கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2011.05-06

Page 1


Page 2
தாண்டன்
G&LD, Eg var 2011 )
LDGADử: 43 இதழ் 04
%
ஆசிரியர்
றொஹான் பேனார்ட்
இணை ஆசிரியர் 须
மலர்வேந்தன் %
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லியோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம்
A.S.யோகராஜா
கணினி வடிவமைப்பு
நிரோன்
வெளியீடு
சமூகத் தொடர்பு நிலையம். திரு / மட் மறை மாவட்டம்
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44 மட்டக்களப்பு.
பதிப்பகம்
வணசிங்கா அச்சகம் மட்டக்களப்பு.
※
公 多 2/ン
ஆக்கங்களுக்குப் பொறு
SOCIAL COMMUNICATIONS CENTRE P. O. BOX - 44 BATTICALOA. TEL: 065 - 2226486 E.mail: scotribattiOgmail.com
 
 

後
分 அன்புடன் உங்களோடு. . . . O 2.
4 திருத்தந்தை இரண்டாம் O2
2 பணிவாழ்வில் வெள்ளிவிழா O3 须
வாழ்வுக்கு.. ●4
ப்பு அளித்தவர்களே (ஆர்)
விலை : 25/= ஆண்டு சந்த 400/=
(தபாற்செலவு உட்பட)
2 ஈழத்தை அளந்த புனிதன் 06 後 戮 எழுத்தும் எழுத்தாளனும் : ... 07
% ● 2 கடுகுக் கதை
இன்றைய உலகில். . . : 12
தொண்டனின் சில நிமிடங்கள் :
s
விருது.. (சிறுகதை) 16
t சமுகச் சாரல் 18
இலக்கிய மஞ்சரி 20
நானும் வாழ்ந்தவள் தான் 22
& 6oo D (pabes) 23
எண்ணிப்பார்க்கையில். 26
விவிலியம் கற்போம் 27
அறிவை வளர்ப்போம் 28

Page 3
©1@াঁL|Lবোঁ 2
LDTத ஏடான தொண்டன் இம்முறை இருமாத ஏடாக மே, ஜூன் ஆகிய இரு மாதங்களையும் இணைத்து வெளிவருகிறது. இது தவிர்க்க முடியாதுபோன தற்காலிக இணைப்பு. தொண்டன் தொடர்ந்தும் ஒவ்வொரு மாதமும் உங்கள் கைகளில் வரும். படைப்பின் ஊற்றாக விளங்குவது தாய்மை. படைப்பின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் ஊட்டந் தருவதும் தாய்மைதான். அதனால்தான் தாய்நாடு, தாய்மொழி என்றெல்லாம் கூறுகின்றோம்.
அன்னை மரியா புதுப்படைப்பின் தாய். நமது விசுவாச வாழ்வுக்கும் இறை உறவுக்கும் அவரே வழிகாட்டும் விளக்கு. நம்பிக்கையோடு நடப்போம்; தாய்மை வாழ்வு தரும்.
அந்த வாழ்வு அவரது திருமகனின் தியாகத்தின் மூலமாக நமக்கு வருகிறது. இரத்தமும் தசையுமாகத் தன்னைக் கொடுத்த அந்த மாபெரும் நிகழ்வை ஜூன் மாதத்தில் திருச்சபை கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா என்னும் பெயரில் விழா எடுத்துக்
 
 
 
 

Iridi(86TTCB.
கொண்டாடுகிறது.
'கொடுத்தல்' என்பது கடவுளின் செயல். இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கூறும் கடவுளின் கொடுத்தலுக்குச் சான்றாக விளங்குகின்றன. தன்னலமற்ற கொடுத்தலில் கடவுளின் அந்த அன்புச்செயல் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தன்னலத்தால் கொடுத்தல் மறுக்கப்படும் போதெல்லாம் கடவுளுக்கு, அவரது திட்டத்திற்கு, இயற்கைக்கு எதிரான கொடுஞ் செயலால் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் துன்பங்கள், அழிவுகள், அவலங்கள்!
அன்னை மரியாவின் வாழ்வும் அவரது மகன் இயேசுவின் வாழ்வும் தம்மை மறுத்து கடவுளின் திட்டத்திற்குத் தம்மைக் கொடுத்த வாழ்வு. விளைவு உயிர்ப்பு - உலக மீட்பு.
இதையிட்டுத் தொடர்ந்து சிந்திப்பது நமது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அவசியம்.
வழியை நான் அறியச் செய்வேன்; லையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உமது வலப்பக்கத்தில் எப்போதும்
பேரின்பம் உண்டு”
(திபா 16:11) ノ

Page 4
6ෂුnෆ්ෆා ගනී. (-
திருத்தந்தை இரண்டாம்
GBgag:TG GEBILITGö
அருளாளராக மே முதல் நாள் அறிவிப்பு
1920ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி
போலந்தின் வாதோவிச் என்னுமிடத்தில் பிறந்தார் நம் திருத்தந்தை இரண்டாம் ஜோன் போல். 1946ம்
ஆண்டு குருவாகவும், 1958ல் ஆயராகவும் திரு
நிலைப்படுத்தப்பட்ட இவர், 1964ல் கிராக்கோவின்
பேராயராக நியமிக்கப்பட்டார். இவர் தனது 47ம் வயதிலேயே அதாவது 1967ம் ஆண்டே திருத் தந்தை ஆறாம் பவுலால் கர்தினாலாக உயர்த்தப் பட்டார். திருத்தந்தை 6ம் பவுல் 1978 ஓகஸ்ட்
மாதம் இறைபதம் சேர்ந்தார். அதற்கு அடுத்து வந்த திருத்தந்தை முதலாம் ஜோன் போலும் 331 நாட்களிலேயே மரணமடைந்ததைத் தொடர்ந்து
1978ம் ஆண்டு ஒக்டோபர் 16ல் திருந்தந்தையாகத் தேர்ந்தெடுக்கபட்டார் கர்தினால் கரோல் வொய் திவா. திருத்தந்தை இரண்டாம் ஜோன் போல்
என்ற பெயரை எடுத்துக்கொண்ட இவர், தன் இரு ெ பத்தாறரை வருட திருத்தந்தை பதவிக் காலத்தில் உ 104 வெளிநாட்டுத் திருப்பயணங்களையும், இத்
தாலிக்குள் 146 திருப்பயணங்களையும் | மேற்கொண் டுள்ளார். உரோமையின் ஆயர் என்ற '
முறையில் அம்மறைமாவட்டத்தின் 3331 பங்குத்தளங்களுள் 317ஐ சென்று சந்தித்துள்ளார்.
இறையடியார்கள் 482 பேரை புனிதர்களாகவும் 1338
பேரை முத்திப் பேறு பெற்றவர்களாகவும் ? அறிவித்துள்ளார். அதிக காலம் திருச்சபையை: வழிநடத்திச் சென்ற திருத் தந்தையர்களின்|
வரிசையில் மூன்றாம் இடத்தை வகிக்கும் நம் நி திருத்தந்தை இரண்டாம் ஜோன் போல் தன் அ
பதவிக்காலத்தின் போது நடத்திய 1160အံဗာကံ (ငြိမ်
 
 
 

- Sir 2011 மேற்பட்ட புதன் பொது மறைபோதக நிகழ்வுகளில் மட்டுமே 1.76 கோடிக்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்துள்ளார். இளைய சமுதாயத்தின் மீது அதிக அன்புகூர்ந்து செயல்பட்ட இத்திருத்தந்தை 2005ம் ஆண்டு ஏப்ரல் 02 அன்று இறைபதம் சேர்ந்தார்.
புனிதர் நிலைக்கு உயர்த்தும் நடவடிக் கைகளுக்கு பொறுப்பான வத்திக்கான் பேராயத் தலைவரான கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, இத்திருத்தந்தைக்கான முத்திப்பேறு பட்டமளிப்பு பற்றிக் குறிப்பிட்டபோது இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜோன் போல் வரலாற்றிலோ அல்லது திருச்சபையிலோ ஏற்படுத்திய தாக்கத்திற்காக அல்ல, மாறாக பற்றுறுதி, நம்பிக்கை, அன்பு ஆகிய கிறிஸ் தவப் புண்ணியங்களை அவர் வாழ்ந்த விதத்திற் காகவே முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட விருக்கிறார் என்று தெரிவித்தார். இத்திருத்தந்தை இறந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 2 அன்றே இவர் புனிதர் என்று இறைமக்கள் பறைசாற்றத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மக்கள் அவரது கல்லறையைத் தரிசிக்கின்றனர். Ο
உலக அமைதி N ஒக்டோபரில் திருத்தந்தை,
பிற சமயத் தலைவர்களுடன்
அசிசியில் செபம்

Page 5
பணிவாழ்வில் வெ நமது அருள்
திருகோணமலை - மட் அருள்தந்தை கிளமென் இம்மானுவல் ஆகியோர் பணிவாழ்வில் இருபத்தி 8তেন্তো-6তো,
தற்போது கல்கு அன்னதாளில் அடிகளார் பொறுப்பான பணிகளை குருமடத்தில் விரிவுரைய 9lgóGTG5LD LD60pLDT6)IL புரிந்தவர். ‘வெட்டாப்பு குறிப்பிடத்தக்கது. மறை இன்று வெள்ளிவிழாக் க வாழ்த்துகளைத் தெரிவி உயர்ந்திட இறையருள்
ஒன்றிணைந்து உழைப்பதற்கும் பல்சமய உரையாடலை மிக உயரிய பாதையாகக் கைக்கொள்ளலாம் என்று வத்திக்கான் பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜீன் லூயிஸ் டாரன் கூறினார். புத்த மதத்தினர் சிறப்பிக்கும் வெசாக் விழாவை முன்னிட்டு உலகின் எல்லாப் புத்த மதத்தினருக்குமென வத்திக்கான் பல்சமய உரையாடல் அவை வெளியீ புத்த மதத்தினருக்கு அமைதியையும் மகிழ்ச்சியை செபிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமைதி உண்ை இருக்கும் உறவு பற்றிக் குறிப்பிட்டு, உண்மையான உண்மையைத் தேடுவதற்கான அர்ப்பணம் மிகவு இந்த வெசாக் விழா ஜப்பானில் ஏப்ரல் 8ம் திகதியு நாடுகளில் மே 10ம் திகதியும் தாய்லாந்து, இலங்ை நாடுகளில் மே 17ம் திகதியும் கொண்டாடப்பட்டது அடைந்தது, அவரின் இறப்பு ஆகியவைகளைக்
 
 
 
 
 

ள்ளிவிழாக் கண்ட தந்தையர்கள்
டக்களப்பு மறைமாவட்டத்தைச் சேர்ந்த ம் அன்னதாஸ் மற்றும் அருள்தந்தை நோயல் கடந்த மே மாதத்தில் தமது குருத்துவப் யைந்து ஆண்டுகளை நிறைத்து வெள்ளிவிழாக்
டா பங்குத்தந்தையாகப் பணிபுரியும் கிளமென்ற் பங்குப் பணிகளுடன் மறைமாவட்டத்தில் பல பும் ஆற்றியவர். தற்போது அம்பிட்டிய தேசிய ாளராகப் பணியாற்றம் நோயல் இம்மானுவல் படத்தில் ஏற்கனவே பல முக்கியமான பணிகளைப் பத்திரிகையை ஆரம்பித்தவர் இவர் என்பது மாவட்ட வளர்ச்சிக்காகப் பலபடப் பணியாற்றி ண்டுள்ள இருவருக்கும் தெள்ண்டன் தனது ப்பதோடு பணிவாழ்வில் மேலும் வளர்ந்து வேண்டுகிறான்.
அமைதியை → — b அவசியம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. b கொரியா, சீனா, தாய்வான், வியட்நாம் ஆகிய க, கம்போடியா, பர்மா, லாவோஸ் ஆகிய
赛

Page 6
தொண்டின் (-
(இன்பியம் என்பது வாழ்வின் அத்தனை அம்சங்களையும் இறைவார்த்தையின் ஒளியில் வாழ முற்படும் ஒரு குட்டித் திருச்சபை, அல்லது, இறைவார்த்தையின் விழுமியங்களில் இணைந்து வாழும் இறைமக்கள் கூட்டம் அல்லது அன்புச் சமூகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
அன்பியங்கள் காலத்தின் கட்டாயம். அன்பியங்களைப் புறக்கணிக்கும் திருச்சபை எதிர்காலம் இல்லாத திருச்சபை. இவை ஆயர்கள், இறையியலாளர்களின் கூற்றாகும். அன்பு என்றால் கிறிஸ்து இயேசு, அன்பிய வாழ்வு என்றால் கிறிஸ்தவ வாழ்வு. எனவே அன்பியங்களில் வாழ்பவர்கள் கிறிஸ்து இயேசுவோடும், கிறிஸ்து இயேசுவுக்குள்ளும் இணைந்து வாழ்பவர்கள் ஆகின்றார்கள்.
இறை இயேசுவின் இலட்சியம் இறையரசு. திருச்சபையின்
இலட்சியமும் இறையரசுதான். அன்பியங்களின் இலட்சியமும் இறையரசுதான். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' (மாற் 1:15) என்ற அறைகூவலோடுதான் இயேசுவின் பணிவாழ்வு ஆரம்பமாயிற்று. இயேசுவில் ஆரம்பித்த இறையரசுப் பணி ஆதிகாலத் திருச்சபையிலும் பரவி வளர்ந்து வந்ததை தி.ப 2:42-47, 4:32-34 ஆகிய பகுதிகளிலும் காணலாம். கால ஓட்டத்தில் இறைவார்த்தைகள் மையப்படுத்தப்படாமல் சட்டங்களும் சடங்குகளும் உள்வாங்கப்பட்டதனால் தொலைந்துபோன அன்பின் தேடல்தான் அன்பியங்கள். மனிதவாழ்வின் ஏக்கங்களுக்கும் தேடல்களுக்கும் பெரிய குழுக்களில் விடைகாண்பது கடினமாக இருப்பதனால் சிறு குழுக்களாகச் செயல்படுவதே இயேசுவின் இலட்சியத்தைச் செயல்படுத்தவும் இலகுவாக்கவும் ஏதுவாக அமையும் என்ற காரணத்தினாலே அருகருகே இருக்கும் பத்து அல்லது பதினைந்து குடும்பங்களாக ஒன்று சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பினாலும், பணியினாலும் இறைவார்த்தைக்கு செயல் வடிவம் கொடுக்கிறார்கள். இன்ப துன்பங்கள், பிரச்சினைகள், கவலைகள், வேதனைகள், ஏக்கங்கள் என எல்லா
 
