கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டிதன் சிறப்பிதழ் 1964

Page 1
பண்டித மாணவர் கழ
《། : و) ، C +ل<"
Q_\ pQ 19
 
 
 


Page 2


Page 3
இலக்கிய கல
திருவள்ளுவ
 
 

ாணவர் கழக
ாமன்ற வெளியீடு
ராண்டு 1995

Page 4
இதழா
மயிலங்கூடலூர் சி
72 பண்டிதர் த. இரா செல்வி இ. கனக
霹 க. சுஇலா
திருமகள் அழுத்தகம், சுன்னுகம் - ஆ21
 

சிரியர் குழு
அப்புத்துரை (தலைவர்) நடராசன்
சரத்தினம்
né00f தேவி (செயலாளர்)
2-8/64

Page 5
வாழ்த்துது
பண்டிதர் இ
நேரிசை
பூமலி கொன்றைப்
தாரன் றந்த தண்ட னியனல மகத்திய தவத்தினர்க் கல்லது
மெய்த்திரு வுற்ற வ ராக்இய விலக்கண ! பத்து மெட்டும் பத் மைந்து மல்லவ ம1 ரவ்வழிப் படரா தல் ருனரெனி லவர்க்கவ்
வொல்காப் பெரும்பு பண்டிதர் கழகம் ப மகவைதெர றிதழ்வி னுதலிய பல்பொருை யிமிழ்திரை தந்த வ தம்மலர் தன்மண ഖഴ്സിഖഴ്സി ിമീഴ്ക, 6 வாழ்த்துது மீசன் ம யிதய கமலத் திருத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6.
மீசன் மலரடி
இ, ஈமசிவாயம்
ஆசிரியப்பா பொன்னேர் புதுமலர்த் மி ழணங்கி விருடிமுன் னை
தான்தெரி பிலதே |த்தக வான வமைதி காட்டிப் தினெ டெட்டு க்கினர் புலத்தோ வழிப் படருந வயர்நெறி காட்டிய கழ் மல்லா கத்துப் ண்டித னென்னு ரி தகவுறு மலரி ன் முதலித ழதனை மிழ்தெனத் தந்த வனியிற் பரப்பி வாழிய ரென்ன 1@jp. தின மகிழ்ந்தே.

Page 6
Lu GöOT 号、
பண்டிதர்
பண்டித ஞமங் கொண்டாய், கொண்டிடற் குண்டு குற்ற ே பண்டுகன் மறைக்கொப் பா6 வண்டமி ழணங்கிற் காய மன
அன்னவை யிகழ்ந்திங் காளி ( துன்னிய நூல்கள் தூய்மை
பன்னுநூற் பசிகொள் வார்க மன்னுபண் டிதனுய்த் தூய
பண்டித வருக, நீயே, பகருே டுண்டுதே ரிலக்க ணங்க ளு பண்டைய தத்து வங்கள் பக கொண்டுகி வந்தா யுன்னை 6
 
 
 

=జాEమాజా
-ബ
ஒ
த வருக !
வ. நடராஜன்
பகளிற்றற் புகழ்ச்சி யாகக் மென்பவர்க் கொன்று சொல்வன் ன பல்வகை நூல்கள் மற்றும் Eகொளா பரண மாக,
லறிந்திடார் புனேயும் பொய்ம்மை யனேந்திடாத் தொடர்க ளாலே ள் பல்திசை மாறக் கண்டு தமிழ்செய்ய வந்தா யாக,
தொல் காப்பி யத்தோ பரிய விலக்கி யங்கள் கருசாத் திரங்க ளெல்லாங் வருகென வரவேற் போமே.

Page 7
பண்டிதனி
திரு. கந்த,
திருவிற் சிறந்தொளிர் யுருவிற் சிறந்துலக மு கொண்டிதமீ யேறக் கு பண்டிதனி வாழ்க பரந்
பண்டிதனும் பல்செவிலி வண்டமிழை யாய்ந்தாக வண்டமிழை யாய்ந்தாக தண்டமிழி னகம்பிரிக்குர் தண்டமிழி னகம்புறமுங்
உலக மோடுடன் வ வுறுதி கூறிே வலகில் பல்கலே தர் வகவ லாருயி நலமி குத்திடு பண்டி கவில்பு லத்தி புலமி குந்தவர் தாங்
புகழ்ா மீழமும்
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்க பரந்து
முருகேசனுர்
செந்தமிழ்ாகன் கூட்டி ற்றே - தருபொன்கட் லவுகலை யாழிபடீஇப்
型。
த் தாயர்வள ரிக்குழவி மக் கீரன்கா ணம்மானை மக் கீரனவ னுமாயின் * தகையவணுே வம்மானே தான்விரிப்பா னம்மானே.
ாழிய வாழிய எ வாழிய வாழிய தனை வாழிய ர்க் கோட்டினை வாழிய
தர் கூட்டமா lனர் போற்றிட வாழிய துணை நிற்றலிற்
வாழிய வாழியே.

Page 8


Page 9
a toj
ஈழத்துத் தமிழ்ப் பரம் தனியணுய்த் தமிழ்க் க தமிழ்ச் சுவையைப் ப ரும் இசைக் குரிசிலுமா நல்லூர் வித்துவசிரோமணி அவர்களது பாதமலரிே இவ்விதழை எமது கான
 

பரையிலே, தமிழ்க்கொரு டலில் மூழ்கித் திளைத்து, ரப்பிய, தமிழ்ப் பேரறிஞ ன தமிழ்ப் பெருமகனுர், ரி 15. ச. பொன்னம்பலபிள்ளே ல தமிழ் மணங் கமழும் எரிக்கையாகச் சூட்டுகிருேம்,

Page 10
கழகக் காப்பாளர்களுப் 1968 -
 

), அலுவலாளர்களும்
- 1964

Page 11
GTLDol G
தண்டமிழ்ச் சான்றேர் தந்துத இற்றைநாட் புலவோர் இனிதளித்த யாராய்ந்து காலப்போக்கிற் கேற்ப துக்களைக் காட்டி, இலக்கியச் சுவை ஏடுகளை இன்று தமிழ்கூறு கல்லுல ஏடுகள் சில இன்று உளவெனினும் ஆ பசியைப் பூர்த்திசெய்ய வியலா கிே இலக்கியமாகக் காட்டி மயங்க வைக்கு எனவே தூய இலக்கியப்பணி செய் நற்பணியாகும் என்னும் எண்ணம் அவ்வெண்ணமே பண்டிதன் என்னு மலர்ந்தது. -
மல்லாகம் பண்டித மாணவர் கழ படிவத்தில் நாற்றிங்கள் வெளியீடா சிறப்பிதழே இது. தகவற்ற ஏடுகளின் மயங்காமற் காத்து, மக்களைச் செக்டுெ களே மரபுவழி நின்று கற்றுணர்ந்து பு தூண்டுங் கருத்தோவியங்களின் து மையை வளர்த்தல்; இக்கால இளை பற்றுவைத்துப் பயில வகைசெய்தல் நிறைவேற்றும் துணைக் கருவியாக, தருதல் வேண்டுமென்பது எமது என வதில் நாம் எத்துணை வெற்றிபெற்றுள் சுவைப்பவர்களே உரைத்தல் வேண்
பண்டிதனின் அடுத்த இதழ்கள் 3 மலரும். தமிழ்ப் பேரறிஞர்கள் எ வளர்ச்சிக்குத் துணைபுரிதல் வேண்டு
இந்த இதழை அழகுற மலரச் கவிஞர்களுக்கும், அச்சகக் கலைஞ பொலிவதாக,
 

Fண்னம்
விய பண்டைய இலக்கியங்களையும், இலக்கியச் செல்வங்களையும் நுணுகி அவற்றிடைத் தோன்றும் புதிய கருத் வளர்க்கும் பெற்றியவாய இயற்றமிழ் கம் வேண்டி நிற்கின்றது. அத்தகைய அவற்றின் சேவை, நாட்டின் இலக்கியப் யோடு இலக்கிய மல்லாதவற்றையும் நக் தன்மையதாகவும் அமைந்துள்ளது. தற்கு இனிய ஓர் ஏட்டினை வெளியிடல் எமது உள்ளத்திலே தோன்றியது. ம் பெயரில் நாற்றிங்கள் வெளியீடாக
க இலக்கிய கலாமன்றம் கையெழுத்துப் க வெளியிட்ட பண்டிதன் ஏட்டின் வழிப்பட்டுப் பிழையுற்ற நெறிச்சென்று றிப்படுத்தல்; எமது பழம்பேரிலக்கியங் துமைகண்டு சுவைத்தல்; சிந்தனையைத் ணைகொண்டு ஆராய்ச்சி மனப்பான் ஞர் பண்டைத்தமிழ் இலக்கியங்களிற்
ஆதியாம் நன்னுேக்கங்களை இனிது பண்டிதன் என்னும் இவ்வேடு பயன் ண்ணம், அந் நோக்கத்தை நிறைவேற்று ளோம் என்பதை இந்தச் சிறப்பிதழைச் (9լի. -
5லேத் துறை ஆராய்ச்சிகள் பலகொண்டு மக்கு ஊக்கம் அளித்து பண்டிதனின்
ம்.
செய்த முதுபெரும் புலவர்களுக்கும், 5ர்களுக்கும் தமிழன் னே யின் அருள்

Page 12
பொருள
பூர்வமீமாம்சையும் புறத்திணையிற் . மனிதனை மீண்டுங் கண்டுபிடித்தல் அறிவியலுஞ் சைவமும் திருக்குறளுஞ் சைவசித்தாந்தமும் திருவள்ளுவர் உவமையிற் கருத்துச் அறிவுச் செல்வம் இலக்கிய விமரிசனம் இலக்கியப் பண்பும் சிறுகதையும் தமிழ்க்காப்பியங்களில் நாடகக் குறி பண்டைத் தமிழரக வாழ்வு தாயர் காத்த தமிழ் அம்மானைப் பாடல்கள் ஈழத்துப் பள்ளுப் பிரபந்தம் இருபெயரொட்டாகுபெயரும் அன்ே பேராசிரியர் நோக்கில் அணியிலக்க அன்றெழுதிய இவர்கள் இன்றிருச்
செவிநுகர் கணிகள்
கவிஞன் கனவு
சுவடு
ຫຼື LGງ
வேனில் மகள்
இன்பம் எது. ? பண்டித மாணவர் கழகம்
சிவநெறிக் கழகம்
 
 
 

šēb
ாடானும்
செறிவு
ப்புச் சுவை
மொழித்தொகையும்
600 fi
தால். 2.
74
75
了台
77
82
84
92

Page 13
பூர்வமீ LDTLD002.G.U JLD LID
பண்டிதமணி சி. கன
வியாச முனிவரின் சீடர்களுள் ஒருவர் சைமினி அருந்தவனுஞ் சைமினி என் கின்றது சிவஞானசித்தியார். தவவிசேடம் படைத்தவரான சைமினி, வேதத்தின் பூர்வகாண்டமான கன்ம காண்டத்தை ஆராய்ந்து ஒரு நூல் செய்திருக்கின்ருர், அந்நூலுக்குப் பூர்வமீமாம்சை என்று பெயர். அது கரும மீமாம்சை எனவும் படும். மீமாம்சை, ஆராய்ச்சி என்னும் பொருட்டு.
சைமினியின் குருவான வியாசர், வேதத்தின் உத்தரகாண்டமான ஞான காண்டத்தை ஆராய்ந்து ஒரு நூல் செய் திருக்கின்றர். அந் நூலுக்கு உத்தர மீமாம்சை என்று பெயர்.
பிரம மீமாம்சை, பிரம சூத்திரம், வேதாந்த சூத்திரம் என்பன உத்தர மீமாம்சைக்கு வழங்கும் வேறு பெயர்கள். இருமீமாம்சைகளும், மீமாம்சை என்ற பெயராற் குறிப்பிடப்படும். மீமாம்சை இரு பாகங்கள் கொண்ட முழு நூலேயாம். பிற்பகுதியைக் குரு செய்ய, முற்பகுதி யைச் சீடர் செய்து முற்றியதொரு முழு நூல் மீமாம்சை, இக் கருத்து, வேதத்தின் உபாங்கங்களுள் ஒன்று மீமாம்சை, என்று ஒருமைப்படுத்துக் கூறுவதனலுக் தெளி GJITILIË).
பூர்வமீமாம்சை, இனித் தருமத்தை அறிய ஆசை என்று தொடங்குகிறது. இது அதன் முதற் குத்திரம்,
உத்தரமீமாம்சையாகிய பிரமமீமாம்சை, இனிப் பிரமத்தை அறிய ஆசை, என்று தொடங்குகிறது. இது அதன் முதற் குத் திரம்.
பூர்வம் தருமத்தை விசாரிக்க, உத் தரம் பிரமத்தை விசாரிக்கின்றது. விசா
 
 
 

த்திணையிற் பாடானும்
ஈபதிப்பிள்ளை அவர்கள்
ரங்களின் தொடர்பை கோக்குங்கால், மீமாம்சை இருபாகங் கொண்டதொரு முழுநூலே யாமென்பது மேலுந்தெளிவாம்.
ஒன்ருேடொன்று மாறில்லாத இரண் டன் தொடர்பையும் விரித்து விளக்கக் தந்திருக்கிருர் நீலகண்ட சிவாச்சாரியர். அப்பைய தீட்சிதர்,நீலகண்டரைப்பாராட்டி நூல் செய்திருக்கின்றர். நீலகண்டரின் அருங் கருத்துக்களை வடமொழியிலிருந்து தமிழ் மொழியிலே தந்தவர்கள் யாழ்ப் பாணத்துக் குப்பிளான் செய்த தவப்பய னுல் அங்கே உதித்த காசிவாசி செந்தி 5ாதையர் அவர்கள்.
பூர்வமீமாம்சை கருமமீமாம்சை என வும் படுமென மேற்குறிக்கப்பட்டது. கரு மத்தைச் சொல்லவந்த மீமாம்சை, தருமத் திற் ருெடங்குகிறது என்றுஞ் சொல்லப் பட்டது. கருமமுந் தருமமும் ஒன்றே. செய் யத்தக்கதைச் செய்வதே கருமம். அதுவே தருமம், தருமத்தை இன்றியமையாதது கருமம் என்பது கருத்து :
தருமத்திற் ருெடங்குகிற இந்தக் கருமமீமாம்சையானது,
* மனிதருக்கு மோட்சத்தில் ஆசை யில்லை. அவர்களுக்குச் சுகபோகங் களிலே தான் ஆசை. ஆசையை அடக்கடக்கென்பர் அறிவிலார் அடக் குதல் தவறு. ஆசை தானே அடங் குதல் வேண்டும். சுகபோகங்களை அநுபவித்து அவற்றின் நிலையா மையை அறிந்தபிறகுதான் ஆசை மெல்ல மெல்ல அடங்கும். அதற்கு வழி சுகபோகங்களே அநுபவித்தற் குத் தருமவழியிலே கருமம் ஆற்று வதற்குத் துண்டுவதேயாம் ' என் கிறது.

Page 14
தருமத்தை விலகியும் கருமங்களாற் றிச் சுகபோகங்களைப் பெறலாமென்கின்ற உலகாயதக் கொள்கையை, மீமாம்சை ஒப்புக்கொள்வதில்லே.
" தன்னைத்தான் காதல
ணுயி னெனத்தொன்று ந் துன்னற்க தீவினைப் பால் '
தன்னிடத்திலே பற்றுள்ளவனுந் தன் உயர் நிலையை விரும்புகின்றவனுமாகிய ஒருவன், மற்ருெரு உயிருக்குத் தினத் துணைத் தீமையுஞ் செய்தலாகாது. மற் ருெரு உயிர் வயிறு எரிய வருவதொரு சுகபோகம் உளதாயின், அது அழக் கொண்டவெல்லாம் அழப்போம் என்றமுடி புக்குத்தான் செல்லுவதாயிருக்கும்.
அருளொடும் அன்பொடும்
வாராப் பொருளாக்கம் புல் லார் புரள விடல்.
ஆகவே, சுகபோகங்களே விரும்பும் மனிதர், தம் குலங்கருதியே பிற உயிருக்கு வருத்தம் நேராமல் தரும வழியில் கின்று கருமங்கள் ஆற்றவேண்டியவர்கள் ஆகின் ருர்கள். இதற்குப் பூர்வமீமாம்சையாகிய கரும மீமாம்சை வழிகாட்டுகின்றது. நிறுத்துவதோர் குணமில்லாதது அது. மனி தரைச் செல்லும் வழியிற் செல்லவைத்து உய்தி கூட்டுவது அது. -
இப்படிப்பட்ட பூர்வமீமாம்சை எண் ணிறந்த வேள்விகளை விதிக்கின்றது. வேட்கைகளைப் பெறுகிற முறையிற் பெறு கிறதற்கு வேதவேள்விகளே வழிகள். வேட்கை-விருப்பம்.
இந்தமுறையில் வேட்கைகளே வேள்வி செய்து பெற்ற ஒருவன் ஒருகாலத்தில் தான் வேட்டவைகள் நிலையற்றவைகள்; இந்த வேட்கைகள் விடப்படவேண்டியவைகள், என் பதை உணர்வான்.
அப்பொழுது அவன் உள்ளம் வேட் களைவிடும் ; நெறியைநாடும். வேட்கை @@rs[i]) வேதாந்தம் என்பது திருமந்திரம்.
 
 
 
 
 
 
 
 
 
 

அந்நிலையில் பிரமத்தை அறியும் ஆசை அவனுக்கு உதிக்கும். வியாசர் வகுத்த வேதாந்த சூத்திரநெறியை அவன் நாடு வன். அதற்கு வழிசெய்வது, தரும நெறி யாகிய சைமினி வகுத்த கருமமீமாம்சை, அஃதாவது பூர்வமீமாம்சை,
பழைய சத்திரியர்களாகிய அரசர்கள் சைமினி வகுத்த பூர்வ மீமாம்சையின் வழி கின்று வேதவேள்விகள் செய்து, இஷ்ட போகங்களைத் தருமவிரோதமின்றிஅடைக் தவர்கள். -
புறநானூற்றிற் புகழப்படும் அரசர்க ளுள் ஒருவனின் சிறப்புப்பெயர் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பது. வழுதி - பாண்டியன். இவனைப் பாடிய புலவர்,
பெரும, நீ பகைவரை நீறு செய்து ஐயத் தம்பங்கள் நிறுவிய போர்க்களங்கள் பலவோ,
'நால் வேதத்து . வேள்வி முற்றி யூபம் நட்ட வியன் களம் பல கொல்
霹壹
என வினவுகின்றர்.
யூபம் - வேள்வித்தம்பம். இருகளங் களுக்கும் எண்ணிக்கை குறிப்பது அரி தென்றபடி, அறமும் மறமும் ஒருங்கு புகழப்பட்டவாறு.
தருமவழியில் தவருது செய்யும் மறப்போர், கேட்பினும் கினைப்பினும் ரு டு க் குறு உந் தறுகண்மைத்தாயினும் பேராண்மை என்று சான்றேராற் புகழப் படுவதேயாம். பேராண்மை என்ப தறு கண், என்பது தேவர் வாக்கு.
"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெரு தீரும் எம்.அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்
ଶ୍ରେTର0F அறத்தாறு நுவலும் பூட்கை மறம்'

Page 15
எனவும், மேற்காட்டிய பேராண்மை புகழப் படுகின்றது. பூட்கை - குறிக்கோள்.
பகைவரைக்கொன்று குவித்து உதிரக் கடலில் மூழ்கித் திளைக்கும் போர் மறவ ணுகிய அரசன், போர் நிகழ்ச்சியில் தினத் தனே தருமவிரோதம் தன்னுலே தன் பரி சனத்தாலே நிகழ நேருமேயாயின், அந்தக் கணமே தன் உடலில் உயிர் தரியான், என்பது ஈண்டு சிந்தித்தற்குரியதொன்று.
பதிற்றுப்பத்து என்கின்ற சங்கத் தமி ழில், பதின்மர் சேர அரசர்கள் புகழப்படு கின்றர்கள். அவர்களெல்லாம் சான்ருேர் மெய்ம்மறை என்று பாராட்டுக் தகுதி வாய்ந்தவர்கள். மெய்ம்மறை - கவசம். உடலே மறைப்பது என்னும் பொருட்டு. சான்றேர்களுக்குக் கவசம்போன்றவர்கள் அச் சேர அரசர்கள். அவர்கள் படை களோ என்ருல் நிரைய வெள்ளம். நிரை யம் - கரகம், அறந்திரி பகைவர்களுக்கு
அவர்கள் படைகள் நரகசமுத்திரம். அக்
நிலையில் அவர்கள் நடுவர்கள். நடுவன் என்பது தருமனுகிய யமனுக்கு மற்ருெரு பெயர். குறிப்பிட்ட சேரர்கள், நடுவர்க ளாய் எந்தச் சந்தர்ப்பத்திலும் நடுவு திறம் பாமையினலே, அவர்களின் போர்மறம் மறம் வீங்கு பல் புகழ் என்று பாராட்டப்
படுகின்றது.
பாடாண் என்று தலையங்கத்திற் குறிப் பிட்டது பாடாண் திணையை. இது புறத் திணை ஏழனுள் ஒன்று. திணை என்பதன் பொருள் ஒழுக்கம் ஆண் - ஆண் மகன். பாடு - பாடுதல். பாடத்தக்க ஆண்மகனின் ஒழுக்கம் என்பது பாடாண் திணை என் பதன் பொருள்.
பதிற்றுப்பத்து, பதின்மர் சேர அரசர் மீது பத்துப்பத்தாகப் பாடிய நூறு பாடல்
கள். நூறுபாடல்களும் பாடாண்திணைகள்,
புலவர்கள் பாடுதற்குரிய ஆடு உக்களா கிய சேர அரசர்களின் ஒழுகலாறுகள் என்றவாறு,
 

பாடாண்டினப் பொருளவாகிய பதிற் றுப்பத்தைப் பாடியவர்கள் சங்கத்துச் சான்றேர்களாகிய புலவர்கள். அவர்கள் பொய்யடிமை யில்லாத புலவர்கள் என்று பாராட்டப்பட்டவர்கள். மெய்க்கு அடிமை யானவர்கள். மெய்யைப் பாடாமல் இருக்க LOTL-l-T56)JT56T.
சங்கப் புலவர்கள் தமிழை ஆராய்ந்த
வர்கள். தமிழ் என்பதற்கு, அன்பு நடை என்று கருத்துக் கூறலாம். வேதக் தமிழ் செய்தவர்கள் சங்கப் புலவர்கள் என்பார் கள். வேதம் அறிவுலகம். அதனை அன்புப் பயிற்சி செய்து அன்பு நடைப்படுத்தியவர் கள் சங்கப் புலவர்கள். வேதப் பொருளே உள்ளம் உருகத் தமிழ்செய்தவர் வள்ளுவர் என்பதனுலும் இஃது உணரப்படும். - அன்புக்கு அகம் என்பது மற்ருெரு
பெயர். அகமாகிய அன்பை ஏழுதிணே செய்து ஆராய்ந்தவர்கள் சங்கப்புலவர்கள்.
கைக்கிளை முதலாப்பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப என்பது தொல்காப்பியம். இடையில் உள்ளவை ஐந்தினே.
இந்த அகமாகிய அன்புத்திணை ஏழுக் கும் ஆதாரமாகிய ஒழுகலாறு புறத்திணே எனப்படும். அவை : பாடாண்டினே முத லாகக் காஞ்சித்திணை இறுவாயாக உள்ள வைகள்,
புறம், பூர்வமீமாம்சை போன்றது. அகம் உத்தர மீமாம்சை போன்றது. தொடர்பும் அவ்வாறே. அகத்துக்குப் புறம் ஆதாரம்,
அன்பு என்கின்ற ஏழுதினே கொண்ட தாவரத்தின் முளே கைக்கிளே. அந்த முளைக்கு ஆதாரம் பாடாண்டின. வித் தைப் பிளந்தெழுகின்ற முளைக்கு அவ்வித் துச் சத்து நல்கி ஆதாரமாய் இருப்பது போன்றது கைக்கிளைக்குப் பாடாண்டின.
பதிற்றுப்பத்துச் சேரர்கள் போன்ற அரசர்களின் மறத்திலமைந்த பாடாண்

Page 16
டினேயாகிய நீதியைக் கண்டு பாராட்டப் பயிலுவதிலேதான், அன்பு முளேயாகிய கைக்கிளே முளை, முளை கொள்ளுமென்பது சிந்திக்கற்பாலது.
நீதியைக் காண்டல் எளிதன்று. மனுச் சோழர் மகனே முறைசெய்தார். அந்த நீதி யைக் காணத் தமக்கு முடியாமையால் அமைச்சர்கள் உயிர் நீத்தார்கள். மண்ண வர்கள் அழுதார்கள். விண்ான வர்கள் கண்ணிர் சிந்தவில்லை ; புஷ் பாஞ்சலி செய் தார்கள். புலவர் என்பது விண்ணவருக்கு மற்ருெரு பெயர்.
சங்கப் புலவர்கள் கண்ட பாடாண் டினேப் பொருள், மகனே முறை செய்த மனுநீதியின் ஒளியில் வைத்துச் சிந்திக்கற்
நன்றி மகாஜனன்.
நமது மொழியிலுள்ள இ6 பாக மதிப்பிடுதற்கும், அதனே மொழி இலக்கிய உணர்ச்சி நம் நமது முன்னுேர்கள் வடமொ வந்தனர். இடைக்காலத்தில் நம்மவர்கள் பயிலுவாராயினர் வின்றியமையாததாய் நேர்ந்து நாமுமொருவாறு பயின்றுவருகி மொழியிலுள்ள இலக்கியங் வேண்டுவது மிக அவசியமாகு நாம் கருதுவன ஆதி இலக் இலக்கியங்களோ டொப்பு ! உணர்ச்சியைப் பெறுவதற்கு

سس -4
பாற்று. சமண சாக்கிய நிழலில் வைத்து நிந்திக்கற் பாலதன்று அப்பொருள்.
தமிழ் அகம், புறம் என இருவகை. அகத்துக்கு ஆதாரம் புறம், புறத்தின் தொடக்கம் பாடாண்டிணை. தமிழ்ப்பயிற் சியில் தமிழின் தொடக்கம் பாடாண்டின.
அறிவுலகமாகிய வேத உலகு கன்மம், ஞானம் என இரு வகை, ஞானத்துக்கு நிமித்தமாகிய ஆதாரம் கன்மம். அதன் தொடக்ககருமம், தருமம். தருமத்திற் ருெடங்குகின்ற கன்மத்தை ஆராய்ந்தது பூர்வமீமாம்சை, ஆகவே, வேத உலகின் தொடக்கம் பூர்வ மீமாம்சை :
இவ்வாற்றல் பூர்வ மீமாம்சைக்கும் பாடாண்டிணைக்கும் பொருத்தங் காண்க.
க்கியத்தை ஆராய்ந்து உண்மை வளம்பெறச் செய்தற்கும் பிற மவர்களுக்கு இன்றியமையாதது : ழி இலக்கியத்தை ஒரளவு கற்று தெலுங்கு முதலிய மொழிகளை 1. அரசியற்றுறை முதலியவற்றி துவிட்ட ஆங்கில இலக்கியத்தை நிருேம். இதனைத் தவிர, ஏனைய களையும் நாம் தெரிந்துகொள்ள கும். இவற்றில் மிக முக்கியமென கியங்களேயாம். நமது பண்டை நோக்கி உண்மையான இலக்கிய இவைகள் சிறந்த கருவியாகும்.
- வையாபுரிப்பிள்ளே

Page 17
மனிதனை மீண்டு
கலாநிதி டி. எம். பி. தத்துவத்துறைப் பேராசிரிய
மக்கள் வரலாற்றில் இக்கட்டான நிலை யேற்படும்போதும், காலம் மாறும்போதும், எல்லாவற்றிற்கும் ஒருயரிய நோக்கமிருப் பதை மனிதனுணர்ந்து அக்கோக்கத்தைத் தெளிவுபடுத்தக்கூடிய தத்துவக் கொள் கையை நாடுகின்றன். அத்தகைய கொள் கையின்றி உயிர் வாழ முடியா தென்றும் உணர்கிருன் வியக்கத்தக்க விஞ்ஞான நூற் கண்டுபிடிப்புகளும், விஞ்ஞானத்தின் வழி யாகப் பெறக்கூடிய சாதனங்களும் இயற் கையினுற்றல்களே தம்வயப்படுத்தி நாகரி கத்தை வளரச் செய்கின்றன என்பதுண் மையே. எனினும், இப்போது மனித இனம் ஓர் இக்கட்டானநிலையிற்றன் சிக்கிக்கொண் டிருக்கின்றது. உண்மையான இன்பம் அல்லது ஞானம் நாம் சேர்த்துவைத்துள்ள பொருட்களினெண்ணிக்கையாலோ, நீடிய வாழ்க்கையாலோ, வாழ்க்கைத் தரத் தாலோ, அல்லது இயற்கை யாற்றல்களை அடக்கக்கூடிய திறத்தாலோ அளக்கக்கூடி யதா? இக்கால வாழ்வு எளிய வாழ்வன்று; எளிமைக்கு மாறன பலதிறப்பட்ட சிக்கல் நிறைந்த வாழ்வு. இவ்வாழ்வு நம்மை ஒன்றுபடச் செய்வதில்லை. இதற்கு மாருகச் சிதறுண்டு போகச் செய்கின்றது. நாம் அகவாழ்வற்றவர்களாகி விட்டோம்.
தத்துவ சாத்திரத்தின் வரலாற்றைப் பார்க்கும் போது, அகவாழ்வு பற்றிய ஆராய்சியும் அகமுகமாக நோக்குங் கலேயும் தத்துவ சாத்திரிகளிடத்துங் காண்பதற் கரிதாகவுள்ளது. பெரும்பாலும் பொருள் களே யெண்ணி வகைப்படுத்துவதே தத்
துவ சாத்திரிகள் மேற்கொண்டுள்ள தொழிலாகக் காணப்படுகின்றது. பொருள் களின் புறத் தோற்றத்தை யளவிடும் முறை பெருவழக்குடையதா யிருக்கிறது. தார்த்தங்கள் அல்லது பொருள் வகைகளை
 
 
 
 

ங் கண்டுபிடித்தல்
காதேவன், M. A., Ph. D. , சென்னைப் பல்கலைக் கழகம்
மிகுதியாக்கக் கருதுவது, தத்துவத்துறை யிலும் புறமுக நோக்கே ஆணைசெலுத்து கின்றதென்பதைக் காட்டுகின்றது. புறமுக நோக்கை யடிப்படையாகக் கொண்டுள்ள தத்துவக் கொள்கை, அதன் வளர்ச்சி முறையில் வர வர மாறுதலடைந்து அக முக நோக்கைப் பெறுவதில்லை. கிரேக்க தத்துவ சாத்திரத்தில் முற்காலத்திய தான பிரபஞ்சவிய லாராய்ச்சிக் காலத்தில் கெராகிலிடசு என்பவர் மனிதனினகவாழ் வில் அக்கறை காட்டுகின்றர். கிரேக்க தத்துவ சாத்திர வரலாற்றின் பின்பு வந்த மனித விய லாராய்ச்சிக் காலத்தில் இருந்த அக்கறை மிகுதியாகின்ற தென்ப துண்மையே. எடுத்துக்காட்டாக, புரோட கொரசு, சோக்கிரதீசர் இவர்களைச்சொல்ல லாம். ஆனல் தத்துவத்துறையில் நவீன காலம் என்பதின் தொடக்கத்திலிருந்து புறமுகநோக்க ஆராய்ச்சி வலுவடைகிறது. தேகார்ட் என்பவர் அறிவு முதற்கொள் கையை (Rationalism) நிறுவியவர். இவர் கணிதத்தை முன்மாதிரியாகக் கொண்ட தால் இவர் கொள்கை தவருனவழியிலுருப் பெறுவதாயிற்று. புறமுக நோக்குடன் லொக் (Lock) என்பவர், அகத்தேயுள்ள தத்துவங்களையு மாராயத் தொடங்கினுர், இதன் விளைவாக ஆன்மா, மனம் என்பன இல்பொருள்களே யென்ற முடிவேற் பட்டது. காண்ட் (Kant) என்பவர்தான் இத்தகைய ஆராய்ச்சி, புறப்பொருள்களுக் கேற்றதாயினுந் தத்துவத் துறைக்குப் பொருந்தாதென்றறிவுறுத்தினுர்,
இந்திய தத்துவ சாத்திரத்தில் அகமுக நோக்குமுறை சிறந்ததெனக் கருதப்பட் டாலும் வளர்ச்சி முறையிற் புறமுகநோக் குக் குறைந்து அகமுகநோக்கு மிகவில் ஆல. உபநிடதங்களேத் தந்த அறிவர் அகமுக

Page 18
நோக்கு முறையிற் கைவந்தவர்களென்ப துண்மையாயினும் நியாயம், சாங்கியம் போன்ற கொள்கைகளிற் புறமுக நோக் கத்திற்கே முதன்மை தரப்படுகிறது. சாங் கியம் என்ற சொல்லுக்கே எண்ணுதல் (கணக்கிடுதல்) என்றவொரு பொரு ளுண்டு. பொருள்களை வகைப்படுத்து வதையும் எண்ணுவதையுமே இக்கொள் கைகளிற் பெரிதுங் காண்கின்ருேம். இத ணுற்றன் சாங்கியத்தில் தூய ஆன்மாவை வியவகார அவத்தையிலுள்ள சிவனே டொன்ருக எண்ணும் மயக்கத்தைக் காண் கிருேம்.
இக்காலத்தில் இவ்விதப் புறமுக நோக்கு தருக்க நெறிப்புலக் கொள்கை ai (Logical Positivism or Logical empirism) காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக இரசல் (Russel), நாய்ரத்து (Neurath) கார்நப் (Carnap) ஏயர் (Ayer) போன்றவர் களைச்சொல்லலாம். இவர்கள் தம்மாராய்ச் சித் தொழிலே இருவகைப்பட்டதாகக் கருது கிருர்கள். ஒன்று அடிப்படைத் தத்துவ சாத் திரம் (Meta-physics) பொருளற்ற தென்று காட்டுவது. இரண்டாவது விஞ்ஞானங் களுக்குத் (Sciences) தகுந்த அடிப்படை பமைப்பது, தருக்க நெறிப்புலக் கொள்கை வற்புறுத்துவது, புறப்பொருள்களைக் குறிக் காத மொழி மொழியேயல்லவென்ற கருத் தைத்தான். ஆகையால் ஒருமுடிபு சரியா என்று பார்க்கும் முறையாவது, எல்லா மொழிகளுக்கும் புலனறி காட்சியையே இறுதியுண்மையாகக் கொள்ள வேண்டு மென்னும் முறை. எனவே, கடவுள், உயிர் என்பன பற்றிய மொழிகள் இக்கொள் கைப்படி மொழிகளே யல்ல. இவ்வாரு யின் தத்துவ சாத்திரிகள் செய்ய வேண் டிய வேலைதானென்ன என்ற கேள்வி யெழுகின்றது. இதற்கவர்கள் கூறும் விடை வருமாறு : விஞ்ஞானிகள் கூறு வதை அலசிப் பார்ப்பது, விஞ்ஞானிகள் கண்ட முடிபுகளே வகைப்படுத்துவது, அவற்றை விளக்குவது, அம் முடி புகளே யொன்றுபடுத்துவது ஆகியவையே தத்

துவ சாத்திரிகள் செய்யவேண்டிய வேலே.
இதனுலென்ன நிலை யேற்படுகின்ற தென் ருல் முன்பெல்லாக் தத்துவசாத்திரம் விஞ்
ஞானங்களுக்கெல்லா மரசியாக விருந்தது; இப்போதிவைகளுக்குக் குற்றேவல் செய்
யும் பணிப்பெண்ணுக மாறவேண்டுமென்
பதே.
விஞ்ஞானத்தின் தலைமையை யேற் றுக் கொள்ளுந் தத்துவக் கொள்கைக் கெதிர்ப்பாக இருத்தற் கொள்கை (Existentialism) என்பதொன்று தோன்றியுள் ளது. விஞ்ஞானத்துறையி லற்புதங்களே நிகழ்த்தும் மனிதன், தன்னையே மறந்து விட்டானென்று இருத்தற் கொள்கையினர் கூறுகின்றனர். மனிதன் தன்னேயும் புற வியற்கையைச் சேர்ந்தவொரு பொரு ளெனத் தவருக நினைத்துக் கொள்கின் ரூன். இருத்தற் கொள்கை கீர்கெகார்ட் (Kierkegaard), ši" (8 SF (Nietzsche) GT Görg வர்க ளாராய்ச்சியிற் ருேன்றி, கிறித்தவ இருத்தற் கொள்கை (மார்செல் (Marce), சில விடயங்களில் யாஸ்பர்சு (Jaspers) என்றும், கிரீசுவர இருத்தற் கொள்கை (6054 5f (Heidegger) s Tŕšg56g (Sartere)) என்றும் வளர்வதாயிற்று.
இருத்தற் கொள்கை தனிமனித னுடைய தத்துவக் கொள்கை (Personal Philosophy). இது மனிதனுக்கு முதன்மை தருகிறது. மனிதனேப் புரிந்து கொள்ள வேண்டுமென்ருல் முதலாவது, அவனேர் உள்பொருளென்பதை யுறுதியாகக் கருத் திற் கொள்ள வேண்டும். அவன் சாரம் (His essence) அவனுள் பொருளாக இருத் 566) (His Existence) அடங்கியுள்ளது. பதார்த்தங்களைக்கொண்டு (Categories) அவனைப் புரிந்துகொள்ள முடியாது. கீர் கெகர்டு மனிதனே அகநிலையுள்ளவனுகக் (Inwardness, Subjectivity) 5C53, 6 apri. gië நிலையை அகநிலை யெண்ணம் (உள்நாட் டம்), அளவை இவற்றின் துணைக் கொண்டு தெரிந்து கொள்ளமுடியாது. மனிதன் தன்னைத் தனக்கு வெளியே யிருந்துகொண்டறிந்துகொள்ள முடியாது.

Page 19
அனைவர்க்கும் பொதுவான உண்மை யென்றென்று எனக்குக் கிடையாது. நானறிந்து கொள்ளக்கூடியது என்னைப் பற்றிய உண்மையை மட்டுத்தான். மனித வியற்கையி னடிப்படையாகச் சில பண்புக ளுண்டு. அவையாவன : சுவதந்திர முடைமை,சுவதந்திரத்தைப்பயன்படுத்தப் பல வழிகளுண்மை, அவற்று ளொன்றைப் பின்பற்றத் தீர்மானித்தல் என்பன. இக் கொள்கை மனிதனுக்கு முதன்மை தருவ தால், மனிதனுக்குப் புறம்பானவற்றைப் புறக்கணிக்கும் அக நிலைக் கொள்கை (Subjectivism) (LJ-T 35 g)6OD 5 iš 5 (1556? Léis கூடாது. இருத்தற் கொள்கை அதற்கு மாருனதென்றுகூடக் கூறலாம். ஏனெனில் இக் கொள்கையினர் மனிதனே, கடந்து | fijöth 6ìLIT (tỹ6ITT & 3 (Transcending being) கருதுகிருர்கள்.  ைக டி க ரெ ன் ப வ ரின் கொள்கைப்படி மனிதன் உலகில் உள்ள Guit (56ir, (Being in the World) Llso பொருட்களினுண்மையை ஏற்றுக்கொண் டாலும் புறமுக நோக்கில்லாதிருப்பதற்குக் காரணம் இவர்கள் குசேர்ல்(Husser)என்ப வருடைய தோற்ற முறையை (Phenomenological Method) gig 5 G5 Tait (65 வதே. எனவே, இவர்கள் கொண்டுள்ள அக்கறை நம்மனுபவத்தில் வருகின்ற உல கத்திலன்று : அந்தவுலகத்தைப்பற்றிய அனுபவத்திலேதான்.
இருத்தற் கொள்கையினர், மனித னுடைய வீண்பெருமை, துன்பம் இவற்றை வற்புறுத்திப் பேசுகின்றனர். மனித ழ்க்கையின் சில மனநிலைகளை, நோவு, பேரச்சம், நம்பிக்கையற்ற அவல நிலை, னியம், குமட்டல், கவலை, மரணம் என் பன போன்ற சொற்களைக்கொண்டு விவ ரிக்கின்றனர். மனிதவியற்கையை ஊடுரு விப் பார்க்காததால் இவர்களில்வாறு கவ லேப்படக்கூடிய வகையிற் பேசுகின்றனர். வேதாந்தத்தின் முடிவு மனிதன் உள் பொருள்களுள் ஒன்று என்பதன்று : அவனே உண்மை (ஆன்மா) என்பதாம்.
 
 
 
 
 
 
 
 
 

-------7 -۔
ல ளந்தறியப்படக் கூடிய பதார்த்தமன்று. உண்மை யென்பதும் அனுபவ மென்பது மொன்றே. இந்த அனுபவமே கிலேயான இன்பம், ஆன்மா பூரணமானதென்ருல், சுவதந்திரம் அற்றுப்போகுமென்று இருத்தற் கொள்கையினர் கருதுகின்றனர். ஆணுற் சுவதந்திரமும் பூர்ணத்துவமு முடைய ஆதரிச புருடனைப்பற்றிக் கீதையில், நீர்த்தொகுதிகள் வந்து விழுகையில் அது மென்மேலும் நிரம்புதற் குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பதுபோல, விருப் பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வா னெவனுே அவன் சாந்தியடைகின்றன் விருப் பங்களை விரும்புவோன் அதனே அடையான். ' (பகவத் கீதை 11-70) என்று கூறப்படு கிறது. ஒவ்வொரு கிமிடமும் மரணத்தைப் பற்றி நினேத்துக்கொண்டிருப்பதன் மூலம் மரணத்திற்குத் தயாராகவேண்டு மென்று கைடிகர் கூறுகிருர், ஆனல், இந்தக் கொள்கையோடு இரமண மகரிஷியின் அனுபவத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். காரணமின்றி மரணத்தைப்பற்றிய அச்சம் அவரை யிளமையிற் பற்றிக்கொண்டது. இவ்வச்சத்தின் முன் தாழ்ந்தடிபணியாமல் மரணத்தை ஒரு நாடகமாக்கி அதன் விளைவுகளை நான் யார் ? என்ற விசாரணை யாலாராய்ந்துபார்த்தார். இவ்வாரய்ச்சியா லான்மாவுக்கு மரணமில்லை யென்று முடிவு செய்தார்.
இக்கட்டான கிலேயின் பிறழ்வான போக்கின் விளைவாகவுள்ளது இருத்தற் கொள்கை. எனவே யிந்தப் போக்கின் சாயலிலே அமைந்துள்ளது இக்கொள்கை. கோல்டர்லின் என்ற கவியின் சொற் களைக்கொண்டு இக்கொள்கை இரண்டு gait GoLD5655 (5L (Double negation) 356ai கொண்டிருப்பதாகச் சொல்லலாம். ஒன்று, மறைந்துவிட்ட கடவுளரினின்மை; இரண் டாவது, இனித் தோன்றவிருக்குங் கட வுளினின்மை. இந்தக் கொள்கையின் முக்கியத்துவம் அக வாழ்க்கையை வற் புறுத்திக் கூறுவதே. ஏனெனில், உப திட தங்கள் கூறுகிறபடி சிவத்துவ கிலேயில்

Page 20
மனிதவியற்கை அகமுக நோக்கைவிடப் புறமுக நோக்கிலெளிதாகச் செல்கிறது. ஆனுற் சங்கரர் கூறுகிறபடி புறமுக நோக் குடையவனுக விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகவுள்ளவன் தன் ஆன்மத்துவத்தை புணர மாட்டான். ஆனல் இந்த ஆன்மாவே முடிவான உண்மையும் வாழ்க்கையின் முடிவான நோக்கமுமன்ருே.
அகமுக நோக்கை மேற்கொள்ளுவ தால் விஞ்ஞானத்துறையிலும் தன்மை யேற்படுமென்பதற் கெடுத்துக் காட்டாக அமெரிக்காவில் லீஃப்வின் நிறுவனம் (Lifwyn Foundation) 6T 6ör JD (63aNo Lu Sjö 3B Gör சார்பில் நடந்துவருமாராய்ச்சியைப் பிலோ usu (a song (Phylobiology) அல்லது பிலோபதோலொஜி (Phylopathology) 6Tair னலாம். மக்களுக்குள் ஏற்படும் உறவு இக்காலத்திற் சரியாக இல்லாதிருப்பதற் குக் காரணம் மனிதன் தன்னைத் தனிப் பட்டவொரு பொருளாகக் கருதிக் கொண்டு தன்னினத்தோடு சார்பற்றுப் போவதுதான். இப்படி உயிர்த் தொகுதி யுடனற்றுப்போகுந் தொடர்பை மீண்டு மேற்படுத்துவதே நாம் செய்யவேண்டு வது நோய்க்குக் காரணம், உயிர் தன் சூழலோடு சரியாகப் பொருந்தாததே. மூளையி னுெருபகுதியையே முழு மூளையா கக் கொள்வதையுங் காரணமாகக் குறிப் பிட வேண்டும். இவ்வாறு இவர்கள் கூறுகி றர்கள். இவ்வாராய்ச்சியை நாம் முழு வதுமேற்றுக் கொள்வதற்கில்லை. நோய் மூளையளவில் நின்று விடுகின்றது. அதைத் தீர்ப்பதற்கு மீண்டும் உடலளவிற் சரியான பொருத்த மேற்படுத்த வேண்டுமென்பது நமக்குடன்பாடன்று. எனினும் இவ் வாராய்ச்சியாளர் அகவழியைப் பின்பற்று கின்றனர். இவர்கள் அகவழிப் பரீட்சை ui GT is air (Internal Experimentalists). 36Ji கள் முடிவு மனிதவியற்கையின் தன்மை யொன்றுதான்; பலவல்ல. இவ்வாறே மனிதனைச் சூழ்ந்துள்ள உலகத்தின் இயற் கையுமொன்றுதான் பல வல்ல என்பதே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த ஒற்றுமையை இன்னுஞ் சற்று மேம்பட்ட நிலையில் வற்புறுத்துவது தியூக் (Duke) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த றைன் (J. B. Rhine) என்பவரும், அவர் கூட்டாளி களுஞ் செய்துவரும் உளநூலாராய்ச்சி. மனமென்பதைப் பெளதிக அளவில் கிறுத்திவிடாது அவர்கள் முனைந்து செய்கிற ஆராய்ச்சியிற் பின்வரும் முடிபு களைக் குறிப்பிடலாம். ܗܝ
(1) தொலையிலுள்ளவர்களுக்கு நேராக எண்ணங்களே யனுப்புவது (Telepathy). (2) மறைவாகவுள்ள பொருள்களைத் தெளி 6JT853, 5 IT 60òTLug5 (Clairvoyant perception). இவ்விரண்டிலும் மனம், இட(Space)வெல்லே யைத் தாண்டிச் செல்வது பெறப்படு கிறது. (3) பின் நிகழவிருப்பவைகளை (ypaốT GOT (3 JJ LJ só 56ö (precognition). 928535 மனங் கால எல்லையையுந் தாண்டிச் செல் கின்றது. (4) சடப் பொருட்களை L030T (3LD 9)Ljöớ5675,560 (Psycho-rinesis). . பொதுவாக இயற்கைக்கு மீறிய ஆற்றல் களாகக் கருதப்படுமிவை சாதாரண மக்க ளிடத்துமுள. இவ் வாராய்ச்சியால் மன மென்பது சத்தியில்லாத வோரதிகப்படி யான பொருள் (Epi-phenomenon) என்ற கொள்கையும், மனம் வேறு உடல் வேறென்ற கருத்து மாறுபாடும் மறுக்கப்படு கின்றன. உடம்பிற்கு மேலாக மனிதனிடம் ஏதோ வொன்றுள்ள தென்றும், மனித வுள்ளத்திற்கும் புறவுலகிற்கும் போக்கு வர விருப்பதற்குத் தடையொன்றுமில்லே யென்றும் இவ்வாராய்ச்சியாளர் முடிபு காண்கின்றனர்.
இதுவரை நாம் பார்த்த இருவகை LITT UT IT ti'j jË GRu? Gay Lô (Phyllobiology & Parapsychology) அகமுகநோக்கு விஞ்ஞானத் துறைக்கு முரணுனதன்று என்ற முடி வைக் காண்கிருேம், பிலோபயலொஜிஸ் றுக்கள் (Phytobiologists) சொல்லுகின்ற உயிர்த்தொகுதி (Phylum) என்பதற்கும் பராசைக்கோலொஜிஸ்றுக்கள் (Para-Psychologists) சொல்லுகின்ற மனதிற்கும்

Page 21
அப்பாற் சென்று வேதாந்தம் உலகத்திற்கு ஆதாரமாகவிருக்கிற ஆன்மாவைக் கண்டு பிடித்து இறுதியாக, முழுவுண்மையான துரியாத்மா வைக் கண்டு பிடிக்கிறது. அக முக நோக்குடன் பார்ப்பதென்பதாற் புறப் GLIII (56535TG3LJ L Tig5 (extrovert attitude)என்பதற் கெதிராகவுள்ள, தன்னையே 2) Gii G GIT UT i tieg Li iĝ2a) (extrovert attitude) யன்று. தன்னையே அனேத்திற்கும் மைய மாகக் கொள்வதுமன்று (egocentricism);அக நிலைக் கொள்கையு (subjectivism) மன்று. ஏனெனில் ஆன்மா அறிபவன், அறியப்படும் பொருளென்ற இரண்டிற்குமடிப்படை ; ஒரே ஆன்மா அறிபவனுகவும் அறியப்படு முலகமாகவுந் தோன்றுகிறது. இந்தவுண் மையை அகவாராய்ச்சி அல்லது யோகத்தா லுணரலாம். கருமயோகத்திற்கும் பத்தி யோகத்திற்கும் வேருகவும் அனைத்திற்கும் முதன்மையான ஞானயோகம் அல்லது உள்ளுணர்வு உளதென்பது அத்வைத வேதாந்தங் கண்ட முடிபு. இது அக நோக்கு (அந்தர் திருட்டி) என்று பேசப் படுகின்றது. இதன் முடிபு அத்வைத அனு பவம் ; ஆன்மீக வாழ்க்கையின் கிறைவு. அவித்தையின் காரணமாக இதைச் சீவாத்மா உணர்வதில்லை. சுயம்பிரகாச மாகவுள்ள மெய்ப்பொருளெவ்வாறு அஞ்
கலே, இலக்கியப் படைப் யதார்த்த வாழ்க்கையிலும் பா பலிக்கும் வாழ்க்கை, ஒருயர்த் இருக்கலாம் இருக்கவும் வேண் திரிக்கும் வாழ்க்கை மிகத் த்ெ வும் அமைகிறபடியால், இலட்சி உலகப் பொதுமையைக் காட்டு
 
 

ானத்தால் மறைக்கப்படுகிற தென்பதை வியவகார நிலையிலுள்ள நம்மால் உணர்ந்து கொள்ளல் முடியாது. இதனுற்ருன் அதை மாயை யென் கிருேம். மெய்ப்பொருள் கிலேயினின்று பார்த்தாலெப்போதும் அஞ் ஞான மிருந்ததில்லை. இந்த வுண்மையை உணர்வதே மோட்சம் ; விடுதலே.
இக் காலத்தில் மனிதனே வாட்டி மரணத்திற்குக் கொண்டு செல்லும் நோய் யாதெனில், அவன் புறப்பொருட்களில் அளவுக்கு மீறி நாட்டஞ் செலுத்துவதே. அவன் தனக்குத் தானே நண்பனுயிரா விடில் தனக்குத்தானே பகைவனுகி விடு வான். இல்லாத பொருள்களை நாடிச் செல்லும் பைத்தியக்காரத்தனம் இதை விட வேறிருத்தல் முடியாது. பொருள் களே மிகுதியாகத் தன்னுடைமையாக்கிக் கொள்வதால் இன்பங் கிட்டாது. உண்மை யான இன்பம் அகத்தேயுள்ளது. வெளித் தோற்றத்தினலே மாருமற் பொருள்களை யூடுருவிப்பார்த்து அங்கே எவன் தன் னுன் மாவைக் காண்கிருனுே, அவனே யுண்மை இன்பத்தை அடைய முடியும்.
அனைத்திந்தியத் தத்துவ சாத்திர மாநாட்டில் - நிகழ்த்திய தலைமைப் பேருரையின் சுருக்கம்.
நன்றி : இராமகிருஷ்ணவிஜயம்
புகள் அழகுள்ளவை. சாதாரண fக்க, கலையு மிலக்கியமும் பிரதி த படியிற் செறிந்த அழகுடன் டும். கலேயு மிலக்கியமுஞ் சித் 1ளிவாகவும், எடுத்துக்காட்டாக யத்திற்குச் சமீபமாக அமைந்து கின்றது.
- மா - சே - துங்

Page 22
அறிவியலு .வி, மயில் வாகனம், C. B. E بيين
தலைவர், இலங்கைப் பல்கலைக் தலைவர், தமிழ்ப் ப
அறிவியலுணர்வு நிறைந்திருக்கு மிக் சமயக் கொள்கைகளில் சிறப் பாக, சைவசமயக் கொள்கைகளில், அறி வியல் பயின்ற இளைஞர்கள் ஒரளவு அவ கம்பிக்கை கொண்டிருக்கிருர்களென்பது யாவருமறிந்த செய்தியே. சைவம் மூட நம்பிக்கைகளின் தொகுதி, என அவர்கள் பறைசாற்றுகிறர்கள். வானவெளிப் பிர யாண சகாத்தம் தொடங்கலாயிற்று; இனி இப்புவிமீது கட்டுண்டு கிடவாது நாம் விரும்பியவாறு எங்கும் பறந்து செல்ல லாம். அணுவின் அகத்திலுறைந்திருக் கின்ற சத்தியை வெளியேற்றவும் அதனைப் பயன்படுத்தவும் நாம் கற்றுக்கொண்டோம். எளிய, அடிப்படையான வைரசு (Virus) வகை யொன்றிலிருந்து தொடங்கி உயி ரினங்கள் விருத்தியடைகின்றன எனவும், அவ்வைரசின் ஆக்கம்பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன எனவும், அத் துறையிலே முன்னேறி விரைவில் அறிவிய லார் வெற்றியடைதல் உறுதியெனவும், அவ் வெற்றிக்குப் பின் பரிசோதனைக்குழா (Test tube)ljaff g uoffgår til såIT 9,55 å கொள்ளலாமெனவும், இற்றை நாள்மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இனி மேல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களெல்லாம் மனிதனையே சாரும். மும்மூர்த்திகளுக்கன்று முதல் வேலை பில்லாத் திண்டாட்ட மேற்படுமென்பதே அவர்கள் கருத்து.
மேற்கூறியவற்றிற்கடிப்படையாக இருப் பது, சைவத்திற்கும் அறிவியலுக்கும் இடையே நீக்கமுடியாத முரணுென்றுண்டு என்னுங்கருத்தேயாகும். இக்கருத்து அடிப் படைத் தத்துவங்களுடன் தொடர்புள்ளது. எனவே, பிரச்சினையைத் தீர்த்துவைக்கும்

ந சைவமும்
M. A. (கேம்பிரிட்ஜ்), ph D (கேம்பிரிட்ஜ்)
கழகத்துப் பெளதிகவியற் பகுதி ல்கலைக்கழக இயக்கம்
பொருட்டு நாம் அடிப்படைத் தத்துவங் களையே நாடுதல் வேண்டும். அத்தத்துவங் களுள் மிக முக்கியமானவை, அளவை முயற்சி பற்றிய கருத்துக்களே. ஆகவே, சரியான-உண்மையான அறிவைப் பெறும் முறைகளை ஆராய்தல் வேண்டப்படுகின் றது. இவ் வடிப்படையிலிருந்தே முன்கூறி யுள்ள முரண் உற்பத்தியாகின்றது.
சைவத்தைப் பொறுத்தமட்டில் அறிவு பெறும் முறைகள் பத்தாகும். அவை யாவும் மூன்றினுள் அடங்குமென்பது சித்தியார் கூற்று:
அளவை காண்டல் கருதலுரை
அபாவம் பொருளொப் பாறென்பர் அளவை மேலு மொழிபுண்மை
ஐதி கத்தோ டியல் பெனநான் களவை காண்ட ரவையிற்றின்
மேலு மறைவ ர வையெல்லாம் அளவை காண்டல் கருதலுரை
யென்றிம் மூன்றி னடங்கிடுமே."
பொருளொன்று உண்டென்பதை மெய்ப்பித்துக் காட்டும் பொருட்டு மேற்படி செய்யுளின் கடைசியடியின் கண்ணுள்ள மூன்று பிரமாணங்களையே சைவசித்தாந் திகள் கையாண்டு வந்துள்ளனர். கடவு ளுண்மையைப் பொறுத்த மட்டில் காண்டல ளவை என்பது, பொதுவாகக் கூறுமிடத் துப் பொருந்தாது. எனவே, இத்துறையி லீடுபட்ட எமது பெரியோர் கருதல் வழி யையும் உரை வழியையுமே பயன்படுத்தி யுள்ளனர்.
கருதல் முறையானது மூவகைத் தென காம் சுருக்கிக் கூறலாம். அம் மூன்றும் முறையே ஒப்பிடுதல் (Analogy) புறச் செருகுதல் (Extrapolation) அனுமானம் (Inference) 6T60TLIGib.

