பிழை விட்டுவிடுவோமே என்ற அச்சத்தை விடுங்கள் மொழி என்பது தொடர்பாடலுக்குரியபேசுவதற்கு உரிய ஒரு சாதனம் பேசினால்தான் எந்த மொழியும் கைவரப்பெறும்
உங்களது எதிர்கால இலட்சியத்தைச் சரியாகக் கணித்து, அதற்குப் பொருத்தமான கணினிக் கற்கைத் துறையைத் தேர்வுசெய்து கற்பதுடன், ஆங்கிலத்தில் பேசும் திறனையும் வளர்க்க உதவுவதே கணிநீ யின் இலக்கு. நீங்களும், நாங்களுமாகச் சேர்ந்து பயணித்து இந்த இலக்கைச் சென்றடைவோம் ܢܥ
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகள் சந்தேகங்களை எழுதி அனுப்புக்கள். துறைசார் நிபுனர்களின் န္တရှိနေဦးခရီး ஆலோசனைகள் பிரசுரிக்கப்படும்
கணிநீ சிகரம் தொடு
சிகரம் ஊடக இல்லம் 21 LIGOTOS 65.
கந்தர்மடம் யாழ்ப்பாணம்
| gd5(3LTuf 2010

Page 20
அ=க "கமிக உஆ_.
■彗 駐 కెఫై" ! " ** ஐயையோ. இது தப்பே. என்று ஏதுாவது தோன்றினால், உடனே இந்த Undo பொத்தானை
1ஆவாரு  ை.
This Tak ! ; F-1 --
リエ・エー』ョ』." リエーリエ・エ量エー *:* - リー て1:ー尋事。エリ | "! : ::: - - , . .:ք:սքի: Լ: iնն է : : ` : ssx së i b if it : Le te i sa i S S S S S S S KK KSK LLL S SJJ S uJ S LY S S S S S S LLLL
al iiiiiig sagis శ్లో یہ ہے :
is Art till r g . . . . . . . . - リア』リー F
TTk kL us Tu uB L L S Y S S S S S LLLLS S K S S SJ KAS JJ LLL 0K JL L S S S L LLkLLLS
. * - , " F 4 ፱ ፆ ** ፪ " m ፬* ማመ s ۔۔۔۔
璽 、菲事、鳕、基 . . . . .
S S S S S LS S S SS
is , ' : : :
* স্ট্র","ট্র it's
- ஆ. . . . :ங் டக .
assssssssss - - -
as -
அழுத்தவேண்டியதுதான். நீங்கள் அனுப்பிய
ன்னஞ்சலை உடனே திரும்பப் பெற்றுக் கொள்ள (tpւգեւյլք: எவ்வளவு நேரத்திற்குள் Undo செய்யலாம் என்று கேட்கிறீர்களா..? ܗ
TTu uu S u S S S L S AAAAA K SY =عي__-__ يت
uS K AAA S S S S S q ASA SKK
SLE S S Z SZLL LLLLL LLLS LMLS S LLLLL LLLLLLY S zLL S YZYS SSSS L LL L S S S S SSZYZZYY
Undo செய்வதற்கான நேர எல்லையை நீங்களே தெரிவு செய்துகொள்ளும் வாய்ப்பையும் ஜிமெய்ல் வழங்கியுள்ளது. Gmail Labs இல் Undo Send ஐ Enable செய்ததும், Gmail இன் Settings இடைமுகத்தின் General Tab இல் புதியதொரு தெரிவு தோன்றியிருக்கும். இதில், Send Cancelation period என்று செக்கன்களில் நேரத்தை குறித்துக் காட்டியிருக்கும். அதில் 5 முதல் 30 செக்கன் வரை உங்களுக்கு வேண்டிய நேரத்தை நீங்கள் தெரிவு @guu@Tb
ஆகக் கூடியது 30 செக்கனுக்குள் நீங்கள் அனுப்பிய
ன்னஞ்சலை Undo செய்ய முடியும்
31ஆவது செக்கன், அது டான் என்று நீங்கள்
喹量巽 –F E -- Ek siste سمجھتے
3ಿ... -...
krer ... . . ................................ - ့်အရေ................. ܕܨ ..
அனுப்பியவரின் Inbox குள் போய் குந்திவிடும். இனியென்ன, தவறுதலாக மின்னஞ்சலை அனுப்பிவிட்டு
8 匣
兵、
 
 
 
 
 
 

நாக்கைக் கடிக்கத் தேவையில்லை.
அனுப்பியதை உடனே திரும்பப் பெற்று மீண்டும் சரியாக அனுப்புவோம். 를
LIġIBIJI Li Jib: www.puthiumutpam.com o
Download
s
Download செய்யக்கூடியதாக இணையப்பரப்பில் இலவசமாகக் கிடைக்கும் ஒளிப்படங்கள், பாடல்கள். வீடியோக்கள், மென்பொருள்கள் எதுவாக இருந்தாலும், அதனுடன் சேர்ந்தாற்போல் Spyware மற்றும் வைரஸ் போன்றவைகள் கணினியிற்கு Download 9,651 b. அபாயங்களும் காணப்படுகின்றன.
இந்த Spyware களின் மூலம் பயனர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்து மென்பொருள் வழங்குனர்கள் இலாபமீட்டிக் கொள்கின்றனர்.
இந்த வகையான Spyware களை நீக்கிக்கொள்ள நம்பகமான மென்பொருள்கள் இப்போது பாவனையில் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி Spyware களை எமது
கணனியிலிருந்து நீக்கிவிட வழி செய்யலாம்.
Download செய்ய ஆரம்பிக்கும் முன்னர் குறித்த மென்பொருள் பற்றிய ஏனைய நம்பகமான இணையத்தளங்களில் ଚିtୱିତୀ குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பாவித்த ஏனையோர் இதனைப்பற்றி என்ன கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள் என்பதையெல்லாம் அறிந்து உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்
தேடற்பொறியொன்றை Open செய்து (Google/Yahoo), பதிவிறக்கம் (Download) செய்யவேண்டிய கோப்பின் பெயர். மென்பொருளின் பெயர் மற்றும் Spyware என்ற சொல் ஆகியவற்றை Type செய்து தேடுங்கள் Spyware தொடர்பாக குறித்த மென்பொருள்களோடு அதனைப் பாவித்தவர்கள் பிரச்சினைகளை அனுபவித்திருந்தால் அது தொடர்பான விடயங்களை தேடற்பொறி (Search Enging)பட்டியற்படுத்தித் தரும்
Download செய்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்வதற்கு முன்னர் அதில் Virus தாக்கமேதும் உள்ளதா எனப் பரிசோதிக்காமல் நிறுவினால் சிலவேளை மென்பொருளோடு சேர்ந்து உங்கள் கணனியில் Virus உம் நிறுவப்பட்டுவிடலாம். இதனால் கணினியின் செயல்திறன் வெகுவாகக் குறைவடையலாம்.
- எல்லாவற்றையும் விடவும் உங்கள் கணினியிலுள்ள தரவுகளை அடிக்கடி Backup செய்து கொள்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும் தவறுதலாக அல்லது கவனக்குறைவாக Spyware,Virus என்பன எமது கணினியில் குடிகொண்டு கணினியை கதிகலங்க வைத்தாலும் கவலையே படாமல் கணினியை Restore செய்து கொள்ளலாம்.
=টেক্স 上
58, sTiñ 2 OfO Ձծ
国

Page 21
a Gmail 36
எமக்கு ஞாபகத்திற்கு வருவது ஜிமெயில் தான். அந்தளவுக்கு நாளுக்கு நாள் புதுமை படைத்து வருகிறது கூகிள் மின்னஞ்சல் பற்றிய சம்பிரதாய சிந்தனைகளைத் தகர்த்தெறிந்து புதுமை படைத்துவரும் அதன் மற்றுமொரு தொழில்நுட்ப அறிமுகமே இந்த அண்டு சென்ட் மெயில் (Undo Sent Mail) சேவை = அனுப்பிய அஞ்சலை அரைவழியில் திருப்பியழைக்கும்
வசதி
2008 ஆம் ஆண்டு, 13 பண்புகளை ஆளும் (Features) Gmail Labs 6T6ip Ligul lugglgou அறிமுகப்படுத்திய ஜிமெயில், காலத்திற்கு காலம் தமது பொறியியலாளர்கள் பரிசோதிக்கும் புதிய சேர்க்கைகளை (Features) ஜிமெயில் பயனர்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறது. இவ்வாறு பரிசோதிக்கப்படும் விடயங்களில் பலதும் பயன்தரக்கூடியதே! அவற்றில் ஒன்றான, Undo Sent என்கின்ற சேவை நாம் ஒருவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் அவரைச் சென்றடைவதற்கு முன்னர் அதனை மீளப்பெற்றுக்கொள்வதற்கான வசதியை வழங்குகிறது. - இன்டர்நெட் உலகத்தில் மிகவும் சிறப்பான சேவையாக இது அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
எமது ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் இதனை
ミリ
 

TGOTIT)
லண்டனிலிருந்து தாரீக் (முன்னாள் PCTimes இணை ஆசிரியர்)
Undo Sent
எவ்வாறு நிறுவிக்கொள்வது என்பதைப் பார்ப்போம்.
முதலில் Gmailஇன் Setings என்ற இணைப்பை கிளிக் செய்யவேண்டும் ܗ - S -
புலனாகும் Gmail இன் Settings இடைமுகத்தில், Labs என்றTabs ஐ கிளிக்குங்கள் Gmail (967 Labs இலுள்ள அத்தனை வசதிகளும் இப்போது உங்கள் முன் பட்டியற்படுத்தப்படும்.
霹
eeS eMLMT S Mee SK MeLeLeA SYSKS MLML L S A S eeSeSYZ LuuLLLL S S LLLSLLL S རྗེ་ THPr -- ** **
sk->s-affarddu Kastitik Grossess
3:a:ih : "a esan :
அவற்றுள், Undo Send என்பதைக் கண்டுபிடித்து அதில் Enable எனும் தெரிவைத் தேர்வுசெய்து, இறுதியாகக் காணப்படும் Save Changes என்கின்ற Button ஐ
கிளிக்குங்கள். நாம் ஒருவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் அவரது Inbox க்குள் புகுந்துவிட முன்னரே இப்போது நீங்கள் அதனைத் திரும்பிப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பியதும், உங்கள் மின்னஞ்சல் இடைமுகத்தின் மேலே Undo என்ற இணைப்பு இப்போது தோன்றுவதைக் காண்பீர்கள் 5) DESIA:Rasi i flaði igata end Gaelta.
AAEE
ஒக்டோபர் 2010

Page 22
õD இலகுவில் ஞாபகப்படுத்திக் கொள்ளக்கூடியதும், ஏனையோரால் இலகுவில் ஊகிக்க முடியாததுமான Password ஏ பாதுகாப்பான Password என்ற வகைக்குள் அடங்கும். இன்றளவில், இணையத்தோடிணைந்த நிலைகள், மற்றும் வங்கி நடவடிக்கைகள் என்பன Password ஐயே எமது பாதுகாப்பின் திறவுகோலாக நம்பியிருக்கின்றன.
அதை எவ்வாறு பாதுகாப்பானதாக உருவாக்கி
* ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம்?
U0ে9fালো US64
எல்லாவற்றுக்கும் ஒரே Password ஐப் பாவிப்பதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
எல்லாச் சேவைகளுக்கும் ஒரேயொரு Password ஐ நீங்கள் பயன்படுத்தினால், ஒரு சேவையின் கடவுச்சொல் கண்டுபிடிக்கப்பட்டால், நீங்கள் பயன்படுத்தும் அனைத்துச் சேவைகளின் தகவல்களும் வேண்டாதவர்கள் கைகளுக்குச்
சென்றுவிடும்.
சரி, ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு கடவுச்சொல்லைப் பயன்படுத்தினால் எல்லாவற்றையும் எப்படி மண்டைக்குள் வைத்துக்கொள்வதாம் என்கிறீர்களா?
ஒரேயொரு விதி - நினைவிலிருக்கும் 100 வேறுபட்ட Password இதற்கும் வழிகாட்டும்
ஒரு சிறிய விதியொன்றுக்குள் நீங்கள் பாவிக்குமPassword களை உருவாக்கும் வழைமை இருந்தால், 100 வகையான Password களை தனித்தனியாக ஞாபகப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
ஒரு தனியான Password ஐ உருவாக்குவதற்கான வழி, முதலில் அடிப்படையான Password ஐத் தெரிவுசெய்து, அதில் நாம் பயன்படுத்தும் இணையச் சேவை நிறுவனத்தின் பெயரைச் சேர்த்துவிடுவதாகும். உதாரணமாக, தெரிவுசெய்த அடிப்படைPassword, KLMN என வைத்துக்கொண்டால், Yahoo இணையத்தளத்தில் 95p35T60 Password g KLMNYAHOO 676076y b, Ebay இணையத்தளத்தில் KLMNEBAY எனவும் பாவிக்க (ԼptԳեւյւb. இதனை இன்னும் ஊகிக்கக் கடினமான Password ஆக மாற்ற, உங்கள் அடிப்படை Password ஆகிய KLMN உடன் உங்களைக் கவர்ந்த இரு இலக்கங்களை தெரிவு செய்து, அதனை மாற்றிவிடலாம். உதாரணத்திற்கு Gmail இணையத்தளத்தில் Password ஐ KLMN43GMAIL எனப் பாவிக்கலாம்.
இதை இன்னும் பலமானதாக்கவேண்டுமென்றால்,
20 ,园
Sミ茎リエー]
 