 
 
 
 
 
 
 

கூறி துன்பத்திலும் துயரத்திலும் ஒருவரை ஒருவர் தாங்கி அன்பினைப் பகிர்ந்து அன்பினால் இணைந்து வாழும் அன்புச் சமூகம். இப்படியான அன்புச் சமூகத்தை ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில் உருவாக்கிட முடியாது. காலங்கள் எடுக்கலாம். ஆனாலும், இறைவன் விரும்பிய இறையரசைக் கட்டியெழுப்பும் சிற்பிகள் நாங்கள் என எண்ணி முழு ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவரை ஒருவர் மன்னித்து, விட்டுக்கொடுத்து உண்மை அன்புடன் வாழும்பொழுது இறைவனின் இலட்சியமான
இறையரசு எம்மில் உருவாக ஆரம்பித்துவிடும்.
ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து ஒரு மனத்தவராயிருக்கும் பொழுது இறைவன் இயேசு எம்மத்தியில் வாழ்ந்து எம்மையும் ஆட்சி செய்வார். இரண்டு மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறார்களே அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் (மத்18:19-20) என்று இயேசுவே உறுதியாகக் கூறியுள்ளார். எம்மத்தியில் இயேசு ஆட்சி செய்கிறார் என்றால் அங்கு அன்பு, அமைதி, நீதி, மன்னிப்பு, சகோதரத்துவம், சமத்துவம் அனைத்துமே ஆட்சி செய்யும். இதுவேதான் இயேசு விரும்பிய இறையாட்சி ஆனாலும் இறையாட்சி உலக முடிவில்தான் தோன்றும் என எண்ணி பலரும் ஏமாந்துபோய் அன்பியங்களில் இணைந்துகொள்ள மறுக்கின்றார்கள். ஆனாலும் ஒன்றை அவர்கள் மறந்து போகின்றார்கள். இறைவனுடைய இரண்டாம் வருகை வெகு சீக்கிரத்தில் என்பதையும், நாம் உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை, தீமைக்குக் கைமாறு பெற்றுக்கொள்ளுமாறு ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாகவேண்டும் (2கொரி 5:10) என்பதையும் உணர்ந்து, நாம் அனைவரும் அன்பியங்களில் இணைந்து முழு ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் ஒன்றாகப் பாடுபட்டு

Page 7
ஏனெனில் இறையாட்சி பேச்சில் அல்ல செயல்பாட்டில்தான் இருக்கிறது (1கொரி 4:20).
இந்த நாட்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள். அறிவிலிகளாய் இராமல் ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள் (எபே 5: 16-17). இதுவே தகுந்த காலம் இன்றே மீட்பு நாள் (2கொரி 6:2) இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்கள் என்றால் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்
திருச்செபமாலைப் ஒரு
1571ம் வரு 圭 அன்று மாதத் ஒஸ்ரிய நாட்டு போரில் மகத்த
நிறைவுபடுத்த மாதா' என வி இவ்விழாவினை மாற்றினார். 1716
தோற்கடித்தது. இ இருந்தது. அதேே செபமாலைச் சை இருந்தனர். விை பாப்பரசர் பத்தாம் திருச்சபையை தி கேட்டுக்கொண்ட நகரில் இதை ந6 லியோ அதிபரிசுத் எனும் வாக்கியத்
செபமாலை , ஆ சொல்லும் வி கற்றுக் கொ அளப்பரியது. திருச்செபமாலை கைக்கொள்வோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= (്ഥ - ജൂ (எபி 4:7). நமது மீட்பு நமது வாசல்வரை வந்துவிட்டது. இனியும் தாமதிக்காமல் இறைவனின் சத்தத்திற்குச் செவிகொடுத்து அன்பியங்களில் இணைந்து நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்.
வாழ்க அன்பியம் வளர்க இறையரசு
e எஸ். செல்வராஜா
Lம் ஐப்பசித்திங்கள் 7ம் நாள் தின் முதல் ஞாயிறாக இருந்தது. அதே தினத்தில் மன்னன் டொன் யுவான் துருக்கியருக்கெதிரான ான வெற்றி பெற்றான். திருச்செபமாலை பரிந்துரையால் பெறப்பட்ட இவ்வெற்றியை பாப்பரசர் புனித ஐந்தாம் பத்திநாதர் "வெற்றி ழாவெடுத்துச் சிறப்பித்தார். பாப்பரசர் 13ம் கிறகரி ாத் திருச்செபமாலை அன்னையின் பெருவிழாவாக ம் வருடம் இளவரசர் யூஜினின் கீழ், சக்கரவர்த்தி ட பெல்கிரேட் நகருக்கருகில் துருக்கியரைத் இத்தினம் பனிமய மாதாவின் திருவிழாவாக நேரம் படையினரின் வெற்றிக்காகப் பரிசுத்த பயினர் உரோம் நகரில் செபித்த வண்ணம் ரவில் கோசிராவில் துருக்கியர் பின்வாங்கினர்.
கிளமன் இதன் நினைவாக உலகத் ருச்செபமாலை திருவிழாவாகச் சிறப்பிக்குமாறு ார். பாப்பரசர் பதினான்காம் பெனடிக்ட் உரோம் டைமுறைப்படுத்தினார். பாப்பரசர் பதின்மூன்றாம் த செபமாலை மாதாவே எமக்காக மன்றாடும்' தை உருவாக்கினார். 1961ம் வருடம் இவ்விழா அன்னையின் பெருவிழாவானது. திருச்செபமாலை தத்தை அன்னை மரியாவே புனித டோமினிக்குக் நித்ததை நாமறிவோம். திருச்செபமாலையின் சக்தி அலகையை விரட்ட வல்லது. எனவே, யை அனுதினமும் செபிப்பதைக்
LD.
O மற்றில்டா இராஜேந்திரம்
5)

Page 8
வேகமோ பெற்றுவேதம் வளர்ந்திடக் கண்டுவாசும் 效 றவர்போலாகி
நன்மடற் கேதுவாக தாகமுற் றவராய்நால்வர் தவத்திருக் குருவாய்வந்தார்
நால்வரில் ஒருவர்தமிழை
நயவுறக் கற்றுப்பின்னர்
நூல்பல ஆக்கிவைத்த யாக்கோமே கொன்சால்வேஸ் ஆலென விழுதுவிட்டு அருந்தமி ழதினிற்பசாம்' நூலதைப் போற்பலவும் நமக்கெனத் தந்தஅசான்
புதியவர் வருகையின்பின் புதுப்பலம் பெற்றவாசும் பதுவையம் பதியான்தாளைப் பல்வகைச் சிறப்பினோடும் அதுவரை நிகழ்ந்திராத அத்தனை மகிமையோடும் பதிவுறச் செய்யும்வண்ணம் பகர வாயுழைத்தார்
பள்ளயம் அமைத் பட்டிலேய தாகை முள்ளிலாப் பூத்த (pē5Ü6DLIGIOTT LOGOTE புதியதோர் தோற் புன்னகை பூத்த மிதிலையோ வெ மிளிர்ந்தது அழகு
மூவருக்கென்றே
ഗ്ഗഖണ്ഡ് காரஊர் பவனியின் தலை பாவமே அற்றகை நாவலி யுற்றமைர்
நவமுறந் தோனி
பாவுலு பேதுரென்
படையணி முடிவி
பொங்குமா கடன புழுதியோ கண்டி எங்குகான் கிணு
ஆர்த்தனர் கழித் ஆடியும் பாடிவந்த சூரிய ஒளியைவி
சுடர்களைக் கை வேட்டுகள் தீர்த்து
வானவே டிக்கை மூட்டினர் ஆன்ம முடுக்கெலாம் புன்
(
 
 
 
 
 
 

செண்பகக்குழல்வாய்மொழி
(வேறு) ந்துளங்கும் தொங்க பூக்கள் பதுவையம் பதியான்
றமுற்றுப் 56ចាំព្រួ ജ്ഞഖങ്ങഥ இறுதிநா ளன்றுபேதம் நவிஞ்சி e s - is 雞 அனைததையும துறநதுபகதா
a ஒருவராய் உருகிநின்ற
காட்சியோ கண்கொளாது அறுசுவை உணவும்உண்டு gotoGeford ਲ 。畫藝 * 、● அனைவரும் கலைந்துசென்றார் ந்தன் உருகியே யோசப்வாசும்
● s s உணர்வினில் யோகமானார்
FLUFTñi , , , , ,
பதுவையம் பதியான்திருநாள் விலென்று இ ல் , இ - is பகட்டுற முடித்துவைத்துப் yGül'ı6:LİTGü புதியவர் இருவரோடு T புன்னிய திசையைநோக்கி யெங்கும் திபல கடந்துகொட்டி ந்தலைகள் D956 (pl.-Ibglolf IL
ாபுரம்' அடையுமுன்னே
ങ്ങ விதிய ஒருவர்தம்மை ( செல்லவாச்சு பன்றெழுந்தார்
சிவிஞ்சி சத்துள்
மட்டிலா நோயுமுற்ற துப்பின்னர் மிகுவேல்டி மெல்லோ சுவாமி 5TIT
நீசும் |5fIGH35/ மூன்றின்பின்னும்
நலமது கண்டிடாது காலனோ டிணைந்துசென்ற GeoHTសំ కేన్స్తవే . கதையது சோகமன்றோ 55TLL). 560)u சிதர்கோஷம் = வளரும் -

Page 9
ழுெத்து என்னும் சொல் தமிழ் எழுத்துகளில் ஏதோ ஒன்றினைக் (உ+ம்: அகரம்) குறித்து நிற்கும். இதனைவிட இச்சொல்லுக்கு நூல், கல்வி, மொழி என்றெல்லாம் பொருள் உண்டு. இவை அனைத்தும் மனித வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டவையாதலால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்த பொய்யா மொழிப் புலவர் வள்ளுவர்,
"எண்ணென்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு' - என்றார்.
வள்ளுவருக்குப் பின் தமிழகத்தில் உலா வந்த புலவர் பெருமக்களில் ஒருவரான ஒளவையார் (கி.பி 12ம் நூற்றாண்டென்பர்) வள்ளுவரின் மேற்படிக் கருத்தினையே "எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்" என்று இயம்பினார்.
எழுத்து எனும் சொல்லைப் பகுதியாகக் கொண்டே எழுத்தாளன் (எழுத்து + ஆளண்) எனும் சொல் பிறந்தது. எழுத்தை ஆள்பவன் அல்லது ஆட்சி செய்பவன் என்னும் பொருள் தரக்கூடிய இச்சொல்லுக்கு அறிஞன் என்றும் பொருள் உண்டு. இதிலிருந்து இச்சொல்லுக்கு
குதித்துச்செல்)
δ. ΈχΆ Ε.
 