Page 23
திருவள்ளுவ நாயனுர் ஒப்புமை முறை யையே பயன்படுத்தினர்.
" அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு ' என்னுங் குறளில் ஒப்புமை முறை வெளிப் ዜi}6Ü)፤__ s :
உலகத்துப் பொருள்க ளெல்லாங் குறையுடையன. ஆகவே, குறை குற்ற மில்லாத நிறை பொருளொன்று மிருத்தல் வேண்டும். அந்த இலட்சியப் பொருளே கடவுளென மேலைநாட்டுத் தத்துவஞானி இம்மானுவேல் காண்ட் என்பார் கருதினுர், இது புறச்செருகுதல் முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டொன்ருகும்.
மட்குடம் உளது. எனவே, அதற்கு ஆக்கியோனுெருவன் இருத்தல் வேண்டும் என்பது அனுமான முறைக்கோர் எடுத்துக் காட்டாகும். தொலேயிற் புகையைக் காண் கிருேம் ; எனவே, அத்துடன் நெருப்பு மிருத்தல் வேண்டுமென்பதும் ஒரெடுத்துக் காட்டாகும். முந்தியது காரணகாரிய விதி யின் பாற்படும். பிந்தியது எமது சொந்த அனுபவத்திலிருந்து உற்பத்தியாகின்றது. காண்டல் முறையை முற்றிலும், கருதல் முறையை ஒரளவிலும், அறிவியாலள ரேற்றுக் கொள்கின்றனர். ஆனுல் அவற் றின் மீது சைவசமயிகள் அத்துணை நம் பிக்கை வைப்பதாகத் தெரியவில்லை.
இறையருள் பெற்ற அனுபூதிமான்க ளுடைய திருவாக்குச் சுருதியெனவும், ஆகமம் எனவும், வேதம் எனவும் அழைக் கப்படுகிறது. இதுவே உரைமுறை. இம் முறையே சைவசமயத்தினடிப்படையாகும்.
தன் புலன்களாலுணரப் படுவது மட்டுமே உண்மையானதெனக் கூறும் அறிவியலாளன், சுருதி அல்லது உரை முறையை ஏற்றுக்கொள்ள மறுக்கிருன். ஆணுல், அவன் பயன்படுத்துங் காண்டல் முறையிலே தவறென்றுளது. ஐம்புல வாயி லாகப் பிரபஞ்சம் பற்றிய செய்திகளை அவன் பெறுகிருன் தன் (குறுகிய) அனு
 

-
பவத்தைப் பயன்படுத்தி, அச் செய்திகளே வரிசைப் படுத்தித் தன் எல்லேயுடைய அறிவு வாயிலாகச் சில உண்மைகளை வெளியிடுகிறன் புலன்கள் வாயிலாக உட்புகுந்த பிரபஞ்சத்துச் செய்திகள் அறிவு வாயிலாக உண்மைகளென வெளிப் படுத்தப்படுகின்றன. என்ருலும், அவன் முடிவு, முழு உண்மையா அல்லது பேருண்மையொன்றின் பகுதித் தோற்றமா என்பது கேள்வி. எமது விடயத்துக்கு இக் கேள்வியானது முதன்மையுடைய தாதலால் அதனை விளக்கி வைக்கும் பொருட்டுச் சில ஒப்புமைகளைப் பார்ப் @L厅芭。
பண்டைய கிரேக்கநாட்டுத் தத்துவ ஞானி சோக்கிரதீசர் கையாண்ட ஒப்புமை யொன்றை அவர் மாணுக்கரான பிளேட்டோ என்பார் அரசியல் என்னும் அவர்தம் நூலொன்றில் எடுத்துக் கூறுகிறர்:
குகையொன்றின் வாயிலுக்கு முதுகு காட்டி, அக் குகையினுள் ஒரு சிலர் வீற்றிருக்கின்றனர். குகை வாயி லுக்கு எதிரான சுவர்மீது வெளியுலக உருக்களின் கிழல் படுகிறது. அந்த நிழலைக் கொண்டு வெளியுலகைப் பற்றிய முடிவுகளுக்கு அவர்கள் வரு கின்றனர்.
அம் முடிவுகள் உண்மைகளா அல்லது பேருண்மை யொன்றின் பகுதித் தோற் றமா ?
இதுபோன்ற உவமை யொன்றை எமது பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் சமயக் கட்டுரைகள் என்னும் தம் கருவூலத்திற் பயன்படுத்துகிருர்,
ஒரு யானை ஒரு குளக்கரையில் நிற்கின்றது. அதன் நிழல் குளத் துள்ளே தோன்றுகிறது. கிழலை மாத் திரங் கண்ட ஒரு சிலர் அதனை அகப் படுத்தப் பெருமுயற்சி செய்கின் ருர்கள். நீத்தும் கிலேயுமாய்க் குளத்து எலேகின்ருர்கள். அவர்களப்படியிருக் கக் குளக்கரையிலே ஒருசில குரு

Page 24
டர்கள் யானையின் ஒவ்வோர் உறுப் பைத் தொட்டுப் பார்த்து, யானையை உரல் என்றும், உலக்கை என்றும், முறம் என்றுங் கலகமிடுகிறர்கள். இவர்கள் கிலேயும் இப்படியாக, மற் ருெரு பகுதியார் யானையின் ஒவ்வோர் உறுப்பைத் தீண்டிப் பார்த்து, அவ் வளவு திருத்தி பிறவாமல், முழுப் பொருளைக் காண முயன்று கொண் டிருக்கின்ருர்கள்.'
கூம்பொன்றையோ உருளையொன் றையோ அதனச்சுக்குக் குறுக்கே வெட்டி னுல் வட்ட வெட்டுமுகமொன்றைப் பெறு வோம். அந்த முழுப்பொருளேக் காணுது அந்த வட்டத்தை மட்டுங் கண்ட, அக் காட்சியிலிருந்து, அவ்வட்டத்தினூடே உரு ளேப் பொருளொன்று மட்டுமே சென் றிருத்தல் வேண்டுமென முடிவுகட்டலாமா?
மேற்படி ஐயப்பாடுகளை அறிவியலார் உணர்ந்ததாகத் தோன்றவில்லை. அடுத்து அறிவியலாரின் போக்கை வேருெரு கோணத்தினின்று ஆராய்வோம். மணி வாசகப் பெருந்தகை கூற்றின்படி உயி ரினங்கள், * புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
' ***、** --*** --*、*- sess - e s -- முனிவராய்த் தேவராய்' என்றவாறு, ஒரறிவு நிலையிலிருந்து படிப் படியாய்ச் சிறந்து, ஐயறிவுடைய இனமாகி ஆறறிவுடைய மனிதனுகி, அதற்கப்பால்
ஏழறிவுடைய முனிவராகவும் விருத்தி 互Jā_JöD厅ü。
ஜயறிவுடைய மாக்கள் நிலைவரை உயி ரினங்கள் பரிணமித்து வந்துள்ளன என, மேலேகாட்டு அறிவியலாளர் சார்ல்சு டார்வின் என்பார், தக்க சான்றுகளுடன் திலே கிறுத்தியிருக்கின்றர். எவ்வாறு அந்த ஐயறிவுடைய விலங்கு ஆறறிவுடைய மனிதனுயிற் றென்பதே கேள்வி. மொழி பின் கண்டுபிடிப்பாலேயே அங்ங்ன
 

மாயிற்று என, நாம் உடனே பதில் கூ விடலாம். எமதாருவது அறிவான பகு தறிவு மொழியாலே தோற்றுவிக்கப்ப டது; மொழியாலே வளம் பெற்றது.
மொழியொரு கருவியாகும். அக் கருவியே எமது பகுத்தறிவுக்கும், அதன் விரிவுக்கும் காரணமாக இருந்து வந்திருக் கிறது. பகுத்தறிவு, நனவு நிலையிலேயே தொழிற்படுகிறது. நனவு நிலைக்கு மேலான நிலைகளுமுளவென உளவியல் நூலார் கூறு கின்றனர். கனவு கிலேக்குரிய ஆருவது அறிவையும் மொழியையுங் கொண்டே அறிவியல் படைக்கப்பட்டுள்ளது. அது போலவே மேலான கனவு நிலைக்குரிய மொழி அல்லது குறியீட்டு முறையொன்று கண்டுபிடிக்கப் பட்டதும் அறிவியலுக்கு மேலான ஞானமொன்று-மெய்ஞ்ஞானம் தோன்றலாகாதா? அவ்வாறு தோன்றி இப்பொழுது அறிவியல் தருகின்ற பாதி யுண்மைக்குப் பதிலாக முழு உண்மையை யும் தெரிவிக்கமாட்டாதா? அறிவுகளின் எண்ணிக்கைக் கோரெல்லேயுண்டா ? அது ஆறை மீறக்கூடாதென்னுங் கட்டாய முளதா ? கருத்து என்னவென்ருல் எமது அறிவு விரிய விரிய எமது சிந்தனேயி னடிவானமும் விரிகிறது. புத்தறிவுகளைப் பெற்றதும் பேருண்மைகளின் பாகங் களேக் காணுது அவற்றின் முழுமையைக் கண்டுகொள்ள முடிகின்றது. அவ்வழியே எமது சமய குரவர்கள் சென்றுள்ளனர்.
மெய்ஞ்ஞானிகள் பயன்படுத்தும் முறைகள் பற்றி அறிவியலாளர் குறை கூறலாகாது. ஆய்கூடமுறை கட்டாய மன்று. பல மேலேகாட்டு அறிவியலாளர் பரிசோதனை முறையைக் கையாளாது , சில அடிப்படையான மூலக் கருத்துக்களி லிருந்து தொடங்கி, அறிமுறை வழியிற் சென்று வெற்றி பெற்றுள்ளனர். ஆக இரு கிபந்தனைகள் மட்டுமே உள. முதலாவதாக, இவ்வழிமூலம் வரும் முடிவுகள் அனுபவத் துடன் ஒத்திருத்தல் வேண்டும். இரண் டாவதாக, இவ்வழிச் செல்லும் யாவரும் வேறுபாடின்றி அதே முடிவுக்கு வருதல்

Page 25
வேண்டும். இக் கோணத்திலிருந்து ஆயுங் கால் எவ்வாறெமது சமயகுரவர் இக் கிபக் தனகளுக்கிணங்கச் செயலாற்றியிருக்கின் றனரென்பது தெளிவாகும்.
முதலாவதாக, எம்முறைகளைப் பயன் படுத்தி எமது சமயாசாரியர் செயலாற் றினரென்பதை ஆய்வோம். எமது பல் கலைக்கழகத்து ஆய்கூடங்களில் ஆராய்ச்சி நடாத்த ஒருவன் விரும்புவானுயின் முதலில் அவன் பட்டதாரி ஆதல் வேண்டும். அந்தப் படிப்பால் அவன் பக்குவமடை இறன். குரு ஒருவரின் கீழ் ஆராய்ச்சி நடாத்தி, அனுபவம் பெற்றுக் கலாநிதி யாகிய பின்னரே அவன் பிறராதரவின்றி ஆராய்ச்சிகள் நடாத்துக் தகுதி யுடையவ ணுகிருன் அவ்வாறே ஆத்மீகத்துறையிலும் நிகழும். ஆணுல், இங்கு வேறுபாடொன் றுளது. உலகியல் விடயங்களே எவரும் ஆராயலாம். ஆத்மீகத் துறையில், இறை பருள் பெற்றவர் மட்டுமே அவ்வாராய்ச் சியை நடாத்த முடிகின்றது. மணிவாசகப் பெருமானின் வரலாறு மேற்கூறியவற் றைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. சிவன் மண்சுமந்த படலத்துடன் மாணிக்கவாசகரின் வரலாற்றுப்பகுதி பொன்று - திருவிளையாடற் புராணம் மதுரைக் காண்டத்தில் முடிவடைகிறது. தனக்கு உடனே சிவகதி அளிக்கப்படு மென்னும் முழு நம்பிக்கையுடனே அவர் திருப்பெருந்துறை மீண்டார். ஆனல், எம் பெருமானின் திருநோக்கு வேருய் இருந் தது. நீ திருவண்ணுமலே மார்க்கமாகத் திருவுத்தரகோசமங்கைக்கும் ____LD கைக்குஞ் செல்லக்கடவாய் அங்குச் சில நாட்கள் தங்கி ஈற்றில் தில்லைக்குப் போ. அங்கு நீ சிவகதி அடையக்கடவாய், என் னும் இச் செய்திகளுக்குத் திருவாசகத்தி
லகச்சான்றுகளுள. -
உத்தரகோச மங்கையுள் ளிருந்து வித்தக வேடங் காட்டிய இயல்பு (கீர்த்தித் திருவகவல்) பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங் கட்டமா சித்தி யருளிய அதுவும்
(கீர்த்தித் திருவகவல்)
 
 

என்னு மடிகளிலிருந்து எதற்காக வாத வூரடிகளவ்விரு இடங்களுக்கு மனுப்பப்பட் டுள்ளாரென்பது தெளிவாம். சமயாசாரி யர்கள் பக்குவமடைதற்கு அட்டமா சித்திகள் பெறல் இன்றியமையாதது. அச் சித்திகளைப் பெறும்பொருட்டு மணிவாசகப் பெருமான் பட்டமங்கை செல்ல வேண்டிய தாயிற்று. சம்பந்தக் குழந்தையின் பயிற்சி வேறு தோணியப்பரின் ஆணைக்கிணங்கு முகமாக இறைவி ஞானப்பாலூட்டினுள். அத்துடன் அக்குழந்தைக்கு அட்டமாசித் திகளும் ஊட்டப்பட்டுள்ளன எனக் கருத இடமுண்டு.
அட்டமாசித்திகளெட்டாகும். அறிவிய லுஞ் சைவமுமெனப் பெயரிய இக் கட் டுரையைப் பொறுத்தமட்டில் அவற்று ளொன்று மட்டுமே தேவைப்படுகின்றது. பிரா காமியம் என்னும் அச் சித்தியைப் பற்றித் திருவிளையாடற் புராணத்திலிருந்து * விண்ணி லிரவி தன்னுடம் பின்
வெயிலா லனைத்தும் விளக்குதல் போல் மண்ணி லுளவாம் பொருள் பலவுங்
கால மூன்றும் வானத்தின் கண்ணி லுளவாம் பொருளுந்தன்
காயத் தொனியா லிருந்தறிதல் எண்ணி லிதுவு மறைபொருளா
பிராகா மியமென் றியம்புமால் ' எனவும், திருமந்திரத்திலிருந்து :
ஆன விளக்துெT யாவ தறிகிலர் மூல விளக்கொளி முன்னே யுனுடயவர் கான விளக்கொளி கண்டுகொள் வார்க்கு
மேலே விளக்கொளி வீடெளி தானின்றே" எனவும் அறிகிருேம்.
கருத்து என்னவென்றல், எவ்வாறு ஞாயிற்றி ஞெளியாற் பொருள்கள் விளக்கம் பெற்று எமக்குக் கட்புலனுகின் றனவோ, அதேபோலவே இறையருளால் பிராகாமியசித்தி பெற்றவரொருவர் அவர் தமுடலொளியாற் புவியிலுள்ள பொருள் களையும், வானிலுள்ளவற்றையும், முக் காலங்களையு முணர்வர்.
இதுவே சைவசமயாசாரியர்கள் ஆராய்ச்சிமுறை. அறிவியலார் இம்முறை

Page 26
யைக் குறைகூறலாகாது. எமது கேள்வி களுக்கு அனுபவத்துடனெத்திருக்கின்ற விடைகள் கிடைக்கப்பெற்ருல், இம்முறை யைப் பயன்படுத்துவோர் கேள்வியொன் றிற்கு அதே விடையை அளிக்க முடிந்தால் இம்முறையிற் பழுதில்லை. முறையை யாவரும் ஏற்றுக்கொள்ளல் வேண்டும். ஏனெனில், அறிவியலிலுமிவ்வாறே நாம் நடந்துகொள்கிருேம் முறையானது எத்துணை விசித்திரமாகவும் இருக்கலாம். ஆனல், அது அனுபவத்துடன் முரண் படாத விடையை யளித்தால் நாம் திருப்தி அடைதல் வேண்டும். முறையைப்பற்றிப் பேச்சில்லை. ஒற்றுமையே உரைகல்.
அதி அற்புதமான கொள்கைகள் இரண்டு பெளதிகவியலிலுள. அவை எயின் ஸ்டைனின் சார்புக்கொள்கை (Reiativity Theory)யும் கைசன் பேக்கின் சத் iš GSF Pri Grŝ2ạo (Quantum Mechanics) Lyub ஆகும். இவ்விரு கொள்கைகளினடிப் படைத் தத்துவங்களும் எமது பொது அறி வுடன், அனுபவத்துடன், எதிர்நோக்குடன் முரண்படுகின்றன. இருந்தாலும், இக் கொள்கைகளைப் பயன்படுத்தி அனுபவத் துடன் ஒத்திருக்கின்ற செய்திகளையும், முன்னர் கூறிப் பின்னர் நிலைநிறுத்தப்பட்ட முடிவுகளையும் பெற்றுள்ளோம். அவ்வாறு நடந்துகொண்ட அறிவியலார் அதே செயல் முறையை சமயத்துறையில் எதற்காக மறுக்கிருர்களென்பது ஆராயற்பாலது.
அடுத்து, கொள்கை யொன்றைச் சரி பிழை பார்ப்பதற்கு ஏற்கனவே இரு விதிகள் கூறப்பட்டுள்ளன. அவை, முறையே கிடைக்கப்பெறுகின்ற செய்திகள் அனுபவத்துடன் ஒத்திருத்தல் வேண்டும்; எல்லா ஆராய்ச்சியாளரும் அதே முடி வுக்கு வருதல் வேண்டும், என்பனவாகும்.
முதலாவது விதியின் உபயோகத்தை ஆராய்வதற்கு மணிவாசகப் பெருமானின் திருவாசகம் உதவுகின்றது.
ஐந்தாம் நூற்றண்டில் திருவவதாரம் செய்த மாணிக்கவாசகர் சிவபுராணத்தில்
 

4 ബ
* புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
கல்லாய். பேயாய். வல்ல சுர ராகி, முனிவராய்த் தேவராய்
எல்லாப் பிறப்பும் பிறந்தி ளேந்தேன்' எனும் பகுதியில் 19ஆம் நூற்றண்டில் வாழ்ந்த சார்ல்சு டார்வின் என்பவரின் பரிணுமக்கொள்கையின் சாயலைக் கூறு கிருர், கல்லாய் என்ற சொல்லே இடவாகு பெயராகவும் (கற்றுளேகளில் வதியும் வைரசு போன்ற உயிரினங்கள்) பேயாய், வல்லசுரராய், முனிவராய் என்ற சொற் களைப் பண்பாகு பெயர்களாகவும் (மக்கள் வடிவத்தில் பேயாகவும், அசுரனுகவும், முனிவராகவும், தேவராகவும் காட்சியளிப் போர்) கருதினுல் வாதவூரடிகளின் திரு. வாக்கு அனுபவத்துடன் முரண்பட மாட்டாது.
திருவாசகத்திலிருந்து இன்னுமோர் எடுத்துக்காட்டு போற்றித் திருவகவலில் பின் வருகின்ற அடிகளைக் காண்கிருேம்.
" மானுடப் பிறப்பினுள்
மாதா உதரத்(து) ஈன மில் கிருமிச்
செருவினிற் பிழைத்தும் ஒரு மதித் தான்றியின்
இருமையிற் பிழைத்தும்
எட்டுத் திங்களிற்
கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருவரு
துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி
தாயொடு தான் படுத் துக்க சாகரத்
துயரிடைப் பிழைத்தும்
இப்பாடற் பகுதி இற்றைகாட் கரு வற்பத்தியியலின் அடிப்படைச் செய்தி களைக் கொண்டிருக்கிறது.
கட்டுரை விரியும் என அஞ்சி, திரு வண்டப்பகுதி, திருவெம்பாவை என் வற்றிலிருந்து மேற்கோள்கள்

Page 27
-
வில்லை. இருந்தாலும் மேற்குறித்த இரு எடுத்துக்காட்டுகளிலிருந்து நாம் கூறி புள்ள முதலாவது விதியைப் பொறுத்த வரையில் பிராகாமியசித்தி என்பது, பிழை பின்றி விடைகள் அளிக்கும் ஆற்றல் உடையது எனக் காணலாம்.
இனி எமது இரண்டாவது விதியைக் காண்போம். பிரச்சினை எதுவாயினும் எல்லா ஆராய்ச்சியாளரும் அதே முறை யைப் பயன்படுத்தி அதே முடிவுக்கு வருதல் வேண்டும் எனபதே அவ்விதி. இங்கு, எமது ஆய்வையிட்டு இந்நூற்ருண் டின் தொடக்கத்தில், அறிவியலுலகில் மேதாவியாகப் பிரகாசித்த எயின்ஸ்டைன் என்பார் பிரபஞ்சத்தைப்பற்றி அறிமுறைப் படி கண்டுபிடித்த கருத்துக்களே அவதா னிப்போம். எயின்ஸ்டைனின் முடிவுகள் பல ஏற்கனவே பரிசோதனை முறைப்படி கிலே நிறுத்தப்பட்டுள்ளன.
எயின்ஸ்டைனின் கூற்று யாதெ னில், பிரபஞ்சம் விரிகிறது ; (The Universe is Expanding) பொருள்கள் யாவும், அவற்றின் இடைத்தூரங்கள் கூடுமுகமாக, அதி வேகத்துடன் பிரிகின்றன; இவ்விரி வுக்கு ஒரெல்லே உண்டு; அந்த எல்லே யளவிற் பிரபஞ்சம் விரிந்ததும், அது ஒடுங்குகின்றது. ஒடுக்கத்தின் ஈற்றிற் பிரபஞ்சத்துச் சடப்பொருள் விடு விக்கப்பட்ட வெப்பம் காரணமாகச் சாம்பலாகின்றது. சாம்பல் ஆவியாகி கட்சத்திரங்களும் நட்சத்திரத் தொகு திகளும் சூரிய சந்திரர்களும் மீண்டு முற்பத்தியாகிப் புத்தம்புதிய பிரபஞ்ச மொன்று காட்சியளிக்கிறது ; இதுவும் விரிகிறது ; விரிந்து பின் ஒடுங்கு கிறது என்பதாம்.
கருத்து என்னவென்ருல் பிரபஞ்ச மானது கிலேயானதொன்றன்று உற்பத்தி விரிவு, ஒடுக்கம், அழிவு மீண்டும் உற் பத்தி என்னும் வட்டத்தில் பிரபஞ்ச மானது ஓயாமற் சென்றுகொண்டிருக்கிற தென்பதாம்.
 
 
 
 

5 -
இவ்விடயம்பற்றி எமது சமயகுரவர் பாது கூறுகின்றனர் என்பதுபற்றி ஆராய் வோம். (எமது விடயம் நன்கு விளங்கும் பொருட்டு மேற்கூறியுள்ள சொற்களுக்குப் பதிலாக மாற்றுச் சொற்களே இங்குத் தெரிவித்தல் சாலவும் நன்று)
உற்பத்தி - தோற்றம், ஆக்கம் பொழில் - உலகு, பிரபஞ்சம்
ஒடுக்கம் அழிவு 를 ஒடுக்கத்தின் இறுதி-பேருழி, யுக முடிவு, நீக்கம், சர்வசங்காரம்,
விரிந்தனை, குளிந்தன விழுங்குயிர் 출를 உமிழ்ந்தனை , திரிந்தனே! என்பது சம்பந்தர்க் குழந்தையின் திரு வாக்கு. -
' விரிந்து குவிந்து
விளைந்த இம் மங்கை கரந்துள் எழுந்து
கரந்தங் கிருக்கிற் பரந்து குவிந்தது
பார் முதற் பூதம் இரைந்தெழு வாயு
விடத்தினில் ஒடுங்கே " எனத் திருமூலர் இயம்புகிருர், திருவண்டப்பகுதியில்,
" தோற்றமுஞ் சிறப்பும்
ஈற்றெடு புணரிய மாப்பே ரூழியும்
நீக்கமும் நிலையும் " எனவும்,
" விரி பொழில் முழு தாய்
விரிந்தோன் காண்க ଶtତot ଘyle) மணிவாசகப்பெருமான் பகர்கிருர், இம்மூன்று மேற்கோள்களிலும் ஒற்றுமை உளது. சிவன் சத்தி நிலையில் (மங்கை பராசத்தி) சிவனின் அபேத நிலையில் பிரபஞ்சத்தினின்று வேறுபடாத நிலையில் வணங்கப்படுகிருனென்பதே கருத்து, பிரபஞ்சம் விரிகிறது ஒடுங்

Page 28
||1|| --س
கிறது. அத்துடன் சிவன் விரிகிருன் ; பின் ஒடுங்குகிருன் ஒடுங்கும்பொழுது ஆருயிர் களை விழுங்குகிறன், ஒடுக்கத்தின் ஈற்றில் பேரூழிக்காலத்தில் - அழிவு முற்றுப் பெற்றதும், எல்லாஞ் சாம்பல் மயமாகவே இருக்கின்றன. பிரபஞ்சம் பெரிய மயான மாக விளங்குகிறது. பிரபஞ்சத்தினின்று பேதப்படாத சிவன், அந்தச் சாம்பலே ஆடையாக அணிந்து சுடலைப்பொடிபூசி List aid காட்சியளிக்கிருன் ; மீண்டும் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கிருன் ; விழுங்கின உயிர்களை மீண்டும் படைக் கிறன் ; ஓயாமல் (திரிந்தனை) இத்தொழிலை அவன் ஆற்றிக்கொண்டே இருக்கிறன்.
இருபதாம் நூற்ருண்டிற் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியற் பேருண்மை யொன்றை முறையே நாலாம், ஐந்தாம்,
இலக்கியம் பொருளின்பா அல்லது இவற்றின் வேருன அஃதறத்தினடிப்படையிலமைத தமிழிலக்கியமுமாகும். வெறுக் தகாத தண்டனையளித்தலையுஞ் நெறியிலே நின்று அவற்றைச் அவ்வித தமிழ் மரபிலே வந் படையில் அமைதலே அழகும் கருவுற்று, அறத்தில் விளைந்து அ செய்வதே இலக்கியம். இ6 யமையலாம் ; இன்ப சாதன விளைப்பதாயும் மிளிரலாம்; ஆயினும், அறத்தின் வாழ்வே அதன் சுவையின் பயனுயு மி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரும் நூற்ருண்டுகளிலே திருமூலர் சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் அறிந்திருந்தனர். ஆனுல் இச்சிறிய விட பங்கள் பற்றி அவர்கள், எமது அறி
வியலார்போலப் பறைசாற்றவில்லை. அவர்
களின் நோக்கும் இலட்சியமும் வேறு. சிவகதியே பரமகதி எனக் கருதுவோருக்கு
இச் சிறிய விடயங்கள் எம்மாத்திரம்?
எனவே சைவசமயமானது மூடநம்பிக்கை களின் தொகுதியொன் ருகுமென நாம்
கூறல் வேண்டுமா? சைவத்தைப்பற்றிப்
பேச்சு எழும்போது நாம் தலைகுனிதல் வேண்டுமா ?
அறிவியற்றுறையிற் பயன்பட்ட
அட்டமாசித்தி முறையானது ஏன் ஆத் மீகத்துறையிற் பயன்படக்கூடாது?
பகளை மட்டுமே கூறுவதானுலும் தொன்றைக் குறிப்பதானுலும் லே சிறப்புடையதாகும். அதுவே கத்தக்க போரையும், விரும்பத் செய்ய நேர்ந்தவிடத்தும் அற செய்தவர்கள் கந்தமிழ் மக்கள். இலக்கியமும் அறத்தி னடிப் ரபுமாகும். எனவே அறத்திற் ப்பயனைப் பாரெங்கும் பரவச் கியம் பொழுதுபோக்கிற்கா மா யிருக்கலாம் ; புதுமையை பிறவற்றிற்காயும் பொருத்தலாம். அதன் படைப்பின் பயனுயும், த்தல் இன்றியமையாதது.
போன், முத்துக்குமாரன்

Page 29
திருக்குறளுஞ் ை
பண்டிதர் சத்தி
திருக்குறளோரறநூல் : கான முழுநூல். அதையியற்றிய வள்ளுவ ரகண்டிதமான (வியாபகமான) அறிவு படைத்தவர். அவருக்கொப்பான புலவர்கள் மிகச் சிலரேயென் றறிஞர்கள் கூறுகின்ருர்கள். முழுமையாகச் சிந்திக்கத் தக்க தகுதி வாய்ந்த பெருமுனிவ ராகையால், அவர் செய்த ஞானச் செல்வ மாகிய திருக்குறளிலே முழுமைக்கு முர ணில்லாதபடி தருமங்கள் கன்கு கூறப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தனிமனித னுடைய வளர்ச்சிப்படிகளும், அவன் கைக் கொள்ளுஞ் சாதனங்களும் உலக நலன் என்கின்ற பெருநோக்குடன் எள்ளள வும் முரண்படாதபடி மிக அவதானமா யமைக்கப்பட்டுள்ளன. இங்ங்னமமைப் பது சுலபமான காரிய மன்று.
தருமங்களே முரண்பாடின்றிச் சிந்திப் பதற்கு மெய்ப்பொருளுணர்ச்சி மிகவும் இன்றியமையாதது. மெய்ப்பொரு ளுணர்ச்சியாவது, பொருள்களிலே உல கத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற வீண் கற்பனைகளைக் கழித்து எஞ்சி நின்ற உண்மையைக் காணும் ஆற்றலாகும். இவ் வாற்றலேத் தருவது திருவருட்சார்பு.
அருள் வழிப்பட்டதும், முரண்பாடில் லாததும், சமரச நோக்குடையதுமான திருக்குறளைப் படிப்பவர்கள் அதன் முழு மையைச் சிந்திப்பதவசியம். ஒவ்வொரு திருக்குறளுங் தனித்தன்மையுடன் விளங் கிய போதிலும், அத் திருக்குறள்களுக்குப் பொருள் கொள்ளும்பொழுது முழுமைக்கு மாறில்லாதபடி பொருள் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனஞ் சிந்தியாதோர் பலர், திருக்குறளுக்குத் தத்தம் மனம் போனவாறே பொருள்கொண்டு இடர்ப் படுவர். உதாரணமாகத் திருக்குறளிற் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில்
- 3
 
 
 
 

சவசித்தாந்தமும் தவி துரைசிங்கம்
எடுத்தாளப்பட்ட மலர்மிசை யேகிஞன், என்ற தொடருக்குப் பூமேனடந்தவன் - அருகன் எனப் பொருள் கொண்டு, திருவள்ளுவர் சமணரெனவும், திருக்குறள் சைனநூலெனவுங் கூறுவதை யெடுத்துக்
திருக்குறளின் கண்ணுள்ள அகச் சான்றுகள் சைன மதத்தினரின் கொள்கை களை யொப்புக் கொள்வனவா யில்லை. பல முடிவுகளுக்கு இடமளிப்பதாய், அநேகாந்தவாதம், சியாத்வாதம் என்னும் பெயர்களால் அழைக்கப்படுஞ் சமணம், உலகங் கடவுளாலே படைக்கப்பட்டதென் பதை உறுதியாகக் கூறுவதில்லை. வள்ளுவர் நூலின் முதற் செய்யுளிலேயே, உலகு ஆதிபகவன் முதற்று-உலக மாதிபகவணுகிய இறைவனே நிமித்தகாரணனுக வுடைய தென வற்புறுத்துகின்றர். அன்றியும், அறத்தாற்றி னில் வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன் என இல்லறத்தின் மாண்பைக் கூறி,
1 பெண்ணிற் பெருந்தக்க யாவுள
கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின் '
என்று பெண்மையைப் போற்றும் வள்ளு வர், இல்லறத்தை முற்ருக ஒதுக்குவதும் மகளிரைக் கண்டா லொளித்து நிற்கும்படி போதிப்பதுமாகிய சமணத்தைச் சார்ந்தவ ரென்பது பொருந்தாது.
இங்ங்ணமாராயும்பொழுது, தத்தம் மனம்போனபடி கூறுவார் கருத்துக்களெல் லாக் திருக்குறளின் முன்னே மழுங்கிப் போவதைக் காணலாம். பிறமதங்களாற் சுட்டிக்காட்டப்படும் நல்ல பகுதிகளைத் தன்னகத்தடக்கியதும், அவற்ருல் விபரிக் கப்படாத உண்மைகளை வற்புறுத்துவது மாகிய சித்தாந்த முடியே அடிப்படைத் தத்துவமாக வுள்ளது.

Page 30
- 8
சித்தாந்த முடிபுகள் சுருதி, யுத்தி, அனுபவமென்னும் மூன்றளவைகளாகிய உரை கற்களிற் பரிசோதிக்கப்பட்டவை ; வளர்ந்துவருமறிவியற் புதுமைகளுக்கும், அரசியற் கொள்கைகளுக்கும், பொரு ளியலிலுள்ள தத்துவங்களுக்கும் ஆதார மாக கிற்கத்தக்கவை. சித்தாந்தம், முடித்த முடிபு அல்லது பூரண சரியாதலால், அதற்கு உண்மையளவில் எதனுடனும் முரண்பா டுண்டாகாது, அது பிறவற்றை யளிக்க முயல்வதுமில்லை; பிறவற்றலழிக்கப் படு வதுமில்லை. எந்தத் தவறுகளின் மத்தியி லும் அது கிலேத்து கிற்குஞ் சத்தி வாய்ந்தது. s
அடித்தளமாக அமைந்துள்ள தத்துவச்
சிறப்பு திருக்குறளை யெக்காலத்துக்கும், எல்லா நாட்டுக்குமுரியதாய் வாழச் செய் கிறது. மனிதவாழ்க்கைக்கான நல்வழி யைக் காட்டுமறநூலாகவே திருக்குறளை வள்ளுவர் செய்துள்ளாரென்பதை நாம் அறிவோம். வாழ்க்கைக்கான வழிவகுக்கும் போது வாழ்வுக்குரியோரையும், அவ ரடைய வேண்டிய குறிக்கோளையும், அக் குறிக்கோளை நோக்கி வாழும் நெறியையும் தெளிவுபடுத்துதல் வேண்டும். சித்தாந்த சாத்திரங்க ளிவற்றை எப்படித் தெளிவு செய்திருக்கின்றனவோ அப்படியே திருக் குறளுந் தெளிவு செய்துள்ளது.
' குடம்பை தனித்தொழியப் புட் பறந்:
தற்றே உடம்பொ டுயிரிடை நட்பு ' * புக்கி லமைந்தின்று கொல்லோ
உடம்பினுட் டுச்சி லிருந்த வுயிர்க்கு என்னுங் குறட்பாக்கள் உயிர்கள் மாறிப் பிறந்து வரும் விதத்தையும், கிரந்தர வீடொன்றைப் பெறுவதற்காகவே வாழ் வென்னும் யாத்திரை நடந்து வருகிற தென்பதையும் வற்புறுத்துகின்றன. அக் கிரந்தரவீடு அறவாழி யந்தணன்ருள், என் பது முதலநிகாரத்திற் சுட்டிக்காட்டப் பட்டது. நிரந்தர வீடொன்றை முயன்று கட்டிக்கொள்ளாது உடம்புகளாகிய

வாடகை வீடுகளி லொன்றிக் குடித்தனஞ் செய்து, அடிக்கடி அவற்றை விட்டு விலகிக் கொண்டிருப்பது மிகுந்த அறியாமை யென்று வள்ளுவர் நமக்குப் போதிக் கிருர், அத்துடனமையாது நிலையான வீடாகிய மோட்சத்தை எப்படியடைவது - கட்டிக்கொள்வது - எனவும் வழிகாட்டு இன்ருர், நிரந்தர இன்ப வீடாகிய மோட் சத்தை யடையவும் வாழ்க்கை நெறியே அறம், பொருள், இன்பமென்னும் மூன்று படிகளிலு மாராயப்பட்டது. 萱
வாழ்க்கையிலே மனம், வாக்கு, காய மென்னும் மூன்றுத் தூய்மையுடனெத் தியங்கும் முறையைச் சைவசித்தாந்த நூல்களைப் போலவே திருக்குறளும் வற் புறுத்துகின்றது. வாய்வேதாந்திகளை, அஃதாவது பேச்சுவேறு, எண்ணம் வேறு, செய்கைவேருக வாழும் மக்களை வையத் துள் வாழ்வாங்கு வாழ்பவரெனத் திருக் குறள் ஒத்துக் கொள்ளவில்லை.
மனத்துக்கண் மாசில ஞத லனைத்தற குைல நீர பிற என்னுந் திருக்குறளிலே, மனமாசினை பகற்றுவதே எல்லா அறங்களுக்கும் மேலான அறமென வற்புறுத்தப்படு கின்றது. மனமாசகன்றுவிடின் மயக்கத் தெளிகிறது; மாசற்ற காட்சி உண்மைக் காட்சி கிட்டுகிறது. எல்லாச் சம்பவங் களிலுமினிமையுமின்பமுங் கிட்டுகின்றன. உலகநிகழ்ச்சிகள் கடவுளாணேப்படி நடப்பன. ஆன்மாக்களின் புண்ணிய பாவத்துக்குத் தக்கதாகக் கடவுளின் நுட்பமான நியதிப்படி உலக சம்பவங்கள் பொருந்துவதை,
போக்கு வரவு புரிய ஆணையின் நீக்க மின்றி நிற்கு மன்றே ' என்ற சிவஞான போதத்தாலும்,
** இருவினையின் றன்மைகளுக் கீட
三 அண்ணலரு ளானண்ணி ' என்னுஞ் சிவப்பிரகாசத்தானு ம லாகும். இங்ங்னங் தெய்வ நியதிப்

Page 31
டைபெறுஞ் சம்பவங்கள், மயக்க நிலையி ள்ள நமக்கு விளங்காதபடியாலேயே துயரத்திலே மூழ்கிக் கிடக்கின்ருேம். மத் தவிர்ந்த பிறரெல்லாந் தீயவர்கள் மக்கு எதிரிகள் என முடிவுகட்டுகின் ரும், துரியோதனன் ஒருமுறை தனக் கெட்டிய வகையில் ஆராய்ந்து பார்த்து, உலகத்திலே நல்லவர்களொருவருமிலர், என்ற முடிபுக்கு வந்தான். அதே சமயத்தில் தருமபுத்திரர் உலகத்தைப் பரிசீலனை செய்து எல்லோரும் நல்லவர்களென்ற முடிபுக்கு வந்தார்.
சனகர் சுகமுனிவரிடம், உலகத்தி லெதைக் கண்டீர் ? எனக் கேட்டபொழுது, எங்குமினிமையே கண்டேன் எனப் பதிலளித் தார்.
இருணங்கி யின்பம் பயக்கும்
மருணிங்கி மாசறு காட்சி யவர்க்கு '
என்னுங் குறள் சுகமுனிவரும் தருமபுத் திரருங் கண்ட இனிமைக்குக் காரணங் கூறுகின்றது.
ஒரு சம்பவத்திலே யொருவர் துன் பத்தையு மொருவ ரின்பத்தையுங் காண்ப தெப்படி யென்பதை யாராய்வோம். ஆன்மா சார்ந்ததன் வண்ணமா புள்ளது. சைவசித்தாந்தங் கூறும் மூன்று பொருள் களுள் ஆன்மா ஒன்று. ஏனய பதியும் பாசமும் ஆன்மா சாரும் பொருள்கள். ஆன்மாவின் முக்கிய குணம், ஒரு நேரத்தி லேதோ ஒன்றையே சாருவது. கடவுளைச் சாரும்போது பாசத்தையும், பாசத்தைச் சாரும்பொழுது கடவுளேயும் அது சாராது காகத்தினிரு கண்களிலு மதனுெருமணி சார்ந்து பொருள்களைக் காண்பதுபோல, ஆன்மா பதியையும் பாசத்தையு மொவ் வொரு சந்தர்ப்பத்திற் சார்ந்து சம்பவங் களிற் பங்கு கொள்ளுகின்றது.
உலக சம்பவங்களைப் பாசத்துக் கூடாகக் காணும்பொழுது துன்பத்தையும், பதிக்கூடாகக் காணும்பொழுதின் பத் தையும் ஆன்மா அடைகின்றது. அப்ப
 
 
 

9 -
ரடிகள் பாசபக்தங்களோடு கூடிய கிலே யிலே தமது குடும்பத்தில் அடுத்தடுத் தேற் பட்ட துக்க சம்பவங்களாலே நடுங்கி மதமாறும் அளவுக்குத் தளர்வடைந்தார். பின்னர் அவர் திருவருளே முன்னிட்டு வாழ்ந்த சந்தர்ப்பத்திலே தஞ்சை யமுதாக அருந் தினர் நீற்றறையை வீணுகான மாகவும், நிலவொளியாகவும், தென்றற் காற்ருகவும், இளவேனிலாகவும், தாமரைப் பொய்கையாகவு மனுபவித்தார்.
கடவுளும் ஆன்மாவும் அணுவளவு கூடப் பிரிவதில்லை யெனினும், உலக சம்பவங்களிற் பங்குபற்றும் பொழுது, ஆன்மாவானது ஆணவமுனைப்புடன் முன்னிற்கும்போது, கடவுள் பின்னின்று விடுகின்ருர் ; ஆன்மா பணிவுடன் பின் னரின்று முயலுமாயின் இறைவன் முன் னின்று வழிதுலக்குகின்ருன் கடவுள் பின்னிற்க ஆன்மா இயங்குவது மருளின் பாற்படும். கடவுள் முன்னிற்க ஆன்மா இயங்குவதருளின்பாற்படும். மருளின்பாற் படும்போது பிறவிகள் பெருகுகின்றன; அருளின்பாற் படும்போது பிறவிகள் சுருங்குகின்றன. சித்தாந்த சாத்திரங்கள் கூறுமிவ் வுண்மைகளே வள்ளுவராலும், மருளானும் மாணுப்பிறப்பு என்றும் (அடி சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடனிந்துவர்
என்றும் வற்புறுத்தப்படுகின்றன.
பிறவியறுத்து வீடுபெற்ற ஆன்மா மோட்ச நிலையிற் சும்மா விருக்குமெனப் பலரெண்ணுகின்றனர். அப்படியெண்ணு வது சைவசித்தாந்தத்துக்குப் பொருந்தாது. சைவசித்தாந்தத்தின்படி இறைவனது பேரானந்தம் எல்லையற்றது; வரம்பிலின்ப மெனப்படுவது. அதனெல்லேயை உயிர் எப்போதாவ தடைவதில்லை. எனவே, ஆன்மா சிவானுபவத்தை நுகர்ந்து கொண்டே மேலும் அயர்ப்பின்றி வளர்ந்து செல்லவேண்டும். இது, அயரா அன்பினரன் கழல்செலுமே என்பதனுலும் ஏகமாய் நின்றே இணையடிகள் தாமுணரப் போக மாய்த்தான் விளைந்த பொற்பினுன், என்பத னுலும் வற்புறுத்தப்பட்டது.