ஆங்கில எழுத்துக்களில் Capital Smal எழுத்துக்களைக் கலந்து பயன்படுத்தலாம். உதாரணம் - KIMn43GmAiL.
இந்த ஒரு விதியைக் கொண்டு நீங்கள் நூற்றுக்கணக்கான Password களை உருவாக்கிக் கொண்டுவிடமுடியும்.
பொதுவாக Password எனப்படும் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக்களைக் கொண்டிருக்க வேண்டும். அத்தோடு, இவை வெறுமனே ஆங்கில அரிச்சுவடி எழுத்துக்களை மட்டும் கொண்டிராது, இலக்கங்கள், குறியீடுகள் என்பனவற்றையும் கொண்டிருத்தால் Password இன் பலத்தை அதிகரிக்கும். ஆக, அது
பற்றியும் கவனத்தில் கொள்ளுங்கள்!
அடிப்படை PaSSWOrd ஐ தெரிவு செய்தல்,
9||al LIGOL Password 용g தெரிவு செய்வதற்கான சில வழிமுறைகளைக் கையாள்வது பொருத்தமானது.
ஒரு வசனத்தின் அல்லது பாடல் வரியின் முதலெழுத்துக்கள். உதாரணமாக நீங்கள் Titanic திரைப்படத்தின் Theme Song இன் 6) fluigo, 'Every nights in my dreams என்பதை பாவிக்க எண்ணினால், உங்கள் அடிப்படை Password ஆனது, அந்தப் பாடல் வரிகளின் சொற்களின் முதலெழுத்துகளைச் சேர்த்தால் வரும், ENIMD என்றவாறு அமையும்.
இப்போது உங்கள் Password ஐ நினைவிலிருத்த நீங்கள் பாட்டை பாடினாலே போதும்!
- ര LcLSq LL LLL Crrr S SSr SS S G SS S SS S SS TMM q qTTT SrG S CS 6060D US&Iname Sikaramthudu ,'; பாதுகாப்பான PaSSYY*Ų Orde esse as as assessa அடி ப ப  ைட - - - i Password gg தெரிவு செய்ய உதாரணமாக ஒரு சொல்லை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கும் சொல் dog என வைத்துக் கொண்டால், keyboard இல் இந்த எழுத்துக்கள் உள்ள நிலைக்கு மேலே உள்ள எழுத்துக்களை Password ஆக மாற்ற முயலுங்கள். dog என்பதற்கு மேலே e9 என்ற பதிவுகள் கிடைக்கப் பெறும் இவ்வாறான வழிகளில் யாருமே இலகுவில் ஊகிக்க முடியாத Password ஐ உருவாக்கிக்கொள்ள முடியும். u
பலமான Password ஐ உருவாக்கிவிட்டோம்தானே என்று இருந்துவிடாதீர்கள் குறைந்தது, இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையாவது Password ஐ மாற்றிக் கொண்டால் அது உங்கள் பாதுகாப்பை இன்னும் அதிகரிக்கும். பலவீனமான Password பாவிப்பதால் அதனை எவ்வளவு இலகுவில் அனுமானிக்க முடியுமென்பது தொடர்பில் Lifehacker இணையத்தளத்தில் விரிவான பதிவொன்று பிரசுரமாகியிருந்தது. நவீன செய்நிரல்களின் மூலம் ஒரு சில செக்கன்களில் கூட உங்கள் பலவீனமான கடவுச்சொல்லை அனுமானித்துவிட முடியுமென அந்தப் பதிவு எச்சரிக்கிறது.
எனவே. கவனம் இ
புதுநுட்பம்: www.puthunutpam.com
ஒக்டோபர் 2010

Page 23
Facebook, Twitter போன்ற சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களின;(Social Networks) ஆதிக்கம் மிகவும் அதிகமாகக் காணப்படும் காலமிது. Facebook, Twitter, Myspace, Freindster, Urbanchat, Black Planet, Hi5 GTGOT நூற்றுக்கணக்கான சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்கள் இன்று பாவன்ையில் உள்ளன.
இந்த சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அவற்றில் நாம் வழங்கும் தகவல்கள் மற்றும் அவற்றின் ஊடாகப் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் எமக்கே ஆபத்தாக அமைந்துவிடவும் கூடும். எனவே, எமக்கு ஆபத்தாக அமையும் எனக் கருதும் விடயங்களைக் கண்டறிந்து தவிர்த்தால் நல்லது தானே?
தனிப்பட்ட கருத்துப்பரிமாற்றம் - தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை Facebook Wall மூலம் பரிமாறுவதைத் தவிர்க்கவேண்டும். இவ்வாறு றுயடட இல் கருத்துக்களையோ அல்லது படங்களையோ பரிமாறிக் கொள்வதால் அவற்றை அனைவரும் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். இதுவே நமக்கு ஆபத்தாக அமைந்துவிடலாம். எனவே,
21
 

தவிர்க்க GUIG
கருத்துக்களையோ அல்லது படங்களையோ Wall மூலம் பகிர்ந்துகொள்ளாமல், அவற்றைத் தனிப்பட்ட Message களாகப் பரிமாறிக்கொள்ளலாம்.
திட்டங்களைப் பகிர்தல்
பிறந்தநாள் விழா, விருந்து போன்றவற்றுக்கான அழைப்புக்களை அனைவரும் பார்க்கக் கூடியவாறாக வெளியிடுவதைத் தவிர்க்கலாம். இதன்மூலம் நண்பர்களுக்கிடையில் மனக்கசப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தொடர்புபட்ட வலைத்தளங்கள்
Facebook போன்ற சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களில் எமது ஏனைய வலைத்தளங்களையும் இணைத்திருப்போம். சிலவேளைகளில் இது எமது வேலைகளுக்கோ శా அல்லது 6TLDg) நற்பெயருக்கோ களங்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமைந்துவிடும்.
Es»
gd56Luf 201O

Page 24
உதாரணமாக, வேலைக்குக் கள்ளம்போட்டு விருந்தொன்றுக்குச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ஞாபக மறதியால் விருத்தில் எடுத்த ஒளிப்படமொன்றை பேஸ் புக்கில் இணைத்துவிட்டீர்களென்றால், உங்கள் நிறுவன அதிபரோ, மனேஜரோ அதனை உங்கள் Facebook கணக்கிலுள்ள பிறிதொரு இணையத்தள இணைப்பின் மூலம் பார்த்துவிட்டால் அதோ கதிதான். தொழில்ரீதியான தகவல்கள்
புதிய தொழில் ஒன்றைத் தொடங்கப் போகின்றேன் அல்லது எனது நிறுவனத்தில் இவ்வாறான மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்ற தகவல்களை Facebook ல் வெளியிட்டால் போட்டியாளர்களை உஷாரடையச் செய்து உங்கள் திட்டத்திற்கும் உலைவைத்துவிடும். இவ்வாறான தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதைத் தவிர்க்கலாம். குரும்பத் தகவல்கள் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் படங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் அவர்களின் தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதும் சிலவேளை எமக்கு வில்லங்கத்தைத் தரலாம். உதாரணமாக, திருமணமான ஒருவர் "எனது கணவர் கொழும்பு சென்றுள்ளார். தனியாக இருப்பது கடினமாக உள்ளது என தனது Facebook ல் எழுதுவாராயின் அது அவருக்கே ஆபத்தைத் தேடிக்கொடுத்துவிடும். இவ்வாறான தகவல்களைப் பரிமாறுவதைத் தவிர்க்கலாம். வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள்
நூற்றுக் கணக்கானவர்கள் - நாளாந்தம் பார்க்கக்கூடிய சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களில் எமது வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பகிரங்கப்படுத்துவது பாதுகா ப்பானதாக இருக்காது.
கொள்ளைக்காரர்களையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும் வெற்றிலை பாக்குத் தட்டம் வைத்து வரவேற்றதுபோல் இது ஆகிவிடும்.
தனிப்பட்ட நிதி விடயங்கள் தனிப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் நிதி தொடர்புபட்ட விடயங்களைப் பகிரங்கமாகப் பகிர்ந்துகொள்வது தவிர்க்கப்படவேண்டும்.
கடவுச் சொற்ளை நண்பர்களுடன் பகிர்தல்
O O ه o
D E
 
 
 

எமது கணக்குகளுக்கான கடவுச் சொற்களை
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது. 2 g5ITT600TLDIT55, Facebook கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியொன்றை அவசரமாகப் பார்த்துக் கூறுமாறு இணையத் தொடர்புள்ள நண்பர் ஒருவரிடம் Facebookன் கடவுச் சொல்லை வழங்குவோ மாயின் அது வில்ல ங்கத்தை விலைக்கு வாங்கியதுபோல் அமைந்துவிடலாம். கு
புளுரே டிவிடி பிளேயர்
டிவிடி பிளேயர்களின் நீண்ட கால வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த கட்ட தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கால்பதித்துள்ளது புளுரே. மிகவும் துல்லியத் தன்மையும் சிறந்த காட்சித் தரத்தைத் தரக்கூடியதாக புளூரே பிளேயரை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், தற்போதுள்ள சாதாரண தரத்தை விட 4 மடங்கு அதிகூடிய துல்லியத்துடன் காட்சிகளைக் காணக்கூடியதாக உள்ளது. - தற்போது வெளியாகும் அனைத்துத் திரைப்படங்கள் மற்றும் LITL6) வெளியீடுகளும் புளுரே டிஸ்குகளிலேயே வெளியிடப்படுவதால், புளுரே பிளேயர்களுக்கான கிராக்கியும் அதிகரித்துள்ளது.
புளுரே டிஸ்குகளின் அளவும் முந்தைய டிவிடிகளின் அளவே உடையது என்பதால், புளுரே பிளேயரில் சாதாரண டிவிடிகளையும் பார்க்க இயலும், அத்துடன், சாதாரண தரத்திலான ஒளிக்காட்சிகளை புளுரே பிளேயரானது உயர்தரத்தில் மாற்றம் செய்து அதிகூடிய எண்ணிக்கையிலான புள்ளிகளுடன் (Pixels) (720p/10201) காட்டக்கூடியதாக உள்ளது.
மூன்று விதமான வெளியீடுகளைக் கொண்டுள்ள இந்தப் பிளேயரானது எச்டிஎம்ஐ (HDMI), 96ÖTG6NDITšs (Analog) Friggsir GBL gagës (Eithernet Jack) இணைய இணைப்புக்கான பகுதி போன்றவற்றையும் கொண்டுள்ளமை மேலதிக போனஸாகும்.
இவ்வகையான அதி துல்லியமான காட்சிகளைக்
காணவேண்டுமெனில் அதற்குப் பொருத்தமான எல்ஈடி \್ தொலைக்காட்சிகளும் தேவைப்படும்.
■蕊零
:
ஒக்டோபர் 2010

Page 25
சிம்களுடன் இயங்கும்
போய், இன்று ஆளுக்கு ஒன்று என்று ஒவ்வொரு வீட்டிலும் எல்லோருடைய கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒரு கைபேசி போதாதென்று, ஒன்றுக்கு மேற்பட்ட சேவை வழங்குநர்களின் இலக்கங்களைப் பயன்படுத்தக்கூடிய Dual Sim வசதியுடைய கைபேசிகளும் பாவனைக்கு வந்துவிட்டன.
இந்த வளர்ச்சிப் போக்கின் புதிய பாய்ச்சலாக, இன்டெக்ஸ் நிறுவனம் I كهU'; அண்மையில் மூன்று
At
நவீன கைபேசிகளை சந்தைக்கு விட்டுள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம். ஏ. என மூன்று சிம்களை இயக்கக்கூடிய 605(3LéfluITGs Intex IN 5030 வெளிவந்துள்ளது.
ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில் சி.டி.எம். ஏ. சிம் இணைப்பும் A\\ இயங்கக்கூடியதாக இதன் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இரண்டிலும் அழைப்புக்கள் வந்தாலும் மாற்றி மாற்றிப் பேசிக்கொள்ளலாம். ஒருவேளை கைபேசியை எங்காவது தொலைத்து விட்டீர்களென்றால் அதனைத் தேடிக் கண்டறியும் Mobile Tracker தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது.
- ല எ.ப்.எம். றேடியோ, எம். ඌණිණී பி3 பிளேயர், கமரா என்று, டிஜிடல் தொழில் நுட்பத்தின் அத்தனை சாத்தியங்களையும் உள்ளங்கைக்குள் சுருக்கிக் கொண்டிருக்கும் கைபேசிகள், இன்னுமின்னும் பல சாத்தியங்களையும் புதிதுபுதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு சிறிய கணினியையே தன்னுள் அடக்கியுள்ள Smart Phones உம் இப்போது அறிமுகமாகி சக்கை போடு போடுகிறது. -
மிக அண்மைக்காலம் வரையில் தொலைபேசிப் பாவனையே அரிதாயிருந்த யாழ்ப்பாணத்துக்கு உலக சந்தையில் மிகப்பிந்திய இவ்வாறான கைபேசி வகைகள் எல்லாம் இப்போது தாராளமாகக் d560) didpgil. Nokia, Motorola, Samsung, Sony Erricson, Vodaton என்று எல்லா வகையான கைபேசி வகைகளும்
இங்கே பெருகிக் கிடக்கின்றன.
Dialog, Mobitel, Hutch, Edisalat 6160L GLC55lu கைபேசி சேவை வழங்குநர்களின் பரவலுக்கு மகுடனம் சூட்டுவதுபோல் Airtel நிறுவனமும் வடமாகாணத்துக்குத் தனது சேவையை விரிவாக்கி, குடாநாடெங்கும் 20க்கும் மேற்பட்ட தொலைபேசி பரிவர்த்தனை கோபுரங்களை Airtel நிறுவனம் நிர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
23
 
 
 
 
 
 

ܢ ܥ
இந்தத் தனியார் தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கிடையிலான போட்டி காரணமாக, அழைப்புக் கட்டணங்கள் வீழ்ச்சியடைந்து வரும் 96.5(86.6061, GPRS, Broadband, Wifi 61353,65lb இதனால், மிகக் குறைந்த கட்டணங்களில் பாவனையாளர் கைசேர்கிறது. ܐ ܢ Airtel நிறுவனம் மொபைல் தொலைக்காட்சி சேவையையும் விரைவில் வழங்கவிருப்பதாகவும் ஒரு கதை இப்போது வெளியாகியிருக்கிறது.
爵*
கைபேசிகளின் இந்தப் பரவலால் அது இப்போது மனிதர்களின் ஆறாவது விரலாகிவிட்டது.
Gugor ? srTULon?
இந்தளவுக்கு எம்மிடையே பரவலாகியிருக்கும் கைபேசிப் பாவனை, உலகளவில் N சாத்தியமாகியிருக்கும் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் எம் கைசேர்த்திருப்பது ஒரு வரமேயாயினும், கூடவே சில சிக்கல்களையும் கொண்டுவந்துள்ளது. திடீரெனப் பரவியிருக்கும் இந்த மொபைல் மேனியா, சிறு குழந்தைகள் முதல் பாட்டன்
பாட்டியர்
றாவது விரல் னை தருமா?
வரையில் அனைவரது கைகளிலும் தவழ்கிறது.
தொழில்நுட்பம் இந்தளவுக்கு எங்களுக்குக் கைவரப்பெற்றிருக்குமளவுக்கு, எதை, எதற்கு, எப்படி நாகரீகமாகப் பயன்படுத்துவது என்பது சரியாக வரவில்லை. பொது இடங்களில் பெண்களைப் படம் எடுப்பதும், வீடியோ பிடிப்பதும், ஆபாசக் காட்சிகளை பரிமாறுவதும் என்று, வரத்தைச் சாபமாக்கும் காரியங்கள் நிறையவே இங்கு நடந்தேறுகின்றன.
இவ்வாறு, நவீன தொழில்நுட்பம் நமக்கு வரமளித்திருக்கும் பல சாத்தியங்களையும் சாபங்களாக்காமல் சரிவரப் பயன்படுத்துவதே நமக்கும், பிறருக்கும் - இந்தத் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தவர்களுக்கும் செய்யும் கைங்கரியமாகும்.
முசுகந்தி ஒக்டோபர் 2010