 
 
 

LITT - SI
ழுத்தாளனும்
இணையாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் WRTER எனும் சொல்லை விட இது (எழுத்தாளன்) பொருள் மிகுந்தது என்பது புலப்படும்.
பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களில் LT60 riggsguib Babais (TAMIL SCHOLARS) பண்டிதர்கள், புலவர்கள், வித்துவான்கள் என்போரும் எழுத்தாளர்கள் என்பதில் ஐயமில்லை. தாம் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப எழுத்தாளர்களாகத் திகழ்ந்த இவ்வறிஞர்கள் பழைய இலக்கியங்களில் பெரும் பற்று வைத்திருந்தமை ஆச்சரியத்திற்குரியதல்ல. ஆயினும் ஒருசிலர் புதியவற்றை (நாவல், சிறுகதை, புதுக்கவிதை) ஏற்று அத்தகைய இலக்கியங்கள் படைத்துள்ளமையை யாரும் மறுக்கப்போவதில்லை.
இன்று எழுத்தாளர்கள் என்போரும் தாம் வாழும் காலத்திற்கு ஏற்ப பழையவற்றில் நாட்டங் கொள்ளாது நாவல், சிறுகதை, புதுக்கவிதை எனும் இலக்கியங்களைப் படைப்பதில் தம் கவனத்தைச் செலுத்துவதை தமிழ் எழுத்துலகம் அறியும்.
இவ்விதம் தமிழ் எழுத்துலகம் இரண்டாகப் பிரிந்திருப்பினும் இவ்வெழுத்தாளர்கள் தமிழின் வாழ்வை,

Page 10
வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டவர்கள் என்பது வெளிப்படை.
தமிழ் எழுத்துலகின் தலை சிறந்த எழுத்தாளராக, புலவராக விளங்குபவர் திருவள்ளுவர். முழு உலகும் தெரிந்திருக்கவேண்டிய உண்மைகளை 1330 குறள் வெண்பாக்களில் மிகவும் சுருக்கமாக எடுத்துரைத்த இவ்வறிஞர் பெருமகனுக்கு இணையாக இன்னுமொருவர் இல்லையென்று நாம் துணிந்து கூறலாம். இதனை புலவர் அரிசில் கிழார்,
பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந் தொறும் சேரச் - சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல் வல்லார் ஆர் வள்ளுவரல்லால்
என்று எடுத்துக் காட்டுவார்.
வள்ளுவரின் இந்த ஒப்பற்ற எழுத்தாற்றலை நன்கு உணர்ந்து கொண்டமையாலேயே மகாகவி
பாரதி,
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு
என்று புகழ்ந்துரைத்தான்.
செஞசொற்காப்பியமான சிலப்பதிகாரம் (கி.பி. 2ம் நூற்றாண்டெண்பர்) சேர நாட்டின் பெரும் புலவரான இளங்கோ என்னும் சமண சமயத் துறவியால் பாடப்பட்டதாகும்.
தமிழில் தோன்றிய முதல் குடிமக்கள் காப்பியம் என்று
கொண்டாடப்படும்
சிலப்பதிகாரத்தை தமிழ்
அறிஞர் சிலர் இது
காவியம் அல்ல' என்று
ஒதுக்கிவைத்த
காலமும்
ஒன்றுண்டு.
எனினும் கால வெள்ளத்தில் மூழ்கிவிடாத இக்காவியம், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
 
 
 
 
 
 
 
 
 

என்றோர் மனியாரமாக நிலைத்து விட்டமை இளங்கோவின் எழுத்தாற்றலுக்குக் கிடைத்த முதல் மரியாதையைக் காட்டும்.
மேலும், படிக்காத பாமர மக்களின் கிராமியப்
IL6556i
குரவை) மெருகு (REFINEMENT) ஏற்றி அவற்றுக்கு இலக்கிய அந்தஸ்து அளித்த இளங்கோவின் எழுத்துப் பணி என்றுமே மறக்கமுடியாததொன்று. ’
இளங்கோவின் இந்த எழுத்துப் பணியைப் பிற்காலத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், இராமலிங்க சுவாமிகள், கோபாலகிருஷ்ண பாரதியார், திரிகூட இராசப்பக் கவிராயர், மாகாவி பாரதியார் ஆகியோர் முன்னெடுத்து அதில் வெற்றியும் பெற்றமையை தமிழ் இலக்கிய உலகம் அறியாதா என்ன?
இளங்கோவின் இந்த எழுத்தாற்றல் சாதரணமானதல்ல. பழமையைப் போற்றிய தமிழ் இலக்கிய உலகைப் புதிய வழியில் நடைபோட வைத்ததோடு கண்ணகி என்னும் ஒரு பெண்ணைப் பத்தினித் தெய்வமாக்கி தமிழர் சமயப் பண்பாட்டில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளமையை வரலாறு கூறும்.
ஐம்பெரும் காப்பியங்கள் என்று தமிழில் உள்ள சில நூல்கள் குறிப்பிடப்பட்டிருப்பினும், அவற்றைவிட ஒரு காவியத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும், சிறப்புக்களையும் கொண்டு விளங்குவது கம்பராமாயணமாகும். இது கம்பனின் எழுத்தாற்றலால் தமிழ் அன்னைக்குக் கிடைத்த மணிமகுடம் என்பதில் ஐயமில்லை. 琴
அறிஞர் மு.வ. அவர்கள் சொல்வது போல தமிழில் உள்ள அனைத்து வளத்தையும் நன்கு பயன்படுத்தி பத்தாயிரம் செய்யுட்களில் கம்பனின் எழுதுகோல் படைத்த இக்காவியம் போல இன்னுமொரு காவியம் இதுவரை தமிழில் படைக்கப்படாமை கவிச்சக்கரவர்த்தி கம்பனின் எழுத்து மேன்மையை காட்டப் போதுமானது.

Page 11
6.
வள்ளுவர்
 


Page 12
தொண்டின் தமிழர்கள்தான் என்னும் உண்மை நம்மைத் தலைகுனிய வைக்கிறது.
பாரதிக்குப் பின் தமிழ்நாட்டில் தோன்றிய புதுமைப்பித்தனை (1906 - 1948) மற்றுமொரு மேதை என்றே அறிஞர் பலர் கருதினர். அதற்கேற்றாற்போல அவரது எழுத்தும் அமைந்தது. 1933ம் ஆண்டில் தனது முதல் சிறுகதையைப் பிரசவித்த புதுமைப்பித்தன் பாரதியைப் போன்று வறுமையோடு போராடியவன். அவன் தனது குடும்பத்தோடு சென்னையில் வாழ்ந்த காலத்தில் வாடகை வீடுகளே அவனது வாசஸ்தலங்களாக விளங்கின. நாளிதழ்கள் (ஊழியன், மணிக்கொடி போன்றவை) அவனுக்குத் தந்த ‘பிச்சைச் சம்பளம்' அவனது நாளாந்த செலவுக்கே போதவில்லை. இருந்தும் அவன் எழுத்தை விடவில்லை. எழுத்து அவனது உயிர். அதை எப்படி அவன் விடுவான்?
புதுமைப்பித்தனின் கண்கள் அவன் வாழ்ந்த சமூகத்தைக் கூர்ந்து பார்த்தன. அந்தப் பார்வை அவனது எழுத்துகளுக்குப் பொருளாக அமைந்தது. சமூகம் மட்டுமின்றி புராண இதிகாச நிகழ்வுகளும் அவனது எழுத்துப் பசிக்குத் தீனியாகின. அகலிகை இருவேறு கதைகளாகக் காட்சி தந்தாள்.
புதுமைப்பித்தனின் எழுத்துநடை பற்றி சுந்தரராமசாமி எழுதுகையில் (புதுமைப்பித்தனின் கதைகள் பக். 42) அவரது மொழி சுயமானது. அவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறுவது முற்றிலும் உண்மை.
மகாகவி பாரதி போன்று மண்ணுலகில் குறுகிய காலமே வாழ்ந்த சொ.விருத்தாசலம் (இயற்பெயர்) சூடிக்கொண்ட புதுமைப்பித்தன் என்னும் புனைபெயர் அவருக்குப் பொருத்தமானதுதான். ஏனெனில் அவரது எழுத்தில் புதுமை இருந்தது. அப்படிப்பட்ட புதுமையைப் படைப்பதில் அவருக்குப் பித்தும் இருந்தது என்பது ஆய்வாளர் பலரின் கருத்து.
தமிழ் இலக்கிய வரலாற்றேட்டில்
 
 

ਲੰ ಸ್ಲೊwi»
வரலாற்று நாவல்களுக்கென ஓர் அத்தியாயத்தை உருவாக்கிய பெருமை கல்கி எனும் இரா.கிருஸ்ணமூர்த்தி (1899 - 1959) அவர்களுக்கே உரியது.
தமிழகத்தின் தனிப்பெரும் அரச வம்சங்களான பல்லவர் (கி.பி 6-9) சோழர் (கி.பி 9-12) வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் தமது எழுத்தால் கட்டி எழுப்பிய பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் எனும் இலக்கிய மாளிகைகள் இன்னும் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றன. இது கல்கியின்
எழுத்தாற்றலையே காட்டி நிற்கும்.
ஆனந்த விகடன், கல்கி ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராக விளங்கிய கல்கியின் இம்மாளிகைகளினால் கவரப்பட்ட சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) கோ.வி. மனிகேசரன், ஜெகசிற்பியன் ஆகியோர் அவைபோன்று எழுப்பிய எழுத்து மாளிகைகளுக்காக தமிழுலகம் கல்கிக்கே நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.
கல்கியின் எழுத்து உருவாக்கிய இந்த இலக்கிய மாளிகைகள், தஞ்சைப் பெரிய கோயில், மாமல்லபுரத்துச் சிற்பங்கள் போன்று என்றும் அழியாது என்று நாம் நம்பலாம்.
அறிஞர் அண்ணாவின் (1909 - 1969) எழுத்தாற்றல் அவரது அரசியலுக்கே பெருமளவில் உதவியமை ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல. ஆயினும் அவரது எழுத்தாற்றல் ஓர் இரவு, வேலைக்காரி என்னும் பெயரில் நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் மக்கள் முன் அரங்கேறியபோது "இதோ ஒரு பெர்னாட்ஷா" என்னும் கல்கியின் குரல் அண்ணாவின் எழுத்துக்கு மற்றுமொரு புகழ்பெற்ற எழுத்தாளரிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாகவே தமிழ் உலகம் அதனை ஏற்றுக்கொண்டது. சமூக சீர்திருத்தத்தையே குறிக்கோளாகக் கொண்ட அண்ணாவின்
O)
亨

Page 13
gഞ്ച്((= எழுத்துகளை நாடக மேடைகள், திரை அரங்குகளில் மட்டுமன்றி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பவற்றிலும் பார்த்த மக்கள் அவர் பின்னர்ல அணிவகுக்கத் - தொடங்கியமைக்கு அவரது எழுத்தாற்றலன்றி வேறு எதுதான் காரணமாக இருக்க முடியும்?
இங்கே சுட்டிக்காட்டப்பட்ட எழுத்தாளர்களை விட இராமலிங்க சுவாமிகள், ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, விபுலானந்த அடிகள், டாக்டர்.உ.வே.சாமிநாதையர், பாரதிதாசன் ஆகியோருக்கும் எழுத்து ஒரு தபமாகவே விளங்கியது. இந்தத் தபத்தை முழுமையாகச் செய்து முடிக்க அவர்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார்கள். நாடாளு மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்குமிடையே முரண்பாடுகள் தலைதூக்கியபோது
அன்ரன் தனது மூன்றாம் வகுப்புப் படிக்கம் மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பாடசாலைக்குக் கூட்டிச் சென்றார். பாடசாலை செல்லும் பாதையில் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவினர் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மறித்து எழுதிக்கொண்டிருந்தனர்.
"அப்பா பொலிஸ்காரங்க என்ன எழுதிறாங்க?"
"அவர் ஹெல்மட் போடாம போனதால குற்றம் எண்டு சொல்லி தண்டப் பணம் அறவிடுறாங்க"
"ஹெல்மட் போடாட்டி என்ன பிழை?"
“விபத்து ஏற்பட்டா தலையுடையாம பாதுகாக்கும் தானே."
அடுத்து அவன் கேட்ட கேள்வி அன்ரனை இடிபோல் தாக்கியது.
"அப்பிடியெண்டா எங்களப் போல சின்னப் பிள்ளைகளுக்கு ஏன் ஒருவரும்
 
 
 
 
 

– N,
ஜூன் 201)
விரைந்தேற்றுக் கொள்ளத வேந்தனுண்டோ உண்டே குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு
என்று கேட்டுவிட்டு காவிரிநாட்டையே கைகழுவி
விட்டுச் சென்ற அவனை வைகை மண் ஓடோடி வந்து வரவேற்றதாகக் கூறுவர்.
எழுத்தின் மீது கம்பனுக்கிருந்த பக்தி,
மகாகவி பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரிடமும் இருந்ததை அவர்கள் வரலாறு எடுத்துப் பேசும். வறுமையும் வாழ்க்கையின் ஏனைய பிரச்சினைகளும் தம்மை ஓட ஓட விரட்டிய சூழலிலும் எழுத்தையே தமது உயிராகக் கொண்டிருந்த இவ்வெழுத்து வேந்தர்கள் தமிழை, தமிழ் இலக்கியத்தை வளர்க்க அந்த உயிரையே அர்ப்பணித்தனர். இந்த அர்ப்பணம், தியாகம் - எழுத்து என்பது பொழுதுபோக்கிற்குரியதல்ல என்னும் உண்மையை உணர்த்தும். இதனை இன்றைய தமிழ் எழுத்துலகம் கவனித்தில் கொள்ளுதல் வேண்டும்.
- வாகரைவாணன் -
ஹெல்மட் போடுறல்ல? எங்கட உயிருக்குப் பெறுமதி இல்லையா? ரீச்சர் சிறுவர் உரிமை பற்றிப் படிப்பிச்சவ. அவட்டச் சொல்லி ஹெல்மட் போடுறதையும் சிறுவர் உரிமையில சேக்கச் சொல்லணும்."
"பள்ளிக்கூடம் விடும்போது மகனுக்கொரு ஹெல்மட் வாங்கிக்கொண்டு போகனும், அவன்ட உயிரும் பெறுமதியானதுதான். சே! இந்த எண்ணம் எனக்கு இவ்வளவு நாளும் வரல்லையே. நெத்திப்பொட்டில அடிச்சமாதிரி கேட்டுப்போட்டானே. இவனுகள நம்பவும் ஏலாது 19க்கு சொன்னாலும் சொல்லிப்போடுவானுகள்" என்று தனக்குள் அன்ரன் நினைத்துக்கொண்டார். ! ! ! பற்றி