Page 32
- 2
மணிவாசகப்பெருமான் தாமடைந்த சிவானுபவ முதிர்ச்சியைத் திருக்கோவை யிலே, புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய்.வளர்கின்றதே எனக் குறிப்பிடுகின் ருர், வள்ளுவப் பெருந்தகையும்,
'அறிதோ றறியாமை கண்டற்ருற்
- காமஞ் செறிதோறு ஞ் சேயிழை மாட்டு ' என்னுந் திருக்குறளால் இத் தெய்வீக அனுபவத்தையே குறிப்பிடுகின்றர்.
இடையருது நன்னெறியிலே முயன்று கொண்டு பணிவுடன் கிடப்பது உயிரின் கடமையென்றும், இன்பத்தை யளித்து அதைத் தாங்கிக்கொண்டிருப்பது இறை வன் கடமையென்றுங் காட்டு மிவ்வரிய கருத்துக்கள் மனிதரைச் சிந்தித்துச் செய லாற்றச் செய்வனவாம். திருக்குறள் இத்
அனைவருஞ் சமம் எல்லே வொருவரும் மனிதப் பண்போ தாய மின்புற்று வாழ முடியும் - கருத்துக்களே மக்களுள்ளங்களி டும். நாட்டுப்பற்றையும், மொ மூட்டுவனவாக அமைதல் வேை அறிவு, நல்ல ஒழுக்கம், கல்ல கும் முறையில் எழுத்தாளர் ப6
 

தத்துவத்தை அத்திபாரமாகக் கொண்டு வாழ்வி னெல்லாக் கோணங்களையும், அக் கோணங்களி னெல்லாப் புள்ளிகளையுமே அலசித் தூய்மை செய்துள்ளது. ஒவ்வொரு திருக்குறளும் வாழ்வினெவ்வொரு அம்சத் துக்கும் உரைகல்லாயிருப்பதுடன், நூன் முழுமையும் மனிதரைப் பெருநோக்காகிய வீட்டுக் கழைத்துச்செல்லும் பெருவழியா யிருப்பதை நாம் காணலாம். 三ー
திருக்குறளைப் போற்றுகின்ற திரு வள்ளுவருக்கு விழாவெடுக்கின்ற உலகம், தன் மனமாசை யகற்ருது அன்பு, அருள் வழிகளினின்றும் விலகி நடக்குமானுல்கடவுட் கொள்கையைப் புறக்கணிக்கு மானுல் - அதனறியாமையை என்ன வென்பது வள்ளுவரைப் பெற்றும் பெருதவர்கள் போல வாழ்வது தமிழ் மக்களுக் கிழுக்காகும்.
ாரும் வாழப் பிறந்தவர் - ஒவ் டு கடந்துகொண்டாற்ருன் சமு என்பன போன்ற அடிப்படைக்
லாழமாகப் பதியவைக்கவேண் ழிப்பற்றையும், இனப்பற்றையு ண்டும். பொதுமக்களின் நல்ல வாழ்க்கை - இவற்றை வளர்க் டைப்புக்க ளிருத்தல் வேண்டும்
- மா. இராசமாணிக்கனூர்

Page 33
திருவள்ளுவர் உவமை
பண்டிதர் போன்
பாவினுயிர் எழுத்து, அசை, சீர், எதுகை, மோனையாகிய புற உறுப்புக் களிலே தங்கியிருக்கவில்லை. நல்ல கருத் துக்களும் பாவிற் குயிர்நாடியாக அமைய வில்லை. நீதி நூல்களெல்லாம் உயர்ந்த கருத்துப் பெருக்கத்தை உடையனவாயி னும் அவற்றிலுள்ள பாக்களே இலக்கிய நயத்திற்காகப் படிப்பவரிலர் புறவுறுப் புக்களெல்லாம் ஏற்ற பெற்றியிலமைந்துள வேனும் உடலினுள் உயிரின்றேற் புற அங் கங்களாற் பயனில்லை. ஆகவே, பாவி னுயிர்காடி கருத்தைப் புலவன் புலப் படுத்தும் வகையிலேயே தங்கியுள்ள தெனலாம். புறச்சிறப்புக்களுடன் பிரதான மாகப் புலவன் பொருளை வெளிப்படுத்து முத்தியுஞ் சேர்ந்தே பாவிற்குச் சிறப்புத் தரும். ஒரு சிறு உதாரணம் பார்ப்போம்:
செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை' என்பது பிரிவாற்றுமை கூறுங் குறட்பா. தலைவனே! பொருளிட்டச் செல்லவில்லையெனில் அதனைப் பலகால் நமக்குரைக்கலாம். பொரு வீட்டி விரைவிலே திரும்புவதாயின் அப்பிரி வினே - நின்பிரிவை ஆற்றி உயிரோடிருக்கக் கூடிய வன்மையுள்ளவர் யாருமுளரேல் அன் னுர்க்குக் கூறிச் செல்லலாம். (தலைமகன் பிரி வால் தலைவியுங் தோழியு முயிரிழப்ப ரென்பது.)
தலைமகன் வாழ்வாங்கு வாழப் பொருள் தேடுங் கடப்பாடுடையன். காதலன்பு இடையே குறுக்கிடுகின்றது ; எனினும் பொருள் தேடப் போவதென்றே முடிபுகட்டிவிட்டான். கடமையுங் காதலும் முரண்படும்போது கடமையைத் தட்டிக் கழிக்க முடியாது. தலைவன் பொருளைக் கடிதிற்றேடி, வல்லே தலே மகளே வந்தடை யலாமென எண்ணுகின்றன். நுண்ணிய

யிற் கருத்துச் செறிவு கிருஷ்ணபிள்ளை
மதியுடைய தோழி இதனை உணர்ந்து கொண்டாள். தலைமகள், பிரிவென்ற வார்த்தையையே கேட்கச் சகியாதவ ளாயின் பிரிவென்னுங் காரியம் நிகழின் அவளுயிர் வாழாள். அவளன்றித் தனக் கென வேருன உயிரென்பதில்லாத தோழிக்கு மஃதே அவலநிலை வந்தெய்தும், கடமையுணர்ச்சி உந்தத் தலைவன் தன் காரிய நிமித்தம் புறப்படும்வேளை தாமிரு வரும் இறந்துபடும் நிலையை அவனுக்கு வெளிப்படுத்துவதோ குன்றன்று ; ஆகவே தந்நிலையை அவனுணருமாறு செய்வதோ டமைந்துவிடுகின்றுள் தோழி. அவன் வல்வரவை ஒன்றென, அவன் பொருள் தேடும் பிரிவு முயற்சிக் குடன்பட்டாள் போல, தோழி கூற்றுக அமைந்த குறட் பாவி னிரண்டாமடியில் ஒரு தனிச்சுவை தொனிக்கின்றது. தோழி கூற்றிலே வெளிப்படையாக உடன்பாடும், குறிப்பாக மறுப்பு மமையும் வகையில் வள்ளுவர் பாவினே அமைத்துள்ளார். வல்வரவு வாழ் வார் என்ற சொற்கள் பாவிற் குயிர்நாடி யாக அமைந்து புலவன் கருத்துப் புலப் பாட்டை நாமுணர்ந்து மகிழ வழிசெய் கின்றன. தலைவனே செல்லவேண்டாம் ; செல்லின் காமிறந்து படுவோம், என : (Թ6)յ6յիլյլ յ60)լ այդ 5լն பொருளமையப் பாவமைத்திருப்பின் அது சுவையற்ற தொன்ருகிவிடும் படிப்பாருணர்ச்சியிற் கிளர்ச்சியை ஏற்படுத்த மாட்டாது. வள்ளுவருடைய இப்பாவிலே அவர் பொருளைப் புலப்படுத்தும் வகை தனி யாற்ருல் பெற்றிலங்குகின்றது.
தனி நீதியை எடுத்தியம்புமிடத்தும் வள்ளுவரிடத்திலே ஒரு தனிச்சிறப்புத் தோற்றுகிறது.
லதன வெயில் போலக் காயுமே அன்பி லதனை யறம். '

Page 34
என்பது, மன்பதை அன்புசெய் தொழுக வேண்டிய அவசியத்தை எடுத்தியம்பும் நீதிக்குறள். உயிர்களே ! நீங்க ளன்புசெய் யாவிடி லழிந்தொழிந்து போவீர்கள். ஆகவே அன்பு செய்து வாழவேண்டும், என்று ஆசிரியர் மனித இனத்திற்குக் கட்டளை யிடும் பான்மையிலே இதனைக் கட்டளைக் குறளாகச் செய்திலர் அன்பு, கட்டளை காரணமாக-புறத்திலிருந்து வரும் நிர்ப்பந் தங் காரணமாக உள்ளத்தி லெழக் கூடிய
தொன்றன்று. அது வான் சுரக்கும் மழை
போலத்தானுகவே கசிந்து மல்கவேண்டிய தொன்று. நாமெப்போதுங் காணக் கூடிய புல்லிய உயிர், புழு எலும்பே யற்ற - வெறுஞ்சதையினுலாகிய - இச்
சிற்றுயிர் தன் மென்மைத் தன்மையையும்,
தான் கடக்கவேண்டிய நிலப்பரப்பையும், அந்நிலப் பாங்கினையும் (மணலி னியல் பினேயும்) சிந்திக்காதுTர்ந்து செல்கின்றது. கதிரோனும் மேகச்சிறையினின்றும் விடு பட்டுச் சடுதியிலே கொடுங்கிரணங்களைக் கால, அஃதப்படியே கரிந்து பொரிந்து போகின்றது. கதிரோனியற்கையின்படி
நடக்கின்ருனுதலாற் கரிந்து வெந்த குற்றம்
புழுவின் மேலதே. அன்பில்லாது வன்பு செய்து வாழுமுயிர் தருமதேவதையின் முன்பு சென்ருல், அது தானுகவே கூசிக் குறுகி மடிந்தொழிந்துவிடும். உலகமொரு நியதியின் பாற்பட்டு நடக்கின்றது. அகப் பட்டவற்றைச் சுழற்றியடித்துப் பொடி யாக்கு மெந்திரத்தி லொருவனகப்பட்டால்
அவன் தானுகவே சாவை வருவிக்கின்றன்.
அதற்காக அந்த எந்திரத்தை யாருங் குறைகூறுதல் முறையற்றது. நீதிவழிப் படி நடக்குஞ் சான்றேர்முன் அங்ங்ன மொழுகாதவன் சென்ருல், அவர்தம் முன்னிலையிலே கிற்கமுடியாது கூசித்தலே கவிழ்கின்றன். அதற்காகச் சான்ருேரைப் பழிப்படுத்திக் கூறுதல் சாலுவதன்று. தன்வினை தன்னைச் சுடும்போது பிறரைப் பழிகூறி ஆவதென்? அரசியல் பிழைத்த பாண்டியனுக் கறமே கூற்றமாயிற்று.
அன்பிலாரை யென்பிலாப் புழுவிற்கொப் பிடு முவமையுட் பொதிந்துகிடக்குங்
 
 
 

கருத்துப்பரப்பும் மகிழ்ச்சி தருகின்றது; வாழ்க்கைச் சிக்கலே யறுக்க உதவுகின்றது. நம்முள்ளத்துள்ளே தூர்ந்துகிடக்குக் தெய்வீக அன்புப் பண்பை வெளிக் கொணர்ந்து வாழவும் வழிகாட்டுகின்றது. வள்ளுவர் குறளில் வெறுமுவமையணி மாத்திரமிருந்தால் அஃதென் ருே மறக்கப் பட்டிருக்கும். காயும் என்ற சொல் கடல் போல உணர்ச்சியைக் கிளரச்செய்யுஞ் சொல்லாவதோடமையாது பாவிற்குயி ரூட்டுஞ் சாதனமாகவும் மிளிருகிறது. " அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத்
தம்மை யிகழ்வார்ப் பொறுத்தல் தலை ". இது மனிதரது தலையாய கடனுென்றைக் கருத்துச் செறிவுட னுவமைமூலம் புலப் படுத்துகின்றது. இகழ்வாரை யொறுக்காதே பொறுத்துவாழ் - என்று வள்ளுவர் கூறி யிருந்தால து வெறுங் கட்டளை யாகிவிடும். அதிற் கருத்துச் செலுத்துவார் யாருமில ராவார். நாம் நாடோறுங் காணுமுண்மை யொன்றையே வள்ளுவரிண்டுக் காட்டு கின்ருர், நிலத்தை ஒருவன் ஆழவெட்டி பகழ்கின்றன் ; தன்னுடலேக் கிழிக்கின்ற னென நிலமாது சிறிதாவது கோபிக் கிருளா ? அதற்குப்பதில் பயிரினங்களை விளைவித்து அவனுக்கு வாழ்வுங் கொடுக் கின்ருள். அவன் செய்யுங் கொடுஞ் செய லுக்கு அவள் தன்னுலான பயனேயே கொடுக்கிருள். அதன்மேற் தன்னுடலே அவன் கிழிப்பதற் காதாரமாக இருப்பவளு மவளே. அப்பாவி, தன் கணின்று தன்னைச் சித்திரவதை செய்ய ஆதாரமாய் இருப் பவளும் அவளே. சில கொடியர் தமக் காதாரமா யிருப்பவர்களை வருத்திக் கொண்டே தாமும் வாழுகின்றனர். அவர்க ளங்ஙனம் வாழுதற்குக் காரணமும் பெரி யோர்களே. நமக்காதாரமா யிருப்பவர் களேயே அல்லலுறுத்தவும் அவர்கள் கோபிக்காதிருத்தலோடு அமையாது அக் கொடியோர் வாழவும் வகை செய்து விடு கின்றர்களே. அவர்தம் பொறுமை பிறர் கொடுமையைச் சகிக்கச் செய்வதோடு

Page 35
அவர்தம் மனதிற் சினங் கனவிலுமேற்பட இடங்கொடா திருக்கின்றதே. இத்தகைய மனிதர், மனிதருள்ளே தலையாயவர். காயு மியல்பு நீங்கி மக்களைக் கவருங் காந்தங் கள்-காந்திகள்-தெய்வமாக் தன்மையர். சிதையின் பொறுமைப் பெருங்குணம் நோக்கிப் போலும் ஆன்ருேர் அவளைப் பூமி பீன்றெடுத்த பெருமகளென்றனர். நிலத்தை பகழ்வாரகழ்தலோடமைந்துவிட இக்கொடியர் தமக்குவாழ்வளித்தவர்களுக் இன்னல் செய்யுமளவி லமைந்துவிடாது அவரை யிகழ்ந்தும் வாழ்கின்றனர். நில மகள் வெட்டுவோரைப் பொறுமையுடன் காத்தலோடிருக்கப் பெரியா ரவளிலும் பொறைமிக்கு தம்மை வருத்துமளவில் நில்லாது இகழ்தலையுஞ் செய்யுங் கொடி பரை மெளனத்தோடு வாழச் செய்கின்ருர், ஆகவே, இத்தகைய பெரியோர் நிலமகளி னும் பன்மடங்கு பெரியவரே.
ஈண்டு பிறிதுமொரு குறளே நோக் குதல் பொருத்தமுடைத்து,
* சமன் செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றேர்க் கணி இப்பா அவையத்திருத்து நண்பர், பகை வர், நொதுமலரென்னும் முத்திறத்தா ருக்கும் நீதி வழங்கவேண்டிய சான்றேர் பண்பு கூறுகின்றது. பண்டம் விற்குமிடங் களிலே யாவருங் காண முற்புறக் தூக்கி பிருக்குங் கோல் (தராசு) என்னுங் கருவிக் குச் சான்ருேரை யொப்பிடுகின்ற உவமை யைத் தன்னுளடக்கியிருக்கும் உவமை பணியின்பாற்பட்டது இச்செய்யுள். இஃது உவமையளவில் அமைந்துவிடாது வேறும் ஏதேதோ உயர் கருத்துக்களைச் சுவையுறத் தெரிவிக்கும் வகையில் நம்மனத்தை பிர்க்கின்றது. சான்ருேருக்கு (உடம்பின் கண் பொன், தங்கமாகியவற்ருலமைந்த ஆணுதற்குரியன இல்லாவிடினு மவர்தம் மனதிற்குகந்த) அணிகளாயுள்ள அமை வும் ஒருபாற் கோடாமையு மாகிய பண் புகள் கோலுக்கும் பொருந்தும். கோலுக் குரிய பண்புகளாகிய சமன்செய்தலும்,
 
 

سب سے 3
பொருளை வரையறுத்தலுஞ் சான்றேர்க்கும் பொருந்தும், இங்ஙனம் உவமையையும் பொருளையு மெல்லாவற்ருலுஞ் சமமுடை பனவாக்கி வைக்கும் வள்ளுவர், நீதிகளைக் காட்டுமிடத்துஞ் சிறப்பான குறிப்புக்கள் தோற்றும் வகையில் தம்பாவைப் பரந்து பட்ட இயல்புடையதாக்கிக் கடுகினுள்ளே கடலை அடங்கச் செய்து விடுகின்ருர்
இப்படி உவமைகள் மூலக் தாமெடுத் துக்கொண்ட பொருளை வள்ளுவர் தெளி வுறுத்துவதோ டவ்வுவமைகளையுங் கருத் துப் பொலிந்தனவாகக் காட்டுவது படிப் போருக்கு மகிழ்வூட்டுகின்றது. மிக முக் கியமான பொருளை வற்புறுத்துமிடத்து வள்ளுவருவமையைத் தனிவாக்கியத்திலே முடிக்கின்ருர், பொருத்துஞ் (அங்ங்னமே, அவ்வாறே, அதுபோல முதலிய) சொல் லெதுவுமின்றியே தாம் பேசவெடுத்துக் கொண்ட பொருளைப் பிறிதொரு வாக் கியத்திலே கூறுகின்ருர், இதனுற் பேச வெடுத்துக்கொண்ட விடயம் பசுமரத் தானிபோல மனத்திலே பதிகின்றது. உதாரணத்தைத் தனியாக முற்றுப்பெறச் செய்து விளக்குதலால் இஃது (உதாரணத் தோடு கூடிய) எடுத்துக்காட்டுவமையணி யெனப்படும் முதற்குறளிலே,
'அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்கே யுலகு" எனக் கடவுளுண்மையை வள்ளுவர் கூறு கின்ருர் இஃதொரு சிக்கலான விடயம். கடவு ளதி சூக்குமமான பொருள். கடவு ளினுஞ் குக்குமமான பொருள் வேறில்லே. எடுத்துக்கொண்ட கடவுளுண்மைக் கிணங்கப் பொருத்தமான உவமை அமைய வேண்டும். உருவமற்ற தெய்வத்திற்குச் குக்குமமான ஒலிவடிவான அகரத்தை உவமிக்கின்ருர் வேதமந்திர சொரூபா, எனக் கடவுளுக்கு ஒலியாகிய மந்திர வடி வுண்டென்கின்ருர் இன்னுெரு பெரியார். உருவமற்ற தெய்வம் அன்புமிகுதியினுலே தன்னை நினைவாருக்கு அந்த வடிவுடன் தோற்றுதலினுலே, கடவுள்

Page 36
- 2
ரென வுங் கூறப்படுவர். அகரத்திற்கு ஒலி வடிவுடன் வரிவடிவமைதலிஞலே யுருவம் பற்றிய வகையிலிருந்த உவமை பொருத்த மானதே.
கடவுள் உலகிற் குயிரானவர். உயிர்க ளுக்குள் ளுயிராயிருந்தவற்றை இயக்கும் தோன்றத் துனே யு மவரே எழுத்துக் ளுள்ளே உயிர்போன்றிருந்து இயங்கா மெய்களே இயக்குமவற்றிற்கு உயிரெழுத் துக்களென்றே பெயர். அவ்வுயிரெழுத்து வருக்கத்துள்ளும் அகரம் அதி சிறந்தது. உடலினுள் உயிரெங்குளதென உசாவுவ தினும் உயிரிலா இடமுண்டோவெனக் கேட்டல் சாலப் பொருத்தமுடைத்து. தலே மயிர் நுனியிலிருந் துள்ளங்கால்வரை உட லிடத் தஃதில்லாத இடமேயில்லே. அங் கனமே தெய்வம் எல்லாப் பொருள்களி னதும் ஆதியும் நடுவு மந்தமுமா யிருக்கின் றது ; பொருள்களுடன் கலந்து (ஒன்ரு ய், வேருய், உடனுய்) கிற்கின்றது. இப்படிக் கலப்பாலும், முதல், நடு, இறுதியாகி நிற்குமிட வகையாலும், தெய்வமும், அகர
சீரிய செம்மை சான்ற முளைத்து, பண்பட்டு, விளைந் நிலையிலெழுந்த கருத்துக்கள் ே அழகெய்தி மானிட சாதிக்கு
ー * :
இலக்கியம் காலத்தாற் இன்று தோன்றி நாளே மறை
 

4
முந் தம்முளொப்பன. இது நிலைபற்றிய உவமைப் பொருத்தத்தைக் காட்டுகின்றது.
இவ்வளவில் நின்று விடாது, இரண் டிற்குமுள்ள பொருத்தம் மேலுந் தொடர்ந்து செல்லுகின்றது. அகர மேனேய எழுத்துக் களைப் போலல்லாது எவ்வித விகாரமு மின்றி வாயைத் திறந்த மாத்திரத்தே தோன்றும் இயற்கையொலி, தெய்வமும் தானெப்பொருள்களுடனுங் கலந்திருப் பினும் அவற்றினுலே தாக்குனுது தன் தனித்தன்மையுடனிலங்குவது. ஆகவே விகாரப்பாடற்ற இயல்பினுலு மிரண்டு மொன்றற்கொன்ருெப்பாவன.
இங்ங்ணமாக, வள்ளுவர் காட்டு முவ மைகள் பொருள் மேற் பொருள் செறிந்து பொருத்தமும் திருத்தமும் பொருந்தி கிற் கும் நிலையுடையனவாக அமைதலே நாம் காண்கிருேம், ஆகவே, அவற்றை அடக்கி யுள்ள குறட்பாக்கள் கவிச்சுவையுடன் குறிப்புப் பொருளுந் தந்து கருத்துக் கரு வூலங்களாக விளங்கு மொப்பிலா மணிக G3 GMT UIT LÈ.
உயர்ந்த உள்ளங்களி லரும்பி, து அடங்கிக் கிடக்க முடியாத மொழியாகிய உடம்பை எடுத்து வாழ்வு தருவதுதான் இலக்கியம்.
- க. தி. சம்பந்தன்
袁 袁
சாகடிக்கப்பட முடியாததாகும். வ திலக்கியமன்று.
-- uLlyfr Gigfyr

Page 37
அறிவுச்
முத்தமிழ்க்காவலர், ச்
செல்வம் பலவகை ; அதில் அறிவு ஒரு வகையெனக் கூறலாம். இதனுல், அறிவுமொரு செல்வமென்ருகிறது. இதை விட அறிவே செல்வம் என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
எச்செல்வமுமில்லாத ஒருவனிடம் அறிவுச் செல்வமொன்றிருந்து விட்டால், அவனெல்லாச் செல்வங்களையும் பெற்றவ -ணுவான். எல்லாச் செல்வங்களும் பெற்ற ஒருவன் அறிவுச் செல்வத்தைப் பெருதவ ணுக விருந்தால், அவனெல்லாச் செல்வங் களையு மிழந்தவனுகி விடுவான்.
எந்தச் செல்வத்தையும் உண்டுபண்ணு மாற்றல் அறிவுச் செல்வத்திற்குண்டு. பிற செல்வங்களுக்கு இந்த ஆற்றலில்லை. இதனுலேயே வள்ளுவர், அறிவுடையா ரெல்லாமுடையார் எனக் கூறினுர்,
செல்வங்களனைத்துமோ, சில செல் வங்கள் மட்டுமோ அல்லது தனித்த வொரு செல்வமோ அறிவற்ற மக்களிடத் தில் நில்லாதென்பது வள்ளுவர் கருத்து. இதனை அறிவிலா ரென்னுடையரேனுமிலர் என்பதால் நன்கறியலாம்.
பிற செல்வங்களைப் பெற்றவன் தன் னையுங் காப்பாற்றிக்கொண்டு, அவற்றை யுங் காப்பாற்றியாக வேண்டும். ஆணுல், அறிவுச் செல்வமானது தன்னைத்தானே காப்பாற்றிக்கொண்டு தன்னைச் சார்ந்த வனையுங் காத்துநிற்குமோர் அருஞ் செல்வ மாகும்.
பல செல்வங்கள் காலத்தால் அழியக் கூடியன. சில செல்வங்கள் பகைவரா லழியக்கூடியன. இன்னும் சில செல்வங் கள் தாமே யழிந்துவிடக்கூடியன. ஆணுல், அறிவுச் செல்வமோ எப்போது மழியா ததும், எவராலு மழிக்க முடியாததுமாகும்.
4 : ایسے LJ
 
 

GJ sipa) në
ஆ. பெ. விசுவநாதம்
மனம் வேறு அறிவு வேறு. மனமே யறிவு என மயங்குவார் சிலர் மனம் மயங்கும்; அறிவு மயங்காது. மனங் கலங்கும் அறிவு கலங்காது. மனம் வாய்க்காலிலோடுக் நீர் அறிவு அதனிரு கரைகள் மனங் குதிரை அறிவு குதிரை போட்டி, மனங் குதிக்கும்; அறிவு அடங்கும். மனம் ஆசைப்படும்; அறிவு அதைத் தடுக்கும். மன்- நினைவு. மனம்நினைப்பது மனனம்-கினேத்துக்கொண்டே யிருப்பது. மனிதன் - மனதின் வழிச் செல் பவனென்ருவான். அவ்வாறு செல்லாமல், அறிவு செலுத்தும் வழியிற் செல்பவரே அறிஞர் எனப்படுவர்.
அறிவை அறியாதவர் சிலர் அறிந்தும் அதை அடையாதவர் சிலர். அடைந்தும் அதனை வளர்க்காதவர் சிலர் வளர்த்தும் பயன்படுத்தாதவரோ பலர். இந்த கால் வகையினரையும் அறிவிழந்தவர் என அறிவைப் பெற்றவர் கூறுவர்.
அறிவையிழந்தவர் மானத்தையும் இழப்பர். அவரை உயிரிழந்த உடல் எனக் கூறலாம். கூறிப்பயன்? உயிரிழந்த உட லழிந்தொழிந்து போய்விடும். இஃது அழிந்தொழியாமல் அலைந்து திரிந்து கொண்டே யிருக்கும். உயிரிழந்த உடல் காடுகளிற் கிடந்தால் நாய், நரிகளுக்கேனு முதவும். இது நாட்டின் நடுவிற் கிடக் தால் யாருக்கு மெதற்கு முதவாது. உயி ரிழந்த உடலே அதனுறவினர்கள் கண்டால் எரித்தோ புதைத்தோ அழுது வருந்துவர். ஆனல், இதனுறவினர்களோ எரிக்காம லும், புதைக்காமலும், அழாமலும் பார்த்துக் கொண்டே யிருப்பர். அதிகங் கூறுவா னேன்? உயிரிழந்த உடலுக்குற்ற நண்பர்க ளிருந்தால், மலர்மாலே யிட்டுப் போற்றுவர். ஆனல் அதற்குற்ற நண்பர்களிருந்தால் வெறுத்தொதுக்கி விடுவர். ஆகவே அறி

Page 38
விழந்த மக்களே உயிரிழந்த உடல் எனக் கூறுவதொரு போதும் பொருந்தாது.
அறிவுடையவர்கள் எத்தகைய மக்களே யும் நட்பாக்கிக் கொள்வார்கள். அது மட்டுமன்று, பெற்ற அக்கட்பைக் குறைத் துக் கொள்ளாமலும், வளர்த்துக் கொள் ளாமலும் ஒரே மாதிரியாக வாழ்ந்து வருவர். அறிவிழந்த மக்களாலிஃதொரு போதும் இயலாது.
அறிவுடையார் கண்ணுற் காண
முடியாததையுங் காண்பர் ; காதாற் கேட்க முடியாததையுங் கேட்பர். அதுமட்டுமல்ல, பின்னுலென்ன வரும் - என்ன நேரிடும் - என்பதைக்கூட முன்கூட்டியே யறிவர். அறிவுச் செல்வத்தை இழந்தவர்களா லிஃதியலாது.
வில், அம்புகளைக் கண்டாலும், வேல், கம்புகளைக் கண்டாலும் அறிவுடையோ ரஞ்சுவதில்லை. எதற்கு மஞ்சாத இவ் வீரர்கள் பழிபாவங்களுக்குப் பெரிது மஞ்சி நடுங்டுவர்.
அறிவுடையோர் அதிகமாகப் பேசுவ தில்லை. குறைவாகப் பேசினும் எதிரியி னுள்ளத்திற் பதியுமாறு தெளிவாகப் பேசு வர். அதுமட்டுமன்று எதிரியின் பேச்சுக ளுக்குள் மறைந்துகிடக்கு முண்மையையும் எளிதிலறிவர். அவர்களே மாறுவதில்லை : எவரையுமேமாற்றுவதுமில்லை.
உயர்ந்தவர்களென்று சொல்வதை யெல்லாம் நம்புவதையோ, தாழ்ந்தவர்க ளென்று சொல்வதையெல்லாம் மறுப் பதையோ, நண்பர்களென்று சொல்வதை யெல்லாம் ஏற்பதையோ, பகைவர்க ளென்று சொல்வதையெல்லாம் வெறுப் பதையோ அறிவுடையார்களிடங் காண முடியாது. இக் கால்வரின் சொற்களிலுங் காணப்படுகிற உண்மைகளை மட்டு மாராய்ந்து வாழ்விற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாற்றல் அறிவுட்ையார்க்கு
மட்டுமேயுண்டு.
 
 

6 -
கண்ணுற் கண்டவைகளுங்கூட, அறி வுடையாரிடத்திற் பொய்த்துப் போவ துண்டு. கடலின் ஆழமான விடத்து நீர் நீல நிறமாகத் தோற்றும். குறைந்த ஆழ முள்ள விடத்து நீர் பச்சை நிறமாகத் தோன்றும். அலேயிலுள்ள நீர் முத்துப் போன்று வெண்மை நிறமாகத் தோன்றும் . இரு கைகளிலும் அள்ளிப்பார்த்தால் நிற
மற்று விளங்கும். உண்மை யென்ன
வெனில் நீருக்கு நிறமில்லை யென்பதே. இதனுற் கண்கண்ட உண்மையைக்கூட அறிவு மறுத்தறிவதைக் காணலாம்.
காதாற் கேட்பவைகளுங்கூட அறி வுடையாரிடத்திற் பொய்த்துப் போவ துண்டு. சிவாஜி கணேசன் பாட்டுக் காதில் விழும். நிழற்படத்திற் கண்டதுங் கேட்டதுங்கூட நினைவிற்குவரும். என் ருலும், பாடியது அவரல்ல - வேருெருவ ரென்பதும், அதுவுமிப்போது கேட்பது சொந்தக் குரலல்ல - ஒலிப்பதிவென்பதுமே உண்மையாக விருக்கும். இதனுற் காது கேட்டறியும் உண்மையைக்கூட அறிவு மறுத்தறிவதைக் காணலாம்.
சாதி வேற்றுமை கூறுபவர் முன் ஒன்றே குலம் என்பவரும், சமய வேற்றுமை கூறுபவர் முன் ஒருவனே தேவன் என்ப வரும், இடவேற்றுமை கூறுபவர்முன் யாது மூரே என்பவரும், இனவேற்றுமை கூறு பவர் முன் யாவருங் கேளிர் என்பவரும் அறிவுடையோராய்க் காட்சியளிப்பர்.
அறிவுடையோர் எதனையும் கன் காராய்ந்து, பிறகே செய்யத் தொடங் குவர். அறிவற்றவ ராராயாது செய்யத் தொடங்கிவிட்டுத் துன்புறுவதோடு, தமது செயலே யெண்ணியுந் துன்புறுவர்.
அறிவுடையோர் ஒருவருக்கு வாக்
களிப்பதாயின் நன்காராய்ந்த பின்னரே
வாக்களிப்பர். வாக்களித்து விட்டால், உயிர் போவதானுலும் அதனைச் செய்து கொடுப்பர். அறிவற்றேர் ஆராயாது வாக் களித்துவிட்டுப் பின்னுல் தானுஞ் செய்

Page 39
யாமல் அவரையுஞ் செய்துகொள்ள விடாமல் தானுந் துன்புற்று அவரையுங் துன்புறுத்தி வருவர்,
ஓரறிவாளி தன்ன அறிவாளியென்று நினைப்பது நல்லதன்று என்பதோர் அறி வாளியின் கருத்து. அது தவறென்பது கமது கருத்து. தன்னை அறிவாளி யென்று நினைத்துக்கொள்ளும் உரிமை ஒவ்வொரு வருக்குமுண்டு. ஆனல், மற்றவர்களே அறிவற்றவர்கள் எனக் கருதுவதுதான் தவறு. ஏனெனில், அறிவுள்ளவர், அறி வற்றவர் என எவரையும் பிரிக்கவியலாது. ஒவ்வொருவரும் அவரவர் துறையிற் சிறிது அறிவுடையவராகவே 岳厅LGL5füLf。 எல்லா மறிந்தவரும் ஏது மறியாதவரும் இவ் வுலக மீதில்லை என்ற தாயுமானவர் வாக்கு இதனை மெய்ப்பிக்கும். .ܝ
ஒருவரை அறிவற்ற வரென்பதைவிட அறிவு குறைந்தவரென்பதே நியாயமான தாகவிருக்கும். செல்வம் என்பதுகூட அப்படியே, ஐந்தாயிரஞ் சொத்துள்ள ஒருவன் ஐந்நூறு ரூபாய் சொத்துள்ளவ னுக்குப் பணக்காரன் தானே ஆணுல், அவன் ஐம்பதாயிரஞ் சொத்துள்ளவனுக்கு ஏழை தானே அவனும் ஐந்தி லட்சம் சொத்து துளவனுக்கு ஏழை தானே ! இவர்களில் யார் செல்வரென்று எப்படிக் கூறுவது. இவ்வாறு அறிவிற் செல்வத்தை யும், செல்வத்தி லறிவையுங் காணும்
இலக்கிய மென்பது வாழ்க் பலித்துக் காட்டுங் கண்ணுடி பிறக்கின்றது; வாழ்விற்குரியது கின்றது.
 

27 -
பொழுதுதான் அஃதறிவுச்செல்வமாகவே திகழ்கிறது.
திருக்குறளில் நாற்பதா மதிகாரத்திற் கல்விச் செல்வத்தை வற்புறுத்திக் கூறிய வள்ளுவர் நாற்பத்திரண்டிற் கேள்விச் செல்வத்தை மிக உயர்த்திக் கூறி, பின்னரே நாற்பத்து மூன்றில் அறிவுச் செல்வத்தை விளக்கிக் காட்டுகிருர், இதி லிருந்து அறிவுச் செல்வங் கல்விச் செல் வத்திலும் கேள்விச் செல்வத்திலும் மிக மிக உயர்ந்த செல்வமென்ருகிறது.
தம்பி, நீ அறிவுடையவனுக இருக்க விரும்புகிருயா ? அப்படியானுல் அறிவுச் செல்வத்தைப் பெறு. அஃதந்த உயர்ந்த இடத்திலிருக்கிறது. இந்த ஒன்பது படி களிலு மேறினுல் அதனை யெளிதாக அடையலாம். (1) பெரியோரை வணங்கு (2) எளியோர்க்குதவு, (3) பொருளைப் போற்று. (4) உடலை யோம்பு. (5) கன் ருகப் படி. (6) அதிகமாகக் கேள். (7) பொறுமையாகச் சிந்தி. (8) குறைவாகப் பேசு. (9) ஒழுக்கமாக கட.
ஆம் நட, வெற்றிபெறுவாய். அப் பொழுதுதான் நீயும் அறிவுச்செல்வம் பெற்ற நன்மகனுகத் திகழ்வாய். உன்னைப் போன்ற அறிவுச் செல்வங்களை நிறையப் பெற்ருல்தான், பெற்றநாடும் வளர்த்த மொழியுஞ் சிறப்படையும்.
வாழட்டும் தமிழகம் ! வளரட்டுந் தமிழ்மொழி !
கையை மொழிவாயிலாகப் பிரதி பாகும். அது வாழ்வினின்றும் வாழ்விற்காகவே நிலைத்திருக்
- கட்சன்

Page 40
இலக்கிய
பேராசிரியர் அ. சீனிவாசராகவன், M. A,
பழைய கதை. உங்களுக்குத் தெரிக் ததுதான் நெற்றிக்கண்ணேத் திறந்தாலும் குற்றங் குற்றமே யென்று தமிழ்ப்புலவன் நக்கீரன் சிவபெருமானிடம் பேசிய இரச மான கதை. இன்றும் நம்முடைய தமிழ் காட்டிற் புலமையினஞ்சாத உறுதிக்கு எடுத்துக்காட்டாக நக்கீரன் நிற்கிருன்,
தமிழன் இன்றும் ருக்கீரனைப் பாராட்டு வதில் வியப்பொன்றுமில்லை. குற்றத்தைச் சொன்னுல் நெற்றிக்கண்ணத் திறக்குஞ் சிவபெருமான்கள் இந்தக் காலத்திலும் நம் மிடையே வாழ்கிருர்கள். தாம் கண்ட உண்மைக்கு உண்மையாய் நிற்கும் ருக்கீரர் களை மட்டும் அதிகமாகக் காணுேம். இலக்கிய விமரிசனமென்பது ஒரு கலை ; இலக்கியம் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமானது இலக்கிய விமரிசனம் இலக்கிய வளர்ச்சிக்கே இந்த விமரிசனம் இன்றியமையாத சாதனம் ; உண்மையும், தீரமும், உறுதியும் படைத்த இலக்கிய விமரிசனம் இப்போது தமிழுக் குத் தேவையென்பதுதான் என்னுடைய கட்சி. ஆகவேதான் நக்கீரர்கள் வேண்டு மென்கிறேன்.
இதனுலே கதையிலே தோன்றும் கக்கீரன் செய்யும் இலக்கிய விமரிசனஞ் சரியானதென்பது என்கருத்தன்று. அந்தக் கதை உண்மை நிகழ்ச்சிகளைச் சொல்லு கிறதோ, என்னவோ, கதையைக் கட்டி யவன் மனதில், அதாவது தமிழனுடைய மனதில், ஒருகாலத்தில் நக்கீரன் கட்சி நியாயமானது; நக்கீரன் கையாண்ட விமரி சனமுறை ஒழுங்கானதென்ற எண்ண மிருந்திருக்கவேண்டும். இப்போதும் பல தமிழறிஞர்களிடையே இந்த எண்ணம் இருந்து வருகிறது. நக்கீரன் கட்சி நியாய மானதா என்று முதலிற் பார்ப்போம்.
 

69)LDflg. Görin
முதல்வர், வ. உ. சி. கல்லூரி, தூத்துக்குடி
கதைதான் உங்களுக்குத் தெரியுமே. தருமியென்ற ஏழைப் பார்ப்பானுெருவன் பாட்டொன்ருேடு பாண்டியன் சபைக்கு வந்து சேர்ந்தான்; Լյու օլ-մ பாடினுன்
' கொங்குதேர் வாழ்க்கை
பஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது
கண்டது மொழிமோ ' என்று தொடங்குகிறது பாடல்.
பூவின் வாசத்தை យបo வாழ்க்கை நடத்துந் தும்பி! அழகிய சிறகை யுடையாயே, எனக்காக ஒருதலைப்பட்சமாக நான் விரும்பு வதைக் கூருமல் நீ கண்டதைச் சொல் என்று ஒருவன் கேட்கிருன் அப்படிக் கேட்பது யார்? என்ன நிலையிலே கேட் கிருன்? என்ன கேட்கிருன்? பாட்டைத் தொடர்ந்து பார்ப்போம்.
' கொங்குதேர் வாழ்க்கை
யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது
கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய
நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ
நீயறியும் பூவே பாட்டிலே பேசுவது ஒரு காதலன். தன் காதலி தன்னுேடு பலகாலம் பழகியதை யெண்ணுகிருன், மயில் போன்ற அவள் சாயலே எண்ணுகிருன் அவளுடைய நெருங்கிய பல் வரிசையை எண்ணுகிருன், அட, தும்பி, எத்தனையோ பூக்களைப் பார்த் திருக்கிறயே, என் காதலியின் கூந்தலவிட வாசனை பொருந்திய பூக்களை நீ கண்ட துண்டோ, சொல், என்று கேட்கிருன். காதலனுெருவனுடைய அன்பின் வேகம் பாட்டில் வடிவாகிறது. அருமையான

Page 41
2 س.
பாட்டென்று நீங்களும் நானும் நினைக் கிருேம். -
ஆணுல், நக்கீரன் சொன்னது தெரியு மல்லவா ?. கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா, என்று கேட்டுப் பாட்டைக்குறை கூறிஞன், நக்கீரன். இதற்கு இறைவ லுைஞ் சமாதான ங் கூற முடியவில்லை யென்று சொல்லும்போது ருக்கிரனெழுப் பிய தடை நியாயமானதென்ற கருத்து உதயமாகிறது. உண்மையில் இந்தக் கதையில் வரும் நக்கீரன் இலக்கியத்தி னியல்பை உணரவில்லை. இலக்கியம் எதைப்பற்றிப் பேசியபோதிலும், உண்மை யில் அது பேசுவது மனித அனுபவத்தைப் பற்றியே என்பதை இந்த நக்கீரன் எண்ண வில்லை. உலகத்திலே உள்ள காட்சிப் பொருள்களைப் பற்றியெல்லாம் இலக்கியம் பேசுகிறது. உண்மைதான், ஆணுல், எந்த முறையிலே, எந்த நோக்கோடு பேசுகிறது என்பதை அவனிக்கவேண்டும். காட்சிப் பொருளைக் காட்சிப் பொருளாக அல்ல ; கருத்தை எழுப்பிய கருவியாகவே இலக் கியம் பேசும். ஆகவே, இலக்கியத்திற் காதலியின் கூந்தல் மணமுடையதாகும்; இதுபோலவே தாமரை விளக்கக் தாங்கும்; கொண்டல் முழவம் பரிமாறும் ; மயில் பரதநாட்டியம் புரியும் ; குவளை கண் விழித்து நோக்கும் ; கவிஞன் கற்பனையி லுதித்த மருதமென்ற அரசி கொலுவீற் றிருப்பாள். இலக்கிய உலகிலே சென்ருல் இவைபோன்ற அற்புதங்களெத்தனையோ அங்கங்கே இன்னரில் தென்படும். உள்ளதை அதாவது வெளியிலேயுள்ள காட்சிப்பொருள்களே, புறநிகழ்ச்சிகளை அல்ல, அவற்றைக் காணுமுள்ளத்தி லெழும் பல்வேறுவிதமான சிந்தனைகளை, உணர்ச்சிகளே, பாவனேகளை அல்லவா இலக்கியம் சித்திரிக்கிறது?
இதை நம்முடைய கதையிலே தோன்றும் நக்கீரனுணரவில்லை. இறைய னுரும் உணரவில்லை. ஆனல், பழைய இலக்கண ஆசிரியர்கள் ஒருவாறு உணர்ந் ருந்தார்கள். அவர்களுடைய கொள்
 
 
 
 
 

கையில் மூன்று அருமையான அம்சங்க விருப்பதைக் காணலாம். ஒன்று, இலக் கியங் கண்டதற் கிலக்கணமியம்புவது ; இரண்டாவது பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; மூன்ருவது நாடக வழக்கு, அதாவது இலக்கிய வழக்குப் புற நிகழ்ச்சிகளைப் பொறுத்தமட்டில் உலகியல் நடைமுறையினின்றும் மாறுபடுவது பொது வாகத் தவருகாது. இதற்கு ஆதாரமான பழைய சூத்திரங்களைச் சொல்ல நான் விரும்பவில்லை. உங்களுக்குத் தெரிந்ததை மறுபடியுஞ் சொல்வானேன்.
ஆணுல், பிற்காலத்தில் இலக்கியத்திற் குயிராதாரமான இந்தப் பரந்த கொள் கையைப் புறக்கணித்து விட்டோம். இலக்கிய மதிப்புரை யென்றல் நக்கீரனைப் போற் குற்றங்காணுவதென்ற எண்ணம் எப்படியோ நம்மிடையே வேரூன்றி விட்டது. விமரிசகன் தடைகளை எழுப்புவ தும் இலக்கிய கருத்தா அதற்குச் சமா தானங்கூற முயல்வதுமான தடை விடை யென்ற முறையானது சாதாரணமாய் வழக்கத்திலிருந்து வந்தது. தண்டகளெல் லாம் பழைய இலக்கண விதிகளை யொட்டியே எழுந்தன. விடைகளும் அவ் வாறே வண்டு, மலரைச் சங்காக ஊது மென்ற புகழேந்தியின் வருணனைக் கெழுந்த தடை ஞாபகமிருக்குமே ? மலர் சங்கானுல் வண்டு அதின் காம்பிலல்லவா ஊதவேண்டுமென்ற தடைக்கு, வண்டு கள்ளையுண்டு மயங்கி முன்பின் தெரி யாமல் தவித்தது நியாயமேயென்ற விடை பிறந்தது சமத்காரமாகத்தானிருக்கிறது. என்ருலும் இந்தத் தடைவிடை முறை இலக் கியத்தினியல்பைப் பற்றிய அடிப்படை யான ஆராய்ச்சியிலிருந்து தோன்ருமல் இலக்கண விதிகளைத் திருப்பித் திருப்பிப் பேசுங் குறுகிய குற்றச்சாட்டு முறையாகி விட்டது. இலக்கண விதிகளைப் பின் பற்றுவது தவறென்று நான் சொல்ல வில்லை. அவையெல்லாம் பழைய இலக்கிய மரபையொட்டி எழுந்தவை. அவற்றை ஒரேயடியாகப் புறக்கணிப்பதால் இலக்கிய

Page 42
வளர்ச்சி தடைப்படுவதோடு மொழியைக் கருவியாகப் பயன்படுத்தக்கூட இயலாமற் போகும். மொழியினழுத்தமுந் தெளிவும் மறைந்துவிடும். ஆனல், அனேகமாக நம் முடைய பழைய இலக்கண விதிகள் இலக்கியத்தின் கருவியான மொழியைப் பற்றியவை. எழுத்து, சொல், அணி யிவற்றைப்பற்றி நுட்பமாக நம்முடைய முன்னுேர்க ளா ராய்ந்தார்கள். இலக்கியத் திற்குப் பொருளிலக்கணங் காணவேண்டு மென்று அவர்கள் முற்பட்டார்கள்; கண் டார்கள். ஆனுல் இலக்கியப் பொருள் களின் தன்மையை, அடிப்படையானமுறை யில் மேல்நாட்டில் அரிஸ்டாட்டில் காலத்தி லிருந்து இன்றுவரை ஆராய்ந்திருப்பது போல் நாமாராயவில்லை. நூலுக்கிலக் கணம் வகுத்தபோது நூலினழகு பத்து வகையிலே கிட்டுமென்று நன்னூலார் சொன்னுர், அதுபோலக் குற்றமும் பத்து. உத்தி முப்பத்திரண்டு. இவை எல்லா நூலுக்கும் பொருந்தும், வான சாத்திரமோ, இரசாயனமோ நூலாக அமைந்தால் அந்த நூலிலும் சுருங்கச் சொல்லுதல், விளங்க வைத்தல், கவின்றேர்க்கினிமை முதலி பன அழகாகவும், குன்றக்கூறல், மிகை படக்கூறல் முதலியன குற்றங்களாகவும், தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், முதலியன உத்திகளாகவும் அமையக் கூடும். இவை இலக்கிய நூல்களுக்கு மட்டுமுரித்தான விதிகளல்ல. தேரையர் வைத்தியமும், கம்பராமாயணமும் நூல் கள். ஆணுல் ஒன்று வைத்தியம், அறி வியல் நூல் : இன்னுென்று கவிதை, இலக்கிய நூல்.
ஒரு நூலெப்போது இலக்கியமாகிற தென்ற ஆராய்ச்சியை நாம் விரிவாகச் செய்யாமல் இருந்துவிட்டோம், இலக்கிய வகைகளையும், உலா, பரணி, பெருங் காப்பியம், பிள்ளைத்தமிழென்று நூலின் வெளிப்படையான சில அம்சங்களை வைத்துக்கொண்டு வகுத்தோம். ஆனல் இந்த வகைகளிற் சேராத புதிய நூல் ஒன்று தோன்றினுல் அதை மதிப்பிடு

س- 0
வதற்கு, இலக்கியத்திற்கே பொதுவாக இலக்கியத்துவ மொன்றை நாம் சிருட்டி செய்துகொள்ளவில்லே, பழைய இலக் கணங்களில் தொல்காப்பியத்தில் இறைய னுரகப் பொருளில், நன்னூலிற் சில சூத்திரங்களி லிந்த இலக்கிய தத்துவம் பேசப்படுகின்றதென்று நீங்கள் சொல்ல லாம். குத்திரங்களிருந்தால் அவற்றை இன்று அடிப்படையாகவோ, புறப்படுமிட மாகவோ கொண்டு, விரிவாக இலக்கிய தத்துவத்தை விசாரணை செய்யவேண்டு மென்றே நான் சொல்லுகிறேன்.
இலக்கிய விசாரணை செய்யாமலா நம்முடைய சாற்று கவிகள் தோன்றியிருக் கின்றன. நம்முடைய உரையாசிரியர்களே விட நுட்பமாக நூலையாரய்ந்தவர்களுண்டா என்று கேட்கிறீர்கள், சாற்றுகவிகள் கேவலம் உபசார வார்த்தைகளாக இல் லாத போதுகூட, ஒரு நூலின் பெருமை யைப் பொதுப்படக் கூறுவனவேயல்லாமல் அவற்றை இலக்கிய விமரிசனமாகக் கொள்ள முடியாது. நம்மாழ்வாருடைய பெருமையிலீடுபட்ட ஒருவர்,
ஈதோ திருநகரி யீதோ பொருநைநதி ஈதோ பரம பதத்தெல்லை
- யீதோ தான் வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளி
னுட்பொருளை போதுஞ் சடகோப னுரர்.
என்று பாடினுர், இந்தப்பாட்டு இலக்கிய விமரிசனமா? இதிலிருந்து இதைப் பாடியவர் நம்மாழ்வாருடைய பாட்டில் எவ்வளவு ஈடுபட்டாரென்பது தெளிவா கிறது. ஆனல் திருவாய்மொழியின் இயல்பைப்பற்றியோ அது எவ்வாறு சிறந்த இலக்கியமாகிறது என்பதைப்பற்றியோ இந்தப் பாட்டிலிருந்து ஒனறுந் தெரிந்து கொள்ள முடியாது. ஆனல் துரதிட்ட வசமாக நம்முடைய தமிழ்நாட்டில் இலக்கிய மொன்றைப்பற்றிப் பெருமையாகவோ குறைவாகவோ அழுத்தமாகப் பேசி