Page 26
தமிழ் தட்டச்சின்போது எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை எழுத்துருப் பிரச்சினை. நாம் தட்டெழுத்துச் செய்யும் எழுத்துரு மற்றவர்களிடமும் இருந்தாலே அதனை அவர் வாசிக்க முடியும். கணினியில் தமிழ் மொழியின் இந்தத் தலையெழுத்தையே மாற்றிவிட்டது என்.எச்.எம். 60).JLL J.
தமிழில் தட்டச்சுச் செய்ய ஆயிரக்கணக்கான
២Ififfffi எசின்றும் EILIGIBLITTIGHICIELD
O எழுத்துருக்கள் -மகேஸ்வரன் பிரசாத்இருந்தாலும், யுனிகோர்ட் முறையில் தட்டச்சுச் சய்யப்பட்டால், அல்லது யுனிகோர்ட் மாற்றி மூலம் நாம் தட்டச்சு செய்ததை யுனிகோர்ட் வடிவத்துக்கு மாற்றிவிட்டால் யாரும் அதை வாசிக்கக்கூடியதாகச் செய்துவிட முடியும்தான்.
ஆனால், இதிலும் நிறைய தொழில்நுட்பச் சிக்கல்கள் உண்டு இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வைத் தருகிறது என்.எச்.எம்.ரைட்டர். நாம் தமிழில் தட்டச்சுச் செய்யும் விடயத்தை, நாம் பயன்படுத்தும் அதே எழுத்துருவுக்குரிய விசைப் பலகை எழுத்து வடிவமைப்பிலேயே யுனிகோர்ட் எழுத்தில் தட்டச்சு செய்யும் மென்பொருளே என். எச்.எம்.ரைட்டர். தமிழில் மட்டுமன்றி, ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, மலையாளம் உட்பட 10 மொழிகளில் யுனிக்கோர்ட் எழுத்துருவில் தட்டச்சுச் செய்யும் வசதியை இது தருகிறது.
இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள், Microsoft Word, Powerpoint, Excel D_6itafli L Lj6) மென்பொருள்களிலும் என்.எச்.எம். ரைட்டரைப் பயன்படுத்தி யுனிக்கோர்ட் எழுத்துருவில் தட்டச்சுச் செய்ய முடியும். தமிழ் எழுத்துருவில் தட்டச்சுச் செய்யத் தெரிந்தவர்கள் நேரடியாகவே தாம் பயன்படுத்தும் அதே எழுத்துருவுக்குரிய விசைப் பலகை வடிவமைப்பில் தட்டச்சுச் செய்ய அது தானாகவே யுனிகோர்ட்டாக மாறிவிடும். தமிழ் எழுத்துருக்கள் தெரியாதவர்கள் ஆங்கில எழுத்துக்களின் ஒலி வடிவத்தினூடாக தமிழ் மொழியில் தட்டச்சுச் செய்ய முடியும். உதாரணமாக, ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சுச் செய்தால், அம்மா எனத் தமிழ் யுனிகோர்ட்டில் அது தட்டச்சாகும்.
சரி, தமிழ் தட்டச்சுக்கான இந்த
 

மந்திரச்சாவியை எப்படிப் பயன்படுத்துவதாம். . ܡ
இதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளும் வழி இதோ!
http://software.nhm.in/products/writer எனும் இணையத்தளத்தில் இருந்து NHM Writer மென்பொருளை தரவிறக்கம் செய்யலாம் தரவிறக்கிய setup File gg click செய்து
NHMWieo
அதை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம். பிறகென்ன, யோசிக்காமல் யுனிக்கோர்ட்டில் தட்டச்சுச் செய்வது தானே.
| : L լգավiki&s
NHMWriter ஐ எவ்வாறு பயன்படுத்துவது? NHM Writer a soa5.5Garagilgib oligoi Taskbar
இன் வலது மூலையில் மணி போன்ற குறியீடு (icon) தென்படும். சில்வர் நிறத்தில் இருக்கும்
Alt+0 Keymap off
Alt+1 Tamil Phonetic Unicode Alt+2 Tamil Tamil 9 Unicode
Alt+3 Tamil Typewriter Unicode Alt+4 Tamil Barnini Unicode
gó6LTuf 2010

Page 27
இந்தக் குறியீடு NHM wrie செயற்பாட்டில் (Enase) உள்ளபோது மஞ்சள் நிறத்துக்கு மாறும் தமிழ் விசைப் பலகையை எவ்வாறு தெரிவுசெய்வது? முன்பு கூறியதைப்போல விரும்பும் தமிழ் விசைப் பலகையை நீங்கள் தெரிவு செய்ய முடியும் உங்கள் Task Bar இல் தென்படும் மணி வடிவக் குறியீட்டில் Right mouse ஐ Click செய்து எமக்குத் தேவையான விசைப் பலகையைத் தெரிவுசெய்யலாம்.
என்.எச்.எம்.ரைட்டரில் வழமையாக அனைவரும் பயன்படுத்தும் பாமினி எழுத்துருவுக்குரிய விசைப்பலகையைப் பெற்றுத் தட்டச்சு செய்வதற்கு, Alt Key + 4 ஐ அழுத்தினாலும் போதும் டான் என்று அது Activate ஆகிவிரும். ஆதனை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவதாயின் (Deactivate) மீண்டும் Alt+ 4 ஐ அழுத்தினால் சரி. அத்துடன், மணி வடிவத்தில் Right Mouse ஐ
கிளிக் செய்து Setting பகுதிக்குள் சென்று எமக்குத் தேவையான வகையில் இந்த Short Key ஐயும் மாற்றியமைக்க முடியும்.
உதாரணமாக, பாமினி விசைப்பலகையைத்
irudi:Fisikararen gotik irekin aferariari ere:
T-黨轉韋
rf six is five- tries
4:fಳ್ತ:* Estó: |E::
II A. ن-ن فـ is risk. . El a 3. ፵ ፲፱.....ዪ ā Lisu. .. # # ሶ
aard :* 量章*酮 ar fras : "nir ፫።ኾ'ኮ! irrera, t...|PáÈá ' ; s E"gri *ಕ್ಷ್: ፲፵ዥ" !F፮፻m ! *冥亨 Π ξεκΣικες :: 壹、 蔷、_、 ---- Disra #-ặg. zi. , , ,
தெரிவுசெய்வதற்கு Ai + 4 ஐ பயன்படுத்துவதற்குப் பதிலாக F6 பொத்தானைப் பயன்படுத்தும் வசதியை நீங்கள் இதன்மூலம் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
- TTSLLSLLLLLLLL LL LSLLLSTuu LeeeLSTSLSLLLSLSLLLLLSLLLLLSLLL
Settings v On-Screen Keyboard
Key Preview
Check for Updates
Åbo out,..
-
 
 
 
 
 
 

தமிழ் விசைப் பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?
தமிழ் எழுத்துருக்கள் தெரியாதவர்களும் NHM Writer ஐப் பயன்படுத்தித் தட்டச்சுச் செய்வதற்கான வசதிகளும் இதில் உண்டு Keyboard
c
R
இல் தமிழ் எழுத்துக்கள் எவை என்பதை அறிந்துகொள்வதற்கும் வழியுண்டு. மணி வடிவத்தில் Right Mouse ஐ கிளிக்செய்து Online screen keyboar gg (0,35flony GolaFLŮg51T6ò, 35L6lyp எழுத்துருவுக்கான keyboard தென்படும் பிறகென்ன, அதைப் பார்த்து பிழையின்றித் தமிழில் தட்டச்சு செய்வதுதான்ே -
முப்பரிமானத் தொலைக்காட்சி
தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சம்சுங் நிறுவனம் முப்பரிமாணத் தோற்றம் கொண்ட தொலைக்காட்சிகளை தயாரித்து வெளியிட்டுள்ளது. திரையில் தெரியும் காட்சிகள் முப்பரிமாணத் தோற்றம் கொண்டதாகத் தெரியும் வகையில் உருவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைக்காட்சியை பார்ப்பதற்கு பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டக் கண்ணாடிகளை நாம் அணியவேண்டும்.
விசேட கண்ணாடியைக் க்ளற்றிவிட்டுப் பார்த்தாலும் சாதாரண தரத்திலும்விட நான்கு மடங்கு துல்லியமான HD(High Definition) தரத்திலான காட்சிகளை இந்தத் தொலைக்காட்சியில் பார்க்கலாம். அத்துடன், இணையத்துடன் நேரடியான இணைப்பினை ஏற்படுத்தி காணொளிகள், பாட்டுக்கள், படங்கள் போன்றவற்றை இந்தத் தொலைக்காட்சி மூலம் பார்ப்பதற்கான
ངགས་པའི་ཚེས་སུ་ காணப்படுகின்றன.
ஒக்டோபர் 2010

Page 28
、
சமூக அநீதி,அதர்மம் போன்றவற்ற ஒருவர் தனது துப்பாக்கிகளை மாத்திர சூழலில் அநீதிக்கு எதிரானவர்களுடன் சித்தரிக்கும் முப்பரிமாணத் தோற்றம் கொன விளையாட்டே இந்த GUN எதிரிகை அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்ே Gun விளையாட்டின் இலக்கு பல்வே கொண்ட இந்த விளையாட்டின் ஒவ்6ெ ஒவ்வொரு இலக்குகள் வழங்கப்படும். இதனை நிறுவுவதற்கு உங்கள் கணினி கொண்டிருக்கவேண்டிய அடிப்படைத் தகன்
Operating System XP Video Card: 32 MB Hardware T&L - capab the latest drivers Ram: 512MB Processor : 1.8 GHz
Firaxis நிறுவனத்தால் உருவாக்க 6ớlaŪDGITULITĚ (3) Sid Meiers Civilization V g, முற்பட்டகாலத்திலிருந்து கி.மு.4000 ஆண்டு காலத்திலிருந்து எதிர்காலத்திற்கான உருவாக்கிக் கொள்வதே இந்த விளை இலக்கு நாகரீகமொன்றைக் கட்டியெழுப்புவதற்க உருவாக்குதல், அதற்குத் தேவையானவ போன்றவற்றில் விளையாடுபவர் ஈடுபடே இவற்றை அமைக்கும் போது எதிரி ஏற்படுத்தப்படும். அவற்றை எதிர்கொ வெற்றிபெறுவது என்பதே இந்த இறுதிக்கட்டம். - இந்தக் கணினி விளையாட்டை உங் நிறுவிக்கொள்ளவேண்டுமாயின் உங்கள் : தகைமைகளைக் கொண்டிருக்கவேண்டும். OS: Windows (R) Vista SP2 / Windows (B) 7
Processor: 1.8 GHz Quad Core CPU
Memory: 4 GB RAM
Disk: 8 GB Free
DVD-ROM: Required for disc-based instal
Video: 512MB ATI 4800 series or better, 5 Sound: DirectX 9.0c-compatible sound car DirectX: DirectX Version 11
26
 
 

ால் பாதிக்கப்பட்ட . ம் நம்பியிருக்கும் P. rer
போரிடுவதைச்
கணினி ளை சுட்டுவீழ்த்தி கொள்வதே இந்த று கட்டங்களைக் வாரு தளத்திலும்
p=6
le video card and
5ப்பட்ட கணினி இ கும் வரலாற்றுக்கு களுக்கு முற்பட்ட நாகரீகமொன்றை பாட்டின் முக்கிய
ான நகரங்களை ற்றை அமைத்தல்
Gបង្រៀន களால் தடைகள் ாண்டு எவ்வாறு விளையாட்டின்
கள் கணினியில் கணினி பின்வரும்
lation 12 MB nVidia 98.00 series or better
புகுந்து
gó6Luf 2010

Page 29
ஒன்றிறுகு மேற்பட்டவர்கள் இணைந்து விளையாட விளையாட்டு இரு தரப்பினருக்கிடையில் நடைபெறும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வழமைபோல தனித்தனியாக அல்லது குழுவாகச் ஒருவர் மீது கூடுதலான தாக்குதல்களை நடத்தும் குழுவி வழங்கப்படும். இந்த கணினி விளையாட்டை விளையாடுவதற்கு உ பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருத்தல் அவசியம் OS: Windows 98/Me/2000/XP OpenGL 32MB video card RAM 512 MB
DirectX 8.1 drivers
இருவருக்கிடையில் நடைபெறும் சண்டையை அடிப்படை முப்பரிமாணத் தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருப்பதே (
ஸ்ரீட் பைட்டர் கணினி விளையாட்டு. 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விளை வெளியீடாக நான்காம் பாகம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருந்ததைவிடப் பல்வேறு c உள்ளடக்கி முப்பரிமாணத் தோற்றத்தில் இந்த உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் கணினியில் நிறுவி விளையாடுவதற்கு கொண்டிருக்கவேண்டிய சிறம்சங்கள். Operating System: Microsoft Windows XP (SP3) / Vista (
Processor. Intel Pentium42.0GHz Orbetter Memory: GB Video Card: DirectX 9.0c/Shader3.0 or higher compatible GeForce6600 Series Soundcard: DirectSound compatible, DirectX 9.0c (or hig Free Railway. 2.5GB ܡ
 
 

க்கூடிய இந்த சண்டைகளை
இருதரப்பும் ៣៣១-u_សាffD ற்குப் புள்ளிகள்
ங்கள் கணினி
s
EN EL MA 'ಶಿಸ್ತಿ
*
யாகக் கொண்டு Street Fighter IV
பாட்டின் நவீன
சிறப்பம்சங்களை ១១៣LT_B)
5 கணினி
SP2) / Win 7
: NVIDIA
ther) compatible
gốGLATLíñ 2OMO