Page 14
திருநதிலையினரா? பொதுநிலையினரா
"வயதிற்கு வந்துவிட்டனர் பொதுநிலையினர். ஆனாலும் வளரவிடாமல் அமுக்குகின்றனர் . திருநிலையினர்'
நிற்கத் .ே திருச்சபையை கிடைக்கிறது N 刁J 1 / A குட்டு. குட்டக் குட்டக் குனிந்து நிற்கிறது பொதுநிலையினர்
ÖffD
"திருநிலையினர் (ஆயர், குருக்கள், துறவிகள்) மாத்திரம் திருச்சபையைச் சார்ந்தவர்கள். திருச்சபையில் உள்ள விசுவாசிகள், பொதுநிலையினர் ஆகியோர் உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் முத்திரை குத்திக் காட்டி நிற்கின்றோம்"
மேற்கூறப்பட்டவை போன்ற உள்ளக் குமுறல்கள், தவறான புரிந்துகொள்ளல்கள் ஆங்காங்கே கேட்டவண்ணம் இருக்கின்றன. திருச்சபையின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பொதுநிலையினர் அடிமைகளாகவே நடத்தப்பட்டு வந்துள்ளனர். நிறுவனத் திருச்சபையில் பொதுநிலையினர் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு எந்தவிதமான உரிமைகளும் அற்றவர்களாகவும், எல்லாவற்றுக்கும் குருக்களிடம் கையேந்துபவர்களாகவும், வெறும் பார்வையாளர்களாகவும், வாயில்லாப் பூச்சிகளாகவும் ஆக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலை தொடரக்கூடாது என்பதற்காக, திருச்சபையிலே மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இறைவன் தம் ஆவியின் மூலம் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டி புதிய ஒளியை, புதிய வழியைக் காண்பித்தார். அவ்வேளையில் திருத்தந்தையாக இருந்த இருபத்து மூன்றாம் யோவான் இறைசித்தத்தை நடைமுறைப்படுத்த ஏற்றதொரு கருவியாக விளங்கியதால் அவர் வழி
(
 
 
 

ഞണu[D மறுமலர்ச்சி யையும் ஏற்படுத்தினார். இரண்டாம் வத்திக்கான் சங்கம் கொணர்ந்த மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தில் "பொதுநிலையினர்' பற்றிய பகுதி மிக சிறப்பு வாய்ந்தது. பொதுநிலையினர்தாம் திருச்சபையை உருவாக்கும் பெரும் பகுதியினர் ஆவர். அவர்களது இடம், பணி, மாண்பு ஆகியவை குறித்து சங்கம் பல ஏடுகளில் ஆய்ந்துள்ளது. உதாரணம்: திருச்சபை பற்றிய ஏடு, பொதுநிலையினரின் அப்போஸ்தலத்துவம், இன்றைய உலகில் திருச்சபை என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
"இறைமக்கள்' என்ற சொல் திருச்சபை உறுப்பினர் அனைவரையும் குறித்து நிற்கின்றது. "இறைமக்கள்’ குழுவில் திரு ஆட்சியைச் சார்ந்தவர்களும், பொதுநிலையினரும் ஆக கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவரும் இடம்பெறுவர். "பொதுநிலையினர்' என்ற சொல் குருகுலத்தாரும், திருச்சபையின் இசைவு பெற்ற துறவற நிலையினரும் நீங்கலாக ஏனைய எல்லா விசுவாசிகளையும் குறிக்கும் (தி. 31).
இவர்கள் கிறிஸ்துவை விசுவசிப்பவர்கள்; திருமுழுக்குப் பெற்றவர்கள்; இறைமக்கள்; கிறிஸ்துவின் முப்பெரும் பணிகளில் (குருத்துவப் பணி, சான்றுப் பணி, அரசுப் பணி) பங்கு பெறுகின்றவர்கள். மேலும் தமக்கே உரித்தான முறையில் கிறிஸ்துவின் பணியை இவ்வுலகில் நிறைவேற்றுபவர்கள். "இவர்கள் திருமுழுக்கின்
A.
2)

Page 15
6ෂුmගණි_ගඟීH− 3. வழியாக கிறிஸ்துவோடு ஒருடலாகப் பெற்று, இறைமக்களாக உருப்பெறுகின்றனர்" (தி.31)
காணக்கூடிய இத்திருச்சபையில் பல்வேறு பணிகள் உண்டு. ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர். ஆனால், மேன்மையிலும் கிறிஸ்துவின் உடலை வளர்ச்சியுறச் செய்ய விசுவாசிகள் அனைவருக்கும் பொதுவாயுள்ள பணியிலும் யாவரும் உண்மையிலேயே சமமான பங்கு பெறுகின்றனர் (தி.32).
ஆனால், பொதுநிலையினருக்கே உரித்தான தனிப்பண்பு ஒன்று உண்டானால் அதுவே உலகுசார் பண்பு எனலாம். உலகைச் சார்ந்திருக்கும் பண்பு பொதுநிலையினருக்கே உரித்தானது.
சங்கம் முடிந்து ஐம்பது ஆண்டுகளை நெருங்குகின்ற வேளையிலும் பொதுநிலையினரில் பெரும்பாலோருக்கு இது பற்றித் தெரியாது.
சங்கம் கொண்டுவந்த மறுமலர்ச்சிக்கு இன்றும் பல குருக்கள், ஆயர்கள் தடையாக உள்ளனர். இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி சில மறைமாவட்டங்களில் மறைமாவட்ட மேய்புப்பணி பேரவைகள் இல்லை. பங்குப் பேரவைகளும் இல்லை. திருச்சபையின் சட்டப்படி பொதுநிலையினருக்குக் கொடுக்கவேண்டிய பங்கேற்புகள் மறுக்கப்படுகின்றன.
பொதுநிலையினரிடம் தங்கள் கடமைகளையும், உரிமைகளையும் பற்றிய விழிப்புணர்வு ஓரளவு தோன்றியிருப்பதும், அதைத் திருச்சபை ஆங்காங்கே ஊக்குவித்து வளர்த்துவருவதும் உண்மையாயினும் பொதுவாகத் திருச்சபையில் பொதுநிலையினரின் பங்கேற்பு மிகக் குறைவாக இருப்பதையும்,
 
 
 
 
 

பொதுநிலையினர் பெரும்பாலும் தேவையானபோது மட்டும் பயன்படுத்தப்பட்டு வருவதையும் பரவலாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்குக் காரணம் யார் என்பதை விவாதிப்பதைத் தவிர்த்து, இந்நிலை தொடர்ந்தும் நீடிக்காதிருக்கச் செய்ய வழிமுறைகளை, ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
இயேசு கண்ட இறையரசு மலர பொதுநிலையினரின் முழுப் பங்கேற்பு அவசியம் என்பதை அனைவரும் உணரவேண்டும். இந்நிலை மாறி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வகுத்துத் தந்த வழியில் தலத் திருச்சபைகள் வாழவேண்டுமானால், வளரவேண்டுமானால் ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய எல்லா நிலையினரிடமும் திருச்சபையின் பணியில் பொதுநிலையினரின் பங்கேற்புப் பற்றிய தெளிவும், மனநிலை மாற்றமும் தேவை.
இருபத்தொன்றாவது நூற்றாண்டில் நுழைந்து பயணம் செய்துகொண்டிருக்கும் திருச்சபை, அனைத்தையும் புதியதாக்க விழைந்த இயேசுவிற்குச் (தி.வெ 21:5) செவி மடுக்க வேண்டும். புதியன நிகழ ஆவியானவருக்குத் தன்னைத் திறந்துவைக்கவேண்டும். அடிப்படை மாற்றம் ஏற்படத் தன்னை முழுமையாக அது அர்ப்பணிக்கவேண்டும்.
பொதுநிலையினர் ஓங்கி வளர்வதற்கான தளத்தை உருவாக்கியது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம். சங்கத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்த முற்படும்போது பொதுநிலையினர் பொற்காலம் ഥസൈന്ദ്രഥ.
- 52. - டலில்சிலு சிலுப்பு
கத்தில்பள பளப்பு லங்காரம் மகிழ்ச்சிதருங் கொண்டாட்டம்
D - 爱

Page 16
இம்முறை தொண்டனின் சில நிமிடங்களுக்காக அருட்சகோதரி கலாநிதி. ஜோசவ்வா ஜோசப் அவர்களை தாண்டவன்வெளியிலுள்ள திருச்சிலுவை கன்னியர் மடத்தில் சந்தித்தோம். இலங்கையில் தாதியத்துறை சார்ந்த மருத்துவவியலில் முதன்முதலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்னும் எவ்விதமான ஆடம்பரமும் இன்றி அண்பேயுருவாய் எளிமையின் வடிவமாய் எம்மைச் சந்திக்க வந்தார்.
முல்லைத்தீவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1955ம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி பிறந்தார். இவருக்கு நான்கு அண்ணாமாரும் மூன்று அக்காமாரும் உடன்பிறப்புகள்.
ஆரம்ப வகுப்பு தொடக்கம் ஏழாம் வகுப்புவரை முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திலும் எட்டாம் வகுப்பு தொடக்கம் க.பொ.த (உ.த) வரை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திலும் கற்ற அருட்சகோதரி அவர்கள் 1977ம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.
உங்கள் பணிவாழ்வுக்காக திருச்சிலுவை கன்னியர் சபையை’ ஏன் தெரிந்தெடுத்தீர்கள்? என்று நாம் கேட்டபோது புனினகையுடன் பதிலளித்தார்கள். ஒவ்வொரு கன்னியர் சபையும் ஏதோவொரு விசேட சேவைக்காக தம்மை அர்ப்பணித்துள்ளார்கள். திருச்சிலுவை கன்னியர் சபையோ ஏராளமான சேவைகளை ஆற்றுகின்றது. மருத்துவத் துறை, கல்வித்துறை, அனாதைகள் பராமரிப்பு என்று பல்வேறுபட்ட பணிகள், சேவைகள் புரிகின்ற படியால் அச்சபை என்னைக் கவர்ந்தது. எனக்கு மருத்துவம் சார்ந்த துறையில் அதிகம் ஈடுபாடு உண்டு.
 
 
 
 

D - 62011 யாழ்ப்பாணம் கொய்யாத் தோட்டப் பகுதியில் 'திருச்சிலுவை சுகாதார நிலையம்' என்ற பெயரில் பிரமாண்டமான வைத்தியசாலை ஒன்று தாதியர் பயிற்சிப் பாடசாலையுடன் இயங்கி வருகின்றது. அருட்சகோதரியாக அவர் பணியாற்றிய தளங்கள் பற்றி நாம் வினவியபோது: கொழும்பில் உள்ள "பெர்னாடா விடுதியில் ஒரு வருடமும் நுவரெலியாவில் உள்ள 'சாந்திபுரம்' என்னும் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தில் இரண்டு வருடங்களும் பணியாற்றிய பின் தாதியத் துறை தொடர்பான கற்கை நெறிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் கேரளாவில் உள்ள தாதியர் கல் ல் தாதியத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுக்கொண்ட அருட்சகோதரி அவர்கள் அதில் மாநில அளவில் விருதினைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் 1993ம் ஆண்டுவரை நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் மீண்டும் இந்தியா சென்று தாதியத் துறையில்

Page 17
உழைப்பைக் கொடுத்தும் உணவின்றி வாடும் உழைப்பாளி உயர்வதெப்போது? ஏக்கம் தீர்வதெப்போது?
கள்ளர்கள் கைகளும்
புள்ளுது ணத்தை வியர்வையி
ஊரிலும் உலகிலும் உயர்ந்தன கோபுரம் 를 உழைப்பவன் வாழ்ந்திட வீடுணர்
9-60PLIL
முதலாம் வகுப்புச் சித்தியுடன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். பெங்களூரில் இப்பட்டப் படிப்பை முடித்தார்.
1996ம் ஆண்டு அப்போதைய கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் அருட்தந்தை இராஜேந்திரா அவர்களின் அழைப்பை ஏற்று, தாதியர் துறை டிப்ளோமா (நோயாளர் விடுதி முகாமைத்துவம்) தொடர்பான பாடத்திட்டத்தை வரைந்துகொடுத்தார்.
மருத்துவக் கல்லூரியொன்றை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக துணை மருத்துவப் பாடநெறிகளை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயம் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இருந்தது. எனவே, 1998ம் ஆண்டு 25 பேரைக்
 
 
 
 
 
 
 
 
 
 