Page 43
விட்டால் அதுவே விமரிசனமென்ற ண்ணத்துடன் சில ரெழுதி வருகிறர்கள். ஒகோகோ இதுவே பாட்டென்று பேசுவதும், சி, சி இதுவும் பாட்டா என்பதுஞ் சாதாரண மாக நாம் கேட்கலாம். இவ்வாறு பேசுகிற வர்கள் தங்களனுபவத்தை உண்மை யாகவே வெளியிடலாம். அதை நான் மறுக்கவில்லை. ஆனுல் அவர்களலுபவம் மற்றெல்லாராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய தன்பதற்கும், அந்த அனுபவத்தை ஆராய்ந்து, அது எவ்வாறு ஏற்பட்ட தென்பதைத் தெளிந்து சஹ்ருதயன் உள் த்தில் இந்த அனுபவந்தான் ஏற்படு மன்பதற்கும் அவர்கள் இலக்கிய தத்துவ உணர்வோடு, தருக்கரீதியாக மற்ற இலக் கியங்களோடு தாங்கள் விமரிசனஞ் செய்யும் இலக்கியத்தையும் ஒப்பிட்டுக் காரணங் காட்டவேண்டும்.
இந்தக் கோஷ்டியார் தத்துவ விசாரத் தோடு பழைய உரையாசிரியர்களையும் ஒப்புக்கொள்வதில்லை. சொல்லின் பொரு ளையும், யாப்பையும் அணிகளையும் பற்றிப் பேசிக்கொண்டு, உரையாசிரியர்கள் பாட்டை மறந்து விடுகிறர்கள்; மறைத்தும் விடுகிறர்களென்பதே இவர்கள் விடுக்குங் குற்றச்சாட்டு. ஒரளவுக்கு இஃது உண்மையே. உரையாசிரியர்கள் பலர் இலக்கியத்திற்குக் கருவியாக அமையும் மொழியோடு நின்றுவிடுகிறர்கள்.
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ, என்ற அடியிலே மோ என்பது முன்னிலே அசையென்பார்கள். பேசாத தும்பி பேசக் கூடியதாகக் கருதப்படுவதற்குப் பழைய தொல்காப்பிய விதியான, “சொல்லா மரபி னவற்ருெடு கெழீஇச் செய்யா மரபிற் ருெழிற்படுத் தடக்கியும் ' என்ப திடக் தருகிறதென் பார்கள். தும்பியென்றது முன்னிலையாக்கல், கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல், கூந்தலில் நறியவுமுள வோ என்றது நன்னய முரைத்தல் என்றெல்லாம் பேசுவார்கள். ஆணுல், பாட்டினருமையை, அஃதெவ்வாறு கவிதையாகின்றதென்பதை மறந்துவிடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-س- 1
வார்கள். உரையாசிரியர்கள் செய்த தொண்டு அருமையானது. சொல்லையும், அணியையும், வேறிலக்கியக் கருவிகளை யும் துல்லியமாக ஆராய்ந்திருக்கிறர்கள். ஆணுல் இது போதாது. இதற்குமேல் தத்துவரீதியில் இலக்கியத்தைப்பற்றி அவர்கள் பேசவில்லை. இலக்கிய விசா ரத்தை வெளிப்படையாக விரிவாக அவர்கள் செய்யவில்லை யென்பதே என் நினைவு.
இலக்கியமென்பது ஒரு கலை. அதன் கருவியான மொழியைப்பற்றிய நுட்பமான ஆராய்ச்சி கம்மிடமுள்ளது. ஆனுல் கலை யின் பண்பைப் பற்றிய ஆராய்ச்சியை நாம் செய்யவேண்டும். அதை அடிப்படையாகக் கொண்டே இலக்கிய விமரிசனம் தோன் றும். இதைத் தத்துவரீதியான இலக்கிய விமரிசனம் என்று சொல்லலாம். ஆணுல் இலக்கியமென்பது வளர்ந்துவரும்போது அதற்கு முன்னிருந்த பழைய இலக்கியத் தோடு தொடர்பில்லாமல் வளருவதில்லை. கம்பன் விருத்தப்பாவைக் கையாண்டா னென்ருல் அதற்குச் சீவகசிந்தாமணி ஆசிரி யன் வழிகாட்டியாக இருந்தானென்பதை மறக்கலாகாது. இந்த வகையிலே நம் காட் டின் இலக்கியத்தைத் தொடர்ந்து வளர்ந்து வந்த ஒரு சீவனுகக் கருதி, ஒரு காலத்து இலக்கியத்திற்கும இன்னுெரு காலத்து இலக்கியத்திற்குமுள்ள தொடர்பையும், எப்படி அந்த அந்தக் காலத்திற் புதிய வகைகள், புதிய முறைகள் தோன்றின என்பதைப்பற்றியு மாராய்வது இலக்கிய விமர்சனத்திலொரு பகுதி. இதைச் சரித் திரரீதியான இலக்கிய விமரிசனமென்று கருதலாம். இலக்கியம் ஆகாயத்தில் முளைப்பதன்று, ஒரு சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவனுடைய அனுபவமே இலக்கிய மாகிறது. ஆகவே அவன் எந்த சமுதா பத்தில் வாழ்ந்தான் ? அவனுக்கும் மற்ற வர்களுக்கு மிருந்த உறவென்ன ? அவ னுடைய வாழ்க்கைச் சரிதம் அவனுடைய இயல்பைப்பற்றி என்ன தெரிவிக்கிறது என்பதெல்லாம் ஆராய்ந்து அவனுடைய

Page 44
3 حصت
இலக்கியத்தின் தன்மையை உணர இந்த அறிவைப் பயன்படுத்திக் கொள்வதும் இலக்கிய விமரிசனத்தில் ஒருமுறை. இதை வாழ்க்கைச் சரிதரீதியிலமைந்த இலக்கிய விமரிசனமென்று கொள்ளலாம். இவை தவிர, ஒரு புலவனுக்கும் இன்னுெரு புலவ னுக்கும் இலக்கியப்பண்பைப் பொறுத்த மட்டில் என்ன என்ன ஒற்றுமை, என்ன என்ன வேறுபாடுள்ளது : இளங்கோ வடிகள் குரலுக்கும் கம்பன் குரலுக்கு முள்ள வேற்றுமையென்ன என்று தனிப் புலவர்களுடைய பண்பை ஆராய்வதும் இலக்கிய விமரிசனத்தின் வேலை. இதை ஒப்புமைfதியான இலக்கிய விமரிசன மென்று சொல்லலாம். இவ் விமரிசன வகைகள் ஒவ்வொன்றிற்கும் தனி முறைகள் உண்டு ; அடிப்படையான விதிகளுமுண்டு.
ஆனுல் இலக்கிய விமரிசனம் எந்த வகையானதாக இருந்த போதிலும் ஒரே நோக்கத்தைக் கொண்டுதான் வழங்க வேண்டும். இலக்கியத்தின் பெருமையை உணருவதற்கும் அனுபவிப்பதற்கும் விமரி சனம் வழிகாட்டல் வேண்டும். விமரிசகன்
வெறுங் கூழுக்காக இலக்கி னுடைய உயரியலட்சியத்தை எந்தவிதமான இடுக்கண்களையு இலக்கியப் படைப்பிற் பிறக்கி நீ அடையும் பரிசாகும்.
賣
இலக்கியத் துறையில் தக் காமலும் அமைக்காமலு மொ அளித்தால் உன்னுடையமனமா மனச்சான்று உன்னைக் கேள்வி விடும். நமக்குக் காவல் நாமே!

2 -
இலக்கணத் தராசைக் கையிலேந்தி இலக் கியத்தை நிறுக்கும் நக்கீரனல்லன், இலக் கியத்திற்கு ஓயாமற் பொருள் விளக்கமும் இலக்கணக் குறிப்புக் தரும் உரையாசிரிய னல்லன். ஒகோ. என்று களித்து, * சி, சி. என்று ஒதுக்குங் குழந்தையு மல்லன். பிரபஞ்சத்தைக் கண்டு தன் மனத்திலெழு மனுபவத்தைச் சொல்லில் தேக்குவது இலக்கியமானுல், அந்த இலக் கியத்திலுள்ள அனுபவத்தைத் தெளிவாக்கி அது எவ்வாறு சொல்லிலே தேங்குகிற தென்பதைக் காட்டி, இந்த அனுபவம் சொல் லிலே தேங்கும்போது ஏன் எவ்வாறு கலை யாகிறது என்பதைத் தத்துவ ரீதியில் ஆராய்ந்து, கலானுபவத்தின் எல்லே நில மான ஆனந்தத்திற் கழைத்துச் செல் வதே இலக்கிய விமரிசனமாகும். இதனுல் மொழி வளரும் ; இலக்கியம் வளரும் ; தத்துவ விலாசமேற்படும் ; கலானுபவஞ் சித்திக்கும் ; சஹ்ருதயம் அதாவது கலைஞ னுேடொன்றி நின்று அவன் பெற்ற ஆனந்தத்தைப் பெறும் அபூர்வசக்தி, தானுகவே நம்மை வந்தடையும்.
நன்றி : சிந்தனை
யத்துறையி லிறங்காதே. உன் நிறைவேற்றுதற் பொருட்டு ம், இன்னல்களேயு மேற்பாயாக ன்ற கலப்பற்ற இன்பமொன்றே
கபடி உழைக்காமலுஞ் சிந்திக் ரு படைப்பை நீ உலகத்திற்கு ம் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் பன்! கள்வன் 1’ என்று கூறி
யென்று தேர்தல் வேண்டும்.
- ஸ்ரீவன்சன்

Page 45
இலக்கியப் பண்
5
இலக்கியமாவது யாது? என்ற வினு வுக்குத் தீர்க்கமான விடை காணும்வரை யில் இலக்கியப் பண்புகள் யாவையென வரையறுத்துக் கூறலுமியலாததாகிறது. இலக்கியப் பண்புகள் பற்றி, அளவிட்டுக் கூறும் விடை காலத்துக்குக் காலம், சிந் தனத் திறனுக்குத் தக்கவாறு மாறுபடும் வரையிற் சிறுகதை யென்னும் நவமான இலக்கியத் துறையின் இலக்கியத் தரம் பற்றிக் கூறுவதும் முழுமை பெருத தாகிறது. மேனுட்டுத் திறனுய்வாளர்களும் அவர்களடியொற்றிய கம் காட்டுத் திறனுய் வாளர்களும் இவற்றினுக்கு, வாதப்பிரதி வாதங்களுக்கு அப்பாலாய், உண்மைத் தன்மையினெல்லேயைத் தொடும் ஒரே யொரு வரைவிலக்கணத்தினைக் கண்டிலர்.
எனினும், தொல்காப்பியரின் கருத் தைத் தழுவி இலக்கியத்துக்குரியதான உரிப்பொருளெனப்படுஞ் செம்பொருள்காலங்கடந்து எக் காலத்துக்குஞ் சென்று நிலைபெறக்கூடிய பொருள் - உயிர்ப் பொருளாய் விளங்கல் வேண்டுமென்பதை மேனுட்டினருங் கீழ் நாட்டினரும் ஒப்புக் கொள்ளுகின்றனர்.
அன்ருெருநாள், பாண்டி நாட்டிலே கடைச்சங்கத்திலே உண்மை இலக்கியம் எதுவென்னுங் கேள்வி எழுப்பப்பட்டது.
இறையனூர் தந்த களவியலுக்கு, கடைச்
சங்கப் புலவர்கள் அனைவரும் உரை கண்ட னர். சிறுமை பெருமை காணுது, தம்மைத் தாமே யுணராது, ஒவ்வொருவரும் தத்த முரையே சிறந்ததெனக் கூறி மலேந்தனர். இந்நிலையில், உண்மையிலக்கியம் - உரை யாருடையதென்ற வினு எழலியல்பே. இறைவனருளால் உருத்திரசன்ம னென் னும் ஊமைப்பிள்ளை கண்டறியப்பட்டான் அவனே அளவுகோலாக அமைந்தான் அவன் யாருரையினே க் கேட்டு மெய்ப் மயிர் சிலிர்த்துக் கண்ணிர்வார உணர்ச்சி
L - 5
 
 
 
 
 
 
 
 
 
 
 

பும் சிறுகதையும்
வடிவினனுயிருக்கிருனுே அவனுரையே சிறந்ததென்ற முடிபு நிலைநாட்டப்பட்டது. இதன்படி களவியலுக்கு நக்கீரர் கண்ட உரையே சிறந்ததாயிற்று. இவ்விடத்தில் இலக்கியம் எது வென்பதற்கு உருத்திர சன்மனின் மெய்ப்பாடுகளே சான்றுகளா யமைகின்றன. அக் கதையிலே நாம் கொள்ளக்கூடிய பேருண்மை யொன்று உண்டு. உணர்ச்சியைத் தூண்டுதலே,- உணர்ச்சியென்னும் உரிப் பொருள் உயி ரோட்டமாக விளங்குவதே - உண்மை இலக்கியத்தின் பிரதான அம்சமென்பதே. அது
வின்செஸ்டர் என்னும் மேனுட் டிலக்கிய விமர்சகர், உணர்ச்சி, கருத்து, கற்பனை, உருவம் என்னும் நான்கும் முழுப் போலிவுடனமையும் ஒன்றே இலக்கிய மாகுந் தகுதியுடையது எனக் கூறுகிருர், இலக்கியமெது வென்பதற்கு இன்றுவரை கிடைத்துள்ள விடைகளிலே ஓரளவு ஏற்புடையதாக இது காணப்படுகிறது.
கலைஞனின் சிந்தனைத் திறனில் விளைந்து பழுத்ததும், அனுபவமென்னுக் தீஞ்சுவைச் சாறு சொட்டுவதுமான கருத்து ; அக்கருத்தினைச் சுவைபடக் கூறி, மனத்திலே தாக்கமுண்டாக்கற்குக் காரண மான கற்பனை ; அவற்றினைச் செய்யுளி லாயினும் வசனத்திலாயினும் ஒரு பூரணத் துவ கிலேகொள்ளச் செய்யும் உருவமென் பன இலக்கிய சிருட்டிகளுக் கின்றியமை யாதனவே யாயினும், அவ்விலக்கிய சிருட்டியிலே, உயிர்ப் பொருளும் உரிப் பொருளுமான உணர்ச்சி யில்லாவிடத்து, அஃது உயிரற்ற பிணமாய், பிணத்துக்குக் கோலஞ்செய்து பார்க்கும் முயற்சியா யமையும். வேருெரு வகையிலே சொன் ணுல், காரிகை கற்றுக் கவிபாடுங் கவிஞ னின் கவிதை முயற்சியா யமையும்.

Page 46
صے۔
இக்காலத்திலே பெரிதுபடுத்தப்படும் உணர்ச்சிக்குஞ் சில சில பண்புகளுண்டு. உணர்ச்சிதானே வேண்டுமென்ற அள வில் எல்லா உணர்ச்சிகளும் இலக்கியத்தி னுயிர்த்துடிப்பாகிவிட முடியாது. சிறப் பான உணர்ச்சிகளென வரையறுத்து ஐவகைப்பட்ட உணர்ச்சிகளைக் கூறலாம். நல்ல காரணத்திற்காக நல்ல வகையி லமைவது ஒருவகை : கலேஞனது உள்ளத் திலே தோன்றி, வளர்ச்சிபெற்ற உண்மை யினையும், உண்மையை யொட்டிச் சேகரிக்கப்பட்ட அனுபவங்களை யுங் காலாகக் கொண்டு ஆழவேர்விட்டு நிற்பது மற்ருெருவகை தன்மனத்துக்குப் பொருங் தாதவற்றையும் வேண்டாதவற்றையும் புறக்கணித்துவிட்டுத் தன் மனத்தியல்பாக எழுந்த உணர்ச்சி இன்னுெருவகை : இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்கும் நெருங் கிய தொடர்புண்டாகையால், வாழ்க்கை யின் பற்பல கோணங்களிலும் திகழும் உணர்ச்சிகளைத் தொகுப்பாக்கிக் காட்டும் உணர்ச்சிப் பிண்டம் இன்னுெருவகை; உலகியல் கடந்து, பண்பட்ட மனத்தின் மேம்பட்ட கிலேயினுலே, அறம், நீதி, தத் துவம் என்பவற்றினை அடியொற்றி அவற்றி னுரடே துடிக்கும் உயரிய உணர்ச்சி, இன் னுெருவகை. இவை ஐந்தினையுமே, இலக்கியத் தி னு யிர் ப் பொருளான உணர்ச்சியின் வகைகளெனத் திறனுய் வாளர் கருதுவர். முதுமைபெற்று, நோய் காரணமாக இறந்த ஒருவனது பிரிவு இலக்கிய உணர்ச்சி யாவதில்லை. மாருக முதியவனேயாயினுந் தன் மகனது பிரிவு காரணமாக உயிர் நீத்த தசரதனது பிரிவு இல்க்கியப் பொருளாகிறது. பாரியென் னும் வள்ளலின் பறம்புமலே மூவேந்தராற் கைப்பற்றப்பட்டு, பாரியொழிந்த பின்னர், கபிலர், அம்மலையைப் பிரியும் போது இரங்குவது இலக்கிய உணர்ச்சியாக, உலோபியொருவன் தன்பொருளை இழந்து வருந்துவது இலக்கிய உணர்ச்சியாவ தில்லை. இதனுல் இலக்கியத்தில் உணர்ச் சியே உயிராய் மிளிர்வதென்பது புல கிறது.
 

-
இலக்கியப் பொருளேக் கருத்தென்றுங் கலைஞனது சிந்தனையென்றுங் கூறலாம். இது வெறும் நிகழ்ச்சிகளைக் கூறுவதோ, பொருள்களே மாத்திரம் கூறுவதோ என்ற பொருள் படாது. கலைஞனின் அனுபவப் பொலிவுஞ் சிந்தனையின் அதீத வேகமுமே எவ்வகைப் பொருளையு மிலக்கியப் பொரு ளாக்கிவிடும். உலகிலுள்ள எப்பொருளு மிலக்கியத்துக்குரிய பொருளே. உலகில் நிகழுமெக்நிகழ்ச்சியும் இலக்கியத்துக் குரிய பொருளே. ஆனுல் அவை, அனு பவக் குழைவோடு சிந்தனைக் கூர்மை கொண்டு அவை இலக்கியப் பொருள்கள்-கருத்துக் கள் ஆவதில்லை. ஒடத்திலே, தாயர் மூவரையும் பரதன் குகனுக் கறிமுகப் படுத்துகிருன் அந்நிகழ்ச்சியில், பரதன் தன் மனக்கருத்தினை மறைக்காமல் உள்ள துள்ளவாறே வெளிப்படுத்தி அறிமுகப் படுத்துகிருன் இந்நிகழ்ச்சி சாதாரண நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி முடிவில், கெளசஆல
யின் உன்னத குணத்தைப் புலப்படுத்தும்
வகையில், கெளசலே கூற்ருக, ஐவிரு மொருவீரா யகலிடத்தை நெடுங்கால மளித்
திர்' என்று கம்பன் கூறும் போது மெய்
சிலிர்க்கிறது. அப்போதுதான் அச்சிறு
நிகழ்ச்சிகூட ஒரு முழுமை பெற்று, கம்ப
னின் சிந்தனையாற்றலால் இலக்கியப் பொருளாய் விடுகிறது.
இன்று, இலக்கியத்தின் பிரதான பங்காயமைந்த கற்பனை பற்றி, பலப்பல அபிப்பிராயங்கள் பரிமாறப் படுகின்றன. இவற்றிற்குக் காரணம், கற்பனை பற்றிய பூரண அறிவின்மையே யெனலாம். கற்பனை யென்பது, இல்லாத தொன்றைப்
புனைந்துரைத்தலென்றும், அதனுல் அது பகுத்தறிவுக்குப் பொருத்தமற்றதாய்
வேண்டாததொன்ருய் முடிகிறதென்றும், அதனுல், உள்ளதை உள்ளபடி கூறும் யதார்த்தமே இலக்கியத்துக்கு வேண்டிய தொன்றென்றுங் கூறுங் கோஷ்டி யொன்று குரல் கொடுக்கிறது. யதார்த்த பூர்வமாக உணர்ச்சியையுங் கருத்தையுங் கூற முடி

Page 47
- 3
யும். அவ்விதங் கூறுவது செய்தியாகவும் வரலாருகவும் அமையலாமேயன்றி, இலக் கியமாகி மக்கள் மனதில் வாழ்தல் முடி யாது. கற்பனை யென்பது யதார்த்த மெனப்படும் உண்மையைப் புறக்கணிப்பு தொன்றன்று; ஏனெனில் உண்மை இன் றேற் கற்பனேயுமில்லை. கற்பனை, உண் மையுங் கலைஞனின் மனுேபாவச் செழு மையுஞ் சேர்ந்து பிறப்பது. அதனுலேயே ஒருண்மை, கலேஞனின் மனுேபாவச் செழுமைவேறுபாட்டால் மனத்திலே தாக்க முண்டாக்குமளவு வேறுபட்டுப் பலப்பல வாறு தோற்றமளிக்கிறது. கற்பனையைச் சமிகரணப்படுத்தினுல்,
கற்பனை = உண்மை + மனுேபாவம்
என்ருகிறது. சோசலிச யதார்த்தம், சன காயக யதார்த்தம், நிர்வாண யதார்த்த மென்றெல்லாம் அதனை வகைப்படுத்திக் கொண்டு கடக்குரலெழுப்பினுலும் அவை யெல்லாம் இலக்கிய அந்தஸ்தைப் பெற்று விட முடியாது. அந்த யதார்த்தங்களெல் லாங் கலைஞனது மனுேபாவச் சேர்க்கை யாற் கற்பனையாகி இலக்கியக் கருத் தைச் சொல்ல முயலும்போதே அவை இலக்கியத் தரமடைய முடியும். தன்மை பணியை இந்த யதார்த்த மென்று ஒப்புமை நோக்கிக் கூறல் முடியும் தன்மையணி யுள்ள பாட்டை எவருமிலக்கியமாகக் கருதுவதில்லை. தன்மையணியின் சாயல் படர்ந்த உரைநடையினை நிருபர்களின் செய்தியாகவும், வரலாற்ருசிரியரின் கட் டுரையாகவும், அறிவியலாரின் விளக்க மாகவுங் கருதலாமேயன்றி இலக்கியமாகக் கருதல் முடியாது.
இலக்கியத்தின் உருவமென்று கூறும் போது அது பரந்த பொருளுடையதாய் விளங்குவதைக் காணலியலும், செய்யுள் நடை, இலக்கியத்தி னுேருருவம் ; வசன நடை, மற்றேருருவம் செய்யுளிலே தனி பாடல்கள் ஒருவகை யுருவம் ; தொட நிலைச் செய்யுள்கள் மற்ருெருவகையுருவம் காவியங்கள் இன்னுெருவகை யுருவம்
 
 
 
 
 
 

வசன நடையிற் கட்டுரை, சிறுகதை, நாடகம், காவல், உரைநடைச் சித்திர மென்பன ஒவ்வொருவகைத் தனியுருவங் கள். இலக்கிய உருவத்தின் வேறுபாடுகள் பலப்பலவாக விகற்பமடையினும் அவ் வகை புருவங்களிடையே காணப்படும் பொதுப்பண்பே பெரிதும் நோக்கற்குரி யது எவ்வகையுருவிலும் ஒரு முதலும், ஒரு வளர்ச்சியும், ஒரு முடிபுங் காணப் படும். அவ்வகையிலமையாது போனுல், அந்தப் படைப்புக் குறைப்பிரசவமாய் இலக்கியத்தரம் பெறுதலியலாது.
இலக்கியப் பண்புகள் இவை ; இவற்றி னுெளியிலே, சிறுகதையின் இலக்கியத் தரத்தை மதிப்பிடலமைவுடைத்து இலக் கியப் பண்புகளே இலக்கணமாகக் கொண் டாற் சிறுகதையை அப்பண்புகள் கொண்ட இலக்கியமாகக் காணலாம். இலக்கியப் பண்புகள் தியறம் (Theorem) என்றற் சிறுகதை : றைடர்' (Rider)
சிறுகதை தமிழுக்குரிய புதியதோர் இலக்கியத்துறை, சிறுகதையும் இலக்கியத் துறையாகுமா ? என்று கேட்டுக்கொண்டு சண்டைக்கு எழுவோரும் இந் நூற்றண்டி லில்லாமல் இல்லே அவர்களிலே பலர் வேண்டா வெறுப்பாக, சிறு கதையை அருவருப்போடு, மனக் கூச் சத்தோடு இலக்கியத் துறையாக எண்ணுகிருர்கள். அவர்களெல்லாரும் உண்மையிலே இலக் கியப் பண்புகளை அறியாதவர்களே எனக் கூறுவதைத் தவிர வேறென்ன கூற முடியும் சங்க இலக்கியங்களையும் புராண
இதிகாசங்களையும் பத்திப் பாடல்களையும் படித்து இலக்கண நெறியமைய உரை
கண்டு, இரசிப்பின் தன்மையை ஓரெல்லேக் குட்படுத்தி இரசித்தவர்களுக்கு, அவை களிலே ஊறித் திளைத்தவர்களுக்குச் சிறு கதை புதுப்பண்டம் போலத் தோன்று வதும், இலக்கிய அந்தஸ்தற்ற வெறுங் கூடுபோல மருட்சியைத் தருவது மியல்பே
சிறு கதைகள் எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் இலக்கியத்

Page 48
துறைகளுளொன்ருகப் போற்றப்படுகின் றன. இதனை மறுத்துப் பயனில்லே ; கொண் டிச் சமாதானங் கூறி மழுப்ப முயன்றலும் ஆவதொன்றில்லை. தமிழ்கூறு டு ல்லுல கிலே, இதற்குக் கூறப்படும் கொண்டிச் சமாதானம் வெகு விசித்திரமானது:
'மற்ற மொழிகளிலே தமிழ் மொழியிலுள்ளது போலப் பரந்த இலக்கியச் செல்வமில்லை. உதாரண மாக அமெரிக்காவிலே பண்பாட்டு வளர்ச்சியின் பிரதிபலிப்பாக அமைந்த இலக்கியச் செல்வங்களில்லே. அதனுல் அம்மொழிகளிலும் நாடுகளிலும் சிறு கதை இலக்கியமாக இ) ஒர் க் இ படைந்தது '
இலக்கியப்பண்பென்பது g) 65 L பொதுமையானது. எங்கெங்கு, எவை யெவை இலக்கியமாகப் போற்றப்படுகின் றனவோ அவையவை யெல்லாம் இலக் கியப் பண்புடையவையா யிருத்தல் வேண்டும். அன்றேல் அவை இலக்கியங்க ளாகா, இந்நிலையில் அம்மொழிகளில், அங் நாடுகளில் தோன்றிய சிறுகதைகள் இலக் கியப் பண்புகள் நிறைந்து விளங்கியமை யாலேயே இலக்கியத் தரத்தைப் பெற்றன. இவ்வாருக, தமிழிலும் முற்கூறிய இலக் கியப் பண்புகள் சிறுகதைகளிலே காணப் படுமானுல் அவற்றினையும் இலக்கியங்க ளென ஏன் கருதக்கூடாது ?
இலக்கியப் பண்புகளை அடிப்படை யாகக் கொண்டு தமிழிலெழுந்த சிறு கதைகளே ஐவகையாகப் பிரித்துக் காண வியலும் (அ) உணர்ச்சி, கருத்துச் செறிவு, கற்பனே, வடிவமென்னும் நால்வகைப் பண்புகளும் பெற்ற பூரணத்துவமானவை ஒருவகை ; அவைகளே யுயர்ந்த வகை யினைச் சேர்ந்தவை. இவ்வகைச் சிறு கதைகள் வெகு அபூர்வமானவை. சமீ பத்தில் வெளிவந்த ஜெயகாந்தனின் யுக சந்தி, உண்மை சுடும் என்பவற்றை ஒரளவு இவ்வகையிலே அடக்கலாம். (ஆ) பலவகை யுணர்ச்சிகளைப் பிரதிபலித்
 

6 -
துக் காட்டுவதற்காக அமைந்தன இன் னுெரு வகையின. இவற்றிற் கருத் தினையோ வடிவினையோ முற்று முழுதாக எதிர்பார்த்தலியலாது. ஆயின், கற்பனை நிறைந்திருக்கும். இவ்வகைக் கதைகளைப் பெருமளவிற் படைத்தவர்கள் தமிழ் நாட்டில் லா சா. இராமாமிர்தம் என்ருல் ஈழநாட்டில் க. தி. சம்பந்தன் அவர்க ளென்று கூறலாம். (இ) கற்பனை யொன் றினேயே தூல தரமாக்கி, மற்றையவற்றை இரண்டாம் பட்சமாக்கிப் புனேயப்படுஞ் சிறுகதைகளும் இல்லாமலில்லை. இவ் வகைக் கதைகள் ஆழ்ந்த தத்துவார்த்தங் களைப் புலப்படுத்தற்காக, தத்துவ வேறு பாடுகளைப் பாத்திரங்களாக்கிப் புனையப் படுபவை. இவ்வகைக் கதைகளின் கற்பனை ஒலசமயம் அதீதமான தொன்ருகப் படுவ தாலோ என்னவோ இன்றைய எழுத் தாளர்க்குக் கற்பனே கசந்து யதார்த்தம் வேண்டுமென்ற எண்ணம் உதித்து விட்டது. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்ற புதுமைப்பித்தன் கதை இவ் வகை யைச் சேர்ந்து, சிரஞ்சீவித் தன்மை பெற்று விட்டது. (ஈ) காவலுக்குரிய சம்பவத் தொடர்களே ஒரு சிறு கதையுள் திணித்து, நிகழ்ச்சிகளுக்கும் இயற்கையோடு ஒட்டாத நிகழ்ச்சித் திருப்பங்களுக்கும் முக்கியத்துவ மளிக்குங் கதைகளை ஒரு வகையில் பொருளைப் பெரிதுபடுத்திக் காட்டுவன வாகக் கொள்ளலாம். (உ) ஒரு முதலும், வளர்ச்சியும், முடியுமாய மூன்றுஞ் சிறு கதையின் வடிவமென்ற உணர்வால், அவ் வடிவமே சிறுகதையாகி விடலாமென்ற எண்ணத்தாற் பிறக்குங் கதைகளைப் பத்திரிகைக் கதைகளெனக் கூறுவர். சிறு கதை வடிவமே பிரதானமாகிவிட்டால், வெறுமெலும்புக்கூட்டை உயிருந் தசையும் நிறைந்த மனிதனென்று கூறிவிடலாம் 9696Ù6չյՈ ?
இவையனைத்திலும் முதல்வகையினவே காலத்தை வென்று நிலைக்கக் கூடிய சிரஞ் சிவிக் கதைகளென்று கூறலாம். மற்றைய வகைகளைக் கூட்டுமொத்தமாகப் புறக்

Page 49
கணித்துவிடல் கூடாது. உணர்ச்சி மதர்ப் பினுலும் கற்பனைச் செழுமையாலும், கருத் தாழ்த்தாலும் மனங் கவரத்தக்க புதுமை வடிவத்தினுலுங் கதைகள் வாழுகின்றன. அவைகளிலே ஒவ்வொரு பண்பு தலைமை யேற்றி யங்க மற்றப் பண்புகள் சேவகஞ் செய்கின்றன. டால்ஸ்ராய் கதைகளில், உதாரணத்துக்குக் குறிப்பிட்டால் யாத் திரிகர் இருவர், ஆறடி கிலம் என்ற கதை களில் அனுபவச் செழிப்புஞ் சிந்தனை யோட்டமும் பிரசவித்துவிட்ட கருத்தாழம், தலைமையேற்று நடக்க, ஏனேய பண்புகள் சேவகஞ் செய்து செல்கின்றன. கன வோடை உத்திமுறைகளைக் கையாண் டெழுதப்படுஞ் சிறுகதைகளிலே உதார ணத்துக்குக்கு எடுத்துக் கொண்டால், லா சா இராமாமிர்தத்தின் தாட்சாயணி, பச்சைக் கனவு என்னுங் கதைகளில் உணர்ச்சிப் பெருக்கு, துடிப்புள்ள தலைவி யாக ஒல்கி கடக்க, ஏனேய பண்புகள் தோழிப் பெண்களாய் மங்கலப் பொருள்க ளேந்திச் செல்கின்றன.
சிறுகதைக்கு உருவமா, உள்ளடக்கமா பிரதான மென்ற பிரச்சனை யெழுந்த துண்டு. ஆனுல் அவையிரண்டும், சிறு கதைக்கு ஒன்றின்றி யொன்றமையாத இரட்டைகளாகையால், அவற்றின எதிர் முனைகளாக்கி மோதவிட்டு வேடிக்கை பார்க்க இயலவில்லை. உருவமென்றசொல் சிறுகதைத் துறையைப் பொறுத்தவரையில் அர்த்த புஷ்டியுள்ளது. முதல், வளர்ச்சி முடிபென்னும் அத்தன்மைகள் மாத்திரம் உருவமாகிவிட முடியாது. அவை வெறுஞ் சட்டகம் ; எலும்புக் கூடு ; அவற்றேடு கதையை வளர்த்துச் செல்லும் உத்தி முறைகளும் உருவத்திலடங்கும். சிறுகை இன்னபாணியிலே தான் எழுதப்பட6 வேண்டுமென்ற இலக்கண நெறியின்ை யால், கலைஞன், தான் கருவுயிர்த்த உரி பொருளே எம்முறையில் வெளியிட்டா அஃது உயிர்த்துடிப்புடன் உலாவும் எ6 வகையில் வெளியிட்டால் அது வாசக மனத்திற் பதிந்து வடுவுண்டாக்கு மெ6
 
 

பவற்றைச் சிந்தித்து, தக்க உத்தி முறை களைக் கையாளுகின்றன். வாழ்க்கையின் அநுசரணைக் குகந்த விதமாக இயற்கை யான திருப்பங்களே புண்டாக்குகிறன், ஆற்றலுக்கேற்றமொழிநடையிற் சொல்லிச் சுவையூட்டுகின்றன். இவையனைத்து முரு வத்தின் அம்சங்களே. உள்ளடக்க வலுக் குறைந்து உருவச் செழுமையாலேயே சிறுகதைகளிற் பல இலக்கியத் தரத்தை படையக் கூடும்.
இலக்கியப் பண்பின் அம்சங்களில் ஒன்ருே பலவோ சிறுகதையிற் படிவதைப் பகுத்துணரும்போது, சிறுகதைகளின் இலக்கிய அந்தஸ்துப் புலப்படுமென்ப துண்மையே. அதனுேடு சிறுகதைகளை முழுமையாக நோக்கி அதன் தாக்கப் பிரதிபலிப்பின் அளவு கொண்டுஞ் சிறு கதையின் இலக்கிய அந்தஸ்தைக் காணல் வேண்டும். ஒருசிறு கதையினைப் பிண்டப் பொருளாகக்கண்டு, அதை யுணர்ந்து, அதன் முடிவில் அது, மனத்திலே கிலேத்து கின்று தாக்கத்தை யுண்டாக்கினுல், புது வகை அநுபவ உணர்வைப் பரப்பினுல், மனம் முழுவதும் மணங்கமழ்ந்து,மனத்தை உயர்த்தி, அதன்மூலம் வாழக்கையை உயர்த்தும் ஆற்றல் பெற்றிருந்தால், அவைகளே அச் சிறுகதையின் முழுப்பெறு பேறு (Total effect); அச் சிறுகதையின் ஆயுளை நிருணயிக்கும் அளவு கருவிகள்.
இனி, சிறுகதைகளின் இலக்கியப் பண் பை அளவிடுதற்கு உதிரியாகக் கிடக்குஞ் சில அம்சங்களே நோக்குதல் இந்த இடத் தில் இன்றியமையாதது. இன்னவகைப் பொருள்களே அடியொற்றி யெழுதப்படுஞ் சிறுகதைகளே, நல்ல சிறுகதைகளாகும் ; அவைகளே கிலேத்து நிற்பவை யென்ற அபிப்பிராயம் உலவுவதைக் கேட்கின் ருேம். சிறுகதைகள் சமுதாயத்தை மேனரி இல புடைய ச் செய்வன வென க் கொண்டால், அப்பணி அரசியற் கருத்துக் களைப் பிரசவஞ் செய்யும் கதைகளாலோ,

Page 50
அன்றி, புரட்சியடிப்படையிற் சமுதாயச் சீர்கேடுகளை வன்மையாகக் கண்டிக்குங் கதைகளாலோ நிறைவேற வேண்டு மென்ற நியதியில்லே சமுதாயத்து மனங் கள் ஒன்றையறிந்து, உணர்ந்து கொள் ளாத வரையில் சமுதாயச் சீர்திருத்தம் நிகழாது. சமுதாயச் சீர்கேடுகளுக்கடித் தளம் அறியாமையே. அறியாமையை அறிவால் நீக்கலாமேயன்றிப் பலாத்காரத்
அறிவுறுத்தல்களே அறியாமையைக் கொல்லக்கூடும். அதனல், சிறுகதைக்குப் பொருள்களாக அமையக்கூடியன இன்ன இன்னவை தாமென வரையறுத்தலிய லாது. கலைஞனின் கூர்ந்த அறிவால் எல்லாமே கதைப் பொருள்களாக அமை தல் கூடும். ஒரு மயிரினச் சத கூறிட்டு ஒரு பகுதியனேய நுண்ணிய உணர்ச்சி யலேயின் ஒரு நெளிவுகூடக் கதையம்ச மாகி, மனத்திலே தாக்கம் பெற்று நின்று நிலவலாம். அதனுல், அதிலக்கிய அக் தஸ்தைப் பெறலாம்.
புதிர்த்தன்மை (Suspense) அல்லது பிரச்சினையம்சமும் சிறுகதைக்கு முக்கிய மானதொன்று. அது வாசகனுக்குக் கவர்ச் சியைத் தூண்டுவது அக்கவர்ச்சித் தன் மையே மனத்தாக்கத்தின் ஏது. வலு வுள்ளதும், பகுத்தறிவுக்குப் பொருத்த மானதுமான புதிர்த்தன்மையின்றி எழுதப் படுஞ் சிறுகதைகள் வெறுங் கடதாசிப் பூக்கள் போல்வன : மணமற்ற மலர்கள். அப்புதிர்த்தன்மை நிகழ்ச்சிகள் சம்பந்த
இலக்கியமே வேண்டாம், அ தவறியவர்களையு முற்பத்தி செய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

38 -
மாக அமைவதிலும் பார்க்க உணர்ச்சி சம்பந்தமாக அமைந்து விடுமானுல், அப் பண்புடைய கதைகளே உலகச் சிறுகதை களின் தரத்தை எட்டிப் பிடித்து நீடு வாழ்வனவாகின்றன: இலக்கியப்பண்பு பெற்றிலக்கியமாகி விடுகின்றன.
சிறுகதைகள் படம்பிடித்துக் காட்டும் வாழ்க்கை பலப்பல அத்தியாயங்கள் கொண்ட மகாகாவியமானுல், உணர்ச்சிகள் அம் மகாகாவியத்தை நடத்திச்செல்லும் ஏதுக்கள் ஆகின்றன. நிகழ்ச்சிகளிலும் பார்க்க, அவற்றினுக்குரிய ஏதுக்களான | a_Gბorfქr &მ ფGჭეr மனிதகுலம் முழுவதற்கும் பொதுவானவை. நிகழ்ச்சிகள் தேசப் பண்பாடுகளுக்கேற்ப மாற்றமடையும் தன்மையின. உணர்ச்சிகள் அவ்வாறல்ல. அத்தகைய உணர்ச்சிகள் தேசியப் பண் பாட்டைச் சூழ்நிலையாகக் கொண்டு நிகழ்ச் சிகளாகப் பரிணமித்து எழுமானுல், அவையே தேசிய மணங்கமழும் உலகச் சிறுகதைகள், ஆறடி நிலம் என்னும் டால்ஸ்ராய் கதையில் வரும் மனிதன் ரூசியாக்காரனுகவும் அவனது சூழ்நிலை ரூசியச் சூழ்நிலையாக அமைந்தாலும் <9յ6ւ னது பேராசைக்குணம் உலக மாந்தரிற் பெரும்பாலாரின் உணர்ச்சியாக அமைக் திருத்தலேக் காணல்முடியும், ருசியக்காரன் அதைத் தேசிய இலக்கியமெனக் கொண் டால் நாம் அதன் உணர்ச்சியொன்றினேயே தலைமையாக்கி உலக இலக்கியமாக மதித் துக் கற்கிருேம். அங்கே உலகனைத்தினுக் கும் பொதுமையாக விளங்குமொன்று கிலேத்து நிற்பதனுல் இலக்கிய அந்தஸ்துப் பெற்றதாகிறது. S
து சோம்பேறிகளையும் ஒழுக்கக் 豪三 நிதி, -
- பிளேட்டோ

Page 51
தமிழ்க்காப்பியங்களில்
ச. தனஞ்சயராசசிங்க விரிவுரையாளர், இல
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி கம்ப ராமாயணம் முதலிய தமிழ்க்காப்பியங்கள் வீரம், இன்பம், துன்பம், நகை, வியப்பு போன்ற பல்வகைச் சுவைகள் நல்கும் 5Tlgá in Lasari (Dramatic Scene of Stuation) கொண்டு விளங்குகின்றன. இதனுல் இக்காப்பியங்களிற் காணப்படும் தன்னிகரில்லாத் தலைவர் தலைவியர் மாத் திரமன்றிச் சிறு பாத்திரங்களுஞ் (Minor characters) சிற்சிலவிடங்களில் முக்கியத் துவம் பெறுகின்றன. இக்காலத் திறனுய் வாளர்கள் நாடகக் குறிப்பு(Dramatic irony) என்று கருதுகின்ற ஒருவகைச் சுவையை இளங்கோவடிகள், திருத்தக்கதேவர், கம்பர் முதலிய காப்பிய ஆசிரியர்கள் துன்ப நிலையைச் சிறப்பாகச் சித்திரிக்க தங்காப்பியங்களில் ஏற்ற விடங்களில் அமைத்துள்ளனர். சில பாத்திரங்கள் தமக்கு நிகழப்போகின்ற துன்பத்தை முன்னுணராது, தன்னம்பிக்கையுடன் கூறுகின்ற கூற்றுக்களிலே நாடகக் குறிப் புச் சுவை பொதிந்துள்ளதை நாம் அறிய லாம். காப்பியக் கதையின் நிகழ்ச்சிகளை யொழுங்காகக் கற்போர் அல்லது நாடக மாக நடிக்கப்படுவதைக் காண்போ பாத்திரங்கள் தன்னம்பிக்கையுடன் கூறிய கூற்றுக்களுக்கு முற்றும் முரணுன நிகழ்ச் சிகளைப் படிக்கும்பொழுது, அல்லது கண் னுறும்பொழுது அப்பாத்திரங்களின் தீய குணங்களே மறந்து அவர்களுக்காக வருந்த வும் முற்படுகின்றனர். இத்தகைய நிலையை யேற்படுத்துவதற்கு நாடகக் குறிப்பு சுவை பெரிதுந் துணையாயுள்ளது. நாடக குறிப்புச் சுவையைப் பெரும்பாலுக் தட ழிலக்கியங்களில் ஒருவன் இன்னுெ வனப்பற்றித் தான் கொண்ட எண்ண தைப் பிறருக்கு வெளிப்படுத்துவதன் வாயிலாக நாம் உணரலாம்.
 