Page 30
அப்பிள் நிறுவனத்தின் படைப்புக்களுக்கு எப்போதும் தன தலைமையிலான அப்பிள் நிறுவனத்தின் புதிய படை கொண்ட இந்த ஐ.போன் 4 பல்வேறு சிறப்பம்சங்கை அப்பிள் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஐ குறைந்தது. இதன் திரை புதிய வகைத் தொழில்நுட்பத் உலகிலேயே மிகவும் தடிப்புக் குறைந்த ஸ்மார்ட் ஐ.போன் 4 தட்டிச் சென்றுள்ளது. -
அது சரி. ஐ.போன் 4 ற்கும். ஐ.போன் 3 GSற்கும் மஹெல்லோ என்பவர் இந்த இரண்டு வகைகளையும்
s
ஆ :-
"This is going to change 国 everything.
| 1 GHz ,穹 = 512MB RANA
Battery Tai iš
LIĠKa-Rs li
Storage
28
 
 
 
 
 
 

க் கிராக்கிதான். புதுமைகள் படைத்துவரும் ஸ்டீவ் ஜொப்ஸ் ப்புத்தான் ஐ.போன் 4 மிகவும் அழகான தோற்றத்தைக் ாயும் தன்னகத்தே கொண்டுள்ளது.
போன் 3 ஜிஎஸ் ஐ விட ஐ.போன் 4 மிகவும் தடிமன் தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
போன் என்ற பெருமையையும் அப்பிள் நிறுவனத்தின்
இடையில் அப்படி என்னதான் வித்தியாசங்கள் உண்டு. ஒப்பிட்டு இப்படி ஒரு வரைபடத்தைத் தந்துள்ளார்.
's Iphone 3
3 () 5 MEGAPXES
Frg & Bck_marg MEGAPIXELS Built in
Wideo Recording
Tap to Focus 善 LED light Backsdgling
고, F7F99
55: E. 12.3.r. I 18.5 & i¡.i. is 9 Bililifir,
135 37 gr
Other too!-ի
featufig if iPhafi :
5eLurdiriirusphyrė for russiske largella tiri
Frant facing camera for "sers' vidra calling
S l mm S aa uuSuSuSuuSuuSSSKSSS KSSS L L LLLL LL LLLLLL
KS aB muu L LL L LlLmmLLK S L t mLLLLLLLS
工「リ
է իջեց it is t operating systern gallows for
sy ܨܦ gd5(3LTuf 2010

Page 31
இலத்திரனியல் புத்தகங்கள் வரையில்(eBooks) தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், ஒரு புத்தகத்தைக் கையில் வைத்து வாசிக்கும் சுகானுபவத்துக்கு அது ஈடாகிவிடாது. நவீன தொழில்நுட்பம் மிக அதிகளவில் வளர்ச்சி கண்டிருக்கும் மேலை நாடுகளிலெல்லாம், அறிவைப் பரலாக்கும் வகையில் பல புத்தகங்கள் மலிவுப் பதிப்புக்களாக வெளியிடப்பட்டு அறிவு விருத்திக்கு வழிசெய்யப்படுகிறது.
- நமது நாட்டைப் பொறுத்தவரையில் புத்தகங்களை விலைகொடுத்து வாங்கிப் LULIqës(5 lb பழக்கம் இன்னமும் குறைவாகவே இருக்கிறது. சரி, அப்படியே
エ三ー
புத்தகங்களை வாங்கிப் படிப்பதற்குத் தயார் என்றாலும், எமக்குத் தேவையான பல புத்தகங்களை இங்கே பெற முடிவதில்லை.
இந்தக் குறையைத் தீர்க்க முன்வந்திருக்கிறது Book Lab இராமநாதன் வீதியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
III pULITODID
ബ త=్న L3366
O O. K. L. விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக அமைந்துள்ள Book Lab 5 அறைகளில் விஸ்தீரனமான காட்சியறையில், ஏறத்தாள
10,000 க்கும் மேற்பட்ட இந்திய, இலங்கை மற்றும் பல்வேறு நாட்டுப் பதிப்புக்களையும் கொண்டுள்ளது.
சிறுவர் நூல்கள், இலக்கியப் படைப்புக்கள், பல்கலைக்கழக மாணவருக்கான மருத்துவ நூல்கள், கணினி, சமயம், வரலாறு, அரசியல், நாடகம், சினிமா, ஆன்மீகம், இசை என்று தேவையான எல்லாத் துறைகளிலும் வேண்டியளவு பயனுள்ள நூல்களும், சிறுவர்களுக்கான பாடல் இறுவட்டுக்கள், விளையாட்டுக்கள் என்பனவும் இங்கே உள்ளன.
இலங்கை, இந்திய, புலம்பெயர் சஞ்சிகைகள்
உட்பட அண்ணளவாக 60க்கும் மேற்பட்ட சஞ்சிகைகள்,
அட இத்தனை சஞ்சிகைகள் வெளிவருகின்றனவா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
இன்றைய 岳TQ) இளைஞர்கள் எல்லோரும்
29 匣
 
 
 
 
 
 
 
 
 
 

நிச்சயமாக வாசிக்கவேண்டிய சுயமுன்னேற்ற நூல்கள் பலவும் இங்கே கிடைக்கின்றன.
யாழ் குடாநாட்டில் நீங்கள் எந்தப் பகுதியில் வசித்தாலும் அங்கிருக்கும் நூலகத்தில் நீங்கள் தேடும் நூல்கள் இல்லாவிடின் அந்த நூல்களை நூலகங்களுக்கு வழங்கத் தாம் தயாராக இருப்பதாகக் கூறினார், Book Lab உரிமையாளர் தட்சணாமூர்த்தி ரவீந்திரன்
"புத்தகங்களைத் தேடி வாசிக்கும் எனது ஆர்வமே, அரிய புத்தகங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதன்
விளைவே இந்த ܢ حج کے (0) 9d) முயற்சி என்கிறார்
அவர்
ক্লািস্থ 5LO அனைவருக்கும் அரிய
நூல்கள் கிடைக்கவேண்டும் A. என்பதற்காக விலைகளை இயன்றவரையில் குறைத்து
வழங்கவதாகவும், 500 - 1000 ரூபாக்கும் மேற்பட்ட விலைகளை உடைய நூல்களுக்கு 10 சதவீத கழிவு வழங்குவதாகவும் அவர் சொன்னார்.
இந்தியத் தமிழ் நூல்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட 3.75 மடங்கு விலையும், ஆங்கில நூல்களுக்கு 3.3 மடங்கு விலையும் விதிப்பதாக அவர் கூறினார். தொடர்ச்சியான
வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பல சலுகைகளையும் வழங்கி வருவதாகவும் அவர் சொன்னார்.
பாலு கஸ்ரோ
ஒக்டோபர் 2010

Page 32
சுஜாதாவிடம் நான் மிகவும் ரசித்த விசயம் அவருடைய ரசனைதான் அதுதான் -96160U toge; சிறந்த எழுத்தாளர் ஆக்கியது எழுத்தின் வசீகரத்தால் இளைஞர் களைக் கவர்ந்த எழுத்தாளர் ತಿತ್ಲೆ! பற்றி இப்படிச் சொல்கிறார் கார்ட்டூனிஸ்ட் மதன் மதனும், சுஜாதாவும் 萱 மிகவும் நெருங்கிய நண்பர்கள் தமிழக விகடன் குழுமத்துடன் இணைந்து வாசகர்களைக் கட்டிப்
பாட்டவர்கள் 喜
ప60 வேண்டுமானாலும் சுவையாக sig, pgицѣ.
గీసిన 923
لعويص
கஷ்டமான விடயம் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து எளிமையாக, நகைச்சுவை கலந்து விஞ்ஞானம் பற்றியெல்லாம் எழுதினால் இளைஞர்கள் நொலேஜுக்காகக் காத்திருக்கிறார்கள் என்று ஒரு தடவை சுஜாதா தனக்குக் கூறியதை அவருடைய மறைவுக்குப் பின்னர் வாஞ்சையோடு நினைவுகூர்ந்தார் மதன்.
சொன்னதுபோலவே, "ஏன் எதற்கு எப்படி? என்ற சுஜாதாவின் கேள்வி பதில் பகுதி ஜூனியர் விகடனில் ஆரம்பித்து வாசகர்களின் ஆயிரக்கணக்கான கேள்விகளைப் பெற்று சக்கை போட்டது என்கிறார் மதன்
தன் எழுத்தைப்பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு இருப்பவர் அல்ல சுஜாதா எல்லோருமே மேலும் மேலும் சுவையாக எழுத வேண்டும் என்பதே அவருடைய ஆசை சுஜாதாவின் எழுத்து நடையைப் பார்த்துத்தான் எனக்கே எழுதவேண்டும் என்ற ஆசை வந்தது என்று தன்னுடைய எழுத்துக்கு சுஜாதா தூண்டுகோலாக இருந்ததை நினைவுகூர்கிறார். கார்டுனிஸ்டாக இருந்து எழுத்தாளராகி, பின்னர் ஜூனியர் விகடன் இணையாசிரியராக உயர்ந்த
 

மதன்
சுஜாதாவை எழுத்த ஆக்கியது அவசர
சுஜாதாவின் எழுத்தால் துண்டப்பட்டுத்தன்
ஒரு எழுத்தாளராக விரும்பினால் நிறைய வாகியுங்கள் நல்ல ரசிகனாக இருங்கள் சுஜாதாவையும் இன்னுமின்னும் அதிகளவு எழுத்தாளர்களையும் வாசித்து ரசியுங்கள் 출
உங்களுக்குள்ளிருக்கும் எழுத்தாளர் உயிர்பெற்று மொழியோடு விளையாடத் தொடங்கிவிடுவார்
என்ன.? ஆரம்பிப்போமா..?
பூமிக்கு நானம் வந்தது.
ரோஜாக்கள் பூத்தன. eTgrejéig egyi Gyög.
முட்கள் முளைத்தன. முட்களுக்கு யோகம் வந்தது
யேசுவின் தலையில் கிரீடமானது
ஒக்டோபர் 2010
丽
இது
国

Page 33
ଔ00@ଓ (୦୩); / நாளை நமதே `
எதிர்கால விடியல்களாய் வரலாற்றேட்டில்
இணைகின்ற புதுவரிகள் நாங்களன்றோ
புதிரான புதிதான செயல்களாலே -
பான்னுலகைச் சமைக்கின்ற ஆக்கம் நாங்கள்
கதிர் தோன்றி நிலாத்தோன்றி விண்மீன்தோன்றி கண்டங்கள் தோன்றிவிட்டால் முழுமை உண்டா? மதியாலே மாறி நிற்கும் புதுமைக் கோலம்
மனிதகுல கைவண்ணப் படைப்பேயன்றோ!
மூலையெனும் மூலதனம் பெற்ற நாங்கள்
முழுநீள அளவினிலே பிறக்கின்றோமே
நாளையென்ற விடிவானம் தோன்றுதற்கே - நற் சேதிதரும் வெள்ளிமீனாய் தோன்றவேண்டும்
சாலைதோறும் நின்று நாங்கள் சுற்றலாமோ சந்திகளில் நின்று கதை பேசலாமோ
வேளையென்ற இறப்பு வந்து கொத்தும் முன்னர்
வியனுலகில் நம் பெயரைச் செதுக்கவேண்டும்.
அன்னையென்றும் தந்தையென்றும் இருவர் சேர்ந்தே அல்லிரவில் எழுதி வைத்த கவிதை நாங்கள்
பின்னர் வரும் உலகத்தார் நமைப் படிக்க பெருமை மிகு காவியமாய் வளரவேண்டும்
தன்னாலே வளர்வதுதான் உடலம் ஆனால் சலிக்காத படிப்பினாலே அறிவினாலே
பொன்னான மூளைவளம் பெருகவேண்டும் புதுமைகளை பூமியெல்லாம் பரப்பவேண்டும்
நாமெல்லாம் நாள்தோறும் கூடவேண்டும் நன்மைகளைப் பாரினிலே விதைக்கவேண்டும்
புவனமது எமைப் பார்த்துப் பெருமைகொள்ள
யவற்றைப் படைத்தளிப்போம் உலகிற்கே நாம்
 
 
 

உங்கள் கண்களால் Y
நான் பார்க்கவா? 666 நான் பரககவா
விளக்கேற்றுங்கள் வெளிச்சத்தை அறியாத என் விழிகளில்,
பார்வையற்ற எனக்குப் பரிசளியுங்கள் Lதலை!
மரணம் உங்களுக்குத்தான் 5 56 கண்களுக்கல்ல!
பிறருக்கு கண்ணாடியாய் இருப்பதல்ல, நீங்கள் என் கண்களாகவே இருங்களேன் நீங்கள் கண் மூடிய பிறகும் அவை திறக்கட்டும் என்னுடைய முகத்தில்
இந்த உலகை எத்தனை காலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இறந்தபின் கண்களை இரவல் தாருங்களேன். ~) நானும் பார்த்து
நனைகிறேன் இதயம்
பாலு கஸ்ரோ
ܢܠ
Хsy,
藝 출 வாசக நெஞ்சங்களே:
% %三 % 須 / 须 须 须 须 / 須 須 須 须 须 % グ 须 须 須 / 须 須 多
மொழியோரு விளையாரும் சுவையோடு கவிபாடும்
உங்கள் திறன்களுக்கு இந்தப் பக்கம் களம் தரும் எழுதி அனுப்புக்கள்
S SSSSSSSSS S

Page 34
100 முட்டைக் ே
75 இறைச்சிக் ே
இவற்றையெல்ல பெரிய கோழிப்பு
இ
இரண்டு c
தெரியாத இவ்வளவும் ே என்றால் நம்புவீர் யாழ்ப்பாணம் குறுக்குத்தெருவி வரும் கனகசபை அசாதாரண வீட்டுக்குப் போகு "கன(க்)கசபை
"அண்ணாக்கள். உதவிசெய்வதற்க உதவுங்கோ.” போன நல்லூர் கண்பார்வை இழ இவர்களுள் ஒரு பேச்சுக்கொடுத்தே ஒழிந்திருப்பதை
அடுத்த நாளே 'பு
அழகிய கூடு
யாழ்ப்பாணப் பா வீடு வாசலில் கு வீட்டின் பின்பகுதி அந்த வீடே அழ 'காலையில் கே சொன்னபடி G. கனகசபை, உற்ச தொடங்கினார்.
கண்பார்வையில்6 'சத்தத்தை வைத் அடையாளம் கன
பாதங்களால் அ இடத்துக்கும் செ6 கோழிகளுக்கு ே
அதனைத் தன்னா
முடியும் என்கிறார் 'கோழிகளின் ச அவற்றுக்கு வரு
32
**茎リAM リ
 