- Guo - gro)
கொண்ட தாதியர் ஒன்றரை ஆண்டு காலப் பாடப்பரப்பு கொண்ட விடுதி முகாமைத்துவ டிப்ளோமா (post base) 6556Opé565 ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக அவர்கட்கு கற்கை விடுமுறை வழங்கப்பட்டது. இதற்கான முழுப் பொறுப்பும் அருட்சகோதரி ஜோசவ்வா ஜோசப் அவர்கள் வசம் இருந்தது.
மீண்டும் 2002 - 2004ம் ஆண்டுகளில் பெங்களூர் சென்று தாதியத் துறையில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பின்னர் 2007ம் ஆண்டு நோர்வேயின் Tromso பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
கலாநிதி (முனைவர்) பட்டத்திற்காக எத்துறையில் ஆய்வுகள் மேற்கொண்டீர்கள் என்று வினவியபோது நீரிழிவு நோய் தொடர்பாக 26000 பேரிடம் பெற்ற தரவுகளைக் கொண்டு ஆய்வுகள் செய்து 6İLİGÖL’ பட்டம் பெற்றுக்கொண்டதாக
அடக்கத்துடன் சொன்னார்.
தாதியத் துறை தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள கற்கைநெறிகள் பற்றி நாம் அவரிடம் வினவினோம். தற்போது தாதியத்துறை பட்டப் படிப்புநெறி உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் நடத்தப்படுகின்றது. இவர்கட்குத் தொழில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. க.பொ.த (உ.த) இல் விஞ்ஞானப் பிரிவில் கற்ற தாதியர் மட்டுமே வெளிவாரி நிகழ்ச்சித் திட்டத்தில்
இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அவர்
ர்டவன் - அவன்
குறிப்பிட்டார்.
ஈற்றில் தொண்டனின் சார்பில் நன்றிகூறி விடைபெற்றுக்கொண்டோம்.
-ஆழியோன் Ο
B)

Page 18
6)andiyos
ഗ്ര വ്/ങ്കേ
கொலம்பஸ் அமெரிக்காவக் கண்டுபுடிச்சமாதிரி இண்டைக்கி நானொரு பெரிய விசயத்தக் கண்டுபுடிச்சிருக்கிறன் என்றான் ருத்ரா, நமட்டுச் சிரிப்புடன் என்ன விசயம் என்றார் ராகவன். பேர் பெற்ற எழுத்தாளர். எனக்குத் தெரிந்து முகத்துக்கு முன்னால் அவரைப் புகழ்ந்தவர்கள் பின்னால் மிக மோசமாக அவரை விமர்சிக்கிறார்கள். கடைசியாக அவரது நாவலொன்று வெளியாகி இங்கும் சில பிரதிகள் வந்தபோது அவரை அசிங்கமாய்ப் பார்த்தவர்கள் பலர். ஹிஸ்டீரியாக்காரன் என்றுகூட ஒருவர் கூறினாராம், அதையும் ருத்ரா நேற்றுக் கூறினான். ராகவன் சிரித்துக்கொண்டார்.
"என்ன கண்டுபிடிச்சீங்க?' மீண்டும் கேட்டார் ராகவன்.
"இல்ல இந்தக் கவிஞை எப்படிக் கவிதை எழுதிறாவ எண்ட விசயத்த இப்பதான் கண்டுபிடிச்சன்" என்றான்.
இருவரும் சிறித்தனர். முன்னால் சகானா மாணவர்களுடன் உட்கார்ந்திருந்தபடியே கவிதை எப்படி எழுதலாம் என்று கேட்டு பெரிசா ஒண்டும் யோசிக்கவேணாம். உங்களுக்குத் தெரிஞ்ச பழக்கமான சொற்களச் சொல்லுங்க என்று கூறி அவர்கள் கூறிய சொற்களை வைற்போட்டில் எழுதி பின்பு அவற்றைத் தொடர்புபடுத்தி மேலும் கீழுமாகப் போட்டு கவிதை சமைத்துக் காட்டினாள். ராகவனுக்கு எரிச்சல் வந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்த நாதன் ஒரு மூச்சு சிரித்து ஓய்ந்து போயிருந்தான்.
இந்தப் பிள்ளையஸ் இருக்கிற இடத்தில நாம நாலஞ்சி பேர் இருக்கோணும். இப்பிடியொரு வாய்ப்புக் கிடைச்சா நான் கோழிமுட்டையெண்டு சொல்லுவன், மன்சூர் உரல் உலக்கை, இவர் கதிரை, ருத்ரா அமெரிக்கா எண்டு சொன்னா கவிதை உருவாக்கிப் பாக்கட்டுமே. கொல் என்றது சிரிப்பு. நான் அடக்கிக்கொண்டேன். கவிதை பற்றி விளங்கப்படுத்தவெண்டு நாமளே

கூப்பிட்டு முன்னால உக்காரவச்சிப்போட்டு இப்பிடிக் கதைக்கக் கூடாது என்றும் கூறிமுடித்தான் நாதன். நேற்றுக் கடைசி வினாடியில் அவன் நன்றியுரை கூறியதைக் கேட்ட பெரியவர் நன்றியுரை நாயகன் என்றுவேறு அவனைப் புகழ்ந்துவிட்டிருந்தார்.
ᎠTTöi5ᎧjᎧᎧléf5Ꮼ5 வயிறு சரியில்லை. கிறீம் கிரெக்கர் ஒரு பக்கட் வாங்கிவைத்துக் கொண்டார். அதுதான் அவரது மதியஉணவு. நேற்றைய ஒருநாள் அறுவை அவரை அலைக்கழித்தது. ச்.சே. என்ன மனிசர்கள். என்று அலுத்துக்ககொண்டபோது என்ன நடந்தது என்று ருத்ரா கிளறினான். ஒரு விசேட கலந்துரையாடல் தவறாது கலந்துகொள்ளுங்கள் என்று அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஒன்றுகூடல் மண்டபத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்பே போனார். நம்மவர்களின் நேரம் அவருக்குத் தெரியும் என்றாலும் ஒரு விருப்பில் சென்றுவிட்டார். மெல்ல மெல்ல வந்துகொண்டிருந்தனர். ராகவன் சில நிரைகளை முன்னால் விட்டு ஒரு கதிரையில் அமர்ந்தார். சபா ஓடிவந்து அண்ணே எனக்காக ஒரு உதவி செய்யுங்கோண்னே என்றபடியே பக்கத்தில் குந்திக்கொண்டான்.
‘என்ன சபா சொல்லன்' என்றார். நடக்கப்போற விழா நம்மட பிரதேச முதன்மை விழா.

Page 19
TTTTssMsL Yi DM DD D D DD DD DS இதில ஒரு வில்லுப்பாட்டுக்கு இட தாங்கண்ணன்' என்றான்.
ராகவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. சபா, மாரி மழைநேரம் விழாவுக்கு சனம் வருகுதோ தெரியாது. நீ வில்லுப்பாட்டுப் படிக்கப் போய் வாற சனத்தையும் துரத்தப் போறியா.' என்றபோது நுழைந்துகொண்டிருந்த சகோதரர் லூயிஸ் ராகவனைக் கண்டதும் ஒரு கும்பிடு போட்டார். ஒருவாறாகக் கூட்டம் தொடங்கியது. நடைபெறப்போகும் விழா பற்றி விலாவாரியாக பேச வெளிக்கிட்ட செயலாளர் விருதுகள் வழங்கும் விடயத்திற்கு வந்துசேர்ந்தார். இப்பொழுது மகா பெரிய ஆராய்ச்சி தொடங்கியது. பிரதேசத்தில் பல துறைகளிலும் சேவை செய்த சேவையின் செம் மல்களைக் கண்டுபிடித்து விருது வழங்கிக் கெளரவிப்போம் எனப் புறப்பட்டிருந்தனர் சபையினர். அவரவர் தம் பாட்டிற்கு சிலசில பெயர் களைக் குறிப்பிட்டனர். சமூக சேவைக்காக, கல்விப் பணிக்காக, பொதுச்சேவைக்காக என்றெல்லாம் பேசிக்கொண்டனர். தலைவரும் இசை கற்பிக்கும் ஓர் அம்மனியின் பெயரை முன்மொழிந்தார். அவ தன்ர கடமையத்தானே செய்யிறா' என்றன சில குரல்கள். அப்பிடியில்ல அந்த அம்மனியின்ர வீட்டில தான் அவரு வாடகைக்கு குடியிருக்கிறாரு என்
ம் எடுத்துத்
செஞ்சிலுவைச் சங்கம் ஓர் அனைத்துலக அமைப்பு உலக நாடுகளிடையே போர் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அத்தகைய போர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்ற அடிப்படையில் செஞ்சிலுவைச் சங்கத்தை உருவாக்கியவர் ஹென்றி டுனான்ட், ஆண்டு 1863,
உலக நாடுகளிடையே அன்றுமுதல் இன்றுவரை ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டு வரும் போர்களினால் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் சந்தித்து வருவது தவிர்க்க முடியாத பெருங் கொடுமையாக உலகில் நடைபெற்றுக்கொண்டே வருகிறது.
அறிவியல் வளர்ந்தாலும், அபிவிருத்திக பெருகினாலும், விண்ணில் பறந்தாலும், வேறு கிரகங்களைத் தொட்டாலும் மனிதனிடமுள்ள சுயநலம், ஆதிக்க, | Քե6ծԾIQվ: மனப்பாங்குகள் குறையாகவே இல்லை; மாறாக அது மேலும் மேலும் வளர்ந்துகொண்டே செல்கிறது. நமது V நாடு உட்பட உலகின் பல நாடுகளிலும்
 
 
 
 
 

DITQ5 தடி த்தது. வாடகை வீட்டப் பாத்துப்போட்டு விழாவ நடத்த வேண்டியதுதானே என்று ராகவன் நினைத்தார்.
இவ்வேளை நாகமணி குறுக்கிட்டு குறித்த வொரு தொழில் செய்வோர் சார்பில் சிவக்கொழுந்து வுக்கும் விருது கொடுப்போம். அவரும் பென்சன் எடுக்கிற மனிசன்' என்றார். சலசலப்புகள் எழுந்தன. சுப்பனுக்கும் சோமனுக்கும் விருதுகளா? குச்சொழுங் கையால் கடைவாயால் வெத்திலைச் சாறு ஒழுக பழஞ்சீலையுடன் கருவாடும் கத்தரிக்காயும் விற்கும் தனலட்சுமியின் பழைய உரவேக்கினுள் பல விருது கள் இருப்பதாகவும் 'விருது வாங்கலையோ விருது வாங்கலையோ. மலிவு விலையில் விருது வாங் கல்லையோ. அவள் ஒழுங்கை ஒழுங்கையாக கூவிக்கொண்டு செல்வது போலவும் ராகவனின் மனக்கண்ணில் காட்சி விரிகிறது.
பலமணிக்கணக்காக விருதுகளுக்கான அவர்களது ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்க முன்கதிரையில் இருந்த குண்டுப் பெண்மனியின் ரவிக்கையில் இருந்த பூக்களை இரண்டாவது தடவையாகவும் கணக்கிட்டுக்கொண்டிருந்தார் ராகவன்.
Gha.GILaff

Page 20
சமைத்தல் என்கிற வினையடியாக சமயம் என்னும் சொல் பிறந்திருக்கலாம் என்று தமிழறிஞர் ஒருவர் உரைக்கிறார். அரிசியைச் சமைத்திட, அது சாதம் ஆகிறது. கல்லைச் சமைத்திட, அது கண்கவர் சிலையாகிறது. சொல்லைச் சமைத்திட அது கவிதையாகிறது. அவ்வாறே, அன்பையும் ஆண்மாவையும், இருதயத்தையும் சமைப்பதே சமயம் எனலாம்.
சமயம் பற்றிச் சமூகவியல் அறிஞர்கள்
ஆரம்ப காலம் தொடக்கம் சமூகவியலாளர்களின் கவனத்தைக் கவர்ந்த ஒரு விடயமாகச் சமயம் என்பது விளங்கிவருகிறது. எமைல் டேர்க்கீம் (Emile Durkheim) என்னும் பிரெஞ்சு சமூகவியலாளர், "புனிதம், மாசு என்னும் பிரிப்பின் அடிப்படையில் கூட்டான மக்கள் குழுமத்தின் நம்பிக்கை வெளிப்பாடே சமயம்' என்று கூறுகின்றார்.
ஒரே சமயத்தில் காலமும், இடமும் (வெளி) புனிதமாகப் பகிரப்படும் நிலையை அவர் ஆழமாக விளக்குகின்றார். தார்மீக நம்பிக்கைகளும், விழுமியங்களும் சமயத்தின் ஊடாகக் கூட்டாகப் பகிர்ந்துகொள்ளப்படுவதனை எடுத்துக் காட்டுகின்றார். சமூக ஒழுங்கு (Sociat Order), depabd5 35L6 LJTG (Social Control), சமூக உறுதிப்பாடு (Sociat Solidarity) என்பன
 
 

சமயமின்றிச் சாத்தியமாகாது எனவும் அவர் எடுத்துரைக்கின்றார்.
மலினோவ்ஸ்கி (Bronistaw s
S Matinowski) என்னும் மானுடவிய்ல் _____ அறிஞர், சமூக நியமங்களையும், விழுமியங்களையும் சமயமானது மேலும் உறுதிப்படுத்தி, நிலைநிறுத்துவதாகக் குறிப்பிடுகின்றார். -
சமூக வாழ்வில் நிகழும் அதிர்ச்சிகரமான மாற்றங்கள், துயரங்கள், இழப்புகள், காயங்களை ஆற்றுப்படுத்தும் வல்லமையும் சமயத்திற்கு இருப்பதாக அவர் விளக்குகிறார்.
LGö6,35T LIT refódigns (Talcott Parsons), மனித நடத்தைக்கும் செயற்பாடுகளுக்கும் ஒரு வழிகாட்டிச் சட்டகமாக விளங்குவது சமயம் என்பதோடு, அதனை ஒரு பண்பாட்டு முறைமையின் பகுதியாகவும் சுட்டிக்காட்டுகிறார். மனித வாழ்வினை அர்த்தப்படுத்துவதும் சமயமே
xx Ge>K-ệ