 
 
 

நாடகக் கு றிப்புச்சுவை
B. A. (Hons); M. Litt. கைப் பல்கலைக் கழகம்
நாடகக் காப்பியமெனக் கற்ருேராற் போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் நாடகக்
குறிப்புச்சுவை விளைகின்ற நிலைக்களனைப் பார்ப்போம். கண்ணகியையும் கவுந்தியடி களையும் அறம்புரிமாதர் வாழும் இடத்தில் விட்டு, கோவலன் மதுரை நகருக்குச் செல்கிருன் மதுரை நகரத்தின் மாண்பும் பாண்டியனின் ஆட்சியின் மாட்சியும்
திய கோவலன் புறஞ்சேரிக்கு மீண்டு
அவன் உள்ளத்தைக் கவர்கின்றன. இவ் வாறு காவலன் பேரூர்கண்டு மகிழ்வெப்
கவுந்தியடிகளிடம் தீதுதிர் மதுரையையுக்
தென்னவன் கொற்றத்தையும் பற்றிச் சித்
நிலந்தரு திருவின்
நிழல் வான் நேமி கடம்பூண் டுருட்டுங்
கெளரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையுங்
குடையின் தண்மையும் வேலின் கொற்றமும்
விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப்
பண்புமே ம் பட்ட மதுரை மூதூர்
மாநகர் கண்டாங் கறந்தரு நெஞ்சி s என்றவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்
பொழிலிடம் புகுந்து i தீதுதிர் மதுரையுந்
தென்னவன் கொற்றமும்
மாதவத் தாட்டிக்குக்
கோவலன் கூறுமி
(சிலம்பு அடைக். 1-10) பதியெழுவறியாப் பண்புமேம்பட்ட
மதுரையிலே காவிரிப்பூம் பட்டினத்தைத் துறந்த கோவலன் மடியப்போகிருன் அம் மதுரையிலே பாண்டியனின் கோலின்

Page 52
செம்மையும், குடையின் தண்மையும் அவ னுக்கு வெம்மையை விளக்கப்போவதை அவனுணரவில்லை.
" போருழந் தெடுத்த
ஆரெயில் நெடுங்கொடி வார லென் பன போல்
மறித்துக் கை காட்ட '
(சிலம்பு, புறஞ்சேரி 189-190) என்பது வெறுங்கவிக்கூற்றக இருக்கின் றது. தீய கணுவைக் கண்டானெனினும் அக்கனவு கனவாவதற்கு மதுரையும் பாண்டியனும் ஏதுப் பொருள்களென் பதைக் கோவலன் உணர்கிருனில்லை. ஊழ் வழியே செயலாற்றுஞ் செம்மலாக விளங் குங் கோவலன் கவுந்தியடிகளிடம் மதுரை யையும் பாண்டியனையும் புகழ்ந்து கூறுவது, எம்மை அவனது தீய பண்புகளைப் பொருட்படுத்தாது, அவன் பால் இரங்கச் செய்கிறது. ஈண்டு கவிக்கூற்ருக மதுரை யும் பாண்டியனும் புகழப்பட்டிருந்தாற் கோவலன் எம்மிரக்கத்திற்குப் பாத்திர மாகமாட்டான். எதிர்கால நிகழ்ச்சிகளை யோர்ந்துணராத அவனது கூற்று துன்பச் பேரெல்லையைத் தொடுகின்ற தெனலாம். மாங்காட்டு மாமுது பார்ப்
JITGör,
* தென்னவன் நாட்டுச்
சிறப்புஞ் செய்கையுங் கண்மணி குளிர்ப்பக் கண்டேன் '
(சிலம்பு. காடுகாண் 54-55) என்று கோவலனுக்குக் கூறும்பொழுது எம்மிடத்து இத்தகைய உணர்ச்சியொன் றும் ஏற்படவில்லை. ஏனெனில், அம்மாமுது மறையோன் கூற்றுக்கு முரணுகப் பின் அவனுக்கு ஒரு நிகழ்ச்சியும் மதுரையில் நிகழவில்லை.
கோவலன் கூறியது செகசிற்பியரின் (Shakespeare) LD & Guğg (Macbeth) GT Gör னும் துன்பியல் நாடகத்தில் வரும் இடங் கன் (Duncan) என்ற அரசன் ஓரிடத்திற் கூறியதோடு ஒத்திருக்கின்றது. மக்பெத்து என்பவன் இசுக்கொட்லாந்து (Scotland)
 
 
 
 

காட்டு மன்னனுகிய இடங்கனுக்குத் திறை செலுத்தாத நோர்வே (Norway) நாட்டு மன்னனேப் போரிலே தோற்கடிக்கின்றன். அவன் நோர்வே நாட்டு மன்னனுக்குச் சூழ்ச்சிசெய்த தேன் ஒஃப் கவுடார் (Thane of Cowdar) 6 TGör JD LJLL Jö3Si) (5 ftLUGIJGD) Libis இங்கிலாந்தைச் சேர்ந்தவனுமாகிய வீர னுெருவனின் வஞ்சனேயையும் வெளிப் படுத்துகின்றன். இடங்கன் தன்னுறவின ணுகிய மக்பெத்தைத் தேன் ஒஃப் கவுடார் பட்டத்திற்கு உரியவனுக்குகிருன் அவன் மேலும் மக்பெத்தைச் சிறப்பிக்க நினைத்து அவனது மாளிகையாகிய இன்வேனசுக்கு (Inveness) விருந்தினனுகச் செல்கின்றன். விருந்துக்கு வந்த மன்னனது காட்டைக் கைப்பற்றித் தான் மன்னனுக வேண்டு மென்ற ஆசையை நிறைவேற்றத் தக்க சமயத்தையெதிர்பார்த்திருந்த மக்பெத்தும் அவனது மனைவியும் மன்னனைத் தங்கள் மாளிகையிற் கொல்லத் திட்டமிடுகின் றனர். மக்பெத்தினுடைய தீய நோக்கத்தை புணராத இடங்கன், அவனது மாளிகை யின் காற்ருேட்டமுள்ள அமைப்பையுஞ் சூழலையும் வியந்து,
* இந்த மாளிகையிலமைந்துள்ள தவிசு, காற்று எல்லாமே எமது நுண் ணுணர்விற்கு உத்வேகம் மூட்டுவன வாக-விருந்தாக அமைந்துள்ளன. {-மக்பெத்து, களம் காட்சி VI அடி 1-3) என்று கூறுகின்றன்.
இதே மாளிகையில் மன்னன் தன் றவினனுற் கொல்லப்படுகிருன் ஈண்டு தான் ஒரிரவைக் கழிக்கவிருக்கும் மாளி கையின் சூழலே இடங்கன் புகழ்வது கோவலன் மதுரையைப் புகழ்வதுடன் ஒத்திருக்கின்றது.
* “This castle hath a pleasant seat; the air Nimbly and sweetly recommends itsel Unto our gently senses
L Macbeth; Act I; Sc... WI; Line l-3]

Page 53
சச்சந்தன் என்பவன் சீவகசிந்தா மணிக் காப்பியத்தின் தலைவனுகிய சிவக னுக்குத் தந்தையாவன். இவன் ஏ மாங்கத நாட்டையாண்டு வருகின்றன். தனது மாமன் மகளாகிய விசையையென்பவளை மணந்து எல்லேயற்ற இன்பவாழ்விலீடுபடு கின்றன். நாட்டைப் புரக்குக் தொழிலைத் தன் மந்திரியாகிய கட்டியங்காரனிடம் ஒப்படைத்துத் தன் னந்தப்புரவாழ்வைத் தொடர்ந்து நடத்த வெண்ணுகின்றன். நிமித்திகனும் ஏனைய வமைச்சரும் இதனுல் விளையக்கூடிய பெருங்கேட்டை மன்ன னுக்கு இடித்துக் கூறுகின்றனர். அப் பொழுதும் மன்னன் தன் முடிவை மாற் ருது கட்டியங்காரனிடம் அரசாளும் பொறுப்பை ஒப்படைத்து, மனைவியோடு இன்பமாய் வாழ்கிறன். ஈற்றிற் கட்டியங்காரன் மன்னனுக் கெதிராகப் போர் தொடுத்து, அவனே க் கொன்று
காட்டைக் கைப்பற்றுகிருன். சச்சந்தன்
கட்டியங்காரனுடைய வீரத்திலும் அரச 1567 filling) ti) (Loyalty to the King) GLCs நம்பிக்கை வைத்தமையாற்ருன் அவனே யரசாள விட்டான். கட்டியங்காரனிடம் அவன் கொண்ட மதிப்பு,
எனக் குயி ரென்னப் பட்டா
னென்னலாற் பிறரை யில்லான் முனைத்திற முருக்கி முன்னே
மொய்யமர் பலவும் வென்முன் தனக்கியான் செய்வ செய்தென்
முன்செய்வ செய்க வொன்றும் மனக்கினு மொழிய வேண்டா
வாழிய ரொழிக வென்ருன் (சிந்தாமணி : காமகள் இல, 205) என்னுமடிகளால் வெளிப்படுகின்றது.
சச்சந்தனப்போலவே இடங்கனும் *மக்பெத்து என்ற நாடகத்தில் மக்பெத்தி னுடைய வீரத்திலும், அரச நன்றியிலும் பெருரும்பிக்கை கொள்ளுகின்றன்.
* பாங்கோ, பெருந்தகாய் , அவன் வலிமை படைத்தவன். அவனது செயற்கருஞ் செய்கைகளாற் களிடே
LJ - 6
 

4 -
ருவகை கூர்ந்தேன். அஃது எனக்குச் சூட்டிய புகழ் மாலேயாகும். அவனே யெதிர்கொண்டு வரவேற்பது எவர்க் கெவன் செயும், (உமக்பெத்து, களம் காட்சி V அடி 54-58 மக்பெத்து தன் மனேவியுடன் சூழ்ச்சி செய்து அரசனைக் கொன்று அரசபதவியை படைந்தான். மக்பெத்துங் கட்டியங் காரனும் மொய்யமர் பல வென்றிருக்கிருர் கள். இடங்கனும் சச்சக்தனும் முறையே மக்பெத்தையும் கட்டியங்காரனையுந் தமக் குயிரெனக்கருதிக் கூறிய கூற்றுக்கள், பின் அவ்விருவரும் இவர்களாற் கொல்லப் படும் நிகழ்ச்சிகளே யறிந்த வாசகரின் உள்ளங்களை யிவர்கள் பால் இரக்கங் கொள்ளச் செய்கின்றன. - கம்பர் இயற்றிய இராமாயணத்தில் வீரமும் உயர்ந்த பண்பு களுங் கொண்ட ஒருன்னத பாத்திரமாகத் திகழ்கிருன், சுக்கிரீவன் முன்வந்து வாலி யைப் போருக்கு அழைக்கிருன், வாலி ஏளனமாகச் சிரித்தானுயினும் உடனே போருக்குத் தயாராகின்றன். அப்பொழுது அவன் மனைவியாகிய தாரை, பலமுறை போரிற் ருேற்ருேடிய சுக்கிரீவன், பெருங் துணைவனுக இராமனைப் பெற்றபடியாற் ருன் வாலியைப் போருக்கு அழைக்கிரு னெனத் துன்னிய வன்பினர் வாயிலாக அறிந்து வாலிக்குக் கூறுகிருள். இவளிவ் வாறு கூறியது இராமனைப்பற்றிச் சிறியன சிந்தியாத வாலியின் சீற்றத்தைப் பொங்கு விக்கிறது : இராமன் சுக்கிரீவனுக்குத் துணேயாக வந்துள்ளானென்ற தகுதியில் லாத சொற்களைச் சொன்ன 5ᎥᎢ 60ᎮᎢ ணுகையால் உயிர் பிழைக்குமாறு விட்டே னென் கின்றன். 를
*“True, worthy Banquo; he is full so valiant; And in his commendations I am fed : It is a banquet to me. Let's after him, Whose care is gone before to bid us welcome. It is a peerless kinsman - Mac : Act. I; Sc. iv ; 54-53

Page 54
- 4.
மேலும், இராமன் சுக்கிரீவன் போன்ற குரங்கோடு நட்புக் கொள்ளானென்றும் சுக்கிரீவனுந் தானுந் நிகழ்த்தும் போரில் இடையே அம்பு தொடுக்கும் இழிந்த போரொழுக்கத்தை யுடையவனல்லன் என்றும் வாலி தாரைக்கு இடித்துக் கூறு கின்றன்:
' நின்றபே ருலகெலா
நெருக்கி நேரினும் வென்றிவெஞ் சிலையலாற்
பிறிது வேண்டுமோ தன்றுணை யொரு வருந்
தன்னில் வேறிலான் புன்ருெழிற் குரங்கொடு புணரு நண்பனுே. '
கி. மு. 300க்கு முன் தமி மகிழத்தக்க ஒரு நிலையை அை 556) ffrif).
★
உணர்ச்சி, கருத்து, கற்ப முழுப்பொலிவுடன் அமையுமெ
U-169L— l'U35.
- ★
தெலுங்கிலக்கியம் கி. பி. பழைய கன்னட இலக்கியம். தொடங்கியது. தமிழிலக்கியம்
 
 
 
 
 
 
 
 

-
* தம்பிய ரல்லது
தனக்கு வேறுயி
னிலதென வெண்ணி யேய்ந்தவ னெம் பியும் யானு முற்
றெதிர்ந்த போரிடை யம் பிடை தொடுக்குமோ
வருளி னுழியான் '
(கம்ப. வாலிவதை 25, 26)
இக்கூற்றுக்கள், வாலிக்கு இராமனுல் நிகழவிருக்குக் துன்பத்தை அறிந்த எம் முள்ளம் வாலியின் குற்றங்களே மன்னித்து அவனது உள்ள மேம்பாட்டைப் பாராட்டச் செய்கின்றன.
நிலக்கியங்கள் தோன்றி நன்கு டந்திருந்தன வென்று நாம் ஊகிக் -வையாபுரிப்பிள்ளை
னே, உருவ மென்னும் நான்கும் ான்றே இலக்கியமாகுக் தகுதி - வின்செஸ்டர்
賣 素
1000க்கு முந்தியதன்று மிகப் கி. பி. 500இல் இருந்துதான் இவற்றைவிடப் பழமையானது.
5 6IT IT {6حسین

Page 55
பண்டிதர் த.
தமிழகத்தின் பொற்காலமெனப் போற் றப்படுவது சங்ககாலமேயாகும். வீரஞ் செறிந்த தமிழ்நாடாகவும், காதல் கனிந்த கன்னித்தமிழ் நாடாகவும் அன்று கம் தாய் நாடு மிளிர்ந்தது.
" ஒளிறுவா ளருஞ்சம முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே ' என்ருர் புறநானூற்றுப் புலவர் பொன் முடியார். காட்டின் நலன் காடிப் போர்க் களம் புக்கு, யானையை வீழ்த்தி, விழுப் புண்பட்டு வருவதே தமிழ்மகனின் கடமை யெனக் கருதப்பட்டது. புறத்திற் போரைப் போற்றிய மகன், அகத்தில் இன்பத்தை முழுதும் மாந்தி மகிழ்ந்தான். தமிழர் வாழ்வு அகம் புறமெனு மிரண்டனுள் அடங்கியது. -
அறம், பொருள், இன்பமாகிய உறு திப் பொருள்கள் மூன்றனயும் அகம், புற மென்ற இரண்டனு ளடக்கினர் நம் முன்னுேர், அறமும் பொருளும் புறத்தி லும், இன்ப மகத்திலும் இடம்பெற்றன. சங்கநூல்களிற் புறத்தைப்பற்றிப் புகழ்வன சிலவாகவும், அகத்தைப்பற்றி விளக்குவன பலவாகவும் இருத்தல், தமிழர் வாழ்வில் அகவாழ்வே தலைமையிடம் வகித்ததென் பதைத் தெள்ளிதில் விளக்கும். இன்பம் நிறைந்த இல்வாழ்க்கையே நாட்டின் நல் வாழ்வுக்கு அடித்தள மென நம்பினர் சங்கத் தமிழர் பொருளுக்கு இலக்கணம் தந்த தண்டமிழ், நிலத்தை ஐந்தெனப் பிரித்தது ; ஐவகை நிலத்திற்கும் ஐவகை ஒழுக்கம் வகுத்து, அதற்கு ஐந்தின என்ற பெயர் தந்து போற்றியது. ஐந்திணை ஒழுக்க நிகழ்ச்சிகளுக்கு அன்பே அடிப்படையா யமையும். அன்புடைக் காமமாகிய இவ்  ைவந்திணை யொழுக்கமே அகவாழ்வு என்றும், காதல் வாழ்வென்றும் பெயர் பெறும்.
 

மிழரக வாழ்வு
இராசரத்தினம்
ஞானத்தாலும், குணத்தாலும், உருவி லுைம், திருவினுலு மொத்த தலைமகனும் தலைமகளு மன்பாற் கூடித் தமரறியாமற் களவொழுக்கம் நிகழ்த்துவர். பின்னர் பலருமறிய மணமுடித்து இல்லற மென்னும் நல்லற மாற்றிக் காமஞ் சான்ற கடைக் கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு சிறந்தது பயிற்றல் ஆகிய அனைத்தும் வாழ்வி லிடம் பெற்றன. காதலரிருவர் கருத்தொருமித் ஆதரவு பட்டதே இன்பமாகும்.
உள்ளங்கலந்த காதல் சாதி சமயத் தைப் பாராது ; பட்டம் பதவியை மதிக் காது. வீரன் ஒருவனேக் கண்டாள் ஒரு தமிழ்மங்கை ; ஆண்மை மிக்க அவனே அவள் மனம் நாடியது. நாணமும் பண்பும் நிறைந்த அவளெழிலில், தலைவனு மிதயத் தைப் பறிகொடுத்தான். இங்கிலேயில் இரு வர் மனமுஞ் செம்புலப்பெயல் நீர்போ லொருமைப்பட்டன. இதனை நினைந்து நினைந்து மனமகிழ்ந்த தலைவன் ஒருநாள் தலைவியிடம்,
* யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தை யு மெம்முறைக்கேளிர் யானும் நீயு மெல்வழி யறிதும்
செம்புலப் பெயனிர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே என்று கூறிக் களித்தான். செம்மண் நிலத்திற் பொழிந்த மழைநீர், அந்த நிலத் தின் செம்மை நிறத்தைப் பெற, நிலமோ நீரின் தன்மையை ஏற்று நெகிழ்ந்து குலை கின்றது. இதுபோன்றே காதலனுங் காதலியு மொருவரின் தன்மை ஒருவராகக் கலந்து நெஞ்சமொன்ருவர். அக்காலத்துச் சிறந்து விளங்கிய உள்ளங்கலந்த காதலைக் காட்ட இச் செய்யுளொன்றுமே போது ԼDIT601 3յl.
இங்ஙனம் கருத்தொருமித்து a chair, கனிந்த காதலர், உற்ருர் பெற்றர் அறி

Page 56
;4 --س۔
யாத கிலேயில் மறைமுகமாகச் சின்னு வின்பம் நுகர்வர். பிறரொருவரறியாது ஒழுகும் இவ்வொழுக்கமே களவெனப் படும். இம்மையின் பங் 50, 6 ըն Դալ: - இருவரை அவர் அறியாமலே வீட்டின் பத்துக்கு அழைத்துச்செல்லும் இவ் வொழுக்கத்திற்குக் களவு என்னும் பெயர் சாலப் பொருந்துவதாகும்.
மறைவில் நடக்கும் இவ்வொழுக்கஞ் சிறிதே வெளிப்பட்டது. ஊரார் அலர் தூற்ற முற்பட்டனர். இதனேச் செவிமடுத்த பெற். ருேர் நிறைகாக்குத் தலைவிக்குச் சிறைக் காவல் என் செய்யு மென்பதை உணராது, அவளே மனேயிற் சிறைவைத்தனர். அறிந் தான் தலைவன் ; உண்மையை உணர்ந் தான்; பலரறிய மணம் புரிதலே தன் கடமை யென எண்ணினுன் எண்ணியது, எண்ணி யாங்கு முடிக்கவேண்டிப் பொருள்நாடிப் பிரிய முற்பட்டான். தான் விரும்பிய தலை விக்குத் தன் முயற்சியால் ஈட்டும் பொரு ளைக் கொண்டே அணிகலன் பூட்டி மணக்க விழைந்தான். பரிசப் பொருளை விரும்பிச் செல்லுமிப் பிரிவே, வரை விடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் எனும் பெயர் பெற்றது. எட்டியுஞ் சுட்டியு மறியமுடியாத செல்வக் குடியிற் ருேன்றிய செம்மலாயிருக் தும், பெற்றேரின் பொருளைக் கொண்டு மணவினே முடிப்பதை அவன் மன மேற்க வில்லை. தன்மானம் படைத்த தமிழுள்ளம் தன் முயற்சி கொண்டு தரும் பொருளைக் கொண்டே பரிசங் கொடுக்க விழைந்தது. அதன் பொருட்டுப் பிரிய மறுக்குக் தன் நெஞ்சைக் கல்லினுங் கடிதாக்கிப் பிரி கின்றன்.
தலைவன் பரிசம் கொடுத்தல் வழக்கமே யாயினும், அதனையே குறிக்கோளாகக் கொண்டு மணத்தலை அன்றைய மகளிர் விரும்பவில்லை. ஆண்மை மிக்கானேயே, ஒழுக்கத்தில் உயர்ந்தானேயே அவர் மனம் விரும்பியது. ஒரு தந்தை நீ பெரும் பொருளைப் பரிசமாகக் கொடுப்பி னும் ஒப்பற்ற தகுதி வாய்க்கப் பெருதானே என்மகள் மணக்க ஒருப்படாள் என்று

கூறிப் பெண் கொடுக்க மறுத்த செய்தி புறப்பாட்டொன்றினுற் புலனுகிறது.
தலைவன்பாற் தலைவி எல்லையற்ற காதல் கொண்டிருந்தால், அக்காதல் நிலத் தினும் பெரிதாய் வானினு முயர்ந்ததாக ଉଞ୍ଛଶୀt 15] ଓ [[b:
* நிலத்தினும் பெரிதே'
வானினு முயர்ந்தன்று நீரினு மார ள
வின்றே சாரற் கருங்காற் குறிஞ்சிப்
பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு
நாடனுெடு நட்பே ' இத்தகைய ஆழ்ந்தகன்ற அன்புப் பெருக் கினை அடைக்குந் தாழுமுண்டோ ? தான் விரும்பும் காதலனே யடைய, பெற்றேர் தடையாவா ரென்பதை உணர்ந்தும் தலைவி தலைவனுடன் யாருமறியாமற் றத்தையின் கடிவாயிலையுங் கடந்து செல்லத் துணி வாள். இதனையே கந்தமிழிலக்கணம் உடன் போக்கு எனச் சிறப்பித்துக் கூறுகின்றது. மணமகள் அறியாத வண்ணச் சீறடியை புடைய தலைவி கல்லும் முள்ளும் நிறைந்த கானகத்தைக் கடக்கவும் முற்படுவாள். தலைவனுடன் சேறலையே இன்பமெனக் கருதுகிறது அவளுள்ளம், அறிவுடைப் பெருமக்களும் காதலைக் காப்பான் வேண் டித் தலைவனுடன் உடன்போதலை அற மெனக் கூறிப் போற்றினர். மலையிடைப் பிறந்த சாந்தும், கடலிடைத் தோன்றிய முத்தும், யாழ் புண ரிசையும் முறையே பூசுவோருக்கும், பூணுவோருக்கும், கேட் போருக்குமே இன்பம் டயப்பன அல்லது தாம் பிறந்த இடத்திற்குப் பயன்படா. அதேபோல உன் மகளும் அவள் விரும்பிய தலைவனுக்கே இன்பமும் பயனுங் கொடுப் அவனுடன் செல்லுதலே அவளுக் குஞ் சிறப்பாகும். இம்மைக்கேற்ற அறமும் அதே எனக் கூறி உடன்போய தலைவி யைத் தேடிச் சென்ற செவிலியை முக் கோற்பகவர் வீடுதிரும்பச் செய்த ஒரு நிகழ்ச்சி கலித்தொகையிற் காணப்படு கிறது :

Page 57
به حسينية
- ജേ கற்பினுட் செல்வம் படரன் மின்
சிறந்தான வழிபடு இச் சென்றன ளறந்தலே பிரியா வாறு மற் றதுவே
இம்மையிற் கற்புகுெறி தவருது காதல னுடன் கூடி நடாத்து மில்லறமே நல்லற மென்றும்,மறுமையின் பத்திற்குச் செலுத்து மார்க்கமும் அஃதேயென்றுக் துணிந்த தமிழுள்ளத்தையே வள்ளுவரும் அற னெனப்பட்டதே இல் வாழ்க்கை எனக் கூறி வலியுறுத்துகின்ருர்,
இல்லறம் போற்றும், கற்பு கெறிபி லும் பிரிவு நேரும். தலைமகன் பொருள் நாடியும் போர் குறித்தும் பிரிவான். வெள் ளத்தனைய காதலை உள்ளத்திற்கொண்ட தலைவி பிரிவுத்துயரா லிரங்குகின்ருள். அன்புள்ளம் பிரிவைத் தாங்கமுடியாத நிலையிலும் கடமை கருதி ஆற்றியிருக்கின் றது. வினேநாடிப் பிரிந்தவர் எப்போது வருவார் என்று ஏங்குகின்றது. வரும்வழி பார்த்துப் பார்த்துக் கண்ணும் பூத்தது.
"வாளாற்றுப் புற்கென்ற
கண்ணு மவர் சென்ற நாளொற்றித் தேய்ந்த விரலும்" அவள் காதலேக் காட்டும் சான்றுக ளாகும். ஒரு தோழி தன் தலைவியிடம், பிரிவுநோய் என்னுயிரையே கொள்ளை கொண்டுவிடும் போலிருந்ததே ; தோழி, நான் இறப்புக்கு அஞ்சுகின்றேன் என்று எண்ணுதே சாதல் அஞ்சேன் ஆணுல் மறுபிறப்பில் இத்தலைவனை மறந்துவிடு வேனுே என்று அஞ்சுகின்றேன் என்று கூறி வருந்தினுனென்ற செய்தி குற்றிணை யில் நலமாகக் கூறப்படுகின்றது.
இத்தகைய காதலுள்ளம் தலைவனை மிகவுயர் வுடையோ னுகவே மதிக்கின் றது, அவனே கினேத்துக் குறை நேரவே நோகிறது அவளுடைய நெஞ்சம். பிரி யேன் பிரியினும் தரியேன் என்று அன்று சூளுரைத்த தலைவன் இன்று பிரித்தது மன்றித் திரும்பிவரக் காலமும் நீடிக்கின் ருனே யெனத் தோழி தலைவனக் குறை கூற, அது பொருத தலைவி,
 
 
 
 
 
 

ܢܝ 5.
' குன்றக னன்னுடன்
வாய்மையிற் பொய்தோன்றிற் றிங்களுட் டீத்தோன் றியற்று என்று கூறுஞ் சொற்கள் அவளது அன்பி னுறுதியைக் காட்டுகின்றன. தான் விரும்பிய காதலனுடன் கூடி வாழ்தலே இன்பம், வறுமையிலும் அவனுடன் ஒன்றி வாழும் வாழ்வே வாழ்வாகும் என அவள் கருதினள்: వ్రే
ஒன்றன் கூ ருடை -
யுடுப்பவரே யாயினும் ஒன்றினுர் வாழ்க்கையே வாழ்க்கை' அன்றே தலைவியின் காதலுக்குச் சிறி துங் குறையாமல் தலைவனிடத்துங் காதல் தழைத்திருந்தது. காதலுக்காக வீர நெஞ் சுடைய அவன்,மெல்லியலாள் முன் பணிய வும் தயங்கான் உலகையே கேட்பினும் கொடுக்க முன்வந்தான். மழைக்கும், கொடிய இடிக்கும், குரு வளிக்கும் அசை யாக் கொல்லிமலைப்பாறைபோன்ற உறுதி கொண்ட காதலுடையான் தமிழ்த் தலை வன் என்பதை ஒரு நற்றிணைப் பாடல் நிலை நாட்டுகின்றது. இத்தகைய உறுதியுடைக் காதல் உள்ளத்தே கிற்கவும், கடமையை மறவாத தன்மை அவனிடம் காணப்படு கின்றது. பிரிவென்ற கினவே அவனுக்கும் எல்லையில்லாத தொல்லேயைக் கொடுக் கின்றது. அவனுடைய வாழ்வில் என் றுமே காதலுக்குங் கடமைக்கு மோயாத போராட்டம் நிகழ்கின்றது. இறுதியிற் கடமையே வெல்கிறது. நீ பிரியின் தலைவி உயிர் நீப்ப்ாளென்று தோழி வெளிப்படக் கூறியுந் தலைவன் பிரிதலைத் தவிர்க்க
" மற்றிவ வின்னுயிர்
தருதலு மாற்றுமோ முன்னிய தேஎத்து
முயன்று செய் பொருளே " எனக் கூறிச் செலவழுங்கச் சொல்கிருள் தோழி. ஆனுற் றலேவன் அதனைப் பொருட் படுத்தாது பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்துவிடுகிருன்.

Page 58
செல்லாமை யுண்டே
லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை ' என்று தலைவனிடங் கூறிய அதேதோழியே தலைவன் பிரிந்த காலத்துத் தலைவியைத் தேற்றவுஞ் செய்கிருள்.
மாசற்ற காதலுடைத் தலைவனும் தலைவி யும் நடத்துமில்வாழ்வில் நாளும் நாளும் காதல் வளர்கிறது. தன்னலம் பேணியே பிறந்த காதல், மனையறத்தில் தன்னலக் துறக்கவும், பிறர் நலம் போற்றவும் முற்படு கிறது. வள்ளுவர் கூறியவாறு, " இருந்தோம்பி இல் வாழ்வ
தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்று எண்ணியது தமிழ்ப் பேருள்ளம். எந்நிலையிலும் எந்நேரத்திலும், எவ்வகையி லும் விருந்தினர்ப் பேணலை உள நிறை வுடன் மேற்கொண்டாள் தமிழ் மாது. மலரத் திறந்த வாயிலே உடையதாய்ப் பொலிந்தது அவர்கள் மனை. தலைவனப் பிரிய நேர்ந்த காலத்துத் தனது இளமை வறிதே கழியுமே என்று தமிழ்மகள் வருக் தாள். ஆனல், அறவோர்க்களித்தலும், அந்தணரோம்பலும், துறவோர்க்கெதிர்த லும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலுமாகிய அறம் பிழைபடுமே என்றுதானேங்கினுள். இத்தகைய பெருக் தகை யுள்ளம் படைத்த பெண்டிரைக் கொண்ட காடன்ருே பொன்னுடென்று போற்றத்தகும். பொதுப்பணி யென்ற பெயரில் இல்லத்தை மறந்து திரியும் இன்றைய நாகரிக உலகம் இதனேயுணர்தல் வேண்டும். போலி இன்பத்தில் மயங்கி மாசற்ற காதலுமறியாது காலத்தைப் பாழாக்கும் தமிழ்மக்கள், நம்முன்னுேர் போற்றிய இல்லறத்தை அறிந்தும் உணர்ந்தும் பின்பற்றத் துணிவார்களாக, தமிழர் வாழ்ந்து காட்டிய காதல் வாழ்வு இன்பத்திற்கும் கடமைக்கும் உறை விடமாய்த் திகழ்ந்தது. களவொழுக்கத் தில் இன்பம் நுகர்ந்த காதலர், கற்பு நெறி யில் கடமையைப் போற்றி அறத்தைச் செம்மையுற ஆற்றினர். களவிலே அரும்
 
 
 

பிய காதல் கற்பு நெறியிலேயே மலர்ந்தது. மங்கலமென்னும் மனைமாட்சி சிறந்த நன் கலமென்னும் நன்மக்களைப் பெறுதல் கற்பு நெறியிலல்லவா ? இருவரிடையே தோன் றிய உழுவலன்பு தம் மக்கள் மாட்டு விரிந்து பின் தம் மக்களோடு தொடர் புடையாரனவரிடத்துஞ் சென்றது. இன் பங் கருதித் தோன்றிய காதல் இவ்வாறு படிப்படியாக அருளாக உருமாறியது. மாசற்ற காதல் இறுதியிலருளாக மாறியே தீரும் என்பதை உணர்ந்தே தெய்வப்புல வர் திருவள்ளுவர் அறம், பொருள், இன் பம் மூன்றினேயுங் கூறி வீடு கூருராயினுர், தலைமகனின் பண்பட்ட உள்ளத்தினே கற் றினேப் பாடலொன்று அழகுறச் சித்திரிக் கின்றது. வினைமுற்றி மீண்டு வருகிருன் தலைவன். அவனுள்ளந் தலைவியைக் காணத் துடிக்கின்றது. உணர்ச்சி வயப் | gl | அந்நிலையிற் கூட அருளுள்ளம் படைத்தோணுகக் காணப்பட்டானெனின் அவனுடைய உயர்வுதான் என்னே தலைவியைக் காணுக் துடிப்பில் கடுமாப் பூட்டிய நெடுந்தேரூர்ந்து காற்றினுங் கடுகி வருகின்றன். நெய்தல் நிலம் ; வழியில் நண்டுகள் நிறைந்துள்ளன ; தலைவனின் உள்ளம் அவற்றிற்கு இடையூறு செய்ய இ ைச ய வில் லே. இதனேக் குறிப்பா லுணர்ந்த பாகன் நிலவின் உதவியால் நண்டுகளை நசுக்காமல் தேரை மெல்லச் செலுத்தினன்.
* புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஒம்பி வலவன் வள் பாய்ந்து ஊர நிலவு விரிந்தன்ருல் காண லானே.
இத்தகைய அருளுள்ளம் படைத் தோர்க்கு ஆண்டவனும் எதிர்ப்படுவான் என்பதில் ஐயமில்லை. அன்பே கடவுள், காதலே கடவுளெனக் கண்டவன் தமிழன். கடவுளையே காதலனுகக்கொண்டு மணி வாசகர்போன்ற தமிழ்ப் பெரியார்கள் கவி பாடியுள்ளார்கள். ஆதலின், தமிழர் காதல் பேரின்ப நோக்குடையதே யென்பதில் எள்ளளவும் ஐயமில்லே.

Page 59
ஆறு. அழகப் தமிழ் விரிவுரையாளர், அ
தாய் ஆழங் காணமுடியாத ஒரன்புக் கடல். அந்த அன்புக் கடலி லிருப்பதே தாலாட்டு என்ற வலம்புரி முத்து. இம் முத்தினருமை பெருமைகளே அண்மைக் காலத்திற் தமிழ்க்குடிமக்க ளறிந்து பெரு மைப்பட்டு வருகின்றனர். அம்முத்தைக் காப்பாற்ற அவர்கள் விழைகின்றனர். இலக்கியச் சுவைஞர்கள் அதனுெளியினைக் கண்டு அணிய ஆவல் கொள்கின்றனர். எனவே இனி யம் முத்துக்கழிவில்லை. என் றும் அழிவில்லாத ஓரிடத்தினைப் பெற்ற அம்முத்தின் சிறப்புக்கள் எண்ணற்றவை.
உலகை விழிப்புறச் செய்யத் திருப் பள்ளியெழுச்சி பாடக் கேட்டிருக்கின்ருேம். விழிகளே முடித் துரங்கு தற்கோ தாய் தாலாட்டிசைக்கக் காண்கிருேம். அழுது அடம்பிடிக்குங் குழந்தைகளை அடக்கும் ஆயுதமாக அன்னையரிடத் தாலாட்டு அமைந்திருக்கின்றது. விழித்துக்கொண் டிருக்குங் குழந்தைக்கு வேடிக்கை காட்டுந் தாய், அது விழிகளே மூடித் துயிலவேண்டு மென்றெண்ணும்போது பாட்டிசைக்கின் ருள். இப்பாட்டினேயே தாலாட்டு என்பர். இப்பெயர் காரணத்தா லமைந்ததாகும். தால் என்ற சொல் நாக்கு என்று பொருள் படும். தாய் ராராரோ என்று நாவினை யாட்டிப் பாடுவதால், தால் + ஆட்டு = தாலாட்டு எனப் பெயர் பெறலாயிற்று. தாலாட்டினேத் தாய்மார்கள் தாராட்டு, ஓராட்டு என்று வழங்குவதுமுண்டு. இவை ஓசை காரணமாக வழங்கும் பெயர்கள்.
தாலாட்டுப் பாடல்களை இரண்டாகப் பிரித்தாராய்வது பொருத்தமாகும். தாயர் தாங்கள் பரம்பரையாகவும், பிறரிடமிருந் தறிந்தும் பாடிவரும் பாடல்களொருவகை. இவ்வகைப் பாடல்களால் வளர்ந்த நக்
 
 
 

த்த தமிழ்
பன், எம். ஏ,
ண்ணுமலேப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் புலவர்கள் அவற்றில் ஈடுபாடு கொண்டியற்றிய பாடல்கள் மற்ருெருவகை. இன்றிவ்விரு வகையான தாலாட்டுப் பாடல்களு முள்ளன.
ஒரளவெழுத்தறிவுள்ள தாய்மார் களும், எழுத்தறிவில்லாத் தாய்மார்களுக் தங்கள் குழந்தைகளைத் தூங்கச்செய்ய ஒரு குறிப்பிட்டளவு தாலாட்டுப் பாடல் களைத் தெரிந்து வைத்திருந்தனர். ஐம்ப தாண்டுகட்கு முந்திய தாய்மார்கள் ஒவ் வொருவருந் நூறு பாடல்கள் வரை தெரிந்து வைத்திருந்தனர். அவர்களுக்குப் பிற்பட்ட தாய்மார்கள் போதுமென்றளவிற்குத் தெரிந்து வைத்திருந்தனர். (ஒன்றிரண்டு பாடல்கள் கூடத் தெரியாத நாரிமணிகளு முண்டு.) இவ்வாறு குழந்தையுள்ள இட மெலாங் குடிகொண்டுள்ள தாலாட்டுப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை அள விட்டுச் சொல்லமுடியாததாகும். தாலாட்டுப்பாடற் பொருள் :
குழந்தைக்காகத் தாய்பாடும் வண்ண வண்ணப் பாடல்களைக் கேட்கும்போது, அப்பாடலிற்,குழந்தையில்லாதபோது தாய் பட்ட துன்பங்கள், குழந்தைப்பேற்றை வேண்டிச் செய்த அறங்கள், குழந்தை யின் அழுகைக்குக் காரணம் வினவல், இதற்காகப் பிறந்திருக்கலா மென்ற காரணங்களை அடுக்கிச் சொல்லல், குழந்தையை வருணித்தல், குழந்தையின் அம்மான், தந்தை, பாட்டன், அத்தை முதலியவர்களின் பெருமை பேசுதல், குழந்தை இத்தகையவர், பேரனுே பேர்த்தியோவென்று பூரித்தல், குழந்தை படுத்துள்ள தொட்டிற் சிறப்பு, காதுகுத் தும் விழா முதலியவற்றை வருணித்தல், கித்திரை செய்யென வேண்டல் முதலிய வைகளும், இறைதொடர்புடைய சில

Page 60
நீண்ட கதைகளும் பொருளாயமைவதைக் காண்கிருேம். ހ
பரவுதல் :
தாலாட்டோரிசைப்பறவை. ஆதலா லோரிடத்திலிருந்து வாழாமற் பலவிடங் களுக்குச் சென்று வளரும்பெற்றியது. உதாரணமாக ஒரு வீட்டில் தாயொருத்தி குழந்தையைத் தாலாட்டுவதை வயது வந்த மகளொருத்தி கேட்டுக்கொண்டே யிருக்கின்ருள். பின் அம்மகளுக்குத் திருமணஞ்செய்து வைக்கப்பட்டவுடன் நீண்ட தொலைவுக்கப்பாலுள்ள தன் கணவ ணுரிலவளுக்குக் குழந்தை பிறந்தபொழுது அவள் தாயிடங் கற்றுவந்த தாலாட்டை இசைக்கின் ருள். அவ்வூரிலுள்ளோர் அதனைக் கேட்கின்ருர்கள். அப்பாடலைப் பாடவுஞ் செய்கின்ருர்கள். பின் அத் தாலாட்டு அங்கிருந்து வேறிடத்துக்குச் செல்லும். இப்படி, நிலம்விட்டு நிலக் நடைபோடுந் தாலாட்டு, தமிழ்ப்பேசுக் நிலப்பரப்பு முழுவதுஞ் சுற்றிக்கொண்டே
Z.
வருகின்றது. இவ்வாறன்றிப் பயணஞ்
செய்யுங்காற் பாடப்படுவதாலும், வெளி யூர்களிலிருந்து வருமுறவினர்கள் பாடக் கேட்டு மனனஞ்செய்வதாலும் இப்பாடல் கள் பரவுவதுமுண்டு. நிலவுதல் :
வாய்மொழி இலக்கியங்களி லதிக அழிவில்லாமல் நல்லுருவோடு கிடைக்கும் பிரிவு, தாலாட்டுப் பாடல்களாகும். குழந்தை மூன்று வயதடையும்வரை யொரு காளிற்குப் பன்முறை தாலாட்டுப் பாடல் கள் பாடப்படுவதாற் தாலாட்டுக்கள் அழிந்தொழியவில்லே. சந்ததி சமுதாயத் திலே ஒரு தொடர் கதை ஆதலால்
தாலாட்டு அதில் வரும் வளர்பாட்டா
கின்றது.
: தாலாட்டினிராகம் நீலாம்பரி, என்று
கூறுகின்றர்கள். பெண்களெல்லோரும்
ஒரே பண்ணிலேயே பாடிவருகின்ருர்க
 

8 -
OO T T M S tt Y Y SS மாறுபடவுங் கூடும். வட்டாரத்திற்கு வட்டாரம் பேச்சு மொலியு மாறுபாடுடை tt ] 60Ꭲ . எனவே, பாடும் முறையிலும் மாறுபா டிருக்கலாம். பாடல்களை ஒலிப் பதிவு செய்தாய்வது பாடலின் பண்ணை யறிய உதவலாம்.
அடிகளை மாற்றல் :
இன்றைய கவிஞர்கள் தாலாட்டுப் பாடல்களியற்றும்போது ஆண்குழந்தைக் குத் தனியாகவும், பெண்குழந்தைக்குத் தனியாகவும் பாடல்களைப் புனைகின்றனர். தாய்மார்கள் பாடிவரும் பாடல்களில் இம் முறை கிடையாது. ஒரே தாலாட்டினைக் குழந்தைக்குத்தக ஆண்பாலாகவும் பெண் பாலாகவும் மாற்றிப் பாடுவதே அவர் வழக்கம்,
மானுடி ஓடுவது மறியடி நல்ல தங்கை மானுேடும் வீதியெலாம்-தங்கை தானே டி வந்தாளோ
என்று பெண் குழந்தைக்குப் பாடும்பாடலை ஆண் குழந்தைக்குப் பாடும்போது,
LDITg) – f ஒடுவது மறிய டா நல்லதம்பி மானுேடும் வீதியெலாம்-தம்பி தானுேடி வந்தானுே . என்று மாற்றிப்பாடுவர். இது தாலாட்டுப் பாடலின் சிறப்பான குண் மாகும். இஃதே போன்று குழந்தைக்குத் தெய்வத்தின் துணையுண்டென்று பாடுபவர்கள் தாங்கள் வணங்குத் தெய்வத்தைப் பரவிப் பாடு ឲ្យព្រឺ ܘܡ
தொட்டிலுக்குங் கீழாக
என் கண்ணே - உனக்குத் துணையிருப்பாள் மீனுட்சி தொட்டிலுக்குங் கீழாக-என் கண்ணம்மா
துணையிருப்பாள் மாரியம்மாள் கட்டிலுக்குங் கீழாக - என் கண்னே
காத்திருப்பார் சொக்கலிங்கம் கட்டிலுக்குங் கீழாக - என் கண்ணம்மா
காத்திருப்பாள் காளியம்மாள்

Page 61
அடிகளினிறுதியிற் றெய்வங்கள் மாறி யிருப்பதனை நோக்குழி, பாடுபவர்கள் வணங்குந்தெய்வங்கள் வந்திருக்கின்றன வென உணரலாம். இப்படிக் குழந் தைக்குத் தகப் பாடுவதும் விரும்பிய தெய் வங்கள் வரப் பாடுவதுமாக மாற்றிப் பாடு வதைப்போல எவ்வித மாற்றமுமின்றி எக் குழந்தைக்கும் பாடப்பட்டன. கீழ்க் காணும் வகைப் பாடல்களாகும்.
பாண்டிப் படிமுத்து-கண்ணே நீ பஞ்சவர்கள் ஆண்டமுத்து ஆயிரம் முத்தினிலே ஆராய்ந்து எடுத்தமுத்து தொண்ணுரறு முத்தினிலே -
கண்ணே நீ துளாவி எடுத்தமுத்து
ජීද් 曼
வாழை பழுக்குமென்று வணக்கிளிகள் வந்து கொய்ய இலுக்குப் பிரம்பெடுத்துக் கிளிவிரட்ட வந்த கண்ணே
காசி விசிறிகொண்டு கையிலொரு செம்புகொண்டு பூசைப் பிரம்பெடுத்து பூசை செய்யப் பிறந்தாயோ ?
a 6 6
தாலாட்டுப் பாடல்களிற் கதைப் பாடல்கள் தவிர மற்றைய பாடல்கள் குறு கிய அளவுடையன. நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க நிகழ்ச்சிகளாகவும், பொருள்களாகவும், பாடல்கள் அமைந் துள்ளன. இது பாடல்கள் சிதைந்து போகாதிருப்பதற்கொரு காரணமாகும். பாடல்கள் குறுகிய அளவாக விருப்ப தாற் குழந்தை கண்ணயருந் நேரம் வரை பாடத் தாய் பல தாலாட்டுப் பாடல்களைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டியவ ளாகின்ருள்.
கதைத் தாலாட்டு :
வாய்மொழி இலக்கியங்களில் நீண்ட நேரம் பாடவேண்டிய விடயங்களில்
- 7 -

9
மக்கள் நன்கறிந்த புராணக் கதைகளே இடம்பெற்றிருக்கின்றன. தாலாட்டிலும் மக்கள் வாழ்வில் நன்கு பழக்கத்துள்ள வள்ளிகதை, இராமர்கதை, சொக்கலிங்க மீனுட்சிகதை முதலியவை வழங்கிவரு கின்றன. கதைத்தாலாட்டிற் குழந்தையின் பெருமை, பிற உறவுமுறைகள் வருவது கிடையாது. கதை மெதுவாகச் செல் லாமல் வேகமாகச்செல்வதும், நாடகம் போலப் பாட்டுவடிவி லுரையாடல்கள் வரு வதும் இத்தாலாட்டுக்களி னியல்பாகும்.
வள்ளிகதைத் தாலாட்டு:
வள்ளிகதைத் தாலாட்டில் வள்ளி பிறந்து குறவரிடம் வளர்ந்தது, தினேப்புனங் காத்தது, நாரதர் வருவது, முருகனுக்கு நாரதர் வள்ளிபற்றிக் கூறுவது, முருகன் வள்ளியை அடைய வேடம் புனேவது, முருகன் யானேயை வரவழைப்பது, இறுதி யில் வள்ளியை மணப்பது ஆகிய நிகழ்ச்சிக ளடுக்கடுக்காக ஏறத்தாழ நூற்றைம்பது அடிகளிற் பாடப்பட்டுள்ளன. இக்கதைத் தாலாட்டு சில இடங்களில் முழுவதும் பாடப்படும். சில இடங்களிற் சிதைந்த வடிவிற் பாடப்பட்டும் வழங்கி வருகின்றது. இவ் வள்ளிகதைத் தாலாட்டைச் சில தாய் மார்கள் பெண் குழந்தைக்கு மட்டும் பாடுவதுண்டு.
இராமகதைத் தாலாட்டு :
வள்ளிகதைத் தாலாட்டைப் போல இராமர்கதைத் தாலாட்டுத்தமிழகமெங்கும் பரவலாக வழங்கிவருகின்றது. வால்மீகி, கம்பர் ஆகியவர்களாற் காப்பியமாகவுங் குலசேகராழ்வாராற் பத்துப்பாடல்கள் கொண்டவொரு தாலாட்டுப்பதிகமாகவும் பாடப்பட்ட இராமர் வரலாற்றைத் தாய் தன் தாலாட்டிற் பாடும்பொழுது
தாயார் சொற்படிக்கு ராமர் வழிநடந்தார் பர்னக சாலை கட்டி-சுவாமி பகவானும் பள்ளிகொண்டார்
盏

Page 62
5
வகையறியாச் சீதையரும்-சுவாமி
மானெனக்கு வேண்டுமென் ருள் மான் பிடிக்க வனம் புகுந்தார்-ஈஸ்வரரும் பிச்சையென் முன் ராவணனும் அள்ளியிட்டாள் ஜானகியாள் கூசாமே சீதையரைக் கொண்டுவந்தான் தென்னிலங்கை, 片
அனுமாரைத் தூதனுப்பி சீராழி கைக்கொடுத்து-ராமர் இதை சிறை மீட்டாராம்
கணேயாழி கைக்கொடுத்து-இராமர் காரிகையை மீட்டாராம்.
என்றெல்லாம் பாடுவதைக் கேட்கலாம்.
சொக்கலிங்க மீனுட்சிகதைத் தாலாட்டு: - சொக்கர்கதைத் தாலாட்டில் சொக்கர் வயலுழுது கெல்விதைத்த கட்சிகளும், மீனுட்சி வயலுக்குச் சோறு கொண்டு போன காட்சிகளுமமைந்துள்ளன.
இறைவன் தொடர்புடைய பாடல்கள் :
நீண்ட பாடல்களாகப் பாடப்படும் இறைவர் தொடர்புடைய பாடல்கள் பாடு பவரின் தெய்வசிந்தனை நிரம்பப்பெற்ற உள்ளத்தைக் காட்டுகின்றன. குழந் தையை நீண்டநேரத் தாலாட்டவேண்டி யிருப்பதாற் பாடல்களுக் நீண்டனவாக அமைந்திருக்கின்றன. குழந்தைகள் மனத்தில் ஆரம்பமுதலே தெய்வ வரலா றுகள் ஆழமாகப் பதிந்துவிட வேண்டு மென்று தாய்மார்கள் விரும்பியதனு லேயே இத்தகைய பாடல்கள் எழுந்தன ড়ো স্লোগ) mab,
பாடபேதங்கள் :
புலவர் படைத்த இலக்கியங்களைப் படியெடுக்கும்போது ஏற்படும் பாடபேதங் கள் வாய்மொழி மூலம் பாடப்பட்டுவரும் பாடல்களில் இல்லாமலா போகும் நிறைய உண்டு. சான்ருகவொன்று காண்போம்.
 
 
 
 

ஆரும் அடிக்கவில்லே அன்னியருந் திண்டவில்லை. தானே அழுகின் ருன் தாயார் மடிதே டி. என்ருெரு தாயிடம் இவ்வடிவில் வெளி வரும் பாடல், மற்ருெருதாயிடம்
ஆரும் அடிக்கவில்லை ஐவிரலுந் தீண்டவில்லை அவனு அழுகின்றன் ஆத்தாள் மடிதேடி. என்ற வடிவத்தில் வெளிவருகின்றது.
தரம் :
விரிந்த விளக்கங்கள் எழுதக்கூடிய இலக்கியத்தரம் பெற்றவை தாலாட்டுப் பாடல்கள் தயங்காண விழைந்தாற் தாயினன் பைப்போலவே, விளக்கத்தை - உணர்வை-மீறி விசுபரூபங்காட்டுபவை யவை. உதாரணத்துக்கு ஒன்று காண் @L肪。 - ܗ
குழந்தையொன்றை ஒரு கட்டெறும்பு கடிக்க வருகிறது. அந்தக் கட்டெறும்பைப் பார்த்துத் தாய் பாடுகிருள். கட்டெறும்பு ஒடிப்போய்விடாது, கால்களையுந் நெற்றி யையும் ஆட்டிக்கொண்டிருக்கிறது. அக் கட்டெறும்பு நிற்குங் காட்சியினைத் தாய் பாடுகின் ருள், பாட்டைக்கேட்ட கட் டெறும்பே தூங்கிவிடும்போ லிருக்கிறது.
காரார் குழலானைக் கடிக்க வந்த கட்டெறும் பு காலுக்குப் பீலிகட்டி கைக்கு வெள்ளிக் காப்பு மிட்டு நெற்றிக்குச் சுட்டிகட்டி நிற்குதந்தக் கட்டெறும்பு. கவிஞர்களிடத் தப்பிய கட்டெறும்பு தாயின் தாலாட்டிற் குழந்தைக்கு எதிரி யாக (Viain) விளங்குகின்றது. குழந்தை களுக்குப் பாலோடு இத்தகைய தாலாட் டுப் பாடல்களையுமூட்டிவளர்த்த தாய்க் குலத் தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களின் வாழ்த்துக்குரியது.