ாழிகள், 550 ஒரு நாள் கோழிக் குஞ்சுகள், 350 குஞ்சுகள், 5ாழிகள்.
ம் ஒருவரே வளர்க்கிறார் என்றால் நம்புவீர்களா?
ண்ணை என்றால் சாத்தியம்தான்.
256t.
கண்களும்
ஒருவர் சய்கிறார் 95@HT.?
2ü
ல் வசித்து என்கின்ற மனிதரின் முன் எனக்கும் நம்ப முடியாமல்தான் இருந்தது.
அக்காக்கள். கண்பார்வையிழந்தவர்களுக்கு ாக ஒரு பத்து ரூபா அதிர்ஷ்டலாபச் சீட்டை வாங்கி
திருவிழாவில் இவ்வாறு கூவியழைத்துக்கொண்டிருந்த ந்த சிலரை நீங்களும் கண்டிருப்பீர்கள்
நவரான கனகசபையிடம் டிக்கட்டை வாங்கியபடியே போதுதான், இவருக்குள் கனக்க គាfigurg6 அறிந்துகொள்ள முடிந்தது. ான் என்று அவருடைய வீட்டுக்கு விசிட் அடித்தோம்.
Iம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலான பழையதொரு ருவிக்கூடு.
யில். ஐந்து பெரிய கோழிக் கூடுகள் யெதொரு கூடுபோல்தான் இருந்தது. ாழிகளுடன்தான் என்ரை நாள் ஆரம்பிக்கும் என்று காழிக்கூடு ஒன்றுக்குள்ளிருந்து வெளியே வந்த கத்துடன் ஒவ்வொரு கோழிக் கூடாக எமக்குக் காட்டத்
ாதவரால் எப்படி என்று நாம் நினைப்பதற்குள், தே குஞ்சுகளின் கூடுகளையும், ஏனைய கூடுகளையும் டுகொண்டுவிடுவேன் என்றார் புன்சிரிப்புடன்
டிகளை எண்ணி வைத்தே தாம் சரியாக ஒவ்வொரு வதாகச் சொல்லப்படுவது தவறு என்று கூறும் கனகசபை, ாய் ஏற்பட்டாலும் ܝܡ
கண்டுபிடித்துவிட
மகேஸ்வரன் பிரசாத் ១៣-គូគា ១២ភាff
தத்தை வைத்தே தம் வந்துள்ளதா
six
ஒக்டோபர் 2010
国

Page 35
என்பதை அறிந்துகொண்டுவிடுவேன். மனைவியை அழைத்து ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று கேட்டுத் தெரிந்துகொள்வேன்' என்கிறார் அவர் உறுதியுடன் 25 வருட அனுபவ முதிர்ச்சி அவருடைய பேச்சில் தெளிவாகத் தொனித்தது.
ஆம், க.பொ.த. சாதாரணதரம் படித்துக்கொண்டிருக்கும்போது தனது இரண்டு கண் பார்வைகளையும் இழந்த கனகசபை, 22வது வயது (இப்போது 47 வயது) முதல் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகச் சொல்கிறார். 2008ஆம் ஆண்டு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் சிறந்த பண்ணையாளராக இவர் தெரிவுசெய்யப்பட்டு கெளரவிக்கப் பட்டுள்ளார்.
வங்கிக் கடன் மூலமே கோழி வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியதாகக் கூறும் கனகசபை, இப்போதும்கூட வங்கிக் கடன்களைக் கொண்டே கோழி வளர்ப்பில் முன்னேறி வருவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் தமது சங்கத்திலுள்ள பலருக்கு வங்கிகள் கடன் வழங்கியிருப்பதாகவும் அவர் மகிழ்கிறார்.
கரம்பிடித்த கதை
கனகசபையுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போதே, கையில் குளிர்பானத்துடன் வந்தவர் - அவருடைய மனைவி சிவநந்தினி (40)
தனது அன்றாட வாழ்க்கையில் 50 சதவீதம் பங்களிப்புத்தான் என்று பெருமையுடன் அவரை எமக்கு அறிமுகப்படுத்தினார் šāöF@L重。
இருவரும் இணைந்த கதையைக் கூறுங்களேன். என்றேன் விடாமல்,
“ஐ.சி.ஆர்.சி.யில் டைப்பிங் வகுப்பிற்குச் செல்லும்போதே இவரை நான் சந்தித்தேன். நாங்கள்
லவ் பண்ணித்தான் கல்யாணம் செய்தனாங்கள்
------
33 瓦
 
 
 
 
 
 

எனது வீட்டில் நான் ஒரேயொரு பெண்
பிள்ளையென்பதால் எதிர்ப்பு இருந்தது' என்று சொன்ன அந்தப் புண்ணியவதி,
"அப்பாவும், தம்பியும் இதுவரை எங்களுடன் கதைப்பதில்லை' என்றார் வேதனையுடன் ஆரம்பத்தில் தேர்தல்கள்
திணைக்களத்தில் பணியாற்றிய
போதும், குழந்தைகள் பிறந்த ன்னர் வேலையிலிருந்து விலகிவிட்டதாகக் கூறிய
அவர், கனகசபை செல்லவேண்டிய
இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் தானே அவரை அழைத்துச் செல்வதாகவும் கூறுகிறார். (வாழ்க்கைத்துணை 6T60TLug560F முழு அர்த்தம் இதுதான்போலும்). துவாரகன் (10), அபிராமி (8) ஆரூரன் (5) என்று மூன்று
ள்ளைச் செல்வங்களின் படிப்பையும் தான்
கவனித்துக் கொள்கின்றபோதும், gTសាលuffi១៦ ភាសា៣១៣T பாடசாலைக்குத் தயார்ப்படுத்தி அனுப்புவதென்னவோ கனகசபையின் பொறுப்புத்தான் என்று எமது பிரமிப்பை மேலும் அதிகரித்தார் அவர் பிறர்க்கென வாழ்தல்
வீட்டுப் பொறுப்புக்கள் போக, கண்பார்வையற்றோர் சங்கத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவரும் கனகசபை, பகல் பொழுது பெரும்பாலும் சங்க வேலைகளிலேயே கழிவதாகக் கூறுகிறார். தனது வாழ்வில் திடீரென இருள் சூழ்ந்தும்கூட சுதாரித்துக்கொண்டு மீண்டெழுந்து, தனக்கென மட்டும் வாழாது, தன்னைப்போன்ற பிறர்க்காகவும் பாடுபடும் இவரது தன்னம்பிக்கை, தற்றுணிவு, பெருந்தன்மை, மனிதநேயம் என்பவற்றை வியந்தபடி அவர்களிடம் விடைபெற்றோம்.
விழி இழந்தபோதும் மனம் துணிவிழக்கவில்லை இருள் சூழ்ந்தபோதும் விழி ஒளி இழக்கவில்லை சிறகொழுந்தபோதும் மனது பறந்து போகும் காற்றின் திசைகளெல்லாம் கைகளில் அடங்கும் பொறிகளும் புலன்களுமே மனிதர் அல்ல உள்ளே சுடர்விடும் ஆன்மரவே மனிதம் ஆகும்
- ញភ្នំ
-GP2
ஒக்டோபர் 2010
登醚

Page 36
ரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் விளாசி யாழ்ப்பாண கிரிக்கட் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துகொண்ட வீரர். கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவனும், யாழ் மாவட்ட கிரிக்கட் அணிக்காக விளையாடியவருமான சந்திரநாதன் மதுரசன். யாழ் மாவட்டம் சார்பாக வெளிமாவட்டங்களில்
விளாசிய இந்த வீரரிடம்,
வெளிமாவட்ட விளையாட்டு
அனுபவங்கள் பற்றிக் கேட்டோம்.
"நாங்கள் மற்றில் துடுப்பெடுத்தாடவும், பந்து வீசவும் பழக்கப்பட்டவர்கள்
அவர்கள் புற்றரையில்
துடுப்பாட்டம்
செய்து
பழக்கப்பட்டவர்கள். இதனால்
அந்த மைதானத்தில் அவர்களுடன் விளையாடுவது
சவாலாகவிருந்தது" என்றார் அவர்
புற்றரையில் ஆடும்போது பந்துகள் ஒவ்வொன்றும் மிக வேகமாகவும் மேலெழுந்தும் (பெளண்சர்) வந்ததால், துடுப்பாட்ட மட்டையில் தடுத்தாட முடியாது பந்துகள் எதிர்பாராத திசைகளில் சென்றதாக தமது அனுபவத்தைக் கூறுகிறார் அவர்
// If
மற்றில் வீசும் பந்து விழுந்து, வேகமாவும், தாழ்வாகவும் வரும். ஆனால், புற்றரை மைதானங்களில் பந்து வேகமாக எழுந்து வரும். இதனால் 'ரைமிங் எமக்கு வரவில்லை. இதுவே எமது வீரர்களின் துடுப்பாட்ட வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது" என்று யாழ் மாவட்ட வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை விளக்கினார் அவர்
தற்போது யாழ் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு நிலைமை சாதகமாகவிருப்பதாகக் கூறும் அவர், வெ மாவட்ட பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் இங்கு வந்து போட்டிகளில் பங்குபற்றுவதால் பல ஆட்ட நுட்பங்களை அறிந்துகொள்ள முடிவதாக மகிழ்கிறார். இனிவரும் காலங்களில் தேசிய அணிக்கு யாழ் மாவட்ட வீரர்கள் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார். தேசிய அணிக்கு யாழ் மாவட்ட வீரர்களைச் சேர்ப்பதில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பகுதியளவே உண்மையானவை என்று வாதிடுகிறார் மதூசன் "சர்வதேச தரத்திலான
34 匣
菠- *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களங்கள் இல்லாமை, தரமான பயிற்றுவிப்பாளர்கள் பற்றாக்குறை, தரமற்ற துடுப்பாட்ட உபகரணங்கள்
பான்ற பல்வேறு காரணங்களால் நம்மால் பிரகாசிக்க முடியவில்லை" என்கிறார் அவர்
இவற்றுக்கு மேலால், பெற்றோரின் ஊக்குவிப்பின்மை இதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது என்று கூறும் அவர், யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் கல்வியில் மட்டும் ஈடுபட்டு தம் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் சிந்திக்கிறார்கள் என்று வேதனைப்படுகிறார். இதுவே இங்கு பல விளையாட்டு வீரர்கள் உருவாகாமைக்குக் காரணம் என்று வாதிடுகிறார் அவர்
"விளையாட்டில் சாதிக்கவேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களின் கனவுகளும், இலட்சியங்களும் இத்தகைய பெற்றோரால் தகர்ந்துபோகின்றன.
இதனால், சிறந்த விளையாட்டு வீரர்கள்
பலர் வெளியில் தெரியாமல் மழுங்கடிக்கப்படுகின்றனர். இதுவே
யாழ்ப்பாண விளையாட்டுத்துறை வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாகும்" என்று அடித்துக் கூறுகிறார் விதூசன்
"விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்கள் ஏனையோரைவிட எல்லாச் செயற்பாடுகளிலும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்கள் என்பதை யாழ்ப்பாணப் பெற்றோர் உணர்கிறார்களில்லை" என்று மனம் வெதும்புகிறார்
விதூசன்
மதூசனின் இந்த வெதும்பல் நமது பெற்றோரின் காதில் விழுமா? யாழ் விளையாட்டுத் துறை முன்னேற அவர்கள் கை கொடுப்பரா?
ö岛Lü前20fO ULA ଦ୍ରୁ

Page 37
அவரிடம் கேட்டே ழ் மாவட்டத்தின் DTតា ត្រា ឆ្នា L T ர்கள் ே 浔 அணியினருடன் ந
2GHT356T log TOILD 90 நிமிடத்தில் 27
பல விளையாட்டுக் கழகங்களின் செயற்பாடுகள் இளைஞர்களைத் துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த விளையாட்டுக் கழகங்களுள் குருநகர் பகுதியில் அமைந்திருக்கும் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் பிரபலமான ஒன்று
குருநகர் கிராமத்தின் 90 சதவீதம் மக்களும் மீன்பிடித் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மத்தியில் திகழும் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் உதைபந்தாட்டத்துக்கு மிகவும் பெயர்பெற்றது.
14.10.1963 அன்று திரு.அ.டேவிற். அ.வின்சன் மேக்களில், திரு.அயோன் ஆகியோரின் துணையோடு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கழகம், இதுவரையில் பல
சாதனைகளைப் படைத்துப் பெயர்பெற்றுள்ளது.
"இப்போது * 47 வருடங்கள் அடித்தமைத் ஆகிவிட்டன. கழகத்தில் பல நினைவுக்கு வருக விளையாட்டுக்கள் இருந்தும் எங்களுடைய அதி உதைப்பந்தாட்டமே குருநகர் ஆட்டத்துக்கு ஈடுே மண்ணிற்கும் இங்கு வாழும் - @_T១១៦ ១ឆ្នាg மக்களுக்கும் பெயர் வாங்கிக் நிமிடத்தில் மைதா கொடுத்தது என்று சிலாகிக்கிறார் வெளியேறினர் எ கழகத்தின் 35 வருடங்கள் அண்மையை சாத செயலாளராகக் கடமையாற்றும் கூறினார். அகஸ்ரின் பெயைக் ராதா இன்றுவரைக்கு "இப்போது பெண்களும் மாவட்டத்தில் எந்த உதைப்பந்தாட்டம் போன்ற உதைப்பந்தாட்ட
விளையாட்டுக்களில் திறமைகாட்டி அணியும் இப்படி வருகிறார்கள் பல வெற்றிகளையும் சாதனையை
பெற்றிருக்கிறார்கள் ஆரம்பத்தில் நிகழ்த்தியதில்லை
பாடும் மீன் உதைபந்தாட்டத்தில் பெருமைப்படுகிற ஆரம்பித்து இப்போது துடுப்பாட்டம் அவர் போன்ற விளையாட்டுக்களும் -
சேர்ந்துள்ளன என்று
பாடும் மீன் கழகத்தின் தற்போதைய O வளர்ச்சியை விளக்கினார் அதன் செயலாளர். பாடும் மீன் விளையாட்டுக் கழகத்தின் சாதனைகள் பற்றிக் கூறுங்களேன் என்று
35
 