Page 21
666 என்று அவர் கூறுவது சிந்திக்கற்பாலது. பிரபஞ்சம் அளாவிய நம்பிக்கைகளை, ஐயங்களை, விசாரங்களை எல்லாம் தீர்க்க வல்லதும் சமயமே.
சமயமும், சமூகமும்
- இன்றைய உலகமயமாதற் சூழலில் சமயத்தின் நிலை எவ்வாறுள்ளது? சிந்திக்கவேண்டிய வினா இது சமயத்துக்கேற்ற சமயம்' சாரம் இல்லாமல், ஆழ்ந்த பொருள் உணராமல், வெறும் சடங்காசார மயமாகி, வணிகமயமாகி நிற்கிறது சமயம்.
"சமூகம் தன்னைத் தானே வழிபட முற்பட்டதன் விளைவே சமயம்' என்பாரும் உளர். எனவே, சமூகக் கட்டமைப்பினின்றும் சமயம் விலகிவிட முடியாது. அன்பு, ஒப்புரவு, மன்னிப்பு, பரஸ்பர நம்பிக்கை, ஐக்கியம், கொடை, இங்கிதம், இரக்கம், கட்டுப்பாடு, கருணை நலம், சகோதரத்துவம் என்னும் அரிய குணநலன்களின் அடித்தளமாக விளங்குவதும்
துரதிர்ஷ்டவசமாக வரலாற்றுக் காலம் முதல் சமயத்தின் பேரால் யுத்தங்களும், கொடூரங்களும், பேதங்களும், அடக்கு முறைகளும் அரங்கேறி வருவதனை நாம் அறிவோம். "பாறையில் விதைக்கப்பட்ட நெல்மணிகளாய்" சமய போதனைகள் ஆகிவிடக்கூடாது. அவை நடைமுறை வாழ்வியலைச் சீர் செய்யும் சாதனங்கள் ஆகவேண்டும்.
சிலருக்குப் போதையாகவும், பலருக்குப் போர்வையாகவும் சமயத்தைப் பயன் செய்வதுகூட விபரீத விளைவுகளையே தரும். விஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டினதும் சமவிகித இணைப்பாகி, சமகால சமூகக் கூட்டமைப்பிற்கும் இயைந்து செல்வதாய் விளங்கும்போதே சமயம் சமூகப் பயன் மிக்கதாக அமையும்.
சமயச் சார்மின்மை என்னும் வியாதி
இன்று புலமைத்துவவாதிகள், புத்திஜீவிகள் எனப் புகல்வோர் தாம் "சமயச் சார்பற்றவர்கள்” என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகின்றனர். அதாவது, அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் இருந்து முற்றிலும்
 
 
 
 
 

ஜூன் 2011 சமயம் தொடர்பான நம்பிக்கை அம்சங்களை விடுவித்தலாகும்.
கல்வி, ஞானம் என்பது இறைவிசுவாசம் இன்றிச் செயற்படும்போது, எத்தகு பயங்கர விளைவு தரும் என்பதற்கு கடந்தகால வரலாறு சாட்சி பகரும்,
கடவுள் நம்பிக்கை உண்டு என்றால் தமது பேதமைக்குப் பங்கம் நேர்ந்துவிடும் எனக் கருதுவோரும் உளர். அவர்கள் இயற்கைத் தத்துவத்தை ஆழ்ந்து, நுணுகி ஆராய்ந்தால் உண்மையினை உணரலாம்.
அறமும், சமய நம்பிக்கையும் அற்ற இன்றைய அறிவுதான் வன்முறைக்கும் வரம்பற்ற ஒழுக்கச் சீர்குலைவுக்கும் வழிசெய்கிறது.
உலகமே கொண்டாடும் மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒருமுறை "உலகை இயக்கும் பேரியற்கைச் சக்தியை நான் முற்றாக நம்புகிறேன்" என்று குறிப்பீட்டார்.
எனவே சமயச் சார்பின்மையின் விளைவுகளை ஆழமாக நாம் பரிசீலிக்கவேண்டிய காலம் கனிந்துவிட்டது.
சமூக நலன் நோக்கிய சமயம்
சமூகத்திலிருந்தே சமய நம்பிக்கை ஊற்றெடுக்கிறது. அதுவே பின் சமூகத்தை ஒன்றாக பிணைக்கிறது. வெறும் தத்துவமாக மட்டும் நின்றுவிடாது மானுட நேயமும் மனிதாபிமானமும் மிக்கதாக அது மாறும்போதே உயிர்ப்பினைப் பெறும்.
மகாகவி பாரதி கூறுமாப்போல் தேசாபிமானம், சமூகப் பற்று, கல்விப் பணி, அறப்பணியுடன் கூடியதாக சமயம் திகழ்வது
அவசியம்.
வெறும் கோஷமாக, கொள்கையாக எட்டாத உயரத்தில் சமயம் நின்றுவிடாமல், மண்ணில் இறங்கி, மனிதரோடு அது கலக்கவேண்டும். நுகர்வுவாத மயக்கத்தில் கானலைத் துரத்தும் இன்றைய மனிதரும் சமய உணர்வை இருதயத்தில் ஊற்றிப் புத்துயிர்ப்புப் பெறவேண்டும். சமூகம் அப்ப்ொழுதே éFIाJिLb மிக்கதாய்த் துலங்கும். மறுதிங்களில் மற்றொரு சிந்தனையோடு சங்கமிப்போம். Ο
சந்திரசேகரன் சசீதரன்
கிழக்குப் பல்கலைக்கழகம்
3)

Page 22
9ອດສ໌ காலமாக வித்தியாசமான, தரமான தமிழ்ப் படங்களும் வரத்தொடங்கியுள்ளன. வழமையான மசாலாப் படங்கள், நம்ப இயலாதபடி எகிறிக் குதித்து உதைக்கும் கதாநாயகன் (உதைக்கும்போது வில்லனின் அடியாட்கள் எப்படித்தான் பறந்துபோய் காரின் முன்கண்ணாடிக்குள்ளால் போய் பின் கண்ணாடிக்குள்ளால் வெளியே
வருகின்றார்களோ), டூயட் பாடல்கள் என்பன இல்லாமல் கதிரை நுனியில் எம்மை இருக்கவைத்து நேரம் போவதே தெரியாமல் எம்மைக் கட்டிப்போடும் திரைப்படம் ஒன்றை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.
அத்திரைப்படத்தின் பெயர் 'பயணம்'.
W臺江雲s s江口
 
 
 

படத்தின் கதாநாயகன் என்று எவரையும் சொல்ல முடியவில்லை. வழமையாக படங்களில் கதாநாயகனாக வரும் பிரபல நடிகர் ஒருவர் இப்படத்தில் "கமாண்டோ அதிகாரியாக வருகின்றார். என்றாலும் அவரை இப்படத்தின் கதாநாயகன் என்று சொல்ல முடியாதுள்ளது. ஏனென்றால் படத்தில் வரும் சகல கதாபாத்திரங்களுக்கும் சமவலுவை இயக்குனர் கொடுத்துள்ளார்.
விமானமொன்று பயணிகளுடன் கடத்தப்படுகின்றது. கடத்தல்காரர்கள் கராச்சிக்குச் செல்லுமாறு உத்தரவிட்டபோதும் விமானக்கோளாறு காரணமாக (கடத்தல்காரர்களின் துப்பாக்கி வெடித்ததில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு) திருப்பதியில் விமானம் இறக்கப்படுகின்றது.
இயக்கம், ஒளிப்பதிவு, இசையம்ைப்பு என்ற விடயங்களையெல்லாம் விட்டு கதாபாத்திரங்களின் மனநிலைகளின் பிரதிபலிப்புகளை பார்ப்பதே இவ்விமர்சனத்தின் முக்கிய நோக்கமாகும். -
விமானத்தில் ஐந்து கடத்தல்காரர்கள், இரண்டு விமானிகள், விமானப் பணிப்பெண், பயணிகள் என்று சுமார் நூறு கதாபாத்திரங்கள். விமானம் கடத்தப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படும்வரை நடைபெறும் சம்பவங்களினைப் படம் சொல்லுகின்றது. ஒரு பயணி தப்பியோடும்போது சுடப்படுகின்றார். அவர் போதை வஸ்து பாவிப்பவர். இன்னொருவர் விமானத்துக்குள்ளேயே சுட்டுக்கொல்லப்படுகின்றார்.
அவ்வளவு நேரத்தையும் பிரயாணிகள் (கடத்தப்பட்டவர்கள்) தங்கள் ஆத்துமசோதனைக் காலமாகக் கருதுகின்றார்கள் போலும்.
கணவனிடம் கோபித்துக்கொண்டு கடைக்குப் போவதாகச் சொல்லிக்கொண்டு டில்லி புறப்பட்ட இளம் மனைவி ஒருத்தியின் மன அவஸ்தை, திருமணம் முடித்த புதிதில் மனைவியிடம் கடுமையாக நடந்துகொண்டமைக்காக மன்னிப்புக் கேட்கும் வயோதிபக் கணவன், இவ்வாறு ஒப்புரவாகும் பாத்திரங்கள்.
பிரபல நடிகர் ஒருவரும் அதில்
s
20)

Page 23
பயணமாகின்றார். அவரின் பக்கத்தில் அவரின் பரம ரசிகர் ஒருவர். நடிகரின் படங்களில் அவர் செய்வதை உண்மை என்று நம்பிய அவர், கடத்தல்காரர்களிடமிருந்து நடிகர் தங்களைக் காப்பாற்றுவார் என்று எண்ணுகிறார். "பாய்ந்து வரும் புல்லட்டைப் பல்லால் கடித்துத் துப்பியவர்" (அவர் நடித்த படமொன்றில்) என்பதை உண்மையென்றே நம்புகின்றார். கடைசியில் அவையெல்லாம் போலிவேடம் என்றுணர்ந்து கோபமும் வெறுப்பும் அடைகின்றார்.
பிரபலமான சோதிடர், எண்சாஸ்திர வித்தகர் என்று தன்னைச் சொல்லிக்கொள்பவரும், அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த மார்க்சிச சிந்தனைவாதியினதும் (இவர்தான் சுட்டுக்கொல்லப்பட்டவர்) உரையாடல்கள் படு சுவாரஷயமானவை.
பெயரின் ஓர் எழுத்தை மாற்றியதால் ஒரு நடிகரின் வாழ்க்கையை உச்சத்தில் கொண்டுவந்ததாகச் சோதிடக்காரர் சொல்ல, "எல்லாரும் பெயர்களைத் தப்புத்தப்பாக எழுத நீங்கள்தான் காரணமா?" என்று மற்றவர் கேட்க உரையாடல் நன்றாகப் போகின்றது.
மார்க்சிசவாதி, கடத்தல்காரர்களிடம் "நீங்கள் எல்லாம் இப்படிச் செய்வதனால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எவ்வளவு சங்கடப்படுகின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்கின்றார். இந்திய தேசிய உணர்வுத் திரைப்படங்களில் வரும் வில்லன் பாத்திரங்களில் அனேகமானோர் முஸ்லிம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாத்திரங்களாகவே காட்டப்படுவதும் சங்கடத்திற்குரியதாகவே காணப்படுகின்றது) நம் நாட்டிலும் குறிப்பிட்ட
ஓர் இனத்தவர்கள்
ஊடகங்களில் குறிப்பிடப்படும் போதும் நாமும் இதே அவஸ்தையைப் பட்டமை ஞாபகத்தில் வருகிறது.
இதில் மனங்கவரும் இன்னொரு பாத்திரம் கத்தோலிக்கக் குருவானவர். உண்மையான கிறிஸ்தவ விழுமியங்களைக் கொண்டவராக அவர் வருகின்றார். கடத்தப்பட்டதும் அனைவரின் ஆறுதலுக்காகவும் கடத்தல்காரர்களின் அனுமதியுடன் விவிலியத்தை அவர் உரக்க வாசிக்கின்றார். இனமத வேறுபாடின்றி அனைவரும் அதனைத் தியானிக்கின்றனர். ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டவுடன் அவரின் ஆண்ம இளைப்பாற்றிற்காகத் தியானிப்பதுடன் கடத்தல்காரர்களிடம் இன்னொருவரைச் சுடும் தேவை ஏற்படின் தன்னைச் சுடும்படியும் அவர் கேட்டுக்கொள்கின்றார். (மக்கள் பனிக்காகத் தம்முயிரை ஈந்த வடக்கு - கிழக்கு கத்தோலிக்கக் குருவானவர்கள் எம் ஞாபகத்தில் வருகின்றார்கள்)
படத்தின் இறுதியில் கடத்தல்காரர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட, பயணிகள் தப்பிவிட குருவானவர் மட்டும் கடத்தல்காரர்களின் உடல்களுக்கண்மையில் நின்று செபிப்பது மனதைத் தொடுகிறது.
விமானத்தில் பாகிஸ்தான் கணவன் மனைவியும் இந்தியாவில் இருதய சத்திரசிகிச்சை செய்யப்பட்ட அவர்களின் சிறுவயது மகளும் பயணம் செய்கின்றார்கள். அவர்களும் கடத்தல்காரர்களை வெறுக்கின்றார்கள்.
இதனை வாசித்த கையோடு படத்தைப் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் சுவாரஷ்யமாக
இருக்கும். - O