Page 63
புலவர்கள் செய்தவை:
தங்களின் இல்லங்களிலோ அல்லது பிற விடங்களிலோ தாலாட்டிசைப் பாட்டைக் கேட்ட நம் அருந்தமிழ்ப் புலவர்கள் தாங் கள் படைத்த இலக்கியங்களில் இவற் றைப்பற்றிக் குறிப்பிட்டுக், தாலாட்டுப் பாடல்கள் பாடியும் வந்திருக்கின்றனர்.
முதன்முதற் தாலாட்டுப்பாடல் பாடிய புலவர் பெரியாழ்வாராவர். தன்னை யசோதையாக வெண்ணி, கண்ணனைக் குழந்தையாக தினத்துப் பாடியுள்ளாரவர். அவரைத் தொடர்ந்து குலசேகராழ்வார் இராம வரலாற்றைப் பத்துப் பாடல்களிற் தாலாட்டாகப் பாடியுள்ளார்.
புலவர்கள் பிள்ளைத்தமிழில் தாலப் பருவம் என ஒரு பருவமே பாடலாயினர். TT T S TS TTT T SS S S LL LLLLL LL LL ஆராரோ என்ற வொலியினப் பயன் படுத்துவதுபோன்று புலவர்கள் தாலேலோ என்ற வொலியின, தாலப்பருவம் பாடும் போது பயன்படுத்தினர்.
தாலாட்டைப்பற்றிய குறிப்புகள் இறை பனுர் களவியலுரை, தேவாரம், முத் தொள்ளாயிரம், கம்பராமாயணம், விறலி விடுதூது முதலிய தமிழிலக்கியங்களி லுண்டு.
கிறிஸ்துவுக்குப்பின் பதினேந்தாம் நூற் ருண்டு முதல் தாலாட்டு, பிரபந்த நிலையை அடைய வாரம்பித்தது. அப்படி யெழுத் தவை பெரும்பாலுந் தாய்மார்கள் பாடும் பாடற்பொருளைக் கொள்ளாமற் தனிப்பட்ட வொருவரின் புகழினை விரித்துரைப்ப தாகவோ அல்லது ஒன்றினை விளக்குவ தாகவோ அமைந்தன. சீர்காழி சிற்றம்பல அடிகள், தத்துவராயர், திருவேங்கடநாதர், வெள்ளியம்பலவானத்தம்பிரான், உபய கவியப்பர், சிவப்பிரகாச சுவாமிகள், அச்சு
 
 

جيمس 5l
தானந்தசுவாமிகள், ஈசுரமுனியாப்பிள்ளை, யாழ்ப்பாணம் வ. கா. கணேசபண்டிதர், மகாவித்துவான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை,
டாக்டர் உ. வே. சாமிநாதையர் போன்ற வர்கள் தாலாட்டுப்பாடல்கள் பாடியுள் ளனர். அண்மைக்காலப் புலவர்களான பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, கண்ணதாசன், வாணிதாசன் முத லான வர்களுந்தாலாட்டுப்பாடல்கள் புனைக் துள்ளனர். இவர்கள் யாத்த பாடல்கள்
ஏடுகளில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனல் தாய்மார்களின் இதய ஏட்டில் எழுதப் படவேயில்லை. இவருள் விதிவிலக்கானவர் சிறுமணவூர் முனுசாமி முதலியார். அவ ரது பாடல்கள் தமிழ்நாட்டிற் பரவியுள் ளன. அவை நாட்டுப்பாடல்களின் சாயலில் அமைந்திருப்பது அதற்கொரு காரண
கவிஞர்கள் எழுதியுள்ள பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இனி எழுதப் போகும் பாடல்களுங்கிடைக்க வழியுண்டு. ஆனல் எழுதாமல் தாயின் எண்ணத்தில் மட்டும் உள்ள எண்ணற்ற எழுதாக்கிள விகளை எழுத்து வடிவிற் கொண்டு வரு வது இந்நூற்ருண்டுத் தமிழ்வளர்ச்சியில் ஒரு சிறந்த பணியாகும்.
கும் தாலாட்டு முத்துக்களே ஒளியுள்ள முத்தாரமாக்கித் தமிழ்த் தாய்க்கு அணிக் தழகு செய்வது அறிஞர்தங் கடனுகும். அனலாலும் புனலாலு மழிந்த தமிழிலக்
கொண்ட அநாகரிக அரக்கனுற் தாலாட் டுப் பாடல்கள் அழிக்தொழிந்துவிடாமற் காப்பது தொண்டன்று ; கங்கடன்

Page 64
பல்கலைச் செல்வர், தெ போ. மீ
ਰੇਲ ਨੇ,
தமிழ்நாடு ஓவென வாழ்ந்த காலமு முண்டு. தமிழர் கடலிற் சென்று பிற நாடுகளோடு வணிகஞ்செய்து பொருள் குவித்த காலமுமுண்டு. அங்கேயெல்லாம் பண்பாட்டை வளர்த்த காலமுமுண்டு. அரசை கிலே நாட்டிய காலமுமுண்டு. அந்தப் பொற்காலத்தில் எல்லோருங் கல்வியிலீடுபட்டார்கள். அதனுல் உயர்ந்த நடையிற் பல காப்பியங்கள் தோன்றின. இந்தக் காலம் பின்னே மாறிவிட்டது. தமிழரசராளுங் காலம்போய்ப் பிறராளுங் காலம் வந்தது. அந்த ஆட்சியின் வன்மை யுங் குறைந்தது. கசக்கிப்பிழிந்து வரி வாங்குவ தொன்றுதான் அரசாட்சி என்ப தாயிற்று. பட்டினி, கோய்கள் - இவற்றை நீக்க வழியில்லாமற் பலரலேந்தார்கள். புதிய இலக்கியம் :
இத்தக் காலத்திற் கல்வியை யார் கற் பார்கள் ஒரு சிலரே கற்றர்கள். கடவு ளேயே நம்பிய வொருசில கல்விமான்கள் கடவுட் செய்தியைப் பாட்டிற் பாடி ணுர்கள். நம்பமுடியாததைக் கடவுள் நமக் காகச் செய்வார். கடவுள்தானே நமக்கு அப்பனும், அம்மையும்; கடவுளே நம்பினுேர் கைவிடப்படார், என்றெல்லாம் மனத்திற் படும்படி இவர்கள் புராணம் பாடினுர்கள். மற்றவர்களோ, கடவுளென்ருல், எப் போதும் மக்கள் அதையே கேட்டுக் கொண்டிருக்க முடியாதென்று வேறு கதை கள் பாடினுர்கள். படிக்கத் தெரியாதவர் களு மிதைக் கேட்க விரும்பினர்கள். பெண் களுஞ் சிறந்த கதைகளைப் பிறர் பாடினுற் கேட்கவந்தார்கள்.
அம்மானே :
கவிஞர்களே அரசர்கள் பாராட்டாத காலத்தில் இப்படியாகப் பொதுமக்கள் பாரட்டும் வழியொன்று கிடைத்தது. ஆகவே, இந்த வகையான கதைகளைப் பல புலவர்களும் பாடினுர்கள். இவற்றை அம்மானைப் பாடல்களென்று வழங்குகி றர்கள். இது அம்மணி அல்லது அம்மன
 
 

னுட்சி சுந்தரனுர், M. A., M. G. L. ண்ணு மலேப் பல்கலைக் கழகம்.
என்று குறிக்கப்பெறும் பெண்களுக் கென்றே பாடிய பாடலாம். இதனைக் கற்றுக்கொண்டு பாடினுற் குறத்திக்குக் கூட நெல்லும், அரிசியும், பழஞ்சிலேயும் சிலகாசுமெளிதிற் கிடைக்கும். அவ்வளவு விரும்பிப் பெண்களுங் கேட்டார்கள். முற்காலத்தில் அம்மானே க் காயை வைத்துக் குழந்தைகள் பாடுகின்ற பாட் டுக்கு அம்மானைப் பாட்டு என்று பெயர். அதுவும் பெண்கள் பாட்டுத்தான். அந்த ஒற்றுமையினுலே இந்தப் புதிய கதைப் Lij T L Gö353air Lju Dub LD IT ŻziTLÜ I TIL Å GI GổT (3 so வழங்கினர்களாம். புராணம் :
இந்த அம்மானைப் பாட்டு மக்க ளுள்ளத்தை இப்படிக் கொள்ளே கொண் டதனுற் புராணம் பாடியவர்களுங் கூட அவற்றை அம்மானைப் பாடலிற் பாட வந்தார்கள். மாகபுராண அம்மானை என்பது போலப் பலநூல்கள் வெளி வந்தன.
வீரகாவியம் பாடி அந்தக் காலத் தரசர்களையோ, படைத் தலைவர்களேயோ பாடவந்தவர்களும் இராமப் பையன் அம் மானை முதலியபோலப் பாட வந்தார்கள். கட்டப்பொம்மன் கதை, தேசிங்கு ராசன் கதை, கான்சாகிபு சண்டை முதலியவை அந்த வீரர்கள் மறைந்தபின்னர் பாடப் பட்டவை. ஆகவே, இவை அரசர்க ளிடத்திலிருந்து பணம் பெறுதற்குப் பாடப்பட்டவை அல்ல. பொதுமக்கள் இந்த வீரர்களே பெண்ணிப் புலம்பிப் போற்றி வந்ததாலேயே சில புலவர்க ளிவற்றை மனங்குழைந்து பாடி வெற்றி பெற்றர்கள். சிறுதெய்வப் புராணம் :
இந்து மதத்திற் பெருந்தெய்வ வழி பாடுமுண்டு; சிறுதெய்வ வழிபாடுமுண்டு. பெருந்தெய்வ வழிபாட்டிற் பார்ப்பனர் களும், தீட்சைபெற்ற மற்றவர்களுமீடு பட்டு வந்தார்கள். சிறுதெய்வ வழிபாட்

Page 65
டிற் பூசாரிகள், உவச்சர்கள் முதலியவர்க விடுபட்டு வந்தார்கள். எல்லேப்பிடாரி, மாரியம்மன் போன்ற பெண்தெய்வ வழி பாடு, காத்தவராயன், மதுரை வீரன் முதலிய ஆண்தெய்வ வழிபாடு - இவை யெல்லாமிதிற் சேரும். இதுபோன்ற வழிபாடு நடுகல் வழிபாட்டிலிருந்து வளர்ந்ததாகலாம். கொள்ளே நோய்க் கெல்லா ந் தெய்வமாக மாரியம்மன வணங்குகிருர்கள். கொள்ளை நோய்கள் வரும்போது மாரியம்மன் தாலாட்டைப் பாடுவது வழக்கம். இந்தச் சிறுதெய்வங் களின் வழிபாட்டில் அந்தத்தெய்வங்களைப் பற்றிய வரலாறுகளே யும், புராணக்கதை கள் போற் பூசாரிகள் பாடுவார்கள் ; இரவில் ஒய்வாக இருந்து ஆண்களும் பெண்களும் விழித்திருந்து கேட்டு மகிழ்
画重GL呜直 壹_武、
இந்தக் கதைப் பாடல்களை யார் பாடினுர்களென்றுகூடப் பல இடங்களில் நமக்குத் தெரிவதில்லே. பழமொழியை முதலில் சொன்னவர் யார்? விடுகதையை முதலிற் புதிராகக் கேட்டவர் யார்? நாடோடிப் பாடல்களைப் பாடியவர் யார்? ஒருவருக்குந் தெரியாது. தனிப் புலவ ருடைய உடைமையில்லை ; எல்லாமிங்கே பொதுவுடைமைதான். அதைப்போலத்தா னிந்தக் கதைப் பாடல்களும். ஆணுற் காவியம்போல அமைந்திருப்பதால் இவற் றைப் பாடிய புலவரொருவரிருக்க வேண்டு மென்று பொதுமக்கள் கருதினுர்கள். புகழேந்திதலைமேலிவற்றை யேற்றினர்கள். புகழேந்தி சிறையிலிருந்தபோது இந்த அம்மானைப் பாடல்களைப் பாடிப் பெண்க ளிடமிருந்து வேண்டியதெல்லாம் பெற்று வாழ்ந்தாரென்ற கதை வழங்குகிறது. இப் படி யொருசில அவரெழுதியுமிருக்கலாம்.
செய்யுள் நடை:
இந்தப் பாடல்களின் நடை நளவெண் பாவினுேசையைச் சிலபோது நினை வூட்டும். ஆணுல், இவை மூன்றேமுக்கா லடியாக வராமற் பல அடிகளாகத் தொடர்ந்து வரும். இதிற் பலவிதச்சந்த அமைப்புகளையு மமைத்துப் பலவேறுபாடு கள் தோன்றக் கதைக்கேற்பப் புலவர்கள்
 
 
 

3
பாடி வந்தார்கள். தேசிங்கு இராசன் கதையில் இதனே கன்ருகப் பார்க்கலாம்.
பாரத இராமாயணக் கதைகள் :
இந்த வகையான பாடல்களிலெல் லோருக்கும் கன்ருகத் தெரிந்தவை பவளக் கொடி மாலை, அல்லியரசாணி மாலை என் பனவாம். இவற்றைப் புகழேந்தி பாடிய தாகக் கொள்வார்கள். அந்தக் காலத்தில்ஏன் இந்தக் காலம்வரை - மக்களிடத்தி லெப்படியோ இராமாயணக் கதையும், மகாபாரதக் கதையும் பரவிவிட்டன. தங்கள் தங்களுர்க் கதைகளையெல்லாக் தலபுராணம் பாடிய புலவர்கள் சிவ னுேடும், பெருமாளோடுஞ் சேர்த்து விட்டதுபோல, பொதுமக்கள் தங்கள் தங்களுர்க் கதைகளையெல்லாம் LD5 it பாரதக் கதைகளோடு சேர்த்துவிட்டார் கள். இப்படியெழுந்தவைதான் பவளக் கொடிமாலை, அல்லியரசாணி மாலை, மின் னுெளியாள் கதை, புலந்திரன் மாலை, ஏணி யேற்றம் முதலியனவெல்லாம். மகாபாரதக் கதையை வைத்துக்கொண்டு தாங்க ளாகவே புதிய கதைகளைப் படைத்து மகா பாரதக் கதைகளோடினேத்தும் புலவர் கள் பாடியிருக்கலாம். இராமாயணக்கதை களு மித்த அம்மானைப்பாடல்களாக வெளி வந்தன. கம்ப இராமாயணத்திலும் வான் மீகி இராமாயணத்திலும் வழங்காது நாட்டில் வழங்கும் கதைகளே இங்குப் பார்க்கலாம். சதமுக ராவணன் கதை, சக சிரமுகராவணன் கதை, மயிலிராவணன் கதை இப்படிப்பட்டவை. இவற்றுளெல் லாம் எவ்வளவு பழஞ்சரக்கு, எவ்வளவு புதுச்சரக்கென்று ஆராய்வது அந்தக் காலத்தைப்பற்றி அறிவதற்கு உதவலாம்.
இலக்கியக் கதை :
இலக்கியக் கதைகளுங்கூட இந்த வழியில் வெளிவந்தன. கோவலன் கதையை இதற்கு எடுத்துக்காட்டலாம். அந்தக் கதையின் பெயரே கோவிலன் கதை என மாறிவிட்டது. இதிலிருந்து இதனை இலக்கண இலக்கிய அறிவில்லாதா ரொருவர் பாடினுரென்பது தெரிகிறது. அங்கே மாதவி பணம்பறிக்குக் தேவடியா ள்ாகிருள். கண்ணகி காளியாக மாறுகிருள்.

Page 66
5.
அந்தக்கால மக்கள் எதனே விரும்பினுர்க ளென்பது இவற்றையெல்லாம் ஆராய்க் தால் தெரியவரும், நரகக்கதை :
நம்முடைய நாட்டிற் கீழ்நாட்டுத் தொடர்பாற் சீனர்கள் போல நரகங்களை மனங்குழம்பும்படி வருணிப்பது வழக்க மாகிவிட்டது. கருடபுராணம் அப்படிப் பட்டது. அருணைபுராணம் முதலியவற்றிலு மிதனேக் காணலாம். இந்தக்கதைப் பாடல் களிலும் சித்திரபுத்திரன் கதை, மார்க் கண்டேயன் கதை முதலியன, இந்தப்பாங் கிலுஞ் செல்லும், வாய்மொழிக் காப்பியம் :
ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளாக இந்தப் போக்குத் தமிழ்நாட்டில் வளர்ந்து வந்திருக்கிறது. இன்னமும் ஊர்ப்புறங்க ளில் இவை மக்களுள்ளத்தைக் கவர்கின் றன. வாய்மொழிக் காப்பியங்களென்று ஒருவகைக் காப்பியம் ஐரோப்பாவிலுங்கூட உருசியா முதலிய நாடுகளில் வழங்கி வக் தது. இதனைக் கவிஞர்கள் ஆசுகவியாகப் பாடுவார்கள். அப்படி விரைந்து பாடுவது முடியுமாவென்று கேட்கலாம். பல சொற் ருெடர்கள், பல வருணனை யமைப்புக்கள் மனப்பாடமாக இருப்பதாற் சந்தர்ப்பத்திற் கேற்றற்போல அவற்றை அடிக்கடி பயன் படுத்திக் கொள்வார்கள். பழங்காலத்திற் கதை, வருணனே முழுவதும் புதிதாக இருக்க வேண்டுமென்று மக்கள் எதிர் பார்க்கவில்லே. பழைய அடிகளைப் பொன்னேபோலப் போற்றுவதைத்தான் அவர்கள் புகழ்ந்து வந்தார்கள். மாருத உலகில் வாழ்ந்த அந்தக்காலத்து மக்கள் அந்த மாருத கிலேமையையே தங்கள் காப்பியத்திலும் எதிர்பார்த்தார்கள். ஒரு கதைபோல மற்ருெரு கதை, ஒரு வருணனே போல மற்ருெரு வருணனை, ஒரு சொற் ருெடர்போல மற்ருெரு சொற்ருெடர் அமைவதை ஒருபோகு அமைப்பு (Parallelism) எனலாம். ஒரு செய்யுளின் சந்தம் போல மற்ருெரு செய்யுளின் சந்தம் அமைவதைப் பாராட்டுவதுபோல இந்தக் கதைச் சந்தங்களையும் அவர்கள் பாராட்டி ஞர்கள். எனவே வாய்வழிக் காப்பியத்தை ஆசுகவியாகத் தாமாகவே பாடுவது
ہے پورے |
 

எளிதாயிற்று. 5ம் நாட்டிற் பூசாரிகளு கூடப் பழைய பாடல்வரிகளே மனம்பாடஞ் செய்துகொண்டு தாமாகவே பாடுவதை இன்னும் பார்க்கிருேம்,
இந்தக் கதைகளைப் பாடும்போது பலருந் தங்கள் தங்களுக்கேற்ற வகையிற் பாடுவதாற் பல வேறுபாடுகள் கான லாம். இப்படி மாகபுராண அம்மானை என் பது ஒரு பிரதிக்கும் மற்றெரு பிரதிக்குக் தொடர்பேயின்றி யிருப்பதைப் பார்க்கி ருேம். எனவே, இந்த அம்மானப் பாடல் களிற் பெரும்பாலானவை இப்படி வாய் வழிக் காப்பியங்களாக வளர்ந்திருக்கலாம். எனவே இவற்றை ஆராய்வது வாய்வழிக் காப்பியத்தைப்பற்றி நாமறிவதற்குதவும் நாவலின் முன்னுேடிகள் :
நம்முடைய நாட்டில் நாவல்கள் வெளி வருவதற்குமுன் இப்படிப்பட்ட கதைகளைத் தான் மக்கள் விரும்பிவந்தார்கள். அச்சுப் புத்தகங்கள் வெளிவரும் வரையில் உரை நடையிற் கதைகளெழுவது அருமையாக விருத்தது. அதனுலேயே கதைகள் பாடல் களாக வழங்கின என்றுகூடக் கூறலாம். நாவலுங் கதைகளும் வெவ்வேறு இலக் கிய இனத்தைச் சேர்ந்தவை; ஆனுலும் நம்முடைய நாட்டில் காவல்களுக்கு முன் னுேடிகளாக இந்தக் கதைகள் அமைக் திருப்பதை ஆராயவேண்டும். இலங்கையிலும் :
இலங்கையிலுங் கண்ணகியின் காவி யம் இத்தகைய கதைப் பாடலாகவே வழங்கி வந்துள்ளது. இதனே அண்மை யில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். இந்தக் கதை இன்னுமெத்தனையோ வகை யில் வழங்கக் காண்கிருேம். கண்ணகி வழிபாட்டைக் கயபாகு இலங்கைக்குக் கொண்டுபோனதாகச் சிலப்பதிகாரமும், இராசவாளியுங் கூறுகின்றன. பத்திணித் தெய்யோ என்று சிங்களவர்களுங் கண் ணகியை வணங்கி வருகிறர்கள். பத்தினித் தெய்யோ கதைப் பாடலுஞ் சிங்களத்தில் வழங்குகிறதாம். எனவே தமிழிலங்கையில் வழங்குங் கதைப் பாடல்களையும் ஆராய் வது சுவையுடையதாகும் பயனுடைய தாகும்.

Page 67
ஈழததுப பள
பண்டிதர் தங்கம்
பழந்தமிழிலக்கியங்கள் கல்வியறிவு மிக்கார்க்கே பயன்படக்கூடியன ; உயர்ந்த மொழிநடையி லமைந்தன. கல்வியறிவு அதிகமில்லாத பாமரமக்களறிக் தனு பவிக்கத்தக்க பண்டை இலக்கியங்கள் மிகக்குறைவு. ஆணுற் காலஞ்செல்லச் செல்லப் பாமரமக்களாடிப் பாடுதற்கேற்ற பள்ளு, குறவஞ்சி, கொண்டி நாடகம் முதலான சிற்றிலக்கியங்கள் தோன்ற லாயின. இவை, தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கதைபோலக் கூறுவன பதினேழாம் நூற்ருண்டு தொடக்கம் சிற்றிலக்கியங்கள் சிறப்புற்று எங்கும் பரவலாயின. உரை யாடியும், விவரித்துக் கூறியும், புனேக் துரைத்தும், கட்டுரைத் துஞ் செய்யுள் வடிவத்திலே சிற்றிலக்கியங்கள் தோன் றின. இவற்றைப் பாமரமக்கள் பெரிதும் விரும்பி ஆடியும் பாடியும் கேட்டும் மகிழ்ந்தனர்.
இச் சிற்றிலக்கியங்களுள் உழத்திப் பாட்டு என்பது மொன்று. இதனிலக்கணத் தைப் பன்னிருபாட்டியலிற் காணலாம்.
* புரவலர் கூறி
யவன் வா ழிய வென் ற கல்வயற் ருெழிலே
பொருமை யுணர்ந்தன ளென வரு மீரை ந்
துழத்திப் பாட்டே' என்பது அந்நூற்பா. இவ்வுழத்திப்பாட்டே பிற்காலத்திற் பள்ளு என்னும் பெயரால் வழங்கப்படலாயிற் றென்பது நவநீதப் பாட்டியலால் தெரியவருகிறது. உழத்திப் பாட்டாகும் பள்ளு மென்பர் என்று ருவ கீதப் பாட்டியல் கூறுவதாற் பள்ளும் உழத்திப் பாட்டும் ஒன்றேயென்பது வெளிப்படை பத்தொன்பதாம் நூற்றண்டி னிறுதியிலெழுந்த செய்யுளிலக்கணம் என்ற நூல் உழத்திப்பாட்டிற்குரிய இலக்
 
 
 
 
 
 
 
 
 

ருப் பிரபந்தம்
ா அப்பாக்குட்டி
கணங்களைத் தொகுத்துக் கூறியுள்ளது. இன்று நாம்காணும் பள்ளுப் பிரபந்தங் களின் அமைப்பே ஆண்டுக் காணப்டுவ தாலும் இவ்வுண்மை பெறப்படும்.
பள்ளரின் வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுமிலக்கிய வகையே பள்ளு ஆகும். பள்ள ரென்போர் பள்ளமான நிலத்திற் (மருதம்) பயிர்செய்து வாழ்வோராவர். இது பள்ளத்தி பள்ளன் எங்கேடி போட் டான் என்ற ஆண்டையின் கேள்விக்குப் பள்ளம் பார்த்துப் பயிர் செய்யப் போட் டான் என்று பள்ளி கூறியதனுற் புலனுகும். ஆகவே, பள்ள நிலத்திற் பயிரிடும் பள்ள ரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் நூலுக்குப் பள்ளு என்ற பெயர் ஆகுபெயராய் வந்த தெனலாம்.
ஆரம்பகாலத்தில் மன்னர் அல்லது வள்ளல்கள் புகழ்பாடி ஊடே உழவின் பெருமையை எடுத்துக்கூறுவது பள்ளுப் பாடல்களின் இயல்பாக இருந்திருக்க வேண்டுமென்பது மேற்போந்த " புரவலர் கூறி. என்ற நூற்பாவால் விளங்கும். பின் கடவுளரைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு அவர்களின் அருட் டிறமையை யெடுத்தோதும், தேவபாணி யாய்த் தெய்வ வாழ்த்துக் கூறுமிலக்கியங்க ளாகவும் மலர்ந்தன எனலாம். இப்பிர பந்தம் சிந்தும், பல்வகை விருத்தங்களும் விரவிவரப் பாடப்படும் மரபினையுடைய தென்பது.
ஒவ்விய சிந்து விருத்தம்
விர விவரத் தொடர்பு செவ்விதிற் கிளந்து பாடுவ
துழத்திப் பாட்டாகும். ' என்ற நவநீதப்பாட்டியற் பகுதியால் விளங்கும். கடவுள் வணக்கம், முறையே முத்தபள்ளி, இளைய பள்ளி, குடும்பன் (பள்ளன்) வரவு, அவன் பெருமை கூறல்,

Page 68
- 5
முறையே அவர் வரலாறுகூறல், நாட்டு வளங்கூறல், குயிற்கூக்கேட்டல், மழை வேண்டிக் கடவுட்பரவல், ஆற்றுவரவு, அகப்பொருட்டுறை கூறல், பண்ணேத் தலைவன் வரவு, பள்ளிகளிருவர் முறை யீடு, இளையாளை யவனுரப்பல், பள்ளன் வெளிப்படல், பண்னேச்செயல் வினவல், அவனது கூறல், ஆயர் பெருமை கூறல், மூத்தபள்ளி முறையீடு, குடும்பனத் தொழுவில் மாட்டல், அவன் புலம்பல், மூத்தபள்ளி அடிசிற் கொடுவரல், அவன் அவளோடு கூறல், அவள் அவனே மீட்க வேண்டிப் பண்ணைத்தலைவனப் பரவல், உழவருழல், நாற்றுகுடல், விளைந்தபின் செப்பஞ் செய்தல், நெல்லளத்தல் முதலிய உறுப்புக்கள் கொண்டதாகப் பள்ளு அமைந்திருப்பதை நாம் காணலாம்.
முக்கூடற்பள்ளு, மன்னர் மோகனப் பள்ளு திருவாரூர்ப்பள்ளு, திருமலை முரு கன் பள்ளு, வைசியப்பள்ளு, குருகூர்ப் பள்ளு, கண்ணுடையம் மை பள்ளு, வட கரைப்பள்ளு, வையாபுரிப்பள்ளு போன்ற பல பள்ளுப் பிரபந்தங்கள் தமிழ்நாட்டிற் ருேன்றியுள்ளன. கும் ஈழமண்டலத்திலும் பலவகைப் பள்ளுக்கள் தோன்றியுள்ளன. கதிரைமலைப்பள்ளு, ஞானப்பள்ளு, பருளைப் பள்ளு என்பன தேவபாணியாய் முறையே கதிர்காமமுருகன், ஏசுநாதர், பருளை விநாயகர் ஆகிய கடவுளரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டன. தண்டிகைக் கனகராயன் பள்ளு மானிடனுெருவனேப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டது.
மேலே காட்டப்பட்ட பள்ளுக்களிற் காலத்தால் முந்தியது கதிர்காமத்திலுவக் துறையும் முருகனேப் பாட்டுடைத் தலைவ ணுகக் கொண்ட கதிரைமலைப் பள்ளே யாகும். முக்கூடற்பள்ளே முதலிற் றேன் றியதென்றும் அது கிறித்துவுக்குப்பின் ஆயிரத்தறுநூற்றெண்பதாம் ஆண்டிற் ருேன்றியதென்றும் திரு. மு. அருணுசலம் கூறுகின்ருர், ஆணுல் மேலே கூறப்பட்ட ஞானப்பள்ளு ஆயிரத்தறுநூற்று காற்பத்தி

ரண்டாமாண்டளவிற் தோன்றியதென அறிஞர் காலவரையறை செய்துள்ளனர். பன்மொழிப் ւյ606)յուն බෂිණirīණිg j ගjගr. ஞானப்பிரகாச அடிகளார், கதிரைமலைப் பள்ளிலுள்ள பலவடிகளே ஞானப்பள்ளு ஆசிரியர் எடுத்தாண்டுள்ளாரென்றும், கதிரைமலைப்பள்ளு அதற்கு மிகவும் முற். பட்டதென்றும் கூறுகிருர், மேலும் முக் கூடற்பள்ளே அடியொற்றியவையாக ஏனைய பள்ளுகளிற் பல காணப்படக் கதிரைமலைப்பள்ளில் அதனுட்சி காணப் படாமையாற் கதிரைமலைப்பள்ளு முந்திய தென்பது தெளிவு. கதிரைமலைப்பள்ளினே இயற்றினர் யாரென்பது இன்னமும் புல கைவில்லை. கதிர்காமத்தலச் சிறப்பும், பாட்டுடைத்தலைவர் சிறப்பும் பள்ளுப் பிரபந்தத்திற்குரிய முத்தமிழ்ச் சிறப்பும் ஒருங்கமைய இந்நூல் இயற்றப் பெற்றுள் ଔT3] , அன்னுர் முருகவேள்மீது மிகுந்த பத்தி புடையவரென்பதற்குப் பல சான்றுகள் நூலிலே உண்டு. அன்றியுங் கற்போருக்கு நகைப்பூட்டும் விகடக் கருத்துக்களேயும் இச் சிற்றிலக்கியத்திற் பரக்கக் காணலாம்.
பள்ளனைப் பண்ணைத்தலைவன் மாட்டுத் தொழுவத்திற் கட்டிவைக்கின்றன். மூத்த பள்ளி அவ்விடத்திற்கு வருகின்ருள். தன் தலைவனைக் கட்டுண்ட நிலையிற் காண்கின் ருள். பள்ளன் தன் மனையாளை ஆண்டை யிடம் வேண்டித் தன் கட்டை அவிழ்த்து விடும்படி இரக்கிருன்
' கன்னி யாக வுனே க்கைப் பிடித்துநான்
கண்ணைப் போலக் கருதி நடந்தேன் முன்னை வல்வினை யாலே புனேவிட்டு
மோச மாக அவளிடஞ் சென்றேன் அன்னே பின்ம்னே யாளென்றெ வர்க்கும் அவனி யோர் சொல்லு மப்படிப் போல என்னை நீருங்க ளாண்டைக்குச் சொல்லி
இருகைகூப்பிவிடுவித்துக்கொள்ளும் என்று பள்ளன் இரந்து பாடுகிருன் தன் னேப் புறக்கணித்து இளைய பள்ளியோடு வதிகிருனே என்பதால் ஏற்பட்ட கோபம்

Page 69
மாறி அவனிடம் அன்பு படிப்படியாகத் தழைக்கின்றது. பண்ணேத் தலைவனிடம் ஓடுகின் ருள். தனது ஆண்டையை வணங்கி,
*" காண வேடரைக்
கண்டுநின் ருங்கே
வளர்ந்தொரு வேங்கை தானதாய் நின்ற
தென்கதி ரைப்பதிச் சண்மு கன் குகன்
தன் பண்ணை தன்னிற் போன மாடுங்
கலப்பை நுகமும் பொதுக்கில் லாமலே
நானுெப்புத் தாறேன் ஆன செந்நெற்
பயிர்செய்து தாறேன் அடியேற் காக
விடும்பள்ள ணுரை. '
ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனுர் செய்யுளுக்குரிய வனப்புகளிற் புலனு மொன்றெனப் பேசுகிருர்
*" சேரி மொழியாற்
செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது
குறித்தது தோன்றிற் புலனென மொழிய
புலனுணர்ந் தோரே " என்ற நூற்பாவிற் சேரிமக்கள் பேசும் வழக்கச் சொல்லினுலே தொடுக்கப்பட்டு ஆராயவேண்டாமற் பொருள் தோன்று வதும் ஒரழகென்று விளக்குகின்ருர், இத்தகைய அழகு கதிர்ைமலைப் பள்ளில் நிறைந்திருக்கக் காணலாம்.
* உப்பில்லாக் கஞ்சி
காய்ச்சச் சொன்னேனுேடி ஊரெல்லாங் கொண்டு
உலாத்தச் சொன்னேனுேடி', ** இப்படிக் கொத்த
நாடங்கப் பள்ளனுக்(கு) எப்படிக் கஞ்சி
காய்ச்சுவே னுண்டே', 8 صے LJ
 
 
 
 
 

" சப்புச் சவரென்று
நினைத்தாயோ அல்லி சாட்டு மூட்டுக்குச்
சாய்வேனுே பள்ளி'. என வருமடிகளில் பள்ளுக்குயிரான பள்ளர் பேச்சினைக் காண்கின்ருேம். ஏனைய பள்ளுக்களிலும் இவ்வனப்பினை நாம் பரக்கக் காணலாம்.
இன்று நமக்குக் கிடைக்கும் பள்ளுக் களுட் கதிரைமலைப் பள்ளுக்கு அடுத்த படியாகத் தோன்றியது ஞானப்பள்ளு ஆகும். இப்பள்ளு யாழ்ப்பாணத்திலே போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தே யாக் கப்பெற்றது. பாடியவர் பெயர் இதுவரை அறியப்படவில்லை. இந்நூல் ஆயிரத்துத் தொளாயிரத்து நாலாமாண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
' பொன்னு பரன் கொலுவும்
பூதலமு மாகிமுதற் றன்னுலே தானுகுங் தற்பரற்
- கென்னுளுஞ் செந்தமிழாற் பள்ளிசைத்
தேனுலகிற் பாடுதற்(கு) அந்தமிலான் தானே யருள் " என்ற கடவுள் வணக்கப் பாடலாற் பள்ளு என்பதே இச்சிற்றிலக்கிய வகையின் பெயரென்பது புலனுகும். இப்பள்ளு ஏசு நாதரைப் பாட்டுடைத்தலே வராகக் கொண் டது. கிறித்துவப் பெருமை பேசுவது. கதிரைமலைப்பள்ளு, பருளைப்பள்ளு என்ப வற்றில் வரும் முத்த இளைய பள்ளியர் முறையே ஈழ, பாரத காட்டினராக இருக்க, இப்பள்ளில் வரும் பள்ளியரோ செருசலே (Jerusalem), உரோமானுபுரி (Rome) நாட்டினராக இருப்பது கவனிக்கத்தக்கது.
a ↔ • • • *** • ↔ ↔ s • • ↔ ↔ @ • • ↔ @ • • • • @ •
தேவ லோகந்
திறந்துமுன் காட்டுஞ்
செருச லைத்திரு
நாடெங்க ணுடே'.
என்று செருசலேப் பள்ளியும்,

Page 70
உண்டு நன்மையிங்
கேதா னென்ருேது முரோமா னு புரி
நாடெங்க ணுடே'. என்று உரோமானுபுரிப் பள்ளியுந் தம் நாட்டுவளங் கூறுவது காணலாம்.
இதனேத் தொடர்ந்து, ஆயிரத்துதெழு நூற்றெண்பதா மாண்டளவில் வாழ்ந்த கவிஞரான சின்னத்தம்பிப் புலவராற் பருளை விநாயகர் பள்ளு இயற்றப் பெற்றது. யாழ்ப்பாணத்துள்ள சுழி புரத்துப் பருளைவிகாயகரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது இந்நூல்.
இப்பள்ளுப்பிரபந்தத்தில் மீனின்
வகைகளும், மாட்டின் வகைகளும், நெல் லினங்களும், பள்ளியரின் பெயர்களும், ஆண்டையைப் பள்ளிகள் சிறப்பித்துப் பேசும் முறையும் படிப்போர்க்குச் சுவை யூட்டுவன. தூண்டிலிட்டார்க்குப் பார மெல்லாம் மிதப்பிற்கண், அடாதன செய் தார் படாததெல்லாம் படுவார்கள், கண் னிலே கரந் தீண்டிவிட்டாலந்தக் கைவிரல் தறிப்பார்களு முண்டோ, அடியாத மாடு படியாது என்ற பழமொழிகளையும், 'ஒறுத்த தாற்பய னென்பொறுத் தாருக்
குலக முள்ளள வும் புக ழென்றே மறுத்த விர்ந்திடு வள்ளுவ னுர் சொன்ன
மான வெள்ளைக் குறளறி யீரோ " என்ற குறளினேயும் பள்ளனும் பள்ளியுங் கூறும்போது யாழ்ப்பாணக் கிராமமொன் றில் அவர்களது உரையாடலேக் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வேற்படு கின்றது.
பருளைப் பள்ளேத் தொடர்ந்து ஆயிரத் தெழுநூற்றுத் தொண்ணுரறில் எழுந்த மற்றேர் பள்ளுத் தண்டிகைக் கனகராயன் பள்ளு. இதனைப் பாடியவர் பரவைச் சின்னக்குட்டிப் புலவர். இந்நூலின் பாட் டுடைத்தலைவர் கனகநாயக முதலியா

8 -
ராவர். எனினும் அவரின் சுற்றத்தார் எல்லோருக்கும் நூலே உரிமைப்படுத்து வதற்காக இவர்களின் முன்னுேனும், கிறித் துவுக்குப்பின் பதின்மூன்ரும் நூற்றண்டில் வசித்தவருமான தண்டிகைக் கனகராய முதலி என்பாரின் பெயரே இந் நூலுக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. கபிலர், பாரி குடும்பத்தில் அன்பு பாராட்டியது போலச் சின்னக்குட்டிப்புலவர் கனகநாயக முதலி குடும்பத்தில் அன்பு பாராட்டி வாழ்ந்தார். மழை பெய்தல், குயில் கூவு தல் என்ற பகுதிகளை இயற்கையோடு பின்னி அழகாகப் பாடியுள்ளார்.
' வெள்ளித் திரளிற் றுள்ளிக் குதித்து வீங்கி ஓங்கித் தேங்குநீர் வேகத் துடனே நாகப் பொருப்பை வெருட்டிச் சுருட்டி மருட்டியே ' என்னும் பாடலில் வெள்ளம் பாய்ந்து செல்லுந் தன்மையைக் காட்டியுள்ளார். இந்நூலிற் சைவசித்தாந்தக் கருத்துக்களும் ஆங்காங்கு மிளிர்ந்து நூலுக்கழகு செய் கின்றன. இவற்றைவிடப் பன்றிப்பள்ளு, சாலிப்பள்ளு என்னும் பள்ளும் வன்னி நாட்டிலே வேளாண்மை செய்வோரால் இப்போதும் பாடப்பட்டு வருகின்றது.
* மெல்ல மெல்ல நன்னி நன்னி
தின்னுங்கோ-மக்காள் மக்காள் வெய்யில் அதிக மென்றற்
கேளுங்கோ-மக்காள் மக்காள் வேலிக் குப்புறத் தாலே நின்று
துரங்குங்கோ-மக்காள் மக்காள்" என்ற பாடல் பன்றிப் பள்ளில் அமைந் துள்ளது.
பள்ளுக்களும், நாட்டுப் பாடல்களுமே கல்வியறிவற்ற பாமரமக்களுக்குக் களிப் பூட்டுவனவாகும். எமது காட்டின் பண் பாட்டை விளக்கும் இவ்வேடுகளே அச்சு வாகனமேற்றி மக்களின் கரங்களிலும் நாவிலும் பயிலவைப்பது கமது தலையாய கடனுகும்.

Page 71
இருபெயரொட்டாகுபெயரு
வித்துவசிரோமன
இருபெயரொட் டாகுபெயரும் அன் மொழித் தொகையும் ஒன்றென்பாரும் வேறென்பாருமாக உரையாசிரியர்கள் பல திறப்பட உரைக்கின்றனர். அவை ஒன்ரு? வேரு ? என்பதைக் கற்போர்க்கு உணர்ச்சி பெருகும்படி ஆராய்ந்து காட்டுதும். உரை யாசிரியர் கருத்துக்களே முன்னர்த்தருதும்.
* முதலிற் கூறும்
சினையறி கிளவியும் சினையிற் கூறும்:
முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும்
பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங்
கிளவியொடு தொகைஇ அனயமர பினவே
ஆகுபெயர்க் கிளவி ??
என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்துள் வரும் இரு பெயரொட்டு என்பதற்கு இளம் பூரணர் இரண்டு பெயரொட்டி கிற்பது ; அது சொல்லப் பிறிது பொருள் விளக்கும். அது வருமாறு பொற்ருெடி' என்பது இரு பெயர் நின்று ஒட்டிற்று. அது சொல்ல, பொற்ருெடி தொட்டாஜ விளக்கும் என உரைத்தனர்.
சேனவரையர், பொற்ருெடி வந்தாள் என இருபெயரொட்டு அன்மொழிப் பொருண் மேலும். வந்தவாறு கண்டு கொள்க’ என உரைத்து, அகலவுரை யுள், ! அன்மொழித் தொகை எச்சவிய லுள் உணர்த்தப்படுதலின், ஈண்டு கூறல் வேண்டாவெனின், அன்மொழித் தொகை தொகையாகலுடைமையின் ஆண்டுக் கூறி னர். இயற்பெயர் ஆகுபெயரெனப் பெய ரிரண்டாய் அடங்கும்வழி ஆகுபெயர்ப்
 
 
 
 

ம் அன்மொழித்தொகையும்
দৃষ্টি গ্রুই, & 660াগতে ৪-uাঁ
பட்டதன் மேலும் வந்தவாறு கண்டு கொள்க. அன்மொழித் தொகை எச்ச வியலு ஞணர்த்தப்படும். அதனுல் அவ் வாகுபெயராதலுடைமைபற்றி ஈண்டுக் கூறினுர், எச்சவியலுட் கூறப்பட்டவர் யினும் வினையெச்ச முதலாயின வினைச் சொல்லாகலும் இடைச் சொல்லாகலு முடைமையான் அவற்றை வினையியலுள் ளும் இடையியலுள்ளும் கூறியவாறு போல என் பது ' என உரைத்தனர். ருச்சினுர்க்கினியர், * அன்மொழிப் பொருண் மேனில்லாத இருபெய ரொட்டும்’ என்றுரைத்து, மக்கட்சுட்டென இரண்டு மில்லாததோர் பொருளே புணர்த்தாது மக்களே உணர்த்திற்று. பொற் ருெடி அன்மொழி; ஆகு பெயர் அன்மை யுணர்க, என உரைத்தனர்.
தெய்வச்சிலையார் இரு பெயர் தொ க் கு ஒரு சொன்னீர்மைப்பட்டு, மற்றெரு பொருள் தரு பெயராகிவருவது. அது துடியிடை யென்பது, துடி போன்ற இடையினை யுடையாளைத் துடியிடை என்பவாகலின் ஆகுபெயராயிற்று. இஃது உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்ருேவெனின், ஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்ட உருபு; அன் மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டுவரும். அன்னதாதல் அன் மொழி என்பதனுணும் விளங்கும். அத ணுனன்ருே ' பண்பு தொகை வருஉங் கிளவியானும். ஈற்று நின்றியலு மன் மொழித் தொகையே ? என ஒதுவா ராயிற்று.

Page 72
அனயமரபினென்றதனுல் ஈண்டு ஒதப்பட்டனவற்றுள், அடை அடுத்துவரு வனவுங் கொள்க. தாழ்குழல்' என்ற வழி அதனையுடையாட்குப் பெயராகி வருதலின் ஆகுபெயராயிற்று. இது வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்ருேவெனின், ஆண்டு எடுத் தோதாமையானும் பொருள் ஒற்றுமைப் படுத்தலானும் ஆகாதென்க.
இனித் தெய்வச்சிலையார் அன் மொழித் தொகைச் சூத்திரத்திற்குரைத்த உரையும், இதற்கு வேண்டுமாகலின் அதனேயும் ஈண்டுத் தருதும்.
* பண்பு தொக வரூஉங்
கிளவி யானும் உம்மை தொக்க
பெயர் வயி னு னும் வேற்றுமை தொக்க
பெயர் வயி ஞனும் ஈற்றுநின் றியலு
மன்மொழித் தொகையே " என்பது குத்திரம். இதற்கு அவருரை வரு ԼDITU) Հ
இ-ள் : பண்பு தொகவரும் பெயர்க் கண்ணும் உம்மை தொக்க பெயர்க் கண்ணும் வேற்றுமை தொக்க பெயர்க் கண்ணும் இறுதி. அன்மொழித் தொகை. எ-று.
அல்லாதமொழி தொகுதலின் அன் மொழித்தொகையாயிற்று. இம்மூவகைத் தொகையினும் ஈற்று கின்றியலும் என்றத னுன் முன்னும் பின்னும் என்னும் இரண்டினும் உணரப்படு பொருண்மை புடைத்து அன்மொழித் தொகை என்று கொள்க. உதாரணம்: கடுங்கோல் பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை கடுமையும் கோலும் அரசன்மேல் நிற்றலின் அன்மொழி.
தகர ஞாழல் உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்தது ; தகரமும் ஞாழலும் சாந்தின் மேன் கிற்றலின் அன்மொழி. * தூணிப்பதக்கு இரண்டும் பொருள் மேனிற்றலின் அன்மொழி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) -
பொற்ருெடி பொன் தொடிக்கு விசேடணமாயினும் உடையாளது செல் வத்தைக் காட்டலின் அன்மொழி.
இனித் துடியிடையும், தாழ்குழலும் என்பவற்றில் முன்மொழி அடையாய் வருவதல்லது அன்மொழியை விசேடி யாமையின் ஆகுபெயரன்றி அன்மொழி ஆகா என்றர்.
இனிச் சிவஞான முனிவர் ஆகுபெயர்க் கும் அன்மொழித்தொகைக்கும் வேறுபாடு கூறுவதும் ஈண்டுக் காட்டவேண்டுதலின் அதனேயும் காட்டுதும் : -
அற்றேல் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம் பொருளுணர்த்தாது பிறிது பொருளுணர்த்துதலான் ஒக்கு மாகலின், அவை தம்முள் வேற்றுமை யாதோவெனின், ஆகுபெயர் ஒன்றன் பெயரானதனுே டியைபுபற்றிய பிறிதொன் றன யுணர்த்தி ஒருமொழிக் கண்ணதாம். அன்மொழித் தொகை இயைபு வேண் டாது இருமொழியும் தொக்க தொகை யாற்றலாற் பிறிது பொருளுணர்த்தி இரு மொழிக் கண்ணதாம். இவை தம்முள் வேற்றுமை என்க.
இருபெயரொட்டாகுபெயர் இரு மொழிக்கண் வந்த தன்ருேவெனின், அன்று. என்ன ? வகரக்கிளவி அது வாகுகிளவி, மக்கட்சுட்டு என்னும் இரு பெயரொட்டாகுபெயருள், வகரமும், அது வாதலும் மக்களுமாகிய அடைமொழிகள், கிளவி, சுட்டு என்னும் ஆகுபெயர்ப் பொருளே விசேடித்து நிற்பக், கிளவி, சுட்டு என்பனவே, ஆகுபெயராய் அப் பொருளை யுணர்த்த இருபெயரொட்டி நிற்குமாகலின், இனிப் பொற்றெடி ? என்னும் அன்மொழித் தொகையில் பொன்’ என்பது அவ்வாறு அன்மொழித் தொகையை விசேடித்து கில்லாது, தொடி யினேயே விசேடித்துநிற்ப, அவ்விரண்டன் தொகையாற்றலான் அன்மொழித்தொகை
பொருளே யுணர்த்துமாறறிக.

Page 73
இங்கே காட்டிய உரைகளுள், உரை யாசிரியருரையும் சேணுவரையருரையும், தம்முள் ஒத்த கருத்தினவாயும், மற்றைய மூவருரையும் ஒத்த கருத்தினவாயும் காணப் படுகின்றன. எனினும், தெய்வச்சிலையா ருரையினும் சிவஞானமுனிவருரையினும் ஒரு வேறுபாடு காணப்படுகின்றது. அது, தெய்வச்சிலையார் இருபெயரொட்டு ஆகு பெயர்க்குச் சொன்ன இலக்கணம், சிவ ஞான முனிவர் அன்மொழித்தொகைக்குச் சொன்ன இலக்கணமாயும், தெய்வச்சிலை யார் அன்மொழித்தொகைக்குச் சொன்ன இலக்கணம் சிவஞான முனிவர் இருபெய ரொட்டாகுபெயர்க்குச் சொன்ன இலக் கணமாயும் மாறி கிற்றலே. இவ்வேறு பாட்டை நோக்கும்போது இவர்கள், இரு பெயரொட்டாகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் ஏதோ வேறுபாடு கூறி விட வேண்டு மென்று கருதித் தத்தங் கருத்திற் பட்டதைக் கூறிவிட்டதேயன்றி உண்மைநோக்கிக் கூறிற்றிலர் என்பது புலனுகின்றது. இவ்விருவருரையையும் நோக்கும்போது பெரிய நகைப்புக்கிட மாகின்றது. இனித் தெய்வச்சிலேயாரும் சிவஞான முனிவரும் தாங்காட்டிய உதாரணங்களேயும் நுனித்து நோக்காது, ஆகுபெயர், பொருளோடு ஒற்றுமை யுடையதாய் வரும், அன்மொழி அங்ங்ன மின்றி வரும் என்று கூறினர்.
தெய்வச்சிலேயார் தகரஞாழல் என் பதில் தகரமுஞாழலுமாகிய இரண்டும் சாந்தின் மேனிற்றலின் அன்மொழித் தொகையென்றர். அங்ங்னமாயின் தகர மும் ஞாழலும் கூடியதே சாக்தாதலின் அம்மொழிப்பொருளோடு இயைபுடைய தன்றெனக் கூறல் எவ்வாறு பொருந்தும் ? கடுங்கோல் என்னும் பண்புத்தொகை யில் வரும் அன்மொழியில், கோலுக்கும் அரசனுக்கும் ஒற்றுமையின்றேனும் கருங் குழல் முதலிய பண்புத்தொகையில் வரும் அன்மொழியில் ஒற்றுமை காணப் படுகின்றதே? அங்ஙனமன்று, கருமை குழலுக்கன்றிப் பொருளுக்கு விசேடண
 
 

-
மன்மையின், இன்னுேரன்ன அன்மொழி யாகாது இருபெயரொட்டாகுமெனின் ; பண்பு தொகவருஉம் கிளவி யானும் என ஆசிரியர் கூறிய கியதி தப்புகின்றதே? இவற்றிற்கெல்லாம் தக்க சமாதானம் ஒன்றுமில்லையாகும். இன்னும் பொற்ருெடி என்பதில், பொன்தொடியை விசேடித்து நின்ற தென்பது வெள்ளிடை விலங்கல் போல் தெரிந்த தொன்ருகவும், தெய்வச் சிலேயார் இருமொழியும் அன்மொழிப் பொருளை விசேடித்து வருவதே அன் மொழித் தொகையெனத் தாம்கொண்டதற் கேற்பப் பொன்தொடியையேயன்றி உடை பாளையும் விசேடித்துச் செல்வமுடையா ளென்பதைக் காட்டி நின்றதென வலிந்து பொருள் கொள்கின்றனர். அங்ங்னேல், துடியிடை தாழ்குழல் என்பனவும் உடையா னது இலக்கணச் சிறப்பைக் காட்டிகின்ற தெனக் கூறலாமாதலின் அது பொருந்தா தென்பது. இவற்றில் அன்மொழிக்கும் ஆகுபெயர்க்கும் தெய்வச்சிலேயார் காட்டிய வேறுபாடு பொருத்தாமை யுணரப்படும்.
இனிச் சிவஞான முனிவரும், இயைபு வேண்டாது பிறிது பொருளுணர்த்திவரு வது அன்மொழித்தொகை யென்றனர். இவர் இங்ங்ணமுரைத்தற்குக் காரணம் வடமொழியில் அன்மொழித்தொகைகள் எல்லாம் சக்கியசம்பந்தமின்றியே தொகை யாற்றலால் அன்மொழிப் பொருளே உணர்த்து மென்றும், இலக்கணக்குச் சக்கியசம்பந்தம் வேண்டுமென்றும் பிர யோக விவேகநூலார் கூறியதை நோக்கிப் > போலும், நுணுகி நோக்குவோர்க்குத் தொகையாற்றலாற் பெறப்படும் அன் மொழிப்பொருளும் சம்பந்தம்பெற்று வரு கின்றது என்பது பெறப்படும். தொகை யாற்றலாற் பெறப்படும் என்று கூறிய பிர யோகவிவேகநூலாரே " தொல்காப்பியர் கூறிய ஆகுபெயரிலக்கணத்தைப் பாணினி முனிவர், தற்குண சம் விஞ்ஞான வெகு விரிகி, அதற்குண சம்விஞ்ஞான வெகு விரிகி, எனக் கூறுவர் ' எனக் லும் உணரப்படும்.