 
 
 

ாது, "யாழ் பாடும்மீன் கழகத்தின்
உதைப்பந்தாட்ட வளர்ச்சியில் குருநகர் வாழ் ந்த போட்டியில் பெண்களின் பங்களிப்பும் கோல்கள் உற்சாகமும் கழகத்தை மேலும்
哆 அதிக முன்னேற்றம் காண
வைத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் பாடும்மீன் பெண்கள்
நான் இப்போது அணி உதைப்பந்தாட்டத்தில் றது. பல போட்டிகளில் பங்குபற்றி ரடியான வெற்றிநடை போட்டு வெற்றிக் கொடுக்க முடியாத கோப்பைகளையும் வென்றிருக்கிறது. னர் 80 ஆவது கிரிக்கெட்டிலும் பல போட்டிகளில் னத்தை விட்டு பங்கு பற்றி வென்றுள்ளனர். : : "பொருளாதாரத்தில் பல
தடைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் வென்று ம் யாழ் அவர்கள் சாதனை படைத்து தவொரு வருகின்றனர்” என்று வியந்தார்
கழகத்தின் செயலாளர் யொரு குருநகர் கிராமத்தில்
உள்ள பெற்றோர் கல்விக்கு GTO] க்கியக்கவம் கொடுப்பதுபோல் 贝 முக்கியத்துவம் கொடுப்பது
தமது பெண் பிள்ளைகளையும்
விருப்போடு அவர்களின்
திறமைக்கு மதிப்பளித்து
விளையாட்டுத்துறையிலும்
ஈடுபடுத்தி ஊக்கமளித்து வருகின்றமையே - இதற்குக் காரணம் என்று விளக்கினார் இவர் இந்த நிலை குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்டால், யாழ் மாவட்டம்
விளையாட்டுத்துறையில் இன்னும் அதிகம் பிரகாசிக்கும் @
gd5(3LTuf 2010

Page 38
இளைஞர் யுவதிகளே!
வேலைவாய்ப்பில்லை, வருமானம் உழைக்க முடியவில்லை என்ற கவலையா?
கவலையை விடுங்கள். இதோ உங்களுக்கான வழிகளைக் காட்டுகின்றன வங்கிகள் தொழில் இல்லை என்று இனி யாரிடமும் கையேந்தி நிற்கத் தேவையில்லை. நீங்களே
LDF53១T ੭66ਲੁ
இணைந்து ஒரு தொழிலை ஆரம்பித்து 6) I(5IDT60ILD FFL-L-
ஆயிரம் வழிகள் உண்டு. QJñá QITüüLé
கையகப்படுத்து
அதுசரி, தொழில் ஆரம்பிக்க முதலுக்கு எங்கே
பாவதாம் என்று அலுத்துக்கொள்ளாதீர்கள் இதற்காகத்தானே வங்கிகள் உள்ளன. இப்போது இலங்கையிலுள்ள அனைத்து வங்கிகளும் யாழ்ப்பாணத்தில் கிள்ை பரப்பிவிட்டன. அவை யாவுமே மத்திய வங்கியின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு கடன்களை உங்களுக்கு வழங்கத் தயாராகக் காத்துள்ளன.
磐KAWA惑→
 
 

உங்களுக்கு வாலாயப்பட்ட துறைசார்ந்த எந்தத் தொழிலை ஆரம்பிக்க நினைத்தாலும், அந்தத் தொழில் தொடர்பான சிறந்த திட்ட வரைபொன்றைத் தயாரித்து, அதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானங்களையும்
வடக்கின் သားအရေးကြီး 茎
புதிதாகத் தொழில் ஆரம்பிப்போரை ஊக்குவிப்பே இந்தக் கடனின் நோக்கமாகும் தொ தொடங்குவதற்கான சாத்தியமான தகவல்கள்ை திட்டத்தையும் வங்கியில் சமர்ப்பித்து ஆ 2000 (இரண்டு இலட்சம் ரூபா வரை ாகப் பெற்றுக்கொள்ளலாம் வருடாந்தம் அறவிடப்படும் கடன் திருப்பிச் செலு: 3 வருடங்கள் இரண்டு நம்பிக்கையான நபர்க கையெழுத்துக்களுடன் இந் இ பெற்றுவிடமுடியும் பாழ்ப்பாணத்தில் இதுவரையில் பத் மேல் அனைத்து வங்கிகளுடாகவும் இந்தக் கடனை வழங்கியுள்ளது
O சரியாக இனங்காட்டி,
உரிய ஆவணங்களுடன்
58.5GOG85 வங்கியில் சமர்ப்பித்தால், வங்கி விதிமுறைகளுக்கு
● ஏற்ப இலகுவாகக் கடன் J(8G)JsTILO பெற்றுக்கொள்ள முடியும்.
O வங்கி நடைமுறைகள் பற்றியும், கடன்களும் அவற்றுக்கான பிணைகள் தொடர்பாகவும் போதிய அறிவு இல்லாததால்தான் பலருக்கும் தேவையானபோது வங்கியை நாடி தேவைகளை நிறைவுசெய்ய முடிவதில்லை. வங்கிக்குப் போவது என்றாலே சிலருக்குப் பயம் பிடித்துக்கொண்டுவிடுகிறது.
இதனால், ஊருக்குள் அதிக வட்டிக்குக் கடன் வேண்டுதல், நகைகளை குறைந்த தொகைக்கு அடகு வைத்தல், சேமித்த பணத்தை யாரிடமாவது கொடுத்து வைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு நட்டமடைவதுடன், முதலுக்கே மோசம் ஏற்படுவதுமுண்டு.
மக்களிடையே முறைசார்ந்த நிதிக் கொடுக்கல் வாங்கல்களை ஏற்படுத்தவும், சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, தேவையானபோது கடன் வழங் உதவவுமே வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் மத்திய வங்கி மிகவும் இறுக்கமாக மேற்பார்வை செய்து வருகிறது. சமயங்களில் மத்திய வங்கியே நேரடியாகக் கடன் உதவிகளை வழங்கவும் செய்கிறது.
வங்கிக் கடன்களைப் பற்றியும், அவற்றை
பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும், எந்தெந்தத் தேவைக்கு எவ்வளவு தொகையைக் கடனாகப்
ses e
ā@L而ü前2010 ତୁଏ ।

Page 39
பெற்றுக்கொள்ளமுடியும் என்பது தொடர்பாகவும் சரியாக அறிந்துகொண்டு வங்கிக்குச் சென்றால், கடன் எடுப்பது மிகவும் இலகு என்பதுடன், உங்கள் மீது
வங்கிக்கு நம்பிக்கையும், மதிப்பும் ஏற்படும். யாழ்ப்பாணத்தில் தற்போது நிதி நிறுவனங்கள் தவிர்ந்த 13 வங்கிகள் செயற்படுகின்றன. அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்பவற்றுடன், ஹற்றன் நஷனல், கொமேர்ஷல் Gigabitat, FLBL15, NDB, CFCC, HSBC.CDB, PANASIA
றது கட 3695ւն ஆகும்
ஆகிய பத்து தனியார் வங்கிகளும் தற்பொழுது வட மாகாணம் எங்கும் கிளைபரப்பியுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக இலங்கை மத்திய வங்கி தனது யாழ் கிளையை அரசடி வீதியில் திறந்து உங்களுக்குச் சேவைசெய்யக் காத்துள்ளது.
இந்த வங்கிகளின் வரவை எமக்கு வரப்பிரசாதமாக்கிக் கொண்டு, அவை தரும் வாய்ப்புக்களை நாம் கையகப் படுத்திகொள்ளவேண்டும்.
இந்த வங்கிகள் வழங்கும் சில கடன்கள் பற்றிய
37
三 、鲑
 
 

விபரங்களை இங்கே தருகிறோம். இவை மட்டுமல்ல, இன்னும் ஏராளம் கடன், வைப்பு நிதியியல் வசதிகளை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நமக்கு வழங்குகின்றன. அவைபற்றி தொடர்ந்து இந்தப் பகுதியில் பார்ப்போம்.
கமம் மற்ற
திட்டம்
யமேம்படுத்துவதற்கும். கயை ஊக்குவிக்கும் கடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
நான்கு | zoo off=
தொழில் பயிற்சி நிலையம் ஒன்றில் பயிற்சிபெற்ற ஒருவர் தனது சான்றிதழ்களை வங்கியில் சமர்ப்பித்து அலுவலர்களின் உதவியுடன் இந்தக் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும் ஆகக் கூடியது 250,000 (இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபா தொகையை கடனாகப் பெற்றுக் கொள்ளமுடியும்
ஆசிந்துஜா
量@拿
2010 gd56LTuf ܓ

Page 40
பெயர் சொல்லும் பிள்ளை உண்டு. அதென்ன பெயர் சொல்லும் வடை?
உங்களுக்குத் தெரிந்த பலகாரங்களின் பெயர்களை ஒருக்கால் நினைத்துப் பாருங்கள் எந்தப் பலகாரமாவது உங்கள் ஊரின் பெயர் சொல்கிறதா? ஆனால், தட்டை வடை என்று சொல்லப்படும் வடை மட்டும் பருத்தித்துறை வடை என்று ஊரின் பெயர் சொல்லி நிற்கிறது. சில வகை உணவுப் பொருள்களுக்கு சில ஊர்கள் பிரபலமாக இருப்பதுண்டுதான். ஆனால், எந்த உணவுப்பொருளும் அந்த ஊரின் பெயர் சொல்லி நிற்பதில்லை. பருத்தித்துறை வடை மட்டும் இதில் விதிவிலக்கு
பொறிவிளாங்காய், உழுத்தம் இ
பலகாரம்,
LJ(35ILIT,
முறுககு
என்று CAN @
வடமராட்சியில் பலவிதமான சிற்றுண்டிகள் பேர்பெற்றிருந்தாலும், தட்டைவடை மட்டும்தான் ஊர் பெயர் சொல்லி நிற்கிறது. அரைக்கப்படாத உழுந்துடன், பெருஞ்சீரகம், மா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துத் தயாராகும் பருத்தித்துறை வடை எவருடைய நாவையும் ஊறவைக்கும் சுவையுடையது.
மூன்று தசாப்தகால போரினால் அதிகளவு கவனிப்பாரற்றிருந்த இந்த வடைக்கு, போருக்குப் பின்னான இன்றைய சுறுசுறுப்பான யாழ்ப்பாணத்தில் மீண்டும் கிராக்கி அதிகரித்துள்ளது. "இப்பதான் நாங்கள் செய்துகொண்டிருக்கின்ற பருத்தித்துறை வடையால வருமானம் அதிகம் கிடைக்குது முன்பு இதிலை அதிக ஆதாயம் .ܦ இருக்கேல்லை. ஏ9 வீதி திறந்த பிறகு வெளிநாட்டால் வருபவர்களும், கொழும்பு மற்றும் ஏனைய இடங்களிலயிருந்து வாறவையும் நிறையத் தேடி வாங்கீனம். இதாலை, இப்ப வருமானம் கூடியிருக்குது' என்று மகிழ்கிறார், பருத்தித்துறை வடை சுட்டு விற்றுவரும் நெல்லியடியைச் சேர்ந்த கரதி என்ற பெண்மணி 茱 。芋
1987 ம் ஆண்டு லிபிறேசன் ஒபரேசன் இராணுவ நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே இவர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பக்கற் செய்தே இந்த வடைகள் சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. பைக்கற் ஒன்றில் 15 வடைகளைப் போட்டு 45 ரூபாவுக்குக் கொடுக்கின்றார்கள். கடைகளில் அவை 50 - 60 ரூபா வரையில் விற்பனையாகிறது.
38 瓦
 

திருமண வைபவங்கள் மற்றும் ஏனைய விஷேசங்கள் எனின், 100 வடை 150 ரூபாவுக்குச் செய்து கொடுக்கிறார்கள்.
"ஒரு நாளைக்குக் குறைந்தது 1 கிலோ உழுந்திலாவது வடை சுடுவம். இதில 400 வடை கிடைக்கும் ஒரு நாளைக்கு 1,200ரூபா வரையில கிடைக்குது. 900 ரூபா செலவு போக, 300 ரூபா மிஞ்சும் என்கிறார் அந்தப் பெண்மணி
இது வடையின் கதை. ஆனால், இந்த 6) GÖDEL- யைச் சுட்டுச் சீவிக்கும்
- ரதிக்கும் ஒரு தனிக்
கதை இருக்குதென்பது அவரோடு பேச்சுக் கொடுத்தபோது
தெரிந்தது
வடை வித்து வாற 300 ரூபாவைக் கொண்டுதான் நாங்கள் சீவியம் நடத்திறம். எனக்கு 2 பெண் பிள்ளைகள் உண்டு. கணவர் பிள்ளைகள் பிறந்தவுடனேயே என்னைத் தனியே விட்டுப் போய் வேற திருமணம் செய்துவிட்டார்” என்று தனது சோகக் கதையைக் கூற ஆரம்பித்த அவர்,
ஆரம்பத்தில ரொம்பக் கஷ்டப்பட்டன் இப்பதான் இந்தத் தொழில் மூலம் ஓரளவு நிம்மதி கிடைச்சிருக்கு 9ம் ஆண்டும் 7ம் ஆண்டும் படிக்கும் என்ர பிள்ளைகளுடைய படிப்பு மட்டுமில்லை, என்ர அம்மா, தங்கைமார் மூண்டுபேரும் என்னோடைதான் இருக்கினம். நாங்கள் எல்லாருஞ் சேர்ந்துதான் இந்தத் தொழிலை செய்யிறம் என்று முடித்தார். 48 வயதாகும் இந்தப் பெண்மணி, 8 வயதிலே தன் தந்தையாரை இழந்து, தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்துள்ளார். மந்திகை வைத்தியசாலையில் வேலைசெய்தே தமது தாயார் தன்னையும், தன்னுடைய ஏனைய 6 சகோதரர்களையும் வளர்த்ததாகப் பழைய நினைவுகளைவும் பகிர்கிறார் அவர்
வீட்டில் மூத்த பிள்ளையாகப் பிறந்த ரதி குடும்பச் சுமைகள் காரணமாகப் பாடசாலை செல்லவில்லை. இப்போது கணவராலும் கைவிடப்பட்டு, தனது தாயையும், மூன்று சகோதரிகளையும் வைத்துப் பராமரிப்பதற்கு அவருக்குக் கைகொடுப்பது இந்தப் பருத்தித்துறை வடைதான்.
பெயர் சொல்லும் வடை இவர்களின் வாழ்வையும் உயர்வுக்கு இட்டுச் செல்லட்டும்.
ப.ஜஸ்வர்யா
Tiña GốGLITLIñ 2O1O