Page 24
என் தோள் தாங்கி என் கை பிடித்து நடத்திப் போனார்கள் கசாப்புக்காரனின் கைக்கயிற்றில் நடக்கும் பலிபாடாக
நானும் வாழ்ந்தேன் என்று வாய் விட்டுக் கத்தினேன்
ழத் தெரியாதவள் என்றது உலகம் வன் என்னைச் சிதைத்தான் தைமேல் வதை செய்தான் என்று வருந்தியமுதேன் அனுசரிக்கத் தெரியாத அல்லியடி நீயென்றன
 

ஏக்கங்களை எரித்தனர்
· ფfrმენგიorერხეს. மெட்டியிட்டு கடிவாளர் பூட்டினர் தாலியெனும் விலங்கிட்டு அடிமைச் சாசனம் வரைந்தனர் இப்பொழுதாவது நம்புங்கள் நானும் வாழ்ந்தவள்தான்
அம்மியை மிதித்தேன் அடிமனது கல்லாயிற்று அச்சமென்றும் மடமென்றும் நாணமென்றும் பயிர்ப்பென்றும்
நாற்குணங்களை விதித்து நங்கையரைச் சிறையிலிட்டார் மலினங்கள் மலிந்த மண்ணில் நயனங்கள் சாக்கடையில் நானென்ன விதிவிலக்கா நம்புங்கள் நம்புங்கள்

Page 25
தெரிண்டன்
அழகும் பசுமையுமிக்க அந்தக் கிராமத்தின் அழகை இ வர்ணிக்க வார்த்தைகள் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. அவள் பெயர் திருனா. இயற்கையுடன் ஒன்றித்த ஈடுபாடு இலவசமாய் அவளுக்குக் கிடைத்திட்ட ஒன்று. இயற்கைக்காகவே கிராமத்தை விரும்பினாள்.
நாளாந்த வாழ்க்கைப் போராட்டத்தில் மாற்றங்கள் பல அந்தக் கிராமத்தைத் தொட்டன. திரும்பும் திசையெல்லாம் திருப்பங்கள், விரும்பும் இடமெல்லாம் வினோதமென மாற்றப் புரட்சியால் மாறிக்கொண்டிருந்தது திருனாவின் கிராமம்.
பசுமைப் புரட்சிகள் சுமையாகக் கருதப்பட்டதோ தெரியவில்லை. கிராம மக்களின் முன்னேற்றம் கருத்தில் எடுக்கப்பட்டு செயற்கைகள் உருவாகின.
கட்டிடங்கள், கடைகள், கம்பியூட்டர் நிலையங்கள் என நவீன உலகோடு ஒத்துப்போனது திருனாவின் கிராமம். கவலை ஒருபுறம் வேதனை மறுபுறமென ஒதுங்கிக்கொண்டாள் திருனா.
இயற்கையின்மேல் மனிதனுக்கு அதிகாரமில்லையே.அதனை அழிக்கும் சக்தியை அவனுக்குக் கொடுத்தது யார்? கடவுளே வந்து இயற்கையை அழிக்க விரும்பினாலும் போர்க்கொடி
உயர்த்தவேண்டும்
 
 
 
 
 

சிறுகதை
என்பதே அவளின் விருப்பம்.
நாட்கள் வேகமாக ஒடியதோ இல்லையோ, கிராமத்தின் பசுமை இல்லாமல் போய்விட்டது. மாற்றத்தின் மத்தியில் வாழ்வது சிரமமென உணர்ந்த திருனாவுக்குக் கிடைத்த வேலை இடமாற்றம் ஆறுதலாக இருந்தது.
எப்போதாவது விடுமுறைக்கென வந்து போவாள். விடுமுறைக்காக அவள் தவமிருப்பதும் இல்லை. நாட்கள் நகர விடுமுறையில் வீடு இருப்பதையும் மறந்தாள்.
கால ஓட்டத்தில் ஐந்து வருடங்கள் நகர்ந்தது வினோதமாகவே இருந்தது திருனாவுக்கு. ஊர்ப்பக்கம் வரவேண்டிய கட்டாயம், தலைகாட்டினாள். பஸ் தரிப்பிடத்தை விட்டு கிராமத்தை நோக்கி நடைபோட்டவளுக்கு ஆச்சரியம்.
அவளால் நம்புமுடியாத அதிசயம்
கிராமத்தை அழகு செய்திருந்தது.
至、 அழிந்திருந்த பசுமை
霹
ܨ ܢ ==

Page 26
அரசியல் சிரேஷ்டர்கள் தங்கள் அறிவுத்திறனை வெளியிடுகிறார்கள் நிபுணர்குழு அறிக்கை குத்துக்கல்லாட்டம் இருக்கிறது இந்த அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்
த்து இலட்சம் கையெழுத்தும் சேகரிக்கிறார்கள்
அறிக்கைகள் வெளியிடுகிறார்கள்
உள்நாட்டு விஷயங்களில்
6մմ:5լb தலையிடக் கூடாதென்று
உபதேசம் செய்கிறார்கள்
囊 தேசப்பற்று உள்ளவர்கள்
இப்படித்தான் செய்யவேண்டும் araয়া । ஆலோசனை கூறுகிறார்கள்
ஐநா செயலாளர் பான்கி மூனை
ல்லோரும் திட்டித் தீர்க்கிறார்கள்
- நிபுணர்குழு அறிக்கையில்
உள்ள தகவல்கள் அவருடையதல்ல
ன்பது தெரியாமலே வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்
மனித உரிமை மீறல்கள் பற்றி
ாரும் பேசவில்லை
獸 மனிதப் படுகொலைகள் பற்றி
யாரும் பேசவில்லை நிபுணர்குழு அறிக்கையில் என்ன இருக்கிறதென்றுகூட
®öeຫgງມີ ung) சொல்லவில்லை இவர்களுக்கு ஒன்று கூறலாம் நிபுணர்குழு මණ්ඨාරසසuහුණූ கூறப்பட்ட
ಮೌಯ್ರ ಲಿಫ್ಟ್ಬfವಾಗತ 夔 . ܠ 鑫 நிராகரிக்க முடிந்தால் 6 அதை மட்டும் செய்யலாம்
6e6ffiយer?
மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது. முன்பிருந்த அளவுக்கு இல்லையாயினும் முகஞ் சுழிக்காத அளவுக்கு இயற்கை அசைந்தது. எப்படி இந்த மாற்றம்? யார் செய்த மாற்றம் என்று எண்ணிய வாறே வீட்டை நெருங்கினாள். மனதில் எழுந்த வினாவுக்கு அன்னை விடைகொடுத்தாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்தி சாயும் வேளை அது அம்மாவிடம் அனுமதியெடுத்து கிராம வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்துகின்ற பெரியவரைச் சந்திக்கப் புறப்பட்டாள் திருனா. சிறிய வீடாயினும் அழகாக இருந்தது. பேராதனை, ஹக்கல தோட்டங்கள் தோற்றுப்போகும் அழகு அந்த வீட்டைச் சுற்றி வளர்ந்திருந்தது. காடெல்லாம் அழிக்கப்பட்டு நாடாகின்ற இக்காலங்களில் இப்படியும் ஒருவரா? வியந்துகொண்டாள். அவள் அறிந்திராத பூக்கள், மரங்கள், செடிகள் என எல்லாமே கண்களுக்கு விருந்தளித்தன.
இயற்கையின் செல்வம் கண்களை ஈரமாக்க தோட்டத்துக்கு உரமாக மாறியது இரு சொட்டுக் கண்ணிர்.
அழைப்புக் கொடுத்து அனுமதி பெற்று உள்நுழைந்தாள். பார்வையில் பட்டர் பெரியவர். வெள்ளை நிற உடையில் விரும்பத்தக்க தோற்றத்தில் இருந்தார். இவளைக் கண்டதும் நாற்காலியைக் காட்டிவிட்டு அமர்ந்துகொண்டார்.
அவரை அவதானித்தபடியே அமர்ந்துகொண்டாள் திருனா. வலக்கை மணிக்கட்டில் ஓடிக்கொண்டிருந்தது நேரம். ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்ற நரைகளின் ஆதிக்கம் ஐம்பதைக் கடந்திருப்பார் எனக் காட்டியது. ஆனாலும் நரைக்கேற்ற சோர்வு அவர் முகத்திலோ முதுகிலோ இருக்கவில்லை. வாரிவிடப்பட்டிருந்த கேசமும், வெட்டிவிடப்பட்டிருந்த நகங்களும், கால்களில் தெரிந்த பாதணிகளும் அவரின் சுத்தத்தை அவளுக்குக் காட்டியது. அவர்மட்டில் ஒருவித மரியாதையை உண்டுபண்ணியது அவளுக்கு. தந்தையை நினைத்துகொண்டாள்.
அறிமுகங்கள், பரஸ்பர வார்த்தைப் பரிமாற்றங்கள், பேச்சுகள், குடும்பங்கள் என இயற்கைச் செழிப்பாய் வளர்ந்தது உரையாடல்,
அவருடன் பேசியதில் நேரத்தையும் மறந்தாள் திருனா. பேச்சின் இடையில் கிடைத்த உபசரிப்பை ஏனோ அவள் மறுத்தாள். உரையாடலின் இடையில் அவர் வலக்கைக் கடிகாரம் ஒலி எழுப்பி நேரத்தைக் கூறவும் w எழுந்துகொண்டார், கூடவே அவளும்.
"பின்பு சந்திப்போம். உனக்கு நேரமாகிறதல்லவா."
"ஐயா உங்களின் நேரத்தை அதிகமாக

Page 27
தெரிண்டன் எடுத்துவிட்டேனா, கேட்டாள்.
வார்த்தைக்குப் பதில் புன்னகையே அவரிடம் வந்தது.
" நகத்தைக் கடித்தபடியே
"ஐயா அழகான இந்தத் தோட்டத்தில் ஒரு குறை உள்ளது' வெளிப்படையாகப் பேசினாள்.
நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் அவர் கண்களைச் சிறிதாக்க யோசனை செய்தார் போலும்.
"ஐயா, உங்கள் தோட்டத்தில் அழகுக்கு அழகு உண்டு. ஆனால், வாசனைக்கு வாசனையாக ஒரு மல்லிகை இல்லையே' கவலையுடன் கூறியவள் பெரியவரிடம் தோன்றி
தீபம்' என்ற சமய
ம.இரகுநாதனின் |
நூல்களாக ஆரையூர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறைந்த புன்னகையைக் கானத் အ၈၂ဏ္ဍ၏လံဓ၈လ. புன்னகையின் அர்த்தம் புரியாமலே புறப்படத் தயாரானவளிடம்
"உனக்கு மல்லிகை என்றால் இஸ்டமா?"
இப்போது புன்னகை அவளிடம்.
அர்த்தம் புரிந்த பெரியவர் மனமும், வீட்டை நோக்கிப் புறப்பட்ட திருனாவின் மனமும் எண்ணிய எண்ணம். அது பெரியவருக்கு மல்லிகைப் பதியமொன்றைப் பரிசளிக்க வேண்டுமென்பதும், உடனே மல்லிகைப் பந்தலொன்றை உருவாக்க வேண்டுமென்ற பெரியவரின் எண்ணமும்,

Page 28
6\ghතffix_Offit
எண்ணிப்பார்க்கையில்
9a)L(TGTo
bேன்பூவியஸ் என்கின்ற சீனத்து அறிஞர் "மனிதனின் இயற்கை என்பது எப்போதுமே ஒன் றானது. ஆனால், அவனது பழக்கவழக்கங்கள்தான் அவனை ஒருவரிடமிருந்து வேறுபடுத்துகின்றன’ என்கின்றார். மணியான வார்த்தைகள் ஆழமாக எண்ணிப்பார்க்கையில்.
நம்மை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகின் றவை நமது வாழ்க்கைமுறைதானேயொழிய எமது உயிர் உடல் அமைப்புக்களல்ல என்பது தெரிய வருகின்றது. நமது தனித்துவம் என்பதை நமது பழக்கவழக் கங்களே தீர்மானிக்கின்றன. நாம் சிறுபராயம் முதல் நமது பெற்றோர் உறவுமுறைகள் நமக்குச் சொல் லித்தரும் பழக்கவழக்கங்களையே கடைப்பிடித்து நிற்கின்றோம். இருந்தபோதும், பாடசாலை வாழ் வுக்குள் நுழைந்ததும் நம்மையறியாமலே மற்றவர் களிடமிருந்து சிலபழக்கவழக்கங்களைப் பிரதி பண்ணவும் செய்கின்றோம். இப்படியானவைகள் சில நேர்மறையானதாக இருந்து விடுகின்றன. சில எதிர்மறைத் தாக்கங்களையும் தந்துவிடுகின்றன. வயதுவருகின்றபோது நம் உள்மனம் நமக்கொரு தனிஅடையாளத்தை - சமூக ஏற்றுக்கொள்ளலைத் தேடிநிற்கின்றது. இந்தச் சமயத்திலும் நம் பழக்க வழக்கங்கள் மாற்றத்திற்குள்ளாக நேருகின்றது. எப்படித்தான் இருந்தாலும் இந்தப் பழக்கவழக் கங்களைத் தேடிச் சேர்த்துக் கொள்வதும், விலக்கித்
(2.
 