Page 74
- 6.
தற்குண சம்விஞ்ஞான வெகுவிரிகி, அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரிகி என்பவற்றிற்கு பாணினி சூத்திர உரை யில் வருவதையும் இங்கே தருகின்ருேம், (சர்வாதிநி, சர்வநாமாநி என்னுஞ் சூத்திர வுரையில் வருவது) தத்குணசம் விஞ்ஞான வெகுவிரிகி ; அன்மொழியின் விசேடண மொழிக்குத் தொழிலோடு சம்பந்தமுள்ள தாக அறிதல் எந்த அன்மொழியில் உண்டோ அது தத்குண. . @9fG。 அச்சம்பந்தம் சமவாயம் சம்யோகம் என்ற இரண்டானும் கொள்ளப்படும். இங்ங்ன மன்றி, உடைமை முதலிய பிறசம்பந்த முறுவது அதற்குணசம்விஞ்ஞான வெகு விரிகி அவற்றிற்குதாரணம் முறையே லம்பகர்ணுே பும்க்தே = துTங்குசெவியன் உண்கின்றன். இங்கே உண்பவனிடத்தில் தூங்குசெவிகள் சம்பந்தப்படுகின்றன. இது சமவாய சம்பந்தம் துவிவாசா : பும்க்தெ = இரு ஆ டையுடைய வன் உண்கின்றன். இதில் உண்பவனிடத்தில் இருஆடையும் சம்பந்தப்படுகின்றன. சை யோகசம்பந்தம் சித்திரகும்ஆருயதி = பல நிறம் பொருத்திய பசுக்களையுடையவனே அழைக்கிருன், இங்கே அழைத்துக் கொண்டு வருதலிற் சம்பந்தப்படுகிறவன் உடையவன். பசுக்கள் அவனுடைய பொருள். அவை அவனுேடு வருதலின்மை யின் வினையோடு சம்பந்தப்படுதலில்லை. செவி ஆடைகளுக்கு உண்ணுக் தொழி லிற் சம்பந்தமில்லையேனும் உண்பவனுேடு குறித்த சம்பந்தங்களினுலே சம்பந்தப்படு தல் பற்றித் தற்குணசம் விஞ்ஞான வெகு விரிகி எனப்படும் என்பது.
இங்ங்னங் கூறிய அன்மொழிப் பொருட் சம்பந்தத்தை கோக்கும்போது, அன் மொழிப் பொருள் தொகையாற்றலாற் பெறப்படுமேனும், ஆண்டு மியைபுடைய தோர் மொழியைப்பற்றியே பெறப்படும் என்பது பெறப்படும். அன்மொழிப் பொருட்கு இயைபு வேண்டாமென்ற சிவ ஞானமுனிவரும் சூத்திர விருத்தியில்,
* அற்றேல் ஆகுபெயர் விட்ட ஆகுபெய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரும் விடாத ஆகுபெயருமென இருவ யாய வாறுபோல, அன்மொழித் தொகை யும் விட்ட அன்மொழித் தொகையும் விடாத அன்மொழித் தொகையும் என இருவகைப்படும். வடநூலார் விடாத
அன்மொழித் தொகையைத் தற்குணசம்
விஞ்ஞான வெகுவிரிகி என்றும் விட்ட அன்மொழித் தொகையை, அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரிகி என்றும் கூறு வர். எனக் கூறுதலானும், அவ்வியைபும் ஆண்டுளதாதல் பெறப்படும். சிவஞான முனிவர் தற்குண. வெகுவிரிகிக்குக் காட்டிய உதாரணம் அகரமுதல. னகர வீறு, அகரவீறு, புள்ளியிறு என்பன அதற்குண. வெகுவிரிகிக்குக் காட் டிய உதாரணம் பொற்ருெடி வந்தாள்", ஒண்ணுதல் கண்டாள் என்பன. இவற் றுள் பின்னுள்ள இரண்டும் முறையே சம்யோக சம்பந்தமும், சமவாயசம்பத்த முடைய வாய் வருதலின் தற்குணசம் விஞ் ஞான வெகுவிரிகி ஆகின்றன. சிவஞான முனிவர் தொழிற்சம்பந்தமாத்திரம் நோக் கிக் கூறினர்போலும். அது பாணினிகுத் திரவுரையோடு மாறுபடுதல் நோக்குக. இம் மாறுபாட்டை நோக்கும்போது வட மொழியிற் சம்பந்தங்கொள்வாரும் தத்தங் கருத்துக்கேற்பக் கொண்டு உரைக்கின்ற னர் என்பது புலனுகின்றது.
இனித் தொல்காப்பியர் ஆகுபெயர்ச் சம்பந்தங் கூறிய “ தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலும் - ஒப்பில்வழியாற் பிறிது பொருள் சுட்டலும் ' என்னுஞ் சூத் திரத்தை நோக்கும்போது அவர் தொழிலி யைபை நோக்காது, ஆகுபெயர்க்கும் பொரு ளுக்குமே சம்பந்தங் கூறியதாகக் தெரி கின்றது. எங்ங்னமெனில் ஆகுபெயர் தம் பொருளோடியைபுடைய பொரு ளோடு பொருந்துதலும், தம்பொருட்கியை பில்லாத பிறிதுபொருள் சுட்டலும் என இயைபைப் பொருளோ டியைபுபடுத்திக் கூறினமையின், அன்றி வினேயோடு இயைபுபடுத்திக் கொள்ளப்படு மெனின் அதற்கேற்ற சொற்களான் விளங்கக்கூறி

Page 75
யிருப்பர்; அங்ஙனம் கூருமையிற் பொருட் சம்பந்தமே கூறிஞர் என்பது துணிபு. இதனை நோக்காது தொல்-சொல்-குறிப் பாசிரியரவர்கள் செந்தமிழ் தொகுதி 26, பகுதி-9, பக்கம்-424இல் சேணு வரையர் ஆகுபெயர்க்கு இயைபு கூறிய * தத்தம்சுட்டலும் ' என்னுஞ் சூத்திரத் துக்கு இலக்கணயை நோக்காது பொருள் கூறியது பொருத்தமன்றென்பது பொருந் தாது ; குறிப்பாசிரியரவர்கள் கிரியைச் சம்பந்தமே நோக்கிக் கூறலின்,
இனிச் சேனவரையர், 1 ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் ஒன்றெனவும், இயற்பெயர் ஆகுபெயர் எனப் பெயர் இரண்டாயடங்கும் வழிப் பொற்ருெடி என் பது ஒரு பெயர்ப்பட்டது. அதுவே அன் மொழித் தொகையாதலுமுடைமை எச்ச வியலுள்ளுங் கூறப்பட்டது' எனவுங் கூறினுர், அது வடநூல் விதியோடு மாறு படுதலானும், வடநூல் விதியோடு, மாறு கொள்ளாமற் கூறலே, ஆசிரியர் மேற் கோளென அதனினியறல் என்னுஞ் சூத் திரத்துத் தாமும் கூறினுராதலானும், அவர்க்கது கருத்தன்றென்க, எனச் சிவ ஞானமுனிவருரைத்தமையையும் ஆராய் 6.JTub.
முனிவர், வடமொழியோடு மாறுபடுத லானும் எனக் கூறியதற்குக்காரணம் அன் மொழித்தொகையாற்றலாற் பெறப்படும் சக்கியசம்பந்தம் வேண்டாமென்பது நோக் இயே தொகையாற்றலாற் பெறப்படும் அன்மொழிப் பொருளும் சம்பந்தமுடைய மொழிகளிடத்தேயே பெறப்படும் என்பது யாமு ன்னுரைத்தவாற்றற் பெறப்படுதலி னுலும், வடமொழியோடு மாறுபடாமற் கூறல், வடமொழிக்குத் தமிழ்மொழிக்கும் ஒத்தவழியன்றிப் பிறவழிக்கூறல் பொருந் தாமையானும், அவர் கருத்துப் பொருந் தாமையுணர்க. வடமொழியில் வரும் அன் மொழித்தொகை தமிழில் வரும் அன் மொழித்தொகை போலன்றித் தாம் எந்த எந்தப் பொருண்மேல் வருகின்றதோ அந்த
 
 
 

3 -
அந்தப் பொருட்குரிய லிங்கவிகுதியைப் பெற்று வருதலினுலே தமிழில் வரும் அன் மொழித்தொகையோடு வேறுபாடுடையது. எங்ஙனம் பெற்றுவருகின்றதெனின், வட மொழியிலே நீலகண்ட (நீலகண்டன்) என்பது, நீலகண்டத்தையுடையவன் என விரிந்து அன்மொழிப் பொருளேயுணர்த்து கின்றது. இங்கே நீலகண்ட நீல :-(நீலம்) கண்ட (கண்டம்) என்னும் இரு சொல் லும் தொக்கு நின்று தொகையாற்றலி னுலே, அன்மொழிப் பொருளை யுணர்த்தி, அதன்மேல் தான் உணர்த்தும் அப் பொருட்குரிய ஆண்பால்(பும் லிங்க) விகுதி யைப் பெற்று நீலகண்ட என வருகின் றது. ஆண்பாலில் வரும் பீதாம்பர என் பது பெண்பாலில் பீதாம்பரா எனவரும்.
தமிழில் வரும் பொற்ருெடி என்னும் அன்
மொழித்தொகை, தானுணர்த்தும் பொருட் குரிய விகுதியின்றியே கிற்கின்றது. விகுதி பெற்று பொற்ருெடியாள் என நிற்பின், அதுபெயராகுமன்றி, அன்மொழித்தொகை யாகாது. ஆதலின், இரண்டிடத்தும்வரும் அன்மொழித்தொகைகளும் சிறிது வேறு பாடுடையன. ஆதலின் இரண்டையும் ஒப் புக்கொண்டு இலக்கணங் கூறல் பொருக் தாது என்பது உம், வடமொழியோடு ஒப் புக்கோடல் ஒத்தவிடத்தன்றி ஒவ்வாத விடத்தது என்பது உம் உணர்ந்துகொள்க. இரண்டிடத்தும் வரும் அன்மொழித்தொ கைகளும் சிறிது வேறுபாடுடையவெனத் தொல் - சொல் - குறிப்பாசிரியர் அவர்
களும் தமது குறிப்புள் எழுதியிருக்கிருர்
கள். அதனைச் செந்தமிழ்த்தொகுதி 26, பகுதி 9, பக்கம் 424இல் காண்க.
இன்னும் இவ்விகுதி வேறுபாடு குறி யாதே, சேணுவரையர் தொகையை நோக்கும்போது, அன்மொழித்தொகை என்றும், பெயரை நோக்கும்போது ஆகு பெயரென்றும், கூறியிருப்பதே தக்க சமாதானமாதலின் அதனையும் ஈண்டு விளக்குவாம். பொற்றெடி என்புழி, பொன், தொடி, என்னும் அவ்விருமொழி யும் தொக்க தொகையாற்றலினுலே, அன்

Page 76
- 6
மொழிப்பொருள் பெறப்படும் என்றும் அது இறுதிமொழியைப் படுத்துக் கூறப் பெறப்படும் என்றும் சேணுவரையர் கூறுதலினுலே பொற்ருெடி என்பது வந் தாள் என்பதோடு தொடர்ப்பட்டு நிற்கு மிடத்து, வந்தாள் என்னும் வினைக்கும் * தொடி என்னும் பெயர்க்கும் இயை பின்மையின் அத் தொடி யென்பது அவ் வினேயோடியைபுடைய அணிந்தாள்? என்னும் வேறுபொருளை உணர்த்தி நிற் கின்றது என்பது பெறப்படும். அப் பொருள் அன்மொழிப் பொருளாதலின் பொற்ருெடி அன்மொழிப் பொருளை யுணர்த்திவந்த தொகைமொழி எனப் படும். அவ் வன்மொழிப்பொருள் தொடி யென்னும் இயற்பெயரினின்றும் ஆகிய பொருளாதலின் பொற்ருெடி இருபெய ரொட்டாகுபெயரெனவும் பட்டது. சுருங் கக் கூறில் பொற்ருெடி யென்னுக் தொகையாற்றலாற் பெறப்பட்ட அன் மொழிப்பொருளே, பொற்ருெடியென்னும் இருபெயரொட்டில் வந்த ஆகுபெயர்ப் பொருளுமாதலின் இரண்டு மொன்றென் பதே சேணுவரையர் கருத்தாம். ஆதலாற் ருன் தொகையை நோக்கும்போது அன் மொழித்தொகை என்றும் பெயரை நோக்
கும்போது ஆகுபெயரென்றும் கூறினுர்,
இதில்வரும் வழு யாது என்பதை யாம் அறியோம். தமிழில்வரும் அன்மொழித் தொகைக்கும், இருபெயரொட்டுக்கும், சிறி
தும் வேறுபாடு காணப்படாமையின் இங் வனம் கூறல் பொருத்தமாம் ; தொல்காப் பியர் இருபெயரெனக் கூருது இருபெய
ரொட்டுடனக் கூறியதை உற்று நோக்கி
னுர்க்குத் தொகையும், ஒட்டும் ஒன்றென் பது பெறப்படும். ஒட்டுதல் - சேர்தல் = தொகுதல், ஒட்டெனக் கூறியது இரு
மொழியும் பிரிந்துநின்று ஆகுபெயர்ப் பொருளை உணர்த்தமாட்டாமை கருதி, அங்ஙனமே அன்மொழித் தொகையும் பிரித்துகின்று அன்மொழிப் பொருளை யுணர்த்தா. ஆதலால் இரண்டும் ஒன் றென்றற்கு வருந் தடை யென்னேயோ?
 
 
 

س- |
கிளிமொழி, தகரஞாழல், வடகிழக்கு என்னும் அன்மொழியுள், மொழி, ஞாழல், கிழக்கு என்பன பிரிந்துகின்று அன் மொழிப்பொருளை யுணர்த்தமாட்டாமை யும் அங்ங்ணமே, அவ்வாகு பெயர் வேறெனக் கூறுவார் அவ்வாகுபெயர்க்குக் காட்டிய மக்கட்சுட்டு, அறுபதம், வகரக் கிளவி முதலியனவும், பின்மொழிகள் தனித்துகின்று குறித்த ஆகுபெயர்ப் பொருளே யுணர்த்த மாட்டாமையும் அறிந்துகொள்க. இனி பசுங்கிளி, பூங் கொடி முதலிய அன்மொழிகள் பிரிந்து நின்றும் உணர்த்துமன்ருேவெனின் அவை போன்ற சில மொழிகள் வழக்காற்றில் இருவேறு வகையால் (அஃதாவது ஒரிடத் துத் தொக்கும், பிறிதோரிடத்துத் தனித் தும்) உணர்த்துமாற்ற லுள்ளனவாதலின், அக்காரணம்பற்றித் தொகையிலக்கணம் பிறழா; தொக்குவரும் வழித் தொகையிலக் கணமமைதலின். இங்ஙனம் கிளி என்ற விடத்து ஆகுபெயரென்றும், பசுங்கிளி என்றவிடத்து அம்மொழியே தொகை யென்றும் கூறப்படுதலும் ஆகுபெயரும் அன்மொழியும் ஒன்றென்பதற்கும் தக்க சான்ரும். பாயினமேகலை, வாரேறு கொங்கை, முற்ருமுலை, கைபரந்து வண் டிசைக்குங் கூந்தல் என்பனவற்றை வட மொழி நோக்கிப் பிரயோகவிவேகநூலார் அன்மொழி என்பர். தமிழில் இவை அன் மொழியாகா, ஏனெனில், தொகைமொழி யில் அன்மொழிப்பொருள் வருதல் நோக்கி அத்தொகை மொழிகளை, அன்மொழித் தொகையெனத் தொகைகளோடு ஒருங்கு வைத்து எல்லா ஆசிரியரும் ஒதுதி 6 ტ) მჟr 6 L_jtrtigქ6ზr(3 tექნტეს) 2 முதலாயின தொகையன்றித் தொடர் ஆதலின், இவற்றை அடையடுத்துகின்ற ஒருமொழி யாகக் கொண்டு ஆகுபெயரென்றலே பொருத்தமாம். பேராசிரியரும், பாயின மேகலை ஒரு சொல்லாதலின் ஆகுபெய ரென்ற்தும் இக்கருத்துநோக்கியே என்க
தமிழ்மொழி இலக்கணத்தையும் வட மொழி இலக்கணத்தையும் ஒப்புநோக்

Page 77
காது வடமொழி இலக்கணங்களைத் தமிழி லும் புகுத்திவிட வேண்டுமென்றும், அப் படிக் கூறினுல் வடமொழி இலக்கண முணர்ந்தவர் எனத் தம்மை மதிப்பார் என்றுங் கருதியே, இவ்வாறு அன்மொழித் தொகைக்கும் ஆகுபெயருக்கும் வடமொழி கோக்கி வேறுபாடு கூறித் தமிழிலக்கணத் தைப் பிறழச் செய்தனர் என்பதும், சேணு வரையர் இரண்டையும் நன்கு ஆராய்ந்து ஒப்பனவற்றை ஒப்புக்கூறியும் ஒவ்வாத வற்றை விடுத்துங் கூறலின் அவருரையே கொள்ளத்தக்கனவென்பதும் எமது கருத் தாகும். இருபெயரொட்டாகு பெயரும் அன்மொழியும் ஒன்றென்பதில் ஒத்த கருத் துடையார், உரையாசிரியர் சேனுவரையர் மாத்திரமன்று; பரிமேலழகர் அடியார்க்கு நல் லார் முதலியோருமாம். கணங்குழை ஆகு பெயர் என்பர் பரிமேலழகர். அருந்திறல் இராமன் அது அன்மொழித்தொகை ஆகு பெயர் (சிலப்பதிகாரம் புறஞ்சேரி 309-ம் பக்க உரை) என்பர் அடியார்க்கு நல்லார். மகரப்பகுவாய் முதலியவற்றை (திருமுரு
எழுதப்படு நூல்கள் இலக்கி முடிவு கூறத்தக்கோர் இலக்கள் தல் வேண்டும். அவர்களால் ஆ லற்ற முடிபுகொண்டே இலக்கி டும். அல்லாதவற்றை இலக்கிய
。★
சரித்திரத்தை இலக்கிய சென்றகாலத்தைச் சிருஷ்டிக்க முடியும். வெறும் வருடத்தைக் மரணக் கணக்குகள் உட்பட போவது சரித்திரமுமல்ல இல
 
 
 

25ஆம் அடி உரை) குச்சினுர்க்கினியரும் மயங்கி ஆகுபெயரென்பர்.
இதுகாறும் கூறியவாற்றன் ஆகுபெய ரன்றி, அன்மொழித்தொகையும் உற்று நோக்குவோர்க்குச் சக்கிய சம்பந்தம் பெற்றே வருகின்ற தென்பது உம், வட மொழியில் வரும் அன்மொழித் தொகைக் கும், தமிழில் வரும் அன்மொழித் தொகைக் கும் சிறிது வேறுபாடு உண்டென்பது உம், வடமொழியில் வரும் அன்மொழித் தொகைக்கும் இலக்கணக்கும் வேறுபாடு இருத்தல்போலத் தமிழில் வரும் அன் மொழித் தொகைக்கும் ஆகுபெயர்க்கும் வேறுபாடின்மையிற் சேனுவரையர் ஒன் றெனக் கூறியதே பொருத்தமுடையதென் பது உம், சேணுவரையர்க்கன்றி உரையா சிரியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் முதலியோர்க்கும் ஒன்றென்பது கருத் தென்பது உம் பெறப்படுதல் காண்க.
செந்தமிழ் தொகுதி 28 பகுதி 12.
யங்களா அன்ரு என ஆராய்ந்து
னம் உணர்ந்தோராகவே இருத்
அங்கீகரிக்கப்பட்ட காய்தலுவத்த
யங்களை வரையறுத்தல் வேண்
ப் போலிகளெனத் தள்ளிவிடுக.
-பண்டிதர் வ. ந.
★
வாயிலாகத்தான் அறியமுடியும், வல்லவன்தான் சரித்திரமெழுத கணக்கிட்டு அரசர்களின் ஜனன டச் சாரமற் றெழுதிக்கொண்டு க்கியமுமல்ல.
-புதுமைப்பித்தன்

Page 78
(3լյյրց՝Ոս յդ 3 நாக்கி
பண்டிதர் အံ•
அதங்கோட்டாசாற் கரிறபத்தெரிந்து புலந்தொகுத்த ஒல்காப்புலமைத் தொல் காப்பியர் காலத்து எழுத்தானுஞ் சொல் லானும் பொருளானு மாராயப்பட்டது தமிழிலக்கணம் அஃதிறையனர் களவிய லுக்கு நல்லுரை கண்ட மதுரைக் கணக் காயனர் மகனுர் நக்கீரனுர் காலத்து யாப் பென்பது மொன்றுபெற்று நான்காயிற்று. வீரசோழியம் யாத்த புத்தமித்திரனுர் தக் நூலு ளணியென்பது மொன்று புகுத்தித் தமிழிலக்கணத்தை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியென ஐந்தாக் இனுர், அணியிலக்கணத்தை விரித்தாய்ந்த இலக்கண வாசிரியர் வரிசையில் வீர சோழியங் கண்ட புத்தமித்திரனுர் மட்டு மன்றித் தண்டியலங்காரத்தந்த தண்டி யாசிரியர், மாறனலங்காம் வகுத்த தென் குருகைப் பெருமாள் கவிராயர் இலக்கண விளக்க மியற்றிய வைத்தியநாத நாவலர் தமிழிலக்கண மமைத்துதவிய விசாகப் பெருமாளேயர் முதலியோரும் இடம்பெறு கின்றனர். இவ்வாசிரியர்தத் தமிழ்நூற் கல்வியொடு வடநூற் பயிற்சியுமாராய்ச்சி வன்மையும் வியந்து பாராட்டற்பாலன. அணியிலக்கணத்தினைச் சொல் லணி, பொருளணியென விருபெரு முறுப்புக்க ளாக வகுத்து ஒவ்வொன்றினும் பல் வேறு பிரிவு காட்டி ஒவ்வொரு பிரிவுள் ளும் பற்பல உட்பிரிவுகள் தந்து செல்லா நிற்கு மணி நூலென் க. தண்டியா சிரியர் பொருளணி முப்பத்தைக்தென்பர். மாற னலங்காரகாரர் அறுபத்துகான்கென்பர். தமிழிலக்கணங் தந்த ஆசிரியர் நூறென் பர். இவ்வாறே எல்லா வாசிரியருந் தம் முள் முரணுவர். தொல்காப்பியப் பொரு ளதிகாரத்து உவமம் என்னும் பொருள் த்தோரியலா னுராயப்பட்டுள்ளது. ல்காப்பியர் கருத்தையும் அணியிலக்
 
 
 

ல் அணியிலக்கணம்
চিnা জ্ঞ। তেওঁীটি ৪, th
கணகாரர்தங் கொள்கையையும் நுணுகி பாய்ந்த தொல்காப்பியப் பொருளதிகார உரையாசிரியரு ளொருவராம் பேராசிரியர் கருத்தைக் காண்பதே இக்கட்டுரையின் கோக்கமாகும்.
உவமை முதலியன செய்யுட்கணி யாமோ வென்பதுபற்றிப் பேராசிரியர் கூறுவன ஈண்டு நுனித்து நோக்கற்பாலன. இனி, இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங் களுட் சிலவற்றையுஞ் சொல்லதிகாரத்தினுள் ளுஞ் செய்யுளியலுள்ளுஞ் சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்று, அவை செய்யுட்கண்ணே யணியாமென இக்காலத் தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை யொரு தலையாகச் செய்யுட் கணியென் றிலக்கணங் கூறப்படா. என்ன ? வல்லார் செய்யி னணி யாகியு மல்லார் செய்யி னணியன்ருகியும் வரும், தாங் காட்டிய விலக்கணத்திற் சிதையா வழியு மென்பது, என வருவது பேராசிரியம். இப்பகுதியால், அணியிலக்கணகாரர் தமக்கு வேண்டியவாறே பணியெனக் கூறுஞ் சொற்பகுதிகள் பொருட்பகுதிக ளாய அனைத்துந் தொல்காப்பியத்து ளாங் காங்குக் கூறப்பட்டுள்ளன வென்பதைப் பேராசிரியர் விளக்குகிறர் தொல்காப் பியத்துள் அன்னவையெல்லாம் உவமவிய லுள்ளுஞ் செய்யுளியலுள்ளுஞ் சொல்லதி காரத்துள்ளு மாராயப்பட்டுள்ளன. வென் பது பேராசிரியர் கருத்து சொல்லதி காரத்தில் ஆராயவேண்டிய பொருட்பகுதி களேயும், செய்யுளியலு ளாராயவேண்டிய பொருட்பகுதிகளையும் பிறிதோரிடத்தா ராய்வதும், அன்னவற்றுக் கெல்லாம் அணி யென மற்றேர் பெயரிடுவதும் பொருந்தா வென்பதைப் பேராசிரியர் நுட்பமாகக் கூறிப்போந்த திறனுரன்றிநோக்கியின்புறற் பாலது. அவ்வாறு, அணியெனப் பெயர் தந்தக்காலும் அவை யொருதலையாகச்

Page 79
செய்யுட்கணியாபவோ வென்பதைப் பேராசிரியர் மேலும் ஆராய்கிருர்,
அணியிலக்கணகாரர் கூறுமிலக்கணப் பகுதியனைத்தும் தனி பொருந்திவரி னுஞ் சில செய்யுள்கள் அணிபெருது வரு தலைப் பேராசிரியர் உதாரணங்கள் மூலம் விளக்குகிருர், அவர், !
" நாயகர்க்கு நாய்கள் போல்
நண்பிற் பிறழாது கூஉய்க் குழாமுடன்
கொட்கு - மாய்படை பன்றி யனையர்
பகைவேந்த ராங்கவர் சென்றெவன் செய்வர் செரு '
என்னும் வரிகளையும்,
* ஒரூ ரட்ட கள்ளிற்
கோரிற் கோயிற் றேருமா னின்னே
என்னும் புறநானூற்றுச் செய்யுட் பகுதி யையு மெடுத்துக்காட்டி யாராய்கிருர், தந்தலைவர்மாட்டு நன்றி காட்டும் நாய் களைப்போல நட்புநிலையின் மாறுபாடுரு தவர் படையாள ரென்பதும் பன்றியை ஒத்தவர் பகைவேந்தரென்பதும் முதலா வது செய்யுளில் வருமுவமப் பகுதிக ளாம். நன்றியறித லொன்றே கருதி நாய் களேப் படையாளருக்கு உவமஞ் செய்த தேற்புடைத்தேனும் போர்புரியும் வீரம் பற்றி அன்னவா றுவமித்தது பொருட்சிறப் பற்றதாம். பன்றியும விவாற்ரு னேக்குழி யிழிந்ததேயாம். என்ன? உவமையெனப் பட்ட துயர்ந்த பொருளாகல் வேண்டு மென்று முவமிக்கப்படும் பொருளிழிந்து வரல் வேண்டுமென்றும் உவமானமும் பொருளுந் தம்மிலொத்தனவென் றுலகத் தார் மகிழ்ச்சி செய்தல்வேண்டுமென்றுக் தொல்காப்பியர் கூறுதலின் தொல்காப் பியத்துள், -
* உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை’ எனவும்,
" உவமையும் பொருளு
மொத்தல் வேண்டும் "
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

67 -
எனவும் வரும் பகுதிகளா லிவ்வுண்மை நன்கு புலப்படுமென்ருெழிக. இருபகை வேந்தர் படைகளையு மன்னவாறே பகை யிற் றிராத நாய்க்கும் பன்றிக்கு முவமே யங்களாக்கியது பயனுடைத்தேனும் வேக் தர் படைகளின் வென்றிச்சிறப்பை நாட் டுதற் குரிமையுடைய வாகாத அவ் வுவமைகளாற் பயனின்றென்பது. இச் செய்யுளில் நாய் உவமமாகாதேல் மற் றைய செய்யுளிற் கோய் எனச் சுட்டப் பட்ட கள்ளளக்கும் பாத்திரமு முவமமா காதோ என்னு மாசங்கை நிகழ்தற் கிட னுண்டு. கோய் ஒருவாற்ருற் செய்யுட் கழகுசெய்து நிற்றலி னுவமமா வான் செல்லுமேனும் நாய் எவ்வாற்ருனுமழகு செய்யாமையி னுவமமாகா தென்பது பேராசிரியர் கூற்று. அணியிலக்கணகாரர் இன்ன சொல்லு மின்ன பொருளுமுடை யன் வணியுற்றன வென்று மின்ன சொல்லு மின்ன பொருளுமுடையன வணி புற்றன வென்று மிலக்கண வகையாற் கூற லெட்டுணே யுஞ் சாலாமையின் குற்ற முங் குணமும் முற்றவுணர்த்தாத அணி யிலக்கணத்தின் பயனும் நின்று வற்று மென்பது பேராசிரியர் கருத்து.
அணியிலக்கணகாரர்தம் நிரம்பா விலக்கண நீர்மையைப் பேராசிரியர் பிறி தோராற்ருனும் விளக்குகிறர். இரண்டு பொருளெண்ணி அவற்றை வினைப்படுக் குங்கா லொருங் கென்பதோர் சொற்பெய் தல் செய்யுட்கணியென்பர். பிறவு மின்னுே ரன்ன பலவுஞ் செய்யுட்கணியா மென் தவர் கருத்து. இக்கருத்தை ஏற்று கொண்டா லணியிலக்கணம் வரம்பின்றி யோடுமென்பது பேராசிரிய ரெண்ணம் ஒருங்கு என்பது மட்டுமல்லாமற் கலி பாவுள் மூன்று தாழிசைகளான் மூன்று பொருள் கூறி, எனவாங்கெனப் பின்வரு மொழியில் என வென்பதோ ரலங்கா மென காட்ட முற்படுவாரை விலக்கு மாறின்மையி னதுவு மணியாவான் செ6 லும். அன்னவாறே அன்னபிற சொற்க

Page 80
- 6
ளும் அணியாதலிற் றிராவாகலின் அவ் வணியிலக்கணம் ஒரெல்லேயின்றி யிகந்து படுமென்க.
இனி, அவற்றைப் பொருளுறுப் பென்ப தல்லது அணியென்பவாயிற் சாத்தனேயுஞ் சாத் தனுலணியப்பட்ட முடியுந் தொடியு முதலாய வற்றையும் வேறு கண்டாற்போல் அவ்வணியுஞ் செய்யுளின் வேருகல் வேண்டுமென்பது, என்று பேராசிரியர் கூறும் பகுதியாலுவம வியலைத் தொல்காப்பியர் பொருளதி காரத்துள் வைத்ததன் உட்கருத்தையும் பிறர் தனியதிகாரஞ் செய்ததனுற் போந்த பயனின்மையையு மொருவாற்றற் புலப் படுத்தியுள்ளார். உவமை முதலியவற்றைச் செய்யுட்கனியென வேண்டுவரேற் சாத் தனுமவனது அணிகளாய முடிமுதலியன வும் வெவ்வேறு பிரித்து நோக்கப்படுதல் போலச் செய்யுளுமணியும் வெவ்வேருகப் பிரிக்கப்படுவனவாதல் வேண்டும். செய் புளுமணியும் வெவ்வேருகாமையின் அணி யெனக் கொள்வதினு மதனைப் பொரு ளுறுப்பெனக் கொள்வதே சாலப் பொருக் துவதாகும். இவற்றை யணியென வேண்டுவார் பொருள்நுட்பம் நோக்காதவ ரென்பது பேராசிரியர்தங் கொள்கை.
செய்யுட்கணியென மற்றிவற்றை யேற்றுக் கொண்டாலுஞ் செய்யுட்கணி செயும் பொருட்பகுதியனேத்தும் எஞ்சா மற் கூறினன்றே அவ்விலக்கணம் நிறை வுடையதாகுமென்பது பேராசிரியர் கருத்து. அல்லாக்காற் குன்றக்கூறலென் னுங் குற்றத்தின்பாற்பட் டவ்விலக்கணமு மிழித்திடப்படுமென்க. அணியிலக்கண காரர் கூரு தொழிந்த பொருட்பகுதிகளைப் பேராசிரியர் ஒரு தனிச் சூத்திரத்தா லெடுத்துக் காட்டுகிறர் :
** அகனமர் கேள்வ
னகற்சி தீர்த்தற்கு மகனெடு புகுந்த
மகவுநிலை யெனுஅ மறுக்குங் காலே
மறுத்துரை மொழியாது குறிப்புவேறு கொளிஇய குறிப்புநிலை யெனுப்

புலவிக் கண்ணும்
போக்கின் கண்ணு ԷՔ (ԼՔ 5 62յ Լք եք fr-9 5 6)
முயங்கலு மென்ரு ங் கிருவகைப் பட்ட
மங்கல மெனு அப் புலம்புறு காலே
யறிவொடு படாது புலம்புகொள வந்த
செய்வினை யெஞஅ வின்னுே ரன்ன
பல்பொருட் பகுதி நன்னெறிப் புலவர்
நாட்டல் வகை யுடைய '
என்றேரிலக்கணம் வகுப்பின் அவையு மணியாவான் செல்லும். இச்சூத்திரத்து மகவுநிலை, குறிப்புகிலே, புலவியுளழுத மங்கலம், போக்கின்கண் ணழாத மங்கல நிலை, அறிவொடுபடாது புலம்புகொள வந்தசெய்வினையென்னும் பகுதிகள் கூறப் படுகின்றன. இவையெல்லாஞ் செய்யுட் கணியாவான் செய்தல் வேண்டு மென் னும் பேராசிரியர் கூற்றைப் பிழையற வுணர்ந்தாலன்றி அவர் கருத்துப் புலப் படாது. பேராசிரிய ரிவற்றுக்குக் காட்டிய உதாரணங்களையு மன்னபிறவற்றையும் தொல்காப்பிய உவமவியலினிறுதிச் சூத் திரத் தவருரையா னுணரலாம். பேராசிரிய ரணியிலக்கணம் படைப்பதால் வரும் பயனின்மையைப் பல்வேறு வழிகளா லெடுத்துக் காட்டுகிருர் பேராசிரியர் தாங் கூறிய வணிகளுக்குதாரணங் காட்டுதல் வாயிலாக வணியிலக்கணத்தை நகைப் பொருளாக்கிப் பழித்துரைத்திட்டாரென்சு
பொருளணிகளென அணியிலக்கண நூலாசிரியர் விரித்துரைத்தவற்றைப் பல் லாற்ருனும் மறுத்துக்கூறிய பேராசிரியர் சொல்லணியெனப் பேசப்படுமவற்றையும் மறுத்துரைத்துள்ளார். நிறைமொழி மாந்தர் மறைமொழி போல்வன சில மிறைக்கவி
LITL-SI) ருளரென்பதே பற்றி அல்லாதாரு மவ் வாறு செய்தல் மரபன்றென்றற்கு மிது கூறினு னென்பது; அவை சக்கரம், சுழிகுளம்,
கோமூத்திரிகை, ஏகபாதம், எழுகூற்றிருக்கை,

Page 81
- {
மாலே மாற்று என்றற் போல்வன. இவை மந்திரவகையானன்றி வாளா மக்களைச் செய் யுள் செய்வார்க்ககனேந்திணைக்கும் மரபன்றென் பது கருத்து. அல்லாதாரிவற்றை யெல்லார்க் குஞ் செய்தற்குரியனவென இழியக்கருதி அன்னவகையான் வேறுசில பெய்துகொண்டு அவற்றிற்கு இலக்கணஞ் சொல்லுப. அவை, இத்துணையவென்றுவரையறுக்கலாகா,என்ன? ஒற்றை, இரட்டை, புத்தி, வித்தாரம் என்றற் போல்வன பலவுங் கட்டிக்கொண்டு அவற்றனே செய்யுள் செய்யினுங் கடியலாகாமையின் அவற்றிற்கு வரையறை வகையான் இலக்கணங் கூறலாகாதென்பது, என வரும் பேராசிரியர் உரைப் பகுதியால், சொல்லணியெனப் பிற் காலத்தாசிரியர் சிலர் வேண்டுமிலக்கணம் மக்கணுதலிவரு மகனேந்திணைக்கு முரிய தல்லவெனுந் தங்கருத்தை நன்கு புலப் படுத்தியுள்ளார். இக்கருத்தை,
* மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி ஞன '
என்னும் மரபியற் குத்திரத்தினுரைப்பகுதி தெளிவாக வெடுத்துக் காட்டிநிற்கின்றது. | | ஐயைதன் கையு
ளிரண்டொழித்தெ னம்பான்மேற் பெய்தார் பிரிவுரைத்த லில்லையால் '
ஐயை தன்கை யெட்டெனவும் அதனுள் இரண்டொழிக்க வாரு குமெனவும், ஆறு கார்த்திகை நட்சத்திரத்தைக் குறிக்கு மெனவும், அது பின்னர்க் கார்த்திகை அளவினதாகிக் கார்த்திகைப் பூவை என தைம்பாலாகிய கூந்தலிற் சூடினுரெனப் பொருள்படுமெனவுங் கொள்ளப்படுமின் னுேரன்னவை யெல்லாம் வரையறை யின்றி வருதலின் அவற்றுக்கு இலக்கணங் கூறலாகாதென்பது பேராசிரியர் கருத்து.
அணியிலக்கணகார ராராய்ந்துரைத்த குணவணிகளைப் பற்றிப் பேராசிரியர் யாதுங் கூறிற்றிலர் ; அவை வடமொழி வழக்கையே முற்றத்தழுவி யெழுத்தமை யின் வைதருப்பம், கெளடமென இரு கடைகள் வகுத்து அவற்றின் இயல்பைப் புலப்படுத்துஞ் செறிவு தெளிவு முதலாய குணவணிகளேத் தமிழ்நூலிற் புகுத்திய
 

59 -
ஆசிரியர்கள் தமிழிலக்கணஞ் செய்தா ரல்லரென்பது பேராசிரியர் கருத்துப் போலும், வடமொழிமேற்கொண்ட அபி மானங் காரணமாக அம்மொழியில் உள்ள தெதுவும் தமிழ்மொழி மாட்டில்லாத நிலை யைக் காணுந்தோறும் அது தமிழ்மொழிக் குரிய குறைவுபாடெனக் கருதியோர் செய் கையே வைதருப்ப கெளட கடைகளுக்கு இலக்கணம் வகுக்கத் தூண்டியதாதல் வேண்டும். காவியாதர்சம் முதலாய நூல்களே மொழிபெயர்த்த தமிழாசிரியர் கள் மொழிபெயர்த்ததர்ப்பட யாத்தல் என்னுக் தொல்காப்பியர் தமதாணேயை யுங் கைநெகிழ்த்து மொழிபெயர்த்திட்டன ரென்க.
வீரசோழியகாரர் அணியிலக்கணத் தினத் தமிழ்மொழியின் ஐந்தாவதிலக்கண மாக எடுத்தோத இலக்கண விளக்க நூலி பாத்த வைத்தியநாத நாவலர் அணியிலக் கணத்தினைப் பொருளதிகாரத்துள் வைத் தாராய்ந்த வியல்பும் நன்கு சிந்திக்கத் தக்கது. பேராசிரியர் பொருளுறுப்பென் றிவற்றை யெடுத்தோதியபான்மைக் கிலக் கண விளக்க நூலார் வைப்புமுறை அரண் செய்வதாகும். எனினும் அணியிலக்கணம் முழுவதும் தண்டியாசிரியரைப் பின்பற் றியே இலக்கண விளக்க நூலார் அமைத் தமையின் பேராசிரியர்தங் கண்டனக் கூற் றுக்களுக்கு இலக்கண விளக்ககாரரும் உரியவரே யாம்.
தொல்காப்பியர் உவமவியலேப் பொரு ளதிகாரத்தில் மெய்ப்பாட்டியலுக் குஞ் செய்யுளியலுக்கும் நடுவணதாக வைத்தா ராய்ந்துள்ளார். உவமம் ஒன்றிலிருந்தே மற்றெல்லா அணிகளும் பிறப்பனவென்பு தணியிலக்கணகாரர் பலருக்கு மொப்ப முடிந்தவுண்மையாம். அத்துணைச் சிறந்த உவமையைத் தொல்காப்பியர் ஆய்ந்த திறமும் இயற்கையொடுபட்ட வின்பமளிப் பதாம். உவமை தோன்றுதற்குரிய கார ணங்களோடு அவை பிறக்குமிடங்கள், முதல் சினேபற்றி உவமை வரும் மரபு, உவமையிற் பொதுத் தன்மையை யறிய

Page 82
நெறி, பொருளையே யுவமமாக்கிக் கூறும் மரபு, பெருமை சிறுமைபற்றி யுவமஞ் செய்தல், அவை மெய்ப்பா டெட்டன் வழித்தோன்றுதல் முதலாய பலப்பல தன்மைகளையும் ஆராயுந் தொல்காப்பிய உவம6யக் துய்த்து கல்லுரை கண்ட பேரா சிரியர், அணியிலக்கணகாரர் தொல்காப் பியர் வழிச்செல்லாமை கண்டு அவ்வணி பிலக்கணத்தைக் கடிந்துரைப்பதில் வியப் பேதுமில்லே யென்க. -
இத்துணையுங் காட்டியவாற்ரு னணி யிலக்கணமெனத் தனியிலக்கணம் படைப் பது தமிழ்ப் பொருளிலக்கண நெறிக்கு முரணுனதென்பதும் அவ்வாறு படைப்
எந்த நாட்டினரும் Gւյց இலக்கியம் தமிழிலக்கியம்.
举
உணர்ச்சியைத் தூண்டுத பொருள் உயிரோட்டமாக விளம் பிரதான அம்சம்.
နျူး.. ။ +
மொழியின் வா பிலாக இலக்கியம்.
 
 
 
 
 
 

பினு மிலக்கண வகையாலணி பிலக்கணத் தினை யெஞ்சாது கூறல் சாலாதென்பதும், எவ்வெவருந் தத்தமக்கேற்றவாற்ருனும் வேண்டுமாற்ருனு மவ்விலக்கணஞ் செய் தலைத் தடைசெய்தலொல்லா தென்பது மணியிலக்கணம் தெரிந்த ஒருவனவ்விலக் கணத்திற் பிழையாது செய்யுள் செய்த வழியும் அச்செய்யுள் அழகிழந்து பொலி வழித்துகாணப்படக்கூடுமென்பதும் நன்கு புலனுகின்றன. ஆதலால் தொல்காப்பியர் கண்ட உவமம்போல அணியிலக்கணஞ் செய்யுள் புனேவார்க்குப் பெருந்துணை புரி யாதென்னும் பேராசிரியருள்ளக் கருத்துக் கொள்ளுதற் பாலதேயாம்.
நமைப்படத்தக்க அருமையான
- GS GJË
*
லே, உணர்ச்சியென்னு முரிப் பகுதலே உண்மையிலக்கியத்தின் ဒွေး (ဒိဋ္ဌိ (၅)j+
மிக்கையை உணர்த்துவதே - 853 Gir

Page 83
அன்றெழுதிய இ
போலிப் புலமை
தம்பையாப்பிள்ளை, தம்பைய நாவலன், தம்பைய கவிஞன் என்பன இரு பெய ரொட்டுப் புண் புத் தொகைக ளன்ருே? இவை களுள்ளே நிலை மொழி யாது ? தம்பையாவோ? தம்பையனுே ? தம் பை யா வா யின் தம்பைய நாவலன் தம் பைய கவிஞன் என்று புணர்ந்த தெப்படி? தம்பையனுயின், தம்பையனப் பிள்ளை என்று புணர்ந்ததெப்படி? ஆகார விற்று ஐயா வென்பது விளியுருபேற்ற Guu u TT 2 உருபேலாது தன்னியல்பி னின்ற பெயரா? உருபேற்ற பெயரும் பின்மொழியுங் கூடி இரு பெயரொட்டுப் பண்புத்தொகை யாகுமா? ஆழ்வாப்பிள்ளை என்னும் புணர்ச்சிக்கு விதி என்னே.
வித்துவான் தம்பையாப்பிள்ளை என் றிட்டுக்கொண்டீரே. வித்து வானென்னும் பட்டமேற்றற்கு யோக்கியராகும் வண்ணங் கற்றற்பாலனவாகிய நூல்கள் எவை? அந்நூல்கள் நீர் கற்றிருக்கின்றீரா? அவை களிலே நீர் பரீட்சிக்கப்பட்டீரா? பரீட் சித்தவர் யார்? பரீட்சையிலே சித்தி பெற்றிரா? பட்டத் தந்தவர் யாவர்? பட்டப் பத்திர மெங்கே? உமக்குப் பட்டம் நீரே படைத்திட்டுக் கொண்டீரா ? அப்படியா யின் இங்கிலிசுப் புத்தகங்கள் சிலநாட் கைக்கொண்டு திரிந்தோரெல்லாம் B, A, B L. M. A. முதலிய பட்டங்கள் தமக்குத் தாமே படைத்திட்டுக் கொண்டு இறுமாந்து திரியலாமே. பயன் என்னேயோ சிறுவரும் இகழ்தற்கிடனுமே இங்கிலிசில் இப்படிச் செய்யத் துணிபவர் யாருமில்லையே! தமிழ்க் கல்வியொன்ரு பகிடிக்கிடணுயிற்று.
பூரீலயூரீ ஆறுமுகநாவலர்
 
 
 
 
 
 
 

இன்றிருந்தால் .? பெறு பெற்ற பேறு
படு, உண் என்னுமிரண்டுமே செயப் பாட்டை உணர்த்தும் விகுதிகள் என்று பழைய தமிழிலக்கண நூலார் சொல்லி யிருப்ப, அவற்றுட் படு என்பது அமங் கலச் சொல்லென்று கருதிப்போலும் அத னேயும் அதனுேடு கூடிய குற்றத்துக்காக உண் என்பதனையும் விலக்கிப் பெறு என ஒரு விகுதி கொள்ளுகிறர்கள். பரிமே லழகர் ஒவ்வொரு குறளுரையிலும் கூறப் பட்டது என்கின்றனர். தொல்காப்பியர் எழுத்தெனப்படுப என்ருர், திருவள்ளுவர், அறனெனப்பட்டதேயில் வாழ்க்கை என்ருர், மெய்கண்டதேவர் ஒருவனுெருத்தி ஒன் றென்று காட்டப்பட்ட பிரபஞ்சம் என்ருர், மாணிக்கவாசக சுவாமிகள் பேசப்பட்டேன், பூசப்பட்டேன், ஏ. சப்பட்டேன் என்ருர், பட்ட என்ற சொல்லே வழங்காத நூலா சிரியர், உரையாசிரியர் ஒருவருமில்லை. பெறு என்பது செயப்பாட்டில் வழங்கப்
Geaug 62%).
சிலர் பின்வருமாறு எழுதுகிருர்கள்: 1. அவர்கள் மிகவுங் கவனம் எடுக்
கிறர்கள். They take much care. அவனுக்கு அதிற் கொஞ்சமும் 56డిa) gaుడిaు. He has not the least care. 3. இதற்கு மறுமொழி சிக்கிரம் வரு
மென்று நம்பியிருக்கும். Hoping to receive an early reply 4. அவர் இன்று வருவார் என்று
நினைக்கிறேன். I think he will come today. 5. யோசனையின் கீழிருக்கின்றது. It is under consideration.
6. அவர்களோடு எமது அனுதாப
மிருக்கிறது. Our sympathy is with them. இவை தமிழாகுமா இவைகள் இங் இலிசு வாக்இய நடையல்லவா ?
-ழரீமத் த. கைலாசபிள்ளை
罗。

Page 84
சிலரும் பலரும்
பிழைகளைக் காணும் அறிஞர்கள் செந்தமிழ் முதலிய பத்திரிகைகளில் அவை களைப் பிரகடனஞ் செய்தல் நன்று. பிழை கூறல் அவமான ஞ் செய்தலன் று. அது சன்மானமாய் 5மக்கும் பயன்படும், கற் போர் பிறர்க்கும் பயன்படும். திருத்தமும் பலவாகும். பிழை திருத்தப்பட்டதென்று யாம் பிரகடனஞ் செய்த யாப்பருங்கலக் காரிகை சில வருடங்களின் பின்னர் நோக் குழிப் பிழையுடையதாகிப் பின்னுந் திருத் தப்பட்டுப் பிரகடனமாயிற்று.
நூ லுரைகளைப் பிழைநோக்கி நகைப் பாரும், பிழையின் மை நோக்கித் துதிப் பாரும், தாரதம்மியம் நோக்கி மதிப்பாரும், ஆராய்ந்து திருத்தம் நோக்கி ஆக்குவோ ரும், நிரம்பிய புலமையிலார் கூற்றுக்களை நீக்குவோரும், அறிஞர் அங்கீகாரந் நோக்கு வோரும் இக்காலத்தில் அரியராய்ச் சிலரா யினர். துவர நோக்காது பாயிரங் கொடுத் துத் துதிப்பாரும், வழுவறிய முடியாது வடிவக் நோக்கி மதிப்பாரும் பாடந்தோடங் கூடலே நாடலின்றி ஆக்குவோரும், தோடஞ் ஞராயிருந்துங் கூறலஞ்சி மெளனம் நோக்கு வோரும், தக்கனவாயினும் கடினம் கடினம் ! என்று நீக்குவோரும் பழைய நூலுரைகளின் பயிற்சியின்றிப் புதிய நூலுரைகள் ஆக்கு வோரும் எளியராய்ப் பலராயினர். புதிய நூலுரைகளை ஆக்குமுன்னரே பழைய நூலுரை களைப் படித்து நோக்கி அநுசீலனஞ் செய்தல் ஆக்குவோர் யாவருக்கும் ஆவசியகம் ; ஆக்கும் பயிற்சியுந் திருத்தமும் அதிகம் வளரும். - பூரீமத் அ. குமாரசுவாமிப் புலவர்
Tெது நியாயம் 2
நியாயம் என்றது, உலக வழக்கி லுள்ள பழமொழிகள் போல, ஒரேயொரு விஷயத்தை விளக்குவதற்கு எடுத்துக் காட்டாகவுள்ள விஷயத்தைச் சுருக்கி ஒரு பிரமாணம் போலக் கூறும் நெறியாம். காகதாலிய நியாயம் காகமும் பனம்பழமும் பற்றியதொரு நெறியாம். ஒரு காகமானது ஒரு விருட்சத்தினது சாகையிலே இருந்த பொழுது அதன் தலையில் அகஸ்மாத்
 

தாக ஒரு பனம்பழம் விழுந்தது. இதினின் றும் இக்கியாயம் பிறந்தது. இந்நியாயமானது, எதிர்பாராதபடி ஒருவன் ஒன்றைத் தொடங்க மங்கலமாகவாவது அமங்கலமாகவாவது ஒரு சம்பவம் எய்தும்பொழுது எடுத்துக்காட்டப்படு கின்றது. இதனைத் தமிழில் காகமிருக்கப் பனம்பழம் விழுந்த வகையாக என்று கூறுவர். ஆணுல், பனம்பழம் விழுதற் கிடங் காகத்தின் றலை யென்றும், பழுத்தகனி காக மிருக்குஞ் சமயத்தில் விழுந்ததெனக் கோடல் பொருந்தாதென்றும் உணர்க. காகம் இருக்க அஃதிருந்த பனம்பழம் விழுமாயின், பிற காரணமேயன்றிக் காகம் இருத்தலும் ஒரு காரணமாகக் கூறலாமன்ருே ? அற்றேல் சிவப்பிரகாச சுவாமிகள் என்னுங் கவிஞர் பெருமான் மெய்தொட்டுப் பயிறல் என் னுந் துறைபாடுகின்று பூமி,
மன்னிசை வெங்கை யுடைய பி
ரான் வரை மானுசுப்பைப் பொன்னிசை கொங்கை யொடித்தாலு
நிந்தை பொருந்து நுமை மின்னிசை மென் குழ லேறன் மின் னிவிர் விளங்கிலிரோ இன்னிசை வண்டினங் காள்காக
தாலிய மென்பதுவே.
| கருத்து இன்னிசை வண்டினங்காள், இவளது மெல்லிய இடையை முறிக்கக் கொங்கை யொன்றே அமையும், இடை முறியும் பழியைக் கூந்தலின்கண் ஏற்றுத லால் நீவிரேலாதொழியின் ; காகதாலிய நியாயத்தை விேரறிகின்றிலீர் போலும்,
என்னும் செய்யுளால் காகதாலியம் என்ப தற்கு காகம் இருக்க அஃதிருந்த பனம் பழமே வீழும் என்று பொருள் கூறினுரா லெனின், அங்ங்னமன்று. தலைவியின் பூரித்த மார்பின் பரப்பே அவளது மெல் லிய இடையை ஒடிக்கும் ; அங்ஙனம் ஒடி யினும் அப்பழி அளகபாரத்தின் கண் வண் டுகள் ஏறியதனு லுண்டாயதாமென்று உலகத்தவர் நுமது தலைமேல் ஏற்றிக் கூறு வர் என யாங் கூறிய பொருளே தந்து நிற்றலானென்க. இந் நியாயத்திற்கிதுவே கருத்தாதலே வடமொழிக் குவலயாருந்தத் தாலுமறிக
- ரீமத் வே. மகாலிங்கசிவ

Page 85
థ
செவிநுகர்
நாடும் பொருட்சுவை சொற். பாடும் பணியிற் பணித்தருள் கூடும் பசும்பொற் கொடியே காடுஞ் சுமக்குங் கரும்பே சக்
-10
 

தனிகள்
சுவை தோய்தர நாற்கவியும்
வாய்பங்க யாசனத்திற் கனகனக் குன்றுமைம்பாற் තං සකුirකෘතීක්ඛිසිL.
リ茨リ茨リミ葵リ裂ー。
*
s

Page 86
கவிஞன்
பண்டிதர் ச.
சித்திர மொன்றுயர் செந்தமி பத்திர மாயுளப் பைக்குட் பது நித்திரை வந்திட நெஞ்சறை
அத்துயில் நேர மருங்கட் கத6
அறையாகு முள்ள மதற்குள்
சிறையாம் புலவனின் சிந்தனை முறையா முணர்வதன் முன்ஞ் இறையான போதவ் விதயத்தி
உருகிய பொன்னுெளி யூட்டிய முருகிய றேனளி முத்தம வி முருவினில் வானத் துறைகன் திருவினற் பெட்புடன் சேயிழை
கண்டான் கவிஞனுங் கண்மூடி வண்டார் குழறன் வனப்பது பெண்டா னுலகிலிப் பேதைை யுண்டாங்கொ லென்றே யுளத்
அப்போதவ் வாயிழை யாங்கவ செப்பரி தாயநின் சிந்தனை ெ யிப்புவி மீதுறை யாவருங் கெ தப்புத லின்றித் தமியேன் வ
இவ்வுரை கேட்டவ் விளம்பா வி செவ்விய தாகத் திறந்துகொன மவ்வியன் மேவு மருநிதி மக் திவ்விய மாது செயுந்துணை சி
நல்லபொன் னுனதை நாடொ யில்லறந் தன்னி லினிதியச் ே சொல்லிசைக் கின்ற துணைவின நல்லவர் கண்ட நெறியவன்
என்றந்தப் பாவல னெண்ணி( கன்றலர்ந் திட்ட வழகர் கருத் குன்ருத வார்வக் குமரியை ய நன்ருகு மெண்ணந் நவிலெ
மூங்கையின் சொப்பனம் போ யாங்கினி தாக வளருங் கவிஞ நாங்கள் கொளச்செயு நல்லார் பாங்குயர் நம்பிக்குப் பத்தினி

கனவு
இராமச்சந்திரன்
pச் சொல்லிற் செதுக்கியாங்கு க்கிய பாவலன்றன் தன்னுள் நினைப்புவைத்தே
மடைத்தனனே.
விளங்கு மருநிதியாய்ச்
தன்னைத் திருநிகர்க்கும்
}ர்வ மாது முகந்துகொள்ள
லார்வ மிசைந்தனளே.
தென்ன வொளிருடலும் நதிடும் மொய்குழலு னி போலு முயர்நலமுந்
முன்பு திகழ்ந்தனளே.
க் கொள்ளல் கருதினனுய் கண்டு மனமயங்கிப் பப் போலும் பிறளொருத்தி திடை யையம துற்றனனே.
|ன் கேட்க வறைந்திடுவாள் நஞ்சிடைத் தேக்கிவைத்தா ாண்டிட விந்நிதியந் ழங்கத் தகுதியின்றே.
பலன்றன் னிருவிழியுஞ் ண் டுள்நிறை சிந்தனையா கட் களிக்கவந்தத் ந்தனை செய்தனனே.
று மீட்டினு நன்கதனை சய்திடற் கின்சுவைசேர் யக் கொள்ளுத ருெல்லுலகில் போல்வளிந் நங்கையற்கே.
யன் னுளு மிளங்கவிஞர்க் தங் ககத்துறினுங் ாங்கவன் கூடிடலே வ் வாறென ஞடினனே,
ா தகத்துள் முளைத்தெழுந்தே
னிருங்கருத்து வ் மாகிய நங்கைதமிழ்ப் யாவளிப் பாரிடத்தே.