Page 41
ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் அந்த நாட்டின் அரச கொள்கைகளுக்கும், அடிப்படைச் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டே வாழ்ந்தாகவேண்டும் சட்டம் என்பது ஒரு இன்த்திற்கோ அல்லது மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ மட்டும் பொருந்தும் ១១guffiស៊ உருவாக்கப்பட்டதல்ல. அது, ஒரு நாட்டின் குடி மக்கள் எல்லோருக்கும் பொதுவானது.
இது ஏதோ மேலேயிருந்து அரசாங்கத்தின் அல்லது சட்டத்தை அமுல்ப் படுத்தும் முகவர்களான காவல்துறை, நீத ம ன ற ம போன்றவற்றின்
சட்டத்தை
தேவைகளுக்காக உருவாக்கப்பட்டதல்ல. வீதிப் போக்குவரத்துச் சட்டம் என்பது வெள்ளைத் தொப்பி போட்ட காக்கிச் சட்டைக்காரர்களைக் 560i ital) மட்டும் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றல்ல. அவர்களுக்கு முன்னால் மட்டும் ஹெல்மட் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓடுவதும், கடந்ததும் அதைக் கழற்றிவிடுவதும் என்பது, எமக்குத்தான் ஆபத்தே தவிர, காவல்துறைக்காரருக்கல்ல. வீதி ஒழுங்கு முறைகளும், அதனை நடைமுறைப்படுத்தும் போக்குவரத்துக் காவல்துறையினரும், வீதிகளுடாக எமது பயணத்தை ஒழுங்குபடுத்தி, மற்றவர்களால் எமக்கும், எம்மால் மற்றவர்களுக்கும் தொந்தரவு ஏற்படாமல், விபத்துக்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் பணியையே செய்கின்றனர்.
இவ்வாறு எமது வாழ்வை ஒழுங்குபடுத்தும், எமக்குப் பாதுகாப்பளிக்கும் இந்தச் சட்டம் தொடர்பாக நாம் அறிந்திருப்பது மிக அவசியமாகும் குறிப்பாக, எமது உரிமைகள் எவை, அவை மீறப்படும்போது நாம்
என்ன செய்யவேண்டும், எமக்கு இழைக்கப்படும்
அநீதிகளுக்கெதிராக எவ்வாறான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம் என்பன பற்றியெல்லாம் அறிந்துகொள்வதற்கு சட்டம் பற்றிய அடிப்படை அறிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமானது. அரசியலமைப்புச் சட்டம் ஒரு நாட்டின் எல்லாச் சட்டங்களுக்கும் அடிப்படை அரசியலமைப்புச் சட்டமே. இதிலிருந்தே ஏனைய சட்டங்களும், துணைநிலைச் சட்டங்களும் தோன்றுகின்றன. கீழ்வரும் முக்கிய தலைப்புக்களின் கீழ் அரசியலமைப்பில் இந்தச் சட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கும். 1.மக்கள் இறைமை
2.அரச கொள்கை தத்துவம் 3.அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் 4.பாராளுமன்றம் 5.ஜனாதிபதி ஆட்சிமுறையும் அமைச்சரவையும் 6.விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை
7.மக்கள் தீர்ப்பு 8ஒம்புட்ஸ்மன் (குறை நிவர்த்தி அதிகாரசபை) 9.மொழியும் மதமும்
39
9、

Á6alAტ !
10.பொதுச்சேவை ஆணைக்குழு 11.நீதிச்சேவை ஆணைக்குழு 12:மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதி மன்றம்
இந்தத் தலைப்புக்களின் கீழ், நடைமுறைப்படுத்த வேண்டிய சட்ட ஏற்பாடுகள் விளக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அறுப்படை உரிமைகள் தொடர்பான சில சட்ட விளக்கங்கள்.
இது எமது அரசியலமைப்பின் 3 ஆம் அத்தியாயத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை உரிமை ஒன்று மீறப்படும்போது அல்லது மீறப்பட இருக்கிறது எனத் தெரியும்போது மேன்முறையீட்டு நீதி மன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பின் 126 ஆவது உறுப்புரைக்கு அமைவாக நபரொருவர் முறையீடு செய்ய முடியும்(நிறைவேற்று நிர்வாகத் துறையால் மீறப்படுகின்ற உரிமை மீறல்களுக்கு எதிராக)
அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சட்டத்தின் பாதுகாப்பும், அனுசரணையும் எமக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அதனைச் சரிவரப் பயன்படுத்தாமல் இருந்துவருகிறோம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் காணப்பட்ட சூழல், சட்டம் பற்றிய எமது தெளிவின்மைக்குக் காரணமாகிவிட்டது. அந்த நெருக்கடியான காலகட்டத்தில்கூட, சட்டம் தொடர்பான தெளிவு எமக்கிருந்திருக்குமேயானால், பல சிக்கல்களிலிருந்து நாம் எம்மைப் பாதுகாத்துக்கொண்டிருக்க முடியும்.
தொடர்ந்து வரும் இதழ்களில் எமககுத் தேவையான அடிப்படைச் சட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Vசுமதீஸ்வரன்
ஒக்டோபர் 2010

Page 42
45 வருடங்களுக்கு மேலாக கலைவழியே இறைபணி ஆற்றிக்கொண்டிருக்கும் யாழ் திருமறைக் கலாமன்றம், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் கலைஞர்களை உள்வாங்கி இன மத பேதம் கடந்து இலங்கையிலும், புலம் பெயர் நாடுகளிலும் கலைப்பணி ஆற்றிக்கொண்டிருக்கின்றது. நாடளாவிய ரீதியில் 10 தமிழ் மன்றங்களையும் 10 சிங்கள மன்றங்களையும் கொண்டு இயங்கிவரும் திருமறைக் கலாமன்றம், ஒவ்வொரு வருடமும் தமிழ்விழா, இலக்கிய விழா, முத்தமிழ்விழா, காப்பிய விழா எனப்பல விழாக்களைக் கொண்டாடி வருவதுடன், சகோதர மொழிக்கலைஞர்களுடனான ஊடாட்டத்தையும் ஊக்குவித்து வருகின்றது.
இளைஞர்களை திடுமறைக் கலி
1964இல் இயேசுவின் பாடுகளை ஆற்றுகை செய்வதுடன் ஆரம்பித்த இந்த மன்றம், நாடகம், நாட்டுக்கூத்து, சைநாடகம் வட்டக்களரி ஆற்றுகைகள், தெருவெ அரங்கு, சிறுவர் நாடகங்கள் என்று பல்வேறு ஆற்றுகைக் கலை வடிவங்களிலும் ஈடுபட்டு, தற்போது முத்தமிழ்
அரங்கையும் நடத்தி வருகிறது. இக் கலையகத்தின் இயக்குனர் பேராசிரியர் மரியசேவியர் அடிகளாரின் நீண்ட முயற்சியின் பயனாக, “கவின் கலை பயிலகம் ஆரம்பிக்கப்பட்டு, துடிப்புள்ள இளைஞர், யுவதிகளுக்கு நடனம், மிருதங்கம், வாய்ப்பாட்டு, கிற்றார், ஒகன், புல்லாங்குழல், வயலின் உட்பட பல்வேறு கலைத்திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களது ஆற்றுகைகள் மேடையேற்றப்பட்டும் வருகின்றன. இங்கே பயின்ற மாணவர்கள் பலர் அரங்கேற்றம் செய்திருப்பதுடன், 5 பேர் இராமநாதன் இசைநடனக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் உள்ளனர்.
* 4 & ? ā A話 リ
 

மன்றத்தின் அழகியற் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கலைக்கல்லூரி, நுண்கலைக்கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து நுண்கலைமாணி(B.FA) முது கலைமாணி(M.F.A.) பரதநாட்டியப்பட்டப்படிப்புக்களையும் 2006ம் ஆண்டு முதல் மேற்கொண்டு, பலர் இதில் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.
கலைமுகம் ஆற்றுகை ஆகிய இரு சஞ்சிகைகளையும் வெளியிட்டு வரும் திருமறைக் கலாமன்றம், பல்வேறு நூல் வெளியீடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவற்றுடன், இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் 200 வ-ை கயான நாட்டுப்புறப் பாடல்கள் இறுவெட்டுக்களாகவும் 300 பாடல்கள் புத்தகங்களாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
ს - 暮 峯 率 ਯ56 - தமிழ் கலைஞர்களிடையேயான ஊடாட்டத்துக்கான ஒரு
தூண்டுகோலாக, 2009
棗 D யாழ்ப்பாணத்தில் கண்டிய நடனப் பயிற்சிகள்
ஆரம்பிக்கப்பட்டு, 50 கலைஞர்கள் வரையில் பயிற்சியில ஈடுபட்டுள்ளனர். தென்னிலங்கைக் கண்டிய நடனக் கலைஞர்கள் விசேடமாக இங்கு வந்து பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
மன்றம் நடாத்தும் இயேசுவின் பாடுகள், சுமார் 200 250 கலைஞர்களின் பங்கேற்புடன் வருடா வருடம் காலத்துக்குப் பொருத்தமான ஒவ்வொரு பெயரில், 57 நாட்கள் மேடையேறி
வருகிறது
இவை மட்டுமன்றி. மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள், தியானம், சித்தாந்த வகுப்புக்கள், கணினி வகுப்புக்களையும் மன்றம்
நடத்தி வருகின்றது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சகோதர மொழிக் கலைஞர்களின் "மக்கள் களரி அரங்க ஆற்றுகையில் கலாமன்றத்தின் “அற்றைத் திங்கள்’ எனும் கூத்துருவ நாடகமும் தன் பங்களிப்பைச்
செய்தது.
செப்டம்பர் 25ம் திகதி ஆரம்பித்த இவ்வாண்டுக்குரிய மன்றத்தின் முத்தமிழ் விழா, ஒக்டோபர் மாதம் 24ம் திகதி வரையில், காலை, மாலை நிகழ்வுகளா 9 நாட்கள் நடைபெறவுள்ளது.
சி.ஜெயந்தி
ஒக்டோபர் 2010
se

Page 43
"தஞ்சாவூரு மண்ணு எருத்து தாமிரபரணி தண்ணியை விட்டு சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த GUTõGODLO.... இது பொம்மையில்லை பொம்மையில்லை உண்மை"
இந்தத் தஞ்சாவூர் பொம்மைக் கதை உங்களுக்குப்
புதியதல்ல. ஆனால், சண்டிலிப்பாய் மண் எடுத்து சங்கானை தண்ணியில் குழைத்துச் செய்யும் பொம்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமோ?
சங்கானைச் சந்தையில் உள்ள 'அரச இயந்திர LD56) 560)gluggal) (GOVT MECHANZED POTTERY
6 MULTIVIS 63oWS9 SIRašÓGIA) ಫ್ಲ್ಯೂ GUnšಎ\ಿ !
செய்யப்பட்டு
வருகின்றன. 2
"நல்லூர்த் திருவிழாவில் விற்பதற்காக இந்தப் பொம்மைகளுக்கு இங்குள்ள மாணவர்கள் அவசரமாக பெயின்ற் பூசுகின்றார்கள் என்று, அங்கு போன எமக்கு விளக்கம் தந்தார் நிலைய போதானாசிரியர் திரு ஆ திருச்செல்வம்
புத்தர், பிள்ளையார், கிருஷ்ணர், பாரதியார், அன்னம்
இ
ଗ1601 LiତD @1600 35uUTତ01 பொம்மைகளும் இவர்களின் கைவணன்னங்களில் உயிர்பெறுகின்றன.
இ
1956 ஆம் ஆண்டு குடிசைக் கைத்தொழில் இலாகாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அலங்கார பொருள்கள் நிலையம், தற்போது பிரதேச செயலகத்தின் பொறுப்பில் வாரத்தில் ஐந்து நாட்கள் இயங்கிவருகிறது. 18-25 வயதிற்கு உட்பட்டவர்கள் இங்கு மாணவர்களாக உள்வாங்கப்படுகிறார்கள். ஆறு மாத பயிற்சியின் பின், எழுத்து, செய்முறைப் பரீட்சை நடைபெற்று, சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
பயிற்சிக் காலத்தில் நாள் ஒன்றுக்கு 200 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. களிமண்ணில் உள்ள கட்டிகள், கழிவுப் பொருள்களை அகற்றிய பின்னர் இரண்டு நாட்களுக்குக் காயவைத்த மணன், கடலிலிருந்து பெறப்பட்ட மிருகக் கல்லுடன் சேர்த்து பெல்மில்லில் (Bal Mil) அரைக்கப்படுகிறது.
41 - - 歴
 
 

அரைத்து, அரித்த மண்ணை தண்ணிரில் குளைத்து, இரண்டு நாட்கள் புளிக்கவிட்டபின், பிளாஸ்ரிக் பரிஸ் அச்சுக்களில் அவை பிரதியாக்கம் செய்யப்படுகின்றன.
இந்த அச்சு உருவங்களை இரண்டு நாட்கள் வெயிலில்
காயவைத்தபின், தேசிய சூளையில் உள்ள
6) ஜ வலைக்குள் வைத்து, வெப்பம் வெ
S26V6) ளியேறாமல் வைக்கோலும், கரைத்த
மண்ணும் ஊற்றிச் சூடாக்கப்படும்.
\69 இரண்டு நாட்கள்
இஇஇஇ கழித்து சூளையில்
இருந்து எடுக்கப்படும் து.சுஜிதா @_Tb១pgគោ
வர்ணப் பூச்சுக்களால் உயிர்பெறும் இனிவரும் நாட்களில் காகிதக் கூழில் பொம்மை செய்யும் ஏற்பாடுகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"பானை, சட்டி, அரிக்கன்சட்டி, கூசா, குடம், ஊறு காய் நிரப்பி போன்ற பாவனைப் பொருள்கள் முன்பு சங்கானைக் கிராமத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த இடத்தைச் சூழவும் இருந்த இவ்வாறான பானை சட்டி செய்யும் பல இடங்கள், போரினாலும், மாற்று உலோக பொருள்களின் உற்பத்தியாலும் படிப்படியாகக் கைவிடப்பட்டுவிட்டன என்கிறார் இந்த நிலையத்தின் போதனாசிரியர் ஆ. திருச்செல்வம்
போருக்குப் பிந்திய இன்றைய சூழலில், உள்ளூர் உற்பத்திகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்போமே ஆனால், எங்களுடைய இந்தப் பாரம்பரியத் தொழில்கள் மீண்டும் உயிர்பெற்று, எமது பிரதேசத்தின் தன்னிறைவுப் பொருளாதாரத்துக்குக் கைகொடுக்கும்.
சிலைகளின் விலைகள்:
புத்தர் {{} Lisiggឆ្នាំ រ៉ា 80 கிருஸ்ணர் 80 பாரதி O
ஒருசோடி அன்னம் | 0
8.
gó6Luf 2010