D. * தவிர்ப்பதும் நாம்தான். நம்மை ஆக்கிய
எண்ணி எண்ணி செய்தாள்
இறைவன் நமது பொறுப்பில்தான் இதனை விட்டிருக்கின்றான் என்பதை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். குடியைத் தெரிந்துகொண்டபிறகு நானாகவா குடிக்கத் தொடங்கினேன் ஆண்டவன்தான் குடிக்க வைத்தான்' என்பதும், கவலை மறக்கக் குடிப்பதும் நமக்குக் குடிகாறனல்ல என்ற தீர்ப்பைப் பெற்றுத்தரப் போவதில்லை. அப்படிப் பேரெடுக்கக் குடியை விட்டுவிட வேண்டும் 3,6360)GouT?
தெரிவுகள் நம்மது அதனால் விளைவு களும் நம்முடையதே. நாம் நல்லவனாகவும், வல்லவனாகவும் மற்றவர் களால் அடையாளம் காணப்படுவது நம் கரங் களில்தான் தங்கியிருக்கிறதேயொழிய, மற்றவர் பார்வையிலல்ல என்பதைப் புரிந்துவாழ முற்பட வேண்டும். பார்ப்பதைத்தான் மனம் எடைபோடும். நம்மை மற்றவர்கள் எப்படிப் பார்க்கவேண்டும்
என்று நாங்கள் விரும்புகின்றோம்?.
ஆனந்தா ஏஜீ.இராஜேந்திரம் ()
ਸੁ
மனுமகனை உதரத்தில் gth) கன்னிமரி அவள்
យញាយប៉ាយរ៉ា យល់ |DITIDIf éIöra)Gru

Page 29
சிறுவர்களுக்கு
மட்டும்
முடிவுத்திகதி 15- 007 - 2011
ഖിഖി|) ,
(எண்ணிக்ை (பொருத்தமான சொற்களைத் தெ மோசே அவர்களிடம் நீங்கள் இதைச் செய்தால் ஆண்ட போர்க்கலந்தாங்கியோர் ஒவ்வொரு வரும் ஆண்டவர்மு diL பணிந்தடங்கும்; அதன் பின்பு நீங்கள் திரும்பி வருவீர்க நிறைவேற்றியவராவீர்கள்; இந்த நாடும் ஆண்டவர் முன் நீங்கள் இதைச் செய்யாவிட்டால் நீங்கள் . உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிப்பது தி உங்கள் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் க செய்யுங்கள். காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வருப கட்டளைப்படியே உம் அடியார்கள் செய்வோம்; எங்கள் கால்நடைகள் அனைத்தோடும் கிலயாதின் நகர்களில் உம் அடியார் ஒவ்வொருவரும் போர்க்கலந் தாங்கியவரா என்றனர். இதுபற்றி . ( மக்களின் குலங்களில் மூதாதையர் வீட்டுத் தலைவர் அவர்களிடம், "காத்துப் புதல்வரிலும் ரூபன் புதல்5 போர்க்கலந் தாங்கிய ஒவ்வொருவரும் உங்களோடு யே நாடு உங்களுக்கு முன் பணிந்தடங்கும்; பின் நீங்கள் கொடுக்க வேண்டும்; ஆனால் அவர்கள் போர்க்கலந்த நாட்டில் உங்களுக்கிடையே அவர்களும் உடைமை புதல்வரும், ரூபன் புதல்வரும் மறுமொழியாக, "ஆண் செய்வோம்; நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போ செல்வோம்; எங்கள் உரிமைச் சொத்தான உடைமை என்றனர். . காத் மனாசேயின் பாதிக் குலத்தவர் ஆகியோருக்கு எமோரி ஒகின் அரசையும், நிலப்பகுதி நாடு முழுவதையும், அ நகர்களையும் கொடுத்தார். காத்துப் புதல்வர் . அற்றரோத்து சோபான், யாசேர், யோக்பகா, பெத்நிய ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டினர். ரூ நெபோ, பாகால்மெகோன், சிப்மா ஆகியவற்றைக் கட சூட்டினர். . pas6ā LOTāšēši
அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர். மோசே கி அவர் அதில் வாழ்ந்தார். மனாசே மகன் யாயிர் புறப்பு கொண்டார்; அவற்றை அவர் . புறப்பட்டுச் சென்று கெனாத்தையும், அதன் சிற்றூர் தம் பெயராலேயே "நோபாகு' என்று அழைத்தார்.
விடைகள் : கடந்து, மோசே, காத்து, அவ்வோ
யோர்தானை, தலைவர் (வினாப்படிவத்திலேயே விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும், பிறிதாக
இ
 
 
 
 

832:20 - 42) ரிந்து இடைவெளிகளை நிரப்புக) டவர் முன் போர்க்கலம் தாங்கிச் சென்றால், உங்களில் மன், அவர் தமக்கு முன் எதிரிகளை விரட்டி அடிக்கும் உந்து சென்றால் நாடு ஆண்டவர் முன்னிலையில் 5ள்; ஆண்டவருக்கு இஸ்ரயேலுக்குமுரிய கடமையை ன்னிலையில் உங்கள் உடைமையாகிவிடும். ஆனால் SSLSSSLS S SSSSSSS SLSSSSS0SSS SSSSLS SSSS0SSSSSLSSSSLS SSL எதிராகப் பாவம் செய்திருக்கிறீர்கள்; திண்ணம். உங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் ட்டுங்கள்; நீங்கள் வாக்களித்ததையே இப்பொழுது ம் மோசேயிடம், "எம். ர் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் மந்தைகள், தங்கியிருப்பர்; ஆனால் எம் தலைவர் ஆணைப்படியே ய் ஆண்டவர் முன்னிலையில் தொடர்ந்து செல்வோம்" தரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் கள் ஆகியோருக்குக் கட்டளை கொடுத்தார். மோசே வரிலும் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்குப் ார்தானைக் . செல்வர்; ர் கிலயாது நாட்டை அவர்களுக்கு உடைமையாகக் ாங்கி உங்களோடு கடந்து செல்லாவிட்டால் கானான் கள் பெறுவர்' என்றார். . டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் ார்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும்" துப் புதல்வர், ரூபன் புதல்வர், யோசேப்பு மகன் ய மன்னன் சீகோனின் அரசையும் பாசான் மன்னன் தன் நகர்களையும், அதைச் சுற்றியுள்ள எல்லைப்புற SLSL SS S S SS S S S S SL S SLS SLS S S S S S LSL S SL S LSSL SSSLSS SS S SLSS SLSS SLS S SL S LSLS S SLS LS LLL அற்றரோத்து, அரோயேர், bரா, பெத்காரான் ஆகிய அரண்சூழ் நகர்களையும் பன் புதல்வர் எஸ்போன், எலயாலே, கிரியத்தாயிம், ட்டினார்கள்; அவர்கள் கட்டிய நகர்களுக்குப் பெயர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி லயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்; Iட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் ise see e. யாயிர் என்று அழைத்தார். நோபாகு என்பவர் களையும் கைப்பற்றிக்கொண்டார்; அவர் அதைத்
ாத்து, மனாசே, தீயோ, ஆண்டவருக்கு, மோசே,
அனுப்பப்படும் விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது)

Page 30
தொண்டின்
HSiS MSiSiLL SS SiiiiS SSiSiSS SiSSS SiiiiiiSL L MSiS S SiS பரிசுப் போட்டி
しつイエイ2イムイZイエイ2イ
7
அறிவை 66 mTriG IIT b - ܓܬ
(பொருத்தமான சொற்களின் கீழ் அடிக் 1. மனித உடலில் உள்ள மொத்த எலும்புகள்
(206, 306, 250)
2. காற்றை விட நீரில் ஒலி .
(மெதுவாகப் பரவும், வேகமாகப் பரவும், ப.
3. அறிவியல் நூல்களின் அரசி என அழைக்க (கம்பியூட்டர் விஞ்ஞானம், பெளதீகம், கணி
4. கலிங்கத்துப் பரணி எனும் காவியத்தைப் (ஜெயங்கொண்டார், காளமேகம், கம்பர்)
5 இரக்கப் போனாலும் . (இரவில் போ, சிறக்கப் போ, சிரித்துப் போ
6. 'வந்தான்' என்பது
(முன்னிலை வினைமுற்று, குறிப்பு வினைமு
பரிசு அனுப்பவேண்டிய தபாலகம்:
 
 
 
 

98
ܓ= 98
கோடிடுக)
அனுப்பவேண்டிய முகவரி: ம் கற்போம் / அறிவை வளர்ப்போம்- 98
தொண்டன் அ. பெ. எண் = 44 மட்டக்களப்பு.

Page 31
es
s ŕ( gy VN
போட்டி மு
விவிலியம் கற்போ
ஆண்டவருக்கு, மோசேயும், ஆள்கள், பல்லாயிரத்தவர், கரை, கு
அறிவை வளர்ப்பே
1) செம்பு 2) இதயத்தை மூடிய 4) தோட்டக்காரி 5) டொனமூர் ய
பரிசுகள் - அனுசரணை; அருகி
இரு பிரிவுகளுக்கும் சரியான வி
ஒரு பிரிவுக்கு மட்டும் சரியான விடை
> T.துலக்ஷிக்கா
இல.82, A வலயம் கொக்குவில் மட்டக்களப்பு
சிறுவர் சிறுமியருக்கான வர்ண
> முதலாம் பரிசு - 400/= ) இரண்டாம்
S.விஸ்மிதா விவோன் Lாலையூற்று 93/44,卤 திருகோணமலை திருகோ6
போட்டியில் பங்குகொண்ட அனைவ
 

ம் - BB விடைகள்
பங்காக, முப்பத்திரெண்டு, இஸ்ரயேல், மிழ் மணிகள், படைவீரனும்
Tuib – HBG finaLdboř
புள்ள அறை 3) சுப்பிரமணிய பாரதி ாப்பு 6)நீட்டல் விகாரம்
ர்தந்தை. அண்ரனி குருஸ், CRS
டை எழுதியவர்கள் எவருமில்லை
எழுதி ரூபா 200/= பரிசு பெறுவோர்
> ஜறின் குளோறியா லெப்பன்
1001/1, அன்புவழிபுரம் திருகோணமலை
ம் திட்டும் போட்டி 48 முடிவுகள்
பாரிசு - 300/= > 3ம் பரிசு - 200/=
ஜோசப் டிலுக்ஷிக்கா திமன்ற வீதி -ஜீவதாஸ்
TD606) விஜயபுரம்
மட்டக்களப்பு
பருக்கும் எமது நன்றி. (ஆ - ர்)

Page 32
இலங்கை வானொ
s கத்தோலிக்க நி SS
ஜூன்
கத்தோலிக்க நற்சிந்தனை - க
நாள் 04 05, 06, 07 - அருள்த .. 08, O9, 10 - அருள்த s 18, 19, 20, 21 - திரு. லு SS 22, 23, 24 - திரு. ெ
சிறுவர் உலகம் - மாலை 7.00
நாள்- 14, 28
கதையும் கருத்தும், கவிதை செபம், பாடல்கள் இன்னும். SC புதிய உலகம் - மாலை 7.00 ப
நாள்- 12, 26
விவிலிய வழிபாடு, வேரைத்
நாடகம், சிந்தனை உ6
s நிகழ்ச்சித் தொகுப்பு : d
SS f மலர்வேந்தனர்
சனி, ஞாயிறு தினங்களில்: செபம்
ਸੰਨੀFM, SC ഒൂഖ് ഖുന്ദ്ര ജ്
^බුණි.
කුණ්‍ය
තුණි.
තුණි.
තුණි.
<
තිබේ.
^බුණි.
^බුණි.
狄
 

R லி தேசிய சேவையில்
尊 @ @ R கழ்ச்சிகள் - தமிழ்
- 2011 R ாலை 5.55 மவரி R ந்தை பிரைனர் செலர் R ந்தை மதுராங்கன் குரூஸ் ாக்காஸ் அலெக்சான்டர் R பளப்லியோ வாளப் "R
துணுக்குகள்,
ܦ
D60s
R தேடி, திருச்சபைச் செய்திகள், ரை, பாடல்கள் இன்னும். R
lajofri fi II : 6-pa Diċjarji s
தாடர்பு சமூகத் தொடர்பு நிலையம்
9. ólu. ốT Ooi - fuf, D__ឆ្នាំ១៩៧u.
கத்தோலிக்க நற்சிந்தனை
б5 6115/14215 л бі (Зиготті.
= -, -, -, ബ= = ബ= മ බිණි. තුණි. කුණ්‍ය කුණුම තුණුබ කුණු කුණු කුණක