Page 87
巴雳
- எம். ஏ.
குளிர்நிழல் வாகைக் கெ கிளிமுகம் மிகைக்கக் கிள மாதுளை மொக்கு மலர்ந்த காதலி நீயிதைக் காட்டி
போதை விளக்கும் புன்ன மொழிந்த கதையெலா 1 வாசலில் முன்றிலில் மல் பேசிச் சிரிக்கையிற் பிணை கூசிக் கரங்களிற் குளிர்மு கண்டுநான் மகிழ்ந்தது க முண்டுகொல் லெதையு இன்று நீயிங் கிருந்திலே
எங்கு சென்றனே சங்க மூர்ந்த த தங்க விட்டுத் த குளத்தினில் ம முத்து நீர்போல் றத்திய வெனது
மாதுளை யேனுே மகிழ்ந்து மாதவள் பெண்மை மல காதினில் மொழிந்த கா சோகம் வந்து சூழ்ந்த வேகங் கொண்டு விரைந்: வீட்டினி லிருளே விலக்க கூட்டினி லடைத்தாற் கு தொட்டிலி லழகாய்த் து கட்டி யணைத்ததுங் கனவி கிடந்தனன் தினங்களும்
நடந்து சென்றதை நான
பொந்து தோண் செந்துவர் வாயி பூவைப் பார்க்க காலையிற் கிழக்ே சோலே நோக்கி மலரே நீயும் 6 பலப்பல விதழ நிலமிசைச் சிை கொஞ்ச நாளில் முந்திநீ யிருந்: கந்தினை நோக் சென்றதும் நெ நின்ருெரு பிஞ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடு
நுஃமான் i.
ாழுங்கனி கொறிக்குங் வினைத் தருமோர்
தொருநாட் யுணர்விடைப் ாகை புரிந்து bழிந்து முடிந்ததோ ருடன் மதியம் ந்து புலர்ந்ததும் கம் புதைத்ததைக் னவெனக் கழிதலு முரைப்பதற் பெண்னே.
யெதுவழிப் புகுந்தன Lமென மகனேநீ தனிவழிச் சென்றையோ ழைத்துளி விழுந்ததுங் குதிக்கும்
முறுவலிற் |ளந் தவித்திடு மின்றே.
சிரித்தது ர்ந்ததை யொருநாட் பசியுங் காட்டுதோ தென்னே
| fats) பிலுங் கூவுமோ பின்ற குழவியைக் விடைப் புகுந்து LI6)5jTuli
றி யேனே.
டப் பொசியுந் நீர்போற் | 6ör Sínio 25OTj 3GPTL"Gúo வோ ராவல் சுரந்தது க கதிரவன் வருமுன் கால்கள் சென்றன பாழ்விழந் தனேயோ ாய்ப் பணியுடன் கலந்து தந்த நீகிடக் கின்ருய் விக் கொடுமையும் நிகழ்ந்ததோ
முறுவல் புரிந்த நிக் கண்கள் சென்றன ஞ்சஞ் சிலிர்த்திட சாய் நீசிரித் தனையே.

Page 88
உணர்வுகள் பிணங்கித் தினவி மனதினில் மலர்ந்து மடிந்து கனவின் துளிகள் கடுப்பவென புனமுருங் கையின்கீழ்ப் பொ சிதறிக் கிடந்து செதுக்காத் தி கொங்கைள் மீதினிற் றேமல் தங்கிய ரகசியந் தனையுணர்த்
நெருநல் தவழ்ந்த
சுரந்து கனிந்த சுை பிலிற்றுந் துளித்தே வழியே யொழுகி வ தென்றலில் முலேமு நின்றனே போலுமெ வந்துன் மதர்த்த 6 குந்தியு மழகிற் கு5 தேரா தேமலேப் பி பேராற் பேத்துமிப் (
காதலே யூரார் கண்டுவம் புை மாதருந் தாங்குவர் கொல்6ெ காமங் கிறங்கிக் கயல்பாடு கா தேமலென் மார்பிடைத் தேய் அம்பல் தூற்று மிந்த
வம்பூர் திறந்த வாய்மூ டும்ே
இலக்கிய மின்றேல் இல எள்ளு மின்றேல் எண்ெ எள்ளினின் றெண்ணெய் இலக்கி யத்தினின் றெடு
இசைபடும் பருப்பொ ருட்டா ! வசைதவிர் நுண்பொ ருட்டா ட
நசையுண ரொருவன் மாட்டு ந மசைவிறின் கொழுச்செல் லா.ே
-LDS
 
 
 
 
 
 
 
 
 

6)
bj6কোেনা ক্টো। —
புகொள் பருவ ம் முடிந்த ண் ணிலவு "Go Girlfrig. ரண்டநின்
தும்மே.
நிலவே முதிர்ந்து 6.Lu Guðfrä JF2%MTUI Tui ன் பீலித் தெங்கில டியும் பொழுதில் கத் திரைசரிந் திழியவும் ன் நினைவிற் றுமிகள் வனமுலைத் தடங்களிற் ரித்தவை கொழித்ததுந்
66
பெருங்குடி யூரே.
ரத்தல் Uன மருள்வாய்
L-ġ5 ந்துதேய்ந் தழியும்
க்கண மின்றே ணயு மின்றே
எடுப்பது போல படு மிலக்கணம்.
-அகத்தியர்
மிலக்கியஞ் சென்ற வாறே விலக்கணம் வயங்கிச் செல்லும் றும்புனல் வயலின் மாட்டு
துன்னுரசி யழகிற் செல்லும்.
வித்துவான் மீனுட்சி சுந்தரம்பிள்ளை

Page 89
பண்டிதர் : க. சச்சிதா
குறுநகையி னிலவுவரக்
குவளைவிழி யிருக கொஞ்சுங்கு பிறைநுதலிற் சுரிகுழலி பினே மயிர்க டுவ மோகனஞ் குறைமொழியி லுரைபழ
கொவ்வையிதழ்ச்
சிறுமகளி னடையழகில்
நானமது வேதும
யாதமகட்
மேலெழு நிலாமுற்ற
மீதுமலர் வாசமண
காலென்ற சிறகேறி
யாழென்ற குரல்த
கானம்மி பாலென்ற வெண்ணிலாட் பஞ்சனேயி னெஞ் பண்ணழுது சேலென்ற விழியாரின்
செவ்விதழ லத்த
சேர்ந்தேக
குயிலான குரலாலே
கோதிவரு மாமரச் கொம்பரிற் வெயிலான பகனேரம்
வேகாது பனேநிழ வெண்ணுை ஒயிலாக விருகரையு
மோலேக்க லத்தின் லூதிக்கு டி துயிலாகிச் சுகமூடச்
சொட்டிட்ட கள்ளி
தோகைநீ
 
 

5 giւքւյ6մլգ ա
፴፭፻፬
ள்தர
சோபிக்க வும்
குங்
செம்மையது
ட வுள்ளமுழு தைச்
றி
செல்விவரு வாய்.
TLD
த்தென் றல்கொண ர
5ந்த தந்துவர வே
சமரப்
பாடியணேக் குஞ்
மதுச் வைக்கவரு வாய்.
s
கூவியழைப் பாய்
ர மிதந்தகள் 2ள
翰
டிப்பவர் கண்
னத் பார்த்துமகிழ் வாய்.

Page 90
மடுநீரிற் பகல்முழுதும்
வெளிவரவு மன மணிநேரர் தொடுதே ளக்களப
- சுகசந்த னம்பூசி மயிர்விசி சுடுகாத லிற்படுவ
ரிரவானதும் விய துகிலாடை விடுநாண மோடுதுகில்
சரிபாதி நீக்கியை
ang Tamr
கானவலை மேலெழுங்
கண் கண் பொரி
காலிரண் மேனிலையுங் கொம்பர்க வெறிதாகி யிலே
மென்குழ வானிடையிற் கைந்நீட்டு வளர்மருது நிழ DIT LADJğ- 3
தானிறையு மகரந்தத்
தமனியப் பாயலி
சற்றேய
கோங்குனது கொங்கைே
குயிலுனது குரெ
குங்குமம்
தேங்கனியின் முத்தங்க
தித்திக்கு மிதெ தேமாவின் தூங்குவன மேணியென துணர்கனின் மு தோன்ற
நீங்காத நறுமணம்
நீயிட்ட வாசமெ நெஞ்சின
அந்திமலர் முல்லைமண மள்ளிவர வறை ளரிவைநி சிந்தியந றுங்கொன்றை தாதுகளும் வழி சீறடிச் ச
 

மின்றி
நீராடி யுந்
றி கொண்டாற்றி யுஞ்
擂G鳕
தம்மைநனைப் ப
ற ரந்திறப் பார்.
படுங்
டும்வேகு மே ir தீய
லுதிர்ந்தபெண் போல்
ருகினிடை யே
NGö) Lğ பர்ந்துதுயில் வாய்.
୍06013,
பூத்தமுருக் கு
ழன்னத்
ன் செந்தளிர் கள்
圭
றுவலெனத்
து பூக்குமகி மின்
L. LDT-6 (5 6.
யினு - ܓ ܒ ன் வரவுதெரி வேன் த் Guសាស្រ្ដី சுவடுகாண் பேன்

Page 91
சந்தனம 2ளந்துமலர்
சண்பகமு றங்கிெ சாளரந் ( கொந்துமலர் கோதியிரு கோகிலங் கூவவு கோதைநி
வானகமு மெரிகின்ற
தோவெனச் செ
õእMII6Öስቇ5፤፪D6ገ தேனனேயும் பாதிரியுந்
தேமாவுஞ் gigs. சேர்ந்தம6
மானனைய மகரந்தஞ்
சிந்துஞ்செ ருந்தி
மந்தார கானகமெ னும்பூவின்
காதலின்
ஓடிவரு மருவியி
னுற்றுக்கு றைற் வோரந்தி காடுகட மன்னயாள்
நதியினைத் தொ 5663 G கூடுமிள மான்களுக்
கொத்தமண ம
கூடிப்பி சோடியைம றந்தபுற
origg gh) 356)6. சொக்கவ
புள்ளியின மான2ணய பூவென்னுங் கி பொன்வ
கள்ளினைய ருந்தமட |- வன்னங்கள் 8ெ காலுண்டு விள்ளுமல ரொருகோபு
தலைநின்ற பூங்
fasīLDG
தெள்ளியநீ ரே
மீதேகு
 
 

79 -
|u தென்றல்வர வும்
蓟
ன் றுதுவரு மே.
ம்மைதரு
ர் மீதிலொரு காற்
கமுஞ் லர் மஞ்சமொரு கால்
Quidadi - மொருகா லுற
இவரு
ரைந்தமண லிற்
ழுதிடக்
பொன்மலர்க ளாற்
ஞ்சமுங் ரிந்துபல நாட்
ருடிச் 2ண யுங்கொடுப் பாய்.
ண்ண்மதிற் ண்டு சோடியுடனே
| D
காதல்கொள் ள
s
35rdsi
ep36) is
ழகுந்
னிந்துநிற் பாய்.

Page 92
பலவருட மாகவே
பிரிவினிற் சென் Li Tiia (g5356 மிலேயின்றி நின்றமர மலரெனத் தள இளநங்ை முலேயென்னு மலரிஞே டணைகின்ற தற் முதல்வர முலகெங்கு மலர்விரிய உவகையெனுந்
டோடிக்கு
கண்ணென்னுந் தொ பண்ணென்னுங் கண்டுயின் பெண்ணனங் கார்காத மணவினைப் பந்
பேருவை விண்ணெங்குஞ் சென் பூந்துணர்கள் ே
ബ வெளியூடு மண்ணெங்கு நின்வரவு சாற்றுமிசைக் ெ
சீதன மில்லையெனுந்
தந்தையர் தாய
தேடாத பாதுகைகள் மூலையினி வீசிவிட் டென்பு
பாதிப்ப வேதவொலி கேளாதே
யாண்டிலொரு
விண்ண பாதியுற வற்றகிழக்
காதலர்க் கும்பு பற்றுவர
பொங்கிவரு புதுநகையு பூரித்த மணம6
பூத்தமன தங்குமிளங் கன்னியர்
தாம்பூல சந்தன்
தந்துபரி

I 80 -
எறபிடி ரி ருேடனேய வு
o
பிரெறிய
க யானகொடிகள்
குமிக ந்த தென்றலுற வு
தோழியோ 5 தித்துவரு வாய்,
հireւpւգլն :
குரலின்றிக் *ற நாதசு ரம்
தலிற் - 5 யோடெழுந் து ŋ6TH LLEI È வய்ந்தபல
ਭ65 ਉs
5FFFDLITTib.
ந்து வருவேனி Gດງ
ர்க்குந் கன்னியர்க் கும்
முறி ழங்குடைக் கும்
விழவயரும் பன் கோயிலுக் கும்
திய
வாசைகொடுப் பாய்.
பரும் ாப் பந்தலிடை யே
ாந்
மாறுவார் போ

Page 93
- 8
ங்குவரு காளேயரி
லாரெமது கணவர
அங்கங்கு லுங்கநகை
ஆனந்தக் ே
தோடியெனு மிராகத்தி @ស តែទង្វើមិទ្ធិ
தொட்டிதய ஆடிவரு தலைகளும்
மேளதா ளத்திகை
ஆண்டவன் கூடிவரு வாரோடு
சூடிவரு மங்கையே
மாடிவரு மங்கையரின்
ᏞᎬᏡᏭᎦᏛhiᏩᏏ ᏛᏂᎬ!
நீரிலே நீராடல்
Gទ្ធិព្រឹ}{
臀 தேயிரவ
மாவியனே யார்மடியிற்
ருவியவர் கைவிசி
6. காவியமு மோவியமுங்
தTபாட்ட வின் பழு
கன்னிநீ கெ
(
கூவுங் குயிலாற் கொழுந தாவி குலையு மணங்கனே பூவுண்ணு மென்றுகுயி
காவுண்ணும் வேனிலுறு
ஆசை யரும்பு மசோகு வாச மகிழரும்பு வாய்தி தென்றலெனுந் தேரிற் மன்றல் மகள்வந்த போ
கூவில், கீரிமலே என்ப
இடங்களாம்.
3 4 قسم قة
 
 

حسينية :
鼩
ன்றுதே ட
தந்திதட் ட
勘
வீதிவருங் காற்
封 த்துநட ன்
İsları
ছ
ទ្ធិ ពិសិទ្ធី ដ្យ
(iii
piši ឆ្នាត្រ សម្រៃ
வேறு
ர் நினைவெழுந்
லோட்டுவரே பொன்வண்டு
மடலவிழ்க்கும் றக்கும்-வீசுமிளந் றெருவெல்லாம் வேனிலெனு:
tO S a E OO TTT S S S S S OO

Page 94
இன்பம்
يجتمع صحيحية
மக்களினம் விரும்புகின்ற இ GINGSGEBIT til H5NLIGAS GAF தொக்கஇளம் பருவத்தார்
சூழ்முதுமை யாளர்க்குத் ெ
பக்கத்தே முற்றத்தின் சேற். பாலர்கள் குதித்தாடிக் காணு கொக்குநரைத் தலைக்கிழவர் கோல்கொண்டு துரத்தியவர்
பருவத்துக் கேற்றது பண்டுணர்ந்த சு6ை உருவத்தைச் செது ஒருநாளவ் வுருவத செருமுகத்தில் இன் சிவர்களுக் கிரங்கிய இருவருமாய் இன ஏறிநின்று நீதிமன்
பாட்டொன்றை வானுெலியிற் பரவசமாய் இன்பமடைந் த்ெ கேட்பதற்குச் சகிக்காமல் அத கிளறியெடுத் தொருசெய்தி
நாட்டுக்கு நாடின்பம் மாற்ற நமதின்பம் பிறர்துன்ப மாசி வீட்டுக்குள் இருப்பவர்க்கும் ! வெவ்வேருய் இருக்குமிது வி
கருதுமின்பக் கண்க கண்ணுறங்கிச் சோ பெருவிருந்தின் உ பெருங்குழப்பம் வி உருவினெழிற் பெ8 உறுதுயரே தருமெ மருவுபுலன் இன்ப மதித்தவற்றை வே

திரேசன் -
ισότιμ (διερεύουπιο ய் மலர்ந்து நிற்கும் கொள்ளு மின்பம் தால்லே யாகும்
i ibisi fuo கொள்ளு வாரோ ?
வாய் இன்பம் மாறும் பயின்று பழுதாய்த் தோன்றும் க்கியின்பம் கண்ட சிற்பி னே யுடைத்தும் வீசும்
படைந்த அசோகன் பின்னர்ச் தைச் செய்தி கூறும் சந்தின்பம் கண்டோர் பின்னர் 1றத் திரங்கல் காண்போம்.
கேட்டுக் கொண்டு தாருவன் நிற்கக்
னே மூடிக் ரசிப்பான் மற்றேன்
மாகும் நிற்கும் இன்பத் தன்மை வியப்பே யன்று.
ாட்சி மறுநாட் காலை ந்துவிழக் கவலை காட்டும் னவின்பம் வயிற்றி னுள்ளே ளைவிக்கும் பேசி நின்ற ண்ணின்பம் எந்த நாளும் ன்ப துரைத்தல் வேண்டாம் ĝis6ir 6Táüy6y RūD GALI (TEĴIUJ ETŭiD ண்டியவண் மயங்கல் தீதே.

Page 95
தனித்திருத்தல் இன்பமென்ற தன்னுெத்த நண்பருடன் கூடி இனித்துநகை யாடுதலே இன்ப எடுத்துரைக்கும் நாலடியார் இ கணித்தமிழின் காவியங்கள் கழ கருதரிய ஒழுக்கநிலை காத்துப்
மனித்தருளம் அறவாழ்வில் பு மனம்பொருந்து மின்பமென
முல்லமலர்க் கொடிச் முறுவலுடன் நடந்து கொல்லேயுறும் மயிலு குளிரதனுற் பேகன்ெ நெல்லிதரு கனியிந்த நிலையின்பம் என்றுை நல்லஉப கதையென் நானுணர்ந்த ஒர்இன்
பூவைநீகர் மென்மையெழிற் புன்சிரிப்பு மலருடனே பொலி து விநிகர் உடையணிந்து தோ தூயஉளப் பரிவுடனே நோயா சாவகற்றும் தொண்டியற்றித் ឆ្នាយកំទៅ தம்நலமே யாது சேவையிலே தனியின்பங் கண் திருமிகுத்த வாழ்வினையே இன்
சொல்லும் பொருளுமே நல்லிடிஞ்சில் என்னுை 3) G. Gior Luft G), Gift & SIMF 67) பெண்பாகர்க் கேற்றிே
★
சேரும் நேரடிப் பாவி3 யேரும் வெள்ளேயல் ல சோர்வி லாத தொல் க கீர ஞரடி நூலுள்ளுங்
 

-
sin 326hr63) en Es FFFF;" | }
莓量
p வற்றின் மேலாய்க் 2றி நிற்கும்
பூேனி
லரும் போது மற்றென் றுண்டாம்,
குத்தேர் ஈந்து பாரி சென்ற நடையே இன்பம் பக்குப் போர்வை நல்கிக் காள் நடுக்கம் இன்பம்
அதிய மானின் ரப்பேன் இவற்றை நீவிர் பீர் ஆத லாலே பம் நவிலு
பொன்னின் மேனி
_,ិទ្ធិ
*றி நின்று
வார்க்குச்
தளர்ந்தார் வெள்ளைத் மின்றிச் டார் அந்தத்
தூத்திரியு நெய்யுமா உய நாவாகச்-சொல்லரிய பன் கயிலை மேலிருந்த
னன் பெற்று. -நக்கீரர்
责
லஞ் சீரடி
ாவழி யென்பது
ாப்பியத் துள்ளுதக்
Ĝ3a, ou GBGaj .
-யாப்பருங்கலவிருத்தி

Page 96
பண்டித மான் ឃតាំង செல்வி : சி. சரசுவதி
யாழ்ப்பான ஆரிய திராவிட பாடாபி விருத்திச் சங்கத்தினராலே தாபிக்கப்பட்டு, மகாவித்துவான் கணேசையர் அவர்களால் நடாத்தப்பட்டுவந்த சுன்னுகம் பிராசீன பாடசாலையோடு யாழ்ப்பாணத்திற் குரு குலக்கல்விமுறை வழக்கொழிந்தது. முறை யாகத் தமிழ் நூல்களைப் பயிற்றுதற்கேற்ற கிலேயமொன்றில்லை, என்ற இக்குறை நெடு நாளாக இருந்துவந்தது. இக் குறையை நீக்கச் சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத் தினர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமையில் திருநெல்வேலியில் ஒரு கிறுவனத்தை நிறுவினர். அதன்பின் திரு.க. நடேசபிள்ளை அவர்களால் ஆரம்பிக் கப்பட்ட பரமேசுவர பண்டித கலாசாலே பும், நடேசன் காவியபாடசாலை" யும் இக் குறையைத் தீர்த்துவந்தன. ஆயினும், ஒரு சில வருடங்களால் அவற்றின் வளர்ச்சி தடைப்பட்டமை தமிழ்மக்களின் தவக் குறைவேயாகும். சைவப்பெரியார் திரு. மு. ஞானப்பிரகாசம் அவர்கள் நடாத்திய பண்டித, பாலபண்டித வகுப்புக்களும் நீண்டநாள் நிலவவில்லை.
இங்கிலேயில் தமிழாசிரிய சங்க வடபிர தேசச் செயலாளராகக் கடமையாற்றிய பண்டிதர் ச. பொன்னுத்துரை அவர்க ளுள்ளத்தில் இக்குறையை நிறைவாக்கு மெண்ணம் இற்றைக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் எழுத்தது. அவரது அரிய முயற்சியின் பேருக ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்திரண்டாமாண்டு புரட்டாதித் திங்கள் விசயதசமி நாளன்று பண்டித மாணவர் கழகம் * மல்லாகம் ஆங்கில வித்தியாசாலேயில் (இந்துக்கல் லூரி) ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பிரவேச பாலபண்டித வகுப்புக்களே இடம்பெற்றன. திருவாளர்கள் பண்டிதர் க. நாகலிங்கம், நவாலியூர் காசி, நாகரத் தினம் ஆகியோர் பண்டிதர் ச. பொன்னுத் துரை அவர்களுக்கு ஆரம்பகாலத்தில் பல்லாற்ருனு முதவியாக விருந்து வகுப்புக் களை நடாத்தினர். காலத்திற்குக்காலம் இவர்களுக்குதவியாகப் பண்டிதர் சி. சின் னத்துரை, பண்டிதர் வே. சங்கரப்பிள்ளை, திரு எசு. சுந்தரம்பிள்ளை, திரு. த.

னவர் கழகம்
Testo
ਲ,66
சண்முகநாதன் என்போருங் கற்பித்து வந்தனர்.
ஆரம்பகாலத்திற் பிரவேச, பாலபண்
டித வகுப்புக்களுக்குரிய நூல்களேக் கற்பிப் பதுமட்டுமே இக் கழகத்தின் நோக்கமாக
விருந்தது. கற்போரின் தகுதியறிந்து தேர்
வுக்குத் தோற்றச் செய்வதைக் கழகம் தனது நோக்கமாகக் கொள்ளவில்லை. ஆதலினுற் கழகத்திற் பயின் ருேர் தம
தென்னப்படி தேர்வுக்குத் தோற்றிவந்த
னர். இடையிடையே இவ்வகுப்புக்கள் ஆசிரியகலாசாலைப் புகுமுகவகுப்புக்களாக வும் க. பொ. த (உயர்நிலை) வகுப்பாக வும், மாறிமாறியமைய நேர்ந்ததாற் பிர வேச, பாலபண்டித வகுப்புக்களின் வளர்ச்சி சிறிதுகாலம் தடைப்பட்டுப் போயிற்று. எனினும், ஆசிரியகலாசாலைப் புகுமுகத் தேர்வுக்கு முன்னும் பின்னுஞ் சிற்சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவ தும் பிரவேச, பாலபண்டித வகுப்புக்களே கடைபெற்றுவந்தன.
மல்லாகம், ஆங்கில வித்தியாசாலே யிலே தொடங்கிய கழக வகுப்புக்கள்
ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தைத்
தாம் ஆண்டு மல்லாகம் அ. மி. பாட சாலேக்கு மாற்றப்பட்டன. இக்காலத்தில் ஆசிரியகலாசாலைப் புகுமுகத் தேர்வுக்கு ஆசிரியர்கள் மட்டுமே தோற்றலாம் என்ற கிலே ஏற்பட்டதால், பண்டித வகுப்புக்களே மட்டுமே தொடர்ந்து நடத்தவேண்டிய கிலேயும் வாய்ப்பும் ஏற்பட்டன. மாணவர் களே யாழ், ஆரிய திராவிட பாடாபி விருத் திச் சங்கத்தின் தேர்வுகளுக்குத் தோற்றச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பாலபண்டித வகுப்பிற் பலர் தேறியமை யால் பண்டிதவகுப்பையும் தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பல புதிய ஆசிரியர் களோடு கழகஞ் சிறப்புடன் செயற்படத்
தொடங்கிற்று.
யா. ஆ. தி. பா. வி. சங்கத் தேர்வுக் குரிய இரண்டாவது மொழியாகச் சமக் கிருதங் கற்பிக்கப்பட்டதாலும் கற்பித்த ஆசிரியர்கள் காட்டிய ஊக்கத்தாலும் பம்பாய் பாரதீய வித்தியாபவன், சென்னை அமரபாரதி ஆகிய நிறுவனங்களால்

Page 97
1963ஆம் ஆண்டு, கழகத்தின்மூ6 பரீட்சையிற் சித்தியெய்திே
 

L」T、6cm。ど存圧」5山
தி விரிவுரையாள
월,
l)L0 LJTU).
ளும்
爪ö
LJfT(HLD,

Page 98


Page 99
-
நடாத்தப்பட்ட தேர்வுகளுக்கும் ஆயிரத் துத் தொளாயிரத்தறுபத்தோரா மாண்டு தொடக்கம் கழகமாணவர் தோன்றி மிகச் சிறந்த தேர்ச்சியைப் பெற்றனர். பதக்கப்
பெற்றுள்ளனர்.
அவ்வாறே யா, ஆ. தி. பா. வி. சங் கத் தேர்வுக்குச் சைவசமயத்தை ஒரு பாட மாகக் கொள்ளும் மாணவர்கள் சைவப் புலவர் தேர்வுக்குத் தோற்ற விரும்பிய தால் அத்தேர்வுக்குரிய பாடங்களும் கற் பிக்கப்படலாயின. சைவப்புலவர் வகுப் பிற்குரிய பாடங்களைக் கற்பிக்கும் பொறுப்பை வித்துவான் ச. கந்தசாமி அவர்களும், பண்டிதர் தங்கம்மா அப் பாக்குட்டி அவர்களும் திறம்படச் செய்து வருகின்றனர். இவ்வாண்டு யாழ். சைவ பரிபாலன சபை நடாத்துஞ் சைவப்புலவர் தேர்வுக்குப் பலர் தோற்றவிருக்கின்றனர்.
ஈன்ற பொழுதிற்
பெரிதுவக்குந் தன் மகனைச் சான்ருே னெனக்கேட்ட தாய் ' என்பது தமிழ் மறை. இதுவரை பால பண்டிதர்களையும், பண்டிதர்களேயும், ஒரு சைவப் புலவரையும் ஈன்றதனுல் இக் கழகம் பெருமைகொண்டிருக்கிறது. எமது கழகமாதா எதிர்காலத்தில் இன்னும் பல அறிஞர், பெருமக்களை யீன்று பெருமை கொள்வாளென்பது உறுதி.
பண்டித மாணவர்களின் பேச்சுவன்மை யையும் எழுத்தாற்றலேயும் வளர்க்குஞ் சாதனமாக ஒரு கலாமன்றம் அமைக்க வேண்டுமென்று பேராசிரியர்களும், மான வர்களுங் கொண்டிருந்த ஆவல், ஆயி ரத்துத் தொளாயிரத்தறுபத்து முன் ரு மாண்டு நிறைவெய்தியது. மன்றத்தின் நோக்கங்களில், பண் டி தன் இதழ் வெளியீடு மொன் ருகும். என்ன நன்முக இறைவன் படைத்தனன் தன்னை நன்ருகத் தமிழ் செய்யு மாறே என்னுஞ் சிரிய நோக்கத்தோடு பண்டிதன் என்ற நாற்றிங்கள் ஏடு வெளிவருகிறது. பண்டிதன் ஏட்டின் ஆசிரியர் குழு கவிதை, கட்டுரைப் போட்டிகளே நடாத் திப் பரிசில்களை வழங்கி வருவதன்மூலம் கழக உறுப்பினர்களே எழுத்துத் துறையில் ஊக்கிவருகின்றது.
L = 12
 

பண்டித மாணவர் கழகத்தின் இலக்கிய கலாமன்றம் திங்களுக்கொருமுறை கூட் டங்களே நடாத்திவருகின்றது. கவியரங் கம், உரையரங்கம், பட்டிமன்றம் என்ப வற்றின் மூலம் பேச்சாற்றலேயும் சிந்தனத் திறனையும் வளர்த்து வருகின்றது. அறி ஞர்களே அழைத்துக் கருத்துரை வழங்க வும் ஏற்பாடு செய்துள்ளது.
சென்ற ஆண்டுகளிற் பல சிறப்பு விழாக்கள் நடைபெற்றன. பண்டிதன் முதலிதழ் வெளியீட்டுவிழா, வள்ளுவர் விழா, தேர்விற் சித்தியடைந்தோர்க்குப் பாராட்டுவிழா, பண்டிதன் இரண்டாமிதழ் வெளியீட்டுவிழா என்பன குறிப்பிடத் தக்க விழாக்களாம். -
கழகச்சிறப்பு விழாக்களுக்குக் கழக உறுப்பினரல்லாத தமிழறிஞர்களும் வருகை தந்து சிறப்பித்தனர். வள்ளுவர் விழாக் கவியரங்கத்திற்குக் கவிஞர் திரு. செ. கதிரேசர்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினுர்கள். ' பண்டிதன் முதலிதழ் வெளியீட்டு விழாவின்போது ஈழநாடு துணே ஆசிரியருள் ஒருவரான திரு. க. உமாமகேஸ்வரன் அவர்கள் பண்டிதன் இதழ் பற்றிக் கருத்துரை வழங்கினுர், சித்தியடைந்தோரின் பாராட்டுவிழாவின் போது பண்டிதர் சத்தியதே.வி துரைசிங் கம், வழக்கறிஞர் இ. கம. சிவப்பிரகாசம் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். பண்டிதன் இரண்டாவது வெளியீட்டு விழாவின்போதும் பண்டிதர் சத்திய தேவி துரைசிங்கம் அவர்கள் சிறப்புச் சொற் பொழிவாளராகக் கலந்துகொண்டார்கள்.
கழகம், இலக்கிய கலாமன்றம் என்ட வற்றின் சேவையையும் இலட்சியங்களே புத் தெரிந்துகொண்டு வள்ளல்கள் பலர்
வண்மை என்பது பண்டுளதன்று, இன்று
முள தென்று எடுத்துக்காட்டி வருகின்ற னர். வழக்கறிஞர் 15ம் சிவப்பிரகாசம், வித்துவான் ச. கந்தசாமி என்போர் நம் கழ கத்துக்கென மாதந்தோறும் நிதியுதவி வரு வதைக் குறிப்பிடுவதிற் குதூகலமடை கின்ருேம்.
எமது பணிகளுக்கு ஆக்கபூர்வமான உதவிகளைப் புரியும் உத்தமர்க்கெல்லாம் பணிவோர்க்கருளும் பரமேசுவரனின் இன் னருள் கிடைக்க வேண்டுமென இறைஞ்சு கின் ருேம்.

Page 100
இஆ இ ஆ ஆ இ ஆ இ அஆ இ இஆஆஆஆஆ.
பண்டித மான்
பண்டிதர், சைவப்புலவர் திரு.
பண்டிதர் திரு. இ. நமசிவாயம்
பண்டிதர் திரு. க. காகலிங்கம்
பண்டிதர் திரு. வ. நடராஜன்
பண்டிதர் திரு. செ. துரைசிங்க
பண்டிதர், சைவப்புலவர் திரு. (
பண்டிதர், வித்துவான், சைவப்ப பண்டிதர், சைவப்புலவர் செல்ல
பண்டிதர் செல்வி சி. பொன்மணி
BeSMSYSeSBeS SeiSiiSeSTSSiSTSSSSSLSSSSSSLSSYSBiTSSBSSSieSTSYSSiSSSBBSSSLieSBLSSSBSSSS
 

ஆ இ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஇ
னவர் கழகம்
T 35 liño
ச. பொன்னுத்துரை
(Dip. in Tamil)
|p. 3i5aDELLUT B. A., (Hons)
- 1 Dip, in Tamil
acari திரு. ச. கந்தசாமி
பி தங்கம்மா அப்பாக்குட்டி
iieTSASeiMSiSSMSSSMSSSMSTMSSSiSSSiSeSSeSSMSSSSMSTA ASiiST SS SS S SBSSMSSBqeSSiSS SiS
@

Page 101
1956 ഏg. G.
| QჟFვსტრამ
1953 : செல்வி 1961 : திரு. பி.
1962 : திரு. த. திரு. வ. திரு. மு திரு. சு.
— @) #- ငါ့ရှ်) ၉၄ါ இகல்வி டுசல்வி டுசல்வி டுசல்வி டுசல்வி டுசல்வி இசல்வி
* திரு. க.
1968 : திரு. இ திரு. ே
திரு. க. டுசல்வி
டுசல்வி
66 டுசல்வி இகல்வி திருவாட
1964 : $(୬. Q திரு. ே திரு. சி * திரு. சி * திரு. க.
 
 

ணவர் கழகம்
பெறுபேறுகள்
乔· இராசரத்தினம்
இது மகேஸ்வரி
இ. கனகமணி
5.j6
இராசரத்தினம்
. 15 IT 55JJ IT 5FIT
பொன்னுத்துரை சின்னத்தம்பி கு. மனுேன்மணி த. அன்னலட்சுமி இ. இராசபூவதி இ. டு ஈன்றனரி க. பரமேஸ்வரி க. ஜெயமணி ஆ. சரஸ்வதி
சீ. சிவசித்திரமணி
தங்கராசா . சுப்பிரமணியம் (11ஆம் பிரிவு வ. முத்துலிங்கம் ,
தங்கராசா கா. தேவமலர் gმ. ნr L/606ტ) .
க. சுசீலாதேவி சி. சரஸ்வதி ட்டி ப, தையல்நாயகி
ச. இராசபுலேந்திரன் வ. சண்முகலிங்கம் சண்முகவடிவேல் அப்புத்துரை சின்னத்துரை.

Page 102
பண்டிதம்: 1964 : திரு. 。
செல்வி
இTல்வி செல்வி
இசல்வி
(ଗgeବି), ତନ୍ମ
இகல்வி
* Garaiö 59
"திரு. சி.
αδάτο), ILHου0)IT :
1963 : செல்வி கு. ம
பம்பாய் பாரதீய வித்தியாபவன்
1961 : படி 1 : திரு. த. திரு. இ.
திரு. 6ே
செல்வி
டுசல்வி
இசல்வி
GFឆ្នាំគ្នា ܗ
படி 2 : திரு. சி.
டுசல்வி
செல்வி
செல்வி
@gດງລງ
@@@@
செல்வி
செல்வி
@@@
டுசல்வி
Q&Fö ଘଣ୍ଟୀ
(Fధ్రుద్ధ 963:12:
செல்வி | Lւգ 3: 605, 6,
செல்வி செல்வி
* நூனசித்தி,
 

88 _
இராசரத்தினம் கு. மனுேன்மணி
அன்னலட்சுமி இராசபூவதி பொன்மணி ஜெயமணி க. பரமேஸ்வரி கா. சிவயோகம் குணரத்தினம்
னேன்மணி (1ஆம் பிரிவு-பரிசில்)
(சமக்கிருத) தேர்வு: இராசரத்தினம் FILL G Jr LDGODif? Ljub ப. முத்துலிங்கம் இ. இராசபூவதி கு. மனுேன்மணி ஆ. சரஸ்வதி க. சுசீலாதேவி குணரத்தினம் அ. தில்லைநாயகி இ, கனகறனரி க. அன்னபூரணம் ம. சகுத்தலாதேவி 5. மனுேகரி
த. அன்னலட்சுமி க. ஜெயமணி
சீ. சிவசித்திரமணி 6. LjCBD}៣Jfi க. நாகரத்தினம் அருளானந்தம் Gtts. LrjG Ljub
குணரத்தினம் (பரிசில்)
சிவசண்முகமூர்த்தி
த. அன்னலட்சுமி

Page 103
1964 : படி 1 : செல்வி
படி 2 : திரு. வே. செல்வி :
@gឆ្នាទៅ
| utj. 4 : 505. gl.
திரு. வே செல்வி செல்வி
சென்னே அமரபாரதி (சமக்கிரு:
1962 : படி 2 : திரு. சி.
திரு. த.
செல்வி இ
செல்வி :
1968 : படி 1 : திரு. சி.
படி 2 : செல்வி
செல்வி ,
(?)ွ#@$)၉၄ါ = {
படி 3 திரு. சி.
செல்வி
செல்வி த
1964 : படி 1 : திரு. ை
டுசல்வி ( செல்வி
(g} { செல்வி
திரு. சி. திரு. வே @F៩៦៣ இசல்வி :
 

89 -
சு. இரத்தினம் 1. முத்துலிங்கம் க. சுசீலாதேவி மு. ஞானகுமாரி
குணரத்தினம்
சண்முகலிங்கம்
த. அன்னலக்குமி
动 தேர்வு: குணரத்தினம் (பரிசில் இராசரத்தினம் சி. பொன்மணி (வெள்ளிப்பதக்கம்] த அன்னலட்சுமி சி. சிவசித்திரமணி
சண்முகவடிவேல்
Թ. arլ66Û): க. சுசீலா தேவி
சி. சரஸ்வதி
குணரத்தினம் பரிசில்) சி. பொன்மணி ( , ) 5. அன்னலட்சுமி ( , )
சு. இரத்தினம்
5 = FLDത്ര இ. கனகமணி
சொ, பத்மாவதி க. சுசீலாதேவி
குணரத்தினம்
சண்முகலிங்கம் த. அன்னலக்குமி F. G) jfr GỞI LOGIOIOf

Page 104
பண்டித மாணவர் கழக
)66)
அலுவ
5Til In
பண்டிதர் ச. பெ LUGOOTL25, † 5. LIET பண்டிதர் தங்கம்
ప్రోడిణుఁ திரு. இரா. சுப்
துணேத்து செல்வி இ.
செல்வி இ.
துணைச்செ திரு. வே. மு.
பொருள் திரு. ந. சிவட
இதழாசி மயிலங்கூடலூர் சி.
செயற்குழு 2 திரு. க. த. 6=gے .J;(36) ,
68 .[ga کہ وہ , சி. குை

இலக்கிய கலாமன்றம்
FUIrgir fr
GT :
என்னுத்துரை 56cm」5LD
மா அப்பாக்குட்டி
Duff :
பிரமணியம்
52656fi :
56öróLD@of
}াটো :
சரஸ்வதி
jGOTGTř : 2த்துலிங்கம்
FTIGT :
T6り5○600rgór
ঐীিu_ii •
அப்புத்துரை
உறுப்பினர் : 鑑」5『T学f ண்முகலிங்கம் நாயகலிங்கம் ணரத்தினம் 靡TáTLDā

Page 105
{9 --سس
அலுவலாளர்
5 TIL UTC
பண்டிதர் ச. டெ
பண்டிதர் இ. ந
ආදිංකාංග
திரு. க. த
துணைத்த
செல்வி க. L
(GSFLUGMONT
செல்வி இசி (
துணைச்செய இரு த. இர
பொருள இரு ഖ. (
இதழாசிரியர்
மயிலங்கூடலூர்
திரு. சி. சண்முக திரு. சி. குணரத் சல்வி கு. மகுே sảje F. FL
 

கள் (1963)
মাটি :
ான்னுத்துரை
LDG6汀度Jü
Jr :
産」与所「字7
Paຽດນ):
গা : )
பான்மணி
6Tarif
சரத்தினம்
মোট ;
த்துலிங்கம்
கள் குழு :
リー『「チós வடிவேல்
தினம் ဤr Linာ့ဤ} |

Page 106
6
காப்பாளர் : சைவப்பேரறிஞர் 15ம தலைவர் : சைவப்புலவர், வித்துவான்
துணேத்தலைவர் திரு. க. உமாமகே பொதுச்செயலாளர் : சைவப்புலவர், இனச்செயலாளர்கள் திரு. க. த
@gF@jÉjL|ခလ3 பொருளாளர் : பண்டிதர் செல்வி இ
கற்றதனு லாய பயனே கற்ருள் தோழாஅ ரேை கல்வியும், கடவுள் வழிபாடும் மக் மாணவர் நாளேய மக்கள். இன்றைய பு காளேய மக்களின் வாழ்க்கை வளம். கழகத்திற் பயில்வோர், ஏனைய கழகங்கு கண்னர்களாக - கல்வியில் மட்டுமே தென்று நாம் விரும்பியதில், அந்த வி மித்ததில் வியப்பில்லேயன்றே ? சிவெ படுத்த நாம் தவறிவிடவில்லை என்பன னுந் தெரிவித்துக்கொள்ளுகிருேம்,
இவ்வாண்டு நிகழ்ந்த சமய விழா பிரகாசம் அவர்கள், வித்துவான் திரு செல்வி அ. தங்கம்மா அவர்கள், பணி ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு B
வருஞ் சந்ததியாரின் நாடி நரம்பு இடமில்லை. ஓர் உத்தம ஆத்மா கரு ( இங்கு இல்லே, ஒரு புனித ஆத்மா உ தந்தை தாயர்களே அது நாடும் ? அப்படி நம் சமூகத்தில் உண்டா ? ஒளவையாரி இராமாயணத்திலும் முழுகித் திளேத்து பயிலும் ஆண்களேயும் பெண்களையும் 5 உலகம் உய்ய ஒர் ஆத்மா கீழ் இற தலைவர்களுஞ் சிந்திக்கு நாள் எந்த நா
 

க் கழகம்
நிவப்பிரகாசம்
ச. கந்தசாமி
கஸ்வரன் ܗ பண்டிதர் செல்வி அ. தங்கம்மா
வர், பண்டிதர் கு. மகுேன்மணி
இராசபூவதி
ன் கோல் வாலறிவன்
களது இரண்டு கண்கள் இன்றைய
ாணவரின் உடல், உள்ள வளர்ச்சியே எனவே, எமது பண்டித மாணவர்
ஒற்றைக் 출
தேர்ந்தவர்களாக - விளங்கக்கூடா ருப்புச் சிவநெறிக் கழகமாகப் பரி ை குறிக் கழகத்தை இயன்றவரை பயன் த மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துட
கேளில் வழக்கறிஞர் திரு கம. சிவப் ச. கந்தசாமி அவர்கள், பண்டிதர் ாடிதர் திரு. க. நாகலிங்கம் அவர்கள் கழ்த்தினர்.
cm。 リ『『守I
கு. மனுேன்மணி இணைச்செயலாளர்கள்
菇菇 புரானேதிகாச இரத்தத்துக்கு
இருப்பதற்கு ஏற்ற ஓர் உதரம் இனி
- լիGւյ655 (3:5f55irst 6ունԼյլգմլյլ լபட்ட தந்தை தாய் ஆகக்கூடியவர்கள் லுக் திருவள்ளுவரிலும் பாரதத்திலும் த் திருமுறைகளுஞ் சிவபுராணங்களும் ம் ஆக்கி வைத்திருக்க வேண்டாவா? ங்குவ தெப்படி ? இதை நமது நாடும் ශ්‍රීධූrotr 2– --
-பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

Page 107


Page 108
திருள்ே அழுத்தகம், சுன்னகம் ஆ212-8
ܢܫܡ¬.
 
 

*