Page 44
Tயிற்றுத் தொகுதியில்
அழகான கோள நமது பூமி. இந்தப் பூமியில் உயிரினங்கள் காணப்படுவதற்கு இந்த நீரே ஆதாரமாக இருந்து வருகிறது. உலக நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி நீரேயாகும். உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையின் 100கோடி பேர் தாழ்வான பகுதியிலேயே வசிக்கிறார்கள் என்று புள்ளிவிபரமொன்று கூறுகின்றது.
கடல் நீர்மட்டம் திடீரென உயர்ந்தால்
உலகம் முழுவதும் 37லட்சம் சதுர மைல் பரப்பளவு நீரில் மூழ்கி, சுமார் 30கோடி பேருக்கு ஆபத்தை ஏற்பத்தும் என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 8அங்குலம் வரையில் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. 2025க்குள் உலக கடல் மட்டம் 10-25 அடி உயரும் என்று உலக கடல் மட்ட அமைப்பு எச்சரித்துள்ளது. அடுத்த 100ஆண்டுகளில் கடல் மட்டம் 11மீற்றர் அளவுக்கு உயரும் என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2100ம் ஆண்டில்
சர்வதேச அளவில் 35L6)LDLLLD
0.54மீற்றர்
உயரும்
石TGT
யாழ்ப்
பருவநிலை மாற்ற விடுத்துள்ளது.
புவி வெப்பம6 பிரதேங்களில் உ படலங்கள் உருகு
மட்ட உயர்வுக்குச்
வான்பரப்பில்
3
O
ஒசோன் LoLa
வளிமண்டல வெட் பூமி வெப்பவிரிவு துருவப் பிரதேசங் Lafli Laoigai g கலக்க, கடல்மட்ட தொழில்நுட்பங்களு விவசாய நடவடிக் வாகனப்புகை, கா என்பவற்றாலும் பு
வெப்பம் அ
2004 இந்ே ஏற் 5
 
 
 
 
 
 

க்குழு எச்சரிக்கை
டைவதால் துருவப்
fion Lafii
வதே கடல்
காரணமாகிறது.
Affga Piggingig
8-3...
சேதம் ஏற்பட்டு பம் அதிகரித்து அடைவதால், களில் உள்ள டருகி கடலுடன் ம் உயர்கின்றது. நடன் கூடிய நவீன கைகளாலும், டு அழிப்பு விப்பரப்பில் திகரிக்கிறது.
ம் ஆண்டு தானேசியாவில்
பட்ட நில நடுக்கம்
பேரலைகள் தோன்றினால், கரையோரங்களில் பல விதமான பாதிப்புகள் ஏற்படும். இந்துசமுத்திரத்தில் கடல்மட்டம் உயர்ந்தால் இலங்கை,
மாலைதீவு, இந்தோனேசியா போன்ற நாடுகள் ஆபத்துக்குள்ளாகும்.
இந்துசமுத்திர கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படும் வங்காள விரிகுடா, வருடத்தில் 3மில்லிமீற்றர் கடல்மட்ட உயர்வைச் சந்திக்கிறது. அடுத்த நுாற்றாண்டில் 988சென்ரிமீற்றர் இது உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்துசமுத்திரப்
பிராந்தியத்துக்குத் தோன்றியிருக்கும் இந்த ஆபத்து, அதனகம் அமைந்துள்ள குட்டித்தீவான இலங்கையை சும்மா விட்டுவிடாது. 2004ம் ஆண்டு சுனாமியால் - இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புக்கள் இதற்கு நல்ல உதாரணம்
1770 கிலோ மீற்றர் நீளமுள்ள நீண்ட கரையோரத்தைக் கொண்ட இலங்கைத் தீவு, கடல்மட்ட உயர்வுக்கு தீவிரமாக முகம்கொடுக்கும் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
(பக்கம் 44ஐப் பார்க்க.
gd5(3LTuf 2010

Page 45
அழகாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோருமே விரும்புகிறோம். யாருக்குத்தான் அழகாய் இருக்க ஆசையிருக்காது.
அழகாக இருக்க வேண்டுமானால், நாம் 'உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று சொல்வது போல், முதலில் தலையிலிருந்தே அழகும், ஆரோக்கியமும் ஆரம்பிக்கவேண்டும்.
தலைக்கு அழகு சேர்ப்பது
ಬ್ಲೌ ಕೆ' வைத்திருக்கவும், 2 ഉ\}\}: };
O Ôሎጓ  ̈ ٤^('رلD
பாதுகாக்கவும், நரைபடாமல் வைத்திருக்கவும் நாம் படும் பாடுகள்தான் எத்தனை. தலைமுடி தொடர்பான எமது இந்தக் கவலைகள் எல்லாம் தீர வேண்டுமானால், அதை நாம் ஆரோக்கியமாகப் பேணவேண்டும் தலைமுடியை சீராகக் கவனிக்காவிட்டால், பொடுகு வரும் சாத்தியமும் உண்டு.
இதோ தலைமுடியைப் பாதுகாக்கச் சில ஆலோசனைகள்
தலைமுடி பொதுவாக நான்கு வகையானது.
சாதாரணமானது
2.வரண்டது
3.எண்ணெய்த்தன்மையானது 4.ஒவ்வாமையுடையது.
இதில், வரண்ட தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று முதலில் பார்ப்போம்.
எண்ணெய்த்தன்மை இல்லாத காரணத்தினால் தலைமுடியும் வரண்டு போகிறது. ஒவ்வொரு நாளும் தலைக்கு எண்ணெய் பூசவேண்டும். மாணவர்கள், வேலைக்கு செல்வோர், குறைந்தது 1, 2 துளி எண்ணெய்யா வது உச்சந்தலையில் பூசிக்கொள்ள வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாட்களாவது முடியை சிக்கின்றி வாரி விட்டு எண்ணெய் நன்கு வைத்து கேசத்தின் அடி வரைக்கும் பூசித் தாமாகவோ அல்லது பிறரின் உதவியுடனோ மசாஜ் செய்து கொள்ளவேண்டும். 10 நிமிடம் கழித்து சீப்பின் பெரிய பல்லால் நன்கு வார வேண்டும் சீப்பின் சிறிய பல்லால் 10 தொடக்கம் 30 தடவைகள் வரையில் வாரவேண்டும். இதுவும் முடிக்கான ஒரு மசாஜ் தான்.
43 园

2 மணி நேரத்தின் பின் கறிவேப்பிலை ஒரு பிடி செவ்வரத்தம் இலை ஒரு பிடி, தாமரை இலை ஒன்று, வெந்தயம் ஒரு கைப்பிடி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, பாதி தேசிப் புளி கலந்து பசையாகக் குழைத்து தலை முழுவதும் பூசிக் கொள்ள வேண்டும் 10 அல்லது 20 நிமிடம் கழித்து தலையைக் கழுவவேண்டும்.
இதன்பின், தேவையாயின்
சம்பூ அல்லது சிகைக்காய்
பயன்படுத்தி
தோயவும்.
O
வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து
O
தலையும், முடியும் வரட்சி
அடையாமல் குளிர்மையாக இருக்கும். அத்துடன் முடி பளபளப்பாகவும் காணப்படும்.
ஆலோசனை: கலாலயா
தொகுப்பு : கார்த்திகா
ஒக்டோபர் 2010

Page 46
இருப்பதால் அ6
(42ம் பக்கத் தொடர்ச்சி)
தீவின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ் குடாநாடு, முழுத் தீவிலேயே அதிகளவு ஆபத்தைச் சந்திக்கக்கூடிய நிலையிலுள்ளது. பல கடல் நீர்
ஏரிகளையும் கண்டமேடுகளையும்
கொண்டு, சூழவும் நெடுந்தீவு, நயினைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, ஐயன் தீவு, எழுவைதீவு, ஊர்காவற்துறை, காரைநகர், மண்டைதீவு, காரைதீவு என தீவுக்கூட்டமாகவே குடாநாடு உள்ளது. பாக்கு தொடுகடல், கருடன் தொடுகடல், மணிப்பல்லவக் கடல், பண்ணைக் கடல், பொன்னாலை வற்றுக்கடல் என்பனவும் இதைச் சூழவுள்ளது.
குடாநாட்டைச் சூழவுள்ள
தீவுகள் பெரும்பாலும்
ஆழ்கடலில
Rராஜிதா
அன்பு வாசக நெஞ்சங்களே,
ஆபத்தை எதிர்ே அதுமட்டுமல்லா பல கடல் நீர் ஏ வாய்ப்புக்களும் கடலிலிருந்து மி வடிந்து தேங்குப் ćБL-60LDL LLD GO U J
கடல் நீரேரிகள்
கரையோரங்களி உட்புகுந்ததால் கலந்து நன்னீர் அடைகிறது.
35L6Ù LDLL - g பிரச்சினையால் தொழிலும் பாதி நெல்வயல் நில
芭
0 0 0 0 0 0 0 0 0 0 0
நீங்களும் பங்
சிகரம் ஊடக இல்ல மாணவர்களின் இந்தப் படைப்ை சில நிமிடங்கள் சிகரம் தொடு வின் வளர்ச்சிக்காக
1.சிகரம் ஊடக இல்ல மாணவர்களின் ஆக்கத்திறன் 2.இதழ் வடிவமைப்புப் பற்றி உங்கள் கருத்து என்ன? 3.இந்த இதழில் நீங்கள் விரும்பி வாசித்த அம்சங்க 4.இதில் தவிர்த்திருக்கக்கூடிய விடயங்கள் என்று நீ 5.அருத்து வரும் இதழ்களில் என்ன விடயங்களை ே
மேலுள்ள வினாக்களுக்கான விடைகளுட உங்கள் ஆலோசனைகளை எழுதி அனுப்பு
44
园
F、经
 
 
 
 
 

வை கடலில் மூழ்கும் காண்டுள்ளன. கரையோரப் பிரதேச மக்களுடைய து. யாழ்ப்பாணத்தின் விவசாயம் பாதிப்படையும்.
ரிகள் அழிவுறவும்
உள்ளன. கரையோரங்களில் அதிகளவு
- மக்கள் இருப்பதாலும், 'ಸ್ತ್ರ್ಯ கட்டிடங்கள், பெரும் வீதிகள்,
驚 உல்லாசப் பிரயாண விடுதிகள் : இருப்பதாலும் கடலரிப்பு) னுள் நீர் மற்றும் வெள்ளப்பெருக்குக்கான 蠶னிருடன் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.
இவ்வாறு, வளமுள்ள கரையோரப் பிரதேசம் அழிவதால் ஈரவலயப் பிரதேசங்களுக்கும் உயர்வுப் வெள்ளப்பெருக்கு அபாயமுள்ளது. மீன்பிடித் க்கப்படுவதுடன், வ்களும் உவர்ப்புத் ன்மை அடையும்.
உவர்ப்புத் தன்மை
கடல் மட்ட உயர்வினால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பாக ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளினூடாகவும் இந்த விழிப்புணர்வு பரவலாக்கப்படவேண்டும் கடற்கரையோர மண் மற்றும் முருகைக்கல் அகழ்வை மேற்கொள்பவர்களுக்கு மாற்று வேலைகளை வழங்குதல், மரங்கள் வெட்டுவதைத் தடுத்து மண்ணரிப்பைக் கட்டுப்படுத்தல் என்பனவும் இதில் முக்கியமானது. இவற்றையெல்லாம் செய்து எமது குடாநாட்டை நாம் பாதுகாக்காவிட்டால், எமது எதிர்கால சந்ததி வாழ்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாடு என்றொரு
நிலப்பரப்பே பூமிப்பந்தில் இல்லாமல் போய்விடலாம்.
D. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O.
காளியாகுங்கள்
வாசித்துவிட்டீர்களா? மூடி வைக்க முன் ஒதுக்குங்கள்
ກໍ ສeຫລ? ங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? மலும் சேர்க்ககலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
சிகரம் தொ ஆக்கக் குழுவினர், கரம் ஊடக இல்லம், இல, 221, பலாலி வீதி, 。, 蠶 யாழ்ப்பாணம் Slaigo76536); sikaramthodu.agmail.com
sTiñ 2OO ,58 دعص= óULO : ஒக

Page 47
நவீன தொழில்நு
DOILöbd
IT ORIENTED JOU I
அச்சு - வானொலி - தொலைக்காட்
ES 용 ( ) 률
சிறந்த தேர்ச்சி வழங்கும் 3 மாத கா: > விரிவான கையேடுகள்
> கணினி - இணைய
>Audio - Video Lab > Ba
நவீன ஒளிப்பட
D ஒளிப்படக் கலை அடிப்படைகள் O சகலவிதமான படப்பிடிப்பு உத்தி O SLR, Digital Camera Techniq O Photo Editing O Studio, Lob Trainings And in
ாழில்வ ய்ப்புக்கு உத்தரவாத
৪×৪ 簇移
ളൺ. 221. uബrജി ഖട്ടി, 8 தொ. பே: 02
 
 
 
 

ட்பத்துடன் கூடிய
RNALISM COURSE 5.
சி - இணைய ஊடக நுட்பங்களில் 0 உலகத்தரம் வாய்ந்த கற்கைநெறி > நூலக வசதி 8: ஆய்வுகூடம்
usic Photography .
க்கலைப் பயிற்
ideo Editing
00 வீடியோப் படப்பிடிப்புத் துறையில்
மான செயன்முறைப் பயிற்சி
135 636.5 6OL 5, . ந்தர் மடம், யாழ்ப்பாணம்
3OO 8O 6O

Page 48

49 ܓ݂ܠ ܠܐܝܢܔܠ